<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-08-02T09:41:46+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[3 நாட்களில் இந்தியாவில் ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே திரைப்படம் செய்துள்ள வசூல்.. விவரம் இதோ]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/spiderman-brand-new-day-3-days-india-box-office-1785663103"></link>
            <id>https://cineulagam.com/article/spiderman-brand-new-day-3-days-india-box-office-1785663103</id>
            <summary type="text">ஸ்பைடர் மேன்மார்வெல் தயாரிப்பில் எத்தனை திரைப்படங்கள் வெளியானாலும் அவெஞ்சர்ஸிற்கு நிகராக எதிர்பார்ப்பை உண்டாக்கும் ஒரே திரைப்படம் ஸ்பைடர் மேன். இதுவரை...</summary>
            <content type="html"><![CDATA[<h2>ஸ்பைடர் மேன்</h2><p>மார்வெல் தயாரிப்பில் எத்தனை திரைப்படங்கள் வெளியானாலும் அவெஞ்சர்ஸிற்கு நிகராக எதிர்பார்ப்பை உண்டாக்கும் ஒரே திரைப்படம் ஸ்பைடர் மேன்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cc931fee-02ab-4aff-af53-38eec4745777/26-6a6f0e829b953.webp' /></p><p>இதுவரை வெளிவந்த ஸ்பைடர் மேன்: ஹோம் கமிங், பார் பிரம் ஹோம், நோ வே ஹோம் உள்ளிட்ட அனைத்து திரைப்படங்களும் அமோக வரவேற்பை பெற்றுள்ளன. இதனால் ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே திரைப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/79702b1e-346c-4c99-a6d3-3e44646eec7e/26-6a6f0e8352330.webp' /></p><p></p><h2>வசூல் விவரம்&nbsp;&nbsp;</h2><p> 

அத்தகைய எதிர்பார்ப்புடன் வெளியான இப்படம் ரசிகர்களிடையே அமோக வரவேற்பு பெற்று வருகிறது. குறிப்பாக இந்தியாவில் மிகப்பெரிய அளவில் இப்படத்தை கொண்டாடி வருகிறார்கள்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8a100132-d381-4710-8015-81505b93700a/26-6a6f0e84095ef.webp' /></p><p>இதுவரை 3 நாட்களை வெற்றிகரமாக பாக்ஸ் ஆபிஸில் கடந்திருக்கும் ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே திரைப்படம் இந்தியாவில் மட்டுமே ரூ. 220 கோடி வரை வசூலித்துள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-02T09:40:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Farook Sihan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பொத்துவில்- பசறிச்சேனையில் ஊர் மக்களை வீதிக்கு விரட்டிய காட்டு யானை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/wild-elephant-rampages-in-pasarichenai-1785662100"></link>
            <id>https://tamilwin.com/article/wild-elephant-rampages-in-pasarichenai-1785662100</id>
            <summary type="text">அம்பாறை- பசறிச்சேனை கிராமத்திற்குள் நேற்றிரவு(1.8.2026) புகுந்த
காட்டு யானை ஒன்று, அதை விரட்ட முயன்ற கிராம மக்களைத் திரும்பத் துரத்தியதால் அந்தப் பகு...</summary>
            <content type="html"><![CDATA[<p>அம்பாறை- பசறிச்சேனை கிராமத்திற்குள் நேற்றிரவு(1.8.2026) புகுந்த
காட்டு யானை ஒன்று, அதை விரட்ட முயன்ற கிராம மக்களைத் திரும்பத் துரத்தியதால் அந்தப் பகுதியில் பெரும் அச்சம் நிலவியது.
</p><p>
கிராமத்திற்குள் புகுந்து முழுமையாகச் சுற்றித் திரிந்த காட்டு யானையை ஊரார்
ஒன்று திரண்டு வெளியேற்ற முயன்றபோது, யானை கோபமடைந்து துரத்த முற்பட்டதால்
பொதுமக்கள் நாலா பக்கமும் தெறித்து ஓடினர். </p><p>எனினும், அதிர்ஷ்டவசமாகவும்
இறைவனின் அருளாலும் பெரிய அளவிலான உயிர்ச்சேதங்களோ உடைமைச் சேதங்களோ இன்றி
யானை பாதுகாப்பாக மீண்டும் காட்டுப் பகுதிக்குள் சென்றுள்ளது.</p><p></p><h2>அட்டகாசம்</h2><p>

கிராமத்துப் பகுதி இளைஞர்கள் துணிச்சலுடனும் மிகுந்த பொறுப்புடனும்
செயற்பட்டு, யானைக்கு எவ்வித ஆபத்தும் இன்றி அதனைப் பாதுகாப்பான முறையில்
காட்டுப் பகுதிக்குள் அனுப்புவதற்கு உதவினர்.
</p><p>
இது குறித்து அப்பகுதி முக்கியஸ்தர் ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில், எமது கிராமத்தை அண்டிய பகுதிகளில் அதிகளவிலான யானைக்கூட்டங்கள் உலாவுவது
அதிகரித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0556bed9-8aca-464f-a6ab-e177fad5a6f6/26-6a6f0ea106475.webp' /></p><p> </p><p>எனவே, பொதுமக்கள் அனைவரும் குறிப்பாக இரவு நேரங்களில்
தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வருவதைத் தவிர்க்க வேண்டும். </p><p>ஒவ்வொருவரின்
உயிரும் பெறுமதியானது என்பதால், உயிர் அல்லது உடைமைச் சேதங்கள் ஏற்படாத
வகையில் மிகவும் அவதானத்துடன் பொறுப்பாகச் செயற்படுமாறு கேட்டுக்கொள்கிறோம் எனக் குறிப்பிட்டார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-02T09:39:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தியாவில் JioTag 2 அறிமுகம்., குறைந்த விலையில் ஸ்மார்ட் டிராக்கர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/jiotag-2-launched-in-india-price-specs-1785663205"></link>
            <id>https://news.lankasri.com/article/jiotag-2-launched-in-india-price-specs-1785663205</id>
            <summary type="text">ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது புதிய ஜியோடேக் 2 (JioTag 2) சாதனத்தை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.இது ரூ.1,249 என்ற குறைந்த விலையில் கிடைக்கிறது. வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது புதிய ஜியோடேக் 2 (JioTag 2) சாதனத்தை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.</p><p>இது ரூ.1,249 என்ற குறைந்த விலையில் கிடைக்கிறது. வங்கி சலுகையுடன் வாங்கினால், ரூ.1,199 விலையில் கிடைக்கும்.</p><p>ஜியோடேக் 2, முந்தைய ஜியோடேக் மாடலை விட மேம்பட்ட வடிவமைப்புடன் வருகிறது. இது கருப்பு, சிவப்பு, பச்சை ஆகிய மூன்று நிறங்களில் கிடைக்கிறது. சாதனம் பாலிகார்பனேட் (Polycarbonate) பொருளால் உருவாக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/64f71841-bb8e-4e7d-a542-a5853df1b549/26-6a6f0ee74da45.webp' /></p><p>முக்கியமாக, ஜியோடேக் 2 இப்போது iOS மற்றும் Android இரண்டிலும் வேலை செய்கிறது. முந்தைய மாடல் ஒரே பிளாட்ஃபார்மில் மட்டுமே இயங்கியது. இதன் மூலம், பயனர்கள் தங்கள் பொருட்களை எளிதில் கண்டுபிடிக்க முடியும்.</p><p>சாதனத்தில் 120dB சத்தம் உண்டாக்கும் ஸ்பீக்கர் உள்ளது. இதனால், ப்ளூடூத் வரம்புக்குள் இருக்கும் போது பொருட்களை எளிதில் கண்டுபிடிக்கலாம். </p><p>ப்ளூடூத் வரம்புக்கு வெளியே சென்றால், மேப் வழிகாட்டி (Map Directions) மூலம் பொருட்களின் இருப்பிடத்தை அறியலாம்.
</p><p></p><p>ஜியோடேக் 2, ஆப்பிள் போன்ற நிறுவனங்களின் விலை உயர்ந்த டிராக்கிங் சாதனங்களுக்கு மாற்றாக, இந்திய பயனர்களுக்கு மலிவான தேர்வாக அமைகிறது. தற்போது, இது அமேசான் இந்தியா வலைத்தளத்தில் கிடைக்கிறது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-02T09:31:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[முன்னாள் அமைச்சர்களின் இல்லங்கள் தொடர்பில் ஜனாதிபதியின் உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/take-action-against-former-ministers-homes-1785661307"></link>
            <id>https://tamilwin.com/article/take-action-against-former-ministers-homes-1785661307</id>
            <summary type="text">முன்னாள் அமைச்சர்களின் உத்தியோகபூர்வ இல்லங்களாகப் பயன்படுத்தப்பட்ட பங்களாக்களையும், வீடுகளையும் பொருளாதார ரீதியாகப் பயனுள்ள நோக்கங்களுக்காகப் பயன்படுத...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் அமைச்சர்களின் உத்தியோகபூர்வ இல்லங்களாகப் பயன்படுத்தப்பட்ட பங்களாக்களையும், வீடுகளையும் பொருளாதார ரீதியாகப் பயனுள்ள நோக்கங்களுக்காகப் பயன்படுத்தும் செயல்முறையை விரைவுபடுத்துமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.</p><p>பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சகத்திற்கு 2026ஆம் ஆண்டில் ஒதுக்கப்பட்ட வரவுசெலவுத் திட்ட ஒதுக்கீடுகள் மற்றும் 2027ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்ட முன்மொழிவுகளின் கீழ் செயல்படுத்தப்பட்ட திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வு தொடர்பாக ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் பங்கேற்றபோது, ​​ஜனாதிபதி இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>முன்மொழிவுகள் மீளாய்வு</h2><p>

பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பொது நிர்வாகத் துறை, உள்விவகாரத்துறை மற்றும் உள்ளூராட்சித் துறை ஆகியவற்றிற்காக 2026ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட ரூ. 60,430.04 மில்லியன் மூலதனச் செலவினம் மற்றும் ரூ. 706,226.83 மில்லியன் தொடர் செலவினம் ஆகியவற்றின் கீழ் செயல்படுத்தப்பட்ட திட்டங்களின் முன்னேற்றம் மற்றும் எதிர்காலத் திட்டங்கள், அத்துடன் 2027ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்ட முன்மொழிவுகளும் விரிவாக மீளாய்வு செய்யப்பட்டன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b7d8a442-9167-43e1-8399-5e074cf4d015/26-6a6f0dddd4855.webp' /></p><p>

பிராந்திய சமூக மற்றும் பொருளாதார அபிவிருத்தியை அடையும் வகையில், பிராந்திய நிர்வாக அலகுகளை அபிவிருத்தி அலகுகளாக உருமாற்றுவதற்கான ஒரு திட்டத்தைத் தயாரிக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-02T09:29:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[எதையும் பெரிதாக எடுத்துக்கொள்ளாதீர்கள்- நடிகை த்ரிஷாவின் அட்வைஸ்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/dont-bothered-here-is-the-advice-actress-trisha-1785328400"></link>
            <id>https://manithan.com/article/dont-bothered-here-is-the-advice-actress-trisha-1785328400</id>
            <summary type="text">Trisha Advice to Fans: எதையும் பெரிதாக எடுத்துக்கொள்ளாதீர்கள் என அட்வைஸ் செய்த நடிகை த்ரிஷாவின் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

த்ரிஷாவின் அட்வை...</summary>
            <content type="html"><![CDATA[<p>Trisha Advice to Fans: எதையும் பெரிதாக எடுத்துக்கொள்ளாதீர்கள் என அட்வைஸ் செய்த நடிகை த்ரிஷாவின் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.</p><h2>

த்ரிஷாவின் அட்வைஸ்</h2><p> 
 
நடிகை த்ரிஷா அண்மையில் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றார். </p><p>

அங்கு எடுத்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த அவர், அதனுடன் ஒரு எளிமையான ஆனால் ஆழமான கருத்தையும் பதிவு செய்துள்ளார்.</p><p>
</p><p><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/p/DbXh9D7mYXW/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/p/DbXh9D7mYXW/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/p/DbXh9D7mYXW/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by Trish (@trishakrishnan)</a></p></div></blockquote> <script async src="//www.instagram.com/embed.js"></script></p><p>அதில், "எதையும் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் இருப்பது ஒரு தேர்வு. அதைத் தேர்ந்தெடுங்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
இந்த பதிவு சமூக வலைதளங்களில் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. </p><p>

அன்றாட வாழ்க்கையில் சிறிய விஷயங்களுக்கு கூட அதிகம் கவலைப்படுபவர்களுக்கு இந்த வார்த்தைகள் உதவியாக அமைந்துள்ளன.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-02T09:12:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பொல்கொல்ல அணையின் வான் கதவுகள் திறப்பு! அவதானத்துடன் செயற்படுமாறு வலியுறுத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/two-spillway-gates-of-the-polgolla-dam-opened-1785659514"></link>
            <id>https://tamilwin.com/article/two-spillway-gates-of-the-polgolla-dam-opened-1785659514</id>
            <summary type="text">பொல்கொல்ல மகாவலி அணையின் இரண்டு வான் கதவுகளைத் திறக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக பொறியியலாளர் அலுவலகம் அறிவித்துள்ளது.அதன்படி, இன்றையதினம்(2.8.2026)&amp;nbsp...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொல்கொல்ல மகாவலி அணையின் இரண்டு வான் கதவுகளைத் திறக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக பொறியியலாளர் அலுவலகம் அறிவித்துள்ளது.</p><p>அதன்படி, இன்றையதினம்(2.8.2026)&nbsp; இரண்டு வான் கதவுகளை தலா இரண்டு அடிகள் வீதம்&nbsp;திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p> </p><p>

நாட்டின் பல மாவட்டங்களில் நிலவும் பலத்த மழையுடனான காலநிலை காரணமாக ஏற்படக்கூடிய வெள்ள அபாயத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கிலேயே இவ்வாறு வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.</p><p></p><h2>நடவடிக்கை</h2><p> </p><p>

இதன் மூலம் வினாடிக்கு 3,940 கனஅடி நீர் விக்டோரியா நீர்த்தேக்கத்திற்கு வெளியேற்றப்படுவதாகப் பொல்கொல்ல மகாவலி அணைக்கட்டுப் பொறுப்புப் பொறியியலாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e6f84a87-8e3a-49d5-9086-89b8ccb6160b/26-6a6f04d8857f2.webp' /></p><p> </p><p>

மகாவலி கங்கையின் கீழ்நோக்கிய தாழ்நிலப் பகுதிகள் மற்றும் விக்டோரியா நீர்த்தேக்கத்தைச் சார்ந்த தாழ்நிலப் பகுதிகளில் வாழும் மக்கள் இது தொடர்பில் அவதானத்துடன் இருக்குமாறும், தேவைப்படின் பாதுகாப்பான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் மேலும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-02T09:05:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[சஞ்சயை பார்த்து கண்கலங்கினேன் - ரவி மோகன் விவகாரத்தில் சுஜாதா விஜயகுமார் உருக்கம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/ravi-mohan-mother-in-law-open-up-family-issue-1785656921"></link>
            <id>https://manithan.com/article/ravi-mohan-mother-in-law-open-up-family-issue-1785656921</id>
            <summary type="text">Sujatha Vijayakumar press meet : நடிகர் ரவி மோகன் மற்றும் அவரது மனைவி ஆர்த்தி இடையேயான விவாகரத்து விவகாரம் கடந்த சில மாதங்களாக சமூக வலைதளங்களிலும், தி...</summary>
            <content type="html"><![CDATA[<p>Sujatha Vijayakumar press meet : நடிகர் ரவி மோகன் மற்றும் அவரது மனைவி ஆர்த்தி இடையேயான விவாகரத்து விவகாரம் கடந்த சில மாதங்களாக சமூக வலைதளங்களிலும், திரையுலக வட்டாரங்களிலும் அதிகம் பேசப்படும் விஷயமாக இருந்து வருகிறது. </p><p>நீதிமன்ற நடவடிக்கைகள், ஜீவனாம்சம் தொடர்பான விவாதம், குழந்தைகளை சந்திக்கும் உரிமை, பாடகி கெனிஷா பிரான்சிஸின் பெயர் அடிக்கடி சர்ச்சையில் இழுக்கப்படுவது என இந்த விவகாரம் நாளுக்கு நாள் புதிய திருப்பங்களை சந்தித்து வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a9181b17-b85d-46e3-ad52-9a36725b408c/26-6a6efda673d18.webp' /></p><p></p><h2>சுஜாதா விஜயகுமார் ஓபன் டாக்&nbsp;&nbsp;</h2><p>
</p><p>
இந்த சூழலில், ஆர்த்தியின் தாயாரும் தயாரிப்பாளருமான சுஜாதா விஜயகுமார் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி இணையத்தில் புதிய விவாதத்தை கிளப்பியுள்ளது. குறிப்பாக அந்த பேட்டியில் நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சயை எடுத்துக்காட்டாக குறிப்பிட்டுப் பேசியது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3c9246c2-b2cf-4115-89f5-8d9f23048c8a/26-6a6efda7c91cd.webp' /></p><p>
</p><p>
பேட்டியில் பேசிய சுஜாதா விஜயகுமார், சமீபத்தில் ஜேசன் சஞ்சய் அளித்த ஒரு நேர்காணலை பார்த்ததாக கூறினார். அதில், தனது தந்தையைப் பற்றி சஞ்சய் மிகுந்த மரியாதையுடனும் பெருமையுடனும் பேசிய விதம் தன்னை மிகவும் நெகிழச் செய்ததாகவும், அதைப் பார்த்தபோது கண்கலங்கியதாகவும் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f1706341-28c7-457b-b435-a2fbbe242816/26-6a6efda722731.webp' /></p><p>

