<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-09-17T05:22:27+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[500 ரூபாய் வாங்கிய நீதிமன்ற அலுவலக ஊழியர் அதிரடி கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/court-office-worker-arrested-for-taking-bribe-1789621871"></link>
            <id>https://jvpnews.com/article/court-office-worker-arrested-for-taking-bribe-1789621871</id>
            <summary type="text">வழக்குத் தீர்ப்பின் பிரதியினை வழங்குவதற்காக 500 ரூபாய் பணத்தை லஞ்சமாக கோரி பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டின் பேரில், கோட்டை நீதிவான் நீதிமன்றில் கடமையாற்...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">வழக்குத் தீர்ப்பின் பிரதியினை வழங்குவதற்காக 500 ரூபாய் பணத்தை லஞ்சமாக கோரி பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டின் பேரில், கோட்டை நீதிவான் நீதிமன்றில் கடமையாற்றும் அலுவலக உதவியாளர் ஒருவர் இலஞ்ச மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். </p><p style="text-align: justify; ">

கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a1549bbb-d69c-452e-b3f2-74195b7c8856/26-6aab775f38781.webp' /></p><h2 style="text-align: justify; ">மேலதிக விசாரணை</h2><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றில் நிலுவையிலிருந்த பணத்தகராறு தொடர்பான வழக்கின் இணக்கப்பாடு எட்டப்பட்ட பின்னர், அவ்வழக்கின் தீர்ப்பு பிரதியை வழங்குவதற்காக சந்தேகநபரால் கடந்த ஜூன் மாதம் 30 ஆம் திகதி இந்த இலஞ்சப் பணம் கோரப்பட்டுள்ளது. </p><p style="text-align: justify; ">

பின்னர் இது தொடர்பில் கிடைத்த தகவலின் அடிப்படையில், இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் சந்தேகநபர் நேற்று (16) பிற்பகல் 3.35 மணியளவில் கோட்டை நீதிவான் நீதிமன்ற வளாகத்திலேயே வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கொழும்பு நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், இலஞ்ச, ஊழல் ஆணைக்குழு மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது.&nbsp;&nbsp;</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-17T05:15:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதிகாலை இடம்பெற்ற கோர விபத்தில் பலியான நெருங்கிய தோழிகள் - பிரேத பரிசோதனையில் வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/kalutara-train-accident-to-girls-death-1789611973"></link>
            <id>https://tamilwin.com/article/kalutara-train-accident-to-girls-death-1789611973</id>
            <summary type="text">களுத்துறை தொடருந்து நிலையத்திற்கு அருகில் தொடருந்தில் மோதி உயிரிழந்த இரு பெண்கள் தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நேற்று அதிகாலை ( 16) அநுராதபுரம...</summary>
            <content type="html"><![CDATA[<p>களுத்துறை தொடருந்து நிலையத்திற்கு அருகில் தொடருந்தில் மோதி உயிரிழந்த இரு பெண்கள் தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
</p><p>
நேற்று அதிகாலை ( 16) அநுராதபுரம் நோக்கி தொடருந்தில் பயணிப்பதற்காக, தாய், மகள் மற்றும் தாயின் தோழி ஆகியோர் களுத்துறை தெற்கு தொடருந்து நிலையத்தின் வலது பக்கமாக நடைமேடைக்கு வருவதற்காக தொடருந்து பாதையில் நடந்து சென்று கொண்டிருந்தபோதே இருவரும் தொடருந்தில் மோதி உயிரிழந்தனர்.</p><h2>உயிரிழந்த பெண்கள்&nbsp;</h2><p>

தொடருந்து தண்டவாள பழுதுபார்ப்பு பணிகளுக்காக பயன்படுத்தப்பட்ட பொருட்களை ஏற்றிச்சென்ற தொடருந்தே அவர்கள் மீது மோதியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/871d3bef-a417-4afb-bf58-74715fcc6ded/26-6aab60323abca.webp' /></p><p>
</p><p>
இந்த விபத்தில் குருகே ஸ்ரீயானி, ரேணுகா தமயந்தி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.</p><p><b>

இந்த விபத்து தொடர்பில் உயிரிழந்த ஸ்ரீயானியின் மகள் சித்துமினி ஜெயநெத்தி சாட்சியமளிக்கையில்,
</b></p><p>
இந்த விபத்தில் உயிரிழந்தவர் என் தாயார், இரண்டாவது குருகே ஸ்ரீயானி. நாங்கள் ஒரு நேர்த்திக்கடனை நிறைவேற்றுவதற்காக அநுராதபுரம் செல்லவிருந்தோம். அந்த பயணத்தில் என் தாயார், நான், மற்றும் என் தாயாரின் தோழி ரேணுகா அத்தையும் சென்றோம்.

16 ஆம் திகதி அதிகாலையில் களுத்துறையில் பேருந்திலிருந்து இறங்கினோம். பிறகு, வயல்வெளி வழியாக தொடருந்து தண்டவாளம் வரை நடந்தோம். அந்த நேரத்தில் தொடருந்து வரும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. நாங்கள் தொடருந்து தண்டவாளம் வழியாக தொடருந்து நிலையத்தை நோக்கி நடந்தோம். என் அம்மா தொடருந்து வருவதாக சொன்னபோது, ​​தொடருந்து அருகில் இருந்தது. நான் எனது இரண்டு பைகளையும் நடைமேடையில் வீசிவிட்டு, இரு கைகளாலும் அதன் மீது ஏறினேன். என் அம்மாவையும் ரேணுகா அத்தையும் தூக்க முயன்றேன், ஆனால் முடியவில்லை. அதற்கு நேரமில்லை. என் அம்மாவும் ரேணுகா அத்தையும் நடைமேடையைக் கட்டிப்பிடித்துக்கொண்டனர். அந்த நேரத்தில், அவர்கள் இருவரும் தொடருந்தில் மோதி வெகுதூரம் தூக்கி வீசப்பட்டனர் என தெரிவித்துள்ளார்.
</p><p>
இதனையடுத்து களுத்துறை போதனா வைத்தியசாலையில் முன்னெடுக்கப்பட்ட பிரேத பரிசோதனையில்,
தொடருந்து மோதலில் ஏற்பட்ட பலத்த காயங்களே மரணங்களுக்கு காரணம் என்றும் கண்டறியப்பட்டுள்ளது.&nbsp; &nbsp; &nbsp; &nbsp; </p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-17T05:13:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[யோஷித ராஜபக்ச மற்றும் வசந்த கரன்னாகொட விவகாரம் - பிறப்பிக்கப்பட்ட உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/vasantha-karannagoda-and-yoshitha-case-heard-today-1789619922"></link>
            <id>https://tamilwin.com/article/vasantha-karannagoda-and-yoshitha-case-heard-today-1789619922</id>
            <summary type="text">இலங்கை கடற்படையின் முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட மற்றும் யோஷித ராஜபக்ச ஆகியோருக்கு எதிராக, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை கடற்படையின் முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட மற்றும் யோஷித ராஜபக்ச ஆகியோருக்கு எதிராக, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு தாக்கல் செய்த வழக்கு இன்று (17) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.</p><p>தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள குற்றம் சாட்டப்பட்டவர்களான வசந்த கரன்னாகொட மற்றும் யோஷித ராஜபக்ச ஆகியோர் நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளனர்.</p><h2>பிறப்பிக்கப்பட்ட உத்தரவு</h2><p>
</p><p>இந்த வழக்கு விசாரணையின் போது சமர்ப்பிக்கப்பட்ட உண்மைகளை கருத்தில் கொண்ட நீதிமன்றம், வழக்கை விசாரணைக்கு முந்தைய கலந்துரையாடலுக்காக அழைக்குமாறு உத்தரவிட்டுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e75811b5-ba8d-4074-85b6-b5780480786b/26-6aab74afdcf40.webp' /></p><p>முறையான தகுதிகளைப் பெற்றிருக்காத நிலையில், குற்றம்சாட்டப்பட்ட யோஷித ராஜபக்சவை பிரித்தானிய அரச கடற்படைக் கல்லூரியில் பயிற்சிக்கு அனுப்பியதன் மூலம் ஊழல் குற்றத்தைச் செய்ததாகக் குற்றம்சாட்டி, இலஞ்ச ஆணைக்குழு குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளது.&nbsp;&nbsp;</p><p>கடந்த 2006ம் ஆண்டு யோஷித ராஜபக்ச, கடற்படையில் (Sri Lanka Navy) சேருவதற்குத் தேவையான குறைந்தபட்ச கல்வித்தகுதியை பூர்த்தி செய்யாத நிலையில், கடற்படையின் விதிமுறைகளை தளர்த்தி இரண்டாம் லெப்டிணன்ட் பதவிக்கு இணைத்துக் கொள்ளப்பட்டதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்திருந்தது.
</p><p>
இந்த விவகாரம் தொடர்பாக யோஷித ராஜபக்ச ஜூன் 17 ஆம் திகதி கைது செய்யப்பட்டு, பின்னர் நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.</p><p>இந்நிலையில், யோஷித ராஜபக்சவை கடற்படையில் இணைத்துக்கொண்டமை மற்றும் அரசு செலவில் அவரை பிரிட்டனுக்குப் பயிற்சிக்கு அனுப்பியமை போன்ற ஊழல் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இலங்கை கடற்படையின் முன்னாள் தளபதி வசந்த கரன்னாகொட கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.&nbsp;&nbsp;</p><p></p><p></p><p><br></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-17T05:09:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Fathima</name>
            </author>
            <title type="text"><![CDATA[மயக்க ஊசி செலுத்தி உயிரை மாய்த்துக்கொண்ட இளம் மருத்துவர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/young-female-doctor-commits-suicide-1789621548"></link>
            <id>https://ibctamilnadu.com/article/young-female-doctor-commits-suicide-1789621548</id>
            <summary type="text">புதுச்சேரியில் இளம் பெண் மருத்துவர் மயக்க ஊசி செலுத்தி கொண்டு தன் உயிரை மாய்த்துக்கொண்ட பரபரப்பான சம்பவம் நடந்துள்ளது. புதுச்சேரியை சேர்ந்தவர் வாசுதேவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>புதுச்சேரியில் இளம் பெண் மருத்துவர் மயக்க ஊசி செலுத்தி கொண்டு தன் உயிரை மாய்த்துக்கொண்ட பரபரப்பான சம்பவம் நடந்துள்ளது. </p><p>புதுச்சேரியை சேர்ந்தவர் வாசுதேவன், ஓய்வுபெற்ற வேளாண்துறை அதிகாரியான இவரது மகள் யோகலட்சுமி.
</p><p>
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவகல்லூரி மருத்துவமனையில் நுரையீரல் மருத்துவம் (MD) இறுதியாண்டு படித்து வந்தார்.
</p><p>
தேர்வுக்கு தயாராகிவந்த யோகலட்சுமி நேற்று முன்தினம் இரவு தாய், தந்தையுடன் இரவு உணவு சாப்பிட்டுவிட்டு உறங்க சென்றார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6ec635c0-f3be-4117-bedd-f9b62577dc3d/26-6aab75ab647ff.webp' /><br></p><p>

