<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-09-08T02:31:54+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாதாள உலகக்கும்பல் தலைவரின் பரபரப்பு வாக்குமூலம்! மயானத்திலிருந்து அடுத்தடுத்து மீட்கப்பட்ட ஆயுதங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/several-guns-bus-lalia-murders-were-recovered-1788831849"></link>
            <id>https://tamilwin.com/article/several-guns-bus-lalia-murders-were-recovered-1788831849</id>
            <summary type="text">டுபாயிலிருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட திட்டமிடப்பட்ட குற்றக்கும்பலை சேர்ந்த பஸ் லலித் என்ற லலித் கண்ணங்கர என்பவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்...</summary>
            <content type="html"><![CDATA[<p>டுபாயிலிருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட திட்டமிடப்பட்ட குற்றக்கும்பலை சேர்ந்த பஸ் லலித் என்ற லலித் கண்ணங்கர என்பவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில்&nbsp;சில துப்பாக்கிகள் மீட்கப்பட்டுள்ளன.</p><p> ஹங்வெல்ல பகுதியிலுள்ள மயானமொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் துப்பாக்கிகள் மீட்கப்பட்டுள்ளதாக கொழும்பு மத்திய குற்றவியல் விசாரணை பணியகம் தெரிவித்துள்ளது.</p><h2>மூன்று சந்தேகநபர்களும் கைது</h2><p>நாடு முழுவதும் 'பஸ் லலியா' செய்த கொலைகளில் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் டி-56 ரக துப்பாக்கி உட்பட பல ஆயுதங்கள் நேற்று (7) இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6df5dd5b-3d07-43d9-b318-3ff93b8dd41c/26-6a9f6ec174619.webp' /></p><p>இந்த ஆயுதங்களுடன், லலித் கண்ணங்கரவின் பாதாள உலகக்கும்பலுடன் தொடர்புடைய மூன்று சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p>இலங்கையில் கொலைகள், துப்பாக்கிச் சூடுகள், கடத்தல்கள் மற்றும் கப்பம் கோருதல் போன்ற பல குற்றச்சாட்டுகளுக்காக சர்வதேச பொலிஸாரின் (Interpol) சிவப்பு எச்சரிக்கை (Red Notice) விடுக்கப்பட்டிருந்த நிலையில், இவர் டுபாயில் தங்கியிருந்த போது கைது செய்யப்பட்டார்.</p><p>இதனையடுத்து டுபாய் நீதிமன்ற உத்தரவின் பேரில் 2026 ஆகஸ்ட் 25 அன்று இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டு, தற்போது விசாரிக்கப்பட்டு வருகின்றார்.</p><p>&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-09-08T02:11:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Erimalai</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் இரவு நேரம் இடம்பெற்ற சோதனை : சட்டவிரோத செயற்பாட்டில் ஈடுபட்ட உழவு இயந்திரம் சிக்கியது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/midnight-raid-in-jaffna-1788827685"></link>
            <id>https://ibctamil.com/article/midnight-raid-in-jaffna-1788827685</id>
            <summary type="text">யாழ் வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டில் சட்டவிரோதமான முறையில் இரவு நேரத்தில்
மணல் ஏற்றிய உழவு இயந்திரம் மருதங்கேணி காவல்துறையினரால் மடக்கி
பிடிக்கப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ் வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டில் சட்டவிரோதமான முறையில் இரவு நேரத்தில்
மணல் ஏற்றிய உழவு இயந்திரம் மருதங்கேணி காவல்துறையினரால் மடக்கி
பிடிக்கப்பட்டுள்ளதுடன் சந்தேக நபர்கள் தப்பிச் சென்றுள்ளனர்
</p><p>
சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில் ,
</p><p>
கட்டைக்காடு பகுதியில் இரவு நேரத்தில் சில உழவு இயந்திரங்கள் மூலம்
சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றி அருகில் உள்ள கேவில், நித்தியவெட்டை,
வெற்றிலைக்கேணி பகுதிகளுக்கு கொண்டு செல்வதாக மருதங்கேணி காவல்துறைக்கு இரகசிய
தகவல் கிடைத்தது.</p><h2>கைப்பற்றப்பட்ட உழவு இயந்திரம்</h2><p>இதனடிப்படையில் குறித்த பகுதியை நேற்று முன்தினம்(6) இரவு சுற்றிவளைத்த மருதங்கேணி
காவல்துறை பொறுப்பதிகாரி கெலும் பண்டார தலைமையிலான காவல்துறை குழுவினர் மணல் ஏற்றிய
உழவு இயந்திரத்தை கைப்பற்றினர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0bd9422c-5d23-4b83-b7fc-bcbe184170af/26-6a9f5826bf8b5.webp' /></p><p>
</p><p>
தப்பிச் சென்ற சந்தேக நபர்களை கைது செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதுடன்
கைப்பற்றப்பட்ட உழவு இயந்திரம் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மருதங்கேணி
காவல் நிலையம் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
</p><p>
உழவு இயந்திரம் வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியை சேர்ந்த நபர்
ஒருவருக்கு சொந்தமானதென காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்</p><p>

குறித்த பகுதியில் இருந்து மேலும் ஒருவரும், கேவில் பகுதியில் இருந்து
இன்னொருவரும் தொடர்ச்சியாக களவாக மணல் ஏற்றிவருவது தொடர்பில் காவல்துறையினர் அவதானம்
செலுத்தியுள்ளதுடன்.விரைவில் அவர்களை கைது செய்யும் பணி
முன்னெடுக்கப்படவுள்ளதாக காவல்துறை பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.&nbsp; &nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p> &nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-09-08T01:35:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலக நாடுகளிடம் ஈரானின் கோரிக்கை ; அமெரிக்காவிற்கு காத்திருக்கும் சிக்கல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/iran-s-appeal-to-world-nations-1788828274"></link>
            <id>https://canadamirror.com/article/iran-s-appeal-to-world-nations-1788828274</id>
            <summary type="text">அமெரிக்க-இஸ்ரேலிய ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக இஸ்லாமிய நாடுகள் அனைத்தும் ஒற்றுமையாகவும் பொறுப்புடனும் செயல்பட வேண்டும் என ஈரான் கோரியுள்ளது.

ஈரானின்...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்க-இஸ்ரேலிய ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக இஸ்லாமிய நாடுகள் அனைத்தும் ஒற்றுமையாகவும் பொறுப்புடனும் செயல்பட வேண்டும் என ஈரான் கோரியுள்ளது.
</p><p>
ஈரானின் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6ce44754-f7ea-4444-ad6d-34cd4ed8cb62/26-6a9f5a738d1de.webp' /></p><p>

OIC என்ற இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் புதிய பொதுச் செயலாளரான இஸ்மாயில் உல்ட் ஷெய்க் அகமதுடன் (Ismail Ould Cheikh Ahmed) தொலைபேசியில் உரையாடியபோது அவர் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.</p><p>

பாலஸ்தீனம் மற்றும் லெபனான் மீது இஸ்ரேல் தொடர்ச்சியாக நடத்தி வரும் தாக்குதல்கள் குறித்தும், ஈரானின் இறையாண்மைக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்கள் குறித்தும் இதன்போது OIC தலைவரிடம் அராக்சி தனது அதிருப்தியை பகிர்ந்து கொண்டார்.
</p><p>
பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள தற்போதைய பதற்றமான சூழலை எதிர்கொள்ள இஸ்லாமிய நாடுகள் யாவும் தெளிவான மற்றும் ஒருங்கிணைந்த நிலைப்பாட்டை எடுக்க வேண்டியதன் அவசியத்தை அராக்சி இந்த தொலைபேசி உரையாடலின்போது வலியுறுத்தியுள்ளார்.</p>]]></content>
            <updated>2026-09-08T01:30:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிம்ம ராசியில் கேது: அடுத்து வரும் 90 நாட்கள் இந்த ராசிக்கு பொற்காலம் தான்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/ketu-in-leo-golden-90-days-ahead-1788830724"></link>
            <id>https://jvpnews.com/article/ketu-in-leo-golden-90-days-ahead-1788830724</id>
            <summary type="text">&amp;nbsp;ஜோதிடத்தின் படி, நவகிரகங்களில் நிழல் கிரகமாக கருதப்படுபவர் கேது. இந்த கேது முக்தி, ஆன்மீகம், உள்ளுணர்வு ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார். தற...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">&nbsp;ஜோதிடத்தின் படி, நவகிரகங்களில் நிழல் கிரகமாக கருதப்படுபவர் கேது. இந்த கேது முக்தி, ஆன்மீகம், உள்ளுணர்வு ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார். தற்போது கேது சிம்ம ராசியிலும், மகம் நட்சத்திரத்திலும் உள்ளார்.</p><p style="text-align: justify;"> சிம்ம ராசியில் கேது டிசம்பர் மாதம் வரை இருந்து, பின் கடக ராசிக்குள் நுழைவார். எனவே அடுத்து வரும் 90 நாட்கள் சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது.இப்போது சிம்ம ராசியில் இருக்கும் கேதுவால் எந்த ராசிக்கு சிறப்பாக இருக்கப் போகிறது என்பதைக் காண்போம்.</p><p style="text-align: justify;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/593ae5eb-3d99-4074-a17c-561a79f656bf/26-6a9f640603982.webp' /></p><h2 style="text-align: justify;">&nbsp;உங்கள் ராசி உள்ளதா ?</h2><p style="text-align: justify;"> </p><p style="text-align: justify;"> </p><p style="text-align: justify; "><b>

ரிஷபம் :</b>புதிய தொழிலை தொடங்கும் ஆசை இருந்தால், இக்காலத்தில் அதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். வேலை தொடர்பாக மேற்கொள்ளும் பயணங்களால் நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும். வணிகர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். பணியிடத்தில் உங்களின் செயல்திறன் பாராட்டப்படும். நீண்ட கால கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். தொழிலதிபர்களுக்கு நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; "><b>


சிம்மம் :</b>புதிய நட்புகள் கிடைக்கும். அந்த நட்பால் எதிர்காலத்தில் நல்ல நன்மைகள் கிடைக்கும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. வேலை தொடர்பான பயணங்களை மேற்கொள்ள நேரிடும். இந்த பயணங்களால் நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும். புதிய தொழிலை தொடங்குவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். அதை திறம்பட பயன்படுத்தினால் நல்ல உயரத்தை அடைவீர்கள். சிலருக்கு புதிய வீடு, வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">

