<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-09-01T10:52:34+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை கடற்பகுதியில் ஈரானிய கப்பல்கள் :அமைச்சர் வெளியிட்ட தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/12-iranian-ships-enter-sri-lankan-waters-1788259128"></link>
            <id>https://ibctamil.com/article/12-iranian-ships-enter-sri-lankan-waters-1788259128</id>
            <summary type="text">அமெரிக்காவால் தடை விதிக்கப்பட்டதாகக் கூறப்படும் ஈரானியக் கப்பல்களை இலங்கை கடல் எல்லைக்குள் நுழைய அனுமதிக்கப்பட்டதா என அமைச்சரவையின் முடிவை அறிவிப்பதற்...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவால் தடை விதிக்கப்பட்டதாகக் கூறப்படும் ஈரானியக் கப்பல்களை இலங்கை கடல் எல்லைக்குள் நுழைய அனுமதிக்கப்பட்டதா என அமைச்சரவையின் முடிவை அறிவிப்பதற்காக இன்று (01) நடைபெற்ற ஊடக சந்திப்பில், பத்திரிகையாளர்கள் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸவிடம் கேள்வி எழுப்பினர்.
</p><p>
அச்சந்திப்பில், கடந்த சில நாட்களில் சுமார் 12 ஈரானியக் கப்பல்கள் நாட்டின் அனுமதியின்றி இலங்கை கடல் எல்லைக்குள் நுழைந்துள்ளதாகத் தெரியவந்துள்ளதாக பத்திரிகையாளர்கள் சுட்டிக்காட்டினர்.</p><h2>எனக்கு எதுவும் தெரியாது&nbsp;</h2><p>&nbsp; நாட்டின் எல்லைக்குட்பட்ட கடல் எல்லையான தரைப்பகுதியிலிருந்து 12 கடல் மைல் எல்லையைக் கடந்து, கப்பல்கள் 11.5 கடல் மைல் வரை வந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7d14fa25-161d-4cd2-84bf-7733f11062e3/26-6a96ad942d20c.webp' /></p><p>
</p><p>
இருப்பினும், இவ்விஷயம் குறித்து தமது கருத்துக்களைத் தெரிவித்த அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ, இவ்விஷயம் குறித்து தமக்குத் தெரியாது என்றும், இது குறித்து வெளியுறவு அமைச்சு விசாரிக்கும் என்றும் கூறினார்.
</p><p>
மத்திய கிழக்கில் போரின் தீவிரம் அதிகமாக இருந்தபோதும், உயிர்களைக் காப்பாற்றும் ஒரே நோக்கத்திற்காக இரு தரப்பினரும் உதவிகரமான முறையில் செயல்பட்டனர் என்றும், அத்தகைய சூழ்நிலையில் போரில் எந்தத் தரப்பையும் ஆதரிக்க வேண்டிய அவசியமில்லை என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-01T10:48:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[செப்டெம்பர் 12இற்கு முன் நான் சிறையில் அடைக்கப்படலாம் : நாமல் பகிரங்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-arrest-him-ahead-of-sept-12-1788257783"></link>
            <id>https://tamilwin.com/article/namal-arrest-him-ahead-of-sept-12-1788257783</id>
            <summary type="text">செப்டெம்பர் 12அன்று அனுராதபுரத்தில் பெருந்திரளான மக்கள் கூடுவார்கள் என அரசாங்கம் எதிர்பார்த்தால், 12ஆம் திகதிக்கு முன்பாகவே தன்னைச் சிறையில் அடைக்கக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>செப்டெம்பர் 12அன்று அனுராதபுரத்தில் பெருந்திரளான மக்கள் கூடுவார்கள் என அரசாங்கம் எதிர்பார்த்தால், 12ஆம் திகதிக்கு முன்பாகவே தன்னைச் சிறையில் அடைக்கக்கூடும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச எச்சரித்துள்ளார்.</p><p>இன்று(01.09.2026) ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு கூறியுள்ளார்.
</p><h2>நாடு தழுவிய பேரணிகள்</h2><p>ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) பேரணிகளால் உருவாக்கப்பட்ட பெருகிவரும் அரசியல் உத்வேகத்திற்கு பதிலளிக்கும் விதமாகவே, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் செப்டம்பர் 5 முதல் நாடு தழுவிய பேரணிகளின் தொடரை அரசாங்கம் தொடங்க முடிவு செய்துள்ளது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சமீபத்தில் முன்வைத்த குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து நாமலின் கருத்துக்கள் வெளியாகியுள்ளன.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8a22776f-5f39-4f68-950f-7d7138733a03/26-6a96ab84e06be.webp' /></p><p>
அரசாங்கம் தனது சொந்த பலவீனங்களை மறைக்க முயற்சிப்பதாகவும், எதிர்க்கட்சிகளின் குரல்களை ஒடுக்குவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச குற்றம் சாட்டியுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-01T10:45:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[மீண்டும் மீண்டும் குற்றமிழைப்போருக்கான சட்டத்தில் திருத்தம் : கிடைத்தது அனுமதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/amendment-to-the-law-against-repeat-offenders-1788257968"></link>
            <id>https://ibctamil.com/article/amendment-to-the-law-against-repeat-offenders-1788257968</id>
            <summary type="text">1999ஆம் ஆண்டின் 46ஆம் இலக்க சமுதாயஞ்சார் சீர்திருத்த சட்டத்தில் திருத்தம் செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.மீண்டும் மீண்டும் குற்றச் செயல்களில் ஈட...</summary>
            <content type="html"><![CDATA[<p>1999ஆம் ஆண்டின் 46ஆம் இலக்க சமுதாயஞ்சார் சீர்திருத்த சட்டத்தில் திருத்தம் செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.</p><p>மீண்டும் மீண்டும் குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்களுக்கு எதிராக சட்டத்தை பயனுள்ள வகையில் நடைமுறைப்படுத்தும் நோக்கில் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.</p><p>

இதற்கான அமைச்சரவை அங்கீகாரம் கடந்த 2025 ஏப்ரல் 7ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் வழங்கப்பட்டிருந்தது.</p><p></p><h2>&nbsp;சட்ட மாஅதிபரின் அங்கீகாரம்&nbsp;</h2><p>

அதன்படி, சட்ட வரைஞரால் தயாரிக்கப்பட்ட சட்டமூலத்துக்கு சட்ட மாஅதிபரின் அங்கீகாரம் கிடைத்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/29f19767-f9e8-4b90-9be5-57e142b00929/26-6a96a956592b4.webp' /></p><p>
</p><p>
இதையடுத்து, சமுதாயஞ்சார் சீர்திருத்த சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிட்டு, பின்னர் நாடாளுமன்றத்தின் அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்கு நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
</p><p>
இந்தத் திருத்தங்கள் நடைமுறைக்கு வந்தால், மீண்டும் மீண்டும் குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்களைச் சீர்திருத்துவதற்கான சட்ட ஏற்பாடுகளை மேலும் வலுப்படுத்த முடியும் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-01T10:43:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்க இராணுவ செயலாளர் இராஜினாமா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/us-army-secretary-resigns-1788259556"></link>
            <id>https://canadamirror.com/article/us-army-secretary-resigns-1788259556</id>
            <summary type="text">&amp;nbsp; அமெரிக்க இராணுவ செயலாளர் டான் டிரிஸ்கோல்(Dan Driscoll), தனது பதவியிலிருந்து விலகுவதற்கான இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிடம் சமர்ப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; அமெரிக்க இராணுவ செயலாளர் டான் டிரிஸ்கோல்(Dan Driscoll), தனது பதவியிலிருந்து விலகுவதற்கான இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிடம் சமர்ப்பித்துள்ளார்.
</p><p>


இராணுவத்தின் தற்போதைய நிலைமை தொடர்பாக ஜனாதிபதி ட்ரம்புடன் கலந்துரையாடிய பின்னரே டிரிஸ்கோல் (Dan Driscoll)&nbsp; தனது இராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்துள்ளதாக அமெரிக்க இராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a6b987a8-044f-4f00-9877-a1bbcc210ce7/26-6a96ace633f90.webp' /></p><p>



டிரிஸ்கோலுக்கும் (Dan Driscoll) அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத்துக்கும் இடையில், இராணுவத்தை நவீனமயமாக்குதல் மற்றும் இராணுவத் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்கள் தொடர்பாக பல மாதங்களாக கருத்து வேறுபாடுகள் நிலவி வந்ததாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன.</p><p>



இராணுவத்தின் தயார் நிலை மற்றும் நவீனமயமாக்கல் நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாக டிரிஸ்கோல் தனது இராஜினாமாவில் கவலை தெரிவித்ததாகவும் தகவல்&nbsp; வெளியாகியுள்ளன.
</p><p>


