<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-08-30T04:22:39+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிக் பாஸ் 10 போட்டியாளர்கள் இவர்கள் தானா? லிஸ்ட் இதோ]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/bigg-boss-10-contestants-list-1788063354"></link>
            <id>https://cineulagam.com/article/bigg-boss-10-contestants-list-1788063354</id>
            <summary type="text">வருகிற செப்டம்பர் 6-ஆம் தேதி தொடங்கவுள்ள பிக் பாஸ் 10 நிகழ்ச்சியில் கலந்துகொள்ள போகும் போட்டியாளர்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் 10 ...</summary>
            <content type="html"><![CDATA[<p>வருகிற செப்டம்பர் 6-ஆம் தேதி தொடங்கவுள்ள பிக் பாஸ் 10 நிகழ்ச்சியில் கலந்துகொள்ள போகும் போட்டியாளர்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.</p><p></p><h2>

பிக் பாஸ் </h2><p>10 

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்க வருகிற செப்டம்பர் 6-ஆம் தேதி பிக் பாஸ் 10 தொடங்கவுள்ளது. இந்த நிலையில், காமென் மேன் கலந்துகொள்ள வேண்டும் என்பதற்காக, அதற்கான போட்டி சமீபத்தில் நடைபெற்றது. இதிலிருந்து முனியம்மா, ஜேசன் மற்றும் கரிஷ்மா ஆகிய மூன்று நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/23253e0b-e36d-4fa2-a9b7-e54f3ebc0974/26-6a93ae7d817fe.webp' /></p><h2>

பிக் பாஸில் கலந்துகொள்ளும் பிரபலங்கள்</h2><p>

இந்நிலையில், பிக் பாஸ் 10-ல் கலந்துகொள்ள போகும் பிரபலங்கள் குறித்த தகவல் ஒன்றின் பின் ஒன்றாக வெளியாகி வருகிறது. 

இதில், சீரியல் நடிகைகள் ஜனனி அசோக் குமார், ஹேமா ராஜ்குமார், ஆல்யா மானசா, அக்ஷிதா அசோக் மற்றும் ஷபானா ஆகியோர் கலந்துகொள்ளப்போவதாக கூறப்படுகிறது.</p><p>
</p><p>
மேலும், சீரியல் நடிகர்கள் நவீன் குமார், வினோத் பாபுவும் இதில் பங்குபெற போகிறார்களாம். இவர்களுடன் குக் வித் கோமாளி பிரபலம் டாலியும் பிக் பாஸ் வீட்டிற்குள் என்ட்ரி தரப்போவதாக பேச்சு அடிபடுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/75b4cf02-235e-4bbf-81da-26ce014e038d/26-6a93ae7e3acbf.webp' /></p><p>

அனைத்திற்கும் மேலாக சர்ப்ரைஸ் என்னவென்றால், ஓய்வுபெற்ற முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் முரளி விஜய் இப்போட்டியில் பங்குபெற போவதாகவும் கூறப்படுகிறது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-30T04:20:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[திடீரென காணாமல்போயுள்ள பொலிஸ் உத்தியோகத்தர்! தீவிரமடையும் தேடுதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/missing-police-officer-1788062365"></link>
            <id>https://tamilwin.com/article/missing-police-officer-1788062365</id>
            <summary type="text">தங்காலை - கிரிந்த பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பொலிஸ் சார்ஜென்ட் ஒருவர் கடந்த சில நாட்களாக காணாமல்போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கிரிந்த அருகே த...</summary>
            <content type="html"><![CDATA[<p>தங்காலை - கிரிந்த பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பொலிஸ் சார்ஜென்ட் ஒருவர் கடந்த சில நாட்களாக காணாமல்போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>
கிரிந்த அருகே தெபரவெவ பிரதேசத்தில் வசித்து வந்த 43 வயதுடைய பொலிஸ் சார்ஜண்ட் ஒருவரே இவ்வாறு காணாமல்போயுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு</h2><p>
கடந்த 23 ஆம் திகதி அதிகாலையில் தனது வீட்டில் இருந்து கடமைக்காக புறப்பட்டுச்சென்ற அவர், அதன் பின்னர் காணாமல்போயுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/74cf4c46-3c0f-4ec4-8a42-1489c5db5c8b/26-6a93ae6c7cd39.webp' /></p><p>
</p><p>
அவரைப் பற்றி இதுவரை எந்தத் தகவலும் கிடைக்கவில்லை என்றும் கிரிந்த பொலிஸ் நிலையத்தில் தற்போது முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
</p><p>
காணாமல்போயுள்ள பொலிஸ் உத்தியோகத்தரை தேடிக் கண்டறியும் வகையில் கிரிந்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.</p><p></p><p>&nbsp;</p><p><br></p>]]></content>
            <updated>2026-08-30T04:16:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாண் உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் விலைகள் குறித்து வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/bread-and-bakery-item-prices-will-hike-1788063048"></link>
            <id>https://tamilwin.com/article/bread-and-bakery-item-prices-will-hike-1788063048</id>
            <summary type="text">பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திகளின் விலைகள் தொடர்பில் நாளைய தினம் தீர்மானிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது.
 கோதுமை மாவின் விலை உயர்த்தப்பட்டதைத...</summary>
            <content type="html"><![CDATA[<p>பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திகளின் விலைகள் தொடர்பில் நாளைய தினம் தீர்மானிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது.</p><p>
 கோதுமை மாவின் விலை உயர்த்தப்பட்டதைத் தொடர்ந்து, உயர்த்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்த்தன தெரிவித்துள்ளார்.</p><p> 
பிரீமா மற்றும் செரண்டிப் ஆகிய நிறுவனங்கள் ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலையை நேற்று&nbsp; முதல் அமலுக்கு வரும் வகையில் 17 ரூபாவினால் உயர்த்தியுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d3db67b0-ca56-4d60-87a0-387f37355290/26-6a93ad498b37e.webp' /></p><p>
</p><p>மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழல் காரணமாக, கடந்த பெப்ரவரி மாதம் முதல் கப்பல் கட்டணங்கள், காப்பீட்டுக் கட்டணங்கள் மற்றும் தானியங்களின் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளதால் இந்த விலை திருத்தம் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>
மாவின் விலை அதிகரிப்புக்கு ஏற்ப பேக்கரி உற்பத்திகளின் விலைகளை உயர்த்துவது தொடர்பான இறுதி முடிவு நாளை ஊடகங்களுக்கு அறிவிக்கப்படும் என சங்கத்தின் தலைவர் ஜயவர்தன குறிப்பிட்டுள்ளார்.</p><p>
கோதுமா மாவின் விலை உயர்வினைத் தொடர்ந்து ஏற்கனவே சிற்றுண்டிகளின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-30T04:15:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[மாளவ்ய ராஜயோகம் தரும் சுக்கிரன்: இந்த ராசிகளின் செல்வம் இரட்டிப்பாகப்போகுது!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/venus-transit-in-libra-who-get-huge-luck-1788014210"></link>
            <id>https://manithan.com/article/venus-transit-in-libra-who-get-huge-luck-1788014210</id>
            <summary type="text">வேத ஜோதிடத்தின் படி, நவகிரகங்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசி மாற்றம் செய்து, மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அந்த வகையில் அசுரர்களி...</summary>
            <content type="html"><![CDATA[<p>வேத ஜோதிடத்தின் படி, நவகிரகங்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசி மாற்றம் செய்து, மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. </p><p>அந்த வகையில் அசுரர்களின் குருவாகவும், அழகு, ஆடம்பரம், காதல், செல்வம், செழிப்பின் காரணியாகவும் கருதப்படுபவர் சுக்கிரன்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3e0ddfae-fda8-4ab1-8ef5-923cf56a8313/26-6a92f801a43b3.webp' /></p><p>
</p><p>
சுக்கிரன் மாதம் ஒருமுறை ராசி மாறுவதுடன், ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளின் அதிபதியாகவும் உள்ளார். இந்நிலையில், செப்டம்பர் 2ஆம் தேதி சுக்கிரன் தனது சொந்த ராசியான துலாம் ராசிக்குள் நுழைகிறார். </p><p>இதனால் பஞ்சமகா புருஷ ராஜயோகங்களில் ஒன்றான மாளவ்ய ராஜயோகம் உருவாகிறது.

