<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-09-17T10:31:24+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுவிட்சர்லாந்தில் விமான விபத்து ; 3 பேர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/plane-crash-in-switzerland-3-killed-1789640621"></link>
            <id>https://canadamirror.com/article/plane-crash-in-switzerland-3-killed-1789640621</id>
            <summary type="text">சுவிட்சர்லாந்தில் ஏற்பட்ட விமான விபத்தில் சிக்கி 3 பேர் பலியாகி உள்ளனர்.

சுவிட்சர்லாந்து நாட்டின் வலைஸ் மாகாணத்தின் தெற்கே லூக்கர்பாத் நகர் அருகே ர...</summary>
            <content type="html"><![CDATA[<p>சுவிட்சர்லாந்தில் ஏற்பட்ட விமான விபத்தில் சிக்கி 3 பேர் பலியாகி உள்ளனர்.
</p><p>
சுவிட்சர்லாந்து நாட்டின் வலைஸ் மாகாணத்தின் தெற்கே லூக்கர்பாத் நகர் அருகே ரோனே வேலி பகுதியில் அமைக்கப்பட்ட சியான் விமான நிலையத்தில் இருந்து சிர்ரஸ் எஸ்.ஆர்.22டி என்ற சிறிய ரக விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/903a360a-7e00-414f-ad16-36b28264105e/26-6aabbfaf4a0b4.webp' /></p><p>
அது புறப்பட்ட 10 நிமிடங்களில் திடீரென ஸ்விஸ் மலைப்பகுதியில் மோதி விபத்திற்குள்ளானது. </p><p>இந்த விமான விபத்தில், இங்கிலாந்து நாட்டினர் 2 பேர் உள்பட 3 பேர் பலியாகி உள்ளனர். </p><p>விபத்தின்போது விமானம் தீப்பிடித்து எரிந்ததுடன், புகையும் வெளியேறி உள்ளது. விபத்துக்கான காரணம் பற்றி உடனடியாக தெரிய வரவில்லை.
</p><p>
இதனை அடுத்து, மீட்பு அமைப்பினர்,&nbsp; மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ பகுதிக்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். </p><p>விபத்து பற்றி விசாரணை நடந்து வருகிறது. உயிரிழந்தவர்களை அடையாளம் காணும் பணியும் மறுபுறம் நடந்து வருகிறது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-17T10:23:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[யோஷித மற்றும் வசந்த கரன்னாகொடவிற்கு எதிரான வழக்கு : நீதிமன்றின் உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/court-orders-yoshitha-rajapaksa-and-ex-navy-chief-1789620964"></link>
            <id>https://ibctamil.com/article/court-orders-yoshitha-rajapaksa-and-ex-navy-chief-1789620964</id>
            <summary type="text">புதிய இணைப்புமுன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொட மற்றும் யோஷித ராஜபக்ச ஆகியோருக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தாக்கல் செய்துள்ள வழக்கை, மு...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொட மற்றும் யோஷித ராஜபக்ச ஆகியோருக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தாக்கல் செய்துள்ள வழக்கை, முன் விசாரணை மாநாட்டிற்காக ஒக்டோபர் 13 ஆம் திகதி அழைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p> 

குறித்த வழக்கு இன்று (17) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரவீந்திர பிரேமரத்ன முன்னிலையில் அழைக்கப்பட்ட போது, பிணையில் உள்ள பிரதிவாதிகள் இருவரும் நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தனர். </p><p>

இதன்போது, வசந்த கரன்னாகொட சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி ஷவீந்திர பெர்னாண்டோ, வழக்கின் சாட்சியங்களாக சமர்ப்பிக்கப்பட்டுள்ள சில வாக்குமூலங்களின் முழுமையான பிரதிகள் பிரதிவாதிகள் தரப்பிற்கு வழங்கப்படவில்லை என சுட்டிக்காட்டினார்.</p><p>யோஷித ராஜபக்ச சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி சம்பத் மெண்டிஸ், இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் வழங்கப்பட்டுள்ள சில ஆவணங்கள் தெளிவற்றதாக இருப்பதால், அவற்றின் தெளிவான பிரதிகளை வழங்குமாறு கோரினார்.</p><h2>குற்றப்பத்திரங்கள் தாக்கல்</h2><p>இதற்கு பதிலளித்த இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு சார்பில் முன்னிலையான பிரதிப் பணிப்பாளர் நாயகம் ருவினி விக்ரமசிங்க, பிரதிவாதிகள் கோரும் சில ஆவணங்கள் மேல் நீதிமன்றத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதால் அவற்றை வழங்க முடியாது எனவும், ஆணைக்குழுவிடம் உள்ள ஆவணங்களை வழங்க முடியும் எனவும் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4a186842-2a87-4a4a-a15d-87109f227667/26-6aabc0b79e775.webp' /></p><p> 

விடயங்களை பரிசீலித்த நீதிபதி, நீதிமன்றத்தின் பொறுப்பில் உள்ள பிரதிவாதிகள் கோரிய ஆவணங்களை உரிய கட்டணத்திற்கு உட்பட்டு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். </p><p>

மேலும், இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிடம் உள்ள ஏனைய தொடர்புடைய ஆவணங்கள் இருப்பின் அவற்றையும் பிரதிவாதிகள் தரப்பிற்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார். </p><p>

2006 ஆம் ஆண்டு உரிய தகுதிகளைப் பூர்த்தி செய்யாத யோஷித ராஜபக்சவை இலங்கை கடற்படையில் நிறைவேற்று அதிகாரிப் பயிற்சிப் கேடட்டாக இணைத்துக் கொண்டமை மற்றும் நடைமுறைகளுக்கு புறம்பாக பிரித்தானியாவின் அரச கடற்படை பயிற்சி கல்லூரியின் பயிற்சி நெறிமுறைக்கு அரசாங்கப் பணத்தை செலவிட்டு பங்கேற்கச் செய்தமையின் மூலம் ஊழல் புரிந்துள்ளதாக குற்றம்சாட்டி இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் இந்த குற்றப்பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><h2>முதலாம் இணைப்பு</h2><p>முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னாகொட மற்றும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌சவின் மகனான யோஷித ராஜபக்‌ச&nbsp;ஆகியோருக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.&nbsp;</p><p>இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு (CIABOC) தாக்கல் செய்த ஊழல் தொடர்பான குறித்த வழக்கின் விசாரணை இன்று (17) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நடைபெற்றது.</p><p>இதன்போது, தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள குற்றம் சாட்டப்பட்டவர்களான வசந்த கரன்னகொட மற்றும் யோஷித ராஜபக்ச ஆகியோர் இன்று நீதிமன்றத்தில் முன்னிலையாகினர்.</p><p></p><h2>இலஞ்ச ஊழல் ஆணைக்குழு&nbsp;</h2><p>இந்தநிலையில் சமர்ப்பிக்கப்பட்ட விடயங்களை ஆராய்ந்த பின்னர், இவ்வழக்கை விசாரணைக்கு முந்தைய கலந்துரையாடலுக்காக அழைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a35335af-0f41-42b8-a44c-c65894842af8/26-6aab79b86b631.webp' /></p><p>முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌சவின் மகனான யோஷித ராஜபக்சவுக்குத் தேவையான தகுதிகள் இல்லாத போதிலும், அவரை பிரித்தானியாவில் உள்ள றோயல் கடற்படைக் கல்லூரியில் பயிற்சிக்கு அனுப்பியதன் மூலம் ஊழல் குற்றம் இழைக்கப்பட்டதாகக் கூறி, குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு இந்த வழக்கைத் தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/BBVsBJUNZ_U" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-17T10:22:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்கா ஹாரர் ஹவுஸ் ; 16 குழந்தைகளின் தாய் கர்ப்பிணியாக நீதிமன்றத்தில் ஆஜர்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/mom-16-feral-kids-house-horrors-appears-pregnant-1789630957"></link>
            <id>https://canadamirror.com/article/mom-16-feral-kids-house-horrors-appears-pregnant-1789630957</id>
            <summary type="text">&amp;nbsp; அமெரிக்காவில் “ஹாரர் ஹவுஸ்” என வர்ணிக்கப்படும் கொடூர சூழ்நிலையில் வளர்க்கப்பட்ட 16 குழந்தைகளின் தாய், மீண்டும் கர்ப்பிணியாக நீதிமன்றத்தில் ஆஜரா...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; அமெரிக்காவில் “ஹாரர் ஹவுஸ்” என வர்ணிக்கப்படும் கொடூர சூழ்நிலையில் வளர்க்கப்பட்ட 16 குழந்தைகளின் தாய், மீண்டும் கர்ப்பிணியாக நீதிமன்றத்தில் ஆஜராகியிருப்பது உலகளவில் பேசுபொருளாகியுள்ளது.
</p><p>
 முறையான உணவு, பராமரிப்பு மற்றும் அடிப்படை மனித வசதிகள் இன்றி சுகாதாரமற்ற சூழலில் பூட்டி வைக்கப்பட்டிருந்த சிறுவர்கள் அண்மையில் அதிகாரிகளால் மீட்கப்பட்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/99125c4e-c28b-42bf-aeae-484fb9195957/26-6aab99eeae9e0.webp' /></p><h2>பொதுமக்களிடையே கடும் கொந்தளிப்பு</h2><p> </p><p>

இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள குழந்தைகளின் பெற்றோர் மீதான விசாரணை தீவிரமடைந்து வருகிறது.</p><p>


நீதிமன்ற விசாரணையின் போது, தாய் மீண்டும் கர்ப்பமாக இருப்பது போன்ற அறிகுறிகளுடன் ஆஜரான காட்சி, மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. </p><p>

ஏற்​கெனவே மீட்கப்பட்ட குழந்தைகள் கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் மன உளைச்சலால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த புதிய தகவலானது வழக்கின் தீவிரத்தை மேலும் கூட்டியுள்ளது. </p><p>

குழந்தைகளின் தற்போதைய நிலை மற்றும் அவர்களின் எதிர்கால பாதுகாப்பு குறித்து குழந்தைகள் நல அமைப்புகள் கவனம் செலுத்தி வருகின்றன.
</p><p> 
 இந்தச் சம்பவத்தில், பெற்றோர் மீது குழந்தை சித்திரவதை, கவனக்குறைவு மற்றும் முறையற்ற பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. </p><p>

குழந்தைகளின் உரிமைகளை மீறி, அவர்களை வெளி உலகத் தொடர்பின்றி தனிமைப்படுத்தி வைத்திருந்த இந்த விவகாரம் தொடர்பான மேலதிக ஆதாரங்களை காவல்துறை அதிகாரிகள் சேகரித்து நீதிமன்றத்தில் சமர்ப்பித்து வருகின்றனர்</p><p>

இந்த விவகாரத்தை மிகத் தீவிரமாகக் கையாண்டு வரும் நீதிமன்றம், மீட்கப்பட்ட 16 குழந்தைகளுக்கும் உடனடியாக மருத்துவ உதவிகள் மற்றும் உளவியல் ஆலோசனைகளை வழங்க உத்தரவிட்டுள்ளது.</p><p> 

குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அவர்கள் தற்காலிகமாக காப்பகங்களில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். 

மேலும், குழந்தைகளின் பெற்றோருக்குக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.</p>]]></content>
            <updated>2026-09-17T10:21:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ்.பாபுவின் உடல்நிலை சீராக உள்ளது- மருத்துவமனை அறிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/hospital-report-for-health-condition-mla-vs-babu-1789638384"></link>
            <id>https://ibctamilnadu.com/article/hospital-report-for-health-condition-mla-vs-babu-1789638384</id>
            <summary type="text">தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக தலைவரான ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் தவெக வேட்பாளர் வி எஸ் பாபுவிடம் தோல்வியை சந்தித்தார். 

