<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-09-04T23:49:27+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[2026-இல் உலகின் போட்டித்திறன் மிகுந்த பொருளாதாரங்கள் - சிங்கப்பூர் முதலிடம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/singapore-tops-2026-global-competitiveness-ranking-1788564479"></link>
            <id>https://news.lankasri.com/article/singapore-tops-2026-global-competitiveness-ranking-1788564479</id>
            <summary type="text">Singapore tops 2026 global competitiveness ranking: 2026 இல் உலகின் போட்டித்திறன் மிகுந்த பொருளாதாரங்களின் தரவரிசையை இங்கே பார்க்கலாம்.

சிங்கப்பூர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>Singapore tops 2026 global competitiveness ranking: 2026 இல் உலகின் போட்டித்திறன் மிகுந்த பொருளாதாரங்களின் தரவரிசையை இங்கே பார்க்கலாம்.</p><h2>

சிங்கப்பூர்&nbsp;முதலிடம்</h2><p>சிங்கப்பூர், 2026-ஆம் ஆண்டிற்கான உலகின் மிகப் போட்டித்திறன் வாய்ந்த பொருளாதாரமாக (Most Competitive Economy) தேர்வாகியுள்ளது.</p><p>

IMD World Competitiveness Ranking வெளியிட்ட பட்டியலில், சிங்கப்பூர் 100 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/259fa4da-2bc6-4880-9f49-4af2a4662953/26-6a9b560c0ea16.webp' /></p><p>இரண்டாம் இடத்தில் ஹொங்ஹொங் (95.6), மூன்றாம் இடத்தில் சுவிட்சர்லாந்து (95.3), நான்காம் இடத்தில் தைவான் (94.3), ஐந்தாம் இடத்தில் டென்மார்க் (94.1) ஆகியவை உள்ளன. </p><p>

தொடர்ந்து அயர்லாந்து (94.1), ஐக்கிய அரபு அமீரகம் (94.1), நெதர்லாந்து (90.1), ஸ்வீடன் (88.5) அடுத்ததடுத்த இடங்கைப் பிடித்துள்ளன.
</p><p></p><h2>அமெரிக்கா</h2><p>அமெரிக்கா, உலகின் மிகப்பெரிய பொருளாதாரமாக இருந்தாலும், இந்த பட்டியலில் 10-வது இடத்தில் உள்ளது. இது, பொருளாதாரத்தின் அளவும் போட்டித்திறனும் ஒன்றல்ல என்பதை காட்டுகிறது.
</p><p>
முதல் 10 இடங்களில் 5 இடங்களை ஐரோப்பிய நாடுகள் பிடித்துள்ளன. இந்தியா இந்த தரவரிசையில் 44-வது இடத்தையே பிடித்துள்ளது.
</p><p>
IMD, போட்டித்திறனை மதிப்பீடு செய்ய 341 அளவுகோல்கள் பயன்படுத்துகிறது. இதில் பொருளாதார செயல்திறன், அரசின் திறன், வணிக திறன், அடிப்படை வசதிகள் ஆகிய நான்கு முக்கிய தூண்கள் அடங்கும்.
</p><p></p><p>சிங்கப்பூர், 2026-இல் வணிக திறன் (Business Efficiency) பிரிவில் முதலிடத்தைப் பெற்றதால், மொத்தத்தில் மீண்டும் உலகின் முதலிடத்தை கைப்பற்றியுள்ளது.

ஐரோப்பா மற்றும் ஆசியா இணைந்து 10 இடங்களில் 9 இடங்களை பிடித்துள்ளன. காரணம், திறமையான தொழிலாளர்கள், மேம்பட்ட அடிப்படை வசதிகள், சட்டத்தின் நம்பகத்தன்மை, மற்றும் புதுமை (Innovation) ஆகியவை.
</p><p>
இந்த பட்டியலில் வியட்நாம் முதல் முறையாக இடம் பெற்றுள்ளது. ஐக்கிய அரபு அமீரகம் (UAE) 7-வது இடத்தில், சவுதி அரேபியா 13-வது இடத்தில் உள்ளது.

இந்த தரவரிசை, பொருளாதார வளர்ச்சி மட்டுமல்லாமல், நிறுவனங்களின் நீண்டகால முதலீடு மற்றும் போட்டித்திறனை உருவாக்கும் சூழ்நிலைகளையும் பிரதிபலிக்கிறது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-04T23:33:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீரிழிவு நோயாளிகளுக்கு நள்ளிரவில் பசி எடுத்தால் என்ன செய்ய வேண்டும்? இதையும் தெரிஞ்சுக்கோங்க]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/what-should-diabetics-eat-if-hungry-at-midnight-1788564264"></link>
            <id>https://jvpnews.com/article/what-should-diabetics-eat-if-hungry-at-midnight-1788564264</id>
            <summary type="text">நீரிழிவு நோயாளிகள் தங்கள் ரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க பெரும்பாலும் இரவில் குறைவாகவே சாப்பிடுவார்கள். ஆனால், இதன் விளைவாக நள்ளிரவில் ப...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">நீரிழிவு நோயாளிகள் தங்கள் ரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க பெரும்பாலும் இரவில் குறைவாகவே சாப்பிடுவார்கள்.</p><p style="text-align: justify; "> ஆனால், இதன் விளைவாக நள்ளிரவில் பசி ஏற்படுவது சகஜம். இந்த நேரத்தில் தவறான உணவை தேர்ந்தெடுத்தால் அல்லது அதிகமாக சாப்பிட்டால், ரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கும் அபாயம் உள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7db96fbe-f91c-4770-98f2-8ba9946bb973/26-6a9b532a18c7d.webp' /></p><h2 style="text-align: justify; ">ரத்த சர்க்கரை&nbsp;</h2><p style="text-align: justify; "> பசியை போக்கி, அதேசமயம் ரத்த சர்க்கரை அளவையும் பாதிக்காத உணவுகளை தேர்ந்தெடுப்பது சவாலானது. 
</p><p style="text-align: justify; ">
 
பாதாம் பருப்பில் குறைந்த கார்போஹைட்ரேட் மற்றும் அதிக நார்ச்சத்துகள் நிறைந்துள்ளன. இது ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைப் பராமரிக்க உதவும். </p><p style="text-align: justify; ">எனவே, நீங்கள் தூங்க செல்வதற்கு முன் ஒரு கைப்பிடி பாதாம் பருப்பை தாராளமாக சாப்பிடலாம். இது வயிறு நிறைந்த உணர்வையும் தரும். அதேசமயம், உங்கள் தூக்கத்தை சீர்குலைக்காமலும் பார்த்துக்கொள்ளும்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9e8439b5-ee4c-4e0f-9ca0-785694e8b3e9/26-6a9b544ece328.webp' /></p><p style="text-align: justify; "> 
தினமும் நள்ளிரவில் பசிக்கிறது என்றால், தூங்க செல்வதற்கு முன் நீங்கள் தாராளமாக வேகவைத்த முட்டையை சாப்பிடலாம்.</p><p style="text-align: justify; "> முட்டையில் கார்போஹைட்ரேட் குறைவாக இருந்தாலும், நல்ல கொழுப்புகள் மற்றும் புரதம் அதிகமாக இருப்பதால், ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">
 
அதேபோல் பாசிப்பயறு சூப் மற்றும் பனீர் போன்றவற்றை எடுத்துக்கொள்ளலாம். பாசிப்பயறு சூப்பில் சிறிதளவு நெய், சீரகம், பெருங்காயம் போன்றவற்றை சேர்த்துக்கொள்ளலாம். </p><p style="text-align: justify; ">சூப்பை வெதுவெதுப்பான சூட்டில் குடிக்க வேண்டும். 

