<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-07-30T17:39:30+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[எரிபொருள் ஏற்றுமதிக்கான தடையை நீட்டித்த ரஷ்யா: அறிவிக்கப்பட்ட சில முக்கிய தளர்வுகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/russia-extent-fuel-export-ban-to-2027-january-1785430050"></link>
            <id>https://news.lankasri.com/article/russia-extent-fuel-export-ban-to-2027-january-1785430050</id>
            <summary type="text">உள்நாட்டு விநியோக சந்தையை பாதுகாக்க எரிபொருள் ஏற்றுமதிக்கான தடையை ரஷ்யா நீட்டித்துள்ளது. அடுத்த ஆண்டு வரை நீட்டிக்கப்பட்ட எரிபொருள் ஏற்றுமதி
உக்ரைன் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>உள்நாட்டு விநியோக சந்தையை பாதுகாக்க எரிபொருள் ஏற்றுமதிக்கான தடையை ரஷ்யா நீட்டித்துள்ளது.</p><h2> அடுத்த ஆண்டு வரை நீட்டிக்கப்பட்ட எரிபொருள் ஏற்றுமதி</h2><p>
உக்ரைன் - ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கை மற்றும் பொருளாதார தடைகள் காரணமாக ரஷ்யாவில் வழக்கத்திற்கு மாறாக எரிபொருள் விநியோகம் பெரும் சிரமத்தை சந்தித்து வருகிறது.</p><p>இந்நிலையில் உள்நாட்டு எரிபொருள் விநியோகத்தை உறுதிப்படுத்தும் விதமாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் எரிபொருள்களுக்கு ரஷ்ய அரசு அதிகாரப்பூர்வமாக தடை விதித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/820fb5c9-8ad7-4524-9011-e3555e789354/26-6a6b8023abc70.webp' /></p><p>இது தொடர்பாக வியாழக்கிழமை வெளியான அறிவிப்பில், பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருள் ஏற்றுமதிக்கான தடை 2027ம் ஆண்டு ஜனவரி 1ம் திகதி வரை அமுலில் இருக்கும் என்று அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> முன்னர் அறிவிக்கப்பட்ட எரிபொருள் ஏற்றுமதி தடை ஜூலை மாத இறுதியுடன் நிறைவடையும் நிலையில், தற்போது எரிபொருள் ஏற்றுமதிக்கான தடை 2027 ம் ஆண்டு ஜனவரி 1ம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.</p><p>சமீபத்தில் உள்நாட்டு சந்தை நிலவரம் சீரடைந்த பிறகே எரிபொருள் ஏற்றுமதி மீதான தடை தளர்த்தப்படும் என்று ரஷ்ய துணை பிரதமர் அலெக்சாண்டர் நோவாக் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cf2b6783-0b97-41df-8dd5-f2deedeb12e9/26-6a6b80247e1dd.webp' /></p><h2>எரிபொருள் ஏற்றுமதியில் சில முக்கிய தளர்வுகள்</h2><p>அறிவிக்கப்பட்டுள்ள எரிபொருள் ஏற்றுமதி தடையில் சில முக்கிய விதிவிலக்குகளும் வழங்கப்பட்டுள்ளது.</p><p> அதன்படி, நேரடியாக உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களின் எரிபொருள் ஏற்றுமதி மீதான தடை செப்டம்பர் 1, 2026 வரை மட்டுமே அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>அதைப்போல நாடுகளுக்கு இடையே மேற்கொள்ளப்பட்ட சர்வதேச ஒப்பந்தங்களில் கீழ் எரிபொருள் ஏற்றுமதிக்கு அனுமதி உண்டு.</p><p> மேலும் மனிதாபிமான நோக்கில் வழங்கப்படும் உதவிகளுக்கு அரசு ஒப்புதலுடன் அனுமதி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td><br></td></tr></tbody></table><p> &nbsp;<br></p>]]></content>
            <updated>2026-07-30T17:39:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[கோர விபத்தில் பலியான இரு இளைஞர்கள் ; லொறிக்கு தீ வைத்த பொதுமக்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/young-men-killed-in-tragic-accident-1785432449"></link>
            <id>https://jvpnews.com/article/young-men-killed-in-tragic-accident-1785432449</id>
