<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-08-18T08:33:15+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[அகிலவிராஜ் கரியவசத்துக்கு பிணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/akila-viraj-kariyawasam-granted-bail-1787041803"></link>
            <id>https://ibctamil.com/article/akila-viraj-kariyawasam-granted-bail-1787041803</id>
            <summary type="text">ஊழல் குற்றச்சாட்டின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் அகிலவிராஜ் கரியவசம் மற்றும் அவரது எரிபொருள் நிலைய ஊழியர் ஆகியோருக்கு பி...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஊழல் குற்றச்சாட்டின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் அகிலவிராஜ் கரியவசம் மற்றும் அவரது எரிபொருள் நிலைய ஊழியர் ஆகியோருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.</p><p>கொழும்பு நீதவான் நீதிமன்றில் இன்று(18.08.2026)&nbsp; முன்னெடுக்கப்பட்ட விசாரணைக்கு அமைய இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.</p><p>

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைய அதிகாரிகள் மற்றும் சந்தேக நபர்களின் சட்டத்தரணிகள் முன்வைத்த வாதங்களைப் பரிசீலித்த பின்னர், கொழும்பு பிரதான நீதிபதி அசங்க எஸ். போதரகம இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.</p><p></p><h2>வெளிநாடு செல்ல தடை&nbsp;</h2><p>
</p><p>
அதன்படி, ஒவ்வொரு சந்தேக நபரையும் தலா ரூ. 5 மில்லியன் மதிப்புள்ள இரண்டு பிணைப்பத்திரங்களில் செல்ல நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3a2de228-aa4f-4444-8472-d26df8b35759/26-6a84180dd097c.webp' /></p><p>மேலும், குறித்த இருவரும் வெளிநாடுகளுக்குப் பயணம் செய்யத் தடை விதிக்கவும் நீதிபதி உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.</p><p><b>தொடர்புடைய செய்திகள்...</b></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-18T08:30:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[நடிகையுடன் நெருக்கமான காட்சிகள்.. எந்த மனைவியும் அதை ஏற்றுக்கொள்ள மாட்டார்!! நடிகர் யாஷ் ஓபன் டாக்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/yash-talk-about-intimate-scene-with-actress-1787032435"></link>
            <id>https://cineulagam.com/article/yash-talk-about-intimate-scene-with-actress-1787032435</id>
            <summary type="text">நடிகையுடன் நெருக்கமான காட்சிகளில் நான் நடித்துள்ளதை பார்க்கும்போது, அதை என் மனைவி முழுமையாக ஏற்றுக்கொள்ள மாட்டார் என நடிகர் யாஷ் கூறியுள்ளார்.யாஷ்

...</summary>
            <content type="html"><![CDATA[<p>நடிகையுடன் நெருக்கமான காட்சிகளில் நான் நடித்துள்ளதை பார்க்கும்போது, அதை என் மனைவி முழுமையாக ஏற்றுக்கொள்ள மாட்டார் என நடிகர் யாஷ் கூறியுள்ளார்.</p><p></p><h2>யாஷ்
</h2><p>
கே.ஜி.எப் திரைப்படத்தின் மூலம் ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தவர் யாஷ். இப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து இவர் நடிப்பில் வருகிற ஆகஸ்ட் 26-ஆம் தேதி வெளிவரவிருக்கும் திரைப்படம்தான் <a href="https://www.youtube.com/watch?v=JsD-LmCkUpY" target="_blank">டாக்சிக்</a>.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0dc59b20-240d-4314-9710-219d3a3c3774/26-6a83f376d2543.webp' /></p><p>இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் கியாரா அத்வானி, தாரா சுதாரியா, ருக்மிணி வசந்த், நயன்தாரா மற்றும் ஹுமா குரேஷி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/af74065e-9265-4a5c-8c42-256ea0328c55/26-6a83f3778f606.webp' /></p><p>இப்படத்தின் அறிவிப்பு வெளிவந்ததில் இருந்து டிரைலர் வரை பல சர்ச்சைகளை டாக்சிக் சந்தித்து வருகிறது. நடிகர் - நடிகைக்கு இடையிலான நெருக்கமான காட்சிகள் சர்ச்சைக்குள்ளானது. கன்னட திரையுலகை சேர்ந்த நடிகை ரிஷிகா சிங் என்பவர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வீடியோ வெளியிட்டு இருந்தார்.</p><h2>நெருக்கமான காட்சிகள்</h2><p>

இந்நிலையில், தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசிய நடிகர் யாஷ், நடிகையுடன் தான் நெருக்கமாக நடிக்கும்போது தனது மனைவி ராதிகா எப்படி எடுத்துக்கொள்வார் என்று மனம் திறந்து பேசியுள்ளார். அதில், "கணவர் அப்படி நடிப்பதை எந்த மனைவியும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என நான் நினைக்கிறேன். நான் பொய் சொல்ல விரும்பவில்லை. எல்லா வாழ்க்கை துணைக்கும் அந்த உணர்வு இருக்கும். ஆனால், இறுதியில் இவை எல்லாம் உருவாக்கப்பட்ட காட்சிகள். இது ஒரு கலை. இதன் மூலம் நாங்கள் எதை அடைய விரும்புகிறோம் என்பதுதான் முக்கியமானது" என்றார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/16419edb-1291-4156-bc8f-efcd2139eeb6/26-6a83f3786dd0b.webp' /></p><h3>என் மனைவிக்கு சங்கடமாகத்தான்
</h3><p>
மேலும் பேசிய அவர், "மக்கள் சிலவற்றை தங்களின் நம்பிக்கையின் அடிப்படையிலும், சில விஷயங்களை தங்களது அறிவின் அடிப்படையிலும் செய்கிறார்கள். நெருக்கமான காட்சிகளில் நடிக்கும்போது அவை எனக்கும் அசௌகரியமாகவே இருக்கும். அந்த காட்சிகளில் நடிப்பது எனக்கு எளிதல்ல. கதைக்கு அந்த காட்சிகள் தேவையாக இருக்கும்போது அப்படி நடிக்க வேண்டியது அவசியமாகிறது".</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/15609990-a4e7-400e-920f-e96bf8a23f0a/26-6a83f379299df.webp' /></p><p>"அப்படியான காட்சிகளில் என்னை பார்க்கும்போது, என் மனைவிக்கு நிச்சயமாக சங்கடமாகத்தான் இருக்கும். அதற்கு அர்த்தம் அவர் அதை தவறாக எடுத்துக்கொள்வார் என்பது இல்லை. அவர் என்னை நம்புகிறார். எல்லாவற்றுக்கும் மேலாக அவரும் ஒரு நடிகை என்பதால், இந்த வேலைகளை அவர் புரிந்துகொள்வார். அங்கே தன வேலையை செய்வது ஒரு நடிகன், அவரது கணவன் இல்லை என்பது அவருக்கு புரியும்" என கூறினார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-18T08:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[லலித் - குகன் விவகாரத்தில் புதிய சாட்சியம்...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/new-testimony-in-the-lalith-kugan-case-1787040722"></link>
            <id>https://ibctamil.com/article/new-testimony-in-the-lalith-kugan-case-1787040722</id>
            <summary type="text">இலங்கையில் இடம்பெற்ற கடத்தல்கள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பில் அரசாங்கமும் அரசு இயந்திரமும் பொறுப்புக்கூற வேண்டும் என வலிக்கிழக்கு பி...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் இடம்பெற்ற கடத்தல்கள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பில் அரசாங்கமும் அரசு இயந்திரமும் பொறுப்புக்கூற வேண்டும் என வலிக்கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் வலியுறுத்தியுள்ளார்.</p><p>கடந்த கால ஆட்சிக்காலங்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் லலித் - குகன் கடத்தல் வழக்கு தொடர்பில் தற்போதைய அரசாங்கம் தீவிர விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் கோரியள்ளார்.</p><p>
 "இவை கடந்த காலத்தில் நடந்தவை, இதற்கும் எனக்கும் தொடர்பில்லை" என தற்போதைய ஆட்சியாளர்கள் தப்பித்துக்கொள்ள முடியாது எனவும், குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க அரசு தயாரா என்றும் அவர் கேள்வியெழுப்பினார். </p><p>

