<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-07-30T06:40:21+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[செவ்வாய் ராசி மாற்றம்: ஆகஸ்ட் 2 முதல் இந்த ராசிகளுக்கு தொழில் வளர்ச்சி உறுதி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/mars-transit-in-gemini-who-get-huge-career-growth-1785391072"></link>
            <id>https://manithan.com/article/mars-transit-in-gemini-who-get-huge-career-growth-1785391072</id>
            <summary type="text">ஜோதிடத்தின் படி, கிரகங்களின் தளபதியாக கருதப்படும் செவ்வாய் தைரியம், வீரம், வலிமை மற்றும் துணிச்சலின் காரணியாக விளங்குகிறார். இவர் ஒரு ராசியில் சுமார் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜோதிடத்தின் படி, கிரகங்களின் தளபதியாக கருதப்படும் செவ்வாய் தைரியம், வீரம், வலிமை மற்றும் துணிச்சலின் காரணியாக விளங்குகிறார். இவர் ஒரு ராசியில் சுமார் 45 நாட்கள் இருப்பார்.</p><p>தற்போது ரிஷப ராசியில் பயணித்து வரும் செவ்வாய், ஆகஸ்ட் 2 ஆம் தேதி மிதுன ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார்.

புதன் ஆட்சி செய்யும் மிதுன ராசியில் செவ்வாய் செப்டம்பர் 18 ஆம் தேதி வரை இருப்பார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bec7c845-847e-47da-a47c-fea638d29773/26-6a6aefd0dd466.webp' /></p><p></p><p>இந்த பெயர்ச்சி மேஷம் முதல் மீனம் வரை அனைத்து ராசிகளின் வாழ்க்கையிலும், குறிப்பாக தொழில் மற்றும் வியாபாரத்தில், தாக்கத்தை ஏற்படுத்தும் என்றாலும், புதன் ஆசியால் தொழில் மற்றும் நிதி ரீதியில் உச்சகட்ட சாதக பலன்களை அனுபவிக்கும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.&nbsp;</p><h2>மேஷம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ea50b270-2753-4f9b-8e6e-2b68cbfb8646/26-6a6aefd1acbbc.webp' /></p><h2>
</h2><p>செவ்வாய் மேஷ ராசியின் 3ஆம் வீட்டிற்கு பெயர்ச்சி அடைவதால் தன்னம்பிக்கை, தைரியம் அதிகரிக்கும். பணியிடத்தில் முன்னேற்றம், வேலை தொடர்பான பயணங்கள் மற்றும் நல்ல நிதி ஆதாயம் கிடைக்கும்.அதிர்ஷ்டமும் முழுமையாக கைகொடுக்கும்.</p><h2>
மிதுனம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9a287f51-f603-41b4-b347-fbca1abb4567/26-6a6aefd25de9d.webp' /></p><p>
செவ்வாய் முதல் வீட்டிற்கு வருவதால் ஆற்றல், தன்னம்பிக்கை, உற்சாகம் உயரும்.தலைமைத்துவ திறன் மேம்பட்டு, பணியில் பதவி உயர்வு அல்லது புதிய பொறுப்புகள் கிடைக்கும் வாய்ப்பு காணப்படுகின்றது.</p><p>ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வியாபாரத்தில் லாபமும் புதிய ஒப்பந்தங்களும் கிடைக்கும்.இந்த காலகட்டத்தில் பணவரவு சிறப்பாக இருக்கும்.&nbsp;</p><h2>

சிம்மம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/929c1260-077c-40c7-b644-cffc1f89635b/26-6a6aefd3111d7.webp' /></p><h2>
</h2><p>செவ்வாய் 11ஆம் வீட்டில் இருப்பதால் வருமானம் அதிகரிக்கும். புதிய வீடு அல்லது வாகனம் வாங்கும் வாய்ப்பு உருவாகலாம். </p><p>செல்வாக்கு மிக்கவர்களின் ஆதரவும், பணியில் புதிய வாய்ப்புகளும் கிடைக்கும்.குறிப்பாக இதுவரையில் இல்லாத அளவுக்கு நிதி நிலையில் அசுர வளர்ச்சி உண்டாகும்.&nbsp;</p><h2>

கன்னி</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/929c1260-077c-40c7-b644-cffc1f89635b/26-6a6aefd3111d7.webp' /></p><h2>
</h2><p>செவ்வாய் 10ஆம் வீட்டிற்கு வருவதால் தொழில் வளர்ச்சி, வருமான உயர்வு மற்றும் புதிய பொறுப்புகள் கிடைக்கும். நிதி நிலை மேம்பட்டு, கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும்.&nbsp;</p><p>உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். புதன் ஆசியால் சிந்தனையில் தெளிவு பிறக்கும். மன அமைதி கிடைக்கும்.</p><h2>

தனுசு</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/01967582-8c83-4af5-9458-100c75f67d7c/26-6a6aefd4922da.webp' /></p><p></p><p>செவ்வாய் 7ஆம் வீட்டில் இருப்பதால் தொழில், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றமும் எதிர்பாராத லாபமும் கிடைக்கும். திருமண வாழ்க்கையில் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி, உறவு வலுப்படும்.</p><p> தேவையற்ற வாக்குவாதங்களைத் தவிர்த்து பொறுமையுடன் செயல்படுவது நல்லது. தொழில் நல்ல முன்னேற்றம் இருக்கும். பணவரவு திருப்திகரமாக இருக்கும்.</p><p><b>இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;&nbsp;</b></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <u><b><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></b></u></td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-30T06:38:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[வாகனங்களில் பொருத்தப்பட்ட ஆபத்தான பாகங்கள்..! பிறப்பிக்கப்பட்டுள்ள தடை உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/special-traffic-operation-orders-issued-drivers-1785383991"></link>
            <id>https://tamilwin.com/article/special-traffic-operation-orders-issued-drivers-1785383991</id>
            <summary type="text">வீதிப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையக்கூடிய வகையில் பழுதுபட்ட நிலையிலிருந்த வாகனங்கள் மற்றும் சட்டவிரோதமான முறையில் மேலதிக பாகங்கள் பொருத்தப்பட்ட ...</summary>
            <content type="html"><![CDATA[<p>வீதிப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையக்கூடிய வகையில் பழுதுபட்ட நிலையிலிருந்த வாகனங்கள் மற்றும் சட்டவிரோதமான முறையில் மேலதிக பாகங்கள் பொருத்தப்பட்ட வாகனங்கள் தீவிர பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.</p><p>வெல்லவாய மற்றும் ஊவா குடாஓயா பொலிஸ் நிலைய உத்தியோகஸ்தர்கள் மற்றும் மோட்டார் வாகன பரிசோதகர்கள் இணைந்து விசேட வாகனத்தணிக்கை நடவடிக்கையினை&nbsp;முன்னெடுத்துள்ளது.</p><p></p><h2>24 வாகனங்களுக்கு தடை உத்தரவு</h2><p>இதன்போது வீதி போக்குவரத்திற்குப் பொருத்தமற்ற மற்றும் சட்டவிரோதமாக மாற்றியமைக்கப்பட்ட 24 வாகனங்களுக்குத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/918821a2-2af7-4d86-8e33-26ef2a3cd421/26-6a6af14f38cb0.webp' /></p><p>குறைபாடுகளுடன் உற்பத்தி செய்யப்பட்ட மற்றும் சட்டவிரோத பாகங்களை பொருத்தியிருந்த 24 வாகனங்களின் சாரதிகளுக்கு எதிராகவே இவ்வாறு தடை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.&nbsp;&nbsp;</p><p>குறித்த சாரதிகளுக்கு வாகனங்களிலுள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கு 14 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.</p><p> குறிப்பிடப்பட்ட காலப்பகுதிக்குள் குறைபாடுகளைச் சரிசெய்ய தவறும்பட்சத்தில், சம்பந்தப்பட்ட சாரதிகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என பொலிஸார் எச்சரித்துள்ளனர்.&nbsp; &nbsp;</p><p></p><p></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-30T06:38:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[எகிப்தில் அமெரிக்க எரிவாயு கப்பல் மீது தாக்குதல்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/attack-on-us-gas-tanker-in-egypt-1785393327"></link>
            <id>https://canadamirror.com/article/attack-on-us-gas-tanker-in-egypt-1785393327</id>
            <summary type="text">&amp;nbsp; எகிப்தின் மத்திய தரைக்கடல் துறைமுகம் டாமியெட்டாவில், அமெரிக்காவிற்குச் சொந்தமான எரிவாயு சேமிப்புக் கப்பல் மீது ட்ரோன் ஒன்று தாக்கியுள்ளதாக கடல்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; எகிப்தின் மத்திய தரைக்கடல் துறைமுகம் டாமியெட்டாவில், அமெரிக்காவிற்குச் சொந்தமான எரிவாயு சேமிப்புக் கப்பல் மீது ட்ரோன் ஒன்று தாக்கியுள்ளதாக கடல்சார் பாதுகாப்பு நிறுவனமான ஆம்ப்ரே தெரிவித்துள்ளது.
</p><p>
டாமியெட்டாவில் இரண்டு எரிவாயு டேங்கர்கள் தீப்பிடித்ததாக இஞ்ச்கேப் துறைமுக சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது.

எகிப்தில் உள்ள மத்திய தரைக்கடல் துறைமுகத்தில் வெடிப்புச் சம்பவம் பதிவானதை அடுத்து, உள்ளூர் அதிகாரிகள் உடனடியாகப் பதிலளித்தனர் என இன்சாபே துறைமுக சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/87d31de0-ae31-4124-84ab-9676b0405d2f/26-6a6af0b178d84.webp' /></p><p> </p><p>

அத்துடன் எகிப்தின் டாமியெட்டா துறைமுகத்தில் ஏற்பட்ட வெடிவிபத்திற்குப் பின்னர் நிலைமைகட்டுப்பாட்டில் உள்ளது.


அமெரிக்காவிற்குச் சொந்தமான எரிவாயு சேமிப்புக் கப்பல் மீது ட்ரோன் ஒன்று தாக்கியதாக கடல்சார் பாதுகாப்பு நிறுவனமான ஆம்ப்ரே கூறியது. </p><p>

எல்என்ஜி முனையத்தில் சரக்கு இறக்கும் பணிகளின் போது ஒரு வெடிப்பு நிகழ்ந்ததாக இஞ்ச்கேப் தெரிவித்தது.