இதனையடுத்து கொளத்தூர் த...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக தலைவரான ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் தவெக வேட்பாளர் வி எஸ் பாபுவிடம் தோல்வியை சந்தித்தார். </p><p>

இதனையடுத்து கொளத்தூர் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்ற வி.எஸ்.பாபு, அப்பகுதி மக்களுக்காக சட்டமன்றத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசியிருந்தார்.
</p><p>
இந்நிலையில் கடந்த 8ஆம் தேதி இரவு திடீரென வி.எஸ்.பாபு உடல் நிலை பாதிக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c34aa5bd-9303-4258-af19-ae6d34c1ec91/26-6aabb7b432596.webp' /></p><p> </p><p>

மூச்சு திணறல் ஏற்பட்டதால் உடனடியாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு 
செயற்கை சுவாச உதவியோடு சிகிச்சை அளிக்கப்பட்டது.</p><p> 

கடந்த ஒரு வராத்திற்கும் மேலாக தொடர் சிகிச்சையின் காரணமாக அவரது உடல் நிலை சற்று முன்னேற்றம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.</p><p>

இந்நிலையில், கொளத்தூர் தவெக எம்எல்ஏ வி.எஸ். பாபுவின் உடல்நிலை குறித்து மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.</p><h2>வெளியிட்டுள்ள அறிக்கை.., </h2><p>"தமிழக சட்டமன்ற உறுப்பினர் வி. எஸ். பாபு, சுவாசக் கோளாறு காரணமாக கடந்த 2026ஆம் ஆண்டு செப்டம்பர் 9ஆம் தேதி சென்னை எம்.ஜி.எம். ஹெல்த்கேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
</p><p>
பல்வேறு மருத்துவத் துறைகளைச் சேர்ந்த நிபுணர்கள் அடங்கிய குழுவின் தொடர் கண்காணிப்பிலும் பராமரிப்பிலும் உள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/742f6fac-8c4d-4b37-bc13-308f2f66834c/26-6aabb7b51b088.webp' /></p><p> 

அவரது உடல்நிலை தற்போது சீரான நிலையிலும் திருப்திகரமாகவும் உள்ளது. </p><p>

அவருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைக்கு அவர் நல்ல முறையில் ஒத்துழைப்பு அளித்து வருகிறார். அவரது ஒட்டுமொத்த உடல்நிலையும் சீராக உள்ளது.</p><p>

மருத்துவக் குழுவினர் அவரது உடல்நிலை முன்னேற்றமடைவதைத் தொடர்ந்து கண்காணித்து அதற்கேற்ப சிகிச்சைகளை அளித்து வருகின்றனர்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
</p>]]></content>
            <updated>2026-09-17T10:19:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[மட்டக்குளி பகுதியை உலுக்கிய விபத்து...! கார் சாரதிக்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/driver-remanded-over-fatal-mattakkuliya-crash-1789636686"></link>
            <id>https://ibctamil.com/article/driver-remanded-over-fatal-mattakkuliya-crash-1789636686</id>
            <summary type="text">கொழும்பு - மட்டக்குளி பகுதியில் விபத்து தொடர்பில் கைது செய்யப்பட்ட சாரதிக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.இதனடிப்படையில் சாரதியை&amp;nbsp;செப்டம்பர் 3...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு - மட்டக்குளி பகுதியில் விபத்து தொடர்பில் கைது செய்யப்பட்ட சாரதிக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.</p><p>இதனடிப்படையில் சாரதியை&nbsp;செப்டம்பர் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p>குறித்த நபர் இன்று (17-09-2026) கொழும்பு அல்ஃபிட்ஸ்டார்ப் (அளுத்கடை) நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.</p><p>
</p><p></p><h2>தீவிர சிகிச்சை&nbsp;</h2><p>இந்தநிலையில் விபத்து நடந்த சமயத்தில் கார் சாரதி கஞ்சா போதையில் காரைச் செலுத்தியுள்ளது காவல்துறை மருத்துவ பரிசோதனையில் உறுதியாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2e81dbe2-8e53-428b-b295-6127fe1fd4c8/26-6aabbbae38dea.webp' /></p><p>சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், நேற்று இரவளிவில் (16-09-2026) வத்தளையிலிருந்து அதிவேகமாக வந்த கார், சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியில் பயணித்த 3 முச்சக்கர வண்டிகள் மற்றும் 4 மோட்டார் சைக்கிள்கள் மீது அடுத்தடுத்து மோதி பயங்கர விபத்துக்குள்ளானது.
</p><p>விபத்தில் காயமடைந்த 13 நபர்கள் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், தீவிர சிகிச்சை பலனின்றி மூவர் உயிரிழந்தனர்.</p><p></p><h2>மேலதிக விசாரணை</h2><p> இறந்தவர்கள் கிராண்ட்பாஸ், கொழும்பு 15 மற்றும் மட்டக்குளி பகுதிகளைச் சேர்ந்த 44 மற்றும் 64 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/df507453-1319-44a4-93d5-bb23e2f272eb/26-6aabbbad5a648.webp' /></p><p>விபத்தை ஏற்படுத்திய 52 வயதான மட்டக்குளி பகுதியைச் சேர்ந்த தொழிலதிபரை காவல்துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியுள்ளனர்.</p><p> மட்டக்குளி காவல்துறையினர் இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-17T10:15:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரசமைப்பின் 22 ஆவது திருத்தம் 'டித்வா' போன்ற மற்றொரு பேரழிவு - சஜித் எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/22nd-amendment-constitution-another-disaster-ditva-1789639758"></link>
            <id>https://tamilwin.com/article/22nd-amendment-constitution-another-disaster-ditva-1789639758</id>
            <summary type="text">அரசமைப்பின் 22 ஆவது திருத்தமானது &#039;டித்வா&#039; போன்றே மற்றொரு பாரதூரமான
பேரழிவாகும் என்று தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, இதன்
மூலம் ஜனநா...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரசமைப்பின் 22 ஆவது திருத்தமானது 'டித்வா' போன்றே மற்றொரு பாரதூரமான
பேரழிவாகும் என்று தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, இதன்
மூலம் ஜனநாயகத்துக்கு மரண அடி கொடுக்க அரசு செயற்பட்டு வருகின்றது என்றும்
குற்றம் சாட்டினார்.
</p><p>
டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்த 100 குடும்பங்களுக்கு
வீடுகளை வழங்கும் நோக்கத்துடன் வத்தளை மொனார்க் மண்டபத்தில் ஏற்பாடு
செய்யப்பட்டிருந்த இசை நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர்
மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.</p><h2>&nbsp;சஜித் எச்சரிக்கை</h2><p>
</p><p>
அவர் மேலும் தெரிவிக்கையில்,

"22 ஆவது திருத்தத்தின் ஊடாக சட்டவாக்கத்துறை, நிறைவேற்றுத்துறை மற்றும்
நீதித்துறை ஆகிய மூன்று தூண்களும் வலுவிழக்கச் செய்யப்பட்டுள்ளன.
</p><p>
நீதித்துறையை நிறைவேற்றுத்துறையின் அடிமையாக்கும் பெரும் சதித்திட்டம்
இதுவாகும்.

இது ஜனநாயகத்தைச் சுருக்கி, நாட்டில் தனிக்கட்சி ஆட்சி முறையை உருவாக்கும்
செயற்பாடாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6fcb6b34-898a-4f37-90f5-b2943755312d/26-6aabbd297694b.webp' /></p><p>

நாட்டில் சர்வாதிகார ஆட்சியை ஸ்தாபிக்க முற்படும் இந்த முயற்சியைத்
தோற்கடிக்காவிட்டால், மக்கள் சுதந்திரமாக அரசியல் செய்யவோ கருத்துக்களைத்
தெரிவிக்கவோ முடியாத நிலை ஏற்படும்.

தனிநபர் சுதந்திரம் மற்றும் அதிகாரப் பகிர்வுச் சமன்பாடுகளைப் பாதுகாக்க
வேண்டும்.
</p><p>
எல் நினோ மற்றும் லா நினோ நிலைமைகள் காரணமாக வறட்சி, வெள்ளம், மண்சரிவு போன்ற
அனர்த்தங்கள் ஏற்படக்கூடும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
</p><p>
தற்போதைய அனர்த்த முகாமைத்துவ பொறிமுறைகள் காலாவதியாகிவிட்டன. பேரழிவுகள்
ஏற்படுவதற்கு முன்னரே தாக்கங்களைக் குறைக்கும் புதிய வேலைத்திட்டங்களை அரசு
உருவாக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-17T10:09:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வனஇலாகா ஆக்கிரமித்துள்ள காணிகளை விடுவிக்க வலியுறுத்திய ரவிகரன் எம்.பி; காணி விடுவிப்பு தொடர்பில் களஆய்வு முன்னெடுப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/field-assessment-regarding-land-release-initiated-1789639255"></link>
            <id>https://tamilwin.com/article/field-assessment-regarding-land-release-initiated-1789639255</id>
            <summary type="text">முல்லைத்தீவு - கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட
மதவளசிங்கன்குளம் கிராம அலுவலர் பிரிவில், வனவளத் திணைக்களத்தால்
ஆக்கிரமிக்கப்பட்டுள்ள ...</summary>
            <content type="html"><![CDATA[<p>முல்லைத்தீவு - கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட
மதவளசிங்கன்குளம் கிராம அலுவலர் பிரிவில், வனவளத் திணைக்களத்தால்
ஆக்கிரமிக்கப்பட்டுள்ள மக்களின் காணிகளை விடுவிக்குமாறு வன்னிமாவட்ட
நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியிருந்த நிலையில், வனவளத்
திணைக்களத்தினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள குறித்த காணிகளை விடுவிப்பது
தொடர்பில் இணைந்த களஆய்வு ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
</p><p>
அந்தவகையில் கரைதுறைப்பற்று பிரதேசசெயலகம், வனவளத் திணைக்களம், நாடாளுமன்ற
உறுப்பினர் துரைரராசா ரவிகரன், காணிகளுக்குரிய மக்கள் ஆகியோர் இணைந்து குறித்த
பகுதிக்கு நேரில் சென்று இணைந்த களஆய்வு ஒன்றினை மேற்கொண்டுள்ளனர்.</p><h2>உணவுப் பயிர்ச்செய்கைக்கென வழங்கப்பட்ட காணி</h2><p>
</p><p>
இதுதொடர்பில் மேலும் தெரியவருகையில்,

