<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-09-01T17:51:18+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் போதைப்பொருள் விற்பனையாளர்களுக்கு மன்னிப்பே கிடையாது ; நீதி அமைச்சர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/no-pardon-for-drug-traffickers-in-sri-lanka-1788283324"></link>
            <id>https://jvpnews.com/article/no-pardon-for-drug-traffickers-in-sri-lanka-1788283324</id>
            <summary type="text">போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுபவர்களுக்கு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மன்னிப்பு வழங்கப்பட மாட்டாது என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நா...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுபவர்களுக்கு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மன்னிப்பு வழங்கப்பட மாட்டாது என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.
</p><p style="text-align: justify; ">
மஹர சிறைச்சாலை வளாகத்தில் இன்று காலை (1) நடைபெற்ற, சிறைச்சாலைகளுக்குள் அவசரகால மோதல் சூழல் ஏற்படும் பட்சத்தில் விரைவாகப் பதிலளிப்பதையும், கைதிகளின் நலனைச் சீரமைப்பதையும் நோக்கமாகக் கொண்டு செயல்படுத்தப்பட்ட கூட்டுச் செயல்முறை குறித்த கலந்துரையாடலில் பங்கேற்றபோது அமைச்சர் இதனை தெரிவித்தார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/76d91948-410d-4e24-9412-177e8cf113b6/26-6a9709bdc9cab.webp' /></p><h2 style="text-align: justify; ">போதைப்பொருள் கடத்தல்காரர்கள்&nbsp;</h2><p style="text-align: justify; ">

போதைப்பொருள் கடத்தல்காரர்கள் தொடர்பில் அரசாங்கம் எந்த வித சமரசத்துக்கும் இடமளிக்காது எனவும், இவர்கள் எவருக்கும் எந்தச் சூழ்நிலையிலும் மன்னிப்பு வழங்கப்படாது எனவும் அவர் உறுதியளித்தார்.</p><p style="text-align: justify; ">கடந்த காலங்களில் பாரிய பிரச்சினையாக இருந்த அரச பகுப்பாய்வாளர் அறிக்கைத் தாமதத்துக்குத் தற்போது தீர்வு காணப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; ">

புதிய ஆட்சேர்ப்புகள் மூலம் இரவு 10 மணி வரை அதிகாரிகள் பணியில் ஈடுபட்டு வருவதுடன், கடந்த ஒகஸ்ட் மாதத்தில் மட்டும் 9,081 அறிக்கைகள் வழங்கப்பட்டுள்ளன.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
எதிர்வரும் இரண்டு மாதங்களுக்குள் நிலுவையில் உள்ள அனைத்து அறிக்கைகளையும் வழங்குவதே அரசாங்கத்தின் இலக்காகும்.</p><p style="text-align: justify; ">

இதேவேளை, அவசர சூழ்நிலைகளை எதிர்கொள்ளும் வகையிலும், கைதிகளின் நலன்புரிச் சேவைகளை மேம்படுத்தும் நோக்கிலும் முப்படை, காவல்துறை மற்றும் விசேட அதிரடிப்படையினரின் பங்களிப்புடன் தற்போது 15 சிறைச்சாலைகளில் பலமான கூட்டுப் பொறிமுறை செயற்படுத்தப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
சிறையில் உள்ள அனைவரும் குற்றவாளிகள் அல்ல எனவும், ஒரு கண நேரத் தவறால் அங்குள்ள கைதிகளுக்குச் சமூகத்தில் இரண்டாவது வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்ட அவர், விடுதலையாகிச் செல்வோரைச் சிறந்த குடிமக்களாக மாற்றுவதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என்றார்.</p><p style="text-align: justify; ">

இதனிடையே, கடந்த நாட்களில் மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதல் நிலைமையால் தீயிட்டு அழிக்கப்பட்ட பிரதான சிறைக்காவலர் அலுவலகம், புனர்வாழ்வு பிரிவு மற்றும் ஏனைய பகுதிகளை அமைச்சர் நேரில் சென்று பார்வையிட்டதுடன், விளக்கமறியல் கைதிகளின் குறைகளையும் கேட்டறிந்தார்.</p>]]></content>
            <updated>2026-09-01T17:45:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[பலாங்கொடையில் காணாமல் போன மாணவிகள் திருகோணமலையில் கண்டுபிடிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/three-missing-schoolgirls-found-in-trincomalee-1788283223"></link>
            <id>https://ibctamil.com/article/three-missing-schoolgirls-found-in-trincomalee-1788283223</id>
            <summary type="text">







பலாங்கொட, பின்னவல-எல்லராவ பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய மூன்று பாடசாலை மாணவிகள் காணாமல் போயிருந்த நிலையில், அவர்கள் திருகோணமலையில் கண்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>







பலாங்கொட, பின்னவல-எல்லராவ பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய மூன்று பாடசாலை மாணவிகள் காணாமல் போயிருந்த நிலையில், அவர்கள் திருகோணமலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
</p><p>
பலாங்கொடையில் உள்ள பாடசாலை ஒன்றில் பயிலும் இம்மூன்று மாணவிகளும், மேலதிக வகுப்பிற்குச் செல்வதற்காக வீட்டை விட்டுச் சென்ற நிலையில் மீண்டும் வீடு திரும்பவில்லை என கூறப்படுகிறது.</p><p>
</p><p>
இதனால் பதற்றமடைந்த பெற்றோர் பலாங்கொட காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்ததையடுத்து காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.</p><p></p><h2>திருகோணமலையில் அடையாளம்&nbsp;</h2><p>
 
