<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-09-05T11:54:11+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Fathima</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாவல் பழத்தில் பாம்பின் விஷமா? சிறுவனின் உயிரை பறித்தது எது? மருத்துவர் பரூக் அப்துல்லா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/doctor-explains-snake-poison-in-jamun-fruit-1788609053"></link>
            <id>https://manithan.com/article/doctor-explains-snake-poison-in-jamun-fruit-1788609053</id>
            <summary type="text">மருத்துவரின் பதிவு இதோ,இலங்கையில் 
மட்டக்களப்பு ஊரில், பாம்பின் விஷம் பட்டதாக சந்தேகிக்கப்படும் நாவல் பழத்தை சாப்பிட்ட 11 வயது சிறுவன் உயிரிழந்துள்ளத...</summary>
            <content type="html"><![CDATA[<p>மருத்துவரின் பதிவு இதோ,</p><p>இலங்கையில் 
மட்டக்களப்பு ஊரில், பாம்பின் விஷம் பட்டதாக சந்தேகிக்கப்படும் நாவல் பழத்தை சாப்பிட்ட 11 வயது சிறுவன் உயிரிழந்துள்ளதாக செய்தி வருகிறது.
</p><p>நேற்று மாலை வீட்டிற்கு அருகிலுள்ள நாவல் மரத்தில் இருந்து நிலத்தில் விழுந்த பழத்தை எடுத்து சாப்பிட்ட சிறுவன், சிறிது நேரத்தில் மயங்கி விழுந்துள்ளார்.
</p><p>உடனடியாக களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோதும், அவர் ஏற்கனவே உயிரிழந்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>பாம்பின் விஷம் பட்டதாக சந்தேகிக்கப்படும் நாவல் பழத்தை உட்கொண்டதே உயிரிழப்புக்கான காரணமாக இருக்கலாம் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
</p><p>சிறுவனின் சடலம் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்புவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் வெல்லாவெளி போலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
</p><p>அன்னாரை இழந்து வாடும் அவர்தம் பெற்றோர் உற்றார் உறவினருக்கு ஆழ்ந்த இரங்கல் உரித்தாகுக.</p><p><iframe src="https://www.facebook.com/plugins/post.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2Ffarookabdulla1988%2Fposts%2Fpfbid02bRY2BRwNoxTuiafTxXPNuixgXnjvfHHma26ktPckWvhDYZkHuJareVDBHwBfxw36l&show_text=true&width=500" width="500" height="673" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share"></iframe><br></p><p> 
உண்மையில் 
பாம்பு பழங்களில் விஷத்தை ஏற்றுமா? 
அப்படியே பாம்பின் விஷம் பழங்களில் இருந்தாலும் அவற்றை உண்பதால் மனிதர்களுக்கு மரணம் ஏற்படுமா? இரண்டுக்கும் இல்லை என்பதே பதில்.</p><p>
பாம்புகள் தாவரப்பட்சினிகளோ பழமுண்ணிகளோ அன்று. 
அவை மாமிசத்தை மட்டுமே உண்டு பிழைக்கும் மாமிசப்பட்சினிகள். </p><p>
தவளைகள், கொரித்து உண்பவை, பறவைகள், மீன்கள், பூச்சிகள் இவற்றை மட்டுமே உண்ணும் வகையில் அவற்றின் ஜீரண மண்டலம் வடிவமைக்கப்பட்டுள்ளது. </p><p>
எனவே, நாவல் பழத்தை அவை உண்ணாது. 
முதல் தர்க்கமே பிழையானது. 
சரி ஒருவேளை தெரியாமல் அறியாமல் 
தனது விஷத்தை பழத்தில் அது இறக்கி வைத்திருந்தாலும் 
அந்த விஷம் என்பது புரதமும் பல்வேறு வகை நொதிகளும் அடங்கிய கலவையாகும்.</p><p> 
அந்த விஷத்தை 
தனது விஷப் பற்கள் மூலம் ஊசி போட்டு எதிரி விலங்கிற்குள் ஏற்றி ரத்தத்தில் கலக்கச் செய்தால் மட்டுமே விஷத்தன்மை இருக்கும். </p><p>
மற்றபடி பாம்பின் விஷத்தை மனிதர்கள் பருகினாலும் மனிதர்களுக்கு விஷம் ஏறாது. 
காரணம், நமது இரைப்பையில் இருக்கும் 
வீரியமான ஹைட்ரோ குளோரிக் அமிலம் 
பாம்பின் நஞ்சை முழுவதுமாக செரித்து விடும். </p><p>
ஒருவேளை வாய் பகுதியில் ஈறுகளில் காயம் இருந்து அதன் வழியாக உள்ளே சென்று ரத்தத்தில் கலந்தால் மட்டுமே பாதிப்பை ஏற்படுத்த முடியும். </p><p>
மற்றபடி பாம்பின் விஷம் ஏறிய பழம் அதை சாப்பிட்டதால் சிறுவன் மரணம் என்பது அறிவியல் ரீதியாகவும் தர்க்க ரீதியாகவும் 
பிழையானது 
பிரேதப் பரிசோதனை முடிவுகள் மட்டுமே உண்மையை வெளிக் கூறும் எனினும் 
சிறுவனின் இறப்பிற்கு பின்வரும் விஷயங்கள் காரணமாக இருக்கலாம்.
</p><p>நாவல் மரத்தில் பழங்களைப் பறிக்கும் போது நிஜமாகவே அங்கு நரம்பு மண்டலத்தைத் தாக்கி சில நிமிடங்களில் மரணத்தைக் கொண்டு வரும் நாகப்பாம்பு உள்ளிட்ட பாம்பு கடித்திருக்கலாம். 
பல நேரங்களில் பாம்பு கடித்த பற்கள் வெளியே தெரியாமலும் இருக்கலாம். </p><p>
பாம்பு கடித்ததை முள் தைத்ததாக சிறுவன் தவறாக எண்ணி நேரத்தை வீணடித்திருக்கலாம். அல்லது 
காலதாமதம் ஆனதால் சுவாசத்திற்கு தேவையான தசைகள் செயலிழந்து மரணித்திருக்கலாம். </p><p>
இரண்டாவது வாய்ப்பு 
அந்த மரத்தில் இருந்த குழவி அல்லது கட்டெறும்பு ஆகியவை கடித்து அதனால் அதி தீவிர ஒவ்வாமை (ANAPHYLAXIS) ஏற்பட்டு அதனால் மூச்சுக் குழாய் சுருங்கி மரணம் சம்பவித்திருக்கலாம். </p><p>
மூன்றாவது வாய்ப்பு 
மரத்தில் இருந்து கீழே விழுந்து அதனால் பின் மண்டையில் / கழுத்து தண்டு வட எலும்பு அடிபட்டு மூர்ச்சையாகி மரணம் சம்பவித்திருக்கலாம். பிரேதப் பரிசோதனை யில் மட்டுமே இவை தெரிய வரலாம். </p><p>
நான்காவது வாய்ப்பு 
அந்த சிறுவனுக்கு ஏற்கனவே இருந்த இதயம் சார்ந்த பாதிப்புகள் தீவிரமடைந்து அதனாலும் மரணம் சம்பவித்திருக்க சிறிய வாய்ப்புண்டு.</p><p> 
பாம்புகள் பழங்களையோ 
காய்கறிகளையோ தீண்டாது. 
அது அவற்றின் உணவன்று 
இது நம்மிடையே உள்ள மூடநம்பிக்கையாகும். </p><p>இன்னும் ஒரு மூடநம்பிக்கை உண்டு
வெள்ளரிக்காய், புடலங்காய் உள்ளிட்டவை 
திடீரென ரொம்ப கசக்கும். 
உடனே நம் பெற்றோர் " பாம்பு வாய் வைத்திருக்கும். சாப்பிடாத" என்பார்கள். </p><p>
உண்மையில் அவற்றில் பாம்பு வாய் வைப்பதில்லை. 
மாறாக வெள்ளரிக்காய், புடலங்காய் உள்ளிட்டவை குக்குர்பிட்டேசியே (Cucurbitaceae) குடும்பத்தைச் சேர்ந்த காய்கறிகள் ஆகும். </p><p>
வேறு விலங்குகள் சாப்பிடக் கூடாது 
தாங்கள் இனப்பெருக்கம் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த இனம் 
குக்குர்பிட்டேசின் எனும் நச்சுப் பொருளை 
சுரக்கும். </p><p>
இந்த குக்குர்பிட்டேசினை அதி வெயில், நீர் தேவையான அளவு போதாமை, மண் வளம் குன்றும் போது சற்று அளவுக்கு அதிகமாக உருவாக்கும். </p><p>
அதனால் அந்த காய்கறிகளில் அதிக கசப்புத் தன்மை இருக்கும். 
இந்த காய்கறிகளை சாப்பிட்டால் 
வயிற்றுப் போக்கு வாந்தி உள்ளிட்ட உணவு ஒவ்வாமை நிகழ்வுகள் ஏற்படும். </p><p>
இதற்கும் பாம்புகளுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. 
பாம்புகள் எப்போது தனது நஞ்சை உபயோகிக்கும்? </p><p>
பிற விலங்குகளால் பாதிப்பு ஏற்பட்டு 
தங்களை பாதுகாக்கவும் 
தங்களின் இரைகளை மூர்ச்சையாக்கவும் மட்டுமே நஞ்சை உபயோகிக்கும் 
மற்றபடி பழங்கள், காய்கறிகள் என்று தங்கள் உணவில்லாதவற்றில் நஞ்சை வீணாக்காது. </p><p>
பழங்கள் / காய்கறிகளில் பாம்பு வாய் வைக்கும், நஞ்சு கக்கும் என்பதில் அறிவியல் இல்லை.&nbsp;</p><p>நன்றி&nbsp;</p><p>பரூக் அப்துல்லா<br>பொது நல மருத்துவர்<br>சிவகங்கை</p>]]></content>
            <updated>2026-09-05T11:53:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[சீனாவில் நிலச்சரிவு: ஒருவர் பலி- பலர் மாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/landslide-in-china-11-missing-1788608121"></link>
            <id>https://tamilwin.com/article/landslide-in-china-11-missing-1788608121</id>
            <summary type="text">சீனாவின்- ஜியாங்சி மாகாணத்தில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட பயங்கர
நிலச்சரிவில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 11 பேர் காணாமல் போயுள்ளதாக அதிகாரிகள...</summary>
            <content type="html"><![CDATA[<p>சீனாவின்- ஜியாங்சி மாகாணத்தில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட பயங்கர
நிலச்சரிவில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 11 பேர் காணாமல் போயுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
</p><p>
சௌடெல் சூறாவளி காரணமாகப் பெய்த கடும் மழை வீழ்ச்சியினைத் தொடர்ந்து, ஜியாங்சி
மாகாணத்தின் சுய்ச்சுவான் கவுண்டிக்கு உட்பட்ட கோபிங் நகரத்தில் இன்று(5.9.2026) அதிகாலை 4.00 மணியளவில் இந்த நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.</p><h2>மீட்புப் பணிகள்</h2><p>

