<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-07-25T05:38:43+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[உச்சக்கட்ட சினத்தில் ஈரான்: பெரிய அளவிலான தாக்குதல்..! ட்ரம்ப்பின் அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/trump-says-iran-serious-yet-in-talks-with-us-1784948449"></link>
            <id>https://ibctamil.com/article/trump-says-iran-serious-yet-in-talks-with-us-1784948449</id>
            <summary type="text">ஈரான் மீது பெரிய அளவிலான இராணுவத் தாக்குதல்களைத் தொடுப்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார்.அமெரிக்காவிற்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரான் மீது பெரிய அளவிலான இராணுவத் தாக்குதல்களைத் தொடுப்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார்.</p><p>அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தைகளில் இரு நாடுகளும் ஈடுபட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி குறிப்பிட்டார்.</p><p>

இருப்பினும், ஒரு ஒப்பந்தத்திற்கு வர ஈரான் இன்னும் தயாராகவில்லை என்பதை அவர் மீண்டும் வலியுறுத்தினார்.</p><p></p><h2>ஈரான் இன்னும் தயாராகவில்லை</h2><p> </p><p>

வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், "நாங்கள் அவர்களுடன் பேசி வருகிறோம். அவர்கள் மிகவும் தீவிரமாக இருப்பதாகவே நான் நினைக்கிறேன்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/abc2b9f1-a408-4367-a6c8-dd25d6e44bed/26-6a644a1be7d9b.webp' /></p><p>இதுவரை நாங்கள் பார்த்ததை விட அவர்கள் இப்போதுதான் அதிக தீவிரத்துடன் செயல்படுகிறார்கள் என்று நான் கருதுகிறேன். </p><p>ஆனால், அதற்காக நாம் ஒரு உடன்பாட்டை எட்டிவிடுவோம் என்று அர்த்தமல்ல. என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்," என்று கூறினார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-25T05:31:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[முத்தக்காட்சிக்கு 36 ரீ-டேக்!! நடிகையுடன் நெருக்கம் காட்டிய ஹீரோவை பிரிந்த மனைவி...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/real-reason-behind-music-directors-divorce-1784955968"></link>
            <id>https://viduppu.com/article/real-reason-behind-music-directors-divorce-1784955968</id>
            <summary type="text">சினிமாவில் இசையமைப்பாளராகவும் ஹீரோவாகவும் வலம் வந்த பிரபலம், சமீபத்தில் தன்னுடைய திரைப்பயணத்தின் உச்சக்கட்ட சாதனையை அடைந்தார். தொழிலில் தொட்டதெல்லான் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சினிமாவில் இசையமைப்பாளராகவும் ஹீரோவாகவும் வலம் வந்த பிரபலம், சமீபத்தில் தன்னுடைய திரைப்பயணத்தின் உச்சக்கட்ட சாதனையை அடைந்தார். தொழிலில் தொட்டதெல்லான் பொன்னாக மாறினாலும் தனிப்பட்ட வாழ்க்கையில் நடந்த விவாகரத்து தான் இன்னும் சினிமா வட்டாரங்களில் பேசுபொருளாக இருக்கிறது. தோழியை காதலித்து, பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்தவர்களுக்கு ஒரு குழந்தை இருக்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d2a72cfb-d55b-43f0-861b-c0a3f70c55fc/26-6a64447f4ec18.webp' /></p><p> </p><p>ஆனால் யாரும் எதிர்பார்த்திராத வகையில் இருவரும் பரஸ்வரமாக பிரிவதாக அறிவித்தனர். இவர்களின் பிரிவுக்கு காரணம் என்ன என்று தெரியாததால் சினிமா பிரபலம் ஒருவர் பகீர் தகவலை உடைத்துள்ளார். இசையமைப்பாளர், தன் தந்தை மற்றும் தங்கையுடன் கூட்டுக்குடும்ப வாழ்க்கையை வாழ்ந்து வந்தபோது மனைவிக்கும் தங்கைக்கும் சண்டை வர, மனமுடைந்த மனைவி தனிக்ல்குடித்தனம் போனலாம் என்று பலமுறை கூறியிருக்கிறார்.</p><p> தன்னுடைய குடும்பத்தை விட்டுவர அந்த பிரபலம் விரும்பவில்லை என்பதால் இருவருக்குள்ளும் மன விரிசல் ஏற்பட்டுள்ளது. இசையமைப்பாளராக அவர் இருக்கும்போது எந்த பிரச்சனையும் வரவில்லை, ஆனால் ஹீரோ அவதாரம் எடுத்தது மனைவிக்கு பிடிக்கவில்லையாம். தன்னுடன் நடித்த இளம் நடிகைகளுடன் நெருக்கம் காட்டி நடித்தது மனைவிக்கும் குடும்பத்தினருக்கும் சுத்தமாக பிடிக்கவில்லையாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e1cabc84-e90d-4daf-98ba-7ee4d799f175/26-6a6444802ab04.webp' /></p><p> </p><p>குறிப்பாக அடல்ட் காமெடி படத்தில் பிளேபாய் ரோலில் நடித்தவர் ஷூட்டிங்கில் ஒரு இளம் நடிகைக்கு முத்தம் கொடுக்கும் காட்சியில் நடித்துள்ளார். இந்த காட்சிக்கு மட்டும் ஹீரோ, 36 ரீ-டேக்குகள் எடுத்துள்ளார். இந்த விஷயம் மனைவி காதுக்கு வந்தது சினிமாவுக்காக நடிக்கிறீர்களா? இல்லை நிஜமாகவே என் ஜாய் செய்கிறீர்களா? என்று சண்டை போட்டுள்ளார். அந்த முத்தக் காட்சியில் தொடங்கி சின்ன சலசலப்பு, போகப்போக குடும்பத் தகராறு உருவெடுக்க இறுதியில் நீதிமன்றம் சென்று விவாகரத்து பெற்றுள்ளனர் என்று அந்த பிரபலம் கூறியுள்ளார்.</p>]]></content>
            <updated>2026-07-25T05:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழ்நாட்டில் ஜனநாயகன் திரைப்படம் 2 நாட்களில் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/jananayagan-movie-tamilnadu-2-days-box-office-1784954934"></link>
            <id>https://cineulagam.com/article/jananayagan-movie-tamilnadu-2-days-box-office-1784954934</id>
            <summary type="text">ஜனநாயகன்இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் முதலமைச்சர் விஜய் நடிப்பில் உருவாகி வெளியாகியுள்ள திரைப்படம் ஜனநாயகன். இப்படத்தை கே.வி.என் நிறுவனம் தயாரிக்...</summary>
            <content type="html"><![CDATA[<h2>ஜனநாயகன்</h2><p>இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் முதலமைச்சர் விஜய் நடிப்பில் உருவாகி வெளியாகியுள்ள திரைப்படம் ஜனநாயகன். இப்படத்தை கே.வி.என் நிறுவனம் தயாரிக்க, அனிருத் இசையமைத்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/82b4ae33-6e45-459a-adfe-be168d1fdb2b/26-6a64403956de8.webp' /></p><p>
இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பிரகாஷ் ராஜ், பாபி தியோல் ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர். இந்த ஆண்டு பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இப்படம் பொங்கலுக்கு வெளிவரவிருந்த நிலையில், சென்சார் பிரச்சனை காரணமாக 6 மாதங்கள் கழித்து தற்போது வெளியாகியுள்ளது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9bc5c385-9354-433a-9231-03b355c63e0f/26-6a64403a08746.webp' /></p><p></p><p>ரசிகர்கள் இப்படத்தை திரையரங்குகளில் கொண்டாடி வருகிறார்கள். கொண்டாட்டம் ஒரு பக்கம் இருந்தாலும், கலவையான விமர்சனங்களும் இப்படத்தின் மீதி வைக்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.</p><h2>தமிழ்நாடு வசூல்&nbsp;</h2><p> </p><p>

விஜய்யின் திரைப்படங்கள் என்றாலே கண்டிப்பாக வசூல் விவரங்களை தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருப்பார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/464ba5c9-93f1-46ca-917b-c2b88675a510/26-6a64403ab1220.webp' /></p><p> 

இந்த நிலையில், தற்போது 2 நாட்களில் தமிழ்நாட்டில் <a href="https://www.youtube.com/watch?v=9JxEcNSK8Xc" target="_blank">ஜனநாயகன் </a>திரைப்படம் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 2 நாட்களில் தமிழ்நாட்டில் மட்டுமே இப்படம் ரூ. 48 கோடி வசூல் செய்துள்ளது.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/kQX9tb129Ss" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-07-25T05:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறப்பு QR குறியீட்டுடன் டிஜிட்டல் மரணச் சான்றிதழ்கள்! இலங்கையில் புதிய திட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-lanka-launches-digital-death-certificate-1784955666"></link>
            <id>https://tamilwin.com/article/sri-lanka-launches-digital-death-certificate-1784955666</id>
            <summary type="text">டிஜிட்டல் மரணச் சான்றிதழ்கள் வழங்கும் பணி தொடங்கியுள்ளதாக பதிவாளர் நாயகம் திணைக்களம் அறிவித்துள்ளது.

மின்னணு மக்கள் தொகை பதிவேட்டுத் திட்டத்தின் கீ...</summary>
            <content type="html"><![CDATA[<p>டிஜிட்டல் மரணச் சான்றிதழ்கள் வழங்கும் பணி தொடங்கியுள்ளதாக பதிவாளர் நாயகம் திணைக்களம் அறிவித்துள்ளது.
</p><p>
மின்னணு மக்கள் தொகை பதிவேட்டுத் திட்டத்தின் கீழ், இந்தச் செயல்பாடுகள் தற்போது களுத்துறை மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வருகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><p>

அதன்படி, முன்னர் கையால் எழுதப்பட்ட சான்றிதழ்களுக்குப் பதிலாக, தற்போது கணினி அடிப்படையிலான தரவுத்தளம் மூலம் மரணச் சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன.</p><h2>பாதுகாப்பான தரவுச் சேமிப்பு</h2><p>

டிஜிட்டல் முறை மூலம் மரணச் சான்றிதழ்களை வழங்குவது, அதிகாரிகளுக்குப் புதுப்பிக்கப்பட்ட தனிப்பட்ட தரவு அமைப்பைப் பராமரிக்கவும், நிறுவனங்களுக்கு இடையே திறமையான தரவுப் பரிமாற்றத்தை எளிதாக்கவும், பாதுகாப்பான தரவுச் சேமிப்பின் மூலம் தகவல் பாதுகாப்பை உறுதி செய்யவும் உதவுகிறது.</p><p></p><p>

