<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-08-21T11:22:28+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுவிஸ் உணவகம் மற்றும் குடியிருப்பு கட்டிடத்தில் தீ விபத்து: 5 பேரை காணவில்லை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/swiss-town-of-thusis-fire-incident-5-missing-1787310939"></link>
            <id>https://news.lankasri.com/article/swiss-town-of-thusis-fire-incident-5-missing-1787310939</id>
            <summary type="text">சுவிட்சர்லாந்தில் உள்ள உணவகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் வரை மாயமாகியுள்ளனர்.சுவிட்சர்லாந்தில் தீ விபத்துசுவிட்சர்லாந்தின் துசிஸ்(Thusis) நகரில் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சுவிட்சர்லாந்தில் உள்ள உணவகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் வரை மாயமாகியுள்ளனர்.</p><h2>சுவிட்சர்லாந்தில் தீ விபத்து</h2><p>சுவிட்சர்லாந்தின் துசிஸ்(Thusis) நகரில் உள்ள உணவகம் மற்றும் அதன் மேல் தளத்தில் உள்ள குடியிருப்பு கட்டிடங்களில் நள்ளிரவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.</p><p> இந்த சம்பவத்தில் 5 பேர் வரை காணாமல் போயிருப்பதாகவும், 8 பேர் வரை காயமடைந்து இருப்பதாகவும் உள்ளூர் காவல் துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9ab57061-aebe-46ef-b10e-3afd2d89b597/26-6a88335ca9b12.webp' /></p><p> மொத்தம் 14 பேர் வரை இடிபாடுகளுக்கு நடுவிலிருந்து உயிர் தப்பிய நிலையில் இதில் 2 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.</p><p></p><p> நள்ளிரவில் தீ விபத்து ஏற்பட்ட சில நிமிடங்களில் இது தொடர்பாக அவசர உதவி பிரிவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.</p><p> இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த 100 தீயணைப்பு வீரர்கள் கட்டிடத்தில் பற்றிய தீயை அணைக்க களமிறக்கப்பட்டனர்.</p><p> தீயை முழுமையாக கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக போராடி வருகின்றனர்.</p><p>தீ விபத்துக்கான காரணத்தை கண்டறிய உள்ளூர் காவல் துறையினர் மற்றும் அரசு வழக்கறிஞர் அலுவலகம் இணைந்து கூட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.</p><p> காணாமல் போன 5 பேரின் விவரங்கள் மற்றும் அடையாளங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-21T11:15:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி காலமானார்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/veteran-actress-sowcar-janaki-passes-away-1787308741"></link>
            <id>https://ibctamil.com/article/veteran-actress-sowcar-janaki-passes-away-1787308741</id>
            <summary type="text">
பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி, தனது 94 வயதில் வயது முதிர்வு மற்றும் உடல் நலக்குறைவு காரணமாக காலமாகியுள்ளார்.

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேர...</summary>
            <content type="html"><![CDATA[<p>
பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி, தனது 94 வயதில் வயது முதிர்வு மற்றும் உடல் நலக்குறைவு காரணமாக காலமாகியுள்ளார்.
</p><p>
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில், இதய நோய் பாதிப்பிற்காக, வியாழக்கிழமையன்று அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் காலமாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
</p><p>
1950ஆம் ஆண்டு செளகார் என்ற தெலுங்கு படத்தின் மூலம் அறிமுகமான ஜானகி, அதன்பின்னர், செளகார் என்ற சிறப்பு பெயரோடு சேர்த்து செளகார் ஜானகி என அழைக்கப்பட்டார்.</p><p></p><h2>தமிழ்த் திரையுல அறிமுகம்</h2><p>
</p><p>
1952-இல் வளையாபதி திரைப்படத்தின் வாயிலாகத் தமிழ்த் திரையுலகில் செளகார் ஜானகி அறிமுகமானார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/96d057ce-d5cd-4a61-8713-91901241a9ba/26-6a88304fc9bd0.webp' /></p><p> </p><p>

எம்ஜிஆர், சிவாஜி, ரஜினி, கமல் உள்ளிட்ட நடிகர்களுடன் செளகார் ஜானகி நடித்துள்ளார். தமிழக அரசின் கலைமாமணி உள்ளிட்ட பல்வேறு விருதுகளை செளகார் ஜானகி பெற்றுள்ளார். </p><p>

தமிழில் புதிய பறவை, நீர்க்குமிழி, மகாகவி காளிதாஸ், தில்லுமுல்லு, எதிர்நீச்சல் உள்ளிட்ட படங்கள் செளகார் ஜானகிக்கு பெரும் புகழை சேர்த்தன. </p><p>

2020-ஆம் ஆண்டில், சௌகார் ஜானகி தனது 400-ஆவது திரைப்படமான சந்தானத்தின் ''பிஸ்கோத்'' படத்தில் நடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-21T11:15:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[Onam Special: ஓணம் சத்யா கேரளாவின் பாரம்பரிய விருந்தில் உணவுகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/what-is-special-in-onam-sadhya-feast-1787309028"></link>
            <id>https://manithan.com/article/what-is-special-in-onam-sadhya-feast-1787309028</id>
            <summary type="text">கேரளாவில் கொண்டாடப்படும் முக்கியமான பண்டிகைகளில் ஓணம் ஒன்று. அந்த ஓணம் பண்டிகை நாளில் இடம் பெறக்கூடிய ஓணம் சத்யா என்பது கேரளாவில் பாரம்பரிய உணவு விருந...</summary>
            <content type="html"><![CDATA[<p>கேரளாவில் கொண்டாடப்படும் முக்கியமான பண்டிகைகளில் ஓணம் ஒன்று. அந்த ஓணம் பண்டிகை நாளில் இடம் பெறக்கூடிய ஓணம் சத்யா என்பது கேரளாவில் பாரம்பரிய உணவு விருந்தாகும். மேலும், "கானம் விற்றாவது ஓணம் உண்" என்ற பழமொழிக்கு ஏற்ப ஓணம் பண்டிகையில் உணவுக்கும் விருந்தோம்பலுக்கு அதிக அளவு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. </p><p>மேலும், ஓணம் பண்டிகை சுமார் பத்து நாட்கள் கொண்டாட கூடிய ஒரு முக்கியமான பண்டிகையாகும். அதில் திருவோணம் நாளில் சத்யா மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கது. குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் ஒன்றாக அமர்ந்து இந்த பாரம்பரிய விருந்தை மகிழ்ந்து உண்பார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/09d461fa-30e0-4e97-bd24-45f0c03de4a2/26-6a882be6590f6.webp' /></p><p></p><p> </p><p>இந்த உணவு ஓணம் சத்யாவில் பலவிதமான சைவ உணவுகள் தயாரிக்கப்படுகின்றன. சாதம், பருப்பு, நெய், சாம்பார், ரசம், மோர் அவியல், தோரன், காலன், ஓலன், எரிசேரி, கூட்டு, பச்சடிக்கு செடி உள்ளிட்ட பல உணவு வகைகள் இதில் இடம் பெறுகிறது. </p><p>அதேபோல், இனிப்பு வகைகளில் அடை பிரதமன், பால், பாயாசம் உள்ளிட்ட பாயாசங்கள் முக்கிய இடம் பெறுவது குறிப்பிடத்தக்கது. அதேபோல், சர்க்கரை புரட்டி, பப்படம், ஊறுகாய் உள்ளிட்டவையும் சத்யா விருந்து சுவையை இன்னும் அதிகரிக்கிறது. மற்றொரு சிறப்பு உணவு வாழை இலையில் தான் பரிமாறப்படுகிறது.</p><p> வாழை இலை உணவு பரிமாறும் பாரம்பரியம் கேரளாவின் கலாச்சாரத்துடன் நீண்ட காலமாக ஒன்றிணைந்தது. சத்யாவில் இடம்பெறும் உணவுகளில் தேங்காய் பால், தேங்காய், தயிர் மோர் போன்றவை அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ebb0c29a-3929-4d12-83cb-ee8b6310a129/26-6a882be713775.webp' /></p><p></p><p> இதனால் ஓணம் சத்யா உணவுகளுக்கு தனித்துவமான கேரள சுவையும் மனமும் கிடைக்கிறது. அதை போல், பலவிதமான உணவுகள் இடம் பெறும் என்று ஓணம் சத்யாவில் செரிமானத்திற்கு உதவக்கூடிய வகைகள் இஞ்சி கறி, இஞ்சி புளி போன்ற உணவுகளும் சேர்க்கப்படுகிறது. </p><p>இவற்றில் உள்ள புளிப்பு காரம் மற்றும் நறுமணம் சத்யா விருந்தின் சுவையை மேலும் அதிகரிக்கிறது. முக்கியமாக ஓணம் சத்யா என்பது வெறும் உணவு விருந்து மட்டுமல்ல குடும்பத்தினர் நண்பர்கள் உறவினர்கள் என எல்லோரும் ஒன்றாக அமர்ந்து உணவை பகிர்ந்து கொள்வதின் வழியாக குடும்பத்தில் ஒற்றுமை மகிழ்ச்சி அதோடு விருந்தோம்பலை வெளிப்படுத்தும் கேரளாவின் முக்கியமான பாரம்பரிய நிகழ்வாகவும் இது திகழ்கிறது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-21T11:10:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவின் ரெஜினாவில் மீட்கப்பட்ட மனித எச்சம் அடையாளம் காணப்பட்டது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/human-remains-found-in-regina-backyard-1787309950"></link>
            <id>https://canadamirror.com/article/human-remains-found-in-regina-backyard-1787309950</id>
            <summary type="text">கனடாவின் ரெஜினா நகரில் உள்ள ஒரு வீட்டின் பின்புறத்தில் கடந்த ஜூன் மாதம் கண்டெடுக்கப்பட்ட மனித எச்சங்கள், வேய்ன் ஜோசப் பிரீட் என்பவருடையது என அடையாளம் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் ரெஜினா நகரில் உள்ள ஒரு வீட்டின் பின்புறத்தில் கடந்த ஜூன் மாதம் கண்டெடுக்கப்பட்ட மனித எச்சங்கள், வேய்ன் ஜோசப் பிரீட் என்பவருடையது என அடையாளம் காணப்பட்டுள்ளதாகக் காவல்துறை அறிவித்துள்ளது.</p><p>
ரெஜினா காவல் சேவை வெளியிட்ட தகவலின்படி, 'ரெடாலாக் தெருவின்' 1300 எண்ணுள்ள வீட்டின் வெளியே இந்த மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. </p><p>
வேய்ன் ஜோசப் பிரீட் காணாமல் போனவர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டிருக்கவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f67f1ec0-7ddb-4e87-b6d9-91a192c2039c/26-6a882f8038761.webp' /></p><p>எனினும், பொலிஸ் டிஎன்ஏ தரவுத்தளத்தை சோதித்ததன் மூலமே இவரது எச்சங்கள் துல்லியமாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
இவருக்கு தற்போது 34 வயதாகியிருக்கும் எனக் குறிப்பிட்ட காவல்துறையினர், இவரது குடும்பத்தினருக்கு இத்தகவலைத் தெரிவித்துள்ளனர்.
</p><p> மேலும், இந்தச் சந்தேகத்திற்கிடமான மரணம் குறித்துத் தொடர்ந்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
கடந்த ஜூன் 9 ஆம் திகதி இந்த மனித எச்சங்கள் குறித்துக் காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. </p><p>முதற்கட்ட விசாரணையில், இந்த உடற்பாகங்கள் குறைந்தபட்சம் 5 ஆண்டுகளாவது அந்த இடத்தில் புதைக்கப்பட்டிருக்க வேண்டும் என்பது தெரியவந்துள்ளது.
</p><p>அந்த வீட்டின் உரிமையாளர் கூறுகையில், 2009 ஆம் ஆண்டு முதல் தாம் இந்த வீட்டைக் வைத்துள்ளதாகவும், அன்றிலிருந்து இதுவரை 7 முதல் 8 வாடகைதாரர்கள் அங்குத் தங்கிச் சென்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
</p><p>ரெஜினாவின் 'நார்த் சென்ட்ரல்' பகுதியில் நடந்த இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
</p><p>பொதுமக்கள் அளித்த தகவல்களும் குறிப்புகளுமே வேய்ன் ஜோசப் பிரீட்டை அடையாளம் காண மிகவும் உதவியாக இருந்ததாகக் தெரிவித்த காவல்துறையினர், தகவல் அளித்த அனைவருக்கும் தங்களது நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-21T11:08:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடா மருத்துவமனையில் செவிலியர் மீது தாக்குதல்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/nurse-beaten-in-psychiatric-ward-of-hospital-1787306826"></link>
            <id>https://canadamirror.com/article/nurse-beaten-in-psychiatric-ward-of-hospital-1787306826</id>
            <summary type="text">கனடாவின் கியூபெக் நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றின் மனநல அவசர சிகிச்சைப் பிரிவில் பணிபுரியும் செவிலியர் ஒருவர், கோபமடைந்த நோயாளி ஒருவரால் கொடூரமாகத் தாக...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் கியூபெக் நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றின் மனநல அவசர சிகிச்சைப் பிரிவில் பணிபுரியும் செவிலியர் ஒருவர், கோபமடைந்த நோயாளி ஒருவரால் கொடூரமாகத் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><p>இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து, மருத்துவமனைகளில் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.</p><p> 
'CHU de Québec-Université Laval' மருத்துவமனையில் பணிபுரியும் பாட்ஸி வான் டேம் என்ற செவிலியர் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் இந்த அதிர்ச்சி சம்பவத்தைப் பகிர்ந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a6304065-a99a-4cd1-89e1-c777fb835b8f/26-6a88234bc68d8.webp' /></p><p> 
நோயாளி ஒருவர் தனது சக ஊழியரைத் தாக்க முயன்றபோது, அவரைக் காப்பாற்ற வான் டேம் இடையூறாகச் சென்றுள்ளார். 
அப்போது அந்த நோயாளி வான் டேமைப் பிடித்துக்கொண்டு, அவரது முடியைப் பிடித்து இழுத்து, கழுத்தை நெரிக்க முயன்று சரமாரியாகத் தாக்கியுள்ளார். </p><p>
"அவர் தனது முழு பலத்தையும் கொண்டு என்னை அடித்தார். எனது சக ஊழியர் மிகுந்த சிரமத்திற்கு இடையே தப்பித்துச் சென்றுவிட, நான் மட்டும் அந்த நோயாளியிடம் தனியாகச் சிக்கிக் கொண்டேன்" என்று கூறிய வான் டேம், "நான் நரகத்தை அனுபவித்தேன். என் உயிருக்கே பயந்து நடுங்கினேன்" எனத் தனது காயமடைந்த முகத்தைச் சுட்டிக்காட்டி வேதனையுடன் தெரிவித்தார்.</p><p> 
நிதி குறைப்பு காரணமாக மனநலப் பிரிவில் பிரத்யேகப் பாதுகாப்பு ஊழியர்கள் நியமிக்கப்படாததே இந்தத் தாக்குதலுக்கு முதன்மைக் காரணம் என அவர் குற்றம்சாட்டியுள்ளார்.</p><p>நிதிகள் எதுவும் களத்தில் பணிபுரியும் எங்களுக்கு வந்து சேருவதில்லை; அதிகாரிகளின் முடிவுகளுக்கானப் பலனைத்தான் நான் என் காயங்கள் மூலம் அனுபவிக்கிறேன் என தெரிவித்துள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-21T11:08:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடற்படை முகாம் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஹரக் கட்டா! நீதிமன்றில் அறிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/harakatta-who-is-being-held-at-a-naval-camp-1787306407"></link>
            <id>https://ibctamil.com/article/harakatta-who-is-being-held-at-a-naval-camp-1787306407</id>
            <summary type="text">போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஹரக் கட்டா என அழைக்கப்படும் நந்துன் சிந்தக விக்ரமரத்ன குறித்த வழக்கு விசாரணை நேற்று இடம்பெ...</summary>
            <content type="html"><![CDATA[<p>போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஹரக் கட்டா என அழைக்கப்படும் நந்துன் சிந்தக விக்ரமரத்ன குறித்த வழக்கு விசாரணை நேற்று இடம்பெற்றுள்ளது.</p><p>இந்த வழக்கில் சந்தேகநபருக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பில் மேன்முறையீடு செய்யப்பட்டுள்ளதாக நீதிமன்றுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இந்நிலையில் இந்த வழக்கில் ஹரக் கட்டாவும் கருத்துக்களை முன்வைக்க சந்தரப்பம் வழங்கப்பட்டுள்ளது.</p><p></p><h3>முழங்கால் பாதிப்பு</h3><p>இந்த வழக்கிற்காக பிரதிவாதியான ஹரக் கட்டா ‘சூம்’ தொழில்நுட்பத்தின் ஊடாக நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7741ba3d-fa22-4533-acc7-ae7c1c36533d/26-6a88256246955.webp' /></p><p> </p><p>அவர் தொலைக்காட்சித் திரை ஊடாக கையை உயர்த்தி, தாம் எதிர்நோக்கும் நிலைமை குறித்து நீதிமன்றத்தில் முறையிட்டார்.</p><p>&nbsp;தமக்கு பொருத்தமான சிறைச்சாலையில் தடுத்து வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த போதிலும், தற்போது தாம் கடற்படை முகாம் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். </p><p>மேலும், தங்காலை பழைய சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தபோது தனது முழங்கால் பாதிப்புக்காக ஆயுர்வேத சிகிச்சை வழங்கப்பட்டதாகவும், தற்போது அந்தச் சிகிச்சை கிடைப்பதில்லை என்றும் அவர் தெரிவித்தார்.</p><p></p><h2>பயங்கரவாதத் தடுப்புச் சட்டம்</h2><p> </p><p>இதன்போது ஹரக் கட்டா சார்பில் முன்னிலையான சட்டத்தரணி சாலிய சமரசிங்க, தமது சேவை பெறுநரை பொருத்தமான சிறைச்சாலையில் தடுத்து வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த போதிலும், அவர் தற்போது கடற்படை அதிகாரிகளின் பொறுப்பில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/97c9590a-175f-44f4-bd27-edbdee915d5a/26-6a882562efa22.webp' /></p><p> </p><p>இந்நிலையில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஹரக் கட்டா என அழைக்கப்படும் நந்துன் சிந்தக விக்ரமரத்ன உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு எதிராக பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல முடியாது என கொழும்பு மேல் நீதிமன்றம் அண்மையில் வழங்கிய உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம் நேற்று (ஆகஸ்ட் 20) கொழும்பு மேல் நீதிமன்றத்திற்கு அறிவித்தது.</p><p>
இந்த வழக்கு இன்று கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி புத்திக சி. ராகல முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.</p><p>

