<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-09-10T06:41:05+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[உயர்தரப் பரீட்சையில் தோற்றிய மாணவர்களுக்கு முக்கிய அறிவித்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/ugc-completes-second-round-university-selections-1789021656"></link>
            <id>https://ibctamil.com/article/ugc-completes-second-round-university-selections-1789021656</id>
            <summary type="text">கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் தோற்றிய மாணவர்களுக்கு முக்கிய அறிவித்தல் ஒன்று வெளியாகி உள்ளது2025ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பர...</summary>
            <content type="html"><![CDATA[<p>கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் தோற்றிய மாணவர்களுக்கு முக்கிய அறிவித்தல் ஒன்று வெளியாகி உள்ளது</p><p>2025ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், பல்கலைக்கழகங்களில் இளங்கலை பட்டப்படிப்புகளுக்கான வெற்றிடங்களை நிரப்பும் இரண்டாம் கட்ட மாணவர் தெரிவு தற்போது நிறைவடைந்துள்ளது.
</p><p>குறித்த விடயம் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>திகதிக்குள் நிறைவு செய்ய வேண்டும்</h2><p>
தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள் தங்களுக்கான பதிவுகளை 2026 செப்டெம்பர் 17ஆம் திகதிக்குள் நிறைவு செய்ய வேண்டும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/17601cf9-c1a4-45a8-b2d1-0c848090007b/26-6aa2509e9490e.webp' /></p><p>மேலதிக தகவல்களுக்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அதிகாரப்பூர்வ இணையத்தளமான www.ugc.ac.lk-ஐ பார்வையிடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP</a> CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-10T06:39:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[துரத்தும் கர்மவினை! கோட்டாபயவை கைது செய்வதில் ஏன் தாமதம் - செல்வம் அடைக்கலநாதன் கேள்வி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/delay-in-arresting-gotabaya-selvam-adaikalanathan-1789020673"></link>
            <id>https://tamilwin.com/article/delay-in-arresting-gotabaya-selvam-adaikalanathan-1789020673</id>
            <summary type="text">&quot;முள்ளிவாய்க்காலில் தமிழ் இனத்தை அழித்தவர்களை, செம்மணி மனிதப் புதைகுழிகளை
உருவாக்கியவர்களை, தாய், தந்தையரை நிர்க்கதியாக்கியவர்களை கர்மவினை தற்போது
த...</summary>
            <content type="html"><![CDATA[<p>"முள்ளிவாய்க்காலில் தமிழ் இனத்தை அழித்தவர்களை, செம்மணி மனிதப் புதைகுழிகளை
உருவாக்கியவர்களை, தாய், தந்தையரை நிர்க்கதியாக்கியவர்களை கர்மவினை தற்போது
துரத்த தொடங்கியுள்ளது" என்று தெரிவித்த ஜனநாயக தமிழ்த்தேசியக்
கூட்டணியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன்,
"கோட்டாபய ராஜபக்சவை கைது செய்வதில் ஏன் தாமதம் நிலவுகின்றது? என்றும்
கேள்வி எழுப்பியுள்ளர்.
</p><p>
நாடாளுமன்றத்தில் நேற்றுப் நடைபெற்ற பாதுகாப்புப்பணியாள்
தொகுதியினரின் தலைமையதிகாரி (நீக்கல்) சட்டமூலம் மீதான விவாதத்தில்
உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது,</p><h2>இனத்துக்கு எதிராக இழைக்கப்பட்ட அநீதிகள்</h2><p>"ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் தனது அறிக்கையில் காணாமல்போனோர்,
எமது இனத்துக்கு எதிராக இழைக்கப்பட்ட அநீதிகள் மற்றும் செம்மணி மனிதப்
புதைகுழி போன்ற விடயங்களில் விசாரணை நடத்தப்பட்டு நியாயம் கிடைக்க வேண்டும்
எனத் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e286e09b-fa85-4aff-8b3d-a6bc523fd028/26-6aa24f95db586.webp' /></p><p>ஐ.நா. சபை வெறும் அறிக்கைகளை மட்டும் விடாமல், அதனை
நடைமுறைப்படுத்தும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். எமது மக்கள் உள்ளக
விசாரணையை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளவில்லை.</p><p>நீதியான சர்வதேச விசாரணையையே
கோருகின்றோம்.

தமிழ் அரசியல் கைதிகள் சுமார் 25 ஆண்டுகளாகச் சிறைகளில் வாடுகின்றனர்.</p><p>
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் ஊடாகப் போராளிகளின் படங்களை வைத்திருந்ததாகக்
கூறி கைது செய்யப்பட்ட இளைஞர்களும் இன்றும் சிறையில் தான் உள்ளனர்.</p><h2>கோட்டாபயவை கைது செய்வதில் ஏன் தாமதம்</h2><p> எங்களுடைய
தாய், தந்தை உறவுகளின் மனநிலை எப்படி இருக்கும் என்பது இன்று ராஜபக்ச குடும்பத்தினருக்கு இப்போது உணர்த்தப்பட்டுள்ளது.

நாட்டின் பொருளாதாரத்தை ராஜபக்சர்கள் இல்லாது ஒழித்துள்ளனர் என்று
உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7f0cb32c-4f43-484e-8491-83a52a9bbd36/26-6aa24f95343f5.webp' />&nbsp; &nbsp;</p><p> மனித உரிமை மீறல்கள் மற்றும் பல்வேறு
குற்றச்சாட்டுகளுக்குள்ளான சந்தேகநபரான கோட்டாபய ராஜபக்சவை கைது செய்வதில்
ஏன் இந்த தாமதம் நிலவுகின்றது என்று தெரியவில்லை? </p><p>ஊழல் மற்றும் மனித உரிமை
மீறல்களில் ஈடுபட்டவர்கள் எவராக இருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.

கர்மா என்பதனை நான் நம்புவதில்லை. ஆனால், கர்மா என்பது இருக்கின்றது என்பதனை
தற்போது உணர முடிகின்றது.</p><h2>சர்வதேச விசாரணை&nbsp;</h2><p> எமது இனத்தை அழித்தொழிக்க நினைத்தவர்கள்,
செம்மணியில் மக்களைப் புதைத்தபோது அவர்கள் பட்ட வேதனைகள் மற்றும்
முள்ளிவாய்க்காலில் தாய், தந்தையின் கண் முன்னே பிள்ளைகள் வீழ்ந்தபோது
எழுப்பட்ட அழுகுரல்கள் இன்று கர்மா என்ற ரீதியில் செயற்பட தொடங்கியுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7a395703-b80b-42ed-95e6-8191393214b6/26-6aa24f9690c5b.webp' /></p><p>ஐக்கிய நாடுகள் சபை தனது கருத்துக்களை அழுத்தமாகக் கூறினாலும், அதனை
நடைமுறைப்படுத்துவதற்கான இறுக்கமான வாய்ப்புகளை அது கையாள்வதில்லை.</p><p> இதனால்
ஐ.நா. சபை மீது எமது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கை படிப்படியாக சிதைவடைந்து
செல்கின்றது.</p><p>
இலங்கை அரசு உள்ளக விசாரணையை நிறுத்திவிட்டு, சர்வதேச விசாரணையை மேற்கொள்ளும்
அடிப்படையை உருவாக்க வேண்டும். </p><p>இந்த அரசு இத்தகைய சரியான செயற்பாடுகளில்
ஈடுபடும்போது எமது முழுமையான ஆதரவு வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-10T06:38:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுவிஸ் மின் நிலையத்தில் வெடிவிபத்து: இருவர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/2-dies-in-swiss-power-plant-explosion-1789022199"></link>
            <id>https://news.lankasri.com/article/2-dies-in-swiss-power-plant-explosion-1789022199</id>
            <summary type="text">Two workers killed in an explosion at a hydroelectric power plant in Switzerland: சுவிஸ் நீர் மின் நிலையம் ஒன்றில் ஏற்பட்ட வெடிவிபத்தில் பணியாளர்கள் இ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Two workers killed in an explosion at a hydroelectric power plant in Switzerland: சுவிஸ் நீர் மின் நிலையம் ஒன்றில் ஏற்பட்ட வெடிவிபத்தில் பணியாளர்கள் இருவர்கள் பலியாகியுள்ளார்கள்.
</p><p>

சுவிட்சர்லாந்தின் Ticino மாகாணத்திலுள்ள Piotta என்னும் கிராமத்தில், நீர் மின் நிலையம் ஒன்று அமைந்துள்ளது.
</p><h3>
மின் நிலையத்தில் வெடிவிபத்து</h3><p>

நேற்று காலை 9.30 மணியளவில் திடீரென அந்த மின் நிலையத்தில் தீப்பற்றியுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/03841e7c-5beb-4217-b3a4-0863c3fab7fd/26-6aa24ff8db24a.webp' /></p><p>
இரண்டு பணியாளர்கள் கட்டிடத்துக்குள் சிக்கிக்கொண்ட நிலையில், தீ வேகமாகப் பரவ, சிறிது நேரத்தில் ஏதோ வெடித்துச் சிதற, முழு கட்டிடமும் குலுங்கியுள்ளது.</p><p>

கட்டிடம் பலத்த சேதமடைய, கட்டிடத்துக்குள் சிக்கியிருந்த இருவரும் படுகாயமடைந்து சிறிது நேரத்தில் உயிரிழந்துள்ளார்கள்.&nbsp;</p><p></p><p>

உயிரிழந்தவர்களில் ஒருவர் 55 வயதுடைய சுவிஸ் குடிமகன். மற்றவரை அடையாளம் காணும் பணி தொடர்கிறது.
</p><p>
இந்நிலையில், எதனால் இந்த விபத்து ஏற்பட்டது என்பது தொடர்பில் அதிகாரிகள் விசாரணை ஒன்றைத் துவக்கியுள்ளார்கள்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-10T06:37:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொட்டாஞ்சேனை துப்பாக்கிச்சூடு விவகாரம்: விசாரணையில் சிக்கிய சந்தேக நபர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/broad-daylight-shooting-in-kotahena-1789021055"></link>
            <id>https://ibctamil.com/article/broad-daylight-shooting-in-kotahena-1789021055</id>
            <summary type="text">கொழும்பு - கொட்டாஞ்சேனை சங்கராஜ மாவத்தையில் கடந்த ஆகஸ்ட் 10ஆம் திகதி&amp;nbsp; இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகந...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு - கொட்டாஞ்சேனை சங்கராஜ மாவத்தையில் கடந்த ஆகஸ்ட் 10ஆம் திகதி&nbsp; இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
கடையின் முன்பாக நின்றுகொண்டிருந்த நபர் மீது மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவர் துப்பாக்கிச்சூடு நடத்தி கொலை செய்திருந்தனர்.
</p><p>
இந்தச் சம்பவம் தொடர்பில் கொழும்பு வடக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்து வந்த நிலையில், கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று (10.09.2026) இரவு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p></p><h2>ஐஸ் போதைப்பொருள்&nbsp;</h2><p>
</p><p>
கொலைச் சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளை ஓட்டியதுடன், கொலைக்கு உதவி மற்றும் ஒத்துழைப்பு வழங்கியதாக சந்தேகிக்கப்படும் குறித்த நபரிடமிருந்து 12 கிராம் 470 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7fdb7ead-01e0-4c22-9c4f-783e5c8f2cc9/26-6aa24ec3c1116.webp' /></p><p>

