<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-08-30T14:21:15+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்க பொருட்களை புறக்கணிக்கும் கனடா இளைஞர்கள் ; ட்ரம்பின் வரியால் வந்த வினை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/canadian-youths-boycott-american-products-1788091318"></link>
            <id>https://canadamirror.com/article/canadian-youths-boycott-american-products-1788091318</id>
            <summary type="text">டிரம்ப்பின் வரிவிதிப்பு எதிரொலியாக அமெரிக்க பொருட்களை புறக்கணித்து கனடா இளைஞர்கள் எதிர்ப்பை காட்டி வருகின்றனர்.

கனடாவுக்கு எதிராக அமெரிக்க ஜனாதிபதி...</summary>
            <content type="html"><![CDATA[<p>டிரம்ப்பின் வரிவிதிப்பு எதிரொலியாக அமெரிக்க பொருட்களை புறக்கணித்து கனடா இளைஞர்கள் எதிர்ப்பை காட்டி வருகின்றனர்.
</p><p>
கனடாவுக்கு எதிராக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் கடுமையான வரிவிதிப்பை அறிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fdfb473c-307e-468b-8faa-ab075c73cf28/26-6a941bb812682.webp' /></p><p> </p><p>இதன்படி, கனடாவின் 2 ஆயிரம் கோடி அமெரிக்க டாலர் மதிப்பிலான சரக்குகளுக்கு 50 சதவீத வரி விதிக்கப்பட்டது.</p><p>&nbsp;இந்த இறக்குமதி வரி விதிப்புக்கு கனடா பிரதமர் மார்க் கர்னியின் அரசு கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. பதிலுக்கு கனடாவும், 15 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை அமெரிக்க பொருட்களுக்கு வரி விதித்து அதிரடி காட்டியது.
</p><p>
இந்த இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தக மோதல் அதிகரித்து காணப்படும் சூழலில், கனடா இளைஞர்கள் தங்களுடைய தேசப்பற்றை வெளிப்படுத்தும் வகையில், நடந்து கொள்கின்றனர்.


</p><p>
அவர்கள் அமெரிக்க தயாரிப்பு பொருட்களை நிராகரித்து வருகின்றனர். இதன்படி, அமெரிக்காவின் ஒயின் உள்ளிட்ட மதுபானங்கள் பல்வேறு மாகாணங்களில் உள்ள குடோன்களில் இருந்து நீக்கப்படுகின்றன.</p><p>

கனடாவில் வாடிக்கையாளர்களின் போக்கிலும் பெரும் மாற்றம் காணப்படுகிறது. இதுபற்றி மான்ட்ரியல் சூப்பர்மார்க்கெட் மேலாளரான பீட்டர் கியானோபோலிஸ் கூறும்போது, பொருட்கள் எங்கிருந்து வருகின்றன என வாடிக்கையாளர்கள் கேட்கின்றனர். </p><p>இந்த மனப்போக்கு அவர்களிடம் அதிகரித்து உள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-30T14:04:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[தாய் - தகப்பன் பாதுகாப்பில் இருந்த 5 வயது சிறுவனுக்கு நேர்ந்த கதி..! தமிழர் பகுதியை அதிர வைத்த நீதிமன்ற தீர்ப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/youth-sexually-assaulted-5-year-old-boy-1788098200"></link>
            <id>https://tamilwin.com/article/youth-sexually-assaulted-5-year-old-boy-1788098200</id>
            <summary type="text">யாழ்ப்பாணத்தில் 5 வயது சிறுவனை தவறான நடத்தைக்கு உட்படுத்திய குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட இளைஞருக்கு எதிராக நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 
...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணத்தில் 5 வயது சிறுவனை தவறான நடத்தைக்கு உட்படுத்திய குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட இளைஞருக்கு எதிராக நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.</p><p> 

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், </p><p>

பெற்றோர் பாதுகாப்பில் இருந்த 5 வயது சிறுவனை, இளைஞர் ஒருவர் தவறான நடத்தைக்கு உட்படுத்தியுள்ளார்.
</p><p>
இதனைத் தொடர்ந்து, குறித்த இளைஞர் கைது செய்யப்பட்ட நிலையில், அவருக்கு 19 வருட சிறைத்தண்டனை விதித்து , யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி பி.எஸ். சூசைதாசன் தீர்ப்பளித்துள்ளார்.
</p><h2>
19 வருட சிறைத்தண்டனை</h2><p>
இந்த சம்பவம் தொடர்பான வழக்கு கடந்த வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே மேற்கண்டவாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ab8264e4-b3b5-4afc-acf8-9e94989ced88/26-6a9437f95db38.webp' /></p><p> </p><p>

இதற்கமைய, பெற்றோரின் பாதுகாப்பில் இருந்த சிறுவனை தவறாக வழி நடத்திய குற்றத்திற்காக 7 வருட சிறைத்தண்டனையும், 25 ஆயிரம் ரூபாய் தண்டப்பணமும் விதிக்கப்பட்டுள்ளது.
</p><p>
மேலும், குறித்த சிறுவனை தவறான நடத்தைக்கு உட்படுத்திய குற்றத்திற்காக 12 வருட சிறைத்தண்டனையும், 25 ஆயிரம் தண்டப்பணமும் விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. </p><p>

இந்த சம்பவத்தினால் பாதிக்கப்பட்ட
சிறுவனுக்கு 05 இலட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்ற நிபந்தனையும், தவறும் பட்சத்தில் 3 வருட சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என்ற நிபந்தனையும் தீர்ப்பில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><p></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-30T14:02:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[காகித தொழிற்சாலையில் தீ விபத்து ; தீவிரமாகும் விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/fire-breaks-out-at-paper-factory-1788094271"></link>
            <id>https://jvpnews.com/article/fire-breaks-out-at-paper-factory-1788094271</id>
            <summary type="text">எம்பிலிபிட்டிய காகித தொழிற்சாலையில் கழிவுப் பொருட்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்த களஞ்சியசாலை ஒன்றில் இன்று ஞாயிற்றுக்கிழமை (30) பிற்பகல் 3.20 மணியளவில...</summary>
            <content type="html"><![CDATA[<p>எம்பிலிபிட்டிய காகித தொழிற்சாலையில் கழிவுப் பொருட்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்த களஞ்சியசாலை ஒன்றில் இன்று ஞாயிற்றுக்கிழமை (30) பிற்பகல் 3.20 மணியளவில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.</p><p>


தீ பரவுவதைத் தடுப்பதற்காகக் காகித தொழிற்சாலையின் தீயணைப்புப் பிரிவு, இராணுவத்தினர், பொலிஸார், எம்பிலிபிட்டிய நகர சபை மற்றும் செவனகல சர்க்கரை ஆலையின் தீயணைப்புப் பிரிவு ஆகியவை இணைந்து தீவிர முயற்சியில் ஈடுபட்டு தீ தற்போது முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9beeab37-faec-4b8c-96f5-7a1d2c32491f/26-6a9427412dcd6.webp' /></p><h2>மேலதிக விசாரணை</h2><p>
</p><p>
காகித தொழிற்சாலைக்குக் கொண்டு வரப்பட்ட கழிவுப் பொருட்கள் சேமிக்கப்பட்டிருந்த பகுதியிலேயே இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதுடன், விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.
</p><p>
மேலும், இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-08-30T14:00:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Bavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வடக்கின் தொழில்துறை வளர்ச்சிக்கு புதிய அத்தியாயம் - பரந்தன் இரசாயனத் தொழிற்சாலை மீள்நிர்மாணப் பணிகள் தீவிரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/industrial-renaissance-of-the-north-1788097032"></link>
            <id>https://tamilwin.com/article/industrial-renaissance-of-the-north-1788097032</id>
            <summary type="text">பல தசாப்தங்களாக செயலிழந்திருந்த பரந்தன் இரசாயனத் தொழிற்சாலையை மீண்டும் நவீன தொழிற்துறை மையமாக உருவாக்கும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும...</summary>
            <content type="html"><![CDATA[<p>பல தசாப்தங்களாக செயலிழந்திருந்த பரந்தன் இரசாயனத் தொழிற்சாலையை மீண்டும் நவீன தொழிற்துறை மையமாக உருவாக்கும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், இது வடக்கின் தொழில்துறை மறுமலர்ச்சிக்கான முக்கிய ஆரம்பமாக அமையும் எனவும் கடற்றொழில், அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
</p><p>
பரந்தன் இரசாயனத் தொழிற்சாலைக்கு நேற்று நேரில் விஜயம் மேற்கொண்ட அமைச்சர், அங்கு இடம்பெற்று வரும் முதற்கட்ட கட்டுமான மற்றும் உட்கட்டமைப்பு பணிகளை பார்வையிட்டதுடன், அதிகாரிகளுடன் திட்டத்தின் முன்னேற்றம் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பிலும் கலந்துரையாடினார்.</p><h2>பரந்தன் இரசாயனத் தொழிற்சாலை</h2><p> 

இதன்போது, கிளிநொச்சி மாவட்ட செயலாளர் எஸ். முரளிதரன் மற்றும் பரந்தன் இரசாயனத் தொழிற்சாலையின் தலைவர் சதானந்தன் நேசராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.
</p><p>
இதன்போது கருத்து தெரிவித்த அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்,

“பல ஆண்டுகளாக செயலிழந்திருந்த பரந்தன் இரசாயனத் தொழிற்சாலை இன்று மீண்டும் உயிர்பெற்று வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7d50d233-3291-417f-9266-bab1bee2072b/26-6a94355bf2cab.webp' /></p><p> </p><p>இது ஒரு தொழிற்சாலையை மீண்டும் கட்டியெழுப்பும் திட்டம் மாத்திரமல்ல. வடக்கின் தொழில்துறை வளங்களை மீண்டும் மக்களின் பொருளாதாரத்துடன் இணைக்கும் ஒரு முக்கிய முயற்சியாகும்.”

“இந்தத் திட்டத்திற்கான அடிக்கல் கடந்த ஜனவரி 21ஆம் திகதி நாட்டப்பட்டது. </p><p>தற்போது சுமார் ரூ.263 மில்லியன் பெறுமதியான முதற்கட்ட உட்கட்டமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

முழுமையான திட்டத்தை விரைவில் நிறைவு செய்து உற்பத்தியை ஆரம்பிப்பதே எமது நோக்கமாகும்.</p><p>

“நாட்டுக்குத் தேவையான பல அத்தியாவசிய இரசாயனப் பொருட்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டிய நிலை காணப்படுகிறது.</p><h2>நேரடி வேலைவாய்ப்புகள்</h2><p>

பரந்தன் இரசாயனத் தொழிற்சாலை மீண்டும் முழுமையான உற்பத்தி நடவடிக்கைகளில் ஈடுபடும் போது, காஸ்டிக் சோடா, திரவ குளோரின் உள்ளிட்ட முக்கிய இரசாயனப் பொருட்களை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்ய முடியும். </p><p>இதன் மூலம் இறக்குமதி சார்பைக் குறைத்து நாட்டின் அந்நியச் செலாவணியை சேமிக்க முடியும்.

