<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-08-11T13:31:28+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாளை வானில் தோன்றவுள்ள அரிய காட்சி; இலங்கையர்களும் காணலாம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/perseid-meteor-shower-in-the-sky-srilanka-1786454487"></link>
            <id>https://jvpnews.com/article/perseid-meteor-shower-in-the-sky-srilanka-1786454487</id>
            <summary type="text">&amp;nbsp;‘பெர்சீட்ஸ்’ (Perseid) எனப்படும் எரிகல் மழை அதன் வருடாந்த உச்ச நிலையை அடையும் அதே வேளையில், ஆறு கோள்கள் வளைவு வடிவில் ஒரே நேர்கோட்டில் அணிவகுக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;‘பெர்சீட்ஸ்’ (Perseid) எனப்படும் எரிகல் மழை அதன் வருடாந்த உச்ச நிலையை அடையும் அதே வேளையில், ஆறு கோள்கள் வளைவு வடிவில் ஒரே நேர்கோட்டில் அணிவகுக்கவுள்ளதால் இலங்கையிலுள்ள விண்வெளி ஆர்வலர்கள் ஒரு அரிய வானியல் நிகழ்வைக் காணவுள்ளதாக மொறட்டுவை ஆதர் சி. கிளார்க் நவீன தொழில்நுட்ப மையத்தின் வானியல் பிரிவு அறிவித்துள்ளது.
</p><p>

 நாளை (12) அதிகாலை, சூரிய உதயத்திற்கு முன்னர் கிழக்கு மற்றும் தெற்கு வானத்தில் புதன், செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ் மற்றும் நெப்டியூன் ஆகிய ஆறு கோள்கள் பரந்த வளைவு வடிவில் தோன்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5c5e2a89-e655-42c3-9d89-5088afe7637e/26-6a7b21d8cd37e.webp' /></p><h2>133 வருடங்களுக்கு ஒருமுறை சூரியனைச் சுற்றி வரும் 109P/Swift-Tuttle</h2><p>
</p><p>
இலங்கையில் இந்த கோள்களின் அணிவகுப்பை சூரிய உதயத்திற்கு சுமார் 60 முதல் 90 நிமிடங்களுக்கு முன்னதாக, அதாவது அதிகாலை 4.30 மணிக்கும் 5.15 மணிக்கும் இடைப்பட்ட காலத்தில் பார்வையிட முடியும் என ஆதர் சி. கிளார்க் மையம் குறிப்பிட்டுள்ளது.</p><p></p><p>
</p><p>
செவ்வாய் மற்றும் சனி கோள்களை மிகவும் எளிதாக அடையாளம் காண முடியும்.

இருப்பினும், புதன் மற்றும் வியாழன் கோள்கள் அடிவானத்திற்கு மிக அருகில் தோன்றுவதால் அவற்றைப் பார்ப்பது கடினமாக இருக்கலாம்.
</p><p>
யுரேனஸைப் இருநோக்கிப் பெருக்கியையும் (binoculars) நெப்டியூனைப் தொலைநோக்கியையும் (telescope) பயன்படுத்தி பார்வையிட முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அரிய வகை நிகழ்வினை பார்ப்பதற்கு வானியல் ஆர்வலர்கள் கிழக்கு மற்றும் தென்கிழக்கு அடிவானத்தை நோக்கித் தடைகளற்ற தெளிவான பார்வை கிடைக்கும் இடத்தை தேர்வு செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.</p><p></p><p>
</p><p>
சுமார் 133 வருடங்களுக்கு ஒருமுறை சூரியனைச் சுற்றி வரும் 109P/Swift-Tuttle என்ற வால்நட்சத்திரத்தினால் விட்டுச்செல்லப்பட்ட விண்வெளிப் பொருட்களினாலேயே பெர்சீட்ஸ் எரிகல் மழை உருவாகிறது.
</p><p>
இந்த எரிகற்கள் ‘பெர்சியஸ்’ (Perseus) விண்மீன் தொகுதியிலிருந்து தோன்றுவது போல் காட்சியளிக்கும்.

இம்முறை எரிகல் மழையின் உச்சம் அமாவாசை நாளான நாளை வருவதால், இருண்ட வானம் எரிகற்களைப் பார்ப்பதற்கு மிகவும் சாதகமான சூழலை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
</p><p>
தெளிவான வானிலை நிலவினால், ஒரு மணி நேரத்திற்கு 100 எரிகற்கள் வீழ்வதை மக்கள் பார்வையிட முடியும்.</p>]]></content>
            <updated>2026-08-11T13:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்த வயசுல டிராமா செய்வது!! திரிஷா இந்த நடிகைக்குதான் பதிலடி கொடுத்தாரா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/trisha-insta-post-about-vijay-to-kutty-padmini-1786451526"></link>
            <id>https://viduppu.com/article/trisha-insta-post-about-vijay-to-kutty-padmini-1786451526</id>
            <summary type="text">தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை திரிஷா குறித்த செய்திகள் தினமும் பேசப்பட்டு தான் வருகிறது. தன்னைப்பற்றி சர்ச்சையாக பேசுபவர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை திரிஷா குறித்த செய்திகள் தினமும் பேசப்பட்டு தான் வருகிறது. தன்னைப்பற்றி சர்ச்சையாக பேசுபவர்களுக்கு மறைமுகமாக சோசியல் மீடியாக்களில் பதிலடியும் கொடுத்து வருகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ae23c533-cf75-468e-bae7-987d3f2abe6b/26-6a7b1648e4377.webp' /></p><p> </p><p>அந்தவகையில் நடிகை திரிஷா இன்ஸ்டாகிராம் ஸ்டோரிகளில், நான் வேண்டிய வாழ்க்கையை வாழ்கிறேன் என்று முதல் ஸ்டோரியில் கூறியுள்ளார்.</p><p> அதாவது, ஒரு காலத்தில் நாம் வேண்டிக்கொண்ட வாழ்க்கையே இன்று நம்ம வியக்க வைக்கும் அளவுக்கு நிறைவாக இருப்பது ஒரு பாக்கியம் என்ற அர்த்தத்தில் பதிவிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5a720d01-cffc-4621-9d11-3c606b013a2d/26-6a7b16499acf8.webp' /></p><h2>இந்த வயசுல டிராமா&nbsp;</h2><p> அதனையடுத்து, Drama at this age is embarrassing... Go make some money and find peace என்ற வசனத்தை பகிர்ந்துள்ளார். அதாவது, இந்த வயதில் டிராமா செய்வது சங்கடமாக இருக்கிறது. போய் கொஞ்சம் பணம் சம்பாதித்து மன அமைதியை தேடுங்கள் என்ற அர்த்ததில் பதிவிட்டார். இந்த பதிவு யாருக்காக போட்டிருப்பார் என்று பலரும் கேள்வி எழுந்து வந்தது. சிலர் நடிகை குட்டி பத்மினிக்கு தான் இப்படி போட்டுள்ளார் என்று கூறி வருகிறார்கள்.</p><p>அதாவது சமீபத்தில் திரிஷா - விஜய் குறித்து குட்டி பத்மினி பேட்டியொன்றில், திரிஷா நல்ல பெண், அவரைப்பற்றி தேவையில்லாமல் பேச வேண்டாம். விஜய்யும் அவருடைய மனைவி சங்கீதாவும் பிரிந்ததற்கு காரணம் திரிஷா தான் என்று சொல்கிறார்கள். ஆனால் அவர்கள் இருவருக்கும் இப்போது ஈர்ப்பு இருக்கிறதா? இல்லையா? என்று தெரியாது, ஆனால் ஆரம்பத்தில் கில்லி சமயத்தில் இருவருக்குள் நல்ல புரிதல், மனப்பூர்வமான காதல் இருந்தது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d612a0f1-8a34-4bbf-8d77-680a3d793e47/26-6a7b164a4d5d5.webp' /></p><p>அச்சமயத்தில் எஸ் ஏ சந்திரசேகருக்கு பிடிக்கவில்லை, அவர்தான் அப்போது சங்கீதாவை விஜய்க்கு கல்யாணம் பண்ணி வைத்தார். அதன்பின் விஜய் வாழ்க்கை வேறுமாதிரி போய்விட்டது. திரிஷாவின் வாழ்க்கை வேறுமாதிரியாகிவிட்டது. பின் இருவரும் கோட் சமயத்தில்தான் சந்தித்தார்கள். ஆனால் அதற்குமுன் விஜய், சங்கீதா பிரிந்துவிட்டார்கள்.</p><p> இப்படி இருக்கும்போது இதில் திரிஷாவை தொடர்புப்படுத்தி சொல்வது என்ன நியாயம்? ஒருவேளை அவர்கள் இருவரும் நல்ல நட்பு மட்டுமே இருக்கலாம், அதைக்கூட இவர்கள் தவறாக பேசுவது தப்பு என்று கூறியிருந்தார். அவர் திரிஷாவிற்கு சப்போர்ட் செய்கிறாரா? கேவலப்படுத்துகிறாரா? என்று கேள்வி கேட்டனர். அதை வைத்து தான் திரிஷா இந்த ஸ்டோரியை போட்டுள்ளாரா? என்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-11T13:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பின்மை விகிதம் குறைவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/optimism-youth-unemployment-is-falling-across-1786446141"></link>
            <id>https://canadamirror.com/article/optimism-youth-unemployment-is-falling-across-1786446141</id>
            <summary type="text">கனடாவில் இளைஞர்களிடையேயான வேலைவாய்ப்பின்மை விகிதம் தொடர்ந்து மூன்றாவது மாதமாக குறைந்துள்ளதாக கனடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள புதிய வேலை...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவில் இளைஞர்களிடையேயான வேலைவாய்ப்பின்மை விகிதம் தொடர்ந்து மூன்றாவது மாதமாக குறைந்துள்ளதாக கனடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள புதிய வேலைவாய்ப்பு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>
15 முதல் 24 வயதுக்குட்பட்ட இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பின்மை விகிதம், கடந்த 2025 ஜூலையில் 14.6 சதவீதமாக இருந்த நிலையில், 2026 ஜூலை மாதத்தில் 12.6 சதவீதமாகக் குறைந்துள்ளது. </p><p>
அதேபோல, கோடைகாலப் பணிகளில் ஈடுபடும் மாணவர்களின் வேலைவாய்ப்பின்மை விகிதமும் 17.5 சதவீதத்திலிருந்து 15.1 சதவீதமாகச் சரிந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9ff4506f-4878-4a5c-9739-4b0340772efa/26-6a7b013f06ee1.webp' /></p><p>
</p><p>அமெரிக்காவுடனான வர்த்தகப் போர் மற்றும் வரிகள் குறித்த ஆரம்பக்கட்ட பொருளாதார பயம் தணிந்துள்ளதால், வர்த்தக நிறுவனங்கள் மீண்டும் நம்பிக்கையுடன் இளைஞர்களைப் பணியில் அமர்த்தத் தொடங்கியுள்ளன.
</p><p>கனடிய மத்திய வங்கி தனது கொள்கை வட்டி விகிதத்தை 2.25 சதவீதமாகக் குறைத்ததைத் தொடர்ந்து, நாட்டின் பொருளாதாரத்தில் ஸ்திரத்தன்மை ஏற்பட்டு நுகர்வோர் செலவழிப்பது அதிகரித்துள்ளது.</p><p>
சுற்றுலாத் துறை, உணவகங்கள், சில்லறை வர்த்தகம் மற்றும் பொழுதுபோக்கு மையங்களில் கோடைகால வேலைவாய்ப்புகள் மீண்டும் அதிகரித்துள்ளன.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-11T13:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[அநுர அரசுக்கு கிடைத்த இரகசிய தகவல் - விரைவில் காத்திருக்கும் பெரும் ஆபத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/secret-information-received-the-anura-government-1786454301"></link>
            <id>https://tamilwin.com/article/secret-information-received-the-anura-government-1786454301</id>
            <summary type="text">கடந்த 3 வாரங்களில் பல சிறைகளில் கைதிகள் கிளர்ச்சியில் ஈடுபட்டதால் சிறைகளுக்குள் நிலைமை மோசமடைந்து வருவதாகவும் 
இனிவரும் வாரங்களில் இது போன்ற சம்பவங்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>கடந்த 3 வாரங்களில் பல சிறைகளில் கைதிகள் கிளர்ச்சியில் ஈடுபட்டதால் சிறைகளுக்குள் நிலைமை மோசமடைந்து வருவதாகவும் 
இனிவரும் வாரங்களில் இது போன்ற சம்பவங்கள் மேலும் இடம்பெறலாம் என இலங்கையின் உள்ளகத் தகவல்கள் தெரிவிப்பதாக பிரித்தானியாவில் இருக்கும் இராணுவ ஆய்வாளர் அருஸ் தெரிவித்துள்ளார்.
</p><p>
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
இந்தச் சம்பவங்களுக்கு பின்னால் சில சதி இருப்பதாக மூத்த அரச அதிகாரிகள் தெரிவிப்பதாகவும் அரசாங்கம் இது தொடர்பில் வெளியே காட்டிக் கொள்ளாமல் இருந்தாலும் உள்ளகத்தில் ஒரு பதற்றத்தில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
ஆனால் அதன் பின்னணியை பார்க்கும் போது இலங்கையிலுள்ள சிறைச்சாலைகளை உடைக்க சிலர் முற்படுவதாகவும் அங்குள்ள குற்றவாளிகளை வெளியேற்றி தென்னிலங்கையில் ஒரு கலவரத்தை ஏற்படுத்த முயற்சிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்....&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/9TM-LHWgTAI" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-11T13:29:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[போலி மணப்பெண்களால் ஏமாற்றப்படும் சீன ஆண்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/chinese-men-deceived-by-fake-brides-1786454858"></link>
            <id>https://canadamirror.com/article/chinese-men-deceived-by-fake-brides-1786454858</id>
            <summary type="text">&amp;nbsp; சீனாவில் திருமணத்துக்குப் பெண் கிடைக்காமல் ஏமாற்றமடையும் ஆண்களை இலக்கு வைத்து &#039;உடனடித் திருமணம்&#039; (Flash Marriage) செய்து வைப்பதாகக் கூறி பல கோட...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; சீனாவில் திருமணத்துக்குப் பெண் கிடைக்காமல் ஏமாற்றமடையும் ஆண்களை இலக்கு வைத்து 'உடனடித் திருமணம்' (Flash Marriage) செய்து வைப்பதாகக் கூறி பல கோடி ரூபாய் பணத்தைச் சூறையாடும் மோசடிகள் அதிகரித்து வருகின்றன.
</p><p>திருமணம் முடிந்த சில நாட்களிலேயே அந்தப் பெண்கள் பணத்துடன் தப்பிச் செல்வதாகவும், தங்களின் உண்மைப் பின்னணி, வயது, கடன் விபரங்கள் மற்றும் முந்தைய திருமணங்களை மறைத்துப் பொய்யான தகவல்களை வழங்கி அவர்கள் ஏமாற்றியுள்ளதாகவும் பாதிக்கப்பட்ட ஆண்கள் கவலை வெளியிடுகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4701708b-4d9d-4bc8-8cd9-efff43953490/26-6a7b234ba86b0.webp' /></p><h2>பாதிக்கப்பட்ட ஆண்கள் கவலை&nbsp;</h2><p>
</p><p>
சீனாவில் பல தசாப்தங்களாக நடைமுறையிலிருந்த 'ஒரு குடும்பத்துக்கு ஒரு குழந்தை' கொள்கை மற்றும் ஆண் குழந்தைகளுக்கான முன்னுரிமை காரணமாக, பெண்களை விட ஆண்களின் எண்ணிக்கை சுமார் 30 மில்லியனால் அதிகரித்துள்ளது.</p><p>