 
மேற்கண்ட உணவுகள் நீரிழிவு நோயாளிகளின் நள்ளிரவு பசியை போக்க உதவும்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-04T23:24:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜனநாயகம் சீரழிகிறது..! அரசுக்கு எதிராக சஜித் போர்க்கொடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/country-and-democracy-being-destroyed-government-1788562996"></link>
            <id>https://tamilwin.com/article/country-and-democracy-being-destroyed-government-1788562996</id>
            <summary type="text">பாதாள உலகக் குழுக்களின் துப்பாக்கிச்சூடுகளால் தொடரும் உயிரிழப்புகள்
ஒருபுறமிருக்க, அரசின் நாசகார வேலைகளினால் நாடும், நீதிமன்றமும், ஜனநாயகமும்
சீரழிந...</summary>
            <content type="html"><![CDATA[<p>பாதாள உலகக் குழுக்களின் துப்பாக்கிச்சூடுகளால் தொடரும் உயிரிழப்புகள்
ஒருபுறமிருக்க, அரசின் நாசகார வேலைகளினால் நாடும், நீதிமன்றமும், ஜனநாயகமும்
சீரழிந்து வருகின்றன என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ
தெரிவித்தார்.
</p><p>
அம்பாந்தோட்டை திஸ்ஸமகாராம கொங்வெலான பிரதேசத்தில் விவசாயிகளின் பிரச்சினைகளை
ஆராயும் மக்கள் சந்திப்பில் நேற்று வெள்ளிக்கிழமை கலந்துகொண்டு
உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.</p><h2>22ஆவது திருத்தம்</h2><p>
</p><p>
இந்தக் கூட்டத்தில் அவர் மேலும் உரையாற்றுகையில்,</p><p>

"அரசு 22ஆவது திருத்தத்தைக் கொண்டுவந்து ஜனநாயகம், சுதந்திரமான நீதித்துறை,
சட்டத்தின் ஆட்சி மற்றும் நீதி வழங்கும் செயற்பாடுகளின் மீது பெரும் அடியைக்
கொடுத்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a2b7a26f-28c8-43f6-ae72-2b2a4b274635/26-6a9b4fb0bf875.webp' /></p><p> </p><p>நீதித்துறையின் சுதந்திரத்தில் கைவைத்து அரசு ஜனநாயகத்தை
சீரழித்து வருகின்றது.

பொருளாதாரத்தின் மீது அரசு தொடுத்த தாக்குதலால் வாழ்க்கைச் சுமை மற்றும்
செலவுகள் அதிகரித்து காணப்படுகின்றன.</p><p> மின்சாரக் கட்டணக் குறைப்பு மற்றும்
உலகளாவிய விலைக்கு எரிபொருள் வழங்குவதாகக் கூறிய வாக்குறுதிகள் எவையும்
நிறைவேற்றப்படவில்லை.</p><h2>சஜித் பிரேமதாஸ</h2><p>
</p><p>
தேர்தல் காலத்தில் அஸ்வெசும தொகை அதிகரிக்கப்படும் என்று கூறப்பட்ட போதிலும்,
தற்போது அஸ்வெசும தொகையும் பயனாளர்களின் எண்ணிக்கையும் அரசாங்கத்தினால்
குறைக்கப்பட்டு வருகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2d3bc845-e58e-4d6e-87b7-24f11702ba34/26-6a9b4fb1b5662.webp' /></p><p> </p><p>வறுமையை ஒழிப்பதற்கான காத்திரமான திட்டங்கள்
எதுவும் இவர்களிடம் இல்லை.

விவசாயிகள் விதை மற்றும் உர விலை உயர்வுடன், யானை - மனித மோதல்களுக்கு
மத்தியிலும் உற்பத்தியை மேற்கொண்டாலும் நிலையான விலை கிடைக்கவில்லை. </p><p>150 ரூபா
வாக்குறுதி மீறப்பட்டு, விவசாயிக்கு நெல் ஒரு கிலோவுக்கு 17 ரூபா நட்டம்
ஏற்படுத்தப்பட்டுள்ளது. </p><p>மேலும், நுண், சிறிய மற்றும் நடுத்தர தொழில்முனைவோர்
மீதான வரித் தாக்குதல்கள் மற்றும் பராட்டே சட்டம் காரணமாக இவர்கள் பெரிதும்
பாதிக்கப்பட்டுள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-04T23:18:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[வீழ்ச்சியடையும் ட்ரம்பின் செல்வாக்கு ! ஈரான் போர் தொடர்பில் ஜே.டி. வான்ஸ் வெளியிட்ட அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/conflict-between-us-and-iran-not-a-war-vance-1788562089"></link>
            <id>https://ibctamil.com/article/conflict-between-us-and-iran-not-a-war-vance-1788562089</id>
            <summary type="text">அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான சண்டையை ஒரு போர் என்று குறிப்பிட முடியாது என்றும், இந்த மோதல் எப்போது முடிவடையும் என்பதற்கான குறிப்பிட்ட காலக்கெடுவை ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான சண்டையை ஒரு போர் என்று குறிப்பிட முடியாது என்றும், இந்த மோதல் எப்போது முடிவடையும் என்பதற்கான குறிப்பிட்ட காலக்கெடுவை வழங்க முடியாது என்றும் அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் தெரிவித்துள்ளார்.</p><p>

இடைக்காலத் தேர்தல்கள் நெருங்கி வரும் வேளையில், இந்த மோதல் ஏழாவது மாதத்தை எட்டியுள்ளதால் ட்ரம்ப் நிர்வாகம் எதிர்கொள்ளும் சவால்களை குறைக்க அவர் இவ்வாறான கருத்துக்களை தெரிவிப்பதாக சர்வதேச வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.</p><p>

அமைதியான சூழலுக்குப் பிறகு இந்த வாரம் இரு நாடுகளுக்கும் இடையே மீண்டும் தாக்குதல்கள் தொடங்கியுள்ளன. தற்போதைக்கு அமைதியை ஏற்படுத்த எவ்வித இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளும் நடைபெறவில்லை.</p><p></p><h2>ட்ரம்பின் செல்வாக்கு</h2><p>
</p><p>
இந்தப் போர் காரணமாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் செல்வாக்கு சரிந்துள்ளதுடன், எரிபொருள் விலையும் உயர்ந்துள்ளதால் வரும் நவம்பர் தேர்தலில் குடியரசுக் கட்சிக்கு இது பெரும் சவாலாக மாறியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/88fe2280-08ad-4a69-976f-344a2e85c729/26-6a9b4e478e4a2.webp' /></p><p><i>Image Credit: CNN</i></p><p>
</p><p>இந்நிலையில், வெள்ளை மாளிகையில் பேசிய வான்ஸ், ஹோர்முஸ் நீரிணை வழியாக எண்ணெய் போக்குவரத்தை சீராக வைத்திருக்க அமெரிக்கா எடுக்கும் முயற்சிகளைப் பாராட்டினார்.</p><p> மேலும், அமெரிக்கா தனது முக்கிய ராணுவ நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டுவந்துவிட்டதால் இதை 'போர்' என்று கூற முடியாது என்றும், தற்போது தீவிரமான தாக்குதல்கள் எதுவும் நடைபெறவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><h2>மோதலின் முடிவு&nbsp;</h2><p>
</p><p>
இருப்பினும், மத்திய கிழக்கில் அமெரிக்கா 50,000-க்கும் மேற்பட்ட வீரர்களையும், 20 போர்க்கப்பல்களையும் நிலைநிறுத்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/90cfff47-7ead-4137-8527-5bb63f49902a/26-6a9b4e4850b49.webp' /></p><p><i>Image Credit:&nbsp;defensenews</i></p><p> 

வர்த்தகக் கப்பல்கள் மீதான தாக்குதலை ஈரான் நிறுத்தும் வரை இராஜதந்திர பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பில்லை என்று கூறிய வான்ஸ், இந்த மோதல் எப்போது முற்றிலுமாக முடிவுக்கு வரும் என்பதைக் கணிக்க முடியாது என்றும் தெளிவுபடுத்தியுள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-04T23:13:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[கைதுக்கு முன் நாமலுக்கு தெரிந்த இரகசியம் - 12ஆம் திகதியின் சூழ்ச்சிகள் அம்பலம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-rajapaksa-arrested-by-bribery-commission-1788554374"></link>
            <id>https://tamilwin.com/article/namal-rajapaksa-arrested-by-bribery-commission-1788554374</id>
            <summary type="text">ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச,லஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச,லஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.</p><p>

 2013-ஆம் ஆண்டில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் 'ஏர்பஸ்' (Airbus) விமானக் கொள்முதல் தொடர்பான ஊழல் மற்றும் 8 லட்சம் டொலர் லஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் அடிப்படையில் இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p><p>

செப்டம்பர் 12-ஆம் திகதி அநுராதபுரத்தில் நடைபெறவிருந்த பெரிய பேரணிக்கு முன்னதாகவே இந்தக் கைது நடந்திருப்பது அரசியல் வட்டாரங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
</p><p>
 இது போராட்டத்தை முடக்கும் முயற்சியாக ஆதரவாளர்களால் பார்க்கப்படுகிறது.
</p><p>
ஆனால் ராஜபக்ச தரப்பு போராட்டத்தை ஒரு திசைதிருப்பல் யுக்தியாகவே பயன்படுத்தியதாக விமர்சகர்கள் கூறுகின்றனர்.
</p><p>
சிறைச்சாலைக்கு வெளியே திரண்டிருந்த ஆதரவாளர்கள், ராஜபக்ச குடும்பத்தைப் பாதுகாப்பாளர்களாகச் சித்தரித்து உணர்ச்சிகரமாகத் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டனர்.</p><p>

ஊழல் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் நாமல் ராஜபக்ச உள்ளிட்டவர்களின் அரசியல் எதிர்காலம் என்னவாகும் என்பது குறித்த கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன. </p><p>

இந்த விடயங்கள் தொடர்பில் பேசுகின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி..</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/gYu0CmEyp28" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-04T23:10:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜெயிலர் நடிகை மிர்னா மேனன் சேலையில் அழகிய போட்டோஷூட்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/mirnaa-menon-cute-in-saree-1788562235"></link>
            <id>https://cineulagam.com/article/mirnaa-menon-cute-in-saree-1788562235</id>
            <summary type="text">நடிகை மிர்னா மேனன் ஜெயிலர் படத்தில் ரஜினி மருமகளாக நடித்து இருந்தவர். கேரளாவை சேர்ந்த அவர் தற்போது பிரபல நடிகையாக வளர்ந்து வருகிறார்.

