<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-08-27T14:34:42+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[16-வது திருமண நாளைக் கொண்டாடும் நடிகர் சிவகார்த்திகேயன் - ஆர்த்தி தம்பதி ... குவியும் வாழ்த்துக்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/sivakarthikeyan-aarthy-wedding-anniversary-photos-1787839429"></link>
            <id>https://manithan.com/article/sivakarthikeyan-aarthy-wedding-anniversary-photos-1787839429</id>
            <summary type="text">நடிகர் சிவகார்த்திகேயன் - ஆர்த்தி தம்பதியினர் தங்களின் 16 ஆவது திருமண நாளை கொண்டாடும் வகையில் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வாழ்த்துக...</summary>
            <content type="html"><![CDATA[<p>நடிகர் சிவகார்த்திகேயன் - ஆர்த்தி தம்பதியினர் தங்களின் 16 ஆவது திருமண நாளை கொண்டாடும் வகையில் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வாழ்த்துக்களை குவித்து வருகின்றது.&nbsp;</p><h2>நடிகர் சிவகார்த்திகேயன்</h2><p>நடிகர், தயாரிப்பாளர், பாடகர் மற்றும் பாடலாசியர் என பல துறைகளில் பணியாற்றி வருபவர் சிவகார்த்திகேயன்.இவருக்கு சிறிவர்களின் ரசிகர் பட்டாளம் சற்று அதிகம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ef09f2d7-4fc7-4ad6-bcbb-e67e4a251bc2/26-6a90496f2276e.webp' /></p><p></p><p>பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'கலக்க போவது யாரு' நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக பங்குபெற்று பிரபலமானவர்.</p><p>



பின்னர் தனது மிமிக்ரி திறமையை கொண்டு மக்களின் ஆதரவை பெற்று அதே தொலைக்காட்சியில் பணியாற்றி புகழ் பெற்றார்.

கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான ‘மெரினா’ என்கிற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8dba6043-556b-4856-b60a-c5b50429409b/26-6a90496fd131f.webp' /></p><p>அதற்கு முன்னாள் சில விளம்பரங்களிலும், படங்களிலும் தலைக்காட்டிய சிவா, ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படம் மூலம் பட்டித்தொட்டியெங்கும் நடிகர் சிவகார்த்திகேயன் பிரபலமானார்.</p><p>இதைத் தொடர்ந்து எதிர்நீச்சல், மான் கராத்தே, காக்கிச்சட்டை, ரஜினி முருகன், ரெமோ, வேலைக்காரன், சீமராஜா, மிஸ்டர் லோக்கல், நம்ம வீட்டுப் பிள்ளை, டாக்டர், டான், பிரின்ஸ், மாவீரன் ஆகிய பல படங்களில் சூப்பர் ஹிட் கொடுத்து புகழின் உச்சத்தில் இருக்கின்றார்.இறுதியாக சிவகார்தி்கேயன் நடிப்பில் வெளியான பராசக்தி&nbsp; திரைப்படம் சூப்பர் ஹிட் கொடுத்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ebd1ffdc-1394-4bf3-a7e8-e1df540bf2b0/26-6a9049709ed7b.webp' /></p><p>இந்நிலையில்&nbsp;நடிகர் சிவகார்த்திகேயன் இன்று தனது 16-வது திருமண நாளை கொண்டாடி வருகிறார். இதையொட்டி ரசிகர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் பலரும் அவருக்கும், அவரது மனைவி ஆர்த்திக்கும் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/302867ab-d37c-4620-bcee-a6c055534b65/26-6a90497153236.webp' /></p><p></p><p>சிவகார்த்திகேயன் சினிமாவுக்கு வருவதற்கு முன்பே தனது மாமா மகளான ஆர்த்தியை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு ஆராதனா என்ற மகளும், குகன் மற்றும் பவன் என்ற இரு மகன்களும் உள்ளனர்.</p><p>&nbsp;<blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/p/DciNjLyE_3q/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/p/DciNjLyE_3q/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/p/DciNjLyE_3q/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by Aarthy Sivakarthikeyan (@aarthysivakarthikeyan_)</a></p></div></blockquote> <script async src="//www.instagram.com/embed.js"></script></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-27T14:32:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[நடிகை மோக்‌ஷாவின் ஓணம் ஸ்பெஷன் சேலை போட்டோஸ்...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/mokksha-actress-share-car-launch-event-photos-1787835782"></link>
            <id>https://viduppu.com/article/mokksha-actress-share-car-launch-event-photos-1787835782</id>
            <summary type="text">மோக்‌ஷாநடிகர் விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பல நடிப்பில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் படம் தான் கட்டா குஸ்தி 2. இப்...</summary>
            <content type="html"><![CDATA[<h2>மோக்‌ஷா</h2><p>நடிகர் விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பல நடிப்பில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் படம் தான் கட்டா குஸ்தி 2. இப்படத்தின் மீனு டீச்சர் ரோலில் நடிகை மோக்‌ஷா நடித்திருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d787c020-a2a4-426f-ae8d-98ac20aec6ae/26-6a90359140c3b.webp' /></p><p>
</p><p>
மீனு டீச்சராக நடித்து ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்த மோக்‌ஷா, பெங்காளி மொழியில் நடிக்க ஆரம்பித்தார். சப்போர்ட்டிங் ரோலில் நடித்த மோக்‌ஷா, தெலுங்கில் லக்கி லக்ஷ்மன் படத்தில் கதாநாயகியாக நடித்து அறிமுகமாகினார்.
</p><p>
அதன்பின் தெலுங்கு, மலையாளம் மொழிகளில் நடித்துள்ள மோக்‌ஷாவுக்கு இப்போது 26 வயதுதான். இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் மோக்‌ஷா, தற்போது ஓணம் ஸ்பெஷலுக்கா லான்ச் செய்யப்பட்ட காரை அறிமுகப்படுத்தியிருக்கிறார். </p><p>கோல்டன் சேலையணிந்து சென்ற புகைப்படங்களை தற்போது பகிர்ந்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-08-27T14:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அநாகரிகமாக சுற்றித் திரிந்த நபர் ; மேலும் 2 பொலிஸ் அதிகாரிகள் இடமாற்றம் !]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/ambalangoda-incident-two-more-police-transferred-1787835891"></link>
            <id>https://jvpnews.com/article/ambalangoda-incident-two-more-police-transferred-1787835891</id>
            <summary type="text">&amp;nbsp; அம்பலங்கொட பொலிஸ் நிலையத்தில் சமீபத்தில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பாக, அம்பலங்கொட பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த மற்றொரு சார்ஜென்ட் மற்றும் ஒரு பொலிஸ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; அம்பலங்கொட பொலிஸ் நிலையத்தில் சமீபத்தில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பாக, அம்பலங்கொட பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த மற்றொரு சார்ஜென்ட் மற்றும் ஒரு பொலிஸ் உத்தியோகத்தர் உடனடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.</p><p>

சம்பந்தப்பட்ட சந்தேக நபரை கைது செய்த குழுவிற்கு பொறுப்பாளராக இருந்த பொலிஸ் உதவி ஆய்வாளரும் முன்னதாகவே இடமாற்றம் செய்யப்பட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ad012fb6-a040-4885-abda-94a6d55ca454/26-6a9035f4bf281.webp' /></p><h2>குடிபோதையில் சாலையில் அநாகரிகமாக சுற்றித் திரிந்த&nbsp;நபர்,</h2><p>

இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸ் தலைமை ஆய்வாளரின் (IGP) உத்தரவின் பேரில் காலி மாவட்ட பொலிஸ் கண்காணிப்பாளரின் கீழ் தொடங்கப்பட்ட விசாரணை இன்னும் நடைபெற்று வருகிறது.</p><p></p><p>
</p><p>
காவலில் உள்ள தனது தந்தையை பொலிஸ் அதிகாரிகள் தாக்கியதாகக் கூறி, அம்பலங்கொடபொலிஸ் நிலையத்திற்குள் வன்முறையாக நடந்து கொள்ளும் ஒரு இளைஞனின் காணொளி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டது.</p><p></p><p>

காணொளியில் தந்தை என அடையாளம் காணப்பட்ட நபர், குடிபோதையில் சாலையில் அநாகரிகமாக சுற்றித் திரிந்ததற்காக அம்பலங்கொட பொலிஸ் நிலைய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-08-27T14:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலக சாம்பியன் கார்லசனை வீழ்த்திய 15 வயது இந்திய சிறுவன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/15-year-old-indian-beat-magnus-carlsen-in-chess-1787840326"></link>
            <id>https://news.lankasri.com/article/15-year-old-indian-beat-magnus-carlsen-in-chess-1787840326</id>
            <summary type="text">15 year old indian beat magnus Carlsen: செஸ் போட்டியில் உலக சாம்பியன் கார்லசனை வீழ்த்திய 15 வயது இந்திய சிறுவன் அதனை கொண்டாடாமல் தூங்க சென்றுள்ளார். ...</summary>
            <content type="html"><![CDATA[<p>15 year old indian beat magnus Carlsen: செஸ் போட்டியில் உலக சாம்பியன் கார்லசனை வீழ்த்திய 15 வயது இந்திய சிறுவன் அதனை கொண்டாடாமல் தூங்க சென்றுள்ளார். </p><h3>

கார்லசனை வீழ்த்திய 15 வயது இந்திய சிறுவன்</h3><p> 

செஸ் விளையாட்டில் உலகின் முதல்நிலை வீரராக இருப்பவர் நார்வேயை சேர்ந்த மேக்னஸ் கார்ல்சன்(Magnus Carlsen).&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/49b9e080-f456-4d5f-b6d6-e2263fd69357/26-6a9047480a7e6.webp' /></p><p>