அதன்போது, காணாமல் போன மாணவிகள் தொடர்பில் ஏதேனும் தகவல் கிடைத்தால் உடனடியாக தகவல் தெரிவிக்குமாறு பலாங்கொடை காவல்துறையினரும் மாணவிகளின் பெற்றோரும் பொதுமக்களிடமும் கோரிக்கை விடுத்திருந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/efd9b4bc-1ca1-483f-b9ff-0554889b39ca/26-6a970d8a70891.webp' /></p><p>
</p><p>
இவ்வாறானதொரு பின்னணியில், குறித்த மாணவிகள் மூவரும் திருகோணமலையில் நின்ற போது அடையாளம் காணப்பட்டுள்ளதையடுத்து, அவர்களை நபர் ஒருவர் காணொளி எடுத்து சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-01T17:38:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாளை பல மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும்: வானிலை மையம் எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/rain-likely-in-several-districts-tomorrow-1788283636"></link>
            <id>https://tamilwin.com/article/rain-likely-in-several-districts-tomorrow-1788283636</id>
            <summary type="text">இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, நாளை
(செப்டம்பர் 02) நாட்டின் காலை வேளையில் மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்கள்,
காலி, மா...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, நாளை
(செப்டம்பர் 02) நாட்டின் காலை வேளையில் மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்கள்,
காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் இடையிடையே மழை
பெய்யக்கூடும்.
</p><p>
அத்துடன் பிற்பகல் 2:00 மணிக்கு பின் ஊவா மாகாணம், அம்பாறை, மட்டக்களப்பு
மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக
திணைக்களம் அறிவித்துள்ளது.</p><h2>மழை பெய்யக்கூடும்</h2><p>
</p><p>
இதேவேளை மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகள்இ வடமத்திய, வடமேல்
மாகாணங்கள் மற்றும் திருகோணமலை, மாத்தறை, ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில்
மணித்தியாலத்திற்கு 30–40 கி.மீ வேகத்தில் மிதமான பலத்த காற்று வீசக்கூடும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/821ca550-12f4-4cb1-9207-d02eb8eb274d/26-6a970d0142820.webp' /></p><p>
</p><p>
இந்த நிலையில் சூரியனின் தெற்கு நோக்கிய நகர்வு காரணமாக, நாளை நண்பகல் 12:10
மணிக்கு ஆனமடுவ, மொரகொல்லாகம, தம்புள்ளை மனம்பிட்டி மற்றும் வாழைச்சேனை
ஆகிய பிரதேசங்களுக்கு மேலாக சூரியன் நேராக உச்சம் கொடுக்கவுள்ளது.
</p><p>
எனவே இடியுடன் கூடிய மழை, மின்னல் தாக்கங்கள் மற்றும் தற்காலிக பலத்த
காற்றினால் ஏற்படும் ஆபத்துகளைக் குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை
நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-01T17:36:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[மீண்டும் ஈரானில் தாக்குதலை தொடங்கிய அமெரிக்கா : IRGC இலக்குகள் மீது அதிரடி தாக்குதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/us-says-striking-targets-in-iran-1788282041"></link>
            <id>https://tamilwin.com/article/us-says-striking-targets-in-iran-1788282041</id>
            <summary type="text">ஈரானில் உள்ள இலக்குகளைத் தாக்குவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
ஈரானில் உள்ள இலக்குகள் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதலைத் தொடங்கியுள்ளதாக சென்ட்காம் (C...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானில் உள்ள இலக்குகளைத் தாக்குவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.</p><p>
ஈரானில் உள்ள இலக்குகள் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதலைத் தொடங்கியுள்ளதாக சென்ட்காம் (CENTCOM) தெரிவித்துள்ளது.</p><h2>ஈரானில் உள்ள இலக்கு</h2><p> </p><p>இந்தத் தாக்குதல்கள் கிழக்கு நேரப்படி மதியம் 12 மணிக்கு தொடங்கியுள்ளன.&nbsp;</p><p>இன்று கிழக்கு நேரப்படி மதியம் 12 மணிக்கு, அமெரிக்கப் படைகள் ஈரானில் உள்ள இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் (IRGC) இலக்குகள் மீது தாக்குதலைத் தொடங்கின.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Today at 12 p.m. ET, U.S. forces began striking Islamic Revolutionary Guard Corps (IRGC) targets in Iran. The strikes follow recent attempted attacks by the IRGC against commercial shipping in the Strait of Hormuz and against American service members deployed to the region.</p>&mdash; U.S. Central Command (@CENTCOM) <a href="https://x.com/CENTCOM/status/2094826294466810366?ref_src=twsrc%5Etfw">September 1, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p> ஹோர்முஸ் நீரிணையில் வர்த்தகக் கப்பல்கள் மீதும், அப்பகுதியில் பணியமர்த்தப்பட்ட அமெரிக்கப் படை வீரர்கள் மீதும் IRGC சமீபத்தில் நடத்திய தாக்குதல் முயற்சிகளைத் தொடர்ந்து இந்தத் தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன என&nbsp; சென்ட்காம் பதிவிட்டுள்ளது.</p><p></p><p></p><p>YOU MAY LIKE THIS VIDEO</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/kUbf_ZpMm_Q" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-09-01T17:14:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையின் மொத்த பொதுக் கடன் ரூ. 33 டிரில்லியனாக அதிகரிப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-lankas-public-debt-rises-to-nearly-rs-33-trill-1788282814"></link>
            <id>https://tamilwin.com/article/sri-lankas-public-debt-rises-to-nearly-rs-33-trill-1788282814</id>
            <summary type="text">&amp;nbsp;இலங்கையின் மொத்த பொதுக் கடன் சுமார் 33 டிரில்லியன் ரூபாயாக உயர்ந்துள்ளது.
 2026 ஜூன் மாத இறுதியளவில் இவ்வாறு கடன் தொகை அதிகரித்துள்ளதாக பொதுக் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;இலங்கையின் மொத்த பொதுக் கடன் சுமார் 33 டிரில்லியன் ரூபாயாக உயர்ந்துள்ளது.
 2026 ஜூன் மாத இறுதியளவில் இவ்வாறு கடன் தொகை அதிகரித்துள்ளதாக பொதுக் கடன் மேலாண்மை அலுவலகம் வெளியிட்டுள்ள அண்மைய புள்ளியியல் கடன் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>
2026 ஜூன் 30 ஆம் திகதி நிலவரப்படி, நாட்டின் மொத்த பொதுக் கடன் 32.977 டிரில்லியன் ரூபாயாகப் பதிவாகியுள்ளது.</p><p> 
இது மார்ச் மாத இறுதியில் 32.233 டிரில்லியன் ரூபாயாக இருந்த நிலையில், இரண்டாவது காலாண்டில் மட்டும் சுமார் 744 பில்லியன் ரூபாயால் அதிகரித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f16c10bd-899a-4f86-a69c-c0213555694a/26-6a9707c03ed97.webp' /></p><p> 
எனினும், ரூபாய் மதிப்பில் கடன் தொகை அதிகரித்துள்ள போதிலும், அமெரிக்க டொல மதிப்பில் அளவிடும் போது நாட்டின் கடன் இருப்பு குறைந்துள்ளது. </p><p>
மார்ச் மாத இறுதியில் 102.27 பில்லியன் டொலராக இருந்த கடன் தொகை, ஜூன் இறுதியில் 97.95 பில்லியன் டொலராகக் குறைந்துள்ளது.</p><p>
ஜூன் மாத இறுதியில் அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாயின் பெறுமதி 336.6623 ரூபாவாகக் கணக்கிடப்பட்டதே இதற்குக் காரணம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. </p><p>
நாட்டின் மொத்தக் கடனில் பெரும்பகுதியை மத்திய அரசின் கடனே வகிக்கிறது. இது மார்ச் மாத இறுதியில் 31.193 டிரில்லியன் ரூபாயாக இருந்த நிலையில், ஜூன் இறுதியில் 31.999 டிரில்லியன் ரூபாயாக உயர்ந்துள்ளது. </p><p>உள்நாட்டுக் கடன்: 19.203 டிரில்லியன் ரூபாவாகவும், வெளிநாட்டுக் கடன்: 12.796 டிரில்லியன் ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
</p><p>அரசாங்கத்தின் வெளிநாட்டுக் கடனில் பன்முகக் கடன்கள் 38 சதவீதமாகவும், வணிகக் கடன்கள் 34 சதவீதமாகவும், இருதரப்புக் கடன்கள் 28 சதவீதமாகவும் உள்ளன. </p><p>
சீனா, இலங்கைக்கு 5.01 பில்லியன் அமெரிக்க டொலரையும், ஜப்பான் 2.27 பில்லியன் அமெரிக்க டொலரையும், இந்தியா 853.9 மில்லியன் அமெரிக்க டொலரையும் கடனாக இலங்கைக்கு வழங்கியுள்ளன.</p><p>
மேலும், அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களின் அரசாங்க உத்தரவாதக் கடன் 971 பில்லியன் ரூபாயாகவும், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் தொடர்பான கடன் சுமார் 7 பில்லியன் ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-01T17:14:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[லெபனான் இராணுவத்திற்கு பயிற்சியளிக்கும் ஐரோப்பிய ஒன்றியம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/eu-planning-new-mission-to-train-lebanese-1788282103"></link>
            <id>https://tamilwin.com/article/eu-planning-new-mission-to-train-lebanese-1788282103</id>
            <summary type="text">&amp;nbsp;லெபனான் ஆயுதப் படைகளுக்கு ஆலோசனை வழங்கி பயிற்சி அளிப்பதற்கான புதிய திட்டம் ஒன்றை ஐரோப்பிய ஒன்றியம் திட்டமிட்டு வருவதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் வெள...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;லெபனான் ஆயுதப் படைகளுக்கு ஆலோசனை வழங்கி பயிற்சி அளிப்பதற்கான புதிய திட்டம் ஒன்றை ஐரோப்பிய ஒன்றியம் திட்டமிட்டு வருவதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுக் கொள்கைத் தலைவர் காஜா கலாஸ் தெரிவித்துள்ளார். </p><p>
ஐநா அமைதிப்படைக்கு மாற்றாகச் செயல்படுவது ஐரோப்பிய ஒன்றியத்தின் நோக்கமல்ல. </p><p>மாறாக, லெபனான் தனது நாட்டின் பாதுகாப்பைத் தானே உறுதிசெய்து கொள்வதற்கான திறனை அதிகரிப்பதே எங்கள் இலக்கு" என்று காஜா கலாஸ் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/813432b7-a10f-405e-8173-36c529798fc8/26-6a9704f8bb5e4.webp' /></p><p>இந்தச் சிறப்புப் பயிற்சியில் எல்லைப் பாதுகாப்பு மற்றும் கடல்சார் பாதுகாப்பு ஆகியவை முதன்மையாகச் சேர்க்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.</p><p>1978 ஆம் ஆண்டு இஸ்ரேல், தெற்கு லெபனான் மீது படையெடுத்ததைத் தொடர்ந்து அமைக்கப்பட்டு, கடந்த 48 ஆண்டுகளாகச் செயல்பட்டு வரும் ஐநா அமைதிப்படையின் பணிக்காலம் எதிர்வரும் டிசம்பர் 31 ஆம் திகதியுடன் நிறைவடைகின்ற நிலையில் இந்த நடவடிக்கை திட்டமிடப்பட்டு வருகிறது.
</p><p>லெபனானின் ஆயுதப் படைகள் மற்றும் தனது சொந்தப் பிராந்தியத்தைப் பாதுகாக்கும் லெபனான் அரசின் திறனை வலுப்படுத்துவதே இதன் முக்கிய நோக்கமாகும். </p><p>
இதற்கான திட்டமிடல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், வரும் அக்டோபர் மாதத்தில் ஐரோப்பிய பேரவையின் முறையான ஒப்புதலுடன் இத்திட்டத்தைத் தொடங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.</p><p>
லெபனான் இராணுவம் மற்றும் அந்நாட்டின் பொலிஸ் படைகளுக்கு ஆலோசனை மற்றும் பயிற்சி அளிக்கும் வகையில் 3 ஆண்டுகளுக்கான இராணுவ மற்றும் சிவிலியன் திட்டம் தொடர்பான முன்மொழிவை ஐரோப்பிய ஒன்றியத்தின் ராஜதந்திர சேவைப் பிரிவு சமர்ப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-01T17:13:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பதவி விலகுவதாக அறிவித்த கெய்ர் ஸ்டார்மர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/keir-starmer-resigns-as-mp-focuses-on-global-role-1788282525"></link>
            <id>https://news.lankasri.com/article/keir-starmer-resigns-as-mp-focuses-on-global-role-1788282525</id>
            <summary type="text">Keir Starmer resigns as MP, focuses on global role: எம்.பி பதவியிலிருந்து விலகுவதாக கெய்ர் ஸ்டார்மர் அறிவித்துள்ளார்.