</p><p style="text-align: justify; "><b>மகரம் :</b>வாழ்க்கையில் புதிய விஷயங்களை முயற்சிக்கும் வாய்ப்பு கிடைக்கும். நிதி நிலைமை மேம்படும். வாழ்க்கைத் துணையுடனான உறவு மேம்படும். தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றம் ஏற்படும். நீண்ட காலத்திற்குப் பிறகு உங்கள் நண்பரை/உறவினரைச் சந்திப்பது உங்கள் குடும்பத்திற்கு மகிழ்ச்சியையும் ஆனந்தத்தையும் தரும். மொத்தத்தில் அடுத்த 3 மாத காலம் அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் இருப்பதை நீங்கள் உணர்வீர்கள்.</p>]]></content>
            <updated>2026-09-08T01:30:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[மட்டக்களப்பு எம்.பி கள் மீது ஊழல் மோசடி விசாரணை ; கந்தசாமி பிரபு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/corruption-probe-against-batticaloa-mps-1788827813"></link>
            <id>https://jvpnews.com/article/corruption-probe-against-batticaloa-mps-1788827813</id>
            <summary type="text">மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் இன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் மீது ஊழல் மோசடி தொடர்பாக விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. எனவே ஊழல் மோசடி தொ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் இன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் மீது ஊழல் மோசடி தொடர்பாக விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. </p><p style="text-align: justify; ">எனவே ஊழல் மோசடி தொடர்பான குற்றச்சாட்டுகளில் தொடர்புபட்டவர்கள் யாராக இருந்தாலும், சட்டத்தின் முன் அனைவரும் சமமாக நடத்தப்பட்டார்கள் சட்டம் தன் கடமையை சுயாதீனமாக செய்யும் என நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு, தெரிவித்தார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/210df6db-cff6-41bb-b16d-8b8b3437ab11/26-6a9f58a720c79.webp' /></p><h2 style="text-align: justify; ">திருட்டுக் கும்பல்</h2><p style="text-align: justify; ">
மட்டக்களப்பில் திங்கட்கிழமை (7) ஊழல் தொடர்பாக ஊடகவியலாளர் கேள்விக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
</p><p style="text-align: justify; ">
குற்றச்சாட்டுகள் தொடர்பாக மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் மற்றும் இந்நாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது விசாரணைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. </p><p style="text-align: justify; ">சட்டத்திற்கு மதிப்பளித்து அனைவரும் செயல்பட வேண்டும் என்பதோடு, விசாரணையின் முடிவில் எட்டப்படும் தீர்மானங்கள் எவ்வித தலையீடுமின்றி நடைமுறைப்படுத்தப்படும்.
</p><p style="text-align: justify; ">

சட்ட ஆட்சியை நடைமுறைப்படுத்தும் ஒரு அரசாங்கம் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் எனவே ஜனாதிபதி வேட்பாளராக இருந்தவர்கள் ஆளுநராக இருந்தவர்கள் இப்போது நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்தாலும் அவர்களுக்கும் அதே சட்டம் பாயும்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
நாமல் ராஜபக்ச தற்போது சிறைவாசம் அனுபவித்து கொண்டிருக்கும் நிலையில் சமூகத்தில் பலவிதமான கருத்துக்கள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது அதே நேரத்தில் முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்க, கடந்த காலங்களில் எதிர்க்கட்சி ஆளும் கட்சியாக இருந்த காலத்தில் ராஜபக்ச குடும்பத்தினரை 'திருடர்கள்' என பகிரங்கமாக விமர்சித்தார்.
</p><p style="text-align: justify; ">
இவ்வாறு ராஜபக்ஸக்கள் திருடர்கள் என சொன்ன ரணில் கடந்த காலத்தில் அவர்களுடன் சேர்ந்து ஆட்சி பீடம் ஏறிய அவர் இன்று அந்த திருடர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றார்

ரணிலுக்கு அன்று ராஜபக்ஷக்கள் திருடர்களாக தெரிந்தது இன்று அவர்கள் நல்லவர்கள் போல தெரிகின்றது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> ஆகவே இந்த திருட்டுக் கும்பலின் மகிந்த ராஜபக்ஷக்களின் தலைவராக ரணில் விக்கிரமசிங்க பெறுப்பேற்றுள்ளார்.</p><p style="text-align: justify; "> அவர்களின் செயல்பாடு இன்று மக்கள் மத்தியில் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ள இந்த நாட்டை வங்குரோத்து அடைய காரணமாக இருந்தவர்களில் இவரும் ஒருவராக இருந்துள்ளதுடன் குற்ற செயல்களுடன் சம்மந்தமாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது இவா திருட்டு கூட்டங்களுடன் ஒன்று சேர்ந்து அவர்களை காப்பாற்ற முயற்சியில் ஈடுபடுகின்றார்.</p><p style="text-align: justify; ">
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் நாட்டின் நீதித்துறை மற்றும் விசாரணை அமைப்புகள் முற்றிலும் சுயாதீனமாக இயங்கி வருகின்றன. சிறியவர்களாக இருந்தாலும் பெரியவர்களாக இருந்தாலும் குற்றம் நிருபிக்கப்பட்டால் சட்டம் தன் கடமையைச் செய்யும் என்றார்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-08T01:29:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[வவுனியாவில் இரு இளைஞர்களின் தகாத செயல் ; சோதனையில் காத்திருந்த ஷாக்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/two-vavuniya-youths-involved-in-illegal-act-1788827136"></link>
            <id>https://jvpnews.com/article/two-vavuniya-youths-involved-in-illegal-act-1788827136</id>
            <summary type="text">போதை மாத்திரைகளுடன் வவுனியாவில் இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட குற்றவிசாரணை பிரிவு பொலிசார் தெரிவித்தனர்.  

வவுனியா மாவட்ட குற்றவிசார...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">போதை மாத்திரைகளுடன் வவுனியாவில் இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட குற்றவிசாரணை பிரிவு பொலிசார் தெரிவித்தனர். </p><p style="text-align: justify; "> 

வவுனியா மாவட்ட குற்றவிசாரணை பிரிவு பொலிசாருக்கு கிடைத்த தகவலையடுத்து வவுனியா கோவில்குளம் மற்றும் சமளங்குளம் பகுதியில் காலை மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது குறித்த இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/45a3fff4-f9ce-4952-9d46-ef9c473d8b94/26-6a9f560204a9e.webp' /></p><p style="text-align: justify; ">அவர்களிடம் இருந்து 1700போதை மாத்திரைகள் பொலிசாரால் மீட்கப்பட்டது.</p><p style="text-align: justify; ">

குறித்த கைது நடவடிக்கை வவுனியா மாவட்ட குற்றிவிசாரணை பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் தலைமையில் மேற்கொள்ளப்பட்டது. </p><p style="text-align: justify; ">


கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-08T01:29:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பகுதியில் முற்றுகையிடப்பட்ட வீடு ; அரங்கேறிய தகாத செயல் அம்பலம் ; வசமாக சிக்கிய ஒருவர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/indecent-act-inside-besieged-house-in-tamil-area-1788829194"></link>
            <id>https://jvpnews.com/article/indecent-act-inside-besieged-house-in-tamil-area-1788829194</id>
            <summary type="text">மட்டக்களப்பு ஆரையம்பதி பிரதேசத்தில் வீடு ஒன்றில் இடம்பெற்று வந்த கசிப்பு உற்பத்தி நிலையத்தை திங்கட்கிழமை (7) முற்றுகையிட்ட பொலிசார் உற்பத்தியில் ஈடுபட...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">மட்டக்களப்பு ஆரையம்பதி பிரதேசத்தில் வீடு ஒன்றில் இடம்பெற்று வந்த கசிப்பு உற்பத்தி நிலையத்தை திங்கட்கிழமை (7) முற்றுகையிட்ட பொலிசார் உற்பத்தியில் ஈடுபட்டிருந்த ஒருவரை கைது செய்ததுடன் அவரிடம் இருந்து 1500 மில்லி லீற்றர் கசிப்பும், 83000 மில்லி லீற்றர் கோடா மற்றும் கசிப்பு உற்பத்தி உபகரணங்களை மீட்டுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.
</p><p style="text-align: justify; ">
காத்தான்குடி பொலிஸ் நிலைய போதை ஒழிப்பு மற்றும் இலஞ்ச ஒழிப்பு பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர்க்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றையடுத்து அவர் தலைமையிலான பொலிஸ் குழுவினர் சம்பவ தினமான திங்கட்கிழமை (7) ஆரையம்பதி செவநகர் பகுதியிலுள்ள குறித்த வீட்டை முற்றுகையிட்டனர்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7cee7017-358b-4d4c-a4bd-6f793ceef0d5/26-6a9f5e0c36187.webp' /></p><p style="text-align: justify; ">

இதன்போது கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 54 வயதுடைய ஒரு வரை கைது செய்ததுடன் 1500 மில்லி லீற்றர் கசிப்பும், 83000 மில்லி லீற்றர் கோடா மற்றும் கசிப்பு உற்பத்தி உபகரணங்களை மீட்டனர்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">

இதில் கைது செய்தவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக பொலிசார் தெரிவித்தனர்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-08T01:29:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாவல் பழம் சாப்பிடுவதால் என்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/benefits-of-eating-jamun-fruit-1788823792"></link>
            <id>https://jvpnews.com/article/benefits-of-eating-jamun-fruit-1788823792</id>
            <summary type="text">நாவல் பழத்தின் கொட்டையை உலர்த்தி பொடியாக்கி பயன்படுத்துவது பல்வேறு உடல்நல நன்மைகளை வழங்கக்கூடும் என வைத்திய நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். 



குறிப...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாவல் பழத்தின் கொட்டையை உலர்த்தி பொடியாக்கி பயன்படுத்துவது பல்வேறு உடல்நல நன்மைகளை வழங்கக்கூடும் என வைத்திய நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.</p><p> 



குறிப்பாக இதில் உள்ள நார்ச்சத்துகள் மற்றும் தாவரச் சேர்மங்கள் செரிமானம் மற்றும் வளர்சிதை மாற்றத்திற்கு ஆதரவாக இருக்கலாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/35e61886-f4c5-4b77-9387-2465ea43c0a7/26-6a9f48f19feb9.webp' /></p><h2>இரத்தச் சர்க்கரை</h2><p>சில ஆய்வுகளின்படி, நாவல் கொட்டையில் உள்ள இயற்கைச் சேர்மங்கள் இரத்தச் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவக்கூடும்.</p><p>



எனினும், நீரிழிவு நோயாளிகள் இதை மருந்துக்கு மாற்றாக பயன்படுத்தாமல், மருத்துவரின் ஆலோசனையுடன் மட்டுமே உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.</p><p>



நாவல் கொட்டைப் பொடியில் உள்ள நார்ச்சத்துகள் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, செரிமானத்தை சீராக்கவும் உதவக்கூடும்.</p><p></p><p> </p><p>



நீண்ட நேரம் பசியைக் கட்டுப்படுத்துவதன் மூலம் உடல் எடையைக் குறைக்கும் முயற்சிக்கும் துணையாக அமையலாம்.
</p><p>


இதய ஆரோக்கியம், குடல் செயல்பாடு மற்றும் உடலின் வளர்சி மாற்றத்தை ஆதரிக்கும் தன்மையும் இதில் இருக்கலாம் என சில ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. </p><p>



நாவல் கொட்டைப் பொடியை பயன்படுத்த விரும்புபவர்கள், வெதுவெதுப்பான நீரில் சிறிய அளவு கலந்து அருந்தலாம்.</p><p></p><p> </p><p>ஆனால் நீரிழிவு உள்ளிட்ட நீண்டகால நோய்களுக்கு சிகிச்சை பெற்று வருபவர்கள், இதை பயன்படுத்துவதற்கு முன் வைத்தியரின் ஆலோசனையைப் பெறுவது அவசியம்.



இவை பொதுவான தகவல் நோக்கங்களுக்காக வழங்கப்பட்டவையே. </p><p>உங்கள் உணவுப்பழக்கம் மற்றும் அன்றாட வாழ்க்கை முறையில் ஏதேனும் மாற்றங்களைச் செய்வதற்கு முன், தகுந்த வைத்தியரிடம் ஆலோசனை மேற்கொள்ளவும்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-08T01:29:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஊரையே பல நாட்கள் அலற வைத்த தம்பதி ; வினோதமான பூஜைகளால் பீதியில் உறைந்த கிராமம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/couple-who-terrified-the-entire-village-for-days-1788808936"></link>
            <id>https://jvpnews.com/article/couple-who-terrified-the-entire-village-for-days-1788808936</id>
            <summary type="text">திருப்பத்தூர் அருகே &quot;என் மீது கருப்பசாமி இறங்கியுள்ளார்&quot; எனக் கூறி, கணவனும் மனைவியும் கடந்த 4 நாட்களாக ஆடைகளின்றி&amp;nbsp; ஊருக்குள் வலம் வந்த சம்பவம் அப...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">திருப்பத்தூர் அருகே "என் மீது கருப்பசாமி இறங்கியுள்ளார்" எனக் கூறி, கணவனும் மனைவியும் கடந்த 4 நாட்களாக ஆடைகளின்றி&nbsp; ஊருக்குள் வலம் வந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் திகைப்பையும்,பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.


