<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-09-13T10:17:31+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[அம்பாறையில் கரையொதுங்கிய இனந்தெரியாத ஆணின் சடலம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/unidentified-man-s-body-washes-ashore-1789294585"></link>
            <id>https://jvpnews.com/article/unidentified-man-s-body-washes-ashore-1789294585</id>
            <summary type="text">அம்பாறை மாவட்டம், மாவடிப்பள்ளி ஆற்றுப் பகுதியில் இனந்தெரியாத ஆண் ஒருவரின் சடலம் இன்று ஞாயிற்றுக்கிழமை (13) கரையொதுங்கிய நிலையில் காணப்பட்டுள்ளது.

ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>அம்பாறை மாவட்டம், மாவடிப்பள்ளி ஆற்றுப் பகுதியில் இனந்தெரியாத ஆண் ஒருவரின் சடலம் இன்று ஞாயிற்றுக்கிழமை (13) கரையொதுங்கிய நிலையில் காணப்பட்டுள்ளது.</p><p>

சடலம் கரையொதுங்கியுள்ளமை தொடர்பில் கிடைத்த தகவலையடுத்து சம்பவ இடத்துக்குச் சென்ற காரைதீவு பொலிஸார், சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b1502204-b4bb-4792-a65d-169d9f90cfdd/26-6aa677fabd10f.webp' /></p><p>
</p><p>
உயிரிழந்த நபரின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.
</p><p>
மேலும், இச்சடலம் தொடர்பான மேலதிக நடவடிக்கைகள் மற்றும் விசாரணைகளில் காரைதீவு பொலிஸ் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனனர்.</p>]]></content>
            <updated>2026-09-13T10:16:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[மகிந்த இறப்பதற்கு முன் நாமலை ஜனாதிபதியாக்குவோம்: ரோஹித எம்.பி சூளுரை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/namal-president-mahinda-can-see-him-before-dies-1789293523"></link>
            <id>https://ibctamil.com/article/namal-president-mahinda-can-see-him-before-dies-1789293523</id>
            <summary type="text">&amp;nbsp;அனுராதபுரத்தில் நேற்று(12)நடைபெற்ற சிறி லங்கா பொதுஜன பெரமுனவின் &#039;ஜன சடன&#039; பேரணியில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன, நாட்டை ஒன...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;அனுராதபுரத்தில் நேற்று(12)நடைபெற்ற சிறி லங்கா பொதுஜன பெரமுனவின் 'ஜன சடன' பேரணியில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன, நாட்டை ஒன்றிணைக்க தலைமை தாங்கிய தலைவர் மகிந்த ராஜபக்சவுக்கு மரியாதையாக, அவரது மரணத்திற்கு முன் நாமல் ராஜபக்சவை ஜனாதிபதி பதவிக்கு நியமிக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.
</p><p>





முன்னாள் ஜனாதிபதிக்கு செய்ய வேண்டிய மிக முக்கியமான கடமையும் பொறுப்பும் அது என்று சுட்டிக்காட்டிய நாடாளுமன்ற உறுப்பினர், அந்த இலக்கை அடைவதற்காக முழு மக்களும் ஒருமித்து ஒன்றிணைய வேண்டும் என்று குறிப்பிட்டார்.</p><h2>மகிந்தவுக்காக நாம் ஒரு கடமையை செய்ய வேண்டும்</h2><p>அங்கு ரோஹித அபேகுணவர்தன எம்.பி மேலும் தெரிவித்தவை வருமாறு,</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f049e614-86e3-4209-a13f-54c84c38ba15/26-6aa6770aafe19.webp' /></p><p>
</p><p>



“நான் கேட்பது ஒரே ஒரு கோரிக்கைதான், அதைச் செய்ய நீங்கள் தயாரா? நீங்கள், ரஜரட்ட மக்கள் தயாரா? என்ன செய்ய வேண்டும்? நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றுதான்.</p><p></p><h2>நாமல் ராஜபக்சவை ஜனாதிபதியாக்கவேண்டும்</h2><p> </p><p>இந்த நாட்டை ஒன்றிணைத்த தலைவர், நாட்டையே கட்டியெழுப்பிய தலைவர், அந்த தலைவருக்காக நாம் ஒரு கடமையைச் செய்ய வேண்டும். பிறந்த அனைவரும் இறப்பார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9b2139c2-7e31-4a65-944b-5825eebcac4b/26-6aa676609d205.webp' /></p><p> </p><p>ஆனால், மகிந்த ராஜபக்சவின் கண்களுக்குத் தெரியும் வகையில், அனைத்து மக்களையும் ஒன்றிணைத்து நாமல் ராஜபக்சவை இந்த நாட்டின் ஜனாதிபதியாக்குவதற்கான பொறுப்பை நிறைவேற்ற நமக்கு ஒரு கடமை உள்ளது. அது மட்டுமே நீங்கள் மகிந்த ராஜபக்சவுக்கு செய்யும் மரியாதையாக மாறும்.” என்றார்.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-13T10:09:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹோர்முஸ் நீரிணையில் வணிகக் கப்பல் மீது தாக்குதல்: ஒருவர் பலி; மூவர் காயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/commercial-ship-attacked-in-strait-of-hormuz-1789294047"></link>
            <id>https://canadamirror.com/article/commercial-ship-attacked-in-strait-of-hormuz-1789294047</id>
            <summary type="text">ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே ஹோர்முஸ் நீரிணையின் கட்டுப்பாடு தொடர்பாக மோதல் நிலவி வரும் வேளையில், அங்கு வணிகக் கப்பல் ஒன்றின் மீது தாக்குதல் நடத்தப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே ஹோர்முஸ் நீரிணையின் கட்டுப்பாடு தொடர்பாக மோதல் நிலவி வரும் வேளையில், அங்கு வணிகக் கப்பல் ஒன்றின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. </p><p>இந்தத் தாக்குதலில் ஒருவர் பலியானதாகவும், 3 பேர் காயமடைந்ததாகவும் ஈரான் அதிகாரிகள் தெரிவித்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0365f89c-86b9-4135-a888-91394b34588e/26-6aa675e0c40de.webp' /></p><p>

”ஹோர்முஸ் நீரிணையில் உள்ள ஹெங்காம் மற்றும் கெஷ்ம் தீவுகளின் கடற்கரைக்கு அருகே இன்று அதிகாலை 5 மணியளவில் வணிகக் கப்பல் ஒன்றின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில், ஒருவர் பலியானார். மூவர் காயமடைந்துள்ளனர்” என கெஷ்ம் நகர அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். </p><p>தாக்குதல் யாரால் நடத்தப்பட்டது போன்ற விவரங்களை அவர்கள் குறிப்பிடவில்லை.


</p><p>ஹோர்முஸ் நீரிணையில் உள்ள மிகப்பெரிய தீவான கெஷ்மைச் சுற்றி நேற்று இரவு பல தாக்குதல்கள் நடைபெற்றதாகப் பதிவாகியுள்ளது.</p><p>

ஹோர்முஸ் நீரிணையை ஈரான் மூடியுள்ள நிலையில், அதுதொடர்பாக ஓமனுக்கு ஈரானுக்கும் இடையில் நாளை பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளதாகக் கூறப்பட்டது. ஆனால், அதற்கு ஒரு நாள் முன்னதாக இந்தத் தாக்குதல் சம்பவம் நடைபெற்றுள்ளது.
</p><p>
ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையில் 6 மாதங்களுக்கும் மேலாகத் தொடரும் இந்தப் போரில், ஹோர்முஸ் நீரிணையின் மீதான கட்டுப்பாடு மோதலுக்கான முக்கிய காரணமாக அமைந்துள்ளது.
</p><p>
அமெரிக்கா - ஈரான் இடையே சில வாரங்களுக்கு முன் நிறுத்தப்பட்டிருந்த போர் மீண்டும் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் ஹோர்முஸ் நீரிணையில் இரு நாடுகளும் மாறி மாறி தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.</p><p>ஆறு மாதங்களுக்கு மேலாகத் தொடரும் இந்த போரால், கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த வாரம் மட்டுமே கச்சா எண்ணெய் ஒரு பீப்பாயின் விலை 100 டாலருக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-09-13T10:07:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[விலை அதிகரிப்பைக் கோரும் தனியார் எரிபொருள் நிறுவனங்கள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/private-fuel-companies-are-seeking-a-price-hike-1789292124"></link>
            <id>https://tamilwin.com/article/private-fuel-companies-are-seeking-a-price-hike-1789292124</id>
            <summary type="text">மத்திய கிழக்கில் நிலவும் மோதல்கள் காரணமாக கடல் வழிகள் பாதிக்கப்பட்டு,
எரிபொருள் இறக்குமதிச் செலவு கணிசமாக உயர்ந்துள்ளதால், தற்போதைய விலையில்
எரிபொரு...</summary>
            <content type="html"><![CDATA[<p>மத்திய கிழக்கில் நிலவும் மோதல்கள் காரணமாக கடல் வழிகள் பாதிக்கப்பட்டு,
எரிபொருள் இறக்குமதிச் செலவு கணிசமாக உயர்ந்துள்ளதால், தற்போதைய விலையில்
எரிபொருளை விற்பனை செய்வது கடினமாக உள்ளதாக தனியார் எரிபொருள் விநியோகஸ்தர்கள்
அரசாங்கத்திற்குத் தெரியப்படுத்தியுள்ளனர்.
​
​ </p><p>எல்.ஐ.ஓ.சி, சினோபெக் மற்றும் RM Parks ஆகிய தனியார் நிறுவனங்கள் இறக்குமதிச்
செலவுக்கு ஏற்ப எரிபொருள் விலைகளை சீரமைக்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை
விடுத்துள்ளனர்.
</p><p>
இருதரப்பு ஒப்பந்தங்களின்படி, இதில் சட்டரீதியான தடைகள் எதுவுமில்லை என்பதால்
அரசாங்கம் இதைப் பரிசீலிக்கக்கூடும் என எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக்க
தெரிவித்துள்ளார்.

​</p><h2>தொடர் மாற்றங்கள்</h2><p>இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் (CPC) நஷ்டத்தைச் சந்தித்த போதிலும்,
உடனடியாக இந்தச் சுமையை மக்கள் மீது சுமத்தாமல் விலையைத் தக்கவைக்கவும், விலை
அதிகரிப்பின் தாக்கத்தைக் குறைக்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறது.