இந்த இயற்கை அசம்பாவிதத்தினால் அப்பகுதியிலுள்ள 12 வீடுகள் கடுமையான
சேதத்திற்குள்ளாகியுள்ளதுடன், நிலச்சரிவுப் பாறைகள் மற்றும் மண்ணுக்குள்
10-க்கும் மேற்பட்டோர் சிக்கியிருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/edd30cd0-68a7-4280-b402-f8f375bf0478/26-6a9c0273defb8.webp' /></p><p>
சம்பவ இடத்திற்கு மீட்புக் குழுவினர் விரைந்துள்ளதுடன், காணாமல் போனவர்களைக்
கண்டுபிடிப்பதற்கான தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் தீவிரமாக
முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-05T11:52:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆசியாவில் தனியான தடயவியல் ஆய்வகம் இல்லாத நாடாக இலங்கை! சிறைச்சாலைகளில் உள்ள சிக்கல்நிலை - அஜித் பி பெரேரா தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ajith-p-perera-statement-about-namal-1788608102"></link>
            <id>https://tamilwin.com/article/ajith-p-perera-statement-about-namal-1788608102</id>
            <summary type="text">இந்த அரசாங்கம் கொண்டுவந்துள்ள 22ஆவது அரசமைப்புத் திருத்தத்தின் மூலமாகவோ அல்லது
புதிய சட்டமூலங்கள் மூலமாகவோ நீதிமன்ற வழக்கு விசாரணைகள் எவையும்
விரைவு...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்த அரசாங்கம் கொண்டுவந்துள்ள 22ஆவது அரசமைப்புத் திருத்தத்தின் மூலமாகவோ அல்லது
புதிய சட்டமூலங்கள் மூலமாகவோ நீதிமன்ற வழக்கு விசாரணைகள் எவையும்
விரைவுபடுத்தப்பட மாட்டாது எனவும், ஊழல்வாதிகளைப் பாதுகாப்பதே அரசாங்கத்தின் உண்மையான
நோக்கம் எனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி
பெரேரா தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p>
இது தொடர்பில் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.</p><h2>வழக்கு விசாரணைகள்</h2><p>அவர் மேலும் கூறுகையில், அரசாங்கம் நீதித்துறையில் பெரும் சீர்திருத்தங்களைச் செய்திருப்பதாகக் கூறுவது
முற்றிலும் பொய்யானது. குற்றவியல் நடைமுறைச் சட்டத்திலோ அல்லது நீதிமன்ற
அமைப்புக் சட்டத்திலோ வழக்கு விசாரணைகளை விரைவுபடுத்தக்கூடிய எந்தவொரு
திருத்தமும் செய்யப்படவில்லை.</p><p> நீதியரசர்கள் மற்றும் நீதிபதிகளின் ஓய்வுபெறும்
வயதை உயர்த்தியதால் வழக்குகள் விரைவாக முடியப் போவதில்லை.

உயர்நீதிமன்றத்தில் பதவி வெற்றிடங்கள் இருந்தபோதிலும், அனுபவமிக்க
மேன்முறையீட்டு நீதிமன்றச் சிரேஷ்ட நீதியரசர்களுக்கு உயர்நீதிமன்ற நியமனங்கள்
வழங்கப்படாமல் அவர்கள் ஓய்வுபெற அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p><p>

பாதுகாப்புத் துறையின் திறனை மேம்படுத்துவதற்கோ குற்றத் தடுப்புக்கோ அரசாங்கம் எவ்வித காத்திரமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆசியாவிலேயே பாதுகாப்புத்
தரப்பிடம் தனியான தடயவியல் ஆய்வகம் இல்லாத நாடுகளாக இலங்கையும்
ஆப்கானிஸ்தானும் மட்டுமே உள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/491e0624-e714-404b-afee-ac98ab5f5397/26-6a9c013bd2d4a.webp' /></p><h2>சிறைச்சாலைகளில் முறையான மறுவாழ்வு நடவடிக்கைகள்</h2><p> பாதுகாப்புத் துறையிலுள்ள ஆயிரக்கணக்கான பதவி
வெற்றிடங்களை நிரப்பவும், அதிகாரிகளின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை
உயர்த்தவும் அரசாங்கம் தவறிவிட்டதுடன், சிறைச்சாலைகளில் முறையான மறுவாழ்வு
நடவடிக்கைகள் இல்லாததால் தண்டனை முடிந்து வருபவர்கள் மீண்டும் குற்றச்
செயல்களில் ஈடுபடும் சூழலே நிலவுகின்றது.
</p><p>
எளியவர்களாகக் காட்டிக்கொண்டு ஆட்சிக்கு வந்த அரச பிரதானிகளின் மாளிகைகள்
மற்றும் பெரும் சொத்து விவரங்கள் வெளியானதைத் தொடர்ந்து, பொதுமக்கள் மற்றும்
ஊடகங்கள் அந்தத் தகவல்களைப் பெறுவதைக் கட்டுப்படுத்தவே புதிய ஊழல் ஒழிப்புச்
சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.</p><p>

வாக்குறுதியளித்தபடி அந்தச் சட்ட மூலத்தில் எவ்வித மாற்றங்களும் செய்யப்படாமல்
அப்படியே நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ஊழலைத் தடுப்பதற்குப்
பதிலாக ஊழல்வாதிகளைப் பாதுகாக்கும் இந்தச் சட்டமூலத்தை ஐக்கிய மக்கள் சக்தி
முழுமையாக எதிர்க்கின்றது என்றார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-05T11:47:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[கருப்பு முகமூடியுடன் போராட்டத்தில் குதித்த மர்ம கும்பல்: டோவர் துறைமுகத்தில் பரபரப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/masked-men-stop-access-to-dover-port-1788608735"></link>
            <id>https://news.lankasri.com/article/masked-men-stop-access-to-dover-port-1788608735</id>
            <summary type="text">பிரித்தானியாவின் டோவர் துறைமுகத்தில் முகமூடி அணிந்தவர்களின் போராட்டம் காரணமாக போக்குவரத்து கடுமையாக பாதிப்படைந்துள்ளது. முகமூடி அணிந்தவர்களின் திடீர் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரித்தானியாவின் டோவர் துறைமுகத்தில் முகமூடி அணிந்தவர்களின் போராட்டம் காரணமாக போக்குவரத்து கடுமையாக பாதிப்படைந்துள்ளது.</p><h2> முகமூடி அணிந்தவர்களின் திடீர் போராட்டம்</h2><p>டோவர் துறைமுகப் பகுதியில் முகமூடி அணிந்த மர்ம கும்பல் ஒன்று திடீரென சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.</p><p>முகமூடி அணிந்த நபர்கள் திடீரென சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பயணிகள், சரக்கு வண்டி ஓட்டுநர்கள் அச்சத்தில் உறைந்த தோடு கடும் அவதிக்கும் உள்ளாகினர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/93d56da2-7971-4d0e-9cd2-00f46f713c35/26-6a9c00e0dabce.webp' /></p><p> இவர்களின் இந்த போராட்டத்தால் துறைமுகத்திற்கு செல்லும் முக்கிய சாலைகளான A2 மற்றும் A20 ஆகிய பகுதிகள் தீவிர போக்குவரத்து நெரிசலுக்கு உள்ளானது.</p><p>P&amp;O Ferries நிறுவனம் பயணிகள் துறைமுகத்திற்கு வருவதில் கட்டுப்பாடுகள் இருப்பதாக எச்சரித்து இருந்ததுடன், விடுமுறை சென்றவர்களும் லாரி ஓட்டுநர்களும் இதில் சிக்கி தவித்தனர்.</p><p></p><h2> வாகன ஓட்டிகளின் எதிர்வினை</h2><p>இந்த திடீர் ஆர்ப்பாட்டம் உள்ளூர் தலைவர்களிடையே கடும் கண்டனத்தை பெற்றுள்ளது.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">📢<a href="https://x.com/hashtag/PODOVER?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#PODOVER</a> UPDATE:<br><br>Access to the Port of Dover has been partially restored and traffic is currently able to access the port via the M2/A2. <br><br>access remains restricted from the M20/A20 ⛔️. <br><br>Our services are operating with some delay, but we will get you onto the next available…</p>&mdash; P&amp;O Ferries Travel Updates (@POferriesupdate) <a href="https://x.com/POferriesupdate/status/2096168788274135402?ref_src=twsrc%5Etfw">September 5, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>போக்குவரத்து நெரிசலில் சிக்கிய ஒருவர் தெரிவித்த கருத்தில், கருப்பு நிற உடையில் வந்தவர்கள் காரை சூழ்ந்து கொண்டதால், என்னுடைய உயிருக்கு ஆபத்து நேரிடுமோ என்று பயந்து விட்டதாக தன்னுடைய வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.</p><p> இதற்கிடையில் சம்பவ இடத்திற்கு விரைந்த கென்ட் காவல்துறையினர் இடத்தை இயல்பு நிலைக்கு கொண்டு வர தீவிரமாக செயல்பட்டனர்.</p><p> மேலும் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தை நிலைமையை கட்டுப்படுத்தினர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-05T11:45:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[விரைவில் நாமலுக்குப் பிணை..! மகனை சிறையில் சந்தித்த பின் மகிந்த வெளியிட்ட தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-rajapaksa-arrested-mahinda-visited-in-prison-1788604228"></link>
            <id>https://tamilwin.com/article/namal-rajapaksa-arrested-mahinda-visited-in-prison-1788604228</id>
            <summary type="text">புதிய இணைப்பு&amp;nbsp;சிறையில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌சவை நேரில் சென்று சந்தித்த பின்னர், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ச ஊடகங்களுக்கு...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு&nbsp;</h2><p>சிறையில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌சவை நேரில் சென்று சந்தித்த பின்னர், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ச ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்துள்ளார்.
</p><p>மேலும், நாமலின் கைது ஒரு பழிவாங்கும் செயலாக இருக்கக்கூடும் அல்லது இல்லாமலும் போகலாம், இச்சூழ்நிலையைச் சட்டரீதியாக எதிர்கொள்ளவுள்ளோம்.</p><p>

எதிர்வரும் தினங்களில் நீதிமன்றத்தின் ஊடாக நாமல் ராஜபக்‌சவிற்குப் பிணை பெறுவதற்கு எதிர்பார்க்கின்றோம்.&nbsp;</p><p>
ஒரு அரசியல் தலைவராக இதுபோன்ற சவாலான சூழ்நிலைகளுக்கு நாமல் ராஜபக்‌ச இதற்கு முன்னரும் முகங்கொடுத்துள்ளார், இது தமக்கு ஒரு புதிய விடயம் அல்ல.</p><p>

இக்கைதினால் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கு எந்தவித பின்னடைவும் ஏற்படாது, இச்சம்பவம் கட்சி மேலும் வலுப்பெற்று முன்னோக்கி நகர்வதற்கான ஒரு சந்தர்ப்பமாகவே அமையும்” என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><h2>முதலாம் இணைப்பு&nbsp;</h2><p>சிறையில் அடைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌சவை, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நேரில் சென்று சந்தித்துள்ளார்.&nbsp;</p><p>நேற்றைய தினம், கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நாமல் ராஜபக்‌சவை சந்தித்து நலம் விசாரிப்பதற்காக, அவரது தந்தையான முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இன்று (05) வெலிக்கடை சிறைச்சாலைக்குச் சென்றுள்ளார்.</p><p>அதன்படி, வெலிக்கடை சிறைச்சாலை வளாகத்திற்கு வருகை தந்த அவர், சிறை அதிகாரிகளின் அனுமதியுடன் நாமல் ராஜபக்‌சவை நேரில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.</p><h2>கைது செய்யப்பட்ட நாமல்..&nbsp;</h2><p>நாமல் ராஜபக்ச,&nbsp;நேற்றைய தினம் எயார்பஸ் விமானக் கொள்வனவின் போது இலஞ்சம் பெற்றதாக கூறப்படும் குற்றச்சாட்டில், இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையான நிலையில், நீண்ட நேர விசாரணைக்கு பின்னர் கைது செய்யப்பட்டார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0a4a1415-bb2c-439c-ae1a-af4ee6ce6d9d/26-6a9bf343325a2.webp' /></p><p>இதனை தொடர்ந்து நீதிமன்றில் முன்னிலைபடுத்தப்பட்ட அவர், எதிர்வரும் 18ஆம் திகதி வரை கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.&nbsp;</p><p>சிறைச்சாலையின் சிறப்பு பாதுகாப்பு அறையில், 10 கைதிகளுடன் பலத்த பாதுகாப்பில் அவர் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/yUiT2q5TrrU" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-05T11:40:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீராட சென்ற இரு இளைஞர்கள் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/two-youths-lost-their-lives-while-bathing-nanu-oya-1788608496"></link>
            <id>https://jvpnews.com/article/two-youths-lost-their-lives-while-bathing-nanu-oya-1788608496</id>
            <summary type="text">நுவரெலியா - நானுஓயா, கிளாஸ்சோ நீர்வீழ்ச்சி அமைந்துள்ள பகுதியில் உள்ள ஆற்றில் நீராடச் சென்ற இருவர் இன்று (05) நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். 

