<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-08-31T10:57:50+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[தங்கத்தின் விலையில் பதிவாகியுள்ள சடுதியான மாற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/gold-price-today-in-sri-lanka-1788173259"></link>
            <id>https://tamilwin.com/article/gold-price-today-in-sri-lanka-1788173259</id>
            <summary type="text">இலங்கையில் தங்கத்தின் விலையில் இன்றைய தினம் (31.08.2026) வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக தெரியவருகிறது.&amp;nbsp;கடந்த சனிக்கிழமை (29.08.2026) 24 கரட் தங்கம் பவு...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் தங்கத்தின் விலையில் இன்றைய தினம் (31.08.2026) வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக தெரியவருகிறது.&nbsp;</p><p>கடந்த சனிக்கிழமை (29.08.2026) 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 378,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டிருந்தது.</p><p>இந்த நிலையில், இன்று அதன் விலை 1000 ரூபாயால் குறைந்து 377,000 ரூபாயாக பதிவாகியுள்ளது.</p><h2>தங்க விலை நிலவரம்</h2><p>
</p><p>
அந்தவகையில், தற்போதைய தங்க விலை நிலவரப்படி,

24 கரட் தங்கம் பவுண் ஒன்று 377,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d52c7804-d009-4690-a3aa-82cad9e9c2e1/26-6a955da360653.webp' /></p><p>
</p><p>இதேவேளை 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 347,000 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
</p><p>
இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 47,125 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 43,375 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-31T10:56:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[தேர்தலுக்குத் தயாராகும் பிரான்ஸ்: அடுத்த பிரதமர் யார்?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/who-will-be-the-next-president-in-france-election-1788173734"></link>
            <id>https://news.lankasri.com/article/who-will-be-the-next-president-in-france-election-1788173734</id>
            <summary type="text">France Elections: Far-right party lead polls: பிரான்ஸ் ஜனாதிபதியின் பதவிக்காலம் அடுத்த ஆண்டுடன் முடிவடைய உள்ள நிலையில், அடுத்த பிரதமராகும் வாய்ப்பு, த...</summary>
            <content type="html"><![CDATA[<p>France Elections: Far-right party lead polls: பிரான்ஸ் ஜனாதிபதியின் பதவிக்காலம் அடுத்த ஆண்டுடன் முடிவடைய உள்ள நிலையில், அடுத்த பிரதமராகும் வாய்ப்பு, தீவிர வலதுசாரிக் கட்சி ஒன்றின் வேட்பாளருக்கு அதிகம் என கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன.</p><p>


பிரான்ஸ் ஜனாதிபதியான இமானுவல் மேக்ரானின் பதவிக்காலம் அடுத்த ஆண்டுடன் முடிவடைய உள்ள நிலையில், அடுத்த ஜனாதிபதி யார் என்பது குறித்து இப்போதே ஊடகங்களில் விவாதங்கள் துவங்கிவிட்டன.</p><h3>

தேர்தலுக்குத் தயாராகும் பிரான்ஸ்</h3><p>

இமானுவல் மேக்ரானின் பதவிக்காலம், 2027ஆம் ஆண்டு மே மாதம் 13ஆம் திகதியுடன் முடிவடைய உள்ளது.&nbsp;</p><p>&nbsp;<img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/39e65546-9a28-4552-bc49-f39afeb3f2bc/26-6a955da961555.webp' /></p><p>
மேக்ரான் ஏற்கனவே இரண்டு முறை ஜனாதிபதியாக பதவி வகித்துவிட்டதால், பிரான்ஸ் சட்டப்படி இனி அவர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடமுடியாது.
</p><p>
ஆக, அடுத்த ஜனாதிபதி யார் என்பது குறித்த விவாதங்களை ஊடகங்களும், பதவியைக் கைப்பற்றுவதற்கான முயற்சியை அரசியல் கட்சிகளும் துவங்கிவிட்டன.</p><h3>

அடுத்த பிரதமர் யார்?
</h3><p>
இந்நிலையில், National Rally கட்சியின் தலைவரான மரீன் லெ பென்னுக்கு (Marine Le Pen) அதிக வாய்ப்புகள் உள்ளதாக கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/57e11b71-3845-46d3-a75a-463cb8c71f80/26-6a955da8aee9e.webp' /></p><p>

விடயம் என்னவென்றால், இமானுவல் மேக்ரானைப் பொருத்தவரை, அவர் பணக்காரர்களின் ஜனாதிபதி என்ற கருத்தே நிலவுகிறது.

10 ஆண்டுகள் பிரான்சை ஆண்டும், அவர் சராசரி மக்களின் கஷ்டங்களை புரிந்துகொள்ளவில்லை என மக்கள் கருதுகிறார்கள்.
</p><p>
மாறாக, மரீன் லெ பென்னோ, மக்களுக்காக பல்வேறு திட்டங்களை செய்ய இருப்பதாகவும், அர்சு அதிகாரிகளின் ஊதியத்தை உயர்த்த இருப்பதாகவும், சட்டவிரோத புலம்பெயர்ந்தோரை பிரான்சிலிருந்து நாடுகடத்த உள்ளதாகவும் வாக்குறுதிகள் அளித்துவருகிறார்.&nbsp;</p><p></p><p>
ஆக, மரீன் லெ பென்னின் கட்சி தீவிர வலதுசாரிக் கட்சியாக இருந்தாலும், மேக்ரானுக்கு மாற்றாக அவருக்கு வாக்களிக்க மக்கள் திட்டமிட்டுவருகிறார்கள்.</p><p>

அடுத்ததாக, ஜான் லூக் மெலன்ஷான் (Jean-Luc Mélenchon) என்பவருக்கு ஆதரவு உள்ளதாக கூறப்படுகிறது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0435fa5e-b166-43e1-a5f5-d33803263c94/26-6a955da8089c6.webp' /></p><p>
இந்த ஜான், ஏழைகளுக்கு வரி குறைப்பு, பணக்கார்களுக்கு அதிக வரி விதித்து ஏழைகளுக்கு உதவுவது என்னும் கருத்தை முன்வைத்துவருகிறார். ஆகவே, அவருக்கும் ஆதரவு நிலவிவருகிறது.</p><p>
விடயம் என்னவென்றால், தேர்தலுக்கு இன்னமும் 7 மாதங்கள் உள்ளன. ஆக, அந்த காலகட்டத்தில் மக்கள் எண்ணங்களில் ஏதாவது மாற்றங்கள் ஏற்படக்கூடும் என்கிறார்கள் நிபுணர்கள்!&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-31T10:55:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் வீடு புகுந்து அடாவடி ; தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் இராஜினாமா!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/rampage-house-in-jaffna-npp-member-resigns-1788163166"></link>
            <id>https://jvpnews.com/article/rampage-house-in-jaffna-npp-member-resigns-1788163166</id>
            <summary type="text">&amp;nbsp; வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்திய தேசிய மக்கள் சக்தியின் வடமராட்சி தென்மேற்கு பிரதேச சபை உறுப்பினர் சந்திரகுமார் கணேசரூபன் தனது...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்திய தேசிய மக்கள் சக்தியின் வடமராட்சி தென்மேற்கு பிரதேச சபை உறுப்பினர் சந்திரகுமார் கணேசரூபன் தனது உள்ளூராட்சி சபை உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்துள்ளார். </p><p>

யாழ்ப்பாணம் நெல்லியடிப் பகுதியில் உள்ள ஓய்வுபெற்ற அரச உத்தியோகஸ்தர் ஒருவரின் வீட்டின் மீது கல்லெறிந்து தாக்குதல் நடத்தி இருந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d10bd686-b9b6-4202-a936-a1781315dabb/26-6a95345fd6910.webp' /></p><h2>கைது செய்த&nbsp; பொலிஸார்&nbsp;</h2><p>அத்துடன், வீட்டு வளாகத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கெமராக்களையும் (CCTV) குறித்த உள்ளூராட்சி சபை உறுப்பினர் தலைமையிலான கும்பல் கடந்த சனிக்கிழமை நள்ளிரவு சேதப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><p> </p><p>

அது தொடர்பில் வீட்டாரால் நெல்லியடி பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சந்தேகநபர்களை கைது செய்தனர். </p><p>

பொலிஸ் நிலையத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதன் பின்னர் அவர்கள் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.</p><p></p><p> 

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, குறித்த உறுப்பினர் தனது பிரதேச சபை உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-31T10:53:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[15 இலட்சத்தைத் தாண்டிய சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/tourists-exceeds-1-5-million-sri-lanka-2026-1788173667"></link>
            <id>https://jvpnews.com/article/tourists-exceeds-1-5-million-sri-lanka-2026-1788173667</id>
            <summary type="text">&amp;nbsp; ஜனவரி மாதம் முதல் இதுவரை இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 15 இலட்சத்தைத் தாண்டியுள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரி...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; ஜனவரி மாதம் முதல் இதுவரை இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 15 இலட்சத்தைத் தாண்டியுள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.</p><p>

 

இதன்படி, ஜனவரி 01 ஆம் திகதி முதல் ஓகஸ்ட் 27 ஆம் திகதி வரை இலங்கைக்கு 1,517,296 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/76369583-e6b5-431a-8c79-313ce3e3c746/26-6a955d64741c6.webp' /></p><p>
</p><p>
 

அதேவேளை, ஓகஸ்ட் 01 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் 173,878 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.</p><p>

 

ஓகஸ்ட் மாதத்தில் இதுவரை அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்தே வருகை தந்துள்ளதுடன், அந்த எண்ணிக்கை 41,781 ஆகும்.</p><p>

 

இரண்டாவதாக அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் ஐக்கிய இராச்சியத்திலிருந்து (UK) வருகை தந்துள்ளனர் (18,197 பயணிகள்).

