<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-08-25T06:30:17+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[அவசர நேரத்தில் வெளியேற முடியாத அபாயம் ; சீனாவில் 30 லட்சம் டெஸ்லா கார்கள் மீளப்பெறல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/3-million-tesla-cars-recalled-in-china-1787639118"></link>
            <id>https://canadamirror.com/article/3-million-tesla-cars-recalled-in-china-1787639118</id>
            <summary type="text">அவசர காலங்களில் வாகனங்களில் இருந்து வெளியேறுவதில் சிக்கலை ஏற்படுத்தக்கூடிய உட்புறக் கதவு கைப்பிடிகள் அமைப்பு காரணமாக, சீனாவில் சுமார் 3 மில்லியன் டெஸ்...</summary>
            <content type="html"><![CDATA[<p>அவசர காலங்களில் வாகனங்களில் இருந்து வெளியேறுவதில் சிக்கலை ஏற்படுத்தக்கூடிய உட்புறக் கதவு கைப்பிடிகள் அமைப்பு காரணமாக, சீனாவில் சுமார் 3 மில்லியன் டெஸ்லா சிற்றூந்துகளை திரும்பப் பெறுவதாக அந்த நாட்டின் தேசிய சந்தை ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
</p><p>
சீனாவில் தயாரிக்கப்பட்ட மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட Model 3, Model Y, Model X மற்றும் Model S வகைகளைச் சேர்ந்த சுமார் 2.98 மில்லியன் டெஸ்லா மின்சார வாகனங்கள் இந்த நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுகின்றன.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c38a2641-0ae7-4be0-b975-47db9b0ae149/26-6a8d354f8705c.webp' /></p><p>எதிர்வரும் செப்டம்பர் 25 ஆம் திகதி முதல் இந்த மீளப் பெறும் நடவடிக்கை தொடங்கவுள்ளது.
</p><p>
விபத்துகள் போன்ற தீவிரமான அவசரச் சூழ்நிலைகளில் வாகனத்தின் குறைந்த மின் அழுத்த அமைப்பு செயலிழந்தால், உட்புறக் கதவு கைப்பிடிகள் இருக்கையின் நிறத்துடனேயே ஒத்துப் போவதால் அவற்றைக் கண்டறிந்து இயக்கச் சிரமமாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இதனால் பயணிகள் உடனடியாக வெளியேறுவதோ அல்லது வெளியில் உள்ளவர்கள் மீட்புப் பணிகளை மேற்கொள்வதோ தடைபடலாம் என்று அந்த ஆணைக்குழு எச்சரித்துள்ளது.</p><p>

டெஸ்லாவைத் தவிர, சியோமி, எக்ஸ்பெங், ஜியோகி, செரி, லீப்கோட்டார் மற்றும் BAIC உள்ளிட்ட மேலும் எட்டு முன்னணிச் சீன வாகனத் தயாரிப்பு நிறுவனங்களும் இதே போன்ற பாதுகாப்புச் சிக்கல்கள் காரணமாகத் தங்கள் சிற்றூந்துகளை மீளப் பெறுவதாக அறிவித்துள்ளன.
</p><p>
பாதிக்கப்பட்ட நிறுவனங்கள், கைப்பிடிகள் அருகே எச்சரிக்கை ஸ்டிக்கர்களை இலவசமாக ஒட்டுவதுடன், விபத்துக்குப் பிறகு சாளரங்களை தானாக இறக்கும் வசதிக்காக மென்பொருள் மேம்படுத்தல்களையும் வழங்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளன.
</p><p>
சமீபகாலமாக நவீன சிற்றூந்துகளின் வடிவமைப்பு முறைகளால் விபத்து நேரங்களில் ஏற்படும் சிக்கல்கள் குறித்துச் சீனாவில் பாதுகாப்பு அச்சங்கள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-08-25T06:25:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரசு விடுவித்த காணாமல் போன ஆட்கள் பற்றிய தகவல்களைத் தாருங்கள் : OMPயிடம் கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/missing-persons-released-by-the-government-details-1787634618"></link>
            <id>https://ibctamil.com/article/missing-persons-released-by-the-government-details-1787634618</id>
            <summary type="text">சர்வதேச நியமங்களை மதித்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான சர்வதேச
தின நிகழ்வைக் கொண்டாடுகின்ற அரசாங்கம் உள்நாட்டு மக்கள் கோருகின்ற சர்வதேச
பொற...</summary>
            <content type="html"><![CDATA[<p>சர்வதேச நியமங்களை மதித்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான சர்வதேச
தின நிகழ்வைக் கொண்டாடுகின்ற அரசாங்கம் உள்நாட்டு மக்கள் கோருகின்ற சர்வதேச
பொறிமுறையை நடைமுறைப்படுத்திவிட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன
நடந்தது என்பதை வெளிப்படுத்துங்கள் என&nbsp;காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தெரிவித்துள்ளனர்.</p><p>

நீங்கள் விடுவித்த ஆட்கள் பற்றிய தகவல்களைத் தாருங்கள். அது தான் ஒரு சர்வதேச
காணாமல் ஆக்கப்பட்ட தினத்தில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு அரசு
செய்கின்ற நியாயமான செயலாக இருக்கும் எனவும் அவர்கள் மேலும் சுட்டிக்காட்டியுள்ளனர்.</p><p>
</p><p>
காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம் (OMP) இன்று (25) யாழ்ப்பாணத்தில் ஏற்பாடு செய்துள்ள 'வலிந்து காணாமல்
ஆக்கப்பட்டவர்களுக்கான சர்வதேச தின நிகழ்வு குறித்து வடக்கில் உள்ள வலிந்து
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களின் உறவினர்கள் மற்றும் சிவில் சமூக
அமைப்புகள் இணைந்து நேற்று (24) மாலை மன்னாரில் ஊடக சந்திப்பு ஒன்றை
ஏற்பாடு செய்தனர்.</p><p></p><h2>பிரச்சினைகள் எதுவும் இல்லை</h2><p>
</p><p>இதன் போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கருத்து
தெரிவிக்கையில், ”ஒரு நாட்டில் சர்வதேச நெறிமுறைகளை நாங்கள் பின்பற்ற மாட்டோம் என்கிற ஒரு
அரசாங்கம், சர்வதேச வலிந்து காணாமல் போனோர் தினத்தை ஏன் நடத்துகிறது?

அவர்களுடைய சட்ட திட்டங்கள், நடைமுறைகள் எமது நாட்டிற்கு தேவைப்படாது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e89de6a3-f497-4646-a6be-e912c230e2f5/26-6a8d287ac3532.webp' /></p><p>ஆனால்,
நாங்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டமையினான சர்வதேச தினத்தை OMP மற்றும்
அரசாங்கம் இணைந்து கொண்டாடுவது என்பது, சர்வதேசத்திற்கு "நாங்கள்
உள்நாட்டிலேயே தீர்வு பெற்றுக் கொடுத்துவிட்டோம்.

இங்கே வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட பிரச்சினைகள் எதுவும் இல்லை. எல்லாம்
தீர்க்கப்பட்டு விட்டது" என்பதை அவர்கள் சம்பிரதாய பூர்வமாக கொண்டாடுவதற்கு
இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.
</p><p>
இந்த நிகழ்வைக் கொண்டாடுவதற்கு இவர்கள் என்ன செய்திருக்க வேண்டும்? இந்த காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை ஒவ்வொரு வருடத்திலாவது குறிப்பிட்ட தொகையில்
விடுவித்திருக்க வேண்டும்.</p><p>

அவர்களை வெளிப்படுத்தி, ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் அதற்காகப் போராடிக்
கொண்டிருக்கின்ற அம்மாமார்களுக்கு அவர்களுடைய பிள்ளைகளை திரும்ப
கொடுத்திருக்க வேண்டும். ஆனால் அது எதையும் செய்யாமல், கண் துடைப்பிற்காக இந்த
நிகழ்வை நீங்கள் அனுஷ்டிக்கிறீர்கள்.</p><p>

இந்த OMP என்பது எங்களுடைய மக்களிடையே, காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத்
தேடுகின்ற உறவுகளிடையே ஒரு தோல்வி அடைந்த ஒரு நெறிமுறையாக தான் அவர்கள் இங்கே
சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.</p><p>&nbsp;</p><h2>காணாமல் போன உறவுகளின் குடும்பத்தினர்</h2><p>
</p><p>
நீங்கள் வலிந்து ஒவ்வொரு மாவட்டத்திலும் அந்த ஒரு அமைப்பைக் கொண்டு வந்து,
நஷ்டஈடு தருகிறோம் என்று ஒரு குறிப்பிட்ட தொகையை அவர்களுக்குக் கொடுத்து
பிரச்சினையை நீங்கள் முடிக்கப் பார்க்கிறீர்கள்.
</p><p>
எங்களுடைய உறவுகள் கேட்பது அந்த நஷ்டஈடு அல்ல. எங்கள் பிள்ளைகளை நீங்கள்
எங்களிடம் ஒப்படையுங்கள். அல்லாவிட்டால் அவர்களை நாங்கள் கடத்தி காணாமல்
ஆக்கி, படுகொலை செய்து விட்டோம் என்பதை நீங்கள் சர்வதேசத்தில் ஒத்துக்
கொள்ளுங்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7f830d95-41cd-4be5-a102-acce1ba6dd3a/26-6a8d287b8fda4.webp' /></p><p>

அதை ஒத்துக் கொள்ளாமல், பிரச்சினையை மூடி மறைக்கப் பார்ப்பதற்கான இப்படிப்பட்ட
ஒரு கண் துடைப்பான விஷயத்தை ஏற்படுத்துவதை நாங்கள் எப்போதும் இந்த காணாமல் போன
சமூகம், அதாவது காணாமல் போன உறவுகளின் குடும்பத்தில் இருக்கும் ஆட்களின்
சார்பில் நாங்கள் அதை நிராகரிக்கிறோம்.
</p><p>
எங்களது உலகளாவிய ரீதியில் இருக்கின்ற எங்களுடைய உறவுகள் புரிந்து கொள்ள
வேண்டும். காணாமல் போனோர் என்ற விடயம் நாங்கள் பத்திரிகைகளில் படிப்பதோடு அல்லது
அம்மாக்களின் போராட்டம் வீதியில் நிற்பதோடு முடிந்துவிடவில்லை.
</p><p>
இங்கே ஒவ்வொரு மாவட்டத்திலும் சிவில் சமூகங்கள் ஒவ்வொருவராக முயற்சி செய்து,
ஒவ்வொரு மாவட்டத்திலும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள்- அவர்கள் எப்போது, எங்கு,
யாரால், எந்தச் சூழ்நிலையில் காணாமல் ஆக்கப்பட்டார்கள் என்ற தரவுகள்
சேகரிக்கப்பட்ட புத்தகம் கிளிநொச்சி, வவுனியா மற்றும் மன்னாரில் 300-க்கும்
மேற்பட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் பற்றிய தகவல்கள் அடங்கியவாறு சிவில் சமூக அமைப்புகளால் உருவாக்கப்பட்டிருக்கிறது.</p><p></p><h2> காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச தினம் அனுஷ்டிப்பு&nbsp;</h2><p>
</p><p>இந்தப் புத்தகத்திற்குள் இருக்கின்ற இந்தப்
பக்கங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் வலி, வேதனை.