இதனால், கிராமப்புறங்கள் மற்றும் சிறிய நகரங்களில் வாழும் ஆண்களுக்குப் பெண் கிடைப்பது பெரும் சவாலாக மாறியுள்ளது.

இதனைப் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் சில திருமணத் தரகு முகவர் நிலையங்கள், 'குறைந்த செலவில், குறுகிய காலத்தில் சிறந்த பெண்ணைத் திருமணம் செய்து வைக்கிறோம்' என விளம்பரம் செய்து ஆண்களைக் கவர்கின்றன.</p><p>

தென்மேற்கு மாகாணமான கைசூவில் (Guizhou) இயங்கும் இவ்வாறான முகவர் நிலையங்களை நம்பிச் செல்லும் ஆண்கள், சில நாட்களிலேயே பெண்களுக்கு பெருந்தொகைப் பணத்தை வழங்கி அவசரத் திருமணம் செய்து கொள்ளும் நிலையில், திருமண்ம் ஆனதும் பெண்கள் , பணத்துடன் தப்பிச் செல்வதாக கூறப்படுகின்றது.
</p><p> 

இவ்வாறான பல மில்லியன் யுவான் மோசடிகள் குறித்து முறைப்பாடுகள் குவிந்து வரும் நிலையில், சீனக் காவல்துறை மற்றும் சட்டத்துறை அதிகாரிகள் இணைந்து இத்தகைய போலியான திருமணத் தரகு முகவர் நிலையங்களுக்கு எதிராக நாடு தழுவிய ரீதியில் கடுமையான நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-08-11T13:25:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Bavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத் தேர் திருவிழாவில் பெண்ணின் தங்க சங்கிலி அறுப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/chain-snatched-woman-mamangeswarar-temple-1786453350"></link>
            <id>https://tamilwin.com/article/chain-snatched-woman-mamangeswarar-temple-1786453350</id>
            <summary type="text">மட்டக்களப்பு- அமிர்தகளி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலய வருடாந்த தேர் திருவிழாவின்
போது பெண் ஒருவரின் கழுத்தில் இருந்த இரண்டரை பவுன் தங்க சங்கிலி இனம் தெரியா...</summary>
            <content type="html"><![CDATA[<p>மட்டக்களப்பு- அமிர்தகளி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலய வருடாந்த தேர் திருவிழாவின்
போது பெண் ஒருவரின் கழுத்தில் இருந்த இரண்டரை பவுன் தங்க சங்கிலி இனம் தெரியாதோரால் அறுத்துச் செல்லப்பட்டுள்ளதாக
பொலிஸார் தெரிவித்தனர்.</p><p>குறித்த சம்பவமானது இன்றையதினம்(11.8.2026) இடம்பெற்றுள்ளது.</p><p>

குறித்த ஆலயத்தின் வருடாந்த தேர்திருவிழா சம்பவ தினமான இன்று காலை 8:30
மணியளவில் ஆலயத்தில் தேர் வீதி உலாவின் போது, ஆயிர்க்கணக்கான மக்கள்
திரண்டிருந்த நிலையில் அதனை தரித்துக் கொண்டிருந்த மூதூரைச் சேர்ந்த 63 வயது
பெண்ணின் கழுத்தில் இருந்த (2½) பவுண் தங்க சங்கிலியை இனம்தெரியாதோரால்
அறுத்துச் செல்லப்பட்டுள்ளது.</p><p></p><h2>தீவிர விசாரணை</h2><p>இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் முறைப்பாட்டையடுத்து பொலிசார் தீவிர
விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c9165e7e-5721-4eae-bfe4-1fe3b5183152/26-6a7b220d380d6.webp' /></p><p>இதேவேளை, ஆலயப் பெருவிழா நாட்களில் பெருந்திரளான பக்தர்கள் வருகை தருவதால்,
பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் தமது ஆபரணங்கள், பணப்பைகள் உள்ளிட்ட உடைமைகளின்
பாதுகாப்பு குறித்து மிகுந்த அவதானத்துடனும் விழிப்புடனும் இருக்குமாறு
மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-11T13:22:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[படுகொலையின் பிரதான சூத்திரதாரி உண்மையான செவ்வந்தியா..! சட்ட ரீதியாக எடுக்கப்படவுள்ள நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sevwandi-to-face-forensic-for-facial-examination-1786453621"></link>
            <id>https://tamilwin.com/article/sevwandi-to-face-forensic-for-facial-examination-1786453621</id>
            <summary type="text">பாதாள உலக குழுவின் தலைவர்களில் ஒருவரான கணேமுல்ல சஞ்சீவ படுகொலையின் பிரதான சந்தேக நபராக இஷாரா செவ்வந்தி கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள...</summary>
            <content type="html"><![CDATA[<p>பாதாள உலக குழுவின் தலைவர்களில் ஒருவரான கணேமுல்ல சஞ்சீவ படுகொலையின் பிரதான சந்தேக நபராக இஷாரா செவ்வந்தி கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார். </p><p>

எனினும் குறித்த பெண் உண்மையில் தேடும் செவ்வந்தியா என்பது தொடர்பில் சந்தேகம் நீடித்து வரும் நிலையில், முகத்தை அடையாளம் காணும் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.
</p><p>
இவ்வாறான நிலையில் அரச இரசாயன பகுப்பாய்வாளர் மூலம் செவ்வந்தியை அடையாளம் காண பரிசோதனைக்கு உட்படுத்துமாறு கொழும்பு குற்றப்பிரிவு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.</p><h2><b>விளக்கமறியலில் வைக்குமாறு&nbsp;உத்தரவு </b></h2><p> 

குறித்த வழக்கு நேற்று கொழும்பு மேலதிக நீதவான் லியான் வருஷவிதான முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dd6f5516-25ea-4d49-b298-691d62c7d9f2/26-6a7b21863fb1b.webp' /></p><p>இதன்போது, சந்தேக நபரை எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் லியான் வருக்குவிதாரண உத்தரவு பிறப்பித்தார்.</p><p> 

சுமார் 09 மாதங்கள் கொழும்பு குற்றப்பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்ட சந்தேக நபர் நேற்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.</p><p> </p><h3><b>சிறப்பு முகம் அடையாளம் </b></h3><p>இதன்போது பொலிஸார் சமர்ப்பித்த விடயங்களை பரிசீலித்த பின்னரே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/eb56af36-c74a-4bee-bb75-8514aeeece62/26-6a7b21872494a.webp' /></p><p>சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்ட நீதவான் அரச இரசாயன பகுப்பாய்வாளர் முன்னிலையில் சிறப்பு முகம் அடையாளம் காணும் பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கும் அனுமதி வழங்கினார். </p>]]></content>
            <updated>2026-08-11T13:21:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிரியா முன்னாள் ஜனாதிபதி அசத்திற்கு மரண தண்டனை விதித்த நீதிமன்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/death-sentence-for-ex-syrian-president-assad-1786454366"></link>
            <id>https://news.lankasri.com/article/death-sentence-for-ex-syrian-president-assad-1786454366</id>
            <summary type="text">சிரியா முன்னாள் ஜனாதிபதி பசார் அல் - அசத்திற்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.சிரியா முன்னாள் ஜனாதிபதிக்கு மரண தண்டனை

