<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-09-10T13:33:12+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[யோசித ராஜபக்ச வழக்கில் பொய்ச் சாட்சியம் அளித்த சாட்சி : பாயப்போகும் நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/witness-gives-false-testimony-in-yoshitha-case-1789040743"></link>
            <id>https://ibctamil.com/article/witness-gives-false-testimony-in-yoshitha-case-1789040743</id>
            <summary type="text">பணச்சலவை தடுப்புச் சட்டத்தின் கீழ் யோஷித ராஜபக்ச மீது தொடுக்கப்பட்ட வழக்கில் பொய்ச் சாட்சியம் அளித்த சாட்சி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டமா அதி...</summary>
            <content type="html"><![CDATA[<p>பணச்சலவை தடுப்புச் சட்டத்தின் கீழ் யோஷித ராஜபக்ச மீது தொடுக்கப்பட்ட வழக்கில் பொய்ச் சாட்சியம் அளித்த சாட்சி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டமா அதிபர் இன்று (10) கொழும்பு உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.&nbsp;</p><p>&nbsp;இன்று (10) இவ்வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, ​​சாட்சியமளித்த பாலித கமகே என்ற சாட்சி, தான் காவல்துறையிடம் அளித்த வாக்குமூலத்திற்கு முரணான சாட்சியத்தை அளித்திருந்ததை பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டார நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டுவந்தார்.</p><h2>சாட்சி மீது நடவடிக்கை</h2><p>
</p><p>
அதன்படி, பொய்ச் சாட்சியம் அளித்த குற்றச்சாட்டின் பேரில் இந்த சாட்சி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதி சொலிசிட்டர் ஜெனரல் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/70d6c431-a297-41bc-a4af-6fc7a27ecb78/26-6aa29eba4553e.webp' /></p><p>
</p><p>
பின்னர், அந்த சாட்சியைப் பிணையில் விடுவிக்க செல்ல உத்தரவிட்டது.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-10T13:31:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[உங்கள் தொப்பை குறைய வேண்டுமா? காலையில் எழுந்து இந்த 5 விஷயங்களை செய்யுங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/5-morning-habit-that-help-to-reduce-belly-fat-1789035991"></link>
            <id>https://news.lankasri.com/article/5-morning-habit-that-help-to-reduce-belly-fat-1789035991</id>
            <summary type="text">பலருக்கும் வயிற்று தொப்பை ஒரு மிகப்பெரிய குறைபாடாக இருக்கிறது. அதனை குறைப்பதற்கு பலரும் பல முயற்சிகள் எடுத்து வருகிறார்கள். ஆனால், அது சற்று கடினமாகவே...</summary>
            <content type="html"><![CDATA[<p>பலருக்கும் வயிற்று தொப்பை ஒரு மிகப்பெரிய குறைபாடாக இருக்கிறது. அதனை குறைப்பதற்கு பலரும் பல முயற்சிகள் எடுத்து வருகிறார்கள். ஆனால், அது சற்று கடினமாகவே அமைகிறது. அதாவது, வெறும் உடற்பயிற்சி கொண்டு மற்றும் நாம் இந்த வயிற்றுப்புண் குறைத்து விட முடியாது.</p><p> சரியான பழக்க வழக்கங்கள் வழியாகத்தான் இதனை நாம் சரி செய்ய முடியும்.


 
அது முக்கியமாக நாம் காலை நேர பழக்கங்களில் செய்யும் விஷயங்களில் தொடங்கி முக்கிய பங்கு வகிக்கின்றன.</p><p> காலையில் எழுந்தவுடன் நாம் செய்யக்கூடிய ஒரு சிறிய மாற்றங்கள் நம்முடைய உடலில் வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து நாள் முழுவதும் கலோரிகளை எரிக்க உதவுகிறது. இதன் வழியாக நமது கொழுப்பை எளிதில் கரைத்து விட முடியும். அப்படியாக, நாம் காலையில் எழுந்து செய்யக்கூடிய ஒரு ஐந்து முக்கியமான பழக்கவழக்கங்களை பற்றி பார்ப்போம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/126a62a0-a335-4d3f-a0a6-007a2f4d7e88/26-6aa285da46a9d.webp' /></p><p></p><p>
</p><h3>
1) வெதுவெதுப்பான நீர் அருந்துதல்:</h3><p> 
 காலையில் எழுந்தவுடன் முதலாவதாக வெறும் வயிற்றில் ஒன்று அல்லது இரண்டு டம்ளர் வெதுவெதுப்பான நீரை குடிப்பது அவசியம். நம்முடைய உடலில் மெட்டபாலிசத்தை 30 சதவீதம் வரை அதிகரித்து, நச்சுக்களை வெளியேற்றுவதோடு தொப்பை கொழுப்பையும் கரைக்க உதவுகிறது. </p><h3>



2) சூரிய ஒளியில் உடற்பயிற்சி அல்லது நடைப்பயிற்சி:</h3><p> 
அதேபோல், காலை நேர சூரிய ஒளிகள் குறைந்தது 20 முதல் 30 நிமிடங்கள் வரை எளிய உடற்பயிற்சி மேற்கொள்ளும் பொழுது சூரிய ஒளியிலிருந்து கிடைக்கக்கூடிய வைட்டமின் டி, தொப்பை கொழுப்பை கட்டுப்படுத்த உதவுகிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன. </p><h3>


3) அதிக புரதம் நிறைந்த காலை உணவு: </h3><p>
காலையில் முக்கியமாக கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளை குறைத்துக் கொண்டு முட்டை, முளைகட்டிய பயறுகள், பன்னீர் அல்லது ஓட்ஸ் போன்ற புரதம் நிறைந்த உணவுகளை சாப்பிடுவது அவசியம். இது நம்முடைய வயிற்றை நீண்ட நேரம் பசியின்மையோடு வைப்பதோடு தொப்பையை குறைக்க உதவுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f4d0529b-99f4-44db-b984-a6b3488477ab/26-6aa285db015c6.webp' /></p><p></p><p> </p><h3>


4) காலை நேர தியானம் அல்லது ஆழ்ந்த சுவாசம்: </h3><p>

காலையில் எழுந்தவுடன் நிச்சயமாக உங்களுக்கான நேரமாக ஒரு பத்து நிமிடங்கள் செலவு செய்வது அவசியம். அதில் நீங்கள் தியானமும் மூச்சு பயிற்சி செய்வது மிக மிக முக்கியம். இது நம்முடைய உடலிம் அழுத்த ஹார்மோனான கார்டிசோல் அளவை குறைக்கிறது. அந்த அளவு குறையும்போது அடிவயிற்றில் கொழுப்பு சேர்வதை இயற்கையாகவே தடுக்கப்படுகிறது. </p><h3>

5) காலை எடையைச் சரிபார்த்தல்: </h3><p>
மேலும், காலை எழுந்தவுடன் கழிவறையை பயன்படுத்திவிட்டு வெறும் வயிற்றில் உடல் எடையை சரி பார்ப்பது வழக்கமாக மாற்றிக் கொள்ளும் பொழுது நாம் உடல் எடையை பற்றிய ஒரு விழிப்புணர்வு உண்டாகும். அதனால், அந்த நாள் முழுவதும் நாம் ஆரோக்கியமான உணவுகளை தேர்ந்தெடுத்து கட்டுப்பாடோடு இருப்பதற்கு ஒரு வழி வகுக்கும்.&nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-09-10T13:30:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ் கிணறுகள் பெருகெடுத்த காரணம் வெளியானது!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/reason-for-the-overflowing-wells-in-arali-jaffna-1789045876"></link>
            <id>https://jvpnews.com/article/reason-for-the-overflowing-wells-in-arali-jaffna-1789045876</id>
            <summary type="text">&amp;nbsp; யாழ்ப்பாணம் - அராலி கிழக்கு ஐயனார் ஆலயத்தின் காணியில் உள்ள கிணறு உட்பட அங்கு இருந்த சில கிணறுகள் கடந்த சில தினங்களாக நீர்மட்டம் வழமைக்கு மாறாக ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; <a href="https://jvpnews.com/article/wells-in-araly-jaffna-suddenly-overflowed-1788872260?itm_source=article" target="_blank">யாழ்ப்பாணம் - அராலி கிழக்கு ஐயனார் ஆலய</a>த்தின் காணியில் உள்ள கிணறு உட்பட அங்கு இருந்த சில கிணறுகள் கடந்த சில தினங்களாக நீர்மட்டம் வழமைக்கு மாறாக உயர்ந்து காணப்பட்டது.
</p><p>


இந்த விடயமானது தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையினரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.



அங்கு வந்த தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையினர் குடிநீர் வழங்கல் குழாயினை சோதனை செய்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1fdbf5e9-69b4-4cc1-8a48-eb83403a44f4/26-6aa2ac75b5d74.webp' /></p><h2>வடிகாலமைப்பு சபையினர்&nbsp; &nbsp;சோதனை</h2><p> இதன்போது அந்த குழாயில் இரண்டு பாரிய துளைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.