அவர்களுடைய ரத்தமும் சதையுமாக பெற்றோர்களின் கண்ணீருக்கு மத்தியில் காணாமல்
ஆக்கப்பட்டிருக்கும் அவர்களுடைய ஒவ்வொருத்தரின் கதை. </p><p>இது இங்கே
இருக்கத்தக்கதாக, நீங்கள் நஷ்டஈடு கொடுக்கிறீர்கள். நீங்கள் சர்வதேச வலிந்து
காணாமல் ஆக்கப்பட்ட தினத்தை கொண்டாடுகிறீர்கள்.

எங்களுக்கு தினங்களும் வேண்டாம், நஷ்டஈடும் வேண்டாம்! எங்களுக்கு எங்களுடைய
பிள்ளைகளும், எங்களுடைய உறவுகளுக்கு நீங்கள் என்ன செய்தீர்கள் என்பதற்கான
பதில் எங்களுக்கு வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2e597212-b8cd-41db-8c8d-3fa4ff5d29a2/26-6a8d287c490f6.webp' /></p><p>சர்வதேச தினத்தை நீங்கள் அனுஷ்டிப்பதாக இருந்தால்,
நாங்கள் கோருகின்ற வெளிநாட்டுப் பொறிமுறையும், அதற்கான தனியான ஒரு
நீதிமன்றமும், சர்வதேச கண்காணிப்புடன் கூடிய நடவடிக்கையையும் நாங்கள்
கோருகிறோம்.</p><p>

அப்படி ஒரு கோரிக்கை விடுக்கின்ற நாங்கள், இந்தத் தினங்களை அல்லது எங்களுடைய
அம்மாமார்களை கூப்பிட்டு வைத்து கண் துடைப்பிற்காக நீங்கள் செய்கின்ற
விடயங்களையோ நாங்கள் ஒருநாளும் சம்மதிக்க இயலாது.
</p><p>
சர்வதேச நியமங்களை மதித்து அந்த நிகழ்வைக் கொண்டாடுகின்ற அரசாங்கம், உள்நாட்டு
மக்கள் கோருகின்ற சர்வதேச பொறிமுறையை நீங்கள் நடைமுறைப்படுத்தி விட்டு, காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதை
வெளிப்படுத்துங்கள். நீங்கள் விடுவித்த ஆட்கள் பற்றிய தகவல்களைத் தாருங்கள்.</p><p>
அது தான் ஒரு சர்வதேச காணாமல் ஆக்கப்பட்ட தினத்தில் காணாமல் ஆக்கப்பட்ட
உறவுகளுக்கு நீங்கள் செய்கின்ற நியாயமான செயலாக இருக்கும் என்பதை நாங்கள்
உங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்“என அவர்கள் மேலும் தெரிவித்தனர்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-25T06:23:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[திருமண பந்தத்தில் இணைந்தார் சரிகமப புகழ் சபேசன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sa-re-ga-ma-pa-fame-sabesan-married-1787639067"></link>
            <id>https://jvpnews.com/article/sa-re-ga-ma-pa-fame-sabesan-married-1787639067</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;அம்பாறை பிரதேசத்தை சேர்ந்த சரிகமப புகழ் சபேசன், சமீபத்தில் தனது காதலியான ரிக்ஷானா (Rithika Sujith / Rikshana) என்பவரைத் திருமணம் செய்து க...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;அம்பாறை பிரதேசத்தை சேர்ந்த சரிகமப புகழ் சபேசன், சமீபத்தில் தனது காதலியான ரிக்ஷானா (Rithika Sujith / Rikshana) என்பவரைத் திருமணம் செய்து கொண்டார்.
</p><p>
 இவர்களது திருமணப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி ரசிகர்களின் வாழ்த்துகளைப் பெற்றன

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்து வரும் நிகழ்ச்சிகளில் ஒன்றுதான் சரிகமப.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b0bf7fb4-fa3e-4056-abca-fbd4172b44fd/26-6a8d351ca4242.webp' /></p><p> </p><p>

அதில் பங்கேற்ற பலரும் தற்போது சினிமாத்துறையிலும், கச்சேரிகளில் பாடியும் வருகிறார்கள். 

அந்தவகையில் இலங்கை தமிழனாக சரிகமப சீனியர் சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார் சபேசன்.</p><p>தனக்கென ரசிகர்களை கொண்டிருந்த சபேசன், அந்த சீசனில் 2 ஆவது இடத்தை பிடித்து 10 லட்சம் ரூபாய் பரிசு தொகை பெற்றார். 

இன்னிலையில் சரிகமப’ சக போட்டியாளர்கள், இசை ரசிகர்கள் மற்றும் திரைத்துறையினர் உள்ளிட்ட பலரும் புதுமணத் தம்பதியருக்கு தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-08-25T06:21:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாக்ஸ் ஆபிஸ்: பெத்லகேம் குடும்ப யூனிட் திரைப்படத்தின் 4 நாட்கள் வசூல் விவரம்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/bethlehem-kudumba-unit-movie-4-days-box-office-1787638296"></link>
            <id>https://cineulagam.com/article/bethlehem-kudumba-unit-movie-4-days-box-office-1787638296</id>
            <summary type="text">நிவின் பாலி, மமிதா பைஜூ நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த பெத்லகேம் குடும்ப யூனிட் திரைப்படத்தின் வசூல் விவரத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.

பெத்லகேம் க...</summary>
            <content type="html"><![CDATA[<p>நிவின் பாலி, மமிதா பைஜூ நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த பெத்லகேம் குடும்ப யூனிட் திரைப்படத்தின் வசூல் விவரத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.</p><p></p><p>
</p><h2>
பெத்லகேம் குடும்ப யூனிட்
</h2><p>
மலையாள திரையுலகில் முன்னணி ஹீரோவாக இருக்கும் <a href="https://www.youtube.com/watch?v=b2JV-e5liJs" target="_blank">நிவின் பாலி</a> நடிப்பில் உருவாகி, கடந்த வாரம் திரைக்கு வந்து ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது பெத்லகேம் குடும்ப யூனிட். இப்படத்தை கிரிஷ் ஏ.டி இயக்கியுள்ளார்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e48d0f56-d689-4e5c-ad1e-96dab664c652/26-6a8d321c8c5dc.webp' /></p><p>இப்படத்தில் கதாநாயகியாக நடித்த மமிதா பைஜூ, இந்த ஆண்டு தனது ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்துள்ளார். ஜனநாயகன், விஸ்வநாத் &amp; சன்ஸ் படங்களை தொடர்ந்து பெத்லகேம் குடும்ப யூனிட் மூன்றாவது வெற்றியை தேடி தந்துள்ளது.</p><h2>

பாக்ஸ் ஆபிஸ்</h2><p>

விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பட்டையை கிளப்பி வரும் பெத்லகேம் குடும்ப யூனிட் திரைப்படம், உலகளவில் 4 நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/791e02ce-2aa6-465c-8626-43ff4f47e60e/26-6a8d321bd36df.webp' /></p><p>அதன்படி, 4 நாட்களில் இப்படம் உலகளவில் ரூ. 80 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. விரைவில் ரூ. 100 கோடி வசூலித்து சாதனை படைக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-08-25T06:20:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[துபாயில் கைதான 'பஸ் லலித்' பற்றிய பின்னணி - காவல்துறையின் அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/police-release-background-details-on-bus-lalith-1787636396"></link>
            <id>https://ibctamil.com/article/police-release-background-details-on-bus-lalith-1787636396</id>
            <summary type="text">சிவப்பு எச்சரிக்கை இல்லாத 38 சந்தேகநபர்களும் இதுவரை நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் சில நாட்களுக்குள் மேலும் சில சந்தேகநபர்களை அழைத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிவப்பு எச்சரிக்கை இல்லாத 38 சந்தேகநபர்களும் இதுவரை நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் சில நாட்களுக்குள் மேலும் சில சந்தேகநபர்களை அழைத்து வருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.&nbsp;&nbsp;</p><p>டுபாயில் கைது செய்யப்பட்ட திட்டமிட்ட குற்றக் குழு உறுப்பினரான "<a href="https://ibctamil.com/article/underworld-bus-lalith-brought-back-sl-from-duba-1787622547" target="_blank">பஸ் லலித்</a>" எனப்படும் லலித் கன்னங்கர, மேலதிக விசாரணைகளுக்காக மத்திய குற்ற விசாரணைப் பணியகத்திடம் (CCIB) ஒப்படைக்கப்பட்டுள்ளார்.&nbsp; &nbsp;&nbsp;</p><p>திட்டமிடப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் குற்றவாளியும் போதைப்பொருள் கடத்தல்காரருமான லலித் கன்னங்கர என்ற 'பஸ் லலித்' தொடர்பில் காவல்துறையினர் விசேட செய்தியாளர் சந்திப்பையொன்றை நடத்தியுள்ளனர்.&nbsp;&nbsp;</p><p></p><h2>கைது நடவடிக்கை</h2><p>
</p><p>
 

அங்கு உரையாற்றிய காவல்துறை ஊடகப் பேச்சாளர், உதவி காவல்துறை அத்தியட்சகர் எஃப்.யு. வூட்லர், 2025ஆம் ஆண்டு ஒக்டோபர் 25ஆம் திகதி காவல்துறை மா அதிபருக்குக் கிடைத்த விசேட தகவலுக்கு அமையவே இந்தக் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/375784d2-a5db-4b2b-aff7-13d05dc67411/26-6a8d33a37cd46.webp' /></p><p>
</p><p>
 

போதைப்பொருள் கடத்தல், மனிதக்கொலை மற்றும் கொலை முயற்சி, பலத்த காயங்களை ஏற்படுத்துதல், கப்பம் கோருதல் மற்றும் சொத்துக்களுக்குத் தீ வைப்பு உள்ளிட்ட பல கடுமையான குற்றச்சாட்டுகள் இவருக்கு எதிராகச் சுமத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
</p><p>
 

சந்தேகநபர் தற்போது மத்திய குற்றப் புலனாய்வுப் பணியக அதிகாரிகளின் தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் மேலதிக விசாரணைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளார். </p><p>

 

அத்துடன், அவரது சட்டவிரோத சொத்துக்கள் தொடர்பில் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினால் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.</p><p></p><h2>சிவப்பு எச்சரிக்கை&nbsp;</h2><p>
</p><p>
 

மேலும், 2024ஆம் ஆண்டு முதல் இதுவரையிலான காலப்பகுதியில் சர்வதேச காவல்துறையினரின் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த 42 சந்தேகநபர்களை நாட்டிற்கு அழைத்து வரப் காவல்துறையினரால் முடிந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c20dc4cc-6457-4bb3-b201-54de2b31264c/26-6a8d33a433418.webp' /></p><p>

 

