<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-09-15T00:25:51+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜோர்தான் தாக்குதலில் புதிய திருப்பம் ; ஈரானின் ஏவுகணைத் தாக்குதலுக்குப் பின்னால் புதிய மர்மம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/a-new-mystery-behind-iran-s-missile-attack-1789431790"></link>
            <id>https://canadamirror.com/article/a-new-mystery-behind-iran-s-missile-attack-1789431790</id>
            <summary type="text">ஜோர்தானில் உள்ள முவாஃபக் அல்-சால்டி (Muwaffaq Al-Salti) வான்படை முகாம் மீது மேற்கொள்ளப்பட்ட ஏவுகணைத் தாக்குதலுக்கு சீன செயற்கைக்கோள் புகைப்படங்கள் பயன...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜோர்தானில் உள்ள முவாஃபக் அல்-சால்டி (Muwaffaq Al-Salti) வான்படை முகாம் மீது மேற்கொள்ளப்பட்ட ஏவுகணைத் தாக்குதலுக்கு சீன செயற்கைக்கோள் புகைப்படங்கள் பயன்படுத்தப்பட்டதா என்பது குறித்து அமெரிக்க புலனாய்வாளர்கள் தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
</p><p>
இந்த ஏவுகணைத் தாக்குதலில் 3 அமெரிக்க இராணுவ வீரர்கள் உயிரிழந்ததுடன், மேலும் பலர் காயமடைந்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
</p><p>
தாக்குதலுக்கு முன்னர், சம்பந்தப்பட்ட இராணுவ முகாமின் அதிநவீன செயற்கைக்கோள் புகைப்படங்களை ஈரான் பெற்றிருந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f3d0ecb3-2a51-4938-92e4-084d96dc57b4/26-6aa88ff03bfda.webp' /></p><p>இந்த தாக்குதலின் மூலம் அமெரிக்க வீரர்களின் இருப்பிடம், இராணுவ தளவாடங்கள் மற்றும் முகாமின் கட்டமைப்பு குறித்த விவரங்களை ஈரான் பெற்றிருக்கலாம் என அமெரிக்கா சந்தேகிக்கிறது.
</p><p>
தாக்குதலுக்குப் பிறகு எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மூலமாக, முகாமிற்கு ஏற்பட்ட சேதங்களை ஈரான் அதிகாரிகள் மதிப்பீடு செய்திருக்கக் கூடும் என்ற கேள்வியும் எழுப்பப்பட்டுள்ளது.</p><p>

தாக்குதல் நடந்த சில மணி நேரங்களிலேயே அல்-சால்டி முகாமின் காணொளிகள் வெளியானதைத் தொடர்ந்து, இலக்கு வைக்கப்பட்ட இடத்திலிருந்து இவ்வளவு விரைவாக ஈரான் எவ்வாறு தகவல்களைப் பெற்றது என்பது குறித்து அமெரிக்கா விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-15T00:23:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[எயார்பஸ் நிறுவன மின்னஞ்சலால் ஆபத்தில் நாமல் ராஜபக்ச! முக்கிய பல தகவல்கள் கசிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/airbus-namal-rajapaksa-email-1789391769"></link>
            <id>https://tamilwin.com/article/airbus-namal-rajapaksa-email-1789391769</id>
            <summary type="text">எயார்பஸ் ரக வானூர்தி கொடுக்கல் வாங்கலில் 100 மில்லியன் டொலர் கையூட்டல் பெற்ற குற்றச்சாட்டில் சிறையில் இருக்கும் மொட்டுக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நா...</summary>
            <content type="html"><![CDATA[<p>எயார்பஸ் ரக வானூர்தி கொடுக்கல் வாங்கலில் 100 மில்லியன் டொலர் கையூட்டல் பெற்ற குற்றச்சாட்டில் சிறையில் இருக்கும் மொட்டுக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் 
ராஜபக்ச இது ஒரு அரசியல் பழிவாங்கல் என்றும் கூற முனைந்தாலும்
சம்பவம் தொடர்பான விசாரணைகளில் வெளிவந்த தகவல்களின் அடிப்படையில் 
2013 மார்ச் 23 ஆம் திகதியிட்ட மின்னஞ்சல் (Email) ஒன்றின் மூலம் பல கதைகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.</p><p>அன்றைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் புதல்வரான நாமல் ராஜபக்ச விமானங்களை கொள்வனவு செய்யும் யோசனையை ஜனாதிபதி மூலமாக அமைச்சரவைக்கு சமர்ப்பித்து விடயத்தை முடித்து தருவதாக மின்னஞ்சல் மூலம் அறிவித்துள்ளதாக தெரியவந்துள்ளது. </p><p>
அது தொடர்பில் எயார்பஸ் (Airbus) நிறுவனம் அனைத்து மின்னஞ்சல்களையும் வழங்கியுள்ளது. எயார்பஸ் கொள்வனவு தொடர்பான வேலையை நான் தந்தைக்குச் சொல்லி செய்து தருகிறேன் தந்தை மூலமாக அல்லது ஜனாதிபதி மூலமாக இதற்குத் தேவையான அமைச்சரவை அனுதியை பெற்று தருவதாக கூறியுள்ளார்.
</p><h2>நாமலின் பங்களிப்பு</h2><p>இதற்கு இணையாக 2013 மார்ச் 27 ஆம் திகதி அன்றைய சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிரியங்கர ஜயரத்ன இக்கொள்வனவுக்கான அனுமதியைக் கோரி அமைச்சரவை பத்திரம் ஒன்றை சமர்ப்பpத்துள்ளார்.</p><p>VZMHUS</p><p> </p><p>அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்ட போதிலும் ஏப்ரல் 13 ஆம் திகதி அன்றைய நிதியமைச்சராக இருந்த மஹிந்த ராஜபக்ச அமைச்சரவைக்கு அறிவித்துள்ளது. என்னவென்றால் நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட சுயாதீன பணிப்பாளர் சபையைக் கொண்ட ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் செயற்பாடுகளுக்கு அமைச்சரவை அனுமதி தேவையில்லை என்று கூறியுள்ளார்.</p><p>அதேபோல் இலங்கைக்கு வந்த எயார்பஸ் நிறுவனத்தின் பிரதிநிதிகளை நாமல் ராஜபக்ச சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
மேலும் இந்த பாரிய அளவிலான விமானக் கொள்வனவின் போது விமான ஓட்டும் பயிற்சி மையம் (Pilot Training Centre) ஒன்றும் பெருந்தொகை செலவில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><h2>
ஹம்பாந்தோட்டையில் விமான ஓட்டும் பயிற்சி</h2><p>அந்தப் பயிற்சி மையத்தை தனது சொந்த தேர்தல் தொகுதியான ஹம்பாந்தோட்டையில் நிறுவுமாறு எயார்பஸ் நிறுவன பிரதிநிதிகளிடம் நாமல் ராஜபக்ச கோரியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. </p><p>மின்னஞ்சல் சான்றுகள் மூலம் இத்தகவல்கள் வெளிவந்துள்ளதாகவே லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தற்போது நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளது.
நிமல் பெரேரா அளித்துள்ள வாக்குமூலம் தனக்கு எயார்பஸ் நிறுவனத்துடனோ அல்லது ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துடனோ எந்தவொரு தொடர்பும் இருக்கவில்லை. </p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/26f8eb70-d0ad-4b6a-a54c-4d4f3d98ea46/26-6aa7f39bafd6d.webp' /></p><p>ஆனாலும் நாமல் ராஜபக்ச வெளிநாட்டு ஆலோசனைச் சேவை ஒன்றின் மூலம் பணம் கிடைக்கவுள்ளதாகவும் அப்பணத்தை வைப்பு செய்வதற்கு வெளிநாட்டு கணக்கு ஒன்றைத் தருமாறும் கோரியுள்ளார்.</p><p>தனக்கு வெளிநாட்டு ஆலோசனை சேவை மூலம் பணம் வரவுள்ளதாகவும் கூறியுள்ளார். இந்த சந்தர்ப்பத்திலேயே நிமல் பெரேரா தனக்குச் சொந்தமான 'SABREVISION' என்ற நிறுவனத்தின் கணக்கு இலக்கத்தை வழங்கியதாக குறிப்பிட்டுள்ளார். </p><p>
இந்தக் கணக்கிற்கு 'Biz Solutions' எனும் நிறுவனம் மூலம் அதாவது அப்போதைய கபில சந்திரசேனவின் மனைவி பிரியங்கா நியோமாலி விஜயநாயக்க பணிப்பாளராக இருந்த புரூணையில் பதிவு செய்யப்பட்ட நிறுவனத்தில் இருந்து 2014 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் 8 இலட்சம் அமெரிக்க டொலர் பணம் நிமல் பெரேராவின் வெளிநாட்டு கணக்கிற்கு வைப்பு செய்யப்பட்டுள்ளது. </p><p>பின்னர் அந்த பணத்தை இலங்கையில் 100 மில்லியன் ரூபாவை (10 கோடி) நாமல் ராஜபக்சவிடம் ஒப்படைத்ததாகவும் தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p>&nbsp;</p><p>&nbsp;&nbsp;</p><p><b>YOU MAY LIKE THIS VIDEO..</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/jpF2dBCZozI" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p>]]></content>
            <updated>2026-09-15T00:21:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலக எண்ணெய் சந்தைக்கு புதிய நெருக்கடி ; சவூதி எண்ணெய் இருப்பு தீரும் அபாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/risk-of-saudi-oil-reserves-running-dry-1789430944"></link>
            <id>https://canadamirror.com/article/risk-of-saudi-oil-reserves-running-dry-1789430944</id>
            <summary type="text">சவூதி அரேபியாவின் முக்கிய கிழக்கு–மேற்கு எண்ணெய் குழாய் வலையமைப்பு சில நாட்களுக்குள் மீண்டும் இயக்கப்படாவிட்டால், யான்பு துறைமுகத்தில் உள்ள எண்ணெய் இர...</summary>
            <content type="html"><![CDATA[<p>சவூதி அரேபியாவின் முக்கிய கிழக்கு–மேற்கு எண்ணெய் குழாய் வலையமைப்பு சில நாட்களுக்குள் மீண்டும் இயக்கப்படாவிட்டால், யான்பு துறைமுகத்தில் உள்ள எண்ணெய் இருப்பு தீர்ந்து, உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் சுமார் 4% வரை பாதிப்பு ஏற்படக்கூடும் என எண்ணெய் வர்த்தகர்கள் மற்றும் தொழில்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சமீபத்தில் இடம்பெற்ற ஆளில்லா விமானத் தாக்குதல்களால் குழாய் வலையமைப்பு சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. </p><p>இதன் காரணமாக யான்பு துறைமுகத்தில் தற்போது 5 முதல் 7 நாட்களுக்கு மட்டுமே போதுமான ஏற்றுமதி இருப்பு உள்ளதாக தொழில்துறை வட்டாரங்கள் கூறுகின்றன.
</p><p>
குறித்த குழாய் மூலம் நாளொன்றுக்கு சுமார் 4 மில்லியன் பீப்பாய்கள் எண்ணெய் யான்புவுக்கு கொண்டு செல்லப்பட்டு வந்தது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/22857be3-d88a-4f2f-8d39-d18124c6b0dc/26-6aa88ca24b946.webp' /></p><p>மாற்று வழியாக எண்ணெயை ஏற்றுமதி செய்யும் வசதிகள் இருந்தாலும், அவற்றின் சேமிப்பு இருப்புகளும் வரையறுக்கப்பட்டவை என தெரிவிக்கப்படுகிறது.</p><p>

