<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-09-07T16:26:30+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பக்தர்கள் புடைசூழ சிறப்பாக இடம்பெற்ற நல்லூர் வேட்டைத் திருவிழா! குதிரை வாகனத்தில் எழுந்தருளிய முருகப்பெருமான்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/nallur-kandasamy-temple-festival-2026-1788797698"></link>
            <id>https://tamilwin.com/article/nallur-kandasamy-temple-festival-2026-1788797698</id>
            <summary type="text">நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் மகோற்சவத்தின் 22ஆம் நாள் திருவிழாவான வேட்டைத் திருவிழா அல்லது ஒருமுகத் திருவிழா இன்று(7) சிறப்பாக இடம்பெற்றது.

இதன்போத...</summary>
            <content type="html"><![CDATA[<p>நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் மகோற்சவத்தின் 22ஆம் நாள் திருவிழாவான வேட்டைத் திருவிழா அல்லது ஒருமுகத் திருவிழா இன்று(7) சிறப்பாக இடம்பெற்றது.</p><p>

இதன்போது, முருகப்பெருமான் குதிரை வாகனத்தில் எழுந்தருளி, ஆலய வீதிகளில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்காட்சி வழங்கினார்.
</p><p>
இதனை முன்னிட்டு கட்டியம் சொல்லப்பட்டதுடன், பாரம்பரிய மரபுகளுக்கு அமைவாக இடம்பெற்ற வீதி உலாவில் பெருமளவான பக்தர்கள் கலந்துகொண்டு முருகப்பெருமானை வழிபட்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/81132bdc-c963-4f39-a832-ae1e241a8765/26-6a9ee40eef06c.webp' /></p>]]></content>
            <updated>2026-09-07T16:19:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாமல் கைது : கலக்கமடையாத Gen Z தலைமுறை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/no-one-is-worried-about-namals-arrest-vasudeva-1788796542"></link>
            <id>https://ibctamil.com/article/no-one-is-worried-about-namals-arrest-vasudeva-1788796542</id>
            <summary type="text">நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்ட சம்பவத்தால் நாட்டின் ஜெனரேஷன் Z (Gen Z) தலைமுறை கலக்கமடையவில்லை என்று கூறிய முன்னாள்நாடாளுமன்ற உறுப்பினர், வாசுதேவ நாணய...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்ட சம்பவத்தால் நாட்டின் ஜெனரேஷன் Z (Gen Z) தலைமுறை கலக்கமடையவில்லை என்று கூறிய முன்னாள்நாடாளுமன்ற உறுப்பினர், வாசுதேவ நாணயக்கார தற்போதைய ஆட்சிக்கு எதிராக எதிர்க்கட்சிகளின் சதித்திட்டமான ஒன்றிணைப்பின் மூலம் நாட்டை மீண்டும் பின்னோக்கி இழுக்கும் முயற்சி குறித்துதான் அவர்களுக்கு உண்மையான கலக்கம் ஏற்பட்டுள்ளது என்றும் மேலும் தெரிவித்தார்.</p><p>&nbsp;இன்று (07) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,</p><h2>மக்கள் அதிருப்தி உருவாகும்வரை காத்திருக்கும் எதிர்க்கட்சி</h2><p>
</p><p>
தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் அதிருப்தி உருவாகும் வரை எதிர்க்கட்சி காத்திருக்கிறது, ஏனெனில் அது தனது அரசியல் அதிகாரத்தை உறுதிப்படுத்திக் கொள்வதற்கான முக்கிய உத்தியாக அதைப் பயன்படுத்துகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/95c0709a-2e5e-4614-a9cd-8d831384cec3/26-6a9ee1aeee2ad.webp' /></p><p> </p><p>மக்கள் எதிர்கொள்ளும் பொருளாதார மற்றும் சமூக சிரமங்களை தவறாகப் பயன்படுத்தி அரசாங்கத்திற்கு எதிராக மக்களை வழிநடத்த எதிர்க்கட்சி தயாராகி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.</p><p></p><h2>ஆளும் தரப்பு&nbsp; எச்சரிக்கையாக செயல்படுவது அத்தியாவசியம்</h2><p>
</p><p>





 இத்தகைய சூழ்நிலையில் ஆளும் தரப்பு மிகவும் புத்திசாலித்தனமாகவும் எச்சரிக்கையாகவும் செயல்படுவது அத்தியாவசியம் என்று வலியுறுத்தினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2cfc752d-c6fa-46c0-aed1-57dccff175c4/26-6a9ee1ae454bd.webp' /></p><p> மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்றும் நோக்கில் வலதுசாரி ஐக்கிய எதிர்க்கட்சி பிற்போக்கு சக்திகளுடன் இணைந்து புதிய திட்டத்திற்கு தயாராகி வருவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
</p><p>
மேலும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் அறிக்கைகளைப் பார்க்கும்போது, அரசாங்கத்தின் தவறுகள் மற்றும் அரசாங்கம் குறித்து மக்கள் மத்தியில் உருவாகும் அமைதியின்மை குறித்து அவர் மிகுந்த மகிழ்ச்சியுடன் இருப்பதாகத் தெரிகிறது என்றும் வாசுதேவ நாணயக்கார குறிப்பிட்டார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-07T16:09:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாட்டிலிருந்து இலங்கை வந்த ஆபத்தான நபர் - நள்ளிரவில் கொடூரமாக வெட்டிக்கொலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/man-killed-who-returned-to-sri-lanka-1788790718"></link>
            <id>https://tamilwin.com/article/man-killed-who-returned-to-sri-lanka-1788790718</id>
            <summary type="text">கொழும்பின் புறநகர் பகுதியான தெஹிவளையில், வெளிநாட்டிலிருந்த வந்த குற்றக் கும்பலுடன் தொடர்புடைய நபர் ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். 

இந்த கொல...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பின் புறநகர் பகுதியான தெஹிவளையில், வெளிநாட்டிலிருந்த வந்த குற்றக் கும்பலுடன் தொடர்புடைய நபர் ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். </p><p>

இந்த கொலை சம்பவம் தெஹிவளை ஓபன் பகுதியில் இன்று அதிகாலை 1.45 மணியில் இடம்பெற்றுள்ளதாக தெஹிவளை பொலிஸார் தெரிவித்துள்ளார். </p><p>

திட்டமிடப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினரான கொஸ் மல்லி என்பவரின் உறவினரான பூத களுவா என்ற நபரே கொலை செய்யப்பட்டுள்ளார்.</p><p> </p><h2><b>

குத்தி கொலை</b></h2><p>நான்கு பேர் கொண்ட கும்பல் ஒன்று வீட்டுக்குள் நுழைந்து உறக்கத்தில் இருந்த களுவா மீது கூரிய ஆயுதத்தால் குத்தி கொலை செய்துள்ளனர். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b7321441-bbe1-4e71-b2ea-c6cc96912148/26-6a9eca660dd26.webp' /></p><p>படுகாயம் அடைந்த களுவா, களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.</p><p> 

கொலை செய்யப்பட்ட நபர், திட்டமிடப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினரான கொஸ் மல்லி என்பவருடன் பல வருடங்கள் டுபாயில் தங்கியிருந்துள்ளார். </p><p>

பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்டதையடுத்து, அவர் சில வாரங்களுக்கு முன்பு இலங்கைக்கு வருகை தந்துள்ளார். </p><p>

இந்தக் கொலையைத் திட்டமிடப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினரான படோவிட்ட அசங்கவின் தரப்பினர் செய்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.&nbsp;</p><p>

