<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-09-16T02:17:41+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஷிரந்திக்கு எதிரான சிரிலிய விசாரணையின் அடுத்த பக்கங்கள்...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/next-chapters-siriliya-inquiry-against-shiranthi-1789524165"></link>
            <id>https://ibctamil.com/article/next-chapters-siriliya-inquiry-against-shiranthi-1789524165</id>
            <summary type="text">முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ச தொடர்பானதாகக் கூறப்படும் நிதி முறைகேடுகள் மற்றும் ஏனைய விவகாரங்கள் குறித்த விசாரணைகள் தற்போ...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ச தொடர்பானதாகக் கூறப்படும் நிதி முறைகேடுகள் மற்றும் ஏனைய விவகாரங்கள் குறித்த விசாரணைகள் தற்போது மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில், கடந்த காலங்களில் அவரைச் சுற்றி எழுப்பப்பட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளும் கவனம் பெற்றுள்ளன.
</p><p>
ஷிரந்தி ராஜபக்சவுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் ‘சிரிலிய’ வங்கிக் கணக்கு தொடர்பான நிதி முறைகேடு மற்றும் மகரகம அபேக்ஷா மருத்துவமனைக்கு PET ஸ்கேன் இயந்திரமொன்றை கொள்வனவு செய்வதற்காக நிதி திரட்டும் நடவடிக்கையை முன்னெடுத்தமை தொடர்பான விவகாரங்கள் தற்போதைய விசாரணைகளில் முக்கிய அம்சங்களாகக் குறிப்பிடப்படுகின்றன.
</p><p>
எனினும், இவற்றுக்கு அப்பால், ஷிரந்தி ராஜபக்ச தொடர்பில் கடந்த காலங்களில் பல்வேறு குற்றச்சாட்டுகள் மற்றும் சர்ச்சைக்குரிய விவகாரங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.</p><p></p><p>
</p><h2>குற்றச்சாட்டுக்கள்</h2><p><b>
1. ‘தேசத்திற்கு மகுடம்’ கண்காட்சி தொடர்பான குற்றச்சாட்டு
</b></p><p>
2012–2013 காலப்பகுதியில் நாடு முழுவதும் நடைபெற்ற ‘தேசத்திற்கு மகுடம்’ கண்காட்சியுடன் தொடர்பாக பொதுநிதி முறைகேடாக பயன்படுத்தப்பட்டதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தன.
</p><p>
இந்த நிகழ்வுகளுக்காக ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமான பொதுநிதி வீணடிக்கப்பட்டதாகவும், அது தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்றதாகவும் அக்காலத்தில் தகவல்கள் வெளியாகின.
</p><p><b>
2. ‘சிரிலிய சவிய’ நிதி தொடர்பான விவகாரம்</b></p><p>

‘சிரிலிய சவிய’ அமைப்பின் நிதியைப் பயன்படுத்தி கொழும்பு டொரிங்டன் பகுதியில் வீடொன்று கொள்வனவு செய்யப்பட்டதாகக் கூறப்பட்ட விவகாரமும் கடந்த காலங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியது.
</p><p>
இந்த நிதி எவ்வாறு பயன்படுத்தப்பட்டது என்பது தொடர்பிலும் கேள்விகள் எழுப்பப்பட்டிருந்தன.
</p><p><b>
3. வரிவிலக்கில் இறக்குமதி செய்யப்பட்ட சொகுசுப் பேருந்துகள்
</b></p><p>
விளையாட்டுத்துறை அமைச்சின் பெயரில் வரிவிலக்குடன் இரண்டு சொகுசுப் பேருந்துகள் இறக்குமதி செய்யப்பட்டு, பின்னர் ஷிரந்தி ராஜபக்ச நிர்வகித்ததாகக் கூறப்படும் ‘கார்ல்டன்’ முன்பள்ளி வலையமைப்பின் நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தன.</p><p></p><h2>வசீம் தாஜுதீன் கொலை</h2><p>
</p><p>
அரச நிறுவனத்தின் பெயரில் வழங்கப்பட்ட வரிவிலக்கு எவ்வாறு பயன்படுத்தப்பட்டது என்பது தொடர்பிலும் அப்போது கேள்விகள் எழுந்தன.
</p><p><b>
4. வசீம் தாஜுதீன் கொலை வழக்குடன் தொடர்புபடுத்தப்பட்ட விவகாரம்</b></p><p>
ரக்பி வீரர் வசீம் தாஜுதீன் உயிரிழந்த சம்பவத்திலும் ‘சிரிலிய சவிய’ அமைப்புடன் தொடர்புடையதாகக் கூறப்படும் டிஃபென்டர் வாகனம் தொடர்பில் விசாரணையாளர்களின் கவனம் சென்றிருந்ததாக முன்னதாக செய்திகள் வெளியாகியிருந்தன.
</p><p>
இந்த வாகனம் சம்பவத்துடன் எவ்வாறு தொடர்புபட்டது என்பது தொடர்பில் பல்வேறு தகவல்கள் அக்காலகட்டத்தில் வெளியாகின.
</p><p>
மேலும், மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்புப் பிரிவில் பணியாற்றியதாகக் கூறப்படும் ‘கஜ்ஜா’ என அறியப்பட்ட நபர் தொடர்பான சம்பவமும் ராஜபக்ச குடும்பத்தைச் சுற்றியிருந்த சர்ச்சைகளில் ஒன்றாகப் பேசப்பட்டது.
</p><p>
அவர் பின்னர் ஊடகங்களுக்கு வழங்கியதாகக் கூறப்படும் நேர்காணல்களும் அக்காலத்தில் பெரும் கவனத்தைப் பெற்றிருந்தன.</p><p></p><p>
</p><h2>விசாரணைகளில் முன்னிலையாக முடியாத நிலை </h2><p>இந்நிலையில், ஷிரந்தி ராஜபக்ச தொடர்பான தற்போதைய விசாரணைகள் தனிப்பட்ட ஒரு வங்கி கணக்கு அல்லது ஒரு நிதி திரட்டும் நடவடிக்கையுடன் மட்டுப்படுத்தப்படுமா அல்லது கடந்த காலங்களில் முன்வைக்கப்பட்ட ஏனைய குற்றச்சாட்டுகள் தொடர்பிலும் விசாரணைகள் விரிவுபடுத்தப்படுமா என்பது குறித்து கவனம் திரும்பியுள்ளது.
</p><p>
குறிப்பாக, கடந்த காலங்களில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளில் எவை தொடர்பாக அதிகாரப்பூர்வ விசாரணைகள் நடத்தப்பட்டன, அவற்றின் முடிவுகள் என்ன, எந்த விவகாரங்கள் இன்னும் விசாரணை நிலையில் உள்ளன என்பவை முக்கிய கேள்விகளாக உள்ளன.
</p><p>
ஷிரந்தி ராஜபக்ச தற்போது மருத்துவ காரணங்களால் விசாரணைகளில் நேரடியாக முன்னிலையாக முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p>

ராஜபக்ச குடும்பத்தைச் சுற்றியுள்ள பழைய விவகாரங்கள் மீண்டும் கவனத்தில்
ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த பலருக்கு எதிரான பழைய நிதி மற்றும் நிர்வாக குற்றச்சாட்டுகள் மீண்டும் விசாரணைக்கு உட்படுத்தப்படுகின்றன என்ற பின்னணியில், ஷிரந்தி ராஜபக்ச தொடர்பான நடவடிக்கையும் அரசியல் மற்றும் சட்ட ரீதியாக முக்கியத்துவம் பெற்றுள்ளது.
</p><p>
இதுவரை முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளில் எவை நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டுள்ளன, எவை விசாரணை மட்டத்தில் உள்ளன, எவை ஆதாரமின்மையால் முடிவுக்கு வந்துள்ளன என்பவற்றை வேறுபடுத்திப் பார்ப்பது அவசியமாகிறது.
</p><p>
தற்போதைய விசாரணைகள் எவ்வாறு முன்னேறுகின்றன என்பதையும், குற்றச்சாட்டுகள் தொடர்பில் சட்ட அமுலாக்க நிறுவனங்கள் என்ன நடவடிக்கைகளை எடுக்கின்றன என்பதையும் பொறுத்தே அடுத்தகட்ட நிலை தெளிவாகும்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-16T02:02:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[பொலிஸ் சான்றிதழ் இணையத்தள சேவை தற்காலிகமாக முடக்கம்: பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/olice-certificate-website-service-suspended-1789523832"></link>
            <id>https://tamilwin.com/article/olice-certificate-website-service-suspended-1789523832</id>
            <summary type="text">பொலிஸ் சான்றிதழ் (Police Clearance Certificate) வழங்கும் இணையத்தள முறைமை தற்செயலாகப் பராமரிப்புப் பணிகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொலிஸ் சான்றிதழ் (Police Clearance Certificate) வழங்கும் இணையத்தள முறைமை தற்செயலாகப் பராமரிப்புப் பணிகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
</p><p>
இதன் காரணமாக, இணையத்தளம் மூலம் சான்றிதழ்களை பெறுவதில் தாமதம் நிலவும் என தெரிவிக்கப்படுகின்றது.</p><p>எனவே பொதுமக்கள் தமக்குரிய சான்றிதழ்களைத் தமது பிரதேச பொலிஸ் நிலையத்தில் (Police Station) நேரில் சென்று பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-16T01:59:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[ராகுவின் ஆசியால் ராஜ வாழ்க்கை வாழ போகும் ராசிகள் இவர்கள் தான்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/zodiac-signs-will-enjoy-wealth-by-rahu-s-grace-1789521955"></link>
            <id>https://jvpnews.com/article/zodiac-signs-will-enjoy-wealth-by-rahu-s-grace-1789521955</id>
            <summary type="text">ஜோதிடத்தில் நிழல் கிரகமாக கருதப்படும் ராகு, ஒரு ராசியில் 18 மாதங்கள் வரை இருப்பதோடு, அடிக்கடி நட்சத்திரத்தையும் மாற்றுவார்.&amp;nbsp; தற்போது ராகு கும்ப ர...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">ஜோதிடத்தில் நிழல் கிரகமாக கருதப்படும் ராகு, ஒரு ராசியில் 18 மாதங்கள் வரை இருப்பதோடு, அடிக்கடி நட்சத்திரத்தையும் மாற்றுவார்.&nbsp; தற்போது ராகு கும்ப ராசியிலும், அவிட்டம் நட்சத்திரத்திலும் பயணித்து வருகிறார். </p><p style="text-align: justify; ">இந்த நட்சத்திரத்தின் அதிபதி செவ்வாய். இந்த நட்சத்திரமானது மங்களகரமானதாக கருதப்படுவதோடு, இது செல்வம், செழிப்பு, வெற்றி ஆகியவற்றை குறிக்கிறது.&nbsp; இந்த நட்சத்திரத்தில் ராகு பயணிப்பது சில ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத வளர்ச்சியைத் தரப்போகிறது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2a777703-b17c-44ed-8871-6dfbc0f5ed6f/26-6aa9f0252df47.webp' /></p><p style="text-align: justify; ">இப்போது அவிட்டம் நட்சத்திரத்தில் இருக்கும் ராகுவால் ஏப்ரல் 2027 வரை எந்த ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமானதாக இருக்கப் போகிறது என்பதைக் காண்போம்.</p><p style="text-align: justify; "><b>மிதுனம்:</b> அவிட்டம் நட்சத்திரத்தில் இருக்கப் போகும் ராகுவால் மிதுன ராசிக்காரர்கள் எதிர்பார்த்த வெற்றியைப் பெறுவார்கள். எந்த ஒரு வேலையை எடுத்தாலும் அதில் மாபெரும் வெற்றியைப் பெறும் வாய்ப்புள்ளது. குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் முடிவடையும். கடனாக கொடுத்த பணம் கைக்கு வந்து சேரும். நிலுவையில் உள்ள நீதிமன்ற வழக்குகளில் தீர்ப்புகள் சாதகமாக வரும். நீண்ட காலமாக சந்தித்து வந்த பிரச்சனைகளை தீர்ப்பதற்கான வாய்ப்புள்ளது. தாய்வழி உறவினர்களின் ஆதரவு கிடைக்கும் வாய்ப்புள்ளது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; "><b>
கன்னி :</b>அவிட்டம் நட்சத்திரத்தில் இருக்கப் போகும் ராகுவால் கன்னி ராசிக்காரர்களுக்கு ஏப்ரல் 2027 வரை சிறப்பாக இருக்கப் போகிறது. நெருங்கிய நண்பர்களுடன் சேர்ந்து ஒரு புதிய முயற்சியைத் தொடங்கும் வாய்ப்புள்ளது. இந்த முயற்சி நல்ல பலனைத் தரும். முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். புத்திசாலித்தனம் மற்றும் கடின உழைப்பால், எவ்வளவு கஷ்டமான வேலைகளையும் எளிதில் முடிக்க முடியும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் சிறப்பான செயல்திறனால் புதிய பொறுப்புக்கள் அல்லது பதவி உயர்வைப் பெறும் வாய்ப்புள்ளது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; "><b>