​</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2de08f00-53bd-4d80-9dd4-7c51be83eecb/26-6aa67133732cc.webp' /></p><p>இதேவேளை, உலகச் சந்தையில் மசகு எண்ணெய் விலையில் ஏற்படும் தொடர் மாற்றங்கள்
மற்றும் இறக்குமதிச் செலவு சூத்திரத்தின் மாறுபாடுகள் காரணமாக, எதிர்வரும்
மாதங்களில் வழக்கத்தை விடக் கூடுதல் இடைவெளிகளில் அடிக்கடி விலை திருத்தங்களை
மேற்கொள்ள நேரிடலாம் என CPC தலைவர் டி.ஜே. ராஜகருணா விளக்கமளித்துள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-13T10:05:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[வாகன இலக்கத் தகடுகள் விநியோகம் குறித்து வெளியாகியுள்ள தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/vehicle-number-plate-in-sri-lanka-1789293154"></link>
            <id>https://tamilwin.com/article/vehicle-number-plate-in-sri-lanka-1789293154</id>
            <summary type="text">2025ஆம் ஆண்டு வாகனங்களுக்கான இலக்கத் தகடு நிலுவைகளை முழுமையாகத் தயாரித்து முடிப்பதற்கு குறித்த நிறுவனத்திற்கு 6 மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக மோட...</summary>
            <content type="html"><![CDATA[<p>2025ஆம் ஆண்டு வாகனங்களுக்கான இலக்கத் தகடு நிலுவைகளை முழுமையாகத் தயாரித்து முடிப்பதற்கு குறித்த நிறுவனத்திற்கு 6 மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் ஓய்வுபெற்ற எயார் வைஸ் மார்ஷல் துஷார பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
</p><p>
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், வாகன இலக்கத் தகடுகளை தாமதமின்றி விரைவாக விநியோகிப்பதை உறுதி செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.</p><p>

இலக்கத் தகடுகளைத் தயாரிக்கும் நிறுவனத்திற்கு, பிறிதொரு இடத்திலும் அதன் உற்பத்திகளை உடனடியாக ஆரம்பிக்குமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.</p><h2>பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கான இலக்கத் தகடுகள்</h2><p> </p><p>

நடப்பாண்டின் மார்ச் மாதத்திற்குப் பிறகு பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கான இலக்கத் தகடுகள் புதிய ஒப்பந்தத்தின் கீழ் தயாரிக்கப்பட்டு வருகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dea392e9-3322-4176-a7af-00d1f4038adb/26-6aa674e2f3fff.webp' /></p><p> </p><p>

இதன்படி, கடந்த ஜூன் முதல் ஆகஸ்ட் வரையிலான காலப்பகுதியில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கான இலக்கத் தகடுகள் எதிர்வரும் மாதத்திற்குள் விநியோகிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. </p><p>

இதேவேளை, 2025ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கான இலக்கத் தகடுகளைத் தயாரிக்கும் பொறுப்பு வேறொரு நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், அந்த நிறுவனத்திற்கும் வேறொரு இடத்தில் உற்பத்தியைத் தொடங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-13T10:03:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹரி.,இந்தக் கோட்டை அரச குடும்பத்தினருக்கு மட்டுமேயானது: கேலி செய்த நிகழ்ச்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/harry-meghan-uk-return-mocked-1789293970"></link>
            <id>https://news.lankasri.com/article/harry-meghan-uk-return-mocked-1789293970</id>
            <summary type="text">Harry meghan uk return mocked: இளவரசர் ஹரி மற்றும் மேகன் இருவரும் பிரித்தானியா திரும்பியது, நிகழ்ச்சி ஒன்றில் கேலி செய்யப்பட்டது.

இளவரசர் ஹரி, மேகன...</summary>
            <content type="html"><![CDATA[<p>Harry meghan uk return mocked: இளவரசர் ஹரி மற்றும் மேகன் இருவரும் பிரித்தானியா திரும்பியது, நிகழ்ச்சி ஒன்றில் கேலி செய்யப்பட்டது.</p><p>

இளவரசர் ஹரி, மேகன் தம்பதியின் சர்ச்சைக்குரிய பிரித்தானிய வருகை நிகழ்ச்சி ஒன்றில் கடுமையாக கேலி செய்யப்பட்டது.</p><p>

ஆறு ஆண்டுகளுக்கு முன் அரச குடும்பத்தை விட்டு வெளியேறிய இளவரசர் ஹரி, மேகன் தம்பதி பிரித்தானியா திரும்பியுள்ளனர்.</p><p> 

முன்னதாக அவர்கள் சாதாரண குடிமக்களே என்றும், அவ்வாறே நடத்தப்படுவார்கள் என்றும் மன்னர் சார்லஸ் கூறியிருந்தார்.
</p><p>
இந்த நிலையில், Saturday Night Live UK நிகழ்ச்சியில் ஹரி, மேகன் இருவரும் கேலி செய்யப்பட்டனர். 

அந்நிகழ்ச்சியில் அரச குடும்பத்தினர் போல் வேடமிட்ட நடிகர்களில், கமில்லாவைப் பார்த்து 'சிற்றன்னை இராணி' என்று மேகன் கூறுகிறார். </p><p>

மன்னர் சார்லஸ் 'அந்த நெட்ஃபிலிக்ஸ் பணத்தை ஏற்கனவே செலவழித்துவிட்டேன் என்று சொல்லாதே' என ஹரியிடம் கூறுகிறார். </p><p>

நகைச்சுவை நடிகர்களான ஜாக் ஷெப் மற்றும் அயோவாடே பாம்க்போய் ஆகியோரால் சித்தரிக்கப்பட்ட சசெக்ஸ் தம்பதியினர், மன்னர் சார்லஸ் (லாரி டீன்) மற்றும் இராணி கமில்லா (எம்மா சிடி) ஆகியோரை அவர்களின் பால்மோரல் எஸ்டேட்டில் சந்திக்கின்றனர். </p><p>

அப்போது 'ஹரி நீ இங்கே என்ன செய்கிறாய்? இந்தக் கோட்டை அரச குடும்பத்தினருக்கு மட்டுமேயானது' சார்லஸ், தனது இளைய மகன் ஹரியிடம் கூறுகிறார்.</p><p> 

இதுபோல் ஒரு நீண்ட உரையாடலை ஹரி, மேகன் தம்பதியை கேலி செய்து வகையில் அந்த குழு செய்தது.


பார்வையாளர்கள் இந்த நகைச்சுவைக் காட்சி குறித்த தங்கள் எண்ணங்களை இணையத்தில் உடனடியாக பகிர்ந்துகொண்டனர்.&nbsp;&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-13T10:03:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[DC அணியின் பயிற்சியாளர் குழுவில் இணையும் சமிந்த வாஸ்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/chaminda-vaas-jo-toin-in-dc-as-fast-bowling-coach-1789293001"></link>
            <id>https://news.lankasri.com/article/chaminda-vaas-jo-toin-in-dc-as-fast-bowling-coach-1789293001</id>
            <summary type="text">chaminda vaas to join in delhi capitals as fast bowling coach: டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் பயிற்சியாளர் குழுவில் இலங்கை முன்னாள் வீரர் சமிந்த வாஸ் இணைய...</summary>
            <content type="html"><![CDATA[<p>chaminda vaas to join in delhi capitals as fast bowling coach: டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் பயிற்சியாளர் குழுவில் இலங்கை முன்னாள் வீரர் சமிந்த வாஸ் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><h3> 

DC அணியில் சமிந்த வாஸ் </h3><p>

2027 ஐபிஎல் தொடருக்கு முன்னதாக டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் பயிற்சியாளர் குழுவினை மாற்றியமைக்கும் முயற்சியில் அணி நிர்வாகம் இறங்கியுள்ளது. </p><p>

டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சுப் பயிற்சியாளராக இலங்கை முன்னாள் வீரர் சமிந்த வாஸ் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/efb7afc7-9703-4185-80e1-64dbfe9d8015/26-6aa671ca7cf95.webp' /></p><p> 

52 வயதான சமிந்த வாஸ், 1994 முதல் 2009 வரை இலங்கை கிரிக்கெட் அணிக்காக விளையாடியுள்ளார்.</p><p> 

சமிந்த வாஸ் இலங்கை அணிக்காக 111 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 355 விக்கெட்களும், 322 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 400 விக்கெட்களையும் கைப்பற்றியுள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cc38f683-1f27-433b-9203-5f36a6474a67/26-6aa671cb33830.webp' /></p><p>
ஒருநாள் போட்டிகளில் 8 விக்கெட்டுகளை வீழ்த்திய ஒரே பந்துவீச்சாளர், ஒருநாள் கிரிக்கெட்டில் 300 விக்கெட்டுகளை எடுத்த இளம் பந்துவீச்சாளர் உள்ளிட்ட சாதனைகளை வாஸ் படைத்துள்ளார்.&nbsp;</p><p></p><p>

மேலும், 1996 உலகக் கிண்ணம் மற்றும் 2002 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை வென்ற இலங்கை அணியில் சமிந்த வாஸ் இடம்பெற்றிருந்தார்.</p><p> 

டெல்லியில் நடைபெறும் DC அணியின் ஆயத்தப் பயிற்சி முகாம் மற்றும் தேர்வுகளில் பங்கேற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. </p><p>

இதே போல், இந்தியாவின் முன்னாள் வீரர் அமித் மிஸ்ராவும் சுழற்பந்து பயிற்சியாளராக இணைய உள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b1f00687-7b7a-401a-8b60-d877986bee41/26-6aa671cbde5b3.webp' /></p><p> 

தற்போது தலைமை பயிற்சியாளாராக உள்ள ஹேமங் பதானிக்கு மாற்றாக முன்னாள் இந்திய அணித்தலைவர் சௌரவ் கங்குலி பொறுப்பேற்க உள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/120007e3-a99f-4edd-b879-e7c1812c664f/26-6aa671cc98aae.webp' /></p><p>இதே போல் முன்னாள் இந்திய ஆல்-ரவுண்டர் யுவராஜ் சிங் உதவிப் பயிற்சியாளராக இணைய உள்ளார்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-13T09:56:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையின் முதல் பெண் தூதரான மானெல் அபேசேகர காலமானார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-lanka-first-female-ambassador-passes-away-1789291484"></link>
            <id>https://tamilwin.com/article/sri-lanka-first-female-ambassador-passes-away-1789291484</id>
            <summary type="text">​இலங்கையின் வெளியுறவுச்சேவையின் (முன்னைய சிலோன் வெளிநாட்டுச்சேவை) முதல்
பெண் தூதரான இரங்கானி மானெல் அபேசேகர தனது 93வது வயதில் காலமானார்.

அவரது இறு...</summary>
            <content type="html"><![CDATA[<p>​இலங்கையின் வெளியுறவுச்சேவையின் (முன்னைய சிலோன் வெளிநாட்டுச்சேவை) முதல்
பெண் தூதரான இரங்கானி மானெல் அபேசேகர தனது 93வது வயதில் காலமானார்.
</p><p>
அவரது இறுதிச் சடங்குகள் பொரளை கனத்தை மயானத்தில் நடைபெற்றுள்ளன.
</p><p>
1933 ஓகஸ்ட் 14, அன்று பிறந்த இவர் முன்னாள் அரச அதிகாரியும் செனட்டருமான
ஈ.டபிள்யூ. கன்னங்கரவின் மகளாவார்.
​</p><h2>பொதுச்சேவை ஆண்களின் ஆதிக்கம்</h2><p>
பொதுச்சேவை ஆண்களின் ஆதிக்கத்தில் இருந்த காலத்தில், 1958 ஆம் ஆண்டு, இவர்
வெளியுறவுச் சேவையில் இணைந்து சாதனை படைத்தார்.

ஜெர்மனி மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கான இலங்கையின் தூதராகப்
பணியாற்றினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/81194071-79ec-41cf-98ee-49736ae4b9a2/26-6aa672ecd6e70.webp' /></p><p>
​
தாய்லாந்து தூதராக இருந்தபோது, சேபால ஏகநாயக்க என்பவரால் 169 பயணிகளுடன்
கடத்தப்பட்ட இத்தாலிய விமானத்தின் கடத்தல்காரருடன் சுமார் 40 மணி நேரம்
சுமுகமாகப் பேசி, எவருக்கும் காயம் ஏற்படாமல் விவகாரத்தைத் தீர்த்து வைத்தார்.

