<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-07-30T08:38:20+00:00</updated>
            <entry>
            <author>
                <name>T.thibaharan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கறுப்பு ஜூலை 1983ஆம் ஆண்டின் ஆறாவடுவும் தீராத தமிழர் பிரச்சினையும்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/black-july-1983-and-unresolved-tamil-problem-1785398530"></link>
            <id>https://tamilwin.com/article/black-july-1983-and-unresolved-tamil-problem-1785398530</id>
            <summary type="text">கறுப்பு ஜூலை என்பது 1983 ஜூலை 24 தொடக்கம் இரண்டு வாரங்களுக்கு மேலாகத் சிங்கள இனவாதிகள் இலங்கைத் தமிழர்கள் 3000 பேர் வரை படுகொலை செய்ததும், தமிழர்களின்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கறுப்பு ஜூலை என்பது 1983 ஜூலை 24 தொடக்கம் இரண்டு வாரங்களுக்கு மேலாகத் சிங்கள இனவாதிகள் இலங்கைத் தமிழர்கள் 3000 பேர் வரை படுகொலை செய்ததும், தமிழர்களின் சொத்துகளை அழித்தும், கைப்பற்றியும், சூரையாடியும், கொள்ளைடித்தும், தமிழ்ப் பெண்களை கற்பழித்தும், தமிழர் வீடுகள் வியாபால நிறுவனங்களை தீவைத்து எரித்தும் சிங்கள இனவெறியர்கள் ஆடிய ஊழித்தாண்டவத்தை ஈழத்தமிழர்கள் அதனை ஒரு துன்பவியல் நிகழ்வாக கடந்துவிட முடியாது. </p><p>

அது ஈழத்தமிழர்களது இருப்போடும், வாழ்வோடும், வரலாற்றோடும் பிண்ணிப் பிணைந்த ஒன்றாகும். அந்த வலியும், வேதனையும் தலைமுறை தலைமுறையாக காவிக் கடத்தப்படவேண்டியதொன்று.</p><p></p><p>
</p><p>
1983 ஜூலையில் தமிழர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இனவழிப்பு என்பது சடுதியாக ஆரம்பிக்கப்பட்ட ஒன்று அல்ல. </p><p>அது நீண்ட திட்டமிடலோடும், இன விரோதத்தோடும், தமிழர்களின் பொருளாதாரத்தை கொழும்பில் இல்லாது ஒழிக்கவும், பொருளாதார இலக்குகளை சிங்களவர்கள் கைப்பற்றுவதற்குமான ஒரு நீண்டகால தொடர் இனவிரோத செயல்முறையின் ஒட்டுமொத்த திரட்சியின் வடிவம் தான் ஜூலை இனப்படுகொலை.</p><p>ஆனால் யாழ் திருநெல்வேலியில் ஜூலை 23ஆம் திகதி விடுதலைப் புலிகள் மேற்கொண்ட கண்ணிவெடி தாக்குதலில் 13 சிங்கள படையினர் கொல்லப்பட்டமை என்பது அந்த இனப்படுகொலையை ஆரம்பிப்பதற்கான உடனடி காரணமாக அமைந்துவிட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1d35756c-1464-429a-9910-06a742631602/26-6a6b057fe22a0.webp' /></p><h2>&nbsp;ஜூலை படுகொலை</h2><p>

சிங்களவர்களால் 1983 ஜூலை இனவழிப்பின் ஆரம்பத்திற்கு முன்னரே மே மாதம் பெரதேனியா பல்கலைக்கழக பதிவாளராக(1976) இருந்த விமல் சுந்தரவின் ஆதரவு அணி மாணவர்களான துல்சி விக்ரமசிங்க மற்றும் டொக் கமகே ஆகியோரின் தலைமையிலான குழுவினால் பெரதேனியா பல்கலைக்கழக அருணாசலம் மண்டபத்தில் வைத்துத் இனத்துவேசம் பேசியவாறு தமிழ் மாணவர்கள் தாக்கப்பட்டனர்.&nbsp;</p><p>இதனையடுத்து, 1983 ஜூலை நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தில் கபினற் மினிஸ்டர்கள் சிலர் கிளாஸ்களை உடைத்து தமிழின விரேதம் பேசி சத்திமிட்டுவிட்டு கலகம் விளைவித்தார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/79a6002d-de55-4b61-b8ab-35c345f577d9/26-6a6b08ad6363d.webp' /></p><p> </p><p>

அதன்பின்னர் அதாவது 83 கலவரம் நடைபெறுவதற்கு சில வாரங்களுக்கு முன்னர் மீன்பிடித்துறை அமைச்சராக இருந்த பெஸ்ரஸ் பெரேரா தன்னுடைய தொண்டர்களுக்கு பிறவுன் கொட்டேல் கடற்கரையில் வைத்து “let them wait a few weeks , they will learn a good lesson‘‘ என்று சொன்னார்.

1983 ஜூலை 11 இல் ஜே.ஆர் ஜயவர்த்தனா ‘‘நான் யாழ்ப்பாண மக்களின் அபிப்பிராயங்களைப் பற்றிக் கவலைப்படவில்லை.</p><p>இப்போது அவர்களைப்பற்றி எம்மால் சிந்திக்க முடியாது. அவர்கள் உயிர்களைப்பற்றியோ, அவர்கள் எங்களைப்பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதைப்பற்றியோ சிந்திக்க முடியாது “என்கிறார்,

இது தமிழர்கள் அழிக்கப்படவேண்டியவர்கள் என்ற வக்கிரம் ஜனாதிபதி மனதில் குடிகொண்டிருப்பதை காட்டுகிறது.</p><p></p><p> </p><p>

இதேவேளை பின்நாளில் பாதுகாப்பு அமைச்சராக இருந்த லலித் அத்துளத்முதலியிடம் ஒக்பேட் பல்கலைக்கழக டேவிட் செல்போர் என்ற அவரது நண்பன் ‘‘இனப்பிரச்சனைக்கு எத்தகைள தீர்வை காணப்போகிறீர்கள்“ என்று கேட்டதற்கு, “ mash The Heads of the Tamils‘‘ என்று சொன்னார்.

 அது இனக்குரோதத்தின் உச்சத்தின் வெளிப்பாடு, திருநெல்வேலியில் கொல்லப்பட்ட 13 இராணுவத்தினருடைய சடலங்களும் பொரளை மயாணத்தில் எரிக்கப்பட்டது.</p><h2>ஓகனேசன்ஸ் திட்டம்</h2><p>
</p><p>
 24 ஆம் திகதி மதியம் 2மணிக்கு கொழும்பு வீதிகள் எங்கும் படுகொலைகள் நடந்தன. சிங்களவர்கள் சிலர் தமிழர்கள் வாழும் ஒவ்வொரு வீட்டிற்கும் செல்லும் போது அந்த அந்த பிரதேசத்தின் வாக்காளர் பட்டியலினை கையில் வைத்துக்கொண்டே ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று தாக்கினர்.
</p><p>
தென்னிலங்கையில் தமிழர்கள் பெருமளவு கொல்லப்பட்டு பேரழிவை சந்தித்துக் கொண்டிருப்பதை ரசித்துக்கொண்டிருந்த ஜனாதிபதி, ஜூலை 27ஆம் திகதி வானொலி ஊடாக தனது உரையில் தமிழர்கள் மீதான இனப்படுகொலைகளுக்கு எந்தவிதமான அனுதாபமோ வருத்தமோ தெரிவிக்கவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b330ef0e-0f9a-46f8-b3fe-ed5b193b6123/26-6a6b08ae35f40.webp' /></p><p> 

அதேநேரம் அமைச்சர் அனந்த திஸ்ஸ டி அல்விஸ் த காடியன் ஊடகங்களுக்கு 28ஆம் திகதி யூலை கொடுத்த பேட்டியில், சில ஓகனேசன்ஸ் திட்டம் செய்திருந்தாகவும், தாம் அது தொடர்பாக விசாரணை நடத்துவதாகவும் தெரிவித்திருந்தார். </p><p>

அத்துடன் இது ஒரு Hit and Run Operation என்றும் கூறினார். இங்கு படுகொலைகளின் பின் எந்தவோரு அரசியல் கட்சியோ, தொண்டு நிறுவனமோ, பத்திரிகைகளோ ஒரு வருத்தத்தை தானும் தெரிவிக்கவில்லை. இப்படிப்பட்டவர்களுடன் எப்படி தமிழர்கள் சமரசம் செய்து இணைந்து வாழ முடியும்?&nbsp;</p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">ஊடகவியலாளர்களுக்கு சொன்ன தகவல்</span></p><p>
இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான இனவழிப்பு நடந்த போது 28 ஆம் திகதி இந்தியப் பிரதமர் இந்திராகாந்தி தனது வெளிவிவகார அமைச்சர் பி.வி.நரசிம்மராவைக் கொழும்புக்கு அனுப்பி வைத்து எச்சரித்தார். </p><p>

ஆனாலும் ஜூலை 31ஆம் திகதி தான் இனவழிப்பு வெறியாட்டம் நிறுத்தப்பட்டது. சிங்களவர்கள் சிலர் வீதியில் சென்று கொண்டிருந்த மக்களை மறித்து, “ நீ சிங்களவனா?” எனக் கேட்டார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8d2bbca6-43a1-4089-b58b-5a58aab7881a/26-6a6b0c23bbb06.webp' /></p><p>
</p><p>
அப்போது அவர் ஆம் என்றால் அவர் சிங்களவன் என்பதற்கான அடையாளத்தை காட்டவேண்டும் இதுஒரு புறம் புத்தரினுடைய பாட்டினை பாடிக்காட்ட வேண்டும். அப்போது தான் விட்டார்களாம். இதன்போது ஐலண்ட் பத்திரிகை ஊடகவியலாளர் அமிர்த அபேசேகர அப்பகுதியால் செல்லும் போது அவரிடமும் கேட்கப்பட்டது. </p><p>

அவர் திருப்பி அந்த சிங்கள தலைவனைக் கேட்டாராம், “ நீ சொல்லு எண்டு அவரால் சொல்ல முடியவில்லை..” என்பதையும் ஐலண்ட் பத்திரிகையில் பதிவு செய்திருந்தார். 

கொழும்பில் நடத்தப்பட்ட படுகொலைகளுக்கு கைத்தொழில் அமைச்சராக இருந்த சிறில் மத்தியூ தலைமை தாங்கியிருந்தார். </p><p>அதற்காக ஜாதிக சேவக சங்கமய (JSS) என்கின்ற தொழிலாளர் சங்கத்திற்கு இனவாதத்தை தூண்டி அவர்களைக் கொண்டே வெள்ளவத்தை பகுதியில வீடுகளை தீக்கிரையாக்கப்பட்டது.

கொழும்புப் படுகொலைகளை சிறில் மத்தியூதான் தலைமை தாங்கினார் என India Today of 31st August 1983, தெரிவித்திருந்தது.&nbsp;</p><p></p><h2>442 கடைகள் அழிப்பு</h2><p>
அடுத்து ஐக்கிய தேசியக்கட்சியின் தெகிவளை கல்கிசை மாநகராட்சி கவுன்சிலர் தலைமையிலான கும்பல் ஒன்று மவுண்லவேனியா, கல்கிசை, புறக்கோட்டைப் பகுதிகளில் 442 கடைகளை எரித்து அழித்திருந்தன. 

