<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-08-29T07:50:08+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[32 கனேடியர்கள் மாயம்... நேபாளப் பெருவெள்ளம் தொடர்பில் அமைச்சர் அனிதா ஆனந்த் தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/anit-anand-says-32-canadians-missing-nepal-flood-1787989711"></link>
            <id>https://news.lankasri.com/article/anit-anand-says-32-canadians-missing-nepal-flood-1787989711</id>
            <summary type="text">Foreign affairs minister Anita Anand says 32 Canadians unaccounted for after Nepal floods: நேபாளப் பெருவெள்ளத்தில் மாயமான 32 கனேடியர்கள் மாயமாகியுள்ளத...</summary>
            <content type="html"><![CDATA[<p>Foreign affairs minister Anita Anand says 32 Canadians unaccounted for after Nepal floods: நேபாளப் பெருவெள்ளத்தில் மாயமான 32 கனேடியர்கள் மாயமாகியுள்ளதாக கனடா வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
</p><p>

நேபாளப் பெருவெள்ளத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 600ஐக் கடந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், சுமார் 2,500 பேர் மாயமாகியுள்ளார்கள்.
</p><h3>
32 கனேடியர்கள் மாயம்...
</h3><p>
நேபாளப் பெருவெள்ளத்தின்போது மாயமானவர்களில் பாதி பேர் வெளிநாடுகளிலிருந்து சுற்றுலா அல்லது புனித யாத்திரை சென்றவர்கள் என கூறப்படுகிறது.</p><p>

இந்நிலையில், நேபாளம் சென்ற 32 கனேடியர்கள் வரை மாயமாகியுள்ளதாக கனடா வெளியுறவுத்துறை அமைச்சரான அனிதா ஆனந்த் தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3ea0e125-04eb-47d9-a389-00c0acaf1f69/26-6a928ed11e6b9.webp' /></p><p>

மாயமானவர்களில் பலர் இந்தோ கனேடியர்கள், அவர்கள் கைலாச மலை மற்றும் மானசரோவருக்கு புனித யாத்திரை சென்றவர்கள் என கனேடிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.&nbsp;</p><p></p><p>
மாயமான கனேடிய குடிமக்கள் மற்றும் நிரந்தரக் குடியிருப்பு அனுமதி பெற்றவர்கள் எத்தனை பேர், அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்பது குறித்த தகவல்கள் இதுவரை உறுதி செய்யப்படவில்லை என்று கூறியுள்ளார் அனிதா ஆனந்த்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b57668ea-3dba-4a4d-9c29-a1e3d23d4506/26-6a928ed1cd37f.webp' /></p><p>
விடயம் என்னவென்றால், சுற்றுலா அல்லது புனித யாத்திரை சென்ற தங்கள் குடும்பத்தினர் பெருவெள்ளத்தில் சிக்கிக்கொண்டார்கள் என்னும் செய்தி தங்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாக தெரிவித்துள்ள பலரும், அவர்களுக்கு என்ன ஆனது என்பது தெரியாததால் தாங்கள் கடும் மன அழுத்தத்துக்குள்ளானதாக தெரிவித்துள்ளது கவலையை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.
</p><p>
இந்நிலையில், கனடா தூதரக அதிகாரிகள், நேபாளத்தில் மாயமான கனேடியர்களைக் கண்டுபிடிக்கும் முயற்சியிலும் கனடாவிலிருக்கும் அவர்களுடைய குடும்பங்களுக்குத் தேவையான உதவிகள் வழங்குவதிலும் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ள அமைச்சர் அனிதா ஆனந்த், நேபாளப் பெருவெள்ளதால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் ஆறுதலைத் தெரிவித்துக்கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
இதற்கிடையில், நேபாளப் பெருவெள்ள நிவாரணப் பணிக்காக 5 இல்லியன் கனேடிய டொலர்களை கனடா வழங்குகிறது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-29T07:49:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kowshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாளத்தை மீண்டும் கட்டியெழுப்ப பில்லியன் டொலர்கள் தேவை..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/nepal-flood-repairs-could-cost-10-of-economy-1787986573"></link>
            <id>https://tamilwin.com/article/nepal-flood-repairs-could-cost-10-of-economy-1787986573</id>
            <summary type="text">வெள்ளத்திற்குப் பிறகு, நேபாளத்தை மீண்டும் கட்டியெழுப்ப 4 பில்லியன் முதல் 5 பில்லியன் டொலர் வரை தேவைப்படலாம் என அந்த நாட்டின் நிதி அமைச்சர் ஸ்வர்னிம் வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>வெள்ளத்திற்குப் பிறகு, நேபாளத்தை மீண்டும் கட்டியெழுப்ப 4 பில்லியன் முதல் 5 பில்லியன் டொலர் வரை தேவைப்படலாம் என அந்த நாட்டின் நிதி அமைச்சர் ஸ்வர்னிம் வாக்லே இன்று(29.08.2026) தெரிவித்துள்ளார்.</p><p>இது அந்த நாட்டின் பொருளாதாரத்தில் கிட்டத்தட்ட பத்தில் ஒரு பங்கிற்கு சமமான செலவு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><h2>4-5 பில்லியன் டொலர்கள் தேவை</h2><p>அவர் மேலும் தெரிவிக்கையில்,&nbsp; ஆரம்பகட்ட மதிப்பீடு 4-5 பில்லியன் டொலர்களுக்கு இடையில் உள்ளது. இது ஒரு மதிப்பீடு மட்டுமே. 2015 ஆம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தின் போது தேவைப்பட்டதை விட மிகக் குறைவான தொகையே நமக்குத் தேவைப்படும் என குறிப்பிட்டுள்ளார்.</p><p>பனிப்பாறை சரிவினால், இமயமலை நதி அமைப்புகள் வழியாக பாறை, பனி, மண் மற்றும் சிதைவுகளின் ஒரு மாபெரும் வெள்ளம் பாய்ந்தது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0cbf6d0a-6900-44b6-b19f-e3405a9d797a/26-6a92882d0afab.webp' /></p><p>இதில் நேபாளம் மற்றும் சீனாவின் திபெத்தில் 600-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 2,000-க்கும் மேற்பட்டோர்&nbsp; காணாமல் போயுள்ளனர்.</p><p>
நேபாளத்தின் வரலாற்றில் பதிவு செய்யப்பட்ட மிக மோசமான பேரழிவான, 2015ஆம் ஆண்டு ஏற்பட்ட 7.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்திற்குப் பிறகு செலவிடப்பட்ட 9 பில்லியன் டொலரை விட, புனரமைப்புக்கான செலவு குறைவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>இது நாட்டின் மொத்த மின் உற்பத்தித் திறனில் 12 சதவீதத்திற்கும் அதிகமான பங்களிப்பை வழங்கும் மின் திட்டங்களையும் சேதப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p>[P8A12EU ]&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-29T07:43:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொலையில் முடிந்த சகோதரர்களுக்கு இடையேயான சண்டை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/35-year-killed-in-alleged-assault-family-dispute-1787983296"></link>
            <id>https://ibctamil.com/article/35-year-killed-in-alleged-assault-family-dispute-1787983296</id>
            <summary type="text">நபர் ஒருவர் தடியால் அடித்து படுகொலை செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் தங்காலை காவல்துறை பிரிவுக்குட்பட்ட மஹகொட பக...</summary>
            <content type="html"><![CDATA[<p>நபர் ஒருவர் தடியால் அடித்து படுகொலை செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p>

குறித்த சம்பவம் தங்காலை காவல்துறை பிரிவுக்குட்பட்ட மஹகொட பகுதியில் நேற்று (28) இரவு வேளையில் இடம்பெற்றுள்ளது.</p><p>மஹகொட பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.</p><p></p><h2>மேலதிக விசாரணை</h2><p>தாக்குதலில் படுகாயமடைந்த நபர் தங்காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8b4438af-c76b-48c7-8c64-564df89f4184/26-6a928c4b76026.webp' /></p><p> தங்காலை காவல் நிலையத்திற்குக் கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. </p><p>

உயிரிழந்த நபருக்கும் அவரது சகோதரருக்கும் இடையே ஏற்பட்ட தகராறு முற்றியதே இத்தாக்குதலுக்குக் காரணம் என இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.</p><p> 

28 வயதுடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், தங்காலை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-29T07:38:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் வளிமண்டலத்தில் ஏற்படும் மாற்றம்! செப்டெம்பர் மற்றும் அக்டோபரில் ஏற்படவுள்ள தாக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/el-nino-weather-alert-in-sri-lanka-1787987254"></link>
            <id>https://tamilwin.com/article/el-nino-weather-alert-in-sri-lanka-1787987254</id>
            <summary type="text">எதிர்வரும் செப்டெம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் நாட்டின் காலநிலை மற்றும் மழைப்பொழிவில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்படக்கூடும் என முன்னாள் சிரேஷ்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>எதிர்வரும் செப்டெம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் நாட்டின் காலநிலை மற்றும் மழைப்பொழிவில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்படக்கூடும் என முன்னாள் சிரேஷ்ட புவியியல் துறை பேராசிரியர் எஸ்.அண்டனி நோர்பர்ட் தெரிவித்துள்ளார். </p><p>

இலங்கையில் வளிமண்டலத்தின் வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் இந்த சூழல் ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். </p><p>

ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.</p><h2>மழைப்பொழிவு</h2><p> 

மேலும் தெரிவிக்கையில், 

தற்போது இலங்கையில் தென்மேற்கு பருவக்காற்று நிலவி வருகின்ற போதிலும், அதன் தாக்கம் காரணமாக வடகிழக்கு மற்றும் தென்பகுதிகளில் மட்டுமே மழைப்பொழிவு கிடைத்து வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/918a0d9e-2897-41dd-bff5-c05f7d873f99/26-6a928bf334ce9.webp' /></p><p> </p><p>