இதனிடையே, சர்வதேச எரிசக்தி நிறுவனம் (IEA), ஹோர்மூஸ் மற்றும் செங்கடல் வழியாக எண்ணெய் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதால் சவூதி அரேபியாவின் எண்ணெய் விநியோகம் பல தசாப்தங்களில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளது.</p><p>

சவூதி அரேபியாவின் எண்ணெய் உற்பத்தி, போருக்கு முன்னர் நாளொன்றுக்கு 10.9 மில்லியன் பீப்பாய்களாக இருந்த நிலையில், ஆகஸ்ட் மாதத்தில் 6.2 மில்லியன் பீப்பாய்களாக குறைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p>

இந்த நிலை நீடித்தால், ஏற்கனவே அதிகரித்துள்ள உலகளாவிய எரிபொருள் விலைகள் மேலும் உயர்ந்து, சர்வதேச பணவீக்க அழுத்தம் தீவிரமடையும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-15T00:09:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹரி-மேகன் தம்பதியினர் அதிரடி: குழந்தைகளின் பாதுகாப்பு தொடர்பில் எடுத்த முக்கிய முடிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/harry-meghan-relocates-children-to-new-school-1789428309"></link>
            <id>https://news.lankasri.com/article/harry-meghan-relocates-children-to-new-school-1789428309</id>
            <summary type="text">Harry Meghan Relocates children to new School: பாதுகாப்பு காரணங்களால் ஹரி-மேகன் தம்பதி தங்களது பிள்ளைகளை வேறு பள்ளிக்கு மாற்றியுள்ளனர்.இங்கிலாந்துக்கு...</summary>
            <content type="html"><![CDATA[<p>Harry Meghan Relocates children to new School: பாதுகாப்பு காரணங்களால் ஹரி-மேகன் தம்பதி தங்களது பிள்ளைகளை வேறு பள்ளிக்கு மாற்றியுள்ளனர்.</p><h2>இங்கிலாந்துக்கு திரும்பிய ஹரி-மேகன் தம்பதி</h2><p>முக்கிய ராஜ கடமைகளில் இருந்து விலகிய சசெக்ஸ் இளவரசரான ஹரி மற்றும் இளவரசி மேகன் தம்பதி 6 ஆண்டுகளுக்கு முன்பு பிரித்தானியாவில் இருந்து வெளியேறி அமெரிக்காவில் குடியேறினர்.</p><p> பெரும்பாலும் தனியாகவும், மிகவும் அரிதாகவே பிரித்தானியாவுக்கு வந்து சென்ற சசெக்ஸ் தம்பதி, தற்போது திரும்பவும் முழுமையாக பிரித்தானியாவில் குடியேறியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b4d80c80-ebcb-4d7e-9ed7-ce12e9146228/26-6aa88256f103f.webp' /></p><p> இந்த நீண்ட கால திட்டம் தொடர்பாக பொது அறிவிப்பு வெளியாவதற்கு முன்பு மன்னர் சார்லஸுக்கு இது தொடர்பாக தெரிவிக்கப்பட்டது.</p><p> ராஜாங்க குடியிருப்புகளில் இருந்து வெளியே தங்கியிருக்கும் இந்த தம்பதி, தற்போது அரசு சார்பிலான பொறுப்புகளில் எதிலும் இல்லாத ராஜ குடும்ப உறுப்பினர்களாக உள்ளனர்.</p><p></p><p> சசெக்ஸ் தம்பதி கடந்த வாரம் தங்களது குழந்தைகளான 7 வயது ஆர்ச்சி மற்றும் 5 வயது லிலிபெட் இருவரையும் புதிய கல்வி நிலையத்தில் சேர்த்தனர்.</p><h2> குழந்தைகளை வேறு பள்ளிக்கு மாற்றிய சசெக்ஸ் தம்பதி</h2><p>
இந்நிலையில் பாதுகாப்பு மதிப்பீடுகள் மற்றும் பள்ளிக்கு செல்வதற்கான நீண்ட தூரம் மற்றும் போக்குவரத்து சவால்கள் காரணமாக சசெக்ஸ் தம்பதி தங்களது குழந்தைகளை புதிய கல்வி நிலையத்திற்கு மாற்றியுள்ளனர்.</p><p> சசெக்ஸ் தம்பதியினரின் தற்போதைய இருப்பிடம் மற்றும் பள்ளிகளின் விவரங்கள் ஆகியவை ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.</p><p> தினசரி நடைமுறை சிக்கல்களை மனதில் கொண்டு மட்டுமே இந்த மாற்றம் மேற்கொண்டு இருப்பதாகவும், ஆசிரியர்கள் மற்றும் பள்ளி நிர்வாகத்தின் அர்ப்பணிக்கு சசெக்ஸ் தம்பதி நன்றி தெரிவித்து இருப்பதாக மேகனின் செய்தி தொடர்பாளர் தகவல் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e03e743a-6a27-49c1-9020-2da03b201761/26-6aa88257ac3dc.webp' /></p><p> இந்த இடமாற்றம் முந்தைய பள்ளியின் தரத்தையோ அல்லது கவனிப்பு குறையையோ மதிப்பிடுவதற்கானது இல்லை என்பதையும் தம்பதி தெளிவுபடுத்தியுள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-15T00:00:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[விடுதலை வேள்வியில் ஆகுதியாக்கிய தியாக தீபத்தின் குரல் ஓய்ந்து 39 ஆண்டுகள்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/39-years-since-thileepan-s-death-1789428753"></link>
            <id>https://ibctamil.com/article/39-years-since-thileepan-s-death-1789428753</id>
            <summary type="text">மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும்” என்ற விடுதலைவாசகத்தை உரக்க கூவி, தன் வாழ்வை தமிழரின் விடுதலை வேள்வியில் ஆகுதியாக்கிய தியாக த...</summary>
            <content type="html"><![CDATA[<p>மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும்” என்ற விடுதலைவாசகத்தை உரக்க கூவி, தன் வாழ்வை தமிழரின் விடுதலை வேள்வியில் ஆகுதியாக்கிய தியாக தீபம் திலீபனின் உண்ணா நோன்பிருந்த முதலாவது தினம் இன்றாகும்.
</p><p>
தமிழ் மக்களின் உரிமைக்காக 15.09.1987 தொடக்கம் 26.09.1987 வரையான 12 நாட்கள் அகிம்சை வழியில் யாழ் . நல்லூரில் நீராகாரம் அருந்தாமல் உண்ணாவிரதப் போராட்டம் நடாத்தி ஈகச் சாவைத் தழுவிக் கொண்ட தியாக தீபம் திலீபனின் 39 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் வழமை போல் இம்முறையும் தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவிடத்தில் நடைபெறுவதற்குரிய ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன .
</p><p>
இன்று 15 ஆம் திகதி நினைவேந்தல் நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டு 26ஆம் திகதி திங்கட்கிழமை வரையான 12 நாட்கள் தொடர்ந்து நடை பெறவுள்ளன.</p><p></p><h2>5 அம்ச கோரிக்கை</h2><p>

பார்த்திபன் இராசையா என்னும் இயற்பெயர்கொண்ட திலீபன், நவம்பர் 27, 1963-ம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் உள்ள ஊரெழு கிராமத்தில் பிறந்தவர். விடுதலைப்புலிகள் அமைப்பின் உறுப்பினராக இவர் அகிம்சை வழியில் ஒரு போராட்டத்தை முன்னெடுத்தார்.</p><p>

1987ம் ஆண்டு இந்திய அமைதிப்படை இலங்கைக்குச் சென்றபோது, 5 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதம் இருந்தார். 

ஒரு கொள்கையில் ஒருவர் எவ்வளவு உறுதியாக இருக்க முடியும், ஒரு போராட்டத்தை எவ்வளவு உன்னதமாக நடத்த முடியும், அதன் தாக்கத்தை எந்த அளவுக்கு மக்களிடம் கடத்த முடியும் என்று உலகுக்கே உணர்த்திய போர் வீரர் திலீபன்.</p><p>

தன் மக்களுக்காக 12 நாள்கள், அதாவது 265 மணி நேரமாக ஒரு சொட்டுத் தண்ணீர் கூட உடலுக்குள் செலுத்தாமல் உண்ணாவிரதம் இருந்த திலீபன், தன் 23-ம் வயதில், 1987 செப்டம்பர் 26-ம் நாள் காலை 10.48 மணிக்கு உயிரிழந்தார். </p><p>

அவரின் 39-வது நினைவு தினமான இன்று, (இலங்கை) தமிழர்கள் வாழும் அனைத்து பகுதிகளிலும் நினைவஞ்சலி செலுத்தப்படுகிறது.
</p><p>

மிகச் சிறந்த அறிவாளியாகவும், கல்வியில் ஆர்வம் மிக்கவராகவும் இருந்த போராளி திலீபன், 1980 காலகட்டத்திலேயே மருத்துவ மாணவனாகத் தேர்வானவர்.</p><p>சிங்களப் பேரினவாதத்தின் கொடுமைகளை நேரில் பார்த்து,
`போராடாமல் இங்கு எதுவும் மாறாது என முடிவெடுத்து, படிப்பை நிறுத்திவிட்டு தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைத்துக்கொண்டார்.
</p><p> தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் அரசியல்துறைப் பொறுப்பாளராகத் தேர்வு செய்யப்பட்டு, கடுமையாக அதற்காக உழைத்தார்.
அகிம்சைப் போராட்டத்தைப் போதித்த காந்தியின் தேசமான இந்தியாவிலிருந்து, 1987-ம் ஆண்டு இலங்கைப் போரை முடிவுக்குக் கொண்டுவர அமைதிப் பேச்சுவார்த்தைக்கு இந்திய அமைதிப்படை சென்றது.
</p><ol><li>அமைதிப் படையிடம் திலீபன் 5 அம்ச கோரிக்கைகளை முன்வைத்தார்.</li><li>பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு, இன்னமும் தடுப்புக்காவலில் அல்லது சிறைகளில் உள்ளோர் விடுவிக்கப்பட வேண்டும்.</li><li>புணர்வாழ்வு என்ற பெயரில் தமிழர் தாயகத்தில் நடத்தப்படும் சிங்களக் குடியேற்றங்கள், உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.
</li><li>இடைக்கால அரசு நிறுவப்படும் வரை புணர்வாழ்வு என்று அழைக்கப்படும் சகல வேலைகளும் நிறுத்தப்பட வேண்டும்.
</li><li>மாகாணங்களில், காவல் நிலையங்கள் திறக்கப்படுவது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.</li><li>இந்திய அமைதிப்படையின் மேற்பார்வையில், ஊர்காவல் படை என அழைக்கப்படுவோருக்கு வழங்கப்பெற்ற ஆயுதங்கள் திரும்பப் பெறப்பட்டு, தமிழ்க் கிராமங்கள், பள்ளிக்கூடங்களில் குடிகொண்டுள்ள இராணுவ, காவல் நிலையங்கள் மூடப்பட வேண்டும்.
</li></ol><p>
 இந்த 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, செப்டம்பர் 15, 1987 அன்று, யாழ்ப்பாணத்தின் நல்லூர் வீதியில் முருகன் கோயில் அருகில், எனக்கு என்ன நேர்ந்தாலும், சுய நினைவு இருந்தாலும், இல்லாவிட்டாலும் யாரும் எனக்கு உணவோ, சிகிச்சையோ அளிக்கக் கூடாது என உறுதியாகக் கூறி உண்ணாவிரதத்தைத் தொடங்கினார்.</p><p></p><h2>உண்ணாவிரத மேடையிலும் புத்தகங்கள்&nbsp;</h2><p>
</p><p>
 பாலஸ்தீனத்தின் போராட்டத்தின் மீது அவருக்கு மிகப்பெரிய ஈர்ப்பு இருந்தது. பாலஸ்தீனக் கவிதைகளைப் படித்து அதைப் பகிர்ந்து கொள்ளும் வழக்கமும் உடையவர்.
உண்ணாவிரத மேடையிலும் புத்தகங்களை வாசிப்பதற்குக் கேட்டு வாங்கிக் கொண்டார். </p><p>பாலஸ்தீன கவிதைத் தொகுப்பு அவருக்கு உண்ணாவிரத மேடையில் வாசிப்பதற்கு வழங்கப்பட்டது.