            <summary type="text">நீர்கொழும்பு போலவலான பிசிஐ கெம்பஸ் அருகே இன்று (30) அதிகாலை 1.45 மணியளவில் இடம்பெற்ற கோர விபத்தில், மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்கள் சம்பவ இட...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">நீர்கொழும்பு போலவலான பிசிஐ கெம்பஸ் அருகே இன்று (30) அதிகாலை 1.45 மணியளவில் இடம்பெற்ற கோர விபத்தில், மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.</p><p style="text-align: justify; ">
சம்பவம் தொடர்பாக பொலிஸார் தெரிவித்ததாவது,

கண்டெய்னர் லொறிக்கும் மோட்டார் சைக்கிளுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலினால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9cb18d0c-475c-4d69-a7b9-af0c0c4508bb/26-6a6b8b70c62ea.webp' /></p><h2 style="text-align: justify; ">&nbsp;மேலதிக விசாரணை</h2><p style="text-align: justify; ">

இந்த விபத்தைத் தொடர்ந்து ஆத்திரமடைந்த அப்பிரதேச மக்கள், விபத்தில் தொடர்புடைய கண்டெய்னர் லொறிக்கு தீ வைத்துள்ளனர். </p><p style="text-align: justify; ">இதனை அடுத்து கட்டான பொலிஸார் மற்றும் நீர்கொழும்பு மாநகர சபையின் தீயணைப்பு பிரிவு அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்று தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து நிலைமையை சீர்செய்துள்ளனர்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
விபத்தில் உயிரிழந்த இருவரின் சடலங்களும் நீர்கொழும்பு மாவட்ட பொது வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதுடன், கண்டெய்னர் லொறியின் சாரதி கட்டான பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p style="text-align: justify; ">

உயிரிழந்தவர்கள், நீர்கொழும்பைச் சேர்ந்த 18 வயதுடைய மற்றும் 19 வயதுடைய&nbsp; இரு இளைஞர்கள் ஆவர்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
கைது செய்யப்பட்ட கண்டெய்னர் லொறியின் சாரதி பன்னில தென்ன பகுதியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p style="text-align: justify; ">
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கட்டான பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;&nbsp;</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-07-30T17:35:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹோர்முஸ் நீரிணையில் ஈரானின் அதிரடி: அதிகரிக்கும் போர்ப் பதற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/iran-grip-strait-of-hormuz-drone-attack-1785432423"></link>
            <id>https://tamilwin.com/article/iran-grip-strait-of-hormuz-drone-attack-1785432423</id>
            <summary type="text">அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே தீவிரமடைந்து வரும் போர், உலகளாவிய கடல்வழி
வர்த்தகம் மற்றும் மசகு எண்ணெய் விநியோகத்தை முடக்கும் அபாயத்தை
ஏற்படுத்தி...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே தீவிரமடைந்து வரும் போர், உலகளாவிய கடல்வழி
வர்த்தகம் மற்றும் மசகு எண்ணெய் விநியோகத்தை முடக்கும் அபாயத்தை
ஏற்படுத்தியுள்ளது.
</p><p>
எகிப்தின் டமியேட்டா துறைமுகத்தில் நின்றுகொண்டிருந்த அமெரிக்காவுக்குச்
சொந்தமான எரிவாயுக் கப்பல் மீது அடையாளம் தெரியாத ட்ரோன் தாக்குதல்
நடத்தப்பட்டது.
</p><p>
சுயஸ் கால்வாய் பகுதிக்கு மிக அருகில் நடந்த இத்தாக்குதல், சவூதி அரேபியாவின்
எண்ணெய் ஏற்றுமதிக்கு எஞ்சியிருந்த பாதுகாப்பான வழியான சுயஸ் கால்வாய் மூலமான
கப்பல் போக்குவரத்திற்கும் புதிய அச்சுறுத்தலை உருவாக்கியுள்ளது.