பிரபல இணைய செஸ் தளமான Chess.com ல் வாரந்தோறும் Title Tuesday என்ற போட்டி நடைபெறும். </p><p>

இதில், கடந்த ஆகஸ்ட் ஆகஸ்ட் 18 ஆம் திகதி நடைபெற்ற போட்டியில் டெல்லியை சேர்ந்த வந்தன் அலங்கார் சவாய்(Vandan Alankar Sawai) என்ற 15 வயது சிறுவன் கலந்து கொண்டார்.&nbsp;</p><p></p><p>

அவரை எதிர்த்து மேக்னஸ் கார்ல்சன் விளையாடினார். உலகின் முதல்நிலை வீரரை எதிர்த்து விளையாடுகிறோம் என்ற பயம் இல்லாமல் விளையாடியுள்ளார்.</p><p> 

50வது நகர்வில் தனது தோல்வியை ஒப்புக்கொண்டு கார்ல்சன் வெளியேறியுள்ளார். </p><p>

 உலகின் முதல்நிலை வீரரை வீழ்த்தியதற்கு எந்த ஒரு கொண்டாட்டமும் இல்லாமல் வந்தன் தூங்க சென்று விட்டார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b69ca77e-125b-4175-bd7a-825cd81f9b94/26-6a904748b126c.webp' /></p><p>

அவரது தந்தையும் முன்னாள் வங்கி அதிகாரியுமான அலங்கார் சவாய், Chess.comல் பார்த்தபோது தான் தனது மகன் வந்தன், கார்ல்சனை வீழ்த்தியது கண்டு அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்துள்ளார்.</p><p> 

மறுநாள் இது குறித்து அவரது தந்தை கூறிய பிறகே வந்தனின் பயிற்சியாளரான குர்பிரீத் பால் சிங்கிற்கு இந்த விடயம் தெரிந்துள்ளது.</p><p> 

குர்பிரீத் பால் சிங் வந்தனுக்கு 7 ஆண்டுகளாக பயிற்சியளித்து வந்துள்ளார். வந்தன் சற்று அமைதியானவன், அதிகம் பேசாமாட்டான். அது கூச்ச சுபாவம் இல்லை ஆனால் ஒதுங்கி இருப்பான். அவன் தந்தை கூறி தான் எனக்கு இந்த வெற்றி தெரியும் என கூறியுள்ளார்.</p><p> 

இந்த வெற்றி குறித்து பேசிய வந்தன், "இழப்பதற்கு எதுவுமில்லை என்பதால் சுதந்திரமாக விளையாடினேன்" என கூறியுள்ளார். </p><p>

வந்தனின் தாய் அவரது சகோதரருடன் விளையாடும் போது வந்தனும் விளையாட கற்று வெற்றி பெற துவங்கியுள்ளார். 

ஆனால் வந்தன் செஸ் விளையாட்டை முழுநேரத் தொழிலாக மாற்றுவாரா என்பது உறுதியில்லை என்றாலும், சர்வதேச மாஸ்டர் பட்டத்தை கைப்பற்றுவது அவரது உடனடி இலக்காக உள்ளது.
</p><p>
அவருக்கு திரைப்படங்கள், புனைகதைகள் போன்றவற்றில் ஆர்வமில்லை. போர்கள் பற்றிய புத்தகங்களை படிப்பதில் ஆர்வம் காட்டுகிறார். எதிர்காலத்தில் வரலாற்றுத் துறை அல்லது அரசியல் அறிவியல் துறையில் படிக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-27T14:20:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பயிற்சி விமானம் விபத்துக்குள்ளானதில் விமானிகள் இருவர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/two-pilots-killed-in-trainer-aircraft-crash-kanpur-1787832531"></link>
            <id>https://jvpnews.com/article/two-pilots-killed-in-trainer-aircraft-crash-kanpur-1787832531</id>
            <summary type="text">&amp;nbsp; இந்தியா உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில், கங்கை நதிக்கரைக்கு அருகிலுள்ள வயல்வெளியில் இன்று (27) இரு என்ஜின்களும் நான்கு இருக்கைகளும் கொண்ட பயி...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; இந்தியா உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில், கங்கை நதிக்கரைக்கு அருகிலுள்ள வயல்வெளியில் இன்று (27) இரு என்ஜின்களும் நான்கு இருக்கைகளும் கொண்ட பயிற்சி விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
</p><p>
இந்த விபத்தில் விமானத்தின் விமானியும், துணை விமானியும் உயிரிழந்துள்ளனர்.

குஜராத்தைச் சேர்ந்த சச்சின் பாட்டியா மற்றும் கர்நாடகாவைச் சேர்ந்த அபிஷேக் பூஜாரி ஆகியோரே உயிரிழந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/82b0f0ff-7134-48ad-aee8-4a9d8438f40b/26-6a9028d53150f.webp' /></p><p></p><p>
</p><p>
சம்பவ இடத்திலிருந்து வெளியான காட்சிகள், புல் மற்றும் மரங்கள் நிறைந்த பகுதியில் விமானம் முற்றிலும் சிதைந்து கிடப்பதைக் காட்டின. 

விபத்துக்கான துல்லியமான காரணம் இன்னும் தெரியவரவில்லை.</p><p> 

விமானத்தின் மீதான கட்டுப்பாட்டை இழந்ததைத் தொடர்ந்தே இந்த விபத்து நிகழ்ந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-27T14:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாளை முதல் எதிர்வரும் 7ஆம் திகதி வரை ஏற்படவுள்ள மாற்றம்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/heat-alert-in-sri-lanka-1787836321"></link>
            <id>https://tamilwin.com/article/heat-alert-in-sri-lanka-1787836321</id>
            <summary type="text">சில பகுதிகளில் நாளை (28.08.2026) பகல் வேளையில் வெப்பச் சுட்டெண் &#039;எச்சரிக்கை&#039; நிலையை எட்டும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>சில பகுதிகளில் நாளை (28.08.2026) பகல் வேளையில் வெப்பச் சுட்டெண் 'எச்சரிக்கை' நிலையை எட்டும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
</p><p>
அதன்படி, கிழக்கு மாகாணம் மற்றும் பொலன்னறுவை, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கு இந்த வெப்பமான காலநிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
</p><p>இலங்கையில் நேற்றைய தினம் (26.08.2026) மிக உயர்ந்த வெப்பநிலை முல்லைத்தீவு மாவட்டத்தில் பதிவாகியுள்ளது. அதன்படி குறித்த வெப்பநிலை 36.7°C ஆகப் பதிவாகியுள்ளது.&nbsp;திருகோணமலை மாவட்டத்தில் வெப்பநிலை 36.4°C ஆகவும், பொலன்னறுவையில் 36°C ஆகவும் பதிவானது.

</p><h2>உச்சம் கொடுக்கவுள்ள சூரியன்</h2><p>
</p><p>இதற்கிடையில், நாளை முதல் அடுத்த மாதம் 7ஆம் திகதி வரை இலங்கையைப் பொறுத்தவரை சூரியன் நேர் உச்சியில் இருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/889aa84f-b5b3-477f-953d-ff0021c08306/26-6a90417fed620.webp' /></p><p>
</p><p>
நாளை மதியம் 12:11 மணிக்கு, கொக்குவில், நல்லூர், கொடிகாமம் மற்றும் நகர் கோவில் ஆகிய நகரங்களுக்கு நேர் மேலே சூரியன் உச்சம் கொடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இருப்பினும், நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் மழைப் பொழிவு தொடர்ந்து நீடித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் 75 மி.மீக்கு மேல் கணிசமான கனமழை எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-27T13:59:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[திருகோணமலை எண்ணெய்த் தாங்கிகள் நீண்டகால குத்தகைக்கு வழங்க நடவடிக்கை - வெளியான அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/action-to-provide-trincomalee-oil-tankers-1787838818"></link>
            <id>https://tamilwin.com/article/action-to-provide-trincomalee-oil-tankers-1787838818</id>
            <summary type="text">திருகோணமலை எண்ணெய் தாங்கிகளில் பராமரிக்காமல் கைவிடப்பட்டுள்ள 29 எண்ணெய் தாங்கிகளை நீண்டகால குத்தகை அடிப்படையில் தனியார் முதலீட்டாளர்களுக்கு வழங்க நடவட...</summary>
            <content type="html"><![CDATA[<p>திருகோணமலை எண்ணெய் தாங்கிகளில் பராமரிக்காமல் கைவிடப்பட்டுள்ள 29 எண்ணெய் தாங்கிகளை நீண்டகால குத்தகை அடிப்படையில் தனியார் முதலீட்டாளர்களுக்கு வழங்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
</p><p>
இதுதொடர்பான தகவல்களை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் மயூர நெத்திக்குமார அறிவித்துள்ளார்.
</p><p>
திருகோணமலை எண்ணெய் தாங்கி மறுசீரமைப்பு தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். </p><h2>

பராமரிக்கப்படாமல் 29 தாங்கிகள்</h2><p>
அவர் மேலும் தெரிவிக்கையில்,</p><p> 

திருகோணமலை எண்ணெய் தாங்கிகளில் இலங்கை பெற்றோலியகூட்டுத்தாபனத்துக்கு சொந்தமான எண்ணெய் தாங்கிகளை மறுசீரமைப்பதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
</p><p>
பெற்றோலிய டேர்மினல் லிமிடெட் நிறுவனத்துக்கு சொந்தமான 61 தாங்களில் 29 தாங்கிகள் முறையாக பராமரிக்கப்படாமல் கைவிடப்பட்ட நிலையில் காணப்படுகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b82de097-b749-492f-bd9b-d51017c57ddc/26-6a90421fcac44.webp' /></p><p>
</p><h2>
விண்ணப்பங்கள் கோரல் நடவடிக்கை</h2><p>
இந்த 29 தாங்கிகளை நீண்டகால குத்தகை அடிப்படையில் தனியார் முதலீட்டாளர்களுக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன, வெகுவிரைவில் அந்த பணிகள் நிறைவுப்படுத்தப்படும்.
</p><p>
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் கண்காணிப்புக்கு அமைவாக 2 தாங்கிகள் முழுமையாக புனரமைக்கப்பட்டுள்ளன. 