டிரிஸ்கோல்&nbsp;(Dan Driscoll) கடந்த 2025 பெப்ரவரி முதல் அமெரிக்க இராணுவ செயலாளராகப் பதவி வகித்து வந்தமை குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-09-01T10:43:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[தேனுடன் இந்த உணவுகளை சேர்த்தால் உடல்நலத்திற்கு பாதிப்பா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/is-adding-these-foods-to-honey-harmful-to-health-1788259071"></link>
            <id>https://jvpnews.com/article/is-adding-these-foods-to-honey-harmful-to-health-1788259071</id>
            <summary type="text">தேனை முறையாகவும் மிதமாகவும் உட்கொண்டால் அது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது, செரிமானத்தை மேம்படுத்துவது, சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துவது, உடலுக்கு...</summary>
            <content type="html"><![CDATA[<p>தேனை முறையாகவும் மிதமாகவும் உட்கொண்டால் அது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது, செரிமானத்தை மேம்படுத்துவது, சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துவது, உடலுக்கு ஆற்றலை வழங்குவது மற்றும் இதய ஆரோக்கியத்திற்கு நல்லது போன்ற பலன்களை அளிக்கும்.</p><p> தேனில் உள்ள கார்போஹைட்ரேட்டுகள் உடனடி ஆற்றலை வழங்குகின்றன. மேலும், இதில் கொழுப்பு மற்றும் புரதம் எதுவும் இல்லை.&nbsp;தேனை சில குறிப்பிட்ட பொருட்களுடன் சேர்த்து உட்கொள்வது உடல் நலத்திற்குத் தீங்கு விளைவிக்கும். அவ்வாறு தீங்கு விளைவிக்கும்&nbsp; உணவுகளை பற்றி நாம் இங்கு தெரிந்து கொள்வோம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f6d0e067-f275-408f-84d7-50e6f3fa6dd6/26-6a96ab00b3964.webp' /></p><h4>சூடான நீர்</h4><p> பலர் காலையில் வெந்நீரில் தேன் கலந்து குடிக்கும் பழக்கத்தைக் கொண்டுள்ளனர். ஆனால், தேனை 60 டிகிரி செல்சியஸுக்கு மேல் சூடுபடுத்துவது நல்லதல்ல. அதிக வெப்பநிலையில் தேனில் ஹைட்ராக்ஸி மெத்தில் ஃபர்ஃபியூரல் (HMF) எனப்படும் ஒரு பொருள் உருவாக வாய்ப்புள்ளது என்று சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆயுர்வேதத்தின்படி, தேனை அதிகமாக சூடுபடுத்துவது அதன் இயற்கையான பண்புகளை மாற்றிவிடுகிறது. அதனால்தான், தேனை வெதுவெதுப்பான நீரில் கலந்து குடிப்பதோ அல்லது அது முழுமையாக ஆறிய பிறகு குடிப்பதோ சிறந்தது.</p><h4>நெய்</h4><p>ஆயுர்வேதமும் தேனையும் நெய்யையும் சம அளவில் எடுத்துக்கொள்ளப் பரிந்துரைப்பதில்லை. அவ்விரண்டின் தன்மையும் வெவ்வேறானது என்றும், அவற்றைச் சம அளவில் எடுத்துக்கொள்வது செரிமானத்தில் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் அது கூறுகிறது. எனவே, நீங்கள் இவ்விரண்டையும் ஒன்றாக எடுத்துக்கொள்ள விரும்பினால், முதலில் நிபுணரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது.</p><h4>புளிக்கவைக்கப்பட்ட உணவுகள்</h4><p> புளிக்கவைக்கப்பட்ட உணவுகளைத் தேனுடன் சேர்த்து உட்கொள்வது நல்லதல்ல என்றும் கூறப்படுகிறது. தயிர் மற்றும் மதுபானம் போன்ற புளிக்கவைக்கப்பட்ட உணவுகளுடன் தேனைக் கலப்பது சிலருக்கு செரிமானப் பிரச்சனைகளையும் வயிற்று உப்புசத்தையும் ஏற்படுத்தும். தேனில் உள்ள இயற்கையான சர்க்கரைகள் புளிக்கும் செயல்முறையைப் பாதிக்கக்கூடும்.</p><h4>இனிப்பு சேர்க்கப்பட்ட உணவுகள்</h4><p>சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை அல்லது அதிக இனிப்பு சேர்க்கப்பட்ட உணவுகளைத் தேனுடன் சேர்த்து உட்கொள்வதையும் நீங்கள் தவிர்க்க வேண்டும். அவ்வாறு செய்வது உடலில் சர்க்கரை அளவை அதிகரித்து, உடல் பருமன், நீரிழிவு மற்றும் இதய நோய் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும். ஆயுர்வேதமும் மீனுடன் தேனை உட்கொள்ளப் பரிந்துரைப்பதில்லை. அது செரிமானத்தைப் பாதிக்கும் என்று நம்பப்படுகிறது.</p><h4>முள்ளங்கி மற்றும் வெங்காயம்</h4><p>முள்ளங்கி மற்றும் வெங்காயத்தை தேனுடன் சேர்த்துச் சாப்பிடுவது நல்லதல்ல என்று ஆயுர்வேத நூல்களும் கூறுகின்றன. இந்தக் கலவையானது செரிமான மண்டலத்திற்கு அழுத்தம் கொடுத்து வயிற்று உபாதை மற்றும் வயிறு உப்புசம் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. மேலும், தேனுடன் அதிகப்படியான வெங்காயத்தைச் சேர்த்து உட்கொள்வதைத் தவிர்க்கவும் அறிவுறுத்தப்படுகிறது.</p>]]></content>
            <updated>2026-09-01T10:38:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை சல்மா அருணின் சமீபத்திய புகைப்படங்கள்.. இணையத்தில் வைரல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/siragadikka-aasai-salma-arun-latest-photoshoot-1788258501"></link>
            <id>https://cineulagam.com/article/siragadikka-aasai-salma-arun-latest-photoshoot-1788258501</id>
            <summary type="text">சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகிணி என்கிற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை சல்மா அருண். இவர் இன்ஸ்டாகிராமில் மிகவும்...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகிணி என்கிற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை சல்மா அருண். </p><p>இவர் இன்ஸ்டாகிராமில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் நபர் ஆவார். இவர் வெளியிடும் புகைப்படங்கள் ரசிகர்களிடையே கவனத்தை பெறுகின்றன. </p><p>இந்நிலையில், தற்போது விதவிதமான ஆடைகளில் எடுத்துக்கொண்ட சமீபத்திய புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். </p><p>இதோ அந்த புகைப்படங்கள்:</p>]]></content>
            <updated>2026-09-01T10:37:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடமை நேரத்தில் காவல்துறை உத்தியோகத்தரின் தகாத செயல்: விதிக்கப்பட்ட தண்டனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/on-duty-opp-officer-driving-drunk-3x-legal-limit-1788258434"></link>
            <id>https://canadamirror.com/article/on-duty-opp-officer-driving-drunk-3x-legal-limit-1788258434</id>
            <summary type="text">&amp;nbsp;கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்தில், கடமை நேரத்தில் கைத்துப்பாக்கியுடன் தீவிர மதுபோதையில் பொலிஸ் ரோந்து வாகனத்தைச் செலுத்தி, கடுமையான தகாத செயலில் ஈட...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்தில், கடமை நேரத்தில் கைத்துப்பாக்கியுடன் தீவிர மதுபோதையில் பொலிஸ் ரோந்து வாகனத்தைச் செலுத்தி, கடுமையான தகாத செயலில் ஈடுபட்ட சிரேஷ்ட பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் நீதிமன்றத்தில் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளதைத் தொடர்ந்து அவருக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.</p><p>
ஒன்ராறியோ மாகாண பொலிஸ் பிரிவில் 17 ஆண்டுகள் சேவையாற்றிய 40 வயதான கிறிஸ்டோபர் புரூட் என்ற உத்தியோகத்தரே இவ்வாறு குற்றத்தை ஒப்புக்கொண்டவராவார்.
</p><p>கடந்த ஜனவரி மாதம், கிறிஸ்டோபர் தனது வீட்டில் மது அருந்திவிட்டு, இடுப்பில் கைத்துப்பாக்கியுடன் பொலிஸ் ரோந்து வாகனத்தை ஓட்டிச் சென்று மிட்லேண்டில் உள்ள தென் ஜோர்ஜியன் பே பொலிஸ் நிலையத்தில் நடைபெற்ற பணி மதிப்பீட்டுக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/52eaadd5-5e3f-4c06-b56d-650bf8de7bf2/26-6a96a8842a65a.webp' /></p><p> 
இதன்போது அவருடன் கூட்டத்தில் பங்கேற்ற சக அதிகாரிகள் அவரிடம் மது மணம் வீசுவதைக் கண்டுபிடித்தனர்.
அதன்பின்னர் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், சட்டப்பூர்வமாக அனுமதிக்கப்பட்ட அளவை விட 3 மடங்குக்கும் அதிகமான மது அவரது உடலில் இருந்தது உறுதியானது.</p><p> பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய ஒரு பொலிஸ் அதிகாரி, கடமை நேரத்தில் சீருடையுடன் இத்தகைய ஆபத்தான மற்றும் தகாத செயலில் ஈடுபட்டது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.</p><p>
வழக்கை விசாரித்த நீதிபதி எட்வர்ட் புருட்சியி, "இவரது பொறுப்பற்ற செயலால் அவரோ அல்லது வீதியில் சென்ற மற்றவர்களோ உயிரிழக்கும் வகையில் பெரும் விபத்து ஏற்படாமல் தப்பியது வெறும் அதிர்ஷ்டமும் தெய்வாதீனமும் தான்" எனக் கடுமையாகக் சாடினார்.</p><p>
குறித்த பொலிஸ் அதிகாரிக்கு, 3,000 டொலர் அபராதம் விதிக்கப்பட்டதுடன் 2 ஆண்டுகளுக்கு வாகனம் ஓட்டுவதற்குத் தடை விதிக்கப்பட்டது.
மேலும், 2 ஆண்டுகள் நன்னடத்தைக் கண்காணிப்பில் வைக்க உத்தரவிடப்பட்டது.
</p><p>எதிரித் தரப்பு சட்டத்தரணி நீதிமன்றத்தில் தெரிவிக்கையில், தனது நீண்டகால பொலிஸ் சேவையில் கண்ட கொடூரமான சம்பவங்களால் கிறிஸ்டோபர் 'அதிர்ச்சிக்குப் பிந்தைய மன உளைச்சல் நோயால்' பாதிக்கப்பட்டிருந்ததாகவும், அதனால் மதுவுக்கு அடிமையானதாகவும் குறிப்பிட்டார்.</p><p>
நீதிமன்றத்தில் உரையாற்றிய பொலிஸ் உத்தியோகத்தர் கிறிஸ்டோபர், தனது செயலுக்காகத் வெட்கப்படுவதாகவும், தனது பொலிஸ் குழுவிற்கு ஏற்படுத்திய களங்கத்திற்கு ஆழ்ந்த மனவருத்தத்தைத் தெரிவிப்பதாகவும் கூறினார்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-01T10:31:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாள வெள்ளப்பெருக்கு: பாதிக்கப்பட்ட கனடியர்களுக்கு உதவ 10 அதிகாரிகள் அனுப்பி வைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/ottawa-sends-officials-to-nepal-as-search-1788257833"></link>
            <id>https://canadamirror.com/article/ottawa-sends-officials-to-nepal-as-search-1788257833</id>
            <summary type="text">&amp;nbsp;நேபாளத்தில் ஏற்பட்டுள்ள பேரழிவுமிக்க வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்ட கனடியர்களுக்கு உதவுவதற்காகக் கனடிய கூட்டாட்சி அரசாங்கத்தின் 10 அதிகாரிகள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;நேபாளத்தில் ஏற்பட்டுள்ள பேரழிவுமிக்க வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்ட கனடியர்களுக்கு உதவுவதற்காகக் கனடிய கூட்டாட்சி அரசாங்கத்தின் 10 அதிகாரிகள் களமிறக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் வெளிவிவகார அமைச்சர் அனிதா ஆனந்த் தெரிவித்துள்ளார்.
</p><p>கனடிய அரச பொலிஸ் அதிகாரி ஒருவர் உட்பட இந்த அதிகாரிகள், காணாமல் போன கனடியர்களைக் கண்டுபிடிப்பதற்கும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆதரவளிப்பதற்கும் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றனர் என அமைச்சர் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>நேபாளம் மற்றும் சீனா இடையிலான இமயமலை எல்லைப் பகுதியில் பனிப்பாறை ஒன்று சரிந்து விழுந்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் இதுவரை சுமார் 800 பேர் உயிரிழந்துள்ளதுடன், கிட்டத்தட்ட 3,000 பேர் காணாமல் போயுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4c81214d-524f-48b1-90c9-524baba8c6b7/26-6a96a63225c27.webp' /></p><p>
இச்சம்பவத்தில் முன்னதாகத் தொடர்பை இழந்திருந்த கனடியர் ஒருவர் பாதுகாப்பாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் அனிதா ஆனந்த் தெரிவித்திருந்தார்.
</p><p>எனினும், மேலும் 30 கனடியர்கள் மற்றும் நிரந்தர வசிப்பாளர்கள் இன்னமும் காணாமல் போயுள்ளதாகவும், கூடுதல் தகவல்கள் கிடைக்கும்போது இந்த எண்ணிக்கை மாறக்கூடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>அத்துடன், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நேபாளத்திற்கு அவசர மனிதநேய உதவியாக 5 மில்லியன் டொலர்களை வழங்குவதற்கு கனடிய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-01T10:31:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[எங்களுடைய ஆடையை கழற்றுவது அவ்வளவு சுலபமல்ல! நாமல் ஆவேசம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-rajapaksha-statement-1788258398"></link>
            <id>https://tamilwin.com/article/namal-rajapaksha-statement-1788258398</id>
            <summary type="text">ஜனாதிபதி கூறும் பொய்கள் மக்களுக்கு பழகிவிட்டது, ஜனாதிபதிக்கு புதிதாக கூற பொய்கள் எதுவும் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜனாதிபதி கூறும் பொய்கள் மக்களுக்கு பழகிவிட்டது, ஜனாதிபதிக்கு புதிதாக கூற பொய்கள் எதுவும் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.</p><p> 

