<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-08-28T20:15:05+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானுக்கு எதிரான ஆறு மாத கால போரின் விளைவு! அமெரிக்க இராணுவத்துக்கு நேர்ந்துள்ள கதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/six-month-us-war-against-iran-weakened-us-military-1787946275"></link>
            <id>https://ibctamil.com/article/six-month-us-war-against-iran-weakened-us-military-1787946275</id>
            <summary type="text">ஈரானுக்கு எதிரான ஆறு மாத கால அமெரிக்கப் போர், அமெரிக்க இராணுவத்தை வெகுவாகப் பலவீனப்படுத்தியுள்ளதாக அமெரிக்க செனட் சபையின் ஜனநாயகக் கட்சித் தலைவர் சக் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானுக்கு எதிரான ஆறு மாத கால அமெரிக்கப் போர், அமெரிக்க இராணுவத்தை வெகுவாகப் பலவீனப்படுத்தியுள்ளதாக அமெரிக்க செனட் சபையின் ஜனநாயகக் கட்சித் தலைவர் சக் ஷூமர் தெரிவித்துள்ளார்.</p><p>

இது குறித்து X தளத்தில் பதிவிட்டுள்ள அவர், ஈரான் மீதான போர் அமெரிக்க ஆயுதக் கிடங்குகளைக் குறைப்பதையும் நாட்டின் இராணுவ நிலையைப் பலவீனப்படுத்துவதையும் தவிர வேறு எதையும் சாதிக்கவில்லை என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>
அத்துடன், இந்த நடவடிக்கை ஒரு பேரழிவு மற்றும் தோல்வி எனக் குறிப்பிட்ட அவர், அதை "டிரம்பின் போர்" என்றும் கடுமையாகச் சாடியுள்ளார்.</p><p></p><h2>அமெரிக்க இடைக்காலத் தேர்தல்</h2><p>
</p><p>
ஈரானில் நடக்கும் அமெரிக்க-இஸ்ரேல் போரின் காரணமாக, ஐரோப்பாவில் உள்ள அமெரிக்க பேட்ரியாட் ஏவுகணைக் கையிருப்பு கடுமையாகக் குறைந்துவிட்டதாகக் கூறும் அசோசியேட்டட் பிரஸ்ஸின் பிரத்யேகச் செய்தியையும் அவர் பகிர்ந்துள்ளார்.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">6 months in, Trump’s disastrous war in Iran has accomplished nothing but the depletion of American stockpiles and the weakening of our military standing.<br><br>That’s what I call an abject failure. <a href="https://t.co/egyUeP6bia">pic.twitter.com/egyUeP6bia</a></p>&mdash; Chuck Schumer (@SenSchumer) <a href="https://x.com/SenSchumer/status/2093362871333802081?ref_src=twsrc%5Etfw">August 28, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>

வரவிருக்கும் அமெரிக்க இடைக்காலத் தேர்தல்களில் இந்த ஈரான் போர் ஒரு முக்கியப் பிரச்சினையாக உருவெடுக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-28T19:57:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாள வெள்ளத்தில் கனடிய தம்பதி மாயம்: நல்ல செய்திக்காகக் காத்திருக்கும் குடும்பத்தினர்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/missing-in-nepal-after-deadly-flash-floods-1787928115"></link>
            <id>https://canadamirror.com/article/missing-in-nepal-after-deadly-flash-floods-1787928115</id>
            <summary type="text">&amp;nbsp;கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தைச் சேர்ந்த கனடிய தம்பதியினர், நேபாளத்தில் ஏற்பட்ட பயங்கர திடீர் வெள்ளத்தில் சிக்கி மாயமாகியுள்ளனர். 
இமய...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தைச் சேர்ந்த கனடிய தம்பதியினர், நேபாளத்தில் ஏற்பட்ட பயங்கர திடீர் வெள்ளத்தில் சிக்கி மாயமாகியுள்ளனர்.</p><p> 
இமயமலை பனிப்பாறை உடைப்பால் ஏற்பட்ட இந்த பேரிடரில் 30-க்கும் மேற்பட்ட கனடியர்கள் காணாமல் போயுள்ள நிலையில், இந்த தம்பதியின் நிலை என்னவென்று தெரியாமல் அவர்களது குடும்பத்தினர் பெரும் தவிப்பில் உள்ளனர்.
</p><p>பிரிட்டிஷ் கொலம்பியாவின் 'போர்ட் மூடி' பகுதியைச் சேர்ந்த தவால் ஷா மற்றும் அவரது மனைவி மேகா ஷா ஆகியோர் நேபாளத்திற்குச் சுற்றுலா சென்றிருந்த நிலையில் இந்த வெள்ளப் பெருக்கில் சிக்கியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a1a090e0-cabc-4b01-acc0-4299c4eb9757/26-6a919e3575bc5.webp' /></p><p>
</p><p>கடந்த ஞாயிற்றுக்கிழமைக்குப் பின்னர் அவர்களிடம் இருந்து எந்தத் தொடர்பும் இல்லை என்று தவாலின் சகோதரர் கேவல் ஷா வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
</p><p>அவர்கள் எப்படியாவது வெள்ளத்திலிருந்து தப்பித்து, உயிருடன் மீட்டெடுக்கப்பட்டார்கள் என்ற ஒரு நல்ல செய்தி வரக் கூடாதா என்று தான் நாங்கள் வழிமேல் விழிவைத்து காத்துக் கொண்டிருக்கிறோம்.</p><p> ஆனால், துரதிர்ஷ்டவசமாக இதுவரை எந்தத் தகவலும் வரவில்லை என காணாமல் போன கனடியரின் சகோதரர் கேவல் ஷா தெரிவித்துள்ளார்.
</p><p>திபெத்-நேபாள எல்லையில் ஏற்பட்ட இந்த திடீர் வெள்ளத்தில் 1,000-க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளனர்.
</p><p>இதில் தவால்-மேகா தம்பதி உட்பட குறைந்தபட்சம் 30 கனடியர்களும், நிரந்தரக் குடியுரிமை பெற்றவர்களும் அடங்குவர் என கனடா உலகளாவிய விவகாரங்கள் துறை உறுதிப்படுத்தியுள்ளது.
</p><p>மலைப் பகுதியில் பனிப்பாறை உடைந்ததால் ஏற்பட்ட இந்த வெள்ளத்தில் பல அடி உயரத்திற்குச் சேறும் சகதியும் அடர்த்தியாகக் குவிந்துள்ளது.
</p><p>பாதிக்கப்பட்ட பகுதிகள் மிகவும் தொலைதூரத்தில் அமைந்திருப்பதாலும், சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளதாலும் மீட்புக் குழுவினர் அங்குச் செல்வதில் பெரும் சிரமம் நிலவுகிறது. 
அடர்ந்த சேற்றுக்குள் சிக்கியவர்களைத் தேடிக் கண்டுபிடிப்பது மிகவும் கடினமான காரியமாக இருக்கும் என அஞ்சப்படுகிறது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-28T19:56:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாள வெள்ளப் பேரழிவில் 35 நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டவர்கள் காணாமல் போனது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/nepal-floods-35-nations-missing-citizens-1787945065"></link>
            <id>https://news.lankasri.com/article/nepal-floods-35-nations-missing-citizens-1787945065</id>
            <summary type="text">Nepal Floods - 35 nations missing citizens: நேபாள பெருவெள்ளத்தில் 35 நாடுகளை சேர்ந்தவர்கள் காணாமல் பொறியுள்ளனர்.

நேபாளம்-திபெத் எல்லைப் பகுதியில் ஏ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Nepal Floods - 35 nations missing citizens: நேபாள பெருவெள்ளத்தில் 35 நாடுகளை சேர்ந்தவர்கள் காணாமல் பொறியுள்ளனர்.
</p><p>
நேபாளம்-திபெத் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பெரும் பேரழிவு ஏற்பட்டுள்ளது. </p><p>