அத்துடன், போரினால் பாதிக்கப்பட்டு கண்பார்வையை இழந்த முன்னாள் போராளிகள் இன்றும் சந்தித்து வரும் சமூக, பொருளாதார நெருக்கடிகள் குறித்துக் கவலை வெளியிட்டதுடன், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் தாய்மார்களின் நீதிக்கான காத்திருப்புக்கு அரசாங்கம் உடனடியாகப் பதில் அளிக்க வேண்டும் என்றும், தமிழ் மக்கள் தமது வாக்களிப்பு முறையில் தீர்க்கமான அரசியல் சித்தாந்தத்துடன் செயற்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.</p><p>இந்நிலையில் ஐ.பி.சி தொலைக்காட்சியின் சக கரவியூகம் அரசியல் கலந்துரையாடலில் கலந்துகொண்டு மேலும் கருத்து தெரிவித்த அவர்,</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/prYpfBion5U" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-18T08:28:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[முன்னாள் அமைச்சர் காஞ்சன நிலக்கரி தொடர்பான விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ex-minister-kanchana-presence-commission-inquiry-1787040762"></link>
            <id>https://tamilwin.com/article/ex-minister-kanchana-presence-commission-inquiry-1787040762</id>
            <summary type="text">முன்னாள் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர, நிலக்கரி கொள்வனவு தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்கும் விசாரணை ஆணைக்குழுவில் இன்று (18) மு...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர, நிலக்கரி கொள்வனவு தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்கும் விசாரணை ஆணைக்குழுவில் இன்று (18) முன்னிலையாகியுள்ளார்.
</p><p>
நிலக்கரி கொள்வனவு மற்றும் அதனுடன் தொடர்புடைய நடவடிக்கைகள் குறித்து முன்னெடுக்கப்படும் விசாரணைகளின் ஒரு பகுதியாகவே அவர் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>ஆணைக்குழுவில் முன்னிலை</h2><p>
</p><p>
அவர் அமைச்சராக பதவி வகித்த காலப்பகுதியில் நிலக்கரி கொள்வனவு தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள், நடைமுறைகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய விடயங்கள் குறித்து ஆணைக்குழுவினால் அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>

இலங்கையின் மின்சார உற்பத்திக்கான பிரதான எரிபொருட்களில் ஒன்றாக நிலக்கரி காணப்படுவதுடன், அதன் கொள்வனவு தொடர்பில் கடந்த காலங்களில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்திருந்தன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/49e95eef-757f-4d6d-88d1-816d6102bea7/26-6a8415edeed9b.webp' /></p><p>

இந்நிலையில், நிலக்கரி கொள்வனவு நடவடிக்கைகளில் இடம்பெற்றதாக கூறப்படும் முறைகேடுகள் மற்றும் நிர்வாகத் தீர்மானங்கள் தொடர்பில் உண்மைகளை கண்டறியும் நோக்கில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
</p><p>
முன்னாள் அமைச்சர் காஞ்சன விஜேசேகரவிடம் இன்றைய தினம் இடம்பெறும் விசாரணைகளில் நிலக்கரி கொள்வனவு தொடர்பான முக்கிய விடயங்கள் குறித்து கேள்விகள் எழுப்பப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-18T08:21:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கல்முனை மருத்துவமனை சீருடைப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/solution-to-the-kalmunai-hospital-uniform-issue-1787041170"></link>
            <id>https://jvpnews.com/article/solution-to-the-kalmunai-hospital-uniform-issue-1787041170</id>
            <summary type="text">&amp;nbsp; கல்முனை உள்ளிட்ட மருத்துவமனைகளில் பணியாற்றும் முஸ்லிம் இளநிலை ஊழியர்கள் மற்றும் செவிலியர் அதிகாரிகளின் சீருடைப் பிரச்சினைக்கு உடனடி, குறுகிய கா...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; கல்முனை உள்ளிட்ட மருத்துவமனைகளில் பணியாற்றும் முஸ்லிம் இளநிலை<a href="https://jvpnews.com/article/uniforms-at-kalmunai-hospital-staff-protest-1786953944" target="_blank"> ஊழியர்கள் மற்றும் செவிலியர் அதிகாரிகளின் சீருடைப் பிரச்சினை</a>க்கு உடனடி, குறுகிய கால மற்றும் நீண்ட கால நிரந்தரத் தீர்வு வழங்குவதில் சுகாதார அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது.

</p><p>அமைச்சரின் தலைமையில் இன்று (18) நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற சிறப்புக் கலந்துரையாடலில் இந்த உடன்பாடு எட்டப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் ஆளும் கட்சியைச் சேர்ந்த முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களும், தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fd5d5cb6-8c9b-4aac-b721-2ff8c9a20510/26-6a84159381a34.webp' /></p><p>

கடந்த சில நாட்களாகக் கவனத்தை ஈர்த்து வரும் இந்த உணர்வுப்பூர்வமான பிரச்சினை குறித்து அனைத்துக் கட்சிகளின் கருத்துக்களும் விரிவாகக் கேட்கப்பட்டன.</p><p></p><p>

மருத்துவமனை அமைப்பின் சீரான செயல்பாட்டையும், அனைத்து சேவைப் பயனாளிகளின் ஒற்றுமையையும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் உரிமைகளையும் உறுதிசெய்யும் அமைதியான மற்றும் நடைமுறைக்கு உகந்த தீர்வை எட்டுவதன் முக்கியத்துவம் வலியுறுத்தப்பட்டது.</p><p></p><p>

