<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-07-24T17:33:23+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[மஹாபொல புலமைப்பரிசிலுக்கு தெரிவான மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/important-notice-for-mahapola-scholarship-students-1784913273"></link>
            <id>https://jvpnews.com/article/important-notice-for-mahapola-scholarship-students-1784913273</id>
            <summary type="text">2024/25 கல்வியாண்டிற்குரிய மஹாபொல புலமைப்பரிசிலுக்காகத் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களின் இணையவழி (Online) பதிவுகள் எதிர்வரும் 17ஆம் திகதியுடன் நிறைவடையவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>2024/25 கல்வியாண்டிற்குரிய மஹாபொல புலமைப்பரிசிலுக்காகத் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களின் இணையவழி (Online) பதிவுகள் எதிர்வரும் 17ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளதாக லலித் அதுலத்முதலி மஹாபொல உயர்கல்வி புலமைப்பரிசில் நிதியம் தெரிவித்துள்ளது. </p><p>

அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அந்நிதியம், குறித்த கொடுப்பனவிற்கான இறுதித் தெரிவுப் பட்டியல்கள் உரிய பல்கலைக்கழகங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/73da8ed0-3192-476b-bd9e-01834db31118/26-6a639d7b5a385.webp' /></p><h2>இணையவழி பதிவு&nbsp;</h2><p> </p><p>

அதற்கமைய, அப்பட்டியலில் பெயர்கள் அடங்கியுள்ள மாணவர்கள் ஓகஸ்ட் 17ஆம் திகதிக்கு முன்னர்<a href="https://mahapola.lk/BankApp2025/" target="_blank"> https://mahapola.lk/BankApp2025/</a> என்ற இணையத்தளத்திற்குப் பிரவேசித்து, தமது தேசிய அடையாள அட்டை இலக்கத்தைப் பயன்படுத்தி இணையவழி பதிவை நிறைவு செய்ய வேண்டும்.</p><p></p><p> 

2024/25 கல்வியாண்டிற்குரிய மஹாபொல புலமைப்பரிசிலுக்குத் தெரிவுசெய்யப்படாத மாணவர்களின் மேல்முறையீடுகள் ஒக்டோபர் 15ஆம் திகதிக்கு முன்னர் உரிய பல்கலைக்கழகங்கள் ஊடாகப் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு அனுப்பிவைக்கப்பட வேண்டும்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-24T17:30:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெற்றியில் முடிந்த 200ஆவது உயிர் காக்கும் முயற்சி.. கனடாவிலிருந்து வந்த உதவிக்கரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/quality-baker-in-canada-batticaloa-lady-operation-1784912299"></link>
            <id>https://tamilwin.com/article/quality-baker-in-canada-batticaloa-lady-operation-1784912299</id>
            <summary type="text">மட்டக்களப்பு - கொக்கட்டிச்சோலை - முனைக்காடு பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவரின்&amp;nbsp;முழு சிகிச்சைச் செலவையும் கனடா - ஸ்கார்பாரோவில் அமைந்துள்ள குவாலிட்டி...</summary>
            <content type="html"><![CDATA[<p>மட்டக்களப்பு - கொக்கட்டிச்சோலை - முனைக்காடு பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவரின்&nbsp;முழு சிகிச்சைச் செலவையும் கனடா - ஸ்கார்பாரோவில் அமைந்துள்ள குவாலிட்டி பேக்கரி உரிமையாளர்களான பிரான்சிஸ், ஜமுனா அந்தோணிப்பிள்ளை தம்பதியினர் உதவியுள்ளனர்.</p><p>இளம் பெண் குழந்தையின் தாயாரான வசந்தி அமல்ராஜ் என்பவரின் உயிரைக் காப்பாற்றும் நோக்கிலேயே, அவர்கள் இந்த உதவியை செய்துள்ளனர்.&nbsp;</p><p></p><h2>நன்றி தெரிவிப்பு&nbsp;</h2><p>
இறைவனின் பேரருளாலும், கொடையாளர்கள், மருத்துவ வல்லுநர்கள் மற்றும் தன்னார்வலர்களின் தாராள மனதாலும், தமது 200ஆவது உயிர் காக்கும் அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளதாக அமைப்பினர் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a02dc6bf-8c73-4914-bdc7-f0c7968182f9/26-6a63a0cfc9503.webp' /></p><p>

இந்தக் கடினமான பயணத்தில் உறுதுணையாகவும் பலமாகவும் இருக்கும் அனைத்துக் கருணை உள்ளங்களுக்கும் தமது ஆழ்ந்த மற்றும் பணிவான நன்றிகளை அவர்கள் உரித்தாக்கியுள்ளனர்.
</p><p>
அத்துடன், அறுவை சிகிச்சையை வெற்றிகரமாகச் செய்து முடித்த Dr. காந்திஜி, Dr. லூஷாந்தா, Dr. அருள்நிதி ஆகியோருக்கும், லங்கா - மட்டக்களப்பு மருத்துவமனைகளின் நிர்வாகம் மற்றும் மருத்துவக் குழு உறுப்பினர்களுக்கும் தங்களது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துள்ளனர்.
</p><p>மக்களின் நம்பிக்கையே எங்களது நோக்கம், இணைந்து செயல்பட்டு, நாம் தொடர்ந்து பல உயிர்களைக் காப்பாற்றுவோம் என்றும் குறித்த அமைப்பினர் உறுதியளித்துள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-24T17:29:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[மஹிந்த வீட்டில் மின்சாரத்தை துண்டிக்காது எனது வீட்டில் துண்டித்தது ஏன் என கோரி தொடரப்பட்ட வழக்கு குறித்து நீதிமன்றின் உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/lawyer-filles-case-against-mahinds-utility-bill-1784913369"></link>
            <id>https://tamilwin.com/article/lawyer-filles-case-against-mahinds-utility-bill-1784913369</id>
            <summary type="text">&amp;nbsp;முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் வீட்டில் மின் கட்டண நிலுவை இருந்த போது மின்சாரத்தை துண்டிக்காது தமது வீட்டில் மின் கட்டண நிலுவையை காரணம் கா...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் வீட்டில் மின் கட்டண நிலுவை இருந்த போது மின்சாரத்தை துண்டிக்காது தமது வீட்டில் மின் கட்டண நிலுவையை காரணம் காட்டி ஏன் மின்சாரம் துண்டிக்கப்பட்டது என நபர் ஓருவர் உச்ச நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
</p><p>இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் வீராக்கெட்டிய இல்லத்தில் 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற அவரது மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்‌சவின் திருமண விழாவிற்காகப் பயன்படுத்தப்பட்ட மின்சாரத்திற்கான கட்டணத்தை செலுத்தத் தவறியமை தொர்பில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது.
</p><p>இந்த விடயம் மக்களின் அடிப்படை மனித உரிமைகளை மீறும் செயலாகும் எனத் தீர்ப்பளிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவை எதிர்வரும் டிசம்பர் 04-ஆம் திகதி விசாரிப்பதற்கு உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1a7c2482-add6-4ea3-ac98-fd7e86f2b596/26-6a639ddab658c.webp' /></p><p> </p><p>
இம்மனு ஏ.எச்.எம்.டி. நவாஸ் மற்றும் சம்பத் அபேகோன் ஆகிய உச்ச நீதிமன்ற நீதியரசர்கள் அமர்வு முன்னிலையில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.</p><p> 
விசாரணையின் போது கருத்துக்களைக் கவனத்திற் கொண்ட நீதிபதிகள் அமர்வு, இலங்கை மின்சார சபை (CEB) தற்போது மறுசீரமைப்பிற்கு உட்படுத்தப்பட்டு வருவதால், அதற்குப் பதிலாக உருவாகியுள்ள பதிலீட்டு நிறுவனத்தை இம்மனுவின் எதிர்மனுதாரராகச் சேர்ப்பதற்கு மனுதாரர் தரப்பிற்கு அனுமதி வழங்கியது. </p><p>
இதனைத் தொடர்ந்து, இந்த மனு மீதான விசாரணையை டிசம்பர் 04-ஆம் திகதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.</p><p>
சட்டத்தரணி விஜித குமார என்பவரால் இந்த அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷவின் திருமண விழா 2019-ஆம் ஆண்டு செப்டம்பர் 12 முதல் 15 வரை மஹிந்த ராஜபக்‌ஷவின் வீராக்கெட்டிய இல்லத்தில் நடைபெற்றது.</p><p> 
இந்த விழாவிற்காகப் பயன்படுத்தப்பட்ட மின்சாரத்திற்கு ரூபா சுமார் 26.8 லட்சம் ரூபாய் கட்டணமாக செலுத்தப்பட வேண்டியிருந்தது. </p><p>
செப்டம்பர் 12 முதல் 15 வரை வீராக்கெட்டிய இல்லம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளுக்குப் பாதுகாப்பு விளக்குகள் வழங்குமாறு அப்போதைய மின்சக்தி அமைச்சரிடம் நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி. சானக்க கோரிக்கை விடுத்திருந்தார்.</p><p> 
இதற்கமைய மின்சாரம் வழங்கப்பட்டதாகவும், அதற்கான கட்டணத்தை ராஜபக்‌ச குடும்பத்தினர் செலுத்துவார்கள் எனக் கூறப்பட்ட போதிலும், நீண்டகாலமாக அத்தொகை செலுத்தப்படாமல் நிலுவையில் வைக்கப்பட்டது.</p><p> 
எதிர்மனுதாரர்கள் தங்களது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி இலவசமாக மின்சாரத்தைப் பெற்றுக்கொண்டதாக மனுதாரர் குற்றம்சாட்டியுள்ளார். </p><p>
சாதாரண குடிமகன் தனது வீட்டில் ரூபா 7,390 மாதக் கட்டணத்தைச் செலுத்தத் தவறியதற்காக உடனடியாக மின் இணைப்பைத் துண்டித்த மின்சார சபை, லட்சக்கணக்கான ரூபாய் நிலுவை வைத்திருந்த வீராக்கெட்டிய இல்லத்தின் மின்சாரத்தைத் துண்டிக்கத் தவறியது சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற கொள்கைக்கு முரணானது என மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>மின்சார சபையின் இந்த பாரபட்சமான செயல்பாடு, அரசியலமைப்பின் 12(1) பிரிவின் கீழ் உறுதி செய்யப்பட்டுள்ள மக்களின் அடிப்படை மனித உரிமைகளை மீறுவதாகும் என அறிவிக்குமாறு மனுதாரர் நீதிமன்றத்தைக் கேட்டுக்கொண்டுள்ளார். </p><p>
இதேவேளை, மறைந்த முன்னாள் ராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த உயிரிழப்பதற்கு முன்னர் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கையில், நாமல் ராஜபக்‌ஷவின் திருமண விழாவிற்கான நிலுவையில் இருந்த மின்சாரக் கட்டணத்தைத் தாம் செலுத்திவிட்டதாகக் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-24T17:24:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வரிச்சுமையால் திணறும் மக்கள்! அரசுக்கு ஆபத்தாகும் எதிர்காலம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/people-struggling-tax-burden-government-sl-anura-1784908214"></link>
            <id>https://tamilwin.com/article/people-struggling-tax-burden-government-sl-anura-1784908214</id>
            <summary type="text">இந்த பிராந்தியத்திலேயே மிகவும் அளவுக்கு அதிகமான வரிச்சுமையை கொண்ட நாடாக இலங்கை இருப்பாதாக கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர் கோ.அமிர்தலிங்கம் தெரிவித்து...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்த பிராந்தியத்திலேயே மிகவும் அளவுக்கு அதிகமான வரிச்சுமையை கொண்ட நாடாக இலங்கை இருப்பாதாக கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர் கோ.அமிர்தலிங்கம் தெரிவித்துள்ளார்.</p><p>அத்தோடு, நாட்டுமக்கள் மீது கடுமையான வரிச்சுமை இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p>மேலும், அண்டை நாடான இந்தியாவுடன் ஒப்பிடுகையில் இலங்கையின் வரிச்சுமை அதிகமாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>சர்வதேச நாணயநிதியம் நாட்டிற்கு வருகை தரும் போது இலங்கை பொருளாதாரம் மேம்பாடு அடைவதும் அதன்பிறகு நீண்ட காலத்தில்&nbsp;சர்வதேச நாணயநிதியம் நாட்டிற்கு வருகை தந்ததால் எந்த விதமான பெரிய மாற்றமும் ஏற்படவில்லை என்பதையும் ஒரு ஆய்வில் மூலம் கண்டறிந்துள்ளதாகவும் அவர் கூறினார்.</p><p>மேலும், இந்த அரசாங்கம் மட்டுமல்ல, கடந்த கால அரசாங்கங்களும் நீண்ட காலத்தில் மிகப்பெரிய நன்மையை இலங்கைக்கு கொடுக்கவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.</p><p>இந்த விடயம் தொடர்பான விரிவான தகவல்களை ஊடறுப்பு நிகழ்ச்சியில் காணலாம்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/wSySGE4DOZE" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-24T17:17:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[கைதான தென் மாகாண முன்னாள் பிரதம செயலாளருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/ex-southern-chief-secretary-faces-court-order-1784912579"></link>
            <id>https://jvpnews.com/article/ex-southern-chief-secretary-faces-court-order-1784912579</id>
            <summary type="text">ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட முன்னாள் தென் மாகாண பிரதான செயலாளரான ரன்னுளு சந்திரசிறி டி சொய...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட <a href="https://jvpnews.com/article/forme-southern-provincial-chief-secretary-arrested-1784891577" target="_blank">முன்னாள் தென் மாகாண பிரதான செயலாளரா</a>ன ரன்னுளு சந்திரசிறி டி சொய்சாவை கொழும்பு நீதிவான் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை (24) பிணையில் விடுவித்தது.</p><p style="text-align: justify; ">