மறுநாள் காலை வெகுநேரமாகியும் மகள் வெளியே வராததால் சந்தேகமடைந்த பெற்றோர் கதவை உடைத்து உள்ளே சென்ற போது சடலமாக கிடந்துள்ளார்.
</p><p>
பக்கத்தில் காலியான மயக்க மருந்து பாட்டில் மற்றும் இன்சுலின் ஊசி இருந்துள்ளது.
</p><p>
உடனடியாக போலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விரைந்து வந்த அதிகாரிகள் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
</p><p>
இதன்பின்னர் நடத்திய விசாரணையில் அவர் கைப்பட எழுதிய கடிதம் கிடைத்தது.
</p><p>
அதில், இந்த முடிவை தானே எடுத்ததாகவும், இதற்காக யாரையும் துன்புறுத்த வேண்டாம், பெற்றோர்கள் மற்றும் நண்பர்கள் தன்னை மன்னிக்க வேண்டும் என எழுதியிருந்தார்.<br></p>]]></content>
            <updated>2026-09-17T05:08:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[கட்டுநாயக்க விமான நிலையத்தில் காணாமல் போன மனைவி - கண்ணீருடன் தேடி அலையும் கணவன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/women-missing-in-katunayake-airport-1789620426"></link>
            <id>https://tamilwin.com/article/women-missing-in-katunayake-airport-1789620426</id>
            <summary type="text">கட்டுநாயக்க விமான நிலையத்தில் தனது மனைவி காணாமல் போயுள்ளதாக, பிங்கிரிய பொலிஸில் நிலையத்தில் கணவன் முறைப்பாடு செய்துள்ளார். பிங்கிரிய பகுதியின் வீரபோகு...</summary>
            <content type="html"><![CDATA[<p>கட்டுநாயக்க விமான நிலையத்தில் தனது மனைவி காணாமல் போயுள்ளதாக, பிங்கிரிய பொலிஸில் நிலையத்தில் கணவன் முறைப்பாடு செய்துள்ளார். </p><p>பிங்கிரிய பகுதியின் வீரபோகுனாவைச் சேர்ந்த, ஐந்து பிள்ளைகளின் தாயான 39 வயதுடைய பெண்ணே இவ்வாறு காணாமல் போயுள்ளார். </p><p>காணாமல் போன அப்பெண் தமரி செவ்வந்திகா விஜேசிங்க என அடையாளம் காணப்பட்டுள்ளார்.</p><p> முறைப்பாட்டிற்கமைய, கடந்த 13ஆம் திகதி அதிகாலை 5.12 மணியளவில் அவர் தனது கணவரைத் தொலைபேசியில் தொடர்புகொண்டுள்ளார்.</p><p> </p><h2><b>பெண்ணின் உடைமைகள்</b></h2><p>வீடு திரும்பும்போது தங்கள் ஐந்து பிள்ளைகளுக்கும் சொக்லட் வாங்கி வருவதாக கூறியிருந்தார். அதன்பிறகு அவர் எங்கே இருக்கிறார் என்பது குறித்த எந்தத் தகவலும் இல்லை என்று குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b5777e0a-d409-4d34-b288-217120fe2ccd/26-6aab74a31c8c7.webp' /></p><p>குறித்த பெண்ணின் உடைமைகள் காணாமல் போனமை குறித்தும் விமான நிலையப் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. </p><p>இரண்டு வருட ஒப்பந்த அடிப்படையில் அவர் சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு குவைத் நாட்டிற்கு வேலைக்காக சென்றிருந்தார். </p><p>ஆனால் உடல்நலக்குறைவு காரணமாக நாடு திரும்பியிருந்ததாகவும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். </p><p>தனது மனைவியை கண்டுபிடிப்பதில் பொலிஸாரும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் அவசர நடவடிக்கை எடுத்து உதவுமாறு அவரது கணவர் கோரிக்கை விடுத்துள்ளார்.


</p>]]></content>
            <updated>2026-09-17T05:03:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் மீட்கப்பட்ட சடலம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/suspicious-death-in-a-secluded-area-1789619748"></link>
            <id>https://ibctamil.com/article/suspicious-death-in-a-secluded-area-1789619748</id>
            <summary type="text">ஹொரண காவல் பிரிவுக்குட்பட்ட இலிம்ப சந்தியில், கால்வாய்க்கு அப்பால் அமைந்துள்ள வெறிச்சோடிய காணியில் ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த நிலையி...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹொரண காவல் பிரிவுக்குட்பட்ட இலிம்ப சந்தியில், கால்வாய்க்கு அப்பால் அமைந்துள்ள வெறிச்சோடிய காணியில் ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
</p><p>குறித்த விடயம் பற்றி ஹொரண காவல் நிலையத்துக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இது தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
</p><p>
உயிரிழந்தவர் பொகுணுவிட்ட பகுதியைச் சேர்ந்த 51 வயதுடையவர் என காவல்துறை விசாரணையில் அடையாளம் காணப்பட்டுள்ளார்.</p><p></p><h2>நீதவான் விசாரணை</h2><p>
</p><p>இதை தொடர்ந்து சடலம் தொடர்பான நீதவான் விசாரணை இன்று (17) இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c251c874-5c12-42c0-ae1f-1bd037de13ab/26-6aab745bb4942.webp' /></p><p>
</p><p>
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹொரண காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-17T05:03:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[முதலமைச்சர் விஜய் குறித்து மகன் ஜேசன் சஞ்சய் பெருமிதம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/son-jason-sanjay-proud-of-chief-minister-vijay-1789621474"></link>
            <id>https://jvpnews.com/article/son-jason-sanjay-proud-of-chief-minister-vijay-1789621474</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;தனது சிக்மா&#039; படத்தின் ரிலீஸுக்காகக எனது தந்தை( விஜய்) காத்திருக்கிறார். அவர் இப்போது முதலமைச்சராக இருப்பதால் அவருக்குப் பல பொறுப்புகள் உள...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;தனது சிக்மா' படத்தின் ரிலீஸுக்காகக எனது தந்தை( விஜய்) காத்திருக்கிறார். அவர் இப்போது முதலமைச்சராக இருப்பதால் அவருக்குப் பல பொறுப்புகள் உள்ளன. நான் என்ன செய்திருக்கிறேன் என்பதைப் பார்க்க அவர் மிகவும் ஆர்வமாக உள்ளார்" என ஜேசன் சஞ்சய் நிகழ்ச்சியில் பேசியுள்ளார். </p><p>

நடிகரும், தமிழக முதல் அமைச்சருமான விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் சிக்மா.அக்டோபர் 2 ஆம் திகதி படம் ரிலீஸ் ஆக உள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dad161e8-7231-42bb-ba33-3b7cab3732a2/26-6aab752c317cf.webp' /></p><h2>படத்திற்கான புரமோஷன் நிகழ்ச்சி</h2><p> 

 </p><p>முதலமைச்சர்&nbsp; விஜய்யின் மகன் இயக்குநராக அறிமுகம் ஆகும் முதல் படம் என்பதால் இந்த படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.</p><p> 

படத்திற்கான புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வரும் ஜேசன் சஞ்சய், தனது தந்தை குறித்தும் நெகிழ்ச்சியாக பேசி வருகிறார். 

இந்த நிலையில், ஐதராபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய ஜேசன் சஞ்சய் கூறியதாவது, </p><p>

எனது தந்தை முதல்வர் ஆனதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். 'சிக்மா' படத்தின் ரிலீஸுக்காகக எனது தந்தை( விஜய்) காத்திருக்கிறார். 

எனது படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள மாட்டார்.</p><p> விளம்பரங்கள் அனைத்தும் படத்தை பற்றியதாக மட்டுமே இருக்க வேண்டும், அவரைச் சார்ந்ததாக மாறிவிடக் கூடாது என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். 

இப்போது முதலமைச்சராக இருப்பதால் அவருக்குப் பல பொறுப்புகள் உள்ளன.</p><p> நான் என்ன செய்திருக்கிறேன் என்பதைப் பார்க்க அவர் மிகவும் ஆர்வமாக உள்ளார்" என்று ஜேசன் சஞ்சய் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.</p><p> 

 நிகழ்ச்சியில் உங்கள் தந்தையிடம் இருந்து நீங்கள் எதை கற்றுக்கொள்ள விரும்புகிறீர்கள் என்று கேட்டனர். இதற்கு பதிலளித்த ஜேசன் சஞ்சய், 'நேரம் தவாறாமை’ என பதிலளித்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-09-17T05:01:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Tony</name>
            </author>
            <title type="text"><![CDATA[Disaster ஆன சர்தார் 2 படத்தின் 7 நாள் வசூல் விவரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/sardar-2-one-week-box-office-collection-1789609536"></link>
            <id>https://cineulagam.com/article/sardar-2-one-week-box-office-collection-1789609536</id>
            <summary type="text">&amp;nbsp;சர்தார் 2சர்தார் 2 ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்த படம். அதோடு கார்த்திக்கு வில்லனாக எஸ் ஜே சூர்யா வருவதால் கண்டிப்பாக இந்த படம் ரசிகர்...</summary>
            <content type="html"><![CDATA[<h2>&nbsp;சர்தார் 2</h2><p>சர்தார் 2 ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்த படம். அதோடு கார்த்திக்கு வில்லனாக எஸ் ஜே சூர்யா வருவதால் கண்டிப்பாக இந்த படம் ரசிகர்களுக்கு செம விருந்தாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. </p><p>ஆனால், படம் டீசண்ட் ஆன விமர்சனங்கள் வந்தும் ரசிகர்கள் யாருமே இந்த படத்தை பார்க்க ஆர்வம் காட்டவில்லை, ரூ 100 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த சர்தார் 2 உலகம் முழுவதும் ரூ 22 கோடிகள் தான் 7 நாளில் வசூல் செய்துள்ளதாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e4efcad1-7164-4a3d-9727-87258f1b4285/26-6aab464366162.webp' /></p><p> கண்டிப்பாக கார்த்தி திரைப்பயணத்தில் மிகப்பெரிய டிஷாஸ்டர் என்று எடுத்து பார்த்தால் அது சர்தார் 2-ஆக தான் இருக்கும் என பாக்ஸ் ஆபிஸ் நிபுணர்கள் கூறுகின்றனர். மேலும் இந்த படத்தின் மொத்த ஷேர் ரூ 10-15 கோடி வந்தாலே ஆச்சரியம் என்று விநியோகஸ்தர்கள் தரப்பில் கூறப்படுகிறது.</p>]]></content>
            <updated>2026-09-17T05:00:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாட்டவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்: நாடொன்றின் திட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/australia-to-ban-foreign-students-bring-partners-1789620671"></link>
            <id>https://news.lankasri.com/article/australia-to-ban-foreign-students-bring-partners-1789620671</id>
            <summary type="text">Australia plans to stop foreign students from bringing partners and children: சர்வதேச மாணவர்கள், தங்கள் துணைவர் மற்றும் பிள்ளைகளை தங்களுடன் அழைத்துவர ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Australia plans to stop foreign students from bringing partners and children: சர்வதேச மாணவர்கள், தங்கள் துணைவர் மற்றும் பிள்ளைகளை தங்களுடன் அழைத்துவர தடை விதிக்க அவுஸ்திரேலியா திட்டமிட்டுவருகிறது.
</p><p>

