<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-08-21T15:38:39+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாடொன்றில் பாடசாலை மீது வாள் வீச்சுத் தாக்குதல்: பலர் காயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sword-attack-at-sweden-school-several-injured-1787326441"></link>
            <id>https://tamilwin.com/article/sword-attack-at-sweden-school-several-injured-1787326441</id>
            <summary type="text">ஸ்வீடனின் மத்திய பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் வாள் ஏந்திய நபர்
ஒருவர் நடத்திய கொடூரத் தாக்குதலில் பலர் காயமடைந்துள்ளதுடன், சந்தேகநபர்
பொலிஸா...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஸ்வீடனின் மத்திய பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் வாள் ஏந்திய நபர்
ஒருவர் நடத்திய கொடூரத் தாக்குதலில் பலர் காயமடைந்துள்ளதுடன், சந்தேகநபர்
பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>

பாகெர்ஸ்டா பகுதியில் அமைந்துள்ள பிரினெல்ஸ்கோலன் என்ற உயர் பாடசாலைக்கே இன்று(21.8.2026) பிற்பகல் வேளையில் புகுந்த தாக்குதல்தாரி, அங்கிருந்தவர்கள் மீது இந்த வாள்
வீச்சுத் தாக்குதலை மேற்கொண்டுள்ளார்.
</p><p>
சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்த பொலிஸார், சந்தேகநபரை சுட்டு வீழ்த்தித்
தடுத்து நிறுத்தியதுடன் அவரைக் கைது செய்துள்ளனர்.</p><h2>தீவிர சோதனைகள்</h2><p>

தாக்குதலில் காயமடைந்தவர்களின் துல்லியமான எண்ணிக்கை இதுவரை அதிகாரப்பூர்வமாக
அறிவிக்கப்படவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7bf8a1a0-1205-48f8-aebd-5afd46f68513/26-6a886fec259bc.webp' /></p><p> </p><p>எனினும், பாதுகாப்பு நிமித்தம் அப்பகுதியிலுள்ள ஏனைய
பாடசாலைகளும் உடனடியாக பூட்டப்பட்டு தீவிர சோதனைகள் முன்னெடுக்கப்பட்டு
வருகின்றன.</p><p>

இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ள நிலையில்,
நிலைமையை அரசாங்கம் உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக அந்நாட்டின் நீதி
அமைச்சர் தெரிவித்தார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-21T15:34:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[10 வயது சிறுவன் வென்ற சிலிகான் வாலி விருது - அவர் கண்டுபிடித்த AI Electronic Nose]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/taiwan-10-years-boy-wins-silicon-valley-ai-award-1787325845"></link>
            <id>https://news.lankasri.com/article/taiwan-10-years-boy-wins-silicon-valley-ai-award-1787325845</id>
            <summary type="text">10-year-old Taiwanese inventor wins top Silicon Valley award: தைவானைச் சேர்ந்த 10 வயது சிறுவன், உலகின் முன்னணி தொழில்நுட்ப மையமான சிலிகான் வாலியில் நட...</summary>
            <content type="html"><![CDATA[<p>10-year-old Taiwanese inventor wins top Silicon Valley award: தைவானைச் சேர்ந்த 10 வயது சிறுவன், உலகின் முன்னணி தொழில்நுட்ப மையமான சிலிகான் வாலியில் நடைபெற்ற போட்டியில் மிக உயர்ந்த விருதைப் பெற்றுள்ளார்.
</p><p>
காங் சியாவோ சர்வதேச பள்ளியின் மாணவரான சு டிங்-வெய் (Hsu Ting-wei) என்ற இந்த சிறுவன், Novel Artificial Electronic Nose என்கிற AI அடிப்படையிலான மோப்பம் பிடிக்கும் கருவியை கண்டுபிடித்துள்ளார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5e592f90-e4cd-467e-946d-84a9be212b5e/26-6a886d986d5db.webp' /></p><h2>Electronic Nose</h2><p>இது விமான நிலையங்களில் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், அபாயகரமான பொருட்கள் மற்றும் தடைசெய்யப்பட்ட ரசாயனங்களை மணம் மூலம் கண்டறியும் திறன் கொண்டது.
</p><p>
இந்த “மின்மூக்கு” (Electronic Nose) செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் சென்சார் தொழில்நுட்பத்தை இணைத்து உருவாக்கப்பட்டுள்ளது. </p><p>

மனித மூக்கின் மணம் அறியும் திறனைப் போல, AI மூலம் தரவுகளை பகுப்பாய்வு செய்து, சந்தேகத்திற்கிடமான பொருட்களை உடனடியாக அடையாளம் காணும். </p><p>விமான நிலையங்களில் பாதுகாப்பு சோதனைகளில் இது மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
</p><p></p><h2>Top Young Innovator விருது</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3a635daf-d721-4d21-bc50-57c52999d4f9/26-6a886d97b63dd.webp' /></p><p>சிறுவனின் கண்டுபிடிப்பு, Silicon Valley International Tech Awards 2026-இல் “Top Young Innovator” விருதைப் பெற்றது. உலகம் முழுவதும் இருந்து வந்த ஆயிரக்கணக்கான கண்டுபிடிப்புகளில், அவரது யோசனை தனித்துவம் மற்றும் சமூகப் பயன்பாட்டுக்காக தேர்வு செய்யப்பட்டது.
</p><p>
விமான நிலையங்களில் பாதுகாப்பு சோதனைகள் பெரும்பாலும் நேரம் எடுத்துக்கொள்ளும். ஆனால், இந்த AI மின்மூக்கு, சில வினாடிகளில் அபாயகரமான பொருட்களை கண்டறிய முடியும். இதனால், பயணிகள் விரைவாகவும் பாதுகாப்பாகவும் சோதனைகளை கடக்க முடியும்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-21T15:21:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[கட்டா குஸ்தி 2 மீனு டீச்சர்!! நடிகை மோக்‌ஷாவின் ஓணம் ஸ்பெஷல் புகைப்படங்கள்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/gatta-kushthi-2-actress-mokksha-onam-special-photo-1787318624"></link>
            <id>https://viduppu.com/article/gatta-kushthi-2-actress-mokksha-onam-special-photo-1787318624</id>
            <summary type="text">மோக்‌ஷாநடிகர் விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பல நடிப்பில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் படம் தான் கட்டா குஸ்தி 2. இப்...</summary>
            <content type="html"><![CDATA[<h2>மோக்‌ஷா</h2><p>நடிகர் விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பல நடிப்பில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் படம் தான் கட்டா குஸ்தி 2. இப்படத்தின் மீனு டீச்சர் ரோலில் நடிகை மோக்‌ஷா நடித்திருந்தார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a1e05e8a-4ccf-4822-9cdc-dfeb284079d2/26-6a88516b16d7a.webp' /></p><p>
மீனு டீச்சராக நடித்து ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்த மோக்‌ஷா, பெங்காளி மொழியில் நடிக்க ஆரம்பித்தார். சப்போர்ட்டிங் ரோலில் நடித்த மோக்‌ஷா, தெலுங்கில் லக்கி லக்ஷ்மன் படத்தில் கதாநாயகியாக நடித்து அறிமுகமாகினார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a4c546f4-2aba-45ac-8d18-51f0c31b9058/26-6a88516bbdc8a.webp' /></p><p>
அதன்பின் தெலுங்கு, மலையாளம் மொழிகளில் நடித்துள்ள மோக்‌ஷாவுக்கு இப்போது 26 வயதுதான். இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் மோக்‌ஷா, தற்போது ஓணம் ஸ்பெஷல் போட்டோஷூட்டை பதிவிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-08-21T15:15:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[போலி கடவுச்சீட்டுடன் கனடா செல்ல முயற்சித்த இலங்கையர் தாய்வானில் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/srilankan-arrest-taiwan-while-trying-travel-canada-1787324528"></link>
            <id>https://ibctamil.com/article/srilankan-arrest-taiwan-while-trying-travel-canada-1787324528</id>
            <summary type="text">சிங்கப்பூரில் இருந்து கனடாவின் டொராண்டோ நோக்கி சென்ற விமானத்தில் பயணித்த இலங்கையர் ஒருவர், தாய்வானின் சர்வதேச விமான நிலையத்தில் போலி கனேடிய கடவுச்சீட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிங்கப்பூரில் இருந்து கனடாவின் டொராண்டோ நோக்கி சென்ற விமானத்தில் பயணித்த இலங்கையர் ஒருவர், தாய்வானின் சர்வதேச விமான நிலையத்தில் போலி கனேடிய கடவுச்சீட்டுடன் சிக்கியுள்ளார்.</p><p>
தாய்வான் உள்துறை அமைச்சின் தேசிய குடிவரவு முகவரகத்தின் தகவலின்படி, அவரது கடவுச்சீட்டில் காணப்பட்ட முரண்பாடுகளை EVA Air நிறுவன ஊழியர்கள் முதலில் அவதானித்துள்ளனர்.
</p><p>இதையடுத்து விமான நிலைய குடிவரவு அதிகாரிகளுக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில், ஆவணப் பரிசோதனை மற்றும் அடையாளச் சரிபார்ப்பின் மூலம் கடவுச்சீட்டு போலியானது கண்டறியப்பட்டது.</p><p></p><h2>அனுமதி மறுப்பு&nbsp;</h2><p>
</p><p>இந்நிலையில் குறித்த நபர் விமானத்தில் தொடர்ந்து பயணிப்பதற்கு தாய்வான் அதிகாரிகள் அனுமதி மறுத்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f5dbb5db-c4df-4024-a092-dfa4013abbe3/26-6a88687298a9d.webp' /></p><p>
விசாரணையின்போது தனது ஆவணங்களில் பிரச்சினைகள் உள்ளதா என ஆராய்ந்த அதிகாரிகள், போலி கடவுச்சீட்டு பயன்படுத்தியதை குறித்த நபர் மறைக்க முயன்றதாக தெரிவித்துள்ளனர்.</p><p>மேலும், அதிகாரிகள் கடவுச்சீட்டின் பாதுகாப்பு அம்சங்களை பரிசோதித்து, அதிலுள்ள தகவல்களை அவரது அடையாளத் தகவல்களுடன் ஒப்பிட்டுள்ளனர்.</p><p>
மேலும், விசாரணையில் சரியாக பதில் வழங்கவில்லை என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.</p><p>இதன் பின்னர் சர்வதேச நடைமுறைகளுக்கு அமைவாக குறித்த இலங்கையர் சிங்கப்பூருக்கு நாடுகடத்தப்பட்டுள்ளார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-21T15:07:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நவாலி திருவிழா வாண வேடிக்கையால் தீ விபத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/navali-festival-fireworks-cause-disaster-1787319178"></link>
            <id>https://ibctamil.com/article/navali-festival-fireworks-cause-disaster-1787319178</id>
            <summary type="text">நவாலி அந்திரான் கிராமத்தில் நேற்று இரவு நடைபெற்ற திருவிழாவின் போது
வாணவேடிக்கையால் தீ விபத்து சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.பனை மரம் ஒன்றும் மற்றும் ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>நவாலி அந்திரான் கிராமத்தில் நேற்று இரவு நடைபெற்ற திருவிழாவின் போது
வாணவேடிக்கையால் தீ விபத்து சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.</p><p>பனை மரம் ஒன்றும் மற்றும் பாதுகாப்பு வேலியும் சம்பவத்தில் தீப்பற்றி எரிந்ததுடன், சில
பொதுமக்களும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அறியப்பட்டுள்ளது.</p><p>