இந்த சுக்கிர பெயர்ச்சியின் தாக்கத்தால் சில ராசிக்காரர்களின் நிதிநிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படுவதுடன், தொழிலிலும் சிறப்பான வளர்ச்சியை அடையவுள்ளனர் என கணிக்கப்பட்டுள்ளது.</p><p>அப்படி செப்டம்பர் மாத சுக்கிர பெயர்ச்சியால் தொழிலில் கொடிகட்டிப் பறக்கப்போகும் ராசிக்காரர்கள் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.</p><h2>சிம்மம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/89f8d3e0-d97a-4171-bcba-2885dcf7f317/26-6a92f8025f7a4.webp' /></p><p>
சிம்ம ராசியின் 10 மற்றும் 3ஆம் வீட்டின் அதிபதியான சுக்கிரன் 3ஆம் வீட்டிற்கு செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களின் வாழ்வில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். </p><p>குறிப்பாக, சமூகத்தில் நல்ல அந்தஸ்தில் உள்ள புதிய நபர்களின் நட்பு கிடைக்கும். மேற்கொள்ளும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி கிடைக்கும். </p><p>வேலையில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். தொழிலை விரிவுபடுத்தும் வாய்ப்புகள் கிடைக்கும். அவற்றைத் திறம்பட பயன்படுத்திக் கொண்டால், தொழிலில் நல்ல உச்சத்தைத் தொடலாம். குறிப்பாக, வேலை தொடர்பாக மேற்கொள்ளும் பயணங்களால் நல்ல ஆதாயம் கிடைக்கும்.</p><p></p><p>
</p><h2>
மேஷம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/71609054-af7a-448b-8312-c5732b89fce4/26-6a92f80313f8f.webp' /></p><h2>
</h2><p>மேஷ ராசியின் 7 மற்றும் 2ஆம் வீட்டின் அதிபதியான சுக்கிரன் 7ஆம் வீட்டிற்கு செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் சாதகமான பலன்களைப் பெறுவார்கள்.நீண்ட காலமாக முடிக்க முடியாமல் இருந்த வேலைகள் வெற்றிகரமாக நிறைவடையும்.</p><p>பணிபுரிபவர்களுக்கு கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். நல்ல நிதி ஆதாயங்களைப் பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் கிடைக்கும். போட்டிகளில் எதிர்பார்த்த முடிவுகளைப் பெறுவீர்கள்.</p><h2>
விருச்சிகம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/864b8c71-cda6-4448-aaab-b2a449ee4076/26-6a92f803bd12e.webp' /></p><h2>
</h2><p>விருச்சிக ராசியின் 12ஆம் வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார்.இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தின் ஆதரவு கிடைக்கும். புதுமண தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க வாய்ப்புள்ளது. </p><p>போட்டிகள் மற்றும் தேர்வுகளில் நல்ல வெற்றியைப் பெறுவீர்கள். பயணங்களால் நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும். நீதிமன்ற வழக்குகளில் தீர்ப்புகள் சாதகமாக வரும்.தொழில் ரீதியாக சிறப்பான காலமாக இருக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கவும் வாய்ப்புள்ளது.</p><h2>
மிதுனம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e4c7320e-ece2-452e-a021-5132c25ede53/26-6a92f80475c3f.webp' /></p><p></p><h2>
</h2><p>மிதுன ராசியின் 5ஆம் வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இந்த ராசியைச் சேர்ந்த மாணவர்களுக்கு இக்காலம் அற்புதமாக இருக்கும். </p><p>குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். முதலீடுகளில் இருந்து எதிர்பார்த்த லாபம் கிடைக்கலாம். குடும்ப உறுப்பினர்களிடையே அன்பும் பிணைப்பும் அதிகரிக்கும். </p><p>எதிர்பாராத நிதி ஆதாயங்களைப் பெறுவதற்கான வாய்ப்புள்ளது. தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படுவதுடன், இரட்டிப்பு லாபம் கிடைக்கும்.மேற்கொள்ளும் ஒவ்வொரு முயற்சியிலும் நல்ல வெற்றி கிடைக்கும்.</p><p><b>இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).&nbsp; &nbsp;</b> &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW&nbsp;</a></u></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-30T04:11:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[சூரியனின் தெற்கு நோக்கிய நகர்வு! செப்டெம்பர் 7ஆம் திகதி வரை இலங்கையில் ஏற்படவுள்ள மாற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/weather-alert-in-sri-lanka-1788060439"></link>
            <id>https://tamilwin.com/article/weather-alert-in-sri-lanka-1788060439</id>
            <summary type="text">சூரியனின் தெற்கு நோக்கிய நகர்வு காரணமாக கடந்த ஆகஸ்ட் 28ஆம் திகதி முதல் செப்டெம்பர் 7ஆம் திகதி வரை இலங்கைக்கு அண்மையில் உள்ள அட்சரேகைகளுக்கு நேரடியாக ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>சூரியனின் தெற்கு நோக்கிய நகர்வு காரணமாக கடந்த ஆகஸ்ட் 28ஆம் திகதி முதல் செப்டெம்பர் 7ஆம் திகதி வரை இலங்கைக்கு அண்மையில் உள்ள அட்சரேகைகளுக்கு நேரடியாக மேலாக சூரியன் உச்சம் கொடுத்து வருகிறது. </p><p>

அதன்படி, இன்று (30.08.2026) நண்பகல் 12.11 மணியளவில் மன்னார், பெரியமடு, புளியங்குளம், வெலிஓயா மற்றும் புல்மோட்டை ஆகிய பகுதிகளுக்கு நேரடியாக மேலாக சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளது.</p><h2>இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்&nbsp;</h2><p>
</p><p>
இதேவேளை நாட்டின் பல பகுதிகளில் இன்று பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d9512e82-8fc7-430d-bef7-0678ba3891b7/26-6a93a99d038b3.webp' /></p><p> </p><p>

அதன்படி, ஊவா மாகாணத்திலும் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>

இதேவேளை, சப்ரகமுவ மாகாணத்திலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும்.</p><h2>வறண்ட வானிலை</h2><p> </p><p>மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என்பதுடன், நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக வறண்ட வானிலை நிலவும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ebcdfd88-935e-4196-90fe-75d8b60d6527/26-6a93a99dcc2c1.webp' /></p><p> </p><p>

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகள், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்கள், அத்துடன் திருகோணமலை, மொனராகலை, ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை மாவட்டங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40 முதல் 50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.</p><p> 

இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசுவதுடன், மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடும். 

எனவே, இதனால் ஏற்படக்கூடிய ஆபத்துகளைக் குறைத்துக் கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-30T03:55:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பணச்சலவையை கட்டுப்படுத்தும் மத்திய வங்கியின் வேலைத்திட்டம்! ஹர்ஷ டி சில்வா வெளியிட்ட தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/central-bank-not-have-planl-money-launder-harsha-1788060415"></link>
            <id>https://tamilwin.com/article/central-bank-not-have-planl-money-launder-harsha-1788060415</id>
            <summary type="text">இலங்கையில் நடைபெறும் பணச்சலவை தொடர்பான சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்தும் வகையிலான தெளிவான வேலைத்திட்டமொன்று மத்திய வங்கியிடம் இல்லை என நாடாளுமன்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் நடைபெறும் பணச்சலவை தொடர்பான சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்தும் வகையிலான தெளிவான வேலைத்திட்டமொன்று மத்திய வங்கியிடம் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா விமர்சித்துள்ளார்.</p><p>இதுவரையில் நாட்டில் இடம்பெற்று வருகின்ற சட்டவிரோத முயற்சிகளைத் தடுக்க முறையான நடவடிக்கை எதுவும் அரசு எடுக்கவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><h2>அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்ட திருத்தங்கள்</h2><p>அவர் மேலும் தெரிவிக்கையில், இதுபோன்ற நிதிக் குற்றங்களைத் தடுக்க, தற்போதுள்ள சட்டங்களை முறையாக நடைமுறைபடுத்த வேண்டிய அவசரத் தேவை உள்ளது.</p><p>இதற்கிடையே இந்த நிலையை சரிசெய்ய புதிய சட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும் என்று பிரதி நிதிஅமைச்சர் அனில் ஜயந்த அண்மையில் தெரிவித்திருந்தார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/48a945ed-d602-41d1-b7ca-70e9b23c0499/26-6a93a6e037ab6.webp' /></p><p>தற்போதுள்ள சட்டங்கள் குற்றவாளிகளுக்கு அபராதம் மட்டுமே விதிக்க முடியும் என்பதால், இந்தக் குற்றத்தை ஒரு குற்றமாக வகைப்படுத்தி, குற்றவாளிகளுக்கு அதற்கேற்ற தண்டனையை வழங்க புதிய சட்டங்கள் அவசியம்.
</p><p>எனினும் புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த முயற்சிப்பதற்குப் பதிலாக, 2019-ல் அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்ட திருத்தங்களைச் செயல்படுத்துவதில் தற்போதைய அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும்.</p><h2>சட்டத்திற்கான&nbsp;வரைவுத் திருத்தம்</h2><p>&nbsp;மத்திய வங்கியின் நிதிப் புலனாய்வுப் பிரிவு, 2024ஆம் ஆண்டு முதல் சந்தை வழியாக நடைபெறும் பணச்சலவை கும்பல்கள் குறித்த நடவடிக்கை எடுக்கக்கூடிய உளவுத் தகவல்களை வழங்கியிருந்தபோதிலும், இதுபோன்ற சட்டவிரோத முயற்சிகளைத் தடுக்க முறையான நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை.</p><p>
</p><p>
அமைச்சரவையின் ஒப்புதலைப் பெற்ற, சட்டத்திற்கான தொடர்புடைய வரைவுத் திருத்தம், தயாரிப்பிற்காக சட்ட மா அதிபர் திணைக்களத்துக்கு அனுப்பப்பட்டிருந்தாலும், கடந்த ஆறு ஆண்டுகளாக சட்ட மா அதிபர் திணைக்கள அலுவலகம் அதை பூர்த்தி செய்யத் தவறிவிட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1eb68be4-1263-474f-9c09-a0ac176555ee/26-6a93a71d632fb.webp' /></p><p>கேசினோக்களை ஒழுங்குபடுத்துவதற்காக ஒரு நிறுவனம் நிறுவப்பட்டிருந்தாலும், அவற்றை இயக்குவதற்கான முறையான விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகள் இல்லாததால் அவை முறையாகக் கட்டுப்படுத்தப்படவில்லை.</p><p>