மிர்னா மேனன் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நடிகை மிர்னா மேனன் ஜெயிலர் படத்தில் ரஜினி மருமகளாக நடித்து இருந்தவர். கேரளாவை சேர்ந்த அவர் தற்போது பிரபல நடிகையாக வளர்ந்து வருகிறார்.
</p><p>
மிர்னா மேனன் தற்போது அழகிய சேலையில் போஸ் கொடுத்து இருக்கும் புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.</p><p>இந்த போட்டோக்களுக்கு 50 ஆயிரம் லைக்குகளுக்கும் மேல் குவிந்து இருக்கிறது.</p>]]></content>
            <updated>2026-09-04T22:50:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[சேலையில் அழகாக வந்த ஐஸ்வர்யா லட்சுமி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/aishwarya-lekshmi-sizzling-in-saree-1788562126"></link>
            <id>https://cineulagam.com/article/aishwarya-lekshmi-sizzling-in-saree-1788562126</id>
            <summary type="text">சேலையில் அழகாக வந்த ஐஸ்வர்யா லட்சுமி&amp;nbsp;</summary>
            <content type="html"><![CDATA[<p>சேலையில் அழகாக வந்த ஐஸ்வர்யா லட்சுமி&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-04T22:48:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிக் பாஸ் பூர்ணிமா ரவியா இப்படி.. வேற லெவல் ஹாட் போட்டோஷூட்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/bigg-boss-poornima-ravi-sizzling-glamour-1788561951"></link>
            <id>https://cineulagam.com/article/bigg-boss-poornima-ravi-sizzling-glamour-1788561951</id>
            <summary type="text">பிக் பாஸ் பூர்ணிமா ரவியா இப்படி.. வேற லெவல் ஹாட் போட்டோஷூட்&amp;nbsp;...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிக் பாஸ் பூர்ணிமா ரவியா இப்படி.. வேற லெவல் ஹாட் போட்டோஷூட்&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-04T22:45:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[நயன்தாரா வீட்டில் பி.வி சிந்து.. ஒரே சந்திப்பில் அவர்களை பற்றிய பார்வையே மாறிவிட்டது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/pv-sindhu-dinner-at-nayanthara-home-1788561578"></link>
            <id>https://cineulagam.com/article/pv-sindhu-dinner-at-nayanthara-home-1788561578</id>
            <summary type="text">நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவை தாண்டி தெலுங்கு, ஹிந்தி என மற்ற மொழிகளிலும் நடித்து வருகிறார். மற்ற மொழி பிரபலங்களும் அவருடன் நட்புடன் இருந்து வருகின்றன...</summary>
            <content type="html"><![CDATA[<p>நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவை தாண்டி தெலுங்கு, ஹிந்தி என மற்ற மொழிகளிலும் நடித்து வருகிறார். மற்ற மொழி பிரபலங்களும் அவருடன் நட்புடன் இருந்து வருகின்றனர்.</p><p>அப்படி பிரபல பாட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து தற்போது நயன்தாராவின் வீட்டுக்கு வந்திருக்கிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dfb32bf8-7e2a-46c6-93b0-85a10fda4bd1/26-6a9b48ac3a59c.webp' /></p><h2>நெகிழ்ச்சியான பதிவு </h2><p>
நயன்தாரா வீட்டுக்கு வந்தது பற்றி பதிவிட்ட பிவி சிந்து, "அழகான மாலை. அருமையான உணவு. மனம் திறந்த உரையாடல்களும் முடிவில்லாத சிரிப்பும்.
</p><p>ஒரே ஒரு டின்னர் அவர்களை பற்றிய பார்வையே மாற்றிவிட்டது. நண்பர்களாக உள்ளே வந்து, வாழ்க்கை, அன்பு என அனைத்தும் பேசி, போகும்போது ஒருவரை ஒருவர் நீண்ட காலம் அறிந்தது போல செல்வீர்கள்.
</p><p>சென்னை எனக்கு வீடு போல. இந்த நாளுக்கு பின், எனக்கு இன்னொரு சிறிய குடும்பம் இங்கே காத்திருக்கிறது. விக்கி மற்றும் நயன், இருவரும் மிக அன்பானவர்கள்.

இவ்வாறு பிவி சிந்து பதிவிட்டு இருக்கிறார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-04T22:39:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[உக்ரைனிய பாதுகாப்பு தலைமையகத்தையே தாக்கிய ரஷ்யா! ஜெலென்ஸ்கியின் அதிரடி அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/russian-drone-attack-on-ukrainian-sbu-headquarters-1788560045"></link>
            <id>https://ibctamil.com/article/russian-drone-attack-on-ukrainian-sbu-headquarters-1788560045</id>
            <summary type="text">
உக்ரைன் தலைநகர் கீவ்வில் உள்ள உக்ரைனிய பாதுகாப்பு சேவையின் (SBU) தலைமையகத்தின் மீது ரஷ்ய ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கி...</summary>
            <content type="html"><![CDATA[<p>
உக்ரைன் தலைநகர் கீவ்வில் உள்ள உக்ரைனிய பாதுகாப்பு சேவையின் (SBU) தலைமையகத்தின் மீது ரஷ்ய ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
</p><p>
உக்ரைன் மீதான வான்வழித் தாக்குதல்களை ரஷ்யா தீவிரப்படுத்தியுள்ள நிலையில், உக்ரைனில் இலக்கு வைக்கப்பட்ட மிக உயர்மட்ட மையங்களில் ஒன்றாக இது கருதப்படுகிறது. </p><p>இந்தச் சம்பவத்தில் சுமார் 12 பேர் காயமடைந்துள்ளதாக நகரின் மேயர் தெரிவித்துள்ளார்.</p><p>&nbsp;</p><h2>தகுந்த பதிலடி &nbsp;</h2><p>
</p><p>
தலைநகரை நோக்கிய ரஷ்யாவின் வான்வழித் தாக்குதல்கள் தொடர்ந்து 10 நாட்களாக நீடித்து வரும் நிலையில், இந்தத் தாக்குதலை போரின் பாரிய தீவிரமடைதல் என்று கூறியுள்ள உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி இதற்குப் பதிலடி கொடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d7782a10-34e4-4e8c-b6be-89f49248cd14/26-6a9b47089533f.webp' /></p><p><i>Image Credit: rollingstone</i></p><p>
</p><p>
அதன்போது, “இதற்கு தகுந்த, உறுதியான மற்றும் சாத்தியமான இடங்களில் இந்தத் தாக்குதலுக்கு நிகரான பதிலடி கொடுக்க உத்தரவிட்டுள்ளேன்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>

மேலும், “ரஷ்ய தாக்குதல்களுக்கு நாம் அளிக்கப்போகும் தீவிர பதிலடிக்கான ஆயத்தங்கள் குறித்து (SBU) தலைவர் ஒலெக்சாண்டர் போக்லாட் அறிக்கை அளித்துள்ளார்” எனவும் ஜெலென்ஸ்கி கூறியுள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-04T22:32:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாமல் கைது அரசின் இயலாமையையே காட்டுகின்றது : முஜிபுர் ரஹ்மான் விமர்சனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-arrest-exposes-government-s-incompetence-1788558205"></link>
            <id>https://tamilwin.com/article/namal-arrest-exposes-government-s-incompetence-1788558205</id>
            <summary type="text">நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழு கைது
செய்ததன் மூலம், அரசு தனது இயலாமையை மறைக்க முற்படுகின்றது என்று ஐக்கிய
மக்கள...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழு கைது
செய்ததன் மூலம், அரசு தனது இயலாமையை மறைக்க முற்படுகின்றது என்று ஐக்கிய
மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.
</p><p>
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் குறிப்பிடுகையில்,</p><h2>நாமல் கைது</h2><p>
</p><p>
"யார் தவறு செய்திருந்தாலும் அது குறித்து விசாரணை நடத்திச் சட்டரீதியாக
நடவடிக்கை எடுப்பதற்கு நாங்கள் ஒருபோதும் எதிரானவர்கள் அல்லர்.</p><p>