அதேவேளை, வழக்கமாக வடகிழக்குப் பகுதிகளில் நிலவும் வறட்சிக்கு மாறாக, இம்முறை அந்த பகுதிகளில் அதிகளவு வெப்பநிலை பதிவாகி வருகிறது.</p><h2>புவி வெப்பமடைதல்</h2><p> 

படிம எரிபொருட்களின் அதிகப்படியான பயன்பாடு மற்றும் பசுமைக்குடில் வாயுக்களின் அதிகரித்த உமிழ்வு ஆகியவை புவி வெப்பமடைதலுக்கு முக்கிய காரணிகளாக உள்ளன. </p><p>

புவி வெப்பமடைதலின் பின்னணியில் எல் நினோ போன்ற காலநிலை காரணிகளின் தாக்கம் அதிகரித்துள்ளது. </p><p>இதன் விளைவாக வழக்கமாக மிதமான வெப்பநிலை நிலவ வேண்டிய காலப்பகுதிகளிலும் 37 முதல் 38 டிகிரி செல்சியஸ் வரையான அதிக வெப்பநிலை பதிவாகி வருகிறது என்றுள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-29T07:36:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[மதுபான உரிமத்தில் பல மில்லியன் ரூபாய் ஊழல்..! ரணிலின் உறவினர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ranil-s-nephew-accused-over-liquor-licence-deal-1787987635"></link>
            <id>https://tamilwin.com/article/ranil-s-nephew-accused-over-liquor-licence-deal-1787987635</id>
            <summary type="text">முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உறவினர் ஒருவருக்கு வழங்கப்பட்ட மதுபான உற்பத்தி உரிமம் தொடர்பில்&amp;nbsp; குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உறவினர் ஒருவருக்கு வழங்கப்பட்ட மதுபான உற்பத்தி உரிமம் தொடர்பில்&nbsp; குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
</p><p>
குறித்த நபர் அந்த உரிமத்தை தனது நண்பர்கள் இருவருக்கு விற்பனை செய்து பல மில்லியன் ரூபாய் இலாபம் ஈட்டியதாக சிவில் புலனாய்வு முன்னணியின் ஒருங்கிணைப்பாளர் சஞ்சய மகாவத்த குற்றம் சாட்டியுள்ளார்.</p><h2>ரணிலின் சகோதரரின் மகன்</h2><p>
</p><p>
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் சஞ்சய மகாவத்த இந்தக் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். </p><p>

நாட்டில் மதுபான உற்பத்தி உரிமங்கள் மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையிலேயே உள்ளதாகவும், தற்போது 13 உரிமங்கள் மட்டுமே இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d07e1fc4-a333-4086-bbf3-a473d80cdf49/26-6a928b18192b7.webp' /></p><p> 

இவ்வாறான பெறுமதிமிக்க உரிமத்தைப் பெறுவதற்கு பொதுவாக பெருமளவு நிதி முதலீடு தேவைப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
</p><p>
முன்னாள் ஜனாதிபதியின் உறவினருக்கு இவ்வாறான உரிமம் வழங்கப்பட்டமை, இதன் பின்னணியில் பாரிய ஊழல் இடம்பெற்றிருக்கலாம் என்பதற்கான அறிகுறியாகும் எனவும் மகாவத்த தெரிவித்தார்.</p><p>இந்த விவகாரம் தொடர்பில் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவில் (CIABOC) எதிர்வரும் வாரத்தில் முறையான முறைப்பாடு ஒன்றைச் சமர்ப்பிக்க உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.</p><h2>நெருங்கிய தொடர்பு</h2><p>
இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் எதிர்க்கட்சி உறுப்பினர் நிரஞ்சன் குமாரவும் கலந்துகொண்டார்.</p><p> 

முன்னாள் ஜனாதிபதி ரணிலுக்கும் சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவருக்கும் இடையிலான நெருங்கிய தொடர்புகளை அவர் விமர்சித்ததுடன், அதனை உறுதிப்படுத்தும் வகையில் புகைப்பட ஆதாரங்களையும் முன்வைத்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7a66e42a-7f9c-4ac1-bd74-3782e1efea05/26-6a928b18eb92e.webp' /></p><p>
</p><p>
மேலும், மாஃபியா உறுப்பினர்களிடமிருந்து இலஞ்சம் பெற்றதாக குற்றம் சாட்டப்படும் மூன்று சட்டத்தரணிகள் தொடர்பிலும் கேள்விகள் முன்வைக்கப்பட்டன.</p><p> 

அவர்கள் மீது இதுவரை சட்டத்தரணிகள் சங்கம் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்காதது ஏன் எனவும் நிரஞ்சன் குமார கேள்வி எழுப்பினார்.
</p><p>
இந்த ஊழல் மற்றும் திறமையின்மை குறித்த குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய அனைத்து தகவல்களையும் எதிர்காலத்தில் பொதுமக்களுக்கு வெளிப்படுத்துவதில் தாங்கள் உறுதியாக இருப்பதாகவும் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-29T07:36:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெனிசுலா மீது கைவைத்த டிரம்ப்; எண்ணெய் வளத்தை கட்டுப்படுத்த ஒப்பந்தம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/us-control65-billion-barrels-oil-venezuela-1787980866"></link>
            <id>https://canadamirror.com/article/us-control65-billion-barrels-oil-venezuela-1787980866</id>
            <summary type="text">&amp;nbsp; வெனிசுலாவின் 6,500 கோடி கொள்கலன் எண்ணெய் இருப்பை அமெரிக்காவின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக டொனால்ட் ட்ரம்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; வெனிசுலாவின் 6,500 கோடி கொள்கலன் எண்ணெய் இருப்பை அமெரிக்காவின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
</p><p>


இந்த ஒப்பந்தம் தொடர்பில் தனது சமூக ஊடகப் பக்கத்தில் பதிவிட்டுள்ள ட்ரம்ப், அமெரிக்கா மற்றும் வெனிசுலா இடையே உலக வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய எண்ணெய் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/55b7cb08-9c2c-40bc-ad65-d478ce664f11/26-6a926c43e0660.webp' /></p><h2>&nbsp;சர்வதேச எண்ணெய் சந்தையில் முக்கியத்துவம் வாய்ந்த ஒப்பந்தம்</h2><p>



தனது வழிகாட்டுதலின் கீழ், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் பீட் ஹெக்செத் ஆகியோர் வெனிசுலாவின் இடைக்கால ஜனாதிபதி டெல்சி ரோட்ரிக்ஸுடன் இணைந்து இந்த ஒப்பந்தத்தை நிறைவு செய்துள்ளதாகவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.</p><p>




இந்த ஒப்பந்தத்தின் மூலம் அமெரிக்காவின் எண்ணெய் இருப்பு இரண்டு மடங்குக்கும் அதிகமாக அதிகரிக்கும் என்றும், நாட்டின் எண்ணெய் விநியோகம் விரிவடையும் என்றும் ட்ரம்ப் கூறியுள்ளார்.
</p><p>


இதன் காரணமாக எதிர்காலத்தில் அமெரிக்க மக்களுக்கான எரிபொருள் விலையை கணிசமாகக் குறைக்க முடியும் எனவும், வெனிசுலாவை பொருளாதார ரீதியாக செழிப்பான பாதைக்கு கொண்டு செல்ல இது உதவும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p>



 இந்த ஒப்பந்தம் அமெரிக்கா மற்றும் வெனிசுலா இடையே வளர்ந்து வரும் நட்புறவை மேலும் வலுப்படுத்தும் என்றும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>


உலகளாவிய மசகு எண்ணெய் இருப்பில் சுமார் 17 சதவீதத்தை வெனிசுலா கொண்டுள்ளதாகக் கூறப்படும் நிலையில், இந்த ஒப்பந்தம் சர்வதேச எண்ணெய் சந்தையில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகின்றது.</p>]]></content>
            <updated>2026-08-29T07:32:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாள வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 600ஐ கடந்தது!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/death-toll-from-the-floods-in-nepal-crossed-600-1787985747"></link>
            <id>https://canadamirror.com/article/death-toll-from-the-floods-in-nepal-crossed-600-1787985747</id>
            <summary type="text">&amp;nbsp; நேபாளத்தைத் தாக்கிய முன்னெப்போதும் இல்லாத வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 626 ஆக உயர்ந்துள்ளதாக நேபாள காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது....</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; நேபாளத்தைத் தாக்கிய முன்னெப்போதும் இல்லாத வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 626 ஆக உயர்ந்துள்ளதாக நேபாள காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது.
</p><p>
இந்த திடீர் பேரழிவின் விளைவாக குறைந்தது 1,924 பேர் இன்னும் காணாமல் போயுள்ளதாக நாட்டின் பேரிடர் மேலாண்மை ஆணையம் மேலும் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/95b1a0cd-2b9a-49c7-8088-4095fcf10959/26-6a927f547a9ee.webp' /></p><p>
</p><p>
இதற்கிடையில், வெளிநாட்டு மீட்புக் குழுக்களின் உதவியை நாட வேண்டாம் என்ற தனது முடிவை நேபாளம் மாற்றிக்கொள்ள முடிவு செய்துள்ளது.
</p><p>
பேரழிவில் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணிகளைத் தாங்களே ஒருங்கிணைப்பதாகவும், வெளிநாட்டு மீட்புக் குழுக்களின் உதவியை நாட வேண்டிய அவசியமில்லை என்றும் நேபாள வெளியுறவு அமைச்சகம் ஆரம்பத்தில் கூறியிருந்தது.
</p><p>
இருப்பினும், வெள்ளத்தில் காணாமல் போனவர்களில் வெளிநாட்டினரும் இருப்பதால், சம்பந்தப்பட்ட நாடுகளின் இராஜதந்திர அழுத்தத்தின் காரணமாக நேபாள அரசாங்கம் அந்த முடிவை மாற்ற வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகியுள்ளது.
</p><p>
அதன்படி, சுரங்கங்களில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் சிக்கலான நடவடிக்கைகளுக்கும், உடல்களை அடையாளம் காணும் தொழில்நுட்பப் பணிகளுக்கும் சர்வதேச நிபுணர் குழுக்களுக்கு நேபாள அதிகாரிகள் தற்போது அனுமதி வழங்கியுள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-08-29T07:32:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் போதகர் மீது கண்மூடித்தனாமான தாக்குதல் ; மருத்துவமனையில் அனுமதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/pastor-brutally-attacked-jaffna-admitted-hospital-1787979869"></link>
            <id>https://jvpnews.com/article/pastor-brutally-attacked-jaffna-admitted-hospital-1787979869</id>
            <summary type="text">&amp;nbsp;தென்னிந்திய திருச்சபை யாழ்ப்பாண ஆதீனத்தின் பிரதித் தலைவரான போதகர் அன்டனி செபஸ்டியன் மீது நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதலில் காயமடைந்த அவர், யாழ் போ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;தென்னிந்திய திருச்சபை யாழ்ப்பாண ஆதீனத்தின் பிரதித் தலைவரான போதகர் அன்டனி செபஸ்டியன் மீது நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதலில் காயமடைந்த அவர், யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். </p><p>

