<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-09-07T09:20:10+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[திமுக எம்.பியின் ஹொட்டலில் அடைத்து மிரட்டப்பட்ட 2 எம்.எல்.ஏ.க்கள் - சட்டமன்றத்தில் சொன்ன அமைச்சர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/aadhav-says-2-iuml-mla-s-hostage-in-dmk-mp-hotel-1788772387"></link>
            <id>https://news.lankasri.com/article/aadhav-says-2-iuml-mla-s-hostage-in-dmk-mp-hotel-1788772387</id>
            <summary type="text">minister aadhav arjuna satys2 IUML mla&#039;s hostage in dmk mp hotel: 2 IUML எம்.எல்.ஏ.க்கள் அடைத்து வைக்கப்பட்ட ஹொட்டல் திமுக எம்பி ஜெகத்ரட்சகனுடையது என ...</summary>
            <content type="html"><![CDATA[<p>minister aadhav arjuna satys2 IUML mla's hostage in dmk mp hotel: 2 IUML எம்.எல்.ஏ.க்கள் அடைத்து வைக்கப்பட்ட ஹொட்டல் திமுக எம்பி ஜெகத்ரட்சகனுடையது என சட்டமன்றத்தில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசியுள்ளார். </p><h3>

ஹொட்டலில் அடைத்து மிரட்டப்பட்ட 2 எம்.எல்.ஏ.க்கள்
</h3><p>
தமிழ்நாடு சட்டமன்றத்தில் பேசிய வாணியம்பாடி எம்எல்ஏ சையத் பாருக் பாஷா, "திருவண்ணாமலை பொதுக் கூட்டத்தில் ஐயூஎம்எல் எம்எல்ஏக்களை திமுகவினர் மிரட்டி கோடி கோடியாக பணம் கொடுப்பதாகவும் அமைச்சர் பதவி கொடுப்பதாகவும் கூறினர் என நான் கூறியதை திமுகவினர் திரித்து, தவெக குதிரை பேரத்தில் ஈடுபட்டதாக கூறி வருகிறார்கள்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/61f06031-df84-42fb-8357-dee01b611687/26-6a9e802657bdf.webp' /></p><p> 

நான் யாரையும் தவறாக பேசவில்லை. மே 7ஆம் தேதி அதிமுக தலைவரை முதல்வராக்க திமுக திட்டமிட்டிருந்தது. அதை எங்கள் தலைவர் காதர் மொய்தீன் ஏற்க மறுத்தார். அவர் பேட்டியில் சொன்னதைதான் நான் எங்கள் கட்சி கூட்டத்தில் சொன்னேன்" என பேசினார்.&nbsp;</p><p></p><p>

இதனைத்தொடர்ந்து பேசிய சிறுபான்மை நலத் துறை அமைச்சர் ஷாஜகான், "இந்த விவகாரத்தில் அதிமுகவுக்கு எந்த சம்பந்தமும் கிடையாது. மே 7 ஆம் திகதி, அதிமுக தலைவரை முதல்வராக்கலாம் என திமுகவினர் முடிவு செய்து எங்கள் தலைவர் காதர் மொய்தீனிடம் சொன்னது.
</p><p>
அப்போது பாஜக கூட்டணியில் இருக்கும் அதிமுக ஆட்சி செய்ய ஆதரிக்க மாட்டோம் என எங்கள் தலைவர் சொன்னார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f51bbaf0-203f-41ba-9a90-1b1eeafd0c2c/26-6a9e8025a36df.webp' /></p><p>இதையடுத்து முஸ்லீம் லீக் எம்.எல்.ஏ.க்கள் இருவரையும் மே 8ஆம் தேதி ஒரு ஹொட்டலில் அடைத்து வைத்திருந்தார்கள்.

எங்களை அடைத்து வைத்தது யார்? மிரட்டி காவல் காத்தது யார், நாங்கள் வெளிப்படையாக பேசினால் யாருமே அரசியல் செய்ய முடியாது. ஆளுநர் ஆட்சி வந்துவிடக் கூடாது என்பதால்தான் தவெகவுக்கு நாங்கள் ஆதரவு அளித்தோம்" என பேசினார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/71e22161-85d4-4cc0-9214-acc86905dbee/26-6a9e8024eb506.webp' /></p><p> 

இதனை தொடர்ந்து பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, "IUML எம்.எல்.ஏ.க்களை அடைத்து வைக்கப்பட்ட ஹொட்டல் திமுக எம்பி ஜெகத்ரட்சகனுடையது. 2 எம்.எல்.ஏ.க்களை அடைத்து வைத்தது குறித்து விசாரணை நடத்தப்படும்" என் பேசியுள்ளார்.&nbsp;&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-07T09:17:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[குமார ஜயகொடி மீதான ஊழல் வழக்கில் சாட்சியங்களுக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/corruption-allegations-against-kumara-jayakody-1788771840"></link>
            <id>https://tamilwin.com/article/corruption-allegations-against-kumara-jayakody-1788771840</id>
            <summary type="text">



அநுர அரசாங்கத்தின் முன்னாள் எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் வழக்கில் மேலதிக சாட்சியங்களை விசாரணை செய்யுமாறு கொழும்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>



அநுர அரசாங்கத்தின் முன்னாள் எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் வழக்கில் மேலதிக சாட்சியங்களை விசாரணை செய்யுமாறு கொழும்பு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. </p><p>

இன்று(07.06.2026) வழக்கு விசாரணைக்கு அழைக்கப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. </p><p>

அத்துடன், நீதிமன்றத்தின் முன்பாக சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d20f569f-d80b-4bed-aa39-00da1e343177/26-6a9e807d33e0a.webp' /></p><p> 

முன்னாள் எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி மீது ஊழல் குற்றச்சாட்டுகள் இலஞ்ச ஆணைக்குழு தாக்கல் செய்த வழக்கில் எதிர்வரும் அக்டோபர் 5ஆம் திகதி மேலதிக சாட்சியங்களை விசாரணை செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.</p><p></p><p></p><p><br></p><p> 

</p>]]></content>
            <updated>2026-09-07T09:14:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Fathima</name>
            </author>
            <title type="text"><![CDATA[முதலமைச்சர் விஜய் குறிப்பிட்ட ரத்தீஷ் என்பவர் யார்? காயத்ரி ரகுராம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/who-is-rathish-gayathri-raghuram-replies-1788772326"></link>
            <id>https://ibctamilnadu.com/article/who-is-rathish-gayathri-raghuram-replies-1788772326</id>
            <summary type="text">சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் பதிலுரையின் மீது ரத்தீஷ் என்பவரை குறிப்பிட்டு பேசினார்.இதுகுறித்து பதிலுக்கு எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டால...</summary>
            <content type="html"><![CDATA[<p>சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் பதிலுரையின் மீது ரத்தீஷ் என்பவரை குறிப்பிட்டு பேசினார்.</p><p>இதுகுறித்து பதிலுக்கு எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின்,&nbsp; அவரிடம் ஆதாரம் உள்ளதா? உங்கள் நண்பர் விஷ்ணு ரெட்டி என்ன பொறுப்பில் இருக்கிறார்? அவரது மச்சான் சுஜய் ரெட்டி, அணில் ரெட்டி என்ன பொறுப்பில் இருக்கின்றனர்? அரசு கனிம வளங்களை கையாளும் பொறுப்பு அவர்களிடம் உள்ளது, அதற்கான ஆதாரத்தை விரைவில் வெளியிடுவேன் என தெரிவித்தார்.</p><p>இந்நிலையில் ரத்தீஷ் குறித்து காயத்ரி ரகுராம் வெளியிட்டுள்ள பதிவில், இந்த ரத்தீஷ் என்பவர் யார்? இவர் தற்போதைய முதல்வர் ஜோசப் விஜய்யின் நண்பர் என்று கூறப்படும் சுஜய் ரெட்டியின் நெருங்கிய நண்பர் எனக் கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2620ec02-ab26-475b-9aab-eb6e921e24aa/26-6a9e804a8b184.webp' /><br></p><p> சுஜய் ரெட்டி, முன்னாள் துணை முதல்வர் உதயநிதியுடனும் முன்பு நெருக்கமாக இருந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் தவெக ஆட்சிக்கு வந்த பிறகு அந்த உறவு மாறிவிட்டதாகவும் கூறப்படுகிறது. </p><p>மேலும், ரத்தீஷுடன் இணைந்து முடிவுகளில் செல்வாக்கு செலுத்தியதோடு, நிதி ரீதியாகவும் பலன் பெற்றதாகக் கூறப்படும் ஒரு அதிகார மையத்தின் ஒரு பகுதியாக சுஜய் ரெட்டி இருந்ததாகவும் குற்றச்சாட்டுகள் உள்ளன.
</p><p>
ரத்தீஷ் மீது தவறுக்காக நடவடிக்கை எடுக்கப்படுகிறதென்றால், சுஜய் ரெட்டியிடம் ஏன் கேள்வி கேட்கப்படவில்லை அல்லது அவர்மீதும் விசாரணை நடத்தப்படவில்லை? </p><p>ரத்தீஷ் மீதான குற்றச்சாட்டுகள் தீவிரமானவை என்றால், அவருடைய நெருங்கிய தொடர்புகளான சுஜய் ரெட்டி, அண்ணாமலை (செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்கின் நண்பர்), காங்கிரஸ் அரசியல் ஆலோசகர் சுனில் கனுகோலு மற்றும் அதே அதிகார வலையமைப்பின் மூலம் பலன் பெற்றிருக்கக்கூடிய மற்ற அனைவரும் ஏன் விசாரிக்கப்படக்கூடாது?
</p><p>
அன்புள்ள முதல்வரே, நீங்கள் உண்மையிலேயே நடவடிக்கை எடுப்பதில் தீவிரமாக இருந்தால், உங்கள் நண்பர்களான சுஜய் ரெட்டி, அண்ணாமலை, காங்கிரஸ் அரசியல் ஆலோசகர் சுனில் கனுகோலு மற்றும் பிற நெருங்கிய தொடர்புகளுக்கு எந்தவிதமான சிறப்பு சலுகையும் வழங்கப்படவில்லை என்பதை உறுதி செய்யுங்கள். </p><p>இப்போது சுஜய் ரெட்டி தவெக-வின் அனைத்து வணிகப் பரிவர்த்தனைகளிலும் முழுமையாக ஈடுபட்டுள்ளார். அவர்களின் அரசியல் அல்லது தனிப்பட்ட தொடர்புகளைப் பொருட்படுத்தாமல், அனைவருக்கும் ஒரே அளவிலான பொறுப்புக்கூறலும் நீதியும் இருக்க வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.</p>]]></content>
            <updated>2026-09-07T09:13:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[துலீப் இறுதிப்போட்டியில் இரட்டைசதம் அடித்த இஷான் கிஷன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/ishan-kishan-250-runs-in-duleep-trophy-2026-1788771921"></link>
            <id>https://news.lankasri.com/article/ishan-kishan-250-runs-in-duleep-trophy-2026-1788771921</id>
            <summary type="text">Ishan Kishan double century in duleep trophy: துலீப் டிராபி இறுதிப்போட்டியில் கிழக்கு மண்டல அணித்தலைவர் இஷான் கிஷன் இரட்டை சதம் விளாசினார். 