அதன்பின்னர் குறித்த துளைகள் சீர் செய்யப்பட்டன. அதனைத் தொடர்ந்து கிணறுகளின் நீர்மட்டம் வழமைக்கு திரும்பியது.</p><p></p><p>
</p><p>


கிணறுகளில் நீர்மட்டம் உயர்ந்தமைக்கான காரணம் குடிநீர் வழங்கல் குழாயின் மூலம் ஏற்பட்ட நீர் வெளியேற்றமே என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.&nbsp; &nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-09-10T13:25:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரச சொத்து துஷ்பிரயோகம்; தயாசிறி ஜயசேகர- சபாநாயகர் கடும் வாக்குவாதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/misuse-state-property-heated-argument-parliament-1789046879"></link>
            <id>https://jvpnews.com/article/misuse-state-property-heated-argument-parliament-1789046879</id>
            <summary type="text">&amp;nbsp; அரச சொத்து துஷ்பிரயோகம் தொடர்பில் சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை சிறப்புரிமை மீறல் பிரச்சினையாக ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; அரச சொத்து துஷ்பிரயோகம் தொடர்பில் சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை சிறப்புரிமை மீறல் பிரச்சினையாக தாம் முன்வைத்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.</p><p>



பாராளுமன்றத்தில் நேற்று (10) பெண்களின் வலுவூட்டல் சட்டத்தின் கீழான தீர்மானம் மீதான விவாதத்தில் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6e5a6d92-182f-4754-9fc8-49b0635c5aac/26-6aa2b0616e037.webp' /></p><p>



சபாநாயகர் ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் உரிமைகளை பாதுகாக்கும் வகையில் நடுநிலையாக செயற்பட வேண்டும் எனத் தெரிவித்த தயாசிறி ஜயசேகர, சபாநாயகருக்கு எதிராக இலஞ்சம் அல்லது ஊழல் தொடர்பான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், அது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் குறிப்பிட்டார்.</p><p></p><p>
</p><p>


இதன்போது, தாம் முன்வைத்துள்ள சிறப்புரிமை மீறல் பிரச்சினை பரிசீலிக்கப்பட்டு வருவதால், அதில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை சபையில் பேச வேண்டாம் என சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தெரிவித்தார்.
</p><p>


இதற்கு பதிலளித்த தயாசிறி ஜயசேகர, “உங்கள் மீதான குற்றச்சாட்டுக்களை ஒவ்வொன்றாக முன்வைக்கும் போது அதனை கேட்டுக்கொண்டிருக்க முடியாவிடின், நீங்கள் சபையில் இருந்து வெளியேறுங்கள். பிரதி சபாநாயகரை சபைக்குத் தலைமை தாங்குவதற்கு குறிப்பிடுங்கள்” எனத் தெரிவித்தார்.</p>]]></content>
            <updated>2026-09-10T13:24:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்க இடைக்காலத் தேர்தலின் பின்னர் ஈரான் போர் நிறைவுக்கு வரும் : ட்ரம்ப் நம்பிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/iran-conflict-end-after-us-midterm-elections-trump-1789045119"></link>
            <id>https://tamilwin.com/article/iran-conflict-end-after-us-midterm-elections-trump-1789045119</id>
            <summary type="text">அமெரிக்காவில் எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள இடைக்காலத் தேர்தலின்
பின்னர் ஈரான் உடனான போர் உடனடியாக முடிவுக்கு வரும் என அமெரிக்க ஜனாதிபதி
டொனா...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவில் எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள இடைக்காலத் தேர்தலின்
பின்னர் ஈரான் உடனான போர் உடனடியாக முடிவுக்கு வரும் என அமெரிக்க ஜனாதிபதி
டொனால்ட் ட்ரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
</p><p>
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலை ஈரானிய தரப்பு பாதிக்க முற்படுவதாகக் குற்றம்
சுமத்தியுள்ள அவர், போரைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல முடியாத நிலையில்
ஈரானிய தரப்பு தவித்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
</p><h2>செங்கடலின் முக்கிய கடல் வழி</h2><p>
இருப்பினும், ஈரானின் முக்கிய அணுசக்தி மையமான 'பிக்எக்ஸ் மவுண்டன்' பகுதியை
இலக்கு வைத்து மீண்டும் தாக்குதல் நடத்தக்கூடும் என்றும் அவர்
எச்சரித்துள்ளார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/31c0e7a5-6e55-42b3-bca5-b65b79a1d13d/26-6aa2abf99e596.webp' /></p><p>
அத்துடன், செங்கடலின் முக்கிய கடல் வழியான பாப் அல்-மந்தேப் நீரிணைப்
பகுதியில் ஹூதி அமைப்பினரின் நடமாட்டம் அதிகரித்து வருவதால், அப்பகுதியில்
பதற்றமான சூழல் நிலவுகின்றது.
</p><p>
மறுபுறம், சர்வதேச சந்தையில் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் விலையானது பீப்பாய்
ஒன்றுக்கு 100 அமெரிக்க டொலர்களைத் தாண்டி விற்பனையாகி வருகின்றமை
குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-10T13:19:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Erimalai</name>
            </author>
            <title type="text"><![CDATA[வேலைக்குச் சென்ற குடும்பஸ்தர் 8 ஆண்டுகளாக மாயம் - உறவினர் விடுக்கும் கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/person-who-went-to-work-in-kilinochchi-is-a-fake-1789046114"></link>
            <id>https://tamilwin.com/article/person-who-went-to-work-in-kilinochchi-is-a-fake-1789046114</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, அம்பன் கிராமத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட நபர் ஒருவர் கடந்த 2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் காணாமல் போயுள்ளதாக குடும்பத...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, அம்பன் கிராமத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட நபர் ஒருவர் கடந்த 2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் காணாமல் போயுள்ளதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
</p><p>
குடத்தனை கிழக்கு, மளிகைத்திடலை வதிவிடமாகக் கொண்ட செல்வராசா அருந்தவச்செல்வன் என்பவரே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.
</p><p>
இவர், கிளிநொச்சி பகுதிக்கு வேலைக்குச் செல்வதாக தனது மனைவியிடம் தெரிவித்துவிட்டு வீட்டிலிருந்து சென்ற நிலையில், இதுவரை வீடு திரும்பவில்லை என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
</p><h2>
ஒரு வாரம் வேலைச் செய்த தொலைபேசி</h2><p>
குறித்த நபர் காணாமல் போனமை தொடர்பில் 10.03.2018 அன்று பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்ததுடன், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாணம் பிராந்திய அலுவலகத்திலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c0df8099-f4af-4286-88c3-27c94fe9540e/26-6aa2ad9a11a8e.webp' /></p><p>
</p><p>
மேலும், அவர் காணாமல்போன தினத்திலிருந்து சுமார் ஒரு வார காலம் வரை அவரது தொலைபேசி இயங்கியதாகவும் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். எனினும், அவரது தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பை மேற்கொண்டபோது, அவர் எவ்வித பதிலும் அளிக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

காணாமல் போனமை தொடர்பில் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்ட போதிலும், இதுவரை உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்படவில்லை என குடும்பத்தினர் குற்றம் சாட்டுகின்றனர்.</p><p>

காணாமல் போன செல்வராசா அருந்தவச்செல்வன் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தவர்கள் 0774323487 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தகவல் வழங்குமாறு அவரது குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.&nbsp; &nbsp; &nbsp; &nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-10T13:18:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிறந்து 13 நாட்களில் பாஸ்போர்ட் பெற்ற குழந்தை – சர்வதேச சாதனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/13-days-old-newborn-got-passport-sets-a-record-1789043249"></link>
            <id>https://manithan.com/article/13-days-old-newborn-got-passport-sets-a-record-1789043249</id>
            <summary type="text">ஆந்திர மாநிலம், ஸ்ரீகாகுளம் மாவட்டம் இச்சாபுரத்தைச் சேர்ந்த ஆஷிஷ் மற்றும் ராஜமகேந்திரவரத்தைச் சேர்ந்த கீதாமாதுரி தம்பதி, வேலை நிமித்தமாக லண்டனில் வசித...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஆந்திர மாநிலம், ஸ்ரீகாகுளம் மாவட்டம் இச்சாபுரத்தைச் சேர்ந்த ஆஷிஷ் மற்றும் ராஜமகேந்திரவரத்தைச் சேர்ந்த கீதாமாதுரி தம்பதி, வேலை நிமித்தமாக லண்டனில் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த மே 30ஆம் தேதி ராஜமகேந்திரவரத்தில் பெண் குழந்தை பிறந்தது.</p><p>

லண்டனுக்குப் பயணம் செய்வதற்காக, பிறந்து இரு நாட்களிலேயே (ஜூன் 1) குழந்தைக்கு ‘அகஸ்யா பிரின்ஸ்’ எனப் பெயரிட்டு பிறப்புச் சான்றிதழ் பெறப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/70b45287-0be2-4be8-a225-ce5f530961a6/26-6aa2a4c92e0fc.webp' /></p><p></p><h2>வெறும் 13 நாட்களிலேயே பாஸ்போர்ட்&nbsp;</h2><p> </p><p>தொடர்ந்து ஜூன் 2ஆம் தேதி ஆதார் அட்டைக்கும், ஜூன் 6ஆம் தேதி பாஸ்போர்ட்டுக்கும் விண்ணப்பிக்கப்பட்டது.

குழந்தையின் ஆதார் அட்டைக்கு ஜூன் 4ஆம் தேதியும், பாஸ்போர்ட்டுக்கு ஜூன் 12ஆம் தேதியும் ஒப்புதல் கிடைத்தது.</p><p> இதன் மூலம் பிறந்து வெறும் 13 நாட்களிலேயே பாஸ்போர்ட் பெற்ற அகஸ்யா பிரின்ஸ், சர்வதேச சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார்.</p><p></p><p>

இதற்கு முன்பு 19 நாள் குழந்தை ஒருவர் மிகக் குறைந்த வயதில் பாஸ்போர்ட் பெற்ற சாதனையைப் படைத்திருந்த நிலையில், அகஸ்யா பிரின்ஸ் அந்தச் சாதனையை முறியடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்<b><u> <a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-10T13:17:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[திருமணமாகி ஒரு வருடம் ;மனைவியின் தலையை வெட்டி பிரிட்ஜில் வைத்த கணவன்; ஷாக்காகி நின்ற பொலிஸார்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/husband-beheads-wife-head-in-the-fridge-assam-1789028572"></link>
            <id>https://jvpnews.com/article/husband-beheads-wife-head-in-the-fridge-assam-1789028572</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;இந்தியா அசாம் மாநிலம் கவுகாத்தியில் 25 வயதான இளம் பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது... கொலை செய...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;இந்தியா அசாம் மாநிலம் கவுகாத்தியில் 25 வயதான இளம் பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது... கொலை செய்ததைவிட, கொலைக்கு பிறகு நடந்த பயங்கரம்தான், அதற்கு மேல் பீதியை ஏற்படுத்தியுள்ளது. </p><p>சம்பவம் தொடர்பில் இந்திய ஊடகங்க்கள் குறிப்பிட்டுள்ளதாவது, 

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ரியாவும் ராமானுஜ் கோஸ்வாமியும் காதலித்து திருமணம் செய்துகொண்ட நிலையில், பின்னர் இருவருக்கும் அடிக்கடி கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதாக போலீஸ் விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8fbfe0d0-0430-4491-8e85-775988846a44/26-6aa268de4d431.webp' /></p><h2>திருமணமாகி&nbsp; ஒரு வருடம்</h2><p> 