3 தாங்கிகள் தற்போது புனரமைக்கப்பட்ட வண்ணம் காணப்படுகின்றன. </p><p>இவை அனைத்தும் வெகுவிரைவில் நிறைவுப்படுத்தப்படும்.

திருகோணமலை எண்ணெய் தாங்கிகளில் இருந்து உச்ச பயனை பெற்றுக்கொள்வதற்கு உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. தேசிய மற்றும் சர்வதேச மட்டத்திலும் அதற்குரிய ஒத்துழைப்புக்கள் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளன என்றார்.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-27T13:57:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[காவல்துறையின் இணையவழி அனுமதிச் சான்றிதழ் குறித்து விசேட அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/police-online-clearance-certificate-1787838862"></link>
            <id>https://ibctamil.com/article/police-online-clearance-certificate-1787838862</id>
            <summary type="text">காவல்துறை அனுமதிச் சான்றிதழ்களை வழங்குவதற்குப் பயன்படுத்தப்படும் கணினிமயப்படுத்தப்பட்ட தரவு முறைமையில் ஏற்பட்ட தற்காலிக கோளாறு தற்போது சீரமைக்கப்பட்டு...</summary>
            <content type="html"><![CDATA[<p>காவல்துறை அனுமதிச் சான்றிதழ்களை வழங்குவதற்குப் பயன்படுத்தப்படும் கணினிமயப்படுத்தப்பட்ட தரவு முறைமையில் ஏற்பட்ட தற்காலிக கோளாறு தற்போது சீரமைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.</p><p>

இதன்படி, பொதுமக்கள் வழமைபோன்று இணையவழியில் காவல்துறை அனுமதிச் சான்றிதழ்களுக்கு விண்ணப்பிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
2026 ஆகஸ்ட் 20ஆம் திகதி பிற்பகல் 12.50 மணியளவில் குறித்த தரவு முறைமை செயலிழந்திருந்த நிலையில், இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிறுவனத்திற்கு அறிவிக்கப்பட்டு, தேவையான நடவடிக்கைகள் மூலம் முறைமை மீளமைக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>காவல்துறை அனுமதிச் சான்றிதழ்</h2><p>

எனினும், ஆகஸ்ட் 20ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட அனைத்து விண்ணப்பங்களும் தரவு முறைமையிலிருந்து நீக்கப்பட்டுள்ளதால், அன்றைய தினம் விண்ணப்பித்தவர்கள் புதிய விண்ணப்பத்தை இணையவழியில் மீண்டும் சமர்ப்பிக்குமாறு காவல்துறை ஊடகப் பிரிவு கேட்டுக்கொண்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e1f904e9-253b-430b-b6c6-acf21cc3636e/26-6a90419001a97.webp' /></p><p>புதிய விண்ணப்பத்திற்கான உரிய அறிக்கைகள் பெறப்பட்ட பின்னர் காவல்துறை அனுமதிச் சான்றிதழ் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>முன்னைய விண்ணப்பத்திற்காக செலுத்தப்பட்ட ரூ.5,100 கட்டணம், விண்ணப்பதாரர் பணம் செலுத்த பயன்படுத்திய கடன் அட்டைக்கு மீளச் செலுத்தப்படும் எனவும் காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...! '</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-27T13:56:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[சரவணன்-மயில் விவாகரத்து வழக்கு, நீதிபதி எடுத்த முடிவு... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புரொமோ]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/pandian-stores-2-27th-to-30th-august-2026-promo-1787837550"></link>
            <id>https://cineulagam.com/article/pandian-stores-2-27th-to-30th-august-2026-promo-1787837550</id>
            <summary type="text">பாண்டியன் ஸ்டோர்ஸ் 2குடும்பங்கள் கொண்டாடும் தொடராக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2.
கதையில் இப்போது அரசிற்கு த...</summary>
            <content type="html"><![CDATA[<h2>பாண்டியன் ஸ்டோர்ஸ் 2</h2><p>குடும்பங்கள் கொண்டாடும் தொடராக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2.
</p><p>கதையில் இப்போது அரசிற்கு திருமணம் செய்துவைக்க ஏற்பாடு செய்ய அதை கெடுக்கும் வகையில் குமார் ஒரு வேலையை செய்துவிட்டார்.</p><p> மாப்பிள்ளை வீட்டாரிடம் எனக்கும் அரசிக்கும் திருமணம் நடந்தது, என்னுடன் வாழ்ந்தால் என கூற அவர்கள் இந்த பெண் வேண்டாம் என சென்றுவிட்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0d3bb001-62ab-477d-aa82-b768b8c40ac4/26-6a903fcde7892.webp' /></p><p> </p><p>இந்த ஆத்திரத்தில் அரசி அண்ணன்கள் அவரை செமயாக அடித்தார்கள்.&nbsp;அப்போதும் திருந்தாக குமார் மீண்டும் வழியில் அரசியை பார்த்து வம்பிழுத்துள்ளார். அந்த நேரம் அங்கு வந்த கதிர்-செந்தில் அவரை மீண்டும் அடி அடியென அடித்து வெளுத்துள்ளார்கள்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9e6fa781-2248-48a8-be1d-1c2e122a2d64/26-6a903fcd264d1.webp' /></p><h2>புரொமோ
</h2><p>கடந்த 2 நாட்களாக அரசி பிரச்சனை சென்றுகொண்டிருக்க தற்போது மயில்-சரவணன் விவாகரத்து பிரச்சனை வந்துள்ளது. புரொமோவில் நீதிமன்றத்தில் நீதிபதி உங்கள் விவாகரத்து முடிவில் எந்த மாற்றமும் இல்லையா என கேட்க இருவரும் இல்லை என்கிறார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2f68384d-66f5-423d-99ed-80bb2fc46982/26-6a903fcc366fb.webp' /></p><p> </p><p>பின் மயிலை தனியாக அழைத்து பேசிய நீதிபதி, ஒரு குழந்தையை தனியாக வளர்ப்பது மிகவும் கஷ்டம், உனக்கு என்ன வேண்டும் என கேட்கிறார். </p><p>ஆனால் மயில் எனக்கு அவர்களிடம் இருந்து எதுவும் வேண்டாம் என கூற நீதிபதி அவரை முடிவை தெரிவிக்கிறார். </p><p>இதோ பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலின் புதிய புரொமோ,</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/FcrJFJxVZrU" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-08-27T13:53:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மட்டக்களப்பு மறைமாவட்ட முன்னாள் பொதுப்பணிப்பாளர் காலமானார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/reverend-father-arulanandan-devadasan-passes-away-1787837916"></link>
            <id>https://tamilwin.com/article/reverend-father-arulanandan-devadasan-passes-away-1787837916</id>
            <summary type="text">மட்டக்களப்பு மறைமாவட்டத்தின் முன்னாள் பொதுப்பணிப்பாளர் அருட்தந்தை அருளானந்தன் தேவதாசன் காலமானார்.

மட்டக்களப்பு மறைமாவட்டத்தின் முன்னாள் விகார் ஜெனர...</summary>
            <content type="html"><![CDATA[<p>மட்டக்களப்பு மறைமாவட்டத்தின் முன்னாள் பொதுப்பணிப்பாளர் அருட்தந்தை அருளானந்தன் தேவதாசன் காலமானார்.</p><p>

மட்டக்களப்பு மறைமாவட்டத்தின் முன்னாள் விகார் ஜெனரல் ஆகப் பணியாற்றிய மொன்சிஞ்ஞோர் அருளானந்தன் தேவதாசன், இன்று(27.08.2026) அமைதியாக இறைவனடி சேர்ந்தார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
</p><h2>
இரங்கல் தெரிவிக்கும் மக்கள்</h2><p>
நீண்டகாலமாக குருத்துவப் பணியாற்றிய அவர், மட்டக்களப்பு மறைமாவட்டத்தின் நிர்வாகம், ஆன்மிக வழிகாட்டல் மற்றும் சமூகப் பணிகளில் முக்கிய பங்காற்றியவராக நினைவுகூரப்படுகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/40e9c5bd-fe80-4c97-89c3-5a59a590ae0a/26-6a903e432333c.webp' /></p><p> 

மக்களுடன் அன்பாகப் பழகிய ஆன்மிக மேய்ப்பராகவும், கருணைமிக்க தலைவராகவும், நெருக்கடியான காலங்களில் அமைதியாக வழிகாட்டிய ஆலோசகராகவும் அவர் திகழ்ந்தார்.</p><p>