தளபதி அலோசியஸ் முதலி மகனுடன் ஐக்கிய தேசியக்கட்சி அமைச்சர்கள் இருவரும் சேர்ந்து பொரளை பகுதியில் தாக்குதல் நடத்தினர். இதில் சீருடைய அணியாத இராணுவம் பயன்படுத்தப்பட்டது. </p><p>

அத்தோடு, இலங்கை போக்குவரத்து வாகனங்கள் பயன்படுத்தப்பட்டது. போக்குவரத்து அமைச்சராக எச் முகம்மட் இருந்தார். நுவரேலியாவில காமினி திசநாயக்கா பற்றிக் சறம் அணிந்தவாறு சிங்களவர்கள் கூட்டத்தை வழிநடத்திப்போய் “தமிழனையும் அவன் கடைகளையும் எரியுங்கள்“ என்று கத்தியவாறு காடையர்களை வழிநடத்தினார். </p><p>

இதனை பியதாச தனது நுாலின் 81 -89 வரையான பக்கங்களில் குறிப்பிடுகிறார். (L.Piyadasa , Srilanka: The Holocaust and After , 1984) இந்த பியதாச தான் 1983 கலவரத்தைப்பற்றி விரிவாக எழுதினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d19da55a-8087-451a-a261-e7d0f33da0a7/26-6a6b0c24a806c.webp' /></p><p> </p><p>

இந்தப்புத்தகம் எழுதியதற்காக அவருடைய கண்டி வீடு அடித்துநொருக்கப்படுகிறது. இந்த கொலைகள் ஒருபுறம் இடம்பெற்றிருக்கும் போது இந்திராகாந்தி இராஜசபாவில் its genocide என்று கூறினார்.</p><p> 

அத்துடன் P.V.நரசிமராவை கொழும்புக்கு அவசரமாக அனுப்பினார். நரசிமராவ் ஜே.ஆர் இடம் நீங்கள் கட்டுபடுத்துகிறீர்களா அல்லது நாங்கள் படையை அனுப்பி கட்டுப்படுத்தவா என்று கேட்டதன் பின் ஜே.ஆர் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தார். </p><p>

அதே போன்று, “எமெஜென்சி 58” என்னும் புத்தகத்தை எழுதிய ரார்சி விற்றாச்சி(Tarzie Vittachi)என்கின்ற தினமும் வெளியாகும் பத்திரிகை ஆசிரியராக இருந்தவர். </p><p>இவர், தனது புத்தகப்பதிவில் 1958 இல் ஹிங்குராங்கொடவில் கரும்புத் தோட்ட அரசவிடுதியில் ஒரு கர்ப்பிணி பெண்ணின் வயிற்றை கிழித்து வயிற்றில் இருந்த குழந்தையை எடுத்து கொலை செய்தனர். </p><p>

இரத்தம் தோய்ந்த படி கிடக்க அதனைச் சுற்றி மேளமடித்து பாட்டுப்பாடி மகிழ்ந்தனர். இதனைப்பார்த்த பெண் தன் 2பிள்ளைக்களுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்தார்.</p><h3>பேருந்து நிலையத்தில் ஆடைகள் கலைக்கப்பட்ட தமிழர்</h3><p>

ஜேர்மனியில் ஹிட்லர் செய்த படுகொலைக்காக இதுவரை நாசிகளின் அரசியல் கட்சிகள் எதுவும் உரிமை கோரிவில்லை, மன்னிப்பு கேட்கவில்லை. அந்த நாளில் ஒஸ்ரிக் முகாமில் அதன் பொறுப்பதிகாரியாக இருந்த ஒஸ்கார் என்ற 94 வயது நிரம்பிய சிறைப்பொறுப்பதிகாரி, கடந்த 2015ஆம் ஆண்டில் கைதுசெய்யப்பட்டு 4வருட சிறைத்தண்டணை விதிக்கப்பட்டிருக்கிறது. 

ஜேர்மனிய அரசுக்கு இந்த தகவல்களை வழங்கியவர்கள் இஸ்ரேலியர்கள். </p><p>அந்தளவிற்கு யூதர்களிடம் தகவல் ஆய்வு மையம் இயங்கிக்கொண்டிக்கிறது. ஆனால் ஈழத்தமிழரிடம் அப்படி எதுவும் இல்லை. 

1983 ஜூலை கொழும்பில் நடைபெற்ற படுகொலையை புரட்சி கொம்னிஸ்ட் கழகம் சார்பில் சிங்களத்தில் கம்கறுமாவத்தை என்றும் தமிழில் தொழிலாளர் பாதை என்ற பத்திரிகையின் ஒளிப்படப்பிடிப்பாளராக இருந்த சந்திரகுப்த அமரசிங்க என்பவர் பொரளைப்பகுதியூடாக குடிபோதையில் வரும்போது பொரளை பேருந்து நிலையத்தில் தமிழர் ஒருவரை நிர்வாணப்படுத்தி தாக்கிவிட்டு மேளமடித்து நடனமாடினர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/110cc77b-5feb-491a-954e-963c29bf24a9/26-6a6b0c2558fa7.webp' /></p><p>
</p><p>

தமிழ் நபர் தலையிலை கை வைத்துக்கொண்டிருக்கும் போது தனது புகைப்படக்கருவியினால் மொத்தம் 14 புகைப்படங்களை எடுத்திருந்தார். </p><p>இவை யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர் ஊடாக கப்டன் பண்டிதருக்கு வழங்கப்பட்டது. 

அந்த புகைப்படங்கள் தான் பேபி சுப்பிரமணியம் என்பவரால் கடந்த 1984ல் தமிழகத்தில் ஒரு கண்காட்சிக்காக வெளியிடப்பட்டது. அவைதான் இன்றுவரையான யூலை ஆதாரமாகவுள்ளது.</p><p>

இனப்படுகைக்கு உள்ளாக்கப்பட்டுள்ள ஈழத் தமிழர்கள் இனப்படுகொலையிலிருந்து தம்மை தற்காத்துக் கொள்வதற்கும், தமக்கான சுயநிர்ணய உரிமையை வென்றெடுப்பதற்கும், அதனுடாக தாம் இழந்து போன இறைமையை மீட்டெடுப்பதற்குமான தொடர் போராட்டத்தில் தமது இழப்புக்களையும், தமக்கு ஏற்பட்ட அவலங்களையும் நினைவு கூர்வதும் அதன் மூலமாக ஒரு கூட்டு மனஉணர்வுடன் ஐக்கியப்படவும், ஒற்றுமைப்படுவதற்குமான இடமாக நினைவுச் சின்னங்களும், நினைவு மண்டபங்களும் பேருதவி புரியும். </p><p>

அந்த அடிப்படையில் தமிழ் மக்கள் தமது வலிகளை, மனக்காயங்களை, உணர்வுகளை வெளிப்படுத்தக் கூடிய வகையில் ஜூலை இனப்படுகொலையை நினைவு கூறும் நினைவு சின்னங்கள் வரலாற்று உணர்வோடு அமைக்கப்பட வேண்டியது அவசியமானது. 

அத்தகைய நினைவுச் சின்னங்கள்தான் எதிர்காலத்தில் எமது சந்ததிக்கு வழிகாட்டியாக அமையும்.&nbsp; </p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-30T08:36:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[நான் தவெகவில் இணையவில்லை - ஓபிஎஸ் அதிரடி மறுப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/ops-denies-rumours-of-joining-tvk-1785400168"></link>
            <id>https://ibctamilnadu.com/article/ops-denies-rumours-of-joining-tvk-1785400168</id>
            <summary type="text">முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைய உள்ளதாக வெளியான தகவல்கள் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தின. இதுகுற...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைய உள்ளதாக வெளியான தகவல்கள் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தின.</p><p> இதுகுறித்து செய்தியளர் ஒருவர் அவரிடம் விளக்கம் கேட்டபோது, அந்த தகவல்களை ஓ. பன்னீர்செல்வம் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7dcd3185-bad6-4057-84eb-a5d29534ba88/26-6a6b0c633549e.webp' /></p><h2>ஓ. பன்னீர்செல்வம் மறுப்பு&nbsp;</h2><p>இது குறித்து பேசிய அவர், “நான் தவெகவில் இணைய இருப்பதாக வெளியாகும் செய்திகள் உண்மையல்ல. ஒரு கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட பின்னர், மற்றொரு கட்சியில் இணைந்து தற்போது சட்டமன்ற உறுப்பினராக உள்ளேன். </p><p>இந்த நிலையில், தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தவறானவை” என ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

இதன் மூலம் தவெகவில் இணைவது தொடர்பாக வெளியான தகவல்களுக்கு அவர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-07-30T08:34:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[படு கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டுள்ள நடிகை திஷா பதானி...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/actress-disha-patani-latest-glamour-photos-1785397515"></link>
            <id>https://cineulagam.com/article/actress-disha-patani-latest-glamour-photos-1785397515</id>
            <summary type="text">திஷா பதானிகிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் அவரது காதலி கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பாலிவுட்டை தாண்டி தென்னிந்திய ரசிக...</summary>
            <content type="html"><![CDATA[<h2>திஷா பதானி</h2><p>கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் அவரது காதலி கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பாலிவுட்டை தாண்டி தென்னிந்திய ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றவர் நடிகை திஷா பதானி.</p><p>அப்படத்திற்கு பிறகு சூர்யாவின் கங்குவா படத்தின் மூலம் நேரடி தமிழ் படத்தில் களமிறங்கினார், ஆனால் முதல் படமே அவருக்கு கடும் தோல்வியை கொடுத்தது, அதன்பின் தமிழ் பக்கம் வரவில்லை.</p><p>பாலிவுட்டிலேயே படங்கள் நடிப்பது, ஸ்பெஷல் பாடல்களுக்கு நடனம் ஆடுவது என பிஸியாக இருப்பவர் போட்டோ ஷுட்களை தவறவிடுவதில்லை.</p><p>திஷா பதானி லேட்டஸ்ட்ட கிளாமர் உடையில் வெளியிட்ட போட்டோஸ் இதோ,</p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-30T08:30:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[கென்யாவுக்கு பறந்து படுக்கையறை புகைப்படத்தை பகிர்ந்த நடிகை எஸ்தர் அனில்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/24-age-esther-anil-kenya-outing-photos-post-1785400374"></link>
            <id>https://viduppu.com/article/24-age-esther-anil-kenya-outing-photos-post-1785400374</id>
            <summary type="text">எஸ்தர் அனில்மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது இளம் நடிகையாக பிரபலமாகியுள்ளவர் தான் நடிகை எஸ்தர் அனில்.

த்ரிஷ்யம், பாபநாசம் ...</summary>
            <content type="html"><![CDATA[<h2>எஸ்தர் அனில்</h2><p>மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது இளம் நடிகையாக பிரபலமாகியுள்ளவர் தான் நடிகை எஸ்தர் அனில்.
</p><p>
த்ரிஷ்யம், பாபநாசம் போன்ற படங்களில் முக்கிய ரோலில் நடித்த எஸ்தர், தமிழ், மலையாளம், தெலுங்கு மொழிகளில் அடுத்தடுத்து நடித்து வந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0ca57869-9d91-48bd-bd04-f87575e185e3/26-6a6b0c38b1be0.webp' /></p><p> இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் எஸ்தர் அனில், சிறு வயதில் இருந்தே போட்டோஷூட் பக்கம் சென்றார்.</p><p>

