<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-09-15T08:11:50+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வடக்கு- கிழக்கு மற்றும் வடமத்திய மருத்துவமனைகள் அபிவிருத்தி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/development-of-hospitals-in-the-northern-eastern-1789458597"></link>
            <id>https://tamilwin.com/article/development-of-hospitals-in-the-northern-eastern-1789458597</id>
            <summary type="text">சுமார் ஏழாயிரம் மில்லியன் ரூபா செலவில் வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மருத்துவமனை அபிவிருத்திகளுக்கான செயற்திட்டம் அங்குரார்ப்பணம் செய்யப்படவுள்ளது....</summary>
            <content type="html"><![CDATA[<p>சுமார் ஏழாயிரம் மில்லியன் ரூபா செலவில் வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மருத்துவமனை அபிவிருத்திகளுக்கான செயற்திட்டம் அங்குரார்ப்பணம் செய்யப்படவுள்ளது.</p><p>

வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களின் சுகாதாரக் கட்டமைப்பை வலுப்படுத்தி, சிகிச்சை சேவைகளை விரிவுபடுத்தும் நோக்கில், 7,148 மில்லியன் ரூபாய் செலவிலான புதிய வைத்தியசாலைக் கட்டடங்களுக்கு நாளை (16) ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் அடிக்கல் நாட்டப்படவுள்ளது.</p><p>&nbsp;ஜப்பான் சர்வதேச கூட்டுறவு முகவராண்மை (JICA) மற்றும் இந்திய அரசாங்கத்தின் கடன் உதவிகளின் கீழ் இத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.</p><h2>அங்குரார்ப்பணம்&nbsp;</h2><p>
</p><p>
அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் இதய நோய் சிகிச்சைக்காக 3,545 மில்லியன் ரூபா செலவில் 8 மாடிகளைக் கொண்ட புதிய கட்டடத் தொகுதி அமைக்கப்படவுள்ளது. </p><p>இதில் தீவிர சிகிச்சைப் பிரிவுகள், இதய பரிசோதனை ஆய்வகங்கள் (Catheter labs), நவீன பரிசோதனைக் கூடங்கள், எக்ஸ்-ரே மற்றும் ஈ.சி.ஜி (ECG) வசதிகள் உள்ளிட்ட பல நவீன கட்டமைப்புகள் இடம்பெறவுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/94b67449-ca45-4dc4-9b4d-9b8a43c26806/26-6aa8fd83ac855.webp' /></p><p>
</p><p>
திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலையில் JICA நிதியுதவியின் கீழ் 2,403 மில்லியன் ரூபா செலவில் 8 மாடிகளைக் கொண்ட அதிநவீன இதய நோய் சிகிச்சை வளாகம் நிர்மாணிக்கப்படவுள்ளது.
</p><p>
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் இந்திய நிதியுதவியின் கீழ் 600 மில்லியன் ரூபா செலவில் அதிநவீன அவசர விபத்து மற்றும் சிகிச்சை பிரிவு வளாகம் அமைக்கப்படவுள்ளது.</p><h2>அவசர சிகிச்சை</h2><p>

முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலைபயில் நோயாளர்களின் நெரிசலைக் குறைக்கும் வகையில், இந்திய நிதியுதவியின் கீழ் 600 மில்லியன் ரூபா செலவில் 4 மாடிகளைக் கொண்ட புதிய விடுதிக் கட்டடத் தொகுதி நிர்மாணிக்கப்படவுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/04352821-30f0-4cbd-b75d-1418fd4ed9d5/26-6aa8fd8460eb4.webp' /></p><p>

சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ, மாகாண ஆளுநர்கள் மற்றும் அமைச்சு அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளனர்.&nbsp;</p><p> இத்திட்டங்கள் நிறைவடையும் போது, கொழும்பு வரை செல்ல வேண்டிய அவசியமின்றி, வடக்கு மற்றும் கிழக்கிலுள்ள பொதுமக்கள் தங்கள் சொந்தப் பகுதிகளிலேயே நிபுணத்துவ இதய நோய் மற்றும் அவசர சிகிச்சைகளை விரைவாகவும் இலவசமாகவும் பெற்றுக்கொள்ள முடியும் என சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-15T08:10:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மூன்று மாவட்டங்களுக்கு 24 மணி நேரம் மண்சரிவு எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/24-hour-landslide-warning-for-three-districts-1789459873"></link>
            <id>https://jvpnews.com/article/24-hour-landslide-warning-for-three-districts-1789459873</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;கொழும்பு, களுத்துறை மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களின் பல பகுதிகளுக்கு முதலாம் கட்ட மண்சரிவு விழிப்புணர்வு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது....</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;கொழும்பு, களுத்துறை மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களின் பல பகுதிகளுக்கு முதலாம் கட்ட மண்சரிவு விழிப்புணர்வு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. </p><p>

இன்று (15) காலை 10.00 மணிக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினால் (NBRO) வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவித்தல், நாளை (16) காலை 10.00 மணி வரையிலான 24 மணித்தியாலங்களுக்குச் செல்லுபடியாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/69720e08-3ff7-4a58-a646-e04f7ed1b87f/26-6aa8fda2c6da7.webp' /></p><p> 

இதற்கமைய, கொழும்பு மாவட்டத்தின் சீதாவக்க பிரதேச செயலகப் பிரிவு மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகள், களுத்துறை மாவட்டத்தின் தொடங்கொட, புளத்சிங்ஹல, பேருவளை, இங்கிரிய, மத்துகம, பாலிந்தநுவர மற்றும் வலல்லாவிட்ட ஆகிய பகுதிகள், அத்துடன் கேகாலை மாவட்டத்தின் வரகாப்பொல மற்றும் ருவன்வெல்ல ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகள் மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளுக்கு இந்த அறிவித்தல் பொருந்தும் என அதில் அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-15T08:07:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மூன்று வாகனங்கள் மோதி கோர விபத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/horrific-accident-involving-three-vehicles-1789459535"></link>
            <id>https://jvpnews.com/article/horrific-accident-involving-three-vehicles-1789459535</id>
            <summary type="text">&amp;nbsp;பதுளை - மஹியங்கனை பிரதான வீதியில் தனியார் பேருந்து, மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டி ஆகியன ஒன்றுடன் ஒன்று மோதி இடம்பெற்ற விபத்தில் சிறு...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;பதுளை - மஹியங்கனை பிரதான வீதியில் தனியார் பேருந்து, மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டி ஆகியன ஒன்றுடன் ஒன்று மோதி இடம்பெற்ற விபத்தில் சிறுமி ஒருவர் உட்பட 5 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். </p><p>

பதுளை - மஹியங்கனை பிரதான வீதியின் மீகஹகிவுல 16ஆம் தூண் சந்திக்கு அருகில் இன்று (15) காலை 7.00 மணியளவில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3937e48c-4285-4020-b768-dfd4c0c4cb5f/26-6aa8fc5117929.webp' /></p><p> 

விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர், முச்சக்கர வண்டியை செலுத்திய பெண், அதில் பயணித்த நான்கு அரை வயதுச் சிறுமி மற்றும் மேலும் மூன்று பெண்கள் காயமடைந்துள்ளனர். </p><p>

விபத்தின் பின்னர் காயமடைந்தவர்கள் மீகஹகிவுல பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர்களின் நிலைமை கவலைக்கிடமானதால் மேலதிக சிகிச்சைக்காக பதுளை போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.</p><p> 

சம்பவம் தொடர்பில் கந்தகெட்டிய பொலிஸாரின் போக்குவரத்து பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-09-15T08:02:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையின் வங்கித்துறைக்கு ஏற்பட்டுள்ள பெரும் ஆபத்து! பெரும் அதிர்ச்சியில் வங்கி உயர் அதிகாரிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-lankans-losing-their-bank-accounts-1789442535"></link>
            <id>https://tamilwin.com/article/sri-lankans-losing-their-bank-accounts-1789442535</id>
            <summary type="text">இலங்கையின் வங்கித்துறையை இலக்கு வைத்து, ஒழுங்கமைக்கப்பட்ட டிஜிட்டல் மோசடி குழுக்கள் செயற்பட்டு வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது நாட்டின்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் வங்கித்துறையை இலக்கு வைத்து, ஒழுங்கமைக்கப்பட்ட டிஜிட்டல் மோசடி குழுக்கள் செயற்பட்டு வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p><p>

இது நாட்டின் நிதிப் பாதுகாப்பு மற்றும் வங்கித்துறையின் ஸ்திரத்தன்மைக்கு பாரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளதாக அதிகாரிகளும் முக்கிய வணிக வங்கித் தலைவர்களும் எச்சரித்துள்ளனர்.</p><p> 

இலகுவான வருமானத்தை பெற்றுத் தருவதாகக் கூறி மக்களை ஏமாற்றும் இந்த வலைப்பின்னல்கள் மூலம் வங்கித்துறையை சர்வதேச நிதிக் குற்றங்களுக்கான பாதையாக மாற்றி வருகின்றன.</p><p>
</p><h2><b>
மோசடி கும்பல்கள் </b></h2><p>இந்த மோசடியாளர்கள் பேஸ்புக், வட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் போன்ற பிரபல சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தி, வீட்டிலிருந்தே செய்யக்கூடிய சட்டப்பூர்வமான வணிகங்கள் என மக்களை நம்பவைத்து ஏமாற்றுவதாக சில முன்னணி வங்கிகளின் பிரதான நிறைவேற்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c6f2a0ae-b73f-401c-a480-ba5634b0cfd5/26-6aa8f5751ae09.webp' /></p><p>இதன்போது ஆரம்பக் கட்டத்தில் சிறிய தொகையை கணக்குகளுக்கு வரவு வைத்து வாடிக்கையாளர் மத்தியில் நம்பிக்கையை உருவாக்குகின்றனர்.

