<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-08-26T12:38:37+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாளத்தில் திடீர் வெள்ளம் - சுற்றுலா சென்ற 57 தமிழர்களின் நிலை என்ன?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/57-tamilnadu-tourists-stuck-in-nepal-flood-1787747810"></link>
            <id>https://news.lankasri.com/article/57-tamilnadu-tourists-stuck-in-nepal-flood-1787747810</id>
            <summary type="text">57 tamilnadu tourists stuck in nepal flood: நேபாளத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் அங்கு சுற்றுலா சென்ற 57 தமிழர்கள் சிக்கியுள்ளனர். ...</summary>
            <content type="html"><![CDATA[<p>57 tamilnadu tourists stuck in nepal flood: நேபாளத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் அங்கு சுற்றுலா சென்ற 57 தமிழர்கள் சிக்கியுள்ளனர். </p><h3>

நேபாளத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு</h3><p>

நேபாளத்தின் கோடாரி பகுதியில் 4.4 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பனிப்பாறை உடைந்து கடும் 
 வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு 40க்கும் மேற்பட்ட கிராமங்களில் வெள்ளம் புகுந்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3449d06e-bb9f-43b0-aaf8-bcfc6a232bb5/26-6a8edde35c47c.webp' /></p><p>

வெள்ளத்தில் பாலங்கள், வாகனங்கள் அடித்து செல்லப்படுவதும், வீடுகள் மூழ்கடிக்கப்படும் வீடியோக்களும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><p> 

நேபாளத்திற்கு சென்றுள்ள 100க்கும் மேற்பட்ட இந்தியாவை சேர்ந்த சுற்றுலா பயணிகள் உட்பட 400க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் மாயமாகியுள்ளதாக நேபாள அரசு தெரிவித்துள்ளது.&nbsp;</p><p></p><h3> 

நேபாளத்தில் சிக்கிய 57 தமிழர்கள்</h3><p> 

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 57 பேர் கும்பகோணத்தை சேர்ந்த சூப்பர் யாத்ரா டிராவல்ஸ் என்ற சுற்றுலா நிறுவனம் மூலம், நேபாளத்திற்கு சென்றுள்ளனர். </p><p>

அங்கு அவர்கள் 3 பேருந்துகளில் பயணித்துள்ள நிலையில், ஒரு வாகனத்தில் பயணித்த 20 பேர் வெள்ளத்தில் சிக்காமல் அங்குள்ள ராணுவ முகாமில் பாதுகாப்பாக தஞ்சமடைந்துள்ளனர்.&nbsp;</p><p></p><p>

மீதமுள்ள 2 வாகனங்களில் சென்ற 37 தமிழர்களின் நிலை குறித்து தற்போது வரை தகவல் வெளியாகவில்லை. </p><p>

வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை இந்தியா தூதரகம் மூலம் நேபாளத்தில் சிக்கியவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.&nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-26T12:38:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெள்ளத்தில் மூழ்கும் நேபாளம் - சீனா: உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/flooding-in-nepal-china-1787747463"></link>
            <id>https://tamilwin.com/article/flooding-in-nepal-china-1787747463</id>
            <summary type="text">நேபாளம் மற்றும் சீனாவின் திபெத் எல்லைப் பகுதிகளில் ஏற்பட்ட
கடுமையான திடீர் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு காரணமாக
ஒன்பது பேர் உயிரிழந்துள்ளதுடன்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நேபாளம் மற்றும் சீனாவின் திபெத் எல்லைப் பகுதிகளில் ஏற்பட்ட
கடுமையான திடீர் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு காரணமாக
ஒன்பது பேர் உயிரிழந்துள்ளதுடன், பல கிராமங்கள், பாலங்கள் மற்றும் மின்
உற்பத்தி நிலையங்கள் கடுமையாகச் சேதமடைந்துள்ளன.
</p><p>
இந்த சம்பவம் இன்று(26.08.2026) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> 

​போடே கோஷி ஆற்றில் ஏற்பட்ட இந்த வெள்ளப்பெருக்கினால் நேபாளத்தின் ரசுவா
மாவட்டத்தில் வீடுகள், பாலங்கள் மற்றும் வாகனங்கள் அடித்துச்
செல்லப்பட்டுள்ளன.
</p><p>
ஆற்று நீர்மட்டம் வெகுவாக உயர்ந்துள்ளதால் மீட்புப் பணிகளுக்காக அனுப்பப்பட்ட
ஹெலிகொப்டர்களால் தரையிறங்க முடியாத நிலை காணப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/83af8cf3-ee31-4c02-a81e-d2a8cc505139/26-6a8edce5afdc7.webp' /></p><p> </p><p>பலரைக் காணவில்லை என்பதால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.</p><h2>

மீட்பு பணியை தீவிரப்படுத்தும் சீன அரசு</h2><p>இதேவேளை, எல்லையோரப் பகுதியான கியிரோங் எல்லைக் கடவையில் ஏற்பட்ட நிலச்சரிவு
காரணமாகப் போக்குவரத்து, தொலைத்தொடர்பு மற்றும் மின்சார இணைப்புகள் முற்றாகத்
துண்டிக்கப்பட்டுள்ளதாகச் சீன ஊடகங்கள் தெரிவித்துள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bc9f3a43-d6f7-42b5-b236-993cf246edb4/26-6a8edce675589.webp' /></p><p>

காணாமல் போனவர்களை மீட்கும் பணிகளைத் தீவிரப்படுத்துமாறு சீன ஜனாதிபதி ஷீ
ஜின்பிங் உத்தரவிட்டுள்ளார்.

​</p><p>இந்த திடீர் வெள்ளப் பெருக்கினால் நேபாளத்தின் நீர்மின் உற்பத்தி கடுமையாகப்
பாதிக்கப்பட்டுள்ளதுடன், நாட்டின் மொத்த நீர்மின் உற்பத்தியில் 12
சதவீதத்திற்கும் அதிகமான உற்பத்தி முடங்கியுள்ளது.
</p><p>
கரையோரப் பகுதிகளில் வாழும் மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு
நேபாளப் பிரதமர் பாலேந்திர ஷா அறிவுறுத்தியுள்ளார்.</p><p></p><p></p><p><b>YOU MAY LIKE THIS VIDEO..</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/gpoTsnvUrPA" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-26T12:32:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[அண்ணனுக்கு பிகினில தான் ராக்கி கட்டுவியான்னு அசிங்கப்படுத்திய கங்கனா!! க்ரித்தி சனோன் பதிலடி...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/kriti-sanons-controversial-raksha-bandhan-ad-1787745627"></link>
            <id>https://viduppu.com/article/kriti-sanons-controversial-raksha-bandhan-ad-1787745627</id>
            <summary type="text">க்ரித்தி சனோன்பாலிவுட்டில் டாப் நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை க்ரித்தி சனோன், ரக்ஷா பந்தன் பண்டிகையை முன்னிட்டு, நகை பிராண்ட் விளம்பரத்தில் அண்ணன் தங...</summary>
            <content type="html"><![CDATA[<h2>க்ரித்தி சனோன்</h2><p>பாலிவுட்டில் டாப் நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை க்ரித்தி சனோன், ரக்ஷா பந்தன் பண்டிகையை முன்னிட்டு, நகை பிராண்ட் விளம்பரத்தில் அண்ணன் தங்கை பாசத்தை கொண்டாடும் ரக்ஷா பந்தன் விழாவில் நடிகை க்ரித்தி சனோன், பிளவுஸ், ஸ்கர்ட் அனிந்து நடித்திருக்கிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/752d8e79-6cef-4fd7-a7f8-b475134e312d/26-6a8ed55fbe08d.webp' /></p><p> </p><p>அதுமட்டுமில்லாமல், அந்த விளம்பரத்தில் நாய் ஒன்றுக்கும் ராக்கி கட்டும் காட்சி அமைந்தது. இந்த விளம்பரத்தை பார்த்த நெட்டிசன்கள், இந்த பண்டிகைகளையும் கலாச்சாரத்தையும் கொச்சைப்படுத்தும் விதமாக அரைகுறை ஆடையில் ரக்ஷா பந்தன் கொண்டாடுவதா என்று விமர்சித்து வந்தனர். </p><p>இது பலருக்கு அதிர்ச்சி கொடுத்து வந்த நிலையில், தன்னுடைய இன்ஸாகிராம் பக்கத்தில் நடிகை கங்கனா ரனாவத் பெயர் குறிப்பிடாமல் விமர்சித்துள்ளார். </p><h2>கங்கனா</h2><p>அதில், அந்த விளம்பரத்தை சுட்டிக்காட்டி, பெண்களாக பிறந்தது, இரு பொற்காலம். நம்முடைய அலமாரியில் காக்டெய்ல் டிரஸ்கள் முதல் லெகங்கா சோளி வரை, ஜீன்ஸ், புடவை, பிகினி என்று இருக்கும். இவ்வளவு ஆடைகள் இருந்தும், ஒரு பெண் தன்னுடைய அண்ணனுக்கு பிகினி, உள்ளாடையுடன் ரக்ஷா பந்தன் கயிறு கட்டுவாரா? உங்களுடைய ஆடை தேர்வுகள் எங்கே போனது? என்று கேள்வி எழுப்பி, அந்த விளம்பரத்தை வேண்டுமென்றே அருவருப்பாக எடுக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e0d85d6e-1f07-4995-9cef-e558cd06431e/26-6a8ed56071032.webp' /></p><p> </p><h2>பதிலடி.</h2><p>அதற்கு நடிகை க்ரித்தி சனோன், ரக்ஷா பந்தன் என்பது பாதுகாப்பிற்கான ஒரு பிணைப்பு, நானும் என் சகோதரியும் ஒருவருக்கொருவர் எந்த வகையிலும் குறைவாக பாதுகாத்துக் கொள்ள முடியாது என்பதை நாங்கள் அறிவோம். ஒருவருக்கு ஒருவர் ஆரோக்கியம், மகிழ்ச்சி, நீண்ட ஆயுளுக்காக நாங்கள் பிரச்சனை செய்கிறோம்.</p><p> எங்களை பொறுத்தவரை, இந்த பிரச்சனையும் வாக்குறுதியும் எங்கள் நாய்களுக்கும் நீட்டிக்கப்படுகிறது. மேலும் பெண்கள் என்ன ஆடையணிய வேண்டும் என்று சொல்வதை நாம் எப்போது நிறுத்தப் போகிறோம், இனக்குழுவின் நாகரீகம் பல ஆண்டுகளாக வளர்ச்சியடைந்துள்ளது. </p><p>ஆனால் இன்னும் ஒரு பெண்ணின் கலாச்சாரத்திற்கான மரியாதை அவளது உடைகளை வைத்தே அளவிடப்படுகிறது. கலாச்சாரமும் பாரம்பரியமும் அவளது இதயத்தில் இருக்கிறதே தவிர, அவளது கழுத்தை சுற்றிலும் அணிந்துள்ள ஆடையில் இல்லை என்று கூறி பதிலடி கொடுத்திருக்கிறார். இதற்கு ராகுல் காந்தி உட்பட பலரும் க்ரித்தி சனோனுக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.</p>]]></content>
            <updated>2026-08-26T12:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கோபாலா நீ வாடா...யாழில் மனதை உருக்கும் ஒரு தாயின் பிரார்த்தனை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/a-heart-rending-prayer-of-a-mother-in-jaffna-1787736708"></link>
            <id>https://jvpnews.com/article/a-heart-rending-prayer-of-a-mother-in-jaffna-1787736708</id>
            <summary type="text">&amp;nbsp; யாழ்.மாவட்ட செயலக கேட்போர் கூட மண்டப வாயிலில் காணப்பட்ட, பதாகையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தமது பிரார்த்தனையை எழுதி காட்ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; யாழ்.மாவட்ட செயலக கேட்போர் கூட மண்டப வாயிலில் காணப்பட்ட, பதாகையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தமது பிரார்த்தனையை எழுதி காட்சிப்படுத்தியுள்ளனர்.
</p><p>


சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு, காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வு நேற்றைய தினம் யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4f9f0ba6-6674-4a99-9240-5b645b15db4a/26-6a8eb285ae7fd.webp' /></p><p></p><h2>&nbsp;இழப்பீடும் வேண்டாம், மரண சான்றிதழும் வேண்டாம்</h2><p>



அதில் கலந்து கொண்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் மண்டப வாயிலில் உள்ள பதாகையில் தமது பிரார்த்தனை துண்டு சீட்டுக்களை இவ்வாறு காட்சிப்படுத்தியுள்ளனர்.</p><p></p><p>ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம். இராணுவத்தினரின் கையில் ஒப்படைக்கப்பட்ட எமது உறவுகளுக்கு என்ன நடந்தது? என கோரி வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் ஏற்பாட்டில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.</p><p>


காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின்(ஓஎம்பி) ஏற்பாட்டில் செவ்வாய்க்கிழமை (25) யாழ்ப்பாணம் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற காணாமல் போனோருக்கான சர்வதேச தின நிகழ்வை கண்டித்து வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் ஏற்பாட்டில் மாவட்ட செயலகம் முன்பாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.</p><p></p><p>
</p><p>
உள்நாட்டு பொறிமுறையை வலுப்படுத்தும் காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் இழப்பீடும் வேண்டாம், மரண சான்றிதழும் வேண்டாம் என்பதை வலியுறுத்தியே போராட்டம் நடைபெற்றது.
</p><p>
இதேவேளை சர்வதேச காணாமல் போனோர் தினத்தை முன்னிட்டு, வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும் 30ம் திகதி சர்வதேச மாநாடு நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-08-26T12:24:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ashik</name>
            </author>
            <title type="text"><![CDATA[கணவருடன் மீண்டும் சேர்ந்து வாழ முடிவு செய்த தாய்க்கு நேர்ந்த கதி - தமிழர் பகுதியில் பெரும் துயரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/mother-who-died-in-thalaimannar-1787746911"></link>
            <id>https://tamilwin.com/article/mother-who-died-in-thalaimannar-1787746911</id>
            <summary type="text">தலைமன்னார் ஸ்ரேசன் பகுதியில் கணவன் - மனைவிக்கு இடையே ஏற்பட்ட மோதலில், மனைவி கத்திக்குத்துக்கு இலக்காகி பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம்...</summary>
            <content type="html"><![CDATA[<p>தலைமன்னார் ஸ்ரேசன் பகுதியில் கணவன் - மனைவிக்கு இடையே ஏற்பட்ட மோதலில், மனைவி கத்திக்குத்துக்கு இலக்காகி பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
</p><p>
இந்தச் சம்பவம் இன்று(26.08.2026) காலை 9 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><h2>
குடும்ப பிரச்சினையால் நேர்ந்த கதி</h2><p>
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
</p><p>
கணவன் - மனைவி இருவரும் சில காலமாகப் பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், சில மாதங்களுக்கு முன்னர் மீண்டும் ஒன்றிணைந்து வாழ முடிவு செய்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8d92d73e-f2ac-44b8-bed6-b8795250c854/26-6a8edad4e6560.webp' /></p><p> </p><p>

இதையடுத்து, தங்களது இரண்டு பிள்ளைகளுடன் இருவரும் ஒன்றாக வசித்து வந்துள்ளனர்.

இந்நிலையில், இன்று காலை கணவரால் கத்தியால் குத்தப்பட்டதில் இரண்டு பிள்ளைகளின் தாயான குறித்த பெண் படுகாயமடைந்துள்ளார்.
</p><p>
சம்பவத்தைத் தொடர்ந்து, படுகாயமடைந்த பெண் உடனடியாக தலைமன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
</p><h2>
கணவர் கைது</h2><p>
உயிரிழந்தவர் தலைமன்னார் பியர் பகுதியைச் சேர்ந்த கோகுலன் சோனியா (28 வயது) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

மனைவியை கத்தியால் குத்திக் கொலை செய்ததாகக் கூறப்படும் 32 வயதுடைய கணவர், தலைமன்னார் ஸ்ரேசன் பகுதியில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cdd61d6f-58fa-46cf-8a5d-0e863c9f732f/26-6a8edad5d5449.webp' /></p><p>

இதையடுத்து, உயிரிழந்த பெண்ணின் சடலம் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் பிரேத பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது.</p><p>

சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நபரிடம் தலைமன்னார் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-26T12:23:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாளத்தில் நூற்றுக்கணக்கான சுற்றுலாப்பயணிகளை அள்ளுண்டு சென்ற வெள்ளம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/floods-hit-hundreds-of-touristsin-nepal-105indians-1787746390"></link>
            <id>https://ibctamil.com/article/floods-hit-hundreds-of-touristsin-nepal-105indians-1787746390</id>
            <summary type="text">நேபாளத்தின் ராசுவா பகுதியில் உள்ள போதே கோஷி (Bhote Koshi) ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால் குறைந்தது 384 சுற்றுலாப் பயணிகள்&amp;nbsp; காணாமல் போயு...</summary>
            <content type="html"><![CDATA[<p>நேபாளத்தின் ராசுவா பகுதியில் உள்ள போதே கோஷி (Bhote Koshi) ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால் குறைந்தது 384 சுற்றுலாப் பயணிகள்&nbsp; காணாமல் போயுள்ளதாக நேபாள சுற்றுலா வாரியம் தெரிவித்துள்ளது.</p><p> இவர்களில் 291 பேர் வெளிநாட்டினர் என்றும் 93 பேர் நேபாள குடிமக்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> இந்தப் பட்டியல் முதற்கட்டமானது என்றும், காணாமல் போனவர்களின் நிலை குறித்து அதிகாரிகள் தொடர்ந்து சரிபார்த்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>105 பேர் இந்தியர்கள்</h2><p>காணாமல் போன வெளிநாட்டினரில் 105 பேர் இந்தியர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/64e8111e-d2a0-468c-9827-e32b35156386/26-6a8edab13b7c3.webp' /></p><p>மேலும் அமெரிக்கா, இங்கிலாந்து, அஸ்திரேலியா, மலேசியா, தென் ஆப்பிரிக்கா மற்றும் நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்களும் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். </p><p>மேலும், 37 பேர் வெளிநாடு வாழ் இந்தியர்கள் (NRI) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.</p><p>இன்று காலை சுமார் 9 மணியளவில் போதே கோஷி ஆற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.</p><p></p><h2>ஆரம்பகட்ட தகவல்கள்&nbsp;</h2><p>வெள்ளநீர் திபெத் பக்கத்திலிருந்து வந்ததாக ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவித்தாலும், வெள்ளத்திற்கான சரியான காரணம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. </p><p>மேலும், பனிப்பாறை மற்றும் பாறைச் சரிவு உள்ளிட்ட காரணங்கள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.</p><p>இந்த வெள்ளத்தால் ராசுவா மாவட்டத்தில் உள்ள திமுரே மற்றும் சியாஃப்ருபேசி பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், வீடுகள், சாலைகள், பாலங்கள், வாகனங்கள் மற்றும் பல்வேறு உள்கட்டமைப்புகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாகவும் நீர்மின் திட்டங்களும் சேதமடைந்துள்ளன எனவும் கூறப்படுகிறது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-26T12:23:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாளத்தை உலுக்கும் பேரழிவு; 380 சுற்றுலா பயணிகள் மாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/devastating-floods-in-nepal-380-tourists-missing-1787747125"></link>
            <id>https://jvpnews.com/article/devastating-floods-in-nepal-380-tourists-missing-1787747125</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;நேபாளத்தின் வடக்கு ரசுவா பகுதியில் திடீரென ஏற்பட்ட வௌ்ளப்பெருக்கு காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது. 

