<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-09-04T08:50:29+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[சற்றுமுன்னர் கைது செய்யப்பட்ட நாமல் ராஜபக்ச..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-appears-before-the-bribery-commission-today-1788489690"></link>
            <id>https://tamilwin.com/article/namal-appears-before-the-bribery-commission-today-1788489690</id>
            <summary type="text">புதிய இணைப்புசற்றுமுன்னர் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகிய நிலையில...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>சற்றுமுன்னர் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகிய நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><h2>முதலாம் இணைப்பு</h2><p>சற்றுமுன்னர் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.</p><p>

இன்று காலை 9 மணிக்கு ஆணைக்குழுவின் முன் முன்னிலையாகுமாறு நாமல் ராஜபக்சவுக்கு எழுத்துப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில் அவர் முன்னிலையாகியுள்ளார்.&nbsp;</p><h2>முதலாம் இணைப்பு</h2><p>நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச இன்று காலை ( 4) இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை ஆணைக்குழுவின் முன் முன்னிலையாவார் என சட்டத்தரணி முதித ஆர். லோகுமுதலி 
தெரிவித்துள்ளார்.
</p><p>
இன்று காலை 9 மணிக்கு ஆணைக்குழுவின் முன் முன்னிலையாகுமாறு ஆணைக்குழுவினால் நாமல் ராஜபக்சவுக்கு எழுத்துப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/gSYHOvwD5kc" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><h2>கோரிக்கைக்கு இணக்கம்</h2><p>
</p><p>
எனவே தனது கட்சிக்காரர் இந்த கோரிக்கைக்கு இணங்க ஒப்புக்கொண்டதாக சட்டத்தரணி உறுதிபடுத்தியுள்ளார்.</p><p>இதன் காரணமாக&nbsp;நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவிற்கு ஆதரவான அரசியல்வாதிகள், பொதுமக்கள், கட்சியின் உறுப்பினர்கள் என பலர் தற்போது&nbsp;ஆணைக்குழுவின் முன்னிலையில் குவிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்காக பெரிய ரக விமானக்குழுமத்தை அமைப்பது மற்றும் எயார்பஸ் (Airbus) விமானக்கொள்வனவின் போது இடம்பெற்றதாக கூறப்படும் இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணையின் ஒரு பகுதியாக, நாமல் ராஜபக்சவுக்கு ஆணைக்குழு (CIABOC) அழைப்பாணை விடுத்துள்ளது&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/65d604aa-af14-4c35-8f3d-9d56698586ac/26-6a9a33ebe94cb.webp' />&nbsp; &nbsp;</p><p></p><p></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-04T08:49:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை அரசிடம் புதிய அறிக்கை ஊடாக ஐ.நா. மனித உரிமை ஆணையகம் விடுத்துள்ள கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/un-human-rights-council-request-sl-government-1788509818"></link>
            <id>https://tamilwin.com/article/un-human-rights-council-request-sl-government-1788509818</id>
            <summary type="text">மனித உரிமை மீறல்களுக்கான பொறுப்புக்கூறலை வலுப்படுத்தவும் நல்லிணக்கம்
மற்றும் ஆற்றுப்படுத்தலை மேம்படுத்தவும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை மேலும்
செயற்பட...</summary>
            <content type="html"><![CDATA[<p>மனித உரிமை மீறல்களுக்கான பொறுப்புக்கூறலை வலுப்படுத்தவும் நல்லிணக்கம்
மற்றும் ஆற்றுப்படுத்தலை மேம்படுத்தவும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை மேலும்
செயற்படுத்த வேண்டும் என்று இலங்கை அரசிடம் புதிதாக வெளியிடப்பட்ட ஐ.நா. மனித
உரிமைகள் ஆணையகத்தின் அறிக்கை கோரியுள்ளது.</p><p>

ஒக்டோபர் 2025 முதல் ஜூலை 2026 வரையிலான காலப் பகுதியை உள்ளடக்கிய இந்த
அறிக்கை ஊழலை எதிர்கொள்ளல், அரசியல் படுகொலைகள் தொடர்பாக உயர்மட்ட கைதுகள்
மற்றும் புலன்விசாரணைகள், வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்கப்படுதல்கள் மற்றும்
2019 உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்கள் என்பனவை தொடர்பான நடவடிக்கைகளை
கவனத்தில் எடுக்கின்றது. </p><p>இதே காலப்பகுதியில் இலங்கை டித்வா சூறாவளி மற்றும்
உலகளாவிய எரிசக்தி விலையேற்றம் ஆகியவற்றால் ஏற்பட்ட சவால்களையும்
எதிர்கொண்டது.</p><h2>நடவடிக்கை</h2><p>

நீண்ட கால சட்ட மற்றும் நிறுவன ரீதியான சீர்திருத்தங்கள் தொடர்பான உறுதிமொழி
அளித்திருந்தாலும் இலங்கை அரசு தொடர்ந்தும் அடக்குமுறைக்கு வழிவகுக்கும்
பயங்கரவாத தடைச் சட்டத்தைப் பயன்படுத்துகின்றது என்றும், அது எதேச்சதிகார
கைதுகளுக்கும் குற்றச்சாட்டின்றிய தடுத்துவைப்புக்களுக்கும் கொண்டு செல்லும்
என்றும் அறிக்கை கூறுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d78637d9-daa1-49a8-a28a-f282a5c43ec0/26-6a9a85e09ca5a.webp' /></p><p>இலங்கை தனது நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் முயற்சிகளைத்
தீவிரப்படுத்துமாறும் குறிப்பாக பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்துச் செய்வது
தொடர்பான நடவடிக்கைகள் நிலுவையில் உள்ள நிலையில், அந்தச் சட்டத்தை
பயன்படுத்துவதற்குத் தற்காலிகத் தடை விதித்தல் மற்றும் அதன் கீழ்
நீண்டகாலமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை விடுவித்தல் போன்ற நடவடிக்கைகளை
மேற்கொள்ளுமாறும் ஆணையாளர் வலியுறுத்தினார்.</p><h2>மனித உரிமை மீறல்கள்</h2><p>
</p><p>
மனித உரிமை மீறல்கள் தொடர்பாக நம்பத் தகுந்த குற்றச்சாட்டுகளுக்கு ஆளான
நபர்கள், அந்தக் குற்றச்சாட்டுகள் உண்மையான முறையில் கையாளப்பட்டுத்
தீர்க்கப்படும் வரை, அரசு, பாதுகாப்புத்துறை அல்லது இராஜதந்திரப் பணிகளில்
உள்ள உயர் பதவிகளிலிருந்து விலக்கி வைக்கப்பட வேண்டும் என்றும் அவர் கோரினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/930bb76a-7ed6-45dd-982a-a39ce9ef96f7/26-6a9a85e1512bf.webp' /></p><p>


பாதிக்கப்பட்டவர்களின் நினைவுகூரல் முயற்சிகளுக்கும், இராணுவத்தின்
கட்டுப்பாட்டில் உள்ள நிலங்களை விடுவிப்பதற்கும் அரசு ஆதரவளிக்க வேண்டும்
என்றும் அவர் வலியுறுத்தினார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-04T08:49:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[மிதிகம சூட்டியின் மில்லியன் கணக்கான சொத்துக்கள் அதிகாரிகளால் முடக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/mithikama-sooti-s-rs-15-million-assets-frozen-1788510175"></link>
            <id>https://tamilwin.com/article/mithikama-sooti-s-rs-15-million-assets-frozen-1788510175</id>
            <summary type="text">ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்டதாக கூறப்படும் பிரபாத் மதுசங்க,“மிதிகம சூட்டி” என அழைக்கப்படுபவருக்கு சொந்தமான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்டதாக கூறப்படும் பிரபாத் மதுசங்க,“மிதிகம சூட்டி” என அழைக்கப்படுபவருக்கு சொந்தமான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது.</p><p>&nbsp;சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப்பிரிவு அதிகாரிகளால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">சட்டவிரோத சொத்துக்கள் தடை&nbsp;</span></p><p>


அதன்படி, வெலிகம, பத்தேகம பகுதியில் அமைந்துள்ள வீட்டை பயன்படுத்துதல், உரிமை மாற்றம் செய்தல் அல்லது விற்பனை செய்தல் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5914f233-6fab-4784-9b33-f10ad1a59a25/26-6a9a83816f8b7.webp' /></p><p>



குறித்த வீடும் அது அமைந்துள்ள காணியும் சேர்த்து சுமார் ரூ.15 மில்லியன் பெறுமதியானது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>குறித்த சொத்தை இனிமேல் பயன்படுத்துவதற்கு சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு தடை விதித்துள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-04T08:43:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்க சமஷ்டி அரசின் கடல்சார் ஆணைக்குழுவின் தலைவர் - ஆணையாளர் ஆகியோர் இலங்கை விஜயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/commissioner-us-federal-maritime-commission-1788510237"></link>
            <id>https://tamilwin.com/article/commissioner-us-federal-maritime-commission-1788510237</id>
            <summary type="text">அமெரிக்க வணிகங்களையும் நுகர்வோரையும் இந்தோ - பசிபிக் பிராந்தியத்திலுள்ள
சந்தைகளுடன் இணைக்கும் கப்பல் போக்குவரத்து வலையமைப்புகள், கடல்சார் வர்த்தகம்
...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்க வணிகங்களையும் நுகர்வோரையும் இந்தோ - பசிபிக் பிராந்தியத்திலுள்ள
சந்தைகளுடன் இணைக்கும் கப்பல் போக்குவரத்து வலையமைப்புகள், கடல்சார் வர்த்தகம்
மற்றும் முதலீடு போன்ற விடயங்களில் அமெரிக்க - இலங்கை ஒத்துழைப்பை
மேம்படுத்துவதற்காக, அமெரிக்க சமஷ்டி அரசின் கடல்சார் ஆணைக்குழுவின் தலைவர்
லோரா டிபெல்லா மற்றும் அதன் ஆணையாளரான ரொபர்ட் ஜே. ஹார்வி ஆகியோர் எதிர்வரும் 6ஆம் திகதி முதல் 10ஆம் திகதி வரை இலங்கைக்கு விஜயம்
செய்யவுள்ளனர்.</p><p>

தமது விஜயத்தின் போது, இலங்கை அரச மற்றும் கடல்சார் துறையிலுள்ள சிரேஷ்ட
தலைவர்களுடன் தலைவர் டிபெல்லா மற்றும் ஆணையாளர் ஹார்வி ஆகியோர் சந்திப்புகளை
மேற்கொள்வர்.
</p><p>
எட்டாவது கொழும்பு சர்வதேச கடல்சார் மற்றும் ஏற்பாட்டில் மாநாட்டில் டிபெல்லா
உரையாற்றுவதுடன், அதன் குழுவொன்றில் ஆணையாளர் ஹார்வி பணியாற்றுவார்.</p><h2>இலங்கையின் வகிபாகம்</h2><p>

“உலகெங்கிலுமுள்ள பல்வேறு இடங்களுக்குப் பயணிக்கும் கொள்கலன்களில் 80
சதவீதத்துக்கும் அதிகமானவை கொழும்பினூடாக பயணிப்பதானது, இந்து
சமுத்திரத்தினூடாக இடம்பெறும் கப்பல் போக்குவரத்தின் மையத்தில் இலங்கை
கொண்டிருக்கும் வகிபாகத்துக்கான ஒரு குறிப்பிடத்தக்க உதாரணமாக விளங்குகின்றது”
என்று அமெரிக்கத் தூதுவர் எரிக் எஸ். மயர் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b20c7538-890c-4b6a-b5cf-777e1df3d184/26-6a9a83ed6835e.webp' /></p><p>
</p><p>
“தலைவர் டிபெல்லாவின் விஜயமானது, அந்தப் பங்கின் முக்கியத்துவத்தை
அங்கீகரிப்பதுடன், இந்தோ - பசிபிக் பிராந்தியத்தில் இந்த முக்கிய
வர்த்தகத்தைத் தடையின்றி நடைபெறச் செய்யும் மக்கள் மற்றும் நிறுவனங்களுடனான
எமது ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதற்கான ஒரு வாய்ப்பையும் வழங்குகின்றது.
பாதுகாப்பான மற்றும் வினைத்திறனான கப்பல் போக்குவரத்தானது, அமெரிக்க
வணிகங்களுக்கு வாய்ப்புகளை உருவாக்குகின்றது, பிராந்தியத்தின் ஒரு கேந்திர
மையமாக இலங்கையின் நிலையைப் பலப்படுத்துகின்றது மற்றும் எமது இரு
பொருளாதாரங்களின் செழிப்புக்கும் உதவி செய்கின்றது” என்றும் அவர் மேலும்
கூறினார்.</p><p>

