<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-07-25T04:42:11+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிறந்தநாள் விழாவில் நடந்த துப்பாக்கிச் சூடு - இந்தியாவில் சிக்கிய இருவர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/two-suspects-arrested-linked-to-wattala-shooting-1784953794"></link>
            <id>https://ibctamil.com/article/two-suspects-arrested-linked-to-wattala-shooting-1784953794</id>
            <summary type="text">வத்தளையில் நடந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் இருவர் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகம் செய்தி வெளியி...</summary>
            <content type="html"><![CDATA[<p>வத்தளையில் நடந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் இருவர் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.</p><p>சட்டவிரோதமாக படகு மூலம் தனுஷ்கோடிக்கு வந்த இலங்கையர்கள் இருவரை இந்திய கடலோர காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.</p><p>இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள், 30 மற்றும் 31 வயதுடையவர்கள் எனவும், இவர்கள் வத்தளை பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><h2>இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படுவார்கள்</h2><p>கடந்த வியாழக்கிழமை வத்தளை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் இவர்களுக்கு தொடர்புள்ளதா என இலங்கை அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளதாக ‘தி ஹிந்து’ பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1fab9b4c-290a-49e5-aa16-6ea0f5550fc2/26-6a643e47dbcb2.webp' /></p><p>மேலும், இவர்கள் இருவருக்கும் எதிராக இலங்கையில் போதைப்பொருள் தொடர்பான மூன்று வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
</p><p>
இலங்கை அதிகாரிகள் அவர்களை ஒப்படைக்குமாறு கோரியுள்ளதாகவும், சந்தேகநபர்கள் தற்போது திருச்சி மத்திய சிறை வளாகத்திற்குள் உள்ள விசேட முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.</p><p>
ஒரு வாரத்திற்குள் அவர்கள் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாகவும் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-25T04:40:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepachelvan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கறுப்பு ஜூலையில் படுகொலை செய்யப்பட்ட குட்டிமணி, தங்கதுரை, ஜெகன்....]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/kuttimani-thangadurai-were-murdered-in-black-july-1784951919"></link>
            <id>https://ibctamil.com/article/kuttimani-thangadurai-were-murdered-in-black-july-1784951919</id>
            <summary type="text">ஜூலை 23, ஈழத் தமிழ் மக்களின் வரலாற்றில் அழியாத இரத்தக் கறையாகப் பதிந்த நாள். அன்றைய தினங்களில் இலங்கைத் தீவு முழுவதும் ஈழத் தமிழ் மக்களின் குருதியால் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜூலை 23, ஈழத் தமிழ் மக்களின் வரலாற்றில் அழியாத இரத்தக் கறையாகப் பதிந்த நாள். அன்றைய தினங்களில் இலங்கைத் தீவு முழுவதும் ஈழத் தமிழ் மக்களின் குருதியால் நனைந்தது.</p><p> தமிழர்களின் உயிர்கள் மட்டுமல்ல, அவர்களின் வீடுகள், உடைமைகள், தொழில்கள், கல்வி, வாழ்வாதாரம் என ஒரு இனத்தின் இருப்பையே குறிவைத்து திட்டமிட்ட தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டன.</p><p>தமிழ் மக்கள்மீதான இனவெறுப்பை அரசியல் மேடைகளில் வெளிப்படையாகப் பேசிய அன்றைய அதிபர் ஜே.ஆர். ஜெயவர்த்தனவின் ஆட்சியில், அரச இயந்திரமும் அமைச்சர்களும் இணைந்து, இலங்கைத் தலைநகரை மையமாகக் கொண்டு வாழ்ந்திருந்த தமிழர்களின் கல்வி, பொருளாதார வலிமை, சமூக அடித்தளம், இனத்தின் தொடர்ச்சி ஆகியவற்றை சிதைத்தழிக்கும் திட்டமிட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.</p><p> அந்த இனவெறி வன்முறை கொழும்பைத் தாண்டி வடக்கு, கிழக்கு பகுதிகளுக்கும் பரவியது. அதன் தொடர்ச்சியாக, அரசின் காவலில் இருந்த தமிழ் அரசியல் கைதிகள்கூட பாதுகாக்கப்படாமல், அவர்கள்மீதும் திட்டமிட்ட இனப்படுகொலை அரங்கேற்றப்பட்டது.</p><p></p><h2>மகத்தான போராளிகள்</h2><p>ஈழத் தமிழ் மக்களின் வாழ்விலும் வரலாற்றிலும் அகலாத வடுவாக அமைந்த கறுப்பு ஜூலைப் படுகொலைகள் ஜூலை 23இல் துவங்கப்பட்ட நிலையில் ஜூலை 25ஆம் நாளில் அதன் தொடர்ச்சியாக தமிழ அரசியல் கைதிகள் மீதான படுகொலை இடம்பெற்றது.</p><p> அன்றைய நாட்களில் தமிழீழ விடுதலைக்காக போராட்டங்களில் ஈடுபட்ட தமிழ் இளைஞர்கள் அரசியல் கைதிகளாக சிறைகளில் அடைக்கப்பட்டிருந்தனர். அதேவேளை கொலை, கொள்ளை, பாலியல் குற்றங்களுக்காக சிங்கள அரசியல் கைதிகளும் சிறைகளில் அடைக்கப்பட்டிருந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/87425707-4db4-4f5d-9aa0-6343071d27b9/26-6a643d60205fa.webp' /></p><p> </p><p>இந்த நிலையில் எவ்வாறு விடுதலைப் புலிகளின் திருநெல்வேலித் தாக்குதலை தகுந்த வாய்ப்பாக சொல்லிக் கொண்டு கறுப்பு ஜூலைப் படுகொலையை சிறிலங்கா அரசு நிகழ்த்தியதோ அதுதேபோன்று கறுப்பு ஜூலையை தகுந்த வாய்ப்பாக்க் கொண்டு தமிழ் அரசியல் கைதிகள்மீதான படுகொலையும் நடந்தது.
</p><p>
அரசினால் – அரச அமைச்சர்களின் கட்டளையில் சிறைக்கு வெளியில் இருந்த காடையர்களாலும் சிறைக்கு உள்ளே இருந்த காடையர்களாலும் தமிழ் அரசியல் கைதிகள் மீதான சித்திரவதை துவங்கியிருந்தது. </p><p>அவர்களை படுகொலை செய்யும் நோக்கில் துவங்கிய அந்த துன்புறுத்தலின் இறுதியில் 53 தமிழ் அரசியல் கைதிகள் படுகொலை செய்யப்பட்டார்கள். </p><p>தமிழீழ விடுதலை வரலாற்றில் மகத்தான போராளிகளாக மதிக்கப்படுகின்ற குட்டிமணி, தங்கதுரை, ஜெகன் உள்ளிட்ட ஈழவிடுதலைப் போராளிகளே இவ்வாறு வெலிக்கடைச் சிறையில் சிங்களப் பேரினவாதிகளால் படுகொலை செய்யப்பட்டார்கள். </p><p>அவர்களின் படுகொலையின் பின்னால் என்ன காரணம் இருந்தது என்பது இன்றும் ஈழ மண்ணை அதிரச் செய்யும் பின்னணியைக் கொண்டது.</p><p></p><p>
</p><h2>
எனது கண்கள் தமிழீழத்தைக் காணட்டும்</h2><p>தமிழீழ விடுதலை இயக்கம் எனப்படும் ரெலோவின் முக்கியஸ்தர்களாக குட்டிமணி, தங்கதுரை உள்ளிட்டோர் அக்காலத்தில் இருந்தனர். குட்டிமணியும் தங்கதுரையும் பலாலி சிறையில் அடைக்கப்பட்ட ஒரு காலத்தில் அச் சிறையில் இருந்து அவர்கள் தப்பித்தனர். </p><p>தவறுதலாக தங்கதுரைக்கு காலில் காயம் ஏற்பட அவரைத் தூக்கிக் கொண்டு 10 கிலோமீற்றர் வரை ஓடிச் சென்று அவர்கள் இருவரும் தப்பிக் கொண்டனர்.</p><p> தமிழீழ விடுதலைக்காக துடிப்புக் கொண்ட இளைஞர்களாக இவர்கள் இருந்தனர் என்பதை அக்காலத்தவர்கள் இச் சம்பவத்தைக் கூறி நினைவு கொள்வதனையும் அவதானிக்க முடிகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/460155e2-7f37-4118-9f18-0370a8a2bbd9/26-6a643d60c69a0.webp' /></p><p>
</p><p>
இந்த நிலையில் 1981 மே மாத நாட்களில் இன விடுதலை சார்ந்த செயற்பாடுகளுக்காக குட்டிமணிக்கு தூக்குத் தண்டணை விதிக்கப்பட்ட வேளையில், உங்கள் இறுதி ஆசை என்ன என்று நீதிபதி நீதிமன்றத்தில் வினவியிருந்தார். </p><p>அதற்கு அவர் அளித்த பதில் கண்டு அன்றைய நீதிமன்றமே அதிர்ந்து வியந்ததாம். “நான் தூக்கில் இறந்த பின்பு தனது இரண்டு கண்களையும் கண்பார்வை இல்லாத ஒரு தமிழருக்கு தானாமாக வழங்கவேண்டும். என்னால் பார்க்க முடியாமல் போகும் ஈழத்தை எனது கண்களாவது பார்க்கட்டும்” என்றார் மாவீர்ர் குட்டிமணி.</p><p>ஈழத் தமிழ் மக்களுக்கு தனி ஈழமே தீர்வு என்பதையும் எந்த நிலை வந்தாலும் அந்த தாகத்தை விட்டுக்கொடுக்க மகத்தான போராளிகள் தயார் இல்லை என்பதையும் மிகச் சிறந்த தலைவராக அளப்பெரிய போராளியாக மாவீரன் குட்டிமணி அன்று சிங்கள நீதிமன்றில் எடுத்துரைத்தார்.</p><p></p><h2>சிறிங்கா நீதித்துறையை நிராகரித்த தங்கதுரை</h2><p>அதேபோல சிறிலங்கா நீதிமன்றம் குட்டிமணி, தங்கதுரை, ஜெகனுக்கு தூக்குத் தண்டனை அறிவித்தபோது மாவீரன் தங்கதுரை அவர்கள் மற்றொரு வரலாற்றுச் சிறப்பு மிக்க விடயத்தை பதிவாக்கியுள்ளார்.</p><p> ஈழத் தமிழ் மக்கள் ஒருபோதும் சிங்கள தேசத்துடன் இணைந்தவர்கள் இல்லை என்பதை வலியுறுத்தி அவர்கள்மீது பிரிவினைக் குற்றம் சுமத்த எந்த அடிப்படையும் இல்லை என்பதை வலியுறுத்தி தங்கதுரை இறுதி உரை ஆற்றினார். </p><p>அதன் அடிப்படையில் சிறிலங்கா நீதிமன்றத்தையும் அதன் தீர்ப்பையும் ஏற்றுக்கொள்ள மறுத்ததுடன், அவை அடிப்படையில் ஈழத் தமிழ் இனத்தை அழிக்கும் அமைப்பிலும் நோக்கிலும் உருவாக்கப்பட்டவை என்பதையும் எடுத்துரைத்து அதற்காக தமது உயிரையும் தியாகம் செய்திருந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/911d59ac-17c5-4ad6-9f13-83f7ac9b713a/26-6a643d6172532.webp' /></p><p>
</p><p>
கறுப்பு ஜூலையின் இனப்டுகொலைத் தீ வெலிக்கடை சிறைச்சாலை கதவுகளையும் திறந்துகொண்டு உள் நுழைந்தது. கத்தி, வாள் மற்றும் பல கூரிய ஆயுதங்களுடன் தமிழ் கைதிகளின் அறைகளுக்குள் நுழைந்த இனவாதிகள் தமிழ்க் கைதிகளை வெட்டி வீழ்த்தினர். </p><p>என் கண்கள் தமிழீழத்தை காணட்டும் என்ற வீரமிகு பேச்சினை அறிந்திருந்த சிங்களக் கதைகளில் குட்டிமணியை வெட்டிக் கொன்று அவரது கண்களை பிடுங்கி எடுத்து தங்கள் கால்களால் நசுக்கி மகிழ்ந்தனர்.</p><p> குட்டிமணி உள்ளிட்ட போராளிகளின் உடல்களை இழுத்துச்சென்று சிறைச்சாலை முற்றத்தில் இருந்த புத்தரின் முன்னால் போட்டு மகிழ்ந்தாடினார்கள்.
</p><p>
இப்படியான வெறுப்புமிகு செயல்கள் தமிழ் இனத்தின் வரலாற்றில் தீராத துயராகவும் வடுவாகவும் படிந்துவிட்டது. பின்னாட்களில் இந்த வடுக்கள் ஈழவிடுதலைப் போராட்டத்தை வலுப்படுத்தியது.</p><p> ஈழ மக்களின் தாயகக் கனவுக்காக தம்மை அர்ப்பணித்த குட்டிமணி, தங்கதுரை வரலாற்றின் தலைவர்களாகவும் மாவீரர்களாகவும் வழிகாட்டினார். குட்டிமணியின் கனவு தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் காலத்தில் சாத்தியமானது. </p><p>குட்டிமணியின் கண்கள் காணாத தமிழீழம் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் காலத்தில் நிகழ்ந்தது. இன நலன்களுக்காக இலட்சிய வேள்வியில் தம்மை மாய்த்த இந்த மாவீர்ர்கள் தமிழ் சமூகத்திற்கு மாத்திரமின்றி உலகச் சமூகத்திற்கே உன்னத வழிகாட்டிகளாகும்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-25T04:36:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[பின் அழகை காட்டி நடிகை நிகிதா ஷர்மா வெளியிட்ட கிளாமர் போட்டோஸ்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/nikita-sharma-latest-glamorous-photos-1784952205"></link>
            <id>https://cineulagam.com/article/nikita-sharma-latest-glamorous-photos-1784952205</id>
            <summary type="text">நிகிதா ஷர்மாமாடல் அழகி நிகிதா ஷர்மா இவர் தான் இப்போது சமூக வலைதளங்களில் செம டிரண்ட் நடிகை. இன்ஸ்டாவில் சுமார் 81 லட்சம் ரசிகர்களை ஃபாலோயர்களாக கொண்டுள...</summary>
            <content type="html"><![CDATA[<h2>நிகிதா ஷர்மா</h2><p>மாடல் அழகி நிகிதா ஷர்மா இவர் தான் இப்போது சமூக வலைதளங்களில் செம டிரண்ட் நடிகை.</p><p> இன்ஸ்டாவில் சுமார் 81 லட்சம் ரசிகர்களை ஃபாலோயர்களாக கொண்டுள்ளார். தனது ஃபாலோவர்களுக்காகவே மிகவும் கவர்ச்சியான புகைப்படங்களாக வெளியிட்ட வண்ணம் உள்ளார்.</p><p> அண்மையில் நீல நிற கவுனில் செம கவர்ச்சியாக போஸ் கொடுத்து அவர் வெளியிட்ட புகைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் லைக்ஸ் குவிந்து வருகிறது.</p><p><br></p>]]></content>
            <updated>2026-07-25T04:30:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாட்டிலிருந்து வந்த பயணி! கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு தாமதமாக வந்த பொதியில் மர்மம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/spain-passenger-arrested-in-bia-1784945336"></link>
            <id>https://tamilwin.com/article/spain-passenger-arrested-in-bia-1784945336</id>
            <summary type="text">கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெளிநாட்டவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த வெளிநாட்டவர் சுமார் 110 மில்லியன் ரூபா பெறுமதியான கொகைன் போதைப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெளிநாட்டவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
குறித்த வெளிநாட்டவர் சுமார் 110 மில்லியன் ரூபா பெறுமதியான கொகைன் போதைப்பொருளுடன் இலங்கை சுங்கத்திணைக்களத்தின் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப்பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் விவசாய பொறியியலாளரான 79 வயதுடைய ஸ்பெயின் நாட்டை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.</p><p></p><p>
</p><h2>&nbsp;விமான நிலையத்திலிருந்து வெளியேற அனுமதி&nbsp;</h2><p>கடந்த 22 ஆம் திகதி சியரா லியோனில் இருந்து அடிஸ் அபாபா மற்றும் தோஹா ஊடாக கட்டார் எயர்வேஸ் விமான சேவைக்கு சொந்தமான QR654 விமானம் மூலம் இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f4794e3d-5c61-4bb2-85df-e5cb60db52c7/26-6a642f2392621.webp' /></p><p>சந்தேகநபர் கொண்டு வந்த பயணப்பையை சுங்க அதிகாரிகள் பரிசோதனைக்கு உட்படுத்திய போதிலும், சந்தேகத்திற்கிடமான எந்தப் பொருட்களையும் கண்டுபிடிக்க முடியவில்லை என போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
</p><p>
எனினும், அவரது மற்றைய பயணப்பை குறித்த விமானத்தில் வராத காரணத்தினால், உரிய வருகை நடவடிக்கைகளை நிறைவு செய்த பின்னர் விமான நிலையத்திலிருந்து வெளியேற அவருக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
</p><p>
தாமதமாக வந்த பயணப் பை பின்னர் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டது. அத்துடன், அதைப் பெற்றுக் கொள்வதற்காக சந்தேக நபர் நேற்றைய தினம் மாலை 6.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை பகுதிக்கு வந்துள்ளார்.
</p><h3>பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பயணப்பை</h3><p>குறிப்பிட்ட பயணப் பையை விடுவிப்பதற்கு முன்னர், இலங்கை சுங்கத்தின் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு அதிகாரிகளினால் அது எக்ஸ்-ரே பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8cdd66a2-9a3c-4a78-b494-19165c2e0c3f/26-6a642f244435e.webp' /></p><p>இதன் போது சந்தேகத்திற்கிடமான பொருட்கள் அவதானிக்கப்பட்டதையடுத்து, அது முழுமையான பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