அரசுக்கு எதிராகச் செயற்படுபவர்கள் மீது மட்டுமே இலஞ்ச, ஊழல் விசாரணை
ஆணைக்குழு தொடர்ச்சியாக விசாரணைகளை நடத்தி கைது நடவடிக்கைகளில் ஈடுபட்டு
வருகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7cf93668-0831-4b1e-b192-aab4bce1ee44/26-6a9b3cfad4efc.webp' /></p><p> </p><p>மாறாக, துறைமுகத்தில் இருந்து 300 க்கும் மேற்பட்ட கொள்கலன்கள்
விடுவிக்கப்பட்டமை மற்றும் தரம் குறைந்த நிலக்கரி இறக்குமதி போன்ற அரசாங்க
தரப்பினர் மீதான முறப்பாடுகள் குறித்து எந்த விசாரணையும் இடம்பெறுவதில்லை.</p><h2>முஜிபுர் ரஹ்மான் விமர்சனம்</h2><p>
</p><p>
அடுத்த வாரம் அநுராதபுரத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியினர் மக்கள்
கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ள நிலையில், நாமல் ராஜபக்சவின் இந்தைக் கைது
அந்தக் கூட்டத்துக்குப் போதுமான இலவசப் பிரசாரத்தையே வழங்கி இருக்கின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/016f8683-a592-41ee-9e3e-b9c433e214a4/26-6a9b3cfbad437.webp' /></p><p>

மக்களுக்குச் செய்ய வேண்டிய பல முக்கியமான விடயங்களை மறந்துவிட்டு,
எதிர்க்கட்சியினரைக் கைது செய்து சிறையில் அடைப்பதற்கே அரசு முன்னுரிமை
அளித்து வருகின்றது. இதன் மூலம் தனது இயலாமையை மறைக்கவே அரசு
முயற்சிக்கின்றது என குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-04T22:25:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாங்கள் தாக்குதல் நடத்தமாட்டோம் - ரஷ்யாவுடன் தற்காலிக போர்நிறுத்தத்தை முன்மொழிந்த ஜெலென்ஸ்கி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/zelensky-proposes-ceasefire-us-envoys-visit-1788555596"></link>
            <id>https://news.lankasri.com/article/zelensky-proposes-ceasefire-us-envoys-visit-1788555596</id>
            <summary type="text">Zelensky proposes ceasefire amid US envoys visit: ரஷ்யாவுடன் போர் நிறுத்தம் செய்ய ஜெலென்ஸ்கி முன்மொழிந்துள்ளார்.தற்காலிக&amp;nbsp;போர்நிறுத்தம்உக்ரைன் ஜனா...</summary>
            <content type="html"><![CDATA[<p>Zelensky proposes ceasefire amid US envoys visit: ரஷ்யாவுடன் போர் நிறுத்தம் செய்ய ஜெலென்ஸ்கி முன்மொழிந்துள்ளார்.</p><h2>தற்காலிக&nbsp;போர்நிறுத்தம்</h2><p>உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, ரஷ்யாவுடன் தற்காலிக போர்நிறுத்த ஒப்பந்தம் (Ceasefire) செய்ய முன்மொழிந்துள்ளார்.
</p><p>
காரணம், அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்பின் தூதர்கள் ஜாரெட் குஷ்னர் மற்றும் ஸ்டீவ் விட்காஃப் வார இறுதியில் ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் செல்ல உள்ளனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/79b8dc65-1b9c-4d4e-b64a-875783765bb5/26-6a9b31cf11139.webp' /></p><p>ஜெலென்ஸ்கி, “அவர்களின் பயணத்தின் போது எங்கள் பக்கம் வான்வழி தாக்குதல் இருக்காது. அதேபோல் ரஷ்யாவும் தாக்குதலை நிறுத்த வேண்டும். இதனால் பேச்சுவார்த்தைகள் நடைபெற வழி ஏற்படும்” என்று தெரிவித்துள்ளார்.</p><p>

ரஷ்யா, உக்ரைன் உளவுத்துறை தலைமையகத்தை குறிவைத்து நடத்திய தாக்குதலுக்குப் பிறகு இந்த அறிவிப்பு வந்தது. அந்த தாக்குதல், உளவுத்துறை தலைவரின் அலுவலகத்தை நேரடியாக குறிவைத்ததாக ஜெலன்ஸ்கி கூறினார்.
</p><p></p><p>அமெரிக்க தூதர்கள், மாஸ்கோவில் சனிக்கிழமையும், கீவ் நகரில் ஞாயிற்றுக்கிழமையும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். இது, ரஷ்யா-உக்ரைன் போருக்கு முடிவு காணும் முயற்சியாகக் கருதப்படுகிறது.
</p><p>
ஜெலென்ஸ்கி, “நாங்கள் ரஷ்யாவுக்காக அல்ல, தூதர்களின் பாதுகாப்புக்காக கவலைப்படுகிறோம். இந்த போரை முடிவுக்கு கொண்டுவர உண்மையான வாய்ப்புகள் தேவை” என்று குறிப்பிட்டார்.
</p><p></p><p>கடந்த சில நாட்களாக ரஷ்யா, கீவ் மற்றும் பிற நகரங்களில் பகல் நேர தாக்குதல்களை அதிகரித்துள்ளது. ஓடெசா பகுதியில் நடந்த தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார்; ஐந்து பேர் காயமடைந்தனர். ட்னிப்ரோவில் நடந்த தாக்குதலில் இரண்டு பொலிஸ் அதிகாரிகள் உயிரிழந்தனர்.
</p><p>
இந்த சூழ்நிலையில், அமெரிக்க தூதர்களின் பயணம், போருக்கு முடிவு காணும் முக்கிய அரசியல் முயற்சி எனக் கருதப்படுகிறது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-04T22:24:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தேயிலைத் தோட்டத்தில் பெண் தொழிலாளிக்கு சிறுத்தையால் நேர்ந்த கதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/leopard-attacks-woman-tea-worker-1788560663"></link>
            <id>https://jvpnews.com/article/leopard-attacks-woman-tea-worker-1788560663</id>
            <summary type="text">தேயிலைத் தோட்டத்தில் கொழுந்து கொய்து கொண்டிருந்த பெண் தொழிலாளியொருவர், சிறுத்தை தாக்குதலுக்கு இலக்காகி, காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">தேயிலைத் தோட்டத்தில் கொழுந்து கொய்து கொண்டிருந்த பெண் தொழிலாளியொருவர், சிறுத்தை தாக்குதலுக்கு இலக்காகி, காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p><p style="text-align: justify; "> 

பொகவந்தலாவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெரேசியா தோட்டத்திலேயே வெள்ளிக்கிழமை (04) இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/08b1480c-f8b3-46bd-8501-9714ef8a90bc/26-6a9b4518cec6b.webp' /></p><h2 style="text-align: justify; ">மேலதிக சிகிச்சை</h2><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
சிறுத்தை தாக்கியதில் காயமடைந்த பெண் தொழிலாளி, பொகவந்தலாவை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பிறகு, மேலதிக சிகிச்சைக்காக கிளங்கன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். </p><p style="text-align: justify; ">

குறித்த பெண் தொழிலாளி கொழுந்து கொய்துகொண்டிருக்கையில் புதருக்குள் இருந்து திடீரென பாய்ந்த பெரிய அளவிலான சிறுத்தை ஒன்று அப்பெண்ணின் கழுத்து மற்றும் கைப் பகுதியில் தாக்கியுள்ளது. 