புதிய முறையின் கீழ் வழங்கப்படும் ஒவ்வொரு மரணச் சான்றிதழிலும் ஒரு சிறப்பு QR குறியீடு இடம்பெற்றுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e97a7735-9332-44ba-be0a-7905140145ac/26-6a64488adb086.webp' /></p><p> </p><p>இதன் மூலம், டிஜிட்டல் தளம் வழியாக யார் வேண்டுமானாலும் அதன் நம்பகத்தன்மையை விரைவாகச் சரிபார்க்க முடியும்.
</p><p>
இந்தச் சான்றிதழ்கள், பாதுகாப்பு அம்சங்கள் உட்பொதிக்கப்பட்ட சிறப்புத் தாளில் அச்சிடப்படுகின்றன.</p><p></p>]]></content>
            <updated>2026-07-25T05:27:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[சாவகச்சேரி நகரசபை உப தவிசாளர் தெரிவுக்கு தடை விதிக்கக் கோரி மனு : நீதிமன்றின் உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/chavakachcheri-uc-deputy-chairman-dismissed-1784950319"></link>
            <id>https://ibctamil.com/article/chavakachcheri-uc-deputy-chairman-dismissed-1784950319</id>
            <summary type="text">சாவகச்சேரி நகரசபை உப தவிசாளர் பதவி மற்றும் நகரசபை உறுப்புரிமையிலிருந்து ஞானப்பிரகாசம் கிஷோர் என்பவரை நீக்கி வட மாகாண ஆளுநரால் வெளியிடப்பட்ட வர்த்தமானி...</summary>
            <content type="html"><![CDATA[<p>சாவகச்சேரி நகரசபை உப தவிசாளர் பதவி மற்றும் நகரசபை உறுப்புரிமையிலிருந்து ஞானப்பிரகாசம் கிஷோர் என்பவரை நீக்கி வட மாகாண ஆளுநரால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை இரத்து செய்யக் கோரிய மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.</p><p>குறித்த மனு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் நேற்றைய தினம் (24) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.</p><p>இந்த வழக்கில் மனுதாரர் சார்பாக சட்டத்தரணி குமாரவடிவேல் குருபரன், எதிர்வரும் 28 ஆம் திகதி நடைபெறவுள்ள சாவகச்சேரி நகரசபையின் புதிய உப தவிசாளர் தெரிவுக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் எனச் சமர்ப்பணங்களை முன்வைத்தார்.</p><p></p><h2>ஒத்திவைக்கப்பட்ட வழக்கு&nbsp;</h2><p>
</p><p>
மனுவை ஆராய்ந்த யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதி சின்னத்துரை சதீஸ்தரன், புதிய உப தவிசாளர் தெரிவை தடை செய்யக்கோரிய கோரிக்கையை நிராகரித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4757dca2-0b43-4ac2-93ec-81b4d4adcb5c/26-6a64325853367.webp' /></p><p>
</p><p>
அத்துடன் வழக்கின் எழுத்து மூல சமர்ப்பணங்களைச் சமர்ப்பிப்பதற்காக குறித்த வழக்கை எதிர்வரும் 27 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-25T05:26:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தென்னந்தோட்டத் தொழிலாளி அடித்துப்படுகொலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/coconut-grove-worker-beaten-to-death-puttalam-1784957234"></link>
            <id>https://jvpnews.com/article/coconut-grove-worker-beaten-to-death-puttalam-1784957234</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;புத்தளம் - முந்தலம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நவதம்குளம்பகுதியில் நேற்று (24) நபரொருவர் அடித்துப்படுகொலை செய்யப்பட்டுள்ளதாக முந்தலம் பொலிஸா...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;புத்தளம் - முந்தலம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நவதம்குளம்பகுதியில் நேற்று (24) நபரொருவர் அடித்துப்படுகொலை செய்யப்பட்டுள்ளதாக முந்தலம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
 சம்பவத்தில் பிங்கிரிய பகுதியைச் சேர்ந்த 47 வயதுடைய நபர் ஒருவரே உயிரிழந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dd48a49b-d751-430e-87de-d70a0edbc61c/26-6a6449344aae4.webp' /></p><p>

உயிரிழந்தவரும் சந்தேகநபரும் தென்னந்தோட்டமொன்றில் பணியாற்றி வந்துள்ளதுடன், இருவருக்குமிடையே ஏற்பட்ட தகராறு முற்றியதில் இத்தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p></p><p>

 சம்பவத்துடன் தொடர்புடைய 52 வயதுடைய சந்தேகநபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், காயமடைந்துள்ள அவரும் பொலிஸ் பாதுகாப்பிற்கு மத்தியில் புத்தளம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
</p><p>
மேலும், சம்பவம் தொடர்பில் முந்தலம் பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-07-25T05:25:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை பிரீமியர் லீக்கில் ஆட்ட நிர்ணய மோசடி! களமிறங்கியது ஐசிசி விசாரணை குழு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/lpl-match-fixing-icc-involvement-in-investigation-1784956341"></link>
            <id>https://ibctamil.com/article/lpl-match-fixing-icc-involvement-in-investigation-1784956341</id>
            <summary type="text">


இலங்கை பிரீமியர் லீக் (LPL) தொடரில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஆட்ட நிர்ணய முறைகேடுகள் தொடர்பான விசாரணைகளில், சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ICC...</summary>
            <content type="html"><![CDATA[<p>


இலங்கை பிரீமியர் லீக் (LPL) தொடரில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஆட்ட நிர்ணய முறைகேடுகள் தொடர்பான விசாரணைகளில், சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ICC) ஊழல் தடுப்புப் பிரிவு தனது தீவிர பங்களிப்பை வழங்கியுள்ளது.
</p><p>
இதன் ஒரு பகுதியாக, ஐசிசி ஊழல் தடுப்புப் பிரிவின் தலைவர் ஆண்ட்ரூ எப்கிரேவ் மற்றும் அதன் சுயாதீனத் தலைவர் சுமதி தர்மவர்தன ஆகியோர், விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே மற்றும் விளையாட்டுப் புலனாய்வுப் பிரிவின் தலைவர் உதவி காவல்துறை கண்காணிப்பாளர் சனக டி சில்வா ஆகியோரைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
</p><p>
இச்சந்திப்பின் போது, நடைபெற்று வரும் விசாரணை நடவடிக்கைகள் மற்றும் ஐசிசியிடமிருந்து பெறக்கூடிய சாத்தியமான உதவிகள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.</p><p></p><h2>உளவுத்துறை ஆதரவு</h2><p>

போட்டிகளை நிர்ணயம் செய்ய வீரர்களைத் தூண்ட முயன்ற குற்றச்சாட்டின் பேரில், ஜஃப்னா கிங்ஸ் அணியின் இணை உரிமையாளர் மன்ஜோத் கல்ரா மற்றும் மற்றொரு இந்திய கிரிக்கெட் வீரர் ஆகியோர் கடந்த வாரம் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்தே இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a29cd314-1d52-436f-984b-2b59601a4140/26-6a6448616f492.webp' /></p><p> </p><p>

கைதான சந்தேகநபர்களிடமிருந்து சுமார் 9.5 மில்லியன் ரூபாய் ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
இதன்படி, இலங்கை அதிகாரிகளின் இந்த விசாரணைக்குத் தேவையான தொழில்நுட்ப நிபுணத்துவம் மற்றும் உளவுத்துறை ஆதரவு உள்ளிட்ட அனைத்துக் கூட்டு உதவிகளையும் வழங்குமாறு அமைச்சர் சுனில் குமார கமகே ஐசிசியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-25T05:23:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[EPF மற்றும் ETF குறித்து பிரதியமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/22-9-million-members-registered-with-epf-1784954835"></link>
            <id>https://ibctamil.com/article/22-9-million-members-registered-with-epf-1784954835</id>
            <summary type="text">தற்போது ஊழியர் சேமலாப நிதியத்தில் (EPF) பதிவாகியுள்ள மற்றும் பலன்களைப் பெறும் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 22.9 மில்லியன் என்று தொழிலாளர் பிரதி அமை...</summary>
            <content type="html"><![CDATA[<p>தற்போது ஊழியர் சேமலாப நிதியத்தில் (EPF) பதிவாகியுள்ள மற்றும் பலன்களைப் பெறும் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 22.9 மில்லியன் என்று தொழிலாளர் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.</p><p>அத்துடன் EPF மற்றும் ETF நிதியங்கள் உருவாக்கப்பட்டதன் பின்னர் கடந்த பல தசாப்த காலப்பகுதியில் எந்தவொரு அரசாங்கமும் மேற்கொள்ளாத அளவிலான முறைசார்ந்த ஆய்வொன்றை மேற்கொள்வதற்கு தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.</p><p>நாடாளுமன்றத்தில் நேற்று (24) உரையாற்றிய போதே பிரதி அமைச்சர் இந்த விடயங்களைக் குறிப்பிட்டார்.</p><p></p><h2>சந்தா பணம் வைப்பு</h2><p>அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போதைய தரவுப் பதிவுகளின்படி, ஊழியர் சேமலாப நிதியத்தில் (EPF) பதிவாகியுள்ள மற்றும் பலன்களைப் பெறும் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 22.9 மில்லியனாகும்.</p><p>அவர்களுள் மாதாந்தம் உறுப்பினர் சந்தா பணம் வைப்பு செய்யப்படும் செயலில் உள்ள கணக்குகளின் எண்ணிக்கை 3.1 மில்லியனாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ec2f9004-edce-422f-86f8-54cdfdb328bc/26-6a64469de75e3.webp' /></p><p> 

அத்துடன், ஊழியர் நம்பிக்கைப்பொறுப்பு நிதியத்தில் (ETF) பதிவு செய்யப்பட்டுள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கை சுமார் மூன்று மில்லியனாகும். </p><p>

2025ஆம் ஆண்டின் இறுதி நிலவரப்படி, ஊழியர் சேமலாப நிதியத்தின் சொத்து மதிப்பு 4.9 டிரில்லியன் ரூபாயாகவும், ஊழியர் நம்பிக்கைப்பொறுப்பு நிதியத்தின் சொத்து மதிப்பு 637.5 பில்லியன் ரூபாயாகவும் காணப்படுகின்றது.</p><p>2025ஆம் ஆண்டிற்கான செயலில் உள்ள முதலாளிமார்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து ஓராயிரம், அதில் அரை அரச துறை சார்ந்த முதலாளிமார்களின் எண்ணிக்கை 376 ஆகும்.</p><p></p><h2>புதிய தரவு அமைப்பு</h2><p>

பணம் செலுத்தத் தவறிய தனியார் மற்றும் அரை அரச துறை நிறுவனங்களிடமிருந்து நிலுவைத் தொகையை அறவிட்டுக்கொள்ளும் செயற்பாட்டைத் தொழிலாளர் திணைக்களம் தற்போது விரைவுபடுத்தியுள்ளது. </p><p>

தொழிலாளர் திணைக்களம் மற்றும் மத்திய வங்கியின் தரவு அமைப்புகளை ஒருங்கிணைத்து, புதிய தரவு அமைப்பின் கீழ் பணியாற்றுவதற்காக புதிய மென்பொருள் ஒன்று தற்போது உருவாக்கப்பட்டு வருகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6082c77f-1062-4ba7-8532-97a1104f436e/26-6a64469d315a8.webp' /></p><p> 

அத்துடன், ஊழியர் பதிவு உள்ளிட்ட பல EPF சேவைகளை இணையவழி ஊடாக மேற்கொள்வதற்காக "டிஜிட்டல் EPF" வசதி கடந்த டிசம்பர் மாதம் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. </p><p>

இந்த மறுசீரமைப்புகள் மற்றும் எதிர்காலத் திட்டங்களின் ஊடாக, ஒரே சேவைச் சாளரத்தின் மூலம் EPF மற்றும் ETF ஆகிய இரு நிதியங்களுக்கும் உரிய அனைத்துச் சேவைகளையும் ஒரே இடத்தில் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு உறுப்பினர்களுக்குக் கிடைக்கும்“ என தெரிவித்தார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-25T05:23:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடகத்தில் உதயமாகும் குரு: ஆகஸ்ட்டில் அதிர்ஷ்டம் கொட்டப்போகும் ராசிகள் யாவை?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/jupiter-rise-in-cancer-who-get-huge-luck-1784954214"></link>
            <id>https://manithan.com/article/jupiter-rise-in-cancer-who-get-huge-luck-1784954214</id>
            <summary type="text">நவகிரகங்களில் தேவர்களின் குருவாக போற்றப்படுபவர் குரு பகவான். இவர் ஆண்டுக்கு ஒருமுறை ராசியை மாறுவார். அந்த வகையில் சமீபத்தில் கடக ராசிக்குள் நுழைந்த கு...</summary>
            <content type="html"><![CDATA[<p>நவகிரகங்களில் தேவர்களின் குருவாக போற்றப்படுபவர் குரு பகவான். இவர் ஆண்டுக்கு ஒருமுறை ராசியை மாறுவார். அந்த வகையில் சமீபத்தில் கடக ராசிக்குள் நுழைந்த குரு பகவான், ஜூலை 5 அன்று அஸ்தமனமானார். </p><p>இந்த அஸ்தமன நிலை சுமார் 40 நாட்கள் நீடித்து, ஆகஸ்ட் 14 அன்று மீண்டும் கடக ராசியிலேயே உதயமாகவுள்ளார்.