குறிப்பாக கடந்த 1979ஆம் ஆண்டு காலப்பகுதியில் மதவளசிங்கன்குளம் கிராமஅலுவலர்
பிரிவிற்குட்பட்ட பகுதியில் மக்களுக்கு உப உணவுப் பயிர்ச்செய்கைக்கென
வழங்கப்பட்ட காணிகளை தற்போது வனவளத் திணைக்களம் ஆக்கிரமித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/66dead11-fa47-4bc3-8ddc-f9df7e18a4c0/26-6aabbb9003e0a.webp' /></p><p>
</p><p>
இந்நிலையில் காணிகளுக்குரிய பொதுமக்கள் குறித்த வனவளத்திணைக்களத்தின்
ஆக்கிரமிப்பு விடயம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனின்
கவனத்திற்கு கொண்டுவந்திருந்தனர்.
</p><p>
இத்தகையசூழலில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் கடந்த 15.05.2026அன்று
இடம்பெற்ற கரைதுறைப்பற்று பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக்
கூட்டத்தில் மதவளசிங்கன்குளம் பகுதியில் உபஉணவுப் பயிற்செய்கைக்கென மக்களுக்கு
வழங்கப்பட்ட காணிகள் விடுவிக்கப்படவேண்டுமென வலியுறுத்தியிருந்தார்.</p><h2>களஆய்வு</h2><p>
</p><p>
அந்தவகையில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனது வலியுறுத்தலுக்கமைய வனவளத்
திணைக்களத்தினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகளை வனவளத்திணைக்களம்,
பிரதேச செயலகம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன், காணிகளுக்குரிய
பொதுமக்கள் இணைந்து இணைந்த களஆய்வொன்றை மேற்கொள்வதென குறித்த பிரதேச
அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/90a37a69-5c07-4d69-9dbe-32f190993659/26-6aabbb912847b.webp' /></p><p>
</p><p>
குறித்த பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத் தீர்மானத்திற்கு
அமைவாக கடந்த 15.09.2026அன்று குறித்த பகுதிக்கு நேரில் சென்று மக்களின் காணிகளை
விடுவிப்பது தொடர்பாக இணைந்த களஆய்வொன்று மேற்கொள்ளப்பட்டிருந்தமை
குறிப்பிடத்தக்கது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dba4b90d-783d-41ce-829d-34f9763c53d4/26-6aabbb9203e56.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2aa3d630-50f6-40dc-bc31-63d2562f15d6/26-6aabbb92cf838.webp' /></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-17T10:07:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[நடிகைகளை கூவத்தூருக்கு கூட்டிட்டு போய் டான்ஸ் ஆடவைத்தேனா!! கருணாஸ் ஓபன் டாக்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/did-i-bring-actresses-to-koovathur-karunas-speaks-1789639616"></link>
            <id>https://viduppu.com/article/did-i-bring-actresses-to-koovathur-karunas-speaks-1789639616</id>
            <summary type="text">கருணாஸ்தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக நடித்து தற்போது குணச்சித்திர ரோலில் நடித்து வருபவர் தான் நடிகர் கருணாஸ். அரசியலிலும் ஈடுபட்டு வரும் கருணாஸ், தற...</summary>
            <content type="html"><![CDATA[<h2>கருணாஸ்</h2><p>தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக நடித்து தற்போது குணச்சித்திர ரோலில் நடித்து வருபவர் தான் நடிகர் கருணாஸ். அரசியலிலும் ஈடுபட்டு வரும் கருணாஸ், தற்போது கூவத்தூர் குறித்து பேசியுள்ளது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fc50e4a3-be16-41cf-8f8f-a9db887c7182/26-6aabbbc2719bc.webp' /></p><p> </p><p>அதில், கூவத்தூரில் நான் ஜூனியர் ஆர்ட்டிஸ் எல்லோரையும் கூட்டிட்டு போய் டான்ஸ் ஆட வைத்தேன் என்று மும்பையில் உள்ள ஒரு பத்திரிக்கையாளர் பொய்யாக எழுதிவிட்டார்.</p><p> அதை சில மக்கள் உடனே நம்பிவிட்டார்களே என்று சின்ன வருத்தம் இருந்தது. நான் குடிப்பேன், சில சண்டைகள் போடுவேன், ஆனால் பெண்கள் விஷயத்தில் நான் அடிப்படையிலேயே ஒழுக்கமானவன். </p><p>காதலித்து திருமணம் செய்தவன், என்னை நம்பி வந்த ஒரேவொரு ஆள் என் மனைவி கிரேஸ் மட்டும்தான் என்று எமோஷனலாக பேசியிருக்கிறார்</p>]]></content>
            <updated>2026-09-17T10:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹஸ்த நட்சத்திரத்தில் புதன்: இரட்டை ராஜயோகம் பெறப்போகும் டாப் 3 ராசிகள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/mercury-transit-in-hasta-nakshatra-who-get-luck-1789636969"></link>
            <id>https://manithan.com/article/mercury-transit-in-hasta-nakshatra-who-get-luck-1789636969</id>
            <summary type="text">ஜோதிட சாஸ்திரத்தில் புதன் கிரகங்களின் இளவரசராகக் கருதப்படுகிறார். தற்போது புதன் தனது சொந்த ராசியான கன்னியில், சந்திரனின் ஆதிக்கத்திற்குரிய ஹஸ்த நட்சத்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜோதிட சாஸ்திரத்தில் புதன் கிரகங்களின் இளவரசராகக் கருதப்படுகிறார். தற்போது புதன் தனது சொந்த ராசியான கன்னியில், சந்திரனின் ஆதிக்கத்திற்குரிய ஹஸ்த நட்சத்திரத்தில் சஞ்சரித்து வருகிறார்.</p><p> கன்னியில் புதன் வலிமையான நிலையில் இருப்பதாகவும், ஹஸ்த நட்சத்திர சஞ்சாரம் கூடுதல் பலன்களைத் தரும் என்றும் ஜோதிட ரீதியில் நம்பப்படுகின்றது.புதன் செப்டம்பர் 21-ஆம் தேதி வரை ஹஸ்த நட்சத்திரத்தில் நீடிக்கிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b2ede928-1091-423a-a1fc-7cfba777a108/26-6aabb91713519.webp' /></p><p>குறித்த புதன் பெயர்ச்சி 12 ராசிகளிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தினாலும், குறிப்பிட்ட சில ராசிக்காரர்களுக்கு முன்னேற்றம் மற்றும் புதிய வாய்ப்புகளை உருவாக்கிக்கொடுக்கப்போகின்றது. அப்படி அதிர்ஷ்ட பலன்களை அனுபவிக்கப்போகும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.</p><p></p><h2>மிதுனம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6c6c56f1-f540-4f85-9f5e-acd2369cf1a6/26-6aabb917bc073.webp' /></p><h2>
</h2><p>ஜோதிடத்தின்படி, இந்த காலகட்டம் மிதுன ராசிக்காரர்களைத் தொழில்முறை இலக்குகளை நோக்கி வேகமாக முன்னேறச் செய்யும். </p><p>முடிக்கப்படாத பணிகளை நிறைவு செய்வதற்கான சிறந்த காலமாக இது அமையும். பணியிடத்தில் புதிய பொறுப்புகள் கிடைப்பதுடன், உங்கள் கடின உழைப்புக்கும் அங்கீகாரம் கிடைக்கும். </p><p>ஒரு சிறப்பு நபரின் வருகை உங்கள் வாழ்க்கையின் திசையை மாற்றக்கூடும். தன்னம்பிக்கை அதிகரிப்பதால் பிரச்சனைகளைத் துணிச்சலுடன் சமாளிப்பீர்கள். திருமண வாழ்க்கையில் அமைதி நிலவும். துணையுடன் மகிழ்ச்சியான நேரத்தை செலவிடுவீர்கள். உடல்நிலையும் சிறப்பாக இருக்கும்.
</p><h2>
கடகம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6a035359-9cc6-471f-a815-8d5155523161/26-6aabb9186e700.webp' /></p><h2>
</h2><p>கடக ராசிக்காரர்களுக்கு இக்காலத்தில் தொழில் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும். உணர்வுகளைத் தெளிவாக வெளிப்படுத்துவதன் மூலம் முக்கிய பிரச்சனைகளைத் தீர்த்து, சிறந்த முடிவுகளை எடுக்க முடியும். </p><p>தொழிலில் நீண்டகாலமாக இருந்த சிக்கல்கள் முடிவுக்கு வரும். நிதிநிலை சீராகி, செலவுகள் குறைந்து சேமிப்பு அதிகரிக்கும்.</p><p> வேலை தேடுபவர்களுக்கு நல்ல வாய்ப்புகளும், பணியில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வும் கிடைக்கலாம். ஒட்டுமொத்தமாக வெற்றியும் அதிர்ஷ்டமும் நிறைந்த காலமாக அமையும்.
</p><h2>
கன்னி</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/12164952-e5c4-4cb3-bc2d-4fa5a6c4cccf/26-6aabb91920307.webp' /></p><p></p><h2>
</h2><p>கன்னி ராசிக்காரர்களுக்கு முதலீடுகள் மற்றும் வணிக வாய்ப்புகள் மூலம் நிதி நன்மைகள் கிடைக்கலாம். வணிகத்தில் இருப்பவர்களுக்கு லாபகரமான ஒப்பந்தங்கள் கிடைத்து, நிதிநிலை மேலும் வலுப்பெற வாய்ப்புள்ளது. </p><p>நீண்டகால முதலீடுகளுக்கு ஏற்ற காலமாக இது அமையும். வருமானத்திற்கான புதிய வழிகள் திறக்கலாம். புதிய விஷயங்களைக் கற்றுக்கொண்டு திறமைகளை வளர்த்துக்கொள்ளும் வாய்ப்பும் கிடைக்கும். </p><p>உடல்நலம் சிறப்பாக இருப்பதுடன், பெற்றோரின் ஆரோக்கியமும் நன்றாக இருக்கும். வெளிநாட்டில் வேலை செய்ய விரும்புபவர்களுக்கு அதற்கான வாய்ப்புகள் கிடைக்கலாம்.</p><p><b>இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;&nbsp;</b></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-17T09:59:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[20 ஆண்டுகால காதல்... ஜோதிகாவின் திருமண உடையில் ஒளிந்திருந்த காதல் குறியீடுகள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/love-details-in-jyo-suriya-20-anniversary-wedding-1789622014"></link>
            <id>https://manithan.com/article/love-details-in-jyo-suriya-20-anniversary-wedding-1789622014</id>
            <summary type="text">20ம் ஆண்டு திருமண உறவை கொண்டாடும் விதமாக, சூர்யா – ஜோதிகா தம்பதியினர் தங்களின் மகன், மகள் முன்னிலையில் மீண்டும் திருமணம் செய்து கொண்டுள்ள காணொளி நேற்ற...</summary>
            <content type="html"><![CDATA[<p>20ம் ஆண்டு திருமண உறவை கொண்டாடும் விதமாக, சூர்யா – ஜோதிகா தம்பதியினர் தங்களின் மகன், மகள் முன்னிலையில் மீண்டும் திருமணம் செய்து கொண்டுள்ள காணொளி நேற்றைய தினம் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றர்.&nbsp;</p><p>இதில் காதலை உணர்த்தும் வகையில் ஜோதிகாவின் திருமண உடையில் பல குறியீடுகள் இடம்பெற்றிருந்தமை இணையத்தில் நெட்டிசன்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6834b4d7-065d-4d25-9556-2052328ba1f0/26-6aab7b7cecbfc.webp' /></p><h2>ஜோதிகா உடையில் கவனம் ஈர்த்த காதல் குறியீடுகள்&nbsp;</h2><p>கிறிஸ்துவ முறைப்படி திருமணம் நடைபெற்றதால், ஜோதிகா வெள்ளை நிற திருமண கவுன் அணிந்திருந்தார். இந்த உடையில் காதலை உணர்த்தும் பல சிறப்பம்சங்கள் இடம்பெற்றிருந்தன.இது தொடர்பான சுவாரஸ்ய அம்சங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.</p><p><b>

மினிமலிசம்:</b>ஜோதிகாவின் திருமண உடையில் முதலில் கவனம் ஈர்த்தது அதன் எளிமையான வடிவமைப்பு. ஆடம்பரமான ஜரிகை அல்லது அதிக வேலைப்பாடுகள் இல்லாமல், நவீன டிசைனில் இந்த உடை வடிவமைக்கப்பட்டிருந்தது. இது, அவர்களின் காதலுக்கு ஆடம்பரம் தேவையில்லை என்பதை உணர்த்துவது போல் அமைந்திருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fc3ad47e-2d5d-4d62-8971-caf1cf06b130/26-6aab7b7db236d.webp' /></p><p><b>