இதன்போது அரசுத் தரப்பு சார்பில் முன்னிலையான அரச சட்டத்தரணி சஜித் பண்டார, நீதிமன்றம் முன்னர் வழங்கிய உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள I<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">BC தமிழ் WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-21T11:07:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[திருமணத்திற்கு வெளியே பாலியல் உறவு ; இரண்டு பெண்களுக்கும் இரண்டு ஆண்களுக்கும் தலா 100 பிரம்படிகள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/sexual-relations-100-lashes-2-men-2women-indonesia-1787309599"></link>
            <id>https://canadamirror.com/article/sexual-relations-100-lashes-2-men-2women-indonesia-1787309599</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;இந்தோனேசியாவின் தீவிர இஸ்லாமிய மாகாணமான ஆச்சேவில், திருமணத்திற்கு வெளியே பாலியல் உறவில் ஈடுபட்டதற்காக இரண்டு பெண்களுக்கும் இரண்டு ஆண்களுக...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;இந்தோனேசியாவின் தீவிர இஸ்லாமிய மாகாணமான ஆச்சேவில், திருமணத்திற்கு வெளியே பாலியல் உறவில் ஈடுபட்டதற்காக இரண்டு பெண்களுக்கும் இரண்டு ஆண்களுக்கும் தலா 100 பிரம்படிகள் என அதிகாரிகள் பகிரங்கமாகத் தண்டிக்கப்பட்டனர்.
</p><p>


வயது வெளியிடப்படாத அந்த நால்வரும், மாகாணத் தலைநகரான பண்டா ஆச்சேவில் உள்ள ஒரு பொதுப் பூங்காவில், டஜன் கணக்கானோர் பார்க்கக் கூடியிருக்க, பிரம்படி வாங்கினர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/addb105f-1375-4c30-bcae-5ca2746c6634/26-6a882e20db38d.webp' /></p><h2>கட்டிப்பிடித்தல் மற்றும் முத்தமிடுதல்</h2><p>
</p><p>
குழந்தைகள் உட்பட கூட்டத்தில் இருந்த சிலர், பிரம்படி மீண்டும் மீண்டும் விழுந்தபோது இன்னும் கடுமையாக என்று கத்தினார்கள்.
</p><p>
வியாழக்கிழமை நடந்த பிரம்படித் தாக்குதலில், கட்டிப்பிடித்தல் மற்றும் முத்தமிடுதல் ஆகியவற்றை உள்ளடக்கிய உடல்ரீதியான நெருக்கம் என்ற சிறிய குற்றத்திற்காக மேலும் நான்கு பேருக்கு தலா 22 பிரம்படிகள் வழங்கப்பட்டன.
</p><p>
ஒருவருக்கொருவர் மிகவும் நெருக்கமாக இருந்ததற்காக இதில் கைகோர்ப்பதும் அடங்கும். மற்ற இருவருக்குத் தலா ஏழு கசையடிகள் வழங்கப்பட்டன. அதேசமயம் மது அருந்திய ஒருவருக்கு 20 முறை பிரம்படி கொடுக்கப்பட்டது.
</p><p>
இவை அனைத்தும் ஆச்சேவில் நிகழும் குற்றங்களாகும். இந்தோனேசியாவின் இந்த மாகாணத்தில்தான், 2002 முதல் அமலில் உள்ள ஷரியா இஸ்லாமியச் சட்டத்தின் ஒரு வடிவம் பின்பற்றப்படுகிறது, மேலும் இது 2015-இல் மேலும் கடுமையாக்கப்பட்டது.</p><p>

தென்கிழக்கு ஆசிய நாடான ஆச்சேவில் பிரம்படி சட்டப்பூர்வமான தண்டனை முறையாக இல்லாவிட்டாலும், சூதாட்டம் மற்றும் ஓரினச்சேர்க்கை உள்ளிட்ட பல்வேறு குற்றங்களைத் தண்டிப்பதற்காக அதற்கு வலுவான ஆதரவு உள்ளது.</p><p>

மாகாணத்தில் 30 ஆண்டுகால பிரிவினைவாதக் கிளர்ச்சியை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக 2005-ல் ஏற்பட்ட அமைதி ஒப்பந்தத்தின் கீழ் வழங்கப்பட்ட சிறப்பு சுயாட்சியை ஆச்சே அனுபவித்து வருகிறது.</p><p>