</p><p>
உலகின் மிக முக்கியமான எண்ணெய் வர்த்தகப் பாதையான ஹோர்முஸ் நீரிணை தற்போது
ஈரானின் கட்டுப்பாட்டில் உள்ளது.</p><p></p><h2>ஈரான் நடத்திய தாக்குதல்</h2><p>அனுமதி பெறாமல் இந்த ஹோர்முஸ் நீரிணை
வழியாகச் செல்ல முயன்ற மூன்று எண்ணெய் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல்
நடத்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c6428219-ffa8-45d5-b959-38f3fc1dc7b4/26-6a6b8a7fc832b.webp' /></p><p>
</p><p>
ஓமன் நாடு ஹோர்முஸ் நீரிணை போக்குவரத்தைச் சீரமைக்க முன்வைத்த திட்டத்தை ஈரான்
நிராகரித்துள்ள போதிலும், பேச்சுவார்த்தைகள் தொடர்வதாகத்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
அமெரிக்கப் படைகள் மீது ஈரான் நடத்திய தாக்குதல்களுக்குப் பதிலடியாக, ஈரானின்
இராணுவத் தளங்கள் மீது அமெரிக்கா குண்டுவீசியது.
</p><p>
இப்போரில் முதன்முறையாகச் சவூதி அரேபியா, அமெரிக்காவுடன் இணைந்து ஈராக்கில்
உள்ள ஈரான் ஆதரவுப் படைகள் மீது வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது.</p><p>

இதற்குப் பதிலடியாக, ஜோர்தானில் உள்ள அமெரிக்க இராணுவத் தளம் மீதும்,
குவைத்தில் உள்ள சீனாவுக்குச் சொந்தமான கட்டிடம் மீதும் ஈரான் தாக்குதல்
நடத்தியுள்ளது.
</p><p>
ஹோர்முஸ் நீரிணை முடக்கம் மற்றும் சுயஸ் கால்வாய் அருகேயான தாக்குதல்கள்
காரணமாக உலகளாவிய எரிபொருள் சந்தை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

சர்வதேசச் சந்தையில் பிரெண்ட் மசகு எண்ணெய் விலை ஒரே நாளில் 8% வரை உயர்ந்து,
ஒரு பீப்பாய் 90 டொலரை நெருங்கியுள்ளது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-30T17:33:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[பயங்கரவாத தடை சட்டத்திலிருந்து தப்பிய ஹரக் கட்டா!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/court-drops-pta-charges-against-harak-kata-1785431837"></link>
            <id>https://ibctamil.com/article/court-drops-pta-charges-against-harak-kata-1785431837</id>
            <summary type="text">பிரபல பாதாள உலக குற்றவாளியான நந்துன் சிந்தக்க விக்கிரமரத்ன என்ற ஹரக் கட்டா மற்றும் அவருடன் குற்றம் சாட்டப்பட்டுள்ள மேலும் நால்வருக்கு எதிராக பயங்கரவாத...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரபல பாதாள உலக குற்றவாளியான நந்துன் சிந்தக்க விக்கிரமரத்ன என்ற ஹரக் கட்டா மற்றும் அவருடன் குற்றம் சாட்டப்பட்டுள்ள மேலும் நால்வருக்கு எதிராக பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (PTA) கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளைத் தொடர முடியாது என கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.</p><p>

தடுப்புக் காவல் உத்தரவின் பேரில் குற்றப் புலனாய்வுத் துறையின் காவலில் இருந்தபோது, ​​தப்பிச் செல்ல சதி செய்ததாக சந்தேகநபர்கள் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டிருந்தது.</p><p></p><h2>சட்டத் தடை</h2><p>