சேப்பா...</summary>
            <content type="html"><![CDATA[<p><p>Ishan Kishan double century in duleep trophy: துலீப் டிராபி இறுதிப்போட்டியில் கிழக்கு மண்டல அணித்தலைவர் இஷான் கிஷன் இரட்டை சதம் விளாசினார்.</p><p> 

சேப்பாக்கத்தில் நடந்து வரும் துலீப் டிராபி இறுதிப்போட்டியில், கிழக்கு மண்டல அணித்தலைவர் இஷான் கிஷன் அதிரடியாக இரட்டை சதம் விளாசினார்.&nbsp; </p><h2>குமார் குஷாக்ரா </h2><p>

கிழக்கு மண்டலம் மற்றும் தெற்கு மண்டலம் அணிகளுக்கு இடையிலான துலீப் டிராபி இறுதிப்போட்டி சென்னை சேப்பாக்கத்தில் நடந்து வருகிறது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b76592a6-fc15-4552-a83d-6a19caca780e/26-6a9e7fd41def4.webp' />&nbsp;</p><p></p><p>

முதல் இன்னிங்ஸில் துடுப்பாட்டத்தை தொடங்கிய கிழக்கு மண்டல அணி இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடர்ந்து வருகிறது.</p><p>

வைபவ் சூர்யவன்ஷி 44 ஓட்டங்களும், அபிமன்யு ஈஸ்வரன் 72 ஓட்டங்களும், ஷிகார் மோகன் 85 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.</p><h2>இஷான் கிஷன் இரட்டை சதம்</h2><p>
</p><p>
அதிரடி ஆட்டத்தில் மிரட்டிய குமார் குஷாக்ரா 132 பந்துகளில் 5 சிக்ஸர், 8 பவுண்டரிகளுடன் 101 ஓட்டங்கள் விளாசி அவுட் ஆனார்.</p><p> </p>மறுமுனையில் ருத்ரதாண்டவம் ஆடி வரும் அணித்தலைவர் இஷான் கிஷன் (Ishan Kishan) இரட்டை சதம் அடித்தார்.</p><p>மொத்தம் 301 பந்துகளை எதிர்கொண்ட இஷான் கிஷன் 7 சிக்ஸர்கள், 27 பவுண்டரிகளுடன் 250 ஓட்டங்கள் விளாசினார்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4c3d97b0-c9e1-4bbc-b68a-bec4cd364a69/26-6a9e7fd4cfc6a.webp' /></p><p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p></p>]]></content>
            <updated>2026-09-07T09:08:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[கத்தார் ஏர்வேஸ் விமானிகள் எவ்வளவு சம்பாதிக்கிறார்கள்... முழுத் தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/qatar-airways-pilots-earn-1788772049"></link>
            <id>https://news.lankasri.com/article/qatar-airways-pilots-earn-1788772049</id>
            <summary type="text">How Much Do Qatar Airways Pilots Earn: கத்தார் ஏர்வேஸ் விமானிகள் எவ்வளவு சம்பாதிக்கிறார்கள்?
2026-ஆம் ஆண்டில் கத்தார் ஏர்வேஸ் விமானிகள், விமானத் துறை...</summary>
            <content type="html"><![CDATA[<p>How Much Do Qatar Airways Pilots Earn: கத்தார் ஏர்வேஸ் விமானிகள் எவ்வளவு சம்பாதிக்கிறார்கள்?
</p><p>2026-ஆம் ஆண்டில் கத்தார் ஏர்வேஸ் விமானிகள், விமானத் துறையிலேயே மிக அதிக சம்பளம் பெறுபவர்களாக உள்ளனர்.</p><h2>கவர்ச்சிகரமான தேர்வாக</h2><p>
</p><p>அனுபவம் வாய்ந்த விமானி ஒருவர் ஆண்டுக்கு QAR 1.6 மில்லியன் (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 4.14 கோடி) வரை சம்பாதிக்கிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/68bd3940-58c1-4d95-ae8b-d154496ffa4b/26-6a9e7ed362a03.webp' /></p><p> </p><p>இதற்கிடையில், முதல் அதிகாரிகள் (First officers) தங்கள் அனுபவம், விமானத்தின் வகை மற்றும் பறக்கும் நேரம் ஆகியவற்றைப் பொறுத்து ஆண்டுக்கு 660,000 கத்தார் ரியால் (தோராயமாக ரூ. 1.71 கோடி) வரை வருமானம் ஈட்ட முடியும். </p><p>இந்தப் புள்ளிவிவரங்கள், சர்வதேச விமானப் பயண வாய்ப்புகளைத் தேடும் விமானப் போக்குவரத்துத் துறையினருக்கு, கத்தார் ஏர்வேஸில் உள்ள விமானிப் பணிகளை ஒரு கவர்ச்சிகரமான தேர்வாக ஆக்குகின்றன. </p><p>இந்த விமான நிறுவனம் தோஹாவைத் தலைமையிடமாகக் கொண்டு, ஐரோப்பா, ஆசியா, ஆப்பிரிக்கா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா மற்றும் ஓசியானியா ஆகிய பகுதிகளில் விமான சேவைகளை இயக்குகிறது.</p><p></p><p> </p><p>வெளியாகியுள்ள தரவுகளின் அடிப்படையில், கத்தார் ஏர்வேஸின் விமானிகளுக்கான சலுகைத் தொகுப்புகள் அடிப்படைச் சம்பளத்தையும் தாண்டியவை.</p><p> விமானிகளுக்கான வீட்டு வசதி, பயணச் சலுகைகள், போக்குவரத்து உதவி மற்றும் சர்வதேசப் பயணங்களின் இடையிலான தங்குதல்களுக்கான படிகள் ஆகியவற்றையும் பெறலாம். கத்தாரின் வேலைவாய்ப்பு நடைமுறையின் கீழ், இவர்களது ஊதியம் வரிக்கு உட்படாததுமாகும். </p><p>கத்தார் ஏர்வேஸில் பணிபுரியும் ஃபர்ஸ்ட் ஆபீசர்கள் (First officers), 2026-ஆம் ஆண்டில் ஆண்டுக்கு 3,60,000 கத்தார் ரியால் (சுமார் ரூ. 93 லட்சம்) முதல் 6,60,000 கத்தார் ரியால் (சுமார் ரூ. 1.71 கோடி) வரை வருமானம் ஈட்ட முடியும்.
</p><p>புதிதாகப் பணியில் சேரும் first officers பொதுவாக ஊதிய வரம்பின் குறைந்தபட்ச அளவிலேயே ஊதியம் பெறுகின்றனர். அதிக அனுபவம் வாய்ந்தவர்கள் மற்றும் நீண்ட தூர விமானங்களை இயக்கும் விமானிகள் அதிக வருமானம் ஈட்ட முடியும்; குறிப்பாக, மாதாந்திர விமான இயக்க நேரம் அதிகமாக இருக்கும்போது இது சாத்தியமாகும்.</p><h2>ஊதிய வரம்பின் உயர் நிலை</h2><p> </p><p>கத்தார் ஏர்வேஸ் விமான நிறுவனம் தொழில் ரீதியான முன்னேற்றத்திற்கான வாய்ப்புகளையும் வழங்குகிறது. அனுபவம் பெறும்போது, ​​'ஃபர்ஸ்ட் ஆபீசர்'கள் உயர் பொறுப்புகளுக்குச் செல்லவும், இறுதியில் விமானி (Captain) பதவிகளை அடையவும் முடியும். </p><p>கத்தார் ஏர்வேஸ் விமானிகள் ஆண்டுக்கு 9,00,000 கத்தார் ரியால் (சுமார் ரூ. 2.33 கோடி) முதல் 1.6 மில்லியன் கத்தார் ரியால் (சுமார் ரூ. 4.14 கோடி) வரை வருமானம் ஈட்டக்கூடும் என்று கூறப்படுகிறது. </p><p>விமானத்தின் வகை, பணி மூப்பு மற்றும் பறக்கும் நேரம் ஆகியவை இறுதித் தொகையைத் தீர்மானிப்பதில் தாக்கத்தை ஏற்படுத்தலாம். ஏர்பஸ் A350, ஏர்பஸ் A380, போயிங் 777 மற்றும் போயிங் 787 போன்ற விமானங்களை இயக்கும் விமானிகள், ஊதிய வரம்பின் உயர் நிலையில் இருக்கக்கூடும். </p><p>பயிற்சி மற்றும் நிர்வாகப் பொறுப்புகள் போன்ற பணிகளுக்காகச் சில விமானிகள் கூடுதல் ஊதியத்தையும் பெறுகிறார்கள். கத்தார் ஏர்வேஸ் விமானிகள் நிறுவனத்தின் தங்குமிட வசதி அல்லது வீட்டு வசதிக்கான உதவி, மருத்துவ மற்றும் காப்பீட்டுப் பாதுகாப்பு, போக்குவரத்துச் சலுகைகள் மற்றும் தகுதியுள்ள குடும்ப உறுப்பினர்களுக்கான சலுகை விலையிலான பயண வசதி ஆகியவற்றைப் பெறுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/87967d81-76a7-4c8b-a59a-949d254017f8/26-6a9e7ed4211a3.webp' /></p><p> </p><p>சர்வதேச விமானங்களை இயக்கும்போது விமானிகளுக்கு 'லேஓவர்' (layover) எனப்படும் இடைவேளைக் காலப் படிகளும் வழங்கப்படுகின்றன. மேலும், கத்தார் ஏர்வேஸ் நிறுவனம் வழக்கமான சிமுலேட்டர் (simulator) பயிற்சியையும் தொழில் வளர்ச்சிக்கான வாய்ப்புகளையும் வழங்குகிறது. </p><p>கத்தார் ஏர்வேஸ் நிறுவனம் ஏர்பஸ் மற்றும் போயிங் ரக விமானங்களின் பெரிய தொகுப்பை இயக்குகிறது. இதன் விமானத் தொகுப்பில் 27 ஏர்பஸ் A320-200, ஆறு A321neo, ஐந்து A330-200, பத்து A330-300, 34- A350-900 மற்றும் 28- A350-1000 ரக விமானங்கள் அடங்கும். </p><p>இது எட்டு ஏர்பஸ் A380-கள், ஏழு போயிங் 777-200LR-கள், 57 போயிங் 777-300ER-கள், 32 போயிங் 787-8-கள் மற்றும் 27 போயிங் 787-9-களையும் இயக்குகிறது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-07T09:04:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வழக்கை வாபஸ் பெற்ற யோஷித ராஜபக்ஷ]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/yoshitha-rajapaksa-withdrew-the-case-1788771988"></link>
            <id>https://jvpnews.com/article/yoshitha-rajapaksa-withdrew-the-case-1788771988</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;நிதி மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் தமக்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள வழக்கின் சதித்திட்டக் குற்றச்சாட்டைத் தொடர்வதைத் தடுக்கும் உத்தரவைப் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;நிதி மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் தமக்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள வழக்கின் சதித்திட்டக் குற்றச்சாட்டைத் தொடர்வதைத் தடுக்கும் உத்தரவைப் பிறப்பிக்குமாறு கோரி, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷ தாக்கல் செய்த மேன்முறையீட்டை இன்று (07) உயர் நீதிமன்றத்தில் அவர் வாபஸ் பெற்றுக்கொண்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f290672e-047c-451b-93b6-6a684b331581/26-6a9e7e961b3ac.webp' /></p><p> </p><p>