இறக்குமதித் துறையில் ஈடுபட்டுள்ள சுமார் 500 நிறுவனங்களிடம் நிறுவனப் பதிவுக்கு அவசியமான சரிபார்க்கப்பட்ட முகவரிகள் மற்றும் சங்க விதிகள் இல்லை என்பதைத் தனது குழுவின் விசாரணைகள் வெளிப்படுத்தியுள்ளது.
</p><p>
அத்துடன் பந்தய சேவைகளில் ஈடுபட்டுள்ள சில கேசினோ நிறுவனங்கள் எந்த வரிகளையும் செலுத்தவில்லை என்று உள்நாட்டு இறைவரி திணைக்களம் வெளிப்படுத்தியுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.</p><p>[JQPBR3J</p><p></p>]]></content>
            <updated>2026-08-30T03:55:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆயுதங்களுடன் சிக்கிய போதைப்பொருள் வர்த்தகர்! பொலிஸார் விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/drug-dealer-arrested-with-weapons-1788061517"></link>
            <id>https://tamilwin.com/article/drug-dealer-arrested-with-weapons-1788061517</id>
            <summary type="text">மொனராகலை அருகே ஆயுதங்களுடன் போதைப்பொருள் வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தனமல்வில பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கங்கேயாய பகுதியில் நடத்தப்பட்ட சோ...</summary>
            <content type="html"><![CDATA[<p>மொனராகலை அருகே ஆயுதங்களுடன் போதைப்பொருள் வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>
தனமல்வில பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கங்கேயாய பகுதியில் நடத்தப்பட்ட சோதனையின் போது, ​​35 வயதுடைய நபர் ஒருவர் துப்பாக்கி மற்றும் சந்தேகத்திற்கிடமான போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><h2>போதைப்பொருள் தொடர்பான வழக்குகள்&nbsp;</h2><p>
</p><p>
வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட 12 குழல் தோட்டாக்களைப் பயன்படுத்தக்கூடிய துப்பாக்கி ஒன்றும், 5 கிராம் மற்றும் 370 மில்லிகிராம் சந்தேகத்திற்கிடமான போதைப்பொருளும் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸ் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b948112c-d013-4dcc-a835-ae4e144a656d/26-6a93a88c67f9c.webp' /></p><p>இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர் அதே பகுதியை சேர்ந்தவர் என்றும் கூறப்படுகின்றது. </p><p>சந்தேகநபர் மீது ஏற்கனவே குற்றவியல் மற்றும் போதைப்பொருள் தொடர்பான வழக்குகள் உள்ளதாக பொலிஸ் தெரிவித்துள்ளது.
</p><p>
சந்தேகநபர் வெல்லவாய நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட உள்ளதுடன், தனமல்வில பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.</p><p></p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-30T03:50:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Tony</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழ் சினிமா BookMyShow மூலம் அதிக டிக்கெட் விற்ற டாப் 10 படங்கள் லிஸ்ட்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/highest-ticket-sales-tamil-films-in-bookmyshow-1788059294"></link>
            <id>https://cineulagam.com/article/highest-ticket-sales-tamil-films-in-bookmyshow-1788059294</id>
            <summary type="text">வசூல் 

தமிழ் சினிமா தற்போது மிகப்பெரிய வளர்ச்சியை நோக்கி செல்கிறது. தமிழகத்திலேயே ரூ. 200 கோடிகளுக்கு மேல் வசூல் வரும் நிலையில் தமிழ் சினிமா வளர்ந்...</summary>
            <content type="html"><![CDATA[<h2>வசூல் </h2><p>

தமிழ் சினிமா தற்போது மிகப்பெரிய வளர்ச்சியை நோக்கி செல்கிறது. தமிழகத்திலேயே ரூ. 200 கோடிகளுக்கு மேல் வசூல் வரும் நிலையில் தமிழ் சினிமா வளர்ந்து உள்ளது</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8a6a14c5-7a7a-4eff-a5aa-f6903ad2babc/26-6a939ea1f18f8.webp' /></p><p></p><p>

இந்நிலையில், முன்பு போல் வசூல் விவரங்கள் கிடைப்பது தற்போது கஷ்டமில்லை; அனைத்து ஏரியாக்களும் 90% ட்ராக் செய்யும்படி தான் உள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cea3512a-db14-4fa1-8e89-f7a6cd0bbca2/26-6a939ea2aa173.webp' /></p><p> </p><h2>