சம்பவமான கப்பல்கள் துறைமுகப் பகுதிக்கு வெளியே பாதுகாப்பாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளன என்று இஞ்ச்கேப்பின் அறிக்கை கூறுகிறது. </p><p>

மேலும் மற்ற கப்பல் நிறுத்துமிடங்கள் மற்றும் முனையங்களில் இரவு நேரத்தில் துறைமுகச் செயல்பாடுகள் மீண்டும் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-30T06:34:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[நடுத்தர வருமானம் பெறும் நூற்றுக்கணக்கான குடும்பங்களுக்கு மகிழ்ச்சியான செய்தி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/house-scheme-for-low-income-families-1785390112"></link>
            <id>https://tamilwin.com/article/house-scheme-for-low-income-families-1785390112</id>
            <summary type="text">நடுத்தர வருமானம் பெறும் குடும்பங்களுக்காக நகர அபிவிருத்தி அதிகாரசபையினால் மாலபேயில் நிர்மாணிக்கப்பட்டு வரும் வீடமைப்புத் திட்டத்தின் பணிகள் 85 சதவீதத்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நடுத்தர வருமானம் பெறும் குடும்பங்களுக்காக நகர அபிவிருத்தி அதிகாரசபையினால் மாலபேயில் நிர்மாணிக்கப்பட்டு வரும் வீடமைப்புத் திட்டத்தின் பணிகள் 85 சதவீதத்திற்கும் அதிகமாக நிறைவடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p>&nbsp;கடுவலை - மாலபே பகுதியில் அமைந்துள்ள இந்த திட்டம், 20 மாடிகளைக் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பை கொண்டுள்ளது.</p><p></p><p>

இதில் 920 சதுர அடி பரப்பளவு கொண்ட 128 வீடுகளும், 700 சதுர அடி பரப்பளவு கொண்ட 128 வீடுகளும் அடங்கலாக மொத்தம் 256 வீடுகள் உள்ளதாக நகர அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.</p><h2>இடைநிறுத்தப்பட்ட திட்டம்</h2><p>
</p><p>
இந்த வீடமைப்புத் திட்டத்தின் நிர்மாணப் பணிகள் 2021 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட போதிலும், நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக 2022 ஆம் ஆண்டு இடைநிறுத்தப்பட்டன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ae6798e6-bae2-4499-9a03-cc9b629b15bf/26-6a6af006a517d.webp' /></p><p>

பின்னர், உரிய ஒப்பந்தக்காரர்களுடன் நகர அபிவிருத்தி அதிகாரசபை புதிய ஒப்பந்தங்களைச் செய்து கொண்டதையடுத்து, 2025 ஆம் ஆண்டில் பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டன.
</p><p>
4,375 மில்லியன் ரூபாய் செலவில் செயல்படுத்தப்பட்டு வரும் இந்த திட்டத்தின் கீழ் உருவான வீடுகளை, இந்த ஆண்டின் இறுதிக்குள் மக்களிடம் ஒப்படைக்க திட்டமிட்டுள்ளதாக நகர அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-30T06:33:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரான்சில் கொழுந்துவிட்டு எரியும் காட்டுத்தீ... வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்ட பிரபலத் தம்பதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/clooney-wife-forced-to-evacuate-1785393152"></link>
            <id>https://news.lankasri.com/article/clooney-wife-forced-to-evacuate-1785393152</id>
            <summary type="text">தெற்கு பிரான்ஸ் முழுவதும் பரவி வரும் காட்டுத்தீ காரணமாக, ஜார்ஜ் மற்றும் அமல் குளூனி தம்பதி தங்கள் வீட்டை விட்டு வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படும் நிலை ஏ...</summary>
            <content type="html"><![CDATA[<p>தெற்கு பிரான்ஸ் முழுவதும் பரவி வரும் காட்டுத்தீ காரணமாக, ஜார்ஜ் மற்றும் அமல் குளூனி தம்பதி தங்கள் வீட்டை விட்டு வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.</p><h2>குளூனி தம்பதி</h2><p>
</p><p>ஆஸ்கார் விருது வென்றவரான 65 வயது ஜார்ஜ் குளூனி மற்றும் அவரது 48 வயதான மனைவியும் மனித உரிமைகள் சட்டத்தரணியுமான அமல் குளூனி ஆகியோர் பிரான்ஸின் 'புரோவென்ஸ்-ஆல்ப்ஸ்-கோட் டி அஸூர்' (Provence-Alpes-Côte d’Azur) பிராந்தியத்தில் உள்ள பிரிக்னோல்ஸ் (Brignoles) நகரில் வசித்து வந்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4866370c-3f72-43c3-95c3-3e576ad53c14/26-6a6af12a793ee.webp' /></p><p> </p><p>இந்த நிலையில், பிரிங்னோல்ஸ் (Brignoles) நகர மேயர் டிடியர் பிரெமோண்டிற்கு (Didier Brémond) எழுதிய கடிதத்தில், தானும் தனது மனைவியும் ஒன்பது வயதுடைய இரட்டைக் குழந்தைகளான அலெக்சாண்டர் மற்றும் எல்லா ஆகியோருடன் தங்கள் வீட்டை விட்டு வெளியேறியதாக குளூனி தெரிவித்துள்ளார்.</p><p> அத்துடன், பரவி வரும் காட்டுத்தீயினால் ஏற்படும் பாதிப்புகளைப் பொருட்படுத்தாமல், 18,000-க்கும் சற்று குறைவான மக்கள் வசிக்கும் அந்தப் பிரெஞ்சு நகரத்திற்கு உதவும் தயார் என குளூனி உறுதியளித்ததாகக் கூறப்படுகிறது.</p><p></p><p> </p><p>ஐரோப்பிய ஒன்றியத்தின் அவசரக்கால நடவடிக்கைப் பிரிவுத் தலைவர், காட்டுத்தீ சில நாட்களுக்குள் ஐரோப்பா முழுவதையும் சூழ்ந்துகொள்ளக்கூடும் என்று எச்சரித்த அதே நாளில்தான், குளூனி தம்பதியினர் தாங்கள் வெளியேறுவதாக அறிவித்தனர்.</p><h2>காட்டுத்தீ அபாயம்</h2><p>
</p><p>தெற்கு ஐரோப்பா முழுவதும் தீயணைப்பு வீரர்கள் பெரும் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் தொடர்ந்து போராடி வரும் நிலையில், வரும் வாரங்களில் கிரீஸ், இத்தாலி மற்றும் மத்திய ஐரோப்பா ஆகிய பகுதிகள் மிக அதிக காட்டுத்தீ அபாயத்தை எதிர்கொள்ளக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. </p><p>பிரான்சில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயை அணைக்க 2,200-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்; தீயைக் கட்டுப்படுத்த 20 விமானங்கள் அவர்களுக்குத் துணையாக களமிறக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8d8ab609-893d-4ca5-b22a-1a9d8c460aff/26-6a6af12b354b0.webp' /></p><p> </p><p>செவ்வாய்க்கிழமை நிலவரப்படி, பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் முழுவதும் 330,000-க்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.</p><p> ஜார்ஜ் மற்றும் அமல் குளூனி ஆகியோர் 2021-ஆம் ஆண்டிலேயே பிரிக்னோல்ஸை (Brignoles) தாங்கள் குடியேறுவதற்கான ஒரு இடமாகப் பரிசீலிக்கத் தொடங்கினர்; பின்னர் அதே ஆண்டில், சுமார் 9 மில்லியன் டொலர் மதிப்பில் அங்குள்ள ஒரு தோட்டத்தை அவர்கள் வாங்கினர். </p><p>இதனையடுத்து அந்த அமெரிக்க நடிகரும் பிரித்தானிய-லெபனானிய சட்டத்தரணியும் 2025-இல் தங்களுக்கும் தங்கள் குழந்தைகளுக்கும் பிரெஞ்சு குடியுரிமையைப் பெற்றனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-30T06:30:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[சேலையில் போட்டோஷூட் நடத்திய நடிகை ப்ரியாமணி.. ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் புகைப்படங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/actress-priyamani-recent-saree-photoshoot-1785392079"></link>
            <id>https://cineulagam.com/article/actress-priyamani-recent-saree-photoshoot-1785392079</id>
            <summary type="text">பருத்திவீரன் திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் நடிகை ப்ரியாமணி. இவர் சமீபத்தில் வெளியான ஜனநாயகன் திரைப்படத்திலும் ஒரு முக்கிய ரோலில் நட...</summary>
            <content type="html"><![CDATA[<p>பருத்திவீரன் திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் நடிகை ப்ரியாமணி. இவர் சமீபத்தில் வெளியான ஜனநாயகன் திரைப்படத்திலும் ஒரு முக்கிய ரோலில் நடித்துள்ளார். </p><p>கோலிவுட் முதல் பாலிவுட் வரை கலக்கிக்கொண்டிருக்கும் நடிகை ப்ரியாமணி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் நபர் ஆவார். தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை தொடர்ந்து அதில் பதிவு செய்வார். </p><p>இந்த நிலையில், தற்போது சேலையில் எடுத்துக்கொண்ட அழகிய போட்டோஷூட் புகைப்படங்களை இன்ஸ்டா பக்கத்தில் பதிவு செய்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். </p><p>இதோ அந்த புகைப்படங்கள்:</p>]]></content>
            <updated>2026-07-30T06:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹோர்முஸ் நீரிணையில் மூன்று எண்ணெய் கப்பல்கள் மீது தாக்குதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/attacks-on-3-oil-tankers-in-the-strait-of-hormuz-1785393068"></link>
            <id>https://canadamirror.com/article/attacks-on-3-oil-tankers-in-the-strait-of-hormuz-1785393068</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;ஹோர்முஸ் ஜலசந்தியில் மூன்று எண்ணெய் கப்பல்களைத் தாக்கியதாக ஐ.ஆர்.ஜி.சி. தெரிவித்துள்ளது.
ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;ஹோர்முஸ் ஜலசந்தியில் மூன்று எண்ணெய் கப்பல்களைத் தாக்கியதாக ஐ.ஆர்.ஜி.சி. தெரிவித்துள்ளது.
ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் (IRGC) கடற்படையானது, எச்சரிக்கைகளைப் புறக்கணித்த மூன்று எண்ணெய்க் கப்பல்களை ஹோர்முஸ் ஜலசந்தியில் குறிவைத்து தாக்குதல் நடத்திய பின்னர் தடுத்து நிறுத்தியதாகக் கூறியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0f5eb0da-275d-4ee7-96f8-93020bf2cf96/26-6a6aefae855f3.webp' /></p><p>
</p><p>
கப்பல்களின் பெயர்கள், உரிமை, துல்லியமான இருப்பிடம் மற்றும் நீர்வழியில் நடந்ததாகக் கூறப்படும் விதிமீறல்களின் விவரங்கள் வெளியிடப்படவில்லை, ஆனால் ஓமானின் கடற்கரையோரமான தெற்கு வழித்தடத்தை தெஹ்ரான் நிராகரித்துள்ளது.</p><p>