பதவி விலகும் ஸ்டார்மர்பிரித்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>Keir Starmer resigns as MP, focuses on global role: எம்.பி பதவியிலிருந்து விலகுவதாக கெய்ர் ஸ்டார்மர் அறிவித்துள்ளார்.
</p><h2>
பதவி விலகும் ஸ்டார்மர்</h2><p>பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் சர் கெய்ர் ஸ்டார்மர், ஹோல்போர்ன் மற்றும் செயின்ட் பான்க்ரஸ் தொகுதியின் எம்.பி பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
</p><p>
2015 முதல் இந்த லண்டன் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தி வந்த அவர், சர்வதேச விவகாரங்கள் மற்றும் பெண்கள், சிறுமிகளுக்கு எதிரான வன்முறையை தடுக்கும் பணிகளில் கவனம் செலுத்த விரும்புவதாக தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/191e355c-f77f-436a-bb20-e8e2ff5dbade/26-6a97069eb9b8e.webp' /></p><h2>இடைத்தேர்தல்</h2><p>2024 தேர்தலில் பெரும் வெற்றி பெற்று பிரதமராக இருந்த ஸ்டார்மர், கடந்த ஜூலையில் பதவி விலகினார். </p><p>அப்போது அவர் 2029 பொதுத் தேர்தல் வரை எம்.பி ஆக தொடருவதாக கூறியிருந்தாலும், தற்போது திடீர் முடிவெடுத்து விலகுவதாக அறிவித்துள்ளார்.</p><p>இதனால் அந்த தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
</p><p></p><p>தற்போதைய பிரித்தானிய பிரதமர் ஆன்டி பர்னாம், நாடாளுமன்றத்தில் தனது முதல் உரையில் ஸ்டார்மரின் உக்ரைன் தொடர்பான பணி மற்றும் ஹில்ஸ்பரோ சட்டம் போன்ற சாதனைகளை பாராட்டினார். “நாட்டிற்கு நீண்ட கால சேவை செய்தவர்” என அவர் புகழ்ந்தார்.
</p><p>
இடைத்தேர்தலில் லேபர் கட்சிக்கு முக்கிய சவாலாக பசுமைக் கட்சி (Green Party) இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்திய உள்ளூர் தேர்தல்களில் பசுமைக் கட்சி வாக்கு விகிதத்தில் இரண்டாம் இடம் பிடித்துள்ளது.</p><p></p><p>ஸ்டார்மர், “இது சரியான நேரம். நான் புதிய தலைமுறைக்கு வாய்ப்பு அளிக்க விரும்புகிறேன். இனி சர்வதேச பாதுகாப்பு, வர்த்தகம், தொழில்நுட்பம் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறையை தடுக்கும் பணிகளில் கவனம் செலுத்துவேன்” எனக் கூறினார்.
</p><p>
சிலர் அவரை பாராட்டினாலும், எதிர்க்கட்சிகள் “மற்றொரு யூ-டர்ன்” என விமர்சித்துள்ளனர்.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">It has been an honour and a privilege to represent Holborn and St Pancras for the last 11 years. <br><br>My statement. <a href="https://t.co/xzu4xcIno2">pic.twitter.com/xzu4xcIno2</a></p>&mdash; Keir Starmer (@Keir_Starmer) <a href="https://x.com/Keir_Starmer/status/2094750480492609634?ref_src=twsrc%5Etfw">September 1, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-01T17:05:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[95,000ஐ கடந்த டெங்கு நோயாளர்கள் எண்ணிக்கை ; பொது மக்களுக்கு வெளியான அறிவித்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sri-lanka-dengue-cases-surpass-95-000-1788281752"></link>
            <id>https://jvpnews.com/article/sri-lanka-dengue-cases-surpass-95-000-1788281752</id>
            <summary type="text">இலங்கையில் இந்த வருடம் இதுவரை 95,493 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.


கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">இலங்கையில் இந்த வருடம் இதுவரை 95,493 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
</p><p style="text-align: justify; ">

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மாத்திரம் 10,157 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். இந்த வருடத்தில் டெங்கு காரணமாக 72 பேர் உயிரிழந்துள்ளனர். டெங்கு மரண வீதம் 0.076 சதவீதமாக பதிவாகியுள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ca0224d0-3789-4474-9fd3-9810826d13a6/26-6a970399b6691.webp' /></p><h2 style="text-align: justify; "><span style="text-align: left;">டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு</span></h2><p style="text-align: justify; ">மாகாண ரீதியில் மேல் மாகாணத்திலேயே அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். அங்கு இதுவரை 50,506 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.</p><p style="text-align: justify; ">
மேலும், நாட்டின் 50 சுகாதார வைத்திய அதிகாரி (MOH) பிரிவுகள் டெங்கு அதிகம் பரவும் அபாயப் பகுதிகளாக தொடர்ந்து அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
</p><p style="text-align: justify; ">
டெங்கு பரவலைக் கட்டுப்படுத்த மக்கள் தமது வீடுகள் மற்றும் சுற்றுப்புறங்களில் நுளம்புகள் பெருகக்கூடிய இடங்களை அகற்றி, சுற்றுச்சூழலை தூய்மையாக வைத்திருக்குமாறும், காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவ ஆலோசனையைப் பெற்றுக்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்படுகின்றனர்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-01T17:03:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் சோகம்: டிப்பர் லாரியுடன் கார் மோதி 11 வயது சிறுவன் உயிரிழப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/child-11-killed-when-vehicle-collides-with-truck-1788280786"></link>
            <id>https://canadamirror.com/article/child-11-killed-when-vehicle-collides-with-truck-1788280786</id>
            <summary type="text">&amp;nbsp;கனடாவின் ஒன்டாரியோ மாகாணம், நார்த் பே பகுதிக்கு அருகே உள்ள நெடுஞ்சாலை 17-இல், பயணிகள் கார் ஒன்றும் டிப்பர் லாரி ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கனடாவின் ஒன்டாரியோ மாகாணம், நார்த் பே பகுதிக்கு அருகே உள்ள நெடுஞ்சாலை 17-இல், பயணிகள் கார் ஒன்றும் டிப்பர் லாரி ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் 11 வயது சிறுவன் உயிரிழந்துள்ளான்.
</p><p>திங்கள்கிழமை மாலை சுமார் 5:20 மணியளவில் ஈஸ்ட் ஃபெர்ரிஸ் பகுதியில் இந்த விபத்து நடந்துள்ளதாக ஒன்டாரியோ மாகாணக் காவல்துறை தெரிவித்துள்ளது.
</p><p>காரில் பயணித்த 11 வயது சிறுவன் தீவிர காயங்களுடன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவர்கள் அறிவித்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a4752d03-f09a-488f-8c63-f06990527cbe/26-6a96ffd42d5fb.webp' /></p><p>
காரில் பயணித்த மேலும் இருவர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். </p><p>அவர்களின் காயங்கள் உயிருக்கு ஆபத்தானவை அல்ல என காவல்துறை தெரிவித்துள்ளது.
விபத்தைத் தொடர்ந்து, காவல்துறையின் விபத்து விசாரணை மற்றும் போக்குவரத்து மேலாண்மைப் பிரிவினர் சம்பவ இடத்தில் ஆய்வுகளை மேற்கொண்டனர்.</p><p> 
இதன்காரணமாக நெடுஞ்சாலை 17 சுமார் 6 மணி நேரத்திற்கு மூடப்பட்டு, தடயங்கள் சேகரிக்கப்பட்ட பின்னர் மீண்டும் போக்குவரத்திற்காகத் திறக்கப்பட்டது.
</p><p>இச்சம்பவம் தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. விபத்தை நேரில் பார்த்தவர்கள் அல்லது அந்தச் சமயத்தில் அப்பகுதியில் சென்ற வாகனங்களின் கேமராவில் காட்சிகள் பதிவாகியிருந்தால், நார்த் பே காவல் பிரிவை 1-888-310-1122 என்ற எண்ணில் தொடர்புகொள்ளுமாறு காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.</p><p> 
தகவல்களை ரகசியமாக வழங்க விரும்புவோர் 'க்ரைம் ஸ்டாப்பர்ஸ்' அமைப்பை 1-800-222-8477 எனும் எண்ணில் தொடர்புகொள்ளலாம்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-01T16:56:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாளத்தில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட உரிமையாளருக்காக காத்துக்கிடக்கும் நாய்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/pet-dog-waits-for-owner-missing-in-nepal-floods-1788280548"></link>
            <id>https://ibctamil.com/article/pet-dog-waits-for-owner-missing-in-nepal-floods-1788280548</id>
            <summary type="text">நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் காணாமல் போன தனது உரிமையாளருக்காக அடித்துச் செல்லப்பட்ட வீடு இருந்த இடத்தைவிட்டு நகராமல் வளர்ப்பு நாய் ஒன்று காத...</summary>
            <content type="html"><![CDATA[<p>நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் காணாமல் போன தனது உரிமையாளருக்காக அடித்துச் செல்லப்பட்ட வீடு இருந்த இடத்தைவிட்டு நகராமல் வளர்ப்பு நாய் ஒன்று காத்திருக்கும் காட்சி பார்ப்போரை கலங்கச் செய்துள்ளது.</p><p>