Book My Show
</h2><p>
அந்த வகையில் Book My Show App மூலமாகவே எத்தனை டிக்கெட்டுகள் விற்றுள்ளது என்பதை நாம் தெரிந்துகொள்ளலாம், தற்போது இந்த ஆப் மூலம் அதிக டிக்கெட் விற்ற டாப் 10 படங்கள் என்னென்ன என்பதை பார்ப்போம்.</p><p>ஜெய்லர் - 9+ மில்லியன்
</p><p>லியோ - 7+ மில்லியன்
</p><p>கூலி - 6+ மில்லியன்
</p><p>அமரன் - 4.6 மில்லியன்
</p><p>கோட் - 4.51 மில்லியன்
</p><p>கருப்பு - 4.5 மில்லியன்
</p><p>ஜனநாயகன் - 4+ மில்லியன்</p><p>
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் - 2.9 மில்லியன்(ஓடிகொண்டு இருக்கிறது)
</p><p>வேட்டையன் - 2.7 மில்லியன்
</p><p>குட் பேட் அக்லி - 2.6 மில்லியன்&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-30T03:40:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[மீண்டும் அமெரிக்கப் பொருட்களைப் புறக்கணிக்கத் தொடங்கிய கனேடிய மக்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/canadians-on-boycotting-america-1788060909"></link>
            <id>https://news.lankasri.com/article/canadians-on-boycotting-america-1788060909</id>
            <summary type="text">Canadians on boycotting Trump’s America: கனேடிய மக்கள் மீண்டும் ட்ரம்பின் அமெரிக்காவைப் புறக்கணிக்கத் தொடங்கியுள்ளனர்.
கடந்த வார இறுதியில் இரு நாடுகள...</summary>
            <content type="html"><![CDATA[<p>Canadians on boycotting Trump’s America: கனேடிய மக்கள் மீண்டும் ட்ரம்பின் அமெரிக்காவைப் புறக்கணிக்கத் தொடங்கியுள்ளனர்.
</p><p>கடந்த வார இறுதியில் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் முறிந்ததைத் தொடர்ந்து, கனடாவின் 20 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான சரக்குகள் மீது அமெரிக்கா இந்த வாரம் 50 சதவீத சுங்க வரியை விதித்துள்ளது;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a37bd6de-0094-4b46-af55-7331a14b70d5/26-6a93a4ef32d29.webp' /></p><p> </p><p>இதற்குப் பதிலடியாக அதே அளவுக்கு வரி விதிக்கப்படும் என்று கனடியப் பிரதமர் மார்க் கார்னி உறுதியளித்துள்ளார். இதனையடுத்து, வியாழக்கிழமையன்று, டொனால்ட் ட்ரம்ப், ஒன்ராறியோ ஏரிக்கு அமெரிக்கா ஏரி எனப் பெயர் மாற்றுமாறு ஃபெடரல் நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுப் பதிலடி கொடுத்தார். </p><p>அமெரிக்க ஜனாதிபதியின் வர்த்தகப் போர் மற்றும் கனடாவை இன்னொரு மாகாணமாக இணைத்துக்கொள்வது குறித்த அச்சுறுத்தல்களுக்குப் பதிலடியாக, கடந்த ஆண்டின் தொடக்கத்தில் கனடியர்களிடையே தொடங்கிய அமெரிக்கப் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான பரவலான புறக்கணிப்பு நடவடிக்கைகளுக்கு இத்தகைய செயல்கள் மேலும் வலுசேர்த்துள்ளன. </p><p>இந்த நிலையில், அமெரிக்க நிர்வாகத்தின் அரசியல் மற்றும் பொருளாதார நிலைப்பாட்டிற்கு எதிர்வினையாகத் தங்கள் வாழ்க்கையில் எத்தகைய மாற்றங்களைச் செய்துகொண்டார்கள் என்பதை, கனடா முழுவதிலும் உள்ள 3,500-க்கும் மேற்பட்டோர் The Guardian நாளேடு நடத்திய இணையவழி அழைப்பின் வாயிலாகப் பகிர்ந்துகொண்டனர். </p><p>பலர் ஆழ்ந்த கோபத்தையும் துக்கத்தையும் வெளிப்படுத்தியபோதிலும், இது ஒரு புதிய வாழ்க்கை முறைதான் என்பதில் உறுதியாக இருந்தனர்.</p><p></p><p> </p><p>புதிய விளைபொருட்கள் உட்பட கனடிய மளிகைப் பொருட்களை மட்டுமே வாங்குவது மற்றும் எல்லைக்குத் தெற்கே (அமெரிக்காவிற்குள்) பயணம் செய்வதைப் புறக்கணிப்பது ஆகியவை பதிலளித்தவர்களிடம் அதிகம் காணப்பட்ட நடவடிக்கைகளாக இருந்தன. </p><p>அமெரிக்கத் தொழில்நுட்பம், Netflix, AmazonPrime, AppleTV மற்றும் Disney+ போன்ற ஸ்ட்ரீமிங் சேவைகள், பெட்ரோல், டெஸ்லா (Tesla) போன்ற வாகனங்கள் மற்றும் Jack Daniel’s உள்ளிட்ட விஸ்கி வகைகளுக்கான செலவுகளைச் செய்வதை கனடிய மக்கள் நிறுத்தியுள்ளனர். </p><p>எக்ஸ், பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடகத் தளங்களும் தவிர்க்கப்பட்டு வந்தன. ஜூலை மாதம், ஆங்கஸ் ரீட் நடத்திய ஒரு கணக்கெடுப்பில், மளிகைப் பொருட்கள் வாங்குபவர்களில் 40 சதவீதம் பேர், பொருட்கள் எங்கிருந்து வருகின்றன என்பதைத் தீவிரமாகச் சரிபார்ப்பதாகவும், அவர்களில் பெரும்பாலானோர் முடிந்தவரை அமெரிக்கப் பொருட்களைத் தவிர்ப்பதாகவும் கண்டறியப்பட்டது. </p><p>இதனிடையே, மளிகைக் கடைகள் மெக்சிகோ, பெரு, குவாத்தமாலா, சிலி மற்றும் தென்னாப்பிரிக்காவிலிருந்து வரும் விளைபொருட்களை அதிகளவில் வழங்கி வருகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e83598f6-b939-4109-9537-408c46b4801f/26-6a93a4efdb709.webp' /></p><p> </p><p>ரொறன்ரோவில் வசிக்கும் மற்றும் ஒரு நிதி நிறுவனத்தில் பணிபுரியும் 51 வயதான விக்ரம், அமெரிக்காவில் தனது குடும்பத்தினர் இருந்தபோதிலும் அங்கு செல்ல மறுத்துவிட்டதாகக் கூறினார். அதற்குப் பதிலாக அவர்கள் அவரைச் சந்திக்கிறார்கள். </p><p>அவரும் அமெரிக்கத் தயாரிப்புகளைத் தவிர்ப்பதுடன், தற்போது அமேசான் சேவைகளைப் புறக்கணித்து வருகிறார். ஆல்பர்ட்டாவின் கால்கரியில் வசிக்கும் ஓய்வுபெற்ற பொறியாளரான 61 வயது கர்ட், அமெரிக்க விஸ்கிகளைச் சுவைக்கும் தனது குழுவினர் ஆண்டுதோறும் அதற்காகப் பெருந்தொகையை – அதாவது சுமார் 10,000 அமெரிக்க டொலர்களை – செலவிடுவதாகக் கூறினார். </p><p>மேலும், ட்ரம்பின் விடுதலை நாள் மற்றும் முதல் கட்ட வரிவிதிப்புகளுக்குப் பிறகு, எங்கள் வெறுப்பை வெளிப்படுத்தும் ஒரு வழி, அமெரிக்க விஸ்கிகளை வாங்காமல் இருப்பதுதான் என்று நாங்கள் முடிவு செய்தோம், என்றார் அவர். </p><p>அதனால், அன்று முதல் நாங்கள் ஒரு அமெரிக்க டொலர் கூட செலவழிக்கவில்லை என்றார். அவரது மனைவியும் இனி கலிபோர்னியா ஒயினை அருந்துவதில்லை என புறக்கணித்து வருகிறார்; </p><p>மேலும், 30 ஆண்டுகளுக்கும் மேலாக அமெரிக்காவிற்குத் தொடர்ந்து சென்று வந்த போதிலும், 2025 ஜனவரிக்குப் பிறகு தாங்கள் அங்கு செல்லவில்லை என்று கர்ட் கூறியுள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-30T03:32:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை நாடாளுமன்றத்தின் சைபர் பாதுகாப்பிற்கு தீவிர அச்சுறுத்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/parliment-on-high-risk-of-cyber-attack-1788060649"></link>
            <id>https://tamilwin.com/article/parliment-on-high-risk-of-cyber-attack-1788060649</id>
            <summary type="text">இலங்கை நாடாளுமன்றத்தின் தகவல் மற்றும் சைபர் பாதுகாப்பில் பெரும் அபாயகரமான சூழ்நிலை நிலவுவதாக இலங்கை கணினி அவசர பதிலளிப்பு பிரிவு மேற்கொண்ட மதிப்பீட்டி...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை நாடாளுமன்றத்தின் தகவல் மற்றும் சைபர் பாதுகாப்பில் பெரும் அபாயகரமான சூழ்நிலை நிலவுவதாக இலங்கை கணினி அவசர பதிலளிப்பு பிரிவு மேற்கொண்ட மதிப்பீட்டில் தெரியவந்துள்ளது.
</p><p>2025 ஆம் ஆண்டிற்கான செயல்திறன் குறித்த மதிப்பாய்வு அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><h2>சைபர் பாதுகாப்பு தொடர்பான மதிப்பீடு</h2><p>
2025 ஆம் ஆண்டில் இலங்கை கணினி அவசர பதிலளிப்பு பிரிவினால் நாடாளுமன்றத்தின் தகவல் மற்றும் சைபர் பாதுகாப்பு தொடர்பான மதிப்பீடு மேற்கொள்ளப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8b861472-8b59-44d8-a895-acba8c660619/26-6a93a3eb377e9.webp' /></p><p> 
இதன்போது பரிசோதிக்கப்பட்ட 56 முக்கிய அம்சங்களில், 46 அம்சங்களில் உயர் மட்டத்திலான பாதுகாப்பு அச்சுறுத்தல் நிலவுவது கண்டறியப்பட்டுள்ளது.
</p><p>சைபர் தொழில்நுட்பத்தைத் தவறாகப் பயன்படுத்தி, டிஜிட்டல் அமைப்புகளுக்குள் அத்துமீறி நுழைந்து முக்கியமான ரகசியத் தகவல்களைத் திருடுதல், நாடாளுமன்றத்தின் அன்றாட செயல்பாடுகளுக்கு இடையூறு விளைவித்தல் மற்றும் அதிகாரப்பூர்வ இணையதள உள்ளடக்கங்களைச் சிதைத்து நிறுவனத்தின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்துதல் போன்ற ஆபத்துகள் நிலவுவதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><p>
இவ்விடயம் தொடர்பில் நாடாளுமன்ற நிர்வாகம் உடனடியாகத் தீவிரக் கவனம் செலுத்த வேண்டும் என அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.&nbsp;</p><p>&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-30T03:30:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[நான் இறக்கவில்லை..இதனால் தான் ஃபைனலுக்கு வரல!! செஃப் தாமு விளக்கம்...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/chef-damu-clarified-his-death-rumours-video-1788015569"></link>
            <id>https://viduppu.com/article/chef-damu-clarified-his-death-rumours-video-1788015569</id>
            <summary type="text">செஃப் தாமுபிரபல சமையல் கலைஞராக திகழ்ந்து பல தேசிய விருதுகளை வாங்கிய பெருமைக்குரியவர் தான் செஃப் தாமு. இந்த வாரம் ஆகஸ்ட் 30 ஆம் தேதியோடு நிறைவடையவுள்ள ...</summary>
            <content type="html"><![CDATA[<h2>செஃப் தாமு</h2><p>பிரபல சமையல் கலைஞராக திகழ்ந்து பல தேசிய விருதுகளை வாங்கிய பெருமைக்குரியவர் தான் செஃப் தாமு. இந்த வாரம் ஆகஸ்ட் 30 ஆம் தேதியோடு நிறைவடையவுள்ள குக் வித் கோமாளி 5 சீசனில் நடுவராகவும் இருந்து வந்தார். இந்நிகழ்ச்சியின் ஃபைனலுக்கு செஃப் தாமு பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1987ee86-91f4-4200-95ac-cb871b0132ab/26-6a92f3d37676e.webp' /></p><p> இந்நிலையில், சமீபகாலமாக அவரது உடல்நிலை குறித்து தவறான செய்திகள் பரவி வந்தது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வண்ணம் தாமு முற்றுப்புள்ளி வைத்து வந்தார். தற்போது செஃப் தாமு இறந்துவிட்டார் என்று அதனால் தான் குக் வித் கோமாளி 5 கிராண்ட் ஃபினாலேவுக்கு கலந்து கொள்ளவில்லை என்றும் தகவல் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. </p><h2>நான் இறக்கவில்லை</h2><p>இதனை அறிந்த தாமு, சமீபத்தில் நான் இறந்துவிட்டதாக வதந்திகள் வந்துக் கொண்டிருந்தது. தேவையில்லாதவர்கள் இதைப் பரப்புகிறார்கள். நான் ஆரோக்கியமாகத்தான் இருக்கிறேன். வதந்திகளை நம்ப வேண்டாம். காலில் ஊசி செலுத்தியதால் தனியார் நிகழ்ச்சியின் செமி ஃபைனலுக்கு பங்கேற்க முடியவில்லை, ஃபைனலில் பங்கேற்றேன், உங்கள் அனைவரையும் மீண்டும் சந்திப்பேன் என்று செஃப் தாமு கூறியிருக்கிறார்.</p><p><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/reel/Dck72_mJz6w/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/reel/Dck72_mJz6w/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/reel/Dck72_mJz6w/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by Damodaran Kothandaraman (@chef_damu)</a></p></div></blockquote> <script async src="//www.instagram.com/embed.js"></script></p>]]></content>
            <updated>2026-08-30T03:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[புதிய பயனாளிகளுக்கான அஸ்வெசும கொடுப்பனவு - வெளியான அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ashwesuma-payment-for-new-beneficiaries-1788060466"></link>
            <id>https://tamilwin.com/article/ashwesuma-payment-for-new-beneficiaries-1788060466</id>
            <summary type="text">அஸ்வெசும கொடுப்பனவு பெற தெரிவு செய்யப்பட்டுள்ள புதிய பயனாளிகளுக்கான கொடுப்பனவுகள் அடுத்த மாதம் தொடக்கம் வழங்கப்படவுள்ளது.
சமூகநலன்புரி சேவைகள் திணைக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>அஸ்வெசும கொடுப்பனவு பெற தெரிவு செய்யப்பட்டுள்ள புதிய பயனாளிகளுக்கான கொடுப்பனவுகள் அடுத்த மாதம் தொடக்கம் வழங்கப்படவுள்ளது.</p><p>
சமூகநலன்புரி சேவைகள் திணைக்களம் இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.</p><h2>மூன்றாம் கட்ட பயனாளிகளின் தெரிவு</h2><p>
</p><p>
அஸ்வெசும கொடுப்பனவுக்கான மூன்றாம் கட்ட பயனாளிகளைத் தெரிவு செய்வதற்கான செயற்பாடுகள் கடந்த மாதம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8de9d98a-63df-4b40-913c-9030bb93240e/26-6a93a334c7d81.webp' /></p><p>
</p><p>
அதன்போது அடையாளம் காணப்பட்ட தகுதியான பயனாளிகளுக்கான கொடுப்பனவு எதிர்வரும் செப்டம்பர் மாதம் தொடக்கம் வழங்கப்படும் என்று தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-30T03:28:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[பால் மா, யோகட் - திரவப் பால் விலைகளில் மாற்றம்: வெளியான அவசர அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/dairy-product-price-increase-announcement-1788056893"></link>
            <id>https://ibctamil.com/article/dairy-product-price-increase-announcement-1788056893</id>
            <summary type="text">பால் மா, யோகட் மற்றும் திரவப் பால் உள்ளிட்ட பல பால் பொருட்களின் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளதாகச் சமூக வலைத்தளங்களில் பரவி வரும் தகவல்கள் முற்றிலும் உண்ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>பால் மா, யோகட் மற்றும் திரவப் பால் உள்ளிட்ட பல பால் பொருட்களின் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளதாகச் சமூக வலைத்தளங்களில் பரவி வரும் தகவல்கள் முற்றிலும் உண்மையற்றவை என அறிவுருத்தப்பட்டுள்ளது.</p><p> நுகர்வோர் விவகார அதிகாரசபை (CAA) இதனை தெரிவித்துள்ளது.&nbsp;</p><p>BREAKING NEWS என்ற பெயரில் பால் மா, செறிவூட்டப்பட்ட பால் மற்றும் யோகட் ஆகியவற்றின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக போலிப் பதிவொன்று சமூக வலைத்தளங்களில் தீவிரமாகப் பரப்பப்பட்டு வருகிறது.</p><p>
</p><p></p><h2>உண்மைத் தன்மை</h2><p>இந்தநிலையில் பால் பொருட்களின் விலைகளில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை என்றும் உண்மைத் தன்மையை உறுதிப்படுத்தாமல் இதுபோன்ற வதந்திகளைப் பகிர வேண்டாம் என்றும் நுகர்வோர் விவகார அதிகாரசபை பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3b2baef1-6d0a-4748-9337-9895b0d78c66/26-6a939f336e6bb.webp' /></p><p>தவறான மற்றும் உறுதிப்படுத்தப்படாத தகவல்களைப் பரப்புவது நுகர்வோர் மத்தியில் தேவையற்ற பீதியை ஏற்படுத்துவதுடன் சந்தையிலும் குழப்ப நிலையை உருவாக்கும் என அதிகாரசபை எச்சரித்துள்ளது.
</p><p>இதனடிப்படையில் சந்தையில் ஏதேனும் முறைகேடுகள் அல்லது சந்தேகத்திற்குரிய விலை மாற்றங்கள் நிலவினால் 1977 என்ற நுகர்வோர் அவசர அழைப்பு இலக்கத்திற்குத் தொடர்பு கொண்டு உடனடியாக முறைப்பாடு செய்யுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-30T03:15:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாக்ஸ் ஆபிஸ்: 4 நாட்களில் டாக்சிக் திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/toxic-movie-4-days-worldwide-box-office-1788058037"></link>
            <id>https://cineulagam.com/article/toxic-movie-4-days-worldwide-box-office-1788058037</id>
            <summary type="text">யஷ் நடிப்பில் வெளிவந்த டாக்சிக் திரைப்படத்தின் 4 நாட்கள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதைப்பற்றி பார்க்கலாம் வாங்க.