“குறிப்பாக குடிநீர் சுத்திகரிப்பு உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளுக்குத் தேவையான இரசாயனப் பொருட்களை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்வது நாட்டின் பொருளாதார மற்றும் தேசிய பாதுகாப்பு நோக்கிலும் முக்கியமானதாகும்.
</p><p>
“இந்தத் திட்டத்தின் மற்றுமொரு முக்கியமான நோக்கம் வடக்கு இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்குவதாகும். தொழிற்சாலை நிர்மாணப் பணிகளிலும், எதிர்கால உற்பத்தி நடவடிக்கைகளிலும் பல்வேறு துறைகளில் நேரடி வேலைவாய்ப்புகள் உருவாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/92557f7e-0f0a-4ae8-975a-234abcc04aad/26-6a94355d1869f.webp' /></p><p>
</p><p>
குறிப்பாக கிளிநொச்சி மற்றும் வடக்கு மாகாண இளைஞர்கள் தமது பிரதேசத்திலேயே தொழில்நுட்ப மற்றும் தொழில்முறை திறன்களைப் பயன்படுத்தி முன்னேறுவதற்கான வாய்ப்புகளை நாம் உருவாக்க வேண்டும்.</p><p>

“வடக்கின் வளங்கள் வடக்கின் மக்களின் பொருளாதார வளர்ச்சிக்குப் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு. கடந்த காலங்களில் புறக்கணிக்கப்பட்ட தொழிற்துறை வளங்களை மீண்டும் உயிர்ப்பித்து, உற்பத்தி சார்ந்த பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும்.
</p><p>
“பரந்தன் மீண்டும் இயங்கும் போது, அது ஒரு தொழிற்சாலையின் வெற்றி மாத்திரமாக இருக்காது.
</p><p>
கிளிநொச்சியின் பொருளாதார வளர்ச்சிக்கும், வடக்கின் தொழில்துறை முன்னேற்றத்திற்கும், நாட்டின் உள்நாட்டு உற்பத்திக்கும் அது ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும்.

மக்களின் வளத்தைக் கொண்டு மக்களின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதே எமது இலக்கு” என அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ae6e9ea2-b1f3-42e5-8b75-275590032593/26-6a94355dec551.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b557c2f4-8f42-4339-ae28-088298257d66/26-6a94355ece997.webp' /></p>]]></content>
            <updated>2026-08-30T13:53:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் அதிரடி கைதான அரசியல்வாதி ; அரச அதிகாரியின் வீட்டில் நடந்த சம்பவம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/politician-arrested-in-jaffna-1788084928"></link>
            <id>https://jvpnews.com/article/politician-arrested-in-jaffna-1788084928</id>
            <summary type="text">நெல்லியடிப் பகுதியில் ஓய்வுபெற்ற அரச அதிகாரி ஒருவரின் வீட்டின் பாதுகாப்புக் கமராவுக்கு சேதம் விளைவித்த சம்பவம் தொடர்பில் தேசிய மக்கள் சக்தியின் வடமராட...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">நெல்லியடிப் பகுதியில் ஓய்வுபெற்ற அரச அதிகாரி ஒருவரின் வீட்டின் பாதுகாப்புக் கமராவுக்கு சேதம் விளைவித்த சம்பவம் தொடர்பில் தேசிய மக்கள் சக்தியின் வடமராட்சி பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் நெல்லியடி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p style="text-align: justify;">

இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட ஓய்வுபெற்ற அரச அதிகாரி நெல்லிஅடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bfcb63b3-2c17-4a7b-bbb2-af3aa9e345f9/26-6a94089abf82b.webp' /></p><p style="text-align: justify; ">முறைப்பாட்டையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள் இக் கைது நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
கைது செய்யப்பட்டவரை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணைகளை மேற்கொண்ட பின்னர், பொலிஸ் பிணையில் விடுவித்துள்ளதுடன், நாளை திங்கட்கிழமை (31) நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அவருக்குப் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-30T13:49:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இஸ்லாமிய நாடுகளுக்கு மொஜ்தபா கமேனி விடுத்துள்ள அழைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/mojtaba-khamenei-calls-on-islamic-nations-1788097624"></link>
            <id>https://canadamirror.com/article/mojtaba-khamenei-calls-on-islamic-nations-1788097624</id>
            <summary type="text">அமெரிக்கா, இஸ்ரேலுக்கு எதிராக இஸ்லாமிய நாடுகள் ஒன்றிணைய வேண்டும் என ஈரான் தலைமை மதகுரு மோஜ்தபா கமேனி அழைப்பு விடுத்துள்ளார்.

ஈரான் மீது அமெரிக்காவு...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்கா, இஸ்ரேலுக்கு எதிராக இஸ்லாமிய நாடுகள் ஒன்றிணைய வேண்டும் என ஈரான் தலைமை மதகுரு மோஜ்தபா கமேனி அழைப்பு விடுத்துள்ளார்.
</p><p>
ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்துதாக்குதல் நடத்தினர். இதனைத் தொடர்ந்து, ஈரானும் பதில் தாக்குதல் நடத்தியது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b404c9b1-23c8-4a25-94ad-c5aa69ff5303/26-6a943459dc8bf.webp' /></p><p> </p><p>மேலும், அமெரிக்காவுக்கு எதிராக சௌதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், ஜோர்டான், குவைத், கத்தார், பஹ்ரைன் ஆகிய நாடுகளில் உள்ள அமெரிக்காவின் ராணுவத் தளங்கள் மீதும் ஈரான் தாக்குதல் நடத்தியது.</p><p>

இதனிடையே, ஹோர்முஸ் நீரிணையையும் ஈரான் மூடியதால், உலகளவில் கச்சா எண்ணெய் வர்த்தகம் பாதிக்கப்பட்டது. </p><p>இதனையடுத்து, ஈரான் - அமெரிக்கா இடையிலான போரை நிறுத்திக் கொள்ளுமாறு பல்வேறு நாடுகளும் வலியுறுத்தி வருகின்றன.
</p><p>
இந்த நிலையில், அமெரிக்கா - இஸ்ரேலுக்கு எதிராக இஸ்லாமிய நாடுகள் ஒன்றிணைய வேண்டும் என ஈரான் தலைமை மதகுரு மோஜ்தபா அழைப்பு விடுத்துள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-30T13:47:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய வேண்டாம் என வாக்களித்த நாடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/iceland-votes-to-stay-out-of-european-union-1788097237"></link>
            <id>https://news.lankasri.com/article/iceland-votes-to-stay-out-of-european-union-1788097237</id>
            <summary type="text">Iceland votes to stay out of European Union: ஐஸ்லாந்து மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய வேண்டாம் என்று வாக்களித்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தில் ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>Iceland votes to stay out of European Union: ஐஸ்லாந்து மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய வேண்டாம் என்று வாக்களித்துள்ளது.</p><p>

ஐரோப்பிய ஒன்றியத்தில் மீண்டும் இணைவதற்கான பேச்சுவார்த்தைகளை தொடங்குவதற்கு எதிராக ஐஸ்லாந்து வாக்களித்துள்ளது.&nbsp;</p><h2>ஐஸ்லாந்து&nbsp;</h2><p>

தீவு நாடான ஐஸ்லாந்து 2009-ஆம் ஆண்டில் நிதி நெருக்கடியைத் தொடர்ந்து, ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய முதன்முதலில் விண்ணப்பித்தது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4732279f-6f6a-44b2-85e0-b95b37918178/26-6a9434362b394.webp' /></p><p></p><p>
ஆனால், ஐரோப்பிய ஒன்றியத்தின் கொள்கைகளை எதிர்க்கும் அரசு 2013-யில் ஆட்சிக்கு வந்த பிறகு பேச்சுவார்த்தைகள் நிறுத்தி வைக்கப்பட்டன. </p><p>

27 நாடுகள் கொண்ட பிரஸ்ஸல்ஸ் அமைப்பில் இணைய முன்மொழியப்பட்டது. ஒரு செல்வந்த உறுப்பு நாட்டினை வரவேற்பதில் ஐரோப்பிய ஒன்றியம் மிகுந்த ஆர்வம் காட்டியது. </p><p>

ஐஸ்லாந்தின் வளமான மீன்பிடிப் பகுதிகளில் அனுமதி பெறுவது உள்ளிட்ட சிக்கலான விவகாரங்களில் கூட, அந்நாடு இணைவதை எளிதாக்க விட்டுக்கொடுத்து செயல்பட தயாராக இருந்தது.</p><h2> 

இணைய வேண்டாம் </h2><p>இந்த நிலையில், ஐஸ்லாந்து தலைநகர் Reykjavik-யில் உள்ள தற்போதைய நிர்வாகம், வர்த்தகப் போர்கள் மற்றும் ஆர்க்டிக் பிராந்தியத்திலான போட்டி ஆகியவற்றில் இருந்து நாட்டை பாதுகாக்கும் 'now or never' வகையிலான முக்கியமான தருணமான வாக்கெடுப்பை முன்னிறுத்தியது.
</p><p>
அப்போது ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய வேண்டாம் என்று ஐஸ்லாந்து வாக்களித்துள்ளது. மீண்டும் இணைவதற்கான பேச்சுவார்த்தைகளை தொடங்குவதற்கு எதிராக இந்த வாக்களிப்பு நடந்துள்ளது.</p><p>

ஐஸ்லாந்தின் சுமார் 4 லட்சம் மக்களில் 52.8 சதவீதம் பேர் இணைய வேண்டாம் என்ற நிலைப்பாட்டை எடுத்துள்ளனர். 

இது ஐரோப்பிய ஒன்றியத்தின் (பிரஸ்ஸல்ஸ்) விரிவாக்கத் திட்டங்களுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
</p><p> 
தற்போதைய பிரதமரின் பதவிக்காலம் முடிவடையும் 2028-ஆம் ஆண்டு வரை, ஐஸ்லாந்து ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகியே இருக்கும் என்று கூறப்படுகிறது.</p><p>

ஏற்கனவே, ஐரோப்பிய பொருளாதாரப் பகுதி மற்றும் தடையற்ற நடமாட்டத்திற்கான ஷெங்கன் மண்டலம் ஆகியவற்றில் ஐஸ்லாந்து உறுப்பினராக உள்ளது.