இந்தோனேசியா உலகின் மிகப்பெரிய முஸ்லிம் பெரும்பான்மை நாடாக இருந்தாலும், அது அதிகாரப்பூர்வமாக ஆறு மதங்களையும் பழங்குடி நம்பிக்கைகளையும் அங்கீகரிக்கிறது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-21T11:07:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களிடம் இறுதிநாளாக வாக்குமூலம் பதிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/confessions-from-relatives-of-the-disappeared-1787309587"></link>
            <id>https://ibctamil.com/article/confessions-from-relatives-of-the-disappeared-1787309587</id>
            <summary type="text">காணாமல் போனோருக்கான அலுவலகத்தினரால் காணாமல் ஆக்கப்பட்டோரின்
உறவினர்களிடம் வாக்குமூலம் பெறும் நடவடிக்கை இன்று (21) இறுதிநாளாக
யாழ்ப்பாணம் பிரதேச செயல...</summary>
            <content type="html"><![CDATA[<p>காணாமல் போனோருக்கான அலுவலகத்தினரால் காணாமல் ஆக்கப்பட்டோரின்
உறவினர்களிடம் வாக்குமூலம் பெறும் நடவடிக்கை இன்று (21) இறுதிநாளாக
யாழ்ப்பாணம் பிரதேச செயலகத்தில் முன்னெடுக்கப்பட்டது.
</p><p>யாழ்ப்பாணம் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற இந்நடவடிக்கையில், விசாரணைக்
குழுக்கள் அமைக்கப்பட்டு, ஒவ்வொரு குழுவின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள்
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களிடம் விசாரணைகளை மேற்கொண்டு
வாக்குமூலங்களைப் பதிவு செய்தனர்.
</p><p>இதன்போது யாழ்ப்பாணம் பிரதேச செயலகத்திற்குட்பட்ட பல்வேறு கிராம சேவையாளர்
பிரிவுகளைச் சேர்ந்தவர்களுடன், வேலணை, ஊர்காவற்றுறை மற்றும் நெடுந்தீவு
உள்ளிட்ட பிரதேசங்களைச் சேர்ந்த காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களும்
அதிகளவில் கலந்து கொண்டனர்.</p><p></p><h2>உரிய விசாரணைகள்</h2><p>
</p><p>வாக்குமூலம் பெறும் நடவடிக்கையின்போது, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பெயர்,
வயது, காணாமல் ஆக்கப்பட்ட காலப்பகுதி, சம்பவம் இடம்பெற்ற விதம் மற்றும் அது
தொடர்பான ஏனைய முக்கிய தகவல்கள் குறித்து உறவினர்களிடம் விசாரணைகள்
மேற்கொள்ளப்பட்டு பதிவுகள் செய்யப்பட்டன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cfb2053f-699b-453e-801b-6ae6a2c33213/26-6a882fff487e5.webp' /></p><p>
</p><p>காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகள் தொடர்பான உண்மைகளை வெளிக்கொண்டு வருவதற்கும்,
அவர்களுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பில் உரிய விசாரணைகள்
முன்னெடுக்கப்படுவதற்கும் இந்த வாக்குமூலம் பதிவு நடவடிக்கை முக்கியத்துவம்
வாய்ந்ததாக அமைந்துள்ளது.</p><p>இதன்போது நீண்டகாலமாக தமது உறவுகளின் நிலை தொடர்பில் எதிர்பார்ப்புடன்
காத்திருக்கும் குடும்பங்கள் தங்களிடம் உள்ள தகவல்கள் மற்றும் ஆவணங்களை
அதிகாரிகளிடம் வழங்கியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-21T11:02:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பின்லாந்து வான்வெளியில் ரஷ்ய விமானம் - விசாரணை தொடக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/russian-jet-suspected-in-finland-airspace-probe-1787306187"></link>
            <id>https://news.lankasri.com/article/russian-jet-suspected-in-finland-airspace-probe-1787306187</id>
            <summary type="text">Russian jet suspected in Finland airspace: பின்லாந்து வான்வெளியில் ரஷ்ய விமானம் நுழைந்ததாக சந்தேகிக்கப்படுகிறது.

பின்லாந்து பாதுகாப்பு அமைச்சகம், ர...</summary>
            <content type="html"><![CDATA[<p>Russian jet suspected in Finland airspace: பின்லாந்து வான்வெளியில் ரஷ்ய விமானம் நுழைந்ததாக சந்தேகிக்கப்படுகிறது.
</p><p>
பின்லாந்து பாதுகாப்பு அமைச்சகம், ரஷ்யாவின் ஒரு விமானம் பின்லாந்து வான்வெளியில் நுழைந்ததாக சந்தேகிக்கப்படும் சம்பவம் குறித்து அதிகாரப்பூர்வ விசாரணையை தொடங்கியுள்ளது.
</p><p>
இந்த சம்பவம் ஆகஸ்ட் 20, 2026 அன்று கிழக்கு பால்டிக் கடலின் போர்வோ அருகே நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b30842fb-2b18-442b-bd22-57baff2e8f32/26-6a88269be355c.webp' /></p><h2>ஆய்வு&nbsp;</h2><p>அந்த ரஷ்ய விமானம் பின்லாந்து வான்வெளியில் சில நிமிடங்கள் பறந்ததாகவும், சில கிலோமீட்டர் தூரம் பின்லாந்து எல்லைக்குள் நுழைந்ததாகவும் கூறப்படுகிறது. பின்னர் அது சர்வதேச வான்வெளிக்குத் திரும்பியதாக கூறப்படுகிறது.
</p><p>
பின்லாந்து விமான கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு அமைப்புகள் உடனடியாக செயல்படுத்தப்பட்டு, அந்த விமானத்தின் பாதையை கண்காணித்தன. தற்போது ரேடார் மற்றும் பிற தரவுகள் ஆய்வு செய்யப்படுகின்றன.
</p><p></p><p>பின்லாந்து பாதுகாப்பு அமைச்சர் அண்டி ஹக்கனென், “எந்தவொரு வான்வெளி மீறலையும் மிகுந்த முக்கியத்துவத்துடன் எடுத்துக்கொள்கிறோம். விசாரணை நடைபெற்று வருகிறது” என்று தெரிவித்துள்ளார்.</p><h2>

ஒரு சம்பவம் அல்ல
</h2><p>
இதுப்போன்ற சம்பவம் முதல்முறைய அல்ல. கடந்த மே மற்றும் ஜூன் மாதங்களிலும் ரஷ்ய விமானங்கள் பின்லாந்து வான்வெளியில் நுழைந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அப்போது பின்லாந்து, ரஷ்ய தூதரக அதிகாரியை அழைத்து எதிர்ப்பு தெரிவித்தது.
</p><p>
பின்லாந்து, ரஷ்யாவுடன் 1,340 கிலோமீட்டர் நீளமான நில எல்லையை பகிர்ந்து கொள்கிறது. இது நேட்டோ (NATO) உறுப்பினரான பின்லாந்துக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான மிக நீளமான எல்லையாகும். 2023 ஏப்ரல் மாதம் பின்லாந்து நேட்டோ கூட்டணியில் இணைந்ததிலிருந்து, பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
</p><p>
இந்த சம்பவம், பால்டிக் பிராந்தியத்தில் பாதுகாப்பு சூழ்நிலையை மேலும் பதற்றமாக்கியுள்ளது. பின்லாந்து எல்லை பாதுகாப்பு படை, இந்த விமானம் திட்டமிட்டே நுழைந்ததா அல்லது வழிச் சிக்கலால் ஏற்பட்டதா என்பதை ஆராய்கிறது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-21T11:00:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[இதை கட்டாயம் கவனியுங்கள்..! வாகனம் வைத்திருப்போருக்கு பொலிஸாரின் முக்கிய எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/police-issued-a-warning-regarding-vehicle-thefts-1787308016"></link>
            <id>https://tamilwin.com/article/police-issued-a-warning-regarding-vehicle-thefts-1787308016</id>
            <summary type="text">மோட்டார் வாகனங்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களை கவனக்குறைவாக நிறுத்தி வைப்பதால், அவற்றை குற்றவாளிகள் திருடிச் செல்லும் சம்பவங்கள் தொடர்பில் தகவல்கள் க...</summary>
            <content type="html"><![CDATA[<p>மோட்டார் வாகனங்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களை கவனக்குறைவாக நிறுத்தி வைப்பதால், அவற்றை குற்றவாளிகள் திருடிச் செல்லும் சம்பவங்கள் தொடர்பில் தகவல்கள் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>

இன்று (21) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் உதவிப் பொலிஸ் அத்தியட்சகருமான எஃப்.யு. வுட்லர், 

வாகனங்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் திருடப்படுவதுடன், அவற்றுக்குள் வைக்கப்பட்டிருந்த முக்கிய ஆவணங்கள் மற்றும் பெறுமதியான பொருட்களும் திருடப்படுவதாக தெரிவித்துள்ளார்.</p><h2>பொலிஸார் எச்சரிக்கை</h2><p>
</p><p>
சில சந்தர்ப்பங்களில் முச்சக்கர வண்டி சாரதிகள் மற்றும் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள், வாகனத்தை இயக்க நிலையில் வைத்துவிட்டு வேறு நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும், மோட்டார் சைக்கிள் அல்லது முச்சக்கர வண்டியின் சாவியை வாகனத்திலேயே விட்டுச் செல்வதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/648d3db6-2d0f-495c-b210-76ff8d4e9209/26-6a882e99f31e5.webp' /></p><p> </p><p>

இவ்வாறான சந்தர்ப்பங்களை பயன்படுத்தி குற்றவாளிகள் மிகக் குறுகிய நேரத்தில் வாகனங்களை திருடிச் செல்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
மேலும், வீடுகளுக்கு வெளியே வாகனங்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களை நிறுத்தி வைப்பதுடன், வீட்டு வளாகத்தின் வாயில் கதவுகளுக்கு பூட்டு போடாமல் இருப்பதால் வாகனங்கள் திருடப்பட்ட சம்பவங்களும் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><h2>வாகனத் திருட்டு</h2><p>

நெரிசல் அதிகமான இடங்களில் வாகனங்களை நிறுத்தும்போது, அருகிலுள்ள பாதுகாப்பு உத்தியோகத்தருக்கு அது தொடர்பில் தெரியப்படுத்துமாறும் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.</p><p> 

வணிக வளாகங்களில் வாகனங்களை நிறுத்தும்போது, அங்குள்ள பாதுகாப்பு உத்தியோகத்தர் அல்லது பணியாளரிடம் தகவல் தெரிவிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/baf75c5f-6c97-4927-9434-6555eabf9e47/26-6a882e9ac690e.webp' /></p><p>
</p><p>
அதேவேளை, இரவு நேரங்களில் இருள் சூழ்ந்த அல்லது மக்கள் நடமாட்டம் குறைந்த இடங்களில் வாகனங்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களை நிறுத்துவதை தவிர்க்குமாறும் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
</p><p>
வாகனம் திருடப்பட்டால், உடனடியாக 119 அல்லது 118 என்ற பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கங்களுக்கு அல்லது அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்குமாறும் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-21T11:00:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் பலரின் கண்ணுக்கு பிரச்சனையான மின் விளக்குகள் பறிமுதல்; சீனா தயாரிப்பாம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/eye-injury-china-light-at-jaffna-temple-festival-1787306941"></link>
            <id>https://jvpnews.com/article/eye-injury-china-light-at-jaffna-temple-festival-1787306941</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;யாழ்ப்பாணம் - பண்டத்தரிப்பு பிரான்பற்று முருகன் ஆலயத்தில் நடைபெற்ற ஆலயத் திருவிழாவின் போது, நூற்றுக்கணக்கானோர் கண் பாதிப்புக்குள்ளான சம்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;யாழ்ப்பாணம் - பண்டத்தரிப்பு பிரான்பற்று முருகன் ஆலயத்தில் நடைபெற்ற ஆலயத் திருவிழாவின் போது, நூற்றுக்கணக்கானோர் கண் பாதிப்புக்குள்ளான சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. </p><p>

கண் பாதிப்புக்கான உண்மையான காரணத்தைக் கண்டறியும் நோக்கில் பொலிஸாரும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் விசாரணைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e6f6d1da-b07c-47e9-b6c8-49a9842a3ea9/26-6a8823beca16d.webp' /></p><p> </p><p>

இதன் ஒரு கட்டமாக, ஆலய வளாகத்தில் பொருத்தப்பட்டிருந்த அதிக வலு கொண்ட சீனத் தயாரிப்பு மின் விளக்குகள் சிலவற்றை பொலிஸார் கையகப்படுத்தி எடுத்துச் சென்றுள்ளனர்.</p><p></p><p> </p><p>