அத்துடன், சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மேலும் 109 சந்தேகநபர்களை எதிர்காலத்தில் நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-25T06:18:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அனுராதபுரம் சிறுமி துஸ்பிரயோகம்; தேரருக்கு எதிரான வழக்கில் திருப்பம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/forensic-report-hemarathana-thero-anuradhapura-1787638425"></link>
            <id>https://jvpnews.com/article/forensic-report-hemarathana-thero-anuradhapura-1787638425</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;அனுராதபுரம் சிறுமி துஸ்பிரயோகம் தொடர்பாக , பல்லேகம ஹேமரத்தன தேரருக்கு எதிரான வழக்கில் சான்றாகக் கைப்பற்றப்பட்ட படுக்கை விரிப்பில், சந்தேக...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;அனுராதபுரம் சிறுமி துஸ்பிரயோகம் தொடர்பாக , பல்லேகம ஹேமரத்தன தேரருக்கு எதிரான வழக்கில் சான்றாகக் கைப்பற்றப்பட்ட படுக்கை விரிப்பில், சந்தேகநபரினது விந்து காணப்பட்டதாக அரசாங்கப் பகுப்பாய்வாளர் அனுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில் அறிக்கை அளித்துள்ளார். </p><p>

இருப்பினும், பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்ட முடி இழைகள், சந்தேகநபரால் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டதாகக் கூறப்படும் சிறுமியினதோ அல்லது வேறொரு பெண்ணினதோ அல்ல என்று அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/347b779d-99d8-46e5-b363-bc94a2e1c44e/26-6a8d329ac3de5.webp' /></p><h2>விரிப்பில் இரத்தக் கறைகள் எதுவும் காணப்படவில்லை</h2><p> 

அந்த விரிப்பில் இரத்தக் கறைகள் எதுவும் காணப்படவில்லை என்றும் அரசாங்கப் பகுப்பாய்வாளர் மேலும் தெரிவித்துள்ளார்.</p><p>

தன்னை வன்புணர்வு செய்த தேரர், தனது படுக்கையின் அடிவாரத்தில் இருந்த ஒரு விரிப்பைக் கொண்டு விந்தைத் துடைத்ததாக பாதிக்கப்பட்ட பெண் காவல்துறையினரிடம் தெரிவித்திருந்தார். </p><p>வழக்கு எண் B22424/2026-இன் கீழ் அரசாங்கப் பகுப்பாய்வாளரின் அறிக்கை நீதிமன்றப் பதிவேட்டில் இணைக்கப்பட்டது. </p><p>இந்த அறிக்கையின் நகல் சட்டமா அதிபருக்கும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

தன்னை வன்புணர்வு செய்த தேரர், தரையில் சிந்திய விந்தை படுக்கையின் அடிவாரத்தில் இருந்த விரிப்பைக் கொண்டு துடைத்ததாக பாதிக்கப்பட்ட பெண் நிட்டம்புவ காவல்துறையினரிடம் தெரிவித்திருந்ததால், விசாரணையின் போது காவல்துறையினரால் அந்த விரிப்பு கைப்பற்றப்பட்டு அரசாங்கப் பகுப்பாய்வாளரின் ஆய்வுக்கு அனுப்பப்பட்டிருந்தது.
</p><p>
 தேரரின் அறை, படுக்கை மற்றும் அந்த விரிப்பு உள்ளிட்ட அறையில் இருந்த பொருட்களை பாதிக்கப்பட்ட பெண் அடையாளம் காட்டியிருந்தார்.
</p><p>
அனுராதபுரம் காவல்துறையின் உதவியுடன், கம்பஹா பிரிவு பெண்கள் மற்றும் சிறுவர் விவகாரப் பிரிவின் பொறுப்பதிகாரி (OIC) காவல் ஆய்வாளர் (IP) வினிசியா பிரேமரத்ன மற்றும் காவல் ஆய்வாளர் (IP) வசுந்தரா குணரத்ன ஆகியோர் அடங்கிய காவல்துறை குழுவினர் சம்பவ இடத்தில் விசாரணைகளை மேற்கொண்டனர்.
</p><p>
சட்டமா அதிபரின் ஆலோசனைக்காகக் காத்திருக்கும் நிலையில், இவ்வழக்கு அனுராதபுரம் நீதவான் பசிந்து விக்ரமரத்னவால் 2027 ஜனவரி 8-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-25T06:11:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையைச் சூழவுள்ள கடல் வெப்பநிலை உயர்வு: எதிர்வரும் 8 மாதங்கள் மிக முக்கியமான காலகட்டமென எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/el-nino-heat-wavw-in-srei-lanka-1787636489"></link>
            <id>https://tamilwin.com/article/el-nino-heat-wavw-in-srei-lanka-1787636489</id>
            <summary type="text">எதிர்வரும் 8 மாதங்கள் இலங்கைக்குக் மிக முக்கியமான காலகட்டமாக அமையும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

அந்த வகையில் எல் - நினோ தாக்கத்தின் காரணமா...</summary>
            <content type="html"><![CDATA[<p>எதிர்வரும் 8 மாதங்கள் இலங்கைக்குக் மிக முக்கியமான காலகட்டமாக அமையும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. </p><p>

அந்த வகையில் எல் - நினோ தாக்கத்தின் காரணமாக இலங்கையை சுற்றியுள்ள கடற்பரப்பின் வெப்பநிலை 1°C உயர்ந்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. </p><p>

பசுபிக் பெருங்கடலில் நிலவும் 3°C வெப்பநிலை உயர்வின் பின்னணியிலேயே இந்த மாற்றம் அவதானிக்கப்பட்டுள்ளது.</p><h2>மழை பெய்யும் வாய்ப்பில்லை</h2><p> </p><p>

இந்த நிலையில், எதிர்வரும் 8 மாதங்கள் இலங்கைக்குக் மிக முக்கியமான காலகட்டமாக அமையும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. 

நாட்டின் சில பகுதிகளில் செப்டெம்பர் இறுதி வரை மழை பெய்ய வாய்ப்பில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5af5dbcd-6a8a-4c0c-8adf-eb0328a86222/26-6a8d311925a2e.webp' /></p><p> </p><p>

தற்போதைய நிலையில், நாட்டின் பகல் மற்றும் இரவு நேர வெப்பநிலைகள் கணிசமாக அதிகரித்துள்ளன.</p><h2>வறட்சியான வானிலை</h2><p> 

இதேவேளை அனர்த்த முகாமைத்துவ மையத்தின் தகவலின் படி, 7 மாவட்டங்களில் உள்ள 22 பிரதேச செயலகப் பிரிவுகளில் 81,605 பேர் வறட்சியான வானிலையால் பாதிக்கப்பட்டுள்ளனர் என கூறப்பட்டுள்ளது. </p><p>

அதேவேளை, விவசாய நடவடிக்கைகளுக்கான நீர் விநியோகத்தை கட்டுப்படுத்த வேண்டிய நிலை ஏற்படலாம் என நீர்ப்பாசனத் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/04010ca6-4263-4033-85ed-8fea6c5b6560/26-6a8d3119d58ac.webp' /></p><p> 

நீடிக்கும் வறட்சி மற்றும் அதிக வெப்பம் காரணமாக 7 மாவட்டங்களில் நீரை ஆதாரமாகக் கொண்ட வாழ்வாதாரங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-25T06:07:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[பொதுவெளியில் தோன்றிய ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபா காமேனி: வெளியான முதல் வீடியோ]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/iran-supreme-leader-mojtaba-khamenei-rare-video-1787637791"></link>
            <id>https://news.lankasri.com/article/iran-supreme-leader-mojtaba-khamenei-rare-video-1787637791</id>
            <summary type="text">Iran supreme leader mojtaba khamenei rare video: ஈரான் - அமெரிக்கா இடையிலான மோதல் தொடங்கிய பிறகான ஈரானிய உச்சத் தலைவர் மொஜ்தபா காமேனி முதல் வீடியோ காட...</summary>
            <content type="html"><![CDATA[<p>Iran supreme leader mojtaba khamenei rare video: ஈரான் - அமெரிக்கா இடையிலான மோதல் தொடங்கிய பிறகான ஈரானிய உச்சத் தலைவர் மொஜ்தபா காமேனி முதல் வீடியோ காட்சியானது வெளியாகியுள்ளது.</p><h2> ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபா காமேனி</h2><p>பிப்ரவரி 28ம் திகதி அமெரிக்க முன்னெடுத்த தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்டதை தொடர்ந்து அவரது மகன் மொஜ்தபா காமேனி ஈரானின் புதிய உச்ச தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.</p><p><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr">Iran’s Supreme Leader Mojtaba Khamenei in FIRST-TIME-SEEN footage<br><br>Released publicly for the first time by Iranian media, footage shows him presiding over a religious academic study session <a href="https://t.co/iIIl0pLAgS">pic.twitter.com/iIIl0pLAgS</a></p>&mdash; RT Intl (@RT_on_X) <a href="https://x.com/RT_on_X/status/2091890841035894935?ref_src=twsrc%5Etfw">August 24, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p></p><p>ஆனால் அவர் பதவியேற்றதில் இருந்து இதுவரை வெளியுலகிற்கு தலை காட்டாமல் இருந்து வந்தார். இதையடுத்து அமெரிக்க நடத்திய வான்வழித் தாக்குதலில் மொஜ்தபா காமேனிக்கும் மிகுந்த உடல்நல பாதிப்புகள் ஏற்பட்டு இருக்கலாம் என்றும் அவரது முகம் மற்றும் சில உடல் பாகங்கள் சிதைந்து இருக்கலாம் என்றும் பல்வேறு கருத்துகள் வெளிவந்தன.</p><p> கொல்லப்பட்ட ஈரானின் உச்ச தலைவரும், தன்னுடைய தந்தையுமான அயதுல்லா அலி காமேனியின் இறுதி சடங்கிற்கு கூட மொஜ்தபா காமேனி பங்கேற்காதது பொதுவெளியில் பரவிய கருத்துகளுக்கு வலு சேர்த்து வந்தது.</p><h2>வெளியான புதிய வீடியோ ஆதாரம்</h2><p>இந்நிலையில் பல மாதங்கள் பரவி வந்த வதந்திகள் மற்றும் ரகசியத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஈரானிய உச்ச தலைவர் மொஜ்தபா காமேனியின் புதிய வீடியோ ஒன்றை ஈரானிய அரசு ஊடகம் வெளியிட்டுள்ளது.</p><p> அவர் உச்ச தலைவராக பதவியேற்ற பிறகு, அவரது குரல் பொதுவெளியில் கேட்கப்படுவது இதுவே முதல்முறையாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8d8e2f51-74f1-44fd-9a15-d6ebf306e060/26-6a8d302149c4f.webp' /></p><p> அந்த வீடியோவில் 56 வயதான மொஜ்தபா காமேனி, மத ரீதியான கல்வி ஆராய்ச்சி அமர்வுக்கு தலைமை தாங்குவது பதிவாகியுள்ளது. ஆனால் அந்த வீடியோ எப்போது எடுக்கப்பட்டது என்பது குறித்த காலம் குறிப்பிடப்படவில்லை.</p><p> மேலும் அதில் மாணவர் ஒருவரின் ஆய்வறிக்கையை கவனமாக கேட்டறிந்து அதனை குற்றமற்றது (Flawless)என்று பாராட்டியதோடு 20-க்கு 19.5 மதிப்பெண்கள் வழங்கி மதிப்பிடுகிறார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-25T06:03:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் சட்டென குறைந்த தங்க விலை ; நகைப்பிரியர்களுக்கு மகிழ்ச்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/gold-prices-suddenly-drop-in-sri-lanka-1787637792"></link>
            <id>https://jvpnews.com/article/gold-prices-suddenly-drop-in-sri-lanka-1787637792</id>
            <summary type="text">இலங்கையில் தங்கத்தின் விலை இன்று (25) சற்று வீழ்ச்சியடைந்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
நேற்று (24) 24 கரட் தங்கம் ஒர...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் தங்கத்தின் விலை இன்று (25) சற்று வீழ்ச்சியடைந்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.</p><p>
</p><p></p><p>நேற்று (24) 24 கரட் தங்கம் ஒரு பவுண் 386,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று அதன் விலை 2000 ரூபாயால் குறைந்துள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5d074ffd-8a5b-4f91-817f-2c8e9fbc239f/26-6a8d3021c3e22.webp' /></p><p>அதன்படி, இன்றைய தங்க விலை நிலவரப்படி 24 கரட் தங்கம் ஒரு பவுண் 384,000 ரூபாயாகவும், 22 கரட் தங்கம் ஒரு பவுண் 353,300 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.</p><p>