</p><p style="text-align: justify; ">இந்த தம்பதியினர் கடந்த சில நாட்களாக வீட்டின் உள்ளே வினோதமான பூஜைகளை செய்து வந்ததாக கூறப்படுகிறது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5eeed6db-6cb8-4680-af2c-90775a49900e/26-6a9f0eea0d6a6.webp' /></p><h2 style="text-align: justify; ">தீவிர விசாரணை&nbsp;</h2><p style="text-align: justify; ">கடந்த 4 நாட்களாக தெருக்களில் அவர்கள் வலம் வர, இதை பார்த்து அதிர்ச்சியடைந்த&nbsp; பொதுமக்கள் அவர்களை தட்டிக்கேட்டபோது, "எங்களை எதிர்த்தால் நீங்கள் அனைவரும் தடம் தெரியாமல் நாசமாகிவிடுவீர்கள்" என கணவன்-மனைவி இருவரும் ஊர் மக்களை நோக்கி சாபமிட்டு, மிரட்டல் விடுத்துள்ளனர்.
</p><p style="text-align: justify; ">&nbsp;அதுமட்டுமின்றி, தங்களை சாமி வந்த கோலத்தில் அப்படியே மொபைலில் 'லைவ் வீடியோ' எடுத்து சமூக வலைத்தளங்களில் வைரல் ஆக்கும்படியும் ஊர் மக்களிடம் வற்புறுத்தி ரகளையில் ஈடுபட்டுள்ளார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> பொதுமக்கள், ஒருகட்டத்தில் பொறுமையிழந்து ஆவேசமடைந்தனர். சாமியாடிய தம்பதியினரை மடக்கி பிடித்து, கயிறுகளால் கட்டி வைத்தனர். </p><p style="text-align: justify; ">&nbsp;தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிசார், பொதுமக்களின் பிடியில் இருந்த தம்பதியினரை மீட்டு, காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-08T01:29:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ்ப்பாணத்திற்கு மெட்ரோ பேருந்து சேவை ; அமைச்சர் வெளியிட்ட தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/metro-bus-service-coming-to-jaffna-1788801457"></link>
            <id>https://jvpnews.com/article/metro-bus-service-coming-to-jaffna-1788801457</id>
            <summary type="text">மெட்ரோ பேருந்து சேவையை மேல் மாகாணத்திற்கு அப்பால் விரிவுபடுத்தி காலி, கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளுக்கும் அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">மெட்ரோ பேருந்து சேவையை மேல் மாகாணத்திற்கு அப்பால் விரிவுபடுத்தி காலி, கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளுக்கும் அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். </p><p style="text-align: justify; ">

இன்று (07) கடவத்தை மெட்ரோ டிப்போ முனையத்தின் செயல்பாடுகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/774a4229-f2a6-463f-b8d3-2d844a4444d0/26-6a9ef1b2b7a2e.webp' /></p><h2 style="text-align: justify; ">&nbsp;மெட்ரோ பேருந்து சேவை</h2><p style="text-align: justify; "> 

இம்மாதத்திற்குள் மெட்ரோ பேருந்து சேவையின் பேருந்துகளின் எண்ணிக்கையை 122 ஆக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும், மேலும் 50 பேருந்துகளை கொள்முதல் செய்வதற்கான அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.</p><p style="text-align: justify; "> 

அதன்படி, இந்த ஆண்டின் இறுதிக்குள் அல்லது அடுத்த ஆண்டின் முற்பகுதியில் மெட்ரோ பேருந்து சேவையை 172 பேருந்துகள் வரை விரிவாக்க எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டார். </p><p style="text-align: justify; ">

மெட்ரோ நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து பேருந்து சேவையை நடத்துவதற்கு எதிர்காலத்தில் தனியார் துறைக்கும் வாய்ப்பளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> 

இதற்கிடையில், நாட்டின் நகர போக்குவரத்து துறையை நவீனமயமாக்கும் திட்டத்தின் கீழ், மெட்ரோ பேருந்து சேவைக்கு தேவையான உள்கட்டமைப்புகளை மேம்படுத்தும் பணிகளை போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு, Clean Sri Lanka செயலகம், இலங்கை போக்குவரத்து சபை மற்றும் லங்கா மெட்ரோ டிரான்சிட் தனியார் நிறுவனம் ஆகியன இணைந்து மேற்கொண்டு வருகின்றன. </p><p style="text-align: justify; ">

இத்திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட கடவத்தை மெட்ரோ டிப்போ முனையத்தின் செயல்பாடுகள் இன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டன. 

மெட்ரோ திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட முதலாவது டிப்போ முனையம் கடந்த 04 ஆம் திகதி பத்தரமுல்லை, தலங்கம பகுதியில் மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது.</p><p style="text-align: justify; "> 

மெட்ரோ பேருந்து சேவையின் நிர்வாகம், செயல்பாடுகள் மற்றும் பராமரிப்பு பணிகளை வலுப்படுத்துவதற்காக முதற்கட்டமாக தலங்கம, கடவத்தை, ஏகல மற்றும் இரத்மலானை ஆகிய பகுதிகளை மையமாகக் கொண்டு 04 புதிய டிப்போக்களை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> 

தற்போது மெட்ரோ பேருந்து சேவையின் 01 ஆம் இலக்க வழியின் கீழ் மாகும்புரவிலிருந்து மகரகம ஊடாக கடவத்தை வரை சேவைகள் இயங்கி வருவதுடன், அந்த வழித்தடத்திற்கு 15 புதிய மெட்ரோ பேருந்துகளை ஈடுபடுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "> 

மேலும் பேருந்து நிறுத்தங்கள், ஒருங்கிணைந்த கட்டண முறைகள், டிப்போ வசதிகள் மற்றும் வாகன நிறுத்துமிடங்கள் உள்ளிட்ட ஏனைய போக்குவரத்து சேவைகளுடனான தொடர்பை மேம்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. </p><p style="text-align: justify; ">

அத்துடன், பொதுப் போக்குவரத்து சேவையில் முக்கிய பங்காற்றும் இலங்கை போக்குவரத்து சபையை (CTB) மேலும் வலுப்படுத்துவதற்காக, இந்த ஆண்டின் இறுதிக்குள் 600 புதிய குளிரூட்டப்பட்ட (A/C) பேருந்துகளை இறக்குமதி செய்யவும், இலங்கை போக்குவரத்து சபையின் நிதியைப் பயன்படுத்தி மேலும் 200 பேருந்துகளைக் கொள்முதல் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் குறிப்பிட்டார்.</p>]]></content>
            <updated>2026-09-08T01:28:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழக முதல்வர் விஜய்யின் சட்டமன்ற உரை ; ஒரு மணி நேரத்தில் பதிவான விடயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/tamil-nadu-cm-vijay-s-assembly-speech-1788799733"></link>
            <id>https://jvpnews.com/article/tamil-nadu-cm-vijay-s-assembly-speech-1788799733</id>
            <summary type="text">தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் சி. ஜோசப் விஜய் இன்று ஆற்றிய உரை டிஜிட்டல் தளங்களில் கவனம் பெற்றதாக கூறப்படுகிறது. குறிப்பாக பெண்களை அவமதிக்கும் பேச்சு...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் சி. ஜோசப் விஜய் இன்று ஆற்றிய உரை டிஜிட்டல் தளங்களில் கவனம் பெற்றதாக கூறப்படுகிறது.</p><p style="text-align: justify; "> குறிப்பாக பெண்களை அவமதிக்கும் பேச்சுகளுக்கு எதிராக அவர் தெரிவித்த கருத்துகள் சமூக வலைதளங்களிலும் யூடியூப் தளத்திலும் வேகமாக பரவியதாக இந்த மதிப்பீடு தெரிவிக்கிறது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/110aa765-affa-418e-9cdf-24c92e13f74a/26-6a9eeaf77217e.webp' /></p><h2 style="text-align: justify; ">பார்வையாளர்</h2><p style="text-align: justify; "> 
முக்கிய தமிழ் செய்தி நேரலைகளை சேர்த்து பார்த்தால், ஒரே நேரத்தில் சுமார் 2.7 லட்சத்துக்கும் அதிகமானோர் பார்த்ததாக கூறப்பட்டுள்ளது. </p><p style="text-align: justify; ">மேலும், உரை முடிந்த முதல் இரண்டு மணி நேரத்தில் வீடியோக்கள் மற்றும் கிளிப்புகள் மூலம் 18 லட்சத்துக்கும் அதிகமான பார்வைகள் கிடைத்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">இவை அதிகாரப்பூர்வ ஒருங்கிணைந்த புள்ளிவிவரங்கள் அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.
</p><p style="text-align: justify; "> 
பெண்கள்தான் தனது அரசியல் வெற்றிக்கு முக்கிய காரணம் என்றும், பெண்களை இழிவுபடுத்தும் வார்த்தைகளை பொறுத்துக்கொள்ள மாட்டேன் என்றும் விஜய் பேசியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "> அந்த நேரத்தில் ஆன்லைன் பார்வையாளர் செயல்பாடுகள் 340 சதவீதம் வரை அதிகரித்ததாகவும் கூறப்படுகிறது.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-08T01:27:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாரிய ஊழல் மோசடியில் சிக்கப் போகும் பிரபல பெண் அரசியல்வாதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/rossy-senanayake-in-investigation-1788755776"></link>
            <id>https://tamilwin.com/article/rossy-senanayake-in-investigation-1788755776</id>
            <summary type="text">கொழும்பு மாநகரசபையில் 2010 ஆம் ஆண்டு முதல் 2025 ஆம் ஆண்டு வரையிலான 15 வருட காலப்பகுதியில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படும் பாரிய ஊழல்கள், மோசடிகள், முறைகேட...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு மாநகரசபையில் 2010 ஆம் ஆண்டு முதல் 2025 ஆம் ஆண்டு வரையிலான 15 வருட காலப்பகுதியில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படும் பாரிய ஊழல்கள், மோசடிகள், முறைகேடுகள் மற்றும் அரச சொத்துக்கள் துஷ்பிரயோகம் தொடர்பில் தகவல்கள் வெளியாகி உள்ளன. </p><p>

இதனை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் விசாரணைகள் தற்போது மிகத் தீவிரமடைந்துள்ளன.</p><p>

குறித்த விசாரணைகளுகளுக்கமைய, கொழும்பு மாநகரசபையின் முன்னாள் உறுப்பினர்கள் 100 பேருக்கு மேற்பட்டோரிடம் ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைப் பிரிவு நீண்ட விசாரணைகளை மேற்கொண்டு வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளது.</p><p>
</p><h2><b>
மோசடிகள், முறைகேடுகள்</b></h2><p>விசாரணைகளில் சிக்கியவர்களில் முன்னாள் மேயர் ரோசி சேனாநாயக்க முக்கியமானவராக உள்ளவராக தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7e354273-fbc7-44e6-8086-2f639eb5db6a/26-6a9e4d4eef9bc.webp' /></p><p>அத்துடன், அரசாங்கக் கட்சியைச் சேர்ந்த மற்றும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த பல முன்னாள் உறுப்பினர்களும் அதில் உள்ளடங்குகின்றனர்.
</p><p>
கொழும்பு மாநகரசபைக்குள் இடம்பெற்ற பல மோசடிச் செயற்பாடுகள் கண்டறியப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைப் பிரிவு மேற்கொண்ட ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p>

2022 ஆம் ஆண்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின் போது கொழும்பு நகரில் குறைந்த வருமானம் பெறும் ஒன்றரை லட்சத்திற்கு மேற்பட்ட குடும்பங்களுக்கு ரூபா 3,500 வீதம் பணம் வழங்கும் விசேட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது. </p><p> 

எனினும், அங்கு உண்மையான குறைந்த வருமானம் பெறுவோருக்குப் பதிலாக முன்னாள் உறுப்பினர்களால் வழங்கப்பட்ட பட்டியலுக்கே வழங்கப்பட்டுள்ளது. </p><h3><b>நிதி மோசடி</b></h3><p>முன்னாள் உறுப்பினர்களின் அரசியல் ஆதரவாளர்களின் பட்டியல்களுக்குரிய வவுச்சர்கள் வழங்கப்பட்டுள்ளமைக்கான சாட்சிகள் வெளிவந்துள்ளன.
 
