<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-08-27T17:27:31+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[புரட்டிப்போட்ட பேரழிவு; நேபாளம் - சீனா எல்லையில் 1400 பேர் மாயம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/disaster-1-400-people-missing-nepal-china-border-1787835381"></link>
            <id>https://canadamirror.com/article/disaster-1-400-people-missing-nepal-china-border-1787835381</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp; நேபாளம் - சீனா எல்லையில் 1400 பேர் மாயமான நிலையில் தேடும் பணி தீவிரமாக முன்னெடுக்கபப்டு வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

வடக்கு நேபா...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp; நேபாளம் - சீனா எல்லையில் 1400 பேர் மாயமான நிலையில் தேடும் பணி தீவிரமாக முன்னெடுக்கபப்டு வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
</p><p>
வடக்கு நேபாளத்தில் நேற்று திடீரென ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக பலரும் உயிரிழந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6dd20ade-6f69-4538-b34f-f1d94fb7b3c2/26-6a9033f88c8a9.webp' /></p><h2>&nbsp;500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம்</h2><p> </p><p>

பல வீடுகளும் கட்டிடங்களும், வாகனங்களும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. இதில் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.</p><p>
 
அதோடு ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களை காணவில்லை. நேபாளம் நாட்டை சேர்ந்தவர்கள் மட்டுமல்லாமல் இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து நேபாளத்திற்கு சுற்றுலா சென்ற பலரும் இதில் சிக்கியிருக்கிறார்கள்.</p><p>

 தமிழகத்திலிருந்து சுற்றுலாவுக்கு சென்ற 83 பேர் பற்றிய தகவல் கிடைக்கவில்லை. அவர்களை மீட்கும் பணியில் தமிழக அரசு ஈடுபட்டிருக்கிறது.</p><p>

ஒருபக்கம் நேபாளம் - சீன எல்லையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி சுமார் 1400 பேர் மாயமாகியுள்ளனர். </p><p>

அந்த வகையில் நேபாளத்தில் 500 வெளிநாட்டினர் உட்பட 826 பேரும், சீனாவில் 260 வெளிநாட்டினர் உட்பட 558 பேரும் மாயமாகியிருப்பதாக அந்தந்த நாட்டு அரசுகள் அறிவித்துள்ளன.</p>]]></content>
            <updated>2026-08-27T17:25:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானியா மீது நேரடி தாக்குதல் - ரஷ்யா எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/russia-warns-uk-of-military-strikes-over-ukraine-1787850635"></link>
            <id>https://news.lankasri.com/article/russia-warns-uk-of-military-strikes-over-ukraine-1787850635</id>
            <summary type="text">Russia warns UK of military strikes over Ukraine: பிரித்தானியா மீது நேரடி தாக்குதல் நடத்தவுள்ளதாக ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது.

பிரித்தானியாவிற்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>Russia warns UK of military strikes over Ukraine: பிரித்தானியா மீது நேரடி தாக்குதல் நடத்தவுள்ளதாக ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது.
</p><h2>
பிரித்தானியாவிற்கு ரஷ்யா எச்சரிக்கை</h2><p>ஐரோப்பாவில் நிலவும் போர் சூழ்நிலை மேலும் தீவிரமடைந்துள்ளது. ரஷ்யா, பிரித்தானியா மீது நேரடி தாக்குதல் நடத்தும் வாய்ப்பு குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது.</p><p>

காரணம், உக்ரைன் தனது தாக்குதல்களில் பிரித்தானியா வழங்கிய நீண்ட தூர ஏவுகணைகளை பயன்படுத்தியிருப்பதாக ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ade02f59-5b31-4c0e-b507-a87f419028d4/26-6a90728ff0e98.webp' /></p><p>ரஷ்ய வெளிவிவகார அமைச்சகம் தெரிவித்ததாவது: “உக்ரைன், பிரித்தானியா வழங்கிய ஆயுதங்களை பயன்படுத்தி ரஷ்ய நிலப்பரப்பில் தாக்குதல் நடத்தியால், அதற்கான பதிலடி நேரடியாக பிரித்தானிய இராணுவ இலக்குகளை குறிவைத்து நடத்தப்படும்” என எச்சரித்துள்ளது.
</p><p>
இந்த எச்சரிக்கை, ரஷ்யா-உக்ரைன் போரில் புதிய பரிமாணத்தை உருவாக்கியுள்ளது.</p><p></p><h2>NATO நாடுகளுக்கு சவால்</h2><p>இதுவரை ரஷ்யா, உக்ரைன் மீது மட்டுமே தாக்குதல் நடத்தி வந்த நிலையில், இப்போது பிரித்தானியா மீது நேரடி தாக்குதல் நடத்தும் வாய்ப்பு குறித்து எச்சரிக்கை விடுத்திருப்பது, NATO நாடுகளுக்கு பெரும் சவாலாக உள்ளது.
</p><p>
பிரித்தானியா, உக்ரைனுக்கு நீண்ட தூர ஏவுகணைகள் மற்றும் பல்வேறு இராணுவ உதவிகளை வழங்கி வருகிறது. இதன் மூலம் உக்ரைன், ரஷ்யாவின் முக்கிய தளங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் ரஷ்யா கடும் அதிருப்தியடைந்துள்ளது.
</p><p></p><p>சர்வதேச அரசியல் வல்லுநர்கள் கூறுவதாவது: “ரஷ்யாவின் இந்த எச்சரிக்கை, ஐரோப்பாவில் போர் பரவலாகும் அபாயத்தை அதிகரிக்கிறது. பிரிட்டன் மீது நேரடி தாக்குதல் நடந்தால், NATO முழுமையாக போரில் ஈடுபடும் சூழ்நிலை உருவாகும்” என தெரிவித்துள்ளனர்.
</p><p>
இந்த சூழ்நிலையில், உலக நாடுகள் பெரும் கவலையுடன் நிலைமையை கவனித்து வருகின்றன. ஐரோப்பாவில் பதற்றம் அதிகரித்துள்ளதால், உலக பொருளாதாரத்துக்கும் தாக்கம் ஏற்படும் அபாயம் உள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-27T17:20:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாளத்திற்கு ஒரு மில்லியன் டொலர் நிவாரண உதவி வழங்கிய இலங்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sri-lanka-gives-1-million-relief-aid-to-nepal-1787851090"></link>
            <id>https://jvpnews.com/article/sri-lanka-gives-1-million-relief-aid-to-nepal-1787851090</id>
            <summary type="text">நேபாளத்தில் ஏற்பட்ட கடுமையான வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">நேபாளத்தில் ஏற்பட்ட கடுமையான வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவியை வழங்க இலங்கை அரசு தீர்மானித்துள்ளது.
</p><p style="text-align: justify; ">
 

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அறிவுறுத்தலின் பேரில் இந்த நிதிப் பங்களிப்பை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், இதன் மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசர நிவாரணம் மற்றும் நிவாரண உதவிகளை வழங்க எதிர்பார்க்கப்படுகிறது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7aba1592-fbcd-4ccd-bd62-920c1a7f738f/26-6a9071541b51d.webp' /></p><h2 style="text-align: justify; ">வெள்ளப்பெருக்கு</h2><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
 

வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு காரணமாக ஏற்பட்டுள்ள உயிரிழப்புகள் மற்றும் மக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து ஜனாதிபதி தனது ஆழ்ந்த கவலையைத் தெரிவித்துள்ளதோடு, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இலங்கை அரசாங்கம் மற்றும் மக்களின் அனுதாபங்களையும் தெரிவித்துள்ளார்.</p><p style="text-align: justify; ">

 

இலங்கைக்கும் நேபாளத்திற்கும் இடையில் நிலவும் நீண்டகால நட்புறவு மற்றும் ஒத்துழைப்பை நினைவுகூர்ந்த ஜனாதிபதி, இந்த சவாலான தருணத்தில் இலங்கை நேபாள மக்களுடன் உறுதியாக நிற்கிறது என்பதையும் சுட்டிக்காட்டினார்.</p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">இதற்கிடையில், வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் விஜித ஹேரத், நேபாள வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் சிஷிர் கனாலுடன் இன்று காலை தொலைபேசியில் கலந்துரையாடி இலங்கையின் இரங்கலையும் ஆதரவையும் தெரிவித்துள்ளார்.
</p><p style="text-align: justify; ">
 

நேபாளத்தின் நிவாரண மற்றும் புனரமைப்புப் பணிகளுக்காக எதிர்காலத்தில் இலங்கை வழங்கக்கூடிய மேலும் பொருத்தமான ஒத்துழைப்பு முறைகள் குறித்தும் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு தெரிவித்துள்ளது.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-27T17:18:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரான் மீது அமெரிக்காவின் &quot;Economic D-Day&quot; தாக்குதல்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/america-s-economic-d-day-attack-on-iran-1787850293"></link>
            <id>https://ibctamil.com/article/america-s-economic-d-day-attack-on-iran-1787850293</id>
            <summary type="text">ஈரானுக்கு எதிராக தொடங்கப்பட்டுள்ள பொருளாதார போருக்கு அமெரிக்கா எகனாமிக் டி-டே&quot; (Economic D-Day) என்று பெயர் சூட்டியுள்ளது.