"கணவன்–மனைவிக்குள் எவ்வளவு பிரச்சனைகள் இருந்தாலும், பிள்ளைகள் தங்கள் தந்தை மீது அன்பும் மரியாதையும் வைத்திருக்க வேண்டும். சஞ்சய் பேசிய விதம் அதற்கு ஒரு எடுத்துக்காட்டு," என்றும் குறிப்பிட்டுள்ளார்.</p><p>இதையடுத்து, தனது பேரன்கள் தொடர்பாக சமீபத்தில் நடந்த ஒரு சம்பவத்தையும் சுஜாதா விஜயகுமார் பகிர்ந்துகொண்டார். அவரது குறிப்பிடுகையில், சுமார் 15 நாட்களுக்கு முன்பு தனது பேரன் வெளிநாட்டில் ஒரு கல்வி நிறுவனத்தில் சேர்வதற்காக பாஸ்போர்ட் ஆவணங்களில் ரவி மோகனின் கையெழுத்து தேவைப்பட்டதாக தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/594a27ac-cca7-47ba-a5df-a482b598b34d/26-6a6efda8788eb.webp' /></p><p>
அதற்காக ரவி மோகனை தொடர்புகொண்டபோது, முதலில் வருவதாக கூறியதாகவும், பின்னர் அவரது தொலைபேசியில் இருந்து நீண்ட குறுஞ்செய்தி ஒன்று வந்ததாகவும் அவர் கூறினார். அந்த செய்தியில், "நான் ஏன் உதவ வேண்டும்? நான் என்ன ஏடிஎம் மெஷினா?" என்ற பொருளில் எழுதப்பட்டிருந்ததாகவும், அதை பார்த்து அதிர்ச்சி அடைந்ததாகவும் தெரிவித்தார்.
</p><p>
ஆனால், அந்த குறுஞ்செய்தியை நேரடியாக ரவி மோகனே அனுப்பியிருப்பார் என்று தாம் நம்பவில்லை என்றும், அவருடன் இருப்பவர்கள்தான் அதை அனுப்பியிருக்கலாம் என்று தனிப்பட்ட சந்தேகத்தை அவர் வெளிப்படுத்தினார்.

மேலும், பாடகி கெனிஷா பிரான்சிஸை குறிப்பிட்டும் சுஜாதா விஜயகுமார் சில குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5bc6fcdc-25b4-4966-8dde-e77de38faf5b/26-6a6efda9278f7.webp' /></p><h2>அந்த பெண்ணுடன் தான் இருக்கின்றார்...</h2><p> அவரது கூற்றுப்படி, கெனிஷா தற்போது கூட ரவி மோகனுடன் இருப்பதாகவும், வெளியில் இருவரும் பிரிந்துவிட்டார்கள் என்ற தோற்றம் மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.</p><p> மேலும், குழந்தைகளை சந்திக்கும் சூழலில் ஒரு ஹீலர் உடன் இருக்க வேண்டும் என்று ரவி தரப்பில்&nbsp; கூறப்படுவதாகவும், அப்படிப்பட்ட சூழலில் குழந்தைகள் எப்படி இயல்பாக செல்வார்கள் என்ற கேள்வியையும் எழுப்பினார். குறித்த பேட்டி&nbsp; தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d1ba5d54-c8e4-4b2c-be38-50a48a58d884/26-6a6efda9cc543.webp' /></p><p></p><p> ரவி மோகன்–ஆர்த்தி விவகாரத்தில் கெனிஷாவின் பெயர் ஏற்கனவே பலமுறை பேசப்பட்டது. அதற்கு அவர் முன்னதாகவே மறுப்பு தெரிவித்திருந்தார். மேலும், ரவி மோகனிடம் இருந்து விலகப் போவதாகவும், ஊடக வெளிச்சத்திலிருந்து விலக முடிவு செய்துள்ளதாகவும் அறிவித்திருந்தார்.
</p><p>
இந்நிலையில், சுஜாதா விஜயகுமார் மீண்டும் கெனிஷா குறித்து கருத்து தெரிவித்திருப்பது சமூக வலைதளங்களில் புதிய விவாதத்தை உருவாக்கியுள்ளது. அதேபோல், ஜேசன் சஞ்சயை எடுத்துக்காட்டாக குறிப்பிட்ட அவரது பேச்சும் ரசிகர்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.&nbsp;</p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-02T09:05:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறைச்சாலைகளில் வெடிக்கும் மோதல் - நிர்வாகத்தின் தவறே இது..! ஐக்கிய மக்கள் சக்தி குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/mahara-prison-clash-criticism-anura-government-1785661343"></link>
            <id>https://tamilwin.com/article/mahara-prison-clash-criticism-anura-government-1785661343</id>
            <summary type="text">இந்த தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு சிறைச்சாலைகளை கூட நிர்வாகம் செய்ய முடியவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்த தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு சிறைச்சாலைகளை கூட நிர்வாகம் செய்ய முடியவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
</p><p>ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார இந்த குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.
</p><p>அந்த அரசாங்கத்திற்கு நாட்டை அல்ல சிறைச்சாலையை கூட நிர்வாகம் செய்யக்கூடிய திறமை இல்லை என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.</p><p></p><h2>கைதிகள் அரசாங்கம் பொறுப்பு</h2><p>சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளின் பொறுப்பினை அரசாங்கமே ஏற்றுக் கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
</p><p>எனவே கைதிகளுக்கு ஏற்படக்கூடிய பிரச்சனைகளுக்கு அரசாங்கமே பொறுப்பு ஏற்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bd47e168-4788-4280-be59-5ff3ec24ee89/26-6a6f08045729c.webp' /></p><p>
</p><p>அவ்வாறு அரசாங்கத்திற்கு செய்ய முடியாவிட்டால் நாட்டின் பொறுப்பை வேறு தரப்பினரிடம் ஒப்படைக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>நீர்கொழும்பு சிறைச்சாலையில் 30க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டதாகவும் வரலாற்றில் முதல் தடவையாக 11 சிறைச்சாலை அதிகாரிகள் கொல்லப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.
</p><p>இவ்வாறான கலவரம் இடம் பெற்ற நிலையிலும் அரசாங்கம் ஏனைய சிறைச்சாலைகளில் பாதுகாப்பினை உறுதி செய்ய தவறி உள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
</p><p>குறிப்பாக மஹர சிறைச்சாலையில் வன்முறை இடம்பெற்றமையை அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.
</p><p>அரசாங்கத்திற்கு சிறைச்சாலை ஒன்றை நிர்வாகம் செய்யக்கூடிய திறன் இல்லை என தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p></p><p></p><p><b>YOU MAY LIKE THIS VIDEO</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/iRkijW3LofU" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-02T09:04:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[மஹர சிறைச்சாலையைச் சுற்றி பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு நீக்கம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/unrest-at-mahara-prison-police-curfew-lifted-now-1785659376"></link>
            <id>https://ibctamil.com/article/unrest-at-mahara-prison-police-curfew-lifted-now-1785659376</id>
            <summary type="text">ராகம காவல்துறை பிரிவுக்குட்பட்ட மஹர சிறைச்சாலையைச் சூழவுள்ள மூன்று கிராம உத்தியோகத்தர் பிரிவுகளுக்கு நேற்று (01) முதல் பிறப்பிக்கப்பட்டிருந்த காவல்துற...</summary>
            <content type="html"><![CDATA[<p>ராகம காவல்துறை பிரிவுக்குட்பட்ட மஹர சிறைச்சாலையைச் சூழவுள்ள மூன்று கிராம உத்தியோகத்தர் பிரிவுகளுக்கு நேற்று (01) முதல் பிறப்பிக்கப்பட்டிருந்த காவல்துறை ஊரடங்கு சட்டம் தற்போது நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p> 

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மையை கட்டுப்படுத்துவதற்காக மறுஅறிவித்தல் வரை உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் காவல்துறை ஊரடங்குச் சட்டம் நேற்று (1) பிறப்பிக்கப்பட்டது.</p><p>அதற்கமைய, 246/கெந்தலியத்த பாலுவ - மேற்கு, 246/சீ கெந்தலியத்த பாலுவ - வடக்கு மற்றும் 181/ஜீ தம்புவ ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகளுக்கே இவ்வாறு காவல்துறை ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டது.</p><p></p><h2>சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை</h2><p> </p><p>

இந்தநிலையில், நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட நிலையில் குறித்த காவல்துறை ஊரடங்கு சட்டம் தற்போது முதல் நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0214253a-5de8-46ad-894b-84f4646cc34c/26-6a6f060c61099.webp' /></p><p>இதேவேளை மஹர சிறைச்சாலையில் ஏற்பட்டிருந்த அமைதியின்மை தற்போது முற்றாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
</p><p>
சிறைச்சாலையில் நிலவிய அசாதாரண சூழ்நிலை கட்டுப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, கைதிகள் அனைவரும் மீண்டும் அவர்களது சிறை அறைகளுக்குள் பாதுகாப்பாக அடைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-02T09:02:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மூத்த பத்திரிகையாளர் சபேஸ்வரனின் மறைவு - ஈழத் தமிழர் ஊடகத் துறைக்குப் பேரழிவு - சிறீதரன் எம்.பி இரங்கல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/journalist-arumugaraja-sabeswaran-passes-away-1785660321"></link>
            <id>https://tamilwin.com/article/journalist-arumugaraja-sabeswaran-passes-away-1785660321</id>
            <summary type="text">இலங்கைத் தீவில் ஈழத்தமிழினம் சந்தித்த போரின் கோர முகத்தையும், இன
ஒடுக்குமுறையின் நிதர்சனங்களையும் உலகறியச் செய்த ஊடகப் போராளி, மூத்த
பத்திரிகையாளர் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கைத் தீவில் ஈழத்தமிழினம் சந்தித்த போரின் கோர முகத்தையும், இன
ஒடுக்குமுறையின் நிதர்சனங்களையும் உலகறியச் செய்த ஊடகப் போராளி, மூத்த
பத்திரிகையாளர் ஆறுமுகராசா சபேஸ்வரனின் (சபேசன்) மறைவு ஈழத் தமிழர் ஊடகத்
துறைக்குப் பேரழிவாகும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்
தெரிவித்துள்ளார்.
</p><p>
அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளார்.</p><p></p><h2>மூத்த பத்திரிகையாளர்&nbsp;</h2><p>அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