ஆதலால், இவ்வாறான சம்பவங்களைத் தவிர்ப்பதற்காக வழிபாட்டு தலங்களின்
நிர்வாகங்களுக்கு பலமுறை அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அரசாங்க
அதிபர் தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>தேவையற்ற&nbsp;பயன்பாடு</h2><p>
</p><p>
தேவையற்ற ஒலிபெருக்கி பயன்பாடு, பட்டாசு வெடித்தல், லேசர் ஒளிக்கீற்றுகளைப்
பயன்படுத்துதல், யானைகளை அழைத்துச் செல்லுதல் உள்ளிட்ட பொதுமக்களின்
பாதுகாப்புக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய செயற்பாடுகளைத் தவிர்க்குமாறு
தொடர்ச்சியாக கோரிக்கைகள் மற்றும் அறிவுறுத்தல்கள் ஊடகங்கள் வாயிலாகவும்
விடுக்கப்பட்டுள்ளது.</p><p>எனினும் சில ஆலயங்கள் வழங்கப்பட்ட
அறிவுறுத்தல்களுக்கு உரிய முறையில் செவிசாய்க்காமல், பொதுமக்களுக்கு சிரமத்தையும் பாதிப்பையும் ஏற்படுத்தக்கூடிய செயற்பாடுகளை முன்னெடுத்து வருவது
கவலையளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/126091cd-6d20-4eab-8919-79f75c92f206/26-6a8855c421567.webp' /></p><p>

எனவே, வழிபாட்டுத் தலங்களின் நிர்வாகத்தினர், மதகுருமார்கள் உள்ளிட்ட
பொறுப்புக்கூற வேண்டிய அனைத்து தரப்பினரும் இவ்விடயம் தொடர்பில் உரிய
நடவடிக்கைகளை முன்னெடுத்து, எதிர்காலத்தில் பொதுமக்களின் பாதுகாப்பை
உறுதிப்படுத்தும் வகையில் சமூகப் பொறுப்புணர்வுடன் திருவிழா நடவடிக்கைகளை
முன்னெடுக்க வேண்டும் என அரசாங்க அதிபர் கோரிக்கை விடுத்துள்ளார்.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-21T15:06:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மானிப்பாய் சபைக்கு நெருப்பு சட்டியுடன் வந்த உறுப்பினரால் பரபரப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/member-who-came-to-manipay-assembly-with-fire-1787323066"></link>
            <id>https://ibctamil.com/article/member-who-came-to-manipay-assembly-with-fire-1787323066</id>
            <summary type="text">மானிப்பாய் பிரதேச சபையின் மாதாந்த அமர்வானது இன்றையதினம் தவிசாளர் கந்தையா
ஜெசீதன் தலைமையில் நடைபெற்றது. இதன்போது உறுப்பினர் நா.பகீரதன் நெருப்பு
சட்டி...</summary>
            <content type="html"><![CDATA[<p>மானிப்பாய் பிரதேச சபையின் மாதாந்த அமர்வானது இன்றையதினம் தவிசாளர் கந்தையா
ஜெசீதன் தலைமையில் நடைபெற்றது.</p><p> இதன்போது உறுப்பினர் நா.பகீரதன் நெருப்பு
சட்டியுடன் திடீரென நுழைந்ததால் அங்கு ஆரவாரம் ஏற்பட்டது.
</p><p>
இது குறித்து கருத்து தெரிவித்த உறுப்பினர் நா.பகீரதன், ''கல்லூண்டாய் குப்பை மேடானது அடிக்கடி எரிகிறது. இதனால் அங்கு இருக்கின்ற
மக்கள் மிகவும் அசௌகரியங்களை எதிர் நோக்குகின்றனர். சுகாதார பிரச்சினைகளை
எதிர்கொள்ளுகின்றனர்.</p><p></p><h2>தீர்க்கமான முடிவு இல்லை</h2><p>
</p><p>
நேற்றும்கூட அந்த குப்பை மேடானது எரிகிறது. யாழ். மாநகர சபையானது பொறுப்பற்ற
வகையில் செயற்படுகிறது.

இந்த பிரச்சினையானது எமது பிரதேச சபையிலும், பல திணைக்களங்களிலும்
பேசப்பட்டிருப்பதுடன் ஊடகங்கள் வாயிலாகவும் வெளிக்கொணரபட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f211d4fc-eb3c-4371-9928-737b2d21abf8/26-6a8862bd3cee3.webp' /></p><p> </p><p>ஆனால் இதுவரை
எந்தவிதமான தீர்க்கமான முடிவும் எட்டப்படவில்லை.

கல்லூண்டாயில் பொலுத்தீன், பம்பஸ் உள்ளிட்ட கழிவு பொருட்கள் எரிவதன் மூலம்
மக்கள் சுவாசம் சம்பந்தமான நோய்களை எதிர்கொள்கின்றனர். </p><p>இதனை வெளிப்படுத்தும்
முகமாக நான் இன்று பொலுத்தீன் உள்ளிட்ட பொருட்களை எரித்துக்கொண்டு சபைக்குள்
வந்தேன். </p><p>எமது மக்கள் தினம் தினம் படுகின்ற துயரத்தை அடையாள ரீதியாக
வெளிப்படுத்துகிறேன்.

குப்பைமேடு தொடர்பாக மானிப்பாய் தவிசாளர் க.ஜெசீதனின் செயற்பாடுகள் எனக்கு
திருப்தி அளிக்கவில்லை. </p><p>மாநகர சபையின் கண்மூடித்தனமான செயற்பாட்டுக்கு
தவிசாளர் துணை போகின்றார். ஏனெனில் இது சம்பந்தமாக நான் பல தடவைகள்
கோரிக்கைகள் முன்வைத்தும் அது சம்பந்தமான எந்த விதமான நகர்களையும் தவிசாளர்
முன்னெடுக்கவில்லை.
</p><p>
யாழ். மாநகர சபையிலும் மானிப்பாய் பிரதேச சபையிலும் ஆளுங்கட்சி இலங்கை தமிழரசு
கட்சி என்பதால் தவிசாளர் க.ஜெசீதன் இந்த விடயத்தில் மாநகர சபைக்கு துணை
போகின்றார் போல் தெரிகிறது. </p><p>அவ்வாறு இல்லாமல் மக்களுடைய பிரச்சினை தீர்க்கப்பட
வேண்டும். எமது மக்கள் பாதிக்கப்படுகின்ற வேளை காட்சிக்காகவோ மேலிடத்திற்காகவோ
அவர் துணை போகின்றது என்பது ஒரு கேவலமான விடயம்" என்றார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-21T15:00:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[24 மணி நேரத்தில் 751 சந்தேகநபர்கள் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/751-suspects-arrested-in-24-hours-1787317970"></link>
            <id>https://jvpnews.com/article/751-suspects-arrested-in-24-hours-1787317970</id>
            <summary type="text">&amp;nbsp; கடந்த 24 மணி நேரத்தில், “முழு நாடுமே ஒன்றாக” என்ற தேசிய நடவடிக்கையின் கீழ் முன்னெடுக்கப்பட்டு வரும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளில் 751 சந்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; கடந்த 24 மணி நேரத்தில், “முழு நாடுமே ஒன்றாக” என்ற தேசிய நடவடிக்கையின் கீழ் முன்னெடுக்கப்பட்டு வரும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளில் 751 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p>


அவர்களில் நான்கு பேருக்கு எதிராக தடுப்புக் காவல் உத்தரவுகள் பெறப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



மேலும் மூவர் புனர்வாழ்வளிப்பதற்காக அனுப்பப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/871b1310-7f00-4ea3-b214-0cd8eb5e4bec/26-6a884ed42da4f.webp' /></p><p>



நேற்று (20) வரை முன்னெடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கைகளில் 753 போதைப்பொருள் கைப்பற்றல் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
</p><p>


இதன்போது, ஹெரோயின் 231 கிலோ 255 மில்லிகிராம், ஐஸ் 1 கிலோ 304 மில்லிகிராம், கஞ்சா 546 கிலோ 142 கிராம், கஞ்சா செடிகள் 43,122, குஷ் 1 கிலோ 52 கிராம், ஹஷீஷ் 11 கிராம், மெத்தம்பிட்டமின் 174 கிராம், மெத்தடோன் 257 கிராம் ஆகியன மீட்கப்பட்டுள்ளன.</p><p></p><p>



நாடு முழுவதும் போதைப்பொருள் விநியோகத்தை தடுத்தல், போதைப்பொருளுக்கான தேவையைக் குறைத்தல், நடவடிக்கைகளை விரிவுபடுத்துதல், போதைக்கு அடிமையானவர்களைப் புனர்வாழ்வளித்தல் மற்றும் போதைப்பொருள் துஷ்பிரயோகத்தைத் தடுத்தல் ஆகிய நோக்கங்களுடன் இந்த தேசிய நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-21T15:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[F-16 Viper போர் விமானங்களை வாங்கிய தைவான் - சீனாவை எதிர்கொள்ள புதிய நம்பிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/taiwan-got-first-two-f-16vs-against-china-j20-jets-1787324039"></link>
            <id>https://news.lankasri.com/article/taiwan-got-first-two-f-16vs-against-china-j20-jets-1787324039</id>
            <summary type="text">Taiwan first two F-16 Viper fighter jets: தைவான், அமெரிக்காவிடமிருந்து புதிய F-16 Viper விமானங்களை பெற்றுள்ளது.

 முதல் இரண்டு F-16 Viper போர் விமான...</summary>
            <content type="html"><![CDATA[<p>Taiwan first two F-16 Viper fighter jets: தைவான், அமெரிக்காவிடமிருந்து புதிய F-16 Viper விமானங்களை பெற்றுள்ளது.
</p><h2>
 முதல் இரண்டு F-16 Viper போர் விமானங்கள்</h2><p>தைவான், அமெரிக்காவிடமிருந்து இரண்டு F-16 Viper Block 70 போர் விமானங்களை முதல்கட்டமாக பெற்றுள்ளது.
</p><p>
சீனாவின் J-20 மற்றும் J-35 ஸ்டெல்த் ஜெட்களை எதிர்கொள்ளும் திறன் இந்த F-16 Viper போர் விமானங்களுக்கு உள்ளது என தைவான் நிபுணர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f039dd26-97c7-4642-a4c2-09c0214c79ac/26-6a88668a65733.webp' /></p><h2>66&nbsp;விமானங்களை வழங்க ஒப்புதல்</h2><p>2019-இல் அமெரிக்கா, தைவானுக்கு 66 F-16 Block 70/72 விமானங்களை வழங்க ஒப்புதல் அளித்தது. COVID-19 மற்றும் உற்பத்தி தாமதங்களால் விநியோகம் தள்ளிப்போனது.</p><p> தற்போது முதல் இரண்டு விமானங்கள் தைவானுக்கு வந்துள்ளன. 