ஜோதிட நம்பிக்கையின்படி, குரு பகவான் அஸ்தமனத்தில் இருக்கும் காலத்தில் அவரது பலம் குறைவதால், அவர் வழங்கும் நற்பலன்களும் தாமதமடையும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/77451db0-d2fb-4c10-ad47-ba7f87d5dcff/26-6a64442e170a3.webp' /></p><p> </p><p>ஆனால் ஆகஸ்ட் 14-ஆம் தேதி குரு உதயமானதும் அவரது வலிமை அதிகரித்து, அதனால் கிடைக்கும் சுபபலன்களும் அதிகரிக்கும் எனக் கருதப்படுகிறது.
</p><p>
குரு பகவானின் இந்த உதயம் 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும், குறிப்பாக சில ராசிக்காரர்களுக்கு தொழில், பணவரவு மற்றும் முன்னேற்றத்தில் சிறப்பான பலன்கள் கிடைக்கும். அப்படிப்பட்ட அதிர்ஷ்டம் பெறும் ராசிகள் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.</p><p></p><h2>ரிஷபம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bbe57f62-f287-4967-ab63-77092645703c/26-6a64442ebe66a.webp' /></p><p>
ரிஷப ராசியின் 3-வது வீட்டில் குரு பகவான் உதயமாக உள்ளார். இதனால் நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடியும். </p><p>பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு அல்லது புதிய பொறுப்புகள் கிடைக்கலாம். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. </p><p>நிதி நிலைமை மேம்பட்டு, பணம் தொடர்பான விஷயங்களில் சாதகமான பலன்கள் கிடைக்கும். நீண்ட காலமாக செய்த கடின உழைப்புக்கான பலனையும் பெறுவீர்கள்.</p><h2>

சிம்மம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ecde97de-7950-4126-bb4e-ac0bec8973b1/26-6a64442f6d3cf.webp' /></p><h2>
</h2><p>சிம்ம ராசியின் 12-வது வீட்டில் குரு பகவான் உதயமாக உள்ளார். இதனால் பணியிடத்தில் உங்கள் திறமையை நிரூபிக்கும் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். </p><p>குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தைத் தரக்கூடும். இதுவரை வேலையில் இருந்த தடைகள் நீங்கும். திடீர் பணவரவு கிடைக்கும் வாய்ப்பும் உள்ளது. வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை அமையும்.</p><h2>
துலாம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/03ff9cea-412d-416c-b98a-8d34d0d994e8/26-6a6444301c81f.webp' /></p><h2>
</h2><p>துலாம் ராசியின் 10-வது வீட்டில் குரு பகவான் உதயமாக உள்ளார். இதனால் தொழில் மற்றும் வேலைவாய்ப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். </p><p>வேலை மாற்ற நினைப்பவர்களுக்கு ஆகஸ்ட் மாதம் சாதகமாக இருக்கும். வியாபாரத்தில் வளர்ச்சி காண்பீர்கள். செலவுகள் குறைந்து, சேமிப்பு அதிகரிக்கும். </p><p>குடும்பத்தினரின் முழு ஆதரவு கிடைக்கும்.தன்னம்பிக்கை உயரும். மாணவர்களுக்கும் இந்த காலம் மிகவும் சாதகமாக இருக்கும்.</p><h2>
கும்பம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4b565118-a949-4324-ac16-da09a1c1ee3c/26-6a644430c20d7.webp' /></p><p></p><p>
கும்ப ராசியின் 6-வது வீட்டில் குரு பகவான் உதயமாக உள்ளார். இதனால் அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். நீண்ட நாட்களாக தடைபட்ட வேலைகள் வெற்றிகரமாக நிறைவேறும். </p><p>பணியிடத்தில் உங்கள் பொறுப்புகளை சிறப்பாகச் செய்து பாராட்டைப் பெறுவீர்கள். திடீர் பணவரவு ஏற்படலாம். நிதி நிலைமை மேம்படும். </p><p>குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் குறைந்து அமைதி நிலவும். உறவினர்களின் ஆதரவும் கிடைக்கும். புதிய வீடு அல்லது வாகனம் வாங்கும் வாய்ப்பு உருவாகலாம். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறவும் வாய்ப்புள்ளது.</p><p><b>இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;&nbsp;</b></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-25T05:18:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA['ஜனநாயகன்' படத்தில் காட்சிகள் நீக்கப்பட்டதால் கதறி அழுத நடிகை ஆனந்தி! என்ன காரணம்?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/anandhi-cries-of-vijay-jananayagan-movie-edit-1784908916"></link>
            <id>https://manithan.com/article/anandhi-cries-of-vijay-jananayagan-movie-edit-1784908916</id>
            <summary type="text">நடிகர் விஜய்யின் பெரும்பாலான திரைப்படங்கள் வெளியாகும் முன் ஏதாவது ஒரு சர்ச்சையையோ, சிக்கலையோ சந்திப்பது ரசிகர்களுக்கு புதிதல்ல. அந்த வரிசையில், அவரது ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நடிகர் விஜய்யின் பெரும்பாலான திரைப்படங்கள் வெளியாகும் முன் ஏதாவது ஒரு சர்ச்சையையோ, சிக்கலையோ சந்திப்பது ரசிகர்களுக்கு புதிதல்ல. அந்த வரிசையில், அவரது கடைசி திரைப்படமான 'ஜனநாயகன்' எந்தவித பிரச்சனையும் இல்லாமல் வெளியாக வேண்டும் என்பதே ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக இருந்தது.</p><p>
</p><p>
ஆனால், ரசிகர்களின் அந்த ஆசை இந்த முறையும் நிறைவேறவில்லை. திரைப்படம் வெளியாவதற்கு முன் தணிக்கைச் சான்றிதழ் தொடர்பான பிரச்சனைகள் எழுந்ததால், படக்குழுவும் ரசிகர்களும் பெரும் பதற்றத்தில் இருந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9db20d84-8d7d-4926-b341-375f6326cda5/26-6a63915b9d039.webp' /></p><p></p><h2>வெற்றிநடை போடும் ஜனநாயகன்&nbsp;</h2><p> </p><p>தணிக்கைச் சான்றிதழ் முன்கூட்டியே கிடைத்திருந்தால், ரசிகர்களுக்கு அது பொங்கல் கொண்டாட்டத்தைப் போல அமைந்திருக்கும். இருப்பினும் அனைத்து தடைகளையும் தாண்டி படம் வெளியானதும், முதல் நாளையே ரசிகர்கள் திருவிழாவாக மாற்றினர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0ea09c9a-b370-49fa-8526-2eb6baed8757/26-6a63915c4a7be.webp' /></p><p>
</p><p>
வசூலில் மிரட்டிய 'ஜனநாயகன்'

வெளியான முதல் நாளிலேயே 'ஜனநாயகன்' வசூலில் அதிரடி காட்டியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சென்னையில் மட்டும் சுமார் ரூ.6 கோடி வரை வசூல் செய்ததாகவும், உலகம் முழுவதும் முதல் நாளில் ரூ.90 கோடி வரை வசூலித்து சாதனை படைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. </p><p>"ஜனநாயகன் சூப்பர்", "தளபதி மாஸ்", "பிளாக்பஸ்டர்" என்று சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கொண்டாடிக் கொண்டிருந்த நிலையில், மறுபுறம் நடிகை ஆனந்தி வெளியிட்ட ஒரு உணர்ச்சிப்பூர்வமான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.</p><p></p><h2>வைரலாகும் காணொளி&nbsp;</h2><p>
</p><p>
அந்த வீடியோவில் பேசிய ஆனந்தி, திருமணத்திற்கும் குழந்தை பிறந்த பிறகும் முதன்முறையாக கமிட்டாகி நடித்த திரைப்படம் 'ஜனநாயகன்' தான் என்று தெரிவித்துள்ளார். </p><p>அதிலும் நடிகர் விஜய்யுடன் இணைந்து ஒரு முக்கியமான காட்சியில் நடித்தது தனது நீண்டநாள் ஆசை நிறைவேறிய தருணம் என்றும் கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5f7cfc9e-b8cf-496f-9917-f182f7ef4ae5/26-6a63915aef434.webp' /></p><p>

இந்த காரணத்தால் மிகுந்த ஆவலுடன் குடும்பத்தினருடன் திரையரங்கிற்கு சென்று படம் பார்த்ததாகவும், ஆனால் படம் முழுவதும் தனது காட்சிகளை எதிர்பார்த்து காத்திருந்தபோதும், இறுதியில் தான் நடித்த அனைத்து காட்சிகளும் நீக்கப்பட்டிருப்பதை அறிந்து மிகுந்த ஏமாற்றமடைந்ததாகவும் அவர் கண்ணீருடன் பகிர்ந்துள்ளார்.</p><p>

"விஜய்யுடன் நடிக்க வேண்டும் என்ற கனவு நனவானது. ஆனால் அந்த காட்சிகள் ரசிகர்களை சென்றடையவில்லை. அது மிகவும் வருத்தமாக இருக்கிறது," என்று கண்கலங்கியபடி அவர் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் மற்றும் திரையுலகைச் சேர்ந்த பலரும் ஆனந்திக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.</p><p><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/reel/DbJF-GTzZuV/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/reel/DbJF-GTzZuV/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/reel/DbJF-GTzZuV/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by Anandhi Ajay (@anandhi_offl)</a></p></div></blockquote> <script async src="//www.instagram.com/embed.js"></script></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"><b>FOLLOW NOW</b></a></u></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-25T05:17:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Erimalai</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்து சமுத்திரத்தை அண்மித்துள்ள எல்நினோ தாக்கம்! பொதுமக்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/el-nino-impact-request-use-water-sparingly-1784953002"></link>
            <id>https://tamilwin.com/article/el-nino-impact-request-use-water-sparingly-1784953002</id>
            <summary type="text">எல்நினோ தாக்கம் இந்து சமுத்திரத்தை அண்மித்துள்ள நிலையில், பொதுமக்கள் சரியான நீர் முகாமைத்துவத்தை பின்பற்றி, அதிக வெப்பத்தினால் ஏற்படக்கூடிய நீர்த்தட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>எல்நினோ தாக்கம் இந்து சமுத்திரத்தை அண்மித்துள்ள நிலையில், பொதுமக்கள் சரியான நீர் முகாமைத்துவத்தை பின்பற்றி, அதிக வெப்பத்தினால் ஏற்படக்கூடிய நீர்த்தட்டுப்பாட்டை சமாளிக்கும் செயற்பாடுகளில் ஈடுபட முன்வர வேண்டும் என பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.</p><p>

பெண்கள் வாழ்வுரிமைச்சங்கத்தின் ஏற்பாட்டில் எல்நினோ (El Niño) காலநிலை
மாற்றம் தொடர்பான விசேட விழிப்புணர்வு செயலமர்வு, யாழ்ப்பாணம், வடமராட்சி
கிழக்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்று 
நடைபெற்றது.</p><p></p><h2>இந்து சமுத்திரத்தை அண்மித்துள்ள எல்நினோ&nbsp;</h2><p>
</p><p>
இச்செயலமர்வில் முதன்மை வளவாளராக யாழ்ப்பாணப்
பல்கலைக்கழகப் புவியியல் துறை பேராசிரியரும், கலைப் பீடாதிபதியுமான நாகமுத்து
பிரதீபராஜா கலந்துகொண்டு உரையாற்றிய போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/88dad8df-cbed-4b9c-9bea-655839897f38/26-6a6446b97b390.webp' /></p><p>

இந்த செயலமர்வில் முக்கிய அம்சங்கள் ஒன்றான வெப்பத்தாக்கத்தின் காலப்பகுதி தொடர்பாக பேராசிரியர் மேலும் கூறுகையில், </p><p>

இந்து சமுத்திர பிராந்தியத்தை எல்நினோ நெருங்கி வருவதால்
பொதுமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் எனக்கேட்டுக்கொண்டார்.</p><p>