உயிரி...</summary>
            <content type="html"><![CDATA[<p>நுவரெலியா - நானுஓயா, கிளாஸ்சோ நீர்வீழ்ச்சி அமைந்துள்ள பகுதியில் உள்ள ஆற்றில் நீராடச் சென்ற இருவர் இன்று (05) நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.</p><p> 

உயிரிழந்தவர்கள் நானுஓயா பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய பெருமாள் திவாகர் மற்றும் ஹப்புத்தளை பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய அன்பழகன் நிக்சன் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/07e33348-5cbb-463a-81f6-3191707e5bc4/26-6a9bfff2435fe.webp' /></p><p> 

நுவரெலியா கிரிகோரி வாவியிலிருந்து வெளியேறி, கொத்மலை ஆற்றில் சங்கமிக்கும் நானுஓயா கிளாஸ்சோ நீர்வீழ்ச்சிப் பகுதியில் உள்ள ஆற்றில் குளிக்கச் சென்றபோதே இவர்கள் இருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.</p><p> 

மீட்கப்பட்ட இருவரின் சடலங்களும் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்படவுள்ளன. 

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நானுஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-05T11:38:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[முதன்முறையாக அரசியலில் குதிக்கும் நாமலின் மனைவி : அனுராதபுர பேரணியில் களமிறக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/limini-to-replace-namal-at-anuradhapura-rally-1788607477"></link>
            <id>https://ibctamil.com/article/limini-to-replace-namal-at-anuradhapura-rally-1788607477</id>
            <summary type="text">பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்சவின் மனைவி லிமினி வீரசிங்க ராஜபக்ச,எதிர்வரும் 12ஆம் திகதி அனுராதபுரத்தில் சிறிலங்கா பொதுஜன பெரமு...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்சவின் மனைவி லிமினி வீரசிங்க ராஜபக்ச,எதிர்வரும் 12ஆம் திகதி அனுராதபுரத்தில் சிறிலங்கா பொதுஜன பெரமுன நடத்தும் மாபெரும் பேரணியின் மேடையில் கலந்துகொள்ள உள்ளார் என கட்சியின் உள்ளக வட்டாரங்கள் தெரிவிப்பதாக கொழும்பு ஊடகமொன்று தெகவல் வெளியிட்டுள்ளது.
</p><p>
நேற்று (04) இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட நாமல் ராஜபக்ச, 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சூழ்நிலையில், சிறிலங்கா பொதுஜன பெரமுன இந்த முடிவை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.</p><h2>மகிந்தவும் பங்கேற்பு</h2><p>கட்சித் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்சவும் அனுராதபுர பேரணியில் கலந்துகொள்ள உள்ளார். ஆனால், அவர் பிரதான மேடையில் நின்று மக்களிடையே உரையாற்றுவதற்குப் பதிலாக, மேடைக்கு முன்னால் மக்களிடையே நின்றோ அல்லது மற்றொரு மேடையிலோ பேரணியில் கலந்துகொள்ள முடிவு செய்துள்ளதாக வட்டாரங்கள் தெரிவித்தன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/99af565e-707e-445c-aea7-9f0e73ec09f0/26-6a9bfeab8aa87.webp' /></p><p>
</p><p>
கட்சியின் பிரதான மேடையில் லிமினி வீரசிங்க ராஜபக்ச முதன்முறையாக மக்களிடையே உரையாற்ற உள்ளார் எனத் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.</p><p></p><h2>லிமினியின் ஜாதகத்தை கணித்த புகழ்பெற்ற சோதிடர்</h2><p>
</p><p>
மேலும், கடந்த காலத்தில் லிமினியின் ஜாதகத்தை ஆய்வு செய்த ஒரு புகழ்பெற்ற ஜோதிடர், அவரது ஜாதகமானது உலகின் முதல் பெண் பிரதமரான சிறிம ரத்வத்த டயஸ் பண்டாரநாயக்க மற்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆகியோரின் ஜாதகங்களைப் போல வலிமையானது என்று கூறியதாக அரசியல் வட்டாரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/953c6e29-5c91-4cdd-94d8-b6b2a9b423ed/26-6a9bfeaabf7d9.webp' /></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-05T11:36:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாமலின் கைது புதிய விடயமல்ல: சிறையில் நாமலைச் சந்தித்த பின் மகிந்த கருத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/mahinda-rajapaksa-visited-namal-rajapaksa-prison-1788604093"></link>
            <id>https://ibctamil.com/article/mahinda-rajapaksa-visited-namal-rajapaksa-prison-1788604093</id>
            <summary type="text">புதிய இணைப்புசிறையில் அடைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷவை நேரில் சென்று சந்தித்த பின்னர், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ச ஊடகங்க...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>சிறையில் அடைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷவை நேரில் சென்று சந்தித்த பின்னர், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ச ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்துள்ளார்.
</p><p>இது தொடர்பாக கருத்து தெரிவித்த அவர், 'நாமலின் கைது ஒரு பழிவாங்கும் செயலாக இருக்கக்கூடும் அல்லது இல்லாமலும் போகலாம் இச் சூழ்நிலையைச் சட்டரீதியாக எதிர்கொள்ளவுள்ளோம்.</p><p>எதிர்வரும் தினங்களில் நீதிமன்றத்தின் ஊடாக நாமல் ராஜபக்‌சவிற்குப் பிணை பெறுவதற்கு எதிர்பாகின்றேன்.</p><p>
ஒரு அரசியல் தலைவராக இதுபோன்ற சவாலான சூழ்நிலைகளுக்கு நாமல் ராஜபக்‌ஷ இதற்கு முன்னரும் முகங்கொடுத்துள்ள்ளார்.</p><p>இது தமக்கு ஒரு புதிய விடயம் அல்ல, இக் கைதினால் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கு எந்தவித பின்னடைவும் ஏற்படாது இச் சம்பவம் கட்சி மேலும் வலுப்பெற்று முன்னோக்கி நகர்வதற்கான ஒரு சந்தர்ப்பமாகவே அமையும் என்று' மகிந்த ராஜபக்ச நம்பிக்கை வெளியிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b14ff446-b2f7-442d-8dd2-179d9f26f456/26-6a9bff411fb46.webp' /></p><h2>முதலாம் இணைப்பு</h2><p>சிறையில் அடைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌சவை, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நேரில் சென்று சந்தித்துள்ளார்.</p><p> </p><p>
நேற்றைய தினம், கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நாமல் ராஜபக்‌சவை சந்தித்து நலம் விசாரிப்பதற்காக, அவரது தந்தையான முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இன்று (05.09.2026) வெலிக்கடை சிறைச்சாலைக்குச் சென்றுள்ளார்.
</p><p>அதன்படி, வெலிக்கடை சிறைச்சாலை வளாகத்திற்கு வருகை தந்த முன்னாள் ஜனாதிபதி, சிறை அதிகாரிகளின் அனுமதியுடன் நாமல் ராஜபக்‌சவை நேரில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.</p><p></p><h2>மகனிடம் நலம் விசாரித்த&nbsp;மகிந்த ராஜபக்ச</h2><p>
</p><p>நாமல் ராஜபக்ச, நேற்றைய தினம் எயார்பஸ் விமானக் கொள்வனவின் போது இலஞ்சம் பெற்றதாக கூறப்படும் குற்றச்சாட்டில், இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையான நிலையில், நீண்ட நேர விசாரணைக்கு பின்னர் கைது செய்யப்பட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/92595b85-cd5c-4908-9016-399153410c29/26-6a9bf46c6126a.webp' /></p><p> </p><p>
இதனை தொடர்ந்து நீதிமன்றில் முன்னிலைபடுத்தப்பட்ட அவர், எதிர்வரும் 18ஆம் திகதி வரை கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.&nbsp;</p><p>மேலும் சிறைச்சாலையின் சிறப்பு பாதுகாப்பு அறையில், 10 கைதிகளுடன் பலத்த பாதுகாப்பில் அவர் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/yUiT2q5TrrU" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-05T11:35:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[பளபளப்பான சருமத்திற்கு அரிசியை பயன்படுத்தும் 3 சிறந்த வழிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/3-ways-to-use-rice-for-sking-glowing-1788598958"></link>
            <id>https://manithan.com/article/3-ways-to-use-rice-for-sking-glowing-1788598958</id>
            <summary type="text">பொதுவாக, எல்லோருமே சரும பராமரிப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். அதில் அரிசி மிக நீண்ட காலமாகவே சரும பராமரிப்பு ஒரு சிறந்த மற்றும் இயற்கை பொருளா...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொதுவாக, எல்லோருமே சரும பராமரிப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். அதில் அரிசி மிக நீண்ட காலமாகவே சரும பராமரிப்பு ஒரு சிறந்த மற்றும் இயற்கை பொருளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதிலும், குறிப்பாக கொரியன் பியூட்டி முறைகள் தற்பொழுது பிரபலம் அடைந்து வருகின்றது.</p><p> அதனால் சரும பராமரிப்பில் அரிசியின் பயன்பாடும் அதிகரித்துள்ளது. 
அதாவது அரிசியில் உள்ள ஆன்டிஆக்சிடென்ட், வைட்டமின் மற்றும் சருமத்தை அமைதிப்படுத்தும் சேர்மங்கள் நம்முடைய சருமத்தின் பொலிவை அதிகரிக்க உதவுகிறது.</p><p> மேலும், அரிசியை ஊற வைத்து அல்லது வேகவைத்து கிடைக்கும் அரிசி நீர், அரிசி மாவு மற்றும் புளிக்க வைக்கப்பட்ட அரிசி சாறு போன்ற பல்வேறு வடிவங்களில் நாம் சரும பராமரிப்புக்கு பயன்படுத்தலாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4ec06f7e-713e-4ea2-a98d-61a771ac0b67/26-6a9bdab02b8c6.webp' /></p><p></p><p>
</p><p>

அதை பயன்படுத்துகின்ற பொழுது சருமத்தில் ஏற்படும் எரிச்சலை குறைக்கவும் மந்தமான தோற்றத்தை போக்கவும் சருமத்திற்கு பாதுகாப்பை கொடுக்கிறது.

இந்த அரிசி ஒரு மென்மையான இயற்கை உரிப்பு பொருளாகவும் செயல்படுகிறது. </p><p>அதனால், நம்முடைய சருமத்தில் இருக்கக்கூடிய இறந்த செல்களை நீக்கி சருமத்தை மென்மையாகவும் பொலிவாகவும் வைக்க உதவுகிறது. 