லவ் சிம்பள்:</b> ஜோதிகா அணிந்திருந்த கவுனின் கழுத்துப்பகுதி ‘ஸ்வீட்ஹார்ட்’ டிசைனில் வடிவமைக்கப்பட்டிருந்தது. அவர்களின் காதலின் குறியீடாகக்கூட இந்த வடிவமைப்பு இருக்கலாம் என சொல்லப்படுகிறது. இந்த வடிவம் ஜோதிகாவின் தோற்றத்திற்கு தனி அழகை சேர்த்தது.
</p><p><b>
இடுப்பு வடிவமைப்பு:</b> ஜோதிகாவின் கவுனில் இடுப்பைச் சுற்றி நேர்த்தியாக செய்யப்பட்டிருந்த துணி சுருக்கங்களும் கவனம் ஈர்த்தன.
</p><p><b>
நீண்ட தரைதொடும் துணி: </b>கிறிஸ்துவ திருமண முறையில் இடம்பெறும் நீண்ட தரைதொடும் துணி, ஜோதிகாவின் உடையிலும் இடம்பெற்றிருந்தது.ஆடையின் பின்புறத்தில் தரையில் நீளமாக இழுத்துச் செல்லும் வகையில் அமைந்திருந்த இது, அவருக்கு தேவதை போன்ற தோற்றத்தை அளித்தது. </p><p>அவர்களின் காதல் 20 ஆண்டுகளோடு நின்றுவிடாமல், தொடர்ந்து நீளும் என்பதை உணர்த்துவது போல் இந்த வடிவமைப்பு அமைந்திருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/23798e55-3233-476a-a9ed-9ed89a57d2cb/26-6aab7b7e65db2.webp' /></p><p><b>
வெள்ளி நிறத் துகள்கள்: </b>வெள்ளை நிறத் துணியில் மென்மையாக மின்னும் வெள்ளி நிறத் துகள்கள் சேர்க்கப்பட்டிருந்தன. இது ஜோதிகாவின் தோற்றத்தை மேலும் மெருகூட்டியது.</p><p>அதேவேளை, வெள்ளை நிறம் தூய்மையைக் குறிப்பதால், சூர்யா – ஜோதிகாவின் 20 ஆண்டுகால கலங்கமில்லாத உண்மையான அன்பையும் இந்த நிறம் பிரதிபலிப்பதாக அமைந்திருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/399644c0-8830-4ae4-b010-444728a59718/26-6aab7b7f181e0.webp' /></p><p>

இதுமட்டுமல்லாமல், தனது திருமண உடையின் அழகை முன்னிலைப்படுத்தும் வகையில் ஜோதிகா குறைவான நகைகள், நேர்த்தியான ஹேர்ஸ்டைல் மற்றும் சிம்பிளான மேக்கப்பை தேர்வு செய்திருந்தார். ஆடம்பரம் இல்லாத அதேநேரம் நேர்த்தியான இந்த திருமண தோற்றம், அவரது வாழ்க்கையையும் பிரதிபலித்தது போல் அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/p/DdV24aVjCS1/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/p/DdV24aVjCS1/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/p/DdV24aVjCS1/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by Jyotika (@jyotika)</a></p></div></blockquote> <script async src="//www.instagram.com/embed.js"></script></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-17T09:56:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரான்ஸ் முன்னாள் அமைச்சர் மீது ஊழல் குற்றச்சாட்டு: வழக்கு விசாரணை துவக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/ex-french-minister-goes-trial-on-corruption-charge-1789638697"></link>
            <id>https://news.lankasri.com/article/ex-french-minister-goes-trial-on-corruption-charge-1789638697</id>
            <summary type="text">Former French culture minister goes on trial over corruption charges: பிரான்ஸ் முன்னாள் கலாச்சாரத்துறை அமைச்சர் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Former French culture minister goes on trial over corruption charges: பிரான்ஸ் முன்னாள் கலாச்சாரத்துறை அமைச்சர் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் வழக்கு விசாரணை துவங்கியுள்ளது.</p><p>


பிரான்ஸ் முன்னாள் கலாச்சாரத்துறை அமைச்சர் மீது ஊழல் குற்றச்சாட்டு ஒன்று முன்வைக்கப்பட்ட நிலையில், அவர் விசாரணைக்குட்படுத்தப்பட உள்ளார்.</p><h3>

பெண் அமைச்சர் மீது ஊழல் குற்றச்சாட்டு</h3><p>

2007ஆம் ஆண்டு, ரச்சிதா டதி (Rachida Dati, 60) என்னும் பெண் பிரான்சின் நீதித்துறை அமைச்சராக பதவியேற்றார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/62af7098-be2e-48bf-84e7-b68534147b33/26-6aabb82a87b32.webp' /></p><p>
பிரான்ஸ் நாட்டில் ஒரு இஸ்லாமியப் பெண்ணொருவருக்கு அவ்வளவு பெரிய பொறுப்பு கொடுக்கப்பட்டது அதுவே முதல்முறை.
</p><p>
அப்போது பிரான்ஸ் ஜனாதிபதியாக இருந்த நிக்கோலஸ் சார்க்கோஸி, பிரான்சிலுள்ள அனைத்துப் பிள்ளைகளுக்கும், கல்வியும் முயற்சியும் இருந்தால் எதுவும் சாத்தியமே என்னும் ஒரு செய்தியை தெரிவிப்பதற்காகவே ரச்சிதாவுக்கு நீதித்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டதாக தெரிவித்திருந்தார்.
</p><p>
ஆனால், ரச்சிதா ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோது, Renault-Nissan கார் தயாரிப்பு நிறுவனத்துக்கு ஆதரவாக செயல்பட்டதாக ஒரு குற்றச்சாட்டு உள்ளது.&nbsp;</p><p></p><p>

மேலும், சட்டத்தரணியாக செயல்பட்டதற்காக அந்நிறுவனக் கிளை ஒன்றிலிருந்து 900,000 யூரோக்கள் கட்டணம் பெற்றதாகவும் கூறப்படுகிறது. ஆனால், அவர் அந்நிறுவனத்தில் எந்த பணியும் செய்யவில்லை.
</p><p>
பின்னர் பிரான்ஸ் கலாச்சாரத்துறை அமைச்சராக ரச்சிதா பொறுப்பு வகித்தார். இந்நிலையில், Renault-Nissan நிறுவனத்துக்கு ஆதரவாக செயல்பட்டது தொடர்பில் ரச்சிதா மீது ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் முதலான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.</p><p>

அந்த வழக்கு தொடர்பான விசாரணை நேற்று துவங்கியுள்ளது. வழக்கில் ரச்சிதா குற்றவாளி என நிரூபிக்கப்படும் பட்சத்தில், அவர் 10 ஆண்டுகள் சிறை செல்லவேண்டிவரலாம்.
</p><p>
மேலும், அவருக்கு 450,000 யூரோக்கள் வரை அபராதம் விதிக்கப்படலாம் என்பதுடன், ஐந்து ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிடவும் தடை விதிக்கப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-09-17T09:51:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Tony</name>
            </author>
            <title type="text"><![CDATA[மண்டாடி 7 நாட்களில் இத்தனை கோடி வசூலா, சூரி பெஸ்ட்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/mandaadi-one-week-box-office-collection-1789610080"></link>
            <id>https://cineulagam.com/article/mandaadi-one-week-box-office-collection-1789610080</id>
            <summary type="text">&amp;nbsp;சூரி சம்பவம்சூரி நடிப்பில் மதிமாறன் இயக்கத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் வெளிவந்த படம் மண்டாடி. இப்படம் எல்லோர் எதிர்ப்பார்ப்பை போலவே மிகப்பெர...</summary>
            <content type="html"><![CDATA[<h2>&nbsp;சூரி சம்பவம்</h2><p>சூரி நடிப்பில் மதிமாறன் இயக்கத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் வெளிவந்த படம் மண்டாடி. </p><p>இப்படம் எல்லோர் எதிர்ப்பார்ப்பை போலவே மிகப்பெரிய பாசிட்டிவ் விமர்சனங்கள் இப்படத்திற்கு கிடைத்தது.</p><p> இதைபோலவே பாக்ஸ் ஆபிஸிலும் மிகப்பெரிய வரவேற்பு கிடைக்க, இந்த வருடம் சூரிக்கு மிகச்சிறந்த வருடமாகவே அமைந்துள்ளது. </p><p>படம் வெளியாகி 7 நாட்களில் உலகம் முழுவதும் இப்படம் ரூ 69 கோடிகள் வசூல் செய்து பெரிய லாபத்தை தயாரிப்பாளர், விநியோகஸ்தர்கள் என அனைவருக்குமே கொடுத்துள்ளது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/87221b79-19d1-4c3c-8607-225a42623aed/26-6aab4863b15da.webp' /></p><p>மேலும் இது சூரியின் முதல் ரூ 100 கோடி படமாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு இந்த வாரமும் தமிழ் சினிமாவில் பெரிய படங்கள் எதுவும் இல்லாததால் கண்டிப்பாக இந்த வாரமே அந்த ரூ 100 கோடி க்ளப் வந்தாலும் ஆச்சரியமில்லை என கூறப்படுகிறது.</p>]]></content>
            <updated>2026-09-17T09:50:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரவிந்த டி சில்வா மற்றும் மனைவியின் பிடியாணை வாபஸ்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/arvinda-de-silva-and-wife-arrest-warrants-recalled-1789638644"></link>
            <id>https://jvpnews.com/article/arvinda-de-silva-and-wife-arrest-warrants-recalled-1789638644</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;இலங்கையின் முன்னாள் கிரிகெட் வீரர் அரவிந்த டி சில்வா மற்றும் அவரது மனைவிக்கு பிறப்பிக்கப்பட்ட பிடியாணை வாபஸ் பெறப்பட்டுள்ளது.