டாக்சிக்

இயக்குநர் க...</summary>
            <content type="html"><![CDATA[<p>யஷ் நடிப்பில் வெளிவந்த டாக்சிக் திரைப்படத்தின் 4 நாட்கள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதைப்பற்றி பார்க்கலாம் வாங்க.</p><p></p><h2>

டாக்சிக்
</h2><p>
இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்கத்தில், கே.வி.என் நிறுவனம் தயாரிப்பில், <a href="https://www.youtube.com/watch?v=7TwkpFlc0dA" target="_blank">யஷ் </a>நடிப்பில் உருவாகி கடந்த 26-ஆம் தேதி வெளியான திரைப்படம் டாக்சிக். இப்படத்தில் நயன்தாரா, ஹுமா குரேஷி, ருக்மிணி வசந்த், கியாரா அத்வானி மற்றும் தாரா சுதாரியா ஆகியோர் நடித்துள்ளனர்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e069122b-5e21-421c-8ee8-e1d874471f79/26-6a9399b89e4f7.webp' /></p><p>2026-ஆம் ஆண்டு பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படங்களில் ஒன்று டாக்சிக். ஆனால் அந்த எதிர்பார்ப்பை இப்படம் முழுமையாக பூர்த்தி செய்யவில்லை. இதனால் பாக்ஸ் ஆபிஸில் இப்படம் கடுமையாக அடிவாங்கியுள்ளது.</p><h2>

பாக்ஸ் ஆபிஸ்
</h2><p>
இந்நிலையில், 4 நாட்களை கடந்துள்ள டாக்சிக் திரைப்படம் உலகளவில் இதுவரை செய்துள்ள வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 4 நாட்களில் இப்படம் ரூ. 240 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b51927b6-0fb2-4ba9-af48-647cd71b8603/26-6a9399b952952.webp' /></p>]]></content>
            <updated>2026-08-30T03:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[சில பொருட்களின் விலை உயர்வு தொடர்பில் பரவும் தகவல்! பொதுமக்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/palma-milk-yogurt-price-1788054406"></link>
            <id>https://tamilwin.com/article/palma-milk-yogurt-price-1788054406</id>
            <summary type="text">சமூக வலைத்தளங்களில் பால்மா, பால் மற்றும் யோகட் உள்ளிட்ட சில பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பரவும் செய்திகள் உண்மைக்கு புறம்பானவை என நுகர்வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சமூக வலைத்தளங்களில் பால்மா, பால் மற்றும் யோகட் உள்ளிட்ட சில பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பரவும் செய்திகள் உண்மைக்கு புறம்பானவை என நுகர்வோர் விவகார அதிகாரசபை விளக்கமளித்துள்ளது. </p><p>

முக்கிய செய்தி என குறிப்பிட்டு, பால்மா, பால் மற்றும் யோகட் உள்ளிட்ட பல பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்தியொன்று பரவி வருகின்றமை அவதானிக்கப்பட்டுள்ளதாக அந்த அதிகாரசபை தெரிவித்துள்ளது.</p><h2>முக்கிய அறிவுறுத்தல்</h2><p>இவை உண்மைக்கு புறம்பானவை என்றும், அவ்வாறான செய்திகளை உறுதிப்படுத்தாமல் பகிர்வதை தவிர்க்குமாறும் நுகர்வோர் விவகார அதிகாரசபை பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a1029140-4007-4fde-8aa3-52ef58897d8a/26-6a9397ea35538.webp' />&nbsp;</p><p>இவ்வாறான&nbsp; போலி அல்லது உறுதிப்படுத்தப்படாத தகவல்களைப் பகிர்வதன் மூலம் நுகர்வோர் மத்தியில் தேவையற்ற அச்சம் ஏற்படவும், சந்தையில் தவறான புரிதல்கள் ஏற்படவும் வாய்ப்புள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது. </p><p>