நேற்று பிற்பகல் (28) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/70c7fa9f-e88c-4e59-abf1-baff642d3aff/26-6a92685fe3eb8.webp' /></p><h2>போதகரின் மகன்&nbsp; தாக்குதல்</h2><p> </p><p> 
தென்னிந்திய திருச்சபையின் செயலாளரான போதகர்&nbsp; மகனே இத்தாக்குதலை நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது.</p><p> 

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் யாழ்ப்பாண ஆதீனத்தின் பிரதித் தலைவராகத் தெரிவுசெய்யப்பட்ட போதகர் செபஸ்டியன், திருச்சபையின் முக்கிய பொறுப்புகளை வகித்து வந்தார்.</p><p></p><p> 

இந்நிலையில் இந்தியாவிலிருந்து வருகை தந்திருந்த விசேட குழுவினரால், தென்னிந்திய திருச்சபையில் பணியாற்றும் போதகர்களின் குடும்பங்களுக்கான ஒன்றுகூடலும் பயிற்சிகளும் கடந்த சில தினங்களாக நடத்தப்பட்டு வந்தன. </p><p>

நிகழ்வின் இறுதி நாளான நேற்று, போதகர்களுக்கான விசேட கலந்துரையாடல் நடைபெற்றது. 

கலந்துரையாடல் நிறைவடைந்து வெளியேறியபோது, பேராயர் மற்றும் ஏனைய போதகர்கள் முன்னிலையிலேயே இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. </p><p>


தாக்குதலாளி போதகரின் தலைப்பகுதியை இலக்குவைத்து மூன்று முறை தாக்கியுள்ளார். போதகரின் மகனை வேறொரு போதகர் பிடித்து வைத்திருந்ததாகவும், செயலாளரான போதகர் சதீஸ் டானியல் இத்தாக்குதலைத் தடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்ததாகவும் நேரில் பார்த்தவர்கள் தெரிவிக்கின்றனர்.</p><p></p><p> </p><p>

இதனால் இது ஒரு திட்டமிட்ட தாக்குதல் எனக் கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. </p><p>

தென்னிந்திய திருச்சபை யாழ்ப்பாண ஆதீனத்தில் நிலவும் நிர்வாகக் குறைபாடுகள், நிதி முறைகேடுகள் மற்றும் நீதிக்குப் புறம்பான செயற்பாடுகளுக்கு எதிராக போதகர் செபஸ்டியன் தொடர்ச்சியாகக் குரல் கொடுத்து வந்தார்.</p><p> 

கடந்த 9 மாதங்களாகச் செயற்குழு மற்றும் நிதிக்குழுவைக் கூட்டாமல் நிதியைப் பயன்படுத்துவது தொடர்பாக அவர் அழுத்தம் கொடுத்து வந்தார்.</p><p> 

திருச்சபை யாப்பிற்கு முரணாகப் பிரதிச் செயலாளர் மற்றும் செயற்குழு உறுப்பினர் ஆகிய இருவர் இடைநிறுத்தப்பட்டமைக்கும், ஊழியர்களுக்கு ஏற்படுத்தப்படும் இடையூறுகளுக்கும் எதிராகச் செயற்பட்டார். </p><p>

கடந்த 2ஆம் திகதி இவரது பொறுப்பிலிருந்த தேவகிராமம் திருச்சபை பூட்டப்பட்டு வழிபாட்டிற்கு இடையூறு ஏற்படுத்தப்பட்டமை குறித்து சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.</p><p></p><p> </p><p>

நிர்வாகம் மற்றும் நிதிக்குழுவின் அனுமதியின்றி 96 இலட்சம் ரூபாய் பெறுமதியான கார் ஒன்று கொள்வனவு செய்யப்பட்டமை குறித்தும் கேள்விகளை எழுப்பினார். </p><p>

தென்னிந்திய திருச்சபை யாழ்ப்பாண ஆதீனம் இதுவரை இலங்கையில் பதிவு செய்யப்படாமல் இயங்கி வருவதாகவும், கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக நிதி முறைகேடுகள் நடந்துள்ளதாகவும் திருச்சபை மக்களால் குற்றஞ்சாட்டப்படுகிறது.</p><p> 

