<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-09-10T14:35:44+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாடாளுமன்றில் இன்று அர்ச்சுனா எம்.பியால் ஏற்பட்ட சலசலப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/commotion-caused-by-mp-arjuna-in-parliament-today-1789048062"></link>
            <id>https://ibctamil.com/article/commotion-caused-by-mp-arjuna-in-parliament-today-1789048062</id>
            <summary type="text">நாடாளுமன்றில் இன்று தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரனை நோக்கி நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் முன்வைத்த குற்ற...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடாளுமன்றில் இன்று தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரனை நோக்கி நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் முன்வைத்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து சபையில் சலசலப்பு ஏற்பட்டது.
</p><p>
இதன்போது கருத்து தெரிவித்த அர்ச்சுனா இராமநாதன், “ஆடு திருடர்களையும், போன் திருடர்களையும் சபையில் அமர வைத்துள்ள இந்த அரசாங்கம், குற்றவாளிகளை கூண்டிலிடுவதாகக் கூறுவது ஏற்றுக்கொள்ளத்தக்க விடயம் அல்ல” எனக் குறிப்பிட்டார்.</p><h2>யாழில் வெறும் கற்களை மட்டுமே நாட்டி வைத்துள்ள அனுர அரசு</h2><p>அத்துடன், அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் யாழ்ப்பாணத்தில் வெறும் கற்களை மட்டுமே நாட்டி வைத்துள்ளதாகவும் அவர் குற்றம் சுமத்தினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f61d7733-2295-4d51-a056-daaec6d203d9/26-6aa2baa48c952.webp' /></p><p>
</p><p>
இதற்கு பதிலளித்த நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன், தமக்கு எதிராக கோப்பாய் காவல்துறையில் ஏதேனும் வழக்குகள் உள்ளனவா என்பது தொடர்பில் தெளிவுபடுத்துமாறு கோரிக்கை விடுத்தார்.

“எனக்கு எதிராக கோப்பாய் காவல்துறையில் வழக்குகள் ஏதேனும் இருந்தால் அதனை தெளிவுபடுத்தவும்.</p><p></p><h2>போலியான பிரசாரங்களை மேற்கொள்ள வேண்டாம்</h2><p> போலியான பிரசாரங்களை மேற்கொள்ள வேண்டாம். அன்றைய ஆட்சியாளர்கள் போலியான விடயங்களை சோடித்து இவ்வாறான குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6d569b48-177a-4db2-8e93-433e4d5cb7d3/26-6aa2baa3d3dff.webp' /></p><p> </p><p>எனவே, உண்மை நிலையைத் தெளிவாக அறிந்து கருத்துக்களை முன்வைக்கவும்” என இளங்குமரன் தெரிவித்தார்.

மேலும், குற்றச்சாட்டு தொடர்பான வழக்கு தற்போது நீதிமன்றில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
</p><p>
“உங்களது திருட்டுக் கூட்டங்கள் முதலில் அந்த வழக்கின் உண்மைத்தன்மையை ஆராயுங்கள்” எனவும் இளங்குமரன் பதிலளித்தார்.
</p><p>
</p><h2>தினமும் பொய்யான பிரசாரங்களை மேற்கொள்கின்றார்</h2><p>இதன்போது அர்ச்சுனா இராமநாதனின் கருத்துக்கு பதிலளித்த நாடாளுமன்ற உறுப்பினர் ரொஷான் அக்மீமன, “இவர் இப்படித்தான் தினமும் பொய்யான பிரசாரங்களை மேற்கொள்கின்றார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6ff7d349-6d1e-48de-9160-1eda34182a9a/26-6aa2baa32725d.webp' /></p><p> அதை நிறுத்துமாறு அவருக்கு தெளிவுபடுத்த வேண்டும். நாடாளுமன்ற வரப்பிரசாதங்களை மீறி நடந்துகொள்கின்றார். இவ்வாறு பொய்யான கருத்துக்களை வெளிப்படுத்த வாய்ப்பு வழங்க வேண்டாம்” எனத் தெரிவித்தார்.
</p><p>
இதற்கு பதிலளித்த அர்ச்சுனா இராமநாதன், நாடாளுமன்றக் கூட்டத்தை கூட்டுமாறும், தாம் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பான உண்மைத்தன்மையை வெளிப்படுத்தத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.</p><p>

“நாடாளுமன்றக் கூட்டத்தை கூட்டுங்கள். குற்றச்சாட்டுக்கள் குறித்த உண்மைத்தன்மையை வெளிப்படுத்துகின்றேன். அப்படியானால் அனைவரும் பதவி விலகுவீர்களா?” எனவும் அர்ச்சுனா இராமநாதன் சவால் விடுத்தார்.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-10T14:33:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வடக்கில் பயணச்சீட்டு வழங்காமல் முறைகேடு; தனியார் பேருந்தின் அனுமதிப்பத்திரம் ரத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/issue-tickets-north-private-bus-permit-cancel-1789043699"></link>
            <id>https://jvpnews.com/article/issue-tickets-north-private-bus-permit-cancel-1789043699</id>
            <summary type="text">&amp;nbsp; வடக்கில் சேவையில் ஈடுபடும் போது பயணிகளுக்கு உரிய பயணச்சீட்டுகளை வழங்காமல் தொடர்ச்சியாக முறைகேடுகளில் ஈடுபட்டதாகக் கண்டறியப்பட்ட பேருந்தின் அனும...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; வடக்கில் சேவையில் ஈடுபடும் போது பயணிகளுக்கு உரிய பயணச்சீட்டுகளை வழங்காமல் தொடர்ச்சியாக முறைகேடுகளில் ஈடுபட்டதாகக் கண்டறியப்பட்ட பேருந்தின் அனுமதிப்பத்திரத்தை ஒரு மாத காலத்துக்கு இடைநிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் பொறியியலாளர் சூ.விமலேஸ்வரன் அறிவித்துள்ளார்.
</p><p>
குறித்த பேருந்து தொடர்பில் ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த வழிமுறைகள் மற்றும் நடைமுறைகளை மீறி, சேவையின்போது பயணிகளுக்கு பயணச்சீட்டு வழங்காமல் நான்கு தடவைகளுக்கு மேல் சேவையில் ஈடுபட்டமையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/92da5367-fd2d-4cad-82b2-1335edf61e04/26-6aa2a3f47872a.webp' /></p><p></p><h2>பயணிகளுக்கு பயணச்சீட்டு</h2><p>
</p><p>
இதன்படி, பேருந்தின் அனுமதிப்பத்திரம் 2026 செப்ரெம்பர் 10ஆம் திகதி முதல் 2026 ஒக்ரோபர் 9ஆம் திகதி வரை ஒரு மாத காலத்துக்கு தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.</p><p></p><p>


வடக்கு மாகாணத்தில் பொதுப் போக்குவரத்து சேவைகளைஒழுங்குமுறைக்கு உட்படுத்தி, பயணிகளுக்கு பாதுகாப்பானதும் நம்பகமானதுமான சேவையை உறுதி செய்வதற்காக அதிகார சபையால் கண்காணிப்பு மற்றும் சட்டரீதியான நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p><p></p><p>

மேலும், இவ்வாறான முறைகேடுகள் தொடர்ந்தும் இடம்பெறும் பட்சத்தில், சம்பந்தப்பட்ட பேருந்துகளுக்கு எதிராக மேலும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
பொதுப் போக்குவரத்தின்போது பயணிகள் பாதுகாப்பற்ற சூழ்நிலைகளையோ, வீதிப் போக்குவரத்து விதிமுறைகளை மீறும் செயற்பாடுகளையோ, அல்லது நடத்துநர்கள் மற்றும் சாரதிகளின் தரக்குறைவான செயற்பாடுகளையோ அவதானித்தால் எவ்வித தயக்கமின்றி முறைப்பாடு செய்ய முடியும்.</p><p></p><p>
</p><p>
இவ்வாறான முறைகேடுகள் தொடர்பில் தகுந்த ஆதாரங்களுடன் (பயணச்சீட்டு, ஒளிப்படங்கள் அல்லது காணொலிகள்) 071 9090900 என்ற வட்ஸ்அப் இலக்கத்துக்குப் பொதுமக்கள் உடனடியாகத் தெரியப்படுத்த முடியும் என வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபை பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-10T14:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[சூரிய பெயர்ச்சியால் தொழிலில் தடைகள்: பாதிக்கப்படும் ராசிகள் இவைதான்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/sun-transit-in-virgo-who-get-bad-luck-1789048125"></link>
            <id>https://manithan.com/article/sun-transit-in-virgo-who-get-bad-luck-1789048125</id>
            <summary type="text">ஜோதிட சாஸ்திரன் பிரகாரம் அனைத்து கிரகங்களும் அவ்வப்போது தங்களின் ராசி மற்றும் நட்சத்திரங்களை மாற்றுகின்றன.அதன் தாக்கமானது 12 ராசிகளிலும் பிரதிபலிக்கும...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜோதிட சாஸ்திரன் பிரகாரம் அனைத்து கிரகங்களும் அவ்வப்போது தங்களின் ராசி மற்றும் நட்சத்திரங்களை மாற்றுகின்றன.அதன் தாக்கமானது 12 ராசிகளிலும் பிரதிபலிக்கும் என்று தொன்று தொட்டு நம்ப்படுகின்றது.</p><p>அந்தவகையில், சுமார் 30 நாட்களுக்கு ஒருமுறை ராசியை மாற்றும் சூரியன், செப்டம்பர் 17ஆம் தேதி சிம்ம ராசியிலிருந்து கன்னி ராசிக்குள் நுழைய உள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7f03d79b-2de0-4e20-a75e-e44c89fd5f9d/26-6aa2bde671514.webp' /></p><p>