இந்த வெள்ளத்தில் திரிசூலி பஜார் பகுதியில் இருந்த நான்கு வீடுகள் அடித்துச் செல்லப்பட்டது. அந்த நான்கு வீடுகளில் இருந்தவர்களும் என்ன ஆனார்கள் என்பது இதுவரை தெரியவில்லை.</p><h2>நகர மறுத்து தனது உரிமையாளருக்காக காத்திருக்கும் காட்சி</h2><p>இடிபாடுகளுக்கு மத்தியில் சேற்றில் அமர்ந்திருக்கும் வெள்ளை - கருப்பு நிற நாய் ஒன்று, அந்த இடத்தைவிட்டு நகர மறுத்து தனது உரிமையாளருக்காக காத்திருக்கும் காட்சிகள் காண்போரைக் கலங்க வைத்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1db4bb2e-985f-42f8-9200-8ccf06a9e9d7/26-6a9703926a608.webp' /></p><p>
</p><p>
ஜேசிபி இயந்திரங்களைக் கொண்டு அப்பகுதியில் உள்ள இடிபாடுகளையும் சேறு, சகதிகளையும் பணியாளர்கள் அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்ட போதிலும் அந்த இடத்தைவிட்டு நகர மறுத்து அமர்ந்திருக்கிறது வளர்ப்பு நாய்.
</p><p>
மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள தன்னார்வலர் விக்ரம் தாபா என்பவர் “நாங்கள் பிஸ்கட் கொடுத்துப் பார்த்தோம், பலவிதமான செல்லப் பெயர்களைச் சொல்லி அழைத்தோம், ஆனால் அது தலையைக்கூடத் திருப்பவில்லை.அது இந்த இடத்தை விட்டு நகராமல் உள்ளது” என்றார்.</p><p></p><h2>சாப்பிட மறுக்கும் நாய்</h2><p>
சரியாக சாப்பிட மறுக்கும் நாய், வீடு இருந்த பகுதியையே சுற்றி, உரிமையாளரைத் தேடி வருவது பார்ப்போரை கலங்க வைத்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/02cf9ef0-4076-42d2-851a-087f7ff7b03c/26-6a9703931e5e3.webp' /></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-01T16:56:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரான் - அமெரிக்க போர்நிறுத்தம் பலவீனமானது - புடின்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/putin-says-iran-us-ceasefire-1788281467"></link>
            <id>https://tamilwin.com/article/putin-says-iran-us-ceasefire-1788281467</id>
            <summary type="text">அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே மேற்கொள்ளப்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தம் பலவீனமானது என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.
இந்த ஒப்பந்தத...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே மேற்கொள்ளப்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தம் பலவீனமானது என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.</p><p>
இந்த ஒப்பந்தத்தை ரஷ்யா வரவேற்ற போதிலும் அந்த போர்நிறுத்தம் நிலையற்றதாகவும் மிகவும் பலவீனமானதாகவும் காணப்படுவது நிரூபணமாகியுள்ளது என தெரிவித்துள்ளார்.</p><h2>போர்நிறுத்தம் நீடிப்பு</h2><p> </p><p>
அதேவேளையில், ஈரானுக்கு ரஷ்யா தொடர்ந்து தனது ஆதரவை வழங்கும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.</p><p>
கிர்கிஸ்தான் தலைநகர் பிஷ்கேக்கில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சிமாநாட்டில் செவ்வாய்க்கிழமை உரையாற்றியபோதே புடின் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.</p><p>
இந்த மாநாட்டின் இடையே அவர் ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியானைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2de2a520-c5a6-44d1-9d66-53d5849b3962/26-6a97027cdd08d.webp' /></p><p>
கடந்த ஜூன் மாத மத்தியில், பாகிஸ்தான் மற்றும் கடார் ஆகிய நாடுகளின் மத்தியஸ்தத்தில் ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. </p><p>
ஈரான் மீதான அமெரிக்க - இஸ்ரேலிய போரை முடிவுக்குக் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்டு, 60 நாட்கள் காலக்கெடுவுடன் கூடிய போர்நிறுத்த நீடிப்பு அதில் வழங்கப்பட்டிருந்தது.</p><p> 
அந்த காலக்கெடு தற்போது முடிவடைந்துள்ள நிலையில், தற்போதைய போர்நிறுத்தச் சூழல் குறித்து ரஷ்ய அதிபர் தனது கரிசனையை வெளிப்படுத்தியுள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-01T16:51:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடிய தயாரிப்புகளுக்கு நுகர்வோரிடையே அதிகரிக்கும் வரவேற்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/local-demand-surges-for-canadian-made-food-1788261071"></link>
            <id>https://canadamirror.com/article/local-demand-surges-for-canadian-made-food-1788261071</id>
            <summary type="text">அமெரிக்காவுடனான வர்த்தக மோதல் நீடித்து வரும் நிலையில், கனடாவில் உள்ளூர் உணவு மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களுக்கான தேவை கணிசமாக அதிகரித்துள்ளதாக உற்பத...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவுடனான வர்த்தக மோதல் நீடித்து வரும் நிலையில், கனடாவில் உள்ளூர் உணவு மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களுக்கான தேவை கணிசமாக அதிகரித்துள்ளதாக உற்பத்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.</p><p> 
மளிகைக் கடைகளில் பொருட்களின் விலை அதிகரித்துள்ளபோதிலும், கனடா முழுவதும் உள்ள நுகர்வோர்கள் தங்கள் நாட்டில் தயாரிக்கப்படும் பொருட்களுக்கே முன்னுரிமை அளித்துத் தேடிச் சென்று வாங்கி வருகின்றனர்.</p><p> 
அமெரிக்காவின் வர்த்தக வரிகளால் தங்களது நிறுவனம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகத் ஒன்டாரியோவின் போமன்வில் பகுதியில் பாய்ச்ச்மென்ட் காகிதம் விநியோகிக்கும் 'ஏவென்கோ லிமிடெட்' நிறுவனத்தின் தலைவர் கேத்லீன் சேப்மேன் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b04795de-0631-4945-bd9c-888eac22e040/26-6a96b2d116f8a.webp' /></p><p> 
சுமார் 40 சதவீத வாடிக்கையாளர்களை அமெரிக்காவில் கொண்டுள்ள இந்நிறுவனம், பிரான்ஸிலிருந்து மூலப் பொருட்களை இறக்குமதி செய்வதால் ஆரம்பத்தில் ஐரோப்பிய பொருட்கள் மீதான அமெரிக்க வரிகளால் பாதிக்கப்பட்டது. </p><p>
தற்போது அப்பொருட்கள் கனடாவில் தயாரிக்கப்பட்டு மாற்றியமைக்கப்படுவதால், மேலும் 50 சதவீத கூடுதல் வரியை எதிர்கொண்டுள்ளது. </p><p>
எனினும், கனடிய மக்கள் நேரடியாகத் தங்கள் நிறுவனத்தைத் தொடர்புகொண்டு ஆதரவு தெரிவிப்பதுடன், ஆன்லைன் மூலமாக நேரடியாக ஆர்டர்களையும் வழங்கி வருகின்றனர்.</p><p>
இதனால், கடந்த இரண்டு ஆண்டுகளில் வெறும் 20 ஆக இருந்த நேரடி வாடிக்கையாளர் ஆர்டர்களின் எண்ணிக்கை, புதிய அமெரிக்க வரிகள் அமலுக்கு வந்த ஒரே வாரத்தில் நூற்றுக்கணக்கில் உயர்ந்துள்ளது. </p><p>
நுகர்வோர்கள் உள்நாட்டுப் பொருட்களை கொள்வனவு விரைவாக மாறிவரும் நிலையில், சில்லறை விற்பனைக் கடைகள் தங்களது விற்பனை அலமாரிகளில் கனடிய தயாரிப்புகளுக்குப் போதிய இட ஒதுக்கீட்டை வழங்குவதில் இன்னும் தாமதம் காட்டி வருவதாக சேப்மேன் சுட்டிக்காட்டியுள்ளார்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-01T16:47:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாள பேரிடரில் மாயமான புலம்பெயர் யாழ்ப்பாண குடும்பம்; தவிக்கும் உறவுகள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/migrant-jaffna-family-missing-in-nepal-disaster-1788248831"></link>
            <id>https://jvpnews.com/article/migrant-jaffna-family-missing-in-nepal-disaster-1788248831</id>
            <summary type="text">&amp;nbsp; நேபாள-திபெத் எல்லைப் பகுதிகளைப் பேரழிவுக்குள்ளாக்கிய வெள்ளப்பெருக்கிற்குப் பின்னர், காணாமல் போன டஜன் கணக்கான அவுஸ்திரேலியர்களில் இலங்கை வம்சாவள...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; நேபாள-திபெத் எல்லைப் பகுதிகளைப் பேரழிவுக்குள்ளாக்கிய வெள்ளப்பெருக்கிற்குப் பின்னர், காணாமல் போன டஜன் கணக்கான அவுஸ்திரேலியர்களில் இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த தம்பதியரும், அவர்களது இரண்டு இளம் மகன்களும் அடங்குவதாக அவுஸ்திரேலிய ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. </p><p>SouthAsians &amp; Diaspora

47 வயதான சந்திரசேகரன் முரளிதரன், அவரது மனைவி 42 வயதான ஷைலஜா முரளிதரன் மற்றும் அவர்களது மகன்களான அஸ்வின் (14), ஆருஷ் (11) ஆகியோர் ‘இமயமலை பனிப்பாறை சாகசப் பயணக் குழுவுடன் (Himalayan Glacier Adventures group) சென்றுகொண்டிருந்தபோது அவர்களுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/059ce3ae-bd99-4f58-9687-95a3d53691c5/26-6a968300dd4b8.webp' /></p><h2>ஆன்மீக சுற்றுலா சென்ற குடும்பம்...</h2><p>
</p><p>
அனர்த்தம் ஏற்பட்ட நாளன்று (புதன்கிழமை) காலை உணவு அருந்திய சிறிது நேரத்திலேயே அந்தக்குடும்பத்துடனான தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

இக்குடும்பத்தினர் சிட்னியின் வடமேற்குப் பகுதியில் வசித்து வந்தனர்.</p><p></p><p>
</p><p>
இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய ஊடகங்களின் தகவல்களின்படி, சந்திரசேகரன் பூர்வீகமாக யாழ்ப்பாணத்தின் கோப்பாயைச் சேர்ந்தவர்.

அவரும் அவரது மனைவியும் அவுஸ்திரேலியாவிற்கு இடம்பெயர்ந்த முதல் தலைமுறை இலங்கையர்கள் ஆவர். 

இவர்களது இரு மகன்களும் அவுஸ்திரேலியத் தமிழர் சமூகத்தில் பிறந்தவர்கள்.</p><p></p><p>

ஆகஸ்ட் 26 அன்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டபோது, ​​அந்தக்குடும்பத்தினர் கைலாச மலைப் பகுதிக்குத் தீர்த்த யாத்திரை மேற்கொண்டிருந்தனர்.

பேரிடர் நிகழ்ந்த நாளன்று காலையில்தான் அக்குடும்பத்தினருடன் கடைசியாகத் தொடர்பு கொள்ள முடிந்ததாக அவர்களது உறவினர்கள் தெரிவித்தனர். </p><p>

பாதிக்கப்பட்ட பகுதியின் பெரும் பகுதிகளில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் சாலைகள், மின்சார விநியோகம் மற்றும் தகவல் தொடர்புகளை அழித்ததால், அந்த அழைப்பிற்குப் பிறகு அவர்களது குடும்பத்தினரால் அவர்களைத் தொடர்பு கொள்ள முடியவில்லை.

முரளிதரன் குடும்பத்தினர், 15 அவுஸ்திரேலியர்கள் அடங்கிய ஒரு சுற்றுலாக் குழுவுடன் பயணம் செய்து கொண்டிருந்தனர்.</p><p></p><p> </p><p>
இந்தப் பேரழிவு ஏற்பட்டபோது, ​​அக்குழுவினர் நேபாள-சீன எல்லைக்கு அருகிலுள்ள ரசுவாகதிக்கு அருகே இருந்ததாக நம்பப்படுகிறது.

