<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-09-06T17:53:02+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[சைவசமயத் தலைமைக்கு அகத்தியர் அடிகளார்: எடுக்கப்பட்டுள்ள முக்கிய தீர்மானம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/saiva-leaders-back-agathiyar-adigalar-in-jaffna-1788716105"></link>
            <id>https://tamilwin.com/article/saiva-leaders-back-agathiyar-adigalar-in-jaffna-1788716105</id>
            <summary type="text">வடக்கு, கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த சைவ அமைப்புகளின் தலைமைப் பிரதானிகளின் முக்கிய கூட்டம் இன்று (06) வவுனியா அகிலாண்டேசுவரர் திருக்கோவிலில் நடைபெற்றத...</summary>
            <content type="html"><![CDATA[<p>வடக்கு, கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த சைவ அமைப்புகளின் தலைமைப் பிரதானிகளின் முக்கிய கூட்டம் இன்று (06) வவுனியா அகிலாண்டேசுவரர் திருக்கோவிலில் நடைபெற்றது.</p><p>

இதன்போது, தென்கயிலை ஆதீனம் தவத்திரு அகத்தியர் அடிகளாரை இலங்கை சைவ சமயிகளின் தலைவராக ஏகமனதாக முன்மொழிந்து ஏற்றுக்கொள்வது என தீர்மானிக்கப்பட்டது.</p><h2>அகத்தியர் அடிகளார்</h2><p>
</p><p>
அத்துடன், இந்த தீர்மானத்தை சைவ சமய மக்கள், இந்து கலாசாரத் திணைக்களம் உள்ளிட்ட அரச திணைக்களங்கள் மற்றும் அரச உயர் மட்டத்தினருக்கு தெரியப்படுத்தவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.</p><p>

தென்கயிலை ஆதீனம் தவத்திரு அகத்தியர் அடிகளாரின் அருளாட்சியில் நடைபெற்ற இக்கூட்டத்தில், அகிலாண்டேசுவரர் ஆலயத்தின் தலைமை அறங்காவலர் சிவத்திரு நவரட்ணராசா, திருக்கோணேசுவர ஆலயத்தின் தலைமை அறங்காவலர் சட்டத்தரணி துசியந்தன், நயினை நாகபூசணி ஆலயத்தின் தலைமை அறங்காவலர் சிவத்திரு சரவணபவன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2efa0bd1-d23f-44d6-9658-07afd8f7575e/26-6a9da694e8294.webp' /></p><p>
</p><p>
மேலும், சைவ சமயப் பேரவை தலைவர் அகோரசிவம் உமையரசு சிவாச்சாரியார், கிழக்கு இந்து ஒன்றியத் தலைவர் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவத்திரு யோகேசுவரன், இலண்டன் கனகதுர்க்கை ஆலய அறங்காவலர் மருத்துவர் பரமநாதன், அகில இலங்கை சைவ மகா சபையின் பொதுச்செயலாளர் மருத்துவர் பரா. நந்தகுமார், அகில இலங்கை சிவமங்கையர் தலைவி சிவசகோதரி சோதிநாயகி அம்மையார் உள்ளிட்ட பலரும் கூட்டத்தில் பங்கேற்றனர்.
</p><p>
கிளிநொச்சி திருநெறிக்கழக தலைவர் சிவத்திரு சிவஞானசுந்தரம், வவுனியா மாவட்ட சுத்தானந்த இந்து இளைஞர் கழக தலைவர் சிவத்திரு அமலன், சிவ சகோதரர்கள், சிவதொண்டர்கள் மற்றும் சிவமங்கையர் மாவட்ட இணைப்பாளர்களும் இதில் கலந்துகொண்டனர்.</p><h2>முக்கிய தீர்மானம்</h2><p>

இதேவேளை, யாழ்ப்பாணத்தைத் தலைமையகமாகக் கொண்ட சிவகுரு ஆதீனம், சைவ பரிபாலன சபை, சைவப்புலவர் சங்கம், மலையகத்தைத் தலைமையகமாகக் கொண்ட சிவசகோதரர் அமைப்பு, கொழும்பைத் தலைமையகமாகக் கொண்ட இலங்கை சைவநெறிக் கழகம் உள்ளிட்ட நாடளாவிய சைவ அமைப்புகளும், பிராந்திய மற்றும் நாடளாவிய சைவ சமய குருமார் ஒன்றியங்களும் ஏற்கனவே தவத்திரு அகத்தியர் அடிகளாரை இலங்கை சைவ சமயிகளின் தலைமையாக ஏற்றுக்கொள்வதற்கான தமது ஆதரவை வெளியிட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/36510e65-e682-4dc6-93ad-f72ac9c1e170/26-6a9da695c236f.webp' /></p><p>

அதேபோன்று, கடந்த மாத இறுதியில் கொழும்பைத் தலைமையகமாகக் கொண்ட அகில இலங்கை இந்து மாமன்றமும் தவத்திரு அகத்தியர் அடிகளாரை தலைவராக ஏற்றுக்கொள்வதற்கான தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியிருந்தது.
</p><p>
இதனிடையே, வெற்றிடமாக உள்ள நல்லை குருமகா சந்நிதானத்தின் அருளாட்சியை ஏற்று வீற்றிருக்குமாறு பல சைவ சமய அமைப்புகளும் நல்லை ஆதீன நம்பிக்கைப் பொறுப்புச்சபையும் தவத்திரு அகத்தியர் அடிகளாரிடம் விண்ணப்பித்திருந்தன.
</p><p>
அந்த விண்ணப்பத்தை தவத்திரு அகத்தியர் அடிகளார் ஏற்றுக்கொண்டுள்ள நிலையில், அதனை நல்லை ஆதீன நம்பிக்கைப் பொறுப்புச்சபை விரைவாக நடைமுறைப்படுத்த வேண்டும் என சைவ அமைப்புகளின் இணையம் வலியுறுத்தியுள்ளது.</p><h2>&nbsp;சைவ சமய மக்கள்</h2><p>
</p><p>
மேலும், திருக்கோவில்களில் ஆபாசமான ஆடல், பாடல் நிகழ்ச்சிகள் மற்றும் பக்தர்களுக்கும் அயல் பிரதேச மக்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய அதிக ஒலி, ஒளி நிகழ்வுகள் முற்றாகத் தவிர்க்கப்பட வேண்டும் என கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
</p><p>
அத்துடன், அனைத்து ஆலயங்களும் சைவ சமய மக்களுக்கு அறப்பணிகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது. </p><p>இதற்கு நயினை நாகபூசணி, வவுனியா சிவன், இலண்டன் கனகதுர்க்கை மற்றும் தெல்லிப்பளை துர்க்கை அம்மன் ஆலயங்கள் முன்னுதாரணங்களாகக் குறிப்பிடப்பட்டன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2a6920b2-c8c2-40df-86e7-7c751efff783/26-6a9da69698d46.webp' /></p><p>

மேலும், 22ஆவது அரசியலமைப்பு திருத்தம் உள்ளிட்ட எதிர்கால அரசியலமைப்பு சீர்திருத்தங்களில் சைவ சமய மக்களின் அபிலாஷைகளை சட்டரீதியாக அரசாங்கத்திடம் முன்வைப்பதற்காக ஒன்பது பேர் கொண்ட நிபுணர் குழுவொன்றை அமைக்கவும் தீர்மானிக்கப்பட்டது.</p><p>

திருக்கோணேசுவர ஆலயத்தின் தலைவர் சட்டத்தரணி துசியந்தன் இந்தக் குழுவின் இணைப்பாளராக செயற்படவுள்ளார். </p><p>மூத்த சட்டத்தரணிகளான இரட்ணவேல், ஜெயரூபன், தயாபரன் மற்றும் முன்னாள் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சைவ சமய விவகாரங்களுக்கான நாடாளுமன்ற உறுப்பினர் யோகேசுவரன் உள்ளிட்டோர் குழுவில் அங்கம் வகிக்க விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
மேலும், மாவட்ட மற்றும் பிரதேச செயலக மட்டங்களில் சிவ சகோதரர்களை ஆதீனத்தின் அருளாணையுடன் நியமிக்கவும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.</p><p>