பின்னர் அவர்களின் வங்கிக்குறிப்பு விவரங்கள், இரகசிய எண்கள் மற்றும் பிற முக்கியமான பாதுகாப்புத் தகவல்களைப் பெற்றுக் கொள்ள முற்படுகின்றனர்.
</p><p>
இவ்வாறு பெற்றுக்கொள்ளும் இரகசியத் தகவல்கள் மூலம் கணக்குகளின் கட்டுப்பாட்டை குற்றவாளிகள் கைப்பற்றுகின்றனர்.</p><h2>மில்லியன் கணக்கான பணம்&nbsp;</h2><p>

அதனை தொடர்ந்து கணக்கு உரிமையாளருக்குத் தெரியாமல் பாரிய அளவிலான நிதி மோசடிகள் மற்றும் சட்டவிரோத பணப்பரிமாற்றங்களுக்கு அக்கணக்குகளைப் பயன்படுத்துவதாகப் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6506a51a-6b16-434b-be93-7d745bc05e64/26-6aa8f575ccbae.webp' />&nbsp;&nbsp;</p><p> </p><p><span style="font-size: 14px;">வாடகை அடிப்படையில் அல்லது விலைக்கு வாங்கப்பட்ட இத்தகைய கணக்குகள் ஊடாக ஏற்கனவே மில்லியன் கணக்கான பணம் புழக்கத்தில் விட்டுள்ளதாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதென குற்றப் புலனாய்வுத் திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன.</span></p><p>இந்த மோசடிகளின் தீவிரத்தன்மை அதன் சர்வதேச பரிமாணங்களினால் மேலும் அதிகரித்துள்ளது.</p><p></p><p></p><p> </p>]]></content>
            <updated>2026-09-15T08:01:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஊக்குவித்ததாக மொட்டுக்கட்சி மீது குற்றச்சாட்டு! விசாரணைக்காக களமிறங்கும் TID]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/tid-probe-alleged-promotion-at-slpp-rally-1789458085"></link>
            <id>https://tamilwin.com/article/tid-probe-alleged-promotion-at-slpp-rally-1789458085</id>
            <summary type="text">அநுராதபுரத்தில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பேரணியில் தடை செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் கருத்துகள் வெள...</summary>
            <content type="html"><![CDATA[<p>அநுராதபுரத்தில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பேரணியில் தடை செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் கருத்துகள் வெளியிடப்பட்டதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை நடத்த பயங்கரவாத விசாரணைப் பிரிவுக்கு (TID) உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>

குறித்த உத்தரவு, பேரணியில் வெளியிடப்பட்ட கருத்துகள் தொடர்பில் கிடைத்த முறைப்பாட்டைத் தொடர்ந்து பொலிஸ் மா அதிபரால் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.</p><h2>கிடைத்த முறைப்பாடு</h2><p>

முன்னதாக, சமூக செயற்பாட்டாளர்கள் குழுவொன்று, அநுராதபுரத்தில் நடைபெற்ற பொதுஜன பெரமுனவின் பேரணியில் தெரிவிக்கப்பட்ட கருத்துகள் விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஊக்குவிக்கும் அல்லது ஆதரிக்கும் வகையில் அமைந்துள்ளதாகக் குற்றஞ்சாட்டி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) முறைப்பாடு செய்திருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/32aee57f-0761-4f30-b632-821fceb40450/26-6aa8fa06ea4cf.webp' /></p><p>
</p><p>
செப்டெம்பர் 12ஆம் திகதி அநுராதபுரம் மாநகர சபை மைதானத்தில் நடைபெற்ற பொதுஜன பெரமுனவின் பேரணியில் யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா உரையாற்றியிருந்தார்.</p><p>

இதன்போது, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தொடர்பான அரசியல் ஒப்பீட்டை முன்வைத்த அவர், தன்னை விடுதலைப் புலிகைளை சார்ந்தவர் எனக் குறிப்பிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
இந்தப் பேரணியில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உள்ளிட்ட பல எதிர்க்கட்சி அரசியல்வாதிகள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டிருந்தனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-15T08:00:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடுமையான நஷ்டத்தை சந்தித்துள்ள கார்த்தியின் சர்தார் 2... தோல்வியில் முடிந்த படம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/karthi-sardar-2-movie-box-office-details-1789458378"></link>
            <id>https://cineulagam.com/article/karthi-sardar-2-movie-box-office-details-1789458378</id>
            <summary type="text">சர்தார் 2முதல் பாகம் வெற்றியடைந்தால் இரண்டாவது பாகம் வருவது வழக்கம். அப்படி நடிகர் கார்த்தி நடிப்பில் கடந்த 2022ம் ஆண்டு வெளியான திரைப்படம் சர்தார், ர...</summary>
            <content type="html"><![CDATA[<h2>சர்தார் 2</h2><p>முதல் பாகம் வெற்றியடைந்தால் இரண்டாவது பாகம் வருவது வழக்கம். </p><p>அப்படி நடிகர் கார்த்தி நடிப்பில் கடந்த 2022ம் ஆண்டு வெளியான திரைப்படம் சர்தார், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. முதல் பாக வெற்றியால் இரண்டாம் பாகம் தயாரானது. </p><p>இதில் அப்பா-மகன் என இரட்டை வேடத்தில் கார்த்தி நடித்திருந்தார். மேலும் எஸ்.ஜே.சூர்யா, மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத், ரஜிஷா விஜயன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/afd42112-b7ff-4fca-bde6-0093269b3dc9/26-6aa8fcb80033d.webp' /></p><h2>பாக்ஸ் ஆபிஸ்</h2><p>
பெரிய எதிர்ப்பார்ப்பில் கார்த்தியின் சர்தார் 2 திரைப்படம் வெளியாகி இருந்தது. </p><p>ஆனால் படம் எதிர்ப்பார்த்த அளவு வசூல் வேட்டை செய்யவில்லை, சாதாரண வசூல் கூட வரலில்லை. ரூ. 100 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படத்தின் வசூல் அதள பாதாளத்தில் உள்ளது. </p><p>தற்போது படத்திற்கான Theatrical Share சிங்கிள் Digitல் வந்துள்ளதாக கூறப்படுகிறது. இது கார்த்தியின் திரைப்பயணத்தில் மோசமான கலெக்ஷன் செய்த படு தோல்விப் படமாக அமைந்துவிட்டது குறிப்பிடத்தக்கது.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/TRsmgwUINcU" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-09-15T08:00:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[வங்கிக் கணக்குகளுக்கு வருகிறது பணம்! அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/aswesuma-payment-amount-to-be-credited-tomorrow-1789458465"></link>
            <id>https://ibctamil.com/article/aswesuma-payment-amount-to-be-credited-tomorrow-1789458465</id>
            <summary type="text">செப்டம்பர் மாதத்திற்கான அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுகளை பயனாளிகளின் வங்கிப் கணக்குகளில் வைப்பிலிடுவதற்கான ஏற்பாடுகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது.