வெள்ளத்தைத் தொடர்ந்து 43 அவுஸ்திரேலியர்கள் இன்னும் காணாமல் போயுள்ளதாக அவுஸ்திரேலிய அதிகாரிகள் திங்களன்று தெரிவித்தனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-01T16:46:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஒன்டாரியோவில் 1 மில்லியன் டொலர் மதிப்புள்ள போதைப்பொருட்கள் மீட்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/more-than-1-million-in-drugs-stolen-property-1788280388"></link>
            <id>https://canadamirror.com/article/more-than-1-million-in-drugs-stolen-property-1788280388</id>
            <summary type="text">&amp;nbsp;கனடாவின் தென்மேற்கு ஒன்டாரியோ பிராந்தியம் முழுவதும் நடத்தப்பட்ட விரிவான சோதனைகளில், 1 மில்லியன் டொலருக்கும் அதிக மதிப்புடைய சட்டவிரோத போதைப்பொரு...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கனடாவின் தென்மேற்கு ஒன்டாரியோ பிராந்தியம் முழுவதும் நடத்தப்பட்ட விரிவான சோதனைகளில், 1 மில்லியன் டொலருக்கும் அதிக மதிப்புடைய சட்டவிரோத போதைப்பொருட்கள், ஆயுதங்கள் மற்றும் திருடப்பட்ட சொத்துக்களை ஒன்டாரியோ மாகாணக் காவல்துறை பறிமுதல் செய்துள்ளது. </p><p>
கடந்த ஜனவரி மாதம் மாகாணம் முழுவதும் நிலவிய போதைப்பொருள் கடத்தல் குறித்து காவல்துறை விசாரணையைத் தொடங்கியது.</p><p> 
பிராண்ட்போர்ட் மற்றும் பிராண்ட் கவுண்டி பகுதிகளில் ஒன்றும், லண்டன் மற்றும் ஒனைடா நேஷன் பகுதியில் இன்னொன்றுமாக இரண்டு தனித்துவமான குற்றவியல் வலையமைப்புகள் சுதந்திரமாக இயங்கி வந்ததை அதிகாரிகள் கண்டறிந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fb1ffd12-0eae-4c9c-81bf-4477658e2de0/26-6a96fe461a24d.webp' /></p><p> </p><p>
பிராம்ப்டன் மற்றும் பாரிஸ் (Paris) பகுதிகளில் உள்ள 4 இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டன. 
லண்டன் மற்றும் ஒனைடா நேஷன் பகுதியில் உள்ள வீடுகளில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. </p><p>
6.5 கிலோ ஃபென்டனில், 420 கிராம் கோகோயின் மற்றும் 250 கிராம் மெத்தம்பெட்டமைன் மற்றும் பெருந்தொகைப் பணம் என்பன கைப்பற்றப்பட்டுள்ளது.
</p><p>பறிமுதல் செய்யப்பட்ட ஃபென்டனில் போதைப்பொருள் மட்டும் தெருக்களில் சுமார் 65,000 பேரின் உயிரைப் பறிக்கக்கூடிய ஆபத்தான அளவைக் கொண்டது என காவல்துறை தெரிவித்துள்ளது. </p><p>
இச்சம்பவம் தொடர்பாக 7 நபர்கள் மீது மொத்தம் 64 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. அவர்களில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், எஞ்சிய இருவரைக் கைது செய்ய பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-01T16:36:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையின் மொத்த அரசாங்கக் கடன் தொடர்பில் வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sri-lanka-s-total-government-debt-1788280563"></link>
            <id>https://jvpnews.com/article/sri-lanka-s-total-government-debt-1788280563</id>
            <summary type="text">கடந்த ஜூன் 30 ஆம் திகதி நிலவரப்படி நாட்டின் மொத்த அரசாங்கக் கடன் 97.952 பில்லியன் அமெரிக்க டொலர்கள் அல்லது 32.977 டிரில்லியன் ரூபா என நிதி அமைச்சின் ப...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">கடந்த ஜூன் 30 ஆம் திகதி நிலவரப்படி நாட்டின் மொத்த அரசாங்கக் கடன் 97.952 பில்லியன் அமெரிக்க டொலர்கள் அல்லது 32.977 டிரில்லியன் ரூபா என நிதி அமைச்சின் பொது கடன் முகாமைத்துவ அலுவலகம் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "> 

பொது கடன் முகாமைத்துவ அலுவலகத்தினால் கடந்த ஓகஸ்ட் 28 ஆம் திகதி வெளியிடப்பட்ட இந்த அறிக்கையானது, கடந்த ஜூன் 30 ஆம் திகதி நிலவரப்படி மத்திய அரசாங்கத்தின் கடன் மட்டும் 31.999 டிரில்லியன் ரூபா அல்லது 95.047 பில்லியன் அமெரிக்க டொலர்கள் எனச் சுட்டிக்காட்டியுள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/768f2b2c-da31-46f1-92a4-eb4f5d754b95/26-6a96fef51e4e9.webp' /></p><h2 style="text-align: justify; ">உள்நாட்டுக் கடன்</h2><p> </p><p style="text-align: justify; ">

இதற்கு மேலதிகமாக, மாகாண சபைகள் மற்றும் மாகாண நிறுவனங்களின் கடன் 20 மில்லியன் டொலர்கள் என்றும், அரசாங்கப் பிணையுடனான அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களின் கடன் 2.885 பில்லியன் டொலர்கள் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "> 

கடந்த ஜூன் மாத இறுதியில் மத்திய அரசாங்கத்தின் உள்நாட்டுக் கடன் 57.039 பில்லியன் டொலர்களாக அல்லது 19.203 டிரில்லியன் ரூபாவாகப் பதிவாகியுள்ளதாகச் குறித்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. </p><p style="text-align: justify; ">

அதில் செலுத்தப்படாத திறைசேரிப் பிணைமுறிகளின் அளவு 47.732 பில்லியன் டொலர்கள் அல்லது 16,069 பில்லியன் ரூபா எனவும், செலுத்தப்படாத திறைசேரி உண்டியல்களின் அளவு 7.045 பில்லியன் டொலர்கள் அல்லது 2,372 பில்லியன் ரூபா எனவும் பதிவாகியுள்ளது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">&nbsp;கடந்த ஜூன் மாத இறுதியில் மத்திய அரசாங்கத்தின் வெளிநாட்டுக் கடன் 38.008 பில்லியன் டொலர்களாகப் பதிவாகியுள்ளது. </p><p style="text-align: justify; ">

2026 ஆம் ஆண்டின் முதலாவது காலாண்டின் இறுதியில் 37.468 பில்லியன் டொலர்களாக இருந்த அரசாங்கத்தின் வெளிநாட்டுக் கடன், இரண்டாவது காலாண்டின் இறுதியில் 38.008 பில்லியன் டொலர்கள் வரை 540 மில்லியன் டொலர்களால் அதிகரித்துள்ளதாகச் சம்மந்தப்பட்ட அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. </p><p style="text-align: justify; ">

அந்த வெளிநாட்டுக் கடன்களில் பலதரப்புக் கடன்களாக 14.802 பில்லியன் டொலர்களும், வர்த்தகக் கடன்களாக 12.409 பில்லியன் டொலர்களும் மற்றும் இருதரப்புக் கடன்களாக 10.797 பில்லியன் டொலர்களும் பதிவாகியுள்ளன.&nbsp;</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-01T16:36:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Erimalai</name>
            </author>
            <title type="text"><![CDATA[வல்வெட்டித்துறையில் சட்டவிரோத விடுதி: பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவில் கடும் விவாதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/controversy-arises-coordination-committee-meeting-1788279136"></link>
            <id>https://tamilwin.com/article/controversy-arises-coordination-committee-meeting-1788279136</id>
            <summary type="text">வல்வெட்டி துறையில் அமைக்கப்படுள்ள சட்டவிரோத விடுதியால் பல்வேறு சட்ட விரோத
நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வடமராட்சி வடக்கு பிரதேச
ஒருங்கிணைப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>வல்வெட்டி துறையில் அமைக்கப்படுள்ள சட்டவிரோத விடுதியால் பல்வேறு சட்ட விரோத
நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வடமராட்சி வடக்கு பிரதேச
ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் நீண்ட விவாதம் இடம்பெற்றுள்ளது.
</p><p>வடமராட்சி வடக்கு பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட வல்வெட்டித்துறை
அமைக்கப்பட்டுள்ள விருந்தினர் விடுதியானது வல்வெட்டித்துறை நகர சபை,
கரையோர பாதுகாப்புத் திணைக்களம், நகர அபிவிருத்தி அதிகார சபை, மது வரித்
திணைக்களம், போன்றவற்றின் சட்ட வரையறைக்குட்படாது சட்ட விரோதமாக அமைக்கப்பட்டுள்ளது.</p><h2>&nbsp;சட்ட விரோத செயற்பாடுகள்</h2><p>கரையோர பாதுகாப்பு விதிகளை மீறி கடலுக்குள் கட்டிடங்கள்
அமைக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் அவற்றை அகற்றுமாறு அறிவிக்கப்பட்டும்
இதுவரை துறை சார்ந்த அதிகாரிகளால் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று நீண்ட
விவாதம் இடம்பெற்றது.</p><p>தொடர்ச்சியாக குறித்த விடயம் பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் ஒரு
வருடத்துக்கு மேலாக விவாதிக்கப்படுவதாகவும், ஆனால் எந்தவித நடவடிக்கையும்
எடுக்கப்படவில்லை என்றும், பலரும் குற்றம் சுமத்தினர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2f216c0b-bea4-45cf-8375-12ce173603cf/26-6a96fdc99f490.webp' /></p><p>