இத்தகைய பின்னணியில் மேற்கொள்ளப்பட்டுள்ள இத்தாக்குதல் சம்பவம், திருச்சபை போதகர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.&nbsp; &nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-29T07:30:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாளத்தில் பெரு வெள்ளம்: மரத்தில் ஏறி உயிர் தப்பிய 8 வயது சிறுவன்: மகனை தேடி அலைந்த தாய்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/son-and-mother-reunion-in-nepal-after-flood-1787986920"></link>
            <id>https://news.lankasri.com/article/son-and-mother-reunion-in-nepal-after-flood-1787986920</id>
            <summary type="text">ஒட்டுமொத்த நோபாளத்தையும் பெரு வெள்ளம் புரட்டி போட்டுள்ள நிலையில், நீண்ட துயரத்திற்கு பிறகு தாயும், மகனும் இணைந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளத...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஒட்டுமொத்த நோபாளத்தையும் பெரு வெள்ளம் புரட்டி போட்டுள்ள நிலையில், நீண்ட துயரத்திற்கு பிறகு தாயும், மகனும் இணைந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><h2> மகனை இழந்த தாய்</h2><p>
கடந்த புதன்கிழமை ஏற்பட்ட பிரம்மாண்ட பனிப்பாறை சரிவு சம்பவம் ராட்சத வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தி வடக்கு நேபாளத்தை முற்றிலும் நிலைகுலைய வைத்துள்ளது.</p><p> இந்த மோசமான தருணத்திற்கு சில நிமிடங்களுக்கு முன்பு, மாட்டி மாயா தமாங்(Matti Maya Tamang) என்ற தாய் தன்னுடைய இரண்டு மகன்களையும் பள்ளிப் பேருந்தில் ஏற்றி விட்டு வீடு திரும்பியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6945e984-1f2d-4fd7-acae-468842c8fad4/26-6a9283e9ddbd6.webp' /></p><p>பேரழிவு செய்தியை கேட்ட தாய் தமாங் உடனடியாக வீட்டில் இருந்து தன்னுடைய குழந்தைகள் படிக்கும் பள்ளிக்கு செல்ல முயன்றுள்ளார்.</p><p> ஆனால் வழக்கமாக செல்லும் பாதைகள் அனைத்தும் கற்கள், சேறுகள் மற்றும் வெள்ள நீரால் அழிந்து போயிருந்தது.</p><p> துயரத்தின் உச்சத்துக்கு சென்ற தாய், ஒவ்வொரு முகாம்களுக்கும் சென்று தேடியுள்ளார்.</p><p> தமாங் தன்னுடைய இளைய மகனை கண்டுபிடித்து விட்ட போதிலும், எந்தவொரு முகாமிலும் அவருடைய மூத்த மகனான 8 வயது சோயல் காலே (Zoyal Ghale)-வின் பெயர் இடம்பெறவில்லை.</p><p></p><h2>உயிர் தப்பிய சிறுவன்</h2><p>வெள்ளப் பேரழிவின் போது பள்ளியில் இருந்த 8 வயது சிறுவன் சோயல் காலே (Zoyal Ghale), தன் உயிரை காப்பாற்றிக் கொள்வதற்காக அருகிலிருந்த காட்டுக்குள் தப்பியோடியுள்ளார்.</p><p>இருப்பினும் பாய்ந்து வந்த தண்ணீர் அவரை புரட்டிப் போட்ட நிலையில், இடிபாடுகளில் இருந்து தப்பிக்க மரங்களின் மீது சோயல் காலே ஏறியுள்ளான்.</p><p style="margin-left: 25px;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7d5f1589-9dee-41e3-8a38-349a2afce0a0/26-6a9283ea95ba9.webp' /></p><p>மீட்பு பணியாளர்கள் அவனை கண்டுபிடித்த போது அவனது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டிருந்துள்ளது. அத்துடன் முகம் முழுவதும் காயங்கள் ஏற்பட்டிருந்தது.</p><p> மருத்துவமனைக்கு செல்லும்படி காவல்துறை அதிகாரிகள் கொடுத்த இரண்டு 10 ரூபாய் நோட்டுகளை சோயல் காலே தன்னுடைய கையில் இறுகப் பிடித்துக் கொண்டு இருந்துள்ளான்.</p><p> நுவாகோட் மாவட்டத்தில் உள்ள சிறிய மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட சோயல் தன்னுடைய குடும்பத்தினரை தொடர்பு கொள்ள முடியவில்லை.</p><p> பின்னர் சோயல் குடும்பத்தினரை கண்டுபிடிப்பதற்காக பத்திரிக்கை குழுவினர் சிறு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.</p><h2> இணைந்த தாய் - மகன்</h2><p> எப்படியோ பத்திரிகையாளர் சஹானா பஜ்ராச்சார்யாவின் தொலைபேசி எண்ணை பெற்று தமாங் பேசிய பிறகு தான் அவரின் துயரம் துடைத்தெறியப்பட்டுள்ளது.</p><p> அப்போது, சோயல் உயிருடன் இருப்பதாகவும், காத்மாண்டு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு இருப்பதாகவும் பத்திரிகையாளர் சஹானா பஜ்ராச்சார்யா தெரிவித்துள்ளார்.</p><p> இதையடுத்து வெள்ளிக்கிழமை பத்திரிகையாளர்களின் உதவியோடு காத்மாண்டு மருத்துவமனைக்கு சென்ற தமாங், தன்னுடைய மகன் சோயல் காலே-வை கட்டியணைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.</p><p> ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வெள்ளப் பெருக்கில் காணாமல் போயுள்ள நிலையில், தமாங்கின் குடும்பம் அதிர்ஷ்டவசமாக மீண்டுள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p>&nbsp;<br></p>]]></content>
            <updated>2026-08-29T07:30:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[புருஷன் இறந்தா ஏன் அந்த பெண் பொட்டு வைக்கக்கூடாது!! சடங்குக்கு எதிராக பேசிய நடிகை அனசுயா..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/anasuya-bharadwaj-questions-widowhood-customs-1787989310"></link>
            <id>https://viduppu.com/article/anasuya-bharadwaj-questions-widowhood-customs-1787989310</id>
            <summary type="text">அனசுயா பரத்வாஜ்தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக தன் பயணத்தை தொடங்கு இன்று தெலுங்கு சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர் தான் நடிகை அனசுயா...</summary>
            <content type="html"><![CDATA[<h2>அனசுயா பரத்வாஜ்</h2><p>தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக தன் பயணத்தை தொடங்கு இன்று தெலுங்கு சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர் தான் நடிகை அனசுயா பரத்வாஜ்.</p><p> நாகர்ஜுனாவின் சொக்கடே சின்னி நயனா என்ற படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து அறிமுகமாகிய அனசுயா, க்ஷணம் என்ற படத்தில் நெகட்டிவ் ரோலில் நடித்து பலரது பாராட்டையும் பெற்றார். புஷ்மா மற்றும் புஷ்பா 2 படத்தில் மிரட்டலாக வில்லி ரோலிலும் நடித்திருப்பார். </p><p>சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், கணவரை இழந்த கைம்பெண்கள் சடங்குகள், கட்டுப்பாடுகள் குறித்து பேசியுள்ளார். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1cbeb138-e15b-46bf-8aa8-69df345bc168/26-6a928d3f9761a.webp' /></p><p>அதில், 3 ஆண்டுகளுக்கு முன் என் தந்தை இறந்துவிட்டார். அதன்பின் என் அம்மாவின் வாழ்க்கையில் ஏற்பட்ட கட்டாய மாற்றங்களை தான் இந்த கேள்வியை எனக்குள் ஏற்படுத்தியது. தன் தாய் தினமும் நெற்றியில் பொட்டு, கண்னில் மை, வண்ண வண்ண வளையல்கள், கொலுசு என்று அனைத்தையும் விரும்பி அணிந்து கொள்வார்.</p><p> அலங்கரித்துக் கொள்வது என் அம்மாவிற்கு பிடித்தமான ஒன்று, ஆனால் தந்தை இறப்பிற்குப்பின் அம்மாவிற்கு நடந்த சடங்குகளால் அவற்றை எல்லாம் அணிவதை நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. </p><p>பொட்டு, மை, வளையல், கொலுசு, மெஹந்தி, நெயில் பாலிஷ் என அழகியல் விஷயங்களை ஒரு பெண் திருமணத்திற்கு முன்பே தன் சிறு வயதிலேயே தாய், பாட்டியிடம் இருந்துதான் முதன்முதலில் கற்றுக்கொள்கிறாள். அப்படியிருக்கும் போது கணவரை இழந்தவுடன் இந்த ஆசைகளை எப்படி சமூதாயம் பார்க்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/965967bc-7aec-4906-b16e-cbc8415d8d86/26-6a928d404acbd.webp' /></p><p> </p><p>பொட்டும், மையும் ஏன் கணவனின் வாழ்வோடு தொடர்புடையதாகவோ பார்க்கப்படுகிறது. கணவனை இழந்த பெண்கள் தங்களின் ஆடைகள், அலங்காரங்கள், சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்பதில் பல கட்டுப்பாடுகள் சந்தித்து வருகின்றனர். </p><p>நான் எந்தவொரு மத நம்பிக்கையையோ, கலாச்சாரத்தையோ புண்படுத்துவதற்கு இந்த விஷயத்தை பற்றி பேசவில்லை. ஒரு பெண் பொட்டு வைப்பது, வளையல் அணிவது, மெஹந்தி வைப்பது என முழுக்க முழுக்க அப்பெண்ணின் தனிப்பட்ட விருப்பம், கணவன் மறைவிற்குப்பின் அப்பெண் என்ன செய்ய வேண்டும் என்று இந்த சமூகம் தீர்மானிக்கக்கூடாது என்று அனுசுயா பேசியது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-29T07:30:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மட்டக்களப்பு விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் படுகாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/three-critically-injured-in-batticaloa-accident-1787988562"></link>
            <id>https://jvpnews.com/article/three-critically-injured-in-batticaloa-accident-1787988562</id>
            <summary type="text">&amp;nbsp; மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியின் ஆரையம்பதி பகுதியில் முச்சக்கர வண்டி மின்கம்பத்துடன் மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, தாய் மற்ற...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியின் ஆரையம்பதி பகுதியில் முச்சக்கர வண்டி மின்கம்பத்துடன் மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, தாய் மற்றும் மகள் ஆகிய மூவர் படுகாயமடைந்துள்ளனர்.
</p><p>


திருமண நிகழ்வொன்றில் கலந்துகொள்வதற்காக சாய்ந்தமருதிலிருந்து ஏறாவூர் நோக்கிப் பயணித்த முச்சக்கர வண்டி, சாரதிக்கு ஏற்பட்ட தூக்கக் கலக்கம் காரணமாக வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியோர மின்கம்பத்துடன் மோதியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/79ea985d-b8db-46dd-9039-d538b580c7e6/26-6a928a53df279.webp' /></p><p>
</p><p>


விபத்தில் 50 வயதுடைய தாய் உயிருக்கு ஆபத்தான நிலையில் உட்பட, 55 வயதுடைய தந்தையும் 18 வயதுடைய மகளும் படுகாயமடைந்துள்ளனர். </p><p>மூவரும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.



இச்சம்பவம் தொடர்பில் காத்தான்குடி போக்குவரத்துப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-29T07:26:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தியாவின் வெற்றி வாய்ப்பைத் தடுத்த இளம் வீரர் - பாராட்டிய கௌதம் கம்பீர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/gautam-gambhir-special-shoutout-to-sonal-dinusha-1787987434"></link>
            <id>https://ibctamil.com/article/gautam-gambhir-special-shoutout-to-sonal-dinusha-1787987434</id>
            <summary type="text">இலங்கை அணியின் இளம் வீரர் சொனல் தினுஷவை இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் பாராட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைத்தளப் பக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை அணியின் இளம் வீரர் சொனல் தினுஷவை இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் பாராட்டியுள்ளார். </p><p>இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, டெஸ்ட் கிரிக்கெட்டில் குணம், பொறுமை மற்றும் மன வலிமை மிகவும் முக்கியம். </p><p>இவை அனைத்தையும் இந்திய அணி வீரர்கள் மிகவும் சிறப்பாக வெளிப்படுத்தினர்.

இலங்கை அணியின் இளம் வீரர் சொனல் தினுஷ மிகவும் அற்புதமாக விளையாடினார் எனப் பதிவிட்டுள்ளார்.</p><p></p><h2>முழுமையாக வெல்லும் வாய்ப்பு&nbsp;</h2><p>இந்தியா - இலங்கை இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் அண்மையில் நிறைவடைந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c6d5f835-9ea5-48cf-89de-adad18761d96/26-6a9289087253a.webp' /></p><p>இந்தத் தொடரை இந்திய அணி 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. 

