<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-09-05T04:55:29+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாமலுக்கு எதிராக அவுஸ்திரேலியாவில் பெறப்பட்ட சாட்சியங்கள்! நீதிமன்றத்தில் என்ன நடந்தது....]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-arrested-based-on-nimal-perera-s-affidavit-1788583095"></link>
            <id>https://tamilwin.com/article/namal-arrested-based-on-nimal-perera-s-affidavit-1788583095</id>
            <summary type="text">ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் &#039;ஏர்பஸ்&#039; (Airbus) விமானக் கொள்முதல் தொடர்பான ஊழலில் 100 மில்லியன் ரூபாயை தாம் நாமல் ராஜபக்சவிடம் வழங்கியதாக தொழிலதிப...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் 'ஏர்பஸ்' (Airbus) விமானக் கொள்முதல் தொடர்பான ஊழலில் 100 மில்லியன் ரூபாயை தாம் நாமல் ராஜபக்சவிடம் வழங்கியதாக தொழிலதிபர் நிமல் பெரேரா வழங்கிய சத்தியக்கடதாசி உட்பட முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளை அடுத்தே, 
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டதாக கொழும்பு மேலதிக நீதிவான் நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டது.
</p><p>
நிமல் பெரேரா என்பவர் பல வருடங்களாக பல பிரசித்தி பெற்ற நிதி குற்றங்கள் விசாரணைகள் மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகளில் பெயர் குறிப்பிடப்பட்ட இலங்கையின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவராவார். சர்ச்சைக்குரிய 'கிரிஷ்' (Krrish) ஒப்பந்தம் உட்பட மேலும் பல சந்தேகத்திற்கிடமான சம்பவங்கள் தொடர்பிலும் அவர் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
</p><h2>
</h2><p></p><h2>இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு-CID விசாரணை</h2><p>இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) இணைந்து நடத்திய கூட்டு விசாரணையைத் தொடர்ந்தே நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டதாக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டார நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
</p><p>
அவுஸ்திரேலியா, சிங்கப்பூர், பிரான்ஸ் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளின் அதிகாரிகளின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட இந்த விசாரணை தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக முறைப்பாட்டாளர் தரப்பு தெரிவித்தது.
</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/444561ea-d9c3-46a4-8e2c-8d7815f91232/26-6a9b9cb9524ee.webp' /></p><p>நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட காரணங்களுக்கு அமைய, இந்த சர்ச்சைக்குரிய விமானக் கொள்வனவு ஒப்பந்தம் தொடர்பாக ஏர்பஸ் நிறுவனத்தினால் 1.45 மில்லியன் யூரோ பணம் செலுத்தப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
</p><p>
ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தின் முன்னாள் நிறைவேற்றுத்தர அதிகாரியான கபில சந்திரசேனவின் மனைவியான பிரியங்கா நியோமலி விஜேநாயக்கவின் முழுமையான உரிமையின் கீழ் இயங்கும் ‘பிஸ் சொல்யூஷன்’ (Biz Solution) என்ற நிறுவனத்தின் சிங்கப்பூர் ஸ்டேன்டட் சாட்டட் வங்கி கணக்கிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட இந்தப் பணம், </p><p>பின்னர் தொழிலதிபர் நிமல் பெரேரா தலைவராகப் பதவி வகித்த நிறுவனத்திற்குச் சொந்தமான சிங்கப்பூரிலுள்ள வங்கிக் கணக்கொன்றிற்கு அனுப்பப்பட்டுள்ளதாக முறைப்பாட்டாளர் தரப்பு தெரிவித்தது.
</p><h2>

</h2><h2><span style="color: inherit; font-size: 1.75rem;">அவுஸ்திரேலியாவில் பெறப்பட்ட வாக்குமூலம்</span></h2><p>விசாரணையாளர்கள் தற்போது நிமல் பெரேரா வசித்து வரும் அவுஸ்திரேலியாவிற்குச் சென்று அவரிடமிருந்து வாக்குமூலம் பதிவு செய்துள்ளதாகவும் நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டது.
</p><p>
முறைப்பாட்டாளர் தரப்பின் கூற்றுப்படி, ‘பிஸ் சொலூஷன்’ கணக்கிலிருந்து தனது நிறுவனத்திற்குப் கிடைத்த 800,000 அமெரிக்க டொலர்களை இலங்கை ரூபாயாக மாற்றி நாமல் ராஜபக்சவிடம் ஒப்படைத்ததாக நிமல் பெரேரா இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவிடம் சத்தியக்கடதாசி வழங்கியுள்ளார்.
</p><p>
அந்தப் தொகை அக்காலகட்டத்தில் சுமார் 100 மில்லியன் இலங்கை ரூபாய்க்கு சமமானது என முறைப்பாட்டாளர் தரப்பு நீதிமன்றத்தில் தெரிவித்தது.

தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி நிமல் பெரேரா மீண்டும் இலங்கைக்கு வர மறுத்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
</p><p>
விமானக் கொள்வனவு ஒப்பந்தம் தொடர்பான விசாரணைக்கு உதவுவதற்கு ஏர்பஸ் நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளதாகவும், ஏர்பஸ் நிறுவனத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் மூன்று முறை இலங்கைக்கு வருகை தந்து நான்கு வாக்குமூலங்களை வழங்கியுள்ளனர். </p><p>ஏர்பஸ் நிறுவனத்திற்கும் நாமல் ராஜபக்சவிற்கும் இடையே இருப்பதாகக் கூறப்படும் தொடர்புகள் குறித்த தகவல்களையும் விசாரணையாளர்கள் வெளிப்படுத்தியுள்ளதாக நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டது.
</p><p>
இதன்போது நாமல் ராஜபக்ச சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி சம்பத் மெண்டிஸ், தனது கட்சிக்காரருக்கு பிணை கோரியதுடன், பிரதானமாக நிமல் பெரேராவின் வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே தனது கட்சிக்காரர் கைது செய்யப்பட்டுள்ளதாக வாதிட்டார்.
</p><h2>
நாமல் ராஜபக்சவின் சட்டத்தரணியின் வாதம்</h2><p>பிரான்ஸ் விசாரணையாளர்களோ அல்லது ஏர்பஸ் அதிகாரிகளோ நாமல் ராஜபக்சவிற்கு பணம் கொடுத்ததாக எந்தவொரு வாக்குமூலமும் அளிக்கவில்லை என பிரதிவாதி தரப்பு வாதிட்டது.
</p><p>
கிரிஷ் ஒப்பந்தம் தொடர்பான பிற நீதிமன்ற நடவடிக்கைகளின் போது நிமல் பெரேரா வழங்கிய சாட்சியங்களை சுட்டிக்காட்டிய சட்டத்தரணி மெண்டிஸ், அவரது நம்பகத்தன்மையையும் கேள்விக்குட்படுத்தினார்.
</p><p>
குறிப்பிட்ட நிறுவனத்துடன் தொடர்புடைய கணக்கின் உரிமையை நிமல் பெரேரா முன்னர் நிராகரித்திருந்ததாகவும், அது இத்தாலி நாட்டவரான தனது நண்பர் ஒருவருக்குச் சொந்தமானது என அவர் கூறியிருந்ததாகவும் பிரதிவாதி தரப்பு வாதிட்டது.
</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b4a14375-b6d6-4b81-94ff-e0c31807e2cf/26-6a9b9cba059a0.webp' /></p><p>2019 ஆம் ஆண்டில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் ஏற்றுக்கொள்ளப்படாத நிமல் பெரேராவின் வாக்குமூலங்களை விசாரணையாளர்கள் இப்போது எவ்வாறு நம்புகிறார்கள் என்றும் சட்டத்தரணி மெண்டிஸ் கேள்வி எழுப்பினார்.
</p><p>
இருப்பினும் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு பிணை வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்ததுடன், ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் 149 ஆவது பிரிவின் கீழ் அதன் பணிப்பாளர் நாயகத்தினால் சான்றிதழ் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதால், பிணை வழங்குவதற்கு விசேட காரணங்கள் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என நீதிமன்றத்திற்கு அறிவித்தது.</p><p>
நிமல் பெரேராவின் நம்பகத்தன்மை குறித்து பிரதிவாதி தரப்பு எழுப்பும் சவாலானது வழக்கு விசாரணையின் போதே தீர்மானிக்கப்பட வேண்டிய ஒரு விடயமாகும் என்றும், இந்த சந்தர்ப்பத்தில் பிணை வழங்குவதற்கான விசேட காரணியாக அதைக் கருத முடியாது என்றும் கொழும்பு மேலதிக நீதிவான் அசங்க எஸ்.போதரம தீர்ப்பளித்தார்.&nbsp;</p><p>&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-09-05T04:47:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Fathima</name>
            </author>
            <title type="text"><![CDATA[பட்டப்பகலில் அத்துமீறல்: பெண்ணை காப்பாற்றிய தெருநாய்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/street-dogs-saved-a-woman-1788583443"></link>
            <id>https://ibctamilnadu.com/article/street-dogs-saved-a-woman-1788583443</id>
            <summary type="text">கோவை துடியலூரில் தவறாக நடக்க முயன்ற நபரிடமிருந்து மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை தெருநாய்கள் காப்பாற்றின.