தற்போது 24 வயதாகும் எஸ்தர்,கென்யாவின் கேப்பிடல் Nairobi இடத்தின் ஓட்டலுக்கு சென்று அவரின் அறையில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.</p><p><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/p/DbYnMXZjZ5O/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/p/DbYnMXZjZ5O/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/p/DbYnMXZjZ5O/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by Esther (@_estheranil)</a></p></div></blockquote> <script async src="//www.instagram.com/embed.js"></script></p>]]></content>
            <updated>2026-07-30T08:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேற்று நடைபெற்றது சட்டத்தரணிகள் சங்க கூட்டமா .....அரசியல் தலைவர்களின் கூட்டமா !]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/bar-association-or-a-meeting-of-political-leaders-1785400136"></link>
            <id>https://jvpnews.com/article/bar-association-or-a-meeting-of-political-leaders-1785400136</id>
            <summary type="text">&amp;nbsp;சட்டத்தரணிகள் சங்கத்தின் பொதுச்சபை கூட்டமா அல்லது அரசியல் தலைவர்களின் கூட்டமா நேற்று நடைபெற்றது என்று தெரியவில்லை என விமர்சனங்கள் எழுந்துள்ளது....</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;சட்டத்தரணிகள் சங்கத்தின் பொதுச்சபை கூட்டமா அல்லது அரசியல் தலைவர்களின் கூட்டமா நேற்று நடைபெற்றது என்று தெரியவில்லை என விமர்சனங்கள் எழுந்துள்ளது.
</p><p>
உதய கம்மன்பில, தயாசிறி ஜயசேகர,சாகர காரியவசம் போன்றவர்கள் ஒரே இடத்தில் கூடுகிறார்கள் என்றால்அது எவ்வாறுபட்ட கூட்டமாக இருக்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a08e97d5-3197-4650-937e-c5fbc260b096/26-6a6b0b49e8593.webp' /></p><h2>&nbsp;எத்தனை வழக்குகளை செய்து இருப்பார்கள்?</h2><p>இந்த உதயகம்மன்பில, தயாசிறி ஜயசேகர போன்றவர்கள் சட்டதரணி என்று சொல்கிறார்கள் இவர்கள் இதுவரை நீதிமன்றத்தில் எத்தனை வழக்குகளை செய்து இருப்பார்கள் என்று தெரியவில்லை.
</p><p>
தயாசிறி ஜயசேகர சொல்வதை போன்று ஓய்வு பெறும் வயது எல்லையை அதிகரிப்பதால் அப்படி என்ன ஜனநாயகம் செத்திடும்.</p><p></p><p> கடந்த காலங்களில் நீதி துறையில் மாத்திரமல்ல முத்துறைகளிலும் ஜனநாயகத்தின் நான்காவது தூணான ஊடகத்துறையிலும் அரசியல் தலையீடுகள் இருந்த போது ஜனநாயகம் வாழ்ந்ததா? என்ற கீள்வியும் எழுப்பப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-30T08:27:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுகீஸ்வர பண்டாரவுக்கு மீண்டும் விளக்கமறியல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sugeeshwara-bandara-produced-before-court-1785392358"></link>
            <id>https://tamilwin.com/article/sugeeshwara-bandara-produced-before-court-1785392358</id>
            <summary type="text">புதிய இணைப்புமுன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌சவின் தனிப்பட்ட செயலாளர் சுகீஸ்வர பண்டாரவை எதிர்வரும் 12ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌சவின் தனிப்பட்ட செயலாளர் சுகீஸ்வர பண்டாரவை எதிர்வரும் 12ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். </p><p>

சந்தேகநபர் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இன்று (30) முன்னிலைப்படுத்தப்பட்ட போதே, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><h2>முதலாம் இணைப்பு</h2><p>முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் முன்னாள் தனிப்பட்ட செயலாளரும், அரசியல் செயற்பாட்டாளருமான சுகீஸ்வர பண்டார, இன்று காலை (30.07.2026) கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.</p><p>


இரண்டு அரச நிறுவனங்களில் இருந்து சம்பளம் பெற்று, அதன் மூலம் அரச நிதியைத் தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக, சுகீஸ்வர பண்டார ஜூன் 18 அன்று கைது செய்யப்பட்டார்.</p><p></p><h2>நிதி முறைகேடு தொடர்பாக</h2><p>


இதற்கிடையில், ஜனாதிபதியின் செலவினத் தலைப்பின் கீழ் நடந்ததாகக் கூறப்படும் நிதி முறைகேடு தொடர்பாக, சிறப்பு ஜனாதிபதி விசாரணை ஆணையத்தின் ஊழல் தடுப்புக் குழு, மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் (CCIB) முறைப்பாடு அளித்திருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fb885555-65d6-4fbb-828b-ea8e0b5f2125/26-6a6af23bc5bfb.webp' /></p><p>அதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணைகளில், சுகீஸ்வர பண்டார 2022இல் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் தனிப்பட்ட செயலாளராகப் பணியாற்றியதும், அதே காலகட்டத்தில் ஜனாதிபதி செயலகத்தில் திட்டப் இயக்குனர் பதவியையும் வகித்ததும் தெரியவந்தது.
</p><p>

இதன் அடிப்படையில், அவர் கடந்த மாதம் கைது செய்யப்பட்டார்.


அதன்படி, கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர், அவர் இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-30T08:25:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கணவரை ரயில் நிலையத்தில் விடச் சென்ற இந்தியப் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/hyderabad-techie-dies-accident-in-us-1785399704"></link>
            <id>https://news.lankasri.com/article/hyderabad-techie-dies-accident-in-us-1785399704</id>
            <summary type="text">அமெரிக்காவில் வாழ்ந்துவரும் இந்தியப் பெண்ணொருவர், தன் கணவரை ரயில் நிலையத்தில் விடச் சென்ற நிலையில், வீடு திரும்பும்போது விபத்தில் சிக்கி உயிரிழந்துவிட...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவில் வாழ்ந்துவரும் இந்தியப் பெண்ணொருவர், தன் கணவரை ரயில் நிலையத்தில் விடச் சென்ற நிலையில், வீடு திரும்பும்போது விபத்தில் சிக்கி உயிரிழந்துவிட்டார்.
</p><h3>
கணவரை ரயில் நிலையத்தில் விடச் சென்ற பெண்</h3><p>

இந்தியாவின் தெலங்கானா மாநிலத்திலுள்ள ஹைதராபாதைச் சேர்ந்த ராமகிருஷ்ண ரெட்டி, ஸ்ரீபதி தீபா (42) தம்பதியர் அமெரிக்காவில் தங்கள் இரண்டு பிள்ளைகளுடன் வாழ்ந்துவருகிறார்கள்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c05a7827-e4db-4f60-855d-724673406296/26-6a6b09998bf98.webp' /></p><p>
இந்நிலையில், செவ்வாயன்று, தன் கணவரை ரயில் நிலையம் ஒன்றில் விட்டு விட்டு காரில் வீடு திரும்பிக்கொண்டிருந்திருக்கிறார் தீபா.
</p><p>
அப்போது அவரது கார் மீது மற்றொரு கார் மோத, அந்த விபத்தில் தீபா உயிரிழந்துவிட்டார்.&nbsp;</p><p></p><p>
விடயம் என்னவென்றால், தீபா இரண்டு நாட்களில் இந்தியா செல்லத் திட்டமிட்டிருந்த நிலையில், அந்த விபத்து அவரை பலிவாங்கிட்டது.
</p><p>
விபத்தை ஏற்படுத்திய நபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-30T08:22:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரிஷாட் வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்த தமிழ் சிறுமி தொடர்பில் பரபரப்பு வாக்குமூலம் - பல தகவல்கள் அம்பலம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/rishad-maid-death-case-latest-info-revealed-1785388801"></link>
            <id>https://tamilwin.com/article/rishad-maid-death-case-latest-info-revealed-1785388801</id>
            <summary type="text">கொழும்பு பௌத்தலோக மாவத்தையில் அமைந்துள்ள முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனுக்குச் சொந்தமான வீடொன்றில் 2021 ஆம் ஆண்டில் மர்மமான முறையில் உயிரிழந்த ஹிஷா...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு பௌத்தலோக மாவத்தையில் அமைந்துள்ள முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனுக்குச் சொந்தமான வீடொன்றில் 2021 ஆம் ஆண்டில் மர்மமான முறையில் உயிரிழந்த ஹிஷாலினி ஜூட் குமார் என்ற சிறுமியின் மரணம் தொடர்பான வழக்கு விசாரணை நேற்று இடம்பெற்றது. </p><p>

கொழும்பு புதுக்கடை மேலதிக நீதவான் நீதிமன்றத்தில் சுவசெரிய முதலுதவி அதிகாரி அஸலி உபேக்ஷா நேற்று சாட்சியமளித்தார்.</p><p> மேலதிக நீதவான் லிலான் வருசூவிதாரன முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே அவர் இவ்வாறு சாட்சியமளித்தார்.</p><p></p><p>
</p><h2><b>
சிறுமியின் மர்ம மரணம்</b></h2><p>“கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய சிறுமியைத் தேடி அந்த வீட்டின் கராஜ் பகுதியினூடாக நுழைந்தேன். அங்கே படிகளில் சிறுமி ஒருவர் இருத்தப்பட்டிருந்தார். அவர் மீது படுக்கை விரிப்பு ஒன்று போர்த்தப்பட்டிருந்தது.

அத்துடன், சிறுமியின் உடலில் ஆடைகள் இருக்கவில்லை. </p><p>அந்த நேரத்தில் எரியும் ஒரு வாசனை உணரப்பட்டது. அது, எரியும் போது தோலில் இருந்து வெளிவரும் வாசனையாகும். எனினும் அது எவ்வகையான வாசனை என்பதை என்னால் உறுதியாகக் கூற முடியாது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fd0871e6-1df7-4dbf-a4e5-c4bd00c5dbaf/26-6a6aec218e1b9.webp' />&nbsp;&nbsp;</p><p>

கழுத்து, நெஞ்சு, கைகள் மற்றும் கால்களில் தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளதை என்னால் அடையாளம் காண முடிந்தது. சிறுமி என்னிடம் தண்ணீர் கேட்டார். அதற்கு மேல் வேறு எதையும் அவர் என்னிடம் கூறவில்லை.</p><p> உடனடியாக சிறுமியை கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம்.

சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்திருந்தார். </p><p>இந்தச் சம்பவம் தொடர்பாகச் சிறுமி இறந்த பின்னரே பொலிஸார் என்னிடம் வாக்குமூலம் பெற்றனர்.
</p><h2><b>
பொலிஸாருக்கு வழங்கிய வாக்குமூலம் </b></h2><p>சுவசரிய அவசர சேவை தொலைபேசி இலக்கமான 119 க்கு இச்சம்பவம் தொடர்பாக கிடைத்த ஆரம்ப அழைப்புக்குப் பதிலளிக்கும் போது தீக்காயங்களுக்கு உள்ளானவர்களை உடனடியாகக் குளிப்பாட்டுவது உள்ளிட்ட அடிப்படை முதலுதவிகள் குறித்து அறிவுறுத்தினோம். </p><p>இருந்த போதிலும், நாங்கள் அங்கே சென்றடையும் போது குறித்த தரப்பினரால் அவை பின்பற்றப்பட்டிருக்கவில்லை.
</p><p>
மேலும், இந்த வழக்கில் சாட்சியமளிப்பது தொடர்பில் பொலிஸார் எங்களுக்கு எந்தவிதமான முறையற்ற அழுத்தங்களையும் பிரயோகிக்கவில்லை” என அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0b996e3c-5ff3-48a9-9558-7a2f9ac1669b/26-6a6af4af733ba.webp' />&nbsp;&nbsp;</p><p>
சம்பவம் நடைபெற்ற 2021 ஆம் ஆண்டில் எரிவாயு காரணமாக தீப்பற்றிய ஒருவர் வீட்டில் உள்ளதாக சுவசரிய சேவைக்கு ஆரம்ப அழைப்பின் மூலம் பெறப்பட்டதாக&nbsp; தெரிவித்து, அதே ஆண்டில் தான் பொலிஸாருக்கு வழங்கிய வாக்குமூலம் தொடர்பில் எதிர்த்தரப்பு வழக்கறிஞர்களின் குறுக்கு விசாரணைக்குப் பதிலளிக்கும் போதே அவர் இதனைக் கூறினார்.
</p><p>
சுவசரிய சேவைக்கு பொதுவாகக் கிடைக்கும் அனைத்து அழைப்பு விவரங்களும் பதிவு செய்யப்படுவதால், இச்சம்பவமும் அவ்வாறே அமைந்திருக்கும் எனத் தான் நம்புவதாக அவர் தெரிவித்தார். </p><p>