​</p><p>.இலங்கை அரசினால் தமிழர்களுக்கு எதிராகத் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட
போரின் பேரழிவுகளையும் மனித உரிமை மீறல்களையும், உயிராபத்தான
அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் வெளி உலகிற்குத் துணிவுடன் கொண்டுவந்தவர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2924d999-2a09-44e2-9fcd-f527325a83e0/26-6a6f073556859.webp' /></p><p>
</p><p>ஈழத்தமிழர்களின் உரிமை சார்ந்த அரசியல் தளத்தில் உறுதியோடு நின்று, தமது
பேனாவை ஆயுதமாக ஏந்தி களத்தில் நிற்கும் ஒரு செய்தியாளராகப் போராடியவர் அமரர்
சபேசன், ​ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்ட கொடூரச் சூழலிலும், அஞ்சாது களத்தில்
நின்று பணியாற்றியதோடு, யாழ். ஊடக அமையத்தின் தலைவராக இருந்து தமிழ்
ஊடகவியலாளர்களின் பாதுகாப்புக்காகவும் உரிமைக்காகவும் தொடர்ந்து குரல்
கொடுத்தவர். </p><p>தனது மும்மொழி ஆற்றலால் சர்வதேச ஊடகங்களுக்கும் ஈழத் தமிழர்களின்
அவலக் குரலைத் துல்லியமாகக் கடத்தியவர்.

​போர்க்காலத்திலும் அதன் பின்னரான நெருக்கடிகளிலும் தமிழ் மக்களின்
குரலாகவும், ஊடகத்துறைக்கே முதுகெலும்பாகவும் திகழ்ந்த ஒரு காத்திரமான ஆளுமையை
இன்று நாம் இழந்து நிற்கின்றோம்.</p><p> அவரது அர்ப்பணிப்பும் தியாகமும் தமிழ் பேசும்
மக்களின் வரலாற்றுப் பதிவுகளில் என்றும் நிலைத்திருக்கும்.

ஊடகப் போராளி சபேசன் அவர்களுக்கு எனது புகழஞ்சலிகளைத் தெரிவிப்பதோடு, அவரின்
பிரிவால் துயருறும் மனைவி, பிள்ளைகள் மற்றும் உறவினர்களுக்கு எனது ஆறுதலையும்
பகிர்ந்துகொள்கின்றேன் என குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-02T09:00:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[சேலையில் ரசிகர்களை கவரும் நடிகை ஸ்ருதி ஹாசன்.. சமீபத்திய போட்டோஷூட்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/actress-shruti-haasan-green-saree-photoshoot-1785655532"></link>
            <id>https://cineulagam.com/article/actress-shruti-haasan-green-saree-photoshoot-1785655532</id>
            <summary type="text">திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக இருக்கும் ஸ்ருதி ஹாசன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் நபர் ஆவார். அவ்வப்போது அதில் போட்டோஷூட் புகைப்படங்...</summary>
            <content type="html"><![CDATA[<p>திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக இருக்கும் ஸ்ருதி ஹாசன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் நபர் ஆவார். அவ்வப்போது அதில் போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்வதை வழக்கமாக வைத்துள்ளார். </p><p>இவர் வெளியிடும் புகைப்படங்கள் ரசிகர்களிடையே கவனத்தை பெறுகிறது. அந்த வகையில், தற்போது பச்சை நிற சேலையில் எடுத்துக்கொண்ட சமீபத்திய போட்டோஷூட் புகைப்படங்களை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். </p><p>இதோ பாருங்க:</p>]]></content>
            <updated>2026-08-02T09:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் 18 வயது இரட்டை சகோதரிகளின் சோகமான முடிவு..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/twin-sisters-survive-in-jaffna-1785659418"></link>
            <id>https://tamilwin.com/article/twin-sisters-survive-in-jaffna-1785659418</id>
            <summary type="text">யாழ்ப்பாணத்தில் 18 வயதுடைய இரட்டைச் சகோதரிகள் இருவர் தவறான முடிவெடுத்து தமக்கு தாமே தீ மூட்டி உயிர்மாய்த்து கொண்டுள்ளனர். 

இந்த சம்பவம் நேற்று(01.0...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணத்தில் 18 வயதுடைய இரட்டைச் சகோதரிகள் இருவர் தவறான முடிவெடுத்து தமக்கு தாமே தீ மூட்டி உயிர்மாய்த்து கொண்டுள்ளனர். </p><p>

இந்த சம்பவம் நேற்று(01.08.2026) அவருடைய வீட்டில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p> </p><h2>

இரட்டை சகோதரிகளின் சோகமான முடிவு</h2><p>
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,</p><p> 

சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புன்னாலைக்கட்டுவன் பகுதியை சேர்ந்த 18 வயதுடைய இரட்டை சகோதரிகள் தமக்கு தாமே தீ வைத்து உயிர்மாய்த்து கொண்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b8385e44-6513-41c1-b3b0-06f5915134ad/26-6a6f039b41a14.webp' /></p><p> </p><p>

இதனைத் தொடர்ந்து அவர் காப்பாற்றப்பட்டு தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p><p> இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர்கள் இருவரும் இன்று(01) அதிகாலை உயிரிழந்துள்ளனர்.</p><p> 

“வாழ்வதற்கு விருப்பமில்லாத காரணத்தால்..” இவ்வாறு செய்ததாக அவர்கள் உயிரிழப்பதற்கு முன்னர் வாக்குமூலம் வழங்கியதாக தெரிவிக்கப்படுகிறது. 

இந்த சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p><p><br></p><p> </p>]]></content>
            <updated>2026-08-02T08:45:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாடு முழுவதும் உள்ள சிறைச்சாலைகளில் பாதுகாப்பு தீவிர அதிகரிப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/all-sl-jails-security-up-after-mahara-riot-1785654936"></link>
            <id>https://ibctamil.com/article/all-sl-jails-security-up-after-mahara-riot-1785654936</id>
            <summary type="text">நாடு முழுவதிலும் உள்ள சிறைச்சாலைகளின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் (SDIG) சஜீவ மேடவத...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடு முழுவதிலும் உள்ள சிறைச்சாலைகளின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் (SDIG) சஜீவ மேடவத்த இதனை தெரிவித்துள்ளார்.</p><p>

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியற்ற சூழ்நிலையைத் தொடர்ந்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
</p><p>
மஹர சிறைச்சாலையை இன்று (02-08-2026) நேரில் சென்று நிலைமைகளைப் பார்வையிட்ட பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p></p><h2>முக்கிய சிறைச்சாலை</h2><p>மேலும் தெரிவித்த அவர், வெலிக்கடை, மெகசின், களுத்துறை மற்றும் நீர்கொழும்பு உள்ளிட்ட நாட்டின் அனைத்து முக்கிய சிறைச்சாலைகளின் பாதுகாப்பு குறித்தும் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
</p><p>
நேற்று ஏற்பட்ட இந்தச் சம்பவம் காரணமாகச் சிறைச்சாலைக்குள் எழுந்த பதற்ற நிலை, இன்றுகாலைப் பொழுது வரை தொடர்ந்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c46aeb4e-1bec-47f8-a1a4-4df8bfc8f34c/26-6a6f035db5ac3.webp' /></p><p>இக்கலவரத்தின் போது பெருமளவிலான கைதிகள் ஒன்றிணைந்து சிறைச்சாலையின் சொத்துக்களுக்குப் சேதத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>

இருப்பினும் சிறைச்சாலைத் திணைக்களம், இலங்கை காவல்துறை, காவல்துறை விசேட அதிரடிப் படை (STF), இலங்கை விமானப்படை மற்றும் கடற்படை ஆகிய கூட்டுப் பாதுகாப்புப் படையினரின் தீவிர முயற்சியால் இன்றுகாலை நிலைமை முற்றாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக சஜீவ மேடவத்த தெரிவித்துள்ளார்.
</p><p>
அடுத்த சில மணிநேரங்களுக்குள் சிறைச்சாலையின் முழுமையான பாதுகாப்பை உறுதிப்படுத்தி, வளாகத்தின் அன்றாட இயல்பு நடவடிக்கைகளை மீண்டும் கட்டியெழுப்ப அதிகாரிகள் தீவிரமாகச் செயற்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-02T08:45:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[150 ஆண்டுகளில் மிக வலுவான எல்-நினோ உருவாகும் அபாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/strongest-el-nino-in-150-years-emerging-1785660286"></link>
            <id>https://news.lankasri.com/article/strongest-el-nino-in-150-years-emerging-1785660286</id>
            <summary type="text">பசிபிக் பெருங்கடலில் உருவாகி வரும் எல்-நினோ (El Niño) நிகழ்வு, கடந்த 150 ஆண்டுகளில் மிக வலுவானதாக மாறக்கூடும் என சீன வானிலை நிர்வாகம் (CMA) எச்சரித்து...</summary>
            <content type="html"><![CDATA[<p>பசிபிக் பெருங்கடலில் உருவாகி வரும் எல்-நினோ (El Niño) நிகழ்வு, கடந்த 150 ஆண்டுகளில் மிக வலுவானதாக மாறக்கூடும் என சீன வானிலை நிர்வாகம் (CMA) எச்சரித்துள்ளது.</p><p>மே மாதம் முதல் மத்திய மற்றும் கிழக்கு பசிபிக் பகுதியில் கடல் மேற்பரப்பு வெப்பநிலை அதிகரித்து, எல்-நினோ நிலை உருவாகியுள்ளது.