ஸ்ரீ லங்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;இலங்கையின் முன்னாள் கிரிகெட் வீரர் அரவிந்த டி சில்வா மற்றும் அவரது மனைவிக்கு பிறப்பிக்கப்பட்ட பிடியாணை வாபஸ் பெறப்பட்டுள்ளது.
</p><p>
<a href="https://jvpnews.com/article/court-issues-warrants-aravinda-de-silva-and-wife-1789561751" target="_blank">ஸ்ரீ லங்கன் எயர்லைன்ஸ் நிறுவனத்தினால்</a> எயார்பஸ் (Airbus) விமானங்களைக் கொள்வனவு செய்தபோது 2 மில்லியன் அமெரிக்க டொலர் இலஞ்சம் வழங்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் சந்தேகநபராக உள்ள கபில சந்திரசேனவின் மனைவிக்காகப் பிணையாளிகளாக இருந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் அரவிந்த டி சில்வா மற்றும் அவரது மனைவிக்கு எதிராக நேற்று (16) பிறப்பிக்கப்பட்ட பிடியாணையினை மீளப் பெறுமாறு கொழும்பு கோட்டை நீதிவான் பாஸன் அமரசேன இன்று உத்தரவிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/67ecd0c6-9a20-48f9-8834-be4ae5054921/26-6aabb7f5c8ad9.webp' /></p><p>
</p><p>
அரவிந்த டி சில்வாவின் தாயாரின் மரணச் சடங்குகள் காரணமாக அவர்களால் நேற்று நீதிமன்றத்தில் ஆஜராக முடியாமல் போனதாக, இன்று மன்றில் தாக்கல் செய்யப்பட்ட மோஷன் மனு ஊடாக ஆஜராகிய சட்டத்தரணிகள் தெரிவித்தனர்.</p><p></p><p>
</p><p>
இவ்விடயத்தைக் பரிசீலித்த நீதிவான், அரவிந்த டி சில்வா மற்றும் அவரது மனைவிக்கு எதிராகப் பிறப்பிக்கப்பட்ட பிடியாணையினை உடனடியாக வாபஸ் பெறுமாறு உத்தரவிட்டுள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-17T09:47:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீதிபதிகளின் சம்பளத்தில் வரி அறவிட முடியும் : உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/supreme-court-rules-judges-liable-to-pay-incometax-1789630589"></link>
            <id>https://ibctamil.com/article/supreme-court-rules-judges-liable-to-pay-incometax-1789630589</id>
            <summary type="text">நீதிபதிகளின் சம்பளத்திலிருந்து முன்பண தனிநபர் வருமான வரியை (APIT) அறவிடுவதற்கு உள்நாட்டு இறைவரித் திணைக்களம் எடுத்த தீர்மானம் குறித்து&amp;nbsp; நீதிமன்றம...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீதிபதிகளின் சம்பளத்திலிருந்து முன்பண தனிநபர் வருமான வரியை (APIT) அறவிடுவதற்கு உள்நாட்டு இறைவரித் திணைக்களம் எடுத்த தீர்மானம் குறித்து&nbsp; நீதிமன்றம் தீர்ப்பை வழங்கியுள்ளது.</p><p>அதற்கமைய, உள்நாட்டு இறைவரித் திருத்தச் சட்டத்தின்படி குறித்த தீர்மானம் சட்டபூர்வமானது என&nbsp;உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.</p><p> 

குறித்த தீர்மானத்திற்கு சவால் விடுத்து மேல் நீதிமன்ற நீதியரசர்கள் சங்கம், மாவட்ட நீதிபதிகள், நீதிவான்கள், மேலதிக நீதிவான்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நீதித்துறை உத்தியோகத்தர்கள் சங்கம் மற்றும் தொழிலாளர் தீர்ப்பாயத் தலைவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சங்கம் ஆகியன மனுக்களை தாக்கல் செய்திருந்தன.</p><p></p><h2>உள்நாட்டு இறைவரித் திருத்தச் சட்டம்</h2><p> </p><p>

குறித்த மனுக்களை நிராகரித்த உயர் நீதிமன்றம், உள்நாட்டு இறைவரித் திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்ட இந்த தீர்மானம் சட்டப்பூர்வமானது எனவும் அறிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c04ea294-13db-4918-aca8-14e7f8dbbc01/26-6aabb5b919548.webp' /></p><p> அதன்படி, உயர் நீதிமன்ற நீதிபதிகள், மாவட்ட நீதிபதிகள் மற்றும் நீதவான்கள் உள்ளிட்ட நீதித்துறை அதிகாரிகள் தங்கள் சம்பளத்தின் மீது வருமான வரி செலுத்தக் கடமைப்பட்டவர்கள் என்றும், அந்த ஊதியத்திலிருந்து முன்கூட்டிய தனிநபர் வருமான வரியை அறவிடுவதற்கு அதிகாரிகளுக்கு உரிமை உண்டு என்றும் நீதிமன்றம் தீர்ப்பளித்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-17T09:44:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் அரவிந்த டி சில்வாவை கைது செய்ய பிடியாணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/arrest-warrant-issued-cricketer-aravinda-de-silva-1789638237"></link>
            <id>https://news.lankasri.com/article/arrest-warrant-issued-cricketer-aravinda-de-silva-1789638237</id>
            <summary type="text">court issued arrest warrant for ex srilankan cricketer aravinda de silva: முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் அரவிந்த டி சில்வா மற்றும் அவரது மனைவியை கைத...</summary>
            <content type="html"><![CDATA[<p>court issued arrest warrant for ex srilankan cricketer aravinda de silva: முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் அரவிந்த டி சில்வா மற்றும் அவரது மனைவியை கைது செய்ய நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.
</p><h3>
அரவிந்த டி சில்வாவை கைது செய்ய பிடியாணை</h3><p>

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் அரவிந்த டி சில்வா 1984 முதல் 2003 வரை இலங்கை தேசிய அணிக்காக விளையாடியுள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/530c99b7-5af7-464f-b10c-5632790a90d2/26-6aabb65f4abc8.webp' /></p><p> 

1996 ஆம் ஆண்டில் உலக கிண்ணம் வென்ற இலங்கை அணியிலும் இடம் பிடித்திருந்தார். </p><p>

2013ஆம் ஆண்டு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்துக்காக ஏர்பஸ் விமானங்களைக் வாங்கிய போது, 2 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலஞ்சமாகப் பெற்றதாகக் கூறப்படும் வழக்கில் சந்தேக நபராக பெயர் குறிப்பிடப்பட்டிருந்தவர் கபில சந்திரசேன.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e05e2c9f-60e1-477d-9597-b28adb5b8a40/26-6aabb65e8be1d.webp' /></p><p> 

இவர் கடந்த மே மாதம் 8 ஆம் திகதி கொள்ளுப்பிட்டிய பகுதியில் உள்ள அரவிந்த டி சில்வாவின் வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் அன்று காலை சடலமாக மீட்கப்பட்டார்.&nbsp;</p><p></p><p>

இது தொடர்பான வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த நிலையில், நீதிமன்றத்தில் ஆஜராகாத அரவிந்த டி சில்வா மற்றும் அவரது மனைவி பிரியங்கா அனுஷ்கா விஜேநாயக்கவை கைது செய்ய கோட்டை நீதிவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9910aabe-ea50-4ad3-950b-0c988a3ed0c5/26-6aabb660026f4.webp' /></p><p>

அரவிந்த டி சில்வாவின் தாயார் ராணி டி சில்வா செப்டம்பர் 14 ஆம் திகதி காலமானார். நேற்று அவரது இறுதிச் சடங்குகள் மற்றும் தகனச் சடங்குகள் நடைபெற்ற நாளில் நீதிமன்றம் பிடியாணையைப் பிறப்பித்துள்ளது.</p><p>

அவரது தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், அரவிந்தா டி சில்வாவின் தாயார் காலமானதாலும், அவரது இறுதிச் சடங்கு இன்று நடைபெறவிருந்ததாலும் அவர்களால் ஆஜராக இயலவில்லை என்று நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-17T09:44:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வலி. வடக்கில் தியாக தீபத்திற்கு அஞ்சலி - நிகழ்வை புறக்கணித்த தவிசாளர் உள்ளிட்ட தமிழரசு உறுப்பினர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/tribute-to-the-flame-of-sacrifice-thiyaga-deepam-1789633389"></link>
            <id>https://tamilwin.com/article/tribute-to-the-flame-of-sacrifice-thiyaga-deepam-1789633389</id>
            <summary type="text">வலி. வடக்கு பிரதேசசபையின் வளாகத்தினுள் நடைபெறும் தியாக தீபம் திலீபனின்
நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொள்ள முடியாது என சபையின் தவிசாளர் உள்ளிட்ட
தமிழ...</summary>
            <content type="html"><![CDATA[<p>வலி. வடக்கு பிரதேசசபையின் வளாகத்தினுள் நடைபெறும் தியாக தீபம் திலீபனின்
நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொள்ள முடியாது என சபையின் தவிசாளர் உள்ளிட்ட
தமிழரசு கட்சியின் சில உறுப்பினர்கள் புறக்கணித்துள்ளனர்.</p><p>வலி. வடக்கு பிரதேச சபையின் மாதாந்த அமர்வு இன்றைய தினம் (17.09.2026) பிரதேச
சபையின் சபா மண்டபத்தில் நடைபெறவிருந்தது.</p><h2>சபை அமர்வு புறக்கணிப்பு</h2><p>
</p><p>
அதன்போது கீரிமலை பகுதிகளில் அனுமதியின்றி வலி. தெற்கு பிரதேச சபையினர்
கழிவுகளை கொட்டியமைக்கு எதிராக வலி. வடக்கு பிரதேசசபை தவிசாளர் நடவடிக்கை
எடுக்காதமையை கண்டித்து பிரதேச சபை உறுப்பினர்களில் பெரும்பாலானவர்கள், சபை
அமர்வில் கலந்து கொள்ளாது புறக்கணித்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e49fa5cf-2590-40ed-b440-b47fa5ed11e5/26-6aabb4367b391.webp' /></p><p>
அதேநேரம் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகளை,
சபா மண்டபத்தினுள் செய்யாது, பிரதேச சபை வளாகத்தினுள் செய்வதற்கான
ஏற்பாடுகளை செய்து, அதில் தவிசாளரை கலந்து கொள்ளுமாறு அழைத்தனர்.
</p><p>
அதற்கு, தவிசாளர் சபையை புறக்கணித்து, வெளியே நடக்கும் நினைவேந்தல் நிகழ்வில்
தான் கலந்து கொள்ள மாட்டேன் என கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6828e17e-f1e1-46b0-afe5-68ccd39f64bd/26-6aabb4377cda8.webp' /></p><h2>அஞ்சலி</h2><p> அவருடன் இணைந்து தமிழரசு
கட்சியை சேர்ந்த சில உறுப்பினர்களும் தாமும் கலந்து கொள்ள மாட்டோம் என
நிகழ்வினை புறக்கணித்தனர்.
</p><p>
அதனை அடுத்து சபையின் ஏனைய உறுப்பினர்கள் ஒன்றிணைந்து பிரதேச சபை
வளாகத்தினுள் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வினை முன்னெடுத்து,
தியாக தீபத்தின் திருவுருவ படத்திற்கு மலர் மாலை அணிவித்து, மலர் தூவி அஞ்சலி
செலுத்தினர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0c83710f-bff6-4059-b866-118b41a0679b/26-6aabb438565e0.webp' /></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-17T09:37:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரஷ்ய எண்ணெய் வர்த்தகம்... இந்தியா, சீனாவுக்கு ட்ரம்ப் தரப்பு எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/russian-oil-team-trump-warns-1789637956"></link>
            <id>https://news.lankasri.com/article/russian-oil-team-trump-warns-1789637956</id>
            <summary type="text">Team Trump Warns India, China Over Russian Oil Trade: ரஷ்ய எண்ணெய் வர்த்தகம் தொடர்பாக இந்தியா மற்றும் சீனாவுக்கு ட்ரம்ப் தரப்பு எச்சரிக்கை விடுத்துள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p>Team Trump Warns India, China Over Russian Oil Trade: ரஷ்ய எண்ணெய் வர்த்தகம் தொடர்பாக இந்தியா மற்றும் சீனாவுக்கு ட்ரம்ப் தரப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
</p><p>ரஷ்ய எண்ணெய் மற்றும் எரிவாயு மீதான சார்பைக் குறைத்துக் கொள்ளுங்கள், இல்லையெனில் அமெரிக்காவிடமிருந்து முன்னெப்போதும் இல்லாத பொருளாதாரத் தண்டனைகளை எதிர்கொள்ள நேரிடும் என டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் ஒரு நேரடியான மிரட்டலை விடுத்துள்ளது.</p><h2>பொருளாதாரத் தடை</h2><p> </p><p> 
அமெரிக்க நாடாளுமன்றத்தில் ரஷ்யா தடைகள் மசோதா நிறைவேற்றப்பட்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய குடியரசுக் கட்சியின் செனட்டர் ரிச்சர்ட் புளூமெண்டல், </p><p>இந்தியாவும் சீனாவும் தங்களைத் திருத்திக்கொள்ள வேண்டும் என்றும் வேறு எங்காவது தங்களுக்கான எரிபொருளை வாங்க வேண்டும் என்று எச்சரித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2e43ac23-204c-40cd-8671-527cf20ccf64/26-6aabb5464b972.webp' /></p><p> உலகின் மூன்றாவது பெரிய எண்ணெய் இறக்குமதியாளரான இந்தியா, ரஷ்ய எண்ணெயை அதிகளவில் வாங்கும் நாடுகளில் ஒன்றாகத் திகழ்கிறது; 2022-ல் உக்ரைன் மீது முழு அளவிலான படையெடுப்பைத் தொடங்கியதைத் தொடர்ந்து மேற்கத்திய நாடுகளின் கடுமையான பொருளாதாரத் தடைகளுக்கு ஆளான ரஷ்யாவுக்கு, இந்த எண்ணெய் விற்பனை அதன் நிதிநிலையைச் சீரமைக்க உதவுவதாகக் கருதப்படுகிறது.</p><p></p><p>
</p><p>மறைந்த செனட்டர் லிண்ட்சே கிரஹாம் உடன் இணைந்து இந்த மசோதாவை உருவாக்கிய ப்ளூமெண்டல், இந்தத் தடைகள் புடினுக்கு அழுத்தமளித்து, போரை முடிவுக்குக் கொண்டுவர உதவும் என்று நம்புவதாகக் கூறினார்.
</p><p>2026-ஆம் ஆண்டின் லிண்ட்சே கிரஹாம் ரஷ்யா மற்றும் ஈரான் மீதான தடைகள் சட்டம், ரஷ்ய அதிகாரிகள், வங்கிகள் மற்றும் ரஷ்ய எரிசக்தியின் போக்குவரத்தை சீராக வைத்திருக்கும் ஒரு மறைமுக எண்ணெய்க் கப்பல் குழுமம் ஆகியவற்றின் மீது தடைகளை விதிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.</p><p> இந்தியா மற்றும் சீனா உள்ளிட்ட, ரஷ்ய எண்ணெய் அல்லது இயற்கை எரிவாயுவை அதிக அளவில் இறக்குமதி செய்யும் முதல் ஐந்து நாடுகளின் மீது 100 சதவீதம் வரையிலான இறக்குமதி வரிகளை விதிக்குமாறும் இது ஜனாதிபதி ட்ரம்ப்பை அறிவுறுத்துகிறது. </p><p>ஆனால், 
ரஷ்யாவின் இயற்கை எரிவாயு ஏற்றுமதியில் 15 சதவீதத்திற்கும் குறைவாக இறக்குமதி செய்யும் மற்றும் அந்த இறக்குமதியைக் குறைக்க குறிப்பிடத்தக்க நடவடிக்கைகளை எடுத்துள்ள நாடுகளுக்கு விதிவிலக்கு அளிக்கப்படுகிறது.</p><h2>உறுதியாக இருப்பதாக</h2><p> </p><p>புதன்கிழமை அன்று நடைபெற்ற வாக்கெடுப்பில் 262-159 என்ற வாக்கு வித்தியாசத்தில் இந்த மசோதா பிரதிநிதிகள் சபையால் அங்கீகரிக்கப்பட்டது. தற்போது இது, சட்டமாக கையொப்பமிடுவதற்காக ட்ரம்ப்பிடம் அனுப்பப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d5121f8b-0c53-4722-90d4-03e726ae11d0/26-6aabb54701c79.webp' /></p><p> </p><p>அமெரிக்கா இத்தகைய இறக்குமதியாளர்களைத் தண்டிக்கும் வகையில் புதிய நடவடிக்கையை மேற்கொண்ட போதிலும், தங்கள் மக்களுக்கு எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்வதில் உறுதியாக இருப்பதாகவும், சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப பல்வேறு விற்பனையாளர்களிடமிருந்து தொடர்ந்து எரிசக்தியைப் பெறுவோம் என்றும் இந்தியா தெரிவித்துள்ளது. </p><p>அத்தகைய புதிய நடவடிக்கைகள் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளைப் பாதிக்கக்கூடும் என்று அமெரிக்காவுக்கு எச்சரித்திருந்ததாகவும் இந்தியா கூறியுள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-17T09:36:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kiyas Shafe</name>
            </author>
            <title type="text"><![CDATA[திருகோணமலையில் அதிகாலை நேர்ந்த கோர விபத்து: ஒருவர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/trinco-accident-1789636455"></link>
            <id>https://tamilwin.com/article/trinco-accident-1789636455</id>
            <summary type="text">திருகோணமலை -ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள ஈச்சிலம்பற்று பகுதியில்
இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர்
படுகாயமடைந்துள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>திருகோணமலை -ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள ஈச்சிலம்பற்று பகுதியில்
இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர்
படுகாயமடைந்துள்ளதாக ஈச்சிலம்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.
</p><p>
இந்த சம்பவம் திருகோணமலை -மட்டக்களப்பு பிரதான வீதியில் இன்று வியாழக்கிழமை (17)
அதிகாலை இடம்பெற்றுள்ளது.</p><h2>மேலதிக விசாரணை</h2><p>