இறுதியாக, வவுனியா சிவன் கோவிலில் இடம்பெற்ற மகேசுவர பூஜையைத் தொடர்ந்து, பயனுறுதியான கலந்துரையாடல்களுடன் கூட்டம் ஏகமனதான தீர்மானங்களையும் கொள்கைப் பிரகடனத்தையும் நிறைவேற்றி பிற்பகல் 2 மணியளவில் நிறைவடைந்தது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-06T17:45:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதிவேக நெடுஞ்சாலை இணைப்பு வீதிகள் விரிவாக்கம் ; வீதி அபிவிருத்தி அதிகாரசபை நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/expansion-of-expressway-connecting-roads-1788716440"></link>
            <id>https://jvpnews.com/article/expansion-of-expressway-connecting-roads-1788716440</id>
            <summary type="text">அதிவேக நெடுஞ்சாலைகளின் நுழைவாயில்கள் மற்றும் வெளியேறும் வாயில்களை இணைக்கும் அனைத்து வீதிகளையும் விரிவாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என வீதி அபிவி...</summary>
            <content type="html"><![CDATA[<p>அதிவேக நெடுஞ்சாலைகளின் நுழைவாயில்கள் மற்றும் வெளியேறும் வாயில்களை இணைக்கும் அனைத்து வீதிகளையும் விரிவாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என வீதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.</p><p>
</p><p></p><p>குறிப்பிட்ட வீதிகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நோக்கிலேயே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் அனுராத ஹெட்டியாராச்சி குறிப்பிட்டுள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/59054290-932e-4488-b401-c110b73aafdb/26-6a9da599b2582.webp' /></p><p>கடந்த 10 வருடங்களாக புனரமைக்கப்படாமல் உள்ள அனைத்து பிரதான வீதிகளையும் புனரமைக்கும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-06T17:40:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[டொராண்டோவில் நடைபாதையில் சென்ற பெண் வாகனம் மோதி பலி: 18 வயது இளைஞர் கைது!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/woman-struck-by-suv-on-toronto-sidewalk-dies-1788702204"></link>
            <id>https://canadamirror.com/article/woman-struck-by-suv-on-toronto-sidewalk-dies-1788702204</id>
            <summary type="text">&amp;nbsp;கனடாவின் டொராண்டோ நகரின் மையப்பகுதியில், நடைபாதையில் நடந்து சென்றுகொண்டிருந்த 37 வயதுடைய பெண் மீது கட்டுப்பாட்டை இழந்த எஸ்.யு.வி கார் ஒன்று மோதி...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கனடாவின் டொராண்டோ நகரின் மையப்பகுதியில், நடைபாதையில் நடந்து சென்றுகொண்டிருந்த 37 வயதுடைய பெண் மீது கட்டுப்பாட்டை இழந்த எஸ்.யு.வி கார் ஒன்று மோதியதில் அந்தப் பெண் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
</p><p>இது குறித்து டொராண்டோ காவல்துறை சனிக்கிழமை பிற்பகல் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் விவரங்களைத் தெரிவித்துள்ளது. </p><p>
பாத்தர்ஸ்ட் தெருவில் வடக்கே நோக்கி வெள்ளை நிற நிசான் பாத்ஃபைண்டர் காரை 18 வயது இளைஞர் ஒருவர் ஓட்டிச் சென்றுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/17da7fec-ba42-4fbc-8dba-dbcc3be8e919/26-6a9d6dfdc80e0.webp' /></p><p> 
லான்ஸ்மவுண்ட் டிரைவ் அருகே சென்றபோது கார் திடீரெனக் கட்டுப்பாட்டை இழந்து, நடைபாதையின் மீது ஏறியுள்ளது. அப்போது கிழக்கு நடைபாதையில் நடந்து சென்றுகொண்டிருந்த அப்பெண்ணின் மீது கார் பலமாக மோதியுள்ளது. </p><p>
விபத்தில் பலத்த காயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்தப் பெண், சிகிச்சை பலனின்றி சனிக்கிழமையன்று உயிரிழந்ததாகக் காவல்துறை தெரிவித்துள்ளது. </p><p>
இந்த விபத்தை ஏற்படுத்திய ஜேக்கப் சான்செஸ் என்ற 18 வயது இளைஞரைச் சனிக்கிழமையன்று காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.</p><p>
அவர் மீது உயிரிழப்பை ஏற்படுத்தும் வகையில் ஆபத்தான முறையில் வாகனத்தை ஓட்டியதாகக் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. 
அவர் வரும் 2026 அக்டோபர் 30 அன்று டொராண்டோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>இந்த ஆண்டு டொராண்டோ நகரில் நடைபெறும் 34-வது கொடிய வாகன விபத்து இதுவாகும். இந்தச் சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை டொராண்டோ காவல்துறையின் போக்குவரத்துப் பிரிவினர் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-06T17:30:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் இருந்து கப்பலில் இந்தியா சென்றவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/those-who-went-to-india-by-ship-were-sent-back-1788715051"></link>
            <id>https://ibctamil.com/article/those-who-went-to-india-by-ship-were-sent-back-1788715051</id>
            <summary type="text">காங்கேசன்துறை துறைமுகம் ஊடாக கப்பல் மூலம் இந்தியா சென்ற 13 பேர் மீண்டும்
காங்கேசன்துறை துறைமுகத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

காங்கேசன்துறை...</summary>
            <content type="html"><![CDATA[<p>காங்கேசன்துறை துறைமுகம் ஊடாக கப்பல் மூலம் இந்தியா சென்ற 13 பேர் மீண்டும்
காங்கேசன்துறை துறைமுகத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.</p><p>

காங்கேசன்துறை துறைமுகத்தில் இருந்து நாகபட்டினம் துறைமுகத்திற்கு கப்பல்
மூலம் சென்றவர்களில் குறித்த 13 பேர் மீது சந்தேகம் கொண்ட அதிகாரிகள்,
அவர்களிடம் நடத்திய விசாரணையின் போது முன்னுக்கு பின் முரணான தகவல்களை
வழங்கியமையால், அவர்களை மீண்டும் காங்கேசன்துறைக்கு திருப்பி அனுப்பியுள்ளனர்.</p><h2>குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால் கைது&nbsp;</h2><p>&nbsp;காங்கேசன்துறைக்கு திரும்பி வந்தவர்களை குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகள்
கைது செய்து மேலதிக சட்ட நடவடிக்கைக்காக காங்கேசதுறை காவல்துறையிடம்
ஒப்படைத்துள்ளனர்</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/da989345-4575-4733-b2f2-412d89b56560/26-6a9da218dcaaf.webp' /></p><p>
</p><p>
காங்கேசன்துறை காவல்துறையினர், 13 பேரையும் காவல் நிலையத்தில் தடுத்து வைத்து
மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-06T17:25:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[பேராயர் மீனவ சமூகத்திடம் முன்வைத்த முக்கிய கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/a-key-request-made-by-archbishop-fishing-community-1788714901"></link>
            <id>https://jvpnews.com/article/a-key-request-made-by-archbishop-fishing-community-1788714901</id>
            <summary type="text">பாரிய சமூகப் பேரழிவுக்குக் காரணமாக அமைந்துள்ள போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்கு ஆதரவளிக்குமாறு பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை மீனவ சமூகத்...</summary>
            <content type="html"><![CDATA[<p>பாரிய சமூகப் பேரழிவுக்குக் காரணமாக அமைந்துள்ள போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்கு ஆதரவளிக்குமாறு பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை மீனவ சமூகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.</p><p> </p><p></p><p>சில போதைப்பொருள் கடத்தல்களுக்கு மீன்பிடிப் படகுகள் பயன்படுத்தப்படுவதால், அத்தகைய செயற்பாடுகளில் இருந்து விலகியிருக்குமாறு மீனவ சமூகத்திடம் கோரிக்கை விடுப்பதாக வலியுறுத்தினார்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0ca81e06-6f63-4090-97fd-533f5c233647/26-6a9d9f9757460.webp' /></p><p>இன்று (06) பேருவளை பண்டாரவத்தையிலுள்ள புனித லாசர் ஆலயத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பேராயர் இதனைக் குறிப்பிட்டார்.</p><p> 

சிலரின் குறுகிய நோக்கம் கொண்ட இந்த செயற்பாடுகள் பாரிய சமூக சீரழிவு ஏற்படுவதாக தெரிவித்தார். </p><p>

அதேநேரம் பெரும்பாலான இளம் தலைமுறையினர் போதைப்பொருளுக்கு அடிமையாகி தமது வாழ்க்கையை இழக்கின்றனர்.</p><p> 