மத்திய பசுபிக் பிராந்திய கடற்பகுதிகளில் இருந்து இந்து சமுத்திர கடல் பிராந்தியத்திற்கு ஊடுருவியுள்ள
எல்நினோ, ஜூலை மாதம் தொடக்கம் அக்டோபர் மாதம் வரை அதிக வெப்பத்தாக்கத்தை
ஏற்படுத்தும்.</p><h2>நீரின் ஊடாக கடத்தப்படும் வெப்பம்&nbsp;</h2><p>
</p><p>
இதேவேளை, வேகமாக பரவும் கடல் வெப்பம் நிலத்தின் ஊடாக வெப்பம் கடத்தப்படுவதை
விட 16 மடங்கு வேகமாக நீரின் ஊடாக வெப்பம் கடத்தப்படுகிறது. இதனால் இந்து சமுத்திர கடற்பரப்பில் ஏற்படும் வெப்ப ஏற்றம் ஏனைய பகுதிகளுக்கும் மிக
வேகமாக பரவி வருகிறது.</p><p>
அத்துடன் இந்த கடல் வெப்ப ஏற்றம் இலங்கை மற்றும் மாலைதீவுகளில் அதிக தாக்கத்தை செலுத்த வாய்ப்புள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6b9c3c99-b125-4e63-8f06-283aae58088f/26-6a6446ba2c7e3.webp' /></p><p>
</p><p>
இலங்கையை பொறுத்தவரை, குறிப்பாக வட மாகாணத்தின் முல்லைத்தீவு, மன்னார்
மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் கடுமையான நீர் தட்டுப்பாட்டை இது
உருவாக்கும்.
</p><p>
மேலும், வறட்சியும், மழைவீழ்ச்சியும் ஜூலை முதல் செப்டெம்பர் வரையிலான
காலப்பகுதியில் கடுமையான வறட்சியை ஏற்படுத்தும்.எல்நினோ, அக்டோபர் மற்றும்
நவம்பர் மாதங்களில் பாரிய மழை வீழ்ச்சியையும் தோற்றுவிக்கும்.</p><p>
அக்டோபர் மாதத்திற்கு பின்னரே காற்றழுத்தத்தாழ்வு மண்டலங்கள் உருவாவதற்கான
சாத்தியக்கூறுகள் இருப்பதால், அதுவரை அதிக வறட்சியான காலநிலையே நிலவும்.</p><h2>சரியான நீர் முகாமைத்துவத்தை பின்பற்றல்</h2><p>
</p><p>
"எல்நினோ இந்து சமுத்திரத்தை அண்மித்துள்ள நிலையில், பொதுமக்கள் சரியான நீர்
முகாமைத்துவத்தை பின்பற்றி, அதிக வெப்பத்தினால் ஏற்படக்கூடிய
நீர்த்தட்டுப்பாட்டை சமாளிக்கும் செயற்பாடுகளில் ஈடுபட முன்வர வேண்டும் என்றும்
கேட்டுக்கொண்டுள்ளார்.
</p><p>
இந்நிகழ்வில் பெண்கள் வாழ்வுரிமைச் சங்கத்தின் இணைப்பாளர் வாசுகி, அமைப்பின்
முக்கியஸ்தர்கள், வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட
கிராமங்களின் பிரதிநிதிகள் மற்றும் சமூகச்செயற்பாட்டாளர்கள் எனப்பலரும்
கலந்துகொண்டனர்.&nbsp;&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-25T05:16:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[தொல்லையாக மாறிவிட்ட EES திட்டம்: புதிய பிரதமருக்கு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/burnham-to-urge-eu-waive-ees-border-controls-1784956355"></link>
            <id>https://news.lankasri.com/article/burnham-to-urge-eu-waive-ees-border-controls-1784956355</id>
            <summary type="text">வார இறுதி நாட்களில் ஐரோப்பாவுக்கு பயணிக்கும் பிரித்தானியர்களுக்கு பெரும் தொல்லையாக மாறிவிட்ட EES திட்டத்தை இடைநிறுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு பி...</summary>
            <content type="html"><![CDATA[<p>வார இறுதி நாட்களில் ஐரோப்பாவுக்கு பயணிக்கும் பிரித்தானியர்களுக்கு பெரும் தொல்லையாக மாறிவிட்ட EES திட்டத்தை இடைநிறுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு பிரித்தானியாவின் புதிய பிரதமருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p><h3>

Entry/Exit System (EES)
</h3><p>
Entry/Exit System (EES) திட்டத்தின்படி, ஐரோப்பாவுக்கு, அல்லது வேறு வகையில் கூறினால், ஷெங்கன் பகுதிக்கும், ஷெங்கன் பகுதியிலிருந்தும் பயணிக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தாரல்லாத மக்கள், எல்லைகளில் தானியங்கி இயந்திரம் ஒன்றில் தங்கள் கைரேகை, புகைப்படம் (biometric data) போன்றவற்றை பதிவு செய்யவேண்டும்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0b0bf66a-ce64-4318-8f25-6b95a246b381/26-6a6445c4b1588.webp' /></p><p>
பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறிவிட்டதால், பிரித்தானியர்களுக்கும் EES திட்டம் பெரும் தொல்லையாக மாறியுள்ளது.</p><p>

ஏராளமானோரின் கைரேகை, புகைப்படம் போன்றவற்றை பதிவு செய்யவேண்டியுள்ளதால் அதற்கு அதிக நேரம் பிடிக்கிறது.&nbsp;</p><p></p><p>
இதனால், பயணிகள் எல்லைகளில் நீண்ட நேரம் காத்திருக்கவேண்டியுள்ளது. கால தாமதத்தால் தங்கள் விமானத்தை தவறவிடுபவர்களும் இருக்கிறார்கள்.</p><h3>

பிரதமருக்கு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
</h3><p>
இந்நிலையில், இந்த EES திட்டத்தை இடைநிறுத்த, ஐரோப்பிய ஒன்றிய தலைவர்களை வலியுறுத்துமாறு பிரித்தானியாவின் புதிய பிரதமரான ஆன்டி பர்னாமுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b302671b-a2d6-4e8f-9f3c-4b925f3b82a3/26-6a6445c56085d.webp' /></p><p>
ஹீத்ரோ விமான நிலையத்தில் ஊடகவியலாளர்களை சந்தித்த லிபரல் டெமாக்ரட்ஸ் கட்சியின் வெளி விவகாரங்கள் செய்தித் தொடர்பாளரான கேலம் மில்லர் (Calum Miller), பிரதமர் ஆன்டி பர்னாம், ஐரோப்பிய ஒன்றிய தலைவர்களை அழைத்து, இந்த குழப்பமான, ஒழுங்காக செயல்படாத எல்லை திட்டத்தைக் கைவிட வலியுறுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.
</p><p>
பிரித்தானியாவில் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் தற்போது கோடை விடுமுறை என்பதால், வெள்ளிக்கிழமை முதல் திங்கட்கிழமை வரை சுமார் 2.2 மில்லியன் பிரித்தானிய சுற்றுலாப் பயணிகள் வெளிநாடுகளுக்குச் செல்வார்கள் என்றும் அவர்களில் பெரும்பாலானவர்கள் ஐரோப்பாவிற்கு பயணிப்பார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
</p><p>
இந்நிலையில், EES திட்டத்தால் சுற்றுலாப்பயணிகள் தண்டிக்கப்படக்கூடாது என்று கூறியுள்ள மில்லர், இந்த குழப்பமான, ஒழுங்காக செயல்படாத எல்லை திட்டத்தை, செப்டம்பர் மாதம் வரையாவது இடைநிறுத்துமாறு, பிரதமர் ஆன்டி பர்னாம், ஐரோப்பிய ஒன்றிய தலைவர்களை வலியுறுத்தவேண்டும் என்று கூறியுள்ளார்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-25T05:15:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்களுக்கு மகிழ்ச்சித் தகவல்! ஜனாதிபதி அநுரவின் அதிரடி அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/land-for-sri-lankan-foreign-workers-1784954292"></link>
            <id>https://tamilwin.com/article/land-for-sri-lankan-foreign-workers-1784954292</id>
            <summary type="text">
வெளிநாட்டில் பணி புரிந்து சேவைக் காலம் நிறைவடைந்து மீண்டும் நாட்டுக்குத் திரும்பும் தொழிலாளர்களின் எதிர்கால நலனைக் கருத்திற்கொண்டு, காணிகள் வழங்க சம...</summary>
            <content type="html"><![CDATA[<p>
வெளிநாட்டில் பணி புரிந்து சேவைக் காலம் நிறைவடைந்து மீண்டும் நாட்டுக்குத் திரும்பும் தொழிலாளர்களின் எதிர்கால நலனைக் கருத்திற்கொண்டு, காணிகள் வழங்க சமகால அநுர அரசாங்கம் திட்டமிடப்பட்டுள்ளது.</p><p>

திட்ட சேவைகளுடன் கூடிய பயன்படுத்தப்படாத காணிகளை வழங்கும் விசேட வேலைத்திட்டமொன்றைத் தயாரிக்குமாறு சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அறிவுறுத்தியுள்ளார்.
</p><p>
தொடர்பில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இந்த அறிவுறுத்தல்களை வழங்கினார்.</p><h2><b>

அநுரவின் அதிரடி அறிவிப்பு</b></h2><p>இதன்போது அரசாங்கத்தால் வழங்கப்படும் காணிகள் தொடர்பில் வலுவான ஒப்பந்தங்களை செய்து கொள்ள வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி, சுட்டிக்காட்டடியுள்ளார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e207c0b4-2fae-4da4-8f1b-0cef0bcd7b15/26-6a6445512b6af.webp' /></p><p>மேலும் அது குறித்து ஆராய்வதற்காக நிதி அமைச்சு ஊடாக விசேட குழுவொன்றை நியமிப்பதற்கும் ஜனாதிபதி தீர்மானித்தார்.</p><p>

அத்துடன், மலையக மக்களுகு்கு 10,000 வீடுகளை நிர்மாணிக்கும் திட்டத்தை உரிய காலத்திற்குள் நிறைவு செய்யுமாறு ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார்.
</p><p>
வெளிநாட்டு உதவி மற்றும் கடன் திட்டங்களில் காணப்படும் பிரச்சினைகள் காரணமாக சில ஒதுக்கீடுகள் திருப்பிச் செல்வதை தவிர்ப்பதற்காக வினைத்திறனான பொறிமுறையொன்றைத் தயாரிக்குமாறும் ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார். 
</p>]]></content>
            <updated>2026-07-25T05:11:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இரண்டு குழந்தைகள் பிறந்தும் நாமல் ராஜபக்க்ஷவை துரத்தும் பிரச்சனை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/namal-rajapaksa-s-wedding-electricity-bill-arrears-1784956359"></link>
            <id>https://jvpnews.com/article/namal-rajapaksa-s-wedding-electricity-bill-arrears-1784956359</id>
            <summary type="text">முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் வீட்டில் மின் கட்டண நிலுவை (26.8 லட்சம் ரூபாய்) இருந்த போது மின்சாரத்தை துண்டிக்காது தமது வீட்டில் மின் கட்டண நில...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் வீட்டில் மின் கட்டண நிலுவை (26.8 லட்சம் ரூபாய்) இருந்த போது மின்சாரத்தை துண்டிக்காது தமது வீட்டில் மின் கட்டண நிலுவையை காரணம் காட்டி ஏன் மின்சாரம் துண்டிக்கப்பட்டது என நபர் ஓருவர் உச்ச நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.</p><p>