பயணப் பையினுள் மிகவும் நுட்பமான முறையில் முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நான்கு கொகைன் பொதிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
</p><p>
இதன் மொத்த எடை 2.198 கிலோகிராம் எனவும் இதன்பெறுமதி 109.9 மில்லியன் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.</p><p>

இச்சம்பவம் தொடர்பாக&nbsp; ஆரம்ப விசாரணைகளை&nbsp;இலங்கைச் சுங்கம் தொடங்கியுள்ளது.
</p><p>
சந்தேக நபரும் கைப்பற்றப்பட்ட கொகைன் தொகையும் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p><p> </p>]]></content>
            <updated>2026-07-25T04:30:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தியாவில் நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் - கல்வி அமைச்சரின் பதவி விலகல் குறித்து இன்று வெளியாகவுள்ள முடிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/neet-protest-india-1784952262"></link>
            <id>https://tamilwin.com/article/neet-protest-india-1784952262</id>
            <summary type="text">இந்திய மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினரின் கோரிக்கை குறித்து மத்திய அரசு இன்று(25.07.2026) முட...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்திய மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினரின் கோரிக்கை குறித்து மத்திய அரசு இன்று(25.07.2026) முடிவெடுக்கவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p>

நீட் பரீட்சை வினாத்தாள் கசிந்த விவகாரம் குறித்து மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் எனக் கோரி, கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் ஜூன் 20 ஆம் திகதியில் டெல்லியின் ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டம் நடத்தத் தொடங்கினர்.</p><p></p><h2>இன்று நண்பகலுக்குள் முடிவு</h2><p>ஒரு மாதத்துக்கும் மேலாக நடக்கும் இப்போராட்டத்தில் மாணவர்கள், இளைஞர்கள், அரசியல் தலைவர்கள் உள்பட பல்வேறு தரப்பினர் பங்கேற்று வருகின்றனர்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/33128aeb-11c7-4a19-aa4e-76e67644a2aa/26-6a643ab13ca93.webp' /></p><p>

இதனைத் தொடர்ந்து, போராட்டத்தைக் கைவிடக் கோரி தொடர்ந்து வலியுறுத்திய நிலையில், மாணவர்கள் கடுமையான தாக்குதலுக்கு உள்ளானர். </p><p>மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனிடையே, போராட்டம் நடத்தி வரும் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினருடன் மத்திய அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர்.</p><p>