மத்திய கி...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிரியா முன்னாள் ஜனாதிபதி பசார் அல் - அசத்திற்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.</p><h3>சிரியா முன்னாள் ஜனாதிபதிக்கு மரண தண்டனை</h3><p>

மத்திய கிழக்கு நாடான சிரியாவில் கடந்த 54 ஆண்டுகளாக அசத் குடும்பத்தினர் ஆட்சி செய்து வந்தனர். </p><p>

கடந்த 2000 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு வரை பசார் அல்-அசத்(Bashar al-Assad), சிரியாவின் ஜனாதிபதியாக செயல்பட்டு வந்தார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d57ca6d9-59eb-400f-8412-d1850aead41d/26-6a7b215fbff52.webp' /></p><p>

2024 ஆம் ஆண்டு உள்நாட்டு போர் தீவிரமடைந்து போராட்ட குழுவினர் சிரியா தலைநகர் டமாஸ்கஸை தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து ஆட்சியை கவிழ்த்தனர்.&nbsp;</p><p>

இதனையடுத்து, ஜனாதிபதியாக இருந்த பசார் அல்-அசத், தனது குடும்பத்தினருடன் ரஷ்யாவிற்கு தப்பி சென்றார்.&nbsp;</p><p>]</p><p>

அதன் பின்னர், அஹ்மத் அல்-ஷரா சிரியாவின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்றுள்ளார்.&nbsp;</p><p>

இதனையடுத்து, மனித குலத்திற்கு எதிரான குற்ற செயல்களில் ஈடுபடுத்தாக முன்னாள் ஜனாதிபதி பசார் அல்-அசத் மீது வழக்கு தொடரப்பட்டது. </p><p>

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் பசார் அல்-அசத் மற்றும் அவரது சகோதரருக்கு மரண தண்டனை விதித்துள்ளது.</p><p> 

பசார் அல்-அசத் மற்றும் அவரது சகோதரர் ரஷ்யாவில் உள்ளதால் தண்டனையை நிறைவேற்றுவதில் அரசுக்கு சிக்கல் உள்ளது. </p><p>

மேலும், அசாத் மற்றும் அவரது சகோதரரை சர்வதேச அளவில் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-11T13:20:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[செம்மணி மனிதப் புதைகுழியில் எலும்புக்கூட்டுக்குள் சிக்கியிருந்த மர்மப் பொருள்..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/today-update-on-the-chemmani-mass-grave-1786453807"></link>
            <id>https://tamilwin.com/article/today-update-on-the-chemmani-mass-grave-1786453807</id>
            <summary type="text">செம்மணி மனித புதைகுழியில் இருந்து புதிதாக 15 மனித என்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டதுடன், 11 மனித என்புக்கூட்டு தொகுதிகள் முழுமையாக அகழ்ந்து ...</summary>
            <content type="html"><![CDATA[<p>செம்மணி மனித புதைகுழியில் இருந்து புதிதாக 15 மனித என்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டதுடன், 11 மனித என்புக்கூட்டு தொகுதிகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 49ஆம் நாள் அகழ்வு பணிகள்
இன்று(11.08.2026) இடம்பெற்ற போதே குறித்த மனித என்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டு அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
</p><h2>
15 மனித எலும்பு கூடுகள் அடையாளம்</h2><p>

யாழ்ப்பாணம் நீதிவான் செ.லெனின்குமார் முன்னிலையில் நடைபெற்ற அகழ்வு பணிகளில் தொல்லியல் பேராசிரியர் ராஜ்சோமதேவா தலைமையிலான குழுவினர், சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவன் தலைமையிலான குழுவினர், தடயவியல் பொலிஸார், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள், நல்லூர் பிரதேச சபை ஊழியர்கள் அகழ்வு பணிகளில் பங்கேற்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2e0cdcd3-af7e-42e8-a3a3-b4137fac7db8/26-6a7b1f7c4efdc.webp' /></p><p>
</p><p>
இதுவரை மொத்தமாக 539 மனித என்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அதில், 524 மனித என்புக் கூட்டு தொகுதிகளும் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
</p><p>
516 வது இலக்கமிடப்பட்ட மனித என்பு கூட்டு தொகுதியின் இடுப்பு பகுதியில்
மீட்கப்பட்ட தாயத்து தகடு போன்ற ஒன்றும், மணல் குவியலில் இருந்து ஒரு ரூபாய்
நாணயக்குற்றி ஒன்றும் பிற சான்றுப் பொருட்களாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp; </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/701d1e1d-46e9-48f5-b9ce-e1270fc17cc7/26-6a7b1f7d5f77d.webp' />&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5b89f75f-08c9-44e1-bd4b-da0f35399943/26-6a7b1f7e36765.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/71a97881-0ea2-4b93-b4f1-8ae8b92c9775/26-6a7b1f7f161a1.webp' /></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-11T13:11:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Keethan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மக்கள் ஆணையினை நிறைவேற்றும் நடவடிக்கையே நீதியரசர்களின் கால எல்லை நீடிப்பு - ஆளும் தரப்பு பகிரங்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/judges-act-of-fulfilling-the-people-s-mandate-1786451268"></link>
            <id>https://tamilwin.com/article/judges-act-of-fulfilling-the-people-s-mandate-1786451268</id>
            <summary type="text">மக்கள் ஆணையினை நிறைவேற்றுகின்ற ஒரு நடவடிக்கையே நீதியரசர்களின் கால எல்லை
நீடிப்பு என&amp;nbsp;கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்...</summary>
            <content type="html"><![CDATA[<p>மக்கள் ஆணையினை நிறைவேற்றுகின்ற ஒரு நடவடிக்கையே நீதியரசர்களின் கால எல்லை
நீடிப்பு என&nbsp;கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.</p><p>இலங்கையில் நீதியரசர்களின் காலநீடிப்பு தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பிய நிலையிலேயே அதனை குறிப்பிட்டுள்ளார்.</p><h2>மோசடிக்காரர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை</h2><p>இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், நீதியரசர்களின் இரண்டு
ஆண்டுகால நீடிப்பு தொடர்பில் இன்று எதிர்கட்சிகள் குழப்பம் அடைந்துள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/34a1886a-1d1c-429a-8b08-789786b95281/26-6a7b1cbf2058d.webp' /></p><p>கடந்த 76
ஆண்டுகளாக நாட்டினை குற்றச்செயல்கள் நிறைந்த நாடாக இவர்கள் மாற்றி
இருக்கின்றார்கள். அதனால் தான் 40ஆயிரத்திற்கும் அதிகமான சிறைக்கைதிகள்
இருக்கின்றார்கள்.</p><p> 20 ஆயிரம் கைதிகள் இருக்கும் இடத்தில் 40 ஆயிரம் கைதிகள்
காணப்படுகின்றார்கள்.&nbsp;</p><p>இலஞ்சஊழல் மோசடிக்கு எதிராக போதைப்பொருளுக்கு எதிராக இவ்வாறான
குற்றச்செயல்களுக்கு எதிரான நடவடிக்கைகளும் சட்டநடவடிக்கைகளும் வேகமாக
முன்னெடுக்கப்படுகின்றன.</p><p>அவ்வாறு முன்னெடுக்கப்படுகின்றபோது அனுபவம் உள்ள
நீதியரர்கள், அதிகாரிகள், சட்டத்தரணிகள் தேவை. இவை அனைத்தினையும் கருத்தில்
கொண்டுதான் இந்த கால எல்லை நீடிப்பிற்கான அனுமதியினை பெற்றுக் கொடுக்கின்றோம்.</p><p>இதில் எந்தவிதமான தனிப்பட்ட லாபங்கள் கிடையாது. நாட்டு மக்கள் ஊழல் மோசடிக்காரர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுங்கள் என்று ஆணை
வழங்கியிருக்கின்றார்கள்.</p><h2>குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்படுபவர்களாக&nbsp;</h2><p>அந்த மக்கள் ஆணையினை நிறைவேற்றுகின்ற ஒரு
நடவடிக்கையையே இந்த நீதியரசர்களின் கால எல்லை நீடிப்பு.</p><p>
இது குறித்து தொடர்ந்து எதிர்கட்சிகள் அரசாங்கத்தின் மீது விமர்சனம் செய்து
வருகின்றார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/316c0afe-94c7-4735-a9d4-d8fc6b1b284b/26-6a7b1cbff0252.webp' /></p><p>இதனால் இந்த வழக்கு விசாரணைகள் இடம்பெறுகின்ற வேகத்தினை பார்க்கின்ற
போது தங்கள் குடும்பமே உள்ளே சென்று கம்பி எண்ண வேண்டிய நிலை வரும் என்று
அவர்களுக்கு தெரியும்.</p><p>இவர்கள் சிறைக்கு செல்கின்ற வரிசையினை பார்க்கின்றபோது
கடந்த 26 ஆண்டுகளாக இந்த நாட்டினை நாசம் செய்து கொள்ளையடித்த ராஜபக்ச கும்பல் கூட்டாக சேர்ந்து ஆட்டம் காணுக்கின்ற நிலை இருக்கின்றது.</p><p>இந்த ராஜபக்சக்களுக்கு வால்பிடிக்கின்றவர்களை தேடிப்பாக்கின்றபொழுது
எல்லாருமே இன்று குற்றவாளி கூண்டில் நிறுத்தப்படுபவர்களாக
இருக்கின்றார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-11T13:09:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[மலேசியாவிலிருந்து அழைத்து வரப்பட்ட இரத்மலானே சைமா : நீதிமன்றின் உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/ratmalane-saima-granted-48-hour-detention-1786451077"></link>
            <id>https://ibctamil.com/article/ratmalane-saima-granted-48-hour-detention-1786451077</id>
            <summary type="text">மலேசியாவில் கைது செய்யப்பட்டு நாட்டிற்குக் கொண்டுவரப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான கஞ்சிபானி இம்ரானின் நெருங்கிய கூட்டாளி என்று கூறப்படும் இரத்ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>மலேசியாவில் கைது செய்யப்பட்டு நாட்டிற்குக் கொண்டுவரப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான கஞ்சிபானி இம்ரானின் நெருங்கிய கூட்டாளி என்று கூறப்படும் இரத்மலானே சைமாவை காவலில் வைத்து விசாரிக்க கண்டி நீதவான் நீதிமன்றம் காவல்துறைக்கு அனுமதி வழங்கியுள்ளது.