​</p><p>அணிசேரா உச்சிமாநாடு (1976): கொழும்பில் நடைபெற்ற 92 நாட்டுத் தலைவர்கள்
பங்கேற்ற அணிசேரா உச்சிமாநாட்டின் தலைமை நெறிமுறை தலைமை அதிகாரியாக (Chief of
Protocol) பணியாற்றினார்.</p><h2>இராஜதந்திர பொறுப்பேற்பு</h2><p>
</p><p>
1970-இல் தாய்லாந்திற்கு இராஜதந்திரப் பொறுப்பேற்கச் சென்றபோது, இவரை
வரவேற்பதற்காக வந்த ஓட்டுநர் ஒரு பெண் தூதரை எதிர்நோக்காததால் "வெல்கம்,
மேடம்- சேர் என வாழ்த்தினார்.</p><p> இந்த நிகழ்வை மையமாகக் கொண்டு 2010-இல்
"Master-Sir" என்ற தலைப்பில் தனது சுயசரிதை நூலை இவர் வெளியிட்டார்.</p><p>

​இவரது வழிகாட்டலும் முன்னோடிப் பணியும் இலங்கையின் பல பெண்
இராஜதந்திரிகளுக்குப் பெரு வழிகாட்டியாக அமைந்துள்ளது.</p><p>&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-09-13T09:55:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இரண்டு பெண்களுடன் கைதான 5 பேர் ; சோதனையில் காத்திருந்த ஷாக்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/five-arrested-along-with-two-women-1789292770"></link>
            <id>https://jvpnews.com/article/five-arrested-along-with-two-women-1789292770</id>
            <summary type="text">கல்கிசை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குடியிருப்பு வளாகம் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது இரு பெண்கள் உட்பட 5 பேர் போதைப்பொருட்களுட...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">கல்கிசை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குடியிருப்பு வளாகம் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது இரு பெண்கள் உட்பட 5 பேர் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p style="text-align: justify; ">



பொலிஸ் விசேட அதிரடிப்படை (STF), பொலிஸார் மற்றும் இலங்கை இராணுவத்தினர் இணைந்து இந்த தேடுதல் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c99d681a-4ddc-4cf8-a922-843cd30c64fe/26-6aa670e36094a.webp' /></p><h2 style="text-align: justify; ">போதைப்பொருட்கள்</h2><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">


இதன்போது 7 கிராம் ‘குஷ்’ போதைப்பொருள், 32 கிராம் ஹஷிஷ், 4 கிராம் ஹெரோயின், 20 போதை மாத்திரைகள் மற்றும் போதைப்பொருள் வர்த்தகத்தின் மூலம் ஈட்டப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ரூ.108,400 பணமும் கைப்பற்றப்பட்டுள்ளது.
</p><p style="text-align: justify; ">


கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களில் ஒருவர், கடந்த ஓகஸ்ட் 4ஆம் திகதி தெஹிவளை, நெதிமல பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">


கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மற்றும் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்கள் மேலதிக விசாரணைகளுக்காக கல்கிசை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.&nbsp;&nbsp;</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-13T09:46:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் நீதிமன்றில் சாட்சியமளித்துவிட்டு வீடு திரும்பிய இளைஞர் மீது வாள்வெட்டு : நால்வர் அதிரடி கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/youth-attacked-with-swords-in-jaffna-four-arrested-1789291455"></link>
            <id>https://ibctamil.com/article/youth-attacked-with-swords-in-jaffna-four-arrested-1789291455</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் - ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் சாட்சியமளித்துவிட்டு வீடு திரும்பிக்
கொண்டிருந்த இளைஞர் மீது அராலிச் சந்தியில் வைத்து வாள்வெட்டுத் தாக்குதல...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் - ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் சாட்சியமளித்துவிட்டு வீடு திரும்பிக்
கொண்டிருந்த இளைஞர் மீது அராலிச் சந்தியில் வைத்து வாள்வெட்டுத் தாக்குதல்
நடத்தப்பட்ட விவகாரம் தொடர்பில் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>யாழ். மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவு காவல்துறையினரால் வவுனியாவில் வைத்து குறித்த சந்தேக நபர்கள் நேற்று (12) கைது செய்யப்பட்டனர்.</p><p>இது குறித்து மேலும் தெரியவருகையில், நெடுந்தீவைச் சேர்ந்த இரு தரப்பினருக்கு இடையில் ஏற்கனவே இடம்பெற்றிருந்த
பிரச்சினை தொடர்பான வழக்கு ஊர்காவற்றுறை நீதிமன்றில் கடந்த 9ஆம் திகதி
விசாரணைக்காக எடுக்கப்பட்டது.</p><p></p><h2>நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை</h2><p>
இந்தநிலையில் குறித்த வழக்கில் சாட்சியமளித்துவிட்டு வீடு திரும்பும்போதே குறித்த இளைஞர் மீது
வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.
</p><p>
இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய நபர்கள் தலைமறைவான நிலையில் வவுனியா
நெடுங்கேணி பகுதியில் வைத்து யாழ். மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவு காவல்துறையினரால்
நேற்று கைது செய்யப்பட்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c51a44c8-dbda-49f8-99b5-bd2a0bc6c484/26-6aa6710b096cd.webp' /></p><p>
</p><p>
குற்றச்செயலில் ஈடுபட்ட மூவர், குற்றச் செயலுக்குத் திட்டமிட்ட ஒருவர் என
நால்வரே இவ்வாறாகக் கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p>
கைது செய்யப்பட்ட நபர்களிடம் தற்போது மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதுடன் அவர்களை நீதிமன்றில் முற்படுத்தும் நடவடிக்கைகள்&nbsp; முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
</p><p>இதேவேளை கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் இருந்து இரண்டு வாள்கள், ஒரு கத்தி, ஓர் உள்ளூர்க்
கைக்குண்டு மற்றும் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் என்பன கைப்பற்றப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-13T09:45:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வாழ்வாதாரத்தை அரசியல் சூழ்ச்சியால் இழந்த மக்கள் - 13 வாரமாக தொடரும் போராட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/protest-in-palaly-enters-13th-week-1789292443"></link>
            <id>https://tamilwin.com/article/protest-in-palaly-enters-13th-week-1789292443</id>
            <summary type="text">வலி. வடக்கு மக்கள் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருக்கும் தமது காணிகளை விடுவிக்கக் கோரி போராட்டம் நடத்தி வருகின்றார்கள்.
 

இந்த போராட்டமானது, இ...</summary>
            <content type="html"><![CDATA[<p>வலி. வடக்கு மக்கள் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருக்கும் தமது காணிகளை விடுவிக்கக் கோரி போராட்டம் நடத்தி வருகின்றார்கள்.
</p><p> 

இந்த போராட்டமானது, இன்றைய தினம்(13.09.2026) 13ஆவது வாரமாக தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.&nbsp;</p><h2> 


36 வருடங்களாக போராடும் மக்கள்</h2><p>

கடந்த 36 வருடங்களாக காணிகளை இழந்த மக்கள் இராணுவத்தின் வசமுள்ள தமது காணிகளை
விடுவிக்குமாறு கோரி காணி உரிமையாளர்கள் இந்த போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/adfe99af-dd1e-4a58-9a1d-2222b20d6093/26-6aa6704c7f97c.webp' /></p><p>
</p><p>




தமது காணிகளில் இராணுவம் விவசாய நடவடிக்கைகள் மற்றும் வர்த்தக நிலையங்களை
அமைத்து தமது சொந்த தேவைகளுக்கு பயன்படுத்தி வரும் நிலையில், தாம் நீண்ட காலமாக
நிலங்கள், வீடுகள் அற்று வாழ்ந்து வருவதாகவும் அவர்கள் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளனர்.</p><p> 

ஆட்சியில் இருக்கும் ஜனாதிபதி தற்போது இவர்களுக்கான பதில்களை விரைவாக வழங்க வேண்டும் என்பதே இவர்களின் முதன்மையான வேண்டுகோளாகவும் இருக்கின்றது. </p><p>


இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை காணி விடுவிப்பு தொடர்பில் நாடாளுமன்றில்
உயர்மட்ட கலந்துரையாடல் நடைபெற்றுள்ள நிலையில், பலாலி கிழக்கு உள்ளிட்ட
பகுதிகளை இந்த மாதத்திற்குள் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக
தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/81401444-bd9b-4bdb-be35-49122608ad2d/26-6aa6704d75b4c.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/153c57aa-2675-4dec-aaad-41a9518122ac/26-6aa6704e4eb7d.webp' /></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-13T09:44:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாக்ஸ் ஆபிஸ்: 3 நாட்களில் தமிழ்நாட்டில் மண்டாடி திரைப்படம் செய்துள்ள வசூல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/mandaadi-movie-3-days-tamilnadu-box-office-1789292084"></link>
            <id>https://cineulagam.com/article/mandaadi-movie-3-days-tamilnadu-box-office-1789292084</id>
            <summary type="text">ஒவ்வொரு புதிய திரைப்படம் வெளிவரும்போதும், அதனுடைய பாக்ஸ் ஆபிஸ் வசூல் குறித்து தொடர்ந்து பார்ப்போம். அந்த வகையில், கடந்த செப்டம்பர் 10-ஆம் தேதி வெளியான...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஒவ்வொரு புதிய திரைப்படம் வெளிவரும்போதும், அதனுடைய பாக்ஸ் ஆபிஸ் வசூல் குறித்து தொடர்ந்து பார்ப்போம். அந்த வகையில், கடந்த செப்டம்பர் 10-ஆம் தேதி வெளியான மண்டாடி திரைப்படத்தின் 3 நாட்கள் வசூல் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம் வாங்க.</p><p></p><p>
</p><h2>
ஆக்ஷன் ஹீரோ சூரி
</h2><p>
நகைச்சுவை நடிகராக தனது பயணத்தை சினிமாவில் ஆரம்பித்து, விடுதலை படத்தின் மூலம் கதையின் நாயகனாக களமிறங்கி, இன்று மண்டாடி திரைப்படத்தின் மூலம் முன்னணி கதாநாயகனாக மாறியுள்ளார் நடிகர் <a href="https://www.thanthitv.com/news/cinema/mandadi-overtakes-sardar-at-the-box-office-crores-earned-in-just-two-days" target="_blank">சூரி</a>.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/17b64aa5-f65d-4c8d-8fc9-05211aade594/26-6aa66e394435d.webp' /></p><p> </p><h2>

மண்டாடி
</h2><p>
அறிமுக இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் உருவான மண்டாடி திரைப்படத்தை RS Infotainment நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தின் மூலம் பிரபல தெலுங்கு நடிகர் சுஹாஸ் தமிழில் அறிமுகமாகியுள்ளார். வில்லனாக இவர் இப்படத்தில் மிரட்டியிருந்தார். இதனால் அடுத்தடுத்து தமிழ் திரைப்படங்களில் இவரை நிச்சயமாக நாம் பார்க்கலாம்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e503ed30-4c06-4121-8dff-5b69cd423587/26-6aa66e37d1f23.webp' /></p><p>மேலும், மஹிமா நம்பியார் மற்றும் சத்யராஜ் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் குமார் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளியான மண்டாடி திரைப்படம் உலகளவில் ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றுள்ளது. இதனால் முதல் நாளிலிருந்தே வசூல் ரீதியாக பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பி வருகிறது.</p><p></p><h3>

தமிழ்நாடு வசூல்
</h3><p>
உலகளவில் மண்டாடி திரைப்படம் 3 நாட்களில் ரூ. 30 கோடிக்கும் மேல் வசூலித்துள்ள நிலையில், தமிழ்நாட்டில் இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 3 நாட்களில் தமிழ்நாட்டில் மட்டும் இப்படம் ரூ. 18.5 கோடி வசூல் செய்துள்ளது. இது இப்படத்திற்கு முதல் வாரத்தில் தமிழ்நாட்டில் கிடைத்துள்ள சிறந்த வசூலாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0bd04961-b1b5-4f5b-9744-40f7c69d5b1e/26-6aa66e388d499.webp' /></p>]]></content>
            <updated>2026-09-13T09:40:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[100 பில்லியன் டொலர் முதலீட்டில் உருவாக்கப்பட்ட நகரம் - இன்று பேய் நகரம் என அழைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/forest-city-ghost-city-tech-dream-collapses-1789285145"></link>
            <id>https://news.lankasri.com/article/forest-city-ghost-city-tech-dream-collapses-1789285145</id>
            <summary type="text">Ghost City Tech Dream Collapses: டெக் தொழில்முனைவோரின் கனவு நகரமாக கட்டப்பட்ட Forest City இப்போது Ghost City-யாக மாறியுள்ளது.