இரண்டாவது முறையாக வெள்ளிக்கிழமை நடந்த பேச்சுவார்த்தையின்போது, கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகல் குறித்தே கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் தொடர்ந்து வலியுறுத்தினர்.
</p><p>
இதனையடுத்து, அவர்களின் கோரிக்கை மீது முடிவெடுக்க மத்திய அமைச்சர்கள் அவகாசம் கோரியதுடன், தர்மேந்திர பிரதானின் பதவி விலகல் குறித்து இன்று (ஜூலை 25) நண்பகலுக்குள் முடிவெடுப்பதாகவும் மத்திய அமைச்சர்கள் கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-25T04:28:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிளிநொச்சியில் வானத்தை நோக்கிச் சுட்ட காவல்துறையினர் - 9 பேர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/nine-arrested-clash-during-forest-clearance-raid-1784951602"></link>
            <id>https://ibctamil.com/article/nine-arrested-clash-during-forest-clearance-raid-1784951602</id>
            <summary type="text">வனஜீவி மற்றும் காவல்துறை விசேட அதிரடிப்படை அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு விளைவித்தமை தொடர்பாக சந்தேகநபர்கள் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.கிளிநொச்சி,...</summary>
            <content type="html"><![CDATA[<p>வனஜீவி மற்றும் காவல்துறை விசேட அதிரடிப்படை அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு விளைவித்தமை தொடர்பாக சந்தேகநபர்கள் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>கிளிநொச்சி, அக்கராயன்குளம், பகுதியில் உள்ள ஒரு பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி அழிக்கப்படுவதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் அதிகாரிகள் இந்த சோதனையை நடத்தியதாக காவல்துறை தெரிவித்துள்ளது.</p><p>காவல்துறையினர் வெளியிட்ட விசேட அறிக்கையில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">வைத்தியசாலையில் அனுமதி</span></p><p>
</p><p>
அந்த அறிக்கையில், அப்பகுதியில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி அழிக்கப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் அதிகாரிகள் சுற்றிவளைப்பிற்கு சென்றுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f87312fd-f3eb-42ff-a1c9-d008f75b8bf8/26-6a643a0b1557b.webp' /></p><p>அங்கு ஏற்பட்ட பதற்ற நிலைமையை கட்டுப்படுத்த விசேட அதிரடிப்படை அதிகாரிகள் வானத்தை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தியதாகவும் காவல்துறையினர் குறிப்பிட்டனர்.
</p><p>
</p><p>மோதல் காரணமாக காயமடைந்த விசேட அதிரடிப்படை அதிகாரிகள் நால்வர் சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
</p><p>
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவரும் நெஞ்சு வலி காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-25T04:26:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஏமனைத் தாக்கிய சவுதி அரேபியா... பதிலடி உறுதி என ஹவுதிகள் சபதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/houthis-vow-retaliation-against-saudi-1784953493"></link>
            <id>https://news.lankasri.com/article/houthis-vow-retaliation-against-saudi-1784953493</id>
            <summary type="text">பொதுமக்கள் குடியிருக்கும் பகுதிகளை சவுதி அரேபியா குறிவைப்பதாக குற்றம் சாட்டிய ஹவுதிகள், அந்நாட்டிற்கு எதிராக பதிலடி உறுதி என சூளுரைத்துள்ளனர்.விரிவடைய...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொதுமக்கள் குடியிருக்கும் பகுதிகளை சவுதி அரேபியா குறிவைப்பதாக குற்றம் சாட்டிய ஹவுதிகள், அந்நாட்டிற்கு எதிராக பதிலடி உறுதி என சூளுரைத்துள்ளனர்.</p><h2>விரிவடையும் போர்</h2><p>ஹவுதிகளின் இந்த நகர்வால் மத்திய கிழக்கு பிராந்தியம் முழுவதும் போர் விரிவடையத் தொடங்கியுள்ளதாகவே அஞ்சப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4623da53-f8e8-4914-a659-d5963fa36ce0/26-6a643c8983dba.webp' /></p><p>
</p><p>யேமனின் முன்னணி எண்ணெய் உற்பத்திப் பகுதியான ஹொடைடாவில் உள்ள ஹவுதி இராணுவ இலக்குகள் மீது சவுதி அரேபியா வெள்ளிக்கிழமை தாக்குதல் நடத்தியது. </p><p>இந்தத் தாக்குதலுக்கு முன்னதாக, ஹவுதிகள் கடல்வழி முற்றுகையை அறிவித்து, சவுதி அரேபியா தொடர்புடையக் கப்பல்களையும் தாக்கியது. மேலும், சவுதி அரேபியாவின் ஒரே மாற்று கடல்வழிப் பாதையான ஹார்முஸ் நீரிணையை ஈரான் ஒரே நேரத்தில் முடக்கியுள்ள சூழலில் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது.</p><p>ஹொடைடா துறைமுக நகரிலுள்ள கடற்படைத் தளம் மற்றும் கமரன் தீவிலுள்ள இராணுவ முகாம் ஆகியவை சவுதி தரப்பால் இலக்கு வைக்கப்பட்டதாக ஏமன் நாட்டுப் பாதுகாப்புத் துறை வட்டாரம் ஒன்று தெரிவித்துள்ளது.</p><p></p><p> </p><p>இதனிடையே, செங்கடல் கப்பல் போக்குவரத்தின் மீதான தாக்குதல்களுக்குப் பதிலடியாக, ஹவுதி அமைப்பின் தளங்களைத் தாக்கியதாகவும், வணிகக் கப்பல்களுக்கு அச்சுறுத்தலாக இருந்த இலக்குகளை அழித்ததாகவும் சவுதி தலைமையிலான கூட்டணி தெரிவித்துள்ளது. </p><p>இந்த வாரத்தில் இரண்டு சவுதி கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியதாக ஹவுதிகள் உரிமை கோரியதைத் தொடர்ந்து இந்தத் தாக்குதல்கள் நடந்துள்ளன; இதில் செங்கடலில் நடத்தப்பட்ட ஒரு தாக்குதலை சவுதி அரேபியா உறுதிப்படுத்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d4fdd3c4-1bae-471f-9240-d2f29df5018f/26-6a643c88a8b0e.webp' /></p><p> </p><p>இந்த நிலையில், ஈரான் தற்போது அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளில் தீவிரம் காட்டி வருவதால், அதன் மீது பெரிய அளவிலான தாக்குதல்களை நடத்துவதா என்பது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை என்று டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார். </p><p>ஆனால், பேச்சுவார்த்தைக்கு இதுவரை தங்கள் தரப்பில் இருந்து தயாராகவில்லை என்றே ஈரான் அறிவித்துள்ளது. மேலும், அழுத்தங்களை எதிர்கொள்ள முடியாமல் ட்ரம்ப் மட்டுமே ஈரான் பேச்சுவார்த்தைக்கு விரும்புவதாக பொய்யானத் தகவல்களை வெளியிட்டு வருவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளனர்.</p><h2>அமெரிக்கர்களுக்கு எச்சரிக்கை</h2><p> பொருளாதார ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் கடும் நெருக்கடியை எதிர்கொள்ளும் ட்ரம்ப், ஈரான் மீது மிகப் பெரிய தாக்குதல் ஒன்றை முன்னெடுக்க மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியானது. </p><p>ஆனால், அது ஈரானை அச்சுறுத்தும் நடவடிக்கை மட்டுமே என்றும், ஈரான் மீது போர் தொடுப்பதையே விரும்பாத அமெரிக்க மக்கள் எதிர்வரும் தேர்தலின்போது ட்ரம்பிற்கு எதிராக திரும்ப வாய்ப்புள்ளதாகவும் ஆய்வாளர்கள் விளக்குகின்றனர். </p><p>இருப்பினும் மத்திய கிழக்கில் மோதல் தணிவதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை. இதனிடையே, மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்கத் தூதரகங்கள், அங்கிருந்து வெளியேறுவதற்கான வாய்ப்புகள் குறைந்துவிடக்கூடும் என்று அமெரிக்கர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b6507c3f-e7c6-4123-b998-6ab97233e8f8/26-6a643c8a34d0a.webp' /></p><p> </p><p>அமெரிக்கப் படைகள் நிலைநிறுத்தப்பட்டுள்ள தளங்களைத் தவிர்க்குமாறு அண்டை நாடுகளின் மக்களுக்கு ஈரானின் புரட்சிகரப் படை அறிவுறுத்தியது.</p><p> இதற்கிடையில், குவைத்தின் உடெய்ரியில் உள்ள அமெரிக்கத் தளத்தை இலக்கு வைத்துத் தாக்கியதாகவும், அதில் மூன்று ஆயுதக் கிடங்குகளை அழித்ததாகவும் ஈரானின் புரட்சிகரப் படை தெரிவித்துள்ளது.
</p><p>பஹ்ரைனைத் தளமாகக் கொண்ட அமெரிக்கக் கடற்படையின் ஐந்தாவது கடற்படைப் பிரிவின் கண்காணிப்புக் கோபுரம் ஒன்றின் மீதும் தாக்குதல் நடத்தியதாக ஈரானின் புரட்சிகரப் படை உரிமை கோரியது. இது குறித்த கேள்விகளுக்கு அமெரிக்க மத்தியக் கட்டளை மையம் (US Central Command) பதிலளிக்க மறுத்துள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-25T04:23:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பில் பிறந்தநாள் விழாவில் பரபரப்பை ஏற்படுத்திய துப்பாக்கிச்சூடு! இந்தியாவில் சிக்கிய இருவர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/two-suspected-wattala-shooting-arrested-in-india-1784949761"></link>
            <id>https://tamilwin.com/article/two-suspected-wattala-shooting-arrested-in-india-1784949761</id>
            <summary type="text">வத்தளையில் நடந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துடன் தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் இருவரை இராமேஸ்வரம் கடலோர காவல் குழும (மரைன்) பொலிஸார் கைது செ...</summary>
            <content type="html"><![CDATA[<p>வத்தளையில் நடந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துடன் தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் இருவரை இராமேஸ்வரம் கடலோர காவல் குழும (மரைன்) பொலிஸார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.</p><p> </p><p>இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் வத்தளையை சேர்ந்தவர்கள் என்றும் 30 மற்றும் 31 வயதுக்குட்பட்டவர்கள் என்றும் கூறப்படுகின்றது.</p><p>கடந்த வியாழக்கிழமை வத்தளையில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இவர்களுக்கு தொடர்பு இருப்பதாக பொலிஸ் சந்தேகிப்பதாக இந்திய ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.</p><p></p><h2>கடவுச்சீட்டின்றி சட்டவிரோதமாக ஊடுருவல்</h2><p>இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் (23) இரவு மன்னார் பேசாலை கடற்கரையிலிருந்து ரூ.3 இலட்சம் பணம் கொடுத்து படகில் புறப்பட்டு, நேற்று (24) அதிகாலை சுமார் 4.00 மணியளவில் தனுஷ்கோடி கம்பிப்பாடு கடற்கரையை வந்தடைந்ததாக தெரிவித்துள்ளனர்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d8de0bfc-e2a5-4164-a20d-985111b69f0e/26-6a64334658e62.webp' /></p><p>கடவுச்சீட்டு இன்றிச் சட்டவிரோதமாக ஊடுருவியதற்காக இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து புழல் சிறையில் அடைக்க மரைன் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.&nbsp;&nbsp;</p><p>மேலும், இருவர் மீதும் இலங்கையில் போதைப்பொருள் தொடர்பான மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.</p><p>இதன் காரணமாக, இருவரையும் மீண்டும் இலங்கைக்கு திருப்பி அனுப்புவது குறித்து 'கியூ' பிரிவு பொலிஸார் உயர் அதிகாரிகளுடன் ஆலோசிக்கப்பட்டு வருகின்றது.&nbsp;</p><h2>5 பொலிஸ் குழுக்கள் விசாரணை</h2><p>இதேவேளை, வத்தளை, கதிரான பள்ளியவத்தை பகுதியில் நேற்று இரவு பிறந்த நாள் வரவேற்பு மண்டபமொன்றில் நடைபெற்ற விருந்தொன்றிற்குள் புகுந்த துப்பாக்கிதாரி ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 39 வயதுடைய நபரொருவர் உயிரிழந்திருந்தார்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6a1b6e75-6cc3-4253-af31-1a0b278342db/26-6a6433470954c.webp' /></p><p>இந்த சம்பவத்திற்கு உதவி புரிந்த குற்றச்சாட்டின் பேரில் இரு பெண்கள் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>போதைப்பொருள் கடத்தல்காரராகக் கருதப்படும் மட்டக்குளியைச் சேர்ந்த 'குடு ரொஷான்' என்பவரைக் இலக்கு வைத்தே இத்துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட போதிலும், இலக்குத் தவறியதால் அவருக்கு அருகில் இருந்தவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.&nbsp;&nbsp;</p><p>மேலும், துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக 5 பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.&nbsp; &nbsp;&nbsp;</p><p></p><p></p><p>&nbsp;&nbsp;</p><p>&nbsp;</p><p><br></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-25T04:00:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thileepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[இனவழிப்புக்கு நீதிகோரி போராட்டத்தில் குதித்த புலம்பெயர் தமிழர்கள்..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/tamil-diaspora-joins-fight-for-justice-1784951871"></link>
            <id>https://tamilwin.com/article/tamil-diaspora-joins-fight-for-justice-1784951871</id>
            <summary type="text">தமிழின அழிப்புக்கு நீதி கோரி பிரித்தானியாவில் இருவேறு இடங்களில் கவனயீர்ப்பு
போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