ஈரான் மீது அமெரிக்கா வித...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானுக்கு எதிராக தொடங்கப்பட்டுள்ள பொருளாதார போருக்கு அமெரிக்கா எகனாமிக் டி-டே" (Economic D-Day) என்று பெயர் சூட்டியுள்ளது.
</p><p>
ஈரான் மீது அமெரிக்கா விதித்துள்ள இந்தத் தடைகள், அந்த நாட்டின் பொருளாதாரத்தை முழுமையாக முடக்கும் நோக்கில் திட்டமிடப்பட்டவை . இது ஈரானின் மக்கள் மற்றும் ஆட்சியாளர்களின் நடத்தையில் மாற்றத்தை ஏற்படுத்த அமெரிக்கா எடுக்கும் ஒரு உளவியல் ஆயுதம் என்றே கருதப்படுகிறது.
</p><p>
 "டி-டே" என்ற சொல் இரண்டாம் உலகப்போரை நினைவூட்டுவது போல, ஈரானிய மக்கள் மத்தியில் ஒருவித அச்சத்தையும், பணவீக்கம் குறித்த பதற்றத்தையும் உருவாக்குவதை அமெரிக்கா இலக்காகக் கொண்டுள்ளது.
</p><p>
அமெரிக்காவின் இந்தத் தடைகளால் ஈரானிய நாணய மதிப்பு கடும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது (1 டொலர் = 2 மில்லியன் ரியால்). உணவு மற்றும் மருந்துப் பொருட்களின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது.
</p><p>
ஈரான் இந்த நடவடிக்கையை "பொருளாதார பயங்கரவாதம்" என்று சாடியுள்ளது.
</p><p>
இது தொடர்பான விரிவான விடயங்களை எடுத்துரைக்கிறது ஐபிசி தமிழின் இன்றைய உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி,&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/kuwqKWzBX2Q" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...! '</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-27T17:15:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடற்கரையில் ஹாயாக போஸ்!! பிக்பாஸ் ஷிவினின் அல்ட்ரா கிளாமர் புகைப்படங்கள்...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/biggboss-tamil-shivin-recent-photoshoot-1787838808"></link>
            <id>https://viduppu.com/article/biggboss-tamil-shivin-recent-photoshoot-1787838808</id>
            <summary type="text">பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர்கள் வரிசையில் பிக்பாஸ் 6 சீசன் மூலம் அனைவரையும் கவர்ந்தவர் திருநங்கை ஷிவின். கடைசி 5 இடத்தினை பிடித்த ஷிவின் பிக்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர்கள் வரிசையில் பிக்பாஸ் 6 சீசன் மூலம் அனைவரையும் கவர்ந்தவர் திருநங்கை ஷிவின். கடைசி 5 இடத்தினை பிடித்த ஷிவின் பிக்பாஸ் நிகழ்ச்சியால் மிகப்பெரிய ஆதரவை பெற்றார்.
</p><p></p><p>
நிகழ்ச்சிக்கு பின் சக பெண் போட்டியாளர்களான விஜே மகேஷ்வரி மற்றும் நடிகை ரச்சிதா மகாலட்சுமியுடன் சேர்ந்து அவுட்டிங் சென்று வருகிறார்.

மேலும் கிளாமர் லுக்கிற்கு மாறிய ஷிவின் ரசிகர்கள் முகம் சுளிக்க வைக்கும் படியான ஆடையில் போட்டோஷூட் எடுத்து வருகிறார். </p><p>தற்போது, திருமணம் நிகழ்ச்சிக்கு சென்றுள்ள ஷிவின், கடற்கரையில் எடுத்த கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-08-27T17:15:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிரியாவும் இஸ்ரேலும் பதற்றத்தைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அமெரிக்கா வலியுறுத்தல்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/us-envoy-to-un-calls-for-de-escalation-1787849990"></link>
            <id>https://tamilwin.com/article/us-envoy-to-un-calls-for-de-escalation-1787849990</id>
            <summary type="text">&amp;nbsp;இஸ்ரேலும் சிரியாவும் பதற்றத்தைத் தணிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமெரிக்கா கேட்டுக்கொண்டுள்ளது. 
சிரியாவில் உள்ள அபு அல்-துஹூர் விமானப் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;இஸ்ரேலும் சிரியாவும் பதற்றத்தைத் தணிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமெரிக்கா கேட்டுக்கொண்டுள்ளது. </p><p>
சிரியாவில் உள்ள அபு அல்-துஹூர் விமானப் படைத்தளத்தின் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களைத் தொடர்ந்து இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p><p>
ஐ.நா பாதுகாப்புச் சபையில் உரையாற்றிய அமெரிக்க துணைப் பிரதிநிதி டாமி புரூஸ் இந்த விடயத்த வலியுறுத்தியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d1039f04-336c-4803-b5e5-b15c7fd441f6/26-6a906d0839c72.webp' /></p><p>
</p><p>பேச்சுவார்த்தை மற்றும் அமைதியான தீர்வுகளை ஊக்குவிப்பதற்காக இரு நாடுகளுடனும் பிராந்தியத்தின் பிற பங்காளர்களுடனும் அமெரிக்கா தொடர்ந்து நெருக்கமாகப் பணியாற்றும் என தெரிவித்துள்ளார்.</p><p>
வடமேற்கு சிரியாவில் அலெப்போ அருகே அமைந்துள்ள அபு அல்-துஹூர் தளத்தின் ஓடுபாதை மற்றும் சேமிப்புக் கிடங்குகளை இலக்கு வைத்து, ஆகஸ்ட் 18 அன்று இஸ்ரேலிய போர் விமானங்கள் 8 வான்வழித் தாக்குதல்களை நடத்தியிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>இதில் சிரியாவின் உள்கட்டமைப்புகளுக்குச் சேதம் ஏற்பட்டது.
பயங்கரவாதத்திற்கு ஆதரவளிக்கும் நாடுகளின் பட்டியலிலிருந்து சிரியாவை நீக்க அமெரிக்கா அண்மையில் எடுத்த தீர்மானத்தை டாமி புரூஸ் சுட்டிக்காட்டினார்.</p><p> 
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல் சர்வதேச வர்த்தகம் மற்றும் முதலீட்டு வாய்ப்புகளைத் திறந்துவிடும் எனவும், நாட்டின் மறுசீரமைப்புப் பணிகளுக்குப் பெரிதும் உதவும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-27T17:05:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரான் மீது அமெரிக்காவின் மிக நுணுக்கமான உளவியல் தாக்குதல்.. ட்ரம்ப் கையிலெடுத்துள்ள கடுமையான ஆயுதம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/iran-united-states-middle-east-economic-d-day-1787849288"></link>
            <id>https://tamilwin.com/article/iran-united-states-middle-east-economic-d-day-1787849288</id>
            <summary type="text">ஈரானின் நிதிப் பின்னணியை முற்றிலும் முடக்கும் வகையில் அமெரிக்கா அதன் வரலாற்றிலேயே மிகக் கடுமையான &quot;Economic D-Day&quot; பொருளாதாரத் தடைகளை அதிகாரப்பூர்வமாக ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானின் நிதிப் பின்னணியை முற்றிலும் முடக்கும் வகையில் அமெரிக்கா அதன் வரலாற்றிலேயே மிகக் கடுமையான "Economic D-Day" பொருளாதாரத் தடைகளை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.</p><p> அமெரிக்க கருவூலத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, ஈரானுடன் எண்ணெய் வணிகம், வங்கிப் பரிவர்த்தனை, டிஜிட்டல் சொத்துக்கள், கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து ஆகியவற்றில் தொடர்பில் இருக்கும் எந்தவொரு நாடோ அல்லது நிறுவனமோ அமெரிக்க நிதி அமைப்பிலிருந்து முற்றிலும் தனிமைப்படுத்தப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.</p><p> ஈரானுக்கு நிதி ஆதாரமாக இருக்கும் அனைத்து பொருளாதாரப் பாதைகளையும் முடக்குவதே இதன் நோக்கம் என அமெரிக்கா தெரிவித்துள்ள நிலையில், இதற்குப் பதிலடியாகத் தானும் அமெரிக்கா மீது நிதி ரீதியான தாக்குதலை நடத்தத் தயாராக இருப்பதாக ஈரானும் எச்சரித்துள்ளது. </p><p>ஈரான் - அமெரிக்க போர் பதற்றத்தில் ஏற்பட்டுள்ள இந்த திடீர் திருப்பம், அமெரிக்கா கையாளும் இந்த மிக நுணுக்கமான யுக்தி சர்வதேச ரீதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.&nbsp;</p><p>இது குறித்து மிக ஆழமாக ஆராய்கின்றது உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி,&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/kuwqKWzBX2Q" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-27T16:59:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[மகா சங்கத்தினரை சந்தித்து ஆசி பெற்றார் ஜனாதிபதி அனுர குமார]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/president-anura-a-meets-maha-sangha-for-blessings-1787849066"></link>
            <id>https://jvpnews.com/article/president-anura-a-meets-maha-sangha-for-blessings-1787849066</id>
            <summary type="text">கண்டி வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகையின் வருடாந்த எசல பெரஹரா விழாவின் நிகழ்வுகளில் கலந்து கொண்ட ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க இன்று (27) பி...</summary>
            <content type="html"><![CDATA[<p>கண்டி வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகையின் வருடாந்த எசல பெரஹரா விழாவின் நிகழ்வுகளில் கலந்து கொண்ட ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க இன்று (27) பிற்பகல் மகா சங்கத்தினரை சந்தித்து ஆசி பெற்றார்.
</p><p>
 