நேபாள அரசு வெளியிட்ட சமீபத்திய தகவலின்படி, 1,468 பேர் காணாமல் போயுள்ளனர். இதில் 517 வெளிநாட்டவர்கள் அடங்குவர். இதுவரை 392 பேர் உயிரிழந்தது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/09944d80-c2be-466f-82a2-cda6fe7b924f/26-6a91e82a97e7e.webp' /></p><p>நேபாள சுற்றுலா வாரியம் தெரிவித்ததாவது, 667 பேர் காணாமல் போயுள்ளனர் என பதிவாகியுள்ளது. இதில் 127 நேபாளர்கள் மற்றும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் அடங்குவர்.
</p><p><b>
இந்தியா:</b> வியாழன் நிலவரப்படி 178 இந்தியர்கள் காணாமல் போயுள்ளனர். 11 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
</p><p><b>அமெரிக்கா:</b> 90 பேர் காணாமல் போயுள்ளனர். 3 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
</p><p><b>பிரித்தானியா:</b> 33 பேர் காணாமல் போயுள்ளனர்.
</p><p><b>கனடா:</b> 25 பேர் காணாமல் போயுள்ளனர். ஆனால், கனடா அரசு 30 பேர் தொடர்பில் தகவல் இல்லை என தெரிவித்துள்ளது.
</p><p><b>அவுஸ்திரேலியா:</b> 39 பேர் காணாமல் போயுள்ளனர்.
</p><p><b>மலேசியா:</b> 51 பேர் தொடர்பில் தகவல் இல்லை.
</p><p><b>உக்ரைன்: </b>56 பேர் காணாமல் போயுள்ளனர்.
</p><p><b>சீனா:</b> 100-க்கும் மேற்பட்ட சீனர்கள் காணாமல் போயுள்ளனர்.
</p><p></p><p>மேலும், ஜேர்மனி (8), ரஷ்யா (8), சிங்கப்பூர் (9), தென் கொரியா (9), பிரான்ஸ் (4), ஸ்பெயின் (4), ஜப்பான் (5), நியூசிலாந்து (5), தென்னாப்பிரிக்கா (6), லாட்வியா (6), போர்ச்சுகல் (3), இத்தாலி (3), அயர்லாந்து (2), கசகஸ்தான் (2), இஸ்ரேல் (1), லிதுவேனியா (1), பிலிப்பைன்ஸ் (1), ஸ்வீடன் (1), பெல்ஜியம் (3), ஹங்கேரி (3),நெதர்லாந்து (2), பின்லாந்து (1) உள்ளிட்ட 35 நாடுகளைச் சேர்ந்தவர்கள் காணாமல் போயுள்ளனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d39788c1-a936-405d-866e-2ad39555284d/26-6a91e82b5605b.webp' /></p><p>சுவிற்சர்லாந்து (1), பல்கேரியா (1) ஆகிய நாடுக்ளிக் சேர்ந்தவர்கள் மீட்கப்பட்டுள்ளார்.
</p><p>
சிலர் மீட்கப்பட்டாலும், பலர் இன்னும் தொடர்பில் இல்லை. இரட்டை குடியுரிமை, உடல்களை அடையாளம் காணும் சிரமம், பேரழிவின் குழப்பம் ஆகிய காரணங்களால் எண்ணிக்கைகள் மாறக்கூடும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
</p><p>
இந்த பேரழிவு, நேபாளத்தின் சுற்றுலா துறைக்கு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் இருந்து வந்த சுற்றுலா பயணிகள் காணாமல் போனதால், பல நாடுகள் தங்கள் குடிமக்களை தேடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-28T19:54:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீதிக்கான நீள் பயணம் மாநாட்டிற்கு யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஆதரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/missing-persons-sri-lanka-tamils-conference-1787946037"></link>
            <id>https://tamilwin.com/article/missing-persons-sri-lanka-tamils-conference-1787946037</id>
            <summary type="text">வடக்கு கிழக்கு இணைந்த வலிந்து காணாமல்
ஆக்கப்பட்டோர் சங்கத்தினால் யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்படவுள்ள &quot;நீதிக்கான நீள் பயணம்&quot; மாநாட்டிற்கு நாங்கள் முழ...</summary>
            <content type="html"><![CDATA[<p>வடக்கு கிழக்கு இணைந்த வலிந்து காணாமல்
ஆக்கப்பட்டோர் சங்கத்தினால் யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்படவுள்ள "நீதிக்கான நீள் பயணம்" மாநாட்டிற்கு நாங்கள் முழுமையான ஆதரவினை வழங்க இருக்கின்றோம் என
யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் யோகராசா துஷாந்தன் தெரிவித்தார்.</p><p>
யாழ். ஊடக அமையத்தில் நேற்று மாலை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த
போது அவர் இதனை குறிப்பிட்டார்.&nbsp;</p><p>

மேலும் தெரிவிக்கையில், "பல ஆண்டு காலமாக தங்களுடைய உறவுகளுக்கு என்ன நடந்தது என்பது தெரியாமல்,
உண்மையையும் நீதியையும் வேண்டி நீண்ட காலமாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின்
உறவுகள் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றார்கள்.</p><h2>&nbsp;முழுமையான ஆதரவு&nbsp;</h2><p>
</p><p>
அந்த நிலையில், தமது உறவுகளின் நீதிக்காக வீதியில் நின்று போராடி வருகின்ற
தாய்மாரினுடைய குடும்பங்களின் குரலுக்கு வலுசேர்க்கும் வகையில், எங்களுடைய
அனைத்து மாணவர் சமூகமும், அத்துடன் இளைஞர்கள் இணைந்து அவர்களுக்கான முழுமையான
ஆதரவை வழங்க வேண்டியது அவசியமானதாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/673118aa-1a06-4ea7-96e7-b93f9756daaf/26-6a91e5e9c1ffd.webp' /></p><p>
</p><p>
அந்த நிலையிலே, எதிர்வருகின்ற ஞாயிற்றுக்கிழமை 9 மணிக்கு யாழ்ப்பாணம்
வீரசிங்கம் மண்டபத்திற்கு முன்பாக அமைந்துள்ள உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு
படுகொலை நினைவுத் தூபி இடத்தில் வைத்து, வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட ஒருவரது
உறவினரின் நினைவுப்படுத்தலோடு கவனயீர்ப்பு போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு,
பின்னர் தந்தை செல்வா கலையரங்கை அடைந்து, நீதிக்கான நீள் பயணம் என்ற பெயரிலே
ஒரு நாள் சர்வதேச மாநாடு, நீதியின் வலியுறுத்தலை நிலைப்படுத்தி நினைவு
நிகழ்வானது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.</p><p>

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளுக்கு உண்மையும் நீதியும் கிடைக்கும்
வரை, அவர்களினுடைய குடும்பங்கள் முன்னெடுத்து வருகின்ற போராட்டத்திற்கு எமது
ஆதரவு தொடரும்.
</p><p>
அவர்களுடைய கோரிக்கைகள் உள்ளூர் மட்டத்தை கடந்து சர்வதேச சமூகத்தின்
கவனத்திற்கு சென்றடைய வேண்டிய அவசியம் உள்ளது. எனவே பேரன்புமிக்க தமிழ்
சமூகமே, 30ஆம் திகதி நடைபெறவுள்ள இந்த முக்கிய நிகழ்விலே பல்கலைக்கழக
மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள், அரசியல் கட்சிகள், பிரதிநிதிகள், மதத்
தலைவர்கள், சமூகம் அனைத்து தரப்பினரும் இணைந்து கலந்துகொண்டு, இந்த காணாமல்
ஆக்கப்பட்ட அம்மாக்களினால் மேற்கொள்ளப்படுகின்ற இந்த பேரணிக்கும்
போராட்டத்திற்கும் வலுச்சேர்க்க வேண்டும் என்பதனை பல்கலைக்கழக மாணவர் சமூகமாக
நாங்கள் வலியுறுத்தி நிற்கின்றோம்” என்றார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-28T19:48:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஐபோனுக்காக பறிபோன உயிர்கள் ; வைரலான காணொளி; விசாரணையில் புதிய தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/lives-lost-over-iphone-viral-video-emerges-1787946030"></link>
            <id>https://jvpnews.com/article/lives-lost-over-iphone-viral-video-emerges-1787946030</id>
            <summary type="text">சில நாட்களுக்கு முன்பு மகாராஷ்டிராவில் ஒரு மலை உச்சியில் குணால் என்கிற வாலிபர் நின்று கொண்டு ‘நான் கீழே குதித்து விடுவேன்’ என அவரது தந்தையையும், தாயைய...</summary>
            <content type="html"><![CDATA[<p>சில நாட்களுக்கு முன்பு மகாராஷ்டிராவில் ஒரு மலை உச்சியில் குணால் என்கிற வாலிபர் நின்று கொண்டு ‘நான் கீழே குதித்து விடுவேன்’ என அவரது தந்தையையும், தாயையையும் மிரட்டிய வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியானது. </p><p>அந்த சம்பவத்தில் அந்த வாலிபரை பிடிக்க அவரின் தந்தை அருகில் சென்ற போது அந்த வாலிபர் தனது தந்தையின் கையும் பிடித்து கீழே இழுத்து இருவரும் கீழே விழுந்து இறந்து போனார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ba3ca4e1-a935-4c25-9db8-c80b1a3fab85/26-6a91e4d163447.webp' /></p><h2>&nbsp;ஐபோன்</h2><p>
</p><p>
அதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அந்த குணாலின் தாயும் மேலே இருந்து குதித்து மொத்தம் குடும்பத்தில் மூன்று பேரும் உயிரிழந்து விட்டனர். </p><p>முதலில் அந்த வாலிபர் தனக்கு ஐபோன் வாங்கி தரசொல்லி கேட்டதாகவும் அதை பெற்றோர்கள் வாங்கி கொடுக்காததால் இப்படி மிரட்டியதாகவும் செய்திகள் வெளியானது..

gunal
அதன்பின் அந்த இளைஞர் ஐபோன் வைத்திருக்கிறார். </p><p>ஆனால் அதற்கு மாதத்தவனை கட்டவில்லை.. அதைக் கேட்டுதான் அவர் தற்கொலைக்கு செய்து கொள்வதாக மிரட்டினார் என சொல்லப்பட்டது..</p><p></p><p> ஆனால் தற்போது பொலிசாரின் விசாரணையில் உண்மை என்ன என்பது தெரிய வந்திருக்கிறது. குணாலின் தாயும், தந்தையும் பிரிந்து வாழ்ந்து வந்திருக்கிறார்கள். </p><p> பிரிந்து வாழ்ந்த தனது பெற்றோரை சமரசம் செய்து ஒன்றாக வாழ வேண்டும் என்று குணால் வலியுறுத்தியதாக அவரின் அத்தை ஊடகங்களிடம் கூறியிருக்கிறார்..
</p><p>
எனவே, நீங்கள் இருவரும் இணைந்து வாழ வேண்டும் என குணால் தனது பெற்றோறோரை வற்புறுத்தியே தற்கொலை செய்து கொள்வதாக அந்த இடத்தில் நின்று மிரட்டியிருக்கிறார்.. </p><p>ஐபோனுக்கும் அதற்கும் எந்த தொடர்பும் இல்லை.. வீட்டில் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாகவே இந்த சம்பவம் நிகழ்ந்திருக்கிறது என போலீசார் விளக்கமளித்துள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-28T19:40:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[நௌஃபர் ஜேசுதாசனின் 7 கோடி ரூபாய் சட்டவிரோத சொத்துக்கள் முடக்கம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/assets-worth-7-cr-belonging-drug-trafficker-frozen-1787942815"></link>
            <id>https://ibctamil.com/article/assets-worth-7-cr-belonging-drug-trafficker-frozen-1787942815</id>
            <summary type="text">நௌஃபர் ஜேசுதாசன் என்ற போதைப்பொருள் கடத்தல்காரருக்கு சொந்தமானது எனக் கூறப்படும், 7 கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள சொத்துக்களின் பயன்பாட்டை தற்கால...</summary>
            <content type="html"><![CDATA[<p>நௌஃபர் ஜேசுதாசன் என்ற போதைப்பொருள் கடத்தல்காரருக்கு சொந்தமானது எனக் கூறப்படும், 7 கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள சொத்துக்களின் பயன்பாட்டை தற்காலிகமாக இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p>

சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப் பிரிவு நடத்திய விசாரணையைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
</p><p>
இதன்போது, மாத்தளை மீகஸ்தென்ன மற்றும் ஓவிலிகந்த பகுதிகளில் அமைந்துள்ள பல சொத்துக்கள் இவ்வாறு தற்காலிகமாகத் தடை செய்யப்பட்டுள்ளன.</p><p></p><h2>தொடர் விசாரணை</h2><p>
</p><p>
இடைநிறுத்தப்பட்ட சொத்துக்களில் 18 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 10 பேர்ச் நிலம், 4.14 கோடி ரூபாய் மதிப்புள்ள மூன்று மாடி வீடு அடங்கிய 10 பேர்ச் நிலம், 1.5 கோடி ரூபாய் மதிப்புள்ள 4 ஏக்கர் தேயிலைத் தோட்டம் மற்றும் 16 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 12.5 பேர்ச் நிலம் ஆகியவை அடங்குவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3c333198-42e4-4714-a03a-c9638fff2ce4/26-6a91d9af4d397.webp' /></p><p>

சமீபத்தில் காவல்துறை போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இச்சந்தேக நபருக்குச் சொந்தமான மேலும் பல சொத்துக்கள் குறித்தும் தொடர்ந்து விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-28T19:37:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kumar</name>
            </author>
            <title type="text"><![CDATA[மட்டக்களப்பு மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் பழமை மிகு தீர்த்தோற்சவம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/mandur-kandaswamy-temple-batticaloa-1787945597"></link>
            <id>https://tamilwin.com/article/mandur-kandaswamy-temple-batticaloa-1787945597</id>
            <summary type="text">இலங்கையின் சின்னக்கதிர்காமம் எனப்போற்றப்படும் மட்டக்களப்பு மண்டூர்
கந்தசுவாமி ஆலயத்தின் பழமை மிகு தீர்த்தோற்சவம் நேற்று பல்லாயிரக்கணக்கான
அடியார்கள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் சின்னக்கதிர்காமம் எனப்போற்றப்படும் மட்டக்களப்பு மண்டூர்
கந்தசுவாமி ஆலயத்தின் பழமை மிகு தீர்த்தோற்சவம் நேற்று பல்லாயிரக்கணக்கான
அடியார்கள் புடைசூழ வெகுவிமர்சையாக நடைபெற்றது.
</p><p>இலங்கையில் கதிர்காமத்தின் காலத்தினை ஒத்ததாக கருதப்படும் மண்டூர் கந்தசாமி
ஆலயத்தின் பூசைமுறைகள் கதிர்காமத்தினை ஒத்ததாக நடைபெற்றுவருகின்றது.
கடந்த 08ஆம் திகதி சனிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 21தினங்கள் ஆலய
உற்சவம் நடைபெற்றுவந்தன.
</p><p>உலகிலேயே முருக வழிபாட்டில் தனித்துவமான முறையினையும் மிகவும் பழமையான
வழிபாட்டு முறையினையும் கொண்டதாக பூஜை முறைகளும் ஆலய நடைமுறைகளும் மண்டூர்
கந்தசுவாமி ஆலயத்தில் உள்ளது.</p><p>
நேற்று காலை விசேட பூஜைகள் நடைபெற்றதுடன் வேல்தாங்கிய பேழைக்கு சிறப்பு பூஜைகள்
நடைபெற்றன. இந்த பேழைக்கு ஆலயத்தினுள் சிறுமி ஒருவரும் தீபம் காட்டி
வழிபாடுகளை முன்னெடுத்த பின்னரே பேழையானது தீர்த்தக்கரை நோக்கி கொண்டு
செல்லப்பட்டது.
</p><p>பெருமளவான பக்தர்கள் அடியார்கள் புடைசூழ மட்டக்களப்பு வாவிக்கு அருகில் உள்ள
தீர்த்தக்கேணிக்கு முருகனின் வேல்தாங்கிய பேழை கொண்டுவரப்பட்டது.
போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் ரங்கநாதன் தலைமையில் இந்த வழிபாடுகள்
முன்னெடுக்கப்பட்டதுடன் தீர்த்தோற்சவம் சிறப்பாக நடைபெற்றது.
</p><p>தீர்த்தோற்சவம் நிறைவடைந்ததும் ஆலயத்திற்கு முருகப்பெருமானின் பேழை
கொண்டுவரப்படும்போது தெய்வானையம்மன் ஆலயத்திற்கு முன்பாக சிறுமிகள் தீப ஆராதனை
செய்யும் நிகழ்வு நடைபெறும்போது சிறுமிகள் மற்றும் வில்அம்பு தாங்கி வரும்
சிறுவன் மயங்கிவிழும் அற்புத நிகழ்வு காலம்காலமாக நடைபெற்றுவருகின்றது.
</p><p>மயங்கிய சிறுமிகள் வள்ளியம்மன் ஆலயத்திற்கு பிற்புறமாக கொண்டுசெல்லப்பட்டு
முருகப்பெருமானின் வேல் வள்ளியம்மன் ஆலயத்திற்குள் வைக்கப்பட்டது. இதன்போது
வள்ளியமனுக்கு தீர்த்தம் தெளிக்கும் சமயத்தில் மயங்கிய பிள்ளைகள் மயக்கம்
தெளிந்து எழும் அற்புத காட்சியும் இடம்பெற்றது.</p>]]></content>
            <updated>2026-08-28T19:34:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[பெரும் கைதுகளுக்கான கோப்புகள் தயார்! அதிரடியாக களமிறங்கும் புலனாய்வு அதிகாரிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/anura-government-cid-investigations-to-arrest-1787943637"></link>
            <id>https://tamilwin.com/article/anura-government-cid-investigations-to-arrest-1787943637</id>
            <summary type="text">தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரசாரங்களில் முன்வைக்கப்பட்ட முக்கிய வாக்குறுதி, கடந்த கால ஆட்சிகளில் இடம்பெற்ற ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் அம்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரசாரங்களில் முன்வைக்கப்பட்ட முக்கிய வாக்குறுதி, கடந்த கால ஆட்சிகளில் இடம்பெற்ற ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் அம்பலப்படுத்துவோம் என்பதே.&nbsp;</p><p>அந்தவகையில், தற்போதைய அரசாங்கம், முந்தைய அரசாங்கங்களில் இடம்பெற்ற குற்றச்சாட்டுக்களை அம்பலப்படுத்தி பலரை கைது செய்து வருவதில் அதிரடியாக செயற்பட்டு வருகின்றது.&nbsp;</p><p>குறிப்பாக, ராஜபக்சக்களின் பாரிய குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் பல முக்கிய தகவல்களை புலனாய்வு அதிகாரிகள் திரட்டி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.&nbsp;</p><p>முன்னெடுக்கப்பட்டு வந்த விசாரணைகளின் அடிப்படையில், விரைவில் பல முக்கிய அரசியல் புள்ளிகளை கைது செய்வதற்கான பட்டியல்களும் தயார்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.&nbsp;</p><p>இது உட்பட நாட்டில் இடம்பெற்ற பல முக்கிய அரசியல் நகர்வுகள் குறித்து ஆராய்கின்றது நாட்டு நடப்பு நிகழ்ச்சி,&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/4l94xWZPoc0" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-28T19:28:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் அடுத்தமாதம் இலங்கை வருகை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/imf-representatives-to-visit-sri-lanka-next-month-1787943985"></link>
            <id>https://tamilwin.com/article/imf-representatives-to-visit-sri-lanka-next-month-1787943985</id>
            <summary type="text">சர்வதேச நாணய நிதியத்தின் முக்கிய பிரதிநிதிகள் குழுவொன்று அடுத்த மாதம் இலங்கைக்கு வரவுள்ளதாக தெரியவந்துள்ளது.

இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள நிதியுதவித்...</summary>
            <content type="html"><![CDATA[<p>சர்வதேச நாணய நிதியத்தின் முக்கிய பிரதிநிதிகள் குழுவொன்று அடுத்த மாதம் இலங்கைக்கு வரவுள்ளதாக தெரியவந்துள்ளது.</p><p>

இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள நிதியுதவித் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதில் இலங்கை அடைந்துள்ள முன்னேற்றத்தைச் சரிபார்க்கும் நோக்கில், சர்வதேச நாணய நிதியத்தின் (ஐஆகு) பிரதிநிதிகள் குழுவொன்று அடுத்த மாதம் இறுதியில் நாட்டிற்கு வருகைதரவுள்ளது.
</p><p>
இலங்கை தொடர்பில் வகையில் மேற்கொள்ளவுள்ள ஏழாவது மதிப்பீட்டு நடவடிக்கைகளுக்காகவே சர்வதேச நாணயத்தின் பிரதிநிதிகள் குழு வருகை தரவுள்ளதாகத் தெரிய வந்துள்ளது.</p><h2>பொருளாதார நெருக்கடி</h2><p>

குறித்த மதிப்பீட்டு செயற்பாடுகள் நிறைவடைந்த பின்னர், அடுத்த தவணைக் கடன் வசதியாக மேலும் சுமார் 330 மில்லியன் அமெரிக்க டொலர் தொகை இலங்கைக்குக் கிடைக்கவுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7fa17f37-82fd-452a-b992-4e6d0cbd5649/26-6a91dc3369399.webp' /></p><p>
சர்வதேச நாணய நிதியம் இதுவரை இலங்கைக்கு வழங்கியுள்ள நிதியுதவித் திட்டத்தின் கீழ், இலங்கை ஆறு மதிப்பீடுகளை நிறைவு செய்துள்ளதுடன், அதனடிப்படையில் நாட்டிற்கு வழங்கப்பட்டுள்ள மொத்த நிதி சுமார் 2.4 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.</p><p>