Forest City-Ghost Cit...</summary>
            <content type="html"><![CDATA[<p>Ghost City Tech Dream Collapses: டெக் தொழில்முனைவோரின் கனவு நகரமாக கட்டப்பட்ட Forest City இப்போது Ghost City-யாக மாறியுள்ளது.</p><h2>

Forest City-Ghost City-யாக மாறியது</h2><p>மலேசியாவின் ஜோகூர் பகுதியில், சிங்கப்பூர் எல்லைக்கு அருகில் உருவாக்கப்பட்ட Forest City உலகின் மிகப்பெரிய நகரத் திட்டங்களில் ஒன்றாகும். </p><p>சுமார் 100 பில்லியன் டொலர் முதலீட்டில் கட்டப்பட்ட இந்த நகரம், உயரமான குடியிருப்புகள், ஹோட்டல்கள், வணிக வளாகங்கள், பொழுதுபோக்கு மையங்கள் என அனைத்தையும் கொண்டிருந்தது.
</p><p>
ஆனால் மக்கள் வசிப்பதற்கான ஆர்வம் குறைவதால், இது “கோஸ்ட் சிட்டி” என அழைக்கப்பட்டது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e6f91f07-cca4-4768-98a8-17c60f752b89/26-6aa6531b33701.webp' /></p><p>2024-இல், Balaji Srinivasan உருவாக்கிய Network School என்ற தொழில்நுட்ப சமூக முயற்சி இங்கு தொடங்கப்பட்டது. ஸ்டார்ட்அப் நிறுவனங்கள், டிஜிட்டல் நோமேட்கள், இளம் தொழில்நுட்ப வல்லுநர்கள் ஆகியோர் ஒன்றாக வாழ்ந்து, வேலை செய்து, கற்றுக்கொள்ளும் புதிய வாழ்க்கை முறையை சோதிக்க முயன்றனர்.

பங்கேற்பாளர்கள் மாதம் சுமார் 1,500 டொலர் செலுத்தி, தங்குமிடம், உணவு, வகுப்புகள், உடற்பயிற்சி மற்றும் தொழில்முனைவு வாய்ப்புகளை பெற்றனர். </p><p></p><h2>சிக்கல்கள்&nbsp;</h2><p>ஆனால், ஈரப்பதமான காலநிலை காரணமாக வீடுகளில் பூஞ்சை, உணவகங்கள் மற்றும் பொழுதுபோக்கு வசதிகள் குறைவு, பெண்கள்-ஆண்கள் பங்கேற்பில் சமநிலை இல்லாமை போன்ற சிக்கல்கள் எழுந்தன.

மேலும், மலேசிய அதிகாரிகளின் அனுமதி பிரச்சினைகள், சட்ட சிக்கல்கள் காரணமாக, இரண்டு ஆண்டுகளுக்குள் Network School மூடப்பட்டது.
</p><p>
Forest City-யின் வெறிச்சோடிய கட்டிடங்கள், தொழில்நுட்ப சமூகத்துக்கு ஒரு பெரிய சோதனை மேடையாக இருந்தாலும், அது முழுமையான நகரமாக மாற முடியவில்லை. சில நூற்றுக்கணக்கான பங்கேற்பாளர்கள் இருந்தாலும், நூற்றுக்கணக்கான மக்களை தங்க வைக்கும் அளவுக்கு கட்டப்பட்ட நகரம் வெறிச்சோடியே இருந்தது.</p><p>
</p><p></p><p>இந்த முயற்சி, தொழில்நுட்ப சமூகங்கள் எவ்வாறு ஒன்றாக வாழ்ந்து, வேலை செய்து, புதிய சமூக வடிவங்களை உருவாக்க முடியும் என்பதை சோதித்தது.</p><p> ஆனால், நடைமுறை சிக்கல்கள் மற்றும் அரசின் கட்டுப்பாடுகள் காரணமாக, Forest City-யின் கனவு குறுகிய காலத்திலேயே முறிந்தது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-13T09:36:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆரக்கிள் பங்குகளை விற்கும் திட்டத்தை ரத்து செய்த லாரி எலிசன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/ellison-cancels-plan-to-sell-oracle-1789292330"></link>
            <id>https://news.lankasri.com/article/ellison-cancels-plan-to-sell-oracle-1789292330</id>
            <summary type="text">Larry Ellison cancels plan to sell Oracle stock: ஆரக்கிள் பங்குகளை விற்கும் திட்டத்தை கைவிட்டார் லாரி எலிசன்.
சுமார் 7.5 பில்லியன் டொலர் மதிப்புள்ள, ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Larry Ellison cancels plan to sell Oracle stock: ஆரக்கிள் பங்குகளை விற்கும் திட்டத்தை கைவிட்டார் லாரி எலிசன்.
</p><p>சுமார் 7.5 பில்லியன் டொலர் மதிப்புள்ள, 50 மில்லியன் வரையிலான ஆரக்கிள் (Oracle) நிறுவனப் பங்குகளை விற்பனை செய்வதற்கான திட்டத்தை, அந்நிறுவனத்தின் இணை நிறுவனரும் நிர்வாகத் தலைவருமான லாரி எலிசன் ரத்து செய்துள்ளதாக ஆரக்கிள் தெரிவித்துள்ளது.</p><h2>எந்தத் திட்டமும் இல்லை</h2><p>
</p><p>எலிசன் அந்த வர்த்தகத் திட்டத்தை ஜூன் 22, 2026 அன்று ஏற்றுக்கொண்டதாகவும், அது அக்டோபர் 24, 2026 அன்று காலாவதியாகத் திட்டமிடப்பட்டிருந்ததாகவும் ஆரக்கிள் நிறுவனம் வெள்ளிக்கிழமை ஒரு ஒழுங்குமுறைத் தாக்கல் மூலம் தெரிவித்திருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aee2affe-1e44-4be2-80bd-72b7443ed244/26-6aa66f2ca14f1.webp' /></p><p> </p><p>இதனிடையே, அந்தத் திட்டத்தின் கீழ் ஆரக்கிள் நிறுவனப் பங்குகள் எதுவும் விற்கப்படவில்லை என்றும், தனது ஆரக்கிள் பங்குகள் எதையும் விற்பனை செய்ய அவருக்கு வேறு எந்தத் திட்டமும் இல்லை என்றும் ஆரக்கிள் நிறுவனம் சனிக்கிழமை விளக்கமளித்துள்ளது. </p><p>அதிகரித்து வரும் முதலீட்டுச் செலவினங்கள் அதன் தடையற்ற பணப்புழக்கத்திற்கு அழுத்தம் கொடுப்பதால், அது குறித்த முதலீட்டாளர்களின் கவலைகள் அதிகரித்து வரும் நிலையில், இந்த ஆண்டு ஆரக்கிளின் பங்கு விலை பெரும் சரிவைச் சந்தித்துள்ளது.</p><p></p><p> </p><p>இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்து பங்குகள் ஏறக்குறைய 23 சதவீதம் சரிந்துள்ளன; மேலும், எலிசன் அந்தத் திட்டத்தை ஏற்றுக்கொள்வதற்கு முந்தைய கடைசி வர்த்தக நாளான ஜூன் 18 அன்று இருந்த அதன் நிறைவு விலையை விட 18 சதவீதத்திற்கும் அதிகமாகக் கீழே உள்ளன. </p><p>எலிசனின் வர்த்தகத் திட்டம் ரத்து செய்யப்பட்டதற்கான காரணத்தை ஆரக்கிள் தெரிவிக்கவில்லை. LSEG தரவுகளின்படி, 82 வயதான எலிசன் 2014 வரை ஆரக்கிள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாகப் பணியாற்றினார்; மேலும், அந்நிறுவனத்தின் 38 சதவீதத்திற்கும் அதிகமான பங்குகளைத் தன்வசம் கொண்டுள்ள அவர், அதன் மிகப்பெரிய பங்குதாரராகவும் உள்ளார். </p><p>வாரத்தின் தொடக்கத்தில், வால் ஸ்ட்ரீட் கணிப்புகளை விஞ்சும் வகையிலான காலாண்டு முடிவுகளையும், எதிர்பார்த்ததை விடக் குறைவான பணப் பயன்பாட்டையும் (cash burn) ஆரக்கிள் நிறுவனம் வெளியிட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2a0d2299-61d1-4add-9353-a78e12b7838b/26-6aa66f2d53dde.webp' /></p><p> </p><p>இது, கடன் மூலம் நிதியளிக்கப்பட்ட அதன் அதிகப்படியான செலவினங்கள் குறித்த கவலைகளைக் குறைத்ததுடன், வெள்ளிக்கிழமையன்று அந்நிறுவனத்தின் பங்கு விலைகள் உயரவும் வழிவகுத்தது. </p><p>இருப்பினும், பணப்புழக்கத்தில் முன்னேற்றம் ஏற்பட இன்னும் சிறிது காலம் ஆகும் என்று ஆய்வாளர்கள் கூறியதையடுத்து, அதன் பங்கு விலை பின்னர் தலைகீழ் மாற்றத்தைச் சந்தித்தது. </p><p>வேலை நீக்கங்கள் உள்ளிட்ட மறுசீரமைப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக, அதற்கான செலவுகள் சுமார் 700 மில்லியன் டொலர் வரை அதிகரிக்கும் என்றும் அந்த நிறுவனம் அறிவித்தது.</p>]]></content>
            <updated>2026-09-13T09:35:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thevanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சர்வதேச நாணய நிதியக் குழுவினர் வட மாகாண ஆளுநருடன் சந்திப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/imf-team-meets-northern-province-governor-1789289389"></link>
            <id>https://tamilwin.com/article/imf-team-meets-northern-province-governor-1789289389</id>
            <summary type="text">வடக்கு மாகாணத்தில் முதலீட்டுக்கான தற்போதைய நிலைமை, முதலீடுகளை
முன்னெடுப்பதில் காணப்படும் வாய்ப்புகள், ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள்,
எதிர்நோக்கும் இடைய...</summary>
            <content type="html"><![CDATA[<p>வடக்கு மாகாணத்தில் முதலீட்டுக்கான தற்போதைய நிலைமை, முதலீடுகளை
முன்னெடுப்பதில் காணப்படும் வாய்ப்புகள், ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள்,
எதிர்நோக்கும் இடையூறுகள் மற்றும் தாமதங்கள் தொடர்பில் சர்வதேச நாணய நிதியக்
குழுவினர் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனிடம் விரிவாகக்
கேட்டறிந்தனர்.
</p><p>
இலங்கையின் சர்வதேச நாணய நிதியத் திட்டத்தின் ஏழாவது மீளாய்வு தொடர்பான
கலந்துரையாடல்களை மேற்கொள்வதற்காக நாட்டுக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய
நிதியக் குழுவினருக்கும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும் இடையிலான கலந்துரையாடல் நேற்று (12.09.2026) மாலை ஆளுநர்
செயலகத்தில் நடைபெற்றது.
</p><p>
கலந்துரையாடலின் ஆரம்பத்தில் சர்வதேச நாணய நிதியப் பிரதிநிதிகளை வரவேற்ற
ஆளுநர், வட மாகாணத்தின் பொதுவான நிலைமைகள், அபிவிருத்தி முன்னேற்றங்கள்
மற்றும் மாகாணம் எதிர்நோக்கும் முக்கிய சவால்கள் தொடர்பில் அவர்களுக்கு
விளக்கமளித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9c0c4852-7d70-4ad8-a4e4-469cacacd5e2/26-6aa66cd5e6eb8.webp' /></p><h2>தடைகள் மற்றும் தாமதங்கள்</h2><p>
</p><p>
இதனைத் தொடர்ந்து இடம்பெற்ற கலந்துரையாடலில், வடக்கு மாகாணத்தில் முதலீடுகளை
ஊக்குவிப்பதற்கான நிலைமை, இதுவரை ஏற்பட்டுள்ள முன்னேற்றம், முதலீடுகளை
ஈர்ப்பதில் காணப்படும் தடைகள் மற்றும் பல்வேறு காரணங்களால் ஏற்பட்டுள்ள
தாமதங்கள் தொடர்பில் சர்வதேச நாணய நிதியப் பிரதிநிதிகள் ஆளுநரிடம்
கேட்டறிந்தனர்.
</p><p>
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம் பதவியேற்றதன் பின்னர்
இலஞ்சம் மற்றும் ஊழலைக் கட்டுப்படுத்துவதற்கு முன்னுரிமை
வழங்கப்பட்டுள்ளதுடன், முதலீடுகளுக்கு சாதகமான சூழல் உருவாகியுள்ளதாகவும்
ஆளுநர் சுட்டிக்காட்டினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4a778702-3375-45c0-8d10-2d64236ad119/26-6aa66cd6ccb60.webp' /></p><p> </p><p>வடக்கு மாகாணத்தில் முதலீட்டுக்குக் காணப்படும்
வாய்ப்புகள் மற்றும் அவற்றை மேம்படுத்துவதற்காக இதுவரை முன்னெடுக்கப்பட்டுள்ள
நடவடிக்கைகள் தொடர்பிலும் அவர் விளக்கமளித்தார்.