போராட்டம் தொடங்கி 4-வது நாளில் பேசிய திலீபன், நான் உற்சாகமாக இருக்கிறேன். என்னால் தாராளமாகப் பேச முடிகிறது. எனக்கு விடை கொடுங்கள். போராடுவதற்குத் தயாராகுங்கள். எனப் பேசியது, போராட்டக்களத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.</p><p>


போராட்டத்தின் தீவிரத்தால், யாழ் கோட்டையிலிருந்த இந்திய அமைதிப் படையினர் வெளியே வர முடியாதவாறு தமிழர்கள் மறியல் போராட்டத்தினை தொடங்கினார்கள். </p><p>

யாழ்ப்பாணம் முழுதிலும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை பார்த்தோர் வேலை நிறுத்தத்தினை மேற்கொள்ள முடிவெடுத்தனர். </p><p>

திலீபனின் போராட்டத்திற்கு ஆதரவாக தமிழ்நாட்டின் சாலைகள் போராட்டங்களால் நிறைய ஆரம்பித்தன. 

திலீபன் தமிழீழத்திற்கு மட்டுமல்லாமல், தமிழ்நாட்டிற்கும் சேர்த்து ஒட்டுமொத்த தமிழினத்தின் அடையாளமாய் மாறியிருந்தார்.</p><p>

முதல் இரண்டு நாள்களில் சில ஆயிரங்களாய் இருந்த மக்கள் கூட்டம், மூன்றாம் நாளிலிருந்து லட்சமாய் மாறியிருந்தார்கள்.

திலீபன் இறப்பதற்கு முன் இறுதியாக ஆற்றிய உரையில்,
`என் அன்பிற்கினிய மக்களே, என்னால் பேச முடியவில்லை. பேச முடியாத நிலையில் இருந்தும், நீங்கள் தரும் உற்சாகம் பேச வைக்கிறது. </p><p>நான் மீட்கப்பட முடியாத இடத்திற்குப் போய்க் கொண்டிருக்கிறேன். நான் வாழ்நாள் முழுவதும் நேசித்த என் தேசத்து மக்களே, உங்களிடம் ஒரு பெரும் பொறுப்பை விட்டுச் செல்கிறேன். </p><p>நீங்கள் அனைவரும் பரிபூரணமாகக் கிளர்ந்தெழ வேண்டும். இங்கே ஒரு மாபெரும் மக்கள் புரட்சி வெடிக்கட்டும். </p><p>மறைந்த போராளிகள் 650 பேருடன், 651வது போராளியாக நான் மேலே இருந்து மலரும் தமிழீழத்தை மகிழ்வோடு பார்ப்பேன். போராடத் தயாராகுங்கள். எனக்கு விடை தாருங்கள்.</p><p> இந்த உரையுடன் திலீபன் குரல் ஓய்ந்து 39 ஆண்டுகள் ஆகிவிட்டன.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-14T23:58:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[மாகாண சபைத் தேர்தலை பிற்போடவே செயற்குழுவை பயன்படுத்தும் அநுர அரசு - எழும் குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/govt-uses-executive-committee-postpone-elections-1789429072"></link>
            <id>https://tamilwin.com/article/govt-uses-executive-committee-postpone-elections-1789429072</id>
            <summary type="text">மாகாண சபைத் தேர்தலை எந்த வழியில் மேலும் பிற்போடலாம் என்பதற்காகவே அநுர அரசு
நாடாளுமன்ற விசேட செயற்குழுவைப் பயன்படுத்தி வருகின்றது என்று ஐக்கிய மக்கள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>மாகாண சபைத் தேர்தலை எந்த வழியில் மேலும் பிற்போடலாம் என்பதற்காகவே அநுர அரசு
நாடாளுமன்ற விசேட செயற்குழுவைப் பயன்படுத்தி வருகின்றது என்று ஐக்கிய மக்கள்
சக்தியின் பொதுச்செயலாளரும் மாகாண சபைத் தேர்தல் குறித்து ஆராயும் நாடாளுமன்ற
விசேட செயற்குழுவின் உறுப்பினருமான ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.
</p><p>
மாகாண சபைத் தேர்தல் குறித்து ஆராயும் நாடாளுமன்ற விசேட செயற்குழுவின் கால
அவகாசம் நீடிக்கப்பட்டமை மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அந்தக் குழு
கூட்டத்தைப் புறக்கணித்தமை குறித்து ஊடகங்கள் வினவியபோதே மேற்கண்டவாறு
குறிப்பிட்டார்.
</p><h2>பழைய முறைமையின் கீழ்</h2><p>
அவர் மேலும் கூறுகையில்,&nbsp;"மாகாண சபைத் தேர்தலை எந்தத் தேர்தல் முறைமையின் கீழ் நடத்துவது என்று
ஆராய்ந்து விதப்புரைகளையும் யோசனைகளையும் முன்வைப்பதற்காக இந்த நாடாளுமன்ற
விசேட குழு கடந்த 8 மாத காலமாகக் கூடியது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d7aeae2f-e9d7-4d90-820a-4ffb4b9aaf50/26-6aa8893f3d1b5.webp' /></p><p>
மாகாண சபைத் தேர்தலைப் பழைய தேர்தல் முறைமையின் கீழ் நடத்தலாம் என்று
குறிப்பிட்டு தேர்தல்கள் ஆணைக்குழுவும், சட்டமா அதிபர் திணைக்களமும் தெளிவாக
அறிக்கை சமர்ப்பித்துள்ளன.</p><p> பழைய முறைமையின் கீழ் தேர்தலை நடத்துவதாயின்
அதற்குரிய சட்ட திருத்தங்களும் முன்வைக்கப்பட்டுள்ளன. </p><p>அந்தப் பரிந்துரைகள்
குறித்துக் கவனம் செலுத்தினால் காணப்படும் சட்ட சிக்கல்களுக்கு உடனடியாகத்
தீர்வு காணலாம்.</p><h2>காலத்தை வீணடிக்கும் விசேட செயற்குழு</h2><p>ஆனால், தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் சட்டமா அதிபர் திணைக்களம் முன்வைத்த
பரிந்துரைகள் எதைக் குறித்தும் அரசு எந்தவொரு கவனமும் செலுத்தவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/802346a6-0095-4a76-9fe1-51ae8733aa6b/26-6aa8893fea5ee.webp' /></p><p> தேர்தலை
எப்படியாவது பிற்போடுவதற்கான யோசனைகளுக்கு மாத்திரமே அரசு
முன்னுரிமையளித்துச் செயற்பட்டது.
</p><p>
இதற்கமைய, இந்தக் குழுவின் செயற்பாட்டுக்காலம் எதிர்வரும் டிசம்பர் மாதம் 17
ஆம் திகதி வரை தற்போது நீடிக்கப்பட்டுள்ளது. இது முற்றிலும் முறையற்ற
செயலாகும்.
</p><p>
தேர்தலை நடத்தும் உண்மையான நோக்கம் அரசிடம் சிறிதும் கிடையாது. குழு அறிக்கை
சமர்ப்பித்தவுடன் தேர்தலை நடத்தத் தயார் என்று கூறிக்கொண்டு அரசு
திட்டமிட்டுக் காலத்தை இழுத்தடித்து வருகின்றது.</p><p>

எனவே, இவ்வாறு காலத்தை வீணடிக்கும் இந்த விசேட செயற்குழுவில் தொடர்ந்து
பங்குபற்றுவதில் எந்தப் பயனும் இல்லை என்பதால், எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த
நான்கு உறுப்பினர்களும் இனி அந்தக் குழுக் கூட்டங்களில் கலந்துகொள்ள மாட்டோம்
என்று ஒருமித்தமாகத் தீர்மானித்துள்ளோம்" என்றும் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-14T23:55:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[தாய்லாந்தில் கோய் மீன்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 51 வயது முதியவர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/elderly-man-sexually-harassed-koi-fish-1789419453"></link>
            <id>https://canadamirror.com/article/elderly-man-sexually-harassed-koi-fish-1789419453</id>
            <summary type="text">தாய்லாந்தில் அண்டை வீட்டாரின் தனியார் கோய் மீன் வளர்ப்புத் தொட்டிக்குள் அத்துமீறி நுழைந்ததாகக் கூறப்படும் 51 வயது நபர் ஒருவர், மீன்களுக்கு பாலியல் துஷ...</summary>
            <content type="html"><![CDATA[<p>தாய்லாந்தில் அண்டை வீட்டாரின் தனியார் கோய் மீன் வளர்ப்புத் தொட்டிக்குள் அத்துமீறி நுழைந்ததாகக் கூறப்படும் 51 வயது நபர் ஒருவர், மீன்களுக்கு பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் அதிர்ச்சி சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>

தாய்லாந்தின் துங் சோங் ஹோங் பகுதியில் உள்ள தனியார் குளமொன்றில் கடந்த செப்டம்பர் 7ஆம் திகதி இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e024373a-87ef-4dd7-b0b8-b8bfd1eaf57f/26-6aa85fbe930c2.webp' /></p><p>குறித்த நபர் மிதிவண்டியில் அப்பகுதிக்கு வந்த பின்னர், குளத்திற்குள் அத்துமீறி நுழைந்ததாகவும், அங்கு வளர்க்கப்பட்டிருந்த கோய் மீன்களுக்கு துஷ்பிரயோகம் செய்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
சம்பவத்தை வீட்டுப் பணியாளரும் குளத்தின் உரிமையாளரும் அவதானித்து அவரை எதிர்கொண்டபோது, சந்தேகநபர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். </p><p>இதனையடுத்து உரிமையாளர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

இந்நிலையில், குளத்தில் வளர்க்கப்பட்ட கோய் மீன்கள் தொடர்ச்சியாக விசித்திரமான முறையில் உயிரிழந்ததை அவதானித்த உரிமையாளர், காரணம் தொடர்பில் சந்தேகமடைந்துள்ளார்.
</p><p>
மேலும், குளத்திற்கு அருகில் சந்தேகத்திற்கிடமான பொருளொன்று கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, அங்கு பொருத்தப்பட்டிருந்த CCTV காட்சிகளை ஆய்வு செய்தபோதே சம்பவத்தின் பின்னணி தெரியவந்துள்ளது.