கையகப்படுத்தப்பட்ட இந்த மின் விளக்குகள் தற்போது ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு வருவதுடன், அவற்றின் மின்சக்தி அளவு, பயன்பாட்டுத் தன்மை மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அவை அனுமதிக்கப்பட்டவையா? அல்லது தடை செய்யப்பட்டவையா என்பது தொடர்பிலும் விரிவாக ஆராயப்பட்டு வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f86c828c-38eb-4529-b83e-f050220a1eb1/26-6a882ffca7165.webp' /></p><h2>&nbsp;நூற்றுக்கும் மேற்பட்டோர் வைத்தியசாலைகளில் அனுமதி</h2><p>பண்டத்தரிப்பு பிரான்பற்று முருகன் ஆலயத்தில் நடைபெற்ற ஆலயத் திருவிழாவின்&nbsp;&nbsp;அதிகப்படியான வெடிகள் கொளுத்தப்பட்டமை மற்றும் சக்திவாய்ந்த லேசர் விளக்குகள் பயன்படுத்தப்பட்டமை காரணமாக, கண்ணில் பாதிப்பு அடைந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p><p></p><p>
</p><p>முதல்கட்டத் தகவல்களின்படி, தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் 46 பேரும், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் 120 பேரும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/edc3a2f3-d94d-48ad-ba98-fba942116361/26-6a882ffd979b0.webp' /></p><p>
</p><p>
பொதுமக்கள் எந்தவிதப் பதற்றமும் இன்றி உடனடியாக வைத்தியசாலையை நாடலாம் எனவும், அதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாகவும் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் ரி. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.</p><p></p><p>
</p><p>
இதேவேளை, ஆலயத் திருவிழாவின்போது மின் இணைப்புகளை வழங்கியவர்கள் இளவாலைப் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-21T10:58:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ் ஆலயத் திருவிழாவில் அதிக வெளிச்சம்; நூற்றிற்கும் மேற்பட்டோர் வைத்தியசாலைகளில்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/excessive-lighting-jaffna-temple-vision-impairment-1787297452"></link>
            <id>https://jvpnews.com/article/excessive-lighting-jaffna-temple-vision-impairment-1787297452</id>
            <summary type="text">&amp;nbsp; யாழ்ப்பாணம் பண்டத்தரிப்பு பகுதியில் இடம்பெறும் ஆலயத் திருவிழாவின்போது அதிக வெடிகள் மற்றும் லேசர் லைற் பயன்பாட்டின் காரணமாக கண்ணில் பாதிப்படைந்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; யாழ்ப்பாணம் பண்டத்தரிப்பு பகுதியில் இடம்பெறும் ஆலயத் திருவிழாவின்போது அதிக வெடிகள் மற்றும் லேசர் லைற் பயன்பாட்டின் காரணமாக கண்ணில் பாதிப்படைந்த நூற்றிற்கும் மேற்பட்டோர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக&nbsp; தெரியவருகின்றது.</p><p>
பிரான்பற்று, பண்டத்தரிப்பு பகுதியில் உள்ள ஆலயத்தில் நேற்றைய உற்சவத்தின்போது அதிக வானவேடிக்கை வெடிகள் கொளுத்தப்பட்டதோடு ஆலயத்தில் இசை நிகழ்வின்போது அதிக சக்திகொண்ட லேசர் லைற் வகைகளும் பயன்படுத்தப்பட்டுள்ளன.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f910deef-2b2a-44c8-8dbd-ff8acea46d1d/26-6a87feae4d898.webp' /></p><p>
</p><h2>&nbsp;கண்ணில் பாதிப்படைந்த நூற்றுக் கணக்கானோர்</h2><p>இதனால் கண்ணில் பாதிப்படைந்த நூற்றுக் கணக்கானோர் வைத்தியசாலைகளை நாடி வருகின்றனர்.</p><p>
இதனால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வழமையான பணிகள் குறைக்கப்பட்டு இதற்காக விசேட ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதோடு ஏனைய வைத்தியசாலைகளில் இருந்து வைத்தியர்கள், தாதியர்கள் வரவழைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளதாகவும் கூறப்படுகின்றது.</p><p></p><p>

இதேநேரம் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் 46 பேரும் போதனா வைத்தியசாலையில் 120 பேரும் அனுமதிக்கப்பட்டுள்ளதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a083bad8-0591-43ff-a5be-7c09f2afc38a/26-6a8819a638212.webp' /></p><p></p><p>
</p><p>
இதேநேரம் எந்தவித பதற்றமும் இன்றி உடன் வைத்தியசாலையை நாடலாம் அதற்கு தேவையான ஏற்பாடுகள் அனைத்தும் தயார. நிலையில் உள்ளதாக போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் ரி.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2f9460aa-bcd0-40f5-b8f2-2bdee99fcca0/26-6a882fa75c52b.webp' /></p><p>
இதேநேரம் ஆலய திருவிழாவின்போது மின் இணைப்புக்களை வழங்கியவர்கள் இளவாலைப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p></p><p>அதேவேளை&nbsp; ஆலய திருவிழாக்கள்&nbsp; தற்போது&nbsp; கேளிக்கை கூடமாக மாறி வருவதாக&nbsp; சமூக ஆர்வலர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/86f19575-ed0e-4587-95e0-7f7ce4d44099/26-6a882fa839241.webp' /></p>]]></content>
            <updated>2026-08-21T10:57:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[குளிரூட்டி பெட்டியில் மிதந்தபடி பசிபிக் கடலில் 5 நாட்கள் தத்தளித்த 2 மீனவர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/2-mexican-fishermen-rescued-after-5-days-1787309327"></link>
            <id>https://news.lankasri.com/article/2-mexican-fishermen-rescued-after-5-days-1787309327</id>
            <summary type="text">பசிபிக் பெருங்கடலில் பெரிய குளிரூட்டி பெட்டியில் மிதந்த படி இருந்த மெக்சிகோ மீனவர்கள் இருவர் மீட்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. கடலில் தத்தளித்த 2 மீ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பசிபிக் பெருங்கடலில் பெரிய குளிரூட்டி பெட்டியில் மிதந்த படி இருந்த மெக்சிகோ மீனவர்கள் இருவர் மீட்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.</p><h2> கடலில் தத்தளித்த 2 மீனவர்கள்</h2><p>பசிபிக் பெருங்கடலில் பெரிய குளிரூட்டி பெட்டியை பாய்மர படகு போல பயன்படுத்திக் கொண்டு 5 நாட்கள் கடலில் தத்தளித்த படி உயிருக்கு போராடிய 53 வயது டேனியல் குவாரெரோ மார்டினெஸ் மற்றும் 32 வயது ஜோஸ் லூயிஸ் போர்டெலாஸ் விலேகஸ் ஆகிய இரண்டு மெக்சிகோ மீனவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.</p><p> கடந்த ஆகஸ்ட் 13ம் திகதி மெக்சிகோவின் சியாபாஸ் மாநிலத்தின் பாரெடான் பகுதியில் இருந்து இந்த இரண்டு மீனவர்களும் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6017f89b-7e60-4966-b281-83b4ae9d0b57/26-6a882d1051399.webp' /></p><p>இவர்கள் கரையில் இருந்து கிட்டத்தட்ட 75 மைல் தொலைவில் இருந்த போது ஆகஸ்ட் 14ம் திகதி இவர்களது வயர்லெஸ் தொடர்பு முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது.</p><p> இதையடுத்து குறித்த நேரத்தில் மீனவர்கள் கரைக்கு திரும்பாததை அடுத்து உள்ளூர் அதிகாரிகள் தீவிர தேடுதல் வேட்டையில் களமிறங்கியுள்ளனர்.</p><p></p><h2> மீட்பு மற்றும் சிகிச்சை</h2><p>
5 நாட்களுக்கு பிறகு சியாபாஸ் கடற்கரையில் இருந்து 130 கடல் மைல்கள் தூரத்தில் காணாமல் போன இரண்டு மீனவர்களையும் மெக்சிகோ கடற்படை வீரர்கள் கண்டறிந்து மீட்டுள்ளனர்.</p><p> மீட்கப்பட்ட இரண்டு மீனவர்களும் ஹெலிகாப்டர்கள் மூலம் கரைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ce00cbf9-e0ec-4ac0-880c-37c3df8dedfc/26-6a882d1103739.webp' /></p><p> அவர்களுக்கு கடுமையான நீரிழப்பு ஏற்பட்டிருந்த நிலையில் தேவையான முதலுதவி சிகிச்சைகள் வழங்கப்பட்டு தற்போது இருவரும் ஆபத்தை தாண்டி நலமுடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> இதற்கிடையில் மீனவர்கள் வழக்கமான பாதையை விட்டுவிட்டு எப்படி இவ்வளவு தூரம் விலகிச் சென்றார்கள் என்பது குறித்து கடல்சார் அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-21T10:49:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[சற்று முன்னர் FCIDஇலிருந்து வெளியேறிய நாமல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-rajapaksa-appears-before-fcid-1787285911"></link>
            <id>https://tamilwin.com/article/namal-rajapaksa-appears-before-fcid-1787285911</id>
            <summary type="text">புதிய இணைப்புநாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச வாக்குமூலம் அளித்த பின்னர், சற்று நேரத்திற்கு முன்பு நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவிலிருந்து (FCID) ...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச வாக்குமூலம் அளித்த பின்னர், சற்று நேரத்திற்கு முன்பு நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவிலிருந்து (FCID) வெளியேறியுள்ளார் </p><p>நடைபெற்று வரும் விசாரணை தொடர்பாக வழங்கப்பட்ட அழைப்பாணைக்கு இணங்க, இன்று காலை (21) FCIDஇற்கு வருகை தந்த நிலையில் அந்தப் பிரிவால் நடத்தப்படும் விசாரணையின் ஒரு பகுதியாக வாக்குமூலம் பதிவு செய்வதற்காக FCIDஇல் முன்னிலையானார்.</p><h2>முதலாம் இணைப்பு&nbsp;</h2><p>ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச இன்று காலை (21) நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு (FCID) வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
 

நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவு நடத்தி வரும் தொடர் விசாரணை தொடர்பாக வாக்குமூலம் அளிக்குமாறு அவருக்கு விடுக்கப்பட்ட அழைப்பாணைக்கு இணங்கவே அவர் முன்னிலையாகியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1eb69073-1174-4e36-9868-c4222ca7c000/26-6a87d51ea9aa7.webp' /></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-21T10:45:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ashik</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறுபோக நெல் கொள்முதல் மற்றும் வட்டியற்ற கடன் திட்டம் - வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/special-discussion-led-by-the-mannar-district-1787306524"></link>
            <id>https://tamilwin.com/article/special-discussion-led-by-the-mannar-district-1787306524</id>
            <summary type="text">2026ஆம் ஆண்டின் சிறுபோக நெல் அறுவடைகளை அரசாங்க உத்தரவாத விலையில் கொள்
முதல் செய்வதற்கான வேலைத்திட்டம் மற்றும் அரிசி ஆலை உரிமையாளர்களுக்கான
வட்டியற்ற...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026ஆம் ஆண்டின் சிறுபோக நெல் அறுவடைகளை அரசாங்க உத்தரவாத விலையில் கொள்
முதல் செய்வதற்கான வேலைத்திட்டம் மற்றும் அரிசி ஆலை உரிமையாளர்களுக்கான
வட்டியற்ற கடன் வழங்கும் திட்டம் தொடர்பான விசேட கலந்துரையாடல், மன்னார்
மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் இன்று (21.08.2026) மன்னார் மாவட்ட செயலகத்தில்
நடைபெற்றது.
</p><p>
நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் வழிகாட்டலுக்கு
அமைவாக ஏற்பாடு செய்யப்பட்ட இக்கூட்டத்தில் மாவட்ட விவசாயப் பணிப்பாளர், பிரதம
கணக்காளர், திட்டமிடல் பணிப்பாளர் திணைக்கள அதிகாரிகள், பலநோக்குக்
கூட்டுறவுச் சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் பதிவு செய்யப்பட்ட தனியார்
அரிசி ஆலை உரிமையாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.</p><h2>நெல் கொள்வனவு செய்யும் நடவடிக்கை</h2><p>
</p><p>
இதன்போது மாவட்ட அரசாங்க அதிபர் கூறுகையில், இச்சிறுபோக
அறுவடை ஆரம்பித்தது முதல் அரசாங்கத்தின் மூலம் நெல் சந்தைப்படுத்தல் சபையின்
ஊடாக நெல் கொள்வனவு செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வந்தது. மாவட்டத்தில் விவசாயிகள் தொடர்ந்து அறுவடைகளை முடித்து நெல்லை
வைத்திருக்கும் நிலையில், அவர்கள் அதை விற்பனை செய்வதற்கு எதிர்பார்ப்புடன்
காத்திருப்பதால் அரசாங்கத்தினால் தற்போது புதிய சுற்றுநிருபம்
வெளியிடப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9f3e253f-0cab-4fc1-9e0a-b74c93e4eff9/26-6a882a7c541ce.webp' /></p><p> </p><p>அதன்படி பலநோக்குக் கூட்டுறவுச்
சங்கங்கள் மற்றும் பதிவு செய்யப்பட்ட தனியார் அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு
அரசாங்கத்தின் ஊடாக வட்டியற்ற கடன்களை வழங்கி, விவசாயிகள் வைத்திருக்கும்
நெல்லைக் கொள்வனவு செய்ய நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p>
எனவே எமது மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்கள் மற்றும் பதிவு செய்யப்பட்ட
தனியார் அரிசி ஆலை உரிமையாளர்கள் நெல்லைக் கொள்வனவு செய்து, அதனைச் சேமித்து
அரிசியாக்குவதற்கான வசதிகளை வைத்திருந்தால் உடனடியாக இந்தச் செயல் திட்டத்தில்
இணைந்து ஒப்பந்தங்களை மேற்கொண்டு இச்சேவையை விரைவாக ஆரம்பிக்குமாறு அவர்
வலியுறுத்தினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ba3afc3e-47a0-4cb1-9e41-09016d029674/26-6a882a7d4210c.webp' /></p><h2>நிர்ணயித்த விலையில் கொள்முதல்</h2><p>
</p><p>

இத்திட்டத்தின் கீழ் சந்தையில் நெல்லுக்கான நியாயமான விலையை உறுதி செய்யும்
பொருட்டு 1 kg வெள்ளை நாடு நெல் 120 ரூபாவிற்கும், சிவப்பு நாடு நெல் 120
ரூபாவிற்கும், சம்பா நெல் 130 ரூபாவிற்கும் அரசு நிர்ணயித்த விலையில்
கொள்முதல் செய்யப்படவுள்ளதுடன், கொள்முதல் செய்யப்படும் நெல்லின் ஈரப்பதம்
அதிகபட்சமாக 14% ஆகவும் பதர் நெல்லின் அளவு 9%க்கு மிகாமலும் இருத்தல்
வேண்டும்.</p><p>

அத்துடன் நிலப்பரப்பின் அடிப்படையில் 1 ஏக்கர் வரை பயிர்செய்த விவசாயிகளிடம்
இருந்து அதிகபட்சமாக 1000 kg நெல்லும், 1 முதல் 3 ஏக்கர் வரை பயிர்
செய்தவர்களிடம் 2500 kg நெல்லும், 3 முதல் 5 ஏக்கர் வரை பயிர் செய்தவர்களிடம்
4000 kg நெல்லும் அதிகபட்சமாக கொள்முதல் செய்யப்பட உள்ள நிலையில்
நாளொன்றுக்கு அதிகபட்சம் 25 மெட்ரிக் தொன் வரை அரைக்கும் திறன் கொண்ட, மாவட்ட
செயலகத்தில் பதிவு செய்யப்பட்ட அரிசி ஆலைகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களுக்கு
அதிகபட்சமாக 25 மில்லியன் ரூபாய் வரை வட்டியற்ற கடன் ஒதுக்கப்பட்டு, ஆரம்ப
முன்பணமாக 25% விடுவிக்கப்பட்டு மீதித் தொகை 3 சம தவனைகளில் வழங்கப்படும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ff5c04b9-cfa7-4088-9828-488c26abaf8f/26-6a882a7e23cdf.webp' /></p><p>
</p><p>
அரசினால் வழங்கப்படும் இந்நிதியை 240 நாட்களுக்குள் முழுமையாக மீளச் செலுத்த
வேண்டும் என்பதுடன், தவறும்பட்சத்தில் எஞ்சிய தொகைக்கு ஆண்டுக்கு 10% வட்டி
அறவிடப்படுவதோடு சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படும் என்றும், முந்தைய அரசாங்கம்
கடன்களை மீளச் செலுத்தாத ஆலை உரிமையாளர்கள் இத்திட்டத்தில் சேர்க்கப்பட
மாட்டார்கள் என்றும் கூட்டத்தில் தெளிவுபடுத்தப்பட்டது.
</p><p>
தொடர்ந்து, தகுதியான பதிவு செய்யப்பட்ட அரிசி ஆலை உரிமையாளர்கள் கூட்டுறவுச்
சங்கங்களும் உடனடியாக மாவட்ட செயலகத்துடன் ஒப்பந்தங்களை மேற்கொண்டு இச்
செயற்திட்டத்தை விரைவுபடுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d44e86a3-dd5d-40d0-b251-aa981b7c5826/26-6a882a7ef1402.webp' /></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-21T10:42:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஏற்றுமதியாளர்களின் வரிப்பணம் திரும்பப்பெறுவதில் தாமதம் - கோப் குழுவில் ஏற்பட்டுள்ள சிக்கல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ird-explains-vat-refund-delays-on-time-1787304320"></link>
            <id>https://tamilwin.com/article/ird-explains-vat-refund-delays-on-time-1787304320</id>
            <summary type="text">சிறு மற்றும் நடுத்தர ஏற்றுமதியாளர்கள் மதிப்புக்கூட்டு வரி(VAT) பணத்தைத் திரும்பப் பெறுவதில் சந்திக்கும் தாமதங்கள் தொடர்பில் பொது நிதிக் குழு (CoPF) கே...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிறு மற்றும் நடுத்தர ஏற்றுமதியாளர்கள் மதிப்புக்கூட்டு வரி(VAT) பணத்தைத் திரும்பப் பெறுவதில் சந்திக்கும் தாமதங்கள் தொடர்பில் பொது நிதிக் குழு (CoPF) கேள்வியெழுப்பியுள்ளது.&nbsp;</p><p> 

அத்துடன், சுமார் 95% பணம் திரும்பச் செலுத்துதல்கள் நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் வழங்கப்படுவதாக உள்நாட்டு வருவாய்த் துறை தெரிவித்துள்ளது.</p><p>பணம் திரும்பச் செலுத்துவதில் தாமதம் ஏற்படுவது குறித்து ஏற்றுமதியாளர்களிடமிருந்து வந்த முறைப்பாடுகளைக் குழு உறுப்பினர்கள் சுட்டிக்காட்டிய நிலையில், IRD-யின் வரி டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் மின்னணு விலைப்பட்டியல் திட்டங்களை CoPF ஆய்வு செய்தபோது இந்தப் பிரச்சினை வெளிவந்துள்ளது.</p><h2>காலகெடுவுக்குள் பணம் செலுத்தப்படுகின்றதா...</h2><p> </p><p>

பணம் திரும்பச் செலுத்துதல் குறித்து சிறு மற்றும் நடுத்தர ஏற்றுமதியாளர்கள் முறைப்பாடு அளிப்பதாகவும், தேவையான காலக்கெடுவுக்குள் பணம் செலுத்தப்படுகிறதா என்று கேள்வி எழுப்பியதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e738f9c4-ebcc-411a-8fcb-534bd91f750b/26-6a882a2490f4c.webp' /></p><p>
</p><p>

மேலும், 14 நாட்களுக்குள் பணம் திரும்பக் கிடைக்கவில்லை என்றும் ஏற்றுமதியாளர்கள் தெரிவித்திருந்தனர்.

இதற்குப் பதிலளித்த IRD அதிகாரிகள், நிலுவையில் உள்ள வரி விவகாரங்கள், வருமான வரி தாக்கல் இணக்கம், ஆவணங்கள் மற்றும் ஒரு கோரிக்கைக்கு ஒதுக்கப்பட்ட இடர் வகைப்பாடு உள்ளிட்ட தனிப்பட்ட கோப்புகளின் சூழ்நிலைகளைப் பொறுத்தே பணம் திரும்பச் செலுத்தும் செயல்முறை அமையும் என்று குறிப்பிட்டுள்ளனர்.</p><p>

"சில நேரங்களில், அவர்கள் கையாள விரும்பாத ஒரு நிலுவைத் தொகை இருக்கும். அத்தகைய நேரங்களில், எங்களால் அவர்களுக்கு 14-15 நாட்களுக்குள் பணத்தை வழங்க முடியாது. </p><p>அவர்கள் அதைக் கையாண்ட பின்னர் தான் நாங்கள் அதை வழங்க வேண்டும்," என்று ஒரு IRD அதிகாரி CoPF-இடம் கூறினார்.

பணத்தைத் திரும்பப் பெறுவதற்கான கோப்புகள், இடர் மற்றும் இணக்கக் கருத்தாய்வுகளின்படி வகைப்படுத்தப்படுவதாக அந்த அதிகாரி மேலும் குறிப்பிட்டார்.</p><h2>இரண்டு வாரங்கள் தொடரும்</h2><p>

கோரிக்கைகள் அதிக, நடுத்தர அல்லது குறைந்த இடர் என வகைப்படுத்தப்படுவதாகவும், குறைந்த மற்றும் நடுத்தர இடர் கொண்ட கோரிக்கைகளுக்கான பணம் திரும்பச் செலுத்துதல் பொதுவாக 14-15 நாட்களுக்குள் செயல்படுத்தப்படும் என்றும் IRD கூறியது.</p><p> 

அதிக இடர் கொண்ட கோரிக்கைகளுக்குப் பணம் திரும்பச் செலுத்தப்படுவதற்கு முன்பு ஒரு தனி சரிபார்ப்பு செயல்முறைக்கு உட்படுத்தப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3cbeab45-7618-4494-b6c7-50ecb607a60d/26-6a882a2543176.webp' /></p><p>
</p><p>
"சுமார் 95% பணம் திரும்பச் செலுத்துதல், கொடுக்கப்பட்ட காலத்திற்குள் வழங்கப்படும்," என்று ஒரு IRD அதிகாரி குழுவிடம் கூறினார்.</p><p>