ஜூலை மாதம் முதல் இது “சூப்பர் எல்-நினோ” ஆக மாறும் சாத்தியம் அதிகரித்துள்ளது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a5ed8cb2-e396-4d6f-82aa-91d1b6356a9c/26-6a6f038031aa3.webp' /></p><p>இந்த நிகழ்வு குறைந்தது அடுத்த ஆண்டு வசந்த காலம் வரை நீடிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
</p><p>
எல்-நினோ உலகளாவிய காலநிலை “அம்ப்ளிபையர்” என அழைக்கப்படுகிறது. இது வெப்ப அலைகள், வறட்சி, கனமழை போன்ற தீவிர வானிலை நிகழ்வுகளின் வாய்ப்பை அதிகரிக்கிறது.</p><p> கடல்-வானிலை தொடர்புகள் காரணமாக, உலகளாவிய காற்றோட்டம் மாறி, பல பிராந்தியங்களில் பருவநிலை மாறுபாடுகளை ஏற்படுத்துகிறது.
</p><p></p><p>சீன தேசிய வானிலை மையத்தின் முன்னறிவிப்பு படி, எல்-நினோ உருவாகும் காலத்தில் வடமேற்கு பசிபிக் பகுதியில் அதிகமான மற்றும் வலுவான சூறாவளிகள் உருவாகும். அவை சீனாவின் தெற்கு மற்றும் கிழக்கு கடற்கரை பகுதிகளில் கடும் காற்றும் மழையும் ஏற்படுத்தும். </p><p>எல்-நினோ உச்சத்தில் இருக்கும் போது தென் சீனாவில் அதிக மழை பெய்யும். பின்னர் யாங்சீ ஆற்றுப் பகுதி வெள்ள அபாயத்தை சந்திக்கும்.
</p><p></p><p>உலக வானிலை அமைப்பு (WMO) வெளியிட்ட அறிக்கையின்படி, 2026-2030 காலத்தில் உலக வெப்பநிலை புதிய உச்சத்தை எட்டும். 2027-ஆம் ஆண்டு வரலாற்றிலேயே அதிக வெப்பமான ஆண்டாக மாறக்கூடும் என 86 சதவீதம் சாத்தியம் கணிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இதனால், உலகம் முழுவதும் வேளாண்மை, நீர் வளங்கள், ஆற்றல் உற்பத்தி ஆகியவை கடுமையாக பாதிக்கப்படலாம். விஞ்ஞானிகள், எல்-நினோவின் தாக்கம் முழுமையாக வெளிப்படுவதற்கு 6-12 மாதங்கள் ஆகும் என எச்சரிக்கின்றனர்.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-02T08:42:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[உயிர்த்த ஞாயிறு வழக்குத் தீர்ப்பு ; முன்னாள் ஜனாதிபதி குறித்து ஸ்ரீநேசன் கருத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/may-have-caught-fever-amid-death-sentence-verdicts-1785655026"></link>
            <id>https://jvpnews.com/article/may-have-caught-fever-amid-death-sentence-verdicts-1785655026</id>
            <summary type="text">ஐந்து கோடி ரூபாய் தண்டப்பணம் செலுத்தியவருக்கும், ஏழரை கோடி ரூபாய் தண்டப்பணம் செலுத்தியவருக்கும் மரண தண்டனை வழங்கப்பட்டுள்ள நிலையில், 10 கோடி ரூபாய் தண...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஐந்து கோடி ரூபாய் தண்டப்பணம் செலுத்தியவருக்கும், ஏழரை கோடி ரூபாய் தண்டப்பணம் செலுத்தியவருக்கும் மரண தண்டனை வழங்கப்பட்டுள்ள நிலையில், 10 கோடி ரூபாய் தண்டப்பணம் செலுத்திய ஒருவருக்கும் தண்டனை கிடைக்காமல் போகும் வாய்ப்பு குறைவாகவே உள்ளது என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார்.</p><p></p><p>



மட்டக்களப்பில் நேற்று நடைபெற்ற சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
</p><p>


முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இதனை நினைத்து அவரது குடும்பம் மிகவும் வேதனைப்படுவார்கள். </p><p>



ஆனால் மற்றைய பக்கம் பார்க்கும்போது உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் 269 அப்பாவி பக்தர்கள் கொல்லப்பட்டிருக்கின்றார்கள்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/20360168-cb66-4966-9ca7-548be81d331c/26-6a6eff24617bd.webp' /></p><p>500 இற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்திருக்கின்றார்கள். அந்த செயலை அறிந்திருந்தும் தடுத்தவில்லை என்பதற்காக அவருக்கு அந்த தண்டனை வழங்கப்பட்டிருக்கின்றது.</p><p> 



இதனைப் பார்த்தவுடன் இன்னும் சிலருக்கு கலக்கம் ஏற்பட்டிருக்கின்றது. அவரோடு இணைந்து மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கின்ற முன்னாள் பொலிஸ் மா அதிபர் ஏழரைக் கோடி ரூபாய் தண்டப்பணம் செலுத்தியவர். </p><p>இந்த பாதுகாப்பு செயலாளர் ஐந்து கோடி ரூபா தண்டப்பணம் செலுத்தியவர். இன்னும் ஒருவர் 10 கோடி தாண்ட பணம் செலுத்தியவர் இருக்கின்றார். </p><p>



அவர் முன்னாள் ஜனாதிபதி அவர் இப்போது சிந்திப்பார், ஐந்து கோடி செலுத்தியவருக்கும் மரண தண்டனை, ஏழரை கோடி செலுத்தியவருக்கும் மரண தண்டனை, கொடுக்கப்பட்டிருக்கிறது என்றால் 10 கோடி செலுத்திய தமக்கு கிடைக்காமல் இருப்பதற்குரிய வாய்ப்பு குறைவாக இருக்கின்றது என சிந்திப்பார்.
</p><p>


அது மாத்திரம் இன்றி உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதலுக்கு சூத்திரதாரியாக இருந்தவர்கள் உள்ளே இரண்டு பேர் இருக்கிறார்கள். </p><p>அவர்களுக்கும் கலக்கம். தங்களுக்கும் என்ன நடக்குமோ என்பது பற்றி சிந்திப்பார்கள். தண்டனைக்கான வாய்ப்பு அவர்களுக்கு உள்ளது. </p><p> 



இதற்கு மேலாக இதனை இயக்கிய ஒரு சூத்திரதாரியான முன்னாள் ஜனாதிபதி ஒருவரும் இருக்கின்றார். அவருக்கு இப்போது காய்ச்சல் பிடித்திருக்கும்.</p><p> ஏனையவர்களுக்கு இவ்வாறான தண்டனை என்றால் தமக்கு கிடைக்க கூடிய வாய்ப்பு இருக்கிறது என சிந்திப்பார் என அவர் இதன்போது தெரிவித்தார்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-02T08:41:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[மஹர சிறைச்சாலை சுற்றுவட்டார பொலிஸ் ஊரடங்கு நீக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/police-curfew-lifted-around-mahara-prison-1785660077"></link>
            <id>https://jvpnews.com/article/police-curfew-lifted-around-mahara-prison-1785660077</id>
            <summary type="text">ராகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஹர சிறைச்சாலையைச் சூழவுள்ள மூன்று கிராம உத்தியோகத்தர் பிரிவுகளுக்கு நேற்று முதல் பிறப்பிக்கப்பட்டிருந்த பொலிஸ் ஊரடங்கு ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>ராகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஹர சிறைச்சாலையைச் சூழவுள்ள மூன்று கிராம உத்தியோகத்தர் பிரிவுகளுக்கு நேற்று முதல் பிறப்பிக்கப்பட்டிருந்த பொலிஸ் ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டுள்ளது.</p><p></p><p> 

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மையை கட்டுப்படுத்துவதற்காக மறுஅறிவித்தல் வரை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் நேற்று (1)பிறப்பிக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/717f08b9-17a3-4ecf-809a-d634247ae901/26-6a6f02aeb7e9c.webp' /></p><p> 

இதற்கமைய, 246/கெந்தலியத்த பாலுவ - மேற்கு, 246/சீ கெந்தலியத்த பாலுவ - வடக்கு மற்றும் 181/ஜீ தம்புவ ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகளுக்கே இவ்வாறு பொலிஸ் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டது. </p><p>