வேத ஜோதிடத்தில் சூரியன் அதிகாரம், தன்னம்பிக்கை, தலைமைத்துவம், ஆற்றல், அங்கீகாரம் மற்றும் உறுதியான முடிவெடுக்கும் திறன் ஆகியவற்றைக் குறிக்கிறார். புதனால் ஆளப்படும் கன்னி ராசியில் சூரியன் நுழைவது ஜோதிட ரீதியாக முக்கியமான மாற்றமாகக் பார்க்கப்படுகின்றது.</p><p>

இந்த சூரியப் பெயர்ச்சி சில ராசிக்காரர்களுக்கு சாதகமான பலன்களை கொடுக்கும் அதேவேளை, சில ராசிகளுக்கு தடைகள் மற்றும் சவால்களை ஏற்படுத்தும்.&nbsp;</p><p>அப்படி தொழில் வாழ்க்கையிலும் நிதி நிலையிலும் பின்னடைவை எதிர்கொள்ளப்போகும் ராசிக்காரர்கள் யார் யார் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.</p><h2>மேஷம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aeedbca4-2673-4281-a33b-054deae65d45/26-6aa2bde726473.webp' /></p><p></p><p>
மேஷ ராசிக்காரர்களின் ஆறாவது வீட்டிற்குள் சூரியன் நுழைவதால் பணிச்சுமை அதிகரிக்கலாம். எதிர்பார்த்த ஆதரவு கிடைக்காமல் பணிச்சூழலில் சில சிரமங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.</p><p>இதனால் வேலையை விடும் எண்ணம் வந்தாலும், அவசர முடிவு எடுக்க வேண்டாம். முதலீடுகளில் நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளதால் கவனம் தேவை. </p><p>திருமண வாழ்க்கையில் பிரச்சினைகள், பயணங்களில் விபத்து அல்லது இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளதால் எச்சரிக்கையாக இருப்பது அவசியம். குறிப்பாக வார்த்தைகளில் நிதானம் தேவை.</p><h2>

சிம்மம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/90526b0c-ba92-4c6e-9099-a9e63694b55a/26-6aa2bde7ce8a7.webp' /></p><h2>
</h2><p>சிம்ம ராசியின் ஐந்தாவது வீட்டிற்குள் சூரியன் நுழைவதால் எதிர்பாராத சில பிரச்சினைகளை சந்திக்க நேரிடலாம். திருமண வாழ்க்கையில் கருத்து வேறுபாடுகள் மற்றும் வாழ்க்கைத்துணையுடன் தவறான புரிதல்கள் ஏற்படலாம்.</p><p> பொறுமையுடனும் நிதானத்துடனும் செயல்படுவது பிரச்சினைகளைத் தவிர்க்க உதவும். குழந்தைகள் தொடர்பான கவலைகளும் அதிகரிக்கலாம்.</p><p>எனவே, தனிப்பட்ட மற்றும் தொழில்முறை வாழ்க்கையில் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது.குறிப்பாக இந்த காலகட்டத்தில் வாக்குவாதங்களை தவிர்ப்பது அவசியம்.</p><h2>
தனுசு</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f5c1dcfc-08b1-456b-b047-e2cd65b4563e/26-6aa2bde889fc9.webp' /></p><p></p><h2>
</h2><p>தனுசு ராசியின் பத்தாவது வீட்டிற்குள் சூரியன் நுழைவதால் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்ள நேரிடலாம். சில சூழ்நிலைகள் மோதலுக்கு வழிவகுக்கலாம் என்பதால், பொறுப்புகளை கவனமாக கையாளுங்கள். </p><p>உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் தேவை.எதிர்பார்த்த காரியங்கள் சாதகமாக முடியாமல் போகலாம்; திருமண வாழ்க்கையிலும் சில பிரச்சினைகள் ஏற்படலாம்.
</p><p>
அலுவலகப் பணிகளை கவனமாக செய்ய வேண்டும். வியாபாரிகளும் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்; இல்லையெனில் நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளது.</p><p><b>இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).&nbsp; &nbsp; &nbsp;</b> &nbsp; &nbsp;&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b></td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-10T14:26:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[சாப்பிட விஜய் கூப்பிட்டும் நான் போகல..கேம் ஆடிய சிலர்!! உதயநிதி சொன்ன ரகசியம்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/vijay-udhayanidhi-friendship-a-throwback-1789043878"></link>
            <id>https://viduppu.com/article/vijay-udhayanidhi-friendship-a-throwback-1789043878</id>
            <summary type="text">விஜய் - உதயநிதி2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் 23 அன்று நடைபெற்றும் மே 3-ஆம் தேதி தமிழக முதல்வர் யார் என்று தெரியவந்தது. திமுகதான் ஆட்சிய...</summary>
            <content type="html"><![CDATA[<h2>விஜய் - உதயநிதி</h2><p>2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் 23 அன்று நடைபெற்றும் மே 3-ஆம் தேதி தமிழக முதல்வர் யார் என்று தெரியவந்தது. திமுகதான் ஆட்சியை மீண்டும் பிடிக்கும் என நினைத்த நிலையில், 3வது கட்சியாக வந்த தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தலைமையில் ஆட்சியை பிடித்தது. முதலமைச்சராக பதவியேற்றப்பின் அனைத்து முக்கிய கட்சி தலைவர்களின் வீட்டுற்கு சென்று வந்தார் விஜய்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4b429fa4-a663-4682-9c2c-d42322fc025f/26-6aa2a4a8f2048.webp' /></p><p> </p><p>இதன்பின் நடந்து முடிந்த சட்டப்பேரவையில் சட்டம்-ஒழுங்கு தொடர்பாக பல கேள்விகள் முன் வைக்கப்பட்டது. விஜய் அதற்காக பதிலளிப்பார் என்று கருதப்பட்ட நிலையில், 40 ஆண்டுகளுக்கு முன் நடந்த மிசாவில் ஸ்லானின் கைதானதை கிண்டலான உடல்மொழியை வைத்து பேசி சர்ச்சையானது. இதற்கு எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், தன்னுடைய பக்குவமான மனநிலையில் சரியாக ஹாண்டில் செய்தார்.</p><p> இந்நிலையில், விஜய்க்கும் உதயநிதிக்கும் ஏற்பட்ட சில பழைய சம்பவம் ஒன்று பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1e02a6e7-9d6c-4cde-a044-c1e621b4afc4/26-6aa2a4a9aef8e.webp' /></p><h2>விஜய் கூப்பிட்டும் நான் போகல</h2><p> உதயநிதி சில ஆண்டுகளுக்கு முன் அளித்த பேட்டியில், விஜய்யுடன் சேஃப் டிஸ்டன்ஸ் தன் மெயின்டெயின் செய்கிறேன், அவரை புதாண்டுக்கு சந்தித்தேன், யாரையும் அவர் நெருங்கவிடமாட்டார். நட்பாகிவிட்டால் ரொம்ப நெருக்கமாகி விடுவார். என்னிடம் நெருக்கமாகத்தான் இருந்தார், ஆனால் சிலர் எங்களிடையே கேம் விளையாடிவிட்டார்கள். </p><p>அதனால் பெரிய ஸ்பேஸ் உருவாகிவிட்டது. பின் நானே அவரிடம் நேரில் சென்று இதுதான் நடந்தது, இதையெல்லாம் நான் செய்யவில்லை என்று விளக்கியதால் புரிந்துகொண்டார். இப்போது அடிக்கடி ஃபோனில் பேசுகிறோம், அடிக்கடி அவரது வீட்டுக்கு என்னை சாப்பிட கூப்பிடிவார், ஆனால் நான் போயி பல காலமாகிவிட்டது, கடைசியாக தேர்தலுக்கு முன்(2021) போனேன், அதற்குப்பின் போகவில்லை என்று கூறியிருக்கிறார் உதயநிதி ஸ்டாலின்.</p>]]></content>
            <updated>2026-09-10T14:15:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[2026 சாதாரண தரப் பரீட்சை எழுதியவர்களுக்கு முக்கிய அறிவிப்பு - இன்றே விண்ணப்பிக்கலாம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/call-for-applications-foro-l-answer-scripts-1789048895"></link>
            <id>https://tamilwin.com/article/call-for-applications-foro-l-answer-scripts-1789048895</id>
            <summary type="text"> 


2026ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் விடைத்தாள்களை மதிப்பீடு செய்வதற்கான விண்ணப்பங்கள் தொடர்பான அறிவிப்பொன்று வெளியி...</summary>
            <content type="html"><![CDATA[<p> 


2026ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் விடைத்தாள்களை மதிப்பீடு செய்வதற்கான விண்ணப்பங்கள் தொடர்பான அறிவிப்பொன்று வெளியிடப்பட்டுள்ளது.</p><p>

இதற்கமைய, பரீட்சாதிகள் இன்று(10.09.2026) முதல் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.</p><h2>

பரீட்சாதிகளுக்கான அறிவிப்பு</h2><p>

இந்த விண்ணப்பங்கள் சமர்பிக்கும் செயல்முறை செப்டெம்பர் 23ஆம் திகதியுடன் நிறைவடையும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8c73997c-e2a4-4de8-b52a-496ff578f8ba/26-6aa2bb3d5fdf2.webp' /></p><p>