நேபாளத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;நேபாளத்தின் வடக்கு ரசுவா பகுதியில் திடீரென ஏற்பட்ட வௌ்ளப்பெருக்கு காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது. 

நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கில் சிக்கி பலர் உயிரிழந்த நிலையில், 291 வெளிநாட்டவர் உள்பட 384 சுற்றுலாப் பயணிகளைக் காணவில்லை என்று நேபாள சுற்றுலாத் துறை தெரிவித்துள்ளது.&nbsp;</p><p>&nbsp; திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி காணாமல்போனவர்களில் 291 வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளும் அடங்குவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
</p><p>

இப்பேரழிவில் இதுவரை 17 பேர் உயிரிழந்துள்ளதுடன், பெருமளவிலானோர் காணாமல்போயுள்ளனர்.

சீனா மற்றும் திபெத் எல்லைக்கு அருகில் அமைந்துள்ள நேபாளத்தின் 'ரசுவா' பகுதியிலேயே இத்திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fd774e3a-47b4-4cd6-9c7b-1db61c69bf2a/26-6a8edb374426d.webp' /></p><h2>ஆற்றில் பனிப்பாறைகள் திடீரென உருகியதால்&nbsp;வெள்ளப்பெருக்கு</h2><p>
</p><p>
எல்லைப் பகுதிக்கு அருகில் பாயும் 'போத்கோஷி' ஆற்றில் பனிப்பாறைகள் திடீரென உருகியதால், அதிக அளவிலான நீர் ஒரே நேரத்தில் பெருக்கெடுத்து ஓடியதே இதற்குக் காரணமாகும். </p><p>அப்பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கமே பனிப்பாறைகள் திடீரென உருகுவதற்குக் காரணம் என நம்பப்படுகிறது.
</p><p></p><p>
மேலும், வெள்ளப்பெருக்கு காரணமாக போத்கோஷி ஆற்றை ஒட்டிய பிரதான நெடுஞ்சாலை முற்றாக நீரில் மூழ்கியுள்ளதுடன், சீன எல்லையில் அமைந்திருந்த சீன அரசுக்குச் சொந்தமான கட்டடம் ஒன்றும் முற்றாக அழிவடைந்துள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-26T12:22:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[புடின் ஐரோப்பா மீது தாக்குதல் நடத்தத் தயாராகலாம்: சிஐஏ தலைவர் விடுத்த எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/cia-chief-warning-to-putin-revealed-1787746181"></link>
            <id>https://news.lankasri.com/article/cia-chief-warning-to-putin-revealed-1787746181</id>
            <summary type="text">CIA Chief&#039;s mystery trip to moscow: ரஷ்யா ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு CIA தலைவர் எச்சரிக்கை விடுத்தது தெரிய வந்துள்ளது.

ஐரோப்பாவுடன் விளாடிமிர் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>CIA Chief's mystery trip to moscow: ரஷ்யா ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு CIA தலைவர் எச்சரிக்கை விடுத்தது தெரிய வந்துள்ளது.</p><p>

ஐரோப்பாவுடன் விளாடிமிர் புடின் போரைத் தொடங்கக்கூடும் என்ற அச்சத்திற்கு இடையே, CIA தலைவர் அவருக்கு விடுத்த எச்சரிக்கை வெளியாகியுள்ளது.&nbsp;</p><h2>ஐரோப்பாவுடன் போரைத் தொடங்கக்கூடும்</h2><p>
ரஷ்யா ஜனாதிபதி விளாடிமிர் புடின் (Vladimir Putin) ஐரோப்பாவுடன் போரைத் தொடங்கக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e2a46e7c-c43c-4b3c-9b85-6fed16685b63/26-6a8ed843d42d3.webp' />&nbsp;</p><p></p><p>

இந்த சூழலில், அமெரிக்காவின் CIA இயக்குநர் ஜான் ராட்க்ளிஃப் (John Ratcliffe) ரஷ்யாவிற்கு திடீர் பயணம் மேற்கொண்டார்.</p><p> 

அவர் புடினிடம், அணு ஆயுதத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ அல்லது உக்ரைனின் மேற்கத்திய நட்பு நாடுகளை குறிவைப்பதன் மூலமோ உக்ரைன் மோதலை தீவிரப்படுத்த வேண்டாம்; அதை செய்யாதீர்கள் என்று எச்சரித்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. </p><p>

உக்ரேனிய போர்க்களத்தில் ரஷ்யாவின் நடவடிக்கைகள் மீண்டும் தேக்கமடைந்த நிலையில் அவர்கள் உடனடியாகவும், தீவிரமாகவும் செயல்படத் தயாராக உள்ளனர் என்ற அமெரிக்க உளவுத்துறையின் தகவலின் அடிப்படையிலேயே அவர் இவ்வாறு கூறியதாக தெரிய வந்துள்ளது.&nbsp; &nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3637dfe7-b47c-42bf-b39d-2dfb20cb9c28/26-6a8ed7886fd12.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-26T12:10:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Erimalai</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பிலிருந்து புறப்பட்ட தொடருந்தில் மோதிய கார் - 17 வயது இளம்பெண்ணுக்கு நேர்ந்த சோகம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/car-collides-with-train-departing-from-colombo-1787745974"></link>
            <id>https://tamilwin.com/article/car-collides-with-train-departing-from-colombo-1787745974</id>
            <summary type="text">கிளிநொச்சி - யாழ் பல்கலைக் கழக வீதியில் உள்ள தொடருந்து கடவையில் ஏற்பட்ட விபத்தில் இளம் வயது பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து இன்று(26.08....</summary>
            <content type="html"><![CDATA[<p>கிளிநொச்சி - யாழ் பல்கலைக் கழக வீதியில் உள்ள தொடருந்து கடவையில் ஏற்பட்ட விபத்தில் இளம் வயது பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
</p><p>
இந்த விபத்து இன்று(26.08.2026) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>


கொழும்பிலிருந்து யாழ் நோக்கி பயணித்த தொடருந்து, தொடருந்துக் கடவையை கடக்க முற்பட்ட போது காரை மோதியுள்ளது. </p><h2>

17 வயது இளம்பெண் உயிரிழப்பு</h2><p>
இதன்போது, காரில் உள்ளே இருந்த 17 வயது இளம் பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c30063af-374c-4f21-b842-f9d42845de55/26-6a8ed6f1d987d.webp' /></p><p> </p><p>

அத்துடன், இருவர் படுகாயமடைந்த நிலையில், கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
</p><p>
இந்த நிலையில், விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-26T12:07:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[Computer keyboardஇல் எழுத்துக்கள் ஏன் வரிசைப்படி இல்லை? சுவாரஸ்ய ரகசியம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/why-computer-keys-are-not-in-alphabetical-order-1787739454"></link>
            <id>https://manithan.com/article/why-computer-keys-are-not-in-alphabetical-order-1787739454</id>
            <summary type="text">why computer keys are not in alphabetical order : நாம் தினமும் கம்ப்யூட்டர் மற்றும் மொபைல் கீபோர்டுகளைப் பயன்படுத்தி பல வார்த்தைகளைத் தட்டச்சு செய்கிற...</summary>
            <content type="html"><![CDATA[<p>why computer keys are not in alphabetical order : நாம் தினமும் கம்ப்யூட்டர் மற்றும் மொபைல் கீபோர்டுகளைப் பயன்படுத்தி பல வார்த்தைகளைத் தட்டச்சு செய்கிறோம். </p><p>ஆனால், அதிலுள்ள எழுத்துக்கள் ஏன் A-B-C-D என அகரவரிசையில் இல்லாமல்&nbsp; ஏன் Q-W-E-R-T என்ற வரிசையில் அமைந்துள்ளன என்று எப்போதாவது சிந்தித்திருக்கிறீர்களா? அது குறித்த சுவாரஸ்யமான வரலாறு குறுத்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aaa9fef4-cf3b-4332-a002-7cd761c392b3/26-6a8ec7debafa1.webp' /></p><p></p><h2>என்ன காரணம்?&nbsp;</h2><p>
நாம் இன்று பரவலாகப் பயன்படுத்தும் இந்த அமைப்பு QWERTY Keyboard Layout எனப்படுகிறது. இதன் வரலாறு 1870-களில் கிறிஸ்டோபர் லாதம் ஷோல்ஸ் உருவாக்கிய தட்டச்சு இயந்திரத்திலிருந்து தொடங்குகிறது. </p><p>ஆரம்பத்தில் எழுத்துக்கள் அகரவரிசைப்படி அமைக்கப்பட்டிருந்தன. ஆனால் வேகமாகத் தட்டச்சு செய்யும்போது, அடிக்கடி பயன்படுத்தப்படும் எழுத்துக்களின் இயந்திரவியல் கைகள் ஒன்றுடன் ஒன்று மோதி தட்டச்சு இயந்திரம் சிக்கிக் கொள்ளும் பிரச்சினை ஏற்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f7954479-f245-4d82-93fb-4f997c874008/26-6a8ec7df6fd5d.webp' /></p><p>
</p><p>
இந்தப் பிரச்சினையைத் தவிர்க்க, ஷோல்ஸ் மற்றும் அவரது சகாக்கள் எழுத்துக்களின் அமைப்பை மாற்றி, அடிக்கடி பயன்படுத்தப்படும் எழுத்துக்கள் ஒன்றுக்கொன்று தொலைவில் இருக்கும் வகையில் வடிவமைத்தனர்.இதன் விளைவாக உருவான QWERTY அமைப்பு 1878-ல் காப்புரிமை பெற்றது.</p><p> அதன் பெயர், கீபோர்டின் மேல் வரிசையில் உள்ள முதல் ஆறு எழுத்துகளான Q-W-E-R-T-Y என்பதிலிருந்து வந்தது.