மேற்கத்திய நாடுகள் சில புலம்பெயர்தல் கட்டுப்பாடுகளை கடினமாக்கிவரும் நிலையில், அந்த நாடுகளின் பட்டியலில் அவுஸ்திரேலியாவும் இணைந்துள்ளது.</p><h3>

புதிய கட்டுப்பாடுகள்</h3><p>

ஆம், அவுஸ்திரேலியாவுக்கு கல்வி கற்க வரும் சர்வதேச மாணவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதிக்க அந்நாடு திட்டமிட்டுவருகிறது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/78bd71ff-3b3d-4cb7-93ec-d9d9d7ea0746/26-6aab71c172660.webp' /></p><p>

அவ்வகையில், சர்வதேச மாணவர்கள் கனடாவுக்குக் கல்வி கற்க வரும்போது, தங்கள் துணையையும், 18 வயதுக்குக் கீழுள்ள தங்கள் பிள்ளைகளையும் தங்களுடன் அழைத்துவர, தடை விதிக்க அவுஸ்திரேலியா திட்டமிட்டுவருகிறது.</p><p>

மேலும் விசாக்களை ஒருவகையிலிருந்து மற்றொரு வகையாக மாற்றுவதும் இனி கடினமாக்கப்பட உள்ளது.&nbsp;</p><p></p><p>

இது தொடர்பான அறிவிப்புகளை இன்று அவுஸ்திரேலிய உள்விவகாரங்கள் அமைச்சரான டோனி பர்க் வெளியிட உள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/578c6201-1ff2-4543-8bdf-063f1ab83133/26-6aab71c226d69.webp' /></p><p>
விடயம் என்னவென்றால், ஒவ்வொரு நாட்டிலும் புலம்பெயர்தலுக்கு எதிரான கொள்கைகள் கொண்ட அரசியல் கட்சிகள் உள்ளன.
</p><p>
உதாரணமாக, சுவிட்சர்லாந்தில் சுவிஸ் மக்கள் கட்சி, பிரித்தானியாவில் யூகே ரீஃபார்ம் கட்சி, பிரான்சில், மரின் லி பென் சார்ந்த நேஷனல் ராலி, ஜேர்மனியில் AfD கட்சி என புலம்பெயர்தலுக்கு எதிராக குரல் கொடுத்துக்கொண்டே இருக்கும் பல கட்சிகள் உள்ளன.
</p><p>
இத்தகைய கட்சிகள் கொடுக்கும் தொல்லை தாங்காமல் சில நாடுகளில் ஆளுங்கட்சியினர் தங்கள் இருக்கையைக் காப்பாற்றிக்கொள்வதற்காக புலம்பெயர்தலுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.</p><p>

அவ்வகையில், அவுஸ்திரேலியாவில் ஒன் நேஷன் கட்சி என்னும் புலம்பெயர்தல் எதிர்ப்புக் கட்சி உள்ளது. அக்கட்சியின் கொள்கைகளை ட்ரம்புடைய கொள்கைகளுடன் ஒப்பிடுகிறார்கள்.</p><p>
அமெரிக்கா அமெரிக்கர்களுக்கே என கருதும் ட்ரம்பைப் போல, இந்த ஒன் நேஷன் கட்சி, அவுஸ்திரேலியா அவுஸ்திரேலியர்களுக்கே என்னும் கொள்கையைக் கொண்டுள்ளது.</p><p>

இந்த ஒன் நேஷன் கட்சிக்கு மக்கள் ஆதரவு அதிகரித்துவருவது சமீபத்திய ஆய்வுகளில் தெரியவந்துள்ளதைத் தொடர்ந்தே, ஆளுங்கட்சி இத்தகைய அதிரடி அறிவிப்புகளை வெளியிட உள்ளதாக கருதப்படுகிறது.</p><p>

விடயம் என்னவென்றால், உண்மையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக அவுஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்வோர் எண்ணிக்கை குறைந்துகொண்டேவருகிறது.</p><p>

2023இல் அவுஸ்திரேலியாவுக்கான நிகர புலம்பெயர்தல் 518,000 ஆக இருந்தது, 2024இல் 429,000 ஆகவும், 2025இல் 306,000 ஆகவும் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-17T04:51:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அவுஸ்திரேலியா விதித்துள்ள புதிய கட்டுப்பாடுகள்; பலருக்கு கலக்கம்...மனைவி பிள்ளைகளுக்கும் மறுப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/visa-new-restrictions-imposed-by-australia-1789620855"></link>
            <id>https://jvpnews.com/article/visa-new-restrictions-imposed-by-australia-1789620855</id>
            <summary type="text">&amp;nbsp; அவுஸ்திரேலியாவில் கல்வி பயிலும் வெளிநாட்டு மாணவர்கள், தங்களது வாழ்க்கைத்துணை மற்றும் குழந்தைகளைத் தங்களுடன் அழைத்து வருவதைத் தடை செய்ய அவுஸ்திர...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; அவுஸ்திரேலியாவில் கல்வி பயிலும் வெளிநாட்டு மாணவர்கள், தங்களது வாழ்க்கைத்துணை மற்றும் குழந்தைகளைத் தங்களுடன் அழைத்து வருவதைத் தடை செய்ய அவுஸ்திரேலிய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p>


மேலும், தற்காலிக வீசாக்களில் உள்ளவர்கள் பிற வீசாக்களுக்கு மாறுவதற்கான விதிமுறைகளையும் அரசாங்கம் கடுமையாக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f2f2813c-293e-45d6-986c-4c5d37dfe6d2/26-6aab727941219.webp' /></p><h2>&nbsp; புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கையை குறைக்க&nbsp; திட்டம்</h2><p>

தற்போது ஆண்டுக்குச் சுமார் 3 இலட்சமாக உள்ள நிகர வெளிநாட்டுப் புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கையை 2028 ஆம் ஆண்டிற்குள் 2 இலட்சத்து 25 ஆயிரமாகக் குறைக்க அவுஸ்திரேலிய உள்நாட்டு அமைச்சர் டோனி பர்க் திட்டமிட்டுள்ளார்.
</p><p>
தற்போது வெளிநாட்டு மாணவர்களின் வாழ்க்கைத்துணை அவுஸ்திரேலியாவில் பணிபுரிய அனுமதி வழங்கப்பட்டு வரும் நிலையில், புதிய விதிமுறைகள் மூலம் இந்தச் சலுகைகள் நிறுத்தப்படவுள்ளன.
</p><p>
2023 இல் 518,000 ஆக உச்சத்திலிருந்த நிகரப் புலம்பெயர்வு, 2024 இல் 429,000 ஆகக் குறைந்து, 2025 ஜூன் 30 உடன் முடிந்த நிதியாண்டில் 306,000 ஆகப் பதிவாகியுள்ளது.</p><p> இதில் பாதியளவினர் வெளிநாட்டு மாணவர்களாவர்.

வலதுசாரி சார்புடைய 'ஒன் நேஷன்' கட்சி, தற்காலிகப் புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கையை 3 ஆண்டுகளில் 750,000 ஆகக் குறைக்க வேண்டும் என வலியுறுத்தி வரும் நிலையில், அரசாங்கத்தின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.</p><p>


கொரோனா கட்டுப்பாடுகளுக்குப் பிறகு அதிகரித்த புலம்பெயர்வோரால் நாட்டின் வீடமைப்புத் துறை, உட்கட்டமைப்பு மற்றும் சமூக அமைப்பில் கடும் அழுத்தம் ஏற்பட்டுள்ளதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. </p><p>

இன்றைய தினம் தேசிய ஊடக மையத்தில் உரையாற்றவுள்ள உள்நாட்டு அமைச்சர் டோனி பர்க், இதுகுறித்த உத்தியோகபூர்வ அறிவிப்புகளை வெளியிடவுள்ளார்.</p>]]></content>
            <updated>2026-09-17T04:51:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[பொலிஸ் அதிகாரிகளின் பெயரில் போலி செய்தி ; காத்திருக்கும் சட்ட நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/fake-news-circulated-using-police-officers-names-1789620065"></link>
            <id>https://jvpnews.com/article/fake-news-circulated-using-police-officers-names-1789620065</id>
            <summary type="text">இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் கொள்முதல் நடவடிக்கைகள் மற்றும் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவின் பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் வகையில் சமூக வலைத்...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் கொள்முதல் நடவடிக்கைகள் மற்றும் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவின் பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் வகையில் சமூக வலைத்தளங்களில் பரவி வரும் செய்திகள் முற்றிலும் பொய் மற்றும் அடிப்படையற்றவை என இலங்கை பொலிஸ் திணைக்களம் அதிகாரப்பூர்வமாக மறுத்துள்ளது.</p><p style="text-align: justify; ">

“கான்ஸ்டபிள் புஞ்ஞசோமவின் ஊழல்கள் இதோ, காலணி பாலிஷ் டின்னிலும் மோசடி, உலகத்தால் தடைசெய்யப்பட்ட ஹைடெரா நிறுவனத்துடனும் டீல்” எனும் தலைப்பில் சமூக வலைத்தளங்களில் பரவி வரும் செய்தி தொடர்பிலேயே பொலிஸ் தலைமையகம் இக் தெளிவுபடுத்தலை வெளியிட்டுள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7533efc0-d0ab-4677-ac3d-3817a3c40843/26-6aab70ad68137.webp' /></p><h2 style="text-align: justify; ">போலி செய்தி</h2><p>
</p><p style="text-align: justify;">
பொலிஸ் அதிகாரிகளின் பயன்பாட்டிற்கான காலணி பாலிஷ் டின்களைக் கொள்முதல் செய்யும் நடவடிக்கை, பத்திரிகை விளம்பரங்கள் மூலம் முறைப்படியான அரசாங்கக் கொள்முதல் விதிகளுக்கு அமைவாகவே முன்னெடுக்கப்பட்டது.
</p><p style="text-align: justify;">