குறித்த விடயம் தொடர்பில் எதிர்காலத்தில் மீண்டும் மேன்முறையீடு செய்ய நேரிட்டால், இந்த விடயத்தை எழுப்புவதற்கான உரிமையைத் தக்க வைத்துக் கொண்டு மேன்முறையீட்டை வாபஸ் பெற உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-07T09:03:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[மிசிசாகாவில் இரயில் விபத்து: லேக்சோர் வெஸ்ட் இரயில் சேவைகள் பாதிப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/significant-delays-on-lakeshore-west-line-1788768552"></link>
            <id>https://canadamirror.com/article/significant-delays-on-lakeshore-west-line-1788768552</id>
            <summary type="text">&amp;nbsp;கனடாவின் மிசிசாகா பகுதியில் சனிக்கிழமை இரவு நபரொருவர் ஜி.ஓ இரயிலில் மோதி விபத்துக்குள்ளானதை அடுத்து, லேக்சோர் வெஸ்ட் வழித்தடத்தின் ஒரு பகுதி சேவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கனடாவின் மிசிசாகா பகுதியில் சனிக்கிழமை இரவு நபரொருவர் ஜி.ஓ இரயிலில் மோதி விபத்துக்குள்ளானதை அடுத்து, லேக்சோர் வெஸ்ட் வழித்தடத்தின் ஒரு பகுதி சேவை தற்காலிகமாக முடங்கியது.</p><p>
இதன் காரணமாக போர்ட் குரெடிட் மற்றும் எக்சிபிஷன் நிலையங்களுக்கு இடையிலான இரயில் சேவைகள் இடைநிறுத்தப்பட்டன.
</p><p>ஃபோர்த் வீதிக்கு தெற்கே உள்ள ஒக்டன் அவென்யூ இரயில் பாதைக் கடவையில் இரவு 8:00 மணியளவில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9fc86750-9edb-440a-8c5b-251fc9b508f0/26-6a9e712a2000a.webp' /></p><p> </p><p>விபத்துக்கான பின்னணி குறித்த தகவல்கள் உடனடியாக வெளியாகவில்லை.
</p><p>லேக்சோர் வெஸ்ட் பாதையில் பெரும் சேவைத் தாமதம் ஏற்பட்டது.
பயணிகளின் வசதிக்காக போர்ட் குரெடிட் மற்றும் கிப்ளிங் நிலையங்களுக்கு இடையே விரைவுப் பேருந்து சேவைகள் இயக்கப்பட்டன.</p><p>
இச்சம்பவத்தின் தாக்கம் காரணமாக லேக்சோர் ஈஸ்ட் வழித்தடத்தின் இரண்டு இரயில் பயணங்களும் ரத்து செய்யப்பட்டன.</p><p>
துப்புரவு மற்றும் விசாரணைப் பணிகளைத் தொடர்ந்து, இரவு 10:00 மணிக்குச் சற்று முன்னர் வழமையான இரயில் சேவைகள் மீண்டும் இயல்பு நிலைக்குக் கொண்டுவரப்பட்டன.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-07T09:00:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Tony</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலகம் முழுவதும் மெகா ஹிட், ஆனால் தமிழகத்தில் படுதோல்வியா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/vishwanath-and-sons-tamilnadu-box-office-1788771414"></link>
            <id>https://cineulagam.com/article/vishwanath-and-sons-tamilnadu-box-office-1788771414</id>
            <summary type="text">விஸ்வநாத் &amp;amp; சன்ஸ்

சூர்யா நடிப்பில், வெங்கி அட்லூரி இயக்கத்தில் பிரம்மாண்ட எதிர்பார்ப்புடன் வெளிவந்த படம் விஸ்வநாத் அண்ட் சன்ஸ். இப்படம் ரசிகர்க...</summary>
            <content type="html"><![CDATA[<h2>விஸ்வநாத் &amp; சன்ஸ்
</h2><p>
சூர்யா நடிப்பில், வெங்கி அட்லூரி இயக்கத்தில் பிரம்மாண்ட எதிர்பார்ப்புடன் வெளிவந்த படம் விஸ்வநாத் அண்ட் சன்ஸ். இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c490b7c4-ee55-4e7e-b766-bbeecbea3122/26-6a9e7c59317fd.webp' /></p><p>இப்படம் உலகம் முழுவதும் ரூ. 220 கோடி வரை வசூல் செய்திருக்கும் என கூறப்படுகிறது. அதிலும் தெலுங்கில் மட்டும் இப்படம் ரூ. 80 கோடி வசூலை தாண்டியிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p></p><h2>

தமிழகத்தில் படுதோல்வியா!!
</h2><p>
இந்நிலையில், ரிலீஸ் செய்த அனைத்து இடங்களிலும் மெகா ஹிட் ஆன <a href="https://www.youtube.com/watch?v=JTHZCJ8Rhxg&amp;t=3s" target="_blank">விஸ்வநாத் </a>அண்ட் சன்ஸ், தமிழகத்தில் மட்டும் படுதோல்வி என்று கூறப்படுகிறது. ஏனெனில், இந்த படம் தமிழகத்தில் ரூ. 100 கோடி வசூல் செய்யும் என எதிர்பார்த்த நிலையில் தற்போது 60+ கோடி தான் வசூல் செய்துள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/87ffe2a1-596f-453b-962c-1aed50a31023/26-6a9e7c59df9a0.webp' /></p><p>அதனால் தமிழகத்தில் விநியோகஸ்தர்களுக்கு இந்த படம் நஷ்டத்தை கொடுத்து இருக்கலாம் என பாக்ஸ் ஆபிஸ் நிபுணர்கள் கூறுகின்றனர். அதோடு சூர்யாவின் அடுத்த படம் தீபாவளி விருந்தாக வரும் நிலையில், கண்டிப்பாக அந்த படம் தமிழகத்தில் ரூ. 100 கோடி வசூலை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p>]]></content>
            <updated>2026-09-07T09:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்க மியாமி விமான நிலையத்தில் விபத்து - 5 பேர் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/accident-at-miami-airport-in-us-1788771395"></link>
            <id>https://tamilwin.com/article/accident-at-miami-airport-in-us-1788771395</id>
            <summary type="text">அமெரிக்க மியாமி சர்வதேச விமான நிலையத்தில் அமேசான் நிறுவனத்தின் சரக்கு விமானம் ஒன்று ஓடுபாதையை விட்டு விலகிச் சென்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்க மியாமி சர்வதேச விமான நிலையத்தில் அமேசான் நிறுவனத்தின் சரக்கு விமானம் ஒன்று ஓடுபாதையை விட்டு விலகிச் சென்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இந்த விபத்து நேற்று(06.09.2026) இடம்பெற்றுள்ளதுடன், விபத்தில் சிக்கி, 5 பேர் உயிரிழந்துள்ளனர். </p><h2>

32 ஆண்டுகள் பழமையான விமானம் விபத்து</h2><p>
மேலும் சிலர் காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


புவேர்ட்டோ ரிக்கோவின் சான் ஜுவானில் இருந்து வந்த விமானம்,
தரையிறங்கும்போது ஓடுபாதையைத் தாண்டிச் சென்று அருகிலுள்ள சாலையில் சென்ற வாகனங்கள் மீது மோதி தீப்பிடித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/778c03f7-9721-4aac-bef6-652ef3eb120a/26-6a9e7c9edd1f9.webp' /></p><p> </p><p>

இதேவேளை 21 ஏர் நிறுவனத்தால் இயக்கப்பட்டு வந்த இந்த போயிங் 767 விமானம் 32 ஆண்டுகள் பழமையானது என கூறப்படுகின்றது. </p><h3>


200 அவசரகாலப் பணியாளர்களின் தீவிர முயற்சி</h3><p>
அத்துடன் சுமார் 200 அவசரகாலப் பணியாளர்கள் தீவிர முயற்சிக்குப் பின் தீயைக்
கட்டுப்படுத்தப்பட்ட நிலையிலும், விமானி, துணை விமானி மற்றும் கார்களில் இருந்த சிலர் மீட்கப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d45560b4-bcdd-46f4-8271-93b02e4a0c86/26-6a9e7c9fa4707.webp' /></p><p>

மேலும் விபத்துக்கான காரணம் குறித்து தேசிய போக்குவரத்து பாதுகாப்பு சபை
(NTSB) விசாரணை நடத்தி வருகின்றது. 

விபத்து காரணமாக மியாமி விமான நிலையத்தில் 160க்கும் மேற்பட்ட விமானங்கள்
ரத்து செய்யப்பட்டு, பல விமானங்கள் திருப்பி அனுப்பப்பட்டன.
</p><p>
இந்தச் சம்பவத்திற்கு அமேசான் நிறுவனம் தனது ஆழ்ந்த இரங்கலைத்
தெரிவித்துள்ளதோடு, விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதாகக் கூறியுள்ளது.&nbsp;&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-07T08:58:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாள பெருவெள்ளம்... நூலிழையில் உயிர் தப்பிய சுவிஸ் பெண்ணின் திகில் அனுபவம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/swiss-woman-escapes-from-nepal-floods-1788760024"></link>
            <id>https://news.lankasri.com/article/swiss-woman-escapes-from-nepal-floods-1788760024</id>
            <summary type="text">Swiss woman escapes from Nepal floods: சுவிஸ் நாட்டவரான பெண்ணொருவர், நேபாளப் பெருவெள்ளத்திலிருந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார்.


சுவிஸ் நாட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>Swiss woman escapes from Nepal floods: சுவிஸ் நாட்டவரான பெண்ணொருவர், நேபாளப் பெருவெள்ளத்திலிருந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார்.</p><p>


சுவிஸ் நாட்டவரான நட்டாலியா (Natalia Rjumin-Girardet, 70), வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த எட்டு சுற்றுலாப்பயணிகளுடன் கைலாச மலைக்கு புனித யாத்திரை சென்றிருந்தார்.
</p><h3>
நூலிழையில் உயிர் தப்பிய அனுபவம்</h3><p>

அவர்கள் பயணித்துக்கொண்டிருந்த பேருந்து திடீரென வழியில் நிற்க, அவர்களுடைய சமையல்காரர் ஜன்னல் வழியாக வெளியே குதித்துள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0be74078-13b4-4f23-b155-b66e60844c21/26-6a9e4fd975e61.webp' /></p><p>
அனைவரும் என்ன நடக்கிறது என்பதை அறிந்துகொள்வதற்காக வெளியே எட்டிப் பார்க்க, தொலைவில் ஒரு மலையே பெயர்ந்துவருவதை கவனித்துள்ளார் அவர்.</p><p>

அப்போதுதான் நிலச்சரிவு ஏற்படுகிறது என்பது அவர்களுக்குப் புரிந்துள்ளது.
</p><p>
உடனடியாக உடைமைகளைக் கூட எடுக்காமல், வேகவேகமாக அனைவரும் பேருந்திலிருந்து இறங்கியுள்ளார்கள்.
</p><p>
சரியாக அவர்களுடைய பேருந்து நின்ற இடத்தின் அருகில் படிக்கட்டுகள் இருக்க, படிக்கட்டுகளில் ஏறி உயரமான ஒரு இடத்தை அடைந்துள்ளார்கள் அனைவரும்.&nbsp;</p><p></p><p>