இந்த அரிசியை எப்பேர்பட்ட சரும வகைகளுக்கு நாம் பயன்படுத்தலாம். அந்த வகையில், நாம் இந்த அரிசியை கொண்டு முகத்தை பொலிவு படுத்தக்கூடிய ஒரு 3 முறை பற்றி பார்ப்போம்.</p><h3>&nbsp; 1. அரிசி நீர்:</h3><p>அரிசி நீர் என்பது சரும பராமரிப்பில் அதிக நன்மைகளை வழங்க கூடிய இடம். இதில் உள்ள ஆக்ஸிஜனேற்றத் தடுப்புப் பொருட்கள், வைட்டமின்கள் மற்றும் அமினோ அமிலங்கள் சருமத்தின் பொலிவையும் தன்மையையும் படிப்படியாக மேம்படுத்துகிறது. </p><p>அரிசியை தண்ணீரில் ஊற வைத்தோ அல்லது வேகவைத்தால் கிடைக்கக்கூடிய நீரை வடிகட்டி எடுத்துக்கொண்டு அதனை இரண்டு முதல் மூன்று நாட்கள் புளிக்க வைக்கலாம். பிறகு புளிக்க வைக்கும் முறையில் சில இயற்கை சத்துக்கள் ஆக்ஸிஜனேற்றத் தடுப்புப் பொருட்களின் அளவு அதிகரிக்கக்கூடும்.</p><p>
பிறகு, தயாரான அரிசி நீரை ஒரு சுத்தமான பாட்டிலில் சேமித்து முகத்தில் தினமும் தெளித்து பயன்படுத்தலாம். இது நமக்கு புத்துணர்ச்சியையும் சருமத்தை ஈரப்பதத்துடனும் வைப்பதற்கு உதவுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bb200a12-8852-4863-998a-e03f81716fc4/26-6a9bdab0db201.webp' /></p><h3> 

 2. சரும பொலிவிற்கு :
</h3><p>அரிசியை நன்றாக அரைத்து அதனுடன் கடலை மாவு அல்லது தயிர் சேர்த்து ஒரு பேஸ்ட் போல் தயாரிக்கலாம். வீட்டிலேயே தயாரிக்க கூடிய இந்த பேஸ்ட் நமக்கு சருமத்தில் இருக்கக்கூடிய இறந்த செல்களை அகற்றுவதோடு சருமத்திற்கு நல்ல ஊட்டச்சத்து அளிக்கிறது. </p><p>அதோடு அதில் இருக்கக்கூடிய கடலை மாவு சருமத்தில் இருக்கும் அதிகப்படியான எண்ணெய் மற்றும் அழுக்குகளை நீக்குகிறது. </p><p>தயிர் நம்முடைய சருமத்திற்கு ஈரப்பதத்தை வழங்குகிறது. இந்த கலவையை நாம் முகத்தில் சீராக தடவி சிறிது நேரம் கழித்து தண்ணீரால் மெதுவாக கழுவலாம். பிறகு நம்முடைய முகம் பொலிவாக இருப்பதையும் புத்துணர்ச்சி இருப்பதையும் பார்க்க முடியும். </p><h3>

3. அரிசி நீர் ஐஸ் கட்டிகள்:</h3><p>
கோடை காலங்களில் அரிசி நீரில் தயாரிக்கப்படும் அந்த ஐஸ் கட்டிகள் முகத்திற்கு குளிர்ச்சியையும் புத்துணர்ச்சியையும் சருமத்தை பராமரிக்கவும் உதவுகிறது. இதற்கு முதலில் அரிசியை தண்ணீரில் ஊற வைத்து பிறகு அந்த நீரை வடிகட்டி நம்முடைய ஐஸ் கட்டி தயாரிக்க கூடிய அந்த தட்டில் ஊற்றி ஊற வைக்கலாம். </p><p>பிறகு உறைந்த அந்த ஐஸ்கட்டியை நேரடியாக முகத்தில் தேய்க்காமல் அதற்கு பதிலாக மென்மையான துணியில் சுற்றி உதட்டில் மெதுவாக பயன்படுத்துவது 

குளிர்ச்சியான தன்மை முகத்தில் ஏற்படக்கூடிய வீக்கத்தையும் சருமத்திற்கு தற்காலிகமான புத்துணர்ச்சிகளையும் கொடுக்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1b6f4cdb-b748-489b-8926-418f687fd757/26-6a9bdab19453c.webp' /></p><p></p><h3> 