1961ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட சமஷ்டி அரசின் கடல்சார் ஆணைக்குழுவானது,
அமெரிக்க ஏற்றுமதியாளர்கள், இறக்குமதியாளர்கள் மற்றும் நுகர்வோரின் நலனுக்காக
அமெரிக்க சர்வதேச கடல்வழிப் போக்குவரத்துக் கட்டமைப்பை ஒழுங்குபடுத்துவதற்குப்
பொறுப்பான சமஷ்டி அரசின் ஒரு சுயாதீன முகவரமைப்பாகும்.</p><h2>சர்வதேச கடல்வழிப் போக்குவரத்துக் கட்டமைப்பு</h2><p>
</p><p>
போட்டித்தன்மை வாய்ந்த மற்றும் நம்பகமான ஒரு சர்வதேச கடல்வழிப் போக்குவரத்துக்
கட்டமைப்பை மேம்படுத்துவதற்கும், கப்பற் போக்குவரத்துத் துறையிலுள்ள நியாயமற்ற
அல்லது ஏமாற்றும் நடைமுறைகளிலிருந்து அமெரிக்க மக்களைப் பாதுகாப்பதற்கும்
அமெரிக்க சமஷ்டி அரசின் கடல்சார் ஆணைக்குழு பணியாற்றுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/38f03bad-e179-45cf-ab4f-078a9ec71bcf/26-6a9a83ee219ec.webp' /></p><p>

2026ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பால்
பெயரிடப்பட்டதைத் தொடர்ந்து சமஷ்டி அரசின் கடல்சார் ஆணைக்குழுவுக்கு டிபெல்லா
தலைமை தாங்கி வழிநடத்துகின்றார்.</p><p>

2026ஆம் ஆண்டு ஜூன் 1ஆம் திகதி ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பால்
பெயரிடப்பட்டதைத் தொடர்ந்து சமஷ்டி அரசின் கடல்சார் ஆணைக்குழுவின் ஆணையாளராக
ரொபர்ட் ஹார்வி பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்பட்டார்.</p>]]></content>
            <updated>2026-09-04T08:41:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை தமிழரின் இசை முயற்சி - வீடியோ காலில் அழைத்து பாராட்டிய ஏ.ஆர்.ரஹ்மான்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/ar-rahman-appreciate-kirijan-uthayakumar-videocall-1788511203"></link>
            <id>https://news.lankasri.com/article/ar-rahman-appreciate-kirijan-uthayakumar-videocall-1788511203</id>
            <summary type="text">ar rahman appreciate Kirijan Uthayakumar by video call for his water bottled music: இலங்கை தமிழரான கிரிஜன் உதயகுமார் தண்ணீர் நிரப்பப்பட்ட கண்ணாடி பாட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ar rahman appreciate Kirijan Uthayakumar by video call for his water bottled music: இலங்கை தமிழரான கிரிஜன் உதயகுமார் தண்ணீர் நிரப்பப்பட்ட கண்ணாடி பாட்டில்களில் இசையமைத்து வருவது ஏ.ஆர்.ரஹ்மானின் கவனத்திற்கு சென்ற நிலையில், அவரை வீடியோ காலில் அழைத்து பாராட்டியுள்ளார்.</p><h3>

இலங்கை தமிழரின் இசை முயற்சிக்கு ஏ.ஆர்.ரஹ்மான் பாராட்டு</h3><p>
இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்கள் மூலம் பலரும் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி பிரபலமாகி வருகின்றனர்.
</p><p>
அந்த வகையில் இலங்கையின் யாழ்ப்பாணம் பருத்தித்துறையை சேர்ந்த 22 வயதான கிரிஜன் உதயகுமார்(Kirijan Uthayakumar), முறையாக இசைக் கல்வி பயிலாத போதிலும், தன்னுடைய ஆர்வத்தால் வீட்டில் உள்ள பொருட்களை இசைக்கருவிகளாக மாற்றி இசையையமைத்து வருகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1f71c175-935d-48a3-9b55-6c9d7e29508c/26-6a9a83e5b291a.webp' /></p><p>
தண்ணீர் நிரப்பப்பட்ட கண்ணாடி பாட்டில்களில் இசையமைத்து அதனை தனது Riomusiq என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.</p><p>

இது பலரின் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், அவரது வீடியோக்கள் மில்லியன் கணக்கான பார்வைகளை பெற்றுள்ளன.
</p><p>
அவர் பெரும்பாலும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் பாடல்களை கண்ணாடி பாட்டில்களில் இசைப்பதோடு, ஏ.ஆர்.ரஹ்மானை டேக் செய்யுமாறு தனது ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுப்பார். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a2b049d1-cb8b-4a33-92d1-6745b1bde08b/26-6a9a83e5060d8.webp' /></p><p>

கிரிஜன் உதயகுமாரின் வீடியோக்கள் ஏ.ஆர்.ரஹ்மானின் கவனத்திற்கு சென்ற நிலையில், அவரை வீடியோ காலில் அழைத்த ஏ.ஆர்.ரஹ்மான் உங்களது வீடியோக்களை பார்த்துள்ளேன். பார்த்துகிட்டுதான் இருக்கிறேன் என பாராட்டு தெரிவித்துள்ளார்.</p><p><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/reel/Dcf8CwgKOF5/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/reel/Dcf8CwgKOF5/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/reel/Dcf8CwgKOF5/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by Rio Musiq (@riomusiq)</a></p></div></blockquote> <script async src="//www.instagram.com/embed.js"></script></p><p>
ஏ.ஆர்.ரஹ்மான் தன்னை அழைத்து பாராட்டிய நிலையில், இதற்கு ஆதரவளித்த ரசிகர்கள் மற்றும் ஏ.ஆர்.ரஹ்மானிற்கும் நன்றி தெரிவித்துள்ளார்.</p><p> முன்னதாக கடந்த ஏப்ரல் மாதத்தில், ஒரு நிமிடத்திற்குள்ளாக 4 கண்ணாடி பாட்டில்களில் தண்ணீர் நிரப்பி அதில் ஒரு பாடலுக்கான இசையை அமைத்து kalam world records ன் அங்கீகாரத்தை பெற்றுள்ளார். </p><p><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/reel/DZXNVHjxEoJ/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/reel/DZXNVHjxEoJ/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/reel/DZXNVHjxEoJ/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by KALAMS WORLD RECORDS (@kalams_world_records)</a></p></div></blockquote> <script async src="//www.instagram.com/embed.js"></script></p><p>
மேலும், Influencer Book Of World Records, Lionzie world records ஆகியவை இவரை அங்கீகரித்துள்ளன.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b918ddf2-eb09-481e-bd74-a8720668657f/26-6a9a83e6679c1.webp' /></p><p>

இலங்கை தமிழரான கிரிஜன் உதயகுமார் மேலும் இது போன்ற சாதனைகளை படைத்து, இசைத்துறையில் அங்கீகாரம் பெறுவார் என அவரது வீடியோக்களில் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.&nbsp;&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-04T08:40:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாள பேரழிவு ;9 நாட்களுக்கு பின் உயிருடன் மீட்கப்பட்ட இருவர்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/two-people-rescued-alive-nepal-mins-after-9-days-1788502223"></link>
            <id>https://canadamirror.com/article/two-people-rescued-alive-nepal-mins-after-9-days-1788502223</id>
            <summary type="text">&amp;nbsp; இயற்கை கோர தாண்டவத்தில் ஆயிரத்திற்கு மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் நேபாளத்தின் ரசுவா மாவட்டத்தில் உள்ள திரிஷூலி-3ஏ நீர்மின் நிலைய சுரங்கத்தில்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; இயற்கை கோர தாண்டவத்தில் ஆயிரத்திற்கு மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் நேபாளத்தின் ரசுவா மாவட்டத்தில் உள்ள திரிஷூலி-3ஏ நீர்மின் நிலைய சுரங்கத்தில் சிக்கியிருந்த இருவர், 9 நாட்களுக்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்டுள்ள சம்பவம் பதிவாகியுள்ளது .</p><p>சஞ்சய் சாஹ் என்ற மெக்கானிக்கல் ஃபோர்மேன் மற்றும் கபீர் மகர்ஜன் என்ற மெக்கானிக்கல் சூப்பர்வைசர் ஆகிய இருவரும் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/51283d75-3aef-49f7-9c86-b4ceb2ff7248/26-6a9a60d0b5eb3.webp' /></p><h2>இன்னும் பலர் உயிருடன் இருக்கக்கூடும் என்ற நம்பிக்கை..</h2><p>
</p><p> 
ஆகஸ்ட் 26ஆம் தேதி ஏற்பட்ட பேரழிவை தொடர்ந்து, திரிஷூலி-3ஏ திட்டத்தில் மட்டும் சுமார் 40 பேர் காணாமல் போயுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையே, சுரங்கத்தின் ஆழப்பகுதியில் இருந்து மேலும் பலரின் குரல்கள் கேட்கப்பட்டதாக மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர். </p><p>இதனால், இன்னும் பலர் உயிருடன் இருக்கக்கூடும் என்ற நம்பிக்கை அதிகரித்துள்ளது.
 
நேபாள ராணுவம் மற்றும் ஆயுதம் தாங்கிய காவல் படையினர் சுரங்கத்துக்குள் தீவிரமாக சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். </p><p> 
 
அதே நேரத்தில், ரசுவா லாங்டாங் கோலா நீர்மின் திட்ட சுரங்கத்தில் இருந்து இருவரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. அந்த திட்டத்தில் பணியாற்றிய 41 பேருடன் இதுவரை தொடர்பு ஏற்படவில்லை என கூறப்படுகிறது.
</p><p>
 
மீட்புப் பணிகள் மோசமான வானிலை மற்றும் சேதமடைந்த கட்டமைப்புகளால் சவால்களை சந்தித்து வருகின்றன. 

இருப்பினும், சுரங்கத்துக்குள் இருந்து குரல்கள் கேட்பது குடும்பங்களுக்கு புதிய நம்பிக்கையை அளித்துள்ளது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-04T08:39:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[1 லட்சம் பணியாளர்கள் பணியிடை நீக்கம்: வோக்ஸ்வேகன் நிறுவனம் முடிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/volkswagen-announces-100000-jobs-cuts-1788510721"></link>
            <id>https://news.lankasri.com/article/volkswagen-announces-100000-jobs-cuts-1788510721</id>
            <summary type="text">Volkswagen Announces 100000 Jobs Cuts: கிட்டத்தட்ட 1 லட்சம் பணியாளர்களை பணியிடை நீக்கம் செய்ய இருப்பதாக பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான வோக்ஸ்வேகன் அறி...</summary>
            <content type="html"><![CDATA[<p>Volkswagen Announces 100000 Jobs Cuts: கிட்டத்தட்ட 1 லட்சம் பணியாளர்களை பணியிடை நீக்கம் செய்ய இருப்பதாக பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான வோக்ஸ்வேகன் அறிவித்துள்ளது.</p><h2> 1 லட்சம் பணியாளர்கள் பணியிடை நீக்கம்</h2><p>
சர்வதேச வாகன துறையில் மிகப்பெரிய அறிவிப்பாக, ஜேர்மனியின் பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான வோக்ஸ்வேகன்(Volkswagen) மறுசீரமைப்பு நடவடிக்கை ஒன்றை அறிவித்துள்ளது.</p><p>அதில், 2030 ம் ஆண்டுக்குள் உலக அளவில் கிட்டத்தட்ட 1,00,000 பணியிடங்களை குறைக்க இருப்பதாக அறிவித்துள்ளது.</p><p style="margin-left: 25px;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/637503e1-5d97-4e43-9812-78e8fa89008b/26-6a9a820309207.webp' /></p><p> இந்த எண்ணிக்கையானது வோக்ஸ்வேகன் நிறுவனத்தின் ஒட்டுமொத்த பணியாளர்கள் எண்ணிக்கையில் 15% ஆகும்.</p><p> ஏற்கனவே 50000 பணியிடங்களை குறைக்க ஒப்புக் கொள்ளப்பட்ட நிலையில், கூடுதலாக 50,000 பணியிடங்களை குறைக்க வோக்ஸ்வேகன் நிர்வாகமும், அதன் தொழிற்சங்கமும் ஒப்புதல் வழங்கியுள்ளது.</p><p>வோக்ஸ்வேகன் நிறுவனத்தின் இந்த அறிவிப்பானது கடந்த 2009ம் ஆண்டு ஜெனரல் மோட்டார் நிறுவனம் திவாலானதை அடுத்து சுமார் 50000 பணிநீக்கங்களை செய்ததை விட அதிகமானது ஆகும்.</p><p></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8656567c-8f00-4798-b00e-1930bebf6bb5/26-6a9a8203b2731.webp' /></p><p> உலகளாவிய பணிநீக்கங்கள் தவிர, ஜேர்மனியில் செயல்பட்டு வரும் ஹானோவர் (Hannover), எம்டென் (Emden), ஸ்விகாவு(Zwickau) மற்றும் நெக்கர்சுல்ம்(Neckarsulm) ஆகிய ஆகிய தொழிற்சாலைகளின் எதிர்காலமும் கேள்விக்குறியாகி இருப்பதாக நிறுவனம் எச்சரித்துள்ளது.</p><p> அதிகரித்து வரும் சீன கார் தயாரிப்பு நிறுவனங்களின் போட்டி மற்றும் மின்சார வாகனங்களின் விற்பனை வளர்ச்சி பெறுவதில் ஏற்படும் தாமதம் ஆகியவை ஐரோப்பிய கார் தயாரிப்பு நிறுவனங்களுக்கு மிகப்பெரிய பொருளாதார சவால்களை ஏற்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-04T08:32:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கையை கடிக்கும் வாழ்க்கை செலவு; ஐரோப்பாவிற்குப் புலம்பெயரும் பிரித்தானியர்கள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/biting-cost-of-living-britons-emigrating-to-europe-1788509863"></link>
            <id>https://canadamirror.com/article/biting-cost-of-living-britons-emigrating-to-europe-1788509863</id>
            <summary type="text">&amp;nbsp; பிரிட்டனில் அதிகரித்து வரும் கடுமையான பணவீக்கம், அதிக வீட்டு வாடகை மற்றும் மின்கட்டண உயர்வு காரணமாக, அந்நாட்டை விட்டு வெளியேறி ஐரோப்பிய நகரங்கள...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; பிரிட்டனில் அதிகரித்து வரும் கடுமையான பணவீக்கம், அதிக வீட்டு வாடகை மற்றும் மின்கட்டண உயர்வு காரணமாக, அந்நாட்டை விட்டு வெளியேறி ஐரோப்பிய நகரங்களுக்குக் குடிபெயரும் ‘காஸ்ட் ஆஃப் லீவிங்’ (Cost of Leaving) கலாச்சாரம் பிரிட்டன்வாசிகளிடையே அதிகரித்து வருகிறமை ஆய்வில் தெரியவந்துள்ளது.</p><p> 