அதேவேளை அமெரிக்காவின் சட்டவிரோதத் தலையீடுகளுக்கும் உத்தரவுகளுக்கும் பிராந்தியத்தில் உள்ள கப்பல்கள் மீது பதிலடி கொடுக்காமல் போகாது என்று ஐ.ஆர்.ஜி.சி அறிக்கை தெரிவித்தது.</p>]]></content>
            <updated>2026-07-30T06:29:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[விகாராதிபதி பதவிப் போட்டி...! தேரர் ஒருவர் மீது கொடூரத் தாக்குதல் - மற்றுமொருவர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/monk-remanded-over-assault-in-temple-dispute-1785390170"></link>
            <id>https://ibctamil.com/article/monk-remanded-over-assault-in-temple-dispute-1785390170</id>
            <summary type="text">ரிதீமாலியத்த செனசுன்கல புராண ரஜமஹா விகாரையின் விகாராதிபதி பதவி தொடர்பாக இரு தேரர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில், ஒரு தேரர் தாக்கப்பட்டுப் பலத்த காயமடைந...</summary>
            <content type="html"><![CDATA[<p>ரிதீமாலியத்த செனசுன்கல புராண ரஜமஹா விகாரையின் விகாராதிபதி பதவி தொடர்பாக இரு தேரர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில், ஒரு தேரர் தாக்கப்பட்டுப் பலத்த காயமடைந்துள்ளார். </p><p>

அத்தோடு மற்றுமொரு தேரர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>

குறித்த தேரரை வரும் ஆகஸ்ட் ஆறாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மதியங்கனை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p>
</p><p></p><h2>பல முறைப்பாடுகள்</h2><p>சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த விகாரையின் முன்னாள் விகாராதிபதி தேரர் காலமானதைத் தொடர்ந்து, விகாராதிபதி பதவிக்காக அளுகெட்டியாவே சீலவம்ச தேரர் மற்றும் கேசல்போத மேதாங்கர தேரர் ஆகிய இருவருக்கும் இடையே நீண்டகாலமாக மோதல் நிலவி வந்துள்ளது.
</p><p>
இதற்கு முன்னரும் இவர்களுக்கிடையேயான மோதல்கள் தொடர்பாக மதியங்கனை காவல் நிலையத்தில் பல முறைப்பாடுகள் பதிவாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/31826035-3d85-4f54-aaf1-d02fa5b70910/26-6a6ae76b4b75f.webp' /></p><p>

அத்தோடு இரு தரப்பினருக்கும் நீதிமன்றத்தினால் சிறைத்தண்டனைகளும் (Suspended Sentences) விதிக்கப்பட்டிருந்த பின்னணியிலேயே இந்த புதிய மோதல் வெடித்துள்ளது.
</p><p>
இந்தநிலையில் கடந்த 24 ஆம் திகதி, தான் விகாராதிபதியாக நியமிக்கப்பட்டதாகக் கூறும் கடிதம் ஒன்றுடன் விகாரைக்கு வருகை தந்த சீலவம்ச தேரர், அங்கு தங்கியிருந்த மேதாங்கர தேரரிடம் விகாரையின் சாவிக்கொத்தைக் கேட்டுள்ளார்.</p><p>
</p><p></p><h2>விசேட விசாரணை</h2><p>இதன்போது ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில், சீலவம்ச தேரர் மேலும் இரு நபர்களுடன் சேர்ந்து மேதாங்கர தேரரைத் தாக்கிவிட்டுத் தப்பிச் சென்றுள்ளார்.</p><p>

இதையடுத்து தாக்குதலில் காயமடைந்த மேதாங்கர தேரர் மதியங்கனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காகப் பதுளை போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3560aa09-b3ee-4bd4-b06f-cdc0dd6ac48d/26-6a6ae76a9d1ae.webp' /></p><p>அராவ பகுதியில் தலைமறைவாகியிருந்த சந்தேகநபரான சீலவம்ச தேரரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். </p><p>

அத்தோடு தாக்குதலுக்கு உதவியதாகக் கூறப்படும் ஏனைய இரு சந்தேகநபர்களும் பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்றுள்ளதுடன் அவர்களைக் கைது செய்ய காவல்துறையினர் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-30T06:27:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மின்கம்பத்தில் ஏறிய நபருக்கு காத்திருந்த அதிர்ச்சி! மின்சார சபைக்கான நட்டத் தொகையை செலுத்த உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/man-climbs-electric-pole-over-family-dispute-1785391315"></link>
            <id>https://tamilwin.com/article/man-climbs-electric-pole-over-family-dispute-1785391315</id>
            <summary type="text">குடும்பத் தகராறு ஒன்றின் காரணமாக உயர் அழுத்த மின்சாரக் கம்பமொன்றில் ஏறி எதிர்ப்பு நடவடிக்கையொன்றை மேற்கொண்ட நபருக்கு இரண்டு இலட்சம் அபராதம் விதிக்கப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>குடும்பத் தகராறு ஒன்றின் காரணமாக உயர் அழுத்த மின்சாரக் கம்பமொன்றில் ஏறி எதிர்ப்பு நடவடிக்கையொன்றை மேற்கொண்ட நபருக்கு இரண்டு இலட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
</p><p>
மாத்தறை , கம்புறுப்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த நபரொருவருக்கே மாத்தறை நீதவான் நீதிமன்றத்தினால் குறித்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

​</p><p>கடந்த 21 ஆம் திகதி பிற்பகல் தனது குடும்பத் தகராறு ஒன்றைத் தீர்த்துக் கொள்வதற்காக குறித்த நபர் உயர் அழுத்த மின்சாரக் கம்பத்தில் ஏறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.</p><p></p><h2>நட்டத் தொகை</h2><p>
</p><p>
இதனால் திஹகொட, கம்புறுபிட்டிய, அக்குரஸ்ஸ, முலட்டியன, தெஹியந்தறை, மாவரல, தெனியான உள்ளிட்ட பல பகுதிகளுக்கு இரண்டு மணித்தியாலங்களுக்கும் அதிகமான நேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.</p><p>

​மின்கம்பத்தில் ஏறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நபரின் குடும்ப உறுப்பினர்களைப் பொலிஸார் வரவழைத்து சமரச முயற்சிகளை மேற்கொண்டதைத் தொடர்ந்து அவர் கீழே இறங்கினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fa67ef81-cf37-4bea-a3c4-209b791d418d/26-6a6aed3ab6acf.webp' /></p><p>
</p><p>
பின்னர் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டதுடன், நேற்றைய தினம் நீதிமன்றத்தில் இடம்பெற்ற விசாரணையின் போது மின்சார சபைக்கு ஏற்பட்ட நஷ்டம் 201,059.90 ரூபா எனப் பொலிஸாரால் அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>&nbsp;அதனையடுத்து குறித்த அபராதத் தொகையை மின்சார சபைக்குச் செலுத்துமாறு நீதிமன்றம் அவருக்கு உத்தரவிட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-30T06:20:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மூத்த ஊடகவியலாளர் சபேஸ்வரனின் மறைவு - யாழ். ஊடக மன்றத்தின் இரங்கல் அறிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/condolences-for-late-journalist-sabeswaran-family-1785386279"></link>
            <id>https://ibctamil.com/article/condolences-for-late-journalist-sabeswaran-family-1785386279</id>
            <summary type="text">மூத்த ஊடகவியலாளர் ஆறுமுகம் சபேஸ்வரனின் மறைவுச் செய்தியானது ஊடகத்
துறைக்கு மிகுந்த ஒரு அதிர்ச்சியையும், பாரிய இழப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
அவரது ஆத்...</summary>
            <content type="html"><![CDATA[<p>மூத்த ஊடகவியலாளர் ஆறுமுகம் சபேஸ்வரனின் மறைவுச் செய்தியானது ஊடகத்
துறைக்கு மிகுந்த ஒரு அதிர்ச்சியையும், பாரிய இழப்பையும் ஏற்படுத்தியுள்ளது.</p><p>
அவரது ஆத்மா சாந்தி அடைய வேண்டும் என்பதுடன் அவரது குடும்பத்துக்கு யாழ். ஊடக
மன்றம் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறது.
</p><p>
நீண்ட கால ஊடக அனுபவத்தை அவர் கொண்டிருந்ததுடன் யாழ். பல்கலைக்கழக ஊடக வழங்கல்
பயிற்சி மையத்தின் விரிவுரையாளராக கடமை புரிந்து பல ஊடகவியலாளர்களை உருவாக்கிய
பெருமையும் அவரை சாரும்.</p><p></p><p> </p><h2>அர்ப்பணிப்புள்ள பணிகள்&nbsp;</h2><p>அத்துடன் தினக்குரல் பத்திரிகையின் முன்னைநாள் செய்தி
ஆசிரியராகவும் சிறப்பாக பணியாற்றி பல விடயங்களை வெளிக்கொணர்ந்து சமூகத்துக்கு
பல நல்ல விடயங்களை புரிந்ததில் அவரது பங்கு அளப்பரியது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3d4fa39e-4c00-4346-b9e6-cc85ebd5c007/26-6a6aecc6a0f3b.webp' /></p><p>தமிழ் ஊடகத்துறையில் நீண்டகாலம் பணியாற்றிய அவர், ஊடகவியலாளர்களின்
குரலாகவும், அவர்களின் உரிமைப் போராட்டங்களில் முன்னின்று உழைத்த ஒரு சிறந்த
ஆளுமையுமாவார். </p><p>அத்துடன் தமிழ் மக்களது உரிமைசார் போராட்டங்கள் தொடர்பான
செய்திகளை நடுநிலையாக பிரசுரித்து தமிழ் மக்களின் போராட்டங்களுக்கு
வலுச்சேர்த்ததில் அவரது பங்கு இன்றியமையாத ஒன்றாகும்.</p><p> அவரது உயிரும் உடலும்
மறைந்தாலும் ஊடகத்துறையில் அவர் புரிந்த அர்ப்பணிப்புள்ள பணிகள் தமிழ் ஊடக
வரலாற்றில் என்றும் அழியாத தடமாக நிலைத்திருக்கும்.
</p><p>
அன்னாரின் சாந்திக்காக இறைவனை பிரார்த்திப்பதோடு அவரை இழந்து வாடும்
உறவுகளுக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறோம்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-30T06:18:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வாகனச் சோதனையில் 24 ஓட்டுநர்களுக்குத் தடை உத்தரவு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/24-drivers-issue-prohibition-orders-during-vehicle-1785389638"></link>
            <id>https://ibctamil.com/article/24-drivers-issue-prohibition-orders-during-vehicle-1785389638</id>
            <summary type="text">பாதுகாப்பு விதிமீறல்கள் மற்றும் அங்கீகரிக்கப்படாத மாற்றங்கள் செய்யப்பட்ட வாகனங்களைக் குறிவைத்து, வெல்லவாயா மற்றும் ஊவா குடா ஓயாவில் நடத்தப்பட்ட சிறப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>பாதுகாப்பு விதிமீறல்கள் மற்றும் அங்கீகரிக்கப்படாத மாற்றங்கள் செய்யப்பட்ட வாகனங்களைக் குறிவைத்து, வெல்லவாயா மற்றும் ஊவா குடா ஓயாவில் நடத்தப்பட்ட சிறப்பு வாகனச் சோதனையின்போது மொத்தம் 24 ஓட்டுநர்களுக்குத் தடை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
</p><p>
 