மேலும், விண்ணப்பங்களை <a href="https://onlineexams.gov.lk/index.php/slogin" target="_blank"><b>onlineexams.gov.lk</b></a> என்ற இணையத்தளத்தின் ஊடாகவும் சமர்ப்பிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-10T14:14:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[கோலாகலமாக நடந்த சேரன்-சந்தா திருமணம்... கலந்துகொண்ட விஜய் டிவி பிரபலங்கள், அய்யனார் துணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/ayyanar-thunai-10th-to-13th-september-2026-promo-1789032674"></link>
            <id>https://cineulagam.com/article/ayyanar-thunai-10th-to-13th-september-2026-promo-1789032674</id>
            <summary type="text">அய்யனார் துணைகடந்த சில வாரங்களாக அய்யனார் துணை சீரியல் ரசிகர்கள் பதற்றத்திலேயே வைத்துள்ளனர். காரணம் சில முறை நின்றுபோன சேரன் திருமணம் இந்த முறையாவது ந...</summary>
            <content type="html"><![CDATA[<h2>அய்யனார் துணை</h2><p>கடந்த சில வாரங்களாக அய்யனார் துணை சீரியல் ரசிகர்கள் பதற்றத்திலேயே வைத்துள்ளனர்.</p><p> காரணம் சில முறை நின்றுபோன சேரன் திருமணம் இந்த முறையாவது நடக்குமா என்ற சந்தேகம் ரசிகர்களிடம் அதிகம் இருந்தது. பிரச்சனைகளை தாண்டி நிச்சயதார்த்தம் முடிந்து திருமணம் நடக்க இருந்தது. </p><p>திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கார்த்திகா, சேரனை காதலித்தேன் என நிறைய விஷயங்களை பகிர பிரச்சனையாகி திருமணம் நிற்கும் அளவிற்கு சென்றது. பின் எப்படியோ சேரனின் காதலும் ஜெயித்தது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fdf39a90-d3de-421e-9645-645e9f8be93e/26-6aa278e4d4dcf.webp' /></p><h2>புரொமோ</h2><p>
சேரன்-சந்தா திருமணம் கோலாகலமாக நாளைய எபிசோடில் நடக்க உள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4d8c9c26-8f25-4612-864b-cd992c69fd29/26-6aa278e42c990.webp' /></p><p> </p><p>இந்த நிலையில் திருமணம் முடித்த ஜோடியை வாழ்த்த விஜய் டிவியின் அழகே அழகு சீரியல் நடிகர்கள், ஒன்னா இருக்க கத்துக்கணும் நடிகர்கள் எல்லாம் வந்துள்ளனர். இதோ புரொமோ,</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/EUo0SX0VAnc" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-09-10T14:10:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானுக்கு எதிராக ஐ.நா பாதுகாப்புச் சபையில் தீர்மானம்: குற்றச்சாட்டுகளை நிராகரித்தது ஈரான்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/resolution-against-iran-in-the-un-security-council-1789047698"></link>
            <id>https://tamilwin.com/article/resolution-against-iran-in-the-un-security-council-1789047698</id>
            <summary type="text">ஈரான் தனது அணுசக்தி கடப்பாடுகளை முறையாகப் பின்பற்றத் தவறிவிட்டதாகக் குற்றம்
சுமத்தி, சர்வதேச அணுசக்தி முகமை அதன் ஆளுநர் சபையில் தீர்மானம் ஒன்றை
நிறை...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரான் தனது அணுசக்தி கடப்பாடுகளை முறையாகப் பின்பற்றத் தவறிவிட்டதாகக் குற்றம்
சுமத்தி, சர்வதேச அணுசக்தி முகமை அதன் ஆளுநர் சபையில் தீர்மானம் ஒன்றை
நிறைவேற்றியுள்ளது.</p><p>அத்துடன், இவ்விவகாரத்தை ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின்
கவனத்திற்கும் கொண்டு சென்றுள்ளது.</p><p>
சுமார் 20 ஆண்டுகளுக்குப் பின்னர் ஐ.நா அணுசக்தி முகவரகத்தால் ஈரானுக்கு
எதிராக நிறைவேற்றப்பட்டுள்ள இத்தீர்மானத்திற்கு அமெரிக்கா, பிரித்தானியா,
பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள் ஆதரவளித்துள்ளன.</p><h2>&nbsp;உடனடி நடவடிக்கை</h2><p>

ஈரானின் 'Fordow', 'Natanz' மற்றும் 'Isfahan' ஆகிய முக்கிய அணுசக்தி மையங்களை
ஆய்வு செய்ய சர்வதேச அதிகாரிகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்ற அடிப்படையில்
இத்தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது.
</p><p>
இருப்பினும், இக்குற்றச்சாட்டுகளை முற்றாக நிராகரித்துள்ள ஈரான், அமெரிக்கா
மற்றும் இஸ்ரேலின் இராணுவத் தாக்குதல்கள் மற்றும் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள்
காரணமாகவே அணுசக்தி மையங்களை ஆய்வு செய்வதற்கான பாதுகாப்பான சூழல் இல்லையெனத்
தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a4453918-3af1-4923-963d-cdce7938edeb/26-6aa2b70a5b711.webp' /></p><p>

அத்துடன், அரசியல் அழுத்தங்கள் காரணமாகவே இத்தீர்மானம்
நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் ஈரான் சுட்டிக்காட்டியுள்ளது.</p><p>

அதேவேளை, ஐ.நா பாதுகாப்புச் சபையில் ஈரானின் நட்பு நாடுகளான ரஷ்யா மற்றும்
சீனா ஆகிய வல்லரசு நாடுகள் வீட்டோ (Veto) அதிகாரத்தைக் கொண்டுள்ளதால்,
ஈரானுக்கு எதிராக உடனடி நடவடிக்கைகளை எடுப்பது கடினம் என சர்வதேச அரசியல்
ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-10T14:08:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாகிஸ்தானில் இருந்து 2 கொள்கலன்களில் வந்த போதைப்பொருள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/narcotics-arrived-from-pakistan-in-two-containers-1789044351"></link>
            <id>https://jvpnews.com/article/narcotics-arrived-from-pakistan-in-two-containers-1789044351</id>
            <summary type="text">&amp;nbsp; பாகிஸ்தானில் இருந்து சட்டவிரோதமான முறையில் போதைப்பொருட்களை இரண்டு கொள்கலன்களில் மறைத்து இலங்கைக்கு இறக்குமதி செய்து கொழும்பு துறைமுகத்தின் CICT...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; பாகிஸ்தானில் இருந்து சட்டவிரோதமான முறையில் போதைப்பொருட்களை இரண்டு கொள்கலன்களில் மறைத்து இலங்கைக்கு இறக்குமதி செய்து கொழும்பு துறைமுகத்தின் CICT முனையத்தில் வைத்திருந்தமை தொடர்பாக மத்திய குற்றவியல் விசாரணை பணியகம் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
அந்த விசாரணைக்கு அமைய சில குறைபாடுகளும் கவனயீனங்களும் அவதானிக்கப்பட்டுள்ளதால், பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரியவின் அறிவுறுத்தலின் பேரில் அது தொடர்பாக பொலிஸ் விசேட விசாரணைப் பிரிவினால் உள்வாரியான விசாரணை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/13c7e529-d506-4bd7-8149-32a4dd91982a/26-6aa2a68071360.webp' /></p><p>
</p><p>
இருப்பினும், இந்த உள்வாரியான விசாரணையானது, போதைப்பொருட்களுடன் பொலிஸ் பொறுப்பில் எடுக்கப்பட்ட இரண்டு கொள்கலன்கள் தொடர்பாக மத்திய குற்றவியல் விசாரணை பணியகம் மேற்கொள்ளும் விசாரணைக்கு எவ்வித இடையூறையும் ஏற்படுத்தாது என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.</p><p></p><p>

அத்துடன், அந்த முக்கிய விசாரணை நடவடிக்கைகள் மிகவும் வெளிப்படைத்தன்மையுடன் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-09-10T14:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[மகிந்த ராஜபக்சவின் மேடையில் அர்ச்சுனா எம்.பி..! நாமலின் மோசடி தொடர்பில் சபையில் பகிரங்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/archchuna-on-mahinda-rajapaksa-s-stage-1789037307"></link>
            <id>https://tamilwin.com/article/archchuna-on-mahinda-rajapaksa-s-stage-1789037307</id>
            <summary type="text">


செப்டெம்பர் மாதம் 12ஆம் திகதி முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையில் அநுராதபுரத்தில் இடம்பெறவுள்ள மக்கள் கூட்டத்தில் தான் கலந்து கொள்ளவுள்ளத...</summary>
            <content type="html"><![CDATA[<p>


செப்டெம்பர் மாதம் 12ஆம் திகதி முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையில் அநுராதபுரத்தில் இடம்பெறவுள்ள மக்கள் கூட்டத்தில் தான் கலந்து கொள்ளவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார். </p><p>

நாடாளுமன்றத்தில் இன்றையதினம் இடம்பெற்ற அமர்வில் கலந்து கொண்ட போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.</p><h2>நாமலுக்காக மேடை ஏறுவேன்..</h2><p> 

தொடர்ந்தும் தெரிவிக்கையில், </p><p>

சமூக வலைத்தளங்களில் எமது இனத்தை அழித்த மகிந்த ராஜபக்சவின் மேடையில் ஏறுவது குறித்து பல பிரசாரங்கள் முன்வைக்கப்படுகின்றன.</p><p> </p><p>

அது, மகிந்த ராஜபக்ச அல்ல, நாளை ரணில் விக்ரமசிங்க அழைத்து அவருடயை மேடையில் ஏறச் சொன்னாலும் அந்த மேடைக்குச் செல்வேன்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/eefc24be-d809-4d3e-b204-a7971f9dcf2d/26-6aa28e4f082cd.webp' /></p><p>
</p><p>
எமது அடுத்த ஜனாதிபதி சஜித் பிரேமதாச, அவர் அழைத்தாலும் அவருடைய மேடைக்கும் நான் செல்வேன். எதிர்க்கட்சியில் இருக்கக்கூடிய எந்தவொரு அரசியல்வாதிக்கும் எனது ஆதரவு இருக்கும். அதேபோலத்தான் நாமல் ராஜபக்சவும். </p><p>

நாமல் ராஜபக்ச மோசடியில் ஈடுபட்டிருந்தாலோ, அவர் மீதான தனிப்பட்டக் குற்றங்களையோ நான் ஆதரிக்கவில்லை. அது எனக்குத் தொடர்பற்றது. </p><p> எதிர்க்கட்சி உறுப்பினராக அவரை நான் ஆதரிக்கின்றேன்.