இந்நிலையில், நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட நிலையில் குறித்த பொலிஸ் ஊரடங்கு சட்டம் தற்போது முதல் நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-02T08:41:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரான் மீதான உக்கிரத் தாக்குதல்... பின்வாங்கிய ட்ரம்பின் முடிவுக்குப் பின்னால்: வெளிவரும் பின்னணி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/trump-climbs-down-iran-strikes-1785650019"></link>
            <id>https://news.lankasri.com/article/trump-climbs-down-iran-strikes-1785650019</id>
            <summary type="text">சனிக்கிழமை இரவு ஈரான் மீது உக்கிரமானத் தாக்குதல் முன்னெடுக்க இருப்பதாக அமெரிக்கா கூறி வந்த நிலையில், திடீரென்று அந்த முடிவை ஜனாதிபதி ட்ரம்ப் மாற்றியுள...</summary>
            <content type="html"><![CDATA[<p>சனிக்கிழமை இரவு ஈரான் மீது உக்கிரமானத் தாக்குதல் முன்னெடுக்க இருப்பதாக அமெரிக்கா கூறி வந்த நிலையில், திடீரென்று அந்த முடிவை ஜனாதிபதி ட்ரம்ப் மாற்றியுள்ளார்.</p><h2>ட்ரம்பின் முடிவில் மாற்றம்</h2><p>
</p><p>ஜனாதிபதி ட்ரம்பின் இந்த முடிவுக்குப் பின்னால் சவுதி அரேபியாவின் தலையீடும் அண்டை நாடுகள் மீது ஈரான் விடுத்த மிரட்டலும் காரணமாகக் கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/94bb4c17-e690-430c-85f9-733606f254c6/26-6a6ee7e5b0983.webp' /></p><p> </p><p>சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான், ட்ரம்ப்பின் தாக்குதல் திட்டங்கள் குறித்து தமது கருத்தைத் தெரிவிப்பதற்காக சனிக்கிழமையன்று அவரைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டதாகத் தகவல் வெளியானது. </p><p>மேலும், அமெரிக்கா தாக்குதல் நடத்தினால் தங்கள் அண்டை நாடுகளுக்கு எதிராகத் தீர்க்கமான முறையில் பதிலடி கொடுப்போம் என்று ஈரான் மிரட்டல் விடுத்ததைத் தொடர்ந்தே ட்ரம்பின் முடிவில் மாற்றம் ஏற்பட்டது என்றும் கூறுகின்றனர். </p><p>சனிக்கிழமையன்று ஈரான் ட்ரோன்களால் தாக்குதலுக்கு உள்ளானதாக குவைத் தெரிவித்தது; அதேவேளையில், ஹார்முஸ் நீரிணையில் ஓமன் அருகே இரண்டு கப்பல்கள் தாக்கப்பட்டன.</p><p></p><p> </p><p>Axios செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலில், பதற்றத்தைத் தணிக்குமாறும், தாக்குதல்களைத் தவிர்க்குமாறும் சவுதி பட்டத்து இளவரசர் ட்ரம்பை வலியுறுத்தியிருந்தார் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. </p><p>Associated Press செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலில், அமெரிக்கா ஈரானின் எரிசக்தி உள்கட்டமைப்பைக் குறிவைத்தாலோ அல்லது பிற முக்கிய உள்கட்டமைப்புகள் மீது பெரும் தாக்குதல்களை நடத்தினாலோ, </p><p>அதற்குப் பதிலடியாக ஈரான் சவுதி அரேபியா மற்றும் பிற வளைகுடா நாடுகள் மீது இதேபோன்ற தாக்குதல்களை நடத்தக்கூடும் என்று சவுதி பட்டத்து இளவரசர் சல்மான் கவலை தெரிவித்திருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/949b1b7e-4fa8-4717-af21-58f7bd65cda9/26-6a6ee7e34f8ec.webp' /></p><p> </p><p>அத்துடன், சனிக்கிழமை நடைபெற்ற தொலைபேசி உரையாடலின்போது, ​​ஈரானுக்கு எதிராக என்ன புதிய சாத்தியமான நடவடிக்கையை எடுப்பது குறித்து ட்ரம்ப் பரிசீலித்து வருகிறார் என்பது பற்றியும் பட்டத்து இளவரசர் தெளிவுபடுத்தக் கோரியுள்ளார். </p><p>ஈராக்கில் ஈரான் ஆதரவு ஆயுதக் குழுக்கள் பயன்படுத்திய தளவாட மற்றும் ஆயுதக் கிடங்குகள் மீதான தாக்குதலில், அமெரிக்காவுடன் இணைந்து சவுதி அரேபியாவும் இந்த வாரத் தொடக்கத்தில் பங்கேற்றது; இருப்பினும், அமெரிக்காவும் ஈரானும் மீண்டும் பேச்சுவார்த்தைக்குத் திரும்ப வேண்டும் என்றே சவுதி வலியுறுத்தி வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d1a39d9c-907a-4c62-b41d-744d0aeff276/26-6a6ee7e459dc5.webp' /></p><p> </p><p>முன்னதாக CBS செய்தி நிறுவனம் வெளியிட்டிருந்த தகவலில், ஈரானின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் மின் நிலையங்கள் உள்ளிட்டவற்றை இலக்காகக் கொண்டு, வார இறுதி முழுவதும் அமெரிக்காவும் இஸ்ரேலும் கூட்டுத் தாக்குதல்களை நடத்தத் திட்டமிட்டு வந்ததாக குறிப்பிட்டுள்ளது.</p><h2>கத்தார் மற்றும் இஸ்ரேலின்</h2><p> </p><p>இந்த நிலையிலேயே, அமெரிக்காவின் எவ்வித சாகச நடவடிக்கைகளுக்கும் எதிராக ஈரான் எச்சரிக்கை விடுத்ததுடன், அதற்குத் தீர்க்கமான பதிலடி கொடுக்கப்படும் என்றும் கூறியது.
</p><p>இதனிடையே,&nbsp;பல முக்கிய தளங்கள் மீது ஈரான் ஏவிய ட்ரோன்களை அழித்ததாக குவைத் இராணுவம் அறிவித்த சில மணிநேரங்களுக்குப் பிறகு, சனிக்கிழமையன்று துருக்கி, பாகிஸ்தான் மற்றும் சவுதி அரேபியாவின் மூத்த அதிகாரிகளுடன் ஈரான் வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அராக்சி தனித்தனி தொலைபேசி உரையாடல்களில் தங்களின் நிலைப்பாட்டைத் தெரிவித்துள்ளார். </p><p>அத்துடன், அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து நடத்தும் எந்தவொரு தாக்குதலுக்கும் அல்லது அத்தகைய நடவடிக்கைகளில் பிராந்திய நாடுகள் பங்கேற்பதற்கும் தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்று ஈரானின் அராக்சி தனது பிராந்திய சகாக்களிடம் தெரிவித்திருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c6e130c4-fa95-40f2-b979-f1c475b4f978/26-6a6ee7e50b722.webp' /></p><p> </p><p>இதனிடையே, ஈரானின் Nournews செய்தி நிறுவனம் வெளியிட்டிருந்த தகவலில், ஈரானிய எரிசக்தி உள்கட்டமைப்பு மீதான அமெரிக்கத் தாக்குதல்கள், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள எண்ணெய் வயல்கள் மீதும், </p><p>கத்தார் மற்றும் இஸ்ரேலின் எரிவாயு வயல்கள் மீதும் ஈரான் தாக்குதல்களைத் தொடுக்கத் தூண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த நிகழ்வுகளே ஈரானுக்கு எதிரான உக்கிரத் தாக்குதல் முடிவில் இருந்து ட்ரம்பை பின்வாங்க வைத்ததாகத் தெரிகிறது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-02T08:35:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[மஹர சிறைக் கைதிகளில் சிலர் பூசா சிறைக்கு மாற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/somemahara-prison-inmates-transferred-boosa-prison-1785659697"></link>
            <id>https://jvpnews.com/article/somemahara-prison-inmates-transferred-boosa-prison-1785659697</id>
            <summary type="text">மஹர சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 20 கைதிகள் பூசா சிறைச்சாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சி...</summary>
            <content type="html"><![CDATA[<p>மஹர சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 20 கைதிகள் பூசா சிறைச்சாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p>
</p><p></p><p>சிறைச்சாலை நிர்வாக நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகவே இந்த இடமாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/35d92dd0-a8f2-4707-a058-a3109bc496ce/26-6a6f013322af9.webp' /></p><p>கைதிகளின் பாதுகாப்பு, சிறைச்சாலை முகாமைத்துவம் மற்றும் நிர்வாக தேவைகளை கருத்தில் கொண்டு இவ்வாறான இடமாற்றங்கள் மேற்கொள்ளப்படுவதாக சிறைச்சாலைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.</p><p>