இவை Chihhang Air Base-இல் நிலைநிறுத்தப்பட்டு, கிழக்கு பிராந்திய பாதுகாப்பில் பயன்படுத்தப்படும்.</p><p></p><p>
</p><h2>
F-16 Viper&nbsp;அம்சங்கள்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/297b196d-2b88-4ea4-b05d-5b773c2e7e9c/26-6a88668b1caea.webp' /></p><p>F-16 Viper-கள், Northrop Grumman நிறுவனத்தின் AN/APG-83 AESA Radar-ஐ கொண்டுள்ளன. இது ஸ்டெல்த் விமானங்களை கண்டறியவும், குறிவைக்கவும் உதவுகிறது. மேலும், Sniper aiming pod, Link 16, GPS navigation, AIM-9X Sidewinder ஏவுகணைகள் போன்ற மேம்பட்ட ஆயுதங்களும் இணைக்கப்பட்டுள்ளன.</p><p>

சீனாவின் J-20 ஸ்டெல்த் ஜெட்கள், ரேடாரில் எளிதில் கண்டறியப்படாமல் பறக்கும் திறன் கொண்டவை. ஆனால், தைவானின் F-16V-கள் Infrared Search and Track (IRST) தொழில்நுட்பத்துடன், வெப்ப சிக்னல்களை அடிப்படையாகக் கொண்டு J-20-ஐ கண்டறிய முடியும்.
</p><p></p><p>தைவான் பாதுகாப்பு அமைச்சகம், “நமது வான்வழி பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் F-16V விமானங்கள் இணைந்து, சீனாவை எதிர்கொள்ள ‘முழுமையான வான் மேலாதிக்கத்தை’ வழங்கும்” என தெரிவித்துள்ளது.</p><p>

J-20 விமானங்கள் F-35 போன்ற அமெரிக்க ஸ்டெல்த் ஜெட்களை எதிர்கொள்ள வடிவமைக்கப்பட்டவை. ஆனால், F-16V-களின் AESA Radar மற்றும் IRST தொழில்நுட்பம், J-20-ஐ பிடிக்க போதுமானதாக இருக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
</p><p>
இந்த புதிய விமானங்கள், தைவானின் பாதுகாப்பு திறனை அதிகரித்து, சீனாவின் சாத்தியமான தாக்குதலைத் தடுக்க முக்கிய பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-21T14:51:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[சாரதிகளின் கணக்குகளை தானியங்கி முறையில் முடக்கம்: Uber நிறுவனத்திற்கு 966 மில்லியன் டொலர் அபராதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/automatic-suspension-of-driver-accounts-1787323508"></link>
            <id>https://tamilwin.com/article/automatic-suspension-of-driver-accounts-1787323508</id>
            <summary type="text">சாரதிகளின் கணக்குகளை அவர்களுக்கு உரிய தகவல்களை வழங்காமல் தானியங்கி
அமைப்புகள் மூலம் முடக்கியமைக்காக, uber நிறுவனத்திற்கு ஐரோப்பிய தரவுப்
பாதுகாப்பு ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சாரதிகளின் கணக்குகளை அவர்களுக்கு உரிய தகவல்களை வழங்காமல் தானியங்கி
அமைப்புகள் மூலம் முடக்கியமைக்காக, uber நிறுவனத்திற்கு ஐரோப்பிய தரவுப்
பாதுகாப்பு விதிகளின் கீழ் 825 மில்லியன் யூரோ (சுமார் 966 மில்லியன் அமெரிக்க
டொலர்கள்) அபராதம் விதிக்க டச்சு தரவுப் பாதுகாப்பு அதிகாரசபை (AP)
தீர்மானித்துள்ளது.
</p><p>
ஐரோப்பிய பொதுத் தரவுப் பாதுகாப்பு விதிகளின் கீழ் விதிக்கப்பட்ட இரண்டாவது
மிகப்பெரிய அபராதத் தொகையாக இது கருதப்படுகின்றது.
</p><p>
2020 முதல் 2022 வரையிலான காலப்பகுதியில், மோசடிகளில் ஈடுபட்டதாக
சந்தேகிக்கப்பட்ட சாரதிகளின் கணக்குகளை போதிய மனித தலையீடுகள் இன்றியும்,
தெளிவான விளக்கமளிப்புகள் இன்றியும் கணினி அமைப்புகள் மூலம் Uber நிறுவனம்
தற்காலிகமாகவும் நிரந்தரமாகவும் முடக்கியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
</p><h2>
விதிமீறல்களுக்கான அபாராதம்</h2><p>

நபர் ஒருவரின் வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் தீர்மானங்களை கணினி
வழிமுறைகள் மூலம் மட்டுமே எடுப்பதை ஐரோப்பிய ஒன்றியத்தின் தரவுப் பாதுகாப்பு
விதிகள் தடை செய்கின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/56657479-a7ea-4b54-a7da-d73656b3aa3b/26-6a8864cb31768.webp' /></p><p>
</p><p>
மனித பரிசீலனை மற்றும் மேல்முறையீடு செய்வதற்கான வாய்ப்புகள் இன்றி இவ்வாறான
முடிவுகள் எடுக்கப்பட்டமை கடுமையான விதிமீறல் என டச்சு கட்டுப்பாட்டகம்
சுட்டிக்காட்டியுள்ளது.</p><p>

இருப்பினும், இந்தத் தீர்மானத்தையும் விதிக்கப்பட்ட அபராதத் தொகையையும்
கடுமையாக மறுத்துள்ள Uber நிறுவனம், இதற்கு எதிராக மேல்முறையீடு செய்யவுள்ளதாக
அறிவித்துள்ளது.</p><p>

சாரதிகளின் உரிமைகளைத் தாம் மதிப்பதாகவும், மிகக் குறைந்த எண்ணிக்கையிலான
சாரதிகளே இதனால் பாதிக்கப்பட்ட நிலையில் இந்த அபராதத் தொகை மிகவும் அதிகமானது
என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-21T14:47:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[துறைமுகக் கட்டமைப்பு நெருக்கடி: வெனிசுலாவில் மசகு எண்ணெய் ஏற்றுமதியில் பெரும் தாமதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/major-delay-in-venezuela-s-lubricant-exports-1787322301"></link>
            <id>https://tamilwin.com/article/major-delay-in-venezuela-s-lubricant-exports-1787322301</id>
            <summary type="text">&amp;nbsp;வெனிசுலா நாட்டின் சீரழிந்த எண்ணெய் துறைமுக முனையங்கள் காரணமாக, அந்நாட்டின்
மீளெழுச்சி பெற்றுவரும் மசகு எண்ணெய் ஏற்றுமதி கடுமையான பாதிப்புகளை
எ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;வெனிசுலா நாட்டின் சீரழிந்த எண்ணெய் துறைமுக முனையங்கள் காரணமாக, அந்நாட்டின்
மீளெழுச்சி பெற்றுவரும் மசகு எண்ணெய் ஏற்றுமதி கடுமையான பாதிப்புகளை
எதிர்நோக்கியுள்ளது.
</p><p>
பழமையான உட்கட்டமைப்புகள், மின்சாரத் தடை மற்றும் தரப் பிரச்சினைகள் காரணமாக
கப்பல்களில் எண்ணெயை ஏற்றுவதற்கு சுமார் 30 நாட்கள் வரை காத்திருக்க வேண்டிய
நிலை ஏற்பட்டுள்ளதாக கப்பல் போக்குவரத்துத் தரவுகள் மற்றும் துறைசார்
வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
</p><h2>
உள்கட்டமைப்புச் சிக்கல்கள்</h2><p>
அமெரிக்காவுடனான உடன்படிக்கையைத் தொடர்ந்து வெனிசுலாவின் எண்ணெய் ஏற்றுமதியை
விரைவாக அதிகரிக்கத் திட்டமிடப்பட்டிருந்த போதிலும், இவ்வாறான உள்கட்டமைப்புச்
சிக்கல்கள் பெரும் தடையாக உருவெடுத்துள்ளன.
</p><p>
மசகு எண்ணெய் உற்பத்தி உயர்வடைந்துள்ள போதிலும், துறைமுகங்களின் பலவீனமான
நிலைமை காரணமாக அண்மைக்காலமாக நாளொன்றிற்கு 1.25 மில்லியன் பீப்பாய்களுக்கு
மேல் ஏற்றுமதி செய்ய முடியாத சூழல் நிலவுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/164bf949-9cd8-4048-ba49-f92a924f1cd4/26-6a8860555f576.webp' /></p><p>
</p><p>
குறிப்பாக, நாட்டின் ஏற்றுமதியில் 70 சதவீதத்தைக் கையாளும் ஹோசே துறைமுகப்
பகுதியில் எண்ணெயைப் பெற்றுக்கொள்வதற்காக ஏராளமான கப்பல்கள் நங்கூரமிட்டு பல
நாட்கள் காத்திருக்கின்றன.
</p><h2>

ஏற்றுமதியை அதிகரிக்கத் திட்டம்</h2><p>பழமையான உள்கட்டமைப்புகளைப் புதுப்பிக்கும் பணிகள் முன்னெடுக்கப்படாத
நிலையில், ஏற்றுமதி அதிகரிக்கும் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல்
துறைமுகங்கள் திணறி வருகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ee7e2bee-6869-4a5b-91a0-fc16004b94e2/26-6a8860562c5c7.webp' /></p><p>
</p><p>
அத்துடன், காத்துக்கிடக்கும் கப்பல்களுக்கான தாமதக் கட்டணங்கள் மற்றும் தரப்
பிரச்சினைகள் தொடர்பில் பிணக்குகள் எழுந்துள்ளது.</p><p>

இந்த நிலையில், துறைமுகங்களின்
கட்டுப்பாட்டைத் தொடர்ந்து தங்கள் வசமே வைத்திருக்க அரசுக்குச் சொந்தமான
பி.டி.வி.எஸ்.ஏ நிறுவனம் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-21T14:40:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[கல்லீரலை பாதுகாக்கும் உணவுகள்: மருத்துவர் பரிந்துரைக்கும் 3 காய்கறிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/top-3-vegetables-for-liver-health-liver-specialist-1787245231"></link>
            <id>https://manithan.com/article/top-3-vegetables-for-liver-health-liver-specialist-1787245231</id>
            <summary type="text">நமது உடலின் மிகப்பெரிய உறுப்பான கல்லீரல், உடலில் சேரும் கழிவுகளை வடிகட்டி வெளியேற்றுவது , செரிமானத்திற்குத் தேவையான பொருட்களை உருவாக்குதல், ஊட்டச்சத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>நமது உடலின் மிகப்பெரிய உறுப்பான கல்லீரல், உடலில் சேரும் கழிவுகளை வடிகட்டி வெளியேற்றுவது , செரிமானத்திற்குத் தேவையான பொருட்களை உருவாக்குதல், ஊட்டச்சத்துக்களைச் செயல்படுத்துதல் உள்ளிட்ட பல முக்கியப் பணிகளைச் செய்கிறது.
</p><p>
உடல் எடை, செரிமானம், சர்க்கரை அளவு, ரத்த அழுத்தம் போன்றவற்றில் கவனம் செலுத்தும் நாம், கல்லீரல் ஆரோக்கியத்தையும் கவனிக்க வேண்டியது அவசியம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/23391ef0-c067-40ae-bb76-82d56b2f1fb4/26-6a87374bc9a0b.webp' /></p><p> </p><p>கல்லீரல் பாதிக்கப்படும்போது பல்வேறு உடல்நலப் பிரச்சனைகள் ஏற்படலாம்.