தீக்காயங்களை தவிர, எரிவாயு காரணமாக தீப்பற்றி காயமடைந்த நபர் ஒருவர் குறித்தும் இச்சம்பவம் தொடர்பான ஆரம்ப சுவசரிய அழைப்பில் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை என எதிர்த்தரப்பு வழக்கறிஞர் முன்வைத்த கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.</p><p></p><p></p><p>
</p>]]></content>
            <updated>2026-07-30T08:20:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிள்ளையானின் அடிப்படை உரிமை மீறல் மனு விசாரணை அடுத்த ஆண்டிற்கு ஒத்திவைப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/petition-filed-by-pillayan-heard-in-january-2027-1785399050"></link>
            <id>https://ibctamil.com/article/petition-filed-by-pillayan-heard-in-january-2027-1785399050</id>
            <summary type="text">முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் ( &#039;பிள்ளையன்&#039;) தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு உயர் நீதிமன்ற...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் ( 'பிள்ளையன்') தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p>தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவர் பிள்ளையான் என்றழைக்கப்படும் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன்&nbsp;பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தன்னை கைது செய்ததை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுவை தாக்கல் செய்திருந்தார்.&nbsp;</p><p>இதற்கு முன்னர் இந்த வழக்கு 2025.10.31ம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தது.&nbsp;</p><p></p><h2>பிள்ளையான் மனு அடுத்த ஆண்டு விசாரணை</h2><p>அன்றைய வழக்கில்&nbsp;ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பில், பிள்ளையான் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்ட போதும் கிழக்கின் பேராசிரியர் ஒருவர் காணாமலாக்கப்பட்டமை தொடர்பிலேயே, அவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அவர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி உதய கம்மன்பில தெரிவித்திருந்தார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d1ae0e68-c2a0-4c66-a7c1-542cbc3892a3/26-6a6b08022c76e.webp' /></p><p>இந்நிலையில் இந்த மனு உயர் நீதிமன்றத்தின் நீதியரசர்கள் அமர்வு முன்பு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.</p><p>

அதன்படி, உயர் நீதிமன்றத்தின் உத்தரவிற்கமைய இந்த மனு ஜனவரி 19, 2027 அன்று விசாரணைக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-30T08:19:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கோணேஸ்வரம் கோயிலில் குரங்கு சேட்டை ; தமிழ் மாணவி எதிர்பாராத நெகிழ்ச்சி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/youth-helps-tamil-girl-thirukoneswaram-monkey-1785391854"></link>
            <id>https://jvpnews.com/article/youth-helps-tamil-girl-thirukoneswaram-monkey-1785391854</id>
            <summary type="text">திருகோணமலை கோணேஸ்வரம் கோயிலுக்குச் சுற்றுலா சென்றிருந்த போது, குரங்கிடம் சிக்கிய ஒரு இலட்சம் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான கைப்பேசியை மீட்டு, கிளிநொச்ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>திருகோணமலை கோணேஸ்வரம் கோயிலுக்குச் சுற்றுலா சென்றிருந்த போது, குரங்கிடம் சிக்கிய ஒரு இலட்சம் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான கைப்பேசியை மீட்டு, கிளிநொச்சியைச் சேர்ந்த தமிழ் மாணவியின் குடும்பத்தினரிடம் சிங்கள இளைஞர் ஒருவர் ஒப்படைத்துள்ளார்.</p><p>

அனுராதபுரம் எப்பாவல பகுதியைச் சேர்ந்த இளைஞரொருவரே இந்த செயலை ஈடுபட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cc0b31f2-35cc-4fd8-95a3-db225052d65c/26-6a6aeaf085172.webp' /></p><h2>கைப்பேசியை&nbsp; எடுத்துச் சென்ற&nbsp;குரங்கு</h2><p>
</p><p>
கடந்த நாட்களில் குடும்பத்தினருடன் திருகோணமலை கோணேஸ்வரம் கோயிலுக்குச் சுற்றுலா சென்றிருந்த இளைஞன் , அங்கு குரங்கொன்றின் கையில் கைப்பேசி ஒன்று இருப்பதைக் கண்டுள்ளார்.</p><p></p><p> </p><p>உடனடியாக குரங்குடன் போராடி அந்த கைபேசியை அவர் மீட்டுள்ளார்.

கிளிநொச்சிப் பகுதியைச் சேர்ந்தவர்கள் வழிபாட்டிற்காக வந்திருந்தபோது, மாணவி ஒருவரின் கைப்பேசியை குரங்கு எடுத்துச் சென்றமை தெரியவந்துள்ளது.</p><p></p><p>
</p><p>
மாணவியின் கல்விசார் மிக முக்கியமான பல தகவல்கள் அதில் அடங்கியிருந்ததாக தெரிவிக்கப்பட்டது.

மீட்கப்பட்ட கைப்பேசியில் இருந்த சிம் அட்டையைப் பயன்படுத்தி உரிமையாளரைத் தொடர்பு கொண்ட அவர், காவல்துறையின் போக்குவரத்துப் பிரிவு பொறுப்பதிகாரியின் பங்குபற்றுதலுடன், நேற்று (28) பிற்பகல் கிளிநொச்சியில் மாணவியின் தந்தையிடம் ஒப்படைத்துள்ளார்.</p><p></p><p>
</p><p>
இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன், பலரின் பாராட்டுக்களையும் பெற்றுள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-30T08:19:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மத்திய கிழக்கில் அதிகரிக்கும் போர் பதற்றம் ; அமெரிக்கா - சவுதி கூட்டு தாக்குதலில் ஈராக்கில் 20 போராளிகள் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/20-militants-killed-joint-us-saudi-strike-in-iraq-1785390449"></link>
            <id>https://canadamirror.com/article/20-militants-killed-joint-us-saudi-strike-in-iraq-1785390449</id>
            <summary type="text">&amp;nbsp; ஈராக்கில் அமெரிக்கா மற்றும் சவுதி இணைந்து ஏழு மாகாணங்களில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் குறைந்தது 20 போராளிகள் கொல்லப்பட்டதுடன் 32 பேர் காயமடைந்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; ஈராக்கில் அமெரிக்கா மற்றும் சவுதி இணைந்து ஏழு மாகாணங்களில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் குறைந்தது 20 போராளிகள் கொல்லப்பட்டதுடன் 32 பேர் காயமடைந்ததாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
</p><p>
 போராளிகாள் ஈராக்கின் மக்கள் திரட்டல் படைகள் (Iraq’s Popular Mobilisation Forces) கண்டனம் தெரிவித்துள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3b23ddfa-09b9-441f-a311-d939ea0d622b/26-6a6ae572b90b0.webp' /></p><h2>கொல்லப்பட்டவர்களுக்குப் பழிவாங்கப்படும்</h2><p> </p><p>மேலும், படைகள் முழு எச்சரிக்கை நிலையில் உள்ளன என்றும் எச்சரித்துள்ளன.

மக்கள் திரட்டல் படைகளின் ஒரு ஆயுதக் குழுவான ஹரகாத் அல்-நுஜாபா, பாதுகாப்பான ஈராக் நகரங்கள் மீதான அமெரிக்க-சவுதி தாக்குதல்களைக் கண்டித்ததோடு, கொல்லப்பட்டவர்களுக்குப் பழிவாங்கப்படும் என்றும் கூறியுள்ளது.
</p><p>

அமெரிக்கப் படைகளின் தொடர்ச்சியான இருப்பு நாட்டின் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மைக்கு உடனடி அச்சுறுத்தலாக மாறியுள்ளது என்று கூறி, அவர்களை நாட்டிலிருந்து வெளியேற்ற வேண்டும் என அது கோரிக்கை விடுத்துள்ளது.
</p><p>
சவூதி அரேபியாவுடனான ஒத்துழைப்பை முடிவுக்குக் கொண்டுவரவும், மேம்பட்ட வான் பாதுகாப்பு அமைப்புகளை நிலைநிறுத்தவும் அழைப்பு விடுத்ததுடன், அமெரிக்க மற்றும் சவூதி நலன்களுக்கு எதிராகப் பதிலடித் தாக்குதல்கள் நடத்தப்படும் என்றும் அச்சுறுத்தியது.
</p><p>
நாடு முழுவதும் உள்ள தங்களது தளங்கள் மீது சவூதி-அமெரிக்கா இணைந்து நடத்திய தாக்குதல்களில், ஈராக்கின் மக்கள் திரட்டல் படையைச் சேர்ந்த குறைந்தது 20 பேர் கொல்லப்பட்டதாகவும், 32 பேர் காயமடைந்ததாகவும் அப்படை தெரிவித்துள்ளது.</p><p>

இந்த தாக்குதலை அடுத்து ஈராக் பிரதமர் அலி அல்-ஜைதியின் நாளைய சவூதி அரேபியா பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. </p><p>

பல்வேறு துறைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவதற்கும், பாதுகாப்பு ஒருங்கிணைப்பு மற்றும் பிராந்திய முன்னேற்றங்கள் குறித்து விவாதிப்பதற்கும் அல்-ஜைதி உத்தியோகபூர்வ பயணமாக சவூதி அரேபியாவுக்குச் செல்வார் என எதிர்பார்க்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-07-30T08:16:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நண்பர்களைத் துண்டு துண்டாக வெட்டி கொடூரக் கொலை! இங்கிலாந்தை உலுக்கிய பயங்கரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/uk-serial-killer-james-desborough-jailed-for-life-1785394125"></link>
            <id>https://canadamirror.com/article/uk-serial-killer-james-desborough-jailed-for-life-1785394125</id>
            <summary type="text">&amp;nbsp;இங்கிலாந்தைச் சேர்ந்த ஜேம்ஸ் டெஸ்பரோ (40) என்ற நபர், தனது இரு நண்பர்களைக் கொடூரமான முறையில் கொலை செய்து, உடல்களைத் துண்டு துண்டாக வெட்டிக் காட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;இங்கிலாந்தைச் சேர்ந்த ஜேம்ஸ் டெஸ்பரோ (40) என்ற நபர், தனது இரு நண்பர்களைக் கொடூரமான முறையில் கொலை செய்து, உடல்களைத் துண்டு துண்டாக வெட்டிக் காட்டுப் பகுதியில் வீசிய சம்பவம் அதிர வைத்துள்ளது.
</p><p>
சந்தேக நபர் குற்றத்திற்காக ஆயுள் முழுவதும் சிறையில் அடைக்கப்பட்டுத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளார். 