இன்று (01.09.2026) ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.</p><p>அவர் மேலும் தெரிவிக்கையில், 

ஜனாதிபதி கொழும்பு - 07 ஏசி அறையில் இருந்து இரண்டு வருடங்களுக்கு பின்னர் கிராமங்களுக்கு செல்ல தயாராகி வருகிறார். 

மக்கள் சந்திப்பு மேடைகளில் ஏறி வாக்குறுதிகள் எப்போது நிறைவேறும் என கூற வேண்டும். </p><p>

கடந்த காலத்திலும் நீங்கள் பார்த்திருப்பீர்கள், ஒரு தலைவர் தேர்தலின் போது ஒரு ஆடையை அணிந்தார், வென்ற பிறகு அதை கழற்றிப்போட்டார். 

சிலர் வெல்லும்போது ஒரு ஆடை, தோற்கும்போது வேறு ஒரு ஆடை. நாங்கள் நேர்மையாக சரியானதை செய்தோம்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/_4rpMXe2U4c" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><h2>இது எங்கள் அடையாளம்</h2><p> அதனால், எதிர்காலத்திலும் எங்களுடைய ஆடையை கழற்றுவது அவ்வளவு சுலபமல்ல. 

அதுதான் எங்கள் அடையாளம், நாங்கள் எங்கள் அடையாளத்தைப் பாதுகாக்கிறோம்.</p><p> அதேபோல், இந்த நாட்டு மக்கள் அந்த பொய்ப் பரப்புரைகள், சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்து இன்று நல்ல புரிதலுடன் இருக்கிறார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. அரசியல் கட்சிகள் மக்களை ஏமாற்ற முயற்சி செய்கின்றன. ஆனால் அது இனிமேலும் பலிக்காது என்று நாங்கள் நினைக்கிறோம்.
</p><p>
அதனால் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள், நாங்கள் அதிகாரத்தைப் பெறுவதற்காக ஆடைகளை மாற்றுபவர்கள் அல்ல. சில தலைவர்கள் அதிகாரத்திற்கு வருவதற்கு முன் அணிந்த ஆடையை, அதிகாரத்திற்கு வந்த பின் அணிவதில்லை. அதனால்தான் சொல்கிற ஒன்றை செய்வதில்லை. </p><p>வரம்பற்ற பொய்களைச் சொல்லி அதிகாரத்திற்கு வந்து, மீண்டும் பொய்களையே சொல்கிறார்கள் என தெரிவித்தார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-01T10:29:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறு தொடர்பில் வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/the-results-of-the-2005-scholarship-exam-1788257743"></link>
            <id>https://ibctamil.com/article/the-results-of-the-2005-scholarship-exam-1788257743</id>
            <summary type="text">கடந்த ஓகஸ்ட் மாதம் நடைபெற்ற ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை எதிர்வரும் 5ஆம் திகதிக்கு முன்னர் வெளியிட பரீட்சைகள் திணைக்களம் நடவடிக்கை எட...</summary>
            <content type="html"><![CDATA[<p>கடந்த ஓகஸ்ட் மாதம் நடைபெற்ற ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை எதிர்வரும் 5ஆம் திகதிக்கு முன்னர் வெளியிட பரீட்சைகள் திணைக்களம் நடவடிக்கை எடுத்து வருகிறது. </p><p>பரீட்சைகள் திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டது போல, அனைத்து மதிப்பெண் பட்டியல்களும் ஏற்கனவே கணினிமயமாக்கப்பட்டுள்ளன, அதனுடன் தொடர்புடைய ஆவணங்களை மீண்டும் சரிபார்க்கும் இறுதி கட்டப் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன.</p><h2>பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்ட அறிவிப்பு</h2><p>&nbsp; நாடு முழுவதும் 2,723 நிலையங்களை உள்ளடக்கி கடந்த 9ஆம் திகதி நடைபெற்ற இந்த ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்கு 294,089 பரீட்சார்த்திகள் தோற்றியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8aa157e4-29bc-4513-9dc6-71689e35b440/26-6a96a7eeee844.webp' /></p><p> </p><p>பரீட்சை முடிந்து ஒரு மாதத்திற்குள் பெறுபேறுகளை வெளியிட தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் பூர்த்தி செய்யும் என்று பரீட்சை நடைபெற்ற அதே நாளில் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்திருந்தது.
</p><p>
இந்த பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டு செயல்முறை கடந்த 20ஆம் திகதி நாடு முழுவதும் தெரிவு செய்யப்பட்ட 48 நிலையங்களை அடிப்படையாகக் கொண்டு ஆரம்பமானது. அங்கு 380 மதிப்பீட்டுக் குழுக்களின் கீழ் 6,000க்கும் மேற்பட்ட பரீட்சகர்கள் விடைத்தாள்களைச் சரிபார்க்கும் பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-01T10:28:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாடு செல்லும் தொழிலாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/abroad-for-first-time-for-jobs-in-japan-romania-1788257157"></link>
            <id>https://tamilwin.com/article/abroad-for-first-time-for-jobs-in-japan-romania-1788257157</id>
            <summary type="text">&amp;nbsp;ஜப்பான் மற்றும் ருமேனியாவில் பணிபுரிய முதன்முறையாக வெளிநாடு செல்லும் தொழிலாளர்களுக்காக பயிற்சி திட்டங்களை நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;ஜப்பான் மற்றும் ருமேனியாவில் பணிபுரிய முதன்முறையாக வெளிநாடு செல்லும் தொழிலாளர்களுக்காக பயிற்சி திட்டங்களை நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப்பணியகம் தெரிவித்துள்ளது.
</p><p>
இதன்படி, முதல் கட்டமாக இந்த பயிற்சித்திட்டம் செப்டெம்பர் 1ஆம் திகதி முதல் பணியகத்தின் பன்னிப்பிட்டிய பயிற்சி மையத்தில் தொடங்கப்பட்டுள்ளது.</p><h2>&nbsp;பயிற்சி திட்டங்களுக்கான பதிவு</h2><p>

