<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-09-16T08:10:45+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாலிவுட் நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் சச்சின் மகள் சாரா டெண்டுல்கர்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/sara-tendulkar-for-ambani-s-ganpati-celebration-1789545852"></link>
            <id>https://viduppu.com/article/sara-tendulkar-for-ambani-s-ganpati-celebration-1789545852</id>
            <summary type="text">மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் - சான்யா திருமணம் கடந்த மார்ச் 5 ஆம்தேதி பிரமாண்டமான முறையில் மும்பையில் நடந்து முடிந்தது.சாரா டெ...</summary>
            <content type="html"><![CDATA[<p>மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் - சான்யா திருமணம் கடந்த மார்ச் 5 ஆம்தேதி பிரமாண்டமான முறையில் மும்பையில் நடந்து முடிந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/06e202f1-07e1-4957-8f8b-a3808303659c/26-6aaa4d8236913.webp' /></p><h2>சாரா டெண்டுல்கர்</h2><p> </p><p>திருமணத்தில் மணமக்களைவிட அதிகமாக கவனத்தை ஈர்த்தவர்தான் சச்சினின் மகள் சாரா டெண்டுல்கர்.

தனது திறமையால் பல தொழில்களை ஆரம்பித்து வருமானம் ஈட்டி வருகிறார் சாரா.</p><p> சமீபத்தில் நடந்த அம்பானி இல்ல விநாயகர் சதுர்த்தி நிகழ்ச்சிக்கு சச்சின் தன் குடும்பத்துடன் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் வியக்க வைக்கும் அளவில் சேலையில் சென்றுள்ளார் சாரா. பாலிவுட் நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் அழகில் அவரது புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் வியந்து வருகிறார்கள்.</p>]]></content>
            <updated>2026-09-16T08:04:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹாரி ப்ரூக் சாதனை சதம்; இங்கிலாந்திடம் படுதோல்வியடைந்த இலங்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/harry-brook-record-ton-england-beat-sri-lanka-1789545715"></link>
            <id>https://news.lankasri.com/article/harry-brook-record-ton-england-beat-sri-lanka-1789545715</id>
            <summary type="text">harry brook record ton leads england beat srilanka by 119 runs: ஹாரி ப்ரூக் சாதனை சதத்தில் முதல் T20 போட்டியில் இலங்கை அணி இங்கிலாந்திடம் படுதோல்வியடை...</summary>
            <content type="html"><![CDATA[<p>harry brook record ton leads england beat srilanka by 119 runs: ஹாரி ப்ரூக் சாதனை சதத்தில் முதல் T20 போட்டியில் இலங்கை அணி இங்கிலாந்திடம் படுதோல்வியடைந்துள்ளது. </p><h3>

இங்கிலாந்திடம் படுதோல்வியடைந்த இலங்கை</h3><p>
இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள இலங்கை கிரிக்கெட் அணி 3 T20, 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0807f44b-2fed-4ed9-a217-7d81988ba032/26-6aaa4cf61c181.webp' /></p><p>

நேற்று சவுத்தாம்ப்டனில் நடைபெற்ற முதல் T20 போட்டியில், நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. </p><p>

இதன்படி, முதலில் துடுப்பாட்டம் ஆடிய இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 254 ஓட்டங்கள் குவித்தது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e50c26a0-c6cd-42d3-ba4c-24af2fe0915f/26-6aaa4cf4a7b9c.webp' /></p><p>

அதிகபட்சமாக இங்கிலாந்து அணி தலைவர் ஹாரி ப்ரூக் அதிரடியாக ஆடி 49 பந்துகளில் 10 பவுண்டரிகள், 6 சிக்ஸர்கள் உட்பட 114 ஓட்டங்கள் குவித்தார்.</p><p> 

தொடக்க ஆட்டக்காரர் ஜோஸ் பட்லர் 44 பந்துகளில் 8 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் உட்பட 80 ஓட்டங்கள் குவித்தார்.&nbsp;</p><p></p><p>

இதனையடுத்து, 255 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி, 19 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 135 ஓட்டங்கள் மட்டுமே குவித்து ஆல் அவுட் ஆனது.</p><p> 

இதன் மூலம், 119 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றது. </p><h3> 

ஹாரி ப்ரூக் சாதனை</h3><p>

இங்கிலாந்து அணிக்காக சர்வதேச T20 போட்டிகளில் புரூக் அடித்த இரண்டாவது சதம் இதுவாகும். </p><p>

இதன் மூலம், சர்வதேச T20 போட்டிகளில், ஒரே ஆண்டில் ஒன்றுக்கு மேற்பட்ட சதமடித்த டெஸ்ட் விளையாடும் அணியை சேர்ந்த முதல் அணித்தலைவர் என்ற பெருமையை ஹாரி ப்ரூக் பெற்றுள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c97c996d-2e84-4ec1-8d94-9bc8e84db5fa/26-6aaa4cf55ec64.webp' /></p><p>

முன்னதாக ஈஸ்வதினியின் அடில் பட் மற்றும் சுவிட்சர்லாந்தின் ஃபஹீம் நசீர் ஆகிய 2 அணித்தலைவர்கள் மட்டுமே ஒரு வருடத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட சர்வதேச T20சதங்களை அடித்திருந்தனர். </p><p>

இதே போல், சர்வதேச T20 சதங்கள் அடித்த டெஸ்ட் விளையாடும் அணித்தலைவர்கள் பட்டியலில் பாகிஸ்தானின் பாபர் அசாம் மற்றும் மற்றும் இந்தியாவின் ரோஹித் ஷர்மாவிற்கு அடித்ததாக புரூக் இணைந்துள்ளார். பாபர் அசாம் மற்றும் ரோஹித் ஷர்மா தலா 3 சதங்கள் அடித்துள்ளனர்.</p><p>

மேலும், இது இலங்கைக்கு எதிராக அடிக்கப்பட்ட இரண்டாவது அதிவேக T20 சதம் ஆகும். முன்னதாக 2017 ஆம் ஆண்டில் இந்தூரில் ரோஹித் சர்மா 35 பந்துகளில் அடித்த சதமடித்து முதலிடத்தில் உள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-16T08:03:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[மும்பை: ரூபாய் 5000 கோடி சொத்து இருந்தாலும் தெருவில் பிச்சை எடுத்த எம்.எல்.ஏ]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/why-bjp-mla-parag-shah-turns-begger-for-3-hours-1789544449"></link>
            <id>https://ibctamilnadu.com/article/why-bjp-mla-parag-shah-turns-begger-for-3-hours-1789544449</id>
            <summary type="text">மும்பையில் 5000 கோடி அதிகமாக மதிப்பு கொண்ட கோடீஸ்வர பாஜக எம்எல்ஏ ஒருவர் திடீரென ஒரு கிழிந்த ஆடைகளுடன் தெருவில் இறங்கி பிச்சை எடுத்த அந்த விசித்திரமான ...</summary>
            <content type="html"><![CDATA[<p>மும்பையில் 5000 கோடி அதிகமாக மதிப்பு கொண்ட கோடீஸ்வர பாஜக எம்எல்ஏ ஒருவர் திடீரென ஒரு கிழிந்த ஆடைகளுடன் தெருவில் இறங்கி பிச்சை எடுத்த அந்த விசித்திரமான நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
</p><p>
 மராட்டிய மாநிலத்தின் மிக முக்கிய கோடீஸ்வர அரசியல்வாதிகளில் ஒருவரான பராக் ஷா இவர் மும்பை காட்கோபர் கிழக்கு தொகுதி பாஜக எம்எல்ஏவாக இருக்கிறார். தொழிலதிபரான இவருக்கு பல ஆயிரம் கோடிகள் மதிப்பிலான சொத்துக்கள் இருக்கிறது. </p><p>இவ்வளவு ஆடம்பர வசதிகள் இருந்தாலும் அவர் ஏன் பிச்சைக்காரராக மாறினார் என்கின்ற கேள்வி எல்லோருக்கும் எழுந்திருக்கிறது. ஜெயின் சமூகத்தை சேர்ந்த இவர் தங்களுடைய புனித கால வழிபாட்டின் பொழுது தன்னுடைய ஆன்மீக குருவான நம்ரமுனி மகாராஜாவை சந்தித்து ஆசீர்வாதம் பெற்றிருக்கிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1b8b3aac-3624-4159-b618-7a7e80bdb7f6/26-6aaa480342971.webp' /></p><p> அப்போது அவரது குரு வாழ்க்கையில் எதார்த்தமான நிலையையும், ஏழை மக்களுடைய கஷ்டங்களையும், மனிதர்களுடைய உண்மையான முகங்களையும் நேரில் உணர்ந்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்திருக்கிறார்.</p><p>