இதையடுத்து விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், சந்தேகநபரை மறுநாள் லாக் சி பகுதியில் வைத்து கைது செய்துள்ளனர். </p><p>கைது செய்யப்பட்டபோது, சம்பவத்தன்று அணிந்திருந்த ஆடைகளையே அவர் அணிந்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2ac78282-8bc1-448c-a744-93b27c474e82/26-6aa85fbf47e2a.webp' /></p><p>விசாரணைகளின்போது குறித்த நபர் சம்பவத்தில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டதாகவும், போதைப்பொருள் பயன்படுத்தியிருந்ததாகவும் பொலிஸாரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.</p><p>
மேலும், கடந்த காலங்களிலும் விலங்குகள் மற்றும் பொருட்கள் தொடர்பில் இதுபோன்ற தகாத செயல்களில் ஈடுபட்டதாக அவர் தெரிவித்துள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர்.</p><p>

சுமார் ஏழு முதல் எட்டு ஆண்டுகளாக கோய் மீன்களை வளர்த்து வரும் குளத்தின் உரிமையாளர், மீன்கள் வித்தியாசமான நிலையில் உயிரிழந்ததைக் கண்டு ஆரம்பத்தில் அவை ஒன்றுடன் ஒன்று மோதியதன் காரணமாக உயிரிழந்திருக்கலாம் என கருதியதாக தெரிவித்துள்ளார்.
</p><p>
எனினும், CCTV காட்சிகளை ஆய்வு செய்த பின்னரே உண்மையான காரணம் தெரியவந்துள்ளது.
</p><p>
இந்தச் சம்பவம் தொடர்பில் விலங்கு வதை, சொத்து சேதம், ஒழுக்கக்கேடான செயற்பாடு மற்றும் இரவு நேரத்தில் அத்துமீறி நுழைதல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து தாய்லாந்து பொலிஸார் பரிசீலித்து வருகின்றனர்.
</p><p>
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p>]]></content>
            <updated>2026-09-14T23:30:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை காதலியைப் பார்க்க இந்தியாவிலிருந்து படகில் வந்த 14 வயது சிறுவன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/boy-who-came-india-see-his-sri-lankan-girlfriend-1789428469"></link>
            <id>https://jvpnews.com/article/boy-who-came-india-see-his-sri-lankan-girlfriend-1789428469</id>
            <summary type="text">முகநூல் ஊடாக அறிமுகமான இலங்கைச் சிறுமியை நேரில் சந்திப்பதற்காக, இந்தியாவில் இருந்து படகு மூலம் இலங்கைக்கு வந்ததாகக் கூறப்படும் 14 வயது சிறுவன் ஒருவர் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>முகநூல் ஊடாக அறிமுகமான இலங்கைச் சிறுமியை நேரில் சந்திப்பதற்காக, இந்தியாவில் இருந்து படகு மூலம் இலங்கைக்கு வந்ததாகக் கூறப்படும் 14 வயது சிறுவன் ஒருவர் தலைமன்னார் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>
</p><p></p><p>பொலிஸாருக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில், குறித்த சிறுவன் இந்தியாவின் ராமேஸ்வரம் – தனுஷ்கோடி பகுதியைச் சேர்ந்தவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.</p><p>

முகநூல் ஊடாக இலங்கையைச் சேர்ந்த சிறுமி ஒருவருடன் சிறுவனுக்கு அறிமுகம் ஏற்பட்டுள்ளதாகவும், அவரை நேரில் சந்திப்பதற்காகவே இலங்கைக்கு வருவதற்கு முயற்சித்ததாகவும் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8bb924a7-6051-4f09-9f66-b585cedf6525/26-6aa882f6cb9e0.webp' /></p><p>

இலங்கைக்கு வருவதற்கான படகுக் கட்டணத்தை செலுத்துவதற்கு போதிய பணம் இல்லாத நிலையில், சிறுவன் தன்னிடமிருந்த தங்கச் சங்கிலியை படகோட்டியிடம் வழங்கியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p>

மேலும், இலங்கைக்கு வந்தபோது சிறுவனிடம் இந்திய நாணயத்தில் 280 ரூபாய் மட்டுமே இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
இந்நிலையில், இலங்கைக்குள் வந்த சிறுவனை தலைமன்னார் பொலிஸார் கைது செய்து, மேலதிக நடவடிக்கைகளுக்காக தலைமன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர்.</p><p>

வழக்கை விசாரித்த தலைமன்னார் நீதிமன்றம், குறித்த 14 வயது சிறுவனை சிறுவர் காப்பகத்தில் தங்க வைக்க உத்தரவிட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
சம்பவம் தொடர்பில் தலைமன்னார் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
</p><p>
இச்சம்பவம், சமூக ஊடகங்கள் வாயிலாக அறிமுகமாகும் நபர்களை நேரில் சந்திப்பதற்காக சிறுவர்கள் ஆபத்தான முறையில் பயணிப்பதால் ஏற்படக்கூடிய அபாயங்கள் குறித்து பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலர்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தையும் எடுத்துக்காட்டுகிறது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-14T23:27:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[கண்ணிவெடிகளில் சிக்கிய எண்ணெய் கப்பல்: ஹார்முஸ் ஜலசந்தியில் முழுமையாக தீக்கிரையான அவலம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/oil-tanker-explodes-after-struck-naval-mine-1789425942"></link>
            <id>https://news.lankasri.com/article/oil-tanker-explodes-after-struck-naval-mine-1789425942</id>
            <summary type="text"> Oil Tanker Explodes after struck naval mine: ஹார்முஸ் ஜலசந்தியில் ஏற்பட்ட விபத்தில் எண்ணெய் தாங்கிக் கப்பல் ஒன்று தீப்பிடித்தது. ஹார்முஸ் ஜலசந்தியில்...</summary>
            <content type="html"><![CDATA[<p> Oil Tanker Explodes after struck naval mine: ஹார்முஸ் ஜலசந்தியில் ஏற்பட்ட விபத்தில் எண்ணெய் தாங்கிக் கப்பல் ஒன்று தீப்பிடித்தது.</p><h2> ஹார்முஸ் ஜலசந்தியில் விபத்து</h2><p>ஹார்முஸ் ஜலசந்தியின் தெற்கு பகுதியில் “எல் கையா”(El Gaia) என்ற பனாமா கொடி தாங்கிய எண்ணெய் கப்பல் ஒன்று தடை செய்யப்பட்ட கடற்பகுதிக்குள் நுழைந்ததை அடுத்து அங்கிருந்த கண்ணிவெடிகளில் மோதி பெரும் விபத்தில் சிக்கியது.</p><p> கண்ணிவெடிகள் வெடித்ததில் எண்ணெய் கப்பலில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டு தீ பரவியது.</p><p>வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட அனைத்து தீயணைப்பு முயற்சிகளும் தோல்வியடைந்ததாக திங்கட்கிழமை ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/798aa03a-078a-42a8-987d-ecb7cc9f040e/26-6aa8791857ec3.webp' /></p><p></p><p> மீட்பு முயற்சி தோல்வியடைந்ததை அடுத்து சுமார் 180 மீட்டர் நீளம் கொண்ட இந்தக் கப்பல் தற்போது முழுமையாக தீயில் எரிந்து வருகிறது.</p><p> ஈரானிய கடற்படை இதுவரை இந்த கப்பல் விபத்து தொடர்பான துல்லியமான நேரத்தை வெளியிடவில்லை.</p><h2> கப்பல் மற்றும் பணியாளர்கள் நிலைமை</h2><p>தரவுகளின் படி, “எல் கையா” கப்பல் சுமார் 48,000 டன் எடை கொள்ளளவு கொண்டது என்றும் விபத்து ஏற்பட்ட கப்பலில் இந்திய மாலுமிகள் இருந்தது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.</p><p> இதுவரை 13 பணியாளர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். மாயமான மாலுமி ஒருவரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.</p>]]></content>
            <updated>2026-09-14T23:26:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepachelvan</name>
            </author>
            <title type="text"><![CDATA[போர்க்குற்றவாளி இல்லையெனில் ஏன் சர்வதேச விசாரணைக்கு அஞ்ச வேண்டும்...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/shavendra-silva-fears-an-international-inquiry-1789427800"></link>
            <id>https://ibctamil.com/article/shavendra-silva-fears-an-international-inquiry-1789427800</id>
            <summary type="text">முள்ளிவாய்க்கால் இறுதிப் போரில் போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாகத் தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில...</summary>
            <content type="html"><![CDATA[<p>முள்ளிவாய்க்கால் இறுதிப் போரில் போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாகத் தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா மீண்டும் மறுத்துள்ளார். </p><p>இந்திய ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில், தான் போர்க்குற்றவாளி அல்ல என்றும், தன் மீதான குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்கத் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p>2020ஆம் ஆண்டு அமெரிக்காவும், 2025ஆம் ஆண்டு பிரித்தானியாவும் தன் மீது விதித்துள்ள தடைகள் குறித்தும் தனது கவலைகளை சவேந்திர சில்வா பேசியுள்ளார்.&nbsp;</p><p></p><h2>சவேந்திர சில்வாவின் குற்றங்கள்&nbsp;</h2><p>ஒரு இராணுவ அதிகாரி தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை மறுப்பது அவரது உரிமை. ஆனால் சவேந்திர சில்வா மீதான குற்றச்சாட்டுகள் வெறுமனே தமிழர்களின் அரசியல் குற்றச்சாட்டுகள் அல்ல என்பதையே முதலில் நினைவில் கொள்ள வேண்டும். </p><p>வடக்கு–கிழக்கில் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் இறுதிப்போரில் கொல்லப்பட்ட தங்கள் உறவுகளுக்காகவும், காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காகவும் இன்று வரை நீதியைத் தேடி நிற்கின்றன. </p><p>அவர்களின் சாட்சிகளும், மனித உரிமை அமைப்புகளின் ஆவணங்களும், ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணைகளும் இணைந்தே இந்தக் குற்றச்சாட்டுகள் உருவாகியுள்ளன.</p><p>