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தெஹிவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.</p><p><b>YOU MAY LIKE THIS VIDEO..</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/jaiQIN4g2fs" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p><p> 
</p>]]></content>
            <updated>2026-09-07T16:03:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[நடிகை நிவேதிதா சதிஷ் நிச்சயதார்த்தம் முடிந்தது.. மாப்பிள்ளை யார் தெரியுமா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/actress-nivedhitha-sathish-engagement-photos-1788796680"></link>
            <id>https://cineulagam.com/article/actress-nivedhitha-sathish-engagement-photos-1788796680</id>
            <summary type="text">தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் படங்கள் நடித்து இருப்பவர் நிவேதிதா சதிஷ். தனுஷின் கேப்டன் மில்லர் படத்திலும் அவர் நடித்திருந்தார்.வித்தியாசமான ர...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் படங்கள் நடித்து இருப்பவர் நிவேதிதா சதிஷ். தனுஷின் கேப்டன் மில்லர் படத்திலும் அவர் நடித்திருந்தார்.</p><p>வித்தியாசமான ரோல்களில் நடித்து வேகமாக வளர்ந்து வரும் நடிகையாக இருக்கிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/95bd9f02-12e2-409d-a3ec-6a7ee6505e91/26-6a9edf0b6e08f.webp' /></p><p>
</p><h2>நிச்சயதார்த்தம்</h2><p>தற்போது நிவேதிதாவுக்கு அவரது காதலர் சுஹைப் முகமது என்பவர் உடன் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்திருக்கிறது.&nbsp;சுஹைப் முகமது&nbsp;போட்டோகிராபர் ஆக பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.</p><p>போட்டோக்கள் வெளியாகி இருக்கும் நிலையில் நெட்டிசன்கள் நடிகைக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-07T15:58:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடா குறித்து மீண்டும் சர்ச்சையை கிளப்பும் டிரம்ப்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/canadas-exchange-rate-with-us-is-unacceptable-1788788844"></link>
            <id>https://canadamirror.com/article/canadas-exchange-rate-with-us-is-unacceptable-1788788844</id>
            <summary type="text">&amp;nbsp;அமெரிக்கா மற்றும் கனடாவுக்கு இடையிலான நாணய மாற்று விகிதம் &quot;ஏற்றுக்கொள்ள முடியாதது&quot; என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கடுமையாக விமர்சித்து...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;அமெரிக்கா மற்றும் கனடாவுக்கு இடையிலான நாணய மாற்று விகிதம் "ஏற்றுக்கொள்ள முடியாதது" என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கடுமையாக விமர்சித்துள்ளார். 
தனது 'ட்ரூத் சோஷியல்' சமூக வலைதளப் பக்கத்தில் டிரம்ப், பதிவிட்டுள்ளார்.</p><p>
அமெரிக்க டாலருடன் கனடா டொலரின் சமநிலையற்ற நிலை ஏற்றுக்கொள்ள முடியாதது. 
பல ஆண்டுகளாக இந்நிலை நீடித்து வருகிறது, ஆனால் இனி அது தொடராது!" எனக் குறிப்பிட்டுள்ளார்.</p><p> 
எனினும், இந்த விவகாரத்தில் அடுத்தகட்டமாக என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்பது குறித்து அவர் விரிவாக விளக்கவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/38a3d0a6-f62b-45a1-a9a6-9ba0aaf625a1/26-6a9ec06d74b73.webp' /></p><p> </p><p>
தற்போது 1 அமெரிக்க டொலர் என்பது சுமார் 1.38 கனடா டொலருக்குச் சமமாக உள்ளது (அதாவது 1 கனடா டொலரின் மதிப்பு சுமார் 72 அமெரிக்க சென்ட்கள்).</p><p> 
வரலாற்று ரீதியாகக் கனடா டொலர் குறைந்த மதிப்பில் இருப்பது, அமெரிக்க வாடிக்கையாளர்களுக்குக் கனடாவின் ஏற்றுமதிப் பொருட்களை மலிவாகவும், கனடா மக்களுக்கு அமெரிக்கப் பொருட்களைக் கூடுதல் விலையுடனும் மாற்றுகிறது. </p><p>
ஆகஸ்ட் 22 முதல் கனடா ஏற்றுமதிகள் மீது டிரம்ப் விதித்த 50% வரிக்கான பதிலடியாக, அமெரிக்காவின் 700 பொருட்கள் மீது புதிய வரிகளைச் சுமத்த கனடா முடிவு செய்துள்ளது. </p><p>
செப்டம்பர் 8-ஆம் திகதி இந்த வரிகள் அமலுக்கு வரவுள்ள நிலையில் டிரம்பின் இந்தப் பதிவு வெளியாகியுள்ளது. </p><p>
ஆகஸ்ட் 21 அன்று இருநாடுகளுக்கு இடையிலான வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் முறிந்ததிலிருந்து, கனடாவை "மிக மோசமாகச் சுரண்டும் நாடுகளில் ஒன்று" என டிரம்ப் கடுமையாகச் சாடி வருகிறார். </p><p>"பல தசாப்தங்களாக அவர்கள் நம்மைச் சுரண்டி வருகிறார்கள், அது இனி நிறுத்தப்படும்" என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். </p><p>
டிரம்பின் இந்த விமர்சனங்களுக்குக் கனடா பிரதமர் மார்க் கார்னி இதுவரை பகிரங்கமாகப் பதில் எதுவும் தெரிவிக்கவில்லை. </p><p>
அதேவேளையில், அமெரிக்காவின் வரிகளுக்கு எதிராகக் கனடா அரசு எடுத்து வரும் பதில்-வரி நடவடிக்கைகளுக்கு அந்நாட்டு மக்களிடையே கணிசமான ஆதரவு இருப்பதாகச் அண்மைய 'நானோஸ்' கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-07T15:57:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெப்பமான வானிலை ; வளிமண்டலவியல் திணைக்களத்தின் எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/hot-weather-meteorological-department-warning-1788796616"></link>
            <id>https://jvpnews.com/article/hot-weather-meteorological-department-warning-1788796616</id>
            <summary type="text">பல மாவட்டங்களுக்கு வெப்பமான வானிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் எச்சரிக்கை அறிவிப்பொன்று விடுக்கப்பட்டுள்ளது. 

வடமத்திய, கிழக்கு மாகாணங...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">பல மாவட்டங்களுக்கு வெப்பமான வானிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் எச்சரிக்கை அறிவிப்பொன்று விடுக்கப்பட்டுள்ளது. </p><p style="text-align: justify; ">

வடமத்திய, கிழக்கு மாகாணங்களுக்கும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, குருநாகல், மொனராகலை மற்றும் அம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களுக்கும் இந்த அறிவிப்பு செல்லுபடியாகும்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a14e4585-5fef-45d2-b380-8d3d1a673245/26-6a9edeca9eb95.webp' /></p><p style="text-align: justify; "> 

அதன்படி, வடமத்திய, கிழக்கு மாகாணங்கள் மற்றும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, குருநாகல், மொனராகலை மற்றும் அம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளில் பகல் வேளையில் வெப்பக் குறியீடு, அதாவது மனித உடலால் உணரப்படும் வெப்பம் 'அவதானம் செலுத்தப்பட வேண்டிய' (Caution) மட்டத்தில் காணப்படலாம் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-07T15:57:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[12 ஆண்டுகளின் பின் கடகத்தில் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/jupiter-moon-make-gajkesari-rajyog-who-get-luck-1788793295"></link>
            <id>https://manithan.com/article/jupiter-moon-make-gajkesari-rajyog-who-get-luck-1788793295</id>
            <summary type="text">ஜோதிடத்தில் மனம், தாய்மை மற்றும் உணர்ச்சிகளின் காரணியாக கருதப்படுபவர் சந்திரன். இவர் ஒரு ராசியில் சுமார் 2½ நாட்கள் மட்டுமே பயணிப்பதால், கிரகங்களிலேயே...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜோதிடத்தில் மனம், தாய்மை மற்றும் உணர்ச்சிகளின் காரணியாக கருதப்படுபவர் சந்திரன். இவர் ஒரு ராசியில் சுமார் 2½ நாட்கள் மட்டுமே பயணிப்பதால், கிரகங்களிலேயே மிக வேகமாக ராசி மாறுபவர்.
</p><p>
செப்டம்பர் 07 அன்று சந்திரன் தனது சொந்த ராசியான கடகத்தில் நுழைகிறார். ஏற்கனவே அறிவு, அதிர்ஷ்டம், முன்னேற்றம் மற்றும் செழிப்பின் காரணியான குரு பகவான் கடகத்தில் பயணித்து வருவதால், சந்திரன்-குரு சேர்க்கையால் மங்களகரமான கஜகேசரி யோகம் உருவாகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b3c0fc67-d652-4cbc-b5e8-541d426449ac/26-6a9ed6c776652.webp' /></p><p></p><p>
</p><p>
சுமார் 12 ஆண்டுகளுக்குப் பிறகு கடகத்தில் இணையும் சந்திரன்-குருவின் இந்த கஜகேசரி ராஜயோகம் செப்டம்பர் 9 ஆம் தேதி வரை நீடிக்கும். இதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்பட்டாலும், குறிப்பாக நான்கு ராசிக்காரர்கள் சிறப்பான பலன்களைப் பெறவுள்ளனர்.
</p><p>அப்படி 12 ஆண்டுகளுக்குப் பிறகு கடகத்தில் உருவாகும் இந்த கஜகேசரி ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் நான்கு ராசிக்காரர்கள் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.</p><h2>மேஷம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/32ccf4c7-835f-41d3-9a55-a0010a820678/26-6a9ed6c82b92d.webp' /></p><p></p><h2>
</h2><p>மேஷ ராசியின் 4-ஆவது வீட்டில் குரு மற்றும் சந்திரனின் சேர்க்கையால் கஜகேசரி ராஜயோகம் உருவாகிறது. இதனால் இந்த ராசிக்காரர்கள் புதிய வீடு, சொத்து, வாகனம் போன்றவற்றை வாங்குவதற்கான வாய்ப்புகளைப் பெறுவார்கள்.</p><p> குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் தீர்ந்து, குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். பண வரவு அதிகரிப்பதன் மூலம், நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.</p><p>புதிய வருமானத்துக்கான வழிகள் தானாக உருவாகும். நீண்ட கால கடன் தொல்லைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கு அளவுக்கு பணவரவு திருப்திகரமாக இருக்கும்.</p><p>
</p><h2>
கடகம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b9127910-ccde-409a-b83c-34d2051ca190/26-6a9ed6c8d3b72.webp' /></p><h2>
</h2><p>கடக ராசியின் முதல் வீட்டில் குரு மற்றும் சந்திரனின் சேர்க்கையால் கஜகேசரி ராஜயோகம் உருவாகிறது. இதனால் இந்த ராசிக்காரர்களின் தன்னம்பிக்கை, மதிப்பு, மரியாதை, கௌரவம் போன்றவை வழக்கத்தைவிட அதிகரிக்கும்.</p><p> திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் அமையும். திருமண வாழ்க்கை இனிமையாக இருப்பதுடன் மகிழ்ச்சியாக தருணங்களை அனுபவிப்பதற்கான வாய்ப்பு அமையும்.</p><p>பணியிடத்தில் செயல்திறன் பாராட்டப்படும். நீண்ட காலமாக முடிக்க முடியாமல் இருந்த வேலைகள் வெற்றிகரமாக நிறைவேறும்.</p><h2>