நாட்டில் ஏற்பட்ட கடுமையான பொருளாதார நெருக்கடிக்குப் பின்னர், 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நான்கு வருட காலப்பகுதிக்கு தவணை முறையில் கிடைக்கும் 2.9 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் உதவியை இலங்கைக்கு வழங்க சர்வதேச நாணய நிதியம் அங்கீகாரம் வழங்கியிருந்தது.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-28T19:15:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[நள்ளிரவில் பயங்கரத் தீ விபத்து! 5 வாகனங்கள் முற்றிலும் சேதம் – தீவிர விசாரணை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/the-car-exploded-5-vehicles-damaged-in-northeast-1787935049"></link>
            <id>https://canadamirror.com/article/the-car-exploded-5-vehicles-damaged-in-northeast-1787935049</id>
            <summary type="text">&amp;nbsp;கனடாவின் கால்கரி நகரிலுள்ள &#039;சிட்டிஸ்கேப்&#039; பகுதியில் அதிகாலை ஏற்பட்ட பயங்கரத் தீ விபத்தில் ஐந்து வாகனங்கள் கடுமையாகச் சேதமடைந்துள்ளன.
அதிகாலை 2 ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கனடாவின் கால்கரி நகரிலுள்ள 'சிட்டிஸ்கேப்' பகுதியில் அதிகாலை ஏற்பட்ட பயங்கரத் தீ விபத்தில் ஐந்து வாகனங்கள் கடுமையாகச் சேதமடைந்துள்ளன.
</p><p>அதிகாலை 2 மணியளவில் 'சிட்டிலைன் காமன் பகுதியில் தீப்பற்றி எரிவதாகக் கிடைத்த தகவலை அடுத்து, கால்கரி காவல்துறையும் தீயணைப்புப் படையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
தீயணைப்புக் குழுவினர் தீயைக் கட்டுப்படுத்தி, விசாரணையைத் தொடங்குவதற்காக அப்பகுதியில் போக்குவரத்து தற்காலிகமாக மூடப்பட்டது.</p><p> 
சேதமடைந்த நான்கு வாகனங்கள் கபேன் மூலமாக அகற்றப்பட்ட நிலையில், கடுமையாக எரிந்த வெள்ளை நிற வேன் ஒன்று சம்பவ இடத்திலேயே நிறுத்தப்பட்டிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1ca21d11-0f71-455a-9cfa-b5d7285ba74a/26-6a91b94ad96d6.webp' /></p><p>
</p><p>சம்பவ இடத்திற்கு அருகில் வசிக்கும் லக் சாது என்பவர் கூறுகையில், நள்ளிரவில் கேட்ட பலத்த சத்தம் ஏதோ வாகன விபத்தினால் ஏற்பட்டது என்று முதலில் நினைத்ததாகத் தெரிவித்தார்.
</p><p>இந்தப் பகுதி முழுவதும் தீப்பற்றி எரிந்தது. கார் வெடித்துச் சிதறியது போல் இருந்தது என குறிப்பிட்டார்.
இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
</p><p>இது திட்டமிட்டு வைக்கப்பட்ட தீயா என்பதை ஆராயக் கால்கரி காவல்துறையின் 'தீவைப்புப் பிரிவு' விசாரணைக்கு வரவழைக்கப்பட்டுள்ளது.</p><p> 
எனினும், தீ விபத்துக்கான சரியான காரணம் இதுவரை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-28T19:00:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>H. A. Roshan</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் முதல் செயலாளர் மற்றும் கிழக்கு ஆளுநர் சந்திப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/eastern-governor-meets-indian-official-1787943441"></link>
            <id>https://tamilwin.com/article/eastern-governor-meets-indian-official-1787943441</id>
            <summary type="text">இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் முதல் செயலாளர் (கல்வி)&amp;nbsp; சந்தீப் சௌத்ரிக்கும், கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரத்னசேகரவுக்கும் இடையில் ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் முதல் செயலாளர் (கல்வி)&nbsp; சந்தீப் சௌத்ரிக்கும், கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரத்னசேகரவுக்கும் இடையில் சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது.</p><p>குறித்த சந்திப்பானது நேற்று(28) திருகோணமலையில் உள்ள கிழக்கு
மாகாண ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.</p><h2>உதவித்தொகை</h2><p>

கிழக்கு மாகாணத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவர்களுக்கு இந்திய
அரசு தொடர்ந்து வழங்கிவரும் கல்வி உதவித்தொகைக்கு ஆளுநர் தனது நன்றியைத்
தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ae111d78-cacd-45c7-bb12-f1a434d278d1/26-6a91da141478f.webp' /></p><p>

கிழக்கு மாகாணத்தின் அரச ஊழியர்களுக்குத் தேவையான கல்விப் பயிற்சியை
வழங்குவதில் இந்திய அரசு ஆதரவளிக்க முடியும் என்று திரு. சந்தீப் சௌத்ரி இதன்
போது குறிப்பிட்டார்.</p>]]></content>
            <updated>2026-08-28T18:57:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[469 ஆக அதிகரித்த பலி எண்ணிக்கை.. நேபாளத்தில் திடீரென இடைநிறுத்தப்பட்ட மீட்பு பணிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/dam-tibet-broken-threatening-another-major-flood-1787942588"></link>
            <id>https://tamilwin.com/article/dam-tibet-broken-threatening-another-major-flood-1787942588</id>
            <summary type="text">நேபாளத்தில் வெள்ளத்தில் சிக்கியோரை மீட்கும் பணிகள் திடீரென இடைநிறுத்தப்பட்டுள்ளன.&amp;nbsp;&amp;nbsp;சீனா - நேபாள எல்லையில் நேற்று முன்தினம் ஏற்பட்ட திடீர் வெ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நேபாளத்தில் வெள்ளத்தில் சிக்கியோரை மீட்கும் பணிகள் திடீரென இடைநிறுத்தப்பட்டுள்ளன.&nbsp;&nbsp;</p><p>சீனா - நேபாள எல்லையில் நேற்று முன்தினம் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 469 ஆக அதிகரித்துள்ளது. 1,468 பேர் மாயமாகியுள்ளனர்.
</p><p>
உள்நாட்டு மக்கள் மற்றும் ஏராளமான வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் மாயமாகியுள்ள நிலையில், நேபாள மற்றும் பொலிஸார், இராணுவம் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தன.&nbsp;</p><h2>தற்காலிக&nbsp;நிறுத்தம்&nbsp;</h2><p>
</p><p>இதற்கிடையில், திபெத் பக்கத்தில் உள்ள கியிராங் எல்லைத் துறைமுகத்திற்கு மேலே உள்ள ஒரு நீர்த்தேக்க அணை ஒன்று உடைந்துள்ளதாக நேபாள பொலிஸார் அறிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b5e27d08-669f-4f81-9839-4d661275704c/26-6a91d7d789c33.webp' /></p><p> </p><p>

மேலும், "மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ள அனைத்துப் பாதுகாப்புப் பணியாளர்கள், மீட்புப் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் விழிப்புடன் இருக்குமாறும், உடனடியாகப் பாதுகாப்பான இடத்திற்குச் செல்லுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.&nbsp;</p><p>
இதே போல், சீனாவும் மீண்டும் பாரிய வெள்ளம் ஏற்படும் வாய்ப்பு உள்ளதால் மீட்பு பணிகளை தற்காலிகமாக நிறுத்துவதாக அறிவித்துள்ளது. 