 அவ்வாறு குருவினுடைய கட்டளையின் படி தன் வசம் இருந்த சொகுசு கார்கள் துப்பாக்கி ஏந்திய பாதுகாவலர்கள் விலை உயர்ந்த ஆடைகள் என எல்லாவற்றையும் ஒரு நாள் முழுவதும் துறந்து வாழ எண்ணினார்.</p><p></p><p>இதை அடுத்து மக்கள் யாரும் அவரை அறிந்து கொள்ள முடியாத அளவு முகத்தில் அழுக்குகளை பூசிக்கொண்டு கிழிந்த ஆடைகளை அணிந்தபடி பராக் ஷா மும்பை காட் கோபர் வீதிகளில் பிச்சைக்காரராக வலம் வருகிறார். வீதியோரம் அமர்ந்து கையேந்தி யாசகம் பெறுகிறார். சொந்த செக்யூரிட்டியே விரட்டி இருக்கிறார். </p><p>இந்த ஒரு நாள் பிச்சைக்கார வாழ்க்கையில் அவருக்கு பல வகையான அதிர்ச்சிகரமான அனுபவங்கள் கிடைத்திருக்கிறது. இது குறித்து அவர் கூறுவது, தான் ஒரு பிச்சைக்காரர் வேடம் அணிந்து தன்னுடைய சொந்த அலுவலக குடியிருப்பு வளாகத்திற்குள் செல்கின்ற பொழுது அங்கு வேலை பார்க்கக் கூடிய அவரது சொந்த செக்யூரிட்டியே என்னை அடையாளம் தெரியாமல் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளினார் என்கிறார்.</p><p>ஆனால், எப்போதும் உதவி செய்யக்கூடிய நெருங்கிய நண்பர் ஒருவரிடம் கையேந்தி நின்று இருக்கிறார். ஆனால், அவரும் அடையாளம் தெரியாமல் விரட்டி இருக்கிறார். ஆனால், அதே நேரத்தில் மும்பை வீதியில் சில இளைஞர்கள் அவருடைய நிலையை கண்டு பரிதாபம் அடைந்து உணவும், இருபது ரூபாய் பணமும் கொடுத்து இருக்கிறார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cca96eb2-ed44-484b-ad5c-ff452daba9c9/26-6aaa4803f1f86.webp' /></p><p> அங்கு இருக்க கூடிய சமோசா வியாபாரி எந்த ஒரு பாகுபாடும் இல்லாமல் அவருக்கு இலவசமாக சமோசா கொடுத்து உபசரித்து இருக்கிறார். பணம் பதவி புகழ் எல்லாம் மனிதர் வாழ்க்கையில் அகங்காரத்தை உண்டாக்கி விடுகிறது.</p><p> இந்த பிச்சைக்காரர் அனுபவம் அவருக்கு அகங்காரத்தை அழித்து விட்டதாகவும் இவர் பதவியில் இருக்கின்ற பொழுது பல மணி நேரம் காத்திருந்தவர்கள் இவருடைய தகுதியை இழந்து ஏழையாக நின்றபொழுது அவர்களை விட உயர்ந்தவர்களாக நினைத்து விரட்டி இருக்கிறார்கள்.</p><p></p><p> </p><p>அவர் இறுதியாக கூறுவது, இந்த சமோசா வியாபாரி போன்ற எளிய மனிதர்களிடம் தான் உண்மையான அன்பு இருக்கிறது என்றும், இந்த சமூகம் மனிதர்களை மதிப்பதே இல்லை என்றும், ஒருவரிடம் இருக்கக்கூடிய பணம் மற்றும் பதிவியை மட்டும் தான் வைத்து அவர்களை மதிக்கிறார் என்றும், அவருடைய அந்த பிச்சைக்காரர் வாழ்க்கை அவருக்கு புரிய வைத்ததாக அவர் தெரிவித்திருக்கிறார். </p><p>கோடீஸ்வரர் எம்எல்ஏ ஒருவர் இவ்வாறு பிச்சைக்காரராக மாறி வலம் வந்த இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் காட்டுத் தீயாகப் பரவி பொதுமக்கள் இடையே பெரும் மகிழ்ச்சியையும் வியப்பையும் ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-16T08:00:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் தீப்பற்றி எரிந்த வாகனத்திற்குள் சடலம் மீட்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/victoria-police-investigating-after-body-found-1789544619"></link>
            <id>https://canadamirror.com/article/victoria-police-investigating-after-body-found-1789544619</id>
            <summary type="text">கனடாவின் விக்டோரியா நகரில் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற வாகனம் தீப்பற்றிய சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக புலனாய்வு அதிகா...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் விக்டோரியா நகரில் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற வாகனம் தீப்பற்றிய சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
</p><p>காலை 7 மணியளவில் விக்டோரியா பொலிஸ் திணைக்கள அதிகாரி ஒருவர் பணிக்குச் சென்று கொண்டிருந்தபோதே, குயின்ஸ் அவென்யூவின் 700 ஆவது பகுதியில் வாகனம் ஒன்று தீப்பற்றி எரிவதைக் கண்டுள்ளார். </p><p>
உடனடியாக அவர் 911 என்ற அவசர இலக்கத்திற்கு அழைப்பு விடுத்ததையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புப் படையினர் சில நிமிடங்களில் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/32e6979f-0cd7-40a7-908d-d0796e14aabd/26-6aaa48ad1fff7.webp' /></p><p> </p><p>எனினும், அந்த வாகனத்திற்குள் ஒருவர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டார். 
பாதிக்கப்பட்டவர் குறித்தோ அல்லது தீப்பற்றிய வாகனம் குறித்தோ மேலதிக விவரங்கள் எதையும் பொலிஸார் இதுவரை வெளியிடவில்லை.</p><p>
விசாரணை ஆரம்ப கட்டத்தில் உள்ளதால், விசாரணையின் நேர்மையைப் பாதுகாக்கும் பொருட்டு தற்போது மேலதிக விவரங்களை வெளியிட முடியாது பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது.
</p><p>சம்பவம் தொடர்பில் அதிகாலை 3 மணி முதல் காலை 7 மணி வரையான காலப்பகுதியில், டக்ளஸ் அல்லது பிளான்ஷார்ட் வீதிகள் வழியாகச் சென்ற வாகனங்களின் கேமரா பதிவுகள் அல்லது தகவல்கள் வைத்திருப்போர் உடனடியாக புலனாய்வாளர்களைத் தொடர்புகொள்ளுமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.</p><p> 
இச்சம்பவத்தைத் தொடர்ந்து புலனாய்வாளர்கள் சோதனைகளை மேற்கொண்டதால், அப்பகுதியில் பல மணிநேரம் போக்குவரத்து முழுமையாகத் தடைப்பட்டிருந்தது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-16T07:59:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பலத்த மின்னல் குறித்த வளிமண்டலவியல் திணைக்களத்தின் எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/warning-regarding-severe-lightning-1789544573"></link>
            <id>https://ibctamil.com/article/warning-regarding-severe-lightning-1789544573</id>
            <summary type="text">நாட்டின் பல பகுதிகளில் பலத்த மின்னல் தாக்கம் ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதன்படி, ஊவா, கிழக்கு, மத்திய மற்ற...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டின் பல பகுதிகளில் பலத்த மின்னல் தாக்கம் ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
</p><p>
இதன்படி, ஊவா, கிழக்கு, மத்திய மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் முல்லைத்தீவு மாவட்டத்திலும் இன்று மாலை அல்லது இரவு வேளைகளில் இடியுடன் கூடிய மழையுடன் பலத்த மின்னல் ஏற்படுவதற்கான அதிக சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன.
</p><p>
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளையில் குறித்த பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>பலத்த மின்னலு்ககான எச்சரிக்கை</h2><p>

மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களைக் குறைப்பதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/942826b7-5733-444d-934b-5ffe35cfed96/26-6aaa4c3a1172b.webp' /></p><p>

இன்று (16.09.2026) முற்பகல் 10.30 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை அறிவிப்பு இரவு 11.30 மணி வரை செல்லுபடியாகும்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-16T07:59:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமைச்சர் வசந்த சமரசிங்கவுக்கு நீதிமன்றத்தில் வழக்கு இல்லையா: விமல் வீரவன்ச கேள்வி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/vasantha-samarasinghe-mp-court-case-wimal-1789544254"></link>
            <id>https://tamilwin.com/article/vasantha-samarasinghe-mp-court-case-wimal-1789544254</id>
            <summary type="text">எதிர்த்தரப்பில் உள்ளவர்கள் எல்லோரும் நீதிமன்ற வழக்குகளில் பிணையில் விடுவிக்கப்பட்டவர்கள் என்றால் அமைச்சர் வசந்த சமரசிங்கவின் நிலை என்ன என்று விமல் வீர...</summary>
            <content type="html"><![CDATA[<p>எதிர்த்தரப்பில் உள்ளவர்கள் எல்லோரும் நீதிமன்ற வழக்குகளில் பிணையில் விடுவிக்கப்பட்டவர்கள் என்றால் அமைச்சர் வசந்த சமரசிங்கவின் நிலை என்ன என்று விமல் வீரவன்ச கேள்வியெழுப்பியுள்ளார்.
</p><p>
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் அவர் இந்தக் கேள்வியொன்றை முன்வைத்துள்ளார்.</p><p>

தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

எதிர்க்கட்சித் தரப்பில் உள்ளவர்கள் பிணையில் இருப்பவர்கள் அல்லது சந்தேகத்திற்குரியவர்கள் என்று அரசாங்கம் குற்றம் சாட்டுகின்றது.</p><h2>விசாரணை&nbsp;</h2><p>
</p><p>
அரசாங்கத்தின் பேரணி ஒன்றில் ஜனாதிபதிக்கு பின்னால் அமைச்சர் வசந்த சமரசிங்க நின்றார். அவ்வாறெனில் அமைச்சர் வசந்த சமரசிங்க பிணையில் இருப்பவரா அல்லது சந்தேகத்திற்குரியவரா என்ற கேள்வி எழுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f9601749-fd36-4007-af79-16131d1262f2/26-6aaa496d7502b.webp' /></p><p>
</p><p>
தங்களுக்கு சவால் விடுக்கக்கூடியவர்களைப் பல்வேறு சம்பவங்களில் சிக்கவைத்து சிறையிலடைக்க தற்போதைய அரசாங்கம் முயற்சிக்கின்றது.
</p><p>
மேலும், தற்போதைய அரசாங்கத்தின் 'கிரிப்டோகரன்சி சொத்துக்கள்' மற்றும் 'மூன்று மாடி வீடுகள்' குறித்து, அடுத்து ஆட்சிக்கு வரும் அரசாங்கமே விசாரணை நடத்த வேண்டியிருக்கும் என்றும் விமல் வீரவன்ச தொடர்ந்தும் குறிப்பட்டுள்ளார்.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-16T07:51:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கணவரின் சிறிய தவறால் லொட்டரியில் ரூ.4.5 கோடி வென்ற பெண்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/michigan-couple-wins-136000-dollar-lottery-mistake-1789542874"></link>
            <id>https://news.lankasri.com/article/michigan-couple-wins-136000-dollar-lottery-mistake-1789542874</id>
            <summary type="text">Michigan couple wins 136000 dollars lottery mistake: கணவரின் சிறிய தவறால் தம்பதிக்கு லொட்டரியில் ரூ.4.5 கோடி பரிசு கிடைத்தது.

தம்பதிக்கு&amp;nbsp;அதிர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>Michigan couple wins 136000 dollars lottery mistake: கணவரின் சிறிய தவறால் தம்பதிக்கு லொட்டரியில் ரூ.4.5 கோடி பரிசு கிடைத்தது.</p><h2>

தம்பதிக்கு&nbsp;அதிர்ஷ்டம் </h2><p>அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்தில் வாழும் ஒரு தம்பதிக்கு, ஒரு சிறிய தவறால் பெரிய அதிர்ஷ்டம் கிட்டியுள்ளது.
</p><p>
78 வயதான வாஷ்டெனாவ் கவுண்டி பெண், தனது கணவருடன் ஒரு உணவகத்தில் Club Keno லொட்டரி விளையாடியபோது, எதிர்பாராத சம்பவம் நடந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1b0aaab5-4c17-4f8e-b658-ffd4ee8b8628/26-6aaa41dbd2852.webp' /></p><p>
</p><h2>
தவறுதலாக...</h2><p>அவர்கள் இருவரும் தனித்தனியாக டிக்கெட் வாங்கியிருந்தனர். பின்னர் மற்றொரு பார் சென்றபோது, கணவர் தவறுதலாக தனது டிக்கெட்டுக்கு பதிலாக மனைவியின் டிக்கெட்டை மீண்டும் replay செய்தார்.

அந்த டிக்கெட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட 07-16-19-23-25-46-55-68-74 என்ற எண்கள், Club Keno-வின் 20 எண்களில் 9 எண்களுடன் பொருந்தின.
</p><p>
இதன் மூலம் அவர்கள் 136,660 டொலர் (இலங்கை பணமதிப்பில் சுமார் ரூ.4.52 கோடி) பரிசை வென்றனர்.
</p><p></p><p>“இது முற்றிலும் எதிர்பாராத ஒன்று. இந்த பணம் எங்களுக்கு இருக்கும் நெருக்கடியை தளர்த்தி சுவாசிக்க உதவும்,” என்று அந்த பெண் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.</p><p>

தம்பதியினர், இந்த வெற்றிப் பணத்தின் ஒரு பகுதியை தங்கள் பேரக்குழந்தைகளின் கல்லூரி கல்விக்காக பயன்படுத்த திட்டமிட்டுள்ளனர்.
</p><p>
இந்த சம்பவம், லொட்டரி விளையாட்டில் ஒரு தவறான நடவடிக்கையும் வாழ்க்கையை மாற்றக்கூடிய அதிர்ஷ்டத்தை தரலாம் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது.&nbsp;&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-16T07:50:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[6 நாட்களில் தமிழகத்தில் பாக்ஸ் ஆபிஸை தெறிக்கவிடும் நடிகர் சூரியின் மண்டாடி... வசூல் விவரம்...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/actor-soori-mandaadi-movie-tamilnadu-box-office-1789535861"></link>
            <id>https://cineulagam.com/article/actor-soori-mandaadi-movie-tamilnadu-box-office-1789535861</id>
            <summary type="text">மண்டாடிஅறிமுக இயக்குனர் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் சூரி நடிப்பில் கடந்த செப்டம்பர் 10ம் தேதி வெளியான திரைப்படம் மண்டாடி. சூரியுடன், மஹிமா நம்பியார...</summary>
            <content type="html"><![CDATA[<h2>மண்டாடி</h2><p>அறிமுக இயக்குனர் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் சூரி நடிப்பில் கடந்த செப்டம்பர் 10ம் தேதி வெளியான திரைப்படம் மண்டாடி. </p><p>சூரியுடன், மஹிமா நம்பியார், சத்யராஜ், சுஹாஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் இசையமைக்க ஆர்எஸ் இன்போடெயின்மென்ட் நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது.</p><p>
படகு போட்டியை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இப்படத்தில் நடிக்க சூரிக்கு ரூ. 20 கோடி சம்பளம் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது, அதேபோல் நாயகியாக நடித்த மஹிமா நம்பியாருக்கு ரூ. 1 கோடி சம்பளம் என்றும் தகவல்கள் வருகின்றன.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/30ca2efc-5281-4b5b-8a19-df57e02a669e/26-6aaa43f037d93.webp' /></p><h2>பாக்ஸ் ஆபிஸ்</h2><p>
இப்படம் வெளியாகி 6 நாட்களில் உலகம் முழுவதும் ரூ. 65 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/160021ff-4d05-4fe6-800c-b0b615490552/26-6aaa4300add4d.webp' /></p><p> </p><p>தமிழகத்தில் மட்டுமே இப்படம் இதுவரை ரூ. 42 கோடிகளுக்கு மேல் வசூல் வேட்டை செய்து சூப்பர் ஹிட்டான படமாகியுள்ளது.</p><p> நாளுக்கு நாள் வசூல் அதிகரித்து வரும் நிலையில் விரைவில் படம் ரூ. 100 கோடிக்கு மேலான வசூல் வேட்டை செய்யும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/OjEDDh_zehU" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-09-16T07:40:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[டொலருக்கு எதிராக இலங்கை ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/value-of-the-rupee-against-the-dollar-1789542164"></link>
            <id>https://ibctamil.com/article/value-of-the-rupee-against-the-dollar-1789542164</id>
            <summary type="text">செவ்வாய்க்கிழமையுடன் ஒப்பிடுகையில், இன்று (16.09.2026) இலங்கையின் வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாயின் பெறுமதி மேலும் வீழ்ச்சி...</summary>
            <content type="html"><![CDATA[<p>செவ்வாய்க்கிழமையுடன் ஒப்பிடுகையில், இன்று (16.09.2026) இலங்கையின் வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாயின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது.
</p><p>
இதன்படி, சில வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை 336 ரூபாயைத் தாண்டியுள்ளது.</p><p>

சேலான் வங்கியில் டொலரின் கொள்வனவு விலை 325.15 ரூபாயிலிருந்து 325.75 ரூபாயாகவும், விற்பனை விலை 334.40 ரூபாயிலிருந்து 335.00 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது.</p><p></p><h2>டொலரின் கொள்வனவு</h2><p>
</p><p>
NDB வங்கியில் கொள்வனவு விலை 325.00 ரூபாயிலிருந்து 327.50 ரூபாயாகவும், விற்பனை விலை 334.00 ரூபாயிலிருந்து 336.50 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/339d94be-3598-49b3-ba3c-bbe0140af9b6/26-6aaa43abc12a2.webp' /></p><p>
</p><p>
மக்கள் வங்கியில் கொள்வனவு விலை 325.93 ரூபாயிலிருந்து 327.91 ரூபாயாகவும், விற்பனை விலை 334.01 ரூபாயிலிருந்து 336.04 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது.</p><p>

கொமர்ஷல் வங்கியில் கொள்வனவு விலை 323.35 ரூபாயிலிருந்து 326.08 ரூபாயாகவும், விற்பனை விலை 333.25 ரூபாயிலிருந்து 336.00 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது.</p><p>