அங்கிருந்து கீழே பார்க்கும்போது, வீடுகளும், கார்களும், ஏன் பேருந்துகளும் கூட அடித்துச் செல்லப்படும் பயங்கர காட்சிகளை கண்ணால் கண்டதை திகிலுடன் விவரிக்கும் நட்டாலியா, தாங்கள் உயிர் தப்பியது கடவுள் அனுக்கிரகம்தான் என்கிறார்.
</p><p>
ஆம், அன்றைய நிலவரப்படி, 1,100 உடல்களை மீட்புக் குழுக்கள் மீட்டிருந்தன, மேலும் 4,500 பேர் வரை மாயமாகியிருந்தார்கள்.
</p><p>
மலை உச்சியிலிருந்த சேமிப்புக் கிடங்கொன்றில், மழை, குளிருக்கு நடுவே அனைவரும் இரவைக் கழிக்க, மறுநாள் காலை ராணுவம் ஹெலிகொப்டர் ஒன்றின் உதவியுடன் அவர்களை மீட்டு காட்மாண்டுவுக்குக் கொண்டு சென்றுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/47fb8d94-fe2e-4f79-804b-3e60f1069b13/26-6a9e4fda287d4.webp' /></p><p>
நட்டாலியா தனது மொபைலை பேருந்திலேயே தவறவிட்டிருந்ததால், வேறொரு பெண்ணிடம் தனது சகோதரியின் மொபைல் எண் இருக்க, அவரது மொபைல் உதவியுடன் தன் குடும்பத்தைத் தொடர்பு கொண்டு, தான் பாதுகாப்பாக இருப்பதை தெரியப்படுத்த அவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள்.</p><p>

ஆகத்து மாதம் 26ஆம் திகதியை மறக்கமுடியாது, அது நான் மறுஜென்மம் எடுத்த நாள் என்கிறார் நட்டாலியா!&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-07T08:55:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[நிமல் பெரேராவுக்கு உயிரச்சுறுத்தல்! அவுஸ்திரெலியாவில் பதுங்கியுள்ள மற்றுமொரு முக்கிய குற்றவாளி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/nimalperera-receives-death-threat-namals-arrest-1788763059"></link>
            <id>https://ibctamil.com/article/nimalperera-receives-death-threat-namals-arrest-1788763059</id>
            <summary type="text">சிறிலங்கன் விமான சேவைக்காக ஏர்பஸ் விமானங்களை கொள்வனவு செய்த பரிவர்த்தனையில் கிடைத்ததாகக் கூறப்படும் தரகு தொகையிலிருந்து 8 இலட்சம் அமெரிக்க டொலர்கள் நா...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிறிலங்கன் விமான சேவைக்காக ஏர்பஸ் விமானங்களை கொள்வனவு செய்த பரிவர்த்தனையில் கிடைத்ததாகக் கூறப்படும் தரகு தொகையிலிருந்து 8 இலட்சம் அமெரிக்க டொலர்கள் நாமல் ராஜபக்சவுக்கு வழங்கப்பட்ட விவகாரத்தின் முக்கிய சாட்சியாளரான&nbsp;நிமல் பெரேராவின் பாதுகாப்பு குறித்து சிறப்பு கவனம் செலுத்தப்பட்டுள்ளது.</p><p> தொழிலதிபர் நிமல் பெரேரா சமர்ப்பித்துள்ள பிரமான பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சமர்பனங்களை நீதிமன்றில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு நீதிமன்றில் சமர்ப்பித்த நிலையில் இந்த விடயம் பேசுபொருளாகியுள்ளது.</p><p>இந்த வழக்கின் முக்கிய சாட்சியாளரான&nbsp;நிமல் பெரேரா தற்போது தன்னை பாதுகாத்துக்கொள்ள அவுஸ்திரேலியாவில் தங்கியுள்ளார்.</p><p></p><h2>புரூணையில் அமைந்துள்ள நிறுவனம்</h2><p>ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் இலஞ்ச ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் நீதிமன்றத்தில் சான்றிதழொன்றை சமர்ப்பித்திருந்த நிலையில், அதனை நாமல் ராஜபக்சவின் சட்டத்தரணிகள் சவால் செய்யவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6a14c99a-6cfd-41d9-95d5-2ed18fe3b600/26-6a9e7b0f6da0a.webp' /></p><p>இதனடிப்படையில் உண்மைகளை கருத்தில்கொண்ட நீதவான் அவரை&nbsp; எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.</p><p>
இலஞ்ச ஆணைக்குழு சார்பில் நீதிமன்றத்தில் முன்னிலையான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டார, குற்றப் புலனாய்வுத் திணைக்களமும் இலஞ்ச ஆணைக்குழுவும் இணைந்து மேற்கொண்டு வரும் விசாரணைகளின் அடிப்படையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக தெரிவித்தார்.
</p><p>
அவுஸ்திரேலியா, சிங்கப்பூர், பிரான்ஸ் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளின் சர்வதேச ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகவும் இலஞ்ச ஆணைக்குழு நீதிமன்றத்திற்கு தெரிவித்தது.&nbsp;</p><p>ஏர்பஸ் விமானங்களை கொள்வனவின் நிறுவனத்தின் தாய் நிறுவனம் புரூணையில் அமைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.</p><p></p><h2>பிரியங்கா நியோமாலி விஜேநாயக்க&nbsp;</h2><p>
</p><p>
குறித்த ஏர்பஸ் பரிவர்த்தனையில் ஏர்பஸ் நிறுவனத்திடமிருந்து 1.454 மில்லியன் யூரோக்கள் இலஞ்சமாக வழங்கப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும் நீதிமன்றத்திற்கு தெரிவிக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4d489fac-acdd-4741-a549-8bd8f0cc3cdd/26-6a9e7b1024656.webp' /></p><p>
</p><p>
‘Biz Solutions’ நிறுவனத்தின் உரிமையாளராகவும் அதன் பணிப்பாளராகவும் பிரியங்கா நியோமாலி விஜேநாயக்க செயற்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
</p><p>
அவர் ஸ்ரீலங்கன் விமான சேவையின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனின் மனைவி. பிரியங்கா நியோமாலி விஜேநாயக்கவுடன் தொடர்புடைய நிறுவனமொன்றிலிருந்து ரூ.9 மில்லியன், ரூ.7 மில்லியன், ரூ.2 மில்லியன் மற்றும் ரூ.6 மில்லியன் என நான்கு சந்தர்ப்பங்களில் மொத்தம் ரூ.25 மில்லியன் ஷமீந்திர ராஜபக்ச என்பவரின் கணக்கிற்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது</p><p>மேலும், அவுஸ்திரேலியாவில் வசித்து வரும் நிமல் பெரேராவுக்குச் சொந்தமானதாகக் கூறப்படும் Sabre Vision Holding Ltd நிறுவனத்தின் பெயரில் சிங்கப்பூரில் உள்ள OCBC வங்கிக் கணக்கிற்கு 8 இலட்சம் அமெரிக்க டொலர்கள் மாற்றப்பட்டுள்ளதாகவும் இலஞ்ச ஆணைக்குழு நீதிமன்றத்தில் தெரிவித்தது.
</p><p>
பின்னர், அந்த 8 இலட்சம் அமெரிக்க டொலர்களை நாமல் ராஜபக்சவுக்கு தாம் வழங்கியதாக நிமல் பெரேரா தனது பிரமான பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளார்.</p><p>2014ஆம் ஆண்டின் நாணய மாற்று விகிதத்தின்படி அந்தத் தொகையின் பெறுமதி சுமார் ரூ.100 மில்லியன் எனவும் இலஞ்ச ஆணைக்குழு தெரிவித்தது.</p><p> இந்த சம்பவம் தொடர்பாக நிமல் பெரேரா அவுஸ்திரேலியாவிலிருந்து சத்தியப்பிரமாணம் ஒன்றை சமர்ப்பித்துள்ளார்.</p><p></p><h2>உயிர் அச்சுறுத்தல்கள்</h2><p> </p><p>தமக்கு ஏற்பட்டதாகக் கூறப்படும் உயிர் அச்சுறுத்தல்கள் காரணமாக அவுஸ்திரேலியாவில் தங்கியிருப்பதாக அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p>
</p><p>
இந்த விவகாரம் தொடர்பாக வாக்குமூலம் வழங்கிய பின்னர் ஏற்பட்ட உயிர் அச்சுறுத்தல்கள் காரணமாகவே தாம் அவுஸ்திரேலியாவுக்கு செல்ல நேரிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p>தற்போதும் இலங்கை வந்தார் தனக்கு உயிர் அச்சுறுத்தல் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். நிமல் பெரேராவிடம் ஏற்கனவே வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. </p><p>பணம் பகிர்ந்தளிக்கப்பட்டதாகக் கூறப்படும் விவகாரத்துடன் தொடர்புடைய சந்தேகநபரான பிரியங்கா நியோமாலி விஜேநாயக்க தற்போது அவுஸ்திரேலியாவில் இருப்பதாகவும், அவரை கைது செய்து இலங்கைக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் இலஞ்ச ஆணைக்குழு தெரிவித்தது.</p><p>
மற்றொரு சந்தேகநபரான ஷமீந்திர ராஜபக்ச அமெரிக்காவில் இருப்பதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.</p><p>நாமல் சார்பில் பிணை கோரி ஜனாதிபதி சட்டத்தரணி சம்பத் மெண்டிஸ் நீதிமன்றத்தில் வாதிட்டார்.

தமது வாடிக்கையாளர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டிருப்பது நிமல் பெரேராவின் வாக்குமூலத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது என அவர் தெரிவித்தார்.</p><p></p><h2>நிமல் தொடர்பான மற்றொரு வழக்கு&nbsp;</h2><p>
</p><p>
நிமல் பெரேரா நாமலுக்கு பணம் வழங்கியதாக உறுதிப்படுத்துவதற்குப் போதுமான சாட்சியங்கள் முன்வைக்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/50e94f58-b76f-494a-87a7-ba822388c535/26-6a9e7b10cf7d6.webp' /></p><p>
</p><p>
நிமல் பெரேரா பல்வேறு சந்தர்ப்பங்களில் வெவ்வேறு கருத்துக்களை வெளியிட்டுள்ளதால், அவரது நம்பகத்தன்மை தொடர்பில் பாரிய சந்தேகங்கள் இருப்பதாகவும் ஜனாதிபதி சட்டத்தரணி கூறியிருந்தார்.</p><p>

பிரான்ஸ் அதிகாரிகளோ அல்லது ஏர்பஸ் நிறுவன அதிகாரிகளோ நிமல் பெரேராவுக்கு பணம் வழங்கப்பட்டதாகக் கூறவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
</p><p>
மேலும், நிமல் பெரேரா தொடர்பான மற்றொரு வழக்கு தற்போது மேல் நீதிமன்றத்தில் விசாரணையில் இருப்பதாகவும், அது கிரிஷ் பரிவர்த்தனை தொடர்பான வழக்கு என்றும் அவர் தெரிவித்தார்.</p><p>

அந்த வழக்கிலும் Sabre Vision Holding Ltd நிறுவனத்தின் கணக்கிற்கு பணம் கிடைத்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், அந்தக் கணக்கு தமக்குச் சொந்தமானதல்ல என்றும், அது இத்தாலிய நண்பர் ஒருவருக்குச் சொந்தமானது என்றும் நிமல் பெரேரா முன்னர் தெரிவித்திருந்ததாக சட்டத்தரணி குறிப்பிட்டார்.
</p><p>
இதனால், நிமல் பெரேரா ஒரு சந்தர்ப்பத்தில் ஒரு விதமான வாக்குமூலத்தையும் மற்றொரு சந்தர்ப்பத்தில் அதற்கு மாறான வாக்குமூலத்தையும் வழங்கியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
</p><p>
2019ஆம் ஆண்டு குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நிமல் பெரேரா வழங்கிய வாக்குமூலங்களை நம்பவில்லை என்றும், அவ்வாறிருக்கும்போது 2026ஆம் ஆண்டு அவரது வாக்குமூலங்களை எவ்வாறு நம்ப முடியும் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
</p><p>
இத்தகைய நிலைமையை “தேவை ஏற்படும் போது கபரகொயாவையும் தலகொயாவாக மாற்றும் கோட்பாடு” என வர்ணிக்க முடியும் என்றும் ஜனாதிபதி சட்டத்தரணி குறிப்பிட்டார்.
</p><p>
எனவே, இந்த விடயங்களை விசேட காரணிகளாகக் கருதி தமது வாடிக்கையாளருக்கு பிணை வழங்குமாறு அவர் நீதிமன்றத்திடம் கோரினார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-07T08:52:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[நோர்வேயில் இடம்பெறவுள்ள போராட்டம் திரைப்படத்தின் சிறப்பு திரையிடல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/porattam-special-screening-in-norway-ibc-tamil-1788770436"></link>
            <id>https://tamilwin.com/article/porattam-special-screening-in-norway-ibc-tamil-1788770436</id>
            <summary type="text">IBC தமிழ் மற்றும் &#039;Kollywood Entertainment Europe&#039; இணைந்து வழங்கும் &#039;போராட்டம்&#039; திரைப்படத்தின் சிறப்பு திரையிடல் நோர்வேயில் நடைபெறவுள்ளது.