கோவை கவுண்டம்பாளையம் அசோகபுரம் பகுதியில் அமை...</summary>
            <content type="html"><![CDATA[<p>கோவை துடியலூரில் தவறாக நடக்க முயன்ற நபரிடமிருந்து மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை தெருநாய்கள் காப்பாற்றின.</p><p>

கோவை கவுண்டம்பாளையம் அசோகபுரம் பகுதியில் அமைந்துள்ள பெட்டிக்கடைக்கு மர்ம நபர்கள் தீ வைத்த விவகாரத்தில் போலிசார் சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்தனர்.
</p><p>
இதன்போது அதிர்ச்சிகர சம்பவமொன்று வெளிச்சத்துக்கு வந்தது, அதாவது அசோகபுரம் ரயில்வே மேம்பால சாலையோரம் மனநலம் பாதிக்கப்பட்ட 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் தனியார் தூங்கி கொண்டிருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0984c57d-a28f-4eae-85cb-37cca7d7f6e0/26-6a9b9e52bca5b.webp' /><br></p><p>
</p><p>
அந்த வழியாக வந்த நபர் ஒருவர் தெருநாய்கள் துரத்தி வந்துள்ளன, சத்தம் கேட்டு விழித்த பெண் கல்லால் அடித்தால் நாய்கள் போய்விடும் என கூறியுள்ளார்.
</p><p>
தொடர்ந்து குறித்த நபர் நாய்களை அடித்து துரத்தினார், அக்கம்பக்கத்தில் யாரும் இல்லாததால் பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார்.</p><p>

பெண்ணின் சத்தம் கேட்டு திரும்பி வந்த நாய்கள், குறித்த நபரிடம் இருந்து பெண்ணை காப்பாற்றினர், அவரது கால்களை கடித்து இழுத்தன.
</p><p>
இக்காட்சிகளை பார்த்த போலிசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தியதில் குறித்த நபர் 16 வயதான சிறுவன் என தெரியவந்தது, இதனையடுத்து அவரை கைது செய்த போலிசார் சிறார் கூர்நோக்கு இல்லத்தில் சேர்த்தனர்.&nbsp;<br></p>]]></content>
            <updated>2026-09-05T04:45:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[சீனப்பிரஜை கடத்திப் படுகொலை: மாறுவேடமிட்டிருந்த முக்கிய சந்தேகநபர் கைது!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/port-city-chinese-national-murderer-arrested-1788583177"></link>
            <id>https://tamilwin.com/article/port-city-chinese-national-murderer-arrested-1788583177</id>
            <summary type="text">&amp;nbsp;கொழும்பு துறைமுக நகரத்தில் வைத்து சீனப் பிரஜை ஒருவரை படுகொலை செய்த குற்றச் சாட்டின் பிரதான சந்தேக நபர் மாறுவேடமிட்டிருந்த நிலையில் கைது செய்யப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கொழும்பு துறைமுக நகரத்தில் வைத்து சீனப் பிரஜை ஒருவரை படுகொலை செய்த குற்றச் சாட்டின் பிரதான சந்தேக நபர் மாறுவேடமிட்டிருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>சீனப் பிரஜையை காரில் கடத்திச் சென்று படுகொலை செய்து, அவரது உடலைக் கற்களால் மூடிவிட்டுத் தப்பிச் சென்ற சம்பவத்தின் பிரதான சந்தேகநபரே இவ்வாறு செயற்கை முடி (விக்கு) அணிந்து மாறுவேடத்தில் இருந்தபோதே 43 நாட்களுக்குப் பின்னர் நேற்றைய தினம் (04) துறைமுக நகரத்திலேயே கைது செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
</p><p>சந்தேகநபர் அணிந்திருந்த செயற்கை முடியும் பொலிஸ் பாரத்திற்கு எடுக்கப்பட்டுள்ளது. </p><p>இக்குற்றச் சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் நான்கு சீன தேசியவாதிகள் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9d6007c3-d671-4ccb-9221-af68798f2eec/26-6a9b9d0adacc6.webp' /></p><p>
</p><p>எஹெலியகொட பொலிஸ் நிலையத்திற்குட்பட்ட கரதன பொலிஸ் சோதனைச் சாவடி அதிகாரிகள் குழுவொன்று, சோதனைச் சாவடியிலிருந்து கெட்டஹெத்த வீதியில் அமைந்துள்ள ரம்புட்டான் தோட்டம் ஒன்றிலுள்ள இடிந்த வீடொன்றில் இருந்து கடந்த ஜூலை 23 ஆம் திகதி நபரொருவரின் சடலத்தைக் கண்டெடுத்தது.
</p><p>அச்சடலம் கபொக் கற்களால் மூடப்பட்டிருந்த நிலையில், சந்தேகத்திற்குரிய சொகுசு கார் ஒன்றும் அன்றைய தினமே நுகதண்ட கோவில் அருகிலுள்ள வீதியிலிருந்து மீட்கப்பட்டது.
</p><p>மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசாரணைகளில் இதுவொரு படுகொலை என்பதும், உயிரிழந்தவர் சீன பிரஜை என்பதும் தெரியவந்தது. </p><p>அதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட மேலதிக விசாரணைகளில், அவர் கொழும்பு துறைமுக நகரத்திலிருந்து கடத்தி வரப்பட்ட சீன தேசியவாதி என்பது உறுதிசெய்யப்பட்டது.</p><p>
கடந்த ஜூலை 23 ஆம் திகதி இக்குற்றம் இடம்பெற்ற காலப்பகுதியிலேயே, சந்தேகத்திற்குரிய இரு சீன பிரஜைகள் வெளிநாடு தப்பிச் செல்வதற்காக கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்குச் சென்றிருந்தபோது கைது செய்யப்பட்டனர். </p><p>ஏனைய இரு சீனப் பிரஜைகளும் சம்பவத்தின் பின்னர் கொழும்புப் பகுதியை விட்டுத் தப்பி, சீகிரியா பகுதியிலுள்ள விடுதியொன்றில் ஒளிந்திருந்த நிலையில் கடந்த மாதம் 30 ஆம் திகதி கைது செய்யப்பட்டனர்.
</p><p>கைது செய்யப்பட்டுள்ள 54 வயதான முக்கிய சந்தேகநபரான சீனப் பிரஜையை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தடுப்புக் காவல் உத்தரவைப் பெற பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-05T04:44:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பன்றியின் சிறுநீரகம் மனித உடலில் 271 நாட்கள் செயற்பட்டு சாதனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/pig-kidney-functions-in-human-body-for-271-days-1788582255"></link>
            <id>https://ibctamil.com/article/pig-kidney-functions-in-human-body-for-271-days-1788582255</id>
            <summary type="text">பன்றியிடமிருந்து பெறப்பட்ட சிறுநீரகத்தைப் பொருத்திய அமெரிக்க நோயாளி ஒருவரின் உடலில், அந்தச் சிறுநீரகம் 271 நாட்கள் செயற்பட்டு சாதனை படைத்துள்ளதாக அமெர...</summary>
            <content type="html"><![CDATA[<p>பன்றியிடமிருந்து பெறப்பட்ட சிறுநீரகத்தைப் பொருத்திய அமெரிக்க நோயாளி ஒருவரின் உடலில், அந்தச் சிறுநீரகம் 271 நாட்கள் செயற்பட்டு சாதனை படைத்துள்ளதாக அமெரிக்க மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.</p><p>

இது பன்றியின் உறுப்பொன்று மனித உடலில் வெற்றிகரமாகச் செயற்பட்ட மிக நீண்ட காலமாகும் என மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.</p><p>

நீண்டகாலமாக இரத்தச் சுத்திகரிப்பு சிகிச்சையான டயாலிசிஸ் மூலம் வாழ்ந்து வந்த குறித்த நோயாளிக்கு, மனித சிறுநீரகம் கிடைக்கும் வரையிலான தற்காலிக மாற்று ஏற்பாடாக பன்றியின் சிறுநீரகம் பொருத்தப்பட்டது.</p><p></p><h2>271 நாட்கள் சாதனை</h2><p>
இந்த உறுப்பு மாற்று சிகிச்சை தனக்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியதாக நோயாளி தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/905760c5-21bf-46d2-92e1-2a597dd4e895/26-6a9b9e0ac4bed.webp' /></p><p>

எனினும், இறுதியில் பன்றியின் சிறுநீரகத்தின் செயற்பாடு தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, குறித்த நோயாளிக்கு மனித சிறுநீரகம் மாற்றுப் பொருத்து சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
</p><p>
அமெரிக்காவில் ஆண்டுதோறும் சுமார் 25,000 சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சைகள் இடம்பெறுகின்றன.</p><p> அதேவேளை, சுமார் ஒரு இலட்சம் பேர் சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சைக்காகக் காத்திருப்போர் பட்டியலில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
மனித உறுப்புகளுக்கான பற்றாக்குறையை சமாளிப்பதற்கான மாற்று வழியாக, விலங்குகளின் உறுப்புகளை மனிதர்களுக்குப் பொருத்தும் Xenotransplantation துறையில் இந்தச் சாதனை முக்கிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-05T04:44:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இன்று முதல் லிட்ரோ சமையல் எரிவாயு புதிய விலை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/litro-gas-prices-slashed-srilanka-1788583397"></link>
            <id>https://jvpnews.com/article/litro-gas-prices-slashed-srilanka-1788583397</id>
            <summary type="text">&amp;nbsp; இன்று (05) முதல் அமலுக்கு வரும் வகையில் லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகளைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் அற...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; இன்று (05) முதல் அமலுக்கு வரும் வகையில் லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகளைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
</p><h2>


புதிய விலை விபரம்,</h2><p>&nbsp;இதன்படி, பொதுமக்களால் அதிகம் பயன்படுத்தப்படும் 12.5 கிலோகிராம் எடையுடைய வீட்டுப் பயன்பாட்டு சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 100 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4781c911-20a8-4dae-bc31-0fc0c06978a5/26-6a9b9de6890a5.webp' /></p><p> </p><p>இந்த விலை திருத்தத்தைத் தொடர்ந்து, 12.5 கிலோகிராம் சமையல் எரிவாயு சிலிண்டரின் புதிய விற்பனை விலை 4,365 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 

மேலும், 5 கிலோகிராம் எடையுடைய சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 42 ரூபாவினால் குறைக்கப்பட்டு, அதன் புதிய விலை 1,750 ரூபாவாக மாற்றமடைந்துள்ளது.</p><p>



அதேபோன்று, 2.3 கிலோகிராம் எடையுடைய சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 20 ரூபாவினால் குறைக்கப்பட்டு, புதிய விலையாக 815 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-05T04:40:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Fathima</name>
            </author>
            <title type="text"><![CDATA[கோர விபத்து: சுற்றுலா சென்ற 8 மாணவர்கள் பரிதாப மரணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/8-college-students-die-in-thrissur-accident-1788582556"></link>
            <id>https://ibctamilnadu.com/article/8-college-students-die-in-thrissur-accident-1788582556</id>
            <summary type="text">8 Dindigul Student Died in Thrissur Accident: கேரளாவின் திருச்சூர் அருகே சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த சரக்கு லாரியின் பின்புறம் கார் மோதி விபத்துக்கு...</summary>
            <content type="html"><![CDATA[<p>8 Dindigul Student Died in Thrissur Accident: கேரளாவின் திருச்சூர் அருகே சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த சரக்கு லாரியின் பின்புறம் கார் மோதி விபத்துக்குள்ளானதில் கல்லூரி மாணவர்கள் 8 பேர் உயிரிழந்த சோக சம்பவம் நடந்துள்ளது.</p><p>