சம்பத் வங்கியில் கொள்வனவு விலை 326.00 ரூபாயிலிருந்து 328.00 ரூபாயாகவும், விற்பனை விலை 334.00 ரூபாயிலிருந்து 336.00 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b> WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-16T07:39:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிவஞானம், சுமந்திரன் உட்பட 4 பேருக்கு எதிராக அரியநேந்திரன் வழக்குத்தாக்கல்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/ariyanethiran-files-case-against-sumanthiran-1789544427"></link>
            <id>https://jvpnews.com/article/ariyanethiran-files-case-against-sumanthiran-1789544427</id>
            <summary type="text">&amp;nbsp; இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரனை கட்சியில் இருந்து நீக்கியமைக்கு எதிராக தமிழ் அரசுக் கட்சியின் தற்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரனை கட்சியில் இருந்து நீக்கியமைக்கு எதிராக தமிழ் அரசுக் கட்சியின் தற்போதைய பதில் தலைவர் மற்றும் பதில் செயலாளர் உள்ளிட்ட 5 பேருக்கு எதிராக மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்றத்தில் இன்று (16) வழக்கு தாக்கல் செய்துள்ளார்.</p><p>கடந்த ஆண்டு அரியநேந்திரனை கட்சியின் உப விதிகளுக்கு எதிராக நீக்கியமைக்கு எதிராக தற்போதைய கட்சியின் பதில் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம், பதில் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், முன்னாள் பொதுச் செயலாளர் சத்தியலிங்கம், நிர்வாக செயலாளர் குணநாயகம் மற்றும் தமிழ் அரசுக் கட்சிக்கும் எதிராக சிரேஸ்ட சட்டத்தரணி பிறேம்நாத் ஊடாக வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c74fc269-3647-49a4-ab2c-4a8fcb31e915/26-6aaa47ed35b86.webp' /></p><p>

இந்த வழக்கினை மாவட்ட நீதவான் இன்று எடுத்துக்கொண்ட போது எதிர்வரும் டிசம்பர் 16ஆம் திகதிக்கு அடுத்த வழக்கினை நீதவான் திகதியிட்டுள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-16T07:37:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழீழத்தை எதிர்க்கும் அர்ச்சுனா எமது மேடைகளில் இருக்க வேண்டியவர்..! மகிந்தவின் சகா வெளியிட்ட தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/we-must-praise-archchuna-mp-says-udaya-1789544027"></link>
            <id>https://tamilwin.com/article/we-must-praise-archchuna-mp-says-udaya-1789544027</id>
            <summary type="text">தமிழீழத்தை எதிர்க்கும் இராமநாதன் அர்ச்சுனா போன்றவர்கள் தமது மேடைகளில் கட்டாயம் இருக்க வேண்டிய நபர் என முன்னாள் அமைச்சரும் பிவித்துரு ஹெல உறுமய கட்சியி...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழீழத்தை எதிர்க்கும் இராமநாதன் அர்ச்சுனா போன்றவர்கள் தமது மேடைகளில் கட்டாயம் இருக்க வேண்டிய நபர் என முன்னாள் அமைச்சரும் பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவருமான உதய கம்மன்பில இதனை தெரிவித்துள்ளார்.</p><p>தாம் தமிழீழ விடுதலைப் புலிகளுக்காக குரல் கொடுத்த ஒருவர் எனவும் தற்பொழுது தமிழ் ஈழம் அமைக்கப்படுவதை விரும்பவில்லை எனவும் அனுராதபுரம் மேடையில் அர்ச்சுனா கூறியதாக கம்மன்பில சுட்டிக்காட்டியுள்ளார்.</p><h2>அனுராதபுரம் மேடையில் அர்ச்சுனா</h2><p>எதிர்காலத்தில் தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் மக்கள் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என அர்ச்சுனா கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/322367ae-9571-4c67-9ed2-40fea5e4cd9a/26-6aaa465d3814f.webp' /></p><p>தமிழீழத்தை ஆதரித்த, பிரிவினைவாதத்தை விரும்பிய வடக்கை பிரதிநிதித்துவம் செய்யும் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர், எமது மேடையில் ஏறி தொடர்ந்தும் தமிழீழத்திற்காக குரல் கொடுக்கப் போவதில்லை என கூறுகின்றார் என்றால் அவரை நாம் மேடையில் வைத்துக் கொள்ளத்தான் வேண்டும் என கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.</p><p>
குறிப்பாக தமிழ் சிங்கள முஸ்லிம் மக்கள் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என அர்ச்சுனா கூறுவதாக அவர் தெரிவித்துள்ளார்.</p><p>
இவ்வாறான நபர்களை எமது மேடையில் வைத்துக் கொள்ள வேண்டும் எனவும் அவர்களை பாராட்ட வேண்டும் எனவும் உதயகம்மன்பில தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-16T07:34:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[லாஸ் ஏஞ்சல்ஸ் நேரலையில் ஹெலிக்கொப்டர் விபத்து ; மூவர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/helicopter-crash-in-los-angeles-three-dead-1789544050"></link>
            <id>https://canadamirror.com/article/helicopter-crash-in-los-angeles-three-dead-1789544050</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸில் பேருந்து தீப்பிடித்த சம்பவத்தை நேரலை செய்துகொண்டிருந்த ஹெலிக்கொப்டர் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து விப...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸில் பேருந்து தீப்பிடித்த சம்பவத்தை நேரலை செய்துகொண்டிருந்த ஹெலிக்கொப்டர் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
</p><p>


லாஸ் ஏஞ்சலீஸின் சாட்ஸ்வொர்த் பகுதியில் நேற்று மாலை வீதியில் பயணித்த பேருந்து ஒன்றில் திடீரென தீப்பற்றியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/459cc42a-0421-4cb0-854c-89cd343a4ad2/26-6aaa46749b3d3.webp' /></p><p> </p><p>

இதனை என்.பி.சி. செய்தி நிறுவனத்தின் ஹெலிக்கொப்டர் நேரலை செய்துகொண்டிருந்த நிலையில், திடீரென கட்டுப்பாட்டை இழந்த ஹெலிக்கொப்டர் இரண்டு கட்டடங்களுக்கு இடையில் தரையில் விழுந்து நொறுங்கியுள்ளது.
</p><p>


இந்த விபத்து நேரலையின்போதே இடம்பெற்றதால், ஹெலிக்கொப்டர் கீழே விழும் காட்சிகள் நேரலையில் ஒளிபரப்பாகியது.
</p><p>


விபத்தில் ஹெலிக்கொப்டரில் பயணித்த விமானி மற்றும் செய்தியாளர் உள்ளிட்ட மூவர் உயிரிழந்துள்ளதாகவும், மேலும் ஒருவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் முதல்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p>



சாட்ஸ்வொர்த் பகுதியில் உள்ள வாகன நிறுத்துமிடத்தில் ஹெலிக்கொப்டர் விழுந்ததால் கட்டடங்களுக்கு சேதம் ஏற்படவில்லை எனவும், நான்கு வாகனங்கள் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



விபத்து தொடர்பில் அமெரிக்க விமானப் போக்குவரத்து ஆணைக்குழு சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது</p>]]></content>
            <updated>2026-09-16T07:30:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[வீடு தேடி வந்த அப்பத்தா.. நினைத்ததை நடத்திய மீனாட்சி - வாகை சூடவா இன்றைய எபிசோட் அப்டேட்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/zeetamil-vaagai-sooda-vaa-sep-16-episode-details-1789543271"></link>
            <id>https://viduppu.com/article/zeetamil-vaagai-sooda-vaa-sep-16-episode-details-1789543271</id>
            <summary type="text">வாகை சூடவாதமிழ் சின்னத்திரையில் Zee தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் வாகை சூடவா. இந்த...</summary>
            <content type="html"><![CDATA[<h2>வாகை சூடவா</h2><p>தமிழ் சின்னத்திரையில் Zee தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் வாகை சூடவா. இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் அப்பத்தான் மீனாட்சி சிவாவை அழைத்து செல்வதற்காக சுமதி வீட்டுக்கு கிளம்பி வந்த நிலையில் இன்றைய நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a6a17d63-9bdd-4d94-95e7-1e5a2cdb4e18/26-6aaa43691f32c.webp' /></p><p> </p><p>

அதாவது தியானத்திற்காக வந்த மீனாட்சி ஜீவா ஃபோனை ஸ்விட்ச் ஆப் செய்து தியானத்தில் அமருகின்றனர். மறுபக்கம் அப்பத்தா வீட்டுக்கு வர வராதவர் வந்திருப்பதால் சுமதி தேன்மொழி ஆகியோர் அப்பத்தாவை ஓடியோடி கவனிக்கின்றனர். 

மீனாட்சிக்கு போன் செய்ய போன் ஸ்விட்ச் ஆப் ஆக இருப்பதை பார்த்து அப்பத்தா கடுப்பாகி அவ வேண்டும் என்று தான் போன சுவிட்ச் ஆப் பண்ணி இருக்கா என கோபப்படுகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6b22b23c-d9b6-4fdd-9352-86b66bd8227f/26-6aaa4369c889a.webp' /></p><p> </p><p>மேலும் கோபப்பட்டு அங்கிருந்து கிளம்ப முயற்சி செய்ய வாசுதேவன் போன் செய்ய என்னால எல்லாம் அவமானப்பட்டு இங்கே இருக்க முடியாது என சொல்லி போனை வைக்கிறார். 