அதன்படி, சம்பந்தப்பட்ட பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான உடனடி குறுகிய கால நடவடிக்கைகளும், எதிர்காலத்தில் இதுபோன்ற பிரச்சினைகள் மீண்டும் ஏற்படாமல் தடுப்பதற்கான நீண்ட கால நிரந்தரத் தீர்வும் கண்டறியப்பட்டு, அவற்றை உடனடியாகச் செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று சுகாதார அமைச்சர் உறுதியளித்தார்.</p>]]></content>
            <updated>2026-08-18T08:17:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரசியலமைப்பின் 22வது திருத்தச்சட்டமூல வரைவு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/the-22nd-amendment-submitted-to-parliament-1787040214"></link>
            <id>https://tamilwin.com/article/the-22nd-amendment-submitted-to-parliament-1787040214</id>
            <summary type="text">22 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் மற்றும் நீதித்துறை அமைப்பு திருத்தச்சட்டமூலம் ஆகியவற்றை நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நா...</summary>
            <content type="html"><![CDATA[<p>22 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் மற்றும் நீதித்துறை அமைப்பு திருத்தச்சட்டமூலம் ஆகியவற்றை நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார்.</p><p>உயர் நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை நீடிப்பதற்காக அரசியலமைப்பில் திருத்தத்தை மேற்கொள்வதற்கான சட்டமூலம் முன்வைக்கப்பட்டுள்ளது.</p><h2>புதிய சபாநாயகரை நியமிக்குமாறு கோரிக்கை</h2><p>
</p><p>அத்துடன், ஏனைய நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை நீடிப்பதற்காக நீதித்துறை திருத்தச் சட்டமூலம் கொண்டுவரப்பட்டுள்ளது.</p><p>
</p><p>இந்த சட்டமூல வரைவுகள் தொடர்பான மேலதிக விவாதங்கள் எதிர்வரும் அமர்வுகளின் போது முன்னெடுக்கப்படவுள்ளது.
&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/886c7130-cdc4-4bec-90e0-60085f8991bf/26-6a84146958f97.webp' /></p><p>நாடாளுமன்றத்தில் 22 ஆவது திருத்தம்&nbsp;சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் அதற்கு எதிராக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபையில் ஆர்ப்பாட்டம் ஒன்றினையும் முன்னெடுத்துள்ளனர்.
</p><p>இதேவேளை, நாடாளுமன்ற அமர்வுகளில் உறுப்பினர்கள் முன்வைக்கும் கருத்துக்களுக்கு சபாநாயகர் செவி சாய்ப்பதில்லை என்றும், தற்போதைய சபாநாயகரை மாற்றி ஜனநாயக ரீதியில் செயற்படும் ஒருவரை அந்த பதவிக்கு நியமிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-18T08:14:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரூ.1943 கோடிக்கு வாடகை ட்ரோன்களை வாங்கும் இந்தியா: MQ-9B Sea Guardian சிறப்பம்சங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/india-leased-mq-9b-seaguardian-valued-at-rs-1943-c-1787040800"></link>
            <id>https://news.lankasri.com/article/india-leased-mq-9b-seaguardian-valued-at-rs-1943-c-1787040800</id>
            <summary type="text">India leased MQ-9B Sea Guardian valued at Rs 1,943 crore: கடல்சார் கண்காணிப்பை பலப்படுத்தும் விதமாக MQ-9B Sea Guardian ட்ரோன்களை வாடகைக்கு எடுக்க இந்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>India leased MQ-9B Sea Guardian valued at Rs 1,943 crore: கடல்சார் கண்காணிப்பை பலப்படுத்தும் விதமாக MQ-9B Sea Guardian ட்ரோன்களை வாடகைக்கு எடுக்க இந்திய அரசு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.</p><h2>இந்திய அரசின் வாடகை ட்ரோன் ஒப்பந்தம்</h2><p>இந்தியாவின் நீண்ட தூர உளவு மற்றும் வான் பாதுகாப்பு திறனை வலுப்படுத்தும் நோக்கில் அமெரிக்காவின் பாதுகாப்பு தளவாட நிறுவனமான ஜெனரல் அட்டாமிக்ஸிடம் (General Atomics) இருந்து இரண்டு MQ-9B SeaGuardian ட்ரோன்களை வாடகைக்கு எடுக்கும் புதிய ஒப்பந்தத்தை இந்திய அரசு மேற்கொண்டுள்ளது.</p><p> 30 மாத வாடகை என்ற திட்டத்தின் கீழ் டெல்லியில் கையெழுத்தான இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு கிட்டத்தட்ட ரூ.1943 கோடியாகும்.</p><p> இந்த தற்காலிக ஏற்பாடானது இந்திய பாதுகாப்பு மற்றும் உளவு அமைப்புகளுக்கான உடனடி தயார் நிலையை உறுதிப்படுத்துகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fa40befc-2bbd-462e-b6b9-e52a172fe908/26-6a84142183d62.webp' /></p><h2> MQ-9B Sea Guardian ட்ரோன்களின் சிறப்பம்சங்கள்</h2><p>MQ-9B Sea Guardian ட்ரோன்கள் நீண்ட தூரம் பறந்து உளவு பணிகள் மேற்கொள்வதிலும், மிக துல்லியமான தாக்குதல்களையும் முன்னெடுக்க இது அதி நவீன தொழில்நுட்பங்களுடன் வடிவமைக்கப்பட்டதாகும்.</p><p> கிட்டத்தட்ட 40,000 அடிக்கு மேல் திறம்பட இயங்கக்கூடிய MQ-9B Sea Guardian ட்ரோன்கள் இடைவிடாமல் 30 மணி நேரத்திற்கும் மேலாக பறக்க கூடியது.</p><p> நீர்மூழ்கி கப்பல்களை கண்டறிந்து அழிக்கும் திறன் கொண்டு இருப்பதால் கடல் ரோந்து பணிகளில் இது சிறப்புடையதாக விளங்குகிறது.</p><p> வாடகை ஒப்பந்தம் தவிர, இந்திய ராணுவத்தின் மூன்று படை பிரிவுகளுக்கும் 31 MQ-9B ட்ரோன்களை வாங்க சுமார் $3 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான ஒப்பந்தமும் போடப்பட்டுள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-18T08:13:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[டொலரின் பெறுமதியில் ஏற்பட்ட மாற்றம் - இன்றைய நாணய மாற்று விகிதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/dollar-rate-in-sri-lanka-today-1787040204"></link>
            <id>https://tamilwin.com/article/dollar-rate-in-sri-lanka-today-1787040204</id>
            <summary type="text">இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (18.08.2026) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது.இதன்படி,&amp;nbsp; &amp;nbsp;அமெரிக்க டொலரின் விற்பனை விலை 336.48 ரூபா...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (18.08.2026) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது.</p><p>இதன்படி,&nbsp; &nbsp;அமெரிக்க டொலரின் விற்பனை விலை 336.48 ரூபாவாகவும் கொள்வனவு விலை 327.40 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.</p><p>அதேபோன்று ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் விற்பனை விலை 442.04 ரூபா மற்றும் கொள்வனவு விலை 456. 86 ரூபாவாகும்

யூரோ ஒன்றின் விற்பனை விலை 377.57 ரூபா எனவும் கொள்வனவு விலை 390.95 ரூபா எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><h2>இன்றைய பெறுமதி</h2><p>இதேவேளை,&nbsp; ஏனைய வெளிநாட்டு நாணய மாற்று விகிதங்கள் தொடர்பாக இன்று (18.08.2026) மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள தகவல்கள் கீழே தரப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><p></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-18T08:11:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Malaivanjan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நுவரெலியாவில் மோட்டார் சைக்கிள் - முச்சக்கரவண்டி மோதல்: இருவர் வைத்தியசாலையில் அனுமதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/two-individuals-traveling-motorcycle-were-injured-1787039910"></link>
            <id>https://tamilwin.com/article/two-individuals-traveling-motorcycle-were-injured-1787039910</id>
            <summary type="text">நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் மோட்டார்
சைக்கிளில் பயணித்த இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

...</summary>
            <content type="html"><![CDATA[<p>நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் மோட்டார்
சைக்கிளில் பயணித்த இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p><p>

இன்று(18) நண்பகல் 12 மணியளவில், ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியின்
குடாகம பகுதியில், மயானத்திற்கு முன்னால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக
ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><h2>&nbsp;மேலதிக விசாரணை</h2><p>
</p><p>
ஹட்டன் பகுதியிலிருந்து குடாகம பகுதியை நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி ஒன்று,
குடாகம பகுதிக்குள் திரும்புவதற்காக பிரதான வீதியின் குறுக்கே சென்றபோது,
எதிர்திசையில் ஹட்டன் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த மோட்டார் சைக்கிளுடன்
மோதியுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/188b9817-a1c4-4bdd-a83c-7d159344c166/26-6a84124e1ede3.webp' /></p><p>
</p><p>
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்களும்
காயமடைந்துள்ளனர். </p><p>காயமடைந்த இருவரும் உடனடியாக வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் மோட்டார் சைக்கிளும் சேதமடைந்துள்ளது.</p><p>
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-18T08:05:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிலிப்பைன்ஸ் பாடசாலையில் துப்பாக்கிச் சூடு; இரு மாணவர்கள் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/shooting-at-a-philippine-school-2-students-killed-1787040492"></link>
            <id>https://canadamirror.com/article/shooting-at-a-philippine-school-2-students-killed-1787040492</id>
            <summary type="text">&amp;nbsp; பிலிப்பைன்ஸில் உள்ள பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

பில...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; பிலிப்பைன்ஸில் உள்ள பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p>

பிலிப்பைன்ஸின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள சாம்போங்கா நகரின் உயர்நிலைப் பாடசாலையிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/253907e6-d106-4b40-ad03-8d5162d4c086/26-6a8412ee6b9f3.webp' /></p><p>

துப்பாக்கியுடன் பாடசாலைக்குள் புகுந்த மாணவர் ஒருவர், மாணவர்கள் சிலர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதுடன், பின்னர் தன்னைத்தானே சுட்டு உயிரை மாய்த்துக் கொண்டதாகவும் அந்த நகர முதலவர் தெரிவித்துள்ளார்.
</p><p>
இந்தத் துப்பாக்கி பிரயோகத்தில் மற்றுமொரு மாணவர் உயிரிழந்ததுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
சம்பவத்தை அடுத்து பாடசாலை வளாகத்தை உடனடியாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த காவல்துறை, நிலைமை தற்போது சீரடைந்துள்ளதாக அறிவித்துள்ளனர்.</p><p>

மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்திற் கொண்டு வகுப்புகள் இடைநிறுத்தப்பட்டு, அவர்களைப் பெற்றோரிடம் ஒப்படைக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.</p>]]></content>
            <updated>2026-08-18T08:05:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிளாமர் லுக்கில் நடிகை ராஷி கண்ணா.. ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் புகைப்படங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/actress-raashii-khanna-latest-instagram-post-1787034219"></link>
            <id>https://cineulagam.com/article/actress-raashii-khanna-latest-instagram-post-1787034219</id>
            <summary type="text">இந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வரும் ராஷி கண்ணா இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருப்பவர். இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடும் பு...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வரும் ராஷி கண்ணா இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருப்பவர். இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடும் புகைப்படங்கள் ரசிகர்களிடையே உடனடியாக கவனத்தை ஈர்க்கும். அந்த வகையில், தற்போது சிவப்பு மற்றும் கருப்பு நிற உடையில் எடுத்துக்கொண்ட கிளாமர் போட்டோஷூட் புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். </p><p>இதோ அந்த புகைப்படங்கள்:&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-18T08:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரபல பாடசாலைக்கு மகளுடன் சென்ற தந்தைக்கு அதிர்ச்சி; பாலியல் லஞ்சம் கோரிய பெண் அதிபர்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/female-principal-demanded-sexual-favors-father-1787034879"></link>
            <id>https://jvpnews.com/article/female-principal-demanded-sexual-favors-father-1787034879</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;மாத்தளை மாவட்டத்தில் உள்ள பெண்கள் பாடசாலை ஒன்றில் தனது மகளைச் சேர்ப்பதற்காகச் சென்ற அரச ஊழியரான தந்தை ஒருவரிடம், பாடசாலையின் பெண் அதிபர் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;மாத்தளை மாவட்டத்தில் உள்ள பெண்கள் பாடசாலை ஒன்றில் தனது மகளைச் சேர்ப்பதற்காகச் சென்ற அரச ஊழியரான தந்தை ஒருவரிடம், பாடசாலையின் பெண் அதிபர் பாலியல் லஞ்சம் கோரியதாக குற்றம் சாட்டி பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
</p><p>

குறித்த அரச ஊழியர் அண்மையில் மாத்தளை மாவட்டத்தில் உள்ள அரச நிறுவனம் ஒன்றுக்கு இடமாற்றம் பெற்று வந்தவர் என கூறப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8360c41e-5b6b-40f3-8bdd-f2a34a89f7a3/26-6a83fd00d8fb7.webp' /></p><p></p><h2>&nbsp;பாலியல் லஞ்சம்&nbsp;&nbsp;</h2><p>

 இன்னிலையில் , மகளை பாடசாலையில் சேர்ப்பதற்கான நடவடிக்கைகளுக்காக பெண் அதிபரை சந்தித்த வேளையிலேயே&nbsp; பாலியல் லஞ்சம் கோரியதாக&nbsp; &nbsp; தந்தை அளித்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இச்சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவவதாகவும் அந்த தகவல்கள் கூறுகின்றன.&nbsp;&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-18T07:58:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரிட்டிஷ் கொலம்பியாவுக்கு சுனாமி அச்சுறுத்தல் இல்லை என அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/no-tsunami-threat-to-bc-after-magnitude-46-1787039954"></link>
            <id>https://canadamirror.com/article/no-tsunami-threat-to-bc-after-magnitude-46-1787039954</id>
            <summary type="text">&amp;nbsp;அலாஸ்கா அருகே பதிவான தொடர் நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்திற்கு சுனாமி அச்சுறுத்தல் எதுவும் இல்லை என அவசரக்கால மேலாண்மை...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;அலாஸ்கா அருகே பதிவான தொடர் நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்திற்கு சுனாமி அச்சுறுத்தல் எதுவும் இல்லை என அவசரக்கால மேலாண்மை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p>
அலாஸ்காவின் கொடியாக் நகருக்கு தென்மேற்கே 161 கிலோமீட்டர் தொலைவில், உள்ளூர் நேரப்படி பிற்பகல் 12:39 மணிக்கு 4.6 ரிக்டர் அளவில் இந்நிலநடுக்கம் பதிவானதாக மாகாணத்தின் 'EmergencyInfoBC' இணையதளம் தெரிவித்துள்ளது.</p><p> 
பூமிக்கு அடியில் 58 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. 
கொடியாக் நகரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள சிலர் நில அதிர்வை உணர்ந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8f472887-6e3e-4f95-82aa-46d4033044f0/26-6a8410d478710.webp' /></p><p> 
ஆரம்பகட்ட மதிப்பீடுகளின் அடிப்படையில், இந்தப் பிராந்தியத்திற்கு சுனாமி ஆபத்து எதுவுமில்லை என அமெரிக்க தேசிய சுனாமி எச்சரிக்கை மையம் உறுதிப்படுத்தியுள்ளது.</p><p> 
அலாஸ்கா நிலநடுக்க மையத்தின் தகவல்படி, இப்பகுதியில் ஏற்படும் சக்திவாய்ந்த நில அதிர்வுகளுக்கு 'அலூசியன் மேகாதிரஸ்ட்' சப்டக்ஷன் மண்டலமேமுக்கிய காரணமாகும். </p><p>முன்னதாக 2020-இல் 7.8 ரிக்டர் அளவிலும், 2021-இல் 8.2 ரிக்டர் அளவிலும் பேரழிவு நிலநடுக்கங்கள் இங்கு பதிவாகியுள்ளன.</p><p> 
வட அமெரிக்க தட்டிற்கு அடியில் பசிபிக் தட்டு சரிந்து நழுவுவதனாலேயே இந்தப் பகுதியில் தொடர்ந்து நில அதிர்வுகள் ஏற்படுவதாக ஆய்வாளர்கள் விளக்கியுள்ளனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-18T07:58:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[முன்னாள் அமைச்சர் கெஹெலிய மீண்டும் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/former-minister-keheliya-arrested-again-1787040018"></link>
            <id>https://jvpnews.com/article/former-minister-keheliya-arrested-again-1787040018</id>
            <summary type="text">&amp;nbsp; முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். </p><p>

விசாரணை ஒன்றுக்கு அமைவாக வாக்குமூலம் அளிப்பதற்காக இன்று (18) முற்பகல் குறித்த ஆணைக்குழுவில் ஆஜரானதை அடுத்து கெஹெலிய ரம்புக்வெல்ல கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a80c39fe-a770-449a-b86a-bed34747c5ee/26-6a841113e9d79.webp' /></p><p> </p><p>