தமிழ்நாட்டின் திண்டுக்கல் PSNA பொறியியல் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் 8 பேர் சேர்ந்து காரில் கேரளாவுக்கு சுற்றுலா சென்றுள்ளனர்.
</p><p>
திருச்சூர் அருகே கைப்பமங்கலத்தில் நேற்று நள்ளிரவு 12 மணியளவில் பனம்பிக்குன்னு சந்திப்பில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த சரக்கு லாரியின் பின்புறத்தில் கார் வேகமாக மோதி விபத்துக்குள்ளானது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b5b90e10-1029-4f3b-8d50-2b94a2f10674/26-6a9b9b30c4818.webp' /><br></p><p>
</p><p>
மோதிய வேகத்தில் கார் முற்றிலும் நொறுங்கியது, பயங்கர சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் உடனடியான மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
</p><p>
கார் முழுவதுமாக சிதைந்து நொறுங்கியதால் காரின் பாகங்கள் வெட்டி எடுக்கப்பட்டு மாணவர்களின் உடல்கள் மீட்கப்பட்டன, 8 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
</p><p>
அவர்களின் சடலங்கள் திருச்சூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.
</p><p>
மாணவர்களின் முகங்களை கூட காணமுடியாத அளவு சிதைந்து போயிருந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர், அனைவரும் 19 முதல் 20 வயதுக்கு உட்பட்டவர்கள் என தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3fc4edd1-9cf4-43a0-ad67-e20988a81f8b/26-6a9b9b318bf5e.webp' /><br></p>]]></content>
            <updated>2026-09-05T04:32:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[சந்தாவுடன் திருமணத்திற்கு தயாரான சேரனை கட்டியணைத்து அழுத கார்த்திகா... அய்யனார் துணை சீரியல் புரொமோ]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/ayyanar-thunai-serial-august-6-episode-promo-1788578147"></link>
            <id>https://cineulagam.com/article/ayyanar-thunai-serial-august-6-episode-promo-1788578147</id>
            <summary type="text">அய்யனார் துணைவிஜய் தொலைக்காட்சியில் அய்யனார் துணை சீரியலில் திருமண கொண்டாட்டம் கலைகட்டியுள்ளது. சந்தாவை அவரது மாமா பீகாரில் வீட்டில் பூட்டி வைக்க அவர்...</summary>
            <content type="html"><![CDATA[<h2>அய்யனார் துணை</h2><p>விஜய் தொலைக்காட்சியில் அய்யனார் துணை சீரியலில் திருமண கொண்டாட்டம் கலைகட்டியுள்ளது. </p><p>சந்தாவை அவரது மாமா பீகாரில் வீட்டில் பூட்டி வைக்க அவர் திருமணத்திற்கு வருவாரா இல்லையா என்ற பரபரப்பில் கடந்த சில நாள் எபிசோட் இருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a742838c-31e7-4b8c-9ed2-391cd5babc22/26-6a9b8e077fe0e.webp' /></p><p> </p><p>பின் நேற்றைய எபிசோடில், நிலாவின் அப்பா பிளான் போட்டு சந்தா குடும்பத்தை சென்னை அழைத்துவர ஏற்பாடு செய்தார்கள்.</p><p> </p><p>இன்றைய எபிசோடில், எப்படியோ சந்தா சென்னை வந்து திருமண வரவேற்பிலும் கலந்துகொண்டார், திருமண கொண்டாட்டம் கலைகட்டிவிட்டது. </p><p>ஆனால் கார்த்திகா மட்டும் சேரனுக்கு சந்தாவுடன் திருமணம் நடப்பது நினைத்து கஷ்டப்படுகிறார், தங்கள் இருவருக்கும் திருமணம் நடக்க இருப்பது போல் கனவு எல்லாம் காண்கிறார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0447b188-6f7d-4663-9890-abffcc53660e/26-6a9b8e084b0e7.webp' /></p><h2>புரொமோ</h2><p>
கார்த்திகா கஷ்டப்படுவதை கண்ட அவரது அம்மா உன் வாழ்க்கையை நானே கெடுத்துவிட்டேன். </p><p>சேரனிடம் பணம் இல்லை, நாகரீகமான குடும்பம் இல்லை என வேறொருவருக்கு திருமணம் செய்துவைத்துவிட்டேன் என அவர் கதறி கதறி அழுகிறார். </p><p>பின் நாளைய எபிசோடின் புரொமோவில், சேரன் சந்தாவிடம் தனியாக வந்து பேசிக்கொண்டிருக்கும் போது அந்த இடம் வந்த கார்த்திகா சேரனை கட்டியணைத்து அழுகிறார். .</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b566f0f6-5c21-40c9-b35c-6e968cadcb12/26-6a9b8e0693c46.webp' /></p>]]></content>
            <updated>2026-09-05T04:30:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[வடக்கு, கிழக்கில் இராணுவத்தினர் வசமுள்ள காணி விடுவிப்பு : ஐ.நா மனித உரிமைகள் அலுவலகம் வலியுறுத்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/release-military-controlled-lands-in-north-east-un-1788579681"></link>
            <id>https://ibctamil.com/article/release-military-controlled-lands-in-north-east-un-1788579681</id>
            <summary type="text">வடக்கு, கிழக்கில் இராணுவத்தின் கட்டுப்பாட்டிலுள்ள காணிகளை விடுவிக்குமாறும் மேலதிக காணி சுவீகரிப்புகளை நிறுத்துமாறும்&amp;nbsp;ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>வடக்கு, கிழக்கில் இராணுவத்தின் கட்டுப்பாட்டிலுள்ள காணிகளை விடுவிக்குமாறும் மேலதிக காணி சுவீகரிப்புகளை நிறுத்துமாறும்&nbsp;ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகம் வலியுறுத்தியுள்ளது.</p><p>எதிர்வரும் செப்டம்பர் 07 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 63 ஆவது அமர்வில் சமர்ப்பிக்கப்படவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க்கின் இலங்கை தொடர்பான எழுத்துமூல அறிக்கை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.</p><p>அரசியலமைப்பு சீர்திருத்தம், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்து செய்தல், அரசியல் கைதிகளை விடுதலை செய்தல் மற்றும் பொறுப்புக்கூறல் போன்ற பாரிய மாற்றங்களைச் செய்வதாக அளித்த வாக்குறுதியின் அடிப்படையிலேயே தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><p>&nbsp;</p><h2>பயங்கரவாதத் தடைச் சட்டம்</h2><p>


எனினும், அரசாங்கம் பயங்கரவாதத் தடைச் சட்டத்தைத் தொடர்ந்தும் அமுல்படுத்தியமையினால் தன்னிச்சையான கைதுகளும் குற்றச்சாட்டுகள் இன்றி நீண்ட காலம் தடுத்து வைப்பதும் இடம்பெற்றதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6f7995bd-c7b1-4fda-8bdf-695b62b4c76c/26-6a9b9ad3ec71a.webp' /></p><p>


2025 ஆம் ஆண்டில் அவ்வாறு காவலின் போதோ அல்லது தடுத்து வைக்கப்பட்டிருந்தபோதோ இடம்பெற்ற 18 மரணங்களும், 2026 ஏப்ரல் மாதமாகும் போது அத்தகைய 3 சம்பவங்களும், அதேபோன்று 2025 ஆம் ஆண்டில் சித்திரவதை மற்றும் கொடூரமாக தாக்குதல் நடாத்துதல் தொடர்பான 602 சம்பவங்களும், 2026 ஏப்ரல் மாதமாகும் போது அத்தகைய 138 சம்பவங்களும் பதிவாகியுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p>


உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் போன்ற சில வழக்குகளில் முன்னேற்றம் காணப்பட்ட போதிலும், யுத்த காலத்தில் இடம்பெற்ற பாரதூரமான மனித உரிமை மீறல்கள் தொடர்பில் இதுவரை நிலையான பொறுப்புக்கூறல் இடம்பெறவில்லை என்றும் உயர்ஸ்தானிகர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p></p><h2>சிறைச்சாலை வன்முறைகள்</h2><p>
</p><p>

மேலும், குற்றப் புலனாய்வுத் திணைக்களம் அல்லது பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு உள்ளடங்கலாக இராணுவ மற்றும் சிவிலியன் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளால் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு எதிராக அரசு மட்டத்திலான உளவு பார்த்தல், அச்சுறுத்தல் மற்றும் பழிவாங்குதல்கள் இடம்பெறுவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7eed66ef-bfdf-4d96-9923-4af4ec0674bd/26-6a9b9ad4a418f.webp' /></p><p>
</p><p>

பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு இடைக்காலத் தடை விதித்து அதனை விரைவாக இரத்து செய்து புதிய சட்டமொன்றை ஏற்படுத்துமாறு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகம் பரிந்துரை செய்கிறது.</p><p>இதற்கு மேலதிகமாக, கருத்துச் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தும் இணையவழிப் பாதுகாப்புச் சட்டம், ICCPR சட்டம் மற்றும் வரைவு செய்யப்பட்டுள்ள NGO சட்டத்தைச் திருத்துதல் அல்லது இரத்து செய்தலும் பரிந்துரைகளில் அடங்கும்.</p><p>