வின்செஸ்டர் கிரவுன் நீதிமன்றம் இவருக்கு இறுதி மூச்சு இருக்கும் வரை சிறை தண்டனை (Whole-life Order) வழங்கி வரலாற்றுச் சிறப்புமிக்கத் தீர்ப்பளித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2833a5e5-0beb-4718-bc45-6d231ab07e73/26-6a6af3ce9fa14.webp' /></p><h2>&nbsp;வரலாற்றுச் சிறப்புமிக்கத் தீர்ப்பு</h2><p>
</p><p>
பிரிட்டனின் கார்ன்வால் பகுதியில் உள்ள காட்டில் தனது குடிசை அருகே வாழ்ந்து வந்த டெஸ்பரோ, அங்குத் தங்கியிருந்த கிளாரியோ அகிலினோ (57) மற்றும் டேனியல் கோல்மேன் (43) ஆகிய இரு நண்பர்களை மிகக் கொடூரமாகக் கொலை செய்தார். </p><p>

கொலைக்குச் பின்னர் இருவரின் உடல்களையும் துண்டு துண்டாக வெட்டி, சில பாகங்களை எாித்து ஆற்றிலும், எஞ்சிய பாகங்களை ஆழமற்ற குழி தோண்டியும் மறைக்க முயன்றார்.</p><p> 

‘டெக்ஸ்டர்’ தொடரில் வருவது போல உடல்களைத் துண்டு துண்டாக வெட்டும் காட்சிகள் தனக்கு மிகவும் பிடிக்கும் எனத் தடயவியல் அதிகாரிகளிடம் அவர் கூறியது விசாரணையில் அம்பலமானது.
</p><p>
போலீசார் ஐந்து மாதங்களுக்கும் மேலாக நடத்திய தீவிர தேடுதல் வேட்டையில், காட்டில் இருந்து எரிக்கப்பட்ட 1,900 எலும்புத் துண்டுகளையும் துண்டிக்கப்பட்ட உடல் பாகங்களையும் மீட்டனர்.</p><p> 
கொலைக்குப் பிறகு, பாதிக்கப்பட்டவர்களின் வங்கி அட்டைகளைப் பயன்படுத்திப் பணம் எடுத்த டெஸ்பரோ, அவர்கள் உயிருடன் இருப்பது போல் போலியான தகவல்களையும் பரப்ப முயன்றார். </p><p>

இந்த வழக்கு விசாரணையின் போது சிறையில் அடைக்கப்பட்டிருந்த போது, குரட்டை விட்ட காரணத்திற்காகத் தனது சக கைதியான ஸ்டீவன் கெம்ப்ஸ்டர் என்பவரையும் அவர் கழுத்தை நெரித்துக் கொன்ற அதிர்ச்சி தகவலும் வெளியானது.
</p><p>
மூன்று பேரைக் கொடூரமாகக் கொன்ற தொடர் கொலையாளியான ஜேம்ஸ் டெஸ்பரோ, மனித நேயமற்ற முறையில் கொடூரச் செயல்களில் ஈடுபட்டுள்ளதாக நீதிபதி திரு. சைனி தனது தீர்ப்பில் குறிப்பிட்டார். </p><p>

இவருக்கு மனித உயிர்கள் மீது எவ்வித மரியாதையும் இல்லை; இவர் சமூகத்திற்கு மிகவும் ஆபத்தான நபர்” எனக் கூறி நீதிமன்றம் இவருக்குக் கருணையற்ற ஆயுள் தண்டனையை உறுதி செய்து உத்தரவிட்டுள்ளது.&nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-07-30T08:15:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[போரினால் முடங்கிய காசா வைத்தியசாலைகள் ; கடும் நெருக்கடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/gaza-hospitals-crippled-by-war-severe-crisis-1785399406"></link>
            <id>https://canadamirror.com/article/gaza-hospitals-crippled-by-war-severe-crisis-1785399406</id>
            <summary type="text">இஸ்‌ரேல் - ஹமாஸ்&amp;nbsp; மோதலால் காசாவில் தொடர்ந்து நீடிக்கும் போர் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் கடும் பற்றாக்குறை காரணமாக, அங்குள்ள சுகாதார அமைப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>இஸ்‌ரேல் - ஹமாஸ்&nbsp; மோதலால் காசாவில் தொடர்ந்து நீடிக்கும் போர் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் கடும் பற்றாக்குறை காரணமாக, அங்குள்ள சுகாதார அமைப்பு முற்றிலும் சீர்குலைந்து வரும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக தகவல்கல் வெளியாகியுள்ளன. </p><p>



 இதனால் டயாலிசிஸ் நோயாளிகள், உறுப்பிழந்தவர்கள் மற்றும் காயங்களிலிருந்து மீண்டு வருபவர்கள் உயிர்காக்கும் வைத்தியக் கவனிப்பு இன்றி தவித்து வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dad4c1a1-2af2-4946-b96c-e29b30e39e50/26-6a6b086fed7b9.webp' /></p><p>
</p><p>


காசா நகரத்தில் உள்ள அல்-ஷிஃபா வைத்தியசாலையின் டயாலிசிஸ் பிரிவில், நோயாளிகள் வரிசையாக அமர்ந்து பல மணிநேர சிகிச்சையை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். </p><p>வடக்கு காசாவின் ஜபாலியாவைச் சேர்ந்த 14 வயது சிறுமி, சிறுநீரகக் கோளாறால் பாதிக்கப்பட்டு இங்கு தொடர்ந்து டயாலிசிஸ் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியதுறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.</p><p>



டயாலிசிஸ் இயந்திரங்களை இயக்குவதற்குத் தேவையான சோடியம் பைகார்பனேட் பற்றாக்குறை காரணமாக, காசாவில் உள்ள 50 சதவீத டயாலிசிஸ் இயந்திரங்கள் முற்றிலும் செயல்படாமல் முடங்கியுள்ளன.</p><p>


 சிறுநீரக செயலிழப்பு நோயாளிகளுக்குச் சிகிச்சையளித்த 7வைத்தியசாலைகளில், நூரா அல்-காபி டயாலிசிஸ் மையம் உள்ளிட்ட பல மையங்கள் போரில் அழிக்கப்பட்டதால், தற்போது 4 வைத்தியசாலைகள் மட்டுமே செயல்பட்டு வருகின்றன.
</p><p>

 வைத்திய வசதிகளின் சீர்குலைவு காரணமாகச் சிறுநீரகச் செயலிழப்பு நோயாளிகள் கவலைக்கிடமான விகிதத்தில் உயிரிழந்து வருகின்றனர் போருக்கு முன்பு காசாவில் 1,200 சிறுநீரக செயலிழப்பு நோயாளிகள் இருந்தனர்.
</p><p>


தேவையான டயாலிசிஸ் சிகிச்சைகள் கிடைக்காததாலும், அத்தியாவசிய மருந்துகள் பற்றாக்குறையாலும் 470-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.



பாலஸ்தீனிய மனித உரிமைகள் மையத்தின் தகவல்படி, தற்போது இந்த நோயாளிகளின் எண்ணிக்கை சுமார் 700 ஆகக் குறைந்துள்ளது.</p><p>



தொடர்ச்சியான தாக்குதல்கள் மற்றும் எல்லைக் கட்டுப்பாடுகள் காரணமாகக் காசாவின் வைத்தியத் துறை கடும் நெருக்கடியைச் சந்தித்து வருகின்றது.</p>]]></content>
            <updated>2026-07-30T08:15:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ashik</name>
            </author>
            <title type="text"><![CDATA[நெல் சந்தைப்படுத்தல் சபை இதுவரை மன்னார் மாவட்டத்தில் நெல் கொள்வனவு மேற்கொள்ளவில்லை - விவசாயிகள் கவலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/no-paddy-procurement-in-mannar-district-1785397929"></link>
            <id>https://tamilwin.com/article/no-paddy-procurement-in-mannar-district-1785397929</id>
            <summary type="text">வட மாகாணத்தில் நெற் கிண்ணம் என அழைக்கப்படும் மன்னார்
மாவட்டத்தில் இதுவரை நெல் சந்தைப்படுத்தல்சபை நெல் கொள்வனவில் ஈடுபடவில்லை என
பாதிக்கப்பட்ட விவசாய...</summary>
            <content type="html"><![CDATA[<p>வட மாகாணத்தில் நெற் கிண்ணம் என அழைக்கப்படும் மன்னார்
மாவட்டத்தில் இதுவரை நெல் சந்தைப்படுத்தல்சபை நெல் கொள்வனவில் ஈடுபடவில்லை என
பாதிக்கப்பட்ட விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
</p><p>
வட மாகாணத்தில் கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா போன்ற பகுதிகளில் நெல்
கொள்வனவில் ஈடுபடுகின்ற போதும் மன்னார் மாவட்டத்தில் இன்னும் நெல் கொள்வனவு
நடைபெறவில்லை.
</p><p>
ஏனைய மாவட்டங்களில் 15 தொடக்கம் 20 இடங்களில் நெல் கொள்வனவு
நடைபெறுகின்றன.</p><p></p><h2>நெல் கொள்வனவு&nbsp;</h2><p> மன்னார் மாவட்டத்தில் கடந்த கால போகத்தில் மூன்று இடங்களில்
மாத்திரமே நெல் கொள்வனவு நடைபெற்றது.

அதிகமான நெல் உற்பத்தி உள்ள மன்னார் மாவட்டத்தில் நெல் சந்தைப்படுத்தல் சபை
இவ்வாறான அநீதியான செயலில் ஈடுபடுவதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
</p><p>
குறிப்பாக மடு பிரதேச செயலாளர் பிரிவு இலுப்பைக் கடவை பிரதேசம் போன்ற
இடங்களில் நெல் கொள்வனவு நடைபெறுவதில்லை.

கடந்த கால போக நெல்லை விவசாயிகள் இன்னும் விற்பனை செய்யாமல்
வைத்திருக்கின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/08ffe0e5-b712-4d19-8c88-a472ba7b4013/26-6a6b077d2a1d6.webp' /></p><p>
</p><p>
மாவட்டத்தில் சிறுபோக அறுவடையும் பல பகுதிகளில் நடை பெறுகின்ற போதும் நெல்
சந்தைப்படுத்தல் பிரிவு நெல்லை கொள்வனவு செய்யாததால் குறைந்த விலையில் தனியார்
வியாபாரிகளிடம் விவசாயிகள் நெல்லை வழங்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு
தள்ளப்பட்டுள்ளனர்.</p><h2>குற்றச்சாட்டு</h2><p>

உரிய அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவட்ட செயலாளர் இந்த விடயத்தில்
எது விதமான அக்கறையுமின்றி செயலாற்றுகின்றனர் என பாதிக்கப்பட்ட விவசாயிகள்
குற்றம் சாட்டுகின்றனர்.
</p><p>
ஆகவே உடனடியாக நடவடிக்கை எடுத்து மாவட்டத்திலுள்ள அனைத்து பகுதிகளிலும் நெல்
கொள்வனவு செய்வதற்கு நெல் சந்தைப்படுத்தல் சபை முன் வரவேண்டும் என அவர்கள்
வேண்டுகோள் விடுகின்றனர்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-30T08:14:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானின் ஏவுகணைகளுக்கு எதிராக எதிர் தாக்குதலை ஆரம்பித்த ஜோர்தான்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/jordan-launched-counter-attack-against-iran-missi-1785395088"></link>
            <id>https://ibctamil.com/article/jordan-launched-counter-attack-against-iran-missi-1785395088</id>
            <summary type="text">அமெரிக்காவிற்கு எதிராக ஈரான் மேற்கொள்ளும் ஏவுகணை தாக்குதலை தமது நாடு முறியடித்துள்ளதாக ஜோர்தான் பாதுகாப்பு தரப்புக்கள் தெரிவித்துள்ளள.&amp;nbsp;ஈரான் மீது...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவிற்கு எதிராக ஈரான் மேற்கொள்ளும் ஏவுகணை தாக்குதலை தமது நாடு முறியடித்துள்ளதாக ஜோர்தான் பாதுகாப்பு தரப்புக்கள் தெரிவித்துள்ளள.&nbsp;</p><p>ஈரான் மீது அமெரிக்கா மேற்கொண்ட தாக்குதலுக்கு ஜோர்தானில் உள்ள இராணுவத்தலங்கள் இலக்கு வைக்கப்பட்ட நிலையில் ஜோர்தான் இந்நகர்வை மேற்கொண்டு உள்ளது.&nbsp;</p><p>ஈரானிய ஏவுகணைகளை ஜோர்தான் வீழ்த்தியதுடன், நாட்டைப் பாதுகாக்கத் தேவையான அனைத்தையும் செய்வதாக உறுதியளித்துள்ளது.</p><p></p><h2>ஈரானிய ஏவுகணை</h2><p>ஈரானிலிருந்து ஏவப்பட்ட ஐந்து ஏவுகணைகளைத் தனது வான்வெளியில் இடைமறித்து அழித்ததாக ஜோர்தானின் ஆயுதப் படைகள் அறிக்கை வெளியிட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/78c10b99-4d8c-4552-842c-056b23deeff1/26-6a6b0116400a7.webp' /></p><p>மேலும் அந்த அறிக்கையில் இதுவரை எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> ஆனாலும் தொடர்ந்து உயர் எச்சரிக்கை நிலையில் இருப்பதாகவும், நாட்டையும் அதன் குடிமக்களின் பாதுகாப்பையும் உறுதிசெய்யத் தேவையான அனைத்தையும் செய்யத் தயாராக இருப்பதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.&nbsp;</p><p>கடந்த புதன்கிழமை காலை ஜோர்டான் மேலும் ஐந்து ஏவுகணைகளை இடைமறித்ததாக உறுதிப்படுத்திய நிலையில் ஈரானின் தற்போதைய இலக்குத் தாக்குதல் நடந்துள்ளது. அவையும் அதன் வான்வெளியில், ஈரானிலிருந்து ஏவப்பட்டவை என்று கூறப்படுகிறது.
</p><p>
தற்போது, ​​ஜோர்தானில் உள்ள அமெரிக்க விமானப்படைத் தளம் மற்றும் கட்டளைத் தலைமையகத்தைத் தாக்கியதாக ஈரான் கூறியுள்ளது. அமெரிக்க இராணுவத்தின் ஆக்கிரமிப்புக்குப் பதிலடியாகவே இது செய்யப்பட்டதாக அது கூறுகிறது.</p><h2>ஜோர்தானில் உள்ள அமெரிக்க விமானப்படை</h2><p>அந்த ஏவுகணைகளும் இடைமறிக்கப்பட்டு அழிக்கப்பட்டன.