மேலும், 24 கரட் தங்கம் ஒரு கிராம் 48,000 ரூபாயாகவும், 22 கரட் தங்கம் ஒரு கிராம் 44,163 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-25T06:03:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பு, கம்பஹாவின் குடிநீரில் ஆபத்து - திடீரென விநியோகம் நிறுத்தப்பட்டமைக்கான காரணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/reason-behind-water-supply-disruption-in-colombo-1787636135"></link>
            <id>https://tamilwin.com/article/reason-behind-water-supply-disruption-in-colombo-1787636135</id>
            <summary type="text">கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களின் பல பிரதேசங்களுக்கு விநியோகிக்கப்படும் நீர் தற்காலிகமாக துண்டிக்கப்பட்டுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமை...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களின் பல பிரதேசங்களுக்கு விநியோகிக்கப்படும் நீர் தற்காலிகமாக துண்டிக்கப்பட்டுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. </p><p>தனியார் தொழிற்சாலை ஒன்றினால் சுற்றாடலில் இரசாயனம் ஒன்று வெளியிடப்பட்டதைத் தொடர்ந்தே இவ்வாறு நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாக சபை குறிப்பிட்டுள்ளது. </p><p>நீர் விநியோகத்தில் எத்தகைய மாசுபடுத்தும் பொருட்களும் கலக்கப்பட்டுள்ளனவா என்பதை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p> </p><h2><b>முன்னெச்சரிக்கை நடவடிக்கை</b></h2><p>அதுவரை, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீர் விநியோகம் தற்காலிகமாக துண்டிக்கப்பட்டுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் தலைவர் சந்தன பண்டார தெரிவித்துள்ளார். </p><p>இச்சம்பவம் குறித்து அனர்த்த முகாமைத்துவ நிலையம் மற்றும் பாதுகாப்புப் படைகள் இணைந்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தலைவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். </p><p>மேலும், இச்சம்பவம் தொடர்பில் தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளது.</p><p> அத்துடன், உரிய சட்ட நடவடிக்கைகளை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தலைவர் தெரிவித்தார்.</p>]]></content>
            <updated>2026-08-25T06:03:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[டெட் தேர்வில் இருந்து ஆசிரியர்களுக்கு விலக்கு - தனித்தீர்மானம் நிறைவேற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/resolution-for-exemption-from-tet-exam-for-teacher-1787637681"></link>
            <id>https://news.lankasri.com/article/resolution-for-exemption-from-tet-exam-for-teacher-1787637681</id>
            <summary type="text">resolution for exemption from tet: டெட் தேர்வில் இருந்து ஆசிரியர்களுக்கு விலக்களிக்க கோரி கொண்டு வந்த தனித்தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
...</summary>
            <content type="html"><![CDATA[<p>resolution for exemption from tet: டெட் தேர்வில் இருந்து ஆசிரியர்களுக்கு விலக்களிக்க கோரி கொண்டு வந்த தனித்தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
</p><h3>
டெட் தேர்வில் இருந்து ஆசிரியர்களுக்கு விலக்கு</h3><p>

தமிழ்நாடு சட்டமன்றத்தில் டெட் தேர்வில் இருந்து விலக்களிக்க கோரி பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் தனித்தீர்மானம் ஒன்றை கொண்டு வந்தார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6a894a9b-4afc-482a-a986-dbabe2df8855/26-6a8d2fb326c75.webp' /></p><p> 

இந்த தீர்மானத்தை முன்மொழிந்து பேசிய அவர், "15 முதல் 20 ஆண்டுகள் வரை மாணவர்களின் நலனில் அக்கறை கொண்டு ஓயாது உழைத்த ஆசிரியர்களின் பணி மகத்தானது. </p><p>

ஆசிரியர் தகுதித்தேர்வு தேர்ச்சி என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில் ஏற்கனவே பணியில் உள்ள ஆசிரியர்கள் தேர்ச்சி பெற வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.</p><p> 

அதனால் ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றால்தான் பணியில் உள்ள ஆசிரியர்கள் நீடிக்கும் நிலை உருவாகியுள்ளது. 15 முதல் 20 வருடங்கள் வரை பணியாற்றிக் கொண்டிருக்கும் ஆசிரியர்களை தகுதித்தேர்வு எழுதச் சொல்லுவது அவர்களின் வாழ்வாதாரத்தை பாதிப்படையச் செய்யும்.
</p><p>
மத்திய அரசு கொண்டு வந்த டெட் தேர்வு தேர்ச்சி என்ற கட்டாய நடைமுறைப்படி தமிழ்நாட்டில் 3,28,701 ஆசிரியர்கள் பாதிப்படைவார்கள். இருப்பினும் ஆசிரியர்களுக்கு துணையாக தமிழக அரசு இருக்கும் என்பதை இப்போது தெரிவித்துக் கொள்கிறேன்.&nbsp;</p><p></p><p>

இதன்படி 2010 ஆகஸ்ட் 23 ம் தேதிக்கு முன்னதாக பணியில் சேர்ந்த அனைத்து ஆசிரியர்களுக்கும் டெட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கும் தனித் தீர்மானத்தை சட்டசபையில் அரசு கொண்டு வருகிறது. </p><p>

இந்தத் தீர்மானத்தின் படி ஓய்வு பெறும் நிலையில் உள்ள தமிழக ஆசிரியர்களின் பணிப் பாதுகாக்கப்படும். இதுகுறித்து மத்திய அரசிடம் வலியுறுத்தி நல்ல முடிவைக் கொண்டு வருவோம்" என பேசினார்.</p><p>
அமைச்சர் ராஜ்மோகன் கொண்டுவந்த தனித்தீர்மானத்திற்கு திமுக, அதிமுக, பாமக, இந்திய கம்யூனிஸ்ட், காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் ஆதரவு தெரிவித்த நிலையில், தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-25T06:01:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பு பேருந்து நிலையத்தில் அதிரடி சோதனை ; 9 பேர் போதைப்பொருளுடன் சிக்கினர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/action-raid-colo-bus-station-9-people-caught-drugs-1787637382"></link>
            <id>https://jvpnews.com/article/action-raid-colo-bus-station-9-people-caught-drugs-1787637382</id>
            <summary type="text">கொழும்பு மாகும்பர பன்முகப் போக்குவரத்து நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட திடீர் போதைப்பொருள் சோதனையில், அதிவேகப் பாதையில் பயணிக்கும் தனியார் பேருந்தின் நடத...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு மாகும்பர பன்முகப் போக்குவரத்து நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட திடீர் போதைப்பொருள் சோதனையில், அதிவேகப் பாதையில் பயணிக்கும் தனியார் பேருந்தின் நடத்துனர் ஒருவர் உட்பட பேருந்து ஓட்டுநர்கள் உட்பட ஒன்பது பேர் போதைப்பொருள் உட்கொண்டிருப்பது தெரியவந்துள்ளது.</p><p></p><p>

மேலும், நடத்துனர் உரிமம் இன்றி பணியாற்றிக் கொண்டிருந்த மூன்று நடத்துனர்களும் இதன்போது அடையாளம் காணப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/31212c6c-7e29-41a7-a144-e0ef1824d737/26-6a8d2e87d76a5.webp' /></p><p>தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனம், ஹோமாகம காவல்துறை, மாகும்பர பன்முகப் போக்குவரத்து நிலையம் மற்றும் மேல் மாகாண போக்குவரத்து அதிகாரசபை ஆகியன இணைந்து இந்த பரிசோதனையை முன்னெடுத்திருந்தன.
</p><p>
அதிவேகப் பாதை மற்றும் சாதாரண வீதிகளில் பயணிகளை ஏற்றிச் செல்லும் 152 தனியார் மற்றும் இலங்கை போக்குவரத்து சபையின் (SLTB) பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் போதைப்பொருள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.
</p><p>
கைது செய்யப்பட்டுள்ளவர்கள் ஹோமாகம காவல்துறையினரால் இன்று (25) ஹோமாகம நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-25T05:56:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ்ப்பாணத்தில் 70 இலட்ச ரூபாய் நகை திருட்டு; கம்பி எண்ணும் சந்தேக நபர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/jewelry-worth-7-million-rupees-stolen-in-jaffna-1787634832"></link>
            <id>https://jvpnews.com/article/jewelry-worth-7-million-rupees-stolen-in-jaffna-1787634832</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;யாழ்ப்பாணத்தில் சுமார் ஒரு கோடியே 70 இலட்ச ரூபாய் பெறுமதியான நகைகளை திருடியமை மற்றும் அதற்கு உடந்தையாக செயற்பட்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டி...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;யாழ்ப்பாணத்தில் சுமார் ஒரு கோடியே 70 இலட்ச ரூபாய் பெறுமதியான நகைகளை திருடியமை மற்றும் அதற்கு உடந்தையாக செயற்பட்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டில் கைதான பெண் உள்ளிட்ட மூவரையும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. </p><p>
சாவகச்சேரி பகுதியில் கடந்த 09ஆம் திகதி நடைபெற்ற திருட்டு சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் நவாலி பகுதியை சேர்ந்த நபரை கைது செய்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9d058e32-dfcf-470b-9d2c-970ea156e907/26-6a8d24920f334.webp' /></p><h2>திருட்டுக்கு உடந்தையாக செயற்பட்ட பெண்&nbsp;</h2><p>

கைது செய்யப்பட்ட நபரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் , திருட்டுக்கு உடந்தையாக செயற்பட்ட பெண் உள்ளிட்ட இருவரை கைது செய்தனர்.</p><p></p><p>

கைது செய்யப்பட்ட நபர்களிடம் முன்னெடுக்கபப்ட்ட விசாரணைகளில் திருடப்பட்ட நகைகளை , அடகு வைத்து பணத்தினை பெற்றமையும் , அதில் சுமார் எட்டரை இலட்ச ரூபாய்க்கு மோட்டார் சைக்கிள் கொள்வனவு செய்தமையையும் பொலிஸார் கண்டறிந்தனர்.</p><p>
அடகு பணத்தில் கொள்வனவு செய்த மோட்டார் சைக்கிள் மற்றும் , அடகு வைத்த நகை என்பவற்றை பொலிஸார் மீட்டதுடன் , சந்தேகநபர்கள் மூவரையும் சாவகச்சேரி நீதிமன்றில் முற்படுத்தியதை அடுத்து , அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டுள்ளது&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-25T05:56:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[47 ஆண்டுகளுக்குப் பின் பயங்கரவாத பட்டியலில் இருந்த சிரியாவை நீக்கிய அமெரிக்கா!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/us-removes-syria-terrorism-list-after-47-years-1787637374"></link>
            <id>https://canadamirror.com/article/us-removes-syria-terrorism-list-after-47-years-1787637374</id>
            <summary type="text">&amp;nbsp; 47 ஆண்டுகளுக்குப் பிறகு, பயங்கரவாதத்திற்கு ஆதரவளிக்கும் நாடுகளின் பட்டியலிலிருந்து சிரியாவை அமெரிக்கா நீக்கியுள்ளது. 