தேசிய ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் அனுமதிக்கப்பட்ட ஊழியர் எண்ணிக்கைக்கு புறம்பாக மேலதிகமாக 6 பணியாளர்களைப் பணியில் அமர்த்தியதன் மூலம் அரசாங்கத்திற்கு நட்டத்தை ஏற்படுத்தியதாக கெஹெலிய ரம்புக்வெல்ல மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-18T07:57:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானியாவை நெருக்கும் ஆறாவது வெப்ப அலை... 14 லட்சம் மக்களுக்கு குழாய் நீர் பயன்பாட்டுத் தடை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/sixth-heatwave-people-hit-with-1786990554"></link>
            <id>https://news.lankasri.com/article/sixth-heatwave-people-hit-with-1786990554</id>
            <summary type="text">Another 1.4m people are hit with hosepipe ban: ஆறாவது வெப்ப அலை வீசவுள்ள நிலையில், மேலும் 1.4 மில்லியன் மக்கள் குழாய் நீர் பயன்பாட்டுத் தடையைச் சந்திக...</summary>
            <content type="html"><![CDATA[<p>Another 1.4m people are hit with hosepipe ban: ஆறாவது வெப்ப அலை வீசவுள்ள நிலையில், மேலும் 1.4 மில்லியன் மக்கள் குழாய் நீர் பயன்பாட்டுத் தடையைச் சந்திக்கின்றனர்.
</p><p>செப்டம்பர் மாதம் பிரித்தானியா இந்த ஆண்டின் ஆறாவது வெப்ப அலைக்கு இலக்காகக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.</p><h2>சராசரிக்கு மேல்</h2><p>
</p><p>பரவலான வறட்சிக்கு மத்தியில் நாடு மழைக்காக ஏங்கும் வேளையில், ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 14 வரையிலான காலகட்டத்திற்கான வானிலை ஆய்வு மையத்தின் சமீபத்திய கணிப்பின் அடிப்படையில், அக்காலகட்டத்தில் வெப்பநிலை ஒட்டுமொத்தமாக சராசரிக்கு மேல் இருக்க வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7e120af9-2e9f-4c62-82e4-ba9ec37a4111/26-6a834fdd5b11a.webp' /></p><p> </p><p>மேலும், பிரித்தானியாவின் தெற்குப் பகுதிக்கு அருகில் உயர் அழுத்த மையம் உருவாகக்கூடும் என்றும், அதே வேளையில் வடக்கு மற்றும் வடமேற்குப் பகுதிகளில் நிலையற்ற வானிலை உருவாகக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. </p><p>இதற்கிடையில், தெற்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் வறண்ட, நிலையான வானிலை நிலவ சற்றே அதிக வாய்ப்புள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. </p><p>
மேலும், இந்தக் கோடையில் நிலவிய தீவிர வானிலை காரணமாக நாடு முழுவதும் ஐந்து வெப்ப அலைகள் ஏற்பட்டன; இவற்றில் இறுதியாக ஏற்பட்ட வெப்ப அலையின்போது, ​​பிரித்தானியாவில் இந்த ஆண்டின் மிக அதிகபட்ச வெப்பநிலை பதிவானது.</p><p></p><p> </p><p>ஆகஸ்ட் 13 அன்று கியூ கார்டன்ஸில் (Kew Gardens) 38.1 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை தற்காலிகமாகப் பதிவானது. வெப்ப அலை என்பது ஆண்டின் அந்தப் பருவத்திற்கு எதிர்பார்க்கப்படும் இயல்பான வானிலையை விட அதிக வெப்பம் நிலவும் ஒரு நீண்ட காலப்பகுதியாகும்; </p><p>ஒரு குறிப்பிட்ட பகுதியில் அதிகபட்ச வெப்பநிலை தொடர்ந்து குறைந்தது மூன்று நாட்களுக்கு வெப்ப அலைக்கான வரம்பு அளவிலோ அல்லது அதற்கு மேலோ பதிவாகும்போதே இது வெப்ப அலையாகக் கருதப்படுகிறது. </p><p>பிரித்தானியாவில் 2026-ஆம் ஆண்டின் கோடைக்காலம், பதிவுகள் தொடங்கப்பட்டதிலிருந்து மிக வெப்பமானதாக அமையக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ள நிலையில் வெப்ப அலை குறித்த எச்சரிக்கைகள் வெளியாகியுள்ளது.</p><h2>செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல்</h2><p> </p><p>இந்த நிலையில், மற்றொரு நீர் நிறுவனமான 'வெசெக்ஸ் வாட்டர்' (Wessex Water), குழாய் மூலம் தண்ணீர் பாய்ச்சுவதற்குத் தடை விதிப்பதாக அறிவித்துள்ளது. </p><p>பாத், சோமர்செட், டோர்செட் மற்றும் வில்ட்ஷயர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 14 லட்சம் வாடிக்கையாளர்களுக்கும் இந்தத் தற்காலிக நடவடிக்கை செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dc825080-d56a-4861-a15d-5ac81f47d9d6/26-6a834fdca580b.webp' /></p><p> </p><p>வெசெக்ஸ் வாட்டர் நிறுவனம் கடைசியாக 50 ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது 1976-ல் தற்காலிகத் தடையை அமுல்படுத்தியிருந்தது. வெசெக்ஸ் வாட்டரின் தலைமை நிர்வாக அதிகாரியான ரூத் ஜெபர்சன் தெரிவிக்கையில், அத்தியாவசியப் பயன்பாட்டிற்கான தண்ணீர் பற்றாக்குறை ஏற்படவில்லை என்றாலும், இந்த சாதனை அளவிலான தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், </p><p>விநியோக வலையமைப்பு முழுவதும் தண்ணீரை போதுமான வேகத்தில் கொண்டு சேர்ப்பதே எங்களுக்கு சவாலாக இருந்து வருகிறது என்றார். </p><p>வேறு ஒன்பது நீர் நிறுவனங்கள் பிரித்தானியாவில் சுமார் 27 மில்லியன் மக்களுக்கு குழாய் நீர் பயன்பாட்டிற்குத் தடை விதித்துள்ளன, ஆனால் விரைவில் கார் கழுவும் நிலையங்கள் மற்றும் தனியார் நீச்சல் குளங்களிலும் இந்தத் தடைகள் விதிக்கப்படலாம் என்று அமைச்சர்களிடம் தெரிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-18T07:55:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் சுட்டுக்கொல்லப்பட்ட இளம்பெண்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/16-year-old-girl-shot-dead-in-canada-1787039561"></link>
            <id>https://canadamirror.com/article/16-year-old-girl-shot-dead-in-canada-1787039561</id>
            <summary type="text">கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்தில் இளம்பெண்ணொருவர் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில், பொலிசார் குற்றவாளியை தீவிரமாகத் தேடிவருகிறார்கள்.

கனடாவில் ஆல்பர்ட்டா...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்தில் இளம்பெண்ணொருவர் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில், பொலிசார் குற்றவாளியை தீவிரமாகத் தேடிவருகிறார்கள்.</p><p>

கனடாவில் ஆல்பர்ட்டா மாகாண தலைநகரான எட்மண்டனில் துப்பாக்கிச்சூடு தொடர்பில் பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/73359615-8bba-48dd-9ca9-bdc01f67d9ef/26-6a840f4b289c4.webp' /></p><p>
பொலிசார் அந்த வீட்டுக்கு விரைந்த நிலையில், அங்கு படுகாயமடைந்த நிலையில் 16 வயதுப்பெண்ணொருவர் இரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார்.
</p><p>
அவசர உதவிக்குழுவினர் அவரைக் காப்பாற்ற எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை. அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்துள்ளார்கள்.
</p><p>
அந்தப் பெண்ணின் பெயர் ஜாஸ்மின் தேசி என்பதும் அவருக்கு இரண்டு தங்கைகள் இருப்பதும் தெரியவந்துள்ளது.
</p><p>
இந்த சம்பவம் தொடர்பில் யாருக்காவது தகவல் ஏதேனும் தெரியுமானால், அல்லது, தங்கள் வாகனங்களில் உள்ள கமெராக்களில் இந்த சம்பவம் தொடர்பான காட்சிகள் ஏதேனும் பதிவாகியிருக்குமானால், தங்களைத் தொடர்புகொள்ளுமாறு பொலிசார் கேட்டுக்கொண்டுள்ளார்கள்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-18T07:52:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசத்திற்கு பிணையில் செல்ல அனுமதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/bail-to-akila-viraj-kariyavasam-1787037765"></link>
            <id>https://tamilwin.com/article/bail-to-akila-viraj-kariyavasam-1787037765</id>
            <summary type="text">தனது எரிபொருள் நிலையத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>தனது எரிபொருள் நிலையத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் மற்றும் அவரது எரிபொருள் நிலைய ஊழியர் ஆகியோரை பிணையில் செல்லுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
</p><p>
இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகள் மற்றும் சந்தேகநபர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் முன்வைத்த வாதங்களை பரிசீலித்த பின்னர், கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம இந்த உத்தரவை பிறப்பித்தார்.</p><h2>வெளிநாடு செல்ல தடை&nbsp;</h2><p>
</p><p>
இதன்படி, இரு சந்தேகநபர்களையும் தலா 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் செல்ல நீதவான் உத்தரவிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/07748d5b-4ed5-471b-b9bb-510c90532bd4/26-6a840d431d6ad.webp' /></p><p>

மேலும், சந்தேகநபர்கள் வெளிநாடு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p><p>
</p>]]></content>
            <updated>2026-08-18T07:52:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆள் மாறாட்டத்தில் சிக்கிய பிரிட்டன் பிரதமர்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/british-pm-burnham-case-of-mistaken-identity-1787031998"></link>
            <id>https://canadamirror.com/article/british-pm-burnham-case-of-mistaken-identity-1787031998</id>
            <summary type="text">&amp;nbsp;பிரிட்டனின் புதிய பிரதமராகப் பொறுப்பேற்றுள்ளஆண்டி பர்ன்ஹாம் ( Andy Burnham ), அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் முதன்மை உதவியாளரான சூசி வைல்ஸ் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;பிரிட்டனின் புதிய பிரதமராகப் பொறுப்பேற்றுள்ளஆண்டி பர்ன்ஹாம் ( Andy Burnham ), அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் முதன்மை உதவியாளரான சூசி வைல்ஸ் (Susie Wiles) போல ஆள்மாறாட்டம் செய்த ஒருவருடன் குறுஞ்செய்திகளைப் பகிர்ந்து கொண்ட சம்பவம் சர்வதேச அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
</p><p>
ஜூலை மாத இறுதியில் பிரிட்டன் பிரதமராகப் பொறுப்பேற்ற ஆண்டி பர்ன்ஹாமிற்கு ( Andy Burnham ) , வெள்ளை மாளிகையின் தலைமை அதிகாரியான சூசி வைல்ஸின் பெயரில் குறுஞ்செய்தி ஒன்று வந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f1db1c29-2d42-4662-85c8-656cdc054347/26-6a83f1bfe964d.webp' /></p><p> 
அச்செய்தியை உண்மையானது என நம்பிய பிரதமர் பர்ன்ஹாம் ( Andy Burnham ), அந்த மர்ம நபருடன் சில குறுஞ்செய்திகளைப் பரிமாறிக் கொண்டுள்ளார்.
</p><p>
 இருப்பினும், உரையாடலின் போக்கில் எழுந்த சந்தேகத்தையடுத்து, பிரதமர் ஆண்டி பர்ன்ஹாம் உடனேத் தகவல்தொடர்பை நிறுத்திவிட்டு பாதுகாப்புத் துறைக்குத் தகவல் தெரிவித்துள்ளார்.
</p><p>
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து வாஷிங்டனில் உள்ள பிரிட்டன் தூதரகம் உடனடியாக வெள்ளை மாளிகையைத் தொடர்புகொண்டு முறையிட்டது. மேலும், சூசி வைல்ஸின் கைபேசி அல்லது சாதனங்கள் ஏதேனும் ஹேக் செய்யப்பட்டுள்ளதா என்ற சந்தேகமும் எழுப்பப்பட்டது. </p><p>