2009ஆம் ஆண்டு போரின் இறுதிக்கட்டத்தில் சவேந்திர சில்வா 58ஆவது படைப்பிரிவுக்குத் தலைமை தாங்கினார். அந்தப் படைப்பிரிவின் நடவடிக்கைகள் தொடர்பாக ஐ.நா. மனித உரிமை விசாரணைகள் தீவிரமான குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்துள்ளன. </p><p>பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள், சட்டவிரோதக் கொலைகள், சரணடைந்தவர்களின் படுகொலை, சித்திரவதை மற்றும் கட்டளைப் பொறுப்பின் கீழ் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் போன்றவை அவற்றில் அடங்குகின்றன. </p><p>இவை நீதிமன்றத்தால் நிரூபிக்கப்பட்ட குற்றங்கள் அல்ல; ஆனால் நம்பகமான சாட்சிகளும் ஆவணங்களும் அடிப்படையாகக் கொண்ட தீவிரமான குற்றச்சாட்டுகள் என்பதே அவற்றின் முக்கியத்துவம்.</p><p></p><h2>மக்னிட்ஸ்கி பாணித் தடை</h2><p>&nbsp;இதனால்தான் அமெரிக்கா 2020ஆம் ஆண்டு சவேந்திர சில்வாவுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் நுழைவுத் தடையை விதித்தது. இறுதிப்போரில் இடம்பெற்றதாகக் கூறப்படும் சட்டவிரோதக் கொலைகளுக்குப் பொறுப்பானவர் என்ற நம்பகமான தகவல்களின் அடிப்படையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்தது. </p><p>பின்னர் 2025ஆம் ஆண்டு பிரித்தானிய அரசும் அவருக்கு எதிராக பயணத்தடை மற்றும் சொத்து முடக்கம் உள்ளிட்ட தடைகளை விதித்தது. சரணடைய முயன்றவர்களை கொல்ல உத்தரவிட்டதாகவும், அவரது கட்டுப்பாட்டில் இருந்த படையினர் சட்டவிரோதக் கொலைகளில் ஈடுபட்டதாகவும் பிரித்தானியாவின் தடைக் காரணங்களில் குறிப்பிடப்பட்டது.
</p><p>
ஒரு நாட்டின் முன்னாள் இராணுவத் தளபதி மீது இரண்டு முக்கிய ஜனநாயக நாடுகள் மனித உரிமைத் தடைகளை விதிப்பது சாதாரணமான அரசியல் நிகழ்வல்ல. </p><p>இத்தகைய “மக்னிட்ஸ்கி பாணி” தடைகள் (உலகளவில் கடுமையான மனித உரிமை மீறல்கள் அல்லது ஊழல்களில் ஈடுபடும் குறிப்பிட்ட நபர்கள் அல்லது அமைப்புகளை இலக்கு வைத்து விதிக்கப்படும் ஒரு வகையான பொருளாதார மற்றும் பயணத் தடைகள்) பொதுவாக தீவிரமான மனித உரிமை மீறல்களுடன் தொடர்புடைய நம்பகமான ஆதாரங்களின் அடிப்படையிலேயே விதிக்கப்படுகின்றன. </p><p>எனவே, “எனக்குக் காரணம் தெரியவில்லை” என்று கூறுவது மட்டுமே அந்தத் தடைகளின் அரசியல் மற்றும் சட்டப் பின்னணியை அழித்துவிட முடியாது.</p><p></p><h2>நீதிக்கான கதவு திறக்குமா?&nbsp;</h2><p>இலங்கையின் உள்நாட்டு அரசியலில் சவேந்திர சில்வா போன்ற இராணுவத் தலைவர்கள் “யுத்த நாயகர்கள்” எனப் போற்றப்படுகின்றனர். நாட்டை பயங்கரவாதத்திலிருந்து மீட்ட இராணுவத்தின் பிரதிநிதிகளாக அவர்கள் சித்தரிக்கப்படுகிறார்கள். </p><p>ஆனால் சர்வதேச மனிதாபிமானச் சட்டம் வேறு ஒன்றைக் கூறுகிறது. ஒரு போரை வென்றிருப்பது, போரின் போது மனித உரிமைகளை மீறுவதற்கான உரிமையை வழங்காது. </p><p>பொதுமக்கள் இலக்காக்கப்பட்டார்களா, சரணடைந்தவர்கள் கொல்லப்பட்டார்களா, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் யார், கட்டளைகளின் பொறுப்பு யாருக்கு என்பது அனைத்தும் விசாரணைக்குரிய கேள்விகளே.
&nbsp;
</p><p>சவேந்திர சில்வா தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்கத் தயாராக இருப்பதாகக் கூறுகிறார். அப்படியானால் அவருக்கான மிகப் பெரிய வாய்ப்பும் அதுவே. </p><p>குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்றால், ஒரு சுதந்திரமான சர்வதேச விசாரணை அவரது பெயரைத் தூய்மைப்படுத்தும். குற்றங்கள் இடம்பெற்றிருந்தால், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நீதிக்கான கதவைத் திறக்கும்.&nbsp;</p><p>இலங்கை இதுவரை முழுமையான சர்வதேச அல்லது கலப்பு நீதிமன்ற விசாரணையை ஏற்கத் தயங்கியிருப்பதுதான் உலக நாடுகளின் சந்தேகத்தையும் அதிருப்தியையும் நீடிக்கச் செய்கிறது. </p><p>உண்மையை எதிர்கொள்ளும் தைரியம் இல்லாத இடத்தில் மறுப்புகள் மட்டுமே பெருகும். இறுதியில் கேள்வி சவேந்திர சில்வா அவர் உண்மையாகவே போர்க்குற்றவாளி இல்லையெனில், ஒரு சுதந்திரமான சர்வதேச விசாரணையை ஏன் அஞ்ச வேண்டும்?</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-14T23:22:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[மகிந்தவின் கூட்டத்தில் நடந்த அட்டகாசம் - அநுரவின் பகிரங்க எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/videos-of-scenes-at-mahinda-s-rally-anura-warning-1789418869"></link>
            <id>https://tamilwin.com/article/videos-of-scenes-at-mahinda-s-rally-anura-warning-1789418869</id>
            <summary type="text">அனுராதபுரத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நடத்திய அரசாங்க எதிர்ப்பு பேரணியில் பங்கேற்ற சில ஆதரவாளர்கள் பேரணி நிறைவடைந்த பின்னர் மதுபோதையில் இருப்பதாகக் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அனுராதபுரத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நடத்திய அரசாங்க எதிர்ப்பு பேரணியில் பங்கேற்ற சில ஆதரவாளர்கள் பேரணி நிறைவடைந்த பின்னர் மதுபோதையில் இருப்பதாகக் கூறப்படும் காணொளிகள் சமூக ஊடகங்களில் வெளியாகின.
</p><p>
இந்நிலையில் பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகரகாரியவசம் குடிப்பது அவர்களது உரிமை அதை யாரும் தடுபக்க முடியாது எனக் கூறியுள்ளார்.
</p><p>மேலும் அநுரவுக்கு எதிரான பேரணியில் நாமலுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டுள்ளது.</p><p>.இவை தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது நாட்டு நடப்புகள் நிகழ்ச்சி...</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/DM_VJcCmwvE" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-14T23:21:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஷிராந்தியை நெருங்கும் நிதிக் குற்றப் பிரிவு! மகிந்தவின் மாளிகையில் திடுக்கிடும் சம்பவம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/shiranthi-urgently-summons-police-officer-anura-1789426268"></link>
            <id>https://tamilwin.com/article/shiranthi-urgently-summons-police-officer-anura-1789426268</id>
            <summary type="text">தேசிய சேமிப்பு வங்கியிலிருந்து ‘சிரிலிய சவிய’ அமைப்பின் கணக்கில் 10 மில்லியன் ரூபா வைப்பு செய்யப்பட்டமை தொடர்பில், முன்னாள் முதல் பெண்மணி ஷிராந்தி ராஜ...</summary>
            <content type="html"><![CDATA[<p>தேசிய சேமிப்பு வங்கியிலிருந்து ‘சிரிலிய சவிய’ அமைப்பின் கணக்கில் 10 மில்லியன் ரூபா வைப்பு செய்யப்பட்டமை தொடர்பில், முன்னாள் முதல் பெண்மணி ஷிராந்தி ராஜபக்‌ஷவிடம் விசாரணை நடத்த பொலிஸ் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது.</p><p>கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலைக்கு சிடி ஸ்கேனர் ஒன்றைக் கொள்வனவு செய்வதாகக் கூறி திரட்டப்பட்ட நிதியில் முறைகேடு இடம்பெற்றதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பிலேயே இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>எனினும், குறித்த சிடி ஸ்கேனர் இயந்திரம் சீன அரசாங்கத்தினால் இலவசமாக நன்கொடையாக வழங்கப்பட்டமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p>ஏற்கனவே நாமல் ராஜபக்ச விளக்கமறியில் வைக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது இந்த விவகாரமும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><p>இதுதொடர்பில் விரிவாக ஆராய்கின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி...</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/e_N3-34LArk" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-14T23:16:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[AI-க்கு எதிரான அபத்தமான சதி! செயற்கை நுண்ணறிவுக்கு எதிரான ஒழுங்குமுறைக்கு டிரம்ப் எதிர்ப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/trump-dismisses-ai-regulation-calls-1789413966"></link>
            <id>https://news.lankasri.com/article/trump-dismisses-ai-regulation-calls-1789413966</id>
            <summary type="text">Trump Dismisses AI Regulation Calls as a Sick Conspiracy: செயற்கை நுண்ணறிவுக்கு கூடுதல் பாதுகாப்பு தேவையில்லை என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்...</summary>
            <content type="html"><![CDATA[<p>Trump Dismisses AI Regulation Calls as a Sick Conspiracy: செயற்கை நுண்ணறிவுக்கு கூடுதல் பாதுகாப்பு தேவையில்லை என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார்.</p><h2> ஆந்த்ரோபிக் CEO-யின் எச்சரிக்கை</h2><p>செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வேகத்தை குறைக்க வேண்டும் என பிரபல AI நிறுவனமான ஆந்த்ரோபிக்(Anthropic) தலைமை நிர்வாக அதிகாரி டாரியோ அமோடி(Dario Amodei) சமீபத்தில் வலியுறுத்தி இருந்தார்.</p><p> செயற்கை நுண்ணறிவுத் துறையின் கட்டுப்பாடற்ற தொழில்நுட்ப வளர்ச்சி எதிர்காலத்தில் மனித குலத்தின் கட்டுப்பாட்டை மீறிச் சென்று விடும் அபாயம் இருப்பதாகவும் டாரியோ அமோடி எச்சரித்து இருந்தார்.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">We Must Pace the Frontier: I’ve written a new essay on why the AI industry should slow down, with a three-part plan for doing so.<br><br>Anthropic is unilaterally committing to the first of these steps. We’ll provide third-party evaluators with permanent, employee-level access to our…</p>&mdash; Dario Amodei (@DarioAmodei) <a href="https://x.com/DarioAmodei/status/2098773920774074715?ref_src=twsrc%5Etfw">September 12, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p> ஆந்த்ரோபிக்-கின் தலைமை நிர்வாக அதிகாரி டாரியோ அமோடி முன்வைத்த செயற்கை நுண்ணறிவுக்கான கூடுதல் பாதுகாப்பு தேவைகளை ஓபன் ஏஐ(Open AI) நிறுவனத்தின் CEO சாம் ஆல்ட்மேன், டெஸ்லா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க் ஆகியோரும் அங்கீகரித்து இருந்தனர்.</p><h2> டிரம்பின் நிலைப்பாடு</h2><p>
இந்நிலையில் செயற்கை நுண்ணறிவுக்கு கூடுதல் பாதுகாப்பு தேவையில்லை என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தன்னுடைய நிலைப்பாட்டை உறுதிப்படுத்தியுள்ளார்.</p><p> &nbsp;ஆந்த்ரோபிக் CEO டாரியோ அமோடி முன்வைத்த கடுமையான தடைகள் தொடர்பான தேவைகள் மற்றும் வாதங்களை டிரம்ப் கடுமையாக நிராகரித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8a780ac8-aa70-4014-ab6c-4826558b588a/26-6aa84a4fa7e4c.webp' /></p><p> இது தொடர்பாக தன்னுடைய ட்ரூத் சோஷியல் பக்கத்தில் டிரம்ப் வெளியிட்ட கருத்தில், செயற்கை நுண்ணறிவு துறையின் வளர்ச்சியை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் அனைத்தும் இந்த துறைக்கு எதிரான ஒரு அபத்தமான சதி(Sick Conspiracy) என்று தெரிவித்துள்ளார்.</p><p> மேலும் அந்த பதிவில், ஆந்த்ரோபிக் CEO டாரியோ அமோடி-வை டிரம்ப் கடுமையாக விமர்சித்துள்ளார்.</p><p> குறிப்பாக, டாரியோ அமோடியை கிண்டல் செய்யும் வகையில், “அவர் தன்னை பரிசுத்தமான சிறிய தேவதை போல் காட்டிக் கொள்வதாக” குற்றஞ்சாட்டியுள்ளார்.</p>]]></content>
            <updated>2026-09-14T22:46:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[இஸ்லாமிய உலகிற்கு ஒரு சமிக்ஞையை அனுப்பிய மெக்கா பாதுகாப்பு ஒப்பந்தம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/mecca-security-agreement-signal-the-islamic-world-1789425579"></link>
            <id>https://ibctamil.com/article/mecca-security-agreement-signal-the-islamic-world-1789425579</id>
            <summary type="text">புதிய மெக்கா கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தத்தின் மூலம், துருக்கி, சவூதி அரேபியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய உறுப்பு நாடுகள் இஸ்லாமிய உலகிற்கு ஒரு செய்தியை அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>புதிய மெக்கா கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தத்தின் மூலம், துருக்கி, சவூதி அரேபியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய உறுப்பு நாடுகள் இஸ்லாமிய உலகிற்கு ஒரு செய்தியை அனுப்பும் விதமாக ஒரு படியை எடுத்துள்ளன என்று துருக்கி ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகன் தெரிவித்துளார்.</p><p>துருக்கியின் சம்சுன் மாகாணத்தில் இளைஞர்களுடன் நடைபெற்ற ஒரு சிறப்பு நிகழ்ச்சியில் பேசிய எர்டோகன் இதனை கூறியுள்ளார்.</p><p>கடந்த மாதம் கையெழுத்திடப்பட்ட இந்த ஒப்பந்தம் நேர்மறையான முன்னேற்றங்களுக்கு ​​வழிவகுத்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.</p><p></p><h2>நேர்மறையான முன்னேற்றங்கள்</h2><p>சவூதி அரேபியா, பாகிஸ்தான் மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் ஒன்றிணைந்து ஒரு அடியை எடுத்து வைத்துள்ளன. இந்த அடியின் மூலம், இஸ்லாமிய உலகிற்கு ஒரு செய்தியை அனுப்புவோம் எனவும் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/358c8d4d-e832-4184-abcd-3dbc4ecf275b/26-6aa877d5179a3.webp' /></p><p>“நேர்மறையான முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன, இதில் நாம் வெற்றி பெறுவோம்” என&nbsp;எர்டோகன் விளக்கமளித்துள்ளார்.</p><p> பிரதிநிதித்துவமற்றது மற்றும் நியாயமற்றது என்று அவர் நீண்ட காலமாக விமர்சித்து வரும் ஐ.நா. பாதுகாப்பு சபையின் ஐந்து நிரந்தர உறுப்பினர்களைக் குறிப்பிட்டு, உலகம் ஐந்தை விடப் பெரியது என்ற தனது நீண்டகாலக் கூற்று குறித்த கேள்விக்குப் பதிலளிக்கும் விதமாக எர்டோகன் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.</p><p>

