<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-09-11T19:29:15+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜனாதிபதிக்கு எதிர்ப்பு ; தேசியக் கொடியுடன் போராட்டத்தில் குதித்த முன்னாள் உறுப்பினர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/former-member-joins-the-protest-with-national-flag-1789154193"></link>
            <id>https://jvpnews.com/article/former-member-joins-the-protest-with-national-flag-1789154193</id>
            <summary type="text">ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று(12) பொலன்னறுவையில் நடைபெறவுள்ள விவசாயி மாநாட்டிற்கு எதிர்ப்புத் தெரிவித்து, இலங்கை பொதுஜன பெரமுனவின் மு...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று(12) பொலன்னறுவையில் நடைபெறவுள்ள விவசாயி மாநாட்டிற்கு எதிர்ப்புத் தெரிவித்து, இலங்கை பொதுஜன பெரமுனவின் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர்&nbsp; நேற்று (11) நண்பகல் முதல் ஹிங்குராக்கொட வர்த்தக வளாகத்தின் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.</p><p>
</p><p></p><p>ரஜஎல கம், மின்னேரிய பகுதியைச் சேர்ந்த முன்னாள் பிரதேச சபை உறுப்பினரே இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/60b65962-ad30-40a4-be40-215dc340baf1/26-6aa4539335142.webp' /></p><p>வீட்டுவசதி மேம்பாட்டு பிரதி அமைச்சர் டி.பி. சரத்தின் கட்டளைகள் மற்றும் அறிவுறுத்தல்களுக்கு அமைய, பிராந்தியத்திலுள்ள அரச நிறுவனங்களின் அதிகாரிகளை குறித்த விவசாயி மாநாட்டில் பங்கேற்கச் செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ரவீந்திர லக்மால் பண்டார தெரிவித்துள்ளார்.
</p><p>
இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையிலேயே குறித்த முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் தேசியக் கொடியை ஏந்தியவாறு வர்த்தக வளாகத்தின் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-11T19:16:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவின் புதிய சாதனை ; நயகரா ஆற்றில் உருவாக்கப்பட்ட இயற்கை வாழ்விடங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/natural-habitats-along-canada-s-niagara-river-1789152185"></link>
            <id>https://canadamirror.com/article/natural-habitats-along-canada-s-niagara-river-1789152185</id>
            <summary type="text">கனடாவில் நயகரா ஆற்றின் கரையோர ஈரநிலங்களில் 75 சதவீதத்திற்கும் அதிகமானவை அழிவடைந்ததைத் தொடர்ந்து, மீள்சுழற்சி செய்யப்பட்ட கிறிஸ்துமஸ் மரங்கள் மற்றும் ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவில் நயகரா ஆற்றின் கரையோர ஈரநிலங்களில் 75 சதவீதத்திற்கும் அதிகமானவை அழிவடைந்ததைத் தொடர்ந்து, மீள்சுழற்சி செய்யப்பட்ட கிறிஸ்துமஸ் மரங்கள் மற்றும் மரக் கழிவுகளை ஆற்றுப் படுகையில் நிலைநிறுத்தி சுற்றுச்சூழல் அமைப்பை மீட்டெடுக்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.</p><p>

இந்தத் திட்டத்தின் மூலம், நயகரா பூங்காக்கள் நிறுவனம் மற்றும் சுற்றுச்சூழல் துறைகள் இணைந்து இதுவரை 1.64 கிலோமீற்றர் பரப்பளவில் நீர்வாழ் உயிரினங்களுக்கான இயற்கை வாழ்விடங்களை வெற்றிகரமாக உருவாக்கியுள்ளன.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c0d2c242-4191-4e7d-a71b-88963ae7e6ab/26-6aa44bbb1b5b5.webp' /></p><p>மேலும், 2025 கோடை காலத்தில் பிளாக் கிரீக் மற்றும் பொயர்ஸ் கிரீக் நதி முகத்துவாரப் பகுதிகளில் மரக் கட்டமைப்புகள் மற்றும் பாறைகளைப் பயன்படுத்தி மேலதிகமாக 240 மீற்றர் ஈரநிலப் பகுதி புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது.
</p><p>
இந்த ஆக்கபூர்வமான நடவடிக்கையினால் அந்த பகுதிகளில் மீன்கள் மற்றும் கரையோரப் பறவைகளின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளதுடன், நீரின் தரமும் மேம்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p>]]></content>
            <updated>2026-09-11T18:43:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் குடும்பங்களின் கடன் விகிதத்தில் மாற்றம்: வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/canada-household-debt-to-income-ratio-drops-1789150588"></link>
            <id>https://ibctamil.com/article/canada-household-debt-to-income-ratio-drops-1789150588</id>
            <summary type="text">கனடாவில் குடும்ப வருமானத்தின் வளர்ச்சி, கடனின் வளர்ச்சியை விட அதிகமாக இருந்ததால் இரண்டாவது காலாண்டில் கடன் மற்றும் வருமானத்திற்கு இடையிலான விகிதம் குற...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவில் குடும்ப வருமானத்தின் வளர்ச்சி, கடனின் வளர்ச்சியை விட அதிகமாக இருந்ததால் இரண்டாவது காலாண்டில் கடன் மற்றும் வருமானத்திற்கு இடையிலான விகிதம் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>கனடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.
</p><p>இந்தநிலையில் செலவிடக்கூடிய வருமானத்துடன் ஒப்பிடுகையில், குடும்பக் கடன் சந்தைக் கடன் பருவகால சீரமைப்பின்படி முதல் காலாண்டில் 178.6 சதவீதமாக இருந்தது இது இரண்டாவது காலாண்டில் 176.4 சதவீதமாகக் குறைந்துள்ளது.</p><p>
</p><p></p><h2>கனடிய குடும்பங்கள்</h2><p>கனடிய குடும்பங்கள் செலவிடக்கூடிய ஒவ்வொரு 1 டொலர் வருமானத்திற்கும் சராசரியாக 1.76 டொலர் கடன் வைத்துள்ளனர்.</p><p>இந்தநிலையில் வருமானத்தில் அசல் மற்றும் வட்டி திருப்பிச் செலுத்துவதற்கான வீதம் 14.68 சதவீதத்திலிருந்து 14.52 சதவீதமாகச் சரிந்துள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/997510cf-4a50-4272-94d4-303b04589711/26-6aa44b0178e83.webp' /></p><p>நுகர்வோர் கடன், வீட்டு அடமானக் கடன் மற்றும் அடமானம் அல்லாத கடன்கள் அடங்கிய மொத்த குடும்பக் கடன் வாங்கும் அளவு, முதல் காலாண்டில் 34.4 பில்லியன் டொலராக இருந்த நிலையில், இரண்டாவது காலாண்டில் 29.4 பில்லியன் டொலராகக் குறைந்துள்ளது.
</p><p>
அடமானக் கடன் வாங்கும் வீதம் 19.4 பில்லியன் டொலராக சரிந்துள்ளது, இது 2024-ஆம் ஆண்டின் முதல் காலாண்டின் பின்னர் பதிவான மிகக் குறைந்த அளவாகும். </p><p>மேலும் நுகர்வோர் கடன் உட்பட அடமானம் அல்லாத கடன்கள் வாங்கும் அளவு 10.0 பில்லியன் டொலராக குறைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-11T18:40:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[விரைவில் மகிந்த - கோட்டாபய வைத்தியசாலையில்! சுரேஸ் சலே உடைத்த பரம இரகசியம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/suresh-sallay-s-shocking-secret-1789151378"></link>
            <id>https://tamilwin.com/article/suresh-sallay-s-shocking-secret-1789151378</id>
            <summary type="text">2006ஆம் ஆண்டு மிக்-27 போர் விமானங்களை கொள்முதல் செய்ததில் சுமார் 7 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி மோசடி இடம்பெற்றதாகக் கூறப்படும் விவகாரம் தொடர்பில் தற...</summary>
            <content type="html"><![CDATA[<p>2006ஆம் ஆண்டு மிக்-27 போர் விமானங்களை கொள்முதல் செய்ததில் சுமார் 7 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி மோசடி இடம்பெற்றதாகக் கூறப்படும் விவகாரம் தொடர்பில் தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p><p>

இந்த விவகாரம் தொடர்பில் முன்னாள் விமானப்படை தளபதி ரொஷான் குணதிலக மற்றும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஆகியோரிடமும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>

இதேவேளை, மகரகம அபேக்ஷா வைத்தியசாலைக்கு PET ஸ்கேனர் கருவியை வழங்குவதாகக் கூறி, ‘சிரிலிய சவிய’ அமைப்பின் ஊடாக நிதி திரட்டப்பட்டதில் முறைகேடுகள் இடம்பெற்றதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.</p><p>

இந்த நிலையில், சிரந்தி ராஜபக்ச தற்போது கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது. </p><p>
அவரது உடல்நிலை காரணமாக விசாரணைகளில் இருந்து விலகி இருக்கிறாரா அல்லது உண்மையான உடல்நலப் பிரச்சினை காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளாரா என்ற கேள்விகளும் எழுந்துள்ளன.</p><p>