இதன் மூலம், அந்நாட்டில...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; 47 ஆண்டுகளுக்குப் பிறகு, பயங்கரவாதத்திற்கு ஆதரவளிக்கும் நாடுகளின் பட்டியலிலிருந்து சிரியாவை அமெரிக்கா நீக்கியுள்ளது. </p><p>

இதன் மூலம், அந்நாட்டில் தனியார் துறை முதலீட்டிற்கும், உலகப் பொருளாதாரத்துடன் அது மீண்டும் இணைவதற்கும் இருந்த "இறுதி முக்கிய தடைகள்" நீக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a1f43599-ecff-4c47-90a9-7eb4a2883454/26-6a8d2e80f3d6a.webp' /></p><h2>சிரிய அரசாங்கத்தின் நேர்மறையான நடவடிக்கை</h2><p>
</p><p>
சர்வதேச பயங்கரவாதச் செயல்களிலிருந்து முழுமையாக விலகி இருப்பதற்கான சிரிய அரசாங்கத்தின் நேர்மறையான நடவடிக்கைகளை அங்கீகரிக்கும் விதமாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ தெரிவித்தார்.
</p><p>
அல்-கொய்தாவின் கிளை அமைப்பொன்றின் தலைவராக இருந்தபோது, ​​ஒரு காலத்தில் அமெரிக்காவால் தேடப்படும் நபராக (தலைக்கு வெகுமதி அறிவிக்கப்பட்டவராக) இருந்த முன்னாள் போராளியான அகமது அல்-ஷாராவை, சிரியாவின் புதிய அதிபராக டிரம்ப் நிர்வாகம் ஏற்றுக்கொண்டுள்ளது.
</p><p>
அவரது இஸ்லாமிய அமைப்பான 'ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம்' (HTS) அமைப்பும், அமெரிக்காவின் உலகளாவிய பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டது.
</p><p>
முன்னர் 'அல்-நுஸ்ரா முன்னணி' (al-Nusra Front) என்று அழைக்கப்பட்ட HTS அமைப்பு, 2016-ல் ஷாரா அந்த ஜிஹாதி அமைப்பிலிருந்து தொடர்பை முறித்துக்கொள்ளும் வரை சிரியாவில் அல்-கொய்தாவின் ஒரு பிரிவாகச் செயல்பட்டு வந்தது.

2024-ன் பிற்பகுதியில், முன்னாள் அதிபர் பஷார் அல்-அசாத்தை பதவியிலிருந்து அகற்றிய கிளர்ச்சியாளர்களின் தாக்குதலுக்கு HTS தலைமை தாங்கியது; தற்போது ஷாராவின் இடைக்கால நிர்வாகத்தில் இவ்வமைப்பு ஆதிக்கம் செலுத்தி வருகிறது.</p><p>

சிரியாவை ரஷ்யா அல்லது சீனாவின் செல்வாக்கு மண்டலத்திற்குள் செல்லவிடாமல், தங்கள் பக்கம் கொண்டுவர அமெரிக்கா விரும்புகிறது. ஆனால், சிரியாவில் இன்னும் பாதுகாப்பு நிலைமை சீராக இல்லாததும், அங்கு மக்கள் பிரதிநிதித்துவம் கொண்ட அரசாங்கம் இல்லாததும் குறிப்பிடத்தக்க அபாயங்களாக உள்ளன.</p><p> அத்துடன், அண்டை நாடுகளான இஸ்ரேல் மற்றும் துருக்கிக்கு இடையிலான பதற்றங்களுக்கு மத்தியிலும் சிரியா ஒரு முக்கிய மையமாகத் திகழ்கிறது.

ஜூலை மாதத்திலேயே இதற்கான அறிகுறி தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், திங்களன்று எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கை சிரியாவிற்கு "வளர்ச்சியை நோக்கிய பாதையை" அமைத்துத் தரும் என்று ரூபியோ கூறினார்.
</p><p>
அமெரிக்க நிதியமைச்சர் ஸ்காட் பெசென்ட் கூறுகையில், "இன்றைய நடவடிக்கை சிரியாவில் அரசியல் மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மையை மேம்படுத்த கூடுதல் முதலீடுகளை ஈர்க்க உதவும்," என்று தெரிவித்தார்.
</p><p>
அரசுக்குச் சொந்தமான செய்தி நிறுவனமான SANA-வின் தகவலின்படி, சிரிய வெளியுறவு அமைச்சர் அசாத் ஹசன் அல்-ஷைபானி இந்தச் செய்தியை ஒரு "வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கை" என்று வரவேற்றார்.
</p><p>
"தனிமைப்படுத்தப்பட்ட நிலையால் ஏற்பட்ட விளைவுகளை நீக்கவும், வெளிப்படைத்தன்மை, பரஸ்பர நலன்கள் மற்றும் மரியாதை ஆகியவற்றின் அடிப்படையில் ஒரு சூழலை உருவாக்கவும் நாங்கள் தொடர்ந்து பணியாற்றுவோம்," என்று அவர் கூறினார்.</p><p>

கடந்த ஆண்டு, HTS அமைப்பை 'வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பு' என்று வகைப்படுத்தியிருந்ததை அமெரிக்கா ரத்து செய்ததுடன், 'குறிப்பிட்ட உலகளாவிய பயங்கரவாதிகள்' பட்டியலிலிருந்தும் ஷாராவை நீக்கியிருந்தது.</p><p>

1979-ம் ஆண்டு முதல் பயங்கரவாதத்திற்கு ஆதரவளிக்கும் நாடுகளின் பட்டியலில் இடம்பெற்றிருந்த சிரியா அதிலிருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, தற்போது அந்தப் பட்டியலில் கியூபா, வட கொரியா மற்றும் ஈரான் ஆகிய மூன்று நாடுகள் மட்டுமே எஞ்சியுள்ளன.</p><p> இந்தப் பட்டியலில் இடம்பெறுவது நிதித் தடைகள், அமெரிக்காவின் வெளிநாட்டு உதவி மற்றும் பாதுகாப்புத் துறை ஏற்றுமதி மற்றும் விற்பனை மீதான கட்டுப்பாடுகளை உள்ளடக்கியது.&nbsp; அத்துடன், தடை விதிக்கப்பட்ட நாட்டுடன் வர்த்தகம் மேற்கொள்ளும் தனிநபர்கள் மற்றும் பிற நாடுகளையும் இது தண்டனைக்கு உள்ளாக்கக்கூடும்.</p>]]></content>
            <updated>2026-08-25T05:53:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[எதிர்நீச்சல் சீரியல் சக்தி யார் என்று உங்களுக்கு தெரியுமா? தந்தையின் கனவை நிறைவேற்றிய மகன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/ethirneechal-sabari-prasanth-life-and-cinema-dream-1787634018"></link>
            <id>https://cineulagam.com/article/ethirneechal-sabari-prasanth-life-and-cinema-dream-1787634018</id>
            <summary type="text">எதிர்நீச்சல் சீரியலில் சக்தி கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகர் சபரி யார்? அவர் எப்படி திரைத்துறையை தேர்ந்தெடுத்தார்? அதற்கு பின் உள்ள காரணம் என்ன?...</summary>
            <content type="html"><![CDATA[<p>எதிர்நீச்சல் சீரியலில் சக்தி கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகர் சபரி யார்? அவர் எப்படி திரைத்துறையை தேர்ந்தெடுத்தார்? அதற்கு பின் உள்ள காரணம் என்ன? என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளன. அதைப்பற்றி இந்த பதிவில் பார்க்கலாம் வாங்க.</p><p></p><h2>நடிகர் சபரி
</h2><p>
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் <a href="https://www.youtube.com/watch?v=7cZLriHqI6s" target="_blank">எதிர்நீச்சல் </a>சீரியலில் சக்தி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமானவர் நடிகர் சபரி பிரசாந்த். தற்போது எதிர்நீச்சல் சீரியல் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் ராவணன் மற்றும் சக்திக்கு இடையேயான நடைபெறும் மோதல் காட்சிகள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2eb75402-bc4d-4752-bfbb-ef5893cf8eb3/26-6a8d2165c12b7.webp' /></p><p>இந்த நிலையில், அமைதியாக இருந்து தற்போது மிரட்டலாக நடித்து வரும் நடிகர் சபரி குறித்து சில சுவாரஸ்யமான தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><h2>சபரியின் வாழ்க்கை
</h2><p>
சென்னையில் பிறந்த சபரி சிறு வயதிலிருந்தே நடிப்பின் மீது ஆர்வமாக இருந்திருக்கிறார். இவருடைய தந்தைக்கும் நடிகராக வேண்டும் என்கிற ஆசை இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால், சில காரணங்களால் அவரால் நடிக்க முடியாமல் போய்விட்டது. தந்தையை போலவே சபரிக்கும் நடிப்பின் மீது ஆர்வம் ஏற்பட, கல்லூரியில் படித்து கொண்டிருந்த காலத்திலேயே குறும்படங்கள் மற்றும் இணைய தொடர்களில் நடிக்க தொடங்கியுள்ளார் சபரி.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0bd639b9-959a-40c7-878e-2cd97bc6f430/26-6a8d21667422d.webp' /></p><h2>சின்னத்திரை
</h2><p>
இதன்பின், சின்னத்திரையில் நடிக்க வாய்ப்புகளை தேடி வந்தபோதுதான், கலர்ஸ் தமிழ் டிவியில் ஒளிபரப்பான 'தறி' சீரியலில் நடிக்கும் வாய்ப்பு சபரிக்கு கிடைத்துள்ளது. அந்த சீரியல் மூலமாக சின்னத்திரை ரசிகர்களிடையேயான நல்ல வரவேற்பை பெற்றார். இதன்பின், எதிர்நீச்சல் சீரியலில் சக்தி கதாபாத்திரத்திற்கு ஆடிஷன் நடைபெற்றது. இதில் பல கட்டங்களை கடந்து ஆடிஷனில் இறுதியாக சபரி சக்தி கதாபாத்திரத்தில் நடிக்க தேர்வு செய்யப்பட்டார். இது அவருடைய வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்துள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f8b3c7fe-ba82-43b8-91c0-9b7a7d5bc28d/26-6a8d223ac4430.webp' /></p><p>சின்னத்திரையில் தற்போது ஜொலித்துக்கொண்டிருக்கும் நடிகர் சபரி பிரசாந்துக்கு வெள்ளித்திரையில் தடம் பதிக்க வேண்டும் என்கிற ஆசை இருக்கிறது. இவர் ஒருசில திரைப்படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.&nbsp;</p><h2>திருமணம்
</h2><p>
நடிகர் சபரி பிரசாந்த், கீர்த்தனா என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். சபரிக்கு திருமணம் ஆன விஷயமே ரசிகர்கள் பலருக்கும் தெரியாது. அவ்வப்போது இவர் தனது இன்ஸ்டாகிராமில் மனைவியுடன் எடுத்துக்கொள்ளும் புகைப்படங்களை பதிவு செய்வார் என்பது குறிப்பிடத்தக்கது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/67b1dfb6-6bf1-4b39-98c2-e2eca998a7e1/26-6a8d21672b67e.webp' /></p>]]></content>
            <updated>2026-08-25T05:50:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ்.மாவட்ட செயலகம் முன்பாக முன்னெடுக்கப்படவுள்ள மாபெரும் போராட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/other-districts-attend-missing-persons-in-jaffna-1787632989"></link>
            <id>https://tamilwin.com/article/other-districts-attend-missing-persons-in-jaffna-1787632989</id>
            <summary type="text">புதிய&amp;nbsp;இணைப்புகாணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் (ஓ.எம்.பி.) ஏமாற்று நாடகம் இனியும்
வேண்டாம், இராணுவத்தினரின் கையில் ஒப்படைக்கப்பட்ட எமது உறவு...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய&nbsp;இணைப்பு</h2><p>காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் (ஓ.எம்.பி.) ஏமாற்று நாடகம் இனியும்
வேண்டாம், இராணுவத்தினரின் கையில் ஒப்படைக்கப்பட்ட எமது உறவுகளுக்கு என்ன
நடந்தது எனக் கோரி, வடக்கு - கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின்
உறவுகள் சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று யாழ்ப்பாணத்தில்
மாபெரும் கவனவீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
</p><p>
சர்வதேச காணாமல்போனோர் தினத்தை முன்னிட்டு, யாழ். மாவட்ட செயலகக் கேட்போர்
கூடத்தில் இன்று பிற்பகல் 2 மணியளவில், காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின்
(ஓ.எம்.பி.) ஏற்பாட்டில் நிகழ்வொன்று நடைபெறவுள்ளது. </p><p>இதனைக் கண்டித்தே யாழ்.
மாவட்ட செயலகம் முன்பாக இந்தப் போராட்டம் அதே நேரத்தில்
முன்னெடுக்கப்படவுள்ளது.
</p><p>
உள்நாட்டு பொறிமுறையை வலுப்படுத்தும் காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின்
இழப்பீடும் வேண்டாம், மரண சான்றிதழும் வேண்டாம் என்பதை வலியுறுத்தியே இந்தப்
போராட்டம் நடத்தப்படவுள்ளது என்று ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
</p><h2>முதலாம் இணைப்பு</h2><p>யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இன்று(25.08.2026) நடைபெறவுள்ள சர்வதேச காணாமல்
ஆக்கப்பட்டோர் தின நிகழ்வுக்காகப் பிற மாவட்டங்களிலிருந்தும் பேருந்துகள் மூலம்
சுமார் 400 பேர் அழைத்து வரப்படவுள்ளனர்.</p><p>

யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இன்று பிற்பகல் நடைபெறவுள்ள இந்நிகழ்வு நீதி
அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தலைமையில் இடம்பெறவுள்ளது. </p><p>இதற்கான ஏற்பாடுகள்
அரசால் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளன.
</p><h2>450இற்கும் மேற்பட்டோர்</h2><p>
இதன்போது மட்டக்களப்பு, திருகோணமலை, வவுனியா உள்ளிட்ட பல்வேறு
பகுதிகளிலிருந்து இடைக்கால நிவாரணமாக 2 இலட்சம் ரூபா பெற்றவர்களிலிருந்து இந்த
400 பேரும் பேருந்துகள் மூலம் அழைத்துவரப்படவுள்ளனர். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3049ccc6-234b-4dd3-81a3-569494cc2413/26-6a8d1f67e7931.webp' /></p><p>இவர்களுடன் சேர்த்து இந்த
நிகழ்வில் 450 இற்கும் மேற்பட்டோர் பங்குகொள்வர் என மண்டப ஏற்பாட்டுத்
தரப்பினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-25T05:48:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ashik</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஓ.எம்.பி அலுவலகத்திடம் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் விடுத்த கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/relatives-of-the-disappeared-request-to-the-omp-1787634240"></link>
            <id>https://tamilwin.com/article/relatives-of-the-disappeared-request-to-the-omp-1787634240</id>
            <summary type="text">சர்வதேச நியமங்களை மதித்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான சர்வதேச
தின நிகழ்வைக் கொண்டாடுகின்ற அரசாங்கம் உள்நாட்டு மக்கள் கோருகின்ற சர்வதேச
பொற...</summary>
            <content type="html"><![CDATA[<p>சர்வதேச நியமங்களை மதித்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான சர்வதேச
தின நிகழ்வைக் கொண்டாடுகின்ற அரசாங்கம் உள்நாட்டு மக்கள் கோருகின்ற சர்வதேச
பொறிமுறையை நடைமுறைப்படுத்தி விட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன
நடந்தது என்பதை வெளிப்படுத்துங்கள் என காணாமல் ஆக்கப்பட்டவர்களின்
உறவுகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
</p><p>
காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம் (OMP) இன்றையதினம்(25) யாழ்ப்பாணத்தில் ஏற்பாடு செய்துள்ள ' வலிந்து காணாமல்
ஆக்கப்பட்டவர்களுக்கான சர்வதேச தின நிகழ்வு குறித்து வடக்கில் உள்ள வலிந்து
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களின் உறவினர்கள் மற்றும் சிவில் சமூக
அமைப்புகள் இணைந்து நேற்று (24) மாலை ஊடக சந்திப்பு ஒன்றை
ஏற்பாடு செய்தனர்.</p><p>குறித்த ஊடக சந்திப்பில், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களின்
தற்போதைய நிலை, எதிர்பார்ப்புகள் மற்றும் கோரிக்கைகள் தொடர்பாகவும் தங்களது
கருத்துக்களை வெளிப்படுத்தினர்.</p><h2>பிரச்சினையை முடிக்கப் பார்க்கிறீர்கள்</h2><p>இதன் போது கலந்து கொண்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கருத்து
தெரிவிக்கையில், ஒரு நாட்டில் சர்வதேச நெறிமுறைகளை நாங்கள் பின்பற்ற மாட்டோம் என்கிற ஒரு
அரசாங்கம், சர்வதேச வலிந்து காணாமல் போனோர் தினத்தை ஏன் நடத்துகிறது? </p><p>இங்கே வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட பிரச்சினைகள் எதுவும் இல்லை. எல்லாம்
தீர்க்கப்பட்டு விட்டது என்பதை அவர்கள் சம்பிரதாய பூர்வமாக கொண்டாடுவதற்கு
இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/847ed02b-371a-4759-afae-775bf2ad617a/26-6a8d25a425d97.webp' /></p><p>
</p><p>
இந்த நிகழ்வைக் கொண்டாடுவதற்கு இவர்கள் என்ன செய்திருக்க வேண்டும்? இந்தக்
காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை ஒவ்வொரு வருடத்திலாவது குறிப்பிட்ட தொகையில்
விடுவித்திருக்க வேண்டும்.</p><p>

அவர்களை வெளிப்படுத்தி, ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் அதற்காகப் போராடிக்
கொண்டிருக்கின்ற அம்மாமார்களுக்கு அவர்களுடைய பிள்ளைகளை திரும்ப
கொடுத்திருக்க வேண்டும். ஆனால் அது எதையும் செய்யாமல், கண் துடைப்பிற்காக இந்த
நிகழ்வை நீங்கள் அனுஷ்டிக்கிறீர்கள்.</p><p>நீங்கள் வலிந்து ஒவ்வொரு மாவட்டத்திலும் அந்த ஒரு அமைப்பைக் கொண்டு வந்து,
நஷ்டஈடு தருகிறோம் என்று ஒரு குறிப்பிட்ட தொகையை அவர்களுக்குக் கொடுத்து
பிரச்சினையை நீங்கள் முடிக்கப் பார்க்கிறீர்கள்.
</p><p>
எங்களுடைய உறவுகள் கேட்பது அந்த நஷ்டஈடு அல்ல. எங்கள் பிள்ளைகளை. நீங்கள்
எங்களிடம் ஒப்படையுங்கள்! அல்லாவிட்டால் அவர்களை நாங்கள் கடத்தி காணாமல்
ஆக்கி, படுகொலை செய்து விட்டோம் என்பதை நீங்கள் சர்வதேசத்தில் ஒத்துக்
கொள்ளுங்கள்.&nbsp;</p><h2>காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது</h2><p>இந்தத் தினங்களை அல்லது எங்களுடைய
அம்மாமார்களை கூப்பிட்டு வைத்து கண் துடைப்பிற்காக நீங்கள் செய்கின்ற
விடயங்களையோ நாங்கள் ஒருநாளும் சம்மதிக்க இயலாது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/50c5d217-c5fe-4bde-aabb-7168ee32b362/26-6a8d25a547fbf.webp' /></p><p>
சர்வதேச நியமங்களை மதித்து அந்த நிகழ்வைக் கொண்டாடுகின்ற அரசாங்கம், உள்நாட்டு
மக்கள் கோருகின்ற சர்வதேச பொறிமுறையை நீங்கள் நடைமுறைப்படுத்தி விட்டு,
நீங்கள் வெளிப்படுத்துங்கள்.காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதை
வெளிப்படுத்துங்கள். </p><p>நீங்கள் விடுவித்த ஆட்கள் பற்றிய தகவல்களைத் தாருங்கள்.