மோட்டார் சைக்கிள் சீமெந்து லொறியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார்
சைக்கிளில் பயணித்த தோப்பூர் -செல்வநகர் பகுதியைச் சேர்ந்த அன்சார் அல்ஹாம்
வயது (33) என்பவர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/326b89c7-b2b6-450c-bb5d-8e176cff4753/26-6aabb3ec52490.webp' /></p><p>அத்தோடு அவரோடு மோட்டார்
சைக்கிளில் பயணித்த சித்திக் சாபி வயது (26) எனும் மற்றுமொரு நபர்
படுகாயமடைந்து ஈச்சிலம்பற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக
சிகிச்சைகளுக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.</p><p>

உயிரிழந்தவரின் ஜனாஸா ஈச்சிலம்பற்று பிரதேச வைத்தியசாலையில்
வைக்கப்பட்டுள்ளதுடன் திடீர் மரண விசாரணை அதிகாரி ஏ.ஜே.எம்.நூருல்லா ஜனாஸாவை
பார்வையிட்ட பின்னர் ஜனாஸா பிரேத பரிசோதனைகளுக்காக கந்தளாய் பொது
வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
</p><p>
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ஈச்சிலம்பற்று பொலிஸார் முன்னெடுத்து
வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-09-17T09:33:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[மட்டக்குளியில் மூன்று பேர் பலியான கோர விபத்து: சாரதி தொடர்பில் வெளியான தகவல் - பிறப்பிக்கப்பட்ட உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/accident-in-the-mattakkuli-1789613410"></link>
            <id>https://tamilwin.com/article/accident-in-the-mattakkuli-1789613410</id>
            <summary type="text">புதிய இணைப்புமட்டக்குளி பகுதியில் இடம்பெற்ற பல வாகனங்கள் தொடர்புடைய கோர விபத்தில் மூவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட காரின் சாரதி, எதி...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>மட்டக்குளி பகுதியில் இடம்பெற்ற பல வாகனங்கள் தொடர்புடைய கோர விபத்தில் மூவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட காரின் சாரதி, எதிர்வரும் செப்டெம்பர் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
</p><p>


சந்தேகநபர் இன்று (17) கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதை தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.</p><p>நேற்று (16) இரவு மட்டக்குளி பகுதியில் இடம்பெற்ற இந்த விபத்தில் மூவர் உயிரிழந்ததுடன், மேலும் 10 பேர் படுகாயமடைந்தனர்.</p><p>இந்த விபத்து இடம்பெற்ற போது குறித்த சாரதி கஞ்சா போதையில் இருந்ததாக பொலிஸார் உறுதி செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">இரண்டாம் இணைப்பு</span></p><p>கொழும்பு - மட்டக்குளி பகுதியில் மூன்று பேர் உயிரிழந்த கோர விபத்தினை ஏற்படுத்திய காரின் சாரதி&nbsp; விபத்து இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் போதைப்பொருள் பயன்படுத்தியிருந்தமை வைத்திய பரிசோதனையில் தெரியவந்துள்ளது.</p><p>போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதிப் பாதுகாப்பு பிரிவுக்குப் பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் இதனை தெரிவித்துள்ளார்.&nbsp;&nbsp;</p><p>விபத்து தொடர்பிலான விசாரணைகளின் போது, ​​சாரதியின் உடலில் கஞ்சா பயன்படுத்தியதற்கான அறிகுறிகள் இருந்ததை தடயவியல் வைத்திய பரிசோதனை உறுதி செய்துள்ளதாக கூறப்படுகின்றது.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/2SYTyf9oUlE" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p>இச்சம்பவம் தொடர்பாக பொலிஸ் துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், மேலதிக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பொலிஸ் பிரிவு தெரிவித்துள்ளது.</p><h2>முதலாம் இணைப்பு</h2><p>கொழும்பு - மட்டக்குளி பகுதியில் மூன்று பேர் உயிரிழந்த கோர விபத்து குறித்த மேலதிக விபரங்களை பொலிஸ் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ளது.</p><p>

நேற்றிரவு (16) இடம்பெற்ற கோர வாகன விபத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் பலர் பலத்த காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p><h2>விபத்திற்கான காரணம்</h2><p>இந்த விபத்து தொடர்பான பொலிஸாரின் கூற்றுப்படி, செப்டம்பர் 16 ஆம் திகதி இரவு பெர்குசன் சந்திப்பு பகுதியில் வத்தளையிலிருந்து அதிவேகமாக வந்த கார் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்தபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7d3ee77c-9573-4a2b-bf46-f178827de425/26-6aab66b2ce044.webp' /></p><p>
இதனைத்தொடர்ந்து அந்த கார் இரண்டு முச்சக்கர வண்டிகள் மற்றும் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மீது மோதியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
இந்த விபத்தில் மொத்தம் 13 பேர் காயமடைந்து கொழும்பில் உள்ள தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் மூவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் பின்னர் உயிரிழந்துள்ளனர்.</p><p>

சம்பவம் நடந்த உடனேயே சம்பவ இடத்திற்கு விரைந்த அப்பகுதி மக்கள், காயமடைந்தவர்களை கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.</p><h2>உயிரிழந்தவர்களின் விபரம்</h2><p>

இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் கொழும்பு 15, கிராண்ட்பாஸ் மற்றும் மட்டக்குளிவை சேர்ந்தவர்கள் என்றும், அவர்களில் இருவர் 44 மற்றும் 64 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/36267214-b0a9-4fd5-86e5-d238a7e8d490/26-6aab66b3814c0.webp' /></p><p> 

மூன்றாவது நபரின் வயது கண்டறியப்படாத நிலையில் பொலிஸ் அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.</p><p>

இந்த விபத்து தொடர்பில் மட்டக்குளியை சேர்ந்த 52 வயதான கார் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
அவர் போதையில் இருந்தாரா என்பது குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>