இந்த போராட்டமானது, லண்டனில் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழின அழிப்புக்கு நீதி கோரி பிரித்தானியாவில் இருவேறு இடங்களில் கவனயீர்ப்பு
போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><p> 

இந்த போராட்டமானது, லண்டனில் உள்ள இலங்கை தூதுரகம் மற்றும் ஸ்கொட்லாந்து ஆகிய இடங்களில் புலம்பெயர் அமைப்புக்களின் ஏற்பாட்டில் இடம்பெற்றுள்ளது.</p><p></p><h2>இனவழிப்பு&nbsp;</h2><p> </p><p>

இதன்போது, 1983 ஆம் ஆண்டு இடம்பெற்ற யூலை படுகொலை மற்றும் தமிழின அழிப்புக்கு நீதி கோரி கோசங்கள் எழுப்பப்பட்டுள்ளதுடன், பதாதைகளையும் ஏந்தி போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/09b209d6-0ba7-46d3-a69c-1d0bc70658a0/26-6a6434b82bf20.webp' /></p><p> </p><p>


அத்துடன், 1983ஆம் ஆண்டு ஜூலை 23ஆம்
திகதி தொடங்கி இலங்கையில் தமிழர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இனவெறி வன்முறைகளில்
உயிரிழந்தோர், காணாமல் ஆக்கப்பட்டோர் மற்றும் பாதிக்கப்பட்ட
அனைத்து மக்களுக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.</p><p> 

அவர்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் வலியுறுத்தப்பட்டுள்ளது. 

இந்த போராட்டத்தில் புலம்பெயர் தமிழின செயற்பாட்டாளர்கள் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b7665002-a4cf-41ff-a5ee-9e856c0ca7df/26-6a6434b92594c.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6412a737-aeb6-46f2-b1fc-fd5e24cc8ba5/26-6a6434b9ea4f4.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d07e497a-76c0-4250-937c-5ae755dae262/26-6a6435396864b.webp' /></p><p></p><p></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-25T04:00:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[சன் டிவியின் துளசி சீரியலில் என்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகை... போட்டோ இதோ]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/new-entry-in-sun-tv-thulasi-serial-1784951429"></link>
            <id>https://cineulagam.com/article/new-entry-in-sun-tv-thulasi-serial-1784951429</id>
            <summary type="text">துளசி சீரியல்ஸ்ராவ்னிதா ஸ்ரீகாந்த், சம்யுதா, அருண் குமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க கடந்த மே மாதம் சன் டிவியில் ஒளிபரப்பாக தொடங்கிய...</summary>
            <content type="html"><![CDATA[<h2>துளசி சீரியல்</h2><p>ஸ்ராவ்னிதா ஸ்ரீகாந்த், சம்யுதா, அருண் குமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க கடந்த மே மாதம் சன் டிவியில் ஒளிபரப்பாக தொடங்கிய சீரியல் தான் துளசி.
</p><p>நடிகர் விஜய்-ரம்பா, தேவயானி உள்ளிட்டோர் நடித்த நினைத்தேன் வந்தாய் படத்தின் கதை போலவே துளசி சீரியல் கதைக்களம் என கூறப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c96a5f40-ec94-4a56-a0a5-19fbd44f4578/26-6a643286e6e96.webp' /></p><p>
</p><p>இளம் கலைஞர்கள் நடிக்க முதல்முறையாக புதிய ஜோடி இணைய ஒளிபரப்பாக தொடங்கிய இந்த சீரியலுக்கு கொஞ்சம் கொஞ்சமாக ரசிகர்கள் கூட்டமும் அதிகமாகிக் கொண்டே வருகிறது.&nbsp;</p><p>புதியதாக தொடங்கப்பட்ட இந்த சீரியலில் இப்போது நடிகை ஒருவர் என்ட்ரி கொடுக்க இருக்கிறார். அதாவது நடிகை அகிலா தான் துளசி சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க என்ட்ரி கொடுக்கிறாராம்.</p><p><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/p/DbLkslMyxRv/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/p/DbLkslMyxRv/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/p/DbLkslMyxRv/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by Hemalatha V (@tamilserialexpress)</a></p></div></blockquote> <script async src="//www.instagram.com/embed.js"></script></p>]]></content>
            <updated>2026-07-25T04:00:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆடி மாதத்தில் அம்மன் கனவில் வந்தால் என்ன பலன் கிடைக்கும்?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/kanavu-palan-aadi-month-amman-dream-1784894549"></link>
            <id>https://manithan.com/article/kanavu-palan-aadi-month-amman-dream-1784894549</id>
            <summary type="text">ஆடி மாதம் அம்மனின் அருள் நிறைந்த மாதமாக கருதப்படுவதால், இந்த மாதத்தில் அம்மன் கனவில் வருவது மிகவும் சிறப்பானதாக நம்பப்படுகிறது.

அதன்படி, கனவில் அம்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஆடி மாதம் அம்மனின் அருள் நிறைந்த மாதமாக கருதப்படுவதால், இந்த மாதத்தில் அம்மன் கனவில் வருவது மிகவும் சிறப்பானதாக நம்பப்படுகிறது.</p><p>

அதன்படி, கனவில் அம்மன் எந்த வடிவில் தோன்றுகிறார் என்பதைப் பொறுத்து பலன்கள் மாறுபடும்.
</p><p>
அம்மன் சிரித்த முகத்துடன் இருப்பது போல, ஆசி வழங்குவது போல அல்லது கோயிலில் வீற்றிருப்பது போல கனவு கண்டால், தெய்வ அருள் கிடைக்கிறது என்று நம்பப்படுகிறது. </p><p>

மேலும், மனதில் இருக்கும் கவலை, பயம் மற்றும் குழப்பங்கள் விரைவில் நீங்கும் என்பதற்கான அறிகுறியாக நம்பப்படுகிறது.</p><p>

<img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8cf7d3a3-9f25-4ea9-a41d-3f54ec81a4ee/26-6a63549f3839c.webp' />
</p><p>
அம்மன் கோயிலில் தீபம் எரிவது போல, பூக்கள் மற்றும் குங்குமம் இருப்பது போல கனவு கண்டால் வீட்டில் நல்ல மாற்றங்கள் ஏற்படும் என்று நம்பப்படுகிறது.</p><p>
</p><p>மேலும், மன அமைதி கிடைப்பதுடன், தெய்வ அருளால் மங்கள நிகழ்வுகள் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.</p><p>
 
அம்மன் சிலையை கனவில் கண்டால், நீண்ட நாட்களாக நினைத்துக் கொண்டிருந்த காரியங்கள் தடையின்றி நிறைவேறும் என்று நம்பப்படுகிறது. </p><p>

மேலும், தெய்வ அருள் எப்போதும் உங்களுக்கு துணையாக இருக்கும் என்பதற்கான அறிகுறியாக நம்பப்படுகிறது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1d10b0d1-d444-4d31-898b-c2feb8239237/26-6a635457d86eb.webp' /></p><p>ஆடி மாதத்தில் வேப்பிலை அல்லது வேப்ப மரத்தை கனவில் காண்பது மங்களகரமானதாக கருதப்படுகிறது. </p><p>

மேலும், குலதெய்வத்தின் அருள் கிடைக்கும் என்றும், வாழ்க்கையில் மகிழ்ச்சியான மற்றும் செழிப்பான மாற்றங்கள் ஏற்படும் என்றும் நம்பப்படுகிறது.
</p><p>
அம்மன் கோயிலை கனவில் காண்பது அல்லது கோயிலுக்குள் செல்வது போல கனவு கண்டால், வாழ்க்கையில் இருந்த துன்பங்கள் நீங்கி மகிழ்ச்சி ஏற்படும் என்று நம்பப்படுகிறது.</p><p>

அம்மனுக்கு தீபாராதனை காட்டுவது போல அல்லது அம்மன் அலங்காரம் நடைபெறுவது போல கனவு கண்டால், விரைவில் சுபச் செய்திகள் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. </p><p>

மேலும், திருமணம் ஆகாதவர்களுக்கு திருமண யோகம் கூடி வருவதற்கான அறிகுறியாகவும் இது கருதப்படுகிறது.</p>]]></content>
            <updated>2026-07-25T04:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[சாவகச்சேரி நகரசபை உப தவிசாளர் தெரிவுக்கு தடை விதிக்கக் கோரி மனு : நீதிமன்றின் உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/chavakachcheri-uc-deputy-chairman-dismissed-1784950319"></link>
            <id>https://ibctamil.com/article/chavakachcheri-uc-deputy-chairman-dismissed-1784950319</id>
            <summary type="text">சாவகச்சேரி நகரசபை உப தவிசாளர் பதவி மற்றும் நகரசபை உறுப்புரிமையிலிருந்து ஞானப்பிரகாசம் கிஷோர் என்பவரை நீக்கி வட மாகாண ஆளுநரால் வெளியிடப்பட்ட வர்த்தமானி...</summary>
            <content type="html"><![CDATA[<p>சாவகச்சேரி நகரசபை உப தவிசாளர் பதவி மற்றும் நகரசபை உறுப்புரிமையிலிருந்து ஞானப்பிரகாசம் கிஷோர் என்பவரை நீக்கி வட மாகாண ஆளுநரால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை இரத்து செய்யக் கோரிய மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.</p><p>குறித்த மனு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் நேற்றைய தினம் (24) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.</p><p>இந்த வழக்கில் மனுதாரர் சார்பாக சட்டத்தரணி குமாரவடிவேல் குருபரன், எதிர்வரும் 28 ஆம் திகதி நடைபெறவுள்ள சாவகச்சேரி நகரசபையின் புதிய உப தவிசாளர் தெரிவுக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் எனச் சமர்ப்பணங்களை முன்வைத்தார்.</p><p></p><h2>ஒத்திவைக்கப்பட்ட வழக்கு&nbsp;</h2><p>
</p><p>
மனுவை ஆராய்ந்த யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதி சின்னத்துரை சதீஸ்தரன், புதிய உப தவிசாளர் தெரிவை தடை செய்யக்கோரிய கோரிக்கையை நிராகரித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4757dca2-0b43-4ac2-93ec-81b4d4adcb5c/26-6a64325853367.webp' /></p><p>
</p><p>
அத்துடன் வழக்கின் எழுத்து மூல சமர்ப்பணங்களைச் சமர்ப்பிப்பதற்காக குறித்த வழக்கை எதிர்வரும் 27 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-25T03:55:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடிக்க ஷாலினி, ஆகாஷ் வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா, இதோ விவரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/pandian-stores-2-serial-shalini-akash-salary-1784947493"></link>
            <id>https://cineulagam.com/article/pandian-stores-2-serial-shalini-akash-salary-1784947493</id>
            <summary type="text">பாண்டியன் ஸ்டோர்ஸ்&amp;nbsp;சின்னத்திரையில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் சீரியல்களில் மிக முக்கியமான ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ் 2. மக்களின் மனம் க...</summary>
            <content type="html"><![CDATA[<h2>பாண்டியன் ஸ்டோர்ஸ்&nbsp;</h2><p>சின்னத்திரையில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் சீரியல்களில் மிக முக்கியமான ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ் 2. மக்களின் மனம் கவர்ந்த இந்த சீரியலில் ஸ்டாலின், நிரோஷா, ஆகாஷ், ஷாலினி, சரண்யா, ஹேமா ராஜ்குமார் உள்ளிட்ட பலரும் நடித்து வருகிறார்கள்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1f43a8c7-63ca-43cf-9b0a-be45017af8ea/26-6a6423297332d.webp' /></p><p></p><p>தற்போதைய கதைகளம்படி, முத்துவேலின் புற்றுநோய் குறித்து குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் தெரியவந்து பெரிய பூகம்பமே வெடித்தது. இது ஒரு பக்கம் இருக்க, செந்தில் மற்றும் மீனா இருவரும் குவார்டஸில் (quarters) இருந்து நம்முடைய வீட்டிற்கு மீண்டும் வர சொல்லிவிட்டார் பாண்டியன். இது மீனாவிற்கு மகிழ்ச்சியை தந்தாலும், செந்திலுக்கு இதில் உடன்பாடு இல்லை.
</p><h2>
ராஜி - கதிர்
</h2><p>
<a href="https://www.youtube.com/watch?v=E5DtZvT0_zQ&amp;t=3s" target="_blank">பாண்டியன் ஸ்டோர்ஸ்</a> சீரியலில் அனைவரின் மனதையும் கவர்ந்த ஜோடிகளில் ஒன்று ராஜி - கதிர். இந்த கதாபாத்திரங்களில் நடிகை ஷாலினி மற்றும் நடிகர் ஆகாஷ் நடித்து வருகிறார்கள்.