விருச்சிகம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/05d067ef-f6e6-4934-aed0-bc077144fd70/26-6a9ed6c9891a3.webp' /></p><p>
விருச்சிக ராசியின் 9-ஆவது வீட்டில் குரு மற்றும் சந்திரனின் சேர்க்கையால் கஜகேசரி ராஜயோகம் உருவாகிறது. இதனால் இந்த ராசிக்காரர்கள் நீண்ட காலமாக முடிக்க முடியாமல் இழுத்தடித்துக் கொண்டிருந்த வேலைகளை வெற்றிகரமாக நிறைவேற்றுவார்கள். </p><p>ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிப்பதோடு, ஆன்மீகப் பயணங்களையும் மேற்கொள்வீர்கள். மேலும், வேலை தொடர்பான பயணங்களையும் மேற்கொள்ள நேரிடும். </p><p>இந்தப் பயணங்களின் மூலம் நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். புதிய வருமான வழிகள் உருவாகும். இதன் மூலம் நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
</p><h2>
மீனம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0c3db0ae-86c2-4da9-b754-01fad36b6bf1/26-6a9ed6ca3da6a.webp' /></p><p>மீன ராசியின் 5-ஆவது வீட்டில் குரு மற்றும் சந்திரனின் சேர்க்கையால் கஜகேசரி ராஜயோகம் உருவாகிறது. இதனால் இந்த ராசிக்காரர்கள் பிள்ளைகளிடமிருந்து நல்ல செய்திகளைப் பெறுவார்கள்.</p><p>எழுத்து மற்றும் ஆராய்ச்சித் துறையில் இருப்பவர்கள் நல்ல மதிப்பையும், மரியாதையையும் பெறுவதோடு, சிறப்பான வெற்றியையும் பெறுவார்கள். </p><p>பங்குச் சந்தை மற்றும் முதலீடுகள் மூலம் எதிர்பாராத அளவில் நிதி ஆதாயங்கள் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு வருமானம் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் ஏற்படும்.</p><p><b>இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).&nbsp;&nbsp;</b></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்<b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"> FOLLOW NOW</a></u></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-07T15:39:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரவி மோகன் - கெனிஷா கோவாவில் என்ன பண்ணிருக்காங்க தெரியுமா? வெளியான அதிர்ச்சி வீடியோ!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/ravi-mohan-smoking-with-keneeshaa-francis-video-1788782655"></link>
            <id>https://manithan.com/article/ravi-mohan-smoking-with-keneeshaa-francis-video-1788782655</id>
            <summary type="text">நடிகர் ரவி மோகன் மற்றும் பாடகி கெனிஷா பிரான்சிஸ் தொடர்பான சர்ச்சை மீண்டும் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது. இருவரும் பிரிந்துவிட்டதாக சமீபத்தில்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நடிகர் ரவி மோகன் மற்றும் பாடகி கெனிஷா பிரான்சிஸ் தொடர்பான சர்ச்சை மீண்டும் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது. இருவரும் பிரிந்துவிட்டதாக சமீபத்தில் தகவல்கள் வெளியான நிலையில், தற்போது இருவரும் கோவாவில் ஒன்றாக இருக்கும் காணொளி ஒன்று இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.
</p><p>
ரவி மோகன் தனது மனைவி ஆர்த்தியுடன் கடந்த 2024ஆம் ஆண்டு விவாகரத்து தொடர்பான அறிவிப்பை வெளியிட்டிருந்தார். இதையடுத்து, ரவி மோகனுக்கும்கெனிஷாவுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக ஆர்த்தி தரப்பில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0fa5d4d1-069b-4c8c-a3b6-dafcf8d952a1/26-6a9ead1c067cd.webp' /></p><p></p><p> </p><p>ஆனால், கெனிஷா தனக்கு மனநல ஆலோசனை வழங்கும் நெருங்கிய நண்பர் மட்டுமே என ரவி மோகன் விளக்கம் அளித்திருந்தார்.</p><p>

கடந்த சில ஆண்டுகளில் இருவரும் பல்வேறு நிகழ்ச்சிகளில் ஒன்றாகக் காணப்பட்டதுடன், ரவி மோகனின் தயாரிப்பு நிறுவனத்திலும் கெனிஷா இணைந்து செயல்பட்டு வந்ததாக கூறப்பட்டது. இதற்கிடையில் இருவரும் பிரிந்துவிட்டதாக செய்திகள் வெளியாகின.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9527af58-903f-494a-b6e0-949b3053ab8c/26-6a9ead1cde343.webp' /></p><h2>ரவி மோகன் - கெனிஷா உறவில் மீண்டும் பரபரப்பு.</h2><p> </p><p>கெனிஷா தன்னை விட்டு சென்றுவிட்டதாக ரவி மோகனும் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்திருந்த நிலையில், தற்போது கோவாவில் இருவரும் ஒன்றாக இருக்கும் வீடியோ வெளியாகியுள்ளது. </p><p>கோவாவில் ரவி மோகன் மற்றும் கெனிஷா இருவரும் ஒன்றாக இருக்கும் காட்சிகள் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளதுடன்&nbsp;ரவி மோகன் மற்றும் கெனிஷா இருவரும் இணைந்து என்ஜாய் செய்யும் காட்சி ரசிகர்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளதுள்ளதுடன் புதிய சர்ச்சையையும் கிளப்பியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/37e70900-e79f-4309-b27a-b8f4069e8766/26-6a9ead1d96bdb.webp' /></p><p></p><p>இருவரும் பிரிந்துவிட்டதாக கூறப்பட்ட நிலையில்,&nbsp; இந்த காணொளி தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பகிரப்பட்டு வரும் நிலையில், ரவி மோகன் மற்றும் கெனிஷா தரப்பில் இருந்து இதுகுறித்து அதிகாரப்பூர்வமான விளக்கம்&nbsp; எதுவும் வெளியாகவில்லை.</p><p>ஆர்த்தி - ரவி மோகன் விவாகரத்து விவகாரம் தொடர்பாக கடந்த காலங்களில் சமூக வலைதளங்களில் பல ரசிகர்கள் ரவி மோகனுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வந்தனர். ஆனால், தற்போது வெளியாகியுள்ள இந்த காணொளியைத் தொடர்ந்து சில ரசிகர்கள் தங்களது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டுள்ளதாகவும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">I stood up for Jayam Ravi when the divorce news broke because I genuinely believed his side. But seeing videos of him is a reality check. Disappointed to see how things are turning out definitely lost respect for him.<br><br>Day by day Ravi 🤒 <a href="https://t.co/cjwTaoL9x4">pic.twitter.com/cjwTaoL9x4</a></p>&mdash; Sundar Vijay (@ItsSundarVJ) <a href="https://x.com/ItsSundarVJ/status/2096655593012682851?ref_src=twsrc%5Etfw">September 6, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b></td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-07T15:38:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை மீள் பரிசீலனை ; விண்ணப்பங்கள் கோரல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/grade-5-scholarship-examination-re-scrutiny-1788795458"></link>
            <id>https://jvpnews.com/article/grade-5-scholarship-examination-re-scrutiny-1788795458</id>
            <summary type="text">2026 ஆம் ஆண்டு 5 ஆம் தரப் புலமைப்பரிசில் பரீட்சையின் மேன்முறையீட்டு விடைத்தாள் மதிப்பீட்டிற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் இன்று (07) ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">2026 ஆம் ஆண்டு 5 ஆம் தரப் புலமைப்பரிசில் பரீட்சையின் மேன்முறையீட்டு விடைத்தாள் மதிப்பீட்டிற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் இன்று (07) முதல் ஆரம்பமாவதாக இலங்கை பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது. </p><p style="text-align: justify; ">

இது தொடர்பில் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகேவினால் அறிவிப்பொன்று வெளியிடப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c6387e22-9511-4775-8ac6-d51c487097f0/26-6a9eda44248b5.webp' /></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

இதன்படி, இன்று (07) முதல் இம்மாதம் 21 ஆம் திகதி வரை விண்ணப்பிக்க முடியும் என்பதுடன், இது முழுமையாக ஒன்லைன் முறைமையினூடாக மட்டுமே மேற்கொள்ளப்பட வேண்டும் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