விசாரணைக்காக அவரை 48 மணி நேரம் காவலில் வைக்க நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.</p><p>மேலதிக விசாரணைக்காக "ரத்மலானே சைமா" நேற்று இரவு (10) பெரதெனிய காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார்.</p><h2>இன்டர்போலின் உதவியுடன்&nbsp; கைது&nbsp;</h2><p>
</p><p>
வலானா மத்திய ஊழல் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகள் குழுவால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி, மலேசிய காவல்துறை மற்றும் இன்டர்போலின் உதவியுடன் அந்த நாட்டில் கைது செய்யப்பட்டிருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fa23ae6b-4584-4a97-a4c2-6bf76d48f335/26-6a7b1e96d26cb.webp' /></p><p>
</p><p>
அவருடன் இருந்த ரத்மலானா பகுதியைச் சேர்ந்த மேலும் இரண்டு பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர், மேலும் இந்த மூன்று சந்தேக நபர்களும் மேலதிக விசாரணைக்காக நேற்று பிற்பகல் நாட்டிற்குக் கொண்டுவரப்பட்டனர்.</p><p></p><h2>நிலுவையில் உள்ள குற்றவாளி&nbsp;</h2><p>

ரத்மலான பகுதியைச் சேர்ந்த 41 வயதான பிரதான சந்தேக நபர், 2014-ஆம் ஆண்டில் பெரதெனிய காவல் பிரிவில் ஒருவரைக் கடத்தி, துப்பாக்கி முனையில் காயப்படுத்தியது மற்றும் 2016-ஆம் ஆண்டில் ஒருவரைச் சுட்டுக் கொன்றது ஆகிய இரண்டு வழக்குகளில் கண்டி நீதவான் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள குற்றவாளி என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fe3575ca-ad7f-4583-bff2-ce38a1c99c1e/26-6a7b1e97838cc.webp' /></p><p>

இதற்கிடையில், மலேசியாவில் கைது செய்யப்பட்டு நாட்டிற்குக் கொண்டுவரப்பட்ட மற்ற இரண்டு சந்தேக நபர்கள் இன்று (11) நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட உள்ளனர்.&nbsp; </p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p>&nbsp; &nbsp;</p><p><br></p>]]></content>
            <updated>2026-08-11T13:07:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிரியா முன்னாள் ஜனாதிபதிக்கு மரண தண்டனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/death-sentence-for-former-syrian-president-1786448558"></link>
            <id>https://canadamirror.com/article/death-sentence-for-former-syrian-president-1786448558</id>
            <summary type="text">&amp;nbsp; போர்க் குற்றங்கள் தொடர்பில் சிரியாவின் முன்னாள் ஜனாதிபதி பஷார் அல்-அசாத் மற்றும் அவரது இளைய சகோதரருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
 

ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; போர்க் குற்றங்கள் தொடர்பில் சிரியாவின் முன்னாள் ஜனாதிபதி பஷார் அல்-அசாத் மற்றும் அவரது இளைய சகோதரருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.</p><p>
 

சிரிய நீதிமன்றமொன்றினால் இத்தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதுடன், அசாத் மற்றும் அவரது சகோதரர் நீதிமன்றத்தில் ஆஜராகாத நிலையில் விசாரணை நடத்தப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/94046756-66a3-4743-9493-5a40ca119d55/26-6a7b0ab09d64b.webp' /></p><p>
</p><p>
 

சுமார் ஐந்து இலட்சம் பேர் உயிரிழந்த 14 ஆண்டுகால உள்நாட்டுப் போரின் போது இடம்பெற்ற போர்க் குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் தொடர்பிலேயே இவர்களுக்கு இத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
</p><p>
 

2011 ஆம் ஆண்டு தாரா (Daraa) பகுதியில் இடம்பெற்ற போராட்டங்களை அடக்குவதற்கு தலைமை தாங்கிய அசாத்தின் உறவினரான ஆட்டெஃப் நஜீப் (Atef Najib) என்பவருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.</p><p>

 

அதேசமயம் அசாத்தும் அவரது சகோதரரும் ரஷ்யாவுக்குத் தப்பிச் சென்றுள்ள நிலையில், கைது செய்யப்பட்ட நஜீப் சிறைச்சாலை உடையில் நீதிமன்றக் கூண்டில் நின்றபோதே இத்தீர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-11T13:00:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவில் 43,000 டொலர் மதிப்பிலான தங்கம், வெள்ளி திருட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/ontario-woman-charged-in-alleged-gold-theft-1786447759"></link>
            <id>https://canadamirror.com/article/ontario-woman-charged-in-alleged-gold-theft-1786447759</id>
            <summary type="text">&amp;nbsp;கனடியப் பெண் எல்லையில் கைது
அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தில் 43,000 கனேடிய டொலருக்கும் அதிக மதிப்பிலான தங்கம் மற்றும் வெள்ளியைத் திருடி...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கனடியப் பெண் எல்லையில் கைது
அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தில் 43,000 கனேடிய டொலருக்கும் அதிக மதிப்பிலான தங்கம் மற்றும் வெள்ளியைத் திருடியதாகக் குற்றம்சாட்டப்பட்ட கனடாவைச் சேர்ந்த பெண் ஒருவர், மீண்டும் கனடாவுக்குத் திரும்ப முயன்றபோது கைது செய்யப்பட்டுள்ளார். </p><p>
கனடாவின் ஒன்ராறியோ, பீம்ஸ்வில் பகுதியைச் சேர்ந்த 25 வயதான கைலீ ஹோகன் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டவர் ஆவார். </p><p>
கடந்த மே 11 அன்று ஃபிலடெல்ஃபியாவிலிருந்து சுமார் 40 நிமிட பயணத் தொலைவில் உள்ள பென்சலேம் டவுன்ஷிப் பகுதியில் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5f0ab8a1-4cb7-4903-821c-0291bb91a99a/26-6a7b07919341c.webp' /></p><p>
</p><p> பாதிக்கப்பட்ட நபர் தங்கம் மற்றும் வெள்ளி அடங்கிய பார்சல் ஒன்றின் வருகைக்காகக் காத்திருந்தவேளையில், அஞ்சல் ஊழியரிடம் சந்தேகநபர் தாங்களே இதன் உண்மையான உரிமையாளர் எனக் கூறி பார்சலுக்குக் கையொப்பமிட்டுப் பெற்றுக்கொண்டு தப்பிச் சென்றுள்ளார்.</p><p>
இதனைப் பாதிக்கப்பட்டவரின் குடும்ப உறுப்பினர் ஒருவர் பார்த்துள்ளார். 
திருடப்பட்ட தங்கம் மற்றும் வெள்ளியின் மொத்த மதிப்பு 43,549 கனேடிய டாலர் என மதிப்பிடப்பட்டுள்ளது. </p><p>
சம்பவ இடத்தில் இருந்த கண்காணிப்பு கேமராக்கள், வாகனப் பதிவு எண் கண்காணிப்பு அமைப்புகள் மற்றும் சந்திப்பு கேமராக்களின் பதிவுகளை ஆய்வு செய்த பொலிஸார், சந்தேகநபர் பயன்படுத்திய 'நிசான்' ரக காரைக் கண்டறிந்தனர். </p><p>
விசாரணையில், மே 10 அன்று ஃபிலடெல்ஃபியா விமான நிலையத்தில் உள்ள கார் வாடகை நிறுவனத்திடமிருந்து இந்த காரை ஹோகன் வாடகைக்கு எடுத்ததும், மே 11 அன்று திருட்டை அரங்கேற்றிய கையோடு காரைத் திரும்ப ஒப்படைத்துவிட்டு ஏரிஸோனாவுக்கு விமானத்தில் தப்பிச் சென்றதும் தெரியவந்தது.</p><p> 
இதனைத் தொடர்ந்து ஹோகனுக்கு எதிராகக் கைது பிடியாணை பிறப்பிக்கப்பட்டு, அமெரிக்க சுங்கம் மற்றும் எல்லைப் பாதுகாப்புத் துறையினருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.</p><p> 
ஜூலை 5 ம் திகதி, நியூயோர்க்கின் லூயிஸ்டன் பகுதியில் உள்ள எல்லைக் கடப்பு வழியே மீண்டும் கனடாவுக்குள் நுழைய முயன்றபோது, அமெரிக்க விசா அனுமதியில் அங்கு தங்கியிருந்த ஹோகனை எல்லைப் பாதுகாப்பு அதிகாரிகள் கைது செய்தனர்.இவர் மீது ஆவணப் போலி தயாரித்தல், சட்டவிரோதமாகப் பொருட்களைக் கவர்தல் மற்றும் ஏமாற்றித் திருடுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. </p><p>இக்குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தில் இன்னும் நிரூபிக்கப்படவில்லை. 
கைது செய்யப்பட்ட ஹோகன் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு, அவருக்குப் பிணைத் தொகை நிர்ணயிக்கப்பட்ட நிலையில், தற்போது பக்ஸ் கவுண்டி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.&nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-08-11T13:00:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நிமிடத்திற்கு 1.5 லட்சம் டிக்கெட் முன்பதிவு - இந்திய ரயில்வேயின் புதிய PRS அமைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/indian-railways-new-prs-1-5-lakh-bookings-min-1786451913"></link>
            <id>https://news.lankasri.com/article/indian-railways-new-prs-1-5-lakh-bookings-min-1786451913</id>
            <summary type="text">Indian Railways upgrades Passenger Reservation System: இனி நிமிடத்திற்கு 1.5 லட்சம் டிக்கெட் முன்பதிவு செய்யமுடியும்.

இந்திய ரயில்வே, 2010 முதல் பய...</summary>
            <content type="html"><![CDATA[<p>Indian Railways upgrades Passenger Reservation System: இனி நிமிடத்திற்கு 1.5 லட்சம் டிக்கெட் முன்பதிவு செய்யமுடியும்.</p><p>

இந்திய ரயில்வே, 2010 முதல் பயன்படுத்தப்பட்ட பழைய Passenger Reservation System (PRS) அமைப்பை மாற்றி, புதிய கிளவுட் அடிப்படையிலான PRS அமைப்பை ஆகஸ்ட் 2026 முதல் படிப்படியாக அறிமுகப்படுத்தியுள்ளது.
</p><h2>
1.5 லட்சம் டிக்கெட் முன்பதிவு&nbsp;திறன் </h2><p>புதிய அமைப்பு ஒரு நிமிடத்தில் 1.5 லட்சம் டிக்கெட் முன்பதிவு மற்றும் 40 லட்சம் பயணிகள் கேள்விகளை கையாளும் திறன் கொண்டது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c61129bb-ee1d-4b35-a4a0-458269e976f5/26-6a7b1d3d1c7e2.webp' /></p><p>தற்போதைய அமைப்பு 32,000 டிக்கெட் முன்பதிவுகளை மட்டுமே கையாள முடிந்தது. Tatkal முன்பதிவின் போது ஏற்படும் சிரமங்களை சரிசெய்யும் வகையில் இந்த மேம்பாடு செய்யப்பட்டுள்ளது.</p><h2>முக்கிய அம்சங்கள்
</h2><p><b>
பல மொழி இடைமுகம் (multilingual, user-friendly interface): </b>பயணிகள் தங்கள் மொழியில் எளிதாக பயன்படுத்தலாம்.
</p><p><b>
புதிய IRCTC Beta வலைத்தளம்: </b>எளிய வடிவமைப்பு, குறைந்த படிகள், அனைத்து வகுப்புகளிலும் இருக்கைகள் காண்பிக்கும் வசதி கொண்டுவரப்பட்டுள்ளது.</p><p><b>

Aadhaar அடிப்படையிலான Tatkal முன்பதிவு:</b> வெளிப்படைத்தன்மை மற்றும் நியாயத்தை உறுதி செய்ய இந்த முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
</p><p><b>
OTP சரிபார்ப்பு:</b> போலியான முகவர்கள் மற்றும் பாட்டுகளைத் தடுக்க OTP verification சேர்க்கப்பட்டுள்ளது.</p><p><b>

Advance Reservation Period:</b> 120 நாட்களிலிருந்து 60 நாட்களாக குறைக்கப்பட்டது.</p><p>
</p><p></p><h2>பின்னணி
</h2><p>
PRS அமைப்பு 1986-இல் அறிமுகமானது. 2002-இல் இணைய வழி முன்பதிவு தொடங்கப்பட்டது. 2014-இல் Next Generation e-Ticketing (NGeT) அறிமுகமானது. 2025-இல் RailOne ஆப் வெளியிடப்பட்டது. இப்போது, 2026-இல் புதிய PRS அமைப்பு அறிமுகமாகிறது.</p><h2>
பயணிகள் பயன்பாடு
</h2><p>
2025-2026 காலத்தில் 65.08 கோடி டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டன. அதில் 89 சதவீதம் ஓன்லைனில் முன்பதிவு செய்யப்பட்டவை. தினசரி 20.5 லட்சம் பயணிகள் இந்த அமைப்பைப் பயன்படுத்துகின்றனர்.</p><p>