எனவே, சந்தேகத்திற்குரிய விலை மாற்றங்கள் அல்லது சந்தை முறைகேடுகள் தொடர்பான தகவல்கள் ஏதேனும் இருந்தால், 1977 என்ற அவசர தொலைபேசி இலக்கத்தினூடாக நுகர்வோர் விவகார அதிகாரசபைக்கு அறிவிக்குமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-30T02:45:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹரக்கட்டா வாய்திறந்தால் இலங்கை அரசியல் வரலாறே தலைகீழாக மாறும்!முன்னாள் அமைச்சர் பெற்றுக் கொண்ட 5 கோடி...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/nandun-chinthaka-also-known-as-harak-kata-crime-1788056112"></link>
            <id>https://tamilwin.com/article/nandun-chinthaka-also-known-as-harak-kata-crime-1788056112</id>
            <summary type="text">&amp;nbsp;பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான நதுன் சிந்தக என்றழைக்கப்படும் ஹரக் கட்டாவிடமிருந்து முன்னாள் அமைச்சரின் செயலாளர் 5 கோடி பெறப்பட்டுள்ளதாக குற்றப...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான நதுன் சிந்தக என்றழைக்கப்படும் ஹரக் கட்டாவிடமிருந்து முன்னாள் அமைச்சரின் செயலாளர் 5 கோடி பெறப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வுத் துறையினர் நடத்திய விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p>இந்த விவகாரம் தொடர்பான விசாரணைகள் நடைபெற்று வருவதால் முன்னாள் அமைச்சரோ அல்லது அவரது செயலாளரோ கைது செய்யப்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
</p><p>டுபாயிலிருந்து கைது செய்யப்பட்டு இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட ஹரக் கட்டாவின் நெருங்கிய நண்பரான மிதிகம ருவன் அளித்த வாக்குமூலத்திலேயே இது வெளிவந்துள்ளது. </p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">பணம் கைமாறப்பட்ட விதம்</span></p><p>
"அமைச்சரிடம் சொல்லி இந்த வேலையை முடித்துக்கொள்ளலாம், அவர் ஜனாதிபதியிடம் பேசி நடவடிக்கை எடுப்பார்" எனக்கூறி இந்த பணம் பெறப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8a0a7ab5-1e91-4a39-bfc0-d9c2ebdf9289/26-6a9392327fb09.webp' /></p><p>ஆனால், பணம் பெற்றபோது அந்த நபர் அமைச்சராகவோ அல்லது நாடாளுமன்ற உறுப்பினராகவோ இருக்கவில்லை என்றும், ஜனாதிபதியுடன் தனக்குள்ள நெருங்கிய தொடர்பை பயன்படுத்தி இந்த வேலையை செய்வதாக கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>எனினும், இது முன்னாள் அமைச்சருக்கு தெரிந்தே நடந்ததா அல்லது அவருக்கு தெரியாமல் நடந்ததா என்பது இதுவரை உறுதி செய்யப்படவில்லை என்றும் கூறப்படுகின்றது.</p><p>மிதிகம ருவன் மற்றும் ஹரக் கட்டாவின் மனைவி ஆகியோரிடம்&nbsp;தனது உயிரை காப்பாற்றிக்கொள்ள "பணம் கேட்கிறார்கள், பணத்தைக் கொடுங்கள்" என்று கூறியவர் ஹரக் கட்டா என்பதும் தெரியவந்துள்ளது.</p><h2>பின்னணியில் நடந்த&nbsp;உண்மைகள்</h2><p> குற்றப்புலனாய்வுத்துறையின் காவலில் இருந்தபோது, அங்கிருந்த தொலைபேசியை பயன்படுத்த ஒரு அழைப்பிற்கு 5 லட்சம் ரூபாய் வீதம் இலஞ்சம் கொடுக்கப்பட்டதாக முறைப்பாடுகளும் உள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/26701233-523e-4902-bf48-5327ba511d1e/26-6a93a1017cfc2.webp' /></p><p> </p><p>இந்த வழக்கில் நதுன் சிந்தகவே முக்கிய சாட்சி என்றும், இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு இதுவரை நதுன் சிந்தகவிடம் வாக்குமூலம் எதுவும் பெறவில்லை என்றும் கூறப்படுகின்றது.</p><p>எனவே, ஹரக் கட்டாவிடமிருந்து பெறப்படும் வாக்குமூலம் இலங்கை வரலாற்றையே மாற்றியமைக்கக்கூடிய ஒன்றாக இருக்கும் என்றும், பின்னணியில் நடந்த உண்மைகள், இதில் ஈடுபட்ட பொலிஸ் அதிகாரிகள், தொலைபேசி அழைப்புகள் என அனைத்தும் வெளிச்சத்திற்கு வரும் என்றும்&nbsp;தெரிவிக்கப்படுகிறது</p><p></p><p></p><p>&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-30T02:17:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பில் பட்டப்பகலில் பட்டமளிப்பு விழாவுக்கு சென்ற யுவதியை கடத்திய காதலன்! வெளியான காரணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/university-students-kidnapped-the-colombo-1788054603"></link>
            <id>https://tamilwin.com/article/university-students-kidnapped-the-colombo-1788054603</id>
            <summary type="text">கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக சென்ற 26 வயதான யுவதியொருவரை அவரது காதலன...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக சென்ற 26 வயதான யுவதியொருவரை அவரது காதலன் கடத்திச்சென்ற சம்பவம் தொடர்பான மேலதிக விபரங்கள் வெளியாகியுள்ளன.</p><p>இதன்போது யுவதியை கடத்திச்சென்ற காதலனின் காரை நாரஹேன்பிட்டி பொலிஸார் துப்பாக்கிச்சூடு நடத்தி நிறுத்தியுள்ளனர்.</p><p>இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட விசாரணையில், அந்த இளம் யுவதியை கடத்த முயன்றவர், அப்பெண்ணின் காதலரே என்பது தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><h2>பொலிஸ் அவசர அழைப்பு</h2><p>நேற்று சனிக்கிழமை (29) பிற்பகல் சுமார் 1.30 மணியளவில் யுவதி ஒருவர் காரில் கடத்திச் செல்லப்படுவதாக பொலிஸ் அவசர அழைப்பு இலக்கத்திற்கு தகவல் கிடைத்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/38a6f085-9f02-4328-8995-52d3484801be/26-6a9391783fcd0.webp' /></p><p> இந்த தகவலின் அடிப்படையில் நாரஹேன்பிட்டி பொலிஸார் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.</p><p>நாரஹேன்பிட்டியிலிருந்து நாவல நோக்கிப் பயணித்த காரை நிறுத்துமாறு பொலிஸார் உத்தரவிட்ட போதிலும், சாரதி அதனை நிறுத்தாமல் தொடர்ந்து செலுத்திச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>எனினும், உத்தரவையும் மீறி கார் தொடர்ந்து சென்றதால், பொலிஸார் காரை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தி அதனை நிறுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

&nbsp;&nbsp;</p><p>இதன்போது காரை செலுத்திய நபர் வாகனத்தை கைவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்ற நிழலயில், பொலிஸார் மேற்கொண்ட சோதனையில், காருக்குள் 26 வயதான யுவதி ஒருவர் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><h2>கடத்தப்பட்டமைக்கான காரணம்</h2><p>அதன்படி முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின்போது, குறித்த யுவதி பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்திற்கு அருகில் வைத்து கடத்தப்பட்டவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/29b89631-0285-42e8-83be-f6c5e15df985/26-6a939178e5051.webp' /></p><p>அவர்கள் இருவரும் காதலர்கள் என்றும், மாத்தறையில் உள்ள வெலிகம மற்றும் மிடிகம பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்று பொலிஸார் கூறுகின்றனர்.</p><p>கொழும்பு பல்கலைக்கழகத்தின் ஸ்ரீபாலி பீடத்தின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக யுவதி தனது குடும்பத்தினருடன் மாநாட்டு மண்டபத்திற்கு வந்திருந்தபோதே சம்பவம் இடம்பெற்றுள்ளது.</p><p>யுவதி தனது காதலனுக்குத் தெரிவிக்காமல் பட்டமளிப்பு விழாவிற்கு வந்திருந்த நிலையில், அவர் கடத்தப்படுவதாக யுவதியின் தந்தை பொலிஸாரிடம் தகவல் தெரிவித்துள்ளார்.</p><p>யுவதியை கடத்த பயன்படுத்தப்பட்ட கார் கறுவாத்தோட்டம் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன், மீட்கப்பட்ட யுவதி கொழும்பு சட்ட வைத்திய அதிகாரியிடம் முன்னிலைபடுத்தப்பட்டுள்ளார்.</p><p>


குறித்த கார் கடத்தலை மேற்கொண்டதாக கூறப்படும் இளைஞருக்கு சொந்தமானது எனவும், அந்த காரை யுவதியின் தந்தையே பட்டமளிப்பு விழாவுக்கு ஓட்டிச்சென்றதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p>மேலும், தப்பிச்சென்ற சந்தேகநபர் போதைப்பொருள் பாவனை மற்றும் விற்பனை தொடர்பான குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடையவர் எனவும், தப்பிச்சென்ற சந்தேகநபரை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.&nbsp; &nbsp;&nbsp;</p><p></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-30T02:12:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டில் கொட்டி தீர்க்கப்போகும் கனமழை...! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/heavy-rain-with-lightning-thunder-weather-report-1788055258"></link>
            <id>https://ibctamil.com/article/heavy-rain-with-lightning-thunder-weather-report-1788055258</id>
            <summary type="text">சப்ரகமுவ மாகாணத்திலும் அத்துடன் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும்.வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (30-0...</summary>
            <content type="html"><![CDATA[<p>சப்ரகமுவ மாகாணத்திலும் அத்துடன் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும்.</p><p>வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (30-08-2026) விடுத்துள்ள அறிக்கையில் மேற்படி விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p>இதனடிப்படையில் மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்.







</p><p></p><h2>பனிமூட்டமான நிலை</h2><p>சூரியனின் தெற்கு நோக்கிய நகர்வின் காரணமாக இன்று இன்று மதியம் சுமார் 12.11 மணியளவில் மன்னார் , பெரியமடு, புளியங்குளம், வெலிஓய மற்றும் புல்மோட்டை போன்ற இடங்களுக்கு மேலாக சூரியன் உச்சம் கொடுக்கின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f14c80e4-1f78-4f4a-8416-8d7a887bee25/26-6a938edbc81ab.webp' />&nbsp;&nbsp;</p><p>கிழக்கு மாகாணத்திலும் அத்துடன் பொலனறுவை, யாழ்ப்பாணம், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் பகல் வேளையில் வெப்பச் சுட்டெண் காரணமாக அதிகரித்த வெப்பநிலையை மனித உடலினால் உணரக்கூடியதாக இருக்கும்.</p><p>இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-30T02:02:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>H. A. Roshan</name>
            </author>
            <title type="text"><![CDATA[திருகோணமலையில் இளைஞனின் உயிரை காவு வாங்கிய மோட்டார் சைக்கிள் விபத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/trinco-bike-accident-1788049007"></link>
            <id>https://ibctamil.com/article/trinco-bike-accident-1788049007</id>
            <summary type="text">திருகோணமலை - தம்பலகாமம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில்&amp;nbsp;இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.சீமெந்து குழைக்கும்
கன...</summary>
            <content type="html"><![CDATA[<p>திருகோணமலை - தம்பலகாமம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில்&nbsp;இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p>சீமெந்து குழைக்கும்
கனரக வாகனத்துடன், குறித்த இளைஞன் பயணித்த&nbsp;மோட்டார் சைக்கிளில் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.</p><p>குறித்த சம்பவம் நேற்று (29.08.2026) மாலை இடம் பெற்றுள்ளது. இவ்வாறு உயிரிழந்த இளைஞன் (24)&nbsp;தம்பலாகாமம், பட்டிமேடு பகுதியை சேர்ந்தவர்
எனவும் தனியார் நிறுவனம் ஒன்றில் தொழில் புரிபவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><h2>மேலதிக விசாரணை</h2><p>குறித்த விபத்து தொடர்பில் தெரியவருவதாவது, மோட்டார் சைக்கிள் மூலம்
திருகோணமலை நோக்கி சென்ற இளைஞனே இவ்வாறு கனரக வாகனத்துடன் நேருக்கு நேர் மோதி
விபத்துக்குள்ளக்கியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/92046001-75d9-4ba3-80e6-5594a878f809/26-6a93767204cd8.webp' /></p><p>
</p><p>இந்த விபத்து சம்பவம் திருகோணமலை - கண்டி பிரதான வீதியில் தம்பலகாம
பிரதேசத்துக்குட்பட்ட ஜெயபுர என்னும் இடத்தில் இடம்பெற்றுள்ளது.</p><p>
உயிரிழந்தவரின் சடலம் தற்போது கந்தளாய் வைத்தியசாலையின் பிரேத அறையில்
வைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தம்பலகாமம் காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-30T01:55:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து! இளைஞர் பரிதாபமாக பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/youth-tragically-dies-motorcycle-on-collision-1788050913"></link>
            <id>https://tamilwin.com/article/youth-tragically-dies-motorcycle-on-collision-1788050913</id>
            <summary type="text">திருகோணமலை - தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சீமெந்து
குழைக்கும் கனரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதியதில் அதில்
பயணித...</summary>
            <content type="html"><![CDATA[<p>திருகோணமலை - தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சீமெந்து
குழைக்கும் கனரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதியதில் அதில்
பயணித்த இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
</p><p>
இந்தச் சம்பவம் நேற்று சனிக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.