நல்ல செய்தி என்னவெனில், ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தின் மூலம் கல்லீரலைப் பாதுகாக்க முடியும். குறிப்பாக, சில காய்கறிகளைத் தொடர்ந்து உணவில் சேர்ப்பது கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்&nbsp;</p><p>அந்தவகையில், எய்ம்ஸ், ஹார்வர்ட் மற்றும் ஸ்டான்ஃபோர்டில் பயிற்சி பெற்ற இரைப்பை–குடல் மருத்துவ நிபுணர் டாக்டர் சௌரப் சேத்தி, கல்லீரல் ஆரோக்கியத்திற்காகத் தான் ஒவ்வொரு வாரமும் சாப்பிடும் மூன்று எளிதில் கிடைக்கக்கூடிய காய்கறிகளை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அவை என்னென்ன என்பதைப் பார்ப்போம்.</p><p></p><h2> பீட்ரூட்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e8392217-8d90-4987-9c07-27f5e9f50465/26-6a87374c7d5cc.webp' /></p><p>
கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் முக்கிய காய்கறிகளில் பீட்ரூட்டும் ஒன்று. இதில் உள்ள பீட்டாலைன்கள் பீட்ரூட்டின் அடர் சிவப்பு நிறத்திற்குக் காரணமாக இருப்பதுடன், உடலில் ஏற்படும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைக் குறைக்கவும் உதவுகின்றன. இதனால் கல்லீரலின் செயல்பாடு சிறப்பாக இருக்க உதவும்.
</p><h2>ப்ராக்கோலி</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/99a3aead-85f5-4d7c-9b6f-7759d59e907f/26-6a87374d3196f.webp' /></p><h2>
</h2><p>கல்லீரல் ஆரோக்கியத்திற்காக டாக்டர் பரிந்துரைக்கும் மற்றொரு காய்கறி ப்ராக்கோலி. இதில் உள்ள சல்ஃபோராஃபேன் கல்லீரலின் இயற்கையான நச்சு நீக்கும் செயல்பாட்டிற்கு ஆதரவளிக்கிறது. ப்ராக்கோலி பிடிக்காதவர்கள் முட்டைக்கோஸ், காலிஃப்ளவர் போன்ற காய்கறிகளையும் சாப்பிடலாம்.</p><p></p><h2>பாகற்காய்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0f5f68b6-c9e2-4348-958f-f2a4d281dce1/26-6a87374de3351.webp' /></p><p>
பாகற்காய் இரத்தச் சர்க்கரையைக் கட்டுப்படுத்தவும், இன்சுலின் உணர்திறனை மேம்படுத்தவும் உதவக்கூடும். இது கல்லீரல் ஆரோக்கியத்திற்கும் முக்கியமானது. குறிப்பாக, கொழுப்பு கல்லீரலுடன் தொடர்புடைய காரணிகளில் ஒன்றான இன்சுலின் எதிர்ப்பைக் கட்டுப்படுத்துவது, மறைமுகமாக கல்லீரல் ஆரோக்கியத்திற்கும் துணைப்புரியும்.</p><p><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/reel/DWXzObrD2nS/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/reel/DWXzObrD2nS/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/reel/DWXzObrD2nS/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by Saurabh Sethi MD MPH | Gastroenterologist (@doctor.sethi)</a></p></div></blockquote> <script async src="//www.instagram.com/embed.js"></script></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW&nbsp;</a></u></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-21T14:38:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இஞ்சி பயன்படுத்துவோருக்கு விவசாயத் திணைக்களத்தின் முக்கிய எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/threat-of-ginger-rot-disease-issues-warning-1787322077"></link>
            <id>https://tamilwin.com/article/threat-of-ginger-rot-disease-issues-warning-1787322077</id>
            <summary type="text">இஞ்சி அழுகல் நோய் குறித்துக் கவனம் செலுத்துமாறு ஏற்றுமதி விவசாயத் திணைக்களம் விவசாயிகளுக்கு அறிவித்துள்ளது.நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக இந்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>இஞ்சி அழுகல் நோய் குறித்துக் கவனம் செலுத்துமாறு ஏற்றுமதி விவசாயத் திணைக்களம் விவசாயிகளுக்கு அறிவித்துள்ளது.</p><p>நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக இந்த நோய்த்தாக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><h2>எச்சரிக்கை</h2><p>

தற்போது வர்த்தகப் பயிரான இஞ்சி, குருணாகல், கண்டி, மாத்தளை, அம்பாறை உள்ளிட்ட பல பகுதிகளில் 2,000 ஹெக்டேருக்கும் அதிகமான நிலப்பரப்பில் பயிரிடப்பட்டுள்ளதாக அதன் பணிப்பாளர் நாயகம் தமயந்தி சமரசிங்க தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f1139422-8434-4bac-bd7e-d3434a8bd7c1/26-6a88625896673.webp' /></p><p>
</p><p>
ஏற்கனவே இந்த நோய் தொற்றியிருந்தால், அதுபோன்ற புதர்களை எரித்து அழிக்குமாறு அவர் விவசாயிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-21T14:36:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளி நாடொன்றில் இரு விமானிகளைக் காப்பாற்றிய இலங்கையர்கள்; கிடைத்த வெகுமதியால் மகிழ்ச்சி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sri-lankans-rescued-two-pilots-korea-win-residency-1787316318"></link>
            <id>https://jvpnews.com/article/sri-lankans-rescued-two-pilots-korea-win-residency-1787316318</id>
            <summary type="text">&amp;nbsp; தென் கொரியாவில் இடம்பெற்ற விமான விபத்தொன்றில் கடலில் வீழ்ந்த விமானிகளில் இருவரின் உயிரைக் காப்பாற்றிய இரண்டு இலங்கையர்களுக்கு நீண்டகால வதிவிட வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; தென் கொரியாவில் இடம்பெற்ற விமான விபத்தொன்றில் கடலில் வீழ்ந்த விமானிகளில் இருவரின் உயிரைக் காப்பாற்றிய இரண்டு இலங்கையர்களுக்கு நீண்டகால வதிவிட விசா வழங்க தென் கொரிய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது. </p><p>

இது தொடர்பில் அந்நாட்டு ஊடகச் செய்திகளின்படி, 2022 ஓகஸ்ட் 12 ஆம் திகதி சியோல் நகருக்குத் தெற்கே சுமார் 45 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ள ஹ்வாசாங் கடற்கரைக்கு அப்பால் உள்ள மஞ்சள் கடலில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த மூன்று இலங்கையர்களால் மீட்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8435a161-ea87-4247-bf27-9e64fc73c283/26-6a88485fc95ac.webp' /></p><p></p><h2>&nbsp;நிரந்தரமாகத் தங்கியிருக்க உரிமை</h2><p> </p><p>

விபத்து நிகழ்ந்தவுடன் உடனடியாகச் செயற்பட்ட இவர்கள், தாங்கள் சேவையாற்றிய கொரிய மீன்பிடிப் படகின் உதவியுடன் கடலில் விழுந்த இரு விமானிகளையும் மீட்டுப் பாதுகாப்பாகக் கரைக்கு அழைத்துவர நடவடிக்கை எடுத்தனர்.</p><p></p><p> 

விபத்து இடம்பெற்ற வேளையில் இந்த இலங்கையர்கள் தென் கொரியாவின் தொழில் அனுமதி முறைமையின் (EPS) கீழ் வழங்கப்பட்ட 'E-9' விசா அனுமதிப்பத்திரத்துடன் சேவையாற்றிக் கொண்டிருந்தனர். </p><p>

பொதுவாக அந்த விசா வகையின் கீழ் வெளிநாட்டுத் தொழிலாளியொருவர் தென் கொரியாவில் அதிகபட்சமாக 4 ஆண்டுகள் 10 மாதங்கள் மட்டுமே தங்கியிருக்க முடியும்.</p><p></p><p> 

விமானிகளின் உயிரைக் காப்பாற்றுவதற்காக அவர்கள் வழங்கிய சிறப்பான பங்களிப்பு மற்றும் மனிதாபிமான சேவையைப் பாராட்டி, தென் கொரிய நீதி அமைச்சினால் குறித்த இரு இலங்கையர்களுக்கும், மீண்டும் மீண்டும் விசாவை நீட்டிக்கத் தேவையின்றி அங்கு நிரந்தரமாகத் தங்கியிருக்க உரிமைகாட்டும் இந்த நீண்டகால விசா வழங்கப்பட்டுள்ளது.</p><p></p><p> </p><p>