அதற்கமைய தலா 10 இலட்சம் ரூபா பெறுமதியான இரு சரீரப் பிணைகள் விதித்து நீதிவான் பிணை வழங்கி வெள்ளிக்கிழமை (24) உத்தரவிட்டார்.

மேலும் சந்தேகநபருக்கு வெளிநாடு செல்வதற்கும் நீதிவான் இதன்போது பயணத்தடை விதித்து பிணையில் விடுவித்திருந்தார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2484e216-0cc0-48bd-8270-3568eb41cd30/26-6a639ac589eb8.webp' /></p><h2 style="text-align: justify; ">பிணையில் விடுதலை</h2><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
தென் மாகாண அபிவிருத்தி அதிகார சபையினால் 2019 ஆம் ஆண்டில் 16.5 மில்லியன் ரூபா தென் மாகாண சபை உறுப்பினர்களின் நிதி ஒதுக்கீட்டைப் பயன்படுத்தி, தென் மாகாணத்தின் பொது தன்னார்வ தொண்டர் சங்கங்களுக்கு நாற்காலிகளை வழங்கும் திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட்டது.
</p><p style="text-align: justify; ">
குறித்த திட்டத்தின் போது, உரிய கொள்முதல் நடைமுறைகளிலிருந்து விலகி, ஒரு குறிப்பிட்ட தயாரிப்பு நிறுவனத்துக்கு சாதகமாக செயற்பட்டமை மற்றும் அதன் மூலம் அரசாங்கத்துக்கு நட்டத்தை ஏற்படுத்தப்பட்டுள்ளதாக சந்தேகநபருக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணைப் பிரிவு குற்றம்சாட்டியுள்ளது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">இச்சம்பவம் தொடர்பில் வெள்ளிக்கிழமை (24) கைது செய்யப்பட்ட முன்னாள் பிரதம செயலாளர், கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து பிணையில் விடுவிக்கப்பட்டார்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-07-24T17:03:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜனநாயகன் முதல் நாள் வசூல்.., எத்தனை கோடிகள் தெரியுமா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/how-much-did-vijays-jananayagan-earn-on-day-one-1784891125"></link>
            <id>https://manithan.com/article/how-much-did-vijays-jananayagan-earn-on-day-one-1784891125</id>
            <summary type="text">முதல்வர் விஜயின் கடைசி திரைப்படமான ஜனநாயகனின் முதல் நாள் வசூல் எவ்வளவு என்பது குறித்து பார்க்கலாம்.
ஜனநாயகன்&amp;nbsp;திரைப்படம்  
நடிகர் விஜய்யின் 69வத...</summary>
            <content type="html"><![CDATA[<p>முதல்வர் விஜயின் கடைசி திரைப்படமான ஜனநாயகனின் முதல் நாள் வசூல் எவ்வளவு என்பது குறித்து பார்க்கலாம்.
</p><h2>ஜனநாயகன்&nbsp;திரைப்படம் </h2><p> 
நடிகர் விஜய்யின் 69வது திரைப்படமான ஜனநாயகன் நேற்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது.</p><p> 

கே.வி.என். புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சுமார் ரூ.500 கோடி பட்ஜெட்டில் இந்த படத்தை தயாரித்துள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e1666b96-5caf-433d-bea8-2eb632732ec1/26-6a6346f751ee2.webp' /></p><p>மேலும், அனிருத் இசையமைப்பில் வெளியான இந்த படத்தில், பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். </p><p> 

இந்நிலையில், ஜனநாயகனின் முதல் நாள் வசூல் எவ்வளவு என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
</p><h2>
எத்தனை கோடி வசூல்?
</h2><p>
வர்த்தக கண்காணிப்பு நிறுவனம் வெளியிட்ட தகவலின்படி, ஜனநாயகன் திரைப்படம் இந்தியாவில் மொத்தமாக ரூ.48.27 கோடியும், நிகரமாக ரூ.41 கோடியும் வசூலித்துள்ளது. </p><p>

மேலும், வெளிநாடுகளில் ரூ.30 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இதன்மூலம் இப்படத்தின் உலகளாவிய முதல் நாள் வசூல் ரூ.78.27 கோடியாக உயர்ந்துள்ளது.</p><p>
இந்தி மொழியில் ரூ.1.75 கோடியும், தெலுங்கில் ரூ.2.75 கோடியும் முதல் நாள் வசூல் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p>