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 23 வயதுடைய மட்டக்குளிய பகுதியைச் சேர்ந்தவர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
</p><p>
சந்தேகநபர் கொட்டாஞ்சேனை காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொட்டாஞ்சேனை காவல்துறை அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-10T06:34:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[72 வயதில் 20 வயது யுவதியை மணந்த கால்பந்து ஜாம்பவான்! வைரலாகும் புகைப்படங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/72-year-old-football-legend-marries-20-year-old-1789019271"></link>
            <id>https://manithan.com/article/72-year-old-football-legend-marries-20-year-old-1789019271</id>
            <summary type="text">மலேசியாவின் முன்னாள் உதைபந்தாட்ட நட்சத்திர வீரரான 72 வயதுடைய டத்தோ அப்தா அலிப், 20 வயதுடைய யுவதியை கடந்த ஓகஸ்ட் 27ஆம் திகதி திருமணம் செய்துகொண்டுள்ளதா...</summary>
            <content type="html"><![CDATA[<p>மலேசியாவின் முன்னாள் உதைபந்தாட்ட நட்சத்திர வீரரான 72 வயதுடைய டத்தோ அப்தா அலிப், 20 வயதுடைய யுவதியை கடந்த ஓகஸ்ட் 27ஆம் திகதி திருமணம் செய்துகொண்டுள்ளதாக அவரது குடும்பத்தினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
</p><p>
திருமணம் இரு குடும்பத்தினரின் முழுமையான சம்மதம் மற்றும் ஆசீர்வாதத்துடன் நடைபெற்றதாக, முன்னாள் தேசிய அணி வீரரும் பயிற்றுவிப்பாளருமான அவரது சகோதரர் டத்தோ யூனுஸ் அலிப் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0ee80716-c545-468d-8d15-6d5a383330ae/26-6aa246d5734ce.webp' /></p><p></p><h2>வைரலாகும் புகைப்படங்கள்&nbsp;</h2><p> </p><p>திருமணத்திற்குப் பின்னர் தம்பதியினர் மகிழ்ச்சியாக இல்லற வாழ்க்கையை ஆரம்பித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
அப்தா அலிப் தனது இளம் மனைவியுடன் இருக்கும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகியதைத் தொடர்ந்து, இந்தத் திருமணம் மலேசிய உதைபந்தாட்ட இரசிகர்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cae8ff71-ff42-46b3-8012-97ad5df590f7/26-6aa246d62978f.webp' /></p><p></p><p>

1970களின் பிற்பகுதியிலும் 1980களின் முற்பகுதியிலும் மலேசிய உதைபந்தாட்டத்தின் பொற்காலத்தில் முக்கிய வீரராகத் திகழ்ந்த அப்தா அலிப், 1980 மாஸ்கோ ஒலிம்பிக் தகுதிச் சுற்றில் தென் கொரியாவை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய வரலாற்று வெற்றியில் முக்கிய பங்காற்றினார்.
</p><p>
எனினும், ஆப்கானிஸ்தான் மீதான சோவியத் யூனியனின் ஆக்கிரமிப்பைக் கண்டித்து மலேசியா ஒலிம்பிக் போட்டிகளைப் புறக்கணித்ததால், அந்தப் போட்டியில் அவரால் பங்கேற்க முடியவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்<b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"> FOLLOW NOW</a></u></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-10T06:33:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[துறைமுகங்களில் சிக்கியுள்ள சுமார் 1000 வாகனங்கள் - பறந்த உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/1000-vehicles-being-released-in-2026-from-port-1789015658"></link>
            <id>https://ibctamil.com/article/1000-vehicles-being-released-in-2026-from-port-1789015658</id>
            <summary type="text">துறைமுகங்களில் சிக்கியுள்ள சுமார் 1,000 வாகனங்களை விரைவாக விடுவிக்குமாறு சம்பந்தப்பட்ட இறக்குமதியாளர்கள் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.இலங்கைக...</summary>
            <content type="html"><![CDATA[<p>துறைமுகங்களில் சிக்கியுள்ள சுமார் 1,000 வாகனங்களை விரைவாக விடுவிக்குமாறு சம்பந்தப்பட்ட இறக்குமதியாளர்கள் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p><p>இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்கள் தொடர்பான எல்லை தாண்டிய கடன் கடிதங்கள் (Cross-border Letters of Credit - LCs) தொடர்பில் ஏற்பட்டுள்ள சிக்கல் காரணமாக,&nbsp;இந்தநிலை ஏற்ப்பட்டுள்ளது.</p><h2>விரைவாக விடுவிக்க நடவடிக்கை</h2><p>
இந்தப் பிரச்சினை காரணமாக நீண்ட காலமாக வாகனங்களை விடுவிக்க முடியாமல், தாம் பல்வேறு சிரமங்களையும் நிதி இழப்புகளையும் எதிர்கொண்டு வருவதாக இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/32ec3a7d-bf1a-41e4-92ef-a6fe3dfa43e2/26-6aa238804c460.webp' /></p><p>இந்த நிலையில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தலையிட்டு, தற்போது காணப்படும் சட்டரீதியான மற்றும் தொழில்நுட்ப தடைகளை நிவர்த்தி செய்து, துறைமுகங்களில் சிக்கியுள்ள வாகனங்களை விரைவாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரியுள்ளனர்.
</p><p>
இந்த விடயத்தில் அதிகாரிகளின் துரிதமான தலையீட்டை எதிர்பார்த்துள்ளதாகவும் இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.</p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-10T06:30:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Tony</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரூ. 1000 கோடி மொத்த வசூல், சாதனை படைப்பாரா சூர்யா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/will-suriya-hit-1000-crore-in-box-office-this-year-1789007129"></link>
            <id>https://cineulagam.com/article/will-suriya-hit-1000-crore-in-box-office-this-year-1789007129</id>
            <summary type="text">சூர்யா

நடிகர் சூர்யா இன்று தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாகிவிட்டார். பல வருடங்களாக ஹிட் கொடுக்காமல் இருந்த சூர்யா, ஆனால், இந்த வருடம் சும்மா அடி...</summary>
            <content type="html"><![CDATA[<h2>சூர்யா
</h2><p>
நடிகர் சூர்யா இன்று தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாகிவிட்டார். பல வருடங்களாக ஹிட் கொடுக்காமல் இருந்த சூர்யா, ஆனால், இந்த வருடம் சும்மா அடித்து நொறுக்கி வருகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1e2b1385-422f-459e-b635-6a4af8258f36/26-6aa2151db240d.webp' /></p><p> 

ஏற்கனவே கருப்பு புயல் வந்து ஒட்டுமொத்த தமிழ் சினிமாவிற்கும் வசூல் விருந்து வைத்தது. அதை தொடர்ந்து வெளியான விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படம் க்ளாஸாக இருந்தாலும் வசூலில் எந்த குறையும் இல்லை ரூ. 220 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0b616d74-1da4-40da-ac90-b43867540030/26-6aa2151d0b48c.webp' /></p><p>கருப்பு + விஸ்வநாத் அண்ட் சன்ஸ் சேர்த்து ரூ. 560 கோடிகள் வசூலை தாண்ட, சூர்யா நடிப்பில் சீன் படம் இந்த தீபாவளிக்கு வரவுள்ளது, இந்த படத்தின் டைட்டில் டீசர் நேற்று வெளிவந்து மிகப்பெரிய ரீச் ஆகியுள்ளது.</p><h2>ரூ. 1000 கோடி
</h2><p>
இந்நிலையில் சீன் படம் ஆவேசம் என்ற மெகா ஹிட் கொடுத்த ஜீது மாதவன் படம் என்பதால் கேரளாவிலும் இந்த படத்திற்கு மிகப்பெரிய ரசிகர்கள் வட்டம் உள்ளது. இப்படம் ரூ. 460 கோடி வசூல் செய்தால் ஒரே ஆண்டில் ரூ 1000 கோடி வசூல் செய்த ஹீரோ என்ற பெருமையை சூர்யா பெறுவார்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7a927929-7609-4b15-807d-72da40b3836b/26-6aa2151c57c07.webp' /></p><p>இதுவரை எந்த ஒரு தமிழ் ஹீரோவும் ஒரே வருடத்தில் ரூ. 1000 கோடி வசூலை எட்டியது இல்லை, ரஜினிகாந்த் 2.0+ காலா சேர்ந்து ரூ. 860 கோடி, விஜய் லியோ+வாரிசு சேர்த்து ரூ. 900 கோடி வசூலை கொடுத்தனர், இந்த ரூ. 1000 கோடி சாதனையை சூர்யா இந்த 3 படங்கள் மூலம் கொடுப்பாரா? பார்ப்போம்.</p>]]></content>
            <updated>2026-09-10T06:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பலரையும் சிந்திக்கவைத்த யாழ்ப்பாண இளம் தலைமுறையினரின் பேச்சு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/a-thought-provoking-speech-young-generation-jaffna-1789020686"></link>
            <id>https://jvpnews.com/article/a-thought-provoking-speech-young-generation-jaffna-1789020686</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;மாறிவரும் சமூகத்தின் முகம் எனும் கருப்பொருளில் யாழ்ப்பாண இளம் தலைமுறையினரின் பேச்சு பலரையும் சிந்திக்க வைத்துள்ளது.

நல்லூர் ஆதீனத்தில்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;மாறிவரும் சமூகத்தின் முகம் எனும் கருப்பொருளில் யாழ்ப்பாண இளம் தலைமுறையினரின் பேச்சு பலரையும் சிந்திக்க வைத்துள்ளது.

நல்லூர் ஆதீனத்தில் இடம்பெற்ற இந்த பேச்சு தற்பொதைய சமூகத்தையும் , புலம் பெயர் தமிழ் மக்களையும் சிந்தை கொள்ள செய்துள்ளது.
</p><p>
சமூகம் சார்ந்த பிரச்சனைகள் , மற்றும் தமிழ் அரசியல்வாதிகளின் போலி முகங்களை தோலுரித்து காட்டுவதாக அவர்களின் பேச்சுக்கள் அமைத்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6bea979b-56fa-4a8b-b5e3-3c213e1d2250/26-6aa24a0fcff9b.webp' /></p><h2>சிந்திக்கவைத்த&nbsp;&nbsp;பேச்சு</h2><p>
</p><p>
சில புலம் பெயர் தமிழர்கள் தாயகம் வந்து செய்யும் அலப்பறைகள் தொடர்பிலும், தாயகத்தில் வாழும் எம் உறவுகள் புலம் பெயர் தமிழர்களை சார்ந்து வாழும் நிலை குறித்தும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்கள்.&nbsp; &nbsp; </p><p>&nbsp; <iframe src="https://www.facebook.com/plugins/video.php?height=476&href=https%3A%2F%2Fwww.facebook.com%2Freel%2F2335888403614312%2F&show_text=false&width=380&t=0" width="380" height="476" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share" allowFullScreen="true"></iframe></p><p>போர் இடம்பெற்ற காலத்தில் புலம்பெயர் தேசங்களுக்கு தப்பியோடிய எம் இளம் தலைமுறையினர் பலர் , தாயகம் மீண்டெழுவதற்கு உதவி இருந்தமையினையும் சுட்டிகாட்டியுள்ளனர்.</p><p>அதேசமயம் தாயகத்தில் பொருளாதார , கல்வி வளர்ச்சிக்கு புலம் பெயர் தமிழர்களின் பெரும் பங்களிப்பு இருப்பதையும் அவர்கள் மறுக்கவில்லை.</p><p></p>]]></content>
            <updated>2026-09-10T06:29:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[விசாரணை வளையத்தில் முன்னாள் அரச ஜோதிடர்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/former-royal-astrologer-under-investigation-1789021800"></link>
            <id>https://jvpnews.com/article/former-royal-astrologer-under-investigation-1789021800</id>
            <summary type="text">&amp;nbsp; முன்னாள் அரச சோதிடர் சுமனதாஸ அபேகுணவர்தன இன்று (10) இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார். 