அதேவேளை இந்தச் சம்பவத்திற்கு உதவிய மற்றைய இலங்கையரும் ஏற்கனவே நீண்டகால விசாவைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-08-21T14:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் நெடுஞ்சாலையில் தரையிறங்கிய விமானம் வாகனம் மீது மோதி விபத்து: ஒருவர் பலி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/1-dead-after-plane-makes-emergency-l-1787305766"></link>
            <id>https://canadamirror.com/article/1-dead-after-plane-makes-emergency-l-1787305766</id>
            <summary type="text">&amp;nbsp;கனடாவின் வடக்கு பிரிட்டிஷ் கொலம்பியா பகுதியில் பொதுச் சாலையில் விமானம் ஒன்று அவசரமாகத் தரையிறக்கப்பட்டபோது ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கனடாவின் வடக்கு பிரிட்டிஷ் கொலம்பியா பகுதியில் பொதுச் சாலையில் விமானம் ஒன்று அவசரமாகத் தரையிறக்கப்பட்டபோது ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். </p><p>
நேற்று பிற்பகல் 2:20 மணியளவில், 'பீச் கிங் ஏர் 200' ரக சிறிய ரக விமானம் ஒன்று பிரின்ஸ் ஜார்ஜ் பகுதியில் உள்ள 'ஃபூட்ஹில்ஸ் போல்வர்டு' சாலையில் அவசரமாகத் தரையிறங்கியது. </p><p>அப்போது எதிர்பாராதவிதமாகச் சாலையில் சென்று கொண்டிருந்த வாகனங்கள் மீது விமானம் மோதியது. 
விமான விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதை வருத்தத்துடன் உறுதிப்படுத்துகிறோம். உயிரிழந்தவர் சாலையில் சென்ற வாகனத்தில் இருந்தவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/72cd50ff-4dd2-44f5-ae29-be7fd0f2f021/26-6a881f2814e18.webp' /></p><p>
</p><p>மேலும், விபத்து நடந்த ஃபூட்ஹில்ஸ் பகுதி, நகர மையப்பகுதியையும் ஹாட் குடியிருப்புப் பகுதியையும் இணைக்கும் மிக முக்கிய மற்றும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலை என்றும், இந்த சம்பவத்தில் இரண்டு வாகனங்கள் சேதமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
</p><p>சம்பவ இடத்திற்கு வந்த அவசர மருத்துவக் குழுவினர் காயமடைந்தவர்களுக்குப் முதலுதவி சிகிச்சைகளை அளித்தனர்.</p><p> எனினும், விமானத்தில் இருந்தவர்கள் மற்றும் வாகனங்களில் இருந்தவர்களில் எத்தனை பேர் காயமடைந்தனர் என்ற முழுமையான விவரங்களை காவல்துறை உடனடியாக உறுதிப்படுத்தவில்லை.</p><p> 
இதேவேளை, இந்தச் சோகமான சம்பவம் குறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்ட பிரிட்டிஷ் கொலம்பியா மாகாண முதலமைச்சர் டேவிட் எபி "இந்தத் துயரச் சம்பவத்தால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-21T14:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்கா - ஈரான் பேச்சுவார்த்தைக்கு சீனா மீண்டும் அழைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/china-reiterates-call-for-us-iran-talks-1787322110"></link>
            <id>https://ibctamil.com/article/china-reiterates-call-for-us-iran-talks-1787322110</id>
            <summary type="text">அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என சீனா மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
அமெரிக்கா புதிய பொருளாதா...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என சீனா மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
</p><p>அமெரிக்கா புதிய பொருளாதாரத் தடைகளை விதிக்கத் தயாராகி வரும் நிலையில் சீனா இந்த அழைப்பை விடுத்துள்ளது.
</p><p>சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் லின் ஜியான் இதனைத் தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு</h2><p>
</p><p>இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக ஊடக பதிவில்,&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c336bc28-83c5-45af-aeb8-25244e5439c4/26-6a885f0005895.webp' /></p><p>“சர்வதேச சட்டம் மற்றும் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் அனுமதியின்றி விதிக்கப்படும் ஒருதலைப்பட்ச தடைகளை சீனா எதிர்க்கின்றது.</p><p>இராணுவ பலத்தைப் பயன்படுத்துவதும் அழுத்தம் கொடுக்கும் உத்திகளும் நிலைமையை மேலும் மோசமாக்கும்.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">China opposes unilateral sanctions that lack basis in international law and UN Security Council mandate. Military force and pressure tactics will only lead to escalation that serves no one’s interests. We call on parties to act responsibly and solve disputes through dialogue and… <a href="https://t.co/6Z1QfRadsj">pic.twitter.com/6Z1QfRadsj</a></p>&mdash; CHINA MFA Spokesperson 中国外交部发言人 (@MFA_China) <a href="https://x.com/MFA_China/status/2090764849047626029?ref_src=twsrc%5Etfw">August 21, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>இத்தகைய நடவடிக்கைகள் எந்தவொரு தரப்பினருக்கும் நன்மையை ஏற்படுத்தாது” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-21T14:22:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் சர்ச்சையை ஏற்படுத்திய ஆலய சம்பவம்! சந்தேகநபருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/excessive-use-of-lighting-at-a-temple-in-jaffna-1787293143"></link>
            <id>https://tamilwin.com/article/excessive-use-of-lighting-at-a-temple-in-jaffna-1787293143</id>
            <summary type="text">புதிய இணைப்புயாழ்ப்பாணம் பிரான்பற்று முருகன் ஆலய திருவிழாவில் பயன்படுத்தப்பட்ட அதிகளவான
ஒளிப்பாவனையால் 200க்கும் மேற்பட்டோர் கண்கள் பாதிக்கப்பட்ட நில...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>யாழ்ப்பாணம் பிரான்பற்று முருகன் ஆலய திருவிழாவில் பயன்படுத்தப்பட்ட அதிகளவான
ஒளிப்பாவனையால் 200க்கும் மேற்பட்டோர் கண்கள் பாதிக்கப்பட்ட நிலையில்
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
</p><p>
இந்நிலையில் குறித்த ஒளிக்கு காரணமான மின்குமிழ்களை தம்வசம் வைத்திருந்தவர்
இளவாலை பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் விசாரணைகளின் பின்னர் இன்றையதினம்(21) மல்லாகம்
நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டார்.</p><p> அந்தவகையில் அவரை எதிர்வரும் மூன்றாம்
திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.</p><h2>ஐந்தாவது இணைப்பு</h2><p>யாழ்ப்பாணம், பிரான்பற்று பகுதியில் உள்ள முருகன் ஆலயத்தில் திருவிழாவை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்ட மின் விளக்கு அலங்காரத்தால் தற்போதுவரை 235 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.<br><br>பாதிக்கப்பட்டவர்களை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்வதற்காக பேருந்து ஒன்றும் அனுப்பி
வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>நான்காவது இணைப்பு</h2><p>பண்டத்தரிப்பு பிரான்பற்று முருகன் ஆலயத்தில் நேற்றைய(20) ஆலயத் திருவிழாவின் போது
நூற்றுக்கணக்கானோர் கண் பாதிப்புக்குள்ளான சம்பவம் தொடர்பான விசாரணைகள்
முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p><p>கண் பாதிப்புக்கான காரணத்தை கண்டறியும் நோக்கில் பொலிஸார் மற்றும்
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ள நிலையில், ஆலய
வளாகத்தில் பொருத்தப்பட்டிருந்த அதிக சக்தி கொண்ட சீனத் தயாரிப்பு மின்
விளக்குகள் சிலவற்றை பொலிஸார் கையகப்படுத்தி எடுத்துச் சென்றுள்ளனர்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/WQ7bM1YT4SA" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p>
கையகப்படுத்தப்பட்ட மின் விளக்குகள் தற்போது ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு
வருவதுடன், அவற்றின் மின்சக்தி அளவு, பயன்பாட்டுத் தன்மை மற்றும் பொதுமக்கள்
பயன்பாட்டிற்கு அவை அனுமதிக்கப்பட்டவையா அல்லது தடை செய்யப்பட்டவையா என்பது
தொடர்பிலும் ஆராயப்பட்டு வருகிறது.&nbsp;</p><h2>மூன்றாம் இணைப்பு</h2><p>யாழ்.பண்டத்தரிப்பு பிரான்பற்று முருகமூர்த்தி ஆலயத்தில் நேற்றிரவு நடைபெற்ற
திருவிழாவில் அதிகளவு ஒலி காரணமாக கண் பாதிப்புக்குள்ளானவர்கள் அனைவரும்
உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டு, அங்கு சிகிச்சை
மற்றும் விசேட கண்காணிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக
வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2c9126fe-085d-4814-86c6-16b9041742f6/26-6a8843de7f133.webp' /></p><p>
</p><p>கண் பாதிப்புக்குள்ளானவர்களில் இம்முறை உயர்தரப் பரீட்சைக்கு தோற்றும் இரு
மாணவர்களுக்கு மேலதிக சிகிச்சைகளைப் பெற்று வீடு திரும்பியுள்ளதுடன், அவர்கள்
தொடர்ந்தும் மருத்துவ கண்காணிப்பில் இருக்குமாறு பெற்றோருக்கு
அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><p>
இதற்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் தனியான விடுதியொன்று
ஒதுக்கப்பட்டு, அனுமதிக்கப்பட்டவர்களுக்கு மேலதிக வைத்தியர்கள், தாதியர்கள்
மற்றும் ஊழியர்களின் பங்களிப்புடன் சிகிச்சைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
</p><p>இந்நிலையில், தற்போது ஆண்கள் 58 பேரும், பெண்கள் 44 பேரும், சிறுவர்கள் 55
பேரும் என மொத்தம் 157 பேர் கண் பாதிப்பு உள்ளிட்ட பாதிப்புகளுக்காக
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/84d11e32-fddd-485e-bc99-2487af8f2a96/26-6a8843df65f63.webp' /></p><p>
கண் பாதிப்புக்கான அறிகுறிகள் தென்படும் அனைவரும் தாமதமின்றி உடனடியாக
வைத்தியசாலைக்கு வருமாறு சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.</p><p>
மேலும், சுகாதார சேவைகள் பணிமனை, பொலிஸார், பிரதேச செயலாளர்கள் மற்றும்
தொடர்புடைய அதிகாரிகள் இணைந்து நிலைமையை தொடர்ந்து கண்காணித்து, தேவையான
நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p><h2>இரண்டாவது இணைப்பு&nbsp;</h2><p>பண்டத்தரிப்பு பிரான்பற்று பகுதியில் நடைபெற்ற ஆலயத் திருவிழாவின் போது
இடம்பெற்ற அதிகளவிலான வாணவேடிக்கை மற்றும் லேசர் ஒளிக்கீற்றுப் பயன்பாடு
காரணமாக பலர் கண் பாதிப்புக்குள்ளாகி வைத்தியசாலைகளை நாடி வருகின்றனர்.
</p><p>இதுதொடர்பில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் கண் வைத்திய நிபுணர் வைத்தியர்&nbsp; எம். மலரவன் பொதுமக்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்களை விடுத்துள்ளார்.</p><p>
️ கண்களில் எரிச்சல், சிவத்தல், நீர்வருதல், வலி, பார்வை மங்குதல் அல்லது
ஏதேனும் மாற்றம் ஏற்பட்டால் அலட்சியம் செய்ய வேண்டாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dbf0db8c-637c-4ee7-a408-b2a7e2bc8c8e/26-6a880a998b5a2.webp' /></p><p>
</p><p>உடனடியாக அருகிலுள்ள வைத்தியசாலைக்குச் சென்று பரிசோதனை செய்து
கொள்ளுமாறும், தேவையானவர்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் கண்
சிகிச்சைப் பிரிவை நாடுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><p>
️ குறிப்பாக நேற்றைய திருவிழாவில் கலந்துகொண்ட சிறுவர்கள், பெண்கள் உள்ளிட்ட
அனைவரும் தங்களது கண்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை கவனமாக அவதானிக்க வேண்டும்.
கண்களை தேய்க்க வேண்டாம்.
</p><p>சுயமாக எந்தவொரு கண் மருந்தையும் பயன்படுத்த வேண்டாம்.
சந்தேகம் ஏற்பட்டாலும் உடனடியாக வைத்திய ஆலோசனையைப் பெறுங்கள்.
</p><p>“கண் பாதிப்பு ஏற்பட்டால் தாமதிக்காமல் வைத்தியசாலையை நாடுங்கள்” – வைத்தியர் எம். மலரவன்
இந்த அறிவிப்பை அதிகமானவர்களுக்கு பகிர்ந்து, பாதிக்கப்பட்டவர்களை உடனடியாக
வைத்தியசாலைக்கு செல்லுமாறு அறிவுறுத்துவோம்.</p><h2>வைத்தியசாலையில் அனுமதி</h2><p>யாழ்ப்பாணம்,பண்டத்தரிப்பு பிரான்பற்று பகுதியில் உள்ள முருகமூர்த்தி
ஆலயத்தில் நேற்று (20.08.2026) நடைபெற்ற திருவிழாவின் போது அதிகளவில்
வாணவேடிக்கைகள் மற்றும் அதிக சக்தி கொண்ட லேசர் ஒளிக்கீற்றுகள்
பயன்படுத்தப்பட்டதால், சிறுவர்கள், பெண்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர்
கண் பாதிப்புக்குள்ளாகி வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக
அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p><p>முதற்கட்ட தகவல்களின் அடிப்படையில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சுமார்
120 பேரும், தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் 46 பேரும் சிகிச்சைக்காக
அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><h2>நோயாளிகளின் எண்ணிக்கை&nbsp;</h2><p>

இவர்களில் சிறுவர்கள் மற்றும் பெண்கள் சுமார் 60 பேரும், ஆண்கள் 50-க்கும்
மேற்பட்டோரும் அடங்குவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. </p><p>மேலும்
பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து வைத்தியசாலைகளை நாடி வருவதால், நோயாளிகளின்
எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

“பொதுமக்கள் எவ்வித பதற்றமும் இன்றி உடனடியாக வைத்தியசாலைகளை நாடலாம்.
</p><p>அதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளன” என யாழ்ப்பாணம் போதனா
வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் ரி. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.</p><p>