இந்த நிலையில், பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடிக்க இவர்கள் ஒரு நாளைக்கு வாங்கும் சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/200014a0-d571-4bfc-bb4b-7eea6f788be7/26-6a642328bfc9a.webp' /></p><p>ராஜியாக நடிக்கும் நடிகை ஷாலினி ஒரு நாளைக்கு ரூ. 5,000 சம்பளம் வாங்கி வருகிறார். கதிர் கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகர் ஆகாஷ் ஒரு நாளைக்கு ரூ. 7,000 சம்பளம் வாங்கி வருகிறாராம்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-25T03:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Keethan</name>
            </author>
            <title type="text"><![CDATA[காணொளி எடுக்கச் சென்ற நபருக்கு நேர்ந்த கொடூரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/one-person-killed-in-elephant-attack-1784947790"></link>
            <id>https://tamilwin.com/article/one-person-killed-in-elephant-attack-1784947790</id>
            <summary type="text">முல்லைத்தீவு மாவட்டத்தின்
புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வசந்தபுரம் – மன்னகண்டல் நெல்
வயல் பகுதியில் காட்டு யானை ஒன்றை வீடியோ எடுக்கச் ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>முல்லைத்தீவு மாவட்டத்தின்
புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வசந்தபுரம் – மன்னகண்டல் நெல்
வயல் பகுதியில் காட்டு யானை ஒன்றை வீடியோ எடுக்கச் சென்றிருந்த நபர் ஒருவர்,
அதே யானையால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.</p><p>குறித்த சம்பவம்&nbsp; நேற்று(24.07.2026) மதியம் 12.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.</p><p></p><h2>சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணை</h2><p>சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், நபர் ஒருவர் வசந்தபுரம் – மன்னகண்டல் நெல் வயல் பகுதியில் காட்டு யானை ஒன்றை வீடியோ எடுக்கச் சென்றுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f9c5a61e-6155-47a4-874a-dfa48cd3f970/26-6a642d0fa37b7.webp' /></p><p>இதன்போது குறித்த காட்டு யானையின் தாக்குதலுக்கு உள்ளாகி காயமடைந்துள்ளார்.</p><p>இந்நிலையில் காயமடைந்த அவர் முதலில் புதுக்குடியிருப்பு ஆதார மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளார். </p><p>பின்னர் மேலதிக சிகிச்சைக்காக
முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட நிலையில், மாலை 4.00
மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
</p><p>உயிரிழந்தவர் கைவேலி, புதுக்குடியிருப்பைச் சேர்ந்த பூபாலசிங்கம் கமலேஸ்வரன்
(வயது 49) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
</p><p>இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார்
மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-25T03:27:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மழை அங்கியுடனான சிறுவனின் என்புக்கூடு! அகழ்வு நடவடிக்கை ஒத்திவைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/chemmani-child-skeleton-excavation-postponed-1784937575"></link>
            <id>https://ibctamil.com/article/chemmani-child-skeleton-excavation-postponed-1784937575</id>
            <summary type="text">செம்மணி புதைகுழிக்குள் அடையாளம் காணப்பட்ட மழை
அங்கியுடனான சிறுவரின் என்புக்கூடு ஆகஸ்ட் நான்காம் திகதிக்கு பின்னரே அகழ்ந்து
எடுக்கப்படவுள்ளது.


அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>செம்மணி புதைகுழிக்குள் அடையாளம் காணப்பட்ட மழை
அங்கியுடனான சிறுவரின் என்புக்கூடு ஆகஸ்ட் நான்காம் திகதிக்கு பின்னரே அகழ்ந்து
எடுக்கப்படவுள்ளது.
</p><p>

அதேவேளை குறித்த என்பு கூடு தொடர்பில் எவருக்கேனும் தகவல்கள்
தெரிந்திருந்தால் அது தொடர்பில் நீதிமன்றுக்கு அறிவிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
சட்டத்தரணி
வி.எஸ் நிரஞ்சன் இதனை தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>செம்மணி புதைகுழிக்கு</h2><p>

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “செம்மணி புதைகுழிக்குள் மழை அங்கியுடன் காணப்பட்ட என்புக்கூடு அகழ்ந்து எடுக்கப்படவில்லை.</p><p> 

அது தொடர்பில் நிபுணர்களின் ஆலோசனைகளை பெற்ற
பின்னரே அதனை அகழ்ந்து எடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/339d5562-3593-4a68-95ac-f5a953f2a963/26-6a63fc6865c20.webp' /></p><p>குறித்த என்புக்கூடு சட்ட ரீதியாக புதைக்கப்பட்டதற்கான அனுமானம் இருப்பதனால் அது தொடர்பிலான தகவல்கள் தெரிந்தவர்கள், நீதிமன்ற பதிவாளருக்கோ, சட்டத்தரணி
ஊடாக நீதிமன்றுக்கோ அல்லது காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்திற்கோ அறிவிக்குமாறு
கேட்டுக்கொள்கிறோம்.
</p><p>
அது தொடர்பிலான தகவல்கள் தெரிந்தால் இந்த அகழ்வு பணிகள் தொடர்பிலான தகவல்கள்
சில வெளிப்படும்” என தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-25T03:23:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[14 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய நபர் - 20 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/vaviniya-court-order-20-yr-jail-for-54-yrs-men-1784945626"></link>
            <id>https://ibctamil.com/article/vaviniya-court-order-20-yr-jail-for-54-yrs-men-1784945626</id>
            <summary type="text">14 வயது சிறுமியை தவறான முறைக்கு உட்படுத்திய பாதுகாவலருக்கு 20 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனையும், ஒரு இலட்சம் ரூபா நீதிமன்ற அபராதம் விதித்து நீதிமன்றம் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>14 வயது சிறுமியை தவறான முறைக்கு உட்படுத்திய பாதுகாவலருக்கு 20 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனையும், ஒரு இலட்சம் ரூபா நீதிமன்ற அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.</p><p>வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ. ஆனந்தராஜா, இந்த தீர்ப்பை வழங்கியுள்ளார்.</p><p>வவுனியா, பூவரசன்குளம் பகுதியில், பாதிக்கப்பட்ட சிறுமி கர்ப்பமாகியமையைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட காவல்துறை புலன் விசாரணைகளின் பிரகாரம் 2017ஆம் ஆண்டு நவம்பர் மாதம் குறித்த பிரதிவாதிக்கு எதிராக வவுனியா நீதிவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.</p><p></p><h2>தலைமறைவாகிய&nbsp; எதிரி </h2><p>அதனை தொடர்ந்து 2023 ஆம் ஆண்டு பிரதிவாதிக்கு எதிராக சட்டமா அதிபர் திணைக்களத்தினால் குற்றபகர்வு பத்திரம் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/79799be2-9464-4e41-90c6-81ddcc85bc28/26-6a6424b4d1ef9.webp' /></p><p>குறித்த வழக்கானது விளக்கத்திற்கு எடுத்து கொள்ளப்பட்ட நிலையில் பிரதிவாதிக்கு தலைமறைவாகியிருந்தார்.</p><p>