</p><p style="text-align: justify; ">சிறுத்தையின் தாக்குதலால் அப்பெண் நிலத்தில் விழுந்த நிலையில், அருகிலிருந்த ஏனைய தோட்டத் தொழிலாளர்கள் கூச்சலிட்டதை அடுத்து சிறுத்தை அங்கிருந்து தப்பி ஓடியுள்ளது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
தோட்டத் தொழிலாளர்கள் வளர்ப்பு நாய்களைத் தேயிலைத் தோட்டங்களுக்கு அழைத்துச் செல்வதால், அந்நாய்களை இரையாக்கிக் கொள்ளவே சிறுத்தைகள் அப்பகுதிக்கு வருகின்றன என வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.</p><p style="text-align: justify; ">

நாய்களை வேட்டையாட முயலும் போது ஏற்படும் தடைகள் காரணமாகவே, அருகில் இருக்கும் மனிதர்கள் மீது சிறுத்தைகள் தாக்குதல் நடத்திவிட்டுத் தப்பிச் செல்வதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-04T22:24:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாள அனர்த்தம் ; 9 நாட்களின் பின் மண்ணுக்குள் இருந்து உயிருடன் மீட்கப்பட்ட இருவர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/two-rescued-alive-after-9-day-burial-struggle-1788559659"></link>
            <id>https://canadamirror.com/article/two-rescued-alive-after-9-day-burial-struggle-1788559659</id>
            <summary type="text">நேபாளத்தில் பனிப்பாறை மற்றும் சேறு சரிவு ஏற்பட்டு 9 நாட்களுக்குப் பிறகு, மேல் திரிசூலி 3A நீர்மின் நிலையச் சுரங்கப்பாதையில் சிக்கியிருந்த (சஞ்சய் சா )...</summary>
            <content type="html"><![CDATA[<p>நேபாளத்தில் பனிப்பாறை மற்றும் சேறு சரிவு ஏற்பட்டு 9 நாட்களுக்குப் பிறகு, மேல் திரிசூலி 3A நீர்மின் நிலையச் சுரங்கப்பாதையில் சிக்கியிருந்த (சஞ்சய் சா )மற்றும் (கபீர் மகர்ஜன் )ஆகிய இரண்டு தொழிலாளர்கள் இன்று (04) உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.
</p><p>
சுரங்கப்பாதைக்குள் இருந்து சத்தம் கேட்டதை அடுத்து, இராணுவம், காவல்துறை மற்றும் வெளிநாட்டு நிபுணர்களின் உதவியுடன் இந்தப் பிரதான மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2956721c-7e28-4168-8ad8-bc40cb51cfb2/26-6a9b412ca5266.webp' /></p><h2><span style="font-size: 14px;">மீட்கப்பட்ட இருவரும் தலைநகர் காத்மண்டுவில் உள்ள இராணுவ மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவர் தெரிவித்துள்ளனர்.</span></h2><p>
அத்துடன் ஆகஸ்ட் 26 அன்று நேரிட்ட இந்தப் பேரிடரால் 1,200-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதுடன், நீர்மின் திட்டச் சுரங்கப்பாதைகளில் குறைந்தது 900 பேர் வரை சிக்கியிருக்கலாம் என்று அனுமானிக்கப்படுவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p><br></p>]]></content>
            <updated>2026-09-04T22:07:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[பராக்கிரம சமுத்திரத்தின் நீர்மட்டம் குறைவு; வெளிப்படும் வரலாற்றுச் சின்னம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/low-water-reveals-historic-landmark-1788558769"></link>
            <id>https://jvpnews.com/article/low-water-reveals-historic-landmark-1788558769</id>
            <summary type="text">பொலன்னறுவை பராக்கிரம சமுத்திரத்தின் நீர் கொள்ளளவு 66,000 ஏக்கர் அடியாகக் குறைந்துள்ளதை அடுத்து, வரலாற்றுச் சிறப்புமிக்க சீதா மாளிகை மீண்டும் வெளிப்பட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொலன்னறுவை பராக்கிரம சமுத்திரத்தின் நீர் கொள்ளளவு 66,000 ஏக்கர் அடியாகக் குறைந்துள்ளதை அடுத்து, வரலாற்றுச் சிறப்புமிக்க சீதா மாளிகை மீண்டும் வெளிப்பட்டுள்ளது.
</p><p>
பராக்கிரமபாகு மன்னரால் உஷ்ண காலத்தில் வசிப்பதற்காகப் பயன்படுத்தப்பட்டதாகக் கருதப்படும் இந்த பகுதி, ஆண்டின் பெரும்பகுதி நீரால் சூழப்பட்ட நிலையிலேயே காணப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/62e0e2a9-2b9f-4133-a076-ac6d07ecb0ed/26-6a9b3db2af810.webp' /></p><p>
</p><p>
தற்போது நீர்மட்டம் குறைந்துள்ளதன் காரணமாக சீதா மாளிகையின் பகுதிகள் காட்சியளிக்கத் தொடங்கியுள்ளன.
</p><p>
எனினும், அந்த பகுதி முழுமையாக நீரிலிருந்து வெளிப்படுத்தப்படாததால், அங்கு செல்வதற்கான வாய்ப்பு இப்போதைக்கு இல்லை.</p><p>

சமுத்திரத்தின் நீர்மட்டம் மேலும் குறைவடைந்த பின்னரே உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இந்த தலத்தைப் பார்வையிட முடியும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-04T21:52:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரான் மீது மீண்டும் ஒரு பாரிய தாக்குதல்! ட்ரம்ப் வெளியிட்டுள்ள அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/trump-said-us-hit-iran-pickaxe-mountain-soon-1788550290"></link>
            <id>https://ibctamil.com/article/trump-said-us-hit-iran-pickaxe-mountain-soon-1788550290</id>
            <summary type="text">அமெரிக்கா விரைவில் ஈரானின் &#039;பிக்காக்ஸ் மலை&#039; மீது தாக்குதல் நடத்தக்கூடும் என்று வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்கா விரைவில் ஈரானின் 'பிக்காக்ஸ் மலை' மீது தாக்குதல் நடத்தக்கூடும் என்று வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
</p><p>
இந்த பிக்காக்ஸ் மலைப் பகுதி, ஏற்கனவே கடுமையாக சேதமடைந்துள்ள ஈரானின் பிரதான 'நடன்ஸ்' யுரேனியம் செறிவூட்டும் மையத்திற்கு மிக அருகில் அமைந்துள்ளது.</p><p> 

இந்நிலையில், ஈரானின் அணுசக்தி திட்டங்களை முடக்கும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, பிக்காக்ஸ் மலை தளத்தை அமெரிக்கப் படைகள் மிக விரைவில் இலக்கு வைத்து தாக்கக்கூடும் என்று ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.</p><p>&nbsp;</p><h2>முழுமையாக அழிப்பது கடினம்</h2><p>குறித்த தளம், ஈரானின் மிகவும் பலப்படுத்தப்பட்ட மற்றும் பாதுகாக்கப்பட்ட ஒரு ராணுவ மையமாக காணப்படுகிற நிலையில், அது மிகவும் கடினமான கிரனைட் பாறைகளுக்கு அடியில், சுமார் 100 மீட்டருக்கும் அதிகமான ஆழத்தில் வெட்டி உருவாக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/13da8da1-a930-42cf-ae7e-74365868f173/26-6a9b1c94e218d.webp' /></p><p>
இதன்படி, மிகவும் ஆழமான பாறைப் பகுதியில் அமைந்துள்ளதால், சாதாரண குண்டுகளால் அல்லது நிலத்தடி ஊடுருவல் குண்டுகளால் (Bunker Buster Bombs) கூட இந்த மையத்தை முழுமையாக அழிப்பது கடினம் என ராணுவ வல்லுநர்கள் கருதுகின்றனர். </p><p>

இதனால் அப்பகுதியில் உள்ள சுரங்கப் பாதை நுழைவாயில்கள் அல்லது அதன் உள்கட்டமைப்புகளை இலக்கு வைத்து அமெரிக்கா தாக்குதல் நடத்தக்கூடும் எனக் எதிர்பார்க்கப்படுகிறது.&nbsp;&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-04T21:46:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆபிரிக்காவில் திருடபட்டு காணாமல் போகும் பிறப்புறுப்பு ; சமூக ஊடகத்தில் பரவும் தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/information-released-on-social-media-theft-1788545400"></link>
            <id>https://jvpnews.com/article/information-released-on-social-media-theft-1788545400</id>
            <summary type="text">ஆப்பிரிக்காவில் கடந்த ஓராண்டாக ஆண்களின் பிறப்புறுப்பு திருடப்பட்டு காணாமல் போவதாக டிக்டாக் மற்றும் ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் தகவல் பரவியதை தொ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">ஆப்பிரிக்காவில் கடந்த ஓராண்டாக ஆண்களின் பிறப்புறுப்பு திருடப்பட்டு காணாமல் போவதாக டிக்டாக் மற்றும் ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் தகவல் பரவியதை தொடர்ந்து, வன்முறை பரவி சுமார் 80 இற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.</p><p style="text-align: justify; "> 

ஆப்பிரிக்காவில் கடந்த ஏப்ரல் 1 ஆம் திகதி மகாலா என்பவர் அவரது நண்பருடன் கார் விற்பனை தொடர்பாக ஒரு வாடிக்கையாளரை சந்திப்பதற்காக, துண்டுமா என்ற நகரத்திற்கு பயணம் செய்தார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d4ca4b79-5aa1-46eb-986f-2e3cf11bd60e/26-6a9b097a2f23b.webp' /></p><h2 style="text-align: justify; ">பலர் பலி</h2><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