முதல் நாளில் ரூ.50 கோடிக்கும் அதிகமாக வசூலித்த தமிழ் திரைப்படங்களின் பட்டியலிலும் ஜனநாயகன் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-24T17:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[டொராண்டோவில் துப்பாக்கிச் சூடு: பெண் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/woman-shot-dead-in-etobicoke-toronto-1784900304"></link>
            <id>https://canadamirror.com/article/woman-shot-dead-in-etobicoke-toronto-1784900304</id>
            <summary type="text">கனடாவின் டொராண்டோ நகரில் உள்ள எட்டோபிகோக் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக டொராண்டோ பொலிஸார் தெரிவித...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் டொராண்டோ நகரில் உள்ள எட்டோபிகோக் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக டொராண்டோ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>ஹம்பர்வுட் மற்றும் ரெக்ஸ்டேல் புலிவார்ட்ஸ் சந்திப்புக்கு அருகிலுள்ள குடியிருப்பு வீதியொன்றில் காலை 7:00 மணியளவில் இத்துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது.
</p><p>தகவலறிந்து பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்தபோது, துப்பாக்கிச்சூட்டு காயங்களுடன் காணப்பட்ட பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c057ffe7-db27-4da3-8b46-141d4427b222/26-6a636ad20cd97.webp' /></p><p>உயிரிழந்த பெண்ணின் வயது அல்லது இச்சம்பவத்திற்கு வழிவகுத்த காரணம் குறித்து இதுவரை தகவல்கள் வெளியாகவில்லை.
பொலிஸார் வருவதற்கு முன்னரே சந்தேகநபர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். </p><p>அவர் குறித்த அடையாளங்களோ அல்லது விவரங்களோ இதுவரை வெளியிடப்படவில்லை.</p><p>
இக்கொலை வழக்கை கொலை வழக்கு விசாரணைப் பிரிவு ஏற்று தீவிரமாக விசாரித்து வருகிறது.
விசாரணைகள் காரணமாக மார்னிங் ஸ்டார் டிரைவ் மற்றும் ரெக்ஸ்டேல் புலிவார்ட் இடையேயான ஹம்பர்வுட் புலிவார்ட் பகுதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.</p><p>
இச்சம்பவம் தொடர்பான தகவல்கள் ஏதேனும் தெரிந்தால், 416-808-2222 என்ற எண்ணில் பொலிஸாரைத் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-24T16:46:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பிரதேசத்தில் துயரத்தை ஏற்படுத்திய முன்னாள் பெண் போராளியின் மரணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/former-female-combatant-dies-of-cancer-1784899272"></link>
            <id>https://jvpnews.com/article/former-female-combatant-dies-of-cancer-1784899272</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;முல்லைத்தீவு -விசுவமடு பிரதேசத்தில் முன்னாள் பெண் போராளி ஒருவர் புற்றுநோய் காரணமாக உயிரிழத சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவத்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;முல்லைத்தீவு -விசுவமடு பிரதேசத்தில் முன்னாள் பெண் போராளி ஒருவர் புற்றுநோய் காரணமாக உயிரிழத சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><p>

சம்பவத்தில் புன்னைநீராவி விசுவமடு பிரதேசத்தை சேர்ந்த 52 வயதான பத்மாவதி சந்திரசேகர் என்பவரே கடந்த 22 ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7d082798-ee7c-4d71-8f24-2836c3cb51b5/26-6a6366c9d8eeb.webp' /></p><p>

இந் நிலையில்&nbsp; முன்னாள் பெண் போராளியின் மரணத்திற்கு பலரும் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-24T16:44:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[சீனா மற்றும் ரஷ்யாவிற்கு டிரம்ப் விடுக்கும் கடும் எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/trump-warns-china-russia-1784911457"></link>
            <id>https://tamilwin.com/article/trump-warns-china-russia-1784911457</id>
            <summary type="text">&amp;nbsp;ஈரான் போர் தொடர்பில் சீனா மற்றும் ரஷ்யாவிற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அமெரிக்க-ஈரான் நாடுகளுக்கு இட...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;ஈரான் போர் தொடர்பில் சீனா மற்றும் ரஷ்யாவிற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.</p><p>
அமெரிக்க-ஈரான் நாடுகளுக்கு இடையில் தற்பொழுது நடைபெற்று வரும் போரில் சீனாவோ அல்லது ரஷ்யாவோ பங்கேற்கவில்லை என்று தாம் நம்புவதாக அவர் தெரிவித்துள்ளார். </p><p>
எனினும், அந்த நாடுகள் இதில் தலையிட்டால் அது அவர்களுக்கு "மிகவும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்" என அவர் எச்சரித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dca82ed2-f194-45d2-915c-e556069fbe42/26-6a63966325f74.webp' /></p><p> </p><p>
இது குறித்து தமது 'ட்ரூத் சோஷியல்' (Truth Social) சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள டிரம்ப், சீனா மற்றும் ரஷ்ய அதிபர்களுடனான பேச்சுவார்த்தைகளைச் சுட்டிக்காட்டியுள்ளார். </p><p>
சீனாவின் பெய்ஜிங் நகரில் அண்மையில் நடைபெற்ற சந்திப்பின் போது, ஈரானுக்கு எந்தச் சூழ்நிலையிலும் ஆயுதங்களை வழங்கவோ அல்லது விற்பனை செய்யவோ போவதில்லை என ஜனாதிபதி ஷி ஜின்பிங் தம்மிடம் உறுதியளித்தார் எனவும் இதில் சீன நிறுவனங்களும் அடங்கும்எனவும் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். </p><p>
அதேபோல, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினும் ஈரானுக்கு ஆயுதங்களை விற்கப் போவதில்லை என் கூறியுள்ளதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். </p><p>
சிலவேளகைளில் சீனாவோ அல்லது இதில் ஈடுபட்டால், அது அவர்களுக்கு மிகவும் மோசமானதாக முடியும். நிச்சயம் அது அவர்களின் நலனுக்கு உகந்ததாக இருக்காது எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.</p><p>
கடந்த பிப்ரவரி மாதம் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் இணைந்து ஈரானின் உயர்மட்ட அதிகாரிகள் மற்றும் அந்நாட்டின் உச்ச தலைவரைக் இலக்கு வைத்து நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து, அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே போர் வெடித்தது.</p><p> 
இப்போரின் தொடக்கத்தில் வளைகுடா பகுதியில் உள்ள சி.ஐ.ஏ மையங்கள் மீது ஈரான் நடத்திய தாக்குதல்களுக்கு, ரஷ்யா இலக்கு தொடர்பான தகவல்களையோ அல்லது ட்ரோன் தொழில்நுட்பங்களையோ வழங்கி உதவியதா என்பது குறித்து அமெரிக்க உளவுத்துறை விசாரணை நடத்தியதாக தகவல்கள் வெளியாகின.</p><p> 
எனினும், இது குறித்த அறிக்கைக்கு கருத்து தெரிவிக்க ரஷ்ய அரசாங்கம் மறுத்துவிட்டது. 
ஈரானுக்கு ஆயுதங்களைக் கொள்முதல் செய்ய உதவியதற்காக ரஷ்யா மற்றும் சீனாவைச் சேர்ந்த நபர்கள் மற்றும் நிறுவனங்கள் மீது அமெரிக்கா ஏற்கனவே பல்வேறு தடைகளை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-24T16:44:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thevanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரசுக்கு சொந்தமான காட்டு பகுதிக்குள் அத்துமீறிய நடவடிக்கை.. 9 பேர் அதிரடி கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/nine-people-arrested-trespassing-govt-forests-1784910633"></link>
            <id>https://tamilwin.com/article/nine-people-arrested-trespassing-govt-forests-1784910633</id>
            <summary type="text">கிளிநொச்சி மாவட்டத்தின் அக்கரையான் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கண்ணகி புறம்
பகுதியின் அரச காட்டுக்குள் அத்துமீறி கற்றாழை செய்கையில் ஈடுபட்டதுடன் அனுமதி...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிளிநொச்சி மாவட்டத்தின் அக்கரையான் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கண்ணகி புறம்
பகுதியின் அரச காட்டுக்குள் அத்துமீறி கற்றாழை செய்கையில் ஈடுபட்டதுடன் அனுமதியின்றி கட்டடம் அமைத்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.&nbsp;</p><p>அரசிற்கு சொந்தமான குறித்த பகுதி தொடர்பாக நீதிமன்ற வழக்கு
நடைபெற்று வரும் நிலையில் எவரும் செல்வதற்கு அனுமதி
மறுக்கப்பட்டிருந்தது.&nbsp;</p><p></p><h2>அதிகாரிகளுக்கு&nbsp;இடையூறு </h2><p>இந்நிலையில், அத்துமீறி கட்டட அபிவிருத்தி
நடவடிக்கையில் ஈடுபட்டமை தொடர்பாக வனவள திணைக்களத்தினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/22fe2ee1-6e33-42db-bfdb-c264c9709172/26-6a6395a316260.webp' /></p><p>இதன்போது, அதிகாரிகளின் பணிக்கு இடையூறு விளைவித்ததன் காரணமாக சிறப்பு
அதிரடிப்படையினர் வரவழைக்கப்படுள்ளனர்.&nbsp;</p><p>இதனை அடுத்து 09 சந்தேக நபர்கள் கைது
செய்யப்பட்டு, பொலிஸ்
நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.</p><p>சந்தேக நபர்களை கிளிநொச்சி
மாவட்ட நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அக்கரையான்
பொலிஸார் தெரிவிக்கின்றனர்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-24T16:41:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் ; 1200 கைதிகளிடம் வாக்குமூலம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/negombo-prison-clash-triggers-investigation-1784911069"></link>
            <id>https://jvpnews.com/article/negombo-prison-clash-triggers-investigation-1784911069</id>
            <summary type="text">நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதுவரையில் 1200 கைதிகளிடம் வாக்குமூல...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதுவரையில் 1200 கைதிகளிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளன. </p><p style="text-align: justify;">சிறைச்சாலை உத்தியோகத்தர் வசமிருந்த ஆயுதங்கள் நீதிமன்றில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.</p><p style="text-align: justify;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c70f31df-74c7-4151-877f-2f8d73547359/26-6a6394df3a5f0.webp' /></p><h2 style="text-align: justify; ">விசாரணைகள்&nbsp;</h2><p style="text-align: justify;">விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்ற நிலையில் அனுமானத்தின் அடிப்படையில் எவர் மீதும் குற்றச்சாட்டுக்களை முன்வைக்க முடியாது என பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
</p><p style="text-align: justify;">அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் மற்றும் பதிவாகிய உயிரிழப்புக்கள் கவலைக்குரியது. </p><p style="text-align: justify;">கடந்த காலங்களில் அரச அனுசரணையுடன் சிறைச்சாலைகளுக்குள் மோதல்கள் உருவாக்கப்பட்டன. ஆனால் இந்த சம்பவம் அவ்வாறானதல்ல,