அதனை தொடர்ந்து பிரதிவாதிக்கு இல்லாத விளக்கத்துக்கு நியமிக்கப்பட்ட இவ்வழக்கானது சட்டமா அதிபர் திணைக்களத்தின் அரச சட்டவாதி ஸ்ரீ சிவஸ்கந்தஸ்ரீயால் நெறிப்படுத்தபட்டிருந்தது.</p><p></p><h2>கடூழிய சிறைத்தண்டனை</h2><p>குறித்த விசாரணைகளின் பின்னர் தீர்ப்பினை வழங்கிய நீதிபதி ஏ.ஏ. ஆனந்தராஜா, வழக்கு தொடுநர் தரப்பு குறித்த எதிரிக்கு எதிரான குற்றச்சாட்டினை சந்தேகத்திற்கு அப்பால் நிரூபித்துள்ளதாக&nbsp;குறிப்பிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/00f93a10-4060-4b24-bbcc-f4a748ff8ed9/26-6a6424b5829a2.webp' /></p><p> அதன் பிரகாரம் பிரதிவாதிக்கு 20 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனையும், ஒரு இலட்சம் ரூபா நீதிமன்ற அபராதம், மற்றும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஒரு மில்லியன் ரூபா இழப்பீடும் செலுத்தப்பட வேண்டுமென தீர்ப்பினை வழங்கியிருந்தார்.</p><p>குறித்த குற்ற செயலின் போது பிரதிவாதியால் சிறுமிக்கு இழைக்கப்பட்ட கடுமையான உடல் மற்றும் உளவியல் சித்திரவதைகள், குறித்த சிறுமி கர்ப்பம் தரித்தமை, எதிரி வழக்கு விசாரணைகளில் இருந்து தலைமறைவாகியமை.</p><p> மற்றும் சிறுமியின் பாதுகாவலரே குறித்த செயலை புரிந்தமை போன்ற காரணிகள் எதிரிக்கு அதிகபட்ச தண்டனை விதிக்கப்பட பிரதான காரணிகளாக அமைந்துள்ளது என மேல் நீதிமன்ற நீதிபதி ஏ ஏ ஆனந்தராஜா தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டியிருந்தார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-25T03:22:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[சீனாவின் தொழில்நுட்பம்... ரஷ்ய தந்திரங்கள்: அமெரிக்காவை அலற விடும் ஈரான்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/iran-bombing-of-us-bases-1784949740"></link>
            <id>https://news.lankasri.com/article/iran-bombing-of-us-bases-1784949740</id>
            <summary type="text">மத்திய கிழக்கில் போர் நெருக்கடி தீவிரமடைந்து வரும் நிலையில், வளைகுடாப் பகுதியில் உள்ள அமெரிக்கத் தளங்கள் மற்றும் முக்கிய உள்கட்டமைப்பு வசதிகள் மீது ஈர...</summary>
            <content type="html"><![CDATA[<p>மத்திய கிழக்கில் போர் நெருக்கடி தீவிரமடைந்து வரும் நிலையில், வளைகுடாப் பகுதியில் உள்ள அமெரிக்கத் தளங்கள் மற்றும் முக்கிய உள்கட்டமைப்பு வசதிகள் மீது ஈரான் நடத்தி வரும் தாக்குதலின் துல்லியம் அதிகரித்துள்ளதாகவே கூறப்படுகிறது.</p><h2>மிக வலுவாகவே</h2><p>
</p><p>இதன் பின்னணியில் சீனாவின் செயற்கைக்கோள் பட உதவியும் உக்ரைனில் ரஷ்யா கற்றுக்கொண்ட தந்திரங்களும் இருப்பதாக ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2e2bccb7-39d9-4855-b34d-f6830982d104/26-6a642d9ba003c.webp' /></p><p> ஜோர்தானில் உள்ள முவாஃபக் சால்டி விமானப்படைத் தளத்தின் மீது கடந்த வெள்ளிக்கிழமை நடத்தப்பட்ட தாக்குதலில் மூன்று அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டனர்; இத்தளம் அமெரிக்காவின் சக்திவாய்ந்த 'தாட்' (THAAD) வான் பாதுகாப்பு அமைப்பால் பாதுகாக்கப்பட்டு வந்தது.</p><p> தாக்குதலுக்குப் பின்னர் ஈரானிய ஊடகங்கள் வெளியிட்ட செயற்கைக்கோள் படங்கள், பல கட்டிடங்கள் அழிக்கப்பட்டிருந்ததை அம்பலப்படுத்தின. ஈரான் தாக்குதலின்போது வான் பாதுகாப்பு அமைப்பு ஏன் செயலிழந்தது என்பது தற்போதும் மர்மமாகவே உள்ளது; இது குறித்து பென்டகன் விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. </p><p>ஆனால், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலால் மொத்தமாக அழிக்கப்பட்டதாக மார்தட்டிக்கொள்ளும் ஈரானின் ஏவுகணைத் திறன் தற்போதும் மிக வலுவாகவே உள்ளது என்பது சமீபத்திய தாக்குதல்கள் உறுதி செய்து வருகிறது.</p><p></p><p> </p><p>லண்டனைச் சேர்ந்த நிபுணர் ஒருவர் குறிப்பிடுகையில், மேம்பட்ட உளவுத் தகவல், ஏவுகணை வழிகாட்டுதல், இயக்கம் சார்ந்த நெகிழ்வுத்தன்மை மற்றும் ஒருங்கிணைந்த தாக்குதல் திட்டமிடல் ஆகியவற்றின் கலவையானது ஈரான் முன்னெடுக்கும் தாக்குதல்களில் உண்மையான மாற்றத்தை ஏற்படுத்தி வருவதாக குறிப்பிட்டுள்ளார். </p><p>மேலும், இது ஈரானின் ஏவுகணைத் திட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட மூன்றாண்டு கால தொழில்நுட்ப மேம்பாட்டின் விளைவாகும் என குறிப்பிட்டுள்ள அவர்; ஈரானின் ராணுவத் திறன்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டுவிட்டதாக ட்ரம்ப் நிர்வாகம் முன்பு கூறியிருந்த போதிலும், </p><p>அமெரிக்க உளவுத்துறையின் மதிப்பீடுகளின்படி ஈரான் வசமுள்ள ஏவுகணைகள் ஏறக்குறைய 70 சதவீதம் அப்படியே பாதுகாக்கப்பட்டிருப்பது மீண்டும் உறுதியாகியுள்ளது என்றார். </p><p>வளைகுடாப் பகுதியில் உள்ள அமெரிக்கத் தளங்கள் மற்றும் பிற இடங்களில் உள்ள இலக்குகளை அடையாளம் காண உதவுவதற்கு, சீன செயற்கைக்கோள் படங்களை ஈரான் பயன்படுத்தி வந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e1a3fa4b-1325-4b70-806c-120bdaaa0c4c/26-6a642d9a32311.webp' /></p><p> </p><p>அத்தகைய படங்களை வழங்கியதற்காக, மே மாதத்தில் அமெரிக்கா மூன்று சீன நிறுவனங்கள் மீது தடைகளை விதித்தது. இருப்பினும், சீனாவின் உளவுத்தகவல்களை ஈரான் பயன்படுத்துவது தொடர்பில் சில நிபுணர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர். </p><p>மட்டுமின்றி, குண்டுவெடிப்புகளின் போது வளைகுடா முழுவதும் உள்ள சிஐஏ தளங்கள் மீது ஈரான் நடத்திய தொடர்ச்சியான துல்லியமான தாக்குதல்கள், ரஷ்யா ஈரானுடன் படங்களைப் பகிர்ந்து கொண்டதா என்ற சந்தேகத்தை அமெரிக்க ஆய்வாளர்களிடையே ஏற்படுத்தியது, ஆனால் உறுதிப்படுத்தப்படவில்லை. </p><p>சீனாவும் ரஷ்யாவும் ஈரானுக்கு தாராளமாக உதவி வருவதாக அமெரிக்கப் பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் இந்த வாரம் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். ஆனால், ஈரானுக்கு ஆயுதங்களை விற்கப்போவதில்லை என்று ஜி ஜின்பிங் மற்றும் விளாடிமிர் புடின் ஆகியோர் தன்னிடம் தனிப்பட்ட முறையில் உறுதியளித்ததாகக் கூறி, டொனால்ட் ட்ரம்ப் வெள்ளிக்கிழமையன்று அவரது கருத்துக்கு முரணான தகவலைத் தெரிவித்தார்.</p><h2>தடுமாறி வருவதாக</h2><p> </p><p>ஈரானின் ஏவுகணைத் திட்டம், சீன மின்னணுவியல் மற்றும் ராக்கெட் எரிபொருளுக்கான அம்மோனியம் பெர்குளோரேட் ஆகியவற்றை பெருமளவில் சார்ந்துள்ளது. </p><p>இருப்பினும், தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள், பலத்த பாதுகாப்பு கொண்ட அமெரிக்க மற்றும் வளைகுடா நாடுகளின் வான் பாதுகாப்பு அமைப்புகளை அவ்வப்போது முறியடிக்கும் அளவுக்கு அதிநவீனமானவை எனக் கருதப்படுகிறது. </p><p>ஏற்கனவே ஆயுதங்களின் பற்றாக்குறையால் அமெரிக்கா தடுமாறி வருவதாக தகவல் கசிந்துள்ள நிலையில், ஈரான் தற்போதும் வலுவான நிலையிலேயே உள்ளது என ஆய்வாளர்கள் விளக்குகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7d601d07-46c6-479f-b6e6-4c86b710e011/26-6a642d9aee8bd.webp' /></p><p> </p><p>மட்டுமின்றி, ஈரானும் தனது ஏவுகணைத் தாக்குதல்களில் தந்திரோபாய ரீதியாக முன்னேறியுள்ளது. உக்ரைனில் ரஷ்யா பயன்படுத்தியதைப் போன்ற முறைகளை அது பயன்படுத்துகிறது; அங்கு பெரிய தாக்குதல்களை விட சிறிய தாக்குதல்கள் அதிக பலனளிக்கக்கூடும், </p><p>மேலும் வான் பாதுகாப்பு அமைப்புகளின் கவனத்தைத் திசைதிருப்பி, பாலிஸ்டிக் தாக்குதலுக்கு வழிவகுக்க ட்ரோன்களும் பயன்படுத்தப்படுகின்றன. </p><p>ஈரான், ரஷ்யா, சீனா மற்றும் வட கொரியா ஆகிய நாடுகளுக்கு இடையே ஒருவித மேற்கத்திய எதிர்ப்புப் புரிதல் இருந்தாலும், கிளர்ச்சியின் அச்சு என்று அடையாளப்படுத்தும் வகையில் ஒரு நிலையான இராணுவக் கூட்டணியாக இந்த நாடுகள் உருவாகவில்லை என்றே நிபுணர்களின் கருத்தாக உள்ளது. இருப்பினும், இந்த நாடுகள் தங்களுக்குள் தீவிரமான உறவையும் பலப்படுத்தியுள்ளன.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-25T03:20:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Fathima</name>
            </author>
            <title type="text"><![CDATA[புதிய கட்சியின் பெயர், சின்னம்: விரைவில் அறிவிக்கிறார் அண்ணாமலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/annamalai-announce-new-partys-name-1784949335"></link>
            <id>https://ibctamilnadu.com/article/annamalai-announce-new-partys-name-1784949335</id>
            <summary type="text">We The Leaders அமைப்பு கட்சியாக உருவெடுக்கும் என அதன் நிறுவனம் அண்ணாமலை அறிவித்திருந்த நிலையில் புதிய கட்சியின் பெயர் மற்றும் கொடி குறித்த அறிவிப்பு வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>We The Leaders அமைப்பு கட்சியாக உருவெடுக்கும் என அதன் நிறுவனம் அண்ணாமலை அறிவித்திருந்த நிலையில் புதிய கட்சியின் பெயர் மற்றும் கொடி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என கூறப்படுகிறது.</p><p>
கடந்த மாதம் பாஜகவில் இருந்து விலகிய அண்ணாலை We The Leaders அமைப்பை உருவாக்கினார், ஆன்லைன் மூலம் உறுப்பினர் சேர்க்கையும் நடைபெற்றது.
</p><p>
கடந்த 12ம் தேதி பொள்ளாச்சியில் மாநாடும் நடந்த நிலையில் தூத்துக்குடியில் 2வது மாநாடு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1a9ff209-44ce-4bef-9a81-f36f72742728/26-6a642b2a8ff24.webp' /><br></p><p>