கடந்த செப்டம்பர் 3-ம் தேதி இருவருக்கும் ஏற்பட்ட தகராறு விபரீதமாகி, ராமானுஜ் தனது மனைவியை கொலை செய்ததாக போலீசார் தெரிவிக்கின்றனர். சம்பவத்துக்குப் பிறகு வீட்டை பூட்டிவிட்டு அவர் தப்பிச் சென்றதாகவும், அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில் போலீசார் வீட்டை சோதனை செய்தபோது கொலை சம்பவம் வெளிச்சத்துக்கு வந்ததாகவும் கூறப்படுகிறது.</p><p></p><p> </p><p>

விசாரணையில், ரியாவின் உடல் வீட்டில் கண்டெடுக்கப்பட்டதுடன், அவரது தலையும் வீட்டில் இருந்த ஃபிரிட்ஜில் கண்டெடுக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். கொலைக்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ஆயுதமும் கைப்பற்றப்பட்டுள்ளது. இந்த வழக்கில் ராமானுஜ் பின்னர் போலீஸ் நிலையத்தில் சரணடைந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9909d809-52d9-49e8-b57e-13fcc5b6ddb7/26-6aa268df0d0d1.webp' /></p><p> 

போலீசாரிடம் அவர் அளித்ததாக வாக்குமூலத்தில், தனது மனைவிக்கு வேறு ஒருவருடன் தொடர்பு இருந்ததாக சந்தேகித்ததால்தான் இருவருக்கும் அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டதாக தெரிவித்துள்ளார்.</p><p></p><p> </p><p> 

 அதுமட்டுமல்லாது , தனது மனைவியுடன் தொடர்பு வைத்திருந்ததாக அவர் சந்தேகிக்கும் அந்த நபரையும் கொலை செய்வேன் என்று ராமானுஜ் கூறியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை பொலிஸாருக்கே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது.&nbsp; </p><p>&nbsp; &nbsp; &nbsp; </p>]]></content>
            <updated>2026-09-10T13:16:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>H. A. Roshan</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் பெண்கள் கடுமையாகப் புறக்கணிப்பு: குகதாசன் எம்.பி குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/women-in-sri-lanka-neglect-mp-kugathasan-1789044655"></link>
            <id>https://tamilwin.com/article/women-in-sri-lanka-neglect-mp-kugathasan-1789044655</id>
            <summary type="text">உலக அளவில் நாடாளுமன்றப் பெண்
பிரதிநிதித்துவ வரிசையில் 193 நாடுகளில் இலங்கை 135 ஆவது இடத்தில் உள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் தெரிவி...</summary>
            <content type="html"><![CDATA[<p>உலக அளவில் நாடாளுமன்றப் பெண்
பிரதிநிதித்துவ வரிசையில் 193 நாடுகளில் இலங்கை 135 ஆவது இடத்தில் உள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் தெரிவித்துள்ளார்.</p><p>நாடாளுமன்றத்தில் இன்று (10.09.2026)இடம்பெற்ற அமர்வின் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.</p><p>அவர் மேலும் தெரிவிக்கையில்,&nbsp;இலங்கையின் குடித் தொகையில் 52 சதவீதமும் வாக்காளர் தொகையில் 56 சதவீதமும்
பெண்கள் ஆவர். எனினும் 225 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் 22 பெண்
பிரதிநிதிகளே உள்ளனர். இது 9.8 வீதம் ஆகும்.</p><h2>பெண் பிரதிநிதித்துவம்&nbsp;</h2><p>ரூவாண்டா நாட்டின் நாடாளுமன்றம் 61 வீதத்துக்கும் அதிகமான பெண்
பிரதிநிதித்துவத்தைக் கொண்டுள்ளமையை இவ்விடத்தில் குறிப்பிடுவது பொருத்தமாக
இருக்கும் என நம்புகின்றேன்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/01fae99d-a39c-47e1-8e56-5b36fe90d442/26-6aa2ad76656a8.webp' /></p><p> </p><p>நமது அயலில் உள்ள இந்திய மாநிலமான
தமிழ் நாட்டில் இது 50 சதவீதமாக உள்ளமை குறிப்பிடத் தக்கது.
நாட்டில் உள்ள அமைச்சரவை அமைச்சர்கள் 25 பேரில் இருவர் மட்டுமே பெண்களாவர்.இது
எட்டு சதவீதமாகும்.</p><p>கனடா நாட்டு அமைச்சரவையில் 50 சதவீதமானோர் பெண்கள் ஆவர்.
இந்தநிலை 2015 ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக நிலவி வருகின்றது என்பதனை
இவ்விடத்தில் குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும் என நம்புகின்றேன்.</p><h2>பொருளாதார மீட்சி</h2><p>
நாட்டில் உள்ள 25 அமைச்சுச் செயலாளர்களில் நால்வர் மாத்திரமே பெண்களாவர்.இது
16 சதவீதமாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/01f7b7eb-6876-4c6e-90bd-84f0e034dfec/26-6aa2ad771a2f6.webp' /></p><p>குடும்பப் பொறுப்புகள் காரணமாக பெண்கள் வேலைகளைக் கைவிடுவதைத்
தடுக்க; குறைந்த செலவிலான குழந்தை காப்பகங்கள், முன்பள்ளிகள், நெகிழ்வுத்தன்மை
கொண்ட பணி நேரங்கள் மற்றும் மகப்பேறு விடுப்பு வசதிகளைச் சட்ட
அடிப்படையிலானதாக்க வேண்டும்.
</p><p>இலங்கையில் மகளிர் வலுவூட்டல் என்பது ஏதோ ஒரு சாராரருக்கு வழங்கப்படும் சலுகை
அல்ல. மாறாக அது நாட்டின் பொருளாதார மீட்சிக்கும் சனநாயக முதிர்ச்சிக்கும்
இன்றியமையாத ஒரு முதலீடாகும் எனக் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content>
            <updated>2026-09-10T13:15:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மலைக்கு அடியில் ஈரானின் ரகசிய அணு உலை; டிரம்ப் எச்சரிக்கையால் அச்சத்தில் உலகம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/iran-secret-nuclear-facility-beneath-the-mountain-1789032264"></link>
            <id>https://canadamirror.com/article/iran-secret-nuclear-facility-beneath-the-mountain-1789032264</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;ஈரானின் நட்டாண்ஸ் அணுஉலை மையத்திற்கு அருகே அமைந்துள்ள ‘பிக்ஆக்ஸ் மலை’ (Pickaxe Mountain) என்ற மிகவும் சக்திவாய்ந்த நிலத்தடி அணுஆயுதத் தளத...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;ஈரானின் நட்டாண்ஸ் அணுஉலை மையத்திற்கு அருகே அமைந்துள்ள ‘பிக்ஆக்ஸ் மலை’ (Pickaxe Mountain) என்ற மிகவும் சக்திவாய்ந்த நிலத்தடி அணுஆயுதத் தளத்தின் மீது அமெரிக்கப் படைகள் மிக விரைவில் தாக்குதல் நடத்தக்கூடும் என 


 டிரம்ப் விடுத்துள்ள நேரடி எச்சரிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><p> 

ஈரான் தனது அணுஆயுதத் திட்டத்தை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், கிரானைட் பாறைகளுக்கு அடியில் 300 அடிக்கும் அதிகமான ஆழத்தில் ‘பிக்ஆக்ஸ்’ நிலத்தடிப் சுரங்கப் பாதையை அமைத்து அதில் ஆயிரக்கணக்கான அதிநவீன சென்ட்ரிஃபியூஜ்களை மாற்றி அமைத்துள்ளதாக அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய உளவு அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b9910475-09c5-43c2-8487-886c761e08b8/26-6aa27749d8ace.webp' /></p><h2>அமெரிக்கப் படைகள் மிகக் கொடூரமாகத் தாக்கி அழிக்கும்</h2><p>
</p><p>
 மேலும், அங்குச் சந்தேகத்திற்கிடமான அணுசக்தி நடவடிக்கைகள் அதிகரித்து வருவதை அமெரிக்கச் செயற்கைக்கோள்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றன.
</p><p>
இதுகுறித்து வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் டிரம்ப், “ஈரானைப் பற்றியும் பிக்ஆக்ஸ் மலையில் யார் யாருடைய நடமாட்டம் இருக்கிறது என்பதையும் நாங்கள் உளவு அமைப்புகள் மூலம் உன்னிப்பாகக் கவனித்து வருகிறோம். </p><p>ஈரான் எந்தவொரு சூழ்நிலையிலும் அணுஆயுதம் தயாரிப்பதை அனுமதிக்க முடியாது. அங்கே ஏதேனும் அணுசக்தி நடவடிக்கைகள் மீண்டும் தொடங்கப்பட்டால், மிக விரைவில் பிக்ஆக்ஸ் தளத்தை அமெரிக்கப் படைகள் மிகக் கொடூரமாகத் தாக்கி அழிக்கும்” என எச்சரித்துள்ளார்.</p><p>

அமெரிக்காவின் இந்த அதிரடி அச்சுறுத்தலுக்குப் பதிலடி கொடுத்துள்ள ஈரான் நாடாளுமன்றப் பிரதிநிதிகள், உலகின் மிகவும் பலமாகப் பாதுகாக்கப்பட்ட அணுஆயுதத் தளமான பிக்ஆக்ஸ் மலை மீது தாக்குதல் நடத்தப்பட்டால், அது ஒட்டுமொத்த மத்திய கிழக்குப் பிராந்தியத்தையும் போர்க் களமாக மாற்றிவிடும் என எச்சரித்துள்ளனர்.
</p><p>
இந் நிலையில் அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே தொடரும் இந்த மோதல் போக்கால் சர்வதேச அளவில் அணுஆயுதப் போர் அபாயம் மீண்டும் தீவிரமடைந்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-10T13:11:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானியாவில் அழிவின் விளிம்பில் 70 சதவீத கடல் பறவைகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/uk-seabirds-face-70-percent-extinction-risk-1789046034"></link>
            <id>https://news.lankasri.com/article/uk-seabirds-face-70-percent-extinction-risk-1789046034</id>
            <summary type="text">UK seabirds face 70 percent extinction risk: பிரித்தானியாவில் கடல் பறவைகள் மிகுந்த ஆபத்தில் உள்ளதாக புதிய ஆய்வு அறிக்கை எச்சரிக்கிறது.