சிறைச்சாலைகளில் அதிக நெரிசல் மற்றும் வன்முறைகளைத் தடுப்பதற்கான சீர்திருத்தங்களை மேற்கொள்வதுடன், போதைப்பொருளுக்கு அடிமையானவர்களை சிறையிலடைக்காது சுகாதார ரீதியிலான மறுவாழ்விற்கு உட்படுத்துமாறும் உயர்ஸ்தானிகரின் பரிந்துரைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-05T04:28:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[உயிரே போனாலும் செய்த தவறை ஒப்புக்கொள்ளாத டாப் 3 ராசிகள்! உங்க ராசியும் இதுவா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/zodiac-signs-who-never-accept-they-are-mistakes-1788526895"></link>
            <id>https://manithan.com/article/zodiac-signs-who-never-accept-they-are-mistakes-1788526895</id>
            <summary type="text">தவறு செய்யாத மனிதர்களே இல்லை. ஒவ்வொருவரும் வாழ்க்கையில் ஏதாவது ஒரு கட்டத்தில் தவறு செய்கிறார்கள். ஆனால், செய்த தவறை ஒப்புக்கொள்ளும் மனப்பக்குவம் அனைவர...</summary>
            <content type="html"><![CDATA[<p>தவறு செய்யாத மனிதர்களே இல்லை. ஒவ்வொருவரும் வாழ்க்கையில் ஏதாவது ஒரு கட்டத்தில் தவறு செய்கிறார்கள். ஆனால், செய்த தவறை ஒப்புக்கொள்ளும் மனப்பக்குவம் அனைவரிடமும் இருப்பதில்லை.
</p><p>
ஜோதிட நம்பிக்கைகளின்படி, சில ராசிக்காரர்கள் எவ்வளவு&nbsp; கடினமான சூழ்நிலை வந்தாலும் தங்களின் தவறை எளிதில் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ‘சாரி’ அல்லது ‘என் தவறு’ என்று சொல்வதற்குப் பதிலாக, தங்கள் செயல்களை நியாயப்படுத்தும் வகையில் மாத்திரமே பேசுவார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5cead4c4-2188-496b-9c03-de89afd39fb5/26-6a9ac8b213ae8.webp' /></p><p></p><p>அப்படி தலையே போனாலும் செய்த தவறை மட்டும் ஒப்புக்கொள்ள விரும்பாத ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்களாம்.</p><h2>சிம்மம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/31572e5f-0ef5-43a9-9d5d-f5de14d9bce2/26-6a9ac8b2bd37a.webp' /></p><p>
சிம்ம ராசியின் அதிபதி கிரகங்களின் ராஜாவான சூரியன். இது அகங்காரம், தன்னம்பிக்கை மற்றும் கௌரவத்தைக் குறிக்கிறது. </p><p>சிம்ம ராசிக்காரர்கள் இயல்பிலேயே தலைமைப் பண்பு கொண்டவர்கள்; அனைவரும் தங்களைப் பாராட்ட வேண்டும் என விரும்புவார்கள். </p><p>இதனால், தாங்கள் செய்த தவறை ஒப்புக்கொள்வதும் மன்னிப்புக் கேட்பதும் அவர்களுக்கு கடினமாக இருக்கும். தாங்கள் வலிமையானவர்களாகத் தோன்ற வேண்டும் என்பதால், தவறை ஒப்புக்கொள்வது தங்களின் மதிப்பையும் இமேஜையும் பாதிக்கும் என நினைப்பார்கள்.
</p><h2>
மேஷம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b8438c93-307f-4038-861f-6bd28f80eb08/26-6a9ac8b375d36.webp' /></p><p></p><h2>
</h2><p>மேஷ ராசியின் அதிபதி செயல் மற்றும் ஆக்ரோஷத்தின் கிரகமான செவ்வாய். மேஷ ராசிக்காரர்கள் துணிச்சலானவர்கள், தன்னம்பிக்கை மிக்கவர்கள், வேகமாகச் செயல்படுபவர்கள்.</p><p> ஆனால், தாங்கள் தவறு செய்திருந்தாலும் அதை நியாயப்படுத்தி மேலும் வாதிடுவார்கள். உணர்ச்சிவசப்பட்ட நேரங்களில் தங்களின் கருத்தே சரி என விடாப்பிடியாக இருப்பார்கள்.பின்னர் வருத்தப்பட்டாலும், வெளிப்படையாக மன்னிப்புக் கேட்க மாட்டார்கள்.</p><h2>
விருச்சிகம்</h2><p>&nbsp;<img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/237a56ab-3ae0-4ee6-9f70-f9b0c1d57054/26-6a9ac8b42950c.webp' /></p><h2>
</h2><p>விருச்சிக ராசிக்காரர்கள் செவ்வாய் மற்றும் புளூட்டோவின் ஆதிக்கத்தில் உள்ளவர்கள். தங்களின் உணர்வுகளை எளிதில் வெளிப்படுத்தாத இவர்கள், தவறு செய்தாலும் அதை ஒப்புக்கொள்வதற்குப் பதிலாக மௌனம் காப்பார்கள்.</p><p> தங்களின் காரணங்கள் நியாயமானவை என நம்புவதால், மன்னிப்புக் கேட்பதைத் தவிர்த்து அந்தச் சூழ்நிலையிலிருந்து விலகிச் செல்ல முயல்வார்கள்.</p><h2><span style="color: inherit; font-size: 1.75rem;">கும்பம்</span></h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ca95ae8d-c5af-45e2-b4ab-e542aff98d4b/26-6a9ac8b4d3b7f.webp' /></p><p>கும்ப ராசியினர் யுரேனஸ் மற்றும் சனியின் ஆதிக்கத்திற்கு உட்பட்டவர்கள். வித்தியாசமாகவும் தனித்துவமான கண்ணோட்டத்துடனும் சிந்திப்பார்கள்.தங்களின் நியாயமே சரி என நம்புவதால், தவறுகளை ஒப்புக்கொள்ளத் தயங்குவார்கள்.</p><p> தங்களின் காரணங்களை மற்றவர்கள் புரிந்துகொள்ளவில்லை எனக் கூறி, உணர்வுப்பூர்வமான விவாதங்களைத் தவிர்ப்பார்கள். ஆனால் செய்த தவறை மட்டும் ஒப்புக்கொள்ளவே மாட்டார்கள்.</p><p><b>இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).&nbsp; &nbsp;</b> &nbsp;&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW&nbsp;</a></u></b> &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-05T04:24:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[கியூஆர் குறியீட்டு எரிபொருள் விநியோக முறைமை தொடர்பில் வெளியான புதிய அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/fuel-distribution-under-qr-code-system-to-continue-1788580721"></link>
            <id>https://tamilwin.com/article/fuel-distribution-under-qr-code-system-to-continue-1788580721</id>
            <summary type="text">கியூஆர் குறியீட்டு முறையின் கீழான எரிபொருள் விநியோகத் திட்டம் தொடரும் என இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. 

மத்திய கிழக்கில் நிலவி...</summary>
            <content type="html"><![CDATA[<p>கியூஆர் குறியீட்டு முறையின் கீழான எரிபொருள் விநியோகத் திட்டம் தொடரும் என இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. </p><p>

மத்திய கிழக்கில் நிலவி வரும் சூழ்நிலை காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் நிர்வாக இயக்குனர் டாக்டர் மயூர நெட்டிகுமார தெரிவித்துள்ளார்.</p><h2>விலை குறைப்பு</h2><p>
</p><p>
இதேவேளை இன்றைய தினம் (05.09.2026) முதல் உலை எண்ணெய் (Furnace Oil) மற்றும் நாப்தாவின் (Naphtha) விலைகள் குறைக்கப்படும் என இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
</p><p>
அதன்படி, ஒரு லீட்டர் உலை எண்ணெயின் விலை 38 ரூபாவும், ஒரு லீட்டர் நாப்தாவின் விலை 35 ரூபாவும் குறைக்கப்படும் என அதன் நிர்வாக இயக்குனர் மயூர நெத்திகுமரா குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cd0448df-c20f-4294-9401-50b6f6686683/26-6a9b97d0736bd.webp' /></p><p> </p><p>

அதன்படி, ஒரு லீட்டர் உலை எண்ணெயின் விலை 248 ரூபாவிலிருந்து, 210 ரூபாவாக குறைக்கப்படும்.</p><h2>மக்களுக்கு நிவாரணம்</h2><p> </p><p>

இதற்கிடையில், உலை எண்ணெய் மற்றும் நாப்தாவின் விலைக் குறைப்பைக் கருத்தில் கொண்டு, எதிர்காலத்தில் பொதுமக்களுக்கு அந்த நிவாரணத்தை வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக தெரிவித்துள்ளார். </p><p>

மேலும், வரவிருக்கும் மின்சாரக் கட்டணத் திருத்தத்தில் பொதுமக்களுக்கு அந்த நிவாரணத்தை வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-05T04:17:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழ் ஊடகவியலாளர் மீதான அடக்குமுறை - அநுர அரசின் போலி முகம் அம்பலம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/repression-of-tamil-journalists-1788581508"></link>
            <id>https://tamilwin.com/article/repression-of-tamil-journalists-1788581508</id>
            <summary type="text">தமிழ் ஊடகவியலாளர் பிரபாகரன் டிலக்சன் மீதான ஊடக அடக்குமுறையை மிகவும்
வன்மையாகக் கண்டிக்கின்றேன் என முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர்
ச.சுகிர்தன் த...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழ் ஊடகவியலாளர் பிரபாகரன் டிலக்சன் மீதான ஊடக அடக்குமுறையை மிகவும்
வன்மையாகக் கண்டிக்கின்றேன் என முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர்
ச.சுகிர்தன் தெரிவித்துள்ளார்.
</p><p>
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. </p><h2>

வெளிச்சத்திற்கு வரும் அரசின் போலி முகங்கள்</h2><p>
அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்படுவதாவது, </p><p>

ஆட்சி அதிகாரங்கள் இல்லாத காலகட்டத்தில் தங்களை ஜனநாயகவாதிகள் போலவும்
ஊடகங்களின் நண்பர்கள் போலவும் காட்டிக்கொண்ட தேசிய மக்கள் சக்தி, தற்போது
ஆட்சிக்கு வந்தவுடன் கடந்த கால அரசுகளை விட மிக மோசமாக ஊடகவியலாளர்கள் மீது அடக்குமுறைகளையும் வன்முறைகளையும் ஏவிவிட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e4a15191-80d9-4ce6-ab93-e39baf416dc4/26-6a9b9763e302f.webp' /></p><p>
</p><p>
தங்களின் இயலாமை, ஊழல்கள் மற்றும் செயற்திறனற்ற தன்மைகளை ஊடகவியலாளர்கள் வெளிச்சம் போட்டுக் காட்டுவதால், தங்கள் போலி முகங்கள் மக்களிடம்
அம்பலப்பட்டுவிடும் என்ற அச்சத்திலே இந்த அடக்குமுறைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
</p><p>அரச தரப்பு இந்த வன்முறைப் போக்கை உடனடியாகக் கைவிட வேண்டும்.