இந்நிலையில் உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்ளும் பொருட்டு புதிய கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தை அண்ணாமலை அறிவிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
</p><p>
ஆகஸ்ட் 3வது வாரத்தில் புதிய கட்சியின் பெயர் அறிவிக்கப்படலாம், தொடர்ந்து செப்டம்பர் 14ல் மதுரை அல்லது திருச்சியில் பிரம்மாண்ட மாநாடு நடத்தவும் அண்ணாமலை திட்டமிட்டுள்ளாராம்.
</p><p>
இதுதொடர்பில் தொண்டர்களை சந்தித்து ஆலோசனை நடத்தவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/219a071e-0aad-47c4-81f4-a4cfc4f0165c/26-6a642b2b4074c.webp' /><br></p>]]></content>
            <updated>2026-07-25T03:19:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Farook Sihan</name>
            </author>
            <title type="text"><![CDATA[அம்பாறையில் இரு பெண்களின் சடலங்கள் மீட்பு - பல கோணங்களில் பொலிஸார் விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/bodies-of-two-women-recovered-in-ampara-1784947028"></link>
            <id>https://tamilwin.com/article/bodies-of-two-women-recovered-in-ampara-1784947028</id>
            <summary type="text">அம்பாறை மாவட்டத்தின் இருவேறு பிரதேசங்களில் தவறான முடிவெடுத்த நிலையில் இரு பெண்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.இந்த மரணம் தொடர்பில் மரண விசாரணைகளின் பி...</summary>
            <content type="html"><![CDATA[<p>அம்பாறை மாவட்டத்தின் இருவேறு பிரதேசங்களில் தவறான முடிவெடுத்த நிலையில் இரு பெண்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.</p><p>இந்த மரணம் தொடர்பில் மரண விசாரணைகளின் பின்னர் உறவினர்களிடம் நல்லடக்கத்திற்காக சடலம் கையளிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.&nbsp; &nbsp;&nbsp;</p><p></p><h2>மருதமுனை சம்பவத்தில் தீவிர விசாரணை</h2><p>மருதமுனையை சேர்ந்த (வயது 20) திருமணமாகாத பெண் கடந்த செவ்வாய்க்கிழமை (21) மாலை தனது வீட்டில் தவறான முடிவெடுத்து உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ba2956c5-d0bd-4a39-b682-424fc85e6fbc/26-6a6427f4cccc6.webp' /></p><p>இந்த மரணம் தொடர்பில் சமூக ஊடகங்களில் பல்வேறு கருத்துக்கள் மற்றும்
விமர்சனங்கள் பரவியதை தொடர்ந்து சம்பவம் குறித்து பல கோணங்களில் பொலிஸாரும், அம்பாறை மாவட்ட தடயவியல் பிரிவு பொலிஸாரும் விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.</p><p>இந்நிலையில், கல்முனை நீதிமன்ற பதில் நீதிவான் ஏ.ஆர்.எம். கலீல் சம்பவ இடத்திற்குச்சென்று
மரண விசாரணை மேற்கொண்டார். </p><p>உயிரிழந்த பெண்ணின் மரணத்தில் சந்தேகம்
நிலவுவதனால் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக அம்பாறை மாவட்ட பொது வைத்தியசாலைக்கு
அனுப்புமாறு உத்தரவிட்டார்.</p><h2>அரச பகுப்பாய்வு திணைக்களத்திற்கு அனுப்பி வைப்பு </h2><p>அம்பாறை பொது வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரியினால் பிரேத பரிசோதனை
முன்னெடுக்கப்பட்டது. </p><p>இதன்போது உயிரிழப்பின் துல்லியமான காரணத்தைக்
கண்டறிவதற்காக சடலத்தின் சில உயிரியல் அவயங்கள் கொழும்பிலுள்ள அரச
பகுப்பாய்வுத் திணைக்களத்திற்கு மேலதிக பரிசோதனைக்காக அனுப்பி
வைக்கப்பட்டுள்ளன.</p><p>
</p><p>
பிரேத பரிசோதனைகளின் பின்னர் சடலம் புதன்கிழமை (22) மாலை உறவினர்களிடம்
ஒப்படைக்கப்பட்டுள்ளது. </p><p>பெரிய நீலாவணை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பூபாலசிங்கம்
கஜேந்திரன் தலைமையிலான குழுவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6e5c0759-3fba-47ac-b00d-314cb0e9a957/26-6a6427f581754.webp' /></p><h2>ஒரு பிள்ளையின் தாய் மரணம்</h2><p>
இதேவேளை சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் (வயது 28) என்ற ஒரு பிள்ளையின் தாய் வியாழக்கிழமை
(23) மாலை தனது வீட்டில் தவறான முடிவெடுத்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
</p><p>
வெள்ளிக்கிழமை (24) சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் சம்மாந்துறை நீதிமன்ற
நீதிவான் நூர்டீன் முஹம்மட் சர்ஜுன் முன்னிலையில் மரண விசாரணை நடத்தப்பட்டது.
விசாரணைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
</p><p>உயிரிழந்த பெண்ணின் கணவர் வெளிநாட்டில் வசித்து வரும் நிலையில் மரணத்திற்கான
பின்னணி குறித்து சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸ்
குழுவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-25T03:11:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[2 நாட்களில் ஜனநாயகன் திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/jananayagan-movie-2-days-worldwide-box-office-1784945681"></link>
            <id>https://cineulagam.com/article/jananayagan-movie-2-days-worldwide-box-office-1784945681</id>
            <summary type="text">ஜனநாயகன்&amp;nbsp;தளபதி விஜய்யின் நடிப்பில் ஒரு திரைப்படம் வெளிவந்தால், கண்டிப்பாக பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டை நடக்கும். அதுவும் அவருடைய கடைசி திரைப்படம் ...</summary>
            <content type="html"><![CDATA[<h2>ஜனநாயகன்&nbsp;</h2><p>தளபதி விஜய்யின் நடிப்பில் ஒரு திரைப்படம் வெளிவந்தால், கண்டிப்பாக பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டை நடக்கும். அதுவும் அவருடைய கடைசி திரைப்படம் என்றால் சொல்லவே தேவையில்லை.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6a1a7dd6-294c-44c7-988b-225c303e2e2d/26-6a641c14edf20.webp' /></p><p>இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான <a href="https://www.youtube.com/watch?v=kQX9tb129Ss" target="_blank">ஜனநாயகன் </a>திரைப்படம் கடந்த ஜனவரி மாதம் வெளியாகவிருந்தது. ஆனால், சென்சார் பிரச்சனை காரணமாக படத்தின் ரிலீஸ் தடைபட்டது. இது விஜய்யின் ரசிகர்களுக்கு கடும் வருத்தத்தை தந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1fa765b7-e57e-422b-8e0b-85d5aea03731/26-6a641c1446f6b.webp' /></p><p></p><p>

இதன்பின், 6 மாதங்கள் பல தடைகளை தாண்டி ஜனநாயகன் திரைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. ஆனால், தளபதி விஜய்யாக இல்லாமல், முதலமைச்சர் விஜய்யின் திரைப்படமாக ஜனநாயகன் வெளியாகியுள்ளது என்பது அவருடைய ரசிகர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை அளித்துள்ளது.</p><h2>வசூல்</h2><p> </p><p>

முதல் நாள் வழக்கம் போல் பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டையை நடத்தி சாதனை படைத்துள்ளார் விஜய். இந்த நிலையில், 2 நாட்களில் உலகளவில் இப்படம் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2f9a0112-9479-4d9f-990b-de994c65674b/26-6a641c15a7711.webp' /></p><p>அதன்படி, 2 நாட்களில் ஜனநாயகன் திரைப்படம் உலகளவில் ரூ. 120 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் எவ்வளவு வசூல் செய்யும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/kQX9tb129Ss" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-07-25T03:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் அதிரடியாக கைது செய்யப்பட்ட ரஷ்ய நாட்டவர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/russian-arrested-in-sri-lanka-1784946825"></link>
            <id>https://tamilwin.com/article/russian-arrested-in-sri-lanka-1784946825</id>
            <summary type="text">அளுத்கம, மொரகல்ல சுற்றுலாப் பிரதேசத்தில் ரஷ்ய நாட்டவர் ஒருவர் அளுத்கம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். வாடகை அடிப்படையில் பெற்றுக் கொள்ளப்பட்ட வீடொ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அளுத்கம, மொரகல்ல சுற்றுலாப் பிரதேசத்தில் ரஷ்ய நாட்டவர் ஒருவர் அளுத்கம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். </p><p>வாடகை அடிப்படையில் பெற்றுக் கொள்ளப்பட்ட வீடொன்றில் தங்கியிருந்து இணையம் ஊடாக பணம் உழைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த 35 வயதுடைய ரஷ்ய நாட்டவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். </p><p>

எந்தவொரு சட்டபூர்வமான விசா அனுமதியும் இன்றி சுமார் 7 ஆண்டுகளாக இவர் இவ்வாறு நாட்டில் சட்டவிரோதமாகத் தங்கியிருந்தது தெரியவந்துள்ளது.</p><p></p><h2><b>சட்டபூர்வமான விசா அனுமதி</b></h2><p>

கடந்த 23ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட இந்த சுற்றிவளைப்பின் போது, வெளிநாட்டவரிடம் இருந்த 5 கிராம் 200 மில்லிகிராம் கஞ்சா பொதியும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/166e34f4-e241-4d8c-8597-7a3a0d5ade84/26-6a6423dbc697f.webp' /></p><p>அவரது கடவுச்சீட்டைப் பரிசோதித்தபோது, அவர் 2019ஆம் ஆண்டில் இலங்கைக்கு வந்துள்ளார். அத்துடன், அன்றிலிருந்து நீண்ட காலமாக விசா இன்றித் தங்கியிருந்தது தெரியவந்துள்ளது.</p><p>

சந்தேக நபர் இணையம் ஊடாகப் பணம் உழைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக வழங்கிய வாக்குமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக அளுத்கம பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, பிரதான பொலிஸ் பரிசோதகர் சம்பத் சஞ்சீவ தெரிவித்தார்.</p><p> 

இது தவிர, சுற்றிவளைப்பின் போது சந்தேகத்திற்கிடமான ரஷ்ய நாட்டவர் பயன்படுத்திய கையடக்கத் தொலைபேசி, இரண்டு மடிக்கணினிகளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-25T02:48:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மஹாபொல புலமைப்பரிசில் கொடுப்பனவு தொடர்பில் முக்கிய அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/mahapola-scholarship-eligible-list-2024-2025-batch-1784942838"></link>
            <id>https://ibctamil.com/article/mahapola-scholarship-eligible-list-2024-2025-batch-1784942838</id>
            <summary type="text">2024/25 கல்வியாண்டிற்குரிய மஹாபொல புலமைப்பரிசிலுக்காகத் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களின் இணையவழி (Online) பதிவுகள் எதிர்வரும் 17ஆம் திகதியுடன் நிறைவடையவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>2024/25 கல்வியாண்டிற்குரிய மஹாபொல புலமைப்பரிசிலுக்காகத் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களின் இணையவழி (Online) பதிவுகள் எதிர்வரும் 17ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது.</p><p>அத்துடன், மஹாபொல கல்வி உதவித்தொகை பெறுபவர்களின் இறுதித் தெரிவுப் பட்டியல் அந்தந்தப் பல்கலைக்கழகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
லலித் அதுலத்முதலி மஹாபொல உயர்கல்வி உதவித்தொகை நிதியம் இதனை அறிவித்துள்ளது.</p><p></p><h2>இணையவழிப் பதிவு&nbsp;</h2><p>இறுதித் தெரிவுப்பட்டியலில் பெயர்கள் இடம்பெற்றுள்ள மாணவர்கள், தங்களது தேசிய அடையாள அட்டை எண்ணைப் பயன்படுத்தி, இறுதி திகதிக்கு முன்னதாக மஹாபொல இணையதளத்தில் (https://mahapola.lk/BankApp2025/) பதிவு செய்ய வேண்டும் என்று கேட்கப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/39d03bc5-4fd2-4792-814c-de31c287188f/26-6a6416b64a586.webp' /></p><p>