சிரிலிய சவிய தொடர்பாக ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; முன்னாள் அரச சோதிடர் சுமனதாஸ அபேகுணவர்தன இன்று (10) இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.</p><p> 

சிரிலிய சவிய தொடர்பாக இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு முன்னெடுத்து வரும் விசாரணை தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே முன்னாள் அரச சோதிடர் சுமனதாஸ அபேகுணவர்தன அங்கு முன்னிலையாகியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1dc01dd7-f8ea-4d37-87bf-3721a160cee3/26-6aa24e6a4ae11.webp' /></p><p></p>]]></content>
            <updated>2026-09-10T06:26:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி விவகாரம்...! முன்னாள் அமைச்சருக்கு பிணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/duminda-dissanayake-indicted-over-gold-plated-gun-1789016288"></link>
            <id>https://ibctamil.com/article/duminda-dissanayake-indicted-over-gold-plated-gun-1789016288</id>
            <summary type="text">புதிய இணைப்புஉரிய அனுமதிப்பத்திரம் இன்றி தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கியை வைத்திருந்ததாகக் கூறப்படும் வழக்கில் முன்னாள் அமைச்சர் துமிந்த திஸாநாயக்கவ...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>உரிய அனுமதிப்பத்திரம் இன்றி தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கியை வைத்திருந்ததாகக் கூறப்படும் வழக்கில் முன்னாள் அமைச்சர் துமிந்த திஸாநாயக்கவுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (10) பிணை வழங்கியுள்ளது.</p><h2>முதலாம் இணைப்பு&nbsp;</h2><p>தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க மற்றும் மற்றொரு பெண் ஆகியோருக்கு எதிராக&nbsp;குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.</p><p>இந்த குற்றப்பத்திரிகையானது இன்று (10.09.2026) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.</p><p></p><p>
</p><h2>தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி&nbsp;</h2><p>
கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, ​​இரு குற்றவாளிகளுக்கும் முறைப்படி குற்றப்பத்திரிகைகள் வழங்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dfd9c355-5b72-47c5-a1da-c6506c3e1b65/26-6aa23be55b403.webp' /></p><p>குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து, முன்னாள் அமைச்சர் உள்ளிட்ட சந்தேகநபர்களை பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார். </p><p>

தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பான மேலதிக வழக்கு நடவடிக்கைகள் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நடைபெறவுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNE</a>L இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-10T06:26:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தல் - வேட்பாளர்களை அறிவித்த தவெக]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/tvk-announced-candidates-for-by-election-1789021253"></link>
            <id>https://news.lankasri.com/article/tvk-announced-candidates-for-by-election-1789021253</id>
            <summary type="text">tvk announced candidates for dharapuram and madurantakam by election: தாராபுரம் மற்றும் மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பாளர்களை தவெக அறிவித்...</summary>
            <content type="html"><![CDATA[<p>tvk announced candidates for dharapuram and madurantakam by election: தாராபுரம் மற்றும் மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பாளர்களை தவெக அறிவித்துள்ளது.
</p><h3>
இடைத்தேர்தலுக்கு வேட்பாளர்களை அறிவித்த தவெக </h3><p>

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளுக்கும் அக்டோபர் 6 ஆம் திகதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.</p><p>

இதில் போட்டியிடுபவர்களுக்கான வேட்பாளர் பட்டியலை தமிழக வெற்றிக்கழகம் அறிவித்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a96479a6-548f-4245-bfc9-82cf40d622d1/26-6aa24c464ed05.webp' /></p><p>

மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி சார்பில், மதுராந்தகத்தில் K.மரகதம் குமரவேல் போட்டியிடுவார்கள் எனவும், தாராபுரத்தில் சத்தியபாமா போட்டியிடுவார்கள் எனவும் அறிவித்துள்ளது.&nbsp;</p><p></p><p>

இருவரும் 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று, தங்களது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர். அவர்களுக்கே தவெக மீண்டும் வாய்ப்பு வழங்கியுள்ளது.&nbsp;</p><p><blockquote class="twitter-tweet"><p lang="zxx" dir="ltr"><a href="https://t.co/nEH9s9t231">pic.twitter.com/nEH9s9t231</a></p>&mdash; TVK Vijay (@TVKVijayHQ) <a href="https://x.com/TVKVijayHQ/status/2097920532931031366?ref_src=twsrc%5Etfw">September 10, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>
திமுக சார்பில் மதுராந்தகம் தொகுதியில் ஐ.பரந்தாமன் மற்றும் தாராபுரம் தொகுதியில் சுகன்யா போட்டியிடுவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-10T06:25:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஞானசார தேரருக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி பொதுமன்னிப்பு : உயர்நீதிமன்றின் அதிரடி தீர்ப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sc-gnanasara-thero-s-presidential-pardon-invalid-1789019099"></link>
            <id>https://ibctamil.com/article/sc-gnanasara-thero-s-presidential-pardon-invalid-1789019099</id>
            <summary type="text">பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு, வழங்கப்பட்ட ஜனாதிபதி பொதுமன்னிப்பு குறித்து உயர்நீதிமன்றம் தீர்ப்பொன்றை வழங்கியுள...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு, வழங்கப்பட்ட ஜனாதிபதி பொதுமன்னிப்பு குறித்து உயர்நீதிமன்றம் தீர்ப்பொன்றை வழங்கியுள்ளது.
</p><p>
அதன்படி, ஞானசார தேரருக்கு, வழங்கப்பட்ட ஜனாதிபதி பொதுமன்னிப்பு சட்டத்திற்கு முரணானதாகும் என உயர்நீதிமன்றம் இன்று (10) தீர்ப்பளித்துள்ளது.</p><p>

காணாமல் போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவின் மனைவியான சந்தியா எக்னலிகொட உள்ளிட்ட தரப்பினர் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனு மீதான விசாரணையின் பின்னர் உயர் நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.</p><p></p><h2>ஜனாதிபதி பொதுமன்னிப்பு</h2><p> </p><p>



நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் 2018 ஆம் ஆண்டு குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட ஞானசார தேரருக்கு ​மேன்முறையீட்டு நீதிமன்றம் 6 வருட சிறைத் தண்டனையை விதித்து தீர்ப்பளித்திருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a6e4488b-0d6c-4eb1-8212-ff6831edfb3c/26-6aa24d134f2ae.webp' /></p><p> </p><p>


இந்த நிலையில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்த ஞானசார தேரருக்கு, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டிருந்தது.
</p><p>
இதனையடுத்து அதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவை ஆராய்ந்த உயர் நீதிமன்றம், அவ்வாறு அவருக்கு வழங்கப்பட்ட பொதுமன்னிப்பு சட்டத்திற்கு முரணானது என்பதால் அதனை செல்லுபடியற்றதாக கருதுவதாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p>

</p>]]></content>
            <updated>2026-09-10T06:22:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[முக சுருக்கம் மற்றும் கருவளையம் போகணுமா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/rose-water-skincare-hack-mix-to-remove-dark-1788951684"></link>
            <id>https://news.lankasri.com/article/rose-water-skincare-hack-mix-to-remove-dark-1788951684</id>
            <summary type="text">தற்போதைய காலகட்டங்களில் எல்லோருக்கும் அவர்களுடைய சருமத்தை சரியாக பராமரிப்பதற்கான நேரம் கிடைப்பதில்லை. அந்த வகையில், வீடுகளில் இருக்கக்கூடிய பொருட்களை ...</summary>
            <content type="html"><![CDATA[<p>தற்போதைய காலகட்டங்களில் எல்லோருக்கும் அவர்களுடைய சருமத்தை சரியாக பராமரிப்பதற்கான நேரம் கிடைப்பதில்லை. அந்த வகையில், வீடுகளில் இருக்கக்கூடிய பொருட்களை வைத்து நாம் சருமத்தை பாதுகாக்க கூடிய சில எளிய வழிகளை பார்க்கலாம். </p><p>அதாவது, வீட்டில் இருக்கக்கூடிய ரோஸ் வாட்டர், தேன் மற்றும் பாதாம் எண்ணெய் இந்த மூன்று பொருட்கள் இருந்தாலே போதும். நம் சருமத்திற்கு உடனடியாக புத்துணர்ச்சி அடைய செய்ய முடியும். சிலருக்கு இரவில் தூக்கம் இல்லாமலும் அல்லது எப்பொழுதும் கணினி முன்பாக இருப்பதினாலோ கருவளையம், மற்றும் வயது அதிகரிப்பு காரணமாக சுருக்கங்கள் இவைகள் எல்லாம் வருவது இயல்பு.</p><p> அந்த நேரங்களில் நாம் அதனை பராமரிக்கும் பொழுது தான் ஒரு நல்ல சருமத்தை பெறலாம். அந்த வகையில், நாம் ரோஸ் வாட்டர் பயன்படுத்தும் பொழுது நம்முடைய சருமத்திற்கு புத்துணர்ச்சியும், தேன் மற்றும் பாதாம் எண்ணெய் நம்முடைய சருமத்தில் ஈரப்பதத்தையும் கொடுக்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f6e72d19-51d5-4e46-850d-57fc1b7d4a3c/26-6aa13c85cb214.webp' /></p><p></p><p><span style="color: inherit; font-size: 1.5rem;">எப்படி பயன்படுத்துவது?</span></p><p>இந்த மூன்று பொருளையும் சிறிதளவு எடுத்துக்கொண்டு கலந்து கொள்ள வேண்டும். பிறகு முகத்தை சுத்தமாக கழுவி இந்த கலவையை சருமத்தின் மீது தடவிக்கொள்ள வேண்டும். முடிந்தவரை கலவையை கண்களுக்குள் செல்லாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள். கண்களுக்கு கீழே தடவும் பொழுது அழுத்தம் கொடுக்காமல் தடவுவது அவசியம்.</p><p> இந்த கலவையை முகத்தில் தடவிக் கொள்வதற்கு முன்பாக சிறிதாக கழுத்து அல்லது காது பகுதிகளில் தடவி ஏதேனும் எரிச்சல் வீக்கம் போன்ற அறிகுறிகள் ஏற்படுகிறதா என்பதை பார்த்து பின்பு முகத்தில் தடவிக் கொள்வது அவசியம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2a9ccea7-e00e-46a5-9b5c-6a2ba2db70c7/26-6aa13c868fd53.webp' /></p><p></p><p> </p><h3>