ஆனால், வெள்ளை மாளிகை தரப்பில் தங்களது அதிகாரிகளின் சாதனங்கள் எதுவும் ஊடுருவப்படவில்லை எனவும், இது தனிப்பட்ட ஆள்மாறாட்ட முயற்சி எனவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இந்தத் தகவல்தொடர்பில் நாட்டின் பாதுகாப்பு தொடர்பான ரகசியங்கள் எதுவும் பரிமாறப்படவில்லை என்றும், வழக்கமான உரையாடல்களே நடைபெற்றதாகவும் பிரிட்டன் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> 

“தேசியப் பாதுகாப்பு தொடர்பான விஷயங்களில் நாங்கள் கருத்து தெரிவிக்க மாட்டோம்” என டவுனிங் ஸ்திரீட் வழக்கமான பதிலை அளித்துள்ள போதிலும், உயர்மட்டத் தலைவர்களிடையே நடைபெறும் இத்தகைய ஆள்மாறாட்ட சம்பவங்கள் இணையப் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை கேள்விக்குள்ளாக்கியுள்ளன.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-18T07:51:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிள்ளையானுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல் : நீதிமன்றம் உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/pillayan-s-remand-extended-court-order-1787032337"></link>
            <id>https://ibctamil.com/article/pillayan-s-remand-extended-court-order-1787032337</id>
            <summary type="text">பிள்ளையான் என்று அழைக்கப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தனை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிள்ளையான் என்று அழைக்கப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தனை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p>கிழக்கு மாகாணத்தில் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் 05 கொலைச் சம்பவங்கள் மற்றும் வலிந்துக் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்களுடன் தொடர்புடைய இந்த வழக்கு பதில் நீதவான் முன்னிலையில் இன்று (18) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.</p><p>இதன்போது காணொளி வழியே பிள்ளையான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதலாம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.</p><p></p><h2>குற்றப் புலனாய்வுத் திணைக்களம்&nbsp;</h2><p>2008 ஆம் ஆண்டு மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற 5 கொலைச் சம்பவங்கள் தொடர்பாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் உள்ளிட்ட சந்தேகநபர்களுக்கு எதிராக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் (CID) வழக்குத் தொடரப்பட்டிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/298923ee-663f-4f5f-a3b5-d54e1a96bc1f/26-6a83f923c60ca.webp' /></p><p>

அதில் அவர் 3 ஆம் சந்தேகநபராகப் பெயரிடப்பட்டுள்ளதுடன், கல்லடிப் பகுதியில் இடம்பெற்ற கொலைகள் மற்றும் காணிப் பிரச்சினை தொடர்பான மூன்று குற்றச்சாட்டுகள் அவருக்கு எதிராகச் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-18T07:51:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல கைது!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/keheliya-appears-ciaboc-1787030090"></link>
            <id>https://ibctamil.com/article/keheliya-appears-ciaboc-1787030090</id>
            <summary type="text">புதிய இணைப்புமுன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். </p><p>

</p><p>தேசிய ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் அனுமதிக்கப்பட்ட ஊழியர் எண்ணிக்கை குறித்த விசாரணைக்காக&nbsp;இன்று (18) காலை குறித்த ஆணைக்குழுவில் முன்னிலையான நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>தேசிய ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் அனுமதிக்கப்பட்ட ஊழியர் எண்ணிக்கைக்கு புறம்பாக மேலதிகமாக 6 பணியாளர்களைப் பணியில் அமர்த்தியதன் மூலம் அரசாங்கத்திற்கு நட்டத்தை ஏற்படுத்தியதாக கெஹெலிய ரம்புக்வெல்ல மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.</p><p></p><h2>முதலாம் இணைப்பு</h2><h5><b>முன்னாள் சுகாதார அமைச்சர் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலை&nbsp;</b></h5><p>முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல சற்றுமுன்னர் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவில் (CIABOC) முன்னிலையாகி உள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/427eb487-a1a4-43a7-bb7d-bc716895a77d/26-6a83edf50a2f0.webp' /></p><p>
தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணை ஒன்றுடன் தொடர்புடையதாக வாக்குமூலம் அளிப்பதற்காகவே அவர் ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>மேலும் குறித்த விசாரணைக்காக&nbsp; கெஹெலிய ரம்புக்வெல்ல சக்கர நாற்காலியில் வருகை தந்திருந்தமை ஊடகங்களில் கவனம் பெற்றுள்ளது.&nbsp;</p><p>இந்நிலையில் இந்த விசாரணை தொடர்பான மேலதிக விவரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-18T07:50:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடா மாகாணமொன்றில் இளம்பெண்ணொருவருக்கு நேர்ந்த துயரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/16-year-old-women-shot-dead-in-edmonton-1787039271"></link>
            <id>https://news.lankasri.com/article/16-year-old-women-shot-dead-in-edmonton-1787039271</id>
            <summary type="text">கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்தில் இளம்பெண்ணொருவர் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில், பொலிசார் குற்றவாளியை தீவிரமாகத் தேடிவருகிறார்கள்.


கனடாவில் ஆல்பர்ட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்தில் இளம்பெண்ணொருவர் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில், பொலிசார் குற்றவாளியை தீவிரமாகத் தேடிவருகிறார்கள்.
</p><p>

கனடாவில் ஆல்பர்ட்டா மாகாண தலைநகரான எட்மண்டனில் துப்பாக்கிச்சூடு தொடர்பில் பொலிசாருக்கு தகவல் ஒன்று கிடைத்துள்ளது.
</p><h3>
சுட்டுக்கொல்லப்பட்ட இளம்பெண்
</h3><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/87ad024b-505e-4175-8740-0388979e0eda/26-6a840e28eb6c9.webp' /></p><p>பொலிசார் அந்த வீட்டுக்கு விரைந்த நிலையில், அங்கு படுகாயமடைந்த நிலையில் 16 வயதுப்பெண்ணொருவர் இரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார்.&nbsp;</p><p></p><p>
அவசர உதவிக்குழுவினர் அவரைக் காப்பாற்ற எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை. அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்துள்ளார்கள்.
</p><p>
அந்தப் பெண்ணின் பெயர் ஜாஸ்மின் தேசி என்பதும் அவருக்கு இரண்டு தங்கைகள் இருப்பதும் தெரியவந்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/22f30c1e-3423-494e-a279-3c3ce04841be/26-6a840e299d996.webp' /></p><p>
இந்த சம்பவம் தொடர்பில் யாருக்காவது தகவல் ஏதேனும் தெரியுமானால், அல்லது, தங்கள் வாகனங்களில் உள்ள கமெராக்களில் இந்த சம்பவம் தொடர்பான காட்சிகள் ஏதேனும் பதிவாகியிருக்குமானால், தங்களைத் தொடர்புகொள்ளுமாறு பொலிசார் கேட்டுக்கொண்டுள்ளார்கள்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-18T07:48:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[41 வயதிலும் குறையாத கிளாமர்!! ஸ்ரேயா சரணின் ரஷ்ய டிரிப் புகைப்படங்கள்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/shriya-saran-russia-trip-with-family-photos-post-1787038752"></link>
            <id>https://viduppu.com/article/shriya-saran-russia-trip-with-family-photos-post-1787038752</id>
            <summary type="text">ஸ்ரேயா சரண்இந்திய சினிமாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் ஸ்ரேயா சரண். இவர் ரஜினிகாந்த், விஜய், விக்ரம், சூர்யா, தனுஷ் என பல முன்னணி நட்சத்திரங்களுடன் இ...</summary>
            <content type="html"><![CDATA[<h2>ஸ்ரேயா சரண்</h2><p>இந்திய சினிமாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் ஸ்ரேயா சரண். இவர் ரஜினிகாந்த், விஜய், விக்ரம், சூர்யா, தனுஷ் என பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்திருக்கிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/adc09f88-460d-47cc-9752-105e1f77ffa5/26-6a840c2d30d26.webp' /></p><p>
</p><p>
கடந்த 2018ஆம் ஆண்டு Andrei Koscheev என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு அழகிய மகள் உள்ளார். </p><p>திருமணத்திற்கு பின்பும் திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்கள் என தனக்கு பிடித்த கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். </p><p>இந்த நிலையில், தன் கணவர் மற்றும் மகளுடன் ரஷ்யா சென்றுள்ள ஸ்ரேயா, அங்கு எடுத்த கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-08-18T07:45:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட அரசியலமைப்பின் 22வது திருத்தச் சட்டமூலம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/22nd-constitutional-amendment-bill-tabled-in-parli-1787036790"></link>
            <id>https://ibctamil.com/article/22nd-constitutional-amendment-bill-tabled-in-parli-1787036790</id>
            <summary type="text">அரசியலமைப்பின் 22வது திருத்தச் சட்டமூல வரைவு மற்றும் நீதித்துறை திருத்தச் சட்டமூல வரைவு என்பன நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. நீதி அமைச்சர் ஹ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரசியலமைப்பின் 22வது திருத்தச் சட்டமூல வரைவு மற்றும் நீதித்துறை திருத்தச் சட்டமூல வரைவு என்பன நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.</p><p> நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவினால் சற்று முன்னர் குறித்த சட்டமூலங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>