ராஜ் சிவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>IBC தமிழ் மற்றும் 'Kollywood Entertainment Europe' இணைந்து வழங்கும் 'போராட்டம்' திரைப்படத்தின் சிறப்பு திரையிடல் நோர்வேயில் நடைபெறவுள்ளது.</p><p>

ராஜ் சிவராஜ் இயக்கத்தில், பூவன் மதீசன் இசையமைப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படத்தை பாஸ்கரன் கந்தையா வழங்குகிறார்.</p><p>

இத்திரைப்படம் வருகின்ற ஒக்டோபர் 02 வெள்ளிக்கிழமை இரவு 8:00 மணிக்கு (20.00) ஒஸ்லோவில் உள்ள 'Nordisk Film Kino - Symra' திரையரங்கில் திரையிடப்படவுள்ளது.
</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fbe5acc6-a825-4576-bb88-b86e0060633b/26-6a9e79c4cd8c8.webp' /></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-07T08:46:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யோஷிதவின் மேன்முறையீட்டை மீளப்பெற்றுக்கொள்ள அனுமதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/yoshitha-rajapaksa-withdraws-appeal-against-1788768971"></link>
            <id>https://ibctamil.com/article/yoshitha-rajapaksa-withdraws-appeal-against-1788768971</id>
            <summary type="text">மகிந்த ராஜபக்சவின் மகனான யோசித ராஜபக்ச தாக்கல் செய்த மேமுறையீட்டை அவர் மீளப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.&amp;nbsp;நிதி மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ...</summary>
            <content type="html"><![CDATA[<p>மகிந்த ராஜபக்சவின் மகனான யோசித ராஜபக்ச தாக்கல் செய்த மேமுறையீட்டை அவர் மீளப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.&nbsp;</p><p>நிதி மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் தமக்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள வழக்கின் சதித்திட்டக் குற்றச்சாட்டைத் தொடர்வதைத் தடுக்கும் உத்தரவைப் பிறப்பிக்குமாறு கோரி,யோசிதவால் இந்த மேன்முறையீடு சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.&nbsp;</p><p>இந்நிலையில் இன்று (07.09.2026) உயர் நீதிமன்றத்தில் அவர் குறித்த மேன்முறையீட்டை மீளப்பெற்றுக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><h2>மீளப்பெற அனுமதி</h2><p>

குறித்த விடயம் தொடர்பில் எதிர்காலத்தில் மீண்டும் மேன்முறையீடு செய்ய நேரிட்டால், இந்த விடயத்தை எழுப்புவதற்கான உரிமையைத் தக்க வைத்துக் கொண்டு மேன்முறையீட்டை மீளப்பெற உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5797207a-ee7c-4aa9-837f-3fad2b8cd8d0/26-6a9e7718cd4d8.webp' /></p><p>பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் யோஷித ராஜபக்சவுக்கு எதிராக நிலுவையிலுள்ள சதித்திட்டக் குற்றச்சாட்டு தொடர்பான வழக்கை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல முடியும் என கொழும்பு மேல் நீதிமன்றம் முன்னதாக உத்தரவிட்டிருந்தது.
</p><p>
எனினும், மேல் நீதிமன்றம் வழங்கிய குறித்த உத்தரவு சட்டத்திற்கு முரணானது எனக் கூறிய யோஷித ராஜபக்ச, அதனை செல்லுபடியற்றதாக்கி உத்தரவிடுமாறு தனது சீராய்வு மனுவின் ஊடாக மேன்முறையீட்டு நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-07T08:36:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலகையே ஆச்சரியப்படுத்தும் ‘வாடகை மனைவி’ நடைமுறை! எந்த நாட்டில் தெரியுமா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/in-this-country-offers-rental-wife-to-the-tourists-1788764323"></link>
            <id>https://manithan.com/article/in-this-country-offers-rental-wife-to-the-tourists-1788764323</id>
            <summary type="text">உலகின் பல நாடுகள் அவற்றின் தனித்துவமான கலாச்சாரம், வாழ்க்கை முறை மற்றும் வித்தியாசமான நடைமுறைகளுக்காகப் பிரபலமாக அறியப்படுகின்றது. அந்த வகையில், தாய்ல...</summary>
            <content type="html"><![CDATA[<p>உலகின் பல நாடுகள் அவற்றின் தனித்துவமான கலாச்சாரம், வாழ்க்கை முறை மற்றும் வித்தியாசமான நடைமுறைகளுக்காகப் பிரபலமாக அறியப்படுகின்றது.</p><p> அந்த வகையில், தாய்லாந்து அதன் அழகிய கடற்கரைகள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் இரவு நேர பொழுதுபோக்கு வாழ்க்கைக்காக உலகம் முழுவதும் பிரபலமாக இருக்கின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/af89f287-a8d3-4c17-b5d3-2b458aeab8f2/26-6a9e6772da452.webp' /></p><p></p><h2>வாடகைக்கு மனைவியா?&nbsp;</h2><p>

இந்நிலையில், தாய்லாந்தின் சில சுற்றுலா மையங்களில் நீண்ட காலமாகப் பேசப்பட்டு வரும் வித்தியாசமான நடைமுறைதான் ‘வாடகை மனைவி’ (Wife Rental) என அழைக்கப்படும் தற்காலிக துணை.</p><p> ‘வாடகை மனைவி’ என்ற பெயர் இருந்தாலும், இது உண்மையான அல்லது சட்டப்பூர்வமான திருமண உறவு அல்ல. மாறாக, ஒரு பெண் குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு ஆணுடன் துணையாக இருந்து, அவருடன் நேரத்தைச் செலவிடும் தனிப்பட்ட ஏற்பாடாக இது கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9c687926-d85e-4d9f-918c-cc36aa779f4d/26-6a9e677232456.webp' /></p><p>ஒன்றாகச் சுற்றுலா செல்வது, உணவருந்துவது, பொழுதுபோக்கு நடவடிக்கைகளில் ஈடுபடுவது உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகள் இதில் இடம்பெறலாம்.

இந்த நடைமுறை குறிப்பாக வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அதிகம் செல்லும் பட்டாயா போன்ற பகுதிகளின் பொழுதுபோக்கு கலாச்சாரத்தில் இந்த நடைமுறை காணப்படுகின்றது.</p><p><b>கால வரையரை&nbsp;</b></p><p>இவ்வாறு வாடகை மனை பெறுபவர்களுக்கு, சில மணிநேரங்கள் முதல் பல நாட்கள் அல்லது அதற்கும் அதிகமான காலம் வரை கால அளவு விருப்பத்துக்கேற்ப ஒழுங்கு செய்து கொடுக்கப்படுமாம்.&nbsp;</p><p>கட்டணம் மற்றும் பிற நிபந்தனைகள் சம்பந்தப்பட்ட இரு தரப்பினரின் உடன்பாட்டைப் பொறுத்து தீர்மானிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