இந்நிலையில், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உள்ளிட்ட முன்னாள் ஆட்சியாளர்கள் தொடர்பிலும் அடுத்த கட்டமாக விசாரணைகள் தீவிரமடையுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
</p><p>
எனவே அவர்களும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகின்றது.
</p><p>
இதேவேளை, உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலின் பின்னணியில் இருந்ததாகக் கூறப்படும் உண்மையான காரணங்கள் மற்றும் அதற்குப் பின்னால் செயற்பட்ட சக்திகள் தொடர்பிலும் சுரேஸ் சலே வெளிப்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
</p><p>


இது தொடர்பான விரிவான தகவல்களை ஆராய்கிறது ‘செய்திகளுக்கு அப்பால்’ நிகழ்ச்சி..</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/CP_Y7qU4Swk" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-11T18:36:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரொபோக்களின் விநோத போராட்டம் ; மனிதர்களுக்குப் பதிலாக களமிறங்கி கோரிக்கை விடுத்த இயந்திர மனிதர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/androids-step-in-for-humans-to-voice-demands-1789151412"></link>
            <id>https://canadamirror.com/article/androids-step-in-for-humans-to-voice-demands-1789151412</id>
            <summary type="text">செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் ரோபோ தொழில்நுட்பம் வேகமாக வளர்ச்சியடைந்து வரும் நிலையில், வேலை வாய்ப்புப் பாதுகாப்புக்காக கடுமையான சட்டங்களை இயற்றுமாறு...</summary>
            <content type="html"><![CDATA[<p>செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் ரோபோ தொழில்நுட்பம் வேகமாக வளர்ச்சியடைந்து வரும் நிலையில், வேலை வாய்ப்புப் பாதுகாப்புக்காக கடுமையான சட்டங்களை இயற்றுமாறு கோரி போலந்தின் வார்சோ நகரில் விநோதமான போராடமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><p>போலந்தின் டிஜிட்டல் விவகார அமைச்சுக்கு அருகில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் பல்வேறு வகையான 30-க்கும் மேற்பட்ட ரோபோக்கள் கலந்துகொண்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/eafeaaed-d12d-42d5-a3a1-4add7299a0f2/26-6aa448b56241f.webp' /></p><p>மனித வடிவிலான (Humanoid) ரோபோக்கள் மற்றும் நான்கு கால் விலங்குகளைப் போன்ற (Quadrupeds) ரோபோக்களை உள்ளடக்கிய இந்தக் குழுவினர், கொடிகளை ஏந்தி, கோஷங்களை எழுப்பி, வட்டமாகச் சென்று அடையாளப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
</p><p>
ஒலிபெருக்கிகள் ஊடாக “வேலைத் தளங்களைப் பாதுகாத்திடுங்கள்”, “சட்டங்களை இயற்றுவதற்கான நேரம் இது” மற்றும் “தாமதிக்காமல் முறைப்படுத்துங்கள்” போன்ற கோஷங்களை வெளிப்படுத்தியுள்ளனர்.
</p><p>
இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்ட Agibot A3 என்ற மனித வடிவிலான ரோபோ ஒன்று AFP செய்தி நிறுவனத்திடம் தெரிவிக்கையில், இந்தத் தொழில்நுட்பம் தற்போது ஒரு நடைமுறை யதார்த்தம் என்பதைச் சுட்டிக்காட்டுவதற்காகவே தாங்கள் இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டதாகக் குறிப்பிட்டுள்ளது.
</p><p>
செயற்கை நுண்ணறிவு மற்றும் ரோபோ தொழில்நுட்பம் காரணமாக வேலைவாய்ப்புச் சந்தையில் ஏற்படும் தாக்கம் குறித்துப் பொதுமக்களிடையே விவாதத்தை உருவாக்கும் நோக்கில் 'Democratism' அமைப்பினால் இந்தப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-11T18:30:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[சவுதி அரேபியாவின் எண்ணெய் குழாய்கள் மீது ஏவுகணை தாக்குதல்: சேதத்தை விவரித்த செயற்கைக்கோள் படங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/saudi-arabia-s-east-west-pipeline-attacked-1789150984"></link>
            <id>https://news.lankasri.com/article/saudi-arabia-s-east-west-pipeline-attacked-1789150984</id>
            <summary type="text">சவுதி அரேபியாவின் எண்ணெய் குழாய்கள் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. எண்ணெய் குழாய்கள் மீது தாக்குதல்கடந்த வியாழக்கிழமை சவுதி அரேபியாவின் முக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>சவுதி அரேபியாவின் எண்ணெய் குழாய்கள் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.</p><h2> எண்ணெய் குழாய்கள் மீது தாக்குதல்</h2><p>கடந்த வியாழக்கிழமை சவுதி அரேபியாவின் முக்கியமான கிழக்கு-மேற்கு எண்ணெய் குழாய்கள் மீது ஏவுகணை தாக்குதல்கள் நடத்தப்பட்டு இருப்பதாக அமெரிக்க ஊடகமான CNN வெளியிட்ட தகவலின் மூலம் தெரியவந்துள்ளது.</p><p>இந்த அத்துமீறிய ஏவுகணை தாக்குதலை அமெரிக்க அதிகாரிகள் இரண்டு பேர் உறுதிப்படுத்தியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fdc0fc37-26ef-467f-9bff-6f1da9fe3e73/26-6aa44709d2632.webp' /></p><p> மேலும் இந்த ஏவுகணை தாக்குதலானது எண்ணெய் குழாய் கட்டமைப்பின் பம்பிங் நிலையங்களை குறிவைத்து நடத்தப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது.</p><p></p><p> தாக்குதல் தொடர்பாக வெளிவந்துள்ள செயற்கைக்கோள் புகைப்படங்களில், ஒரு பம்பிங் நிலையத்தில்&nbsp; தீவிரமான தீ சேதமும், மற்றொரு பம்பிங் நிலையத்தில் சிறிய தீ சேதமும் ஏற்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது.</p><h2> தாக்குதலுக்கு யார் பொறுப்பு?</h2><p>
ஏமனில் ஈரான் ஆதரவு ஹவுதி கிளர்ச்சியாளர்கள் படைகளுக்கு எதிராக சவுதி அரேபியாவின் ஆதரவு பெற்ற அரசு படைகள் சண்டையிட்டு வரும் நிலையில் இந்த எண்ணெய் குழாய் தாக்குதலானது நடைபெற்றுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/574b070e-efdc-45dc-9c8f-038a8fffeeb2/26-6aa4470a88e86.webp' /></p><p> ஆனால் இந்த எண்ணெய் குழாய் தாக்குதலுக்கு யாரும் பொறுப்பேற்றதாக தெரியவரவில்லை.</p><p> மேலும் தாக்குதலால் ஏற்பட்டுள்ள சேதங்களை சீரமைக்க எவ்வளவு காலம் தேவைப்படும் என்பதற்கான மதிப்பீடுகளும் இன்னும் வெளிவரவில்லை.</p><p>இந்நிலையில், எண்ணெய் குழாய்கள் மீது தாக்குதல் நடத்த பயன்படுத்தப்பட்ட ஏவுகணைகள் ஈராக்கில் இருந்து ஏவப்பட்டிருக்கலாம் என்று அமெரிக்க அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-11T18:23:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிம் அட்டைப் பதிவு விதிகளில் புதிய திருத்தங்களைக் கொண்டுவரத் திட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/new-amendments-to-sim-card-registration-rules-1789150504"></link>
            <id>https://jvpnews.com/article/new-amendments-to-sim-card-registration-rules-1789150504</id>
            <summary type="text">சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு சிம் அட்டைகள் பயன்படுத்தப்படுவது அதிகரித்து வருவதையடுத்து, சிம் அட்டைப் பதிவு விதிகளில் புதிய திருத்தங்களை கொண்டுவர இலங்கை ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு சிம் அட்டைகள் பயன்படுத்தப்படுவது அதிகரித்து வருவதையடுத்து, சிம் அட்டைப் பதிவு விதிகளில் புதிய திருத்தங்களை கொண்டுவர இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு திட்டமிட்டுள்ளது.</p><p>
</p><p></p><p>புதிய விதிகள் இந்த ஆண்டு இறுதிக்குள் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
</p><p>
இதன்படி, புதிதாக சிம் அட்டைகளை கொள்வனவு செய்யும் நபர்கள், மேம்படுத்தப்பட்ட அடையாளச் சரிபார்ப்பு நடைமுறைகளுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் பந்துல ஹேரத் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8ca83f45-4e3c-47da-88f4-f0c2f7273f73/26-6aa4452a166dc.webp' /></p><p>

