<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-08-12T05:42:56+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீதிமன்றில் முன்னிலையான கோட்டாபயவின் முன்னாள் தனிப்பட்ட செயலாளர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sugeeswara-bandara-to-court-gotabaya-rajapaksa-1786512409"></link>
            <id>https://tamilwin.com/article/sugeeswara-bandara-to-court-gotabaya-rajapaksa-1786512409</id>
            <summary type="text">முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் முன்னாள் தனிப்பட்ட செயலாளர் சுகீஸ்வர பண்டார நீதிமன்றத்திற்கு அழைத்து செல்லப்பட்டார்.&amp;nbsp;அவர், சற்று முன்னர் க...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் முன்னாள் தனிப்பட்ட செயலாளர் சுகீஸ்வர பண்டார நீதிமன்றத்திற்கு அழைத்து செல்லப்பட்டார்.&nbsp;</p><p>அவர், சற்று முன்னர் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட்டார்.&nbsp;</p><p>இரு நிறுவனங்களில் இருந்து அரச சம்பளம் பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட அவர் கடந்த 18ஆம் திகதி முதல் இன்று (12.08.2026) வரை காவலில் வைக்கப்பட்டிருந்தார்.
</p><p>இந்நிலையில் இன்று இந்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.&nbsp;</p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-12T05:41:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாட்டிலிருந்து வரும் உத்தரவு! இரகசிய உளவுத்தகவலில் ஆபத்தான பொதிகளுடன் சிக்கிய நபர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/one-arrested-underworld-group-member-with-drugs-1786506625"></link>
            <id>https://tamilwin.com/article/one-arrested-underworld-group-member-with-drugs-1786506625</id>
            <summary type="text">வெளிநாட்டில் தலைமறைவாகியுள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியும் போதைப்பொருள் கடத்தல்காரருமான &#039;கங்கன&#039; என்பவரின் உள்நாட்டு போதைப்பொருள் வலையமைப்பை இயக்கும்...</summary>
            <content type="html"><![CDATA[<p>வெளிநாட்டில் தலைமறைவாகியுள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியும் போதைப்பொருள் கடத்தல்காரருமான 'கங்கன' என்பவரின் உள்நாட்டு போதைப்பொருள் வலையமைப்பை இயக்கும் பிரதான நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் குறித்த சந்தேகநபர் இன்று (12) கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>ஹோமாகமவின் கெண்டலந்த பகுதியில் நடத்தப்பட்ட சோதனையின் போது, ​​போதைப்பொருள் கையிருப்புடன் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>&nbsp;</p><h2>அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய உளவுத்தகவல்</h2><p>பொலிஸ் விசேட அதிரடிப்படையின் விசேஷ நடவடிக்கைப்பிரிவு III அதிகாரிகளுக்கு கிடைத்த உளவுத்தகவலின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0a37f0df-7346-4d93-9f7d-bbe40436b769/26-6a7c06c0ee778.webp' /></p><p>இதன்போது சந்தேகநபரிடமிருந்து 2 கிலோகிராம் 59 மில்லிகிராம் ஐஸ் மற்றும் 800 'எக்ஸ்டஸி' வகை போதைப்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.</p><p>இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர், ஹோமகம பகுதியை சேர்ந்த 44 வயதுடையவர் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.</p><p>வெளிநாட்டில் தலைமறைவாகியுள்ள 'கங்கன' என்பவரின் நேரடி உத்தரவுகளின் கீழ், இவர் நாட்டில் போதைப்பொருள் விநியோக வலையமைப்பை இரகசியமாக இயக்கி வந்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.</p><p>இதன்போது கைது செய்யப்பட்ட சந்தேகநபரும், கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் கையிருப்பும் மேலதிக விசாரணைக்காக ஹோமாகம பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டதாக பொலிஸ் விசேட அதிரடிப்படை தெரிவித்துள்ளது.</p><p>&nbsp;</p><p></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-12T05:38:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[திடீரென கீழே இறங்கிய விமானம் ;ஏர் இந்தியா விமானி போதைப்பொருள் பயன்படுத்தியமை உறுதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/air-india-pilot-confirmed-to-have-used-drugs-1786512733"></link>
            <id>https://jvpnews.com/article/air-india-pilot-confirmed-to-have-used-drugs-1786512733</id>
            <summary type="text">புக்கெட்டிலிருந்து (Phuket) டெல்லி நோக்கி பயணித்த ஏர் இந்தியா விமானத்தை இயக்கிய முதன்மை விமானியிடம் நடத்தப்பட்ட இரண்டாம் கட்ட போதைப்பொருள் உறுதிப்படுத...</summary>
            <content type="html"><![CDATA[<p>புக்கெட்டிலிருந்து (Phuket) டெல்லி நோக்கி பயணித்த ஏர் இந்தியா விமானத்தை இயக்கிய முதன்மை விமானியிடம் நடத்தப்பட்ட இரண்டாம் கட்ட போதைப்பொருள் உறுதிப்படுத்தல் பரிசோதனையிலும் அவர் போதைப்பொருள் பயன்படுத்தியமை உறுதியாகியுள்ளது.</p><p>கடந்த 4 ஆம் திகதி குறித்த வானூர்தி நடுவானில் பயணித்த போது, திடீரென சுமார் 300 அடிகள் வரை கீழே இறங்கி பலத்த குலுக்கலுக்கு உள்ளானது.</p><p>இதனால் விமானத்திலிருந்த பயணிகள் மற்றும் பணியாளர்கள் உட்பட 24 பேர் காயமடைந்தனர்.</p><p>இதனைத் தொடர்ந்து, டெல்லி விமான நிலையத்தை வந்தடைந்ததும் விமானிகளுக்கு முன்னெடுக்கப்பட்ட முதற்கட்ட போதைப்பொருள் பரிசோதனையில் குறித்த முதன்மை விமானியின் மாதிரி சந்தேகத்திற்குரியதாக அமைந்திருந்தது.</p><p>ஆய்வகத்தில் நடத்தப்பட்ட இரண்டாவது கட்ட உறுதிப்படுத்தல் பரிசோதனையில், விமானி கஞ்சா போதைப்பொருளை பயன்படுத்தியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.</p><p>இதனையடுத்து வானூர்தி போக்குவரத்து பணிப்பாய்வுச் செயலகத்தின் விதிமுறைகளின்படி, குறித்த விமானி உடனடியாகப் பணிப் பொறுப்புகளிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.</p>]]></content>
            <updated>2026-08-12T05:35:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[மீண்டும் திரையில் இணையும் விஜய் - த்ரிஷா ஜோடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/vijay-trisha-blockbuster-thirupaachi-re-release-1786511674"></link>
            <id>https://manithan.com/article/vijay-trisha-blockbuster-thirupaachi-re-release-1786511674</id>
            <summary type="text">thirupaachi re release : விஜய் ரசிகர்களின் மனதில் தனி இடம் பிடித்த ‘திருப்பாச்சி’ திரைப்படம், மீண்டும் திரையரங்குகளில் மாஸ் காட்ட வருகிறது. இத் திரைப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>thirupaachi re release : விஜய் ரசிகர்களின் மனதில் தனி இடம் பிடித்த ‘திருப்பாச்சி’ திரைப்படம், மீண்டும் திரையரங்குகளில் மாஸ் காட்ட வருகிறது. இத் திரைப்படம் அக்டோபர் 1-ம் தேதி மீண்டும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.</p><h2>திருப்பாச்சி</h2><h2> </h2><p> விஜய் – திரிஷா ஜோடியில் வெளியான இப்படத்தில், விஜய்யின் தங்கையாக நடிகை மல்லிகா நடித்திருந்தார். இவர்களுடன் பசுபதி, மனோஜ் கே. ஜெயன், கோட்டா ஸ்ரீனிவாச ராவ், பெஞ்சமின், லிவிங்ஸ்டன், சாயா சிங் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5d3b46d1-3137-49de-bb38-ecbc259cfb2d/26-6a7c0405c72e6.webp' /></p><p></p><p>

விஜய்யின் அதிரடியான ஆக்‌ஷன் காட்சிகள், தங்கச்சி சென்டிமென்ட், காமெடி என அனைத்து அம்சங்களும் ரசிகர்களை கவர்ந்ததுடன், தீனா, மணிசர்மா, தேவி ஸ்ரீ பிரசாத் ஆகியோரின் துள்ளலான இசையும் படத்தின் வெற்றிக்கு கூடுதல் பலமாக அமைந்தது.</p><p> 2005-ம் ஆண்டு வெளியான இந்தப் படம், விஜய்யின் வெற்றிப் படங்களில் முக்கியமான ஒன்றாக மாறியது. இதன் வெற்றியைத் தொடர்ந்து, தெலுங்கில் பவன் கல்யாண் நடிப்பில் ‘அன்னவரம்’ என்றும், கன்னடத்தில் ‘தங்கிகாகி’ என்றும் ரீமேக் செய்யப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/705b7b8a-fb6c-4ad8-8469-6ca2b0106583/26-6a7c040696dc4.webp' /></p><p></p><p><b>
மீண்டும் திரையரங்குகளில் ‘திருப்பாச்சி’</b></p><p>கடந்த ஆண்டு விஜய்யின் ‘கில்லி’ திரைப்படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டபோது, ரசிகர்கள் அதனை திருவிழா போல கொண்டாடினர். அந்த ரீ-ரிலீஸ் உலகம் முழுவதும் சுமார் ரூ.26 முதல் ரூ.30 கோடி வரை கூடுதல் வசூல் செய்ததாக தகவல்கள் வெளியாகின.
</p><p>
அந்த வெற்றியைத் தொடர்ந்து, தற்போது விஜய்யின் மற்றொரு மாஸ் படமான ‘திருப்பாச்சி’ ரீ-ரிலீஸுக்கு தயாராகியுள்ளது. </p><p>வரும் அக்டோபர் 1-ம் தேதி இப்படம் மீண்டும் திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தை திருப்பதி பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்<b> <u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW&nbsp;</a></u></b></td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-12T05:30:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[தங்காலையில் மர்ம நபர்களின் துப்பாக்கிச் சூடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/gunmen-open-fire-at-house-in-tangalle-1786511505"></link>
            <id>https://tamilwin.com/article/gunmen-open-fire-at-house-in-tangalle-1786511505</id>
            <summary type="text">கடுவலை - தங்காலை, குடவெல்ல பகுதியில் உள்ள வீடொன்றின் மீது இனந்தெரியாத நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