எனவே, இந்த இரண்டு நிலைகளும் இந்த வாக்கெடுப்பால் மாற்றமின்றித் தொடரும் என தெரிய வந்துள்ளது.&nbsp; &nbsp; &nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8254608d-d5e8-4178-befe-ff2e4a184d27/26-6a94343721f36.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-30T13:45:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[குருந்தூர் ரஜமகா விகாரை விவகாரம் - விசேட பொலிஸ் பாதுகாப்பு கோரும் நிர்வாகம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/kurundi-rajamaha-viharaya-affair-1788097282"></link>
            <id>https://tamilwin.com/article/kurundi-rajamaha-viharaya-affair-1788097282</id>
            <summary type="text">முல்லைத்தீவு - குருந்தூர் மலையில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க விகாரையிலிருந்து அகற்றப்பட்டிருந்த பொலிஸ் பாதுகாப்பை மீண்டும் பலப்படுத்த நடவடிக்கை எடுக...</summary>
            <content type="html"><![CDATA[<p>முல்லைத்தீவு - குருந்தூர் மலையில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க விகாரையிலிருந்து அகற்றப்பட்டிருந்த பொலிஸ் பாதுகாப்பை மீண்டும் பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. </p><p>

இந்த விடயம் தொடர்பில், புத்தசாசன, சமய மற்றும் பண்பாட்டு விவகாரங்கள் அமைச்சு கலந்துரையாடி முடிவை அறிவித்துள்ளது.</p><h2> 


பொலிஸ் பாதுகாப்பு</h2><p>

கோயிலிலிருந்து அகற்றப்பட்ட பொலிஸ் பாதுகாப்பை மீண்டும் நிலைநிறுத்தக் கோரி, அதன் தலைமைப் பொறுப்பாளர் கல்கமுவே சந்தபோதி தேரர் அமைச்சுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/de9da111-9113-4ae8-b400-c4c8e3adb86d/26-6a9433418c243.webp' /></p><p>

இதன் அடிப்படையில், எடுக்கப்பட்ட நடவடிக்கையின் பிரகாரம் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> 

அத்துடன், இந்த துறைக்குப் பொறுப்பான அமைச்சர் டாக்டர் ஹினிடும சுனில் செனவி, கோயிலுக்குத் தேவையான பொலிஸ் பாதுகாப்பை மீண்டும் நிலைநிறுத்த உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தலைமைப் பொறுப்பாளருக்குத் தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-30T13:43:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தில் இலண்டனில் கவனயீர்ப்பு போராட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/protest-in-london-on-enforced-disappeared-1788096434"></link>
            <id>https://ibctamil.com/article/protest-in-london-on-enforced-disappeared-1788096434</id>
            <summary type="text">&amp;nbsp; சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான இன்று(30) இலங்கையில் இடம்பெற்ற இன
அழிப்பு போரின் போது வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான இன்று(30) இலங்கையில் இடம்பெற்ற இன
அழிப்பு போரின் போது வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி கோரி
இலண்டனில் அமைந்துள்ள இலங்கை தூதரகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று
மேற்கொள்ளப்பட்டுள்ளது
</p><p>
வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட எம் தமிழ் உறவுகளை தேடி எனும் தொனிப்பொருளுடன்
சர்வதேச நீதியை வலியுறுத்தி இந்த மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது</p><h2>பலநூற்றுக்கணக்கான தமிழ் மக்கள்</h2><p>&nbsp;தமிழீழ சுயநிர்ணய அமைப்பு ஏற்பாடு செய்த குறித்த போராட்டத்தில்
புலம்பெயர்ந்து வாழும் பலநூற்றுக்கணக்கான தமிழ் மக்கள், உணர்வாளர்கள்
கலந்துகொண்டனர்&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8f95a9a7-0e0d-475e-bda5-6b606f35d0e1/26-6a943235b686e.webp' /></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-30T13:38:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாள வெள்ளத்தில் 5 பேரின் உயிரைக் காப்பாற்றிய தேநீர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/tea-saves-five-lives-in-nepal-floods-1788096954"></link>
            <id>https://jvpnews.com/article/tea-saves-five-lives-in-nepal-floods-1788096954</id>
            <summary type="text">நேபாளத்தில்&amp;nbsp; தேநீர் இடைவேளை சென்றதால் பெரு வெள்ளத்திலிருந்து 5 பேர் உயிர் தப்பினர்.
&amp;nbsp;திபெத்தின் வெண்டே நதியில் உருவான பெருவெள்ளம், நேபாளத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">நேபாளத்தில்&nbsp; தேநீர் இடைவேளை சென்றதால் பெரு வெள்ளத்திலிருந்து 5 பேர் உயிர் தப்பினர்.
</p><p style="text-align: justify;">&nbsp;திபெத்தின் வெண்டே நதியில் உருவான பெருவெள்ளம், நேபாளத்தில் உள்ள போடே கோஷி நதி வழியாக மத்திய மாவட்டங்களுக்குள் புகுந்து பேரழிவை விளைவித்தது.</p><p style="text-align: justify;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6c7d4358-4d62-40f3-936d-8869378191b6/26-6a9431bc1632c.webp' /></p><h2 style="text-align: justify;">தேநீர் இடைவேளை</h2><p style="text-align: justify;">இருப்பினும், ஒரு சிறு தேநீர் இடைவேளையால் இந்தப் பெரு வெள்ளத்தில் சிக்காமல் 5 பேர் உயிர் தப்பியுள்ளனர்.</p><p style="text-align: justify;">
சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரை சேர்ந்த 50 முதல் 60 வயதுக்குட்பட்ட நாராயண் சென், தினேஷ் ஓஜா, பிரேம் சிங் ஜகத், யதேந்திர பிரகாஷ், தினேஷ் சிங் தாக்கூர் ஆகியோர், நேபாளத்துக்கு வாடகை வாகனத்தில் சுற்றுலா சென்றனர்.
</p><p style="text-align: justify; ">
நேபாளத்துக்கு சுற்றுலா சென்ற 5-வது நாளில்தாடிங் என்ற மாவட்டத்தில் காலை 10 மணியளவில் ஒரு விடுதியில் தேநீர் அருந்துவதற்காக அவர்கள் வாகனத்தை நிறுத்தினர்.</p><p style="text-align: justify; "></p><p> </p><p style="text-align: justify;">இந்த நிலையில்தான், நேபாளத்தில் பெரு வெள்ளம் ஏற்பட்டு, அந்நாட்டையே உருக்குலைத்தது. விடுதிக்குள் தேநீர் அருந்திக் கொண்டிருந்தபோது, அப்பகுதி மக்கள் அலறிக்கொண்டு ஓடுவதையும் இவர்கள் பார்த்துள்ளனர்.</p><p style="text-align: justify;">

அதிருஷ்டவசமாக அவர்கள் 5 பேரும் தேநீர் இடைவெளி எடுத்துக் கொண்டதால் உயிர் தப்பியதாகக் கூறினர். 5 - 10 நிமிடங்கள் முன்சென்றிருந்தாலோ விரைவாகக் கிளம்பியிருந்தாலோ அவர்களும் வெள்ளத்தில் சிக்கியிருக்கக் கூடும்.


</p><p style="text-align: justify;">அவர்கள் 5 பேரும் இரு நாள்களாக அவர்கள் சென்ற வாகனத்திலேயே உறங்கியும், அந்த இரு நாள்களில் வெள்ளத்தின் கோர தாண்டவத்தையும் மேலிருந்து பார்த்ததாகவும் தெரிவித்தனர்.&nbsp;</p><p style="text-align: justify;"></p>]]></content>
            <updated>2026-08-30T13:36:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[நடிகை சைத்ரா அச்சாரின் ரீசெண்ட் புகைப்படங்கள்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/chaithra-j-achar-recent-black-dress-photoshoot-1788064048"></link>
            <id>https://viduppu.com/article/chaithra-j-achar-recent-black-dress-photoshoot-1788064048</id>
            <summary type="text">சைத்ரா ஜே அச்சார்மஹிரா, ஆ த்ருஷ்யா, கில்கி, தோபி, பிளிங்க் போன்ற கன்னட மொழிப்படங்களில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை சைத்ரா ஜே அச்சார். கடந்த ஆண்டு வ...</summary>
            <content type="html"><![CDATA[<h2>சைத்ரா ஜே அச்சார்</h2><p>மஹிரா, ஆ த்ருஷ்யா, கில்கி, தோபி, பிளிங்க் போன்ற கன்னட மொழிப்படங்களில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை சைத்ரா ஜே அச்சார். கடந்த ஆண்டு வெளியான 3BHK என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி பலரது கவனத்தையும் ஈர்த்தார் சைத்ரா.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d802f6d8-48a3-44d7-8fe2-31391b429525/26-6a93b13d40ac0.webp' /></p><p>
</p><p>
இதனையடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியான மை லார்ட் படத்தில் சுசிலா என்ற ரோலில் நடித்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றார். நடிப்பை தாண்டி பாடகியாகவும் விளங்கி வரும் சைத்ரா, பல பாடல்களை பாடியிருக்கிறார்.
</p><p>
மீசையமுறுக்கு படத்தின் பப்பாளி பழமே என்ற பாடலுக்கு ஹிப் ஆப் ஆதியுடன் ஆட்டம் போட்டார். தற்போது, கருப்பு நிற கிளாமர் ஆடையணிந்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-08-30T13:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[முல்லைத்தீவு குருந்தூர் ரஜமஹா விகாரைக்கு மீண்டும் பொலிஸ் பாதுகாப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/police-security-restored-at-kurundoor-vihara-1788096142"></link>
            <id>https://jvpnews.com/article/police-security-restored-at-kurundoor-vihara-1788096142</id>
            <summary type="text">முல்லைத்தீவு குருந்தூர் ரஜமஹா விகாரை வளாகத்திலிருந்து அகற்றப்பட்டிருந்த பொலிஸ் பாதுகாப்பை மீண்டும் வழங்குவதற்குப் புத்தசாசன, சமய மற்றும் கலாசார விவகார...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">முல்லைத்தீவு குருந்தூர் ரஜமஹா விகாரை வளாகத்திலிருந்து அகற்றப்பட்டிருந்த பொலிஸ் பாதுகாப்பை மீண்டும் வழங்குவதற்குப் புத்தசாசன, சமய மற்றும் கலாசார விவகார அமைச்சு தீர்மானித்துள்ளது. </p><p style="text-align: justify; ">

விகாரையில் அகற்றப்பட்ட பொலிஸ் பாதுகாப்பை மீண்டும் வழங்குமாறு கோரி, விகாராதிபதி கல்கமுவே சந்தபோதி தேரரினால் அமைச்சுக்கு அனுப்பப்பட்ட கடிதத்திற்குப் பதிலளிக்கும் வகையிலேயே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/629c8904-38f8-4c9a-8db9-62718c59a8b7/26-6a942e8f7e6f0.webp' /></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