பாரிஸ், ஸ்டாக்ஹோம் மற்றும் பெர்லின் போன்ற ஐரோப்பிய நகரங்களில் வாழ்க்கைச் செலவு லண்டனை விட கணிசமாகக் குறைவாக இருப்பது சர்வதேச நுகர்வோர் குறியீட்டு (Numbeo Cost of Living Index) ஆய்வில் தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/64fffa31-2370-4d12-b1bd-eb7d7a9d691f/26-6a9a7ea8502ff.webp' /></p><h2>வாடகை மட்டுமல்லாது, தினசரிப் பொருட்கள் கொள்முதல்</h2><p>
</p><p>
சர்வதேச வாழ்வாதாரக் குறியீட்டின் தரவுகளின்படி, பிரிட்டன் தலைநகர் லண்டனில் தனிநபர் ஒருவர் சராசரியாக வாழத் தேவையான பணத்தை விட, பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் 11 சதவீதமும், ஸ்வீடனின் ஸ்டாக்ஹோம் நகரில் 10 சதவீதமும் குறைவான செலவிலேயே வாழ முடியும் எனப் பட்டியலிடப்பட்டுள்ளது.</p><p> 

குறிப்பாக லண்டனில் ஒரு படுக்கையறை கொண்ட வீட்டின் சராசரி வாடகை ஐரோப்பிய தலைநகரங்களை விட 35 முதல் 40 சதவீதம் வரை அதிகமாக உள்ளது, பிரிட்டன் மக்களை பிற நாடுகளை நோக்கித் தள்ளும் முதன்மை காரணியாக மாறியுள்ளது.
</p><p>
வாடகை மட்டுமல்லாது, தினசரிப் பொருட்கள் கொள்முதல், பொதுப்போக்குவரத்து, மின்சாரம் மற்றும் உணவகங்களின் செலவுகளிலும் பிரிட்டனை விட ஐரோப்பிய நகரங்கள் அதிக சேமிப்பை வழங்கி வருகின்றன. </p><p>உதாரணமாக, ஸ்பெயின் நாட்டின் மாட்ரிட் மற்றும் இத்தாலியின் ரோம் ஆகிய நகரங்கள் லண்டனை விட சுமார் 45 சதவீதம் வரை மலிவான வாழ்க்கைச் சூழலை வழங்குவதால், வீட்டில் இருந்தே பணியாற்றும் (Remote Work) இளம் பிரிட்டன் ஊழியர்கள் பெருமளவில் அந்நகரங்களை நோக்கிப் இடம்பெயர்ந்து வருகின்றனர்.
</p><p>
கடந்த சில ஆண்டுகளாகப் பிரிட்டனில் அத்தியாவசியப் பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளதால், குறைந்த செலவில் உயர்தர வாழ்க்கை முறையைப் (Quality of Life) பெற விரும்புவோருக்குப் பாரிஸ், பர்லின், பார்சிலோனா போன்ற நகரங்கள் சிறந்த மாற்றாக உருவெடுத்துள்ளன.</p><p>

 பிரிட்டன் அரசு வரி விதிப்புகளையும் வாழ்க்கைச் செலவுகளையும் சீரமைக்கத் தவறினால், நாட்டின் திறமைவாய்ந்த பணியாளர்கள் (Brain Drain) ஐரோப்பிய நாடுகளுக்குக் குடிபெயர்வது மேலும் அதிகரிக்கும் எனப் பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.</p>]]></content>
            <updated>2026-09-04T08:31:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிருஷ்ண ஜெயந்திக்கு மங்கலகரமான லுக்கில் நடிகை நந்திதா ஸ்வேதா..புகைப்படங்கள் இதோ..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/nandita-swetha-krishna-janmasthami-look-photoshoot-1788510173"></link>
            <id>https://viduppu.com/article/nandita-swetha-krishna-janmasthami-look-photoshoot-1788510173</id>
            <summary type="text">சினிமாவில் களமிறங்கிய வேகத்தில் பெரிய வெற்றிப் படங்களை கொடுத்தவர் தான் நந்திதா ஸ்வேதா. இவரைப் பார்த்ததுமே ரசிகர்கள் குமுதா ஹேப்பி அண்ணாச்சி என்று தான்...</summary>
            <content type="html"><![CDATA[<p>சினிமாவில் களமிறங்கிய வேகத்தில் பெரிய வெற்றிப் படங்களை கொடுத்தவர் தான் நந்திதா ஸ்வேதா. இவரைப் பார்த்ததுமே ரசிகர்கள் குமுதா ஹேப்பி அண்ணாச்சி என்று தான் கூறுவார்கள்.</p><p> அந்த அளவிற்கு இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா என்ற படத்தில் விஜய் சேதுபதி இவருக்காக கூறிய டயலாக் செம பேமஸ்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3aa7f196-13d5-47e9-81d5-e4d9486d6072/26-6a9a7fea27120.webp' /></p><p>
</p><p>
இதன்பின் அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்த நந்திதா, தெலுங்கு சினிமாவில் நடித்து பிரபலமானார். 1.4 மில்லியன் ஃபாலோயர்ஸ்களை வைத்துள்ள நந்திதா சப்ஸ்கிரிப்ஷன் மூலமும் ரசிகர்களிடம் உரையாடி வருகிறார்.</p><p>எப்போதும் மாடர்ன் லுக்கில் போட்டோஷூட் எடுத்து வரும் நந்திதா, இன்று செப்டம்பர் 4 கிருஷ்ண ஜெயந்தியை மின்னிட்டு மங்கலகரமான லுக்கில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-09-04T08:31:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாமல் இன்று கைது செய்யப்படுவார்: பட்டாசுக்களுடன் தயாராகும் ஜே.வி.பி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/milinda-rajapaksha-statement-about-12th-rally-1788507925"></link>
            <id>https://ibctamil.com/article/milinda-rajapaksha-statement-about-12th-rally-1788507925</id>
            <summary type="text">நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாலும், எதிர்வரும் 12ஆம் திகதி அனுராதபுரத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள பொது...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாலும், எதிர்வரும் 12ஆம் திகதி அனுராதபுரத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள பொதுஜன பெரமுனவின் பாரிய மக்கள் பேரணி எவ்வித தடங்களுமின்றி மிக வெற்றிகரமாக நடத்தப்படும் என அந்த கட்சியின் பேச்சாளர் மிலிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
</p><p>
நாமல் இன்று (04) காலை இலஞ்ச ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையான போது, அந்த வளாகத்திற்கு வெளியே காத்திருந்த ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
</p><p>நாடாளுமன்ற உறுப்பினர் நாமலைகைது செய்தால், நாங்கள் இன்னும் இருமடங்கு மக்களை அனுராதபுரத்திற்கு அழைத்து வருவோம்.</p><p></p><h2>கைது முயற்சி</h2><p> </p><p>

இந்த கைது முயற்சியின் பின்னணியில் அரசியல் நோக்கம் உள்ளது. </p><p>

இந்த வார இறுதியில் ஜனாதிபதிக்கும் ஒரு கூட்டம் உள்ளது. ஆனால் அவருக்கு மக்களுக்குச் சொல்வதற்கு எதுவும் இல்லை.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5fb60c83-bb26-4b50-873a-278d41696df7/26-6a9a7cc1e317b.webp' /></p><p>துறைமுகங்கள், விமான நிலையங்கள், அதிவேக நெடுஞ்சாலைகளை அமைத்ததாகக் கூறவா? அல்லது கோதுமை மா, பால் மாவின் விலையைக் குறைத்ததாகக் கூறவா? 

சொல்வதற்கு எதுவும் இல்லாததால் நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டார் என்று கூறி அன்றைய தினம் கைதட்ட வைக்கவே இவர்கள் முயற்சிக்கிறார்கள்.
</p><p>
நாமல் கைது செய்யப்பட்ட பின்னர் கிராம மட்டத்தில் பட்டாசுகளை கொளுத்தி, பதாகைகள் மற்றும் கட்அவுட்களை காட்சிப்படுத்தி கொண்டாடுமாறு ஜனதா விமுக்தி பெரமுன (JVP) தனது கட்சியினருக்கு வாட்ஸ்அப் செய்திகள் மூலம் அறிவுறுத்தியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
</p><p>
அரசாங்கத்திற்கு எதிராக குரல் எழுப்பும் போதும், கட்சி பலமடையும் போதும் இவ்வாறான அழைப்புகளும் அடக்குமுறைகளும் சாதாரணமானவை.

இவற்றில் எதனாலும் தங்களது அரசியல் பயணத்தை நிறுத்த முடியாது" என்றார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p> </p>]]></content>
            <updated>2026-09-04T08:26:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[உச்சம் தொட்ட தங்க விலை...! வாங்கவுள்ளோருக்கு வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sri-lanka-gold-price-today-22k-1788509761"></link>
            <id>https://ibctamil.com/article/sri-lanka-gold-price-today-22k-1788509761</id>
            <summary type="text">இலங்கையில் (sri Lanka) கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது.

இதனடிப்படையில், இன்றைய (04-09-2026) நிலவரத...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் (sri Lanka) கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது.
</p><p>
இதனடிப்படையில், இன்றைய (04-09-2026) நிலவரத்தின் படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 1,317,667 ரூபாவாக காணப்படுகின்றது.
</p><p>
அத்தோடு, 24 கரட் தங்க கிராம் (24 karat gold 1 grams) 48,380 ரூபாவாக பதிவாகியுள்ளது.</p><p>
</p><p></p><h2>தங்கப் பவுண்</h2><p>அதேவேளை 24 கரட் தங்கப் பவுண் 387,050 ரூபாவாக பதிவாகியுள்ளது.
</p><p>
அதேபோல 22 கரட் தங்க கிராம் (22 karat gold 1 grams) 44,350 ரூபாவாக பதிவாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4d56c227-fb7d-4251-bc41-bba234378510/26-6a9a804eda1e3.webp' /></p><p>

22 கரட் தங்கப் பவுண் (22 karat gold 8 grams) 354,800 ரூபாவாக பதிவாகியுள்ளது.</p><p>

21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை (21 karat gold 1 grams) 42,340 ரூபாவாக பதிவாகியுள்ளது.</p><p>
மேலும், 21 கரட் தங்கப் பவுண் (21 karat gold 8 grams) இன்றையதினம் 338,700 ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p>]]></content>
            <updated>2026-09-04T08:25:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஊழல் எதிர்ப்புத் திருத்தச் சட்டமூலம் தொடர்பான விசாரணை நிறைவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/inquiry-regarding-anti-amendment-bill-concluded-1788510302"></link>
            <id>https://jvpnews.com/article/inquiry-regarding-anti-amendment-bill-concluded-1788510302</id>
            <summary type="text">அரசாங்கத்தால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஊழல் எதிர்ப்புத் திருத்தச் சட்டமூலத்தை சவாலுக்குட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசா...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரசாங்கத்தால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஊழல் எதிர்ப்புத் திருத்தச் சட்டமூலத்தை சவாலுக்குட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணையை உயர் நீதிமன்றம் நிறைவு செய்துள்ளது.</p><p> </p><p></p><p>குறித்த சட்டமூலத்தின் அரசியலமைப்புத் தன்மை தொடர்பான உயர்நீதிமன்றின் வியாக்கியானத்தை நாடாளுமன்ற சபாநாயகருக்கும் ஜனாதிபதிக்கும் அனுப்பி வைப்பதாக அறிவித்துள்ளது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/37afbb81-547a-42ee-8eb6-bd9fbfb28229/26-6a9a806072e82.webp' /></p><p>இச்சட்டமூலத்தை சவாலுக்குட்படுத்தி 15 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்ததுடன், அவை சிரான் குணரத்ன, மஹிந்த சமயவர்தன மற்றும் சம்பத் விஜேரத்ன ஆகிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர் குழாம் முன்னிலையில் இரண்டு நாட்களாக விசாரிக்கப்பட்டன.</p><p>இன்று (04) வாய்மூல சமர்ப்பணங்களை நிறைவு செய்த உயர் நீதிமன்றம், எழுத்துமூலச் சமர்ப்பணங்கள் ஏதேனும் இருப்பின் அவற்றை திங்கட்கிழமை பிற்பகல் 12.00 மணிக்கு முன்னர் தாக்கல் செய்யுமாறு தரப்பினருக்கு உத்தரவிட்டது. </p><p>