எதிர்காலத்தில், நாட்டின் பரப்பளவைக் கருத்தில் கொண்டு, நாடு முழுவதும் அமைந்துள்ள பணியகத்தின் பிற பயிற்சி மையங்களிலும் இது தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1c0ed422-45f2-4b3f-abe0-92e0e3f30c2d/26-6a96a6d0b080c.webp' /></p><p>செப்டம்பர் 15ஆம் திகதி முதல் இந்த பயிற்சித் திட்டத்தில் பங்கேற்றிருப்பது கட்டாம் என்றும், இவை இல்லாமல், பணியகத்தில் பதிவு பெற முடியாது என்றும் பணியகம் தெரிவிக்கின்றது.
</p><p>
இந்த வழிகாட்டுதல் பயிற்சித்திட்டத்தின் மூலம், அந்தந்த நாடுகளின் கலாச்சாரம், பணியிடப் பாதுகாப்பு, பணத்தை கையாளுதல், சுகாதாரம் போன்றவை குறித்த விழிப்புணர்வு வழங்கப்படுகின்றது.
</p><p>
இந்த வழிகாட்டுதல் பயிற்சித் திட்டங்களுக்கான பதிவை, நாடு முழுவதும் அமைந்துள்ள இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் கிளை அலுவலகங்களில் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-01T10:22:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[சேரன்-சந்தா திருமணத்தின் ஸ்பெஷல் வீடியோ வெளியானது... அய்யனார் துணை சீரியல் புரொமோ]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/cheran-chandha-kalyanam-serial-ayyanar-thunai-1788242350"></link>
            <id>https://cineulagam.com/article/cheran-chandha-kalyanam-serial-ayyanar-thunai-1788242350</id>
            <summary type="text">அய்யனார் துணைவிஜய் தொலைக்காட்சியில் கடந்த வருடம் புதுமுகங்கள் சிலர் நடிக்க நாம் பார்த்து பழகிய கலைஞர்கள் பலர் நடிக்க தொடங்கப்பட்ட தொடர் தான் அய்யனார் ...</summary>
            <content type="html"><![CDATA[<h2>அய்யனார் துணை</h2><p>விஜய் தொலைக்காட்சியில் கடந்த வருடம் புதுமுகங்கள் சிலர் நடிக்க நாம் பார்த்து பழகிய கலைஞர்கள் பலர் நடிக்க தொடங்கப்பட்ட தொடர் தான் அய்யனார் துணை.</p><p>சேரன், சோழன், பாண்டியன், பல்லவன் என 4 பேரின் வாழ்க்கை கதையை மையமாக கொண்டு ஒளிபரப்பாகிய இந்த சீரியல் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு பெற்று வருகிறது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6a82117c-fced-4595-8265-5f9b62ff6188/26-6a966c15dc726.webp' /></p><p>கதையில் சோழன்-நிலா ஜோடிக்கு என்றே தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளார்கள். அவர்களை அடுத்து கதையில் பொறுப்புள்ள அண்ணனாக இருக்கும் சேரனுக்கு எப்போது திருமணம் நடக்கும் என பெரிய கேள்வி இருந்து வந்தது. அவருக்கும் திருமணம் நடக்கும் என தாலி கட்டுவதை வந்து நின்றுபோன கதையெல்லாம் உள்ளது.</p><p>கடைசியில் இப்போது ஏகப்பட்ட போராட்டங்களுக்கு பிறகு சேரன்-சந்தா திருமணம் கோலாகலமாக நடக்க உள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/72658d74-7c99-466d-81aa-3daf767e4382/26-6a966c16ab453.webp' /></p><h2>புரொமோ</h2><p>பீகார் சென்று சேரன் நிச்சயதார்த்தத்தை சந்தாவுடன் செய்துமுடித்துவிட்டு சென்னை வந்த குடும்பத்தினர் அடுத்து திருமண வேலைகளை பரபரப்பாக செய்து வருகின்றனர். இதற்கு இடையில் சந்தாவை அவரது மாமா மிரட்டி வீட்டில் அடைக்கிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/04d13b79-4467-46f9-97f2-025148a431b6/26-6a966c1519009.webp' /></p><p>அவர் பீகாரில் இருந்து எப்படி தப்பித்து சேரனை திருமணம் செய்துகொள்ள போகிறார் என்பது தெரியவில்லை.</p><p>இந்த நிலையில் தான் சேரன்-சந்தா திருமணம் கோலாகலமாக நடக்கவுள்ள நிலையில் இருவரும் பங்குபெறும் வகையில்&nbsp;ஸ்பெஷல் மியூசிக் வீடியோ வெளியாகியுள்ளது. இதோ அந்த வீடியோ,</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/dQcZtQIq6P4" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-09-01T10:18:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானியா நோக்கிச் சென்றுகொண்டிருந்த லொறி..குதிக்க முயன்ற புலம்பெயர் நபர் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/sudan-migrant-youth-dies-after-failed-jump-lorry-1788257818"></link>
            <id>https://news.lankasri.com/article/sudan-migrant-youth-dies-after-failed-jump-lorry-1788257818</id>
            <summary type="text">Sudan migrant youth dies after failed jump lorry: பிரான்ஸில் பிரித்தானியா நோக்கி சென்றுகொண்டிருந்த லொறி மீது குதிக்க முயன்ற புலம்பெயர்ந்த ஒருவர் உயிரி...</summary>
            <content type="html"><![CDATA[<p>Sudan migrant youth dies after failed jump lorry: பிரான்ஸில் பிரித்தானியா நோக்கி சென்றுகொண்டிருந்த லொறி மீது குதிக்க முயன்ற புலம்பெயர்ந்த ஒருவர் உயிரிழந்தார்.</p><p>

பிரான்ஸின் Calais சாலை சுங்கச்சாவடியின் உச்சியில் இருந்து, பிரித்தானியா நோக்கி சென்றுகொண்டிருந்த லொறி ஒன்றின் மீது குதிக்க முயன்ற சூடானிய நபர் உயிரிழந்துள்ளார்.&nbsp;</p><h2>22 வயது இளைஞர்</h2><p>

பிரான்ஸ் நாட்டின் Pas-de-Calais பகுதியில் உள்ள செட்க்ஸ் சுங்கச்சாவடியின் வழியாக பிரித்தானியா நோக்கி லொறி ஒன்று சென்றுகொண்டிருந்தது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d66d722c-d5cd-40fa-89b4-20f9acd5b397/26-6a96a6c05b168.webp' />&nbsp;</p><p></p><p>
அப்போது சுங்கச்சாவடியின் கட்டமைப்பின் உச்சியில் இருந்த 22 வயது இளைஞர் ஒருவர், அந்த லொறியின் மீது குதிக்க முயன்றுள்ளார்.
</p><p>
ஆனால், அவர் வாகனத்தை சரியாக அடைய முடியாததால், அதற்கு பின்னால் சாலையில் கீழே விழுந்துள்ளார். 

இதில் படுகாயமடைந்த குறித்த இளைஞர், உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.</p><h2>

துரதிர்ஷ்டவசமாக&nbsp;உயிரிழப்பு</h2><p>துரதிர்ஷ்டவசமாக ஞாயிற்றுக்கிழமை மதியம் அந்நபர் உயிரிழந்தார். விசாரணையில் குறித்த இளைஞர் சூடானைச் சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது.

உயிரிழந்தவரின் உடல் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. </p><p>