வெல்லவாயா மற்றும் ஊவா குடா ஓயா காவல் நிலையங்களைச் சேர்ந்த காவல்துறையினர் மோட்டார் வாகனப் பரிசோதனை அதிகாரிகளுடன் இணைந்து, அங்கீகரிக்கப்படாத கூடுதல் பாகங்கள் கொண்டு மாற்றியமைக்கப்பட்ட வாகனங்கள் மற்றும் இயந்திர நிலையில் பழுதடைந்த வாகனங்கள் மீது ஒரு சிறப்புப் பரிசோதனை நடவடிக்கையை மேற்கொண்டனர்.</p><p>இந்த ஆய்வில்&nbsp; ​​சாலைப் பாதுகாப்பைப் பாதிக்கக்கூடிய பல்வேறு குறைபாடுகள் மற்றும் மாற்றங்களுடன் இயக்கப்பட்டு வந்த 24 வாகனங்களை அவர்கள் கண்டறிந்தனர்.&nbsp;</p><p></p><h2>24 வாகனங்களுக்குத் தடை</h2><p>
 

இதனைத் தொடர்ந்து, வாகனங்களின் ஓட்டுநர்கள், அடையாளம் காணப்பட்ட பிரச்சனைகள் சரிசெய்யப்படும் வரை வாகனங்களை இயக்குவதைத் தடுக்கும் வகையில் இந்த தடை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/53833561-4e43-4bbb-87ed-a1d6397cdb78/26-6a6ae97d5ab3f.webp' /></p><p>
</p><p>
 

ஓட்டுநர்களுக்குத் தங்களது வாகனங்களில் உள்ள குறைபாடுகளைச் சரிசெய்யவும், அங்கீகரிக்கப்படாத மாற்றங்களை அகற்றவும் 14 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
</p><p>மேலும் சாலைப் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும், பொதுச் சாலைகளில் இயங்கும் வாகனங்கள் சட்ட மற்றும் பாதுகாப்புத் தேவைகளுக்கு இணங்குவதை உறுதி செய்வதற்கும் இதுபோன்ற வாகனச் சோதனை நடவடிக்கைகள் எதிர்காலத்திலும் தொடரும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-30T06:14:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கணவர் வெளிநாட்டிலிருப்பதாக கூறிய பெண்: திரைப்பட பாணியில் ஒரு திடுக் சம்பவம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/man-buried-by-wife-family-believed-he-was-in-aus-1785391759"></link>
            <id>https://news.lankasri.com/article/man-buried-by-wife-family-believed-he-was-in-aus-1785391759</id>
            <summary type="text">இந்தியாவின் குஜராத் மாநிலத்தில், தன் கணவர் அவுஸ்திரேலியாவில் வேலை செய்துவருவதாகக் கூறி பெண்ணொருவர் அவரது குடும்பத்தினரை ஏமாற்றிவந்த நிலையில், தற்போது ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியாவின் குஜராத் மாநிலத்தில், தன் கணவர் அவுஸ்திரேலியாவில் வேலை செய்துவருவதாகக் கூறி பெண்ணொருவர் அவரது குடும்பத்தினரை ஏமாற்றிவந்த நிலையில், தற்போது அவரது குட்டு வெளிப்பட்டுள்ளது.
</p><h3>
கணவர் வெளிநாட்டிலிருப்பதாக கூறிய பெண்</h3><p>

குஜராத்திலுள்ள ஜாம்நகர் என்னுமிடத்தைச் சேர்ந்தவர் ஜிக்னேஷ் மாவடியா. ஜிக்னேஷின் மனைவி ப்ரித்வி. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7a9e3971-ec76-4b5b-86de-d3118a33f10f/26-6a6aea91330fb.webp' /></p><p>
ஜிக்னேஷின் குடும்பத்தினர் அவர் இரண்டு ஆண்டுகளாக அவுஸ்திரேலியாவில் வேலை செய்துவருவதாக நம்பிக்கொண்டிருந்த நிலையில், சமீபத்தில் அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் அவுஸ்திரேலியாவுக்குச் சென்றுள்ளார்.
</p><p>
அங்கு சென்று ஜிக்னேஷ் தங்கியிருப்பதாக கூறப்பட்ட முகவரியில் அவரைத் தேடும்போதுதான் தெரிந்துள்ளது அவர் அவுஸ்திரேலியாவில் இல்லை என்பது.&nbsp;</p><p></p><p>

சந்தேகம் எழவே, ஜிக்னேஷின் சகோதரர் பொலிசில் புகாரளிக்க, பொலிஸ் விசாரணையில் அதிரவைக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
</p><h3>
திரைப்பட பாணியில் ஒரு திடுக் சம்பவம்</h3><p>

ஆம், ஜிக்னேஷின் மனைவியாகிய ப்ரித்வியும், ப்ரித்வியின் காதலனான நிலேஷ் என்பவரும் சேர்ந்து ஜிக்னேஷுக்கு மதுவில் விஷம் கலந்து கொடுத்து அவரைக் கொன்றுள்ளார்கள். </p><p><iframe src="https://www.facebook.com/plugins/post.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2Ffeedmileapp%2Fposts%2Fpfbid0Dh83pNjjdTk3SYPAfPEsk9iq1EaNmY4GaPcV5Vqsu1PtHcMG5pgyusDR5S3SApryl&show_text=true&width=500" width="500" height="731" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share"></iframe></p><p>
பின்னர் திரைப்படம் ஒன்றில் வரும் காட்சி ஒன்றைப்போல, அவரது உடலை தொழிற்சாலை ஒன்றிற்குக் கொண்டு சென்று, அங்கு 12 முதல் 15 அடி ஆழமுள்ள ஒரு குழியைத் தோண்டி, ஜிக்னேஷ் உடலை புதைத்துள்ளார்கள்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8a0e3408-f00f-4ad6-81c5-c48e0be63c13/26-6a6aea9082725.webp' /></p><p>

இரண்டு ஆண்டுகளாக ஜிக்னேஷ் அவுஸ்திரேலியாவில் வேலை செய்வதாகவும், மொபைல் பயன்படுத்த அவர் வேலை செய்யும் நிறுவனம் அனுமதியளிக்கவில்லை என்றும் கூறி, ஜிக்னேஷின் மனைவியாகிய ப்ரித்வி அவரது குடும்பத்தினரை ஏமாற்றி வந்துள்ளார் என்பது பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.</p><p>
கடும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த தகவல்களைத் தொடர்ந்து, ஜிக்னேஷின் மனைவியாகிய ப்ரித்வியும், ப்ரித்வியின் காதலனான நிலேஷ் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
</p><p>
அவர்கள் அடையாளம் காட்டிய தொழிற்சாலையிலிருந்து ஜிக்னேஷின் எலும்புகள் தோண்டி எடுக்கப்பட்டு ஆய்வகப் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளன.</p><p>

திரைப்பட பாணியில் பெண்ணொருவர் தன் கணவரைக் கொன்று புதைத்த சம்பவம், அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் உருவாக்கியுள்ளது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-30T06:14:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரான் மீது அமெரிக்கா உக்கிர தாக்குதல் - ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/3-killed-2-children-injured-in-us-strike-on-iran-1785390332"></link>
            <id>https://ibctamil.com/article/3-killed-2-children-injured-in-us-strike-on-iran-1785390332</id>
            <summary type="text">அமெரிக்கா- ஈரான் இடையேயான மோதல் மீண்டும் தொடங்கியதால் மத்திய கிழக்கில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.ஜோர்டானில் உள்ள அமெரிக்க ராணுவத் தளம் மீதான தாக்குதலுக்கு...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்கா- ஈரான் இடையேயான மோதல் மீண்டும் தொடங்கியதால் மத்திய கிழக்கில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.</p><p>ஜோர்டானில் உள்ள அமெரிக்க ராணுவத் தளம் மீதான தாக்குதலுக்கு ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை பொறுப்பேற்றது.

ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் ஈரானுக்குக் கடுமையான எச்சரிக்கை விடுத்தார்.</p><p>அமெரிக்கப் படைகள் ஈரான் மீது நடத்திய தாக்குதலில், கெஷ்ம் தீவில் உள்ள குடியிருப்பு கட்டிடம் தாக்கப்பட்டதில் ஒரு தம்பதியினரும் அவர்களது இரண்டு வயது குழந்தையும் உயிரிழந்ததாக அந்நாட்டின் அதிகாரப்பூர்வ ஐஆர்என்ஏ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.</p><p></p><h2>கடுமையான தாக்குதல் அலை</h2><p>குடும்பத்தின் மற்ற இரண்டு குழந்தைகள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர் என்றும் ஹோர்மோஸ்கான் துணை ஆளுநர் அஹ்மத் நஃபிசியை மேற்கோள் காட்டி&nbsp;செய்தி வெளியாகி உள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/528b612b-35f6-4553-9c2a-4b08828c117c/26-6a6ae844ea3b6.webp' /></p><p>கிஷ் தீவிலும், புஷேரிலும், ஈரானின் எண்ணெய் தொழிலின் மையமான குசெஸ்தான் மாகாணத்தின் நான்கு இடங்களிலும் வெடிப்புச் சத்தங்கள் கேட்டதாக சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.</p><p>அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சூளுரைத்த சில மணி நேரங்களில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.&nbsp;&nbsp;</p><p>முன்னதாக, மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்கப் படைகளைக் குறிவைத்து நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதல் முயற்சிகளுக்குப் பதிலடியாக, ஈரான் மீது அமெரிக்கப் படைகள் ஒரு "கடுமையான தாக்குதல் அலையை" நடத்தியுள்ளதாக அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு (சென்ட்காம்) தெரிவித்திருந்தது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-30T06:09:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கோணேஸ்வரம் கோயிலில் குரங்கு சேட்டை ; தமிழ் மாணவி எதிர்பாராத நெகிழ்ச்சி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/youth-helps-tamil-girl-thirukoneswaram-monkey-1785391854"></link>
            <id>https://jvpnews.com/article/youth-helps-tamil-girl-thirukoneswaram-monkey-1785391854</id>
            <summary type="text">திருகோணமலை கோணேஸ்வரம் கோயிலுக்குச் சுற்றுலா சென்றிருந்த போது, குரங்கிடம் சிக்கிய ஒரு இலட்சம் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான கைப்பேசியை மீட்டு, கிளிநொச்ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>திருகோணமலை கோணேஸ்வரம் கோயிலுக்குச் சுற்றுலா சென்றிருந்த போது, குரங்கிடம் சிக்கிய ஒரு இலட்சம் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான கைப்பேசியை மீட்டு, கிளிநொச்சியைச் சேர்ந்த தமிழ் மாணவியின் குடும்பத்தினரிடம் சிங்கள இளைஞர் ஒருவர் ஒப்படைத்துள்ளார்.</p><p>

அனுராதபுரம் எப்பாவல பகுதியைச் சேர்ந்த இளைஞரொருவரே இந்த செயலை ஈடுபட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cc0b31f2-35cc-4fd8-95a3-db225052d65c/26-6a6aeaf085172.webp' /></p><h2>கைப்பேசியை&nbsp; எடுத்துச் சென்ற&nbsp;குரங்கு</h2><p>
</p><p>
கடந்த நாட்களில் குடும்பத்தினருடன் திருகோணமலை கோணேஸ்வரம் கோயிலுக்குச் சுற்றுலா சென்றிருந்த இளைஞன் , அங்கு குரங்கொன்றின் கையில் கைப்பேசி ஒன்று இருப்பதைக் கண்டுள்ளார். </p><p>உடனடியாக குரங்குடன் போராடி அந்த கைபேசியை அவர் மீட்டுள்ளார்.

கிளிநொச்சிப் பகுதியைச் சேர்ந்தவர்கள் வழிபாட்டிற்காக வந்திருந்தபோது, மாணவி ஒருவரின் கைப்பேசியை குரங்கு எடுத்துச் சென்றமை தெரியவந்துள்ளது.</p><p></p><p>
</p><p>
மாணவியின் கல்விசார் மிக முக்கியமான பல தகவல்கள் அதில் அடங்கியிருந்ததாக தெரிவிக்கப்பட்டது.

மீட்கப்பட்ட கைப்பேசியில் இருந்த சிம் அட்டையைப் பயன்படுத்தி உரிமையாளரைத் தொடர்பு கொண்ட அவர், காவல்துறையின் போக்குவரத்துப் பிரிவு பொறுப்பதிகாரியின் பங்குபற்றுதலுடன், நேற்று (28) பிற்பகல் கிளிநொச்சியில் மாணவியின் தந்தையிடம் ஒப்படைத்துள்ளார்.</p><p></p><p>
</p><p>
இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன், பலரின் பாராட்டுக்களையும் பெற்றுள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-30T06:08:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[பள்ளிகளில் அரசியல், மத நிகழ்ச்சிகளுக்கு தடை- தமிழக அரசு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/gov-warns-holding-religious-events-in-schools-1785391439"></link>
            <id>https://ibctamilnadu.com/article/gov-warns-holding-religious-events-in-schools-1785391439</id>
            <summary type="text">தமிழக பள்ளி வளாகங்களில் அரசியல், மதம், ஜாதி அமைப்புகளின் நிகழ்ச்சிகள் நடத்த தமிழக அரசு தடை விதித்துள்ளது. அரசின் எச்சரிக்கை 

தமிழகத்தில் உள்ள அனைத்...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழக பள்ளி வளாகங்களில் அரசியல், மதம், ஜாதி அமைப்புகளின் நிகழ்ச்சிகள் நடத்த தமிழக அரசு தடை விதித்துள்ளது. </p><h2>அரசின் எச்சரிக்கை</h2><p> 

தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி வளாகங்களிலும் அரசியல் கட்சிகள், மத அமைப்புகள் மற்றும் ஜாதி சங்கங்களின் கூட்டங்கள், நிகழ்ச்சிகள் நடத்த தமிழக அரசு தடை விதித்துள்ளது.</p><p> அரசு பள்ளிகளில் சிலர் ரீல்ஸ் எடுத்தது சர்ச்சையானதை தொடர்ந்து இந்த உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது.
</p><p>
பள்ளி வளாகத்தை அரசியல் அல்லது மத நிகழ்ச்சிகளுக்காக வாடகைக்கோ, இலவசமாகவோ வழங்கக் கூடாது.</p><p> </p><p><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">*_பள்ளி வளாகங்களில் அரசியல் / மத / சாதிய அமைப்புகளின் கூட்டங்கள், நிகழ்வுகள், சடங்குகள் மற்றும் பயிற்சிகளுக்கு முழுமையான தடை விதித்து அரசாணை மற்றும் அரசிதழ் அறிவிப்பு வெளியீடு!!!_* <a href="https://t.co/wmQxx0zaCz">pic.twitter.com/wmQxx0zaCz</a></p>&mdash; Makkalsevai (@Makkalsevai2) <a href="https://x.com/Makkalsevai2/status/2082434880089248125?ref_src=twsrc%5Etfw">July 29, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>இந்த தடை பள்ளி விடுமுறை நாட்களிலும் அமலில் இருக்கும்.

அரசு நலத்திட்ட விழாக்கள் மற்றும் அரசின் அதிகாரப்பூர்வ நிகழ்ச்சிகளுக்கு மட்டுமே பள்ளி வளாகத்தை பயன்படுத்த அனுமதி உள்ளது.
</p><p>
மேலும், பள்ளி சுவர் மற்றும் வளாகங்களில் அரசியல், மதம் தொடர்பான போஸ்டர்கள், விளம்பரங்கள், கொடிக்கம்பங்கள், சின்னங்கள் வைப்பதும் தடை செய்யப்பட்டுள்ளது.
</p><p>
இந்த அரசாணையை மீறி அனுமதி வழங்கும் தலைமை ஆசிரியர்கள் அல்லது பள்ளி நிர்வாகிகள் மீது ஒழுங்கு நடவடிக்கையும், சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-30T06:08:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[உச்சம் தொட்ட தங்க விலை...! வாங்கவுள்ளோருக்கு வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/gold-price-increase-sri-lanka-today-update-1785391252"></link>
            <id>https://ibctamil.com/article/gold-price-increase-sri-lanka-today-update-1785391252</id>
            <summary type="text">இலங்கையில் (sri Lanka) கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது.

இதனடிப்படையில், இன்றைய (27-07-2026) நிலவரத...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் (sri Lanka) கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது.
</p><p>
இதனடிப்படையில், இன்றைய (27-07-2026) நிலவரத்தின் படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது . 1,313,294 ரூபாவாக காணப்படுகின்றது.
</p><p>
அத்தோடு, 24 கரட் தங்க கிராம் (24 karat gold 1 grams) 46,330 ரூபாவாக பதிவாகியுள்ளது.</p><p>
</p><p></p><h2>தங்கப் பவுண்</h2><p>அதேவேளை 24 கரட் தங்கப் பவுண் 370,650 ரூபாவாக பதிவாகியுள்ளது.
</p><p>
அதேபோல 22 கரட் தங்க கிராம் (22 karat gold 1 grams) 42,470 ரூபாவாக பதிவாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/332336dd-35e6-49f3-ace1-2271a1c7efdc/26-6a6ae96be79ec.webp' /></p><p>

22 கரட் தங்கப் பவுண் (22 karat gold 8 grams) 339,800 ரூபாவாக பதிவாகியுள்ளது.</p><p>

21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை (21 karat gold 1 grams) 40,540 ரூபாவாக பதிவாகியுள்ளது.</p><p>
மேலும், 21 கரட் தங்கப் பவுண் (21 karat gold 8 grams) இன்றையதினம் 324,350 ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p>]]></content>
            <updated>2026-07-30T06:08:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[லண்டனை விட்டு வெளியேறிவரும் ஆயிரக்கணக்கான மக்கள்: காரணம் என்ன?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/cost-of-living-leads-peoples-to-leave-london-1785388249"></link>
            <id>https://news.lankasri.com/article/cost-of-living-leads-peoples-to-leave-london-1785388249</id>
            <summary type="text">ஆயிரக்கணக்கானோர் லண்டனை விட்டு வெளியேறிவருவதை தேசிய புள்ளியியல் அலுவலகம் உறுதி செய்துள்ளது.