அதனைத் தொடர்ந்து, இச்சட்டமூலத்தின் அரசியலமைப்புத் தன்மை குறித்த உயர் நீதிமன்றத்தின் வியாக்கியானம் நாடாளுமன்ற சபாநாயகருக்கு எதிர்காலத்தில் அனுப்பி வைப்பதாகவும் நீதியரசர் குழாம் அறிவித்தது.</p><p> 

குறித்த சட்டமூலத்தை சவாலுக்குட்படுத்தி முன்னாள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், மீடியா லோ போரம் (Media Law Forum), ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நேஷனல் ஸ்ரீ லங்கா (Transparency International Sri Lanka) அமைப்பு உள்ளிட்ட 15 தரப்பினர் மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-04T08:25:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[காதல் வலையில் வீழ்த்தி 10 லட்சம் டொலர் மோசடி செய்த நபர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/41old-ontario-man-who-allegedly-duped-5-women-1788510477"></link>
            <id>https://canadamirror.com/article/41old-ontario-man-who-allegedly-duped-5-women-1788510477</id>
            <summary type="text">&amp;nbsp;கனடாவின் டர்ஹாம் பிராந்தியத்தில் ஐந்து பெண்களைக் காதலிப்பதாக ஏமாற்றி, 10 லட்சம் டாலருக்கும் அதிகமான தொகையை மோசடி செய்த 41 வயது நபரை காவல்துறையின...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கனடாவின் டர்ஹாம் பிராந்தியத்தில் ஐந்து பெண்களைக் காதலிப்பதாக ஏமாற்றி, 10 லட்சம் டாலருக்கும் அதிகமான தொகையை மோசடி செய்த 41 வயது நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.</p><p>
"புராஜெக்ட் மரூன்" என்ற சிறப்பு விசாரணை நடவடிக்கையின் முடிவுகள் குறித்து காவல்துறையினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.</p><p>2025 நவம்பரில் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் அளித்த புகாரின் பேரிலேயே இந்தத் திட்டம் வெளிச்சத்திற்கு வந்தது.
 எனினும், சந்தேகநபர் 2020 முதலே இதுபோன்ற பொய் வாக்குறுதிகள் மற்றும் ஏமாற்று வேலைகளில் ஈடுபட்டு வந்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/12582e03-f35c-4106-a614-a3788b0a3e48/26-6a9a810f1d229.webp' /></p><p>இந்தச் சம்பவத்தில் ஒன்டாரியோவின் மார்மோரா பகுதியைச் சேர்ந்த சால்வடோர் மலான்ட்ரினோ என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.இவர் மீது 5,000 டொலருக்கும் அதிகமான பணமோசடி (5 வழக்குகள்), சட்டவிரோதப் பணப் பரிமாற்றம், பிணை உத்தரவை மீறியது மற்றும் போலி ஆவணங்களைத் தயாரித்தது உட்பட பல பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
</p><p>பொதுவாக நடக்கும் ஆன்லைன் காதல் மோசடிகளைப் போலன்றி, மலான்ட்ரினோ பாதிக்கப்பட்ட பெண்களை நேரில் சந்தித்து வலையில் வீழ்த்தியுள்ளார்.</p><p> 
தனது "ஃபிரண்ட்லி கே9" என்ற நாய் பயிற்சி மையம் மற்றும் உடற்பயிற்சிக் கூடம் ஆகியவற்றின் மூலம் பெண்களுடன் நட்பு ஏற்படுத்தியுள்ளார்.
</p><p>தன்னை ஒரு வெற்றிகரமான தொழிலதிபராகக் காட்டிக்கொண்ட மலான்ட்ரினோ, தொழில் முதலீடு, கடன்கள் மற்றும் அவசர தேவைகள் எனக் கூறி பெருந்தொகையைப் பெற்றுள்ளார். </p><p>பதிலுக்குத் திருமணம் செய்துகொள்வதாகவும், தொழிலில் பங்கு தருவதாகவும் உறுதியளித்து ஏமாற்றியுள்ளார்.</p><p>
காவல்துறையினர் அவரது ஆயிரக்கணக்கான வங்கிப் பக்கங்களை ஆய்வு செய்ததில், பெண்களிடம் வாங்கிய பணத்தை முறைகேடாகப் பயன்படுத்தியது அம்பலமானது.</p><p> தனித்தனியாக ஏமாற்றப்பட்ட பல பெண்களின் வாக்குமூலங்கள் ஒரே மாதிரியாக இருந்ததால், இது ஒரு திட்டமிடப்பட்ட மோசடி என்பது உறுதி செய்யப்பட்டது.
</p><p>மலான்ட்ரினோவால் ஏமாற்றப்பட்ட வேறு யாரேனும் இருந்தால், உடனடியாகக் காவல்துறையைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். அவர் தற்போது காவல் பிணையில் வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-04T08:25:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[போதைப்பொருள் பாவனை; பாடசாலைகளில் கடும் சோதனை நடவடிக்கை !]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/drug-abuse-strict-inspection-operations-in-schools-1788510326"></link>
            <id>https://jvpnews.com/article/drug-abuse-strict-inspection-operations-in-schools-1788510326</id>
            <summary type="text">&amp;nbsp; நாடளாவிய ரீதியில் பாடசாலைகளில் கடுமையான சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாக பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.
...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; நாடளாவிய ரீதியில் பாடசாலைகளில் கடுமையான சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாக பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.
</p><p>


இதற்காக, பொலிஸ் மோப்ப நாய்கள் மற்றும் பொலிஸ் அதிகாரிகளின் உதவிகளைப் பெற்றுக்கொள்ளுமாறு பாடசாலை நிர்வாகத்திடம் கேட்டுக்கொண்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ea76c316-efc0-4669-abb7-b54545cb8084/26-6a9a807815343.webp' /></p><p></p><h2>பொலிஸ் மோப்ப நாய்கள் மற்றும் பொலிஸ் அதிகாரிகளின் உதவி</h2><p>
</p><p>


பாடசாலை மாணவர்களிடையே போதைப்பொருள் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் நோக்கில்,இந்த சோதனை நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
</p><p>


இதன்போது, பிள்ளைகளின் நடத்தை மற்றும் செயற்பாடுகள் குறித்து பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் மிகுந்த விழிப்புடன் இருக்குமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.</p><p></p><p>



பிள்ளைகள் போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளனரா என்பதை பெற்றோர் ஆரம்ப நிலையிலேயே கண்டறிவதற்கான விரைவுப் பரிசோதனை கருவிகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. </p><p>இதற்கான முன்மொழிவு ஜனாதிபதி தலைமையிலான தேசிய குழுவிடம் முன்வைக்கப்பட்டுள்ளது.



இந்த கருவிகள் முதலில் சந்தைகளில் கிடைக்கச் செய்யப்படுவதுடன், பின்னர் உள்ளூர் சில்லறை விற்பனை நிலையங்கள் வாயிலாக நாடு முழுவதும் விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது.</p><p></p><p> 



இதன்மூலம் பெற்றோர் மருத்துவ நிலையத்திற்குச் செல்லாமல், தங்களது பிள்ளைகளுக்கு போதைப்பொருள் பரிசோதனையை தனிப்பட்ட முறையில் மேற்கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-04T08:22:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[இங்கிலாந்து தொடரிலிருந்து குசல் மெண்டிஸ் - பினுரா விலகல்: இலங்கை அணிக்கு இரட்டை பின்னடைவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/kusal-mendis-binura-withdraw-from-england-series-1788510026"></link>
            <id>https://tamilwin.com/article/kusal-mendis-binura-withdraw-from-england-series-1788510026</id>
            <summary type="text">இங்கிலாந்துக்கு எதிரான T20I தொடருக்கு முன்பாக, இலங்கை கிரிக்கெட் அணிக்கு பெரும் பின்னடைவான சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. 

இதன்படி, இலங்கை அணியின் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இங்கிலாந்துக்கு எதிரான T20I தொடருக்கு முன்பாக, இலங்கை கிரிக்கெட் அணிக்கு பெரும் பின்னடைவான சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. </p><p>

இதன்படி, இலங்கை அணியின் முன்னணி வீரர்களான குசல் மெண்டிஸ் மற்றும் பினுரா பெர்னாண்டோ ஆகியோர் காயங்கள் ஏற்பட்ட காரணமாக தொடரிலிருந்து தற்காலிகமாக விலகியுள்ளனர்.</p><p> 

​2026 லங்கா பிரீமியர் லீக் (LPL) தொடரின் போது குசல் மெண்டிஸுக்கு வலது தொடை தசைநார் (Hamstring) காயமும், பினுரா பெர்னாண்டோவுக்கு முதுகுப் பகுதியில் காயமும் ஏற்பட்டுள்ளது. </p><h2>

தொடரிலிருந்து விலகிய இரு போட்டியாளர்கள்</h2><p>
இந்த நிலையில் காயமடைந்த இரு வீரர்களும் தொடர் உடற்தகுதி மறுவாழ்வு சிகிச்சையில்
(Rehabilitation) ஈடுபட்டு வரும் நிலையில், இப்போட்டித் தொடருக்குள் அவர்களால்
முழுமையாகக் குணமடையாமல் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 

இதனால் தொடரில் இருந்து காயமடைந்த இருவரும் விளையாட முடியாது என 
இலங்கை கிரிக்கெட் சபை (SLC) அறிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e33b8ff1-2861-4e72-b023-e1ef73233963/26-6a9a7fa25312e.webp' /></p><p>இலங்கை கிரிக்கெட் தேர்வுக்குழுவின் அறிவிப்பின்படி, ​குசல் மெண்டிஸ்க்குப் பதிலாக பவன் ரத்நாயக்கவும், ​பினுரா பெர்னாண்டோவுக்குப் பதிலாக இடது கை வேகப்பந்து வீச்சாளர் தில்ஷான்
மதுஷங்கவும் மாற்று வீரர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.</p><p>

மேலும் ​, ​குசல் மெண்டிஸ் இந்த தொடரில் பங்கேற்காததால், இங்கிலாந்துக்கு எதிரான T20I
தொடரில் இலங்கை அணியை சரித் அசலங்கா கேப்டனாக வழிநடத்துவார் என்றும் கூறப்படுகின்றது.</p><p> 

 இலங்கை அணி, இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக 3 போட்டிகள்
கொண்ட T20I தொடரில் விளையாடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp; &nbsp; &nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-04T08:22:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[கைதாகிறார் நாமல்..! ஜேவிபியிடமிருந்து கட்சி உறுப்பினர்களுக்கு பறந்த அவசர தகவல் - அம்பலமான விடயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/milinda-rajapaksha-statement-about-12th-rally-1788506324"></link>
            <id>https://tamilwin.com/article/milinda-rajapaksha-statement-about-12th-rally-1788506324</id>
            <summary type="text">நாமல் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாலும், எதிர்வரும் 12ஆம் திகதி அநுராதபுரத்தில் நடைபெறவிருக்கும் மாபெரும் பேரணி எவ்வித தடையுமின்றி வெற்றிகர...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாமல் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாலும், எதிர்வரும் 12ஆம் திகதி அநுராதபுரத்தில் நடைபெறவிருக்கும் மாபெரும் பேரணி எவ்வித தடையுமின்றி வெற்றிகரமாக நடைபெறும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆதரவாளர் மிலிந்த ராஜபக்ச தெரிவித்தார். </p><p>

இன்று (04.09.2026) காலை இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் முன் நாமல் ராஜபக்ச முன்னிலையான போது, ​​வளாகத்திற்கு வெளியே கூடியிருந்த ஊடகவியலாளர்களிடம் உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.</p><p></p><h2>இருமடங்கு மக்களைக் கொண்டு வருவோம்</h2><p>
</p><p>
அவர் மேலும் தெரிவிக்கையில், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் கைது செய்யப்பட்டால், நாங்கள் அநுராதபுரத்திற்கு இருமடங்கு மக்களைக் கொண்டு வருவோம். அவரைக் கைது செய்யும் இந்த முயற்சிக்குப் பின்னால் ஒரு அரசியல் உள்நோக்கம் உள்ளது.