மீதமுள்ள வழக்குகளில் ஏற்படும் தாமதங்கள், தவறுகள், ஆவணச் சிக்கல்கள் அல்லது வரி செலுத்துவோரின் கோப்பு தொடர்பான குறிப்பிட்ட சூழ்நிலைகளால் ஏற்படக்கூடும் என்று அந்த அதிகாரி கூறினார்.
</p><p>
பணத்தைத் திரும்பப் பெறுவதில் உள்ள பிரச்சினைகளை மதிப்பிடுவதற்குத் தரவுப் பகுப்பாய்வு பயன்படுத்தப்பட்டு வருவதாக அந்தத் துறை தெரிவித்துள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-21T10:37:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[6 ஆடி உயரம்..உனக்கெல்லாம் ஹீரோயின் எங்கிருந்து தேட!!தடையாக இருந்ததை உடைத்த ரகுவரன்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/raghuvaran-height-struggle-tamil-cinema-1787309123"></link>
            <id>https://viduppu.com/article/raghuvaran-height-struggle-tamil-cinema-1787309123</id>
            <summary type="text">ரகுவரன்தமிழ் சினிமாவில் சில நடிகர்களின் தோற்றம், குரல், வித்தியாசமான உடல்மொழி, அமைதியான அச்சத்தை ஏற்படுத்தும் நடிப்பு உள்ளிட்ட தனக்கென ஒரு பாணியை உருவ...</summary>
            <content type="html"><![CDATA[<h2>ரகுவரன்</h2><p>தமிழ் சினிமாவில் சில நடிகர்களின் தோற்றம், குரல், வித்தியாசமான உடல்மொழி, அமைதியான அச்சத்தை ஏற்படுத்தும் நடிப்பு உள்ளிட்ட தனக்கென ஒரு பாணியை உருவாக்கி பிரபலமானவர் தான் நடிகர் ரகுவரன். ஹீரோ, வில்லன், குணச்சித்திர ரோலில் நடித்து வந்த ரகுவரன், கடைசியாக யாரடி நீ மோகினி படத்தில் நடித்து மரணமடைந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/252d58c5-6d89-4aa0-9d74-6d2609fddf90/26-6a882c45952ce.webp' /></p><p> தற்போது ரகுவரன் குறித்த சில தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிக்க ஆரம்பித்தபோது வாய்ப்பு தேடச் சென்றபோது ஆறு அடிக்கும் மேல் உயரம் கொண்டதால் பலரும் கதாநாயகன் தோற்றத்தில் பொருத்திப் பார்க்க தயங்கினர். </p><p>அவர் அளித்த பேட்டியில், நீ இவ்வளவு உயரமாக இருக்கிறாய்? உனக்கு ஹீரோயினை எங்கிருந்து தேடுவது என்று சிலர் என்னிடம் கூறினார்கள். அதுமட்டுமில்லாமல் என் தோற்றத்தை வைத்து 'ஜிப்ஸி' என்றும் குறிப்பிடுவார்கள்.</p><p> சினிமாவில் நடிக்க ச்வேடும் என்ற கனவுடன் வந்த ஒருவருக்கு இதுபோன்ற விமர்சனங்கள் நிச்சயம் எளிதானதாக இருந்திருக்காது. ஆனால், காலம் செல்ல செல்ல ரகுவரனின் தோற்றமே அவருக்கான மிகப்பெரிய பலமாக மாறியது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b1d26e03-d543-4549-829c-cfab26bcd99c/26-6a882c464f28e.webp' /></p><p> </p><p>வழக்கமான ஹீரோ கதாபாத்திரங்களை தாண்டி, வில்லன், குணச்சித்திர ரோல்களில் அவர் காட்டிய நடிப்பு கவனத்தை ஈர்த்தது. அதேபோல் பாட்ஷாவில் மார்க் ஆண்டனி படத்தில் ரோலும் மிகப்பெரிய அடையாளத்தை கொடுத்தது. முதல்வன் படத்திலும் வித்தியாசமான தோற்றத்தை கொடுத்து டாப் லெவலுக்கு சென்றார். கடைசியாக, யாரடி நீ மோகனி படத்தின் தோற்றமும் இன்றும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-21T10:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் திருவிழாவுக்கு சென்றவர்களுக்கு நேர்ந்த அதிர்ச்சி! இதுவரையில் 157 பேர் வைத்தியசாலையில்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/excessive-use-of-lighting-at-a-temple-in-jaffna-1787293143"></link>
            <id>https://tamilwin.com/article/excessive-use-of-lighting-at-a-temple-in-jaffna-1787293143</id>
            <summary type="text">புதிய இணைப்புபண்டத்தரிப்பு பிரான்பற்று முருகன் ஆலயத்தில் நேற்றைய(20) ஆலயத் திருவிழாவின் போது
நூற்றுக்கணக்கானோர் கண் பாதிப்புக்குள்ளான சம்பவம் தொடர்பா...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>பண்டத்தரிப்பு பிரான்பற்று முருகன் ஆலயத்தில் நேற்றைய(20) ஆலயத் திருவிழாவின் போது
நூற்றுக்கணக்கானோர் கண் பாதிப்புக்குள்ளான சம்பவம் தொடர்பான விசாரணைகள்
முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p><p>கண் பாதிப்புக்கான காரணத்தை கண்டறியும் நோக்கில் பொலிஸார் மற்றும்
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ள நிலையில், ஆலய
வளாகத்தில் பொருத்தப்பட்டிருந்த அதிக சக்தி கொண்ட சீனத் தயாரிப்பு மின்
விளக்குகள் சிலவற்றை பொலிஸார் கையகப்படுத்தி எடுத்துச் சென்றுள்ளனர்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/WQ7bM1YT4SA" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p>
கையகப்படுத்தப்பட்ட மின் விளக்குகள் தற்போது ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு
வருவதுடன், அவற்றின் மின்சக்தி அளவு, பயன்பாட்டுத் தன்மை மற்றும் பொதுமக்கள்
பயன்பாட்டிற்கு அவை அனுமதிக்கப்பட்டவையா அல்லது தடை செய்யப்பட்டவையா என்பது
தொடர்பிலும் ஆராயப்பட்டு வருகிறது.&nbsp;</p><h2>மூன்றாம் இணைப்பு</h2><p>யாழ்.பண்டத்தரிப்பு பிரான்பற்று முருகமூர்த்தி ஆலயத்தில் நேற்றிரவு நடைபெற்ற
திருவிழாவில் அதிகளவு ஒலி காரணமாக கண் பாதிப்புக்குள்ளானவர்கள் அனைவரும்
உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டு, அங்கு சிகிச்சை
மற்றும் விசேட கண்காணிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக
வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
</p><p>கண் பாதிப்புக்குள்ளானவர்களில் இம்முறை உயர்தரப் பரீட்சைக்கு தோற்றும் இரு
மாணவர்களுக்கு மேலதிக சிகிச்சைகளைப் பெற்று வீடு திரும்பியுள்ளதுடன், அவர்கள்
தொடர்ந்தும் மருத்துவ கண்காணிப்பில் இருக்குமாறு பெற்றோருக்கு
அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><p>
இதற்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் தனியான விடுதியொன்று
ஒதுக்கப்பட்டு, அனுமதிக்கப்பட்டவர்களுக்கு மேலதிக வைத்தியர்கள், தாதியர்கள்
மற்றும் ஊழியர்களின் பங்களிப்புடன் சிகிச்சைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
</p><p>இந்நிலையில், தற்போது ஆண்கள் 58 பேரும், பெண்கள் 44 பேரும், சிறுவர்கள் 55
பேரும் என மொத்தம் 157 பேர் கண் பாதிப்பு உள்ளிட்ட பாதிப்புகளுக்காக
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.</p><p>
கண் பாதிப்புக்கான அறிகுறிகள் தென்படும் அனைவரும் தாமதமின்றி உடனடியாக
வைத்தியசாலைக்கு வருமாறு சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.</p><p>
மேலும், சுகாதார சேவைகள் பணிமனை, பொலிஸார், பிரதேச செயலாளர்கள் மற்றும்
தொடர்புடைய அதிகாரிகள் இணைந்து நிலைமையை தொடர்ந்து கண்காணித்து, தேவையான
நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p><h2>இரண்டாவது இணைப்பு&nbsp;</h2><p>பண்டத்தரிப்பு பிரான்பற்று பகுதியில் நடைபெற்ற ஆலயத் திருவிழாவின் போது
இடம்பெற்ற அதிகளவிலான வாணவேடிக்கை மற்றும் லேசர் ஒளிக்கீற்றுப் பயன்பாடு
காரணமாக பலர் கண் பாதிப்புக்குள்ளாகி வைத்தியசாலைகளை நாடி வருகின்றனர்.
</p><p>இதுதொடர்பில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் கண் வைத்திய நிபுணர் வைத்தியர்&nbsp; எம். மலரவன் பொதுமக்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்களை விடுத்துள்ளார்.</p><p>
️ கண்களில் எரிச்சல், சிவத்தல், நீர்வருதல், வலி, பார்வை மங்குதல் அல்லது
ஏதேனும் மாற்றம் ஏற்பட்டால் அலட்சியம் செய்ய வேண்டாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dbf0db8c-637c-4ee7-a408-b2a7e2bc8c8e/26-6a880a998b5a2.webp' /></p><p>
</p><p>உடனடியாக அருகிலுள்ள வைத்தியசாலைக்குச் சென்று பரிசோதனை செய்து
கொள்ளுமாறும், தேவையானவர்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் கண்
சிகிச்சைப் பிரிவை நாடுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><p>
️ குறிப்பாக நேற்றைய திருவிழாவில் கலந்துகொண்ட சிறுவர்கள், பெண்கள் உள்ளிட்ட
அனைவரும் தங்களது கண்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை கவனமாக அவதானிக்க வேண்டும்.
கண்களை தேய்க்க வேண்டாம்.
</p><p>சுயமாக எந்தவொரு கண் மருந்தையும் பயன்படுத்த வேண்டாம்.
சந்தேகம் ஏற்பட்டாலும் உடனடியாக வைத்திய ஆலோசனையைப் பெறுங்கள்.
</p><p>“கண் பாதிப்பு ஏற்பட்டால் தாமதிக்காமல் வைத்தியசாலையை நாடுங்கள்” – வைத்தியர் எம். மலரவன்
இந்த அறிவிப்பை அதிகமானவர்களுக்கு பகிர்ந்து, பாதிக்கப்பட்டவர்களை உடனடியாக
வைத்தியசாலைக்கு செல்லுமாறு அறிவுறுத்துவோம்.</p><h2>வைத்தியசாலையில் அனுமதி</h2><p>யாழ்ப்பாணம்,பண்டத்தரிப்பு பிரான்பற்று பகுதியில் உள்ள முருகமூர்த்தி
ஆலயத்தில் நேற்று (20.08.2026) நடைபெற்ற திருவிழாவின் போது அதிகளவில்
வாணவேடிக்கைகள் மற்றும் அதிக சக்தி கொண்ட லேசர் ஒளிக்கீற்றுகள்
பயன்படுத்தப்பட்டதால், சிறுவர்கள், பெண்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர்
கண் பாதிப்புக்குள்ளாகி வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக
அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p><p>முதற்கட்ட தகவல்களின் அடிப்படையில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சுமார்
120 பேரும், தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் 46 பேரும் சிகிச்சைக்காக
அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><h2>நோயாளிகளின் எண்ணிக்கை&nbsp;</h2><p>

இவர்களில் சிறுவர்கள் மற்றும் பெண்கள் சுமார் 60 பேரும், ஆண்கள் 50-க்கும்
மேற்பட்டோரும் அடங்குவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. </p><p>மேலும்
பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து வைத்தியசாலைகளை நாடி வருவதால், நோயாளிகளின்
எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

“பொதுமக்கள் எவ்வித பதற்றமும் இன்றி உடனடியாக வைத்தியசாலைகளை நாடலாம்.
</p><p>அதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளன” என யாழ்ப்பாணம் போதனா
வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் ரி. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.</p><p>

இதேவேளை, பாதிக்கப்பட்டவர்களை உடனடியாக வைத்தியசாலைகளுக்குச் செல்லுமாறு
பிரதேச சபையினால் ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்டு வருகிறது.
</p><p>
குறிப்பாக கண்களில் பாதிப்பு, எரிச்சல் அல்லது பார்வை தொடர்பான பிரச்சினைகள்
ஏற்பட்டவர்கள் தாமதிக்காமல் அருகிலுள்ள வைத்தியசாலையை நாடுமாறு
அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><h2>ஆலயத் திருவிழா</h2><p>
</p><p>
மேலும், ஆலயத் திருவிழாவின் போது மின் இணைப்புகளை வழங்கியதாகக் கூறப்படும்
சிலர் இளவாலை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.</p><p>