அதற்கமைய, முதற்கட்டமாக மல்வத்து மகா விகாரைக்குச் சென்ற ஜனாதிபதி, மல்வத்து மகா நாயக்க அதி வணக்கத்துக்குரிய திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கள நாயக்க தேரரைச் சந்தித்து ஆசி பெற்றார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f2544795-bee9-4664-834e-6c75e7bb85f3/26-6a90696bb8784.webp' /></p><p>

 

அதன் பின்னர் அஸ்கிரி மகா விகாரைக்குச் சென்ற ஜனாதிபதி, அஸ்கிரி மகா நாயக்க அதி வணக்கத்துக்குரிய வரகாகொட ஸ்ரீ ஞானரதன நாயக்க தேரரையும் சந்தித்து ஆசி பெற்றுக்கொண்டார்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-27T16:44:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறிய எதிர்ப்புகளுக்காக முடிவுகளை திரும்பப் பெறமாட்டோம்! ஜனாதிபதியின் அதிரடியான பதில்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/npp-government-22nd-amendment-anura-kumara-1787847895"></link>
            <id>https://tamilwin.com/article/npp-government-22nd-amendment-anura-kumara-1787847895</id>
            <summary type="text">சிறிய எதிர்ப்புகளுக்காக முடிவுகளை&amp;nbsp;திரும்பப் பெறமாட்டோம் என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க நேற்றைய தினம் குறிப்பிட்டிருந்தார்.&amp;nbsp;அண்மைய காலமாக,...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிறிய எதிர்ப்புகளுக்காக முடிவுகளை&nbsp;திரும்பப் பெறமாட்டோம் என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க நேற்றைய தினம் குறிப்பிட்டிருந்தார்.&nbsp;</p><p>அண்மைய காலமாக, தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கத்திற்கு எதிராக கடுமையான விமர்சனங்களும் குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கப்பட்டு வருகின்றன.&nbsp;</p><p>குறிப்பாக, அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலம் குறித்து எதிர்க்கட்சிகள் உட்பட பல தரப்பினரால் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகின்றது.&nbsp;</p><p>அதேநேரம், இனவாதத்தை தூண்டும் வகையில் சமூக வலைதளங்களில் பல மோசமான கருத்துக்களும் முன்வைக்கப்பட்டு வருகின்றன.&nbsp;</p><p>இந்நிலையில்,&nbsp;ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இது தொடர்பில் எவ்வாறான பதிலை வழங்குவார் என நீண்ட எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையிலேயே நேற்றைய தினம் அவர் நிகழ்த்திய உரை இடம்பெற்றுள்ளது.&nbsp;</p><p>இவ்விடயம் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது நியூஸ் இன்சைக்ட் நிகழ்ச்சி,&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/FrbTK1osark" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-27T16:38:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரபல கிரிக்கெட் வீரர் தில்ஷான் குற்றப் புலனாய்வுப் பிரிவில் செய்த முறைப்பாடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/t-m-dilshan-lodges-complaint-1787848353"></link>
            <id>https://tamilwin.com/article/t-m-dilshan-lodges-complaint-1787848353</id>
            <summary type="text">இலங்கைக் கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் டி.எம். தில்ஷான், தனது நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் சமூக வலைதளங்களில் பரப்பப்படும்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கைக் கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் டி.எம். தில்ஷான், தனது நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் சமூக வலைதளங்களில் பரப்பப்படும் போலி மற்றும் அவதூறு பதிவுகளுக்கு எதிராக நடவடிக்க எடுக்குமாறு முறைப்பாடு செய்துள்ளார்.
</p><p>கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவில் அவர் இவ்வாறு முறைப்பாடு செய்துள்ளார்.
</p><p>நாட்டிற்காக 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஆற்றிய சேவையின் மூலம் கட்டியெழுப்பிய நற்பெயருக்கு, சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்ட பொய்ப் பிரசாரங்கள் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக தில்ஷான் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/998f8ae5-33b7-462d-be70-8b2cdd0ac6ba/26-6a9066a2935b8.webp' /></p><p>அவுஸ்திரேலியாவிலிருந்து இலங்கை திரும்பியதும் இந்த முறைப்பாட்டைப் அவர் பதிவுசெய்துள்ளார்.</p><p>
தனது பெயரை எதிர்மறைப் பிரசாரங்களிலிருந்து மீட்டெடுக்க நியாயமான மற்றும் விரைவான விசாரணையை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
</p><p>பார்வையாளர்கள் எண்ணிக்கையை அதிகரித்துக் கொள்ள அல்லது விளம்பரத்துக்காகப் பிரபலங்களின் பெயர்களைப் பயன்படுத்திப் பொய்ச் செய்திகளைப் பரப்புவதைத் தவிர்க்குமாறும், பொறுப்புணர்வுடன் செயல்படுமாறும் சமூக வலைதளப் பயனர்களுக்கு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
</p><p>அவதூறான பதிவுகளை வெளியிட்டவர்களுக்கு எதிராகத் தனது வழக்கறிஞர்கள் மேலதிக சட்ட நடவடிக்கை எடுக்கத் தயாராகி வருவதாகவும், தனக்கு ஏற்பட்ட சேதத்திற்குச் சட்டரீதியான தீர்வுகளைப் பெறவுள்ளதாகவும் தில்ஷான் குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p>சட்டவிரோத செயற்பாடுகளுடன் தொடர்புடைய குற்றவாளி ஓருவருடன் தில்ஷான், தொடர்பு பேணியதாக சமூக ஊடகங்களில் தகவல்கள் பகிரப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.</p><p>இந்த தகவல்கள் பொய்யானவை எனவும் இதனால் தமது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுவதாகவும் தில்ஷான் குற்றம் சுமத்தியுள்ளார்.</p>]]></content>
            <updated>2026-08-27T16:33:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாளம் சென்ற பிரபல நடிகையின் பெற்றோர் மாயம்; சமூகவலைத்தளத்தில் கவலை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/actress-nivetha-pethuraj-parents-missing-nepal-1787833519"></link>
            <id>https://jvpnews.com/article/actress-nivetha-pethuraj-parents-missing-nepal-1787833519</id>
            <summary type="text">&amp;nbsp; நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் கைலாஷ் மலைக்கு யாத்திரைக்கு சென்ற , நடிகை நிவேதா பெத்துராஜின் பெற்றோர்கள் காணமல் போயுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெர...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் கைலாஷ் மலைக்கு யாத்திரைக்கு சென்ற , நடிகை நிவேதா பெத்துராஜின் பெற்றோர்கள் காணமல் போயுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. </p><p> 

நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் கைலாஷ் மலைக்கு யாத்திரைக்கு சென்ற தனது பெற்றோர் ரமேஷ் சர்மா(65), மற்றும் நீலம் சர்மா(64) இருவரையும் காணவில்லை.. அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை என நடிகர் நிவேதா பெத்தராஜ் சமூகவலைத்தங்களில் பதிவிட்டிருக்கிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7ea7376b-63ba-49ae-8efa-cd298aece535/26-6a902cb143f11.webp' /></p><p></p><h2>நேபாளத்தில் ஏற்பட்ட பெரு வெள்ளம்</h2><p> </p><p>மீட்பு குழுவினர், அரசு அதிபர்கள் ஏதேனும் தகவல் தெரிந்தால் உடனடியாக தன்னை தொடர்பு கொள்ளுமாறும் அவர் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.</p><p>

நேபாளத்தில் ஏற்பட்ட பெரு வெள்ளம் காரணமாக 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்க கூடும் என அஞ்சப்படுகிறது.</p><p></p><p> அதில் பல இந்தியர்களும் அடக்கம். நேபாளம் ஒரு சுற்றுலா நாடு. அந்த வகையில் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் இருந்தும் பலரும் அங்கு சுற்றுலா சென்ற நேரத்தில்தான் நேற்று பெருவெள்ளம் ஏற்பட்டு அதில் பலரும் சிக்கியிருக்கிறார்கள்.</p><p></p><p> பலரும் உயிரிழந்திருக்கிறார்கள்.

அதேபோல், தமிழகத்திலிருந்து நேபாளத்திற்கு சுற்றுலா சென்றவர்களில் 83 பேரை தொடர்பு கொள்ளமுடியவில்லை. அவர்களின் நிலை என்னவாயிருக்கும் என்கிற பதட்டம் பலருக்கும் ஏற்பட்டிருக்கிறது. அவர்களை மீட்க தமிழக அரசும் முயற்சிகளை எடுத்து வருகிறது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-27T16:30:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[148 தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளோம் - நேபாளத்திலிருந்து வீடியோ வெளியிட்ட தேச மங்கையற்கரசி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/desa-mangaiyarkarasi-says-148-tamils-safe-at-nepal-1787830332"></link>
            <id>https://news.lankasri.com/article/desa-mangaiyarkarasi-says-148-tamils-safe-at-nepal-1787830332</id>
            <summary type="text">Desa Mangaiyarkarasi says 148 tamils safe at nepal: நேபாளத்தில் 148 தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளோம் என ஆன்மீக சொற்பொழிவாளர் தேச மங்கையற்கரசி வீடியோ வெளி...</summary>
            <content type="html"><![CDATA[<p>Desa Mangaiyarkarasi says 148 tamils safe at nepal: நேபாளத்தில் 148 தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளோம் என ஆன்மீக சொற்பொழிவாளர் தேச மங்கையற்கரசி வீடியோ வெளியிட்டுள்ளார்.
</p><h3>
நேபாளத்தில் 148 தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளோம்
</h3><p>
நேபாளத்தில் நேற்று பனிச்சரிவு காரணமாக ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 332 ஆக அதிகரித்துள்ளது. 900க்கும் அதிகமானோர் மாயமாகியுள்ளனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/05e7c45a-3a33-4a2d-a289-63c9fa44b28d/26-6a90203e56c82.webp' /></p><p>

இதில் தமிழ்நாட்டை சேர்ந்த 103 பேர் நேபாளத்தில் சிக்கியுள்ளதாக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் ராஜ்மோகன் தமிழ்நாடு சட்டமன்றத்தில் விளக்கமளித்துள்ளார். </p><p>

கும்பகோணத்தை சேர்ந்த சூப்பர் யாத்ரா டிராவல்ஸ் என்ற சுற்றுலா நிறுவனம் மூலம், தமிழ்நாட்டை சேர்ந்த 54 பேர் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த 3 பேர் என மொத்தம் 57 பேர் நேபாளத்திற்கு சென்றுள்ளனர்.&nbsp;</p><p></p><p>
இதில் ஒரு பேருந்தில் சென்ற 20 பேர் பாதுகாப்பாக ராணுவ முகாமில் தஞ்சமடைந்தனர். அவர்கள் தற்போது மீட்கப்பட்டுள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. மீதமுள்ள 37 பேர் குறித்து தகவல் பெறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.</p><p> 

சென்னையை சேர்ந்த மகாதேவ் கைலாஷ் ஏஜென்சி மூலம் 49 தமிழர்கள் நேபாளம் சென்றுள்ளனர். அவர்களின் நிலை குறித்து அரசு தீவிரமாக கண்காணித்து வருகிறது. </p><p>

இதனையடுத்து அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, ராஜ்மோகன், வினோத், தென்னரசு ஆகிய 4 பேரையும் டெல்லிக்கு சென்று மத்திய அரசுடன் இணைந்து மீட்பு பணிகளை தீவிரப்படுத்த முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆசிஷ் குமார் தலைமையிலான குழு நேபாளம் செல்ல உள்ளது.&nbsp;</p><p></p><p>

இந்நிலையில் பிரபல ஆன்மீக பேச்சாளரான தேச மங்கையற்கரசி, 148 தமிழர்கள் நேபாளத்தில் பாதுகாப்பாக உள்ளோம் என தெரிவித்துள்ளார். </p><p>

இது குறித்து பேசிய அவர், "நாங்கள் திருக்கயிலாய மானசரோவர் யாத்திரைக்கு இரு குழுக்களாக ஆகஸ்ட் 17, 18 சென்னையிலிருந்து புறப்பட்டு காத்மண்டு வந்தடைந்தோம். தற்போது இந்த வெள்ளப்பெருக்கு குறித்து கேள்வி பட்டோம். 

இதில் பல வெளிநாட்டவர்களும், தமிழ்நாட்டை சேர்ந்தவர்களும் பாதிப்படைந்துள்ளதை கண்டு கவலையடைந்துள்ளோம்.&nbsp;</p><p><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/reel/DciR7T3AuPU/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/reel/DciR7T3AuPU/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/reel/DciR7T3AuPU/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by Desa Mangaiyarkarasi (@desamangaiyarkarasi_official)</a></p></div></blockquote> <script async src="//www.instagram.com/embed.js"></script></p><p>நாங்கள் 148 தமிழர்கள் மற்றும் 2 வெளிநாட்டவர்கள் உட்பட 150 பேர் சாகாவில் மிகுந்த பாதுகாப்பாக உள்ளோம். </p><p>

இங்கிருந்து எவ்வாறு வெளியேறுவது என்பது குறித்து அரசுடன் ஆலோசித்து வருகிறோம். அனுமதி கிடைத்த உடன் விரைவில் தாயகம் திரும்புவோம்" என தெரிவித்துள்ளார்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-27T16:26:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[எச்சரிக்கை மட்டத்தை அடையும் வெப்பம் ; வளிமண்டலவியல் திணைக்களத்தின் எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/rising-heat-meteorology-department-warning-1787847801"></link>
            <id>https://jvpnews.com/article/rising-heat-meteorology-department-warning-1787847801</id>
            <summary type="text">கிழக்கு மாகாணம் மற்றும் பொலன்னறுவை, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மொனராகலை ஆகிய மாவட்டங்களில் வசிக்கும் மக்களுக்கு வளிமண்டலவியல் திண...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">கிழக்கு மாகாணம் மற்றும் பொலன்னறுவை, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மொனராகலை ஆகிய மாவட்டங்களில் வசிக்கும் மக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெப்பமான வானிலை தொடர்பான முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; ">

இதற்கமைய, நாளை (28) பகல் வேளையில் கிழக்கு மாகாணத்திலும், பொலன்னறுவை, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களின் சில இடங்களிலும் மனித உடலால் உணரப்படும் வெப்பச் சுட்டெண் (Heat Index) 'எச்சரிக்கை மட்டம்' வரை அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/60c98550-4a49-46d6-af73-35de506455f3/26-6a9064e91c850.webp' /></p><h2 style="text-align: justify; ">அதிகபட்ச வெப்பநிலை</h2><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
சார்பு ஈரப்பதம் மற்றும் அதிகபட்ச வெப்பநிலையைக் கணக்கிட்டே இந்த வெப்பச் சுட்டெண் தீர்மானிக்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. </p><p style="text-align: justify; ">