ஜனாதிபதிக்கும் இந்த வார இறுதியில் ஒரு கூட்டம் உள்ளது. </p><p>ஆனால், மக்களிடம் சொல்வதற்கு அவரிடம் எதுவும் இல்லை. அவர் துறைமுகங்கள், விமான நிலையங்கள் மற்றும் நெடுஞ்சாலைகளைக் கட்டியதாகக் கூற வேண்டுமா? அல்லது ரொட்டி மாவு மற்றும் பால் பவுடரின் விலைகளைக் குறைத்ததாகக் கூற வேண்டுமா?</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/522b7865-4447-41d2-b1bf-85c0270a22bc/26-6a9a7ea15daf2.webp' /></p><h2>கேலி செய்யும் ஒரு முயற்சி</h2><p> </p><p>

சொல்வதற்கு எதுவும் இல்லாததால், இது நாமல் ராஜபக்சவின் கைது நடவடிக்கையைக் கேலி செய்யும் ஒரு முயற்சி என குற்றம் சாட்டியுள்ளார்.
</p><p>
அத்துடன் நாமல் ராஜபக்சவின் கைதுக்கு பிறகு, கிராம அளவில் பட்டாசுகளை வெடித்தும், பதாகைகள் மற்றும் கட்-அவுட்களைக் காட்சிப்படுத்தியும் கொண்டாட்டங்களுக்குத் தயாராகுமாறு ஜே.வி.பி தனது கட்சி உறுப்பினர்களுக்கு வாட்ஸ்அப் மூலம் அறிவுறுத்தியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-09-04T08:19:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அந்தரங்கப் பகுதியில் மிளகாய்ப் பொடி தூவி சித்திரவதை: சிறுவர் இல்லத்தில் நடந்த கொடுமை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/torture-sprinkling-chili-powder-on-private-parts-1788506012"></link>
            <id>https://jvpnews.com/article/torture-sprinkling-chili-powder-on-private-parts-1788506012</id>
            <summary type="text">&amp;nbsp; கண்டி, மைலப்பிட்டி பகுதியில் அமைந்துள்ள சிறுவர் இல்லமொன்றில் தங்கியிருந்த 16 வயது சிறுவனுக்குச் சித்திரவதை புரிந்த சம்பவம் தொடர்பில், அதன் பாது...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; கண்டி, மைலப்பிட்டி பகுதியில் அமைந்துள்ள சிறுவர் இல்லமொன்றில் தங்கியிருந்த 16 வயது சிறுவனுக்குச் சித்திரவதை புரிந்த சம்பவம் தொடர்பில், அதன் பாதுகாப்பாளரும் அவரது கணவரும் தலாத்துஓயா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>


சந்தேகநபர்கள் இருவரும் சிறுவனின் அந்தரங்கப் பகுதியில் மிளகாய்ப் பொடியைத் தூவி கொடுமைப்படுத்தியுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/efd20bd1-2474-4962-bef0-92ed53ab6d0a/26-6a9a6f9dbdc29.webp' /></p><h2>சிறுவன் வைத்தியசாலையில் அனுமதி</h2><p>

கொடுமைக்குள்ளான சிறுவன் மாரஸ்ஸனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், பின்னர் மேலதிக சிகிச்சைக்காகக் கண்டி தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.</p><p></p><p>

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் கண்டி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, எதிர்வரும் 07 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
</p><p>
மேலும், சம்பவம் தொடர்பில் தலாத்துஓயா பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.&nbsp;&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-09-04T08:17:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[காட்டுக்குள் காதலனுடன் மாயமான பதின்மவயது சிறுமி; இரு நாட்களாக தேடுதல்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/girl-goes-boyfriend-predicament-in-the-deep-forest-1788499708"></link>
            <id>https://jvpnews.com/article/girl-goes-boyfriend-predicament-in-the-deep-forest-1788499708</id>
            <summary type="text">&amp;nbsp; சோமாவதியா புனிதத் தலத்திற்குத் தனது காதலனுடன் சென்று திரும்பும் வழியில் காணாமல் போன 17 வயதுடைய சிறுமி ஒருவர், வனவிலங்குகள் நிறைந்த அடர்ந்த தம்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; சோமாவதியா புனிதத் தலத்திற்குத் தனது காதலனுடன் சென்று திரும்பும் வழியில் காணாமல் போன 17 வயதுடைய சிறுமி ஒருவர், வனவிலங்குகள் நிறைந்த அடர்ந்த தம்பலா (Thambala) காட்டுப் பகுதியில் ஒரு இரவைக் கழித்த நிலையில், புலத்திசிகம காவல்துறையினரின் தேடுதல் நடவடிக்கையின் மூலம் சுமார் இரண்டு நாட்களுக்குப் பிறகு மீட்கப்பட்டார். </p><p>

 மீட்கப்பட்ட சிறுமி, வெலிகண்டா , மொனரதென்ன ,பிரதேசத்தை சேர்ந்தவர் என பொலிஸார் கூறியுள்ளனர். 

அந்த ஜோடியினர் கடந்த மாதம் 2-ஆம் தேதி காலை சுமார் 11:00 மணியளவில் மோட்டார் சைக்கிளில் சோமாவதியா புனிதத் தலத்திற்குச் சென்றிருந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/387ea55c-ef89-4e2a-bf5d-4c9b7f9631c9/26-6a9a56fe23842.webp' /></p><h2>&nbsp;இளைஞர் மற்றும் சிறுமி&nbsp; &nbsp;காவல்துறையின் பாதுகாப்பில்..</h2><p> </p><p>அ

ங்கிருந்து திரும்பும்போது, ​​சுங்கவிலா-சோமாவதியா (Sungavila-Somawathiya) சாலையில் உள்ள 29-வது மைல்கல் (post) அருகே மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு காட்டுப் பகுதிக்குள் சென்றனர்.</p><p> சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளைக் கண்ட ஒருவர் சந்தேகம் அடைந்து புலத்திசிபுர (Pulathisipura) காவல்துறையினருக்குத் தகவல் அளித்தார்.</p><p></p><p> </p><p>

அதனடிப்படையில், பகல்நேர ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறை அதிகாரிகள் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணையைத் தொடங்கினர்.
</p><p>

வயிற்று வலி காரணமாகவே காட்டுக்குள் சென்றதாக அந்த இளைஞர் கூறினாலும், காவல்துறையினர் வந்ததை உணர்ந்த அந்தச் சிறுமி பயந்துபோய், பிடிபடுவதைத் தவிர்க்க வேறு வழியின் வழியாகக் காட்டுக்குள் இன்னும் ஆழமாகச் சென்றது விசாரணையில் தெரியவந்தது.</p><p>

 பயந்த நிலையில் பதிலளித்த அந்த இளைஞர் உடனடியாகக் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.</p><p></p><p>
</p><p>
புலத்திசிபுர, வெலிகண்டா, ஹிங்குரக்கொட (Hingurakgoda) மற்றும் மீகஸ்வெவ (Meegaswewa) ஆகிய காவல் நிலையங்களைச் சேர்ந்த அதிகாரிகள் மற்றும் உள்ளூர் மக்கள் இணைந்து, காணாமல் போன அந்தச் சிறுமிக்காக சுமார் இரண்டு நாட்களாகப் பெரிய அளவிலான தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டனர். </p><p>

 மீட்கப்பட்ட அந்தச் சிறுமி, காட்டு யானைகள், சிறுத்தைகள் மற்றும் கரடிகள் நடமாட்டம் மிகுந்த தம்பலா காட்டுப் பகுதியின் நடுவே ஒரு மரத்தடியில் தான் இரவு முழுவதும் இருந்ததாக காவல்துறையினரிடம் கூறினார்.</p><p></p><p>
</p><p>
இரண்டு நாள் நடவடிக்கைக்குப் பிறகு, நேற்று (3-ஆம் தேதி) மாலை சுமார் 4:00 மணியளவில் காட்டுப் பகுதியின் நடுவே அந்தச் சிறுமியை காவல்துறைக் குழுக்களால் கண்டுபிடிக்க முடிந்தது; இச்சம்பவத்துடன் தொடர்புடைய அந்த இளைஞர் மற்றும் சிறுமி ஆகிய இருவரும் தற்போது காவல்துறையின் பாதுகாப்பில் உள்ளனர்</p>]]></content>
            <updated>2026-09-04T08:08:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளியில் வராத ஏதோ ஒரு பெரிய குற்றம்! தான் கைது செய்யப்படப் போகும் திகதியை நன்கு அறிந்துள்ள நாமல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-rajapaksa-arrested-1788505916"></link>
            <id>https://tamilwin.com/article/namal-rajapaksa-arrested-1788505916</id>
            <summary type="text">தான் எப்போது சிறைக்கு செல்வேன் என்று நாமல் ராஜபக்சவுக்கு நன்றாகத் தெரியும் என்று பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் சந்திப...</summary>
            <content type="html"><![CDATA[<p>தான் எப்போது சிறைக்கு செல்வேன் என்று நாமல் ராஜபக்சவுக்கு நன்றாகத் தெரியும் என்று பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.
</p><p>
ஊடகவியலாளர் சந்திப்பொன்றின்போது எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.</p><p>

தொடர்ந்தும் தெரிவிக்கையில், </p><p>

தான் 12ஆம் திகதிக்கு முன்னர் கைது செய்யப்படுவேன் என நாமல் ராஜபக்ச தெரிவித்த கருத்து தொடர்பில் எமக்குத் தொடர்பில்லை.</p><h2>பதற்றத்தில் நாமல்&nbsp;</h2><p> </p><p>

தான் எப்போது கைது செய்யப்படுவேன் என்பது குறித்து நாமல் ராஜபக்சதான் நன்கு அறிந்திருப்பார்.
</p><p>
நாமல் ராஜபக்ச மீதான குற்றச்சாட்டுக்கள் குறித்து அரசாங்கத்திற்கு முழுமையாகத் தெரியாது. அவர் தொடர்பான ஒரு சில குற்றச்செயல்கள் குறித்தே நாம் அறிவோம்.

அவற்றுள் சில குற்றச்செயல்கள் தொடர்பான வழக்குகள் நீதிமன்றத்தில் விசாரணைக்காக உள்ளன.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/7A33NpQdXfI" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p>இந்த வழக்குகளுக்காக அவர் 12ஆம் திகதிக்கு முன்னர் சிறைக்குச் செல்வாரா, அல்லது எமக்கோ, நீதிமன்றத்திற்கோ தெரியாத வேறு ஏதேனும் பாரிய குற்றச்செயல் தொடர்பில் அவர் கைது செய்யப்படுவாரா என்பது எமக்குத் தெரியாது.</p><p>

கடந்த கால குற்றச்செயல்கள் குறித்து விசாரணைகளை மேற்கொண்டு வரும்போது, நாங்கள் அனைவரும் அறிந்த பல குற்றச்செயல்களைத் தாண்டி, வெளியில் தெரியாத பல குற்றச் சம்பவங்கள் குறித்த தகவல்கள் தற்போது வெளிவருகின்றன.
</p><p>
அவை, கடந்த கால குற்றங்களை விட பாரதூரமானதாகவும் இருக்கலாம், அதைவிட சிறியதாகவும் இருக்கலாம்.

எனவே, அந்தக் குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்களுக்குத் தான்&nbsp; அதனுடைய பாரதூரம் தெரியும். எத்தனைக் குற்றங்களை தாங்கள் இழைத்துள்ளோம் என்ற வரையறை அவர்களுக்குத் தெரியும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e7220eb9-442b-47f9-bc2d-2b70fa85a613/26-6a9a727685fdd.webp' /></p><p> </p><p>எனவே ஒவ்வொன்றாக தற்போது வெளிவரும் போது அவர்கள் குழப்பமடைகின்றார்கள். 

இதுதான் தற்போது நாமல் ராஜபக்சவுக்கும் நேர்ந்துள்ளது. </p><p>எம்மைவிட, நீதிமன்றத்தை விட&nbsp; அவருடைய குற்றங்கள் நாமல் ராஜபக்சவுக்கு நன்றாகத் தெரியும். அவர் செய்த குற்றங்களுக்கு சிறைக்குச் செல்வது குறித்து அவர் நன்றாக அறிந்து வைத்திருக்கின்றார்.
</p><p> 

12ஆம் திகதிக்கு முன்னரா அல்லது அதற்குப் பின்னரா தாம் கைது செய்யப்படப் போகிறோம் என்பது குறித்து அரசாங்கத்தை விட நாமல் ராஜபக்ச நன்கு அறிவார் என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/09008cb1-f7d4-4769-97bf-b2fe88908687/26-6a9a7275aca56.webp' />&nbsp; &nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-04T08:01:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படவுள்ள பணம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/compensation-for-drought-affected-farmers-money-1788506852"></link>
            <id>https://tamilwin.com/article/compensation-for-drought-affected-farmers-money-1788506852</id>
            <summary type="text">வறட்சியால் பாதிக்கப்பட்ட&amp;nbsp; விவசாயிகளுக்கான இழப்பீடு இன்று (04.09.2026) முதல் வழங்கப்படும் என விவசாய மற்றும் கமநல காப்பீட்டு சபை அறிவித்துள்ளது.
...</summary>
            <content type="html"><![CDATA[<p>வறட்சியால் பாதிக்கப்பட்ட&nbsp; விவசாயிகளுக்கான இழப்பீடு இன்று (04.09.2026) முதல் வழங்கப்படும் என விவசாய மற்றும் கமநல காப்பீட்டு சபை அறிவித்துள்ளது.</p><p>