அது தான் ஒரு சர்வதேச காணாமல் ஆக்கப்பட்ட தினத்தில் காணாமல் ஆக்கப்பட்ட
உறவுகளுக்கு நீங்கள் செய்கின்ற நியாயமான செயலாக இருக்கும் என்பதை நாங்கள்
உங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம் என அவர்கள் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-25T05:40:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கைக்கு அழைத்துவரப்பட்ட பெரும் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய நபர் - அதிரடியாக முடக்கப்படும் சொத்துக்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/bus-lalit-police-investigation-1787633868"></link>
            <id>https://tamilwin.com/article/bus-lalit-police-investigation-1787633868</id>
            <summary type="text">டுபாயில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்குழுவைச் சேர்ந்த ‘பஸ் லலித்’ என அழைக்கப்படும் லலித் கன்னங்கரவின் சட்டவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>டுபாயில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்குழுவைச் சேர்ந்த ‘பஸ் லலித்’ என அழைக்கப்படும் லலித் கன்னங்கரவின் சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப் பிரிவு சிறப்பு விசாரணையை தொடங்கியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு. வூட்லர் தெரிவித்துள்ளார்.</p><p> 

டுபாயிலிருந்து இன்று (25) நாட்டிற்கு லலித் கண்ணங்கரா தொடர்பாக பொலிஸ் பிரிவினால் இன்று நடத்தப்பட்ட சிறப்பு ஊடக சந்திப்பில் இதனை குறிப்பிட்டுள்ளார். மேலும் தெரிவிக்கையில்,</p><h2>கடுமையான குற்றச்சாட்டுகள்</h2><p>
</p><p>
அக்டோபர் 25, 2025 அன்று பொலிஸ் தலைமை அதிகாரிக்கு (IGP) கிடைத்த ஒரு சிறப்பு தகவலின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3fb55b1f-710a-49af-a3a3-3dcc2b765710/26-6a8d29b983f9d.webp' />&nbsp;</p><p>
</p><p>
போதைப்பொருள் கடத்தல், கொலை மற்றும் கொலை முயற்சி, கடுமையான உடல் காயத்தை ஏற்படுத்துதல், மிரட்டிப் பணம் பறித்தல் மற்றும் தீவைத்தல் உள்ளிட்ட பல கடுமையான குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.</p><p>

மேலதிக விசாரணைக்காக சந்தேகநபர் மத்திய குற்றப் பிரிவின் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

மேலும் அவரது சட்டவிரோத சொத்துக்கள் குறித்து சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப் பிரிவும் சிறப்பு விசாரணையைத் தொடங்கியுள்ளது.</p><p>

2024-ஆம் ஆண்டு முதல் இன்டர்போலால் ரெட் நோட்டீஸ் வழங்கப்பட்டிருந்த 42 சந்தேகநபர்களை பொலிஸாரால் திரும்ப அழைத்து வர முடிந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">சிவப்பு அறிவித்தல்</span></p><p>
இதற்கிடையில், ரெட் நோட்டீஸ் பெற்ற மேலும் 109 சந்தேகநபர்கள் எதிர்காலத்தில் நாட்டிற்குத் திரும்ப அழைத்து வரப்பட உள்ளதாகவும் கூறியுள்ளார்.</p><p>

ரெட் நோட்டீஸ் இல்லாத 38 சந்தேகநபர்கள் ஏற்கனவே நாட்டிற்கு திரும்ப அழைத்து வர முடிந்துள்ளது என்றும், வரும் நாட்களில் மேலும் பல சந்தேகநபர்களைத் திரும்ப அழைத்து வர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/45a839f3-63ba-45ff-86e1-69785a8a1303/26-6a8d29ba32ab6.webp' /></p><p>
கடந்த மூன்று ஆண்டுகளில் தனிநபர்கள் சட்டவிரோதமாகச் சேர்த்துள்ள ரூ. 3,878 மில்லியன் மதிப்புள்ள சொத்துக்களைப் பறிமுதல் செய்யத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.</p><p>
</p><p>
அதன்படி, 2024 ஆம் ஆண்டில் ரூ. 1,549 மில்லியன் மதிப்புள்ள சொத்துக்கள் அரசாங்கத்தால் கையகப்படுத்தப்பட்டன.
</p><p>
2025-ஆம் ஆண்டில் மேலும் ரூ. 1,549 மில்லியன் மதிப்புள்ள சொத்துக்களைக் கையகப்படுத்த முதற்கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
</p><p>
 உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் விசாரிக்கப்பட்டு வருவதைத் தொடர்ந்து, இந்த சொத்துக்கள் அனைத்தும் செயலிழக்கச் செய்யப்பட்டு, அரசாங்கத்தால் முழுமையாக கையகப்படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.</p><p>&nbsp;</p><p></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/URucxM82z-8" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-08-25T05:39:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Fathima</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர்கள் சுட்டுக்கொலை: பிரேதபரிசோதனையில் அதிர்ச்சி தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/three-tamils-were-shot-at-from-very-close-range-1787636061"></link>
            <id>https://ibctamilnadu.com/article/three-tamils-were-shot-at-from-very-close-range-1787636061</id>
            <summary type="text">கர்நாடகாவின் சாம்ராஜ்நகரில் மூன்று தமிழர்கள் துப்பாக்கியால் சுடப்பட்ட சம்பவம் திட்டமிட்ட கொலை என குற்றம்சாட்டப்பட்ட நிலையில் பிரேத பரிசோதனையில் அதிர்ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>கர்நாடகாவின் சாம்ராஜ்நகரில் மூன்று தமிழர்கள் துப்பாக்கியால் சுடப்பட்ட சம்பவம் திட்டமிட்ட கொலை என குற்றம்சாட்டப்பட்ட நிலையில் பிரேத பரிசோதனையில் அதிர்ச்சிகர தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><h2>தமிழர்கள் சுட்டுக்கொலை</h2><p>
</p><p>
கர்நாடகாவின் சாம்ராஜ்நகர் காவேரி வனப்பகுதிக்கு உட்பட்ட சாக்கியா வனப்பகுதியில் கடந்த 15ம் தேதி வனத்துறையினரால் மூன்று தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.</p><p>

அந்தோணிசாமி, ஜான் ரோஸ் பீட்டர் மற்றும் செபஸ்டின் டேவிட் குமார் ஆகிய மூன்று பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
</p><p>
இதுதொடர்பில் சாம்ராஜ்நகர் மாவட்ட உதவி கலெக்டர் தினேஷ் குமார் மீனா தலைமையிலான அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dc83a79b-b4ad-4c16-a55e-0de3aa4951de/26-6a8d29c0de6b1.webp' /><br></p><h2>பிரேதபரிசோதனை அறிக்கை</h2><p>
</p><p>
சமீபத்தில் வெளியான பிரேத பரிசோதனை அறிக்கையில், மூவரின் உடலில் இருந்த துப்பாக்கி குண்டுகள் மிக அருகில் இருந்து சுடப்பட்டவை என்றும், உடலில் உள்காயங்கள் இருந்ததாகவும் தெரியவந்துள்ளது.
</p><p>
மேலும் மூன்று பேரின் உடல்களிலும் 8.5 செ.மீ அகலத்தில், 6 செ.மீ ஆழத்துக்கு காயங்கள் இருந்தது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.<br></p>]]></content>
            <updated>2026-08-25T05:36:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்திய கடற்பரப்பில் நடமாடிய இலங்கைப் படகு - காவல்துறையின் கண்ணில் மண் தூவி தப்பியோட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sri-lankan-boat-suspiciously-escapes-from-police-1787635160"></link>
            <id>https://ibctamil.com/article/sri-lankan-boat-suspiciously-escapes-from-police-1787635160</id>
            <summary type="text">இந்திய கடற்பரப்பில் இலங்கை கடற்றொழில் படகொன்று நீண்ட நேரம் நடமாடிய சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.குறித்த சம்பவம் நேற்று (24.08.2026) காலை ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்திய கடற்பரப்பில் இலங்கை கடற்றொழில் படகொன்று நீண்ட நேரம் நடமாடிய சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.</p><p>குறித்த சம்பவம் நேற்று (24.08.2026) காலை இந்தியாவின் கோட்டைப்பட்டினம் அருகே கரையில் இருந்து இரண்டு கடல்மைல் (நொட்டிக்கல்) தூரத்தில் இடம்பெற்றுள்ளது&nbsp;&nbsp;</p><p>
கோட்டைப்பட்டினம் கடற்கரைக்கு அருகில் சந்தேகத்துக்கிடமான முறையில் நீண்ட நேரம் நடமாடிய இலங்கைப் படகை மடக்க இந்திய காவல்துறையினர் முற்பட்டுள்ளனர்.</p><p></p><h2>தப்பிச் சென்ற&nbsp;படகு</h2><p>காவல்துறையினர் படகில் சென்று இலங்கைப் படகைச் சுற்றி வளைக்க முயன்ற போதிலும், அந்தப் படகு அவர்களின் பிடியில் சிக்காமல் தப்பிச் சென்றுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/30de446a-cf41-4079-a73d-ac96b936d78b/26-6a8d2986b6ce0.webp' /></p><p>தப்பிச் சென்ற இலங்கைப் படகில் இருவர் காணப்பட்டனர் என்றும், அதில் பல மூடைகள் இருந்தன என்றும் தெரிவிக்கப்படுகின்றது.</p><p> இது ஒரு கடத்தல் நடவடிக்கை தொடர்பான படகாக இருக்கலாம் என இந்திய காவல்துறையினர் சந்தேகித்துள்ளனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/FJQcrzobjUcEaJJsEVOWpF" target="_blank">WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-25T05:35:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பில் இருந்து யாழ். நோக்கி மருந்துகளுடன் சென்ற வாகனம் விபத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/vehicle-carrying-medicines-colombo-jaffna-accident-1787635931"></link>
            <id>https://jvpnews.com/article/vehicle-carrying-medicines-colombo-jaffna-accident-1787635931</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மருந்துகளை ஏற்றி வந்த வாகனம் கொக்காவில் பகுதியில் தடம்புரண்டுள்ளது. 