சில பெண்களுக்கு இத்தகைய ஏற்பாடுகள் வருமானம் ஈட்டும் வழியாக அமைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/339e0622-30ce-48fb-ae55-c8bd9a1f305c/26-6a9e67738fba1.webp' /></p><p> அதே நேரத்தில், இந்த நடைமுறை பல்வேறு சமூக மற்றும் ஒழுக்க ரீதியான சர்ச்சைகளையும் ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக பெண்களைப் பொருளாகக் கருதுதல், பொருளாதாரச் சுரண்டல் மற்றும் சுற்றுலாவுடன் தொடர்புடைய பாலினச் சுரண்டல் போன்ற பிரச்சினைகள் குறித்து கேள்விகள் எழுப்பப்படுகின்றன.
</p><p>
மேலும், சில சந்தர்ப்பங்களில் தற்காலிகமாகத் தொடங்கும் இத்தகைய உறவுகள் பின்னர் நீண்டகால தனிப்பட்ட உறவுகளாகவும் மாறக்கூடும் என்றும் கூறப்படுகிறது. இதனால், இது வெறும் சுற்றுலா சார்ந்த ஏற்பாடாக மட்டுமின்றி, சமூக ரீதியாகவும் விவாதிக்கப்படும் ஒரு விஷயமாக மாறியுள்ளது.
</p><p>
எனினும், ‘வாடகை மனைவி’ என்பது தாய்லாந்தின் அதிகாரப்பூர்வ திருமண முறையோ அல்லது அந்நாட்டின் பொதுவான கலாச்சார நடைமுறையோ அல்ல.&nbsp; மாறாக குறிப்பிட்ட சுற்றுலா மற்றும் பொழுதுபோக்கு சூழல்களுடன் தொடர்புடையதாகக் மட்டுமே கூறப்படும் ஒரு தற்காலிக தனிப்பட்ட ஏற்பாடாகவே பார்க்கப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bb81e6b6-27ef-4d0c-a753-ff47010badfe/26-6a9e677444089.webp' /></p><p></p><h2>இதற்கான கட்டணம்&nbsp;</h2><p>வாடகை மனைவியின் கட்டணம் என்பது அந்த பெண்ணின் வயது, தோற்றம் மற்றும் கல்வி போன்ற காரணிகளைப் பொறுத்து மாறுபடும். இதன் கட்டணம் சுமார் 1,600 அமெரிக்க டாலர்கள் முதல் 1,16,000 அமெரிக்க டாலர்கள்(இந்திய மடிபில் 1.5 லட்சம் முதல் 11 லட்சம்) வரை அறவிடப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-07T08:33:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[1 வருடத்துக்கு பின் கன்னி ராசியில் புதன் பெயர்ச்சி: 12 ராசிகளுக்குமாக சிறப்பு பலன்கள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/mercury-transit-in-virgo-effects-on-12-zodiacs-1788767567"></link>
            <id>https://manithan.com/article/mercury-transit-in-virgo-effects-on-12-zodiacs-1788767567</id>
            <summary type="text">வேத ஜோதிடத்தின் படி, நவகிரகங்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசி மாறி, மனித வாழ்க்கையில் பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்துகின்றன. அந்த வகையில், கிரகங்களி...</summary>
            <content type="html"><![CDATA[<p>வேத ஜோதிடத்தின் படி, நவகிரகங்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசி மாறி, மனித வாழ்க்கையில் பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்துகின்றன. </p><p>அந்த வகையில், கிரகங்களின் இளவரசனாகக் கருதப்படும் புதன், புத்திசாலித்தனம், பேச்சாற்றல், கல்வி மற்றும் வியாபாரத்தின் காரணியாக விளங்குகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7852d5d0-4d69-47ca-9c9e-622888b79f22/26-6a9e767fb8022.webp' /></p><p>
</p><p>
மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியான புதன், ஒருவரது ஜாதகத்தில் வலுவாக இருந்தால், அறிவாற்றல், கல்வித்திறன், பேச்சாற்றல் மற்றும் தொழில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும் என ஜோதிடம் கூறுகிறது.
</p><p>
இந்நிலையில், புதன் இன்று செப்டம்பர் 7 மதியம் 1.33 மணியளவில் தனது சொந்த ராசியான கன்னிக்குள் பெயர்ச்சியாகிறார். செப்டம்பர் 26 வரை கன்னி ராசியில் சஞ்சரிக்கும் புதன், சுமார் ஓராண்டுக்குப் பிறகு மீண்டும் தனது சொந்த ராசிக்குத் திரும்புவதால், இந்தப் பெயர்ச்சி 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் எனக் கூறப்படுகிறது.</p><p>அப்படி, கன்னி ராசியில் புதன் சஞ்சரிப்பதால் எந்த ராசிகளுக்கு சாதம், எந்தெந்த ராசிகளுக்கு பாதபம் என்பது குறித்த விரிவான விளக்கத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1982ac16-68f1-4ee6-923c-6ba8a1a8408f/26-6a9e76808a617.webp' /></p><p></p><h2>12 ராசிகளுக்கமான பலன்கள்&nbsp;</h2><p><b>மேஷம்</b></p><p>
மேஷ ராசியின் 6-ம் வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் வேலை தொடர்பான பயணங்களில் நல்ல ஆதாயம் கிடைக்கும். பணியிடத்தில் செயல்திறன் பாராட்டப்படும்.வெளிநாட்டில் படிக்க விரும்புபவர்களுக்கு காலம் சாதகமாக இருக்கும். இந்த காலகட்டத்தில் எதிரிகளிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.</p><p><b>
ரிஷபம்</b></p><p>
ரிஷப ராசியின் 5-ம் வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் காதல் உறவுகள் வலுப்படும். காதலிப்பவர்களுக்கு பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் நடைபெற வாய்ப்புள்ளது.வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். அரசு தொடர்பான பணிகளில் இருந்த தடைகள் விலகும்.</p><p><b>
மிதுனம்</b></p><p>
மிதுன ராசியின் 4-ம் வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் நண்பர்கள் மற்றும் உறவினர்களிடமிருந்து நற்செய்திகள் கிடைக்கும். வணிகர்களுக்கு லாபம் தரும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கலாம். புதிய தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு காலம் சாதகமான சூழல் உருவாகும்.</p><p><b>
கடகம்</b></p><p>
கடக ராசியின் 3-ம் வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் ஆன்மீகம் மற்றும் சமூக சேவையில் ஆர்வம் அதிகரிக்கும். வேலையில் இருந்த பிரச்சனைகள் தீரும். வியாபாரிகளுக்கு சிறப்பான காலமாக இருக்கும். முக்கிய முடிவுகளை எடுக்கவும், அரசியலில் இருப்பவர்களுக்கும் சாதகமான காலம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e1d5648d-9972-4a4a-96b5-bac6c49e2e83/26-6a9e7681452a3.webp' /></p><p>
</p><p><b>
சிம்மம்
</b></p><p>சிம்ம ராசியின் 2-ம் வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் உங்கள் பேச்சுத் திறனால் கடின சூழ்நிலைகளையும் எளிதில் சமாளிப்பீர்கள். ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. பணியிடத்தில் எதிரிகளிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். விருந்தினர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.</p><p><b>
கன்னி
</b></p><p>கன்னி ராசியின் முதல் வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். சக ஊழியர்களுடனான உறவு சிறப்பாக இருக்கும். சமூகத்தில் மதிப்பு, மரியாதை மற்றும் அந்தஸ்து அதிகரிக்கும். போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு காலம் சாதகமாக இருக்கும்.
</p><p><b>
துலாம்</b></p><p>
துலாம் ராசியின் 12-ம் வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். புனித யாத்திரை மேற்கொள்ளும் வாய்ப்பு கிடைக்கலாம். இருப்பினும் பெரிய அளவில் கடன் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும். பிரச்சனைகளை பேசி தீர்ப்பது நல்லது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a8644776-ae1c-4d68-9022-a391bf460337/26-6a9e7681ed31b.webp' /></p><p></p><p>
</p><p><b>
விருச்சிகம்
</b></p><p>விருச்சிக ராசியின் 11-ம் வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் நிலுவையில் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடியும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வெளிநாட்டில் படிக்க விரும்பும் மாணவர்களுக்கு வாய்ப்புகள் கிடைக்கலாம். தேர்வுகளிலும் நல்ல வெற்றி கிடைக்கும்.</p><p><b>

தனுசு</b></p><p>
தனுசு ராசியின் 10-ம் வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் பெற்றோரின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். பரம்பரை சொத்து தொடர்பான பிரச்சனைகள் முடிவுக்கு வரும். நீண்ட நாட்களாக வாகனம் வாங்க நினைத்தவர்களுக்கு அதற்கான வாய்ப்பு கிடைக்கலாம்.</p><p><b>

மகரம்
</b></p><p>மகர ராசியின் 9-ம் வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறலாம். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் அமைய வாய்ப்புள்ளது. புதுமண தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கலாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/25a410f4-9ff1-403c-abc1-59e8eac9fa1a/26-6a9e76829f7fd.webp' /></p><p><b>

கும்பம்
</b></p><p>கும்ப ராசியின் 8-ம் வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் பணியிடத்தில் கவனமாக இருக்க வேண்டும். எதிரிகள் உங்களுக்கு எதிராக சதிகளில் ஈடுபடலாம். எனவே உங்கள் திட்டங்களை ரகசியமாக வைத்துச் செயல்படுவது நல்லது. கடின உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கும்.</p><p><b>

மீனம்
</b></p><p>மீன ராசியின் 7-ம் வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் திருமண வாழ்க்கையில் இருந்த பிரச்சனைகள் தீரும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் அமையலாம். கூட்டு தொழில் தொடங்க நினைப்பவர்கள் அதைத் தவிர்ப்பது நல்லது. அரசு தொடர்பான பணிகள் சிறப்பாக முடியும். தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றம் காண</p><p><b>இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).&nbsp;&nbsp;</b></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-07T08:32:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரோஹினி விஷயத்தில் மனோஜிற்கு எதிராக திரும்பிய விஜயா, அடுத்து நடந்தது என்ன?... சிறகடிக்க ஆசை சீரியல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/siragadikka-aasai-serial-sep-08-episode-promo-1788765739"></link>
            <id>https://cineulagam.com/article/siragadikka-aasai-serial-sep-08-episode-promo-1788765739</id>
            <summary type="text">சிறகடிக்க ஆசைவிஜய் டிவியில் கடந்த சில மாதங்களாக இழு இழு என இழுத்து வந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் மயில்-சரவணன் விவாகரத்து பிரச்சனை எப்படியோ முடிந...</summary>
            <content type="html"><![CDATA[<h2>சிறகடிக்க ஆசை</h2><p>விஜய் டிவியில் கடந்த சில மாதங்களாக இழு இழு என இழுத்து வந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் மயில்-சரவணன் விவாகரத்து பிரச்சனை எப்படியோ முடிந்துவிட்டது. </p><p>மயில் விவாகரத்திற்கு ஒப்புக்கொண்டு எந்த பணமும், சொத்தும், எந்த ஒரு உதவியும் வேண்டாம் என கூறிவிட்டார்.
</p><p>அந்த சீரியலை தொடர்ந்து சிறகடிக்க ஆசை தொடரில் மனோஜ்-ரோஹினி விவாகரத்து பிரச்சனையும் கடந்த சில மாதங்களாக ஓடிக் கொண்டிருக்கிறது. </p><p>இந்த விவாகரத்து பிரச்சனை எப்போது முடிவுக்கு வரும் என தெரியவில்லை.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0dcc4961-d840-4ec6-855a-3a392e4f4e76/26-6a9e6e38bf57e.webp' /></p><h2>எபிசோட்</h2><p>
இன்றைய எபிசோடில், ஸ்பெஷல் பூஜையெல்லாம் முடித்துவிட்டு விஜயா அண்ணாமலை தவிர அனைவருடனும் நீதிமன்றம் வருகிறார். </p><p>அங்கு மனோஜ் தான் விவாகரத்து கொடுப்பதில் உறுதியாக இருப்பதாக கூற ரோஹினி திடீரென தனது Medical Report சமர்ப்பிக்கிறார். அதைப்பார்த்த நீதிபதி, ரோஹினி கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை வைத்து நிறைய கேள்விகள் எழுப்புகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2ec84824-6a7b-4a4d-9191-a9cde693974e/26-6a9e6e37aaee7.webp' /></p><p> </p><p>
பின் நாளைய எபிசோடின் புரொமோவில், வீட்டிற்கு வந்த விஜயா, அதுநாள் வரை தனது மகன் தவறு செய்திருக்க மாட்டான் என நம்பிக்கொண்டிருந்தவர் அந்த குழந்தை உன்னுடையது தானா என கோபமாக மனோஜை பார்த்து கேட்கிறார்.</p><p> </p><p>அவர் வழக்கம் போல் எதுவும் சொல்லாமல் முழிக்கிறார், உண்மை வெளிவருமா, விஜயா செய்யப்போவது என்ன என்பதை பொறுத்திருந்து காண்போம்.</p>]]></content>
            <updated>2026-09-07T08:30:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[வசிய மருந்தால் கர்ணாவை வசப்படுத்த திட்டமிடும் புவனா.. கர்வம் கொள்ளும் கர்ணா! - சின்னஞ்சிறு கிளியே இன்றைய எபிசோட் அப்டேட்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/chinna-siru-kiliye-today-episode-1788763105"></link>
            <id>https://viduppu.com/article/chinna-siru-kiliye-today-episode-1788763105</id>
            <summary type="text">தமிழ் சின்னத்திரையில் Zee தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சின்னஞ்சிறு கிளியே. கடந்த ...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழ் சின்னத்திரையில் Zee தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சின்னஞ்சிறு கிளியே. கடந்த எபிசோடில் புவனா, கர்ணாவையும் தன்னையும் சேர்த்து வைப்பதாக கூறிய கிருபாவிடம் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்திய நிலையில், இன்றைய எபிசோடில் பரபரப்பான சம்பவங்கள் அரங்கேற உள்ளன.</p><p>அதாவது, கர்ணாவும் இந்துவும் நாளுக்கு நாள் நெருக்கமாகி வருவதை நினைத்து வேதனைப்படும் புவனா, கிருபாவிடம், “ஆறு மாதத்தில் கர்ணாவை என்னுடன் சேர்த்து வைப்பதாக சொன்னீர்கள். ஆனால் எதுவும் நடக்கவில்லை. அது முடியாது என்றால் சொல்லுங்கள், நான் உயிரை விடுகிறேன்” என்று உணர்ச்சிவசப்பட்டு பேசுகிறாள்.
</p><p>அதற்கு கிருபா, “நான் சொன்னது கண்டிப்பாக நடக்கும். கர்ணா உன்னுடன் சேர்வார்” என்று உறுதியளித்து புவனாவுக்கு வாக்கு கொடுக்கிறார்.
</p><p>மறுபக்கம், இந்துவுக்காக கர்ணா ஆசையுடன் பூரி சமைத்து கொண்டிருக்கிறார். அப்போது இந்துவை பார்க்க வரும் பாலு, கர்ணாவின் இந்த பாசமான செயலை கண்டு மனம் மகிழ்கிறார். இந்துவும், “வாங்கப்பா, சாப்பிடலாம்” என்று அன்புடன் அழைக்க, கர்ணாவும் “வாங்க மாமா” என்று வரவேற்கிறார்.
</p><p>கையில் கத்தியுடன் சுற்றிக்கொண்டிருந்தவன் இன்று கையில் கரண்டியுடன் சமையல் செய்து கொண்டிருக்கும் கர்ணாவை பார்த்த பாலு, அவரின் மாற்றத்தை நினைத்து நெகிழ்கிறார். மேலும், “உங்களை இப்படி சந்தோஷமாக பார்த்ததே எனக்கு போதும். என் மனசு நிறைஞ்சுடுச்சு” என்று கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பிச் செல்கிறார்.
</p><p>இதற்கிடையில், தீனதயாளனை மருத்துவமனைக்கு அழைத்து வரும் இந்து, கர்ணா மற்றும் சித்ரா ஆகியோர் அங்கு பாஸ்கர் மற்றும் முத்தழகியை சந்திக்கின்றனர். அப்போது பாஸ்கர், ஒரு திறமையான மருத்துவர் குறித்து தகவல் கூறி, “அவரை சந்தித்தால் தீனதயாளனின் கால் நிச்சயமாக குணமாகும்” என்று நம்பிக்கை அளிக்கிறார்.
</p><p>மற்றொரு புறம், கர்ணாவை எப்படியாவது தன் வசப்படுத்த வேண்டும் என முடிவெடுக்கும் புவனா, தனது தோழியுடன் கேரளாவைச் சேர்ந்த நம்பூதிரியை சந்திக்கிறாள். அப்போது அவர் ஒரு மருந்தை கொடுத்து, “இதை யாருக்குக் கொடுக்கிறாயோ அவர்கள் 12 மணி நேரம் உன் கட்டுப்பாட்டில் இருப்பார்கள்” என்று கூறுகிறார். இதனால் புவனா அடுத்ததாக என்ன செய்யப் போகிறாள் என்ற எதிர்பார்ப்பு அதிகரிக்கிறது.
</p><p>மேலும், தேர்தல் தொடர்பாக கர்ணா ஒரு யோசனையை கூற, திவாகரன் அதனை அலட்சியமாக எடுத்துக்கொண்டு கிண்டலாக பேசுகிறார். இதனால் கிருபா, “ஏன் இப்படிப் பேசுற? அவன் நம்ம தம்பிதானே” என்று திவாகரனை கண்டிக்கிறார். இதைக் கேட்டு கர்ணா திவாகரனை கோபமாக முறைக்கிறார்.
</p><p>இப்படி விறுவிறுப்பும் பரபரப்பும் நிறைந்த இந்தக் கதையில் அடுத்ததாக என்ன நடக்கப் போகிறது? புவனாவின் திட்டம் வெற்றியடையுமா? கர்ணா மற்றும் இந்துவின் வாழ்க்கையில் புதிய சிக்கல் உருவாகுமா? என்பதை அறிய சின்னஞ்சிறு கிளியே சீரியலை திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7 மணிக்கு Zee தமிழ் தொலைக்காட்சியில் தவறாமல் காணுங்கள்.
&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-07T08:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thevanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[முல்லைத்தீவில் புதையல் அகழ்வுக்கு தயாரான சந்தேகநபர்கள் காவல்துறையால் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/suspects-arrest-preparing-dig-treasure-mullaitivu-1788769692"></link>
            <id>https://ibctamil.com/article/suspects-arrest-preparing-dig-treasure-mullaitivu-1788769692</id>
            <summary type="text">முல்லைத்தீவில் சந்தேகத்துக்கு இடமான முறையில் நடமாடிய சந்தேக நபர்கள் ஐந்து போர், புதையல் அகல்வுக்கு பயன்படும் உபகரணங்களுடன் காவல்துறையினரால் கைது செய்ய...</summary>
            <content type="html"><![CDATA[<p>முல்லைத்தீவில் சந்தேகத்துக்கு இடமான முறையில் நடமாடிய சந்தேக நபர்கள் ஐந்து போர், புதையல் அகல்வுக்கு பயன்படும் உபகரணங்களுடன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.&nbsp;</p><p>விசுவமடு பகுதியில் புதையல் அகழ்வுக்காக ஒருவரின் அழைப்புக்கினங்க வந்த நிலையில் குறித்த 5 பேரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.</p><p>இந்நிலையில் காவல்துறைக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக முல்லைத்தீவு
கடற்கரை பகுதியில் வைத்து இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><h2>புதையல் அகல்வு</h2><p>கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள்