போதைப்பொருளுக்கு எதிராக கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் முதல் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.</p><p style="text-align: justify;">அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்தின் பணிகள் விரைவுப்படுத்தப்பட்டுள்ளன. நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் சம்பவமானது போதைப்பொருள் குற்றத்தின் விளைவாகும்.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;">போதைப்பொருள் வலைப்பின்னலுடன் தொடர்புடைய தரப்பினருக்கும், அதற்கு எதிர்ப்பு தெரிவித்த தரப்பினருக்கும் இடையிலான முரண்பாடு இவ்வாறு மோதலாக உருவெடுத்தது.

</p><p style="text-align: justify;">
நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் சம்பவத்துக்கு நீதியமைச்சர் மாத்திரம் பொறுப்புக்கூற வேண்டிய அவசியம் இல்லை. </p><p style="text-align: justify;">நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.. இதுவரையில் 1200 கைதிகளிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளன.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;">&nbsp;சிறைச்சாலைகளில் இவ்வாறான சம்பவங்கள் எதிர்காலத்தில் தோற்றம் பெறாமல் இருப்பதற்குரிய கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. போதைப்பொருளுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளுக்கு எதிராகவே நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் திட்டமிட்ட வகையில் இடம்பெற்றது.</p><p style="text-align: justify;">இந்த சம்பவம் தொடர்பான உண்மை விரைவில் வெளிப்படுத்தப்படும் என்றார்.</p>]]></content>
            <updated>2026-07-24T16:37:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[நூறாண்டுகள் பழைமையான புதிருக்கு விடை - இரண்டு சீனர்கள் வரலாற்றுச் சாதனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/answer-century-old-puzzle-2-history-winning-1784909658"></link>
            <id>https://tamilwin.com/article/answer-century-old-puzzle-2-history-winning-1784909658</id>
            <summary type="text">கணிதத் துறையின் நோபல் பரிசாகக் கருதப்படும் புகழ்பெற்ற ஃபீல்ட்ஸ் மெடல் விருதை வரலாற்றிலேயே முதன்முறையாக இரண்டு சீனர்கள் வென்று சாதனை படைத்துள்ளனர்.

...</summary>
            <content type="html"><![CDATA[<p>கணிதத் துறையின் நோபல் பரிசாகக் கருதப்படும் புகழ்பெற்ற ஃபீல்ட்ஸ் மெடல் விருதை வரலாற்றிலேயே முதன்முறையாக இரண்டு சீனர்கள் வென்று சாதனை படைத்துள்ளனர்.
</p><p>
சீனாவைச் சேர்ந்த 35 வயதான ஹோங் வாங்கி மற்றும் 37 வயதான யு டெங் ஆகிய
இருவருக்கும் அமெரிக்காவில் நடைபெற்ற விழாவில் இவ்விருது வழங்கப்பட்டது.</p><p>

100 ஆண்டுகளுக்கும் மேலாகத் தீர்க்கப்படாமல் இருந்த கடினமான கணிதப்
புதிர்களுக்குத் தீர்வு கண்டதற்காக இவர்களுக்கு இந்த உயரிய விருது
கிடைத்துள்ளது.</p><p></p><h2>உலகளாவிய கணித வல்லுநர்கள்</h2><p>

இதில் ஹோங்வாங்கி, 1917இல் ஜப்பானிய கணிதவியலாளர் சோய்ச்சி காக்கியா
முன்வைத்த காக்கியா ஊசிப் புதிருக்கு முப்பரிமாண அடிப்படையில் விடை
கண்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/eedcce3f-8001-421e-b791-22d3ec9c77a9/26-6a63917a2e5ea.webp' /></p><p>