 

மூன்றாவதாக சீனாவிலிருந்து 11,368 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.
</p><p>
 

அத்துடன், இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் ஒட்டுமொத்தமாக அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்தே வருகை தந்துள்ளனர் (380,011 பயணிகள்).
</p><p>
 

இதற்கு மேலதிகமாக, ஐக்கிய இராச்சியத்திலிருந்து 148,598 பயணிகளும், சீனாவிலிருந்து 99,875 பயணிகளும் வருகை தந்துள்ளனர்.

 

மேலும், இந்த ஆண்டில் ஒரே மாதத்தில் அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்தது பெப்ரவரி மாதத்திலாகும் (279,328 பயணிகள்).</p>]]></content>
            <updated>2026-08-31T10:51:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[எம்.எஸ். சுப்புலட்சுமி வாழ்க்கை வரலாறு திரைப்படம்.. ருக்மிணி வசந்த், சாய் பல்லவி இல்லை!! கமிட்டான ராஷ்மிகா மந்தனா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/actress-rashmika-mandanna-ms-subbulakshmi-biopic-1788153769"></link>
            <id>https://cineulagam.com/article/actress-rashmika-mandanna-ms-subbulakshmi-biopic-1788153769</id>
            <summary type="text">எம்.எஸ். சுப்புலட்சுமி வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் ராஷ்மிகா மந்தனா நடிக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
எம்.எஸ். சுப்புலட்சுமி

1916-ஆம் ஆண்டு ...</summary>
            <content type="html"><![CDATA[<p>எம்.எஸ். சுப்புலட்சுமி வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் ராஷ்மிகா மந்தனா நடிக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p>
</p><p></p><h2>எம்.எஸ். சுப்புலட்சுமி
</h2><p>
1916-ஆம் ஆண்டு பிறந்த எம்.எஸ். சுப்புலட்சுமி, தனது 10-வது வயதிலேயே எச்.எம்.வி நிறுவனத்திற்காக பாடி சாதனை படைத்தார். அதனை தொடர்ந்து சில படங்களில் நடித்து வந்தார். இதில் இவர் நடிப்பில் வெளிவந்த மீரா என்கிற திரைப்படம் மிகவும் பிரபலமான ஒன்று.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/573f8d60-4159-4ba8-8cbe-ec6c22137c7c/26-6a950fac07f72.webp' /></p><p>புகழ்பெற்ற இந்திய கர்நாடக இசைக்கலைஞரான எம்.எஸ். சுப்புலட்சுமி, இந்தியாவின் உயரிய விருதான 'பாரத ரத்னா'வை பெற்றுள்ளார். இந்த விருதை பெற்ற முதல் இசைக்கலைஞர் இவரே. மேலும், 1954-ஆம் ஆண்டு பத்மபூஷன் விருதை பெற்றார். இதுமட்டுமின்றி மியூசிக் அகாடமி வழக்கு சங்கீத கலாநிதி பட்டத்தை 1968-ல் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இசை உலகில் மாபெரும் உச்சத்தில் இருந்த எம்.எஸ் அவர்கள் கடந்த 2004-ஆம் ஆண்டு தனது 88-வது வயதில் உயிரிழந்தார்.</p><h2> 

வாழ்க்கை வரலாறு
</h2><p>
எம்.எஸ். சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாறை சினிமா படமாக எடுக்க கீதா ஆர்ட்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தை தெலுங்கு இயக்குநர் கௌதம் தின்னூரி இயக்கப்போவதாக கூறப்படுகிறது. இவர் இதற்கு முன் தெலுங்கில் வெளிவந்த ஜெர்ஸி மற்றும் கிங்டம் ஆகிய திரைப்படங்களை இயக்கியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6e72a52b-2768-40fa-8f4e-1d9a9b5055f6/26-6a950facb66ef.webp' /></p><p> </p><h2>சாய் பல்லவி, ருக்மிணி வசந்த்</h2><p>இப்படத்தில் எம்.எஸ். சுப்புலட்சுமியாக நடிக்க முன்னணி நடிகைகளான சாய் பல்லவி, ருக்மிணி வசந்த் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடந்ததாக சொல்லப்படுகிறது. ஆனால், இவர்கள் இருவரும் தற்போது இப்படத்தில் நடிக்கவில்லை என கூறப்படுகிறது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/329131d4-d311-495f-961d-cf8d49f881a2/26-6a951027dc144.webp' /></p><h2>ராஷ்மிகா மந்தனா
</h2><p>
இந்நிலையில், நடிகை <a href="https://www.youtube.com/watch?v=javF7bnU9kc" target="_blank">ராஷ்மிகா </a>மந்தனாவை இப்படத்தில் எம்.எஸ். சுப்புலட்சுமி கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க இறுதியாக முடிவு எடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. வருகிற செப்டம்பர் 16-ஆம் தேதி எம்.எஸ் சுப்புலட்சுமியின் பிறந்தநாளில் இப்படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளிவரும் என தகவல் தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a8fbf598-4ae2-4f2b-aaa1-54b6a4a4dfd6/26-6a951028afb5d.webp' /></p><p> </p><p>

ஏற்கனவே இந்திய சினிமாவின் டாப் நடிகையாக வலம் வரும் ராஷ்மிகா மந்தனா, எம்.எஸ். சுப்புலட்சுமி வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நடிப்பதன் மூலம் புதிய உச்சத்தை அடைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.</p>]]></content>
            <updated>2026-08-31T10:51:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழுப்பு கல்லீரல் நோயாளிகளா நீங்கள்? இதை தினமும் குடிங்க சரியாகும்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/fatty-liver-patients-should-drink-this-daily-1780911173"></link>
            <id>https://manithan.com/article/fatty-liver-patients-should-drink-this-daily-1780911173</id>
            <summary type="text">&amp;nbsp;கொழுப்பு கல்லீரல் பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருந்தால் தினமும் ஒரு திரவத்தை குடிப்பது பலனளிக்கும். இது உங்கள் உடலை இயற்கையாகவே நச்சு நீக்குகி வைத...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கொழுப்பு கல்லீரல் பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருந்தால் தினமும் ஒரு திரவத்தை குடிப்பது பலனளிக்கும். இது உங்கள் உடலை இயற்கையாகவே நச்சு நீக்குகி வைத்திருக்கும்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/777e7ecc-1682-4911-81f2-172b0903e023/26-6a268f0def2be.webp' /></p><h3><b>கொழுப்பு கல்லீரல்</b></h3><p>
கல்லீரல் உடலில் பல வேலைகளை செய்யும் ஓர் உறுப்பு. நாம் அடிக்கடி ஆரோக்கியமற்ற உணவுகளை உட்கொள்வதால் கல்லீரலின் வேலை இரட்டிப்பாகிறது.</p><p></p><p> </p><p>ஒரு மோசமான வாழ்க்கை முறை, கொழுப்பு கல்லீரல் நோய் விரைவாக உருவாக வழிவகுக்கும். கடுமையான கல்லீரல் பாதிப்பைத் தடுக்கவும், உங்கள் கல்லீரலில் உள்ள நச்சுக்களை நீக்குவதும் அவசியம்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4ba62a54-d9fb-49f8-ad94-4087149e852a/26-6a268f0f4adb2.webp' /></p><h4><b>காலையில் தினமும் செய்ய வேண்டியது</b></h4><p>நீங்கள் கொழுப்பு கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டிருந்தால் தினமும் காலையில் தேநீர் அல்லது காபிக்கு பதிலாக வெதுவெதுப்பான நீருடன் தொடங்குங்கள்.</p><p> தினமும் ஒன்று முதல் இரண்டு குவளை வெதுவெதுப்பான நீரை குடிக்கவும். அந்த வெதுவெதுப்பான நீரில் அரை அல்லது ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு சேர்ப்பது மிகவும் நல்லது.&nbsp;</p><p></p><p> </p><p>இவ்வாறு செய்வதால், உடலில் இருந்து நச்சுகள் எளிதில் வெளியேற்றப்படும். வெதுவெதுப்பான நீருக்குப் பதிலாக நெல்லிக்காய் சாறு, மஞ்சள் நீர் அல்லது செலரி நீரையும் காலையில் குடிக்கலாம்.&nbsp;</p><p> தினமும் வெதுவெதுப்பான நீரைக் குடிப்பது உங்களுக்குச் சலிப்பை ஏற்படுத்தினால், வாரத்தின் ஏழு நாட்களும் வெவ்வேறு நச்சு நீக்கும் நீரை குடிப்பது மிகவும் நல்லது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/41979158-731e-4e65-9eb4-03ccdeb45132/26-6a268f0d53281.webp' /></p><h3><b>பின்பற்ற வேண்டியவை</b></h3><p> கொழுப்பு கல்லீரல் நோயாளிகள் நார்ச்சத்து நிறைந்த உணவை உட்கொள்ள வேண்டும். தினசரி உணவில் கீரை வகைகள், பீட்ரூட், கேரட் மற்றும் நார்ச்சத்து நிறைந்த சாலட்களைச் சேர்த்துக்கொள்வது அவசியம்.&nbsp;</p><p>கல்லீரலில் கொழுப்பு சேர்வதைக் கட்டுப்படுத்த, வெளி உணவுகளை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும். சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை மற்றும் டிரான்ஸ் கொழுப்புகளை நிறைந்த உணவுகளை தவிர்க்க வேண்டும். இது கல்லீரல் அழற்சியை விரைவாகக் குறைக்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/94783708-969a-498e-9de9-45ec4677ede5/26-6a268f0e9a9bc.webp' /></p><p>நீங்கள் எவ்வளவு அதிகமாகத் தண்ணீர் குடிக்கிறீர்களோ, அந்த அளவிற்கு உங்கள் உடல் நீரேற்றத்துடன் இருக்கும், மேலும் நச்சுக்களை அகற்றுவதும் எளிதாகும். எனவே, தினமும் எட்டு முதல் ஒன்பது குவளை தண்ணீர் குடியுங்கள், அப்போதுதான் உங்கள் கல்லீரல் கழிவுப் பொருட்களை எளிதாக வெளியேற்ற முடியும்.</p><p>புகைப்பிடிப்பவராக இருந்தால் அந்தப் பழக்கத்தை உடனடியாகக் கைவிடுங்கள். சிகரெட்டுகள் கல்லீரலின் செயல்பாட்டை வெகுவாகக் குறைத்து, உடலில் நச்சுகள் சேரக் காரணமாகின்றன. இவற்றை பின்பற்றினால் கல்லீரல் நோய் வராது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp; சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன்<a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள் <a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"><b>FOLLOW NOW&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;</b></a></td></tr></tbody></table><p><br></p><p>
</p>]]></content>
            <updated>2026-08-31T10:44:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இஷாரா செவ்வந்திக்கு படகு வழங்கிய யாழ்ப்பாண நபர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/boat-ishara-sewwandi-escape-arrested-jaffna-man-1788172986"></link>
            <id>https://jvpnews.com/article/boat-ishara-sewwandi-escape-arrested-jaffna-man-1788172986</id>
            <summary type="text">&amp;nbsp; கனேமுல்ல சஞ்சீவ மீதான துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் சந்தேக நபராகக் குறிப்பிடப்படும் இஷாரா செவ்வந்தி, நாட்டிலிருந்து இந்தியாவுக்குத் தப்பிச்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; கனேமுல்ல சஞ்சீவ மீதான துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் சந்தேக நபராகக் குறிப்பிடப்படும் இஷாரா செவ்வந்தி, நாட்டிலிருந்து இந்தியாவுக்குத் தப்பிச் செல்வதற்குப் படகு வழங்கி உதவியதாகக் கூறப்படும் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>