இலங்கை தரக்கட்டளை நிறுவனத்தினால் பரிந்துரைக்கப்பட்ட நிறுவனங்களில் குறைந்த விலையைக் கோரிய நிறுவனத்திற்கே இக் குத்தகை வெளிப்படையாக வழங்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify;">
இதில் எந்தவித தனிப்பட்ட விருப்பங்களோ அல்லது ஊழல்களோ இடம்பெறவில்லை எனப் பொலிஸ் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;">
</p><p style="text-align: justify;">
பொலிஸ் அதிகாரிகளின் நவீன தொழில்நுட்பப் பயன்பாட்டிற்காக உடலில் அணியும் கேமராக்களைக் கொள்முதல் செய்வதற்கான டெண்டர் நடைமுறைகள் மட்டுமே தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
</p><p style="text-align: justify;">
இதற்காக 26 நிறுவனங்கள் விண்ணப்பித்துள்ளதுடன், 15 நிறுவனங்கள் மாதிரிப் பொருட்களைச் சமர்ப்பித்துள்ளன.</p><p style="text-align: justify;"> எனினும், இதுவரையில் எந்தவொரு நிறுவனத்திற்கும் இக் குத்தகை வழங்கப்படவில்லை என்றும், அது தற்போது மதிப்பீட்டுக்குழுவின் பரிசீலனையில் மட்டுமே உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

</p><p style="text-align: justify;">
பொலிஸ் மா அதிபரினதும் இலங்கை பொலிஸ் திணைக்களத்தினதும் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையிலும், பொதுமக்கள் மத்தியில் தவறான பிம்பத்தை உருவாக்கும் வகையிலும் இவ்வாறான போலிச் செய்திகளைச் சமூக வலைத்தளங்களில் பரப்புவோருக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் தலைமையகம் எச்சரித்துள்ளது.</p><p style="text-align: justify;"></p>]]></content>
            <updated>2026-09-17T04:46:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[வீட்டிலேயே பொலிவான முகத்தை பெற உதவும் பீட்ரூட்.., எப்படி பயன்படுத்துவது?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/beetroot-face-packs-to-brighten-skin-naturally-1789620211"></link>
            <id>https://news.lankasri.com/article/beetroot-face-packs-to-brighten-skin-naturally-1789620211</id>
            <summary type="text">Beetroot face packs to brighten skin naturally-&amp;nbsp;சருமத்தைப் பொலிவோடும், புத்துணர்ச்சியோடும் வைத்திருக்க பீட்ரூட்டை பயன்படுத்தலாம்.இதில் உள்ள ஆன்டி...</summary>
            <content type="html"><![CDATA[<p>Beetroot face packs to brighten skin naturally-&nbsp;சருமத்தைப் பொலிவோடும், புத்துணர்ச்சியோடும் வைத்திருக்க பீட்ரூட்டை பயன்படுத்தலாம்.</p><p>இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் சரும ஆரோக்கியத்திற்கு உதவுகின்றன. </p><p>

அந்தவகையில், வீட்டிலேயே பொலிவான முகத்தை பெற பீட்ரூட்டை எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.</p><p></p><h2>1. தேவையான பொருட்கள் </h2><ul><li>

பீட்ரூட்- 1
</li><li>தயிர்- 1 ஸ்பூன் </li></ul><h2>

எப்படி பயன்படுத்துவது? </h2><p>

முதலில் பீட்ரூட்டைத் துருவி, அதன் சாற்றை எடுத்துக் கொள்ளவும்.
</p><p>
அதனுடன் கெட்டியான தயிரைச் சேர்த்து நன்கு கலக்கவும்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f7d56728-d5fb-4ab5-b782-d5d7e230e263/26-6aab6ff5b0f67.webp' /></p><p>இந்தக் கலவையை முகம் மற்றும் கழுத்தில் தடவி 20 நிமிடங்கள் வைக்கவும்.</p><p>

பின்னர் வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவவும்.</p><h2>

2. தேவையான பொருட்கள் </h2><ul><li>

பீட்ரூட்- 1
</li><li>எலுமிச்சை- 1</li></ul><h2>

எப்படி பயன்படுத்துவது?
</h2><p>
பீட்ரூட்டைத் துருவி, அதன் சாற்றை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ளவும்.
</p><p>
அதனுடன் சிறிதளவு எலுமிச்சை சாற்றைச் சேர்த்து கலக்கவும்.</p><p>
</p><p></p><p>இந்தக் கலவையை முகம் மற்றும் கழுத்தில் தடவவும்.
</p><p>
பின் அரை மணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரால் கழுவிக்கொள்ளலாம்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p><p>
</p>]]></content>
            <updated>2026-09-17T04:46:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[22வது திருத்தத்தினால் இலங்கைக்கு ஏற்படப்போகும் பாரிய சிக்கல் : எச்சரிக்கும் ஜீ.எல். பீரிஸ்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/investments-in-sl-affected-by-the-22nd-amendment-1789618933"></link>
            <id>https://ibctamil.com/article/investments-in-sl-affected-by-the-22nd-amendment-1789618933</id>
            <summary type="text">அரசியலமைப்பின் 22வது திருத்தத்தை தன்னிச்சையாகச் சட்டமாக்குவதன் மூலம் நாட்டிற்கு வரும் முதலீடுகளில் பெரும் சிக்கல் ஏற்படும் எனவும் இதனால் மதிப்பீடு செய...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரசியலமைப்பின் 22வது திருத்தத்தை தன்னிச்சையாகச் சட்டமாக்குவதன் மூலம் நாட்டிற்கு வரும் முதலீடுகளில் பெரும் சிக்கல் ஏற்படும் எனவும் இதனால் மதிப்பீடு செய்ய முடியாத அளவிற்கு நாட்டிற்குப் பாதிப்பு ஏற்படும் எனவும் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.
</p><p>ஜீ.எல். பீரிஸ் தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சி நேற்று (16) கொழும்பில் அமைந்துள்ள ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் காரியாலயத்தில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.</p><p>அவர் மேலும் தெரிவிக்கையில்,

அரசியலமைப்பின் 22வது திருத்தம் என்பது அரசாங்கத்தைத் தவிர இந்நாட்டிலுள்ள அனைவரும் கடுமையாக விமர்சித்த ஒரு திருத்தமாகும்.</p><p></p><h2>22ஆம் திருத்தத்துக்கு எதிர்ப்பு</h2><p> </p><p>கடந்த காலத்தில் இத்தகையதொரு நிலைமை ஒருபோதும் ஏற்பட்டதில்லை. அரசியலமைப்பு திருத்தப்படுவது இது முதன்முறையல்ல, 21 முறை திருத்தப்பட்டுள்ளது. ஆனால் அந்த 21 திருத்தங்களின் போதும் இதனைச் செய்யவேண்டாம் என நாட்டில் இவ்வளவு பெரிய எதிர்ப்பு அலை உருவானதில்லை.</p><p>

இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் மதத் தலைவர்கள் உள்ளிட்ட அனைத்து உள்நாட்டு வெளிநாட்டு அமைப்புகள் சிவில் அமைப்புகள் என அனைத்து தரப்பினரும் 22ஆம் திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/70ad8e47-6572-432a-aea8-b633424f896b/26-6aab6f83500a3.webp' /></p><p> </p><p>அதேநேரம் அரசியலமைப்பின் 22ஆம் திருத்தம் நீதித்துறையின் சுயாதீனத்திற்கு முற்றிலும் பொருத்தமற்ற நடவடிக்கை என குறிப்பிட்டு லாே ஏசியா அமைப்பு மிகவும் கடுமையான அறிக்கையொன்றை இன்று வெளியிட்டுள்ளது.</p><p>என்றாலும் இவை எதனையும் பொருட்படுத்தாமல், மிகவும் பிடிவாதமாகவும் அகந்தையுடனும் யார் எதிர்த்தாலும் இதனைச் செய்தே தீருவோம் என்ற நிலைப்பாட்டில் அரசாங்கம் உறுதியாக உள்ளது.</p><p>

இதுவரை எமது நாட்டின் வெளிவிவகார அமைச்சர்களாக இருந்த, நான் உட்பட, அனைவரும் ஜெனீவா மற்றும் நியூயோர்க் என அனைத்து இடங்களிலும் "எமது நாட்டில் தலையிடாதீர்கள்" என்றே கூறி வந்தோம்.</p><p>ஏனெனில் எமது நாட்டில் மிகவும் வலுவான சுயாதீன நிறுவனங்கள் உள்ளன. எமது உயர்நீதிமன்றம் சர்வதேச ரீதியில் புகழும் நம்பிக்கையும் பெற்ற நிறுவனமாகும்.</p><p></p><h2>சர்வதேச நாணய நிதியத்துடன் மேற்கொண்ட நடவடிக்கை</h2><p>எனவே எமது பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்வதற்குத் தேவையான கட்டமைப்பு எமது நாட்டிலேயே உள்ளது. எனவே உங்களின் தலையீடு தேவையில்லை எனக் கூறினோம்.</p><p> இப்போது அந்த வாதத்தை நம்மால் முன்வைக்க முடியுமா? நேர்மையாக முன்வைக்க முடியுமா? இலங்கை நீதித்துறை முன்னெப்போதுமில்லாதவாறு மிகப்பெரியதொரு நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது. நாட்டின் பாதுகாப்பிற்கு இது பாதிப்பை ஏற்படுத்துகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8541f9f9-f4df-4cf3-ba55-84a05c7e47f3/26-6aab6f840b4c7.webp' /></p><p> </p><p>முதலீடுகள் தொடர்பில் இது மிகவும் முக்கியமானது. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சர்வதேச நாணய நிதியத்துடன் மேற்கொண்ட சில நடவடிக்கைகளினால் எமது பொருளாதாரத்தில் ஒரு ஸ்திரத்தன்மை ஏற்பட்டுள்ளது. </p><p>ஆனால் பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்த முதலீடுகள் அவசியம். இந்நாட்டிற்கு முதலீடு செய்ய வரும் முதலீட்டாளர்கள், வெளிநாடுகள், சர்வதேச வங்கிகள் கவனிக்கும் மிக முக்கிய காரணி நீதித்துறையின் சுயாதீனத்தன்மையாகும்.</p><p>நீதித்துறையின் சுயாதீனம் குறித்து நம்பிக்கை இருந்தால் மட்டுமே முதலீட்டாளர்கள் இங்கு வருவார்கள். அதில் சந்தேகம் எழுந்தால் முதலீட்டாளர்கள் பின்வாங்குவார்கள். நாட்டிற்கு முதலீடுகள் வராது.