தொடரை முழுமையாக வெல்லும் வாய்ப்பு இந்திய அணிக்கு இருந்தது. </p><p>அதனை தனது அபார ஆட்டத்தின் மூலம் தடுத்து நிறுத்தினார் இலங்கை அணியின் இளம் வீரர் சொனல் தினுஷ. </p><p>இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் 100 மற்றும் 84 ஓட்டங்கள் குவித்த சொனல் தினுஷ, இரண்டாவது டெஸ்ட்டில் 103 மற்றும் 133* ஓட்டங்கள் பெற்றிருந்தார்.</p><p>

இந்த நிலையில், இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இறுதிவரைப் போராடிய இந்திய அணியின் மன வலிமையை பாராட்டுவதாக இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார். </p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-29T07:24:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரச ஊழியர்களுக்கு அமைச்சர் வழங்கியுள்ள முக்கிய அறிவுறுத்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/important-instructions-government-servants-1787969617"></link>
            <id>https://tamilwin.com/article/important-instructions-government-servants-1787969617</id>
            <summary type="text">அரச ஊழியர்கள் பாரம்பரிய மனப்பான்மையை உடனடியாக கைவிட வேண்டும் என்று நெடுஞ்சாலைகள் மற்றும் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

சி...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரச ஊழியர்கள் பாரம்பரிய மனப்பான்மையை உடனடியாக கைவிட வேண்டும் என்று நெடுஞ்சாலைகள் மற்றும் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
</p><p>
சில அரச அலுவலகங்கள், அதிகாரிகளின் உத்தியோகபூர்வ அதிகாரத்தையும் பதவியையும் வெளிக்காட்டும் ஒரு கருவியாக பயன்படுத்தப்படுவது வருந்தத்தக்க நிலை என்று அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><h2>அரச அலுவலக அமைப்பில் மாற்றம்</h2><p>

பழைய சுவர்களாலும் சிறைச்சாலைகள் போன்று சூழப்பட்ட இருண்ட அலுவலக அமைப்பிலிருந்து அரசத்துறை உடனடியாக வெளியே வர வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fa0cde7a-b1ef-469f-b7ed-e642016d75b5/26-6a92885782d39.webp' />&nbsp;</p><p>

தற்போது தாம் பயன்படுத்தும் நெடுஞ்சாலைகள் அமைச்சகத்தின் அலுவலகம் கூட ஒரு டென்னிஸ் மைதானத்தின் அளவுக்கு பெரியதாக உள்ளது என்றும், இதுபோன்ற விசாலமான அலுவலக அறைகளின் கட்டுமானம் எதிர்காலத்தில் தடை செய்யப்பட வேண்டும் என்றும் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.</p><p>
அலுவலக இடம் என்பது பதவியின் அதிகாரத்தை வெளிக்காட்டும் இடமல்ல என்றும், உண்மையான தகுதி வாய்ந்த அதிகாரிகளுக்கு தங்கள் ஆளுமையை வெளிப்படுத்த பெரிய அலுவலக அறைகளோ விலையுயர்ந்த தளபாடங்களோ தேவையில்லை என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.
</p><p>
எனவே, அரச அலுவலக அமைப்பானது, அவர்கள் ஒரு குழுவாக எளிதாக இணைந்து பணியாற்றக்கூடிய 'பணிநிலைய' (workstation) மாதிரிக்கு மாற வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>
மேலும், ஒரே அமைச்சகத்தை சேர்ந்த நிறுவனங்கள் வெவ்வேறு இடங்களில் சிதறிக்கிடப்பதால் ஆளுகையும் அரச சேவையும் கடினமாகிவிட்டதாகவும், எதிர்காலத்தில் அரச நிறுவனங்கள் ஒரே வளாகத்தில் ஒருங்கிணைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க மேலும் கூறியுள்ளார்.</p><p></p><p></p><p> &nbsp; &nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-08-29T07:21:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[மாகாணசபைத் தேர்தல் : தேர்தல்கள் ஆணைக்குழுவின் முக்கிய அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/provincial-council-elections-election-commission-1787986949"></link>
            <id>https://ibctamil.com/article/provincial-council-elections-election-commission-1787986949</id>
            <summary type="text">பல ஆண்டுகாலமாக பிற்போடப்பட்டுள்ள மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உறுதியாகவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது....</summary>
            <content type="html"><![CDATA[<p>பல ஆண்டுகாலமாக பிற்போடப்பட்டுள்ள மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உறுதியாகவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.</p><p>
மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் வினவியபோதே தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க இதனைத் தெரிவித்தார். </p><p>இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது,

மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் ஆராயும் நாடாளுமன்ற விசேட செயற்குழுவில் முன்னிலையாகி பல யோசனைகளை முன்வைத்துள்ளோம்.</p><p></p><h2>&nbsp;சட்ட மாஅதிபர் திணைக்களம்</h2><p> </p><p>பழைய தேர்தல் முறைமையின் கீழ் மாகாணசபைத் தேர்தலை நடத்தலாம் என்று சட்ட மாஅதிபர் திணைக்களம் முன்வைத்துள்ள திருத்த பரிந்துரைகளுக்கு இணையாக யோசனைகளை நாங்கள் முன்வைத்துள்ளோம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4d1d37af-dbbe-4fda-be74-f78deaab8328/26-6a9287b378c3c.webp' /></p><p>
</p><p>

முன்வைக்கப்படும் யோசனைகள் மற்றும் பரிந்துரைகளை விரைவாக ஆராய்ந்து உறுதியான தீர்மானத்தை எடுக்குமாறு செயற்குழுவிடம் வலியுறுத்தியுள்ளோம். </p><p>மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல் மாகாணசபைகள் இயங்குவது ஜனநாயகத்துக்கு விரோதமானது. மாகாண சபைத் தேர்தல் குறித்து தீர்மானம் எடுக்கும் அதிகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு கிடையாது.</p><p></p><h2>&nbsp;நாடாளுமன்றத்தின் ஊடாக உறுதியான தீர்மானம்&nbsp;</h2><p> </p><p>ஏனெனில் 2017ஆம் ஆண்டு இயற்றப்பட்ட புதிய தேர்தல் முறைமையின் அம்சங்கள் பூர்த்திச் செய்யப்படாத காரணத்தால் எந்தத் தேர்தல் முறைமைக்கு அமைய மாகாண சபைத் தேர்தலை நடத்துவது என்பதில் சிக்கல் காணப்படுகிறது.</p><p>தேர்தல் முறைமை குறித்து நாடாளுமன்றத்தின் ஊடாக உறுதியான தீர்மானம் ஒன்று எடுக்கப்பட வேண்டும். அப்போது தான் மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் உத்தியோகபூர்வமாக தீர்மானங்களை எம்மால் எடுக்க முடியும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e8a8d2bb-04bb-402e-ad6b-3bb3fe596d17/26-6a9287b4324ef.webp' /></p><p>நாடாளுமன்ற செயற்குழு விரைவான தீர்மானத்தை எடுக்கும் என்று எதிர்பார்த்துள்ளோம்.

பெண் பிரதிநிதித்துவம் தொடர்பில் செயற்குழு முன்வைத்த விடயங்களை கருத்திற்கொண்டு அதற்குரிய யோசனைகளை முன்வைத்துள்ளோம். </p><p>தற்போது இளைஞர் பிரதிநிதித்துவம் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. அது குறித்தும் யோசனைகளை முன்வைப்போம்“ என தெரிவித்தார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-29T07:20:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[நான் சபிச்சது உண்மைதான், ஆனால்... நாஞ்சில் விஜயன் பிரச்சனை குறித்து வைஷு பதிலடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/vaishu-about-nanjil-vijayan-family-problem-1787984608"></link>
            <id>https://cineulagam.com/article/vaishu-about-nanjil-vijayan-family-problem-1787984608</id>
            <summary type="text">நாஞ்சில் விஜயன்நாஞ்சில் விஜயம், தமிழ் சின்னத்திரையில் மிகவும் பிரபலமாக வலம் வரக்கூடியவர். விஜய் டிவியில் நிறைய நிகழ்ச்சிகளில் பங்குபெற்ற இவர் அதிகம் ப...</summary>
            <content type="html"><![CDATA[<h2>நாஞ்சில் விஜயன்</h2><p>நாஞ்சில் விஜயம், தமிழ் சின்னத்திரையில் மிகவும் பிரபலமாக வலம் வரக்கூடியவர். </p><p>விஜய் டிவியில் நிறைய நிகழ்ச்சிகளில் பங்குபெற்ற இவர் அதிகம் பெண் வேடம் போட்டு நடித்து மக்களை சிரிக்க வைப்பார். பல மேடை பேச்சுகள், சொந்த தொழில் என பிஸியாக இருந்தவருக்கு வாழ்க்கையில் ஒரு சோகமான விஷயம் நடந்துள்ளது. </p><p>அதாவது நாஞ்சில் விஜயன் தனது மனைவியை பிரிந்துவிட்டதாக தனது இன்ஸ்டாவில் பதிவு செய்திருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1a921985-93c0-4d8e-85ea-89fbdde49655/26-6a9281e55bc96.webp' /></p><p> </p><p>மேலும் திருநங்கை சகோதரி வைஷ்ணவியிடம் நான் தோற்றுவிட்டேன், இருவரையும் தொடர்புப்படுத்தி பேசிய போதெல்லாம் என் மனைவி உறுதியாக இருந்தார், ஆனால் சிறிய சண்டையால் மனைவியை பிரிந்துவிட்டேன் என பதிவு செய்திருந்தார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e074548e-ad07-485b-8b44-292083749e25/26-6a9281e6364c4.webp' /></p><h2>திருநங்கை பதிலடி</h2><p>
நாஞ்சில் விஜயனின் பதிவிற்கு தற்போத வைஷு பதிலடி கொடுத்துள்ளார். அதில் அவர், என்னுடைய சாபத்தால் மனைவியை பிரிந்துவிட்டேன் என்கிறார். </p><p>கடவுள் மீது சத்தியமாக சொல்கிறேன், நான் நியாயம் கிடைக்க தான் போராடினேன், கணவன்-மனைவி பிரிய வேண்டும் என ஒருபோதும் சபிக்கவில்லை.</p><p>
நான் கமிஷனர் அலுவலகத்திற்கு சென்றதும் சரி, உங்களிடம் கேட்டதும் சரி எல்லாமே என்னுடன் மீண்டும் சேர்ந்து வாழ வேண்டும் என்பதற்காகத்தான் செய்தார். நீங்க ரெண்டு பேரும் பிரிந்து போக வேண்டும் என நான் சத்தியமாக எதையும் செய்யவில்லை என வீடியோ பதிவு செய்துள்ளார்.</p><p><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/reel/DcmMWYOTT3y/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/reel/DcmMWYOTT3y/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/reel/DcmMWYOTT3y/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by Vaishulisa vallal (@vj_vaishu_143)</a></p></div></blockquote> <script async src="//www.instagram.com/embed.js"></script></p>]]></content>
            <updated>2026-08-29T07:20:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[இன்ஸ்டாகிராமில் ரகசியம் சொல்வதாக கூறி ரூ.8.5 கோடி வசூல் செய்த மர்ம நபர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/man-duped-8crore-in-insta-reveal-secret-25-august-1787987983"></link>
            <id>https://news.lankasri.com/article/man-duped-8crore-in-insta-reveal-secret-25-august-1787987983</id>
            <summary type="text">இன்ஸ்டாகிராமில் ரகசியம் சொல்வதாக கூறி முகமுடி அணிந்த நபர், 1.66 லட்சம் பயனர்களிடம் ரூ.500 வசூலித்து ரூ.8.5 கோடி வசூல் செய்துள்ளார். 