இத...</summary>
            <content type="html"><![CDATA[<p>செப்டம்பர் மாதத்திற்கான அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுகளை பயனாளிகளின் வங்கிப் கணக்குகளில் வைப்பிலிடுவதற்கான ஏற்பாடுகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது.
</p><p>
இது தொடர்பான அறிவிப்பை நலன்புரி நன்மைகள் சபை வெளிட்டுள்ளது.</p><p>&nbsp;</p><h2>வரவு வைக்கப்படவுள்ள பணம்</h2><p>
</p><p>
இதற்கமைய, அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் முதற்கட்டத்தின் கீழ் 999,053 பயனாளி குடும்பங்களுக்கு மொத்தம் 9,181,696,250 ரூபாய் நாளை (16) வங்கிப் கணக்குகளில் வரவு வைக்கப்படவுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/98d32dcc-e2ae-401c-8ef3-192b1927d203/26-6aa8f9805f464.webp' /></p><p>

மேலும், இரண்டாம் கட்டத்தின் கீழ் 213,335 பயனாளி குடும்பங்களுக்கான கொடுப்பனவுகள் நாளை மறுதினம்(17) வங்கிப் கணக்குகளில் வைப்பிலிடப்படும் என்றும் நலன்புரி நன்மைகள் சபை குறிப்பிட்டுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-15T07:53:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[இரும்புக் கூண்டுகளில் அடைக்கப்பட்ட புலம்பெயர்ந்தோர்: பதறவைக்கும் ஒரு தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/immigrants-held-in-small-outdoor-cages-in-florida-1789458396"></link>
            <id>https://news.lankasri.com/article/immigrants-held-in-small-outdoor-cages-in-florida-1789458396</id>
            <summary type="text">Immigrants held in small outdoor cages in Florida: அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில், புலம்பெயர்ந்தோர் இரும்புக்கூண்டுகளில் அடைக்கப்பட்டது குறித்த ஒ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Immigrants held in small outdoor cages in Florida: அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில், புலம்பெயர்ந்தோர் இரும்புக்கூண்டுகளில் அடைக்கப்பட்டது குறித்த ஒரு செய்தி வெளியாகியுள்ளது.</p><p>


உலக நாடுகள் பலவற்றில் புலம்பெயர்தல் அரசியலாகிவிட்டதை மறுப்பதற்கில்லை. ஒரு பக்கம் புலம்பெயர்வோர் தங்கள் நாடுகளுக்குள் நுழைவதால் தங்களுக்கு பிரச்சினை என அரசாங்கங்கள் கூறிக்கொண்டிருக்கும் நிலையில், மறுபக்கம், புலம்பெயர்ந்தோர் எவ்வளவு மோசமாக நடத்தப்படுகிறார்கள் என்பதைக் குறித்த செய்திகள் வெளியாகிக்கொண்டேதான் இருக்கின்றன.
</p><h3>
பதறவைக்கும் ஒரு தகவல்
</h3><p>
சமீபத்தில், பிரித்தானியாவிலிருந்து பிரான்சுக்கு நாடுகடத்தப்பட்ட புகலிடக்கோரிக்கையாளர்களை பிரான்ஸ் மருத்துவர்கள் பரிசோதித்தபோது, அவர்கள் அடித்து உதைக்கப்பட்ட விடயம் தெரியவந்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/12407d4e-1827-4a4a-a797-8030818e4628/26-6aa8f7dd46c79.webp' /></p><p>
இந்நிலையில், அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில், புலம்பெயர்ந்தோரை 1.67 சதுரமீற்றர் அளவே கொண்ட இரும்புக் கூண்டுகளில் அதிகாரிகள் அடைத்துவைத்தது தெரியவந்துள்ளது.</p><p>

விடயம் என்னவென்றால், இந்த உண்மையை வெளிக்கொணர்ந்ததே அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு அதிகாரிகள்தான்.
</p><p>
அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு அமைப்பின் ஆய்வுக்குழு ஒன்று நடத்திய திடீர் சோதனைகளின்போது, புலம்பெயர்ந்தோர் இந்த இரும்புக்கூண்டுகளில் அடைக்கப்பட்டதும், அவர்களுக்கு நல்ல தண்ணீரோ, மருந்துகளோ கொடுக்கப்படவில்லை என்பதும் தெரியவந்தது.&nbsp;</p><p></p><p>

அதைவிட மோசமான ஒரு தகவல் என்னவென்றால், புலம்பெயர்ந்தோரை அடைக்கும் அந்த தடுப்புக்காவல் மையம் அமைந்துள்ள இடம், முதலைகள் அதிகம் வாழும் சதுப்புநிலமாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/41c4a3ab-da1c-47fd-b732-b6f6709db79e/26-6aa8f7deab01a.webp' /></p><p>
</p><p>
அது குறித்து கேலி செய்த அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், அங்கு அடைக்கப்படும் புலம்பெயர்ந்தோர் எப்படி ஓடுவது என கற்றுக்கொள்வார்கள் என்று கூறினாராம்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/983f4eee-69ce-40b8-a90e-4dc0d935040d/26-6aa8f7de01bb8.webp' /></p><p>

விடயம் என்னவென்றால், இப்படி அதிர்ச்சியை ஏற்படுத்தும் தகவல்கள் வெளியாகும்போதெல்லாம், அதிகாரிகள் இரண்டு விடயங்கள் செய்கிறார்கள்.
</p><p>
ஒன்று, அது இப்போது இல்லை, முன்பு இருந்தது, இப்போது அதை ஒழித்துவிட்டோம் என்று கூறுவது.
</p><p>
இரண்டு, அதற்கு நாங்கள் பொறுப்பல்ல, உள்ளூர் அதிகாரிகள் அல்லது ஒப்பந்ததாரர்கள்தான் காரணம் என்று கூறிவிடுவது.
</p><p>
ஆக, தங்கள் நாட்டிலிருப்பதைவிட ஒரு மேம்பட்ட வாழ்வைத் தேடியோ, அல்லது உயிருக்கு பயந்தோ இன்னொரு நாட்டுக்குச் செல்லும் புலம்பெயர்ந்தோர் அங்கு எப்படி மோசமாக நடத்தப்படுகிறார்கள் என்பது குறித்த செய்திகள் வெளியாகிக்கொண்டேதான் இருக்கின்றன.
</p><p>
இதுபோன்ற விடயங்களை தட்டிக் கேட்பதற்கென உருவாக்கப்பட்டுள்ள அமைப்புகளும், உலக நாடுகள் அவைகளும், எந்த புலம்பெயர்ந்தோர் விடயத்திலும் நேரடியாக தலையிட்டு பிரச்சினைக்கு தீர்வு கண்டதாக வெளியாகும் செய்திகளை மட்டும் அதிகம் காணமுடிவதில்லை!</p>]]></content>
            <updated>2026-09-15T07:46:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மூன்று வாகனங்கள் கோர விபத்து: சிறுமி உட்பட 5 பேர் காயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/accident-involving-collision-three-vehicles-1789457321"></link>
            <id>https://ibctamil.com/article/accident-involving-collision-three-vehicles-1789457321</id>
            <summary type="text">பதுளை - மஹியங்கனை பிரதான வீதியின் மீகஹகிவுல 16ஆம் தூண் சந்திக்கு அருகில் மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி கோரவிபத்துக்குள்ளாகியதில் சிறுமி ஒருவர் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பதுளை - மஹியங்கனை பிரதான வீதியின் மீகஹகிவுல 16ஆம் தூண் சந்திக்கு அருகில் மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி கோரவிபத்துக்குள்ளாகியதில் சிறுமி ஒருவர் உட்பட 5 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.&nbsp;</p><p>குறித்த விபத்து இன்று காலை (15.09.2026) ஏற்பட்டுள்ளது.</p><p>

தனியார் பேருந்தும், மோட்டார் சைக்கிளும், முச்சக்கர வண்டியுமே இவ்வாறு விபத்திற்குள்ளாகியுள்ளன.</p><p></p><h2>கோர விபத்து</h2><p> </p><p>

விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர், முச்சக்கர வண்டியை செலுத்திய பெண், அதில் பயணித்த நான்கு அரை வயதுச் சிறுமி மற்றும் மேலும் மூன்று பெண்கள் காயமடைந்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/40539632-afa4-4da2-ad97-09adb1f9b3ad/26-6aa8f7200632a.webp' /></p><p> </p><p>விபத்தின் பின்னர் காயமடைந்தவர்கள் மீகஹகிவுல பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர்களின் நிலைமை கவலைக்கிடமானதால் மேலதிக சிகிச்சைக்காக பதுளை போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.</p><p> </p><p>