</p><p>
இந்நிலையில், சந்தேகநபர்கள் சார்பாக முன்னிலையான வழக்கறிஞர்களால் முன்வைக்கப்பட்ட ஆரம்பக்கட்ட ஆட்சேபனைகளை ஏற்றுக் கொண்ட கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி புத்திக சி. ராகல மேற்படி உத்தரவை பிறப்பித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d4664b1c-f1cf-474d-9767-2be23ee01650/26-6a6b8a28ada94.webp' /></p><p>
</p><p>
இருப்பினும், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தொடரப்பட்ட வழக்குகளை மட்டுமே பராமரிக்க முடியாது என்றும், குற்றவியல் தண்டனைச் சட்டக்கோவையின் கீழ் குற்றம் சாட்டப்பட்ட நபர்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கைத் தொடர்ந்து நடத்துவதற்கு எந்தவொரு சட்டத் தடையும் இல்லை என்றும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> WHATSAPP CHANNEL </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-30T17:30:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[வீட்டைச் சுற்றி தெய்வீக ஆற்றல் இருப்பதை உணர்த்தும் முக்கிய அறிகுறிகள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/spiritual-meaning-behind-hearing-these-sounds-1785417370"></link>
            <id>https://manithan.com/article/spiritual-meaning-behind-hearing-these-sounds-1785417370</id>
            <summary type="text">இந்து சாஸ்திரங்களின் படி, தொன்றுதொட்டு பல நம்பிக்கைகளும் பாரம்பரிய நடைமுறைகளும் பின்பற்றப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், ஆன்மீக ரீதியாக நம்மைச் சுற...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்து சாஸ்திரங்களின் படி, தொன்றுதொட்டு பல நம்பிக்கைகளும் பாரம்பரிய நடைமுறைகளும் பின்பற்றப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், ஆன்மீக ரீதியாக நம்மைச் சுற்றி நிகழும் சில சம்பவங்கள், தெய்வீக ஆற்றல் எப்போதும் நம்முடன் இருப்பதற்கான அறிகுறிகளாகக் கருதப்படுகின்றன.
</p><p>
அவ்வாறாக, இரவு நேரங்களில் வீட்டில் சில குறிப்பிட்ட சத்தங்கள் கேட்பதற்கு சாஸ்திரங்களின்படி என்ன அர்த்தம் கூறப்படுகிறது என்பதை இந்தப் பதிவில் விரிவாகப் பார்ப்போம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/30e849c5-5059-44f3-9ea9-9ec4507c9804/26-6a6b547b47fce.webp' /></p><p></p><p>
</p><h2>
தெய்வ நடமாட்டத்தை உணர்த்தும் சத்தங்கள்
</h2><p><b>சங்கு ஒலி:
</b>இரவு நேரத்தில் வீட்டில் சங்கு ஒலி கேட்பது, சிவபெருமானின் அருள் எப்போதும் நம்மீது பரிபூரணமாக இருப்பதற்கான அறிகுறியாகக் கருதப்படுகிறது.</p><p>
</p><p><b>
கொலுசு சத்தம்:
</b>இரவில் கொலுசு சத்தம் கேட்பதாக உணர்ந்தால், நம் வீட்டைச் சுற்றி தெய்வ நடமாட்டம் இருப்பதையும், குலதெய்வத்தின் அருள் எப்போதும் நம்மைக் காத்து வருவதையும் உணர்த்துவதாக நம்பப்படுகிறது.