அவரது தன்னலமற்ற இறைபணி, ஆழமான விசுவாசம், எளிமையான அணுகுமுறை மற்றும் சமூகத்திற்குச் செய்த சேவைகள் மட்டக்களப்பு மறைமாவட்ட மக்களின் நினைவுகளில் என்றும் நிலைத்திருக்கும் என இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp; &nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-27T13:40:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈழத்தின் சைவ, தமிழ் மரபுகளை சிதைக்கும் கலாசார சீர்கேடு! எழுந்துள்ள கண்டனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/cultural-corruption-is-destroying-tamil-traditions-1787837693"></link>
            <id>https://ibctamil.com/article/cultural-corruption-is-destroying-tamil-traditions-1787837693</id>
            <summary type="text">சைவ சமய மரபுகளைச் சிதைக்கும் கலாச்சாரச் சீர்கேடுகளுக்கு இந்து குருமார் அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
மங்கள காரியங்கள், ஆலய வழிபாட்டு முறைகள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>சைவ சமய மரபுகளைச் சிதைக்கும் கலாச்சாரச் சீர்கேடுகளுக்கு இந்து குருமார் அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
</p><p>மங்கள காரியங்கள், ஆலய வழிபாட்டு முறைகள் உள்ளிட்ட பாரம்பரிய நடைமுறைகள் முறையாகப் பேணப்பட வேண்டும் என இன்று வெளியிட்ட அறிக்கையில் வலியுறுத்தியுள்ளது.
</p><p>திருமணம், இறப்பு உள்ளிட்ட சடங்குகளில் இடம்பெறும் தேவையற்ற மாற்றங்கள் மற்றும் பாரம்பரியத்திற்கு முரணான செயற்பாடுகளைத் தவிர்க்குமாறும் அந்த அமைப்பு கோரியுள்ளது.</p><p>இது தொடர்பில் பொதுமக்கள், ஆலய நிர்வாகிகள் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினர் உரிய கவனம் செலுத்த வேண்டும் என இந்து குருமார் அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.&nbsp; &nbsp;&nbsp;</p><p></p><p></p><p></p><p><b>you may like this</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/D9ODhOhjET4" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...! '</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-27T13:35:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[நடிகை சாய் பிரியா தேவாவின் ஓணம் ஸ்பெஷல் கிளிக்ஸ்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/sai-priya-deva-recent-onam-special-photos-1787837035"></link>
            <id>https://viduppu.com/article/sai-priya-deva-recent-onam-special-photos-1787837035</id>
            <summary type="text">சாய் பிரியா தேவாமலையாள சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகையாக திகழ்ந்து வருபவர் தான் நடிகை சாய் பிரியா தேவா. ராகவா லாரன்ஸ் நடித்த சிவலிங்கா படத்தில் ...</summary>
            <content type="html"><![CDATA[<h2>சாய் பிரியா தேவா</h2><p>மலையாள சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகையாக திகழ்ந்து வருபவர் தான் நடிகை சாய் பிரியா தேவா. ராகவா லாரன்ஸ் நடித்த சிவலிங்கா படத்தில் சங்கீதா என்ற ரோலில் நடித்து பிரபலமானவர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6cdfbcab-1e67-4471-ad55-8c90166fb5e4/26-6a903a735899f.webp' /></p><p> Ente Ummante Peru என்ற மலையாள படத்திலும் அறிமுகமாகி நல்ல வரவேற்பை பெற்றார். அதன்பின் யுத்த சத்தம், டைனோசர்ஸ், பம்பட்டம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.</p><p> இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் சாய் பிரியா, ஓணம் ஸ்பெஷலாக எடுத்த க்யூட் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-08-27T13:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[செப்டம்பர் 6 இல் பிக்பாஸ் தமிழ் சீசன் 10 ; பெரும் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/bigg-boss-tamil-season-10-on-september-6-1787836626"></link>
            <id>https://jvpnews.com/article/bigg-boss-tamil-season-10-on-september-6-1787836626</id>
            <summary type="text">&amp;nbsp; விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் தமிழ் சீசன் 10 மிகப் பிரம்மாண்ட தொடக்க விழா வரும் செப்டம்பர் 6 அன்று மாலை 06:00 முதல் நேரடியாக ஒளிபரப்பாகவுள்ளத...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் தமிழ் சீசன் 10 மிகப் பிரம்மாண்ட தொடக்க விழா வரும் செப்டம்பர் 6 அன்று மாலை 06:00 முதல் நேரடியாக ஒளிபரப்பாகவுள்ளது. </p><p>

 இந்த முறை ஓடிடி தளமான ஜியோஹாட்ஸ்டார் தளத்தில் இந்நிகழ்ச்சி ஸ்ட்ரீமிங் செய்யப்படவுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fb5a8ab4-9e91-4510-8b01-8b75e5dc9f32/26-6a9038d3d25b2.webp' /></p><h2>பெரும் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்&nbsp;</h2><p> 

 

உலகநாயகன் கமல்ஹாசனுக்குப் பிறகு பிக்பாஸ் மேடையை அலங்கரித்த விஜய் சேதுபதி, தனது முதல் சீசனிலேயே (சீசன் 9) போட்டியாளர்களைக் கையாண்ட விதம் மற்றும் வார இறுதி நாட்களில் அவர் காட்டிய 'மக்கள் செல்வன்' பாணிக்கு மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது.</p><p></p><p> </p><p>

தற்போது பிக்பாஸ் தமிழ் தனது 10 ஆவது சீசனை எட்டியுள்ள நிலையில், விஜய் சேதுபதியின் வருகை இந்த மைல்கல் சீசனை இன்னும் விறுவிறுப்பாகவும், பொழுதுபோக்கு நிறைந்ததாகவும் மாற்றும் என்று சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.</p><p> 

இன்னிலையில் வீட்டிற்குள் நுழையப்போகும் பிரபலங்கள் யார் யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-27T13:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[10 அரசியல் வாதிகளின் தொடர்பை அம்பலபடுத்திய சிரான் பாசிக்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/past-minister-received-crores-rupees-from-fasik-1787832055"></link>
            <id>https://ibctamil.com/article/past-minister-received-crores-rupees-from-fasik-1787832055</id>
            <summary type="text">தடுப்புக்காவலில் விசாரிக்கப்பட்டு வரும் போதைப்பொருள் கடத்தல்காரர்களில் ஒருவரான சிரான் பாசிக் என்பவருடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணிய,10 முக்கிய அரசியல...</summary>
            <content type="html"><![CDATA[<p>தடுப்புக்காவலில் விசாரிக்கப்பட்டு வரும் போதைப்பொருள் கடத்தல்காரர்களில் ஒருவரான சிரான் பாசிக் என்பவருடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணிய,10 முக்கிய அரசியல்வாதிகளிடம் எதிர்வரும் காலங்களில் விசாரணை நடத்தப்படவுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.</p><p>கோடிக்கணக்கான ரூபாய் பணம் மற்றும் பல்வேறு சலுகைகளைப் பெற்றதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பிலேயே குறித்த விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படகிறது.</p><p>
சிரான் பாசிக்கிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்போது வெளியாகிய தகவல்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.</p><p></p><h2>10 அரசியல்வாதிகள்</h2><p>
விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ள அரசியல்வாதிகளில் முன்னாள் அமைச்சர்கள் இருவர், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவர் மற்றும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் உள்ளிட்ட பல பிரபல அரசியல்வாதிகள் இருப்பதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4238dce6-73dc-4d0c-bab9-9157268ca8da/26-6a902a012aa23.webp' /></p><p>
இந்த 10 அரசியல்வாதிகளுக்கும் தேர்தல் பிரசார நடவடிக்கைகளின்போது பல்வேறு சந்தர்ப்பங்களில் சிரான் பாசிக் பெருமளவு பணத்தை வழங்கியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது.</p><p>

அத்துடன், கடந்த அரசாங்கத்தில் பதவி வகித்த சக்திவாய்ந்த அமைச்சர் ஒருவர்,&nbsp; பாசிக்கிற்கு சட்டவிரோதமாக காணிகளை பெற்றுக்கொடுத்து, அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் ஹோட்டல்களை நிர்மாணிப்பதற்குத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்துள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>