இதேவேளை, பாதிக்கப்பட்டவர்களை உடனடியாக வைத்தியசாலைகளுக்குச் செல்லுமாறு
பிரதேச சபையினால் ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்டு வருகிறது.
</p><p>
குறிப்பாக கண்களில் பாதிப்பு, எரிச்சல் அல்லது பார்வை தொடர்பான பிரச்சினைகள்
ஏற்பட்டவர்கள் தாமதிக்காமல் அருகிலுள்ள வைத்தியசாலையை நாடுமாறு
அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><h2>ஆலயத் திருவிழா</h2><p>
</p><p>
மேலும், ஆலயத் திருவிழாவின் போது மின் இணைப்புகளை வழங்கியதாகக் கூறப்படும்
சிலர் இளவாலை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.</p><p>

இதனிடையே, இதேபோன்று நவாலி அந்திரான் பகுதியில் நடைபெற்ற ஆலயத் திருவிழாவின்
போதும் வாணவேடிக்கையால் அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2a4f5d61-1510-4a3f-bdb4-a5434702ed78/26-6a87f1b62cc5d.webp' /></p><p>
</p><p>இதன்போது பனை மரம் ஒன்றும் பாதுகாப்பு வேலியும் தீப்பற்றி எரிந்ததுடன், சில
பொதுமக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.</p><p>

இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் கவலை வெளியிட்டுள்ள யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க
அதிபர் மருதலிங்கம் பிரதீபன், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும்
வகையில் ஆலய நிர்வாகங்கள் மற்றும் மதகுருமார்கள் உள்ளிட்ட அனைத்து
பொறுப்புக்கூற வேண்டிய தரப்பினரும் சமூகப் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என
கேட்டுக்கொண்டுள்ளார்.
</p><p>
தேவையற்ற ஒலிபெருக்கி பயன்பாடு, அதிகளவிலான பட்டாசு மற்றும் வாணவேடிக்கை, அதிக
சக்தி கொண்ட லேசர் ஒளிக்கீற்றுகள் உள்ளிட்ட பொதுமக்களின் பாதுகாப்புக்கு
பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய செயற்பாடுகளைத் தவிர்க்குமாறும் அவர்
வலியுறுத்தியுள்ளார்.
</p><p>
பொதுமக்களின் பாதுகாப்பை விட எந்தவொரு திருவிழா கொண்டாட்டமும் முக்கியமானதல்ல
எனவும், எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாத வகையில் ஆலய
நிர்வாகங்கள் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும்
கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p><p><b><i>&nbsp;மேலதிக தகவல் - தீபன்</i></b></p><h2>முதலாம் இணைப்பு</h2><p>யாழ்ப்பாணம், பிரான்பற்று பகுதியில் உள்ள முருகன் ஆலயத்தில் திருவிழாவை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்ட மின் விளக்கு அலங்காரத்தால் சுமார் 35 பேருக்கு கண் பார்வை பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>

குறித்த ஆலயத்தில் திருவிழா நடைபெற்று வரும் நிலையில், ஆலய வளாகம் பல்வேறு மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
</p><h2>பார்வை பிரச்சினை</h2><p>
இந்நிலையில், அதிகளவில் பயன்படுத்தப்பட்ட மின் விளக்குகளின் ஒளியால் நேற்று ஆலயத்திற்கு சென்றவர்களில் சுமார் 35 பேருக்கு கண் பார்வை தொடர்பான பாதிப்புகள் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b96d6b16-a4d5-4f7b-9533-87ec33cef535/26-6a87f1b55bdf5.webp' /></p><p>பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
</p><p>
இதனையடுத்து, குறித்த ஆலயத்திற்கு நேற்று சென்ற அனைவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குச் சென்று கண் பரிசோதனை மேற்கொள்ளுமாறு யாழ்ப்பாணம் மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் அறிவுறுத்தியுள்ளனர்.</p><p></p><p></p><p>YOU MAY LIKE THIS VIDEO</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/CFWVi5B8mkE" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-08-21T14:20:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[26 வயதில் இளவரசரான கார் விற்பனையாளர் - சட்டப்படி மகனாக அங்கீகரித்த பெல்ஜியத்தின் இளவரசர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/belgium-prince-recognises-his-son-as-royal-1787322051"></link>
            <id>https://news.lankasri.com/article/belgium-prince-recognises-his-son-as-royal-1787322051</id>
            <summary type="text">Belgium prince recognises son as royal: 26 வயதில் பெல்ஜியத்தின் அரச குடும்பத்தில் ஒருவர் அதிகாரபூர்வமாக இணைந்துள்ளார்.

கார் விற்பனையாளர்பெல்ஜியம் ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>Belgium prince recognises son as royal: 26 வயதில் பெல்ஜியத்தின் அரச குடும்பத்தில் ஒருவர் அதிகாரபூர்வமாக இணைந்துள்ளார்.
</p><h2>
கார் விற்பனையாளர்</h2><p>பெல்ஜியம் நாட்டின் இளவரசரான லாரன்ட் (Prince Laurent), 26 வயதான கிளெமென்ட் வான்டென்கெர்கோவ (Clement Vandenkerckhove) என்பவரை தனது மகனாக சட்டப்படி அங்கீகரித்துள்ளார்.</p><p>
இதன் மூலம், கார் விற்பனையாளராக இருந்த கிளெமென்ட் வான்டென்கெர்கோவே இப்போது அதிகாரப்பூர்வமாக அரச குடும்பத்தின் ஒரு உறுப்பினராகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3e21e75e-44d2-41e8-91d8-1dad4b783dc3/26-6a885ec68de4f.webp' /></p><h2>அரச குடும்ப அந்தஸ்து</h2><p>அவர் தனது வாழ்க்கையை சாதாரணமாக நடத்தி வந்த நிலையில், இளவரசர் லாரன்ட் அவரை தனது மகனாக சட்டரீதியாக ஏற்றுக்கொண்டது பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><p> இந்த அங்கீகாரம் மூலம் அவர் அரச குடும்பத்தின் உரிமைகள் மற்றும் அந்தஸ்துகளை பெறுகிறார்.

இது பெல்ஜிய அரச குடும்பத்தில் முக்கியமான நிகழ்வாகக் கருதப்படுகிறது. </p><p></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8c196ec3-0e25-4a7c-b487-b0a7ca946fd9/26-6a885ec5d6b2b.webp' /></p><p>பல ஆண்டுகளாக தனிப்பட்ட வாழ்க்கையை நடத்தி வந்த இளைஞர், இப்போது அரச குடும்பத்தின் ஒரு பகுதியாக இருப்பது சமூக மற்றும் அரசியல் வட்டாரங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.</p><p>

இந்த அங்கீகாரம் அரச குடும்பத்தின் பாரம்பரியத்திலும், எதிர்காலத்தில் அரசியல் மற்றும் சமூக உறவுகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என கூறப்படுகிறது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-21T14:18:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[தொழிலதிபர் கந்தையா பாஸ்கரன் அரசியலுக்கு வருகின்றாரா..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/is-kandiah-bhaskaran-entering-politics-1787320749"></link>
            <id>https://tamilwin.com/article/is-kandiah-bhaskaran-entering-politics-1787320749</id>
            <summary type="text">தான் அரசியலுக்கு வருவது குறித்து இதுவரை எந்தவொரு முடிவையும் எடுக்கவில்லை என தொழிலதிபர் கந்தையா பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.

தற்போதைய அரசியல் சூழலும் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>தான் அரசியலுக்கு வருவது குறித்து இதுவரை எந்தவொரு முடிவையும் எடுக்கவில்லை என தொழிலதிபர் கந்தையா பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.</p><p>

தற்போதைய அரசியல் சூழலும் சில அரசியல்வாதிகளின் விமர்சனங்களுமே தன்னை அரசியல் களத்திற்குள் தள்ள முயற்சிப்பதாக தெரிவித்துள்ளார்.</p><p>

லங்காசிறிக்கு வழங்கிய நேர்காணலிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
</p><p>
மேலும் குறிப்பிட்ட அவர், </p><p>

தான் எந்தவொரு அரசியல் கட்சியுடனும் இணையவில்லை என்றும், தற்போதைக்கு தனது சமூகப் பணிகளையும் வர்த்தக நடவடிக்கைகளையும் தொடர்ந்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
மக்களுக்கு மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் தனது சொந்த முயற்சியில் ‘ரீச்சா’ (REECHA) உள்ளிட்ட திட்டங்களை முன்னெடுத்து வருவது சில அரசியல்வாதிகளுக்கு பிடிக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
</p><p>
தான் வளர்வது தங்களது அரசியலுக்கு அச்சுறுத்தலாக அமையும் என சில அரசியல்வாதிகள் கருதுவதாகவும், இதன் காரணமாகவே தன்னை அரசியல்வாதியாக சித்தரித்து விமர்சனங்களை முன்வைத்து வருவதாகவும் கந்தையா பாஸ்கரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
</p><p>
தான் அரசியலுக்கு வர வேண்டும் என்ற ஆசையில் இருப்பதைவிட, தன்னைச் சுற்றியுள்ள அரசியல்வாதிகளே தொடர்ந்து விமர்சனங்களை முன்வைத்து அரசியல் களத்திற்குள் தள்ள முயற்சிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
</p><p>
எனினும், எதிர்காலத்தில் அரசியலுக்கு வருவாரா அல்லது தனது தொழில் மற்றும் சமூகப் பணிகளில் தொடர்ந்து பயணிப்பாரா என்பது குறித்து தற்போது எந்த முடிவும் எடுக்கவில்லை எனவும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
</p><p>
முழுமையான விடயங்களுக்கு கீழுள்ள காணொளியை காண்க..</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/6A0I_zgeOSg" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-21T14:14:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாடளாவிய ரீதியில் திடீர் சுற்றிவளைப்பு: ஆயிரக்கணக்கானோர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/751-suspects-arrested-sri-lanka-1787320068"></link>
            <id>https://tamilwin.com/article/751-suspects-arrested-sri-lanka-1787320068</id>
            <summary type="text">நாடளாவிய ரீதியில் கடந்த 24 மணி நேரத்தில் முழு நாடுமே ஒன்றாக நடவடிக்கையின் மூலம் 751 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.அத்தோடு, அவர்களில் நான்கு பே...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடளாவிய ரீதியில் கடந்த 24 மணி நேரத்தில் முழு நாடுமே ஒன்றாக நடவடிக்கையின் மூலம் 751 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>அத்தோடு, அவர்களில் நான்கு பேருக்கு எதிராக தடுப்பு காவல் உத்தரவு பெறப்பட்டுள்ளதாகப் பொலிஸார் அறிவித்துள்ளதுடன் மேலும் மூவர் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p>

நேற்று (20) மாத்திரம் மேற்கொள்ளப்பட்ட முழுமையான சுற்றிவளைப்புக்களின் எண்ணிக்கை 753 ஆகும்.</p><p></p><h2>தேசிய நடவடிக்கை</h2><p> 