அப்போது அவர்கள் ஒரு மதிய உணவிற்காக ஒரு உணவகத்தில் நின்று கொண்டிருந்தபோது, அங்கு இருந்த ஒருவரின் பிறப்புறுப்புகளை இவர்கள் திருடிவிட்டதாக, உணவகத்தில் இருந்த நபர்கள் கூச்சலிட தொடங்கினர்.</p><p style="text-align: justify; "> 

இதையடுத்து அங்கு திரளான கூட்டம் கூடியதால், அவர்களால் அங்கிருந்து தப்பிச் செல்வது கடினமாக இருந்ததாகவும், பின்னர் அங்கிருந்து தப்பித்து வந்ததாகவும் உயிர்பிழைத்த நபர்கள் தெரிவித்தனர்.</p><p style="text-align: justify; "> 

இந்த வகையிலான வதந்திகள் சமூக ஊடகங்கள் மூலமாக பரப்பப்பட்டு, பொதுமக்களிடம் பீதியை ஏற்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். </p><p style="text-align: justify; ">

இந்த தகவல் ஜாம்பியா, தான்சானியா, மொசாம்பிக், அங்கோலா, மலாவி, புருண்டி, கென்யா உள்ளிட்ட பிற நாடுகளுக்கும் பரவின. </p><p style="text-align: justify; ">

இதன் காரணமாக கடந்த ஆறு வாரங்களில் சுமார் 55 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். மேலும் இந்த தாக்குதலில் ஒரு பொலிஸ் அதிகாரி, அரசு ஊழியர்கள், சுகாதார பணியாளர்கள் உள்ளிட்டவர்களும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். </p><p style="text-align: justify; ">இது போன்ற வதந்திகள் கடந்த 2008 ஆம் ஆண்டும் பரவியதாக பொலிஸார் தெரிவித்தனர். </p><p style="text-align: justify; ">

சமூக ஊடகங்களில் அதிகப்படியான பின்தொடர்பவர்களை வைத்திருப்பவர்கள், மக்களின் கவனத்தையும் அதிகப்படியான பார்வைகளையும் ஈர்ப்பதற்காக இந்த வகையான வதந்திகள் மூலமாக நாட்டில் வன்முறைகளை தூண்டுவதாக கொம்பாசா மாவட்ட ஆணையர் முகமது நூர் கூறியுள்ளார். </p><p style="text-align: justify; ">

மொசாம்பிக் நாட்டு ஜனாதிபதி டேனியல் சாப்போ, வதந்திகள் பரப்பப்படுவதையும் அதன் விளைவாக ஏற்படும் மரணங்களையும் பகிரங்கமாக கண்டித்தார்.</p><p style="text-align: justify; ">

மேலும் உண்மையில் எந்த நபரும் தங்கள் உடல் உறுப்புகளை இழந்துள்ளதாக எந்த வைத்திய ஆதாரமும் கிடைக்கவில்லை என்றும் அவர் கூறினார்</p>]]></content>
            <updated>2026-09-04T21:38:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் தன்னை கருணைக்கொலை செய்யுமாறு கோரிய நகைச்சுவை நடிகை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/ontario-court-denies-toronto-womans-motion-1788537333"></link>
            <id>https://canadamirror.com/article/ontario-court-denies-toronto-womans-motion-1788537333</id>
            <summary type="text">&amp;nbsp;மனநல பாதிப்பை மட்டுமே காரணமாகக் கொண்டு மருத்துவ உதவியுடனான மரணத்தை நாட அனுமதி கோரிய பிரபல நகைச்சுவை நடிகையின் அவசர மனுவை ஒன்டாரியோ உயர் நீதிமன்ற...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;மனநல பாதிப்பை மட்டுமே காரணமாகக் கொண்டு மருத்துவ உதவியுடனான மரணத்தை நாட அனுமதி கோரிய பிரபல நகைச்சுவை நடிகையின் அவசர மனுவை ஒன்டாரியோ உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
</p><p>எனினும், இது தொடர்பாக அவர் தாக்கல் செய்துள்ள அரசியலமைப்புச் சட்டப் போராட்டத்திற்குப் பதிலளிக்குமாறு கனடா அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
</p><p>டொராண்டோவைச் சேர்ந்த முன்னாள் நடிகையும் நகைச்சுவைக் கலைஞருமான கிளாரி புரோஸோ , சிறுவயது முதலே கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக தீவிர மனநலப் பிரச்சினைகளால் அவதிப்பட்டு வருகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/17fafbec-6a8d-4ac7-aaaf-337e6e70589b/26-6a9ae9f6e5020.webp' /></p><p>
</p><p>பல கட்ட சிகிச்சைகளுக்குப் பிறகும் தனக்குக் தீராத மன உளைச்சல் நீடிப்பதால், சட்டம் வழங்கும் கருணைக்கொலைக்குத் தனக்கு அனுமதி அளிக்க வேண்டும் என மே 2026-இல் அவசர மனுத் தாக்கல் செய்திருந்தார்.
</p><p>நீதிபதி கரிசிமா மாதன், புரோஸோவின் வேதனைகள் உண்மையானவை என்பதில் மாற்றுக் கருத்து இல்லை என்றபோதிலும், சட்ட விலக்கு அளிப்பது சமூகத்திலும் அரசின் கொள்கை முடிவுகளிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் எனக் கூறி மனுவை நிராகரித்தார்.
</p><p>அதேசமயம், 2024-ஆம் ஆண்டு புரோஸோ தாக்கல் செய்த அரசியலமைப்புச் சட்டப் போராட்டத்திற்கு பதிலளிக்கும் அடுத்தகட்ட நடவடிக்கைகளை 14 நாட்களுக்குள் தொடங்குமாறு கனடா தலைமை வழக்கறிஞருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
</p><p>கனடாவில் 2021-ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட திருத்தங்களின்படி, தீர்க்க முடியாத நோய் மற்றும் உடல் ஊனம் உள்ளவர்கள் கருணைக்கொலை கோர முடியும்.</p><p> ஆனால், மனநலப் பிரச்சினையை மட்டுமே காரணமாகக் கொண்டு கருணைக்கொலை கோருவதற்கு அரசு தற்காலிகத் தடை விதித்துள்ளது. </p><p>இத்தடையை நீட்டிக்க நாடாளுமன்றக் குழு பரிந்துரை செய்துள்ளது.
நீதிமன்றத் தீர்ப்பு குறித்துப் பேசிய புரோஸோ, "மனநலப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மற்றவர்களைப் போன்ற சம உரிமையோ, உடல் சார்ந்த சுய உரிமையோ இல்லை என்பதை அரசாங்கம் மீண்டும் நிரூபித்துள்ளது. </p><p>நான் தொடர்ந்து வேதனையை அனுபவிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளேன்" என வேதனையுடன் தெரிவித்தார்.
</p><p>அரசியலமைப்புச் உரிமைகளின்படி மனநலப் பாதிப்பு உள்ளவர்களுக்கும் கருணைக்கொலை உரிமை கிடைக்க வேண்டும் என்பதற்கான முதன்மை வழக்கைத் தொடர்ந்து நடத்தப்போவதாக புரோஸோவின் சட்டக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-04T21:37:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[உக்ரைன் பாதுகாப்பு சேவை தலைமையகத்தை தாக்கிய ரஷ்ய ட்ரோன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/russian-drone-hits-ukraine-security-service-hq-1788557824"></link>
            <id>https://canadamirror.com/article/russian-drone-hits-ukraine-security-service-hq-1788557824</id>
            <summary type="text">கீவ் நகரில் உள்ள உக்ரைனின் SBU பாதுகாப்பு சேவைகளின் தலைமையகத்தை ரஷிய ஆளில்லா விமானம் தாக்கியதாக உக்ரைன் ஜனாதிபதி&amp;nbsp; வோலோடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்தா...</summary>
            <content type="html"><![CDATA[<p>கீவ் நகரில் உள்ள உக்ரைனின் SBU பாதுகாப்பு சேவைகளின் தலைமையகத்தை ரஷிய ஆளில்லா விமானம் தாக்கியதாக உக்ரைன் ஜனாதிபதி&nbsp; வோலோடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்தார். </p><p>உக்ரைன்ஸ்கா பிரவ்தா செய்தி நிறுவனம் வெளியிட்ட ஒரு புகைப்படத்தில், கட்டிடத்தின் முன்புறத்தில் உள்ள குறைந்தது இரண்டு ஜன்னல்களில் இருந்து கருப்பு புகை வெளியேறுவது போல தெரிந்தது, அதே நேரத்தில் வெளியே ஒரு தீயணைப்பு வாகனம் நிறுத்தப்பட்டிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a95f0a39-53f9-4b2a-b953-c062f897eb1e/26-6a9b3a0272357.webp' /></p><p>
</p><p>&nbsp;நகர மையத்தின் மீதான தாக்குதலில் குறைந்தது ஐந்து பேர் காயமடைந்தனர் என கீவ் நகர மேயர் விட்டாலி கிளிச்கோ தெரிவித்தார். </p><p>சமீபத்திய வாரங்களில் ரஷியா, உக்ரைன் மீதான தனது பகல் நேர தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளது. </p><p>சில சமயங்களில், வான் பாதுகாப்பு அமைப்புகளால் அழிக்க கடினமான ஜெட் விமானங்களையும் அது பயன்படுத்துகிறது.
</p><p>
தாக்குதலுக்கு பிறகு "SBU-வின் தலைவர் ஒலெக்சாண்டர் போக்லாடுடன்" பேசியதாக ஜெலென்ஸ்கி கூறினார்.</p><p> "துரதிர்ஷ்டவசமாக, கீவ் நகரின் வோலோடிமிர்ஸ்கா தெருவில், புனித சோபியா பேராலயத்திற்கு எதிரே உள்ள SBU-வின் மைய கட்டிடத்தின் மீது ஒரு ரஷிய ஆளில்லா விமானம் தாக்கியுள்ளது," என்று ஜெலென்ஸ்கி டெலிகிராமில் தெரிவித்தார்.</p>]]></content>
            <updated>2026-09-04T21:37:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[மிக விரைவில் தாக்குதல்..! ஈரானின் முக்கிய தளத்தை குறிவைக்கும் ட்ரம்ப்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/trump-says-us-may-hit-iran-pickaxe-mountain-soon-1788557211"></link>
            <id>https://tamilwin.com/article/trump-says-us-may-hit-iran-pickaxe-mountain-soon-1788557211</id>
            <summary type="text">அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரானின் “Pickaxe Mountain” பகுதியை அமெரிக்கா “வெகு விரைவில்” தாக்கக்கூடும் எனத் தெரிவித்துள்ளார்.