முக்கியக் குறிப்பு:
</h3><p>இவையெல்லாம் இயற்கையான பொருட்கள் என்றாலும் அனைவரது சருமமும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. ஆதலால் எந்த ஒரு பொருளையும் பயன்படுத்துவதற்கு முன்னதாக சிறியதாக ஒரு பகுதியில் பயன்படுத்தி பரிசோதனை செய்த பிறகு முகத்தில் நீங்கள் முழுவதுமாக பயன்படுத்தலாம்.</p><p> மேலும், வீடுகளில் தயாரிக்கும் அரிசி நீர் போன்ற பொருட்களை நீண்ட நாட்கள் சேமித்து வைக்காமல் சுத்தமான முறையில் குறுகிய நாட்களுக்குள் பயன்படுத்துவது பாதுகாப்பை கொடுக்கும். வெறும் சரும பராமரிப்பு மட்டும் எப்பொழுதும் பாதுகாக்காது. </p><p>போதுமான தண்ணீர் சுத்தமான உணவு சூரிய ஒளியில் இருந்து சருமத்தை பாதுகாத்தல் ஆரோக்கிய உணவுகள் எடுத்துக் கொள்ளுதல் தேவை இல்லாமல் மன அழுத்தத்திற்கு ஆளாகுதல் இவையெல்லாம் முறையாக பின்பற்றும் பொழுது தான் நாம் நினைத்த சருமத்தை அடைய முடியும்.&nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-09-05T11:30:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[ட்ரம்பின் அதிரடி வெனிசுலா ஒப்பந்தம்... அதிர்ச்சியில் அமெரிக்க எண்ணெய் தொழில்துறை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/trump-venezuela-deal-us-oil-industry-1788601251"></link>
            <id>https://news.lankasri.com/article/trump-venezuela-deal-us-oil-industry-1788601251</id>
            <summary type="text">Venezuela deal leaves US oil industry blindsided: வெனிசுலாவுடனான ட்ரம்பின் ஒப்பந்தம் அமெரிக்க எண்ணெய் தொழில்துறையை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.  
வெ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Venezuela deal leaves US oil industry blindsided: வெனிசுலாவுடனான ட்ரம்பின் ஒப்பந்தம் அமெரிக்க எண்ணெய் தொழில்துறையை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. </p><p> 
வெனிசுலாவின் கச்சா எண்ணெய் வளத்தின் பெரும்பகுதி மீதான கட்டுப்பாட்டை நடைமுறையில் அமெரிக்காவிற்கு வழங்கும் அந்த விரிவான எண்ணெய் ஒப்பந்தம், இதுவரை மேற்கொள்ளப்பட்டவற்றிலேயே மிகச் சிறந்த ஒப்பந்தமாக இருக்கலாம் என்று ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பெருமிதத்துடன் கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/28b8ba56-0915-42c9-a22a-2fcf66efab7f/26-6a9be3a5cc24f.webp' /></p><p>
</p><p>சில அமெரிக்க எண்ணெய் நிறுவனங்களின் நிர்வாகிகள் இதை மறுக்கின்றனர். உண்மையில், இந்த ஏற்பாடு தொழில் துறைத் தலைவர்களிடையே ஒருவித பதற்றத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது; </p><p>ஏனெனில், இது நடைபெற்று வரும் வணிகப் பேச்சுவார்த்தைகளைத் தடம் புரளச் செய்வதோடு, வெனிசுலாவில் அதிக வாய்ப்புகள் கொண்ட சில முக்கியத் திட்டங்களிலிருந்து தங்களை விலக்கி வைப்பதாகவும் அவர்கள் கவலைப்படுகின்றனர். </p><p>மேலும், அமெரிக்க எண்ணெய் நிறுவனங்களுக்கு இது ஒரு பெரும் வாய்ப்பு என்று ட்ரம்ப் அறிவித்ததை அடுத்து, அந்த ஒப்பந்தத்தின் மீது ட்ரம்பிற்கு இருந்த வெளிப்படையான ஆர்வத்தைக் கருத்தில் கொண்டு, அதை பகிரங்கமாகக் விமர்சிப்பதில் உள்ள சிரமத்தையும் சிலர் ஒப்புக்கொண்டனர்.</p><p></p><p> இந்த நிலையில், வெனிசுலாவின் கடுமையாகச் சீரழிந்த எண்ணெய் தொழில்துறையை புத்துயிர் அளிப்பதில் எரிசக்தி நிறுவனங்களின் ஆர்வம், புதன்கிழமை அன்று கராகஸில் நடைபெற்ற ஒரு விழாவில் உச்சக்கட்டத்தை அடைந்தது. </p><p>இந்த விழாவில் அந்நாட்டின் தற்காலிக ஜனாதிபதி டெல்சி ரோட்ரிக்ஸ், அமெரிக்க எரிசக்தி செயலாளர் கிறிஸ் ரைட் மற்றும் செவ்ரான் கார்ப்., Eni SpA மற்றும் ஜிஇ வெர்னோவா இன்க். உள்ளிட்ட எரிசக்தி நிறுவனங்களின் தலைவர்கள் கலந்துகொண்டு முதலீட்டு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டனர். </p><p>ஆனால், பல மாதங்களாகத் தயாரிக்கப்பட்டு வந்த அந்த ஒப்பந்தங்கள், கடந்த வெள்ளிக்கிழமையன்று ட்ரம்ப் தனது சமூக ஊடகத் தளத்தில் அறிவித்த ஒப்பந்தத்தால் மங்கிப்போயின. </p><p>வெனிசுலாவில் 17 எண்ணெய் வயல்களை மேம்படுத்துவதற்கான 100 ஆண்டுகால உரிமையைப் பெற்றுள்ள, சர்ச்சைக்குரிய முதலீட்டாளர் அலெஜான்ட்ரோ பெட்டன்கோர்ட் தலைமையிலான 'நார்த் அமெரிக்கன் ப்ளூ எனர்ஜி பார்ட்னர்ஸ்' (North American Blue Energy Partners) என்ற தனியார் எண்ணெய் நிறுவனத்தில், அமெரிக்க அரசு 35 சதவீத பங்குகளைப் பெறுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8e1c1f93-c08f-49ad-a52f-2b7751bd42f3/26-6a9be3a682583.webp' /></p><p> </p><p>அமெரிக்க வெளிவிவகாரத் துறை மற்றும் பென்டகனால் முன்னெடுக்கப்பட்ட பெட்டன்கோர்ட் ஒப்பந்தம், வெனிசுலாவில் ஏற்கனவே வர்த்தகப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருந்தவர்கள் உட்பட பல எரிசக்தி நிறுவனங்களையும் தலைவர்களையும் திடுக்கிடச் செய்துள்ளது.</p><p> ட்ரம்பின் இந்த ஒப்பந்த முயற்சியை ஆதரிப்பவர்கள், இது உடனடியாக அதிக அளவிலான கச்சா எண்ணெய் விநியோகத்தை உறுதி செய்ய உதவும் என்று கூறுகின்றனர்; ஜனாதிபதியின் ஆதரவாளர்களைப் பொறுத்தவரை, எழும் சில அதிருப்திக் குரல்கள், மிகவும் தயக்கத்துடன் செயல்பட்டதால் தோல்வியடைந்தவர்களின் விமர்சனங்களாகவே கருதப்படுகிறது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-05T11:30:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அநுராதபுரத்தில் குளமொன்றில் இருந்து துப்பாக்கி மற்றும் ரவைகள் மீட்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/guns-bullets-recovered-from-pond-in-anuradhapura-1788607102"></link>
            <id>https://tamilwin.com/article/guns-bullets-recovered-from-pond-in-anuradhapura-1788607102</id>
            <summary type="text">அநுராதபுரம் அருகே குளமொன்றின் கரைப்பகுதியில் இருந்து துப்பாக்கியொன்றும் பெருமளவு ரவைகளும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.மிஹிந்தலை, மஹா ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அநுராதபுரம் அருகே குளமொன்றின் கரைப்பகுதியில் இருந்து துப்பாக்கியொன்றும் பெருமளவு ரவைகளும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>மிஹிந்தலை, மஹா கனதராவ குளத்தின் அருகில் இருந்தே குறித்த துப்பாக்கி மற்றும் ரவைகள் மீட்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.</p><h2>சந்தேகத்திற்கிடமான பொதி</h2><p>
</p><p>
அநுராதபுரம் - திருகோணமலை வீதியில் உள்ள மிஹிந்தலையில், மஹா கனதராவ குளத்திற்கு அருகே தற்போது நடைபெற்று வரும் புனரமைப்புப் பணிகளில் ஈடுபட்டிருந்த ஒருவர், கைவிடப்பட்டிருந்த நிலையில் காணப்பட்ட சந்தேகத்திற்கிடமான பொதியொன்றை அவதானித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/26e0e8e8-c272-43c4-ae68-3f05f70b2283/26-6a9bfc88b6a62.webp' /></p><p>
</p><p>
இது குறித்து மிஹிந்தலை பொலிஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, அங்கு வந்த பொலிஸார் அந்த சந்தேகத்திற்கிடமான பொதியைச் சோதனையிட்டுள்ளனர்.&nbsp;</p><h2>விசாரணை</h2><p>
அதன்போது குறித்த பொதியில் இருந்து ஒரு டி 56 ரக துப்பாக்கியும், 4 தோட்டாக்கூடுகள் மற்றும் 25 தோட்டாக்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
</p><p>
இந்த விவகாரம் குறித்து மிஹிந்தலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-05T11:27:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஐரோப்பாவின் சில பகுதிகளில் 40 டிகிரி செல்சியஸைத் தாண்டிய வெப்பம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/heat-exceeds-parts-of-europe-1788607635"></link>
            <id>https://news.lankasri.com/article/heat-exceeds-parts-of-europe-1788607635</id>
            <summary type="text">Heat exceeds 40C in parts of Europe: ஐரோப்பாவின் சில பகுதிகளில் வெப்பம் 40 டிகிரி செல்சியஸைத் தாண்டியுள்ளது.
மத்திய மற்றும் தெற்கு ஐரோப்பாவைப் பாதித்...</summary>
            <content type="html"><![CDATA[<p>Heat exceeds 40C in parts of Europe: ஐரோப்பாவின் சில பகுதிகளில் வெப்பம் 40 டிகிரி செல்சியஸைத் தாண்டியுள்ளது.
</p><p>மத்திய மற்றும் தெற்கு ஐரோப்பாவைப் பாதித்துள்ள வெப்பக் காற்று வடக்கு நோக்கிப் பரவுவதால், இந்த வார இறுதியில் பிரித்தானியாவில் கோடைக்காலத்தைப் போன்ற வானிலை நிலவும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4f9b2956-3a68-4f1c-9cad-ffe3bd38cddb/26-6a9bfc9542868.webp' /></p><p>
</p><p>இந்த வாரம் பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகள் மிகவும் வெப்பமான இடங்களாக இருந்துள்ளன, அங்கு சில நேரங்களில் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸைத் தாண்டியது. </p><p>அடுத்த சில நாட்களில் மத்திய மற்றும் கிழக்குப் பகுதிகளில் கடும் வெப்பம் மேலும் தீவிரமடையும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு நிகழும்போது, ​​அந்த வெப்பத்தின் ஒரு பகுதி சிறிது காலத்திற்கு பிரித்தானியா நோக்கி நகரும்; </p><p>இதனால் வார இறுதி நாட்களில் வெப்பநிலை உயரும், அதைத் தொடர்ந்து அடுத்த வாரம் குளிர்ந்த காற்று வீசக் கூடும். இந்த வாரத் தொடக்கத்தில், வட ஆப்பிரிக்காவிலிருந்து வெப்பமான மற்றும் தூசு கலந்த காற்று ஐபீரிய தீபகற்பத்தை நோக்கி நகர்ந்தது; அங்கு நிலவிய தெளிவான வானிலை மற்றும் வறண்ட நிலப்பரப்பின் தாக்கம் ஆகியவற்றால் அது மேலும் தீவிரமடைந்தது.</p><p></p><p> </p><p>தென்மேற்கு ஸ்பெயினில் உள்ள எல் கிரனாடோவில் வியாழக்கிழமையன்று வெப்பநிலை 45.7 டிகிரி செல்சியஸை எட்டியது; இது அந்த நாட்டில் இந்த ஆண்டில் பதிவான மிக அதிகபட்ச வெப்பநிலையாகும். </p><p>ஆண்டின் அதிகபட்ச வெப்பநிலை ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களைத் தவிர மற்ற காலங்களில் ஏற்படுவது மிகவும் அரிதானது என்றே கூறப்படுகிறது.</p><p> ஸ்பெயின், தெற்கு பிரான்ஸ், போஸ்னியா மற்றும் ஹெர்சகோவினா, அத்துடன் செர்பியா ஆகிய நாடுகளில் சனிக்கிழமை வரை ஆரஞ்சு நிற கடும் வெப்ப எச்சரிக்கைகள் அமுலில் உள்ளன.
</p><p>ஸ்பெயினின் வெப்பம் மிகுந்த பகுதிகளில், இந்த வார இறுதியிலும் அடுத்த வாரத் தொடக்கத்திலும் வெப்பநிலை தொடர்ந்து 40 டிகிரி செல்சியஸைத் தாண்டும்; வழக்கமாக ஆண்டின் இக்காலத்தில் 20 டிகிரி செல்சியஸை ஒட்டிய வெப்பநிலையே நிலவும் வடக்கே உள்ள எப்ரோ (Ebro) பள்ளத்தாக்குப் பகுதியிலும் கூட இத்தகைய அதிக வெப்பநிலை காணப்படும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/761db899-20ca-4f1b-b7f7-eca9068f56af/26-6a9bfc95ec60e.webp' /></p><p> </p><p>ஆர்டெஷ் (Ardeche) பகுதி உட்பட தெற்கு பிரான்ஸின் சில பகுதிகளில், அடுத்த சில நாட்களுக்கு வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸின் மேல் உயர் மட்டத்தில் இருக்கும்; சில இடங்களில் அது 40 டிகிரி செல்சியஸை எட்டவும் வாய்ப்புள்ளது. </p><p>மேலும் கிழக்கே, கிரீஸ் மற்றும் துருக்கியில் இந்த வாரம் காற்றின் வெப்பநிலை சற்று குறைந்துள்ளது; இருப்பினும், அடுத்த வாரத் தொடக்கத்தில் சில நாட்களுக்கு வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸுக்கு மேல் (30-களின் உயர் நிலையில்) இருக்கக்கூடும். </p><p>இந்த வார இறுதியில் காற்று தெற்கு திசையை நோக்கி வீசத் தொடங்குவதால், இங்கிலாந்திற்குள் (UK) வெப்பமான காற்று நுழையும். இருப்பினும், தெற்குப் பகுதிகளில் நிலவும் தீவிரமான வெப்பம் போன்ற நிலை இங்கு இருக்காது. </p><p>வார இறுதியில் ஞாயிற்றுக்கிழமை மிகவும் வெப்பமான நாளாக இருக்கும்; இருப்பினும், குறிப்பாக வடமேற்குப் பகுதிகளில் சிறிதளவு மழை பெய்யக்கூடும்.</p><p> இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் முழுவதும் வெப்பநிலை பொதுவாக 20 டிகிரி செல்சியஸின் கீழ் அல்லது இடைப்பட்ட அளவுகளில் இருக்கும்; எனினும், தென்கிழக்குப் பகுதிகள் சிலவற்றில் 27 அல்லது 28 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகக்கூடும். அடுத்த 10 நாட்களுக்கு வெப்ப அலை நிலவும் சூழல் மீண்டும் ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைவு.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-05T11:25:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[நள்ளிரவில் மாஸ்கோ நடத்திய தாக்குதல்: குறிவைக்கப்பட்ட உக்ரைனின் தளவாட மற்றும் தொழிற்சாலைகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/russia-attacks-ukraine-logistics-and-industries-1788607482"></link>
            <id>https://news.lankasri.com/article/russia-attacks-ukraine-logistics-and-industries-1788607482</id>
            <summary type="text">Russia attacks Ukraine logistics and industries: உக்ரைன் முக்கிய தளவாட தொழிற்சாலைகளை குறிவைத்து ரஷ்யா தாக்குதல் நடத்தியுள்ளது.உக்ரைனை குறிவைத்து தாக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>Russia attacks Ukraine logistics and industries: உக்ரைன் முக்கிய தளவாட தொழிற்சாலைகளை குறிவைத்து ரஷ்யா தாக்குதல் நடத்தியுள்ளது.</p><h2>உக்ரைனை குறிவைத்து தாக்குதல்</h2><p>ரஷ்யா நேற்றிரவு உக்ரைன் முழுவதும் அமைந்துள்ள அந்நாட்டின் ராணுவ தொழிற்சாலைகள் மற்றும் தளவாட மையங்களை குறிவைத்து வான்வழி தாக்குதலை நடத்தியுள்ளது.</p><p> இந்த தாக்குதலில் பெரிய உலோக ஆலைகள், சேமிப்பு கிடங்குகள் மற்றும் துறைமுக கட்டமைப்புகள் ஆகியவை தாக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டு இருப்பதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b9b7a30e-5457-4c23-b763-ecc40dd0e7a2/26-6a9bfbfbbc8e1.webp' /></p><p> குறிப்பாக Dnipropetrovsk மற்றும் Dnepr உலோக ஆலைகள் மீது ரஷ்யா வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளது.</p><p> இது உக்ரைனின் முதல் உலோக தயாரிப்பு வழங்குநர் என்று ரஷ்யா குறிப்பிட்டுள்ளது.</p><p>அதே போல், Nikolaev மற்றும் Odessa பகுதிகளில் அமைந்துள்ள ராணுவ உபகரணங்கள் சேமிப்பு கிடங்கு மற்றும் தளவாட மையங்கள் ஆகியவை ரஷ்ய வான்வழித் தாக்குதலில் குறிவைக்கப்பட்டுள்ளது.</p><p> மேலும் Svyatopetrovsky தளவாட மையமும், 2 எரிபொருள் சேமிப்பு தளங்களும் தாக்கப்பட்டுள்ளன.</p><p> &nbsp;Chernomorsk துறைமுகத்தில் நிலை நிறுத்தப்பட்டிருந்த சரக்கு கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இது&nbsp; வெளிநாட்டு ஆயுதங்கள் மற்றும் ராணுவ தளவாடங்களை ஏற்றிச் செல்வது என்பது குறிப்பிடத்தக்கது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"> WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-05T11:24:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பு- கண்டி இடையிலான தொடருந்து சேவைகள் மீண்டும் ஆரம்பம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/colombo-kandy-train-services-to-resume-1788604934"></link>
            <id>https://tamilwin.com/article/colombo-kandy-train-services-to-resume-1788604934</id>
            <summary type="text">கொழும்பு- கோட்டையிலிருந்து பேராதெனிய ஊடாக கண்டி வரையிலான தொடருந்து சேவைகள்
அடுத்த மாதம் மீண்டும் ஆரம்பிக்கப்பட உள்ளதாக திணைக்களத்தின் பிரதம பொறியாளர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு- கோட்டையிலிருந்து பேராதெனிய ஊடாக கண்டி வரையிலான தொடருந்து சேவைகள்
அடுத்த மாதம் மீண்டும் ஆரம்பிக்கப்பட உள்ளதாக திணைக்களத்தின் பிரதம பொறியாளர் பிரியந்த திகலா தெரிவித்துள்ளார்.</p><p>