வடக்கில் நீண்டகாலமாகச் சுயாதீனமாகச் செயற்பட்டு வரும் ஊடகவியலாளர் பிரபாகரன் டிலக்சன், கொள்கை ரீதியில் பிழைவிடும் தமிழ்த் தேசியவாதிகளுக்கு எதிராகக் கூட துணிந்து கருத்துக்களைப் பதிவு செய்தவர். </p><p>அத்தகைய ஒரு சுதந்திரமான ஊடகவியலாளர் தற்போது தேசிய மக்கள் சக்தி அரசால் பழிவாங்கப்பட்டுள்ளார்.
</p><h2>

ஊடகவியலாளர்கள் மீதான அடக்குமுறை</h2><p>
கடந்த காலங்களில் ஊடகங்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட அநீதிகளுக்காகப் போலியாகக்
கண்ணீர் வடித்தவர்கள், இன்று அதிகாரம் கிடைத்தவுடன் ஊடகவியலாளர்களைக் காலால் எடையும் மிலேச்சத்தனமான சூழலை உருவாக்கியுள்ளனர்.
</p><p>
நாடளாவிய ரீதியில் இன்று மகிந்த ராஜபக்சவின் ஆட்சியை விடவும் மோசமான,
சர்வாதிகார மற்றும் மிலேச்சத்தனமான ஆட்சி முறைக்குள் இலங்கை மக்கள்
தள்ளப்படும் ஆபத்து உருவாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fb6d1aa2-1179-4206-8c69-f2993c284d19/26-6a9b9764aeee8.webp' /></p><p> </p><p>

இத்தகைய ஆபத்துக்களை மக்கள் மத்தியில்
கொண்டு சேர்த்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் பாரிய பொறுப்பு
ஊடகவியலாளர்களுக்கே உள்ளது. </p><p>அதனை அவர்கள் சிறப்பாகச் செய்து வருவதை ஒடுக்கும் நோக்கிலேயே அரசு இந்த அடக்குமுறைகளைக் கையிலெடுத்துள்ளது.
</p><p>
எனவே, நாட்டில் ஊடக சுதந்திரத்துக்கு எதிரான இத்தகைய வதைகள் தொடராதவாறு அரசு
தனது செயற்பாடுகளை மாற்றிக்கொள்ள வேண்டும். ஊடகவியலாளர் பிரபாகரன் டிலக்சன்
மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள அடக்குமுறையை மிகவும் வன்மையாகக்
கண்டிக்கின்றேன் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-05T04:16:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாரிஜாதம் சீரியல் நடிகை ஆல்யா மானசாவின் ரீசெண்ட் க்யூட் கிளிக்ஸ்...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/parijatham-heroine-alya-manasa-recent-photoshoot-1788582508"></link>
            <id>https://viduppu.com/article/parijatham-heroine-alya-manasa-recent-photoshoot-1788582508</id>
            <summary type="text">ஆல்யா மானசாசின்னத்திரையில் ஹீரோயினாக அறிமுகமாகிய முதல் சீரியலிலேயே ரசிகர்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்த நடிகைகளில் ஒருவர் தான் நடிகை ஆல்யா மானசா. ர...</summary>
            <content type="html"><![CDATA[<h2>ஆல்யா மானசா</h2><p>சின்னத்திரையில் ஹீரோயினாக அறிமுகமாகிய முதல் சீரியலிலேயே ரசிகர்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்த நடிகைகளில் ஒருவர் தான் நடிகை ஆல்யா மானசா.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d388ab97-fa95-45ed-9d87-f3fd692874fb/26-6a9b9a76eb143.webp' /></p><p> </p><p>ராஜா ராணி சீரியல் மூலம் புகழ் பெற்ற ஆல்யா, சீரியலின் ஹீரோ சஞ்சீவை காதலித்து திருமணம் செய்து 2 குழந்தைகளுக்கு தாயானார். அதன்பின்பும் உடல் எடையை கட்டுக்கோப்பாக வைத்துக்கொண்டு சீரியலில் நடிக்க தொடங்கினார். </p><p>இனியா சீரியலில் நடித்து பின் தற்போது பாரிஜாதம் சீரியலிலும் முக்கிய ரோலில் நடித்து வருகிறார். இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் ஆல்யா மானசா, க்யூட்டான லுக்கில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-09-05T04:15:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[தீவிரமடையும் கருங்கடல் தாக்குதல்... உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் என அச்சம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/escalation-in-black-sea-attacks-1788581707"></link>
            <id>https://news.lankasri.com/article/escalation-in-black-sea-attacks-1788581707</id>
            <summary type="text">Deadly escalation in Black Sea attacks: அபாயகரமாக அதிகரித்துள்ள கருங்கடல் தாக்குதல்.
ரஷ்யாவும் உக்ரைனும் கருங்கடலில் மாறி மாறி தாக்குதலை முன்னெடுப்பத...</summary>
            <content type="html"><![CDATA[<p>Deadly escalation in Black Sea attacks: அபாயகரமாக அதிகரித்துள்ள கருங்கடல் தாக்குதல்.
</p><p>ரஷ்யாவும் உக்ரைனும் கருங்கடலில் மாறி மாறி தாக்குதலை முன்னெடுப்பதால், முக்கியமான தானிய ஏற்றுமதி பாதிக்கப்படுவதுடன், இமோதல் உலகளாவிய உணவுப் பொருட்களின் விலையை மேலும் உயர்த்தக்கூடும் என்ற கவலையும் அதிகரிக்க செய்துள்ளது.</p><h2>மிகவும் ஆபத்தானதாக</h2><p>
</p><p>சமீபத்திய வாரங்களில் இரு நாடுகளுக்கும் இடையேயான மோதல் தீவிரமடைந்ததால், அதற்கு முந்தைய போர்க் காலம் முழுவதிலும் கருங்கடலில் கொல்லப்பட்டவர்களை விட, ஜூலை மாதத்தில் கருங்கடலில் அதிகமான மாலுமிகள் மரணமடைந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/da72e053-7e85-4def-a22e-09090b9ecd4c/26-6a9b974da7646.webp' /></p><p> </p><p>இதனால், அந்தக் நீர்நிலையானது வர்த்தகக் கப்பல் போக்குவரத்திற்கு உலகின் மிகவும் ஆபத்தானதாக மாறியது. அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே மோதல் நிலவி வந்தபோதிலும், ஹார்முஸ் நீரிணை, செங்கடல் மற்றும் ஏடன் வளைகுடா ஆகிய பகுதிகளில் கப்பல்கள் தொடர்ந்து குறிவைக்கப்பட்டு வருகின்றன. </p><p>துருக்கிய மாலுமிகள் சங்கத்தின் மதிப்பீடுகளின்படி, ஜூலை மாதத்தில் கருங்கடலில் 35 கப்பல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களின் விளைவாக 23 பேர் வரை மரணமடைந்தனர். ஆகஸ்ட் மாதத்திலும் கப்பல்கள் மீதான தாக்குதல்கள் தொடர்ந்தன. </p><p>மேலும், உக்ரைன் போர் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, ஐ.நா. கப்பல் போக்குவரத்து அமைப்பான சர்வதேச கடல்சார் அமைப்பின் தலைவர், உலகெங்கிலும் கடல்சார் பாதுகாப்பு மோசமடைந்து வருவதைக் கண்டித்துள்ளார்.</p><p></p><p> </p><p>2022-இல் உக்ரைன் மீது படையெடுத்ததைத் தொடர்ந்து வந்த மாதங்களில், உக்ரைனின் கருங்கடல் துறைமுகங்களில் நங்கூரமிடப்பட்டிருந்த கப்பல்கள் மற்றும் துறைமுகக் கட்டமைப்புகள் மீது ரஷ்யா தொடர்ச்சியான தாக்குதல்களை நடத்தியது; இதன் மூலம் தானியங்களை ஏற்றுமதி செய்வதிலிருந்து உக்ரைன் தடுக்கப்பட்டது. </p><p>ஜூலை மாதத்தில், உக்ரைனின் முக்கிய தானிய ஏற்றுமதி மையங்களான ஒடெசா மற்றும் சோர்னோமோர்ஸ்க் மீது ரஷ்யா மீண்டும் தாக்குதல் நடத்தியது.</p><p> இருப்பினும், கருங்கடல் மற்றும் அதனுடன் கெர்ச் நீரிணையால் இணைக்கப்பட்டுள்ள அசோவ் கடல் பகுதிகளில் சமீபகாலமாக ஏற்பட்டுள்ள பதற்ற அதிகரிப்புக்கு, உக்ரைனின் பதிலடித் தாக்குதல்களும் ஒரு காரணமாக அமைந்துள்ளன. </p><p>மேலும், தனது எண்ணெய் ஏற்றுமதி மீதான தடைகளைத் தவிர்ப்பதற்காக ரஷ்யா பயன்படுத்தும் நூற்றுக்கணக்கான கப்பல்களைக் கொண்ட ஒரு மறைமுகக் கப்பற்படைக்குச் சொந்தமானவை என்று உக்ரைன் கூறும் எண்ணெய்க் கப்பல்கள் உட்பட, ரஷ்யக் கப்பல்களை ட்ரோன்களால் உக்ரைன் தாக்கியுள்ளது.</p><p> மட்டுமின்றி, எண்ணெய் மற்றும் தானிய ஏற்றுமதிக்கு மிக முக்கியமான ரஷ்யாவின் கருங்கடல் துறைமுகமான நோவோரோசிஸ்கில் உள்ள கப்பல்கள் மற்றும் துறைமுகக் கட்டிடங்களை உக்ரைன் குறிவைத்துள்ளது.</p><h2>தானிய ஏற்றுமதி</h2><p> </p><p>நிலையற்ற கடல்சார் நிலைமையானது, ரஷ்ய மற்றும் உக்ரேனிய தானிய ஏற்றுமதிகளை ஏற்கனவே கணிசமாகக் குறைத்துள்ளது. இந்த இடையூறு, மற்ற உணவு விலை அதிர்ச்சிகளின் தாக்கத்தை மேலும் மோசமாக்கி, இறக்குமதி செய்யப்படும் கோதுமை, பார்லி மற்றும் மக்காச்சோளத்தை நம்பியிருக்கும் நாடுகளைப் பாதிக்கும் என்ற கவலைகளை இது எழுப்பியுள்ளது. </p><p>ரஷ்யா உலகின் மிகப்பெரிய தானிய ஏற்றுமதியாளராகத் திகழ்கிறது; அதன் விளைபொருட்கள் பெரும்பாலும் மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்க நாடுகளுக்கும் (குறிப்பாக துருக்கி மற்றும் எகிப்துக்கும்) அனுப்பப்படுகின்றன. </p><p>அதேவேளையில், உக்ரைன் ஐந்தாவது மிகப்பெரிய ஏற்றுமதியாளராக உள்ளது. உக்ரேனிய ட்ரோன் தாக்குதல்களின் தொடர் நடவடிக்கைகளைத் தொடர்ந்து, ஜூலை மாதத்தில் ரஷ்யா அசோவ் கடலில் கப்பல் போக்குவரத்தை நிறுத்தியது; பின்னர், காஸ்பியன் மற்றும் பால்டிக் கடல்கள் மற்றும் பசிபிக் பெருங்கடல் போன்ற மாற்றுப் பாதைகள் வழியாகத் தனது தானிய ஏற்றுமதியில் ஒரு பகுதியைத் திருப்பிவிட முடிவு செய்தது.
</p><p>இருப்பினும், ரஷ்யாவின் கடல்வழி தானிய ஏற்றுமதியில் 70 சதவீதத்திற்கும் அதிகமானவை கருங்கடல் துறைமுகங்களிலிருந்தும், மேலும் 20 சதவீதத்தவை அசோவ் கடலிலிருந்தும் அனுப்பப்படுகின்றன என்றே ஆக்ஸ்போர்டு எகனாமிக்ஸ் (Oxford Economics) அமைப்பு கண்டறிந்துள்ளது. </p><p>இந்த ஆண்டு முன்கூட்டியே அதிக அளவில் தானிய அறுவடை செய்த உக்ரைன், தனது கருங்கடல் துறைமுகங்கள் வழியாக அதிக அளவில் தானியங்களை ஏற்றுமதி செய்ய இயலாத நிலையையும் சந்தித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/07a729c9-579b-42c9-92e4-25a216d8a2f9/26-6a9b974e5fdd5.webp' /></p><p> </p><p>உக்ரைனின் உணவுத்துறை அமைச்சரின் சமீபத்திய கருத்துக்களின்படி, கடல், ரயில், நதி மற்றும் சாலைப் போக்குவரத்து முறைகளைப் பயன்படுத்தி ஏற்றுமதி செய்யக்கூடிய தானியத்தில் மூன்றில் ஒரு பங்கை, அதாவது சுமார் 1.4 மில்லியன் டன்களை மட்டுமே அந்த நாடு ஏற்றுமதி செய்துள்ளது. </p><p>சமீபத்திய வாரங்களில் உலகளாவிய கோதுமை விலைகள் உயர்ந்து வர்த்தகமாகி வருகின்றன, ஆனால் 2022-ல் உக்ரைன் போர் தொடங்கிய காலகட்டத்தில் இருந்த அளவுகளை விடக் குறைவாகவே உள்ளன. </p><p>இந்த ஆண்டு உலகளாவிய உணவுப் பொருட்களின் விலைகள் கிட்டத்தட்ட 12 சதவீதம் உயரும் என்றும், 2027-ஆம் ஆண்டில் மேலும் 4.8 சதவீதம் உயரும் என்றும் ஆக்ஸ்போர்டு எகனாமிக்ஸ் கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-05T04:13:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[அநுர அரசின் அதிரடி நடவடிக்கை - கொழும்பில் சட்டவிரோத ஹோட்டல்களை அகற்ற நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/hotels-to-be-removed-from-colombo-1788580151"></link>
            <id>https://tamilwin.com/article/hotels-to-be-removed-from-colombo-1788580151</id>
            <summary type="text">கொழும்பு மற்றும் அதன்புறநகர் பகுதியிலுள்ள கரையோரங்களில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள ஹோட்டல்களை அகற்ற சமகால அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல்கள...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு மற்றும் அதன்புறநகர் பகுதியிலுள்ள கரையோரங்களில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள ஹோட்டல்களை அகற்ற சமகால அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.</p><p> 