இணையவழிப் பதிவை நிறைவு செய்த பிறகு, மாணவர்கள் விண்ணப்பத்தை அச்சிட்டு, கையொப்பமிட்டு, தங்களது வங்கிக் கணக்குப் புத்தகத்தின் நகல் அல்லது வங்கிக் கணக்கு உறுதிப்படுத்தல் சான்றிதழுடன் அந்தந்தப் பல்கலைக்கழகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.</p><p>

கல்வி உதவித்தொகை கொடுப்பனவுகள், விண்ணப்பதாரரின் பெயரில் இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கி ஆகியவற்றில் பராமரிக்கப்படும் தனிநபர் சேமிப்பு அல்லது நடப்புக் கணக்கில் மட்டுமே வரவு வைக்கப்படும் என்று மஹாபொல நிதியம் மேலும் தெரிவித்துள்ளது.</p><p></p><p>
</p><h2>பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு</h2><p>
இதற்கிடையில், 2024-2025 மஹாபொல கல்வி உதவித்தொகைக்குத் தேர்ந்தெடுக்கப்படாததை எதிர்த்து மேல்முறையீடு செய்ய விரும்பும் மாணவர்கள், தத்தமது பல்கலைக்கழகங்கள் மூலம் தங்கள் மேன்முறையீடுகளைச் சமர்ப்பிக்க வேண்டும்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7795ebfc-71da-4988-bafd-c030d8a24771/26-6a6416b70d657.webp' /></p><p>பல்கலைக்கழகங்கள் அத்தகைய மேன் முறையீடுகளை 2026 ஒக்டோபர் 15, அன்றோ அல்லது அதற்கு முன்னரோ பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு அனுப்ப வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-25T02:40:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆகஸ்ட் 17இற்குள் விண்ணப்பிக்கவும் - பல்கலைக்கழக மாணவர்களுக்கு வெளியான அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/important-announcement-from-the-mahapola-fund-1784946369"></link>
            <id>https://tamilwin.com/article/important-announcement-from-the-mahapola-fund-1784946369</id>
            <summary type="text">மஹாபொல கல்வி உதவித்தொகை பெறுபவர்களின் 2024 - 2025ஆம் ஆண்டுக்கான&amp;nbsp; இறுதித் தெரிவுப் பட்டியல் அந்தந்தப் பல்கலைக்கழகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக அறி...</summary>
            <content type="html"><![CDATA[<p>மஹாபொல கல்வி உதவித்தொகை பெறுபவர்களின் 2024 - 2025ஆம் ஆண்டுக்கான&nbsp; இறுதித் தெரிவுப் பட்டியல் அந்தந்தப் பல்கலைக்கழகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
லலித் அதுலத்முதலி மஹாபொல உயர்கல்வி உதவித்தொகை நிதியம் இதனை அறிவித்துள்ளது.
</p><p>
இந்தநிலையில் தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள் 2026 ஆகஸ்ட் 17இற்குள் தங்களது இணையவழிப் பதிவை நிறைவு செய்யுமாறு நிதியம் கேட்டுக்கொண்டுள்ளது.
</p><p></p><h2>இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கிகளில் மாத்திரம்&nbsp;</h2><p>
இறுதித் தெரிவுப்பட்டியலில் பெயர்கள் இடம்பெற்றுள்ள மாணவர்கள், தங்களது தேசிய அடையாள அட்டை எண்ணைப் பயன்படுத்தி, இறுதி திகதிக்கு முன்னதாக <a href="https://mahapola.lk/BankApp2025/" target="_blank">https://mahapola.lk/BankApp2025/</a>&nbsp;என்ற மஹாபொல இணையதளத்தில்&nbsp;பதிவு செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/355673bf-2d34-4ede-9db1-48414b25a80d/26-6a642206a3a50.webp' /></p><p>
</p><p>
இணையவழிப் பதிவை நிறைவு செய்த பிறகு, மாணவர்கள் விண்ணப்பத்தை அச்சிட்டு, கையொப்பமிட்டு, தங்களது வங்கிக் கணக்குப் புத்தகத்தின் நகல் அல்லது வங்கிக் கணக்கு உறுதிப்படுத்தல் சான்றிதழுடன் அந்தந்தப் பல்கலைக்கழகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.</p><p>


கல்வி உதவித்தொகை கொடுப்பனவுகள், விண்ணப்பதாரரின் பெயரில் இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கி ஆகியவற்றில் பராமரிக்கப்படும் தனிநபர் சேமிப்பு அல்லது நடப்புக் கணக்கில் மட்டுமே வரவு வைக்கப்படும் என்று மஹாபொல நிதியம் மேலும் தெரிவித்துள்ளது.
</p><p>
இதற்கிடையில், 2024 - 2025 மஹாபொல கல்வி உதவித்தொகைக்குத் தேர்ந்தெடுக்கப்படாததை எதிர்த்து மேல்முறையீடு செய்ய விரும்பும் மாணவர்கள், தத்தமது பல்கலைக்கழகங்கள் மூலம் தங்கள் மேன்முறையீடுகளைச் சமர்ப்பிக்க வேண்டும்.
</p><p>
பல்கலைக்கழகங்கள் அத்தகைய மேன் முறையீடுகளை 2026 ஒக்டோபர் 15, அன்றோ அல்லது அதற்கு முன்னரோ பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு அனுப்ப வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.&nbsp; &nbsp; &nbsp; &nbsp;</p><p></p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-25T02:40:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[புதிய உச்சத்தை தொட்ட தங்கம் மற்றும் வெள்ளியின் விலை! இலங்கையில் பதிவான மாற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/gold-and-silver-prices-change-1784945966"></link>
            <id>https://tamilwin.com/article/gold-and-silver-prices-change-1784945966</id>
            <summary type="text">சர்வதேச சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகள் இன்று (25) சடுதியாக அதிகரித்துள்ளன.அதன்படி, ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 4,054.89 அமெரிக்க டொலராக ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>சர்வதேச சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகள் இன்று (25) சடுதியாக அதிகரித்துள்ளன.</p><p>அதன்படி, ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 4,054.89 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.
</p><p>
அதேவேளை, வெள்ளி ஒரு அவுண்ஸ் விலை 58.31 அமெரிக்க டொலராக உயர்ந்துள்ளது.</p><p></p><h2>இலங்கையில் இன்று தங்கத்தின் விலை</h2><p>
</p><p>
அமெரிக்க டொலரின் மதிப்பு மற்றும் சர்வதேச அரசியல் மாற்றங்கள் இந்த விலை உயர்வுக்கு முக்கிய காரணங்கள் என்றும் குறிப்பிடுகின்றன.
&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8b350517-9429-4827-bf9a-399c154c0691/26-6a642032a39ed.webp' /></p><p>இதேவேளை,&nbsp;சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை மாற்றங்களுக்கு ஏற்ப, உள்நாட்டு தங்க விலைகளிலும் தொடர்ந்து ஏற்ற, இறக்கங்கள் பதிவாகி வருகின்றன.</p><p>இதற்கமைய,&nbsp;இலங்கையில் இன்று (ஜூலை 25, 2026) நிலவரப்படி, ஒரு கிராம் 24 கரட் தங்கத்தின் விலை தோராயமாக ரூ. 46,070 ஆகவும், 8 கிராம் (ஒரு பவுன் ) 24 கரட் தங்கத்தின் விலை ரூ. 368,600 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.</p><p></p><p></p><p>
</p>]]></content>
            <updated>2026-07-25T02:32:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[59 வயதிலும் ஃபிட்டாக இருக்கும் சீமான்.., அவரது டயட் ரகசியம் என்ன?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/59-year-old-ntk-seeman-fitness-secrets-1784884309"></link>
            <id>https://manithan.com/article/59-year-old-ntk-seeman-fitness-secrets-1784884309</id>
            <summary type="text">நடிகர், இயக்குநர், அரசியல்வாதி எனப் பல அடையாளங்களைக் கொண்ட 59 வயதாகும் சீமான், உணவு மற்றும் உடற்பயிற்சியில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறார்.டயட் ரக...</summary>
            <content type="html"><![CDATA[<p>நடிகர், இயக்குநர், அரசியல்வாதி எனப் பல அடையாளங்களைக் கொண்ட 59 வயதாகும் சீமான், உணவு மற்றும் உடற்பயிற்சியில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறார்.</p><h2>டயட் ரகசியம் என்ன?</h2><p>

இவர் காலை உணவாக குதிரைவாலி கஞ்சி, சாமை அடை, தினை கஞ்சி, தினை உப்புமா போன்ற சிறுதானிய உணவுகளை எடுத்துக்கொள்கிறார். </p><p>

சில நேரங்களில் இட்லி, இடியாப்பம் போன்ற உணவுகளையும் சாப்பிடுகிறார் என்று கூறப்படுகிறது.</p><p>

</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/04863eb4-82f0-4ecd-a7d0-d4980be9f541/26-6a632c57a6729.webp' /></p><p>உணவில் அரிசியின் அளவைக் குறைத்து, காய்கறிகளை அதிகளவில் உணவில் சேர்த்துக்கொள்கிறார். </p><p>

புரதச்சத்துக்காக முட்டை, சிக்கன், மீன் மற்றும் மாட்டுக்கறி உள்ளிட்டவற்றையும் உணவில் சேர்த்துக்கொள்கிறார்.
</p><p>
இரவு நேரத்தில் அதிகமாக சாப்பிடாமல், அத்திப்பழம், வெள்ளரி விதை, பேரிச்சை, வால்நட்ஸ், முந்திரி மற்றும் பப்பாளிச் சாறு போன்றவற்றை குறைந்த அளவில் எடுத்துக்கொள்கிறார்.
</p><p>
மேலும், தொடர்ந்து உடற்பயிற்சி செய்வதன் மூலம் தனது உடற்தகுதியை முறையாக பராமரித்து வருகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/42088887-5fc3-4aff-a8d1-65840c104a66/26-6a632c58569f2.webp' /></p><p>

மெஷின் புல்-டவுன், டம்பல்ஸ் மற்றும் கோர் பயிற்சிகள் உள்ளிட்ட வலிமை சார்ந்த உடற்பயிற்சிகளை அவர் மேற்கொள்கிறார்.</p><p>

மேலும், நீண்ட நேரம் நடக்கும் பழக்கத்தை அவர் தொடர்ந்து பின்பற்றி வருகிறார்.

நடக்கும்போது தொடர்ந்து தண்ணீர் குடிக்கிறார்.</p><p> இதனால், உடலில் நீர்ச்சத்து குறைபாடு ஏற்படாமல் இருக்கும் என்று செல்லப்படுகிறார்.
</p><p>
உணவு, உடற்பயிற்சி, நடைப்பயிற்சி மற்றும் போதுமான தண்ணீர் ஆகியவற்றை தனது வாழ்க்கை முறையின் ஒரு பகுதியாகக் கொண்டிருப்பதே சீமானின் உடற்தகுதிக்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.</p>]]></content>
            <updated>2026-07-25T02:30:00+00:00</updated>
        </entry>
    </feed>