குறிப்பாக, புதிய சிம் அட்டை பெறுபவர்களின் நேரலை புகைப்படம் உள்ளிட்ட மேலதிக அடையாளத் தகவல்கள் பதிவு செய்யப்பட்டு, அவர்களின் அடையாளம் உறுதிப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
சட்டவிரோத நடவடிக்கைகளுக்காக போலியான அல்லது பிற நபர்களின் பெயர்களில் பதிவு செய்யப்பட்ட சிம் அட்டைகள் பயன்படுத்தப்படுவதை கட்டுப்படுத்துவதே இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
மேலும், 2027ஆம் ஆண்டுக்குள் நாட்டிலுள்ள கையடக்கத் தொலைபேசி மற்றும் சிம் அட்டை பயனாளர்கள் அனைவருக்கும் நூறு சதவீத அடையாளச் சரிபார்ப்பை உறுதி செய்வதை இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு இலக்காகக் கொண்டுள்ளதாக பந்துல ஹேரத் தெரிவித்துள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-11T18:15:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[உக்ரைன் போரில் உயிரிழந்த ரஷ்ய வீரர்களின் எண்ணிக்கை: பிரித்தானிய உளவுத்துறை தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/half-million-russian-soldiers-killed-in-ukraine-1789149788"></link>
            <id>https://news.lankasri.com/article/half-million-russian-soldiers-killed-in-ukraine-1789149788</id>
            <summary type="text">Half Million Russian Soldiers Killed in Ukraine War: உக்ரைன் ரஷ்யா போரில் இதுவரை அரை மில்லியனுக்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டு இருப்பதாக பிரித்தானிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>Half Million Russian Soldiers Killed in Ukraine War: உக்ரைன் ரஷ்யா போரில் இதுவரை அரை மில்லியனுக்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டு இருப்பதாக பிரித்தானிய உளவுத்துறை தகவல் தெரிவித்துள்ளது.</p><h2> அரை மில்லியன் ரஷ்ய வீரர்கள் உயிரிழப்பு</h2><p>
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினால் உக்ரைனுக்கு எதிராக தொடங்கப்பட்ட போரில் இதுவரை அரை மில்லியன்(5 லட்சம்) ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டு இருப்பதாக பிரித்தானிய உளவுத்துறை தகவல் தெரிவித்துள்ளது.</p><p> ரஷ்ய வீரர்களின் உயிரிழப்பும், போரினால் ரஷ்ய பொருளாதாரத்தில் அதிகரித்து வரும் அழுத்தமும் உக்ரைனை ரஷ்யாவின் கட்டுப்பாட்டிற்கு கீழ் கொண்டு வரும் ரஷ்ய அதிபர் புடினின் திட்டத்தில் எந்தவொரு மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/62e416d0-e912-4833-bf79-344e4a907ba5/26-6aa4425dcf2d9.webp' /></p><p> பிரித்தானிய ஆயுதப் படைகளின் தலைவர் ஏர் சீப் மார்ஷல் சர் ரிச்சர்ட் நைட்டன் வழங்கிய தகவலில், கடந்த 2022ம் ஆண்டு பிப்ரவரியில் தொடங்கிய போரில் காயமடைந்தவர்கள் உட்பட கிட்டத்தட்ட 1.5 மில்லியன் ரஷ்ய வீரர்கள் பாதிப்படைந்து இருப்பதாக தெரிவித்துள்ளார்.</p><p> இதில் மிகப்பெரிய இழப்பு 2023ம் ஆண்டு ஜனவரியில் ஏற்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார். அத்துடன் இந்த போர் நடவடிக்கையில், உக்ரைனின் 2% நிலப்பரப்பை மட்டுமே ரஷ்யா கைப்பற்றி இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2> நீண்ட கால போராக தொடரும் உக்ரைன் போர்</h2><p>ரஷ்ய வீரர்கள் கிட்டத்தட்ட 1660 நாட்களாக உக்ரைனுடன் சண்டையிட்டு வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a4f10c8b-3b2d-47bb-a2fc-67d1bf63bf12/26-6aa4425e828ed.webp' /></p><p> இதனால் முதல் மற்றும் இரண்டாம் உலக போரில் ரஷ்ய வீரர்கள் சண்டையிட்ட நாட்களை விட உக்ரைன் போரில் ரஷ்ய வீரர்கள் அதிக நாட்கள் சண்டையிட்டு வருகின்றனர் என்பது உறுதியாகியுள்ளது.</p><p> இந்த போரினால் ரஷ்யாவின் பணவீக்கம் புதிய உச்சத்தை தொட்டுள்ளது. உள்நாட்டு நுகர்வோரின் தேவை பலவீனமாகியுள்ளது.</p><p> நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் படுவேகமாக சரிந்துள்ளது. இந்த போர் நடவடிக்கை தொடர்ந்தால் அது நாட்டு மக்களின் எதிர்காலத்திற்கு பெரும் சுமையாக மாறிவிடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-11T18:03:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[இணையத்தில் தீயாய் பரவும் செல்ஃபி ; சிற்றூந்து பந்தயப் பயிற்சி த்ரிஷாவும் வருகிறாரா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/selfie-spreading-wildfire-online-trisha-joining-1789149290"></link>
            <id>https://jvpnews.com/article/selfie-spreading-wildfire-online-trisha-joining-1789149290</id>
            <summary type="text">நடிகர் அஜித்குமாரின் சிற்றூந்து பந்தயப் பயிற்சி இடம்பெறும் சில்வர்ஸ்டோன் பகுதியில் நடிகை ராதிகா இருப்பது போன்ற காணொளி ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி...</summary>
            <content type="html"><![CDATA[<p>நடிகர் அஜித்குமாரின் சிற்றூந்து பந்தயப் பயிற்சி இடம்பெறும் சில்வர்ஸ்டோன் பகுதியில் நடிகை ராதிகா இருப்பது போன்ற காணொளி ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.</p><p></p><p>
</p><p>
இந்தநிலையில், நடிகை ராதிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை த்ரிஷாவுடன் எடுத்துக்கொண்ட செல்ஃபி புகைப்படம் ஒன்றையும் பகிர்ந்துள்ளார்.
</p><p>
இதனால், நாளை சில்வர்ஸ்டோனில் நடைபெறவுள்ள சிற்றூந்து பந்தயத்தை நடிகை த்ரிஷாவும் நேரில் பார்வையிடுவாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/85515a63-849a-4a15-b1e3-6c83503820e3/26-6aa4406c999a5.webp' /></p><p>

லண்டனில் உள்ள சில்வர்ஸ்டோனில் நடைபெறும் Michelin Le Mans Cup சிற்றூந்து பந்தயத்தை தமிழக முதலமைச்சர் விஜய் கொடியசைத்து ஆரம்பித்து வைக்கவுள்ளதாக Le Mans Cup நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
அதேவேளை, முதலமைச்சர் விஜய் மற்றும் நடிகை த்ரிஷா தொடர்பில் அண்மைக்காலமாக சமூக ஊடகங்களில் பல்வேறு கருத்துகளும் தகவல்களும் பரவி வருகின்றன.</p><p>

இந்தநிலையில், த்ரிஷா தொடர்பாக தற்போது வெளியாகியுள்ள இந்த தகவலும் சமூக ஊடகங்களில் பேசுபொருளாகியுள்ளது.
</p><p>
எனினும், நடிகை த்ரிஷா குறித்த சிற்றூந்து பந்தயத்தை நேரில் பார்வையிடவுள்ளதாக இதுவரை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல் எதுவும் வெளியாகவில்லை.</p><p></p>]]></content>
            <updated>2026-09-11T17:54:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் விரிவுரையாளரின் அநாகரிக பேச்சால் தவறான முடிவெடுக்க முயற்சி செய்த மாணவி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/trainee-teacher-attempts-wrong-lecturer-s-remarks-1789143031"></link>
            <id>https://tamilwin.com/article/trainee-teacher-attempts-wrong-lecturer-s-remarks-1789143031</id>
            <summary type="text">யாழ்.கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரியில் கல்வி பயிலும் மாணவி ஒருவர் அங்கு கடமையாற்றும் பெண் விரிவுரையாளர் ஒருவரின் அநாகரிகமான பேச்சினால் தவறான முடிவெட...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்.கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரியில் கல்வி பயிலும் மாணவி ஒருவர் அங்கு கடமையாற்றும் பெண் விரிவுரையாளர் ஒருவரின் அநாகரிகமான பேச்சினால் தவறான முடிவெடுக்க முயன்ற நிலையில் யாழ்ப்பாண வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p><p>சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,</p><p>
</p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">நிர்வாகம் நடவடிக்கை</span></p><p>குறித்த மாணவி கல்லூரி கழகம் ஒன்றின் செயற்பாட்டிற்காக சென்றிருந்த நிலையில் அந்த விடுதிக்கு பொறுப்பான பெண் விரிவுரையாளர் எங்கு சென்று வருகிறாய்? என மாணவியை கேட்டுள்ளார்.
</p><p>
 அதற்கு தனது கழக செயற்பாட்டுக்கு கழகத் தலைவர் அழைத்ததன் காரணமாக சென்று வருகிறேன் என தெரிவித்திருக்கிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/07f295d0-63d1-4df4-acb5-a06409b3e3bc/26-6aa42c836e316.webp' /></p><p> </p><p>


உடனே குறித்த விரிவுரையாளர் அநாகரிகமான முறையில் திட்டியுள்ளார்.