குறித்த நடவடிக்கைகளுக்காக அந்த முன்னாள் அமைச்சர், பாசிக்கிடமிருந்து பல்வேறு சந்தர்ப்பங்களில் பெருமளவு பணத்தைப் பெற்றுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p>
</p><p></p><h2>நீண்ட நேரமாக விசாரணை</h2><p>நீண்ட காலமாகவே சிரான் பாசிக் இந்த அரசியல்வாதிகளுக்காக தாராளமாக பணத்தை செலவிட்டு வந்துள்ளதாகவும் விசாரணைகளில் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளதாக காவ்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.</p><p>
</p><p>
இது தொடர்பில் கருத்து தெரிவித்த காவல்துறைமா அதிபர்&nbsp; பிரியந்த வீரசூரிய,சிரான் பாசிக்கிடம் மேற்கொள்ளப்படும் விசாரணைகளின்போது வெளிப்படும் தகவல்களின் அடிப்படையில், குறித்த போதைப்பொருள் கடத்தல்காரருடன் தொடர்புகளைப் பேணி பணம் மற்றும் பல்வேறு சலுகைகளைப் பெற்ற அனைத்து அரசியல்வாதிகளிடமும் விசாரணை நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.</p><p>
தற்போது தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள சிரான் பாசிக்கிடம் நீண்ட நேரமாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், அவருக்குச் சொந்தமான கோடிக்கணக்கான ரூபாய் பெறுமதியான சொத்துக்கள் தொடர்பிலும் விரிவான விசாரணைகள் இடம்பெற்று வருவதாக&nbsp; அவர் கூறியுள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...! '</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-27T13:24:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீண்ட ஆயுளில் ஜப்பான் முதலிடம்: ரகசியம் இது தான்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/what-is-the-80-rule-in-japan-1787833678"></link>
            <id>https://manithan.com/article/what-is-the-80-rule-in-japan-1787833678</id>
            <summary type="text">
Why do Japanese people live longer : ஜப்பான் நாட்டில் 100 வயதைக் கடந்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை நெருங்கியுள்ளது. உலகிலேயே நீண்ட ஆயுட்காலம் கொண...</summary>
            <content type="html"><![CDATA[<p>
Why do Japanese people live longer : ஜப்பான் நாட்டில் 100 வயதைக் கடந்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை நெருங்கியுள்ளது. </p><p>உலகிலேயே நீண்ட ஆயுட்காலம் கொண்ட மக்களைக் கொண்ட நாடுகளில் ஒன்றாகத் திகழும் ஜப்பானில், இவ்வாறு அதிக எண்ணிக்கையிலானோர் நூறு வயதைக் கடந்து வாழ்வதற்கு இவர்கள் தொன்று தொட்டு பின்பற்றும் தனித்துவமான உணவு முறைகள் மற்றும் வளர்ச்சியடைந்த மருத்துவம் என்பன காரணமாக இருக்கின்றது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f86be202-5f91-4408-a322-7d06e25f8fe1/26-6a90372816625.webp' /></p><p></p><p>அந்தவகையில், அவர்களின் உணவுப் பழக்கம், வாழ்க்கை முறை, உடல் இயக்கம், சமூக உறவுகள் மற்றும் மருத்துவ வசதிகள் ஆகியவை இதில் எந்த அளவுக்கு முக்கியப் பங்கு வகிக்கின்றன என்பதை விரிவாகப் பார்க்கலாம்.</p><h2>ஜப்பானியர்களின் நீண்ட ஆயுளின் ரகசியம்&nbsp;</h2><p>
</p><p>
ஜப்பானில் நூறு வயதைக் கடந்த முதியவர்களின் எண்ணிக்கை, 2025 செப்டம்பர் நிலவரப்படி, 99,763 ஆக உயர்ந்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது.கடந்த 55 ஆண்டுகளாக இந்த எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகின்றமையும்,&nbsp; நூறு வயதைக் கடந்தவர்களில் சுமார் 88 சதவீதம் பேர் பெண்கள் என்பதும் கவனிக்கத்தக்க அம்சமாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/577649fd-0140-4166-bb94-dd88125f60a9/26-6a903729025a5.webp' /></p><p> ஜப்பானியர்களின் நீண்ட ஆயுளுக்குப் பின்னால் அவர்களின் கட்டுப்பாடான வாழ்க்கை முறை மட்டுமின்றி, சமூக அமைப்பு மற்றும் சுகாதாரக் கட்டமைப்பும் முக்கியப் பங்கு வகிக்கின்றன.</p><p>
அளவான உணவும் ஆரோக்கியமான உணவுப் பழக்கமும்
ஜப்பானியர்களின் நீண்ட ஆயுளுக்கான முக்கியக் காரணங்களில் ஒன்றாக அவர்களின் உணவுப் பழக்கம் கருதப்படுகிறது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7220882b-d977-4967-b4af-0d14fbc0819a/26-6a903729b2540.webp' /></p><p>வயிறு முழுமையாக நிரம்பும் வரை உண்பதைத் தவிர்த்து, சுமார் 80 விழுக்காடு நிறைந்தவுடன் உண்பதை நிறுத்தும் பழக்கம் அவர்களிடம் காணப்படுகிறது. இதன் மூலம் தேவைக்கு அதிகமாக உணவு உட்கொள்வதைத் தவிர்த்து, உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்க முடிகிறது.
</p><p>
அதேபோல், பாரம்பரிய ஜப்பானிய உணவில் காய்கறிகள், மீன், கடல் உணவுகள், சோயா சார்ந்த உணவுகள் உள்ளிட்ட பல்வேறு ஊட்டச்சத்துமிக்க உணவுகள் இடம்பெறுகின்றன.அளவோடு உண்பதும், உணவில் பல்வேறு ஊட்டச்சத்துகளுக்கு முக்கியத்துவம் அளிப்பதும் உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றது.&nbsp;</p><p>
அன்றாட வாழ்க்கையிலேயே உடல் இயக்கம்
ஜப்பானியர்களின் வாழ்க்கை முறையில் உடற்பயிற்சி என்பது தனியாக ஒதுக்கப்படும் ஒரு செயலாக மட்டுமல்லாமல், அன்றாட நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகவே உள்ளது.</p><p> நடைப்பயிற்சி மேற்கொள்வது, வீட்டு வேலைகளைச் செய்வது, அன்றாடத் தேவைகளுக்காக நடந்து செல்வது போன்ற செயல்பாடுகள் அவர்களின் உடல் இயக்கத்தைத் தொடர்ந்து பராமரிக்க உதவுகின்றன.</p><p>

மேலும், வயது முதிர்ந்த பின்னரும் தங்களுக்குப் பிடித்தமான பணிகள் மற்றும் செயல்பாடுகளில் தொடர்ந்து ஈடுபடுகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7bd163c6-25e0-43a0-ac7f-0cf90923a958/26-6a90372a6402f.webp' /></p><p> இதனால் முதுமையிலும் உடல் சுறுசுறுப்புடன் இருப்பதோடு, மனதளவிலும் உற்சாகத்தையும் வாழ்க்கையின் மீதான ஆர்வத்தையும் தொடர்ந்து பேண முடிகிறது.
</p><p>
பெண்களின் நீண்ட ஆயுளுக்கான காரணங்கள்
ஜப்பானில் நூறு வயதைக் கடந்தவர்களில் பெண்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பது குறிப்பிடத்தக்கது. </p><p>இதற்கு உயிரியல் ரீதியான காரணிகளுடன், பெண்களின் சுகாதார விழிப்புணர்வும் ஒரு காரணமாகக் கூறப்படுகிறது.

நோய் தீவிரமடைவதற்கு முன்பே அதைக் கண்டறிவதற்கான மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்வது, உடல்நிலையில் ஏற்படும் மாற்றங்களைத் தொடர்ந்து கவனிப்பது போன்ற தடுப்பு சுகாதார நடைமுறைகள் அவர்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க உதவுகின்றன.</p><p>

அதுமட்டுமின்றி, முதுமையிலும் வலுவான சமூகத் தொடர்புகளைப் பேணுவதும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பது, தினசரி உரையாடல்களில் ஈடுபடுவது போன்றவை தனிமை உணர்வையும் மன அழுத்தத்தையும் குறைக்க உதவுகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c2e3fc95-09f8-4e84-815d-88b1b475970b/26-6a90372b16bcd.webp' /></p><p>
</p><p>
தரமான மருத்துவ வசதிகளும் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளும்
ஜப்பானின் சுகாதாரக் கட்டமைப்பும் மக்களின் நீண்ட ஆயுளில் முக்கியப் பங்கு வகிக்கிறது. அரசு வழங்கும் தரமான பொது மருத்துவக் காப்பீட்டின் உதவியுடன், மக்கள் தேவையான மருத்துவச் சேவைகளைப் பெறுவதற்கான வாய்ப்பு பரவலாக உள்ளது.
</p><p>
குறிப்பாக, நோய் ஏற்பட்ட பிறகு சிகிச்சை பெறுவதற்கு மட்டும் முக்கியத்துவம் அளிக்காமல், நோய்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து தடுப்பதற்கான மருத்துவப் பரிசோதனைகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.</p><p> இதனால் பல்வேறு நோய்களை ஆரம்பக் கட்டத்திலேயே கண்டறிந்து, உரிய சிகிச்சையை விரைவாகத் தொடங்க முடிகிறது. நீண்ட ஆயுளுக்குப் பின்னால் உள்ள வாழ்க்கை முறை
ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, ஜப்பானியர்களின் நீண்ட ஆயுளுக்கான ஒரே ஒரு காரணத்தைக் குறிப்பிட்டு சொல்ல முடியாது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/342b2075-4d86-4433-ad01-1e823c8a291c/26-6a90372bbeaea.webp' /></p><p></p><p>அளவான உணவு, ஊட்டச்சத்துமிக்க பாரம்பரிய உணவுப் பழக்கம், தொடர்ந்து மேற்கொள்ளப்படும் உடல் இயக்கம், முதுமையிலும் சுறுசுறுப்பாக இருப்பது, வலுவான சமூக உறவுகளைப் பேணுவது, நோய்களை முன்கூட்டியே கண்டறியும் மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் தரமான மருத்துவ வசதிகள் எனப் பல்வேறு காரணிகள் ஒன்றிணைந்து அவர்களின் நீண்ட ஆயுளுக்கு அடித்தளமாக அமைந்துள்ளன.</p><p>

இதனால், ஜப்பான் உலகிலேயே நீண்ட ஆயுட்காலம் கொண்ட மக்களைக் கொண்ட நாடுகளில் ஒன்றாகத் தொடர்ந்து விளங்கி வருகிறது. </p><p>நீண்ட காலம் வாழ்வது மட்டுமல்லாமல், முதுமையிலும் ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் வாழ்வதற்கான வாழ்க்கை முறையைப் பின்பற்றுவதுதான் ஜப்பானியர்களின் சிறப்பாகவும் பார்க்கப்படுகின்றது.&nbsp;</p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW&nbsp;</a></u></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-27T13:23:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாளம் சென்ற பிரபல நடிகையின் பெற்றோர் மாயம்; சமூகவலைத்தளத்தில் கவலை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/actress-nivetha-pethuraj-parents-missing-nepal-1787833519"></link>
            <id>https://jvpnews.com/article/actress-nivetha-pethuraj-parents-missing-nepal-1787833519</id>
            <summary type="text">&amp;nbsp; நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் கைலாஷ் மலைக்கு யாத்திரைக்கு சென்ற , நடிகை நிவேதா பெத்துராஜின் பெற்றோர்கள் காணமல் போயுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெர...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் கைலாஷ் மலைக்கு யாத்திரைக்கு சென்ற , நடிகை நிவேதா பெத்துராஜின் பெற்றோர்கள் காணமல் போயுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. </p><p> 

நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் கைலாஷ் மலைக்கு யாத்திரைக்கு சென்ற தனது பெற்றோர் ரமேஷ் சர்மா(65), மற்றும் நீலம் சர்மா(64) இருவரையும் காணவில்லை.. அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை என நடிகர் நிவேதா பெத்தராஜ் சமூகவலைத்தங்களில் பதிவிட்டிருக்கிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7ea7376b-63ba-49ae-8efa-cd298aece535/26-6a902cb143f11.webp' /></p><p></p><h2>நேபாளத்தில் ஏற்பட்ட பெரு வெள்ளம்</h2><p> </p><p>மீட்பு குழுவினர், அரசு அதிபர்கள் ஏதேனும் தகவல் தெரிந்தால் உடனடியாக தன்னை தொடர்பு கொள்ளுமாறும் அவர் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.</p><p>

நேபாளத்தில் ஏற்பட்ட பெரு வெள்ளம் காரணமாக 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்க கூடும் என அஞ்சப்படுகிறது.</p><p></p><p> அதில் பல இந்தியர்களும் அடக்கம். நேபாளம் ஒரு சுற்றுலா நாடு. அந்த வகையில் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் இருந்தும் பலரும் அங்கு சுற்றுலா சென்ற நேரத்தில்தான் நேற்று பெருவெள்ளம் ஏற்பட்டு அதில் பலரும் சிக்கியிருக்கிறார்கள்.</p><p></p><p> பலரும் உயிரிழந்திருக்கிறார்கள்.

அதேபோல், தமிழகத்திலிருந்து நேபாளத்திற்கு சுற்றுலா சென்றவர்களில் 83 பேரை தொடர்பு கொள்ளமுடியவில்லை. அவர்களின் நிலை என்னவாயிருக்கும் என்கிற பதட்டம் பலருக்கும் ஏற்பட்டிருக்கிறது. அவர்களை மீட்க தமிழக அரசும் முயற்சிகளை எடுத்து வருகிறது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-27T13:21:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[இங்கிலாந்தில் அகதி உரிமை கோருவோரின் எண்ணிக்கையில் சரிவு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/uk-asylum-applications-drop-by-21-in-2026-1787833979"></link>
            <id>https://ibctamil.com/article/uk-asylum-applications-drop-by-21-in-2026-1787833979</id>
            <summary type="text">இங்கிலாந்தில் அகதி உரிமை கோருவோரின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில்
குறைந்துள்ளதாகப் புதிய புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

​ஜூன் 2026 வரையிலான ஒர...</summary>
            <content type="html"><![CDATA[<p>இங்கிலாந்தில் அகதி உரிமை கோருவோரின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில்
குறைந்துள்ளதாகப் புதிய புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

​</p><p>ஜூன் 2026 வரையிலான ஒரு ஆண்டில் அகதி உரிமை கோரியவர்களின் எண்ணிக்கை 21
சதவீதம் குறைந்து 86,000 ஆகப் பதிவாகியுள்ளது.
</p><p>
இருப்பினும், இந்த எண்ணிக்கை 2021 ஆம் ஆண்டுக்கு முந்தைய சாதாரண அளவை விட
அதிகமாகவே உள்ளது.

​</p><p></p><h2>சிறிய படகுகள்&nbsp;</h2><p>அதேபோல், சிறிய படகுகள் மூலம் இங்கிலாந்தை வந்தடைந்தவர்களின் எண்ணிக்கையும்
23 சதவீதம் குறைந்து 33,000 ஆக பதிவாகியுள்ளது.
</p><p>
இவர்களில் எரித்திரியா, சூடான், ஆப்கானிஸ்தான், சோமாலியா மற்றும் ஈரான் ஆகிய
நாடுகளைச் சேர்ந்தவர்களே அதிகம் எனத் தெரியவந்துள்ளது.

​</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dde74349-a7e3-470c-b14c-0ab48220ac9a/26-6a9038aa5bfab.webp' /></p><p>அகதிகளுக்கான விடுதி பயன்பாடும் பாதியாகக் குறைந்துள்ளது, கடந்த ஜூன் மாத
நிலவரப்படி, சுமார் 16,000 அகதிகள் மட்டுமே விடுதிகளில்
தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

​</p><p>கன்சர்வேடிவ் ஆட்சிக்காலத்தின் இறுதியில் கொண்டுவரப்பட்ட கடுமையான விதிகளின்
காரணமாக வேலை, கல்வி மற்றும் குடும்ப விசாகளின் எண்ணிக்கையும்
சரிவடைந்துள்ளது.

​</p><p>இந்தத் தரவுகள் குறித்துக் கருத்து தெரிவித்துள்ள உள்துறைச் செயலாளர் ஷபானா
மஹ்மூத், அரசாங்கம் இதில் திருப்தியடைந்து விடவில்லை இன்னும் செய்ய
வேண்டியவை நிறைய உள்ளன எனக் குறிப்பிட்டுள்ளார்.

​</p><p>அதேவேளை, நீதிமன்றங்களில் தேங்கிக்கிடக்கும் அகதிகள் மேல்முறையீட்டு
வழக்குகளை விரைந்து முடிப்பதே தற்போதைய அரசாங்கத்தின் மிகப்பெரிய சவாலாக
இருக்கும் என இடம்பெயர்வு கண்காணிப்பகம் (Migration Observatory)
தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p>]]></content>
            <updated>2026-08-27T13:21:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நோர்வே மன்னரின் உடல்நிலை கவலைக்கிடம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/norway-king-in-critical-condition-1787831104"></link>
            <id>https://canadamirror.com/article/norway-king-in-critical-condition-1787831104</id>
            <summary type="text">நோர்வே நாட்டின் மன்னர் ஐந்தாம் ஹரால்ட்டின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக நோர்வே அரச மாளிகை அறிவித்துள்ளது.மன்னர் ஹரால்ட்டின் இரத்தத்தில் பாக்டீரியா தொ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நோர்வே நாட்டின் மன்னர் ஐந்தாம் ஹரால்ட்டின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக நோர்வே அரச மாளிகை அறிவித்துள்ளது.</p><p>மன்னர் ஹரால்ட்டின் இரத்தத்தில் பாக்டீரியா தொற்று ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் அவரது உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாகவும் நோர்வே அரச மாளிகை இன்று (27) அறிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d5938f2c-0c08-4f68-a55d-bfbd56084ca2/26-6a90234268953.webp' /></p><p>



89 வயதான மன்னர் ஐந்தாம் ஹரால்ட், கடந்த 1991ஆம் ஆண்டு முதல் நோர்வே நாட்டின் மன்னராக பதவி வகித்து வருகிறார். </p><p>

இரத்த சோகையால் பாதிக்கப்பட்டுள்ள அவர், கடந்த சில வாரங்களாக சிகிச்சை பெற்று வருகிறார்.



இதன் தொடர்ச்சியாக, ஓகஸ்ட் மாத தொடக்கத்தில் தலைநகர் ஒஸ்லோவில் உள்ள தேசிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட மன்னர் ஹரால்ட், சில நாட்கள் சிகிச்சை பெற்ற பின்னர் வீடு திரும்பினார்.
</p><p>தொடர்ச்சியாக உடல்நலக் குறைவு காரணமாக மன்னர் ஹரால்ட் ஓய்வில் இருந்து வரும் நிலையில், அவரது மகனும் நோர்வே நாட்டின் பட்டத்து இளவரசருமான ஹாக்கோன் அரசுப் பிரதிநிதியாகச் செயல்பட்டு வருகிறார்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-27T13:21:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[சட்டப்பேரவையில் இருக்கை மாற்றி அமர்ந்த முதல்வர் விஜய்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/cm-cm-vijay-seat-changed-in-the-tn-assembly-1787836809"></link>
            <id>https://ibctamilnadu.com/article/cm-cm-vijay-seat-changed-in-the-tn-assembly-1787836809</id>
            <summary type="text">cm vijay seat changed in tn assembly: சட்டப்பேரவையில் முதல்வர் விஜய், முதல்வருக்கான இருக்கையில் அமராமல் அமைச்சர்களுக்கிடையே அமர்ந்துள்ளார்.