இதேவேளை வல்லிபுர கோவிலுக்கு அண்மித்த பகுதியில் இந்திய நிறுவனம் ஒன்றிற்கு 25
ஏக்கர் காணி வழங்கப்பட்டு அதில் சுற்றுலா கவர்ச்சி ஏற்படுத்தும் வகையில்
பல்வேறு முதலீடுகளை மேற்கொள்ளப்பட உள்ளதாகவும், குறித்த அமைவிடம்
தொடர்பிலும் நீண்ட விவாதம் ஏற்பட்ட நிலையில் பிரதேச மக்களுடன் இணைந்து இடங்களை
பார்வையிட்டு இந்திய முதலீட்டு திட்டத்தை அனுமதிப்பதா இல்லையா என்றும்
தீர்மானிக்கப்பட்டது.
</p><p>
வடமராட்சி வடக்கு பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் வடமராட்சி வடக்கு
பிரதேச ஒருங்கிணைப்பு குழு தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான றஜீவன்
ஜெயசந்திரமூர்த்தி தலைமையில் காலை 9:45 மணியளவில் ஆரம்பமானது.</p><h2>ஒருங்கிணைப்பு குழு கூட்டம்</h2><p>
</p><p>மேலும் வீதி அமைத்தல் தொடர்பான அனுமதிகள், எல்லை நிர்ணயம் தொடர்பாக மவட்ட
ஒருங்கிணைப்புக் குழுவின் அனுமதிக்காக சமர்ப்பிப்பதற்கான அனுமதியும்,
பருத்தித்துறை அஞ்சல் திணைக்கள காணியிலிருந்து முழுமையாக இராணுவம் வெளியேற
வேண்டும் என்ற கோரிக்கை வைப்பது என்ற தீர்மானமும், நீதிமன்றத்திற்கு காணி
ஆனைவிழுந்தான் பகுதியில் வழங்குவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டதுடன்
மேலும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6858bbb1-e6f7-47f9-856e-487036e35bdf/26-6a96fdcac400d.webp' /></p><p>
</p><p>
இன்றைய வடமராட்சி வடக்கு பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் அரச
திணைக்கள அதிகாரிகள், பருத்தித்துறையை நகர சபை தவிசாளர், செயலாளர்,
வல்வெட்டித்துறை நகர சபை தவிசாளர், செயலாளர், பருத்தித்துறை பிரதேச சபை உப
தவிசாளர், வடமராட்சி வடக்கு பிரதேச செயலக அதிகாரிகள், கிராமம் மட்ட
அமைப்புகளின் தலைவர்கள், நிர்வாகிகள் இராணுவம் காவல்துறை, கடற்படை
ஆகியவற்றின் அதிகாரிகளும் கலந்து கொண்டிருந்தனார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-01T16:34:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[நடிகை கயாடு லோஹரின் சேலை போட்டோஷூட்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/kayadu-lohar-saree-photoshoot-post-1788271923"></link>
            <id>https://viduppu.com/article/kayadu-lohar-saree-photoshoot-post-1788271923</id>
            <summary type="text">கயாடு லோஹர்ரசிகர்கள் மனம் கவர்ந்த இளம் நடிகைகளில் ஒருவர் கயாடு லோஹர். இவர் டிராகன் திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார்.

இதை தொடர...</summary>
            <content type="html"><![CDATA[<h2>கயாடு லோஹர்</h2><p>ரசிகர்கள் மனம் கவர்ந்த இளம் நடிகைகளில் ஒருவர் கயாடு லோஹர். இவர் டிராகன் திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார்.</p><p>

இதை தொடர்ந்து இவர் நடிப்பில் அடுத்ததாக வெளியாகியுள்ள திரைப்படம் தான் இதயம் முரளி. மேலும் Immortal, Paradise, மஞ்சணத்தி உள்ளிட்ட பல திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/92455e9d-5332-490a-a3b8-0c4778e97ecb/26-6a96dd3f72ff4.webp' /></p><p>

இன்ஸ்டாகிராமில் 3.2M followers கொண்டுள்ள நடிகை கயாடு லோஹர் அவ்வப்போது தனது போட்டோஷூட் புகைப்படங்களை அதில் பதிவிடுவார். தற்போது சேலையணிந்து எடுத்த க்யூட் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-09-01T16:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[பனிப்பாறைகள் உருகுவதால் இமயமலைப் பிராந்தியத்திற்கு காத்திருக்கும் பேராபத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/un-warns-sudden-glacial-lake-eruption-in-himalayas-1788275401"></link>
            <id>https://tamilwin.com/article/un-warns-sudden-glacial-lake-eruption-in-himalayas-1788275401</id>
            <summary type="text">இமயமலைப் பிராந்தியத்தில் எதிர்காலத்தில் பனிப்பாறைகள் உருகுவதால் ஏற்படும் பேரழிவுமிக்க வெள்ள அபாயங்கள் மேலும் அதிகரிக்கும் என ஐக்கிய நாடுகள் சபையின் உத...</summary>
            <content type="html"><![CDATA[<p>இமயமலைப் பிராந்தியத்தில் எதிர்காலத்தில் பனிப்பாறைகள் உருகுவதால் ஏற்படும் பேரழிவுமிக்க வெள்ள அபாயங்கள் மேலும் அதிகரிக்கும் என ஐக்கிய நாடுகள் சபையின் உதவிப் பொதுச்செயலாளர் கன்னி விக்னராஜா எச்சரித்துள்ளார்.</p><p>நேபாளத்தில் கடந்த வாரம் பனிப்பாறை சரிவு காரணமாக ஏற்பட்ட பெருவெள்ளத்தில்
உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,000 ஐக் கடந்துள்ள நிலையிலேயே இந்த எச்சரிக்கை
விடுக்கப்பட்டுள்ளது.</p><h2>​இயற்கை அனர்த்தங்களை தடுத்தல்</h2><p>

காலநிலை மாற்றத்தின் தீவிர விளைவாக பனிப்பாறைகள் வேகமாக உருகி வருவதால்,
நேபாளம், சீனா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் ஆபத்தான நிலையிலுள்ள பனிப்பாறை
ஏரிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளதுடன், ஆற்றோரப் பகுதிகளில் வாழும்
மில்லியன் கணக்கிலான மக்கள் இதனால் பாதிக்கப்படும் அபாயத்தை
எதிர்நோக்கியுள்ளனர்.

​</p><p>இந்த அனர்த்தங்கள் நீர்மின் உற்பத்தித் திட்டங்களை அச்சுறுத்துவதுடன், ஆறுகளின்
கரையோரப் பகுதிகளை மனிதர்கள் வாழத் தகுதியற்ற பகுதிகளாக மாற்றக்கூடும் என்றும்
சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b1423d5f-fe49-435a-ba2a-609571a813b6/26-6a96ecce9331e.webp' /></p><p>குறிப்பாக, நேபாளத்தில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால்
நிர்மாணப்பணியில் இருந்த 15 பிரதான நீர்மின் நிலையங்கள் முற்றிலும்
சேதமடைந்துள்ளன.</p><p>

​இயற்கை அனர்த்தங்களைத் தடுக்கும் தொழில்நுட்பங்களின் பயன்பாட்டையும் மீறி
இத்தகைய பேரழிவுகள் நிகழும் சாத்தியக்கூறுகள் அதிகமாக உள்ளதனால்,
பாதிக்கப்பட்ட பிராந்திய மக்கள் பாதுகாப்பான உயரமான இடங்களுக்கு இடம்பெயர்வது
தொடர்பில் கடினமான தீர்மானங்களை எடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாக ஐ.நா.
அதிகாரி மேலும் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-01T16:16:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையின் நாளைய வானிலை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/announcement-regarding-tomorrow-s-weather-1788278823"></link>
            <id>https://jvpnews.com/article/announcement-regarding-tomorrow-s-weather-1788278823</id>
            <summary type="text">நாளை (02) மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் தி...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">நாளை (02) மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிடைத்துள்ளது.</p><p style="text-align: justify; "> 

நாளைக்கான வானிலை முன்னறிவிப்பை வெளியிட்டு அத்திணைக்களம் இதனை அறிவித்துள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/54971670-30ec-4a1f-95e4-e1a29fec5ed8/26-6a96f8298fd0f.webp' /></p><h2 style="text-align: justify; ">&nbsp;பலத்த காற்று</h2><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

இதன்படி, ஊவா மாகாணத்திலும் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் சில இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக வறட்சியான வானிலை நிலவும்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும், வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், திருகோணமலை, ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 30 முதல் 40 கிலோமீற்றர் வேகத்தில் மிதமான பலத்த காற்று வீசக்கூடும்.</p><p style="text-align: justify; "> 

இடியுடன் கூடிய மழையுடன் ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் விபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> 

சூரியனின் தெற்கு நோக்கிய நகர்வின் காரணமாக, ஓகஸ்ட் மாதம் 28 ஆம் திகதி முதல் செப்டம்பர் 07 ஆம் திகதி வரை இலங்கைக்கு நேராக உச்சம் கொடுக்கவுள்ளது. </p><p style="text-align: justify; ">

அதன்படி, நாளை (02) நண்பகல் 12:10 மணிக்கு ஆனமடுவ, மொரகொல்லாகம, தம்புள்ளை, மனம்பிட்டி மற்றும் வாழைச்சேனை ஆகிய பிரதேசங்களுக்கு மேலாக சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-01T16:07:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[இரண்டு வருடங்களில் மதிப்பை இழக்கப்போகும் ஹோர்முஸ் நீரிணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/hormuz-worthless-piece-of-water-in-2-years-1788277252"></link>
            <id>https://ibctamil.com/article/hormuz-worthless-piece-of-water-in-2-years-1788277252</id>
            <summary type="text">மாற்று எண்ணெய் வழித்தடங்கள் முக்கியத்துவம் வாய்ந்த ஹோர்முஸ் நீரிணையை தவிர்த்துச் செல்வதால், இரண்டு ஆண்டுகளுக்குள் ஹோர்முஸ் நீரிணை அதன் மதிப்பை இழந்துவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>மாற்று எண்ணெய் வழித்தடங்கள் முக்கியத்துவம் வாய்ந்த ஹோர்முஸ் நீரிணையை தவிர்த்துச் செல்வதால், இரண்டு ஆண்டுகளுக்குள் ஹோர்முஸ் நீரிணை அதன் மதிப்பை இழந்துவிடும் என்று அமெரிக்க திறைசேரிச் செயலாளர் ஸ்கொட் பெசென்ட் இன்று(01) தெரிவித்துள்ளார்.
</p><p>
"உலகெங்கிலும் நாம் இடர்களைக் குறைக்க வேண்டும். ஈரானியர்கள் ஹோர்முஸ் நீரிணையை ஒரு நெருக்கடிப் புள்ளியாகப் பயன்படுத்த முயற்சிப்பதை நம்மால் காண முடிகிறது," என்று வடக்கு கரோலினாவின் ஆஷ்வில்லில் அளித்த பேட்டி ஒன்றின்போது பெசென்ட் குறிப்பிட்டார்.</p><h2>&nbsp;இரண்டு வருடங்களில் இழக்கப்போகும் மதிப்பு</h2><p>"இது அமெரிக்காவிற்கு ஒரு நெருக்கடிப் புள்ளி அல்ல, ஆனால் இது பல, பல பிற நாடுகளுக்கு ஒரு நெருக்கடிப் புள்ளியாகும்," என்று ஜி20 நாடுகளின் அமைச்சர்களுடனான சந்திப்புகளின்போது அவர் கூறினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f0f95b7f-fa07-4192-958b-c395ec757c2f/26-6a96f7c2b7ec7.webp' /></p><p>

"இரண்டு ஆண்டுகளில் இந்த முக்கியத்துவம் வாய்ந்த நீர்வழி தவிர்க்கப்பட்டுவிடும்" என்று அவர் தெரிவித்தார்.</p><p>

"இரண்டு ஆண்டுகளில், ஹோர்முஸ் நீரிணை ஒரு மதிப்பற்ற நீர்நிலையைப் போல ஆகிவிடும்," என்று அவர் கூறினார்.