அதனைதொடர்ந்து மாணவி எழுத்து மூலம் கல்லூரி நிர்வாகத்திற்கு தெரியப்படுத்தியருக்கிறார். </p><p>

ஆனால் நிர்வாகம் நடவடிக்கை எடுக்காமை காரணமாக மனவிரக்தி அடைந்து தவறான முடிவெடுக்க முயன்ற நிலையில் சக மாணவிகளால் காப்பாற்றப்பட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-11T17:29:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[மகிந்த தலைமையில் அரசாங்கத்திற்கு எதிராக அனுராதபுரத்தில் களமிறங்கும் மொட்டுக்கட்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/anuradhapura-rally-led-by-mahinda-rajapaksa-1789146588"></link>
            <id>https://tamilwin.com/article/anuradhapura-rally-led-by-mahinda-rajapaksa-1789146588</id>
            <summary type="text">இலங்கை பொதுஜன பெரமுன (SLPP) கட்சி, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையில் நாளை (12) அனுராதபுரத்தில் “ஜனசதன” மக்கள் பேரணியை நடத்தவுள்ளதாக, SLPP தேச...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை பொதுஜன பெரமுன (SLPP) கட்சி, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையில் நாளை (12) அனுராதபுரத்தில் “ஜனசதன” மக்கள் பேரணியை நடத்தவுள்ளதாக, SLPP தேசிய அமைப்பாளர் டி.வி. சாணக்க தெரிவித்துள்ளார்.
</p><p>
விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்தப் பேரணி நடத்தப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.</p><h2>&nbsp;மகிந்த ராஜபக்ச</h2><p>
</p><p>
மேலும், அரசாங்கம் வழங்கியுள்ள வாக்குறுதிகளை நிறைவேற்ற அழுத்தம் கொடுப்பதும் இந்தப் பேரணியின் நோக்கம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
இந்தப் பேரணி சனிக்கிழமை (12) அனுராதபுரத்தில் நடைபெறவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-11T17:25:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[நார்வே இளவரசி ஆஸ்ட்ரிட் காலமானார்: சோகத்தில் ஆழ்ந்த அரச குடும்பம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/norway-princess-astrid-passed-away-at-94-1789147232"></link>
            <id>https://news.lankasri.com/article/norway-princess-astrid-passed-away-at-94-1789147232</id>
            <summary type="text">நார்வே நாட்டின் இளவரசி ஆஸ்ட்ரிட் தன்னுடைய 94வது வயதில் வெள்ளிக்கிழமை காலமானார். இளவரசி ஆஸ்ட்ரிட் காலமானார்வெள்ளிக்கிழமை நார்வே நாட்டின் இளவரசி ஆஸ்ட்ரி...</summary>
            <content type="html"><![CDATA[<p>நார்வே நாட்டின் இளவரசி ஆஸ்ட்ரிட் தன்னுடைய 94வது வயதில் வெள்ளிக்கிழமை காலமானார்.</p><h2> இளவரசி ஆஸ்ட்ரிட் காலமானார்</h2><p>வெள்ளிக்கிழமை நார்வே நாட்டின் இளவரசி ஆஸ்ட்ரிட்(Princess Astrid&nbsp;) தனது 94வது வயதில் காலமானார். இதனால் நார்வே அரச குடும்பத்தினர் பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.</p><p> மறைந்த மன்னர் ஹரால்டின் சகோதரியான ஆஸ்ட்ரிட் தன்னுடைய சகோதரர் உயிரிழந்த சில வாரங்களில் உயிரிழந்துள்ளார்.</p><p> கிட்டத்தட்ட 35 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சியில் புரிந்து பிறகு கடந்த மாதம் மன்னர் ஹரால்டு(89) உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a13a5a9f-e531-49f0-8866-8e578146b4b3/26-6aa43861e3c0b.webp' /></p><p>மன்னர் ஹரால்டின் இறுதிச் சடங்கு கடந்த புதன்கிழமை ஓஸ்லோ பேராலயத்தில் நடைபெற்ற நிலையில், அதில் இளவரசி ஆஸ்ட்ரிட் தன்னுடைய கடைசி பொது நிகழ்வாக கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.</p><p></p><p> இளவரசியின் மறைவு தொடர்பாக அரண்மனை வெளியிட்ட குறிப்பில், தன்னுடைய வாழ்நாள் முழுவதும் இளவரசி ஆஸ்ட்ரிட் தன்னுடைய அரச குடும்பத்தை அன்பாகவும் பொறுப்புடனும் கவனித்து கொண்டதாக தெரிவித்துள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-11T17:24:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[செங்கடலின் முழுப் பகுதியையும் கைப்பற்றிய ஹூதி கிளர்ச்சியாளர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/houthi-rebels-seized-control-entire-red-sea-region-1789147457"></link>
            <id>https://canadamirror.com/article/houthi-rebels-seized-control-entire-red-sea-region-1789147457</id>
            <summary type="text">யேமனின் முக்கிய நகரமான மோகாவைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து, உலகின் முக்கிய வர்த்தகக் கடல்வழிகளில் ஒன்றான பாப் அல்-மன்தெப் நீரிணைப் பகுதியில் தங்களது அதி...</summary>
            <content type="html"><![CDATA[<p>யேமனின் முக்கிய நகரமான மோகாவைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து, உலகின் முக்கிய வர்த்தகக் கடல்வழிகளில் ஒன்றான பாப் அல்-மன்தெப் நீரிணைப் பகுதியில் தங்களது அதிகாரத்தை ஹூதி கிளர்ச்சியாளர்கள் மேலும் விரிவுபடுத்தியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d30a2cc7-16fb-498d-9226-8c09147bfd26/26-6aa4394387a38.webp' /></p><p>இதன் மூலம் யேமனின் ஒட்டுமொத்த செங்கடல் கடலோரப் பகுதியின் கட்டுப்பாட்டையும் ஹூதி கிளர்ச்சியாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p>

இதற்கிடையில், யேமனின் மோகா விமான நிலையத்தை இலக்காகக் கொண்டு சவூதி படைகள் இரண்டு வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக ஹூதிகளுடன் தொடர்புடைய அல்-மஸீரா (Al-Masirah) தொலைக்காட்சி அலைவரிசை செய்தி வெளியிட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.</p>]]></content>
            <updated>2026-09-11T17:24:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[மொட்டுத் தரப்பினரின் போராட்டம் பயனளிக்காது! அமைச்சர் பிமல் ரத்நாயக்க திட்டவட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/protests-will-not-yield-results-bimal-rathnayake-1789146853"></link>
            <id>https://tamilwin.com/article/protests-will-not-yield-results-bimal-rathnayake-1789146853</id>
            <summary type="text">தற்போதைய அரசியல் சூழலில் எந்தவொரு அரசியல் கட்சியும் இந்த ஸ்திரமான அரசைக்
கவிழ்க்கவோ அல்லது வீழ்த்தவோ முடியாது என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க
தெரிவித...</summary>
            <content type="html"><![CDATA[<p>தற்போதைய அரசியல் சூழலில் எந்தவொரு அரசியல் கட்சியும் இந்த ஸ்திரமான அரசைக்
கவிழ்க்கவோ அல்லது வீழ்த்தவோ முடியாது என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க
தெரிவித்தார்.
</p><p>
அனுராதபுரத்தில் இன்று(11.9.2026) அநுர அரசுக்கு எதிராக ஸ்ரீலங்கா பொதுஜன
பெரமுன கட்சியின் தலைமையில் முன்னெடுக்கப்படவுள்ள போராட்டம் தொடர்பில்
ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.</p><p>

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

"நாட்டின் மூன்றில் இரண்டு பெரும்பான்மை மக்களின் அசைக்க முடியாத ஆதரவு எமது
அரசுக்கு உள்ளது. மக்களின் உண்மையான ஆணை அரசின் பக்கமே முழுமையாகச்
சாய்ந்துள்ளது.</p><h2>போராட்டங்கள்</h2><p>
</p><p>
மொட்டுக் கட்சியினர் அல்லது எதிர்க்கட்சிகள் மக்களை வலுக்கட்டாயமாகத் திரட்டி
முன்னெடுக்கும் அரசுக்கு எதிரான போராட்டங்கள் எவ்விதப் பலனையும் தராது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/80506689-03c6-456d-b966-6cc5cbcba32e/26-6aa436e83461f.webp' /></p><p>
</p><p>
மக்களின் கவனத்தை திசைதிருப்பும் இத்தகைய வெற்று முயற்சிகள் யாவும்
தோல்வியிலேயே முடியும்.</p><p>

தற்போதைய அரசியல் சூழலில் எந்தவொரு அரசியல் கட்சியும் இந்த ஸ்திரமான அரசைக்
கவிழ்க்கவோ அல்லது வீழ்த்தவோ முடியாது.