பின்னர் கணினி கீபோர்டுகள் அறிமுகமானபோதும், மக்கள் ஏற்கனவே QWERTY அமைப்புக்கு பழகியிருந்ததால் அதே அமைப்பு தொடர்ந்து பயன்படுத்தப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/40dfe9f7-1f37-4442-b2cc-a9ede18b0781/26-6a8ec7e024e7d.webp' /></p><p> </p><p>இதனுடன் Function Keys, Arrow Keys, Number Keys உள்ளிட்ட கூடுதல் விசைகளும் சேர்க்கப்பட்டன.

QWERTY மட்டுமே உள்ள ஒரே கீபோர்டு அமைப்பு அல்ல. </p><p>Dvorak மற்றும் Colemak போன்ற மாற்று அமைப்புகளும் உருவாக்கப்பட்டுள்ளன.அவை அதிக செயல்திறனை நோக்கமாகக் கொண்டிருந்தாலும், QWERTY ஏற்கனவே பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வந்ததால் அவற்றுக்கு அதே அளவிலான வரவேற்பு கிடைக்கவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2f0f1839-88ee-4895-b132-8e6519e3bbed/26-6a8ec7e0cb53f.webp' /></p><p></p><p>
இதனால், இன்று நாம் கம்ப்யூட்டர் மற்றும் மொபைல் கீபோர்டுகளில் பயன்படுத்தும் QWERTY அமைப்பு, வெறும் எழுத்துக்களை ஒழுங்கற்ற முறையில் அடுக்கியது அல்ல, மாறாக தட்டச்சு இயந்திரங்களில் ஏற்பட்ட தொழில்நுட்பச் சிக்கல்களைத் தீர்க்க உருவாக்கப்பட்ட ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க வடிவமைப்பாகும் என்பது குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b>&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-26T12:01:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ் மறைமாவட்டத்தின் புதிய ஆயர் பொறுப்பேற்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/new-bishop-of-jaffna-diocese-takes-charge-1787745821"></link>
            <id>https://jvpnews.com/article/new-bishop-of-jaffna-diocese-takes-charge-1787745821</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;யாழ்.மறை மாவட்டத்தின் ஆயராக திருத்தந்தையால் நியமிக்கப்பட்டுள்ள பேரருட் கலாநிதி அன்ரன் ரஞ்சித் பிள்ளைநாயகம் ஆண்டகையின் பணிப் பொறுப்பேற்கும...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;யாழ்.மறை மாவட்டத்தின் ஆயராக திருத்தந்தையால் நியமிக்கப்பட்டுள்ள பேரருட் கலாநிதி அன்ரன் ரஞ்சித் பிள்ளைநாயகம் ஆண்டகையின் பணிப் பொறுப்பேற்கும் நிகழ்வு இன்று புனித மரியன்னை பேராலயத்தில் இடம்பெற்றது.
</p><p>


யாழ்.புனித மடுத்தீனார் சிறிய குருமட நுழைவாயிலில் ஆயர் வரவேற்கப்பட்டு, பவனியாக அழைத்துவரப்பட்டார்.



தொடர்ந்து, புனித மரியன்னை பேராலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டதுடன், இத்திருப்பலியில் ஆயர்,யாழ். மறைமாவட்டத்தின் புதிய ஆயராக தமது பணிப்பொறுப்பை அதிகாரப்பூர்வமாக ஏற்றார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/34ead269-045b-499a-9504-c64e2b767be8/26-6a8ed61f383fc.webp' /></p><p>



குறித்த நிகழ்வில் கர்தினால் மல்கம் ரஞ்சித், மறை மாவட்டங்களின் ஆயர்கள், அருட் தந்தைகள், அருட் சகோதரிகள், சர்வமத தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள், பொலிஸார், இராணுவத்தினர், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
</p><p>


மேலும், யாழ்ப்பாண மறைமாவட்டத்தின் புதிய ஆயராகப் பொறுப்பேற்ற பேரருட்தந்தை அன்ரன் ரஞ்சித் பிள்ளைநாயகம் ஆண்டகைக்கு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் நேரில் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-26T12:01:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[உர இறக்குமதி மோசடியில் சிக்கிய கோட்டாபய...! நீதிமன்றில் அம்பலமான அறிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/investigation-into-fertilizer-imports-from-china-1787734483"></link>
            <id>https://ibctamil.com/article/investigation-into-fertilizer-imports-from-china-1787734483</id>
            <summary type="text">சீனாவிடமிருந்து&amp;nbsp;தரம் குறைந்த உரம் இறக்குமதி செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில்&amp;nbsp;விசாரணைகள்&amp;nbsp;தொடர்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.கையூட்டல் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சீனாவிடமிருந்து&nbsp;தரம் குறைந்த உரம் இறக்குமதி செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில்&nbsp;விசாரணைகள்&nbsp;தொடர்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணையம், கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றத்தில் இதனை தெரிவித்துள்ளது.&nbsp;</p><p>முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் சீனாவிடமிருந்து தரம் குறைந்த 20,000 மெட்ரிக் டன் உரம் இறக்குமதி செய்யப்பட்டதன் மூலம் அரசுக்கு 6.7 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமான இழப்பு ஏற்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பிலேயே இவ்வாறு விசாரணைகள் தொடர்ந்து நடந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>வழக்குத் தாக்கல்&nbsp;</h2><p>முன்னாள் விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் சில நபர்களுக்கு எதிராக இது தொடர்பில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
</p><p>
இந்தநிலையில் வேறு வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் அளுத்கமகே, சிறைச்சாலை அதிகாரிகளால் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d329b42f-070c-4f76-b17b-cb152d9a2306/26-6a8eb2f9638bc.webp' /></p><p>இந்தநிலையில் கொழும்பு பிரதான நீதிவான் அசாங்க எஸ். போதரகம முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
</p><p>
இதன்போது, வழக்கு தொடர்பான விசாரணைகள் இன்னும் முடிவடையவில்லை என்பதால் விசாரணையை நிறைவு செய்து தொடர்புடைய அறிக்கைகளைச் சமர்ப்பிக்க மேலதிக கால அவகாசத்தை, கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைய அதிகாரிகள் கோரினர்.
</p><p>
சமர்ப்பிக்கப்பட்ட கோரிக்கைகளை ஏற்றுக்கொண்ட நீதிவான், வழக்கை எதிர்வரும் டிசம்பர் நான்காம் திகதிக்கு ஒத்தி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p>]]></content>
            <updated>2026-08-26T11:59:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[காணாமல் ஆக்கப்பட்டோருக்காக யாழில் எழுந்த பிரார்த்தனைகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/prayers-for-the-disappeared-in-jaffna-1787745403"></link>
            <id>https://tamilwin.com/article/prayers-for-the-disappeared-in-jaffna-1787745403</id>
            <summary type="text">யாழ். மாவட்ட செயலக கேட்போர் கூட மண்டபத்தின் வாயிலில் வைக்கப்பட்டிருந்த பதாகையில், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தங்களது பிரார்த்தனைகளை...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ். மாவட்ட செயலக கேட்போர் கூட மண்டபத்தின் வாயிலில் வைக்கப்பட்டிருந்த பதாகையில், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தங்களது பிரார்த்தனைகளை எழுதி ஒட்டியிருக்கிறார்கள்.</p><p> 

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு, காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வு நேற்று (25.08.2026) யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
</p><p>
இந்நிகழ்வில் கலந்துகொண்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், மண்டப வாயிலில் வைக்கப்பட்டிருந்த பதாகையில் தங்களது பிரார்த்தனைகளை துண்டுச் சீட்டுகளில் எழுதி ஒட்டியிருப்பதை காணக் கூடியதாக இருந்தது.&nbsp; &nbsp; &nbsp; &nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-26T11:57:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[திருநங்கையாக மாறிய இந்திய கிரிக்கெட்டரின் மகன் - அவுஸ்திரேலியாவில் விளையாட ஒப்புதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/australia-approve-trans-cricketer-anaya-bangar-1787743931"></link>
            <id>https://news.lankasri.com/article/australia-approve-trans-cricketer-anaya-bangar-1787743931</id>
            <summary type="text">trans cricketer anaya bangar to play in australia: திருநங்கையாக மாறிய அனயா பங்கர் கிரிக்கெட்டில் பங்குபெற அவுஸ்திரேலியா ஒப்புதல் வழங்கியுள்ளது. 