இது மனித உடலுக்கு உணரப்படும் உண்மையான வெப்பநிலையைக் குறிக்கிறது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
நீண்ட நேரம் வெயிலில் இருப்பது அல்லது வெளிப்புற நடவடிக்கைகளில் ஈடுபடுவது உடற்சோர்வை ஏற்படுத்தும் என்றும், தொடர்ந்து வெளிப்புறச் செயற்பாடுகளில் ஈடுபடும்போது தசைப்பிடிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
</p><p style="text-align: justify; ">
எனவே, பொதுமக்கள் போதுமான அளவு நீர் அருந்தி உடலை நீரேற்றத்துடன் வைத்துக்கொள்ளுமாறும், கடினமான வெளிப்புற நடவடிக்கைகளைக் குறைத்துக்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-27T16:25:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாள வெள்ள அனர்த்தத்திற்கு ஓரு மில்லியன் டொலர் நிதி உதவி வழங்கும் இலங்கை அரசாங்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-lanka-announces-us-1-million-humanitarian-aid-1787847488"></link>
            <id>https://tamilwin.com/article/sri-lanka-announces-us-1-million-humanitarian-aid-1787847488</id>
            <summary type="text">வெள்ள அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட நேபாளத்திற்கு மனிதாபிமான உதவியாக 1 மில்லியன் அமெரிக்க டாலர்களை வழங்க இலங்கை தீர்மானித்துள்ளது.
நேபாளத்தில் வெள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>வெள்ள அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட நேபாளத்திற்கு மனிதாபிமான உதவியாக 1 மில்லியன் அமெரிக்க டாலர்களை வழங்க இலங்கை தீர்மானித்துள்ளது.</p><p>
நேபாளத்தில் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு காரணமாக உயிரிழப்புகள், இடப்பெயர்வுகள் மற்றும் பெருமளவிலான அழிவுகள் ஏற்பட்டுள்ளன. </p><p>
நேபாளத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் நிவாரணம் மற்றும் மனிதாபிமான உதவிகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் இந்த நிதியுதவியை வழங்குமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அரசாங்கத்திற்குப் பணிப்புரை விடுத்துள்ளதாக வெளி விவகார அமைச்சு தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8f13efb0-d75b-4505-b1e9-b52b0bb3e637/26-6a9063462de02.webp' /></p><p>
இந்த இயற்கை அனர்த்தத்தினால் ஏற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் பொதுமக்களின் துயரங்கள் குறித்து ஜனாதிபதி திசாநாயக்க தனது ஆழ்ந்த வருத்தத்தைப் பதிவு செய்துள்ளார். 
குறிப்பாக, அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கும் நேபாள மக்களுக்கும் இலங்கை அரசாங்கம் மற்றும் மக்களின் சார்பில் தனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாக அறிவித்துள்ளார்.</p><p>
இலங்கைக்கும் நேபாளத்திற்கும் இடையிலான வரலாற்றுச் சிறப்புமிக்க நீண்டகால நட்புறவைச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, வெள்ளம் மற்றும் நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு உடனடியாகத் தேவைப்படும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ளவே இந்த உதவி வழங்கப்படுகிறது எனத் தெரிவித்துள்ளார்.
</p><p>இதேவேளை, இலங்கை வெளி விவகார அமைச்சர் விஜித ஹேரத், நேபாள வெளி விவகார அமைச்சர் சிசிர் கனாலுடன் தொலைபேசியில் உரையாடி, இலங்கையின் இரங்கலையும், நேபாளத்திற்கான முழுமையான ஆதரவை வெளிப்படுத்தியுள்ளார்.
</p><p>நேபாளத்துடன் தொடர்ந்து நெருக்கமான தொடர்பில் இருப்பதுடன், அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளுக்கு மேலும் உதவிகளை வழங்குவதற்கான வழிகளை இலங்கை தொடர்ந்து ஆராயும் என வெளி விவகார அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-27T16:18:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[UK-வின் 3 விமான நிலையங்களில் சைபர் தாக்குதல்! 8.7 மில்லியன் தரவுகள் அம்பலம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/cyberattack-on-3-uk-airports-1787847447"></link>
            <id>https://ibctamil.com/article/cyberattack-on-3-uk-airports-1787847447</id>
            <summary type="text">பிரித்தானியாவின் முக்கிய மூன்று விமான நிலையங்கள் இணையவழித் தாக்குதலுக்கு உள்ளாகியதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இதன்படி,மான்செஸ்டர், லண்...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரித்தானியாவின் முக்கிய மூன்று விமான நிலையங்கள் இணையவழித் தாக்குதலுக்கு உள்ளாகியதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p>இதன்படி,மான்செஸ்டர், லண்டன் ஸ்டான்ஸ்டெட் மற்றும் ஈஸ்ட் மிட்லாண்ட்ஸ் விமான நிலையங்களே இவ்வாறு இணையவழி தாக்குதலுக்கு உள்ளாகியதாக கூறப்படுகிறது.</p><p>இந்தத் தாக்குதலில் சுமார் 8.7 மில்லியன் வாடிக்கையாளர்களின் தரவுகள் அம்பலப்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><h2>வாடிக்கையாளர்களின் வங்கி விவரங்கள்</h2><p>
பிரித்தானியாவின் மிகப்பெரிய விமான நிலையக் குழுமமான மான்செஸ்டர் விமான நிலையக் குழுமம் (MAG), அங்கீகரிக்கப்படாத மூன்றாம் தரப்பினரால் இணையப் பாதுகாப்புச் சம்பவத்திற்கு உள்ளாகியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0febaf3c-86f8-4ba9-9baa-3097f202aeb2/26-6a9063a7ba651.webp' /></p><p>மான்செஸ்டர், ஸ்டான்ஸ்டெட் மற்றும் ஈஸ்ட் மிட்லாண்ட்ஸ் விமான நிலையங்களில் உள்ள வாகன தரிப்பிடம், ஓய்வறை, முன்பதிவுகள் இடங்கள் மற்றும் விமான நிலையத்திற்குள் wifi பதிவு செய்தல் தொடர்பான வாடிக்கையாளர் தரவுகள் பெருமளவில் வெளியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>இந்த தாக்குதலில் மின்னஞ்சல் முகவரிகள், தொலைபேசி எண்கள், வாகனப் பதிவு எண்கள் மற்றும் அஞ்சல் குறியீடுகள் உள்ளிட்ட தரவுகள் திருடப்பட்டதாக கண்டறியப்பட்டுள்ளது.</p><p>
இருப்பினும், வாடிக்கையாளர்களின் வங்கி அல்லது பணம் செலுத்தும் விவரங்கள் பாதிக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
இந்தச் சம்பவத்தால் விமான நிலையங்களில் எந்தவிதமான செயல்பாட்டு இடையூறும் ஏற்படவில்லை என்றும், இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்களுடன் இணைந்து செயல்பட்டு வருவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...! '</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-27T16:17:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜீப் ரக வாகனத்துடன் முச்சக்கரவண்டி மோதியதில் மூவர் ஸ்தலத்திலேயே பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/three-killed-three-wheeler-jeep-collision-1787846377"></link>
            <id>https://tamilwin.com/article/three-killed-three-wheeler-jeep-collision-1787846377</id>
            <summary type="text">கெப்பித்திகொல்லாவை அருகே இன்று (27) காலை ஜீப் ரக வண்டியும் முச்சக்கரவண்டியும் மோதி ஏற்பட்ட விபத்தில் குழந்தை உட்பட மூவர் உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கெப்பித்திகொல்லாவை அருகே இன்று (27) காலை ஜீப் ரக வண்டியும் முச்சக்கரவண்டியும் மோதி ஏற்பட்ட விபத்தில் குழந்தை உட்பட மூவர் உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.&nbsp;</p><h2>பொலிஸ் விசாரணை</h2><p>
</p><p>
கெப்பித்திகொல்லாவை - மதவாச்சி பிரதான வீதியில் கோனமரியாவை பகுதியில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக கெப்பித்திகொல்லாவை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3bee5cb4-7bde-4149-bbc6-4fc9bb591b36/26-6a905ffd84214.webp' /></p><p>
</p><p>
இச்சம்பவத்தில் பதவிய பகுதியைச் சேர்ந்த பாட்டி, அவரது மகள் மற்றும் 10 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
</p><p>
குழந்தைக்குச் சிகிச்சை பெற்றுக்கொள்வதற்காக அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்குச் சென்று கொண்டிருந்தபோதே இந்தத் துயர விபத்து நேர்ந்துள்ளதாகப் பொலிஸாரின் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-27T16:06:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டு மக்கள் வழங்கிய பெரும்பான்மை ஆணை இதற்காக தான்! பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க கூறும் விடயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/chaturanga-abesinga-statement-1787844901"></link>
            <id>https://tamilwin.com/article/chaturanga-abesinga-statement-1787844901</id>
            <summary type="text">தற்போதைய அரசாங்கத்திற்கு நாட்டு மக்கள் வழங்கிய பெரும்பான்மை ஆணை என்பது
பழைய சட்டங்களுக்குள் அடைபட்டு நிற்பதற்காக வழங்கப்பட்டது அல்ல என&amp;nbsp;அமைச்சர் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>தற்போதைய அரசாங்கத்திற்கு நாட்டு மக்கள் வழங்கிய பெரும்பான்மை ஆணை என்பது
பழைய சட்டங்களுக்குள் அடைபட்டு நிற்பதற்காக வழங்கப்பட்டது அல்ல என&nbsp;அமைச்சர் சதுரங்க அபேசிங்க தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p>தேவைப்பட்டால் புதிய சட்டங்களை இயற்றியாவது அல்லது இருக்கும் சட்டங்களை
மாற்றியமைத்தாவது ஒரு முழுமையான 'முறைமை மாற்றத்தை' ஏற்படுத்த வேண்டும்
என்பதற்காகவே வழங்கப்பட்டது என்றும் அவர் கூறியுள்ளார்.&nbsp;</p><h2>வரலாற்று சிறப்புமிக்க ஆணை</h2><p>
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில், மக்கள் இந்த வரலாற்று சிறப்புமிக்க ஆணையை மூன்று பிரதான காரணங்களுக்காக
வழங்கியுள்ளனர்.</p><p> முதலாவதாக, பழைய அரசியல் கலாசாரத்தை மாற்றிப் பிள்ளைகள்
நிம்மதியாக வாழக்கூடிய சூழலை உருவாக்குவது, இரண்டாவதாக, சட்டம் மற்றும்
நீதியின் ஆட்சியை உறுதிப்படுத்துவது, மூன்றாவதாக, வங்குரோத்தான பொருளாதாரத்தை
மீட்டு முன்னோக்கிச் செல்வது என்பனவாகும்.
</p><p>
நாட்டின் வரலாற்றிலேயே முதன்முறையாக அரசியல்வாதிகள், பெரும் தொழில்
உரிமையாளர்கள் மற்றும் பாதாள உலக குற்றவாளிகள் உட்பட அனைவரும் சட்டத்தின்
முன் நிறுத்தப்பட்டு, சட்டம் தன் கடமையைச் செய்யும் நிலை தற்போது
உருவாக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2a01abe2-e337-45e7-b7b7-044fd32f0850/26-6a905dbe597f6.webp' /></p><h2>இலங்கையின் பொருளாதாரம்</h2><p>
</p><p>
முற்றிலும் வீழ்ச்சியடைந்திருந்த இலங்கையின் பொருளாதாரம் தற்போது ஆசிய
பிராந்தியத்திலேயே மிகவும் வலுவான பொருளாதாரமாக மாற்றப்பட்டுள்ளதுடன்,
அந்நியச் செலாவணி நெருக்கடியில் இருந்த நாடு தற்போது நேர்மறையான நிலைக்கு
மீண்டெழுந்துள்ளது.
</p><p>
போக்குவரத்து, கல்வி, டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் ஏற்றுமதித் துறைகளிலும்
தொடர்ச்சியான சீர்திருத்தங்கள் ஏற்பட்டு வருவதால், மக்கள் எதிர்பார்த்த முறைமை
மாற்றத்தின் பெரும்பகுதியை கடந்த இரண்டு ஆண்டுகளுக்குள் அரசாங்கம் வெற்றிகரமாக
நிறைவேற்றியுள்ளது என்றார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-27T15:59:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மனைவியை இழந்த கே.வி.தவராசாவுக்கு கொழும்பில் காத்திருந்த பேரதிர்ச்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/k-v-thavarasa-s-legal-experiences-1787842140"></link>
            <id>https://tamilwin.com/article/k-v-thavarasa-s-legal-experiences-1787842140</id>
            <summary type="text">40 வருடங்களாக நீதித்துறையில் முன்னணி சட்டத்தரணியாக திகழ்வதற்கும், ஜனாதிபதி சட்டத்தரணியாக உயர்வதற்கும் தனது மனைவி கௌரி சங்கரியே காரணம் என கொழும்பைச் சே...</summary>
            <content type="html"><![CDATA[<p>40 வருடங்களாக நீதித்துறையில் முன்னணி சட்டத்தரணியாக திகழ்வதற்கும், ஜனாதிபதி சட்டத்தரணியாக உயர்வதற்கும் தனது மனைவி கௌரி சங்கரியே காரணம் என கொழும்பைச் சேர்ந்த ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி. தவராசா தெரிவித்துள்ளார்.</p><p>