கும்பம் :</b>அவிட்டம் நட்சத்திரத்தில் இருக்கப் போகும் ராகுவால் கும்ப ராசிக்காரர்களுக்கு ஏப்ரல் 2027 வரை பொற்காலமாக இருக்கும். குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். உறவுகளைப் பொறுத்தவரை இனிமையாக இருக்கும். வீட்டு சூழல் மகிழ்ச்சியாக இருக்கும். பணிபுரிபவர்கள் தங்கள் அலுவலகத்தில் சிறப்பான செயல்திறனால் நல்ல பாராட்டுக்களைப் பெறுவார்கள். நீண்ட காலமாக சந்தித்து வந்த ஆரோக்கிய பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும். பணிபுரிபவர்கள் தங்கள் திறமைக்கேற்ற நல்ல பலனைப் பெறுவார்கள்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-16T01:33:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இவர்களுக்கு இனி அரச சேவை கிடையாது ; வெளியான அதிரடி அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/child-crime-accused-face-government-job-ban-1789492659"></link>
            <id>https://jvpnews.com/article/child-crime-accused-face-government-job-ban-1789492659</id>
            <summary type="text">அரச சேவையில் நுழையும், குறிப்பாகச் சிறுவர்களுடன் நேரடியாகத் தொடர்புடைய பணிகளுக்கு ஆட்களைச் சேர்க்கும்போது, அவர்கள் சிறுவர் குற்றங்களில் குற்றஞ்சாட்டப்...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">அரச சேவையில் நுழையும், குறிப்பாகச் சிறுவர்களுடன் நேரடியாகத் தொடர்புடைய பணிகளுக்கு ஆட்களைச் சேர்க்கும்போது, அவர்கள் சிறுவர் குற்றங்களில் குற்றஞ்சாட்டப்படாதவர்கள் என்பதை உறுதிப்படுத்தும் சான்றிதழைப் பெறுவதற்கு மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு தீர்மானித்துள்ளது. </p><p style="text-align: justify; ">

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா போல்ராஜ், இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தைச் சமர்ப்பிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e69c6493-0607-4c30-8da0-0513507f0138/26-6aa97db4ef1ae.webp' /></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

இதற்கமைய, பொலிஸார் அல்லது தொடர்புடைய உத்தியோகபூர்வ நிறுவனங்கள் மூலம் இந்தச் சான்றிதழைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதுடன், தற்போது அரச சேவையில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளும் தங்களது சேவைத் தேவைகள் மற்றும் சம்பள உயர்வுகளைப் பெறும்போது, குறித்த காலப்பகுதியில் தாங்கள் சிறுவர் குற்றங்களில் ஈடுபடவில்லை என்பதற்கான இந்தச் சான்றிதழை புதுப்பித்து வழங்க வேண்டும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.&nbsp;</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-16T01:33:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பகுதியில் பாடசாலை சென்று வீடு திரும்பிய ஆசிரியைக்கு காத்திருந்த பேரிடி ; பட்டப்பகலில் பரபரப்பை கிளப்பிய சம்பவம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/tragedy-awaits-teacher-returning-home-from-school-1789519653"></link>
            <id>https://jvpnews.com/article/tragedy-awaits-teacher-returning-home-from-school-1789519653</id>
            <summary type="text">வவுனியா - உக்கிளாங்குளம் பகுதியில் நேற்று(15) பட்டப்பகலில் வீடு புகுந்து பெறுமதியான நகைககள் உள்ளிட்ட பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெர...</summary>
            <content type="html"><![CDATA[<p>வவுனியா - உக்கிளாங்குளம் பகுதியில் நேற்று(15) பட்டப்பகலில் வீடு புகுந்து பெறுமதியான நகைககள் உள்ளிட்ட பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>&nbsp;இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5b21fa4e-845d-4dcf-bb37-fc8949d5e55b/26-6aa9e726de09b.webp' /></p><h2>&nbsp;விசாரணைகள் தீவிரம்</h2><p>
</p><p>
வவுனியா - உக்கிளாங்குளம் பகுதியில் உள்ள வீடு ஒன்றுக்குள் பட்டப்பகலில் புகுந்த திருடர், வீட்டுக் கதவினை சூட்சுமாக உடைத்து உள் நுழைந்து அங்கிருந்த அலுமாரிகளை உடைத்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/935f765e-832c-493e-9953-58122de12757/26-6aa9e72794958.webp' /></p><p>
அதன் பின்னர், அதற்குள் இருந்த பெறுமதியான சங்கிலி, தோடுகள் உள்ளிட்ட நகைகள் மற்றும் ஒரு தொகைப் பணம் என்பவற்றையும் திருடிச் சென்றுள்ளனர்.</p><p>

</p><p>


காலை வீட்டில் இருந்து பாடசாலைக்கு சென்ற ஆசிரியர் பாடசாலை முடிந்து வீடு திரும்பிய போது கதவு உடைக்கப்பட்டு திருடப்பட்டு இருந்தமை தெரியவந்துள்ளது.</p><p></p><p>
</p><p>
இதனையடுத்து, வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்து, வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் சம்பவ இடத்திற்கு வருகை தந்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.</p><p>

இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதுடன், தடவியல் பொலிஸாரின் உதவியை நாடுவதற்கான நடவடிக்கையையும் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp; &nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-09-16T01:33:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இரு சகோதரர்களை பலியெடுத்த கைக்குண்டுத் தாக்குதல் ; சந்தேக நபர்களின் வாக்குமூலத்தால் ஷாக்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/grenade-attack-claims-lives-of-two-brothers-1789517797"></link>
            <id>https://jvpnews.com/article/grenade-attack-claims-lives-of-two-brothers-1789517797</id>
            <summary type="text">தெஹிவளையில் மேற்கொள்ளப்பட்ட கைக்குண்டுத் தாக்குதலில் இரு சிறுவர்கள் உயிரிழந்த சம்பவத்தில், குண்டை வீசியதாகக் கூறப்படும் நபரும், அவர் வந்த முச்சக்கர வண...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">தெஹிவளையில் மேற்கொள்ளப்பட்ட கைக்குண்டுத் தாக்குதலில் இரு சிறுவர்கள் உயிரிழந்த சம்பவத்தில், குண்டை வீசியதாகக் கூறப்படும் நபரும், அவர் வந்த முச்சக்கர வண்டியை ஓட்டி வந்த நபரும் மேல் மாகாண தெற்கு குற்றத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p style="text-align: justify; ">
 

சந்தேக நபர்கள் இருவரிடமும் தற்போது தடுப்புக் காவலில் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a4fb3bc7-d22d-48d9-919d-f8b083556fa0/26-6aa9dfe729e81.webp' /></p><h2 style="text-align: justify; ">இறுதிச் சடங்குகள்&nbsp;</h2><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
 

தாக்குதல் நடத்தப்பட்ட வீடும், தாம் இலக்கு வைத்த வீடும் ஒரே சுவரினால் பிரிக்கப்பட்டிருந்ததால், இரு வீடுகளையும் தங்களால் சரியாக அடையாளம் காண முடியவில்லை என குண்டு வீசிய சந்தேக நபர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.</p><p style="text-align: justify; ">

 

தெஹிவளை, சிறிசங்கபோ மாவத்தையிலுள்ள வீடு ஒன்றின் மீது கடந்த 11 ஆம் திகதி அதிகாலை மேற்கொள்ளப்பட்ட கைக்குண்டுத் தாக்குதலில் 11 மற்றும் 17 வயதுடைய இரு சிறுவர்கள் உயிரிழந்ததுடன், அவர்களின் தந்தை பலத்த காயமடைந்தார்.</p><p style="text-align: justify; ">

 

தந்தையின் கால் ஒன்று துண்டிக்கப்பட்டதுடன், உயிரிழந்த இரு சிறுவர்களின் இறுதிச் சடங்குகள்&nbsp; கண்ணீருடன் நடைபெற்றது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
 

சம்பவம் தொடர்பான விசாரணைகள் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவின் அறிவுறுத்தலின் பேரில், மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சஜீவ மெதவத்தவின் நேரடி மேற்பார்வையில் ஆரம்பிக்கப்பட்டன.</p><p style="text-align: justify; ">

 

கைக்குண்டுத் தாக்குதலை நடத்துவதற்காக குற்றவாளிகள் வந்த முச்சக்கர வண்டியின் நிறத்தை மாற்றுவதற்காக கராஜில் ஒப்படைத்ததாக சந்தேகிக்கப்படும் நபர் ஒருவரும், அந்தக் கராஜின் உரிமையாளரும் கல்கிஸ்ஸை குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டனர்.
</p><p style="text-align: justify; ">
 

கடந்த 10 ஆம் திகதி இரவு 9 மணியளவில் நபர் ஒருவர் வந்து அந்த முச்சக்கர வண்டியை எடுத்துச் சென்றதாக அவர்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
 

அவர் களுபோவில, சரணங்கர வீதியைச் சேர்ந்த 'ஹிருத்ம ஷஷ்மிக' அல்லது 'ஹிரு மல்லி' எனப்படும் நபர் என சந்தேக நபர்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.
</p><p style="text-align: justify; ">
 

ஹிரு மல்லி என்பவருடன் சேர்ந்து, குண்டு வீசியதாக சந்தேகிக்கப்படும் 'மதுஷ்க ரேணுக பெர்னாண்டோ' அல்லது 'மது' என்ற நபர் சென்றிருந்தமை பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
</p><p style="text-align: justify; ">
 

அதற்கமைய, சந்தேக நபர்களைக் கைது செய்வதற்காக மேல் மாகாண தெற்குப் பொறுப்பாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் சமந்த விஜேசேகரவின் வழிகாட்டலில் பல பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை ஆரம்பித்ன.