இந்த மேம்பாடு, இந்திய ரயில்வேயின் மிகப்பெரிய ஓன்லைன் தளங்களில் ஒன்றை மேலும் வலுப்படுத்தும்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-11T12:59:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்த வயசில் ட்ராமா.. யாரை சொல்கிறார் த்ரிஷா? வைரலாகும் பதிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/drama-at-this-age-trisha-post-goes-viral-1786453092"></link>
            <id>https://cineulagam.com/article/drama-at-this-age-trisha-post-goes-viral-1786453092</id>
            <summary type="text">நடிகை திரிஷா அடிக்கடி சமூக வலைத்தளங்களில் போடும் பதிவுகள் வைரல் ஆகின்றன. சமீபத்தில் அவர் விஜய்யுடன் வெளியிட்ட பிறந்தநாள் கொண்டாட்டப் புகைப்படம் எந்த அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நடிகை திரிஷா அடிக்கடி சமூக வலைத்தளங்களில் போடும் பதிவுகள் வைரல் ஆகின்றன. சமீபத்தில் அவர் விஜய்யுடன் வெளியிட்ட பிறந்தநாள் கொண்டாட்டப் புகைப்படம் எந்த அளவுக்கு வைரல் ஆனது என சொல்லி தெரிய வேண்டியது இல்லை. அதை தொடர்ந்து அவர் விமர்சனத்தையும் சந்தித்து வருகிறார்.</p><p>மறுபுறம் நடிகரும் முதலமைச்சருமான விஜய்யின் மனைவி சங்கீதா சமீபத்தில் விவாகரத்து வழக்கு வாபஸ் பெறுவதாக அறிவித்து இருந்தார். இதை தொடர்ந்து த்ரிஷா போடும் பதிவுகள் மேலும் இணையத்தில் வைரல் ஆகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/51a03d95-06c5-4a1f-ad62-c98f53c4388c/26-6a7b1c670cca2.webp' /></p><p>
</p><h2>யாரை சொல்கிறார்?
</h2><p>இன்று த்ரிஷா போட்டு இருக்கும் ஒரு பதிவு அப்படி வைரலாகி இருக்கிறது. "இந்த வயதில் ட்ராமா சங்கடமாக இருக்கிறது. போய் பணம் சம்பாதித்து, அமைதியை நாடுங்கள்" என த்ரிஷா பதி பதிவிட்டு இருக்கிறார்.</p><p>

த்ரிஷா யாரை சொல்கிறார் என்று நெட்டிசன்கள் தற்போது கேட்கத் தொடங்கி இருக்கின்றனர்.



&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-11T12:58:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழ்நாட்டு அரசின் நிலைப்பாடு: ஈழத் தமிழர்களுக்கான காய் நகர்த்தல் தொடர்பான திட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/project-related-to-the-movement-crops-eelam-tamils-1786452723"></link>
            <id>https://tamilwin.com/article/project-related-to-the-movement-crops-eelam-tamils-1786452723</id>
            <summary type="text">சுவிட்சர்லாந்தில் தமிழ் மொழியைக் கற்பிக்கும் மாணவர்களுக்காக நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ்ப் பாடசாலைகள் இயங்கி வருவதாக, சுவிட்சர்லாந்தின் பேர்ன் மாநிலத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>சுவிட்சர்லாந்தில் தமிழ் மொழியைக் கற்பிக்கும் மாணவர்களுக்காக நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ்ப் பாடசாலைகள் இயங்கி வருவதாக, சுவிட்சர்லாந்தின் பேர்ன் மாநிலத்தில் இயங்கும் வள்ளுவன் தமிழ்ப் பாடசாலையின் முதல்வர் முருகவேள் தெரிவித்துள்ளார்.</p><p>

“அகளகம்” நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்து உலகின் பல்வேறு நாடுகளில் வாழும் தமிழ் மக்களிடம் தமிழர்களின் மொழி, பண்பாடு மற்றும் பாரம்பரியத்தை கொண்டு சேர்க்கும் பணியில் ஈடுபட்டு வரும் முருகவேள், வெளிநாடுகளில் தமிழ் மாணவர்களுக்காக விசேட தமிழ்ப் பாடசாலைகள் இயங்கி வருவதாக தெரிவித்துள்ளார்.
</p><p>
அத்துடன், தமிழர்களுக்காக முன்னெடுக்கப்பட்ட பயணங்களின் போது தமிழ்நாடு மற்றும் மலேசியா உள்ளிட்ட நாடுகளில் பல தமிழ் ஆர்வலர்கள், அறிஞர்கள் மற்றும் கல்வியாளர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
</p><p>
மேலும், தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு, ஈழத் தமிழர்களுக்கான முன்னெடுப்புகள் மற்றும் புலம்பெயர் தமிழர்களின் செயற்பாடுகள் தொடர்பிலும் அவர் தனது கருத்துக்களை பகிர்ந்துகொண்டுள்ளார்.
</p><p>
இது தொடர்பான மேலதிக தகவல்கள் மற்றும் அவரது முழுமையான கருத்துக்களை காணொளியில் தொடர்ந்து காணலாம்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/u9zfHVtj19g" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-11T12:53:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஐரோப்பிய ஊடகம் வியந்த ஈழத்தமிழ் தொழிலதிபர் பாஸ்கரன் கந்தையா!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/eelam-tamil-entrepreneur-baskaran-k-dutch-media-1786445798"></link>
            <id>https://jvpnews.com/article/eelam-tamil-entrepreneur-baskaran-k-dutch-media-1786445798</id>
            <summary type="text">றீச்சா உணவு திருவிழாவில் ஏற்பட்ட குழப்பங்களுக்கு சமூக வலைத்தளங்களில் வாதபிரதிவாதங்க்கள் இடம்பெற்று வரும் நிலையில் , நெதர்லாந்து ஊடகம் வியந்த ஈழத்தமிழர...</summary>
            <content type="html"><![CDATA[<p>றீச்சா உணவு திருவிழாவில் ஏற்பட்ட குழப்பங்களுக்கு சமூக வலைத்தளங்களில் வாதபிரதிவாதங்க்கள் இடம்பெற்று வரும் நிலையில் , நெதர்லாந்து ஊடகம் வியந்த ஈழத்தமிழர் பாஸ்கரன் கந்தையா தொடர்பில் வெளிவந்த செய்திதான் இது. </p><p>

நெதர்லாந்து ஊடகம் ஒன்றில் கடந்த வாரம், புலம்பெயர் ஈழத் தமிழர் பாஸ்கரன் கந்தையா தொடர்பில் வெளிவந்த கட்டுரையை அவதூறு பரப்புவோர் அறிந்து கொள்ளவேண்டும். 