உறுப்பினர்கள் பலரும் தமது உத்தியோகபூர்வ அலுவலகங்களை நடத்திச் செல்வதாகக் கூறியும் ஏமாற்றியுள்ளனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ea52bc21-b4d4-4fdb-a21f-eafb7aa2460d/26-6a9e4d4fc344b.webp' /></p><p>கொழும்பு பிரதான நகரங்களை அண்மித்த வர்த்தக மதிப்புமிக்க இடங்களில் வாகனத் தரிப்பிடத்திற்காகக் காணிகளை ஒதுக்கியுள்ளனர்.
</p><p>
பின்னர் அந்த இடங்களை பெருமளவு பணத்திற்குத் தனியார் வர்த்தக நிலையங்களுக்கு விற்பனை செய்து நிதித் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டுள்ளமையும் விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.
</p><p>
எதிர்காலத்தில் இத்தகைய மோசடிகள் மற்றும் முறைகேடுகளுடன் நேரடியாகத் தொடர்புபட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்படும் முன்னாள் உறுப்பினர்களை ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு அழைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
</p><p>
மேலும் பொதுமக்கள் மற்றும் ஊடகங்களுக்கு முன்னால் பகிரங்க சாட்சி விசாரணை ஒன்றை நடத்துவதற்கும் ஆணைக்குழுவின் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
</p>]]></content>
            <updated>2026-09-08T01:27:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[நட்சத்திர வீரருக்கு எதிராக வெளிநாட்டு பயணத்தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/court-order-about-dilantha-1788830405"></link>
            <id>https://tamilwin.com/article/court-order-about-dilantha-1788830405</id>
            <summary type="text">இலங்கையின் நட்சத்திர மோட்டார் பந்தய வீரர் டிலந்த மாலகமுவ உள்ளிட்ட நால்வருக்கு வெளிநாட்டு பயணத்தடை விதிக்குமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களம் முன்வைத்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் நட்சத்திர மோட்டார் பந்தய வீரர் டிலந்த மாலகமுவ உள்ளிட்ட நால்வருக்கு வெளிநாட்டு பயணத்தடை விதிக்குமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களம் முன்வைத்த கோரிக்கையை கொழும்பு நீதவான் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.</p><p>
கொழும்பு பகுதியில் போலி ஆவணங்களைத் தயாரித்து காணிகளை விற்பனை செய்யும் மோசடியுடன் தொடர்புபட்டிருப்பதாக டிலந்த உள்ளிட்டவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
</p><p>கொழும்பு மேலதிக நீதவான் லஹிரு சில்வா முன்னிலையில் இக்கோரிக்கை சமர்ப்பிக்கப்பட்ட போது, குறித்த நபர்களை முதலில் இவ்வழக்கின் சந்தேகநபர்களாகப் பெயரிடுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு நீதவான் அறிவுறுத்தினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/58ad2af7-f0f6-4554-867d-a8ffba8a5efa/26-6a9f62c7209e8.webp' /></p><p>
போலி ஆவணங்கள் மூலம் கொழும்பிலுள்ள காணிகளை பலவந்தமாக கையகப்படுத்தி விற்பனை செய்யும் பாரிய மோசடி தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும், விசாரணைகளின் போது இவர்கள் வெளிநாடு சென்றால் விசாரணைக்கு இடையூறு ஏற்படும் எனவும் கூறி இந்த பயணத்தடையைக் கோரப்பட்டது.
</p><p>டிலந்த மாலகமுவவைத் தவிர சாந்த விதானகமகே, டெஸ்மண்ட் அமரசிங்க மற்றும் சமன் ஜெயவீர ஆகிய நால்வருக்கு எதிராகவே இப்பயணத்தடை கோரப்பட்டிருந்தது.
</p><p>கொழும்பு 07, பார்ன்ஸ் பிளேஸ் இலக்கம் 18 இல் அமைந்துள்ள 43 பேர்ச் காணியொன்றை போலி ஆவணங்கள் மூலம் தயாரித்து, பிரபல வாகன விற்பனை நிறுவனமொன்றிற்கு 1 பில்லியன் ரூபாய்க்கு விற்பனை செய்தமை தொடர்பிலேயே விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. </p><p>
இக்காணியின் உண்மையான பெறுமதி 250 கோடி ரூபாய்க்கும் அதிகமானது எனத் தெரிவிக்கப்படுகிறது.
இச்சம்பவம் தொடர்பில் பன்னிபிட்டியவைச் சேர்ந்த 80 வயதான ஆரியபால திஸாநாயக்க என்ற நபர் கைது செய்யப்பட்டு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
</p><p>காணி விற்பனை மூலம் கிடைத்த பணம் குறித்த நால்வரில் மூவருக்கு இடையே பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளதாகவும், டிலந்த மாலகமுவ என்பவருக்குப் பணத்திற்குப் பதிலாக 14 ஆடம்பர சொகுசு மோட்டார் வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக நீதிமன்றில் சுட்டிக்காட்டியுள்ளது.
</p><p>சமர்ப்பிக்கப்பட்ட விடயங்களை கவனத்தில் கொண்ட மேலதிக நீதவான், விளக்கமறியலில் உள்ள ஆரியபால திஸாநாயக்கவின் மருத்துவ அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு சிறைச்சாலை அத்தியட்சகருக்கு உத்தரவிட்டார்.
</p><p>மேலும், வெளிநாட்டு பயணத்தடை கோரப்பட்டுள்ள நபர்களை இச்சம்பவத்தின் சந்தேகநபர்களாகப் பெயரிட நடவடிக்கை எடுக்குமாறு குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளுக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-08T01:20:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[2030-க்குள் மனிதர்கள் விலங்குகளுடன் பேச AI உதவும்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/ai-may-let-humans-talk-to-animals-by-2030-1788830558"></link>
            <id>https://news.lankasri.com/article/ai-may-let-humans-talk-to-animals-by-2030-1788830558</id>
            <summary type="text">AI help humans talk to animals by 2030: புதிய தொழில்நுட்ப முன்னேற்றம் மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் இடையே நேரடி தொடர்பை ஏற்படுத்தும் வாய்ப்பை உருவா...</summary>
            <content type="html"><![CDATA[<p>AI help humans talk to animals by 2030: புதிய தொழில்நுட்ப முன்னேற்றம் மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் இடையே நேரடி தொடர்பை ஏற்படுத்தும் வாய்ப்பை உருவாக்கியுள்ளது.</p><p>
</p><h2>
விலங்குகளுடன் உரையாட முடியும்</h2><p>செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் 2030-க்குள் மனிதர்கள் விலங்குகளின் மொழியைப் புரிந்து கொண்டு அவர்களுடன் உரையாட முடியும் என சமீபத்திய ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/607c87b9-8221-477d-8867-b7c67c82fda3/26-6a9f635fcf333.webp' /></p><p>இந்த ஆய்வில், விலங்குகள் உபயோகிக்கும் ஒலிகள், சைகைகள் மற்றும் உடல் மொழியை AI மூலம் பகுப்பாய்வு செய்து, அதனை மனிதர்களுக்குப் புரியும் வகையில் மொழிபெயர்க்க முடியும் என கூறப்பட்டுள்ளது. </p><p>அதேபோல், மனிதர்களின் சொற்கள் மற்றும் உணர்வுகளை விலங்குகள் புரிந்துகொள்ளும் வகையில் மாற்றவும் AI உதவும்.
</p><p></p><p>விலங்குகளின் தொடர்பு முறைகள் மிகவும் சிக்கலானவை. அவற்றை மனிதர்கள் நேரடியாகப் புரிந்து கொள்ள முடியாது. ஆனால் AI, பெரும் அளவிலான தரவுகளை சேகரித்து, ஒலியியல் மற்றும் நடத்தைப் படிமுறைகளை ஆராய்ந்து, விலங்குகளின் உணர்வுகளை வெளிப்படுத்தும் திறன் கொண்டது என்று 
ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
</p><p>
இந்த கண்டுபிடிப்பு, விலங்குகள் பாதுகாப்பு, பண்ணை வளர்ப்பு, செல்லப்பிராணி பராமரிப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆராய்ச்சியில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும். குறிப்பாக, வனவிலங்கு பாதுகாப்பு துறையில், விலங்குகளின் தேவைகள் மற்றும் எச்சரிக்கைகளை நேரடியாக அறிந்து நடவடிக்கை எடுக்க முடியும்.
</p><p></p><p>மேலும், மனிதர்கள் தங்கள் செல்லப்பிராணிகளுடன் ஆழமான உறவை உருவாக்கும் வாய்ப்பு கிடைக்கும். நாய், பூனை போன்றவை எதை உணர்கின்றன, எதை விரும்புகின்றன என்பதை நேரடியாக அறிய முடியும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
</p><p>
இத்திட்டம் இன்னும் ஆரம்ப நிலையில் இருந்தாலும், 2030-க்குள் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. உலகளவில் பல தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் ஆராய்ச்சி மையங்கள் இந்த முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-08T01:19:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[சாதாரண தர மாணவர்கள் விடுத்துள்ள கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/speedy-re-correction-exam-results-requested-1788829589"></link>
            <id>https://tamilwin.com/article/speedy-re-correction-exam-results-requested-1788829589</id>
            <summary type="text">&amp;nbsp;2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையின் விடைத்தாள் மீள்மதிப்பீட்டு முடிவுகளை விரைவாக வெளியிடுமாறு மாணவர்கள் கோரிக்கை விடு...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையின் விடைத்தாள் மீள்மதிப்பீட்டு முடிவுகளை விரைவாக வெளியிடுமாறு மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p><p>
இப் பரீட்சை முடிவுகள் தாமதமாவதால், வேறு பாடசாலைகளுக்கு மாற எதிர்பார்க்கும் மாணவர்கள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளதாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.</p><p> 
 இதன் காரணமாகவே இக்கோரிக்கையை மாணவர்கள் முன்வைப்பதாக என தெற்கு ஊடகமொன்று தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/34885aa3-92ee-43a4-ac07-61788da7b238/26-6a9f5f96d22d1.webp' /></p><p>
</p><p>2025ஆம் ஆண்டுக்கான சாதாரண தரப் பரீட்சையானது 2026 பெப்ரவரி 17 முதல் 26 வரை நடைபெற்றதுடன், அதற்கான முடிவுகள் 2026 ஜூன் 19 அன்று பரீட்சைத் திணைக்களத்தால் வெளியிடப்பட்டன.</p><p>
அதனைத் தொடர்ந்து, குறித்த பரீட்சை முடிவுகளின் மீள்மதிப்பீடு செய்வது தொடர்பில் விண்ணப்பிப்பதற்காக வழங்கப்பட்ட கால அவகாசம் ஜூலை 08 ஆம் திகதியுடன் நிறைவடைந்தது.
</p><p>இந்நிலையில், 2026ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை நடத்தப்பட்டு அதன் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளதுடன், 2026ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சையும் நிறைவடைந்து தற்போது விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ள போதிலும், சாதாரண தர மீள்மதிப்பீட்டு முடிவுகள் இன்னும் வெளியிடப்படவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-08T01:16:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்து மதக் குழுவினரின் வருகையால் புறக்கணிக்கப்பட்ட பெண் ஊழியர்கள் ; மூடப்பட்ட ஈபிள் கோபுரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/ignored-female-staff-eiffel-tower-closed-1788830004"></link>
            <id>https://canadamirror.com/article/ignored-female-staff-eiffel-tower-closed-1788830004</id>
            <summary type="text">பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உலகப் புகழ்பெற்ற ஈபிள் கோபுரம் அமைந்துள்ளது. பிரான்ஸ் செல்லும் சுற்றுலாப் பயணிகளின் லிஸ்டில் ஈபிள் கோபுரம் நிச்சயம் இருக்கும...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உலகப் புகழ்பெற்ற ஈபிள் கோபுரம் அமைந்துள்ளது. பிரான்ஸ் செல்லும் சுற்றுலாப் பயணிகளின் லிஸ்டில் ஈபிள் கோபுரம் நிச்சயம் இருக்கும். ஆனால் நேற்று (திங்கள்கிழமை) ஈபிள் டவர் திடீரென மூடப்பட்டது. </p><p>பிரான்ஸில் புதிய கோயில் திறப்பு விழாவிற்காக வந்த சுவாமிநாராயண் சன்ஸ்தா (BAPS) அமைப்பைச் சேர்ந்த 100 பேர் அடங்கிய குழுவினர் கடந்த சனிக்கிழமை ஈபிள் கோபுரத்தை பார்வையிட்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/934f31e0-ddf0-45b1-ae97-e0c08ba73946/26-6a9f613656654.webp' /></p><p>