 

இதனடிப்படையில், இரு சிறுவர்களின் உயிரைப் பறித்த குண்டுத் தாக்குதலை நடத்தியதாக சந்தேகிக்கப்படும் நபரும், முச்சக்கர வண்டியின் சாரதியும் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p style="text-align: justify; ">
 

இதன்போது சந்தேக நபர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தாம் தாக்குதல் நடத்த நினைத்த வீடும், தாக்குதல் நடத்திய வீடும் ஒரே சுவரினால் பிரிக்கப்பட்டிருந்ததால், சரியான வீட்டை அடையாளம் காண முடியாமல் போனதாகத் தெரியவந்துள்ளது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
 

தமது உறவினரின் மகனான 'கொஸ் மல்லி' மற்றும் போதியாவத்த அவிஷ்க ஆகியோரின் அறிவுறுத்தலின் பேரிலேயே இந்தத் தாக்குதலை நடத்தியதாக குண்டு வீசியதாக சந்தேகிக்கப்படும் நபர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
</p><p style="text-align: justify; ">
 

குண்டு வீசியதாகக் கூறப்படும் 'மது' என்ற நபர், கடந்த ஓகஸ்ட் 1 ஆம் திகதி இரத்மலானை கந்தவல வீதியில் இடம்பெற்ற 'ஜாதுங்க பிரியந்த' என்பவரின் கொலையில் துப்பாக்கிச் சூடு நடத்தியவராகச் செயற்பட்டுள்ளமையும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p style="text-align: justify; ">

 

இந்த இரண்டு சந்தேக நபர்களும் அடையாள அணிவகுப்பில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-09-16T01:32:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[பேய் பிடித்ததாக கூறி மாணவியை தோழிகள் செய்த சம்பவம் ; விசாரணையில் காத்திருந்த ஷாக்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/friends-act-leaves-student-distressed-1789499230"></link>
            <id>https://jvpnews.com/article/friends-act-leaves-student-distressed-1789499230</id>
            <summary type="text">மகளிர் என்ஜினீயரிங் கல்லூரி விடுதியில் பேய் பிடித்ததாக கூறி மாணவியின் கையில் கற்பூரம் ஏற்றியும், துடைப்பத்தால் அடித்தும் கொடுமைப்படுத்திய தோழிகள் மீது...</summary>
            <content type="html"><![CDATA[<p>மகளிர் என்ஜினீயரிங் கல்லூரி விடுதியில் பேய் பிடித்ததாக கூறி மாணவியின் கையில் கற்பூரம் ஏற்றியும், துடைப்பத்தால் அடித்தும் கொடுமைப்படுத்திய தோழிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
</p><p>&nbsp;கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் பொறியியல் கல்லூரியில்&nbsp; மாணவி முதலாம் ஆண்டு படிக்கும் மாணவியை 2 மாணவிகள்,&nbsp; பேய் பிடித்ததாக கூறி, அவருடன் தங்கியிருந்த தோழிகளான 4 பேரும் அந்த மாணவியின் கையில் கற்பூரத்தை ஏற்றி உள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/58319077-4ec3-4a33-b7c2-2fb6703513dc/26-6aa9975fb8f40.webp' /></p><p> </p><h2> பொலிஸார் விசாரணை</h2><p>மேலும் துடைப்பத்தால் அந்த மாணவியை அடித்து கொடுமைப்படுத்தியுள்ளனர். மேலும் இதுகுறித்து வெளியில் கூறினால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டினர். </p><p>தோழிகளின் துன்புறுத்தலை பொறுத்துக்கொள்ள முடியாத மாணவி, சின்னசேலம் போலீசில் புகார் கொடுத்தார்.</p><p></p><p> அதன்பேரில் சக மாணவிகள் 4 பேர் மீதும் சின்னசேலம் பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.&nbsp;&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-09-16T01:32:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்த உடல் பிரச்சினைகள் இருக்கா? அப்போ கொத்தமல்லியை அதிகம் சாப்பிடாதீர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/health-issues-avoid-too-much-coriander-1789515816"></link>
            <id>https://jvpnews.com/article/health-issues-avoid-too-much-coriander-1789515816</id>
            <summary type="text">அன்றாட சமையலில் சுவைக்காகவும் அலங்காரத்திற்காகவும் பயன்படுத்தப்படும் கொத்தமல்லி இலைகளில் வைட்டமின்கள் ஏ, சி, கே மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">அன்றாட சமையலில் சுவைக்காகவும் அலங்காரத்திற்காகவும் பயன்படுத்தப்படும் கொத்தமல்லி இலைகளில் வைட்டமின்கள் ஏ, சி, கே மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. செரிமானத்தை மேம்படுத்தவும் இது உதவுவதாகக் கூறப்படுகின்றது.
</p><p style="text-align: justify; ">


எனினும், சில குறிப்பிட்ட உடல்நலப் பிரச்சினைகள் உள்ளவர்கள் கொத்தமல்லியை அதிக அளவில் உட்கொள்வதில் கவனமாக இருக்க வேண்டும் என மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/14a8c216-7ee1-40eb-9e41-789937a414ce/26-6aa9d82a6b5e6.webp' /></p><h2 style="text-align: justify; ">உடல்நலப் பிரச்சினைகள்</h2><p style="text-align: justify;"><b>



சிறுநீரக நோயாளிகள்:</b>



சிறுநீரகங்களின் செயல்பாடு பாதிக்கப்பட்டவர்களுக்கு உடலில் அதிகரிக்கும் பொட்டாசியத்தை வெளியேற்றுவது சிரமமாக இருக்கலாம். கொத்தமல்லியில் பொட்டாசியம் உள்ளதால், அதிக அளவில் உட்கொள்வது சிலருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடும்.
</p><p style="text-align: justify; "><b>


குறைந்த இரத்த அழுத்தம் உள்ளவர்கள்:</b>



கொத்தமல்லி இரத்த அழுத்தத்தைக் குறைக்கும் தன்மை கொண்டதாகக் கருதப்படுகிறது. ஏற்கனவே குறைந்த இரத்த அழுத்தம் உள்ளவர்கள் அதிக அளவில் அல்லது சாறு வடிவில் எடுத்துக்கொண்டால் தலைசுற்றல், மயக்கம் போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify;"><b>


நீரிழிவு நோயாளிகள்:
</b>


நீரிழிவு மருந்துகள் அல்லது இன்சுலின் பயன்படுத்துபவர்கள் அதிக அளவில் கொத்தமல்லியை உட்கொள்ளும்போது இரத்தச் சர்க்கரை அளவு மேலும் குறையக்கூடும். எனவே, அளவோடு பயன்படுத்துவது அவசியம்.
</p><p style="text-align: justify;"><b>


கல்லீரல் நோயாளிகள்:
</b>


கடுமையான கல்லீரல் நோய் அல்லது கல்லீரல் இழைநார் வளர்ச்சி போன்ற பிரச்சினைகள் உள்ளவர்கள் கொத்தமல்லியை அதிகமாக உட்கொள்வதைத் தவிர்ப்பது நல்லது என வைத்தியர் அறிவுறுத்தியுள்ளார்.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;">
</p><p style="text-align: justify;"><b>


ஒவ்வாமை மற்றும் சுவாசப் பிரச்சினை உள்ளவர்கள்:
</b>


சிலருக்கு கொத்தமல்லி ஒவ்வாமையை ஏற்படுத்தி தோலில் சிவத்தல், தடிப்பு மற்றும் அரிப்பு போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தலாம். அரிதாக, சிலருக்கு சுவாசப் பிரச்சினைகளும் ஏற்படக்கூடும்.



</p><p style="text-align: justify;">


மேற்கண்ட உடல்நலப் பிரச்சினைகள் உள்ளவர்கள் பச்சைக் கொத்தமல்லி சட்னி அல்லது சாறு போன்றவற்றை அதிக அளவில் உட்கொள்வதைத் தவிர்த்து, உணவில் குறைந்த அளவில் பயன்படுத்துவது குறித்து வைத்தியரின் ஆலோசனையைப் பெறுவது பாதுகாப்பானதாகும்.</p><p style="text-align: justify;"></p>]]></content>
            <updated>2026-09-16T01:31:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[எரிபொருள் விலை திருத்தம் தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/minister-reveals-key-fuel-price-revision-details-1789504447"></link>
            <id>https://jvpnews.com/article/minister-reveals-key-fuel-price-revision-details-1789504447</id>
            <summary type="text">இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இதுவரை எரிபொருள் விலை திருத்தம் தொடர்பில் எவ்வித யோசனையும் முன்வைக்கவில்லை. எதிர்வரும் நாட்களில் உலக சந்தையில் எரிபொ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இதுவரை எரிபொருள் விலை திருத்தம் தொடர்பில் எவ்வித யோசனையும் முன்வைக்கவில்லை. எதிர்வரும் நாட்களில் உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரிக்கப்படுவதை அடிப்படையாகக் கொண்டே, உள்நாட்டில் விலைகளைத் தீர்மானிக்கலாம் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.</p><p style="text-align: justify; ">
செவ்வாய்க்கிழமை (15) கொழும்பில் உள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6005784b-b69d-4242-b0c8-a72b2b4b8e52/26-6aa9abc0e32b7.webp' /></p><h2 style="text-align: justify; ">எரிபொருள் விலை திருத்தம்</h2><p style="text-align: justify; ">

இதுவரை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் எரிபொருள் விலை திருத்தம் தொடர்பில் எவ்வித யோசனையும் முன்வைக்கவில்லை. </p><p style="text-align: justify; ">முன்னர் முற்பதிவு செய்யப்பட்ட எரிபொருட்களே தற்போது நாட்டை வந்தடைகின்றனர். இது குறித்து அரசாங்கமும் இன்னும் கலந்துரையாடவில்லை.

</p><p style="text-align: justify; ">
எவ்வாறிருப்பினும் எரிபொருள் விநியோக நிறுவனங்கள் சில, தற்போதுள்ள விலையில் எரிபொருட்களை விநியோகிப்பதில் நெருக்கடிகளை எதிர்கொள்வதாகத் தெரிவித்துள்ளன.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> கடந்த 3 மாதங்களாக எரிபொருள் விலையில் அரசாங்கம், நுகர்வோருக்கு சலுகைகளை வழங்கியிருக்கிறது.</p><p style="text-align: justify; ">

இதற்காக 57 பில்லியன் ரூபா அரசாங்கத்தால் ஒதுக்கப்பட்டது. எதிர்வரும் நாட்களில் உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரிக்கப்படுவதை அடிப்படையாகக் கொண்டே, உள்நாட்டில் விலைகளைத் தீர்மானிக்கலாம் என்றார்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-16T01:31:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதிகாலையில் கோர விபத்து - இரண்டு பெண்கள் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/2-women-killed-after-being-struck-by-train-1789520893"></link>
            <id>https://tamilwin.com/article/2-women-killed-after-being-struck-by-train-1789520893</id>
            <summary type="text">களுத்துறை புகையிரத நிலையத்தில் இன்று அதிகாலையில் தொடரூந்தில் மோதுண்டு இரண்டு பெண்கள் உயிரிழந்துள்ளனர். 

அனுராதபுரத்திற்கு செல்லும் புகையிரதத்தில் ஏ...</summary>
            <content type="html"><![CDATA[<p>களுத்துறை புகையிரத நிலையத்தில் இன்று அதிகாலையில் தொடரூந்தில் மோதுண்டு இரண்டு பெண்கள் உயிரிழந்துள்ளனர்.</p><p> 

அனுராதபுரத்திற்கு செல்லும் புகையிரதத்தில் ஏறுவதற்காக சென்ற பெண்ணும் அவரது மருமகளும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
அதிகாலை 4.30 மணியளவில் புகையிரதப் பாதையில் நடந்து சென்று கொண்டிருந்த போது கொழும்பில் இருந்து காலி நோக்கிப் பயணித்த புகையிரதத்தில் மோதியுள்ளனர்.</p><p>
</p><h2><b>
இரண்டு பெண்கள் பலி</b></h2><p>இவர்கள் புகையிரத பாதையில் பாதுகாப்பற்ற முறையில் நடந்து சென்று கொண்டிருந்த போதே விபத்து நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9e689ba6-8f24-412c-9b63-52838e4fe0c9/26-6aa9f02a35be6.webp' /></p><p>அவரது மகள் மற்றும் மற்றொரு பெண் உறவினர் ஆகிய மூவரும் அனுராதபுரத்தில் ஆன்மீக நிகழ்வொன்றில் கலந்து கொள்வதற்காக புகையிரத நிலையத்திற்கு சென்றுள்ளனர். </p><p>

இந்த கோர விபத்தில் பெண்ணும் அவரது மருமகளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். </p><p>



உயிரிழந்த இரு பெண்களின் சடலங்களும் களுத்துறை போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன. </p><p>