இந்த விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை மட்டக்குளிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;</p><p></p><p></p><p> </p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-17T09:27:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரவிந்த டி சில்வா மற்றும் அவரது மனைவிக்கு பிறப்பிக்கப்பட்ட பிடியாணை - பிறப்பிக்கப்பட்ட உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/warrants-aravinda-de-silva-and-his-wife-recalled-1789633255"></link>
            <id>https://tamilwin.com/article/warrants-aravinda-de-silva-and-his-wife-recalled-1789633255</id>
            <summary type="text">ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்துக்கு புதிய வானூர்திகளை கொள்முதல் செய்ததில் இடம்பெற்றதாக கூறப்படும் நிதி மோசடி தொடர்பான வழக்கின் சந்தேகநபருக்கு பிணையா...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்துக்கு புதிய வானூர்திகளை கொள்முதல் செய்ததில் இடம்பெற்றதாக கூறப்படும் நிதி மோசடி தொடர்பான வழக்கின் சந்தேகநபருக்கு பிணையாளர்களாக தோன்றிய இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் அரவிந்த டி சில்வா மற்றும் அவரது மனைவி பிரியங்கி அனுஷ்கா விஜேநாயக்க ஆகியோருக்கு பிறப்பிக்கப்பட்ட பிடியாணை உத்தரவு திரும்பப்பெறப்பட்டுள்ளது.</p><p>கொழும்பு கோட்டை நீதவான் பசன் அமரசேன இன்று (17) இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார்.&nbsp;</p><h2>தாயாரின் இறுதிச்சடங்கு ஏற்பாடுகள்&nbsp;</h2><p>தனது தாயாரின் இறுதிச்சடங்கு ஏற்பாடுகள் காரணமாக தமது கட்சிக்காரர்களால் நீதிமன்றத்தில் முன்னிலையாக முடியவில்லை என ஜனாதிபதி சட்டத்தரணி நலின் லட்டுவெஹெட்டி தெரிவித்த வாதங்களை கருத்தில் கொண்ட பின்னர், நீதவான் பிடியாணையை திரும்பப்பெறுமாறு உத்தரவிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3703aed7-a95f-4f44-bd85-e90a2183bd1b/26-6aabaf6f75f6e.webp' /></p><p>ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி மறைந்த கபில சந்திரசேனவின் மனைவியான பிரியங்கா நியோமாலி விஜேநாயக்க என்பவருக்கு பிணை நின்ற பிணையாளர்களான அரவிந்த டி சில்வா மற்றும் அவரது மனைவி ஆகியோர்&nbsp; நீதிமன்றத்தில் முன்னிலையாகாமையினாலேயே இந்த பிடியாணை நேற்று (16) பிறப்பிக்கப்பட்டது.&nbsp;</p><p>அதன்படி, இன்று (17) நீதிமன்றத்தில் இருவருக்காக முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி, அரவிந்த டி சில்வாவின் தாயார் காலமானதாலும், இறுதிச்சடங்கு நேற்று (16) நடைபெற்றதாலும் அவர்களால் நீதிமன்றத்தில் முன்னிலையாக முடியவில்லை என்று தெரிவித்துள்ளார்.</p><h2>சந்தேகநபருக்கு&nbsp;&nbsp;வழங்கப்பட்ட&nbsp;பிணை</h2><p>சந்தேகநபருக்கு வழங்கப்பட்ட பிணையை பறிமுதல் செய்யாததற்கான காரணங்களை கூறுவதற்காக, சம்பந்தப்பட்ட வழக்கு நேற்று (16) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/accf1db8-fb14-4eb9-bd3a-39031b9017ec/26-6aabaf7029483.webp' /></p><p>
அரவிந்த டி சில்வா மற்றும் அவரது மனைவி, சம்பவத்தின் இரண்டாவது சந்தேகநபரான கபில சந்திரசேனவின் மனைவிக்கு, தலா ரூ. 20 மில்லியன் மதிப்புள்ள இரண்டு பிணை பத்திரங்களின் பேரில் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.
</p><p>
அதன்படி, அரவிந்த டி சில்வா மற்றும் அவரது மனைவி பிரியங்கா அனுஷ்கா விஜேநாயக்க ஆகியோரை கைது செய்வதற்காக நேற்று (16) நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை திரும்பப்பெறுமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-17T09:16:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[விநாயகர் சிலையை கரைக்கும் போது பரிதாபமாக உயிரிழந்த 9 நபர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/9-people-died-immersing-ganesh-idol-in-odisha-1789635974"></link>
            <id>https://ibctamilnadu.com/article/9-people-died-immersing-ganesh-idol-in-odisha-1789635974</id>
            <summary type="text">விநாயகர் சதுர்த்தி நாடு முழுவதும் திங்கட்கிழமை அன்று மிக விமர்சையாக கொண்டாடப்பட்டது. இதனை அடுத்து பண்டிகையின் ஒரு முக்கிய பகுதியாக விநாயகர் சிலைகளை நீ...</summary>
            <content type="html"><![CDATA[<p>விநாயகர் சதுர்த்தி நாடு முழுவதும் திங்கட்கிழமை அன்று மிக விமர்சையாக கொண்டாடப்பட்டது. இதனை அடுத்து பண்டிகையின் ஒரு முக்கிய பகுதியாக விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைக்கக்கூடிய சடங்குகள் நடந்து வருகின்றன. </p><p>அந்த வகையில், வடகிழக்கு மாநிலமான ஒடிசாவில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தின் பொழுது ஒரு பகுதியாக நீர் நிலைகளில் சிலைகளை கரைக்கும் நிகழ்ச்சியில் பலர் உயிரிழந்த சோகம் நடந்துள்ளது. கடந்த 24 மணி நேரங்களில் ஒடிசாவில் நடைபெற்ற வெவ்வேறு சிலை கரைக்கும் நிகழ்வில் படி மொத்தம் ஒன்பது பேர் உயிரிழந்தது அதிர்ச்சி அளித்து உள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/80ce20d4-6d2a-43a6-b61d-67633aadffd8/26-6aabad8df34b4.webp' /></p><p></p><p> </p><p>ஒடிசாவின் கஞ்சம், சுந்தர் கார், பத்ரக், கோர புட் மற்றும் காலஹண்டி உள்ளிட்ட மாவட்டங்களில் இந்த இறப்புகள் நடந்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
</p><p>
 ஒடிசா தீயணைப்பு மற்றும் அவசரகால சேவைக்கான துறையினர் வெளியிட்ட இந்த தகவலின் படி ஜெகத்சிம்பூர் மாவட்டத்தில் எர்சாமா நகரில் இருக்கக்கூடிய கோபால்பூர் பகுதியில் ஓடானலா இந்த இடத்தில் ஆற்றின் மூழ்கிய நான்கு நபர்கள் உடைய சடலங்களை மீட்டு எடுத்து இருக்கிறார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0c8f156d-5ef2-43ac-a0d4-d585571338f6/26-6aabad8eada18.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0c8f156d-5ef2-43ac-a0d4-d585571338f6/26-6aabad8eada18.webp' /></p><p> </p><p>மூன்று நபர் காணாமல் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது தவிர பல்வேறு பகுதிகளிலும் பலர் உயிரிழந்த சோகமும் காணாமல் போன செய்தியும் கிடைத்திருக்கிறது. மொத்தம் ஒன்பது பேர் சடலங்கலாகவும், 7 பேர் உயிருடனும் மீட்கப்பட்டு இருக்கிறார்கள். அதோடு, மீட்பு பணிகள் இன்னும் தீவிரமாக தொடர்ந்து நடந்து வருகிறது. </p><p>இந்த சம்பவங்களுக்கு ஓடிஸா முதல்வர் மோகன் சரண் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் மற்றும் முன்னாள் தலைவர் நவீன் பட்நாயக் மற்றும் ஒடிசா காங்கிரஸ் தலைவர் பக்த சரந்தா ஆகியோர் இரங்கல் தெரிவித்திருக்கிறார்கள். முன்னிட்டு விநாயகர் சதுர்த்தி சிலை கரைப்புகளை முன்னிட்டு நடந்த இந்த சோகமான செய்தி அந்த பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்திருக்கிறது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-17T09:14:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[பல கனவுகளுடன் புறப்பட்ட இளைஞனுக்கு நேர்ந்த கதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/tragic-death-engineering-student-at-sea-1789632005"></link>
            <id>https://tamilwin.com/article/tragic-death-engineering-student-at-sea-1789632005</id>
            <summary type="text">மொரட்டுவை பல்கலைக்கழக பொறியியல் பீடத்தில் அடுத்த மாதம் இணையவிருந்த 22 வயதான திறமையான மாணவன் ஒருவர், மாரவில கடற்கரையில் வீசிய திடீர் அலை சீற்றத்தில் சி...</summary>
            <content type="html"><![CDATA[<p>மொரட்டுவை பல்கலைக்கழக பொறியியல் பீடத்தில் அடுத்த மாதம் இணையவிருந்த 22 வயதான திறமையான மாணவன் ஒருவர், மாரவில கடற்கரையில் வீசிய திடீர் அலை சீற்றத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.</p><p>
குளியாப்பிட்டிய, போதிமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த சலித்த தனுர்தர மதுஷன் விதானகே என்ற இளைஞனே இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.</p><p> க.பொ.த உயர்தர பரீட்சையில் கணிதப் பிரிவில் சிறந்த சித்திகளைப் பெற்று பல்கலைக்கழக பிரவேசத்திற்காக காத்திருந்த காலத்தில், அவர் தனியார் நிறுவனம் ஒன்றில் தள மேற்பார்வையாளராகப் பணியாற்றி வந்துள்ளார்.</p><h2>திடீரென வந்த அலை..&nbsp;</h2><p> </p><p>இதன்போது, இதுவரை கடலைப் பார்த்திராத தனது சக ஊழியர்கள் அறுவரை, அவர்களின் ஆசையை நிறைவேற்றுவதற்காக மாரவில குருசடி தேவாலயத்திற்கு அருகிலுள்ள கடற்கரைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d8170f62-d840-4cf4-885a-59ebe448c0ea/26-6aaba7e3a3a0c.webp' /></p><p>
</p><p>
நண்பர்கள் கடலில் நீராடிக் கொண்டிருந்த வேளையில், சலித்த கடற்கரையோரப் பாறை ஒன்றின் மீது அமர்ந்திருந்தபோது எதிர்பாராதவிதமாக வந்த மிகப்பெரிய அலை அவரை கடலுக்குள் இழுத்துச் சென்றுள்ளது. </p><p>அவர் ஒரு திறமையான நீச்சல் வீரராக இருந்தபோதிலும், கடலின் நீரோட்டத்திற்கு முன்னால் அவரால் உயிர்தப்ப முடியாமல் போயுள்ளது.</p><p> கடற்படையினர் மற்றும் பிரதேசவாசிகளின் தீவிர தேடுதல் நடவடிக்கையைத் தொடர்ந்து, மறுநாள் பிற்பகல் அவரது சடலம் கரையொதுங்கியது.
</p><p>இச்சம்பவம், அவரின் குடம்பத்திற்கு, ஈடுசெய்ய முடியாத பெரும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-17T09:14:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[செயற்கை நுண்ணறிவால் சிறுவர்களுக்கு காத்திருக்கும் ஆபத்து ; பெற்றோருக்கு வெளியான எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/ai-poses-risks-to-children-1789636051"></link>
            <id>https://jvpnews.com/article/ai-poses-risks-to-children-1789636051</id>
            <summary type="text">செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் அதிவேக வளர்ச்சியுடன், இணையவழியில் சிறுவர்கள் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்களின் தன்மையும் தீவிரமடைந்துள்ளதாக பொலிஸார்...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் அதிவேக வளர்ச்சியுடன், இணையவழியில் சிறுவர்கள் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்களின் தன்மையும் தீவிரமடைந்துள்ளதாக பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.</p><p style="text-align: justify; ">