இதற்கமைய, பொலன்னறுவை மாவட்டத்திலுள்ள பாதிக்கப்பட்ட விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் இழப்பீடு தொகை இன்று வரவு வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
</p><p>
ஏனைய மாவட்டங்களைச் சேர்ந்த அனைத்து விவசாயிகளுக்கும் எதிர்வரும் 15 ஆம் திகதிக்கு முன்னர் இழப்பீடு தொகை வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.</p><p></p><h2>வறண்ட காலநிலை</h2><p>
</p><p>
வறண்ட காலநிலை காரணமாக ஹம்பாந்தோட்டை, அம்பாறை, புத்தளம், அனுராதபுரம், பொலன்னறுவை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களில் நெல், மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்கள் சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0d628c34-fb88-4c5d-b0c7-092fd1997178/26-6a9a77bcd68be.webp' /></p><p>இதற்காக சுமார் 3,000 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக விவசாய மற்றும் கமநல காப்பீட்டு சபை குறிப்பிட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-04T07:59:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[பொலிஸ் மற்றும் நீதிமன்ற கட்டமைப்பு குறித்து மக்கள் கேள்வி: நாமல் சுட்டிக்காட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-slams-npp-1788508615"></link>
            <id>https://tamilwin.com/article/namal-slams-npp-1788508615</id>
            <summary type="text">நாட்டில் பொலிஸ் மற்றும் நீதிமன்ற கட்டமைப்பின் சுயாதீனத்தன்மை தொடர்பில் மக்கள் கேள்வி எழுப்ப தொடங்கியுள்ளனர் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவி...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டில் பொலிஸ் மற்றும் நீதிமன்ற கட்டமைப்பின் சுயாதீனத்தன்மை தொடர்பில் மக்கள் கேள்வி எழுப்ப தொடங்கியுள்ளனர் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
</p><p>லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு விசாரணை ஆணைக் குழுவில் முன்னிலையான போது அவர் இந்த விடயங்களை ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
</p><p>தமது தலைவிதியை ஆளும் கட்சியின் 159 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானிக்கும் நிலை உருவாகியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.</p><h2>விசாரணை</h2><p>
</p><p>நீதிமன்றம் மற்றும் பொலிஸ் திணைக்களத்தை விடவும் ஆளும் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் வழக்குகள் தொடர்பான மற்றும் விசாரணைகள் தொடர்பான தகவல்கள் அதிக அளவில் காணப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
</p><p>தமக்கு எதிராக சாட்சிகள் புனையப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தம்மை கைது செய்தாலும் எதிர்வரும் 12 ஆம் திகதி நடைபெறவுள்ள போராட்டம் நடத்தப்படும் என அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e24e42ca-94d9-41e8-8f0d-3e2c973eb0d9/26-6a9a79ca273d6.webp' /></p><p>
பெரும் எண்ணிக்கையிலான மக்கள் விவசாயிகளுக்காக களம் இறங்கி போராடுவார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.</p><p>
தாம் எந்தவிதமான குற்றத்தையும் இழைக்கவில்லை எனவும் அதனால் சுயாதீனமான விசாரணைகளுக்கு முகம் கொடுக்க எந்த நேரத்திலும் அஞ்ச போவதில்லை எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-04T07:57:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டில் நிலவும் கடும் வறட்சி : பல்லாயிரக்கணக்கானோர் பாதிப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/over-96-000-people-affected-by-dry-weather-dmc-1788507124"></link>
            <id>https://ibctamil.com/article/over-96-000-people-affected-by-dry-weather-dmc-1788507124</id>
            <summary type="text">நாட்டில் ஏற்பட்டுள்ள வறட்சியினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 96 ஆயிரத்தைக் கடந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.அத்துட...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டில் ஏற்பட்டுள்ள வறட்சியினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 96 ஆயிரத்தைக் கடந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.</p><p>அத்துடன் வறட்சியான காலநிலை காரணமாக நாட்டின் 06 மாவட்டங்களைச் சேர்ந்த 96,584 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது. </p><p>

இதற்கமைய அம்பாறை, பதுளை, மட்டக்களப்பு, மொனராகலை, பொலன்னறுவை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் உள்ள 28 பிரதேச செயலாளர் பிரிவுகளில் 29,584 குடும்பங்களைச் சேர்ந்த 94,356 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p></p><h2> குடிநீர் விநியோகப் பணிகள்</h2><p>

மொனராகலை மாவட்டத்திலேயே அதிகளவானோர் வறட்சியினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கமைய அந்த மாவட்டத்தில் மாத்திரம் 11,751 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2e4978c5-82a7-4532-9a90-3c28070ac4a1/26-6a9a78c28c428.webp' /></p><p> 

இதேவேளை, பாதிக்கப்பட்டவர்களுக்கான குடிநீர் விநியோகப் பணிகளும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

இதன்படி, அனர்த்தத்திற்கு உள்ளான 6 மாவட்டங்களில் உள்ள 28 பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு குடிநீர் விநியோகிக்கும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் மேலும் குறிப்பிட்டுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-04T07:56:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Diasa</name>
            </author>
            <title type="text"><![CDATA[மனிதப் புதைகுழிகளில் மீட்கப்படும் என்புகள்: அறிவியல் அடையாளம் அவசியம்..! பிரித்தானிய தமிழர் பேரவை வலியுறுத்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/statement-issued-by-british-tamil-association-1788506698"></link>
            <id>https://tamilwin.com/article/statement-issued-by-british-tamil-association-1788506698</id>
            <summary type="text">மனிதப் புதைகுழிகளில் இருந்து மீட்கப்படும் என்புகளை அறிவியல் ரீதியாக
அடையாளம் காணவும், நீதி மற்றும் பொறுப்புக்கூறலை உறுதி செய்யவும் நடவடிக்கை
எடுக்க ...</summary>
            <content type="html"><![CDATA[<p>மனிதப் புதைகுழிகளில் இருந்து மீட்கப்படும் என்புகளை அறிவியல் ரீதியாக
அடையாளம் காணவும், நீதி மற்றும் பொறுப்புக்கூறலை உறுதி செய்யவும் நடவடிக்கை
எடுக்க வேண்டும் என பிரித்தானிய தமிழர் பேரவை வலியுறுத்தியுள்ளது. </p><p>


இந்த விடயம் தொடர்பில் கடந்த 30 ஆம் திகதி வெளியிடப்பட்ட அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.</p><h2> 

காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளின் கோரிக்கை</h2><p>
அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்படுவதாவது, </p><p>


இலங்கையின் நீண்டகால ஆயுத மோதலின் இறுதிக் கட்டத்தில் கைது
செய்யப்பட்டவர்கள், இராணுவத்திடம்
சரணடைந்தவர்கள் அல்லது அரச படையினரின் கட்டுப்பாட்டுக்குள் சென்ற பின்னர்
காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான உண்மையை வெளிக் கொணர்வது இனியும் தாமதிக்க
முடியாத அவசரக் கடமையாகும்.
</p><p>
கிடைக்கப் பெறும் ஆவணங்கள், சர்வதேச அமைப்புகளின் பதிவுகள், காணாமல்
ஆக்கப்பட்டோர் தொடர்பான முறைப்பாடுகள் மற்றும் இலங்கையின் காணாமல் போனோர்
அலுவலகத்தின் (OMP) தரவுகள் ஆகியவற்றை ஒருங்கிணைத்துப் பார்க்கும் போது, போரின்
இறுதிக் கட்டத்துடன் தொடர்புடைய காணாமல் ஆக்கப்பட்டோரின் எண்ணிக்கை 18,000க்கும்
அதிகமாக இருக்கலாம் என மதிப்பிடப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/db54c752-4792-47e4-b303-a88d30edd8d4/26-6a9a74e8ec261.webp' /></p><p>
</p><p>
இந்த நிலையில், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் முழுமையான பெயர்ப் பட்டியலை
உடனடியாக வெளியிடுவது நீதிக்கான தேடலின் அத்தியாவசியமான முதல் படியாகும்.
</p><p>
இந்தச் செயல்முறை, இக்குற்றங்களுக்கு வழிவகுத்த சூழ்நிலைகளைக்
கண்டறிவதற்கும், குற்றவாளிகளை
அடையாளம் காண்பதற்கும், நீதித்துறை நடவடிக்கைகளைத் தொடங்குவதற்கும், உறவினர்கள்
தங்கள் இறுதி மரியாதையைக் கண்ணியமான முறையில் செலுத்துவதற்கும் முதல் படியாக
அமையும்.</p><h2>விவரங்களை சரிப்பார்க்க தளவுத்தளம்</h2><p>
காணாமல் ஆக்கப்பட்டோரின் பெயர்கள், காணாமல் போன அல்லது கைது செய்யப்பட்ட திகதிகள்,
சரணடைந்த இடங்கள், கடைசியாகக் காணப்பட்ட இடங்கள் மற்றும் இரத்த உறவினர்களின்
தொடர்பு விவரங்கள் உள்ளிட்ட தகவல்கள் ஒருங்கிணைக்கப்பட்ட, சரிபார்க்கக் கூடிய
தரவுத்தளமாக உடனடியாக வெளியிடப்பட வேண்டும்.</p><p>


 மனித என்புகளை அடையாளம் காண்பதில் இனியும் தாமதம் கூடாது. இலங்கையின் பல்வேறு பகுதிகளில் மனிதப் புதைகுழிகள் தொடர்ந்து
கண்டெடுக்கப்பட்டு வருகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e8ba3459-bb98-4743-8de5-82806055a8fc/26-6a9a74e9b14d6.webp' /></p><p> </p><p>

இவை காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு உண்மையை அறியும் வாய்ப்பை வழங்கக் கூடிய முக்கியமான தடயவியல் ஆதாரங்களாகும்.
</p><p>
ஒவ்வொரு மனித என்புகளையும் அறிவியல் ரீதியாக அடையாளம் காண்பதற்கு,

காணாமல் ஆக்கப்பட்டோரின் முழுமையான பெயர்ப் பட்டியல்

இரத்த உறவினர்களிடமிருந்து பெறப்படும் DNA மாதிரிகள்

பாதுகாப்பாகப் பராமரிக்கப்படும் மனித என்புகளில் இருந்து பெறப்படும் DNA
மாதிரிகள்

சர்வதேச அளவில் ஏற்றுக் கொள்ளப்பட்ட தடயவியல் நடைமுறைகள் உள்ளிட்டவை ஒருங்கிணைக்கப்பட வேண்டும்.</p><h2>

இறுதி மரியாதைக்காக கொடுக்கப்பட வேண்டிய மனித எச்சங்கள்</h2><p>

ஒரு மனித எச்சம் அடையாளம் காணப்படுவது வெறும் அறிவியல் செயல்முறை அல்ல. அது
ஒரு குடும்பத்திற்கு பல தசாப்தங்களாக மறுக்கப்பட்ட உண்மையை வழங்கும் நீதிச்
செயல்முறையாகும்.
</p><p>
அடையாளம் காணப்பட்டவர்களின் உடல் எச்சங்களை அவர்களின் குடும்பங்களிடம்
கண்ணியத்துடன் ஒப்படைத்து, அவர்கள் விரும்பும் மத மற்றும் கலாசார மரபுகளின்படி
இறுதி மரியாதை செலுத்துவதற்கான உரிமையும் உறுதி செய்யப்பட வேண்டும்.&nbsp;</p><h2>கிடைக்கப்பெறும் ஆவணங்கள் என்ன கூறுகின்றன</h2><h4>
சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் (ICRC)</h4><p>


சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் பதிவுகளின்படி, 2011 டிசம்பர் 31 நிலவரப்படி
இலங்கையில் 15,780 பேரைக் கண்டறியும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.

இதில் பெரும்பான்மையினர் ஆண்கள் என்றும், 1,494 குழந்தைகள் மற்றும் 754
பெண்கள் தொடர்பான வழக்குகளும் அடங்கியிருந்ததாக அந்தக் காலகட்டத்தின் ICRC தரவுகள்
குறிப்பிடுகின்றன. </p><p>

136 நபர்கள் மட்டுமே அவர்களின் குடும்பத்தினரிடம் சேர்த்து
வைக்கப்பட்டிருந்தனர்.</p><p>

மேலும், ஐ.சி.ஆர்.சி (ICRC) அமைப்பு முந்தைய ஆண்டில்
17,741 சிறைக் கைதிகளைச் சென்று பார்வையிட்டிருந்தது.</p><h4>

ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு (AHRC)</h4><p>

2012 ஜூலை மாதம் வெளியிடப்பட்ட அறிக்கையிலும் 15,780 காணாமல் போனோர் தொடர்பான
எண்ணிக்கை குறிப்பிடப்பட்டுள்ளது. </p><p>

இதில் குழந்தைகள் மற்றும் பெண்கள் தொடர்பான வழக்குகளும் அடங்குகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d04ad15f-b2b1-48c2-af9e-c342d6212878/26-6a9a74ea69e89.webp' /></p><p>
</p><h4>

அம்னெஸ்டி இன்டர்நேஷனல் (AI)</h4><p>

இலங்கை, உலகில் அதிகளவிலான ஆட்கள் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் இடம்பெற்ற
நாடுகளில் ஒன்றாகும். 1980களின் பிற்பகுதியிலிருந்து 60,000 முதல் 100,000
வரையிலான ஆட்கள் காணாமல் ஆக்கப்பட்டதாகக் கூறப்படும் வழக்குகள் நிலுவையில்
உள்ளன.