நாமல் ராஜபக்ச அல்ல, எனது மக்களுக்காக யாருடைய மேடையிலும் ஏறத் தயார் என குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p><p><b>YOU MAY LIKE THIS VIDEO..</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/FxHDUaTrx9Q" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p>]]></content>
            <updated>2026-09-10T13:53:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாட்டில் உயிரிழக்கும் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இலங்கை அரசு விசேட சலுகை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/compensation-of-foreign-workers-die-1789045586"></link>
            <id>https://tamilwin.com/article/compensation-of-foreign-workers-die-1789045586</id>
            <summary type="text">வெளிநாட்டில் பணிபுரியும் போது உயிரிழக்கும் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கான மரண இழப்பீட்டுத் தொகை ரூ. 2 மில்லியனாக உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள...</summary>
            <content type="html"><![CDATA[<p>வெளிநாட்டில் பணிபுரியும் போது உயிரிழக்கும் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கான மரண இழப்பீட்டுத் தொகை ரூ. 2 மில்லியனாக உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p> 

இது வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு ஒரு பெரும் நிவாரணம் என வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். </p><p>

வெளிநாட்டில் பணிபுரியும் போது உயிரிழந்த 50 வெளிநாட்டுத் தொழிலாளர்களின் உறவினர்களுக்கு ரூ. 70 மில்லியன் இழப்பீடு வழங்கும் நிகழ்வில் பங்கேற்ற போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். </p><h2> 


இழப்பீடு தொகை அதிகரிப்பு</h2><p>
முன்னதாக, வெளிநாட்டில் பணிபுரியும் போது உயிரிழக்கும் ஒருவருக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் ரூ. 6 லட்சம் வழங்கி வந்தது.</p><p> 

இந்த தொகை, போதுமானதாக இல்லாத காரணத்தால் குறித்த தொகையை ரூ. 2 மில்லியனாக உயர்த்த நடவடிக்கை எடுப்பதில் மகிழ்ச்சி அடைவதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p> 

ஆண்டுதோறும் வெளிநாடு செல்லும் தொழிலாளர்களில் சுமார் 250 பேர் ஏதேனும் துரதிர்ஷ்டவசமான காரணத்தால் அந்த நாட்டிலேயே உயிரிழக்கின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6c8ef468-3418-46a3-b65d-b32caca65032/26-6aa2b516902b8.webp' /></p><p> 

இந்த நிலையைக் குறைக்கவும், குழுத் திட்டங்களைச் செயல்படுத்தவும் ஒரு திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். 

 வெளிநாட்டுத் தொழிலாளர்கள் ஆண்டுதோறும் சுமார் 8 பில்லியன் அமெரிக்க டொலர்களை நாட்டிற்குப் பணமாக அனுப்புகின்றனர். 

பணியகம் ஏற்கனவே அவர்களுக்காகப் பெரிய அளவிலான நலத்திட்டங்களைச் செயல்படுத்தி வருகின்றது.</p><h2> 

வெளிநாடு செல்லும் தொழிலாளர்களுக்கான விசேட திட்டம்</h2><p>

மேலும், நாங்கள் புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தவும் பணியாற்றி வருகிறோம். இந்தத் திட்டங்களில் ஒன்று, வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு வங்கிகள் மூலம் 10 மில்லியன் ரூபாயை வீட்டுக் கடனாக வழங்குவதாகும்.
</p><p>
 இந்தக் கடன்கள் குறைந்த வட்டி விகிதத்தில் வழங்கப்படுகின்றன என்றும், அந்த வட்டியின் ஒரு பகுதியை பணியகமும் செலுத்துகின்றது என்றும் விஜித ஹேரத் கூறியுள்ளார். </p><p>

 இது தவிர, பணியகம் தற்போது தொழிலாளர்களுக்குப் பாடசாலை உபகரணங்கள் மற்றும் பாடசாலை மாணவர்களுக்கான வருடாந்த கல்வி உதவித்தொகை போன்ற நலத்திட்டங்களையும் வழங்கி வருகின்றது என்பதையும் அமைச்சர் நினைவூட்டியுள்ளார்.</p><p></p><p></p><p><br></p><p> </p>]]></content>
            <updated>2026-09-10T13:48:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜோர்டானில் ஈரான் ஏவுகணை தாக்குதலில் அமெரிக்க விமானங்கள் சேதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/iran-missiles-damage-us-jets-in-jordan-1789047864"></link>
            <id>https://news.lankasri.com/article/iran-missiles-damage-us-jets-in-jordan-1789047864</id>
            <summary type="text">Iran missiles damage US jets in Jordan: ஜோர்டானில் ஈரானின் ஏவுகணை தாக்குதலில் அமெரிக்க விமானங்கள் சேதமடைந்துள்ளன.

அமெரிக்க போர் விமானங்கள் சேதம்ஜோர...</summary>
            <content type="html"><![CDATA[<p>Iran missiles damage US jets in Jordan: ஜோர்டானில் ஈரானின் ஏவுகணை தாக்குதலில் அமெரிக்க விமானங்கள் சேதமடைந்துள்ளன.</p><h2>

அமெரிக்க போர் விமானங்கள் சேதம்</h2><p>ஜோர்டானில் உள்ள Muwaffaq Salti விமான தளம் (Al-Azraq) மீது ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலில் பல அமெரிக்க போர் விமானங்கள் சேதமடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
</p><p>
அமெரிக்காவின் A-10 Thunderbolt (Warthog) விமானம் கடுமையாக சேதமடைந்தது, அதன் ஒரு சிறகு முற்றிலும் அழிந்துவிட்டது. மேலும், சுமார் எட்டு F-15 போர் விமானங்கள் சிறிய அளவில் சேதங்களை சந்தித்தன. ஆனால் அவை பின்னர் சேவைக்கு திரும்பியதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/287e3fff-93d3-4de8-a047-6496616859ca/26-6aa2b50007a97.webp' /></p><p>இந்த தாக்குதலின் போது, அமெரிக்க படைகள் 30-க்கும் மேற்பட்ட Patriot interceptor missiles-ஐ பயன்படுத்தி எதிர்ப்பு நடவடிக்கை மேற்கொண்டன.
</p><p>
ஈரான், தண்டனை நடவடிக்கை (punitive operation) என அழைக்கப்படும் இந்த தாக்குதலை, அமெரிக்கா தனது ஐந்து ஈரான் எண்ணெய் கப்பல்களை அழித்ததற்கான பதிலடி எனக் கூறியுள்ளது.
</p><p></p><p>ஜோர்டான் அரசு, “எங்கள் வான்வழி பாதுகாப்பு அமைப்புகள் 20 ஏவுகணைகளில் 18-ஐ தடுத்து நிறுத்தின. மீதமுள்ள 2 ஏவுகணைகள் மக்கள் வசிப்பிடமற்ற பகுதிகளில் விழுந்தன. உயிரிழப்புகள் எதுவும் இல்லை” என தெரிவித்ததாவது.
</p><p>
இந்த சம்பவம், அமெரிக்கா-ஈரான் இடையேயான நீண்டகால பதற்றத்தை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. Strait of Hormuz மற்றும் Bab-el-Mandeb போன்ற முக்கிய கடல் வழித்தடங்களில் இரு தரப்பும் தங்கள் தாக்குதல்களை அதிகரித்து வருகின்றன.
</p><p>
சர்வதேச அரசியல் வல்லுநர்கள் எச்சரிப்பதாவது, “இந்த தாக்குதல்கள், மத்திய கிழக்கு பகுதியில் நிலவும் பதற்றத்தை உலகளாவிய எரிபொருள் விநியோகத்திற்கும், பாதுகாப்பிற்கும் பெரும் ஆபத்தாக மாற்றுகின்றன” எனக் கூறுகின்றனர்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p>&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-10T13:44:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாட்டில் உயிரிழக்கும் இலங்கையருக்கு கிடைக்கப்போகும் பெருந்தொகை இழப்பீடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/compensation-who-die-working-abroad-increased-1789046146"></link>
            <id>https://ibctamil.com/article/compensation-who-die-working-abroad-increased-1789046146</id>
            <summary type="text">வெளிநாட்டில் பணிபுரியும்போது உயிரிழக்கும் இலங்கை பணியாளர்களுக்கான மரண இழப்பீட்டை ரூ. 2 மில்லியனாக உயர்த்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

இ...</summary>
            <content type="html"><![CDATA[<p>வெளிநாட்டில் பணிபுரியும்போது உயிரிழக்கும் இலங்கை பணியாளர்களுக்கான மரண இழப்பீட்டை ரூ. 2 மில்லியனாக உயர்த்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

இது வெளிநாட்டுப் பணியாளர்களுக்கு ஒரு பெரும் நிவாரணம் என்று வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.</p><p>வெளிநாட்டில் பணிபுரியும்போது உயிரிழந்த 50 வெளிநாட்டுப் பணியாளர்களின் உறவினர்களுக்கு ரூ. 70 மில்லியன் இழப்பீடு வழங்கும் நிகழ்வில் பங்கேற்றபோது அமைச்சர் இந்த தகவலை வெளியிட்டார்.
</p><p>
</p><h2>இழப்பீட்டு தொகையை உயர்த்த நடவடிக்கை</h2><p>முன்னதாக, வெளிநாட்டில் பணிபுரியும்போது உயிரிழக்கும் ஒருவருக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் ரூ. 600,000 வழங்கி வந்தது.