உடனே பாண்டியிடம் இருந்து போன் கால் வருகிறது. என்ன வெளியே வருகிறேன் என்று சொல்றாங்க எப்படி ஆச்சு அவங்கள வீட்டுக்கு கூட்டிட்டு வந்துடு என்று சொல்ல அப்பத்தா வேறு வழியில்லாமல் நிற்கிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7aef795c-dfd2-496e-b837-0cd82ff149c0/26-6aaa436a7c1c4.webp' /></p><p> </p><p>தியானம் முடிந்து மீனாட்சி போனை ஆன் செய்ய தேன்மொழி போன் செய்து அப்பத்தா நம்மள கூட்டிட்டு போகிறதுக்காக வீட்டுக்கு வந்து இருக்காங்க.. நீ சீக்கிரம் வா என்று சொல்ல மீனாட்சி நினைத்தது நடந்த சந்தோஷத்தை அடைகிறாள்.

ஆனால் அதே நேரத்தில் அப்பத்தாவின் மீது முழு நம்பிக்கையும் இல்லாமல் வீட்டுக்கு கிளம்பி வருகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய வாகை சூடவா சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.</p>]]></content>
            <updated>2026-09-16T07:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thevanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மன்னார் மாவட்ட பொது மருத்துவமனையில் இந்திய அரசின் நிதியுதவி! வடக்கு ஆளுநரின் கருத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/mannar-hospital-financial-india-north-1789542676"></link>
            <id>https://tamilwin.com/article/mannar-hospital-financial-india-north-1789542676</id>
            <summary type="text">மன்னார் மாவட்ட மக்கள் கடந்த காலங்களில் தாங்கள் போதிய கவனம் பெறவில்லை என்ற
உணர்வுடன் இருந்ததை நான் அறிவேன். ஆனால், இந்த நிலைமை படிப்படியாக மாறிக்
கொண...</summary>
            <content type="html"><![CDATA[<p>மன்னார் மாவட்ட மக்கள் கடந்த காலங்களில் தாங்கள் போதிய கவனம் பெறவில்லை என்ற
உணர்வுடன் இருந்ததை நான் அறிவேன். ஆனால், இந்த நிலைமை படிப்படியாக மாறிக்
கொண்டிருக்கிறது என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன்&nbsp; தெரிவித்தார்.</p><p>மன்னார் மாவட்ட பொது மருத்துவமனையில் இந்திய அரசின் 600 மில்லியன் ரூபா
நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்படவுள்ள புதிய விபத்து மற்றும் அவசர சிகிச்சைப்
பிரிவுக்கான அடிக்கல் நடும் நிகழ்வு இன்று (16.09.2026) நடைபெற்றபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.</p><p>அவர் மேலும் தெரிவிக்கையில், அரசாங்கத்தின் 600 மில்லியன் ரூபா நன்கொடை உதவியுடன் உருவாகவுள்ள இந்தப்
பிரிவு, அவசர நிலைகளில் எமது மக்களுக்கு விரைவானதும் ஒருங்கிணைந்ததுமான
மருத்துவ சேவையை வழங்குவதற்கு மிகவும் முக்கியமானதாக அமையும்.</p><h2>நிதியுதவி</h2><p> மன்னார் மாவட்ட
மக்களின் சார்பில், இந்தப் பெறுமதியான உதவிக்காக இந்திய மக்களுக்கும், இந்திய
அரசாங்கத்துக்கும், இந்தியப் பிரதமர் மேன்மைதங்கிய நரேந்திர மோடிக்கும், இங்கு பிரதி நிதித்துவப்படுத்தும் இந்திய உயர் ஸ்தானிகர் ஊடாக எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.</p><p>மன்னார் மாவட்டத்தின் சுகாதாரத் தேவைகளிலும் இதே அணுகுமுறை காணப்படுகிறது.
ஜனாதிபதி தலைமையின் கீழும், சுகாதார அமைச்சர்&nbsp; நளிந்த ஜயதிஸ்ஸவின் பங்களிப்புடனும், மன்னார் மாவட்ட பொது மருத்துவமனையின்
மேம்பாட்டுக்காக நாம் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகின்றோம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/993f0fb0-48ed-426b-9ac0-2d632827d383/26-6aaa44aa27f72.webp' /></p><p>மன்னார் மாவட்டத்தின் சுகாதாரத் துறையை இன்னும் வலுப்படுத்துவதில் நாம்
அனைவரும் ஒன்றிணைந்து தொடர்ந்து பணியாற்றுவோம். </p><p>இன்று நடுகை செய்யப்படும் இந்த
அடிக்கல் விரைவில் ஒரு நவீன மருத்துவக் கட்டமைப்பாக எழுந்து, ஆயிரக்கணக்கான
எமது மக்களின் உயிருக்கும் நலனுக்கும் பாதுகாப்பாக அமையட்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.</p><p>புதிய கட்டிடத்தில் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு, தீவிர சிகிச்சைப்
பிரிவு, படப்பதிவு மற்றும் நோயறிதல் வசதிகள், எக்ஸ்-கதிர் மற்றும் சி.ரி.
ஸ்கேன் வசதிகள், ஆய்வுகூடம், வெளிநோயாளர் சிகிச்சைப் பிரிவு உள்ளிட்ட முக்கிய
மருத்துவ வசதிகள் ஏற்படுத்தப்படவுள்ளன.</p><p> </p>]]></content>
            <updated>2026-09-16T07:26:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுரேஷ் சலேயின் மருத்துவ அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/suresh-saleh-s-medical-report-submitted-to-court-1789542137"></link>
            <id>https://tamilwin.com/article/suresh-saleh-s-medical-report-submitted-to-court-1789542137</id>
            <summary type="text">தேசிய புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேயின் மருத்துவ அறிக்கை நேற்று பிற்பகல் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>தேசிய புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேயின் மருத்துவ அறிக்கை நேற்று பிற்பகல் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
</p><p>
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம் தொடர்பான சுரேஷ் சலேவுக்கு எதிரான வழக்கு நேற்று கொழும்பு கோட்டை நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தது.</p><h2>பிறப்பிக்கப்பட்ட உத்தரவு</h2><p>
</p><p>இதற்கு முன்னரான வழக்கு விசாரணையின் போது கடந்த நூறு நாட்களாக கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சுரேஷ் சலேயின் மருத்துவ அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு கொழும்பு தேசிய மருத்துவமனையின் பணிப்பாளருக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d701d964-f5e2-449f-b975-28e5c9a6b911/26-6aaa4434d581b.webp' /></p><p>

எனினும் நேற்றைய வழக்கு விசாரணையின் போது குறித்த அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருக்கவில்லை.</p><p>இதனைக்கருத்திற் கொண்ட நீதிபதி பசன் அமரசேன, மருத்துவ அறிக்கைகள் தொடர்பான விபரங்களை வழங்குவதற்காக 22 ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளருக்கு அறிவித்தல் விடுத்ததுடன், வழக்கு விசாரணையை அன்றைய தினம் வரை ஒத்திவைத்தும் உத்தரவிட்டார்.</p><p>
இதற்கிடையே நீதிமன்ற நடவடிக்கைகள் நிறைவடைந்ததை தொடர்ந்து, சுரேஷ் சலே தொடர்பான மருத்துவ அறிக்கை பிற்பகல் சுமார் 3:15 மணியளவில் கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் கையளிக்கப்பட்டுள்ளதாக நீதித்துறை வட்டாரங்களில் இருந்து தெரியவந்துள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-16T07:24:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[100 கோடி மோசடி ; தமிழக அரசின் கிடுக்கிப்பிடியில் அன்பில் மகேஸ்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/1-000-crore-fraud-raid-dmk-anbil-mahesh-s-home-1789543646"></link>
            <id>https://jvpnews.com/article/1-000-crore-fraud-raid-dmk-anbil-mahesh-s-home-1789543646</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;100 கோடி மோசடி செய்ததாக தமிழ்நாட்டின் முன்னாள் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பத...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;100 கோடி மோசடி செய்ததாக தமிழ்நாட்டின் முன்னாள் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
</p><p>
இது தொடர்பில் இந்திய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளதாவது, 

தமிழ்நாடு முழுவதும் உள்ள பல தனியார் பாடசாலை நிர்வாகிகளிடமிருந்து ரூ.100 கோடிக்கும் அதிகமாக பணம் பெற்று ஏமாற்றியதாக சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையிடம் முறைப்பாடு அளித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/936717ae-67a4-46ed-93b0-5deb7d05a02b/26-6aaa44dfac6ca.webp' /></p><h2>&nbsp; &nbsp;100 கோடி மோசடி</h2><p>
</p><p>
அந்த முறைப்பாட்டின் அடிப்படையில் தமிழ்நாட்டின் முன்னாள் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, திருச்சி தென்னூரில் உள்ள அன்பில் மகேஸ் வீட்டில் இன்று காலை முதல் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறை சோதனை நடத்தி வருகின்றனர்.</p><p></p><p>
</p><p>
மேலும், சென்னை, திருச்சியில் அவருக்கு தொடர்புடைய 6 இடங்களில் ஒரே நேரத்தில் சோதனை நடத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>