மன்னார், இலுப்பைக்கடவை பொலிஸ் விசேட பணியக அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின்போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/214e2746-a384-40a7-9ed3-55fb3d0fcb5f/26-6a955abc37b8a.webp' /></p><p>
</p><p>கைது செய்யப்பட்டவர் யாழ்ப்பாணம், மண்டைதீவு பகுதியைச் சேர்ந்த 'பலசி' என அழைக்கப்படும் ஜேசுதாசன் செல்வசேத் என அடையாளம் காணப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.</p><p></p><p>
</p><p>
மேலும், இஷாரா செவ்வந்தி சட்டவிரோதமான முறையில் இந்தியாவுக்குத் தப்பிச் செல்வதற்கு இவரே படகு வசதியை ஏற்படுத்திக் கொடுத்துள்ளதாகப் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-31T10:40:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க நீதிமன்றில் முன்னிலை..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ravi-mp-appeared-commissio-bribery-and-corruption-1788146384"></link>
            <id>https://tamilwin.com/article/ravi-mp-appeared-commissio-bribery-and-corruption-1788146384</id>
            <summary type="text">புதிய இணைப்புஇலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க புதுக்கடை பிரதான நீதிவ...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க புதுக்கடை பிரதான நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.</p><p>இன்று (31) இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் அவர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">இரண்டாம்&nbsp;இணைப்பு</span></p><p>இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவால் முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>ரவி கருணாநாயக்க இன்று காலை சுமார் 8.15 மணியளவில் இலஞ்ச விசாரணை ஆணைக்குழுவிற்கு விசாரணைக்காக வருகை தந்திருந்த நிலையில், பல மணி நேர விசாரணைக்குப் பிறகு,&nbsp; அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>தேசிய லொத்தர் சபைக்கு அங்கீகரிக்கப்பட்ட பணியமர்த்தல் நடைமுறைகளுக்குப் புறம்பாக ஒப்பந்த அடிப்படையில் ஐவர் ஆட்சேர்ப்புச் செய்யப்பட்டு, பின்னர் அவரின் தனிப்பட்ட பணியாளர்களாக இணைத்துக் கொள்ளப்பட்டமை தொடர்பிலான குற்றச்சாட்டு தொடர்பில் இந்த விசாரணை முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">முதலாம் இணைப்பு</span></p><p>சற்றுமுன்னர் நடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க இலஞ்ச மற்றும் ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.</p><p>தேசிய லொத்தர் சபைக்கு பணியாளர்களை ஆட்சேர்ப்பு செய்தமை தொடர்பான விசாரணையொன்றிற்கு வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று காலை (31) இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு வருகை தந்துள்ளார்.</p><h2>ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அறிவிப்பு</h2><p>மூன்று சந்தர்ப்பங்களில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அவருக்கு அறிவிக்கப்பட்ட போதிலும், அவர் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அங்கு முன்னிலையாகவில்லை.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ef81f79b-105d-4f60-b87d-d7e4b25fd357/26-6a94f5e55ec15.webp' /></p><p>இதனையடுத்து அவரிடம் வாக்குமூலம் பெற அதிகாரிகள் கடந்த சனிக்கிழமை அவரது வீட்டிற்கு சென்றிருந்த நிலையில், அவர் இருக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.</p><p>தனது மகளின் திருமண ஏற்பாடுகள் காரணமாக ஆணைக்குழுவில் முன்னிலையாவதற்கு வேறொரு திகதியை வழங்குமாறு ரவி கருணாநாயக்க தனது சட்டத்தரணிகள் ஊடாகக் கோரிக்கை விடுத்திருந்தார்.&nbsp;</p><p> </p><p>இதன் பின்னர் ரவி கருணாநாயக்க எதிர்வரும் தினமொன்றில் கையூட்டல் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவில் முன்னிலையாகவுள்ளதாக அவரது சட்டத்தரணிகள் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-31T10:34:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[முச்சக்கர வண்டி கட்டணம் தொடர்பில் வெளியான அறிவிப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sl-fuel-price-reduce-three-wheeler-fares-unchanged-1788168371"></link>
            <id>https://ibctamil.com/article/sl-fuel-price-reduce-three-wheeler-fares-unchanged-1788168371</id>
            <summary type="text">அரசாங்கம் ஒக்டேன் 92 ரக பெட்ரோல் லீற்றர் ஒன்றின் விலையை 15 ரூபாவால் குறைத்துள்ள போதிலும், முச்சக்கர வண்டி கட்டணங்களில் எந்தவித மாற்றமும் ஏற்படாது என த...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரசாங்கம் ஒக்டேன் 92 ரக பெட்ரோல் லீற்றர் ஒன்றின் விலையை 15 ரூபாவால் குறைத்துள்ள போதிலும், முச்சக்கர வண்டி கட்டணங்களில் எந்தவித மாற்றமும் ஏற்படாது என தகவல் வெளியாகியுள்ளது.</p><p>குறித்த வியடத்தினை தேசிய ஒருங்கிணைந்த முச்சக்கர வண்டி சாரதிகள் மற்றும் தொழில்முனைவோர் சங்கத்தின் பிரதான செயலாளர் எல். ரோஹண பெரேரா தெரிவித்துள்ளார். </p><p>

பால் மா மற்றும் கோதுமை மா ஆகியவற்றின் விலைகளை உயர்த்திக்கொண்டு, எரிபொருள் விலையை 15 ரூபாயால் குறைப்பது அரசாங்கத்தின் ஒரு தந்திரோபாய நடவடிக்கை என அவர் குற்றம்சாட்டியுள்ளார்.</p><p>&nbsp;</p><h2>&nbsp;நாடாளுமன்றத்திற்குச் சமர்ப்பிக்க வேண்டும்</h2><p>இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், "தற்போது அரசாங்கம் எரிபொருள் விலையைத் திருத்தியமைத்து ஒக்டேன் 92 ரக பெட்ரோலை மேலும் 15 ரூபாயால் குறைத்துள்ளது. </p><p>உண்மையில் இந்த நேரத்தில் அரசாங்கம் மிகவும் தந்திரமான முறையிலேயே இந்த வேலையைச் செய்கிறது. ஏனெனில் ஒரு புறம் பால் மா மற்றும் கோதுமை மாவின் விலைகளை உயர்த்திக்கொண்டு, மறுபுறம் எரிபொருள் விலையில் 15 ரூபாயைக் குறைக்கிறார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3c0278d7-c68c-446f-9856-676b570cc683/26-6a955742714e2.webp' /></p><p>ஆனால் முச்சக்கர வண்டி சேவைக்கான கட்டணங்கள் குறித்துக் கூறுவதானால், இந்த முறைப்படுத்தலுக்குரிய அனைத்து விலைகளையும் குறிப்பிட்டு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அனைத்து நடவடிக்கைகளையும் அமைச்சிடம் ஒப்படைத்துள்ளது.</p><p> தற்போது அமைச்சு அமைச்சரவை அங்கீகாரத்தைப் பெற்று, அது தொடர்பான சட்ட நடவடிக்கைகளுக்காக சட்டமா அதிபரிடம் அனுப்பியுள்ளது.</p><p> எனவே சட்டமா அதிபரே இது குறித்து விரைவாக நடவடிக்கை எடுத்து நாடாளுமன்றத்திற்குச் சமர்ப்பிக்க வேண்டும். நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு, அங்கு அனுமதி பெறப்பட்டு கையொப்பமிட்ட பின்னரே இது சட்டமாக மாறும்.</p><p></p><h2>தேசிய போக்குவரத்து ஆணைக்குழு</h2><p>

இப்போது எம்மால் வழக்கம்போல மேல் மாகாண வீதிப் போக்குவரத்து அதிகார சபையின் விலைக் கட்டுப்பாட்டுக் குழுவிடம் கோரிக்கை விடுக்க முடியாது.</p><p>ஏனெனில் கடந்த காலத்தில் நாங்கள் கோரிக்கை விடுத்தபோது, அதன் தலைவர் தெளிவாகக் குறிப்பிட்டார், இனி இந்த விலை குறித்து நடவடிக்கை எடுக்க அவர்களுக்கு அதிகாரம் இல்லை என்று. தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவுடனேயே இது பற்றிப் பேசுமாறு கூறினார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/39590ecd-1f20-4228-bd70-2171c4c4c9fc/26-6a95574321ffe.webp' /></p><p>தற்போது நாங்கள் இந்த வேலைகள் அனைத்தையும் முடித்துள்ளோம். தேசிய போக்குவரத்து ஆணைக்குழு இது குறித்து எப்போது நடவடிக்கை எடுக்கும் என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.</p><p> 