நெலுக்குளம், வவுனியா
உலுகெட்டவெவ வீதி, கித்துல்ஹிட்டியாவ, முல்லைத்தீவு, முல்லிவைக்கால் மேற்கு கலபலுவாவ வீதி, தலங்கம வடக்கு,
கொஸ்வத்த குறித்த பகுதிகளை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b96fd9a6-bcc8-4835-b44c-485a5f850134/26-6a9e759e94e32.webp' /></p><p>இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் புதையல் அகல்வுக்கு பயன்படுத்தப்படும்
ஸ்கேனர் ஒன்றும் மற்றும் அவர்கள் பயன்படுத்தியவாகனம் ஒன்றும் காவல்துறையால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.</p><p>மேலும், சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை முல்லத்தீவு நீதிமன்றம் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...! </td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-07T08:29:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடும் வெப்பநிலை; யால தேசிய வனத்தை மூட தீர்மானம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/heat-wave-temporarily-close-yala-national-park-1788769666"></link>
            <id>https://jvpnews.com/article/heat-wave-temporarily-close-yala-national-park-1788769666</id>
            <summary type="text">&amp;nbsp; நாட்டில் நிலவும் கடுமையான வெப்பநிலை காரணமாக விலங்குகள் மற்றும் வனவிலங்கு அதிகாரிகளுக்கு ஏற்படும் வெப்ப அழுத்தத்தைக் கருத்திற்கொண்டு, யால தேசிய ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; நாட்டில் நிலவும் கடுமையான வெப்பநிலை காரணமாக விலங்குகள் மற்றும் வனவிலங்கு அதிகாரிகளுக்கு ஏற்படும் வெப்ப அழுத்தத்தைக் கருத்திற்கொண்டு, யால தேசிய வனத்தின் 01 மற்றும் 02 ஆம் வலயங்களை தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. </p><p>

குறித்த இரண்டு வலயங்களையும் எதிர்வரும் 14 ஆம் திகதி முதல் மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இன்று (07) வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகம் மஞ்சுள அமரரத்ன தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7fc1f002-e32d-4d82-9757-f73adfa4b37e/26-6a9e758482f12.webp' /></p><h2>&nbsp;விலங்குகளுக்கு நீர் பற்றாக்குறை</h2><p> </p><p>

நிலவும் கடும் வெப்பமான வானிலை காரணமாக விலங்குகளுக்கு நீர் பற்றாக்குறை மற்றும் வெப்ப அழுத்தம் கடுமையாகப் பாதித்துள்ளதாகக் குறிப்பிட்டார்.</p><p> 

மேலும், அதிகளவிலான சுற்றுலா ஜீப் வண்டிகள் வனத்திற்குள் பயணிப்பதால், தற்போதைய சூழ்நிலையில் வனவிலங்கு அதிகாரிகள் தமது கடமைகளை முன்னெடுப்பதில் அசௌகரியங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.</p><p></p><p> 

இலங்கையின் வறண்ட வலயத்தைச் சேர்ந்த யால 1 மற்றும் 2 மட்டுமன்றி, மன்னார் மற்றும் வில்பத்து தேசிய வனங்களை அண்டிய பகுதிகளில் நிலவும் நிலைமை தொடர்பிலும் அதிகாரிகள் அவதானத்துடன் செயற்பட்டு வருவதாக மஞ்சுள அமரரத்ன தெரிவித்தார்.</p><p></p><p> 

அதேசமயம் தேவைப்படும் சந்தர்ப்பங்களில் குறித்த வனங்களை மூடுவதற்கோ அல்லது விலங்குகள் மற்றும் அதிகாரிகளுக்கு வெப்ப அழுத்தம் இன்றி செயற்படுவதற்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கோ நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-07T08:24:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Tony</name>
            </author>
            <title type="text"><![CDATA[பெத்லகேம் குடும்ப யூனிட் தமிழகத்தில் மட்டும் இத்தனை கோடிகள் வசூலா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/bethlehem-kudumba-unit-tamilnadu-box-office-1788678115"></link>
            <id>https://cineulagam.com/article/bethlehem-kudumba-unit-tamilnadu-box-office-1788678115</id>
            <summary type="text">பெத்லகேம் குடும்ப யூனிட்நிவின் பாலி, மமிதா பைஜு நடிப்பில், கிரிஷ் இயக்கத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் இந்த ஓணம் ஸ்பெஷலாக வெளிவந்த படம் பெத்லகேம் க...</summary>
            <content type="html"><![CDATA[<h2>பெத்லகேம் குடும்ப யூனிட்</h2><p>நிவின் பாலி, மமிதா பைஜு நடிப்பில், கிரிஷ் இயக்கத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் இந்த ஓணம் ஸ்பெஷலாக வெளிவந்த படம் பெத்லகேம் குடும்ப யூனிட்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ddb46e94-8fdf-4aa2-9202-25d93361bc78/26-6a9d0fe5e93e9.webp' /></p><p>இப்படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது; அதோடு தென்னிந்திய முழுவதுமே இப்படம் வசூல் மழை பொழிந்து வருகிறது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9551717e-bfc6-4521-8307-4c2badb225c4/26-6a9d0fe69f75c.webp' /></p><p></p><p>இந்நிலையில் பெத்லகேம் குடும்ப யூனிட் உலகம் முழுவதும் ரூ. 250 கோடி வசூலை கடந்து ரூ. 300 கோடி வசூலை நோக்கி செல்கிறது. 

அதோடு மலையாள சினிமாவின் அதிக வசூலான லோகா படத்தின் ரூ. 300 கோடி வசூலை கடந்து பெத்லகேம் குடும்ப யூனிட் இண்டஸ்ட்ரி ஹிட் அடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><h2>தமிழ்நாடு வசூல்</h2><p> </p><p>

இந்நிலையில் தமிழகத்தில் இந்த வாரம் தான் இப்படத்தின் தமிழ் டப்பிங் ரிலீஸ் செய்யப்பட்டது. அதற்கும் நல்ல வரவேற்பு இருப்பதால், தற்போது இந்த படம் தமிழகத்தில் மட்டுமே ரூ. 7.5 கோடி வசூல் செய்துள்ளாதாம்; கண்டிப்பாக ரூ. 10 கோடி வரை இப்படம் வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6e8db2b4-7ec1-4d7e-bc94-f0f8b12eee1e/26-6a9d0fe75890e.webp' /></p>]]></content>
            <updated>2026-09-07T08:20:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[யோஷித ராஜபக்சவின் மேல்முறையீடு திரும்பப்பெற அனுமதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/yoshitha-s-appeal-petition-withdrawn-1788767025"></link>
            <id>https://tamilwin.com/article/yoshitha-s-appeal-petition-withdrawn-1788767025</id>
            <summary type="text">பணச்சலவை தடுப்புச்சட்டத்தின் கீழ் தொடரப்பட்ட வழக்கில், தனக்கு எதிரான சதிக்குற்றச்சாட்டை தொடர்வதை தடுக்கக்கோரி யோஷித ராஜபக்ச தாக்கல் செய்திருந்த மேல்மு...</summary>
            <content type="html"><![CDATA[<p>பணச்சலவை தடுப்புச்சட்டத்தின் கீழ் தொடரப்பட்ட வழக்கில், தனக்கு எதிரான சதிக்குற்றச்சாட்டை தொடர்வதை தடுக்கக்கோரி யோஷித ராஜபக்ச தாக்கல் செய்திருந்த மேல்முறையீடு&nbsp;திரும்பப்பெறப்பட்டுள்ளது. 