சம்பவம் தொடர்பில் களுத்துறை தெற்கு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-09-16T01:26:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[போதைப் பொருள் குறித்த இரசாயன பகுப்பாய்வு அறிக்கைகளை வேகமாக வழங்க நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/making-fast-action-for-drug-test-1789521641"></link>
            <id>https://tamilwin.com/article/making-fast-action-for-drug-test-1789521641</id>
            <summary type="text">&amp;nbsp;போதைப்பொருள் தொடர்பிலான அரசாங்க இரசாயனப் பகுப்பாய்வாளர் அறிக்கைகளை 3 மாதங்களுக்குள் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நீதி மற்றும் தேசி...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;போதைப்பொருள் தொடர்பிலான அரசாங்க இரசாயனப் பகுப்பாய்வாளர் அறிக்கைகளை 3 மாதங்களுக்குள் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார தெரிவித்துள்ளார்.</p><p>
பத்தரமுல்லையில் உள்ள அரசாங்க இரசாயனப் பகுப்பாய்வாளர் திணைக்களத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>இதுவரை போதைப்பொருளின் நிகர எடை 10 கிராமிற்கு மேல் இருந்தால் பிணை பெறுவதற்கு மேல்முறையீட்டு நீதிமன்றத்தை நாட வேண்டியிருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/87488bc8-2343-4652-ba66-4717d13f5562/26-6aa9eeeb3472d.webp' /></p><p>
</p><p>உத்தேச புதிய சட்டத் திருத்தத்தின்படி, கைது செய்யப்படும் போது போதைப்பொருளின் நிகர எடை 100 கிராமிற்கு குறைவாக இருந்தால் மேல் நீதிமன்றத்திலேயே பிணை பெற வழிவகை செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.</p><p>
திணைக்களத்தில் நிலவிய 118 இரசாயனப் பகுப்பாய்வாளர் வெற்றிடங்களில் சுமார் 70 பேர் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டுள்ளனர் என குறிப்பிட்டுள்ளார். </p><p>
அதிகாரிகள் இரவு 10.00 மணி வரை தீவிரமாகப் பணியாற்றி அறிக்கைகளை விரைவுபடுத்துவதால், ஆய்வக அறிக்கைகள் கிடைப்பதில் ஏற்படும் தாமதம் கணிசமாகக் குறையும் என அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
</p><p>இதேவேளை, அரசாங்க இரசாயனப் பகுப்பாய்வாளர் திணைக்களத்தின் டி.என்.ஏ பரிசோதனைகளின் தரத்தை மேம்படுத்த தேவையான அத்தியாவசிய ஆய்வக உபகரணங்கள், ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டத்தின் இலங்கைக்கான நிரந்தர பிரதிநிதி அஸுசா குபோட்டாவினால் அரசாங்க இரசாயனப் பகுப்பாய்வாளர் காமிணி பெரேராவிடம் கையளிக்கப்பட்டன.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-16T01:23:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சதிகாரர்களுக்கு அரசியல் பாதுகாப்பு வழங்கிய ரிஷாத் பதியுதீன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/rishad-implicated-in-easter-sunday-attacks-case-1789521525"></link>
            <id>https://ibctamil.com/article/rishad-implicated-in-easter-sunday-attacks-case-1789521525</id>
            <summary type="text">உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தோடு உடந்தையாக இருந்தவர்களுக்கு தற்போதைய எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் அரசியல் பாதுகாப்பு அளித்...</summary>
            <content type="html"><![CDATA[<p>உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தோடு உடந்தையாக இருந்தவர்களுக்கு தற்போதைய எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் அரசியல் பாதுகாப்பு அளித்துள்ளதுடன் என மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் நீதிமன்றத்தில் அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளிப்படுத்தியுள்ளார்.
</p><p>
நேற்று இடம்பெற்ற வழக்கு விசாரணையின் போதே கோட்டை நீதவான் நீதிமன்றில் இந்த விடயத்தை பகிரங்கப்படுத்தியிருந்தார்.
</p><p>
இந்த விடயங்கள் குறித்து மேலும் தனது வாதங்களை திலீப பீரிஸ் பின்வருமாறு பகிரங்கப்படுத்தியிருந்தார்.</p><p></p><h2>தாக்குதலின் உண்மையான பொறுப்பாளர்</h2><p>
</p><p>
“சஹ்ரான் ஹாஷிமை பாதுகாப்பதன் ஊடாக தாக்குதலின் உண்மையான பொறுப்பாளர்களைப் பாதுகாக்க இராணுவ புலனாய்வுப் பிரிவின் ஒழுங்கமைக்கப்பட்ட குழுவொன்று செயற்பட்டதாக விசாரணைகளில் வெளியாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f070d421-3298-4d36-8962-544a275c7648/26-6aa9f17e91e69.webp' /></p><p>
</p><p>
 
இதன் ஒரு பகுதியாகவே வவுனதீவு காவல்துறை அதிகாரிகள் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகள் திசைதிருப்பப்பட்டுள்ளது.

வவுனதீவு காவல்துறை அதிகாரிகள் மீதான தாக்குதலை முன்னாள் விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர் ஒருவர் மேற்கொண்டதாக ஆரம்பத்தில் இராணுவ புலனாய்வுப் பிரிவு தெரிவித்திருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
</p><p>
எனினும், ஈஸ்டர் தாக்குதலுக்கு முன்னர் ஏப்ரல் 12ஆம் திகதி கிரிதலே புலனாய்வு முகாமின் பொறுப்பதிகாரியாக இருந்த கர்னல் மத்துமகே, வவுனதீவு சம்பவத்தை சஹ்ரான் மேற்கொண்டதாக எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.
</p><p>
இந்தத் தகவல்களை மறைத்தவர்கள் அனைவரும் முன்னாள் அரச புலனாய்வு சேவைப் பணிப்பாளர் சுரேஷ் சாலேயுடன் தொடர்புடையவர்கள்.

தாக்குதலாளிகளுக்கு உதவி மற்றும் ஆதரவு வழங்கியதாக சந்தேகிக்கப்படும் மேலும் இருவர் தொடர்பிலும் விசாரணைகள் இடம்பெற்று வருகிறது. </p><p>அவர்களில் ஒருவர் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன்.

மற்றையவர் மன்னார் பகுதியைச் சேர்ந்த அலாவுதீன் என்ற வர்த்தகர்.</p><p></p><h2>சந்தேகநபரை விடுவித்த கோட்டாபய</h2><p> </p><p>அலாவுதீன், ஷங்ரி-லா ஹோட்டலில் குண்டுத் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் இன்ஷாப் அஹமட்டின் மாமனார். இன்ஷாப் அவரது மகளை திருமணம் செய்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/60a3c797-8b5f-462a-a617-0d9befe75b5a/26-6aa9f17dd9d89.webp' /></p><p>
</p><p>
அலாவுதீனுக்கு சொந்தமான அதிவேகப் படகுகளைப் பயன்படுத்தி, தாக்குதலுக்கு முன்னர் சஹ்ரான் உள்ளிட்ட சிலர் பல சந்தர்ப்பங்களில் இந்தியாவுக்குச் சென்றுள்ளனர்.
</p><p>
மேலும், இன்ஷாப் அஹமட்டின் மனைவியான அலாவுதீனின் மகள், தாக்குதலுக்குப் பின்னர் தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் இருந்த நிலையில், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் விடுவிக்கப்பட்டார்.
</p><p>
அலாவுதீன், கோட்டாபய ராஜபக்சவின் தேர்தல் பிரசாரத்திற்கு ஆதரவளித்தவர் என்பது இதற்குப் பின்னணியாக இருந்திருக்கலாம் என விசாரணையாளர்கள் சந்தேகிக்கின்றனர்.
</p><p>
இராணுவ புலனாய்வுப் பிரிவுடன் இணைந்து அரச புலனாய்வு சேவையின் ஒரு குழுவும் தாக்குதல் தொடர்பான தகவல்களை அறிந்திருந்த போதிலும் அவற்றை மறைத்திருக்கலாம் என விசாரணைகளில் சந்தேகம் எழுந்துள்ளது.</p><p></p><h2>தாக்குதல்தாரிகளுடன் நெருங்கிய 16 தொடர்பாளர்கள்</h2><p>
</p><p>
ஈஸ்டர் தாக்குதலுக்குப் பின்னர், ஏப்ரல் 27ஆம் திகதி(2019) சாய்ந்தமருதில் தாக்குதல்தாரர்களுடன் நெருங்கிய தொடர்புடையதாகக் கூறப்பட்ட 16 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/61a2a4f1-d8a8-49e2-b6fa-9da34c36a2cb/26-6aa9f17d11d67.webp' /></p><p>
</p><p>
அவர்கள் அனைவரும் தற்கொலைத் தாக்குதலில் உயிரிழக்கவில்லை.
சிலரையாவது உயிருடன் கைது செய்திருக்க முடிந்திருக்கலாம் . 
அந்தக் காலப்பகுதியில் சாய்ந்தமருது பகுதி இராணுவத்தின் பொறுப்பில் இருந்தது.
</p><p>
இதனால், ஈஸ்டர் தாக்குதலின் பின்னணியில் இருந்த உண்மையான தகவல்கள் வெளிவருவதைத் தடுக்கும் நோக்கில் இராணுவத்தின் சில தரப்பினர் திட்டமிட்டு அந்த 16 பேரையும் கொன்றார்களா என்பது குறித்தும் விசாரணைகள் இடம்பெற்று வருகிறது” என்றார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-16T01:22:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[செப்டெம்பர் 24இல் நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டு மக்கள் போராட்டம் - வருண ராஜபக்ச அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/public-protest-to-besiege-parliament-september-24-1789519995"></link>
            <id>https://tamilwin.com/article/public-protest-to-besiege-parliament-september-24-1789519995</id>
            <summary type="text">அரசமைப்பின் 22ஆவது திருத்தத்துக்கு எதிராக எதிர்வரும் செப்டெம்பர் 24 ஆம்
திகதி நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டுப் மாபெரும் மக்கள் போராட்டம்
நடத்தப்படவுள...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரசமைப்பின் 22ஆவது திருத்தத்துக்கு எதிராக எதிர்வரும் செப்டெம்பர் 24 ஆம்
திகதி நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டுப் மாபெரும் மக்கள் போராட்டம்
நடத்தப்படவுள்ளது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா தொகுதி அமைப்பாளர்
வருண ராஜபக்ச அறிவித்துள்ளார்.
</p><p>
எதுல்கோட்டேயிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி தலைமை அலுவலகத்தில் நேற்று(15.09.2026) நடைபெற்ற
ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே இதனைக்
குறிப்பிட்டுள்ளார்.
</p><h2>மக்கள் திசைகாட்டியை நம்பியதற்கு</h2><p>மேலும் தெரிவிக்கையில்,

"நாட்டின் ஜனநாயகத்தை ஒழித்து, சர்வாதிகார ஒற்றைக் கட்சி ஆட்சியை
அமைப்பதற்காகக் கொண்டுவரப்பட்டுள்ள இந்தத் திருத்தத்துக்கு அரசாங்கத்த
உள்ளிருந்தே பல தரப்பினர் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/75e4f982-2820-4ec1-8a06-f406574e4cba/26-6aa9edcb0f387.webp' /></p><p> ஜனாதிபதியை
ஆட்சிக்குக் கொண்டுவரப் பங்களிப்பு வழங்கிய லால் விஜேநாயக்க மற்றும் உபுல்
குமாரப்பெரும ஆகியோரும் இதற்கு எதிராகக் குரல் கொடுத்துள்ளனர்.</p><p>பிரதமர் ஹரிணி அமரசூரிய இது குறித்து இதுவரை தனது நிலைப்பாட்டை
வெளிப்படுத்தாமல் மௌனம் காக்கின்றார்.</p><p> மக்கள் திசைகாட்டியை நம்பியதற்கு ஹரிணி
அமரசூரிய உள்ளிட்ட குழுவினரே காரணம் என்பதால், இந்தத் திருத்தத்துக்கு ஆதரவாக
அவரால் வாக்களிக்க முடியாது. அவர் தனது தெளிவான நிலைப்பாட்டை நாட்டுக்கு
வெளிப்படுத்த வேண்டும்.</p><h2>மாற்றத்தைக் கோரியவர்களுக்கும் அழைப்பு</h2><p>
</p><p>
இந்தத் திருத்தத்தை நாடாளுமன்றத்துக்குள் தோற்கடிக்கும் பொறுப்பும் வல்லமையும்
பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் திசைகாட்டி குழுவினருக்கே உள்ளது. </p><p>அதனை
நாடாளுமன்றத்துக்கு வெளியே தோற்கடிக்கும் பொறுப்பை எதிர்க்கட்சிகள்
ஏற்றுக்கொண்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/46b11203-fd9c-473d-b9f3-ebb5d9af61e9/26-6aa9edcbba7eb.webp' /></p><p>