எனவே போதைப்பொருளை ஒழிப்பதற்கு சகலரும் ஒன்றிணைய வேண்டும். </p><p>

அதற்கு மீனவ சமூகமும் தமது ஆதரவை வழங்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-06T17:15:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடுமையான மற்றும் வேதனைமிக்க பதிலடி கொடுக்கப்படும் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஈரான்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/further-attacks-will-be-more-painful-1788714682"></link>
            <id>https://tamilwin.com/article/further-attacks-will-be-more-painful-1788714682</id>
            <summary type="text">மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டால் முன்பை விட அதிவேகமான, கடுமையான மற்றும் வேதனைமிக்க பதிலடி கொடுக்கப்படும் என ஈரான், அமெரிக்காவை கடுமையாக எச்சரித்துள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p>மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டால் முன்பை விட அதிவேகமான, கடுமையான மற்றும் வேதனைமிக்க பதிலடி கொடுக்கப்படும் என ஈரான், அமெரிக்காவை கடுமையாக எச்சரித்துள்ளது.
</p><p>ஈரானியப் பாராளுமன்ற சபாநாயகர் மொஹம்மத் பாகர் காலிபாஃப் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.</p><p>
அமெரிக்காவின் தடைகளால் பொருளாதாரப் பாதிப்புகளைச் சந்தித்து வரும் ஈரான், அவற்றை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ள நிலையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/72d55492-99d9-44e4-9ca2-f1789873875d/26-6a9d9ebbb62c4.webp' /></p><p>ஈரானியப் புரட்சிகரக் காவல் படை அமெரிக்கக் கடற்படைக் கப்பல்கள் மீது பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசியதைத் தொடர்ந்து, சனிக்கிழமையன்று ஈரானின் 3 எண்ணெய் தாங்கிக் கப்பல்கள் மீது அமெரிக்க மத்திய கட்டளையகம் தாக்குதல் நடத்தியது.
</p><p>ஈரானுக்கு எதிரான போரில் "விளையாட்டின் விதிகள் மாறிவிட்டன" என்பதை அமெரிக்கா தாமதமாவதற்குள் புரிந்துகொள்ள வேண்டும் என சபாநாயகர் காலிபாஃப் குறிப்பிட்டுள்ளார்.
</p><p> இனி ஈரானின் பாதுகாப்பு மற்றும் நலன்களுக்கு எதிராக நடத்தப்படும் எந்தவொரு தாக்குதலுக்கும் பன்மடங்கு கடுமையான பதிலடி அளிக்கப்படும் என கூறியுள்ளார்.
</p><p>வடக்கு ஈராக்கின் எர்பில் பகுதியில் அமெரிக்காவின் வான்வழிக் கண்காணிப்பு பலூன் ஒன்றை ஈரானியப் படைகள் சுட்டு வீழ்த்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
</p><p>ஈரானின் கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் 90% பங்கு வகிக்கும் முக்கிய மையமான கார்க் தீவு கடந்த மாதங்களில் சுமார் 550 முறை தாக்குதலுக்கு உள்ளானபோதிலும், அதன் செயல்பாடுகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக ஈரானிய எண்ணெய் வளத்துறை அமைச்சர் மொஹ்சின் பாக்னெஜாத் தெரிவித்துள்ளார்.
</p><p>இராணுவப் போருக்கு நிகராக, தற்போது உற்பத்தி மற்றும் மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதே ஈரானின் முக்கியப் போராக மாறியுள்ளதாகச் சபாநாயகர் காலிபாஃப் தெரிவித்துள்ளார்.
</p><p>பணவீக்கம், நாணய மதிப்பு வீழ்ச்சி மற்றும் வேலைவாய்ப்பின்மை போன்ற பிரச்சினைகளைச் சமாளிக்க அரசு விரைந்து செயல்பட வேண்டும் என மக்கள் எதிர்பார்ப்பதாக அவர் கூறியுள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-06T17:11:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[எவர் திருடினாலும் சிறை செல்வது உறுதி : ரில்வின் சில்வா ஆணித்தரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/if-you-stole-you-will-have-to-go-to-prison-tilvin-1788714065"></link>
            <id>https://ibctamil.com/article/if-you-stole-you-will-have-to-go-to-prison-tilvin-1788714065</id>
            <summary type="text">பொது நிதியைத் தவறாகப் பயன்படுத்திய குற்றவாளிகள், அவர்களின் அரசியல் சார்பு அல்லது பின்னணியைப் பொருட்படுத்தாமல் சிறைத்தண்டனையை எதிர்கொள்ள வேண்டும் என்று...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொது நிதியைத் தவறாகப் பயன்படுத்திய குற்றவாளிகள், அவர்களின் அரசியல் சார்பு அல்லது பின்னணியைப் பொருட்படுத்தாமல் சிறைத்தண்டனையை எதிர்கொள்ள வேண்டும் என்று ஜேவிபி பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா இன்று தெரிவித்துள்ளார்.
</p><p>
புலத்சிங்கலவில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய சில்வா, அரசாங்கம் அரசியல் எதிரிகளைக் குறிவைப்பதாகவும் அல்லது ஜனநாயகக் கொள்கைகளைச் சீர்குலைப்பதாகவும் கூறப்படும் குற்றச்சாட்டுகளை நிராகரித்தார்.</p><h2>திருடியிருந்தால், சிறைக்குச் செல்ல நேரிடும்</h2><p>&nbsp;“நாங்கள் யாரையும் துன்புறுத்தவில்லை. ஆனால், நீங்கள் திருடியிருந்தால், சிறைக்குச் செல்ல நேரிடும். அதைப்பற்றி நாங்கள் எதுவும் செய்ய முடியாது. அது முன்னாள் ஜனாதிபதியாக இருந்தாலும் சரி, முன்னாள் அமைச்சராக இருந்தாலும் சரி, அல்லது யாருடைய மகனாக இருந்தாலும் சரி, அது எங்களுக்கு ஒரு பொருட்டல்ல.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3ef105b7-c3f7-4e3a-b051-3bfb1c72666b/26-6a9d9e935ac1e.webp' /></p><p> யாராவது குற்றம் செய்திருந்தால், சட்டம் அமல்படுத்தப்படும்,” என்று அவர் கூறினார்.</p><p></p><h2>மக்கள் எமது அரசை தேர்ந்தெடுக்க காரணம்</h2><p>

நாட்டின் அரசியல் கலாசாரத்தில் மாற்றத்தைக் கொண்டுவரும் என்றும், மோசடி மற்றும் ஊழலுக்கு எதிராக உறுதியான நடவடிக்கை எடுக்கும் என்றும் எதிர்பார்த்து மக்கள் இந்த அரசாங்கத்தைத் தேர்ந்தெடுத்துள்ளனர் என்று சில்வா மேலும் தெரிவித்தார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/271736db-4081-41b9-aa17-28edd1c59d85/26-6a9d9e940e1f7.webp' /></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-06T17:10:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நல்லூர் கந்தன் 21ஆம் நாள் திருவிழா – வேல் விமான உற்சவம் கோலாகலம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/nallur-kandaswamy-temple-21st-day-festiva-1788713852"></link>
            <id>https://tamilwin.com/article/nallur-kandaswamy-temple-21st-day-festiva-1788713852</id>
            <summary type="text">வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவப் பெருவிழாவின் 21ஆம் நாள் திருவிழாவான வேல் விமான உற்சவம் இன்று(...</summary>
            <content type="html"><![CDATA[<p>வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவப் பெருவிழாவின் 21ஆம் நாள் திருவிழாவான வேல் விமான உற்சவம் இன்று(6) ஞாயிற்றுக்கிழமை பக்தி பரவசத்துடன் இடம்பெற்றது.
</p><p>
இதன்போது, ஆலயத்தில் இடம்பெற்ற சிறப்பு பூஜை வழிபாடுகளில் பெருந்திரளான பக்தர்கள் கலந்துகொண்டு நல்லூர் கந்தனை தரிசித்தனர்.</p><h2>கலாசார அலுவல்கள் அமைச்சர்</h2><p>
</p><p>
இதேவேளை, யாழ்ப்பாணத்திற்கு இன்று விஜயம் செய்த கலாசார அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஹினிதும சுனில் செனவி, நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி ஆலயத்தில் வழிபாடுகளில் ஈடுபட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bab4bbfe-d5a8-4ebe-aaad-90cb1e111cbd/26-6a9d9e480d2d4.webp' /></p><p>

அவருடன் நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரனும் கலந்துகொண்டிருந்தார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-06T17:09:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[அம்பாறையின் 9 நீர்த்தேக்கங்களின் நீர்மட்டத்தில் பாரிய வீழ்ச்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/significant-drop-water-ampara-nine-reservoirs-1788714558"></link>
            <id>https://jvpnews.com/article/significant-drop-water-ampara-nine-reservoirs-1788714558</id>
            <summary type="text">கடும் வறட்சியான காலநிலை காரணமாக அம்பாறை மாவட்டத்திற்குட்பட்ட ஒன்பது பிரதான நீர்ப்பாசன நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் இன்று (06) 21.5% ஆகக் குறைந்துள்ளத...</summary>
            <content type="html"><![CDATA[<p>கடும் வறட்சியான காலநிலை காரணமாக அம்பாறை மாவட்டத்திற்குட்பட்ட ஒன்பது பிரதான நீர்ப்பாசன நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் இன்று (06) 21.5% ஆகக் குறைந்துள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது.</p><p> </p><p></p><p>அத்துடன், மட்டக்களப்பு மாவட்டத்தின் நான்கு பிரதான நீர்ப்பாசன நீர்த்தேக்கங்களின் நீர்மட்டமும் 25.3% ஆகக் குறைவடைந்துள்ளது. </p><p>

நிலவும் கடும் வறட்சியான காலநிலையால் பல மாவட்டங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கைக்குத் தொடர்ந்தும் கடும் பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8a94fee7-c265-4dfe-86ce-b9df0eddf9d2/26-6a9d9e402a2a6.webp' /></p><p>இவ்வாறான பின்னணியில், பொலன்னறுவை மற்றும் மொனராகலை ஆகிய பகுதிகளில் சில இடங்களில் மழை பெய்துள்ளமையானது வறட்சியான காலநிலைக்குச் சற்று ஆறுதலை அளித்துள்ளது. </p><p>

எவ்வாறாயினும், அப்பகுதிகளில் பிற்பகல் வேளையில் ஓரளவு மழை பெய்தாலும், கடும் வெப்பத்துடனான காலநிலை எதிர்வரும் வாரத்திலும் அவ்வாறே தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. </p><p>

இதேவேளை, நிலவும் கடும் வறட்சியான காலநிலை நாட்டின் 7 மாவட்டங்களுக்குக் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இதனால் நீர் ஆதாரங்களுக்கும் விவசாயம் உள்ளிட்ட பிரதான தொழில்களுக்கும் மிகவும் மோசமானதொரு பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றது. </p><p>

வறட்சியான காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ள மொனராகலை மாவட்டத்தில் பல சிறிய குளங்கள் தற்போது முற்றாக வற்றிப்போயுள்ளன. </p><p>