தற்போது இந்தத் தொகையை ரூ. 2 மில்லியனாக உயர்த்த நடவடிக்கை எடுப்பதில் மகிழ்ச்சி அடைவதாக அமைச்சர் கூறினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9a0916b9-7e7f-48ed-8fba-b0c63f77238d/26-6aa2b2505e3f3.webp' /></p><p>
</p><p>
ஆண்டுதோறும் வெளிநாடு செல்லும் தொழிலாளர்களில் சுமார் 250 பேர் ஏதேனும் ஒரு துரதிஷ்டவசமான காரணத்தால் தங்கள் உயிரை இழக்கின்றனர்.

இந்த நிலைமையைக் குறைப்பதற்காக, குழுத் திட்டங்களைச் செயல்படுத்தும் ஒரு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது என்று விஜித ஹேரத் மேலும் தெரிவித்தார்.</p><p></p><h2>ஆண்டுதோறும் 8 பில்லியன் அமெரிக்க டொலர்</h2><p>

“வெளிநாட்டுப் பணியாளர்கள் ஆண்டுதோறும் சுமார் 8 பில்லியன் அமெரிக்க டொலர்களை நாட்டிற்குப் பணமாக அனுப்புகின்றனர். பணியகம் ஏற்கனவே அவர்களுக்காக ஏராளமான நலத்திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது, மேலும் நாங்கள் புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தவும் பணியாற்றி வருகிறோம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8241f561-704e-4964-b5db-85a008e26919/26-6aa2b24faaf0e.webp' /></p><p> இந்தத் திட்டங்களில் ஒன்று, வெளிநாட்டுப் பணியாளர்களுக்கு வங்கிகள் மூலம் 10 மில்லியன் ரூபாயை வீட்டுக் கடனாக வழங்குவதாகும். இந்தக் கடன்கள் குறைந்த வட்டி விகிதத்தில் வழங்கப்படுகின்றன, மேலும் அந்த வட்டியின் ஒரு பகுதியை பணியகமும் செலுத்துகிறது. </p><p>கூடுதலாக, பணியகம் தற்போது பணியாளர்களுக்குப் பள்ளி உபகரணங்கள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கான வருடாந்திர கல்வி உதவித்தொகை போன்ற நலத்திட்டங்களை வழங்கி வருகிறது.”&nbsp;&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-10T13:41:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[மசகு எண்ணெயை அவசரமாக கொள்வனவு செய்யும் சீனா!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/china-s-independent-refineries-purchase-crude-oil-1789046497"></link>
            <id>https://tamilwin.com/article/china-s-independent-refineries-purchase-crude-oil-1789046497</id>
            <summary type="text">சீனாவின் சுயாதீன மசகு எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள், ஈரானிய மற்றும் ரஷ்ய
விநியோகங்களில் ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக, மேற்கு ஆப்பிரிக்கா, கனடா
மற்...</summary>
            <content type="html"><![CDATA[<p>சீனாவின் சுயாதீன மசகு எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள், ஈரானிய மற்றும் ரஷ்ய
விநியோகங்களில் ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக, மேற்கு ஆப்பிரிக்கா, கனடா
மற்றும் தென் அமெரிக்க நாடுகளிலிருந்து மசகு எண்ணெயை அவசரமாகக் கொள்வனவு செய்ய
முற்பட்டு வருகின்றன.
</p><p>
அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையிலான இராணுவ மோதல்கள் தீவிரமடைந்துள்ளது.</p><p>இதனால்,
ஹோர்முஸ் நீரிணை வழியிலான எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டு, பிரெண்ட் ரக மசகு
எண்ணெயின் விலை சர்வதேச சந்தையில் பீப்பாய் ஒன்றுக்கு 100 அமெரிக்க டொலர்களைத்
தாண்டியுள்ளது.</p><h2>எரிபொருள் தேவை</h2><p>
</p><p>
இந்நிலையிலேயே சீன நிறுவனங்கள் மாற்று வழிகளில் எண்ணெயைக் கொள்வனவு செய்ய
நடவடிக்கை எடுத்து வருகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/87dc5f96-cd4a-4b77-85f0-b0d1a084d17f/26-6aa2b1c7574e4.webp' /></p><p>

இதன் காரணமாக, சிங்கப்பூரில் நடைபெற்று வரும் சர்வதேச ஆற்றல் மாநாட்டிற்கு சீன
நிறுவனங்களின் பிரதிநிதிகள் பெருமளவில் சென்றுள்ளதுடன், சந்தையில் மசகு
எண்ணெய்க்கான கூடுதல் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது.
</p><p>
அதேவேளை, சீனாவின் உள்நாட்டு எரிபொருள் தேவையை பூர்த்தி செய்யவும், ஆண்டின்
இறுதிக்குள் தமக்கு ஒதுக்கப்பட்ட இறக்குமதி ஒதுக்கீட்டைப் பயன்படுத்தி
முடிக்கவும் இத்தகைய அவசர கொள்வனவுகள் தீவிரமடைந்துள்ளதாக வர்த்தக வட்டாரங்கள்
தெரிவிக்கின்றன.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-10T13:36:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்திய பாதுகாப்பு அமைச்சரை சந்தித்த செந்தில் தொண்டமான்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/senthil-thondaman-met-indian-defence-minister-1789047246"></link>
            <id>https://tamilwin.com/article/senthil-thondaman-met-indian-defence-minister-1789047246</id>
            <summary type="text">இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் செந்தில் தொண்டமானை சந்தித்துள்ளார். 

இந்த சந்திப்பு இன்று(10.09.2026)...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் செந்தில் தொண்டமானை சந்தித்துள்ளார்.</p><p> 

இந்த சந்திப்பு இன்று(10.09.2026) இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> 

இதன்போது, கடந்த டிசம்பர் மாதம் முழு இலங்கையையும் புரட்டிப் போட்ட டித்வா புயலின் போது, இந்திய இராணுவம் இலங்கை மக்களை பாதுகாக்க விரைந்து செயற்பட்டதற்கு நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f34b5510-3abd-4db2-a69e-24eebe357895/26-6aa2b203c65a8.webp' /></p><p> </p><p>

அத்துடன், டித்வா புயலினால் சேதமடைந்த பாலங்களை நிர்மாணித்தல், பாதைகளை சீர்செய்தல் போன்ற நடவடிக்கைகளை இந்திய இராணுவம் விரைந்து செய்து கொடுத்தமை தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளது.&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9ceb6c05-fe64-43b9-878e-0075be7e957f/26-6aa2b2216f71d.webp' /></p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-10T13:35:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் - வேட்பாளர்களை அறிவித்த அதிமுக]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/admk-announced-candidates-for-by-election-1789047249"></link>
            <id>https://ibctamilnadu.com/article/admk-announced-candidates-for-by-election-1789047249</id>
            <summary type="text">admk announced candidates for dharapuram and madurantakam by election: தாராபுரம் மற்றும் மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பாளர்களை அதிமுக அறிவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>admk announced candidates for dharapuram and madurantakam by election: தாராபுரம் மற்றும் மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பாளர்களை அதிமுக அறிவித்துள்ளது. </p><h3>

இடைத்தேர்தலுக்கு வேட்பாளர்களை அறிவித்த அதிமுக
</h3><p>
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளுக்கும் அக்டோபர் 6 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0e7205b2-abf1-4f4e-8f48-343794bc5619/26-6aa2b1d32bcd4.webp' /></p><p>

இதில் போட்டியிடுபவர்களுக்கான வேட்பாளர் பட்டியலை அதிமுக அறிவித்துள்ளது. </p><p>

மதுராந்தகம் தொகுதியில் கனிதா சம்பத் மற்றும் தாராபுரம் தொகுதியில் பானுமதியை வேட்பாளர்களாக அறிவித்துள்ளது அதிமுக.&nbsp;</p><p><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">மதுராந்தகம், தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தல்-2026 அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர்கள்<br><br>- மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் <a href="https://x.com/EPSTamilNadu?ref_src=twsrc%5Etfw">@EPSTamilNadu</a> அவர்களின் முக்கிய அறிவிப்பு <a href="https://t.co/mqappC34a2">pic.twitter.com/mqappC34a2</a></p>&mdash; AIADMK (@AIADMKOfficial) <a href="https://x.com/AIADMKOfficial/status/2098037409875451933?ref_src=twsrc%5Etfw">September 10, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>