2019-ஆம் ஆண்டு நடைபெற்ற<a href="https://jvpnews.com/article/namal-rajapaksa-s-warning-electric-bill-issue-1691557217" target="_blank"> நாமல் ராஜபக்‌சவின் திருமண விழா</a>விற்காகப் பயன்படுத்தப்பட்ட மின்சாரத்திற்கான கட்டணத்தை செலுத்தத் தவறியமை தொர்பில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/05d47b12-264f-4e44-88f2-786a7193f802/26-6a6445c8a4243.webp' /></p><h2>எனக்கு மட்டும் பாராபட்சம் ஏன்?</h2><p>
</p><p>
இந்த விடயம் மக்களின் அடிப்படை மனித உரிமைகளை மீறும் செயலாகும் எனத் தீர்ப்பளிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவை எதிர்வரும் டிசம்பர் 04-ஆம் திகதி விசாரிப்பதற்கு உயர் நீதிமன்றம் நேற்று (24) உத்தரவிட்டுள்ளது.
</p><p>
சாதாரண குடிமகன் தனது வீட்டில் ரூபா 7,390 மாதக் கட்டணத்தைச் செலுத்தத் தவறியதற்காக உடனடியாக மின் இணைப்பைத் துண்டித்த மின்சார சபை, லட்சக்கணக்கான ரூபாய் நிலுவை வைத்திருந்த வீராக்கெட்டிய இல்லத்தின் மின்சாரத்தைத் துண்டிக்கத் தவறியது சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற கொள்கைக்கு முரணானது என மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p>]]></content>
            <updated>2026-07-25T05:11:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் ஆயிரக்கணக்கான மின்னல் தாக்கியதால் பற்றியெரியும் புதிய காட்டுத்தீ]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/lightnings-trigger-fresh-wildfires-1784955940"></link>
            <id>https://news.lankasri.com/article/lightnings-trigger-fresh-wildfires-1784955940</id>
            <summary type="text">மேற்கு கனடாவில் புதிய காட்டுத்தீ ஏற்பட்டுள்ள அதேவேளையில் ஒன்ராறியோவில் காடுகள் தொடர்ந்து எரிந்து வருவதாகவே தகவல் வெளியாகியுள்ளது.கடும் வெப்பம், மின்னல...</summary>
            <content type="html"><![CDATA[<p>மேற்கு கனடாவில் புதிய காட்டுத்தீ ஏற்பட்டுள்ள அதேவேளையில் ஒன்ராறியோவில் காடுகள் தொடர்ந்து எரிந்து வருவதாகவே தகவல் வெளியாகியுள்ளது.</p><h2>கடும் வெப்பம், மின்னல்</h2><p>
கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சுமார் 34,000 மின்னல் தாக்குதல் ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து, தெற்கு பிரிட்டிஷ் கொலம்பியாவில் தொடர்ச்சியான காட்டுத்தீ சம்பவங்களுக்கும் வெளியேற்ற உத்தரவுகளுக்கும் வழிவகுத்தன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4d2e7b15-5831-44c3-b01c-8081538869b7/26-6a6445b897279.webp' /></p><p> </p><p>வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி, அந்த மாகாணத்தில் 25 வெளியேற்ற உத்தரவுகளும் 90 தீவிர காட்டுத்தீச் சம்பவங்களும் பதிவாகியிருந்தன; வெப்பம் மற்றும் வறண்ட வானிலை நிலவுவதால் இவை மேலும் பரவக்கூடும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். </p><p>அதிகரித்த வெப்பநிலையால் தூண்டப்பட்ட கடும் வெப்பம் மற்றும் மின்னலுடன் கூடிய புயல்களால் ஏற்பட்ட காட்டுத்தீ, இந்த கோடையில் கனடா முழுவதும் உள்ள தொலைதூரக் காடுகளை எரித்துச் சாம்பலாக்கியுள்ளது.</p><p></p><p> </p><p>கடந்த வாரம், அவற்றிலிருந்து எழுந்த புகை அமெரிக்காவின் கிழக்குக் கடற்கரை மற்றும் மத்திய-மேற்குப் பகுதிகளில் உள்ள பெரிய நகரங்களின் மீது பரவியது. வடமேற்கு ஒன்ராறியோவில் 139 காட்டுத்தீ சம்பவங்கள் தீவிரமாக எரிந்து கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><h2>நிலைமை மேம்படும்</h2><p> </p><p>அவற்றில் 32 எண்ணிக்கை கட்டுப்படுத்த முடியாமல் எரிந்து வருவதாகவே கூறப்படுகிறது. இந்த நிலையில், கனடாவின் சுற்றுச்சூழல் துறை, ஆல்பர்ட்டாவின் பேன்ஃப் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மோசமான காற்றின் தரம் குறித்து வெள்ளிக்கிழமை எச்சரிக்கை விடுத்தது; இருப்பினும், வார இறுதியில் பெரும்பாலான பகுதிகளில் நிலைமை மேம்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் கூறியது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c74d100f-381b-418e-b1c5-b2dcd1a2be67/26-6a6445b94775c.webp' /></p><p> </p><p>இதனிடையே, தீயை அணைக்கும் பணியில் ஈடுபட 5,300-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்களையும், சுமார் 300 நீர் வீசும் விமானங்கள், ஹெலிகொப்டர்கள் மற்றும் மக்களை வெளியேற்றும் விமானங்களையும் ஃபெடரல் அரசாங்கம் திரட்டும் என்று பிரதமர் கார்னி அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார். </p><p>இந்த ஆண்டில் சுமார் 2.95 மில்லியன் ஹெக்டேர் (7.29 மில்லியன் ஏக்கர்) நிலம் எரிந்துள்ளது; இது கடந்த 10 ஆண்டுகளின் சராசரி அளவான சுமார் 2.55 மில்லியன் ஹெக்டேரை விட அதிகமாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b6ec7f13-58ad-4361-a54a-a78774a367e2/26-6a6445b7d8dcc.webp' /></p><p> </p><p>கடந்த இரண்டு ஆண்டுகளின் இதே காலகட்டத்தை விட, கனடாவில் தற்போது அதிக எண்ணிக்கையிலான காட்டுத்தீ எரிந்து கொண்டிருப்பதாகவே தெரிய வந்துள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-25T05:04:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[அழகு என்றால் என்ன? அழகை பற்றி மனம் திறந்து பேசிய நடிகை ராஷ்மிகா மந்தனா..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/rashmika-mandanna-defines-real-beauty-1784952891"></link>
            <id>https://cineulagam.com/article/rashmika-mandanna-defines-real-beauty-1784952891</id>
            <summary type="text">ராஷ்மிகா மந்தனாபான்-இந்தியன் ஸ்டாராக ஜொலித்துக்கொண்டிருக்கிறார் நடிகை ராஷ்மிகா மந்தனா. இந்திய சினிமாவில் அதிக வசூல் செய்த கதாநாயகிகளில் இவரும் இடம்பிட...</summary>
            <content type="html"><![CDATA[<h2>ராஷ்மிகா மந்தனா</h2><p>பான்-இந்தியன் ஸ்டாராக ஜொலித்துக்கொண்டிருக்கிறார் நடிகை ராஷ்மிகா மந்தனா. இந்திய சினிமாவில் அதிக வசூல் செய்த கதாநாயகிகளில் இவரும் இடம்பிடித்துள்ளார். </p><p>

கடந்த சில மாதங்களுக்கு முன் தனது நீண்ட நாள் காதலரான விஜய் தேவரகொண்டாவை திருமணம் செய்துகொண்டார். இவர்களுடைய திருமணம் பிரம்மாண்டமாக நடைபெற்றது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e10d5581-2d60-49b4-b3ed-f7ce651f5df3/26-6a64383e2d342.webp' /></p><p>திருமணத்திற்கு பிறகும் பிஸியாக நடித்து வரும் <a href="https://www.youtube.com/watch?v=uYxaRef5GHw&amp;t=1s" target="_blank">ராஷ்மிகா </a>நடிப்பில், சமீபத்தில் வெளிவந்த காக்டெய்ல் 2 திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு ரசிகர்களிடையே வரவேற்பை பெறவில்லை.</p><p></p><p>

அடுத்ததாக இவர் நடிப்பில் Mysaa மற்றும் ரணபலி ஆகிய திரைப்படங்கள் உருவாகி வருகின்றன. இதில் ரணபலி திரைப்படத்தில் தனது கணவர் விஜய் தேவரகொண்டாவோடு இணைந்து நடித்து வருகிறார். இந்த இரண்டு திரைப்படங்களின் மீதும் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்ப்பை வைத்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/09094fa6-cb6e-4840-88d6-f438d1e3edee/26-6a64383ed8631.webp' /></p><h2>அழகு என்றால் என்ன?</h2><p>
</p><p>
முன்னணி நடிகையாக வலம் வரும் ராஷ்மிகா, அழகு குறித்து எழுந்த கேள்விக்கு அளித்த பதில் அனைவரையும் கவர்ந்துள்ளது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5bd27a26-eec3-476c-a0f5-44a4ede2b6c4/26-6a64383f8bc1b.webp' /></p><p>அவர் கூறியதாவது, "உள்ளம் அழகினால் உடலும் அழகாகும்; விதவிதமான ஆடைகள், அழகு சாதன பொருட்களை பயன்படுத்தினாலும், ஆழ்மனது தூய்மையாக இருந்தால் மட்டுமே நாம் அழகாக தெரிவோம். முடிந்தவரை நல்லது செய்து வாழ்வோம்; அதுதான் நம் காலத்திற்கு பிறகும் நம்மை பேச வைக்கும்" என தெரிவித்துள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-25T05:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[வசூல் வேட்டை நடத்தி வரும் ஜனநாயகன்.. 2 நாட்கள் பாக்ஸ் ஆபிஸ் விவரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/jananayagan-worldwide-box-office-1784955352"></link>
            <id>https://viduppu.com/article/jananayagan-worldwide-box-office-1784955352</id>
            <summary type="text">இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் முதலமைச்சர் விஜய் நடிப்பில் உருவாகி வெளியாகியுள்ள திரைப்படம் ஜனநாயகன். கே.வி.என் நிறுவனம் இப்படத்தை தயாரிக்க, அனிரு...</summary>
            <content type="html"><![CDATA[<p>இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் முதலமைச்சர் விஜய் நடிப்பில் உருவாகி வெளியாகியுள்ள திரைப்படம் ஜனநாயகன். கே.வி.என் நிறுவனம் இப்படத்தை தயாரிக்க, அனிருத் இசையமைத்துள்ளார்.

விஜய்யுடன் இணைந்து பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பிரகாஷ் ராஜ், பாபி தியோல் ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர். </p><p>

இந்த ஆண்டு பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இப்படம் பொங்கலுக்கு வெளிவரவிருந்த நிலையில், சென்சார் பிரச்சனை காரணமாக 6 மாதங்கள் கழித்து தற்போது வெளியாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e933f3fd-8c7f-4890-a335-730ad2d4abc4/26-6a6441db161ad.webp' /></p><p> </p><p>

திரையரங்குகளில் ரசிகர்களால் தலைமேல் தூக்கி வைத்து கொண்டாடப்பட்டு வரும் ஜனநாயகன் திரைப்படத்தின் 2 நாட்கள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.</p><p> 