லண்டனை விட்டு வெளியேறிவரும் மக்கள்

லண்டனை விட்டு ஆயி...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஆயிரக்கணக்கானோர் லண்டனை விட்டு வெளியேறிவருவதை தேசிய புள்ளியியல் அலுவலகம் உறுதி செய்துள்ளது.
</p><h3>
லண்டனை விட்டு வெளியேறிவரும் மக்கள்
</h3><p>
லண்டனை விட்டு ஆயிரக்கணக்கானோர் வெளியேறிவருவதை உறுதி செய்துள்ள தேசிய புள்ளியியல் அலுவலகம், 1980களுக்குப் பிறகு, கோவிட் காலகட்டம் தவிர்த்து, இந்த அளவுக்கு லண்டன் மக்கள்தொகை குறைந்துள்ளது இப்போதுதான் என்கிறது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/687dc31a-f750-4532-aa13-7f61d9979d34/26-6a6adcdaba3c0.webp' /></p><p>

2025ஆம் ஆண்டின் நடுப்பகுதியில், சுமார் 27,000 பேர் லண்டனை விட்டு வெளியேறியுள்ளதாக தேசிய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது.
</p><p>
ஆக, 2024ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் 9,149,646 ஆக இருந்த லண்டன் மக்கள் தொகை, 2025ஆம் ஆண்டின் நடுப்பகுதியில், 9,122,909 ஆக குறைந்துள்ளது.</p><h3>

காரணம் என்ன?
</h3><p>
இப்படி ஆயிரக்கணக்கான மக்கள் லண்டனை விட்டு வெளியேற முக்கிய காரணம், விலைவாசி உயர்வுதான்!
</p><p>
சமீபத்தில், Deutsche Bank Research Institute என்னும் ஆய்வமைப்பு மேற்கொண்ட ஆய்வுகளின் முடிவுகள், பிரித்தானியாவில் மட்டுமல்ல, உலகிலேயே விலைவாசி அதிகமான பல நகரங்களைவிட லண்டனில் விலைவாசி அதிகம் என்று கூறியுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/35504163-6ae2-4e12-85c5-8dc224eda7fd/26-6a6adcdb69321.webp' /></p><p>
பிரித்தானியாவைப் பொருத்தவரை, எடின்பர்கிலுள்ள அடுக்குமாடிக் குடியிருப்பொன்றின் ஒரு சதுர மீற்றர் பரப்பின் விலை 5,019 பவுண்டுகள்.&nbsp;</p><p></p><p>
பர்மிங்காமில் ஒரு சதுர மீற்றர் பரப்பின் விலை 4,045 பவுண்டுகள். அதே நேரத்தில், லண்டனிலோ, ஒரு சதுர மீற்றர் பரப்பின் விலை 14,982 பவுண்டுகள்!</p><p>

அத்துடன், போக்குவரத்துச் செலவும் லண்டனில் அதிகம் என்கிறது, Deutsche Bank Research Institute ஆய்வமைப்பு.</p><p>

லண்டன், நியூயார்க், பாரீஸ் மற்றும் ஹொங்ஹொங் ஆகிய நகரங்கள் உலகின் திறமைசாலிகளையும் முதலீட்டையும் கவர்ந்திழுப்பது என்னவோ உண்மைதான். ஆனால், வீடுகள் விலை அல்லது வாடகை, காற்று மாசு, தினசரி நீண்ட பயணம் மற்றும் விலைவாசி ஆகிய விடயங்கள் இந்த நகரங்களின் வாழத்தகுந்த தன்மைக்கான மதிப்பெண்களை குறைத்துவிடுகின்றன என்கிறார்கள் ஆய்வாளர்களான Jim Reid மற்றும் Galina Pozdnyakova.
</p><p>
அதாவது, படிப்பினை என்னவென்றால், விலைவாசி உயர்ந்த நகரங்கள் என்பதால் மட்டுமே, அவை வாழத் தகுந்த நகரங்களாகிவிடாது என்கிறார்கள் அவர்கள்.</p><p>

ஆக, விலைவாசி உயர்வால், ஆயிரக்கணக்கான மக்கள் லண்டனை விட்டு வெளியேறி வருகிறார்கள்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-30T06:05:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[20 ஆண்டுகள் கடந்தும் மூதூர் படுகொலைக்கு நீதி இல்லை : மனித உரிமைகள் கண்காணிப்பகம் அதிருப்தி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/no-justice-for-mudur-massacre-even-after-20-years-1785389452"></link>
            <id>https://tamilwin.com/article/no-justice-for-mudur-massacre-even-after-20-years-1785389452</id>
            <summary type="text">சர்வதேச தன்னார்வ தொண்டு நிறுவனப் பணியாளர்கள் 17 பேர் படுகொலை செய்யப்பட்ட
மூதூர் படுகொலை இடம்பெற்று 20 வருடங்கள் கடந்துள்ள போதிலும், அதற்குப்
பொறுப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>சர்வதேச தன்னார்வ தொண்டு நிறுவனப் பணியாளர்கள் 17 பேர் படுகொலை செய்யப்பட்ட
மூதூர் படுகொலை இடம்பெற்று 20 வருடங்கள் கடந்துள்ள போதிலும், அதற்குப்
பொறுப்புக்கூற வேண்டியவர்கள் இன்னமும் சட்டத்தின் முன் நிறுத்தப்படவில்லை
என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளது.
</p><p>
அத்தோடு, மூதூர் படுகொலை உள்ளிட்ட முக்கிய வழக்குகளை விசாரிப்பதற்காக ஒரு
சுயாதீன சட்டவாதியை நியமிப்பதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அரசு தனது
தேர்தல் விஞ்ஞாபனத்தில் அளித்த வாக்குறுதியை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்
என்றும் அந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
</p><p></p><h2>தப்பிச் செல்ல முயன்ற</h2><p>
இது குறித்து மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் சட்ட மற்றும் கொள்கைப் பிரிவு
இயக்குநர் ஜேம்ஸ் ரோஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும்
தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,&nbsp;</p><p>போரின் தீவிரத்துக்கு உள்ளாகியிருந்த திருகோணமலைக்கு அருகில் அமைந்துள்ள
மூதூர் நகரில், 2006ஆம் ஆண்டு ஓகஸ்ட் 4ஆம் திகதி பாரிஸ் நகரைத் தளமாகக் கொண்டு
இயங்கிய 'அக்ஷன் எகெய்ன்ஸ்ட் ஹங்கர்' அமைப்பைச் சேர்ந்த 17 இலங்கைத் தன்னார்வ
உதவிப் பணியாளர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/79000486-30ef-46ba-8493-4bf860bf1f63/26-6a6ae8f505d6a.webp' /></p><p>அலுவலக வளாகத்துக்குள் 15 பணியாளர்களின் உடல்கள் தலையிலும் கழுத்திலும் மிக
அருகில் வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட காயங்களுடன் கண்டறியப்பட்டன.
</p><p>தப்பிச் செல்ல முயன்ற மேலும் இருவரின் உடல்கள் அருகில் நிறுத்தப்பட்டிருந்த
வாகனத்திலிருந்து மீட்கப்பட்டன.</p><p></p><h2>பாதிக்கப்பட்ட சகலருக்குமான நீதி</h2><p>இது தொடர்பாக அடுத்தடுத்து ஆட்சிப்பீடமேறிய அரசுகள் விசாரணைகளை முன்னெடுப்பதாக
உறுதியளித்த போதிலும், தன்முனைப்புடன் செயற்படாத முக்கிய 12 மனித உரிமை
வழக்குகளில் இதுவும் ஒன்றாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0fb710d8-ba92-49ae-ae26-824491e44eb1/26-6a6ae8f5bd310.webp' /></p><p> </p><p>கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினரும்,
காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளும் பல்லாண்டுகளாக நீதிக்காகக்
காத்திருக்கின்றனர்.
</p><p>
யுத்த கால வன்முறைகள் மற்றும் அதன் பின்னரான மீறல்களால் பாதிக்கப்பட்ட
சகலருக்குமான நீதி மற்றும் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துமாறு சர்வதேச
நாடுகள் இலங்கை மீது தொடர்ந்து அழுத்தம் பிரயோகிக்க வேண்டும் என்று அந்த
அறிக்கையில் மேலும் வலியுறுத்தப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-30T06:04:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடற்பகுதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர சிவப்பு எச்சரிக்கை! வழங்கப்பட்டுள்ள முக்கிய அறிவுறுத்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/red-weather-warning-1785390008"></link>
            <id>https://tamilwin.com/article/red-weather-warning-1785390008</id>
            <summary type="text">கடற்பகுதிகளுக்கு பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.வளிமண்டலவியல் த...</summary>
            <content type="html"><![CDATA[<p>கடற்பகுதிகளுக்கு பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p><p>வளிமண்டலவியல் திணைக்களத்தினால் இன்று (30) வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>&nbsp;</p><h2>மறு அறிவித்தல் வரை கடற்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் </h2><p>இந்த எச்சரிக்கை, ஹம்பாந்தோட்டை முதல் பொத்துவில் வரையிலும், காங்கேசன்துறை முதல் மன்னார் வழியாக கல்பிட்டிய வரையிலும் உள்ள கடல் பகுதிகளுக்கு பொருந்தும் என அறிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8d9f2696-4af8-4118-93fa-7a81d006caf3/26-6a6ae8ec99b05.webp' /></p><p>
இந்த கடல் பகுதிகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணிக்கு 60 - 70 கி.மீ. வரை அதிகரிக்கும், மேலும் கடல் அவ்வப்போது மிகவும் கொந்தளிப்பாக இருக்கும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><p>மன்னார் முதல் கொழும்பு வரையிலும், காலி மற்றும் ஹம்பாந்தோட்டை முதல் பொத்துவில் வரையிலான கடலோரப்பகுதிகளில் 2.0 - 2.5 மீட்டர் வரை கடல் அலைகள் எழ வாய்ப்புள்ளதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.</p><p>