"எண்ணெய் தரைவழியாகக் குழாய்கள் மூலம் கொண்டு செல்லப்படும்," என்றும் அவர் மேலும்தெரிவித்தார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-01T16:05:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[14 ஆண்டுகளுக்கு முன் கொல்லப்பட்ட பிரித்தானியக் குடும்பம்: வழக்கில் முக்கிய திருப்பம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/pistol-found-14-years-after-brit-family-shot-dead-1788260760"></link>
            <id>https://news.lankasri.com/article/pistol-found-14-years-after-brit-family-shot-dead-1788260760</id>
            <summary type="text">Breakthrough in murders mystery as pistol found 14 years after Brit family shot dead: 14 ஆண்டுகளுக்கு முன் பிரித்தானியக் குடும்பம் ஒன்று சுட்டுக்கொல்ல...</summary>
            <content type="html"><![CDATA[<p>Breakthrough in murders mystery as pistol found 14 years after Brit family shot dead: 14 ஆண்டுகளுக்கு முன் பிரித்தானியக் குடும்பம் ஒன்று சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் துப்பாக்கி ஒன்று கிடைத்துள்ளதைத் தொடர்ந்து வழக்கில் முக்கிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.</p><p>[<img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/86579e78-fb30-4100-a7b9-34f2dbe4cb29/26-6a96b19af2e3a.webp' />]</p><p>பிரான்சில் நடந்த பயங்கர கொலை சம்பவம் ஒன்று தொடர்பில், ஒரு முக்கிய திருப்பம் ஏற்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
</p><h3>
துப்பாக்கியால் சுட்ட மர்ம நபர்
</h3><p>
2012ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 5ஆம் திகதி, பிரான்சுக்கு சுற்றுலா சென்றிருந்த ஒரு பிரித்தானியக் குடும்பம் சென்ற காரை நோக்கி, மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார்.</p><p>

அவர் சுட்டதில், காரிலிருந்த Saad al-Hilli (50), அவரது மனைவி Iqbal (47) மற்றும் தாயார் Suhaila Al-Allaf (74) ஆகியோர் உயிரிழந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/86579e78-fb30-4100-a7b9-34f2dbe4cb29/26-6a96b19af2e3a.webp' /></p><p>தம்பதியரின் ஒரு மகளான Zainab (7) காயத்துடன் உயிர் பிழைக்க, மறு நாள் தடயவியல் நிபுணர்கள் இறந்தவர்களின் உடல்களை அகற்றும்போது, தாய் Iqbalஇன் கால்களுக்கிடையில் அவரது இரண்டாவது குழந்தையான Zeena (4) பயந்து நடுங்கிக்கொண்டு ஒளிந்திருப்பது தெரியவந்தது.&nbsp;</p><p></p><p>
இந்த துப்பாக்கிச்சூட்டில், அவ்வழியே சைக்கிளில் வந்துகொண்டிருந்த பிரான்ஸ் நாட்டவரான Sylvain Mollier (45) என்பவரும் கொல்லப்பட்டிருந்தார். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e47178fb-b4f3-4dab-8afb-daf1eb03c00f/26-6a96b19baa27d.webp' /></p><h3>வழக்கில் முக்கிய திருப்பம்
</h3><p>
இந்நிலையில், சம்பவம் நடந்த இடத்துக்கு அருகிலுள்ள ஏரி ஒன்றின் அடியிலிருந்து துப்பாக்கி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
</p><p>
விடயம் என்னவென்றால், அது ஒரு சுவிஸ் ராணுவ துப்பாக்கி. அத்துடன், 1935ஆம் ஆண்டு, அதே மொடலில் 940 துப்பாக்கிகள் மட்டுமே தயாரிக்கப்பட்டன.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6e5ba4aa-663d-4640-bdc4-22f155bfc54b/26-6a96b19a4bb4f.webp' /></p><p>மேலும், தாக்குதல்தாரி, ஒரு முறை தன் இலக்கை துப்பாக்கியால் சுட்டுவிட்டு, அவர் உயிரிழந்ததை உறுதி செய்யும் வகையில், இரண்டாவது முறை அதே நபரை சுடும் ஒரு கைதேர்ந்த, துப்பாக்கி சுடும் பயிற்சி பெற்ற நபர்.
</p><p>
அத்துடன், இந்த வகை துப்பாக்கிகளில் ஒரு சீரியல் நம்பர் இருக்கும். ஆகவே, அது எங்கு தயாரிக்கப்பட்டது என்பது முதல், அதை யார் பயன்படுத்தினார் என்பது வரை கண்டுபிடிக்கமுடியும்.
</p><p>
எல்லாவற்றிற்கும் மேல், தண்ணீருக்குள் எத்தனை ஆண்டுகள் கிடந்திருந்தாலும், அதிலுள்ள DNAவைக் கண்டுபிடிக்கும் வழிமுறைகள் தற்போது உள்ளதால், முன்பு கிடைத்த ஆதாரங்களை, தற்போது கிடைத்துள்ள ஆதாரத்துடன் இணைத்து குற்றவாளியைக் கண்டுபிடிப்பதை எளிதாக்கக்கூடும் என்பதே நல்ல செய்தி.
</p><p>
ஆக, அந்த துப்பாக்கி தடயவியல் ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளது. தடயவியல் நிபுணர்கள், Saad al-Hilli குடும்பத்தினரைக் கொல்ல குற்றவாளி பயன்படுத்திய துப்பாக்கி இதுதானா என்பதைக் கண்டறியும் ஆய்வில் ஈடுபட்டுவருகின்றனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-01T15:52:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[மனைவி, குழந்தையை பிரிந்த பிரதீப் ஆண்டனி.. உருக்கமான பதிவால் அதிர்ச்சியில் ரசிகர்கள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/bigg-boss-pradeep-antony-separates-from-wife-1788276406"></link>
            <id>https://manithan.com/article/bigg-boss-pradeep-antony-separates-from-wife-1788276406</id>
            <summary type="text">பிக் பாஸ் புகழ் பிரதீப் ஆண்டனி குழந்தையை பிரிந்து மிகுந்த துயரில் இருப்பதாக வெளியிட்டுள்ள உருக்கமாக பதிவு இணையத்தில் வைரலாகியுள்ளது.பிரதீப் ஆண்டனிதமிழ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிக் பாஸ் புகழ் பிரதீப் ஆண்டனி குழந்தையை பிரிந்து மிகுந்த துயரில் இருப்பதாக வெளியிட்டுள்ள உருக்கமாக பதிவு இணையத்தில் வைரலாகியுள்ளது.</p><h2>பிரதீப் ஆண்டனி</h2><p>தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் அறிமுகமானவர் நடிகர் பிரதீப் ஆண்டனி. சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியான ‘அருவி’ திரைப்படத்தின் மூலம் நடிகராக தனது திரைப்பயணத்தை தொடங்கிய இவர், அதன்பிறகு ‘வாழ்’ திரைப்படத்திலும் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d54a99f4-4d85-46ba-b98f-6a83a877cf59/26-6a96f3d77a817.webp' /></p><p></p><p>

நடிகர் கவினின் நெருங்கிய நண்பராகவும் அறியப்படும் பிரதீப் ஆண்டனி, விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபலமான ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியின் 7வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டார். ஏற்கனவே திரைப்படங்களில் நடித்திருந்தாலும், பிக்பாஸ் நிகழ்ச்சிதான் அவரை அதிகளவில் மக்களிடம் கொண்டு சேர்த்தது.</p><p>

நிகழ்ச்சியில் பிரதீப் ஆண்டனி வெளிப்படையாகப் பேசிய விதமும், தனது கருத்துகளை தயக்கமின்றி முன்வைத்த விதமும் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றது.</p><p> </p><p>அதே நேரத்தில், அவரது செயல்பாடுகள் நிகழ்ச்சிக்குள் பல்வேறு சர்ச்சைகளையும் ஏற்படுத்தின.