அந்தத் தாக்குதலை புதன்கிழமை அன்று வளைகுடா ஒத்துழைப்பு அமைப்பு (GCC) நாடுகள் கடுமையாகக் கண்டித்தன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bfb19cd2-8629-4cc4-98c9-51354ef20a1c/26-6a6b011713cd8.webp' /></p><p> </p><p>ஜோர்டான் மீதான இந்தத் தாக்குதல்களும், ஈராக்கில் ஈரான் ஆதரவுக் குழுக்கள் மீது சவூதி அரேபியா பதிலடித் தாக்குதல்களை நடத்திய புதன்கிழமை நிகழ்வுகளும் தற்போது இந்தப் பிராந்தியத்தில் சில கவலைகளை ஏற்படுத்தி வருகின்றன.</p><p>

இந்தப் போர் விரிவடைந்து, மற்ற நாடுகளையும் தனக்குள் இழுத்துவிடும் என்ற கவலை நிலவுகிறது. அதைத்தான் வளைகுடா ஒத்துழைப்பு அமைப்பு (GCC) நாடுகள் தவிர்க்க விரும்புகின்றன.</p><p> எனவே, அமெரிக்காவும் ஈரானும் ஆகிய இரு தரப்பினரும் தற்சமயம் தாக்குதலை நடத்தி வருகின்றன. இந்நிலையில் இந்த நெருக்கடிக்கு இராஜதந்திரத் தீர்வுகளை முன்னெடுக்க வளைகுடா ஒத்துழைப்பு அமைப்பு (GCC) திரைக்குப் பின்னால் கடுமையாக உழைத்து வருவதாக மத்திய கிழக்கு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-30T08:14:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[2 வயது மகள் தேர்ந்தெடுத்த எண் - லொட்டரியில் ரூ.6.52 லட்சம் வென்ற சென்னை நபர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/chennai-man-won-6-lakh-lottery-pick-by-daughter-1785399107"></link>
            <id>https://news.lankasri.com/article/chennai-man-won-6-lakh-lottery-pick-by-daughter-1785399107</id>
            <summary type="text">2 வயது மகள் தேர்ந்தெடுத்த எண் சென்னை நபர் லொட்டரியில் ரூ.6.52 லட்சம் பரிசு வென்றுள்ளார். 

மகள் தேர்ந்தெடுத்த எண் மூலம் ரூ.6.52 லட்சம்

சென்னையைச்...</summary>
            <content type="html"><![CDATA[<p>2 வயது மகள் தேர்ந்தெடுத்த எண் சென்னை நபர் லொட்டரியில் ரூ.6.52 லட்சம் பரிசு வென்றுள்ளார்.</p><h3> 

மகள் தேர்ந்தெடுத்த எண் மூலம் ரூ.6.52 லட்சம்
</h3><p>
சென்னையைச் சேர்ந்த 44 வயதான கஜினிமுகமது பஹருதீன், கடந்த 24 ஆண்டுகளாக குடும்பத்துடன் ஷார்ஜாவில் வசித்து வருகிறார்.&nbsp; </p><p>இவர் 2019 முதல், கடந்த 7 ஆண்டுகளாக பிக் டிக்கெட் லொட்டரி வாங்கி வருகிறார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0cad5e39-516d-4290-8fbf-05972a2a2ec2/26-6a6b0744ed861.webp' /></p><p> 

ஜூலை மாத குலுக்கலுக்கான லொட்டரி டிக்கெட் எண்ணை தனது 2வயது மகளை தேர்ந்தெடுக்குமாறு கூறியுள்ளார். </p><p>

இந்த குலுக்கலில் தனது 2 வயது மகள் தேர்வு செய்த எண்ணுக்கு 25,000 AED(இந்திய மதிப்பில் ரூ.6.52 லட்சம்) பரிசு கிடைத்துள்ளது.
</p><p>
இது குறித்து பேசிய கஜினிமுகமது, "பரிசுப் பணத்தை எப்படிச் செலவழிக்கப் போகிறேன் என்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என்றும், ஆனால் அடுத்த குலுக்கல்களில் பங்கேற்க விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
</p><p>
இதே போல், ஐக்கிய அரபு அமீரகத்தில் 30 ஆண்டுகளாக வசித்து வரும் கேரளாவைச் சேர்ந்த 56 வயதான லிண்டோ ஜோஸ் மெச்செரியும் விற்பனை மேலாளராகப் பணியாற்றி வருகிறார்.&nbsp;</p><p></p><p>

லிண்டோ ஒவ்வொரு மாதமும் 10 பேர் கொண்ட குழுவின் ஒரு பகுதியாக 'பிக் டிக்கெட்' போட்டியில் பங்கேற்று வருகிறார். </p><p>இந்த முறை அவரது நண்பர் பிறந்தநாள் திகதியை வைத்து எண்ணை தேர்வு செய்ததில், 25,000 AED பரிசு வென்றுள்ளார்.&nbsp;&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-30T08:12:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாகற்காய் பிடிக்காதவர்களும் விரும்பி சாப்பிடும் அசத்தல் ரெசிபி – செட்டிநாடு ஸ்டைல் சாம்பார்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/tasty-and-healthy-chettinad-pavakkai-sambar-1785397333"></link>
            <id>https://manithan.com/article/tasty-and-healthy-chettinad-pavakkai-sambar-1785397333</id>
            <summary type="text">பாகற்காய் என்றாலே பலருக்கும் முதலில் நினைவுக்கு வருவது அதன் கசப்பு சுவை தான். அதனால் பலரும் இதை விரும்பி சாப்பிடுவதில்லை. ஆனால், உடலுக்கு தேவையான பல ஆ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பாகற்காய் என்றாலே பலருக்கும் முதலில் நினைவுக்கு வருவது அதன் கசப்பு சுவை தான். அதனால் பலரும் இதை விரும்பி சாப்பிடுவதில்லை. ஆனால், உடலுக்கு தேவையான பல ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ள பாகற்காய், குறிப்பாக சர்க்கரை நோயை கட்டுப்படுத்த உதவும் சிறந்த உணவாகவும் அறியப்படுகின்றது.</p><p>குழந்தைகளுக்கு ஏற்படும் குடல் புழுக்களை நீக்கவும் இது உதவியாக இருக்கும்.

பொதுவாக பெரும்பாலானவர்கள் பாகற்காயை பொரியலாக மட்டுமே செய்து சாப்பிட்டிப்பார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4ebccd6a-2fce-44b9-bb2b-40890d801d4b/26-6a6b03ba3fd68.webp' /></p><p>ஆனால், அதன் கசப்பு சுவை அதிகம் தெரியாமல் அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் செட்டிநாடு ஸ்டைலில் ஒரு சுவையான பாகற்காய் சாம்பாரை செய்து பாருங்கள். </p><p>பாகற்காய் பிடிக்காதவர்களும் கூட இதை ஒரு முறை சுவைத்தால் மீண்டும் கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள்.அப்படி அசத்தல் சுவையில்,&nbsp;செட்டிநாடு பாணியில் பாகற்காய் சாப்பார் எப்படி செய்வதென இந்த பதிவில் பார்க்கலாம்.</p><p></p><h2>தேவையான பொருட்கள்</h2><p>நறுக்கிய பாகற்காய் – 1 கப்
</p><p>துவரம் பருப்பு – 2 ஸ்பூன்
</p><p>கடலைப்பருப்பு – 2 ஸ்பூன்
</p><p>அரிசி மாவு – 2 ஸ்பூன்
</p><p>சாம்பார் பொடி – 2 ஸ்பூன்
</p><p>மஞ்சள் தூள் – ½ ஸ்பூன்</p><p>
வெல்லம் – 1 ஸ்பூன்
</p><p>புளிக்கரைசல் – 1 கப்
</p><p>உப்பு – தேவையான அளவு</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c0248507-3ff1-44d9-b060-68bfea7a2cc0/26-6a6b06ebe7387.webp' /></p><p>
</p><p><b>அரைக்க தேவையானவை</b></p><p>கடலைப்பருப்பு – 2 ஸ்பூன்</p><p>
மல்லி விதை – 2 ஸ்பூன்
</p><p>வர மிளகாய் – 2
</p><p>துருவிய தேங்காய் – 1 ஸ்பூன்
</p><p><b>தாளிக்க தேவையானவை</b></p><p> கடுகு – 1 ஸ்பூன்</p><p>
பெருங்காயம் – 1 சிட்டிகை
</p><p>கறிவேப்பிலை – சிறிதளவு
</p><p>எண்ணெய் – தேவையான அளவு</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/994c9f1b-d8bf-48a1-820f-5887c6395539/26-6a6b06ecb74f0.webp' /></p><h2>
செய்முறை</h2><p> முதலில் துவரம் பருப்பு மற்றும் கடலைப்பருப்பை தனித்தனியாக நன்றாக மென்மையாகும் வரை வேகவைத்து தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும்.</p><p>அதனையடுத்து ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி சூடாக்கி, அரைக்கக் கொடுத்துள்ள கடலைப்பருப்பு, மல்லி விதை, வர மிளகாய் மற்றும் துருவிய தேங்காயை சேர்த்து நன்றாக வதக்கவும். </p><p>வதக்கிய பொருட்கள் ஆறியதும், சிறிது தண்ணீர் சேர்த்து மென்மையான விழுதாக அரைத்து வைக்கவும்.

அரிசி மாவை சிறிதளவு தண்ணீரில் கலந்து கட்டிகள் இல்லாமல் கரைத்து தனியாக வைத்துக் கொள்ளவும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9c5e36ca-8601-4985-b75f-7d5fe6c575d3/26-6a6b06ed68a89.webp' /></p><p>

பாகற்காய் துண்டுகளை சிறிது தண்ணீர் சேர்த்து மென்மையாகும் வரை வேகவைத்து, பின்னர் அதிகப்படியான நீரை வடித்து எடுத்துக்கொள்ள வேண்டும்.</p><p>
ஒரு பாத்திரத்தில் புளிக்கரைசல், உப்பு, மஞ்சள் தூள் மற்றும் சாம்பார் பொடியை சேர்த்து நன்றாகக் கலந்து மிதமான தீயில் கொதிக்க விட வேண்டும்.&nbsp;</p><p>பின்னர் பச்சை வாசனை நீங்கியதும் வேகவைத்த பாகற்காயை சேர்த்து 2 நிமிடங்கள் கொதிக்க விடவும்.