ஃபீல்ட்ஸ் மெடல் விருதைப் பெறும் வரலாற்றின் 3ஆவது பெண்மணி என்ற பெருமையை
ஹாங் வாங்கி பெற்றுள்ளதால், இச்சாதனை சீனாவில் பெரும் கொண்டாட்டமாக
மாறியுள்ளது.
</p><p>
6சீனாவில் பிறந்து அமெரிக்கா மற்றும் பிரான்ஸில் உயர்கல்வி கற்ற இவ்விரு
பேராசிரியர்களுக்கும் உலகளாவிய கணித வல்லுநர்கள் தங்களது வாழ்த்துகளைத்
தெரிவித்து வருகின்றனர்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-24T16:24:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்க அணுசக்தி விஞ்ஞானிகளின் மின்னஞ்சல்களை குறிவைத்த ரஷ்யா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/russia-targeting-the-emails-1784892197"></link>
            <id>https://news.lankasri.com/article/russia-targeting-the-emails-1784892197</id>
            <summary type="text">ரஷ்ய ஹேக்கர்கள் குழு ஒன்று, கடந்த ஓராண்டாக அணுசக்தி விஞ்ஞானிகள், பாதுகாப்புத் துறை ஒப்பந்ததாரர்கள் மற்றும் அரசு ஊழியர்களைக் குறிவைத்து இணைய உளவு நடவடி...</summary>
            <content type="html"><![CDATA[<p>ரஷ்ய ஹேக்கர்கள் குழு ஒன்று, கடந்த ஓராண்டாக அணுசக்தி விஞ்ஞானிகள், பாதுகாப்புத் துறை ஒப்பந்ததாரர்கள் மற்றும் அரசு ஊழியர்களைக் குறிவைத்து இணைய உளவு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.</p><h2>பாதுகாப்பு அமைப்புகள்</h2><p>
</p><p>அந்த ஹேக்கர்களின் 
இலக்குகள், அணுக்கரு இணைவுத் தொழில்நுட்பம் மற்றும் உக்ரைன் மீதான போரில் ரஷ்யாவுக்கு உதவக்கூடிய உளவுத் தகவல்கள் ஆகியவற்றின் மீது இருந்ததும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b03c1b99-8616-44ef-a5d0-47d9f9af021d/26-6a634c0fa5642.webp' /></p><p> </p><p>இதில், சில நடவடிக்கைகளை ஆய்வு செய்த அமெரிக்க மின்னஞ்சல் பாதுகாப்பு நிறுவனமான 'புரூஃப் பாயிண்ட்' (Proofpoint), அமெரிக்காவில் உள்ள அணுசக்தி நிலையங்கள் மற்றும் பாதுகாப்புத் துறை சார்ந்த தொழில்துறை தளங்கள் பயன்படுத்தும் மின்னஞ்சல் சேவையகங்களை ஹேக்கர்கள் குறிவைத்ததாகத் தெரிவித்துள்ளது. </p><p>அமெரிக்கா மற்றும் அதன் பன்னிரண்டுக்கும் மேற்பட்ட நட்பு நாடுகளின் உளவு மற்றும் பாதுகாப்பு அமைப்புகள் விடுத்த ஆலோசனையானது, நேட்டோ நாடுகளில் பயன்படுத்துவதற்கு முன்பு உக்ரைனில் ஹேக்கிங் நுட்பங்களைச் சோதித்துப் பார்க்கும் ஒரு தொடர்ச்சியான ரஷ்ய உளவு நடவடிக்கை குறித்து எச்சரித்தது.</p><p></p><p> </p><p>மேலும், புதிதாக பாதிக்கப்பட்டவர்கள் முன்வந்தால், ரஷ்ய உளவாளிகள் எந்த வகையான உளவுத் தகவல்களைச் சேகரிக்க முடிந்தது என்பது குறித்த பாதிப்பு மதிப்பீட்டை மேற்கொள்ள அமெரிக்காவிற்கும் அதன் நட்பு நாடுகளுக்கும் இந்த ஆலோசனை உதவக்கூடும் என்றே தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>ரஷ்ய ஹேக்கர்கள் ஒரு அரிதான மென்பொருள் ஒன்றைப் பயன்படுத்தியுள்ளனர்; இதைப் பொறுத்தவரை, பாதிக்கப்பட்ட மின்னஞ்சல் அமைப்பைக் கொண்ட ஒருவர் எந்தவொரு இணைப்பையும் (link) கிளிக் செய்யத் தேவையில்லை, மாறாக அந்த மின்னஞ்சலைத் திறந்தாலே போதுமானது.</p><h2>விரிவான எச்சரிக்கை</h2><p> </p><p>இந்தத் தாக்குதலால் பாதிக்கப்பட்டவரின் மூன்று மாத கால மின்னஞ்சல் பரிமாற்றங்களையும், ஒரு முழு நிறுவனத்தின் மின்னஞ்சல் கோப்பகத்தையும் திருட முடியும் என்று ஃபெடரல் ஆலோசனைக் குறிப்பு தெரிவித்துள்ளது. </p><p>இதனிடையே, குறிப்பிட்ட விவரங்களை வெளியிடாமல், அமெரிக்காவும் அதன் நேச நாடுகளும் தெரிவித்த தகவலின்படி, இந்த இணையவழி நடவடிக்கையில் ஃபெடரல் மற்றும் உள்ளூர் அரசுகள், சட்ட அமலாக்கத் துறைகள், அத்துடன் பாதுகாப்பு, கல்வி மற்றும் எரிசக்தித் துறைகள் ஆகியவை குறிவைக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d6961954-2699-4dea-b60d-6f072e6d820f/26-6a634c105c054.webp' /></p><p> சைபர் பாதுகாப்பு நிறுவனங்களால் வெளியிடப்படாத தகவல்களை உள்ளடக்கிய இந்த விரிவான எச்சரிக்கையானது, ரஷ்ய உளவுப் பிரிவு குறித்த பரந்த அளவிலான உளவுத் தகவல்களை அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளின் உளவு அமைப்புகள் சேகரித்துள்ளன என்பதை உணர்த்துகிறது. </p><p>சட்ட அமலாக்கத் துறையினரும் இந்த ஹேக்கர்களைத் தேடி நடவடிக்கை எடுத்துள்ளனர். தாய்லாந்து அதிகாரிகள் இக்குழுவைச் சேர்ந்தவர் என்று சந்தேகிக்கப்படும் ஒருவரை நவம்பர் மாதம் கைது செய்தனர்; 30 வயது கடந்த அந்த ரஷ்ய நபர் பின்னர் நாடு கடத்தப்பட்டு, கடந்த மாதம் பாஸ்டனில் நீதிமன்றத்தில் முதன்முறையாக ஆஜர்படுத்தப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-24T16:16:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[80 ஆயிரத்தை கடந்த நோயாளர்களின் எண்ணிக்கை ; ஆபத்தாகும் நிலைமை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/patient-count-surpasses-80-000-1784909131"></link>
            <id>https://jvpnews.com/article/patient-count-surpasses-80-000-1784909131</id>
            <summary type="text">நாட்டில் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 59 ஆக உயர்வடைந்துள்ளதுடன், இதுவரை அடையாளம் காணப்பட்ட டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையும் 80 ஆயிர...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">நாட்டில் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 59 ஆக உயர்வடைந்துள்ளதுடன், இதுவரை அடையாளம் காணப்பட்ட டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையும் 80 ஆயிரத்தைக் கடந்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
</p><p style="text-align: justify; ">
நாடளாவிய ரீதியில் ஜனவரி முதலாம் திகதி முதல் வியாழக்கிழமை (23) வரையான காலப்பகுதியில் மாத்திரம் சுமார் 80 ஆயிரத்து 114 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d0f8c903-dfd2-49ed-ba4c-d1262efbc39b/26-6a638d4ca6229.webp' /></p><h2 style="text-align: justify; "><p><span style="color: inherit; font-size: 1.75rem;">நோயாளர்கள் எண்ணிக்கை</span></p></h2><p> </p><p style="text-align: justify; ">இம்மாதத்தில் கடந்த 23 நாட்களில் 24,739 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. அந்தவகையில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை நாளாந்தம் வெகுவாக அதிகரித்து வருவதைக் காணக்கூடியதாக உள்ளது.</p><p style="text-align: justify; ">
அத்தோடு டெங்கு காய்ச்சல் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 59 ஆக உயர்வடைந்துள்ளதோடு, டெங்கு பரவலைக் கருத்தில் கொண்டு 175 சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுக்குட்பட்ட பகுதிகள் அதி உயர் டெங்கு அபாயமிக்க பகுதிகளாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. </p><p style="text-align: justify; ">மேல் மாகாணத்தில் 42,414 (52.84 சதவீதம்) நோயாளர்கள் பதிவாகியுள்ளதோடு, தென்மாகாணத்தில் 12,154 (15.17 சதவீதம்) நோயாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">

மேலும் கம்பஹா, கொழும்பு, மாத்தறை, கண்டி, களுத்துறை, இரத்தினபுரி, காலி, குருநாகல், அம்பாந்தொட்டை உள்ளிட்ட மாவட்டங்களிலும் கொழும்பு மாநகரசபைக்கு உட்பட்ட பகுதிகளிலும் தொடர்ச்சியாக அதிக எண்ணிக்கையிலான டெங்கு நோயாளர்கள் பதிவாவதைக் காணக்கூடியதாக உள்ளது.</p><p style="text-align: justify; ">
இதேவேளை தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் சமூக மருத்துவ நிபுணர் பிரஷிலா சமரவீர தெரிவிக்கையில்,