வெள்ளை மாளிகை...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரானின் “Pickaxe Mountain” பகுதியை அமெரிக்கா “வெகு விரைவில்” தாக்கக்கூடும் எனத் தெரிவித்துள்ளார்.</p><p>

வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கும்போதே ட்ரம்ப் இதனைத் தெரிவித்துள்ளார்.
</p><h2>குறிவைக்கும் ட்ரம்ப்</h2><p>
ஈரானில், கடுமையாக சேதமடைந்துள்ள Natanz யுரேனியம் செறிவூட்டல் நிலையத்திற்கு அருகில் Pickaxe Mountain அமைந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ab84a2af-636f-4a82-b3f0-4a920bfde6aa/26-6a9b388122cd7.webp' /></p><p>

இந்தப் பகுதி மிகவும் பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு கட்டமைப்பைக் கொண்டதாக தெரிவிக்கப்படுவதுடன், ஆழமாக பூமிக்குள் அமைக்கப்பட்டுள்ள இரண்டு சுரங்கத் தொகுதிகள் அங்கு இருப்பதாக சில அறிக்கைகள் கூறுகின்றன.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-04T21:30:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[புதிய பாதுகாப்பு கட்டமைப்பு! சீனாவின் முன்மொழிவை வரவேற்றது ஈரான்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/iran-welcomes-china-s-proposal-security-framework-1788551301"></link>
            <id>https://ibctamil.com/article/iran-welcomes-china-s-proposal-security-framework-1788551301</id>
            <summary type="text">மத்திய கிழக்கில் ஒரு புதிய பாதுகாப்பு கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்ற சீனாவின் அழைப்பை, ஈரானின் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப் வரவேற்று...</summary>
            <content type="html"><![CDATA[<p>மத்திய கிழக்கில் ஒரு புதிய பாதுகாப்பு கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்ற சீனாவின் அழைப்பை, ஈரானின் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப் வரவேற்றுள்ளார்.
</p><p>
எகிப்துக்கு மேற்கொண்ட அரசுமுறைப் பயணத்தின் போது சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் இந்த முன்மொழிவை முன்வைத்துள்ளார்.
</p><p>
அதன்போது, வெளித் தலையீடுகளை தவிர்க்கும் பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு ஆதரவளிக்க பெய்ஜிங் தயாராக இருப்பதாக அவர் தெரிவித்திருந்தார்.</p><p></p><h2>சீனா காட்டும் முக்கியத்துவம்</h2><p>
</p><p>
அத்தோடு, அத்தகைய ஏற்பாடு ஐ.நா. சாசனம் மற்றும் சர்வதேச சட்டத்தின் அடிப்படையில் அமைய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">China’s emphasis on fostering common security reflects a principle Iran has long championed. <br>Regional countries must be taking their future into their own hands, and true stability can only come through a new security architecture that is homegrown. Iran stands ready.</p>&mdash; محمدباقر قالیباف | MB Ghalibaf (@mb_ghalibaf) <a href="https://x.com/mb_ghalibaf/status/2095918982494859536?ref_src=twsrc%5Etfw">September 4, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>
</p><p>
இது குறித்து 'X' தளத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள காலிபாஃப், பொதுப் பாதுகாப்பை வளர்ப்பதில் சீனா காட்டும் முக்கியத்துவம், ஈரான் நீண்ட காலமாக ஆதரித்து வரும் ஒரு கொள்கையைப் பிரதிபலிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். </p><p>

மேலும், மத்திய கிழக்கு நாடுகள் இந்த விவகாரங்களை தன் கைகளில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-04T21:10:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[பொலிஸ் அதிகாரிகளை மிரள வைத்த இளம் பெண் ;சோதனையில் காத்திருந்த ஷாக்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/young-woman-who-shocked-police-officers-1788552586"></link>
            <id>https://jvpnews.com/article/young-woman-who-shocked-police-officers-1788552586</id>
            <summary type="text">கொழும்பு, மட்டக்குளி பகுதியில் இரண்டு இலட்ச ரூபாய் மதிப்பிலான போதை மாத்திரைகளுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு குற்றத்தடுப்புப் பிரி...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு, மட்டக்குளி பகுதியில் இரண்டு இலட்ச ரூபாய் மதிப்பிலான போதை மாத்திரைகளுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>
கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரால் மட்டக்குளி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, சுமார் 2 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள 1,000 போதை மாத்திரைகளுடன் 35 வயதுடைய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5e388fb4-b9c5-452f-a09a-df3f07436cd3/26-6a9b258b76ae5.webp' /></p><p>
</p><p>
கைது செய்யப்பட்ட பெண் மட்டக்குளி சமித்புர பகுதியைச் சேர்ந்தவராவார். </p><p>அவரிடமிருந்து 1,000 போதை மாத்திரைகள் (மதிப்பு ரூ. 2 இலட்சம்) கைப்பற்றப்பட்டன. 

கைது செய்யப்பட்ட பெண் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.</p><p></p><p> </p><p>இந்த சம்பவம் தொடர்பாக கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-09-04T20:30:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[286 நாட்கள் கடலில்… அமெரிக்காவின் பிரமாண்ட போர்க்கப்பலுக்கு நேர்ந்த நிலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/after-months-in-hormuz-uss-abraham-lincoln-1788551786"></link>
            <id>https://tamilwin.com/article/after-months-in-hormuz-uss-abraham-lincoln-1788551786</id>
            <summary type="text">அமெரிக்காவின் USS Abraham Lincoln போர்க்கப்பல் தாய்லாந்து துறைமுகத்தை வந்தடைந்தபோது, அதன் தோற்றம் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

கடந்த ஆண்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவின் USS Abraham Lincoln போர்க்கப்பல் தாய்லாந்து துறைமுகத்தை வந்தடைந்தபோது, அதன் தோற்றம் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
</p><p>
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சான் டியாகோவிலிருந்து புறப்பட்ட இந்த விமானம் தாங்கிக் கப்பல், சுமார் 1,100 அடி நீளமுடையது. 