இது கருவளையம் மற்றும் சுருக்கங்களை நீக்குமா?
</h3><p>
 ரோஸ் வாட்டர், தேன் மற்றும் பாதாம் எண்ணெய் கலவையானது நம்முடைய கருவளையம் அல்லது சுருக்கங்களை நிரந்தரமாக நீக்கும் என்பதற்கான அறிவியல் ஆதாரம் இல்லை என்றாலும் இந்த கலவை நம்முடைய சருமத்திற்கு ஈரப்பதத்தை வழங்குவதோடு பராமரிக்க உதவியாக அமைகிறது.</p><p>

 திடீரென்று வெளியூர் பயணம் மேற்கொள்ள வேண்டும் அல்லது ஏதேனும் முக்கிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வேண்டும் அப்பொழுது கருவளையம் அல்லது முகம் புத்துணர்ச்சி இல்லாமல் இருக்கிறது என்ற சமயத்தில் கட்டாயமாக இந்த கலவையை நீங்கள் முகத்தில் தடவிக் கொள்ளலாம். அவை உங்களுக்கு ஒரு நல்ல புத்துணர்ச்சியும் ஈரப்பதமான் சருமத்தையும், நல்ல பொலிவும் கருவளையத்தை குறைத்தும் காண்பிக்க கூடிய ஒரு தன்மையை உருவாக்கும்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-10T06:20:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[iPhone Duo... மடிக்கக்கூடிய தொலைபேசியை அறிமுகப்படுத்தியது ஆப்பிள் நிறுவனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/apple-launches-iphone-duo-price-in-sri-lanka-1789017715"></link>
            <id>https://ibctamil.com/article/apple-launches-iphone-duo-price-in-sri-lanka-1789017715</id>
            <summary type="text">பல ஆண்டுகளாக மடிக்கக்கூடிய தொலைபேசிகளை விற்பனை செய்து வரும் போட்டியாளர்களை விட, தனது வடிவமைப்பு மற்றும் தரவு தனியுரிமை குறித்த வாக்குறுதிகள் தன்னை முன...</summary>
            <content type="html"><![CDATA[<p>பல ஆண்டுகளாக மடிக்கக்கூடிய தொலைபேசிகளை விற்பனை செய்து வரும் போட்டியாளர்களை விட, தனது வடிவமைப்பு மற்றும் தரவு தனியுரிமை குறித்த வாக்குறுதிகள் தன்னை முன்னோக்கிச் செலுத்தும் என்ற நம்பிக்கையில் புதிய பதிப்பை&nbsp;ஆப்பிள் நிறுவனம் இன்று வெளியிட்டுள்ளது.</p><p>ஆப்பிள் நிறுவனம் புதன்கிழமை அன்று, 1,999 டொலர் மதிப்பிலான மடிக்கக்கூடிய ஐபோனான 'iPhone Duo'வை அறிமுகம் செய்து, தனது முதன்மை ஸ்மார்ட்போனுக்கு ஒரு புதிய வரையறையை வழங்கியுள்ளது.
</p><p>இதன் ஆரம்ப விலை இலங்கை மதிப்பில் 6 இலட்சத்துக்கும் அதிகமாகும்.</p><p></p><h2>Smart Watches மற்றும் wireless earbuds</h2><p>
 

Samsung மற்றும் Huawei போன்ற சீன நிறுவனங்களின் சாதனங்கள் ஒரு குறிப்பிட்ட வாடிக்கையாளர் வட்டத்தைத் தாண்டி பிரபலமடையப் போராடி வரும் நிலையில், நீண்ட காலமாக அவற்றின் ஆதிக்கத்தில் உள்ள ஒரு பிரிவை இந்த 'டியோ' புரட்டிப் போடக்கூடும் என விளம்பரதாரர்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a7b8e8b8-86e6-40d3-b0dd-478aa7605fce/26-6aa24a5a350b2.webp' /></p><p> Smart Watches மற்றும் wireless earbuds போன்றவை ஆப்பிள் செய்ததைப் போலவே, மடிக்கக்கூடிய சாதனங்களின் வடிவத்தையும் பிரதான நீரோட்டத்திற்குக் கொண்டுவர உதவுவதன் மூலம், ஆப்பிளின் இந்த வருகை அவற்றுக்குத் தேவையான ஒரு உந்துசக்தியாக அமையக்கூடும் என்று ஆய்வாளர்கள் நீண்ட காலமாகவே கூறி வருகின்றனர். </p><p>

 

iPhone Duo, வளைந்த விளிம்புகளுடன், பாஸ்போர்ட் போன்ற அளவிலும் வடிவத்திலும் உள்ளது. இதைத் திறக்கும்போது, ​​7.6 அங்குல (19 செ.மீ) கிடைமட்டத் திரை விரிகிறது, இதைச் செங்குத்தாகவும் பார்க்க முடியும். </p><p>ஃபோனை மடிக்கும்போது, ​​முன்பக்கத்தில் ஒரு சிறிய ஒற்றைத் திரை உள்ளது. திறந்த நிலையில், இது ஆப்பிளின் மிகவும் மெல்லிய ஃபோன் என்று அந்நிறுவனம் கூறியுள்ளது.</p><p> 

 

இருப்பினும், இது சீனப் போட்டியாளர்கள் வழங்கும் மடிக்கக்கூடிய தொலைபேசிகளை விட தடிமனாக வடிவமைக்கப்பட்டுள்ளது.</p><p>
 

2017-ஆம் ஆண்டு ஐபோன் X-க்குப் பிறகு ஆப்பிளின் முதன்மைத் தயாரிப்பில் மேற்கொள்ளப்பட்ட மிக முக்கியமான சீரமைப்பு நிகழ்விற்கு, புதிய தலைமைச் செயல் அதிகாரி ஜான் டெர்னஸ் தலைமை தாங்கியுள்ளார்.</p><p></p><h2>209.6 பில்லியன் டொலர்</h2><p> </p><p>ஐபோன், அதன் சமீபத்திய நிதியாண்டில் 209.6 பில்லியன் டொலர்களை ஈட்டியது, இது ஆப்பிளின் மொத்த விற்பனையில் பாதிக்கும் சற்று அதிகமாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4a35cf8c-8aa8-4184-bee1-2aa5919e0d3a/26-6aa24af3ba21f.webp' /></p><p>

 

தற்போதுள்ள மடிக்கக்கூடிய சாதனங்கள், ஸ்க்ரோலிங் மற்றும் வீடியோ பார்ப்பது போன்ற பொதுவான பணிகளுக்குச் சிரமமானவையாகவும் பொருத்தமற்றவையாகவும் இருப்பதாக டெர்னஸ் விமர்சித்தார். </p><p>மேலும், ஒரு பிரத்யேக கீல், சீரான விகிதாச்சாரத்துடன் கூடிய இரட்டைத் திரைகள் மற்றும் ஒரு புதிய டைட்டேனியம் உடல் ஆகியவற்றின் மூலம், பாக்கெட் அளவில் உள்ள ஒரு சாதனத்தில் ஐபேட் போன்ற அனுபவத்தை வழங்கும் வகையில் iPhone Duo வடிவமைக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார். </p><p>&nbsp;'டுயோ' என்ற பச்சை ஆந்தையைச் சின்னமாகக் கொண்ட வெளிநாட்டு மொழி கற்றல் செயலியான டுயோலிங்கோ, X செயலியில், "நாங்கள் காப்புரிமையை மீறிவிட்டோம்," என்று சிரித்து அழும் ஈமோஜிகளுடன் செய்தி அனுப்பியது. </p><p>இதற்கு, மடிக்கக்கூடிய கைபேசி நிறுவனமான Samsung மொபைல் யு.எஸ், "அவர்களும் எங்களைப் பார்த்து நகலெடுத்துவிட்டார்கள்," என்று கூறி, தனது "ஒற்றுமையை" வெளிப்படுத்தியது.</p><p>வெகுஜன ஆடம்பரத்திற்கு இலக்கணமாகத் திகழ்ந்த ஒரு உலகளாவிய பிராண்டிற்கு புதிய உச்சமாக விளங்கும், சுமார் 2,000 டொலர் விலையுள்ள ஒரு மடிக்கக்கூடிய சாதனம் தங்களுக்குத் தேவை என்று ஆப்பிளின் வாடிக்கையாளர்களை நம்பவைக்கும் பொறுப்பு, இதற்கு முன்பு அதிகம் அறியப்படாத வன்பொருள் பிரிவுத் தலைவரான டெர்னஸிடமே வந்து சேரும்.</p><p> 

 

இன்டர்நேஷனல் டேட்டா கார்ப்பரேஷன் போன்ற பகுப்பாய்வு நிறுவனங்கள், ஆப்பிள் நிறுவனம் தன்னால் உற்பத்தி செய்யக்கூடிய ஒவ்வொரு மடிக்கக்கூடிய ஐபோனையும் விற்று, அடுத்த ஆண்டு இறுதிக்குள் இந்த இலாபகரமான சந்தையில் 40% பங்கைப் பெறும் என்று எதிர்பார்க்கின்றன. </p><p>ஆப்பிள் நிறுவனம் v&nbsp; ஒரு வணிக உற்பத்தித்திறன் சாதனமாக நிலைநிறுத்தியுள்ளது. இது பல பங்கேற்பாளர்களுடன் zoom அழைப்புகளை எவ்வாறு நிர்வகிக்கும் என்பதையும், ஸ்லாக் மெசேஜிங் செயலியின் விரிவான பார்வையையும் காட்டுகிறது.</p><p></p><h2>அக்டோபர் 23 முதல் விற்பனைக்கு</h2><p> 

 

Duo-வின் பெரிய திரை ஒரே நேரத்தில் பல செயலி சாளரங்களை ஆதரிக்கும். இது, உற்பத்தித்திறனை நோக்கமாகக் கொண்ட ஒரு நகர்வாகும், இதை ஆப்பிள் தனது சில iPad-களில் செய்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dc303dd2-a904-453f-a689-5f4c007483ad/26-6aa24af5459de.webp' /></p><p>
</p><p>
 