நேற்றைய தினம் மாத்திரம் 198 புதிய டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். </p><p style="text-align: justify; ">இவ்வருடத்தில் இதுவரை பதிவான டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 59 ஆக உயர்வடைந்துள்ளது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">காய்ச்சல் ஏற்படுமாயின் கட்டாயமாக அவர் ஓய்வெடுப்பது அவசியம். டெங்கு நோய் உறுதிப்படுத்தப்படும் வரை தகுதியுள்ள வைத்தியர் ஒருவரை நாடி, அவரின் ஆலோசனைக்கு அமைவாக இரத்தப் பரிசோதனைகளை மேற்கொள்வதும், அவர் அறிவுறுத்தும் பட்சத்தில் வைத்தியசாலை நாடி சிகிச்சை பெறுவதும் அவசியம்.
</p><p style="text-align: justify; ">
வைத்தியர்களின் ஆலோசனைகளைப் பின்பற்றாத போதே, நோய் நிலைமை தீவிரமடைவதோடு, அதனால் உயிரிழப்புகள் ஏற்படக் கூடிய அபாயமும் நிலவுகிறது. தகுந்த நேரத்தில் உரிய மருத்துவ ஆலோசனைகளைப் பெற்றுக்கொண்டால் டெங்கு காய்ச்சலால் ஏற்படக் கூடிய மரணங்களைக் குறைத்துக்கொள்ள முடியும் என்றார்.</p>]]></content>
            <updated>2026-07-24T16:05:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறந்த அபிவிருத்தி திட்டங்கள் கொண்ட அநுரவுக்கு சுமையாகிய அரசியல் திண்டாட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/political-turmoil-burdens-anurag-1784903727"></link>
            <id>https://ibctamil.com/article/political-turmoil-burdens-anurag-1784903727</id>
            <summary type="text">தமிழ் மக்கள் சார் பிரச்சினைகளை அனுராதரப்புக்கு எடுத்துரைத்து அரசியல் நகர்வை தற்போதய தமிழ் எம்.பிக்கள் முன்னெடுத்திருக்கலாம் என முன்னாள் அமைச்சர் டக்ளஸ...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழ் மக்கள் சார் பிரச்சினைகளை அனுராதரப்புக்கு எடுத்துரைத்து அரசியல் நகர்வை தற்போதய தமிழ் எம்.பிக்கள் முன்னெடுத்திருக்கலாம் என முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
</p><p>
ஐ.பி.சி தமிழின் களம் நிகழ்ச்சியின் நேர்காணலில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே இதனை கூறியுள்ளார்.
</p><p>
மேலும் இலங்கை தொடர்பில் சிறந்த திட்டங்களை தன்வசம் வைத்துள்ள ஜனாதிபதி அதை செயற்படுத்த முடியாமல் திண்டாடிக்கொண்டிருக்கிறார் என்றும் கூறியுள்ளார்.
</p><p>
இவ்வாறு சமகால அரசியல் குறித்தும், தமிழ் மக்களுக்கான அரசியல் எதிர்பார்ப்புக்கள் குறித்தும் டக்ளஸ் மையப்படுத்திய விடயங்களை தொகுத்து வருகிறது தொடரும் காணொளி...</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/RL2gNI_wZM0" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-24T16:00:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[டிரம்பின் வரி விதிப்பிற்கு உலக நாடுகள் கடும் எதிர்ப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/completely-unjustified-how-countries-1784903542"></link>
            <id>https://canadamirror.com/article/completely-unjustified-how-countries-1784903542</id>
            <summary type="text">அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ள புதிய சுங்க வரி உயர்வு நடவடிக்கைக்கு சீனா, ஜப்பான் உள்ளிட்ட முக்கிய வர்த்தக பங்களிப்பு நாடுகள் கடும் எ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ள புதிய சுங்க வரி உயர்வு நடவடிக்கைக்கு சீனா, ஜப்பான் உள்ளிட்ட முக்கிய வர்த்தக பங்களிப்பு நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.</p><p>
குறிப்பாக, இந்த வரி உயர்வுக்கு எவ்வித நியாயமும் இல்லை என அவுஸ்திரேலிய வர்த்தக அமைச்சர் சாடியுள்ளார். </p><p>
கட்டாயத் தொழிலாளர் பயன்பாட்டைத் தடுப்பதற்கான வர்த்தகத் தடைகளை சரியாகச் செயல்படுத்தத் தவறிவிட்டதாகக் கூறி, சுமார் 60 நாடுகளின் இறக்குமதிகள் மீது 10% முதல் 12.5% வரை கூடுதல் சுங்க வரியை அமெரிக்க நிர்வாகம் வியாழக்கிழமை இரவு அறிவித்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/219f66d2-ee70-4455-ace9-682fc35f97f0/26-6a63777890c27.webp' /></p><p> 
அமெரிக்க உச்ச நீதிமன்றத் தீர்ப்பிற்குப் பிறகு டிரம்ப் தற்காலிகமாக விதித்திருந்த வரிகளின் காலக்கெடு வெள்ளிக்கிழமை நள்ளிரவு 12:01 மணிக்கு முடிந்த உடனேயே, இந்த புதிய வரிகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன. </p><p>
மாட்டிறைச்சி, தங்கம் மற்றும் தாமிரத்தின் முக்கிய ஏற்றுமதியாளரான அவுஸ்திரேலியா மீதான வரியை 12.5% ஆக அமெரிக்கா உயர்த்தியுள்ளது.</p><p> 
நவீன அடிமைமுறைக்கு எதிரான நடவடிக்கைகளை அவுஸ்திரேலியா மிகவும் தீவிரமாகவே அணுகுகிறது. இந்த கூடுதல் வரி உயர்வு முற்றிலும் நியாயமற்றது, இதைக் கைவிடுமாறு அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதியிடம் தொடர்ந்து வலியுறுத்துவோம் என வர்த்தக அமைச்சர் டான் ஃபாரெல், தெரிவித்துள்ளார்.</p><p>
12.5% வரி உயர்வு மிகுந்த ஏமாற்றமளிப்பதாகவும், வர்த்தகத்தைப் பாதிப்பதாக நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் தெரிவித்துள்ளார்.
</p><p> மேலும், அமெரிக்காவின் விசாரணையில் கட்டாயத் தொழிலாளர் பயன்பாடு தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு எந்தவொரு வலுவான ஆதாரமும் இல்லை. வரிகள் வணிகங்களுக்கான செலவுகளையும் நிச்சயமற்ற தன்மையையும் மட்டுமே அதிகரிக்கும்" என தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ளார். </p><p>
எங்களது தொழிலாளர் சட்டங்களை அமெரிக்காவுடன் ஒப்பிட்டுப் பார்த்தால், எங்களது ஊழியர்களுக்குச் சம்பளத்துடன் கூடிய விடுமுறை மற்றும் சிறந்த பணிச்சூழல் வழங்கப்படுகிறது. எனவே அமெரிக்காவின் இந்த நடவடிக்கை எவ்வித அடிப்படையுமற்றது என ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுக் கொள்கைத் தலைவர் காஜா கலாஸ் விமர்சித்துள்ளார்.</p><p>
கட்டாயத் தொழிலாளர் முறையை தாம் ஒருபோதும் ஆதரிப்பதில்லை என்று தெளிவுபடுத்தியுள்ள சிங்கப்பூர் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சு, இது தொடர்பாக அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதியுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகத் தெரிவித்துள்ளது.
ஜப்பான் ஏற்றுமதிகள் மீது விதிக்கப்பட்டுள்ள 12.5% வரியை எதிர்த்து அந்நாடு மேல்முறையீடு செய்துள்ளது.</p><p> ஏற்கனவே ஒப்புக்கொண்ட 10% வரியைத் தாண்டி கூடுதல் வரிகள் விதிக்கப்படாது என்று டிரம்ப் நிர்வாகம் உறுதியளித்திருந்ததை ஜப்பானிய அமைச்சரவை முதன்மைச் செயலாளர் மினோரு கிஹாரா சுட்டிக்காட்டினார். </p><p>
பரஸ்பர நன்மைகளைப் பேணும் வகையில் அமெரிக்காவுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்போவதாகத் தெரிவித்துள்ளது. தென் கொரியா மீதான கூட்டு வரிகள் 15%-ஐத் தாண்டக்கூடாது என அந்நாட்டு வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.</p><p>
ஒருதலைப்பட்சமாக விதிக்கப்படும் அனைத்து விதமான சுங்க வரிகளையும் சீனா எதிர்ப்பதாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சு செய்தித் தொடர்பாளர் லின் ஜியான் தெரிவித்துள்ளார். 
வரிப் போர்களும் வர்த்தகப் போர்களும் எந்தவொரு தரப்பின் நலனுக்கும் உகந்ததல்ல எனஅவர் எச்சரித்துள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-24T16:00:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[உயர் தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள பரீட்சாத்திகளுக்கு வெளியான விசேட அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/special-notice-for-gce-a-l-exam-candidates-1784907754"></link>
            <id>https://jvpnews.com/article/special-notice-for-gce-a-l-exam-candidates-1784907754</id>
            <summary type="text">2026 கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையானது எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 10ஆம் திகதி முதல் செப்டம்பர் மாதம் 05ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் உள்ள 2,532 ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">2026 கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையானது எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 10ஆம் திகதி முதல் செப்டம்பர் மாதம் 05ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் உள்ள 2,532 பரீட்சை நிலையங்களில் நடாத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகப் பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது. </p><p style="text-align: justify; ">

இம்முறை பரீட்சைக்குத் தோற்றும் பாடசாலை விண்ணப்பதாரர்களின் பரீட்சை அனுமதி அட்டைகள் (Admission Cards) ஏற்கனவே உரிய வலையக் கல்வி அலுவலகங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதுடன், அனைத்து அதிபர்களும் தமது பாடசாலைக்குரிய வலையக் கல்வி அலுவலகத்தின் பரீட்சைப் பாடத்திற்குப் பொறுப்பான பிரதி அல்லது உதவிக்கல்விப் பணிப்பாளரிடமிருந்து அவற்றைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/43c8793a-4a33-4f31-8fe2-61705570d0b5/26-6a6387ebbbd13.webp' /></p><h2 style="text-align: justify; ">அனுமதி அட்டைகள்</h2><p style="text-align: justify; "> 

தனிப்பட்ட விண்ணப்பதாரர்களின் அனுமதி அட்டைகள் அவர்களின் தனிப்பட்ட முகவரிகளுக்குத் தபால் மூலம் அனுப்பிவைக்கப் பரீட்சைத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. </p><p style="text-align: justify; ">

பாடசாலை விண்ணப்பதாரர்களின் அனுமதி அட்டைகளில் ஏதேனும் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டியிருப்பின், அதிபர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பயனர் பெயர் (Username) மற்றும் கடவுச்சொல்லைப் (Password) பயன்படுத்தி இலங்கை பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்குள் பிரவேசித்து அத்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

தனிப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கும் தமது அனுமதி அட்டைகளில் திருத்தங்கள் இருப்பின், மேற்கூறிய இணையத்தளத்திற்குப் பிரவேசித்து, தேசிய அடையாள அட்டை இலக்கத்தை உள்ளீடு செய்வதன் மூலம் அவற்றை இணையவழியில் (Online) திருத்திக்கொள்வதற்கான வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

இந்த அனுமதி அட்டைத் திருத்தப் பணிகளை மேற்கொள்ளும் காலம் ஓகஸ்ட் மாதம் 03ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணியுடன் நிறைவடையும் என்பதுடன், அந்தத் திருத்தக் காலம் எக்காரணம் கொண்டும் மீண்டும் நீடிக்கப்பட மாட்டாது என்றும் பரீட்சைத் திணைக்களம் வலியுறுத்தியுள்ளது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