அதற்கமைய பம்பலப்பிட்டி முதல் தெஹிவளை வரையிலான கடற்கரை பகுதியில் அமைந்துள்ள சட்டவிரோத கட்டுமானங்களை எதிர்வரும் 10 ஆம் திகதிக்கு முன்னர் அகற்றுமாறு கடற்கரை பாதுகாப்பு திணைக்களம் உத்தரவிட்டுள்ளது.
</p><p>
அரசியல்வாதிகள் மற்றும் உயர் அரசாங்க அதிகாரிகளின் தலையீட்டுடன் போலி ஆவணங்களை தயாரித்து இந்த ஹோட்டல்கள் தன்னிச்சையாக நிர்மாணிக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.</p><p>
</p><h2><b>
சட்டவிரோத ஹோட்டல்</b></h2><p>இவ்வாறு சட்டவிரோதமாக மேற்கொள்ளப்பட்டுள்ள அனைத்து கட்டுமானங்களையும் இடித்து அகற்றுவதற்கு கடற்கரை பாதுகாப்பு மற்றும் கடலோர வள முகாமைத்துவ திணைக்களம் தீர்மானித்துள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/617f8b19-d9b5-433c-a6cd-9e8565fd0a75/26-6a9b93072286c.webp' /></p><p>இந்த கடற்கரை பகுதிகளை மிகவும் உணர்திறன் வாய்ந்த மற்றும் சுற்றுலாப் பயணிகளை பெரிதும் ஈர்க்கும் வகையில் மேம்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. </p>]]></content>
            <updated>2026-09-05T03:58:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[காலி சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/galle-prisoner-dies-1788579455"></link>
            <id>https://ibctamil.com/article/galle-prisoner-dies-1788579455</id>
            <summary type="text">காலி சிறைச்சாலையில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர...</summary>
            <content type="html"><![CDATA[<p>காலி சிறைச்சாலையில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
</p><p>
உயிரிழந்தவர் ஹபராதுவ, மெலேகொட பகுதியைச் சேர்ந்த 42 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
</p><p>குறித்த நபர் கடந்த ஜூலை 22ஆம் திகதி முதல் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்ததாக சிறைச்சாலை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>கைதி உயிரிழப்பு</h2><p>உயிரிழந்த கைதி ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/37a924d6-d0e7-4ba5-a75a-27e3783458a0/26-6a9b93455b8ed.webp' /></p><p>
உயிரிழந்த சந்தேகநபர் தொடர்பான நீதவான் விசாரணையும், பிரேதப் பரிசோதனையும் இன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-05T03:58:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Tony</name>
            </author>
            <title type="text"><![CDATA[நடிகர் சூர்யாவின் 50வது படத்தின் இயக்குனர் இவரா.. வேறலெவல் மாஸ் சம்பவம் உறுதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/actor-suriya-50th-movie-director-details-1788577174"></link>
            <id>https://cineulagam.com/article/actor-suriya-50th-movie-director-details-1788577174</id>
            <summary type="text">நடிகர் சூர்யாசூர்யா தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகர். பல வருடங்கள் ஹிட் இல்லாமல் இருந்த சூர்யா கருப்பு, விஸ்வநாத் அண்ட் சன்ஸ் என இரண்டு பேக் ட...</summary>
            <content type="html"><![CDATA[<h2>நடிகர் சூர்யா</h2><p>சூர்யா தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகர். </p><p>பல வருடங்கள் ஹிட் இல்லாமல் இருந்த சூர்யா கருப்பு, விஸ்வநாத் அண்ட் சன்ஸ் என இரண்டு பேக் டூ பேக் மெகா ஹிட் படங்களை கொடுத்து வசூல் நாயகன் ஆகிவிட்டார்.</p><p> இந்நிலையில் சூர்யா தன் அடுத்தடுத்த படங்களில் மிகவும் கவனம் செலுத்தி வருகிறாராம், அதில் அடுத்து ஜெய் பீம் ஞானவேல் இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bd81d240-4f70-4fff-aa28-34a22ff62be5/26-6a9b85977094b.webp' /></p><h2>50வது படம்</h2><p>அதை தொடர்ந்து ஹெச் வினோத் இயக்கும் படம் என ப்ளான் செய்த இவர், தனது 50வது படத்தை மெகா ஹிட் இயக்குனர் லோகேஷ் கனகராஜிடம் கொடுத்துள்ளதாகவும், அதுவும் ரோலெக்ஸ் கதாபாத்திரம் முழுப்படமாக வரும் எனவும் கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ad89cd3e-4cc2-48ef-b0dc-ef2f174653ff/26-6a9b859821302.webp' /></p><p>இது அனைத்தும் நடந்தால் விஜய் இடத்திற்கு சூர்யா தான் அடுத்து வருவார் என்றே தெரிகிறது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-05T03:50:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் அதிரடியாக குறைக்கப்பட்ட லிட்ரோ எரிவாயு விலை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/litro-gas-prices-reduced-in-sri-lanka-1788577791"></link>
            <id>https://ibctamil.com/article/litro-gas-prices-reduced-in-sri-lanka-1788577791</id>
            <summary type="text">இலங்கையில் நுகர்வோர் பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகளைக் குறைத்துள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.


இந்த விலைக் க...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் நுகர்வோர் பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகளைக் குறைத்துள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.
</p><p>

இந்த விலைக் குறைப்பானது இன்று (05) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வருவதாக லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
</p><p>

இதன்படி, பொதுமக்களால் அதிகம் பயன்படுத்தப்படும் 12.5 கிலோகிராம் எடையுடைய வீட்டுப் பயன்பாட்டு சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 100 ரூபாயினால் குறைக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>புதிய விலைகள்</h2><p> </p><p>இந்தநிலையில், 12.5 கிலோகிராம் சமையல் எரிவாயு சிலிண்டரின் புதிய விற்பனை விலை 4,365 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c74dfc5b-d09e-46ce-a44d-9961d9144ba0/26-6a9b8c6d5dccf.webp' /></p><p>

 

மேலும், 5 கிலோகிராம் எடையுடைய சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 42 ரூபாயினால் குறைக்கப்பட்டு, அதன் புதிய விலை 1,750 ரூபாயாக அறிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>

அதேபோன்று, 2.3 கிலோகிராம் எடையுடைய சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 20 ரூபாயினால் குறைக்கப்பட்டு, புதிய விலையாக 815 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-05T03:31:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் 20ஆம் திருவிழா - பக்தி பரவசத்தில் பக்தர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/20th-festival-of-nallur-kandaswamy-temple-1788578777"></link>
            <id>https://tamilwin.com/article/20th-festival-of-nallur-kandaswamy-temple-1788578777</id>
            <summary type="text">நல்லூர் ஆலயத்தின் 20ஆம் திருவிழா இன்று (05.09.2026) காலை பக்தி பரவசத்துடன் இடம்பெற்றுள்ளது.