வெள்ள அச்சம் காரணமாக உள்ளூர் மக்கள் மலை மீது விரைந்து ஏறி வருவதாக செ்யதிகள் வெளியாகியுள்ளன.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-28T18:52:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[செவ்வந்தியிடமிருந்து வாக்குமூலம் பதிவு செய்ய கொழும்பு குற்றப்பரிவுக்கு அனுமதி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/court-permission-to-statement-from-sevvanthi-1787941817"></link>
            <id>https://ibctamil.com/article/court-permission-to-statement-from-sevvanthi-1787941817</id>
            <summary type="text">பாதாள உலக குற்றவாளி கணேமுல்ல சஞ்சீவவின் கொலை தொடர்பாக நடத்தப்பட்டு வரும் விசாரணைகள் தொடர்பாக, தற்போது அங்குனுகொல பெலஸ்ஸ சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள...</summary>
            <content type="html"><![CDATA[<p>பாதாள உலக குற்றவாளி கணேமுல்ல சஞ்சீவவின் கொலை தொடர்பாக நடத்தப்பட்டு வரும் விசாரணைகள் தொடர்பாக, தற்போது அங்குனுகொல பெலஸ்ஸ சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தியிடமிருந்து வாக்குமூலம் பெறுவதற்கு, கொழும்பு குற்றப்பிரிவு நீதிமன்றிடம் அனுமதி கோரியுள்ளது.
</p><p>
</p><p>இந்த சம்பவம் தொடர்பாக ஒரு மனுவைத் தாக்கல் செய்வதன் மூலம் இன்றையதினம் கொழும்பு பிரதான நீதிபதி அசங்க எஸ். பொதரகமவிடம் கொழும்பு குற்றப்பிரிவு தெரியப்படுத்தியுள்ளது.</p><p>
இந்த சம்பவத்தை நீதிமன்றத்திற்கு மேலும் விளக்கிய விசாரணை அதிகாரிகள், கணேமுல்ல சஞ்சீவவின் கொலை தொடர்பாக நடத்தப்பட்டு வரும் விசாரணைகள் தொடர்பாக சந்தேக நபரிடமிருந்து வாக்குமூலம் பெற வேண்டியுள்ளது என்று சுட்டிக்காட்டியுள்ளனர்.</p><p></p><h2>நீதிமன்றின் உத்தரவு</h2><p>
</p><p>
அதன்படி, அடுத்த இரண்டு நாட்களுக்கு அங்குனுகொல பெலஸ்ஸ சிறைக்குச் சென்று வாக்குமூலம் பெறுவதற்கு அனுமதி வழங்குமாறு கொழும்பு குற்றப்பிரிவு மேலும் நீதிமன்றத்தைக் கோரியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/71d4475d-f677-488f-ac16-4d3fac96463a/26-6a91d5c437926.webp' /></p><p>
</p><p>
அத்தோடு, இது தொடர்பில் சிறை கண்காணிப்பாளருக்கு தகவல் தெரிவிக்குமாறும் கொழும்பு குற்றப்பிரிவு நீதிமன்றத்தை கோரியுள்ளது.
</p><p>
அதன்படி, நீதிபதி, முன்வைக்கப்பட்ட உண்மைகளைப் பரிசீலித்த பின்னர், அந்தக் கோரிக்கைக்கு இணங்க ஒரு உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.</p><p></p><p></p><h5><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table></h5>]]></content>
            <updated>2026-08-28T18:39:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதிரடிப்படையினரிடம் சிக்கிய கடத்தல்காரர் ; கட்டுக்கட்டாக மீட்கப்பட்ட பணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/smuggler-arrested-by-special-task-force-1787941725"></link>
            <id>https://jvpnews.com/article/smuggler-arrested-by-special-task-force-1787941725</id>
            <summary type="text">பெருமளவிலான கேரள கஞ்சா கடத்தலில் ஈடுபட்டுவந்த முக்கிய சந்தேக நபர் ஒருவர், 16 கிலோகிராம் கேரள கஞ்சா மற்றும் 9 இலட்சத்துக்கும் அதிகமான பணத்தொகையுடன் பொல...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">பெருமளவிலான கேரள கஞ்சா கடத்தலில் ஈடுபட்டுவந்த முக்கிய சந்தேக நபர் ஒருவர், 16 கிலோகிராம் கேரள கஞ்சா மற்றும் 9 இலட்சத்துக்கும் அதிகமான பணத்தொகையுடன் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p style="text-align: justify; ">
பொலிஸ் விசேட அதிரடிப்படையின் விசேட நடவடிக்கை பிரிவு Iஇன் அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், நேற்று வியாழக்கிழமை (27) கொஸ்வத்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கஹடவில - பொத்துவட்டன பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின்போதே இச்சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3eced449-65c8-4252-9e15-3a390fa858e1/26-6a91d35f37fb4.webp' /></p><h2 style="text-align: justify; ">மேலதிக விசாரணை</h2><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
கைது செய்யப்பட்டவர் கஹடவில, பொத்துவட்டன பகுதியைச் சேர்ந்த 61 வயதுடைய நபர் ஆவார்.
</p><p style="text-align: justify; ">
16 கிலோகிராம் கேரள கஞ்சா மற்றும் போதைப்பொருள் விற்பனை மூலம் உழைக்கப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் 9 இலட்சத்துக்கும் அதிகமான ரொக்கப் பணம் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">

</p><p style="text-align: justify; ">
இது தொடர்பில் கொஸ்வத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-08-28T18:29:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[தாய் - மனைவி - சகோதரியின் புகைப்படங்களுக்கே பாதுகாப்பில்லை! இலங்கையில் வெளிச்சத்திற்கு வந்த அதிர்ச்சி உண்மை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/women-security-in-sri-lanka-facebook-group-1787936451"></link>
            <id>https://tamilwin.com/article/women-security-in-sri-lanka-facebook-group-1787936451</id>
            <summary type="text">பெண்கள் மற்றும் குழந்தைகளின் அந்தரங்க புகைப்படங்களை கொண்டு வியாபாரம் செய்யும் வகையில் நடத்தப்பட்ட முகப்புத்தக குழு தொடர்பில் பல தகவல்கள் அம்பலமாகியுள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>பெண்கள் மற்றும் குழந்தைகளின் அந்தரங்க புகைப்படங்களை கொண்டு வியாபாரம் செய்யும் வகையில் நடத்தப்பட்ட முகப்புத்தக குழு தொடர்பில் பல தகவல்கள் அம்பலமாகியுள்ளன.&nbsp;</p><p>குறித்த முகப்புத்தக குழுவில் ஆயிரக்கணக்கான நபர்கள் இணைந்திருப்பமை தெரிய வந்துள்ளது.&nbsp;</p><p>இந்நிலையில், அக்குழுவில் உள்ள நபர்கள், தனது தாய், மனைவி, சகோதரி, குழந்தை என பெண்களின் அந்தரங்க புகைப்படங்களை விற்பனை செய்துள்ளனர்.&nbsp;</p><p>மிக மிலேச்சத்தனமான இந்த செயற்பாடுகள் தொடர்பில் அம்பலப்படுத்தப்பட்டு பின்னர், இது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p>இதன்படி, இவ்வாறு புகைப்படங்களை கொண்டு முகப்புத்தக குழு ஒன்றை நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.&nbsp;</p><p>முகம் சுளிக்க வைக்கும் இச்செயல் தொடர்பில் மேலும் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது நியூஸ் இன்சைக்ட் நிகழ்ச்சி,&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/qWA9SgtNsTs" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-28T18:11:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Erimalai</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ்.பருத்தித்துறையில் இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி போராட்டம்: விடுக்கப்பட்டுள்ள அழைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/removal-of-army-camps-protest-point-pedro-1787937718"></link>
            <id>https://tamilwin.com/article/removal-of-army-camps-protest-point-pedro-1787937718</id>
            <summary type="text">பருத்தித்துறை நகரின் வளர்ச்சிக்கு தடையாக உள்ள இராணுவ முகாம்களை அகற்ற
வலியுறுத்தி செப்டெம்பர் 11 ஆம் திகதி நகரசபையினால் பருத்தித்துறையில்
நடாத்தப்பட ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பருத்தித்துறை நகரின் வளர்ச்சிக்கு தடையாக உள்ள இராணுவ முகாம்களை அகற்ற
வலியுறுத்தி செப்டெம்பர் 11 ஆம் திகதி நகரசபையினால் பருத்தித்துறையில்
நடாத்தப்பட உள்ள பெரும் போராட்டத்தில் சகலரும் பங்கேற்குமாறு பருத்தித்துறை நகரபிதா வின்சென் டீ போல் டக்ளஸ் போல்
பகிரங்கமாக அழைப்பு விடுத்துள்ளார்.
</p><p>இன்று (28) ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.</p><p>அவர் மேலும்
தெரிவிக்கையில், பருத்தித்துறை நகரத்தின் அபிவிருத்திக்கு தடையாகவும், எமது
நகரத்தின் புராதன சின்னங்கள் / இடங்களை ஆக்கிரமித்தும் உள்ள இராணுவ முகாம்களை
அகற்ற கோரி எமது சபையினால் இரண்டாவது கவனயீர்ப்பு போராட்டம் வரும் செப்டெம்பர்
11 ஆம் திகதி பருத்தித்துறையில் பாரிய போராட்டப் பேரணி
நடாத்தப்பட உள்ளது.</p><p></p><h2>கண்டனப் பேரணி</h2><p>

பருத்தித்துறை துறைமுக சந்தியில் இருந்து அன்றைய தினம் காலை 8.30 மணிக்கு
கண்டனப் பேரணி ஆரம்பித்து பருத்தித்துறை பிரதேச செயலகம் வரை இடம்பெறும்
இப்போராட்டத்தில் அரசியல், கட்சி வேறுபாடுகள் கடந்து சகல அரசியல் தரப்பினரும்,
வர்த்தகர்கள், மரக்கறி, மீன் வியாபாரிகள், கடற்றொழில் சங்கத்தினர் உள்ளிட்ட
பொது அமைப்புகள், சமூகமட்ட அமைப்புகளும் பங்கேற்று ஆதரவு வழங்குமாறு கேட்டுக்
கொள்கின்றேன் எனக் குறிப்பிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fb3f0f91-18ca-43ca-9c73-5ab0adaae875/26-6a91cba4133c1.webp' /></p><p>இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தும் இந்தப் போராட்டத்திற்கு பருத்தித்துறை
நகரசபையில் அங்கம் வகிக்கும் தேசிய மக்கள் சக்தி சார்பில் தெரிவாகியுள்ள
உறுப்பினர்கள் தவிர்த்து, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமிழரசு கட்சி,
ஜனநாயக தேசிய கூட்டணி, ஈழ மக்கள் ஜனநாய கட்சி மற்றும் சுயேட்சை(ஊசி) குழு
ஆகியன முழுமையான ஆதரவினை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-28T18:09:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[சமூக ஊடகங்களில் தமிழீழ விடுதலைப் புலிகள் ஆதரவு! தமிழ்நாடு இளைஞனை கைது செய்த NIA]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/ltt-support-nia-arrests-tamil-nadu-youth-1787927150"></link>
            <id>https://ibctamil.com/article/ltt-support-nia-arrests-tamil-nadu-youth-1787927150</id>
            <summary type="text">தமிழீழ விடுதலைப் புலிகள் (LTTE) மற்றும் தமிழ்நாடு விடுதலை இராணுவம் (TNLA) ஆகியவற்றின் சித்தாந்தங்களை சமூக ஊடகங்கள் மூலம் பரப்பியதாகக் கூறப்படும் குற்ற...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழீழ விடுதலைப் புலிகள் (LTTE) மற்றும் தமிழ்நாடு விடுதலை இராணுவம் (TNLA) ஆகியவற்றின் சித்தாந்தங்களை சமூக ஊடகங்கள் மூலம் பரப்பியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், இந்தியாவில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
</p><p>
இது குறித்து தமிழ்நாடு திருச்சிராப்பள்ளியைச் சேர்ந்த ஒருவர் மீது இந்திய தேசிய புலனாய்வு முகமை (NIA) வழக்குப் பதிவு செய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
</p><p>
குற்றம் சாட்டப்பட்டவர், தமிழ்நாடு மற்றும் வடக்கு இலங்கையை உள்ளடக்கிய ஒரு இறையாண்மை கொண்ட தமிழ் தேசத்தை உருவாக்க அழைப்பு விடுத்திருந்ததாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
</p><p></p><h2>பயங்கரவாத எதிர்ப்பு&nbsp;</h2><p>
பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் தீவிரமயமாக்கல் எதிர்ப்புப் பிரிவு (CTCR) சட்டங்களின் மூலம் அவர் கைதுசெய்யப்பட்ட நிலையில், இந்திய மத்திய உள்துறை அமைச்சகம் (MHA) வழங்கிய வழிகாட்டுதல்களின் பேரில் தேசிய புலனாய்வு முகமை (NIA) இந்த விசாரணையை மேற்கொள்வதாக கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3cb36b58-a018-4b58-9c07-06f73fa1174f/26-6a919a707ceb1.webp' /></p><p>