அதன்படி, 2 நாட்களில் இப்படம் உலகளவில் ரூ. 120 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது. இனி வரும் நாட்களிலும் இப்படத்தின் வசூல் வேட்டை தொடரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.</p>]]></content>
            <updated>2026-07-25T04:55:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாதாள உலகக்குழு குற்றவாளிகளை அதிரடியாக கைது செய்த பொலிஸ் அதிகாரி! மனைவி தொடர்பில் வழக்குத்தாக்கல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/senior-police-office-files-case-against-wife-1784940567"></link>
            <id>https://tamilwin.com/article/senior-police-office-files-case-against-wife-1784940567</id>
            <summary type="text">நாட்டை உலுக்கிய பிரபல பாதாள உலகக்குழு தலைவர்கள் பலரை கைது செய்த உயர் பொலிஸ் அதிகாரியொருவர், தனது மனைவியினால் வீட்டு வன்முறைக்கு உட்படுத்தப்படுவதாக நீத...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டை உலுக்கிய பிரபல பாதாள உலகக்குழு தலைவர்கள் பலரை கைது செய்த உயர் பொலிஸ் அதிகாரியொருவர், தனது மனைவியினால் வீட்டு வன்முறைக்கு உட்படுத்தப்படுவதாக நீதிமன்றில் வழக்குத்தாக்கல் செய்துள்ளார்.</p><p>நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சர்ச்சைக்குரிய சந்தேகநபர்களை கைது செய்யும் நடவடிக்கைகளுக்கு அண்மையில் தலைமை தாங்கிய சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவரே இவ்வாறு நீதிமன்றின் உதவியை நாடியுள்ளார்.</p><p></p><h2>வீட்டு வன்முறை தொடர்பாக வழக்குத்தாக்கல் </h2><p>
</p><p>குறித்த உயர் பொலிஸ் அதிகாரி, தனது மனைவிக்கு எதிராக தொடர்ந்த வீட்டு வன்முறை வழக்கு தொடர்பாக அவரது மனைவி நீதிமன்றத்தில் எழுத்துப்பூர்வ உரைகளை சமர்ப்பித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bbf89759-a4d7-44b9-ba69-e59f66bad80b/26-6a64409267cc4.webp' /></p><p>தனது மனைவியிடமிருந்து தனக்கும் தனது குழந்தைகளுக்கும் ஏற்படும் அச்சுறுத்தல்கள் மற்றும் வன்முறைச்செயல்கள் காரணமாக பாதுகாப்பு உத்தரவை வழங்குமாறு குறித்த பொலிஸ் அதிகாரி நீதிமன்றத்தை கேட்டுக்கொண்டுள்ளார்.</p><p>தான் பணிபுரியும் இடத்திற்கு வந்து இடையூறு விளைவிப்பது, தேவையற்ற தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டு தொந்தரவு செய்வது மற்றும் பல்வேறு அச்சுறுத்தல்களை விடுப்பது போன்ற காரணங்களால் தான் கடுமையான உளவியல் மற்றும் சுகாதார ரீதியிலான பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளதாக தனது முறைப்பாட்டில் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p>
எவ்வாறாயினும், குறித்த பொலிஸ் அதிகாரியின் மனைவி, கணவரால் சுமத்தப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளையும் நிராகரித்துள்ளார்.</p><h2>நீதிமன்றில் எழுத்துப்பூர்வ கடிதம் தாக்கல்</h2><p> 
இது தொடர்பில் தனது சட்டத்தரணி ஊடாக எழுத்துப்பூர்வ விளக்கத்தை நீதிமன்றில் தாக்கல் செய்துள்ளார்.</p><p>
இது ஒரு வீட்டு வன்முறை அல்ல என்றும், கணவரின் அதிகப்படியான பணிச்சுமை மற்றும் குழந்தைகளுக்காக நேரத்தை ஒதுக்காமை போன்ற காரணங்களை அடிப்படையாகக்கொண்ட ஒரு சாதாரண குடும்பத்தகராறு மட்டுமே என்றும் மனைவியின் சட்டத்தரணி நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டியுள்ளரார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5e24f9bf-82ad-47b2-9fba-52d8f39d64a1/26-6a6408191b65e.webp' />&nbsp;&nbsp;</p><p>
</p><p>பொலிஸ் அதிகாரி குறிப்பிடுவது போன்ற வன்முறைச்சம்பவங்கள் நடந்துள்ளன என்பதை உறுதிப்படுத்த எந்தவொரு மருத்துவ அறிக்கையோ அல்லது சுயாதீன சாட்சியங்களோ சமர்ப்பிக்கப்படவில்லை என்றும் மனைவியின் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளது.</p><p>
இதற்கமைய, தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ள தற்காலிக பாதுகாப்பு உத்தரவை இரத்து செய்யுமாறு அவர் நீதிமன்றத்திடம் மேலும் கோரிக்கை விடுத்துள்ளதாக சிங்கள இணைய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
</p><p>குறித்த உயர் பொலிஸ் அதிகாரியின் தரப்பிலிருந்து இந்த விவகாரம் தொடர்பில் இதுவரையில் அதிகாரபூர்வ அறிவிப்புக்கள் எதுவும் வெளியிடப்படவில்லை என்றும் கூறப்படுகின்றது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-25T04:50:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஐரோப்பாவில் எல்லை மீறிய ரஷ்ய வானூர்தி; துரத்தி அடிப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/romanian-f-16-fighter-jet-shot-down-russian-drone-1784954953"></link>
            <id>https://canadamirror.com/article/romanian-f-16-fighter-jet-shot-down-russian-drone-1784954953</id>
            <summary type="text">&amp;nbsp; ஐரோப்பிய நாடான ருமேனியாவின் வான்வெளிக்குள் அத்துமீறி நுழைந்த, ரஷ்யாவினுடையது என சந்தேகிக்கப்படும் ஒரு ஆளில்லா வானூர்தியை, ருமேனியப் போர் வானூர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; ஐரோப்பிய நாடான ருமேனியாவின் வான்வெளிக்குள் அத்துமீறி நுழைந்த, ரஷ்யாவினுடையது என சந்தேகிக்கப்படும் ஒரு ஆளில்லா வானூர்தியை, ருமேனியப் போர் வானூர்தி ஒன்று சுட்டு வீழ்த்தியுள்ளது.
</p><p>

யுக்ரைன்; மீதான ரஷ்யாவின் முழு அளவிலான படையெடுப்பு ஆரம்பித்ததில் இருந்து, ஊடுருவிய ஒரு ஆளில்லா வானூர்தியை, இந்த கிழக்கு ஐரோப்பிய நாடு இடைமறித்தது இதுவே முதல் முறை என்று நாட்டின் ஜனாதிபதி நிகுசர் டான் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b0b6d7b7-b5fc-41ba-93d2-25fdf866b716/26-6a64404acfdc1.webp' /></p><p>
</p><p>
ரஷ்யாவும் யுக்ரைனும் தினமும் நூற்றுக்கணக்கான ஆளில்லா வானூர்திகளை ஏவி வரும் நிலையில், குறித்த ஆளில்லா வானூர்தியை, ருமேனிய போர் வானூர்தி சுட்டு வீழ்த்தியுள்ளது.
</p><p>
முன்னதாக, கடந்த ஜூன் மாதத்தில்;, ருமேனியாவின் கருங்கடல் துறைமுகமான கான்ஸ்டன்டாவில் உள்ள ஒரு எண்ணெய் முனையத்திற்கு அருகில் ஒரு கடல் ஆளில்லா வானூர்தி தானாகவே வெடித்த சம்பவமும் பதிவானது.</p>]]></content>
            <updated>2026-07-25T04:47:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[எல் நினோவால் ஏற்படவுள்ள தாக்கம்! வடக்கில் அதிகாரிகளுக்கு அவசர அறிவுறுத்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/north-governor-statement-regarding-farmers-1784952676"></link>
            <id>https://tamilwin.com/article/north-governor-statement-regarding-farmers-1784952676</id>
            <summary type="text">எல் நினோ காலநிலைத் தாக்கத்துக்கு முகம்கொடுக்கும் பொருட்டு, ஒவ்வொரு
மாவட்டத்திலும் விவசாயக் குழுக் கூட்டங்களை உடனடியாக நடத்தி நெல்
விதைப்புக்கான திகத...</summary>
            <content type="html"><![CDATA[<p>எல் நினோ காலநிலைத் தாக்கத்துக்கு முகம்கொடுக்கும் பொருட்டு, ஒவ்வொரு
மாவட்டத்திலும் விவசாயக் குழுக் கூட்டங்களை உடனடியாக நடத்தி நெல்
விதைப்புக்கான திகதியைத் தீர்மானிக்குமாறும், போதிய நீருள்ள குளங்களின் கீழான
சிறுதானியப் பயிர்ச்செய்கையை ஊக்குவிக்குமாறும் வட மாகாண ஆளுநர்
நா.வேதநாயகன் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
</p><p>
எல் நினோ காலநிலையை எதிர்கொள்வதற்கான முன்னாயத்தங்கள் மற்றும் தணிப்பு
நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயும் விசேட உயர்மட்ட கலந்துரையாடல் ஆளுநர்
செயலகத்தில் நேற்று (24.07.2026) இடம்பெற்றது.</p><p>

இக்கலந்துரையாடலில் 'சூம்' தொழில்நுட்பத்தின் ஊடாக இணைந்து கொண்ட வளிமண்டலவியல்
திணைக்களத்தின் வானிலை ஆய்வாளர், எல் நினோ தாக்கம் குறித்து விரிவான
விளக்கமளித்தார்.</p><p></p><h2>இலங்கையில் எல் நினோ தாக்கம்</h2><p> </p><p>ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் இதன் தாக்கம்
ஒப்பீட்டளவில் குறைவாகவே காணப்படும் எனவும், ஒவ்வொரு எல் நினோவும் தனக்கே
உரித்தான தனித்துவமான தன்மைகளைக் கொண்டிருக்கும் எனவும் அவர்
சுட்டிக்காட்டினார்.
</p><p>
இதனைத் தொடர்ந்து, எதிர்வரும் காலநிலையை எதிர்கொள்வது தொடர்பில் விரிவாக
ஆராயப்பட்டது. </p><p>இதன்போது கருத்துத் தெரிவித்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக்
கலைப்பீடாதிபதி பேராசிரியர் நா.பிரதீபராஜா, வட மாகாணத்துக்கான
மழைவீழ்ச்சியானது வழமைபோன்று அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில்
தாழமுக்கங்களால் ஏற்படும் எனத் தெரிவித்தார். மழை பெய்யும் நாட்களின்
எண்ணிக்கை குறைவாக இருந்தாலும், மழைவீழ்ச்சியின் அளவு அதிகமாக இருக்கும்
எனவும், டிசம்பர், ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் மழைக்கான வாய்ப்பு
மிகக் குறைவு எனவும் அவர் சுட்டிக்காட்டினார். </p><p>அத்துடன், அக்டோபர் 12ஆம்
திகதிக்குப் பின்னரே வட மாகாணத்துக்கான மழைவீழ்ச்சி ஆரம்பமாவதற்கான
சாத்தியப்பாடுகள் அதிகமுள்ளன எனவும் அவர் குறிப்பிட்டார்.</p><p></p><p>
</p><p>
இதன்போது கருத்துத் தெரிவித்த வடக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளர்
எஸ்.சிவஸ்ரீ, மத்திய விவசாய அமைச்சின் அறிவுறுத்தலுக்கமைய எதிர்வரும் அக்டோபர்
மாதம் 15ஆம் திகதிக்கு முன்னர் நெல் விதைப்பை நிறைவு செய்ய வேண்டியதன்
அவசியத்தை வலியுறுத்தினார். </p><p>அத்துடன், மூன்று அல்லது மூன்றரை மாத கால நெல்
இனங்களையே பயிரிடுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.</p><h2>மழைவீழ்ச்சியால் பயிர் பாதிப்பு</h2><p>
</p><p>யாழ்ப்பாணம் தவிர்ந்த ஏனைய 4 மாவட்டங்களிலும் நெல் விதைக்கப்பட்டு 12 நாட்கள்
கடந்த பின்னர் கிடைக்கும் மழைவீழ்ச்சியால் பயிர்கள் பாதிக்கப்படுவது குறைவாக
இருக்கும் என இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது. </p><p>இதனைக் கருத்திற்கொண்டு,
ஒவ்வொரு மாவட்டங்களிலும் விவசாயக் குழுக் கூட்டங்களை நடத்திப் பொருத்தமான நெல்
விதைப்புத் திகதிகளைத் தீர்மானிக்குமாறு ஆளுநர் பணிப்புரை விடுத்தார்.</p><p></p><p>
</p><p>
வடக்கு மாகாண நீர்ப்பாசனத் திணைக்கள மாகாணப் பணிப்பாளர் த.ராஜகோபு கருத்துத்
தெரிவிக்கையில், குளங்களில் சிறுபோகப் பயிர்ச்செய்கை நிறைவடைந்த பின்னரும்
சராசரியாக 20 சதவீதமான நீர் எஞ்சியுள்ளதாகத் தெரிவித்தார். வன்னேரிக்குளத்தில்
மூன்றாம் போகமாகச் சிறுதானியப் பயிர்ச்செய்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளமையையும்
அவர் சுட்டிக்காட்டினார்.

இதனையடுத்து ஆளுநர் பின்வரும் முக்கிய அறிவுறுத்தல்களை அதிகாரிகளுக்கு
வழங்கினார்.</p><p>
அதிக வெப்பத்தால் குளங்களில் நீரின் ஆவியாதல் வீதம் அதிகமாக இருக்கும்
என்பதால், தற்போது எஞ்சியுள்ள நீரைப் பயன்படுத்தி மூன்றாம் போகமாகச்
சிறுதானியப் பயிர்ச்செய்கையை முன்னெடுக்க விவசாயிகள் விரும்பினால், பொருத்தமான
குளங்களில் அதற்கு உடனடியாக அனுமதியளிக்க வேண்டும்.