முதலீடுகள் வராவிட்டால் பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்த முடியாது.</p><p> எனவே இந்த 22வது திருத்தத்தை தன்னிச்சையாகச் சட்டமாக்குவதன் மூலம் நாட்டிற்கு வரும் முதலீடுகளில் பெரும் சிக்கல் ஏற்படும். இதனால் மதிப்பீடு செய்ய முடியாத அளவிற்கு எமது நாட்டிற்குப் பாதிப்பு ஏற்படும்“ என தெரிவித்தார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-17T04:44:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[பொலிஸ் நற்சான்றிதழ் பெற்றுக்கொள்ளவுள்ளவர்களுக்கு விசேட அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/police-clearance-certificate-srilanka-1789619040"></link>
            <id>https://tamilwin.com/article/police-clearance-certificate-srilanka-1789619040</id>
            <summary type="text">பொலிஸ் நற்சான்றிதழ் (Police Clearance Certificate) பெற்றுக்கொள்ளவுள்ளவர்களுக்கு புதிய தொலைபேசி இலக்கங்கள் வழங்கப்பட்டுள்ளன.

அதன்படி இதன்போது ஏற்படு...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொலிஸ் நற்சான்றிதழ் (Police Clearance Certificate) பெற்றுக்கொள்ளவுள்ளவர்களுக்கு புதிய தொலைபேசி இலக்கங்கள் வழங்கப்பட்டுள்ளன.
</p><p>
அதன்படி இதன்போது ஏற்படும் பிரச்சினைகளைத் தெரிவிப்பதற்காக புதிய தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.</p><h2>பிரச்சினைகளை தெரிவிக்க முடியும்</h2><p> 

24 மணி நேரமும் செயற்படும் இந்த தொலைபேசி இலக்கங்கள் ஊடாக பொலிஸ் தலைமையகத்தின் விசேட செயல்பாட்டு மையத்தைத் தொடர்புகொண்டு, நற்சான்றிதழுக்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பது தொடர்பான பிரச்சினைகளை தெரிவிக்க முடியும் என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.</p><p> 

மேலும், இது தொடர்பில் ஏதேனும் பிரச்சினைகள் ஏற்பட்டால், 071 8595946, 071 8595947 மற்றும் 071 8595948 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்புகொண்டு மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ad971356-9a54-47a5-a2c9-d599d0c5eaa5/26-6aab6e895b785.webp' /></p><h2>விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கும் நடவடிக்கை</h2><p>
</p><p>
இதேவேளை கணினி கட்டமைப்பில் மேற்கொள்ளப்படும் அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள் காரணமாக, இணையவழியில் பொலிஸ் நற்சான்றிதழுக்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கும் நடவடிக்கை தற்போது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
</p><p>
கணினி கட்டமைப்பு வழமைக்குத் திரும்பும் வரை, பிரதேச பொலிஸ் நிலையங்கள் ஊடாக நற்சான்றிதழைப் பெறுவதற்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க முடியும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் எப்.யு.வுட்லர் தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-17T04:37:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[சூரிய பெயர்ச்சியால் பாதிக்கப்படும் 3 ராசிகள்: தொழில், பணம், ஆரோக்கியத்தில் கவனம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/sun-transit-in-virgo-zodiacs-who-face-money-issue-1789618317"></link>
            <id>https://manithan.com/article/sun-transit-in-virgo-zodiacs-who-face-money-issue-1789618317</id>
            <summary type="text">ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் நவகிரகங்களின் நிலைகளில் ஏற்படுகின்ற மாற்றங்களானது 12 ராசிகளின் வாழ்க்கையிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் நவகிரகங்களின் நிலைகளில் ஏற்படுகின்ற மாற்றங்களானது 12 ராசிகளின் வாழ்க்கையிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என தொன்று தொட்டு நம்பப்பட்டு வருகின்றது.</p><p>அந்தவகையில், கிரகங்களின் தலைவனாகக் கருதப்படுபவர் சூரியன். சிம்ம ராசியின் அதிபதியான சூரியன் மாதத்திற்கு ஒருமுறை ராசியை மாற்றுகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/eb764483-6665-4167-9545-6df07f50dff0/26-6aab6dd43594d.webp' /></p><p> </p><p>தற்போது தனது சொந்த ராசியான சிம்மத்தில் பயணித்து வரும் சூரியன், செப்டம்பர் 17ஆம் தேதியான இன்று கன்னி ராசிக்குள் நுழைகின்றார். கன்னி ராசியின் அதிபதி புதன். ஜோதிடத்தில் சூரியனும் புதனும் நண்பர்களாகக் கருதப்படுவதால், இந்த சூரிய பெயர்ச்சி முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
</p><p>
இந்த பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்பட்டாலும், சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமான பலன்களும்,&nbsp; குறிப்பிட்ட 3 ராசிக்காரர்களுக்கு பல்வேறு சவால்களும் ஏற்பட வாய்ப்புள்ளதாக ஜோதிட நிபுணர்களால் கணிக்கப்பட்டுள்ளது.</p><p>குறிப்பாக தொழில், நிதி நிலை மற்றும் ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் அவர்கள் கவனமாக இருக்க வேண்டியிருக்கும்.

அப்படியானால், செப்டம்பர் 17ஆம் தேதியான இன்று நடைபெறும் சூரிய பெயர்ச்சியால் எந்த 3 ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.</p><p></p><h2>சிம்மம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5ac91763-03a5-4afa-a538-04bed3cb8e49/26-6aab6dd4dfca0.webp' /></p><h2>
</h2><p>சிம்ம ராசியின் 2-வது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களின் பேச்சு சற்று கடுமையாகவோ, முரட்டுத்தனமாகவோ இருக்கலாம். </p><p>இதனால் உறவுகளில் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. பணம் கொடுக்கல், வாங்கலில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். </p><p>பண விஷயங்களில் எந்தவித ரிஸ்க்கையும் எடுப்பதைத் தவிர்க்கவும்.

பணிபுரிபவர்களுக்கு அலுவலகத்தில் உடன் வேலை செய்பவர்களுடன் பிரச்சனைகள் ஏற்படலாம். உணவு விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, கண் மற்றும் தொண்டை தொடர்பான பிரச்சனைகள் ஏற்படலாம். “</p><h2>கும்பம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/73ab662d-513b-49c8-83f4-482a7818df09/26-6aab6dd599246.webp' /></p><p>
கும்ப ராசியின் 8-வது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் ஆரோக்கியத்தில் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இதன் காரணமாக மருத்துவச் செலவுகளும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
</p><p>
பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் மறைமுக எதிரிகளால் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம்.எனவே, இந்த காலகட்டத்தில் யாரையும் கண்மூடித்தனமாக நம்புவதைத் தவிர்க்க வேண்டும். </p><p>விபத்து ஏற்படும் வாய்ப்பு இருப்பதால், வாகனம் ஓட்டும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.நீதிமன்றம் தொடர்பான விஷயங்களில் பல தடைகளை சந்திக்க வேண்டிய நிலை உருவாகும்.</p><h2>

மீனம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8da607ed-9fa3-45be-948f-139d9e426747/26-6aab6dd65fdf7.webp' /></p><p></p><h2>
</h2><p>மீன ராசியின் 7-வது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களின் திருமண வாழ்க்கையில் சில பதற்றமான சூழ்நிலைகள் உருவாகும். </p><p>வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியம் குறித்து கவலை அதிகரிக்கலாம்.

கூட்டு தொழில் செய்து வருபவர்கள், கூட்டாளியுடன் கருத்து வேறுபாடுகளை சந்திக்க நேரிடும்.</p><p> வணிகர்கள் புதிய ஒப்பந்தங்களை ஏற்றுக்கொள்வதற்கு முன் அவற்றை நன்கு சரிபார்த்துக் கொள்ள வேண்டும். பண விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். யாருக்கும் கடன் கொடுப்பதைத் தவிர்க்கவும்.</p><p><b>இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;&nbsp;</b></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-17T04:36:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[செப்டம்பர் இறுதியில் கொழும்பு மெட்ரோ பேருந்து சேவை விரிவாக்கம்: அரசாங்கத்தின் பரிசு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/colombo-metro-bus-service-expansion-1789617212"></link>
            <id>https://ibctamil.com/article/colombo-metro-bus-service-expansion-1789617212</id>
            <summary type="text">கொழும்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளை உள்ளடக்கும் வகையில் கொழும்பு மெட்ரோ பேருந்து சேவையை செப்டம்பர் மாத இறுதியில் இருந்து விரிவுபடுத்த திட்டமி...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளை உள்ளடக்கும் வகையில் கொழும்பு மெட்ரோ பேருந்து சேவையை செப்டம்பர் மாத இறுதியில் இருந்து விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது.</p><p>

போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்கவினால் திட்டமிடப்பட்ட பேருந்து வழித்தடங்களைக் கொண்ட வரைபடங்கள் வெளியிடப்பட்டுள்ளதுடன், பயணிகளுக்கு பாதுகாப்பானதும் வசதியானதுமான பயண அனுபவத்தை வழங்கும் வகையில் மேலதிக சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

'Lanka Metro Transit' என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ள வழித்தட வரைபடங்களில், கொழும்பின் முக்கிய புறநகர் பகுதிகள் மற்றும் போக்குவரத்து மையங்களை இணைக்கும் ஏழு சேவைகள் குறிப்பிடப்பட்டுள்ளன.</p><p></p><h2>திட்டமிடப்பட்டுள்ள வழித்தடங்கள்</h2><ul><li>

CM 01 – மாகும்புர முதல் புறக்கோட்டை வரை</li></ul><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fc3beabe-fcba-4a0d-b58b-de7744ee9128/26-6aab6bf635073.webp' /></p><p>
</p><ul><li>CM 02 – மில்லேனியம் சிட்டி முதல் கொழும்பு கோட்டை வரை
</li><li>CM 03 – கடவத்தை முதல் மாகும்புர வரை
</li><li>CM 04 – தெமட்டகொடை முதல் பாணந்துறை வரை
</li><li>CM 05 – பத்தரமுல்லை முதல் ஏக்கல வரை
</li><li>CM 06 – கொள்ளுப்பிட்டி சுற்றுவட்டப் பாதை
</li><li>CM 08 – கஹதுடுவ முதல் புறக்கோட்டை/SLIIT வரை</li></ul><p>இந்த பேருந்து வலையமைப்பு மகரகம, நுகேகொடை, பத்தரமுல்லை, மாலபே, தெஹிவளை, மொரட்டுவ மற்றும் ஜா-எல உள்ளிட்ட முக்கிய பகுதிகளை உள்ளடக்கும்.
</p><p>
வெளியிடப்பட்டுள்ள வரைபடங்களில் ஒவ்வொரு வழித்தடத்தினதும் புவியியல் அமைவிடம், முக்கிய பேருந்து நிறுத்தங்கள் மற்றும் இணைப்பு நிலையங்கள் தொடர்பான தகவல்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
</p><p>
எவ்வாறாயினும், செப்டம்பர் மாத இறுதியில் சேவைகள் விரிவுபடுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், ஒவ்வொரு வழித்தடத்திற்குமான குறிப்பிட்ட ஆரம்ப திகதி இதுவரை அறிவிக்கப்படவில்லை.</p><p>