 மிகுந்த ஆபத...</summary>
            <content type="html"><![CDATA[<p>UK seabirds face 70 percent extinction risk: பிரித்தானியாவில் கடல் பறவைகள் மிகுந்த ஆபத்தில் உள்ளதாக புதிய ஆய்வு அறிக்கை எச்சரிக்கிறது.</p><h2>

 மிகுந்த ஆபத்தில் கடல் பறவைகள்&nbsp;</h2><p>காலநிலை மாற்றம் காரணமாக, அடுத்த சில தசாப்தங்களில் 70 சதவீத கடல் பறவைகள் அழிவுக்கு உள்ளாகும் அபாயம் இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/acea0453-b11b-4383-b198-f598db75e908/26-6aa2ad142a561.webp' /></p><p>இந்த அறிக்கையில், கடல் நீரின் வெப்பநிலை உயர்வு, உணவுப் பொருட்களின் குறைபாடு, மற்றும் கடல் சூழலின் மாற்றங்கள் ஆகியவை பறவைகளின் வாழ்வை கடுமையாக பாதிக்கின்றன என்று கூறப்பட்டுள்ளது. குறிப்பாக, பஃபின் (Puffin), கிட்டிவேக் (Kittiwake) போன்ற பறவைகள் அதிக ஆபத்தில் உள்ளன.</p><p> விஞ்ஞானிகள் எச்சரிப்பதாவது, “கடல் பறவைகள் அழிவது, கடல் சூழலின் ஆரோக்கியத்திற்கும், உயிரியல் சமநிலைக்கும் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். பறவைகள் கடல் உணவுச் சங்கிலியில் முக்கிய பங்கு வகிக்கின்றன. அவற்றின் அழிவு, மீன்கள் மற்றும் பிற கடல் உயிரினங்களின் வாழ்வையும் பாதிக்கும்” என தெரிவித்துள்ளனர்.
</p><p></p><h2>உடனடி&nbsp;நடவடிக்கைகள் வேண்டும்</h2><p>மேலும், கடல் பறவைகள் பாதுகாப்பு நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்பட வேண்டும் என்று அறிக்கையில் வலியுறுத்தபட்டுள்ளது.</p><p>கார்பன் உமிழ்வை குறைப்பது, கடல் பாதுகாப்பு பகுதிகளை விரிவாக்குவது, மற்றும் மீன்பிடித் துறையில் கட்டுப்பாடுகளை கடுமையாக்குவது போன்ற நடவடிக்கைகள் அவசியம் என குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p></p><p>சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறுவதாவது, “இது வெறும் பறவைகள் பற்றிய பிரச்சினை அல்ல; உலகளாவிய சூழல் சமநிலையைப் பற்றிய எச்சரிக்கை. கடல் பறவைகள் அழிவது, மனிதர்களின் வாழ்வையும் நேரடியாக பாதிக்கும்” என தெரிவித்துள்ளனர்.</p><p>

இந்த அறிக்கை, உலகளாவிய காலநிலை மாற்றத்தின் தீவிர விளைவுகளை மீண்டும் நினைவூட்டுகிறது. உடனடி நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், கடல் பறவைகள் மட்டுமல்ல, முழு கடல் சூழலே ஆபத்தில் சிக்கக்கூடும்.&nbsp; &nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-10T13:10:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[சன் டிவியில் அட்டகாசமான விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் படங்கள்... முழு விவரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/sun-tv-vinayagar-chathurthi-special-movies-1789038087"></link>
            <id>https://cineulagam.com/article/sun-tv-vinayagar-chathurthi-special-movies-1789038087</id>
            <summary type="text">சன் டிவிததமிழக மக்கள் கொண்டாடும் வகையில் அடுத்து வருகிறது கொண்டாட்டமான ஒரு நாள், விநாயகர் சதுர்த்தி. வரும் செப்டம்பர் 14ம் தேதி (திங்கட்கிழமை) வருகிறத...</summary>
            <content type="html"><![CDATA[<h2>சன் டிவி</h2><p>ததமிழக மக்கள் கொண்டாடும் வகையில் அடுத்து வருகிறது கொண்டாட்டமான ஒரு நாள், விநாயகர் சதுர்த்தி. </p><p>வரும் செப்டம்பர் 14ம் தேதி (திங்கட்கிழமை) வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d1a997fa-c742-40a1-a9ba-2d73db966162/26-6aa297f7a96e1.webp' /></p><p>இதனால் எல்லா தொலைக்காட்சிகளிலும் மக்களை மகிழ்விக்கும் வகையில் நிறைய ஸ்பெஷல் படங்கள் ஒளிபரப்பாக உள்ளது. அப்படி சன் டிவியில் விநாயகர் சதுர்த்தி தின ஸ்பெஷலாக என்னென்ன படங்கள் ஒளிபரப்பாக உள்ளது என்பதை காண்போம். </p><p>
வழக்கம் போல் ரியாலிட்டி ஷோக்கள் நிறைய ஒளிபரப்பாக இரு முன்னணி நடிகர்களின் படங்கள் ஒளிபரப்பாக உள்ளது.</p><p> காலை 11 மணிக்கு ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளியான ருத்ரன் திரைப்படம் ஒளிபரப்பாக உள்ளதாம். </p><p>அப்படத்தை தொடர்ந்து நடிகர் தனுஷே இயக்கி, நடித்த ராயன் திரைப்படம் மாலை 3 மணிக்கு ஒளிபரப்பாக இருக்கிறதாம்.</p>]]></content>
            <updated>2026-09-10T13:10:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepachelvan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறுவர்களுக்கு எதிரான இனப்படுகொலைக்குச் சாட்சி சத்துருக்கொண்டான் படுகொலை...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sathurukondan-massacre-1789045315"></link>
            <id>https://ibctamil.com/article/sathurukondan-massacre-1789045315</id>
            <summary type="text">ஈழத் தமிழர் விடுதலைப் போராட்ட வரலாற்றில் கிழக்கு மண் சிந்திய குருதி அளவற்றது. குறிப்பாக 1990ஆம் ஆண்டு கிழக்கு மாகாணம் பெரும் இனப்படுகொலைகளையும் காணாமல...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈழத் தமிழர் விடுதலைப் போராட்ட வரலாற்றில் கிழக்கு மண் சிந்திய குருதி அளவற்றது. குறிப்பாக 1990ஆம் ஆண்டு கிழக்கு மாகாணம் பெரும் இனப்படுகொலைகளையும் காணாமல் ஆக்கல்களையும் எதிர்கொண்டது. </p><p>அந்த ஆண்டிலும் அதற்கு முன்னரும் பின்னரும் இடம்பெற்ற படுகொலைகள் ஈழத் தமிழ் மக்களின் அரசியல் உரிமை, பாதுகாப்பு மற்றும் நீதிக்கான கோரிக்கைகளை மேலும் வலுப்படுத்தின. </p><p>அந்த வரலாற்றில் 1990ஆம் ஆண்டு புரட்டாதி 9ஆம் திகதி இடம்பெற்ற சத்துருக்கொண்டான் படுகொலை முக்கியமானதாகும்.</p><p></p><h2>சத்துருக்கொண்டான் எனும் வடு</h2><p>
</p><p>
வந்தாறுமூலை கிழக்குப் பல்கலைக்கழக வளாகத்தில் நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டு நான்கு நாட்களே கடந்திருந்த நிலையில், மட்டக்களப்பை அடுத்த சத்துருக்கொண்டான் பகுதியில் தமிழ் மக்கள் இலங்கை அரச படைகளால் படுகொலை செய்யப்பட்டனர்.</p><p> </p><p>இன்று அந்தப் படுகொலையின் 36ஆவது ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிக்கப்படுகிறது.</p><p>மட்டக்களப்பு நகரிலிருந்து சுமார் நான்கு கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ள சத்துருக்கொண்டான் பிரதேசம் ஊறணி, பிள்ளையாரடி, பனிச்சையடி உள்ளிட்ட கிராமங்களை உள்ளடக்கியது. </p><p>1990ஆம் ஆண்டு புரட்டாதி 9ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை அந்தப் பகுதிகளை இராணுவத்தினர் சுற்றிவளைத்தனர்.</p><p> மாலை சுமார் 5.30 மணியளவில் வின்சன் டிப்போ தோட்ட இராணுவ முகாமில் கூட்டம் நடைபெறவுள்ளதாகவும், அனைவரும் கட்டாயம் அதில் கலந்துகொள்ள வேண்டும் என்றும் இராணுவச் சீருடையில் வந்த ஒருவர் மக்களுக்கு அறிவித்ததாக சாட்சியங்கள் தெரிவிக்கின்றன.
</p><p>
இராணுவத்தின் அழைப்பை நிராகரித்தால் பிரச்சினை ஏற்படலாம் என்ற அச்சத்தில் மக்கள் முகாமுக்குச் சென்றனர். அங்கு அழைத்துச் செல்லப்பட்டவர்களில் முதியவர்கள் உட்பட பலர் லொறிகளில் ஏற்றப்பட்டனர்.</p><p> பின்னர் ஆண்கள், பெண்கள் எனப் பிரிக்கப்பட்டு தடுத்து வைக்கப்பட்டனர். விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டதாக நினைத்த மக்கள், தாங்கள் மீண்டும் வீடுகளுக்குத் திரும்ப முடியாத நிலைக்குள் கொண்டு செல்லப்பட்டிருந்ததை அறிய முடியவில்லை.</p><p></p><h2>சிறுவர்களையும் விட்டுவைக்காத கொடூரம்</h2><p>அன்றிரவு சுமார் 7 மணியளவில் அங்கு அழைத்துச் செல்லப்பட்ட மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக சாட்சியங்கள் தெரிவிக்கின்றன.</p><p> </p><p>வாள்கள் மற்றும் கத்திகளால் வெட்டியும் குத்தியும் துப்பாக்கிகளால் சுட்டும் மக்கள் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்டவர்களின் உடல்கள் தீயிட்டு எரிக்கப்பட்டதாகவும் சாட்சியங்கள் கூறுகின்றன. </p><p>குழந்தைகள், சிறுவர்கள், பெண்கள், முதியவர்கள் என எவ்வித வேறுபாடுமின்றி பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