இந்தக் கோரிக்கைக்குப் பதிலளிக்கும் வகையில், விகாரைக்குத் தேவையான பொலிஸ் பாதுகாப்பை மீண்டும் வழங்குவதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் எனப் விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனவி, விகாராதிபதி தேரருக்கு அறிவித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.</p>]]></content>
            <updated>2026-08-30T13:22:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஒரு விமானத்தில் இலங்கைக்கு வந்து சேர்ந்த 200 ஜப்பானிய சுற்றுலா பயணிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/200-japanese-tourists-depart-for-sri-lanka-1788093880"></link>
            <id>https://ibctamil.com/article/200-japanese-tourists-depart-for-sri-lanka-1788093880</id>
            <summary type="text">200 ஜப்பானிய சுற்றுலாப் பயணிகள் அடங்கிய குழு ஒன்று, சிறிலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் ஒரே விமானத்தில் இன்று இலங்கைக்குப் புறப்பட்டது. இது இலங்கைக்கும்...</summary>
            <content type="html"><![CDATA[<p>200 ஜப்பானிய சுற்றுலாப் பயணிகள் அடங்கிய குழு ஒன்று, சிறிலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் ஒரே விமானத்தில் இன்று இலங்கைக்குப் புறப்பட்டது. இது இலங்கைக்கும் ஜப்பானுக்கும் இடையிலான சுற்றுலா உறவுகளுக்கு ஒரு குறிப்பிடத்தக்க ஊக்கத்தை அளிக்கிறது.</p><p>

லிட்டில் ஜப்பான் குழுமத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்தக் குழு, நரிட்டா சர்வதேச விமான நிலையத்திலிருந்து சிறிலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் UL455 விமானத்தில் இலங்கைக்குப் பயணம் செய்தது.</p><h2>சிகிரியா எனும் பண்டைய நகரம்&nbsp;</h2><p>&nbsp;ஜப்பானுக்கான இலங்கைத் தூதர், பேராசிரியர் பிவித்துரு ஜனக் குமாரசிங்க, வர்த்தக முதல் செயலாளர் சந்துன் சமீராவுடன் இணைந்து, அவர்கள் புறப்படுவதற்கு முன்பு விமான நிலையத்தில் சுற்றுலாப் பயணிகளைச் சந்தித்து வழியனுப்பி வைத்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ba5b48c9-3352-472c-b340-c950cc63e157/26-6a942e3764239.webp' /></p><p>
</p><p>
இலங்கையில் தங்கியிருக்கும் போது, ​​இந்தப் பயணிகள் சிகிரியா எனும் பண்டைய நகரம் உட்பட நாட்டின் பல முக்கிய சுற்றுலாத் தலங்களைச் சுற்றிப் பார்ப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p> மேலும், இந்தக் குழுவினர் இலங்கையின் பாரம்பரிய ஆயுர்வேத சிகிச்சைகள் மற்றும் ஆரோக்கிய சேவைகளையும் அனுபவிப்பார்கள்.

ஜப்பானில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் ஆதரவு மற்றும் உதவியுடன் லிட்டில் ஜப்பான் குழுமத்தால் இந்தப் பயணம் ஏற்பாடு செய்யப்பட்டது.</p><p></p><p>
</p><p>
</p><h2>இலங்கை-ஜப்பான் சுற்றுலா உறவுகளில்&nbsp; ஊக்கமளிக்கும் முன்னேற்றம்</h2><p>விமான நிலையத்தில் குழுவினரிடம் பேசிய தூதர் குமாரசிங்க, சுற்றுலாப் பயணிகளை வரவேற்றதோடு, இலங்கையைத் தங்கள் விடுமுறைத் தலமாகத் தேர்ந்தெடுத்ததற்காக அவர்களுக்கு நன்றி தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/916544cb-a0c8-4cbf-9516-72f0ac0cdc00/26-6a942e3601b1f.webp' /></p><p> </p><p>அவர்களுக்குப் பாதுகாப்பான பயணத்தையும், இனிமையான மற்றும் மறக்க முடியாத தங்குதலையும் அவர் வாழ்த்தினார்.&nbsp;</p><p>இலங்கை-ஜப்பான் சுற்றுலா உறவுகளில் ஒரு ஊக்கமளிக்கும் முன்னேற்றம் என்றும், இலங்கைக்கு ஒன்றாகப் பயணம் செய்யும் ஜப்பானிய சுற்றுலாப் பயணிகளின் மிகப்பெரிய ஒழுங்கமைக்கப்பட்ட குழுக்களில் இதுவும் ஒன்று என்றும் தூதர் கூறினார்.
</p><p>
</p><h2>மறக்க முடியாத இடமாக மேம்படுத்தும் முயற்சி</h2><p>ஜப்பானியப் பயணிகளிடையே அதிகரித்து வரும் ஆர்வமும், இலங்கையின் சுற்றுலாத் துறை மற்றும் பிற பங்குதாரர்களின் தொடர்ச்சியான முயற்சிகளும் இணைந்து, இரு நாடுகளுக்கும் இடையிலான சுற்றுலாப் பரிமாற்றங்களை வலுப்படுத்த உதவும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aa85466c-ba54-4352-88cc-03791ababc99/26-6a942e36b2cac.webp' /></p><p>
</p><p>
இந்தப் பயணம், இலங்கைக்கும் ஜப்பானுக்கும் இடையே வளர்ந்து வரும் மக்கள் தொடர்பைப் பிரதிபலிக்கிறது என்றும், ஜப்பானியப் பயணிகளுக்கு இலங்கையை ஒரு பாதுகாப்பான, கவர்ச்சிகரமான மற்றும் மறக்க முடியாத இடமாக மேம்படுத்தும் முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதில் தனது உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்துவதாகவும் தூதரகம் கூறியது.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-30T13:21:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[வட சைப்ரஸ் கடற்பகுதியில் 270 பேருடன் பயணித்த படகு கவிழ்ந்து விபத்து: ஒருவர் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/boat-carrying-270-people-capsizes-off-northern-1788095712"></link>
            <id>https://tamilwin.com/article/boat-carrying-270-people-capsizes-off-northern-1788095712</id>
            <summary type="text">வட சைப்ரஸ் கடற்பகுதியில் சுமார் 270 பேருடன் பயணித்த படகு ஒன்று கவிழ்ந்து
விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளி...</summary>
            <content type="html"><![CDATA[<p>வட சைப்ரஸ் கடற்பகுதியில் சுமார் 270 பேருடன் பயணித்த படகு ஒன்று கவிழ்ந்து
விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p>

வட சைப்ரஸின் கிரினியா துறைமுகத்திலிருந்து துருக்கியின் தசுசு துறைமுகம்
நோக்கி பயணித்த தனியார் சொகுசு படகு ஒன்றே, துறைமுகத்திலிருந்து புறப்பட்ட
சிறிது நேரத்திலேயே எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கத் தொடங்கியுள்ளது.</p><h2>


படகு கவிழ்ந்து விபத்து</h2><p>
குறிப்பிட்ட படகில் 259 பயணிகளும் 8 பணியாளர்களும் அடங்கலாக மொத்தம் 267 பேர்
பயணித்துள்ளதாக வட சைப்ரஸ் போக்குவரத்து அமைச்சர் எர்ஹான் அரிக்லி
தெரிவித்துள்ளார்.</p><p>

கடலில் கவிழ்ந்த படகின் மீது சிவப்பு நிற உயிர் பாதுகாப்பு அங்கிகளை அணிந்தவாறு பயணிகள் அமர்ந்திருக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cf75a91b-1505-43ed-a2b9-a98c869ee7ed/26-6a942d376d095.webp' /></p><p>
</p><p>
சம்பவ இடத்திற்கு விரைந்த கடலோரப் காவல்படையினரும் மீட்புக் குழுவினரும்
படகிலிருந்தவர்களை மீட்கும் நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

மீட்கப்பட்ட பயணிகள் அனைவரும் சிகிச்சைக்காக கிரினியா துறைமுகத்திற்கு கொண்டு
செல்லப்பட்டு, அங்கிருந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.</p><p>

விபத்துக்கான துல்லியமான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்பதுடன், மீட்புப்
பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-30T13:16:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாராலும் தோற்கடிக்கவே முடியாத 3 ராசியினர்! இவர்களிடம் வம்பு வச்சிக்காதீங்க]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/zodiac-sign-who-are-unbeatable-1788094134"></link>
            <id>https://manithan.com/article/zodiac-sign-who-are-unbeatable-1788094134</id>
            <summary type="text">ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில், ஒருவரின் பிறப்பு ராசியும் நட்சத்திரமும் அவர்களின் வாழ்க்கைப் பயணத்தில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நம்பப்பட...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில், ஒருவரின் பிறப்பு ராசியும் நட்சத்திரமும் அவர்களின் வாழ்க்கைப் பயணத்தில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிறது.
</p><p>
எதிர்கால முன்னேற்றம், பொருளாதார நிலை, தொழில் வாய்ப்புகள், தனித்திறமைகள், உடல் அமைப்பு, மனப்பாங்கு, குணநலன்கள் மற்றும் சமூக ஆளுமை என பல அம்சங்களில் ராசி மற்றும் நட்சத்திரத்தின் தாக்கம் இருப்பதாகக் கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/66936507-8b18-482f-8179-bb6657ba8b0d/26-6a942bee05769.webp' /></p><p>

அந்த வகையில், சில குறிப்பிட்ட ராசிகளில் பிறந்தவர்கள் அபாரமான அறிவாற்றல், தன்னம்பிக்கை, மன உறுதி மற்றும் எந்தச் சவாலையும் எதிர்கொள்ளும் துணிச்சல் கொண்டவர்களாகத் திகழ்வார்கள்.</p><p> இவர்களை&nbsp; தோற்கடிப்பதும், மன உறுதியை உடைப்பதும் மிகவும் கடினம்.அப்படிப்பட்ட அபூர்வமான ஆளுமை, அசைக்க முடியாத மனவலிமை மற்றும் சிறப்பான திறமைகளுடன் பிறந்த ராசியினர் யார் யார் என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.</p><h2>விருச்சிகம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5b58c274-1239-4b6c-a032-2f0527d3bae6/26-6a942beeb2088.webp' /></p><p></p><h2>
</h2><p>விருச்சிக ராசியில் பிறந்தவர்கள் மர்மமான இயல்பு, கவர்ச்சியான ஆளுமை மற்றும் அசாத்திய துணிச்சலுக்கு பெயர் பெற்றவர்கள். </p><p>வாழ்க்கையில் எத்தனை தடைகள் வந்தாலும், அவற்றை தைரியமாக எதிர்கொண்டு சாதிக்கும் மனஉறுதி இவர்களிடம் இருக்கும்.

தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தவும், தவறுகளை தட்டிக்கேட்கவும், எதிர்ப்புகளை எதிர்கொள்ளவும் ஒருபோதும் தயங்கமாட்டார்கள். </p><p>மாற்றத்தை ஏற்றுக்கொண்டு சூழ்நிலைக்கு ஏற்ப தங்களை மாற்றிக்கொள்ளும் திறனும் இவர்களுக்கு உண்டு. அதனால் இவர்களை எளிதில் தோற்கடிப்பது மிகவும் கடினம்.</p><h2>ரிஷபம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4e37b696-2220-4445-a65b-6fdb9b17b5a7/26-6a942bef64f5a.webp' /></p><p>
சுக்கிரனால் ஆளப்படும் ரிஷப ராசியினர் வலிமையான ஆளுமை, தலைமைத்துவ குணம் மற்றும் தன்னம்பிக்கை கொண்டவர்களாக இருப்பார்கள். </p><p>தாங்கள் செல்லும் இடங்களில் தனித்துவமான தாக்கத்தை ஏற்படுத்துவதுடன், மற்றவர்களை ஈர்க்கும் காந்த ஆற்றலும் இவர்களிடம் இருக்கும்.
</p><p>
எத்தனை முறை வாழ்க்கையில் விழுந்தாலும், மீண்டும் அதே நம்பிக்கையுடன் எழுந்து நிற்கும் மனவலிமை இவர்களுடைய மிகப்பெரிய பலமாகும். விடாமுயற்சியுடன் செயல்படுவதால் இவர்களை எளிதில் தோற்கடிக்க முடியாது.
</p><h2>மகரம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/109ebae3-71e7-4308-82d4-5cff778a726b/26-6a942bf01b50b.webp' /></p><p></p><h2>
</h2><p>மகர ராசியில் பிறந்தவர்கள் சிறந்த அறிவாற்றல் மற்றும் நிதானமான சிந்தனை கொண்டவர்கள். எந்த விஷயத்தையும் பல கோணங்களில் ஆராய்ந்து, மற்றவர்கள் கவனிக்காத விஷயங்களையும் கூர்ந்து கவனிக்கும் திறன் இவர்களிடம் இருக்கும்.</p><p>

சிக்கலான சூழ்நிலைகளையும் நம்பிக்கை, திறமை மற்றும் தன்னம்பிக்கையுடன் கையாள்வார்கள். இவர்களின் நிதானமும் விடாமுயற்சியும் எதிரிகளை திணறடிக்கும். </p><p>எவ்வளவு காலம் எடுத்தாலும், முயற்சியை கைவிடாமல் இறுதியில் வெற்றியை தங்களுடையதாக மாற்றிக்கொள்வார்கள்.</p><p><b>இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).</b></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://chat.whatsapp.com/KPaiG8NNYogL3W9EipSjKP" target="_blank">FOLLOW NOW</a></u></b>&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-30T13:12:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepachelvan</name>
            </author>
            <title type="text"><![CDATA[காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான போராட்டத்தை ஒடுக்குகிறதா அரசு?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/is-the-government-suppressing-the-protest-1788094534"></link>
            <id>https://ibctamil.com/article/is-the-government-suppressing-the-protest-1788094534</id>
            <summary type="text">காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் அரசு நிகழ்வொன்றை நடத்தியது. அதே மாவட்ட செயலகத்தின் வாசலுக்கு வெளி...</summary>
            <content type="html"><![CDATA[<p>காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் அரசு நிகழ்வொன்றை நடத்தியது. அதே மாவட்ட செயலகத்தின் வாசலுக்கு வெளியே, தமது பிள்ளைகளையும் உறவுகளையும் தேடிக்கொண்டிருக்கும் தாய்மார்கள் நீதிகேட்டு நிற்கிறார்கள். </p><p>அவர்களைப் காவல்துறையினர் இழுத்துச் சென்று வெளியேற்றுகின்றனர். </p><p>உள்ளே இருந்த நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, வெளியே நடைபெறும் அந்தப் போராட்டத்தைத் தனது கையடக்கத் தொலைபேசியில் பார்த்துக்கொண்டிருக்கும் காட்சி சமூக ஊடகங்களில் பரவுகிறது.
</p><p>
இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டோரின் பிரச்சினையைவிட, இந்தக் காட்சி வேறு எதையும் இவ்வளவு தெளிவாகச் சொல்ல முடியாது.</p><p></p><h2>நீதிக்காக நின்ற தாய்மார்கள்</h2><p>ஒருபுறம் காணாமல் ஆக்கப்பட்டோருக்காக அரசு நிகழ்வு நடத்துகிறது. மறுபுறம் காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்கள் அதே அரச நிறுவனத்தின் முன்பாக நீதிகேட்டு நிற்பதற்கே இடமளிக்கப்படவில்லை. அரசு ஏற்பாடு செய்யும் நிகழ்வுக்குள் அழைக்கப்படுபவர்கள் ஒருவகை பிரதிநிதிகளாக இருக்கின்றனர். </p><p>வெளியேற்றப்படும் தாய்மார்கள் இன்னொரு உண்மையின் பிரதிநிதிகளாக இருக்கின்றனர். அந்த இரண்டுக்கும் இடையிலான இடைவெளியே இலங்கையின் காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினையின் அரசியல் உண்மையாகும்.</p><p>

மட்டக்களப்பு, திருகோணமலை, வவுனியா உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து இடைக்கால நிவாரணமாக இரண்டு இலட்சம் ரூபாய் பெற்றவர்களில் தெரிவுசெய்யப்பட்ட சுமார் 400 பேர் நிகழ்வில் பங்கேற்பதற்காக பஸ்கள் மூலம் அழைத்துவரப்படவிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. </p><p>நிவாரணம் வழங்குவது பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அவசியமான உதவியாக இருக்கலாம். ஆனால் நிவாரணத்தை நீதிக்கு மாற்றாகப் பயன்படுத்த முடியாது. காணாமல் போன ஒருவரின் குடும்பத்துக்கு வழங்கப்படும் பணம், அந்த நபருக்கு என்ன நடந்தது என்ற கேள்விக்குப் பதிலாகாது.</p><h2>தாய்மார்கள் வீதியில் நிற்பது ஏன்?
</h2><p>
இதனால்தான் பல ஆண்டுகளாகத் தாய்மார்கள் வீதியில் நிற்கிறார்கள். அவர்கள் அரசாங்கத்திடம் பணம் கேட்டு நிற்கவில்லை. தங்களது உறவினர்களின் பெயரில் இன்னொரு ஆவணம் கேட்டு நிற்கவில்லை. </p><p>தங்கள் பிள்ளைகள் எவ்வாறு காணாமல் போனார்கள், யாருடைய பொறுப்பில் அவர்கள் காணாமல் போனார்கள், அவர்கள் உயிருடன் உள்ளார்களா, இல்லையா என்பதற்கான உண்மையைத் தேடுகின்றனர். அந்த உண்மைக்குப் பின்னால் பொறுப்புக்கூறல் இருக்க வேண்டும் என்பதையே கோருகின்றனர்.&nbsp;</p><p>இந்தக் கோரிக்கையைப் புரிந்துகொள்ளாமல் காணாமல் ஆக்கப்பட்டோரின் பிரச்சினையை நிவாரணத் திட்டமாகச் சுருக்குவது, பல தசாப்தங்களாக நீடிக்கும் ஒரு அரசியல் மற்றும் மனித உரிமைப் பிரச்சினையை நிர்வாக நடவடிக்கையாகக் குறைத்துவிடுவதாகும்.
</p><p>
யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்துக்கு முன்பாக நடந்த சம்பவம் இதனால்தான் முக்கியம் பெறுகிறது. </p><p>நீதிக்காகக் காத்திருக்கும் குடும்பங்களுக்கும் அரசாங்கத்துக்கும் இடையிலான நம்பிக்கையின் இடைவெளி இன்னமும் நிரம்பவில்லை என்பதை அது வெளிப்படுத்துகிறது. அத்துடன் நீதிக்காகக் காத்திருக்கும் மக்களின் குரலைக் கேட்பதற்குப் பதிலாக, அவர்களின் போராட்டத்தை வெளியிலிருந்து கண்காணிக்கும் அரசியல் அணுகுமுறையும் எதன் வெளிப்பாடாகிறது?</p><h2>கண்டனத்துக்குள்ளான அரசாங்கம்</h2><p>இந்தச் சம்பவத்துக்கு தமிழ்த் தேசிய அரசியல் பிரதிநிதிகள் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளனர். எம்.ஏ. சுமந்திரன், தர்மலிங்கம் சித்தார்த்தன், நடராஜர் காண்டீபன் உள்ளிட்டோர் தாய்மார்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டமையையும், காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்களின் நீண்டகாலக் கோரிக்கைகள் புறக்கணிக்கப்படுவதையும் சுட்டிக்காட்டியுள்ளனர். </p><p>குறிப்பாக, கடந்த கால மீறல்கள் தொடர்பில் உள்ளகப் பொறிமுறைகள் மீது பாதிக்கப்பட்ட மக்களுக்கு நம்பிக்கை இல்லாத நிலையில் சர்வதேச நீதிப் பொறிமுறையின் அவசியம் மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளது.</p><h2>&nbsp;ஆகஸ்ட் 30 ஏன் முக்கியமானது?
</h2><p>
ஆகஸ்ட் 30ஆம் நாள் உருவான வரலாறும் இதே கேள்வியையே முன்னிறுத்துகிறது. வலிந்து காணாமல் ஆக்கப்படுதல் பல நாடுகளில் அரசியல் அடக்குமுறையின் கருவியாகப் பயன்படுத்தப்பட்ட பின்னணியில், ஐக்கிய நாடுகள் பொதுச்சபை 2010 டிசம்பர் 21ஆம் நாள் 65/209 தீர்மானத்தின் மூலம் ஆகஸ்ட் 30ஆம் நாளை வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச நாளாக அறிவித்தது. 2011ஆம் ஆண்டு முதல் இந்த நாள் உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.
</p><p>&nbsp;இந்த நாளின் நோக்கம் காணாமல் போனவர்களை நினைவுகூர்வது மட்டுமல்ல.</p><p> காணாமல் ஆக்கப்படுதல் மீண்டும் நிகழாமல் தடுப்பதும், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு உண்மையை அறியும் உரிமையை உறுதிப்படுத்துவதும், குற்றங்களுக்குப் பொறுப்பானவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதும் இதன் அடிப்படை நோக்கங்களாகும்.
</p><p>
இலங்கையில் இந்த நாளின் முக்கியத்துவம் அதனால் இன்னும் அதிகமாகிறது. யுத்தத்தின் இறுதிக்காலம் உள்ளிட்ட பல்வேறு காலகட்டங்களில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறித்து குடும்பங்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றன. வடக்கு, கிழக்கு மட்டுமன்றி தென்னிலங்கையிலும் காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்கள் உள்ளன. தலைமுறைகள் மாறிவிட்டன. ஆனால் பல குடும்பங்களில் காத்திருப்பு முடியவில்லை.</p><p>இந்த நீண்டகாலக் காத்திருப்புக்கு இலங்கை பல்வேறு நிறுவனங்களை உருவாக்கி பதிலளிக்க முயன்றுள்ளது. காணாமல் போனோர் பற்றிய அலுவலகம் உருவாக்கப்பட்டது. சட்டங்களும் இயற்றப்பட்டன. </p><p>சர்வதேச உடன்படிக்கைகளும் ஏற்றுக்கொள்ளப்பட்டன. ஆனால் ஒரு நிறுவனம் இருப்பது மட்டும் ஒரு குடும்பத்துக்கு நீதி கிடைத்ததற்கான அடையாளமாகாது. விசாரணையின் முடிவு என்ன? உண்மை என்ன? பொறுப்பானவர்கள் யார்? அவர்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? என்பவையே முக்கியமான கேள்விகள்.</p><h2>சர்வதேச விசாரணை ஏன்?
</h2><p>
இந்தக் கேள்விகளுக்கு நீண்டகாலமாகத் தெளிவான பதில் இல்லாததே உள்ளகப் பொறிமுறைகள் மீதான நம்பிக்கையைச் சிதைத்துள்ளது.