பரீட்சார்த்தி கல்வி கற்கும் பாடசாலையின் அதிபரால், பாடசாலைக்கு வழங்கப்பட்டுள்ள பயனர் பெயர் (Username) மற்றும் கடவுச்சொல்லைப் (Password) பயன்படுத்தி [<a href="https://onlineexams.gov.lk" target="_blank">https://onlineexams.gov.lk</a>] என்ற இணையத்தளத்திலுள்ள SCHOOL LOGIN பகுதிக்குள் பிரவேசித்து இந்த மேன்முறையீட்டு விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-07T15:37:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[குதிரை வாகனத்தில் எழுந்தருளிய நல்லூரானுக்கு இன்று ஒருமுகத் திருவிழா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/nallur-kandhasuwami-kovil-22-day-1788790837"></link>
            <id>https://ibctamil.com/article/nallur-kandhasuwami-kovil-22-day-1788790837</id>
            <summary type="text">நல்லூர் பெருங்கோயிலின் மகோற்சவத்தின் 22ஆம் நாள் திருவிழா, ஒருமுகத் திருவிழா
என்றும், வேட்டைத் திருவிழா என்றும் அழைக்கப்படுகிறது.
இன்றைய உற்சவத்தில் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நல்லூர் பெருங்கோயிலின் மகோற்சவத்தின் 22ஆம் நாள் திருவிழா, ஒருமுகத் திருவிழா
என்றும், வேட்டைத் திருவிழா என்றும் அழைக்கப்படுகிறது.
</p><p>இன்றைய உற்சவத்தில் குதிரை வாகனத்தில் முருகப்பெருமான் எழுந்தருளி, ஆலய
வீதிகளில் பக்தர்களுக்கு அருள்காட்சி வழங்கினார்.
</p><p>அதனை முன்னிட்டு கட்டியம் சொல்லி, பாரம்பரிய மரபுகளுடன் வீதி உலா சிறப்பாக
இடம்பெற்றது.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/oPSDX4quwSI" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-07T15:15:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[படுகொலை செய்யப்பட்ட மாணவி கிரிசாந்தியின் 30ஆவது ஆண்டு நினைவேந்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/student-krisanthi-s-30th-anniversary-commemoration-1788791502"></link>
            <id>https://ibctamil.com/article/student-krisanthi-s-30th-anniversary-commemoration-1788791502</id>
            <summary type="text">யாழ். செம்மணிப் பகுதியில் படுகொலை செய்யப்பட்ட சுண்டுக்குளி பாடசாலை
மாணவியான குமாரசாமி கிருசாந்தி உள்ளிட்டவர்களின் 30ஆவது ஆண்டு நினைவேந்தல்
இன்றைய தி...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ். செம்மணிப் பகுதியில் படுகொலை செய்யப்பட்ட சுண்டுக்குளி பாடசாலை
மாணவியான குமாரசாமி கிருசாந்தி உள்ளிட்டவர்களின் 30ஆவது ஆண்டு நினைவேந்தல்
இன்றைய தினம் திங்கட்கிழமை மாலை செம்மணி பகுதியில் இடம்பெற்றது.
</p><p>
இதன்போது செம்மணிப் பகுதியில் படுகொலை செய்யப்பட்ட, அங்கு புதைக்கப்பட்ட
ஏனையவர்களும் நினைவு கூரப்பட்டு, அவர்களுக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது.</p><p>

1996 ஆம் ஆண்டு செம்டம்பர் மாதம் 7ஆம் திகதி 18 வயதுடைய யாழ்ப்பாணம்
சுண்டுக்குளி மகளிர் கல்லூரி மாணவி கிருஷாந்தி வீதியால் சென்று கொண்டிருந்த
போது, செம்மணி பகுதியில் இராணுவத்தினரால் வழிமறித்து பாலியல் அத்துமீறலுக்கு உள்ளாக்கி படுகொலை செய்யப்பட்டார்.</p><p></p><h2>செம்மணி இராணுவ முகாம்</h2><p>
</p><p>
கிருஷாந்தியை, செம்மணி இராணுவ முகாமில் தடுத்து வைத்திருந்ததை பிரதேச மக்கள்
அவதானித்து மாணவியின் தாயாரிடம் கூறியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/00fd61d0-86a4-465f-884a-8827d1de4a6c/26-6a9ecacfda16e.webp' /></p><p>
</p><p>
இதனையடுத்து, மாணவியின் தாயாரான ஆசிரியை குமாரசாமி இராசம்மா, மாணவியின்
சகோதரன், குமாரசாமி பிரணவன் மற்றும் மாணவியின் வீட்டுக்கு அயல் வீட்டில்
வசிக்கும் தென்மராட்சி பல நோக்கு கூட்டுறவு சங்கத்தில் உதவியாளராக கடமையாற்றிய
சிதம்பரம் கிருபாமூர்த்தி ஆகியோர் மாணவியை தேடி சென்று செம்மணி இராணுவ
முகாமில் விசாரித்துள்ளனர்.
</p><p>
அதனையடுத்து மாணவியைத் தேடிச் சென்ற மூவரையும் இராணுவத்தினர் படுகொலை
செய்திருந்தனர்.

அன்றைய தினம் நள்ளிரவு கிருஷாந்தி உள்ளிட்ட படுகொலை செய்யப்பட்ட நால்வரின்
உடல்கள் செம்மணி பகுதியில் உள்ள வயல் வெளியில் புதைத்திருந்தனர்</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b18e1f4a-81e5-43cf-b9e4-717f3afeb842/26-6a9ecbb3bcde9.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7c46a094-9a36-4479-b930-d1dcff685fa1/26-6a9ecbb47ca32.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c1b75101-12c1-4a96-b7c1-19288fd9f2ba/26-6a9ecbb53d4ba.webp' /></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-07T15:15:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஒரே இரவில் 6 ஆலயங்களில் திருட்டு; மக்கள் அதிர்ச்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/theft-at-six-hindu-temples-in-a-single-night-1788786643"></link>
            <id>https://jvpnews.com/article/theft-at-six-hindu-temples-in-a-single-night-1788786643</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;கண்டி, பன்விலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பல்வேறு தோட்டப் பகுதிகளிலும் நகர்பகுதிகளிலும் அமைந்துள்ள ஆலயங்களில், ஒரே இரவில் பல திருட்டுச் சம்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;கண்டி, பன்விலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பல்வேறு தோட்டப் பகுதிகளிலும் நகர்பகுதிகளிலும் அமைந்துள்ள ஆலயங்களில், ஒரே இரவில் பல திருட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
</p><p>
இந்த திருட்டு ச்சம்பவங்கள் 6 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இரவில் நடந்தேறியுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f8f18f50-2d2b-4f69-8255-f4c446572ad1/26-6a9eb7d51ceb2.webp' /></p><h2>தங்க நகைகள், உண்டியல்கள்&nbsp;&nbsp;திருட்டு</h2><p>

மடுல்கலை, உன்னகலை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம், டீமலை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம், உளுகங்கை ஸ்ரீ விநாயகர் ஆலயம், உளுகங்கை கம்பளிக்கடை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம், தவலந்தன்னை கந்தகட்டி ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம், அகலை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம் உள்ளிட்ட பல்வேறு ஆலயங்களிலேயே இந்தத் திருட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.</p><p></p><p>

திருவுருவச் சிலைகளில் அணியப்பட்டிருந்த தங்க நகைகள், உண்டியல்கள் மற்றும் ஆலயத்தின் பல்வேறு பொருட்கள் பலவற்றை, திருடர்கள் மிகவும் சூட்சுமமாகத் திட்டமிட்டு ஒரே இரவில் பல ஆலயங்களிலிருந்து திருடிச் சென்றுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
</p><p>