இந்தநிலையில் ரம்புக்கானைக்கும் கடுங்கன்னாவைக்கும் இடையிலான தொடருந்து பாதையில்
மேற்கொள்ளப்பட்டு வந்த புனரமைப்புப் பணிகள் தற்போது நிறைவடையும் தருவாயை
எட்டியுள்ளன. </p><p>இதனையடுத்து, குறித்த வழித்தடத்தில் தொடருந்து போக்குவரத்தை மீண்டும்
ஆரம்பிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.</p><h2>புனரமைப்புப் பணிகள்&nbsp;</h2><p>
</p><p>
இது குறித்து மேலும் கருத்து தெரிவித்த பிரதம பொறியாளர் பிரியந்த திகலா, தொடருந்து ஊழியர்களின் அர்ப்பணிப்புமிக்க சேவையினாலேயே இந்த புனரமைப்புப்
பணிகள் விரைவாகவும் வெற்றிகரமாகவும் முன்னெடுக்கப்பட்டு முடிவடையும் கட்டத்தை
எட்டியுள்ளதாகப் பாராட்டினார்.
</p><p>
அத்துடன் எஞ்சியுள்ள சிறு புனரமைப்புப் பணிகளும் விரைந்து முடிக்கப்பட்டு,
எதிர்வரும் மாதத்தில் கொழும்பு - கண்டி இடையிலான தொடருந்து சேவைகள் மக்களின்
பயன்பாட்டிற்காக மீண்டும் முழுமையாகத் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக
அவர் இதன்போது தெரிவித்தார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-05T11:24:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாள சுரங்கப்பாதையில் 10 நாட்களின் பின் மீட்கப்பட்ட மூன்றாவது நபர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/third-person-rescued-nepal-tunnel-after-10-days-1788607462"></link>
            <id>https://canadamirror.com/article/third-person-rescued-nepal-tunnel-after-10-days-1788607462</id>
            <summary type="text">&amp;nbsp; நேபாள சுரங்கப்பாதையில் 10 நாட்களின் பின்னர் இருந்து மூன்றாவது நபர் உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 இயற்கையில...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; நேபாள சுரங்கப்பாதையில் 10 நாட்களின் பின்னர் இருந்து மூன்றாவது நபர் உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
</p><p>

 இயற்கையில் திடீர் கோர தாண்டவத்தால் நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் 1,300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தும், 5,600க்கும் மேற்பட்டோர் காணாமல் போன 10 நாட்களுக்குப் பின்னர், நேபாளத்தில் இன்று சனிக்கிழமையன்று ஒரு சீன நாட்டவர் சுரங்கப்பாதையிலிருந்து உயிருடன் மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1f70d942-b4d3-4477-b6b6-5eb4968a7d89/26-6a9bfbe7bae91.webp' /></p><p>
</p><p>
திரிசூலி ஆற்றில் உள்ள அதே நீர்மின் சுரங்கப்பாதையிலிருந்துதான் அந்த சீன நபர் மீட்கப்பட்டதாக நேபாள இராணுவம் கூறியது. முந்தைய நாள் இதே சுரங்கப்பாதையில்தான் இரண்டு நேபாளியர்கள் ஒரு பரபரப்பான மீட்பு நடவடிக்கையில் உயிருடன் மீட்கப்பட்டனர்.
</p><p>
ஆற்றின் மேல் பகுதிகளில் ஆகஸ்ட் 26 அன்று ஒரு பனியாறு சரிந்ததால், ஆறு நீர்மின் திட்டங்கள் தொடர்பான சுரங்கப்பாதைகளில் குறைந்தது 900 பேர் சிக்கியிருக்கலாம் என்று மீட்புப் பணியாளர்கள் நம்புவதாகக் கூறியுள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-09-05T11:21:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>H. A. Roshan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிண்ணியாவில் போதிய வசதிகள் இன்றி தவிக்கும் மாணவர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/students-struggling-due-lack-adequate-facilities-1788605869"></link>
            <id>https://ibctamil.com/article/students-struggling-due-lack-adequate-facilities-1788605869</id>
            <summary type="text">கிண்ணியா கல்வி வலயத்திற்குட்பட்ட முள்ளிப்பொத்தானை தி/கிண். புகாரி நகர் முஸ்லிம் மகாவித்தியாலயத்தில் போதிய கட்டிட வசதிகள் இல்லாத காரணத்தால், மாணவர்களின...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிண்ணியா கல்வி வலயத்திற்குட்பட்ட முள்ளிப்பொத்தானை தி/கிண். புகாரி நகர் முஸ்லிம் மகாவித்தியாலயத்தில் போதிய கட்டிட வசதிகள் இல்லாத காரணத்தால், மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகள் பல்வேறு சிரமங்களுக்கு உள்ளாகியுள்ளதாக பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.</p><p>

ஏனைய பாடசாலை மாணவர்களைப் போலவே, இப்பாடசாலை மாணவர்களும் சிறந்த கல்வியைப் பெறுவதற்கான உரிமையைக் கொண்டுள்ளனர்.</p><p> எனவே, அவர்களுக்கு தேவையான கற்றல் சூழலை ஏற்படுத்திக் கொடுப்பது காலத்தின் கட்டாயமாகும் என பெற்றோர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.</p><p></p><h2>பெற்றோர்கள் கோரிக்கை</h2><p>
</p><p>
இதன்படி, பாடசாலைக்குக் கிடைக்க வேண்டிய கல்வி வளங்கள் மற்றும் கட்டிட வசதிகளை உரிய முறையில் பங்கீடு செய்து வழங்குவதுடன், பாடசாலையின் கல்வி வளர்ச்சி மற்றும் உட்கட்டமைப்பு அபிவிருத்தி தொடர்பில் மாகாண கல்வித் திணைக்களம், மாகாண கல்வி அமைச்சு மற்றும் கிண்ணியா கல்வி வலய அதிகாரிகள் விசேட கவனம் செலுத்த வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3e523caf-5691-49f5-961b-73e61cd15c1e/26-6a9bfa97c4494.webp' /></p><p>
மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்படாத வகையில், தேவையான அடிப்படை வசதிகளை விரைவாக ஏற்படுத்திக் கொடுக்குமாறும் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-05T11:20:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[மோட்டார் சைக்கிள் பந்தயத்தால் பறிபோன பாடசாலை மாணவன் உயிர் : 13 மாணவர்கள் படுகாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/schoolboy-dies-after-racing-on-motorbike-1788605156"></link>
            <id>https://ibctamil.com/article/schoolboy-dies-after-racing-on-motorbike-1788605156</id>
            <summary type="text">ஹசலகாவிலிருந்து வஸ்கமுவா நோக்கிச் சென்றுகொண்டிருந்த இரண்டு மோட்டார் சைக்கிள்கள் வஸ்கமுவா சாலையில் மோதிக்கொண்ட விபத்தில், மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒர...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹசலகாவிலிருந்து வஸ்கமுவா நோக்கிச் சென்றுகொண்டிருந்த இரண்டு மோட்டார் சைக்கிள்கள் வஸ்கமுவா சாலையில் மோதிக்கொண்ட விபத்தில், மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்தார்.</p><p>

இந்த விபத்து இன்று காலை (05) சுமார் 05.00 மணியளவில் நிகழ்ந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
ஹசலகாவின் அதீலா பகுதியில் ஒரு இறுதிச் சடங்கில் கலந்துகொண்டிருந்த பாடசாலை மாணவர்கள் குழு ஒன்று, வஸ்கமுவா சாலையில் மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபடச் சென்றதாகக் கூறப்படுகிறது.</p><h2>அதிவேகமாக சென்றதால் ஏற்பட்ட விபரீதம்</h2><p>அதிவேகமாகச் சென்ற ஒரு மோட்டார் சைக்கிள், ஒரு வளைவுக்கு அருகில் மற்றொரு மோட்டார் சைக்கிள் மீது மோதியபோது, ​​ஓட்டுநரால் அதைக் கட்டுப்படுத்த முடியாமல் போனதால் இந்த விபத்து ஏற்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/775e2f72-1b0f-45cc-804d-ddc9c6d96b79/26-6a9bf92fe258b.webp' /></p><p>
</p><p>
இந்த விபத்தில் 17 வயது பள்ளி மாணவன் உயிரிழந்தான்.

இந்த விபத்தில் மேலும் பதின்மூன்று மாணவர்கள் காயமடைந்து, சிகிச்சைக்காக மஹியங்கன தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p><p></p><h2>காவல்துறையினர் மேலதிக விசாரணை</h2><p>
</p><p>
இச்சம்பவம் குறித்து ஹசலக்க காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ef546792-2626-40f9-84c1-b7ffdc6bc5ec/26-6a9bf930980f8.webp' /></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-05T11:12:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறை சென்றார் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ; கைதால் நாம் முடங்க மாட்டோம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/mahinda-rajapaksa-visited-prison-namal-rajapaksa-1788605717"></link>
            <id>https://jvpnews.com/article/mahinda-rajapaksa-visited-prison-namal-rajapaksa-1788605717</id>
            <summary type="text">&amp;nbsp;


நாமலின் கைது ஒரு பழிவாங்கும் செயலாக இருக்கக்கூடும் அல்லது இல்லாமலும் போகலாம் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ ஊடகங்களுக்குக் கருத்து த...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;


நாமலின் கைது ஒரு பழிவாங்கும் செயலாக இருக்கக்கூடும் அல்லது இல்லாமலும் போகலாம் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்துள்ளார். </p><p>

சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷவை நேரில் சென்று சந்தித்த பின்னர், அவர் இவ்வாறு கூறியுள்ளார். மஹிந்த ராஜபக்‌ஷ இதன்போது மேலும் கூறுகையில்,</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/de8838cb-8db3-46ee-ae01-9a90e4e3f119/26-6a9bf51716aac.webp' /></p><h2>&nbsp;இது தமக்கு ஒரு புதிய விடயம் அல்ல...</h2><p> 
இச் சூழ்நிலையைச் சட்டரீதியாக எதிர்கொள்ளவுள்ளதாக தெரிவித்த அவர் 

எதிர்வரும் தினங்களில் நீதிமன்றத்தின் ஊடாக நாமல் ராஜபக்‌ஷவிற்குப் பிணை பெறுவதற்கு எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தார்.</p><p></p><p>ஒரு அரசியல் தலைவராக இதுபோன்ற சவாலான சூழ்நிலைகளுக்கு நாமல் ராஜபக்‌ஷ இதற்கு முன்னரும் முகங்கொடுத்துள்ளதாகவும், இது தமக்கு ஒரு புதிய விடயம் அல்ல என்றும் சுட்டிக்காட்டினார்.</p><p>
இக் கைதினால் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கு எந்தவித பின்னடைவும் ஏற்படாது எனக் கூறிய அவர், இச் சம்பவம் கட்சி மேலும் வலுப்பெற்று முன்னோக்கி நகர்வதற்கான ஒரு சந்தர்ப்பமாகவே அமையும் என்றும் நம்பிக்கை வெளியிட்டார்.
</p><p><b>
முதலாம் இணைப்பு</b></p><p> இலஞ்ச குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்டு, செப்டம்பர் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை பார்வையிடுவதற்காக அவரது தந்தை, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ சிறைச்சாலைக்கு சென்றுள்ளார்.
</p><p>