அதனால்தான் சர்வதேச விசாரணைக்கான கோரிக்கை தொடர்ந்து எழுகிறது. </p><p>இது இலங்கையைத் தண்டிப்பதற்கான கோரிக்கையாக அல்ல; இலங்கையால் இதுவரை தீர்க்கப்படாத ஒரு பிரச்சினைக்கு சுயாதீனமான விசாரணை தேவை என்பதற்கான கோரிக்கையாகப் பார்க்கப்பட வேண்டும். </p><p>காணாமல் ஆக்கப்பட்டோரின் நிலை, அதற்கான சூழ்நிலைகள், பொறுப்புடையவர்கள், கட்டளைப் பொறுப்பு, ஆதாரங்கள் மற்றும் சாட்சிகளின் பாதுகாப்பு ஆகியவை சுயாதீனமான சர்வதேசப் பொறிமுறையால் ஆராயப்பட வேண்டும்.

ஆகஸ்ட் 30 அன்று யாழ்ப்பாணத்தில் நிகழ்ந்த முரண்பாடு இந்தக் கோரிக்கையை மேலும் வலுப்படுத்துகிறது.</p><p> காணாமல் ஆக்கப்பட்டோருக்காக நிகழ்வு நடத்தும் அரசாங்கமே, அவர்களுக்காக நீதிகேட்டு நிற்கும் தாய்மார்களை வெளியேற்றும் நிலையில் இருக்குமானால், அந்த அரசாங்கத்திடம் மட்டும் நீதியை எதிர்பார்க்க முடியுமா என்ற கேள்வி எழுவது இயல்பானது.</p><p>காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்கள் அரசின் அனுதாபத்தை மாத்திரம் எதிர்பார்க்கவில்லை. அவர்களுக்கு அரசின் அறிக்கைகளும் மாத்திரம் தேவையில்லை. அவர்களுக்கு முடிவு தேவை. உண்மை எங்கே இருக்கிறது என்பதற்கும் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்பதற்கும் பதில் வேண்டும். </p><p>அவர்களுக்கு என்ன நடந்தது என்பதற்கான விசாரணை தேவை. அதற்குப் பொறுப்பானவர்கள் யார் என்பதற்கான நீதியும் தேவை. ஆகஸ்ட் 30 இந்தக் கேள்விகளை மீண்டும் உலகத்தின் முன் கொண்டுவருகிறது.</p><p> யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தின் வாசலுக்கு வெளியே இழுத்துச் செல்லப்பட்ட தாய்மார்கள், இந்தக் கேள்விகள் இன்னும் முடிவுக்கு வரவில்லை என்பதை உலகுக்குக் காட்டியுள்ளனர்.</p><p>

அவர்களின் போராட்டத்தை வெளியேற்றலாம். அவர்களின் குரலைத் தடுக்கலாம். ஆனால் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உண்மையை அதனால் மறைத்துவிட முடியாது. </p><p>இலங்கை அரசு நினைவு நிகழ்வுகளை நடத்துவதைக் காட்டிலும், காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்களின் கேள்விகளுக்கு பதிலளிப்பதே இந்த நாளுக்குச் செய்யக்கூடிய உண்மையான மரியாதையாகும்.</p><p> அந்தப் பதில் உள்நாட்டில் கிடைக்காதவரை, சர்வதேச விசாரணை மூலம் நீதியைத் தேடுவது பாதிக்கப்பட்ட மக்களின் நியாயமான உரிமையாகவே தொடரும்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p><p>
</p>]]></content>
            <updated>2026-08-30T13:11:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாளத்தை உலுக்கிய வெள்ளம் ; சாதுரியத்தால் 1,643 உயிர்களை காப்பாற்றிய ஆசிரியர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/teacher-saves-1-643-lives-amid-nepal-floods-1788095386"></link>
            <id>https://canadamirror.com/article/teacher-saves-1-643-lives-amid-nepal-floods-1788095386</id>
            <summary type="text">நேபாள - திபெத் எல்லையில் லெண்டே கோலா ஆற்றில் பனிப்பாறைகள் உடைந்து விழுந்து பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரை உயிர...</summary>
            <content type="html"><![CDATA[<p>நேபாள - திபெத் எல்லையில் லெண்டே கோலா ஆற்றில் பனிப்பாறைகள் உடைந்து விழுந்து பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 734 ஆக உயர்ந்துள்ளது.

திபெத்தில் 16 பேர் உயிரிழந்துள்ளனர்.</p><p> எல்லையின் இருபுறமும் காணாமல் போன 2000த்திற்கும் மேற்பட்டோரை தேடும் பணியும் 5வது நாளாக தொடர்ந்து வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aae72f71-7957-4542-9a89-7c2dd7717a5a/26-6a942b9bcedb5.webp' /></p><p>

</p><p>இந்நிலையில் வெள்ள நேரத்தில் பதட்டமடையால், நிதானமாக செயல்பட்டு 1,643 குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றிய நேபாள பள்ளியின் தலைமை ஆசிரியர் ஒருவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.
</p><p>
நேபாளத்தின் திரிசூலி பள்ளத்தாக்கில் உள்ள திரிபுவன் திரிசூலி மேல்நிலைப் பள்ளியின் முதல்வர் ராஜேந்திர தவாடிக்கு புதன்கிழமை காலை 9:20 மணிக்கு அவரது நண்பர் ஒருவர் வெள்ளம் தொடர்பான செய்தியை தெரிவித்துள்ளார்.</p><p>


10 நிமிட இடைவெளி
வெள்ளப்பெருக்கு தொடர்பாக அவருக்கு தகவல் கிடைத்தப்போது பள்ளியில் 900 குழந்தைகள் இருந்துள்ளனர். மேலும் 700-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பள்ளிப் பேருந்துகளிலும், நடந்தும் பள்ளிக்கு வந்து கொண்டிருந்தனர்.
</p><p>
தனக்குக் கிடைத்த 10 நிமிட இடைவெளியில், உடனடியாகப் பள்ளியின் அவசர எச்சரிக்கை மணியை ஒலிக்கச் செய்து ஆசிரியர்கள் உடனடியாக வகுப்பறைகளைக் காலி செய்யுமாறு உத்தரவிட்டார்.</p><p>

மேலும் பள்ளிப் பேருந்து ஓட்டுநர்களுக்கு போன் செய்து, “இங்கு வராதீர்கள், பேருந்தை அப்படியே உயரமான பகுதிக்குத் திருப்புங்கள். வரும் வழியில் பாலங்கள் இருந்தால் அதைக் கடக்க வேண்டாம்” என்றும் எச்சரித்துள்ளார்.
</p><p>
பள்ளியில் இருந்த குழந்தைகள் அனைவரும் தப்பி மலைப்பகுதிகளுக்கு சென்றனர். பயத்தால் ஒரு குழந்தைக்கு மட்டும் ஃபிக்ஸ் வந்துள்ளது. </p><p>அக்குழந்தை மட்டும் இருசக்கர வாகனம் மூலம் மலை உச்சிக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.


இறுதியாக வெள்ளம் பள்ளிக் கட்டிடங்களை அடித்துச் சென்றபோது, குழந்தைகள் அனைவரும் பாதுகாப்பாக மலை உச்சியில் இருந்த ஒரு மரத்தின் அடியில் இருந்தனர்.</p><p>3 மாடிகள் கொண்ட வலுவான கான்கிரீட் பள்ளி கட்டடம் ஆற்றிலிருந்து 60 மீட்டர் உயரத்தில், கிராமத்தை கிழக்குக் கரையுடன் இணைக்கும் எஃகுப் பாலத்தின் அதே மட்டத்தில் இருந்துள்ளது.
</p><p>
பேரிடர் காலத்தில் சொந்த உயிரைப் பற்றிக் கவலைப்படாமல், ஆயிரக்கணக்கான குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றிய ராஜேந்திர தவாடிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.</p>]]></content>
            <updated>2026-08-30T13:10:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[எங்கள் நிலங்கள் எங்களுடையதுதானே… அது எப்படி உங்களுடையதாகும்.. 11ஆவது வாரமாகவும் பலாலி மக்களின் போராட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/palaly-people-s-protest-enters-11th-week-1788094353"></link>
            <id>https://tamilwin.com/article/palaly-people-s-protest-enters-11th-week-1788094353</id>
            <summary type="text">வலிகாமம் வடக்கு பலாலி காணி இழந்த மக்கள் இன்று(30) 11ஆவது வாரமாகவும் தமது தொடர் அமைதிவழிப் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

பலாலி பகுதியில் இராணுவப் பயன்...</summary>
            <content type="html"><![CDATA[<p>வலிகாமம் வடக்கு பலாலி காணி இழந்த மக்கள் இன்று(30) 11ஆவது வாரமாகவும் தமது தொடர் அமைதிவழிப் போராட்டத்தை முன்னெடுத்தனர்.
</p><p>
பலாலி பகுதியில் இராணுவப் பயன்பாட்டில் உள்ள தமது பூர்வீகக் காணிகளை மீளப்பெற்று, தமது சொந்த இடங்களில் மீள்குடியேறுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி, காணி உரிமையாளர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட மக்கள் இந்தப் போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.</p><h2>பலாலி மக்களின் போராட்டம்</h2><p>

பலாலி சந்தியை அண்மித்த பகுதியில் இடம்பெற்ற போராட்டத்தில் கலந்துகொண்ட மக்கள், தமது பூர்வீக நிலங்களை நீண்டகாலமாக இழந்து, சொந்த ஊரிலேயே அகதிகளாக வாழ வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக கவலை வெளியிட்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0a4211ac-03b5-4499-956d-4344e3931ee6/26-6a942a5c2e562.webp' /></p><p>