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய மகோற்சவத...</summary>
            <content type="html"><![CDATA[<p>நல்லூர் ஆலயத்தின் 20ஆம் திருவிழா இன்று (05.09.2026) காலை பக்தி பரவசத்துடன் இடம்பெற்றுள்ளது.
</p><p>
வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய மகோற்சவத்தின் 20ஆம் திருவிழா இன்று காலை வெகு விமரிசையாக நடைபெற்றுள்ளது.</p><p>

இதன்போது சந்தன கோபாலர் உற்சவமும், பட்டித் திருவிழாவும் சிறப்பாக இடம்பெற்றதுடன், பெருமளவான பக்தர்கள் கலந்து கொண்டு நல்லூரானை தரிசித்து வழிபட்டனர்.
</p><p>
வாத்திய இசை முழங்க, பக்தர்களின் ‘அரோகரா’ கோஷங்களுக்கு மத்தியில் இடம்பெற்ற காலை உற்சவம் பக்தி உணர்வை மேலோங்கச் செய்தது.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-05T03:30:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிளிநொச்சியில் கோர விபத்து - 22 வயது இளைஞர் பரிதாப உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/accident-in-kilinochchi-1788578183"></link>
            <id>https://tamilwin.com/article/accident-in-kilinochchi-1788578183</id>
            <summary type="text">கிளிநொச்சி - உருத்திரபுரம் டி - 7 பகுதியில் மோட்டார் சைக்கிள் பனை மரத்தில்
மோதி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிளிநொச்சி - உருத்திரபுரம் டி - 7 பகுதியில் மோட்டார் சைக்கிள் பனை மரத்தில்
மோதி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p> இந்த சம்பவம் நேற்று(04.09.2026) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> 

உருத்திரபுரம் இந்துக் கல்லூரிக்கு அண்மித்த பகுதியில் பயணித்த மோட்டார்
சைக்கிள், சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதிக்கு அருகிலிருந்த பனை
மரத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.</p><h2>

இளைஞர் உயிரிழப்பு</h2><p>
இந்தச் சம்பவத்தில் படுகாயமடைந்த கிளிநொச்சி, உதயநகர் பகுதியைச் சேர்ந்த 22
வயதுடைய இளைஞர், உடனடியாகக் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c8b23c03-d2e4-4003-9a5a-22672840206b/26-6a9b89d0c69bd.webp' /></p><p>

உயிரிழந்த இளைஞரின் சடலம் பிரேத பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம்
ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p>

இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளைக் கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்து
வருகின்றனர்.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-05T03:17:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரஷ்யர்களுக்கான சுற்றுலா விசா... ஐரோப்பிய ஒன்றியத்தை வலியுறுத்தும் ஜேர்மனி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/eu-cut-russians-holiday-visas-1788578267"></link>
            <id>https://news.lankasri.com/article/eu-cut-russians-holiday-visas-1788578267</id>
            <summary type="text">Germany urges EU to cut Russians’ holiday visas: ரஷ்யர்களுக்கான சுற்றுலா விசாக்களைக் குறைக்க ஐரோப்பிய ஒன்றியத்தை ஜேர்மனி வலியுறுத்துகிறது.
சமீபத்திய ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Germany urges EU to cut Russians’ holiday visas: ரஷ்யர்களுக்கான சுற்றுலா விசாக்களைக் குறைக்க ஐரோப்பிய ஒன்றியத்தை ஜேர்மனி வலியுறுத்துகிறது.</p><p>
சமீபத்திய நாசவேலைத் தாக்குதல்களைத் தொடர்ந்து, சுற்றுலா விசாக்களில் ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் நுழையும் ரஷ்யர்கள் மீது கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்குமாறு ஜேர்மனி தனது ஐரோப்பிய சகாக்களை வலியுறுத்தி வருகிறது.</p><h2>அதிக விசாக்கள்</h2><p>
</p><p>ட்ரோன்கள் மற்றும் வெடிபொருட்களைப் பயன்படுத்தி லைப்சிக் (Leipzig) விமான நிலையத்தைத் தாக்க முயன்றதாகக் கூறப்படும் விவகாரம் தொடர்பாக, ரஷ்யக் கடவுச்சீட்டையும் வைத்திருக்கும் பெலாரஸ் நாட்டைச் சேர்ந்த ஒருவரை ஜேர்மன் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். </p><p>பெலாரஸின் தலைநகரான மின்ஸ்கில் உள்ள இத்தாலியத் தூதரகம் வழங்கிய சுற்றுலா விசாவில், அந்த நபர் ஷெங்கன் பகுதிக்குள் நுழைந்ததாகக் கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/87cda2e3-c03b-4821-9472-45cf70a1bacc/26-6a9b89dd188b5.webp' /></p><p> </p><p>ஆனால் அவர் ஒருபோதும் இத்தாலி வழியாகப் பயணம் செய்ததாகத் தெரியவில்லை என்று பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. </p><p>இதனிடையே, ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து ரஷ்யர்களுக்கு அதிக எண்ணிக்கையிலான விசாக்கள் வழங்கப்படுவதாக ஜேர்மனியின் வெளிவிவகார அமைச்சகம் புகார் தெரிவித்துள்ளது.
</p><p>அரசுக்கு நெருக்கமான வட்டாரங்களில் இருந்து கசிந்துள்ள தகவலின் அடிப்படையில், ரஷ்யர்களுக்கு வழங்கப்படும் அதிக எண்ணிக்கையிலான விசாக்கள் உக்ரைன் போர் தொடர்பான தடைகளின் நோக்கத்திற்கு முரணாக அமைவதுடன், ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் யார், எந்த நோக்கத்திற்காக நுழைகிறார்கள் என்பதை அறிவதையும் சாத்தியமற்றதாக்குகின்றன.</p><p></p><p> </p><p>2025-ஆம் ஆண்டில், ஷெங்கன் கூட்டமைப்பில் உள்ள மற்ற எந்த நாட்டையும் விட இத்தாலி அதிக விசாக்களை வழங்கியுள்ளது என்று புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன; இத்தாலி, பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகள் இணைந்து, ரஷ்யர்களிடமிருந்து வந்த மொத்த விசா விண்ணப்பங்களில் முக்கால் பங்கைப் பெற்றன. </p><p>கடந்த ஆண்டு ஐரோப்பிய ஒன்றியத்தின் மற்ற எந்தவொரு நாட்டையும் விட இத்தாலி பெலாரஸ் நாட்டவர்களுக்கு அதிக எண்ணிக்கையிலான விசாக்களை வழங்கியுள்ளது; உக்ரைன் மீதான ரஷ்யாவின் முழு அளவிலான படையெடுப்புக்குப் பிறகு இந்த எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது. </p><p>வெளியாகியுள்ள தரவுகளின் அடிப்படையில், கடந்த ஆண்டு 50,709 விசாக்கள் வழங்கப்பட்ட நிலையில், 2021-ல் இத்தாலி பெலாரஸ் குடிமக்களுக்கு வெறும் 2,968 விசாக்களை மட்டுமே வழங்கியுள்ளது. ரஷ்யர்களுக்கும் இதேபோன்ற போக்கைக் காணலாம்.</p><h2>22-வது சுற்றுத் தடை</h2><p> </p><p>போர் இருந்தபோதிலும், ரஷ்ய குடிமக்களுக்கு வழங்கப்பட்ட இத்தாலிய விசாக்களின் எண்ணிக்கை 2021-ல் 63,894-ஆக இருந்து, 2025-ல் 165,000-க்கும் அதிகமாக உயர்ந்து, கிட்டத்தட்ட மும்மடங்காகியுள்ளது.
</p><p>இதனிடையே, லைப்சிக் விமான நிலையத்தின் மீது திட்டமிடப்பட்டதாகக் கூறப்படும் சதித்திட்டத்தின் பின்னணியில் ரஷ்ய உளவுத்துறை இருந்திருக்கக்கூடும் என்று கூறியதைத் தொடர்ந்து, ரஷ்யாவிற்குப் பதிலடி கொடுப்பதற்கான நடவடிக்கைகளை ஜேர்மன் அரசாங்கம் இந்த வாரம் அறிவித்தது.
</p><p>பான் (Bonn) நகரில் உள்ள ரஷ்யத் தூதரகத்தை மூடுவது, வெளிவிவகார அமைச்சகத்திற்கு ரஷ்யத் தூதரை வரவழைப்பது, மற்றும் பால்டிக் கடலில் சட்டவிரோதமாக எண்ணெய் கடத்தலில் ஈடுபடும் ரஷ்யாவின் மறைமுகக் கப்பல் படையின் கண்காணிப்பைத் தீவிரப்படுத்துவது ஆகியவை இதில் அடங்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0adef1f3-9976-4323-b529-e575c4d13f9c/26-6a9b89ddc2fcf.webp' /></p><p> இந்த நிலையில், ரஷ்யாவிற்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியம் 22-வது சுற்றுத் தடைகளை அறிவித்ததுடன், ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் நுழைய அனுமதிக்கப்படாத ரஷ்யர்களின் பட்டியலை விரிவுபடுத்துவதாகவும் தெரிவித்தது. </p><p>லைப்சிக் விவகாரத்தில் 
தொடர்புடைய பெலாரஸ் சந்தேக நபர் ஒருவருக்கு வழங்கப்பட்ட விசா குறித்து ஆய்வு செய்ய இத்தாலியின் வெளிவிவகார அமைச்சர் அன்டோனியோ தஜானி உத்தரவிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/319aa099-1f91-48f0-8810-f1025940cbfe/26-6a9b89de77898.webp' /></p><p> </p><p>எஸ்டோனியா, பின்லாந்து, லாட்வியா, லிதுவேனியா, போலந்து மற்றும் செக் குடியரசு ஆகிய நாடுகள், ஐரோப்பிய ஒன்றியத்தின் நடவடிக்கைகளையும் தாண்டிய தேசிய கட்டுப்பாடுகளை அமுல்படுத்தி, ரஷ்யர்களுக்கு விசா வழங்குவதை ஏறக்குறைய நிறுத்திவிட்டன. </p><p>ஆனால், வேறு பல உறுப்பு நாடுகள் தொடர்ந்து பெருமளவிலான விசாக்களை வழங்கி வருகின்றன; சில சந்தர்ப்பங்களில் அவற்றின் எண்ணிக்கையை அதிகரித்தும் உள்ளன.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-05T03:16:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[முதல் நாளில் மட்டுமே ஜி.வி.பிரகாஷின் Immortal படம் செய்துள்ள வசூல்... எவ்வளவு தெரியுமா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/gv-prakash-kumar-immortal-movie-first-day-bo-1788575512"></link>
            <id>https://cineulagam.com/article/gv-prakash-kumar-immortal-movie-first-day-bo-1788575512</id>
            <summary type="text">Immortal படம்ஜி.வி.பிரகாஷ் குமார் மற்றும் கயாடு லோஹர் ஜோடியாக நடிக்க தயாரான படம் இம்மார்டல். வாம்பயர் பின்னணியைக் கொண்ட இந்த திரைப்படத்தை மாரியப்பன் இ...</summary>
            <content type="html"><![CDATA[<h2>Immortal படம்</h2><p>ஜி.வி.பிரகாஷ் குமார் மற்றும் கயாடு லோஹர் ஜோடியாக நடிக்க தயாரான படம் இம்மார்டல். </p><p>வாம்பயர் பின்னணியைக் கொண்ட இந்த திரைப்படத்தை மாரியப்பன் இயக்கியுள்ளார். </p><p>அண்மையில் ரசிகர்களுடன் இணைந்து படம் பார்த்த ஜி.வி.பிரகாஷ் பத்திரிக்கையாளர்களுடன் பேசும்போது, இம்மார்டல் படம் காதலும் த்ரில்லரும் நிறைந்த ஒரு வித்தியாசமான படைப்பு.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7e84cdcb-ae3e-41e6-9427-06b441688181/26-6a9b82d34f9ea.webp' /></p><p> </p><p>4000 ஆண்டுகள் வாழும் வில்லனைக் கொண்ட இக்களம் தமிழ் சினிமாவிற்கு முற்றிலும் புதிய அனுபவத்தைத் தரும் என கூறியுள்ளார். </p><p></p><h2>
பாக்ஸ் ஆபிஸ்
</h2><p>வித்தியாசமான கதைக்களம் கொண்ட இப்படம் நேற்று (ஆகஸ்ட் 4) வெளியாகி இருந்தது. ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ள இப்படம் முதல் நாள் முடிவில் ரூ. 1.5 கோடிக்கு மேல் வசூல் வேட்டை செய்துள்ளதாக கூறப்படுகிறது.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/WxQOM5_OifY" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-09-05T03:10:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பில் தம்பதி மீது துப்பாக்கி சூடு நடத்திய பொலிஸ் அதிகாரியின் மகன் - பின்னணி குறித்து வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/former-police-officers-son-shoots-couple-1788577058"></link>
            <id>https://tamilwin.com/article/former-police-officers-son-shoots-couple-1788577058</id>
            <summary type="text">கொழும்பு, கொள்ளுப்பிட்டி 6வது தெருவில் உள்ள பாம் கோர்ட் அடுக்குமாடி குடியிருப்பில் முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியின் மகனால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு, கொள்ளுப்பிட்டி 6வது தெருவில் உள்ள பாம் கோர்ட் அடுக்குமாடி குடியிருப்பில் முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியின் மகனால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் தம்பதி காயமடைந்துள்ளனர்.</p><p>