குறித்த ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கடுவலை - தங்காலை, குடவெல்ல பகுதியில் உள்ள வீடொன்றின் மீது இனந்தெரியாத நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். </p><p>

குறித்த சம்பவம்&nbsp;நேற்று(11.08.2026) இரவு இடம்பெற்றுள்ளது.</p><h2>பொலிஸார் மேலதிக விசாரணை</h2><p>இதில் எவ்வித உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/37154665-dd24-4e94-8e34-d507d512a553/26-6a7c04ae335f1.webp' /></p><p>இந்நிலையில், தங்காலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-12T05:29:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரஷ்யாவின் மிகப்பெரிய இரசாயன ஆலையைத் தாக்கிய ட்ரோன்கள்: உக்ரைன் மீது குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/ukraine-strike-russia-s-big-petrochemical-plant-1786512517"></link>
            <id>https://news.lankasri.com/article/ukraine-strike-russia-s-big-petrochemical-plant-1786512517</id>
            <summary type="text">மேற்கு சைபீரியாவில் ரஷ்யாவின் மிகப்பெரிய இரசாயன ஆலையை உக்ரைன் தாக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேற்கு சைபீரியாவின் ட்யூமென் பகுதியில் ரஷ்யாவின் மி...</summary>
            <content type="html"><![CDATA[<p>மேற்கு சைபீரியாவில் ரஷ்யாவின் மிகப்பெரிய இரசாயன ஆலையை உக்ரைன் தாக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p>

மேற்கு சைபீரியாவின் ட்யூமென் பகுதியில் ரஷ்யாவின் மிகப்பெரிய பெட்ரோ இரசாயன ஆலையை உக்ரைன் தாக்கியதாக கூறப்படுகிறது.&nbsp;</p><h2>பெட்ரோ இரசாயன ஆலை</h2><p>

ரஷ்யாவின் மிகப்பெரிய பெட்ரோ இரசாயன ஆலை மேற்கு சைபீரியாவின் ட்யூமென் பகுதியில் உள்ளது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e27f445b-d46a-4f91-b4da-eaee80619131/26-6a7c055768fac.webp' /></p><p></p><p>
ஆலை ஒன்றின் மீது பல ட்ரோன்கள் மோதியதாகவும், அதன் காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாகவும் ட்யூமென் பிராந்திய ஆளுநர் அலெக்சாண்டர் மூர் உறுதிப்படுத்தினார்.</p><p>ஆனால், அவர் அந்த இடத்தின் பெயரை குறிப்பிடவில்லை. அதே சமயம், சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட காணொளிகளில் பெட்ரோ இரசாயன ஆலைக்கு மேலே அடர்த்தியான புகை மேகங்கள் எழுவதாகக் கூறப்படுகிறது.
</p><p>
சிபூர் பெட்ரோ இரசாயன நிறுவனத்தின் ஒரு பகுதியான ஸாப்ஸிப்நெஃப்டெகிம் ஆலையை ட்ரோன்கள் குறிவைத்ததாக சரிபார்க்கப்படாத அறிக்கைகள் தெரிவிக்கின்றன.&nbsp;</p><h2>காலவரையின்றி&nbsp;</h2><p>
ரஷ்யாவின் மிகப்பெரிய பெட்ரோ இரசாயன ஆலை தாக்கப்பட்டதாக சுயாதீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p>தாக்குதலுக்கு உள்ளன ஆலை, சேதத்தின் அளவு மற்றும் அதன் விளைவுகள் மதிப்பிடப்பட்டு வரும் நிலையில் காலவரையின்றி மூடப்பட்டுள்ளதாக தொழிற்சாலை வட்டாரம் ஒன்று கூறியதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் மேற்கோள் காட்டியுள்ளது.</p><p>

இதற்கிடையில், திங்கட்கிழமை அதிகாலையில் இரண்டு ரஷ்ய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறிய உக்ரைன், ட்யூமென் பிராந்தியத்தில் நடந்த இந்தத் தாக்குதலுக்கு உடனடியாக பொறுப்பேற்கவில்லை.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dd56c86e-2b84-45ab-90f5-e47b03a4b0c9/26-6a7c055837cfd.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-12T05:26:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிளாமர் லுக்கில் நடிகை ரைசா வில்சன் ரீசெண்ட் போட்டோஸ்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/actress-raiza-wilson-recent-photos-1786512241"></link>
            <id>https://viduppu.com/article/actress-raiza-wilson-recent-photos-1786512241</id>
            <summary type="text">ரைசா வில்சன்கன்னட சினிமாவில் மாடலிங் மூலம் தனது சினிமா பயணத்தை துவங்கியவர் தான் ரைசா வில்சன். 

அந்த துறையில் பணிபுரிந்துகொண்டிருந்தபோதே தமிழ் பக்கம...</summary>
            <content type="html"><![CDATA[<h2>ரைசா வில்சன்</h2><p>கன்னட சினிமாவில் மாடலிங் மூலம் தனது சினிமா பயணத்தை துவங்கியவர் தான் ரைசா வில்சன். 

அந்த துறையில் பணிபுரிந்துகொண்டிருந்தபோதே தமிழ் பக்கம் வந்தவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மக்களின் கவனம் பெற்றார். </p><p>அந்நிகழ்ச்சி முடிந்த கையோடு ஹரிஷ் கல்யாணுடன் இணைந்து ஒரு காதல் திரைப்படம் நடித்தார்.

அப்படம் வெற்றி என்றாலும் அதன்பின் ரைசா நடித்த படங்கள் அவ்வளவாக வெற்றிப்பெறவில்லை.
</p><p>
ரைசா வில்சன் இன்று தனது இன்ஸ்டாவில் மிகவும் கவர்ச்சியான உடை அணிந்து போட்டோ ஷுட் நடத்தியுள்ளார். இதோ அந்த போட்டோஸ்..</p>]]></content>
            <updated>2026-08-12T05:23:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ட்ரம்ப்பிற்கு எதிராக நெதன்யாகு எடுத்துள்ள அதிரடி முடிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/netanyahu-s-bold-move-against-trump-for-gaza-1786512036"></link>
            <id>https://canadamirror.com/article/netanyahu-s-bold-move-against-trump-for-gaza-1786512036</id>
            <summary type="text">இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, தனது உள்நாட்டு அரசியல் எதிர்காலத்தைப் பாதுகாத்துக் கொள்வதற்காக டொனால்ட் ட்ரம்ப்பை எதிர்க்கத் தயாராக இருப்பதாக ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, தனது உள்நாட்டு அரசியல் எதிர்காலத்தைப் பாதுகாத்துக் கொள்வதற்காக டொனால்ட் ட்ரம்ப்பை எதிர்க்கத் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளமை உகல நாடுகளில் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><p>இத் தகவலை சவூதி அரேபியாவுக்கான முன்னாள் அமெரிக்கத் தூதரும் இஸ்ரேலுக்கான அமெரிக்கத் தூதரகத்தின் சார்ஜ் டி அஃபேர்ஸாகப் பணியாற்றியவருமான மைக்கேல் ராட்னி தெரிவித்துள்ளார்.</p><p>ட்ரம்ப்பிடமிருந்து எத்தகைய எதிர்வினை வந்தாலும் அதை எதிர்கொள்வதை விட, அத்திட்டத்தைப் பகிரங்கமாக நிராகரிப்பதே தனக்கு நல்லது என்று அவர் கணக்கிடுகிறார் என நான் நினைக்கிறேன் என்று ராட்னி தெரிவித்துள்ளார்.</p><p>இது முதன்மையாக அடுத்த சில மாதங்களில் வரவுள்ள நெதன்யாகுவின் தேர்தல் வாய்ப்புகள் பற்றியது என்று அவர் மேலும் கூறினார்.</p><p>ட்ரம்ப்புடன் அவருக்குள்ள உறவு எப்படியிருந்தது அல்லது இந்தத் திட்டத்தின் சில அம்சங்களை அவர் எந்த அளவுக்கு ஏற்றுக்கொள்வார் என்பதெல்லாம் இரண்டாம் பட்சமான விடயங்கள் என்றும் தனது வாக்காளர்களுக்கு அவர் பொதுவெளியில் என்ன சொல்கிறார் என்பதுதான் அவருக்கு இப்போது முக்கியம் என்றும் ராட்னி தெரிவித்துள்ளார்.</p><p><br></p>]]></content>
            <updated>2026-08-12T05:20:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மன்னர் சார்லஸ் இறந்துவிட்டதாக வெளியான அறிவிப்பு: பணியாளரின் ஆர்வத்தால் உருவான குழப்பம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/uk-radio-falsely-announced-king-charles-death-1786510321"></link>
            <id>https://news.lankasri.com/article/uk-radio-falsely-announced-king-charles-death-1786510321</id>
            <summary type="text">மே மாதத்தில், தனியார் வானொலி ஒன்று மன்னர் சார்லஸ் இறந்துவிட்டதாக வெளியிட்ட அறிவிப்பு, பணியாளர் ஒருவரின் ஆர்வத்தால் ஏற்பட்ட தவறு என விளக்கமளிக்கப்பட்டு...</summary>
            <content type="html"><![CDATA[<p>மே மாதத்தில், தனியார் வானொலி ஒன்று மன்னர் சார்லஸ் இறந்துவிட்டதாக வெளியிட்ட அறிவிப்பு, பணியாளர் ஒருவரின் ஆர்வத்தால் ஏற்பட்ட தவறு என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
</p><p>