இதனிடையே, இதேபோன்று நவாலி அந்திரான் பகுதியில் நடைபெற்ற ஆலயத் திருவிழாவின்
போதும் வாணவேடிக்கையால் அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2a4f5d61-1510-4a3f-bdb4-a5434702ed78/26-6a87f1b62cc5d.webp' /></p><p>
</p><p>இதன்போது பனை மரம் ஒன்றும் பாதுகாப்பு வேலியும் தீப்பற்றி எரிந்ததுடன், சில
பொதுமக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.</p><p>

இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் கவலை வெளியிட்டுள்ள யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க
அதிபர் மருதலிங்கம் பிரதீபன், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும்
வகையில் ஆலய நிர்வாகங்கள் மற்றும் மதகுருமார்கள் உள்ளிட்ட அனைத்து
பொறுப்புக்கூற வேண்டிய தரப்பினரும் சமூகப் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என
கேட்டுக்கொண்டுள்ளார்.
</p><p>
தேவையற்ற ஒலிபெருக்கி பயன்பாடு, அதிகளவிலான பட்டாசு மற்றும் வாணவேடிக்கை, அதிக
சக்தி கொண்ட லேசர் ஒளிக்கீற்றுகள் உள்ளிட்ட பொதுமக்களின் பாதுகாப்புக்கு
பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய செயற்பாடுகளைத் தவிர்க்குமாறும் அவர்
வலியுறுத்தியுள்ளார்.
</p><p>
பொதுமக்களின் பாதுகாப்பை விட எந்தவொரு திருவிழா கொண்டாட்டமும் முக்கியமானதல்ல
எனவும், எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாத வகையில் ஆலய
நிர்வாகங்கள் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும்
கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p><p><b><i>&nbsp;மேலதிக தகவல் - தீபன்</i></b></p><h2>முதலாம் இணைப்பு</h2><p>யாழ்ப்பாணம், பிரான்பற்று பகுதியில் உள்ள முருகன் ஆலயத்தில் திருவிழாவை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்ட மின் விளக்கு அலங்காரத்தால் சுமார் 35 பேருக்கு கண் பார்வை பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>

குறித்த ஆலயத்தில் திருவிழா நடைபெற்று வரும் நிலையில், ஆலய வளாகம் பல்வேறு மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
</p><h2>பார்வை பிரச்சினை</h2><p>
இந்நிலையில், அதிகளவில் பயன்படுத்தப்பட்ட மின் விளக்குகளின் ஒளியால் நேற்று ஆலயத்திற்கு சென்றவர்களில் சுமார் 35 பேருக்கு கண் பார்வை தொடர்பான பாதிப்புகள் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b96d6b16-a4d5-4f7b-9533-87ec33cef535/26-6a87f1b55bdf5.webp' /></p><p>பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
</p><p>
இதனையடுத்து, குறித்த ஆலயத்திற்கு நேற்று சென்ற அனைவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குச் சென்று கண் பரிசோதனை மேற்கொள்ளுமாறு யாழ்ப்பாணம் மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் அறிவுறுத்தியுள்ளனர்.</p><p></p><p></p><p>YOU MAY LIKE THIS VIDEO</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/CFWVi5B8mkE" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-08-21T10:29:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுரேஷ் சலேவை பயங்கரவாதியாக அரசாங்கம்! ஆவேசத்தில் ஞானசார தேரர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/gnanasara-thero-concerned-about-suresh-salley-1787306901"></link>
            <id>https://ibctamil.com/article/gnanasara-thero-concerned-about-suresh-salley-1787306901</id>
            <summary type="text">
சுரேஷ் சலே போன்ற போர் வீரர்களை அரசாங்கம் பயங்கரவாதியாக காட்ட முயற்சிப்பதாக கலகொட அத்தே ஞானசார தேரர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு பயங்கர...</summary>
            <content type="html"><![CDATA[<p>
சுரேஷ் சலே போன்ற போர் வீரர்களை அரசாங்கம் பயங்கரவாதியாக காட்ட முயற்சிப்பதாக கலகொட அத்தே ஞானசார தேரர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
</p><p>
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் முன்னாள் அரச புலனாய்வு பிரதானி சுரேஷ் சலே கைது செய்யப்பட்டுத் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளதை கண்டித்து நடத்தப்பட்ட கூட்டமொன்றின் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
</p><p>
அதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், “சில முக்கிய வரலாற்று உண்மைகளை நினைவூட்ட விரும்புகிறேன். 1971 மக்கள் விடுதலை முன்னணி கிளர்ச்சியில் 4,000 முதல் 5,000 பேர் வரையிலும், 1987-89 காலப்பகுதியில் 40,000 முதல் 80,000 பேர் வரையிலும் கொல்லப்பட்டனர்.</p><p></p><h2>சஹ்ரான் குழுவுக்கும் ஜனநாயக உரிமை?</h2><p>
</p><p>
அன்று தவறான பாதையில் சென்று கொலைகளைச் செய்தவர்கள் பின்னர் ஜனநாயகத்துக்கு வந்து மனித உரிமைகளைப் பற்றிப் பேச முடிந்தது என்றால், ஏன் அந்த உரிமையைச் சஹ்ரான் குழுவுக்கும், சிறையிலிருக்கும் விடுதலைப் புலிகள் உறுப்பினர்களுக்கும், நாட்டைக் காப்பாற்றப் போராடிவிட்டு இன்று சிறையிலிருக்கும் போர் வீரர்களுக்கும் வழங்க முடியாது?</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/37843fad-c130-45c4-8bd6-1aa44d8c9b1d/26-6a882708a116c.webp' /></p><p>
1983 முதல் 2009 வரை வடக்கில் நிலவிய பயங்கரவாதத்தினால் 27,000 போர் வீரர்களை நாம் இழந்தோம்.
</p><p>
தமிழீழ விடுதலைப் புலிகளை இராணுவ ரீதியாகத் தோற்கடிக்க எமது பாதுகாப்புப் படைகள் செயல்பட்டபோது, அவர்களுக்குத் தேவையான புலனாய்வு ஆதரவை அதிகளவில் வழங்கியவர்கள் முஸ்லிம் சகோதரர்களே.</p><p>

ஆனால், 1990களில் உருவான ஆயுதக் குழுக்கள் அல் கொய்தா, போகோ ஹராம், ஐ.எஸ்.ஐ.எஸ் போன்ற அமைப்புகளின் செல்வாக்கினால் வஹாபி தீவிரவாதத்துக்கு இரையானார்கள்.
</p><p>
சுரேஷ் சலே போன்ற புலனாய்வு அதிகாரிகள் இந்த வஹாபி தீவிரவாதத்தில் இருந்து நாட்டைக் காப்பாற்றப் பாடுபட்டவர்கள்.
</p><p>
அத்தகைய போர் வீரர்களைத் பயங்கரவாதிகளாகக் காட்ட அரசாங்கம் முயற்சிக்கிறது. ஆனால், ஆயிரம் வழக்குகள் போட்டாலும் சிறையில் அடைத்தாலும் நாம் எமது தேசியப் பொறுப்பையும், சாசனப் பொறுப்பையும் கைவிடப் போவதில்லை.” என்றார்.</p><p></p><p>[IIXB9PG</p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;&nbsp;</h5></td></tr></tbody></table><p></p>]]></content>
            <updated>2026-08-21T10:23:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kowshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை ரூபாயின் பெறுமதியில் பதிவாகியுள்ள மாற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/the-decline-in-us-dollar-selling-rate-in-sri-lanka-1787306006"></link>
            <id>https://tamilwin.com/article/the-decline-in-us-dollar-selling-rate-in-sri-lanka-1787306006</id>
            <summary type="text">அமெரிக்க டொலரின் விற்பனை விகிதம் 334 ரூபாவாக குறைந்துள்ளது. அதே சமயம் நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில், இன்று(21.08.2026) அமெரிக்க டொலருக்கு எதிராக இல...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்க டொலரின் விற்பனை விகிதம் 334 ரூபாவாக குறைந்துள்ளது.</p><p> அதே சமயம் நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில், இன்று(21.08.2026) அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாயின் மதிப்பு மேலும் உயர்ந்துள்ளது.</p><h2>டொலரின் பெறுமதி&nbsp;</h2><p>
</p><p>
இலங்கை மத்திய வங்கியின் தகவல்படி, அமெரிக்க டொலரின் கொள்வனவு பெறுமதி ரூ. 326.05இலிருந்து ரூ. 325.10 ஆகக் குறைந்துள்ளது. மேலும் அதன் விற்பனை விகிதமும் ரூ. 335.01இலிருந்து ரூ. 334.23 ஆகக் குறைந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/56be3058-d5b3-45dc-8f26-41d9f7bf2ad9/26-6a882286ee908.webp' /></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-21T10:22:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kowshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொரிய விமானிகளைக் காப்பாற்றிய இலங்கைத் தொழிலாளர்கள்! கிடைத்துள்ள அங்கீகாரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-lankan-workers-save-korean-pilots-1787302984"></link>
            <id>https://tamilwin.com/article/sri-lankan-workers-save-korean-pilots-1787302984</id>
            <summary type="text">4 ஆண்டுகளுக்கு முன்பு, 3 இலங்கை புலம்பெயர் தொழிலாளர்கள்&amp;nbsp;தென் கொரிய படகொன்றின் மாலுமியுடன் இணைந்து&amp;nbsp;மஞ்சள் கடலில்&amp;nbsp; தீப்பிடித்து விழுந்த வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>4 ஆண்டுகளுக்கு முன்பு, 3 இலங்கை புலம்பெயர் தொழிலாளர்கள்&nbsp;தென் கொரிய படகொன்றின் மாலுமியுடன் இணைந்து&nbsp;மஞ்சள் கடலில்&nbsp; தீப்பிடித்து விழுந்த விமானமொன்றில் இருந்து 2 விமானிகளை காப்பாற்றியுள்ளனர்.</p><p>அவ்வாறு உயிரைக் காப்பாற்றிய 2&nbsp;இலங்கையர்களுக்கு தேசிய நலனுக்கு ஆற்றிய சிறப்பான பங்களிப்பை காரணம் காட்டி, அங்கு நீண்ட காலம் தங்குவதற்கான திறன்மிகு தொழிலாளர் விசாக்களை வழங்கியதாக அந்த நாட்டு நீதி அமைச்சு தெரிவித்துள்ளது.&nbsp;</p><h2>திறன்மிகு தொழிலாளர் தகுதி&nbsp;</h2><p>மூன்றாவது மீட்பாளர் ஏற்கனவே நீண்ட கால வதிவிடத் தகுதியைப் பெற்றிருப்பதுடன் 2022 ஆகஸ்ட் 12 அன்று, சியோலுக்குத் தெற்கே சுமார் 45 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஹ்வாசொங் கடற்கரைக்கு அப்பால் இந்த மீட்பு நடவடிக்கை நடைபெற்றுள்ளது.</p><p> இயந்திரத்தில் ஏற்பட்ட தீ விபத்தைத் தொடர்ந்து கீழே விழுந்த போர் விமானத்தின் விமானிகளை, கடற்றொழில் படகில் இருந்த இலங்கைத் தொழிலாளர்கள் கண்டுள்ளனர்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1b427d77-16df-48da-a688-fea3f86ba3ba/26-6a881d8da7f5d.webp' /></p><p>அந்த நேரத்தில், அந்த மூன்று பேரும் தொழிலாளர் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் துறைகளில் உள்ள வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்குப் பொதுவாக வழங்கப்படும் E-9 விசாக்களை வைத்துக்கொண்டு, வேலைவாய்ப்பு அனுமதி முறையின் கீழ் தென் கொரியாவில் இருந்துள்ளனர். </p><p>இந்தத் தகுதி, தொழிலாளர்கள் அதிகபட்சமாக நான்கு ஆண்டுகள் மற்றும் 10 மாதங்கள் தங்குவதற்கு அனுமதி வழங்கும். வெள்ளிக்கிழமை அன்று E-7-4 திறன்மிகு தொழிலாளர் தகுதி வழங்கப்பட்ட அந்த இரு நபர்களும், ஆரம்பத்தில் இரண்டு ஆண்டுகள் வரை தென் கொரியாவில் தங்கியிருக்கலாம்.</p><h2>அதிகாரப்பூர்வ அங்கீகாரம்</h2><p> </p><p>அதன் பிறகு, நீட்டிப்புகளின் எண்ணிக்கைக்கு வரம்பின்றி, அவர்களின் விசாக்களை இரண்டு ஆண்டு இடைவெளிகளில் புதுப்பித்துக் கொள்ளலாம். </p><p>இதனையடுத்து "நமது சமூகத்திற்குச் சிறப்பான பங்களிப்புகளை ஆற்றியுள்ள வெளிநாட்டினர் நாட்டில் நிலையாக வாழ்வதற்கு நாங்கள் தொடர்ந்து ஆதரவளிப்போம்" என நீதித்துறை அமைச்சர் ஜங் சங்-ஹோ கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c70a4a7f-f60b-4e4a-be68-5b387715c92c/26-6a881d8e58f5f.webp' /></p><p> </p><p>அந்த வீரர்களின் செயல்களுக்கு கிடைத்த மற்றொரு அதிகாரப்பூர்வ அங்கீகாரத்தைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.</p><p> கடந்த மே மாதம், இரண்டு விமானிகளைக் காப்பாற்ற உதவியதற்காக, விமானப்படைத் தலைமைத் தளபதியிடமிருந்து அவர்கள் ஒரு பாராட்டுக் கடிதத்தைப் பெற்றுள்ளனர். </p><p>4 ஆண்டுகளுக்கு முன்பு செய்யப்பட்ட அந்தத் தொழிலாளர்களின் செயல், இறுதியில் 2 உயிர்களை காப்பாற்றியது மட்டுமல்லாமல், தென் கொரியாவில் அவர்களின் வாழ்க்கைப் போக்கையும் மாற்றியமைத்துள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-21T10:17:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதிக டெஸ்ட் அரை சதம் - சச்சினின் சாதனையை சமன் செய்த ஜோ ரூட்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/joeroot-equal-sachin-record-most-test-half-century-1787307249"></link>
            <id>https://news.lankasri.com/article/joeroot-equal-sachin-record-most-test-half-century-1787307249</id>
            <summary type="text">joe root equal sachin record most test half century: அதிக டெஸ்ட் அரை சதம் அடித்துள்ள சச்சினின் சாதனையை ஜோ ரூட் சமன் செய்துள்ளார். 