லங்காசிறி ஊடகம் வழங்கும் “ஊடறுப்பு” நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
அவர் மேலும் தெரிவிக்கையில்,</p><p>

சாதாரண மனிதராக இருந்த என்னை கொழும்பிற்கு அழைத்து வந்து, இவ்வளவு பெரிய சட்டத்தரணியாக மாற்றியவர் என்னுடைய துணைவியார் தான். சுமார் 40 ஆண்டுகளாக எனக்குத் தேவையான அனைத்து வேலைகளையும் அவர்தான் செய்து வந்தார்.
</p><p>
அந்தக் காலப்பகுதியில் எங்களுடன் அலுவலகத்தில் பணியாற்றிய இளம் பெண் சட்டத்தரணி ஒருவரால் 60 கோப்புகள் திருடப்பட்டன. அதேபோன்று, இந்த விடயம் தொடர்பில் விசாரித்தபோது, எதுவும் தெரியாதது போன்று அவர்கள் பேசினார்கள்.
</p><p>
அதன் பின்னர், தற்போது என்னுடன் இருப்பவர்களை வைத்துத்தான் கடந்த 5 ஆண்டுகளாக இந்தப் பணியை தொடர்ந்து வருகின்றேன்.</p><p>

மேலும், மாயமான கோப்புகள் காரணமாக ஏராளமான வழக்குகள் இன்றுவரை நிலுவையில் உள்ளதாகவும் அறிய முடிகின்றது. சில வருடங்களுக்கு முன்னர் எனக்கும் உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது என்றார்.
</p><p>
இந்த விடயம் தொடர்பில் மேலும் பல தகவல்களையும், அனுபவங்களையும் உங்கள் பார்வைக்கு கொண்டு வருகிறது “ஊடறுப்பு” நிகழ்ச்சி,&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/fSE6JfGxUrU" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-27T15:48:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[சமூக ஊடகங்களில் தவறான முறையில் பகிரப்பட்ட பெண்களின் புகைப்படங்கள்! விசாரணையில் அதிர்ச்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/photos-of-women-shared-inappropriately-1787845384"></link>
            <id>https://ibctamil.com/article/photos-of-women-shared-inappropriately-1787845384</id>
            <summary type="text">பெண்கள் மற்றும் குழந்தைகளின் புகைப்படங்களை தவறான முறையில் பகிர்ந்த குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவர் காவல்துறையால் கைதுசெய்யப்பட்டள்ளார்.அவ்வாறான புகைக்கட...</summary>
            <content type="html"><![CDATA[<p>பெண்கள் மற்றும் குழந்தைகளின் புகைப்படங்களை தவறான முறையில் பகிர்ந்த குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவர் காவல்துறையால் கைதுசெய்யப்பட்டள்ளார்.</p><p>அவ்வாறான புகைக்கடங்களை வைத்து முகநூல் குழுக்களையும் பக்கங்களையும் இயக்கியதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமைய இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><p>இவ்வாறு கைது செய்யப்பட்டவர் 21 வயதுடைய இளைஞன் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p></p><h2>சந்தேக நபரின் கைபேசி</h2><p>குழந்தைகள் மற்றும் பெண்கள் மீதான வன்முறை தடுப்பு காவல் பணியகத்தின் அதிகாரிகளால் அவர் இன்று பெலியத்த பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/338e649f-0dae-40a1-8156-ca6dc6ef2ce2/26-6a905b9ede48f.webp' /></p><p>இதன்படி சந்தேக நபரின் கைபேசி காவல்துறையின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டதாகவும் மேலும் இதுகுறித்து புலனாய்வுப் பிரிவு மேலதிக விசாரணைகளை நடத்தி வருவதகவும் தெரிவிக்கப்படுகிறது.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-27T15:44:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையர்களுக்கு பொலிஸாரின் முக்கிய அறிவித்தல் ; மீளளிக்கப்படும் பணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/important-police-notice-for-sri-lankans-1787845158"></link>
            <id>https://jvpnews.com/article/important-police-notice-for-sri-lankans-1787845158</id>
            <summary type="text">2026 ஓகஸ்ட் 20 ஆம் திகதி பொலிஸ் சான்றிதழுக்கு விண்ணப்பித்தவர்கள் மீண்டும் இணையவழியில் விண்ணப்பிக்க வேண்டும் என பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