அதன் பிறகு வேகவைத்த பருப்பை சேர்த்து நன்றாகக் கலக்கவும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f074b4e0-64d0-4541-9308-c1a48ee76463/26-6a6b06ee1a0e0.webp' /></p><p></p><p> கலவை நன்கு கொதித்ததும் அரைத்த மசாலா விழுது, அரிசி மாவு கரைசல் மற்றும் வெல்லம் சேர்த்து நன்றாகக் கிளறவும்.சாம்பார் தேவையான பதத்திற்கு வரும் வரை மிதமான தீயில் கொதிக்க விடவும்.</p><p>
இறுதியாக, ஒரு சிறிய கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, பெருங்காயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து,&nbsp; இந்தத் தாளிப்பை சாம்பாரில் சேர்த்து ஒரு நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கினால் அவ்வளவு தான். அவுமையான சுவையில்&nbsp; பாகற்காய் சாம்பார் தயார்.</p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b></td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-30T08:10:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரச இலட்சினையற்ற நாடாளுமன்ற 50 வாகனங்கள்...! வெளியான அறிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/no-state-emblem-on-50-parliament-vehicles-1785396374"></link>
            <id>https://ibctamil.com/article/no-state-emblem-on-50-parliament-vehicles-1785396374</id>
            <summary type="text">அரசுக்குச் சொந்தமான அனைத்து ஒதுக்கப்பட்ட வாகனங்களிலும் அரச இலட்சினைபொறிக்கப்பட வேண்டும் என்ற விதிமுறை உள்ளபோதிலும் 

இலங்கைப் நாடாளுமன்றத்திற்குச் ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரசுக்குச் சொந்தமான அனைத்து ஒதுக்கப்பட்ட வாகனங்களிலும் அரச இலட்சினைபொறிக்கப்பட வேண்டும் என்ற விதிமுறை உள்ளபோதிலும் 

இலங்கைப் நாடாளுமன்றத்திற்குச் சொந்தமான 50 வாகனங்களில் அரச இலட்சினை பொருத்தப்பட்டிருக்கவில்லை எனத் தேசிய தணிக்கை அலுவலகம் தெரிவித்துள்ளது.</p><p>

அரசுக்குச் சொந்தமான அனைத்து ஒதுக்கப்பட்ட வாகனங்களிலும் அரச இலட்சினை பொறிக்கப்பட வேண்டும் என்ற விதிமுறை உள்ளபோதிலும் இவ்வாறு காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
</p><p>
இலங்கைப் நாடாளுமன்றத்தின் 2025 ஆம் ஆண்டிற்கான ஆண்டறிக்கையில் சேர்க்கப்பட்டுள்ள தணிக்கை அறிக்கையிலேயே இந்த தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p>
</p><p></p><h2>நுகர்வுப் பரிசோதனை</h2><p>அத்துடன், நாடாளுமன்றத்தின் 41 வாகனங்களுக்கான எரிபொருள் நுகர்வுப் பரிசோதனை (Fuel Efficiency Test) சுற்றுநிருப விதிகளுக்கு அமைய மேற்கொள்ளப்படவில்லை என்றும் தணிக்கை அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/42afcb41-6ab4-4703-bc03-862fafd4c23d/26-6a6b0570c5e1b.webp' /></p><p>
2016 டிசம்பர் 29 ஆம் திகதியிட்ட பொது நிர்வாகச் சுற்றுநிருபத்தின்படி, ஒவ்வொரு எரிபொருள் பரிசோதனைக்குப் பின்னரும் 12 மாதங்கள் கழித்து அல்லது 25,000 கிலோமீட்டர் தூரம் பயணித்த பிறகு அல்லது எஞ்சின் தொடர்பான முக்கிய பழுதுபார்ப்புக்குப் பிறகு எது முதலில் வருகிறதோ, அதன் பிறகு மீண்டும் எரிபொருள் நுகர்வுப் பரிசோதனை செய்யப்பட வேண்டும். </p><p>

ஆனால் இப்பரிசோதனைகள் முறையாக நடத்தப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p></p><h2>தீவிர சேவைக்காலம்</h2><p>நாடாளுமன்றத்திற்குச் சொந்தமான 12 வாகனங்களை ஏலத்தில் விற்பனை செய்வதற்கு 5 அதிகாரிகள் கொண்ட குழுவினால் கடந்த ஆண்டின் மே 28 ஆம் திகதி தீர்மானிக்கப்பட்ட போதிலும், இன்றுவரை அந்த நடவடிக்கைகள் பூர்த்தி செய்யப்படவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/99744e38-919d-42cd-8c99-25419a5720ce/26-6a6b056fe5c65.webp' /></p><p>
அத்தோடு நாடாளுமன்ற ஊழியர்களுக்குச் சலுகை அடிப்படையில் மோட்டார் வாகன அனுமதிப்பத்திரம் (Duty-free Vehicle Permits) வழங்குவது தொடர்பான சுற்றுநிருப அறிவுறுத்தல்களுக்கு முரணாகச் செயற்படப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
சிரேஷ்ட நிர்வாகப் பதவியொன்றில் 6 ஆண்டுகள் தீவிர சேவைக்காலத்தைப் பூர்த்தி செய்யாத மூன்று நாடாளுமன்ற அதிகாரிகளுக்குச் சலுகை வாகன அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ள போதிலும், அதற்கான முறைப்படியான அனுமதி தொடர்பான ஆவணங்கள் தணிக்கைப் பிரிவிடம் சமர்ப்பிக்கப்படவில்லை என்றும் அவ்வறிக்கை மேலும் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p>]]></content>
            <updated>2026-07-30T08:09:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thirumal</name>
            </author>
            <title type="text"><![CDATA[இளம் பெண் வைத்தியர் கொலை விவகாரம் - சந்தேகநபர்களுக்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/female-physiotherapist-murdered-1785397866"></link>
            <id>https://tamilwin.com/article/female-physiotherapist-murdered-1785397866</id>
            <summary type="text">நுவரெலியாவில் உடற் சிகிச்சை நிபுணர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர்கள்&amp;nbsp; நால்வரின் விளக்கமறி...</summary>
            <content type="html"><![CDATA[<p>நுவரெலியாவில் உடற் சிகிச்சை நிபுணர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர்கள்&nbsp; நால்வரின் விளக்கமறியல் உத்தரவு எதிர்வரும் ஆகஸ்ட் 3 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.</p><p>சம்பவம் தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த&nbsp;பிரதான சந்தேகநபர், அவரது மனைவி மற்றும்
குற்றத்திற்கு துணை புரிந்ததாக கூறப்படும் மேலும் இருவர் உள்ளிட்ட நால்வரின்
விளக்கமறியலே இவ்வாறு நீடிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>நீதிமன்றில் முன்னிலை</h2><p>குறித்த நால்வரும் இன்று (30) நுவரெலியா நீதவான் நீதிமன்றில்
சிறைச்சாலை அதிகாரிகளால்&nbsp;நுவரெலியா நீதவான் புஷ்பிகா ஜயதாச முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டதை தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9a3ad61d-fde8-41b9-8d4e-09646e59ffbe/26-6a6b05b4abe10.webp' /></p><p>நாரம்மல பகுதியைச் சேர்ந்த 43 வயதுடைய
ஜயசுந்தர முதியன்சேலாகே சம்பிக ஸ்ரீயான் ஜயசுந்தர, அவரது மனைவியான 35 வயதுடைய
ரத்நாயக்க முதியன்சேலாகே நெத்மி அமாயா ரத்நாயக்க, கொலைச் சம்பவத்திற்கு
உதவியதாகக் கூறப்படும் குண்டசாலை பிரதேச சபையின் 49 வயதுடைய சாரதி ஜயசிங்க
ஆராச்சிகே ரஜித சாலிய சமரசிங்க மற்றும் குண்டசாலை பொலிஸ் பயிற்சி கல்லூரியின்
பொலிஸ் பரிசோதகர் அனில் ஆரியவங்ச ஆகியோர்&nbsp;விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.</p><p>இக்கொலை சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் தொடர்ந்து முன்னெடுத்து
வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-30T08:06:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ் செம்மணிக்கு நீதி கோரி அரியாலையில் அமைதி பேரணி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/peace-rally-demand-justice-chemmani-mass-graves-1785398902"></link>
            <id>https://jvpnews.com/article/peace-rally-demand-justice-chemmani-mass-graves-1785398902</id>
            <summary type="text">&amp;nbsp; யாழ்ப்பாணம் செம்மணியில் புதைக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி கோரிய அமைதி வழி போராட்டம் இன்று (30) காலை அரியாலையில் முன்னெடுக்கப்பட்டது.



யாழ் ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; யாழ்ப்பாணம் செம்மணியில் புதைக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி கோரிய அமைதி வழி போராட்டம் இன்று (30) காலை அரியாலையில் முன்னெடுக்கப்பட்டது.
</p><p>


யாழ் மறை மாவட்ட நீதி சமாதான ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் கிறிஸ்தவ பாதிரியார்களால் முன்னெடுக்கப்பட்ட குறித்த போராட்டமானது அதிகாலை புனித யூதாதேயு தேவாலயத்திலிருந்து ஆரம்பித்து செம்மணி சிந்துபாத்தி மயானம் வரை அமைதி வழி பேரணியாக இடம்பெற்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3ce92a96-f80d-4acd-af04-a3890f139509/26-6a6b06780979d.webp' /></p><p>



 'மனித மாண்பை மதிப்போம் உண்மையை நிலை நாட்டுவோம்' 'செம்மணிக்கு சர்வதேச நீதி வேண்டும்' 'உலகமே செம்மணியை மறந்து விடாதே!' உள்ளிட்ட கோஷங்களை அடங்கிய பதாகைகளை தாங்கியவாறு அமைதி வழியில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.</p><p>



இதன்போது ஐக்கிய நாடுகள் அமைப்பு சர்வதேச நீதியை வலியுறுத்த வேண்டும் எனவும் யாழ் மறை மாவட்டத்தின் சாராபாக கோரிக்கை விடுக்கப்பட்டது.</p>]]></content>
            <updated>2026-07-30T08:06:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரபல சீரியல் நடிகை ரிந்தியா தனது இன்ஸ்ட்வில் வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோஸ்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/serial-actress-rindhya-latest-photos-1785396079"></link>
            <id>https://cineulagam.com/article/serial-actress-rindhya-latest-photos-1785396079</id>
            <summary type="text">நடிகை ரிந்தியாசன் டிவியில் ஒளிபரப்பான திருமதி செல்வம் என்ற தொடரில் வில்லியாக நடித்ததன் மூலம் மக்களிடம் பிரபலமானவர் தான் நடிகை ரிந்தியா. தமிழை தாண்டி ம...</summary>
            <content type="html"><![CDATA[<h2>நடிகை ரிந்தியா</h2><p>சன் டிவியில் ஒளிபரப்பான திருமதி செல்வம் என்ற தொடரில் வில்லியாக நடித்ததன் மூலம் மக்களிடம் பிரபலமானவர் தான் நடிகை ரிந்தியா. </p><p>தமிழை தாண்டி மலையாளத்திலும் சீரியல்கள் நடித்துவரும் இவர் குங்குமபூ தொடர் மூலம் நாயகியாக அறிமுகமானார்.
</p><p>சீரியலில் பிஸியாக நடித்துவந்த ரிந்தியாவிற்கு நிறைய பட வாய்ப்புகள் வந்துள்ளது, ஆனால் அவர் சின்னத்திரையே போதும் என பட வாய்ப்புகளை நிராகரித்துள்ளார். </p><p>தற்போது ரிந்தியா தனது இன்ஸ்டாவில் வெளியிட்ட சில லேட்டஸ்ட் புகைப்படங்களை காண்போம்.</p><p><br></p>]]></content>
            <updated>2026-07-30T08:00:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[சர்வதேச கால்பந்திலிருந்து ஓய்வை அறிவித்த நெய்மர் - முறியடிக்கப்படாத சாதனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/footballer-neymar-announced-retirement-for-brazil-1785390673"></link>
            <id>https://news.lankasri.com/article/footballer-neymar-announced-retirement-for-brazil-1785390673</id>
            <summary type="text">பிரேசில் கால்பந்து வீரர் நெய்மர் தேசிய அணியிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.  