அத்துடன், குடிநீர்ப் பிரச்சினைக்குத் தீர்வாக சியம்பலாண்டுவ பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட 48 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் உள்ள குழாய்க் கிணறுகளைத் திருத்தியமைப்பதற்கு சியம்பலாண்டுவ பிரதேச சபையும் நீர் வழங்கல் சபையும் நடவடிக்கை எடுத்திருந்தன.</p><p></p>]]></content>
            <updated>2026-09-06T17:09:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரசாங்கம் பொய்யுரைப்பதை நிறுத்தவில்லை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/npp-govt-telling-lies-says-marikkar-1788713716"></link>
            <id>https://tamilwin.com/article/npp-govt-telling-lies-says-marikkar-1788713716</id>
            <summary type="text">அரசாங்கம் பொய்யுரைப்பதை இன்னமும் நிறுத்தவில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி அநுரகும...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரசாங்கம் பொய்யுரைப்பதை இன்னமும் நிறுத்தவில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் தெரிவித்துள்ளார்.
</p><p>ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் பதவிக் காலத்தில் 40 வீதமான காலம் பூர்த்தியாகியுள்ளது எனவும், அவர் வழங்கிய வாக்குறுதிகளில் எதுவும் நிறைவேற்றப்படவில்லை எனவும் குற்றம் சுமத்தியுள்ளார்.
</p><p>அதிவேக நெடுஞ்சாலைகள், மின்சார ரயில் கட்டமைப்பு, மீன் பிடித் தொழிலுக்கு அதி நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தக் கூடிய செயலி, கனிய வள அகழ்வு ஆய்வு போன்ற எந்தவொரு திட்டமும் இதுவரையில் ஆரம்பிக்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5caa70c0-e8fe-4294-ab1a-c5b902b75f02/26-6a9d9af59da62.webp' /></p><p>
</p><p>பெரிய பேச்சுக்கள் பேசினாலும் நடைமுறையில் அமுல்படுத்தப்படுவதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
சமூகத்தின் அனைத்து துறைகளும் அழிவுப்பாதையில் செல்வதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
</p><p>எனினும் அரசாங்கம் ஒரு விடயத்தை மட்டும் குறைவில்லாமல் செய்வதாகவும் அது பொய்யுரைப்பது எனவும் எஸ்.எம். மரிக்கார் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p>
அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாத காரணத்தினால் நாட்டின் ஒட்டுமொத்த கட்டமைப்பும் வீழ்ச்சியடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
</p><p>மக்களை ஏமாற்றும் அரசியலை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தொடர்ந்தும் செய்து வருவதாகவும் அவர் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-06T17:06:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானியாவில் பதின்பருவ மாணவியிடம் தகாத முறையில் பேசிய ஆசிரியர்: வாழ்நாள் தடை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/essex-teacher-duhig-banned-life-time-teaching-1788701428"></link>
            <id>https://news.lankasri.com/article/essex-teacher-duhig-banned-life-time-teaching-1788701428</id>
            <summary type="text">Essex teacher duhig banned life time teaching: பிரித்தானியாவில் மாணவியிடம் தகாத முறையில் பேசியஆசிரியருக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பிரித்...</summary>
            <content type="html"><![CDATA[<p>Essex teacher duhig banned life time teaching: பிரித்தானியாவில் மாணவியிடம் தகாத முறையில் பேசியஆசிரியருக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளது.
</p><p>
பிரித்தானியாவில் ஆசிரியர் ஒருவர், மாணவியுடன் படுக்கையை பகிர்ந்துகொள்ள விரும்புவதாக கூறியதற்காக, அவரது பணியில் இருந்து வாழ்நாள் தடை விதிக்கப்பட்டார்.&nbsp;</p><h2>டேட்டிங் செயலி மூலம்&nbsp;</h2><p>

பிரித்தானியாவின் Dagenham-யில் உள்ள Godwin தொடக்கப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றியவர் டேனியல் டுஹிக் (29).&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3e0dc8ea-bfb0-4a92-b25c-e1e35c9f479f/26-6a9d6bd0cc983.webp' />&nbsp;</p><p></p><p> 

எசெக்ஸின் ஹார்ன்சர்ச் பகுதியைச் சேர்ந்த இவர், 18 வயதிற்கும் மேற்பட்டவர்களுக்கான டேட்டிங் செயலி மூலம் 16 வயதுக்கும் குறைவான சிறுமி ஒருவரிடம் பேசியுள்ளார். </p><p>

கடந்த 2023 டிசம்பர் மாதம் குறித்த சிறுமிக்கு பாலியல் ரீதியான குறுஞ்செய்திகளை டுஹிக் அனுப்பியிருக்கிறார். அதில் பள்ளி மாணவியான அந்த சிறுமியிடம் படுக்கையை பகிர்ந்துகொள்ள விரும்புவதாக டுஹிக் கூறியிருக்கிறார்.</p><p> 

அதனைத் தொடர்ந்து எழுந்த புகாரினையடுத்து டேனியில் டுஹிக் 2024-ஆம் ஆண்டில் கைது செய்யப்பட்டார். 

பின்னர் நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்புக்கொண்ட அவர், பாதிக்கப்பட்டவர் ஒரு சிறுமி என்று தனக்கு தெரியாது என்று வாதிட்டார்.</p><p> 

என்றாலும், ஒரு சிறுமியுடன் பாலியல் ரீதியான தொடர்பை ஏற்படுத்த முயன்ற குற்றத்திற்காக டேனியல் தண்டிக்கப்பட்டார். 

பணியில் இருந்து நீக்கப்பட்ட டேனியல், தனது தொழில் வாழ்க்கையைத் தொடர மற்றொரு வாய்ப்பு வழங்குமாறு பள்ளியிடம் கோரினார்.
</p><h2>
 கற்பித்தல் பணியில் ஈடுபட தடை </h2><p>இதற்கிடையில் ஆசிரியருக்கு ஆறு மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு, அது 18 மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது. 

அத்துடன் அவர் மறுவாழ்வு பயிற்சியில் ஈடுபடவும், 100 மணிநேரம் ஊதியமில்லா சமூக பணியை செய்யவும் உத்தரவிடப்பட்டது. </p><p>

மேலும், பாதிக்கப்பட்டவருக்கு 154 பவுண்டுகள் மற்றும் அரசுத் தரப்பு வழக்கு செலவுகளுக்காக 85 பவுண்டுகளை அவர் செலுத்த வேண்டியிருந்தது; அத்துடன் அவர் ஏழு ஆண்டுகளுக்கு 'பாலியல் குற்றவாளிகள் பதிவேட்டில்' சேர்க்கப்பட்டார். </p><p>