அத்துடன், அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் சமூக நலன்புரித் திட்டங்கள்
தொடர்பிலும் விரிவான கலந்துரையாடல் இடம்பெற்றது.</p><h2>கலந்துரையாடல்</h2><p> சமூகத்தின் பல்வேறு பிரிவுகளை
உள்ளடக்கிய நலன்புரி நடவடிக்கைகள், அவற்றின் தாக்கம் மற்றும் மக்களின்
வாழ்வாதாரத்துடன் அவற்றுக்குள்ள தொடர்புகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
</p><p>
மேலும், நல்லிணக்கச் செயற்பாடுகள், உலகளாவிய நெருக்கடிகளால் வடக்கு
மாகாணத்தின் அபிவிருத்தியில் ஏற்பட்டுள்ள தாக்கங்கள், நாட்டிலிருந்து
இடம்பெறும் புலம்பெயர்வு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் சர்வதேச நாணய
நிதியப் பிரதிநிதிகள் ஆளுநருடன் விரிவாகக் கலந்துரையாடினர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d921ff21-55d7-4013-bef9-1d5e9cc7b66c/26-6aa66cd7a43d0.webp' /></p><p>
</p><p>
இதேவேளை, சர்வதேச நாணய நிதியம் தொடர்பில் வடக்கு மாகாண மக்களிடையே காணப்படும்
அபிப்பிராயங்கள் மற்றும் பார்வைகள் குறித்தும் பிரதிநிதிகள் ஆளுநரிடம்
கேட்டறிந்து கொண்டனர்.

இக்கலந்துரையாடலில் வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் சிவபாதசுந்தரம்
சத்தியசீலன் அவர்களும் பங்கேற்றிருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/54c521dc-2f7d-46f0-b772-da2cbb91835a/26-6aa66cd881c78.webp' /></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-13T09:32:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>H. A. Roshan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈச்சம் குளம் நீர்மட்டம் குறைவு: கால்நடை வளர்ப்பு பாதிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/el-nio-impact-low-water-level-in-eecham-kulam-1789290788"></link>
            <id>https://tamilwin.com/article/el-nio-impact-low-water-level-in-eecham-kulam-1789290788</id>
            <summary type="text">திருகோணமலை- தம்பலகாமம் பிரதேச செயல பிரிவுக்குட்பட்ட ஈச்சம் குளம்
வற்றி நீர் மட்டம் குறைந்ததால் வறட்சியான கால நிலை நிலவி வருகிறது.

எல் நினோ காலநிலை...</summary>
            <content type="html"><![CDATA[<p>திருகோணமலை- தம்பலகாமம் பிரதேச செயல பிரிவுக்குட்பட்ட ஈச்சம் குளம்
வற்றி நீர் மட்டம் குறைந்ததால் வறட்சியான கால நிலை நிலவி வருகிறது.</p><p>

எல் நினோ காலநிலைத் தாக்கத்தின் காரணமாக ஏற்பட்டுள்ள கடும் வரட்சியினால்
தம்பலாகாமம் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட ஈச்சம் குளத்தின் நீர்மட்டம்
வெகுவாகக் குறைந்து, குளம் வற்றும் நிலையை அடைந்துள்ளது.
</p><p>
நீண்டகாலமாக போதிய மழைவீழ்ச்சி இல்லாத நிலையில், குளத்தின் நீர்மட்டம்
தொடர்ச்சியாகக் குறைந்து வருவதால், குளத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் வாழும்
விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்பாளர்கள் பெரும் பாதிப்புகளை எதிர்கொண்டு
வருகின்றனர்.</p><h2>நீர்ப்பற்றாக்குறை</h2><p>

குறிப்பாக, ஈச்சம் குளத்தின் நீரை நம்பியுள்ள மேட்டு நிலப்
பயிர்ச்செய்கைகளுக்கு தேவையான நீரைப் பெற்றுக்கொள்வதில் விவசாயிகள் சிரமங்களை
எதிர்நோக்கியுள்ளனர். மிளகாய், கத்தரி, வெண்டைக்காய் உள்ளிட்ட பல்வேறு மேட்டு
நிலப் பயிர்களைப் பயிரிடும் விவசாயிகளுக்கு நீர்ப்பற்றாக்குறை பெரும் சவாலாக
மாறியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/646693ed-021b-409f-853e-a97025663f7d/26-6aa66cdd0733f.webp' /></p><p>
</p><p>
அதேவேளை, குளத்தை அண்டிய பகுதிகளில் கால்நடைகளை வளர்த்து வரும் கால்நடை
வளர்ப்பாளர்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். </p><p>எனவே, வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள் மற்றும் கால்நடை
வளர்ப்பாளர்களின் நிலைமையை கருத்திற்கொண்டு, அவசர குடிநீர் மற்றும் விவசாயத்
தேவைகளுக்கான நீர் விநியோகம், கால்நடைகளுக்கான குடிநீர் மற்றும் தேவையான
நிவாரண நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்னெடுக்க வேண்டும் என
கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-13T09:29:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[கூரிய ஆயுதத்தால் தாக்கி கொல்லப்பட்ட இளைஞன் ; இரவில் அரங்கேறிய பயங்கரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/youth-killed-in-sharp-weapon-attack-1789291391"></link>
            <id>https://jvpnews.com/article/youth-killed-in-sharp-weapon-attack-1789291391</id>
            <summary type="text">அநுராதபுரம், பரசன்கஸ்வெவ வன்னி பளுகொல்லேவ பகுதியில் இருவருக்கிடையில் ஏற்பட்ட கைகலப்பின்போது 21 வயதுடைய இளைஞன் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">அநுராதபுரம், பரசன்கஸ்வெவ வன்னி பளுகொல்லேவ பகுதியில் இருவருக்கிடையில் ஏற்பட்ட கைகலப்பின்போது 21 வயதுடைய இளைஞன் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார்.</p><p style="text-align: justify; ">

இந்தச் சம்பவம் நேற்று சனிக்கிழமை (12) இரவு இடம்பெற்றுள்ளதாக பரசன்கஸ்வெவ பொலிஸார் தெரிவித்தனர்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e5002ede-8c36-47a3-a537-172e4ecad19a/26-6aa66b86c7a12.webp' /></p><h2 style="text-align: justify; ">கொலைச் சம்பவம்</h2><p>
</p><p style="text-align: justify; ">
கம்பிரிகஸ்வெவ, வன்னி பளுகொல்லேவ பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக ஆரம்பகட்ட பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
</p><p style="text-align: justify; ">
உயிரிழந்த இளைஞனுக்கும் மற்றுமொரு இளைஞனுக்கும் இடையில் நீண்டகாலமாக நிலவி வந்த தனிப்பட்ட பகைமை காரணமாக இந்தக் கொலைச் சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-13T09:23:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[காசுக்காக தன்னுடைய உடலை விற்பது எவ்வளவு பெரிய வலி!! நடிகை சரண்யா ஆதங்கம்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/saranya-nagh-emotional-and-painful-interview-1789290785"></link>
            <id>https://viduppu.com/article/saranya-nagh-emotional-and-painful-interview-1789290785</id>
            <summary type="text">காதல், பேராண்மை போன்ற படங்களில் நடித்தப்பின் ஆள் அடையாளமே தெரியாமல் மாறியவர் தான் நடிகை சரண்யா. தற்போது உடல் எடையை வெகுவாக குறைத்து பேட்டிகளில் பல விஷ...</summary>
            <content type="html"><![CDATA[<p>காதல், பேராண்மை போன்ற படங்களில் நடித்தப்பின் ஆள் அடையாளமே தெரியாமல் மாறியவர் தான் நடிகை சரண்யா. தற்போது உடல் எடையை வெகுவாக குறைத்து பேட்டிகளில் பல விஷயங்களை பகிர்ந்து வருகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0bb9d78d-42c1-46f2-9c7c-62fdb3ec6bdb/26-6aa669234c711.webp' /></p><p> </p><h2>சரண்யா</h2><p>சமீபத்தில் அளித்த பேட்டியில், நான் நிறைய பெண்களை பார்த்துள்ளேன், சில பெண்கள் ரொம்பவே நெருக்கடியான சூழலில் தன் உடம்பையே விற்றிருப்பார்கள், ஆனால் அப்படிப்பட்ட எந்த பெண்ணையும் நான் ஒருநாளும் குறை சொன்னதே இல்லை. ஏன்னா, அந்த விஷயம் எவ்வளவோ பெரிய வேதனை நிறைந்தது என்று எனக்கு தெரியும்.</p><p> யாரோ முகம் தெரியாத ஒருத்தனிடம் காசுக்காக தன்னுடைய உடலை விற்பது எவ்வளவு பெரிய விஷயம். ஒரு பெண் எந்தளவுக்கு ஏழ்மையில் இருந்தால் இந்த இடத்திற்கு வந்திருப்பாங்க என்பதை நாம் புரிந்து கொள்ளணும். அப்படிப்பட்ட பெண்களை நம்மால் காப்பாத்தவே முடியவில்லை என்றாலும் பரவாயில்லை, தயவு செய்து அவர்களை குறை மட்டும் சொல்லாதீங்க.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0ddd6030-7312-42a0-88e7-70c4e4e431b9/26-6aa66923f3e98.webp' /></p><p> </p><p>நான் தனியாக இருக்கிறேன், எனக்கு என்று யாரும் இல்லை என சொன்னதும், ஆண்கள், பெண்கள் என்னை அணுகும் விதமே வேறாக இருக்கிறது. ஆண்கள் என் கண்ணை பார்த்து பேசுறதைவிட, என் கண்ணுக்கு கீழே பார்த்து பேசுறதுதான் ரொம்ப ஜாஸ்தி. இவளை எப்படி தன் வசப்படுத்திக்கலாம் என்று தான் நினைப்பார்கள். அந்த கோபம் எனக்கு இன்னும் குறையவே இல்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cc2a616a-4bee-41c0-a460-671d913766f4/26-6aa66924a94b6.webp' /></p><p> </p><p>ஆண்கள் இப்படியென்றால், ஆண்களைவிட பெண்கள் தான் ரொம்ப மோசமனவர்கள். ஒரு பெண்ணை இன்னொரு பெண் தான் அசிங்கப்படுத்த முடியும். மொத்தமாக அழிக்க முடியும். பெண்களிடம் உதவி இருக்காது, பொறாமை தான் அதிகமாக இருக்கு. ஆண்களிடமாவது ஏதாவது ஒரு கரிசனம் இருக்கும், பெண்களிடம் அதுக்கூட இருக்காது. </p><p>எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறியிருக்கிறேன். முன்னாடி குண்டா இருந்தப்ப யாரும் எதுவும் சொல்லிருவாங்களோன்னு பயந்து ஒதுங்கி இருப்பேன். ஆனா இப்போ உடல் எடையை குறைத்த்ப்பின் நானே எல்லார்கிட்டயும் போய் பேசுகிறேன், இந்த மாற்றமும் எனக்கு ரொம்பவே பிடிச்சிருக்கு என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார் நடிகை சரண்யா.</p>]]></content>
            <updated>2026-09-13T09:15:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கைக்கு வந்து குவிந்த இலட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/srilanka-records-over-1-5-mn-tourist-arrivals-2026-1789284252"></link>
            <id>https://ibctamil.com/article/srilanka-records-over-1-5-mn-tourist-arrivals-2026-1789284252</id>
            <summary type="text">2026ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 15 இலட்சத்தைக் கடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 ...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 15 இலட்சத்தைக் கடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p>