எனவே, சட்டபூர்வமான விலை வரும் வரை பழைய விலையையே நாங்கள் பயன்படுத்த வேண்டியுள்ளது. அதாவது முதலாவது கிலோமீற்றருக்கு 110 ரூபாயும், இரண்டாவது கிலோமீற்றருக்கு 90 ரூபாயும் என்ற வரம்பிற்குள்ளேயே இருக்க வேண்டியுள்ளது.</p><p> ஆனால் பொது வீதிகளில் சாதாரண முச்சக்கர வண்டி பயன்பாட்டில் 110, 120 ரூபாய் என்ற அடிப்படையிலேயே கட்டணம் அறவிடப்படுகிறது. </p><p>இன்னும் இது சட்டமாக நடைமுறைப்படுத்தப்படாததாலேயே இந்த நிலை ஏற்பட்டுள்ளது. இந்த முறைமையின் கீழ் மிக விரைவில் புதிய விலைகள் வரும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம்" என தெரிவித்தார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-31T10:32:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாள வெள்ளப்பெருக்கிற்கு காரணமான பனிச்சரிவு: எதேட்சையாக பிடிபட்ட காணொளி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/what-is-the-cause-of-the-floods-in-nepal-1788169786"></link>
            <id>https://ibctamil.com/article/what-is-the-cause-of-the-floods-in-nepal-1788169786</id>
            <summary type="text">நேபாளம் மற்றும் திபெத் பகுதிகளில் பாரிய வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கு முன்னர் இடம்பெற்ற பனிப்பாறை சரிவு சம்பவம், தற்செயலாக ட்ரோன் கேமராவில் பதிவாகியுள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நேபாளம் மற்றும் திபெத் பகுதிகளில் பாரிய வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கு முன்னர் இடம்பெற்ற பனிப்பாறை சரிவு சம்பவம், தற்செயலாக ட்ரோன் கேமராவில் பதிவாகியுள்ளது.
</p><p>
சீன புகைப்படக் கலைஞர் ஒருவரால் பதிவு செய்யப்பட்ட இந்தக் காட்சிகளில், கடல் மட்டத்திலிருந்து 7,200 மீற்றருக்கும் அதிகமான உயரத்தில் அமைந்துள்ள லாங்டாங் லிருங் மலைச் சிகரத்திற்கு அருகில், பாரிய பாறைகள் மற்றும் பனிப்பாறைத் துண்டுகள் மலையின் சரிவிலிருந்து இடிந்து விழும் காட்சி அநடத காணொளியில் பதிவாகியுள்ளது.</p><p>மேலும் பனிப்பாறையும் பாறைகளும் சரிந்து விழுந்ததைத் தொடர்ந்து, பெரும் தூசிப் படலம் மலைப் பகுதி முழுவதும் பரவுவதையும் அந்த ட்ரோன் காட்சிகளில் காண முடிகிறது.</p><p></p><h2>நேபாள வெள்ளப்பெருக்கு</h2><p>
</p><p>
அதனைத் தொடர்ந்து பனி, பாறைகள், சேறு மற்றும் பெருமளவான குப்பைகள் சுமார் 1,200 மீற்றர் கீழே அமைந்துள்ள பள்ளத்தாக்கை நோக்கி வேகமாக அடித்துச் செல்லப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cdbcb9fd-edc9-472c-a056-f7d34486f077/26-6a95570b36872.webp' /></p><p> இதன் காரணமாக தான் போதேகோஷி மற்றும் திரிசூலி ஆறுகளின் நீர்மட்டம் திடீரென உயர்ந்து, பாரிய வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
ஆகஸ்ட் 26ஆம் திகதி ஏற்பட்ட இந்தப் பேரழிவில் நேபாளத்தில் 903 பேரும் திபெத்தில் 16 பேரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுவதுடன், நேபாளத்தில் மாத்திரம் மேலும் 4,500க்கும் அதிகமானோர் காணாமல் போயுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
</p><p>
நேபாளத்தை உலுக்கிய பாரிய இயற்கைப் பேரழிவு

நேபாள பிரதமர் பாலேந்திர ஷா, நாடு “கற்பனை செய்ய முடியாத அளவுக்கு இதயத்தை உலுக்கும் இயற்கைப் பேரழிவை” எதிர்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.</p><p><a href="https://youtu.be/qEic2ZU6taM" target="_blank"><b>காணொளியை காண இங்கே க்ளிக் செய்யவும்</b></a></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-31T10:32:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[முதன்முறையாக 10 பில்லியன் டொலரை கடந்த இலங்கையின் ஏற்றுமதி வருவாய்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-lanka-s-export-earnings-10-billion-1788169850"></link>
            <id>https://tamilwin.com/article/sri-lanka-s-export-earnings-10-billion-1788169850</id>
            <summary type="text">2026ஆம் ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் இலங்கையின் மொத்த ஏற்றுமதி வருவாய் 10 பில்லியன் அமெரிக்க டொலரைத் தாண்டியுள்ளது.இது ஜனவரி முதல் ஜூலை வரையிலான காலகட...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026ஆம் ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் இலங்கையின் மொத்த ஏற்றுமதி வருவாய் 10 பில்லியன் அமெரிக்க டொலரைத் தாண்டியுள்ளது.</p><p>இது ஜனவரி முதல் ஜூலை வரையிலான காலகட்டத்தில் 10.437 பில்லியன் அமெரிக்க டொலரை எட்டியுள்ளது.</p><h2>ஆண்டின் முதல் ஏழு மாதங்களில்&nbsp;</h2><p>
</p><p>
 

இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் (EDB) தலைவர் மங்கள விஜேசிங்க, ஜூலை 2026இல் நாட்டின் ஏற்றுமதி செயல்திறன் குறித்த புள்ளிவிவரங்களை, இன்று (31.08.2026) அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் வெளியிட்டார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ac0cf27d-4208-4023-ba00-fe0e94d01ecb/26-6a9557c303394.webp' /></p><p>
 

ஓர் ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் இலங்கை 10.437 பில்லியன் அமெரிக்க டொலர் ஏற்றுமதி வருவாயைப் பதிவு செய்தது இதுவே முதல் முறை என்று அவர் கூறியுள்ளார்.&nbsp;&nbsp;</p><p></p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-31T10:31:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[இஷாரா செவ்வந்தி இந்தியா தப்பிச் செல்ல படகு வழங்கிய யாழ்ப்பாணத்தவர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/jaffna-man-boat-ishara-travel-india-arrested-1788171396"></link>
            <id>https://ibctamil.com/article/jaffna-man-boat-ishara-travel-india-arrested-1788171396</id>
            <summary type="text">கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவத்தில் சந்தேக நபராக பெயரிடப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தி, துப்பாக்கி சூட்டு சம்பவத்திற்கு பின்னர் இந்தியாவுக்குத் தப்பிச் செல்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவத்தில் சந்தேக நபராக பெயரிடப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தி, துப்பாக்கி சூட்டு சம்பவத்திற்கு பின்னர் இந்தியாவுக்குத் தப்பிச் செல்வதற்குப் படகு வழங்கி உதவியதாகக் கூறப்படும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>இவ்வாறு கைது செய்யப்பட்டவர் யாழ்ப்பாணம், மண்டைதீவு பகுதியைச் சேர்ந்த 'பலசி' என அழைக்கப்படும் ஜேசுதாசன் செல்வசேத் என அடையாளம் காணப்பட்டுள்ளதாகப் காவல்துறையினர் தெரிவித்தனர்.&nbsp;</p><h2>&nbsp;மன்னார் காவல்துறையின் விசேட நடவடிக்கையில் கைது</h2><p>மன்னார், இலுப்பைக்கடவை காவல்துறை அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின்போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9572323e-f157-4cd1-ae2a-0b987e9efc1c/26-6a9557d8da86f.webp' /></p><p>
</p><p>


 இஷாரா செவ்வந்தி துப்பாக்கிசூட்டு சம்பவத்திற்கு பின்னர் யாழ்ப்பாணத்திற்கு வந்து இந்தியாவுக்குத் தப்பிச் செல்வதற்கு இவரே படகு வசதியை ஏற்படுத்திக் கொடுத்துள்ளதாக காவல்துறை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-31T10:31:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாட்டில் ஆடம்பர விடுதியில் பதுங்கியிருந்து நாட்டை உலுக்கிய பிரபல குற்றவாளி! அடுத்த சில வாரங்களில் இலங்கைக்கு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/9-underworld-figures-return-to-the-srilanka-1788142649"></link>
            <id>https://tamilwin.com/article/9-underworld-figures-return-to-the-srilanka-1788142649</id>
            <summary type="text">டுபாயில் கைது செய்யப்பட்ட &#039;வெல்லே சாரங்கா&#039; என்று அழைக்கப்படும் சாரங்க பிரதீப் எனும் பிரபல பாதாள உலகக்குற்றவாளியை நாட்டிற்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>டுபாயில் கைது செய்யப்பட்ட 'வெல்லே சாரங்கா' என்று அழைக்கப்படும் சாரங்க பிரதீப் எனும் பிரபல பாதாள உலகக்குற்றவாளியை நாட்டிற்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p>