இந்த நிலையில், லண்டனின் Redbridge பகுதியில் Learning Support Assistant ஆக முன்பு பணியாற்றிய டுஹிக், ஒரு தீர்ப்பாயத்தின் விசாரணையில் வாழ்நாள் முழுவதும் கற்பித்தல் பணியில் ஈடுபட தடை செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
ஆசிரியர் ஒழுங்குமுறைக் குழு, டேனியல் டுஹிக் எதிர்காலத்தில் இதுபோன்ற குற்றங்களை செய்வதற்கான வாய்ப்பு அதிகம் என்று கண்டறிந்தது.&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2cf07ae8-e694-45b6-a4c0-8792e52510d6/26-6a9d6bd1bffe6.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-06T17:03:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாடொன்றில் பிரபல டிவி தொகுப்பாளினி உட்பட 12 பேருக்குத் தூக்கு தண்டனை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/tv-presenter-among-12-sentenced-to-death-1788703248"></link>
            <id>https://canadamirror.com/article/tv-presenter-among-12-sentenced-to-death-1788703248</id>
            <summary type="text">எகிப்தில் சட்டவிரோதமாகப் போதைப்பொருட்களைத் தயாரித்து கடத்திய வழக்கில், அந்நாட்டின் பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினியான சாரா கலீஃபா உட்பட 12 பேருக்குத் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>எகிப்தில் சட்டவிரோதமாகப் போதைப்பொருட்களைத் தயாரித்து கடத்திய வழக்கில், அந்நாட்டின் பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினியான சாரா கலீஃபா உட்பட 12 பேருக்குத் தூக்கிலிட்டு மரண தண்டனை நிறைவேற்றக் கெய்ரோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. </p><p>
39 வயதான சாரா கலீஃபா, எகிப்தில் குற்றவியல் தொடர்பான 'மிஷன் இம்பாசிபிள்' என்ற புகழ்பெற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியின் தொகுப்பாளினியாவார். </p><p>
போதைப்பொருள் தயாரிப்பதற்கான மூலப்பொருட்களை இறக்குமதி செய்து, செயற்கைப் போதைப்பொருட்களை உற்பத்தி செய்து விற்பனை செய்த குற்றவியல் கும்பலுடன் இணைந்து செயல்பட்டதாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2fa5d369-5466-46ea-9047-3bb4ae5316da/26-6a9d7215b0903.webp' /></p><p> </p><p>
மேலும், உரிமம் பெறாத சட்டவிரோத ஆயுதங்கள் மற்றும் தோட்டாக்களை வைத்திருந்த குற்றச்சாட்டுகளும் இவர்கள் மீது நிரூபிக்கப்பட்டுள்ளன. 
இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் 9 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதுடன், 7 பேர் விடுவிக்கப்பட்டனர்.
</p><p>கடந்த மாதம் முதற்கட்டத் தீர்ப்பு அறிவிக்கப்பட்ட போதிலும், எகிப்திய சட்டப்படி மரண தண்டனை விவகாரங்களில் எகிப்தின் தலைமை மதத் தலைவரான 'கிராண்ட் முஃப்தி'யின் மத ரீதியான ஆலோசனையைப் பெற்ற பிறகே இத்தீர்ப்பு தற்போது முறைப்படி உறுதி செய்யப்பட்டுள்ளது. </p><p>
விசாரணையின் போது, 750 கிலோவிற்கும் அதிகமான போதைப்பொருட்களும், அவற்றைச் செய்வதற்குப் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன. </p><p>
20 சாட்சிகளின் வாக்குமூலங்கள் மற்றும் ஆடியோ/வீடியோ உரையாடல்கள் அடங்கிய மின்னணு ஆதாரங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன. </p><p>
எனினும் தன் மீதான குற்றச்சாட்டுகளை சாரா கலீஃபா முற்றிலுமாக மறுத்துள்ளார். போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அலுவலகத்தில் வைத்துப் புகைப்படம் எடுக்கப்படும் வரை தான் போதைப்பொருட்களைப் பார்த்ததே இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார். </p><p>
இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யவுள்ளதாகச் சாரா கலீஃபாவின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.</p><p>
இதேவேளை, சர்வதேச மன்னிப்புச் சபை வெளியிட்ட 2025 ஆம் ஆண்டின் அறிக்கையின்படி, எகிப்தில் அந்த ஆண்டில் மட்டும் 492 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு, அதில் 23 தண்டனைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.</p><p> 
சர்வதேச சட்ட விதிகளின்படி "திட்டமிட்ட கொலை" குற்றங்களுக்கு மட்டுமே மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்ற போதிலும், போதைப்பொருள் கடத்தல் மற்றும் பாலியல் வன்கொடுமை போன்ற குற்றங்களுக்கும் எகிப்தில் மரண தண்டனை வழங்கப்படுவதாக அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.&nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-09-06T17:02:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் துர்நாற்றம் வீசிய வீட்டில் சடலம் மீட்பு ; மர்ம மரணம் குறித்து பொலிஸார் தீவிர விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/body-recovered-from-foul-smelling-house-in-jaffna-1788711532"></link>
            <id>https://jvpnews.com/article/body-recovered-from-foul-smelling-house-in-jaffna-1788711532</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் – கோண்டாவில் பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
குறித்த வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியதைத் தொடர்ந்து, அயலவர...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் – கோண்டாவில் பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p></p><p>குறித்த வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியதைத் தொடர்ந்து, அயலவர்கள் கோப்பாய் காவல்துறையினருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
</p><p>
தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்துக்குச் சென்ற காவல்துறையினர் வீட்டிலிருந்து சடலத்தை மீட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான விசாரணைகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/921a7b06-aff3-41c3-a391-993285bab7ba/26-6a9d926dd1418.webp' /></p><p>சடலமாக மீட்கப்பட்டவர் ஓரிரு தினங்களுக்கு முன்னர் உயிரிழந்திருக்கலாம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
</p><p>
எனினும், உயிரிழப்புக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.</p><p> மேலதிக விசாரணைகள் மற்றும் சட்ட வைத்திய பரிசோதனைகளின் பின்னரே உயிரிழப்புக்கான காரணம் தொடர்பில் உறுதியாகத் தெரிவிக்க முடியும் என காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-06T17:02:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[புதிய பச்சை நிற இலக்கத் தகடு ; அறியாத காவல்துறையினரால் வாகன உரிமையாளர் அசௌகரியம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/new-green-number-plate-uninformed-police-personnel-1788714065"></link>
            <id>https://jvpnews.com/article/new-green-number-plate-uninformed-police-personnel-1788714065</id>
            <summary type="text">மின்சார வாகனங்களுக்காக புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பச்சை நிற இலக்கத் தகடு (Number plate) குறித்து போக்குவரத்து காவல்துறையினருக்கு போதிய விழிப்புண...</summary>
            <content type="html"><![CDATA[<p>மின்சார வாகனங்களுக்காக புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பச்சை நிற இலக்கத் தகடு (Number plate) குறித்து போக்குவரத்து காவல்துறையினருக்கு போதிய விழிப்புணர்வு இன்மையால், புதிய மின்சார சிற்றூந்து உரிமையாளர் ஒருவர் வீதியில் வைத்து சோதனைக்குட்படுத்தப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.</p><p>
</p><p></p><p>வெலிவேரிய பகுதியில் தனது புதிய மின்சார சிற்றூந்தில் பயணித்த வேளையில், அதன் பச்சை நிற இலக்கத் தகட்டைக் கண்ட காவல்துறையினர் சந்தேகத்தின் பேரில் வாகனத்தை மறித்து விசாரணை நடத்தியதாக குறித்த வாகன உரிமையாளர் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ள காணொளியில் தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c71705ad-2c0f-4716-84ae-89821ae8e6ab/26-6a9d9c52c393a.webp' /></p><p>புதிய வகை இலக்கத் தகடு குறித்து காவல்துறை அதிகாரிகள் அறிந்திருக்காததால், மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தினால் வழங்கப்பட்ட வாகனப் பதிவு உறுதிப்படுத்தல் குறுஞ்செய்தி மற்றும் தொடர்புடைய ஏனைய ஆவணங்களைச் சமர்ப்பித்து, அது சட்டப்பூர்வமாகப் பெறப்பட்ட இலக்கத் தகடு என்பதைத் தான் நிரூபிக்க வேண்டியிருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
இருப்பினும், இந்தச் சம்பவத்திற்கு காவல்துறையினரை மட்டும் முழுமையாகக் குற்றம் சுமத்த முடியாது எனக் குறிப்பிட்டுள்ள அவர், மின்சார வாகனங்களுக்கான இந்த புதிய மாற்றம் குறித்து போக்குவரத்து காவல்துறை அதிகாரிகளுக்குச் சரியாகத் தெரிவிக்கப்பட்டிருக்க வாய்ப்பில்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>
எனவே, வாகனப் பதிவு நடைமுறைகள் மற்றும் இலக்கத் தகடுகளில் மேற்கொள்ளப்படும் மாற்றங்கள் குறித்து அனைத்து காவல்நிலையங்களுக்கும் போக்குவரத்துப் பிரிவுகளுக்கும் உடனடியாகத் தெரியப்படுத்துவதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்றும், இதுபோன்ற தேவையற்ற அசௌகரியங்களைத் தவிர்க்க தொடர்புடைய வர்த்தமானி அறிவித்தல்களின் பிரதிகளை காவல்துறை நிலையங்களுக்கு வழங்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.</p><p>
</p><p>வாகனப் பதிவு மற்றும் அடையாள அமைப்புகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ள போதிலும், அது குறித்து சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அதிகாரிகளுக்கு இடையே போதிய தொடர்பாடலும் விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டுள்ளதா என்ற கேள்வியை இந்தச் சம்பவம் எழுப்பியுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-06T17:01:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாட்டுப் பயணத் தடைக்கு முன்னதாக வெளிநாடு பறந்தார் பிரேமலால்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/premalal-left-the-country-before-the-travel-ban-1788710937"></link>
            <id>https://ibctamil.com/article/premalal-left-the-country-before-the-travel-ban-1788710937</id>
            <summary type="text">சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பிரதி அமைச்சர் பிரேமலால் ஜயசேகரவுக்கு எதிராக விதிக்கப்பட்ட வெளிநாட்டு பயணத் தடையை அமல்படுத்தச் சென்றபோது, அவர் ஏற...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பிரதி அமைச்சர் பிரேமலால் ஜயசேகரவுக்கு எதிராக விதிக்கப்பட்ட வெளிநாட்டு பயணத் தடையை அமல்படுத்தச் சென்றபோது, அவர் ஏற்கனவே நாட்டை விட்டு வெளியேறிவிட்டதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கண்டறிந்துள்ளது. </p><p>குறித்த பயணத் தடை விதிக்கப்படுவதற்கு முன்னர், அதாவது கடந்த ஓகஸ்ட் 31 ஆம் திகதியே முன்னாள் பிரதி அமைச்சர் தாய்லாந்துக்கு புறப்பட்டுச் சென்றுவிட்டதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அறிவித்துள்ளது.&nbsp;</p><h2>உச்ச நீதிமன்றின் உத்தரவு</h2><p>&nbsp;பிரேமலால் ஜயசேகர உட்பட மூவருக்கு எதிராக இந்த வெளிநாட்டு பயணத் தடையை விதித்து, வரும் ஒக்டோபர் 21 ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு உச்ச நீதிமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/eadbfe84-24f0-4c59-8fe8-53d5fd7086f4/26-6a9d99e2763e9.webp' /></p><p> பிரதம நீதியரசர் ப்ரீதி பத்மன் சூரசேன, அச்சல வெங்கப்புலி மற்றும் கிஹான் குலதுங்க ஆகியோரைக் கொண்ட மூவர் அடங்கிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குழாம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.</p><p></p><p>

</p><h2>&nbsp;மரண தண்டனை</h2><p>2015 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் கஹவத்த பிரதேசத்தில் அப்போதைய ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேர்தல் பேரணியின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் பிரேமலால் ஜயசேகர, சப்ரகமுவ மாகாண சபை உறுப்பினர் நிலந்த ஜயசிங்க மற்றும் கஹவத்த பிரதேச சபையின் முன்னாள் தலைவர் வஜிர தர்ஷன டி சில்வா ஆகியோருக்கு இரத்தினபுரி மேல் நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d2b02b6f-336f-468a-9a56-a1e33cd64c62/26-6a9d99e1c1d5d.webp' /></p><p>