கனிதா சம்பத் 2011 சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.&nbsp;</p><p>

திமுக, தவெகவை தொடர்ந்து அதிமுகவும் வேட்பாளர்களை அறிவித்துள்ளது. </p><p>

செப்டம்பர் 13 ஆம் தேதி நாம் தமிழர் கட்சி இடைத்தேர்தலுக்கான வேட்பாளர்களை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-10T13:34:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[காலாவதியான அழகுசாதனப் பொருட்கள் விற்பனை; 230,000 ஆயிரம் ரூபாய் அபராதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sale-of-expired-cosmetics-fine-of-230-000-rupees-1789041577"></link>
            <id>https://jvpnews.com/article/sale-of-expired-cosmetics-fine-of-230-000-rupees-1789041577</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;காலாவதியான அழகுசாதனப் பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்தமை, மருத்துவ உபகரணங்களின் விலையை மாற்றி விற்பனை செய்தமை மற்றும் அதிகபட்ச சில்லறை ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;காலாவதியான அழகுசாதனப் பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்தமை, மருத்துவ உபகரணங்களின் விலையை மாற்றி விற்பனை செய்தமை மற்றும் அதிகபட்ச சில்லறை விலை குறிப்பிடப்படாத மருந்துகளை விநியோகித்தமை தொடர்பில் மூன்று நிறுவனங்களுக்கு மொத்தம் 230,000 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.</p><p>



பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையின் பதுளை மாவட்ட புலனாய்வு அதிகாரிகளால் பண்டாரவளை நீதவான் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், குற்றச்சாட்டுகளை பிரதிவாதிகள் ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5321263a-844f-4b2c-8c6b-cf8e3940b09f/26-6aa29bab641d9.webp' /></p><p></p><h2>&nbsp;1,300க்கும் அதிகமான பொருட்களை அழிக்க உத்தரவு</h2><p>
</p><p>


2026 ஓகஸ்ட் 5ஆம் திகதி பண்டாரவளை, எட்டம்பிட்டிய வீதியிலுள்ள நிறுவனத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது, காலாவதியான Aquasoft Lotion பொதிகள் 24, விலை மாற்றப்பட்ட , விலையை மாற்றுவதற்குப் பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் மற்றும் அதிகபட்ச சில்லறை விலை குறிப்பிடப்படாத 1,180க்கும் அதிகமான மருந்துப் பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.</p><p></p><p>
</p><p>

 வழக்குச் சான்றுகளாக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் உள்ளிட்ட 1,300க்கும் அதிகமான பொருட்களை அழிக்குமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.</p><p></p><p>
</p><p>


மருந்துகள், அழகுசாதனப் பொருட்கள் மற்றும் மருத்துவ உபகரணங்களை கொள்வனவு செய்யும்போது அவற்றின் காலாவதி திகதி, விலை உள்ளிட்ட தகவல்களை கவனமாகச் சரிபார்க்குமாறு பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-10T13:33:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[யோசித ராஜபக்ச வழக்கில் பொய்ச் சாட்சியம் அளித்த சாட்சி : பாயப்போகும் நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/witness-gives-false-testimony-in-yoshitha-case-1789040743"></link>
            <id>https://ibctamil.com/article/witness-gives-false-testimony-in-yoshitha-case-1789040743</id>
            <summary type="text">பணச்சலவை தடுப்புச் சட்டத்தின் கீழ் யோஷித ராஜபக்ச மீது தொடுக்கப்பட்ட வழக்கில் பொய்ச் சாட்சியம் அளித்த சாட்சி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டமா அதி...</summary>
            <content type="html"><![CDATA[<p>பணச்சலவை தடுப்புச் சட்டத்தின் கீழ் யோஷித ராஜபக்ச மீது தொடுக்கப்பட்ட வழக்கில் பொய்ச் சாட்சியம் அளித்த சாட்சி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டமா அதிபர் இன்று (10) கொழும்பு உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.&nbsp;</p><p>&nbsp;இன்று (10) இவ்வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, ​​சாட்சியமளித்த பாலித கமகே என்ற சாட்சி, தான் காவல்துறையிடம் அளித்த வாக்குமூலத்திற்கு முரணான சாட்சியத்தை அளித்திருந்ததை பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டார நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டுவந்தார்.</p><h2>சாட்சி மீது நடவடிக்கை</h2><p>
</p><p>
அதன்படி, பொய்ச் சாட்சியம் அளித்த குற்றச்சாட்டின் பேரில் இந்த சாட்சி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதி சொலிசிட்டர் ஜெனரல் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/70d6c431-a297-41bc-a4af-6fc7a27ecb78/26-6aa29eba4553e.webp' /></p><p>
</p><p>
பின்னர், அந்த சாட்சியைப் பிணையில் விடுவிக்க செல்ல உத்தரவிட்டது.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-10T13:31:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[குடியுரிமை வழங்க எக்கச்சக்கமாக கட்டணம் வசூலிக்கும் பிரித்தானியா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/applicants-for-uk-citizenship-charge-more-5-times-1789044193"></link>
            <id>https://news.lankasri.com/article/applicants-for-uk-citizenship-charge-more-5-times-1789044193</id>
            <summary type="text">Applicants for UK citizenship charged more than five times the admin cost: பிரித்தானிய குடியுரிமை பெற விண்ணப்பிப்போர், நிர்வாக செலவை ஒப்பிடும்போது, ஐந...</summary>
            <content type="html"><![CDATA[<p>Applicants for UK citizenship charged more than five times the admin cost: பிரித்தானிய குடியுரிமை பெற விண்ணப்பிப்போர், நிர்வாக செலவை ஒப்பிடும்போது, ஐந்து மடங்கு கூடுதல் கட்டணம் செலுத்துகிறார்களாம்.
</p><p>

பிரித்தானிய குடியுரிமை பெற விண்ணப்பிப்போர், உள்துறை அலுவலகத்துக்கு ஆகும் நிர்வாக செலவை ஒப்பிடும்போது, ஐந்து மடங்கு கூடுதல் கட்டணம் செலுத்துவதாக, சமீபத்திய ஆய்வொன்று தெரிவிக்கிறது.
</p><h3>
எக்கச்சக்கமான கட்டணம் வசூலிக்கும் பிரித்தானியா</h3><p>

குடியுரிமை வழங்குவதற்காக, அமெரிக்கா வசூலிக்கும் கட்டணம், 562 பவுண்டுகள். மற்ற G7 நாடுகளை ஒப்பிடும்போது, குடியுரிமை வழங்குவதற்காக பிரித்தானியாதான் உள்ளதிலேயே அதிக கட்டணம் வசூலிக்கிறது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b37749a2-94b3-43a5-bfbb-667bfcef1f0d/26-6aa2a5e2cedfd.webp' /></p><p>
விடயம் என்னவென்றால், ஒருவருக்கு குடியுரிமை வழங்குவதற்காக, பிரித்தானிய உள்துறை அலுவலகத்துக்கு ஆகும் நிர்வாக செலவு, 324 பவுண்டுகள் மட்டுமே.</p><p></p><p>

ஆனால், பிரித்தானியா 1,709 பவுண்டுகள் வசூலிப்பதுடன், குடியுரிமை வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, தனியாக 130 பவுண்டுகள் வசூலிக்கிறது.</p><p>

ஆக மொத்தம், ஒருவர் பிரித்தானியக் குடியுரிமை பெறுவதற்காக செலுத்தும் கட்டணம், 1,839 பவுண்டுகள். ஆக, கிட்டத்தட்ட, ஐந்து மடங்கு அதிக கட்டணம் வசூலிக்கிறது பிரித்தானியா.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-10T13:30:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[உங்கள் தொப்பை குறைய வேண்டுமா? காலையில் எழுந்து இந்த 5 விஷயங்களை செய்யுங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/5-morning-habit-that-help-to-reduce-belly-fat-1789035991"></link>
            <id>https://news.lankasri.com/article/5-morning-habit-that-help-to-reduce-belly-fat-1789035991</id>
            <summary type="text">பலருக்கும் வயிற்று தொப்பை ஒரு மிகப்பெரிய குறைபாடாக இருக்கிறது. அதனை குறைப்பதற்கு பலரும் பல முயற்சிகள் எடுத்து வருகிறார்கள். ஆனால், அது சற்று கடினமாகவே...</summary>
            <content type="html"><![CDATA[<p>பலருக்கும் வயிற்று தொப்பை ஒரு மிகப்பெரிய குறைபாடாக இருக்கிறது. அதனை குறைப்பதற்கு பலரும் பல முயற்சிகள் எடுத்து வருகிறார்கள். ஆனால், அது சற்று கடினமாகவே அமைகிறது. அதாவது, வெறும் உடற்பயிற்சி கொண்டு மற்றும் நாம் இந்த வயிற்றுப்புண் குறைத்து விட முடியாது.</p><p> சரியான பழக்க வழக்கங்கள் வழியாகத்தான் இதனை நாம் சரி செய்ய முடியும்.