இலங்கையின் மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் (CCIB) மற்றும் குற்றப் புலனாய்வுத் துறை (CID) வழங்கிய உளவுத்தகவல்களின் அடிப்படையில் டுபாயில் உள்ள ஒரு ஆடம்பர விடுதியில் வைத்து டுபாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார்.
</p><p>
இந்நிலையில், வெல்லே சாரங்கா உள்ளிட்ட ஒன்பது குற்றவாளிகள், அடுத்த சில வாரங்களில் இலங்கைக்குக் அழைத்துவரப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><h2>இரகசியமாக போதைப்பொருட்களை அனுப்பும் நடவடிக்கை</h2><p>

இவர்கள் டுபாயில் பதுங்கி ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்துகொண்டு இலங்கைக்குள் போதைப்பொருட்களை இரகசியமாக அனுப்பும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b60a63f9-fd72-4d93-be35-ad67e57efe84/26-6a9557e600975.webp' />&nbsp;</p><p>

மேலும், வெல்லே சாரங்கா மீது கொலை, போதைப்பொருள் மற்றும் ஆயுதக்கடத்தல், மிரட்டிப்பணம் பறித்தல் உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.</p><p>

மத்திய குற்றப் புலனாய்வு பணியகத்தின் அதிகாரிகள், பாதாள உலகத்தலைவரான லலித் கண்ணங்கராவை கைது செய்வதற்காக டுபாய்க்கு சென்று, அந்நாட்டு பொலிஸாருடன் இணைந்து தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
</p><p>
இந்த நடவடிக்கையில் ​​மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் அதிகாரிகள், டுபாய் பொலிஸ் அதிகாரிகளுக்கு வெல்லே சாரங்கா என்ற பாதாள உலகத் தலைவர் குறித்த தகவல்களையும் வழங்கியுள்ளனர்.</p><p>

அதன்படி, டுபாய் பொலிஸார் பல வாரங்களாக நடத்திய தேடுதல் நடவடிக்கைக்குப் பிறகு, டுபாயில் உள்ள ஒரு ஹோட்டலில் பதுங்கியிருந்த வெல்லே சாரங்கா உட்பட 9 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர்.</p><h2>ஆடம்பர ஹோட்டல்களில் தங்கி போதைப்பொருள் கடத்தல்&nbsp;</h2><p>
</p><p>
கைது செய்யப்பட்ட நேரத்தில், இந்த குற்றவாளிகளிடமிருந்து கொக்கைன் மற்றும் ஹெரோயின் உள்ளிட்ட போதைப்பொருட்களும் கைப்பற்றப்பட்டிருந்தன.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/661e7bb7-d6be-40c6-b9ab-426792b96809/26-6a9557e6aac11.webp' /></p><p>
வெல்லே சாரங்கா ஆடம்பர ஹோட்டல்களில் தங்கியிருந்தபடியே பெரிய அளவிலான போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ளார்.</p><p>

ஈரான், ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகளைச் சேர்ந்த கடத்தல்காரர்களுடன் இணைந்து, போதைப்பொருட்களை இழுவைப் படகுகளில் ஏற்றி இலங்கைக்கு அனுப்பும் கடத்தலிலும் அவர் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
</p><p>
போதைப்பொருள் தகராறு காரணமாக மோதரை பகுதியில் எவோனி சுதர்ஷனி பெர்னாண்டோ என்ற பெண்ணை சுட்டுக்கொன்றதாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
</p><p>
மேலும், மட்டக்குளிய, கொட்டஹேன, மோதரை உள்ளிட்ட பல பகுதிகளில் பல கொலைகளை இயக்கியதாகவும் அவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.</p><p>

தற்போது டுபாய் பொலிஸ் காவலில் உள்ள வெல்லே சாரங்கா உள்ளிட்ட 9 குற்றவாளிகளை விரைவாக இலங்கைக்கு கொண்டுவருவது குறித்து இலங்கை பொலிஸாருடன் பேச்சுவார்த்தைகள் ஏற்கனவே தொடங்கிவிட்டதாக சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-31T10:31:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரசிகர்களை கவரும் வகையில் நடிகை ருஹானி ஷர்மா வெளியிட்ட புகைப்படங்கள்.. இதோ பாருங்க]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/actress-ruhani-sharma-elegant-photoshoot-1788171767"></link>
            <id>https://cineulagam.com/article/actress-ruhani-sharma-elegant-photoshoot-1788171767</id>
            <summary type="text">தமிழ், தெலுங்கு, ஹிந்தி என தொடர்ந்து பல்வேறு மொழிகளில் நடித்து வருபவர் நடிகை ருஹானி ஷர்மா. இவர் தமிழில் வெளிவந்த கடைசி பெஞ்ச் கார்த்தி, மாஸ்க் போன்ற த...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழ், தெலுங்கு, ஹிந்தி என தொடர்ந்து பல்வேறு மொழிகளில் நடித்து வருபவர் நடிகை ருஹானி ஷர்மா. இவர் தமிழில் வெளிவந்த கடைசி பெஞ்ச் கார்த்தி, மாஸ்க் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.</p><p> ரசிகர்களின் மனம் கவர்ந்த இளம் நடிகையாக வலம் வரும் ருஹானி ஷர்மா, அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் வெளியிடும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின்றன. </p><p>அந்த வகையில், தற்போது வெள்ளை நிற ஆடையில் ரசிகர்களை கவரும் வகையில் எடுத்துக்கொண்ட போட்டோஷூட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார் நடிகை ருஹானி ஷர்மா.</p><p> இதோ அந்த புகைப்படங்கள்:</p>]]></content>
            <updated>2026-08-31T10:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவுக்கு கல்வி கற்கச் செல்பவர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/canada-study-permit-rules-changes-from-september-1-1788167658"></link>
            <id>https://news.lankasri.com/article/canada-study-permit-rules-changes-from-september-1-1788167658</id>
            <summary type="text">Canada Study Permit Rules changes from September 1: செப்டம்பர் 1ஆம் திகதி முதல், கனடா கல்வி அனுமதி விதிகளில் சில மாற்றங்கள் செய்யப்பட உள்ளன.

கனடாவி...</summary>
            <content type="html"><![CDATA[<p>Canada Study Permit Rules changes from September 1: செப்டம்பர் 1ஆம் திகதி முதல், கனடா கல்வி அனுமதி விதிகளில் சில மாற்றங்கள் செய்யப்பட உள்ளன.</p><p>

கனடாவில் கல்வி கற்க வரும் வெளிநாட்டு மாணவர்கள், தங்கள் சொந்தத் தேவைகளுக்காக கனடாவில் யாரையும் சார்ந்திருக்காமல், தங்களுக்கான தேவைகளை தாங்களே சந்திப்பதற்காக, அவர்கள் தங்கள் வங்கிக்கணக்கில் ஒரு குறிப்பிட்ட தொகையை வைத்திருப்பதை உறுதி செய்துகொள்ளவேண்டும் என்றொரு விதி உண்டு.</p><p>

இந்நிலையில், அது தொடர்பான விதிகளில், நாளை முதல், அதாவது, 2026ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் 1ஆம் திகதி முதல் சில மாற்றங்கள் அமுலுக்கு வருகின்றன.
</p><h3>
கல்வி அனுமதி தொடர்பில் சில மாற்றங்கள்</h3><p>

கனடாவில் கல்வி கற்க வரும் வெளிநாட்டு மாணவர்கள், தங்களுக்கான தேவைகளை தாங்களே சந்திப்பதற்காக தங்கள் வங்கிக்கணக்கில் 22,895 டொலர்கள் வைத்திருக்கவேண்டும் என ஜூன் மாதத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6fd50aea-7019-4dfd-80ed-b1b816ab54d2/26-6a9545ebdfc0f.webp' /></p><p>
தற்போது மீண்டும் அந்த விதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆம், இனி வெளிநாட்டு மாணவர்கள் தங்களுக்கான தேவைகளை தாங்களே சந்திப்பதற்கான தங்கள் வங்கிக்கணக்கில் 23,448 டொலர்கள் வைத்திருக்கவேண்டும் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
விடயம் என்னவென்றால், இது மாணவர்கள் கல்வி கற்பது, போக்குவரத்து போன்ற விடயங்களை உள்ளடக்கிய கல்விக் கட்டணம் அல்ல. அது, தனிச் செலவு!
</p><p>
அத்துடன், கனடாவில் கல்வி கற்பதற்காக உரிமம் கோரி விண்ணப்பிக்கும் மாணவர்கள், தங்களுடன் தங்கள் குடும்ப உறுப்பினர்கள் எத்தனை பேரை அழைத்துவருகிறார்களோ, அதற்கேற்ப அவர்கள் வங்கிக்கணக்கில் வைத்திருக்கவேண்டிய தொகையும் அதிகரிக்கும்.&nbsp;</p><p></p><p>
ஒரு மாணவர் தன்னுடன் தன் உறவினர்கள் இரண்டு பேரை கனடாவுக்கு அழைத்துவர விரும்பினால், அவர் தன் வங்கிக்கணக்கில் 29,192 டொலர்கள் வைத்திருக்கவேண்டும்.</p><p>