</p><p>அதன்படி, இன்று (07) மேல்முறையீட்டைத் திரும்பப்பெறுவதற்கு உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.</p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">மீண்டும் மேல்முறையீடு செய்ய வேண்டிய நிலை&nbsp;</span></p><p>அத்துடன், எதிர்காலத்தில் மீண்டும் மேல்முறையீடு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டால், இதே விடயத்தை முன்வைக்க யோஷித ராஜபக்சவுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cdeda138-f3b9-4bfb-9921-bce60ae7f5a2/26-6a9e732bcd8fd.webp' />&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-07T08:18:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[விமானத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்ட பயணி; டேப்போட்டு கட்டிய பணியாளர்கள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/a-passenger-behaved-unruly-us-flight-taped-him-up-1788764606"></link>
            <id>https://canadamirror.com/article/a-passenger-behaved-unruly-us-flight-taped-him-up-1788764606</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;அமெரிக்க உள்நாட்டு விமானம் ஒன்றில், ஒழுங்கீனமாக நடந்து கொண்ட ஒரு பயணி, விமானப் பணியாளர்களால் அவரது இருக்கையில் டேப்பால் கட்டி வைக்கப்பட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;அமெரிக்க உள்நாட்டு விமானம் ஒன்றில், ஒழுங்கீனமாக நடந்து கொண்ட ஒரு பயணி, விமானப் பணியாளர்களால் அவரது இருக்கையில் டேப்பால் கட்டி வைக்கப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.</p><p>

கடந்த வியாழக்கிழமை நடந்த இந்தச் சம்பவத்தை அமெரிக்கன் ஏர்லைன்ஸ் செய்தித் தொடர்பாளர், உறுதிப்படுத்தினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/144d709c-d2ab-474e-a216-9544f6022f15/26-6a9e61c06bbb9.webp' /></p><p>
</p><p>
டல்லாஸிலிருந்து நியூயோர்க்கிற்கு அருகிலுள்ள நியூவார்க்கிற்குச் சென்ற விமானம் 618, பால்டிமோரில் இறங்க்கிய நிலையில் , அங்கு வந்த எப்.பி.ஐ அதிகாரிகள் அந்த நபரை விமானத்திலிருந்து வெளியேற்றியதாகவும் கூறப்படுகின்றது.</p><p>இன்னிலையில்&nbsp;&nbsp;இருக்கையில்&nbsp; பயணி&nbsp; டேப்பால் கட்டி வைக்கப்பட்ட புகைப்படம்&nbsp; சமூகவலைத்தளங்க்களில்&nbsp; வைரலாகியுள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-07T08:10:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மிஸ் வேர்ல்ட் பட்​டத்தை வென்ற தமிழ் பெண்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/taanusiya-chetty-3rd-won-the-miss-world-2026-1788766152"></link>
            <id>https://canadamirror.com/article/taanusiya-chetty-3rd-won-the-miss-world-2026-1788766152</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;மிஸ் வேர்ல்ட் பட்​டத்தை டொமினிகன் குடியரசைச் சேர்ந்த ஜோஹேரி மோலா (வயது 24), வென்றுள்ளார்.

 ஸ்பெ​யினைச் சேர்ந்த எலிசபெத் 2 ஆம் இடத்​தை​...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;மிஸ் வேர்ல்ட் பட்​டத்தை டொமினிகன் குடியரசைச் சேர்ந்த ஜோஹேரி மோலா (வயது 24), வென்றுள்ளார்.

 ஸ்பெ​யினைச் சேர்ந்த எலிசபெத் 2 ஆம் இடத்​தை​யும், மலேசியாவை சேர்ந்த தமிழ்ப் பெண்ணான தனுசியா செட்டி 3 ஆம் இடத்​தை​யும் பிடித்​தனர்.
</p><p>
வியட்​நாமின் காங் ஹோவா மாகாணம், நியா ட்ராங் நகரில் கடந்த ஓகஸ்ட் 8 ஆம் திகதி மிஸ் வேர்ல்டு உலக அழகிப் போட்டி தொடங்​கியது. 

இதில் இந்​தி​யா​வைச் சேர்ந்த நிகிதா போர்​வால் உட்பட 111 நாடு​களைச் சேர்ந்த போட்​டி​யாளர்​கள் பங்​கேற்​றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4fb0d005-7f95-47ee-a99a-072ff28aaa91/26-6a9e67ca6bf76.webp' /></p><h2>மலேசியாவை சேர்ந்த தமிழ்ப் பெண்</h2><p> </p><p>அவர்​களுக்கு பல்​வேறு கட்​டங்​களாக போட்​டிகள் நடத்​தப்​பட்​டன.

வியட்​நாமின் நியா ட்ராங் நகரில் நேற்று முன்​தினம் மாலை இறுதிப் போட்டி நடை​பெற்​றது. முதல்​கட்​ட​மாக 111 போட்டியாளர்களில் இருந்து 40 பேர் தேர்வு செய்​யப்​பட்​டனர். இதில் இந்​தி​யா​வின் நிகிதா இடம் பெற்​றிருந்​தார். அதன்​பிறகு 20 பேர் தேர்வு செய்​யப்​பட்​டனர்.</p><p>

ஆனால் அந்​தப் பட்​டியலில் இந்​திய அழகி இடம்​பெற​வில்​லை. அடுத்த கட்​ட​மாக 12 போட்​டி​யாளர்​கள் தேர்ந்​தெடுக்​கப்​பட்​டனர். அவர்​களில் இருந்து 6 பேர் தேர்வு செய்யப்​பட்​டனர். நள்​ளிர​வில் முடிவு​கள் அறிவிக்​கப்​பட்​டன.
</p><p>
அப்​போது டொமினிகன் குடியரசைச் சேர்ந்த ஜோஹேரி மோலா முதலிடத்​தைப் பிடித்து ‘மிஸ் வேர்ல்​டு’ உலக அழகி பட்​டத்தை வென்​றார்.

 அவருக்கு கடந்த ஆண்டு பட்​டம் வென்ற தாய்​லாந்​தின் ஓபல் சுசாடா மகுடம் சூட்​டி​னார். ஸ்பெ​யின் நாட்டை சேர்ந்த எலிசபெத் ரெய்​னெஸ் (வயது 22) இரண்​டாவது இடம் பிடித்​தார்.

மலேசி​யா​வைச் சேர்ந்த தனுசியா செட்டி (வயது 25) மூன்​றாம் இடத்தைப் பெற்​றார். </p><p>அவரது தாய்​மொழி தமிழ் ஆகும்.

 அவரது தந்தை வீர​பாண்​டியன். 14 வயதில் தாயை இழந்த தனுசியா தந்தை​யின் அரவணைப்​பில் வளர்ந்​தார். அவர் கொடுத்த ஊக்கத்தால் மிஸ் மலேசியா பட்​டம் வென்​று, மிஸ் வேர்ல்டு போட்டி​யில் நுழைந்​தார்.
</p><p>
வியட்​நாமில் நடை​பெற்ற மிஸ் வேர்ல்டு போட்​டி​யின்​போது ஆங்​கிலம், மலாய், மாண்​டரின், தமிழ் ஆகிய 4 மொழிகளில் தனுசியா சரள​மாக பேசி​னார். “மாற்​றம் என்​பது நமக்​குள் இருந்தே தொடங்க வேண்​டும்” என்று அவர் 4 மொழிகளில் பேசிய வீடியோ சமூக வலை​தளங்​களில் வைரலாக பரவி வரு​கிறது.</p>]]></content>
            <updated>2026-09-07T08:10:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மின்சாரம் தாக்கி இளம் தாய் உயிரிழப்பு; தவிக்கும் பிள்ளைகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/bibile-young-mother-dies-of-electrocution-1788765247"></link>
            <id>https://jvpnews.com/article/bibile-young-mother-dies-of-electrocution-1788765247</id>
            <summary type="text">&amp;nbsp; பிபிலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தோதம்வள்ளை பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றில், மின்சாரம் தாக்கி மூன்று பிள்ளைகளின் தாய் ஞாயிற்றுக்கிழமை (06) உயிரிழந...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; பிபிலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தோதம்வள்ளை பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றில், மின்சாரம் தாக்கி மூன்று பிள்ளைகளின் தாய் ஞாயிற்றுக்கிழமை (06) உயிரிழந்துள்ள சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><p>&nbsp;உயிரிழந்தவர் தோதம்வள்ளை ஈதனவத்தையைச் சேர்ந்த பிரசந்திகா மதுமாலி (30) எனப்படும் மூன்று பிள்ளைகளின் தாயாவார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f3866da1-34a3-4f22-9f5f-a99400159b39/26-6a9e650645d0a.webp' /></p><h2>&nbsp;சார்ஜரை&nbsp; இணைக்க முற்பட்டவேளை உயிரிழப்பு</h2><p>
 வீட்டில் மின்விளக்கு ஒன்றை மின்னேற்றம் (சார்ஜ்) செய்வதற்காக,&nbsp; சார்ஜரை சுவிட்சில் இணைக்க முற்பட்டவேளை மின்சாரம் தாக்கியுள்ளது.</p><p></p><p>இதனையடுத்து , பிபிலை முஸ்தபா வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் முன்பே அவர் உயிரிழந்திருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
 மரணம் தொடர்பில் பிபிலை பதில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் ஆர்.எஸ். ஜகத் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-07T08:09:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மஹிந்தவை தொடர்ந்து சிறைசாலைக்கு சென்ற ஷிராந்தி ராஜபக்ச !]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/shiranthi-rajapaksa-continued-to-visit-prison-1788768703"></link>
            <id>https://jvpnews.com/article/shiranthi-rajapaksa-continued-to-visit-prison-1788768703</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp; விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை பார்ப்பதற்காக அவரது தாயாரும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp; விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை பார்ப்பதற்காக அவரது தாயாரும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மனைவியுமான ஷிராந்தி ராஜபக்ச இன்று (07) சிறைச்சாலை வளாகத்திற்கு வந்துள்ளார்.
</p><p>


ஷிராந்தி ராஜபக்ச சற்று முன்னர் அவர் வெலிக்கடை சிறைச்சாலை வளாகத்திற்கு சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/421b0b23-3cec-4cf4-9cce-fb3a4bab3b2c/26-6a9e71c0902ca.webp' /></p><p></p><p>



இதேவேளை, நாமல் ராஜபக்சவை சந்திப்பதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவும் கடந்த சனிக்கிழமை (05) வெலிக்கடை சிறைச்சாலைக்கு சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.&nbsp;&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-09-07T08:08:39+00:00</updated>
        </entry>
    </feed>