தி...</summary>
            <content type="html"><![CDATA[<p>trans cricketer anaya bangar to play in australia: திருநங்கையாக மாறிய அனயா பங்கர் கிரிக்கெட்டில் பங்குபெற அவுஸ்திரேலியா ஒப்புதல் வழங்கியுள்ளது. </p><h3>

திருநங்கையாக மாறிய இந்திய கிரிக்கெட்டரின் மகன்</h3><p>

இந்திய கிரிக்கெட் அணியில் 2001-2004 காலகட்டத்தில் விளையாடி வந்தவர் சஞ்சய் பங்கர். ஓய்வுக்கு பிறகு அணியின் பேட்டிங் பயிற்சியாளராக செயல்பட்டார்.&nbsp;</p><p> 

இவரின் மகனான ஆர்யன், உள்ளூர் போட்டிகளில் மும்பை மற்றும் புதுச்சேரி அணிகளுக்காக விளையாடி வந்தார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d4b0848e-1596-40be-a633-7d653422065c/26-6a8ecebde283e.webp' /></p><p>
2023 ஆம் ஆண்டில் தான் பெண்ணாக மாற விரும்புவதாக கூறி, ஹார்மோன் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டார். அதன் பின்னர் பாலின மாற்று சிகிச்சை செய்து கொண்டு தனது பெயரை அனயா பங்கர்(anaya bangar) என மாற்றிக்கொண்டார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3b1c009a-0680-48f6-b81d-5420f0d9ceab/26-6a8ecebd39bab.webp' /></p><h3> 

அவுஸ்திரேலியா ஒப்புதல்</h3><p> 

இவர் திருநங்கையாக மகளிர் கிரிக்கெட்டில் விளையாட பிசிசிஐயிடம் அனுமதி கோரினார். பிசிசிஐ எந்த பதிலும் தராத நிலையில் அவுஸ்திரேலியா கிரிக்கெட் அமைப்பை அணுகியுள்ளார். அவுஸ்திரேலியா அனயாவின் கோரிக்கைக்கு ஒப்புதல் அளித்துள்ளது.&nbsp;&nbsp;</p><p></p><p>
ஆண் பருவமடைதலை அடைந்த திருநங்கை பெண்கள் உயர்மட்ட மகளிர் சர்வதேச கிரிக்கெட்டில் பங்கேற்பதைத் தடுக்கும் விதிமுறைகளை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் 2023 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தியது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b7b37c7a-5f03-4b2b-b48c-81a84906c0a6/26-6a8ecebe99c6d.webp' /></p><p> 

மகளிர் பிக்பாஸ் தொடரில் விளையாட அவர் விருப்பம் தெரிவித்திருந்த நிலையில், அதற்காக ஒப்புதல் தரப்பட்டுள்ளது. உயர்மட்ட கிரிக்கெட்டில் விளையாட டெஸ்ட்ரோஜென் சோதனைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.</p><p>

ஐசிசி விதிப்படி உயர்மட்ட கிரிக்கெட்டிற்குத் தகுதிபெற, அவரது இரத்தத்தில் உள்ள டெஸ்டோஸ்டிரோன் செறிவு குறைந்தது 12 மாதங்களுக்கு 10 nmol/L-க்குக் குறைவாக இருக்க வேண்டும்.</p><p>
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள கிரிக்கெட் அவுஸ்திரேலியாவின் நேர்மைப் பிரிவுத் தலைவர் ஜாக்கி பார்ட்ரிட்ஜ், "உயர்மட்ட கிரிக்கெட்டில் விளையாடுவது மார்ச் 2027 ஆம் ஆண்டுக்கு பின்னர் இந்த டெஸ்டோஸ்டிரோன் சோதனை முடிவுகளை பொறுத்து உள்ளது.&nbsp;</p><p></p><p> 

மார்ச் 2027 வரை, அவுஸ்திரேலியாவின் எந்தவொரு மாநிலம் அல்லது பிராந்தியத்திலும் நடைபெறும் பிரீமியர் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க தகுதியுடையவராக தொடர்வார்" என தெரிவித்துள்ளார்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-26T11:37:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>H. A. Roshan</name>
            </author>
            <title type="text"><![CDATA[செம்மணி மனித புதைகுழி விவகாரம் - விசாரணை தீவிரப்படுத்துமாறு தமிழரசுக் கட்சி பிரமுகர் கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/justice-must-be-in-chemmani-trincomalee-official-1787741768"></link>
            <id>https://tamilwin.com/article/justice-must-be-in-chemmani-trincomalee-official-1787741768</id>
            <summary type="text">பல ஆண்டுகளாக காணாமல் ஆக்கப்பட்ட தங்களது உறவுகளின் நிலை என்ன என்பதை
அறியாமல் வாழும் குடும்பங்களின் வேதனைக்கு முற்றுப்புள்ளி வைக்க
வேண்டிய பொறுப்பு அர...</summary>
            <content type="html"><![CDATA[<p>பல ஆண்டுகளாக காணாமல் ஆக்கப்பட்ட தங்களது உறவுகளின் நிலை என்ன என்பதை
அறியாமல் வாழும் குடும்பங்களின் வேதனைக்கு முற்றுப்புள்ளி வைக்க
வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு உள்ளது என இலங்கை தமிழரசுக்
கட்சியின் திருகோணமலை மாவட்ட பிரமுகர் குமார் ஜெயக்குமாரன்
தெரிவித்துள்ளார்.</p><p>இன்று(26.08.2026) அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.</p><h2> செம்மணி புதைகுழி தொடர்பான விசாரணைகள்</h2><p>அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, </p><p>இது ஒரு அரசியல் பிரச்சினையாக மட்டும் பார்க்கப்படக்கூடாது. இது மனித
உயிர்கள், காணாமல் ஆக்கப்பட்டவர்கள், அவர்களின் குடும்பங்களின் உரிமைகள்
மற்றும் உண்மையை அறியும் உரிமை தொடர்பான மனிதாபிமானப் பிரச்சினையாகும்.
</p><p>
எனவே, இலங்கை அரசாங்கத்திடம் நான் வலியுறுத்திக் கேட்பது என்னவென்றால் செம்மணி புதைகுழி தொடர்பான விசாரணைகள் முழுமையான, சுயாதீனமான மற்றும்
வெளிப்படையான முறையில் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f9418c36-a6a9-4057-85be-d12e7807bf6c/26-6a8ecb9f0a1c0.webp' /></p><p>அத்துடன் மீட்கப்பட்ட மனித எச்சங்கள் நவீன அறிவியல் முறைகள் மற்றும் DNA பரிசோதனைகள்
மூலம் அடையாளம் காணப்பட வேண்டும்.&nbsp;</p><p> காணாமல் போனவர்களின் குடும்பங்களிடமிருந்து பெறப்பட்ட DNA மாதிரிகளுடன் அவை
ஒப்பிடப்பட்டு, முடிவுகள் குடும்பங்களுக்கு வெளிப்படையாகத் தெரிவிக்கப்பட
வேண்டும்.
</p><p>எந்தத் தரப்பைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், குற்றத்திற்கு பொறுப்பானவர்கள்
சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்.&nbsp; விசாரணைகளில் அரசியல் அல்லது நிர்வாகத் தலையீடு இல்லாத வகையில் சுயாதீனமான
கண்காணிப்பு ஏற்படுத்தப்பட வேண்டும்.</p><h2>பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான நீதி</h2><p>பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உண்மை, நீதி மற்றும் உரிய நிவாரணம்
வழங்கப்பட வேண்டும்.</p><p>

அதேவேளை, ஐக்கிய நாடுகள் சபை மற்றும் சர்வதேச மனித உரிமை அமைப்புகள் உள்ளிட்ட
சர்வதேச சமூகமும் இந்த விசாரணையை நெருக்கமாகக் கண்காணித்து, தேவையான
தொழில்நுட்ப மற்றும் நிபுணத்துவ ஆதரவை வழங்க வேண்டும்.</p><p>பல தசாப்தங்களாக ஒரு தாய் தனது மகனை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார். ஒரு
தந்தை தனது பிள்ளையின் நிலையை அறியாமல் இருக்கிறார். ஒரு குடும்பம் இன்னும்
ஒரு பதிலை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/93a659d4-9658-4105-b55b-6d35eff5dec5/26-6a8ecb9e3a245.webp' /></p><p>அவர்களுக்கு அரசியல் பேச்சு தேவையில்லை. அவர்களுக்கு உண்மை வேண்டும்.
நீதி வேண்டும். தங்கள் அன்புக்குரியவர்களுக்கு ஒரு இறுதி மரியாதை
செலுத்துவதற்கான உரிமை வேண்டும்.
</p><p>
செம்மணி தொடர்பான உண்மை முழுமையாக வெளிக் கொண்டு வந்து, பொறுப்புக்கூறல் உறுதி
செய்யப்பட்டு, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உரிய நீதி கிடைக்கும் வரை இந்த
விவகாரம் மறக்கப்படக்கூடாது, நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-26T11:36:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[நடிகை மாளவிகா மோகனனின் ஓணம் ஸ்பெஷல் போட்டோஷூட்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/malavika-mohanan-onam-special-photoshoot-1787743707"></link>
            <id>https://viduppu.com/article/malavika-mohanan-onam-special-photoshoot-1787743707</id>
            <summary type="text">மாளவிகா மோகனன்பட்டம் போலே என்ற மலையாள படத்தில் நடிகையாக அறிமுகமாகி கன்னடம், இந்தி மொழிகளில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை மாளவிகா மோகனன்.