விபத்தில் உயிரிழந்தவர் தம்பலகாமம், பட்டிமேடு பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய
இளைஞர் ஆவார்.</p><h2>பொலிஸ் விசாரணை&nbsp;&nbsp;</h2><p> </p><p>இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிபவர் என்பது
குறிப்பிடத்தக்கது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2d17fd2c-fb70-4275-aaf2-e21f327395db/26-6a937eacc4739.webp' /></p><p>
தம்பலகாமம் பிரதேசத்துக்குட்பட்ட ஜெயபுரம் என்னுமிடத்தில் அமைந்துள்ள
திருகோணமலை - கண்டி பிரதான வீதியிலேயே இந்தக் கோர விபத்து நிகழ்ந்துள்ளது.
</p><p>
மேற்படி இளைஞர் மோட்டார் சைக்கிளில் திருகோணமலை நோக்கிச்
சென்றுகொண்டிருந்த போதே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
</p><p>
விபத்தில் உயிரிழந்தவரின் சடலம் கந்தளாய் வைத்தியசாலையின் பிரேத அறையில்
வைக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைத் தம்பலகாமம் பொலிஸார்
முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-30T01:45:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[தாமரை மலரை பறிக்கச் சென்ற தந்தை முதலைத் தாக்குதலில் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/father-dies-in-crocodile-attack-1788052834"></link>
            <id>https://ibctamil.com/article/father-dies-in-crocodile-attack-1788052834</id>
            <summary type="text">கொழும்பு, பெல்லன்வில வாவியில் தாமரை மலர்களைப் பறிப்பதற்காகச் சென்ற நபர் ஒருவர், முதலைத் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு, பெல்லன்வில வாவியில் தாமரை மலர்களைப் பறிப்பதற்காகச் சென்ற நபர் ஒருவர், முதலைத் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p>இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.</p><p>இது குறித்து தெரியவருகையில்,&nbsp; கொழும்பு, பெல்லன்வில வாவியை அண்டிய கிளைக் கால்வாய் ஒன்றில் இருந்து மிதந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் நேற்று சனிக்கிழமை பிற்பகல் மீட்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>முதலை தாக்கியதற்கான காயங்கள்</h2><p>தாமரை மலர் பறிப்பதற்காக கடந்த வியாழக்கிழமை பெல்லன்வில வாவியை அண்டிய கிளைக்
கால்வாயில் இறங்கியபோதே ஹொரணை, கணன்வில பகுதியைச் சேர்ந்த 44 வயதுடைய இரண்டு
பிள்ளைகளின் தந்தை முதலைத் தாக்குதலுக்கு இலக்காகிக் காணாமல்போயிருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/96f1f20e-ed2a-482e-a920-97ca0d90cc88/26-6a9385647678a.webp' /></p><p>
</p><p>
பிரதேச மக்கள் அளித்த தகவலின் பேரில் அன்று தேடுதல் நடத்தப்பட்ட போதிலும்
தகவல்கள் கிடைக்காத நிலையில், நேற்று பிற்பகல் அவர் காணாமல்போன இடத்திலிருந்து
சுமார் 100 மீற்றர் தொலைவில் உள்ள கால்வாயில் சடலம் மிதப்பதாகக் கிடைத்த தகவலை
அடுத்துப் காவல்துறையினர் சடலத்தை மீட்டுள்ளனர்.</p><p>

மீட்கப்பட்ட சடலத்தின் தலை மற்றும் நெஞ்சுப் பகுதியில் முதலை தாக்கியதற்கான
காயங்கள் காணப்படுவதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.</p><p>
நுகேகொடை குற்றவியல் ஆய்வக அதிகாரிகள் சம்பவ இடத்தில் சோதனைகளை
மேற்கொண்டதுடன், பொரலஸ்கமுவ பொலிஸார் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை
முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-30T01:20:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[உக்ரைனில் ரஷ்யாவின் பயங்கர தாக்குதல் ; ஆயுதக் கிடங்கு வெடித்துச் சிதறியதில் 37 பேர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/37-killed-in-arms-depot-explosion-1788038528"></link>
            <id>https://canadamirror.com/article/37-killed-in-arms-depot-explosion-1788038528</id>
            <summary type="text">உக்ரைன் தலைநகர் கீவ் அருகே அமைந்துள்ள ஆயுதக் கிடங்கு ஒன்றின் மீது ரஷ்யா நடத்திய ட்ரோன் தாக்குதலைத் தொடர்ந்து ஏற்பட்ட பாரிய வெடிவிபத்தில் குறைந்தது 37 ...</summary>
            <content type="html"><![CDATA[<p>உக்ரைன் தலைநகர் கீவ் அருகே அமைந்துள்ள ஆயுதக் கிடங்கு ஒன்றின் மீது ரஷ்யா நடத்திய ட்ரோன் தாக்குதலைத் தொடர்ந்து ஏற்பட்ட பாரிய வெடிவிபத்தில் குறைந்தது 37 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
</p><p>
கீவ்வின் மேற்குப் புறநகர்ப் பகுதியான மைலா பகுதியில் அமைந்துள்ள குறித்த ஆயுதக் கிடங்கு மீது வெள்ளிக்கிழமை இரவு ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
</p><p>
தாக்குதலைத் தொடர்ந்து ஏற்பட்ட பாரிய தீ விபத்து மற்றும் வெடிப்பினால் அப்பகுதியில் உள்ள சுமார் 50 குடியிருப்பு வீடுகள் சேதமடைந்துள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/75fcf5bf-095a-4db3-908e-aa157d0b598e/26-6a934d817d077.webp' /></p><p> </p><p>அத்துடன், அப்பகுதியில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக 400க்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அவசரமாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.</p><p>

உயிரிழந்தவர்களில் டிமிட்ரிவஸ்கா கிராமத்தின் மேயர் தராஸ் டிடிச் என்பவரும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
குடியிருப்புப் பகுதிகளுக்கு அருகில் ஆபத்தான ஆயுதங்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்தமையே அதிகளவிலான உயிரிழப்புகளுக்கு காரணமாக இருக்கலாம் என உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
</p><p>
இந்த சம்பவம் தொடர்பில் கடுமையான குற்றவியல் விசாரணைகள் முன்னெடுக்கப்படும் எனவும், பாதுகாப்பு விதிமுறைகளை மீறி செயற்பட்ட பொறுப்பற்ற நபர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்நாட்டு பிரதமர் எச்சரித்துள்ளார்.</p><p>

இதேவேளை, உக்ரைனை இலக்காகக் கொண்டு ரஷ்யா ஒரே இரவில் இரண்டு ஏவுகணைகள் மற்றும் 267 ட்ரோன்களை ஏவி தாக்குதல்களை நடத்தியுள்ளதாக உக்ரைனிய விமானப்படை தெரிவித்துள்ளது.
</p><p>
இதற்கிடையில், ரஷ்யாவின் எல்லைப் பகுதிகளையும் இலக்காகக் கொண்டு உக்ரைன் பதிலடி தாக்குதல்களை முன்னெடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-30T01:19:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[பால் மா, யோகட் விலை உயர்ந்ததாகப் பரவும் செய்தி முற்றிலும் பொய்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/palm-oil-and-yogurt-are-expensive-completely-false-1788052685"></link>
            <id>https://jvpnews.com/article/palm-oil-and-yogurt-are-expensive-completely-false-1788052685</id>
            <summary type="text">பால் மா யோகட் மற்றும் பால் பானங்களின் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் பரவி வரும் செய்திகளை நுகர்வோர் விவகார அதிகாரசபை திட்டவட்டமாக மற...</summary>
            <content type="html"><![CDATA[<p>பால் மா யோகட் மற்றும் பால் பானங்களின் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் பரவி வரும் செய்திகளை நுகர்வோர் விவகார அதிகாரசபை திட்டவட்டமாக மறுத்துள்ளது.</p><p></p><p>
ஒரு கிலோகிராம் பால் மாவின் விலை 260 ரூபாயினாலும் யோகட் ஒன்றின் விலை 20 ரூபாயினாலும் பண்படுத்தப்பட்ட பால் பானம் ஒன்றின் விலை 40 ரூபாயினாலும் உயர்த்தப்பட்டுள்ளதாக "Breaking News" என்ற பெயரில் போலித் தகவல் ஒன்று பகிரப்பட்டு வருகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/93bafc0b-7976-4ad1-97ff-00044d7e4b18/26-6a9384cf030c2.webp' /></p><p>

எனினும் இந்த விலை அதிகரிப்பு தொடர்பான செய்திகள் முற்றிலும் பொய் என நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.</p><p>

"முக்கிய செய்தி (Breaking News) என்று குறிப்பிடப்படுவதனாலேயே ஒரு தகவல் உண்மையாகிவிடாது" என்றும் அதிகாரசபை சுட்டிக்காட்டியுள்ளது.
</p><p>
இந்தநிலையில், உத்தியோகபூர்வ மூலங்கள் மூலம் உறுதிப்படுத்தப்படாத தகவல்களைச் சமூக வலைத்தளங்களில் பகிர்வதைத் தவிர்க்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.</p><p>