 
...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">2026 ஓகஸ்ட் 20 ஆம் திகதி பொலிஸ் சான்றிதழுக்கு விண்ணப்பித்தவர்கள் மீண்டும் இணையவழியில் விண்ணப்பிக்க வேண்டும் என பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.</p><p style="text-align: justify; ">

 

அன்று சான்றிதழ் தரவுத் தொகுதி செயலிழந்ததால், விண்ணப்பதாரர்களால் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் அமைப்பில் இருந்து நீங்கியுள்ளன.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/698d4971-f3ed-4882-a4eb-06c6382a3cf1/26-6a905a2787fd5.webp' /></p><p> </p><p style="text-align: justify; ">எனவே, சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரர்கள் மீண்டும் இணையவழியில் விண்ணப்பிக்க வேண்டும் என பொலிஸ் தலைமையகம் சுட்டிக்காட்டியுள்ளது.
</p><p style="text-align: justify; ">
 

மீண்டும் சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் தொடர்பான அறிக்கைகள் பெறப்பட்ட பின்னர் சான்றிதழை வழங்க முடியும் என்றும் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">

 

அத்துடன், முந்தைய விண்ணப்பத்திற்காக அறவிடப்பட்ட 5,100 ரூபாய் கட்டணம், விண்ணப்பதாரர் செலுத்திய அட்டையிலேயே மீண்டும் மீளளிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
</p><p style="text-align: justify; ">
 

இதேவேளை, பொலிஸ் சான்றிதழ்களுக்கு விண்ணப்பித்தல், அறிக்கைகளை அழைத்தல் மற்றும் சான்றிதழ்களை அச்சிடுதல் ஆகியவற்றிற்கு பயன்படுத்தப்படும் தரவுத் தொகுதி ஓகஸ்ட் 20 ஆம் திகதி பிற்பகல் 12.50 மணி முதல் செயலிழந்திருந்த நிலையில், இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையத்திற்கு (ICTA) தெரியப்படுத்தப்பட்டதை அடுத்து அது சீர்செய்யப்பட்டுள்ளது.
</p><p style="text-align: justify; ">
 

அதற்கமைய, தற்போது வழமை போன்று சான்றிதழ் அறிக்கைகளுக்காக இணையவழியில் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க முடியும் என பொலிஸ் தலைமையகம் மேலும் தெரிவித்துள்ளது.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-27T15:39:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிளாஸ்டிக் நாற்காலியில் இருக்கும் அந்தத் துளை எதற்காக? சுவாரஸ்ய பின்னணி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/why-do-plastic-stools-have-a-hole-in-the-center-1787842306"></link>
            <id>https://manithan.com/article/why-do-plastic-stools-have-a-hole-in-the-center-1787842306</id>
            <summary type="text">பொதுவாகவே பிளாஸ்டிக் நாற்காலிகளின் நடுவில் சிறிய துளை இருப்பதை அனைவரும் அவதானித்திருப்போம் இதன் பின்னணியில் இருக்கும் காரணம் குறித்து பலருக்கும் தெரிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொதுவாகவே பிளாஸ்டிக் நாற்காலிகளின் நடுவில் சிறிய துளை இருப்பதை அனைவரும் அவதானித்திருப்போம் இதன் பின்னணியில் இருக்கும் காரணம் குறித்து பலருக்கும் தெரியாது.&nbsp;</p><p>குறிப்பாக பிளாஸ்டிக் நாற்காலிகளின் மையப்பகுதியில் இருக்கும் சிறிய வட்டத் துளை ஏன் உள்ளது என்று எப்போதாவது சிந்தித்திருக்கிறீர்களா?அதற்குப் பின்னால் பல பயனுள்ள காரணங்கள் உள்ளன.இது குறித்து விரிவான விளக்கத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6cc76f58-d3e6-45d7-b7f0-02768097c2dd/26-6a90585893fce.webp' /></p><p></p><h2>முக்கிய காரணங்கள்&nbsp;</h2><p><b>
வெற்றிடத்தைத் தடுக்கிறது</b></p><p>நாற்காலிகளை ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கும்போது அவற்றுக்கு இடையில் காற்று சிக்கி, பிரிப்பது கடினமாகலாம்.இந்தத் துளை காற்று வெளியேற வழிவகுத்து, நாற்காலிகளை எளிதாகப் பிரிக்க உதவுகிறது.</p><p><b>
கட்டமைப்பு வலிமைக்கு உதவுகிறது.</b></p><p>சரியான வடிவமைப்பில் அமைக்கப்படும் இந்தத் திறப்பு, நாற்காலியின் எடையைச் சீராகப் பகிர்ந்து, தேவையான உறுதித்தன்மையைப் பராமரிக்க உதவக்கூடும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/944fb101-6a77-41dd-98cd-349905d8ca10/26-6a90585948442.webp' /></p><p></p><p><b>உற்பத்தி செயல்முறைக்கு உதவுகிறது.</b></p><p>பிளாஸ்டிக் நாற்காலிகள் பொதுவாக ஊசி வார்ப்பு முறையில் தயாரிக்கப்படுகின்றனதுளைகள் மற்றும் மாறுபட்ட தடிமன் கொண்ட பகுதிகள், பிளாஸ்டிக் சீராகக் குளிர்வதற்கும் சுருக்கம், வளைதல் போன்ற உற்பத்திக் குறைபாடுகளைத் தவிர்க்கவும் உதவுகின்றன.</p><p><b>

நீர் தேங்குவதைத் தடுக்கிறது</b></p><p> மழை, சுத்தம் செய்தல் அல்லது பிற காரணங்களால் இருக்கையில் தேங்கும் நீர் இந்தத் துளை வழியாக வெளியேறி, நாற்காலியை விரைவாக உலரச் செய்கிறது.</p><p>
</p><p><b>
பிளாஸ்டிக் மற்றும் செலவைச் சேமிக்கிறது</b></p><p> தேவையற்ற பகுதிகளில் பிளாஸ்டிக்கின் அளவைக் குறைப்பதன் மூலம், நாற்காலியின் வலிமையைப் பாதிக்காமல் மூலப்பொருள் மற்றும் உற்பத்திச் செலவைக் குறைக்க முடிகிறது.
</p><p>
எனவே, நாற்காலியில் காணப்படும் அந்தச் சிறிய துளை வெறும் அலங்காரத்திற்காக அல்ல மாறாக வடிவமைப்பு, உற்பத்தி, பயன்பாடு மற்றும் செலவுக் குறைப்பு எனப் பல விடயங்களுக்கு உதவியாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b>&nbsp;</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-27T15:38:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரான் - அமெரிக்க பேச்சுவார்த்தை! ட்ரம்ப்பை மையப்படுத்தி வெள்ளை மாளிகை அறிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/iran-us-talks-update-whait-house-1787843813"></link>
            <id>https://ibctamil.com/article/iran-us-talks-update-whait-house-1787843813</id>
            <summary type="text">அமெரிக்காவும் ஈரானும் தற்போது எந்த ஒரு பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபடவில்லை என்று வெள்ளை மாளிகையின் பத்திரிகைச் செயலாளர் கரோலின் லீவிட் தெரிவித்துள்ளார்....</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவும் ஈரானும் தற்போது எந்த ஒரு பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபடவில்லை என்று வெள்ளை மாளிகையின் பத்திரிகைச் செயலாளர் கரோலின் லீவிட் தெரிவித்துள்ளார்.</p><p>மாறாக, வெள்ளை மாளிகை ஒபரேஷன் எகனாமிக் அவுட்காஸ்ட் எனப் பெயரிட்டுள்ள ஒரு முன்னெடுப்பின் மூலம் ஈரான் மீதான பொருளாதார அழுத்தத்தை அதிகரிப்பதில் அமெரிக்கா கவனம் செலுத்துகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.</p><p>“தற்போது எந்தப் பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை. ஒருவேளை அவர்கள் அர்த்தமுள்ள வகையில் பேச்சுவார்த்தைக்கு வருவார்கள் என்று ஜனாதிபதி கருதும் வரை இது தொடரும்” என்று&nbsp;கரோலின் தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.</p><p></p><h2>ஒபரேஷன் எகனாமிக் அவுட்காஸ்ட்</h2><p>அதுபோன்ற ஒரு நிலையை நாங்கள் இன்னும் காணவில்லை என்றும் லீவிட் தனது கருத்தில் வெளிப்படுத்தியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c40761ab-4f4d-4b52-9583-d1538e6dbef1/26-6a90565071a27.webp' /></p><p>&nbsp;மேலும், டொனால்ட் ட்ரம்ப் “அனைத்து வாய்ப்புகளையும் தொடர்ந்து தன்வசம் வைத்துள்ளார்” என்றும் லீவிட் குறிப்பிட்டுள்ளார்.</p><p>
இதன்படி “ஈரானின் இராணுவத்தை அழிக்க ஒபரேஷன் எபிக் ஃபியூரி'யை நாங்கள் மேற்கொண்டோம். இப்போது அவர்களின் பொருளாதாரத்தை அழிக்க ஒபரேஷன் எகனாமிக் அவுட்காஸ்ட்'டை மேற்கொள்கிறோம்," என்று லீவிட் மேலும் தெரிவித்துள்ளார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...! '</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-27T15:25:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[எந்த அபிவிருத்தியை எங்கு மேற்கொள்ள வேண்டும் என்பது தொடர்பில் அரசாங்கமே முடிவு செய்யும்! அமைச்சர் பிமல் தெரிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/minister-wimal-ratnayake-statement-1787841578"></link>
            <id>https://tamilwin.com/article/minister-wimal-ratnayake-statement-1787841578</id>
            <summary type="text">யாழில் சர்வதேச விமான நிலையம் மற்றும் துறைமுகத்துக்கு இந்தியா நிதி உதவி வழங்கினாலும் எந்த அபிவிருத்தியை எப்போது மேற்கொள்வது என்பது தொடர்பில் அரசாங்கமே ...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழில் சர்வதேச விமான நிலையம் மற்றும் துறைமுகத்துக்கு இந்தியா நிதி உதவி வழங்கினாலும் எந்த அபிவிருத்தியை எப்போது மேற்கொள்வது என்பது தொடர்பில் அரசாங்கமே முடிவெடுக்கும் என நெடுஞ்சாலைகள் மற்றும் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். </p><p>