இந்தக் குழுவினர் செல்லும்போது, ஈபிள் கோபுரத்தில் பணிபுரியும் பெண் ஊழியகர்கள் ஷிப்டில் இருந்து நிறுத்தப்பட்டு, அவர்களுக்கு பதிலாக ஆண் ஊழியர்கள் மட்டுமே இருக்கும்படி செய்துள்ளது நிர்வாகம்.
</p><p>
இந்து மதக் குழுவினரின் வருகையின் போது, பெண் ஊழியர்கள் கட்டாயப்படுத்தப்பட்டு ஒதுக்கி வைக்கப்பட்டதாக கூறி நேற்று ஊழியர்கள் நேற்று திடீர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.</p><p>

இதற்குக் காரணமாக ஈபிள் கோபுர சுற்றுலாப் பயணிகளுக்கு நேற்று மூடப்பட்டுள்ளது.</p><p>
ஈபிள் டவரை நிர்வகிக்கும் 'SETE' நிறுவனம், "பெண்களுடனான தொடர்பை குறைக்குமாறு இந்து அமைப்பின் குழுவினர் கோரிக்கை விடுத்தது உண்மைதான், ஆனால் அந்த நிபந்தனையை நிர்வாகம் ஏற்றுக் கொண்டிருக்கக் கூடாது" என தன் தவறை ஒப்புக்கொண்டுள்ளது.
</p><p>
இந்தச் சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்துள்ள பாரிஸ் BAPS கோயில் நிர்வாகம், "நாங்கள் யாருடைய பிரவேசத்தையும் தடுக்கவில்லை.

மற்ற பார்வையாளர்களுக்கு இடையூறு இல்லாத வகையில் மட்டுமே நேரத்தை ஒதுக்குமாறு கேட்டுக் கொண்டோம். பரஸ்பர மரியாதையையே நாங்கள் நம்புகிறோம்" எனக் கூறி மன்னிப்பு கோரியுள்ளது.</p><p>
பாரிஸ் மேயர் இமானுவேல் கிரிகோயர் கூறுகையில், "பெண்களை ஒதுக்கி வைக்கும் இத்தகைய நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டது ஏற்றுக்கொள்ள முடியாதது. பிரெஞ்சு மதிப்பீடுகளுக்கு எதிரானது" எனக் கூறி இது குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.</p><p>

பிரான்ஸ் தேசிய பேரவைத் தலைவர் யேல் பிரவுன் பிவெட்கூறுகையில், "வெளிநாட்டுப் பார்வையாளர்களின் கோரிக்கைகளுக்காக பெண்கள் ஒதுங்கி நிற்க வேண்டும் என்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது" என சாடியுள்ளார்.</p>]]></content>
            <updated>2026-09-08T01:13:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பெண்கள் புறக்கணிக்கப்பட்டதால் சர்ச்சை - மூடப்பட்ட ஈபிள் கோபுரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/eiffel-tower-shut-over-women-staff-row-1788829834"></link>
            <id>https://news.lankasri.com/article/eiffel-tower-shut-over-women-staff-row-1788829834</id>
            <summary type="text">Eiffel tower shut over women staff row: பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் நகரின் அடையாளமாக விளங்கும் ஈபிள் கோபுரம் திங்கட்கிழமை தற்காலிகமாக மூடப்பட்டது.காரணம், ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Eiffel tower shut over women staff row: பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் நகரின் அடையாளமாக விளங்கும் ஈபிள் கோபுரம் திங்கட்கிழமை தற்காலிகமாக மூடப்பட்டது.</p><p>காரணம், இந்து மத குழுவான BAPS (Bochasanwasi Akshar Purushottam Swaminarayan Sanstha) சார்பில் சுமார் 100 பேர் கொண்ட குழு ஈபிள் கோபுரத்திற்கு வந்த போது, பெண் பணியாளர்கள் புறக்கணிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/75752ab8-500b-49bb-804a-97f9e3b15e72/26-6a9f608c6b8c8.webp' /></p><p>

சம்பவம் குறித்து ஊழியர் சங்க பிரதிநிதி டயான் டாவோயின் தெரிவித்ததாவது:</p><p>

“அந்த குழுவினர் கோபுரம் வழியாகச் சென்றபோது, பெண் பணியாளர்கள் தங்கள் பணியிடங்களை விட்டு வெளியேறும்படி கூறப்பட்டனர். அவர்களின் இடத்தில் ஆண்கள் பணியாற்றினர்” என்றார். இதனால் ஊழியர்களிடையே கடும் அதிருப்தி ஏற்பட்டது.
</p><p>
இந்த சம்பவம் வார இறுதியில் நடந்ததால், திங்கட்கிழமை காலை ஊழியர்கள் கூட்டம் நடத்தி, மேலாண்மையுடன் உரையாடி, இனி பெண்கள் இவ்வாறு புறக்கணிக்கப்படக்கூடாது என வலியுறுத்தினர். இதனால் கோபுரம் திறப்பதில் தாமதம் ஏற்பட்டது.
</p><p></p><p>பாரிஸ் மேயர் இம்மானுவேல் கிரெகாயர் உடனடியாக விசாரணை நடத்த உத்தரவிட்டார். “பெண்கள் புறக்கணிக்கப்பட்டது மிகுந்த கவலைக்குரியது. உண்மைகள் வெளிச்சத்திற்கு வரவேண்டும்” என அவர் தெரிவித்தார்.
</p><p>
ஈபிள் கோபுர நிர்வாகம் SETE இந்த சம்பவம் தவறானது என ஒப்புக்கொண்டது. “பெண்களுடன் தொடர்புகளை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்றுக்கொண்டது தவறு” என SETE தலைவர் அரியல் வேயில் கூறினார்.

இந்த சர்ச்சை பிரான்ஸ் அரசியல்வாதிகளிடமும் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><p> 

இதேவேளை, BAPS அமைப்பு பாரிஸ் புறநகரில் தனது முதல் பெரிய இந்துக் கோவிலை திறந்து வைத்தது. இதில் கலந்து கொண்ட இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இந்த கோவில் இந்தியாவின் பண்பாட்டு மதிப்புகளை பிரான்சுக்கு கொண்டு செல்லும் பாலமாக இருக்கும் எனக் கூறினார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-08T01:07:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாமலின் கைதின் பின்னர் விசமிகளால் இலக்கு வைக்கப்படும் தமிழர் கிராமங்கள்! வெளியான காணொளி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/tamil-villages-targeted-namal-s-arrest-1788806752"></link>
            <id>https://tamilwin.com/article/tamil-villages-targeted-namal-s-arrest-1788806752</id>
            <summary type="text">வனவளத் திணைக்கள அதிகாரிகள் என்று தங்களை அழைத்துக்கொண்ட குழுவினர், வாகரை பிரதேசத்தில் உள்ள மக்களின் வீடுகளுக்குள் அத்துமீறி நுழைந்து பொருட்களைச் சேதப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>வனவளத் திணைக்கள அதிகாரிகள் என்று தங்களை அழைத்துக்கொண்ட குழுவினர், வாகரை பிரதேசத்தில் உள்ள மக்களின் வீடுகளுக்குள் அத்துமீறி நுழைந்து பொருட்களைச் சேதப்படுத்தியுள்ள காணொளியொன்று வெளியாகியுள்ளது.
</p><p>
இந்தச் சம்பவம் நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்ட அதே காலப்பகுதியில் நிகழ்ந்துள்ளது. </p><p>

இது இன ரீதியான மோதல்களைத் தூண்டும் திட்டமிட்ட முயற்சியாக இருக்கலாம் என்று
கூறப்படுகின்றது,
 
மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் ஸ்ரீநாத் உடனடியாகச் சம்பவ இடத்திற்குச் சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
</p><p>
பாதிக்கப்பட்ட மக்கள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளனர்.
</p><p>
இந்தக் கிராமம் வரலாற்று ரீதியாகவே விவசாய நிலமாகவும், மக்களின் வாழ்வாதாரமாகவும் இருந்து வருகிறது. 