குற்றம் சாட்டப்பட்டவர், விடுதலைப் புலிகள் மற்றும் தமிழ்நாடு விடுதலை இராணுவத்திற்கு ஆதரவான உள்ளடக்கங்களை இன்ஸ்டாகிராம் கணக்குகள் மற்றும் ஒரு முகநூல் பக்கத்தில் பரப்பி வந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டது.</p><p> 

மேலும், தடைசெய்யப்பட்ட தமிழ்நாடு விடுதலை இராணுவத்திற்குப் புத்துயிர் அளிக்கும் நோக்கில் பிரிவினைவாத சித்தாந்தத்தை அந்தக் கணக்குகள் பரப்பியதாகவும், அந்தப் பதிவுகள் மூலம் 'தமிழ்நாடு இளைஞர் அமைப்பு' என்ற புதிய அமைப்பை நிறுவ முயன்றதாகவும் புலனாய்வாளர்கள் தெரிவித்தனர்.</p><p>

தமிழக காவல்துறையால் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையை ஏற்றுக்கொண்ட மத்திய அரசு, இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமைக்கு (NIA) மாற்ற முடிவு செய்தது. </p><p>

இந்த வழக்கு, இளைஞர்களைத் தவறாக வழிநடத்தி, அவர்களைப் பிரிவினைவாதத்தின் பக்கம் மூளைச்சலவை செய்வதுடன், தேசியப் பாதுகாப்பிற்குப் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய ஒரு பரந்த சதித்திட்டம் தொடர்பானது என்று மத்திய அரசு குறிப்பிட்ட்டுள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-28T18:08:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பல்: கனடாவில் முக்கிய சூத்திரதாரி கைது !]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/canadian-charged-in-drug-trafficking-1787934429"></link>
            <id>https://canadamirror.com/article/canadian-charged-in-drug-trafficking-1787934429</id>
            <summary type="text">சர்வதேச போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பில் தொடர்புடைய 24 வயது கனடிய இளைஞர் ஒருவரை வாட்டர்லூ பிராந்திய காவல்துறை கைது செய்துள்ளது.
ஒன்டாரியோவின் கேம்பி...</summary>
            <content type="html"><![CDATA[<p>சர்வதேச போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பில் தொடர்புடைய 24 வயது கனடிய இளைஞர் ஒருவரை வாட்டர்லூ பிராந்திய காவல்துறை கைது செய்துள்ளது.
</p><p>ஒன்டாரியோவின் கேம்பிரிட்ஜ் நகரில் உள்ள ஒரு வீட்டில் வைத்து ஆகஸ்ட் 26 அன்று இவர் கைது செய்யப்பட்டார்.</p><p>
இவர் மீது கொக்கைன் போதைப்பொருளை சட்டவிரோதமாக ஏற்றுமதி செய்தல் மற்றும் சதித்திட்டம் தீட்டுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4c70de98-8af7-4afc-aa2b-d291c3fb01b1/26-6a91b6df8befa.webp' /></p><p>
</p><p>கைது செய்யப்பட்ட நபரின் பெயரைப் போலீசார் வெளியிடவில்லை என்றாலும், போதைப்பொருள் கடத்தல் கும்பலில் அவர் முக்கியப் பங்காற்றியதாகத் தெரிவித்துள்ளனர்.</p><p>
கடந்த செப்டம்பர் 2025-இல், கேம்பிரிட்ஜைச் சேர்ந்த 19 வயதான ஜேட் என்ற பெண் ஹாங்காங் சர்வதேச விமான நிலையத்தில் 25 கிலோ கொக்கைனுடன் பிடிபட்டார்.
கனடாவின் பியர்சன் விமான நிலையத்தின் சோதனைகளில் சிக்காமல் கொண்டு செல்லப்பட்ட இந்தப் போதைப்பொருள், ஹாங்காங் சுங்க அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டது.
</p><p>நான்கு மாத காலத்தில் ஹாங்காங்கில் பிடிபட்ட 4 கனடியர்களில் ஜேடும் ஒருவர். இவர்களிடம் இருந்து மொத்தம் சுமார் 100 கிலோ கொக்கைன் பறிமுதல் செய்யப்பட்டது.
</p><p>சர்வதேச பொதிகள் அனுப்புபவர் என்ற பெயரில் சமூக வலைதளங்களில் விளம்பரம் செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.</p><p>
ஒரு பயணத்திற்கு 5,000 டொலர் சம்பளம் மற்றும் இலவச விமானக் கட்டணம், தங்குமிடம் வழங்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
</p><p>தங்களுக்குத் தெரியாமலேயே நகை அல்லது பிற பொருட்கள் என நம்ப வைக்கப்பட்டு போதைப்பொருள் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்டதாகப் பிடிபட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-28T18:03:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[மது மற்றும் போதைப்பொருள் பாவிப்போரின் கவனத்திற்கு ; மிரளவைக்கும் தரவுகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/attention-to-alcohol-and-drug-users-1787939651"></link>
            <id>https://jvpnews.com/article/attention-to-alcohol-and-drug-users-1787939651</id>
            <summary type="text">போதைப்பொருள் மற்றும் மதுபான பாவனை காரணமாக இலங்கையில் நாளொன்றுக்கு 80 முதல் 100 பேர் வரை உயிரிழப்பதாக ராஜரட்ட பல்கலைக்கழகத்தின் பயன்பாட்டு அறிவியல் பீட...</summary>
            <content type="html"><![CDATA[<p>போதைப்பொருள் மற்றும் மதுபான பாவனை காரணமாக இலங்கையில் நாளொன்றுக்கு 80 முதல் 100 பேர் வரை உயிரிழப்பதாக ராஜரட்ட பல்கலைக்கழகத்தின் பயன்பாட்டு அறிவியல் பீடத்தின் பீடாதிபதி கலாநிதி மனோஜ் பெர்னாண்டோ தெரிவித்தார். </p><p>

முழு நாடுமே ஒன்றாக தேசிய செயற்பாட்டின் கீழ், நச்சுப் போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் அது தொடர்பான கல்வி குறித்த விழிப்புணர்வு ஊடகவியலாளர் சந்திப்பு இன்று (28) நடைபெற்ற போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/460e4cf8-c59f-4e09-949f-3a2afab6c88d/26-6a91cb4547c61.webp' /></p><h2>சட்டவிரோத போதைப்பொருள்</h2><p> 

இத்தகைய எண்ணிக்கையிலான மரணங்கள் நாளாந்தம் ஏற்படுவதற்கு வேறு தனிப்பட்ட காரணங்கள் எதுவும் இல்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார். </p><p>

அத்துடன், நாட்டில் அதிகளவான உயிரிழப்புகளை ஏற்படுத்தும் காரணியாக புகைப்பிடித்தல் விளங்குவதாகக் குறிப்பிட்ட அவர், மதுபானப் பாவனையினால் மாத்திரம் நாளொன்றுக்கு 10 முதல் 15 மரணங்கள் வரை பதிவாவதாகவும் தெரிவித்தார்.</p><p></p><p> 

சட்டவிரோத போதைப்பொருள் பாவனையும் தற்போது குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இதற்கு பிரதான ஆரம்பப் புள்ளியாக சட்டப்பூர்வமான போதைப்பொருட்களே அமைந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டினார். </p><p>இதற்கமைய, ஹெரோயின் பாவிக்கும் நபர் ஒருவர் அதற்கு முன்னர் புகைப்பிடிப்பதற்கு அடிமையாகியிருந்ததாகவும், கஞ்சா பாவிப்பவரும் அதற்கு முன்னர் புகைப்பிடித்தலுக்கு அடிமையாகியிருந்தவரே எனவும் ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், இதற்கான சான்றுகளும் தரவுகளும் இருப்பதாகவும் குறிப்பிட்டார்.&nbsp;&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-28T17:54:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Erimalai</name>
            </author>
            <title type="text"><![CDATA[சவுக்கங்காட்டிற்கு தீ வைத்த விஷமிகள்! கட்டுப்படுத்த களமிறக்கப்பட்ட இராணுவத்தினர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/forest-fire-in-jaffna-1787938616"></link>
            <id>https://ibctamil.com/article/forest-fire-in-jaffna-1787938616</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மணக்காட்டில் உள்ள சமூக காடான சவுக்கங்காட்டிற்கு விஷமிகளால் வைக்கப்பட்டுள்ள நிலையில் சுமார் 10 ஏக்கருக்கு மேற்பட்ட பகுதி ...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மணக்காட்டில் உள்ள சமூக காடான சவுக்கங்காட்டிற்கு விஷமிகளால் வைக்கப்பட்டுள்ள நிலையில் சுமார் 10 ஏக்கருக்கு மேற்பட்ட பகுதி தீயில் ஏரிந்து நாசமாகியுள்ளது.</p><p>

குறித்த பகுதிக்கு இன்று மதியம் 12 மணியளவில் விசமிகளால் தீவைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.
</p><p>
அதன்போது, சம்பவ இடத்துக்குச் சென்ற வட்டார பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர் குறித்த விடயம் தொடர்பில் பிரதேச சபை, பிரதேச செயலகங்கள், காவல்துறை, இராணுவம் உட்பட பலருக்கும் அறிவித்திருந்திருந்தார்.</p><p></p><h2>இராணுவத்தினரின் வருகை&nbsp;</h2><p>
</p><p>
அதனை தொடர்ந்து, பிற்பகல் 5:15 மணிக்கு பின்னரே மருதங்கணியிலிருந்து இராணுவத்தினர் சுமார் 30 பேர் வரை வருகை தந்து தீயை கட்டுப்படுத்துவதற்கு மனிதவலு மூலம் நடவடிக்கைகளை எடுத்திருந்தாக கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3d6e3d40-005e-4008-95dc-cdde0184e6d8/26-6a91c739ec9e7.webp' /></p><p>

சம்பவத்தின் போது, குறித்த இடத்திற்கு மருதங்கேணி காவல் நிலைய பொறுப்பதிகாரியும் வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.&nbsp;&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-28T17:43:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாட்டு மாணவர் இன்டர்ன்ஷிப் மீது டிரம்ப் நிர்வாகம் கடும் கட்டுப்பாடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/trump-restricts-foreign-student-internships-1787938747"></link>
            <id>https://news.lankasri.com/article/trump-restricts-foreign-student-internships-1787938747</id>
            <summary type="text">Trump restricts foreign student internships: வெளிநாட்டு மாணவர்களுக்கான இன்டர்ன்ஷிப்பில் கடுமையானா கட்டுப்பாடுகளை டிரம்ப் கொண்டுவருகிறார்.