</p><p><b>
கோவில் மணி ஓசை:</b>
இரவு நேரத்தில் கோவில் மணி ஒலி கேட்பது, அதிர்ஷ்டமும் நற்செய்திகளும் நம்மை நோக்கி வருவதற்கான அறிகுறியாக சாஸ்திரங்களில் கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e7a4ae5e-8862-41ca-85e9-1c4408b7922a/26-6a6b547c07eee.webp' /></p><p></p><p>
</p><p>
அதேபோல், சில நேரங்களில் எந்தவித வெளிப்படையான காரணமும் இல்லாமல் விபூதி, சந்தனம் போன்ற தெய்வீக நறுமணங்களை உணரலாம். இத்தகைய நறுமணங்களும் நம்மைச் சுற்றி தெய்வீக ஆற்றல் நிறைந்திருப்பதற்கான அறிகுறிகளாக நம்பப்படுகின்றன.</p><p><b>இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;&nbsp;</b></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-30T17:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[சீரியல் நடிகை கேப்ரியல்லா செல்லஸுக்கு என்னாச்சு.. மருத்துவமனையில் அனுமதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/serial-actress-gabrella-sellus-major-surgery-1785432205"></link>
            <id>https://cineulagam.com/article/serial-actress-gabrella-sellus-major-surgery-1785432205</id>
            <summary type="text">சன்டிவியின் சுந்தரி சீரியல் புகழ் நடிகை கேப்ரியல்லா செல்லஸ் சின்னத்திரையில் பாப்புலர் நடிகைகளில் ஒருவர்.அவர் சீரியல்கள் மட்டுமின்றி சில படங்களிலும் நட...</summary>
            <content type="html"><![CDATA[<p>சன்டிவியின் சுந்தரி சீரியல் புகழ் நடிகை கேப்ரியல்லா செல்லஸ் சின்னத்திரையில் பாப்புலர் நடிகைகளில் ஒருவர்.</p><p>அவர் சீரியல்கள் மட்டுமின்றி சில படங்களிலும் நடித்து இருக்கிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9e48d05d-eea2-4e8a-9fe6-1008ce599acd/26-6a6b888eab9ac.webp' /></p><p> </p><h2>
மேஜர் சர்ஜரி
</h2><p>
இரண்டு நாட்களுக்கு முன் தனக்கு நடைபெற்ற மேஜர் சர்ஜரிவாழ்க்கையையே மாற்றி விட்டது என கேப்ரியல்லா தெரிவித்துள்ளார்.
</p><p>"உடல்நலம் தான் மிகப்பெரிய சொத்து என்பதை அப்போது தான் உணர்ந்தேன். பலரது உண்மையான சுயரூபத்தையும் நான் பார்த்தேன். வாழ்க்கை கணிக்கமுடியாதது. மீண்டு வலிமையாக வருவேன். "</p><p>இவ்வாறு கேப்ரியல்லா தெரிவித்து இருக்கிறார்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-30T17:26:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை வந்த தொழிலதிபர் அதிரடி கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/businessman-arrested-upon-arrival-in-sri-lanka-1785430601"></link>
            <id>https://jvpnews.com/article/businessman-arrested-upon-arrival-in-sri-lanka-1785430601</id>
            <summary type="text">வெளிநாட்டுத் தயாரிப்புச் சிகரெட்டுகளைச் சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவந்த, இலங்கை பயணி ஒருவர் இன்று (30) சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">வெளிநாட்டுத் தயாரிப்புச் சிகரெட்டுகளைச் சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவந்த, இலங்கை பயணி ஒருவர் இன்று (30) சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p style="text-align: justify; ">

சிலாபம், மாரவில பகுதியைச் சேர்ந்த 43 வயதுடைய வியாபாரி ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ceb78aea-4fe1-4326-9fd9-ca0058258853/26-6a6b824b5122f.webp' /></p><h2 style="text-align: justify; ">மேலதிக விசாரணை</h2><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
இவர் இன்று காலை 10.00 மணியளவில் டுபாயிலிருந்து எமிரேட்ஸ் விமான சேவைக்குச் சொந்தமான EK-650 என்ற விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
</p><p style="text-align: justify; ">
இதன்போது, சந்தேகநபர் கொண்டு வந்த 02 பயணப் பைகளைச் சோதனையிட்ட போது, அவற்றுள் மறைத்து வைக்கப்பட்டிருந்த "மென்செஸ்டர்" மற்றும் "பிளாட்டினம்" வகையைச் சேர்ந்த 46 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பெறுமதியுடைய 31,000 சிகரெட்டுகள் அடங்கிய 155 சிகரெட் கார்டூன்கள் சுங்க அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