இத்தகைய சம்பவங்கள் அந்த மக்களின் அடிப்படை உரிமைகளை மீறும் செயலாகப் பார்க்கப்படுகிறது.
</p><p>
இந்தச் சம்பவத்தின் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பது குறித்து பொதுமக்கள் மத்தியில் பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டுள்ளன. </p><p>

மேலும், இந்தச் சம்பவத்தின் பின்னணியில் மகிந்த ராஜபக்சவின் ஆதரவாளர்களான ரொஷான் ரணசிங்க, கிழக்கு மாகாண ஆளுநர் மற்றும் திலித் ஜெயவீர ஆகியோரின் செயற்பாடுகள் இருக்கலாம் எனத் தொடர்ந்து சந்தேகம் வெளியிடப்படுகிறது.
</p><p>

இந்த விடயங்கள் தொடர்பில் விரிவாக எடுத்து வருகின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி...</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/bPcMV8QJimw" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-08T01:02:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[விடுதலைப் புலிகளின் குறிசூட்டுப் படை! தலையைக்கூட உயர்த்த முடியாமல் 8 மாதங்கள் போராடிய இலங்கை இராணுவம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/shavendra-selva-statement-on-ltt-sniper-squad-1788785226"></link>
            <id>https://ibctamil.com/article/shavendra-selva-statement-on-ltt-sniper-squad-1788785226</id>
            <summary type="text">தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு இலங்கையில் இராணுவ ரீதியாக தோற்கடிக்கப்பட்ட போதிலும், சர்வதேச அரங்கில் தங்களது அரசியல் மற்றும் பரப்புரை நடவடிக்கைகளை தொ...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு இலங்கையில் இராணுவ ரீதியாக தோற்கடிக்கப்பட்ட போதிலும், சர்வதேச அரங்கில் தங்களது அரசியல் மற்றும் பரப்புரை நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுக்கும் அளவுக்கு வலுவான வலையமைப்பைக் கொண்டிருந்ததாக முன்னாள் இரானுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
</p><p>
வலைதள ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய விசேட நேர்காணலில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
</p><p>
இலங்கையின் இறுதிக்கட்டப் போரின்போது தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு பயன்படுத்தியதாகக் கூறப்படும் இராணுவத் தந்திரோபாயங்கள், ஆயுத பலம், சர்வதேச நிதி வலையமைப்பு மற்றும் இராணுவம் எதிர்கொண்ட தடைகள் தொடர்பில் சவேந்திர சில்வா இந்த நேர்காணலில் வெளிப்படுத்தியுள்ளார்.
</p><p></p><h2>அடுத்த கட்டத் தாக்குதல்</h2><p>
இதன்போது விடுதலைப் புலிகளின் நிதி வலையமைப்பு மற்றும் ஆதரவுகள் தொடர்பிலும் கருத்து தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f84f6df5-8e73-4fdc-9e3a-8944e4370075/26-6a9eb6a0399d1.webp' /></p><p>குறிப்பாக கப்பல் போக்குவரத்து, மற்றும் சர்வதேசத்தின் வர்த்தகங்கங்கள் மூலம் தமிழீழ விடுதலைப் புலிகள் பல்வேறாக நிதிகளை திரட்டிக்கொண்டனர். மேலும், வெளிநாடுகளில் தங்களுக்கு சாதகமான அரசியல் சூழலை உருவாக்கும் நோக்கில், அந்நாடுகளின் தேர்தல்களில் போட்டியிடும் அரசியல்வாதிகளுக்கு புலம்பெயர் அமைப்பின் ஆதரவாளர்கள் நிதியுதவி வழங்கி வருகின்றனர் என தனது கருத்துக்களை முன்வைத்தார்.</p><p>மேலும், விடுதலைப் புலிகளின் பிரதான அரசியல் இலக்கு இலங்கையில் தனித் தமிழ் அரசை உருவாக்குவதாக இருந்தது எனவும் தெரிவித்தார்.</p><p>
போர் நடைபெற்ற காலத்தில் சமாதானப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவது குறித்து அவர்கள் சிறந்த திட்டமிடலை கொண்டிருந்தனர் எனவும் கூறியுள்ளார்.
</p><p>
அதன்படி, பேச்சுவார்த்தைகளின் இடைவேளைகளைப் பயன்படுத்தி போராளிகளை மீள ஒருங்கிணைத்து, ஆயுத பலத்தை அதிகரித்து அடுத்த கட்டத் தாக்குதல்களுக்கு அவர்கள் தயாராகியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
</p><p>
மன்னாரில் உள்ள பரந்த நெல்வயல் பகுதியான ‘Rice Bowl’ பகுதியில் இராணுவம் எதிர்கொண்ட சவால் குறித்தும் சவேந்திர சில்வா விரிவாக இதில் விளக்கியுள்ளார்.</p><p></p><h2>தாக்குதலுக்கு இலக்காகும் நிலை&nbsp;</h2><p>

மரங்கள் அல்லது இயற்கையான மறைவிடங்கள் இல்லாத அந்தப் பரந்த வயல்வெளியில் விடுதலைப் புலிகள் அதிக எண்ணிக்கையிலான குறிசூட்டுப் படையினரை நிலைநிறுத்தியிருந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/809ef2c0-c820-4a65-bb07-39052c77cbbf/26-6a9eb6a0f1eef.webp' /></p><p>
</p><p>
இராணுவ வீரர்கள் தலைகளை உயர்த்தினால்கூட குறிசூட்டுப் படையினரின் தாக்குதலுக்கு இலக்காகும் நிலை காணப்பட்டதாகவும், இதனால் இராணுவத்தினர் இரவு நேரங்களையும் இருள் சூழ்ந்த காலங்களையும் பயன்படுத்தி தரையில் தவழ்ந்தவாறு மெதுவாக முன்னேற வேண்டியிருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.</p><p>

சுமார் 15 கிலோமீற்றர் தூரத்தைக் கொண்ட அந்தப் பகுதியை கடப்பதற்கு இராணுவத்திற்கு கிட்டத்தட்ட எட்டு மாதங்கள் எடுத்ததாகவும் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.</p><p>

மேலும், தமது படைப்பிரிவு போரின் போது சுமார் 202 கிலோமீற்றர் தூரம் முன்னேறிச் சென்று போரில் ஈடுபட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
விடுதலைப் புலிகள் சிறிய நாட்டில் இயங்கிய அமைப்பாக இருந்தபோதிலும், வெளிநாடுகளில் இருந்து பெறப்பட்ட பீரங்கிகள், நவீன துப்பாக்கிகள் மற்றும் வெடிபொருட்கள் உள்ளிட்ட ஆயுதங்களைக் கொண்டு குறிப்பிடத்தக்க இராணுவ பலத்தை உருவாக்கியிருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
</p><p>
வெளிநாடுகளில் இருந்து பெறப்பட்ட ஆயுதங்களை அடிப்படையாகக் கொண்டு எறிகணைகள்’, 82 மில்லிமீற்றர் மோட்டார்கள் மற்றும் கிளேமோர் கண்ணிவெடிகள் போன்ற ஆயுதங்களைத் தாங்களே தயாரித்துப் பயன்படுத்தும் திறனை கொண்டிருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.</p><p>