மக்களின் பேராதரவுடன் ஆட்சியமைத்துள்ள இந்த அரசை எந்தச் சக்தியாலும் அசைக்க
முடியாது.</p><h2>முழுமையான ஒத்துழைப்பு</h2><p>
</p><p>
இத்தகைய போராட்டங்கள் யாவும் நாட்டு நலனுக்காக அல்லாமல், அரசியல்
காழ்ப்புணர்ச்சிகளையும் சுயநல அஜண்டாக்களையும் மட்டுமே அடிப்படையாகக் கொண்டவை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8a1f7e81-29f3-43e9-abdc-740f3cb41f35/26-6aa436e8dcfd9.webp' /></p><p>

மக்களின் நல்வாழ்வை உறுதி செய்யும் அரசாட்சியைக் குலைக்க எதிர்க்கட்சிகள்
மேற்கொள்ளும் தந்திரோபாயங்களை மக்கள் நன்றாகவே புரிந்து கொண்டுள்ளனர்.
</p><p>
நாட்டு மக்கள் அனைவரும் எதிர்கொண்டுள்ள சவால்களைத் தீர்த்து, நாட்டைப்
பொருளாதார ரீதியாகக் கட்டியெழுப்பும் அரசின் முறையான வேலைத்திட்டங்களுக்குப்
பொதுமக்கள் தொடர்ந்தும் முழுமையான ஒத்துழைப்பு வழங்குவர் எனக் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-11T17:20:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[ட்ரம்பின் அயர்லாந்து விஜயம்...! மக்களிடையே எழுந்துள்ள பலத்த எதிர்ப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/69-in-ireland-oppose-trump-visit-amid-protests-1789142023"></link>
            <id>https://ibctamil.com/article/69-in-ireland-oppose-trump-visit-amid-protests-1789142023</id>
            <summary type="text">அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அயர்லாந்திற்கு விஜயம் செய்யவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இந்தநிலையில், அவரது வருகைக்கு அயர்லாந்து...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அயர்லாந்திற்கு விஜயம் செய்யவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p>இந்தநிலையில், அவரது வருகைக்கு அயர்லாந்து மக்களிடையே பலத்த எதிர்ப்பும் அதிருப்தியும் கிளம்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>இந்தநிலையில் சண்டே இண்டிபெண்டன்ட் (Sunday Independent) மற்றும் அயர்லாந்து திங்க்ஸ் (Ireland Thinks) அமைப்புகள் இணைந்து இது தொடர்பில் கருத்து கணிப்பொன்றை நடத்தியுள்ளது.</p><p></p><h2>இனப்படுகொலைக்கு வசதி&nbsp;</h2><p> நடத்திய கருத்துக்கணிப்பில், அயர்லாந்து மக்களில் 69 சதவீதத்தினர் ட்ரம்பின் இந்த வருகைக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது.</p><p>டப்ளின் டிரினிட்டி கல்லூரியின் (Trinity College Dublin) பொருளாதாரத் துறை மாணவரும், அயர்லாந்தின் BDS (பாய்காட், டைவெஸ்ட்மென்ட், சாங்க்ஷன்ஸ்) இயக்கத்தின் தலைவருமான ஷான் ராட்க்ளிஃப் (Sean Radcliffe) இது குறித்து ஊடகங்களிற்கு கருத்துத் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ef2c3963-0091-402e-89a5-ff9b8c05fcbb/26-6aa433bac6cb1.webp' /></p><p>இந்தநிலையில் இனப்படுகொலைக்கு உடந்தையாக இருக்கும் ஒருவரை சாதாரணமாக ஏற்றுக்கொள்ள முடியாது என்பதால் பல்லாயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்துவார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>அயர்லாந்து பிரதமர் (Taoiseach) மைக்கேல் மார்ட்டின் (Micheal Martin), அமெரிக்கா இனப்படுகொலைக்கு வசதி செய்து கொடுத்து உதவி வருகிறது என்பதை பகிரங்கமாகவும் உறுதியாகவும் வெளிப்படையாகக் கூற வேண்டும் என்றும் மாணவர் தலைவர் வலியுறுத்தியுள்ளார்.
</p><p>மத்திய கிழக்கு மோதல்கள் மற்றும் ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகள் தொடர்பில் அமெரிக்காவின் அணுகுமுறை காரணமாகவே அயர்லாந்து மக்களிடையே ட்ரம்பின் இந்த வருகைக்கு எதிரான அதிருப்தி வலுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-11T17:18:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதிக வெப்பம் குறித்து இயற்கை அனர்த்த முன்னெச்சரிக்கை மையம் விடுத்துள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/early-warning-regarding-extreme-heat-1789146011"></link>
            <id>https://jvpnews.com/article/early-warning-regarding-extreme-heat-1789146011</id>
            <summary type="text">நாளை (12) செல்லுபடியாகும் வகையில் வெப்பமான வானிலை தொடர்பான எச்சரிக்கை அறிவித்தலை வளிமண்டலவியல் திணைக்களத்தின் இயற்கை அனர்த்த முன்னெச்சரிக்கை மையம் வெள...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாளை (12) செல்லுபடியாகும் வகையில் வெப்பமான வானிலை தொடர்பான எச்சரிக்கை அறிவித்தலை வளிமண்டலவியல் திணைக்களத்தின் இயற்கை அனர்த்த முன்னெச்சரிக்கை மையம் வெளியிட்டுள்ளது.</p><p>
</p><p></p><p>வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, குருணாகல், மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களின் சில பகுதிகளிலும் பகல் வேளையில் மனித உடலால் உணரப்படும் வெப்பத்தின் அளவான வெப்பச் சுட்டெண் (Heat Index), “அவதானம் செலுத்தப்பட வேண்டிய” மட்டத்தில் காணப்படக்கூடும் என அந்த அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/edd9925d-2c6c-4f66-bb1a-8075a7562840/26-6aa4339cd8483.webp' /></p><p>எனவே, குறித்த பகுதிகளில் வசிப்பவர்கள் பகல் வேளையில் அதிக வெப்பத்துக்கு நீண்ட நேரம் வெளிப்படுவதைத் தவிர்த்து, போதியளவு நீர் அருந்தி, வெப்பத்தின் தாக்கத்திலிருந்து தம்மைப் பாதுகாத்துக்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-11T17:00:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜனாதிபதியால் நீதிமன்றத்துக்கு மறைமுக அழுத்தம்: ஐக்கிய மக்கள் சக்தி குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/president-pressure-on-the-judiciary-sjb-1789145384"></link>
            <id>https://tamilwin.com/article/president-pressure-on-the-judiciary-sjb-1789145384</id>
            <summary type="text">அரசமைப்பு திருத்தம் தொடர்பான உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு இன்னும் வெளிவராத
நிலையில், அதனை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவோம் எனக் கூறி ஜனாதிபதி அநுரகுமார...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரசமைப்பு திருத்தம் தொடர்பான உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு இன்னும் வெளிவராத
நிலையில், அதனை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவோம் எனக் கூறி ஜனாதிபதி அநுரகுமார
திஸாநாயக்க நீதிமன்றத்துக்கு மறைமுக அழுத்தம் கொடுத்து வருகின்றார் என்று
ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதிச் சட்ட செயலாளர் ரஜித லக்மால் குற்றம் சுமத்தியுள்ளார்.</p><p>

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

"22ஆவது அரசமைப்பு திருத்தம் தொடர்பான உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு இன்னும்
சபாநாயகருக்கு அனுப்பி வைக்கப்படாத நிலையில் உள்ளது.</p><p>நாட்டினுடைய பிரதான நிறைவேற்று
அதிகாரியான ஜனாதிபதி மேடைகளில் ஏறி 'தீர்ப்பு வந்தவுடன் அதனை மூன்றில் இரண்டு
பெரும்பான்மையுடன் நிறைவேற்றுவோம்' எனக் கூறுவது நீதிமன்றத்தின் மீது
விடுக்கப்படும் நேரடி அழுத்தமாகும்.</p><h2>அத்தியாவசிய மருந்துகள்&nbsp;</h2><p>

எழுதப்படாத ஒரு தீர்ப்பு குறித்து நாட்டின் ஜனாதிபதி பகிரங்கமாகப் பேசுவது
ஜனநாயகத்துக்கு ஆபத்தானது. இன்று நாட்டில் உள்ள பிரதான மருத்துவமனைகளில்
நோயாளிகளுக்குத் தேவையான அத்தியாவசிய மருந்துகள் எதுவும் இல்லை. ஆனால்,
ஜனாதிபதியோ மக்கள் வினோதத்துக்காக மருத்துவமனைக்குச் செல்கின்றார்.</p><p>வீடுகளிலேயே கொத்தமல்லி குடித்துவிட்டு இருக்குமாறும் கூறுகின்றார்.