அதே சமயம், சம்பவ இடத்தில் இருந்த மற்றொரு நபர் சில நிமிடங்களுக்கு முன்னர் அதே வாகனத்தில் வெற்றிகரமாக ஏறி சென்றுள்ளார்.
</p><p>
Calais துறைமுகம் மற்றும் சேனல் சுரங்கப்பாதையை சுற்றியுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் இருந்தபோதிலும், புலம்பெயர்ந்தோர் லொறிகளில் மறைந்து பிரித்தானியாவை அடைய முயற்சிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.&nbsp; &nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e007cd54-12d5-43b1-b334-830b9aec4738/26-6a96a6c126fe0.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-01T10:17:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாள வெள்ளத்தில் காணாமல் போன மகனைத் தேடி ஒரு குடும்பத்தின் நான்கு நாள் பயணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/family-lost-son-in-nepal-flood-1788257804"></link>
            <id>https://news.lankasri.com/article/family-lost-son-in-nepal-flood-1788257804</id>
            <summary type="text">Nepal&#039;s floods.. A family&#039;s four-day quest for a son: நேபாள வெள்ளத்தில் சிக்கி மாயமான மகனைத் தேடி ஒரு குடும்பம் மேற்கொண்ட நான்கு நாள் பயணம்.
நேபாளத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>Nepal's floods.. A family's four-day quest for a son: நேபாள வெள்ளத்தில் சிக்கி மாயமான மகனைத் தேடி ஒரு குடும்பம் மேற்கொண்ட நான்கு நாள் பயணம்.</p><p>
நேபாளத்தில் வெள்ளம் புரட்டிப்போட்டதைத் தொடர்ந்து, 21 வயதான அரசு ஊழியர் ஒருவர் தொடர்பில் அவரது குடும்பத்தினர் நான்கு நாட்களாகத் துயரமும் பதற்றமும் நிறைந்த நிலையில் தேடிய சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ad72a47a-1211-42a6-981e-6b2e4cbd1a93/26-6a96a60e3db4e.webp' /></p><p>
</p><p>நேபாளம் மற்றும் திபெத்தில் நகரங்கள் மற்றும் கிராமங்கள் வழியாகப் பனி, பாறை, சேறு மற்றும் சிதைவுப் பொருட்கள் கலந்த பெருவெள்ளத்தை ஏற்படுத்திய பனிப்பாறை சரிவு காரணமாக ஏற்பட்ட மிக மோசமான சூழலிலும், நம்பிக்கையைத் தளர்த்தாமல் இருந்த ஆயிரக்கணக்கான குடும்பங்களில் கட்கா (Khadka) குடும்பத்தினரும் அடங்குவர்.</p><p> 
வெள்ளம் ஏற்படுவதற்கு முந்தைய இரவு 21 வயதான ஆயுஷ் கட்கா தனது உறவினர்களிடம் பேசியிருந்தார்; மறுநாள் காலையிலும் அவரது சமூக ஊடகக் கணக்கு அவர் ஒன்லைனில் இருப்பதைக் காட்டியது. </p><p>அவர் உயிர் பிழைத்திருக்கக்கூடும் என்ற நம்பிக்கையை அவரது குடும்பத்தினருக்கு இந்தச் சிறிய அறிகுறி அளித்தது. ஆகஸ்ட் 26 அன்று பரவலான அழிவு குறித்த தகவல்கள் வெளியானதும், குடும்பத்தினர் உடனடியாக ஒரு தேடுதல் நடவடிக்கையைத் தொடங்கினர்; ஆனால், அது இறுதியில் பயனற்ற முயற்சியாகவே முடிந்துள்ளது.</p><p></p><p> </p><p>வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிக்கு அருகிலுள்ள மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கான முக்கிய ஒருங்கிணைப்பு மையங்களில் ஒன்றான நுவாகோட்டில் உள்ள நேபாள ராணுவத்தின் மைதாலி முகாமுக்கு அருகில், அவரது தந்தையின் சகோதரரான கணேஷ் கட்கா இரண்டு நாட்களாகக் காத்திருந்தார். </p><p>இதற்கிடையில், ஆயுஷின் தாய்வழி அத்தை லட்சுமி தாபா, அவரைச் சுமார் 200 கி.மீ தொலைவில் உள்ள சித்வானில் தேடிக்கொண்டிருந்தார்; அங்கு வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்ட உடல்கள் மீட்கப்பட்டு வந்தன. </p><p>இந்த நிலையில், 1,000 பேரின் உயிரைப் பறித்து, சுமார் 4,000 பேரைக் காணாமல் போகச் செய்த அந்தப் பேரிடர் நிகழ்ந்த நாளன்றே, ஆயுஷுடையது என்று கருதப்படும் ஒரு சடலத்தை அதிகாரிகள் ஏற்கனவே மீட்டிருந்தனர்; ஆனால், அந்த நேரத்தில் குடும்பத்தினர் பலருக்கும் இந்தத் தகவல் தெரிந்திருக்கவில்லை.</p><p> ஆகஸ்ட் 27 அன்று, உறவினர்கள் அடையாளம் காண்பதற்காக மீட்கப்பட்ட உடல்களின் புகைப்படங்கள் தொலைக்காட்சித் திரையில் காட்டப்பட்டுக் கொண்டிருந்த தற்காலிக முகாம் ஒன்றிற்கு லட்சுமி சென்றார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/158e3675-a761-48f3-b569-716d50be5883/26-6a96a60ee7b2d.webp' /></p><p> </p><p>ஒரு புகைப்படம் உடனடியாக அவரது கவனத்தை ஈர்த்தது. அது அவர்தான் என்று எனக்கு ஏறக்குறைய 70% உறுதியாகத் தெரிந்திருந்தது என்று அவர் கூறியுள்ளார். அவர் அந்தப் புகைப்படத்தை கணேஷ் உள்ளிட்ட பிற உறவினர்களுக்கு அவர்களின் கருத்துக்களை அறிய அனுப்பினார்; ஆனால், ஆயுஷின் தாயார் முனா கட்காவிடம் அதைக் காட்ட வேண்டாம் என்று குடும்பத்தினர் வேண்டுமென்றே முடிவு செய்தனர். </p><p>அந்தக் குடும்பத்தினர் கண்ணுக்குத் தெரிந்த ஒவ்வொரு விவரத்தையும் கூர்ந்து கவனித்தனர்: அவரது தாடியைப் போலவே, அவரது தாடையின் இடது பக்கத்தில் இருந்த மச்சமும் ஆயுஷின் மச்சத்துடன் ஒத்துப்போவது போல் தோன்றியது. </p><p>அவரது இடது கையில் அவர் வழக்கமாக அணிந்திருந்த, ஆனால் மணிக்கட்டுப் பகுதிக்கு நழுவியிருந்த கருப்பு நிற மதரீதியான பாதுகாப்புக் கயிற்றையும் அவர்கள் அடையாளம் கண்டுகொண்டனர். </p><p>இதனிடையே, அடையாளம் காணப்படாத உடல்களைப் பெருமளவில் அடக்கம் செய்ய அதிகாரிகள் தயாரான நிலையில், கட்கா குடும்பத்தினருக்கு அந்த நிச்சயமற்ற நிலை இன்னும் அதிக வேதனையை அளிப்பதாக அமைந்தது. </p><p>தொலைதூர மாவட்டங்களைச் சேர்ந்த பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சித்வானுக்கு வந்து அவர்களை அடையாளம் காண்பதற்குப் போதுமான நேரம் கிடைப்பதற்கு முன்பே, அவர்களின் உடல்கள் அடக்கம் செய்யப்பட்டுவிடக்கூடும் என்று கட்கா குடும்பத்தினர் அஞ்சினர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/87622089-6747-4e4b-9384-a6f5d6031548/26-6a96a60f9f3fe.webp' /></p><p> </p><p>வெள்ளம் ஏற்பட்டு நான்கு நாட்களுக்குப் பிறகு, ஆகஸ்ட் 30 அன்றுதான், மகன் இறந்துவிட்டான் என்ற தகவல் ஆயுஷின் தாய்க்கு அவரது குடும்பத்தினரால் தெரிவிக்கப்பட்டது. </p><p>மறுநாள் அதிகாலை சுமார் 1 மணியளவில், நெருங்கிய மற்றும் உறவினர்கள் சல்யானிலிருந்து புறப்பட்டு, இரவு முழுவதும் பயணித்து சித்வானை அடைந்தனர். </p><p>ஆயுஷின் உடல் அடையாளம் காணப்பட்டு, பின்னர் உடலைத் தகனம் செய்வதற்காக, சுமார் 35 உறவினர்கள் நாராயணி ஆற்றங்கரையில் கூடினர். </p><p>அவன் பிறந்தபோது நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்தோம், அதேபோல் இவ்வளவு இளம் வயதிலேயே அவன் அரசு ஊழியர் தேர்வில் தேர்ச்சி பெற்றபோதும் மகிழ்ச்சியடைந்தோம், இன்று எங்களைக் கண்ணீரில் விட்டுவிட்டு அவன் சென்றுவிட்டான் என்று லட்சுமி கண்கலங்கியுள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-01T10:15:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[கல்யாணி லுக்கில் நடிகை காவியா அறிவுமணி..புகைப்படங்கள்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/kaavya-arivumani-kalyani-look-photoshoot-1788258739"></link>
            <id>https://viduppu.com/article/kaavya-arivumani-kalyani-look-photoshoot-1788258739</id>
            <summary type="text">காவியா அறிவுமணிவிஜய் டிவியில் மூலம் பிரபலமானவர் வரிசையில் இருப்பவர் நடிகை காவியா அறிவுமணி. இவர் பாரதி கண்ணம்மா முதல் சீசனில் பாரதியின் தங்கையாக காவியா...</summary>
            <content type="html"><![CDATA[<h2>காவியா அறிவுமணி</h2><p>விஜய் டிவியில் மூலம் பிரபலமானவர் வரிசையில் இருப்பவர் நடிகை காவியா அறிவுமணி. இவர் பாரதி கண்ணம்மா முதல் சீசனில் பாரதியின் தங்கையாக காவியா ரோலில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/559b4c57-1161-4a42-a2ae-79bff27b56c0/26-6a96a9bab7cfa.webp' /></p><p>
இதையடுத்து பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் விஜே சித்ரா மறைவுக்கு பின் அந்த ரோலில் நடிக்க ஆரம்பித்தார் காவியா அறிவுமணி.
</p><p>
அதன்பின் முல்லை ரோலில் இருந்து விலகி வெள்ளித்திரை வாய்ப்பினை பெற்றார் காவியா அறிவுமணி. மிரள், ரிப்பப்பரி என்ற படங்களில் நடித்துள்ளார்.
</p><p>
கவின், நயன் தாரா நடிப்பில் உருவாகி வெளியான HI படத்தில் முக்கிய ரோலில் நடித்துள்ளார் காவியா. தற்போது பிரபல பாடலான கல்யாணி லுக்கில் எடுத்த போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-09-01T10:15:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[மோட்டார் போக்குவரத்து திணைக்களத்திற்கு புதிய ஆணையாளர் நாயகம் நியமனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/appointed-the-new-commissioner-general-of-dmt-1788256386"></link>
            <id>https://ibctamil.com/article/appointed-the-new-commissioner-general-of-dmt-1788256386</id>
            <summary type="text">மோட்டார் போக்குவரத்து திணைக்களத்திற்கு புதிய ஆணையாளர் நாயகம் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இலங்கை விமானப் படையின் ஓய்வுபெற்ற எயர் வைஸ் ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>மோட்டார் போக்குவரத்து திணைக்களத்திற்கு புதிய ஆணையாளர் நாயகம் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p>இலங்கை விமானப் படையின் ஓய்வுபெற்ற எயர் வைஸ் மார்ஷல் துஷார இந்துனில் பெர்னாண்டோ இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளார்.
</p><p>
 