மேலும் அன்பில் மகேஸ் வீட்டுக்கு வெளியே திராவிட முன்னேற்ற கழக தொண்டர்கள் வரத் தொடங்கியதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.</p>]]></content>
            <updated>2026-09-16T07:24:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜோன்ஸ்டனுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/case-against-johnston-adjourned-1789542545"></link>
            <id>https://tamilwin.com/article/case-against-johnston-adjourned-1789542545</id>
            <summary type="text">முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு எதிரான வழக்கு ஒக்டோபர் 28 வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மீது, சொகுசு ...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு எதிரான வழக்கு ஒக்டோபர் 28 வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.</p><p>முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மீது, சொகுசு வாகனமொன்றை சட்டவிரோதமாக வைத்திருந்த சம்பவம் தொடர்பாகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று (16) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.</p><h2>இறுதி முறையாக விசாரணை</h2><p>
</p><p>
அதன்போது கொழும்பு கோட்டை நீதவான் பசன் அமரசேன, குறித்த வழக்கை ஒக்டோபர் 28 ம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு உத்தரவிட்டார்.
</p><p>
குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள சந்தேக நபரான முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/873b380b-1273-4807-a7a4-336b2055fafe/26-6aaa42c5a9288.webp' /></p><p>

சந்தேக நபருக்காக முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி சம்பத் மெண்டிஸ், இது மோட்டார் வாகனங்கள் அவசரச் சட்டத்தின் கீழ் வரும் வழக்கு என்று நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
</p><p>
இருப்பினும், இந்த வழக்கு ஒக்டோபர் 28 அன்று இறுதி முறையாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றும் நீதவான் உத்தரவிட்டார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-16T07:18:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[FCIDயின் அழைப்பாணையைப் புறக்கணித்த ஷிரந்தி : குற்றச்சாட்டை மறுக்கும் ராஜபக்ச குடும்பம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/family-rejects-shiranthi-ignored-fcid-summons-1789540570"></link>
            <id>https://ibctamil.com/article/family-rejects-shiranthi-ignored-fcid-summons-1789540570</id>
            <summary type="text">முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவியான ஷிரந்தி ராஜபக்ச நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டிருந்த நிலையில...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவியான ஷிரந்தி ராஜபக்ச நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டிருந்த நிலையில், நாட்டை விட்டு வெளியேறியதாக ஊடகங்களில் வெளியாகும் செய்திகளை ராஜபக்ச குடும்பம் நிராகரித்துள்ளது.</p><p>ஷிரந்தி ராஜபக்ச எதிர்வரும் 24ஆம் திகதி நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு அழைக்கப்பட்டிருந்த நிலையில் அவர் வெளிநாடு சென்றதாக செய்திகள் வெளியாகியிருந்தது.</p><p>அதன்படி, குறித்த செய்திகள் முற்றிலும் பொய்யானவை என்று குறிப்பிட்ட ராஜபக்ச குடும்பத்தின் உறுப்பினர் ஒருவர் இது தொடர்பில் விளக்கமளித்துள்ளார்.</p><p></p><h2>விமான நிலையத்தில் வைத்து ஒப்படைக்கப்பட்ட கடிதம்&nbsp;</h2><p>குடும்ப உறுப்பினர் தெரிவித்ததாவது, ஷிரந்தி ராஜபக்ச தனியார் வைத்தியசாலையிலிருந்தே நேரடியாக விமான நிலையத்திற்கு வந்ததாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/152604c8-98ac-494c-baef-8ed2dc4bd953/26-6aaa4216c659f.webp' /></p><p>மேலும், நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகி வாக்குமூலம் அளிக்குமாறு இதற்கு முன்னர் அவருக்கு எந்தவொரு அழைப்பாணையும் விடுக்கப்பட்டிருக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
</p><p>
 

இன்று (16) அதிகாலை 12.50 மணிக்கு விமானம் புறப்படவிருந்த நிலையில், விமான நிலைய வாயிலுக்கு அருகில் வைத்து விமான நிலைய அதிகாரி ஒருவர் திடீரென குறித்த அழைப்பாணை கடிதத்தைக் கொண்டுவந்து ஷிரந்தி ராஜபக்சவிடம் ஒப்படைத்துள்ளதாக அந்த குடும்ப உறுப்பினர் கூறினார்.</p><p></p><h2>அழைப்பாணை அனுப்பப்படவில்லை</h2><p>
</p><p>
 

முன்னதாக நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவினால் ஷிரந்தி ராஜபக்சவிற்கு எவ்வித அழைப்பாணையும் அனுப்பப்படவில்லை என்றும், அவர் விமான நிலையத்திற்கு வந்த பின்னரே அக்கடிதம் ஒப்படைக்கப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7bb827ba-8a95-49e8-94a3-1cb9dc801fd5/26-6aaa42177d4a4.webp' /></p><p>இந்தநிலையில் மருத்துவ சிகிச்சைக்காக இன்று சிங்கப்பூருக்கு புறப்பட்ட ஷிரந்தி ராஜபக்ச எதிர்வரும் 19ஆம் திகதி மீண்டும் இலங்கை திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-16T07:13:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[லண்டனில் முதல்வர் விஜய்யை பார்க்க குவிந்த கூட்டம் - ரசிகர் சந்திப்பு நிகழ்ச்சி ரத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/vijay-london-fans-meet-cancelled-after-fans-gather-1789541674"></link>
            <id>https://ibctamilnadu.com/article/vijay-london-fans-meet-cancelled-after-fans-gather-1789541674</id>
            <summary type="text">cm vijay london fans meet cancelled after fans gathered in streets: லண்டனில் முதல்வர் விஜய்யை பார்க்க அவர் தங்கியுள்ள ஹொட்டல் முன்பு ஏராளமான ரசிகர்கள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>cm vijay london fans meet cancelled after fans gathered in streets: லண்டனில் முதல்வர் விஜய்யை பார்க்க அவர் தங்கியுள்ள ஹொட்டல் முன்பு ஏராளமான ரசிகர்கள் குவிந்துள்ள நிலையில், ரசிகர் சந்திப்பு நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.&nbsp;</p><h3>லண்டனில் முதல்வர் விஜய்யின் நிகழ்ச்சி ரத்து</h3><p> 

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், தொழில் முதலீடுகளை ஈர்க்க 5 நாள் பயணமாக பிரித்தானியாவிற்கு சென்றுள்ளார். லண்டன் சென்ற முதல்வர் விஜய்க்கு பிரித்தானிய வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு வழங்கினர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0f71e3c1-6c07-47b1-82b7-ee9113190bac/26-6aaa3d2b70e5b.webp' /></p><p>
இந்த பயணத்தின் ஒருபகுதியாக சில்வர்ஸ்டோர் சர்க்யூட் மைதானத்தில், நடிகர் அஜித் கலந்துகொண்ட கார் பந்தயத்தை முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்.</p><p> 

தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்க உள்ள இந்த பயணத்தில், சுமார் ரூ.12,300 கோடி முதலீட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளதாக முதல்வர் அலுவகம் தெரிவித்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/116b7073-a8cc-445c-b2cb-d246d0d211e0/26-6aaa3d2c2974e.webp' /></p><p>

முதல்வர் விஜய் லண்டனில் உள்ள உயரமான கட்டிடமான 'தி ஷார்ட்' ல் தங்கியுள்ளார்.&nbsp;</p><p></p><p>

முதல்வர் விஜய் கார் பந்தயத்தை காண வந்த போது அங்கு அவரை சந்திக்க ஏராளமான ரசிகர்கள் குவிய தொடங்கினர். </p><p>

அப்போது முதல்வர் விஜய்யின் தணிப்பாதுகாவலரான மூஸா, இங்கு காத்திருக்க வேண்டாம். செப்டெம்பர் 15 ஆம் திகதி வாருங்கள். ரசிகர்கள் சந்திப்பு உள்ளது என கூறியிருந்தார். </p><p>

இந்த தகவல் லண்டன் வாழ் தமிழர்களிடம் பரவியதையடுத்து, முதல்வர் விஜய் தங்கியுள்ள ஹொட்டல் முன்பு ஏராளமான ரசிகர்கள் குவிய தொடங்கினர். மேலும், TVK, TVK என முழக்கமிட்டனர்.&nbsp;</p><p><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="ta" dir="ltr">லண்டன்லயே என்ன இவ்ளோ கூட்டம் முதல்வருக்கு🥵🔥 <a href="https://t.co/KNblC89hAQ">pic.twitter.com/KNblC89hAQ</a></p>&mdash; priya (@PriyankaSmile01) <a href="https://x.com/PriyankaSmile01/status/2099908631135404048?ref_src=twsrc%5Etfw">September 15, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>