கொழும்பில் இருந்து , யாழ்.போதனா வைத்தியசாலைக...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மருந்துகளை ஏற்றி வந்த வாகனம் கொக்காவில் பகுதியில் தடம்புரண்டுள்ளது.</p><p></p><p> 

கொழும்பில் இருந்து , யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மருந்துகளை ஏற்றி வந்த வாகனம் முல்லைத்தீவு, கொக்காவில் பகுதியில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை அதிகாலை தடம்புரண்டு விபத்துக்கு உள்ளாகியுள்ளது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d512a09e-6b5a-47b8-a185-13f64163d252/26-6a8d28dcb9479.webp' /></p><p>விபத்தில் சாரதி மற்றும் உடன் பயணித்த இரு ஊழியர்களும் , பாதுகாப்பாக உள்ளதாகவும், தடம்புரண்ட வாகனத்தில் இருந்த மருந்துகளை பாதுகாப்பாக இறக்கி, மற்றுமொரு வாகனத்திற்கு மாற்றி எடுத்து வர நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளப்பட்டதாக , வைத்தியசாலை பணிப்பாளர் த, சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். </p><p>

அதேவேளை குறித்த விபத்து சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-25T05:33:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[விஸ்வநாத் &amp; சன்ஸ் உலகளவில் இதுவரை செய்துள்ள வசூல், எவ்வளவு தெரியுமா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/vishwanath-and-sons-movie-worldwide-box-office-1787635914"></link>
            <id>https://viduppu.com/article/vishwanath-and-sons-movie-worldwide-box-office-1787635914</id>
            <summary type="text">கருப்பு திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து சூர்யா நடிப்பில் உருவாகி கடந்த ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளிவந்த திரைப்படம் விஸ்வநாத் &amp;amp; சன்ஸ். இப்படத்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கருப்பு திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து சூர்யா நடிப்பில் உருவாகி கடந்த ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளிவந்த திரைப்படம் விஸ்வநாத் &amp; சன்ஸ். இப்படத்தை இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aeacd287-a447-46bc-8668-25816452ae38/26-6a8d28cd9a19d.webp' /></p><p>
</p><p>
இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து முதல் முறையாக மமிதா பைஜூ நடிக்க, நடிகை ராதிகா சரத்குமார் மற்றும் பாலிவுட் நடிகை ரவீனா டாண்டன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் குமார் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.</p><p>இப்படத்தின் வசூல் குறித்த விவரங்களை தொடர்ந்து ஒவ்வொரு நாளும் பார்த்து வருகிற நிலையில், 11 நாட்களில் எவ்வளவு வசூலித்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7c24df25-faae-40bd-9ad4-b6b6312ebd63/26-6a8d28ce5217a.webp' /></p><p>

அதன்படி, 11 நாட்களில் விஸ்வநாத் &amp; சன்ஸ் திரைப்படம் உலகளவில் ரூ. 187 கோடி வசூலித்துள்ளது. இனி வரும் நாட்களில் எவ்வளவு வசூல் செய்யும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.</p>]]></content>
            <updated>2026-08-25T05:33:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[தன் படத்தையே கலாய்த்த விக்னேஷ் சிவன் - குலுங்கி குலுங்கி சிரித்த கியாரா அத்வானி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/kiara-you-are-lucky-didnt-act-in-lik-vignesh-video-1787634024"></link>
            <id>https://manithan.com/article/kiara-you-are-lucky-didnt-act-in-lik-vignesh-video-1787634024</id>
            <summary type="text">இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கு சமீப காலமாக வெற்றி சற்று தூரமாகவே இருந்து வருகிறது. காதல், நகைச்சுவை, இளைஞர்களை கவரும் விதமான கதைக்களம் என தனக்கென ஒரு பா...</summary>
            <content type="html"><![CDATA[<p>இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கு சமீப காலமாக வெற்றி சற்று தூரமாகவே இருந்து வருகிறது. காதல், நகைச்சுவை, இளைஞர்களை கவரும் விதமான கதைக்களம் என தனக்கென ஒரு பாணியை உருவாக்கியிருந்தாலும், அவரது சமீபத்திய படமான&nbsp; லவ் இன்சூரன்ஸ் கம்பெனி (LIK) ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களைப் பெற்றது.</p><p> 2026-ல் வெளியான இப்படம் எதிர்பார்த்த அளவுக்கு பெரிய வெற்றியைப் பெறவில்லை. 

இந்த நிலையில், சென்னையில் நேற்று நடைபெற்ற ‘Toxic’ பட விழாவில் யாஷ், கியாரா அத்வானி, ருக்மிணி வசந்த் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c45106e0-152a-41e4-83f6-f80ab7ae9c89/26-6a8d2665663b4.webp' /></p><p></p><h2>விக்னேஷ் சிவன் பேசிய வீடியோ வைரல்</h2><p> </p><p>விழாவில் பேசிய விக்னேஷ் சிவன், கியாரா அத்வானியைப் பற்றிய பழைய நினைவு ஒன்றை பகிர்ந்துகொண்டார்.

அப்போது கியாராவை பார்த்து, “எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. ‘Kabir Singh’ படத்திற்கு முன்பாகவே உங்களை சந்தித்து ஒரு கதை சொன்னேன். </p><p>அந்தக் கதையை இப்போது நான் படமாக்கிவிட்டேன். அதுதான் ‘Love Insurance Kompany’” என்று கூறினார்.

அதோடு நிறுத்தாமல், “நீங்க லக்கி... அதில் நீங்க நடிக்கவில்லை!” என்று விக்னேஷ் சிவன் கிண்டலாக கூறினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/253b139e-3bb5-4afa-929e-0e8cd7e1b8de/26-6a8d266618d3f.webp' /></p><p>
</p><p>
அதாவது, ஒரு காலத்தில் கியாராவிடம் சொன்ன கதையை பல ஆண்டுகளுக்குப் பிறகு படமாக்கியிருக்கிறார் விக்னேஷ் சிவன். ஆனால் அந்தப் படத்தில் கியாரா நடிக்காததை வைத்து, மேடையிலேயே தனது சொந்தப் படத்தைப் பற்றியே அவர் ஜாலியாக கலாய்த்துக்கொண்டது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
</p><p>
பொதுவாக ஒரு இயக்குநர் தனது படத்தை மேடையில் புகழ்ந்து பேசுவார். ஆனால் விக்னேஷ் சிவனோ, “நல்ல வேளை நீங்க நடிக்கல...” என்று சொல்லி தனது படத்தையே ட்ரோல் செய்திருப்பதுதான் தற்போது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3c72f7cc-f0e9-4997-b8d4-24ade9ae961c/26-6a8d2666c17e6.webp' /></p><p></p><p>
</p><p>
குறிப்பாக, தனது படத்தின் வரவேற்பு குறித்து வரும் விமர்சனங்களையும் தாண்டி, தன்னையே கிண்டல் செய்துகொள்ளும் அளவுக்கு விக்னேஷ் சிவன் இந்த விஷயத்தை மிகவும் கேஷுவலாக எடுத்துக்கொண்டிருப்பது ரசிகர்களையும் சிரிக்க வைத்துள்ளதுடன் அவரின் செயல் பலரையும் வியக்க வைத்துள்ளது. குறித்த காணொளி தற்போது இணையத்தில் படு வைராலாகி வருகின்றது.&nbsp;</p><p><blockquote class="twitter-tweet"><p lang="zxx" dir="ltr"><a href="https://t.co/RO1e73Ff5W">pic.twitter.com/RO1e73Ff5W</a></p>&mdash; Laxmi Kanth (@iammoviebuff005) <a href="https://x.com/iammoviebuff005/status/2091919444696289443?ref_src=twsrc%5Etfw">August 24, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://manithan.com/article/venus-transit-in-chithirai-who-get-huge-luck-1787630992" target="_blank">FOLLOW NOW&nbsp;</a></u></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-25T05:28:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[16 இலட்சம் பெறுமதியான சட்டவிரோத மதுபானத்துடன் பெண் ஒருவர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/woman-arrested-illicit-liquor-worth-1-6million-1787631616"></link>
            <id>https://ibctamil.com/article/woman-arrested-illicit-liquor-worth-1-6million-1787631616</id>
            <summary type="text">பதினாறு இலட்சம் ரூபா பெறுமதியான 120,000 மில்லிலீற்றர் சட்டவிரோத மதுபானத்துடன்&amp;nbsp; பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த பெண் கல்கிஸ்ஸ பகுதியில...</summary>
            <content type="html"><![CDATA[<p>பதினாறு இலட்சம் ரூபா பெறுமதியான 120,000 மில்லிலீற்றர் சட்டவிரோத மதுபானத்துடன்&nbsp; பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>குறித்த பெண் கல்கிஸ்ஸ பகுதியில் குற்றப்புலனாய்வுப் பிரிவினரின் விசேட சோதனை நடவடிக்கையின்போதே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.&nbsp;</p><p>கைது செய்யப்பட்ட பெண் 31 வயதுடைய மொரட்டுவை, கொரலவெல்ல, பெரேரா மாவத்தையைச் சேர்ந்தவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p></p><h2>குற்றப்புலனாய்வுப் பணியகப் பொறுப்பதிகாரி</h2><p>இவர் இரத்மலானை கடற்கரைப் பகுதியில் வைத்து கல்கிஸ்ஸ குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ed0f4236-9db2-43e0-bae7-4483cf509621/26-6a8d250341a10.webp' /></p><p>
கல்கிஸ்ஸ குற்றப்புலனாய்வுப் பணியகப் பொறுப்பதிகாரியின் நேரடி மேற்பார்வை மற்றும் வழிகாட்டலின் கீழ் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><p>

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கல்கிஸ்ஸ காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், அவரை கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/FJQcrzobjUcEaJJsEVOWpF" target="_blank"><b>WHATSAPP</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-25T05:28:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[மகர வாகனத்தில் அருட்காட்சி அளித்த நல்லூர் கந்தன் ; நாளை மஞ்சத் திருவிழா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/nallur-kandan-performed-auspicious-makara-vahana-1787635326"></link>
            <id>https://jvpnews.com/article/nallur-kandan-performed-auspicious-makara-vahana-1787635326</id>
            <summary type="text">வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவம் பக்திபூர்வமாகவும் கோலாகலமாகவும் நடைபெற்று வரும் நிலையில், திங்கட்கிழமை மாலை எட்டாம...</summary>
            <content type="html"><![CDATA[<p>வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவம் பக்திபூர்வமாகவும் கோலாகலமாகவும் நடைபெற்று வரும் நிலையில், திங்கட்கிழமை மாலை எட்டாம் திருவிழா சிறப்பாக இடம்பெற்றது.</p><p>
</p><p></p><p>எட்டாம் திருவிழாவை முன்னிட்டு ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்றதைத் தொடர்ந்து, வேல் பெருமான் வள்ளி, தெய்வானை சமேதரராக மகர வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருட்காட்சி அளித்தார். </p><p>இதனையடுத்து, மூவரும் ஆலய வெளிவீதிகளில் உலா வந்து திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e7cab845-e121-466b-97a4-6c55136724fc/26-6a8d268014edd.webp' /></p><p>வருடாந்த மகோற்சவத்தின் முக்கியமான திருவிழாக்களில் ஒன்றான எட்டாம் திருவிழாவைக் காண யாழ்ப்பாணம் மட்டுமன்றி நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் பெருமளவில் நல்லூர் ஆலயத்திற்கு வருகை தந்திருந்தனர். </p><p>மகர வாகனத்தில் எழுந்தருளிய வேல் பெருமான், வள்ளி மற்றும் தெய்வானையின் தெய்வீகக் காட்சியை பக்தர்கள் பக்திப் பரவசத்துடன் தரிசித்தனர்.</p><p>

தொடர்ந்து நடைபெற்று வரும் மகோற்சவத்தின் அடுத்த முக்கிய நிகழ்வாக, நாளைய தினம் புதன்கிழமை 10ஆம் திருவிழாவான மஞ்சத் திருவிழா மாலை 4.45 மணிக்கு நடைபெறவுள்ளது. </p><p>இந்த விசேட திருவிழாவிலும் பெருமளவான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2a02b8aa-ba0f-43be-ae32-71f456c4e37f/26-6a8d2680bb5ad.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6bfd0893-8e2a-49ce-b1b1-316f51e95efe/26-6a8d26816fa06.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3d52b53a-46e5-49ab-96f8-c61b1f94d82f/26-6a8d26822b0ae.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e7cab845-e121-466b-97a4-6c55136724fc/26-6a8d268014edd.webp' /></p>]]></content>
            <updated>2026-08-25T05:23:13+00:00</updated>
        </entry>
    </feed>