எனவே, மறு அறிவித்தல் விடுக்கப்படும் வரை இந்த கடற்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என கடற்படை மற்றும் மீனவ சமூகத்தினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><p>அதன்படி, வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிடும் எதிர்கால அறிவிப்புகள் குறித்து மீன்பிடி மற்றும் கடற்படைத்தரப்பினர் விழிப்புடன் இருக்குமாறு திணைக்களம் கேட்டுக்கொள்கின்றது.</p><p></p><p></p><p>

</p>]]></content>
            <updated>2026-07-30T06:02:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[அய்யனார் துணை சீரியல் புகழ் அருண் கார்த்தியா இது... 7 வருடங்களுக்கு முன் எப்படி உள்ளார் பாருங்க]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/ayyanar-thunai-serial-actor-arun-karthi-old-photo-1785389416"></link>
            <id>https://cineulagam.com/article/ayyanar-thunai-serial-actor-arun-karthi-old-photo-1785389416</id>
            <summary type="text">அய்யனார் துணைவசதியாக வாழ்ந்த தனது மனைவியை பெரிய வீட்டில் வாழ வைக்க வேண்டும். அவரது அம்மா வீட்டில் இருந்தது போல் நிலாவை வாழ வைக்க வேண்டும் என்று ஆசையாக...</summary>
            <content type="html"><![CDATA[<h2>அய்யனார் துணை</h2><p>வசதியாக வாழ்ந்த தனது மனைவியை பெரிய வீட்டில் வாழ வைக்க வேண்டும். அவரது அம்மா வீட்டில் இருந்தது போல் நிலாவை வாழ வைக்க வேண்டும் என்று ஆசையாக பல பிளான்கள் போட்டார் சோழன்.</p><p>ஆனால் அவரின் ஆசையில் மண்ணை போட்டுவிட்டார் நிலா. எனக்கு எல்லோருடனும் இருப்பது தான் பிடிக்கும், தனி வீடு வேண்டாம், கொடுத்த அட்வான்ஸை திரும்பி வாங்கி வாருங்கள் என கடுமையாக சொல்லிவிட்டார்.</p><p>சோழன் நிலா சொன்னதை செய்ய வீட்டு ஓனரிடம் பணம் கேட்டால் தராமல் பெரிய பிரச்சனை செய்துவிட்டார். சோழன் எப்படியோ காலில் விழுந்து பணத்தை பெற்றுவிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/eade4e29-5915-4a45-9d05-aa35db6ec313/26-6a6ae3202cc68.webp' /></p><h2>போட்டோ</h2><p>இந்த தொடரில் பாண்டி என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் மனதை வென்றவர் தான் நடிகர் அருண் கார்த்திக். தொகுப்பாளராக கிடைக்கும் மேடைகள் ஏறி தனது திறமையை காட்டி வந்தவருக்கு இந்த அய்யனார் துணை சீரியல் பெரிய உச்சத்தை கொடுத்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ca5ab74b-86db-4d16-b03a-e06b7685a0ba/26-6a6ae31e86044.webp' /></p><p>அலட்டிக்கொள்ளாத நடிப்பின் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்துவிட்டார். தற்போது நடிகர் அருண் கார்த்தி கடந்த 7 வருடங்களுக்கு முன் எடுத்த போட்டோ சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.</p><p>அப்போது எப்படி உள்ளார் பாருங்க,</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e727ae12-75f4-464b-a062-0a3caaf67098/26-6a6ae31f61311.webp' /></p>]]></content>
            <updated>2026-07-30T06:00:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடகத்தில் புதன் பெயர்ச்சி: ஆகஸ்ட் 5 முதல் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/mercury-transit-in-cancer-who-get-huge-money-luck-1785324037"></link>
            <id>https://manithan.com/article/mercury-transit-in-cancer-who-get-huge-money-luck-1785324037</id>
            <summary type="text">ஜோதிட சாஸ்திரத்தில் புதன் கிரகம் அறிவுத்திறன், தகவல் தொடர்பு, சிந்தனை, கற்றல், வணிகம், தொழில்நுட்பம் மற்றும் முடிவெடுக்கும் திறன் ஆகியவற்றின் காரக கிர...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜோதிட சாஸ்திரத்தில் புதன் கிரகம் அறிவுத்திறன், தகவல் தொடர்பு, சிந்தனை, கற்றல், வணிகம், தொழில்நுட்பம் மற்றும் முடிவெடுக்கும் திறன் ஆகியவற்றின் காரக கிரகமாகக் கருதப்படுகிறது.</p><p> புதன் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி அடையும் ஒவ்வொரு முறையும், அதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் சிந்தனை முறை, பேசும் விதம், தகவல் பரிமாற்றம், வணிக முடிவுகள் மற்றும் தொழில் சார்ந்த செயல்பாடுகளில் பிரதிபலிக்கும் என்று ஜோதிடர்கள் நம்புகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a73cb707-7a69-4de9-b495-60021124ef34/26-6a69e9c845da5.webp' /></p><p> </p><p>அதனால் புதனின் ராசி மாற்றம் ஜோதிடத்தில் மிகவும் முக்கியமான கிரகப் பெயர்ச்சிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

அந்தவகையில், 2026-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 05-ஆம் தேதி புதன் மிதுன ராசியிலிருந்து கடக ராசிக்கு பெயர்ச்சி அடைகிறது. </p><p>குறித்த புதன் பெயர்ச்சியின் தாக்கம் 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் ஏதோ ஒரு வகையில் வெளிப்பட்டாலும், குறிப்பாக சில ராசிக்காரர்கள் அதிகப்படியான அதிர்ஷ்டம், முன்னேற்றம், வெற்றிகளை பெறுவார்கள் என கணிக்கப்பட்டுள்ளது. அப்படி புதன் ஆசியால் ராஜயோகத்தை அனுபவிக்கப்போகும் ராசிகள் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.</p><p></p><h2>மிதுனம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/537c552f-3ca1-44d4-bac5-095c612b9052/26-6a69e9c8eaef0.webp' /></p><p> புதன் இந்த ராசியின் அதிபதி என்பதால், இந்தப் பெயர்ச்சி மிதுன ராசிக்காரர்களுக்கு பல நன்மைகளைத் தரும். தடைபட்ட வேலைகள் குறைந்த முயற்ச்சியிலேயே வெற்றியை கொடுக்கும்.</p><p>பணியிடத்தில் அங்கீகாரம், பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. முயற்சிகளுக்கு நல்ல பலன் கிடைத்து, வருமானமும் லாபமும் அதிகரிக்கும்.கடனாகக் கொடுத்த பணம் திரும்ப கிடைக்கும்.</p><p>இந்த காலகட்டத்தில் இவர்களின் பேச்சுத் திறன் மேம்பட்டு, மற்றவர்களின் கவனத்தை ஈர்ப்பார்கள். திருமண வாழ்க்கையிலும் அன்பும் நெருக்கமும் அதிகரிக்கும்.</p><h2>
கன்னி</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/788e5f9c-0533-4289-8d96-778a374a8c39/26-6a69e9c9acb0b.webp' /></p><p>புதன் கன்னி ராசியின் அதிபதி என்பதால், இந்தக் காலம் மிகவும் சாதகமாக இருக்கும். பதவி உயர்வு, புதிய பொறுப்புகள் மற்றும் தொழிலில் முன்னேற்றம் கிடைக்கும்.</p><p> வணிகத்தில் புதிய ஒப்பந்தங்கள், தொழில்முறை தொடர்புகள் உருவாகும். வருமானம் உயரும். அலுவலகச் சூழல் சாதகமாக இருக்கும். எதிர்காலத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவீர்கள்.&nbsp;</p><p> தனிப்பட்ட வாழ்க்கையில்&nbsp; அமைதியும், மகிழ்ச்சியும் அதிகரிக்கும். திருமண வாழ்க்கையில் நீண்டகாலம் நிலவிய பிரச்சினைகள் முடிவுக்கு வரும். புதன் ஆசியால் சிந்தனையில் தெளிவு பிறக்கும்.</p><h2>துலாம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/75e517a2-6fdc-4313-9cab-ec3811b5150b/26-6a69e9ca5b687.webp' /></p><p></p><h2> </h2><p>ராசிக்காரர்களுக்கு தொழில் மற்றும் சமூக அந்தஸ்தில் முன்னேற்றத்தைத் தரும். நீண்ட நாள் முயற்சிகளுக்கு அங்கீகாரம் கிடைக்கும். </p><p>புதிய பொறுப்புகள் வளர்ச்சிக்கு வழிவகுக்கும். சமூக மரியாதை உயரும். பெற்றோர் மற்றும் மேலதிகாரிகளுடன் நல்ல உறவு உருவாகும். இனிமையான பேச்சால் உறவுகள் வலுவடையும். </p><p>வெளிநாட்டு தொடர்பான தொழில்களில் இருப்பவர்களுக்கு நல்ல பலன் கிடைக்கும். கூடுதல் வருமான வாய்ப்புகள் உருவாகும். மாணவர்களுக்கு போட்டித் தேர்வுகளுக்குத் தயாராக இது சிறந்த காலமாக இருக்கும். குறிப்பாக நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.</p><p><b>இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).&nbsp; &nbsp; &nbsp; &nbsp;&nbsp;</b></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-30T05:59:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[சர்வதேச கால்பந்திலிருந்து ஓய்வை அறிவித்த நெய்மர் - முறியடிக்கப்படாத சாதனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/footballer-neymar-announced-retirement-for-brazil-1785390673"></link>
            <id>https://news.lankasri.com/article/footballer-neymar-announced-retirement-for-brazil-1785390673</id>
            <summary type="text">பிரேசில் கால்பந்து வீரர் நெய்மர் தேசிய அணியிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.  