அந்த பகுதி ரயில் நிலையம், மருத்துவமனைகள் அடங்கிய பகுதி என்பதால் ஏற்பட்ட இடையூறு காரணமாக அங்கு கூடியிருந்தவர்களை கலைந்து செல்லுமாறு லண்டன் காவல்துறையினர் ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தினர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0f0daea9-5b43-4d6c-b6cb-bec198a77197/26-6aaa3d2cd62d2.webp' /></p><p>

ரசிகர்கள் கலைந்து செல்ல மறுத்த போது, முதல்வரின் பாதுகாப்பு அதிகாரியான தர்மராஜன் ஐபிஎஸ் ஒலிபெருக்கி மூலம் "பொதுப் பாதுகாப்பு குறித்த கவலைகள் காரணமாக, எங்களுக்கு அனுமதி இல்லாததால் நிகழ்ச்சியை ரத்து செய்கிறோம்,"எனக்கூறி இங்கிருந்து கலைந்து செல்லுமாறு கேட்டுக்கொண்டார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a14714b1-8281-4531-95e7-fce3d732d79b/26-6aaa3d2d8bba8.webp' /></p><p> 

நீண்ட நேரமாக காத்திருந்த ரசிகர்கள் முதல்வர் விஜய்யை சந்திக்க முடியவில்லை என ஏமாற்றமடைந்தனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-16T07:11:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் கழன்ற சக்கரம்.., அவசர தரையிறக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/iran-plane-emergency-landing-after-tire-falls-off-1789542045"></link>
            <id>https://ibctamilnadu.com/article/iran-plane-emergency-landing-after-tire-falls-off-1789542045</id>
            <summary type="text">Iran Plane Makes Emergency Landing After Tire Falls Off- ஈரானில் விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே அதன் சக்கரம் கழன்று விழுந்ததால் அவசர தரையிறக்கம்...</summary>
            <content type="html"><![CDATA[<p>Iran Plane Makes Emergency Landing After Tire Falls Off- ஈரானில் விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே அதன் சக்கரம் கழன்று விழுந்ததால் அவசர தரையிறக்கம் செய்யப்பட்டது.&nbsp;</p><h2>விமானம் அவசர தரையிறக்கம் </h2><p>

ஈரானைச் சேர்ந்த செபெஹ்ரான் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் போயிங் 737 விமானம், மஷ்ஹத் நகரிலிருந்து கெர்மன்ஷாவுக்கு செவ்வாய்க்கிழமை அன்று புறப்பட்டது.
</p><p>
விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் அதன் சக்கரங்களில் ஒன்று கழன்று விழுந்தது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4afa30dc-b753-4724-bb03-0123865534c3/26-6aaa3e9f24a6e.webp' /></p><p>இதனால் விமானத்தின் என்ஜினில் கோளாறு ஏற்பட்டு, விமானத்தில் கடுமையான அதிர்வுகள் ஏற்பட்டன.
</p><p>
இதையடுத்து விமானம் மஷ்ஹத் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.&nbsp;</p><p>என்ஜின் கோளாறு காரணமாக ஏற்பட்ட அதிர்வில் விமானத்தின் உட்புற மேற்கூரை, விளக்குகள் மற்றும் தலைக்கு மேல் வைக்கப்பட்டிருந்த பேக்குகள் உள்ளிட்டவை சேதமடைந்தன.</p><p>
</p><h2>
பயணிகள் பத்திரமாக மீட்பு</h2><p>இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. </p><p>

அதில், விமானம் விபத்துக்குள்ளாகும் என அச்சமடைந்த பயணிகள் அலறும் காட்சிகளும், பிரார்த்தனை செய்யும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.</p><p>
</p><p><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr">An aviation incident occurred in Iran involving a Sepehran Airlines Boeing 737-300. <br><br>After a landing gear tire burst post-<br>takeoff causing engine damage and severe vibrations the plane safely made an emergency landing<br><br>No injuries were reported among the 127 passengers. <a href="https://t.co/DCYgZykQM5">pic.twitter.com/DCYgZykQM5</a></p>&mdash; Ramesh Speaks (@rameshofficial0) <a href="https://x.com/rameshofficial0/status/2100080762062278716?ref_src=twsrc%5Etfw">September 16, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானத்தில் இருந்த அனைத்து பயணிகளும் மீட்புக் குழுவினரால் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
</p><p>
இந்த சம்பவத்தில் பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என செபெஹ்ரான் ஏர்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-16T07:11:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் 9000 கடல் அட்டைகளுடன் நாங்கு பேர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/four-arrested-in-jaffna-with-9-000-sea-cucumbers-1789542671"></link>
            <id>https://jvpnews.com/article/four-arrested-in-jaffna-with-9-000-sea-cucumbers-1789542671</id>
            <summary type="text">&amp;nbsp; யாழ்ப்பாணம் கல்முனை முனை களப்புப் பகுதியில் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாகப் பிடிக்கப்பட்ட 9000 ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; யாழ்ப்பாணம் கல்முனை முனை களப்புப் பகுதியில் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாகப் பிடிக்கப்பட்ட 9000 கடல் அட்டைகளுடன் 04 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p>


நேற்றிரவு(15) இடம்பெற்ற கைது நடவடிக்கையின் போது, 02 டிங்கி படகுகளும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bf566e05-5617-4fe2-a787-990f5336f5bb/26-6aaa4111327da.webp' /></p><p>
</p><p>
 வடக்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படைக் கப்பல் வேளுசுமன நிறுவனத்திற்குச் சொந்தமான கல்முனை முனை கடற்படைப் பிரிவினால், கல்முனை முனைக்கு அப்பால் உள்ள யாழ்ப்பாணக் களப்பின் மணியந்தோட்டம் பகுதியில் மேற்கொள்ளப்பட்டது.</p><p></p><p>
</p><p>


 சட்டவிரோதமாகப் பிடிக்கப்பட்டு கரைக்கு கொண்டு செல்லப்பட்ட இந்த கடல் அட்டைகளின் தொகுதியுடன் கற்பிட்டி, அனுராதபுரம் மற்றும் யாழ்ப்பாணம் கொழும்புத்துறை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த நான்கு (04) சந்தேக நபர்களும் அந்த டிங்கி படகுகளும் இவ்வாறு சட்டத்தின் பிடியில் ஒப்படைக்கப்பட்டனர்.</p><p></p><p>
</p><p>

 34 முதல் 44 வயதிற்கு இடைப்பட்ட சந்தேக நபர்கள், கடல் அட்டைகளின் தொகுதி மற்றும் டிங்கி படகுகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணம் மீன்பிடி மற்றும் நீரியல் வளங்கள் திணைக்கள அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டன.</p>]]></content>
            <updated>2026-09-16T07:07:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[மீண்டும் நீதிமன்றில் முன்னிலையாகும் ஞானசார தேரர்.. விடுக்கப்பட்டுள்ள உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/date-fixed-hearing-case-involving-gnanasara-thero-1789540962"></link>
            <id>https://tamilwin.com/article/date-fixed-hearing-case-involving-gnanasara-thero-1789540962</id>
            <summary type="text">பொது பல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் மீதான விசாரணை இம்மாதம் 30ஆம் திகதி மீண்டும் எடுத்துக் கொள்ளப்படவுள்ளது என கொழும்பு மேல் நீதிம...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொது பல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் மீதான விசாரணை இம்மாதம் 30ஆம் திகதி மீண்டும் எடுத்துக் கொள்ளப்படவுள்ளது என கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p>இஸ்லாமிய மதத்தை அவமதித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு, ஞானசார தேரருக்கு எதிராக சட்டமா அதிபரால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.&nbsp;</p><p></p><h2>கைது நடவடிக்கை..&nbsp;</h2><p>

இவ்வழக்கு இன்று (16) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி புத்திக சி. ராகல முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/de1f424f-1276-448e-ba15-2d82e60440b2/26-6aaa40053b4a3.webp' /></p><p>

குற்றஞ்சாட்டப்பட்டவரான கலகொட அத்தே ஞானசார தேரர் நீதிமன்ற நடவடிக்கைகளுக்காக நேரில் முன்னிலையாகியிருந்தார்.
</p><p>
இதற்கிடையில், நீதிமன்ற அவமதிப்புக்காக சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்த அவருக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கிய ஜனாதிபதி பொதுமன்னிப்பு செல்லுபடியாகாது என்று உயர் நீதிமன்றம் இம்மாதம் 10 ஆம் திகதி தீர்ப்பளித்திருந்தது.</p><p>

இருப்பினும், அந்தத் தீர்ப்பின் அடிப்படையில் ஞானசார தேரரைக் கைது செய்வதற்கான நீதிமன்ற உத்தரவு எதுவும் தங்களுக்கு இதுவரை கிடைக்கவில்லை என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சகருமான (ASP) எஃப்.யு. வூட்லர் அண்மையில் தெரிவித்திருந்தார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-16T07:07:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் ஏடிஎம் இயந்திரம் கொள்ளை: பொதுமக்கள் உதவியை நாடும் பொலிசார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/thiaves-theft-atm-in-british-columbia-1789542287"></link>
            <id>https://canadamirror.com/article/thiaves-theft-atm-in-british-columbia-1789542287</id>
            <summary type="text">Thieves haul ATM from British Columbia: பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் கொள்ளையர்கள் ஏடிஎம் இயந்திரம் ஒன்றையே கொள்ளையடித்துச் சென்றுவிட்டனர்.