அந்தவகையில் நெதர்லாந்து ஊடகம் வெளியிட்ட கட்டுரையில்,
 டச்சு மண்ணை அதிரவைத்த தமிழர் நெதர்லாந்து ஊடகம் வியந்த பாஸ்கரன் கந்தையாவின் 5,445 கோடி ரூபாய் சாம்ராஜ்யம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/262d7f58-4f3c-4152-a593-7d70b0dd5d21/26-6a7affe866861.webp' /></p><h2>நெதர்லாந்தின்&nbsp; செல்வாக்குமிக்க பணக்காரர்கள் பட்டியலில் இடம்பிடித்த&nbsp; ஈழத்தமிழர்</h2><p> நெதர்லாந்து நாட்டின் வர்த்தக உலகில் பிரகாசிக்கும் ஈழத்து நட்சத்திரம், பாஸ்கரன் கந்தையாவின் வரலாற்றுச் சுவடுகள்
ஐரோப்பியப் பெருநிலப்பரப்பில் ஈழ அகதிகளாக தடம் பதித்து, தமது கடின உழைப்பால் வெற்றி மீது வெற்றி குவித்து வாழும் புலம்பெயர் தமிழர்களின் பட்டியலில் , பாஸ்கரன் கந்தையா என்ற பெயர் இன்றைக்கு உலகளவில் அதிக கவனத்தை ஈர்த்து நிற்கிறது என நெதர்லாந்தின் முன்னணி பொருளாதார மற்றும் வணிக இதழான '<a href="https://www.quotenet.nl/lifestyle/reizen/a73375336/quote-500-lid-baskaran-kandiah-resort-sri-lanka/" target="_blank">Quote Net'</a> அண்மையில் வெளியிட்ட சிறப்புக் கட்டுரை ஒன்று, டச்சு மண்ணில் ஒரு ஈழத்தமிழர் உருவாக்கியுள்ள பிரமாண்டமான வணிகச் சாம்ராஜ்யத்தையும், தனது தாய்நிலம் மீதான காதலையும் , நன்றியுணர்வையும் வெகுவாக பாராட்டியுள்ளது .</p><p></p><p> 
நெதர்லாந்து நாட்டின் ஆகப்பெரிய மில்லியனர்களைக் வரிசைப்படுத்தும் 'Quote 500' பட்டியலில் பாஸ்கரன் கந்தையாவைச் சேர்த்து பெருமைப்படுத்தியிருக்கும் அந்த ஊடகம், அவரது வாழ்க்கைப் பாதையை ஒரு பரபரப்பான நாவலைப் போலவும், திரைப்படக் காட்சிகளைப் போலவும் வர்ணித்துள்ளது.
</p><p>அந்த டச்சு ஊடகத்தின் துல்லியமான நிதி மதிப்பீட்டின்படி, திரு . பாஸ்கரன் கந்தையாவின் தற்போதைய நிகர சொத்து மதிப்பானது 165 மில்லியன் யூரோக்கள் ஆகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e0d05f12-75c8-46a4-9eb8-72a2c2764e44/26-6a7b02b0b294b.webp' /></p><p>அதாவது நமது இலங்கை ரூபாய் மதிப்பில் இதைக் கணக்கிட்டுப் பார்த்தால், அது சுமார் 5,445 கோடி இலங்கை ரூபாயைத் தொடுகிறது (LKR 54.45 Billion).</p><p>
இந்த பிரமாண்டமான நிதிப் பலம்தான் அவரை நெதர்லாந்தின் மிகச் செல்வாக்குமிக்க பணக்காரர்கள் பட்டியலில் 437-வது இடத்தில் கம்பீரமாக அமர்த்தியிருக்கிறது எனவும் . 
இந்த எண்களுக்குப் பின்னால் இருக்கும் உழைப்பும் அசாத்தியமான துணிச்சலும்தான் உண்மையிலேயே வியப்பளிக்கக்கூடியவை எனவும் அவர்கள் வியப்படைந்துள்ளனர் . </p><p>
யாழ்ப்பாணத்தின் வடலியடைப்பில் ஒரு சாதாரன வறிய குடும்ப சூழலில் பிறந்து வளர்ந்த பாஸ்கரன், தனது இளமைக் காலத்தில் இலங்கையில் நிலவிய போர் மேகங்களினாலும் பொருளாதார நெருக்கடிகளினாலும் ஐரோப்பாவை நோக்கித் தனது பயணத்தைத் தொடங்கினார். </p><p>
நெதர்லாந்து மண்ணில் காலூன்றிய அவர், தன் முன்னாலுள்ள சவால்களைக் கண்டு அஞ்சாமல் தனது முப்பதாவது வயதில் தனது இரண்டு நண்பர்களுடன் இணைந்து 'லெபாரா மொபைல்' (Lebara Mobile) என்ற தொலைத்தொடர்பு நிறுவனத்தைத் தொடங்கினார்.</p><h2>ஐரோப்பாவின் முதன்மை வணிக இதழ் புகழாரம்&nbsp;</h2><p> </p><p>தாயகத்தையும், புலம்பெயர்ந்து வாழும் சொந்தங்களையும் குறைந்த செலவில் இணைக்கும் அவரது தொலைநோக்கு வர்த்தக உத்தி, ஐரோப்பா முழுவதும் காட்டுத்தீ போலப் பரவியது. 
2017-இல் அந்த நிறுவனத்தைச் சுவிட்சர்லாந்து முதலீட்டாளர்களுக்கு விற்றதன் மூலம் சர்வதேச அளவில் அறியப்படும் தமிழ் மில்லியனராக உயர்ந்தார். </p><p>அதோடு லெபாராவோடு நின்றுவிடாது 2014-இல் லண்டனைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கும் 'IBC தமிழ்' ஊடகக் குழுமத்தைக்கொள்வனவு செய்து , அதனை ஈழத்தமிழர்களுக்கான எல்லைகடந்த ஒரே ஒரு பேரூடகமாக உருவாக்கி இன்றும் அதன் தலைவராகத் தனது பயணத்தை தொடர்கிறார் .</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b70fcddd-7cef-463a-8d18-81ab46fbdbe4/26-6a7b02b1b73e2.webp' /></p><p>ஐரோப்பிய பொருளாதாரச்சூழலில் வெற்றிகரமான வியாபாரத்தில் ஆயிரக்கணக்கான கோடிகளை ஈட்டிய பிறகும், தான் பிறந்த தாய்நிலத்தின் மீது அவருக்கு இருந்த பற்றின் காரணமாக போரினால் சிதைந்து கிடந்த தாயகப்பகுதிக்கு மீண்டும் பொருளாதார ரீதியாக உயிர் கொடுக்க வேண்டும் என்ற அவரது தணியாத ஆசையின் விளைவாக உருவானதுதான் 'ரீச்சா (ReeCha) ஒருங்கிணைந்த பண்ணை சூழலியல் சுற்றுலா மையம் ஆகும் . </p><p>
பரந்து விரிந்த அந்த நிலப்பரப்பில் இயற்கை உரங்களைக் கொண்டு பராமரிக்கப்படும் கரிமப் பண்ணைகள், பலவகை மிருகங்கள் மற்றும் பறவைகள் பூங்கா, பிரமாண்டமான நீர் விளையாட்டு வளாகம், தீம் பார்க் என அனைவரையும் கவரும் வகையில் ஒரு சுற்றுலாச் சொர்க்கத்தையே உருவாக்கியுள்ளார். </p><p>
அத்துடன் பன்னாட்டுச் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் நட்சத்திர விடுதிகள் அறைகள், ஸ்பா, உடற்பயிற்சிக் கூடங்கள் மற்றும் உணவகங்களும் அங்கு அமைக்கப்பட்டுள்ளன.
 "முப்பதாண்டு கால கொடூர போருக்குப் பிறகும் நமது வடபிராந்தியத்தில் பெரிய அளவிலான பொருளாதார முதலீட்டு வளர்ச்சிப் பணிகள் எவையும் நடக்கவில்லை. </p><p>எனது சொந்த மண்ணுக்கும், என்னை உருவாக்கிய மக்களுக்கும் என்னால் முடிந்த மறுவாழ்வை அளிக்க வேண்டும் என்ற ஒரே எண்ணம்தான் இந்த பிரமாண்ட திட்டத்தின் பின்னணியில் உள்ளது" என்று Quote இதழிடம் பாஸ்கரன் கந்தையா உருக்கமுடன் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>யுத்தத்திற்குப் பிந்தைய காலத்தில் வட இலங்கையின் பொருளாதாரம் தேக்கமடைந்து கிடந்த சூழலில், ரீச்சா மையத்தில் பாஸ்கரன் செய்த முதலீட. அந்தப்பகுதியில் ஒரு புதிய மறுமலர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><p> இன்றைக்கு அந்த மையத்தில் மட்டும் சுமார் 400 பேருக்கு நிரந்தர வேலைவாய்ப்பும், 100 பேருக்குப் பகுதிநேர வேலைவாய்ப்பும் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் நேரடியாகப் பயனடைகின்றன. 
அதுமட்டுமன்றி, 2025-ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 3 லட்சம் சுற்றுலாப் பயணிகள் இந்த மையத்தைப் பார்வையிட்டுள்ளனர். </p><p>இதனால் யாழ்ப்பாணப் பகுதியிலுள்ள சிறு வியாபாரிகள், ஆட்டோ மற்றும் வாகன ஓட்டுநர்கள், உள்ளூர் கைவினைஞர்கள் என பலதரப்பட்ட மக்களின் பொருளாதாரமும் கணிசமாக உயர்ந்துள்ளது எனவும் அந்த இதழ் புகழாரம் சூடியுள்ளது </p><p>. 
ஈழத்தமிழர்களின் தேச நலன் தொடர்பிலான கருத்தாடல்களில் தேசிய முதலாளிகள் உருவாக்கப்பட வேண்டும் என்ற சிந்தனை சரியானமுறையில் சமூகமயமாக்கப்படாமல் , ஒரு தரப்பின் விமர்சனம் இருந்து வந்தாலும் , தேவையுடைய ஒரு சமூகத்தின் பொருளாதார தேவையாக பாஸ்கரன் கந்தையா இருந்து வருகிறார் . </p><p>
ஐரோப்பாவின் முதன்மை வணிக இதழ் ஒன்றில் புகழாரம் சூட்டப்படும் ஒரு ஈழத்தமிழரை எண்ணி நமது 
சமூகமும் பெருமையுறும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை . 
வடக்கு கிழக்கின் இன்றைய தேவை அதை வளப்படுத்தக்கூடிய பாரம்பரியமான முதலீட்டாளர்களே என்பதை உணர்த்தி 
ஒரு முன்னுதாரனமாக தனது கனவுகளை நோக்கி வெற்றிகரமாக நகர்ந்து வருகிறார் திரு பாஸ்கரன் கந்தையா&nbsp; என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p><br></p>]]></content>
            <updated>2026-08-11T12:48:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுவிட்சர்லாந்து வாழ் இலங்கையர்களுக்கு மகிழ்ச்சித்தகவல்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/good-news-sri-lankans-living-switzerland-consular-1786452484"></link>
            <id>https://jvpnews.com/article/good-news-sri-lankans-living-switzerland-consular-1786452484</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp; சுவிட்சர்லாந்தின் பேர்ண் (Bern) நகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் இலங்கை மக்களுக்குத் தேவையான அத்தியாவசிய தூதரகச் சேவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp; சுவிட்சர்லாந்தின் பேர்ண் (Bern) நகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் இலங்கை மக்களுக்குத் தேவையான அத்தியாவசிய தூதரகச் சேவைகளை வழங்கும் பொருட்டு, நடமாடும் சேவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
</p><p>
அதன்படி ஜெனீவாவிலுள்ள இலங்கை கொன்சியூலர் ஜெனரல் அலுவலகத்தால் இரண்டு நாட்கள் கொண்ட நடமாடும் சேவையொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f6c6666e-af18-46c0-a79b-3cf13ed7ee0c/26-6a7b1a066b9cc.webp' /></p><h2>நடமாடும் தூதரக&nbsp; சேவை</h2><p>
</p><p>
இந்த நடமாடும் சேவை எதிர்வரும் 29 (சனிக்கிழமை) மற்றும் ஆகஸ்ட் 30 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய திகதிகளில் 'Haus Der Religionen, Europaplatz 1, 3008 Bern' என்ற முகவரியில் காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெறவுள்ளது.
</p><p>
இந்த சேவையின் ஊடாகக் கடவுச்சீட்டு (Passport) விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளல் கடவுச்சீட்டில் பெயர் திருத்தங்களை மேற்கொள்ளுதல், பிறப்பு மற்றும் இறப்புப் பதிவுகள், இரட்டைக் குடியுரிமைக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளல் உள்ளிட்ட சேவைகள் வழங்கப்படவுள்ளன.</p><p></p><p>
</p><p>
அத்துடன் e-BMD தொகுதியின் ஊடாகப் பெறப்படும் பிறப்பு, திருமணம் மற்றும் இறப்புச் சான்றிதழ்களை விநியோகித்தல், சிவில் நிலை உறுதிமொழிப் பத்திரங்களைச் சான்றளித்தல், ஓய்வூதியதாரர்களின் ஆயுள் சான்றிதழ்களை ஏற்றுக்கொள்ளுதல், உறுதிமொழிப் பத்திரங்கள் மற்றும் அதிகாரப் பத்திரங்களைச் சான்றளித்தல் ஆகிய சேவைகளும் இதன்போது முன்னெடுக்கப்படவுள்ளன.
</p><p>
கால அவகாசம் குறைவாக உள்ளமையினால் , இந்தச் சேவைகளைப் பெற விரும்புபவர்கள் எதிர்வரும் 27 ஆம் திகதிக்கு முன்னர் www.lankamission.org/mcs என்ற இணையதள முகவரிக்கு பிரவேசித்து முன்பதிவுகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><p></p><p>
</p><p>
மேலும் , தேவையான ஆவணங்கள் மற்றும் விபரங்களை www.lankamission.org/checklist என்ற முகவரியில் அறிந்துகொள்ள முடியும் என்பதுடன், மேலதிக விசாரணைகளுக்கு slcgs.geneva@lankamission.org என்ற மின்னஞ்சல் முகவரி மூலமாகவோ அல்லது +41 77 990 6073, +41 77 909 8969 ஆகிய தொலைபேசி எண்கள் வாயிலாகவும் தொடர்பு கொள்ள முடியும் என ஜெனீவாவிலுள்ள இலங்கை கொன்சியூலர் ஜெனரல் அலுவலகம் அறிவித்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-11T12:46:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[குழந்தையால் ரத்து செய்யப்பட்ட விமானப் பயணம் - நிர்வாகம் எடுத்த திடீர் முடிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/canada-toronto-flight-cancelled-1786451599"></link>
            <id>https://tamilwin.com/article/canada-toronto-flight-cancelled-1786451599</id>
            <summary type="text">கனடா - டொராண்டோவிற்குச் செல்லும் விமானம் ஒன்று, ஒரு சிறு குழந்தை தனது சீட் பெல்ட்டை அணிய மறுத்ததால், ரத்து செய்யப்பட்டுள்ளதாக போர்ட்டர் ஏர்லைன்ஸ் தெரி...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடா - டொராண்டோவிற்குச் செல்லும் விமானம் ஒன்று, ஒரு சிறு குழந்தை தனது சீட் பெல்ட்டை அணிய மறுத்ததால், ரத்து செய்யப்பட்டுள்ளதாக போர்ட்டர் ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது.</p><p>பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள விக்டோரியா சர்வதேச விமான நிலையத்திலிருந்து டொராண்டோவின் பியர்சன் சர்வதேச விமான நிலையத்திற்குச் செல்லும் PD444 விமானம், பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் புறப்படவில்லை என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><h2>