இந்தப் பரீட்சை தொடர்பில் ஏதேனும் விசாரணைகள் இருப்பின், 1911 என்ற உடனடி அழைப்பு இலக்கம், 011-2784208 அல்லது 011-2784537 ஆகிய தொலைபேசி இலக்கங்கள், 011-2784422 என்ற தொலைநகல் (Fax) இலக்கம் மற்றும்<a href="gcealexamsl@gmail.com" target="_blank"> gcealexamsl@gmail.com </a>என்ற மின்னஞ்சல் முகவரி ஊடாகவும் பரீட்சைத் திணைக்களத்திடமிருந்து தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-07-24T15:44:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதிகரிக்கும் டெங்கு அச்சுறுத்தல்: ரசாயனமின்றி நுளம்புகளை விரட்டும் எளிய முறைகள் உங்களுக்கு தெரியுமா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/how-to-get-rid-of-mosquitoes-naturally-1784900414"></link>
            <id>https://manithan.com/article/how-to-get-rid-of-mosquitoes-naturally-1784900414</id>
            <summary type="text">மாலை நேரம் வந்தாலே வீட்டைச் சுற்றி நுளம்புகளின் தொல்லை ஆரம்பமாகிவிடுகிறது. சிறியதாகத் தோன்றும் இந்த நுளம்புகள், டெங்கு காய்ச்சல், மலேரியா போன்ற ஆபத்தா...</summary>
            <content type="html"><![CDATA[<p>மாலை நேரம் வந்தாலே வீட்டைச் சுற்றி நுளம்புகளின் தொல்லை ஆரம்பமாகிவிடுகிறது. சிறியதாகத் தோன்றும் இந்த நுளம்புகள், டெங்கு காய்ச்சல், மலேரியா போன்ற ஆபத்தான நோய்களை ஏற்படுத்தக்கூடியவை என்பதால் அவற்றிடம் எச்சரிக்கையாக இருப்பது மிகவும் அவசியம்.
</p><p>
தற்போது டெங்கு காய்ச்சல் அதிகரித்து வரும் நிலையில், நுளம்புகளிடமிருந்து நம்மையும் நம் குடும்பத்தினரையும் பாதுகாத்துக் கொள்வது முக்கியமான விடயமாக மாறியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/668a0758-b307-47df-be4a-e5c807a3e96f/26-6a6371a1271fc.webp' /></p><p>நுளம்புகளை விரட்ட நாம் பயன்படுத்தும் பல பொருட்களில் அதிக அளவில் ரசாயனங்கள் கலந்திருப்பதால், அவை வீட்டின் சூழலையும் நமது ஆரோக்கியத்தையும் பாதிக்கக்கூடிய வாய்ப்பு உள்ளது.

அதில் அதிகம் பயன்படுத்தப்படும் ஒன்றுதான் நுளம்பு சுருள்.</p><p></p><h2>இயற்கை வழிகள்</h2><p> நுளம்புகளை விரட்டுவதில் இது உதவினாலும், தொடர்ந்து அதன் புகையை சுவாசிப்பது உடலுக்கு பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தலாம். குறிப்பாக வீட்டில் இருக்கும் குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் இதனால் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.</p><p></p><p>
அப்படியானால், ரசாயனப் பொருட்களை தவிர்த்து இயற்கையான முறையில் நுளம்புகளை எவ்வாறு விரட்டுவது?

நம் வீட்டில் எளிதாகக் கிடைக்கும் சில இயற்கைப் பொருட்களை பயன்படுத்தி, எந்தவிதமான பக்கவிளைவுகளும் இல்லாமல் நுளம்புத் தொல்லையைக் குறைக்கும் வழிகளை இந்த காணொளி மூலம் தெரிந்துகொள்ளலாம்.</p><p><iframe width="325" height="578" src="https://www.youtube.com/embed/J2LOSjQEl9w" title="நுளம்பை விரட்டியடிக்கும் டெக்னிக்- இனி ட்ரை பண்ணி பாருங்க..! #mosquitorepellent #srilanka #wellness" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share" referrerpolicy="strict-origin-when-cross-origin" allowfullscreen></iframe></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-24T15:39:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் கறுப்பு ஜூலை நினைவேந்தல்..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/commemoration-those-massacred-black-july-1983-1784906685"></link>
            <id>https://tamilwin.com/article/commemoration-those-massacred-black-july-1983-1784906685</id>
            <summary type="text">1983 கறுப்பு யூலை கலவரத்தில் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவேந்தல்
யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம்(24) வெள்ளிக்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது.

யாழ்ப்பாணம...</summary>
            <content type="html"><![CDATA[<p>1983 கறுப்பு யூலை கலவரத்தில் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவேந்தல்
யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம்(24) வெள்ளிக்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது.</p><p>

யாழ்ப்பாணம் கோட்டை முனியப்பர் கோவில் முன்பாக நினைவேந்தல் நடைபெற்ற
நினைவேந்தல் நிகழ்வில் பொதுச் சுடர் ஏற்றப்பட்டு ஏனையவர்களும் சுடர் ஏற்றி
அஞ்சலி செலுத்தினர்.</p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-24T15:33:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கல்கரியில் காற்றுத் தரம் மிக மோசமான நிலைக்குச் சரிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/wildfire-smoke-pushes-calgary-air-quality-1784902666"></link>
            <id>https://canadamirror.com/article/wildfire-smoke-pushes-calgary-air-quality-1784902666</id>
            <summary type="text">&amp;nbsp;கனடாவின் கல்கரி நகரில் காற்றுத் தரம் மிக மோசமான நிலைக்குச் சரிந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கனடா சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறைய...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கனடாவின் கல்கரி நகரில் காற்றுத் தரம் மிக மோசமான நிலைக்குச் சரிந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கனடா சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறையின் காற்றுத் தர சுகாதாரக் குறியீடு, வெள்ளிக்கிழமை காலை 6:30 மணி நிலவரப்படி 10-பிளஸ் (10+) என்ற அளவில் பதிவாகியுள்ளது. </p><p>
இது ஆரோக்கியத்திற்கு மிகக் கடுமையான ஆபத்தை விளைவிக்கும் நிலையாகும்.
பிரிட்டிஷ் கொலம்பியா மற்றும் அமெரிக்காவின் வாஷிங்டன் மாநிலத்தில் எரிந்து வரும் காட்டுத்தீயிலிருந்து எழும் புகையே இதற்குக் காரணமாகும்.</p><p>கல்கரி மட்டுமின்றி, ஏர்ட்ரி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல பகுதிகளிலும் காற்றுத் தரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7d9e208e-0364-43de-9975-17ba10a8950b/26-6a63740b6aec0.webp' /></p><p>
</p><p>இந்தப் புகை மூட்டம் மெதுவாக அப்பகுதியை விட்டு விலகும் என்பதால், வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை முழுவதும் இப்போக்கு நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. </p><p>
வெள்ளிக்கிழமை காலையில் காற்றுத் தரக் குறியீடு தொடர்ந்து அதிகமாக இருக்கும் என்றாலும், பிற்பகலில் 'மிதமான ஆபத்து' என்ற நிலைக்குச் சற்று மேம்பட வாய்ப்புள்ளது.
எனினும், மாலையில் மீண்டும் காற்றுத் தரம் மோசமடையக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
</p><p>தற்போது கல்கரியில் சுமார் இரண்டு வார கால வெப்ப அலை நீடித்து வருகிறது. பெரும்பாலான நாட்களில் வெப்பநிலை 30 பாகை செல்சியஸை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. </p><p>வெள்ளிக்கிழமை வெப்பநிலை 32°C வரை உயரக்கூடும் என முன்னறிவிக்கப்பட்டிருந்தாலும், தடிமனான புகைமூட்டம் சூரிய ஒளியைத் தடுப்பதால் இந்நகரம் அந்த வெப்பநிலையை எட்டுவது தடைப்படலாம்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-24T15:24:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[எதிரணிகளை அடக்குவதை விட்டு குற்றங்களைக் கட்டுப்படுத்துங்கள்! நாமல் எம்.பி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/curb-opposition-crimes-namal-mp-government-1784905278"></link>
            <id>https://tamilwin.com/article/curb-opposition-crimes-namal-mp-government-1784905278</id>
            <summary type="text">எதிர்க்கட்சியினரை முடக்குவதிலேயே அரசு பிரதான கவனம் செலுத்தி வருகின்றது
என&amp;nbsp;ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>எதிர்க்கட்சியினரை முடக்குவதிலேயே அரசு பிரதான கவனம் செலுத்தி வருகின்றது
என&nbsp;ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச குற்றம் சாட்டினார்.</p><p>பத்தரமுல்ல நெலும் மாவத்தையிலுள்ள கட்சியின் தலைமையகத்தில் இன்று(24.7.2026) இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.</p><p>அத்தோடு,&nbsp; எதிரணிகளை அடக்குவதை விட்டு நாட்டில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் மற்றும் பாதாள
உலகச் செயற்பாடுகளை கட்டுப்படுத்துங்கள் எனவும் அவர் வலியுறுத்தினார்.</p><p></p><h2>முறையான விசாரணை</h2><p>எதிர்க்கட்சிகள் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைச் சுமத்துவதை விடுத்து,
முறையான விசாரணைகளை நடத்துமாறு அரசிடம் வலியுறுத்திய அவர், விவசாயிகள்,
மீனவர்கள் மற்றும் தொழிலாளர்கள் சந்திக்கும் நெருக்கடிகளுக்கு எதிராக
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தொடர்ந்து குரல் கொடுக்கும் என்றும் உறுதியளித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/709eb8df-ba62-442b-8151-fb71f173fe28/26-6a63833ded34a.webp' /></p><p>
</p><p>நாட்டின் எதிர்கால அரசியலுக்கு இளைஞர் தலைமுறையின் பங்களிப்பு மிக அவசியமானது
என்று குறிப்பிட்ட அவர், அதற்கமைய தெய்வேந்திரமுனை முதல் பருத்தித்துறை வரை
நாடு முழுவதிலும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் தொகுதி மட்டத்தில் புதிய
இளைஞர் அமைப்பாளர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர் என்றும் தெரிவித்தார்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-24T15:22:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[என்னை மோசமானவர் என கூறிய மகிந்த! டக்ளஸ் தேவானந்தா பகிரங்கம்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/douglasdevananda-exclusive-interview-video-tamil-1784905211"></link>
            <id>https://tamilwin.com/article/douglasdevananda-exclusive-interview-video-tamil-1784905211</id>
            <summary type="text">தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனை விட தான் மோசமானவர் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தன்னை சில சந்தர்ப்பங்களில் கூறுவார் என ஈழ மக்கள் ஜனந...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனை விட தான் மோசமானவர் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தன்னை சில சந்தர்ப்பங்களில் கூறுவார் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.</p><p>