 
அது முக்கியமாக நாம் காலை நேர பழக்கங்களில் செய்யும் விஷயங்களில் தொடங்கி முக்கிய பங்கு வகிக்கின்றன.</p><p> காலையில் எழுந்தவுடன் நாம் செய்யக்கூடிய ஒரு சிறிய மாற்றங்கள் நம்முடைய உடலில் வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து நாள் முழுவதும் கலோரிகளை எரிக்க உதவுகிறது. இதன் வழியாக நமது கொழுப்பை எளிதில் கரைத்து விட முடியும். அப்படியாக, நாம் காலையில் எழுந்து செய்யக்கூடிய ஒரு ஐந்து முக்கியமான பழக்கவழக்கங்களை பற்றி பார்ப்போம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/126a62a0-a335-4d3f-a0a6-007a2f4d7e88/26-6aa285da46a9d.webp' /></p><p></p><p>
</p><h3>
1) வெதுவெதுப்பான நீர் அருந்துதல்:</h3><p> 
 காலையில் எழுந்தவுடன் முதலாவதாக வெறும் வயிற்றில் ஒன்று அல்லது இரண்டு டம்ளர் வெதுவெதுப்பான நீரை குடிப்பது அவசியம். நம்முடைய உடலில் மெட்டபாலிசத்தை 30 சதவீதம் வரை அதிகரித்து, நச்சுக்களை வெளியேற்றுவதோடு தொப்பை கொழுப்பையும் கரைக்க உதவுகிறது. </p><h3>



2) சூரிய ஒளியில் உடற்பயிற்சி அல்லது நடைப்பயிற்சி:</h3><p> 
அதேபோல், காலை நேர சூரிய ஒளிகள் குறைந்தது 20 முதல் 30 நிமிடங்கள் வரை எளிய உடற்பயிற்சி மேற்கொள்ளும் பொழுது சூரிய ஒளியிலிருந்து கிடைக்கக்கூடிய வைட்டமின் டி, தொப்பை கொழுப்பை கட்டுப்படுத்த உதவுகிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன. </p><h3>


3) அதிக புரதம் நிறைந்த காலை உணவு: </h3><p>
காலையில் முக்கியமாக கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளை குறைத்துக் கொண்டு முட்டை, முளைகட்டிய பயறுகள், பன்னீர் அல்லது ஓட்ஸ் போன்ற புரதம் நிறைந்த உணவுகளை சாப்பிடுவது அவசியம். இது நம்முடைய வயிற்றை நீண்ட நேரம் பசியின்மையோடு வைப்பதோடு தொப்பையை குறைக்க உதவுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f4d0529b-99f4-44db-b984-a6b3488477ab/26-6aa285db015c6.webp' /></p><p></p><p> </p><h3>


4) காலை நேர தியானம் அல்லது ஆழ்ந்த சுவாசம்: </h3><p>

காலையில் எழுந்தவுடன் நிச்சயமாக உங்களுக்கான நேரமாக ஒரு பத்து நிமிடங்கள் செலவு செய்வது அவசியம். அதில் நீங்கள் தியானமும் மூச்சு பயிற்சி செய்வது மிக மிக முக்கியம். இது நம்முடைய உடலிம் அழுத்த ஹார்மோனான கார்டிசோல் அளவை குறைக்கிறது. அந்த அளவு குறையும்போது அடிவயிற்றில் கொழுப்பு சேர்வதை இயற்கையாகவே தடுக்கப்படுகிறது. </p><h3>

5) காலை எடையைச் சரிபார்த்தல்: </h3><p>
மேலும், காலை எழுந்தவுடன் கழிவறையை பயன்படுத்திவிட்டு வெறும் வயிற்றில் உடல் எடையை சரி பார்ப்பது வழக்கமாக மாற்றிக் கொள்ளும் பொழுது நாம் உடல் எடையை பற்றிய ஒரு விழிப்புணர்வு உண்டாகும். அதனால், அந்த நாள் முழுவதும் நாம் ஆரோக்கியமான உணவுகளை தேர்ந்தெடுத்து கட்டுப்பாடோடு இருப்பதற்கு ஒரு வழி வகுக்கும்.&nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-09-10T13:30:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ் கிணறுகள் பெருகெடுத்த காரணம் வெளியானது!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/reason-for-the-overflowing-wells-in-arali-jaffna-1789045876"></link>
            <id>https://jvpnews.com/article/reason-for-the-overflowing-wells-in-arali-jaffna-1789045876</id>
            <summary type="text">&amp;nbsp; யாழ்ப்பாணம் - அராலி கிழக்கு ஐயனார் ஆலயத்தின் காணியில் உள்ள கிணறு உட்பட அங்கு இருந்த சில கிணறுகள் கடந்த சில தினங்களாக நீர்மட்டம் வழமைக்கு மாறாக ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; <a href="https://jvpnews.com/article/wells-in-araly-jaffna-suddenly-overflowed-1788872260?itm_source=article" target="_blank">யாழ்ப்பாணம் - அராலி கிழக்கு ஐயனார் ஆலய</a>த்தின் காணியில் உள்ள கிணறு உட்பட அங்கு இருந்த சில கிணறுகள் கடந்த சில தினங்களாக நீர்மட்டம் வழமைக்கு மாறாக உயர்ந்து காணப்பட்டது.
</p><p>


இந்த விடயமானது தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையினரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.



அங்கு வந்த தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையினர் குடிநீர் வழங்கல் குழாயினை சோதனை செய்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1fdbf5e9-69b4-4cc1-8a48-eb83403a44f4/26-6aa2ac75b5d74.webp' /></p><h2>வடிகாலமைப்பு சபையினர்&nbsp; &nbsp;சோதனை</h2><p> இதன்போது அந்த குழாயில் இரண்டு பாரிய துளைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.



அதன்பின்னர் குறித்த துளைகள் சீர் செய்யப்பட்டன. அதனைத் தொடர்ந்து கிணறுகளின் நீர்மட்டம் வழமைக்கு திரும்பியது.</p><p></p><p>
</p><p>


கிணறுகளில் நீர்மட்டம் உயர்ந்தமைக்கான காரணம் குடிநீர் வழங்கல் குழாயின் மூலம் ஏற்பட்ட நீர் வெளியேற்றமே என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.&nbsp; &nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-09-10T13:25:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரச சொத்து துஷ்பிரயோகம்; தயாசிறி ஜயசேகர- சபாநாயகர் கடும் வாக்குவாதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/misuse-state-property-heated-argument-parliament-1789046879"></link>
            <id>https://jvpnews.com/article/misuse-state-property-heated-argument-parliament-1789046879</id>
            <summary type="text">&amp;nbsp; அரச சொத்து துஷ்பிரயோகம் தொடர்பில் சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை சிறப்புரிமை மீறல் பிரச்சினையாக ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; அரச சொத்து துஷ்பிரயோகம் தொடர்பில் சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை சிறப்புரிமை மீறல் பிரச்சினையாக தாம் முன்வைத்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.</p><p>



பாராளுமன்றத்தில் நேற்று (10) பெண்களின் வலுவூட்டல் சட்டத்தின் கீழான தீர்மானம் மீதான விவாதத்தில் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6e5a6d92-182f-4754-9fc8-49b0635c5aac/26-6aa2b0616e037.webp' /></p><p>



சபாநாயகர் ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் உரிமைகளை பாதுகாக்கும் வகையில் நடுநிலையாக செயற்பட வேண்டும் எனத் தெரிவித்த தயாசிறி ஜயசேகர, சபாநாயகருக்கு எதிராக இலஞ்சம் அல்லது ஊழல் தொடர்பான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், அது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் குறிப்பிட்டார்.</p><p></p><p>
</p><p>


இதன்போது, தாம் முன்வைத்துள்ள சிறப்புரிமை மீறல் பிரச்சினை பரிசீலிக்கப்பட்டு வருவதால், அதில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை சபையில் பேச வேண்டாம் என சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தெரிவித்தார்.
</p><p>