மேலும், பேருந்துகளின் சேவை frequency, கட்டணங்கள் மற்றும் விரிவான கால அட்டவணை தொடர்பான தகவல்களும் இதுவரை வெளியிடப்படவில்லை.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-17T04:30:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[கூர்மையான ஆயுதங்களால் தாக்கிகொல்லப்பட்ட நபர் ; போதைப்பொருளுடன் பிடிபட்ட இளைஞர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/person-killed-in-sharp-weapon-attack-1789619229"></link>
            <id>https://jvpnews.com/article/person-killed-in-sharp-weapon-attack-1789619229</id>
            <summary type="text">தெஹிவளை - ஓபன் வீதியில் இடம்பெற்ற கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சூத்திரதாரி உள்ளிட்ட நான்கு சந்தேகநபர்கள் ஐஸ் போதைப்பொருள் மற்றும் கூர்மையான ஆ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">தெஹிவளை - ஓபன் வீதியில் இடம்பெற்ற கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சூத்திரதாரி உள்ளிட்ட நான்கு சந்தேகநபர்கள் ஐஸ் போதைப்பொருள் மற்றும் கூர்மையான ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p style="text-align: justify; ">

07 ஆம் திகதி முச்சக்கரவண்டியில் வந்த குழுவொன்று வீடொன்றிலிருந்த நபர் மீது கூர்மையான ஆயுதங்களால் தாக்குதல் நடத்திப் கொலை செய்திருந்தது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4b8a8597-a26e-4394-a13c-25a55e252f8c/26-6aab6c1e559f4.webp' /></p><h2 style="text-align: justify; "><span style="text-align: left;">தீவிர விசாரணை</span></h2><p style="text-align: justify; ">இச் சம்பவம் தொடர்பில் கல்கிஸ்ஸ குற்றப் புலனாய்வுப் பணியகத்தினர் விசாரணைகளை முன்னெடுத்து வந்தனர்.</p><p style="text-align: justify; ">

குற்றப் புலனாய்வுப் பணியக அதிகாரிகளால் நேற்று புதன்கிழமை (16) அங்குலானை, கந்தவல வீதி மற்றும் கல்கிஸ்ஸ பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கைகளின் போது இக் குற்றத்தை மேற்கொண்ட நபர் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டு, கல்கிஸ்ஸ பொலிஸ் நிலையத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">

</p><p style="text-align: justify; ">
சந்தேகநபர்களிடமிருந்து 17 கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் குற்றத்திற்குப் பயன்படுத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் 04 வாள்கள் உள்ளிட்ட 05 கூர்மையான ஆயுதங்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.</p><p style="text-align: justify; ">

கைது செய்யப்பட்டவர்கள் கல்கிஸ்ஸ மற்றும் அங்குலானை பகுதிகளைச் சேர்ந்த 23, 24 மற்றும் 30 வயதுடையவர்களாவர்.</p><p style="text-align: justify; ">

மேலும், இச் சம்பவம் தொடர்பில் கல்கிஸ்ஸ பொலிஸார் மேலதிக தீவிர விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-17T04:27:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[மகிந்த ராஜபக்ச உயிருடன் இருக்கும் வரை மேடைக்கு அழைத்து வர திட்டமிடும் மொட்டுக் கட்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/mahinda-continues-to-attend-public-meetings-1789616948"></link>
            <id>https://tamilwin.com/article/mahinda-continues-to-attend-public-meetings-1789616948</id>
            <summary type="text">
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உயிருடன் இருக்கும் வரை, அவரை பொதுமக்களுக்கு அறிமுகப்படுத்த அரசியல் மேடைகளுக்கு சக்கர நாற்காலியில் வைத்தேனும் அழைத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உயிருடன் இருக்கும் வரை, அவரை பொதுமக்களுக்கு அறிமுகப்படுத்த அரசியல் மேடைகளுக்கு சக்கர நாற்காலியில் வைத்தேனும் அழைத்து வருவோம் என்று பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இந்திக அனுருத்த தெரிவித்துள்ளார்.</p><p> 

பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
</p><p>
தொடர்ந்தும் தெரிவிக்கையில், </p><p>

வலுவான தலைவர்களைக் காண வேண்டும் என்ற விருப்பம் எப்போதும் மக்களிடம் உண்டு. எனவே எதிர்காலத்திலும் மகிந்த ராஜபக்சவை மக்கள் முன்னிலையில் கொண்டு வருவோம்.</p><h2>மிகச்சிறந்த தலைவர்&nbsp;</h2><p> </p><p>

சக்கர நாற்காலியில் வைத்தேனும் அவரை அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை நாங்கள் முன்னெடுப்போம்.
</p><p>
மகிந்த ராஜபக்சவின் தற்போதைய உடல்நிலையைக் கருத்திற் கொண்டு ஏன் அவரை தொடர்ந்து மேடைக்குக் கொண்டு வருகின்றீர்கள் என கேள்வி எழுப்பப்படுகின்றது. </p><p>

அவர் எங்கள் அரசியல் இயக்கத்தின் மிகச்சிறந்த தலைவர். ஆகவே, அவர் உயிருடன் இருக்கும் வரை அவரை மக்கள் முன்னிலைக்கு கொண்டு வருவோம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/acd114bc-bc3f-403a-a1c7-6738072e87c0/26-6aab6ad6e3c73.webp' /></p><p>
</p><p>
மேலும், அநுராதபுர பேரணி குறித்து விமர்சனங்களை முன்வைக்கும், தற்போது அமைச்சுப் பதவிகளை வகிக்கும் ஆட்சியாளர்கள் தங்கள் கடந்த காலச் செயற்பாடுகள் குறித்துச் சிந்திக்க வேண்டும்.
</p><p>
ஆளும் கட்சியைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் வெளியிடும் கருத்துக்களால் நாட்டிற்கு ஒரு பாரதூரமான மற்றும் ஆபத்தான நிலை உருவாகி வருகின்றது. </p><p> 