சம்பவம் தொடர்பில் கந்தகெட்டிய காவல்துறை போக்குவரத்து பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-15T07:45:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[விநாயகர் சதுர்த்தி : அம்பானி மருமகள் ராதிகாவின் பரதநாட்டிய நடனம்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/radhika-ambani-performing-tribute-to-lord-ganesha-1789457991"></link>
            <id>https://viduppu.com/article/radhika-ambani-performing-tribute-to-lord-ganesha-1789457991</id>
            <summary type="text">அம்பானி குடும்பத்தின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்கள் சமீபத்தில் மும்பையிலுள்ள ஆண்டிலியா இல்லத்தில் கோலாகலமாக நடைபெற்றது. செப்டம்பர் 13 ஆம் தேதி விந...</summary>
            <content type="html"><![CDATA[<p>அம்பானி குடும்பத்தின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்கள் சமீபத்தில் மும்பையிலுள்ள ஆண்டிலியா இல்லத்தில் கோலாகலமாக நடைபெற்றது. செப்டம்பர் 13 ஆம் தேதி விநாயகர் சிலையை ஆண்டிலியா இல்லத்திற்கு கொண்டு வரப்பட்டு, பாரம்பரிய முறையில் அதனை வரவேற்றனர். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7f99aef3-39f9-4759-a428-1855bb5d174a/26-6aa8f6499b495.webp' /></p><p>மேள தாளங்கள் முழங்க இந்த வரவேற்பு நடந்தநிலையில், ல்மான் கான், கரீனா கபூர் கான், சைஃப் அலி கான், கத்ரீனா கைஃப், விக்கி கௌஷல், ரன்பீர் கபூர், ஆலியா பட் உள்ளிட்ட பாலிவுட் பிரபலங்கள் கலந்து கொண்டனர். </p><p>அந்நிகழ்ச்சியின்போது அம்பான்யின் மருமகளும் ஆனந்த் அம்பானியின் மனைவியுமான ராதிகா மெர்ச்சண்ட், விநாயரை போற்றும் ஏகதந்தாய வக்ரதுண்டாய பாடலுக்கு பரதநாட்டியம் ஆடியுள்ளார். சிவப்பு மற்றும் இளஞ்சிவப்பு நிறங்களான ஆடையணிந்து பாரம்பரிய நகைகள், தலியரங்காரத்தை அணிந்து ஆடிய ராதிகாவின் வீடியோ பலரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.</p><p><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/reel/DdR1v_csxnp/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/reel/DdR1v_csxnp/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/reel/DdR1v_csxnp/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by IIFA Awards (@iifa)</a></p></div></blockquote> <script async src="//www.instagram.com/embed.js"></script></p>]]></content>
            <updated>2026-09-15T07:45:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹவுதி தாக்குதலால் சவுதி அரேபியாவில் அவசர நிலை - மேற்கு ஆசியாவில் பதற்றம் அதிகரிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/houthi-attacks-trigger-saudi-emergency-alerts-1789458383"></link>
            <id>https://news.lankasri.com/article/houthi-attacks-trigger-saudi-emergency-alerts-1789458383</id>
            <summary type="text">Houthi Attacks Trigger Saudi Emergency Alerts: சவுதி அரசு முக்கிய நகரங்களில் அவசர எச்சரிக்கை அறிவித்துள்ளது.

நான்கு முக்கிய நகரங்களில் அவசர எச்சரிக...</summary>
            <content type="html"><![CDATA[<p>Houthi Attacks Trigger Saudi Emergency Alerts: சவுதி அரசு முக்கிய நகரங்களில் அவசர எச்சரிக்கை அறிவித்துள்ளது.
</p><h2>
நான்கு முக்கிய நகரங்களில் அவசர எச்சரிக்கை</h2><p>சவுதி அரேபியாவில் ஹவுதி போராளிகள் நடத்திய தாக்குதலால் குறைந்தது 13 பேர் காயமடைந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து சவுதி அரசு அல்உலா, அபா, ஜாசான், ஜெட்டா மற்றும் யான்பு ஆகிய நகரங்களில் அவசர எச்சரிக்கை அறிவித்துள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/827afb54-a103-4c6d-abcc-3f1848b56012/26-6aa8f7d14e76c.webp' /></p><p>இந்த தாக்குதல், மேற்கு ஆசியாவில் ஏற்கனவே நிலவும் அரசியல் பதற்றத்தை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.

ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி குழுக்கள், ஏமன் வழியாக சவுதி மீது தாக்குதலை மேற்கொண்டு வருகின்றன. இதனால் சவுதி-ஈரான் உறவுகள் மோசமடைந்துள்ளன. </p><p>அமெரிக்கா, சவுதியின் பாதுகாப்பிற்கு ஆதரவாக செயல்படுகிறது. இதனால் அமெரிக்கா-ஈரான் உறவுகள் மேலும் சிக்கலான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.</p><p></p><h2>பாதிப்பு&nbsp;</h2><p>

இந்த சூழ்நிலையில், ஹார்முஸ் நீரிணையில் எண்ணெய் போக்குவரத்து பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. உலகளாவிய எண்ணெய் விலை உயர்வு ஏற்படும் வாய்ப்பு அதிகம். இந்தியா உள்ளிட்ட பல நாடுகள், இந்த பிராந்தியத்தில் நிலவும் பதற்றத்தால் நேரடி பாதிப்புகளை சந்திக்கக்கூடும்.
</p><p>
இந்திய பிரதமர் நரேந்திர மோடி, நிலைமை குறித்து கவலை தெரிவித்ததுடன், இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார நலன்களை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், ஹவுதி தாக்குதல்களை கண்டித்து, சவுதியுடன் இணைந்து செயல்படுவதாக அறிவித்துள்ளார்.
</p><p></p><p>மேற்கு ஆசியாவில் நிலவும் இந்த பதற்றம், உலக அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். குறிப்பாக, எண்ணெய் விலை உயர்வு, சர்வதேச வர்த்தகத்தில் சிக்கல்கள், இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளுக்கு சவாலாக இருக்கும்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-15T07:43:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரவி செனவிரத்ன மற்றும் ஷானி அபேசேகவுக்கு உயர் நீதிமன்றின் முக்கிய தீர்ப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/fundamental-rights-of-ravi-and-shani-violated-1789456812"></link>
            <id>https://ibctamil.com/article/fundamental-rights-of-ravi-and-shani-violated-1789456812</id>
            <summary type="text">
பொதுப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் தற்போதைய பிரதி காவல்துறை மா அதிபர் ஷானி அபேசேகர ஆகியோர...</summary>
            <content type="html"><![CDATA[<p>
பொதுப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் தற்போதைய பிரதி காவல்துறை மா அதிபர் ஷானி அபேசேகர ஆகியோரின் அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. </p><p>

முன்னாள் காவல்துறை மா அதிபர் தேஷபந்து தென்னகோன், ஓய்வுபெற்ற பிரதி காவல்துறை மா அதிபர் பாலித சிறிவர்தன மற்றும் அப்போதைய பிரதம காவல்துறை பரிசோதகர் இந்துக்க டி சில்வா ஆகிய மூவரே இந்த மனித உரிமை மீறலுக்குப் பொறுப்பானவர்கள் என நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.
</p><p>
கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலத்தில், ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பாக விசாரணை நடத்துமாறு கோரி ஓய்வுபெற்ற பிரதி காவல்துறை மா அதிபர் பாலித சிறிவர்தன வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையிலேயே இந்த விசாரணைகள் தொடங்கப்பட்டிருந்தன.</p><p></p><h2>பொய் முறைப்பாடு</h2><p>
</p><p>
எனினும், இந்த முறைப்பாடு அரசியல் நோக்கத்துடனும் தீய எண்ணத்துடனும் செய்யப்பட்டது என்றும், இதன் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணைகள் மனுதாரர்களின் அடிப்படை உரிமைகளை மீறும் வகையில் அமைந்திருந்தன என்றும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/13f6369c-e126-4040-9fe2-828677215e54/26-6aa8f5edc3aec.webp' /></p><p>

இந்தத் தீர்ப்பின் மூலம் பாதிக்கப்பட்ட மனுதாரர்களான ரவி செனவிரத்ன மற்றும் ஷானி அபேசேகர ஆகியோருக்கு இழப்பீடு வழங்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.</p><h2>முக்கியத் தீர்ப்பு</h2><p> 

அதன்படி, பொய் முறைப்பாடு அளித்த ஓய்வுபெற்ற பிரதி காவல்துறை மா அதிபர் பாலித சிறிவர்தன மனுதாரர்கள் இருவருக்கும் தலா 50,000 ரூபாயையும், விசாரணையை மேற்கொண்ட அப்போதைய பிரதம காவல்துறை பரிசோதகர் இந்துக்க டி சில்வா தலா 10,000 ரூபாயையும் இழப்பீடாக வழங்க வேண்டும் எனத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/84de9d37-6f44-439a-ba7f-175b4b483425/26-6aa8f5ee79e4b.webp' /></p><p>
</p><p>
நீதிபதிகள் பிரீத்தி பத்மன் சுரசேன மற்றும் அச்சல வெங்கப்புளி ஆகியோரின் உடன்பாட்டுடன், உயர் நீதிமன்ற நீதிபதி கிஹான் குலதுங்க இந்த முக்கியத் தீர்ப்பை வழங்கியுள்ளார்.</p><p>

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளின் கீழ் தங்களைச் சட்டவிரோதமாகக் கைது செய்வதைத் தடுக்கும் உத்தரவைக் கோரி ஷானி அபேசேகர மற்றும் ரவி செனவிரத்ன ஆகியோர் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவை விசாரித்த பின்னரே உயர் நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-15T07:38:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹோர்முஸ் நீரிணையில் கடல் கண்ணி வெடியில் மோதி வெடித்த கப்பல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/ship-explodes-striking-a-sea-mine-strait-of-hormuz-1789458065"></link>
            <id>https://canadamirror.com/article/ship-explodes-striking-a-sea-mine-strait-of-hormuz-1789458065</id>
            <summary type="text">&amp;nbsp; ஹோர்முஸ் நீரிணையில் எண்ணெய்த் தாங்கி கப்பல் ஒன்று கடல் கண்ணி வெடியில் மோதி வெடித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

பனாமா கொடியுடன...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; ஹோர்முஸ் நீரிணையில் எண்ணெய்த் தாங்கி கப்பல் ஒன்று கடல் கண்ணி வெடியில் மோதி வெடித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.</p><p>