மூன்று பேரை அழைத்துவர விரும்பினால், அவர் தன் வங்கிக்கணக்கில் 35,888 டொலர்களும், நான்கு பேரை அழைத்துவர விரும்பினால் தன் வங்கிக்கணக்கில் 43,572 டொலர்களும் வைத்திருக்கவேண்டும்.
</p><p>
இப்படியே இந்த தொகை அதிகரித்துக்கொண்டே செல்லும். அதாவது, ஒரு மாணவர் கனடாவுக்கு கல்வி கற்பதற்காக வந்தால், அவர் கனடாவில் வேலை செய்யாமலே, தனது மற்றும் தன்னுடன் அழைத்துவந்துள்ள குடும்ப உறுப்பினர்களின் செலவுகளை சந்திக்கும் வகையில் தன்னிடம் போதுமான பணம் உள்ளது என்பதை நிரூபித்தாகவேண்டும் என்கிறது, கனடா புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பு!&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-31T10:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டுக்கு வருகைதந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை தொடர்பில் வெளியான அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/tourist-arrivals-crossed-1-5-million-in-sl-1788169654"></link>
            <id>https://tamilwin.com/article/tourist-arrivals-crossed-1-5-million-in-sl-1788169654</id>
            <summary type="text">நாட்டிற்கு இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 15 இலட்சத்திற்கும் அதிகமான&amp;nbsp;சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக&amp;nbsp;சுற்றுலா அபிவிருத்தி அதி...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டிற்கு இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 15 இலட்சத்திற்கும் அதிகமான&nbsp;சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக&nbsp;சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.</p><p>இதன்படி, ஜனவரி 01 ஆம் திகதி முதல் ஓகஸ்ட் 27 ஆம் திகதி வரை இலங்கைக்கு 1,517,296 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.</p><p>அதேவேளை, ஓகஸ்ட் 01 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் 173,878 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.</p><h2>சுற்றுலாப் பயணிகள்&nbsp;</h2><p>
</p><p>
 

ஓகஸ்ட் மாதத்தில் இதுவரை அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்தே வருகை தந்துள்ளதுடன், அந்த எண்ணிக்கை 41,781 ஆகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0162704b-a72d-40f7-b6aa-2482332bb8d8/26-6a9552ec92c21.webp' /></p><p>
</p><p>
 

இரண்டாவதாக அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் ஐக்கிய இராச்சியத்திலிருந்து (UK) வருகை தந்துள்ளனர் (18,197 பயணிகள்).

 

மூன்றாவதாக சீனாவிலிருந்து 11,368 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.
</p><p>
 

அத்துடன், இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் ஒட்டுமொத்தமாக அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்தே வருகை தந்துள்ளனர் (380,011 பயணிகள்).</p><h2>அதிகரிப்பு</h2><p>மூன்றாவதாக சீனாவிலிருந்து 11,368 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9ca490d8-a655-4f99-af37-f8942920502a/26-6a9552ed4d444.webp' /></p><p>அத்துடன், இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் ஒட்டுமொத்தமாக அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்தே வருகை தந்துள்ளனர் (380,011 பயணிகள்).</p><p>மேலும், இந்த ஆண்டில் ஒரே மாதத்தில் அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்தது பெப்ரவரி மாதத்திலாகும். (279,328 பயணிகள்).</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-31T10:29:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பு துறைமுகத்தில் பெருந்தொகை போதைப்பொருள்; வெளிநாட்டில் இருந்து வந்த கொள்கலனால் அதிர்ச்சி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/narcotics-at-colombo-port-from-pakistan-1788172052"></link>
            <id>https://jvpnews.com/article/narcotics-at-colombo-port-from-pakistan-1788172052</id>
            <summary type="text">&amp;nbsp; கொழும்பு துறைமுகத்தில் கொள்கலன் ஒன்றில் ‘ஐஸ்’ எனச் சந்தேகிக்கப்படும் பெருந்தொகையான போதைப்பொருள் தொகை ஒன்று கைப்பற்றப்பட்டது.

 

கைப்பற்றப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; கொழும்பு துறைமுகத்தில் கொள்கலன் ஒன்றில் ‘ஐஸ்’ எனச் சந்தேகிக்கப்படும் பெருந்தொகையான போதைப்பொருள் தொகை ஒன்று கைப்பற்றப்பட்டது.</p><p>

 

கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் ‘ஐஸ்’ (ICE) வகை போதைப்பொருளாக இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுவதுடன், மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தினால் இந்தப் போதைப்பொருள் தொகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c820dfdd-1f9f-4d13-b66d-e519a668fab4/26-6a95571628528.webp' /></p><p>

 

பாகிஸ்தானில் இருந்து இலங்கை கொண்டுவரப்பட்ட குறித்த கொள்கலனில் மறைத்து வைத்து இந்தப் போதைப்பொருள் கடத்தி வரப்பட்டுள்ளமை இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p>

 

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-08-31T10:24:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்ட மகனுக்காக கையில் பச்சை குத்திய தாய்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/mother-in-canada-get-a-tattoo-keypad-son-autism-1788171473"></link>
            <id>https://canadamirror.com/article/mother-in-canada-get-a-tattoo-keypad-son-autism-1788171473</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;கனடாவில் ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்ட 11 வயது மகனின் தாயார், தனது கையில் கீபோர்ட் வடிவத்தில் பச்சை ஒன்றை குத்திக் கொண்டார். 

இதன் மூல...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;கனடாவில் ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்ட 11 வயது மகனின் தாயார், தனது கையில் கீபோர்ட் வடிவத்தில் பச்சை ஒன்றை குத்திக் கொண்டார். 

இதன் மூலம் தனது மகன் எந்த சூழ்நிலையிலும் அவன் நினைப்பதை மற்றவர்களிடம் தெரிவிக்க முடியும் என கூறினார். </p><p>

கனாடாவில் வசித்து வரும் ஜெசிகா என்பவர், மூளை வளர்ச்சி குன்றிய நோயால் பாதிக்கப்பட்ட தனது 11 வயது மகனான ஹண்டர் உடன் சேர்ந்து ஒரு உணவகத்திற்கு உணவருந்த சென்றார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8377b620-3434-460d-9d86-ff74fee782f6/26-6a9554d2bed90.webp' /></p><h2>&nbsp;எந்தவித சிக்கலும் இல்லாமல் தொடர்பு</h2><p> </p><p>

அப்போது ஹண்டர் தனது வார்த்தைகளையும், எண்ணங்களையும் பகிர்ந்து கொள்வதற்காக, அவன் வைத்திருந்த ஒரு எலக்ட்ரிக் கருவியின் பேட்டரி திடீரென தீர்ந்து போனது. இதனால் அவன் என்ன நினைக்கிறான் என்பதை, தனது தாயிடம் வெளிப்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டது. </p><p>

இந்த சூழ்நிலையில் ஹண்டர் ஒரு காகிதத்தை எடுத்து, அதில் ஒரு கீபோர்டை வரைந்து, பிறகு தனக்கு என்ன சாப்பிட வேண்டும் என்பதை தனது தாய்க்கு தெரியப்படுத்தும் வகையில், அந்த வரையப்பட்ட காகிதத்தில் எழுத்துக்களை சுட்டிக்காட்டினான். 

இந்த காட்சியை பார்த்த ஹண்டரின் தாயார், இதற்கு ஒரு மாற்று தகவல் தொடர்பு சாதனம் தேவை என்பதை உணர்ந்தார். </p><p>

இதைத்தொடர்ந்து ஜெசிகா தனது கையில் ஒரு கீபோர்டை பச்சை குத்திக் கொள்ள முடிவு செய்தார். மேலும் அந்த கீபோர்டு வடிவிலான டாட்டூவில், ‘மகிழ்ச்சி, சோகம்’ ஆகிய ஸ்மைலி வடிவங்களும், ‘நான் உன்னை விரும்புகிறேன்’ என்ற பொத்தானும் இடம்பெற்றிருந்தன.</p><p> 

இந்த வடிவத்தை தனது கையில் பச்சை குத்திக்கொண்ட அவரின் தாயார், அதை தனது மகனிடம் முதலில் காண்பித்தார். அப்போது ஹண்டர், தனது தாயின் கையில் வரையப்பட்ட கீபோர்டில், ‘அம்மா’ என்று பதிவுசெய்தான். </p><p>

இதன்மூலம் ஹண்டர் தன்னுடன் எந்தவித சிக்கலும் இல்லாமல் தொடர்பு கொள்ளும் வீடியோவை, ஜெசிகா சமூக வலைதளத்தில் பகிர்ந்தார். 

இதைத்தொடர்ந்து, ஜெசிகா ஒரு ஆடை நிறுவனத்துடன் இணைந்து, கீபோர்டு வடிவிலான அச்சுகளை தனது சட்டைகளில் அச்சிட்டார்.</p><p> 

இதன்மூலம்,&nbsp; ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், தங்களது எண்ணங்களை வீடுகளிலும், வைத்தியசாலைகளிலும், பாடசாலைகளிலும் வெளிப்படுத்த முடியும் என ஜெசிகா குறிப்பிட்டார். </p><p>

மேலும் தனது உடலில் ஆயிரம் தழும்புகளை பச்சை குத்திக் கொள்வதன் மூலம், தனது மகனுக்கு அவனது எண்ணங்களை வெளிக்காட்ட ஒரு வழி இருக்குமென்றால், தான் உடல் முழுவதும் பச்சை குத்திக்கொள்ள தாயாராக இருப்பதாகவும் ஜெசிகா தெரிவித்தார்.</p>]]></content>
            <updated>2026-08-31T10:15:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மாகாணசபை தேர்தல் குறித்து அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/provincial-council-election-1788170534"></link>
            <id>https://tamilwin.com/article/provincial-council-election-1788170534</id>
            <summary type="text">மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் சகல அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் தரப்புகளுடன் கலந்துரையாடல்களை மேற்கொள்ள தேர்தல்கள் ஆணைக்குழு உத்தேசித்துள்ளது.