22ஆவது திருத்தச் சட்டம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள எதிர்வரும்
செப்டெம்பர் 24 ஆம் திகதி நாடு தழுவிய ரீதியில் ஜனநாயக மக்கள் போராட்டம்
முன்னெடுக்கப்படவுள்ளது. </p><p>அன்றைய தினம் நாடாளுமன்றத்துக்கு அருகில் திரண்டு
போராட்டத்தில் ஈடுபடுமாறு அனைத்து மக்களுக்கும், குறிப்பாக காலிமுகத்திடல் போராட்டத்தின் மூலம் முறைமை
மாற்றத்தைக் கோரியவர்களுக்கும் அழைப்பு விடுக்கின்றோம்" என்றும் குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-16T01:16:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[ட்ரோன் திருட முயன்ற ஈரானிய படகுகள் அழிக்கப்பட்டதாக அமெரிக்கா ராணுவம் அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/us-says-iranian-boats-destroyed-over-drone-theft-1789520980"></link>
            <id>https://canadamirror.com/article/us-says-iranian-boats-destroyed-over-drone-theft-1789520980</id>
            <summary type="text">ஈரான் கடல் பகுதியில் அமெரிக்காவின் ஆளில்லா கப்பல் ஒன்றை திருட முயன்ற ஈரானின் இரண்டு சிறிய படகுகள் மீது துப்பாக்கி சூடு நடத்தி அவற்றை அழித்ததாக அமெரிக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரான் கடல் பகுதியில் அமெரிக்காவின் ஆளில்லா கப்பல் ஒன்றை திருட முயன்ற ஈரானின் இரண்டு சிறிய படகுகள் மீது துப்பாக்கி சூடு நடத்தி அவற்றை அழித்ததாக அமெரிக்க ராணுவம் தெரிவித்தது.</p><p> நீண்ட காலமாக நீடிக்கும் மோதலில் இது சமீபத்திய தாக்குதல் சம்பவமாகும்.</p><p style="margin-left: 25px;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3c6a0037-3b21-47a2-b204-776c7d02338f/26-6aa9ec559b3b5.webp' /></p><h2 style="margin-left: 25px;">ஆளில்லா கடல்சார் கப்பல்</h2><p>
</p><p>
அமெரிக்க மத்திய கட்டளை பிரிவின் செய்தி தொடர்பாளர் கேப்டன் டிம் ஹாக்கின்ஸ் கூறுகையில், ஈரானியப் படகுகள் "சமீபத்தில் அமெரிக்காவின் ஆளில்லா கடல்சார் கப்பலை கைப்பற்ற முயன்றன ஆனால் ராணுவம் "வலுவான பதிலடி கொடுத்ததால் அந்த முயற்சி தோல்வியடைந்தது," என்று தெரிவித்தார்.</p><p>ஈரானின் தெற்கு கடற்கரையில் உள்ள ஹார்முஸ்கான் மாகாணத்தில் இரண்டு மீன்பிடி படகுகள் தாக்குதலுக்கு உள்ளானதாகவும், பல மீனவர்கள் காணாமல் போனதாகவும் ஈரானிய அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.</p><p> மாகாண அதிகாரி ஒருவரை மேற்கோள் காட்டி இத்தகவல் தெரிவிக்கப்பட்டது.
</p><p>
ஹார்முஸ் நீரிணை மீதான கட்டுப்பாட்டை பெற இரு தரப்பினரும் முயன்று வரும் நிலையில், 6 மாதங்களுக்கும் மேலாக நீடிக்கும் இந்த மோதலில் இது சமீபத்திய தாக்குதல் சம்பவமாகும். </p><p>முக்கியமான எரிசக்தி கப்பல் போக்குவரத்து பாதையான ஹார்முஸ் நீரிணையில் ஈரானின் பிடியை தளர்த்துவதில் அமெரிக்கா சமீபத்திய வாரங்களில் வெற்றி பெற்றுள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-16T01:09:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[500 கோடி ரூபா கடத்தலை காட்டிக்கொடுத்த நபரை கொலை செய்ய முயற்சி - சிக்கிய முக்கிய புள்ளிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/muder-plan-failed-3-arrested-1789480226"></link>
            <id>https://tamilwin.com/article/muder-plan-failed-3-arrested-1789480226</id>
            <summary type="text">
கதிர்காமத்தில் 500 கோடி ரூபா பெறுமதியான ஐஸ் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைக்குத் தகவல் வழங்கிய நபரை கொலை செய்யத் திட்டமிட்ட குற்றக் கும்பலின் பிரதான...</summary>
            <content type="html"><![CDATA[<p>
கதிர்காமத்தில் 500 கோடி ரூபா பெறுமதியான ஐஸ் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைக்குத் தகவல் வழங்கிய நபரை கொலை செய்யத் திட்டமிட்ட குற்றக் கும்பலின் பிரதானி உள்ளிட்ட மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p>
செல்லக்கதிர்காமம் பகுதியில் வைத்து வலான மத்திய ஊழல் தடுப்புத் தாக்குதல் பிரிவினரால் குறித்த மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>

2025ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 29 ஆம் திகதி 325 கிலோகிராம் போதைப்பொருள், 8 சந்தேகநபர்கள் மற்றும் 6 வாகனங்களைக் கைப்பற்றுவதற்குக் காரணமாக இருந்த நபரை கொலை செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p><p>
</p><h2><b>
1.4 மில்லியன் ரூபாய் ஒப்பந்தம்</b></h2><p>இதற்காக அங்கொடை பிரியங்கர மற்றும் ரூபன் ஆகிய ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளால் 1.4 மில்லியன் ரூபாய் ஒப்பந்தம் வழங்கப்பட்டிருந்தமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fa9f5234-11e3-44de-85b7-b7265395a1ef/26-6aa950c131178.webp' /></p><p>கொலை ஒப்பந்தத்தின் பிரதான சந்தேகநபரான மதுக்க சாமர என்ற மதுவாவிடம் இருந்து 2 கத்திகள், 8 கிராம் ஹெரோயின் மற்றும் குற்றச் செயலுக்குப் பயன்படுத்தத் திட்டமிடப்பட்டிருந்த ஜீப் வாகனத்தின் போலியான இலக்கத் தகட்டுடன் தொடர்புடைய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
</p><p>
பிரதான சந்தேகநபருடன் இங்கிரிய பிரதேசத்தில் வசித்து வந்த நலின் என்ற நபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>

சந்தேக நபர் கைது செய்யப்படும்போது தனது மகனுக்கு எழுதிய உயிரை மாய்ப்புக்கான கடிதம் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தாக்குதலை நடத்தி தமது உயிரைப் பணயம் வைத்து இந்தக் கொலையை செய்வதற்கு அவர் திட்டமிட்டிருந்தமை தெரியவந்துள்ளது.</p><h3><b>

பல கொலை குற்றச்சாட்டுக்கள்</b></h3><p>பிரதான சந்தேகநபரான மதுவாவின் மைத்துனரான சுசாந்த என்ற நபரும் கைது செய்யப்பட்டுள்ளார். 
இந்த நபருக்கும் மதுவாவுக்கும் எதிராக வெல்லம்பிட்டிய பகுதியில் மேற்கொள்ளப்பட்ட மற்றுமொரு கொலைச் சம்பவம் தொடர்பில் அளுத்கடை இலக்கம் 02 நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையில் உள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5f0ce1d0-9da5-4f2f-9839-8d9747d7e295/26-6aa950c1e2283.webp' /></p><p>சந்தேகநபர்கள் ஜீப் வாகனத்தில் கிரிந்த பகுதியில் அமைந்துள்ள தகவல் வழங்கியவரின் வீட்டிற்கு சென்று, அவரை கடத்திச் சென்று கத்திகளால் வெட்டிப் படுகொலை செய்து வீதியில் வீசிவிட்டு, குறித்த ஜீப் வாகனத்திற்குத் தீயிட்டு அழிக்கவும் திட்டமிட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
கொலைத் திட்டம் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, குற்றச் செயலுக்காக பயன்படுத்தவிருந்த ஜீப் வாகனம் கடுவலை, ஹேவகம பகுதியில் மறைத்து வைக்கப்பட்டுள்ளது.</p><p>

இந்த நிலையில் கடந்த 08 ஆம் திகதி பொலிஸாரால் பொறுப்பேற்கப்பட்டு கிரிந்த பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-16T01:08:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறுவர்களை வைத்து போதை வியாபாரம் ; இலவச Wifi மூலம் வசமாக சிக்கிய இளைஞன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/youth-caught-in-drug-trade-using-free-wifi-1789520348"></link>
            <id>https://canadamirror.com/article/youth-caught-in-drug-trade-using-free-wifi-1789520348</id>
            <summary type="text">வடமேற்கு லண்டனில் ஜோயல் லூயிஸ் என்ற 34 வயது நபர் &#039;பாபி டிரக் லைன்&#039; என்ற போதைப்பொருள் நெட்வொர்க்கின் கீழ் போதொப்பொருள் வியாபாரம் செய்து வந்துள்ளார்.
...</summary>
            <content type="html"><![CDATA[<p>வடமேற்கு லண்டனில் ஜோயல் லூயிஸ் என்ற 34 வயது நபர் 'பாபி டிரக் லைன்' என்ற போதைப்பொருள் நெட்வொர்க்கின் கீழ் போதொப்பொருள் வியாபாரம் செய்து வந்துள்ளார்.
</p><p>
வடக்கு கில்பர்ன் உள்ளிட்ட பகுதிகளுக்கு கோகைன், ஹெராயின் உள்ளிட்டவற்றை அவர் சப்ளை செய்து வந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aebfd9c7-f036-4581-aeaa-f391df36808a/26-6aa9e9ddcbe5a.webp' /></p><p>
</p><p>
போதைப்பொருள் கடத்துவதாக சந்தேகத்தின் பேரில் சில சிறுவர்களை பிடித்து அவர்களின் செல்போன்களை ஆய்வு செய்த்தில் லூயிஸ் உடைய செயல்பாடுகள் குறித்து&nbsp; தெரியவந்துள்ளது.