மேலும், போரின் இறுதி கட்டத்தில் தாக்குதல் படைகள் மற்றும் வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட வாகனங்களைப் பயன்படுத்தி இராணுவத்துக்கு எதிராக தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>வெளிநாட்டு தடை</h2><p>
</p><p>
இறுதிப் போரின் கடைசி ஏழு நாட்கள் இராணுவத்துக்கு மிகவும் கடுமையான காலகட்டமாக இருந்ததாக சவேந்திர சில்வா குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
அத்தகைய தாக்குதலின்போது ஏற்பட்ட வெடிப்பில் தனது ஒரு காதின் கேட்கும் திறன் பாதிக்கப்பட்டதாகவும், தனது உடலில் இன்னமும் 32 வெடிகுண்டுத் துகள்கள் இருப்பதாகவும் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
</p><p>
போர்க்களத்தில் விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னரும், சர்வதேச அரங்கில் பரப்புரை நடவடிக்கைகள் மூலம் இலங்கை இராணுவத்துக்கு எதிரான கருத்தை வெளிப்படுத்தி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
</p><p>
இதன் காரணமாக அமெரிக்கா மற்றும் பிரித்தானியா உள்ளிட்ட நாடுகளில் தமக்கும் தமது குடும்பத்தினருக்கும் பயணத் தடைகள், விசா மறுப்புகள் மற்றும் நிதி முடக்கங்கள் போன்ற நடவடிக்கைகள் ஏற்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
இவை போருக்குப் பின்னர் தாம் எதிர்கொண்ட முக்கிய சவால்களில் ஒன்றாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-08T01:00:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Keethan</name>
            </author>
            <title type="text"><![CDATA[முல்லைத்தீவில் புதையல் தோண்ட முற்பட்ட சந்தேகத்தில் 5 பேர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/5-people-arrest-attempting-dig-treasure-mullaitivu-1788828694"></link>
            <id>https://tamilwin.com/article/5-people-arrest-attempting-dig-treasure-mullaitivu-1788828694</id>
            <summary type="text">முல்லைத்தீவு கடற்கரை பகுதியில் முல்லைத்தீவு பொலிசார் மேற்கொண்ட சோதனை
நடவடிக்கையின் போது புதையல் தோண்ட பயன்படுத்தப்படும் இயந்திரம் ஒன்றுடன் 5
பேர் சந...</summary>
            <content type="html"><![CDATA[<p>முல்லைத்தீவு கடற்கரை பகுதியில் முல்லைத்தீவு பொலிசார் மேற்கொண்ட சோதனை
நடவடிக்கையின் போது புதையல் தோண்ட பயன்படுத்தப்படும் இயந்திரம் ஒன்றுடன் 5
பேர் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளார்கள்.</p><p>வாகனம் ஒன்றில் ஸ்கானர் இயந்திரம் காணப்பட்டுள்ளமையினை தொடர்ந்து வாகனத்தில் இருந்து 5 பேரும் சந்தேகத்தின் பெயரில் கைதுசெய்யப்பட்டுள்ளார்கள்.&nbsp;&nbsp;</p><h2>&nbsp;சட்ட நடவடிக்கை</h2><p>இவர்கள் வவுனியா,முள்ளிவாய்க்கால்,கொழும்பு,தம்புள்ள பகுதிகளை சேர்ந்தவர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்கள்.&nbsp;&nbsp;</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1a27eec9-8df5-4811-b18d-ee1a7aa20274/26-6a9f5cedb994c.webp' /></p><p>
</p><p>இவர்கள் மீதான விசாரணை மற்றும் சட்ட நடவடிக்கையினை முல்லைத்தீவு பொலிசார்
மேற்கொண்டு வருகின்றார்கள்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-08T01:00:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை வரை நீளும் நாமல் கைது விவகாரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/slpp-s-milinda-rajapaksha-in-geneva-1788828884"></link>
            <id>https://tamilwin.com/article/slpp-s-milinda-rajapaksha-in-geneva-1788828884</id>
            <summary type="text">நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கைது விவகாரம் உள்ளிட்ட சில விடயங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் குரல் எழுப்பும் நோக்கில் ஸ்ரீ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கைது விவகாரம் உள்ளிட்ட சில விடயங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் குரல் எழுப்பும் நோக்கில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் உறுப்பினர் மிலிந்த ராஜபக்ச சுவிட்சர்லாந்து விஜயம் செய்துள்ளார்.
</p><p>இலங்கையின் முன்மொழியப்பட்ட 22ஆவது அரசியலமைப்புத் திருத்தம், முன்னாள் அரச புலனாய்வுச் சேவையின் பணிப்பாளர் சுரேஷ் சல்லேயின் தடுப்புக்காவல் உள்ளிட்ட சில விவகாரங்கள் குறித்து குரல் கொடுப்பதற்காக ஜெனிவா சென்றுள்ளார். </p><p>
ஜெனிவாவில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரின் போது இந்த விடயங்களை எழுப்பவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9b9a819f-853a-41c6-be3c-e5fcd23e0996/26-6a9f5cd572950.webp' /></p><p>இலங்கையில் ஜனநாயகம், சட்டத்தின் ஆட்சி, சுதந்திரம் மற்றும் மனித உரிமைகள் குறித்தும் கவனத்தை ஈர்க்கவுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். </p><p>
இது தொடர்பில் எக்ஸ் (X) சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள மிலிந்த ராஜபக்ஷ, 18 ஆண்டுகளுக்குப் பின்னர் தாம் மீண்டும் ஜெனிவா திரும்பியுள்ளதாகவும், நாட்டில் "அடக்கப்பட்ட எதிர்க்கட்சியின் அரசியல் குரல்களைப்" பிரதிநிதித்துவப்படுத்துவதற்காகவே இம்முறை வருகை தந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். </p><p>
மேலும், தாம் சுட்டிக்காட்ட விரும்பும் இந்த விடயங்களை கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டு, ஜனநாயக உரிமைகள் மற்றும் சட்டத்தின் ஆட்சியின் பரந்த சூழலில் அணுக வேண்டும் என மிலிந்த ராஜபக்ச வலியுறுத்தியுள்ளார்.&nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-09-08T00:54:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை வரும் முக்கியஸ்தர்: கொழும்பில் விசேட போக்குவரத்து ஏற்பாடுகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/special-traffic-plan-in-colombo-1788827357"></link>
            <id>https://tamilwin.com/article/special-traffic-plan-in-colombo-1788827357</id>
            <summary type="text">&amp;nbsp;இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் உத்தியோகபூர்வ இலங்கை விஜயத்தை முன்னிட்டு, இன்று முதல் வியாழக்கிழமை (செப். 10) வரை கொழும்பு பகுதியில...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் உத்தியோகபூர்வ இலங்கை விஜயத்தை முன்னிட்டு, இன்று முதல் வியாழக்கிழமை (செப். 10) வரை கொழும்பு பகுதியில் சிறப்பு போக்குவரத்து மேலாண்மைத் திட்டம் அமல்படுத்தப்படும் என இலங்கை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p> 
பாதுகாப்பு அமைச்சரின் மோட்டார்வாகனப் பேரணி பயணிக்கும் வீதிகளில் தற்காலிக போக்குவரத்து கட்டுப்பாடுகளும், மாற்றுப்பாதை திருப்பங்களும் மேற்கொள்ளப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>தேவைப்படும் இடங்களில் சாரதிகள் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். </p><p>
இன்று, பிற்பகல் 1:30 மணி: பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து அமைச்சர் தங்கும் ஹோட்டல் வரையிலான வீதி.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ba7b1a0a-2aae-4848-b1e8-a48dfbc21059/26-6a9f56e205918.webp' /></p><p> </p><p>
இன்று, இரவு 8:00 - 9:00 மணி வரை: தங்கும் ஹோட்டலிலிருந்து இந்திய உயர்ஸ்தானிகராலயம்&nbsp; வரையிலான பயணம் மற்றும் திரும்பும் வழி.
</p><p>புதன்கிழமை (9), காலை 9:50 - 11:25 மணி வரை: தங்கும் ஹோட்டலிலிருந்து ஜனாதிபதி செயலகம் வரையிலான பயணம் மற்றும் திரும்பும் வழி.
</p><p>புதன்கிழமை (9), பிற்பகல் 2:00 மணி முதல்: அமைச்சரின் திட்டமிடப்பட்ட ஏனைய பயணங்களுக்கான போக்குவரத்து கட்டுப்பாடுகள்.</p><p> 
புதன்கிழமை (9), இரவு 7:00 - 7:10 மணி வரை: தங்கும் ஹோட்டலிலிருந்து திட்டமிடப்பட்ட பயணத்திற்கான வீதி. </p><p>
வியாழக்கிழமை (10), காலை 9:00 - 9:10 மணி வரை: அமைச்சரின் புறப்பாட்டின் போது மேற்கொள்ளப்படும் போக்குவரத்து கட்டுப்பாடுகள்.
</p><p>வாகனப் பேரணியின் நகர்வுகளுக்கு ஏற்ப இக்கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படும். எனவே, வீதிகளில் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள பொலிஸ் அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குமாறு சாரதிகள் மற்றும் பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். </p><p>
இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று முதல் எதிர்வரும் 10 வரை மூன்று நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தருகிறார்.</p><p> 
இந்த விஜயத்தின் போது, அவர் இலங்கைத் தலைவர்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துவதுடன், கொழும்பிலுள்ள இந்திய சமூகத்தினரையும் சந்திக்கவுள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-08T00:45:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[மக்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்திய விடுதலைப் புலிகள்! போரின் இறுதிக்கட்டம் குறித்து மனம் திறந்த சவேந்திர சில்வா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-lanka-war-shavendra-silva-exclusive-interview-1788826651"></link>
            <id>https://tamilwin.com/article/sri-lanka-war-shavendra-silva-exclusive-interview-1788826651</id>
            <summary type="text">நாட்டின் உள்நாட்டுப் போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் தவறுகள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளை இலங்கையின் முன்ன...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டின் உள்நாட்டுப் போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் தவறுகள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளை இலங்கையின் முன்னாள் இராணுவத் தளபதியும் பாதுகாப்புப் படைகளின் முன்னாள் பிரதானியுமான ஜெனரல் சவேந்திர சில்வா, நிராகரித்துள்ளார்.
</p><p>
இந்தியாவை தளமாகக் கொண்ட சமூக ஊடகமொன்றுக்கு&nbsp; வழங்கிய நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.</p><h2>&nbsp;பதிலளிக்கத் தயார்</h2><p>2009ஆம் ஆண்டு போரின் இறுதிக்கட்டத்தில் இராணுவத்தின் 58ஆவது படைப்பிரிவுக்குத் தலைமை தாங்கிய சவேந்திர சில்வா, தமக்கு எதிராக முன்வைக்கப்படும் குறிப்பிட்ட குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கத் தயாராக இருப்பதாகவும், தமக்கு எதிராக சர்வதேச அளவில் விதிக்கப்பட்டுள்ள தடைகளுக்கான அடிப்படை என்னவென்று கேள்வி எழுப்பியுள்ளதாகவும் குறி்பிட்டுள்ளார்.</p><p>
அமெரிக்காவினால் தனக்கும் தனது நெருங்கிய குடும்ப உறுப்பினர்களுக்கும் பயணத் தடைகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும், அண்மையில் பிரித்தானியாவும் தமக்கு எதிராக தடைகளை விதித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b58e3908-8738-4ad1-bbab-2c3e352e2a23/26-6a9f568f84636.webp' /></p><p>

“எதற்காக எனக்கு தடைகள் விதிக்கப்பட்டுள்ளன? நான் என்ன தவறு செய்தேன் என்பதை தெரிவிக்குமாறு தொடர்ந்து கேட்டு வருகின்றேன். நான் போர்க்குற்றவாளி அல்ல. எனது நாட்டுக்காகவே போராடினேன்” என அவர் தெரிவித்தார்.</p><p>

இராணுவ சட்டங்களை தாம் மீறியிருந்தால், உரிய விசாரணை நடத்தப்பட்டு சட்டத்தின் அடிப்படையில் தண்டனை வழங்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.</p><p>

2020ஆம் ஆண்டு அமெரிக்கா, போரின் இறுதிக்கட்டத்தில் கட்டளைப் பொறுப்பு ஊடாக மனித உரிமைகளின் பாரிய மீறல்களில் சவேந்திர சில்வா ஈடுபட்டதாக நம்பகமான தகவல்கள் இருப்பதாகக் கூறி, அவருக்கும் அவரது நெருங்கிய குடும்பத்தினருக்கும் பயணக் கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. </p><p>இதேவேளை, 2025ஆம் ஆண்டு பிரித்தானியாவும் போர்க்கால மனித உரிமை மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளை முன்வைத்து சவேந்திர சில்வாவுக்கு தடைகளை விதித்திருந்தது.</p><h2>இராணுவத்தின் நோக்கம்</h2><p>
</p><p>
இராணுவம் திட்டமிட்டு பொதுமக்களை இலக்குவைத்ததாக முன்வைக்கப்படும்&nbsp; இந்த குற்றச்சாட்டுகளையும் சவேந்திர சில்வா நிராகரித்தார்.எனினும், மோதல்களின் போது பொதுமக்கள் உயிரிழந்திருக்கக்கூடும் என்பதை அவர் ஏற்றுக்கொண்டார்.</p><p>
பொதுமக்கள் உயிரிழப்புகளை ஏற்படுத்துவது இராணுவத்தின் நோக்கமாக இருக்கவில்லை என்றும், இராணுவ நடவடிக்கைகளை திட்டமிடும்போது பொதுமக்கள் உயிரிழப்புகளை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
</p><p>
போரின் இறுதிக்கட்டத்தில் தமது படைப்பிரிவு 123,000க்கும் மேற்பட்ட பொதுமக்களை மீட்டதாகவும், போர் முடிவில் சரணடைந்த சுமார் 12,000 விடுதலைப் புலி உறுப்பினர்களில் 75 சதவீதத்துக்கும் அதிகமானோர் தமது படைப்பிரிவிடம் சரணடைந்ததாகவும் அவர் கூறினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0c27ed5c-7edc-47d7-88b8-e1fd252b921f/26-6a9f5690795cd.webp' /></p><p>
</p><p>
சரணடைந்த விடுதலைப் புலி உறுப்பினர்கள் பின்னர் புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகத்துடன் மீள இணைக்கப்பட்டதாகவும், ஆயுதங்களை கைவிட்டவர்களிடம் இராணுவம் எவ்வாறு அணுகுமுறையை மேற்கொண்டது என்பதற்கு இது எடுத்துக்காட்டாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
</p><p>
அதேவேளை, இறுதிக்கட்ட இராணுவ நடவடிக்கையின்போது மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் சுற்றிவளைப்பு நடவடிக்கையொன்றையும் அவர் நினைவுகூர்ந்தார். </p><p>அந்த நடவடிக்கையில் பெருமளவான விடுதலைப் புலி உறுப்பினர்களின் சடலங்கள் மீட்கப்பட்டதாகவும், அவர்களில் விடுதலைப் புலிகளின் வடக்குப் பிராந்தியத்தைச் சேர்ந்த முக்கிய தளபதி ஒருவரும் இருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
</p><p>
அவர் சிவில் உடையில் ஆயுதத்துடன் காணப்பட்டதாகக் குறிப்பிட்ட சவேந்திர சில்வா, இவ்வாறான சூழ்நிலைகளில் பொதுமக்கள் உயிரிழப்புகள் எனக் குறிப்பிடப்படும் சிலர் உண்மையில் ஆயுதம் தாங்கிய போராளிகளாக இருந்திருக்கலாம் என்றும் தெரிவித்தார்.
</p><p>
இறுதிக்கட்டப் போரின்போது விடுதலைப் புலிகள் பொதுமக்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தியதாகவும், அவர்கள் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளில் இருந்து பொதுமக்கள் வெளியேறுவதைத் தடுத்ததாகவும் சவேந்திர சில்வா குற்றஞ்சாட்டினார்.</p><h2>விடுதலைப் புலிகள்</h2><p>
</p><p>
மேலும், பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு அருகில் விடுதலைப் புலிகள் இராணுவ வளங்களை நிலைநிறுத்தியதாகவும் அவர் தெரிவித்தார்.</p><p>

இலங்கை இராணுவம் தொடர்பில் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு சர்வதேச மட்டத்தில் அடுத்தடுத்து வந்த அரசாங்கங்கள் போதிய விளக்கங்களை முன்வைக்கத் தவறியுள்ளதாகவும் சவேந்திர சில்வா விமர்சித்தார்.
</p><p>
இலங்கை இராணுவத்துக்கு எதிராக குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் அரசாங்கங்கள் மற்றும் சர்வதேச அமைப்புகள், குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்களுடன் நேரடியாக கலந்துரையாடி, குறிப்பிட்ட சம்பவங்கள் தொடர்பில் விளக்கம் கோர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/24de3c96-2b3d-4e94-8b47-0936286705bd/26-6a9f56912f66f.webp' /></p><p>