உயர் நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை நீடிப்பதற்காக அரசியலமைப்பில் திருத்தத்தை மேற்கொள்வதற்கான சட்டமூலம் முன்வைக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>வர்த்தமானி அறிவித்தல்&nbsp;</h2><p>

அத்துடன், ஏனைய நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை நீடிப்பதற்காக நீதித்துறை திருத்தச் சட்டமூலம் கொண்டுவரப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3c290fe7-2c83-4765-9817-42b8dd76fd52/26-6a8409eaf2ab9.webp' /></p><p>
</p><p>
நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இந்தச் சட்டமூல வரைவுகள் தொடர்பான மேலதிக விவாதங்கள் எதிர்வரும் அமர்வுகளின் போது முன்னெடுக்கப்படவுள்ளன.</p><p>இதேவேளை&nbsp;சட்டமூலமொன்றின் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டு ஒரு வாரத்திற்குப் பின்னரே அது முதலாம் வாசிப்பிற்காக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்பதோடு, அதன்பின்னர் எவரேனும் நீதிமன்றத்தை நாடுவதற்கு ஒரு வார காலம் அவகாசம் கிடைக்கும்.</p><p></p><h2>சபாநாயகருக்கு அறிவிக்கப்படும்</h2><p>அதன்படி, உயர் நீதிமன்றம் மனுக்களை விசாரித்து 3 முதல் 21 நாட்களுக்குள் தனது தீர்மானத்தை நாடாளுமன்ற சபாநாயகருக்கு அறிவிக்கப்படும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b98b38cc-1939-46aa-8070-ad07263b60c4/26-6a8409ebdd26d.webp' /></p><p> </p><p>

22வது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர், உயர் நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயது 65 இலிருந்து 67 ஆகவும், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயது 63 இலிருந்து 65 ஆகவும் உயரும்.&nbsp;</p><p>நீதித்துறை அமைப்புகள் திருத்தச் சட்டமூலம் நிறைவேற்றப்படுவதன் மூலம் மேல்நீதிமன்றம், மாவட்ட நீதிமன்றம் மற்றும் நீதவான் நீதிமன்றங்களின் நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை 62 ஆக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p><p> </p>]]></content>
            <updated>2026-08-18T07:43:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[மகிந்தவையும் விமர்சிக்கும் நாமல் ராஜபக்ச...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/namal-rajapaksa-to-go-to-prison-in-a-few-days-1787034722"></link>
            <id>https://ibctamil.com/article/namal-rajapaksa-to-go-to-prison-in-a-few-days-1787034722</id>
            <summary type="text">மொட்டுக்கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச இன்னும் சில நாட்களில் சிறைக்குச் செல்வார் என்று அரசாங்கத்தின் முக்கிய தரப்பினர் மற்றும் அமைச்சர்கள் ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>மொட்டுக்கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச இன்னும் சில நாட்களில் சிறைக்குச் செல்வார் என்று அரசாங்கத்தின் முக்கிய தரப்பினர் மற்றும் அமைச்சர்கள் சிலரும் கூறிவருவதை அடிக்கடி நாம் கேட்கும் பார்க்கும் விடயமாக மாறியுள்ளது.</p><p>எனினும் ஒரு வழக்கில் தீர்ப்பு வழங்குவது யார்? என்ற கேள்வியை மொட்டுக்கட்சி தரப்பும் எதிர்கட்சிகளும் பறந்த அளவில் எழுப்பி வருகின்றன.</p><p>இன்றுவரை வழக்குகளை விசாரிப்பது நீதிமன்றம் என்றுதான் மக்களும் சமூகமும் நினைப்பதாகவும், ஆனால் நீதிவிவகாரத்தில் ஆளும்கட்சி தலையிடுவது குறித்து சந்தேகங்கள் எழுவதாகவும் அந்த தரப்புக்கள் சுட்டிக்காட்டுகின்றன.</p><p></p><h2>ராஜபக்சர்களின் ஊழல்</h2><p>அமைச்சர் ஒருவர் நபர் ஒருவரை சுட்டிக்காட்டி சிறைக்குச் செல்வார் என்று கூறுகிறார் என்றால், வழக்கை எழுதுவது அவர்தானா? என்று நாமல் கேள்வியையும் எழுப்பியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/abeb8781-bb54-408a-874b-3614db3fc1bd/26-6a840c3842570.webp' /></p><p>ஒருபுறம் இந்த கேள்வி நியாயமானதுதான். ஒரு ஜனநாயக நாட்டில் நீதித்துறையின் கருத்துக்களில் அரசாங்கம் தலையிடமுடியாது.</p><p>இருந்தும் ராஜபக்சர்களின் ஊழல் ஆட்சியை நீதித்துறை கூறிதான் இலங்கை மக்கள் அறியவேண்டும் என்ற அவசியம் இருக்காது. நாளுக்கு நாள் வெளிவரும் விசாரணை அறிக்கைகள், வாக்குமூலங்கள் எங்கெங்கோ சுற்றி இருதியில் வந்து முடிவதென்னவோ ராஜபக்சர்கள் என்ற புள்ளியில்தான்.</p><p>ஆக அரசாங்கம் நாமல் மிது முன்வைக்கும் சிறை கருத்துக்கள் நீதித்துறை மீதான தலையீடாக இல்லாவிட்டாலும், ஒரு எதிர்வுகூறலாக இருக்கலாம்.</p><p>அது ஒருபுறம் இருக்கநாமல் நடத்தும் உள்ளக் கலந்துரையாடல்களில், கோட்டாபய , பசில் மட்டுமல்லாமல், சில சந்தர்ப்பங்களில் மகிந்தவையும் விமர்சிக்கும் வகையில் பல்வேறு கருத்துகளை வெளியிட்டு வருகிறார் என சிங்கள நாளிதல் ஒன்று செய்தி வெளியிட்டது.</p><p></p><h2>பை தக்சலாவ&nbsp;பிரசார நடவடிக்கை</h2><p>
சில நாட்களுக்கு முன்னர் விவசாயிகள் சிலரைச் சந்தித்த சந்தர்ப்பத்திலும், கோட்டாபய மீது கடுமையான விமர்சனத்தை முன்வைத்ததாகக் கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9de9786b-9af7-409a-ac37-83266382d8b1/26-6a840c3915d37.webp' /></p><p>