பனாமா கொடியுடன் கூடிய 'El Gaia' என்ற இந்த எண்ணெய்க் கப்பல், தெற்கு கடற்பாதை வழியே பயணித்துக் கொண்டிருந்தபோது இவ்வாறு கடல் கண்ணி வெடியில் மோதியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/39c669d2-1cf9-4ca7-abd2-558b7a4f4607/26-6aa8f692d1818.webp' /></p><p> </p><p>

இந்த வெடிப்புச் சம்பவத்துடன் முழு கப்பலும் தீப்பற்றி அழிந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள்&nbsp; &nbsp;செய்தி வெளியிட்டுள்ளன. </p><p>

எனினும், ஈரானின் இந்தக் கூற்றை அமெரிக்க மத்திய கட்டளையகம் (CENTCOM) மறுத்துள்ளது.</p><p> 

குறித்த கப்பல் கடந்த மாதம் ஈரானிய ஏவுகணைத் தாக்குதலுக்கு இலக்காகி முடங்கியிருந்ததாகவும், அதன் பின்னர் ஈரானிய ட்ரோன் தாக்குதலுக்கும் உள்ளானதாகவும் அமெரிக்க பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.</p><p> 

ஈரான் வெளியிடும் இத்தகைய அறிக்கைகள் வர்த்தகக் கப்பல் போக்குவரத்துக்கு இடையூறு விளைவிப்பதற்காகச் செய்யப்படும் பொய்ப் பிரசாரங்கள் என்றும் அமெரிக்கா மேலும் குற்றஞ்சாட்டியுள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-15T07:37:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[குப்பைகளை மீள அள்ள வலி.தெற்கு பிரதேச சபைக்கு கொடுத்த காலக்கெடு நிறைவு - குப்பைகளுக்கு தொடர்ந்தும் தீ வைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/continued-burning-of-garbage-1789454509"></link>
            <id>https://tamilwin.com/article/continued-burning-of-garbage-1789454509</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் வலி.வடக்கு பிரதேசசபை ஆளுகைக்கு உட்பட்ட பகுதியில் சட்டவிரோதமான
முறையில் கழிவுகளை கொட்டிய , வலி. தெற்கு பிரதேச சபை அவற்றை மீள அள்ள வேண்டும்...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் வலி.வடக்கு பிரதேசசபை ஆளுகைக்கு உட்பட்ட பகுதியில் சட்டவிரோதமான
முறையில் கழிவுகளை கொட்டிய , வலி. தெற்கு பிரதேச சபை அவற்றை மீள அள்ள வேண்டும்
என வலி. வடக்கு பிரதேச சபை காலக்கெடு விதித்தும் குப்பைகள் மீள அள்ளப்படாமல் ,
தீயிட்டு கொளுத்தப்பட்டு வருவதாக குற்றம் சாட்டப்படுகிறது.
</p><p>
வலி. வடக்கு பிரதேச சபையின் மாதாந்த அமர்வு கடந்த 20ஆம் திகதி தவிசாளர்
சோ.சுகிர்தன் தலைமையில் நடைபெற்றது.
</p><p>
அதன்போது சபை ஆளுகைக்கு உட்பட்ட கீரிமலை பகுதியில் சுண்ணக்கல் அகழப்பட்ட
பாரிய பள்ளங்களுக்குள், வலி. தெற்கு பிரதேச சபையினர், சட்டவிரோதமான முறையில்
இலத்திரனியல் கழிவுகள், மருத்துவ கழிவுகள் உள்ளிட்ட பல்வேறு வகையான கழிவுகளை
கொட்டியமை தொடர்பில் பிரஸ்தாபிக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/be5c52b2-b2ca-4303-9e34-077254278926/26-6aa8f5a32b92c.webp' /></p><h2>ஏக மனதாக தீர்மானம்</h2><p>
</p><p>
அதனை தொடர்ந்து, கொட்டப்பட்ட கழிவுகளை வலி. தெற்கு பிரதேச சபையினர்
செப்டெம்பர் 13ஆம் திகதிக்கு முன்னர் மீள அள்ள வேண்டும் எனவும் , அது
தொடர்பிலான அறிவித்தலை வலி. தெற்கு பிரதேச சபைக்கு உடனடியாக அனுப்ப வேண்டும்
என சபையில் ஏக மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
</p><p>
அந்நிலையில் 13ஆம் திகதியுடன் குப்பைகளை மீள
அள்ள கொடுத்த காலக்கெடு முடிவடைந்த நிலையில், வலி. வடக்கு பிரதேச சபை
உறுப்பினர்கள் இன்றைய தினம் குப்பைகள் கொட்டப்பட்ட பகுதிக்கு சென்ற வேளை
குப்பைகள் மீள அள்ளப்படாது, தீயிட்டு கொளுத்தப்பட்ட நிலையில் குப்பை
மேட்டில் இருந்து புகை எழுந்த வண்ணம் காணப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7ad515aa-e346-4eeb-9eab-72c2fedc5bcd/26-6aa8f5a408ff2.webp' /></p><p>

அது தொடர்பில் அயலில் வசிக்கும் மக்களிடம் உறுப்பினர்கள் வினாவிய போது,
தொடர்ந்து குப்பைகள் அப்பகுதிகளில் கொட்டப்படுவதாகவும், குப்பைகளுக்கு
தினமும் தீ வைப்பதனால் எழும் புகை மண்டலத்தால், வீடுகளில் மூச்சு விட
சிரமப்படும் நிலையிலே வாழ்கின்றோம்.</p><h2>கவலை</h2><p> </p><p>இதனை நிறுத்துமாறு பல்வேறு தரப்பினரிடமும்
கோரிக்கை விடுத்த போதிலும் , தம்மை பற்றி யாரும் கவனத்தில் எடுக்கவில்லை என
கவலை தெரிவித்துள்ளனர்.</p><p>அதேவேளை அனுமதியின்றி கழிவுகளை கொட்டியமை தொடர்பில் பிரஸ்தாபிப்பதற்கு என
இன்றைய தினம் திங்கட்கிழமை சிறப்பு கூட்டத்தினை நடாத்துவது எனவும், அதன்
போது, வலி. தெற்கு பிரதேசசபையினர் கழிவுகளை மீள அள்ளாது விடின் அடுத்த கட்ட
நடவடிக்கை எடுப்பது தொடர்பில் கூட்டத்தில் தீர்மானிப்பதாக கடந்த 20ஆம் திகதி
நடைபெற்ற கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bb90e937-74b0-4e22-8b8a-a3d4ad5ffebf/26-6aa8f5a4d6124.webp' /></p><p>
</p><p>
அந்நிலையில் குறித்த கூட்டம் இன்றைய தினம் நடைபெறவில்லை. கூட்டம்
நிறுத்தப்பட்டமை தொடர்பில் சபை உறுப்பினர்களுக்கு அறிவிக்கவில்லை எனவும்,
எதிர்வரும் வியாழக்கிழமை சபையின் வழமையான மாதாந்த கூட்டத்திற்கே கடிதம்
கிடைக்கப்பெற்றுள்ளதாகவும், சபை உறுப்பினர்கள் தெரிவித்துள்ளமையும்
குறிப்பிடத்தக்கது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fb535ab1-3108-4b66-96d9-6b4c157b42a9/26-6aa8f5a5b07dc.webp' /></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-15T07:37:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் குடும்பஸ்தர் வெட்டி படுகொலை: பிரதான சந்தேகநபர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/man-hacked-to-death-in-jaffna-suspect-arrested-1789456373"></link>
            <id>https://tamilwin.com/article/man-hacked-to-death-in-jaffna-suspect-arrested-1789456373</id>
            <summary type="text">யாழ்ப்பாணத்தில் முன் பகை காரணமாக குடும்பஸ்தர் ஒருவர் வீதியில் வைத்து வெட்டி
படுகொலை செய்த சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் தலைமறைவாகியிருந்த நிலையில் பொ...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணத்தில் முன் பகை காரணமாக குடும்பஸ்தர் ஒருவர் வீதியில் வைத்து வெட்டி
படுகொலை செய்த சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் தலைமறைவாகியிருந்த நிலையில் பொலிஸாரிடம் சரணடைந்ததை அடுத்து கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>குறித்த கைது நடவடிக்கையானது நேற்றையதினம்(14.9.2026) மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p><p>