 திருட்டு சம்பவங்கள் தொடர்பாகப் பன்விலை பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகப் பன்விலை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.&nbsp; &nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-09-07T15:00:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்க கடற்படையின் முற்றுகைக் கோடு! ஹோர்முஸ் நிரிணையில் கட்டுப்பாட்டு மண்டலத்தை அமைக்கவுள்ள ஈரான்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/iran-to-establish-control-zone-in-strait-of-hormuz-1788792755"></link>
            <id>https://ibctamil.com/article/iran-to-establish-control-zone-in-strait-of-hormuz-1788792755</id>
            <summary type="text">அமெரிக்காவுக்கும் மத்திய கிழக்கு நாடான ஈரானுக்கும் இடையே சமீபத்தில் நடந்த மோதலை தொடர்ந்து, ஹோர்முஸ் நிரிணைக்கு அருகில் ஒரு கட்டுப்பாட்டு மண்டலத்தை ஈரா...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவுக்கும் மத்திய கிழக்கு நாடான ஈரானுக்கும் இடையே சமீபத்தில் நடந்த மோதலை தொடர்ந்து, ஹோர்முஸ் நிரிணைக்கு அருகில் ஒரு கட்டுப்பாட்டு மண்டலத்தை ஈரான் அறிவிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இதன்படி அடுத்த சில நாட்களில் நீரிணைக்கு அருகில் ஒரு புதிய கட்டுப்பாட்டு மண்டலம் அறிவிக்கப்பட உள்ளதாக ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்பு மன்றத்தின் செயலாளர் மேஜர் ஜெனரல் மொஹ்சென் ரெசாய் இன்று(07.09.2026) தெரிவித்துள்ளார்.</p><p>&nbsp;அந்த மண்டலத்திற்குள் வரும், ஈரானியர்களுடன் ஒத்துழைக்காத அனைத்து கப்பல்களும் தடைகள் பட்டியலில் சேர்க்கப்படும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.</p><p></p><h2>எண்ணெய் மற்றும் எரிவாயு விலை</h2><p>இது குறித்து மேலும் கருத்து வெளியிடுகையில், “ இது அமெரிக்க கடற்படையின் முற்றுகைக் கோட்டிலிருந்து தொடங்கி பாரசீக வளைகுடாவின் சில பகுதிகள் வரை நீட்டிக்கப்படும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8ce5d941-590b-4c4f-9d41-0a2ed72d01b4/26-6a9ecfb56434e.webp' /></p><p>ஈரான் போர் ஆறு மாதங்களைக் கடந்துள்ள நிலையில், இந்த மோதல் அமெரிக்காவின் வரலாற்று நட்பு நாடுகளுடனான உறவுகளைச் சீர்குலைத்துள்ளது.</p><p>ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டதன் மத்தியில் எண்ணெய் மற்றும் எரிவாயு விலைகளை உயர்த்தியுள்ளது.</p><p>மேலும், சமீபத்திய கருத்துக் கணிப்புகளில் அமெரிக்கப் பொதுமக்களிடையே இது செல்வாக்கற்றதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.</p><p>தொலைவிலிருந்து இயக்கப்படும் ஒரு அமெரிக்க இராணுவக் கப்பல், இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படையால் (IRGC) தாக்கப்பட்டதாக அந்த இராணுவக் குழு தெரிவித்துள்ளது.</p><p>சர்வவல்லமையுள்ள இறைவனின் அருளாலும் கருணையாலும், எதிரியின் ஒவ்வொரு தீவிர முயற்சியும், வீரமும் தியாக மனப்பான்மையும் கொண்ட ஐ.ஆர்.ஜி.சி கடற்படையினரால் உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டு, தீர்க்கமான தாக்குதல் மூலம் முறியடிக்கப்படும்” என கூறியுள்ளார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-07T14:52:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Erimalai</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் நள்ளிரவில் நடத்தப்பட்ட சோதனை: மணல் ஏற்றிய வாகனம் பறிமுதல் - சந்தேக நபர்கள் தப்பியோட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/midnight-raid-in-jaffna-1788792586"></link>
            <id>https://tamilwin.com/article/midnight-raid-in-jaffna-1788792586</id>
            <summary type="text">யாழ். வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டில் சட்டவிரோதமான முறையில் இரவு நேரத்தில்
மணல் ஏற்றிய உழவு இயந்திரம் மருதங்கேணி பொலிஸாரால் மடக்கி பிடிக்கப்பட்டுள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ். வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டில் சட்டவிரோதமான முறையில் இரவு நேரத்தில்
மணல் ஏற்றிய உழவு இயந்திரம் மருதங்கேணி பொலிஸாரால் மடக்கி பிடிக்கப்பட்டுள்ளதுடன், சந்தேக நபர்கள் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> 

இந்த நடவடிக்கை நேற்று(06.09.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><h2> 



மணல் ஏற்றிய வாகனம் பறிமுதல்</h2><p>

சம்பவம் குறித்து மெலும் தெரிய வருகையில்,
</p><p>
கட்டைக்காடு பகுதியில் இரவு நேரத்தில் சில உழவு இயந்திரங்கள் மூலம்
சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றி அருகில் உள்ள கேவில், நித்தியவெட்டை,
வெற்றிலைக்கேணி பகுதிகளுக்கு கொண்டு செல்வதாக மருதங்கேணி பொலிஸாருக்கு இரகசிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c7f45fb1-f50c-4c7f-9540-6f71436b60c0/26-6a9ecf589f5e4.webp' /></p><p> </p><p>

இதன் அடிப்படையில், குறித்த பகுதியை நேற்று(6) இரவு சுற்றிவளைத்த மருதங்கேணி
பொலிஸ் பொறுப்பதிகாரி கெலும் பண்டார தலைமையிலான பொலிஸ் குழுவினர் மணல் ஏற்றிய உழவு இயந்திரத்தை கைப்பற்றியுள்ளனர்.</p><p>

தப்பிச் சென்ற சந்தேக நபர்களை கைது செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதுடன்
கைப்பற்றப்பட்ட உழவு இயந்திரம் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மருதங்கேணி
பொலிஸ் நிலையம் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
</p><p>
உழவு இயந்திரம் வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியை சேர்ந்த நபர்
ஒருவருக்கு சொந்தமானது என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>

இந்த நிலையில், குறித்த பகுதியில் இருந்து மேலும் ஒருவரும், கேவில் பகுதியில் இருந்து
இன்னொருவரும் தொடர்ச்சியாக களவாக மணல் ஏற்றிவருவது தொடர்பில் பொலிஸார் அவதானம் செலுத்தியுள்ளதுடன், விரைவில் அவர்களை கைது செய்யும் பணி முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸ் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.&nbsp; &nbsp; &nbsp; </p><p>&nbsp;</p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-07T14:51:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[73ஆவது உலக அழகி போட்டி : 44 ஆண்டுகளுக்குப் பிறகு டொமினிகன் குடியரசுக்கு உலக அழகி பட்டம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/miss-world-2026-dominican-republic-joheiry-mola-1788787076"></link>
            <id>https://manithan.com/article/miss-world-2026-dominican-republic-joheiry-mola-1788787076</id>
            <summary type="text">வியட்நாமில் நடைபெற்ற 73ஆவது உலக அழகி போட்டியில் டொமினிகன் குடியரசைச் சேர்ந்த ஜோஹெய்ரி மொலா டொமிங்கஸ் உலக அழகி பட்டத்தை வென்றார்.

நடப்பாண்டுக்கான உல...</summary>
            <content type="html"><![CDATA[<p>வியட்நாமில் நடைபெற்ற 73ஆவது உலக அழகி போட்டியில் டொமினிகன் குடியரசைச் சேர்ந்த ஜோஹெய்ரி மொலா டொமிங்கஸ் உலக அழகி பட்டத்தை வென்றார்.

நடப்பாண்டுக்கான உலக அழகி போட்டியில் 111 நாடுகளைச் சேர்ந்த போட்டியாளர்கள் பங்கேற்றனர். </p><p>பல்வேறு சுற்றுகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட எரித்தியா, ஸ்பெயின், மலேசியா, வியட்நாம், டொமினிகன் குடியரசு மற்றும் தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த போட்டியாளர்கள் இறுதிச்சுற்றுக்கு முன்னேறினர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/33ef50ba-fede-4fdc-8e29-87a7a4081c1b/26-6a9eca9323223.webp' /></p><p></p><h2>44 ஆண்டுகளுக்குப் பின் கிடைத்த வெற்றி&nbsp;</h2><p>
</p><p>
இறுதிச்சுற்றில் சிறப்பாகப் போட்டியிட்ட டொமினிகன் குடியரசைச் சேர்ந்த 24 வயதான ஜோஹெய்ரி மொலா டொமிங்கஸ், உலக அழகியாகத் தேர்வு செய்யப்பட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d3a25e5e-a49d-471f-b12c-2ee2cd8c5b8a/26-6a9eca93d4387.webp' /></p><p></p><p> </p><p>ஆசிரியர், பத்திரிகையாளர் மற்றும் சமூகப் பணியாளர் எனப் பன்முகத் திறமைகளைக் கொண்ட இவர், தனது வெற்றியின் மூலம் டொமினிகன் குடியரசின் அழகிப் போட்டி வரலாற்றில் புதிய சாதனையைப் படைத்துள்ளார்.</p><p>இதனிடையே, ஸ்பெயினைச் சேர்ந்த எலிசபெத் ரெய்னெஸ் முதல் ரன்னர் அப்பாகவும், மலேசியாவைச் சேர்ந்த டானுசியா செட்டி இரண்டாவது ரன்னர் அப்பாகவும் தேர்வு செய்யப்பட்டடுள்ளனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/75a11395-ad94-442f-b05e-62af0e6608b4/26-6a9eca926c3a4.webp' /></p><p>சுமார் 44 ஆண்டுகளுக்குப் பிறகு டொமினிகன் குடியரசைச் சேர்ந்த ஒருவர் உலக அழகி பட்டத்தை வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்<b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"> FOLLOW NOW</a></u></b></td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-07T14:31:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இறந்துவிட்டதாக தகனம் செய்த பெண் உயிருடன் வந்ததால் அதிர்ச்சி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/lucknow-woman-dead-cremated-returns-alive-1788784885"></link>
            <id>https://jvpnews.com/article/lucknow-woman-dead-cremated-returns-alive-1788784885</id>
            <summary type="text">&amp;nbsp; இறந்துவிட்டதாக தகனம் செய்த பெண் உயிருடன் வந்த அதிர்ச்சி சம்பவம் ஒன்று இந்தியாவில் நடந்துள்ளது. சம்பவம் தொடர்பில் இந்திய ஊடகங்க்கள் குறிப்பிட்டு...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; இறந்துவிட்டதாக தகனம் செய்த பெண் உயிருடன் வந்த அதிர்ச்சி சம்பவம் ஒன்று இந்தியாவில் நடந்துள்ளது. சம்பவம் தொடர்பில் இந்திய ஊடகங்க்கள் குறிப்பிட்டுள்ளதாவது, </p><p>

லக்னோவின் பி.கே.டி பகுதிக்கு உட்பட்ட நாவிகோட் நந்தனா கிராமத்தைச் சேர்ந்த ஷிவானி என்ற பெண், கடந்த 2024-ஆம் ஆண்டு மே 2-ஆம் தேதி திடீரென காணாமல் போனார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ae56e3be-8150-45f8-893e-fc2e2fe7e838/26-6a9eb0f719e6c.webp' /></p><h2>கால்வாயில் இருந்து மீட்கப்பட்ட எரிக்கப்பட்ட பெண் யார்?</h2><p> </p><p>