இவ்வாறு அனுமதிக்கும்போது கால்நடைகளுக்கான குடிநீர்த் தேவை மற்றும் நிலத்தடி
நீரைச் செறிவூட்டுதல் ஆகிய விடயங்களைக் கருத்திற்கொண்டு மிகவும் கவனமாகச்
செயற்பட வேண்டும்.
</p><p>
இம்முறை கிடைக்கப்பெறவுள்ள அதிகளவான மழைநீரை உச்ச அளவில் தேக்கி வைப்பதற்கு
ஏதுவாக, குளங்களைத் தூர்வாருதல் உள்ளிட்ட புனரமைப்புச் செயற்பாடுகளை விரைந்து
முன்னெடுக்க வேண்டும்.

வறட்சியால் பாதிக்கப்படக்கூடிய பிரதேசங்களுக்கான மாற்று குடிநீர் விநியோக
மூலங்களைக் கண்டறியும் செயற்பாடுகளை உடனடியாக ஆரம்பிக்குமாறும், இது தொடர்பில்
தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையினருடன் ஒருங்கிணைந்து செயற்படுமாறும்
ஆளுநர் அறிவுறுத்தினார்.
</p><p>
இதேவேளை, நீரின் ஆவியாதல் வீதம் அதிகமாகக் காணப்படும் தற்போதைய நிலையில்,
குறிப்பாக யாழ்ப்பாண மாவட்டத்தின் நிலத்தடி நீர் மட்டமும் வெகுவாகக்
குறைவடைந்து வருவதால், பொதுமக்களும் விவசாயிகளும் நீரை மிகவும் சிக்கனமாகப்
பயன்படுத்த வேண்டும் எனப் பேராசிரியர் பிரதீபராஜா இதன்போது விசேட
கோரிக்கையொன்றை முன்வைத்தார்.
</p><p>
இக்கலந்துரையாடலில் வடக்கு மாகாண பிரதம செயலாளர், ஆளுநரின் செயலாளர்,
அமைச்சுக்களின் செயலாளர்கள், மாவட்டச் செயலாளர்கள், மேலதிக மாவட்டச் செயலாளர்,
அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர்கள் உள்ளிட்ட பல உயர்
அதிகாரிகள் பங்கேற்றிருந்தனர்.</p>]]></content>
            <updated>2026-07-25T04:46:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் தேடப்பட்ட குற்றவாளிகள் தமிழ் நாட்டிற்கு தப்பியோட்டம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/wanted-criminals-from-sri-lanka-flee-to-tamil-nadu-1784954633"></link>
            <id>https://jvpnews.com/article/wanted-criminals-from-sri-lanka-flee-to-tamil-nadu-1784954633</id>
            <summary type="text">&amp;nbsp; இலங்கையில் போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் தேடப்பட்டு வந்த இருவர், தமிழ்நாட்டின் இராமே...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; இலங்கையில் போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் தேடப்பட்டு வந்த இருவர், தமிழ்நாட்டின் இராமேஸ்வரம் பகுதியில் இந்திய பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
</p><p>


படகு மூலம் சட்டவிரோதமாக இந்தியாவுக்குத் தப்பிச் சென்றபோதே அவர்கள் கைதுசெய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><h2>தமிழ் நாட்டிற்கு தப்பியோட்டம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/579929b8-740c-42d9-b1c7-28614c7b0796/26-6a643f0ae7592.webp' /></p><p>
</p><p>


இராமநாதபுரம்&nbsp; தனுஷ்கோடி கம்பிப்பாடு கடற்கரையில், இலங்கையிலிருந்து வந்த படகிலிருந்து இருவர் இறங்கியதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
</p><p>


ஆரம்பகட்ட விசாரணைகளில், கைதுசெய்யப்பட்ட இருவரும் வத்தளை பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதும், மன்னார் மாவட்டத்தின் பேசாலை கடற்கரையிலிருந்து படகு மூலம் இந்தியாவுக்கு வந்ததாகவும் தெரியவந்துள்ளது. </p><p>இதற்காக சுமார் 3 இலட்சம் ரூபாய் செலுத்தியதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.



இதையடுத்து, இந்திய மத்திய மற்றும் மாநில உளவுத்துறை அதிகாரிகள் இலங்கை அதிகாரிகளுடன் தொடர்புகொண்டு சந்தேகநபர்கள் தொடர்பான தகவல்களை உறுதிப்படுத்தினர்.
</p><p>


அதன்படி, கைது செய்யப்பட்ட இருவருக்கும் எதிராக ஹெரோயின், கொக்கைன் உள்ளிட்ட போதைப்பொருள் கடத்தல் மற்றும் பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பான வழக்குகள் நிலுவையில் இருப்பதை இலங்கை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
</p><p>


இதனையடுத்து, கைதுசெய்யப்பட்ட இருவரையும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p>&nbsp;கைது செய்யப்பட்டவர்கள் 30 மற்றும் 31 ஆகிய வயதுடைய வத்தளை மற்றும் கம்பஹா பகுதிகளை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது. 

கடந்த வியாழக்கிழமை வத்தளைப் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் இவர்களுக்குத் தொடர்பிருக்கலாம் என&nbsp; சந்தேகம்&nbsp; வெளியிடப்பட்டுள்ளது.</p><p>

இவர்களைத் தங்களிடம் ஒப்படைக்குமாறு இலங்கை அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளதாகவும், சந்தேகநபர்கள் தற்போது திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. </p><p>