சர்வதேச அமைப்பில் சீர்திருத்தம் செய்ய வேண்டும் என்ற தனது அழைப்பை மீண்டும் வலியுறுத்திய அவர், ஒரு நியாயமான உலகத்திற்காக துருக்கி தொடர்ந்து குரல் கொடுக்கும் என்றும் கூறியுள்ளார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-14T22:39:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்க வர்த்தகப் போரில் சிக்கியுள்ள கார்னி: சர்வதேச முதலீட்டாளர்களுக்கு அழைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/carney-caught-up-in-us-trade-war-1789424517"></link>
            <id>https://ibctamil.com/article/carney-caught-up-in-us-trade-war-1789424517</id>
            <summary type="text">கனடா பிரதமர் மார்க் கார்னி இந்த வாரம் டொராண்டோவிற்கு வருகை தரும் பல உலகளாவிய முதலீட்டாளர்களை வரவேற்கும் நடவடிக்கையில் குதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிற...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடா பிரதமர் மார்க் கார்னி இந்த வாரம் டொராண்டோவிற்கு வருகை தரும் பல உலகளாவிய முதலீட்டாளர்களை வரவேற்கும் நடவடிக்கையில் குதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p> 
அமெரிக்காவுடனான வர்த்தகப் போரின் ஊடாக கனடாவின் பொருளாதாரத்தை வழிநடத்துவதற்கு முக்கியம் எனக் கூறும் 160-க்கும் மேற்பட்ட திட்டங்களுக்கு முதலீடுகளை ஈர்க்கும் நம்பிக்கையில், இந்த நடவடிக்கையில் கார்னி ஈடுபட்டுள்ளார்.
</p><p>
கோல்ட்மேன் சாக்ஸின் முன்னாள் நிர்வாகியும் மத்திய வங்கித் தலைவருமான கார்னி, திங்களன்று பிளாக்ராக் (BLK.N) உள்ளிட்ட பங்கேற்பாளர்களுடன் இருதரப்பு சந்திப்புகளை நடத்தியதான தெரிவிக்கப்படுகிறது.
</p><p></p><h2>721 பில்லியன் அமெரிக்க டொலர் முதலீடு</h2><p>
முக்கியமாக இன்று நடைபெறவுள்ள இந்த உச்சிமாநாட்டில், எதிர்கால முதலீடுகள் குறித்த விவாதங்கள் இடம்பெறும் என்றும் கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c24b5c88-8cda-4309-8643-19cf077f133c/26-6aa873b0f31b8.webp' /></p><p>
</p><p>
 இருப்பினும், முக்கிய ஒப்பந்தங்கள் கைகூடுவதற்கு 12 முதல் 18 மாதங்கள் ஆகலாம் என கனேடிய அரசாங்க வட்டாரங்கள் தெரிவிப்பதாக கூறப்படுகிறது.</p><p>

தேவையற்ற நிர்வாகத் தடைகளைக் குறைத்து, சுரங்கம், எரிசக்தி, தொழில்நுட்பம் மற்றும் உள்கட்டமைப்புத் திட்டங்களை மேம்படுத்துவதன் மூலம், அடுத்த ஐந்து ஆண்டுகளில் 1 டிரில்லியன் கனடிய டாலர் (721 பில்லியன் அமெரிக்க டொலர்) முதலீடுகளை ஈர்ப்பதாக கார்னி உறுதியளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-14T22:30:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல் : ஐ.நா. கடும் கண்டனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/un-strongly-condemns-killing-of-two-children-1789420673"></link>
            <id>https://tamilwin.com/article/un-strongly-condemns-killing-of-two-children-1789420673</id>
            <summary type="text">கொழும்பு, தெஹிவளையில் இடம்பெற்ற கைக்குண்டுத் தாக்குதலில் இரண்டு சிறுவர்கள்
கொல்லப்பட்ட சம்பவத்துக்கு இலங்கையிலுள்ள ஐக்கிய நாடுகள் சபை கடும்
கண்டனத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு, தெஹிவளையில் இடம்பெற்ற கைக்குண்டுத் தாக்குதலில் இரண்டு சிறுவர்கள்
கொல்லப்பட்ட சம்பவத்துக்கு இலங்கையிலுள்ள ஐக்கிய நாடுகள் சபை கடும்
கண்டனத்தைத் தெரிவித்துள்ளது. </p><p>அத்துடன் இந்தக் கொடூர செயலுக்குப்
பொறுப்பானவர்கள் உடனடியாகச் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்றும் அது
வலியுறுத்தியுள்ளது.
</p><h2>உயிரிழந்த சிறுவர்களின் குடும்பத்தினர்</h2><p>
இது குறித்து இலங்கையிலுள்ள ஐ.நா. வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க் -
அன்ட்ரூ பிரெஞ்ச் தனது உத்தியோகபூர்வ எக்ஸ் பக்கத்தில் விடுத்துள்ள பதிவில்,

"தெஹிவளையில் இரு சிறுவர்கள் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் மனவேதனையளிக்கின்றது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a5a6ddaf-343e-44e2-ad24-1443b96b04b2/26-6aa8744cf0c0b.webp' /></p><p>எந்தவொரு குழந்தையும் இத்தகைய கொடூர வன்முறைக்கு இரையாகக் கூடாது. இதற்குப்
பொறுப்பானவர்கள் உடனடியாகச் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு பதில் கூறியாக
வேண்டும். </p><p>உயிரிழந்த சிறுவர்களின் குடும்பத்தினருக்கும் அன்பானவர்களுக்கும்
எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கின்றேன்" - என்று குறிப்பிட்டுள்ளார்.</p><h2>வேறு ஒரு வீட்டை இலக்கு வைத்து</h2><p>
</p><p>
தெஹிவளை பகுதியிலுள்ள வீடொன்றின் மீது கடந்த 11 ஆம் திகதி அதிகாலை ஓட்டோவில்
வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கைக்குண்டு வீசித் தாக்குதல்
நடத்தியிருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2892d584-b1a6-474a-8d65-afea50dacd53/26-6aa8744da510c.webp' /></p><p>இந்தத் தாக்குதலில் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த 11 மற்றும் 17 வயதுடைய
இரண்டு சகோதரர்கள் பரிதாபமாக உயிரிழந்தமையுடன் அவர்களின் தந்தையும்
படுகாயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
</p><p>
தாக்குதலாளிகள் வேறு ஒரு வீட்டை இலக்கு வைத்துத் தவறுதலாக இந்தத் தாக்குதலை
நடத்தியிருக்கலாம் என்று பொலிஸார் ஆரம்பகட்ட விசாரணைகளில் சந்தேகம்
வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-14T22:25:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[முள்ளிவாய்க்கால் முற்றத்தில் நினைவேந்தல் சுவர் இடிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/demolition-memorial-wall-at-mullivaikkal-mutram-1789409172"></link>
            <id>https://ibctamil.com/article/demolition-memorial-wall-at-mullivaikkal-mutram-1789409172</id>
            <summary type="text">முள்ளிவாய்க்கால் முற்றத்தின் நினைவேந்தல் சுவர் இடிக்கப்பட்ட காணொளி சமூக ஊடகங்களில் விவாதத்தை கிளப்பியுள்ளது.