எவ்வாறாயினும், பின்னர் மேன்முறையீட்டு நீதிமன்றம் குறித்த குற்றச்சாட்டுகளிலிருந்து மூவரையும் விடுவிக்க நடவடிக்கை எடுத்ததுடன், அந்த விடுவிப்புக்கு எதிராக, குறித்த துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த பாதிக்கப்பட்டவரின் மனைவி சாந்தா தொடங்கொட உச்ச நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்தார். உச்ச நீதிமன்றம் இந்த நடவடிக்கையை குறித்த மேன்முறையீட்டை பரிசீலித்துக்கொண்டிருக்கும் வேளையில் எடுத்துள்ளது&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-06T16:50:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜனாதிபதி அநுரவிடம், சஜித் எழுப்பியுள்ள கேள்வி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sajith-questions-about-22nd-ammendment-1788712735"></link>
            <id>https://tamilwin.com/article/sajith-questions-about-22nd-ammendment-1788712735</id>
            <summary type="text">20-ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்குத் தேவைப்பட்ட சர்வஜன வாக்கெடுப்பு, 22-ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு ஏன் தேவையில்லை என்று ஜனாதிபதியிடம் தாம...</summary>
            <content type="html"><![CDATA[<p>20-ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்குத் தேவைப்பட்ட சர்வஜன வாக்கெடுப்பு, 22-ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு ஏன் தேவையில்லை என்று ஜனாதிபதியிடம் தாம் கேள்வி எழுப்புவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.</p><p>
ரத்தொட்ட பகுதியில் நடைபெற்ற கட்சியின் மகளிர் அணிக் கூட்டமொன்றில் அவர் இந்தக் கேள்வியை எழுப்பியுள்ளார்.
</p><p>ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க எதிர்க்கட்சியில் இருந்தபோது, அன்றைய அரசாங்கம் 20-ஆவது திருத்தத்தைக் கொண்டுவந்த வேளையில் நாடாளுமன்றத்தின் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் சர்வஜன வாக்கெடுப்பும் அவசியம் எனக் கூறியிருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9f454468-e476-454e-b898-575d7c862ea6/26-6a9d972075c7a.webp' /></p><p>
</p><p> ஆனால் இன்று, 22-ஆவது திருத்தத்திற்குச் சர்வஜன வாக்கெடுப்புத் தேவையில்லை என அரசாங்கத்தில் உள்ளவர்களே கூறி வருவதாகச் சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p>
நாட்டில் தினமும் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுச் சட்டத்தின் ஆட்சி பலவீனமடைந்துள்ள சூழலில், 22-ஆவது அரசியலமைப்புத் திருத்தமானது நீதித்துறையின் சுயாதீனத்தைப் பாதித்து, சட்டத்தின் ஆட்சியை மேலும் சீரழிக்கும் என தெரிவித்துள்ளார்.</p><p>
தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கமானது மனிதநேயமற்ற, மனித உரிமைகளை மீறுகின்ற, மக்கள் நலனுக்கு முன்னுரிமை தராத மற்றும் நீதித்துறையின் சுதந்திரத்தைப் பொருட்படுத்தாத ஒரு அரசாங்கமாகும் என சஜித் குற்றம் சுமத்தியுள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-06T16:48:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் சட்டவிரோதமாக கடலட்டைகளை கடத்திய மூவர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/three-arrested-illegally-smuggling-sea-jaffna-1788712654"></link>
            <id>https://jvpnews.com/article/three-arrested-illegally-smuggling-sea-jaffna-1788712654</id>
            <summary type="text">யாழ்ப்பாணம், குடரப்பு கடற்கரைப் பகுதியில் சட்டவிரோதமாகக் கடலட்டைகளைக் கடத்திச் சென்ற மூவர் கடற்படையினரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளனர். 

 வெற்றிலைக்கேண...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம், குடரப்பு கடற்கரைப் பகுதியில் சட்டவிரோதமாகக் கடலட்டைகளைக் கடத்திச் சென்ற மூவர் கடற்படையினரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளனர்.</p><p></p><p> 

 வெற்றிலைக்கேணி கடற்படை முகாம் அதிகாரிகளால் நேற்று சனிக்கிழமை காலை முன்னெடுக்கப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போதே இந்த கடலட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4edfe743-a1f5-4219-8048-5411a46cf65c/26-6a9d96d010c4b.webp' /></p><p>கடற்கரைக்கு அருகில் சந்தேகத்திற்கிடமான முறையில் காணப்பட்ட படகொன்றைச் பரிசோதித்தபோது, சட்டவிரோதமாகப் பிடிக்கப்பட்டு நிலப்பரப்பிற்கு கடத்தி வரப்பட்ட 673 கடல் அட்டைகள் அடங்கிய தொகுதியை கடற்படையினர் கண்டுபிடித்துள்ளனர். </p><p>

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 51 முதல் 56 வயதிற்கு இடைப்பட்ட மன்னார் பகுதியைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.</p><p> 

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள், கடலட்டைகள் தொகுதி, கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட படகு மற்றும் மீன்பிடி உபகரணங்கள் என்பன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணம் மீன்பிடிப் பரிசோதகர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.</p><p></p>]]></content>
            <updated>2026-09-06T16:37:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் பெற்றோரைக் கத்தியால் குத்திய மகன் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/son-arrested-after-couple-in-their-60s-stabbed-1788701729"></link>
            <id>https://canadamirror.com/article/son-arrested-after-couple-in-their-60s-stabbed-1788701729</id>
            <summary type="text">கனடாவின் மொண்ட்ரியால் நகரிலுள்ள செயிண்ட்-லியோனார்ட் பகுதியில், 60 வயதைக் கடந்த பெற்றோரைக் கத்தியால் குத்திய குற்றத்திற்காக அவர்களுடைய 26 வயது மகனைக் க...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் மொண்ட்ரியால் நகரிலுள்ள செயிண்ட்-லியோனார்ட் பகுதியில், 60 வயதைக் கடந்த பெற்றோரைக் கத்தியால் குத்திய குற்றத்திற்காக அவர்களுடைய 26 வயது மகனைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.</p><p>
வியோ பூலேவார்டு மற்றும் ஜீன்-ரிவார்ட் தெரு அருகில் நடைபெற்ற இந்தச் சம்பவத்தில், 68 வயதுடைய ஆண் மற்றும் 66 வயதுடைய பெண் ஆகிய இருவரின் உடலின் மேல் பகுதியில் கூர்மையான ஆயுதத்தால் பலத்த கத்திக் குத்து காயங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.</p><p> 
உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட இருவரும் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், தற்போது அவர்களின் உடல்நிலை தேறி ஆபத்தான கட்டத்தைத் தாண்டிவிட்டதாக மொண்ட்ரியால் காவல்துறையின் செய்தித் தொடர்பாளர் ஜீன்-பியர் பிராபண்ட் உறுதிப்படுத்தியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/58c6fcae-689e-4d0a-8442-d38f00e3ade4/26-6a9d6c2323fc5.webp' /></p><p>
சம்பவம் நடந்த இடத்திற்கு அருகிலேயே தம்பதியினரின் 26 வயது மகன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு, விசாரணை மையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். </p><p>
அவரிடம் விசாரணை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில், சம்பவம் நடைபெற்ற இடத்தில் பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட்டு மேலதிக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-06T16:30:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[நடுவானில் தீப்பிடித்த விமானம்: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/the-engine-on-fire-qantas-flight-from-queenstown-1788711328"></link>
            <id>https://tamilwin.com/article/the-engine-on-fire-qantas-flight-from-queenstown-1788711328</id>
            <summary type="text">நியூசிலாந்தின் குயின்ஸ்டவுன் நகரிலிருந்து அவுஸ்திரேலியாவின் சிட்னி நோக்கிப்
பயணித்த &#039;குவாண்டாஸ்&#039; விமானத்தின் இடதுபுற எஞ்சினில், விமானம் டேக்-ஆஃப் ஆன...</summary>
            <content type="html"><![CDATA[<p>நியூசிலாந்தின் குயின்ஸ்டவுன் நகரிலிருந்து அவுஸ்திரேலியாவின் சிட்னி நோக்கிப்
பயணித்த 'குவாண்டாஸ்' விமானத்தின் இடதுபுற எஞ்சினில், விமானம் டேக்-ஆஃப் ஆன
சிறிது நேரத்தில் திடீரெனத் தீப்பிடித்து எரிந்தமையால் பெரும் பரபரப்பு
ஏற்பட்டது.
</p><p>
வானில் பறந்து கொண்டிருந்தபோதே எஞ்சினிலிருந்து தீப் பிளம்புகள் வெளியேறியதைக்
கண்டு பயணிகள் பெரும் அச்சத்திற்குள்ளாகினர்.</p><h2>மேலதிக விசாரணை</h2><p>

நிலைமையை உடனடியாகச் சீர்செய்த விமானி, விமானத்தை கிறைஸ்ட்சர்ச் சர்வதேச விமான
நிலையத்திற்குத் திருப்பி அனுப்பி, அங்கு அதனைப் பாதுகாப்பாகத் தரையிறக்கினார்.</p><p><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr"><a href="https://x.com/hashtag/VIDEO?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#VIDEO</a>: Flames erupted from the engine of a Qantas flight shortly after takeoff from Queenstown on Sept. 5, forcing the Sydney-bound aircraft to divert to Christchurch. Videos of the fiery moment circulated on social media. <a href="https://t.co/6QZ5ObUzNN">pic.twitter.com/6QZ5ObUzNN</a></p>&mdash; Saudi Gazette (@Saudi_Gazette) <a href="https://x.com/Saudi_Gazette/status/2096583345899508060?ref_src=twsrc%5Etfw">September 6, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>