இதற்கு பதிலளித்த தயாசிறி ஜயசேகர, “உங்கள் மீதான குற்றச்சாட்டுக்களை ஒவ்வொன்றாக முன்வைக்கும் போது அதனை கேட்டுக்கொண்டிருக்க முடியாவிடின், நீங்கள் சபையில் இருந்து வெளியேறுங்கள். பிரதி சபாநாயகரை சபைக்குத் தலைமை தாங்குவதற்கு குறிப்பிடுங்கள்” எனத் தெரிவித்தார்.</p>]]></content>
            <updated>2026-09-10T13:24:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்க இடைக்காலத் தேர்தலின் பின்னர் ஈரான் போர் நிறைவுக்கு வரும் : ட்ரம்ப் நம்பிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/iran-conflict-end-after-us-midterm-elections-trump-1789045119"></link>
            <id>https://tamilwin.com/article/iran-conflict-end-after-us-midterm-elections-trump-1789045119</id>
            <summary type="text">அமெரிக்காவில் எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள இடைக்காலத் தேர்தலின்
பின்னர் ஈரான் உடனான போர் உடனடியாக முடிவுக்கு வரும் என அமெரிக்க ஜனாதிபதி
டொனா...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவில் எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள இடைக்காலத் தேர்தலின்
பின்னர் ஈரான் உடனான போர் உடனடியாக முடிவுக்கு வரும் என அமெரிக்க ஜனாதிபதி
டொனால்ட் ட்ரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
</p><p>
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலை ஈரானிய தரப்பு பாதிக்க முற்படுவதாகக் குற்றம்
சுமத்தியுள்ள அவர், போரைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல முடியாத நிலையில்
ஈரானிய தரப்பு தவித்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
</p><h2>செங்கடலின் முக்கிய கடல் வழி</h2><p>
இருப்பினும், ஈரானின் முக்கிய அணுசக்தி மையமான 'பிக்எக்ஸ் மவுண்டன்' பகுதியை
இலக்கு வைத்து மீண்டும் தாக்குதல் நடத்தக்கூடும் என்றும் அவர்
எச்சரித்துள்ளார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/31c0e7a5-6e55-42b3-bca5-b65b79a1d13d/26-6aa2abf99e596.webp' /></p><p>
அத்துடன், செங்கடலின் முக்கிய கடல் வழியான பாப் அல்-மந்தேப் நீரிணைப்
பகுதியில் ஹூதி அமைப்பினரின் நடமாட்டம் அதிகரித்து வருவதால், அப்பகுதியில்
பதற்றமான சூழல் நிலவுகின்றது.
</p><p>
மறுபுறம், சர்வதேச சந்தையில் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் விலையானது பீப்பாய்
ஒன்றுக்கு 100 அமெரிக்க டொலர்களைத் தாண்டி விற்பனையாகி வருகின்றமை
குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-10T13:19:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Erimalai</name>
            </author>
            <title type="text"><![CDATA[வேலைக்குச் சென்ற குடும்பஸ்தர் 8 ஆண்டுகளாக மாயம் - உறவினர் விடுக்கும் கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/person-who-went-to-work-in-kilinochchi-is-a-fake-1789046114"></link>
            <id>https://tamilwin.com/article/person-who-went-to-work-in-kilinochchi-is-a-fake-1789046114</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, அம்பன் கிராமத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட நபர் ஒருவர் கடந்த 2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் காணாமல் போயுள்ளதாக குடும்பத...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, அம்பன் கிராமத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட நபர் ஒருவர் கடந்த 2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் காணாமல் போயுள்ளதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
</p><p>
குடத்தனை கிழக்கு, மளிகைத்திடலை வதிவிடமாகக் கொண்ட செல்வராசா அருந்தவச்செல்வன் என்பவரே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.
</p><p>
இவர், கிளிநொச்சி பகுதிக்கு வேலைக்குச் செல்வதாக தனது மனைவியிடம் தெரிவித்துவிட்டு வீட்டிலிருந்து சென்ற நிலையில், இதுவரை வீடு திரும்பவில்லை என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
</p><h2>
ஒரு வாரம் வேலைச் செய்த தொலைபேசி</h2><p>
குறித்த நபர் காணாமல் போனமை தொடர்பில் 10.03.2018 அன்று பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்ததுடன், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாணம் பிராந்திய அலுவலகத்திலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c0df8099-f4af-4286-88c3-27c94fe9540e/26-6aa2ad9a11a8e.webp' /></p><p>
</p><p>
மேலும், அவர் காணாமல்போன தினத்திலிருந்து சுமார் ஒரு வார காலம் வரை அவரது தொலைபேசி இயங்கியதாகவும் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். எனினும், அவரது தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பை மேற்கொண்டபோது, அவர் எவ்வித பதிலும் அளிக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

காணாமல் போனமை தொடர்பில் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்ட போதிலும், இதுவரை உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்படவில்லை என குடும்பத்தினர் குற்றம் சாட்டுகின்றனர்.</p><p>

காணாமல் போன செல்வராசா அருந்தவச்செல்வன் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தவர்கள் 0774323487 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தகவல் வழங்குமாறு அவரது குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.&nbsp; &nbsp; &nbsp; &nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-10T13:18:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிறந்து 13 நாட்களில் பாஸ்போர்ட் பெற்ற குழந்தை – சர்வதேச சாதனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/13-days-old-newborn-got-passport-sets-a-record-1789043249"></link>
            <id>https://manithan.com/article/13-days-old-newborn-got-passport-sets-a-record-1789043249</id>
            <summary type="text">ஆந்திர மாநிலம், ஸ்ரீகாகுளம் மாவட்டம் இச்சாபுரத்தைச் சேர்ந்த ஆஷிஷ் மற்றும் ராஜமகேந்திரவரத்தைச் சேர்ந்த கீதாமாதுரி தம்பதி, வேலை நிமித்தமாக லண்டனில் வசித...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஆந்திர மாநிலம், ஸ்ரீகாகுளம் மாவட்டம் இச்சாபுரத்தைச் சேர்ந்த ஆஷிஷ் மற்றும் ராஜமகேந்திரவரத்தைச் சேர்ந்த கீதாமாதுரி தம்பதி, வேலை நிமித்தமாக லண்டனில் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த மே 30ஆம் தேதி ராஜமகேந்திரவரத்தில் பெண் குழந்தை பிறந்தது.</p><p>

லண்டனுக்குப் பயணம் செய்வதற்காக, பிறந்து இரு நாட்களிலேயே (ஜூன் 1) குழந்தைக்கு ‘அகஸ்யா பிரின்ஸ்’ எனப் பெயரிட்டு பிறப்புச் சான்றிதழ் பெறப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/70b45287-0be2-4be8-a225-ce5f530961a6/26-6aa2a4c92e0fc.webp' /></p><p></p><h2>வெறும் 13 நாட்களிலேயே பாஸ்போர்ட்&nbsp;</h2><p> </p><p>தொடர்ந்து ஜூன் 2ஆம் தேதி ஆதார் அட்டைக்கும், ஜூன் 6ஆம் தேதி பாஸ்போர்ட்டுக்கும் விண்ணப்பிக்கப்பட்டது.

குழந்தையின் ஆதார் அட்டைக்கு ஜூன் 4ஆம் தேதியும், பாஸ்போர்ட்டுக்கு ஜூன் 12ஆம் தேதியும் ஒப்புதல் கிடைத்தது.</p><p> இதன் மூலம் பிறந்து வெறும் 13 நாட்களிலேயே பாஸ்போர்ட் பெற்ற அகஸ்யா பிரின்ஸ், சர்வதேச சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார்.</p><p></p><p>

இதற்கு முன்பு 19 நாள் குழந்தை ஒருவர் மிகக் குறைந்த வயதில் பாஸ்போர்ட் பெற்ற சாதனையைப் படைத்திருந்த நிலையில், அகஸ்யா பிரின்ஸ் அந்தச் சாதனையை முறியடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்<b><u> <a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-10T13:17:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[திருமணமாகி ஒரு வருடம் ;மனைவியின் தலையை வெட்டி பிரிட்ஜில் வைத்த கணவன்; ஷாக்காகி நின்ற பொலிஸார்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/husband-beheads-wife-head-in-the-fridge-assam-1789028572"></link>
            <id>https://jvpnews.com/article/husband-beheads-wife-head-in-the-fridge-assam-1789028572</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;இந்தியா அசாம் மாநிலம் கவுகாத்தியில் 25 வயதான இளம் பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது... கொலை செய...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;இந்தியா அசாம் மாநிலம் கவுகாத்தியில் 25 வயதான இளம் பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது... கொலை செய்ததைவிட, கொலைக்கு பிறகு நடந்த பயங்கரம்தான், அதற்கு மேல் பீதியை ஏற்படுத்தியுள்ளது. </p><p>சம்பவம் தொடர்பில் இந்திய ஊடகங்க்கள் குறிப்பிட்டுள்ளதாவது, 

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ரியாவும் ராமானுஜ் கோஸ்வாமியும் காதலித்து திருமணம் செய்துகொண்ட நிலையில், பின்னர் இருவருக்கும் அடிக்கடி கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதாக போலீஸ் விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8fbfe0d0-0430-4491-8e85-775988846a44/26-6aa268de4d431.webp' /></p><h2>திருமணமாகி&nbsp; ஒரு வருடம்</h2><p> 

கடந்த செப்டம்பர் 3-ம் தேதி இருவருக்கும் ஏற்பட்ட தகராறு விபரீதமாகி, ராமானுஜ் தனது மனைவியை கொலை செய்ததாக போலீசார் தெரிவிக்கின்றனர். சம்பவத்துக்குப் பிறகு வீட்டை பூட்டிவிட்டு அவர் தப்பிச் சென்றதாகவும், அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில் போலீசார் வீட்டை சோதனை செய்தபோது கொலை சம்பவம் வெளிச்சத்துக்கு வந்ததாகவும் கூறப்படுகிறது.</p><p></p><p> </p><p>

விசாரணையில், ரியாவின் உடல் வீட்டில் கண்டெடுக்கப்பட்டதுடன், அவரது தலையும் வீட்டில் இருந்த ஃபிரிட்ஜில் கண்டெடுக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். கொலைக்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ஆயுதமும் கைப்பற்றப்பட்டுள்ளது. இந்த வழக்கில் ராமானுஜ் பின்னர் போலீஸ் நிலையத்தில் சரணடைந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9909d809-52d9-49e8-b57e-13fcc5b6ddb7/26-6aa268df0d0d1.webp' /></p><p> 

போலீசாரிடம் அவர் அளித்ததாக வாக்குமூலத்தில், தனது மனைவிக்கு வேறு ஒருவருடன் தொடர்பு இருந்ததாக சந்தேகித்ததால்தான் இருவருக்கும் அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டதாக தெரிவித்துள்ளார்.</p><p></p><p> </p><p> 

 அதுமட்டுமல்லாது , தனது மனைவியுடன் தொடர்பு வைத்திருந்ததாக அவர் சந்தேகிக்கும் அந்த நபரையும் கொலை செய்வேன் என்று ராமானுஜ் கூறியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை பொலிஸாருக்கே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது.&nbsp; </p><p>&nbsp; &nbsp; &nbsp; </p>]]></content>
            <updated>2026-09-10T13:16:14+00:00</updated>
        </entry>
    </feed>