</p><p>
இதை அறிந்த லூயிஸ் முன்னெச்சரிக்கையாக தப்பிக்க தலைமறைவாகி உள்ளார்.தான் இருக்கும் இடத்தை கண்டுபிடித்துவிடக்கூடாது என்பதற்காக தனது மொபைல், லேப்டாப் உள்ளிட்ட சாதனங்களில் லொகேஷனை ஹைட் செய்யும் VPN நெட்வொர்க்கை அவர் பயனப்டுத்தியுள்ளளார். </p><p>ஆனால் அவர்களின் சாதனங்களில் ஒன்று அவர் இருக்கும் இடத்தில் இலவச பப்ளிக் WIFI உடன் கனெக்ட் ஆகி இருந்துள்ளது.
</p><p>
அதை வைத்து பொலிசார் அவரின் இருப்பிடத்தை கண்டுபிடித்துள்ளனர். இதன் பின் அதிகாரிகள் கைது வாரண்ட் உடன் அவர் இருந்த இடத்திற்கு சென்றுள்ளனர். </p><p>அப்போது அவர் கைதில் இருந்து தப்பிக்க அலமாரிக்குள் ஒளிந்துகொண்டிருந்திருக்கிறார். ஆனால் பொலிசார் அவர் ஒளிந்திருக்கும் இடத்தை கண்டுபிடித்து அவரை கைது செய்தனர்.</p>]]></content>
            <updated>2026-09-16T00:59:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையை சூழ்ந்துள்ள காற்றழுத்த தாழ்வு : விடுக்கப்பட்ட எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/low-atmospheric-disturbance-continue-srilanka-1789518311"></link>
            <id>https://tamilwin.com/article/low-atmospheric-disturbance-continue-srilanka-1789518311</id>
            <summary type="text">இலங்கையின் சூழவுள்ள பகுதியில் காற்றழுத்த தாழ்நிலை தொடர்ந்து நீடிப்பதால், இன்று சில பகுதிகளில் 75 மிமீக்கு மேல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் சூழவுள்ள பகுதியில் காற்றழுத்த தாழ்நிலை தொடர்ந்து நீடிப்பதால், இன்று சில பகுதிகளில் 75 மிமீக்கு மேல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p>தற்போது நிலவும் வானிலையின்படி மேற்கு, சபரகமுவ, மத்திய, ஊவா, கிழக்கு மற்றும் தெற்கு மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மேகமூட்டமான வானம் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><h2>தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்</h2><p>
 

பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு, நாட்டின் ஏனைய பகுதிகளில் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a348c475-36ae-42cd-8d20-e70d5fe8603e/26-6aa9e6d14ebe0.webp' /></p><p>
 

இடியுடன் கூடிய மழையின் போது, ​​தற்காலிகமாக குறிப்பிட்ட பகுதிகளில் ஏற்படக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னலுக்கு எதிராக தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-16T00:46:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈஸ்டர் தாக்குதல் விவகாரத்தில் விரைவில் கைதாகபோகும் கோட்டாபய! நீதிமன்றத்தில் அம்பலமான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/gotabaya-set-to-be-arrested-soon-easter-attacks-1789519296"></link>
            <id>https://ibctamil.com/article/gotabaya-set-to-be-arrested-soon-easter-attacks-1789519296</id>
            <summary type="text">உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உள்ளிட்டோருக்கு எதிராக&amp;nbsp;மேன்முறையீட்டு நீதிமன்றத்திலும் ரிட் மனுவொன்றை தாக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உள்ளிட்டோருக்கு எதிராக&nbsp;மேன்முறையீட்டு நீதிமன்றத்திலும் ரிட் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றுக்கு தெரிவித்துள்ளது.</p><p>உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாத தாக்குதல் குறித்த வழக்கு விசாரணை நேற்று இடம்பெற்ற நிலையில் இந்த விடயம்&nbsp;மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸால் முன்வைக்கப்பட்டுள்ளது.</p><p>இந்த விசாரணையின் போது நீதவான் எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கும் போதே,&nbsp;கோட்டாபய ராஜபக்ச உள்ளிட்டோருக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டுள்ள விசாரணைகள் குறித்த விடயத்தை&nbsp; திலீப பீரிஸ் வெளிப்படுத்தினார்.</p><p></p><h2>மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ரிட் மனு</h2><p><b>கேள்வி எழுப்பிய கொழும்பு கோட்டை நீதவான் -&nbsp;</b><i>அதிகாரிகள் மீது கடுமையான சந்தேகம் எழுந்துள்ள நிலையில், அவர்களை ஏன் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவில்லை?</i></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/65607088-b7d2-462a-9c4c-ca3dc1059f35/26-6aa9e5c2c5879.webp' /></p><p>திலீப பீரிஸ் - இந்த வழக்குடன் தொடர்புடைய மூவருக்கு ஏற்கனவே வெளிநாட்டு பயணத் தடைகள் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.</p><p>
மேலும், கர்னல் மத்துமகே முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உள்ளிட்டோருக்கு எதிராகவும், மேன்முறையீட்டு நீதிமன்றத்திலும் ரிட் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
</p><p>
அந்த சட்ட நடவடிக்கை நிறைவடைந்ததும் சந்தேகநபர்களைக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p>இந்நிலையில் சந்தேகநபரான முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவு தலைவர் சுரேஷ் சாலே சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி ஷமிந்த பெர்னாண்டோ, தனது தரப்பை சேர்ந்த நபரின் மருத்துவ அறிக்கைகள் இதுவரை நீதிமன்றத்திற்கு கிடைக்கவில்லை என கூறியுள்ளார்.
</p><p>
மேலும், ‘B’ அறிக்கைகள் மூலம் எந்தவொரு ஆதாரமற்ற விடயத்தையும் முன்வைக்க முடியும் என்பதால், அவற்றுக்கு பதிலளிப்பதைத் தவிர்ப்பதாகவும் அவர் நீதிமன்றத்தில் குறிப்பிட்டார். </p><p>இதன்போது காவல்துறை பரிசோதகர் ரஞ்சன் செனரத் பண்டாரவுக்கு வெளிநாட்டு பயணத் தடையும் நீதிமன்றத்தால் விதிக்கப்பட்டது. </p><p>விசாரணைகளின் முன்னேற்றத்தை அறிவிப்பதற்காக வழக்கு செப்டம்பர் 22ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p></p><p><b>you may like this</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/xTlZZeEf05U" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-16T00:42:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்திய வர்த்தக ஒப்பந்தத்தை நிறைவேற்றிய நியூசிலாந்து நாடாளுமன்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/new-zealand-passes-india-trade-deal-1789519064"></link>
            <id>https://news.lankasri.com/article/new-zealand-passes-india-trade-deal-1789519064</id>
            <summary type="text">New Zealand parliament passes India trade deal: நியூசிலாந்து நாடாளுமன்றம் இந்திய வர்த்தக ஒப்பந்தத்தை நிறைவேற்றியது.
இந்தியாவுடன் தடையற்ற வர்த்தக ஒப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>New Zealand parliament passes India trade deal: நியூசிலாந்து நாடாளுமன்றம் இந்திய வர்த்தக ஒப்பந்தத்தை நிறைவேற்றியது.
</p><p>இந்தியாவுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கான சட்டத்தை நியூசிலாந்து நாடாளுமன்றம் புதன்கிழமை நிறைவேற்றியது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/98b81f8f-64ac-4348-82ac-71484bf22573/26-6aa9e4daaa89a.webp' /></p><p>
</p><p>இதன் கீழ், நியூசிலாந்திலிருந்து இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களில் சுமார் 95 சதவீதத்தின் மீதான சுங்கவரிகள் நீக்கப்படும் அல்லது கணிசமாகக் குறைக்கப்படும். </p><p>எதிர்க்கட்சியான லேபர் கட்சியின் ஆதரவுடன், இந்தச் சட்டம் 93-29 என்ற வாக்கு வித்தியாசத்தில் நிறைவேற்றப்பட்டது. சட்டம் அமுலுக்கு வரும் நாளிலிருந்து, இதன் கீழ் வரும் அனைத்துப் பொருட்களில் பாதிக்கும் மேற்பட்டவை வரி விலக்கு பெறும்.</p><p></p><p> </p><p>ஏற்றுமதியாளர்களுக்குக் கிடைக்கும் பலன்கள் உடனடியானவை மற்றும் கணிசமானவை என நியூசிலாந்து வர்த்தக அமைச்சர் டாட் மெக்ளே ஓர் அறிக்கையில் தெரிவித்தார். </p><p>இந்த உயர்தரமான ஒப்பந்தம் இந்த ஆண்டு நடைமுறைக்கு வரும் என்றும், இதன்மூலம் இந்தியாவுடன் ஒரு தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை இந்தக் காலக்கட்டத்தில் நிறைவு செய்வோம் என்ற நமது வாக்குறுதி நிறைவேறும் என்றும் எதிர்பார்க்கிறோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/82754aab-befd-4d0a-9c6b-18e3ff4770d7/26-6aa9e4db5efd0.webp' /></p><p> </p><p>இந்த ஒப்பந்தத்தின்படி, அனைத்து இந்தியப் பொருட்களும் நியூசிலாந்திற்கு வரியின்றி கொண்டு செல்லப்படும். மேலும், அடுத்த 15 ஆண்டுகளில் இந்தியாவில் 20 பில்லியன் டொலர் முதலீடு செய்யவும் வெலிங்டன் ஒப்புக்கொண்டுள்ளது. </p><p>இரு நாடுகளும் முதலில் ஏப்ரல் மாதத்தில் வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. ஜூன் 2026-ல் முடிவடைந்த ஆண்டில், இருதரப்பு வர்த்தகம் மொத்தம் 3.99 பில்லியன் நியூசிலாந்து டொலராக (2.29 பில்லியன் அமெரிக்க டொலர்) இருந்தது; இதில் நியூசிலாந்தின் சரக்கு மற்றும் சேவைகளுக்கான ஒன்பதாவது பெரிய ஏற்றுமதிச் சந்தையாக இந்தியா திகழ்ந்தது. </p><p>இரு நாடுகளும் தங்கள் தரப்பிலான ஒப்புதல் நடைமுறைகளை நிறைவு செய்த பிறகு, அந்த வர்த்தக ஒப்பந்தம் நடைமுறைக்கு வரும்.</p>]]></content>
            <updated>2026-09-16T00:34:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவுடன் வரி மோதல்; ஐரோப்பா பயணமாகும் கனடா பிரதமா் மாா்க் காா்னி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/canada-pm-mark-carney-heads-to-europe-1789518688"></link>
            <id>https://canadamirror.com/article/canada-pm-mark-carney-heads-to-europe-1789518688</id>
            <summary type="text">அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான நிா்வாகத்துடன் வரி மோதல் தீவிரமடைந்துள்ள சூழலில், ஐரோப்பிய யூனியனுடனான ஒத்துழைப்பை மேலும் வலப்படுத்தும் ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான நிா்வாகத்துடன் வரி மோதல் தீவிரமடைந்துள்ள சூழலில், ஐரோப்பிய யூனியனுடனான ஒத்துழைப்பை மேலும் வலப்படுத்தும் நோக்கில் கனடா பிரதமா் மாா்க் காா்னி ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் மேற்கொள்கிறாா்.
</p><p style="text-align: justify; ">
கனடாவின் மொத்த ஏற்றுமதியில் சுமாா் 70 சதவீதம் அமெரிக்காவை மட்டுமே சாா்ந்துள்ள நிலையில், அந்த அதீத சாா்புநிலையைக் குறைக்கும் நோக்கில் ஐரோப்பாவுடனான வா்த்தக மற்றும் முதலீட்டு உறவுகளுக்கு மாா்க் காா்னி முன்னுரிமை அளித்து வருகிறாா்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/135878ad-2cb0-4a62-83c7-da6f081e1dea/26-6aa9e361bc3db.webp' /></p><p style="text-align: justify; ">அமெரிக்காவுடன் தொடா்ந்து வா்த்தகம் மேற்கொண்டாலும், மாற்றமடைந்து வரும் புவிசாா் அரசியல் சூழலுக்கு ஏற்ப புதிய கூட்டணிகளை உருவாக்குவது காலத்தின் கட்டாயம் என்று கனடா தெரிவித்துள்ளது.</p><p style="text-align: justify; ">