எமது ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
</p><p>
மேலும் தெரிவித்த அவர்,

தமிழ் கைதிகளின் கோரிக்கையை ஏற்று, விசாரணை இன்றி சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதிகளைச் சந்தித்து அவர்களின் பிரச்சினைகளைக் கேட்கச் சென்றபோது தான் தாக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.</p><p>

இந்தத் தாக்குதல் மிகவும் திட்டமிட்டுக் கொலை செய்யும் நோக்குடன் மேற்கொள்ளப்பட்டது.
</p><p>
தான் எப்போதுமே தமிழ் மக்களின் நலன்களையே முதன்மையாகக் கொண்டு செயல்படுவதாகவும், அதிகாரத்தில் இருப்பது மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கே தவிர சுயநலத்திற்காக அல்ல.

சிறைச்சாலைக்குள் சிறிய கற்கள், இரும்புக் கம்பிகள் மற்றும் கூர்மையான ஆயுதங்களைப் பயன்படுத்தி இந்தக் தாக்குதல் நடத்தப்பட்டது.
</p><p>
 இந்தத் தாக்குதலின் பின்னணியில் சிறைச்சாலை நிர்வாகத்தின் சில அதிகாரிகளின் பங்கு இருந்திருக்கலாம் என்றும், தன்னை உள்ளே வைத்து மரணமடைய வைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இது திட்டமிடப்பட்டிருக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
</p><p>
இந்த விடயங்கள் தொடர்பிலான முழுமையான விபரங்களுக்கு கீழுள்ள காணொளியை காண்க..</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/RL2gNI_wZM0" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-24T15:14:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[இரண்டாம் நாளிலும் தொடரும் சாதனை.. ஜனநாயகன் சென்னை வசூல் அப்டேட்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/jana-nayagan-2nd-day-box-office-in-chennai-1784905674"></link>
            <id>https://cineulagam.com/article/jana-nayagan-2nd-day-box-office-in-chennai-1784905674</id>
            <summary type="text">நடிகர் விஜய்யின் ஜனநாயகன் படம் தியேட்டரில் ரிலீஸ் ஆனதை விஜய் ரசிகர்கள் வெறித்தனமாக கொண்டாடி வருகின்றனர். கடைசி முறையாக விஜய்யின் படத்தை தியேட்டரில் பா...</summary>
            <content type="html"><![CDATA[<p>நடிகர் விஜய்யின் ஜனநாயகன் படம் தியேட்டரில் ரிலீஸ் ஆனதை விஜய் ரசிகர்கள் வெறித்தனமாக கொண்டாடி வருகின்றனர். கடைசி முறையாக விஜய்யின் படத்தை தியேட்டரில் பார்க்க ரசிகர்கள் எல்லோரும் எமோஷ்னலாக வருகின்றனர்.</p><p>அதனால் படம் நல்ல வசூலை முதல் நாளில் இருந்தே குவித்து வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ce4870fc-be3c-4ee6-ae4f-88dd6aec8e12/26-6a637fcc18bf4.webp' /></p><p>
</p><h2>2ம் நாள் வசூல்
</h2><p>இரண்டாம் நாளிலும் நல்ல வசூலை ஜனநாயகன் பெற்று வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னையில் நல்ல வசூல் வந்திருக்கிறது.
</p><p>இரண்டு நாட்களில் மொத்தம் 11 கோடி ரூபாயை ஜனநாயகன் ஈட்டி இருக்கிறது. அடுத்து விடுமுறை நாட்களில் இன்னும் வசூல் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
&nbsp;</p><p><br></p>]]></content>
            <updated>2026-07-24T15:08:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[நான் பதவி விலகப் போவதில்லை! எதிர்க்கட்சிகளுக்கு ஹர்ஷன பதிலடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/harshana-s-response-to-the-opposition-parties-1784899936"></link>
            <id>https://ibctamil.com/article/harshana-s-response-to-the-opposition-parties-1784899936</id>
            <summary type="text">ஊழல் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடையவர்களும் பிணையில் உள்ளவர்களுமே பதவி விலகுமாறு நாட்டு மக்கள் கோரி வருவதாக நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார சுட்டிக்காட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஊழல் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடையவர்களும் பிணையில் உள்ளவர்களுமே பதவி விலகுமாறு நாட்டு மக்கள் கோரி வருவதாக நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>
நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார மீது எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதத்தில் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
</p><p>
அவரை பதவி விலகுமாறு முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளுக்கு பதிலளிக்கும் வகையில் மேலும் கருத்து வெளியிட்ட அவர்,</p><p></p><h2>அரசாங்கத்தின் மக்கள் ஆணை</h2><p> 


“தன்னை பதவி விலகுமாறு நாட்டு மக்கள் குறிப்பிடவில்லை. ஊழல்வாதிகளும், பிணையில் உள்ளவர்களுமே நான் பதவி விலக வேண்டும் எனக் கூறுகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/69de48dd-e5c1-49c3-8241-b919a33b17f2/26-6a636961baefe.webp' /></p><p> </p><p>

நான் பதவி விலகப் போவதில்லை. அதற்கான எந்தவொரு அவசியமும் கிடையாது.

 நீதித்துறை மற்றும் தேசிய ஒருமைப்பாடு தொடர்பான பொறுப்புகளை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றேன்.
</p><p>
அரசாங்கத்தின் மக்கள் ஆணைக்கு அமைவாக தனது கடமைகளை நிறைவேற்றுகின்றேன்.
</p><p>
அமைச்சரின் இந்த கருத்து, அவரை பதவி விலகுமாறு முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளுக்கு பதிலளிக்கும் வகையில் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-24T15:00:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[99 கிலோவுக்கும் அதிக போதைப்பொருளை தீயிட்டு அழிக்க நடவடிக்கை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/destroy-99-kg-of-narcotics-by-burning-puttalam-1784898620"></link>
            <id>https://jvpnews.com/article/destroy-99-kg-of-narcotics-by-burning-puttalam-1784898620</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;வழக்கு விசாரணைகள் நிறைவடைந்த 99 கிலோவுக்கும் அதிகமான ஹெரோயின் உள்ளிட்ட பெருந்தொகையான போதைப்பொருட்கள் நாளை சனிக்கிழமை (25) தீயிட்டு அழிக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;வழக்கு விசாரணைகள் நிறைவடைந்த 99 கிலோவுக்கும் அதிகமான ஹெரோயின் உள்ளிட்ட பெருந்தொகையான போதைப்பொருட்கள் நாளை சனிக்கிழமை (25) தீயிட்டு அழிக்கப்படவுள்ளன.
</p><p>

புத்தளம், வனாத்தவில்லு - லாக்டோவத்தை பகுதியில் அமைந்துள்ள சிறப்பு எரியூட்டியில் இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e1111a8d-e048-4998-8e76-c8b4d69542b4/26-6a63643e1541f.webp' /></p><p>
</p><p>
மாரவில நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைகள் நிறைவடைந்த 99 கிலோகிராம் 478 கிராம் ஹெரோயின் மற்றும் அரசாங்க பகுப்பாய்வாளர் திணைக்களத்தின் பொறுப்பில் இருந்தவாறு நாட்டின் பல்வேறு நீதிமன்றங்களால் அழிக்க உத்தரவிடப்பட்ட வழக்கு, முடிவடைந்த ஏனைய போதைப்பொருட்களுமே தீயிட்டு அழிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><p>

நாளை காலை வேளையில் குறித்த போதைப்பொருட்கள் அனைத்தும் மாரவில நீதிமன்ற வளாகத்திலிருந்து பாதுகாப்பாக எடுத்துச் செல்லப்பட்டு, வனாத்தவில்லு எரியூட்டியில் வைத்து அழிக்கப்படவுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-24T15:00:00+00:00</updated>
        </entry>
    </feed>