அரசாங்கத்தைக் கைப்பற்றிய போதிலும், தாங்கள் இன்னும் முழுமையான அரச அதிகாரத்தை அடையவில்லை என்று கூறும் இவர்கள், மற்றுமொரு போராட்டத்திற்கு தயாராகுமாறு அழைப்பு விடுக்கின்றனர் என குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p><p> 
</p>]]></content>
            <updated>2026-09-17T04:21:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Tony</name>
            </author>
            <title type="text"><![CDATA[அஜித் படத்தை முந்திய சூரியின் மண்டாடி வசூல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/soori-overtake-ajith-box-office-collection-1789609071"></link>
            <id>https://cineulagam.com/article/soori-overtake-ajith-box-office-collection-1789609071</id>
            <summary type="text">&amp;nbsp;சூரி சம்பவம்அஜித் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவர் நடிப்பில் அடுத்து டேர்டெவில் படம் அறிவிப்பு வந்தது. ஆனால், தற்போது வரை இப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<h2>&nbsp;சூரி சம்பவம்</h2><p>அஜித் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவர் நடிப்பில் அடுத்து டேர்டெவில் படம் அறிவிப்பு வந்தது. ஆனால், தற்போது வரை இப்படத்தின் ஷுட்டிங் தொடங்கியதா என்றால் கேள்விகுறி தான்.</p><p> சரி இது ஒரு புறம் இருக்க, அஜித்திற்கு தமிழகம், கர்நாடகம், மலேசியா, கல்ப், சிங்கப்பூர் தாண்டி வேறு எந்த பகுதிகளிலும் ஒரு நிலையான மார்கெட் இல்லை. </p><p>அதிலும் ஆந்திரா/தெலுங்கானாவில் அஜித்துக்கு மிக மோசமான மார்கெட் உள்ளது. எந்த அளவிற்கு என்றால் 4 படம் நடித்த ப்ரதீப் ரங்கநாதனே தெலுங்கில் மிகப்பெரிய மார்க்கெட் உருவாக்கியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/27a73673-d5e1-48a9-8802-ccd0887e2421/26-6aab4472762fa.webp' /></p><p>ஆனால், அஜித்திற்கு இன்று வரை அங்கு மார்கெட் இல்லை. அஜித்தின் அதிக வசூல் தெலுங்கில் குட் பேட் அக்லி 7 கோடி தான். ஆனால் இந்த வசூலை சூரியின் மண்டாடி 7 நாளில் முறியடித்து ரூ 10 கோடிகள் வரை அந்த பகுதியில் இப்படம் வசூல் செய்துள்ளது, இதன் மூலம் அஜித்தின் அதிகபட்ச தெலுங்கு வசூலை சூரி முறியடித்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. </p><p>ரியாலிட்டி என்ன என்பதை புரிந்துகொண்டு அஜித் படம் நடிக்க வேண்டும் என்பதே எல்லோரின் விருப்பமும்.</p>]]></content>
            <updated>2026-09-17T04:20:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[நோய்த்தொற்று அதிகரிப்பு... HIV-யை தேசிய அவசரநிலையாக அறிவித்த ஃபிஜி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/fiji-national-emergency-1789618830"></link>
            <id>https://news.lankasri.com/article/fiji-national-emergency-1789618830</id>
            <summary type="text">Fiji declares HIV a national emergency: ஃபிஜி எச்.ஐ.வி-யை தேசிய அவசரநிலையாக அறிவித்துள்ளது.
எச்.ஐ.வி (HIV) பாதிப்புகள் அதிகரித்து வருவதால் ஃபிஜி நாட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>Fiji declares HIV a national emergency: ஃபிஜி எச்.ஐ.வி-யை தேசிய அவசரநிலையாக அறிவித்துள்ளது.
</p><p>எச்.ஐ.வி (HIV) பாதிப்புகள் அதிகரித்து வருவதால் ஃபிஜி நாட்டில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது; அத்துடன் பரிசோதனை, சிகிச்சை மற்றும் தடுப்புச் சேவைகளுக்கான அணுகல் வசதிகளும் விரிவுபடுத்தப்பட்டு வருகின்றன.</p><h2>குழந்தைகளின் எண்ணிக்கை</h2><p>
</p><p>பசிபிக் பெருங்கடலில் உள்ள இந்தச் சிறிய தீவுக்கூட்டத்தில், ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு 167 பெரியவர்களில் ஒருவருக்கு தொற்று இருந்த நிலையில், தற்போது சுமார் 60 பெரியவர்களில் ஒருவர் அந்த தொற்றோடு வாழ்ந்து வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0dd99673-ceec-46e5-b32d-02cab1dbd824/26-6aab6a902fa65.webp' /></p><p> </p><p>அத்துடன், எச்.ஐ.வி (HIV) தொடர்பான சிக்கல்களால் மரணமடையும் குழந்தைகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. பத்து லட்சத்திற்கும் குறைவான மக்கள் தொகையைக் கொண்ட இந்த நாட்டில், 2025-ஆம் ஆண்டில் மட்டும் 2,016 பேருக்குப் புதிதாக நோய் பாதிப்பு கண்டறியப்பட்டதாக சுகாதார அமைச்சர் அன்டோனியோ லாலாபலவு தெரிவித்தார்; </p><p>மேலும், நோய் பரவல் தீவிரமடையும் சூழலில் மேற்கொள்ளப்படும் வழக்கமான நடவடிக்கைகள் இனி போதுமானதாக இருக்காது என்றும் அவர் குறிப்பிட்டார்.</p><p></p><p> போதைப்பொருள் பயன்பாடு, பாதுகாப்பற்ற பாலியல் உறவு, ஊசிகளைப் பகிர்ந்துகொள்ளுதல் ஆகியவற்றின் அதிகரித்துவரும் போக்கே இந்தத் தொற்றுநோய்க்கு அடிப்படையாக அமைகிறது. </p><p>மட்டுமின்றி, இன்னொரு ஆபத்தான முறையும் இங்கு பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. நரம்பு வழியாக போதைப்பொருள் பயன்படுத்துபவர்கள், ஏற்கனவே போதையில் இருக்கும் நபர்களின் இரத்தத்தை ஊசி மூலம் செலுத்தும் அபாயகரமான பழக்கம், குறிப்பாக ஆப்பிரிக்கா மற்றும் பசிபிக் பகுதிகளில் உலகளாவிய எச்.ஐ.வி. அதிகரிப்புக்கு வழிவகுத்துள்ளது.</p><h2>தங்களின் எச்.ஐ.வி நிலை</h2><p> </p><p>மற்றொன்று, ஒரே ஒரு சிரிஞ்ச் மட்டும் பயன்படுத்தும் முறை; ஃபிஜியில் சிரிஞ்சுகள் கிடைப்பது அரிது. மக்கள் முன்வந்து பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்று அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1688f676-10bd-4906-b303-db417589e6a2/26-6aab6a90d9af3.webp' /></p><p> </p><p>எச்.ஐ.வி மற்றும் எய்ட்ஸ் மீதான ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டுத் திட்டத்தின்படி, 2025-ஆம் ஆண்டில் எச்.ஐ.வி-யுடன் வாழும் 9,100 ஃபிஜியர்களில், 39 சதவீதம் பேர்கள் மட்டுமே தங்களின் எச்.ஐ.வி நிலையை அறிந்திருந்தனர் மற்றும் 22 சதவீதம் பேர்கள் மட்டுமே எச்.ஐ.வி எதிர்ப்பு மருந்து சிகிச்சையைப் பெற்று வந்தனர். எச்.ஐ.வி (HIV) பாதிப்புள்ளவர்களில் 78% பேர் சிகிச்சையைப் பெறும் உலகளாவிய சராசரிக்கு இது முற்றிலும் முரணாக உள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-17T04:17:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிரிலிய விவகாரம்... ஷிரந்தி ராஜபக்சவிற்கு FCID அழைப்பு : காவல்துறையின் அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/shiranthi-rajapaksa-summoned-by-fcid-sept-24-1789616162"></link>
            <id>https://ibctamil.com/article/shiranthi-rajapaksa-summoned-by-fcid-sept-24-1789616162</id>
            <summary type="text">முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவியான ஷிரந்தி ராஜபக்சவை எதிர்வரும் 24 ஆம் திகதி காவல்துறை நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவில் (FCID) முன்னிலைகு...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவியான ஷிரந்தி ராஜபக்சவை எதிர்வரும் 24 ஆம் திகதி காவல்துறை நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவில் (FCID) முன்னிலைகுமாறு பணிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p>'சிரிலிய சவிய' கணக்கு தொடர்பான வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காகவே அவர் இவ்வாறு அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>
</p><p>
குறித்த கணக்கு தொடர்பான விசாரணைகளை நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவு மீண்டும் ஆரம்பித்துள்ளதாகவும், அதனடிப்படையில் செப்டெம்பர் 24 அன்று அவரை முன்னிலையாகுமாறு கோரி அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் குறிப்பிட்டனர்.</p><p></p><h2>விமான நிலையத்தில் கையளிக்கப்பட்ட அறிவித்தல்</h2><p>
</p><p>
இந்த அறிவித்தல் ஆரம்பத்தில் தங்காலையில் உள்ள அவரது இல்லமான 'கார்ல்டன் இல்லத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. எனினும், அக்காலப்பகுதியில் அவர் கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.&nbsp;</p><p>நேற்று தனது சிகிச்சையை நிறைவு செய்த ஷிரந்தி ராஜபக்ச, சிங்கப்பூருக்குப் புறப்படுவதற்காக மருத்துவமனையிலிருந்து நேரடியாக பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்குச் சென்றார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/635ed906-9840-42c1-b783-0eef5e079b83/26-6aab697c7be3a.webp' /></p><p>
</p><p>
அங்கு வைத்து, செப்டெம்பர் 24 ஆம் திகதி நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவின் முன்னிலையாகுமாறு தெரிவிக்கும் அறிவித்தலை அதிகாரிகள் அவரிடம் கையளித்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. </p><p>அந்த அறிவித்தலை அவரது உறவினர் ஒருவர் அவருக்குப் பதிலாகப் பெற்றுக்கொண்டதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.</p><p>
இதனைத் தொடர்ந்து, ஷிரந்தி ராஜபக்ச நேற்று (16) அதிகாலை ஒரு சாதாரணப் பயணியாக சிங்கப்பூருக்குப் புறப்பட்டுச் சென்றார் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-17T04:14:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[3 ஆண்டுகளின் பின் மீண்டும் உயர்ந்த அமெரிக்க வட்டி வீதங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/us-interest-rates-rise-again-after-3-years-1789618048"></link>
            <id>https://canadamirror.com/article/us-interest-rates-rise-again-after-3-years-1789618048</id>
            <summary type="text">அதிகரித்து வரும் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில், மூன்று ஆண்டுகளுக்கும் மேலான காலப்பகுதியில் முதன்முறையாக அமெரிக்க வட்டி வீதங்கள் உயர்த்தப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>அதிகரித்து வரும் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில், மூன்று ஆண்டுகளுக்கும் மேலான காலப்பகுதியில் முதன்முறையாக அமெரிக்க வட்டி வீதங்கள் உயர்த்தப்பட்டுள்ளதுடன், அவை மேலும் உயர்த்தப்படக்கூடும் என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. </p><p>

வட்டி வீதங்களைக் குறைக்குமாறு கோரி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் கடுமையான எதிர்ப்பிற்கு மத்தியிலும், மத்திய வங்கியால் ஏகமனதான தீர்மானத்தின் மூலம் வட்டி வீதங்கள் 3.5%-3.75% இலிருந்து 3.75%-4% ஆக உயர்த்தப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e169e33c-fb4a-4cae-ae81-14f16db24b04/26-6aab6781ac136.webp' /></p><p> </p><p>

பணவீக்கம் மிகவும் அதிகமாக உள்ளதுடன், அது நீண்டகாலமாக நீடிக்கிறது எனக் குறிப்பிட்ட மத்திய வங்கியின் தலைவர் கெவின் வோர்ஷ், இது ஒரு "தெளிவான" மற்றும் "பொறுப்பான தீர்மானம்" என்றும் கூறினார். </p><p>

இந்த அறிவிப்புக்குப் பிறகு, ஜனாதிபதி ட்ரம்ப், கெவின் வார்ஷிற்குத் தனது ஆதரவை வெளியிட்ட போதிலும், வட்டி வீதத் தீர்மானங்களில் வாக்களிக்கும் மத்திய வங்கி சபை எதிர்ப்பான போக்கைக் கொண்டுள்ளதாகக் குறிப்பிட்டார். </p><p>

உயர்ந்த வட்டி வீதங்கள் கடன், வீடமைப்புப் பிணைக்கடன் மற்றும் கடன் அட்டைகளைப் பெற விரும்புவோருக்குக் கடன்களை அதிக செலவுடையதாக்குகின்றன. </p><p>

இருப்பினும், இது சேமிப்புகளுக்குச் சிறந்த பலன்களை அளிக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> 

தீர்மானத்தைத் தொடர்ந்து புதன்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது, மத்திய வங்கித் தலைமையிற்குள் நம்பிக்கையான மனநிலை இருந்தபோதிலும், பணவீக்கம் தொடர்ந்து ஒரு பிரச்சினையாகவே உள்ளதாக வோர்ஷ் கூறினார்.</p><p> 

பல மத்திய வங்கிகளைப் போலவே, பணவீக்கத்தை 2% அல்லது அதற்குக் குறைவாக வைத்திருக்க வேண்டும் என்ற இலக்கை மத்திய வங்கியும் கொண்டுள்ளது. </p><p>

அமெரிக்க பணவீக்கம் ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக இலக்கை விட அதிகமாகவே உள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். </p><p>

அமெரிக்கா-இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கு இடையிலான போர் தொடங்கியது முதல் மொத்த விற்பனை எண்ணெய் விலைகள் அதிகரித்ததன் காரணமாக, எரிபொருள் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளன. </p><p>

இது பல பொருட்கள் மற்றும் சேவைகளின் விலையையும் உயர்த்தியுள்ளதுடன், இதுவே அமெரிக்க வாக்காளர்களின் முதன்மை கவலைகளில் ஒன்றாக வாழ்வாதாரச் செலவை மாற்ற உதவியுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-17T04:07:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[மட்டக்குளியில் கோர விபத்து: உயிரிழந்தவர்கள் தொடர்பில் பொலிஸார் வெளியிட்ட தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/accident-in-the-mattakkuli-1789613410"></link>
            <id>https://tamilwin.com/article/accident-in-the-mattakkuli-1789613410</id>
            <summary type="text">கொழும்பு - மட்டக்குளி பகுதியில் மூன்று பேர் உயிரிழந்த கோர விபத்து குறித்த மேலதிக விபரங்களை பொலிஸ் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ளது.