பல...</summary>
            <content type="html"><![CDATA[<p>மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் சகல அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் தரப்புகளுடன் கலந்துரையாடல்களை மேற்கொள்ள தேர்தல்கள் ஆணைக்குழு உத்தேசித்துள்ளது.
</p><p>
பல ஆண்டுகாலமாக பிற்போடப்பட்டுள்ள மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க அண்மையில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டிருந்தார்.</p><p>

மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் எழுப்பப்பட்ட வினாவொன்றுக்குப் பதிலளிக்கும் வகையில் அவர் மேற்குறித்த கருத்தை ஊடகங்களுக்கு முன்வைத்திருந்தார்.</p><h2>யோசனை முன்வைப்பு</h2><p>
</p><p>
அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் ஆராயும் நாடாளுமன்ற விசேட செயற்குழுவில் முன்னிலையாகி பல யோசனைகளை முன்வைத்துள்ளது.</p><p>

பழையத் தேர்தல் முறைமையின் கீழ் மாகாணசபைத் தேர்தலை நடத்தலாம் என்று சட்ட மாஅதிபர் திணைக்களம் முன்வைத்துள்ள திருத்த பரிந்துரைகளுக்கு இணையான யோசனைகளை தேர்தல்கள் ஆணைக்குழுவும் முன்வைத்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1dc1d08a-59c6-4724-b459-f0215d4d5866/26-6a9553187af46.webp' /></p><p>
</p><p>
முன்வைக்கப்படும் யோசனைகள் மற்றும் பரிந்துரைகளை விரைவாக ஆராய்ந்து உறுதியான தீர்மானத்தை எடுக்குமாறு செயற்குழுவிடம் வலியுறுத்தியுள்ளோம். மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல் மாகாணசபைகள் இயங்குவது ஜனநாயகத்துக்கு விரோதமான விடயமாகும்.</p><h2>தேர்தல் குறித்து தீர்மானம் எடுக்கும் அதிகாரம்</h2><p>
</p><p>
மாகாண சபைத் தேர்தல் குறித்து தீர்மானம் எடுக்கும் அதிகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு கிடையாது.

ஏனெனில் 2017ஆம் ஆண்டு இயற்றப்பட்ட புதிய தேர்தல் முறைமையின் அம்சங்கள் பூர்த்திச் செய்யப்படாத காரணத்தால் எந்தத் தேர்தல் முறைமைக்கு அமைய மாகாண சபைத் தேர்தலை நடத்துவது என்பதில் சிக்கல் காணப்படுகிறது.
</p><p>
தேர்தல் முறைமை குறித்து நாடாளளுமன்றத்தின் ஊடாக உறுதியான தீர்மானம் ஒன்று எடுக்கப்பட வேண்டும்.

அப்போது தான் மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் உத்தியோகபூர்வமாக தீர்மானங்களை எடுக்க முடியும் என்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-31T10:12:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கோட்டாபய ராஜபக்ச நுவரவெவ குளத்தை நிரப்பி கட்டிய சொகுசு ஹோட்டல்! ஓய்வுநிலை விரிவுரையாளர் சந்தன காரியவசம் வெளிப்படுத்திய தகவல்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/gotabaya-rajapaksa-anuradhapura-1788168918"></link>
            <id>https://tamilwin.com/article/gotabaya-rajapaksa-anuradhapura-1788168918</id>
            <summary type="text">&amp;nbsp;கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக பதவியில் இருந்த காலத்தில் அவருக்கு ஆலோசனை வழங்கிய அம்மையார் ஒருவர் இருந்தார். அவரை உங்களுக்கு நினைவிருக்கலாம். கோட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக பதவியில் இருந்த காலத்தில் அவருக்கு ஆலோசனை வழங்கிய அம்மையார் ஒருவர் இருந்தார். அவரை உங்களுக்கு நினைவிருக்கலாம். கோட்டாபயவின் அனைத்து செயல்பாடுகளும் அவரின் ஆலோசனைபடியே அமைந்திருந்தது. </p><p>அமைச்சரவை நியமினம் - சிலரை பதவியில் நீக்கியமை அவர் சொற்படியே செய்தார். எப்படி உறங்குவது கூட அந்த அம்மையார் சொன்னபடியேதான்.
நாம் மேலே குறிப்பிட்ட அம்மையார் தான் அநுராதபுரத்தில் சோதிடம் பார்த்து பிரபலமான 'ஞானக்கா'.</p><p>அவருக்கு சொந்தமான ஒரு சொகுசு ஹோட்டல் ஒன்று அநுராதபுரத்தில் நுவரவெவ குளத்தை நிரப்பி கட்டுப்பட்டுள்ளதாக றுவுணு பல்கலைக்கழகத்தின் ஓய்வுநிலை விரிவுரையாளரும் ரிவிர பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் - இலங்கை புவிச்சரிதவியல் ஆய்வு மற்றும் சுரங்கங்கள் பணியகத்தின் முன்னாள் ஊடக பணிப்பாளரான சந்தன காரியவசம் தெரிவித்துள்ளார். அது தொடர்பில் அவர் தெரிவித்த மேலதிக தகவல்கள்...</p><h2>
</h2><p></p><h2>சட்டவிரோதமாக கட்டப்பட்ட கட்டடங்கள்</h2><p>அந்த அம்மையார் ஹோட்டல் கட்டினால் உனக்கென்ன எங்களுக்கு என்ன என்று கேள்வி எழலாம் அல்லவா? 
ஆனால் 2300 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்ட நுவரவௌ குளத்தை அழித்துள்ளார்கள்.</p><p>இது எங்களுடைய உரிமைச் சொத்து அதைத்தான் இவர்கள் நாசப்படுத்தியுள்ளனர்.
நுவரவெவ எல்லைப் பகுதியில்தான் இந்த ஹோட்டலின் பெரும்பாலான கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. </p><p>இது முற்றிலும் சட்டவிரோதமான செயல் அப்படிச் செய்ய முடியாது. குளத்தின் எல்லைப் பகுதிக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளனர்.
ஒரு சாதாரண மனிதரால் இதைச் செய்ய முடியாது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3e05147e-9951-449f-825b-ac96a0430e30/26-6a954ad85b05f.webp' /></p><p>நாட்டுத் தலைவரின் அரசியல் செல்வாக்கைக் கொண்டுதான் இவற்றை நிரப்பி இந்த நிலைக்குக் கட்டியிருக்கிறார்கள்.மேலும் கோட்டாபய ராஜபக்ச பணம் வழங்கியதாகவும் ஒரு கதையும் உள்ளது. இந்த அம்மையார் ஹோட்டல் கட்டினாரா அல்லது கோட்டாபயவுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தாரா என்பது நமக்கு முக்கியமல்ல.</p><p>ஆனால் இந்த விடயங்கள் இப்படி நடக்க முடியாது. 
கடந்த காலத்தில் குளத்தின் கரையோரங்களில் அல்லது குளத்திற்குள் கட்டப்பட்ட ஹோட்டல்களை அகற்றும் திட்டம் ஒன்று நடந்தது. அதற்கும் நிறைய பிரச்சினைகள் வந்தன.ஆனால் அநுராதபுரத்திலுள்ள இந்த ஹோட்டலுக்கு ஒன்றும் நடக்கவில்லை. அதனால் அதிகாரிகள் மற்றும் அரசாங்கம் இது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும்.</p><p>
இந்த ஹோட்டல் புதிதாக அமைக்கப்பட்ட கண்டி - அனுராதபுர வீதியில் இராணுவ மருத்துவப் படைப்பிரிவை கடந்து சில மீட்டர்கள் செல்லும் போது உள்ளது. அநுராதபுரத்தில் சோதிடம் பார்த்த சாதாரண ஒரு பெண் இப்போது கோடிக்கணக்கான சொத்துக்களுக்கு சொந்தக்காரராக இருப்பது எப்படி என்ற கேள்வி எழுந்துள்ளது.</p><p>&nbsp;</p><p>&nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-08-31T10:06:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆபத்தாக மாறியுள்ள பட்டங்கள் - விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/urgent-notice-to-kite-flyers-1788169264"></link>
            <id>https://tamilwin.com/article/urgent-notice-to-kite-flyers-1788169264</id>
            <summary type="text">&amp;nbsp;உயர் மின்னழுத்த மின் கம்பிகளுக்கு அருகில் பட்டம் விடுவதை தவிர்க்குமாறு வைத்தியர்கள் மீண்டும் பொது மக்களை கேட்டுக்கொள்கின்றனர்.

குறித்த இடங்கள...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;உயர் மின்னழுத்த மின் கம்பிகளுக்கு அருகில் பட்டம் விடுவதை தவிர்க்குமாறு வைத்தியர்கள் மீண்டும் பொது மக்களை கேட்டுக்கொள்கின்றனர்.
</p><p>
குறித்த இடங்களுக்கு அருகில் பட்டம் விடுவதால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக விசேட வைத்தியர் பிரதீப் ரத்னசேகர கூறியுள்ளார்.
</p><p>
பட்டம் விடுவதால் ஏற்படும் மின் அதிர்ச்சிகளால் ஆழமான தீக்காயங்களுடன் நோயாளிகள் அதிகளவு அனுமதிக்கப்படுவதாக அறிக்கைகள் வந்துள்ளன.</p><h2>பெற்றோர்கள் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தல்</h2><p>
</p><p>
தேசிய வைத்தியசாலை மற்றும் லேடி ரிட்ஜ்வே குழந்தைகள் வைத்தியசாலைகளில் கடுமையான தீக்காயங்களுடன் பல நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1cf01b15-d26f-42be-bde5-dec06a621fe9/26-6a9551e818ab6.webp' /></p><p>

எனவே, பெரும்பாலான நேரங்களில், நாம் வாங்கும் நூல்கள் நீரில் நனைந்தாலோ அல்லது சில சமயங்களில் உலோகங்கள் கலந்து செய்யப்பட்ட மின்கடத்திகளாக செயற்படுகின்றன.
</p><p>
இவை உயர் மின்னழுத்த மின் கம்பிகளில் பட்டவுடன், அந்த நூல் வழியாக அதிக மின்சாரம் பாய்கிறது. இதன் காரணமாக திசுக்களும், இரத்த நாளங்கள், நரம்புகள் என அனைத்தும் தீக்காயமடைகின்றன.</p><p>