அந்தவகையில், கனடாவின் 2-ஆவது பெரிய வா்த்தகக் கூட்டாளியாக விளங்கும் ஐரோப்பிய யூனியனின் நாடாளுமன்றம் ஒட்டாவாவில் புதிய அலுவலகத்தைத் திறக்கவுள்ளதுடன், ஐரோப்பிய பாதுகாப்பு தளவாடக் கொள்முதல் திட்டத்திலும் கனடா இணைந்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-16T00:31:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தியாவுக்கு அனுப்பப்பட்ட சாரா உள்ளிட்ட குழு! விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினரின் துள்ளிய தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/team-including-sarah-jasmine-sent-ind-easter-case-1789517934"></link>
            <id>https://ibctamil.com/article/team-including-sarah-jasmine-sent-ind-easter-case-1789517934</id>
            <summary type="text">2019ஆம் ஆண்டு இடம்பெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்களின் பின்னணியில், இராணுவ புலனாய்வுப் பிரிவின் சில தரப்பினரின் திட்டமிட்ட உதவியும் விரிவான ...</summary>
            <content type="html"><![CDATA[<p>2019ஆம் ஆண்டு இடம்பெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்களின் பின்னணியில், இராணுவ புலனாய்வுப் பிரிவின் சில தரப்பினரின் திட்டமிட்ட உதவியும் விரிவான சதித்திட்டப் பின்னணியும் இருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளதாக மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
</p><p>
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணைகளின் முன்னேற்றம் குறித்து விரிவான அறிக்கையொன்றை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
</p><p>
வவுனியாவில் அமைந்துள்ள முதலாவது புலனாய்வுப் படைப்பிரிவு மற்றும் மட்டக்களப்பு, கிரிதலே ஆகிய பகுதிகளில் அமைந்துள்ளமூன்றாவது இராணுவப் புலனாய்வுப் படைப்பிரிவு தொடர்பான விசாரணைகளிலேயே இந்தத் தகவல்கள் வெளியாகியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>தம்பியன் என்ற முன்னாள் கடற்புலி உறுப்பினர்</h2><p>
இராணுவ புலனாய்வுப் பிரிவினால் வழிநடத்தப்பட்டதாகக் கூறப்படும் ‘தம்பியன்’ என்ற முன்னாள் கடற்புலி உறுப்பினர் ஊடாக, சஹ்ரான் ஹாஷிம் தாக்குதலொன்றை நடத்தத் தயாராகி வருவதாகவும், வவுனதீவு காவல்துறை காவலரண் அதிகாரிகள் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு சஹ்ரானே காரணம் எனவும் புலனாய்வுத் தகவல்கள் உறுதிப்படுத்தப்பட்டிருந்ததாக அவர் நீதிமன்றத்தில் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3bb1c8c9-a649-4a39-a1f8-dbb1d7bbd005/26-6aa9e20d00da7.webp' /></p><p>
</p><p>
எனினும், அந்தத் தகவல்கள் திட்டமிட்டு மறைக்கப்பட்டு, வவுனதீவு சம்பவத்தை தமிழீழ விடுதலைப் புலிகள் (LTTE) மீது சுமத்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
</p><p>
கர்னல் ரணவீர மற்றும் கிரிதலே இராணுவ புலனாய்வுப் படைப்பிரிவின் தலைவராக இருந்த கர்னல் மத்துமகே ஆகியோர் இந்தத் தகவல்களை புலனாய்வு பணிப்பாளரிடம் முறையாகத் தெரிவிக்காமல் மறைத்ததாகவும் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.</p><p>

முன்னெச்சரிக்கைத் தகவல்கள் உரிய முறையில் பகிரப்படவில்லை என குற்றச்சாட்டு
2016ஆம் ஆண்டு முதல் புலனாய்வுப் பிரிவுக்கு தகவல்களை வழங்கியதாகக் கூறப்படும் ‘ராசிக்’ என்ற உளவாளி வழங்கிய தகவல்கள், வெளிநாட்டு புலனாய்வுப் பிரிவுகளால் ஏப்ரல் 3ஆம் திகதி வழங்கப்பட்ட எச்சரிக்கைகள் மற்றும் ஏப்ரல் 20ஆம் திகதி தேவாலயங்களை இலக்காகக் கொண்டு தாக்குதல் நடத்தப்படலாம் என கிடைத்த தகவல்கள் ஆகியவையும் முறையாகப் பரிமாறப்படவில்லை என நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

சஹ்ரான் உள்ளிட்ட குழுவினரைப் பாதுகாப்பதற்காக புலனாய்வுப் பிரிவின் குறிப்பிட்ட குழுவொன்று செயற்பட்டதாகவும் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>சாரா ஜாஸ்மின் இந்தியாவுக்கு&nbsp;&nbsp;</h2><p>
2014ஆம் ஆண்டு முதல் அரச புலனாய்வு சேவையின் (SIS) பயங்கரவாத குழுக்கள் தொடர்பான விசாரணைப் பிரிவின் தலைவராகப் பணியாற்றிய காவல்துறை பரிசோதகர் ரஞ்சன் செனரத் பண்டார, சஹ்ரான் மற்றும் அவரது சகோதரர் ரில்வான் உள்ளிட்ட 94 பேரைக் கொண்ட பயங்கரவாத பட்டியலைத் தயாரித்திருந்ததாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6a7ae6d6-2812-4b7c-80df-bb607c3267d5/26-6aa9e20c3b9fa.webp' /></p><p>
</p><p>
தாக்குதல்களுக்கு முன்னர் காத்தான்குடிக்கு சென்ற அவர், சஹ்ரானின் சகோதரர் ரில்வானை சந்தித்து தேநீர் அருந்தி கலந்துரையாடியதாகவும், எனினும் அவரைக் கைது செய்யவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
அந்த சந்தர்ப்பத்தில் ரில்வான் கைது செய்யப்பட்டிருந்தால், பின்னர் இடம்பெற்ற பேரழிவைத் தடுக்க வாய்ப்பு இருந்திருக்கலாம் என மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
</p><p>