குறிப்பாக, சில பெண் போட்டியாளர்கள் பிரதீப் ஆண்டனி மீது புகார் தெரிவித்ததைத் தொடர்ந்து, பிக்பாஸ் நிகழ்ச்சியில் அவருக்கு ரெட் கார்டு வழங்கப்பட்டது. </p><p>இதையடுத்து அவர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

பிரதீப்புக்கு ரெட் கார்டு வழங்கி வெளியேற்றப்பட்ட முடிவு அப்போது சமூக வலைதளங்களில் மிகப்பெரிய விவாதத்தை ஏற்படுத்தியது. பலரும் பிக்பாஸ் குழுவின் முடிவுக்கு எதிராக தங்களது கருத்துகளைப் பதிவு செய்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5e710ef7-88f5-4be5-bd73-a694d7f0c81c/26-6a96f3d82befa.webp' /></p><p> பிரதீப்பை வெளியேற்றியது தவறான முடிவு என்றும், அவருக்கு நியாயம் கிடைக்கவில்லை என்றும் சில ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தொடர்ந்து கருத்து தெரிவித்து வந்தனர்.
</p><h2>மனைவி குழந்தையை பிரிந்தது ஏன்?&nbsp;</h2><p>பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு பிரதீப் ஆண்டனி தனது தனிப்பட்ட வாழ்க்கையில் கவனம் செலுத்தினார். கடந்த 2024ஆம் ஆண்டு பூஜா என்பவரை திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்குப் பிறகு தனது குடும்ப வாழ்க்கையை மகிழ்ச்சியாக நடத்தி வந்த பிரதீப்புக்கு, கடந்த ஏப்ரல் மாதம் ஆண் குழந்தை பிறந்தது.
</p><p>
குழந்தை பிறந்த செய்தி பிரதீப்பின் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்திய நிலையில், தற்போது அவரது தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பான ஒரு பதிவு ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7e5e0646-0a8b-47f1-a140-29780764f4a4/26-6a96f3d8d1cd0.webp' /></p><h2>உருக்கமான&nbsp; பதிவு&nbsp;</h2><p>
</p><p>பிரதீப் ஆண்டனி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள நீண்ட பதிவில், தனது மனைவி மற்றும் குழந்தையை பிரிந்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.

தனது வாழ்க்கையின் மிகப்பெரிய கனவு குறித்து அவர் அந்த பதிவில் உருக்கமாக பேசியுள்ளார். </p><p>ஒரு நல்ல குடும்பத்தை அமைத்துக்கொண்டு, தனது குழந்தைக்கு சிறந்த தந்தையாக வாழ வேண்டும் என்பதுதான் தனது வாழ்நாளின் மிகப்பெரிய கனவு என்று பிரதீப் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், தங்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக தற்போது இணைந்து வாழ்வது மிகவும் கடினமாகிவிட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/64106227-c16e-4e02-aaaf-7dc0e90cc3cb/26-6a96f3d9848d4.webp' /></p><p></p><p>
</p><p>
மேலும், தனது குழந்தையின் மீது அளவுகடந்த அன்பு வைத்திருப்பதாகக் கூறியுள்ள பிரதீப், குழந்தையை பிரிந்திருப்பது தனக்கு மிகுந்த வேதனையை ஏற்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளார். </p><p>“ஒவ்வொரு நொடியும் என் குழந்தையை ரொம்பவே மிஸ் பண்றேன்” என்று அவர் தனது பதிவில் உருக்கமாக குறிப்பிட்டுள்ளார்.

பிரதீப்பின் இந்த பதிவு தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது. </p><p>குடும்ப வாழ்க்கை குறித்து பிரதீப் ஆண்டனி வெளியிட்டுள்ள இந்த பதிவு சமூக வலைதளங்களில் பேசுபொருளாகி வரும் நிலையில், அவரது தற்போதைய நிலை குறித்து ரசிகர்கள் பலரும் வருத்தத்தையும் ஆதரவையும் தெரிவித்து வருகின்றனர்.</p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்<b><u> <a href="https://chat.whatsapp.com/KPaiG8NNYogL3W9EipSjKP" target="_blank">FOLLOW NOW&nbsp;</a></u></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-01T15:49:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிக் பாஸ் போட்டியாளராக வரும் பிரபல மேக்கப் ஆர்ட்டிஸ்ட்! யார் என பாருங்க]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/makeup-artist-asmitha-to-enter-bigg-boss-10-tamil-1788277086"></link>
            <id>https://cineulagam.com/article/makeup-artist-asmitha-to-enter-bigg-boss-10-tamil-1788277086</id>
            <summary type="text">பிக் பாஸ் 10ம் சீசன் தமிழில் தொடங்க இன்னும் ஒரு வாரம் மட்டுமே இருக்கிறது. அதில் 20 பிரபலங்கள் மற்றும் 3 காமன் மேன் என மொத்தம் 23 போட்டியாளர்கள் வர இரு...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிக் பாஸ் 10ம் சீசன் தமிழில் தொடங்க இன்னும் ஒரு வாரம் மட்டுமே இருக்கிறது. அதில் 20 பிரபலங்கள் மற்றும் 3 காமன் மேன் என மொத்தம் 23 போட்டியாளர்கள் வர இருக்கின்றனர்.
</p><p>
பல முக்கிய சீரியல் நடிகர்கள் பலரும் போட்டியாளர்களாக வர இருக்கின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7bcc29fe-5a7b-4887-a0bf-e80f215e70f7/26-6a96f1619f691.webp' /></p><h2>மேக்கப் ஆர்ட்டிஸ்ட்</h2><p>இந்நிலையில் மேக்கப் ஆர்ட்டிஸ்ட் மற்றும் நடிகை அஸ்மிதா என்பவர் போட்டியாளராக வருவது உறுதியாகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.</p><p>

அஸ்மிதா சில படங்களில் நடித்து இருந்தாலும் மேக்கப் ஆர்ட்டிஸ்ட் ஆக அதிகம் பிரபலம். அவர் ஒரு வருடத்திற்கு முன் தனது கணவர் தன்னை தாக்கி கொடுமை படுத்தியதாக போலீசில் புகார் அளித்து கைது செய்ய வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.</p><p><br></p>]]></content>
            <updated>2026-09-01T15:38:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறைச்சாலைகளுக்கு பதில் வீட்டுக்காவல் ; சட்ட மறுசீரமைப்புகள் ஆரம்பம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/house-arrest-instead-of-imprisonment-1788276757"></link>
            <id>https://jvpnews.com/article/house-arrest-instead-of-imprisonment-1788276757</id>
            <summary type="text">சிறைச்சாலைகளில் தடுத்து வைப்பதற்கு பதிலாக வீட்டுக்காவலில் வைப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள சட்ட மறுசீரமைப்புகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக அமைச...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">சிறைச்சாலைகளில் தடுத்து வைப்பதற்கு பதிலாக வீட்டுக்காவலில் வைப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள சட்ட மறுசீரமைப்புகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். </p><p style="text-align: justify; ">

இன்று (01) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1f131be0-cd57-4226-9828-79c6dd86d3b8/26-6a96f016eec0e.webp' /></p><h2 style="text-align: justify; ">சட்ட மறுசீரமைப்புகள்</h2><p> </p><p style="text-align: justify; ">

இதற்காகப் பல சட்ட மறுசீரமைப்புகள் குறித்து தற்போது கலந்துரையாடப்பட்டு, தேவையான சட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக அமைச்சர் கூறினார்.</p><p style="text-align: justify; "> 

"நீதித்துறை அமைப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல மறுசீரமைப்புகளுக்கு மத்தியில் இந்தச் சட்ட மறுசீரமைப்பும் இடம்பெறுகிறது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> சிறைச்சாலைகளின் நெருக்கடியைக் குறைத்தல், அரசாங்க பகுப்பாய்வாளர் திணைக்களத்தின் அறிக்கைகளை விரைவுபடுத்துதல், பிணை பெற முடியாதவர்களுக்குப் பிணை வழங்குவதற்குத் தேவையான சட்ட மறுசீரமைப்புகளைச் செய்தல், சிறைச்சாலைகளுக்கு வெளியே இவ்வாறானவர்களை வீடுகளில் தடுத்து வைத்து தண்டனைக் காலத்தைக் கழிப்பதற்கான வாய்ப்பை வழங்குதல் போன்ற பல மறுசீரமைப்புகள் குறித்து கலந்துரையாடப்பட்டு சட்டங்கள் இயற்றப்பட்டு வருகின்றன என்றார்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-01T15:32:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகுகிறார் முன்னாள் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/keir-starmer-is-stepping-member-of-parliament-1788274856"></link>
            <id>https://tamilwin.com/article/keir-starmer-is-stepping-member-of-parliament-1788274856</id>
            <summary type="text">பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தனது நாடாளுமன்ற
உறுப்பினர் பதவியிலிருந்து விலகவுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.

ஆளும் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தனது நாடாளுமன்ற
உறுப்பினர் பதவியிலிருந்து விலகவுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.
</p><p>
ஆளும் தொழிற்கட்சியின் ஆதரவை இழந்ததைத் தொடர்ந்து பிரதமர் பதவியிலிருந்து
விலகி சுமார் ஆறு வாரங்களே நிறைவடைந்துள்ள நிலையில், அவர் இந்த முடிவை
எடுத்துள்ளார்.</p><p>

தான் வகித்து வந்த லண்டன் ‘ஹோல்பர்ன் மற்றும் சென் பாங்க்ராஸ்’ தொகுதிக்கான
எம்.பி பதவியிலிருந்து விலகி, இனி சர்வதேச விவகாரங்கள் தொடர்பில் கூடுதல் கவனம்
செலுத்த திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.</p><h2>இராஜதந்திர நடவடிக்கை</h2><p>
</p><p>
கடந்த 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தொழிற்கட்சியைப் வரலாற்றுச்
சிறப்புமிக்க பெரும்பான்மையுடன் வெற்றி பெறச் செய்து பிரதமரான போதிலும்,
உள்நாட்டுக் கொள்கைகளில் ஏற்பட்ட பின்னடைவுகள் மற்றும் மக்களின் ஆதரவு
வீழ்ச்சி காரணமாக அவர் தனது பதவியை இழக்க நேரிட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/eb6db646-5936-4c47-8c24-17472f37e007/26-6a96e9af8e7fe.webp' /></p><p>

எனினும், பிரான்ஸ் மற்றும் சீனாவுடனான உறவுகளைச் சீரமைத்தல், உக்ரைனுக்கான
ஆதரவு மற்றும் பாலஸ்தீன நாட்டை அங்கீகரித்தல் போன்ற சர்வதேச விவகாரங்களில்
அவரது இராஜதந்திர நடவடிக்கைகள் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியிருந்தன.
</p><p>
கெய்ர் ஸ்டார்மரைத் தொடர்ந்து அண்டி பர்ன்ஹாம் பிரித்தானியாவின் புதிய
பிரதமராகப் பதவியேற்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-01T15:22:12+00:00</updated>
        </entry>
    </feed>