2009ஆம் ஆண்டு இறுதிக்கட்டப் போரில் உயி...</summary>
            <content type="html"><![CDATA[<p>முள்ளிவாய்க்கால் முற்றத்தின் நினைவேந்தல் சுவர் இடிக்கப்பட்ட காணொளி சமூக ஊடகங்களில் விவாதத்தை கிளப்பியுள்ளது.
</p><p>
2009ஆம் ஆண்டு இறுதிக்கட்டப் போரில் உயிரிழந்த தமிழ் மக்களை நினைவுகூரும் மிக முக்கியமானதொரு வரலாற்று இடத்தில் அமைந்துள்ள நினைவேந்தல் சுவரே இவ்வாறு இடிக்கப்பட்டுள்ளது.
</p><p>
நீதிமன்ற உத்தரவுக்கு அமைய இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி (TNPF) கட்சியைச் சேர்ந்த ஒரு முக்கிய அரசியல்வாதியும் யாழ்ப்பாண மாநகர சபை முன்னாள் உறுப்பினருமான ரத்னம் சதீஸ், வீதி அபிவிருத்தி அதிகார சபையால் இந்த செயற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளது என்ற விடயத்தை தனது முகநூலில் பகிர்ந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/53251a8b-8961-4e3e-9b0a-d686f57765f8/26-6aa837962d7c0.webp' /></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள I<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">BC தமிழ் WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-14T21:49:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/man-killed-by-police-after-woman-infant-reportedly-1789402889"></link>
            <id>https://canadamirror.com/article/man-killed-by-police-after-woman-infant-reportedly-1789402889</id>
            <summary type="text">கனடாவில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கனடாவின் அல்பெர்ட்டா மாகாணத்தில் உள்ள எட்மண்டன் நகரின் தென்மேற்குப் ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.</p><p>
கனடாவின் அல்பெர்ட்டா மாகாணத்தில் உள்ள எட்மண்டன் நகரின் தென்மேற்குப் பகுதியில், பெண்ணையும் குழந்தையையும் சுட்ட 36 வயது நபரை காவல்துறையினர் சுட்டுக் கொன்றனர். </p><p>
ஞாயிற்றுக்கிழமை காலையில் டான்ஸ்டேல் டிரைவ் மற்றும் 45-வது அவென்யூ பகுதிக்கு அருகில் உள்ள வீடு ஒன்றிற்குள் துப்பாக்கியுடன் நுழைந்த அந்த நபர், அங்கிருந்த பெண்ணையும் ஒரு குழந்தையையும் சுட்டதாக எட்மண்டன் காவல் துறைக்கு அவசரத் தகவல் கிடைத்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/799d4e77-0e93-44b6-867e-51229102c334/26-6aa81f0bc7ce8.webp' /></p><p>
</p><p>தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், காயமடைந்த சிலர் வீட்டின் வெளியே தவித்துக் கொண்டிருப்பதைக் கண்டனர். 
தொடர்ந்து வீட்டைச் சுற்றி வளைக்க முயன்றபோது, அந்த நபர் கையில் துப்பாக்கியுடன் வீட்டின் முன் கதவைத் திறந்து வெளியே வந்துள்ளார்.</p><p> 
அப்போது அதிகாரிகள் கொடுத்த வாய்மொழி எச்சரிக்கைகளை அவர் மதிக்கத் தவறியதால், அங்கிருந்த மூன்று காவலர்கள் அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். </p><p>
மருத்துவக் குழுவினர் அவருக்கு உடனடியாக முதலுதவி சிகிச்சை அளித்தபோதிலும், அந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.</p><p>
இந்தச் சம்பவத்தில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காயமடைந்த இரண்டு பெண்கள் மற்றும் ஒரு குழந்தை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
</p><p>அவர்களின் காயங்கள் உயிருக்கு ஆபத்தானவை அல்ல எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>
இதனிடையே, காவல்துறையினர் நடத்திய இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து தற்போது விரிவான விசாரணை மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-14T21:11:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[லண்டனில் முதலமைச்சர் விஜய் முன்னிலையில் ரூ.11,000 கோடி முதலீடு ; 7000 பேருக்கு வேலைவாய்ப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/11-000-crore-secured-london-presence-chief-vijay-1789406889"></link>
            <id>https://jvpnews.com/article/11-000-crore-secured-london-presence-chief-vijay-1789406889</id>
            <summary type="text">தமிழ்நாட்டில் சுமார் இந்திய மதிப்பில் 11,000 கோடி ரூபாய் முதலீட்டில் 7000 பேருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில், முதலமைச்சர் விஜய் முன்னிலையில்...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழ்நாட்டில் சுமார் இந்திய மதிப்பில் 11,000 கோடி ரூபாய் முதலீட்டில் 7000 பேருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில், முதலமைச்சர் விஜய் முன்னிலையில் லண்டனில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது.</p><p>
</p><p></p><p>தொழில் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் பிரித்தானியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்க்கு, லண்டனில் வசிக்கும் தமிழர்கள் உற்சாக வரவேற்பு அளித்திருந்தனர்.
</p><p>
இந்த நிலையில், இன்று (14) லண்டனில் நடைபெற்ற முதலீட்டாளர் சந்திப்பில், சம்வர்தனா மதர்சன் இன்டர்நேஷனல் லிமிடெட் (Samvardhana Motherson International Ltd.) நிறுவனம், அதன் ஐரோப்பா மற்றும் இங்கிலாந்தைச் சேர்ந்த கூட்டு நிறுவனங்களுடன் இணைந்து, தமிழ்நாடு அரசின் வழிகாட்டி நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/79990f73-9e9e-4308-ad3a-75d014484de7/26-6aa82eaad318a.webp' /></p><p>இதன்படி, வடிவமைப்பு, பொறியியல், உற்பத்தி, கூட்டிணைப்பு மற்றும் தளபாட வசதிகள் உள்ளிட்ட துறைகளில் சுமார் 11,000 கோடி ரூபாய் முதலீடு செய்யப்படவுள்ளதுடன், சுமார் 7000 பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இதனைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் உலகளாவிய திறன் மையங்களை (Global Capability Centres – GCCs) நிறுவுவதற்கும் விரிவுபடுத்துவதற்கும் மேலும் இரண்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன.
</p><p>
இங்கிலாந்தை தலைமையிடமாகக் கொண்ட முன்னணி உலகளாவிய தகவல் தொடர்பு நிறுவனம், சென்னையில் உலகளாவிய திறன் மையம் ஒன்றை அமைப்பதற்காக தமிழ்நாடு அரசின் வழிகாட்டி நிறுவனம் மற்றும் ஏர்ன்ஸ்ட் &amp; யங் (Ernst &amp; Young) நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டுள்ளது.
</p><p>
சுமார் 1000 கோடி ரூபாய் முதலீட்டில் அமையவுள்ள இந்த மையத்தின் ஊடாக 2000க்கும் மேற்பட்ட உயர் மதிப்புடைய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படவுள்ளன.
</p><p>
இந்த மையம், சென்னையின் மவுண்ட் பூந்தமல்லி வீதியில் புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள GCC கொரிடார் பகுதியில் அமைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
மேலும், சுவீடனைச் சேர்ந்த சிக்மா டெக்னாலஜி குரூப் (Sigma Technology Group), தனது இந்திய நிறுவனமான ஸ்ரியா சொல்யூஷன்ஸ் (Sria Solutions) மூலம், திருச்சிராப்பள்ளி மற்றும் சென்னையில் இயங்கி வரும் உலகளாவிய திறன் மையங்களை விரிவுபடுத்துவதற்கும் உறுதியளித்துள்ளது.</p><p>

இதன்மூலம் எம்பெடட் சிஸ்டம்ஸ், மின்மயமாக்கல் மற்றும் தொழில்துறை டிஜிட்டல் மயமாக்கல் உள்ளிட்ட துறைகளில் 600 உயர் மதிப்புடைய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படவுள்ளன.
</p><p>
இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், முதலமைச்சர் விஜய் முன்னிலையில், சிக்மா டெக்னாலஜி குரூப் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி மைக்கேல் கார்ல்சன், ஸ்ரியா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கிருஷ்ணா ராதாகிருஷ்ணன் மற்றும் தமிழ்நாடு அரசின் வழிகாட்டி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் தீபக் ஜேக்கப் IAS ஆகியோருக்கு இடையே பரிமாறிக் கொள்ளப்பட்டது.
</p><p>
இந்த முதலீடுகள் மூலம் தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சி மற்றும் உயர்தர வேலைவாய்ப்புகள் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-14T21:11:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[இத்தாலியில் பெண்ணை கொடூரமாக தாக்கிய இலங்கை இளைஞனை துரத்தி பிடித்த பொலிஸ்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-lankan-boy-arrested-in-italy-1789396538"></link>
            <id>https://tamilwin.com/article/sri-lankan-boy-arrested-in-italy-1789396538</id>
            <summary type="text">இத்தாலியின் வெரோனா நகரில் சுப்பர் மார்க்கெட் ஒன்றிலிருந்து மதுபானப் போத்தல்களைத் திருடிவிட்டு, தப்பியோட முற்பட்டபோது, பெண் ஊழியர் ஒருவரை தாக்கிய 29 வய...</summary>
            <content type="html"><![CDATA[<p>இத்தாலியின் வெரோனா நகரில் சுப்பர் மார்க்கெட் ஒன்றிலிருந்து மதுபானப் போத்தல்களைத் திருடிவிட்டு, தப்பியோட முற்பட்டபோது, பெண் ஊழியர் ஒருவரை தாக்கிய 29 வயதுடைய இலங்கையர் கைது செய்யப்பட்டுள்ளார். </p><p>இந்தச் சம்பவம்&nbsp; Vicolo Fossetto பகுதியில் அமைந்துள்ள கடை ஒன்றில் இடம்பெற்றுள்ளது. </p><p>குறித்த இலங்கையர் அலுமாரிகளில் இருந்த பல மதுபானப் போத்தல்களை எடுத்து தனது பைக்குள் மறைத்து வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. </p><h2><b>பெண் மீது தாக்குதல்</b></h2><p>பணம் செலுத்தாமல் காசாளர் பகுதியைக் கடந்து வெளியேறும் பகுதியை நோக்கிச் சென்றுள்ளார். ஊழியர் ஒருவர் அவரை அணுகி திருடப்பட்ட பொருட்களைத் திருப்பி தருமாறு கோரியுள்ளார். எனினும் அவர் ஊழியரை உடல் ரீதியாக தாக்கியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2a03fafc-08cd-4e3e-aa39-7d9d716c3277/26-6aa81c6181bf1.webp' /></p><p>ஊழியரை கீழே தள்ளியதோடு, திருடப்பட்ட பொருட்களுடன் இலங்கையர் தப்பியோடியுள்ளார். </p><p> கீழே விழுந்த பெண் எழுந்து, தனக்கு உதவ நின்ற வாடிக்கையாளர் ஒருவரின் காரில் இலங்கையரை துரத்தத் தொடங்கினார். </p><p>அங்கு வசிப்பவர் ஒருவர் சந்தேக நபரை அடையாளம் கண்டு, சந்தேக நபர் எங்கு பதுங்கியிருக்கின்றார் என்பதை அதிகாரிகளுக்கு தெரிவித்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p> </p><h3><b>சட்டவிரோத குடியேற்றவாசி</b></h3><p>சோதனையின் போது, பையில் திருடப்பட்ட இரண்டு மதுபானப் போத்தல்களைக் கண்டெடுத்தனர். தப்பியோடும்போது கைவிடப்பட்ட மூன்றாவது மதுபான போத்தல் அதிகாரிகளால் மீட்கப்பட்டது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ef89cfd9-9a3d-4d28-976c-4469b8d7f026/26-6aa81c6272d81.webp' /></p><p>இந்நிலையில் விற்பனை செய்யக்கூடிய நிலையில் இருந்த அனைத்துப் பொருட்களும் அதன் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டன. </p><p>விசாரணையை தொடர்ந்து பல குற்றப் பின்னணியை கொண்டவரும் சட்டவிரோதமான குடியேற்றவாசியுமான இலங்கையர் கைது செய்யப்பட்டார். </p>]]></content>
            <updated>2026-09-14T21:10:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[சீனாவில் உண்மையான மீனைப் போல நீந்தும் செயற்கை மீன் ; இணையத்தில் கவனம் ஈர்க்கும் காட்சிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/robot-fish-that-swims-like-a-real-fish-china-1789417828"></link>
            <id>https://canadamirror.com/article/robot-fish-that-swims-like-a-real-fish-china-1789417828</id>
            <summary type="text">உண்மையான மீனைப் போலவே நீருக்கடியில் தத்ரூபமாக நீந்தக்கூடிய அதிநவீன ரோபோ மீன் ஒன்று சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