வடமராட்சி கிராமக்கோடு சந்திக்கு அருகாமையில் கடந்த 09ஆம் திகதி இரவு
இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்தில் ,துன்னாலை பகுதியை சேர்ந்த ஜெயசீலன்
ஜெனிதன் (வயது 33) என்பவரே படுகொலை செய்யப்பட்டுள்ளார்.</p><h2>விசாரணை</h2><p>&nbsp;சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்த
நிலையில் , சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் முல்லைத்தீவில் பதுங்கியிருப்பதாக
கிடைத்த இரகசிய தகவலின் கடந்த 11ஆம் திகதி அங்கு விரைந்த பொலிஸார் மூவரையும்
கைது செய்து , நீதிமன்றில் முற்படுத்திய நிலையில் மூவரும் விளக்கமறியலில்
வைக்கப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5a968ad9-d333-49cc-b0bd-dcdd02f6be0d/26-6aa8f45fd2c55.webp' /></p><p>&nbsp;இந்நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் தொடர்ந்து
தலைமறைவாகியிருந்த நிலையில், நேற்றைய தினம் பொலிசாரிடம் சரணடைந்ததை அடுத்து
கைது செய்துள்ளனர்.</p><p>&nbsp;கைது செய்யப்பட்ட நபரை பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து
விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-15T07:31:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆல்பர்ட்டா மாகாணத்தில் பெண்ணை சுட்ட நபரை சுட்டுக்கொன்ற பொலிசார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/man-killed-by-canada-police-after-gun-incident-1789457424"></link>
            <id>https://canadamirror.com/article/man-killed-by-canada-police-after-gun-incident-1789457424</id>
            <summary type="text">Man killed by police after gun incident involving woman and a baby: கனடாவில் பெண்ணொருவரையும் ஒரு குழந்தையையும் சுட்டதாக நபர் ஒருவரை பொலிசார் சுட்டுக் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Man killed by police after gun incident involving woman and a baby: கனடாவில் பெண்ணொருவரையும் ஒரு குழந்தையையும் சுட்டதாக நபர் ஒருவரை பொலிசார் சுட்டுக் கொன்றுள்ளனர்.
</p><p>


கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்தில், பெண்ணொருவரையும் ஒரு குழந்தையையும் 36 வயது ஆண் ஒருவர் துப்பாக்கியால் சுட்டதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2191affe-cb0a-4344-a3da-e601d24cf917/26-6aa8f412232be.webp' /></p><p>
ஞாயிற்றுக்கிழமை காலை, ஆல்பர்ட்டா மாகாண தலைநகரான எட்மண்டனில் அமைந்துள்ள அந்த வீட்டுக்கு பொலிசார் விரைந்த நிலையில், சம்பந்தப்பட்ட நபருடன் பேச்சுவார்த்தை நடத்த அவர்கள் முயன்றுள்ளனர்.</p><p>

ஆனால், கதவைத் திறந்துகொண்டு கையில் துப்பாக்கியுடன் வெளியே வந்த அந்த நபர் துப்பாக்கியைக் கீழே போட மறுத்துள்ளார்.
</p><p>
ஆகவே, மூன்று பொலிசார் அவரைத் துப்பாக்கியால் சுட்டதாகக் கூறப்படுகிறது.
</p><p>
அந்த நபர் படுகாயமடைந்த நிலையில், அவசர உதவிக்குழுவினர் அவரைக் காப்பாற்ற எடுத்த முயற்சிகள் பலனளிக்காமல் அவர் அந்த இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.</p><p>

இதற்கிடையில், அந்த வீட்டுக்குள் துப்பாக்கியால் சுடப்பட்ட நிலையில் இருந்த ஒரு பெண்ணையும், காயமடைந்திருந்த ஒரு குழந்தையையும் மீட்ட போலிசார், அவர்களை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
</p><p>
கொல்லப்பட்ட அந்த ஆணும், காயமடைந்த அந்தப் பெண்ணும் ஒருவருக்கொருவர் அறிமுகமானவர்கள் என்று கூறியுள்ள பொலிசார், குடும்பச் சண்டையே இந்த பிரச்சினைக்குக் காரணமாக இருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-09-15T07:30:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்: நடிகை ஜான்வி கபூரின் அழகிய புகைப்படங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/janhvi-kapoor-beautiful-ganesh-chaturthi-outfit-1789457215"></link>
            <id>https://cineulagam.com/article/janhvi-kapoor-beautiful-ganesh-chaturthi-outfit-1789457215</id>
            <summary type="text">Janhvi Kapoor looks so beautiful in ganesh chaturthi outfit: விநாயகர் சதுர்த்திக்காக நடிகை ஜான்வி கபூர் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படங்கள் வெளியாகியுள...</summary>
            <content type="html"><![CDATA[<p>Janhvi Kapoor looks so beautiful in ganesh chaturthi outfit: விநாயகர் சதுர்த்திக்காக நடிகை ஜான்வி கபூர் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ab2b5cf9-ca9e-4d0a-a242-0b3d1c30f299/26-6aa8f395c31aa.webp' /></p><p></p><p>
</p><h2>
ஜான்வி கபூர்</h2><p>
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளான ஜான்வி பாலிவுட்டில் தொடங்கி இன்று தென்னிந்திய சினிமா வரை பிரபலமான நடிகையாக மாறிவிட்டார் ஜான்வி கபூர்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5d518b59-19e5-41ed-80b5-cfbc5d32fd29/26-6aa8f396a274a.webp' /></p><p>இவர் நடிப்பில் இந்த ஆண்டு தெலுங்கில் வெளிவந்த பெத்தி திரைப்படம் ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றது. தெலுங்கில் தொடர்ந்து படங்கள் நடித்து வரும் <a href="https://www.instagram.com/p/DdTHsu_CFiK/?img_index=12" target="_blank">ஜான்வி கபூர்</a> விரைவில் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைப்பார் என ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d9e903d5-3a26-4584-827c-b72f1b6d4e1f/26-6aa8f3975e07f.webp' /></p><p></p><p>
</p><h3>
விநாயகர் சதுர்த்தி Outfit
</h3><p>
இன்ஸ்டாகிராமில் அவர் பதிவிடும் புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து உடனடியாக இணையத்தில் வைரலாகும். அந்த வகையில் தற்போது விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷலாக அவர் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. 

இதோ அந்த புகைப்படங்கள்:</p><p><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/p/DdTHsu_CFiK/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/p/DdTHsu_CFiK/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/p/DdTHsu_CFiK/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by Janhvi Kapoor (@janhvikapoor)</a></p></div></blockquote> <script async src="//www.instagram.com/embed.js"></script></p>]]></content>
            <updated>2026-09-15T07:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கைக்கு சுற்றுலா வந்த பயணி மீது தொற்றிக் கொண்ட வௌவால்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/a-bat-latched-onto-a-tourist-visiting-sri-lanka-1789457523"></link>
            <id>https://jvpnews.com/article/a-bat-latched-onto-a-tourist-visiting-sri-lanka-1789457523</id>
            <summary type="text">நாட்டுக்கு சுற்றுலா வந்த பயணி ஒருவர் மீது வௌவால் ஒன்று வந்து தொற்றிக் கொண்ட அரிய காட்சி சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

வௌவால் தொற்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டுக்கு சுற்றுலா வந்த பயணி ஒருவர் மீது வௌவால் ஒன்று வந்து தொற்றிக் கொண்ட அரிய காட்சி சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
</p><p>
வௌவால் தொற்றிக் கொண்டதும் அச்சுறுத்தும் அந்தச் சூழலிலும் பதற்றமடையாமல் அந்தப் பயணி அமைதியாக நின்ற விதம் இணையவாசிகளை கவர்ந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c58c50d1-cd36-43d6-b36b-6688c1ea73b9/26-6aa8f47531e29.webp' /></p><p>
</p><p>
இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்டுள்ள காணொளி ஒன்றில்,சுற்றுலாப் பயணியின் மீது திடீரென வந்து அமர்ந்த வௌவால் அவரை விட்டு நகராமல் ஒட்டியுள்ளது.

அதைக் கண்டு அதிர்ச்சியடைந்தாலும், பயந்து ஓடாமல் குறித்த சுற்றுலாப்பயணி அமைதியாக ஒரே இடத்தில் நின்றார்.</p><p></p><p>
</p><p>
அருகில் இருந்த மற்றொருவர் அந்த வௌவாலை அகற்ற அவருக்கு உதவ முயன்றார்.