விமானத்திலிருந்த பயணிகள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் எவ்வித காயங்களுமின்றி
பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக விமான நிலைய அதிகாரிகள்
உறுதிப்படுத்தியுள்ளனர்.
</p><p>
பறவைகளின் மோதலால் இந்த எஞ்சின் கோளாறு ஏற்பட்டிருக்கலாம் என
சந்தேகிக்கப்படும் நிலையில், வானில் எஞ்சின் தீப்பிடித்து எரிந்த காட்சிகள்
சமூக வலைத்தளங்களில் வெளியாகிப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.</p><p>சம்பவம் குறித்து விமானப் போக்குவரத்துத் துறையினர் மேலதிக விசாரணைகளை
ஆரம்பித்துள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-06T16:23:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[முடிவுக்கு வரும் சன் டிவியின் டாப் சீரியல்.. கடும் அதிர்ச்சியில் ரசிகர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/sun-tv-kayal-serial-ending-soon-1788711724"></link>
            <id>https://cineulagam.com/article/sun-tv-kayal-serial-ending-soon-1788711724</id>
            <summary type="text">சன் டிவியில் ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகும் ஒரு சீரியல் முடியப்போவதாக வந்திருக்கும் செய்தி ரசிகர்களை கடும் அதிர்ச்சி ஆக்கி இருக்கிறது.டிவி சேனல்கள் ஓடாத ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சன் டிவியில் ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகும் ஒரு சீரியல் முடியப்போவதாக வந்திருக்கும் செய்தி ரசிகர்களை கடும் அதிர்ச்சி ஆக்கி இருக்கிறது.</p><p>டிவி சேனல்கள் ஓடாத சீரியல்களை முடித்துவிட்டு அதன்பின் புது சீரியலை அறிமுகப்படுத்துவது வழக்கமான ஒன்று தான். ஆனால் இந்த முறை முன்னணியில் இருக்கும் சீரியல் நடிகருடன் ஏற்பட்ட சிக்கல் காரணமாகவே முடிக்கப்படுவதாக கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/238fc627-485c-44c5-a6af-04e3f774339a/26-6a9d932dbf7ce.webp' /></p><p>
</p><h2>கயல் Climax</h2><p>கயல் சீரியல் தான் விரைவில் முடியப்போகிறதாம். அதில் ஹீரோவாக நடித்து வந்த சஞ்சீவ் தொடரில் நடிக்க மறுப்பதாக முன்பே செய்தி வெளியானது குறிப்பிடத்தக்கது.
</p><p>அவர் கோமாவில் இருப்பது போல தொடர்ந்து சீரியலில் காட்டப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தான் விரைவில் கயல் கிளைமாக்ஸ் வர இருப்பதாக தகவல் வெளிவந்திருக்கிறது.
</p><p>அந்த செய்தி ரசிகர்களை கடும் அதிர்ச்சி ஆக்கி இருக்கிறது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6da3b1dc-a6ee-4064-9086-09b450220d1f/26-6a9d932e95775.webp' /></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-06T16:22:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்த அரசாங்கம் படைத்துள்ள சாதனை: மார் தட்டிக் கொள்ளும் ஜனாதிபதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/anura-says-npp-govt-made-a-record-1788711018"></link>
            <id>https://tamilwin.com/article/anura-says-npp-govt-made-a-record-1788711018</id>
            <summary type="text">இந்த அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பினை ஏற்று இரண்டு ஆண்டுகளில் இனவாதப் பிரச்சினைகள் எதுவும் ஏற்படவில்லை என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இலங்கை வரலாற்றில் தம...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்த அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பினை ஏற்று இரண்டு ஆண்டுகளில் இனவாதப் பிரச்சினைகள் எதுவும் ஏற்படவில்லை என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
</p><p>இலங்கை வரலாற்றில் தமது அரசாங்க ஆட்சிக் காலத்தில் மட்டுமே இனவாத அடிப்படையிலான பிரச்சினைகள் ஏற்படவில்லை என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
</p><p>வரலாற்றில் முதல் தடவையாக கடந்த இரண்டு ஆண்டுகளில் இனவாத அடிப்படையிலான பிரச்சினைகள் தொடர்பில் எந்தவொரு பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடுகள் பதிவாகவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/08808ae0-56bf-42bf-b4f7-c58bd6f2050b/26-6a9d906f9d3fb.webp' /></p><p>
கடந்த காலங்களில் ஆட்சி செய்த ஆட்சியாளர்கள் இனவாதத்தை போஷித்தார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>சில அரசாங்கள் சிங்கள இனவாத அமைப்புக்களுக்கும் முஸ்லிம் இனவாத அமைப்புக்களுக்கும் ஒரே கணக்கிலிருந்து பணம் வழங்கியதாகத் தெரிவித்துள்ளார்.
</p><p>ஓரே வங்கிக் கணக்கிலிருந்து சிங்கள இனவாத அமைப்புக்களுக்கும், முஸ்லிம் இனவாத அமைப்புக்களுக்கும் பணம் வைப்பிலிடப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
</p><p>மக்களை ஒன்றிணைத்து ஆட்சி செய்வதனை தவிர்த்து பிரித்தாளும் ஓர் முறையை கடந்த அரசாங்கங்கள் மேற்கொண்டதாகத் தெரிவித்துள்ளார்.
</p><p>இனவாதத்தை தூண்டி, மக்களை நாய்களைக் போன்று கடித்துக் கொள்ளச் செய்த அரசாங்கங்களே கடந்த காலங்களில் ஆட்சி செய்ததாகத் தெரிவித்துள்ளார்.
</p><p>எனினும் தமது அரசாங்க ஆட்சிக் காலத்தில் இனவாதம் தலைதூக்க இடமளிக்கப்படவில்லை என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-06T16:10:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாமல் ராஜபக்சவுக்கு எதிர்வரும் கிழமைகளில் காத்திருக்கும் அபாயம்! பிணை பெறுவதில் பாரிய சிக்கல்...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-rajapaksa-arrested-judgement-1788699794"></link>
            <id>https://tamilwin.com/article/namal-rajapaksa-arrested-judgement-1788699794</id>
            <summary type="text">நாமல் ராஜபக்சவுக்கு எதிராக வரும் கிழமைகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட உள்ளதாக தெரியவந்துள்ளது.
அத்துடன், கிரிஷ் கொடுக்கல் வாங்கல் தொடர்பான வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாமல் ராஜபக்சவுக்கு எதிராக வரும் கிழமைகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட உள்ளதாக தெரியவந்துள்ளது.
</p><p>அத்துடன், கிரிஷ் கொடுக்கல் வாங்கல் தொடர்பான வழக்கும் இலஞ்ச ஊழல் வழக்காக பதிவு செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p>இந்த விடயம் ராஜபக்சர்கள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில்,&nbsp; கிரிஷ் வழக்கில் 70 மில்லியன் இலஞ்சம் பெறப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.</p><p>மேலும், இது சம்பந்தமாகவும் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களை விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் 
பணிப்பாளர் நாயகத்தால் 'பீ' அறிக்கை சமர்ப்பித்தால் அந்த வழக்கும் இதனுடன் சேர்ந்து, நாமலுக்கு பிணையில் செல்லும் அனுமதியில் சிக்கலை ஏற்படுத்தும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.&nbsp;</p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">எயார்பஸ் நிறுவனத்தின் பிரதிநிதிகளின் வருகை</span></p><p>நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்ட வழக்கில் வரலாற்றுச் சிறப்புமிக்க சம்பவம் ஒன்று நிகழவுள்ளது.</p><p> உலகின் மிகப்பெரிய இரு விமான தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான “எயார்பஸ்” நிறுவனத்தின் பிரதிநிதிகள் இலங்கைக்கு வந்து வாக்குமூலம் மற்றும் சாட்சியங்களை வழங்கவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/zS2Cv0mlPKk" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p>
தொழிலதிபர் நிமல் பெரேராவின் வாக்குமூலத்தின் அடிப்படையில், மட்டுமே நாமல் இதில் தொடர்புபடுத்தப்படுகிறார் என்பதல்ல. நாமலை இதில் தொடர்புபடுத்துவதற்கு பிரதானமாக சான்றுகள் பல சமர்ப்பிக்கப்படவுள்ளன. </p><p>இதன்படி, இலங்கையில் உள்ள மேலும் சில சாட்சியாளர்கள் வாக்குமூலம் வழங்கவுள்ளதாகக் கூறப்படும் வேளையில், அதில், ஒரு பாதுகாப்பு அதிகாரி மற்றும் ஒரு சாரதியும் அடங்கியுள்ளனர்.</p><h2>வெளிச்சத்திற்கு வரும் ஆதாரங்கள்</h2><p> </p><p>எனவே இது நிமலின் வாக்குமூலம் மட்டுமல்ல, எயார்பஸ் நிறுவனத்தின் சாட்சியங்களில் நாமலுடன் மேற்கொள்ளப்பட்ட பரிவர்த்தனைகள் கலந்துரையாடல்கள் மற்றும் மின்னஞ்சல்கள் போன்ற பல விடயங்கள் சேர்க்கப்படவுள்ளதாகக் கூறப்படுகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2cee8cdb-1e8e-4087-8437-a05aee318e2c/26-6a9d6494e913a.webp' /></p><p>நீதிமன்ற தகவல்களின் படி, எயார்பஸ் நிறுவனத்தில் சாட்சியம் அளிப்பது யார் அவர்களின் உண்மைத்தன்மை என்ன என்பது போன்ற தகவல்கள் இதுவரை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை.</p><p> அதாவது, ஒரு இலஞ்ச வழக்கில் இலஞ்சம் கொடுத்த தரப்பு தான் இலஞ்சம் கொடுத்ததாகக் கூற வேண்டும்.</p><p>மேலும் அந்த இலஞ்சம் கொடுத்த நபருடன் இந்த குறிப்பிட்ட நபர் எவ்வாறு தொடர்புபடுகிறார் என்பது பற்றிய தெளிவான சான்றுகளையோ அல்லது இலஞ்சம் கொடுத்த தரப்பின் வாக்குமூலத்தையோ சமர்ப்பிக்க வேண்டும்.</p><p>தற்போது கூறப்படும் தகவல்களின் படி இதுவரை வெளிப்படுத்தப்படாத பல விடயங்கள் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.&nbsp;</p><p></p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-06T16:06:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ். நெடுந்தீவை முற்றுகையிட்ட தமிழக விசைப்படகுகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/tamil-nadu-trawlers-surround-jaffna-s-delft-island-1788710753"></link>
            <id>https://jvpnews.com/article/tamil-nadu-trawlers-surround-jaffna-s-delft-island-1788710753</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் – நெடுந்தீவை அண்டிய கடற்பரப்பில் இந்திய தமிழக மீனவர்களின் விசைப்படகுகள் அதிகளவில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடுவதால், உள்ளூர் மீனவர்கள் பெ...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் – நெடுந்தீவை அண்டிய கடற்பரப்பில் இந்திய தமிழக மீனவர்களின் விசைப்படகுகள் அதிகளவில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடுவதால், உள்ளூர் மீனவர்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>
</p><p></p><p>தமிழக மீனவர்களின் ரோலர் விசைப்படகுகள், நெடுந்தீவு கரையிலிருந்து சுமார் 4 கடல் மைல் தொலைவுக்குள் உள்ள கடற்பரப்பில் அதிகளவில் மீன்பிடியில் ஈடுபட்டுள்ளதாக உள்ளூர் மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cdca7875-9107-4bd0-8574-92e3311649e1/26-6a9d8f62c99e3.webp' /></p><p>இவ்வாறு அதிக எண்ணிக்கையிலான இந்திய விசைப்படகுகள் வரிசையாக நிற்பதால், அந்தப் பகுதிக்கு அப்பால் சென்று மீன்பிடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும்,