இங்கிலாந்தை மையமாகக் கொண்டு இயங்கிவரும் தனியார் வானொலி, ரேடியோ கரோலின்.
</p><p>
மே மாதம் 19ஆம் திகதி, வானொலியில் வழக்கம்போல பாடல்கள் ஒலிபரப்பாகிக்கொண்டிருந்த நிலையில், திடீரென நிகழ்ச்சிகள் நிறுத்தப்பட்டன.</p><h3>

மன்னர் சார்லஸ் இறந்துவிட்டதாக வெளியான அறிவிப்பு
</h3><p>
அதைத் தொடர்ந்து, மன்னர் சார்லஸ் மரணடைந்து விட்டதால், நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாக, நிகழ்ச்சியைக் கேட்டுக்கொண்டிருந்தவர்கள் குழப்பமடைந்துள்ளார்கள்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/16b3a2a2-594f-464b-be81-84730efa84a6/26-6a7bfbf372fed.webp' /></p><p>
குழப்பத்தை அதிகரிக்கும் வகையில், தேசிய கீதமும் ஒலிக்கச் செய்யப்பட்டுள்ளது.
</p><p> 
பின்னர் மீண்டும் ஒரு முறை மன்னர் சார்லஸ் மரணமடைந்ததாக அறிவிக்கப்பட, 16 நிமிடங்களுக்கு நிகழ்ச்சிகள் நிறுத்தப்பட்டு அமைதி நிலவியுள்ளது.&nbsp;</p><p></p><p>
இந்நிலையில், அரை மணி நேரத்துக்குப் பின், மீண்டும் அறிவிப்பொன்றை வெளியிட்ட வானொலி அறிவிப்பாளர், மன்னர் மரணமடைந்துவிட்டதாக தவறுதலாக அறிவிப்பு வெளியானதாகக் கூறி, மன்னிப்புக் கேட்டுக்கொண்டுள்ளார்.
</p><h3>
நடந்தது என்ன?
</h3><p>
அதாவது, எல்லா பிரித்தானிய ஊடகங்களுமே, மன்னரின் மரணம் தொடர்பான ஒரு செய்தியை தயாராக வைத்திருக்குமாம்.
</p><p>
வானொலி நிலையத்தில் கணினி பராமரிப்புப் பணிக்காக வந்த ஒரு பணியாளர், கணினியில் மன்னர் மரணம் தொடர்புடைய மூன்று கோப்புகள் இருப்பதைக் கவனித்துள்ளார்.
</p><p>
அதில் என்ன உள்ளது என்பதை அறியும் ஆர்வத்தில், அந்த கோப்புகளை ஒலிக்கச் செய்துள்ளார் அந்த பணியாளர்.
</p><p>
விடயம் என்னவென்றால், அப்போது ஒலிபரப்பாகிக்கொண்டிருந்த பாடல் நிகழ்ச்சி, வேறொரு இடத்திலிருந்து ஒலிபரப்பாகிக்கொண்டிருந்திருக்கிறது.</p><p>

அப்போது, தொலைபேசியில் வாசகர் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர், வானொலி நிலையத்தில் என்ன நடக்கிறது என்று தெரியாமலே, பாடல் நிகழ்ச்சியை நிறுத்திவிட்டு, மன்னர் குறித்து வந்த செய்தியை ஒலிபரப்பியுள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/56ceb0cb-fee7-44e8-b144-43b75c710c29/26-6a7bfbf2c1a4e.webp' /></p><p>
இதற்கிடையில், அந்த பராமரிப்புப் பணியாளர் தான் தவறு செய்துவிட்டது தெரியவந்ததால், அங்கிருந்து ஓட்டம் பிடித்துள்ளார்.
</p><p>
நிகழ்ச்சியை வழங்குபவர் வானொலி நிலையத்தை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, அங்குள்ள நிலைய பொறியாளரிடம் விசாரிக்க, அவர் அந்த பராமரிப்புப் பணியாளர் செய்த தவறு குறித்து கூறியுள்ளார்.</p><p>

தவறை உணர்ந்த நிகழ்ச்சி தொகுப்பாளர், வாசகர்களிடம் மன்னர் குறித்து வெளியான தவறான செய்திக்காக மன்னிப்புக் கேட்டுக்கொண்டுள்ளார். ஆனால், அதற்குள் அரை மணி நேரம் கடந்துவிட்டிருக்கிறது.
</p><h3>
ஒழுங்குமுறை அமைப்புக்கு வந்த புகார்கள்
</h3><p>
இந்நிலையில், வானொலி, தொலைக்காட்சி முதலான தகவல் தொடர்பு அமைப்புகள் தொடர்பில் நடவடிக்கைகள் எடுக்கும் ஒழுங்குமுறை அமைப்பான Ofcom என்னும் அமைப்புக்கு இந்த தவறு தொடர்பில் புகார்கள் வர, அந்த அமைப்பு விசாரணை ஒன்றைத் துவக்கியுள்ளது.</p><p>

விசாரணையின் முடிவுகள், ரேடியோ கரோலின் வானொலி, இரண்டு விதி மீறல்களில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளன.
</p><p>
துல்லியமான, பாரபட்சமற்ற தகவல்களை வெளியிடுதல் மற்றும் தவறு நிகழ்ந்தால் உடனடியாக அதை திருத்திக்கொண்டு அது குறித்து விளக்கமளித்தல் என இரண்டு விதிகளை ரேடியோ கரோலின் வானொலி மீறியுள்ளதாக Ofcom தெரிவித்துள்ளது.
</p><h3>
என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன?</h3><p>