மருத்துவமனைகளில் மருந்துகள் இல்லை என்பதை மறைக்கவே ஜனாதிபதி இவ்வாறு
கூறுகின்றாரா. இதன் காரணமாகவே மக்கள் அவரை இன்று 'கொத்தமல்லி ஜனாதிபதி' என
விமர்சிக்கத் தொடங்கியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d9694d6c-bf9f-454d-b095-5a40ec5c6d3b/26-6aa432ca14b01.webp' /></p><p>
</p><p>
ஊழலை ஒழிப்பதாகக் கூறி ஆட்சிக்கு வந்தவர்கள், 2025 ஜனவரி மாதம் இடம்பெற்ற
கொள்கலன் விவகாரம் தொடர்பான விசாரணை அறிக்கையைத் தம் வசமிருந்தும் அதனை
வெளிப்படுத்தாமல் பூட்டி வைத்துள்ளனர்.
</p><p>
போலி கலாநிதி பட்டம் தொடர்பான குற்றச்சாட்டுக்கு உள்ளான முன்னாள் சபாநாயகர்
மீதோ அல்லது நிலக்கரி கொள்முதல் ஊழல்கள் மீதோ இதுவரை எவ்வித முறையான
விசாரணைகளும் நடத்தப்படவில்லை.</p><h2>அரச போலிப் பேரணி</h2><p>ஜெனிவா மனித உரிமைகள் பேரவையின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த அரசு
தவறியுள்ளது. ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை
இரத்துச் செய்வதாக வாக்குறுதியளித்தவர்கள், இன்று அப்பாவி மக்களுக்கு எதிராக
அதே சட்டத்தைப் பயன்படுத்தி வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ffb89da7-330f-4f52-9bf1-a343971e57e7/26-6aa432cabd10d.webp' /></p><p>
</p><p>
மக்களின் அதிருப்தியையும் சரிந்துவரும் செல்வாக்கையும் மறைக்கவே பஸ்கள் மூலம்
ஆட்களைத் திரட்டி அரசு போலிப் பேரணிகளை நடத்தி வருகின்றது.</p><p>

இந்த அரசுக்கு இன்னும் 3 ஆண்டுகள் மட்டுமே அவகாசம் உள்ளது. அதற்குப் பிறகு
மக்களால் இவர்கள் முற்றாக நிராகரிக்கப்படுவார்கள். எதிர்க்கட்சியாக நின்று
மக்களுக்கான ஜனநாயகப் போராட்டத்தை ஐக்கிய மக்கள் சக்தி தொடர்ந்து
முன்னெடுக்கும் எனத் தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-11T16:56:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[போர்ட்ஸ்மத் அகதிகள் எதிர்ப்பு போராட்டம்: முதல் நபரை கைது செய்த பொலிஸார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/portsmouth-anti-migration-protests-1-man-arrested-1789145354"></link>
            <id>https://news.lankasri.com/article/portsmouth-anti-migration-protests-1-man-arrested-1789145354</id>
            <summary type="text">Portsmouth Anti-Migration Protests 1st man arrested: போர்ட்ஸ்மத் அகதிகள் எதிர்ப்பு போராட்டம் தொடர்பில் முதல் நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Portsmouth Anti-Migration Protests 1st man arrested: போர்ட்ஸ்மத் அகதிகள் எதிர்ப்பு போராட்டம் தொடர்பில் முதல் நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><h2> முதல் நபர் கைது</h2><p>பிரித்தானியாவில் கடந்த வாரம் நடந்த அகதிகள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் வன்முறையில் ஈடுபட்டது மற்றும் காவல்துறை அதிகாரிகளை தாக்கியது ஆகிய குற்றச்சாட்டின் கீழ் பால்ஸ்ரோவ்(Paulsgrove) பகுதியை சேர்ந்த 42 வயது நபரை வெள்ளிக்கிழமை ஹாம்ப்ஷயர்(Hampshire) காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.</p><p>100க்கும் மேற்பட்ட அகதிகளுடன் RNLI படகுகள் துறைமுகத்திற்கு வந்த நிலையில், அதனை எதிர்த்து கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டக்காரர்கள் பல மணி நேரம் துறைமுக பாதையை முடக்கினர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/058321a8-975d-49af-a29e-e9c3a2e37ba4/26-6aa4310c5d69c.webp' /></p><p>மேலும் அப்போது ஏற்பட்ட மோதலின் போது சில காவலர்கள் காயமடைந்தனர். இறுதியில் திங்கட்கிழமை காலை கூட்டம் கலைக்கப்பட்டது.</p><p>இந்த வார சனிக்கிழமை போர்ட்ஸ்மவுத் நகர மையத்தில் சவுத் கோஸ்ட் பேட்ரியாட்ஸ் அமைப்பினர் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.</p><p></p><h2>முகமூடி அணிந்தவர்கள் மீது கடும் நடவடிக்கை</h2><p>
இந்நிலையில் போராட்டக்காரர்கள் யாரும் முகமூடி அணிந்து கொண்டு ஆர்ப்பாட்ட பகுதிக்குள் வரக்கூடாது என்று பொலிஸார் எச்சரித்துள்ளனர்.</p><p> உத்தரவை மீறி முகமூடி அணியும் எவரும் குற்றவாளியாக கருதப்பட்டு உடனடியாக கைது செய்யப்படுவார்கள் என எச்சரிக்கப்பட்டுள்ளது.</p><p> முகமூடி அணிந்த நபர்களால் பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள அச்சத்தை போக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக காவல்துறை அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p>&nbsp;<br></p>]]></content>
            <updated>2026-09-11T16:49:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிளிநொச்சியில் திகில் சம்பவம்; எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நடந்தது என்ன!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/stabbing-at-kilinochchi-fuel-station-1789133141"></link>
            <id>https://jvpnews.com/article/stabbing-at-kilinochchi-fuel-station-1789133141</id>
            <summary type="text">&amp;nbsp; கிளிநொச்சி நகரிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றிற்குள் நேற்றிரவு (10) 8.00 மணியளவில் இடம்பெற்ற கத்திக்குத்துத் தாக்குதல் சம்பவம் பரபரப்பை ஏ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; கிளிநொச்சி நகரிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றிற்குள் நேற்றிரவு (10) 8.00 மணியளவில் இடம்பெற்ற கத்திக்குத்துத் தாக்குதல் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
</p><p>
 இந்த கதாக்குதல் சம்பவத்தில் நால்வர் காயமடைந்துள்ளனர். 

டிப்பர் வாகனம் ஒன்றிற்கு எரிபொருள் நிரப்பிய பின்னர், அவ்வாகனத்தைச் சற்று முன்னோக்கி நகர்த்துமாறு எரிபொருள் நிரப்பு நிலையப் பணியாளர் கோரியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/365c7b2a-3e9c-44b3-b2de-5148bf95adf6/26-6aa4015723946.webp' /></p><h2>&nbsp;சாரதிக்கும் பணியாளருக்கும் வாய்த்தர்க்கம்</h2><p>

 இதன் காரணமாகச் சாரதிக்கும் பணியாளருக்கும் இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது. 

தனியே சென்ற டிப்பர் வாகனச் சாரதி, சிறிது நேரத்தின் பின்னர் மேலும் ஐந்து பேருடன் மீண்டும் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு வந்துள்ளார்.</p><p></p><p> 

அங்கு இருந்த எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர், முகாமையாளர், பணியாளர் மற்றும் வாடிக்கையாளர் ஒருவர் மீது கத்திக்குத்துத் தாக்குதல் நடத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளார். </p><p>

இத்தாக்குதலில் காயமடைந்த நான்கு பேரும் உடனடியாக மீட்கப்பட்டு சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-11T16:44:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொக்கட்டிச்சோலை ஆலய குரு சிவஸ்ரீ வ. சோதிலிங்கம் குருக்கள் இறைவனடி சேர்ந்தார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sothilingam-gurukkal-has-attained-the-lord-s-feet-1789145004"></link>
            <id>https://jvpnews.com/article/sothilingam-gurukkal-has-attained-the-lord-s-feet-1789145004</id>
            <summary type="text">மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரைப் பெருநிலப் பகுதியில் அமைந்துள்ள பிரசித்திபெற்ற கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தின் நீண்டகால ஆலய குரு...</summary>
            <content type="html"><![CDATA[<p>மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரைப் பெருநிலப் பகுதியில் அமைந்துள்ள பிரசித்திபெற்ற கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தின் நீண்டகால ஆலய குருவாக அர்ப்பணிப்புடன் சேவையாற்றிய சிவஸ்ரீ வ. சோதிலிங்கம் குருக்கள் இன்று (11.09.2026) வெள்ளிக்கிழமை சுகவீனம் காரணமாக இறைவனடி சேர்ந்தார்.</p><p></p><p>

கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தின் பூர்வீக கால பாரம்பரிய நடைமுறைகள் தொடர்பில் ஆழ்ந்த அறிவு கொண்டிருந்த அவர், அவற்றை ஆதாரபூர்வமாக மற்றவர்களுக்கு தெளிவுபடுத்தக்கூடிய ஒரு வரலாற்றுப் பொக்கிஷமாகத் திகழ்ந்தார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/50edcc04-1929-487f-9661-80582c868762/26-6aa42fae3b8d0.webp' /></p><p>ஆலயத்தின் நீண்டகால வரலாறு மற்றும் பாரம்பரிய நடைமுறைகள் தொடர்பான பல்வேறு அரிய தகவல்களை அவர் அறிந்திருந்ததுடன், அவற்றை அடுத்த தலைமுறையினருக்கும் எடுத்துரைப்பதில் பெரும் அக்கறை கொண்டிருந்தார்.
</p><p>
கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் 1998 முதல் 2004 வரை வண்ணக்கராகவும் செயலாளராகவும் பணியாற்றிய காலப்பகுதியில், ஆலயத்தின் பல்வேறு வரலாற்றுத் தகவல்களை சோதிலிங்கம் குருக்கள் தனக்குத் தெரிவித்திருந்ததாக நெருங்கியவர்கள் நினைவுகூருகின்றனர்.
</p><p>
அடியார்கள் மத்தியில், “கொக்கட்டிச்சோலை சிவன் கோயில் என்றால் சோதிலிங்கம் குருக்கள்; சோதிலிங்கம் குருக்கள் என்றால் கொக்கட்டிச்சோலை சிவன் கோயில்” என்ற எண்ணக்கருத்தே நீண்டகாலமாக நிலவி வந்தது.</p><p>

அன்னாரின் இல்லம் மட்டக்களப்பு கூளாவடியில் அமைந்துள்ளதுடன், அன்னாரின் இறுதிக் கிரியைகள் தொடர்பான விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-11T16:43:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் குறித்து பொலிஸார் வெளியிட்டுள்ள சந்தேகம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/six-grenade-attacks-reported-1789144772"></link>
            <id>https://tamilwin.com/article/six-grenade-attacks-reported-1789144772</id>
            <summary type="text">தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதங்களை பாதாள உலகக் குழு உறுப்பினர்கள் பயன்படுத்துகின்றார்களா என்ற சந்தேகம் எழுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இலங்கையில...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதங்களை பாதாள உலகக் குழு உறுப்பினர்கள் பயன்படுத்துகின்றார்களா என்ற சந்தேகம் எழுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>இலங்கையில் இந்த ஆண்டில் இதுவரை ஒழுங்கமைக்கப்பட்ட பாதாள உலகக் குழுக்களினால் 06 கைக்குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>இதில் 3 தாக்குதல்கள் கல்கிஸ்ஸ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியிலேயே பதிவாகியுள்ளன. 
யுத்த காலத்தில் விடுதலைப் புலிகளிடமிருந்து பெறப்பட்ட கைக்குண்டுகளே இவ்வாறான தாக்குதல்களுக்குப் பயன்படுத்தப்படுவதாக பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளதாக தெற்கு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.</p><h2>குற்றவியல் பின்னணி</h2><p>
</p><p>இதன்காரணமாக, பாதாள உலகக் குற்றங்களைக் கட்டுப்படுத்த எதிர்காலத்தில் முப்படைகளின் உதவியைப் பெறுவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்று (11) அதிகாலை 3.00 மணியளவில், தெஹிவளை, சிறிசங்கபோ மாவத்தையில் உள்ள வீடு ஒன்றின் கதவை அடையாளம் தெரியாத நபர் தட்டியுள்ளார். </p><p>வீட்டார் கதவைத் திறந்ததும் அந்நபர் கைக்குண்டை வீட்டிற்குள் வீசிவிட்டுத் தப்பிச் சென்றுள்ளார்.
வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த 17 வயதுடைய கசுன் ரஷ்மிக மற்றும் அவரது 11 வயதுடைய சகோதரரான துமிந்த கீஹான் ஆகிய இரு சிறுவர்களும் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/165ea34e-213d-4db0-905c-cfee39a99058/26-6aa42ec60c3a0.webp' /></p><p>
</p><p>இச்சிறுவர்களின் தந்தையான 55 வயதுடைய நளின் துசாந்த பெரேரா என்பவரின் காலில் காயமேற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். </p><p>இவர் மீது எவ்வித குற்றவியல் பின்னணியோ குற்றச்சாட்டுகளோ இல்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>அருகில் உள்ள வீடொன்றில் வசிக்கும் உறவினர்கள் சிலர் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வருவதாகவும், அவர்கள் வெளிநாட்டில் தலைமறைவாக இருக்கும் "படவிட்ட அசாங்க" என்ற பாதாள உலகக் கும்பல் தலைவனின் நெருங்கிய சகாக்கள் என்றும் தகவல்கள் கிடைத்துள்ளன.</p><h2>விசாரணைகள்</h2><p> 
நேற்று முன்தினம் களுபோவில பகுதியில் உள்ள வீடு ஒன்றின் மீது படவிட்ட அசாங்கவின் சகாக்களால் நடத்தப்பட்ட கைக்குண்டுத் தாக்குதலுக்குப் பழிவாங்கும் வகையிலேயே இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.</p><p> 
எனினும், தாக்குதல் நடத்தியவர் இலக்கை மாற்றி, தவறுதலாக இச்சிறுவர்களின் வீட்டின் மீது குண்டை வீசியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e0203a34-7e85-4344-ba5d-cda7eee17aa3/26-6aa4348c25f6a.webp' /></p><p> </p><p>
இச்சம்பவம் தொடர்பில் நீதவான் விசாரணை நடத்தப்பட்டுள்ளதுடன், மூன்று பொலிஸ் குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
</p><p> மேலும், தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் முச்சக்கர வண்டி பஹல போபே பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-11T16:39:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[அவமானப்படும் முத்து, பொங்கியெழுந்த விஜயா.. சிறகடிக்க ஆசை ட்விஸ்ட்! ப்ரோமோ இதோ]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/siragadikka-aasai-promo-vijaya-supports-muthu-1789144609"></link>
            <id>https://cineulagam.com/article/siragadikka-aasai-promo-vijaya-supports-muthu-1789144609</id>
            <summary type="text">சிறகடிக்க ஆசை சீரியலில் எப்போதும் முத்துவை திட்டிக்கொண்டே தான் இருப்பார் விஜயா. மனோஜ் என்ன தப்பு செய்தாலும் அவருக்கு ஆதரவாக இருக்கும் விஜயா எப்போது இன...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிறகடிக்க ஆசை சீரியலில் எப்போதும் முத்துவை திட்டிக்கொண்டே தான் இருப்பார் விஜயா. மனோஜ் என்ன தப்பு செய்தாலும் அவருக்கு ஆதரவாக இருக்கும் விஜயா எப்போது இன்னொரு மகன் முத்து மற்றும் மருமகள் மீனாவை மட்டம் தட்டி பேசிக்கொண்டே இருப்பார்.</p><p>மீனாவின் தம்பி மற்றும் வில்லி சிந்தாமணியின் திருமணம் நடக்கும்போது அங்கு முத்து எல்லோருக்கும் return gift கொடுக்கிறார்.
</p><p>அவர் யார் என கெஸ்ட் ஒருவர் கேட்க, அவர் பெரிய தொழிலதிபர், 50 வண்டிகள் ஓடுகிறது என வில்லி சிந்தாமணி பொய் சொல்கிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ceb6b92b-5314-4fc3-841a-2fa0ce88bba2/26-6aa42e2360c42.webp' /></p><p>
</p><h2>மகனுக்காக பேசிய விஜயா
</h2><p>அதன்பின் முத்து சில வண்டிகள் தான் வைத்திருக்கிறார், அதுவும் டியூவில் இருக்கிறது என்கிற விஷயம் அறிந்து அவரை அந்த நபர்கள் அசிங்கமாக பேசுகின்றனர்.
</p><p>அப்போது அதை பார்த்து விஜயா கடும் கோபமாக அவர்களிடம் சண்டை போடுகிறார்.
</p><p>
முத்துவுக்காக விஜயா பேசியது எல்லோருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ப்ரோமோவை பாருங்க.&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/U5lpT7W85kk" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-11T16:38:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் குடும்பங்களின் கடன் விகிதத்தில் ஏற்பட்ட மாற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/statcan-says-debt-to-income-ratio-declined-1789143307"></link>
            <id>https://canadamirror.com/article/statcan-says-debt-to-income-ratio-declined-1789143307</id>
            <summary type="text">கனடாவில் குடும்ப வருமானத்தின் வளர்ச்சி கடனின் வளர்ச்சியை விட அதிகமாக இருந்ததால், இரண்டாவது காலாண்டில் கடன் மற்றும் வருமானத்திற்கு இடையிலான விகிதம் குற...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவில் குடும்ப வருமானத்தின் வளர்ச்சி கடனின் வளர்ச்சியை விட அதிகமாக இருந்ததால், இரண்டாவது காலாண்டில் கடன் மற்றும் வருமானத்திற்கு இடையிலான விகிதம் குறைந்துள்ளதாக கனடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
</p><p>செலவிடக்கூடிய வருமானத்துடன் ஒப்பிடுகையில், குடும்பக் கடன் சந்தைக் கடன் பருவகால சீரமைப்பின்படி முதல் காலாண்டில் 178.6 சதவீதமாக இருந்தது, இது இரண்டாவது காலாண்டில் 176.4 சதவீதமாகக் குறைந்துள்ளது. </p><p>
கனடிய குடும்பங்கள் செலவிடக்கூடிய ஒவ்வொரு 1 டொலர் வருமானத்திற்கும் சராசரியாக 1.76 டொலர் கடன் வைத்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2c3d84b5-32d7-4b27-8c21-90bc5542e5ae/26-6aa4290cedfec.webp' /></p><p> 
வருமானத்தில் அசல் மற்றும் வட்டி திருப்பிச் செலுத்துவதற்கான வீதம் 14.68 சதவீதத்திலிருந்து 14.52 சதவீதமாகச் சரிந்துள்ளது. </p><p>
நுகர்வோர் கடன், வீட்டு அடமானக் கடன் மற்றும் அடமானம் அல்லாத கடன்கள் அடங்கிய மொத்த குடும்பக் கடன் வாங்கும் அளவு, முதல் காலாண்டில் 34.4 பில்லியன் டொலராக இருந்த நிலையில், இரண்டாவது காலாண்டில் 29.4 பில்லியன் டொலராகக் குறைந்துள்ளது. </p><p>
அடமானக் கடன் வாங்கும் வீதம் 19.4 பில்லியன் டொலராக சரிந்துள்ளது. இது 2024-ஆம் ஆண்டின் முதல் காலாண்டின் பின்னர் பதிவான மிகக் குறைந்த அளவாகும். 
நுகர்வோர் கடன் உட்பட அடமானம் அல்லாத கடன்கள் வாங்கும் அளவு 10.0 பில்லியன் டொலராக குறைந்துள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-11T16:25:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[47 வயதில் CPL-ல் 5 விக்கெட் - இம்ரான் தாஹிர் சாதனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/imran-tahir-47-bags-historic-cpl-five-for-1789143334"></link>
            <id>https://news.lankasri.com/article/imran-tahir-47-bags-historic-cpl-five-for-1789143334</id>
            <summary type="text">Imran Tahir (47) bags historic 5 wickets at CPL: Caribbean Premier League (CPL) போட்டியில், தென்னாப்பிரிக்காவின் முன்னாள் லெக் ஸ்பின்னர் இம்ரான் தாஹிர...</summary>
            <content type="html"><![CDATA[<p>Imran Tahir (47) bags historic 5 wickets at CPL: Caribbean Premier League (CPL) போட்டியில், தென்னாப்பிரிக்காவின் முன்னாள் லெக் ஸ்பின்னர் இம்ரான் தாஹிர், 47 வயதிலும் தனது திறமையை நிரூபித்துள்ளார்.</p><p>