நேற்றிரவு (16) இடம்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு - மட்டக்குளி பகுதியில் மூன்று பேர் உயிரிழந்த கோர விபத்து குறித்த மேலதிக விபரங்களை பொலிஸ் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ளது.</p><p>

நேற்றிரவு (16) இடம்பெற்ற கோர வாகன விபத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் பலர் பலத்த காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p><h2>விபத்திற்கான காரணம்</h2><p>இந்த விபத்து தொடர்பான பொலிஸாரின் கூற்றுப்படி, செப்டம்பர் 16 ஆம் திகதி இரவு பெர்குசன் சந்திப்பு பகுதியில் வத்தளையிலிருந்து அதிவேகமாக வந்த கார் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்தபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7d3ee77c-9573-4a2b-bf46-f178827de425/26-6aab66b2ce044.webp' /></p><p>
இதனைத்தொடர்ந்து அந்த கார் இரண்டு முச்சக்கர வண்டிகள் மற்றும் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மீது மோதியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
இந்த விபத்தில் மொத்தம் 13 பேர் காயமடைந்து கொழும்பில் உள்ள தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் மூவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் பின்னர் உயிரிழந்துள்ளனர்.</p><p>

சம்பவம் நடந்த உடனேயே சம்பவ இடத்திற்கு விரைந்த அப்பகுதி மக்கள், காயமடைந்தவர்களை கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.</p><h2>உயிரிழந்தவர்களின் விபரம்</h2><p>

இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் கொழும்பு 15, கிராண்ட்பாஸ் மற்றும் மட்டக்குளிவை சேர்ந்தவர்கள் என்றும், அவர்களில் இருவர் 44 மற்றும் 64 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/36267214-b0a9-4fd5-86e5-d238a7e8d490/26-6aab66b3814c0.webp' /></p><p> 

மூன்றாவது நபரின் வயது கண்டறியப்படாத நிலையில் பொலிஸ் அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.</p><p>

இந்த விபத்து தொடர்பில் மட்டக்குளியை சேர்ந்த 52 வயதான கார் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
அவர் போதையில் இருந்தாரா என்பது குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>

இந்த விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை மட்டக்குளிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;</p><p></p><p></p><p> </p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-17T04:06:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் ஃபேஸ்புக் சந்தை மூலம் கடிகாரம் விற்கச் சென்ற நபர் மீது தாக்குதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/3-suspects-sought-after-person-pepper-sprayed-1789615758"></link>
            <id>https://canadamirror.com/article/3-suspects-sought-after-person-pepper-sprayed-1789615758</id>
            <summary type="text">&amp;nbsp;கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்தில் உள்ள விட்பி பகுதியில், ஃபேஸ்புக் சந்தை வாயிலாகக் கைக்கடிகாரம் ஒன்றை விற்பனை செய்யச் சென்ற நபர் மீது மிளகுத் தெளிப...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்தில் உள்ள விட்பி பகுதியில், ஃபேஸ்புக் சந்தை வாயிலாகக் கைக்கடிகாரம் ஒன்றை விற்பனை செய்யச் சென்ற நபர் மீது மிளகுத் தெளிப்பான் தாக்குதல் நடத்தப்பட்டு, அவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மூன்று சந்தேகநபர்களைக் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.</p><p> 
செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3 மணியளவில் டான்டன் வீதி கிழக்கு மற்றும் பால்ட்வின் வீதி தெற்கு பகுதிக்கு அருகில் அசம்பாவிதம் ஏற்பட்டுள்ளதாக டர்ஹாம் பிராந்திய காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.</p><p> 
காவல்துறையினர் நடத்திய விசாரணையில், பாதிக்கப்பட்ட நபர் தனது கைக்கடிகாரத்தை விற்பனை செய்வதற்காக ஃபேஸ்புக் சந்தையில் விளம்பரம் செய்திருந்ததும், அதனை வாங்குவதாகக் கூறிய நபரைச் சந்திக்கச் சென்றபோது இச்சம்பவம் நடந்துள்ளதும் தெரியவந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6cff3112-a210-4ffd-9b56-fd56962f0b4e/26-6aab5e8fa3997.webp' /></p><p>
</p><p>அங்கு வந்த மூன்று நபர்கள், விற்பனையாளர் மீது மிளகுத் தெளிப்பான் தாக்குதல் நடத்தி, அவரைத் தாக்கிவிட்டு, கருப்பு நிற எஸ்.யு.வி காரில் தப்பிச் சென்றுள்ளனர். காயமடைந்த நபர் லேசான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.</p><p> 
சந்தேகநபர்கள் தப்பிச் செல்லப் பயன்படுத்திய கருப்பு நிற 'ஹோண்டா சி.ஆர்-வி' ரக காரின் புகைப்படத்தைப் புதன்கிழமை காவல்துறையினர் வெளியிட்டனர். </p><p>முதலாம் நபர்: 18 முதல் 20 வயதுடைய கருப்பின இளைஞர், 6 அடி உயரம், நீண்ட சடை முடி கொண்டவர். இவர் கருப்பு நிற தொப்பி, நீல நிற மருத்துவ முகக்கவசம், கருப்பு ட்ராக்சூட், மஞ்சள் நிற வேலைக் கையுறைகள் மற்றும் சாம்பல் நிற ஓட்டப்பந்தயக் காலணிகளை அணிந்திருந்தார். </p><p>இரண்டாம் நபர்: 5 அடி 5 அங்குலம் முதல் 5 அடி 7 அங்குல உயரம் கொண்டவர். இவர் கருப்பு நிற மருத்துவ முகக்கவசம், பழுப்பு நிற ஸ்வெட்ஷர்ட், அடர் சாம்பல் நிற ட்ராக் பேன்ட், கருப்பு காலணிகள் மற்றும் கருப்பு நைட்ரைல் கையுறைகளை அணிந்திருந்தார்.</p><p>மூன்றாம் நபர்: இவரைப் பற்றிய அடையாளங்கள் எதுவும் இதுவரை கிடைக்கப்பெறவில்லை.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-17T04:00:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[சனி வக்ர நிவர்த்தி: இனி இந்த ராசிகளுக்கு பொற்காலம் ஆரம்பம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/saturn-direct-in-pisces-who-will-get-more-benefits-1789544505"></link>
            <id>https://manithan.com/article/saturn-direct-in-pisces-who-will-get-more-benefits-1789544505</id>
            <summary type="text">ஜோதிடத்தில் சனி பகவானின் நிலை ஒருவரது வாழ்க்கையில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும் என நம்பப்படுகிறது. சனி ஒரு ராசியில் சுமார் 2½ ஆண்டுகள் பயணிப்பதுடன்,...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜோதிடத்தில் சனி பகவானின் நிலை ஒருவரது வாழ்க்கையில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும் என நம்பப்படுகிறது. சனி ஒரு ராசியில் சுமார் 2½ ஆண்டுகள் பயணிப்பதுடன், அவ்வப்போது வக்ர நிலையில் சஞ்சரிப்பார்.</p><p>

தற்போது மீன ராசியில் சஞ்சரித்து வரும் சனி பகவான், ஜூலை 27 முதல் வக்ர நிலையில் உள்ளார். இதனால் சில ராசிக்காரர்கள் தடைகள், பிரச்சினைகள் மற்றும் முயற்சிகளில் தாமதங்களை சந்திக்க நேரிடும் என ஜோதிடத்தில் கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/89cc886d-b477-4931-b8de-6b736ed61acf/26-6aaa6027cd888.webp' /></p><p></p><p>

இந்நிலையில், டிசம்பர் 11 அன்று சனி வக்ர நிவர்த்தி அடைந்து மீண்டும் நேர்கதியில் பயணிக்கவுள்ளார். இதன் மூலம் இதுவரை சிரமங்களை எதிர்கொண்ட சில ராசிக்காரர்களுக்கு சாதகமான மாற்றங்கள் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. சனி நேர்கதிக்கு திரும்புவதால் அதிர்ஷ்ட பலன்களை அனுபவிக்கப்போகும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.</p><h2>ரிஷபம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cf7bc348-e8b1-4fe6-8b46-2ea0d6d53280/26-6aaa6028821c6.webp' /></p><p>
சனி பகவான் வக்ர நிவர்த்தி அடைவதால் ரிஷப ராசிக்காரர்களின் வாழ்க்கையில் இதுவரை இருந்து வந்த பல்வேறு பிரச்சனைகள் படிப்படியாக குறையும். </p><p>குறிப்பாக வேலை தொடர்பான சிக்கல்கள் முடிவுக்கு வந்து, பணியில் முன்னேற்றத்திற்கான சூழல் உருவாகலாம். பணிபுரிபவர்களுக்கு அலுவலகத்தில் புதிய பொறுப்புகள் வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.</p><p>

நீண்ட காலமாக பணப் பிரச்சனைகளை எதிர்கொண்டு வந்தவர்களுக்கு நிதி நிலை மேம்படும் சூழல் உருவாகலாம்.எதிர்பாராத வகையில் பணவரவு கிடைப்பதுடன், பொருளாதார ரீதியாகவும் நிம்மதி கிடைக்க வாய்ப்புள்ளது.</p><h2>
மிதுனம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6cf47811-651f-424a-9e3f-f825429b1903/26-6aaa602938093.webp' /></p><h2>
</h2><p>சனி வக்ர நிவர்த்தி மிதுன ராசிக்காரர்களுக்கு சாதகமான மாற்றங்களை ஏற்படுத்தும் எனக் கூறப்படுகிறது. குறிப்பாக வேலை மாற்றம் குறித்து நீண்ட நாட்களாக யோசித்து வந்தவர்களுக்கு டிசம்பர் மாதத்திற்குப் பிறகு புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கலாம்.
</p><p>
நீண்ட காலமாக முடிக்க முடியாமல் இருந்த பணிகள் மற்றும் திட்டங்கள் வெற்றிகரமாக நிறைவு பெறும் வாய்ப்புள்ளது. இதுவரை சந்தித்து வந்த சில பிரச்சனைகளிலிருந்தும் நிவாரணம் கிடைக்ககும்.</p><p>மேலும் மன அழுத்தம் குறைந்து, மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கி அமைதியும் நிம்மதியும் கிடைக்கக்கும். குடும்பத்துடன் மகிழ்ச்சியான தருணங்களை அனுபவிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கும்.&nbsp;</p><h2>
கன்னி</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/440f61d2-ef4a-4173-b7a4-120efef93a62/26-6aaa6029e2bb2.webp' /></p><p></p><h2>
</h2><p>சனி பகவான் வக்ர நிவர்த்தி அடைவதால் கன்னி ராசிக்காரர்களின் வாழ்க்கையில் நல்ல மாற்றங்கள் ஏற்படலாம். நீண்ட நாட்களாக தாமதமாகி வந்த வேலைகள் மற்றும் முயற்சிகள் இனி தடையின்றி நிறைவேறும் சூழல் உருவாகும்.</p><p>

பணிபுரிபவர்களுக்கு நீண்ட கால கடின உழைப்புக்கான பலன் கிடைக்கக்கூடும். அதேபோல், பல்வேறு வழிகளில் இருந்து நல்ல செய்திகள் கிடைக்கும் வாய்ப்பும் உள்ளது.</p><p> தொழில் செய்து வருபவர்களுக்கு எதிர்பார்த்த லாபம் கிடைப்பதுடன், அதன் மூலம் நிதி நிலையும் மேம்படும். குறிப்பாக புதிய வீடு, வாகனம் வாங்குவதற்கான யோகம் கூடிவரும்.</p><p><b>இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;&nbsp;</b></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-17T03:59:14+00:00</updated>
        </entry>
    </feed>