யாழில் உள்ள தேசிய மக்கள் சக்தியின் தலைமை அலுவலகத்தில் நேற்று (26.08.2026) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனை தெரிவித்துள்ளார்.</p><h2>நிதி கிடைத்துமே அபிவிருத்தியில் தாமதம்</h2><p> </p><p>

“காங்கேசன்துறை முகாம் மற்றும் விமான நிலைய அபிவிருத்தி தொடர்பில் நிதி கிடைத்தும் அரசாங்கமே அதனை அபிவிருத்தி செய்ய பின் நிற்கிறது” என ஊடகவியலாளர் ஒருவர் கேள்வியெழுப்பிய போதே இந்த விடயத்தை கூறியுள்ளார். </p><p>

அவர் மேலும் தெரிவிக்கையில், விமான நிலைய அபிவிருத்திக்காக இந்தியா ஒரு தொகை பணத்தை வழங்கியிருக்கிறது. அந்த நிதி முழுமையான அபிவிருத்திக்கு போதாது எஞ்சிய தொகையை கடன் வாங்க வேண்டியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/87efae7a-9bbf-4b70-b4ce-72c9166bf5be/26-6a90555334e71.webp' /></p><h2>அரசாங்கமே முடிவு செய்யும்</h2><p> </p><p>

அபிவிருத்தி தொடர்பில் அரசாங்கம் என்ற வகையில் கரிசனையுடன் இருக்கிறோம். ஆனால் எந்த அபிவிருத்தியை எங்கு மேற்கொள்ள வேண்டும் என்பது தொடர்பில் அரசாங்கமே முடிவு செய்யும்.</p><p> 

மத்தள விமான நிலையத்தை கடந்த கால அரசாங்கம் முறையான திட்டமிடல் என்று காட்டியதன் காரணமாக அரசாங்கத்திற்கு பாரிய நஷ்டம் ஏற்பட்டு வருகிறது. 

அவ்வாறான ஒரு நஷ்டமான அபிவிருத்தியை எமது அரசாங்கம் மேற்கொள்ளாது. அபிவிருத்தி தொடர்பில் யார் நீதி வழங்கினாலும் அரசாங்கமே இறுதி முடிவை எடுக்கும் என கூறியுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-27T15:23:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹோர்முஸ் நீரிணையில் பதிக்கப்பட்ட கண்ணிவெடிகளை அகற்ற இரு தரப்பு பேச்சுவார்த்தை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/talks-remove-mines-planted-in-the-strait-of-hormuz-1787833667"></link>
            <id>https://ibctamil.com/article/talks-remove-mines-planted-in-the-strait-of-hormuz-1787833667</id>
            <summary type="text">ஹோர்முஸ் நீரிணையில் இருந்து கண்ணிவெடிகளை அகற்றும் கூட்டுத் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து கட்டாரும் ஈரானும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக கட்டாரின...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹோர்முஸ் நீரிணையில் இருந்து கண்ணிவெடிகளை அகற்றும் கூட்டுத் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து கட்டாரும் ஈரானும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக கட்டாரின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
</p><p>ஈரானின் தலைநகர் தெஹ்ரானில் இன்று இரு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களுக்கு இடையே நடைபெற்ற சந்திப்பைத் தொடர்ந்து இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.</p><p>மேலும், ​​ஹோர்முஸ் நீரிணை வழியாக ஒரு தற்காலிக கப்பல் போக்குவரத்து வழித்தடத்தை உருவாக்குவதை உள்ளடக்கிய முன்மொழியப்பட்ட கட்டமைப்பு குறித்தும் இருதரப்பும் விவாதித்துள்ளன.</p><p></p><h2>பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மை</h2><p>இது குறித்துகத்தார் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில்,</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/89bbb263-6c65-420f-b29a-1d4e64a31eba/26-6a90327ca6cb9.webp' /></p><p>“பிராந்திய பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை மேம்படுத்துவதற்கு பங்களிக்கும் வகையில், பதற்றத்தைக் குறைப்பதற்கும், உரையாடலுக்கான பொருத்தமான நிலைமைகளை உருவாக்குவதற்கும் மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சிகளுடன், பிராந்திய சூழ்நிலையில் ஏற்பட்டுள்ள சமீபத்திய முன்னேற்றங்களும் ஆய்வு செய்யப்பட்டன" என்று தெரிவித்துள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-27T15:06:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[காலியில் வாகன விபத்து ; ஆணும் பெண்ணும் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/vehicle-accident-in-galle-man-and-woman-died-1787836950"></link>
            <id>https://jvpnews.com/article/vehicle-accident-in-galle-man-and-woman-died-1787836950</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;காலி, அம்பலன்வத்தை அனகாரிக தர்மபால மாவத்தையில் இன்று (27) முற்பகல் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கரவண்டி விபத்தில் பெண்ணொருவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;காலி, அம்பலன்வத்தை அனகாரிக தர்மபால மாவத்தையில் இன்று (27) முற்பகல் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கரவண்டி விபத்தில் பெண்ணொருவரும் ஆண் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.
</p><p>


அம்பலன்வத்தையிலிருந்து கராப்பிட்டிய நோக்கிச் சென்ற முச்சக்கரவண்டியும், கராப்பிட்டியவிலிருந்து அம்பலன்வத்தை நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ad8295e6-44e3-489e-9ba8-ef403a8fa69a/26-6a903a186c633.webp' /></p><h2>முச்சக்கரவண்டி வீதியை விட்டு விலகி விபத்து</h2><p>



விபத்தில் முச்சக்கரவண்டி வீதியை விட்டு விலகி அருகிலிருந்த மின்சாரக் கம்பத்தில் மோதியதில், அதன் பின்னாசனத்தில் பயணித்த 59 வயதுடைய பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.</p><p></p><p>
</p><p>


மோட்டார் சைக்கிளில் பயணித்த 49 வயதுடைய ஆண் பலத்த காயங்களுடன் காலி தேசிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.</p><p></p><p>



கனம்பிட்டியைச் சேர்ந்த பெண்ணும், ஹீன்பந்தலையைச் சேர்ந்த ஆணுமே குறித்த விபத்தில் உயிரிழந்துள்ளார்கள்.



இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காலி போக்குவரத்து பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-27T15:00:00+00:00</updated>
        </entry>
    </feed>