நாமல்&nbsp; முன்னெடுத்து வரும் இந்தப் பிரசார நடவடிக்கை குறித்து கவனம் செலுத்தியுள்ள அரசியல் ஆய்வாளர்கள், “பை தக்சலாவ” (Bai Thaksalawa) என்ற அணுகுமுறையைப் பின்பற்றும் நாமலிடமிருந்து இதைவிட வேறுபட்ட ஒன்றை எதிர்பார்க்க முடியாது என்று சுட்டிக்காட்டியுள்ளனர்.</p><p>

கோட்டாபய&nbsp; தனது அரசியல் பிரசாரத்தின் அடிப்படையாக, 2016 பெப்ரவரி 04ஆம் திகதி “வியத்மக” (Viyathmaga) என்ற அமைப்பை உருவாக்கினார்.</p><p>வைத்தியர் நாலக கொடஹேவா, பேராசிரியர் சன்ன ஜயசுமன உள்ளிட்ட பலர் அந்த அமைப்பின் ஆரம்பகால உறுப்பினர்கள் அல்லது நிறுவனர்களாக இருந்ததாகக் குறிப்பிடப்படுகிறது.
</p><p>
ஆனால், நாமல் தனது “பை தக்சலாவ” என்ற பிரசார நடவடிக்கையை மிலிந்த ராஜபக்ச, இராஜ் வீரரத்ன, அர்ஜுன் கமலநாத் போன்றவர்களிடம் ஒப்படைத்துள்ளதாகவும், அதன் மூலம் மேலும் அரசியலை தரக்குறைவான அல்லது கீழ்த்தரமான பிரசாரமாக மாற்றுவதே அவரது உத்தியாக மாறியுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><p>ராஜபக்சர்கள் மீது நாளுக்கு நாள் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்களும் அதற்கு தனி ஒரு ராஜபக்சராக இருந்து நாமல் வழங்கும் பதில்களும் தொடர்ந்துக்கொண்டுதான் இருக்கின்றன.</p><p>கடந்த இரு வாரங்களுக்கு முன்னரும் பணச்சலவை தடுப்புச் சட்டத்தின் கீழ், நாமல் உட்பட நான்கு சந்தேக நபர்களுக்கு எதிராக, முந்தைய நல்லாட்சி அரசாங்கத்தின் போது தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாடு குறித்து மேலதிக விசாரணைகளை நடத்துமாறு சட்டமா அதிபர் அறிவுறுத்தியுள்ளதாக, குற்றப் புலனாய்வுத் துறை நீதிமன்றுக்கு அறிவித்தது.</p><p>இந்தப் முறைப்பாடு கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகமவால்&nbsp; விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
</p><p>
நீதிமன்றத்தில் உண்மைகளை முன்வைத்த குற்றப் புலனாய்வுத் துறை, இந்தச் சம்பவம் குறித்த விசாரணையை முடித்து, விசாரணை கோப்புகளை சட்டமா அதிபருக்கு அனுப்பிவிட்டதாகத் தெரிவித்தது.</p><p></p><h2>நீதித்துறை நடவடிக்கை</h2><p>
</p><p>
கடந்த ஆண்டு அக்டோபர் 14 ஆம் திகதி சட்டமா அதிபரால் நடத்தப்பட்ட கலந்துரையாடலின் போது, ​​பான் ஆசியா(Pan Asia) மற்றும் நேஷன் டிரஸ்ட் வங்கிகளிடமிருந்து கணக்குப் பதிவேடுகளைப் பெற்று, இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு அவர் தங்களுக்கு அறிவுறுத்தியதாக விசாரணை அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.</p><p>இவ்வாறு ராஜபக்சர்கள் மீது முன்னெடுக்கப்படும் நகர்வுகளுக்கு மத்தியில் நீதித்துறை நடவடிக்கைகளில் சமூகத்தின் கவனம் திரும்பியுள்ளது.</p><p>எந்த மேடைகளிலும், நிகழ்வுகளிலும் குற்றமற்றவர்கள் நாங்கள் என கூறிக்கொள்ளும் ஒவ்வொருவரும் நீதித்துறையிடம் ஒரு நாள் பதில் வழங்கவேண்டிய கட்டயத்திற்கு தற்போது தள்ளப்பட்டுள்ளனர்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-18T07:39:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுவிட்சர்லாந்தில் செல்வந்தர்களின் வீடுகளைக் குறிவைத்துக் கொள்ளை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/thieves-target-geneva-super-riches-luxury-home-1787038593"></link>
            <id>https://news.lankasri.com/article/thieves-target-geneva-super-riches-luxury-home-1787038593</id>
            <summary type="text">சுவிட்சர்லாந்தின் ஜெனீவா ஏரியை ஒட்டி அமைந்துள்ள பகுதிகளில் வாழும் செல்வந்தர்களைக் குறிவைத்து நிகழ்த்தப்படும் கொள்ளைச் சம்பவங்கள் அச்சத்தை உருவாக்கியுள...</summary>
            <content type="html"><![CDATA[<p>சுவிட்சர்லாந்தின் ஜெனீவா ஏரியை ஒட்டி அமைந்துள்ள பகுதிகளில் வாழும் செல்வந்தர்களைக் குறிவைத்து நிகழ்த்தப்படும் கொள்ளைச் சம்பவங்கள் அச்சத்தை உருவாக்கியுள்ளன.</p><p>


சுவிட்சர்லாந்தின் ஜெனீவா ஏரியை ஒட்டி அமைந்துள்ள பகுதிகளில், வங்கியாளர்கள், பெரு வர்த்தகர்கள் முதலான பெரும் செல்வந்தர்கள் வாழ்ந்துவருகிறார்கள்.</p><p>

இந்நிலையில், அப்பகுதியில் செல்வந்தர்களைக் குறிவைத்து பயங்கர கொள்ளைச் சம்பவங்கள் நடந்துவருகின்றன.
</p><h3>
செல்வந்தர்களின் வீடுகளைக் குறிவைத்துக் கொள்ளை
</h3><p>
செல்வந்தர்களின் வீடுகளுக்குள் ஆயுதங்களுடன் நுழையும் கொள்ளையர்கள், துப்பாக்கி முனையில் வீடுகளில் இருப்பவர்களை மிரட்டி, பணம், நகைகள் மற்றும் கைக்கடிகாரங்கள் முதலான விலையுயர்ந்த பொருட்களை கொள்ளையடித்துச் செல்கிறார்கள்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dce1968d-8628-4f3b-b6a5-7061033fad23/26-6a840b82c4722.webp' /></p><p>
தடுத்தால் அடி உதைதான். அத்துடன், ஒரு செல்வந்தர் வீட்டில் கொள்ளையடித்த கொள்ளையர்கள், அந்தக் குடும்பத்திலுள்ள ஒரு பதின்ம வயதுப் பிள்ளையையும் கடத்திச் சென்றுள்ளார்கள்.
</p><p>
பிரான்ஸ் எல்லை அருகே அந்தப் பிள்ளையை விடுவித்துள்ளது அந்தக் கொள்ளைக் கூட்டம்.</p><p>

அதாவது, இந்தக் கொள்ளையர்கள், சுவிட்சர்லாந்தை ஒட்டியுள்ள பிரான்ஸ் பகுதிகளிலிருந்து சுவிட்சர்லாந்துக்குள் நுழைவதாக நம்பப்படுகிறது.&nbsp;</p><p></p><p>
கடந்த ஒரு ஆண்டில் மட்டுமே ஜெனீவா ஏரி பகுதியில் இப்படி சுவிஸ் செல்வந்தர்களைக் குறிவைத்து 18 கொள்ளைச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதால், அப்பகுதியில் வாழும் மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளார்கள்.
</p><p>
பலர் பொலிசாரை நம்பாமல், தனியார் பாதுகாவலர்களை ஏற்பாடு செய்துவருகிறார்கள்.</p><p>

விடயம் என்னவென்றால், சுவிட்சர்லாந்தில் ஜெனீவா ஏரி பகுதி, செல்வந்தர்களையும், பெரும் வர்த்தக நிறுவனங்களையும் ஈர்க்கும் ஒரு பகுதியாக அமைந்துள்ளது.
</p><p>
ஆனால், இந்த கொள்ளைச் சம்பவங்கள் அந்த பகுதியின் புகழைக் கெடுக்கும் வகையில் அமைந்துள்ளன. ஆகவே, அதிகாரிகள் அந்தக் கொள்ளையர்களைப் பிடிக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுவருகிறார்கள்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-18T07:36:44+00:00</updated>
        </entry>
    </feed>