சட்டப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>cm vijay seat changed in tn assembly: சட்டப்பேரவையில் முதல்வர் விஜய், முதல்வருக்கான இருக்கையில் அமராமல் அமைச்சர்களுக்கிடையே அமர்ந்துள்ளார்.
</p><h3>
சட்டப்பேரவையில் இருக்கை மாற்றி அமர்ந்த முதல்வர் விஜய்</h3><p> 

தமிழ்நாடு சட்டமன்றத்தில் வழக்கமாக முதலமைச்சர் அமர்வதற்கு தனி இருக்கை ஒதுக்கப்பட்டிருக்கும். </p><p>

அதே போல் அமைச்சர்கள் அமர்வதற்கு தனி வரிசையும், அதன் பின்னர் எம்எல்ஏக்கள் அமர்வதற்கு இருக்கைகள் ஒதுக்கப்பட்டிருக்கும்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/86fe3c25-9c32-4af1-bf78-9aefcca92dc8/26-6a90398b34da1.webp' /></p><p>

இந்நிலையில் இன்று சட்டமன்றத்தில் பிற்படுத்தப்பட்டோர் சிறுபான்மையினர் சமூகநீதித்துறை மானிய கோரிக்கை நடைபெற்று வருகிறது. </p><p>

மதியத்திற்கு மேல் சட்டமன்றத்திற்கு வந்த முதல்வர் விஜய், தனது இருக்கையில் அமராமல் அமைச்சர்கள் வரிசையில் சென்று அமர்ந்துள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a5aa6eb4-be28-4e5a-959b-ff097bf1f3a8/26-6a90398a8234d.webp' /></p><p>

அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா மற்றும் செங்கோட்டையனுக்கு இடையே அமர்ந்த முதல்வர் விஜய், அமைச்சர் செங்கோட்டையனுடன் தீவிரமாக உரையாடிக் கொண்டிருந்தார்.
</p><p>
முதல்வர் இருக்கை மாற்றி அமர்ந்தது ஏன்? என்ன உரையாடினார்கள் என சமூகவலைத்தளங்களில் பலரும் விவாதித்து வருகின்றனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-27T13:20:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[புரட்டிப்போட்ட பேரழிவு; நேபாளம் - சீனா எல்லையில் 1400 பேர் மாயம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/disaster-1-400-people-missing-nepal-china-border-1787835381"></link>
            <id>https://canadamirror.com/article/disaster-1-400-people-missing-nepal-china-border-1787835381</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp; நேபாளம் - சீனா எல்லையில் 1400 பேர் மாயமான நிலையில் தேடும் பணி தீவிரமாக முன்னெடுக்கபப்டு வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

வடக்கு நேபா...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp; நேபாளம் - சீனா எல்லையில் 1400 பேர் மாயமான நிலையில் தேடும் பணி தீவிரமாக முன்னெடுக்கபப்டு வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
</p><p>
வடக்கு நேபாளத்தில் நேற்று திடீரென ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக பலரும் உயிரிழந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6dd20ade-6f69-4538-b34f-f1d94fb7b3c2/26-6a9033f88c8a9.webp' /></p><h2>&nbsp;500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம்</h2><p> </p><p>

பல வீடுகளும் கட்டிடங்களும், வாகனங்களும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. இதில் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.</p><p>
 
அதோடு ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களை காணவில்லை. நேபாளம் நாட்டை சேர்ந்தவர்கள் மட்டுமல்லாமல் இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து நேபாளத்திற்கு சுற்றுலா சென்ற பலரும் இதில் சிக்கியிருக்கிறார்கள்.</p><p>

 தமிழகத்திலிருந்து சுற்றுலாவுக்கு சென்ற 83 பேர் பற்றிய தகவல் கிடைக்கவில்லை. அவர்களை மீட்கும் பணியில் தமிழக அரசு ஈடுபட்டிருக்கிறது.</p><p>

ஒருபக்கம் நேபாளம் - சீன எல்லையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி சுமார் 1400 பேர் மாயமாகியுள்ளனர். </p><p>

அந்த வகையில் நேபாளத்தில் 500 வெளிநாட்டினர் உட்பட 826 பேரும், சீனாவில் 260 வெளிநாட்டினர் உட்பட 558 பேரும் மாயமாகியிருப்பதாக அந்தந்த நாட்டு அரசுகள் அறிவித்துள்ளன.</p>]]></content>
            <updated>2026-08-27T13:20:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[எதிர்நீச்சல் தொடர்கிறது 2 சீரியல் இப்படியொரு சாதனையை செய்துவிட்டதா?... என்ன பாருங்க...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/ethirneechal-thodargiradhu-serial-good-news-1787834828"></link>
            <id>https://cineulagam.com/article/ethirneechal-thodargiradhu-serial-good-news-1787834828</id>
            <summary type="text">எதிர்நீச்சல் தொடர்கிறது 2ஹீரோவை அசைக்கமுடியாத நாயகனாக காட்டினால் தான் மக்களுக்கு பிடிக்கும். ஆனால் எதிர்நீச்சல் தொடர்கிறது 2 சீரியலில் இரண்டு சீசன்கள்...</summary>
            <content type="html"><![CDATA[<h2>எதிர்நீச்சல் தொடர்கிறது 2</h2><p>ஹீரோவை அசைக்கமுடியாத நாயகனாக காட்டினால் தான் மக்களுக்கு பிடிக்கும். ஆனால் எதிர்நீச்சல் தொடர்கிறது 2 சீரியலில் இரண்டு சீசன்கள் முடிந்தும் வில்லனை தான் அசைக்கமுடியாத ஒரு நபராக காட்டி வருகிறார்கள்.</p><p>ஒரு வில்லன் பத்தாது என்று இப்போது ராவணன் என்ற கொடூர வில்லனும் களமிறங்கியுள்ளார். இந்த இரண்டு வில்லனகளையும் சமாளித்து நியாயத்திற்காக போராடும் ஜனனி எப்படி சாதிக்க போகிறார் என்பதே இப்போதையாக கதையாக உள்ளது.</p><p>ராவணன் சக்தியிடம் அடிவாங்கிய பின்னர் இன்னும் கொடூரமான செயல்களை செய்ய ஆரம்பித்துவிட்டார். இன்றைய எபிசோடில், ராவணன் எதையோ ஜனனி-சக்தியிடம் காட்டி பயமுறுத்துகிறார். அப்படி என்ன காட்டினார், அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பது எல்லாம் பரபரப்பின் உச்சமாக செல்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1ffcc5df-0294-4d27-95f9-958a833de4b5/26-6a9035dd87665.webp' /></p><h2>சாதனை</h2><p>முதல் சீசன் முடிவடைந்து 2வது சீசன் அதே நடிகர்களை வைத்து துவங்கப்பட்டது.</p><p>சில நடிகர்களே மாறினார்கள், ஆனால் கதை மட்டும் சுத்தமாக மாறவில்லை. இந்த நேரத்தில் எதிர்நீச்சல் தொடர்கிறது 2 சீரியல் ரசிகர்களுக்காக ஒரு சூப்பரான நியூஸ் வந்துள்ளது. அதாவது எதிர்நீச்சல் தொடர்கிறது 2ம் பாகம் 600 எபிசோடுகளை எட்டிவிட்டதாம்.</p><p><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/p/Dcfni-EqWX2/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/p/Dcfni-EqWX2/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/p/Dcfni-EqWX2/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by ❤𝗧𝗡 𝗙𝗔𝗩𝗢𝗥𝗜𝗧𝗘 𝗦𝗘𝗥𝗜𝗔𝗟❤ (@familyserial_official)</a></p></div></blockquote> <script async src="//www.instagram.com/embed.js"></script></p>]]></content>
            <updated>2026-08-27T13:04:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பால் காய்ச்சினால் அமைதி...பற்றவைத்தால் வெடிக்கும்; தமிழக சட்டமன்றத்தில் காரசாரம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/tamil-nadu-assembly-argument-premalatha-aadhav-1787834720"></link>
            <id>https://jvpnews.com/article/tamil-nadu-assembly-argument-premalatha-aadhav-1787834720</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;தமிழக சட்டமன்றத்தில் இன்று இது சட்டமன்றமா? இல்லை சண்டை மன்றமா?.. பிரேமலதா கேள்வி எழுப்ப, பால் காய்ச்சினால் அமைதி...பற்றவைத்தால் வெடிக்கும...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;தமிழக சட்டமன்றத்தில் இன்று இது சட்டமன்றமா? இல்லை சண்டை மன்றமா?.. பிரேமலதா கேள்வி எழுப்ப, பால் காய்ச்சினால் அமைதி...பற்றவைத்தால் வெடிக்கும் என தவெக ஆதவ் அர்ஜுனா சூடாக பதிலடி கொடுத்துள்ளார்.
</p><p>

2026 சட்டமன்றத் தேர்தலில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதியில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்திருக்கிறது. கட்சியின் தலைவர் ஜோசப் விஜய் தமிழ்நாட்டின் முதலமைச்சராக மாறியிருக்கிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7ac6413e-e8c4-4dc6-9bf3-9f75b31168af/26-6a903161ac026.webp' /></p><h2>கேஸை பிடுங்கிவிட்டு பற்றவைத்தால் வெடிக்கும்</h2><p> </p><p>

2021 தேர்தலில் வெற்றி பெற்று ஆளும் கட்சியாக இருந்த திமுக தற்போது எதிர்க்கட்சியாக அமர்ந்திருக்கிறது. தவெக ஆட்சி அமைத்ததை தாங்கிக் கொள்ள முடியாத திமுக சட்டசபையில் தவெகவுடன் காரசாரமான வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகிறது.</p><p>

எதிர்க்கட்சி உதயநிதி ஸ்டாலின் எழுப்பும் கேள்விகளுக்கு தவெக அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, சிடி நிர்மல் குமார், ராஜ்மோகன் போன்றவர்கள் எழுந்து பதில் கூறி வருகிறார்கள்.</p><p></p><p> </p><p>அதிலும் யார் என்ன கேள்வி கேட்டாலும் ஆதவ் அர்ஜுனா எழுந்து பதில் சொல்வதாக உதயநிதி ஸ்டாலின் சமீபத்தில் சட்டமன்றத்தில் புகார் கூறியிருந்தார்.</p><p>