அக்டோபர் 23 முதல் விற்பனைக்கு வரும் 'iPhone Duo'வில், அதன் திரைகளை இயக்குவதற்காக A20 Pro chip, குவால்காமின் Qualcomm's wireless data chipsகளில் இருந்து விலகிச் செல்லும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக ஆப்பிளால் வடிவமைக்கப்பட்ட புதிய C2 மோடம் சிப்பும் இடம்பெறும் என்று ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது. </p><p>இதன் பேட்டரி, இரண்டு திரைகளையும் கலந்து 24 மணி நேரம் வரை பயன்படுத்தும் திறன் கொண்டது மற்றும் சுமார் 20 நிமிடங்களில் 50% வரை சார்ஜ் செய்துகொள்ளும்.</p><p>ஏனைய நிறுவனங்களுக்கு பல ஆண்டுகளுக்குப் பிறகு களமிறங்கிய ஆப்பிள் நிறுவனம், இன்று விதிகளை வகுக்கும் திறனை கொண்டுள்ளது.</p><p>ஆப்பிளின் நன்கு அறியப்பட்ட மற்றும் மடிக்க முடியாத வரிசையின் சமீபத்திய பதிப்புகளான ஐபோன் 18 ப்ரோ மற்றும் 18 ப்ரோ மேக்ஸ் கைபேசிகளையும் காட்சிப்படுத்தினர்.</p><p> ஐபோன் 17 ப்ரோ மற்றும் ப்ரோ மேக்ஸின் தொடக்க விலைகளை விட100 டொலர் அதிகமாக, ஐபோன் 18 ப்ரோ மற்றும் ப்ரோ மேக்ஸின் விலை முறையே 1,199 டொலர் மற்றும் 1,299 டொலர் இல் தொடங்குகிறது.</p><p></p><h2>செயற்கை நுண்ணறிவு</h2><p>
</p><p>
 

AirPods மற்றும் Apple Watch புதுப்பிப்புகள்

 

செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்டு, கையாளப்பட்ட படங்கள் குறித்த அதிகரித்து வரும் கவலைகளை நிவர்த்தி செய்யும் நோக்கில், ஆப்பிள் நிறுவனம் ஒரு புதிய அம்சத்தையும் அறிமுகப்படுத்தியது.</p><p> 

 

புதிய ஐபோன் iPhone Duo கேமராக்களில் எடுக்கப்பட்ட படங்களின் நம்பகத்தன்மையை நிரூபிப்பதற்காக, 'ஆப்பிள் ரெஃபரன்ஸ் இமேஜ்' எனப்படும் ஒரு புதிய தரநிலையை அறிமுகப்படுத்தியுள்ளது. </p><p>மேலும், செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்பட்ட அல்லது திருத்தப்பட்ட படங்களை அடையாளம் காண்பதற்கான, வளர்ந்து வரும் SynthID தரநிலையையும் இது ஆதரிக்கும் என்று கூறியுள்ளது. </p><p>இந்த ஆப்பிள் ரெஃபரன்ஸ் இமேஜ் அம்சம் ஐரோப்பிய ஒன்றியம் அல்லது சீனாவில் கிடைக்காது.

 

ஐபோன் 18 ப்ரோவில் புதிய A20 ப்ரோ சிப்பும் இடம்பெறும், இது மேம்பட்ட AI மாடல்களை ஐபோன்களில் நேரடியாக இயக்க உதவும் மேம்பாடுகளைக் கொண்டுவருகிறது.
</p><p>
 

இரைச்சல் நீக்கும் வசதியுடன் கூடிய புதிய ஏர்பாட்ஸ் பதிப்பு 129 டொலர் விலையில் தொடங்கும் என்றும், இது தங்களது பட்ஜெட் இயர்பட்ஸ் வரிசையில் முதல் முறையாகும் என்றும் அந்நிறுவனம் கூறியது. </p><p>மேலும், ஆப்பிள் நிறுவனம் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 12 மற்றும் ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா 4 ஆகியவற்றையும் அறிமுகப்படுத்தியது. இவை, உடல் மீட்சி மற்றும் உடற்தகுதியை அளவிடும் புதிய அம்சங்கள் மற்றும் மேம்படுத்தப்பட்ட இதயத் துடிப்பு கண்காணிப்புடன், ஆரோக்கியத்தை மையமாகக் கொண்ட முக்கிய மேம்படுத்தல்களாக நிலைநிறுத்தப்பட்டுள்ளன.</p><p> 

 

மைக்ரான் தலைமை நிர்வாக அதிகாரி சஞ்சய் மெஹ்ரோத்ரா இந்த அறிமுக விழாவில் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது, ஏனெனில் ஆப்பிள் இதுபோன்ற நிகழ்வுகளில் அதன் விநியோகஸ்தர்களுக்கு முக்கியப் பங்கை வழங்குவது அரிது. </p><p>ஆப்பிள், ஐபோன்கள் மற்றும் பிற தயாரிப்புகளில் அதிக செயற்கை நுண்ணறிவு அம்சங்களைச் சேர்ப்பதால், உயர் செயல்திறன் கொண்ட மெமரிக்கான தேவை அதிகரித்துள்ளது.</p><p> இது, குறிப்பாக உலகளாவிய மெமரி சிப் பற்றாக்குறை நிலவும் சூழலில், மைக்ரான் போன்ற விநியோகஸ்தர்களின் முக்கியப் பங்கை உயர்த்துகிறது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-10T06:16:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[CM கிட்ட போய் சொல்லு ஒன்னும் பண்ண முடியாது - புகார் கொடுத்த மறுநாளே கொல்லப்பட்ட நபர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/tiruvottiyur-youth-murdered-next-day-of-complaint-1789020093"></link>
            <id>https://news.lankasri.com/article/tiruvottiyur-youth-murdered-next-day-of-complaint-1789020093</id>
            <summary type="text">tiruvottiyur youth murdered after day of complaint to police: காவல்நிலையத்தில் புகார் கொடுத்த மறுநாளே சென்னை திருவொற்றியூரை சேர்ந்த நபர் கொல்லப்பட்ட ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>tiruvottiyur youth murdered after day of complaint to police: காவல்நிலையத்தில் புகார் கொடுத்த மறுநாளே சென்னை திருவொற்றியூரை சேர்ந்த நபர் கொல்லப்பட்ட சம்பவம் பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. </p><h3>

புகார் கொடுத்த மறுநாளே கொல்லப்பட்ட நபர்
</h3><p>
சென்னை திருவொற்றியூர் மேற்கு மாட வீதியைச் சேர்ந்த 26 வயதான பிரதீப் ராஜ் என்பவரை நேற்று மாலை தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில் மர்ம கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ca315741-2d53-47a3-8823-2ddc55daa59f/26-6aa247bf1dac9.webp' /></p><p>
நேற்று முன்தினம் திருவொற்றியூர் காவலநிலையத்தில், சிலர் தன்னை கொலை செய்ய முயற்சிப்பதாகவும், தன் உயிருக்கு பாதுகாப்பு இல்லை என கூறி குடும்பத்துடன் புகாரளித்துள்ளார். </p><p>

அதனைத்தொடர்ந்து வெளியே வந்த பேட்டியளித்த அவர், " என் அம்மா, நவநீதம் என்பவரிடம் கடன் வாங்கியதால் என்னை அழைத்து சம்பந்தப்பட்டவர்கள் சில ரவுடிகளை வைத்து மிரட்டினார்கள். </p><p>

திருவொற்றியூர் காவல் ஆய்வாளர் என்னை அழைத்து உங்களுக்குள் பகை இருக்கிறது. மாறி மாறி வெட்டிக் கொள்வீர்கள் என தகவல் வருகிறது என கூறினார்.&nbsp;</p><p></p><p>
 நான் சொன்னதற்கு ஏதாவது ஆதாரம் இருக்கிறதா என கேட்டதற்கு, நீ என்ன பெரிய ஆளா, கை, கால்களை உடைத்து விடுவேன். உயிரோட இருக்க மாட்ட, உன்னை சுட்டு விடுவேன், உன்னை வெட்டி திருச்செந்தூரில் சென்று கரைப்பேன், பொய் வழக்குப் போட்டு கைது செய்வேன் என காவல் ஆய்வாளர் என்னை மிரட்டுகிறார். </p><p>

நான் எந்த தவறும் செய்யவில்லை என கூறினேன். பதிலுக்கு ரவுடி ராதாகிருஷ்ணனிடம் என்னைப் பேச சொன்னார். </p><p>

மேலும் நீ முதலமைச்சரிடம் வேண்டுமானாலும் போய் புகார் சொல்லிக்கொள். உனக்காக வரும் வழக்கறிஞரால் என்ன செய்ய முடியும். அவர்களால் நீதிமன்றத்தில் மட்டுமே பார்க்க முடியும். இது என் காவல் நிலையம்" என கூறியுள்ளார். </p><p>

காவல் ஆய்வாளர் மிரட்டியதாக புகார் அளித்த நபர் பேட்டியளித்த மறுநாளே கொல்லப்பட்டுள்ள சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><h3> 

உதயநிதி ஸ்டாலின் கண்டனம் </h3><p>

இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், "தலைநகர் சென்னையில் மீண்டும் ஒரு கொடூர கொலை அரங்கேறி இருப்பது கடும் அதிர்ச்சி அளிக்கிறது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/41b917e5-6549-4d4e-81b0-5e6f72083d97/26-6aa247bfc63f3.webp' /></p><p>
‘கடன் தொல்லை கொடுக்கிறார்கள்’ என பாதுகாப்பு கேட்ட பிரதீப்ராஜ் எனும் இளைஞரை, ‘உயிரோடு இருக்க மாட்ட.. பொய் Case போட்டு உள்ள தள்ளுவேன்’ என்று திருவொற்றியூர் காவல் ஆய்வாளர் மிரட்டியதாக சம்பந்தப்பட்ட இளைஞரே நேற்று முன் தினம் வீடியோ வெளியிட்ட நிலையில், நேற்று அவர் கொலை செய்யப்பட்டு இருக்கிறார்.</p><p>

‘CM-ட்ட வேணும்னா போய் சொல்லு. என்னைய ஒன்னும் பண்ண முடியாது’ என்று திருவொற்றியூர் காவல் ஆய்வாளர் சொன்னதாகவும் கொலையாவதற்கு ஒரு நாள் முன்பு பிரதீப்ராஜ் கூறியுள்ளார்.