 ஓய்வை அறிவித்த நெய்மர்

2010 ஆம் ஆண்டு நியூ ஜெர்சியில் உள...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரேசில் கால்பந்து வீரர் நெய்மர் தேசிய அணியிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். </p><h3> 

 ஓய்வை அறிவித்த நெய்மர்</h3><p>

2010 ஆம் ஆண்டு நியூ ஜெர்சியில் உள்ள மெட்லைஃப் ஸ்டேடியத்தில் அமெரிக்காவுக்கு எதிரான நட்புறவுப் போட்டியில் சர்வதேச அளவில் அறிமுகமானவர் நெய்மர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/451ccad2-c213-4bf0-bed2-45f7959cb394/26-6a6ae6533f1fb.webp' /></p><p>

பிரேசில் அணிக்காக 130 சர்வதேசப் போட்டிகளில் விளையாடி, 80 கோல்களை அடித்துள்ளார் மற்றும் 59 கோல்களுக்கு உதவியாக இருந்துள்ளார்.
</p><p>
இதன் மூலம், பிரேசில் கால்பந்து அணிக்காக அதிக கோல்களை அடித்த வீரர் என்ற சாதனையை தன்வசம் வைத்துள்ளார். </p><p>

2014 முதல் 2026 வரை தொடர்ச்சியாக 4 ஃபிஃபா உலகக் கிண்ணத்தில் பங்கேற்ற நெய்மர், 15 போட்டிகளில் 9 கோல்களை அடித்து, 4 தொடர்களிலும் கோல் அடித்த மிகச் சில வீரர்களில் ஒருவரானார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c35cad37-709b-4d84-a43f-0ae5773cad0f/26-6a6ae653edd96.webp' /></p><p>

2026 ஃபிஃபா உலகக் கிண்ணத்தில், 5 முறை சாம்பியனான பிரேசில் அணி,.காலிறுதிக்கு முந்தைய சுற்றான 'ரவுண்ட் ஆஃப் 16' ஆட்டத்தில் நார்வே அணியிடம் 2-1 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறியது.</p><p> 

அவர் சர்வதேச போட்டியில் அறிமுகமான அதே மெட்லைஃப் ஸ்டேடியத்தில் தனது கடைசி சர்வதேச போட்டியை விளையாடியுள்ளார்.</p><p>

கடந்த 2 ஆண்டுகளாக காயம் காரணமாக அடிக்கடி அவதிப்பட்டு வந்த நெய்மரால், இந்த தொடரின் முதல் சில போட்டிகளிலும் அவரால் முழுமையாக விளையாட முடியாமல் போனது. </p><p>

இந்நிலையில் தனது சர்வதேச போட்டிகளில் ஓய்வை அறிவித்துள்ள நெய்மர், "தேசிய அணியுடனான எனது காலம் ஏற்கனவே முடிந்துவிட்டது என்று நான் நினைக்கிறேன். நான் அங்கு வரலாறு படைத்தேன், அதற்காக நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். </p><p>நான் அங்கே நிறைய அனுபவங்களைப் பெற்றேன், என் இரத்தத்தையும் உயிரையும் கொடுத்தேன், மேலும் அந்த மஞ்சள் ஜெர்சிக்காக எப்போதும் போராடினேன். ஆனால், எனக்கு இனி அது வேண்டும் என்று தோன்றவில்லை" என தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5d5b8739-6125-4408-827d-2e9c173e92c2/26-6a6ae6549fc99.webp' /></p><p>

சர்வதேச போட்டிகளில் ஓய்வு பெற்றாலும், தனது Santos அணிக்காக விளையாட உள்ளார். </p><p>

நெய்மர் 2017 ஆம் ஆண்டில் பார்சிலோனாவிலிருந்து பாரிஸ் செயிண்ட் ஜெர்மெயினுக்கு 222 மில்லியன் யூரோக்கு(இந்திய மதிப்பில் ரூ.2,432 கோடி) பரிமாற்றம் செய்யப்பட்டதே, தற்போது வரை சாதனை பரிமாற்றமாக உள்ளது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-30T07:55:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆங்கில மொழி தொடர்பில் சுவிஸ் அமைப்பொன்று எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/english-over-national-languages-concern-in-swiss-1785396592"></link>
            <id>https://news.lankasri.com/article/english-over-national-languages-concern-in-swiss-1785396592</id>
            <summary type="text">சுவிட்சர்லாந்தில் ஆங்கில மொழிப் பயன்பாடு அதிகரித்துவருவது தொடர்பில், மொழிசார் அமைப்பொன்று எச்சரிக்கை செய்தி ஒன்றைத் தெரிவித்துள்ளது.

அதிகரித்துவரும...</summary>
            <content type="html"><![CDATA[<p>சுவிட்சர்லாந்தில் ஆங்கில மொழிப் பயன்பாடு அதிகரித்துவருவது தொடர்பில், மொழிசார் அமைப்பொன்று எச்சரிக்கை செய்தி ஒன்றைத் தெரிவித்துள்ளது.</p><h3>

அதிகரித்துவரும் ஆங்கில மொழிப் பயன்பாடு
</h3><p>
சுவிட்சர்லாந்தில், ஜேர்மன், பிரெஞ்சு, இத்தாலிய மொழி மற்றும் ரோமான்ஷ் என்னும் மொழி என, மொத்தம் நான்கு மொழிகள் தேசிய மொழிகளாக பயன்படுத்தப்பட்டுவருகின்றன.
</p><p>
பன்மொழித்தன்மை என்பது சுவிஸ் தேசிய அடையாளத்தின் ஓர் முக்கியத் தூணாகும்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d6cf71f1-90a2-41f9-aeea-4bef0cb581ce/26-6a6afd71d7342.webp' /></p><p>
ஆனால், சமீப காலமாக, சில மாகாணங்களில், ஆங்கிலத்தை இரண்டாவது மொழியாக கற்பித்தல் அதிகரித்துவருகிறது.
</p><p>
அதாவது, ஜேர்மன் மொழி பேசும் மாகாணங்களில் இரண்டாவது மொழியாக பிரெஞ்சு மொழியும், பிரெஞ்சு மொழி பேசும் மாகாணங்களில் இரண்டாவது மொழியாக ஜேர்மன் மொழியும் கற்பிக்கப்படவேண்டும்.&nbsp;</p><p></p><p>
ஆனால், அதற்கு பதிலாக, ஆங்கிலத்துக்கு சில மாகாணங்கள் முக்கியத்துவம் கொடுத்துவருகின்றன.
</p><p>
இந்நிலையில், Switzerland's Bilingualism Forum என்னும் மொழிசார் அமைப்பு, இரண்டாவது மொழியாக தேசிய மொழி ஒன்றிற்கு பதில் ஆங்கிலத்தைக் கற்பித்தல், தேசிய ஒற்றுமைக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என எச்சரித்துள்ளது.</p><p>

விடயம் என்னவென்றால், உலகளாவிய தொழில் மற்றும் உயர் கல்வி என்னும் விடயங்களைக் கருத்தில் கொள்ளும்போது, ஆங்கிலம் கற்றல் அதற்கு உதவியாக இருக்கும் என மாணவர்களும் பெற்றோர்களும் கருதுகிறார்கள்.</p><p>

ஆகவே, இரண்டாவது மொழியாக தேசிய மொழி ஒன்றைக் கற்பதற்கு பதிலாக ஆங்கிலத்தைக் கற்கும் விடயம், தேசிய அளவில் விவாதப்பொருளாக மாறிவருகிறது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-30T07:51:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[திடீர் விஜயமாக பூட்டான் சென்றார் ரணில் விக்ரமசிங்க!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/ex-president-ranil-departs-for-bhutan-1785392276"></link>
            <id>https://ibctamil.com/article/ex-president-ranil-departs-for-bhutan-1785392276</id>
            <summary type="text">முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பூட்டான் நாட்டிற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

பேராசிரியர் மைத்திரி விக்ரமசிங்கவும் ரணிலுடன் இந்தப் பயணத்தி...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பூட்டான் நாட்டிற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
</p><p>
பேராசிரியர் மைத்திரி விக்ரமசிங்கவும் ரணிலுடன் இந்தப் பயணத்தில் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p> </p><p></p><h2>முக்கிய நோக்கங்கள்</h2><p>ரணில், ஞாயிற்றுக்கிழமை மீண்டும் இலங்கை திரும்பவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c8319265-610e-42e7-8817-8125ec2bdcef/26-6a6b002f8126d.webp' /></p><p>பூட்டானிலுள்ள பௌத்த விகாரைகளை வழிப்படுவதே இந்த விஜயத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்று என தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p>]]></content>
            <updated>2026-07-30T07:41:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை நாடாளுமன்ற வாகனங்கள் மற்றும் அதிகாரிகள் தொடர்பில் வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/50-parliament-vehicles-without-government-logo-1785394925"></link>
            <id>https://tamilwin.com/article/50-parliament-vehicles-without-government-logo-1785394925</id>
            <summary type="text">&amp;nbsp;நாடாளுமன்ற வாகனங்களில் சுமார் 50 வாகனங்களில் அரச இலச்சினை இல்லை என்று தேசிய தணிக்கை அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனை...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;நாடாளுமன்ற வாகனங்களில் சுமார் 50 வாகனங்களில் அரச இலச்சினை இல்லை என்று தேசிய தணிக்கை அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
அனைத்து அரச வாகனங்களிலும் அரச இலச்சினை பதியப்பட வேண்டும் என்ற விதி இருந்தபோதிலும், நாடாளுமன்றத்தின் ஐம்பது சின்னம் இல்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது.</p><p></p><h2>எரிபொருள் பரிசோதனை</h2><p>இதற்கிடையில், 41 நாடாளுமன்ற வாகனங்களின் எரிபொருள் எரிப்பு சோதனை மேற்கொள்ளப்படவில்லை என்றும் கூறப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2aed1b94-8464-4440-8a65-78f2d080e6e8/26-6a6afe75c611e.webp' /></p><p>
2016 டிசம்பர் 29 திகதியிட்ட பொது நிர்வாக சுற்றறிக்கையின் படி, 12 மாத காலத்திற்குள், 25,000 கிலோமீட்டர் தூரம் பயணித்த பின்னரோ அல்லது ஒரு பெரிய இயந்திரப்பழுதுபார்ப்புக்கு பின்னரோ எரிபொருள் பரிசோதனை மீண்டும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அலுவலகம் குறிப்பிடுகின்றது.</p><p>

இதற்கிடையில், கடந்த ஆண்டு மே 28 அன்று, ஐந்து அதிகாரிகளைக்கொண்ட ஒரு குழு, நாடாளுமன்றத்திற்கு சொந்தமான 12 வாகனங்களை ஏலம் விட தீர்மானித்த நிலையில், அந்த பணி இன்று வரை முடிக்கப்படவில்லை என்றும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><h2>நாடாளுமன்ற ஊழியர்களுக்கான சலுகை</h2><p>
</p><p>
நாடாளுமன்ற ஊழியர்களுக்கு சலுகை அடிப்படையில் மோட்டார் வாகன உரிமங்கள் வழங்குவது தொடர்பான சுற்றறிக்கை விதிகள் மற்றும் அறிவுறுத்தல்களுக்கு முரணாக, சிரேஷ்ட நிர்வாகப் பதவியில் ஆறு ஆண்டுகள் சேவையை நிறைவு செய்யாத மூன்று நாடாளுமன்ற ஊழியர்களுக்கு சலுகை மோட்டார் வாகன உரிமங்கள் வழங்கியமை தொடர்பாக முறையான ஒப்புதல் சமர்ப்பிக்கப்படவில்லை என்றும் அந்த அறிக்கை குறிப்பிடுகின்றது.
</p><p>
இந்த தகவல், இலங்கை நாடாளுமன்றத்தின் 2025 ஆண்டு அறிக்கையில் சேர்க்கப்பட்டுள்ள தணிக்கை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-30T07:40:16+00:00</updated>
        </entry>
    </feed>