ஆகவே, பெற்றோர் பிள்ளைகள் தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><p>&nbsp;</p><p>&nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-08-31T10:05:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[கன்னியா விகாரை கட்டுமானத்திற்கு நீதிமன்றம் தற்காலிக தடை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/court-halts-construction-kanniya-hot-springs-site-1788167645"></link>
            <id>https://ibctamil.com/article/court-halts-construction-kanniya-hot-springs-site-1788167645</id>
            <summary type="text">கன்னியாவில் அமைக்கப்படும் விகாரை தொடர்பான புனர்நிர்மாண வேலைகளுக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.
விகாரை தொடர்பான புனர்நிர்மாண வேலைகளுக்கு எதிர்ப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கன்னியாவில் அமைக்கப்படும் விகாரை தொடர்பான புனர்நிர்மாண வேலைகளுக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.</p><p>
விகாரை தொடர்பான புனர்நிர்மாண வேலைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து கன்னியா காணி உரிமையாளர் கோகிலரமணியால் மனுதாக்கல் செய்யப்பட்டிருந்தது.</p><p>இந்த மனுவின் அடிப்படையில் இன்றைய தினம் (31-08-2026) வழக்கு
விசாரணை எடுத்துக் கொள்ளப்பட்டது.</p><p>
</p><p></p><h2>எட்டப்பட்ட உடன்படிக்கை</h2><p>இதன் போது மனுதாரர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் மற்றும் பிரசாந்தினி உதயகுமார் முன்னிலையாகி இருந்தனர்.
</p><p>
அதே சமயம் அரச சட்டத்தரணி, திருக்கோணமலை மாவட்ட தொல்பொருள் திணைக்கள
பணிப்பாளர் W. W. சுரங்க பெரேராவும் வருகை தந்திருந்தார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/94c41f26-4465-434f-9fb5-71289449c2af/26-6a954ef35a343.webp' /></p><p>வழக்கின் போது 2019 ஆம் ஆண்டு இரு தரப்புக்கு இடையில் எட்டப்பட்ட
உடன்படிக்கையின் அடிப்படையில் தொல்பொருள் இடங்களை பாதுகாப்பதற்கான உரிமை
மாத்திரமே கன்னியா விடயத்தில் வழங்கப்பட்டிருப்பதாகவும் புனர்நிர்மாணம்
செய்வதற்கு உடன்பாடு ஏற்படவில்லை என்ற அடிப்படையில் வழக்கு வாதம்
வைக்கப்பட்டது.
</p><p>
மேலும் அரச சட்டத்தரணியால் குறித்த இடத்தை பார்வையிட்டு வாதங்களை முன்வைக்க
காலம் கோரப்பட்ட நிலையில் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி வரை
வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. </p><p>மேலும் அதுவரையான காலப்பகுதியில் எந்த புதிய
கட்டுமானப் பணிகளையோ, மாற்றங்களையோ செய்யக்கூடாது என்ற உத்தரவும்
வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-31T10:00:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[தனியார் பாதுகாப்பு சேவைகளை ஒழுங்குபடுத்த நடவடிக்கை : வெளியான அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/new-regulations-for-private-security-services-1788159738"></link>
            <id>https://ibctamil.com/article/new-regulations-for-private-security-services-1788159738</id>
            <summary type="text">இலங்கையின் தனியார் பாதுகாப்பு சேவைகள் தொடர்பில்&amp;nbsp;பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகர அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார்.அதன்படி, நாட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் தனியார் பாதுகாப்பு சேவைகள் தொடர்பில்&nbsp;பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகர அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார்.</p><p>அதன்படி, நாட்டில் தனியார் பாதுகாப்பு சேவைகளை ஒழுங்குபடுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.</p><p>அந்தவகையில், இதற்கான சட்டத் திருத்தங்களை உள்ளடக்கிய சட்டமூலம் எதிர்வரும் சில மாதங்களுக்குள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.</p><h2>சட்டமூலத்தை தயாரித்தல்</h2><p>
</p><p>குறித்த சட்டமூலத்தை தயாரிப்பதற்கு சட்ட மா அதிபர் திணைக்களம், தொழில் திணைக்களம் மற்றும் காவல்துறை ஆகியவற்றின் உதவிகள் பெறப்படவுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2c87d60d-7238-4566-9f0d-4615fd4c2caa/26-6a954e5832957.webp' /></p><p></p><p>&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-31T09:56:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறைச்சாலை ஆடைகளை அணிவதற்கு முன்னர் சில அரசியல்வாதிகளின் திட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/the-opposition-s-intense-struggle-1788168345"></link>
            <id>https://tamilwin.com/article/the-opposition-s-intense-struggle-1788168345</id>
            <summary type="text">

சிறைச்சாலை ஆடைகளை அணிவதற்கு முன்னர் இந்த அரசாங்கத்தை கவிழ்க்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தீவிரமாக செயற்படுவதாக ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப...</summary>
            <content type="html"><![CDATA[<p>

சிறைச்சாலை ஆடைகளை அணிவதற்கு முன்னர் இந்த அரசாங்கத்தை கவிழ்க்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தீவிரமாக செயற்படுவதாக ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நந்தன பத்மகுமார தெரிவித்துள்ளார்.</p><p>

பொதுக் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,</p><p> 

தற்போது நம் நாட்டில் உள்ள எதிர்க்கட்சியினர் அரசாங்கத்தை விமர்சிப்பதற்கு மாத்திரமே காத்திருக்கின்றனர்.</p><h2>காத்திருக்கும் எதிர்க்கட்சிகள்&nbsp;</h2><p> </p><p>

வீடுகளில் கிளிகள், புறாக்கள் என செல்லப்பிராணிகளை மக்கள் கூடுகளில் வைத்து வளர்ப்பார்கள்.

அவை உணவு உண்ணும் போது அவற்றின் கூடுகளில் இருந்த உணவுகள் கீழே சிதறி விழும்.

இவ்வாறு விழும் உணவுகளுக்காகவே கூண்டுக்கு கீழே சிலப் பிராணிகள் காத்திருக்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/993f7eab-4c44-436b-a1b0-768b8cf40471/26-6a954f3c54010.webp' /></p><p> </p><p>அப்படித்தான் இன்று நம் நாட்டில் இருக்கும் எதிர்க்கட்சியும்.

அரசாங்கத்தை விமர்சிப்பதற்காக சந்தர்ப்பங்களை நோக்கிக் காத்திருக்கின்றனர்.</p><p> 

தற்போதைய வெள்ளை ஆடைகளை களைந்து, சிறைச்சாலை ஆடைகளை அணிவதற்கு முன்னர் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை வீழ்த்த வேண்டும் என்று அவர்கள் போராடிக் கொண்டிருக்கின்றனர் என குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p>&nbsp;</p><hr><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/d7-8j-P_5fw" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p> </p>]]></content>
            <updated>2026-08-31T09:54:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[சாப்பாட்டில் மயக்க மருந்து... இந்துவுக்கு காத்திருக்கும் சிக்கல்! - சின்னஞ்சிறு கிளியே இன்றைய எபிசோட் அப்டேட்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/chinnan-siru-kiliye-serial-today-episode-1788166609"></link>
            <id>https://cineulagam.com/article/chinnan-siru-kiliye-serial-today-episode-1788166609</id>
            <summary type="text">தமிழ் சின்னத்திரையில் Zee தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சின்னஞ்சிறு கிளியே. கடந்த ...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழ் சின்னத்திரையில் Zee தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சின்னஞ்சிறு கிளியே. கடந்த எபிசோடில் ஆதரவற்ற குழந்தைகளுக்காக இந்து அன்புடன் உணவு சமைத்து எடுத்துச் சென்றிருந்த நிலையில், இன்றைய எபிசோடில் பரபரப்பான திருப்பங்கள் அரங்கேற உள்ளன.</p><p>அதன்படி, இந்து சமைத்த உணவில் வாந்தி, பேதி மற்றும் மயக்கத்தை ஏற்படுத்தும் மருந்து கலக்கப்பட்டிருப்பது தெரிய வருகிறது. ஆனால் இந்த விஷயம் குறித்து எதுவும் அறியாத இந்து, அந்த உணவை ஆதரவற்ற குழந்தைகளிடம் கொண்டு செல்கிறாள்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/25702dbb-3d78-43f0-8815-f60f6a7fa88b/26-6a9541f9da15f.webp' /></p><p>மறுபக்கம், விஷ்வா பசிக்கிறது என்று கூறியதும், சுகுணா இந்து சமைத்த உணவை அவனுக்கு பரிமாறுகிறாள். விஷ்வாவும் அந்த உணவை சாப்பிடத் தொடங்க, இதைப் பார்த்த புவனா அதிர்ச்சி அடைகிறாள். பின்னர் சாப்பாட்டில் மயக்க மருந்து கலந்திருப்பதை விஷ்வாவிடம் கூறி, குழந்தைகளுக்கு ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால் இந்துவே குற்றவாளியாகி கைது செய்யப்படுவாள் என்ற தனது திட்டத்தை வெளிப்படுத்துகிறாள். அதன்பின் விஷ்வாவை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கிறாள்.
</p><p>இந்நிலையில் கர்ணாவும் பசிப்பதாக வந்து உணவு கேட்க, சுகுணா மற்றும் ஜெயந்தி அதே உணவை அவனுக்கும் கொடுக்கிறார்கள். கர்ணாவும் அதை சாப்பிடத் தொடங்கியதும் புவனா மீண்டும் அதிர்ச்சியில் உறைகிறாள்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/481d0c20-07f0-4eff-bcaf-7dba7c31257e/26-6a9541f92113f.webp' /></p><p>இதனால் அடுத்து என்ன நடக்கப் போகிறது? புவனாவின் திட்டம் வெற்றியடையுமா? இந்து புதிய சிக்கலில் சிக்கிக்கொள்ளப் போகிறாளா? என்ற பரபரப்பான கேள்விகளுக்கான பதிலை அறிய, சின்னஞ்சிறு கிளியே தொடரை Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத் தவறாதீர்கள்.
&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-31T09:50:00+00:00</updated>
        </entry>
    </feed>