புதிய ஆணையாளர் நாயகம் இன்று (01) காலை கொழும்பு 05, எல்விடிகல மாவத்தையில் அமைந்துள்ள மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் தலைமை அலுவலகத்தில் தனது உத்தியோகபூர்வ கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.</p><p></p><h2>கடமையேற்றல் நிகழ்வு</h2><p>
</p><p>
 

போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் வைத்தியர் பிரசன்ன குணசேன தலைமையில் இந்த கடமையேற்றல் நிகழ்வு நடைபெற்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3ab3a725-855e-4d74-816e-0c7cadda2276/26-6a96a2359b1a6.webp' /></p><p>

 

கொழும்பு, ஹுனுபிட்டிய கங்காராம விகாராதிபதி கிரிந்தே அஸ்ஸஜி நாய்மி தேரர் தலைமையிலான மகா சங்கத்தினரின் சமய வழிபாடுகளுக்கு மத்தியில் புதிய ஆணையாளர் நாயகம் தனது கடமைகளை ஆரம்பித்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td><td><br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-01T10:14:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிள்ளையான் தொடர்பில் நீதிமன்றம் இன்று பிறப்பித்த உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/court-order-issued-today-regarding-pillayan-1788257767"></link>
            <id>https://jvpnews.com/article/court-order-issued-today-regarding-pillayan-1788257767</id>
            <summary type="text">&amp;nbsp; மட்டக்களப்பில் கடந்த 2008ஆம் ஆண்டு இடம்பெற்ற 5 கொலைச் சம்பவங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; மட்டக்களப்பில் கடந்த 2008ஆம் ஆண்டு இடம்பெற்ற 5 கொலைச் சம்பவங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையான் உள்ளிட்ட மூவரையும் எதிர்வரும் செப்டெம்பர் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் இன்று (01) உத்தரவிட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/88d3d337-df98-44df-8a89-b949f5baab61/26-6a96a5e87cad0.webp' /></p><h2>5 கொலைச் சம்பவங்கள்</h2><p>



குறித்த வழக்கு இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, பிள்ளையான் மற்றும் இராணுவப் புலனாய்வுப் பிரிவின் தகவலாளிகளான முகமட் சிபான், முகமட் சகீத் ஆகிய மூவரும் சிறைச்சாலைகளில் இருந்து இணையவழி காணொளி ஊடாக நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.</p><p></p><p>



2008ஆம் ஆண்டு கல்லடியில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உட்பட இருவர் சுட்டுக்கொல்லப்பட்டதுடன், காத்தான்குடியில் ரி-56 துப்பாக்கியால் சுட்டு மேலும் இருவர் கொல்லப்பட்டதாகவும், வவுணதீவு கரையாக்கன்தீவு பகுதியில் வர்த்தகர் ஒருவர் கடத்தப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><p>
</p><p>


இந்த 5 கொலைச் சம்பவங்கள் தொடர்பில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் உள்ளிட்ட சந்தேகநபர்கள் மீது குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு, அவர்கள் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.</p><p>