இதன் காரணமாக நெடுந்தீவு மீனவர்கள் மீன்பிடி நடவடிக்கைகளை கைவிட்டு கரை திரும்ப வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
இந்திய விசைப்படகுகளின் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கைகள் காரணமாக தங்களின் வாழ்வாதாரம் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டு வருவதாகவும், இதற்கு உரிய தீர்வு காணப்பட வேண்டும் எனவும் நெடுந்தீவு மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-06T16:06:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[எவரும் தப்ப முடியாது : 22 ஆவது திருத்தம் நிறைவேற்றப்படும் : ஜனாதிபதி அனுர திட்டவட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/no-one-will-be-left-president-anura-1788709487"></link>
            <id>https://ibctamil.com/article/no-one-will-be-left-president-anura-1788709487</id>
            <summary type="text">&amp;nbsp;அரசாங்கத்தால் வெளிக்கொணரப்பட்டதாகக் கூறப்படும் அனைத்து ஊழல் மற்றும் முறைகேடுகள் முழுமையாக விசாரிக்கப்பட்டால், அதற்குப் பொறுப்பானவர்களில் ஒருவரும...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;அரசாங்கத்தால் வெளிக்கொணரப்பட்டதாகக் கூறப்படும் அனைத்து ஊழல் மற்றும் முறைகேடுகள் முழுமையாக விசாரிக்கப்பட்டால், அதற்குப் பொறுப்பானவர்களில் ஒருவரும் தப்ப மாட்டார்கள் என்று ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க கூறியுள்ளார்.
</p><p>

இன்று (06) புலத்சிங்ஹல பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.</p><h2>உள்ளே இருந்து பார்க்கும்போது தெரியவந்த ஊழல் செயற்பாடு</h2><p>&nbsp;அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னரும், அரச விவகாரங்களை உள்ளிருந்தே ஆய்வு செய்த பின்னருமே, கூறப்படும் முறைகேடுகளின் அளவைக் கண்டறிந்ததாகக் கூறினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/00c198a6-b6dd-4603-b487-cbe618c74052/26-6a9d8e6c94fee.webp' /></p><p>"நாங்கள் வெளியே இருந்தபோது, ​​ஊழலைப் பற்றிப் பேசினோம். ஆனால் உள்ளே வந்து, நமது நாட்டிற்கு என்ன செய்யப்பட்டுள்ளது என்பதைப் பார்க்கும்போது, ​​இந்த விஷயங்களை ஒவ்வொன்றாக வெளிக்கொணரும்போது, ​​நமது நாடு மிகப்பெரிய அளவிலான முறைகேடுகளைச் சந்தித்துள்ளது என்பதை நாம் காண்கிறோம்," என்று ஜனாதிபதி தெரிவித்தார்.</p><p>&nbsp; "நீங்கள் யதார்த்தத்தைப் பார்த்தால், ஒரு நபர் கூட தப்ப மாட்டார் என்ற அளவிற்கு நிலைமை உள்ளது," என்று கடந்தகால ஊழல் மற்றும் முறைகேடுகளுக்குப் பொறுப்பானவர்கள் என்று அவர் குற்றம் சாட்டியவர்களைக் குறிப்பிட்டு மேலும் கூறினார்.</p><p></p><h2>&nbsp;மக்களின் சார்பாக எடுக்கப்படும் முடிவுகள்</h2><p>எதிர்ப்புகள் இருந்தபோதிலும், அரசியலமைப்பு மற்றும் சட்ட சீர்திருத்தங்களை அரசாங்கம் தொடரும் என்று ஜனாதிபதி குறிப்பிட்டார். மேலும், அவர் "கறுப்பு அரசு" என்று வர்ணித்த ஒன்றிலிருந்து பயனடைந்தவர்கள் பெருகிய முறையில் கவலைப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8dcb2c4f-8a48-4c1c-b53f-02838db1fefa/26-6a9d8e6be1b97.webp' /></p><p>&nbsp;அரசாங்கத்தின் சீர்திருத்தங்களை எதிர்ப்பவர்கள் வெளிநாட்டுத் தூதரகங்களை அணுகுவதாகவும், சர்வதேச அமைப்புகளுக்குக் கடிதம் எழுதுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
</p><p>
"அவர்கள் கவலைப்பட வேண்டும். ஆனால் நினைவில் கொள்ளுங்கள், நாங்கள் எடுக்கும் முடிவுகள் கவனமாக பரிசீலிக்கப்பட்டு மக்களின் சார்பாக எடுக்கப்படுகின்றன. அத்தகைய எந்த முடிவையும் நாங்கள் மாற்ற மாட்டோம்," என்று அவர் திட்டவட்டமாக தெரிவித்தார்.</p><p></p><p>
</p><p>
</p><h2>22 ஆவது திருத்தம் நிறைவேற்றப்படும்</h2><p>அரசியலமைப்பின் முன்மொழியப்பட்ட 22வது திருத்தம் குறித்துக் குறிப்பிடுகையில், உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பை வழங்கியவுடன் அரசாங்கம் விரைவாகச் செயல்படும் என்று தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c644a7d5-112d-48ee-8c1b-8fb460879b59/26-6a9d8e6d492d0.webp' /></p><p>
</p><p>
"தீர்மானம் வழங்கப்பட்ட உடனேயே, அதை நாங்கள் நாடாளுமன்றத்திற்குக் கொண்டு சென்று நிறைவேற்றுவோம்," என்று அவர் கூறினார்.</p><p>

நீதி அமைப்பில் ஏற்படும் தாமதங்களையும் ஜனாதிபதி விமர்சித்தார். சில வழக்குகளில், சம்பந்தப்பட்ட சம்பவங்கள் நடந்து நீண்ட காலத்திற்குப் பிறகு தீர்ப்புகள் வழங்கப்படுவதால், அந்த வழக்குகள் எதைப் பற்றியவை என்பதைப் பொதுமக்கள் ஏற்கனவே மறந்துவிடுகிறார்கள் என்று அவர் தெரிவித்தார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p>

</p>]]></content>
            <updated>2026-09-06T16:02:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்திய மீனவர்களின் அட்டகாசம் ; இலங்கை மீனவர்கள் கவலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/high-handed-actions-by-indian-fishermen-1788710164"></link>
            <id>https://jvpnews.com/article/high-handed-actions-by-indian-fishermen-1788710164</id>
            <summary type="text">தலைமன்னார் கிராமத்தை அண்மித்த கடற்பரப்பில், இலங்கை கடல் எல்லையிலிருந்து சுமார் 9 கடல் மைல் தொலைவில் இந்திய விசைப்படகுகள் அத்துமீறி மீன்பிடித்ததாக உள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p>தலைமன்னார் கிராமத்தை அண்மித்த கடற்பரப்பில், இலங்கை கடல் எல்லையிலிருந்து சுமார் 9 கடல் மைல் தொலைவில் இந்திய விசைப்படகுகள் அத்துமீறி மீன்பிடித்ததாக உள்ளூர் மீனவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.</p><p>
</p><p></p><p>இந்தச் சம்பவம் சனிக்கிழமை (05) இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9babf02f-0919-4c34-8835-b8a2a70b6cb1/26-6a9d8d15e409f.webp' /></p><p>இந்த அத்துமீறல் காரணமாக இலங்கை மீனவர்களுக்குச் சொந்தமான சுமார் 6 இலட்சம் ரூபாய் பெறுமதியான மீன்பிடி வலைகள் சேதப்படுத்தப்பட்டுள்ளதாகவும், சில வலைகள் காணாமல் போயுள்ளதாகவும் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
</p><p>
மேலும், சம்பவம் தொடர்பில் தலைமன்னார் கடற்படையினரிடம் தகவல் வழங்கப்பட்ட போதிலும், உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் மீனவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.</p><p>

இலங்கை கடற்பரப்பில் இடம்பெறுவதாகக் கூறப்படும் இந்திய விசைப்படகுகளின் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கைகளைத் தடுக்கவும், தங்களது மீன்பிடி உபகரணங்கள் மற்றும் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும் அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தலைமன்னார் மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
</p><p>
இந்நிலையில், சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மீனவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-06T15:56:12+00:00</updated>
        </entry>
    </feed>