சீனாவில் நடைபெற்ற சர்வதேச ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>உண்மையான மீனைப் போலவே நீருக்கடியில் தத்ரூபமாக நீந்தக்கூடிய அதிநவீன ரோபோ மீன் ஒன்று சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
</p><p>
சீனாவில் நடைபெற்ற சர்வதேச சேவை வர்த்தகக் கண்காட்சியான CIFTIS-இல், ‘BG-5 Golden Dragon Fish’ என்ற இந்த ரோபோ மீன் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c2375680-c080-40fd-b572-ee90a90ef0d6/26-6aa8596640536.webp' /></p><p>

சாதாரணமாகப் பார்க்கும்போது இது செயற்கையாக உருவாக்கப்பட்ட ரோபோ மீன் என்பதைக் கண்டறிவது மிகவும் கடினமாக இருக்கும் வகையில், உண்மையான மீனைப் போன்ற தோற்றத்துடனும் நீச்சல் இயக்கத்துடனும் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
</p><p>
இந்த அதிநவீன ரோபோ மீனை கடல்சார் தொழில்நுட்ப நிறுவனமான ROBOSEA உருவாக்கியுள்ளது.</p><p>

நீரடிப் பகுதிகளில் உளவுப் பணிகள், ரகசியக் கண்காணிப்பு நடவடிக்கைகள் மற்றும் கடல்சார் ஆராய்ச்சிப் பணிகள் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக இந்த ரோபோ மீனைப் பயன்படுத்த முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

உண்மையான மீனைப் போன்றே நீந்தக்கூடிய இந்த ரோபோவின் தொழில்நுட்பத் திறன், கண்காட்சிக்கு வந்த பார்வையாளர்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-14T20:30:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[அணுசக்தி மாநாட்டில் ஈரான் பங்கேற்பதற்கு அமெரிக்கா தடை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/us-bans-iran-participating-in-nuclear-conference-1789414569"></link>
            <id>https://tamilwin.com/article/us-bans-iran-participating-in-nuclear-conference-1789414569</id>
            <summary type="text">வியன்னாவில் நடைபெற்று வரும் சர்வதேச அணுசக்தி முகவரகத்தின் (IAEA) வருடாந்த
பொது மாநாட்டில், ஈரானின் அணுசக்தித் தலைவர் மொஹமட் எஸ்லாமி பங்கேற்பதைத்
தடு...</summary>
            <content type="html"><![CDATA[<p>வியன்னாவில் நடைபெற்று வரும் சர்வதேச அணுசக்தி முகவரகத்தின் (IAEA) வருடாந்த
பொது மாநாட்டில், ஈரானின் அணுசக்தித் தலைவர் மொஹமட் எஸ்லாமி பங்கேற்பதைத்
தடுக்கும் வகையில் அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தியுள்ளமைக்கு
ஈரான் கடும் எதிர்ப்பினை வெளியிட்டுள்ளது.
</p><p>
ஈரான் மீது மீண்டும் விதிக்கப்பட்டுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் பயணத்
தடைகளிலிருந்து மொஹமட் எஸ்லாமிக்கு விலக்கு அளிக்குமாறு மாநாட்டை நடத்தும்
ஆஸ்திரியா விடுத்த கோரிக்கையை, ஐ.நா. பாதுகாப்புச் சபையின் பொருளாதாரத்
தடைக்குழுவில் அமெரிக்கா நிராகரித்துள்ளது.
</p><h2>அரசியல் நோக்கம் கொண்டது என</h2><p>
இதனைத் தொடர்ந்து ஆஸ்திரியாவினால் அவருக்கு வழங்கப்பட்ட விசா இரத்து
செய்யப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c41e2bcf-1116-407f-81d7-f71e11978af7/26-6aa853d01a708.webp' /></p><p>

அமெரிக்காவின் இந்த நடவடிக்கை முற்றிலும் அரசியல் நோக்கம் கொண்டது எனவும்,
சர்வதேச அமைப்பினைத் தனது அரசியல் தேவைகளுக்காகப் பயன்படுத்துவதாகவும் ஈரான்
குற்றம் சுமத்தியுள்ளது.</p><p>இருப்பினும், ஈரானிய பிரதிநிதி மாநாட்டைத் தனது பிரச்சார மேடையாகப்
பயன்படுத்துவதைத் தடுக்கும் நோக்கிலேயே இந்த விலக்கு கோரிக்கை
நிராகரிக்கப்பட்டதாக அமெரிக்கா தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-14T20:06:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹவுதிகளுடன் நேரடி பேச்சுவார்த்தையை தொடங்கியது அமெரிக்கா: ஜே.டி வான்ஸ் தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/us-starts-direct-talks-with-houthis-1789416325"></link>
            <id>https://news.lankasri.com/article/us-starts-direct-talks-with-houthis-1789416325</id>
            <summary type="text">US Starts Direct Talks with Houthis Following Perim Island Seizure: ஹவுதிகளுடன் நேரடியாக பேச்சுவார்த்தையை தொடங்கி இருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது....</summary>
            <content type="html"><![CDATA[<p>US Starts Direct Talks with Houthis Following Perim Island Seizure: ஹவுதிகளுடன் நேரடியாக பேச்சுவார்த்தையை தொடங்கி இருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.</p><h2> பெரிம் தீவை கைப்பற்றிய ஹவுதிகள்</h2><p>செங்கடலின் கிழக்கு கடற்கரைக்கு அருகே இராஜதந்திர ரீதியில் முக்கியமாக அமைந்துள்ள பெரிம்(Perim) தீவை ஹவுதிகள் கைப்பற்றியுள்ளனர்.</p><p> இந்த பெரிம் தீவானது முக்கியமான சர்வதேச கடல்வழிப் போக்குவரத்து பாதையான பாப் எல்-மண்டப் ஜலசந்திக்கு அருகில் அமைந்துள்ளது. எனவே இந்த கைப்பற்றல் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு முக்கிய ராணுவ பலத்தை பெற்றுத் தந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/524d768d-a419-4f81-ba24-6d97cbda9595/26-6aa853873c11a.webp' /></p><h2> அமெரிக்கா தலையீடு</h2><p>இந்நிலையில் ஹவுதி கிளர்ச்சியாளர்களுடன் நேரடித் தொடர்புகளை அமெரிக்கா தொடங்கியுள்ளது.</p><p> கான்சாஸ் மாகாணத்திற்கு புறப்படுவதற்கு சற்று முன்பு ஜாயிண்ட் பேஸ் ஆண்ட்ரூஸில் செய்தியாளர்களை சந்தித்த அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி வான்ஸ், மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள புதிய நெருக்கடியை அமெரிக்கா தீவிரமாக கையாண்டு வருவதாக உறுதிப்படுத்தியுள்ளார்.</p><p> அத்துடன் இது தொடர்பாக சவுதி அரேபியா, எமிரேட்ஸ் மற்றும் அப்பகுதியை சுற்றி பாதிக்கப்பட்ட மற்ற தரப்பினருடனும் அமெரிக்கா தொடர்ந்து தொடர்பில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.</p><p> மேலும் நிலைமையை அமெரிக்கா உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.<br></p>]]></content>
            <updated>2026-09-14T20:05:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[அஸ்வெசும கொடுப்பனவு குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/announcement-regarding-the-aswesuma-allowance-1789415796"></link>
            <id>https://jvpnews.com/article/announcement-regarding-the-aswesuma-allowance-1789415796</id>
            <summary type="text">செப்டெம்பர் மாதத்திற்குரிய &#039;அஸ்வெசும&#039; கொடுப்பனவு எதிர்வரும் 16ஆம் திகதி பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்புச் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என நலன்...</summary>
            <content type="html"><![CDATA[<p>செப்டெம்பர் மாதத்திற்குரிய 'அஸ்வெசும' கொடுப்பனவு எதிர்வரும் 16ஆம் திகதி பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்புச் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என நலன்புரிப் நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.</p><p> </p><p></p><p>அறிக்கையொன்றை வெளியிட்டு நலன்புரிப் நன்மைகள் சபை இதனைக் குறிப்பிட்டுள்ளது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c8abff56-9849-4fe9-9c59-913860015833/26-6aa851764fc28.webp' /></p><p>இதற்கமைய, அஸ்வெசும நலன்புரிப் நன்மைகள் திட்டத்தின் முதலாம் கட்டத்தின் கீழ் பலனடையும் 9,99,053 குடும்பங்களின் வங்கிக் கணக்குகளில் 9 பில்லினே 181 மில்லியனே 696 ஆயிரத்து 250 ரூபா நிதி வைப்புச் செய்யப்படவுள்ளது. </p><p>

அத்துடன், அதன் இரண்டாம் கட்டத்தின் கீழ் பலனடையும் 2,13,335 குடும்பங்களுக்கு 2 பில்லியனே 120 மில்லியனே 856 ஆயிரத்து 250 ரூபா நிதியை செலுத்துவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. </p><p>

இதன்படி, இந்த நிதியை எதிர்வரும் 17ஆம் திகதி முதல் பயனாளிகள் பெற்றுக்கொள்ள முடியும் என நலன்புரிப் நன்மைகள் சபை மேலும் தெரிவித்துள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-14T19:57:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[அஹுங்கல்லையில் துப்பாக்கிச்சூடு முயற்சி ; மரணத்தின் விளிம்பில் இருந்து தப்பிய பெண்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/attempted-shooting-woman-escapes-brink-death-1789414826"></link>
            <id>https://jvpnews.com/article/attempted-shooting-woman-escapes-brink-death-1789414826</id>
            <summary type="text">அம்பலாங்கொடை - அஹுங்கல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெலிகந்த பகுதியில் உள்ள வீடொன்றிற்கு இன்று (14) இரவு பிரவேசித்த நபரொருவர், அங்கிருந்த பெண் மீது துப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>அம்பலாங்கொடை - அஹுங்கல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெலிகந்த பகுதியில் உள்ள வீடொன்றிற்கு இன்று (14) இரவு பிரவேசித்த நபரொருவர், அங்கிருந்த பெண் மீது துப்பாக்கிச் சூடு நடத்த முற்பட்ட போதிலும், துப்பாக்கி இயங்காத காரணத்தினால் அத்தாக்குதல் முயற்சி தோல்வியில் முடிவடைந்துள்ளது.</p><p> </p><p></p><h3>மேலதிக விசாரணை</h3><p>சம்பவம் நடந்த நேரத்தில் குறித்த வீட்டில் அந்தப் பெண் மட்டுமே இருந்துள்ளதுடன், நபரொருவர் வந்து கதவைத் தட்டியதை அடுத்து அவர் கதவைத் திறந்துள்ளார்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5480f5f9-17da-4561-89fa-c1dfa64d2617/26-6aa84dac3e4f2.webp' /></p><p>அந்தக் கணமே செயற்பட்ட அந்த நபர், பெண் மீது துப்பாக்கிச் சூடு நடத்த முயன்ற போதிலும் துப்பாக்கி இயங்கவில்லை. 

இதனையடுத்து, துப்பாக்கிச் சூடு நடத்த வந்த நபர் அவ்விடத்திலிருந்து தப்பியோடியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். </p><p>

இவ்வாறு அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய பெண், போதைப்பொருள் கடத்தல் சம்பவங்கள் தொடர்பில் பலமுறை சிறைவாசம் அனுபவித்த 'குடு நோனி' என்று அழைக்கப்படும் லியன கமகே அனோமா என்ற பெண் ஆவார். 

சம்பவம் தொடர்பில் அஹுங்கல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-14T19:40:33+00:00</updated>
        </entry>
    </feed>