கன...</summary>
            <content type="html"><![CDATA[<p>Thieves haul ATM from British Columbia: பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் கொள்ளையர்கள் ஏடிஎம் இயந்திரம் ஒன்றையே கொள்ளையடித்துச் சென்றுவிட்டனர்.</p><p>


கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில், கொள்ளையர்கள் இருவர் ஏடிஎம் இயந்திரம் ஒன்றைத் தூக்கிச் சென்றுள்ளனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fcb521e9-a9c4-4e41-abdc-04c3cfca8dfa/26-6aaa3f9080bcb.webp' /></p><p>

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்திலுள்ள Ladysmith என்னுமிடத்தில் அமைந்துள்ள ஒரு கட்டிடத்தில் ஏடிஎம் இயந்திரம் ஒன்று அமைக்கப்பட்டிருந்தது.
</p><p>
இந்நிலையில், முகமூடியும் கையுறைகளும் அணிந்த இருவர், அந்த ஏடிஎம் இயந்திரத்தை சங்கிலி மூலம் தங்கள் ட்ரக்குடன் இணைத்து, இழுத்துப் பெயர்த்து, தங்கள் ட்ரக்கில் ஏற்றிக் கொண்டு சென்றுவிட்டனர்.
</p><p>
இந்தக் காட்சிகள் அங்கிருந்த கமெராவில் பதிவாகியுள்ளன.
</p><p>
கொள்ளைச் சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட ட்ரக் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், கொள்ளையர்கள் குறித்து ஏதேனும் தெரியவந்தால் தங்களுக்குத் தகவல் கொடுக்குமாறு பொலிசார் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-16T07:04:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Farook Sihan</name>
            </author>
            <title type="text"><![CDATA[அடுத்த சில மாதங்களில் கடுமையான வெப்பநிலை! தீவிரமடையும் எல்நினோ தொடர்பில் வெளியான கடும் எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/warning-regarding-intensifying-el-ni-o-climate-1789541436"></link>
            <id>https://tamilwin.com/article/warning-regarding-intensifying-el-ni-o-climate-1789541436</id>
            <summary type="text">பசிபிக் பெருங்கடலில் ஏற்பட்டுள்ள அசாதாரண வெப்ப மாற்றம் காரணமாக எல்நினோ காலநிலை முறை தீவிரமடைந்து வருவதாகவும், இதன் காரணமாக அடுத்த சில மாதங்களில்
உலகெ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பசிபிக் பெருங்கடலில் ஏற்பட்டுள்ள அசாதாரண வெப்ப மாற்றம் காரணமாக எல்நினோ காலநிலை முறை தீவிரமடைந்து வருவதாகவும், இதன் காரணமாக அடுத்த சில மாதங்களில்
உலகெங்கிலும் கடுமையான வெப்பம், வெள்ளம் மற்றும் வறட்சி போன்ற வானிலை
மாற்றங்கள் ஏற்படக்கூடும் என்றும் உலக வானிலை அமைப்பு (WMO) எச்சரித்துள்ளது.
</p><p>
இந்த நிகழ்வானது 2026 ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியில் உச்சத்தை அடைந்து
‘மிகவும் வலுவானதாக’ மாறும் என எதிர்பார்க்கப்படுவதுடன், 2027 பெப்ரவரி வரை
தொடர்வதற்கான வாய்ப்பு 100 சதவீதத்தை எட்டியுள்ளதாக கணிப்பாளர்கள்
தெரிவிக்கின்றனர்.</p><h2>வானிலை மாற்றங்கள்</h2><p>
</p><p>

வெப்பமண்டல பசிபிக் பகுதியின் மேற்பரப்புக்குக் கீழே அசாதாரணமாக வெப்பமான
நீரின் பாரிய இருப்பு காணப்படுகின்றது. </p><p>ஜூலை மற்றும் ஒகஸ்ட் மாதங்களில்
மேற்பரப்புக்குக் கீழே உள்ள நீரின் வெப்பநிலை இயல்பை விட 8°C (14°F) வரை
அதிகமாகப் பதிவாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ef28e8b7-ce51-418b-beae-61584a847c1c/26-6aaa3f38e1619.webp' /></p><p>
“பூமி தற்போது அறிமுகமில்லாத காலநிலை மாற்றத்திற்குள் நுழைந்துள்ளது, கடல்
நீரும் தொடர்ந்து வெப்பமடைந்து வருகிறது” என ஐநா பொதுச் செயலாளர் அன்டோனியோ
குட்டெரஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>

பொதுவாக 2 முதல் 7 ஆண்டுகளுக்கு ஒருமுறை உருவாகும் இந்த இயற்கையான காலநிலை
மாற்றம், இம்முறை பெருங்கடல்கள் ஏற்கனவே அதிக வெப்பத்துடன் காணப்படுவதனால் மிக
மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும் என அஞ்சப்படுகிறது. </p><p>மே முதல் ஒகஸ்ட் வரையிலான
காலப்பகுதியில் பசிபிக் கடலின் வெப்பநிலை இயல்பை விட 2.6°C வரை உயர்ந்துள்ளது.</p><h2>வெள்ளப் பெருக்குகள்&nbsp;</h2><p>
</p><p>
இதன் காரணமாக உலகளவில் விவசாயம், பொது சுகாதாரம், நீர் விநியோகம் மற்றும்
எரிசக்தித் துறைகள் பாதிக்கப்படும் அபாயம் உருவாகியுள்ளது. </p><p>வறட்சி மற்றும்
திடீர் வெள்ளப் பெருக்குகள் மூலம் சமூகங்கள் மற்றும் பொருளாதாரத்திற்குப்
பெரியளவிலான பாதிப்புகள் ஏற்படக் கூடுமென WMO தலைவர் செலஸ்டே சவுலோ
தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4f3d7dc7-dc35-41ab-bc60-97d9124681c8/26-6aaa3f3995288.webp' /></p><p>
இவ்வானிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்கும் நோக்கில் தேசிய
வானிலை முகமைகள் மற்றும் அரசுகள் இணைந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத்
தீவிரப்படுத்தியுள்ளன.</p><p>

இதேவேளை, நிலவும் காலநிலை மாற்றம் மற்றும் தீவிரமடைந்து வரும் வெப்பநிலை
தொடர்பில் பொதுமக்கள் அவதானத்துடன் செயல்பட வேண்டுமென அனர்த்த முகாமைத்துவ
மத்திய நிலையத்தின் அம்பாறை மாவட்ட பிரதிப் பணிப்பாளர் எம்.ஏ.சீ.எம். றியாஸ்
கேட்டுக்கொண்டுள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-16T07:03:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஏடிஎம் இயந்திரத்தைத் தூக்கிச் சென்ற கொள்ளையர்கள்: கமெராவில் சிக்கிய காட்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/thieves-haul-atm-from-british-columbia-1789542012"></link>
            <id>https://news.lankasri.com/article/thieves-haul-atm-from-british-columbia-1789542012</id>
            <summary type="text">Thieves haul ATM from British Columbia: பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் கொள்ளையர்கள் ஏடிஎம் இயந்திரம் ஒன்றையே கொள்ளையடித்துச் சென்றுவிட்டனர்.


கன...</summary>
            <content type="html"><![CDATA[<p>Thieves haul ATM from British Columbia: பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் கொள்ளையர்கள் ஏடிஎம் இயந்திரம் ஒன்றையே கொள்ளையடித்துச் சென்றுவிட்டனர்.
</p><p>

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில், கொள்ளையர்கள் இருவர் ஏடிஎம் இயந்திரம் ஒன்றைத் தூக்கிச் சென்றுள்ளனர்.

</p><h3>னடாவில் ஏடிஎம் இயந்திரம் கொள்ளை
</h3><p>
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்திலுள்ள Ladysmith என்னுமிடத்தில் அமைந்துள்ள ஒரு கட்டிடத்தில் ஏடிஎம் இயந்திரம் ஒன்று அமைக்கப்பட்டிருந்தது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ee3bd0fc-1329-40dc-ae31-b4068a2e2697/26-6aaa3e7db9753.webp' /></p><p>
இந்நிலையில், முகமூடியும் கையுறைகளும் அணிந்த இருவர், அந்த ஏடிஎம் இயந்திரத்தை சங்கிலி மூலம் தங்கள் ட்ரக்குடன் இணைத்து, இழுத்துப் பெயர்த்து, தங்கள் ட்ரக்கில் ஏற்றிக் கொண்டு சென்றுவிட்டனர்.
</p><p>
இந்தக் காட்சிகள் அங்கிருந்த கமெராவில் பதிவாகியுள்ளன.&nbsp;</p><p></p><p>
கொள்ளைச் சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட ட்ரக் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், கொள்ளையர்கள் குறித்து ஏதேனும் தெரியவந்தால் தங்களுக்குத் தகவல் கொடுக்குமாறு பொலிசார் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-09-16T07:00:26+00:00</updated>
        </entry>
    </feed>