இதனையடுத...</summary>
            <content type="html"><![CDATA[<h2>மாளவிகா மோகனன்</h2><p>பட்டம் போலே என்ற மலையாள படத்தில் நடிகையாக அறிமுகமாகி கன்னடம், இந்தி மொழிகளில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை மாளவிகா மோகனன்.

இதனையடுத்து தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பேட்ட, விஜய்யின் பேட்ட, தனுஷின் மாறன் போன்ற படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களை ஈர்த்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7ff1d101-bdd0-4d10-aafd-0860218b5a38/26-6a8ecde9c4978.webp' /></p><p>
</p><p>அதன்பின் தங்கலான், யுத்ரா, தி ராஜா சாப் போன்ற படங்களில் நடித்து வந்தார். தற்போது சர்தார் 2, பாக்கெட் நாவல் போன்ற படங்களிலும் தற்போது நடித்து வருகிறார்.

வீக்கெண்ட் என்றாலே மாளவிகா அவுட்டிங் சென்று அங்கு எடுத்த கிளாமர் புகைப்படங்களை பகிர்வார். </p><p>

கடந்த ஆகஸ்ட் 4 ஆம் தேதி தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடினார். தற்போது ஓணம் ஸ்பெஷலாக பாரம்பரிய சேலையணிந்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-08-26T11:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[கணவனின் கத்திக்குத்திற்கு இலக்காகி பரிதாபமாக பலியான பெண்...!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/woman-stabbed-to-death-by-husband-in-mannar-1787740511"></link>
            <id>https://ibctamil.com/article/woman-stabbed-to-death-by-husband-in-mannar-1787740511</id>
            <summary type="text">தலைமன்னாரில்&amp;nbsp;கணவனின் கத்திக்குத்திற்கு இலக்காகி பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.இரண்டு பிள்ளைகளின் தாயார் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.&amp;nbsp;&amp;nbs...</summary>
            <content type="html"><![CDATA[<p>தலைமன்னாரில்&nbsp;கணவனின் கத்திக்குத்திற்கு இலக்காகி பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.</p><p>இரண்டு பிள்ளைகளின் தாயார் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.&nbsp;&nbsp;</p><p>குறித்த சம்பவம் இன்று (26-08-2026)&nbsp; காலை 9 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p></p><h2>மேலதிக விசாரணை</h2><p>இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், தலைமன்னார் ஸ்ரேசன் பகுதியில் உள்ள வீடொன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.</p><p>கணவனின் கத்தி குத்துக்கு இலக்காகிய அவரது மனைவி தலை மன்னார்
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d0dc3757-c582-4681-8813-7f27453e4060/26-6a8ec5e19217f.webp' /></p><p>தாக்குதலை மேற்கொண்ட உயிரிழந்த பெண்ணின் கணவர் தலைமன்னார் ஸ்ரேசன் பகுதியில்
வைத்து தலைமன்னார் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
மேலதிக விசாரணைகளை தலைமன்னார் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p>]]></content>
            <updated>2026-08-26T11:28:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ். மறைமாவட்டத்தின் 12வது ஆயராக அன்ரன் ரஞ்சித் பிள்ளைநாயகம் ஆண்டகை பதவியேற்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/appointment-of-12th-bishop-of-diocese-of-jaffna-1787743408"></link>
            <id>https://tamilwin.com/article/appointment-of-12th-bishop-of-diocese-of-jaffna-1787743408</id>
            <summary type="text">யாழ். மறை மாவட்டத்தின் 12வது ஆயராக திருத்தந்தையால் பேரருட்தந்தை அன்ரன் ரஞ்சித் ஆண்டகை நியமிக்கப்பட்டுள்ளார். 

இந்த பதவியேற்பு நிகழ்வு இன்று(26.08.2...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ். மறை மாவட்டத்தின் 12வது ஆயராக திருத்தந்தையால் பேரருட்தந்தை அன்ரன் ரஞ்சித் ஆண்டகை நியமிக்கப்பட்டுள்ளார். </p><p>

இந்த பதவியேற்பு நிகழ்வு இன்று(26.08.2026 புனித மரியன்னை பேராலயத்தில் இடம்பெற்றது.
</p><p>
யாழ். புனித மடுத்தீனார் சிறிய குருமட நுழைவாயிலில் ஆயர் வரவேற்கப்பட்டு,
பவனியாக அழைத்துவரப்பட்டார்.</p><h2>

12வது ஆயர் நியமனம்</h2><p>
இதனைத் தொடர்ந்து, புனித மரியன்னை பேராலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டதுடன், இந்த திருப்பலியில் ஆயர், யாழ். மறைமாவட்டத்தின் புதிய ஆயராக தமது பணிப்பொறுப்பை
அதிகாரப்பூர்வமாக ஏற்றுக் கொண்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/715e1d2c-a0d9-45bd-b6ef-a99e2a17aaaa/26-6a8eccf3125d6.webp' /></p><p> 

குறித்த நிகழ்வில் கர்தினால் மல்கம் ரஞ்சித், மறை மாவட்டங்களின் ஆயர்கள்,
அருட் தந்தைகள், அருட் சகோதரிகள், சர்வமத தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள்,
பொலிஸார், இராணுவத்தினர், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-26T11:27:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாளத்தில் கடும் வெள்ளப்பெருக்கு: 8 பேர் பலி, 384 பேரை காணவில்லை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/nepal-flood-8-dead-384-people-missing-1787743420"></link>
            <id>https://news.lankasri.com/article/nepal-flood-8-dead-384-people-missing-1787743420</id>
            <summary type="text">நேபாளத்தில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் சிக்கி&amp;nbsp; 8 பேர் வரை இதுவரை உயிரிழந்துள்ளனர். நேபாளத்தில் வெள்ளப்பெருக்கு
திபெத் எல்லையில் இருந்து வந்த திடீர...</summary>
            <content type="html"><![CDATA[<p>நேபாளத்தில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் சிக்கி&nbsp; 8 பேர் வரை இதுவரை உயிரிழந்துள்ளனர்.</p><h2> நேபாளத்தில் வெள்ளப்பெருக்கு</h2><p>
திபெத் எல்லையில் இருந்து வந்த திடீர் மற்றும் கடுமையான வெள்ளப்பெருக்கு வடக்கு நேபாள பகுதிகளை தீவிரமாக உலுக்கியுள்ளது.</p><p>போட்டே கோஷி(Bhote Koshi) நதியில் ஏற்பட்ட இந்த திடீர் வெள்ளத்தில் நுவாகோட் மற்றும் தாதிங் மாவட்டங்கள் பலத்த சேதமடைந்துள்ளன.</p><p> இந்த வெள்ளப்பெருக்கு சம்பவத்தில் இதுவரை குறைந்தது 8 பேர் வரை உயிரிழந்துள்ளனர். பலர் காணாமல் போய் உள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/16fff331-d8e8-4808-8f4a-5e99c6e77b1d/26-6a8eccbe096f1.webp' /></p><p> நேபாள சுற்றுலா வாரியம் வழங்கிய தகவல்படி, 291 வெளிநாட்டினர் மற்றும் 93 உள்நாட்டு மக்கள் என&nbsp; மொத்தம் 384 பேர் இதுவரை காணாமல் போயுள்ளனர்.</p><p> மாயமான சுற்றுலா பயணிகளில் 105 பேர் இந்தியர்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளது.</p><p></p><p> ராசுவா மாவட்டத்தில் நேபாள காவல்துறையை சேர்ந்த &nbsp; 26 அதிகாரிகளும், 7 ஆயுதப்படை வீரர்களும் இந்த வெள்ளப்பெருக்கில் காணாமல் போயுள்ளனர்.</p><p> இந்நிலையில், பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணியில் நேபாள ராணுவம், பேரிடர் மீட்புப் படைகள் ஆகியவை முழுவீச்சில் ஈடுபட்டுள்ளனர். ஹெலிகாப்டர் மூலமும் மீட்புப் பணிகளானது தீவிரமாக நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> இந்த வெள்ளம் காரணமாக ராசுவகதி, சிலிமே, திரிசூலி ஆகிய துணை மின் நிலையங்கள் மற்றும் ஆறு முக்கிய மின் உற்பத்தி நிலையங்கள் இதில் சேதமடைந்து இருப்பதாக நேபாள மின்சார வாரியம் அறிவித்துள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-26T11:25:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[அடுத்த 24 மணித்தியாலத்துக்கான வானிலை முன்னறிவிப்பு ; பொதுமக்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/weather-forecast-for-the-next-24-hours-1787743400"></link>
            <id>https://jvpnews.com/article/weather-forecast-for-the-next-24-hours-1787743400</id>
            <summary type="text">அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு இன்று (26) பிற்பகல் வெளியிடப்பட்டுள்ளது. புத்தளத்திலிருந்து கொழ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு இன்று (26) பிற்பகல் வெளியிடப்பட்டுள்ளது.</p><p> </p><p></p><p>புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் பல இடங்களில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. </p><p>

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு திசையிலிருந்து வீசக் கூடும். 

காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f6fe39a9-3e81-41f3-9376-da2730c8f97f/26-6a8ecca9ec36d.webp' /></p><p>காங்கேசந்துறையிலிருந்து மன்னார் ஊடாக புத்தளம் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-60 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. </p><p>

காங்கேசந்துறையிலிருந்து முல்லைத்தீவு ஊடாக திருகோணமலை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. </p><p>

கொழும்பிலிருந்து காலி மற்றும் மாத்தறை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் கடல் அலைகள் 2.0 – 3.0 மீற்றர் உயரம் வரை மேலெழும்பக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. </p><p>

பேருவளையிலிருந்து காலி ஊடாக மாத்தறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் கடல் அலைகளின் மட்டம் உயர்வாகக் காணப்படும்போது கடல் அலைகள் கரையை அண்டிய நிலப்பகுதிகளுக்கு வரக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. </p><p>

மேற்குறிப்பிட்ட கடற்பரப்புகளில் கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் கரையோரத்திற்கு அண்மையில் வசிக்கும் பொதுமக்களும் இவ்விடயம் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றார்கள்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-26T11:24:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தியாவிற்கு திட்டமிட்டு கடத்தப்பட்ட இளம்பெண்! எட்டு ஆண்டுகளின் பின்னர் வெளியான இரட்டைக்கொலை திட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/after-eight-years-double-murder-revealed-1787734564"></link>
            <id>https://tamilwin.com/article/after-eight-years-double-murder-revealed-1787734564</id>
            <summary type="text">இரத்தினபுரி - குருவிட்ட பகுதியில் எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் இராணுவ வீரரொருவர் கடத்தப்பட்டு கொலை செய்து காணாமலாக்கப்பட்ட சம்பவம் தொடர்பான தகவல்களை குற...</summary>
            <content type="html"><![CDATA[<p>இரத்தினபுரி - குருவிட்ட பகுதியில் எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் இராணுவ வீரரொருவர் கடத்தப்பட்டு கொலை செய்து காணாமலாக்கப்பட்ட சம்பவம் தொடர்பான தகவல்களை குற்றப்புலனாய்வுப்பிரிவு வெளிப்படுத்தியுள்ளது.
</p><p>
தடுப்புக் காவல் உத்தரவின் பேரில் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர் ஒருவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது இந்த விடயம் தெரியவந்துள்ளது.</p><p>

குற்றப்புலனாய்வுத்துறையின் கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவு, ஜூன் 8 ஆம் திகதி, வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி மற்றும் பல்வேறு வகையான தோட்டாக்கள் அடங்கிய பொதியுடன் ஒருவரை கைது செய்துள்ளனர்.</p><h2>வெளியான காரணம்</h2><p>
</p><p>
இதனையடுத்து சந்தேகநபரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது, ​​எட்டு ஆண்டுகளுக்கு முன்பு குருவிட்ட பகுதியில் நிசங்க என்ற ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டமை தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4efdb072-50f9-46c5-aa4d-9c318929674a/26-6a8ebb644d8fd.webp' /></p><p>
</p><p>
குறித்த இராணுவ அதிகாரியின் மனைவியுடன் தனக்கு நெருங்கிய உறவு இருந்தமையே இதற்கு காரணம் என்றும் விசாரணை அதிகாரிகளிடம் கூறியுள்ளார்.
</p><p>
மேலும், சம்பந்தப்பட்ட சடலம் அப்பகுதியில் உள்ள நிலத்தில் புதைக்கப்பட்டு, பின்னர் ஆற்றில் வீசப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
</p><p>
அதன்படி, சந்தேகநபர் நேற்று விசாரணை அதிகாரிகளிடம் சடலம் புதைக்கப்பட்ட இடத்தையும் அடையாளம் காட்டியுள்ளதுடன்,சடலம் கண்டுபிடிக்கப்படவில்லை என்றும் கூறப்படுகின்றது.</p><h2>&nbsp;25 வயது பெண்&nbsp;கொலை </h2><p>
</p><p>
இந்த கொலை தொடர்பில் அறிந்திருந்த 25 வயது பெண்ணை சந்தேகநபர் இந்தியாவிற்கு அழைத்துச்சென்று, அங்கு அவரை கொலை செய்துவிட்டு தலைமறைவானதும் தெரியவந்துள்ளது.</p><p>

சந்தேகநபருக்கும் சம்பந்தப்பட்ட பெண்ணுக்கும் நெருங்கிய உறவு இருந்ததாகவும் கூறப்படுகின்றது. </p><p>

இந்த சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-26T11:14:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[இராணுவத்திடம் கையளிக்கப்பட்ட 29 சிறுவர்கள் எங்கே..! காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளின் கேள்வி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/where-29-children-handed-military-relatives-ask-1787737645"></link>
            <id>https://tamilwin.com/article/where-29-children-handed-military-relatives-ask-1787737645</id>
            <summary type="text">இறுதி யுத்தத்தில் பெற்றோர்களால் இலங்கை இராணுவத்திடம் உயிரிடன்
கையளிக்கப்பட்ட 29 சிறுவர்களுக்கு என்ன நடந்தது என காணாமல் ஆக்கப்பட்ட சிறுவர்களின் பெற்றோ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இறுதி யுத்தத்தில் பெற்றோர்களால் இலங்கை இராணுவத்திடம் உயிரிடன்
கையளிக்கப்பட்ட 29 சிறுவர்களுக்கு என்ன நடந்தது என காணாமல் ஆக்கப்பட்ட சிறுவர்களின் பெற்றோர் கேள்வி
எழுப்பியுள்ளனர்.
</p><p>
நேற்று(25.08.2026) யாழ் மாவட்ட செயலகத்தின் முன்பாகவே அவர்கள் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளனர்.</p><h2>சர்வதேச காணாமல் போனோர் தினம்</h2><p>
</p><p>அவர்கள் மேலும் தெரிவிக்கையில், </p><p>இறுதி யுத்தம் இடம்பெற்று 15 வருடங்கள்
கடந்துள்ள நிலையில் 29 சிறுவர்கள் உட்பட 100 பேர் இலங்கை இராணுவத்திடம்
அவர்களின் உறவினர்களால் உயிருடன் கையளிக்கப்பட்டனர்.
</p><p>
ஆனால் இன்று வரை அவர்களுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பில் தேடி கண்டுபிடிக்க
முடியாத ஓ எம் பி சர்வதேச காணாமல் போனோர் தினத்தை யாழில் நடத்துவது இலங்கை
அரசாங்கத்தை திருப்திப்படுத்தும் ஒரு செயற்பாடாகவும் பாதிக்கப்பட்ட
தரப்பினர்களை மேலும் காயப்படுத்தும் ஒரு செயற்பாடாக பார்க்கிறோம்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4670927c-4f33-4495-bc36-1c72b303fe13/26-6a8ec49913336.webp' /></p><p>இலங்கையில் தமிழர்கள் காணாமலாக்கப்படுதல் என்பது மிகச் சாதாரண விடயமாக
மாறிவிட்டது. வயது, பால் வேறுபாடின்றி காலத்துக்கு காலம்
கடத்தப்பட்டிருக்கின்றனர். </p><p>அவ்வாறு காணாமலாக்கப்பட்டவர்களில் அதிகளவான ஆண்களும், அதற்கு அடுத்த நிலையில்
பெண்களும் இருக்கின்றனர். இதில் சிறுவர்கள் எனக் குறிப்பிடப்படும் விவரமறியாத
பிள்ளைகளும் காணாமலாக்கப்பட்டுள்ளனர்.
</p><p>
அதையும் தாண்டி குழந்தைகளும் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். குழந்தைகள் காணாமல்
ஆக்கப்படுதல் என்பது இலங்கையை தவிர உலகில் எங்குமே நடைபெற்றிருக்காத விடயம் வடக்கு கிழக்கு தமிழர் பகுதிகளில் இடம் பெற்றிருக்கிறது.</p><h2>இராணுவத்திடம் கையளிக்கப்பட்ட 29 சிறுவர்கள்</h2><p>
</p><p>
இதுவரை பல குழந்தைகள் இலங்கை இராணுவத்தினரிடம் கையளிக்கப்பட்டும் இலங்கை
இராணுவத்தினரால் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்டுள்ளனர்.
</p><p>இதற்கான நேரடி சாட்சிகள் இன்றும் உயிருடன் இருக்கிறார்கள்.


2009 ஆம் ஆண்டில் போர் முடிவுக்கு வந்த வேளையில் அதிகளவான குழந்தைகள் தம்
பெற்றோருடன் இலங்கை இராணுவத்திடம் சரணடைந்த பின்னரே காணாமலாக்கப்பட் டுள்ளனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/737a7b89-cc0d-41a0-a1cb-5587b90ac217/26-6a8ec4984bb90.webp' /></p><p>தமது பெற்றோருடன் அழைத்துச் செல்லப்பட்ட சிறார்கள் மீளத் திரும்பவில்லை.