சச்சினின் சாதனைய...</summary>
            <content type="html"><![CDATA[<p>joe root equal sachin record most test half century: அதிக டெஸ்ட் அரை சதம் அடித்துள்ள சச்சினின் சாதனையை ஜோ ரூட் சமன் செய்துள்ளார். </p><h3>

சச்சினின் சாதனையை சமன் செய்த ஜோ ரூட்</h3><p> 

இங்கிலாந்துக்கு சென்றுள்ள பாகிஸ்தான் அணி 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
</p><p>
முதல் டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தான் அணி 171 ஓட்டங்கள் குவித்து ஆல் அவுட் ஆனது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1ba60590-466f-4559-9cfa-bdeee68fd67d/26-6a8824f287ba7.webp' /></p><p>

அதனைத்தொடர்ந்து முதல் இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து அணி, 8 விக்கெட் இழப்பிற்கு 366 ஓட்டங்கள் குவித்துள்ளது.&nbsp;</p><p>

இங்கிலாந்து தரப்பில் ஜோர்டான் காக்ஸ், ஹாரி ப்ரூக், ஜோ ரூட் உள்ளிட்ட மூவரும் அரைசதம் அடித்தனர்.&nbsp;</p><p></p><p>

66 ஓட்டங்களை குவித்த ஜோ ரூட்டிற்கு இது 68வது டெஸ்ட் அரைசதம் ஆகும்.
</p><p>
இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக அரைசதம் அடித்துள்ள சச்சின் டெண்டுல்கரின் சாதனையை சமன் செய்துள்ளார்.&nbsp;</p><p>
278 இன்னிங்ஸில் சச்சின் செய்த சாதனையை, ஜோ ரூட் 264 இன்னிங்ஸில் சமன் செய்துள்ளார்.&nbsp;&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-21T10:14:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[மூத்த நடிகை சௌகார் ஜானகி காலமானார்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/veteran-actress-sowcar-janaki-passes-away-1787306661"></link>
            <id>https://tamilwin.com/article/veteran-actress-sowcar-janaki-passes-away-1787306661</id>
            <summary type="text">உடலநலக் குறைவு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகை சௌகார் ஜானகி தனது 94ஆவது வயதில் காலமானார்.தென்னிந்திய சினிமாவின் மூத்த நடிகைகளில் ஒ...</summary>
            <content type="html"><![CDATA[<p>உடலநலக் குறைவு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகை சௌகார் ஜானகி தனது 94ஆவது வயதில் காலமானார்.</p><p>தென்னிந்திய சினிமாவின் மூத்த நடிகைகளில் ஒருவரான சௌகார் ஜானகி, உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் வைத்தியசாலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அனுமதிக்கப்பட்டிருந்தார்.</p><h2>சௌகார் ஜானகி</h2><p> </p><p>இந்த நிலையில் இன்று(21) மதியம் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக வைத்தியர்கள்கள் அறிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b3f305b5-6c0d-429a-9abe-fcc503e997a2/26-6a8824aee63f8.webp' /></p><p>கடந்த 1950 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான ’சவுகாரு’ திரைப்படத்தின் மூலம் அவர் திரையுலகில் அடியெடுத்து வைத்தார். அதை தொடர்ந்து சௌகார் ஜானகி என அவர் அழைக்கப்பட்டார்.</p><p>சௌகார் ஜானகியின் மறைவு தென்னிந்திய திரையுலகத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-21T10:13:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரெஞ்சு பொலிஸார் மீது புலம்பெயர்ந்தோர் தாக்குதல்; சம்பவத்தால் பரபரப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/migrants-attack-french-police-1787293186"></link>
            <id>https://canadamirror.com/article/migrants-attack-french-police-1787293186</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;பிரான்ஸ் நாட்டின் வடக்குக் கடற்கரைப் பகுதியிலிருந்து சிறிய ரப்பர் படகுகள் (Small Boats) மூலம் இங்கிலாந்து நோக்கிக் சட்டவிரோதமாகப் பயணிக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;பிரான்ஸ் நாட்டின் வடக்குக் கடற்கரைப் பகுதியிலிருந்து சிறிய ரப்பர் படகுகள் (Small Boats) மூலம் இங்கிலாந்து நோக்கிக் சட்டவிரோதமாகப் பயணிக்க முயன்ற புலம்பெயர்ந்தோரைத் தடுக்க முயன்ற பிரெஞ்சு காவல் துறையினர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><p> 

கடலோரக் காவல் படையினர் படகை நோக்கிச் சென்றபோது, அங்கிருந்த புலம்பெயர்ந்தோர் அவர்களைத் தடுத்து நிறுத்தி மோதலில் ஈடுபட்ட காட்சிகள் வெளியாகியுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6cf82c50-d0e5-4a6b-babd-0a2e76f635c2/26-6a87ee036fa0e.webp' /></p><h2>மனித கடத்தல்காரர்கள் மற்றும் புலம்பெயர்ந்தோர்&nbsp;</h2><p>
</p><p>
ஆங்கிலக் கால்வாய் (English Channel) வழியாகப் பிரிட்டனை அடைய கடத்தல் கும்பல்களின் உதவியுடன் நூற்றுக்கணக்கானோர் தினமும் பிரெஞ்சு கடற்கரைகளில் திரள்கின்றனர். </p><p>

பாதுகாப்புப் படையினர் படகுகளைக் பறிமுதல் செய்யவோ அல்லது கடலுக்குள் செல்வதைத் தடுக்கவோ முயலும் போது, அவர்கள் மீது கற்களை வீசியும், தடி மற்றும் கூர்மையானப் பொருட்களைக் கொண்டும் தாக்குதல்கள் நடத்தப்படுவதாகப் பிரெஞ்சு அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
சமீபகாலமாகப் பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் அரசுகள் இணைந்து எல்லைக் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியுள்ளன. </p><p>போலீசார் கடலோரப் பகுதிகளில் ரோந்துப் பணியை அதிகரித்துள்ள போதிலும், மனித கடத்தல்காரர்கள் மற்றும் புலம்பெயர்ந்தோர் மிகவும் ஆக்ரோஷமான முறையில் சட்ட அமலாக்கப் படையினரை எதிர்கொண்டு படகுகளை இயக்க முயல்வது தொடர்கதையாகி வருகிறது.
</p><p>
ஆபத்தான இந்த கடல்சார் பயணங்களின் போது ஏற்படும் மோதல்கள் மற்றும் விபத்துக்களால் உயிரழப்புகள் அதிகரிக்கும் அபாயம் உருவாகியுள்ளது. </p><p>

இந்த வன்முறை சம்பவங்களைத் தொடர்ந்து, பிரெஞ்சு கடலோரப் பகுதிகளில் கூடுதல் காவல் படையினரைக் குவிக்கவும், கடத்தல் நெட்வொர்க்குகளுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கவும் இரு நாடுகளின் அதிகாரிகளும் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-08-21T10:09:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரூ. 100 கோடி கிளப்பில் இணைந்ததா லோகேஷ் கனகராஜின் டிசி திரைப்படம்... மாஸ் கலெக்ஷன் விவரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/lokesh-kanagaraj-dc-movie-bo-1787300573"></link>
            <id>https://cineulagam.com/article/lokesh-kanagaraj-dc-movie-bo-1787300573</id>
            <summary type="text">டிசி திரைப்படம்ஆல் ஏரியாவிலும் நான் கில்லி என விஜய்யின் பட வசனம் வருவது போல் இயக்கம் மட்டுமில்லை நடிப்பிலும் மாஸ் காட்டுவேன் வசூல் வேட்டை செய்வேன் என ...</summary>
            <content type="html"><![CDATA[<h2>டிசி திரைப்படம்</h2><p>ஆல் ஏரியாவிலும் நான் கில்லி என விஜய்யின் பட வசனம் வருவது போல் இயக்கம் மட்டுமில்லை நடிப்பிலும் மாஸ் காட்டுவேன் வசூல் வேட்டை செய்வேன் என செய்து காட்டி வருகிறார் லோகேஷ் கனகராஜ். </p><p>அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் லோகேஷ் கனகராஜ், வாமிகா கபி, சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியான படம் டிசி. </p><p>அனிருத் இசையமைக்க ஆக்ஷன் கதைக்களத்தில் உருவான டிசி படம் கடந்த ஆகஸ்ட் 7ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/60811e8d-e65d-4b6f-ad28-ec7d6436f9e0/26-6a881baef0715.webp' /></p><h2>பாக்ஸ் ஆபிஸ்</h2><p>
ஹீரோவாக களமிறங்கியுள்ள லோகேஷ் கனகராஜின் நடிப்பு ரசிகர்களால் வெகுவாக பாராட்டப்பட்டது. அதேபோல் அனிருத்தின் இசையும் படத்திற்கு பலம் சேர்த்துள்ளது. </p><p>படம் வெளியாகி 15 நாள் முடிவில் உலகளவில் ரூ. 100 கோடிக்கு மேலான வசூல் வேட்டை செய்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/DSmdlruqxMg?start=5" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p> </p><p>படங்கள் இயக்கி ரூ. 100 கோடி மட்டுமில்லை நடிப்பின் மூலமாகவும் வசூல் வேட்டை செய்வேன் என இப்படம் மூலம் மாஸ் காட்டியுள்ளார் லோகேஷ் கனகராஜ்.</p>]]></content>
            <updated>2026-08-21T10:00:56+00:00</updated>
        </entry>
    </feed>