“எங்கள் நிலங்கள் எங்களுடையதுதானே; அதை எப்படி உங்களுடையதாக மாற்ற முடியும்?”, “எங்கள் பூர்வீக நிலங்களை எங்களிடம் ஒப்படை”, “மக்களின் நிலம் மக்களிடம் ஒப்படைக்கப்படும் என்ற வாக்குறுதி எங்கே?”, “வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள்” உள்ளிட்ட கோஷங்களை எழுப்பியவாறு மக்கள் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
</p><p>
மேலும், தேர்தல் காலங்களில் மக்களின் காணிகள் மீள வழங்கப்படும் எனக் கூறி ஆதரவைப் பெற்ற அரசியல்வாதிகள், ஆட்சிக்கு வந்த பின்னர் காணி இழந்த மக்களின் பிரச்சினையை மறந்து செயற்படுவதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றஞ்சாட்டினர்.</p><h2>தொடர் போராட்டம்</h2><p>
</p><p>
பல தசாப்தங்களாக தமது காணிகளை இழந்து வாழ்ந்து வரும் நிலையில், பல்வேறு அரசாங்கங்கள் மாறினாலும் தமது அடிப்படைப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கவில்லை எனவும் அவர்கள் தெரிவித்தனர்.
</p><p>
தமது பூர்வீக நிலங்களை விடுவிப்பது வெறுமனே காணி உரிமை தொடர்பான பிரச்சினை அல்ல என்றும், அது தமது வாழ்வுரிமை, வாழ்வாதாரம் மற்றும் எதிர்கால சந்ததிகளின் உரிமையுடன் தொடர்புடையது என்றும் போராட்டத்தில் கலந்துகொண்ட மக்கள் வலியுறுத்தினர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/199976ff-7026-4b75-a71d-0187834cd340/26-6a942a5d095ae.webp' /></p><p>

அரசாங்கம் மக்களின் காணிகளை விடுவிப்பது தொடர்பில் தெளிவான காலக்கெடுவுடன் கூடிய செயற்றிட்டத்தை முன்வைக்க வேண்டும் எனவும், இராணுவம் உள்ளிட்ட அரச நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் உள்ள பொதுமக்களின் காணிகளை உரிய உரிமையாளர்களிடம் விரைவாகக் கையளிக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
</p><p>
தமது கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு கிடைக்கும் வரை போராட்டத்தை தொடரப் போவதாகவும் காணி இழந்த பலாலி மக்கள் தெரிவித்துள்ளனர்.</p><p>

இந்நிலையில், 11ஆவது வாரமாகவும் இடம்பெற்றுள்ள இந்த தொடர் போராட்டம், பலாலி மக்களின் காணி உரிமைப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு வழங்க வேண்டியதன் அவசியத்தை மீண்டும் அரசாங்கத்தின் கவனத்துக்கு கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-30T13:04:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[உயரும் கடல் அலைகள் ; வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/meteorology-department-issues-warning-1788092904"></link>
            <id>https://jvpnews.com/article/meteorology-department-issues-warning-1788092904</id>
            <summary type="text">புத்தளத்திலிருந்து கொழும்பு, காலி மற்றும் மாத்தறை ஊடாக பொத்துவில் வரையிலான கடற்பகுதிகளில் கடல் அலைகளின் உயரம் அதிகரிக்கும் சாத்தியக்கூறுகள் நிலவுவதாக ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">புத்தளத்திலிருந்து கொழும்பு, காலி மற்றும் மாத்தறை ஊடாக பொத்துவில் வரையிலான கடற்பகுதிகளில் கடல் அலைகளின் உயரம் அதிகரிக்கும் சாத்தியக்கூறுகள் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.</p><p style="text-align: justify; ">
இதற்கமைய, குறித்த கடற்பகுதிகளில் கடல் அலைகள் சுமார் 2.0 முதல் 3.0 மீட்டர் வரை உயரக்கூடும்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/85e9c463-171d-4724-af0d-cbe0ce0afaa6/26-6a9421e97eb34.webp' /></p><h2 style="text-align: justify; ">எச்சரிக்கை</h2><p style="text-align: justify; ">இதன் காரணமாகச் சிலாபத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக மாத்தறை வரையிலான கடலோரப் பகுதிகளில் கடல் அலைகள் கரைக்கு வரக்கூடிய சாத்தியக்கூறுகளும் காணப்படுகின்றன.</p><p style="text-align: justify; ">

எனவே, இக் கடற்பகுதிகளில் மீன்பிடி மற்றும் கடற்பயணங்களில் ஈடுபடும் சமூகத்தினரும், கடலோரப் பகுதிகளில் வாழும் மக்களும் இது குறித்து எச்சரிக்கையுடனும் அவதானத்துடனும் செயற்படுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
</p><p style="text-align: justify; ">

இதேவேளை, கிழக்கு மாகாணம் மற்றும் பொலன்னறுவை, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கு அதிக வெப்பமான வானிலை தொடர்பான எச்சரிக்கை அறிவித்தலும் விடுக்கப்பட்டுள்ளது.
</p><p style="text-align: justify; ">
குறித்த பகுதிகளில் பகல் வேளையில் மனித உடலால் உணரப்படும் வெப்பச் சுட்டெண் கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய மட்டத்தில் காணப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p style="text-align: justify; ">
இந்த எச்சரிக்கை அறிவித்தல்கள் அனைத்தும் நாளை திங்கட்கிழமை (31) ஆம் திகதிக்காகச் செல்லுபடியாகும் வகையில் விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-08-30T13:00:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thevanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ் பேருந்து சாரதிகளுக்கு புதிய எச்சரிக்கை - மீறினால் நடவடிக்கை..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/new-warning-to-jaffna-bus-drivers-1788094360"></link>
            <id>https://tamilwin.com/article/new-warning-to-jaffna-bus-drivers-1788094360</id>
            <summary type="text">&amp;nbsp;வடக்கு மாகாணத்தில் பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை ஏற்றிச் செல்லும்
பேருந்துகள் அனைத்தும் “சிசுசெரிய”சேவையின் கீழ் பதிவு செய்யப்பட்டு, உர...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;வடக்கு மாகாணத்தில் பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை ஏற்றிச் செல்லும்
பேருந்துகள் அனைத்தும் “சிசுசெரிய”சேவையின் கீழ் பதிவு செய்யப்பட்டு, உரிய
அனுமதிகளுடன் மட்டுமே பாடசாலை போக்குவரத்துச் சேவையில் ஈடுபட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p> 

அத்துடன், பதிவு
செய்யப்படாமலும் உரிய தகுதிகளைப் பூர்த்தி செய்யாமலும் இவ்வாறான சேவையில்
ஈடுபடும் பேருந்துகளுக்கு எதிராக முன்னறிவிப்பின்றி சட்ட நடவடிக்கை
கடுமையாக்கப்படும் என வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின்
தலைவர் பொறியியலாளர் சூ.விமலேஸ்வரன் எச்சரிக்கை விடுத்துள்ளார். </p><h2>

சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை</h2><p>
வடக்கு மாகாணத்தில் பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான
போக்குவரத்துச் சேவையில் ஈடுபடும் பேருந்துகள், வீதிப் பயணிகள் போக்குவரத்து
அதிகாரசபையில் முறையாகப் பதிவு செய்யப்படுவது கட்டாயமாகும். </p><p>

எனினும், உரிய அனுமதியோ அல்லது பதிவோ இன்றி, “சிசுசெரிய” சேவையின் கீழ் இடம்பெறாமல் சில
பேருந்துகள் தொடர்ந்தும் பாடசாலை போக்குவரத்துச் சேவையில் ஈடுபட்டு வருவது
கண்டறியப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b59b0c19-a1fd-46b1-a349-6031f76df633/26-6a9427fea36cf.webp' /></p><p>
</p><p>

இத்தகைய பேருந்து உரிமையாளர்கள் மற்றும் சேவை வழங்குநர்களுக்கு கடந்த ஐந்து
மாதங்களாக நேரடியாக எச்சரிக்கைகளும் தேவையான அறிவுறுத்தல்களும்
வழங்கப்பட்டுள்ளன. </p><h2>


தகுதிகளை பெற செய்ய வேண்டியவை..</h2><p>

இருந்தபோதிலும், இதுவரை உரிய பதிவுகளை மேற்கொள்ளாத மற்றும்
நிர்ணயிக்கப்பட்ட தகுதிகளைப் பூர்த்தி செய்யாத தரப்பினர் தொடர்ந்து பாடசாலை
சேவையில் ஈடுபட்டால், அவர்களுக்கு எதிராக அதிகாரசபையால் உடனடியாக சட்ட
நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. </p><p>

எனவே, பாடசாலை மாணவர்களையும் ஆசிரியர்களையும் ஏற்றிச் செல்லும் பேருந்து
சேவைகளை நடத்தும் அனைத்து தரப்பினரும் நடைமுறையில் உள்ள விதிமுறைகளுக்கு
அமைவாக தங்களைப் பதிவு செய்து, தேவையான தகுதிகள் மற்றும் அனுமதிகளைப்
பெற்றுக்கொள்ளுமாறு வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின்
தலைவர் கேட்டுக்கொண்டார்.&nbsp; &nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-30T12:54:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மன்னாரில் இடம்பெற்ற 1999ஆம் ஆண்டு மடு உறவுகள் கால்பந்தாட்ட போட்டி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/commemorative-football-event-1788091574"></link>
            <id>https://ibctamil.com/article/commemorative-football-event-1788091574</id>
            <summary type="text">1999ஆம் ஆண்டு மடுக்கோவிலில் இடம்பெற்ற&amp;nbsp; குண்டுத்தாக்குதலில் உயிரிழந்த உறவுகளை நினைவுகூறும் “&amp;nbsp;1999ஆம் ஆண்டு மடு உறவுகள் கால்பந்தாட்ட போட்டி இன...</summary>
            <content type="html"><![CDATA[<p>1999ஆம் ஆண்டு மடுக்கோவிலில் இடம்பெற்ற&nbsp; குண்டுத்தாக்குதலில் உயிரிழந்த உறவுகளை நினைவுகூறும் “&nbsp;1999ஆம் ஆண்டு மடு உறவுகள் கால்பந்தாட்ட போட்டி இன்று&nbsp;தட்சனாமருதமடு&nbsp;ஐக்கிய விளையாட்டுக் கழக மைதானத்தில் இன்று இடம்பெற்றது.</p><p>இளம் தலைமுறையினரிடையே விளையாட்டுத் திறனை ஊக்குவிக்கும் வகையிலும், கடந்த கால வடுக்களை நினைவுகூறும் வகையிலும், இந்த கால்பந்தாட்டத் தொடர் ஆண்டுதோறும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.</p><p>அந்த வகையில் இவ்வாண்டும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள போட்டியில் பல்வேறு அணிகள் பங்கேற்று தங்களது திறமையை வெளிப்படுத்தினர்.</p><p></p><h2>நினைவேந்தல் கால்பந்தாட்ட நிகழ்வு</h2><p>
</p><p>இந்த போட்டியின் பிரதான விருந்தினர்களாக ஐ.பி.சி தமிழ் ஊடக நிறுவனத்தின் தலைவர் பாஸ்கரன் கந்தையா கலந்துக்கொண்ட நிலையில் கௌரவ விருந்தினர்களும் நிகழ்வில் கலந்து கொண்டு வீரர்களை உற்சாகப்படுத்தியிருந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bad5629a-c173-4700-93d4-d9fe21031a1a/26-6a9427571e5fe.webp' /></p><p>இந்த கால்பந்தாட்டப் போட்டி இன்று (30.08.2026) பிற்பகல் 3.00 மணிக்கு ஆரம்பமாகியது.</p><p>இதன்படி போட்டியில் வெற்றிப்பெற்ற அணிக்கு கேடையங்களும் சிறப்பு பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-30T12:52:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[கல்வி முறையில் பல நெருக்கடிகள்! மீண்டும் சிந்திக்க வேண்டும் - ஜோசப் ஸ்டாலின் சாடல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/josep-starlin-statment-about-education-1788091062"></link>
            <id>https://tamilwin.com/article/josep-starlin-statment-about-education-1788091062</id>
            <summary type="text">தற்போதைய கல்வி முறையில் பல நடைமுறை நெருக்கடிகள் காணப்படுகின்ற நிலையில், பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்காத சீர்திருத்தங்களை கொண்டு வருவதாயின் அது குறித...</summary>
            <content type="html"><![CDATA[<p>தற்போதைய கல்வி முறையில் பல நடைமுறை நெருக்கடிகள் காணப்படுகின்ற நிலையில், பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்காத சீர்திருத்தங்களை கொண்டு வருவதாயின் அது குறித்து மீண்டும் சிந்திக்க வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். </p><p>