 

இலங்கை சுற்றுலா <a href="https://www.sltda.gov.lk/storage/common_media/Weekly_Report_1st_to_7th_September_2026.pdf" target="_blank">அபிவிருத்தி அதிகாரசபையினால்</a> (SLTDA) வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>அதன்படி, ஜனவரி முதலாம் திகதி முதல் செப்டம்பர் 06 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1,567,007 ஆக பதிவாகியுள்ளது.</p><p></p><h2>இந்தியாவிலிருந்தே வருகை தந்துள்ளனர்</h2><p>மேலும் செப்டெம்பர் மாதம் 01 ஆம் திகதி முதல் 06 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 31,885 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f290bd6a-7ca1-4144-959c-09f3ce26cb10/26-6aa669790e247.webp' /></p><p>

 

இந்த ஆண்டில் இதுவரையான காலத்தில் அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்தே வருகை தந்துள்ளதுடன், அவர்களின் எண்ணிக்கை 395,377 ஆகும்.
</p><p>
 

இதற்கு மேலதிகமாக, ஐக்கிய இராச்சியத்திலிருந்து 152,625 பேரும், சீனாவிலிருந்து 102,473 பேரும், ஜெர்மனியிலிருந்து 91,763 பேரும் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
</p><p>
 

செப்டெம்பர் மாதத்தின் முதல் 6 நாட்களில் அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்தே வருகை தந்துள்ளதுடன், அதன்படி இந்தியாவிலிருந்து 9,897 சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-13T09:12:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[சர்ச்சைகளுக்கு நடுவில் விஜய் - த்ரிஷா ஜோடியாக அஜித்தின் கார் பந்தயத்தில் : வைரலாகும் புகைப்படங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/cm-vijay-actress-trisha-watching-ajith-car-race-1789288961"></link>
            <id>https://manithan.com/article/cm-vijay-actress-trisha-watching-ajith-car-race-1789288961</id>
            <summary type="text">லண்டனில் நடைபெற்ற கார் பந்தயத்தில் நடிகர் அஜித்குமார் பங்கேற்ற நிலையில், அந்தப் போட்டியை தமிழக முதல்வர் விஜய் மற்றும் நடிகை த்ரிஷா நேரில் கண்டுகளித்தன...</summary>
            <content type="html"><![CDATA[<p>லண்டனில் நடைபெற்ற கார் பந்தயத்தில் நடிகர் அஜித்குமார் பங்கேற்ற நிலையில், அந்தப் போட்டியை தமிழக முதல்வர் விஜய் மற்றும் நடிகை த்ரிஷா நேரில் கண்டுகளித்தனர். இதுதொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.</p><h2>லண்டனில் விஜய் த்ரிஷா</h2><p>தமிழக முதல்வர் விஜய், ஆறு நாள் அரசியல் பயணமாக லண்டன் சென்றுள்ளார். தமிழ்நாட்டிற்கு புதிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பது உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்று வருகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ee28d7ed-cc72-4615-9100-6f31f4ed0df5/26-6aa665691e0e7.webp' /></p><p> </p><p>இதனிடையே, லண்டனின் சில்வர்ஸ்டோன் மோட்டார் ரேஸ் மைதானத்தில் நடைபெற்ற கார் பந்தயத்தில் அஜித்குமார் பங்கேற்றார்.</p><p>

பந்தய நிகழ்வில் கலந்து கொண்ட முதல்வர் விஜய்யை அஜித்குமார் அன்புடன் கட்டியணைத்து வரவேற்றார். இருவரும் சந்தித்துக் கொண்ட காட்சிகள் சமூக வலைதளங்களில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. மேலும், அஜித்தின் கார் அருகில் விஜய் புகைப்படம் எடுத்துக்கொண்டதுடன், அவருக்கு வாழ்த்துகளையும் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c8d35384-72f6-45cc-870c-695d8a7f342a/26-6aa66569c7484.webp' /></p><p>

அத்துடன், சில்வர்ஸ்டோன் மைதானத்தை தமிழ்நாட்டில் அமைக்கப்படவுள்ள உலகத் தரம் வாய்ந்த மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகருக்கான மாதிரியாக பார்வையிடும் நிகழ்விலும் முதல்வர் விஜய் மற்றும் தமிழ்நாடு விளையாட்டுத் துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.</p><p></p><p>
</p><p>
இந்நிலையில், அஜித்குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை காண நடிகை த்ரிஷாவும் சில்வர்ஸ்டோன் மைதானத்திற்கு வருகை தந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/85a9813d-2314-4f06-b8ad-fd362431d5d8/26-6aa6656a7abe7.webp' /></p><p> </p><p>மேலும் ஏற்கனசே விஜய் - த்ரிஷா உறவு குறித்த சர்ச்சைகள் இணையத்தில் நிலவிவரும் நிலையில், போட்டியை முதல்வர் விஜய்யுடன் இணைந்து த்ரிஷா கண்டுகளித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி புதிய சர்ச்சையை கிளப்பி வருகின்றது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW&nbsp;</a></u></b> &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-13T09:12:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kiyas Shafe</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் விற்பனை! கடை உரிமையாளர்களுக்கு எதிராக வழக்கு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sale-of-madana-modhagam-in-trinco-law-1789290114"></link>
            <id>https://tamilwin.com/article/sale-of-madana-modhagam-in-trinco-law-1789290114</id>
            <summary type="text">திருகோணமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பாடசாலை மாணவர்களுக்கு விற்பனை
செய்வதற்காக மதன மோதகங்களை வைத்திருந்ததாகக் கூறப்படும் ஆறு கடை
உரிமையாளர்களு...</summary>
            <content type="html"><![CDATA[<p>திருகோணமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பாடசாலை மாணவர்களுக்கு விற்பனை
செய்வதற்காக மதன மோதகங்களை வைத்திருந்ததாகக் கூறப்படும் ஆறு கடை
உரிமையாளர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.</p><p>சுதேச மருத்துவ திணைக்கள அதிகாரிகள் மற்றும் விசேட பொலிஸ் அதிரடிப்படையினர்
இணைந்து மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பு மற்றும் சோதனை நடவடிக்கைகளின்போதே
குறித்த மதன மோதகங்கள் கைப்பற்றப்பட்டது.</p><p>

கந்தளாய் பகுதியில் பாடசாலை மாணவர்களுக்கு விற்பனை செய்வதற்காக மதன மோதகங்கள்
மறைத்து வைக்கப்பட்டுள்ளதாகக் கிடைத்த தகவலையடுத்து, கந்தளாய் பிரதான வீதியில்
அமைந்துள்ள மருந்தகமொன்றில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.</p><h2>சட்ட நடவடிக்கை&nbsp;</h2><p>இதன்போது, பொதி செய்யப்பட்ட
நிலையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 86 மதன மோதகங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக
விசேட பொலிஸ் அதிரடிப்படையினர் தெரிவித்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8c44b921-cae7-4026-a88c-23f995fec131/26-6aa6682d24e87.webp' /></p><p>

இதனைத் தொடர்ந்து, திருகோணமலை அலஸ்தோட்டம், நாளாம் கட்டை மற்றும் பதவிஸ்ரீபுர
உள்ளிட்ட பகுதிகளில் மதன மோதகம் விற்பனை செய்ததாகக் கூறப்படும் கடை
உரிமையாளர்களுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாகாணப்
பணிப்பாளர் எம்.ஏ. நபீல் தெரிவித்தார்.
</p><p>
பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து மதன மோதகங்கள் விற்பனை செய்யப்படுவதைத்
தடுக்கும் வகையில், திருகோணமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும்
தொடர்ச்சியான சோதனை மற்றும் சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு
வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-13T09:09:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மலையகத் தமிழர் பிரச்சினையை பேரிடருக்குள் சுருக்காதீர்கள் - அருட்தந்தை சத்திவேல் கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/issue-of-upcountry-tamils-1789290267"></link>
            <id>https://tamilwin.com/article/issue-of-upcountry-tamils-1789290267</id>
            <summary type="text">மலையகத் தமிழர்களின் பிரச்சினைகளை டித்வா புயல் அனர்த்தத்துடன் மட்டும்
மட்டுப்படுத்திப் பார்ப்பது கவலையளிப்பதாக சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும்,
மலையக...</summary>
            <content type="html"><![CDATA[<p>மலையகத் தமிழர்களின் பிரச்சினைகளை டித்வா புயல் அனர்த்தத்துடன் மட்டும்
மட்டுப்படுத்திப் பார்ப்பது கவலையளிப்பதாக சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும்,
மலையக ஆய்வு மையத்தின் இணைப்பாளருமான அருட்தந்தை மா. சத்திவேல்
தெரிவித்துள்ளார்.</p><p>

அவரால் இன்று(13.09.2026) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு
தெரிவித்துள்ளார்.</p><h2>


அரசாங்கத்தின் முயற்சி</h2><p>
மேற்படி அறிக்கையில் தெரிவிக்கப்படுவதாவது, </p><p>

தற்போது நிகழ்ந்து கொண்டிருக்கும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 63 ஆம்
கூட்டத் தொடரில் வாசிக்கப்பட்ட ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை உயர்
ஸ்தானிகர் வோல்கர் டேக்கின் எழுத்து மூலம் அறிக்கையில் மலையகம் தொடர்பாகவும்
குறிப்பிட்டுள்ளமைக்கு மலைய சமூக ஆய்வு மையம் தனது நன்றியை தெரிவிப்பதோடு
மலையக தமிழர்கள் விடயத்தில் டித்வா பேரிடரை மட்டும் பார்த்திருப்பது
கவலையையும் வேதனையையும் அளிப்பதோடு ஆணையாளரின் அறிக்கைக்கு பதில் அளித்து
உரையாற்றிய இலங்கை பிரதி "மலையக மக்களின் பிரச்சனைக்கு தீர்வு காண்பதை இலக்காக
கொண்டு அரசாங்கம் முற்போக்காக செயற்பட்டு வருவதாக" குறிப்பிட்டார். </p><p>