நாடளாவிய ரீதியில் போதைப்பொருள் விநியோகத்தைக் கட்டுப்படுத்தல், போதைப்பொருளுக்கான கேள்வியைக் குறைத்தல், நடவடிக்கைகளை விரிவுபடுத்துதல், போதைக்கு அடிமையானவர்களைப் புனர்வாழ்வுக்கு உட்படுத்தல் மற்றும் போதைப்பொருள் துஷ்பிரயோகத்தைத் தடுத்தல் ஆகிய நோக்கங்களுடன் 'முழு நாடுமே ஒன்றாக' தேசிய நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cf761a87-c63b-4a4b-ba3a-c42b92876e22/26-6a885b6f1200f.webp' /></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-21T14:13:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டில் ஆபத்தான நிலையில் மீன்வளம் - விசாரணை துரிதப்படுத்துமாறு நாடாளுமன்றத்தில் கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/government-launches-detailed-investigation-1787320457"></link>
            <id>https://tamilwin.com/article/government-launches-detailed-investigation-1787320457</id>
            <summary type="text">நாட்டில் மீன்வளம் குறைந்து வருவதாக இலங்கை கடற்றொழிலாளர்கள் மற்றும் ஊடகங்கள் வெளியிடும் தகவல்கள் தொடர்பில் விரிவான விசாரணைகளை நடத்துமாறு இலங்கையின் கடற...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டில் மீன்வளம் குறைந்து வருவதாக இலங்கை கடற்றொழிலாளர்கள் மற்றும் ஊடகங்கள் வெளியிடும் தகவல்கள் தொடர்பில் விரிவான விசாரணைகளை நடத்துமாறு இலங்கையின் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் துணை அமைச்சராக தேசிய மக்கள் சக்தி கட்சியைச் சேர்ந்த ரத்ன கமகே தெரிவித்துள்ளார். </p><p>

இது தொடர்பில் இன்று(21.08.2026) நாடாளுமன்றத்தில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். </p><h2>

நாட்டில் குறைந்து வரும் மீன்வளம்</h2><p>
அவர் மேலும் தெரிவிக்கையில், </p><p>

நாட்டில் மீன்வளம் குறைந்து வருவதாக செய்தித்தாள் அறிக்கைகளை நான் பார்த்திருக்கிறேன். </p><p>அதில் ஓரளவு உண்மை இருப்பதாகத் தெரிகிறது.


கடல் சூழலில் ஏற்படும் மாற்றங்கள், கடல் மாசுபாடு மற்றும் அதிகரித்து வரும் கடல் வெப்பநிலை உள்ளிட்ட பல்வேறு காரணிகள் மீன் இருப்பு குறைவதற்கு பங்களிக்கக்கூடும்.
</p><p>
உலகின் பல்வேறு கடல் பகுதிகளிலும் இதேபோன்ற மாற்றங்கள் காணப்படுவதால், இந்த நிலைமை எல் நினோ நிகழ்வுகளுடன் தொடர்புடையதா என்பதை விசாரிக்க வேண்டியது அவசியம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/63d1600b-76ff-449c-b75c-602250656646/26-6a885ca34b0ae.webp' /></p><p>
</p><p>
 கடலில் பாசிகளின் அளவு குறைவது ஒளிச்சேர்க்கை செயல்முறையைத் தடுக்கின்றதால், மீன் இனங்களின் வளர்ச்சிக்கும் உயிர்வாழ்விற்கும் தேவையான கடல் சூழலையும் பாதிக்கக்கூடும்.</p><h2>

காலநிலை மாற்றம்..</h2><p>
மேலும், கடல் வெப்பநிலை அதிகரிப்பால், சில மீன் இனங்கள் ஆழ்கடல் பகுதிகளுக்கு இடம்பெயர வாய்ப்பு உள்ளது. இந்த நிலைமையால் நாட்டில் ஆங்காங்கே பாரம்பரியமாக மீன்பிடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் பகுதிகளில் மீன்வளம் குறைவதற்கு வழிவகுக்கலாம்.</p><p>

சட்டவிரோத மற்றும் அழிவுகரமான மீன்பிடி முறைகளால் மீன்வளத்திற்கு ஏற்படக்கூடிய சேதத்தால், ஒழுங்குபடுத்தப்படாத இதுபோன்ற மீன்பிடி முறைகள் மீன்வளத்தைப் பாதிக்கக்கூடும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/999a3619-5378-45f7-98e8-65cfbca61776/26-6a885ca43b393.webp' /></p><p>

மேலும், மீன்வளத்தின் தற்போதைய நிலை, மீன் உற்பத்தியில் ஏற்படும் மாற்றங்கள், அவற்றின் வாழ்விடங்களில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் அவற்றைப் பாதிக்கும் காரணிகள் குறித்து ஒரு விரிவான ஆய்வை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு NARA-க்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><p> 

அத்துடன், கண்டறியப்பட்ட சிக்கல்களுக்குத் தீர்வு காணவும், மீன்வளத்தைப் பாதுகாக்கவும் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த பரிந்துரைகளைச் சமர்ப்பிக்குமாறு NARA-விடம் கோரப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>

இந்த ஆய்வறிக்கை மீன்வளத்துறை அமைச்சகத்தின் செயலாளரிடம் ஒப்படைக்கப்படும் என எதிர்பார்க்கின்றோம் என்றார்.</p><p><b>YOU MAY&nbsp; LIKE THIS VIDEO..</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/ok1iskLKzWo" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p><p> </p>]]></content>
            <updated>2026-08-21T14:11:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[திருவிழா நிகழ்வில் கண் பாதிப்புக்குள்ளான பக்தர்கள்: தென் கயிலை ஆதீனம் விடுத்துள்ள கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/devotees-affected-by-festival-eye-disease-1787321152"></link>
            <id>https://ibctamil.com/article/devotees-affected-by-festival-eye-disease-1787321152</id>
            <summary type="text">யாழ் மாவட்ட சைவத்திருக்கோவில் ஒன்றில் நேற்று இரவு எமது&amp;nbsp; இடம்பெற்ற திருவிழா
நிகழ்வின் அதீத வெளிச்சத்தை வெற்றுக்கண்ணால் பார்த்த பலர் கண்
பாதிப்பு...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ் மாவட்ட சைவத்திருக்கோவில் ஒன்றில் நேற்று இரவு எமது&nbsp; இடம்பெற்ற திருவிழா
நிகழ்வின் அதீத வெளிச்சத்தை வெற்றுக்கண்ணால் பார்த்த பலர் கண்
பாதிப்புக்குள்ளாகி வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்ட்டிருக்
கின்றமை மிகுந்த துயரத்தைத் தோற்றுவித்துள்ளது என
தென் கயிலை ஆதீனம் தவத்திரு அகத்தியர் அடிகளார் தெரிவித்துள்ளார்.</p><p>

அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். </p><p>அதில்
மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

அதே போல கடந்த மாதங்களில் சில ஆலய திருவிழாக்களில் மிகவும் விரும்பத்தகாத ஆடல்
பாடல் நிகழ்ச்சிகள் சைவசமயிகளிடையே பெருமை விசனத்தை ஏற்படுத்தியிருந்தது.</p><p>[FAFAGWS
]</p><h2>சைவ பரிபாலன சபை</h2><p>சைவ பரிபாலன சபை இந்து கலாச்சார திணைக்களம் என்பன சில ஒழுங்குவிதிகளை
கட்டுப்பாடுகளை ஏற்கனவே திருக்கோவில்களிடம் வலியுறுத்தி உள்ளன அது
வரவேற்கத்தக்கது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c3a6213e-dd9d-4055-8735-2b217fe41b0f/26-6a885b423deb5.webp' /></p><p>
</p><p>
ஆதலினால் அன்புக்குரிய ஆலய அறங்காவலர்களே எக்காரணம் கொண்டும் ஆலய
திருவிழாக்களில் இவ்வாறான எந்த களியாட்டங்களிற்கோ அதிக வெளிச்சம் பாய்ச்சல்
நிகழ்வுகளிற்கோ ஒலி எழுப்புதலுக்கோ இடம் அளிக்காதீர்கள்.</p><p>

இந்த விடயத்தை மிகவும் சிரத்தை எடுத்து தலைமேற்கொண்டு கோவிலை தழுவிய குடிகள்
குடிகளை தழுவிய கோவில் என்பதற்கு உயிர் கொடுக்குமாறு அனைத்து ஆலயம் சார்ந்த
சைவ பெருமக்களையும் கேட்டுக் கொள்கின்றோம். </p><p>அதே நேரம் சட்டத்தை மிக இறுக்கமாக
நடைமுறைப்படுத்துமாறு சகல சம்பந்தப்ட்ட தரப்புக்களையும் கோருவதுடன்
அவர்களிற்கு அனைத்து சைவ சமயிகளும் பூரண ஒத்துழைப்பு வழங்குமாறும் கேட்டு
கொள்கின்றோம்.</p><p>

பாதிக்கப்பட்ட பக்தர்கள் விரைந்து குணம்பெற அன்பே உருவான இறை சிவனை
பிரார்த்திக்கின்றோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-21T14:06:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[1 பைசாவில் தாய்மாமன் தங்க மோதிரம் ஒப்பந்தம் கோரிய ஜாய் ஆலுக்காஸ் - சந்தேகம் கிளப்பும் அதிமுக]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/joyalukkas-1paisa-tender-to-thanga-modhiram-scheme-1787321049"></link>
            <id>https://ibctamilnadu.com/article/joyalukkas-1paisa-tender-to-thanga-modhiram-scheme-1787321049</id>
            <summary type="text">joyalukkas 1paisa tender for thaimaman thanga modhiram scheme: தாய்மாமன் தங்க மோதிரம் திட்ட ஒப்பந்தம் பெற ஜாய் ஆலுக்காஸ் 1 பைசாவிற்கு ஒப்பந்தம் கோரிய ...</summary>
            <content type="html"><![CDATA[<p>joyalukkas 1paisa tender for thaimaman thanga modhiram scheme: தாய்மாமன் தங்க மோதிரம் திட்ட ஒப்பந்தம் பெற ஜாய் ஆலுக்காஸ் 1 பைசாவிற்கு ஒப்பந்தம் கோரிய நிலையில் அதிமுக சந்தேகம் எழுப்பியுள்ளது.
</p><h3>
தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்</h3><p> 

தவெகவின் தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்த தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்தை பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாளான செப்டம்பர் 15, 2026 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் துவக்கி வைக்க உள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1b18f5c2-c027-4f7d-9d02-75061092effa/26-6a885ada8874d.webp' /></p><p>

இதன்படி, அரசு மருத்துவமனைகளில் பிரசவிக்கும், தமிழ்நாட்டில் நிரந்தரமாக வசிக்கும் குடும்பங்களை சார்ந்த தாய்மார்களின் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்படும். </p><p>

இத்திட்டத்தை செயல்படுத்துவதற்காக தமிழ்நாடு அரசு ரூ.755.83 கோடி நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது. </p><h3> 

1 பைசாவில் ஒப்பந்தம் கோரிய ஜாய் ஆலுக்காஸ்</h3><p>

மேலும், முதற்கட்டமாக 4,41,667 தங்க மோதிரங்களை கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தம் கடந்த ஜூலை 14ம் தேதி வெளியிடப்பட்டது. </p><p>

அந்த தங்க மோதிரங்கள் 22 காரட் தூய்மையுடனும், 916 தரச்சான்றிதழ் கட்டாயம் இருக்கவேண்டும் என டெண்டரில் கூறப்பட்டுள்ளது.</p><p>

இந்த திட்டத்துக்காக டெண்டர் கோரிய நிறுவனங்களின் பட்டியல் வெளியானதில், ஜாய் ஆலுக்காஸ் நிறுவனம் தங்க விலை தவிர்த்து, செய்கூலி, சேதாரம், ஹால்மார்க் முத்திரை, பேக்கிங், காப்பீடு, போக்குவரத்து என அனைத்துக்கும் சேவைக் கட்டணமாக 1 பைசா வழங்கினால் போதும் என விண்ணப்பித்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/63b98ad3-426a-496c-af5d-92d281b7d9eb/26-6a885adb3b007.webp' /></p><p> 