மேலும், கைது செய்யப்பட்ட சந்தேகநபரைத் தடுத்து வைத்துள்ள கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-07-30T17:15:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பெண்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் நோக்கில் யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்ட பயிற்சி நெறி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/women-s-livelihood-training-begins-in-jaffna-1785424860"></link>
            <id>https://tamilwin.com/article/women-s-livelihood-training-begins-in-jaffna-1785424860</id>
            <summary type="text">பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் செயற்பட்டு வரும் ஜீவ ஊற்று
அன்பின் கரம் அமைப்பின் நான்காவது கிளை அலுவலகம் இன்றையதினம் யாழ்ப்பாணம்,
அர...</summary>
            <content type="html"><![CDATA[<p>பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் செயற்பட்டு வரும் ஜீவ ஊற்று
அன்பின் கரம் அமைப்பின் நான்காவது கிளை அலுவலகம் இன்றையதினம் யாழ்ப்பாணம்,
அரியாலையில் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.</p><p>

அரியாலை சரஸ்வதி சனசமூக நிலைய கட்டிடத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வு தேசியக்
கொடியேற்றலுடன் ஆரம்பமானது.</p><h2>பெண்களின் வாழ்வாதார மேம்பாடு</h2><p> </p><p>அதனைத் தொடர்ந்து விருந்தினர்கள்
வரவேற்கப்பட்டதுடன், பிரதம அதிதியாக கலந்து கொண்ட யாழ்ப்பாணம் போதனா
வைத்தியசாலையின் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி அவர்கள் நாடா வெட்டி புதிய கிளை
அலுவலகத்தை திறந்து வைத்துள்ளார்.</p><p>
புதிய கிளை அலுவலகத்தின் ஊடாக பெண்களுக்கான தையல் பயிற்சி, ஆரி வேலைப்பாடு,
கேக் ஐசிங், அழகுக்கலை உள்ளிட்ட பல்வேறு தொழிற்பயிற்சி வகுப்புகள்
முன்னெடுக்கப்படவுள்ளதுடன் கிறிஸ்தோபர் எமி (கனடா ) அவர்களின்
நிதி அனுசரணையில் தையல் பயிற்சி நெறி முதற்கட்டமாக இன்றையதினம் உத்தியோக
பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a11e3780-2f60-42c3-9d02-a85c3996bf89/26-6a6b6bdf561ac.webp' /></p><p>பெண்களுக்கு தொழில்திறன்களை வழங்கி அவர்களின் பொருளாதார முன்னேற்றத்தையும்
தன்னம்பிக்கையையும் உயர்த்தும் நோக்கில் இந்த இலவச கற்கைநெறிகள் தொடர்ச்சியாக
முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், அதன் ஒரு பகுதியாக ஜீவ ஊற்று அன்பின் கரத்தின்
நான்காவது கிளை அலுவலகம் யாழ்ப்பாணத்தில் திறந்து வைக்கப்பட்டமை
குறிப்பிடத்தக்கதாகும்.</p><p>ஜீவ ஊற்று அன்பின் கரத்தின் யாழ் மாவட்ட உத்தியோகத்தர் கலையரசன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், தனிமனித மேம்பாட்டு வழிநடத்துனரும் பத்மஷாலா நல்வாழ்வு நிறுவனத்தின் நிறுவுனருமான நளினாசினி அம்பிகைபாகன், வன்னி தமிழ் மக்கள் ஒன்றியத்தின் நிறுவனர் தரன் ஶ்ரீ, வன்னி தமிழீழ மக்கள் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் நிரூபன் உள்ளிட்ட பல்வேறு சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள், ஜீவ ஊற்று அன்பின் கரத்தின் உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-30T17:07:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானுக்கு ஆயுதங்கள் வழங்கியதாக வெளியான தகவலை மறுக்கும் சீனா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/china-rejects-report-of-air-defence-missile-1785430417"></link>
            <id>https://tamilwin.com/article/china-rejects-report-of-air-defence-missile-1785430417</id>
            <summary type="text">&amp;nbsp;சீனாவில் தயாரிக்கப்பட்ட தோளில் வைத்து இயக்கும் 400 வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்புகளை ஈரான் இன்னும் சில வாரங்களில் பெறவுள்ளதாக சர்வதேச செய்தி நிற...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;சீனாவில் தயாரிக்கப்பட்ட தோளில் வைத்து இயக்கும் 400 வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்புகளை ஈரான் இன்னும் சில வாரங்களில் பெறவுள்ளதாக சர்வதேச செய்தி நிறுவனம் ஒன்று வெளியிட்ட செய்தி முற்றிலும் தவறானது என்றும் உண்மைக்குப் புறம்பானது என்றும் சீனா மறுத்துள்ளது.