இந்தநிலையில்,"நீங்கள் இலங்கைக்குச் செல்லும் போது... பெட்மேனே உங்கள் மீது விழுந்தால்..." என்ற நகைச்சுவையான தலைப்புடன் இந்த காணொளி சமூக வலைதளங்களில் பகிரப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-15T07:28:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[தாயையும் குழந்தையையும் சுட்ட கனேடியர்: பொலிசார் அதிரடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/canada-police-killed-man-after-gun-incident-1789457213"></link>
            <id>https://news.lankasri.com/article/canada-police-killed-man-after-gun-incident-1789457213</id>
            <summary type="text">Man killed by police after gun incident involving woman and a baby: கனடாவில் பெண்ணொருவரையும் ஒரு குழந்தையையும் சுட்டதாக நபர் ஒருவரை பொலிசார் சுட்டுக் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Man killed by police after gun incident involving woman and a baby: கனடாவில் பெண்ணொருவரையும் ஒரு குழந்தையையும் சுட்டதாக நபர் ஒருவரை பொலிசார் சுட்டுக் கொன்றுள்ளனர்.
</p><p>


கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்தில், பெண்ணொருவரையும் ஒரு குழந்தையையும் 36 வயது ஆண் ஒருவர் துப்பாக்கியால் சுட்டதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.</p><h3>

தாயையும் குழந்தையையும் சுட்ட கனேடியர்</h3><p>

ஞாயிற்றுக்கிழமை காலை, ஆல்பர்ட்டா மாகாண தலைநகரான எட்மண்டனில் அமைந்துள்ள அந்த வீட்டுக்கு பொலிசார் விரைந்த நிலையில், சம்பந்தப்பட்ட நபருடன் பேச்சுவார்த்தை நடத்த அவர்கள் முயன்றுள்ளனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a163ec5f-9bab-4cf9-a1e5-afcfede40b65/26-6aa8f33f1bacf.webp' /></p><p>
ஆனால், கதவைத் திறந்துகொண்டு கையில் துப்பாக்கியுடன் வெளியே வந்த அந்த நபர் துப்பாக்கியைக் கீழே போட மறுத்துள்ளார்.
</p><p>
ஆகவே, மூன்று பொலிசார் அவரைத் துப்பாக்கியால் சுட்டதாகக் கூறப்படுகிறது.
</p><p>
அந்த நபர் படுகாயமடைந்த நிலையில், அவசர உதவிக்குழுவினர் அவரைக் காப்பாற்ற எடுத்த முயற்சிகள் பலனளிக்காமல் அவர் அந்த இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.&nbsp;</p><p></p><p>
இதற்கிடையில், அந்த வீட்டுக்குள் துப்பாக்கியால் சுடப்பட்ட நிலையில் இருந்த ஒரு பெண்ணையும், காயமடைந்திருந்த ஒரு குழந்தையையும் மீட்ட போலிசார், அவர்களை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
</p><p>
கொல்லப்பட்ட அந்த ஆணும், காயமடைந்த அந்தப் பெண்ணும் ஒருவருக்கொருவர் அறிமுகமானவர்கள் என்று கூறியுள்ள பொலிசார், குடும்பச் சண்டையே இந்த பிரச்சினைக்குக் காரணமாக இருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-15T07:27:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[அஸ்வெசும பயனாளிகளுக்கு முக்கிய அறிவித்தல்: வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்படவுள்ள பணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/aswesuma-payment-to-be-credited-tomorrow-1789456693"></link>
            <id>https://tamilwin.com/article/aswesuma-payment-to-be-credited-tomorrow-1789456693</id>
            <summary type="text">செப்டெம்பர் மாதத்திற்கான அஸ்வெசும கொடுப்பனவை நாளை (16) பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை ...</summary>
            <content type="html"><![CDATA[<p>செப்டெம்பர் மாதத்திற்கான அஸ்வெசும கொடுப்பனவை நாளை (16) பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.</p><p>

அதன்படி, அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு திட்டத்தின் முதல் கட்டத்தின் கீழ் 999,053 பயனாளி குடும்பங்கள் உள்ளன.</p><h2>முக்கிய அறிவிப்பு</h2><p>

அந்த குடும்பங்களுக்கு 9 பில்லியன் 181 மில்லியன் 696 ஆயிரத்து 250 ரூபாய் நிதி வரவு வைக்கப்பட உள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/43e36d97-15ea-444f-b20e-cb5c57092b60/26-6aa8f31151942.webp' /></p><p>
</p><p>
அதேவேளை, இரண்டாம் கட்டத்தின் கீழ் 213,335 பயனாளி குடும்பங்கள் உள்ளன.
</p><p>
அவர்களுக்கான கொடுப்பனவு நாளை மறுதினம் (17) வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-15T07:26:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மூன்று மாவட்டங்களுக்கு நிலச்சரிவு எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/landslide-warning-has-been-issued-for-3-districts-1789455295"></link>
            <id>https://ibctamil.com/article/landslide-warning-has-been-issued-for-3-districts-1789455295</id>
            <summary type="text">மூன்று மாவட்டங்களின் பல பகுதிகளுக்கு மண்சரிவு அபாயம் தொடர்பான முதலாம் கட்ட எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.&amp;nbsp;இந்த எச்சரிக்கையை தேசிய கட்டிட ஆராய்ச்...</summary>
            <content type="html"><![CDATA[<p>மூன்று மாவட்டங்களின் பல பகுதிகளுக்கு மண்சரிவு அபாயம் தொடர்பான முதலாம் கட்ட எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p><p>&nbsp;இந்த எச்சரிக்கையை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினால் (NBRO) வெளியிட்டுள்ளது.
</p><p>
இன்று (15.09.2026) காலை 10.00 மணிக்கு வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவித்தல், நாளை (16) காலை 10.00 மணி வரையிலான 24 மணித்தியாலங்களுக்குச் செல்லுபடியாகும்.</p><p></p><h2>வரக்காபொல மற்றும் ருவன்வெல்ல </h2><p>

இதன்படி, கொழும்பு மாவட்டத்தில் சீதாவக்க பிரதேச செயலகப் பிரிவும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளும், களுத்துறை மாவட்டத்தில் தொடங்கொட, புலத்சிங்கள, பேருவளை, இங்கிரிய, மதுகம, பாலிந்தநுவர மற்றும் வலல்லாவிட்ட ஆகிய பகுதிகளும் எச்சரிக்கை வலயங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3d2b2394-dd71-488e-8606-aa9e031b92a0/26-6aa8f1f0848dc.webp' /></p><p>மேலும், கேகாலை மாவட்டத்தில் வரக்காபொல மற்றும் ருவன்வெல்ல பிரதேச செயலகப் பிரிவுகளும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கும் முதலாம் கட்ட மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p><p>இந்த எச்சரிக்கை அடிப்படையில் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-15T07:24:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[பொதுஜன பெரமுனவின் பேரணி தொடர்பில் திரிபுப்படுத்தப்பட்ட காணொளிகள் - மொட்டுக்கட்சி விளக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/alcohol-personal-rights-motu-party-explanation-1789455588"></link>
            <id>https://tamilwin.com/article/alcohol-personal-rights-motu-party-explanation-1789455588</id>
            <summary type="text">எமது கூட்டங்களுக்கு வருகை தருபவர்களை மதுபானம் அருந்தாமல் வருமாறு
கட்டளையிடும் அதிகாரம் எங்களிடம் கிடையாது. மது அருந்துவதும் அருந்தாமல்
இருப்பதும் அவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>எமது கூட்டங்களுக்கு வருகை தருபவர்களை மதுபானம் அருந்தாமல் வருமாறு
கட்டளையிடும் அதிகாரம் எங்களிடம் கிடையாது. மது அருந்துவதும் அருந்தாமல்
இருப்பதும் அவரவர் தனிப்பட்ட உரிமையாகும். நாங்கள் யாருக்கும் மது
அருந்திவிட்டு வருமாறு குறிப்பிடவும் இல்லை, கட்சி கூட்டத்துக்காக மதுபானம்
வாங்கிக்கொடுக்கவும் இல்லை என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்
பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.</p><p>

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமைச் செயலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்குப்
பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு மேலும் கூறியதாவது,</p><h2>திரிபுப்படுத்தப்பட்ட காணொளிகள்</h2><p>அனுராதபுரத்தில் இடம்பெற்ற எமது கட்சியின் மக்கள் பேரணியில் நாட்டின் பல
பகுதிகளிலிருந்தும் ஏழை விவசாயிகளும், உழைக்கும் தொழிலாளர்களும் திரளாகக்
கலந்துகொண்டார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8e8360a7-8398-46d1-9e3e-89eec40a403e/26-6aa8f1ee26c63.webp' /></p><p> </p><p>ஆனால், அக்கூட்டத்துக்கு வந்த மக்களை அவமதிக்கும் வகையில்
சமூக வலைத்தளங்களில் வேண்டுமென்றே திரிபுப்படுத்தப்பட்ட காணொளிகள்
பரப்பப்பட்டு வருகின்றன.
</p><p>
இலங்கையில் ஒவ்வொரு வருடமும் பெருந்தொகையான மதுபானம் உற்பத்தி
செய்யப்படுகின்றது. அவற்றை இந்த நாட்டு மக்கள்தான் குடிக்கின்றார்கள்.
மதுபானம் அருந்துவதும், அதனைத் தவிர்ப்பதும் அவரவர் தனிப்பட்ட விருப்பமும்
உரிமையுமாகும்.</p><p> எமது கூட்டங்களுக்கு மதுபானம் அருந்தாமல் வரவேண்டும் என்று
நாங்கள் எவருக்கும் நிபந்தனை விதிக்கவில்லை. அதேபோல், கூட்டத்தில்
கலந்துகொண்டவர்களுக்கு எமது தரப்பிலிருந்து எந்தவிதமான மதுபானமும் வாங்கிக்
கொடுக்கப்படவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-15T07:21:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவில் நண்பரை காப்பற்ற முயன்ற இந்திய இளம்பெண் ரயில் மோதி உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/indian-women-dies-hit-by-us-train-when-save-friend-1789456865"></link>
            <id>https://news.lankasri.com/article/indian-women-dies-hit-by-us-train-when-save-friend-1789456865</id>
            <summary type="text">&amp;nbsp;indian origin women dies in newyork hit by train while save friend fell in track: நியூயார்க்கில் தண்டவாளத்தில் சிக்கிய ஆண் நண்பரை காப்பற்ற முயன்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;indian origin women dies in newyork hit by train while save friend fell in track: நியூயார்க்கில் தண்டவாளத்தில் சிக்கிய ஆண் நண்பரை காப்பற்ற முயன்ற இந்திய இளம்பெண் ரயில் மோதி உயிரிழந்துள்ளனர்.
</p><h3>
நண்பரை காப்பற்ற முயன்ற பெண் ரயில் மோதி உயிரிழப்பு</h3><p> 