ஒரு குழந்தையால் ரத்து செய்யப்பட்ட விமானம்</h2><p>
இது தொடர்பில் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்படுவதாவது,
</p><p>
விமானம் முனையத்திலிருந்து புறப்பட்டு ஓடுபாதையை நோக்கிச் சென்றது, ஆனால் உடன் வந்த பெற்றோர் மற்றும் விமானப் பணியாளர்கள் முயன்றும், இருக்கையில் நின்றுகொண்டிருந்த ஒரு சிறு குழந்தை தனது சீட் பெல்ட்டை அணியவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/87d2e127-1590-4c1c-9c68-88b0bbf5e056/26-6a7b1799dd746.webp' /></p><p> </p><p>

இந்த பாதுகாப்பற்ற சூழ்நிலையால் விமானத்தால் புறப்பட முடியவில்லை, எனவே விமானப் பணியாளர்கள் முனையத்திற்கே திரும்பிச் சென்று பயணிகளை இறக்கிவிட முடிவு செய்தனர்.</p><p>

விமானத்தை மீண்டும் தயார் செய்வதற்கும், குழந்தையையும் பெற்றோர்களையும் விமானத்திலிருந்து இறக்குவதற்கும், அவர்களின் உடமைகளை மீட்டெடுப்பதற்கும், ஆவணங்களை மீண்டும் தாக்கல் செய்வதற்கும் தேவைப்பட்ட நேரத்தால், விமானம் மிகவும் தாமதமாக புறப்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.</p><p>இதன் காரணமாக விக்டோரியா விமான நிலையத்தின் ஓடுபாதை நள்ளிரவு 12:30 மணிக்கு மூடப்பட்டுள்ளது. ஒரு குழந்தையால் மற்ற பயணிகளுக்கு ஏற்பட்ட பாதிப்பிற்காக நாங்கள் வருந்துகிறோம். அவர்கள் மறுநாள் விமானத்தில் புறப்பட்டுச் சென்றனர் என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><p></p><p><b>YOU MAY LIKE THIS VIDEO..&nbsp;</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/hh-Q7I2Hjmg" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p>]]></content>
            <updated>2026-08-11T12:37:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[லண்டன் துறைமுகம் ஒன்றில் சிக்கிய 232 மில்லியன் பவுண்டுகள் மதிப்புடைய போதைப்பொருள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/232-million-pound-cocaine-seized-london-harbour-1786451800"></link>
            <id>https://news.lankasri.com/article/232-million-pound-cocaine-seized-london-harbour-1786451800</id>
            <summary type="text">வாழைப்பழங்களுக்கு நடுவே மறைத்து கொண்டுவரப்பட்ட 232 மில்லியன் பவுண்டுகள் மதிப்புடைய போதைப்பொருள் லண்டன் துறைமுகம் ஒன்றில் சிக்கியுள்ளது.


தென் அமெர...</summary>
            <content type="html"><![CDATA[<p>வாழைப்பழங்களுக்கு நடுவே மறைத்து கொண்டுவரப்பட்ட 232 மில்லியன் பவுண்டுகள் மதிப்புடைய போதைப்பொருள் லண்டன் துறைமுகம் ஒன்றில் சிக்கியுள்ளது.
</p><p>

தென் அமெரிக்காவிலிருந்து இங்கிலாந்துக்கு வந்த கண்டெய்னர் ஒன்றில் 232 மில்லியன் பவுண்டுகள் மதிப்புடைய போதைப்பொருள் மறைத்துவைக்கப்பட்டிருந்ததை சுங்க அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளார்கள்.</p><h3>

துறைமுகம் ஒன்றில் சிக்கிய போதைப்பொருள்
</h3><p>
இங்கிலாந்தின் எசெக்ஸிலுள்ள London Gateway துறைமுகத்திற்கு தென் அமெரிக்காவிலிருந்து கண்டெய்னர் ஒன்று வந்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/350f9938-43b2-426f-8c4d-dbb0e56ca584/26-6a7b1759da21f.webp' /></p><p>
அதில் வாழைப்பழங்கள் அடங்கிய பெட்டிகள் இருந்த நிலையில், சுங்க அதிகாரிகள் அவற்றை சோதனையிட்டுள்ளார்கள்.
</p><p>
அப்போது, அந்த பெட்டிகளிலிருந்த வாழைப்பழங்களின் இடையே போதைப்பொருள் அடங்கிய பார்சல்கள் மறைத்துவைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. </p><p></p><p>
அந்த கண்டெய்னரில், 2,900 கிலோ போதைப்பொருள் இருந்துள்ளது. அதன் மதிப்பு சுமார் 232 மில்லியன் பவுண்டுகள் ஆகும்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/441cbdf1-d0a5-419b-b847-eb2594e6010b/26-6a7b175a88f71.webp' /></p><p>

232 மில்லியன் பவுண்டுகள் என்பது, இலங்கை மதிப்பில் 1,04,69,60,08,800.00 ரூபாய் ஆகும்.
</p><p>
அந்த போதைப்பொருளை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ள நிலையில், அந்த போதைக்கடத்தல் தொடர்பில் ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-11T12:36:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆங்கில மொழிக் கற்பித்தலில் காலனித்துவமய நீக்கம்! சர்வதேச மாநாடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/international-conference-university-of-jaffna-1786451462"></link>
            <id>https://tamilwin.com/article/international-conference-university-of-jaffna-1786451462</id>
            <summary type="text">யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீடத்தின் ஆங்கில மொழிக் கற்பித்தல் துறை (DELT)
ஏற்பாடு செய்யும் “ஆங்கில மொழிக் கற்பித்தலில் காலனித்துவமய நீக்கம்” எனும்...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீடத்தின் ஆங்கில மொழிக் கற்பித்தல் துறை (DELT)
ஏற்பாடு செய்யும் “ஆங்கில மொழிக் கற்பித்தலில் காலனித்துவமய நீக்கம்” எனும்
தொனிப்பொருளிலான 2வது சர்வதேச மாநாடு (ICDE – 2026), முன்னாள் ஆங்கில மொழிக்
கற்பித்தல் துறைத் தலைவரும், தற்போதைய பென்ஸ்டேட் (ஐக்கிய அமெரிக்கா)
பல்கலைக்கழகத்தின் புகழ்பெற்ற ஈவான் பஃப் பேராசிரியருமான சுரேஷ் கனகராஜாவின் அனுசரணையில், எதிர்வரும் 2026 ஆகஸ்ட் 12 முதல் 14ஆம் திகதி வரை
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கைலாசபதி மற்றும் நூலக அரங்குகளில்
நடைபெறவுள்ளது.</p><p>

ஆங்கில மொழிக் கற்பித்தல், சமூக மொழியியல் மற்றும் காலனித்துவமய நீக்கச்
சிந்தனைகள் தொடர்பான முக்கியமான உரையாடல்களை முன்னெடுப்பதை நோக்கமாகக் கொண்டு
இம்மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.</p><h2>மாநாடு</h2><p>
</p><p>
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் மூத்த பேராசிரியர் திருநாவுக்கரசு
வேல்நம்பியின் தலைமையில், பேராசிரியர் நா.பிரதீபராஜா மற்றும்
பேராசிரியர் தி.கருணாகரன் ஆகியோரின் இணைத் தலைமையில் இம்மாநாடு
இடம்பெறவுள்ளது.
</p><p>
இம்மாநாட்டில் பேராசிரியர் சுரேஷ் கனகராஜா, பேராசிரியர் பிமாலி இந்திரரத்ன,
பேராசிரியர் ரோண்டா ஒலிவர், டாக்டர் வைதேகி ராஜபிள்ளை, பேராசிரியர் செண்டர்
தோவ்சின் மற்றும் இணைப் பேராசிரியர் மேக்ஸ் ஸ்பாட்டி உள்ளிட்ட பல சர்வதேச
புகழ்பெற்ற பேராசிரியர்கள் மற்றும் அறிஞர்கள் சிறப்புரையாற்றவுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/770739a0-0aad-4f1a-9f91-7b026fd07d5a/26-6a7b16091eee1.webp' /></p><p>
</p><p>
ஆகஸ்ட் 12ஆம் திகதி காலை 8.30 மணிக்கு ஆரம்பமாகும் தொடக்க விழா உள்ளிட்ட
மாநாட்டின் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்ளுமாறு பேராசிரியர்கள்,
ஆய்வாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் ஆர்வலர்கள் அனைவரையும் அன்புடன்
அழைப்பதாக ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-11T12:32:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[காதல் காதல் காதல் சீரியல் நடிகை ஷோபனாவின் மாடர்ன் லுக் புகைப்படங்கள்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/kadhal-kadhal-kadhal-serial-shobanaa-photos-1786446079"></link>
            <id>https://viduppu.com/article/kadhal-kadhal-kadhal-serial-shobanaa-photos-1786446079</id>
            <summary type="text">ஷோபனாசின்னத்திரை நடிகைகள் பலரும் ரசிகர்கள் மத்தியில் குறுகிய காலக்கட்டத்தில் கவனத்தை ஈர்த்துவிடுகிறார்கள். அந்தவகையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப...</summary>
            <content type="html"><![CDATA[<h2>ஷோபனா</h2><p>சின்னத்திரை நடிகைகள் பலரும் ரசிகர்கள் மத்தியில் குறுகிய காலக்கட்டத்தில் கவனத்தை ஈர்த்துவிடுகிறார்கள். அந்தவகையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான முத்தழகு சீரியலில் முக்கிய ரோலில் நடித்து பிரபலமானவர் தான் தான் நடிகை ஷோபனா.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ca51c76c-acd4-4bde-bf69-9c0ec3d156bf/26-6a7b010861a2b.webp' /></p><p> இதனையடுத்து மீனாட்சி சுந்தரம், பூங்காற்று திரும்புமா உள்ளிட்ட சீரியலில் நடித்து வந்தார். தற்போது, ஜூலை மாதம் ஒளிப்பரப்பாகி வரும் காதல் காதல் காதல் என்ற சீரியலில் முக்கிய ரோலில் நடித்து வருகிறார்.</p><p> சீரியலில் அடக்கவுடக்கமாக இருக்கும் ஷோபனா, மாடர்ன் லுக்கில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-08-11T12:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆகஸ்ட் 11 ஆம் திகதியை சுதந்திர தினமாக அறிவித்துள்ள பலுச்சிஸ்தான் - பாகிஸ்தான் மௌனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/balochistan-declares-august-11-independence-day-1786451195"></link>
            <id>https://news.lankasri.com/article/balochistan-declares-august-11-independence-day-1786451195</id>
            <summary type="text">&amp;nbsp;பாகிஸ்தானில் உள்ள பலுசிஸ்தான் மாகாணம் ஆகஸ்ட் 11 ஆம் திகதியை சுதந்திர தினமாக அறிவித்துள்ளது. 