இந்நிலையில், இன்று சட்டசபையில் பேசிய தேமுதிக எம்.எல்.ஏ பிரேமலதா ‘எப்போது பார்த்தாலும் சண்டை சண்டை என்று செல்கிறது.. இது சட்டமன்றம்.. சண்டை மன்றம் அல்ல.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேச ஆரம்பிக்கும் வரை நன்றாக செல்கிறது.. அவர் பேச ஆரம்பித்தாலே சண்டைதான்’ எனக்கூறினார்.</p><p></p><p> அதற்கு பதிலளித்த ஆதவ் அர்ஜுனா ‘அண்ணியாருக்கும் எங்களுக்கும் பிரச்சனை இல்லை.. எங்களுக்கும் விஜயகாந்த் சாரை மிகவும் பிடிக்கும்.. உண்மைக்கு மாறாக பேசும் போது தான் நாங்கள் எழுந்து பதில் சொல்கிறோம்.</p><p> எதிர்க்கட்சி என்பது தீப்பெட்டி போன்றது.. அதை வைத்து கேஸ் பற்ற வைத்து பால் காய்ச்சினால் அமைதியாக இருப்போம்.. கேஸை பிடுங்கிவிட்டு பற்றவைத்தால் வெடிக்கும்’ என பதிலடி கொடுத்தார்.&nbsp; &nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-27T13:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[தொடர்ச்சியான ஏமாற்றுதல்களால் முற்றாக ஸ்தம்பித்துள்ளது இலங்கை - எதிர்க்கட்சித் தலைவர் சஜித் குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sajith-premadhasa-statement-about-sri-lanka-1787834739"></link>
            <id>https://tamilwin.com/article/sajith-premadhasa-statement-about-sri-lanka-1787834739</id>
            <summary type="text">தொடர்ச்சியாக இரண்டு சந்தர்ப்பங்களில் இந்நாட்டு மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர்
என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, 2019ஆம் ஆண்டில்
ஏமாந்து...</summary>
            <content type="html"><![CDATA[<p>தொடர்ச்சியாக இரண்டு சந்தர்ப்பங்களில் இந்நாட்டு மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர்
என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, 2019ஆம் ஆண்டில்
ஏமாந்து நாடு வங்குரோத்தடைந்தது போல், 2024 இலும் ஏமாந்து இன்று முழு சமூகமும் முற்றாக ஸ்தம்பித்துப் போயுள்ளது என்றார்.
</p><p>
அநுராதபுரத்தில்
நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் அங்கத்தவர் விரிவாக்க விசேட
வேலைத்திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்ட மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு
உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.</p><h2>கடுமையான அசௌகரியம்</h2><p>

விவசாயிகள், கடற்தொழிலாளர்கள், தொழிலாளிகள், தொழில்முனைவோர்கள், குழந்தைகள், பெண்கள்
உள்ளிட்ட 220 இலட்சம் மக்களும் தற்போது கடுமையான அசௌகரியத்துக்கும் பீதிக்கும்
ஆளாகியுள்ளனர் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7c048c68-9f87-426a-9a49-e8b48e2dbe66/26-6a9034459e75e.webp' /></p><p>
</p><p>
அவர் மேலும் உரையாற்றுகையில், தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிவரத் திணைக்களத்தின் பிரகாரம் முப்பது நாள்கள்
ஒரு நபர் வாழ்வதற்கு 17 ஆயிரத்து 315 ரூபா போதுமானதாகக் கூறப்பட்டுள்ளது.
தற்போதைய அரசாங்கத்தின் கொள்கைகள் இதுபோன்ற பொய்யான தரவுகளை அடிப்படையாகக் கொண்டே
அமைந்துள்ளன.</p><h2>நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள்</h2><p>
</p><p>
தேர்தல் காலத்தில் நெல் ஒரு கிலோகிராமிற்கு 150 ரூபா உத்தரவாத விலை தருவதாகக்
கூறிவிட்டு, தற்போது 120 ரூபாவே வழங்கப்படுகின்றது. ஆனால், நெல் ஒரு கிலோகிராமிற்கு உற்பத்தி செய்வதற்கு 137 ரூபா செலவாவதாக விவசாய அமைச்சரே நாடாளுமன்றத்தில்
தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bb38665e-b256-4a3c-9124-9eb0ad081fd6/26-6a9034468a5bb.webp' /></p><p>
</p><p>
மின்சாரக் கட்டணத்தை 33 வீதத்தால் குறைத்தல், துறைமுகத்தில் இறக்கப்படும்
விலைக்கு எரிபொருள் வழங்குதல் மற்றும் 12 இலட்சத்துக்கு விட்ஸ் ரக கார்
வழங்குதல் போன்ற எவைகளுமே இதுவரை அரசால் நிறைவேற்றப்படவில்லை என்றார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9111f859-6486-4306-ae70-70e8a01b0d61/26-6a90344764d82.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c8ecde4d-1ee8-40c6-b8d5-77f663665fc8/26-6a9034483f76a.webp' /></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-27T12:59:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[மாலியில் தாக்குதல்: பிரான்சும், உக்ரைனும் தான் காரணம்! ரஷ்யா பகீர் குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/ukraine-france-involvement-in-mali-attack-1787835425"></link>
            <id>https://news.lankasri.com/article/ukraine-france-involvement-in-mali-attack-1787835425</id>
            <summary type="text">Russia Accuses Ukraine France Involvement in Mali Attack: மாலி தாக்குதலில் உக்ரைன் மற்றும் பிரான்ஸ் நாட்டிற்கு தொடர்பு இருப்பதாக ரஷ்யா குற்றம்சாட்டியு...</summary>
            <content type="html"><![CDATA[<p>Russia Accuses Ukraine France Involvement in Mali Attack: மாலி தாக்குதலில் உக்ரைன் மற்றும் பிரான்ஸ் நாட்டிற்கு தொடர்பு இருப்பதாக ரஷ்யா குற்றம்சாட்டியுள்ளது.</p><h2> பிரான்ஸ் - உக்ரைனை குற்றஞ்சாட்டிய ரஷ்யா</h2><p>
சமீபத்தில் மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் நடந்த தீவிரவாத தாக்குதல்களுக்கு உக்ரைன் மற்றும் பிரான்ஸ் நாட்டின் உளவு பிரிவுகள் காரணமாக இருக்கலாம் என்று ரஷ்யா குற்றஞ்சாட்டியுள்ளது.</p><p> இந்த கருத்தை ரஷ்ய வெளியுறவு அமைச்சகத்தின் முதல் ஐரோப்பிய துறையின் இயக்குனர் ஆர்தம் ஸ்டுடென்னிகோவ் தெரிவித்துள்ளார்.</p><p> இது தொடர்பாக RIA நோவொஸ்டி செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்த பேட்டியில், விரிந்த சாஹேல் பிராந்தியத்தில் அரசாங்கத்தை கவிழ்த்து விட்டு பொம்மை அரசாங்கத்தை முன்னெடுக்க பிரான்ஸ் தொடர்ந்து முயற்சித்து வருவதாக தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d9a38eaa-821a-439e-b0c6-e73f2d305763/26-6a9034233ef0f.webp' /></p><p> அத்துடன் ஜனவரி 3ம் திகதி புர்கினா பாசோவில் நடந்த ஆட்சி கவிழ்ப்பு நடவடிக்கையிலும் பிரான்ஸ் பின்னணியில் இருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.</p><p> இந்த குற்றச்சாட்டில் உக்ரைன் மற்றும் மற்ற சில ஐரோப்பிய நாடுகளும் இடம்பெற்றுள்ளன.</p><p></p><p>அதில், மாலியில் ஆட்சியை கவிழ்க்க உள்ளூர் தீவிரவாதிகளுக்கு உக்ரைன் மற்றும் சில ஐரோப்பிய நாடுகள் இராணுவ பயிற்சி வழங்கியதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.</p><p>கடந்த ஏப்ரலில் மாலியில் நடந்த ஆட்சி கவிழ்ப்பு நடவடிக்கை ரஷ்யாவின் “ஆப்பிரிக்கா கார்ப்ஸ்” படை வெற்றிகரமாக முறியடித்ததாக ரஷ்யா தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-27T12:57:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹோர்முஸ் நீரிணையில் பதிக்கப்பட்ட கண்ணிவெடிகளை அகற்ற இரு தரப்பு பேச்சுவார்த்தை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/talks-remove-mines-planted-in-the-strait-of-hormuz-1787833667"></link>
            <id>https://ibctamil.com/article/talks-remove-mines-planted-in-the-strait-of-hormuz-1787833667</id>
            <summary type="text">ஹோர்முஸ் நீரிணையில் இருந்து கண்ணிவெடிகளை அகற்றும் கூட்டுத் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து கட்டாரும் ஈரானும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக கட்டாரின...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹோர்முஸ் நீரிணையில் இருந்து கண்ணிவெடிகளை அகற்றும் கூட்டுத் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து கட்டாரும் ஈரானும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக கட்டாரின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
</p><p>ஈரானின் தலைநகர் தெஹ்ரானில் இன்று இரு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களுக்கு இடையே நடைபெற்ற சந்திப்பைத் தொடர்ந்து இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.</p><p>மேலும், ​​ஹோர்முஸ் நீரிணை வழியாக ஒரு தற்காலிக கப்பல் போக்குவரத்து வழித்தடத்தை உருவாக்குவதை உள்ளடக்கிய முன்மொழியப்பட்ட கட்டமைப்பு குறித்தும் இருதரப்பும் விவாதித்துள்ளன.</p><p></p><h2>பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மை</h2><p>இது குறித்துகத்தார் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில்,</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/89bbb263-6c65-420f-b29a-1d4e64a31eba/26-6a90327ca6cb9.webp' /></p><p>“பிராந்திய பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை மேம்படுத்துவதற்கு பங்களிக்கும் வகையில், பதற்றத்தைக் குறைப்பதற்கும், உரையாடலுக்கான பொருத்தமான நிலைமைகளை உருவாக்குவதற்கும் மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சிகளுடன், பிராந்திய சூழ்நிலையில் ஏற்பட்டுள்ள சமீபத்திய முன்னேற்றங்களும் ஆய்வு செய்யப்பட்டன" என்று தெரிவித்துள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-27T12:50:16+00:00</updated>
        </entry>
    </feed>