தவறு செய்த பராமரிப்புப் பணியாளர் உடனடியாக வரவழைக்கப்பட்டு கண்டிக்கப்பட்டதாக வானொலி நிலையம் தெரிவித்துள்ளதுடன், அவர் மன்னிப்புக் கோரியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
அத்துடன், மன்னர் மரணம் தொடர்பான கோப்புகள், ஏற்கனவே வைக்கப்பட்டிருந்த கணினியிலிருந்து அகற்றப்பட்டு, தனியாக ஒரு ஹார்ட் ட்ரைவுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், அந்த கோப்புகளை பயன்படுத்துதல் தொடர்பில் பணியாளர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் வானொலி நிலையம் தெரிவித்துள்ளது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-12T05:20:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யோஷித ராஜபக்ச சி.ஐ.டி யில் முன்னிலை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/yoshitha-rajapaksa-arrives-at-cid-1786510116"></link>
            <id>https://ibctamil.com/article/yoshitha-rajapaksa-arrives-at-cid-1786510116</id>
            <summary type="text">முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் புதல்வரான யோஷித ராஜபக்‌ஷ சற்று முன்னர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகி உள்ளார்.&amp;nbsp;இடம்பெற்று வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் புதல்வரான யோஷித ராஜபக்‌ஷ சற்று முன்னர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகி உள்ளார்.&nbsp;</p><p>இடம்பெற்று வரும் விசாரணை ஒன்றுக்கு தொடர்புடையதாக வாக்குமூலம் வழங்குவதற்காகவே குற்றப் புலனாய்வுதிணைக்களத்திற்கு இன்று இவர் (12.08.2026) வருகை தந்துள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8e4760d3-406a-4dc4-8eed-fb3449319dbb/26-6a7c00c11a9d0.webp' /></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-12T05:12:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Malaivanjan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்திய அரசாங்கத்தின் உதவி - எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/indian-government-help-by-inclement-weather-1786509095"></link>
            <id>https://tamilwin.com/article/indian-government-help-by-inclement-weather-1786509095</id>
            <summary type="text">சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்திய அரசாங்கத்தின் உதவிகளைப்
பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கொட்டகலை பிரதே...</summary>
            <content type="html"><![CDATA[<p>சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்திய அரசாங்கத்தின் உதவிகளைப்
பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கொட்டகலை பிரதேச சபைத்
தலைவர் ராஜமணி பிரசாந்த் தெரிவித்துள்ளார்.</p><p>கொட்டகலை பிரதேச சபையின் மாதாந்த அமர்வு நேற்று (11) செவ்வாய்க்கிழமை
நடைபெற்றபோது இதனை தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில்,</p><h2>சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி</h2><p>அண்மையில் மத்திய மலைநாட்டில் ஏற்பட்ட கடும் மழை, வெள்ளம் மற்றும் சீரற்ற
காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளைப் பெற்றுக்கொடுப்பதற்காக
இந்திய அரசாங்கத்தின் உதவியை நாடியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e9f6ad07-66e3-4b3b-867f-44f49a574cbb/26-6a7bffb39c41c.webp' />&nbsp;</p><p>இதற்கமைய, கடந்த வாரம் கண்டியிலுள்ள இந்திய உதவித்தூதரகத்தின் உதவித்தூதுவர்
சரண்யா அம்மையாரை, பிரதேச சபை செயலாளர் விஜயசுந்தரம் மற்றும் உறுப்பினர்
பாஸ்கரன் ஆகியோருடன் சந்தித்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசர நிவாரண உதவிகளை
வழங்குமாறு கோரிக்கை விடுத்ததாக அவர் கூறியுள்ளார்.</p><p>அத்துடன், கொட்டகலை பிரதேசத்தில் க.பொ.த. சாதாரண தரம் மற்றும் உயர்தரப்
பரீட்சைகளில் சித்தியடைந்த சுமார் 700 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள்,
மடிக்கணினிகள் மற்றும் புலமைப்பரிசில்கள் வழங்குவதற்கும், இளைஞர்,
யுவதிகளுக்கு சுயதொழில் வாய்ப்புகளை உருவாக்குவதற்கும், விவசாய நடவடிக்கைகளை
ஊக்குவிப்பதற்கும் உதவிகளை வழங்குமாறு இந்திய அரசாங்கத்திடம் கோரிக்கை
விடுக்கப்பட்டுள்ளது.</p><p>&nbsp;இந்த உதவிகளை வழங்குவதற்கு எதிர்வரும் மூன்று மாதங்களுக்குள் நடவடிக்கை
எடுக்கப்படும் என இந்திய தரப்பில் உறுதியளிக்கப்பட்டுள்ளதாகவும், இதற்காக
இந்திய அரசாங்கத்திற்கும் இந்திய உதவித் தூதரகத்திற்கும் நன்றி
தெரிவிப்பதாகவும் பிரதேச சபை தலைவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>கொட்டகலை பிரதேசத்தில் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ள 88 விசேட தேவையுடைய
மாணவர்களுக்காக, 2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில்
ஒதுக்கப்பட்டுள்ள நிதியிலிருந்து இரண்டு இலட்சம் ரூபாய் பெறுமதியான உலர்
உணவுப் பொருட்களை கொள்வனவு செய்து, அவற்றை மாணவர்களின் வீடுகளுக்கே நேரடியாகச்
சென்று வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் பிரதேச சபைத் தலைவர்
தெரிவித்துள்ளார்.</p><h2>விரைவில் புதிய கட்டட நிர்மாண பணிகள்&nbsp;</h2><p>
</p><p>
இதேவேளை, கொட்டகலை பொது விளையாட்டு மைதானத்தின் பயன்பாடு தொடர்பிலும் புதிய
தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.</p><p>

இதற்கமைய, உள்ளூர் விளையாட்டுக் கழகங்களுக்கு ஒரு நாளுக்கான மைதான வாடகையாக 10
ஆயிரம் ரூபாயும், வைப்புப் பணமாக மேலும் 10 ஆயிரம் ரூபாயும் அறவிடப்படவுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/996ff3a9-273a-48f5-a5b4-cc16f9a5bfcd/26-6a7bffb470ce0.webp' />&nbsp;</p><p>
</p><p>
பிரதேசத்திற்கு வெளியேயுள்ள விளையாட்டுக் கழகங்களுக்கு ஒரு நாளுக்கு 15 ஆயிரம்
ரூபாயும், 10 ஆயிரம் ரூபாய் வைப்புப் பணமும் அறவிடப்படவுள்ளதாகவும்
தெரிவிக்கப்பட்டது.</p><p>

எனினும், கொட்டகலை பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பாடசாலைகளின் நிகழ்வுகளுக்கு
மைதானத்தை இலவசமாக வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
</p><p>
மைதானத்தைப் பயன்படுத்துவோரின் வசதிக்காக மின்சாரம் மற்றும் மலசலகூட வசதிகளும்
ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2ab32374-8df7-486b-95ae-372cf7e8a200/26-6a7bffb545d59.webp' /></p><p>அத்துடன், கொட்டகலை பிரதேச சபைக்குச் சொந்தமான புதிய கட்டிடத்தின் நிர்மாணப்
பணிகளை விரைவில் நிறைவு செய்வதற்காக மத்திய மாகாண ஆளுநர், உள்ளூராட்சி
ஆணையாளர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் ஒப்புதல் மற்றும் ஒத்துழைப்பைப்
பெற்றுக்கொள்ள கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாகவும் ராஜமணி பிரசாந்த்
கூறியுள்ளார்.</p><p>உறுப்பினர் சுதர்ஷன் முன்வைத்த கோரிக்கைக்கு அமைவாக, வட்டகொடை நகரில் யுவுஆ
இயந்திர சேவையைப் பெற்றுக்கொடுப்பதற்காக பிரபல வங்கிகளுடன் தொடர்பு கொண்டு
நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p>இதனிடையே, பிரதேச சபை உறுப்பினர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதியில் அவரவர்
வட்டாரங்களில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்திப் பணிகளை விரைவாக நிறைவு
செய்து, அவற்றின் முழுமையான விபரங்களை நவம்பர் மாத இறுதிக்குள்
சமர்ப்பிக்குமாறும் பிரதேச சபைத் தலைவர் உறுப்பினர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.</p><p>

ஒதுக்கப்பட்ட நிதி மீண்டும் திறைசேரிக்கு திரும்பிச் செல்லாத வகையில்,
அபிவிருத்தித் திட்டங்களை உரிய காலத்திற்குள் நிறைவு செய்ய அனைத்து
உறுப்பினர்களும் ஒத்துழைக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.</p><p>சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணம், விசேட தேவையுடைய
பிள்ளைகளுக்கான கல்வி வசதிகள், விளையாட்டு மைதான அபிவிருத்தி உள்ளிட்ட பல்வேறு
விடயங்கள் தொடர்பில் கொட்டகலை பிரதேச சபையின் இன்றைய அமர்வில் கவனம்
செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.</p><p>&nbsp;</p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-12T05:11:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Tony</name>
            </author>
            <title type="text"><![CDATA[விஸ்வநாதன் அண்ட் சன்ஸ் உலகம் முழுவதும் இத்தனை கோடிகள் முன்பதிவு வசூலா, முழு விவரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/viswanathan-and-sons-pre-booking-box-office-1786510734"></link>
            <id>https://cineulagam.com/article/viswanathan-and-sons-pre-booking-box-office-1786510734</id>
            <summary type="text">விஸ்வநாதன் அண்ட் சன்ஸ்சூர்யா நடிப்பில் இந்த வருடம் வெளிவந்த கருப்பு போட்ட ஆட்டமே இன்னும் அடங்கவில்லை. உலகம் முழுவதும் இப்படம் ரூ 340 கோடிகள் வரை வசூல்...</summary>
            <content type="html"><![CDATA[<h2>விஸ்வநாதன் அண்ட் சன்ஸ்</h2><p>சூர்யா நடிப்பில் இந்த வருடம் வெளிவந்த கருப்பு போட்ட ஆட்டமே இன்னும் அடங்கவில்லை. உலகம் முழுவதும் இப்படம் ரூ 340 கோடிகள் வரை வசூல் செய்ததாக படக்குழுவே அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. </p><p>இந்நிலையில் நாளை மறுநாள் சூர்யா நடிப்பில் விஸ்வநாதன் அண்ட் சன்ஸ் படம் திரைக்கு வரவுள்ளது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/969afeaf-c349-4f02-b936-fc70c072349c/26-6a7bfd9191476.webp' /></p><p>இப்படத்தில் மமிதா பைஜு, ராதிகா, ரவீனா டாண்டன் போன்ற பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இப்படத்தை தெலுங்கில் மெகா ஹிட் கொடுத்த லக்கி பாஸ்கர் பட இயக்குனர் வெங்கி அட்லூரி தான் இயக்கியுள்ளார்.</p><p> </p><h2>வசூல்</h2><p>இப்படத்தின் உலகம் முழுவதுமான முன்பதிவு நேற்று மாலை தொடங்க ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஆம் உலகம் முழுவதும் ரூ 3 கோடிக்கு முன்பதிவு நடந்துள்ளதாம், கண்டிப்பாக ரிலிஸுக்கு முன் ரூ 15 கோடி வரை முன்பதிவு நடக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.</p>]]></content>
            <updated>2026-08-12T05:10:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[மீண்டும் அதிகரிக்கிறது அரச ஊழியர்களின் சம்பளம்! அரசாங்கத் தரப்பில் இருந்து வெளியான அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/government-employee-salary-sri-lanka-1786508674"></link>
            <id>https://tamilwin.com/article/government-employee-salary-sri-lanka-1786508674</id>
            <summary type="text">
2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக அரச உத்தியோகத்தர்களின் சம்பளம் அதிகரிக்கப்படும் என்று அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ...</summary>
            <content type="html"><![CDATA[<p>
2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக அரச உத்தியோகத்தர்களின் சம்பளம் அதிகரிக்கப்படும் என்று அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.</p><p> 

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பில், ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,</p><p> 

2025 மற்றும் 2026ஆம் ஆண்டுகளில் அரச ஊழியர்களுக்கு அடிப்படைச் சம்பள அதிகரிப்பு வழங்கப்பட்டுள்ளது.</p><h2>சம்பளம் அதிகரிக்கப்படும்</h2><p> </p><p> 2027ஆம் ஆண்டிலும் சம்பள அதிகரிப்பு மேற்கொள்ளப்படும்.