“குறிப்பிட்ட நாளில், குறிப்பிட்ட நேரத்தில், குறிப்பிட்ட சம்பவத்தில் நீங்கள் இதனைச் செய்தீர்கள் எனக் கூறுங்கள். அதற்கு நாங்கள் விளக்கம் அளிப்போம். ஏதேனும் தவறு செய்திருந்தால் அதை ஏற்றுக்கொள்வோம்” என அவர் தெரிவித்தார்.
</p><p>
விடுதலைப் புலிகள் ஒட்டுமொத்த தமிழ் சமூகத்தையும் பிரதிநிதித்துவப்படுத்திய அமைப்பு என்ற கருத்தையும் சவேந்திர சில்வா நிராகரித்தார்.மக்களின் குறைகளை ஆயுதப் போராட்டத்தின் மூலம் தீர்ப்பதற்கு பதிலாக அரசியல் ரீதியாக தீர்வு காண வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.</p><p>
விடுதலைப் புலிகளின் படுகொலைகள், தற்கொலைத் தாக்குதல்கள் மற்றும் கட்டாய ஆட்சேர்ப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளையும் அவர் சுட்டிக்காட்டினார்.</p><h2>இறுதிக்கட்ட இராணுவ நடவடிக்கை</h2><p> </p><p>அதேவேளை, ஒரு அமைப்பு அல்லது அதன் ஆதரவாளர்களின் நடவடிக்கைகளுக்காக ஒட்டுமொத்த இன அல்லது மத சமூகத்தையும் குற்றஞ்சாட்டக் கூடாது என்றும் அவர் தெரிவித்தார்.
</p><p>
விடுதலைப் புலிகளை தோற்கடிப்பதும், அவர்களின் கட்டுப்பாட்டில் இருந்த பொதுமக்களை விடுவிப்பதுமே இராணுவத்தின் நோக்கமாக இருந்ததாகவும், பொதுமக்களுக்கு எதிராக இலங்கை இராணுவம் திட்டமிட்டு அத்துமீறல்களில் ஈடுபடவில்லை என்றும் சவேந்திர சில்வா மீண்டும் வலியுறுத்தினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f51e9a4f-11da-4b06-acbb-3bced42484de/26-6a9f5691d7e61.webp' /></p><p>

இலங்கையின் இறுதிக்கட்ட இராணுவ நடவடிக்கை தொடர்பில் சர்வதேச அளவில் நீண்டகாலமாக விசாரணைகளும் விமர்சனங்களும் இடம்பெற்று வருகின்றன. </p><p>இறுதிக்கட்ட மோதலின்போது அரச படைகளாலும் விடுதலைப் புலிகளாலும் சர்வதேச மனிதாபிமான மற்றும் மனித உரிமைச் சட்டங்கள் கடுமையாக மீறப்பட்டதாக ஐக்கிய நாடுகள் சபை மற்றும் சர்வதேச மனித உரிமை அமைப்புகள் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளன.
</p><p>
எனினும், சவேந்திர சில்வா உள்ளிட்ட இலங்கை இராணுவத்தின் முன்னாள் மற்றும் தற்போதைய தலைவர்கள், பொதுமக்களை இலக்கு வைத்து அரச படைகள் திட்டமிட்டு தாக்குதல் நடத்தியதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை தொடர்ச்சியாக நிராகரித்து வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-08T00:35:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுவிட்சர்லாந்தில் 1 கோடி சம்பளம் பெற்ற இந்திய டெக்கி - சிறிய தவறால் பணி நீக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/swiss-techie-fired-over-sauna-towel-mix-up-1788817298"></link>
            <id>https://news.lankasri.com/article/swiss-techie-fired-over-sauna-towel-mix-up-1788817298</id>
            <summary type="text">Swiss techie fired over sauna towel mix-up: சுவிட்சர்லாந்தில் 1 கோடி சம்பளம் பெற்ற இந்திய டெக்கி, மூத்த நிர்வாகியுடன் ஏற்பட்ட சிறிய சம்பவத்தால் வேலை இ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Swiss techie fired over sauna towel mix-up: சுவிட்சர்லாந்தில் 1 கோடி சம்பளம் பெற்ற இந்திய டெக்கி, மூத்த நிர்வாகியுடன் ஏற்பட்ட சிறிய சம்பவத்தால் வேலை இழந்ததாக கூறியுள்ளார்.</p><p>
</p><h2>சுவிட்சர்லாந்தில் ரூ.1 கோடி சம்பளம்</h2><p>சுவிட்சர்லாந்தில் உள்ள ஒரு பெரிய தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியாற்றிய இந்திய மென்பொருள் பொறியாளர், சுமார் ரூ.1 கோடி வருடச்சம்பளம் பெற்றிருந்தார்.
</p><p>
ஆனால், உடற்பயிற்சி மையத்தில் சோனாவில் நடந்த ஒரு சிறிய தவறால் அவர் வேலை இழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ab5a3152-7ad1-4a69-a41f-03421ebc9485/26-6a9f2f93d63a4.webp' /></p><h2>தவறுதலாக துண்டை எடுத்ததற்காக</h2><p>அவரது விளக்கத்தின் படி, மே 8 அன்று ஜிம் சோனாவில் பயிற்சி முடிந்தபின் தவறுதலாக ஒரு மூத்த நிர்வாகியின் துண்டை எடுத்துக் கொண்டார். பின்னர் அந்த நிர்வாகி அமைதியாக நடந்துகொண்டாலும், “புதிய வேலை தேடத் தொடங்குங்கள்” என்று எச்சரித்ததாக கூறப்படுகிறது.
</p><p>
ஐந்து நாட்களுக்குப் பிறகு, மே 13 அன்று, HR குழுவினரிடமிருந்து “பொருளாதார காரணங்களால்” பணி நீக்கம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், அந்த சோனா சம்பவமே உண்மையான காரணமாக இருக்கலாம் என்று அவர் சந்தேகிக்கிறார்.</p><p></p><h2>வேறு நிறுவனங்களில் வேலை கிடைக்காது..</h2><p>அவர் 2022 முதல் அந்த நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். பல திட்டங்களில் ஈடுபட்டிருந்தபோதும், திடீரென பணி நீக்கம் செய்யப்பட்டதால் திட்டங்கள் தாமதமானதாகவும், தான் எவ்வளவு சிறப்பாக செயல்பட்டிருந்தாலும் உழைந்திருந்தாலும் அது அவர்களுக்கு ஒரு பொருட்டே இல்லை என்று அவர் மனவருத்தம் தெரிவித்தார்.
</p><p>
மேலும், “என்னை ‘சமூக விரோத’ (antisocial) பட்டியலில் சேர்த்துள்ளனர், இதனால் எதிர்காலத்தில் வேறு நிறுவனங்களில் வேலை கிடைக்காது” என்று அவர் குற்றம்சாட்டினார்.</p><p> தற்போது மூன்று மாதங்களாக வேலை இழந்த நிலையில், தனியார் வியாபாரம் தொடங்க வேண்டிய சூழ்நிலையில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
</p><p></p><p>இந்த சம்பவம், ஊழியர்களின் வாழ்க்கை எந்த அளவிற்கு உயர்நிலை நிர்வாகத்தின் முடிவுகளின் கீழ் இருக்கிறது என்பதை வெளிப்படுத்துவதாக அவர் கூறியுள்ளார்.</p><p>அவர் இந்த சம்பவத்தை Reddit பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-08T00:34:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரகசியமாக பாலைவன விமான தளத்தை உருவாக்கிவரும் சீனா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/chinas-secret-desert-airbase-for-next-gen-jets-1788827854"></link>
            <id>https://news.lankasri.com/article/chinas-secret-desert-airbase-for-next-gen-jets-1788827854</id>
            <summary type="text">China builds secret desert airbase: சீனா ரகசிய பாலைவன விமான தளத்தை உருவாக்கிவருகிறது.

பாலைவனப் பகுதியில் விமான சோதனை&amp;nbsp;தளம்சீனா தனது மேற்கு பாலை...</summary>
            <content type="html"><![CDATA[<p>China builds secret desert airbase: சீனா ரகசிய பாலைவன விமான தளத்தை உருவாக்கிவருகிறது.
</p><h2>
பாலைவனப் பகுதியில் விமான சோதனை&nbsp;தளம்</h2><p>சீனா தனது மேற்கு பாலைவனப் பகுதியில் உள்ள லோப் நூர் விமான சோதனைத் தளத்தை விரிவாக்கம் செய்து வருகிறது.
</p><p>
செயற்கைக்கோள் படங்களில், அங்கு நான்கு பெரிய ஹேங்கர்கள், புதிய டாக்ஸிவேக்கள், வட்ட வடிவ சோதனை மேடை, எரிபொருள் சேமிப்பு வசதிகள் ஆகியவை கட்டப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e73bd8be-fb14-43fd-95f5-fdfe3e101682/26-6a9f58d005504.webp' /></p><p>இந்த விரிவாக்கம், சீனாவின் அடுத்த தலைமுறை போர் விமான திட்டங்களை வேகமாக முன்னெடுக்க உதவுகிறது. </p><p>2025 ஆகஸ்டில், J-36 எனப்படும் ஆறாம் தலைமுறை போர் விமானம் முதன்முதலில் இங்கு கண்டறியப்பட்டது. அதற்கு 17 நாட்கள் கழித்து, J-XDS அல்லது J-50 எனப்படும் மற்றொரு புதிய விமானமும் இங்கு சோதனைக்காக வந்தது.</p><p>
</p><p></p><p>2026 பிப்ரவரி மாதத்திற்குள், இந்த தளம் 60,000 சதுர அடிகள் ஹேங்கர் இடம் மற்றும் 3,00,000 சதுர அடிகள் கூடுதல் வசதிகள் பெற்றது. இதனால் தளத்தின் அளவு இரட்டிப்பு ஆனது.

லோப் நூர் தளம், 5 கி.மீ நீள ரன்வே கொண்டது. </p><p>பாலைவனப் பகுதியில் மக்கள் தொகை குறைவாக இருப்பதால், இங்கு ரகசிய சோதனைகள் எளிதாக நடத்தப்படுகின்றன. இதனால் சீனாவுக்கு சோதனை வேகத்தை அதிகரிக்கும் வாய்ப்பு கிடைக்கிறது.

மேலும், இந்த விரிவாக்கம் H-20 எனப்படும் ரகசிய ஸ்டெல்த் பாம்பர் திட்டத்துடன் தொடர்புடையதாக இருக்கலாம் என்ற ஊகமும் எழுந்துள்ளது.</p><p> </p><p></p><p>புதிய ஹேங்கர்கள், H-6 பாம்பர் போன்ற பெரிய விமானங்களையும் தாங்கக்கூடிய அளவில் உள்ளன.

சீனா தற்போது ஷென்யாங் பகுதியில் 40 லட்சம் சதுர அடிகள் கொண்ட புதிய உற்பத்தி வளாகம் அமைத்து வருகிறது. </p><p>இது சீனாவின் அடுத்த தலைமுறை வான்படை ஆற்றலை உருவாக்கும் மிகப்பெரிய முயற்சியாகக் கருதப்படுகிறது. அமெரிக்காவுடன் போட்டியிட, சீனா 2035-க்குள் இந்த புதிய போர் விமானங்களை செயல்படுத்தும் திட்டத்தில் உள்ளது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-08T00:34:26+00:00</updated>
        </entry>
    </feed>