காயமடைந்தவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதய குமார வூட்லர் தெரிவித்துள்ளார்.
</p><p>
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காயமடைந்த தம்பதி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p><p>
</p><h2><b>தம்பதி மீது துப்பாக்கி </b></h2><p>துப்பாக்கிச் சூட்டை நடத்தியதாகக் கூறப்படும் 51 வயதுடைய திருமணமாகாத நபர், பயன்படுத்திய துப்பாக்கி, அதற்காக பயன்படுத்தப்பட்ட இரண்டு வெற்று தோட்டாக்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cd494c72-9801-48e5-9b15-0f53dc5f9287/26-6a9b875b8ec10.webp' /></p><p>காயமடைந்த பெண் சந்தேகநபருடன் நீண்ட காலமாக நெருங்கிய உறவை பேணிவந்துள்ளார்.
</p><p>
நேற்று, முன்தினம் இரவில் வேறு ஒரு யுவதியையும் சந்தேகநபரின் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
</p><p>
காயமடைந்த குறித்த தம்பதி கிருலப்பனை பகுதியை சேர்ந்தவர்களாகும். சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-09-05T03:07:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதிரடியாக குறைந்த லிட்ரோ எரிவாயு விலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/litro-gas-prices-down-1788576547"></link>
            <id>https://tamilwin.com/article/litro-gas-prices-down-1788576547</id>
            <summary type="text">இன்று(05.09.2026)&amp;nbsp; நள்ளிரவு முதல் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் எரிவாயுவின் விலை குறைக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, 12.5 கிலோ எடையுடைய வீட்டு...</summary>
            <content type="html"><![CDATA[<p>இன்று(05.09.2026)&nbsp; நள்ளிரவு முதல் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் எரிவாயுவின் விலை குறைக்கப்பட்டுள்ளது.</p><p>

இதற்கமைய, 12.5 கிலோ எடையுடைய வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.100 குறைக்கப்பட்டுள்ளது.</p><h2>விலை குறைப்பு</h2><p>
</p><p>
இதன்படி, அதன் புதிய விலை ரூ.4,365 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
</p><p>
அதேவேளை, 5 கிலோ எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.42 குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை ரூ.1,750 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b1157c9c-7d8c-4fc3-b65d-581f2899b3a7/26-6a9b84ca2f719.webp' /></p><p>
</p><p>
மேலும், 2.3 கிலோ எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.20 குறைக்கப்பட்டு, அதன் புதிய விலை ரூ.815 ஆக குறைக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-05T02:56:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பில் இளம் தமிழ் யுவதி கழுத்து அறுக்கப்பட்டு கொடூரமாக கொலை - சந்தேக நபரின் சடலமும் மீட்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/women-killed-in-colombo-suspects-body-found-1788572187"></link>
            <id>https://tamilwin.com/article/women-killed-in-colombo-suspects-body-found-1788572187</id>
            <summary type="text">கொழும்பின் புறநகர் பகுதியான வத்தளை - பள்ளியவத்தை, டேன் லங்கா வீதியில் அமைந்துள்ள வீடொன்றில், யுவதி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

18 வயதான குறித்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பின் புறநகர் பகுதியான வத்தளை - பள்ளியவத்தை, டேன் லங்கா வீதியில் அமைந்துள்ள வீடொன்றில், யுவதி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
18 வயதான குறித்த யுவதி கழுத்து அறுக்கப்பட்டு, கண்கள் தோண்டப்பட்டு நேற்று முன்தினம் மிகக் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
பள்ளியவத்தை, டேன் லங்கா வீதியில் வசிக்கும் தனது பெற்றோர் வீட்டிற்கு சில நாட்களுக்கு முன்பு வந்து தங்கியிருந்த கனகசபை மீகா என தெரியவந்துள்ளது.</p><p>
</p><h2><b>
இளம் யுவதி கொலை</b></h2><p>இந்தக் கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர் உடுபுஸ்ஸல்லாவை, சென்ட் வத்தையைச் சேர்ந்த 25 வயதுடையவர் என தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3d3a0324-d51b-44de-bc42-e3c9ecec0fa9/26-6a9b73f9dad6f.webp' /></p><p>குறித்த சந்தேகநபர் 2020ஆம் ஆண்டு கேலி செய்தமைக்குப் பழிவாங்கும் முகமாக அவசகவெல்ல பிரதேசத்தில் நபரைக் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடையவராகும்.</p><p>

தற்போது அது குறித்த வழக்கு விசாரணையில் உள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இந்த நிலையில் கொலை செய்யப்பட்ட யுவுதி சந்தேகநபருடன் காதல் உறவைப் பேணி வந்துள்ளார்.
</p><p>
சந்தேகநபர் அவரைத் தொடர்ந்து சந்தேகப்பட்டு வந்துள்ளார். இந்த நிலையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தை தொடர்ந்து, வீட்டில் இருந்த அவரை குளியலறைக்கு அழைத்துச் சென்று கத்தியால் கழுத்தறுத்து, கண்களைத் தோண்டி படுகொலை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.
</p><p>
யுவதியை கொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் 25 வயதுடைய நபரின் சடலம் அத்துருகிரிய பொலிஸ் பிரிவில் நேற்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர்.</p><p>

இவர் நஞ்சு அருந்தி உயிரை மாய்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.</p><p>

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-09-05T02:50:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[மின்வெட்டு தொடர்பில் பரவும் வதந்திகள் - அரசத்தரப்பு வெளியிட்ட விளக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/no-power-cut-1788573726"></link>
            <id>https://tamilwin.com/article/no-power-cut-1788573726</id>
            <summary type="text">மின்வெட்டு தொடர்பில் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வரும் தகவல்களுக்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் விளக்கமளித்துள்ளது.
நாட்டு மக்களுக்கு மின்சாரத்தை தட...</summary>
            <content type="html"><![CDATA[<p>மின்வெட்டு தொடர்பில் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வரும் தகவல்களுக்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் விளக்கமளித்துள்ளது.
</p><p>நாட்டு மக்களுக்கு மின்சாரத்தை தடையின்றி தொடர்ச்சியாக வழங்குவதற்கு எந்தவொரு தடையும் இல்லை என மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சு அறிவித்துள்ளது.</p><h2>அனுர கருணாதிலக்க விளக்கம்&nbsp;</h2><p>இந்த அறிவிப்பை மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக்க வெளியிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/36f83a51-b2c2-429c-bb56-25dbe49990fd/26-6a9b807bbb3a1.webp' /></p><p>
2026 மற்றும் 2027 ஆம் ஆண்டுகளுக்கான நிலக்கரியை இறக்குமதி செய்யும் நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>லக்விஜய மின் உற்பத்தி நிலையத்திற்கு மேற்கொண்ட கண்காணிப்பு விஜயத்தின் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.</p><p>மேலும், நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக மின்வெட்டு ஏற்படவுள்ளதாக பரப்பப்படும் செய்திகள் முற்றிலும் உண்மையற்றவை என்றும் அவர் இதன்போது ஊடகங்களிடம் தெளிவுபடுத்தியுள்ளார்.&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-05T02:37:53+00:00</updated>
        </entry>
    </feed>