ரகசியம் சொல்வத...</summary>
            <content type="html"><![CDATA[<p>இன்ஸ்டாகிராமில் ரகசியம் சொல்வதாக கூறி முகமுடி அணிந்த நபர், 1.66 லட்சம் பயனர்களிடம் ரூ.500 வசூலித்து ரூ.8.5 கோடி வசூல் செய்துள்ளார். </p><h3>

ரகசியம் சொல்வதாக கூறி ரூ.8.5 கோடி மோசடி</h3><p>

சமூக ஊடகமான இன்ஸ்டாகிராமில் முகம் காட்டாத மர்ம நபர் ஒருவர், 25august2026 என்ற பயனர் பெயரில் கணக்கு தொடங்கியிருந்தார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9b31fe70-dd63-43e8-a976-55eba5a76350/26-6a92881036166.webp' /></p><p>

முகமுடி அணிந்து கொண்டு ஆகஸ்ட் 25 ஆம் திகதி மிகப்பெரிய விடயத்தை வெளியிடப்போவதாக கூறி அந்த நபர் ரீல்ஸ் வெளியிட்டு கொண்டிருந்தார். சுமார் 4 லட்சம் பேர் அவரை பின்தொடர தொடங்கினர்.</p><p> 

அப்படி என்ன ஆகஸ்ட் 25 ஆம் திகதி வெளியிட போகிறார்? ஏதாவது பிரபலம் குறித்த அறிவிப்பா? ஸ்டார்ட்அப் நிறுவன தொடக்கமா? என தெரிந்து கொள்ள பயனர்கள் ஆர்வம் காட்ட தொடங்கினர்.</p><p> 

ஆகஸ்ட் 25 ஆம் திகதிக்கான அறிவிப்பு டெலிகிராமில் வெளியிடப்படும் எனக்கூறி அதற்கான லிங்கை பகிர்ந்தார்.&nbsp;</p><p>அவரை பின்தொடர்பவர்கள் டெலிகிராமிற்கு செல்ல அங்கு அந்த லிங்கிற்கு பின்னால் உள்ள விடயத்தை அணுக ரூ.500 கட்டணம் செலுத்தமாறு கூறப்பட்டது.&nbsp;</p><p><blockquote class="instagram-media" data-instgrm-permalink="https://www.instagram.com/reel/DcdVTq3hX2q/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/reel/DcdVTq3hX2q/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/reel/DcdVTq3hX2q/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by @lx___suruuuu_________143</a></p></div></blockquote> <script async src="//www.instagram.com/embed.js"></script></p><p> 

சுமார் 1 லட்சத்து 66 ஆயிரம் பேர் அந்த தொகையைச் செலுத்தியுள்ளனர். இதன்மூலம், அந்த முகமூடி அணிந்த நபர் சுமார் ரூ.8.5 கோடி வசூல் செய்துள்ளார்.&nbsp;</p><p></p><p>

ஆனால் ஏதோ பெரிய ரகசியத்தை தெரிந்து கொள்ள போகிறோம் என நினைத்து பணம் செலுத்தியவர்களுக்கு, "அதிகாலையில் எழு, உன் நேரத்தை மதி, உன்னை நீயே உருவாக்கிக்கொள்' என்பது போன்ற AI மூலம் உருவாக்கப்பட்ட மோட்டிவேஷனல் வீடியோ மட்டுமே இருந்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f02562f0-c566-4572-81df-a5fd5a8545d6/26-6a928810e3119.webp' /></p><p> 

இதனை இலவசமாக பார்க்கலாமே இதற்கு ஏன் ரூ.500 செலுத்தினோம் என பயனர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். </p><p>

இதனை பலரும் 2026 ஆம் ஆண்டின் மிகப்பெரிய மோசடி என வர்ணிக்கின்றனர். ஒரு சிலர் இது மோசடி இல்லை, வணிக உத்தி என தெரிவித்துள்ளனர்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-29T07:19:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Malaivanjan</name>
            </author>
            <title type="text"><![CDATA[லிப்பகலை தோட்ட கிராம சேவகர் அலுவலகம் புனரமைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/nuwara-eliya-lippella-gs-office-renovation-1787985208"></link>
            <id>https://tamilwin.com/article/nuwara-eliya-lippella-gs-office-renovation-1787985208</id>
            <summary type="text">பொதுமக்களுக்கான சேவைகளை துரிதப்படுத்தும் நோக்கில், நுவரெலியா - லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லிப்பகலை தோட்ட கிராம சேவகர் அலுவலகம் புனரமைக்கப்பட்டு,...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொதுமக்களுக்கான சேவைகளை துரிதப்படுத்தும் நோக்கில், நுவரெலியா - லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லிப்பகலை தோட்ட கிராம சேவகர் அலுவலகம் புனரமைக்கப்பட்டு, புதிய புகைப்பட பிரதி இயந்திரம் ஒன்றும் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
</p><p>
இதன் ஊடாக, குறித்த கிராம சேவகர் பிரிவை சேர்ந்த பொதுமக்கள் மாத்திரமன்றி, பாடசாலை மாணவர்கள் மற்றும் பயனாளர்களும் புகைப்பட பிரதி சேவையை இலவசமாக பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>மக்களின் அடிப்படை தேவைகள்</h2><p>


குறித்த பகுதியிலுள்ள மக்கள் மற்றும் அரச ஊழியர்கள் ஆவணங்களின் புகைப்பட
பிரதிகளைப் பெற்றுக் கொள்வதற்காக, கிராம சேவகர் அலுவலகங்களில் இருந்து சுமார்
இரண்டு முதல் மூன்று கிலோமீற்றர் தூரம் வரை பயணிக்க வேண்டிய நிலை
காணப்படுகிறது.
</p><p>

இதன்மூலம் பொதுமக்கள் தங்களது அத்தியாவசிய ஆவணங்களை பிரதியெடுப்பதற்காக
நீண்ட தூரம் பயணிக்க வேண்டிய நிலை தவிர்க்கப்படுவதுடன், கிராம சேவகர்
அலுவலகத்தின் ஊடான மக்கள் சேவையும் மேலும் துரிதப்படுத்தப்படும் என
எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e5bb5e8c-e4aa-49fc-8e7a-f9455b24c9ac/26-6a927fae67aee.webp' /></p><p>இதேவேளை, என்போல்ட் பகுதியில் சுமார் 60 வருட காலமாக மின்சார வசதியின்றி
இருளில் வாழ்ந்து வந்த ஏழைக் குடும்பம் ஒன்றிற்கும் இந்த நிகழ்வின் போது
இலவசமாக மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.</p><p>

மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதையும், அவர்களின் வாழ்க்கை
தரத்தை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு இந்த நடவடிக்கைகள்
முன்னெடுக்கப்பட்டுள்ளன.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9e470e54-7165-43d7-b453-9907001dfb0d/26-6a927faf63d41.webp' /></p><p>இந்த நிகழ்வில் வெளிச்சம் அமைப்பின் தலைவர் அகஸ்டின் இரவீந்திரன், செயலாளர்
பத்மநாதன் கிருபாகரன், மலையக இணைப்பாளர் ஜெ. பத்மநாதன் கிருபாகரன், வாழ்வியல்
அமைப்பின் உறுப்பினர் இராயப்பு அந்தோனிப்பிள்ளை, ரா. ரூபரத்தனகுமார் லிந்துலை
பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.&nbsp;&nbsp;</p><p></p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-29T07:13:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இன்று நள்ளிரவு முதல் சிற்றுண்டிகளின் விலைகளில் மாற்றம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/short-eats-prices-change-from-today-midnight-1787983025"></link>
            <id>https://ibctamil.com/article/short-eats-prices-change-from-today-midnight-1787983025</id>
            <summary type="text">இலங்கையில் இன்று (29) நள்ளிரவு முதல் சிற்றுண்டிகளின் விலை 5 ரூபாயால் அதிகரிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.குறித்த விடயத்தினை அகில இலங்கை உணவக உ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் இன்று (29) நள்ளிரவு முதல் சிற்றுண்டிகளின் விலை 5 ரூபாயால் அதிகரிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p>குறித்த விடயத்தினை அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. </p><p>அதன்படி, ரொட்டி, பரோட்டா மற்றும் சிற்றுண்டி வகைகள் உள்ளிட்ட கோதுமை மா சார்ந்த உணவுப் பொருட்களின் விலைகள் இவ்வாறு அதிகரிக்கப்படவுள்ளன.</p><p></p><h2>புதிய விலைகள்&nbsp;</h2><p>இன்று (29) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் கோதுமை மாவின் விலை 17 ரூபாயினால் அதிகரித்துள்ளதைக் கருத்திற்கொண்டு&nbsp;இந்த விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்படுவதாக சங்கம் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cf62e2eb-94a6-434b-accc-b0b4f6283ed3/26-6a92799e2abc2.webp' /></p><p> </p><p>இதன்படி, இன்று நள்ளிரவு முதல் குறித்த உணவுப் பொருட்களின் புதிய விலைகள் நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p>&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-29T07:11:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பரில் போராட்டம் - நகரபிதா பகிரங்க அழைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/protest-in-september-call-for-public-1787982827"></link>
            <id>https://tamilwin.com/article/protest-in-september-call-for-public-1787982827</id>
            <summary type="text">யாழ். பருத்தித்துறை நகரின் வளர்ச்சிக்குத் தடையாக உள்ள இராணுவ முகாம்களை அகற்ற
வலியுறுத்தி, எதிர்வரும் செப்டெம்பர் 11ஆம் திகதி பருத்தித்துறையில் நகரசபை...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ். பருத்தித்துறை நகரின் வளர்ச்சிக்குத் தடையாக உள்ள இராணுவ முகாம்களை அகற்ற
வலியுறுத்தி, எதிர்வரும் செப்டெம்பர் 11ஆம் திகதி பருத்தித்துறையில் நகரசபையின் ஏற்பாட்டில் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று நடத்தப்படவுள்ளது.</p><p>
இந்தப் போராட்டத்தில் அனைத்து தரப்பினரும் பங்கேற்குமாறு பருத்தித்துறை நகரபிதா வின்சென் டீ போல் டக்ளஸ்
போல்&nbsp;நேற்றைய தினம் (28.08.2026) பருத்தித்துறை நகரசபையின் 15ஆவது அமர்வின் போது&nbsp;பகிரங்கமாக அழைப்பு விடுத்துள்ளார்.</p><h2>கவனவீர்ப்புப் போராட்டம்&nbsp;</h2><p>அவர் மேலும் தெரிவிக்கையில், பருத்தித்துறை துறைமுக சந்தியிலிருந்து செப்டெம்பர் 1ஆம் திகதி காலை 8.30 மணிக்கு ஆரம்பமாகும் இந்த பேரணி, பருத்தித்துறை
பிரதேச செயலகம் வரை சென்று நிறைவடையும்.</p><p>
பருத்தித்துறை நகரத்தின் அபிவிருத்திக்குத் தடையாகவும், நகரத்தின் புராதன
சின்னங்கள் மற்றும் இடங்களை ஆக்கிரமித்தும் உள்ள இராணுவ முகாம்களை உடனடியாக
அகற்றக் கோரி இந்த இரண்டாவது கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/675ac03c-6686-4d92-bb75-b6fca139aabc/26-6a92760a24536.webp' /></p><p>

அரசியல் மற்றும் கட்சி வேறுபாடுகளைக் கடந்து அனைத்து அரசியல் தரப்பினர்,
வர்த்தகர்கள், கடற்றொழில் சங்கங்கள்
மற்றும் சமூக மட்ட அமைப்புகள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டு ஆதரவு
வழங்குமாறு&nbsp; கேட்டுக்கொண்டுள்ளார்.
</p><p>
இந்தப் போராட்டத்துக்கு பருத்தித்துறை நகரசபையில் அங்கம் வகிக்கும் தேசிய
மக்கள் சக்தி உறுப்பினர்களை தவிர, தமிழ் தேசிய மக்கள் முன்னணி, தமிழரசுக்
கட்சி, ஜனநாயக தேசியக் கூட்டணி, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி மற்றும்
சுயேச்சைக் குழு (ஊசி) ஆகியவை முழுமையான ஆதரவை தெரிவித்துள்ளமை
குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-29T07:10:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[3 நாள் முடிவில் யஷ் Toxic படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/3-days-yash-toxic-box-office-details-1787976489"></link>
            <id>https://cineulagam.com/article/3-days-yash-toxic-box-office-details-1787976489</id>
            <summary type="text">டாக்ஸிக்கேஜிஎப் படத்திற்கு பிறகு இந்திய சினிமா கொண்டாடும் பிரபல நடிகராக வளர்ந்துவிட்டார் கன்னட சினிமா நடிகர் யஷ். அவரது நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 26ம் தே...</summary>
            <content type="html"><![CDATA[<h2>டாக்ஸிக்</h2><p>கேஜிஎப் படத்திற்கு பிறகு இந்திய சினிமா கொண்டாடும் பிரபல நடிகராக வளர்ந்துவிட்டார் கன்னட சினிமா நடிகர் யஷ். </p><p>அவரது நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 26ம் தேதி டாக்ஸிக் என்ற திரைப்படம் வெளியாகி இருந்தது. கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யஷ், நயன்தாரா, கியாரா அத்வானி மற்றும் பலர் நடிப்பில் வெளியாக இப்படத்திற்கு மக்கள் நல்ல ஆதரவு கொடுத்து வருகிறார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cf31171a-0860-4bf9-8426-ae958bb74bc2/26-6a925ccd03d65.webp' /></p><p>
கேங்ஸ்டர் டிராமா கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படம் பெரிய எதிர்ப்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகி இருந்தது, ஆனால் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. குறிப்பாக, படத்தின் ஆக்‌ஷன் காட்சிகள் மற்றும் யாஷின் நடிப்பு கவனம் பெற்றுள்ளன.</p><h2>பாக்ஸ் ஆபிஸ்</h2><p>
முதல் நாளிலேயே உலகளவில் ரூ. 140.75 கோடி வசூலித்துள்ள இப்படம் நாளுக்கு நாள் நல்ல வசூல் வேட்டை செய்கிறது. தற்போது 3 நாள் முடிவில் இப்படம் ரூ. 230 கோடி வரை வசூல் வேட்டை நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/8k-Kqg5UUq8" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-08-29T07:08:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வரலாற்று பிரசித்தி பெற்ற செல்வ சந்நிதி ஆலய சூழலில் இப்படி ஒரு சம்பவம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/ice-blocks-vicinity-selva-sannidhi-temple-1787987355"></link>
            <id>https://jvpnews.com/article/ice-blocks-vicinity-selva-sannidhi-temple-1787987355</id>
            <summary type="text">வரலாற்று பிரசித்தி பெற்ற தொண்டமானாறு செல்வ சந்நிதி ஆலய சூழலில் உள்ள தாக சாந்தி நிலையத்தில் சுகாதார முறையற்ற நிலையில் காணப்பட்ட 12 பரல் ஐஸ் கட்டிகளை கை...</summary>
            <content type="html"><![CDATA[<p>வரலாற்று பிரசித்தி பெற்ற தொண்டமானாறு செல்வ சந்நிதி ஆலய சூழலில் உள்ள தாக சாந்தி நிலையத்தில் சுகாதார முறையற்ற நிலையில் காணப்பட்ட 12 பரல் ஐஸ் கட்டிகளை கைப்பற்ற முயன்ற சுகாதார பரிசோதகர்கள் மீது வாகனத்தால் மோத நபர் ஒருவர் முயன்றதாக வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.</p><p>சந்நிதி ஆலய வருடாந்திர மகோற்சவம் நடைபெற்று வரும் நிலையில் நேற்றைய தினம் தீர்த்த உற்சவம் நடைபெற்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ca701e79-0272-45a2-af55-d5934537bf1b/26-6a92859d3fa6b.webp' /></p><p></p><h2>வாகனத்தால் மோதி விபத்து</h2><p>
</p><p>
அதன் போது ஆலய சுற்றுப்புறங்களில் நடத்தப்பட்டு வந்த தாக சாந்தி நிலையங்களில் பொது சுகாதார பரிசோதகர்கள் திடீர் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.</p><p></p><p>
</p><p>
அதன் போது , புலம்பெயர் தமிழர் ஒருவரால் நடத்தப்பட்டு வந்த தாக சாந்தி நிலையத்தில் , காணப்பட்ட 12 பரல் ஐஸ் கட்டிகள் சுகாதாரமற்ற முறையில் காணப்பட்டுள்ளன.</p><p>

அவற்றை கைப்பற்றி அழிக்க முற்பட்ட சுகாதார பரிசோதகர்களை கடுமையான வார்த்தை பிரயோகங்களால் பேசி , அவர்களின் கடமைக்கு இடையூறு விளைவித்ததுடன் , அவர்கள் மீது வாகனத்தால் மோதி விபத்தினை ஏற்படுத்த முற்பட்டுள்ளார்.</p><p></p><p>
</p><p>
இது தொடர்பில் சுகாதர பரிசோதகர்களால் வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.</p><p>

அந்த முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன் , குறித்த நபரை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-08-29T07:06:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஒரே நாளில் ரூ.2,360 குறைந்த தங்க விலை! இன்று சவரன் எவ்வளவு?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/today-aug-29-gold-and-silver-rate-in-chenai-1787985718"></link>
            <id>https://manithan.com/article/today-aug-29-gold-and-silver-rate-in-chenai-1787985718</id>
            <summary type="text">சர்வதேச பொருளாதார சூழல் மற்றும் சந்தையில் நிலவும் ஏற்ற இறக்கங்களின் காரணமாக, ஆகஸ்ட் மாத தொடக்கம் முதலே தங்கம் விலை தொடர்ந்து மாற்றங்களை சந்தித்து வரும...</summary>
            <content type="html"><![CDATA[<p>சர்வதேச பொருளாதார சூழல் மற்றும் சந்தையில் நிலவும் ஏற்ற இறக்கங்களின் காரணமாக, ஆகஸ்ட் மாத தொடக்கம் முதலே தங்கம் விலை தொடர்ந்து மாற்றங்களை சந்தித்து வரும் நிலையில், இன்றைய சந்தை நிலவரம் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.</p><p>குறிப்பாக, கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஒருநாள் உயர்வதும் மறுநாள் குறைவதுமாக நிலையற்ற போக்கில் காணப்பட்டு வருகிறது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/30948e74-16ab-488a-9722-f994d0d946ef/26-6a92829c22823.webp' /></p><p></p><p>
நேற்று (ஆகஸ்ட் 28) ஒரே நாளில் தங்கம் விலை காலை மற்றும் மாலை வேளைகளில் வெவ்வேறு நிலவரத்தில் விற்பனை செய்யப்பட்டது.</p><p> நேற்று காலை 22 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.75 குறைந்து, ஒரு கிராம் ரூ.14,650க்கும், ஒரு சவரன் ரூ.600 குறைந்து ரூ.1,17,200க்கும் விற்பனை செய்யப்பட்டது.</p><p>