இலங்கை விமான நிறுவனத்தின் விமானக் கொள்வனவு தொடர்பான இலஞ்சக் குற்றச்சாட்டு விசாரணையின் அடிப்படையில் நாமல் ராஜபக்ஷ கடந்த 4ஆம் திகதி இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டார்.</p><p></p><p><span style="color: inherit; font-size: 1.5rem;">சிறை அதிகாரிகளின் அனுமதியுடன் நாமல் ராஜபக்‌ஷவை சந்திப்பு</span></p><p>
</p><p>


பின்னர் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நாமல் ராஜபக்க்ஷவை செப்டம்பர் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.</p><p>கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷவைச் சந்தித்து நலம் விசாரிப்பதற்காக, அவரது தந்தையான முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ இன்று சனிக்கிழமை (05) வெலிக்கடை சிறைச்சாலைக்குச் சென்றுள்ளார்.</p><p></p><p>


வெலிக்கடை சிறைச்சாலை வளாகத்திற்கு வருகை தந்த முன்னாள் ஜனாதிபதி, சிறை அதிகாரிகளின் அனுமதியுடன் நாமல் ராஜபக்‌ஷவை நேரில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.</p>]]></content>
            <updated>2026-09-05T11:11:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[பொரலஸ்கமுவ துப்பாக்கிச்சூடு தொடர்பில் பொலிஸார் வெளியிட்டுள்ள புதிய தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/information-regarding-the-boralesgamuwa-shooting-1788606245"></link>
            <id>https://tamilwin.com/article/information-regarding-the-boralesgamuwa-shooting-1788606245</id>
            <summary type="text">பொரலஸ்கமுவ, மாலினி புலத்சிங்கள மாவத்தையில் உள்ள வீடொன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் 74 வயதுடைய முதியவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொரலஸ்கமுவ, மாலினி புலத்சிங்கள மாவத்தையில் உள்ள வீடொன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் 74 வயதுடைய முதியவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் புதிய தகவல்களை வெளியிட்டுள்ளனர்.</p><p>

இந்த நிலையில் மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இரு
துப்பாக்கிதாரிகள், பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த "கோஸ் மல்லி" என்பவரிடம்
வசூல் அதிகாரியாகப் பணியாற்றியதாகக் கூறப்படும் உயிரிழந்தவரின் மகனையே
குறிவைத்துச் சுட முற்பட்டுள்ளனர்.</p><h2>தவறான இலக்கு</h2><p>
</p><p>
இருப்பினும், துப்பாக்கிதாரிகள் தவறான இலக்கைச் சுட்டதில், பக்கவாத நோயினால்
பாதிக்கப்பட்டிருந்த 74 வயதுடைய தந்தை சம்பவ இடத்திலேயே கைத்துப்பாக்கிச்சூட்டிற்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9748e7e2-35b4-4644-a9e5-7215c61c4832/26-6a9bf829b71ba.webp' /></p><p>
</p><p>
இதற்கமைய "தெஹிவல சண்டோ" எனப்படும் பாதாள உலகக் கும்பல் தலைவராலேயே இந்தத்
துப்பாக்கிச்சூடு திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.</p><h2>தப்பிச்சென்ற துப்பாக்கிதாரிகள்</h2><p>
</p><p>
அத்துடன் இந்தத் தாக்குதலை நடத்திய இரு நபர்களும் கைத்துப்பாக்கியால்
சுட்டுவிட்டு உடனடியாக மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
</p><p>
மேலும் இச்சம்பவம் தொடர்பில் பொரலஸ்கமுவ பொலிஸார் மேலதிக தீவிர
விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-05T11:09:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[திருமலையில் சட்டவிரோத கட்டிடம் அமைக்க முயற்சி : தடுத்து நிறுத்திய மக்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/attempt-to-construct-an-illegal-building-in-trinco-1788605482"></link>
            <id>https://ibctamil.com/article/attempt-to-construct-an-illegal-building-in-trinco-1788605482</id>
            <summary type="text">திருகோணமலை மாவட்டத்தின் குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பகுதியில்&amp;nbsp;சட்டவிரோத கட்டிடம் அமைக்க முயன்ற போது அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பை வெள...</summary>
            <content type="html"><![CDATA[<p>திருகோணமலை மாவட்டத்தின் குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பகுதியில்&nbsp;சட்டவிரோத கட்டிடம் அமைக்க முயன்ற போது அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.</p><p>கும்புறுபிட்டி கிராம சேவையாளர் பிரிவிலுள்ள கடற்கரையை அண்டிய தேவிக்கல்
பகுதியில் தொல்லியல் திணைக்களத்தின் உதவியுடன் ஒப்பந்தக்காரர்கள் இன்று (05) கட்டிடம் கட்டுவதற்காக துப்பரவு செய்யப்பட்டுள்ளது.</p><p>
இதனையடுத்து தமிழரசுக் கட்சியின் குச்சவெளி பிரதேச சபை உறுப்பினர் உள்ளிட்ட கிராம இளைஞர்கள்
இடத்திற்குச் சென்று வேலைகளை தடுத்து நிறுத்தியுள்ளனர்.</p><p></p><h2>&nbsp;கட்டிடம் அமைக்க முயற்சி</h2><p>
</p><p>
அத்துடன் பிரதேசத்திற்கு பொறுப்பான பிரதேச செயலாளரின் அனுமதியில்லாமல்
தொல்லியல் இடமென்று கூறிக் கொண்டு கட்டிடம் அமைக்க முயற்சிப்பதை
எம்மால் ஏற்றுக் கொள்ள முடியாதென மக்கள் தெரிவிக்கின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/362dca0b-eb6c-4982-aa45-1de5fae85cba/26-6a9bf8c6a2158.webp' /></p><p>
</p><p>இதேவேளை வார இறுதி நாட்களில் இவ்வாறான வேலைகள் இடம்பெறுவது சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.</p><p>குறித்த பகுதி தொல்லியல் இடமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இங்கே பழைய விகாரை இருந்ததாகவும் அதனை அபிவிருத்தி செய்வதற்காக இப்பகுதியில் இரண்டு அறைகளைக் கொண்ட கட்டிடம் ஒன்றைக் கட்டுவதற்காக முயற்சித்ததாக தெரிவித்துள்ளனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-05T11:09:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>H. A. Roshan</name>
            </author>
            <title type="text"><![CDATA[போதிய வசதிகள் இன்றி தவிக்கும் கிண்ணியா மாணவர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/kinniya-school-students-struggle-1788606222"></link>
            <id>https://tamilwin.com/article/kinniya-school-students-struggle-1788606222</id>
            <summary type="text">கிண்ணியா வலயக் கல்வி பிரிவுக்குட்பட்ட முள்ளிப்பொத்தானை தி/கிண். புகாரி நகர்
முஸ்லிம் மகாவித்தியாலயத்தில் போதிய கட்டிட வசதிகள் இல்லாத காரணத்தால்,
மாண...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிண்ணியா வலயக் கல்வி பிரிவுக்குட்பட்ட முள்ளிப்பொத்தானை தி/கிண். புகாரி நகர்
முஸ்லிம் மகாவித்தியாலயத்தில் போதிய கட்டிட வசதிகள் இல்லாத காரணத்தால்,
மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகள் பல்வேறு சிரமங்களுக்கு உள்ளாகியுள்ளன.</p><p>