</p><p>குறித்த ஊடகம் பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரப்பூர்வ ஆதாரங்களை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டிருந்தது. </p><p>
அதில், சீனாவிலிருந்து ஈரானுக்கு வான் பாதுகாப்பு அமைப்புகள் வழங்கப்படவுள்ளதாகக் கூறப்பட்டிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e08d9b93-4f28-4499-913f-d9463ea53369/26-6a6b819369fd8.webp' /></p><p>
</p><p>அந்தச் செய்தியின்படி, முதற்கட்டமாகச் மேற்கு சீனாவில் உள்ள உரும்கி நகரிலிருந்து விமானங்கள் மூலம் பாகிஸ்தான் வழியாக ஈரானுக்கு இந்த ஏவுகணைகள் கொண்டு செல்லப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.</p><p>
பீஜிங்கில் நடைபெற்ற வழக்கமான செய்தியாளர் சந்திப்பில் சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மாவோ இது குறித்து கருத்து வெளியிட்டுள்ளார்.</p><p>
தொடர்புடைய விவகாரங்களில் சீனா பலமுறை தனது நிலையைத் தெளிவுபடுத்தியுள்ளது. இந்தச் செய்திகள் முற்றிலும் உண்மையற்றவை மற்றும் ஆதாரமற்றவை. </p><p>சீனா எப்போதும் அமைதிக்காகவும் மோதல்களை முடிவுக்குக் கொண்டுவரவுமே பாடுபடுகிறது என தெரிவித்துள்ளார்.</p><p>
இந்த ஏவுகணை விநியோகத்திற்கான வழித்தடமாக குறிப்பிடப்பட்டிருந்த பாகிஸ்தானும் ஒரு நாளுக்கு முன்பாகவே இச்செய்தியை மறுத்திருந்தது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-30T16:53:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீர்கொழும்பில் கோர விபத்தில் பலியான இளைஞர்கள்.. வெளியான பரபரப்பு சிசிடிவி காட்சிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/cctv-footage-2-teens-killed-negombo-crash-1785428597"></link>
            <id>https://tamilwin.com/article/cctv-footage-2-teens-killed-negombo-crash-1785428597</id>
            <summary type="text">அதிவேகத்தில் சென்ற இரண்டு மோட்டார் சைக்கிள்கள் விபத்துக்குள்ளாகி இரண்டு இளைஞர்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

நீர...</summary>
            <content type="html"><![CDATA[<p>அதிவேகத்தில் சென்ற இரண்டு மோட்டார் சைக்கிள்கள் விபத்துக்குள்ளாகி இரண்டு இளைஞர்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
</p><p>
நீர்கொழும்பு - மினுவாங்கொட வீதியில், போலவலன பகுதியில் நேற்று இரவு இரண்டு இளைஞர்களின் உயிரைப் பறித்த கொடூர வீதி விபத்து தொடர்பான அதிர்ச்சி தரும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.</p><p>கன்டெய்னர் முனையத்திற்குள் பின்னோக்கி நகர்ந்து கொண்டிருந்த பிரைம் மூவர் ரக லொறியின் டிரெய்லர் பகுதியில், அதிவேகமாக வந்த இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதியது அந்த சிசிடிவி காட்சியில் பதிவாகியுள்ளது.&nbsp;</p><p></p><h2>தீ வைக்கப்பட்ட வாகனம்..&nbsp;</h2><p>
</p><p>
இந்த விபத்தின் காரணமாக, மோட்டார் சைக்கிள்களை செலுத்தி வந்த 18 மற்றும் 19 வயதுடைய இரு இளைஞர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6b30cbb8-6440-4471-9844-ae3d0ae1a643/26-6a6b8023ab3c9.webp' /></p><p>