குறிப்பாக சிறுவர்களின் கைகளைப் பின்னால் கட்டி அவர்களை கத்தியால் குத்திக் கொன்றதாக உயிர்தப்பிய சாட்சியங்கள் தெரிவிக்கின்றன.</p><p> படுகொலையில் 184 பேர் கொல்லப்பட்டதாக பின்னர் இடம்பெற்ற விசாரணைகளில் பதிவு செய்யப்பட்டது.</p><p> அவர்களில் ஐந்து கைக்குழந்தைகள், பத்து வயதுக்குட்பட்ட 42 சிறுவர்கள், 85 பெண்கள் மற்றும் 28 முதியவர்கள் அடங்கியிருந்தனர். ஒரே இரவில் ஒரு கிராமத்தின் குடும்பங்கள் அழிக்கப்பட்டன. மறுநாள் வரை வின்சன் டிப்போ தோட்டப் பகுதியில் எரிந்த நெருப்பையும் புகையையும் அங்கிருந்தவர்கள் பார்த்துக் கொண்டிருந்தனர்.</p><p></p><h2>சாட்சியாக உயிர் தப்பிய கிருஷ்ணகுமார்</h2><p>படுகொலையை முழுமையாக மறைத்துவிட முடியாமல் செய்த முக்கியமான சாட்சியாக கந்தசாமி கிருஷ்ணகுமார் உயிர்தப்பினார். மக்களுடன் அழைத்துச் செல்லப்பட்ட அவர் தாக்குதலில் வெட்டுக்காயங்களுக்கு உள்ளானார்.</p><p> </p><p>இறந்துவிட்டதாகக் கருதி மற்ற உடல்களுடன் வீசப்பட்ட நிலையில், உயிருடன் இருந்த அவர் அங்கிருந்து தப்பி வேலிக்கரையை நோக்கி ஊர்ந்து சென்று புதருக்குள் மறைந்துகொண்டார். </p><p>மறுநாள் மதகுரு ஒருவரின் உதவியுடன் மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
</p><p>
அவரை வைத்தியசாலையிலிருந்து இராணுவப் புலனாய்வாளர்கள் அழைத்துச் செல்ல முயன்றதாகவும், குறித்த மதகுரு அவரைப் பாதுகாத்து இரகசியமாக சிகிச்சை அளித்து காப்பாற்றியதாகவும் தெரிவிக்கப்படுகிறது. </p><p>பின்னர் கிருஷ்ணகுமார் சத்துருக்கொண்டான் படுகொலை தொடர்பான விசாரணைகளில் முக்கியமான சாட்சியங்களை வழங்கினார். </p><p>அவர் உயிர்தப்பியிருக்காவிட்டால் அந்த இரவில் என்ன நடந்தது என்பதை நிரூபிக்கும் முக்கியமான நேரடி சாட்சியம் ஒன்று இழக்கப்பட்டிருக்கும்.</p><p></p><h2>விசாரணைகளால் வெளிப்பட்ட உண்மை</h2><p>படுகொலை இடம்பெற்ற பின்னர் வின்சன் டிப்போ தோட்ட இராணுவ முகாமை மக்கள் அணுகுவதற்கே அஞ்சினர். சில நாட்களுக்குப் பின்னர் தங்களுடன் அழைத்துச் செல்லப்பட்ட உறவினர்கள் எங்கே என இராணுவத்தினரிடம் மக்கள் கேள்வி எழுப்பினர்.</p><p> </p><p>காணாமல் போனவர்களின் உறவினர்களால் முறைப்பாடுகள் செய்யப்பட்டன. மனித உரிமை அமைப்புகள் மற்றும் செஞ்சிலுவைச் சங்கம் உள்ளிட்ட தரப்புகள் சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டன.
</p><p>
இராணுவத்தினர் தமக்கு இதில் தொடர்பில்லை என மறுத்தபோதிலும், பின்னர் கிடைத்த சாட்சியங்கள் மற்றும் விசாரணைகள் சம்பவத்தின் உண்மையை வெளிக்கொண்டு வந்தன. </p><p>அன்றைய அரசாங்கம் சத்துருக்கொண்டான் படுகொலை தொடர்பாக ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணையையும் முன்னெடுத்தது.</p><p> ஓய்வுபெற்ற நீதிபதி கே. பாலகிஷ்ணர் தலைமையிலான விசாரணையில் படுகொலை இடம்பெற்றதற்கான வலுவான சாட்சியங்கள் இருப்பதாகவும், அதற்குப் பொறுப்பானவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டது.&nbsp;</p><p></p><h2>பன்னாட்டு ஆய்வுகளிலும் பதிவான படுகொலை&nbsp;</h2><p>சத்துருக்கொண்டான் படுகொலை இலங்கைக்குள் மட்டுமல்லாது பன்னாட்டு மனித உரிமை ஆய்வுகளிலும் பதிவானது.</p><p> </p><p>அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழகம் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களுடன் தொடர்புடைய ஆய்வுகளில் கிழக்கில் இடம்பெற்ற படுகொலைகள் மற்றும் காணாமல் ஆக்கல்கள் ஆவணப்படுத்தப்பட்டன. </p><p>அமெரிக்காவின் கொலராடோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சட்ட ஆய்வாளர்களும் இலங்கையில் இடம்பெற்ற திட்டமிட்ட பொதுமக்கள் அழிப்பு சம்பவங்கள் தொடர்பாக ஆய்வுகளை மேற்கொண்டனர்.
</p><p>
சத்துருக்கொண்டான் படுகொலை தொடர்பாக பொறுப்புக்கூறல் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் பல்வேறு மனித உரிமைத் தரப்புகளாலும் முன்வைக்கப்பட்டன. </p><p>விசாரணைகளில் சம்பவத்துடன் தொடர்புடையதாகக் குறிப்பிடப்பட்ட சில இராணுவ அதிகாரிகளுக்கு எதிராகவும் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் அரச படைகளின் பொறுப்பு மற்றும் கட்டளைப் பொறுப்பு தொடர்பான கேள்விகள் தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகின்றன.</p><h2>நீதி மறுக்கப்பட்டு 36 ஆண்டுகள்</h2><p>சத்துருக்கொண்டான் படுகொலை இடம்பெற்று 36 ஆண்டுகள் கடந்துவிட்டன. விசாரணைகள் இடம்பெற்றன; சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டன; படுகொலைக்கான வலுவான ஆதாரங்கள் இருப்பதாக விசாரணை அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டது.</p><p> </p><p>இருந்தபோதிலும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இதுவரை முழுமையான நீதி கிடைக்கவில்லை. குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என ஆயுதமற்ற பொதுமக்கள் கொல்லப்பட்ட ஒரு சம்பவத்தில் கூட குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்த முடியாத நிலை, இலங்கையில் போர்க்காலக் குற்றங்கள் தொடர்பான பொறுப்புக்கூறலின் தோல்வியை வெளிப்படுத்துகிறது.
</p><p>
சத்துருக்கொண்டான் படுகொலை முள்ளிவாய்க்கால் உள்ளிட்ட பல்வேறு படுகொலைகளுடன் இணைந்து பார்க்கப்பட வேண்டிய ஒரு முக்கியமான வரலாற்றுச் சம்பவமாகும். </p><p>குறிப்பாக குழந்தைகள் உட்பட பொதுமக்கள் திட்டமிட்ட வகையில் அழிக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவங்களுக்கு நீதி கிடைக்காமல் இருப்பது, காணாமல் ஆக்கப்பட்டவர்களினதும் படுகொலை செய்யப்பட்டவர்களினதும் குடும்பங்களின் நீதிக்கான போராட்டத்தை மேலும் நீடிக்கச் செய்கிறது.
</p><p>
36 ஆண்டுகள் கடந்தாலும் சத்துருக்கொண்டான் மறக்கப்படவில்லை. அங்கு கொல்லப்பட்ட ஒவ்வொரு குழந்தையும், ஒவ்வொரு பெண்ணும், ஒவ்வொரு முதியவரும் ஒரு எண்ணிக்கை அல்ல; அவர்கள் ஒரு குடும்பத்தின் உறுப்பினர்கள், ஒரு சமூகத்தின் அங்கங்கள். </p><p>அவர்களின் மரணம் குறித்த உண்மையும் அதற்கான பொறுப்பும் முழுமையாக வெளிப்படுத்தப்படும் வரை சத்துருக்கொண்டான் படுகொலை முடிந்துபோன வரலாறாக மாறாது. </p><p>முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை உள்ளிட்ட போர்க்காலக் குற்றங்களுக்கு நீதி கோரும் போராட்டத்தில் சத்துருக்கொண்டான் படுகொலையும் தொடர்ந்து நினைவுகூரப்பட்டு, உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறலுக்கான கோரிக்கையாக முன்வைக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p>
</p>]]></content>
            <updated>2026-09-10T13:02:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஸ்டார்மரின் தொகுதியில் அகதி ஒருவரை வேட்பாளராக நிறுத்தும் லேபர் கட்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/labour-picks-child-refugee-to-stand-in-by-election-1789045124"></link>
            <id>https://news.lankasri.com/article/labour-picks-child-refugee-to-stand-in-by-election-1789045124</id>
            <summary type="text">Labour picks former child refugee to stand in by election for Starmer’s seat: கெய்ர் ஸ்டார்மரின் இருக்கைக்கு போட்டியிட அகதி ஒருவரை தேர்ந்தெடுத்துள்ளது...</summary>
            <content type="html"><![CDATA[<p>Labour picks former child refugee to stand in by election for Starmer’s seat: கெய்ர் ஸ்டார்மரின் இருக்கைக்கு போட்டியிட அகதி ஒருவரை தேர்ந்தெடுத்துள்ளது லேபர் கட்சி.
</p><p>

பிரித்தானியாவின் முன்னாள் பிரதமரான சர் கெய்ர் ஸ்டார்மர் தனது பதவியை ராஜினாமா செய்தது அனைவரும் அறிந்ததே.
</p><p>
அதுமட்டுமின்றி, அவர் சமீபத்தில் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்துள்ளார்.
</p><h3>
கெய்ர் ஸ்டார்மரின் இடத்தைப் பிடிக்க...
</h3><p>
கெய்ர் ஸ்டார்மர், இங்கிலாந்திலுள்ள Holborn and St Pancras தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6366c906-f755-46ba-a13c-d6233c841073/26-6aa2a98682898.webp' /></p><p>
அவர் தனது நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ததால், அந்தத் தொகுதி காலியாக உள்ளது.
</p><p>
இந்நிலையில், அந்தத் தொகுதியைக் கைப்பற்றும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளார் கிரீன் கட்சித் தலைவரான ஸாக் போலன்ஸ்கி.&nbsp;</p><p></p><p>
அவருடன், தற்போது இந்திய வம்சாவளியினரான ரிஷி மத்லானி (44) என்னும் நபரும் போட்டியில் இணைந்துள்ளார்.
</p><h3>
அகதி ஒருவரை நிறுத்தும் லேபர் கட்சி</h3><p>