பூசா சிறைச்சாலை நாட்டின் முக்கிய பாதுகாப்பு ஏற்பாடுகள் கொண்ட சிறைச்சாலைகளில் ஒன்றாகக் கருதப்படுவதுடன், முக்கிய வழக்குகளில் தொடர்புடைய கைதிகள் உட்பட பலர் அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-02T08:35:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[அநுரவால் நியமிக்கப்பட்ட பூஜித் ஜயசுந்தர..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/anura-recomended-pujith-1785658691"></link>
            <id>https://tamilwin.com/article/anura-recomended-pujith-1785658691</id>
            <summary type="text">ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் பரிந்துரையின் அடிப்படையிலேயே பூஜித் ஜயசுந்தர பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
தேச...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் பரிந்துரையின் அடிப்படையிலேயே பூஜித் ஜயசுந்தர பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
</p><p>தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான விமல் வீரவன்ச இந்தக் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.
</p><p>ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில் அநுரகுமார உள்ளிட்ட தரப்பினர் ஊழல் ஒழிப்பு தொடர்பான ஏதோ ஒரு அமைப்பில் அங்கம் வகித்தனர் என தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>ஊழலை ஒழிக்க பதவிக்கு வந்த பூஜித்</h2><p>ஊழல்களை ஒழிப்பதற்கு எங்களுக்கு இந்த பொலிஸ்மா அதிபர் தான் தேவை என்று பூஜித் ஜயசுதந்தரவை, அனுரகுமாரா தரப்பினரே பரிந்துரை செய்தனர் என தெரிவித்துள்ளார்.</p><p>ரணில் விக்ரமசிங்கவை வீதியில் கண்டால் இதனை நீங்கள் கேட்டு தெரிந்து கொள்ளலாம் விமல் வீரவன்ச ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/62bf550e-4abf-4df3-b0b7-74765578b098/26-6a6efd44e7907.webp' />&nbsp; &nbsp;</p><p>
</p><p>தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் கோரிக்கைக்கு இணங்கவே பூஜித் ஜயசுந்தர பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டார் என சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p>தமக்கு பூஜித் ஜயசுந்தரவடன் எந்த விதமான தொடர்பும் கிடையாது எனக் குறிப்பிட்டுள்ளார்.</p><p>
பூஜித் பொாலிஸ் மா அதிபராக கடமை ஆற்றிய காலப்பகுதியில் போலி கடவுச்சீட்டு விவகாரம் ஒன்றில் தம்மை சிக்க செய்தவர்கள் அந்த குற்றச்சாட்டுகளில் நான் குற்றமற்றவர் என நீதிமன்றம் அறிவித்திருந்தது எனவும் அதனால் அவருக்கும் தமக்கும் எவ்விதமான தொடர்புகளும் கிடையாது எனவும் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-02T08:35:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரசாங்கத்திற்கு சிறைச்சாலைகளை கூட நிர்வாகம் செய்ய முடியவில்லை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/npp-cant-administrate-prisons-1785659475"></link>
            <id>https://tamilwin.com/article/npp-cant-administrate-prisons-1785659475</id>
            <summary type="text">இந்த தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு சிறைச்சாலைகளை கூட நிர்வாகம் செய்ய முடியவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்த தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு சிறைச்சாலைகளை கூட நிர்வாகம் செய்ய முடியவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
</p><p>ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார இந்த குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.
</p><p>அந்த அரசாங்கத்திற்கு நாட்டை அல்ல சிறைச்சாலையை கூட நிர்வாகம் செய்யக்கூடிய திறமை இல்லை என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
</p><p>சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளின் பொறுப்பினை அரசாங்கமே ஏற்றுக் கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
</p><p>எனவே கைதிகளுக்கு ஏற்படக்கூடிய பிரச்சனைகளுக்கு அரசாங்கமே பொறுப்பு ஏற்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
</p><p>அவ்வாறு அரசாங்கத்திற்கு செய்ய முடியாவிட்டால் நாட்டின் பொறுப்பை வேறு தரப்பினரிடம் ஒப்படைக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>நீர்கொழும்பு சிறைச்சாலையில் 30க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டதாகவும் வரலாற்றில் முதல் தடவையாக 11 சிறைச்சாலை அதிகாரிகள் கொல்லப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.
</p><p>இவ்வாறான கலவரம் இடம் பெற்ற நிலையிலும் அரசாங்கம் ஏனைய சிறைச்சாலைகளில் பாதுகாப்பினை உறுதி செய்ய தவறி உள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
</p><p>குறிப்பாக மஹர சிறைச்சாலையில் வன்முறை இடம் பெற்றமையை அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.
</p><p>அரசாங்கத்திற்கு சிறைச்சாலை ஒன்றை நிர்வாகம் செய்யக்கூடிய திறன் இல்லை என தெரிவித்துள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-02T08:31:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Tony</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரமாண்ட இயக்குனர் ஷங்கருக்கே இந்த நிலைமையா, நோ சொன்ன இளம் நடிகர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/actor-says-no-to-director-shankar-1785648910"></link>
            <id>https://viduppu.com/article/actor-says-no-to-director-shankar-1785648910</id>
            <summary type="text">ஷங்கர் ஒரு காலத்தில் இவர் இயக்கத்தில் நடிக்க இந்தியாவில் உள்ள உச்ச நட்சத்திரங்கள் பலரும் போட்டி போட்டு வருவார்கள். ஆனால் இவரின் இந்தியன் 2, கேம் சேஞ்ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஷங்கர் ஒரு காலத்தில் இவர் இயக்கத்தில் நடிக்க இந்தியாவில் உள்ள உச்ச நட்சத்திரங்கள் பலரும் போட்டி போட்டு வருவார்கள்.</p><p> ஆனால் இவரின் இந்தியன் 2, கேம் சேஞ்சர் படத்தின் தோல்வி ஷங்கர் மார்கெட்டை கடுமையாக பாதித்துள்ளது. இனி இவர் இயக்கத்தில் நடிக்கலாமா என பலரும் ஒதுங்கி வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b8c1d0fc-8cdd-44c2-9097-0bca9d9768d3/26-6a6ed711b903b.webp' /></p><p> இந்நிலையில் ஷங்கர் வேள்பாரி பிரமாண்ட படத்தை எடுப்பதற்கு முன்பு சிறு பட்ஜெட்டில் ஒரு ஆக்‌ஷன் படத்தை எடுத்து விடலாம் என நினைத்துள்ளாராம், அதற்கான வேலையில் இறங்கி தனுஷிடம் கதை சொல்ல போக, அவரோ வேண்டாம் சார் என டீசண்ட் ஆக தன்னிடம் உள்ள லைன் அப் காட்டி மறுத்ததாக பிரபல பத்திரிகையாளர் ஒருவர் கூறியுள்ளார்.</p><p>எவ்ளோ பெரிய ஆள் என்றாலும் எல்லாம் மார்கெட் இருக்கும் வரை தான் என விஷயம் அறிந்தவர்கள் சொல்லி நகர்கின்றனர்.</p>]]></content>
            <updated>2026-08-02T08:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரான் மீதான தாக்குதல்களை இடைநிறுத்த ட்ரம்ப் தீர்மானம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/trump-s-decision-to-suspend-attacks-on-iran-1785645542"></link>
            <id>https://canadamirror.com/article/trump-s-decision-to-suspend-attacks-on-iran-1785645542</id>
            <summary type="text">ஈரானின் அணுசக்தி இலக்குகளைக் கட்டுப்படுத்தி, ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கான உடன்படிக்கை விரைவில் எட்டப்படும் வரை, ஈரான் மீதான புதிய தாக்குதலை...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானின் அணுசக்தி இலக்குகளைக் கட்டுப்படுத்தி, ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கான உடன்படிக்கை விரைவில் எட்டப்படும் வரை, ஈரான் மீதான புதிய தாக்குதலைத் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.</p><p> 

நீரிணையை உடனடியாக, முழுமையாக மீண்டும் திறப்பதற்கும், ஈரானின் அணுசக்தி அச்சுறுத்தலுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கும் வழிவகுக்கும் உடன்படிக்கை ஒன்றை கொண்டுவர ஈரானும் பிற மத்திய கிழக்கு நாடுகளும் அவகாசம் கோரியதாக ட்ரம்ப் தனது 'டிரூத்' சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e3704af1-e7d8-45dd-9ee2-e078ee768ae0/26-6a6ec9e80310d.webp' /></p><p>இந்தக் கோரிக்கையின் அடிப்படையில், உலகின் எதிர்கால நலன் கருதியும், அதேபோன்று வளமான மற்றும் வெற்றிகரமான ஈரானின் இருப்புக்காகவும், விரைவாக உடன்படிக்கை ஒன்றை எட்ட முடியும் என்ற நிபந்தனைக்கு உட்பட்டு, தாக்குதலை ரத்து செய்ய தாம் சம்மதித்துள்ளேன் என்றும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். </p><p>

ஈரானிய இலக்குகள் மீது புதிய தாக்குதல்களை நடத்துவது தொடர்பான ட்ரம்பின் அச்சுறுத்தல்களை அமெரிக்கப் படைகள் முன்னெடுத்தால், அதற்கு தீர்க்கமான முறையில் பதிலடி கொடுக்கப்படும் என்றும் ஈரான் தெரிவித்துள்ளது. </p><p>

பல முக்கிய உட்கட்டமைப்புகள் மீது ஈரானினால் ஏவப்பட்ட ட்ரோன்களை அழித்துள்ளதாக குவைத் இராணுவம் அறிவித்த சில மணித்தியாலங்களிலேயே, துருக்கி, பாகிஸ்தான் மற்றும் சவூதி உயர் அதிகாரிகளுடன் சனிக்கிழமை ஈரான் வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அராக்சி நடத்திய தனித்தனி தொலைபேசி உரையாடல்களின் போது இக்கருத்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.</p><p> 