அவர் CPL-இல் ஐந்து விக்கெட் எடுத்து, டி20 கிரிக்கெட்டில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்திய மிக வயதான வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9186e84c-60ec-46fd-b3e4-35f128217eec/26-6aa429279230d.webp' /></p><p>தாஹிர், Guyana Amazon Warriors அணிக்காக விளையாடி, St Lucia Kings அணிக்கு எதிரான போட்டியில் 5 விக்கெட் எடுத்தார். அவரது அசத்தலான பந்துவீச்சால் எதிரணி அணி குறைந்த ஓட்டங்களில் சுருண்டது.
</p><p>
போட்டிக்குப் பிறகு, தாஹிர், “என் மகன் என்னை தொடர்ந்து ஊக்குவித்து வருகிறார். அவர் தான் என்னை இன்னும் விளையாட தூண்டுகிறார். எனக்கு வயதானாலும், கிரிக்கெட்டில் ஆர்வம் குறையவில்லை” எனக் கூறினார்.
</p><p></p><p>தாஹிர் தனது வாழ்க்கையில் பல்வேறு நாடுகளில் விளையாடியுள்ளார். IPL-இல் Chennai Super Kings அணிக்காகவும், உலகம் முழுவதும் பல T20 லீக்குகளில் தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.
</p><p>
அவரது சாதனை, வயது ஒரு தடையாக இல்லாமல், உற்சாகமும், உடல் ஆரோக்கியமும் இருந்தால் எந்த வயதிலும் விளையாட முடியும் என்பதை நிரூபிக்கிறது.</p><p>
</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Imran Tahir picks up his sixth T20 five-fer and registers his best figures in the format - all while 4⃣7⃣ years young 🫡<a href="https://t.co/dyfKFpFitV">pic.twitter.com/dyfKFpFitV</a></p>&mdash; Cricbuzz (@cricbuzz) <a href="https://x.com/cricbuzz/status/2097855827545838039?ref_src=twsrc%5Etfw">September 10, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>CPL ரசிகர்கள், தாஹிரின் சாதனையை பாராட்டி, சமூக ஊடகங்களில் பெரும் வரவேற்பை அளித்துள்ளனர். “தாஹிர் இன்னும் இளம் வீரர்களுக்கு சவாலாக இருக்கிறார்” என ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
</p><p>
இந்த சாதனை, CPL வரலாற்றில் மட்டுமல்லாமல், உலகளாவிய T20 லீக்குகளிலும் ஒரு முக்கிய நிகழ்வாக கருதப்படுகிறது.&nbsp; &nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-11T16:12:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஏமனில் பெரிம் தீவை கைப்பற்றிய ஹவுதிகள் - உலகளாவிய எண்ணெய் போக்குவரத்துக்கு அச்சுறுத்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/houthis-capture-perim-island-oil-at-risk-1789140181"></link>
            <id>https://news.lankasri.com/article/houthis-capture-perim-island-oil-at-risk-1789140181</id>
            <summary type="text">Houthis capture Perim island: ஏமனில் பெரிம் தீவை ஹவுதிகள் கைப்பற்றியுள்ளனர்.

பெரிம் தீவை கைப்பற்றிய ஹவுதிகள்ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி இயக்கம், ஏமனின்...</summary>
            <content type="html"><![CDATA[<p>Houthis capture Perim island: ஏமனில் பெரிம் தீவை ஹவுதிகள் கைப்பற்றியுள்ளனர்.</p><h2>

பெரிம் தீவை கைப்பற்றிய ஹவுதிகள்</h2><p>ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி இயக்கம், ஏமனின் மேற்குக் கடற்கரை பகுதியில் முக்கிய முன்னேற்றம் கண்டுள்ளது. அவர்கள் பாப் அல்-மந்தப் நீரிணையின் நடுப்பகுதியில் அமைந்துள்ள பெரிம் (Mayyun) தீவை கைப்பற்றியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
</p><p></p><h2>எண்ணெய் ஏற்றுமதி பாதிக்கப்பட வாய்ப்பு</h2><p>இந்த தீவு, செங்கடல் மற்றும் சூயஸ் கால்வாய் வழியாக ஆசியாவையும் ஐரோப்பாவையும் இணைக்கும் முக்கியமான வர்த்தக பாதையில் அமைந்துள்ளது. உலகளாவிய பொருட்களின் சுமார் 12 சதவீதம் இந்த நீரிணை வழியாக வர்த்தகம் செய்யப்படுகிறது.</p><p>

சவுதி அரேபியா, ஏமன் அரசுப் படைகளுக்கு ஆதரவளித்து வந்த நிலையில், ஹவுதிகள் மோகா துறைமுக நகரத்தையும் கைப்பற்றியுள்ளனர்.

இதனால், சவுதி அரேபியாவின் எண்ணெய் ஏற்றுமதி பாதிக்கப்பட வாய்ப்பு அதிகரித்துள்ளது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1f406672-322b-4f76-bde3-6ff80b707e71/26-6aa41cd80bf0c.webp' /></p><p>ஏற்கனவே, ஹார்முஸ் நீரிணையில் ஈரான் தாக்குதல்களை நடத்தியதால், சவுதி அதிகமாக செங்கடல் பாதையை பயன்படுத்தி வந்தது.

ஹவுதிகள் பெரிம் தீவை கைப்பற்றியதால், உலகளாவிய எரிசக்தி போக்குவரத்துக்கு இரட்டை அச்சுறுத்தல் உருவாகியுள்ளது.</p><p></p><h2>ஈரான்&nbsp;வரவேற்பு</h2><p> </p><p>ஹார்முஸ் நீரிணை ஈரான் கட்டுப்பாட்டில் இருக்கும் நிலையில், பாப் அல்-மந்தப் ஹவுதிகள் கட்டுப்பாட்டிற்கு சென்றுள்ளது.

இதனால், எண்ணெய் விலை பீப்பாய்க்கு 100 டொலரை தாண்டியுள்ளது. </p><p>

ஈரான், ஹவுதிகளின் முன்னேற்றத்தை வரவேற்று, “இது சவுதி மற்றும் அமெரிக்காவுக்கு எதிரான எங்கள் கூட்டணியை வலுப்படுத்தும்” என அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-11T16:08:21+00:00</updated>
        </entry>
    </feed>