 அவரைத் தேடும் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், 2024 ஜூலை 16 அன்று ஐ.ஐ.எம் சாலைக்கு பின்புறம் உள்ள ஒரு கழிவுநீர் கால்வாயில் இருந்து அழுகிய நிலையில் ஒரு பெண்ணின் சடலத்தை காவல்துறை மீட்டது.</p><p> 
உடலை பார்வையிட்ட ஷிவானியின் குடும்பத்தினர், கையில் கட்டப்பட்டிருந்த காப்பு மற்றும் விரலில் இருந்த மோதிரத்தை வைத்து அது ஷிவானிதான் என அடையாளம் காட்டி மயானத்தில் தகனமும் செய்தனர்.</p><p></p><p>

 அத்துடன் ஷிவானியின் குடும்பத்தினர் அவருடைய கணவர் மற்றும் மாமனார் வீட்டினர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். ஷிவானியை வரதட்சணைக்காகக் கொடுமைப்படுத்தி கொலை செய்து உடலை வீசிவிட்டதாகக் குற்றம் சாட்டினர்.</p><p> இதன் அடிப்படையில் காவல்துறை வரதட்சணைக் கொடுமை, கடத்தல் உள்ளிட்ட சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தீவிரப்படுத்தியது.</p><p></p><p>


 எனினும் உடற்கூறாய்வு மற்றும் தடயவியல் சோதனைகளின் ஒரு பகுதியாக டி.என்.ஏ மாதிரி சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. அதில், தகனம் செய்யப்பட்ட உடலின் டி.என்.ஏ மாதிரியும், ஷிவானியின் பெற்றோரின் டி.என்.ஏ மாதிரியும் பொருந்தவில்லை.</p><p> இதனால், மீட்கப்பட்ட உடல் ஷிவானியுடையது அல்ல என்பது தெரியவந்ததை அடுத்து, வரதட்சணைக்கொடுமை பிரிவுகள் வழக்கில் இருந்து நீக்கப்பட்டன.</p><p></p><p>
</p><p>
இந்நிலையில், காணாமல் போய் 27 மாதங்கள் கழித்து கடந்த சனிக்கிழமை அன்று ஷிவானி திடீரென தனது பெற்றோர் வீட்டிற்கு நேரில் வந்ததைக்கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினரும் காவல்துறையினரும் அவரிடம் விசாரணை நடத்தினர். </p><p>

விசாரணையில், ஷிவானி பரா பகுதியில் உள்ள பொதுப்பணித்துறை பராமரிப்பில் இருக்கும் கழிப்பறையை நிர்வகித்து வரும் ஜாவேத் என்பவருடன் தங்கியிருந்தது தெரியவந்தது. 

ஷிவானி உயிருடன் திரும்பியதைத் தொடர்ந்து, காவல்துறையினர் இந்த வழக்கை மீண்டும் தீவிரமாக விசாரிக்கத் தொடங்கியுள்ளனர். </p><p> 

அதேவேளையில், லக்னோ காவல்துறைக்கு மற்றொரு பெரிய புதிர் எழுந்துள்ளது. ஷிவானி உயிருடன் இருக்கும் பட்சத்தில், கால்வாயில் இருந்து மீட்கப்பட்ட எரிக்கப்பட்ட பெண் யார், அவரைப் படுகொலை செய்தது யார் என்ற கோணத்தில் காவல்துறை தங்களது விசாரணையை முடுக்கிவிட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-07T14:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[விஷம் குடித்து உயிருக்கு போராடும் திவ்யா... கிருஷ்ண ஜெயந்தி விழாவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்! - திருமாங்கல்யம் இன்றைய எபிசோட் அப்டேட்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/thirumangalyam-serial-today-episode-07-09-2026-1788772505"></link>
            <id>https://viduppu.com/article/thirumangalyam-serial-today-episode-07-09-2026-1788772505</id>
            <summary type="text">தமிழ் சின்னத்திரையில் Zee தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் திருமாங்கல்யம். கடந்த ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழ் சின்னத்திரையில் Zee தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் திருமாங்கல்யம். கடந்த சண்டே ஸ்பெஷல் எபிசோடில் கிருஷ்ண ஜெயந்தி நாடகம் நடைபெற்று முடிந்த நிலையில், ராதையாக நடித்த திவ்யா திடீரென வாயில் ரத்தம் வடிந்தபடி "நீ இல்லாமல் என்னால் வாழ முடியாது" என்று கூறி சரிந்து விழுந்தார். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடக்கிறது என்பதை பார்க்கலாம்.</p><p>&nbsp;திவ்யாவின் வாயிலிருந்து உண்மையாகவே ரத்தம் வருவதை பார்த்து அங்கிருந்த அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். அப்போது பிளாஷ்பேக்கில், கவிதா பானத்தில் விஷம் கலந்தது தெரியவருகிறது. திவ்யாவின் நிலைமை மோசமடைந்ததால், உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்று அனுமதிக்கின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/674f46a3-b7c5-4fd2-bd5d-830749c18c6d/26-6a9e809c649c0.webp' /></p><p>மருத்துவமனையில் பரிசோதித்த மருத்துவர், திவ்யா எந்த வகையான விஷத்தை குடித்திருக்கிறார் என்பதை தெரிந்து கொண்டால்தான் சரியான சிகிச்சை அளிக்க முடியும் என்று கூறுகிறார். விஷம் இருந்த பாட்டில் கிடைத்தால் மட்டுமே அதற்கேற்ற சிகிச்சையை விரைவாக தொடங்க முடியும் எனவும் தெரிவிக்கிறார்.</p><p>இதற்கிடையில், நடந்த அனைத்திற்கும் மகாதான் காரணம் என்று நம்பும் காஞ்சனா, மகா மீது கடும் கோபம் கொள்கிறாள். அவரை அனைவரின் முன்னிலையிலும் திட்டி மருத்துவமனையை விட்டு வெளியே தள்ளுகிறாள். இதனால் மனமுடைந்த மகா அங்கே நிற்கிறாள்.
</p><p>அப்போது காவேரி மற்றும் மயில், விஷம் கலந்த பாட்டிலை கண்டுபிடிக்க வீட்டிற்கு சென்று தேடலாம் என்று முடிவு செய்கின்றனர். மூவரும் வீட்டிற்குச் சென்று தீவிரமாக தேடியபோது, இறுதியில் மகாவின் கையிலேயே அந்த விஷப் பாட்டில் சிக்குகிறது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1187b5b6-80e7-4e6f-840c-0608d4509c5d/26-6a9e809d2290e.webp' /></p><p>மறுபக்கம் மருத்துவமனையில் திவ்யாவின் உடல்நிலையை நினைத்து அனைவரும் பதற்றத்துடன் காத்திருக்கின்றனர். அப்போது மகா விஷப் பாட்டிலுடன் மருத்துவமனைக்கு வருகிறாள். ஆனால் அதைப் பார்த்த காஞ்சனா, “நீதான் விஷம் கலந்திருக்கிறாய்... இப்போது நாடகம் ஆடி பாட்டிலையும் கொண்டு வந்திருக்கிறாய்” என்று மகா மீது மேலும் குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறாள்.
</p><p>இப்படி பரபரப்பான திருப்பங்களுடன் நகரும் இந்தக் கதையில், திவ்யா உயிர் பிழைப்பாரா? விஷம் கலந்ததற்கான உண்மையான காரணம் வெளிச்சத்துக்கு வருமா? மகா தன் மீதான குற்றச்சாட்டிலிருந்து தப்பிப்பாரா? என்பதை அறிய திருமாங்கல்யம் சீரியலை திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7:30 மணிக்கு Zee தமிழ் தொலைக்காட்சியில் தவறாமல் காணுங்கள்.
&nbsp;</p><p>
</p>]]></content>
            <updated>2026-09-07T14:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாளை நாடாளுமன்றத்திற்கு வருகைத்தரவுள்ள நாமல்! சிறைச்சாலை ஆணையாளரை சென்றடைந்த கடிதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/namal-to-visit-parliament-tomorrow-1788790484"></link>
            <id>https://ibctamil.com/article/namal-to-visit-parliament-tomorrow-1788790484</id>
            <summary type="text">எதிர்வரும் நாட்களில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்துகொள்வதற்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்தித் தருமாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இலங்கை ...</summary>
            <content type="html"><![CDATA[<p>எதிர்வரும் நாட்களில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்துகொள்வதற்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்தித் தருமாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இலங்கை பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச விடுத்த கோரிக்கைக்கு நாடாளுமன்ற செயலாளர் நாயகம் பதில் வழங்கியுள்ளார்.</p><p>

குறித்த கோரிக்கை தொடர்பில் நாடாளுமன்ற செயலாளர் நாயகம் சட்டத்தரணி குஷானி ரோஹணதீர, சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்திற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
</p><p>
இதற்கமைய, நாமல் ராஜபக்ச நாடாளுமன்றத்திற்கு வருகை தருவதற்குத் தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு நாடாளுமன்ற செயலாளர் நாயகம், சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்திற்கு அறிவித்துள்ளார்.</p><p></p><h2>நாமல் ராஜபக்ச</h2><p>