இந்நிலையில், Holborn and St Pancras தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிட, அகதியாக பிரித்தானியா வந்த பெண்ணொருவரை தேர்ந்தெடுத்துள்ளது லேபர் கட்சி.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f428f49f-35af-40e1-8363-02720e495d0d/26-6aa2a985ceb97.webp' /></p><p>

1900களில், ஒரு சிறுமியாக சோமாலியாவிலிருந்து அகதியாக வந்த Sagal Abdi-Wali (42) என்னும் பெண்ணே லேபர் கட்சி சார்பில் Holborn and St Pancras தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிட நிறுத்தப்பட உள்ளார்.
</p><p>
Abdi-Wali, 10 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு தொண்டு நிறுவனங்களிலும் இரண்டு பள்ளிகளிலும் பணியாற்றியவர் ஆவார்.</p><p>

Holborn and St Pancras தொகுதியில், அடுத்த மாதம், அதாவது, அக்டோபர் மாதம் 8ஆம் திகதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-10T13:00:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[இருள் ஒருபோதும் தீங்கு விளைவிக்காது!! நடிகை ரேஷ்மா முரளிதரன்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/reshma-muralidaran-reccent-photoshoot-1789041580"></link>
            <id>https://viduppu.com/article/reshma-muralidaran-reccent-photoshoot-1789041580</id>
            <summary type="text">ரேஷ்மா முரளிதரன்ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற சீரியல் தான் பூவே உனக்காக. இந்த சீரியலில் முக்கிய ரோலில் ...</summary>
            <content type="html"><![CDATA[<h2>ரேஷ்மா முரளிதரன்</h2><p>ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற சீரியல் தான் பூவே உனக்காக. இந்த சீரியலில் முக்கிய ரோலில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை ரேஷ்மா முரளிதரன்.
</p><p>
4 ஆண்டுகள் ஒளிப்பரப்பாகிய இந்த சீரியலுக்குப்பின் அபி டைலர், நெஞ்சத்தை கிள்ளாதே, கிழக்கு வாசலே, செல்லமே செல்லமே போன்ற சீரியல்களில் நடித்து வந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/80571823-3fa0-4bb0-ae85-efdbfd1dc77b/26-6aa29bb2965c9.webp' /></p><p> </p><p>கடந்த 2021ல் சீரியல் நடிகர் மதன் பாண்டியனை காதலித்து திருமணம் செய்து கொண்டார் ரேஷ்மா. இதற்கிடையில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்யவுள்ளதாக செய்திகள் பரவி வருகிறது. </p><p>இதற்கிடையில், இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் ரேஷ்மா, கருப்புநிற கிளாமர் ஆடையணிந்து நாற்காலியில் உட்கார்ந்தபடி எடுத்த கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-09-10T13:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[விரைவில் அறிமுகமாகும் இலங்கை பொலிஸ் செயலி - பொதுமக்கள் பயன்படுத்துவது எப்படி..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/app-to-provide-police-of-emergency-1789043091"></link>
            <id>https://tamilwin.com/article/app-to-provide-police-of-emergency-1789043091</id>
            <summary type="text">


அவசர காலங்களில் பொலிஸாருக்கு விரைவாக தகவல் தெரிவிப்பதற்காக இலங்கை பொலிஸார் ஒரு புதிய தொலைபேசி செயலியை அறிமுகம் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக தெர...</summary>
            <content type="html"><![CDATA[<p>


அவசர காலங்களில் பொலிஸாருக்கு விரைவாக தகவல் தெரிவிப்பதற்காக இலங்கை பொலிஸார் ஒரு புதிய தொலைபேசி செயலியை அறிமுகம் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p> 

 தேசிய அடையாள அட்டை வைத்திருக்கும் எந்தவொரு இலங்கை பிரஜையும், Sri Lanka Police App-ஜ பயன்படுத்தலாம் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவி பொலிஸ் கண்காணிப்பாளர் எஃப். யூ. உட்லர் தெரிவித்துள்ளார். </p><h2>


SOS பொத்தான்</h2><p>
மேலும், அவசர காலங்களில் இந்தச் செயலியில் உள்ள SOS பொத்தானை 10 விநாடிகளுக்கு அழுத்துவதன் மூலம், சம்பந்தப்பட்ட நபரின் இருப்பிடம் குறித்த தகவலை அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கு வழங்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>

இதுவரை காலமும், 119 என்ற அவசர எண் மூலம் பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு வந்தது. மாறாக, தற்போது நடைமுறைக்கு வரும் இந்த புதிய செயலி மூலம், உங்களுடைய பிரச்சினைகளை விரைவாக பொலிஸாருக்கு தெரியப்படுத்த முடியும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/01a77550-b5d6-400c-812e-0b0882e7e741/26-6aa2a7b5e9ee8.webp' /></p><p> </p><p>

அதே போன்று, ஒரு குழந்தைக்கு ஏதேனும் விபத்து அல்லது சிக்கல் ஏற்பட்டால் கூட, இந்தச் செயலி மூலம் பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்க முடியும் என்றும் இது தொடர்பாக பொலிஸார் உடனடியாக நடவடிக்கை எடுக்க முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><h2> 


செயலியை பயன்படுத்தும் சந்தர்ப்பங்கள்</h2><ul><li>
 இலங்கை பொலிஸ் செயலியை பொலிஸ் ஸ்டோர் மூலமாக அணுகி பதிவு செய்துகொள்ளலாம்.
</li><li>
தேசிய அடையாள அட்டை வைத்திருக்கும் குழந்தைகளுக்கும் இதில் பதிவு செய்துகொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.</li><li> 

இந்த பொலிஸ் செயலியைத் தவறாகப் பயன்படுத்துவது சாத்தியமற்றது. </li></ul><p>

 2025-ஆம் ஆண்டில் 119 என்ற அவசர எண்ணைத் தவறாகப் பயன்படுத்திய 91 பேர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் இதன்போது அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-10T12:51:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[குடியுரிமை வழங்க எக்கச்சக்கமாக கட்டணம் வசூலிக்கும் பிரித்தானியா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/applicants-for-uk-citizenship-charge-more-5-times-1789044193"></link>
            <id>https://news.lankasri.com/article/applicants-for-uk-citizenship-charge-more-5-times-1789044193</id>
            <summary type="text">Applicants for UK citizenship charged more than five times the admin cost: பிரித்தானிய குடியுரிமை பெற விண்ணப்பிப்போர், நிர்வாக செலவை ஒப்பிடும்போது, ஐந...</summary>
            <content type="html"><![CDATA[<p>Applicants for UK citizenship charged more than five times the admin cost: பிரித்தானிய குடியுரிமை பெற விண்ணப்பிப்போர், நிர்வாக செலவை ஒப்பிடும்போது, ஐந்து மடங்கு கூடுதல் கட்டணம் செலுத்துகிறார்களாம்.
</p><p>

பிரித்தானிய குடியுரிமை பெற விண்ணப்பிப்போர், உள்துறை அலுவலகத்துக்கு ஆகும் நிர்வாக செலவை ஒப்பிடும்போது, ஐந்து மடங்கு கூடுதல் கட்டணம் செலுத்துவதாக, சமீபத்திய ஆய்வொன்று தெரிவிக்கிறது.
</p><h3>
எக்கச்சக்கமான கட்டணம் வசூலிக்கும் பிரித்தானியா</h3><p>

குடியுரிமை வழங்குவதற்காக, அமெரிக்கா வசூலிக்கும் கட்டணம், 562 பவுண்டுகள். மற்ற G7 நாடுகளை ஒப்பிடும்போது, குடியுரிமை வழங்குவதற்காக பிரித்தானியாதான் உள்ளதிலேயே அதிக கட்டணம் வசூலிக்கிறது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b37749a2-94b3-43a5-bfbb-667bfcef1f0d/26-6aa2a5e2cedfd.webp' /></p><p>
விடயம் என்னவென்றால், ஒருவருக்கு குடியுரிமை வழங்குவதற்காக, பிரித்தானிய உள்துறை அலுவலகத்துக்கு ஆகும் நிர்வாக செலவு, 324 பவுண்டுகள் மட்டுமே.</p><p></p><p>

ஆனால், பிரித்தானியா 1,709 பவுண்டுகள் வசூலிப்பதுடன், குடியுரிமை வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, தனியாக 130 பவுண்டுகள் வசூலிக்கிறது.</p><p>