டிரம்ப் த...</summary>
            <content type="html"><![CDATA[<p>Trump restricts foreign student internships: வெளிநாட்டு மாணவர்களுக்கான இன்டர்ன்ஷிப்பில் கடுமையானா கட்டுப்பாடுகளை டிரம்ப் கொண்டுவருகிறார்.</p><p>

டிரம்ப் தலைமையிலான அமெரிக்க நிர்வாகம் வெளிநாட்டு மாணவர்களின் Curricular Practical Training (CPT) அனுமதிகளை கடுமையாக கட்டுப்படுத்தும் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7dc53d9c-55be-4959-bad3-a3d21b0cf7c1/26-6a91c7bd2e265.webp' /></p><p>

CPT என்பது வெளிநாட்டு மாணவர்கள் தங்கள் பாடத்திட்டத்துடன் தொடர்புடைய இன்டர்ன்ஷிப் அல்லது பயிற்சிகளை மேற்கொள்ள அனுமதிக்கும் திட்டமாகும்.</p><h2>புதிய வழிகாட்டுதல்</h2><p> ஆனால், சமீபத்தில் பல CPT அனுமதிகள் விதிகளை மீறுவதாக கண்டறியப்பட்டதால், US Immigration and Customs Enforcement (ICE) உட்பட்ட Student and Exchange Visitor Program (SEVP) ஆகஸ்ட் 24-ஆம் திகதி புதிய வழிகாட்டுதலை வெளியிட்டது.
</p><p>
அதில், CPT அனுமதி பெறும் பயிற்சிகள் பாடத்திட்டத்துடன் நேரடியாக இணைந்திருக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. விதிகளை பின்பற்றாத பல்கலைக்கழகங்கள் வெளிநாட்டு மாணவர்களை சேர்க்கும் சான்றிதழை இழக்க நேரிடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. </p><p></p><p>இதனால், UCLA மற்றும் UC Berkeley போன்ற பல்கலைக்கழகங்கள் சில CPT விண்ணப்பங்களை தற்காலிகமாக நிறுத்தி ஆய்வு செய்யத் தொடங்கியுள்ளன.</p><p> UC Berkeley, புதிய அறிவிப்பு முந்தையதை விடக் கடுமையானதாக இருப்பதாகவும், சில இன்டர்ன்ஷிப் அனுமதிகளை இனி வழங்க முடியாது என்றும் தெரிவித்துள்ளது.
</p><p>
அமெரிக்க உள்துறை அமைச்சகம், “விதிகளில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால், டிரம்ப் நிர்வாகத்தில் இந்த திட்டத்தின் தவறான பயன்பாடு இனி சகித்துக்கொள்ளப்படாது” என்று தெரிவித்துள்ளது.
</p><p>
இது கல்வி துறையை மட்டுமல்லாமல், பல்கலைக்கழகங்களின் பாலஸ்தீன ஆதரவு போராட்டங்கள், பல்வகைமை திட்டங்கள், காலநிலை முயற்சிகள், பாலினக் கொள்கைகள் போன்றவற்றிலும் விசாரணைகள் நடத்தும் பரந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாகும்.</p><p></p><p>சில மாணவர்களின் விசாக்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

மேலும், Justice Department பல்கலைக்கழகங்களின் சேர்க்கை முறைகளையும் ஆய்வு செய்து, சில இடங்களில் கருப்பர் மற்றும் ஹிஸ்பானிக் மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது என குற்றம் சாட்டியுள்ளது. பல்கலைக்கழகங்கள் இதனை மறுத்துள்ளன.</p><p>
இந்த நடவடிக்கைகள், அமெரிக்காவில் கல்வி பெறும் வெளிநாட்டு மாணவர்களுக்கு பெரும் சவாலாக மாறியுள்ளது.</p><p> இன்டர்ன்ஷிப் வாய்ப்புகள் குறையக்கூடும் என்பதால், மாணவர்கள் தங்கள் கல்வி மற்றும் தொழில் திட்டங்களை மறுபரிசீலனை செய்ய வேண்டிய நிலை உருவாகியுள்ளது.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-28T17:36:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவின் புதிய பொருளாதாரத் தடைகளுக்கு ஈரான் கடும் கண்டனம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/iran-urges-other-nations-not-to-join-us-sanctions-1787938271"></link>
            <id>https://tamilwin.com/article/iran-urges-other-nations-not-to-join-us-sanctions-1787938271</id>
            <summary type="text">அமெரிக்கா விதித்துள்ள புதிய பொருளாதாரத் தடைகளை அரச பயங்கரவாதம் என ஈரான் கண்டித்துள்ளது.
சர்வதேச சட்டப்படி பிற நாடுகள் இந்தத் தடைகளை அமல்படுத்தக் கூடா...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்கா விதித்துள்ள புதிய பொருளாதாரத் தடைகளை அரச பயங்கரவாதம் என ஈரான் கண்டித்துள்ளது.</p><p>
சர்வதேச சட்டப்படி பிற நாடுகள் இந்தத் தடைகளை அமல்படுத்தக் கூடாது என வலியுறுத்தியுள்ளது.</p><p> 
அதேவேளையில், ஈரானைக் குறிவைத்து மேலும் பல பொருளாதாரக் கட்டுப்பாடுகளை அமெரிக்க திறைசேரி அறிவித்துள்ளது.</p><h2>வர்த்தக உறவு</h2><p> </p><p>
ஆறு மாதங்களுக்கு முன்பு போர் தொடங்குவதற்கு முன், உலகின் 20% கச்சா எண்ணெய் விநியோகத்தைக் கையாண்ட ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க மத்தியஸ்தர்கள் தீவிர முயற்சி எடுத்து வரும் சூழலில் ஈரானின் இந்த அறிக்கை வெளியாகியுள்ளது.</p><p> 
ஈரானுடன் வர்த்தக உறவுகளைத் துண்டிக்குமாறு பிற நாடுகளுக்குக் கெடு விதித்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நிர்வாகம், தவறினால் கடுமையான தடைகளைச் சந்திக்க நேரிடும் என எச்சரித்திருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a2324782-5ad4-4d56-80df-779a54136678/26-6a91d202ca9a4.webp' /></p><p> </p><p>
இது குறித்து ஈரானிய வெளியுறவுத்துறை அமைச்சு அறிக்கை வெளியிட்டுள்ளது.
அமெரிக்காவின் சட்டவிரோதக் கட்டுப்பாடுகளை மற்ற நாடுகள் ஏற்று நடப்பது, ஒரு நாட்டின் சட்டவிரோத விருப்பத்திற்குத் துணை போவதற்குச் சமம் என தெரிவித்துள்ளது.</p><p>
இந்த நடவடிக்கை லட்சக்கணக்கான பொதுமக்களின் ஆரோக்கியம் மற்றும் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் "மனிதகுலத்திற்கு எதிரான குற்றம்" ஆகும் என தெரிவித்துள்ளது.</p><h2>ஹோர்முஸ் நீரிணை</h2><p>
</p><p>சர்வதேச சட்டத்தையும் சட்டத்தின் ஆட்சியையும் நிலைநிறுத்த பிற நாடுகளும் ஐக்கிய நாடுகள் சபையும் முன்வர வேண்டும் என ஈரான் கோரியுள்ளது.
ஈரானுக்கு எதிரான அழுத்தத்தை அதிகரிக்கும் வகையில், ஐக்கிய அரபு அமீரகத்தில் இயங்கும் எகிப்தின் 'பேங்க் மிஸ்ர்' வங்கி, ஈரானுடன் வர்த்தகத் தொடர்பில் இருந்ததால் அதன் அமெரிக்க நிதி அணுகலை ரத்து செய்ய டிரம்ப் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
</p><p>கூடுதலாக, ஹாங்க்காங்கைச் சேர்ந்த ஒரு நிறுவனம் மற்றும் ஈரானின் 'பேங்க் மெல்லி' வங்கியுடன் தொடர்புடைய ஒரு நபர் மீதும் அமெரிக்க திறைசேரி புதிய தடைகளை விதித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c7e04393-9292-49b9-9171-dc56eef85bd7/26-6a91c5e177a1d.webp' /></p><p> 
போரை முடிவுக்குக் கொண்டு வரக் கத்தார் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் தூதரக முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.
</p><p>கத்தார் பிரதமர் ஷேக் முகமது பின் அப்துல்ரஹ்மான் அல் தானி வியாழக்கிழமை டெஹ்ரானில் ஈரானிய தலைவர்களைச் சந்தித்து, ஹோர்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்தை மீண்டும் தொடங்குவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-28T17:33:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் 204 காட்டுயானைகளுக்கு நேர்ந்த கதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/204-wild-elephants-die-in-sri-lanka-eight-months-1787938063"></link>
            <id>https://jvpnews.com/article/204-wild-elephants-die-in-sri-lanka-eight-months-1787938063</id>
            <summary type="text">இலங்கையில் இந்த ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் 204 காட்டுயானைகள் உயிரிழந்துள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஜனவரி 1ஆம் ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">இலங்கையில் இந்த ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் 204 காட்டுயானைகள் உயிரிழந்துள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
</p><p style="text-align: justify; ">
ஜனவரி 1ஆம் திகதி முதல் ஆகஸ்ட் 14ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இந்த உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a9c24a88-69b3-465e-ac9e-4606d5680583/26-6a91c511066fa.webp' /></p><h2 style="text-align: justify; ">உயிரிழப்புகள்</h2><p style="text-align: justify; ">