வழக்கு விசாரணையின்போது, லண்டனில் உள்ள சந்தேகநபர் ஒருவருக்கு தொடர்ந்து பிடியாணை பிறப்பிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-09-01T10:13:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[வறண்ட வானிலை: சுமார் 8000 ஏக்கர் பயிர்கள் சேதம் - அமைச்சர் தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/revelation-about-crop-damage-caused-by-dry-weather-1788255851"></link>
            <id>https://tamilwin.com/article/revelation-about-crop-damage-caused-by-dry-weather-1788255851</id>
            <summary type="text">வறண்ட வானிலை காரணமாக சுமார் 8000 ஏக்கர் பயிர்கள் சேதமடைந்துள்ளதாக அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.இன்றைய தினம் (01.09.2026) இடம்பெற்ற ஊடக சந...</summary>
            <content type="html"><![CDATA[<p>வறண்ட வானிலை காரணமாக சுமார் 8000 ஏக்கர் பயிர்கள் சேதமடைந்துள்ளதாக அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.</p><p>இன்றைய தினம் (01.09.2026) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.</p><p>
</p><p>
அவர் மேலும் தெரிவிக்கையில், பயிர் சேதங்களுக்கான அவசரத் திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக ரூ. 3000 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.</p><h2>அவசரத் திட்டம்</h2><p>அதன்படி, அவசரத் திட்டத்தின் கீழ் பயிர் சேதத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கப்படும். நெல், மக்காச்சோளம், பெரிய வெங்காயம், உருளைக்கிழங்கு, சோயா மற்றும் மிளகாய் ஆகிய பயிர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும்.</p><p>இதுவரை அநுராதபுரம் மாவட்டத்தில் 1,923 ஏக்கர் பயிர் சேதம் பதிவாகியுள்ளது. அந்த மாவட்டமே பயிர் சேதத்தால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது.</p><p>தற்போது நிலவும் வறண்ட வானிலையால் சேதமடைந்த பயிர்களுக்கு முதல் கட்டமாக ரூ. 3,00 கோடி இழப்பீடு வழங்கும் அவசரத் திட்டம் இதுவாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aac0ab89-f1f7-415b-90d5-fefdc40d483e/26-6a96a501e24b7.webp' /></p><h2>இழப்பீடு</h2><p> அதன்படி, நெல், மக்காச்சோளம், பெரிய வெங்காயம், உருளைக்கிழங்கு, சோயா மற்றும் மிளகாய் போன்ற பயிர்களுக்கு, அதிகபட்சமாக 5 ஏக்கர் வரை ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு ஹெக்டேருக்கு ரூ. 1,00,000 இழப்பீடு வழங்கப்படும். </p><p>சேதமடைந்த நிலப்பரப்புகளையும் நாங்கள் அடையாளம் கண்டுள்ளோம். இந்தப் பயிர்களைச் சாகுபடி செய்யும் விவசாயிகள் பயிர் சேதத்தால் பாதிக்கப்பட்டிருந்தால், அவர்கள் அருகிலுள்ள விவசாய சேவைகள் திணைக்களத்தின் விவசாய ஆராய்ச்சி உற்பத்தி உதவியாளரையோ அல்லது விவசாய அபிவிருத்தி அல்லது கள அலுவலர்களையோ தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-01T10:12:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Malaivanjan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பலகை ஆலை அமைக்கும் முயற்சி – தொழிலாளர்களின் எதிர்ப்பால் தற்காலிகமாக நிறுத்தம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/attempts-to-set-up-a-board-mill-temporarily-halted-1788255771"></link>
            <id>https://tamilwin.com/article/attempts-to-set-up-a-board-mill-temporarily-halted-1788255771</id>
            <summary type="text">கொட்டகலை ரொப்கில் தோட்டப் பகுதியில் மரப்பலகை ஆலை ஒன்றை அமைப்பதற்காக தோட்ட
நிர்வாகத்தினால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை, தோட்டத் தொழிலாளர்களின்
எதிர்ப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொட்டகலை ரொப்கில் தோட்டப் பகுதியில் மரப்பலகை ஆலை ஒன்றை அமைப்பதற்காக தோட்ட
நிர்வாகத்தினால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை, தோட்டத் தொழிலாளர்களின்
எதிர்ப்பைத் தொடர்ந்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
</p><p>ரொப்கில் தோட்டத்திற்கு நுழைவாயில் பகுதியில் குறித்த பலகை ஆலையை அமைப்பதற்கான
அடித்தளத்தை நிர்மாணிக்கும் நோக்கில், அப்பகுதியில் காணப்பட்ட தேயிலைச்
செடிகளை அகற்றும் நடவடிக்கையை தோட்ட நிர்வாகம் இன்று(01.09.2026) முன்னெடுக்க
முற்பட்டுள்ளது.
</p><h2>வீடுகளை அமைத்துக் கொள்வதற்கு</h2><p>
இதன்போது, அப்பகுதியில் ஒன்றுகூடிய தோட்டத் தொழிலாளர்கள் பணிக்கு செல்லாமல்
அமைதியான எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5bf3971d-62c1-4c91-af49-0e59857c12af/26-6a96a346293a3.webp' /></p><p>தொழிலாளர்களின் எதிர்ப்பைத் தொடர்ந்து, ஆலையை அமைப்பதற்கான நடவடிக்கைகளை தோட்ட
நிர்வாகம் தற்காலிகமாக நிறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>இதனிடையே, கடந்த 15 வருடங்களுக்கும் மேலாக சீரற்ற காலநிலையின்போது ரொப்கில்
தோட்டப் பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, தொழிலாளர்களின் வீடுகள் மற்றும்
உடைமைகள் பாதிக்கப்பட்டு வருவதாக தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.</p><p>
அண்மையில் ஏற்பட்ட சீரற்ற காலநிலையின்போதும் கொட்டகலையில் அதிகளவில்
பாதிக்கப்பட்ட பகுதிகளில் ரொப்கில் பகுதியும் ஒன்றாக இருந்ததாக அவர்கள்
சுட்டிக்காட்டியுள்ளனர்.
</p><p>தொழிலாளர்களுக்கு வீடுகளை அமைத்துக் கொள்வதற்காக காணிகளை வழங்குமாறு தோட்ட
நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்தபோது, தேயிலைச் செடிகளை அகற்ற முடியாது
என்றும், உரிய அறிக்கை கிடைக்கவில்லை என்றும் தெரிவிக்கப்படுவதாக
தொழிலாளர்கள் கூறியுள்ளனர்.</p><h2>தேயிலைச் செடிகளை அகற்ற</h2><p>எனினும், தற்போது பலகை ஆலையை அமைப்பதற்காக தேயிலைச் செடிகளை அகற்ற முடிவது
எவ்வாறு என அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d6427d18-c5cb-4dc8-817a-1a7a4a28e878/26-6a96a3470df33.webp' /></p><p>
தாங்கள் வியாபார நடவடிக்கைகளுக்காக காணிகளை கோரவில்லை என்றும், தங்களது
குடும்பங்களுடன் வாழ்வதற்காகவே காணிகளை கோருவதாகவும் தெரிவித்துள்ள
தொழிலாளர்கள், இந்த விடயத்தில் ஜனாதிபதி தலையிட்டு உரிய தீர்வை பெற்றுத்தர
வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
</p><p>
இதேவேளை, பலகை ஆலையை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படும் பகுதியில் இந்து
ஆலயம் ஒன்றும் கிறிஸ்தவ ஆலயம் ஒன்றும் காணப்படுவதாக அப்பகுதி மக்கள்
தெரிவிக்கின்றனர்.
</p><p>
தொழிற்சாலை அமைக்கப்பட்டால் தங்களது வழிபாட்டு நடவடிக்கைகள்
பாதிக்கப்படக்கூடும் என கவலை வெளியிட்டுள்ள மக்கள், தொழிலாளர்கள் மற்றும்
பொதுமக்களின் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வை பெற்றுக்கொடுத்த பின்னர்,
பொருத்தமான இடத்தில் ஆலையை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை
விடுத்துள்ளனர்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-01T10:10:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[தேனுவின் கருவை கலைக்கத் தயாரான அப்பத்தா.. பரபரப்பின் உச்சத்தில் வாகை சூடவா!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/vaagai-sooda-vaa-today-episode-31st-august-2026-1788254745"></link>
            <id>https://cineulagam.com/article/vaagai-sooda-vaa-today-episode-31st-august-2026-1788254745</id>
            <summary type="text">தமிழ் சின்னத்திரையில் Zee தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான தொடர் வாகை சூடவா. இந்த சீரியலின் ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழ் சின்னத்திரையில் Zee தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான தொடர் வாகை சூடவா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் தேன்மொழி கர்ப்பமாக இருப்பது தேவிக்கு தெரிய வந்த நிலையில், இன்று நடைபெறவுள்ள அதிரடி சம்பவங்கள் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d6cc128b-8261-4efb-93be-8549e8f572ab/26-6a969a1da7a16.webp' /></p><p>அதன்படி, யாருக்கும் தெரியாமல் தேன்மொழி ரூமை விட்டு வெளியே வரும் தேவி, அப்பத்தாவை சந்தித்து கண்கலங்குகிறார். என்ன நடந்தது என்று அப்பத்தா கேட்டபோது, தனது கையில் இருந்த குங்குமப்பூ டப்பாவை அவரிடம் கொடுக்கிறார். அதை பார்த்த அப்பத்தா, “கர்ப்பமான பெண்கள் சாப்பிட வேண்டியதுதானே இது? நீ கர்ப்பமானால் நானே உனக்கு வாங்கித் தந்திருப்பேனே. இப்போது எதற்கு இதை கொண்டு வந்திருக்கிறாய்?” என்று கேட்கிறார்.
</p><p>அதற்கு தேவி, சுமதி இந்த குங்குமப்பூவை தேன்மொழிக்காக வாங்கிக் கொடுத்து சென்றதாக கூறுகிறார். மேலும், தேன்மொழி கர்ப்பமாக இருப்பது உண்மை என தெரிவிக்கிறார். இதைக் கேட்ட அப்பத்தா அதிர்ச்சியடைந்து கோபத்தில் உலக்கையை எடுக்கிறார்.
</p><p>பின்னர் சில மூலிகைகளை இடித்து கசாயம் தயாரிக்கும் அப்பத்தா, தேன்மொழியை அழைக்கிறார். அவர் வந்ததும் டம்ளரில் இருந்த கசாயத்தை கொடுத்து குடிக்கும்படி கூறுகிறார். எதுவும் சந்தேகிக்காத தேன்மொழி அதை வாங்கிக் குடிக்க முயல்கிறாள்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2a583a8b-dc89-4b7b-a312-8840dec5c1a3/26-6a969a1ced751.webp' /></p><p>அந்த நேரத்தில், “இதைக் குடித்தால் கரு கலைந்து விடும்” என்று அப்பத்தா கூற, தேன்மொழி அதிர்ச்சியில் உறைந்து விடுகிறாள். அவளது தயக்கத்தை கவனிக்கும் அப்பத்தா, “ஏன் குடிக்கவில்லை? அப்படியானால் நீ கர்ப்பமாக இருப்பது உண்மையா?” என்று ஆவேசமாக கேட்கிறார்.
</p><p>அப்போது மீனாட்சி மற்றும் ஜீவா, “அவள் கர்ப்பமாக இருந்தால் அதில் என்ன தவறு?” என்று கேள்வி எழுப்புகின்றனர். ஆனால் அப்பத்தா அதைக் கேட்காமல், “என் பேத்தி கர்ப்பமாகால் யார் கர்ப்பமாக இருப்பதையும் நான் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டேன்” என்று கோபமாக பதிலளிக்கிறார்.
</p><p>இறுதியாக, அந்த கசாயத்தை தேவியிடம் கொடுத்த அப்பத்தா, “இதைக் கொண்டு அவள் வாயில் ஊற்றி விடு” என்று உத்தரவிடுகிறார். இதனால் அடுத்ததாக என்ன நடக்கப் போகிறது என்ற பதட்டம் உச்சத்தை எட்டியுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8824c5ba-2020-4635-90cc-40d8773bc84f/26-6a969a1c3d05a.webp' /></p><p>தேன்மொழியின் கர்ப்பம் காப்பாற்றப்படுமா? அப்பத்தாவின் முடிவை மாற்ற யாராவது முன்வருவார்களா? பரபரப்பான திருப்பங்களுடன் தொடரும் வாகை சூடவா சீரியலை Zee தமிழ் தொலைக்காட்சியில் தவறாமல் காணுங்கள்.
&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-01T10:10:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[திட்டமிட்ட குற்றக் குழு உறுப்பினர் 'களு மல்லி' டுபாய் அதிகாரிகளால் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/crime-group-member-kalu-malli-arrested-dubai-autho-1788257301"></link>
            <id>https://canadamirror.com/article/crime-group-member-kalu-malli-arrested-dubai-autho-1788257301</id>
            <summary type="text">ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபடுபவரும் போதைப்பொருள் கடத்தல்காரருமான ஷெஹான் சத்சர என்ற &quot;தெஹிபாலே மல்லி&quot;யின் இளைய சகோதரரான பட்டபெதிகே துஷான் ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபடுபவரும் போதைப்பொருள் கடத்தல்காரருமான ஷெஹான் சத்சர என்ற "தெஹிபாலே மல்லி"யின் இளைய சகோதரரான பட்டபெதிகே துஷான் சத்சர என்ற "களு மல்லி" என்பவர் டுபாயில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p></p><p>
</p><p>
 

படபெதிகே துஷான் சத்சர என்ற 25 வயதுடைய இச்சந்தேகநபருக்கு எதிராக, தென் மாகாணத்தில் இடம்பெற்ற பல கொலைச் சம்பவங்கள் தொடர்பில் இன்டர்போல் (சர்வதேச பொலிஸ்) மூலம் சிவப்பு எச்சரிக்கை (Red Notice) விடுக்கப்பட்டிருந்தது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/309d7863-6186-4016-a7ca-f36ed58f7c82/26-6a96a416642e8.webp' /></p><p>இலங்கை பொலிஸார் வழங்கிய தகவலுக்கு அமையவே குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.&nbsp;&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-09-01T10:09:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[காணமல் போன மூன்று மாணவிகள் திருகோணமலையில்; காட்டிக்கொடுத்த காணொளி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/missing-schoolgirls-found-in-trincomalee-video-led-1788248326"></link>
            <id>https://jvpnews.com/article/missing-schoolgirls-found-in-trincomalee-video-led-1788248326</id>
            <summary type="text">பலாங்கொடை, பின்னவல - எல்லராவ பிரதேசத்தைச் சேர்ந்த பிரபல பாடசாலையொன்றில் கல்வி பயிலும் 17 வயதுடைய கௌசல்யா, சர்மிளா மற்றும் சதுனி ஆகிய 3 மாணவிகளும் திரு...</summary>
            <content type="html"><![CDATA[<p>பலாங்கொடை, பின்னவல - எல்லராவ பிரதேசத்தைச் சேர்ந்த பிரபல பாடசாலையொன்றில் கல்வி பயிலும் 17 வயதுடைய கௌசல்யா, சர்மிளா மற்றும் சதுனி ஆகிய 3 மாணவிகளும் திருகோணமலைப் பகுதியில் வைத்துப் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.</p><p>
 

நேற்று (01) தனியார் வகுப்பிற்குச் சென்ற வேளையில் இவர்கள் காணாமல் போயிருந்த நிலையில், பெற்றோரினால் பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