ஆக மொத்தம், ஒருவர் பிரித்தானியக் குடியுரிமை பெறுவதற்காக செலுத்தும் கட்டணம், 1,839 பவுண்டுகள். ஆக, கிட்டத்தட்ட, ஐந்து மடங்கு அதிக கட்டணம் வசூலிக்கிறது பிரித்தானியா.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-10T12:44:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[தேங்காய்களை ஏற்றிச் சென்ற லொறி கவிழ்ந்து கோர விபத்து! இருவர் படுகாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/accident-lorry-carrying-coconuts-overturns-1789042314"></link>
            <id>https://tamilwin.com/article/accident-lorry-carrying-coconuts-overturns-1789042314</id>
            <summary type="text">குருநாகல் - கண்டி வீதியில், கலகெதர பொலிஸ் நிலையத்துக்கு அருகிலுள்ள சரிவுப்
பகுதியில் உரித்த தேங்காய்களை ஏற்றிச் சென்ற லொறி ஒன்று வீதியோரத்தில் கவிழ்ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>குருநாகல் - கண்டி வீதியில், கலகெதர பொலிஸ் நிலையத்துக்கு அருகிலுள்ள சரிவுப்
பகுதியில் உரித்த தேங்காய்களை ஏற்றிச் சென்ற லொறி ஒன்று வீதியோரத்தில் கவிழ்ந்து
விபத்துக்குள்ளாகியுள்ளது.</p><p>குறித்த விபத்தானது இன்று(10.09.2026) காலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>வேகக் கட்டுப்பாட்டை இழந்து குறித்த லொறியானது விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><h2>மேலதிக விசாரணை</h2><p>
</p><p>
இந்த விபத்தில் லொறியின் சாரதியும் உதவியாளரும் படுகாயமடைந்த நிலையில்
உடனடியாக வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b7499da5-698e-41c0-a9e6-72cc4298cd5a/26-6aa2a44ac9d2e.webp' /></p><p>
</p><p>
இந்தச் சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளைக் கலகெதரப் பொலிஸார் முன்னெடுத்து
வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-10T12:36:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[மொட்டுவின் பேரணியில் பங்கேற்க விமலுக்கு அழைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/wimal-weerawansa-invited-rally-of-slpp-1789042819"></link>
            <id>https://ibctamil.com/article/wimal-weerawansa-invited-rally-of-slpp-1789042819</id>
            <summary type="text">&amp;nbsp;தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்சவுக்கும் சிறிலங்கா பொதுஜன பெரமுன பொதுச் செயலாளர் சாகர கரியவசத்திற்கும் இடையேயான சந்திப்பு இன்று (...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்சவுக்கும் சிறிலங்கா பொதுஜன பெரமுன பொதுச் செயலாளர் சாகர கரியவசத்திற்கும் இடையேயான சந்திப்பு இன்று (10) பொதுஜன பெரமுன கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
</p><p>
சந்திப்பிற்குப் பிறகு ஊடகங்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச, 12ஆம் திகதி அனுராதபுரத்தில் பொதுஜன பெரமுனவால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பேரணியில் பங்கேற்க இந்த சந்திப்பில் தனக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாகக் கூறினார்.</p><h2>கட்சி உறுப்பினர்களுடன் கலந்துரையாடி முடிவு</h2><p>
</p><p>
இருப்பினும், இந்தப் பேரணியில் பங்கேற்பது குறித்து இன்று (10) கட்சி உறுப்பினர்களுடன் கலந்துரையாடி முடிவெடுப்பதாக அவர் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3a06194f-4fcc-42ae-963a-e9803e965095/26-6aa2a3f24b556.webp' /></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="http://செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-10T12:34:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[குணசேகரனுக்கு வீடு தேடி வந்த ஆபத்து, ஈஸ்வரியின் அதிரடி முடிவு... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/ethirneechal-thodargiradhu-special-promo-10-sep-1789042761"></link>
            <id>https://cineulagam.com/article/ethirneechal-thodargiradhu-special-promo-10-sep-1789042761</id>
            <summary type="text">எதிர்நீச்சல் தொடர்கிறதுகுணசேகரன், தவறுக்கு மேல் தவறு செய்தாலும் தனது பண பலத்தால் ராஜ்ஜியம் செய்துவரும் ஒரு நபர்.&amp;nbsp;என்ன நடந்தாலும் தனது பணம், அதிகா...</summary>
            <content type="html"><![CDATA[<h2>எதிர்நீச்சல் தொடர்கிறது</h2><p>குணசேகரன், தவறுக்கு மேல் தவறு செய்தாலும் தனது பண பலத்தால் ராஜ்ஜியம் செய்துவரும் ஒரு நபர்.&nbsp;</p><p>என்ன நடந்தாலும் தனது பணம், அதிகாரத்தை வைத்து நான் தண்டனை அனுபவிப்பதில் இருந்து தப்பிப்பேன் என முதல் சீசனை தொடர்ந்து இரண்டாவது சீசனிலும் ஜாலியாக வலம் வருகிறார்.</p><p>ஜனனி போட்ட வழக்கில் இருந்து தப்பிக்க ஜாமின் வாங்கியிருந்தவர் இப்போது அவரை அழிக்க அய்யனாருக்கு கட்டுகட்டும் வேலையில் மும்முரமாக இறங்கி இருந்தார். இதற்கு இடையில் ராவணன் செய்த சூழ்ச்சியால் அவரது ஜாமின் கேன்சல் ஆக போலீஸிடம் சிக்கக் கூடாது என ராவணன் உதவியுடன் பதுங்கியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3718b22d-955a-4426-9923-abb458978cdc/26-6aa2a309b552c.webp' /></p><h2>புரொமோ</h2><p>தற்போது எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் தனது ஜாமின் கேன்சல் ஆனதால் ஜனனி தான் அதற்கு காரணம் என செம கோபத்தில் உள்ளார். இதனால் இந்த கட்டுகட்டும் விஷயத்தை நிறுத்தவே கூடாது அதை செய்தே ஆக வேண்டும், ஜனனி அழிந்தே ஆகனும் என மும்முரமாக உள்ளார் குணசேகரன்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d4c917e8-9f6b-4133-a111-61f0de797eff/26-6aa2a308d96a5.webp' /></p><p>இதற்கு இடையில் ஜனனி, அக்காக்களிடம் ராவணன் குறித்த உண்மையை கூறி அவர்களுக்கு சில விஷயங்கள் புரிய வைக்கிறார்.</p><p>பின் ஈஸ்வரி, ஜனனிக்கு ஒரு பிரச்சனை என்றால் சும்மா விடமாட்டேன், இந்த கட்டு கட்டும் விஷயத்தை நடக்க விடமாட்டேன் என்கிறார். பின் தலைமறைவாக இருக்கும் குணசேகரன் இடத்திற்கே போலீசார் செல்ல அவர் பயத்தின் உச்சத்தில் பதறுகிறார்.</p><p>இதோ ஸ்பெஷல் புரொமோ,</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/z1fbEIM9tNk" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-09-10T12:31:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவில் AI கல்லூரி அமைக்க ரூ.190 கோடி நன்கொடை வழங்கிய இந்திய தம்பதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/indian-origin-couple-donates-190-cr-for-us-college-1789043265"></link>
            <id>https://news.lankasri.com/article/indian-origin-couple-donates-190-cr-for-us-college-1789043265</id>
            <summary type="text">indian origin couple donates 190 crores for setup ai college in us: அமெரிக்காவில் AI கல்லூரி அமைக்க, இந்திய வம்சாவளி தம்பதி ரூ.190 கோடி நன்கொடை வழங்கி...</summary>
            <content type="html"><![CDATA[<p>indian origin couple donates 190 crores for setup ai college in us: அமெரிக்காவில் AI கல்லூரி அமைக்க, இந்திய வம்சாவளி தம்பதி ரூ.190 கோடி நன்கொடை வழங்கியுள்ளனர்.
</p><h3>
 ரூ.190 கோடி நன்கொடை வழங்கிய இந்திய தம்பதி</h3><p> 

அமெரிக்காவின் வடக்கு டெக்சாஸ் பல்கலைக்கழகம்(UNT) ஒரு பொது ஆராய்ச்சிப் பல்கலைக்கழகம். இந்த பல்கலைக்கழகத்தில் சுமார் 44,000 மாணவர்கள் கல்வி பயில்கின்றனர். 230 பட்டப்படிப்புகள் உள்ளது. 

இங்கு கடந்த ஆண்டு 13,000 க்கும் அதிகமானோர் பட்டம் பெற்றுள்ளனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f375fa32-9a6d-49f3-856c-917b2f1a234d/26-6aa2a2428ef2b.webp' /></p><p>

இந்நிலையில், இந்த பல்கலைக்கழகம் செயற்கை நுண்ணறிவு மற்றும் மேம்பட்ட பகுப்பாய்வுக் கல்லூரி ஒன்றை அமைப்பதற்காக இந்திய வம்சாவளி தம்பதியான விகாஸ் சின்ஹா மற்றும் அனுராதா 20 மில்லியன் டொலர்களை(இந்திய மதிப்பில் ரூ.190 கோடி) நன்கொடையாக வழங்கியுள்ளனர்.
</p><p>
இந்த நன்கொடையைப் பாராட்டும் விதமாக, UNT பல்கலைக்கழகம் அவர்களின் பெயரில் அனுராதா மற்றும் விகாஸ் சின்ஹா ​​செயற்கை நுண்ணறிவு மற்றும் மேம்பட்ட பகுப்பாய்வுக் கல்லூரியை அமைக்க உள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8aa396b0-0357-48eb-9962-29962562ab41/26-6aa2a24344468.webp' /></p><p>
இந்தப் புதிய கல்லூரி 2 கல்விப் பிரிவுகள் மூலம் செயல்படும். ஒரு பிரிவு அறிவார்ந்த அமைப்புகளை உருவாக்குவதிலும் செயல்படுத்துவதிலும் கவனம் செலுத்தும், மற்றொன்று மனித மற்றும் நிறுவனச் சூழல்களில் தகவல் மற்றும் அறிவார்ந்த அமைப்புகள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதை ஆய்வு செய்யும்.&nbsp;</p><p></p><h3>

யார் இந்த விகாஸ் சின்ஹா அனுராதா?
</h3><p>
உத்தரப் பிரதேசத்தில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா பல்கலைக்கழகத்தில் குடிசார் பொறியியலில் இளங்கலைப் பட்டம் பெற்ற விகாஸ் மற்றும் அனுராதா, மேல்படிப்புக்காக இந்தியாவிலிருந்து அமெரிக்கா சென்றனர்.

இருவரும் புளோரிடா அட்லாண்டிக் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் படிப்பைத் தொடர்ந்தனர்.</p><p> 

விகாஸ் 2023 ஆம் ஆண்டில் UNT-யில் தனது முனைவர் பட்டத்தைப் பெறுவதற்கு முன்பு, நார்த்வெஸ்டர்ன் பல்கலைக்கழகத்திலும் பயின்றுள்ளார். </p><p>

விகாஸ் சின்ஹா ​​தற்போது பிராட்காம் நிறுவனத்தின் மெயின்ஃபிரேம் மென்பொருள் பிரிவின் துணைத் தலைவராக உள்ளார், மேலும் 2023 முதல் UNT தகவல் கல்லூரியின் தலைமைத்துவ வாரியத்தில் பணியாற்றி வருகிறார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e359fe88-97d2-48de-99b3-95192ed34b81/26-6aa2a243ef3a8.webp' /></p><p>
இந்த நன்கொடை குறித்து பேசிய அவர், "கல்வி எங்கள் வாழ்நாள் முழுவதும் எங்களுக்குப் பல கதவுகளைத் திறந்து வைத்துள்ளது, அந்தக் கதவுகளை நாங்கள் மற்றவர்களுக்கும் திறந்து வைக்க விரும்புகிறோம். </p><p>

எங்களைப் பொறுத்தவரை, இந்தப் பரிசானது அந்த வாய்ப்பை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சேர்ப்பதும், குடியேறிகள் அமெரிக்கக் கனவில் வெறுமனே பங்கேற்பவர்கள் மட்டுமல்ல, அதைக் கட்டமைக்கவும் உதவுகிறார்கள் என்பதை அங்கீகரிப்பதுமாகும்" என தெரிவித்துள்ளார். </p><p>