இதனால் அந்த நிறுவனத்திற்கே ஒப்பந்தம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><h3>

சந்தேகம் கிளப்பும் அதிமுக</h3><p>

இந்த விவகாரம் குறித்து சந்தேகம் எழுப்பும் விதமாக அதிமுகவின் ஐடி விங் பதிவு வெளியிட்டுள்ளது. </p><p>

இந்த பதிவில், "தாய் மாமன் தங்க மோதிரம்” திட்டத்தின் ஒப்பந்தப்புள்ளி கோரிய நிறுவனங்கள் குறித்த விவரங்கள் சமூக ஊடகங்களில் செய்தியாக வந்துள்ளன.
</p><p>
அதில், “ஜாய் அலுக்காஸ்” என்ற நிறுவனம் 0.01 பைசா செய்கூலி சேதார அளவில் இந்த மோதிரத்தை செய்வதாக கூறி ஒப்பந்தத்தைப் பெற்றுள்ளதாக செய்திகள் வருகின்றன.&nbsp;</p><p><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">“தாய் மாமன் தங்க மோதிரம்” திட்டத்தின் ஒப்பந்தப்புள்ளி கோரிய நிறுவனங்கள் குறித்த விவரங்கள் சமூக ஊடகங்களில் செய்தியாக வந்துள்ளன.<br><br>அதில், “ஜாய் அலுக்காஸ்” என்ற நிறுவனம் 0.01 பைசா செய்கூலி சேதார அளவில் இந்த மோதிரத்தை செய்வதாக கூறி ஒப்பந்தத்தைப் பெற்றுள்ளதாக செய்திகள் வருகின்றன.<br><br>இந்த… <a href="https://t.co/ood2PRhELk">pic.twitter.com/ood2PRhELk</a></p>&mdash; AIADMK IT WING (@AIADMKITWINGOFL) <a href="https://x.com/AIADMKITWINGOFL/status/2090739245283697130?ref_src=twsrc%5Etfw">August 21, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>
இந்த ஜாய் அலுக்காஸ் நிறுவனத்தின் Sister Concern எனக் கூறப்படும் ஜோஸ் அலுக்காஸ் நிறுவனத்தின் Brand Ambassador ஆக விளம்பரங்கள் நடித்தவர் யார் தெரியுமா?

நம்ம ப்ரோ @actorvijay தான்!
</p><p>
மற்ற நிறுவனங்கள் எல்லாம் 400-15000 ரூபாய் வரை செய்கூலி அளவு கோரிய போது, இந்த நிறுவனம் மற்றும் ஒரு பைசா கோரி இருப்பது புருவங்களை உயர்த்தாமல் இல்லை.
</p><p>
தமிழக அரசு Major Shareholder ஆக இருக்கும் Titan நிறுவனத்திடம் இந்த விலையை Match செய்ய அரசு கோரியதா? தனியார் நிறுவனம் செய்வதற்கு பதிலாக அரசு நிர்வகிக்கும் நிறுவனமே செய்தால் அது இன்னும் செம்மையாக அமையுமே? ஆவன செய்வீர்களா முதல்வர்?" என தெரிவித்துள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-21T14:04:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரவி மோகன் படவிழாவில் அவமானமா போச்சு!! வேதனையை சொன்ன நடிகை வினோதினி...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/vinodhini-shared-bad-incident-during-comali-movie-1787317458"></link>
            <id>https://viduppu.com/article/vinodhini-shared-bad-incident-during-comali-movie-1787317458</id>
            <summary type="text">தமிழ் சினிமாவில் குணச்சித்திர நடிகராக நடித்து வரும் நடிகர் மன்சூர் அலி கான், பட நிகழ்ச்சி ஒன்றில், கருப்பு படத்தின் பாடல் காட்சியில் தான் நடித்த காட்ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழ் சினிமாவில் குணச்சித்திர நடிகராக நடித்து வரும் நடிகர் மன்சூர் அலி கான், பட நிகழ்ச்சி ஒன்றில், கருப்பு படத்தின் பாடல் காட்சியில் தான் நடித்த காட்சி இல்லை என்று கூறி தன்னுடைய வேதனையை வெளிப்படுத்தியது பேசு பொருளானது. அவரை தொடர்ந்து பேசிய நடிகை வினோதினி, தனக்கு நடந்த ஒரு சம்பவத்தை கூறி மன்சூர் அலி கானை சமாதானப்படுத்தியிருக்கிறார்.</p><h2>வினோதினி</h2><p> </p><p>அதில், கடந்த 2019ல் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ரவி மோகன் நடிப்பில் கோமாளி படத்தில் மிக முக்கியமான ரோலில் வினோதினி நடித்திருந்தார். படத்தை வேல்ஸ் நிறுவனம் தயாரித்த நிலையில், கோமாளி படம் தொடர்பான நிகழ்ச்சிக்கு வினோதினி அழைக்கப்பட்டிருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a741f827-01f7-4e15-870b-958a10164cb3/26-6a884cd4d3219.webp' /></p><p> இதற்காக ஒரு மணி நேரம் மேக்கப், உடை என்று நேரல் செலவழித்து அந்நிகழ்ச்சிக்கு சென்றால், கடைசி இருக்கைக்கு இரண்டு வரிசை முன்னால் உட்கார வைக்கப்பட்டாராம். மேடையில்கூட தன்னை அழைத்து பேசவில்லை, இதனால் கோபமடைந்து அங்கிருந்து கிளம்பியிருக்கிறார். </p><p>அதேபோல் படம் வெளியானப்பின் சென்னையிலுள்ள ஈகா தியேட்டரில் பார்க்க சென்றபோது அவருடைய காட்சிகள் வந்ததும் அருகிலிருந்த பெண் ஒருவர் கட்டிப்பிடித்து அழுதுள்ளார். </p><p>அதனால் இந்நிகழ்வை குறிப்பிட்டு படங்களோ, மற்ற இடங்களோ நீங்கள் இருட்டடிப்பு செய்தாலும் இந்த உலகம் அதனைப்பார்த்துக் கொண்டு சும்மா இருக்காது, நிச்சயமாக உங்களுக்கு கிடைக்க வேண்டிய அங்கீகாரம் கிடைக்கும் என்று தெரிவித்துள்ளார் வினோதினி.</p>]]></content>
            <updated>2026-08-21T14:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மானிப்பாய் பிரதேச சபைக்கு தீச்சட்டியுடன் வந்த உறுப்பினர்! திடீரென நுழைந்ததால் பரபரப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/manipay-pradeshiya-sabha-carrying-a-fire-pot-1787316641"></link>
            <id>https://jvpnews.com/article/manipay-pradeshiya-sabha-carrying-a-fire-pot-1787316641</id>
            <summary type="text">&amp;nbsp;யாழ்ப்பாணம் மானிப்பாய் பிரதேச சபையின் மாதாந்த அமர்வில், உறுப்பினர் நா. பகீரதன் தீச்சட்டியுடன் திடீரென நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;யாழ்ப்பாணம் மானிப்பாய் பிரதேச சபையின் மாதாந்த அமர்வில், உறுப்பினர் நா. பகீரதன் தீச்சட்டியுடன் திடீரென நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.</p><p>



மானிப்பாய் பிரதேச சபையின் மாதாந்த அமர்வு இன்று (21) தவிசாளர் கந்தையா ஜெசீதன் தலைமையில் நடைபெற்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f6c7b432-8ea7-4612-af61-0136af749475/26-6a8849a3074b8.webp' /></p><h2>கல்லூண்டாய் குப்பை மேடு -&nbsp;கடுமையான சுகாதாரப் பிரச்சினை</h2><p> </p><p>இதன்போதே உறுப்பினர் நா. பகீரதன் நெருப்பு சட்டியுடன் சபைக்குள் நுழைந்தார்.



கல்லூண்டாய் குப்பை மேடு அடிக்கடி தீப்பற்றி எரிவதால், அப்பகுதி மக்கள் கடுமையான சுகாதாரப் பிரச்சினைகளை எதிர்கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார்.</p><p></p><p>
</p><p>


குப்பை மேட்டில் பொலித்தீன் உள்ளிட்ட கழிவுப் பொருட்கள் எரிவதால் ஏற்படும் புகையைச் சுவாசிப்பதன் மூலம் மக்கள் சுவாச நோய்களுக்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.</p><p></p><p>



இந்தப் பிரச்சினை தொடர்பில் பல்வேறு தரப்பினரிடமும், மானிப்பாய் பிரதேச சபையிலும் பலமுறை தெரிவிக்கப்பட்ட போதிலும் இதுவரை தீர்க்கமான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அவர் குற்றஞ்சாட்டினார்.
</p><p>


கல்லூண்டாய் குப்பை மேட்டில் மக்கள் தினமும் எதிர்கொள்ளும் பாதிப்பை அடையாளப்படுத்தும் வகையிலேயே நெருப்பு சட்டியுடன் சபைக்குள் வந்ததாகவும் உறுப்பினர் நா. பகீரதன் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-21T14:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளராக ஹஷான் திலகரத்ன]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sri-lanka-cricket-team-s-new-batting-coach-1787320568"></link>
            <id>https://ibctamil.com/article/sri-lanka-cricket-team-s-new-batting-coach-1787320568</id>
            <summary type="text">இலங்கை ஆண்கள் கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளராக முன்னாள் உலகக் கிண்ண வெற்றியாளர் ஹஷான் திலகரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை கிரிக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை ஆண்கள் கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளராக முன்னாள் உலகக் கிண்ண வெற்றியாளர் ஹஷான் திலகரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.
</p><p>
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தேசிய உயர் செயல்திறன் மையத்தில் பணியாற்றவுள்ள அவர், மூத்த ஆடவர் அணியின் தேசிய வீரர்களுடன் இணைந்து செயல்படவுள்ளார்.</p><p>

முன்னதாக இலங்கைஆடவர் தேசிய அணியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளராகவும், இலங்கை மகளிர் தேசிய அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராகவும் ஹஷான் திலகரத்ன பணியாற்றியுள்ளார்.</p><p></p><h2>புதிய நியமனம்&nbsp;</h2><p>
அத்துடன், பங்களாதேஷ் மகளிர் தேசிய அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராகவும் அவர் கடமையாற்றியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d3a8bb26-a1ab-4889-a85e-ffca1c4f9775/26-6a8858fb23418.webp' /></p><p>

1989 முதல் 2003ஆம் ஆண்டு வரை இலங்கை அணிக்காக விளையாடிய ஹஷான் திலகரத்ன, 83 டெஸ்ட் மற்றும் 200 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று, இரு வடிவங்களிலும் 8,200க்கும் மேற்பட்ட சர்வதேச ஓட்டங்களைப் பெற்றுள்ளார்.</p><p>

அவரது புதிய நியமனம் 2026 ஆகஸ்ட் 20ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளதுடன், 2027 டிசம்பர் 31ஆம் திகதி வரை தொடரும் என இலங்கை கிரிக்கெட் அறிவித்துள்ளது.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-21T13:56:59+00:00</updated>
        </entry>
    </feed>