 குறிப்பாக, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்படும் சிறுவர் பாலியல் துஷ்பிரயோக உள்டக்கங்களால் தற்காலத்தில் குடும்பங்கள் எதிர்கொள்ளும் மிகப்பெரிய டிஜிட்டல் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ac0e2608-1c7d-40bb-8545-1edbd983be27/26-6aabaf4c4a2d9.webp' /></p><h2 style="text-align: justify; ">அறிகுறிகள்</h2><p>
</p><p style="text-align: justify; ">
இது தொடர்பாக இலங்கை பொலிஸாரின் உத்தியோகபூர்வ சமூக ஊடகப் பக்கங்களில் விசேட விழிப்புணர்வு அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; ">
முன்னைய காலங்களில் இணையத்தில் பரப்பப்பட்ட சிறுவர் பாலியல் துஷ்பிரயோகப் படங்கள் அல்லது காணொளிகள் உண்மையாகப் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் நிழற்படங்களைக் கொண்டிருந்தன.</p><p style="text-align: justify; ">தற்போதைய செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப முன்னேற்றத்தால், குற்றவாளிகள் சிறுவர்களின் சாதாரண புகைப்படங்களை அவர்களின் அறிவோ அல்லது அனுமதியோ இன்றி, மிகத் துல்லியமான ஆபாச அல்லது துஷ்பிரயோகப் படங்களாக மாற்றியமைக்க முடிகிறது.
</p><p style="text-align: justify; ">
இது சிறுவர்களின் தனியுரிமை, கண்ணியம் மற்றும் மனநலத்திற்குப் பலத்த அச்சுறுத்தலை ஏற்படுத்துவதுடன், இணையவழி அச்சுறுத்தல் மற்றும் துன்புறுத்தல்களுக்கு வழிவகுக்கிறது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">

சிறுவர்கள் இணைய அச்சுறுத்தலுக்கு உள்ளாவதைக் காட்டும் அறிகுறிகள்:

ஒரு குழந்தை இணையவழியில் அச்சுறுத்தல் அல்லது தவறான செல்வாக்கிற்கு உள்ளாகியிருப்பதை உணர்த்தும் சில முக்கிய அறிகுறிகளைப் பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.</p><p style="text-align: justify; ">சமூக குழுக்களில் இணையுங்கள்


கணினி அல்லது மொபைல் போனைப் பயன்படுத்தும்போது யாராவது அருகில் வந்தால், உடனே திரையை மூடுதல் அல்லது மறைத்தல்.</p><p style="text-align: justify; ">

சமூக ஊடகக் கணக்குகளின் தனியுரிமக் கட்டுப்பாடுகளைத் திடீரென அதிகரித்தல் அல்லது இரகசியமாகப் புதிய கணக்குகளை உருவாக்குதல்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
திடீர் பதற்றம், மன அழுத்தம், குற்ற உணர்ச்சி அல்லது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடமிருந்து விலகி தனித்திருக்கும் போக்கு.</p><p style="text-align: justify; ">

பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளின் புகைப்படங்களைச் சமூக ஊடகங்களில் பகிரும்போது மிகுந்த அவதானத்துடன் செயல்பட வேண்டும். </p><p style="text-align: justify; ">பொதுக் கணக்குகளுக்குப் பதிலாகத் தனியுரிமை பாதுகாப்பு அமைப்புகளைப் பயன்படுத்த வேண்டும். </p><p style="text-align: justify; ">இணையத்தில் உள்ள ஆபத்துகள் மற்றும் தெரியாத நபர்களுடன் பழகுவதால் ஏற்படும் தீமைகள் குறித்துப் பிள்ளைகளுடன் தோழமையுடன் திறந்த மனதுடன் பேச வேண்டும்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
பிள்ளைகள் அணுகும் வலைத்தளங்கள் மற்றும் செயலிகளைக் கண்காணிப்பதுடன், பெற்றோர் கட்டுப்பாட்டுக் கருவிகளை சாத்தியமான இடங்களில் பயன்படுத்த வேண்டும்.
</p><p style="text-align: justify; ">
டிஜிட்டல் யுகத்தில் பிள்ளைகளைப் பாதுகாப்பது விழிப்புணர்விலிருந்தே தொடங்குகிறது எனவும், பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் பாதுகாவலர்கள் கூட்டுப் பொறுப்புடன் விழிப்புடன் செயல்பட வேண்டும் என்றும் இலங்கை பொலிஸார் வலியுறுத்தியுள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-09-17T09:14:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மட்டக்குளி விபத்து ; சாரதிக்கு விளக்கமறியல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/mattakkuliya-accident-driver-remanded-1789636557"></link>
            <id>https://jvpnews.com/article/mattakkuliya-accident-driver-remanded-1789636557</id>
            <summary type="text">&amp;nbsp; மட்டக்குளியில் நேற்று இடம்பெற்ற விபத்து சம்பவத்தின் பின்னர் கைது செய்யப்பட்ட காரின் சாரதியை எதிர்வரும் 30 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;<a href="https://jvpnews.com/article/accident-in-the-mattakkuli-1789623280" target="_blank"> மட்டக்குளியில் நேற்று இடம்பெற்ற விபத்து</a> சம்பவத்தின் பின்னர் கைது செய்யப்பட்ட காரின் சாரதியை எதிர்வரும் 30 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. </p><p>

சந்தேகநபர் இன்றைய தினம் புதுக்கடை 7 ஆம் இலக்க போக்குவரத்து பிரிவு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மட்டக்குளி பகுதியில் நேற்று இரவு இடமம்பெற்ற கோர விபத்தில் மூவர் உயிரிழந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4f7cf3ea-91de-446f-a507-8c73f1582d3e/26-6aabafceccd4c.webp' /></p><p></p><h2>காரொன்று&nbsp; பல வாகனங்களுடன் மோதி&nbsp;விபத்து</h2><p>
</p><p>
காரொன்று வீதியில் பயணித்த பல வாகனங்களுடன் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றிருந்தது.
</p><p>
விபத்தில் உயிரிழந்தவர்கள் 64 வயதுடைய இருவர் மற்றும் 44 வயதுடைய ஒருவர் என்பதுடன் அவர்கள் கிரான்ட்பாஸ், கொழும்பு 15 மற்றும் வத்தளை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p></p><p> 

 விபத்தை அடுத்து உடனடியாகச் செயற்பட்ட பிரதேச மக்கள் காயமடைந்தவர்களை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுத்தனர். 

இந்நிலையில் தற்போது 8 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

விபத்தை ஏற்படுத்திய காரின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-17T09:12:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதிக அழிவை ஏற்படுத்தக்கூடிய 2,000 பவுண்டு குண்டுகளை இஸ்ரேலுக்கு விற்கும் அமெரிக்கா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/trump-plans-israel-arms-sale-1789624991"></link>
            <id>https://news.lankasri.com/article/trump-plans-israel-arms-sale-1789624991</id>
            <summary type="text">Trump’s administration is planning to sell highly destructive 2,000-pound bombs to israel: அதிக அழிவை ஏற்படுத்தக்கூடிய 2,000 பவுண்டு எடையுள்ள குண்டுகள...</summary>
            <content type="html"><![CDATA[<p>Trump’s administration is planning to sell highly destructive 2,000-pound bombs to israel: அதிக அழிவை ஏற்படுத்தக்கூடிய 2,000 பவுண்டு எடையுள்ள குண்டுகளை இஸ்ரேலுக்கு விற்க ட்ரம்ப் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
</p><p>அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகம், பல்லாயிரக்கணக்கான, அதிக அழிவை ஏற்படுத்தக்கூடிய 2,000 பவுண்டு எடை கொண்ட குண்டுகள் உட்பட 2.8 பில்லியன் டொலர் மதிப்பிலான ஆயுதத் தொகுப்பை இஸ்ரேலுக்கு விற்கத் திட்டமிட்டுள்ளது.</p><h2>அளவுக்கு அதிகமாக</h2><p>
முக்கிய ஆயுத விற்பனைகளை மறுஆய்வு செய்யும் தொடர்புடைய நாடாளுமன்றக் குழுக்களுக்கு முறைசாரா முறையில் தெரிவிக்கப்பட்டுள்ள இந்தத் திட்டமிடப்பட்ட தொகுப்பில், 20,000 எம்.கே-84 குண்டுகளும் 20,000 பி.எல்.யூ-117 குண்டுகளும் அடங்கும் என தகவல் கசிந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8e750fca-295b-46f0-a114-fdc785f6ae62/26-6aab82a113726.webp' /></p><p> </p><p>2023-இல் காஸா போர் தொடங்கியதிலிருந்து, இஸ்ரேலுக்கான அமெரிக்கப் பொதுமக்களின் ஆதரவு, குறிப்பாக ஜனநாயகக் கட்சியினரிடையே பெருமளவில் சரிந்துள்ளது. </p><p>
ஜூன் மாதத்தில் நடத்தப்பட்ட குவின்னிபியாக் பல்கலைக்கழகக் கருத்துக்கணிப்பு ஒன்றின்படி, அமெரிக்கா இஸ்ரேலுக்கு அளவுக்கு அதிகமாக ஆதரவளிப்பதாக 48 சதவீத பேர்களும் 66 சதவீத ஜனநாயகக் கட்சியினரும் கருதுகின்றனர்; 2017-இல் இந்தக் கேள்வி முதன்முதலில் கேட்கப்பட்டபோது இச்சதவீதங்கள் முறையே 16 மற்றும் 20 ஆக மட்டுமே இருந்தன.</p><p></p><p> </p><p>காஸா மற்றும் லெபனான் ஆகிய பகுதிகளில் இஸ்ரேல் தொடர்ந்து 2,000 பவுண்டு எடையுள்ள குண்டுகளைப் பயன்படுத்தி வருகிறது; இது மனித உரிமை ஆர்வலர்களின் கடும் எதிர்ப்பையும் கண்டனத்தையும் ஈர்த்துள்ளது.
</p><p>காஸா சுகாதாரத் துறையினரின் தகவலின்படி, இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கையில் 73,000-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். காஸாவில் இஸ்ரேல் இனப்படுகொலையை நிகழ்த்தியதாக ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணை ஒன்று கண்டறிந்தது; ஆனால், இந்தக் குற்றச்சாட்டை இஸ்ரேல் மறுக்கிறது.
</p><p>அக்டோபர் 7, 2023 அன்று ஹமாஸ் தலைமையில் நடத்தப்பட்ட தாக்குதலில் 1,200 பேர் கொல்லப்பட்டு, 250-க்கும் மேற்பட்டோரைப் பணயக்கைதிகளாகப் பிடித்ததைத் தொடர்ந்து, தாங்கள் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் தற்காப்புக்காகவே என்று இஸ்ரேல் கூறுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/851654de-b10f-46c9-b070-507424bbc39c/26-6aab82a1bea45.webp' /></p><p> </p><p>உண்மையில் காஸா போரின் பின்னணி குறித்த தகவல்களை இஸ்ரேலியப் பத்திரிகை ஒன்று சமீபத்தில் அம்பலப்படுத்தியுள்ளது. காஸா விவகாரத்தில் அமெரிக்கா தலையிட்டு ஒரு ஒப்பந்தம் எட்டப்பட்ட சூழலில், இஸ்ரேலின் பார்வை ஈரான் மீது திரும்பியது. </p><p>பிப்ரவரி 28 அன்று அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது தாக்குதல் நடத்தின. இதற்குப் பதிலடியாக, இஸ்ரேல் மற்றும் அமெரிக்க ராணுவத் தளங்கள் அமைந்துள்ள வளைகுடா நாடுகள் மீது ஈரான் தாக்குதல்களை நடத்தியது. தற்போது ஈரான் போரில் இருந்து வெளியேற முடியாமல், அமெரிக்கா திணறி வருவதுடன், கடும் பின்னடைவையும் சந்தித்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-17T09:10:22+00:00</updated>
        </entry>
    </feed>