இது மலையக தமிழர்கள் தொடர்பாக சர்வதேசத்தை ஏமாற்றும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின்
நரித்தன அரசியல் கூற்று என்றே நாம் சுட்டிக்காட்ட விரும்புகின்றம்.</p><p>

ஆணையாளரின் அறிக்கைக்கேற்ப மலையக தமிழர்களில் டித்வா புயலுக்கு முகம்
கொடுத்தவர்களுக்கு மட்டுமே பிரச்சினை உள்ளது போன்று உலகம் நினைக்கலாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e0f45e73-5623-4027-8521-35c7304e968a/26-6aa667bab87aa.webp' /></p><p>ஒட்டு
மொத்த மலையக தமிழர்களுக்கு வேறு எந்த விதமான பிரச்சினையும் இல்லாத தொனியே
உள்ளது.இது மிகுந்த கவலையையும் ஏமாற்றத்தையும் அளிக்கின்றது.
</p><p>
டித்வா புயலால் பாதிக்கப்பட்ட மலையகத் தமிழர்கள் அவர்கள் தமிழர்கள்
என்பதற்காகவும், தோட்டத் தொழிலாளர்கள் காரணமாகவும், சிங்கள மொழி தெரியாதவர்கள்
என்பதாலும், சொந்த நிலம் இல்லாமையினாலும், பெருந்தோட்ட கம்பெனிகளின்
நிர்வாகத்தின் கீழ் இருப்பதாலும், கம்பனி மற்றும் அரசு நிர்வாக மட்டத்திலும்
தமது பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ள முடியாதவர்களாக தொடர்ந்தும் உள்ளனர்
என்பதுவே உண்மை. இவ்விடயம் அறிக்கையில் தெளிவாக குறிப்பிடப்படவில்லை.</p><p>
மேலும் 2021 ஆம் ஆண்டின் இறுதியில் இலங்கை வந்த ஐக்கிய நாடுகளின் நவீன
அடிமைத்தனம் தொடர்பிலான விசேட செய்தியாளர் மலையகத்தில் மேற்கொண்ட கள ஆய்வின்
பின்னர் 2022 இல் நடத்திய ஊடக சந்திப்பொன்றில் "மலையகத் தமிழர்கள் தமிழர்கள்
என்பதற்காகவும், தொழிலாளர்கள் என்பதற்காகவும் ஒடுக்கப்படுகின்றனர்" என ஊடக
சந்திப்பொன்றில் தெரிவித்தார். </p><h2>

அடிமைகளாக இருக்கும் மலையக மக்கள்</h2><p>

அவரின் ஆய்வறிக்கை ஐக்கிய நாடுகள் அவைக்கும் கொடுக்கப்பட்டதாக அறிகின்றோம். அத்தோடு சர்வதேச மன்னிப்பு சபை இவ் வருடம் (2026) ஜூன் மாதம் வெளியிட்ட
அறிக்கையில் "தென் இலங்கையில் மலையக தமிழ் தோட்டத் தொழிலாளர்கள் அடிமைகளாக
வைக்கப்பட்டுள்ளனர்" எனும் நீண்ட அறிக்கையை வெளியிட்டது.
</p><p>
 அதுவும் உண்மையே, ஆனால் அதனை இலங்கை அரசாங்கம் ஏற்றுக் கொள்ளவில்லை. வடகிழக்கில் நடந்த யுத்த குற்றங்களையே ஏற்றுக் கொள்ளாதவர்கள் இதையும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பது
நாம் அறிந்ததே.

மலையகத் தமிழர்கள் தொடர்பாக மேற்கூறப்பட்ட இரண்டு அறிக்கைகள் உள்ள போதும்
அறிக்கையின் உள்ளடக்கம் ஐக்கிய நாடுகள் உயர் ஸ்தானிகரின் அறிக்கையில்
உள்ளடக்கப்படாது ஏன்? </p><p>நாட்டுக்காக அனைத்து வகையிலும் உழைக்கும் மலையக
தமிழர்கள் இந்நாட்டில் இன்னொரு தேசிய இனமாக தமக்கே உரிய இன அடையாளத்தை
வளர்த்து பாதுகாத்துக் கொண்டிருக்கின்ற நிலையில் அவர்களை இலங்கையில் வாழும்
இன்னுமொரு இனமாக அல்லது இந்நாட்டின் பிரஜைகளாகவோ மட்டுமல்ல மனிதர்களாகவோ
இன்னும் ஏற்றுக் கொள்ளப்படாத நிலையே தொடர்கின்றது என்பதே உண்மை.
</p><p>
மேலும் நடந்து கொண்டிருக்கும் ஐ.நா மனித உரிமை பேரவை கூட்டத்தொடரில்
ஆணையாளரின் அறிக்கைக்கு பதில் அளித்து உரையாற்றிய இலங்கை பிரதிநிதி மலையகத்
தமிழர்கள் என்று குறிப்பிடாது மலையக மக்கள் என்றே குறிப்பிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/52dbe43b-7f8d-480b-a04c-6c24e4b0acba/26-6aa667bb8a7b9.webp' /></p><p>
</p><p>
அத்தோடு "அவர்களின் பிரச்சனையை தீர்ப்பதற்கு அரசாங்கம் முற்போக்காக செயல்படுகின்றது"
என குறிப்பிட்டுள்ளார்.</p><p> 


முற்போக்கு என்பதற்கு இடதுசாரி சிந்தனை கொண்ட தேசிய
மக்கள் சக்தி அரசாங்கத்தின் பிரதிநிதி கொடுக்கும் வரைவிலக்கணம் என்ன? என்று
கேட்கின்றோம்.
</p><p>
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தமது தேர்தல் காலத்தில் மலையகத் தமிழர்களுக்கு
கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற இதுவரை எந்தவிதமான ஆக்கபூர்வமான தீர்மானத்தையும் எடுக்கவில்லை.</p><h2>

53 வருட ஒப்பந்தம்</h2><p>
 இந்நிலையில் 2042 ல் முடிய போகும்
அரசாங்கத்துக்கும் பெருந்தோட்ட கம்பெனிகளுக்கும் இடையிலான ஒப்பந்தத்தில் சில
திருத்தங்களை செய்து அதை நீடிக்க உள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளமை
மலையக தமிழர்களுக்கும் அவர்களால் உருவாக்கப்பட்ட மலையகம் எனும் தேசத்துக்கும்
இடையிலான இரத்த உரிமையை மறுப்பதற்கே அன்றி வேறில்லை.
</p><p>
 அது மட்டுமல்ல மலையக
தமிழர்களின் ஒரு தொகுதியினரை தொடர்ந்து கம்பெனிகளின் அடிமைகளாகவே
வைத்திருக்கத் துடிக்கும் சிங்கள பௌத்த பேரினவாத அரசியலின் கபடத்தையே
சுட்டி நிற்கின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/35580ef3-fdbb-4dd4-ab81-3aec5cf8dd38/26-6aa667bc45fec.webp' /></p><p>

மேலும் மலையக தோட்ட வீடமைப்பு, மற்றும் உட்கட்டமைப்பு அபிவிருத்தியினை
மையமாகக் கொண்டு நல்லாட்சி காலத்தில் உருவாக்கப்பட்ட அதிகார சபையை
முடமாக்கிவிட்டு மலையகத்துக்கான புதிய அதிகார சபையை உருவாக்கப் போவதாக
ஜனாதிபதி அறிவித்துள்ளார். </p><p>

இது சிங்கள பௌத்த தீவிரவாதத்தின் அரசியலை மலையகம்
முழுவதும் வியாபிப்பதற்கான அதிகார சபையாகவே அமையும். இது மலைய தமிழர்களுக்கு
எதிரான இனவாத அதிகார சபையாகவே அமையும். 

வடக்கு கிழக்கில் மகாவலி அதிகார சபை
போன்று சிங்கள பௌத்த பேரினவாதம் மலையகத்திலும் தனது கையை நீட்டுவதற்காக
உருவாக்கப்படவே புதிய அதிகார சபை தொடர்பாக ஜனாதிபதி குறிப்பிடுகின்றார். </p><p>இது
மலையக தமிழர்களுக்கு எதிரானது என்பதே எமது நிலைப்பாடு.</p><h2>



மலையக மக்களின் பிரச்சினைக்கான தீர்வு</h2><p>
மலையகத் தமிழர்களுக்கு எதிரான சிங்கள பௌத்த ஆக்கிரமிப்பு திட்டத்தைத் தீட்டிக்
கொண்டு மலையக தமிழர்களுடைய பிரச்சினைகளை தீர்ப்பதற்கு முற்போக்கான
செயற்படுகின்றோம் என்பது மலையக தமிழர்களை மட்டுமல்ல முழு உலகத்தையும்
ஏமாற்றுவதற்கேயாகும்.</p><p> 

ஐ.நா மனித உரிமை பேரவை இது தொடர்பாக விழித்துக் கொள்ளாத விடில் இலங்கையில் மலையத் தமிழர்கள் என்போர் இல்லாமல் போய்விடும் அபாய நிலையில் உள்ளது என்பதை எச்சரிக்கையாகவே குறிப்பிடவும் வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5723101d-33ea-45bc-ab80-efb660488153/26-6aa667bced011.webp' /></p><p>
</p><p>
ஐ.நா மனித உரிமை பேரவை தொடர்ந்தும் மலைகயம் தொடர்பில் அவதானத்துடன் இருக்க
வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுப்பதோடு, அடுத்த கூட்டத் தொடரில் மலையகத்
தமிழர் தொடர்பில் விரிவான அறிக்கையை வெளியிட வேண்டுமெனவும்
எதிர்பார்க்கின்றோம்.</p><p>

 ஆனால் பேரினவாதத்தின் இன அழிப்பிற்கும் உச்சக்கட்ட
இனப்படுகொலைக்கும் நீதி கேட்டு நிற்கும் வடக்கு கிழக்கு தமிழர்களுக்கான நீதி
கிட்டாத நிலையில், மலையக தமிழர்களுக்கான நீதி என்பது எட்டா கனியாகவே
அமைந்துவிடும். </p><p>

இத்தகைய பின்புலத்தில் வடக்கு-கிழக்கு தமிழர்கள், மலையகத்
தமிழர்கள் என ஒடுக்கப்படும் தமிழர் இனங்களாக ஓரணியில் திரல்வதே காலத்தின்
கட்டாயம் என்பதை வெளிப்படுத்துகின்றோம்.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-13T09:07:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்; CPI, CPIM போட்டி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/cpim-and-cpi-to-contest-in-by-election-1789289202"></link>
            <id>https://news.lankasri.com/article/cpim-and-cpi-to-contest-in-by-election-1789289202</id>
            <summary type="text">cpim and cpi to contest in madurantakam and dharapuram by election: இடைத்தேர்தலில், தாராபுரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், மதுராந்தகத்தில் மார்க்...</summary>
            <content type="html"><![CDATA[<p>cpim and cpi to contest in madurantakam and dharapuram by election: இடைத்தேர்தலில், தாராபுரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், மதுராந்தகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் போட்டியிடுவதாக அறிவித்துள்ளன.</p><h3>

இடைத்தேர்தலில் போட்டியிட உள்ள CPI, CPIM</h3><p> 

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளுக்கும் அக்டோபர் 6 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
</p><p>
இதில் போட்டியிடுபவர்களுக்கான வேட்பாளர் பட்டியலை தவெக, திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் அறிவித்துள்ளது. </p><p>

இந்நிலையில், தவெக அரசை வெளியிலிருந்து ஆதரித்து வரும் இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் இடைதேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளன.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7598e110-cd94-46ac-b756-adafa03a36d3/26-6aa662f41b51d.webp' /></p><p> 