காவல்துறைக்கு பொறுப்பு வகிக்கும் முதல்வரை காவல்துறையினரே DUMMY CM ஆக நினைக்கிறார்களா?</p><p> 

காவல்துறையிடம் பாதுகாப்பு கேட்டால் கொலை செய்யப்படுவார்கள் என்ற புதிய வரலாற்றை இந்த Circus ஆட்சியாளர்கள் உருவாக்கி இருக்கிறார்கள்.</p><p>

சட்டமன்றத்தில் சட்டம் ஒழுங்கு குறித்து கேள்வி கேட்டால், ‘1974-இல் என்ன நடந்து தெரியுமா, ED என்ன பண்ணுச்சு தெரியுமா’ என்று Divert செய்யும் முதலமைச்சர், இந்த கொலைக்கு என்ன பதில் வைத்திருக்கிறார்.
</p><p>
இந்த வழக்கில் திருவொற்றியூர் காவல் ஆய்வாளர் உட்பட சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் வழக்குப்பதிவு செய்வதோடு, சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனை பெற்றுத்தர வேண்டும்.&nbsp;</p><p><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">தலைநகர் சென்னையில் மீண்டும் ஒரு கொடூர கொலை அரங்கேறி இருப்பது கடும் அதிர்ச்சி அளிக்கிறது.<br><br>‘கடன் தொல்லை கொடுக்கிறார்கள்’ என பாதுகாப்பு கேட்ட பிரதீப்ராஜ் எனும் இளைஞரை, ‘உயிரோடு இருக்க மாட்ட.. பொய் Case போட்டு உள்ள தள்ளுவேன்’ என்று திருவொற்றியூர் காவல் ஆய்வாளர் மிரட்டியதாக…</p>&mdash; Udhay (@Udhaystalin) <a href="https://x.com/Udhaystalin/status/2097900236282703980?ref_src=twsrc%5Etfw">September 10, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>

தலைநகரில் மீண்டும் ஒரு கொலை நடக்காமல் இருப்பதற்கு தேவையான கடுமையான நடவடிக்கையை இந்த அரசு எடுக்க வேண்டும்" என பதிவிட்டுள்ளார்.&nbsp; &nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-10T06:15:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இறுதிகிரியைக்கு சென்ற தாய்க்கும் மகனுக்கும் நேர்ந்த துயரம் ; பலியான பல்கலை மாணவன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/tragedy-strikes-mother-and-son-at-funeral-1789020657"></link>
            <id>https://jvpnews.com/article/tragedy-strikes-mother-and-son-at-funeral-1789020657</id>
            <summary type="text">அனுராதபுரம், மரிதன்கடவல பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் தாயும் மகனும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



மரிதன்கடவல நகரில் நேற்று (0...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">அனுராதபுரம், மரிதன்கடவல பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் தாயும் மகனும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p style="text-align: justify; ">


மரிதன்கடவல நகரில் நேற்று (09) காலை 10.35 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/caf5430e-e93b-446f-b359-a885a0fab0be/26-6aa249f2eadca.webp' /></p><h2 style="text-align: justify; ">மேலதிக விசாரணை</h2><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">


தம்புள்ளை பகுதியில் உறவினர் ஒருவரின் இறுதிக் கிரியையில் கலந்துகொள்வதற்காக தாயும் மகனும் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போதே இந்த விபத்து இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p style="text-align: justify; ">



விபத்தில் 47 வயதுடைய தாய் மற்றும் அவரது 24 வயதுடைய மகன் ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">



உயிரிழந்த இளைஞர் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்று வந்த பல்கலைக்கழக மாணவர் என தெரியவந்துள்ளது.
</p><p style="text-align: justify; ">


விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-10T06:15:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[டொனால்ட் ட்ரம்ப் வெளியிட்ட மகிழ்ச்சி தகவல் ; முடிவுக்கு வரும் ஈரான் போர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/happy-news-announced-by-donald-trump-1789009998"></link>
            <id>https://canadamirror.com/article/happy-news-announced-by-donald-trump-1789009998</id>
            <summary type="text">எதிர்வரும் நவம்பரில் நடைபெறும் இடைத்தேர்தலுக்குப் பின்னர் உடனடியாக ஈரான் போர் முடிவுக்கு வரும் என தாம் கருதுவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெ...</summary>
            <content type="html"><![CDATA[<p>எதிர்வரும் நவம்பரில் நடைபெறும் இடைத்தேர்தலுக்குப் பின்னர் உடனடியாக ஈரான் போர் முடிவுக்கு வரும் என தாம் கருதுவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். </p><p>

டெக்சாஸ் செல்வதற்கு முன்னர் ஊடகவியலாளர்களுக்கு அவர் இதனைக் குறிப்பிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/abee4bb2-817f-4279-9930-5e0230e25678/26-6aa220505cea2.webp' /></p><p> 

ஈரானால் இதற்கு மேல் தாக்குப்பிடிக்க முடியாது என்பதால், தேர்தலுக்குப் பிறகு உடனடியாக போர் முடிவுக்கு வரும் என நான் நினைக்கிறேன் என்று ட்ரம்ப் கூறினார்.</p><p> 

ஈரானுடனான போரை முடிவுக்குக் கொண்டுவரக் கோரி, அமெரிக்க ஜனாதிபதி தனது சொந்த குடியரசுக் கட்சிக்குள்ளிருந்தே அழுத்தத்தை எதிர்நோக்கி வருவதுடன் அவருக்கான கருத்துக் கணிப்பு ஆதரவும் குறைந்து வருகின்றது. </p><p>

பெப்ரவரியில் போர் தொடங்கியதிலிருந்து, இந்த மோதல் எப்போது முடிவடையும் என்பது குறித்து ட்ரம்ப் பல்வேறு காலக்கெடுவை முன்பு அளித்திருந்தார். </p><p>

ஆனால், போர் தொடர்ந்தும் நீடித்து வருவதால் ட்ரம்ப் மீது பல்வேறு விமர்சனங்கள் நேரடியாகவே எழுந்துள்ளன. 

மத்திய கிழக்கில் அதிகரித்துள்ள மோதல்கள் காரணமாக, நேற்றைய தினம் கச்சா எண்ணெய் விலை மீண்டும் 100 அமெரிக்க டொலரை கடந்து விற்பனையாகின்றது. </p><p>

இது கடந்த ஜூலை மாதத்திற்குப் பின்னர் முதல் முறையாக ஏற்பட்ட பாரிய அதிகரிப்பாகும்.</p><p> 

ஈரான் போர் சர்ச்சைகளுக்கு மத்தியில் அமெரிக்க நேரப்படி இன்றைய தினம் குடியரசுக் கட்சி மாநாட்டில் ட்ரம்ப் சிறப்புரை ஆற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-09-10T06:10:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Tony</name>
            </author>
            <title type="text"><![CDATA[மண்டாடி, சர்தார் 2 முதல் நாள் வசூல் கணிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/sardar-2-mandaadi-first-day-box-office-prediction-1789006478"></link>
            <id>https://cineulagam.com/article/sardar-2-mandaadi-first-day-box-office-prediction-1789006478</id>
            <summary type="text">மண்டாடி

சூரி நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ள படம் மண்டாடி. இப்படம் பிரம்மாண்ட பட்ஜெட்டில் போட் ரேஸை மையமா...</summary>
            <content type="html"><![CDATA[<h2>மண்டாடி</h2><p>

சூரி நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ள படம் மண்டாடி. இப்படம் பிரம்மாண்ட பட்ஜெட்டில் போட் ரேஸை மையமாக கொண்டு வெளிவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5cc4e74c-dad1-4eb8-ae00-ab3a869f9d39/26-6aa212920ecba.webp' /></p><p> 

இந்த படம் முன்பதிவு ரூ. 2 கோடிகளுக்கு மேல் ஆக, முதல் நாள் கண்டிப்பாக ரூ. 7 கோடி வரை வசூல் வரும் என பாக்ஸ் ஆபிஸ் நிபுணர்கள் கணித்துள்ளனர். கண்டிப்பாக சூரி திரைப்பயணத்தில் இவை மிகப்பெரிய ஓப்பனிங் தான்.
</p><h2>
சர்தார் 2</h2><p>

கார்த்தி, எஸ் ஜே சூர்யா நடிப்பில் மித்ரன் இயக்கத்தில் பிரம்மாண்டமாக இன்று ஸ்பை திரில்லராக சர்தார் 2 வெளியாகியுள்ளது. ஏற்கனவே சர்தார் படம் ரூ. 100 கோடி வசூல் செய்து ஹிட் அடித்ததால், தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் நல்ல எதிர்பார்ப்பில் உள்ளது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/22d4305c-a209-4821-a2eb-6f070b11c426/26-6aa21292ba411.webp' /></p><p></p><p>சர்தார் 2 ஏற்கனவே ரூ. 4 கோடிகள் வரை முன்பதிவு செய்யப்பட்டுள்ளதால், உலகம் முழுவதும் இப்படம் ரூ. 10 கோடி வரை முதல் நாள் வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/348fbdaa-3327-44f7-bc39-d6a9c7270bca/26-6aa212936ecac.webp' /></p><p>இந்த இரண்டு படங்களில் தமிழகத்தை பொறுத்தவரை சூரியின் மண்டாடி படத்திற்கே நிறைய நல்ல தியேட்டர்கள் கிடைத்ததாகவும், இப்படத்தை ரெட் ஜெயிண்ட் நிறுவனம் வெளியிட தமிழகத்தில் மண்டாடி கை கொஞ்சம் ஓங்கி தான் உள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-10T06:10:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Fathima</name>
            </author>
            <title type="text"><![CDATA[மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்- வேட்பாளர்கள் அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/announcement-of-candidates-tvk-party-1789019876"></link>
            <id>https://ibctamilnadu.com/article/announcement-of-candidates-tvk-party-1789019876</id>
            <summary type="text">மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றி கூட்டணி சார்பில் மதுராந்தகம்(தனி), தாராபுரம்(தனி) சட்டப்பேரவை தொகுதிகளின் இடைத்தேர்தலுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள...</summary>
            <content type="html"><![CDATA[<p>மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றி கூட்டணி சார்பில் மதுராந்தகம்(தனி), தாராபுரம்(தனி) சட்டப்பேரவை தொகுதிகளின் இடைத்தேர்தலுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
</p><p>
இதுதொடர்பில் தமிழக வெற்றிகழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
</p><p>
அனைவருக்கும் வணக்கம்.
</p><p>
வருகிற 06.10.2026 அன்று நடைபெற உள்ள மதுராந்தகம் (தனி), தாராபுரம் (தனி) ஆகிய சட்டமன்றத் தொகுதிகளின இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி சார்பில் தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர்களாகக் கீழ்க்காண்பவர்கள் போட்டியிடுவார்கள்.
</p><p>


1. 35-மதுராந்தகம் (தனி) - திருமதி K.மரகதம் குமரவேல், Ex.M.LA.. கழகத் துணைப் பொதுச் செயலாளர்
</p><p>
2. 101-தாராபுரம் (தனி) திருமதி.சத்தியபாமா. Ex.MLA.. திருப்பூர் தென்கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர்
</p><p>