ஒரு வாரத்திற்குள் அவர்களை மீண்டும் இலங்கைக்கு அனுப்ப எதிர்பார்க்கப்படுவதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><br></p>]]></content>
            <updated>2026-07-25T04:42:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிறந்தநாள் விழாவில் நடந்த துப்பாக்கிச் சூடு - இந்தியாவில் சிக்கிய இருவர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/two-suspects-arrested-linked-to-wattala-shooting-1784953794"></link>
            <id>https://ibctamil.com/article/two-suspects-arrested-linked-to-wattala-shooting-1784953794</id>
            <summary type="text">வத்தளையில் நடந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் இருவர் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகம் செய்தி வெளியி...</summary>
            <content type="html"><![CDATA[<p>வத்தளையில் நடந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் இருவர் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.</p><p>சட்டவிரோதமாக படகு மூலம் தனுஷ்கோடிக்கு வந்த இலங்கையர்கள் இருவரை இந்திய கடலோர காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.</p><p>இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள், 30 மற்றும் 31 வயதுடையவர்கள் எனவும், இவர்கள் வத்தளை பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><h2>இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படுவார்கள்</h2><p>கடந்த வியாழக்கிழமை வத்தளை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் இவர்களுக்கு தொடர்புள்ளதா என இலங்கை அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளதாக ‘தி ஹிந்து’ பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1fab9b4c-290a-49e5-aa16-6ea0f5550fc2/26-6a643e47dbcb2.webp' /></p><p>மேலும், இவர்கள் இருவருக்கும் எதிராக இலங்கையில் போதைப்பொருள் தொடர்பான மூன்று வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
</p><p>
இலங்கை அதிகாரிகள் அவர்களை ஒப்படைக்குமாறு கோரியுள்ளதாகவும், சந்தேகநபர்கள் தற்போது திருச்சி மத்திய சிறை வளாகத்திற்குள் உள்ள விசேட முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.</p><p>
ஒரு வாரத்திற்குள் அவர்கள் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாகவும் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-25T04:40:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepachelvan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கறுப்பு ஜூலையில் படுகொலை செய்யப்பட்ட குட்டிமணி, தங்கதுரை, ஜெகன்....]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/kuttimani-thangadurai-were-murdered-in-black-july-1784951919"></link>
            <id>https://ibctamil.com/article/kuttimani-thangadurai-were-murdered-in-black-july-1784951919</id>
            <summary type="text">ஜூலை 23, ஈழத் தமிழ் மக்களின் வரலாற்றில் அழியாத இரத்தக் கறையாகப் பதிந்த நாள். அன்றைய தினங்களில் இலங்கைத் தீவு முழுவதும் ஈழத் தமிழ் மக்களின் குருதியால் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜூலை 23, ஈழத் தமிழ் மக்களின் வரலாற்றில் அழியாத இரத்தக் கறையாகப் பதிந்த நாள். அன்றைய தினங்களில் இலங்கைத் தீவு முழுவதும் ஈழத் தமிழ் மக்களின் குருதியால் நனைந்தது.</p><p> தமிழர்களின் உயிர்கள் மட்டுமல்ல, அவர்களின் வீடுகள், உடைமைகள், தொழில்கள், கல்வி, வாழ்வாதாரம் என ஒரு இனத்தின் இருப்பையே குறிவைத்து திட்டமிட்ட தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டன.</p><p>தமிழ் மக்கள்மீதான இனவெறுப்பை அரசியல் மேடைகளில் வெளிப்படையாகப் பேசிய அன்றைய அதிபர் ஜே.ஆர். ஜெயவர்த்தனவின் ஆட்சியில், அரச இயந்திரமும் அமைச்சர்களும் இணைந்து, இலங்கைத் தலைநகரை மையமாகக் கொண்டு வாழ்ந்திருந்த தமிழர்களின் கல்வி, பொருளாதார வலிமை, சமூக அடித்தளம், இனத்தின் தொடர்ச்சி ஆகியவற்றை சிதைத்தழிக்கும் திட்டமிட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.</p><p> அந்த இனவெறி வன்முறை கொழும்பைத் தாண்டி வடக்கு, கிழக்கு பகுதிகளுக்கும் பரவியது. அதன் தொடர்ச்சியாக, அரசின் காவலில் இருந்த தமிழ் அரசியல் கைதிகள்கூட பாதுகாக்கப்படாமல், அவர்கள்மீதும் திட்டமிட்ட இனப்படுகொலை அரங்கேற்றப்பட்டது.</p><p></p><h2>மகத்தான போராளிகள்</h2><p>ஈழத் தமிழ் மக்களின் வாழ்விலும் வரலாற்றிலும் அகலாத வடுவாக அமைந்த கறுப்பு ஜூலைப் படுகொலைகள் ஜூலை 23இல் துவங்கப்பட்ட நிலையில் ஜூலை 25ஆம் நாளில் அதன் தொடர்ச்சியாக தமிழ அரசியல் கைதிகள் மீதான படுகொலை இடம்பெற்றது.</p><p> அன்றைய நாட்களில் தமிழீழ விடுதலைக்காக போராட்டங்களில் ஈடுபட்ட தமிழ் இளைஞர்கள் அரசியல் கைதிகளாக சிறைகளில் அடைக்கப்பட்டிருந்தனர். அதேவேளை கொலை, கொள்ளை, பாலியல் குற்றங்களுக்காக சிங்கள அரசியல் கைதிகளும் சிறைகளில் அடைக்கப்பட்டிருந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/87425707-4db4-4f5d-9aa0-6343071d27b9/26-6a643d60205fa.webp' /></p><p> </p><p>இந்த நிலையில் எவ்வாறு விடுதலைப் புலிகளின் திருநெல்வேலித் தாக்குதலை தகுந்த வாய்ப்பாக சொல்லிக் கொண்டு கறுப்பு ஜூலைப் படுகொலையை சிறிலங்கா அரசு நிகழ்த்தியதோ அதுதேபோன்று கறுப்பு ஜூலையை தகுந்த வாய்ப்பாக்க் கொண்டு தமிழ் அரசியல் கைதிகள்மீதான படுகொலையும் நடந்தது.
</p><p>
அரசினால் – அரச அமைச்சர்களின் கட்டளையில் சிறைக்கு வெளியில் இருந்த காடையர்களாலும் சிறைக்கு உள்ளே இருந்த காடையர்களாலும் தமிழ் அரசியல் கைதிகள் மீதான சித்திரவதை துவங்கியிருந்தது. </p><p>அவர்களை படுகொலை செய்யும் நோக்கில் துவங்கிய அந்த துன்புறுத்தலின் இறுதியில் 53 தமிழ் அரசியல் கைதிகள் படுகொலை செய்யப்பட்டார்கள். </p><p>தமிழீழ விடுதலை வரலாற்றில் மகத்தான போராளிகளாக மதிக்கப்படுகின்ற குட்டிமணி, தங்கதுரை, ஜெகன் உள்ளிட்ட ஈழவிடுதலைப் போராளிகளே இவ்வாறு வெலிக்கடைச் சிறையில் சிங்களப் பேரினவாதிகளால் படுகொலை செய்யப்பட்டார்கள். </p><p>அவர்களின் படுகொலையின் பின்னால் என்ன காரணம் இருந்தது என்பது இன்றும் ஈழ மண்ணை அதிரச் செய்யும் பின்னணியைக் கொண்டது.</p><p></p><p>
</p><h2>
எனது கண்கள் தமிழீழத்தைக் காணட்டும்</h2><p>தமிழீழ விடுதலை இயக்கம் எனப்படும் ரெலோவின் முக்கியஸ்தர்களாக குட்டிமணி, தங்கதுரை உள்ளிட்டோர் அக்காலத்தில் இருந்தனர். குட்டிமணியும் தங்கதுரையும் பலாலி சிறையில் அடைக்கப்பட்ட ஒரு காலத்தில் அச் சிறையில் இருந்து அவர்கள் தப்பித்தனர். </p><p>தவறுதலாக தங்கதுரைக்கு காலில் காயம் ஏற்பட அவரைத் தூக்கிக் கொண்டு 10 கிலோமீற்றர் வரை ஓடிச் சென்று அவர்கள் இருவரும் தப்பிக் கொண்டனர்.</p><p> தமிழீழ விடுதலைக்காக துடிப்புக் கொண்ட இளைஞர்களாக இவர்கள் இருந்தனர் என்பதை அக்காலத்தவர்கள் இச் சம்பவத்தைக் கூறி நினைவு கொள்வதனையும் அவதானிக்க முடிகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/460155e2-7f37-4118-9f18-0370a8a2bbd9/26-6a643d60c69a0.webp' /></p><p>
</p><p>
இந்த நிலையில் 1981 மே மாத நாட்களில் இன விடுதலை சார்ந்த செயற்பாடுகளுக்காக குட்டிமணிக்கு தூக்குத் தண்டணை விதிக்கப்பட்ட வேளையில், உங்கள் இறுதி ஆசை என்ன என்று நீதிபதி நீதிமன்றத்தில் வினவியிருந்தார். </p><p>அதற்கு அவர் அளித்த பதில் கண்டு அன்றைய நீதிமன்றமே அதிர்ந்து வியந்ததாம். “நான் தூக்கில் இறந்த பின்பு தனது இரண்டு கண்களையும் கண்பார்வை இல்லாத ஒரு தமிழருக்கு தானாமாக வழங்கவேண்டும். என்னால் பார்க்க முடியாமல் போகும் ஈழத்தை எனது கண்களாவது பார்க்கட்டும்” என்றார் மாவீர்ர் குட்டிமணி.</p><p>ஈழத் தமிழ் மக்களுக்கு தனி ஈழமே தீர்வு என்பதையும் எந்த நிலை வந்தாலும் அந்த தாகத்தை விட்டுக்கொடுக்க மகத்தான போராளிகள் தயார் இல்லை என்பதையும் மிகச் சிறந்த தலைவராக அளப்பெரிய போராளியாக மாவீரன் குட்டிமணி அன்று சிங்கள நீதிமன்றில் எடுத்துரைத்தார்.</p><p></p><h2>சிறிங்கா நீதித்துறையை நிராகரித்த தங்கதுரை</h2><p>அதேபோல சிறிலங்கா நீதிமன்றம் குட்டிமணி, தங்கதுரை, ஜெகனுக்கு தூக்குத் தண்டனை அறிவித்தபோது மாவீரன் தங்கதுரை அவர்கள் மற்றொரு வரலாற்றுச் சிறப்பு மிக்க விடயத்தை பதிவாக்கியுள்ளார்.</p><p> ஈழத் தமிழ் மக்கள் ஒருபோதும் சிங்கள தேசத்துடன் இணைந்தவர்கள் இல்லை என்பதை வலியுறுத்தி அவர்கள்மீது பிரிவினைக் குற்றம் சுமத்த எந்த அடிப்படையும் இல்லை என்பதை வலியுறுத்தி தங்கதுரை இறுதி உரை ஆற்றினார். </p><p>அதன் அடிப்படையில் சிறிலங்கா நீதிமன்றத்தையும் அதன் தீர்ப்பையும் ஏற்றுக்கொள்ள மறுத்ததுடன், அவை அடிப்படையில் ஈழத் தமிழ் இனத்தை அழிக்கும் அமைப்பிலும் நோக்கிலும் உருவாக்கப்பட்டவை என்பதையும் எடுத்துரைத்து அதற்காக தமது உயிரையும் தியாகம் செய்திருந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/911d59ac-17c5-4ad6-9f13-83f7ac9b713a/26-6a643d6172532.webp' /></p><p>
</p><p>
கறுப்பு ஜூலையின் இனப்டுகொலைத் தீ வெலிக்கடை சிறைச்சாலை கதவுகளையும் திறந்துகொண்டு உள் நுழைந்தது. கத்தி, வாள் மற்றும் பல கூரிய ஆயுதங்களுடன் தமிழ் கைதிகளின் அறைகளுக்குள் நுழைந்த இனவாதிகள் தமிழ்க் கைதிகளை வெட்டி வீழ்த்தினர். </p><p>என் கண்கள் தமிழீழத்தை காணட்டும் என்ற வீரமிகு பேச்சினை அறிந்திருந்த சிங்களக் கதைகளில் குட்டிமணியை வெட்டிக் கொன்று அவரது கண்களை பிடுங்கி எடுத்து தங்கள் கால்களால் நசுக்கி மகிழ்ந்தனர்.</p><p> குட்டிமணி உள்ளிட்ட போராளிகளின் உடல்களை இழுத்துச்சென்று சிறைச்சாலை முற்றத்தில் இருந்த புத்தரின் முன்னால் போட்டு மகிழ்ந்தாடினார்கள்.
</p><p>
இப்படியான வெறுப்புமிகு செயல்கள் தமிழ் இனத்தின் வரலாற்றில் தீராத துயராகவும் வடுவாகவும் படிந்துவிட்டது. பின்னாட்களில் இந்த வடுக்கள் ஈழவிடுதலைப் போராட்டத்தை வலுப்படுத்தியது.</p><p> ஈழ மக்களின் தாயகக் கனவுக்காக தம்மை அர்ப்பணித்த குட்டிமணி, தங்கதுரை வரலாற்றின் தலைவர்களாகவும் மாவீரர்களாகவும் வழிகாட்டினார். குட்டிமணியின் கனவு தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் காலத்தில் சாத்தியமானது. </p><p>குட்டிமணியின் கண்கள் காணாத தமிழீழம் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் காலத்தில் நிகழ்ந்தது. இன நலன்களுக்காக இலட்சிய வேள்வியில் தம்மை மாய்த்த இந்த மாவீர்ர்கள் தமிழ் சமூகத்திற்கு மாத்திரமின்றி உலகச் சமூகத்திற்கே உன்னத வழிகாட்டிகளாகும்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-25T04:36:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[பின் அழகை காட்டி நடிகை நிகிதா ஷர்மா வெளியிட்ட கிளாமர் போட்டோஸ்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/nikita-sharma-latest-glamorous-photos-1784952205"></link>
            <id>https://cineulagam.com/article/nikita-sharma-latest-glamorous-photos-1784952205</id>
            <summary type="text">நிகிதா ஷர்மாமாடல் அழகி நிகிதா ஷர்மா இவர் தான் இப்போது சமூக வலைதளங்களில் செம டிரண்ட் நடிகை. இன்ஸ்டாவில் சுமார் 81 லட்சம் ரசிகர்களை ஃபாலோயர்களாக கொண்டுள...</summary>
            <content type="html"><![CDATA[<h2>நிகிதா ஷர்மா</h2><p>மாடல் அழகி நிகிதா ஷர்மா இவர் தான் இப்போது சமூக வலைதளங்களில் செம டிரண்ட் நடிகை.</p><p> இன்ஸ்டாவில் சுமார் 81 லட்சம் ரசிகர்களை ஃபாலோயர்களாக கொண்டுள்ளார். தனது ஃபாலோவர்களுக்காகவே மிகவும் கவர்ச்சியான புகைப்படங்களாக வெளியிட்ட வண்ணம் உள்ளார்.</p><p> அண்மையில் நீல நிற கவுனில் செம கவர்ச்சியாக போஸ் கொடுத்து அவர் வெளியிட்ட புகைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் லைக்ஸ் குவிந்து வருகிறது.</p><p><br></p>]]></content>
            <updated>2026-07-25T04:30:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாட்டிலிருந்து வந்த பயணி! கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு தாமதமாக வந்த பொதியில் மர்மம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/spain-passenger-arrested-in-bia-1784945336"></link>
            <id>https://tamilwin.com/article/spain-passenger-arrested-in-bia-1784945336</id>
            <summary type="text">கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெளிநாட்டவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த வெளிநாட்டவர் சுமார் 110 மில்லியன் ரூபா பெறுமதியான கொகைன் போதைப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெளிநாட்டவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
குறித்த வெளிநாட்டவர் சுமார் 110 மில்லியன் ரூபா பெறுமதியான கொகைன் போதைப்பொருளுடன் இலங்கை சுங்கத்திணைக்களத்தின் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப்பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் விவசாய பொறியியலாளரான 79 வயதுடைய ஸ்பெயின் நாட்டை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.</p><p></p><p>
</p><h2>&nbsp;விமான நிலையத்திலிருந்து வெளியேற அனுமதி&nbsp;</h2><p>கடந்த 22 ஆம் திகதி சியரா லியோனில் இருந்து அடிஸ் அபாபா மற்றும் தோஹா ஊடாக கட்டார் எயர்வேஸ் விமான சேவைக்கு சொந்தமான QR654 விமானம் மூலம் இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f4794e3d-5c61-4bb2-85df-e5cb60db52c7/26-6a642f2392621.webp' /></p><p>சந்தேகநபர் கொண்டு வந்த பயணப்பையை சுங்க அதிகாரிகள் பரிசோதனைக்கு உட்படுத்திய போதிலும், சந்தேகத்திற்கிடமான எந்தப் பொருட்களையும் கண்டுபிடிக்க முடியவில்லை என போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
</p><p>
எனினும், அவரது மற்றைய பயணப்பை குறித்த விமானத்தில் வராத காரணத்தினால், உரிய வருகை நடவடிக்கைகளை நிறைவு செய்த பின்னர் விமான நிலையத்திலிருந்து வெளியேற அவருக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
</p><p>
தாமதமாக வந்த பயணப் பை பின்னர் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டது. அத்துடன், அதைப் பெற்றுக் கொள்வதற்காக சந்தேக நபர் நேற்றைய தினம் மாலை 6.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை பகுதிக்கு வந்துள்ளார்.
</p><h3>பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பயணப்பை</h3><p>குறிப்பிட்ட பயணப் பையை விடுவிப்பதற்கு முன்னர், இலங்கை சுங்கத்தின் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு அதிகாரிகளினால் அது எக்ஸ்-ரே பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8cdd66a2-9a3c-4a78-b494-19165c2e0c3f/26-6a642f244435e.webp' /></p><p>இதன் போது சந்தேகத்திற்கிடமான பொருட்கள் அவதானிக்கப்பட்டதையடுத்து, அது முழுமையான பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

பயணப் பையினுள் மிகவும் நுட்பமான முறையில் முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நான்கு கொகைன் பொதிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
</p><p>
இதன் மொத்த எடை 2.198 கிலோகிராம் எனவும் இதன்பெறுமதி 109.9 மில்லியன் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.</p><p>

இச்சம்பவம் தொடர்பாக&nbsp; ஆரம்ப விசாரணைகளை&nbsp;இலங்கைச் சுங்கம் தொடங்கியுள்ளது.
</p><p>
சந்தேக நபரும் கைப்பற்றப்பட்ட கொகைன் தொகையும் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p><p> </p>]]></content>
            <updated>2026-07-25T04:30:28+00:00</updated>
        </entry>
    </feed>