இந்த சம்பவங்களுக்குப் பொறுப்புக்கூறல் இல்லாத நிலையைக் கருத்திற் கொண்டு,
இலங்கையில் நீதி மறுக்கப்பட்டதற்கான சான்றுகளுக்குப் பஞ்சமில்லை என அம்னெஸ்டி
இன்டர்நேஷனல் (Amnesty International) சுட்டிக்காட்டியுள்ளது.
</p><h4>



காணாமல் போனோர் தொடர்பான ஆணைக் குழுக்கள்</h4><p>

இலங்கையில் காணாமல் போனோர் தொடர்பாக அமைக்கப்பட்ட விசாரணை ஆணைக் குழுக்களுக்கு 18,000க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைத்ததாக 2014ஆம் ஆண்டில்
தெரிவிக்கப்பட்டது.</p><h4>


இலங்கையின் காணாமல் போனோர் அலுவலகம் (OMP)</h4><p>இலங்கையில் 17,000 காணாமல் போனோர் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவற்றில்
பெரும்பாலானவை சிறிலங்கா - விடுதலை புலிகள் (LTTE) போருடன் தொடர்புடையவை.</p><h4>


இலங்கை காணாமல்போன ஆட்களைப் பற்றிய அலுவலகம் (OMP)</h4><p>எங்களது தரவுத் தளத்தில் 23,352 வழக்குகள் கையாளப்பட்டு வருகின்றன" என்று
ஆகஸ்ட் 30 அன்று அனுசரிக்கப்படும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச
தினத்தை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய தலைவரான மகேஷ் கட்டுலந்த கடந்த வியாழக்கிழமை தெரிவித்தார். </p><p>

இரட்டிப்பாகப் பதிவானவை மற்றும் போரில்
காணாமல் போன இராணுவத்தினரின் (missing in action) கோப்புகளை நீக்கிய பின்னர்,
தற்போது 16,966 காணாமல் போனோர் வழக்குகள் உள்ளதாக அவர் மேலும் கூறினார்.
</p><p>
அதிகாரப்பூர்வ மதிப்பீட்டின்படி, 1,00,000க்கும் அதிகமான மனித உயிர்களைப்
பலி வாங்கிய
போர் முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து, சுமார் 20,000 பேர் காணாமல் போயுள்ளதாகக்
கருதப்படுகின்றது.</p><h4>




பிரித்தானியத் தமிழர் பேரவை (BTF)</h4><p>

நம்பகமான ஆவணச் சான்றுகளின் அடிப்படையில், போரின் இறுதிக் கட்டத்தில் கைது
செய்யப்பட்ட அல்லது சரணடைந்த 18,000க்கும் மேற்பட்ட காணாமல் ஆக்கப்பட்ட தமிழ்
உறவுகள் பற்றிய தகவல்களை வெளியிடுமாறும், அவர்களிற்கு என்ன நடந்ததது என்பதைத்
தெளிவுபடுத்துமாறும் பிரித்தானியத் தமிழர் பேரவை (BTF) ஒரு தசாப்தத்திற்கும்
மேலாகத் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறது.</p><h2>சர்வதேச சமூகத்திற்கான உடனடி கோரிக்கைகள்</h2><p>
01. முழுமையான பெயர்ப் பட்டியலை வெளியிடுதல்: சிறிலங்கா அரசும் ஏனைய
பங்குதாரர்களும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் பெயர்ப் பட்டியல், காணாமல்
ஆக்கப்பட்ட திகதிகள் மற்றும் இரத்த உறவினர்களை தொடர்பு கொள்ளும் விபரங்கள்
அடங்கிய விரிவான பட்டியலை வெளியிடுவதற்கு சர்வதேச சமூகம் அவர்கள் மீது
அழுத்தத்தைப் பிரயோகிக்க வேண்டும்.</p><p>

02. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள்: பாதிக்கப்பட்ட அனைவரினதும்
மேற்குறித்த விபரங்கள் 1) ஒரே விரிவான *பொது தரவுத்தளத்தில் (centralised
database) பதிவு செய்யப்படுவதை உறுதி செய்யவும், 2) தம்மிடம் கைவசம் உள்ள
பட்டியல்களை ஐ.நா (UN) நிறுவனங்களுடன் ஒப்பிட்டுப் பார்த்து நம்பகமான
முழுமையான பெயர் பட்டியலை விரைவாக வெளிக் கொண்டு வருவதற்கு அனைவரையும் இணைத்து ஒற்றுமையாக செயல்பட வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/60734200-b7d3-489e-9ccf-dbcfe68e82b4/26-6a9a74eb1ce04.webp' /></p><p>
</p><p>
03. சர்வதேச டி.என்.ஏ தரவு வங்கி - பொது தரவுத்தளம் (centralised database):
செம்மணியில்
கண்டெடுக்கப்பட்ட 583 மனித எலும்புக்கூடுகள் மற்றும் பிற இடங்களில்
கண்டுபிடிக்கப்பட்ட எலும்புக்கூடுகளை, டி.என்.ஏ தரவு வங்கியைக் கொண்டு விரைவாக
அடையாளம் காண மேற்படி பொது தரவுத்தளம் (centralised database)
வழிவகுக்கும்.
</p><p>
 இந்தப் பட்டியல் இல்லையெனில், இந்த மனித எச்சங்களை அடையாளம் காண்பதற்கான வாய்ப்புகள் மிகக் குறைந்து விடும்.
</p><p>
சர்வதேச மேற்பார்வையின் கீழ் டி.என்.ஏ தரவு வங்கியை நிறுவுதல், இலங்கையிலும்
மற்றும் உலகளாவிய புலம்பெயர் தமிழ் மக்களிடையேயும் DNA ஒப்பீட்டு
மாதிரிகளை (reference
samples) சேகரித்தல், மனித எச்சங்களிலிருந்து பெறப்படும் DNA மாதிரிகளுடன் இவை
ஒப்பிடப்பட்டு, அடையாளம் காணும் செயல்முறை வெளிப்படையாகவும் சுயாதீனமாகவும்
மேற்கொள்ளப்பட வேண்டும். 

DNA ஒப்பீட்டுச் செயல்பாட்டை (DNA matching process) ஐக்கிய
இராச்சியம் அல்லது ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடு ஒன்றில்
மேற்காள்ளுதல்.
</p><p>
04. டி.என்.ஏ சேகரிப்பிற்கான அனுமதி: குற்றங்கள் நடைபெற்ற இடங்களிலிருந்து
சேகரிக்கப்பட்டு பாதுகாக்கப்படும் எலும்புக்கூடுகள் மற்றும் பிற உடல்
எச்சங்களுடன் ஒப்பீடு செய்வதற்கும், டி.என்.ஏ மாதிரிகளைச் சேகரிப்பதற்கும்
இலங்கை அரசு ஐக்கிய இராச்சியம் (UK) அல்லது ஐரோப்பிய ஒன்றிய (EU) உறுப்பு
நாட்டிற்கு அனுமதி அளிக்க வேண்டும்.</p><p>
05. தடயவியல் நிபுணர்களைப் பணியமர்த்துதல் (Forensic Experts Deployment): மினசோட்டா
நெறிமுறை (Minnesota Protocol) மற்றும் சர்வதேச குற்றவியல் சட்டத்
தரநிலைகளுக்கு முழுமையாகக் கட்டுப்படுவதை உறுதி செய்வதற்காக, கண்டறியப்பட்ட
அனைத்து மனிதப் புதைகுழி இடங்களுக்கும் அங்கீகாரம் பெற்ற தடயவியல்
மானுடவியலாளர்கள் (Forensic Anthropologists), நோயியல் நிபுணர்கள்
(Pathologists) மற்றும் சட்ட நிபுணர்களை உடனடியாகப் பணியமர்த்துதல்.
</p><p>
06. புவிசார் மற்றும் செயற்கைக்கோள் பகுப்பாய்வு (Geospatial &amp; Satellite Analysis)
: மோதல் காலம் மற்றும் மோதலுக்குப் பிந்தைய காலப் பகுதிகளைச் சேர்ந்த, அறியப்பட்ட
மற்றும் சந்தேகிக்கப்படும் அனைத்து மனிதப் புதைகுழி இடங்களிலும் செயற்கைக்கோள்
படத் தொகுப்பு மற்றும் புவிசார் பகுப்பாய்வை மேற்காள்ளுதல்.</p><p>
</p><p>
07. மனிதப் புதைகுழிகளின் பாதுகாப்பும் உடனடி அகழ்வாராய்ச்சியும்: உடனடியான
அகழாய்வுபணிகளை (Immediate Excavations) மண்டைதீவு மற்றும் சாட்சிகளின்
வாக்குமூலங்கள், தடயவியல் சான்றுகள் மூலம் சுட்டிக் காட்டப்பட்ட பிற இடங்கள்
உட்பட மனித புதைகுழிகள் கண்டறியப்பட்ட அனைத்து இடங்களிலும் உடனடியாகத் அகழ்வு
பணிகளைத் தொடங்குதல்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3eea105f-c55c-492c-88aa-d21213d75660/26-6a9a74ebc6f52.webp' /></p><p>
</p><p>
08. சான்றுகளைப் பாதுகாத்தல் (Evidence Protection): சான்றுகள் அழிக்கப்படுவதையோ
மாற்றப்படுவதையோ தடுக்கும் வகையில் அனைத்து தடயவியல் சான்றுகளையும் சம்பவ
இடங்களையும் (குற்றவியல் இடங்கள்) பாதுகாத்து பராமரித்தல்.</p><p>

09. பாதிக்கப்பட்ட குடும்பங்களின் முழுமையான பங்கேற்பு (Victim Family Involvement)
: அனைத்து விசாரணைச் செயல்பாடுகளிலும் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் முழுமையான
பங்கேற்பை உறுதிசெய்தல். காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்கள் வெறும் தகவல்
பெறுபவர்களாக அல்லாமல், விசாரணை மற்றும் அடையாளம் காணும் செயல்முறையின்
முக்கிய பங்குதாரர்களாக கருதப்பட வேண்டும்.
</p><p>
மேலும் அவர்களுக்கு விசாரணையின் முன்னேற்றம் குறித்த தகவல், DNA பரிசோதனை
முடிவுகள், மனித எச்சங்களின் அடையாளம் தொடர்பான தகவல், சட்ட உதவி, உளவியல்
மற்றும் சமூக ஆதரவு வழங்கப்பட வேண்டும்.</p><p></p><p>

10. தடையற்ற மேற்பார்வை (Unrestricted Oversight): அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச
தரநிலைகளுக்கு அமைவாக, அடையாளங் காணும் செயல்பாட்டில் ஈடுவதற்கு சர்வதேச
தடயவியல் நிபுணர்கள் மற்றும் தொழில்நுட்ப நிபுணர்களுக்கு முழுமையான, தடையற்ற
அனுமதியை வழங்குதல். அவர்களுக்கு ஆவணங்கள், தரவுத்தளங்கள், புதைகுழி இடங்கள்
மற்றும் தடயவியல் ஆதாரங்களுக்கு முழுமையான தடையற்ற அணுகல் வழங்கப்பட வேண்டும்.</p><p>

11. காலக்கெடுவுடன் கூடிய வெளிப்படையான அறிக்கையிடல்: பாதிக்கப்பட்டவர்களை
அடையாளம் காணுவது குறித்த முன்னேற்றம், குற்றங்கள் இழைக்கப்பட்ட
விவரங்கள், அடையாளம்
காணப்பட்ட குற்றவாளிகள் மற்றும் கட்டளைச் சங்கிலி (chain of command) ஆகியவை
குறித்து வெளிப்படையான அறிக்கையிடலை உறுதி செய்ய அவ்வப்போது அறிக்கைகளை
வெளியிடுதல். அதில் எத்தனை வழக்குகள் விசாரிக்கப்பட்டுள்ளன, எத்தனை பேர்
அடையாளம் காணப்பட்டுள்ளனர், எத்தனை மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன, எத்தனை
DNA ஒப்பீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன, எத்தனை குடும்பங்களுக்கு முடிவுகள்
அறிவிக்கப்பட்டன என்பது போன்ற தகவல்கள் குறித்த இடைவெளிகளில் பொதுமக்களுக்கு
வெளியிடப்பட வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9852aa58-5334-4f54-883c-a35f3a3223ab/26-6a9a74ec78738.webp' /></p><p>
</p><p>
12. பொறுப்புக்கூறல் (Accountability): வலிந்து காணாமல் ஆக்குதல் என்பது ஒரு
குடும்பத்தின் தனிப்பட்ட துயரம் மட்டுமல்ல. அது மனித உரிமைகளையும் சட்டத்தின்
ஆட்சியையும் அடிப்படையாகத் தாக்கும் ஒரு தீவிரமான குற்றமாகும்.