எந்தவொரு ஆக்கிரமிப்புக்கும் ஈரான் தீர்க்கமாக பதிலளிக்கும் எனக் கூறிய அராக்சி, அமெரிக்காவின் பிராந்திய நிலைகுலைவு நடவடிக்கைகள் மற்றும் பிராந்திய பாதுகாப்பின்மை அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறுகளின் விளைவுகள் குறித்தும் விவாதித்ததாக அராக்சியின் டெலிகிராம் கணக்கில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-02T08:26:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் அதிகாலை பட்டாசு வெடிப்பு ; மடு மாதா ஆலய யாத்திரைக்கு சென்ற இளைஞனுக்கு நேர்ந்த கதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/youth-dies-in-firecracker-explosion-in-jaffna-1785646017"></link>
            <id>https://jvpnews.com/article/youth-dies-in-firecracker-explosion-in-jaffna-1785646017</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் குருநகர் 5 மாடி குடியிருப்பு பகுதியில் இன்று (02) அதிகாலை பட்டாசு வெடித்ததில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.மேலதிக விசாரணைஇந்தச் சம்பவம் இன்ற...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் குருநகர் 5 மாடி குடியிருப்பு பகுதியில் இன்று (02) அதிகாலை பட்டாசு வெடித்ததில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.</p><h3>மேலதிக விசாரணை</h3><p>இந்தச் சம்பவம் இன்று அதிகாலை சுமார் 2.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தொிவிக்கப்படுகின்றது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/27125567-f7f0-4700-b406-a233ae502975/26-6a6ecbc2ddb92.webp' /></p><p>சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, மடு மாதா ஆலய யாத்திரைக்காக புறப்படும் வேளையில் பட்டாசுகள் கொளுத்தப்பட்டிருந்தன. </p><p>

அவற்றில் ஒரு பட்டாசு வெடிக்காமல் இருந்த நிலையில், அதனை மீண்டும் வெடிக்கச் செய்வதற்கு குறித்த இளைஞர் முற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. </p><p>

இதன்போது அந்த பட்டாசு திடீரென வெடித்ததில் அதில் அவர் பலத்த காயமடைந்த நிலையில் உயிரிழந்ததாக குறிப்பிடப்படுகின்றது. </p><p>

இந்தச் சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-08-02T08:26:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீர்கொழும்பு கடற்பகுதியில் படகு கவிழ்ந்ததில் ஒருவர் பலி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/body-of-missing-fisherman-recovered-negombo-1785656645"></link>
            <id>https://ibctamil.com/article/body-of-missing-fisherman-recovered-negombo-1785656645</id>
            <summary type="text">நீர்கொழும்பு கடற்பரப்பில் மீன்பிடிப் படகு கவிழ்ந்த சம்பவத்தில் காணாமல் போனதாகக் கூறப்பட்ட இரண்டு கடற்தொழிலாளர்களில் ஒருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீர்கொழும்பு கடற்பரப்பில் மீன்பிடிப் படகு கவிழ்ந்த சம்பவத்தில் காணாமல் போனதாகக் கூறப்பட்ட <a href="https://ibctamil.com/article/mahara-riot-under-control-curfew-continues-1785642709" target="_blank">இரண்டு கடற்தொழிலாளர்களில் </a>ஒருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.</p><p>குறித்த நபர்கள் நேற்று (01.08.2026) மீன்பிடிக்க சென்ற இடத்தில் தான்&nbsp; கடலில் காணாமல் போயுள்ளனர்.&nbsp;</p><p>படகு கவிழ்ந்ததைத் தொடர்ந்து, இலங்கை கடற்படை மற்றும் இலங்கை விமானப்படை இணைந்து விரிவான தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளை முன்னெடுத்தன.</p><p></p><h2>படகு கவிழ்ந்ததில் ஒருவர் பலி</h2><p> </p><p>ஆரம்பத்தில் ஒரு சடலம் மீட்கப்பட்டிருந்த நிலையில் ஒருவர் காணாமல் போயிருந்ததாக தெரிவிக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e871b547-9703-4d27-a876-063aae5270c4/26-6a6efc68e8e0a.webp' /></p><p>பின்னர் மற்றுமொருவரும் பாதுகாப்பாக மீட்டு கரைக்குக் கொண்டுவரப்பட்டதுடன், மேலதிக <a href="https://ibctamil.com/article/donald-trump-holds-off-on-new-strikes-against-iran-1785648369" target="_blank">சிகிச்சைக்காக அவர் மருத்துவமனையில்</a> அனுமதிக்கப்பட்டுள்ளார். </p><p>&nbsp;மீட்புப் பணிகளுக்கு ஆதரவாக இலங்கை விமானப்படையின் Bell 412 ஹெலிகாப்டர் பயன்படுத்தப்பட்டது.
</p><p>
இதற்கிடையில், கடலில் ஏற்பட்ட மோசமான வானிலை காரணமாக மேலும் பல மீன்பிடிப் படகுகள் ஆபத்தான நிலையில் இருப்பதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது.</p><p>எனவே அவற்றுக்கு உதவுவதற்கான மீட்பு நடவடிக்கைகளும் கடற்படை மூலம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-02T08:25:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீர்கொழும்பு மோதல் வேறு - மஹர சம்பவம் வேறு...! அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/mahara-riot-under-control-minister-says-1785651431"></link>
            <id>https://ibctamil.com/article/mahara-riot-under-control-minister-says-1785651431</id>
            <summary type="text">மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியற்ற சூழ்நிலை தற்போது முற்றாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு சுமூக நிலை திரும்பியுள்ளதாக நீதி அமைச்சர், சட்டத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியற்ற சூழ்நிலை தற்போது முற்றாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு சுமூக நிலை திரும்பியுள்ளதாக நீதி அமைச்சர், சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.
</p><p>
இச்சம்பவம் நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற சம்பவத்திலிருந்து முற்றிலும் மாறுபட்ட கோணத்தைக் கொண்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p>

நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகளின் இரு குழுக்களுக்கு இடையே மோதல் ஏற்பட்ட போதிலும், மஹர சிறைச்சாலைச் சம்பவம் <a href="https://ibctamil.com/article/mahara-riot-under-control-curfew-continues-1785642709" target="_blank">சிறைச்சாலை நிர்வாகத்திற்கு </a>எதிராக முன்னெடுக்கப்பட்டது என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p></p><h2>கடுமையான நடவடிக்கை</h2><p>

சிறைச்சாலைகளுக்குள் போதைப்பொருள் நுழைவதைத் தடுப்பதற்கு அரசாங்கம் எடுத்துள்ள கடுமையான நடவடிக்கைகளால் ஏற்பட்ட அதிருப்தியும் கோபமுமே இந்த அமைதியற்ற சூழ்நிலைக்குக் காரணமாக இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>

மேலும் தெரிவித்த அவர், “அனைத்துச் சிறைச்சாலைகளுக்குள்ளும் போதைப்பொருள் கடத்தப்படுவதைக் கட்டுப்படுத்த நாங்கள் சிறப்புத் திட்டமொன்றை நடைமுறைப்படுத்தியுள்ளோம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/282c6ca5-6633-43fd-9528-f8a585890718/26-6a6ee843c24f9.webp' /></p><p> 

அதன்பேரில் உள்ள வெறுப்பும் கோபமுமே இத்தகைய நிலைக்குக் காரணமாக அமைந்திருக்கலாம். </p><p>முதற்கட்ட அறிக்கை கிடைத்த பின்னரே இது குறித்துத் துல்லியமாகக் கூற முடியும்.</p><p></p><h2>மேலதிக விவரங்கள்&nbsp;</h2><p>

சிறைச்சாலையின் பாதுகாப்பிற்காகப் காவல்துறையினரும், காவல்துறை விசேட அதிரடிப் படையினரும் (STF) தொடர்ந்தும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
</p><p>
மோதலின் போது சேதமடைந்த சொத்துக்களைச் சீரமைக்கும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.</p><p>
</p><p>
 <img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/46506665-9ca7-4d0a-8b3c-23510579fe2f/26-6a6ee7e7e6ef2.webp' /></p><p>கைதிகள் அனைவரும் மீண்டும் அவர்களது சிறை அறைகளுக்குள் அனுப்பப்பட்டுள்ளதுடன், அவர்களுக்குத் தேவையான உணவு மற்றும் நீர் வழங்கப்பட்டுச் சிறைச்சாலையின் அன்றாட நடவடிக்கைகள் இயல்பு நிலைக்குக் கொண்டுவரப்பட்டு வருகின்றன” என தெரிவித்துள்ளார்.</p><p>

அத்தோடு இச்சம்பவம் குறித்து முதற்கட்ட அறிக்கை கோரப்பட்டுள்ளதாகவும், இக்கலவரத்தின் போது கைதி ஒருவர் உயிரிழந்துள்ளதால் அது தொடர்பில் உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
</p><p>
முழுமையான விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட பின்னர், இது தொடர்பான மேலதிக விவரங்கள் வெளிப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p><a href="https://ibctamil.com/article/mahara-prison-unrest-damage-caused-in-prison-1785643509" target="_blank">https://ibctamil.com/article/mahara-prison-unrest-damage-caused-in-prison-1785643509</a></p>]]></content>
            <updated>2026-08-02T08:23:47+00:00</updated>
        </entry>
    </feed>