பொருளாதார மீட்சிக்கு மத்தியில் அரச வருமானம் ஒப்பீட்டளவில் உயர்வடைந்து வருகின்றது. </p><p> இவற்றுள் கணிசமான பகுதி அரச அரச அதிகாரிகளின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளுக்காக ஒதுக்கப்பட்டு வருகின்றது. </p><p>

அரச ஊழியர்களின் அடிப்படைச் சம்பளத்தை உயர் மட்டத்தில் அரசாங்கம் அதிகரித்துள்ளது. 2025 ஏப்ரல் மாதத்தில் சம்பளம் அதிகரிக்கப்பட்டது. பின்னர், 2026இல் சம்பளம் அதிகரிக்கப்பட்டதோடு 2027இலும் அதிகரிக்கப்படும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b9eb5e55-5811-4cce-afbc-86dba2a24061/26-6a7bff97883a9.webp' /></p><p> 

மிகச் சிறந்த பொருளாதார நிலையில் இருந்து நாம் நாட்டைப் பொறுப்பேற்கவில்லை. பொருளாதார நிலை படிப்படியாக முன்னேறுகின்றது. அதற்கு ஏற்பவே அரச ஊழியர்களின் அடிப்படைச் சம்பளத்திலும் அதிகரிப்பும் கொடுப்பனவுகளும் வழங்கப்பட்டு வருகின்றன.</p><p>

யாருக்கேனும் கொடுப்பனவுகள் மற்றும் சம்பளம் தொடர்பான பிரச்சினைகள் இருந்தால், அதற்காக அமைக்கப்பட்டுள்ள ஆணைக்குழுவில் முறைப்பாட்டினை முன்வைக்க முடியும் என குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-12T05:07:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கண்காணிப்பு கமராவை சேதப்படுத்தியவர்களிடம் தண்டப்பணம் அறவிட்ட நல்லூர் பிரதேசசபை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/nallur-pradeshiya-sabha-fines-damaged-camera-1786508760"></link>
            <id>https://tamilwin.com/article/nallur-pradeshiya-sabha-fines-damaged-camera-1786508760</id>
            <summary type="text">நல்லூர் பிரதேசசபையினால் நந்தாவில் அம்மன் கோவில் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கமரா உடைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் அடையாளம் க...</summary>
            <content type="html"><![CDATA[<p>நல்லூர் பிரதேசசபையினால் நந்தாவில் அம்மன் கோவில் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கமரா உடைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். </p><p>

நல்லூர் பிரதேசசபைக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகள் கண்காணிப்பு கமராக்கள் மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன.</p><h2>தண்டப்பணம் அறவிடும் நடவடிக்கை</h2><p> 

இதன்மூலம் சட்டவிரோதமாக வீதிகளில் கழிவுகளை வீசி செல்பவர்கள் அடையாளம் காணப்பட்டு, அவர்களிடம் இருந்து தண்டப்பணம் அறவிடும் நடவடிக்கைகளும் நல்லூர் பிரதேசசபையினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d00b9c8c-3547-4fe3-9216-91dfe10c878e/26-6a7bfd235d861.webp' /></p><p> 

இதன் காரணமாக வீதிகளில் கழிவுகளை வீசிவிட்டுச் செல்வோரின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளது. </p><p>

இந்நிலையில், நந்தாவில் அம்மன் கோவில் பகுதியில் நல்லூர் பிரதேச சபையினால் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கமரா ஒன்று அண்மையில் சிலரினால் அடித்து நாசமாக்கப்பட்டது.</p><h2>சந்தேகநபர்கள் அடையாளம்</h2><p> </p><p>

எனினும், அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த ஏனைய கண்காணிப்பு கமராக்களின் பதிவுகளை பயன்படுத்தி குறித்த சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d14c1cb6-f491-4ba2-a78d-de67aa664add/26-6a7bfd244d90f.webp' /></p><p> 

இதனையடுத்து, சேதப்படுத்தப்பட்ட கண்காணிப்பு கமராவின் பெறுமதியுடன் தண்டப்பணத்தையும் சேர்த்து ரூபா 80,000 தொகையை குறித்த நபர்களிடமிருந்து நல்லூர் பிரதேச சபையினால் அறவிடப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/04b3b6de-e62b-44d0-acc4-4ac2fef9c7a1/26-6a7bfd2522952.webp' /></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-12T05:01:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[தங்காலையில் பதிவான துப்பாக்கிச் சூடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/gunfire-targeting-a-house-1786510775"></link>
            <id>https://ibctamil.com/article/gunfire-targeting-a-house-1786510775</id>
            <summary type="text">
தங்காலை - குடாவெல்ல பகுதியில் உள்ள ஒரு வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு ஒன்று நடத்தப்பட்டுள்ளது.

அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் நேற்று இரவு இந்த ...</summary>
            <content type="html"><![CDATA[<p>
தங்காலை - குடாவெல்ல பகுதியில் உள்ள ஒரு வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு ஒன்று நடத்தப்பட்டுள்ளது.</p><p>

அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் நேற்று இரவு இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
</p><p>
காவல்துறை தகவல்படி, துப்பாக்கிச் சூட்டிற்குப் பிறகு குறித்த சந்தேக நபர்கள் அப்பகுதியிலிருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரியவருகிறது.</p><p></p><h2>மேலதிக விசாரணை</h2><p>

எவ்வாறாயினும், துப்பாக்கிச் சூட்டினால் எந்தவொரு காயமோ அல்லது உயிரிழப்போ ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/13d35112-3d1d-431e-80a4-149b494c4690/26-6a7c00022c433.webp' /></p><p>
</p><p>
இந்நிலையில், சம்பவம் தொடர்பில் தங்காலை காவல்துறை மேலதிக விசாரணைகளைத் தொடங்கியுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-12T04:59:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாடொன்றில் கொலை செய்யப்பட்ட இலங்கை இளைஞன் - பிரதமரின் தலையீட்டால் உண்மை அம்பலம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-lankan-dies-in-abu-dhabi-1786496464"></link>
            <id>https://tamilwin.com/article/sri-lankan-dies-in-abu-dhabi-1786496464</id>
            <summary type="text">அபுதாபியில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவமொன்றில் உயிரிழந்த இளைஞனின் சடலம் பிரதமர் ஹரிணி அமரசூரியவின் நேரடி தலையீட்டின் காரணமாக நாட்டுக்கு கொண்டு வரப்பட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>அபுதாபியில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவமொன்றில் உயிரிழந்த இளைஞனின் சடலம் பிரதமர் ஹரிணி அமரசூரியவின் நேரடி தலையீட்டின் காரணமாக நாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
</p><p>
கம்பளை - அத்கால பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய சாமிக இஷான் லியனகே என்ற இளைஞனின் சடலம் நாட்டுக்கு கொண்டு வரப்பட்ட நிலையில் நேற்றையதினம் இறுதிக் கிரியைகள் நடைபெற்றுள்ளன. </p><p><b style="color: inherit; font-size: 1.75rem;">உறவினர்கள் நடவடிக்கை</b></p><p>கடந்த 2 வருடங்கள் 10 மாதங்களுக்கு முன்பு வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக அபுதாபிக்குச் சென்ற இளைஞன் தாக்குதல் ஒன்றினால் கடந்த ஜூலை மாதம் 15ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5e7bf07d-9375-4c9c-96a4-8d534dd0eb7c/26-6a7bf0371d6fb.webp' />&nbsp; &nbsp;&nbsp;</p><p> </p><p> 

இதனையடுத்து, உயிரிழந்த இளைஞரின் மாமா, அந்த இளைஞரை வெளிநாட்டுக்கு அனுப்பிய முகவர் நிலையத்திடம் தகவல்களைக் கோரியபோதிலும், ஒப்பந்தக் காலம் முடிவடைந்துவிட்டதாக கூறி அந்த நிறுவனம் பொறுப்பிலிருந்து நழுவ முயன்றுள்ளது.</p><p>இதனையடுத்து, வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் மற்றும் வெளிவிவகார அமைச்சில் தகவல்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.</p><p>சிங்கப்பூரிலிருந்து உடனடியாக நாடு திரும்பிய தாயாரும் உறவினர்களும் தேவையான சட்ட ஆவணங்களைத் தயாரித்து அபுதாபி நிறுவன அதிகாரிகளைத் தொடர்பு கொள்ள முயற்சித்துள்ளனர்.