அடுத்த ஆண்டு முதல் புதிய கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கத்திடம் இதுவரை முறையான தயார்நிலை இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். </p><p>

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

அடுத்த ஆண்டு முதல் முதலாம் மற்றும் 6 ஆம் தரங்களுக்கு புதிய கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த அரசாங்கம் தற்போது திட்டமிட்டுள்ளது. எனினும், அதற்கான முறையான வேலைத்திட்டம் எதுவும் நடைமுறைப்படுத்தப்படவில்லை.</p><h2>ஆசிரியர்களுக்குப் பயிற்சியளிக்கும் செயற்பாடு</h2><p>
</p><p>
இந்த சீர்திருத்தங்கள் அடுத்த வருடம் கொண்டுவரப்பட்டாலும், 1ஆம் மற்றும் 6ஆம் தரங்களுக்கான சீர்திருத்தங்கள் எப்படியும் அடுத்த வருடம் வரவுள்ளன. 

ஆனால், அதற்கான ஆசிரியர்களுக்குப் பயிற்சியளிக்கும் செயற்பாடு இன்னும் மந்தகதியிலேயே இடம்பெறுகின்றது.</p><p> இந்த சீர்திருத்தங்கள் தெளிவாக கோட்டாபய ராஜபக்ச அரசாங்கம் கொண்டுவந்த சீர்திருத்தங்களின் நீட்சியாகவே உள்ளன. 

நடைமுறைப்படுத்தப்படாமல் கைவிடப்பட்ட சீர்திருத்தங்களின் தொடர்ச்சியாகவே இது காணப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0f201c3c-63b7-4bfa-a51e-a1fb35f79eb0/26-6a942527c869e.webp' /></p><p> </p><p>அதேபோன்று, இந்த கல்வி சீர்திருத்தங்களுக்காக விசேட கொள்கைக் கட்டமைப்பொன்றை உருவாக்குமாறு கடந்த நாட்களில் ஜனாதிபதி தேசிய கல்வி ஆணைக்குழுவிடம் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் தேசிய கல்வி ஆணைக்குழு அதனைத் தயாரித்து முடித்துள்ளதா என்பது எமக்குத் தெரியாது.</p><h2>எந்தவொரு திட்டமும் இல்லை</h2><p> </p><p>அது இன்னும் மக்கள் மத்தியில் வரவுமில்லை, அதுபற்றிப் பேசப்படவுமில்லை. 

எந்தவொரு திட்டமுமின்றி கடந்த அரசாங்கங்கள் கொண்டுவந்த சீர்திருத்தங்களையே இவர்கள் முன்னெடுத்துச் செல்கின்றனர். அதற்கான எவ்வித தயார் நிலையும் இன்னும் தென்படவில்லை.</p><p> இது ஒரு பாரிய நெருக்கடியாக மாறியுள்ளது. 

தற்போதைய கல்வி முறையில் பல நடைமுறை நெருக்கடிகள் காணப்படுகின்ற நிலையில், பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்காத சீர்திருத்தங்களைக் கொண்டுவருவதாயின் அது குறித்து மீண்டும் சிந்திக்க வேண்டும் என்றார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-30T12:46:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[வடக்கு சைப்ரஸில் 270 பயணிகளுடன் சென்ற கப்பல் கவிழ்ந்து விபத்து ; மீட்பு பணிகள் தீவிரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/270-passengers-capsizes-in-northern-cypru-1788093840"></link>
            <id>https://canadamirror.com/article/270-passengers-capsizes-in-northern-cypru-1788093840</id>
            <summary type="text">வடக்கு சைப்ரஸில் 270 பயணிகளுடன் சென்ற கப்பல் கடலுக்கு நடுவே கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக துருக்கிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கைரேனியா கடற்கர...</summary>
            <content type="html"><![CDATA[<p>வடக்கு சைப்ரஸில் 270 பயணிகளுடன் சென்ற கப்பல் கடலுக்கு நடுவே கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக துருக்கிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
</p><p>
கைரேனியா கடற்கரையிலிருந்து துருக்கியின் தாசுசு துறைமுகத்திற்கு புறப்பட்ட சிறிது நேரத்திலேயே சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் கப்பல் கவிழ்ந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/337a053e-af3d-46d7-867f-4da23a79a795/26-6a9425919c965.webp' /></p><p>
</p><p>
கப்பல் கவிழ்ந்த உடனேயே துருக்கிய சைப்ரஸ் கடலோரக் காவல் படகுகள் மீட்புப் பணிக்காக சம்பவ இடத்திற்கு விரைந்தன. மேலும் ஒரு ஹெலிகாப்டரும் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.</p><p>


</p><p>இதில் 159 பயணிகள் மீட்கப்பட்டுள்ளதாகவும், மற்ற 99 பயணிகள் மற்றும் ஊழியர்கள் குறித்து இன்னும் தெரியவில்லை என்று கைரேனியா நகர மேயர் முராத் சென்குல் தெரிவித்துள்ளார்.
</p><p>
இப்பகுதியில் கடந்த சில நாட்களாகவே மோசமான வானிலை நிலவி வருவதால், இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.</p><p> மீட்புப் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன.</p>]]></content>
            <updated>2026-08-30T12:44:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் அனைத்து அரச நிறுவனங்களிலும் வந்துள்ள நடைமுறை! பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/avoid-the-use-of-single-use-plastic-water-bottles-1788090058"></link>
            <id>https://tamilwin.com/article/avoid-the-use-of-single-use-plastic-water-bottles-1788090058</id>
            <summary type="text">ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் தண்ணீர் போத்தல்களின் பயன்பாட்டைத் தவிர்க்குமாறு சுற்றாடல் அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.எதிர்கால சந்ததிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் தண்ணீர் போத்தல்களின் பயன்பாட்டைத் தவிர்க்குமாறு சுற்றாடல் அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.</p><p>எதிர்கால சந்ததியினருக்காக பசுமையான மற்றும் தூய்மையான சூழலை உருவாக்குவதற்காக இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.&nbsp;</p><p>
ஒரு சிறுபொழுது வசதிக்காகப் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் போத்தல்கள், அழியாமல் பல நூறு ஆண்டுகள் சூழலில் நிலைத்திருந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><h2>சூழலுக்கு உகந்த மாற்று வழி</h2><p>இது தொடர்பான அறிவிப்பில் மேலும், குறித்த போத்தல்களுக்கு மாற்றாக, மீண்டும் மீண்டும் பயன்படுத்தக்கூடிய கண்ணாடிப் போத்தல்கள் அல்லது சூழலுக்கு உகந்த மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
</p><p>
இதற்கமைய, அனைத்து அரச நிறுவனங்களிலும் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் தண்ணீர் போத்தல்களின் கொள்வனவு மற்றும் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் விசேட சுற்றுநிருபம், கடந்த மே மாதம் 31 ஆம் திகதி முதல் நாடு முழுவதும் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/55350194-65a8-481d-968b-5a4be35535f5/26-6a94198094e9d.webp' /></p><h2>விசேட திட்டங்கள் நடைமுறை</h2><p>
</p><p>
அத்துடன், திருத்தப்பட்ட சுற்றாடல் சட்டத்தின் ஊடாக, உற்பத்தியாளர்களின் இணக்கப்பாட்டுடன் பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைப்பதற்கான விசேட நாடளாவிய திட்டங்களை நடைமுறைப்படுத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
</p><p>
சட்டதிட்டங்களுக்கும் அப்பால், பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே செல்லும்போது மீண்டும் பயன்படுத்தக்கூடிய தண்ணீர் போத்தலை உடன் எடுத்துச் செல்வது போன்ற சிறிய அன்றாட பழக்கவழக்க மாற்றங்கள் மூலம் பிளாஸ்டிக் மாசுபாட்டைக் குறைக்க முடியும் என்றும் சுற்றாடல் அமைச்சு தெரிவித்துள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-30T12:42:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழ் உறவுகளுக்காக லண்டனில் வெடித்த போராட்டம் - மக்களின் முக்கிய கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/protest-in-london-1788093469"></link>
            <id>https://tamilwin.com/article/protest-in-london-1788093469</id>
            <summary type="text">சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான இன்று(30.08.2026) இலங்கையில் இடம்பெற்ற இன
அழிப்பு போரின் போது வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளுக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான இன்று(30.08.2026) இலங்கையில் இடம்பெற்ற இன
அழிப்பு போரின் போது வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளுக்கு நீதி கோரி தமிழர் பகுதிகளில் போராட்டங்கள் மற்றும் மாநாடு இடம்பெற்றன.</p><p>

இதனைத் தொடர்ந்து, லண்டனில் அமைந்துள்ள இலங்கை தூதரகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
</p><p>
“வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட எம் தமிழ் உறவுகளை தேடி” எனும் தொனிப்பொருளுடன்
சர்வதேச நீதியை வலியுறுத்தி இந்த மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. </p><p>

தமிழீழ சுயநிர்ணய அமைப்பு ஏற்பாடு செய்த குறித்த போராட்டத்தில்
புலம்பெயர்ந்து வாழும் பல நூற்றுக்கணக்கான தமிழ் மக்கள் உணர்வாளர்கள்
கலந்துகொண்டனர்.&nbsp; &nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-30T12:39:42+00:00</updated>
        </entry>
    </feed>