தாக்குதலுக்குப் பின்னர் சாய்ந்தமருதில் சஹ்ரானின் உறவினர்கள் 16 பேர் உயிரிழந்தமை, முச்சக்கர வண்டி சாரதி மற்றும் ஊடகவியலாளர் ஒருவர் கொல்லப்பட்டமை, சாரா ஜாஸ்மின் உள்ளிட்ட சிலர் படகுகள் மூலம் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டமை ஆகியவற்றின் பின்னணியிலும் ஆழமான சதித்திட்டம் இருந்ததாக சட்டமா அதிபர் திணைக்களம் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-16T00:21:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹவுதிகளுக்கு எதிராக அமெரிக்கா களமிறங்காது... ட்ரம்ப் கூறிய விளக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/not-having-us-involved-1789518070"></link>
            <id>https://news.lankasri.com/article/not-having-us-involved-1789518070</id>
            <summary type="text">Houthis had called his admnistration and indicated they did not want: ஹவுதிகள் அவரது நிர்வாகத்தைத் தொடர்புகொண்டு, தலையிட வேண்டாம் என்று தெரிவித்திருந்...</summary>
            <content type="html"><![CDATA[<p>Houthis had called his admnistration and indicated they did not want: ஹவுதிகள் அவரது நிர்வாகத்தைத் தொடர்புகொண்டு, தலையிட வேண்டாம் என்று தெரிவித்திருந்தனர்.
</p><p>சவுதி அரேபியா ஹவுதிகளுக்கு எதிராக உதவி கோரியிருந்த நிலையில், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அதற்கு மறுப்பு தெரிவித்திருந்தார்.
இந்த விவகாரத்தில் ட்ரம்ப் விளக்கமளித்துள்ளதுடன், ஹவுதிகள் கேட்டுக்கொண்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/54655d01-201e-4ae2-9db7-1e48ec19d661/26-6aa9e0f85307b.webp' /></p><p> </p><p>மேலும், சவுதி அரேபியாவின் கிழக்கு-மேற்கு குழாய்வழியை முடக்கிய வான்வழித் தாக்குதலுக்கு ஈரானே காரணமாக இருக்கலாம் என்றும் ட்ரம்ப் கூறியுள்ளார்.</p><p> ஹார்முஸ் நீரிணையைத் தவிர்த்து, கச்சா எண்ணெயை ஏற்றுமதி செய்வதற்கான சவுதி அரேபியாவின் முக்கிய வழித்தடங்களில் ஒன்று இந்தக் கிழக்கு-மேற்கு குழாய்வழி. </p><p>முக்கியமான எண்ணெய் குழாய் வழித்தடத்தின் மீதான தாக்குதலுக்கு ஈரான் காரணமா என்று டப்ளினில் செய்தியாளர்கள் கேள்விக்கு, ​​அவர்கள் தான் காரணம் என்று நான் நினைக்கிறேன்; அநேகமாக அவர்களாகத்தான் இருப்பார்கள் என்று ட்ரம்ப் பதிலளித்துள்ளார். </p><p>மட்டுமின்றி, இந்த விவகாரம் தொடர்பில், தாம் ஒரு நல்ல நண்பராகக் கருதும் சவுதி இளவரசர் முகமது பின் சல்மானுடன் பேசியதாகவும் அமெரிக்க ஜனாதிபதி கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7b3b0fb3-a41b-46e5-a67a-c45e11d5b157/26-6aa9e0f90d0d6.webp' /></p><p> </p><p>மேலும், ஏமனில் ஈரானுடன் இணக்கமான போக்கைக் கொண்ட ஹவுதிகள் தமது நிர்வாகத்தைத் தொடர்புகொண்டு, இந்த மோதலில் அமெரிக்கா நேரடியாக ஈடுபடுவதை தாங்கள் விரும்பவில்லை என்று தெரிவித்ததாகவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
ஏற்கனவே, ஹவுதிகளுக்கு எதிராக ட்ரம்பிடம் உதவிக் கோரிய சவுதி பட்டத்து இளவரசருக்கு அவர் கைவிரித்தது சர்வதேச செய்தி நிறுவனங்கள் வெளியிட்டிருந்தன. </p><p>தற்போது ஹவுதிகளின் வேண்டுகோளுக்கு இணங்கவே ட்ரம்ப் அந்த முடிவுக்கு வந்துள்ளது உறுதியாகியுள்ளது. மட்டுமின்றி, நாங்கள் இதில் ஈடுபடாமல் இருப்பதே ஹவுதிகளுக்கு மிகவும் விருப்பமாக உள்ளது என்றும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content>
            <updated>2026-09-16T00:17:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kumar</name>
            </author>
            <title type="text"><![CDATA[குருக்கள்மடம் அகழ்வாய்வுப் பணிகள் - நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/kurukkalmadam-excavation-work-scheduled-1789516511"></link>
            <id>https://tamilwin.com/article/kurukkalmadam-excavation-work-scheduled-1789516511</id>
            <summary type="text">குருக்கள்மடம் பகுதியில் விடுதலைப் புலிகளால் முஸ்லீம் பொதுமக்கள் படுகொலை
செய்யப்பட்டு புதைக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் பகுதியானது மீண்டும் மண்
படிவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>குருக்கள்மடம் பகுதியில் விடுதலைப் புலிகளால் முஸ்லீம் பொதுமக்கள் படுகொலை
செய்யப்பட்டு புதைக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் பகுதியானது மீண்டும் மண்
படிவ மாதிரி பரிசோதனைகளுக்காக அகழ்வாய்வு நடவடிக்கை மேற்கொள்ளவிருந்த நிலையில் மற்றுமொரு திகதிக்கு மாற்றப்பட்டுள்ளது.</p><p>நேற்று
தொடக்கம் ஒரு வாரம் ஒதுக்கப்பட்ட நிலையில் ஆய்வினை மேற்கொள்ளும் நிபுனர்களின்
வேண்டுகோளுக்கமைவாக குறித்த அகழ்வாய்வுப் பணிகள் எதிர்வரும் ஐப்பசி மாதம் 06ம்
திகதிக்கு மாற்றப்பட்டுள்ளது.</p><h2>பாதிக்கப்பட்ட தரப்பினர் சார்பில்&nbsp;</h2><p>
</p><p>
முன்னமே கடந்த பங்குனி 30ஆம் திகதி தொடக்கம் குறித்த பகுதியில் அகழ்வுப் பணிகள்
மேற்கொள்ளப்பட்டு எத்தகு தடயங்களும் கிடைக்கப்பெறாத நிலையில் அப்பணிகள்
இடைநிறுத்தப்பட்டிருந்தன.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bbd446a0-30ae-457c-877f-966b29b6d295/26-6aa9deb893e87.webp' /></p><p>
அதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட தரப்பினர் சார்பில் குறித்த பகுதில் மேலும்
சில இடங்களைச் சுட்டிக்காடி தங்கள் சொந்த செலவில் ஸ்கேன் பரிசோதனை
மேற்கொள்வதற்காக அனுமதி கோரி வழக்குத் தொடரப்பட்டிருந்த நிலையில் நீதிமன்ற
உத்தரவின் அடிப்படையில் குறித்த பகுதி ஸ்கேன் செய்யப்பட்டதுடன். குறித்த
அறிக்கையின் பிரகாரம் நேற்றைய தினம் தொடக்கம் ஒரு வாரத்திற்கு அகழ்வாய்வு
மேற்கொள்வதற்கான நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
</p><p>
அதனடிப்படையில் நேற்றைய தினம் அகழ்வாய்வினை மேற்கொள்ளும் தடயவியல் நிபுனர்களின்
கோரிக்கைக்கு அமைவாக குறித்த அகழ்வாய்வுப் பணிகளை எதிர்வரும் ஐப்பசி மாதம்
06ம் திகதி தொடக்கம் முன்னெடுப்பதற்கு நீதிமன்றம் மீண்டும்
உத்தரவு பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-16T00:13:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[நோர்வேயில் அமைச்சு பதவியை பொறுப்பேற்றுள்ள ஈழத்தமிழ் பெண்! இலங்கை அரசாங்கம் வாழ்த்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/kamzy-gunaratnam-sri-lanka-backround-1789517089"></link>
            <id>https://ibctamil.com/article/kamzy-gunaratnam-sri-lanka-backround-1789517089</id>
            <summary type="text">நோர்வேயின் அமைச்சராக ஈழத்தமிழ் பெண் ஒருவர் பெறுப்பேற்றுள்ள நிலையில்,&amp;nbsp;இலங்கை அரசாங்கம் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது. கம்சி குணரத்னம் என...</summary>
            <content type="html"><![CDATA[<p>நோர்வேயின் அமைச்சராக ஈழத்தமிழ் பெண் ஒருவர் பெறுப்பேற்றுள்ள நிலையில்,&nbsp;இலங்கை அரசாங்கம் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது.</p><p> கம்சி குணரத்னம் என்ற ஈழத்தமிழ் பெண் அந்நாட்டின்&nbsp;புதிய போக்குவரத்து அமைச்சராக பதவியேற்றுள்ளார்.</p><p>இதன்படி வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் தனது சமூக வலைத்தளத்தில் வாழ்த்தினை தெரிவித்துள்ளார்.</p><p></p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Heartiest congratulations to Minister Kamzy Gunaratnam on taking oaths as the Minister of Transport of Norway. A proud moment for Sri Lankan community in Norway given the shared heritage. I wish Minister Gunaratnam every success in leading her Ministry.</p>&mdash; Vijitha Herath (@HMVijithaHerath) <a href="https://x.com/HMVijithaHerath/status/2098377957895225542?ref_src=twsrc%5Etfw">September 11, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><h2>வாழ்த்து செய்தி&nbsp;</h2><p>
</p><p>
“<i>நோர்வேயின் போக்குவரத்து அமைச்சராக பதவியேற்றுள்ள அமைச்சர் கம்சி குணரத்தினத்திற்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். பகிரப்பட்ட பாரம்பரியத்தைக் கொண்ட நோர்வே வாழ் இலங்கைச் சமூகத்தினருக்கு பெருமைக்குரிய தருணம் இதுவாகும். அமைச்சர் கம்சி குணரத்னம் தனது அமைச்சு பதவியை வெற்றிகரமான முன்னெடுக்க வாழ்த்துகிறேன்</i>” என அமைச்சர் தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fba5cd2f-d956-496a-a82a-bcb20db2b816/26-6aa9dd2518e4e.webp' /></p><p>நோர்வே மன்னர் தலைமையில் நடைபெற்ற அரசாங்க சபைக் கூட்டத்தில், 2026 செப்டெம்பர் 11ஆம் திகதி, யாழ்ப்பாணத்தை பின்புலமாக கொண்ட 38 வயதான கம்சி குணரத்னம் போக்குவரத்து அமைச்சராக உத்தியோகபூர்வமாக நியமிக்கப்பட்டதாக நோர்வே அரசாங்கம் அறிவித்துள்ளது.
</p><p>
இதன் மூலம் நோர்வே அரசியலில் முக்கியமான அமைச்சுப் பதவியை வகிக்கும் தமிழ்ப் பின்னணியைக் கொண்ட அரசியல்வாதியாக கம்சி குணரட்ணம் உலகத் தமிழர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
</p><p>
இளம் வயதிலேயே அரசியலில் ஈடுபட்ட கம்சி குணரட்ணம், தொழிலாளர் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தி படிப்படியாக பல்வேறு அரசியல் பொறுப்புகளை வகித்து முன்னேறியுள்ளார். </p><p>19 வயதில் ஒஸ்லோ மாநகர சபைக்கு தெரிவான அவர், பின்னர் தேசிய அரசியலிலும் முக்கிய இடத்தைப் பெற்றார்.
</p><p>
தற்போது நோர்வே அரசாங்கத்தில் போக்குவரத்து அமைச்சராக பொறுப்பேற்றுள்ள கம்சி குணரட்ணம், பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்து, அஞ்சல் சேவைகள் உள்ளிட்ட துறைகள் தொடர்பான கொள்கைகளுக்கு பொறுப்பானவராக செயற்படவுள்ளார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p> 
</p>]]></content>
            <updated>2026-09-16T00:05:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரான் பதற்றம் சவுதியின் முக்கிய எண்ணெய் கப்பல் வழித்தடங்களுக்கு அச்சுறுத்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/crude-tops-109-as-drone-attacks-1789516498"></link>
            <id>https://news.lankasri.com/article/crude-tops-109-as-drone-attacks-1789516498</id>
            <summary type="text">Brent crude tops $109 as latest drone attacks: சமீபத்திய ட்ரோன் தாக்குதல்களால் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 109 டாலரைக் கடந்தது.
செவ்வாய்க்கிழமை வர்த்...</summary>
            <content type="html"><![CDATA[<p>Brent crude tops $109 as latest drone attacks: சமீபத்திய ட்ரோன் தாக்குதல்களால் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 109 டாலரைக் கடந்தது.</p><p>
செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் கச்சா எண்ணெய் விலைகள் மீண்டும் உயரத் தொடங்கின; இதில் பிரெண்ட் கச்சா எண்ணெய் எதிர்கால ஒப்பந்தங்களின் விலை பீப்பாய்க்கு 3.7 டொலர் அதிகரித்து 109.39 டொலரை எட்டியது.</p><h2>மூட வேண்டிய கட்டாயம்</h2><p>
</p><p>ஹார்முஸ் நீரிணையைத் தவிர்த்துச் செல்லும் ஒரு முக்கிய குழாய் வழித்தடத்தை சவுதி அரேபியா கடந்த வாரம் மூடியதைத் தொடர்ந்து, உலகளாவிய கச்சா எண்ணெய் விநியோகத்தில் ஏற்படக்கூடிய தாக்கத்தை வர்த்தகர்கள் மதிப்பிட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/25365fbd-9dd5-415c-9e9a-10889a73b7d2/26-6aa9dad4867c8.webp' /></p><p> </p><p>ஈராக்கிலிருந்து ஏவப்பட்ட ட்ரோன்கள் வியாழக்கிழமையன்று 'கிழக்கு-மேற்கு' குழாய் வழித்தடத்தைச் சேதப்படுத்தியதால், சவுதி அரசாங்கம் அந்த முக்கியமான கச்சா எண்ணெய் விநியோகப் பாதையை மூட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. </p><p>பழுதுபார்க்கும் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், அந்த எரிவாயுக் குழாய் பல வாரங்களுக்குப் பெரும்பாலும் பயன்பாட்டில் இருக்காது என்றே கசிந்துள்ள தகவலின் அடிப்படையில் 'அசோசியேட்டட் பிரஸ்' செய்தி வெளியிட்டுள்ளது.</p><p></p><p>
</p><p>இந்தக் குழாய்வழி, செங்கடலுக்கு எண்ணெய் ஏற்றுமதிகளைக் கொண்டு செல்ல சவுதி அரேபியாவுக்கு ஒரு மாற்று வழியை வழங்குகிறது. இதன்மூலம், ஈரானியத் தாக்குதல்களால் எண்ணெய் கப்பல்களின் போக்குவரத்து தடைபட்டிருந்த பாரசீக வளைகுடா மற்றும் ஹார்முஸ் நீரிணையை அது கடந்து செல்ல முடிகிறது. </p><p>இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவால் முன்னெடுக்கப்பட்ட போரை அடுத்து, ஹார்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்து முடக்கப்பட்டுள்ளது. அப்போதிருந்து, கச்சா எண்ணெய் ஏற்றுமதிக்குச் செங்கடலையும் ஏடன் வளைகுடாவையும் இணைக்கும் பாப்-எல்-மண்டேப் நீரிணையைச் சவூதி அரேபியா அதிகளவில் நம்பியுள்ளது. </p><p>போர் தொடங்கிய பிறகு, சவுதி அரேபியாவின் எண்ணெய் ஏற்றுமதியில் பெரும்பகுதியை கிழக்கு-மேற்கு குழாய்வழி முன்னெடுத்துள்ளது. தற்போது குழாய் வழித்தடத்தில் ஏற்பட்டுள்ள இந்தத் தடை, கச்சா எண்ணெயை சர்வதேசச் சந்தைகளுக்குக் கொண்டு செல்வதற்கான சவுதி அரேபியாவின் முயற்சிகளை மேலும் சிக்கலாக்கக்கூடும்.</p><h2>முழுமையாக நின்றால்</h2><p> </p><p>ஜூலை மாத இறுதியில் பாப் அல்-மண்டேப் நீரிணையில் ஹவுதிகள் தாக்குதல் தொடங்கியபோது, ​​யான்பு (Yanbu) துறைமுகத்திலிருந்து புறப்பட்ட பெரும்பாலான எண்ணெய் கப்பல்கள் செங்கடலில் வடக்கு நோக்கித் திரும்பி மத்தியதரைக் கடலை நோக்கின; அவை தங்கள் சரக்குகளை சூயஸ் கால்வாய் அல்லது எகிப்தியக் குழாய் வழித்தடம் வழியாக அனுப்பின.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9a61c07b-6e6e-4465-8a13-a82c9f5b1d38/26-6aa9dad556c5a.webp' /></p><p> </p><p>ஆகஸ்ட் மாத இறுதி முதல், இந்த எரிபொருள் குழாய் வழித்தடம் நாளொன்றுக்கு சராசரியாக 2.6 மில்லியன் முதல் 4 மில்லியன் பீப்பாய்கள் வரையிலான அளவைக் கொண்டு செல்கிறது; இதன் ஓட்டம் முழுமையாக நின்றால், அந்த அளவு எண்ணெய் சந்தைக்குக் கிடைக்காமல் போகக்கூடும். </p><p>குழாய்வழித் தாக்குதல் பிராந்திய பதட்டங்களையும் அதிகரித்துள்ளது. ஹார்முஸ் நீரிணையின் நிலைமை குறித்து விவாதிப்பதற்காக, ஈரான் மற்றும் வளைகுடா அரபு நாடுகளுக்கு இடையே திங்கட்கிழமை ஓமானில் நடைபெறவிருந்த தூதரக சந்திப்பு, இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து திடீரென ஒத்திவைக்கப்பட்டது.</p><p></p><p> </p><p>ஒரு மாதத்திற்கும் மேலாக, ஹவுதிகள் செங்கடலில் உள்ள சவுதி எண்ணெய் உள்கட்டமைப்பு மற்றும் கப்பல் போக்குவரத்து மீது தாக்குதல் நடத்தி, உலகளாவிய எண்ணெய் விலைகள் மீதான அழுத்தத்தை அதிகரித்து, அமெரிக்காவுடனான போரில் ஈரானின் செல்வாக்கை வலுப்படுத்தி வருகின்றனர். </p><p>ஹவுதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள விமான நிலையம் ஒன்றின் மீது சவுதி அரேபியா முன்னெடுத்த குண்டு வீச்சே முதன்மை காரணமாகக் கூறப்படுகிறது.</p><p> இந்த நிலையில், ஏமனின் மேற்கு கடற்கரையில் உள்ள மோச்சா துறைமுக நகரத்தைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து, பாப்-எல்-மண்டேப் நீரிணையில் அமைந்துள்ள முக்கியத்துவம் வாய்ந்த பெரிம் தீவையும் ஹவுதிகள் கைப்பற்றியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன; இது உலகளாவிய எண்ணெய் போக்குவரத்திற்கான மற்றொரு முக்கிய வழித்தடத்தின் பாதுகாப்பு குறித்த கவலைகளை அதிகரித்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-15T23:51:45+00:00</updated>
        </entry>
    </feed>