இடைத்தேர்தல் குறித்து இன்று நடைபெற்ற ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியன், "நாங்கள் யாருடைய கூட்டணியிலும் இல்லை. இந்த இடைத்தேர்தல் இயல்பானது அல்ல, திணிக்கப்பட்ட ஒன்று.</p><p>

ஆளுநர் ஆட்சி வந்துவிடக் கூடாது என்ற ஒரே காரணத்திற்காக, தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளித்து வருகிறோம். </p><p>

தாராபுரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், மதுராந்தகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் போட்டியிடும. எளிய உழைக்கும் மக்களின் குரல் சட்டமன்றத்தில் ஒலிக்க இடதுசாரிகளுக்கு ஆதரவு வழங்க வேண்டும்" என அறிவித்துள்ளார்.&nbsp;</p><p>திருச்சியில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆலோசனை கூட்டதிற்க்கு பிறகு பேசிய CPIM மாநில செயலாளர் பெ.சண்முகம், தவெக ஆட்சிக்கு வெளியில் இருந்து அளித்து வரும் ஆதரவு தொடரும்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b16dbacd-17c9-4b79-a99f-7891f36f027f/26-6aa664d4d1f81.webp' /></p><p>

தவெகவுக்கு ஆதரவு இல்லை என்பதால் திமுகவுக்கு ஆதரவு என்று அர்த்தம் இல்லை. இடைத்தேர்தலில் இடதுசாரிக்கு மக்கள் வாய்ப்பளிக்க வேண்டும். நாளை மறுநாள் வேட்பாளர்கள் அறிவிக்கப்படும்" என அறிவித்துள்ளார்.</p><p>நாம் தமிழர் கட்சி இன்று 2 தொகுதிகளுக்குமான வேட்பாளர்களை அறிவிக்க உள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-13T09:04:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஸ்கூட்டர்களின் SUV River Indie - பயனரின் ஒரு வருட அனுபவம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/river-indie-ev-review-after-1-year-suv-of-scooters-1789290305"></link>
            <id>https://news.lankasri.com/article/river-indie-ev-review-after-1-year-suv-of-scooters-1789290305</id>
            <summary type="text">River Indie EV customer review after 1 year: River Indie மின்சார ஸ்கூட்டரை 1 வருடம் பயன்படுத்திய நபரின் அனுபவத்தை இங்கே பார்க்கலாம்.

ஸ்கூட்டர்களின்...</summary>
            <content type="html"><![CDATA[<p>River Indie EV customer review after 1 year: River Indie மின்சார ஸ்கூட்டரை 1 வருடம் பயன்படுத்திய நபரின் அனுபவத்தை இங்கே பார்க்கலாம்.
</p><h2>
ஸ்கூட்டர்களின் SUV River Indie</h2><p>மின்சார வாகனங்கள் இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் நிலையில், ஸ்கூட்டர்களின் SUV என அழைக்கப்படும் River Indie கடந்த ஒரு வருடமாக பயணிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3812fddf-5c05-48de-9ba7-e9f799ebb20b/26-6aa6674440ea9.webp' /></p><p>டெல்லியில் சுமார் ரூ.1,60,414 விலையில் அறிமுகமான இந்த ஸ்கூட்டர், அதிக சேமிப்பு வசதி, வலுவான வடிவமைப்பு மற்றும் நீண்ட பயண திறன் காரணமாக பலரின் விருப்பமாக மாறியுள்ளது.</p><h2>

வசதிகள்</h2><p>

River Indie-யின் 787 mm உயரம் கொண்ட இருக்கை, 160 mm ground clearance, மற்றும் 14 inch alloy wheels ஆகியவை நகரப் பயணத்திலும், சாலையின் தடங்கல்களிலும் சுலபமாகச் செல்ல உதவுகின்றன.</p><p> இருவர் தாராளமாக அமரக்கூடிய நீளமான இருக்கை, பரந்த footboard, கூடுதல் foot pegs ஆகியவை நீண்ட பயணத்தில் வசதியை அதிகரிக்கின்றன.</p><p></p><p>
</p><h2>
பேட்டரி &amp; ரேஞ்ச்: </h2><p>

இந்த ஸ்கூட்டர் 4 kWh battery-யை பயன்படுத்துகிறது. நிறுவனம் கூறும் 163 km IDC range இருந்தாலும், நடைமுறை பயணத்தில் சுமார் 110 km வரை கிடைக்கிறது. Eco, Ride, Rush என மூன்று பயண முறைகள் உள்ளன. Rush mode-ல் அதிகபட்சம் 90 km/h வேகம் பெற முடிகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0a835386-4547-4b58-9e0f-0fc656a64ffe/26-6aa66743885f2.webp' /></p><p>
</p><h2>
பராமரிப்பு &amp; செலவு:</h2><p> 
 
மாதாந்திர மின்சார செலவு சுமார் ரூ.400 மட்டுமே; பெட்ரோல் ஸ்கூட்டருடன் ஒப்பிடும்போது இது பெரிய சேமிப்பு. Engine oil, clutch, gearbox போன்ற பராமரிப்பு தேவைகள் இல்லாததால், பராமரிப்பு எளிதாகிறது.
</p><h2>
சேமிப்பு வசதி: </h2><p> 
43 லிட்டர் under-seat storage, 12 லிட்டர் glove box, பெரிய footboard, bag hooks, USB charging, reverse assist போன்ற வசதிகள் பயணிகளுக்கு மிகுந்த உதவியாக உள்ளன.

ஆனால் Bluetooth connectivity, navigation போன்ற மேம்பட்ட தொழில்நுட்பங்கள் இல்லாதது குறையாகும்.</p><p></p><h2>

நன்மைகள்:</h2><ul><li>

43 லிட்டர் under-seat storage
</li><li>
பரந்த footboard மற்றும் luggage-friendly design
</li><li>
14 inch wheels மூலம் நல்ல stability
</li><li>
தினசரி பயணத்திற்கு ஏற்ற வலுவான வடிவமைப்பு
</li></ul><h2>
குறைபாடுகள்:
</h2><ul><li>
143 kg எடை, கையால் தள்ளும்போது சிரமம்</li><li>

Bluetooth connectivity, navigation வசதி இல்லை
</li></ul><p>
River Indie, தினசரி பயணத்திற்கும், கூடுதல் சுமைகளை ஏற்றிச் செல்லவும் ஏற்ற ஒரு வலுவான மின்சார ஸ்கூட்டர். ஆனால், எடை மற்றும் சில தொழில்நுட்ப குறைகள் வாங்குபவர்களுக்கு சிந்திக்க வேண்டிய அம்சங்களாகும்.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-13T09:01:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரபல வர்த்தக நிலைய காட்சியறைகளில் பாதணிகள் மோசடி விற்பனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/fraudulent-footwear-sales-in-mall-showrooms-1789288396"></link>
            <id>https://tamilwin.com/article/fraudulent-footwear-sales-in-mall-showrooms-1789288396</id>
            <summary type="text">இலங்கையின் பிரபல ஆடை மற்றும் நவநாகரிக வர்த்தக நிலைய தொடர் ஒன்றின் காட்சியறைகளில் வெளிநாட்டு தயாரிப்பு பாதணிகள் மோசடியாக விற்பனை செய்யப்பட்ட சம்பவம் தொ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் பிரபல ஆடை மற்றும் நவநாகரிக வர்த்தக நிலைய தொடர் ஒன்றின் காட்சியறைகளில் வெளிநாட்டு தயாரிப்பு பாதணிகள் மோசடியாக விற்பனை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
</p><p>
குறித்த வர்த்தக நிலையத் தொடரின் காட்சியறை ஒன்றில் கொள்வனவு செய்யப்பட்ட பாதணிகளுக்கான பற்றுச்சீட்டுகளை அடிப்படையாகக்கொண்டு மேற்கொள்ளப்பட்ட விரிவான தொடர் விசாரணையின் பின்னர், 2026 செப்டெம்பர் 11 அன்று தெஹிவளை, கவுடான பகுதியில் இரகசியமாக இயங்கி வந்த பாதணி தயாரிப்பு நிலையம் ஒன்றை நுகர்வோர் விவகார அதிகாரசபையின் புலனாய்வு அதிகாரிகள் சுற்றிவளைத்துள்ளனர்.</p><p>

சீன எழுத்துக்கள் மற்றும் “Made in China” என்ற அடையாளத்துடன் கூடிய பெட்டியில் பாதணிகள் வைக்கப்பட்டிருந்ததால், அதிக விலை கொடுத்து வாங்கும் பாதணிகள் இறக்குமதி செய்யப்பட்டவை என நுகர்வோர் நம்பக்கூடிய நிலையில் பொதிசெய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டிருந்தன.</p><h2>பாதணிகளுக்கு பொருந்தும் இறக்குமதி வரி</h2><p> எனினும் விசாரணையில் வெளிப்பட்ட தகவல்களின் அடிப்படையில், முடிவுற்ற பாதணிகளுக்கு பொருந்தும் இறக்குமதி வரிகளைத் தவிர்க்கும் நோக்கில், பாதணிகளின் அடிப்பகுதிகள் மற்றும் ஏனைய பாகங்கள் மூலப்பொருட்களாக வகைப்படுத்தப்பட்டு தனித்தனியாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e9033955-a761-4d62-a867-e22e845661f4/26-6aa6664f186b2.webp' /></p><p> </p><p>பின்னர் அவை தெஹிவளை, கவுடான பகுதியில் உள்ள இரகசிய இடமொன்றில் ஒன்றிணைக்கப்பட்டு ஒட்டப்பட்டு முழுமையான பாதணிகளாக தயாரிக்கப்பட்டதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p>இவ்வாறு இலங்கையில் ஒன்றிணைக்கப்பட்ட பாதணிகளில் உண்மையான உற்பத்தியாளரின் பெயர் மற்றும் முகவரி குறிப்பிடப்படாமல் “Made in China” என அடையாளமிடப்பட்டு, பிரபல வர்த்தக நிலையத் தொடர்களுக்கு விநியோகிக்கப்பட்டதாகவும் விசாரணைகளில் தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p>

இத்தகைய நடவடிக்கைகள் பொருளின் உண்மையான உற்பத்தி மூலத்தைப் பற்றி நுகர்வோரை தவறாக வழிநடத்தக்கூடும்.</p><h2>சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை&nbsp;</h2><p> </p><p>மேலும் பாதணிகளில் குறைபாடு ஏற்பட்டால் அதற்குப் பொறுப்பான உண்மையான உற்பத்தியாளரை அடையாளம் காண்பதும் சிரமமாகலாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3dffdde2-ebb4-48bc-a5c8-fef8a5f84b42/26-6aa6664fc86b3.webp' /></p><p> </p><p>அதேவேளை, சட்டபூர்வமாக வரிகளைச் செலுத்தி நியாயமான முறையில் வர்த்தகத்தில் ஈடுபடும் உள்ளூர் உற்பத்தியாளர்கள் மற்றும் வர்த்தகர்களுக்கும் இது நியாயமற்ற வர்த்தகப் போட்டியை ஏற்படுத்தக்கூடும் என்று நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.
</p><p>
இந்த சுற்றிவளைப்பின்போது சுமார் 1,000 ஜோடி பாதணிகள் மற்றும் அவற்றை தயாரிக்க/ஒன்றிணைக்க பயன்படுத்தப்பட்ட மூலப்பொருட்கள் அதிகாரிகளால் பொறுப்பேற்கப்பட்டுள்ளன.</p><p> இது தொடர்பான மேலதிக விசாரணைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. விசாரணைகள் நிறைவடைந்த பின்னர் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.</p><p>&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-09-13T09:01:10+00:00</updated>
        </entry>
    </feed>