 ஓய்வை அறிவித்த நெய்மர்

2010 ஆம் ஆண்டு நியூ ஜெர்சியில் உள...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரேசில் கால்பந்து வீரர் நெய்மர் தேசிய அணியிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். </p><h3> 

 ஓய்வை அறிவித்த நெய்மர்</h3><p>

2010 ஆம் ஆண்டு நியூ ஜெர்சியில் உள்ள மெட்லைஃப் ஸ்டேடியத்தில் அமெரிக்காவுக்கு எதிரான நட்புறவுப் போட்டியில் சர்வதேச அளவில் அறிமுகமானவர் நெய்மர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/451ccad2-c213-4bf0-bed2-45f7959cb394/26-6a6ae6533f1fb.webp' /></p><p>

பிரேசில் அணிக்காக 130 சர்வதேசப் போட்டிகளில் விளையாடி, 80 கோல்களை அடித்துள்ளார் மற்றும் 59 கோல்களுக்கு உதவியாக இருந்துள்ளார்.
</p><p>
இதன் மூலம், பிரேசில் கால்பந்து அணிக்காக அதிக கோல்களை அடித்த வீரர் என்ற சாதனையை தன்வசம் வைத்துள்ளார். </p><p>

2014 முதல் 2026 வரை தொடர்ச்சியாக 4 ஃபிஃபா உலகக் கிண்ணத்தில் பங்கேற்ற நெய்மர், 15 போட்டிகளில் 9 கோல்களை அடித்து, 4 தொடர்களிலும் கோல் அடித்த மிகச் சில வீரர்களில் ஒருவரானார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c35cad37-709b-4d84-a43f-0ae5773cad0f/26-6a6ae653edd96.webp' /></p><p>

2026 ஃபிஃபா உலகக் கிண்ணத்தில், 5 முறை சாம்பியனான பிரேசில் அணி,.காலிறுதிக்கு முந்தைய சுற்றான 'ரவுண்ட் ஆஃப் 16' ஆட்டத்தில் நார்வே அணியிடம் 2-1 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறியது.</p><p> 

அவர் சர்வதேச போட்டியில் அறிமுகமான அதே மெட்லைஃப் ஸ்டேடியத்தில் தனது கடைசி சர்வதேச போட்டியை விளையாடியுள்ளார்.</p><p>

கடந்த 2 ஆண்டுகளாக காயம் காரணமாக அடிக்கடி அவதிப்பட்டு வந்த நெய்மரால், இந்த தொடரின் முதல் சில போட்டிகளிலும் அவரால் முழுமையாக விளையாட முடியாமல் போனது. </p><p>

இந்நிலையில் தனது சர்வதேச போட்டிகளில் ஓய்வை அறிவித்துள்ள நெய்மர், "தேசிய அணியுடனான எனது காலம் ஏற்கனவே முடிந்துவிட்டது என்று நான் நினைக்கிறேன். நான் அங்கு வரலாறு படைத்தேன், அதற்காக நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். </p><p>நான் அங்கே நிறைய அனுபவங்களைப் பெற்றேன், என் இரத்தத்தையும் உயிரையும் கொடுத்தேன், மேலும் அந்த மஞ்சள் ஜெர்சிக்காக எப்போதும் போராடினேன். ஆனால், எனக்கு இனி அது வேண்டும் என்று தோன்றவில்லை" என தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5d5b8739-6125-4408-827d-2e9c173e92c2/26-6a6ae6549fc99.webp' /></p><p>

சர்வதேச போட்டிகளில் ஓய்வு பெற்றாலும், தனது Santos அணிக்காக விளையாட உள்ளார். </p><p>

நெய்மர் 2017 ஆம் ஆண்டில் பார்சிலோனாவிலிருந்து பாரிஸ் செயிண்ட் ஜெர்மெயினுக்கு 222 மில்லியன் யூரோக்கு(இந்திய மதிப்பில் ரூ.2,432 கோடி) பரிமாற்றம் செய்யப்பட்டதே, தற்போது வரை சாதனை பரிமாற்றமாக உள்ளது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-30T05:53:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மத்திய கிழக்கில் அதிகரிக்கும் போர் பதற்றம் ; அமெரிக்கா - சவுதி கூட்டு தாக்குதலில் ஈராக்கில் 20 போராளிகள் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/20-militants-killed-joint-us-saudi-strike-in-iraq-1785390449"></link>
            <id>https://canadamirror.com/article/20-militants-killed-joint-us-saudi-strike-in-iraq-1785390449</id>
            <summary type="text">&amp;nbsp; ஈராக்கில் அமெரிக்கா மற்றும் சவுதி இணைந்து ஏழு மாகாணங்களில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் குறைந்தது 20 போராளிகள் கொல்லப்பட்டதுடன் 32 பேர் காயமடைந்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; ஈராக்கில் அமெரிக்கா மற்றும் சவுதி இணைந்து ஏழு மாகாணங்களில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் குறைந்தது 20 போராளிகள் கொல்லப்பட்டதுடன் 32 பேர் காயமடைந்ததாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
</p><p>
 போராளிகாள் ஈராக்கின் மக்கள் திரட்டல் படைகள் (Iraq’s Popular Mobilisation Forces) கண்டனம் தெரிவித்துள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3b23ddfa-09b9-441f-a311-d939ea0d622b/26-6a6ae572b90b0.webp' /></p><h2>கொல்லப்பட்டவர்களுக்குப் பழிவாங்கப்படும்</h2><p> </p><p>மேலும், படைகள் முழு எச்சரிக்கை நிலையில் உள்ளன என்றும் எச்சரித்துள்ளன.

மக்கள் திரட்டல் படைகளின் ஒரு ஆயுதக் குழுவான ஹரகாத் அல்-நுஜாபா, பாதுகாப்பான ஈராக் நகரங்கள் மீதான அமெரிக்க-சவுதி தாக்குதல்களைக் கண்டித்ததோடு, கொல்லப்பட்டவர்களுக்குப் பழிவாங்கப்படும் என்றும் கூறியுள்ளது.
</p><p>

அமெரிக்கப் படைகளின் தொடர்ச்சியான இருப்பு நாட்டின் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மைக்கு உடனடி அச்சுறுத்தலாக மாறியுள்ளது என்று கூறி, அவர்களை நாட்டிலிருந்து வெளியேற்ற வேண்டும் என அது கோரிக்கை விடுத்துள்ளது.
</p><p>
சவூதி அரேபியாவுடனான ஒத்துழைப்பை முடிவுக்குக் கொண்டுவரவும், மேம்பட்ட வான் பாதுகாப்பு அமைப்புகளை நிலைநிறுத்தவும் அழைப்பு விடுத்ததுடன், அமெரிக்க மற்றும் சவூதி நலன்களுக்கு எதிராகப் பதிலடித் தாக்குதல்கள் நடத்தப்படும் என்றும் அச்சுறுத்தியது.
</p><p>
நாடு முழுவதும் உள்ள தங்களது தளங்கள் மீது சவூதி-அமெரிக்கா இணைந்து நடத்திய தாக்குதல்களில், ஈராக்கின் மக்கள் திரட்டல் படையைச் சேர்ந்த குறைந்தது 20 பேர் கொல்லப்பட்டதாகவும், 32 பேர் காயமடைந்ததாகவும் அப்படை தெரிவித்துள்ளது.</p><p>

இந்த தாக்குதலை அடுத்து ஈராக் பிரதமர் அலி அல்-ஜைதியின் நாளைய சவூதி அரேபியா பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. </p><p>

பல்வேறு துறைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவதற்கும், பாதுகாப்பு ஒருங்கிணைப்பு மற்றும் பிராந்திய முன்னேற்றங்கள் குறித்து விவாதிப்பதற்கும் அல்-ஜைதி உத்தியோகபூர்வ பயணமாக சவூதி அரேபியாவுக்குச் செல்வார் என எதிர்பார்க்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-07-30T05:45:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[கோட்டாபயவின் முன்னாள் செயலாளர் நீதிமன்றில் முன்னிலை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sugeeshwara-bandara-produced-in-court-1785388738"></link>
            <id>https://ibctamil.com/article/sugeeshwara-bandara-produced-in-court-1785388738</id>
            <summary type="text">முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் முன்னாள் தனிப்பட்ட செயலாளரான சுகீஸ்வர பண்டார நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.

கொழும்பு கோட்டை ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் முன்னாள் தனிப்பட்ட செயலாளரான சுகீஸ்வர பண்டார நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.</p><p>

கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இன்று (30-07-2026) அவர் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.
</p><p>
அரச நிதியை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
</p><p>
இந்த நிலையிலேயே அவர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-30T05:38:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[A9 பிரதான வீதியில் கோர விபத்து - யாழ் திரும்பிய இரு இளைஞர்கள் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/horrific-accident-in-vavuniya-two-youth-dead-1785388701"></link>
            <id>https://ibctamil.com/article/horrific-accident-in-vavuniya-two-youth-dead-1785388701</id>
            <summary type="text">வவுனியாவில் இடம்பெற்ற கோர விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளதாக கனகராயன்குளம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த விபத்து இன்று (30.07.2026...</summary>
            <content type="html"><![CDATA[<p>வவுனியாவில் இடம்பெற்ற கோர விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளதாக கனகராயன்குளம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
</p><p>
குறித்த விபத்து இன்று (30.07.2026) வவுனியா - கனகராயன்குளம் பகுதியில் ஏ-9 பிரதான வீதியில் இடம்பெற்றுள்ளது.</p><p>இந்த கோர விபத்தில் 25 வயதுடைய இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.</p><p></p><h2>மேலதிக விசாரணை</h2><p>


தம்புள்ளையிலிருந்து பருத்தித்துறைக்கு மரக்கறிகளை ஏற்றிச் சென்ற சிறிய ரக பாரவூர்தி ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி அருகிலிருந்த மரத்தில் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0a63ea01-d832-4b9d-a078-4267a89fff2c/26-6a6ae126951b1.webp' /></p><p>



விபத்தில் வாகனத்தில் பயணித்த 25 வயதுடைய இரு இளைஞர்களும் படுகாயமடைந்த நிலையில் மாங்குளம் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர்.
</p><p>


எனினும், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டபோதிலும், அவர்கள் இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
</p><p>


குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கனகராயன்குளம் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-30T05:37:53+00:00</updated>
        </entry>
    </feed>