முன்னதாக 2024 ஆம் ஆண்டில், இந்த தம்பதியினர் ​​தரவு அறிவியல் துறையை நிறுவுவதற்காக 3 மில்லியன் டொலர்களை நன்கொடையை வழங்கினர். அத்துடன், கல்வி உதவித்தொகை, பேராசிரியர்கள், ஆராய்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிகளை ஆதரிக்கும் அறக்கட்டளை நிதிகளையும் வழங்கினர்.</p><p>

மீண்டும் 2025 ஆம் ஆண்டில் மற்றொரு பெரும் நன்கொடையை வழங்கி, தரவு அறிவியலுக்கான சின்ஹா ​​புத்தாக்க ஆய்வகத்தை உருவாக்கினர்.
</p><p>
இந்த நன்கொடையானது, மாணவர் வெற்றி, ஆராய்ச்சி மற்றும் புத்தாக்கம் தொடர்பான UNT-யின் இலக்குகளை முன்னெடுத்துச் செல்வதோடு, செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவுகளால் அதிகரித்து வரும் பணியிடத்திற்கு பட்டதாரிகளைத் தயார்படுத்தவும் உதவும்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-10T12:29:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[4 பில்லியன் ரூபாய் பெறுமதியான நிலக்கரி எங்கே..! நாடாளுமன்றத்தில் நாமல் கேள்வி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/how-did-coal-worth-4-62-billion-rupees-namal-1789041425"></link>
            <id>https://tamilwin.com/article/how-did-coal-worth-4-62-billion-rupees-namal-1789041425</id>
            <summary type="text">சிறையிலிருந்து நாடாளுமன்றத்திற்கு வந்த எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட 19 நிலக்கரி கப்பல்களிலிருந்து...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிறையிலிருந்து நாடாளுமன்றத்திற்கு வந்த எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட 19 நிலக்கரி கப்பல்களிலிருந்து சுமார் 4.62 பில்லியன் ரூபாய் பெறுமதியான 120,000 மெற்றிக்தொன் நிலக்கரி கணக்கின்றி மாயமாகியுள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
</p><p>
நாடாளுமன்றத்தில் இன்று (10.09.2026) உரையாற்றியபோதே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
</p><h2>அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்த</h2><p>
குறித்த 19 நிலக்கரி கப்பல்கள் தொடர்பான பதிவுகளில் சுமார் 120,000 மெற்றிக்தொன் பற்றாக்குறை காணப்படுவதாக நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fba240dd-ad0a-4094-ae5c-6ac14cf1a56a/26-6aa2a26d04f62.webp' /></p><p>
இந்த அளவு நிலக்கரியானது ஏறத்தாழ இரண்டு கப்பல் சுமைக்குச் சமமானது எனக் குறிப்பிட்ட அவர், இவ்வளவு பெரிய அளவு எவ்வாறு மாயமாகியிருக்க முடியும் எனவும் கேள்வி எழுப்பினார்.
</p><p>இந்த அறிக்கைகளின்படி, 120,000 மெற்றிக்தொன் காணாமல் போயுள்ளது. இந்த இரண்டு நிலக்கரி கப்பல்களையும் விழுங்கியது யார்?" எனவும் அவர் நாடாளுமன்றத்தில் வினவினார்.</p><p>

இதன்போது, மின்சார மற்றும் எரிபொருள் விலைகள், வரிகள், பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு வாக்குறுதிகள், அரிசி இறக்குமதி மற்றும் கொழும்பு துறைமுகத்திலிருந்து விடுவிக்கப்பட்ட கொள்கலன்கள் தொடர்பான முறைகேடுகள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பாகவும் அரசாங்கத்தை அவர் கடுமையாக விமர்சித்தார்.</p><p>

அதிகாரத்திற்கு வருவதாகத் தெரிவித்து வழங்கப்பட்ட பல வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் அரசாங்கம் தோல்வியடைந்துள்ளதாகக் குற்றம் சாட்டியே நாமல் ராஜபக்ச இந்தக் கருத்துக்களை தெரிவித்தார்.</p><p></p><p></p><p><b>YOU MAY LIKE THIS VIDEO..&nbsp;</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/DyCd5Oh1q3I" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-10T12:28:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[சத்துருக்கொண்டான் படுகொலைக்கு நீதிவேண்டி விசேட மனு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/special-petition-regarding-sathurukondan-massacre-1789043184"></link>
            <id>https://ibctamil.com/article/special-petition-regarding-sathurukondan-massacre-1789043184</id>
            <summary type="text">மட்டக்களப்பு சத்துருக்கொண்டானில் 1990ஆம் ஆண்டு இடம்பெற்ற படுகொலைக்கான நீதி வேண்டி கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

சத்துருக்கொண்டான் பனிச்சையடியில் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>மட்டக்களப்பு சத்துருக்கொண்டானில் 1990ஆம் ஆண்டு இடம்பெற்ற படுகொலைக்கான நீதி வேண்டி கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.</p><p>

சத்துருக்கொண்டான் பனிச்சையடியில் அமைந்துள்ள உயிரிழந்தவர்களின் நினைவுத்தூபி வளாகத்தில், 
நேற்றைய உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட சத்துருக்கொண்டான் படுகொலை நினைவேந்தலில் வெளிப்படுத்தப்பட்ட மனுவில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
</p><p>

1990ஆம் ஆண்டு செப்டெம்பர் 9ஆம் திகதி கொக்குவில், பனிச்சையடி, பிள்ளையாரடி மற்றும் சத்துருக்கொண்டான் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 186 பொதுமக்கள் இராணுவ முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்ட பின்னர் படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.</p><p>

உயிரிழந்தவர்களில் 85 பெண்களும், 10 வயதுக்குட்பட்ட 42 சிறுவர்களும், 25 வயோதிபர்களும் அடங்கியுள்ளனர்.
</p><p>
இந்தச் சம்பவத்தில் இராணுவத்தினர், முஸ்லிம் ஊர்காவல் படையினர் மற்றும் ஒட்டுக்குழுவினர் ஈடுபட்டதாக நினைவேந்தல் ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.</p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/ulxIE5d8fDo" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-09-10T12:26:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் வழங்க்கப்படவுள்ள சிறப்பு உளநல பயிற்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/today-is-world-wrong-decition-prevention-day-1789041641"></link>
            <id>https://ibctamil.com/article/today-is-world-wrong-decition-prevention-day-1789041641</id>
            <summary type="text">தவறான முடிவுகளால் உயிரைமாய்த்துக்கொள்வதை தடுக்கும் தினத்தையொட்டி அனைவரும் ஒன்றிணைந்து சகோதர உணர்வுடன் எமது உறவுகளுக்கு உளநல ஆதரவை வழங்கி, மன நெருக்கடி...</summary>
            <content type="html"><![CDATA[<p>தவறான முடிவுகளால் உயிரைமாய்த்துக்கொள்வதை தடுக்கும் தினத்தையொட்டி அனைவரும் ஒன்றிணைந்து சகோதர உணர்வுடன் எமது உறவுகளுக்கு உளநல ஆதரவை வழங்கி, மன நெருக்கடிகளில் இருந்து அவர்களை மீட்டெடுக்க வேண்டியது அவசியமாகும் எனும் தொனிப்பொருளில் உளநல ஆற்றுதல் பயிற்சி யாழில் வழங்க்கப்படுகின்றது.</p><p>இதன்படி&nbsp;இதன் ஒரு பகுதியாக, நாளை பிற்பகல் 3 மணிக்கு சிவகுரு ஆதீனத்தில் உளநல மருத்துவர்களால் சிவ சகோதரர்களுக்கு முதற்கட்ட உளநல ஆற்றுப்படுத்தல் பயிற்சி வழங்கப்படவுள்ளது.</p><p>இந்தப் பயிற்சியில் சிவ சகோதரர்களுடன் ஆர்வமுள்ள சிவதொண்டர்கள் மற்றும் சிவமங்கையரும் கலந்துகொள்ள முடியுமென ஏற்பாட்டுக்குழு தெரிவித்துள்ளது.&nbsp;</p><p>
மேலதிக தகவல்களுக்கு நிர்வாக உத்தியோகத்தரை 077 694 3179 என்ற தொலைபேசி இலக்கத்தில் தொடர்புகொள்ளலாம்.</p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-10T12:21:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழ் சமூகத்தில் அதிகரிக்கும் மரணங்கள் - பொதுமக்களுக்கு கிடைத்த அரிய வாய்ப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/world-suicide-prevention-1789042607"></link>
            <id>https://tamilwin.com/article/world-suicide-prevention-1789042607</id>
            <summary type="text">இன்றைய தினம்(10.09.2026) நாடளாவிய ரீதியில் உலக தற்கொலை தடுப்புத்தினமாக அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.

இந்த தினத்தை நாம் அனைவரும் ஒன்றிணைந்து சகோதர உ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இன்றைய தினம்(10.09.2026) நாடளாவிய ரீதியில் உலக தற்கொலை தடுப்புத்தினமாக அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.
</p><p>
இந்த தினத்தை நாம் அனைவரும் ஒன்றிணைந்து சகோதர உணர்வுடன், எம் உறவுகளுக்காக இந்த தினத்தை அனுஷ்டிக்க வேண்டும்.</p><p> 

தமிழ் மாவட்டங்களில் சமீபக்காலமாக தற்கொலை செய்துக் கொண்டு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.</p><h2> 

விவரங்களை பெற..</h2><p>

இதுபோன்ற சம்பவங்களை குறைப்பதற்கு எம்மால் முடிந்த வரையில் முயற்சிப்போம். </p><p>

இந்த நிலையில், சர்வதேச தற்கொலை தடுப்புத்தினத்தை முன்னிட்டு, நாளைய தினம் 3 மணியளவில், சிவகுரு ஆதீனத்தில் உள நல மருத்துவர்களால் பயிற்சியொன்று இடம்பெறவுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/54f043ac-094a-4bf2-9092-6cc06240b791/26-6aa29ff54d74a.webp' /></p><p> </p><p>

இதில், சிவ சகோதரிகள், தொண்டர்கள் உட்பட பலரும் கலந்துக்கொள்வார்கள்.
</p><p>
அத்துடன், இந்த முயற்சி திட்டம் தொடர்பில் மேலதிக விவரங்களை தெரிந்துக் கொள்ள நிர்வாக உத்தியோகத்தரை <b>0776943179 </b>என்ற இலக்கம் மூலம் தொடர்புக் கொண்டு பெற்றுக் கொள்ளலாம்.&nbsp; &nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-10T12:18:09+00:00</updated>
        </entry>
    </feed>