பிள்ளைகளும் ஏனைய பாடசாலை மாணவர்களைப் போலவே சிறந்த கல்வியைப் பெறுவதற்கான
உரிமை கொண்டவர்கள். அவர்களுக்கு தேவையான கற்றல் சூழலை உருவாக்குவது காலத்தின்
கட்டாயமாகும்.
</p><p>
எனவே, பாடசாலைக்குக் கிடைக்க வேண்டிய கல்வி வளங்கள் மற்றும் கட்டிட வசதிகளை
சரியான முறையில் பங்கீடு செய்து வழங்குவதுடன், இப்பாடசாலையின் கல்வி வளர்ச்சி
மற்றும் உட்கட்டமைப்பு அபிவிருத்தியில் மாகாண கல்வித் திணைக்களம், மாகாண கல்வி
அமைச்சு மற்றும் கிண்ணியா கல்வி வலய அதிகாரிகள் விசேட கவனம் செலுத்துமாறு
பெற்றோர்கள் சார்பாக மிகவும் வினயமாகக் கேட்டுக்கொள்கின்றனர்.</p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-05T11:03:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Tony</name>
            </author>
            <title type="text"><![CDATA[இப்படியெல்லாம் பிறந்தநாள் கொண்டாடலாமா வெற்றிமாறன் சார்... குவியும் எதிர்ப்புக்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/director-vetrimaran-birthday-celebration-photo-1788592018"></link>
            <id>https://cineulagam.com/article/director-vetrimaran-birthday-celebration-photo-1788592018</id>
            <summary type="text">வெற்றிமாறன்வெற்றிமாறன் தமிழ் சினிமாவில் பல தரமான படங்களை கொடுத்தவர். தமிழ் சினிமாவிலிருந்து உலகதரத்தில் ஒரு இயக்குனர் என்று கூட இவரை சொல்லலாம், பொல்லா...</summary>
            <content type="html"><![CDATA[<h2>வெற்றிமாறன்</h2><p>வெற்றிமாறன் தமிழ் சினிமாவில் பல தரமான படங்களை கொடுத்தவர். </p><p>தமிழ் சினிமாவிலிருந்து உலகதரத்தில் ஒரு இயக்குனர் என்று கூட இவரை சொல்லலாம், பொல்லாதவனில் ஆரம்பித்து ஆடுகளம், விசாரணை, அசுரன், விடுதலை என பல தரமான படங்களை கொடுத்தவர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/510642d4-71c3-4bd6-a05b-2b61ebcb30a7/26-6a9bc2049c5f9.webp' /></p><p> </p><p>இவர் சமீபத்தில் தன் பிறந்தநாளை கொண்டாடினார். அப்போது அவர் கையில் வாள் பாரிசாக கொடுக்க, அதை அவர் தூக்கி பிடித்தார்.</p><p>இதை அருகில் இருந்த எல்லோரும் ஆர்பரித்து கொண்டாட, ஒரு சிலர் ஒரு பொறுப்புள்ள இயக்குனர் இப்படியெல்லாம் செய்யலாமா என கமெண்ட் அடித்து வருகின்றனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c083107a-8fbd-4c41-a3bf-e2f224a0a14e/26-6a9bc20580abf.webp' /></p>]]></content>
            <updated>2026-09-05T11:00:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[நயன்தாரா அப்படி..கயாடு லோஹர் இப்படி..பட பிரமோஷனில் வேறுபாடு காட்டும் நடிகைகள்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/nayanthara-is-like-promotions-kayadulohar-is-like-1788605171"></link>
            <id>https://viduppu.com/article/nayanthara-is-like-promotions-kayadulohar-is-like-1788605171</id>
            <summary type="text">நயன்தாராலேடி சூப்பர் ஸ்டார் நயன் தாரா நடிப்பில் டாக்சிக் மற்றும் ஹாய் என இரு படங்கள் இரு நாட்கள் இடைவெளியில் ரிலீஸானது. அக்காவாக நடித்த டாக்சிக் படம் ...</summary>
            <content type="html"><![CDATA[<h2>நயன்தாரா</h2><p>லேடி சூப்பர் ஸ்டார் நயன் தாரா நடிப்பில் டாக்சிக் மற்றும் ஹாய் என இரு படங்கள் இரு நாட்கள் இடைவெளியில் ரிலீஸானது. அக்காவாக நடித்த டாக்சிக் படம் வெற்றியடையவில்லை. பெரியவில் வசூலையும் பெறாமல் படுதோல்வியடைந்தது. ஆனால், அவர் ஹீரோயினாக நடித்த ஹாய் படம் வெற்றியடைந்தது. </p><p>இப்படத்தினை கணவர் தயாரிப்பதால் பிரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார், ஆனால் சக்சஸ் மீட் விழாவில் கலந்துகொள்ளவில்லை. ஆனால் சென்னையில் தியேட்டர் விசிட் அடித்தார். </p><p>நான் பேட்டி கொடுக்க மாட்டேன், விளம்பர நிகழ்ச்சிக்கு வர மாட்டேன் என்ற பாலிசியை மேற்கொள்பவர், ஹாய் படத்தில் மாற்றியுள்ளார். அவரே பட தயாரிப்பாளர்களில் ஒருவர் என்பதால் படத்தை ஆர்வமாக விளம்பரப்படுத்தினார், இது மற்றப்படங்களுக்கு தொடருமா என்று தெரியவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e52d71c4-e0dd-47b4-9269-76ef0e44d027/26-6a9bf2f53fcbf.webp' /></p><h2>கயாடு லோஹர்</h2><p>அதேபோல், துல்கர் சல்மானுக்கு ஜோடியாக ஐ ஆம் கேம் பட நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட நடிகை கயாடு லோஹர், தமிழில் வெளியான இம்மார்ட்டல் பட பிரமோஷனை புறக்கணித்தார். </p><p>தமிழில் டிராகனுக்கு முன் நடித்த படம் இம்மார்ட்டல், அப்படி அதை ஏன் புறக்கணித்தார். சம்பள பிரச்சனையா? இல்லை ஈகோ பிரச்சனையா? என்ற கேள்வியும் எழுந்து வருகிறது. அவர் மீது இம்மார்ட்டல் படகுழு கடும் கோபத்தில் இருக்கிறதாம்.</p><p> ஐ ஆம் கேம் படத்தின் செகண்ட் ஆஃப் பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது, ஆனால் இம்மார்ட்டல் படத்திற்கு கயாடுவின் நடிப்பு, அழகு பெரியளவில் பேசப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-05T11:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ashik</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தியா விரையும் குழு! இந்திய கடற்தொழிலாளர்கள் இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைய மாட்டார்கள் என்ற உத்தரவாதம் வேண்டுமென கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/indian-fishermen-continue-to-violate-1788605150"></link>
            <id>https://tamilwin.com/article/indian-fishermen-continue-to-violate-1788605150</id>
            <summary type="text">இலங்கை - இந்திய கடற்தொழிலாளர்கள் பிரச்சினை குறித்து கலந்துரையாட இந்தியா செல்லும் குழுவினர் இனிவரும் காலங்களில் இலங்கை கடற்பரப்பிற்குள் இந்திய கடற்தொழி...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை - இந்திய கடற்தொழிலாளர்கள் பிரச்சினை குறித்து கலந்துரையாட இந்தியா செல்லும் குழுவினர் இனிவரும் காலங்களில் இலங்கை கடற்பரப்பிற்குள் இந்திய கடற்தொழிலாளர்கள் நுழைய மாட்டார்கள் என்ற உத்தரவாதத்தை பெற வேண்டும் என வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் செயலாளரும், ஊடகப் பேச்சாளருமான என்.எம்.ஆலம் கோரிக்கை விடுத்துள்ளார்.</p><p>

மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று (05.09.2026) காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கை - இந்திய கடற்தொழிலாளர்கள் பேச்சுவார்த்தை தொடர்பாக இந்தியா செல்லவிருக்கும் மீன்பிடி தொடர்பான அதிகாரிகள் மட்ட பேச்சுவார்த்தை நடைபெறவிருப்பதாக நேற்றைய தினம் கடற்றொழில் அமைச்சர் அவர்கள் தனது அறிவிப்பில் தெரிவித்திருக்கின்றார்.</p><h2>நீண்டகாலமாக பேசப்பட்ட விடயம்</h2><p> </p><p>

இந்த பேச்சுவார்த்தையில் நாங்கள் எதிர்பார்க்கும் விடயம் அதில் உள்வாங்கப்படுமா? குறிப்பாக, இந்திய - இலங்கை கடற்தொழிலாளர்கள் பிரச்சினை தொடர்பாக நீண்டகாலமாக எங்களால் பேசப்பட்ட விடயம்.</p><p>அது தொடர்பாக நீண்ட பேச்சுவார்த்தைகளை நாங்கள் நடத்தி இருந்த நிலையில் தான், தற்போது இருக்கின்ற அரசாங்கம் இரண்டு வருடங்கள் நெருங்கியிருக்கும் நிலையில் இந்த பேச்சுவார்த்தையை ஆரம்பிக்கலாம் என்ற கருத்தை, அமைச்சரின் கருத்தை நாங்கள் வரவேற்கின்றோம்.</p><p> அந்த வகையிலே, அதிகாரிகள் மட்டத்தில் பேசுவதற்கு செல்லுகின்ற அந்த குழுவானது, இலங்கையில் இருக்கின்ற குறிப்பாக வடக்கிலிருக்கின்ற கடற்தொழிலாளர்களின் பிரச்சினை எந்த அளவுக்கு புரிந்திருக்கிறது, அவர்களிடம் இது தொடர்பாக கருத்துக்கள் பெறப்பட்டதா என்பது கேள்வியாக இருக்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/022350c3-c771-4a42-aea3-5084d780d5c3/26-6a9bf60f22123.webp' /></p><p> </p><p>ஒட்டுமொத்தமாக வடக்கிலிருக்கின்ற கடற்தொழிலாளர்களின் ஒரே குரலாக, இந்திய கடற்தொழிலாளர்கள் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும். அந்த கடற்தொழிலாளர்கள் எங்களது கடல் எல்லைக்குள் இந்திய படகுகள் அல்லது வெளிநாட்டு படகுகள் எங்களது கடலிலே தொழில் செய்வதை தடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை ஒட்டுமொத்த குரலாக எழுப்பி வருகிறார்கள்.</p><h2>வழங்கவேண்டிய உத்தரவாதம்</h2><p> கடற்றொழில் அமைச்சரின் தற்போதைய நடவடிக்கைகளை நாங்கள் பாராட்டுகிறோம். இருந்த போதிலும், இங்கு பேச சொல்கின்ற அதிகாரிகள் மட்ட குழுவானது, இந்திய கடற்தொழிலாளர்கள் இலங்கை கடல் எல்லைக்குள் நுழைய மாட்டார்கள் என்ற உத்தரவாதத்தை அவர்களால் வழங்கக்கூடிய அல்லது இந்தியாவால் பெறக்கூடிய நிலையில் அவர்களின் பேச்சு வார்த்தை அமையுமா? என்பது கேள்வியாக இருக்கிறது. </p><p>இந்த பேச்சுவார்த்தைக்கு அப்பால், கடற்தொழிலாளர்கள் மட்டத்தில் பேச்சுவார்த்தை ஒன்று நடைபெறும் என்று அமைச்சர் தெரிவிக்கின்றார். இருந்த போதிலும் நாங்கள் இந்த பேச்சுவார்த்தையை ஆரம்பத்திலிருந்தே குறிப்பிடுகின்றோம், இலங்கை கடற்பரப்பிற்குள் இந்திய குறிப்பாக தமிழக, பாண்டிசேரி சார்ந்த கடற்தொழிலாளர்கள் எங்களது கடல் எல்லைக்குள் வந்து எமது அரசாங்கத்தால் தடை செய்யப் பட்டிருக்கின்ற இழுவை மடியைக் கொண்டு தொழில் செய்வது தடுக்கப்பட வேண்டும். </p><p>அவ்வாறு தடுக்கப்படும் பட்சத்தில் தான் அவர்களோடு நாங்கள் பேச்சுவார்த்தையை மேற்கொள்ள முடியும் என்ற கருத்தை நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம் என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-05T10:59:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[18 வயது இளம் பெண் கொடூரமாக கொலை; காதலனும் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/young-woman-brutally-murder-boyfriend-also-dead-1788585831"></link>
            <id>https://jvpnews.com/article/young-woman-brutally-murder-boyfriend-also-dead-1788585831</id>
            <summary type="text">&amp;nbsp; வத்தளை, பள்ளியவத்தை, டேன் லங்கா வீதியிலுள்ள வீடொன்றில் 18 வயதுடைய இளம் பெண் ஒருவர் கழுத்து அறுக்கப்பட்டு, மிகவும் கொடூரமான முறையில் படுகொலை செய...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; வத்தளை, பள்ளியவத்தை, டேன் லங்கா வீதியிலுள்ள வீடொன்றில் 18 வயதுடைய இளம் பெண் ஒருவர் கழுத்து அறுக்கப்பட்டு, மிகவும் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக வத்தளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>

நேற்று முன்தினம் (செப்டம்பர் 03) படுகொலை செய்யப்பட்டு உயிரிழந்த பெண் சந்தேக நபருடன் காதல் தொடர்பு வைத்திருந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/de68cacf-36e6-4dc5-a7ac-e24c12c5f062/26-6a9ba7689d211.webp' /></p><h2>&nbsp;பெண் சந்தேக நபருடன் காதல் தொடர்பு</h2><p>&nbsp;சட்டப்பூர்வமாக திருமணம் செய்து கொள்ளாது ஒரு வருடத்திற்கும் மேலாக இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்ததாக கூறப்படுகின்றது.</p><p>
</p><p>சந்தேக நபர் அப்பெண்ணை தொடர்ந்து சந்தேகப்பட்டு வந்துள்ளதாகவும், அதன்போது ஏற்பட்ட தர்க்கத்தையடுத்து வீட்டிலிருந்த அவரை குளியலறைக்கு அழைத்துச் சென்று கத்தியால் கழுத்தை அறுத்து, கண்களைத் தோண்டி எடுத்து இக்கொலையைச் செய்துள்ளமை தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p></p><p>
இந்த பெண் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடையவர் எனக் கூறப்படும் 25 வயதுடைய நபரின் சடலம் அதுருகிரிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் நேற்று (செப்டம்பர் 04) கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். </p><p>

 கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர் உடுப்புஸ்ஸல்லாவ, சென்ட் தோட்டத்தைச் சேர்ந்த 25 வயதுடைய நபர் என தெரியவந்துள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர்.</p><p></p><p>
</p><p>
 இவர் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
</p><p>
 சந்தேக நபர் 2020 ஆம் ஆண்டில் கேலி செய்தமைக்குப் பழிவாங்கும் முகமாக அவிசாவளைப் பகுதியில் நபரொருவரை கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடையவர் என்றும், அது தொடர்பான வழக்கு விசாரணை தற்போதும் நடைபெற்று வருவதாகவும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p></p><p>
</p><p>பெண் கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம்&nbsp; பெரும் அதிர்ச்சியை&nbsp; ஏற்படுத்தியுள்ள&nbsp; நிலையில்&nbsp; சம்பவம்&nbsp; தொடர்பில் வத்தளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-09-05T10:55:37+00:00</updated>
        </entry>
    </feed>