இந்த விடயம் காணாமல் போனோர் அலுவலகத்தின் விசாரணை அமர்வுகளில் ஆதாரத்துடன்
முன்வைத்தும் சிறுவர்களுக்கு என்ன நடந்தது என இன்று வரை கூற முடியாத நிலையில்
இந்த அலுவலகம் செயற்பட்டு கொண்டிருக்கிறது.</p><p>


இலங்கையில் காலத்துக்கு காலம் மாறி வரும் அரசாங்கங்கள் இந்த விவகாரம்
தொடர்பில் பேச மறுத்து வருகின்ற நிலையில் இராணுவத்திடம் கையளிக்கப்பட்ட 29
சிறுவர் தொடர்பான விடயங்களை வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம்
ஐ.நாவுக்கு பட்டியலிட்டு அனுப்பியுள்ளது என கவலை தெரிவித்திருந்தனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-26T11:13:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[இஸ்ரேலிய குடியேற்றங்கள் மீது ஆண்டி பர்ன்ஹாமின் நடவடிக்கை: கிளர்ச்சியைத் தடுக்க முயற்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/andy-burnham-plan-of-sanction-for-israeli-settle-1787742933"></link>
            <id>https://news.lankasri.com/article/andy-burnham-plan-of-sanction-for-israeli-settle-1787742933</id>
            <summary type="text">பிரித்தானியாவில் இஸ்ரேலிய குடியேற்றங்கள் மீது பிரதமர் ஆண்டி பர்ன்ஹாம் கடுமையான பொருளாதாரத் தடைகளை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிரித்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரித்தானியாவில் இஸ்ரேலிய குடியேற்றங்கள் மீது பிரதமர் ஆண்டி பர்ன்ஹாம் கடுமையான பொருளாதாரத் தடைகளை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>

பிரித்தானியாவின் பிரதமரான ஆண்டி பர்ன்ஹாம் பாலஸ்தீன தொழிலாளர் கட்சியின் கிளர்ச்சியைத் தடுக்கும் முயற்சியாக, இஸ்ரேலிய குடியேற்றங்கள் மீது பொருளாதாரத் தடைகளை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.&nbsp;</p><h2>பிரதமர் ஆண்டி பர்ன்ஹாம்&nbsp;</h2><p> 

பரவலாக ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியாகக் கருதப்படும் மேற்குக் கரை தொடர்பிலான, E1 திட்டத்திற்கான ஒப்பந்தப்புள்ளியை இஸ்ரேலிய அரசாங்கம் வெளியிட்டது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9470982f-e788-43ac-95c9-676baf069c3e/26-6a8ecad7d35ac.webp' />&nbsp;</p><p></p><p> 
இதற்கு பதிலடியாக, பிரித்தானிய அரசாங்கத்தின் நிலைப்பாட்டை வலுப்படுத்த பிரதமர் ஆண்டி பர்ன்ஹாம் விரும்புவதாகக் கூறப்படுகிறது.</p><p>

அதாவது, பாலஸ்தீனத்தில் தொழிலாளர் கட்சியின் கிளர்ச்சியைத் தணிக்க, இஸ்ரேலியக் குடியேற்றங்கள் மீது பொருளாதாரத் தடைகளை விதிக்கும் திட்டத்தை அவர் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.&nbsp;</p><h2>வர்த்தகத்தைத் தடை</h2><p>
தொழிற்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பகுதியினரான 140-க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டவிரோத இஸ்ரேலியக் குடியேற்றங்களுடனான வர்த்தகத்தைத் தடை செய்யுமாறு அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டு ஒரு கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.
</p><p>
 
இதனைத் தொடர்ந்து, அடுத்த மாதம் லிவர்பூலில் நடைபெறும் தொழிற்கட்சியின் மாநாட்டிலும் பர்ன்ஹாம் புதிய அழுத்தத்தை எதிர்கொள்வார்; அங்கு கட்சி உறுப்பினர்கள் இஸ்ரேல் மீது பொருளாதாரத் தடைகளை விதிக்கக் கோரும் ஒரு தீர்மானத்தை முன்வைக்க உள்ளதாக கூறப்படுகிறது.
</p><p>
இஸ்ரேலியக் குடியேற்றங்கள் மீதான வர்த்தகத் தடை மற்றும் தனிநபர்கள் மீதான பொருளாதாரத் தடைகள் ஆகியவற்றுக்கான திட்டங்களுக்கு, பர்ன்ஹாம் ஒப்புதல் அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுவதாக ஒரு மூத்த அரசாங்க வட்டாரம் 'தி டைம்ஸ்' பத்திரிகைக்குத் தெரிவித்துள்ளது.&nbsp; &nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6c8c922f-ccae-4584-8340-36ca49759fa4/26-6a8ecad88d727.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-26T11:12:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[எயர் அரேபியா விமானச் சக்கரத்தில் இருந்த சடலம் ; விசாரணையில் வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/body-found-in-airplane-wheel-inquest-underway-1787730612"></link>
            <id>https://canadamirror.com/article/body-found-in-airplane-wheel-inquest-underway-1787730612</id>
            <summary type="text">லண்டன் கேட்விக் (Gatwick) விமான நிலையத்தை வந்தடைந்த விமானம் ஒன்றின் சக்கரப் பகுதியில் அடையாளம் தெரியாத நபர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொ...</summary>
            <content type="html"><![CDATA[<p>லண்டன் கேட்விக் (Gatwick) விமான நிலையத்தை வந்தடைந்த விமானம் ஒன்றின் சக்கரப் பகுதியில் அடையாளம் தெரியாத நபர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பான மரண விசாரணை தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகிறது.</p><p>

கடந்த ஜூன் 16ஆம் திகதி மொராக்கோவின் டான்ஜியர் (Tangier) நகரிலிருந்து கேட்விக் விமான நிலையத்தை வந்தடைந்த ‘எயர் அரேபியா’ (Air Arabia) விமானத்தின் லேண்டிங் கியர் பகுதியில் குறித்த நபரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/033bd060-586d-4a56-8ce5-11f954c3e2e9/26-6a8e9ab5bd5d2.webp' /></p><p>விமானத்தை பரிசோதித்துக் கொண்டிருந்த தரைக்கட்டுப்பாட்டு பொறியாளர் ஒருவர் சடலத்தை கண்டுபிடித்ததையடுத்து, குறித்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருந்தமை உறுதிப்படுத்தப்பட்டது.</p><p>

இந்நிலையில், ஹார்ஷாம் (Horsham) மரண விசாரணை நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை குறித்த மரணம் தொடர்பான விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.</p><p>

அப்பகுதியின் மரண விசாரணை அதிகாரி ஜோசப் டர்னர் (Joseph Turner) முன்னிலையில் இடம்பெற்ற விசாரணையில், பிரேதப் பரிசோதனை அறிக்கை தொடர்பான தகவல்கள் முன்வைக்கப்பட்டன.
</p><p>
அதன்படி, ஹைபோக்சியா (Hypoxia – உடலுக்கு போதியளவு ஒட்சிசன் கிடைக்காத நிலை), ஹைபோதெர்மியா (Hypothermia – உடல் வெப்பநிலை கடுமையாகக் குறைதல்) மற்றும் மாரடைப்பு ஆகியவை மரணத்திற்கான முக்கிய காரணிகளாக இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
விமானத்தின் சக்கரப் பகுதி பயணத்தின் போது கடுமையான குளிர் மற்றும் குறைந்தளவிலான ஒட்சிசன் கொண்ட சூழலாக இருந்திருக்கலாம் என மரண விசாரணை அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
மேலும், குறித்த மரணம் இயற்கையான முறையில் ஏற்பட்டதாகக் கருத முடியாததற்கான போதுமான காரணங்கள் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-26T11:10:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[எல் நினோவால் ஒக்டோபர், நவம்பரில் சராசரியை விட அதிக மழை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/rainfall-in-october-and-november-due-to-el-nino-1787742382"></link>
            <id>https://jvpnews.com/article/rainfall-in-october-and-november-due-to-el-nino-1787742382</id>
            <summary type="text">&amp;nbsp; தற்போது நிலவும் எல் நினோவுடன் தொடர்புடைய வானிலை மாற்றத்தின் காரணமாக, இலங்கையில் ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் சராசரியை விட அதிக மழைவீழ்ச்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; தற்போது நிலவும் எல் நினோவுடன் தொடர்புடைய வானிலை மாற்றத்தின் காரணமாக, இலங்கையில் ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் சராசரியை விட அதிக மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது .</p><p>வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அஜித் விஜேமன்ன இது குறித்து குறிப்பிடுகையில்,

இலங்கையின் ஆண்டு மழைவீழ்ச்சியில் சுமார் 30 சதவீதம் இந்த இரண்டு மாதங்களில் பொதுவாகப் பெய்யும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6f6096eb-c839-4550-a7fa-fe15354f8560/26-6a8ec8afa9c4f.webp' /></p><p>வழக்கத்தை விட கனமழையால் நீர்த்தேக்கங்கள் வேகமாக நிரம்பி சில பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும்.

டிசம்பர், ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் எல் நினோவின் தாக்கங்கள் தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுவதாக அஜித் விஜேமன்ன மேலும் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content>
            <updated>2026-08-26T11:03:41+00:00</updated>
        </entry>
    </feed>