 

இதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட தீவிர தேடுதல் மற்றும் விசாரணைகளின் பலனாகவே மாணவிகள் திருகோணமலையில் மீட்கப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5dda028f-a585-4d1e-9c93-32e9573cd41c/26-6a9681081597a.webp' /></p><p><b>முதலாம் இணைப்பு</b></p><p> </p><p>இரத்தினபுரி பலாங்கொடையில் காணாமல்போன 3 மாணவிகள் திருகோணமலையில் மீட்பு முயற்சி பேருந்து நிலையத்தில் இருந்த காட்சி வெளியாகியுள்ளது.</p><p></p><p>


பலாங்கொடை, பின்னவல - எல்லராவ பிரதேசத்தைச் சேர்ந்த 17 வயதுடைய கௌசல்யா, சர்மிளா மற்றும் சதுனி ஆகிய 3 பாடசாலை மாணவிகள் நேற்று (31.08.2026) தனியார் வகுப்புக்குச் சென்ற நிலையில் காணாமல் போயிருந்தனர்.</p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">காட்டிக்கொடுத்த காணொளி&nbsp;&nbsp;</span></p><p> 

இது குறித்து மாணவிகளின் பெற்றோர்களால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில், குறித்த மூன்று மாணவிகளும் கண்டி ஊடாக திருகோணமலை சென்றடைந்து, அங்குள்ள பேருந்து தரிப்பிடத்தில் அமர்ந்திருக்கும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.</p><p>]</p><p>
</p><p>
மாணவிகள் திருகோணமலை பொலிஸ் நிலையத்தைத் தாண்டி இறங்கி, பின்னர் முச்சக்கர வண்டியில் சென்றதாகவும், பேருந்து நிலையத்தில் அவர்கள் இருப்பதை இனங்கண்ட நபர் ஒருவர் தங்களுக்கு தகவல் வழங்கியதாகவும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். </p><p>

 இதனையடுத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-01T10:07:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>H. A. Roshan</name>
            </author>
            <title type="text"><![CDATA[எல் நினோ தாக்கம்: வற்றிப்போகும் திருகோணமலை- புளிஊத்து குளம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/puli-oothu-pond-is-drying-el-nino-1788256031"></link>
            <id>https://tamilwin.com/article/puli-oothu-pond-is-drying-el-nino-1788256031</id>
            <summary type="text">திருகோணமலை மாவட்டத்திலும் தற்போது நிலவி வரும்– எல் நினோ தாக்கம் காரணமாக நிலவும் கடும் வறட்சியான காலநிலையால்
புளிஊத்து குளத்தின் நீர்மட்டம் வெகுவாகக் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>திருகோணமலை மாவட்டத்திலும் தற்போது நிலவி வரும்– எல் நினோ தாக்கம் காரணமாக நிலவும் கடும் வறட்சியான காலநிலையால்
புளிஊத்து குளத்தின் நீர்மட்டம் வெகுவாகக் குறைந்து, குளம் தற்போது வறண்டு
வரும் நிலை ஏற்பட்டுள்ளது.</p><p>

நீண்டகாலமாக போதிய மழைவீழ்ச்சி இல்லாத நிலையில், குளத்தின் நீர்மட்டம்
நாளுக்கு நாள் குறைந்து வருவதால், இப்பகுதியை நம்பி விவசாய நடவடிக்கைகளில்
ஈடுபட்டு வரும் விவசாயிகள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
</p><p>
அத்துடன், குளத்து நீரை கால்நடைகளுக்காக பயன்படுத்தி வந்த கால்நடை
வளர்ப்பாளர்களும் கடுமையான நீர்ப்பற்றாக்குறையை எதிர்நோக்கியுள்ளனர்.</p><h2>கோரிக்கை</h2><p> குளம்
முற்றாக வறண்டு போகும் நிலை ஏற்பட்டால், விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு
நடவடிக்கைகள் மேலும் பாதிக்கப்படும் அபாயம் காணப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/940951c6-c9ea-4110-932d-abccbedae1b2/26-6a969f25626a4.webp' /></p><p>
</p><p>
எனவே, நிலவும் வரட்சியான காலநிலையை கருத்தில் கொண்டு, பாதிக்கப்பட்ட
மக்களுக்கும் கால்நடைகளுக்கும் தேவையான குடிநீர் மற்றும் நீர் வசதிகளை
ஏற்படுத்துவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க
வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-01T09:59:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[நான்கு மணி நேரம் வாக்குமூலம்! CCIDயிலிருந்து வெளியேறிய தனசிறி அமரதுங்க]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/dhanasiri-amaratunga-to-ccib-1788242396"></link>
            <id>https://tamilwin.com/article/dhanasiri-amaratunga-to-ccib-1788242396</id>
            <summary type="text">புதிய இணைப்புதெஹிவளை - கல்கிஸ்ஸ முன்னாள் மேயர் தனசிறி அமரதுங்க மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவிலிருந்து (CCID) வெளியேறியுள்ளார்.&amp;nbsp;&amp;nbsp;சுமார் நா...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>தெஹிவளை - கல்கிஸ்ஸ முன்னாள் மேயர் தனசிறி அமரதுங்க மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவிலிருந்து (CCID) வெளியேறியுள்ளார்.&nbsp;&nbsp;</p><p>சுமார் நான்கு மணி நேரம் வாக்குமூலம் அளித்த பின்னர் மத்திய குற்றப்பிரிவிலிருந்து வெளியேறியுள்ளார்.</p><p>சமீபத்தில் வெளிநாட்டிலிருந்து நாட்டிற்கு அழைத்து வரப்பட்ட சக்திவாய்ந்த போதைப்பொருள் கடத்தல்காரரான ஷிரான் பாசிக்குடன் உள்ள தொடர்புகள் குறித்து விசாரிக்க, இன்று (01) அழைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><h2>முதலாம் இணைப்பு</h2><p>தெஹிவளை - கல்கிஸ்ஸ முன்னாள் மேயர் தனசிறி அமரதுங்க&nbsp; மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவில் (CCID) முன்னிலையாகியுள்ளார்.</p><p>போதைப்பொருள் கடத்தல்காரர் எனக் கூறப்படும் ஷிரான் பாசிக் தொடர்பான விசாரணை ஒன்றுக்காக வாக்குமூலம் அளிப்பதற்கு முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>டுபாயில் கைது செய்யப்பட்டு நாட்டுக்கு அழைத்து வரப்பட்ட பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான ஷிரான் பாசிக் தற்போது குற்றப் புலனாய்வுப் பிரிவின் காவலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.&nbsp;&nbsp;</p><p>&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-09-01T09:59:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Bavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஐவர் படுகொலை வழக்கு: பிள்ளையான் உள்ளிட்ட மூவருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/3-people-including-pillayan-remanded-until-sep-15-1788255879"></link>
            <id>https://ibctamil.com/article/3-people-including-pillayan-remanded-until-sep-15-1788255879</id>
            <summary type="text">மட்டக்களப்பில் கடந்த 2008ஆம் ஆண்டு இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டுவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சர...</summary>
            <content type="html"><![CDATA[<p>மட்டக்களப்பில் கடந்த 2008ஆம் ஆண்டு இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டுவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன்(பிள்ளையான்) உள்ளிட்ட மூவருக்கான விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.</p><p>பிள்ளையான் மற்றும் இராணுவ புலனாய்வு பிரிவின் தகவலாளிகள் இருவர் உட்பட மூவருக்கும் இந்த உத்தரவை நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.</p><p>துப்பாக்கியால் 5 பேரை கொலை செய்த சம்பவம் தொடர்பாக இடம்பெற்று வரும் இந்த வழக்கு, இன்று&nbsp;(01.09.2026) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.</p><p></p><h2>15திகதி வரை விளக்கமறியல்</h2><p>மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில், பதில் நீதவான் தலைமையில் வழக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது சந்தேகநபர்கள் மூவரும் இணையவழி காணொளி ஊடாக முன்னிலைப்படுத்தப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dc349953-6fba-48c9-a8d2-eb1ac6296f88/26-6a96a6fb7c520.webp' /></p><p>இதன்படி முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்கள் பரிசீலித்த நீதவான், குறித்த சந்தேகநபர்களை எதிர்வரும் 15திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு தெரிவித்துள்ளார்.</p><p>2008ஆம் ஆண்டு கல்லடியில் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் உட்பட இருவர் சுட்டுக் கொலை, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி உறுப்பினர் உட்பட இருவர் காத்தான்குடியில் வைத்து சுட்டுக் கொலை மற்றும் வவுணதீவு, கரையாக்கன்தீவு பகுதியைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவரை கடத்தி கொடூரமாக கொலை செய்யப்பட்டமை உள்ளிட்ட சம்பவங்கள் தொடர்பிலேயே குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு இடம்பெற்று வருகிறது.</p><p>இந்த 5 முக்கிய மனிதக் கொலைகள் தொடர்பட்ட பிள்ளையான் மற்றும் இராணுவ புலனாய்வு பிரிவின் தகவலாளிகளான லண்டனில் உள்ள காத்தான்குடியைச் சேர்ந்த முகமட் பாய்ஸ், உட்பட 4 பேருக்கு எதிராக மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் கடந்த 2026 ஜுன் 17ஆம் திகதி குற்றப் புலனாய்புத்துறையினரால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.</p><p>அன்று அவர்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், அவர்களை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.</p><p> </p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-01T09:57:14+00:00</updated>
        </entry>
    </feed>