எனினும் அது பலனளிக்கவில்லை.</p><h2>பிரதமர் தலையீடு&nbsp;</h2><p>இதற்கிடையில் நிர்க்கதிக்குள்ளான குடும்ப உறவினர்கள் பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு வாட்ஸ்அப் குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பியுள்ளனர்.</p><p>

இதன் காரணமாக பிரதமரின் பணிப்புரையின் பேரில் பிரதமர் செயலகம் தலையீடு செய்து, சடலத்தை நாட்டுக்குக் கொண்டுவரும் நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.
</p><h3><span style="font-size: 14px;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5498f0e5-289b-4909-b11b-9c51f125e237/26-6a7bf037d9652.webp' /></span></h3><p>பிரதமரின் மற்றும் அமைச்சின் முயற்சியால் கடந்த ஜுலை மாதம் 29 ஆம் திகதி நாட்டுக்குக் கொண்டுவரப்பட்ட சடலம், கட்டுநாயக்க விமான நிலையப் பொலிஸார் மற்றும் நீர்கொழும்பு வைத்தியசாலை ஊடாகப் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டது.&nbsp;</p><p>அங்கு இடம்பெற்ற மரணப் பரிசோதனை மற்றும் நீர்கொழும்பு நீதவான் உத்தரவிற்கமைய, தலையில் ஏற்பட்ட பலத்த தாக்கம் காரணமாக இரத்தம் உறைந்தமையும், உடலின் பல இடங்களில் ஏற்பட்ட காயங்களுமே இந்த மரணத்திற்குக் காரணம் என தெரியவந்துள்ளது.
</p><p>
இந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் இலங்கையர் ஒருவர் அபுதாபி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-12T04:59:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[சற்றுமுன்னர் சிஐடியில் முன்னிலையான யோஷித ராஜபக்ச]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/yoshitha-to-cid-investigation-1786509266"></link>
            <id>https://tamilwin.com/article/yoshitha-to-cid-investigation-1786509266</id>
            <summary type="text">முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் புதல்வரான யோஷித ராஜபக்ஷ இன்றைய தினம் (12) குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகவுள்ளார்.வாக்குமூலமொன்று வழங...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் புதல்வரான யோஷித ராஜபக்ஷ இன்றைய தினம் (12) குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகவுள்ளார்.</p><p>வாக்குமூலமொன்று வழங்குவதற்காக&nbsp;குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-12T04:55:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[வசூலில் பட்டய கிளப்பும் லோகேஷ் கனகராஜின் DC திரைப்படம்... 5 நாள் பாக்ஸ் ஆபிஸ் விவரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/dc-movie-5-days-box-office-details-1786506333"></link>
            <id>https://cineulagam.com/article/dc-movie-5-days-box-office-details-1786506333</id>
            <summary type="text">DC திரைப்படம்அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் லோகேஷ் கனகராஜ், வாமிகா கபி, சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் நடிக்க கடந்த ஆகஸ்ட் 7ம் தேதி வெளியான திரைப்பட...</summary>
            <content type="html"><![CDATA[<h2>DC திரைப்படம்</h2><p>அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் லோகேஷ் கனகராஜ், வாமிகா கபி, சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் நடிக்க கடந்த ஆகஸ்ட் 7ம் தேதி வெளியான திரைப்படம் DC.</p><p> திரையரங்குகளில் ரசிகர்களின் கூட்டம் இப்படத்திற்காக அலை மோதுகிறது, அதற்கு முக்கிய காரணம் பட கதை, நடிகர்களை தாண்டி இமாலய வெற்றிக்கு அனிருத்தின் இசை என்பது எல்லோரும் கூறும் முக்கிய விஷயமாக உள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/58427f93-19df-4c5c-8a17-aae6f46c2095/26-6a7bec5eee5e1.webp' /></p><h2>
பாக்ஸ் ஆபிஸ்</h2><p>
படம் வெளியாகி 5 நாள் ஆன நிலையில் வசூலும் பட்டய கிளப்பி வருகிறது. </p><p>படங்கள் இயக்கியதன் மூலம் நானும் பாக்ஸ் ஆபிஸ் கிங் தான் என நிரூவித்தவர் இப்போது நாயகனாக நடித்த படத்தின் மூலமாகவும் செம வசூல் செய்கிறார் லோகேஷ் கனகராஜ்.
</p><p>இப்படம் 5 நாள் முடிவில் இதுவரை ரூ. 50 கோடிக்கும் மேலான வசூல் வேட்டை செய்துள்ளது.&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/lkFiBoPlUQ0" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-08-12T04:55:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[விண்ணில் நிகழும் மிக அரிய சூரிய கிரகணம் இன்று]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/very-rare-solar-eclipse-is-taking-place-sky-today-1786509647"></link>
            <id>https://jvpnews.com/article/very-rare-solar-eclipse-is-taking-place-sky-today-1786509647</id>
            <summary type="text">விண்ணில் நிகழும் மிக அரிய மற்றும் வியப்பூட்டும் வானியல் நிகழ்வுகளில் ஒன்றான முழு சூரிய கிரகணம் இன்று (ஒகஸ்ட் 12) நிகழவுள்ளது.&amp;nbsp;உலகெங்கிலும் உள்ள வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>விண்ணில் நிகழும் மிக அரிய மற்றும் வியப்பூட்டும் வானியல் நிகழ்வுகளில் ஒன்றான முழு சூரிய கிரகணம் இன்று (ஒகஸ்ட் 12) நிகழவுள்ளது.&nbsp;</p><p>உலகெங்கிலும் உள்ள வானியல் ஆர்வலர்களாலும் புகைப்படக் கலைஞர்களாலும் பெரிதும் எதிர்பார்க்கப்படும் இந்த நிகழ்வை, இலங்கையில் இருந்து பார்க்க முடியாது என்பது அந்நாட்டு மக்களுக்கு ஏமாற்றமளிக்கும் செய்தியாக அமைந்துள்ளது.</p><p>இரவு நேரத்தில் நிகழ்வதால் இலங்கையில் தெரியாது .சூரியனுக்கும் பூமிக்கும் இடையே நிலவு ஒரே நேர்கோட்டில் வரும்போது, சூரியனின் ஒளியை நிலவு முழுமையாக மறைப்பதே 'முழு சூரிய கிரகணம்' எனப்படுகிறது.</p><p>இதன்போது, பகல் நேரத்திலேயே வானம் இருண்டு மாலை போன்ற சூழல் உருவாகும். மேலும், சூரியனின் வெளிப்புற வளிமண்டலமான ‘கரோனா’ பகுதி மட்டும் பிரகாசமான வெண்வட்டம் போல ஒளிரும் காட்சியே இதன் தனித்துவமான சிறப்பம்சமாகும்.</p><p>இருப்பினும், இலங்கை நேரப்படி இன்று இரவு சுமார் 11:16 மணிக்கு இந்த கிரகணம் நிகழ உள்ளதால், இரவு நேர காரணமாக இலங்கையின் எந்தவொரு பகுதியிலும் இதை நேரடியாகக் காண முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இந்த முழு சூரிய கிரகணத்தின் முதன்மைப் பாதை கிரீன்லாந்து, ஐஸ்லாந்து, ஸ்பெயின், போர்த்துகலின் சில பகுதிகள் மற்றும் வடக்கு ரஷ்யா வழியாகச் செல்கிறது.</p><p>வடக்கு ஸ்பெயினில் சூரிய மறைவு நேரத்திற்கு மிக அருகில் கிரகணம் நிகழு என்பதால், அடிவானத்தில் மறையும் சூரியனோடு இணைந்த அரிய காட்சியை அங்கே காண முடியும்.</p><p>ஐஸ்லாந்தின் பனிப்பாறைகள் மற்றும் எரிமலை நிலப்பரப்புகளிலும், கிரீன்லாந்தின் ஆர்க்டிக் பனிப்பகுதிகளிலும் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வைக் காண உலகெங்கிலும் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்து வருகின்றனர்.</p><p>முழு கிரகணம் தென்படாத ஐரோப்பாவின் பெரும்பாலான பகுதிகள், வட அமெரிக்கா, அலாஸ்கா, கனடா மற்றும் வடமேற்கு ஆபிரிக்கா ஆகிய பிராந்தியங்களில் இது 'பகுதி சூரிய கிரகணமாக'க் காட்சியளிக்கும்.</p><p>அடுத்ததாக 2027-ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதத்திலும் ஒரு முழு சூரிய கிரகணம் நிகழவுள்ளது. ஆனால், அந்த கிரகணமும் இலங்கையில் இருந்து தென்படாது என்றும்; வட அமெரிக்கா, ஸ்பெயின் மற்றும் யேமன் ஆகிய பகுதிகளில் இருந்தே அதைக் காண முடியும் என்றும் வானியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-08-12T04:40:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[cristiano ronaldo : 5 குழந்தைகள் முன்னிலையில் திருமணம் செய்துகொண்ட ரொனால்டோ–ஜார்ஜினா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/cristiano-ronaldo-georgina-got-married-10-years-1786508538"></link>
            <id>https://manithan.com/article/cristiano-ronaldo-georgina-got-married-10-years-1786508538</id>
            <summary type="text">cristiano ronaldo wedding photo : போர்ச்சுகல் கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோவும், அவரது நீண்டகால காதலியான ஜார்ஜினா ரோட்ரிக்ஸும் சுமார் 10 ஆ...</summary>
            <content type="html"><![CDATA[<p>cristiano ronaldo wedding photo : போர்ச்சுகல் கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோவும், அவரது நீண்டகால காதலியான ஜார்ஜினா ரோட்ரிக்ஸும் சுமார் 10 ஆண்டுகால லிவ் இன் ரிலேஷன்ஷிப்பிற்கு பிறகு திருமணம் செய்து கொண்டுள்ளனர்.</p><p>போர்ச்சுகலின் காஸ்காய்ஸ் நகரில் நடைபெற்ற இந்த திருமணத்தில், தங்களின் 5 குழந்தைகள் முன்னிலையில் இருவரும் திருமண பந்தத்தில் இணைந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f8208b60-40f0-46bc-8b3b-64cb958048d9/26-6a7bf86342fab.webp' /></p><p></p><h2>10 ஆண்டு லிவ் இன் உறவு</h2><p>திருமணத்திற்குப் பிறகு மோதிரம் அணிந்த கைகளின் புகைப்படங்களை இருவரும் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர்.இந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளன.</p><p>
ரொனால்டோவும் ஜார்ஜினாவும் 2016ஆம் ஆண்டு ரியல் மாட்ரிட் அணிக்காக ரொனால்டோ விளையாடிய காலத்தில் சந்தித்துக் கொண்டனர். அதன்பின் காதலித்து வந்த இருவரும் 2017ஆம் ஆண்டு தங்களின் உறவை வெளிப்படையாக உறுதி செய்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b1728f9f-2bf3-45ee-851d-715adff2084f/26-6a7bf863e6ea7.webp' /></p><p></p><p> </p><p>நீண்டகாலமாக திருமணம் குறித்த எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில், தற்போது அவர்களின் 10 ஆண்டுகால காதல் திருமணத்தில் முடிந்துள்ளது.