இதில், 33 யானைகள் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதுடன், 26 யானைகள் சட்டவிரோத மின்சார வேலிகள் அல்லது மின்கம்பிகளில் சிக்கி உயிரிழந்துள்ளன.
</p><p style="text-align: justify; ">
வெடிபொருள் கலந்த உணவை உட்கொண்டதால் 26 யானைகளும், விஷம் காரணமாக 4 யானைகளும் உயிரிழந்துள்ளன.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">


இதேவேளை, ரயில் விபத்துகளில் 2 யானைகளும், வீதி விபத்துகளில் 4 யானைகளும் உயிரிழந்துள்ளன.</p><p style="text-align: justify; ">

விவசாயக் கிணறுகளில் தவறி விழுந்ததில் 7 யானைகளும், நீரில் மூழ்கியதில் மேலும் 7 யானைகளும் உயிரிழந்துள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது.&nbsp;</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-28T17:27:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாள வெள்ளத்தினால் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/live-news-nepal-china-flood-1787937594"></link>
            <id>https://tamilwin.com/article/live-news-nepal-china-flood-1787937594</id>
            <summary type="text">நேபாளத்தில் ஏற்பட்டுள்ள திடீர் வெள்ளப் பெருக்கால் பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் சிறுமிகள் வன்முறை, சுரண்டல் மற்றும் தீவிர வறுமைக்கு ஆளாகும் அதிக ஆபத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>நேபாளத்தில் ஏற்பட்டுள்ள திடீர் வெள்ளப் பெருக்கால் பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் சிறுமிகள் வன்முறை, சுரண்டல் மற்றும் தீவிர வறுமைக்கு ஆளாகும் அதிக ஆபத்தில் உள்ளதாக ஐ.நா பெண்கள் அமைப்பு எச்சரித்துள்ளது.</p><p>
இத்தகைய பேரிடர்கள் ஏற்கனவே சமூகத்தில் நிலவும் பாலினச் சமத்துவமின்மையை மேலும் மோசமாக்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>ஐ.நா அமைப்பின் தரவுகளின்படி, நேபாளத்தின் ரசுவா மற்றும் நுவாகோட் ஆகிய மாவட்டங்களில் மட்டும் சுமார் 1,60,000 பெண்கள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இந்த வெள்ளப் பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ளனர்.</p><h2>பாதிப்புகள்&nbsp;</h2><p>
</p><p>பேரிடரின் முழுமையான பாதிப்புகள் இன்னும் கணக்கிடப்பட்டு வரும் நிலையில், சூழ்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக நேபாளத்திற்கான ஐ.நா பெண்கள் அமைப்பின் பிரதிநிதி பட்ரீஷியா பெர்னாண்டஸ்-பச்சேகோ தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/772d6988-07bf-4904-8718-38a4c2b0574e/26-6a91c33c7235c.webp' /></p><p>
</p><p>இயற்கைப் பேரழிவுகள் நிகழும்போது, பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கான பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் பெருமளவில் அதிகரிக்கின்றன. பலர் சுரண்டலுக்கும் துஷ்பிரயோகத்திற்கும் ஆளாகின்றனர். </p><p>வளங்கள் பற்றாக்குறையாக இருக்கும்போது, பெண்களும் சிறுமிகளுமே உணவும் மருந்தும் இன்றி அதிகம் தவிக்கின்றனர். முந்தைய பேரிடர் அனுபவங்களின்படி, ஆண்களை விட பெண்களே அதிகளவில் உயிரிழக்கும் அபாயமும் உள்ளது என தெரிவித்துள்ளார்.</p><h2>பொருளாதாரச் சீரழிவு</h2><p>
</p><p>பேரிடருக்குப் பிறகு, பெண்கள் வன்முறை மற்றும் பொருளாதாரச் சீரழிவை எதிர்கொள்வதுடன், வீட்டுப் பராமரிப்புப் பணிகள் மற்றும் குடிநீர் சேகரித்தல் போன்ற கூடுதல் சுமைகளையும் சுமக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படுகிறார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0e2f21e2-2d98-40c9-87e4-5991238555dc/26-6a91d044efcb7.webp' /></p><p>
</p><p>மேலும், வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட பல மாவட்டங்களில் பெண்களிடையே குறைந்த எழுத்தறிவு விகிதமே நிலவுவது, இந்நெருக்கடியான சூழலைச் சமாளிப்பதில் கூடுதல் சவாலாக அமைந்துள்ளது என ஐக்கிய நாடுகள் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-28T17:27:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Erimalai</name>
            </author>
            <title type="text"><![CDATA[பருத்தித்துறையில் இராணுவ முகாம்களுக்கு எதிராக வெடிக்கவுள்ள பாரிய பேராட்டம்! விடுக்கப்பட்டுள்ள அழைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/pedro-mayor-calls-for-participation-in-protest-1787937429"></link>
            <id>https://ibctamil.com/article/pedro-mayor-calls-for-participation-in-protest-1787937429</id>
            <summary type="text">பருத்தித்துறை நகரின் வளர்ச்சிக்கு தடையாக உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 ஆம் திகதி நகரசபையினால் பருத்தித்துறையில்
நடாத்தப்பட உ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பருத்தித்துறை நகரின் வளர்ச்சிக்கு தடையாக உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 ஆம் திகதி நகரசபையினால் பருத்தித்துறையில்
நடாத்தப்பட உள்ள பெரும் போராட்டத்தில் அரசியல், கட்சி வேறுபாடுகளை கடந்து சகலரும் பங்கேற்குமாறு பருத்தித்துறை நகரபிதா வின்சென் டீ போல் டக்ளஸ் போல் பகிரங்கமாக அழைப்பு விடுத்துள்ளார்.
</p><p>
பருத்தித்துறை நகரசபையின் 15 ஆவது அமர்வு இன்று (28) வெள்ளிக்கிழமை காலை 9.30 மணிக்கு நகரபிதா வின்சன் டி போல் டக்ளஸ் போல் தலைமையில் ஆரம்பமாகி இடம்பெற்றது.
</p><p>
 நகரசபை மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற இவ் அமர்வில் நகரசபை செயலாளர் சந்திரசேகரம் பிரசாத் மற்றும் உப நகரபிதா தே.தேவராஜேந்திரன் உள்ளிட்ட சபைக்கு தெரிவு செய்யப்பட்ட 15 உறுப்பினர்களும் பங்கேற்றிருந்தனர்.</p><p></p><h2>முழுமையான ஆதரவு</h2><p> </p><p>

இதன் பின்னராக இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இது தொடர்பில் நகரபிதா பகிரங்க அழைப்பினை விடுத்திருந்தார். இதன்போது NPP கட்சி தவிர்ந்த சபையை பிரதிநிதித்துவப்படுத்தும் ஏனைய கட்சிகள் முழுமையான ஆதரவினை தெரிவித்திருந்தன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7f981175-1a38-40ca-aeab-1ac16675a333/26-6a91c46492db0.webp' /></p><p>
</p><p>
இது தொடர்பில் பருத்தித்துறை நகரபிதா வின்சென் டீ போல் டக்ளஸ் போல் மேலும் தெரிவிக்கையில், “பருத்தித்துறை நகரத்தின் அபிவிருத்திக்கு தடையாகவும், எமது
நகரத்தின் புராதன சின்னங்கள்/இடங்களை ஆக்கிரமித்தும் உள்ள இராணுவ முகாம்களை அகற்ற கோரி எமது சபையினால் இரண்டாவது கவனயீர்ப்பு போராட்டம் வரும் செப்டெம்பர்
11 ஆம் திகதி வெள்ளிக்கிழமை பருத்தித்துறையில் நடாத்தப்பட உள்ளது.
</p><p>
பருத்தித்துறை துறைமுக சந்தியில் இருந்து அன்றைய தினம் காலை 8.30 மணிக்கு ஆரம்பித்து பருத்தித்துறை பிரதேச செயலகம் வரை இடம்பெறும் இப்போராட்டத்தில் அரசியல், கட்சி வேறுபாடுகள் கடந்து சகல அரசியல் தரப்பினரும், வர்த்தகர்கள், மரக்கறி, மீன் வியாபாரிகள், கடற்றொழில் சங்கத்தினர் உள்ளிட்ட பொது அமைப்புகள், சமூகமட்ட அமைப்புகளும் பங்கேற்று ஆதரவு வழங்குமாறு கேட்டுக் கொள்கின்றென்.” என்றார்.
</p><p>
இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தும் இப்போராட்டத்திற்கு பருத்தித்துறை நகரசபையில் அங்கம் வகிக்கும் தேசிய மக்கள் சக்தி சார்பில் தெரிவாகியுள்ள உறுப்பினர்கள் தவிர்த்து, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமிழரசு கட்சி, ஜனநாயக தேசிய கூட்டணி, ஈழ மக்கள் ஜனநாய கட்சி மற்றும் சுயேற்சை(ஊசி) குழு ஆகியன முழுமையான ஆதரவினை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-28T17:25:06+00:00</updated>
        </entry>
    </feed>