சுதந்திர தினத்தை அறிவித்துள்ள பலுச்சிஸ்தான்

ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;பாகிஸ்தானில் உள்ள பலுசிஸ்தான் மாகாணம் ஆகஸ்ட் 11 ஆம் திகதியை சுதந்திர தினமாக அறிவித்துள்ளது. </p><h3>

சுதந்திர தினத்தை அறிவித்துள்ள பலுச்சிஸ்தான்
</h3><p>
பாகிஸ்தானின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள பலுசிஸ்தான் மாகாணம், பாகிஸ்தானின் மிகப்பெரிய மாகாணம் ஆகும்.
</p><p>
பல ஆண்டுகளாகவே, பலுசிஸ்தானை தனி நாடாக அறிவிக்கக்கோரி, பலுச் விடுதலைப் படையினர்(BLA) உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7f4e9b60-15db-4540-9e69-d7d798c8df77/26-6a7b14fc6865e.webp' /></p><p>

இந்நிலையில், ஆகஸ்ட் 11 ஆம் திகதியை ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினமாக கொண்டாடப்போவதாக பலுசிஸ்தான் அமைப்புகள் அறிவித்துள்ளன.</p><p> 

மேலும், பலூசிஸ்தான் சுதந்திரத்தை சட்டப்பூர்வமாகவும், அரசியல் ரீதியாகவும், இராஜதந்திர ரீதியாகவும், தார்மீக ரீதியாகவும் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்று உலக நாடுகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். </p><p>

பாகிஸ்தான் தனது சுதந்திர தினத்தை ஆகஸ்ட் 14 ஆம் திகதி கொண்டாடி வரும் நிலையில், 3 நாட்களுக்கு முன்னதாக ஆகஸ்ட் 11 ஆம் திகதியை பலுசிஸ்தான் சுதந்திர தினமாக அறிவித்துள்ளது.</p><p> 

முன்னதாக பிரித்தானியர்கள் இந்த துணைக்கண்டத்தை விட்டு வெளியேறியபோது, ​​1947 ஆகஸ்ட் 11 அன்று பலுசிஸ்தான் தனது சுதந்திரத்தை அறிவித்தது.&nbsp;</p><p></p><p> 

ஆனால், அதன் பின்னர் பாகிஸ்தான் ராணுவத்தின் ஆக்கிரமிப்பு மூலம், சுதந்திர நாடாக செயல் பட்டு வந்த பலுசிஸ்தானை, 1948 ஆம் ஆண்டு மார்ச் 27 ஆம் திகதி பாகிஸ்தான் உடன் இணைக்கப்பட்டது. </p><p>

பாகிஸ்தான் மற்றும் உலகின் பல்வேறு பகுதிகளில் வாழ்ந்து வரும் பலூச் மக்கள், பலூசிஸ்தான் கொடியுடன் இந்த நாளை சுதந்திரதினமாக கொண்டாடி வருகின்றனர்.
</p><p>
இது குறித்து பலூச் தலைவர் மிர் யார் பலோச் வெளியிட்டுள்ள பதிவில், "பலுசிஸ்தானின் ஆறு கோடி மக்கள் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 11 ஆம் தேதி தங்கள் தேசிய சுதந்திர தினத்தைக் கொண்டாடுகிறார்கள்.</p><p> 

இன்று நாம் நமது சுதந்திரத்தைக் கொண்டாடுவதோடு மட்டுமல்லாமல், பலுசிஸ்தானின் சுதந்திரம் சட்டப்பூர்வமாகவும், அரசியல் ரீதியாகவும், இராஜதந்திர ரீதியாகவும், தார்மீக ரீதியாகவும் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்று உலகத்திடம் கோரும் ஒரு நிலையை அடைந்துள்ளோம்.
</p><p>
பலுசிஸ்தான் குடியரசு, இன்று முதல், பலுசிஸ்தானை பாகிஸ்தானின் ஒரு மாகாணம் என்று அழைப்பதற்கோ, எழுதுவதற்கோ அல்லது குறிப்பிடுவதற்கோ பதிலாக, அது ஒரு சுதந்திர நாடு என்று எழுதப்பட வேண்டும், படிக்கப்பட வேண்டும் மற்றும் அழைக்கப்பட வேண்டும் என்று முழு உலகத்திடமும் கோருகிறது.&nbsp;</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Message of Independence of the Republic of Balochistan<br><br>11 August, 2026<br><br>The six crore people of Balochistan celebrate their national independence day every year on the 11th of August. Today we have reached a stage where we do not merely celebrate our independence, but demand… <a href="https://t.co/W1LT0LNajU">pic.twitter.com/W1LT0LNajU</a></p>&mdash; Mir Yar Baloch (@miryar_baloch) <a href="https://x.com/miryar_baloch/status/2086917139777372259?ref_src=twsrc%5Etfw">August 10, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p> 

வெளியுறவுக் கொள்கை, பாதுகாப்பு, பொருளாதாரம், அரசியல் மற்றும் இராஜதந்திரம் ஆகியவற்றின் அனைத்துப் பொறுப்புகளையும் தானே நிறைவேற்றிக் கொள்ளும் உரிமையை பலுசிஸ்தான் இப்போது கொண்டுள்ளது.</p><p> 

மிக விரைவில் கடவுச்சீட்டு, நாணயம், பலுசிஸ்தானின் ஊடக நிறுவனங்கள், பலுசிஸ்தான் வர்த்தக மற்றும் வணிக நிறுவனம் மற்றும் தூதரகங்களின் முறையான தொடக்கம் நடைபெறும், அதற்கான தேதிகள் உரிய நேரத்தில் அறிவிக்கப்படும்.</p><p> 

பலுசிஸ்தானின் குரலை உலக அரங்கிற்கு எடுத்துச் சென்று, நமது மக்களின் குரலாக மாறியுள்ள உலகின், குறிப்பாக இந்தியாவின், துணிச்சலான பிரதான ஊடகங்களுக்கும், அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் பலுசிஸ்தான் குடியரசு தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது" என குறிப்பிட்டுள்ளார். </p><p>

பலுசிஸ்தானின் இந்த சுதந்திரதின அறிவிப்புக்கு இதுவரை பாகிஸ்தான் அரசு அதிகாரபூர்வமாக எந்த பதிலும் அளிக்கவில்லை.</p><p> 

இதற்கு அதிகாரபூர்வமாக எதிர்வினையாற்றினால் அது சர்வதேச அளவில் கவனம் பெறும் என்பதால் பாகிஸ்தான் மௌனமாக இருந்து இதனை தவிர்த்து வருகிறது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-11T12:26:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரான் அச்சுறுத்தலால் ரகசிய விமானத்தில் ஒழித்து ஓடிய ட்ரம்ப் !]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/iran-threat-trump-fled-in-a-secret-plan-uk-1786439764"></link>
            <id>https://canadamirror.com/article/iran-threat-trump-fled-in-a-secret-plan-uk-1786439764</id>
            <summary type="text">&amp;nbsp; அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் துருக்கியில் இருந்து பிரிட்டனுக்கு இரகசியமாக இராணுவ விமானத்தில் பயணம் செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

ஈரா...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் துருக்கியில் இருந்து பிரிட்டனுக்கு இரகசியமாக இராணுவ விமானத்தில் பயணம் செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

ஈரானிடமிருந்து கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, டொனால்ட் ட்ரம்ப் இரகசியமாக இராணுவ விமானத்தில் பயணம் செய்ததாக கூறப்படுகின்றது.</p><p>

கடந்த மாதம் நேட்டோ உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ட்ரம்ப் துருக்கியின் அங்காராவுக்குச் சென்றிருந்தார். அங்கிருந்து புறப்படும்போது வழக்கமாகப் பயன்படுத்தும் எயார் போர்ஸ் ஒன் விமானத்தில் ஊடகங்கள் முன்னிலையில் அவர் ஏறியதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e372dfa7-cf44-4b10-a9d0-f1013a257e56/26-6a7ae855affe9.webp' /></p><h2>பழைய எயார் போர்ஸ் ஒன் விமானத்தில் பயணித்த ட்ரம்ப்</h2><p>


எனினும், அந்த விமானம் புறப்படாத நிலையில், ஊடகவியலாளர்கள் அங்கிருந்து சென்ற பின்னர், கேட்டரிங் வாகனம் ஒன்றின் மூலம் ட்ரம்ப் வேறு விமானத்துக்கு இரகசியமாக அழைத்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகின்றது.</p><p>



பின்னர், பாதுகாப்புத்துறை செயலாளர் ஹெக்செத் மற்றும் இரகசிய பாதுகாப்பு அதிகாரிகளுடன் சி-32ஏ இராணுவ விமானத்தில் துருக்கியிலிருந்து பிரிட்டனுக்கு அவர் பயணம் செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
</p><p>


இதனிடையே, ட்ரம்ப் இல்லாமல் பழைய எயார் போர்ஸ் ஒன் விமானத்தில் பயணித்த ஊடகவியலாளர்கள் மற்றும் வெள்ளை மாளிகை ஊழியர்களிடம் விமானத்தின் ஜன்னல்களை மூடி வைக்குமாறு அறிவுறுத்தப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
</p><p>


அத்தோடு பிரிட்டனில் இருந்து பின்னர் ட்ரம்ப் பாதுகாப்பாக அமெரிக்கா திரும்பியதாகவும் அந்த தகவல்கள் கூறுகின்றது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-11T12:25:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தாயின் தகாத உறவு; 5 நட்சத்திர விடுதியில் சடலமாக மீட்கப்பட்ட குழந்தைகள்! சம்பவத்தால் ஷாக்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/wife-affair-bengaluru-man-kills-daughters-hotel-1786436112"></link>
            <id>https://jvpnews.com/article/wife-affair-bengaluru-man-kills-daughters-hotel-1786436112</id>
            <summary type="text">&amp;nbsp; இந்தியா பெங்களூரில் உள்ள ஒரு 5 நட்சத்திர விடுதியில் இரு குழந்தைகள் சடலமாகவும், அவர்களின் தந்தை படுகாயங்களுடனும் கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் அத...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; இந்தியா பெங்களூரில் உள்ள ஒரு 5 நட்சத்திர விடுதியில் இரு குழந்தைகள் சடலமாகவும், அவர்களின் தந்தை படுகாயங்களுடனும் கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் தொடர்பில் இந்திய ஊடகங்க்கள் குறிப்பிட்டுள்ளதாவது,</p><p> 
 
40 வயதான இம்ரான் மற்றும் அவரது இரு மகள்கள் விடுதியில் தங்கியிருந்தனர். விடுதி ஊழியர்கள் அறைக்குள் சென்று பார்த்தபோது, குழந்தைகள் கட்டிலில் சடலமாகக் கிடந்தனர். 

இம்ரான் கழுத்து அறுபட்ட நிலையில் கழிப்பறையில் ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/acf08a62-e9c8-4a4e-8ded-fd4ebb6b47fa/26-6a7ada120aeec.webp' /></p><h2>என் குழந்தைகள் இப்படிப்பட்ட தாயுடன் வளர்வதை நான் விரும்பவில்லை</h2><p> </p><p>
விடுதி ஊழியர்கள் அவரை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். தற்போது அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
 
இம்ரான் தனது மனைவிக்கு வேறு ஒருவருடன் தொடர்பு இருப்பதாக சந்தேகித்ததாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.</p><p></p><p> </p><p>

“என் குழந்தைகள் இப்படிப்பட்ட தாயுடன் வளர்வதை நான் விரும்பவில்லை. அதனால்தான் அவர்களைக் கொன்றுவிட்டு நானும் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்தேன்” என அவர் காவல்துறையினரிடம் கூறியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
</p><p> 
இம்ரான் தன் மகள்களின் கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு, கத்தியால் கழுத்தை அறுத்துத் தற்கொலைக்கு முயன்றதாக காவல்துறை தெரிவித்துள்ளது.</p><p> </p><p>

இது தொடர்பாக கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் பெங்களூரு நாகவாரா பகுதியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் , மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-11T12:24:10+00:00</updated>
        </entry>
    </feed>