இதனைத் தொடர்ந்து நேற்று மாலை தங்கம் விலையில் மீண்டும் உயர்வு ஏற்பட்டது. அதன்படி, 22 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.150 அதிகரித்து ஒரு கிராம் ரூ.14,800க்கும், சவரனுக்கு ரூ.1,200 அதிகரித்து ஒரு சவரன் ரூ.1,18,400க்கும் விற்பனை செய்யப்பட்டது.</p><h2>இன்றைய நிவலரம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1150b2ed-8c8b-46bd-9113-5d70db683c1c/26-6a92829cd5db5.webp' /></p><p></p><p>

இந்நிலையில், இன்று (ஆகஸ்ட் 29) தங்கம் விலையில் அதிரடி சரிவு ஏற்பட்டுள்ளது. நேற்று மாலை விலையுடன் ஒப்பிடுகையில், 22 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.295 குறைந்துள்ளது. </p><p>இதனால் ஒரு கிராம் 22 காரட் தங்கம் ரூ.14,505க்கும், ஒரு சவரன் ரூ.1,14,840க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.இதன் மூலம் ஒரே நாளில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.2,360 அளவுக்கு குறைந்துள்ளது.</p><p>18 காரட் தங்கத்தின் விலையும் சரிவு
22 காரட் தங்கத்தைப் போலவே 18 காரட் தங்கத்தின் விலையிலும் இன்று கணிசமான சரிவு பதிவாகியுள்ளது. 18 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.295 குறைந்து, ஒரு கிராம் ரூ.12,275க்கும், ஒரு சவரன் ரூ.2,360 குறைந்து ரூ.98,200க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b50c2b67-dd0a-41b4-b576-d86c42a33266/26-6a92829d9e8d9.webp' /></p><p>
</p><p>தங்கத்தைத் தொடர்ந்து வெள்ளி விலையிலும் இன்று சரிவு ஏற்பட்டுள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து, ஒரு கிராம் ரூ.260க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதன்படி ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.2,60,000 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.</p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">&nbsp;</a></td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-29T06:56:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வடக்கு, தெற்கு கடற்பகுதிகளுக்கு எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/warning-for-northern-and-southern-sea-areas-1787986660"></link>
            <id>https://jvpnews.com/article/warning-for-northern-and-southern-sea-areas-1787986660</id>
            <summary type="text">&amp;nbsp; யாழ்ப்பாணம் - காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக புத்தளம் வரையிலும், ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையிலும் உள்ள கடற்பகுதிகளுக்கு வானில...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; யாழ்ப்பாணம் - காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக புத்தளம் வரையிலும், ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையிலும் உள்ள <a href="https://jvpnews.com/article/warning-regarding-strong-winds-1787906084" target="_blank">கடற்பகுதிகளுக்கு வானிலை ஆய்வு திணைக்களம் எச்சரிக்கை</a> விடுத்துள்ளது.</p><p>



குறித்த கடற்பகுதிகளில் மணிக்கு 50 முதல் 60 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதுடன், இதனால் அவ்வப்போது கடல் கொந்தளிப்பாகக் காணப்படும் என வானிலை ஆய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e883e6df-d885-41b7-9dcd-1f6c49cce5db/26-6a9282e5b770d.webp' /></p><p>
</p><p>


மேலும், புத்தளத்திலிருந்து கொழும்பு, காலி மற்றும் மாத்தறை ஊடாக பொத்துவில் வரையிலான கடற்பகுதிகளில் அலைகளின் உயரம் சுமார் 2 முதல் 2.5 மீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
</p><p>


இதனால், கடற்படை மற்றும் மீனவர்கள் உள்ளிட்ட கடற்றொழிலில் ஈடுபடுவோர் அவதானத்துடன் செயற்படுமாறு வானிலை ஆய்வு திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-29T06:54:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரஷ்யா மீதானத் தாக்குதலை மூன்று மடங்காக அதிகரிக்க ஜெலென்ஸ்கி உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/zelenskyy-orders-military-to-1787986365"></link>
            <id>https://news.lankasri.com/article/zelenskyy-orders-military-to-1787986365</id>
            <summary type="text">Zelenskyy orders military to triple daily strikes: ரஷ்யா மீதான தினசரி தாக்குதல்களை மும்மடங்காக்குமாறு ஜெலென்ஸ்கி உத்தரவு.
உக்ரைன் - ரஷ்யா போர் தொடங்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>Zelenskyy orders military to triple daily strikes: ரஷ்யா மீதான தினசரி தாக்குதல்களை மும்மடங்காக்குமாறு ஜெலென்ஸ்கி உத்தரவு.
</p><p>உக்ரைன் - ரஷ்யா போர் தொடங்கி 1,648 நாட்கள் ஆன நிலையில், ராணுவத்திற்கு புதிய உத்தரவுகளை ஜெலென்ஸ்கி பிறப்பித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0d970b98-e3ac-4c01-ac9e-196cdf277b37/26-6a9281bf6886f.webp' /></p><p>
</p><p>ரஷ்யாவுக்கு எதிரான நீண்ட தூர ட்ரோன் தாக்குதல்களை நாளொன்றுக்கு 1,000 ஆக அதிகரிக்குமாறு தனது ராணுவத்திற்கு உத்தரவிட்டுள்ளதாக ஜெகென்ஸ்கி கூறியுள்ளார். </p><p>தற்போது நாளொன்றிற்கு 300 ட்ரோன்கள் என தாக்குதலுக்குப் பயன்படுத்தும் நிலையில், இது மூன்று மடங்காக அதிகரிக்க உள்ளது. உக்ரைன் ஜனாதிபதி வெள்ளிக்கிழமை மாலை ஆற்றிய உரையில், </p><p>இன்னும் அதிகம் செய்யப்பட வேண்டும்: ஒரு உறுதியான இலக்கு உள்ளது, மேலும் இந்தப் பணியை நாங்கள் நிறைவேற்றுவோம் என்று அறிவித்தார்.</p><p> இதனிடையே, தொடர்ச்சியான ட்ரோன் தாக்குதல்களால் முக்கிய சுத்திகரிப்பு நிலையங்கள் தங்கள் செயல்பாடுகளை நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, ஆகஸ்ட் மாத இறுதியில் ரஷ்யாவின் பெட்ரோல் உற்பத்தி உள்நாட்டு நுகர்வு அளவில் சுமார் 70 சதவீதமாகக் குறைந்தது.</p><p></p><p> </p><p>ஜூலை மாத இறுதியில், சில உள்ளூர் அதிகாரிகள் எரிபொருள் விற்பனை மீதான கட்டுப்பாடுகளைத் தளர்த்தவோ அல்லது நீக்கவோ தொடங்கியதால் ஏற்பட்ட ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு, ஆகஸ்ட் மாதத்தில் ரஷ்யப் பிராந்தியங்களில் மீண்டும் பற்றாக்குறை ஏற்பட்டது.</p><p> கடந்த ஒரு வாரத்தில், வாகனங்களுக்கான பெட்ரோலை பெருமளவில் உற்பத்தி செய்யும் பெர்ம், நிஸ்னி நோவ்கோரோட் மற்றும் யாரோஸ்லாவ் ஆகிய இடங்களில் உள்ள ஆலைகள் உட்பட பல முக்கிய சுத்திகரிப்பு நிலையங்கள் மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதல் நடத்தியதில் அவற்றின் செயல்பாடுகள் முடங்கின. </p><p>இந்த நிலையில், வரவிருக்கும் குளிர்காலத்திற்குப் போதுமான அளவு, அதாவது 14.6 பில்லியன் கன மீற்றர் எரிவாயுவை நிலத்தடி சேமிப்பு நிலையங்களில் உக்ரைன் சேமித்து வைத்துள்ளதாக அந்நாட்டின் எரிசக்தித் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-29T06:50:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரவி கருணாநாயக்க வீட்டிற்குச் சென்ற இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/bribery-commission-team-visits-ravi-k-house-1787983969"></link>
            <id>https://ibctamil.com/article/bribery-commission-team-visits-ravi-k-house-1787983969</id>
            <summary type="text">நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்கவின் வீட்டிற்கு இலஞ்ச அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள் குழுவொன்று சென்றுள்ளது. 

நாடாளுமன்ற வீதியில...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்கவின் வீட்டிற்கு இலஞ்ச அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள் குழுவொன்று சென்றுள்ளது. </p><p>

நாடாளுமன்ற வீதியில் அமைந்துள்ள அவரது வீட்டிற்கே இவ்வாறு அதிகாரிகள் குழு சென்றுள்ளது.</p><p>இலஞ்ச அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு ரவி கருணாநாயக்கவிற்கு அறிவிக்கப்பட்டிருந்தது.&nbsp;&nbsp;</p><p>
</p><p></p><h2>குழுவின் அதிகாரிகள்</h2><p>இருப்பினும் அவர் விசாரணைக்கு முன்னிலையாகவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a271ac8e-b1fd-4d28-b607-d6539199ab79/26-6a927ddea40b4.webp' /></p><p>
இதனால் இன்று (29-08-2026) அவ்வாணைக்குழுவின் அதிகாரிகள் குழுவொன்று அவரது வீட்டிற்கு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-29T06:47:17+00:00</updated>
        </entry>
    </feed>