கழக நிர்வாகிகள் மற்றும் தோழர்கள் அனைவரும் வெற்றி ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு நம் வெற்றி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரித்து, வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றுத் தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fba7807e-bde0-4928-99ac-256a38febd08/26-6aa24757aa36d.webp' /><br></p>]]></content>
            <updated>2026-09-10T06:00:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[திடீரென நுழைந்த ட்ரோன்கள் ; நூழிலையில் தப்பிய உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/drones-enter-zelensky-narrowly-escapes-1789019924"></link>
            <id>https://canadamirror.com/article/drones-enter-zelensky-narrowly-escapes-1789019924</id>
            <summary type="text">உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலன்ஸ்கி சென்ற விமானம் ட்ரோன் தாக்குதலில் இருந்து நூலிழையில் தப்பியதாக நார்வே பிரதமர் ஜோனாஸ் கார் ஸ்டோரே தெரிவித்துள்ளதாக...</summary>
            <content type="html"><![CDATA[<p>உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலன்ஸ்கி சென்ற விமானம் ட்ரோன் தாக்குதலில் இருந்து நூலிழையில் தப்பியதாக நார்வே பிரதமர் ஜோனாஸ் கார் ஸ்டோரே தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p>உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்த நிலையில், ஜெலன்ஸ்கி மால்டோவாவில் இருந்து நார்வேக்கு விமானத்தில் புறப்பட்டபோது இந்த சம்பவம் நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/02f06781-5443-4f05-9fac-0ab703b6728c/26-6aa24715bd979.webp' /></p><p>மால்டோவா தலைநகர் சிசினாவ் விமான நிலையத்தில் இருந்து ஜெலன்ஸ்கி சென்ற விமானம் புறப்படுவதற்கு முன்பு, அந்த நாட்டின் வான்பரப்பில் ட்ரோன் ஒன்று நுழைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளத.</p><p>இதையடுத்து பாதுகாப்பு காரணங்களுக்காக மால்டோவா வான்பரப்பு தற்காலிகமாக மூடப்பட்டது. இதனால் ஜெலன்ஸ்கியின் விமானம் உள்பட பல விமானங்களின் பயணம் தாமதமானது.</p><p>இதுகுறித்து நார்வே பிரதமர் ஜோனாஸ் கார் ஸ்டோரே கூறுகையில், “மால்டோவாவில் இருந்து புறப்படத் தயாராக இருந்தபோது ஜெலன்ஸ்கியின் விமானம் டிரோன் ஒன்றால் தாக்கப்படுவதில் இருந்து நூலிழையில் தப்பியது” என்று தெரிவித்துள்ளார்.</p><p> ஆனால், ட்ரோன் விமானத்திற்கு எவ்வளவு அருகில் வந்தது என்பது குறித்த விவரங்களை அவர் தெரிவிக்கவில்லை.</p><p>
மால்டோவா அதிகாரிகளின் தகவலின்படி, ரஷ்யாவை சேர்ந்ததாக கருதப்படும் 2 டிரோன்கள் அந்த நாட்டின் வான்பரப்புக்குள் நுழைந்தன. அதில் ஒரு ட்ரோன் தலைநகர் அருகே உள்ள வயல்வெளியில் விழுந்து தீப்பிடித்தது. மற்றொரு டிரோன் ருமேனியா நோக்கி சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> இதையடுத்து ஜெலன்ஸ்கி சென்ற விமானம் புறப்பட அனுமதிக்கப்பட்டது என குறிப்பிட்டனர்.</p>]]></content>
            <updated>2026-09-10T05:59:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஞானசாரருக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரி கொடுத்த சலுகை! இல்லை என்று உயர் நீதிமன்றம் அதிரடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/gnanasara-thero-s-court-order-1789019313"></link>
            <id>https://tamilwin.com/article/gnanasara-thero-s-court-order-1789019313</id>
            <summary type="text">நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டின் பேரில் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு, முன்னாள் ஜனாதிபதி...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டின் பேரில் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு, முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன வழங்கிய பொது மன்னிப்பு செல்லாது என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.&nbsp;</p><p>காணாமல் போன பத்திரிகையாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா எக்னெலிகொட மற்றும் பலர் தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மனுக்களை உயர் நீதிமன்றம் பரிசீலித்த பின்னர், இன்று (10.09.2026) இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.</p><h2>முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன&nbsp;</h2><p>
 

நீதிமன்ற அவமதிப்புக் குற்றத்திற்காக ஞானசார தேரருக்கு 2018ஆம் ஆண்டு மேன்முறையீட்டு நீதிமன்றம் ஆறு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b43cb4fc-f2ab-45c5-96b8-21ddbc9583ba/26-6aa248a136726.webp' /></p><p>
</p><p>
 

முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவருக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கியதை அடுத்து, ஞானசார தேரர் பின்னர் விடுவிக்கப்பட்டார்.
</p><p>இந்நிலையில் ஞானசார தேரருக்கு வழங்கப்பட்ட மன்னிப்பை நிலைநிறுத்த முடியாது என்று உயர் நீதிமன்றம் தற்போது தீர்ப்பளித்துள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-10T05:56:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[லிமினி அரசியலில் ஈடுபடுவது தொடர்பில் அவரின் தந்தை திலக் வீரசிங்க சொன்ன பரபரப்பான கருத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/limini-weerasinghe-namal-1789019323"></link>
            <id>https://tamilwin.com/article/limini-weerasinghe-namal-1789019323</id>
            <summary type="text">அநுராதபுரத்தில் மகிந்த ராஜபக்ச தலைமையில் 12 ஆம் நடைபெறவுள்ள கூட்டத்தில் லிமினி கலந்து கொள்ளுவது சாத்தியமில்லை எனவும் லிமினியின் தந்தையும் நாமல் ராஜபக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>அநுராதபுரத்தில் மகிந்த ராஜபக்ச தலைமையில் 12 ஆம் நடைபெறவுள்ள கூட்டத்தில் லிமினி கலந்து கொள்ளுவது சாத்தியமில்லை எனவும் லிமினியின் தந்தையும் நாமல் ராஜபக்சவின் மாமனார் பிரபல தொழிலதிபர் திலக் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
</p><p>வலையொளிதளம் ஒன்றுக்கு இன்று (10.06.2026) வழங்கிய விசேட செவ்வியிலேயே இதனை குறிப்பிட்டுள்ளார்.
இதில் அவர் பல சர்ச்சைக்குரிய தகவல்களை வெளியிட்டுள்ளார்.அதில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது
</p><h2>
</h2><p></p><h2>லிமினி தந்தைக்கு சொன்னது</h2><p>நான் லிமினியிடம் கேட்டபோது அவர் அப்படி ஆயத்தமாக இல்லை என்று சொன்னார். இன்னும் மூன்று நாட்கள் இருக்கிறது. எங்கள் நிலைமை என்னவென்றால் இது எங்கிருந்து வெளியே வருகிறது? லிமினி 12ஆம் திகதி அநுராதபுர மேடையில் ஏறமாட்டார்.
எனக்குத் தெரிந்தவரையில் இல்லை.</p><p>இன்று வரை அவர் ஏறுவாரா என்பது எனக்குத் தெரியாது. அதற்கு ஒரு காரணம் இருக்கிறது. லிமினி நாமலை விட்டுவிட்டு மேடையில் ஏறி அரசியலில் மேலே வரப் போகிறாரா? என்பது சாத்தியமில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9360d246-97a0-48d1-a9ac-0138d2998974/26-6aa244bde0050.webp' /></p><p>ஆனால் இப்போது எங்களது கடமை என்னவென்றால் நாமலைப் பார்த்துக் கொள்வது பிள்ளைகளைப் பார்த்துக்கொள்வது. அதுதான் லிமினியின் கடமை. நாமலும் அவரின் பிள்ளைகள் இருவரும் எங்கள் வீட்டில் தான் இருக்கிறார்கள்.</p><p>எங்கள் வீட்டில் இருந்து தான் உணவு அனுப்புகிறோம். 
வீட்டில் வேலை செய்யும் ஆட்கள் தான் சமைக்கிறார்கள். 
2029 ஜனாதிபதி வேட்பாளர் எனது மகள் லிமினி என குறிப்பிடுகிறார்கள்.</p><p>எனக்குத் தெரியாது. மற்றொன்றுஇ நான் அதை ஏற்றுக்கொள்வதும் இல்லை. வீட்டில் அப்படி ஒரு உரையாடலும் நடக்கவில்லை. இது எங்கிருந்து இந்த அளவுக்கு வெளியே வந்தது என்பதுதான் கேள்வி என அவர் குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p>&nbsp;</p><p>&nbsp; &nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-09-10T05:54:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்துதல் தொடர்பில் மேலும் ஒரு நாட்டுடன் ஒப்பந்தம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/uk-deal-with-belgium-to-stop-people-smugglers-1789016839"></link>
            <id>https://news.lankasri.com/article/uk-deal-with-belgium-to-stop-people-smugglers-1789016839</id>
            <summary type="text">Britain has struck a deal with Belgium to stop people smugglers: ஆட்கடத்தல்காரர்களைக் கட்டுப்படுத்துவது தொடர்பில், பெல்ஜியம் நாட்டுடனும் ஒப்பந்தம் ஒன்...</summary>
            <content type="html"><![CDATA[<p>Britain has struck a deal with Belgium to stop people smugglers: ஆட்கடத்தல்காரர்களைக் கட்டுப்படுத்துவது தொடர்பில், பெல்ஜியம் நாட்டுடனும் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது பிரித்தானியா.
</p><p>

சட்டவிரோத புலம்பெயர்வோர் சிறுபடகுகள் மூலம் ஆங்கிலக்கால்வாய் வழியாக பிரித்தானியாவுக்குள் நுழைவதைக் கட்டுப்படுத்துவது இன்னமும் பிரித்தானியாவுக்கு சவாலாகவே உள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fe940d37-93fa-427f-a7c6-fccdb2f79a07/26-6aa23b0971edc.webp' /></p><p>
அதற்குக் காரணம், இந்த சட்டவிரோத புலம்பெயர்வோர் வெறுமனே பிரான்சை மட்டும் பின்னணியாகக் கொண்டு இயங்கவில்லை. </p><p>அவர்கள் பல நாடுகளிலிருந்து இயங்குகிறார்கள் என நாம் ஏற்கனவே குறிப்பிட்டதுண்டு.

அதை நிரூபிப்பதுபோல, சமீபத்தில், ஆட்கடத்தல்காரர்கள், பெல்ஜியம் நாட்டிலிருந்து புலம்பெயர்வோரை படகுகள் மூலம் பிரித்தானியாவுக்கு அனுப்புவது தெரியவந்துள்ளதாக பிரித்தானிய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது.</p><h3>

 பெல்ஜியம் நாட்டுடன் ஒப்பந்தம்
</h3><p>
ஆக, பிரான்சிலிருந்து ஆங்கிலக்கால்வாய் வழியாக பிரித்தானியாவுக்குள் நுழைய முயலும் சட்டவிரோத புலம்பெயர்வோரைக் கட்டுப்படுத்துவதற்காக பிரித்தானியா பிரான்சுடன் ஒப்பந்தம் செய்துகொள்ள, ஆட்கடத்தல்காரர்கள் பெல்ஜியம் நாட்டுக் கடற்கரைகளிலிருந்து படகுகள் மூலம் புலம்பெயர்வோரை பிரித்தானியாவுக்குள் அனுப்புகிறார்கள்.
</p><p>
ஆகவே, பெல்ஜியம் நாட்டிலிருந்து ஆங்கிலக்கால்வாய் வழியாக பிரித்தானியாவுக்குள் நுழைய முயலும் சட்டவிரோத புலம்பெயர்வோரைக் கட்டுப்படுத்த, பெல்ஜியம் நாட்டுடன் ஒப்பந்தம் ஒன்றைச் செய்துகொண்டுள்ளது பிரித்தானியா.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3220ef22-9db5-4fa4-96da-374959a067c2/26-6aa23b08bf590.webp' /></p><p>
ஆக, சட்டவிரோத புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்துவதற்காக, இனி பிரான்ஸ், பிரித்தானிய பொலிசாருடன், பெல்ஜியம் பொலிசாரும் இணைந்துகொள்ள இருக்கிறார்கள்.
</p><p>
அத்துடன், பிரித்தானியாவும் பெல்ஜியமும் உளவுத்துறை தகவல்களையும் தங்களுக்குள் பகிர்ந்துகொள்ள இருக்கின்றன.&nbsp;</p><p></p><p>