286 நாட்கள் கடலில் தொடர்ச்சியாகப் பணியில் ஈடுபட்டதன் பின்னர், அதன் நீர்மட்டப் பகுதியில் முழுவதும் துருப்பிடித்த தடங்கள் காணப்பட்டன.
</p><h2>பல மாத கால போர்&nbsp;</h2><p>
இந்தக் காட்சி பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்தியிருந்தாலும், கடற்படை நிபுணர்கள் இதை எதிர்பார்க்கக்கூடிய ஒன்றாகவே தெரிவித்துள்ளனர்.</p><p> 

அமெரிக்க கடற்படையின் தகவலின்படி, இந்தக் கப்பல் 286 நாட்கள் கடலில் இருந்ததுடன், மத்திய கிழக்கில் ஈரானுக்கு எதிரான பல மாத கால போர் மற்றும் முற்றுகைப் பணிகளிலும் ஈடுபட்டிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/52885aee-a1b6-4521-81b2-385fbb495055/26-6a9b246cb344e.webp' /></p><p>
</p><p>
முன்னாள் அமெரிக்க கடற்படை கப்டன் கார்ல் ஷஸ்டர் CNN-க்கு கருத்து தெரிவிக்கையில், 60 நாட்கள் அல்லது அதற்கு மேல் தொடர்ச்சியாக கடலில் செயல்பட்ட கப்பலில் நீர்மட்டப் பகுதியில் துருப்பிடிப்பது அசாதாரணமானது அல்ல எனக் கூறியுள்ளார்.
</p><p>
கப்பல் கடலில், குறிப்பாக போர் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கும் நிலையில், இந்தத் துருப்பிடிப்பை சரிசெய்வது நடைமுறையில் சாத்தியமற்றது எனவும் அவர் விளக்கியுள்ளார்.</p><p>

இதனை சரிசெய்ய, பணியாளர்கள் கப்பலின் நீர்மட்டப் பகுதிக்கு கீழே சென்று துருவை அகற்றி, துருப்பிடிப்பைத் தடுக்கும் இரண்டு அடுக்கு பூச்சுகளைப் பூசி, அதன் பின்னர் கடற்படை பயன்படுத்தும் சாம்பல் நிற பெயிண்டின் இரண்டு அடுக்குகளை பூச வேண்டும்.</p><h2>குறுகிய கால பயண இடைநிறுத்தம்</h2><p>

கார்ல் ஷஸ்டரின் கூற்றுப்படி, துருவை முழுமையாக அகற்றி கப்பலை சீரமைக்க சுமார் 30 நாட்கள் தேவைப்படலாம்.

சில அவசர சீரமைப்புப் பணிகள் தாய்லாந்தில் கப்பல் தரித்திருக்கும் காலத்திலேயே ஆரம்பிக்கப்படலாம். </p><p>இருப்பினும், குறுகிய கால பயண இடைநிறுத்தம் என்பதால் மிக அவசரமான பகுதிகளுக்கு மட்டுமே முன்னுரிமை வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7943da85-9ba9-45ca-8c50-084f3ceeacee/26-6a9b246d6c0b6.webp' /></p><p>

USS Abraham Lincoln, பாங்கொக்கிற்கு தெற்கே தாய்லாந்து வளைகுடாவில் அமைந்துள்ள லேம் சபாங் துறைமுகத்தை புதன்கிழமை சென்றடைந்தது.</p><p>

 இந்தப் பயணம் சில நாட்கள் நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுவதுடன், நீண்ட கால கடற்படைப் பணிக்குப் பின்னர் கப்பல் பணியாளர்களுக்கு கிடைக்கும் முதல் முறையான ஓய்வு காலமாகவும் இது அமைந்துள்ளது.</p><h2>யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன்</h2><p>

கப்பல் தொடர்ந்து கடலில் பயணிக்கும் போது உப்பு நீர் மற்றும் கடல் அலைகளின் தாக்கத்தால் முன்பகுதி மற்றும் நீர்மட்டப் பகுதிகள் அதிகளவில் பாதிக்கப்படுவதாகவும், எனவே அந்தப் பகுதிகளுக்கு முதலில் சீரமைப்பு செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
துருப்பிடிப்பை அப்படியே விட்டுவிட்டால், அது மேலும் பரவி கப்பலின் கட்டமைப்பை பாதிக்கக்கூடும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ee004bc6-6eb5-4bb2-8c63-2ae65287e304/26-6a9b246e2946c.webp' /></p><p>

இதனிடையே, USS Abraham Lincoln-ன் நீண்டகால பணியுடன் தொடர்புடையதாக மேலும் சில பிரச்சினைகளும் வெளியாகியுள்ளன. </p><p>

விநியோகப் பற்றாக்குறையால் பணியாளர்களின் மனநிலை பாதிக்கப்பட்டுள்ளதாகவும், குறைந்தது ஒரு பணியாளர் கப்பலில் இருந்து கடலில் விழுந்த சம்பவமும் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p>

எனினும், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கப்பலில் நிலவும் சூழ்நிலை தொடர்பான கவலைகளை நிராகரித்துள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-04T20:05:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ashik</name>
            </author>
            <title type="text"><![CDATA[தலைமன்னாரில் திடீரென பற்றி எரிந்த பனந்தோப்பு! களத்தில் பொலிஸார் - கடற்படையினர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/fire-breaks-out-in-banana-grove-in-katukkaraman-1788548286"></link>
            <id>https://tamilwin.com/article/fire-breaks-out-in-banana-grove-in-katukkaraman-1788548286</id>
            <summary type="text">தலைமன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கட்டுக்காரண் குடியிருப்பு பகுதியில்
காணப்பட்ட பனந்தோப்பில் தீப்பரவல் இன்று(4) மாலை திடீரென
தீப்பரவல் ஏற்பட்டது.உட...</summary>
            <content type="html"><![CDATA[<p>தலைமன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கட்டுக்காரண் குடியிருப்பு பகுதியில்
காணப்பட்ட பனந்தோப்பில் தீப்பரவல் இன்று(4) மாலை திடீரென
தீப்பரவல் ஏற்பட்டது.</p><p>உடனடியாக பொலிஸார் மற்றும் கடற்படையினர் இணைந்து குறித்த தீயை கட்டுப்படுத்த
நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.</p><h2>தீப்பரவல்</h2><p>

எனினும் தீ பரவ ஆரம்பித்துள்ளமையினால் தொடர்ந்து பொலிஸார் மற்றும்
கடற்படையினர் இணைந்து தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டு
வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/68415ebb-780d-4a52-9523-0c4d4f380819/26-6a9b1a02ac2fb.webp' /></p><p>
</p><p>
அருகில் மக்களின் குடியிறுப்புகள் காணப்படுகின்ற மையினால் மக்களின்
குடியிருப்புகளுக்கு தீ பரவாத வகையில் கட்டுப்படுத்த தலைமன்னார் பொலிஸார்
மற்றும் கடற்படையினர் இணைந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-04T20:00:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[9 நாள் மரணத்துடன் போராட்டம்; மண்ணுக்குள் இருந்து உயிருடன் மீட்கப்பட்ட இருவர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/two-rescued-alive-after-9-day-burial-struggle-1788550221"></link>
            <id>https://jvpnews.com/article/two-rescued-alive-after-9-day-burial-struggle-1788550221</id>
            <summary type="text">நேபாளத்தில் பனிப்பாறை மற்றும் சேறு சரிவு ஏற்பட்டு 9 நாட்களுக்குப் பிறகு, மேல் திரிசூலி 3A நீர்மின் நிலையச் சுரங்கப்பாதையில் சிக்கியிருந்த (சஞ்சய் சா )...</summary>
            <content type="html"><![CDATA[<p>நேபாளத்தில் பனிப்பாறை மற்றும் சேறு சரிவு ஏற்பட்டு 9 நாட்களுக்குப் பிறகு, மேல் திரிசூலி 3A நீர்மின் நிலையச் சுரங்கப்பாதையில் சிக்கியிருந்த (சஞ்சய் சா )மற்றும் (கபீர் மகர்ஜன் )ஆகிய இரண்டு தொழிலாளர்கள் இன்று (04) உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.
</p><p>
சுரங்கப்பாதைக்குள் இருந்து சத்தம் கேட்டதை அடுத்து, இராணுவம், காவல்துறை மற்றும் வெளிநாட்டு நிபுணர்களின் உதவியுடன் இந்தப் பிரதான மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c6279dd2-d2d5-4bbe-a494-a0b88c944738/26-6a9b1c4ed1fd1.webp' /></p><h2>தீவிர சிகிச்சை</h2><p>
</p><p>
மீட்கப்பட்ட இருவரும் தலைநகர் காத்மண்டுவில் உள்ள இராணுவ மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
</p><p>
அவர்களின் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை குலாமினர் தெரிவித்துள்ளனர்.
</p><p>
அத்துடன் ஆகஸ்ட் 26 அன்று நேரிட்ட இந்தப் பேரிடரால் 1,200-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதுடன், நீர்மின் திட்டச் சுரங்கப்பாதைகளில் குறைந்தது 900 பேர் வரை சிக்கியிருக்கலாம் என்று அனுமானிக்கப்படுவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p></p>]]></content>
            <updated>2026-09-04T20:00:36+00:00</updated>
        </entry>
    </feed>