இந்தக் கோரிக்கைக்கமைய, நாமல் ராஜபக்ச நாளை (08) நாடாளுமன்றத்திற்கு வருகை தருவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fbc2a2e8-92a6-4a78-b684-c81458a73bca/26-6a9ec6d7216b2.webp' /></p><p>இதன்படி நாடாளுமன்றம் நாளை முதல் எதிர்வரும் 11ஆம் திகதி வரை கூடவுள்ளது.
</p><p>விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இலங்கை பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச, நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்துகொள்ள முன்னதாக அனுமதி கோரியிருந்தார்.</p><p></p><h2>எழுத்துபூர்&nbsp;கோரிக்கை</h2><p>இந்த கோரிக்கையானது சபாநாயகருக்கு எழுத்துபூர்வமாக அனுப்பப்பட்டிருந்தது.</p><p>



நாடாளுமன்றத்தின் நிலையியற் கட்டளைகள் மற்றும் நடைமுறையில் உள்ள மரபுகளுக்கு அமைய சபாநாயகர் இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வார் என முன்னதாக கூறப்பட்டது.</p><p>அதன்படி, நாடாளுமன்றத்தின் தற்போதைய மரபுகளுக்கு அமைய, நாளை (08) நடைபெறவுள்ள நாடாளுமன்ற அமர்வில் நாமல் ராஜபக்ச கலந்துகொள்ளகூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-07T14:22:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்திய வீராங்கனை ஆட்டமிழந்ததும் சைகை - பாகிஸ்தான் கேப்டனுக்கு அபராதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/pakistan-captain-fatima-fined-for-send-off-gesture-1788789509"></link>
            <id>https://news.lankasri.com/article/pakistan-captain-fatima-fined-for-send-off-gesture-1788789509</id>
            <summary type="text">இந்திய வீராங்கனை ஷிபாலி வர்மா ஆட்டமிழந்ததும் அவரை நோக்கி சைகை செய்த பாகிஸ்தான் கேப்டனுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 

பாகிஸ்தான் கேப்டனுக்கு அபர...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்திய வீராங்கனை ஷிபாலி வர்மா ஆட்டமிழந்ததும் அவரை நோக்கி சைகை செய்த பாகிஸ்தான் கேப்டனுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. </p><h3>

பாகிஸ்தான் கேப்டனுக்கு அபராதம்</h3><p> 


2026 மகளிர் ஆசிய கிண்ண தொடரில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இடையேயான போட்டி நேற்று முன்தினம் நடைபெற்றது.&nbsp;</p><p>

பாகிஸ்தான் 55 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, 8.4 ஓவர்களில் 57 ஓட்டங்கள் குவித்து இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e53154d2-04a9-4707-846c-e6241f6b3c57/26-6a9ec30747dc8.webp' /></p><p>

இந்தியா 1.3 ஓவர்களில் 13 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் இந்திய வீராங்கனை ஷிபாலி வர்மா, பாகிஸ்தான் கேப்டன் பாத்திமா சனா பந்தை அடித்து அவரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.&nbsp;</p><p></p><p> 

ஷிபாலி வர்மாவின் விக்கெட்டை வீழ்த்தியதும் வெளியே போ என்ற ரீதியில், பாத்திமா சனா சைகை செய்தார். </p><p>

இது ஐசிசி நன்னடத்தை விதியை மீறியதாக குற்றம்சாட்டப்பட்ட நிலையில், குற்றத்தை ஒப்புக்கொண்ட பாத்திமா சனாவிற்கு போட்டிக்கான கட்டணத்தில் 10 சதவீதம் அபாரதம் விதிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-07T14:05:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Bavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மட்டக்களப்பு மாவட்டத்தின் முன்னாள் எம்.பிக்கள் சிலருக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டு வழங்கு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/corruption-charges-filed-against-former-batti-mps-1788789710"></link>
            <id>https://ibctamil.com/article/corruption-charges-filed-against-former-batti-mps-1788789710</id>
            <summary type="text">மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் மீது
ஊழல் மோசடி தொடர்பாக விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருவதாக&amp;nbsp;நாடாளுமன்ற உறுப்பினர் கந...</summary>
            <content type="html"><![CDATA[<p>மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் மீது
ஊழல் மோசடி தொடர்பாக விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருவதாக&nbsp;நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தெரிவித்துள்ளார்.</p><p>மட்டக்களப்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.</p><p>மேலும் கருத்து வெளியிட்ட அவர்,&nbsp;</p><p></p><h2>தீவிர&nbsp;விசாரணை</h2><p>“குற்றச்சாட்டுகள் தொடர்பாக மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் மற்றும் இந்நாள்
நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது விசாரணைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு
வருகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cfb5cdca-c0bc-42de-aa13-bad916f9d5f1/26-6a9ec3d114b7b.webp' /></p><p>சட்டத்திற்கு மதிப்பளித்து அனைவரும் செயல்பட வேண்டும் என்பதோடு,
விசாரணையின் முடிவில் எட்டப்படும் தீர்மானங்கள் எவ்வித தலையீடுமின்றி
நடைமுறைப்படுத்தப்படும்.</p><p>

சட்ட ஆட்சியை நடைமுறைப்படுத்தும் ஒரு அரசாங்கம் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம்
எனவே ஜனாதிபதி வேட்பாளராக இருந்தவர்கள் ஆளுநராக இருந்தவர்கள் இப்போது
நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்தாலும் அவர்களுக்கும் அதே சட்டம் பாயும்.
</p><p>
நாமல் ராஜபக்ச தற்போது சிறைவாசம் அனுபவித்து கொண்டிருக்கும் நிலையில்
சமூகத்தில் பலவிதமான கருத்துக்கள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.</p><p> அதே நேரத்தில்
முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்க,
கடந்த காலங்களில் எதிர்க்கட்சி ஆளும் கட்சியாக இருந்த காலத்தில் ராஜபக்ச
குடும்பத்தினரை 'திருடர்கள்' என பகிரங்கமாக விமர்சித்தார்.</p><p></p><h2>ராஜபக்சர்களின் தலைவராக ரணில்</h2><p>
</p><p>
இவ்வாறு ராஜபக்ஸக்கள் திருடர்கள் என சொன்ன ரணில் கடந்த காலத்தில் அவர்களுடன்
சேர்ந்து ஆட்சி பீடம் ஏறிய அவர் இன்று அந்த திருடர்களுக்கு ஆதரவாக குரல்
கொடுத்து வருகின்றார்.</p><p>
ரணிலுக்கு அன்று ராஜபக்சர்கள் திருடர்களாக தெரிந்தது. இன்று அவர்கள் நல்லவர்கள்
போல தெரிகின்றது. </p><p>ஆகவே இந்த திருட்டுக் கும்பலின் மகிந்த ராஜபக்சர்களின்
தலைவராக ரணில் விக்கிரமசிங்க பெறுப்பேற்றுள்ளார். </p><p>அவர்களின் செயல்பாடு இன்று
மக்கள் மத்தியில் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளது

இந்த நாட்டை வங்குரோத்து அடைய காரணமாக இருந்தவர்களில் இவரும் ஒருவராக
இருந்துள்ளதுடன் குற்ற செயல்களுடன் சம்மந்தமாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு
வருகின்றது” என்றார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-07T14:02:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாடாளுமன்றம் செல்ல அனுமதி கோரும் நாமல் ராஜபக்ச]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/namal-rajapaksa-seeks-permission-visit-parliament-1788785751"></link>
            <id>https://jvpnews.com/article/namal-rajapaksa-seeks-permission-visit-parliament-1788785751</id>
            <summary type="text">&amp;nbsp; விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச, எதிர்வரும் பாராளுமன்ற அமர்வுகளில் கலந்துகொ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச, எதிர்வரும் பாராளுமன்ற அமர்வுகளில் கலந்துகொள்ள அனுமதிக்குமாறு சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவிடம் எழுத்துமூல கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p><p>



ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தயாரித்துள்ள குறித்த கடிதம், எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகம் ஊடாக சபாநாயகருக்கு அனுப்பப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/153796b9-865e-4a45-8cde-b498ab038b50/26-6a9eb45910c38.webp' /></p><p>
</p><p>


இந்தக் கோரிக்கை தொடர்பில் பாராளுமன்ற நிலையியற் கட்டளைகள் மற்றும் நடைமுறைகளுக்கு அமைய அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.</p><p></p><p>
</p><p>


இதேவேளை, வழக்கமான நடைமுறைகளுக்கு அமைய நாமல் ராஜபக்ச நாளைய (08) பாராளுமன்ற அமர்வில் கலந்துகொள்வார் என எதிர்பார்ப்பதாக எதிர்க்கட்சியின் பிரதம கொறடா கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-07T14:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாளை கூடும் நாடாளுமன்றம் - நாமலின் கோரிக்கையை ஏற்ற அரசாங்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-requested-to-join-parliament-session-1788781248"></link>
            <id>https://tamilwin.com/article/namal-requested-to-join-parliament-session-1788781248</id>
            <summary type="text">புதிய இணைப்புஎதிர்வரும் நாட்களில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்துகொள்வதற்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்தித் தருமாறு விளக்கமறியலில் வைக்கப்பட்...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>எதிர்வரும் நாட்களில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்துகொள்வதற்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்தித் தருமாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இலங்கை பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் சட்டத்தரணி நாமல் ராஜபக்ச விடுத்த கோரிக்கைக்கு நாடாளுமன்ற செயலாளர் நாயகம் பதிலளித்துள்ளார்.
</p><p>
குறித்த கோரிக்கை தொடர்பில் நாடாளுமன்ற செயலாளர் நாயகம் சட்டத்தரணி குஷானி ரோஹணதீர, சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்திற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.</p><p>