விடயம் என்னவென்றால், இந்த ஆண்டின் ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான நான்கு மாதங்களில் மட்டும், 32 முறை, பெல்ஜியம் நாட்டிலிருந்து ஆங்கிலக்கால்வாய் வழியாக சட்டவிரோத புலம்பெயர்வோர் பிரித்தானியாவுக்குள் நுழைய முயற்சிப்பதை பெல்ஜியம் பொலிசார் கவனித்துள்ளார்கள்.
</p><p>
கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில், வெறும் இரண்டு முறை மட்டுமே இத்தகைய முயற்சிகள் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
</p><p>
அதாவது, பிரான்சிலிருந்து ஆங்கிலக்கால்வாய் வழியாக பிரித்தானியாவுக்குள் நுழைய முயலும் சட்டவிரோத புலம்பெயர்வோரைக் கட்டுப்படுத்த பிரான்ஸ் பொலிசார் நடவடிக்கைகளைத் துவக்கியதால், ஆட்கடத்தல்காரர்கள், பெல்ஜியம் நாட்டுக் கடற்கரைகளிலிருந்து படகுகள் மூலம் புலம்பெயர்வோரை பிரித்தானியாவுக்குள் அனுப்பத் துவங்கியுள்ளார்கள் என்பது தெளிவாகிறது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-10T05:50:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[மோசடி செய்த எவரையும் சிறையில் காணவில்லை! சிறைச்சாலையில் கண்ட காட்சியை வெளிப்படுத்திய சமிந்த விஜேசிறி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/the-fraudster-not-found-prison-chaminda-wijesiri-1789019182"></link>
            <id>https://tamilwin.com/article/the-fraudster-not-found-prison-chaminda-wijesiri-1789019182</id>
            <summary type="text">அரசமைப்பின் 22ஆவது திருத்தத்தின் ஊடாக அரசு தனக்கு தானே குழி தோண்டிக்
கொள்கின்றது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற
உறுப்பினர் சம...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரசமைப்பின் 22ஆவது திருத்தத்தின் ஊடாக அரசு தனக்கு தானே குழி தோண்டிக்
கொள்கின்றது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற
உறுப்பினர் சமிந்த விஜேசிறி தெரிவித்துள்ளார்.</p><p>இந்த திருத்தத்தால் நாடும் எதிர்க்கட்சிகளும்
அழியும் அபாயம் உள்ளன என்றும் எச்சரித்துள்ளார்.</p><p>

நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற பாதுகாப்புப்பணியாள்
தொகுதியினரின் தலைமையதிகாரி (நீக்கல்) சட்டமூலம் மீதான விவாதத்தில்
உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,</p><h2><span style="color: inherit; font-size: 1.75rem;">மத்திய வங்கி பிணைமுறி மோசடி&nbsp;</span></h2><p>

"நான் வெலிக்கடைச் சிறையில் இருந்தபோது, மத்திய வங்கி பிணைமுறி மோசடி நபரை காணவில்லை. சிறை முழுவதும் தேடியும் அவர் இருக்கவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1fb5d8f1-8cfc-4c74-a45a-155d0093743b/26-6aa2442fe1c23.webp' /></p><p> </p><p>உகண்டாவில் பணத்தை
வைத்திருந்ததாக கூறப்பட்டவரோ அல்லது வெள்ளைப்பூடு, சீனி மற்றும்
கடவுச்சீட்டு மோசடிகளுடன் தொடர்புடையவர்களோ எவரையும் சிறையில் காணவில்லை.
அனைவரும் வெளியில் தான் சுதந்திரமாகத் திரிந்துகொண்டிருக்கின்றார்கள்.
</p><p>
போரை வென்று, அதிக காலத்துக்கு ஆட்சியில் இருக்க முயன்றவர்கள் 2022ஆம் ஆண்டில்
மக்களால் தோற்கடிக்கப்பட்டனர். </p><p>மக்களுக்குப் பொருத்தமில்லாமல் ஆட்சியைத்
தக்கவைக்க முயன்ற காரணத்தினாலேயே அவர்களுக்கு அந்த நிலை ஏற்பட்டது. அதேபோன்று,
தற்போதைய அரசு தனது இருப்புக்காகவே 22ஆவது திருத்தத்தைக் கொண்டு வருகின்றது.இது அரசு தனக்குத் தானே தோண்டிக் கொள்ளும் குழியாகும்.</p><h2>பொதுமன்னிப்பு நிறுத்தம்</h2><p>

தேசிய பண்டிகைக் காலங்களில் கைதிகளுக்கு வழங்கப்பட்டு வந்த பொதுமன்னிப்பு
வழங்குவது இந்த அரசு வந்த பின்னர் நிறுத்தப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a4363948-4278-4a30-99be-7093baf582fa/26-6aa244309bc36.webp' /></p><p> இதனால் குற்றம்
செய்தவர்களுக்குத் தண்டனை வழங்கப்பட்டாலும், சில காரணங்களுக்காக அவர்கள்
விடுதலை பெறும் சந்தர்ப்பங்கள் இல்லாமல் போவது அநீதியாகும்.
</p><p>
இதேவேளை, 70 வயதுக்கும் மேற்பட்ட சிறைக் கைதிகள் இருக்கின்றனர். அவர்கள்
நடக்கக்கூடிய முடியாதவர்களாக இருக்கின்றனர். அவர்கள் பெரும் துன்பங்களை
அனுபவிக்கின்றனர். அவர்கள் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும்.</p><p> 18 வயதில் வந்த
இளைஞர், புனர்வாழ்வு பெற்று வெளியில் விடப்படாமல் 54 வயதில் சிறையிலேயே
உயிரிழந்த சம்பவத்தை நான் சிறையில் அவதானித்தேன். இவ்வாறான விடயங்களில்
மாற்றங்கள் ஏற்பட வேண்டும் என்றார்.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-10T05:46:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தங்கும் ஹொட்டலை முற்றுகையிட்ட பேட்ரியாட் போராட்டக்காரர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/protesters-surround-pakistan-cricket-team-1789019268"></link>
            <id>https://news.lankasri.com/article/protesters-surround-pakistan-cricket-team-1789019268</id>
            <summary type="text">Protesters surround Pakistan cricket team hotel: பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தங்கியிருந்த ஹொட்டலை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டனர்.
புலம்பெயர்ந்தவர்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>Protesters surround Pakistan cricket team hotel: பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தங்கியிருந்த ஹொட்டலை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டனர்.</p><p>
புலம்பெயர்ந்தவர்கள் என்ற வதந்தி பரவியதை அடுத்து, பதின்வயது பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தங்கியிருந்த ஹொட்டலை, புலம்பெயர்ந்தோருக்கு எதிரான போராட்டக்காரர்கள் குழு ஒன்று முற்றுகையிட்டது.</p><h2>வதந்தி பரவியது</h2><p>
</p><p>இங்கிலாந்துக்கு எதிரான போட்டிக்கு முன்னதாக, செவ்வாய்க்கிழமையன்று போர்ட்ஸ்மத்தில் உள்ள மேரியட் ஹொட்டலுக்குள் பேருந்தில் வந்திறங்கிய 19 வயதுக்குட்பட்டோர் கிரிக்கெட் அணியை, உள்ளூர்வாசிகள் பார்த்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/10724bde-d399-4579-9eee-a62eb8b39952/26-6aa24486d10c2.webp' /></p><p> </p><p>இதனையடுத்தே அவர்கள் புலம்பெயர்ந்தோர் என வதந்தி பரவியது. ஆனால், சுமார் 50 பேர்கள் கொண்ட ஒரு குழு அதற்குள் அந்த ஹொட்டலை முற்றுகையிட்டுள்ளது. </p><p>இந்த நிலையில், Reform UK அரசியல்வாதியான George Madgwick, உண்மையில் அவர்கள் கிரிக்கெட் வீரர்கள் தானா என்பதை உறுதி செய்ய ஹொட்டலுக்கு சென்றதாகவும் தெரிவித்துள்ளார்.</p><p></p><p> </p><p>ஹொட்டல் நிர்வாகம், அவர்கள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் என்பதை விளக்கியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதனிடையே, கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் தன்னிடம் நேரில் வந்து பேசியதாகவும்; அப்போது அதற்கான ஆதாரத்தை அவர்கள் காண்பித்ததாகவும், </p><p>பின்னர், ஹொட்டலுக்கு வெளியே கூடியிருந்த 40 முதல் 50 பேர் கொண்ட பேட்ரியாட் போராட்டக்காரர்களிடம் பேசி, அது ஒரு கிரிக்கெட் அணிதான் என்பதை அவர்களுக்கு உறுதிப்படுத்தியதாகவும் George Madgwick தெரிவித்துள்ளார்.</p><p> உடனடியாகக் கூடியிருந்த கூட்டம் அதை மரியாதையுடன் ஏற்றுக்கொண்டு, அமைதி நிலவச் செய்ததுடன், மற்றவர்களையும் அங்கிருந்து உடனடியாகக் கிளம்பிச் செல்லுமாறு கேட்டுக்கொண்டது. ஐந்து நிமிடங்களுக்குள்ளாகவே அவர்கள் அனைவரும் அங்கிருந்து சென்றுவிட்டனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><h2>தவறாக நினைத்திருக்கலாம்</h2><p> </p><p>மேலும், போர்ட்ஸ்மவுத்தில் புலம்பெயர்ந்தோரை ஏற்றிச் செல்ல உள்விவகார அமைச்சகம் பயன்படுத்திய அதே பேருந்து நிறுவனத்தைத்தான் கிரிக்கெட் வீரர்களும் பயன்படுத்தினார்கள் என்பதால், உள்ளூர் மக்கள் அவர்களையும் புலம்பெயர்ந்தோர் எனத் தவறாக நினைத்திருக்கலாம் என்றும் விளக்கமளித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bea637d5-b79d-4fa1-87fb-8e2fcaaa2318/26-6aa244878508e.webp' /></p><p> </p><p>இதனிடையே, போர்ட்ஸ்மவுத்தில் உள்ள RNLI தலைமையகத்திற்கு வெளியே மற்றொரு போராட்டம் நடைபெற்றது. அங்கு, கடலில் மக்களைக் காப்பாற்றியதற்காகக் கடலோரக் காவல்படையினரைக் கண்டித்து சுமார் ஒரு டசினுக்கும் அதிகமான பேட்ரியாட் போராட்டக்காரர்கள் திரண்டனர்.</p><p> ஞாயிற்றுக்கிழமை இரவு, ஆங்கிலக் கால்வாயைக் கடந்து கொண்டிருந்த ஒரு பெரிய ரப்பர் படகில் இருந்த சுமார் 140 புலம்பெயர்ந்தோரை RNLI தன்னார்வக் குழுவினர் மீட்டனர். இது, போர்ட்ஸ்மவுத்தின் ஈஸ்ட்னி பகுதியில் தீவிர வலதுசாரிகளின் கடுமையான போராட்டங்களையும் கடல் முற்றுகைகளையும் தூண்டியது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-10T05:45:05+00:00</updated>
        </entry>
    </feed>