 எனவே, விசாரணைகள்
காணாமல் ஆக்கப்பட்டோரின் நிலையை அறியும் முயற்சியில் மட்டுமே முடிவடையக்
கூடாது. கட்டளைப் பொறுப்பு (command responsibility), நிறுவனப் பொறுப்பு
(institutional
responsibility) மற்றும் அரச பொறுப்பு (state responsibility) குறித்து
விசாரணை நடத்துதல் என தொடர் நடவடிக்கை தேவை.
</p><p>
13. உடல் எச்சங்களை உறவினரிடம் கையளித்தல்: தோண்டி எடுக்கப்பட்ட மனித எச்சங்களை
அவர்களின் இரத்த உறவினர்களிடம் ஒப்படைப்பதை உறுதி செய்வதுடன், குடும்பங்கள்
தங்களது இறுதி மரியாதையைச் செலுத்துவதற்கும், இறுதிச் சடங்குகளைக் கண்ணியமான
முறையில் நிறைவேற்றுவதற்கும் அனுமதித்தல்.

காலம் மிகவும் முக்கியமானது. நீதி மற்றும் பொறுப்புக்கூறல் சார்ந்த
செயல்பாடுகளைத் தாமதப்படுத்துவதே தொடர்ச்சியாக வந்த இலங்கை அரசுகளின் நீண்ட
கால உத்தியாகும்.</p><p>தற்காலிக விசாரணைக் குழுக்கள் அமைத்தல், மற்றும் உறுப்பு
நாடுகள், பிராந்திய அமைப்புகள் (ஐரோப்பிய ஒன்றியம் போன்றவை), உலக வங்கி, சர்வதேச
நாணய நிதியம் (IMF) போன்ற சர்வதேச நிறுவனங்களுக்கு வழங்கப்படும் போலி
வாக்குறுதிகள் மூலம், ஐ.நா அமைப்புகளின் அழுத்தத்தைத் தணிப்பதே இந்தத்
தாமதத்தின் நோக்கமாகும்.

எனவே, இலங்கை தெளிவான முடிவுகளை வெளிப்படுத்துவதை உறுதி செய்ய, குறிப்பிட்ட
காலக் கெடுவுடன் கூடிய நடைமுறைத் திட்டத்தை சர்வதேச சமூகம் வகுக்க வேண்டும்.</p><h2>சர்வதேச சமூகத்திற்கான அழைப்பு</h2><p>
பல தசாப்தங்களாக உண்மைக்காகக் காத்திருக்கும் குடும்பங்களை மேலும்
காத்திருக்கச் சொல்வது ஏற்றுக் கொள்ள முடியாதது. 

தற்காலிக ஆணைக்
குழுக்களும், எதிர்கால
நடவடிக்கைகள் குறித்த வெறுமனே வாக்குறுதிகளும் இனிப் போதாது. </p><p>அளவிடக் கூடிய
முடிவுகள், தெளிவான காலக்கெடுக்கள் மற்றும் சர்வதேச கண்காணிப்பு என்பனவே
தற்போதைய அவசிய தேவைகளாகும்.
</p><p>
ஆகவே, ஐக்கிய நாடுகள் சபை, ஐரோப்பிய ஒன்றியம், ஐக்கிய இராச்சியம் மற்றும் பிற
சர்வதேச அமைப்புகள், இலங்கை அரசாங்கத்துடனான இராஜதந்திர, பொருளாதார மற்றும்
நிதி நிறுவனங்கள் சார்ந்த ஈடுபாடுகளில் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான உண்மை,
நீதி மற்றும் பொறுப்புக்கூறலை முதன்மை நிபந்தனைகளாக முன்னிறுத்த வேண்டும்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8688363d-6334-4606-9932-8e7a3ed87105/26-6a9a74ed2b33e.webp' /></p><h2>எமது முதன்மை முன்னுரிமைகள்</h2><p>
01. குற்றவியல் நீதி (Criminal Justice): இலங்கை, பொறுப்புக்கூறல் மற்றும் OSLAP உட்பட
நீதிச் செயல்பாடுகளில் சர்வதேச சமூகத்துடன் ஒத்துழைப்பதையும், சர்வதேச
குற்றவியல் நீதி முறைமைக்கு (international criminal justice mechanism)
உடன்படுவதையும்
உறுதிசெய்தல்.
</p><p>
02. மீண்டும் நிகழாமை (Non-Recurrence): உரிய அதிகாரப் பகிர்வு, தமிழ்
தேசத்திற்கான அதிகாரப்பூர்வ அங்கீகாரம் மற்றும் தமிழ் மக்களின் நியாயமான
அபிலாசைகளுக்கான அங்கீகாரம் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு அரசியல் தீர்வைப்
உறுதிப்படுத்துதல்.</p><p>

03.இழப்பீடுகள் (Reparations): தமது பாரம்பரிய தாயகத்திலிருந்து வெளியேறிய,
வெளியேற்றப்பட்ட
தமிழர்களை உடனடியாக மீளக் குடியேற்றுவதற்கும் விரும்புவோரின் முழு
சம்மதத்துடன் தாயகத்திற்கு அழைத்து வருவதற்கும் உடனடி நடவடிக்கைகளை
எடுத்தல்,&nbsp; போரினால்
பாதிக்கப்பட்ட பிரதேசத்தை மறுசீரமைத்து, வடக்கு-கிழக்கு பிராந்தியத்தை தீவின்
ஏனைய பகுதிகளுக்கு இணையான நிலைக்குக் கொண்டு வருதல்.
</p><p>
வடக்கு - கிழக்குப் பிரதேசங்களில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் நிலம்,
வாழ்வாதாரம், சமூக உட்கட்டமைப்பு மற்றும் நீண்டகால மறுசீரமைப்பு தொடர்பான
பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்பட வேண்டும்.

காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்களில் பலர் பல ஆண்டுகளாகத் தங்களது
அன்புக்குரியவர்களின் நிலை குறித்து எந்த உறுதியான தகவலும் இன்றி வாழ்ந்து
வருகின்றனர்.&nbsp;&nbsp;</p><h2>நீதி மேலும் தாமதிக்கப்படக் கூடாது..</h2><p>

ஒவ்வொரு ஆண்டும் தாமதமாகும் போது, சாட்சிகள், ஆவணங்கள் மற்றும் பிற ஆதாரங்கள்
இழக்கப்படும் அபாயம் அதிகரிக்கிறது. மேலும், வயதான பெற்றோர்கள் தங்களது
பிள்ளைகளின் உண்மையான நிலையை அறியாமலேயே இறந்து போகும் நிலையும் தொடர்கிறது.
</p><p>
இனி ஒரு குடும்பமும் “என் அன்புக்குரியவர் எங்கே?” என்ற கேள்வியுடன் வாழ
வேண்டிய நிலை ஏற்படக் கூடாது.
</p><p>
எனவே, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் பெயர்ப் பட்டியலை வெளியிடுவது உட்பட,
உண்மை, அடையாளம் காணுதல், நீதி மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பான அனைத்து
நடவடிக்கைகளுக்கும் தெளிவான காலக்கெடுவுடன் கூடிய சர்வதேச கண்காணிப்பு
செயல்திட்டம் உடனடியாக உருவாக்கப்பட வேண்டும்.
</p><p>
உண்மை மறைக்கப்படக்கூடாது, பெயர்கள் மறைக்கப்படக்கூடாது, சான்றுகள்
அழிக்கப்படக்கூடாது, நீதி மேலும் தாமதிக்கப்படக் கூடாது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-04T07:38:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[பதற்றத்தில் பிரபல அரசியல்வாதிகள்! ஆபத்தான நபரின் வாக்குமூலத்தில் அடுத்தடுத்து சிக்கவுள்ள பலர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/shiran-pasik-case-politicians-investigation-cid-1788505093"></link>
            <id>https://tamilwin.com/article/shiran-pasik-case-politicians-investigation-cid-1788505093</id>
            <summary type="text">சக்திவாய்ந்த போதைப்பொருள் கடத்தல்காரரான ஷிரான் பாசிக் வெளிப்படுத்திய தகவலின்படி அடுத்து வரும் நாட்களில் மேலும் பல அரசியல்வாதிகள் விசாரணைக்காக அழைக்கப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>சக்திவாய்ந்த போதைப்பொருள் கடத்தல்காரரான ஷிரான் பாசிக் வெளிப்படுத்திய தகவலின்படி அடுத்து வரும் நாட்களில் மேலும் பல அரசியல்வாதிகள் விசாரணைக்காக அழைக்கப்பட உள்ளதாக மத்திய குற்றப்புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது.
</p><p>
சமீபத்தில் வெளிநாட்டிலிருந்து நாட்டிற்கு அழைத்து வரப்பட்ட ஷிரான் பாசிக்குடன் நெருங்கிய தொடர்பினை பேணி, அவரிடமிருந்து கோடிக்கணக்கான பணம் மற்றும் சலுகைகளை பெற்றதாக முன்னாள் அமைச்சர்கள், தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் உட்பட 10 முக்கிய அரசியல்வாதிகள் மற்றும் பிரபலங்கள் குறித்து மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
</p><h2>சர்ச்சைக்குரிய கட்டுமான அனுமதி</h2><p>
இதன் ஒரு கட்டமாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோவிடமும் நேற்று (03) சுமார் 4 மணி நேரம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0706cd95-c4ac-453a-a79b-ba506fce6f83/26-6a9a743ecd8f2.webp' />&nbsp;</p><p>

ஷிரான் பாசிக் சொந்தமானது என்று கூறப்படும் தெஹிவளை கடற்கரையில் உள்ள ஒரு ஹோட்டலுக்கான சர்ச்சைக்குரிய கட்டுமான அனுமதி தொடர்பாக இந்த விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
</p><p>
அவர் முன்னாள் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு இராஜாங்க அமைச்சராக இருந்தபோது குறித்த ஹோட்டல் கட்டப்பட்டமை தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியொருவர் கூறியுள்ளார்.</p><h2>பல அரசியல்வாதிகளிடம் விசாரணை</h2><p> 

ஹோட்டல் கட்டப்பட்ட நேரத்தில் பிரதி அமைச்சராக இருந்த அருந்திக பெர்னாண்டோ, அந்த இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளார் என்பது விசாரணையின் போது தெரியவந்துள்ளது.</p><p>இதேவேளை, தெஹிவளை - கல்கிஸ்ஸ முன்னாள் மேயர் தனசிறி அமரதுங்கவிடமும் மத்திய குற்றப் புலனாய்வுப்பிரிவு (CCID) (01) திகதி சுமார் நான்கு மணி நேரம் வாக்குமூலம் பதிவு செய்திருந்ததது.</p><p>
இதற்கமைய, எதிர்வரும் காலங்களில் மேலும் பல அரசியல்வாதிகள் விசாரணைக்காக அழைக்கப்பட உள்ளதாக மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-04T07:33:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[குடும்பத்துடன் வெளிநாட்டிற்கு டூர் சென்றுள்ள நடிகை நயன்தாரா... வீடியோ இதோ]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/nayanthara-italy-vacation-with-her-family-1788506499"></link>
            <id>https://cineulagam.com/article/nayanthara-italy-vacation-with-her-family-1788506499</id>
            <summary type="text">நயன்தாராகடந்த ஆகஸ்ட் 26ம் தேதி யஷ் நடிப்பில் திரைக்கு வந்த திரைப்படம் டாக்சிக். இந்த படத்தில் யஷின் சகோதரியாக முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை நயன்தாரா ...</summary>
            <content type="html"><![CDATA[<h2>நயன்தாரா</h2><p>கடந்த ஆகஸ்ட் 26ம் தேதி யஷ் நடிப்பில் திரைக்கு வந்த திரைப்படம் டாக்சிக். </p><p>இந்த படத்தில் யஷின் சகோதரியாக முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை நயன்தாரா நடித்திருந்தார். ஆனால் இப்படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்ததால் இப்படம் பாக்ஸ் ஆபிஸில் சொதப்பியது.
</p><p>அதேபோல் நயன்தாராவிற்கு இப்படம் பெரிய பெயர் பெற்றுத்தரவில்லை. இப்படத்தை தொடர்ந்து நயன்தாரா கவினுடன் இணைந்து ஹாய் படத்தில் நடித்திருந்தார், இப்படம் கடந்த ஆகஸ்ட் 28ம் தேதி வெளியாகி இருந்தது. இந்த படமும் ரசிகர்கள் கொண்டாடும் அளவு பெரிய வரவேற்பு பெறவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/98b674c6-0985-4469-9bbc-d04170707509/26-6a9a73aed6a50.webp' /></p><h2>
குடும்பம்</h2><p>
சினிமாவில் பிஸியாக படங்கள் நடித்துவரும் நயன்தாரா தனது குடும்பத்துடன் நேரம் செலவிடுவதை மிஸ் செய்வதில்லை. </p><p>அண்மையில் தனது குழந்தைகள் மற்றும் கணவருடன் இத்தாலிக்கு டூர் சென்றுள்ளார். அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்கள், வீடியோக்களை நடிகை நயன்தாரா தனது இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார்.</p><p><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/reel/Dc2dTLSvbLD/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/reel/Dc2dTLSvbLD/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/reel/Dc2dTLSvbLD/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by N A Y A N T H A R A (@nayanthara)</a></p></div></blockquote> <script async src="//www.instagram.com/embed.js"></script></p>]]></content>
            <updated>2026-09-04T07:31:19+00:00</updated>
        </entry>
    </feed>