இத்தகைய போலிச் செய்திகள் நுகர்வோர் மத்தியில் தேவையற்ற அச்சத்தையும் சந்தையில் குழப்பத்தையும் ஏற்படுத்துவதாக அதிகாரசபை எச்சரித்துள்ளது.
</p><p>
அத்துடன் சந்தையில் சந்தேகத்திற்குரிய விலை மாற்றங்கள் அல்லது முறைகேடுகள் இடம்பெற்றால் அலுவலக நேரங்களில் 1977 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்குத் தொடர்பு கொண்டு முறைப்பாடு செய்யுமாறு நுகர்வோர் விவகார அதிகாரசபை அறிவுறுத்தியுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-30T01:18:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுக்கிர பெயர்ச்சியால் தொழிலில் கொடிகட்டிப் பறக்கப்போகும் ராசிக்காரர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/venus-transit-for-business-people-1788052357"></link>
            <id>https://jvpnews.com/article/venus-transit-for-business-people-1788052357</id>
            <summary type="text">வேத ஜோதிடத்தின் படி, நவகிரகங்கள் ஒவ்வொன்றும் தங்களின் நிலையில் குறிப்பிட்ட காலஇடைவெளியில் மாற்றங்களை ஏற்படுத்தி மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்து...</summary>
            <content type="html"><![CDATA[<p>வேத ஜோதிடத்தின் படி, நவகிரகங்கள் ஒவ்வொன்றும் தங்களின் நிலையில் குறிப்பிட்ட காலஇடைவெளியில் மாற்றங்களை ஏற்படுத்தி மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் அசுரர்களின் குருவாக கருதப்படும் மற்றும் அழகு, ஆடம்பரம், காதல், செல்வம், செழிப்பு ஆகியவற்றின் காரணியாக கருதப்படுபவர் சுக்கிரன்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cef3ec11-3653-47fa-be49-b15a42e59234/26-6a938386b7458.webp' /></p><p>இந்த சுக்கிரன் மாதம் ஒருமுறை ராசியை மாற்றுவார் மற்றும் இவர் ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளின் அதிபதியும் கூட. இப்படிப்பட்ட சுக்கிரன் செப்டம்பர் மாத தொடக்கத்திலேயே ராசியை மாற்றவுள்ளார். அதுவும் செப்டம்பர் 02 ஆம் திகதி சுக்கிரன் தனது சொந்த ராசியான துலாம் ராசிக்குள் நுழைகிறார். இதனால் பஞ்சமகா புருஷ ராஜயோகங்களில் ஒன்றான மாளவ்ய ராஜயோகம் உருவாகவுள்ளது.</p><p>இந்த சுக்கிர பெயர்ச்சியின் தாக்கத்தினால் சில ராசிக்காரர்கள் தங்களின் நிதி நிலையில் நல்ல முன்னேற்றத்தையும், தொழிலில் நல்ல உச்சத்தை அடையப் போகிறார்கள். மேலும் ஆடம்பரமான வாழ்க்கையையும் வாழ்வார்கள். இப்போது செப்டம்பர் மாத சுக்கிர பெயர்ச்சியால் தொழிலில் கொடிகட்டிப் பறக்கப்போகும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ebb04b92-8a47-462a-a716-3cb1b56bb323/26-6a93838768a9a.webp' /></p><h4>மேஷம்
</h4><p>மேஷ ராசியின் 7 மற்றும் 2 ஆவது வீட்டின் அதிபதியான சுக்கிரன், 7 ஆவது வீட்டிற்கு செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் சாதகமான பலன்களைப் பெறுவார்கள். நீண்ட காலமாக முடிக்க முடியாமல் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். பணிபுரிபவர்களுக்கு கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். நல்ல நிதி ஆதாயங்கள் கிடைப்பதற்கான வாய்ப்புக்களும் உள்ளன. அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். போட்டிகளில் எதிர்பார்த்த முடிவுகளைப் பெறுவீர்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/87ba1306-b2bc-47be-8244-5945212ed1c2/26-6a9383881ae59.webp' /></p><h4>மிதுனம்
</h4><p>மிதுன ராசியின் 5 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இந்த ராசியைச் சேர்ந்த மாணவர்களுக்கு இக்காலம் அற்புதமாக இருக்கும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். முதலீடுகளில் இருந்து எதிர்பார்த்த லாபம் கிடைக்கலாம். குடும்ப உறுப்பினர்களிடையே அன்பும், பிணைப்பும் அதிகரிக்கும். எதிர்பாராத நிதி ஆதாயங்களைப் பெறுவதற்கான வாய்ப்புள்ளது. தொழிலில் நல்ல முன்னேற்றத்துடன், இரட்டிப்பு லாபம் கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. மேலும் ஒவ்வொரு முயற்சிகளிலும் நல்ல வெற்றி கிடைக்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/37ad1011-573d-489f-b7db-8c944f11d669/26-6a938388bf116.webp' /></p><h4>விருச்சிகம்</h4><p>
விருச்சிக ராசியின் 12 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தின் ஆதரவைப் பெறுவார்கள். புதுமண தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. போட்டிகள் மற்றும் தேர்வுகளில் நல்ல வெற்றியைப் பெறுவீர்கள். பயணங்களால் நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும். நீதிமன்ற வழக்குகளில் தீர்ப்புகள் சாதகமாக வரும் வாய்ப்புள்ளது. தொழில் ரீதியாக சிறப்பாக இருக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2217d05c-3d75-40be-8a49-2dc8cbc9a035/26-6a9383896f350.webp' /></p><h4>சிம்மம்
</h4><p>சிம்ம ராசியின் 10 மற்றும் 3 ஆவது வீட்டின் அதிபதியான சுக்கிரன் 3 ஆவது வீட்டிற்கு செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு வாழ்வில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். முக்கியமாக இக்காலத்தில் சமூகத்தில் நல்ல அந்தஸ்தில் உள்ள புதிய நபர்களின் நட்பு கிடைக்கும். ஒவ்வொரு முயற்சிகளிலும் நல்ல வெற்றி கிடைக்கும். வேலையில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். தொழிலை விரிவுபடுத்தும் வாய்ப்புக்கள் கிடைக்கும். அதை திறம்பட பயன்படுத்திக் கொண்டால், நல்ல உச்சத்தைத் தொடலாம். முக்கியமாக வேலை தொடர்பாக மேற்கொள்ளும் பயணங்களால் நல்ல ஆதாயம் கிடைக்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3f816993-2d2b-42a0-ae12-c83d4b37b184/26-6a93838a243db.webp' /></p>]]></content>
            <updated>2026-08-30T01:12:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தியாவில் மோசடிகளை தடுக்க Amazon புதிய பிரிவு அறிமுகம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/amazon-launches-anti-scam-unit-in-india-1788052450"></link>
            <id>https://news.lankasri.com/article/amazon-launches-anti-scam-unit-in-india-1788052450</id>
            <summary type="text">Amazon launches anti-scam unit in India: இந்தியாவில் மோசடிகளை தடுக்க Amazon புதிய பிரிவை அறிமுகப்படுத்துகிறது.

Counterfeit Crimes Unitஇந்தியாவில் ஆ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Amazon launches anti-scam unit in India: இந்தியாவில் மோசடிகளை தடுக்க Amazon புதிய பிரிவை அறிமுகப்படுத்துகிறது.
</p><h2>
Counterfeit Crimes Unit</h2><p>இந்தியாவில் ஆன்லைன் ஷாப்பிங் அதிகரித்துள்ள நிலையில், போலியான பொருட்கள் மற்றும் மோசடிகள் பெரும் சவாலாக மாறியுள்ளன. </p><p>இதை சமாளிக்க Amazon நிறுவனம் Counterfeit Crimes Unit (CCU) எனும் சிறப்பு பிரிவை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4a32e18e-4819-4a11-a34e-122e66f7c10c/26-6a9383e4280f1.webp' /></p><p>இந்த பிரிவு, Amazon தளத்தில் போலியான பொருட்களை விற்பனை செய்யும் வியாபாரிகளை கண்டறிந்து, அவர்களின் சப்ளைச் செயினை முறியடிக்கும் நோக்கத்துடன் செயல்படுகிறது. </p><p>

CCU குழுவில் வழக்கறிஞர்கள், விசாரணையாளர்கள், தரவு விஞ்ஞானிகள் உள்ளிட்டோர் உள்ளனர்.
</p><p></p><p>Amazon CCU உலகளவில் 2020-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. கடந்த ஆறு ஆண்டுகளில், 32,000க்கும் மேற்பட்ட மோசடி வியாபாரிகளுக்கு எதிராக வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. </p><p>15 மில்லியனுக்கும் மேற்பட்ட போலியான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டுள்ளன. மேலும், 300 மில்லியன் டொலர் மதிப்பிலான அபராதம் விதிக்கப்பட்டு, 290-க்கும் மேற்பட்ட குற்றவாளிகள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.</p><p></p><p>
</p><h2>
இந்தியாவில்...</h2><p>இந்தியாவில் CCU ஏப்ரல் 2026 முதல் செயல்படத் தொடங்கியுள்ளது. தற்போது, Amazon இந்தியா, CBI மற்றும் மாநில பொலிஸாருடன் இணைந்து விசாரணைகளை நடத்தி வருகிறது. </p><p>“Mission Grahak” மற்றும் “ScamSmartIndia” போன்ற விழிப்புணர்வு பிரச்சாரங்களும் நடத்தப்படுகின்றன.</p><p>

Amazon, விற்பனையாளர்களை தளத்தில் சேர்க்கும் முன்பே AI அடிப்படையிலான ஆவணச் சரிபார்ப்பு, வீடியோ அடையாளச் சோதனை போன்ற முறைகளை கடுமையாகப் பின்பற்றுகிறது. </p><p>இதனால், வாடிக்கையாளர்கள் பாதுகாப்பாக வாங்கும் சூழல் உருவாகும் என நிறுவனம் நம்புகிறது.</p><p>
</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-30T01:11:19+00:00</updated>
        </entry>
    </feed>