ரொனால்டோவின் முந்தைய காதல் உறவுகளை விட ஜார்ஜினாவுடனான உறவே நீண்ட காலம் நீடித்துள்ளது. </p><p>இருவருக்கும் குழந்தைகள் பிறந்த பின்னரும் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்ததால், அவர்களின் உறவு ரசிகர்களிடையே தொடர்ந்து ஆர்வத்தை ஏற்படுத்தி வந்தது.

தற்போது திருமணத்தைத் தொடர்ந்து பகிரப்பட்ட மோதிரப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதுடன், இணையத்தில் வாழ்த்துக்களையும் குவித்து வருகின்றது.</p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b>&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-12T04:38:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ் சொகுசுப் பேருந்துகளுக்கு எதிராக விரைவில் அதிரடிச் சட்டம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/strict-measures-against-jaffna-luxury-buses-soon-1786509171"></link>
            <id>https://jvpnews.com/article/strict-measures-against-jaffna-luxury-buses-soon-1786509171</id>
            <summary type="text">தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் செல்லுபடியாகும் வழித்தட அனுமதிப்பத்திரமின்றி யாழ்ப்பாணத்திலிருந்து ஏனைய மாகாணங்களுக்கு, குறிப்பாக கொழும்பு உள்ளிட்ட ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் செல்லுபடியாகும் வழித்தட அனுமதிப்பத்திரமின்றி யாழ்ப்பாணத்திலிருந்து ஏனைய மாகாணங்களுக்கு, குறிப்பாக கொழும்பு உள்ளிட்ட பகுதிகளுக்கு சொகுசுப் பேருந்துச் சேவைகளை இயக்கிவரும் பேருந்துகளுக்கு எதிராக விசேட சட்ட அமுலாக்க நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாக&nbsp; தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இதனை வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் பொறியியலாளர் சூ.விமலேஸ்வரன் தெரிவித்தார்.</p><p>அத்துடன், வடக்கு மாகாணத்தினுள் உரிய பதிவுகள் மற்றும் அனுமதிகளின்றி பணியாளர்களைப் போக்குவரத்து செய்யும் தனியார் பேருந்துச் சேவைகளுக்கு எதிராகவும் இவ்வாறு சட்ட அமுலாக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.</p><p>வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையும் பொலிஸாரும் இணைந்து விரைவில் இந்த விசேட சட்ட அமுலாக்க நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளனர்.</p><p>இது தொடர்பாக வடக்கு மாகாண சிரேஷ;ட பிரதி பொலிஸ் மா அதிபருக்கு உத்தியோகபூர்வமாக கடிதம் அனுப்பி, பொலிஸாரின் ஒத்துழைப்புடன் ஒருங்கிணைந்த சுற்றிவளைப்பு மற்றும் பரிசோதனை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.</p><p>யாழ்ப்பாணத்திலிருந்து ஏனைய மாகாணங்களுக்கு சேவையில் ஈடுபட்டு வரும் மொத்தம் பத்து பேருந்துகள், தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் செல்லுபடியாகும் வழித்தட அனுமதிப்பத்திரமின்றி சேவையில் ஈடுபட்டு வருவதாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், இவ்வாறான சட்டவிரோத சேவைகள் ஒழுங்குபடுத்தப்பட்ட பயணிகள் போக்குவரத்து முறைமையை பாதிப்பதுடன், சட்டபூர்வமாக சேவையாற்றும் பேருந்து இயக்குநர்களுக்கும் அநீதி விளைவிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.</p><p>மேலும், வடக்கு மாகாணத்தினுள் அரச திணைக்களங்கள், தொழிற்சாலைகள், நிறுவனங்கள் மற்றும் ஏனைய பணியிடங்களுக்கு பணியாளர்களை ஏற்றிச் செல்லும் பேருந்துகளை பதிவு செய்து சட்டபூர்வமாக இயங்குவதற்காக போதுமான கால அவகாசம் ஏற்கனவே வழங்கப்பட்டிருந்ததாகவும், அந்த அவகாசம் நிறைவடைந்துள்ள நிலையிலும் இதுவரை பதிவு செய்யப்படாமல் சேவையில் ஈடுபட்டு வரும் பேருந்துகளுக்கு எதிராக இனி சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும்&nbsp; கூறினார்.</p><p>இந்த விசேட நடவடிக்கையின் போது, வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் பறக்கும் படை அதிகாரிகளும், தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அதிகாரிகளும், பொலிஸாரும் இணைந்து சம்பந்தப்பட்ட பேருந்துகளை பரிசோதித்து, வழித்தட அனுமதிப்பத்திரங்கள் மற்றும் ஏனைய சட்டபூர்வ ஆவணங்களை ஆய்வு செய்வதுடன், அனுமதியின்றி சேவையில் ஈடுபடுவது உறுதிப்படுத்தப்படும் பேருந்துகளுக்கு எதிராக சட்டத்தின் பிரகாரம் நடவடிக்கை எடுக்கப்படும்.&nbsp;</p><p>அனுமதியற்ற பேருந்துகள் சேவையை ஆரம்பிப்பதைத் தடுப்பதற்கும், அங்கீகரிக்கப்பட்ட வழித்தடங்கள் மற்றும் கால அட்டவணைகளுக்கு அமைவாகவே சேவைகள் இடம்பெறுவதை உறுதிப்படுத்துவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.</p><p>பயணிகள் போக்குவரத்து சேவைகளில் ஒழுங்கு, பாதுகாப்பு மற்றும் சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்துவதற்காக இந்நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாகவும், அனுமதியின்றி சேவையில் ஈடுபடும் எந்தவொரு பேருந்திற்கும் இனி சலுகை வழங்கப்படமாட்டாது என்றும்&nbsp; &nbsp;சூ.விமலேஸ்வரன் மேலும் தெரிவித்தார்.</p><p><br></p>]]></content>
            <updated>2026-08-12T04:32:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Fathima</name>
            </author>
            <title type="text"><![CDATA[தொகுதி மறுசீரமைப்பு மசோதா: சட்டப்பேரவையில் தனித்தீர்மானம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/pass-a-separate-resolution-in-the-assembly-today-1786508946"></link>
            <id>https://ibctamilnadu.com/article/pass-a-separate-resolution-in-the-assembly-today-1786508946</id>
            <summary type="text">தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுக்கு எதிராக தனித்தீர்மானம் இன்று சட்டப்பேரவையில் கொண்டு வரப்படுகிறது.

முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான அனைத்து கட்சி எ...</summary>
            <content type="html"><![CDATA[<p>தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுக்கு எதிராக தனித்தீர்மானம் இன்று சட்டப்பேரவையில் கொண்டு வரப்படுகிறது.
</p><p>
முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான அனைத்து கட்சி எம்பிக்கள் கூட்டத்தில் தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுக்கு எதிராக தனித்தீர்மானம் நிறைவேற்றப்படும் என முடிவு செய்யப்பட்டது.</p><p>

இதன்படி, இன்று சட்டப்பேரவையில் மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை 543ஆக நிரந்தரமாக்க வேண்டும் என்றும், பேரவை உறுப்பினர்களின் மூன்றில் ஒரு பங்கு தொகுதிகளை பெண்களுக்கு ஒதுக்க உறுதி செய்ய வேண்டும் எனவம் மத்திய அரசை வலியுறுத்தம் தனித்தீர்மானம் கொண்டு வரப்படும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d40d6da2-1c5a-4ef7-9960-28b086541a6c/26-6a7bf6ffa2512.webp' /><br></p>]]></content>
            <updated>2026-08-12T04:31:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[கருப்பு நிற குட்டை உடையில் சீரியல் நடிகை ஷோபனா வெளியிட்ட போட்டோஸ்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/serial-actress-shobana-latest-photoshoot-1786508065"></link>
            <id>https://cineulagam.com/article/serial-actress-shobana-latest-photoshoot-1786508065</id>
            <summary type="text">நடிகை ஷோபனாவிஜய் தொலைக்காட்சியில் அடுத்தடுத்து சீரியல்கள் முடிவுக்கு வந்து புத்தம் புதிய தொடர்கள் ஒளிபரப்பாகி வருகிறது.அப்படி சமீபத்தில் தொடங்கப்பட்ட ...</summary>
            <content type="html"><![CDATA[<h2>நடிகை ஷோபனா</h2><p>விஜய் தொலைக்காட்சியில் அடுத்தடுத்து சீரியல்கள் முடிவுக்கு வந்து புத்தம் புதிய தொடர்கள் ஒளிபரப்பாகி வருகிறது.</p><p>அப்படி சமீபத்தில் தொடங்கப்பட்ட புதிய சீரியல் தான் காதல் காதல் காதல். ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 அண்ணன்-தம்பிகளின் காதல் கதையை மையப்படுத்தி இந்த தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.</p><p>இந்த தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நாயகியாக நடித்து வருபவர் தான் ஷோபனா.
இவர் அண்மையில் கருப்பு நிற குட்டை உடையில் எடுத்த போட்டோ ஷுட் புகைப்படங்களை காண்போம்.</p><p><br></p>]]></content>
            <updated>2026-08-12T04:30:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரிய வானியல் நிகழ்வு: 121 ஆண்டுகளுக்குப் பிறகு முழு சூரிய கிரகணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/2026-s-only-total-solar-eclipse-happens-today-1786500866"></link>
            <id>https://ibctamil.com/article/2026-s-only-total-solar-eclipse-happens-today-1786500866</id>
            <summary type="text">விண்ணில் நிகழும் வியப்பூட்டும் நிகழ்வுகளில் ஒன்றான முழு சூரிய கிரகணம் இன்று புதன்கிழமை நிகழவுள்ளது.2026 ஆம் ஆண்டின் இரண் டாவது சூரிய கிரகணம் இன்று இந்...</summary>
            <content type="html"><![CDATA[<p>விண்ணில் நிகழும் வியப்பூட்டும் நிகழ்வுகளில் ஒன்றான முழு சூரிய கிரகணம் இன்று புதன்கிழமை நிகழவுள்ளது.</p><p>2026 ஆம் ஆண்டின் இரண் டாவது சூரிய கிரகணம் இன்று இந்திய நேரப்படி இரவு 9.04 முதல் 13 ஆம் திகதி நள்ளிரவு 1.37 வரை சுமார் நான்கரை மணி நேரம் நீடிக்கும். இதில் முழு மறைப்பு இரவு 11.13 மணி முதல் நள்ளிரவு 12.03 க்குள் நிகழும்.&nbsp;</p><p>இந்த அரிய நிகழ்வை உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து காண முடியும் என்றாலும், இலங்கை மற்றும் இந்தியாவின் எந்த பகுதியிலும் முழு சூரிய கிரகணத்தை காண முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>ஸ்பெயினில் முழு சூரிய கிரகணம்</h2><p>இலங்கையில் இருந்து இந்த முழு சூரிய கிரகணத்தை காண முடியாததற்கு முக்கிய காரணம், கிரகணம் நிகழும் நேரத்தில் இலங்கையில் இரவு நேரமாக இருப்பதுதான். இலங்கை நேரப்படி இரவு சுமார் 11:16 மணிக்கு இது நிகழ்கிறது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/93f003fb-7368-445f-a345-cee8553270e0/26-6a7bdd3669c3c.webp' /></p><p>121 ஆண்டுகளுக்குப் பிறகு ஸ்பெயினில் முழு சூரிய கிரகணம் ஒன்று தென்படவுள்ளதாக நாசா நிறுவனம் தெரிவித்துள்ளது.</p><p>

அந்நிறுவனத்தின் அறிக்கையை மேற்கோள்கட்டி சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியின்படி, 1905 ஆம் ஆண்டிற்குப் பிறகு தென்படவுள்ள இந்த சூரிய கிரகணம் எதிர்வரும் 12 ஆம் திகதி ஸ்பெயின், கிரீன்லாந்து, ஐஸ்லாந்து, ரஷ்யா மற்றும் போர்ச்சுகலின் ஒரு பகுதியில் காணக் கூடியதாக இருக்கும்.</p><p>சூரியனுக்கும் பூமிக்கும் இடையே நிலவு நேர்கோட்டில் வரும்போது, சூரியனின் ஒளி முழுமையாக மறைக்கப்படும். இதனால் பகல் நேரத்திலேயே வானம் இருண்டு, மாலை நேரம் போன்ற சூழல் உருவாகும்..</p><p>முழு சூரிய கிரகணத்தின் போது, சூரியனின் வெளிப்புற வளிமண்டலமான ‘கரோனா’ மட்டும் பிரகாசமான வெண்வட்டம் போல் காட்சியளிக்கும். இந்த அரிய காட்சியே முழு சூரிய கிரகணத்தின் சிறப்பம்சமாகும்.</p><p></p><h2>நடத்தை மாற்றங்கள்</h2><p>இந்த அரிய நிகழ்வைக் காண உலகம் முழுவதும் இருந்து வானியல் ஆர்வலர்களும், புகைப்படக் கலைஞர்களும் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6486cda9-43c0-44c4-8ac8-f2026f8a812a/26-6a7bdd371c203.webp' /></p><p>அத்துடன் கால்நடைகள் மற்றும் வன விலங்குகளின் நடத்தைகளிலும் மாற்றங்கள் காணப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-12T04:20:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[12 ஆண்டுகளுக்குப் பிறகு வரும் சிறப்புமிக்க ஆடி அமாவாசை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/aadi-amavasai-religious-observance-today-1786507900"></link>
            <id>https://ibctamil.com/article/aadi-amavasai-religious-observance-today-1786507900</id>
            <summary type="text">2026 ஆம் ஆண்டுக்கான ஆடி அமாவாசை இன்று (12) புதன்கிழமை அனுஷ்டிக்கப்படுகிறது.
12 ஆண்டுகளுக்குப் பின்னர் புதன்கிழமையில் ஆடி அமாவாசை தினம் வருவது, இந்த ஆ...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026 ஆம் ஆண்டுக்கான ஆடி அமாவாசை இன்று (12) புதன்கிழமை அனுஷ்டிக்கப்படுகிறது.
</p><p>12 ஆண்டுகளுக்குப் பின்னர் புதன்கிழமையில் ஆடி அமாவாசை தினம் வருவது, இந்த ஆண்டின் ஆடி அமாவாசை பக்தர்கள் மத்தியில் சிறப்புக் கவனத்தைப் பெற்றுள்ளது</p><p>இந்த ஆண்டின் ஆடி அமாவாசை தினத்துடன் சூரிய கிரகணமும் இடம்பெறுகிறது. ஆடி அமாவாசை தினத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம், பிதிர்க்கடன் உள்ளிட்ட சடங்குகளை மேற்கொள்வது இந்து சமய மரபாகக் காணப்படுகிறது.</p><p></p><h2>இன்று ஆடி அமாவாசை</h2><p>
எனினும், இன்றைய சூரிய கிரகணம் இலங்கையில் தென்படாது என்பதால், இலங்கையில் இன்று ஆடி அமாவாசை விரதத்தை அனுஷ்டிக்க வேண்டும் என இந்துக் குருமார் அமைப்பு தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/12aa31dc-0e64-4167-8c89-f59afb9c01fb/26-6a7bf470a953f.webp' /></p><p>அதேவேளை, ஐரோப்பிய நாடுகளில் குறித்த சூரிய கிரகணம் தென்படுவதால், அங்கு ஆடி அமாவாசை தொடர்பான பிதிர்க்கடன், தர்ப்பணம் உள்ளிட்ட சடங்குகள் நாளை (13) கடைப்பிடிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இதையொட்டி, நாடு முழுவதும் உள்ள இந்து ஆலயங்கள் மற்றும் புனித நீர்நிலைகளில் முன்னோர்களை நினைவுகூர்ந்து சிறப்பு வழிபாடுகள் இடம்பெற்று வருகின்றன.&nbsp;</p><p>கிரகணம் ஏற்பட்டு, அது குறிப்பிட்ட பிரதேசத்தில் தென்படும் பட்சத்திலேயே மறுநாள் தர்ப்பணம் உள்ளிட்ட பிதிர்க்கடன்களை மேற்கொள்ள வேண்டும் என ஆகம மற்றும் சம்பிரதாய அடிப்படையில் கூறப்பட்டுள்ளதாகவும் இந்துக் குருமார் அமைப்பு குறிப்பிட்டுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-12T04:20:05+00:00</updated>
        </entry>
    </feed>