இந்திய வம்சாவளியை சேர்ந்த மலாய்கா சித்ரே மற்றும் நேபாள பூர்விகத்தை கொண்ட நவம் கவுல் ஆகிய இருவரும் அமெரிக்காவில் உயர்கல்வி பயின்று அங்கு பணியாற்றி வந்துள்ளனர்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3bc4f8fb-a1d3-4c1a-8eb7-4a3282f8bc36/26-6aa8f1e2aac1f.webp' /></p><p> 

நேற்று நள்ளிரவு 3 மணியளவில் நியூயார்க்கின் மன்ஹாட்டன் சுரங்கப்பாதை ரயில் நிலையத்தில் ரயிலுக்காக இருவரும் காத்திருந்துள்ளனர்.</p><p> 

அப்போது ரயில் வரும் நேரத்தில் நவம் கவுல் தண்டவாளத்தில் விழுந்த நிலையில், அவரை காப்பாற்ற மலாய்கா சித்ரேவும் தண்டவாளத்தில் இறங்கியுள்ளார்.&nbsp;</p><p></p><p> 

அவர்கள் இருவரையும் தண்டவாளத்தில் பார்த்தாலும் அருகே வந்துவிட்டதால் ரயில் ஓட்டுநரால் ரயிலை உடனடியாக நிறுத்த முடியவில்லை. </p><p>

ரயில் மோதியதில், இருவரும் ரயிலுக்கு அடியில் சிக்கி உயிரிழந்துள்ளனர். இருவரின் உடலையும் மீட்டுள்ள நியூயார்க் காவல்துறைத் துறையினர் இந்தச் சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர்.</p><p> 

நியூ ஜெர்சியில் அருகில் உள்ள நகரங்களில் வசித்து வந்த இருவரும், 2024 ஆம் ஆண்டில் ரட்கர்ஸ் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றிருந்தனர்.
</p><p>
மலாய்கா சித்ரே, அகாடியா பார்மசூட்டிகல்ஸ் நிறுவனத்தில் தரச் செயல்பாட்டு நிபுணராகப் பணிபுரிந்துகொண்டே, டெம்பிள் பல்கலைக்கழகத்தில் மருந்தியல் படிப்பில் முனைவர் பட்டம் படித்து வந்தார்.
</p><p>
வணிகப் பட்டம் பெற்றிருந்த நவம் கவுல், ப்ளூம்பெர்க் நிறுவனத்தில் தரவு ஆய்வாளராக பணியாற்றி வந்துள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-15T07:21:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[களுதாவளை பிள்ளையார் ஆலயத்தில் மெய்சிலிர்க்க வைத்த சம்பவம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/kaluthavalai-pillaiyar-temple-elephant-pray-viral-1789448955"></link>
            <id>https://jvpnews.com/article/kaluthavalai-pillaiyar-temple-elephant-pray-viral-1789448955</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;நேற்றையதினம் முழுமுதல் கடவுளாம் விநாயககடவுள் பிறந்ததாக புராணங்கள் கூறுகின்றது. அந்தவகையில் ஆலயங்கள் தோறும் விநாயக பெருமானுக்கு சிறப்பு அப...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;நேற்றையதினம் முழுமுதல் கடவுளாம் விநாயககடவுள் பிறந்ததாக புராணங்கள் கூறுகின்றது. அந்தவகையில் ஆலயங்கள் தோறும் விநாயக பெருமானுக்கு சிறப்பு அபிசீக ஆராதனைகள் இடம்பெற்றது.
</p><p>

விநாயகர் சதுர்த்தி மற்றும் ஆலயத் திருவிழாக்கள் என்பது இறைவனின் அருளைப் பெற்று மன அமைதி அடையும் ஆன்மீக நன்னாளாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/141febcd-005b-40d6-9c71-e42573fba838/26-6aa8d2fd72357.webp' /></p><p> </p><p>

இன்னிலையில் களுதாவளை கல்லடி பிள்ளையார் ஆலயத்தின் வீதியில், விநாயகப் பெருமானின் திருமுன்னே ஒரு யானை முழந்தாளிட்டுத் தன் தும்பிக்கையை உயர்த்தி வணங்கிய காட்சி, காண்போர் அனைவரையும் மெய்சிலிர்க்க வைப்பதாக அமைந்துள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-15T07:19:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இணையை தேடி ஆப்பிரிக்க காட்டு நாய்கள் வரலாற்று சாதனை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/african-wild-dogs-historic-4-126-kilometer-journey-1789456779"></link>
            <id>https://canadamirror.com/article/african-wild-dogs-historic-4-126-kilometer-journey-1789456779</id>
            <summary type="text">&amp;nbsp; நாடு முழுவதும் சுமார் 4,000 கிலோமீட்டர் (2,485 மைல்கள்) தூரத்தைக் கடந்து ஆப்பிரிக்க காட்டு நாய்கள் (African Wild Dogs) வரலாற்று சாதனை படைத்துள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; நாடு முழுவதும் சுமார் 4,000 கிலோமீட்டர் (2,485 மைல்கள்) தூரத்தைக் கடந்து ஆப்பிரிக்க காட்டு நாய்கள் (African Wild Dogs) வரலாற்று சாதனை படைத்துள்ளன.

இணையை தேடி ஸாம்ஃபியாவில் (Zambia) ஆப்பிரிக்க நிலப்பரப்பில் பாலூட்டி விலங்கு ஒன்று பயணித்த மிக நீண்ட தூரம் இதுவே ஆகும் என்று ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
</p><p>&nbsp;தலைநகர் லூசாக்கா (Lusaka) உட்பட முக்கிய தொழில் நகரங்களைத் தவிர்த்து, 8 மாத காலத்தில் வளைந்து நெளிந்து 4,000 கிலோமீற்றர் தூரத்தைக் கடந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/73874c7e-0e3e-4329-9362-c90b72520bf1/26-6aa8f18d4944b.webp' /></p><p>
</p><p>
நேர்கோட்டில் இதன் தூரம் 260 மைல்கள் என்றாலும், தடையான நிலப்பரப்புகளைக் கடக்க அவை நீண்ட தூரம் பயணிக்க வேண்டியிருந்தது.

ஆப்பிரிக்க காட்டு நாய்கள் தாம் பிறந்த கூட்டத்திற்குள்ளேயே இனப்பெருக்கம் செய்ய முடியாது.
</p><p>
இதனால், இரண்டு அல்லது மூன்று வயதில் அவை புதிய இணை மற்றும் புதிய நிலப்பரப்பைத் தேடி இத்தகைய ஒருவழிப் பயணத்தை (Dispersals) மேற்கொள்கின்றன.
</p><p>
இந்த நீண்ட பயணத்தில் மனிதர்களின் சட்டவிரோத வேட்டை வலைகள் (Snares) மிகப்பெரிய அச்சுறுத்தலாக விளங்குகின்றன.

மூன்று ஆண் நாய்கள் வெற்றிகரமாகப் பயணத்தை முடித்த நிலையில், இதைப் போன்று பயணித்த மூன்று பெண் நாய்களில் இரண்டு நாய்கள் வேட்டை வலைகளில் சிக்கி உயிரிழந்தன.
</p><p>
மொண்டானா மாநில பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஸ்காட் க்ரீல் (Scott Creel) தலைமையிலான இந்த ஆய்வு, Ecology இதழில் வெளியிடப்பட்டுள்ளது.

வேலி அடைக்கப்படாத ஆப்பிரிக்க காட்டு நாய் கூட்டங்கள் ஒன்றுக்கொன்று தொடர்பிலேயே இருக்கின்றன என்பதை இந்த ஆய்வு காட்டுகிறது.
</p><p>
 அதேசமயம் காட்டு நாய்கள் மற்றும் யானைகள் போன்ற அதிக தூரம் பயணிக்கும் உயிரினங்கள் வாழ, பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளை மட்டும் தீவுகளாகப் பார்க்காமல், அவற்றை இணைக்கும் இயற்கை வழித்தடங்களை உருவாக்க வேண்டும் என்று சூழலியல் அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.</p>]]></content>
            <updated>2026-09-15T07:16:22+00:00</updated>
        </entry>
    </feed>