இதற்கமைய, நாமல் ராஜபக்ச நாடாளுமன்றத்திற்கு வருகை தருவதற்குத் தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு நாடாளுமன்ற செயலாளர் நாயகம், சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்திற்கு அறிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/46d2640a-6529-4038-b850-e74d42007f3b/26-6a9ec357be6b5.webp' /></p><p>
</p><p>
இந்தக் கோரிக்கைக்கமைய, நாமல் ராஜபக்ச நாளை (08) நாடாளுமன்றத்திற்கு வருகை தருவதற்கான வாய்ப்புகள் அதிகம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.</p><p>

நாடாளுமன்றம் நாளை முதல் எதிர்வரும் 11ஆம் திகதி வரை கூடவுள்ளது.</p><h2>முதலாம் இணைப்பு</h2><p>விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இலங்கை பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச, நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்துகொள்ள அனுமதி கோரியுள்ளார்.&nbsp;</p><h2>நாடாளுமன்ற அமர்வுகள்..&nbsp;</h2><p>
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தின் ஊடாக இலங்கை பொதுஜன பெரமுன விடுத்த இந்த எழுத்துப்பூர்வமான கோரிக்கை, தற்போது சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6864ee0e-bf63-453b-8acc-53fea132c400/26-6a9ea6a95bc25.webp' /></p><p>

நாடாளுமன்றத்தின் நிலையியற் கட்டளைகள் மற்றும் நடைமுறையில் உள்ள மரபுகளுக்கு அமைய சபாநாயகர் இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வார் என சபாநாயகர் அலுவலகப் பேச்சாளர் ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.&nbsp;</p><p>
இதற்கிடையில், நாடாளுமன்றத்தின் தற்போதைய மரபுகளுக்கு அமைய, நாளை (08) நடைபெறவுள்ள நாடாளுமன்ற அமர்வில் நாமல் ராஜபக்ச கலந்துகொள்வதற்கான வாய்ப்பு வழங்கப்படும் என்று தாம் நம்புவதாக எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவான கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p></p><p></p><p><b>YOU MSY LIKE THIS..&nbsp;</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/uEYkPlSoXv8" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p>]]></content>
            <updated>2026-09-07T13:59:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[லட்சணமாக புடவையில் நடிகை மௌனி ராயின் வெளியிட்ட கலக்கல் போட்டோஸ்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/actress-mouni-roy-saree-attire-photoshoot-1788784283"></link>
            <id>https://cineulagam.com/article/actress-mouni-roy-saree-attire-photoshoot-1788784283</id>
            <summary type="text">மௌனி ராய்பாம்பு என்றாலே பயந்துகொண்டிருந்த மக்கள் ரசித்து பார்க்க வைத்தவர் தான் நடிகை மௌனி ராய்.ஹிந்தியில் நாகினி என்ற சீரியலில் பாம்பாக நடித்ததன் மூலம...</summary>
            <content type="html"><![CDATA[<h2>மௌனி ராய்</h2><p>பாம்பு என்றாலே பயந்துகொண்டிருந்த மக்கள் ரசித்து பார்க்க வைத்தவர் தான் நடிகை மௌனி ராய்.</p><p>ஹிந்தியில் நாகினி என்ற சீரியலில் பாம்பாக நடித்ததன் மூலம் இந்திய சினிமா ரசிகர்களின் கவனத்தை பெற்ற மௌனி ராய் இப்போது படங்கள் நடித்து வருகிறார். படங்களில் இடம்பெறும் ஸ்பெஷல் பாடல்களிலும் நடனம் ஆடி வருகிறார்.</p><p>எப்போதும் கிளாமராக ஸ்டைலிஷ் உடையில் புகைப்படங்கள் வெளியிடும் மௌனி ராய் லட்சணமாக புடவையில் புகைப்படங்கள் வெளியிட்டுள்ளார்.</p><p>இதோ அந்த போட்டோஸ்,</p><p><br></p>]]></content>
            <updated>2026-09-07T13:50:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் கோர விபத்து: வாகனம் கட்டுப்பாட்டை இழந்து இளைஞர் பரிதாப பலி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/new-brunswick-article-one-dead-following-1788780961"></link>
            <id>https://canadamirror.com/article/new-brunswick-article-one-dead-following-1788780961</id>
            <summary type="text">&amp;nbsp;கனடாவின் நியூ பிரன்சுவிக் மாநிலத்தில் உள்ள கெட்ஜ்விக் ஆற்றுக்கு அருகில் உள்ள பால்ஸ் புரூக் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இடம்பெற்ற வாகன விபத...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கனடாவின் நியூ பிரன்சுவிக் மாநிலத்தில் உள்ள கெட்ஜ்விக் ஆற்றுக்கு அருகில் உள்ள பால்ஸ் புரூக் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் 26 வயதுடைய இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.</p><p>எதிரே வந்த வாகனத்துடன் மோதாமல் தவிர்க்க முயன்றபோது, ஓட்டுநர் வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்ததால் இவ்விபத்து நேரிட்டுள்ளதாகப் பொலிஸார் நம்புகின்றனர்.</p><p>வாகனத்தில் பயணித்த ஒரேயொரு பயணியான 26 வயதுடைய இளைஞர், படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bec6ca69-5f60-489d-90b8-58f2f59e957d/26-6a9ea1a342115.webp' /></p><p>
</p><p>செயிண்ட்-குவென்டின் பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய பெண் ஓட்டுநருக்கு எந்தவித உடற்காயங்களும் ஏற்படவில்லை எனப் பொலிஸார் தெரிவித்தனர்.</p><p>
இச்சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-07T13:30:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரச அலுவலகங்களுக்கு இனி செல்லத் தேவையில்லை! முக்கிய சேவைகள் குறித்து ஜனாதிபதியின் தீர்மானம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/no-more-trips-govt-offices-anura-kumara-says-1788786027"></link>
            <id>https://tamilwin.com/article/no-more-trips-govt-offices-anura-kumara-says-1788786027</id>
            <summary type="text">நாட்டின் டிஜிட்டல் மயமாக்கல் செயல்பாடுகளை விரைவுபடுத்தும் நோக்கில், சுமார் 80 சதவீதமான அரசாங்க சேவைகளை கைபேசி ஊடலாக வீட்டிலிருந்தே பொதுமக்கள் பெற்றுக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டின் டிஜிட்டல் மயமாக்கல் செயல்பாடுகளை விரைவுபடுத்தும் நோக்கில், சுமார் 80 சதவீதமான அரசாங்க சேவைகளை கைபேசி ஊடலாக வீட்டிலிருந்தே பொதுமக்கள் பெற்றுக் கொள்ளக்கூடிய வசதிகள் செய்யப்படவுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.</p><p> புளத்சிங்கள பகுதியில் இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் இதனைத் குறிப்பிட்டுள்ளார். </p><p>இதற்காக அடுத்த வருட வரவு - செலவுத் திட்டத்தில் 30 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதுடன், நாடு தழுவிய ரீதியில் 4G அலைவரிசை சேவையை விரிவுபடுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.</p><h2>முக்கிய சேவைகள்..&nbsp;</h2><p>
இதன்படி பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களைப் பெறுதல், காணி உரிமப் பத்திரப் பரிவர்த்தனைகள் மற்றும் வாகன வருமான உரிமங்களைப் பெறுதல் உள்ளிட்ட முக்கிய அரச சேவைகள் அனைத்தும் இணையவழியில் (Online) மாற்றப்படவுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/109770d1-49d9-4992-958d-d4b97744f153/26-6a9eba3d1beda.webp' /></p><p> </p><p>மேலும், நாடு முழுவதும் 4G வலையமைப்பை பூர்த்தி செய்யும் நோக்கில் அடுத்த மூன்று ஆண்டுகளில் 1,000 புதிய 4G கோபுரங்கள் அமைக்கப்படவுள்ளதுடன், அதில் 250 கோபுரங்களின் பணிகள் அடுத்த ஆண்டிலேயே நிறைவுசெய்யப்படவுள்ளன. </p><p>நெடுஞ்சாலைகள் மற்றும் தொடருந்து மின்மயமாக்கல் உள்ளிட்ட அரசாங்கத்தின் பிரம்மாண்ட உட்கட்டமைப்பு திட்டங்களின் ஒரு அங்கமாகவே இந்த டிஜிட்டல் மயமாக்கல் திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது என ஜனாதிபதி தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><p></p><p><b>YOU MAY LIKE THIS VIDEO..</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/Qb6I0-FcAr4" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p>]]></content>
            <updated>2026-09-07T13:29:14+00:00</updated>
        </entry>
    </feed>