விபத்தைத் தொடர்ந்து, சம்பவ இடத்தில் கூடிய பொதுமக்கள் சிலர் அந்த பிரைம் மூவர் லொறிக்கு தீ வைத்துள்ளனர். </p><p>நீர்கொழும்பு மாநகரசபையின் தீயணைப்புப் படையினரும், கட்டான பொலிஸாரும் இணைந்து தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
</p><p>
இந்த உயிரிழப்பை ஏற்படுத்திய விபத்து மற்றும் வாகனத்திற்கு தீ வைக்கப்பட்ட சம்பவம் ஆகிய இரண்டும் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளைத் தொடங்கியுள்ளனர்.</p><p>

உயிரிழந்தவர்கள் நீர்கொழும்பு, தாகொன்ன பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய தலிஷ நிம்னெத் சிறிவர்தன மற்றும் 19 வயதுடைய கவிந்து ஹஷான் சோமதிலக்க என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-30T16:50:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[சர்வதேச மன்னிப்புச் சபை, இந்தியா மீது பரபரப்புக் குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/amnesty-says-indian-arms-exports-to-israel-1785429915"></link>
            <id>https://tamilwin.com/article/amnesty-says-indian-arms-exports-to-israel-1785429915</id>
            <summary type="text">காசாவில் பாலஸ்தீன மக்களுக்கு எதிராக நடைபெற்று வரும் போருக்கு இடையே, இஸ்ரேலுக்கு இந்தியா தொடர்ந்து ஆயுதங்களை வழங்கி வருவதாகச் சர்வதேச மன்னிப்புச் சபை க...</summary>
            <content type="html"><![CDATA[<p>காசாவில் பாலஸ்தீன மக்களுக்கு எதிராக நடைபெற்று வரும் போருக்கு இடையே, இஸ்ரேலுக்கு இந்தியா தொடர்ந்து ஆயுதங்களை வழங்கி வருவதாகச் சர்வதேச மன்னிப்புச் சபை குற்றம் சாட்டியுள்ளது.
</p><p>சர்வதேச மன்னிப்புச் சபை வெளியிட்ட “மேட் இன் இந்தியா” (Made in India) என்ற தலைப்பிலான அறிக்கையில், ஏற்றுமதி சார்ந்த விரிவான தரவுகள் ஆய்வு செய்யப்பட்டு ஆதாரங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
</p><p>ஒக்டோபர் 7, 2023 முதல் நவம்பர் 30, 2025 வரையிலான காலத்தில், இந்தியாவில் இருந்து இஸ்ரேலுக்குக் குறைந்தபட்சம் 2,596 ஆயுத ஏற்றுமதி கப்பல்கள் அனுப்பப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ec95b7ca-9b7b-4da9-a422-a1e9ea7875eb/26-6a6b7f9cc5a48.webp' /></p><p>
</p><p>சிறிய ரக ஆயுதப் பாகங்கள், பீரங்கி குண்டு உரைகள் மற்றும் 'லோயிட்டரிங் டியூனிஷன்ஸ்' எனப்படும் ட்ரோன்களுக்கான வெடிமருந்து தலைப்பகுதிகள் ஆகியவை இதில் அடங்கும்.</p><p>
இவை இஸ்ரேலின் எல்பிட் சிஸ்டம்ஸ், ரஃபேல் மற்றும் இஸ்ரேல் ஏரோஸ்பேஸ் இண்டஸ்ட்ரீஸ் ஆகிய முன்னணி பாதுகாப்பு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.</p><p>
அனுப்பப்பட்ட ஆயுதங்களை விநியோகம் செய்த நிறுவனங்களில் பல, நேரடியாக இந்திய அரசின் கீழ் அல்லது கட்டுப்பாட்டில் இயங்குபவை என்று சர்வதேச மன்னிப்புச் சபை சுட்டிக்காட்டியுள்ளது.</p><p> 
மேலும், சர்வதேச சட்ட விதிகளுக்கு உட்பட்டு இந்த ஏற்றுமதிகளைக் கட்டுப்படுத்த இந்தியா தவறிவிட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
</p><p>முக்கிய விநியோக நிறுவனங்களின் உரிமையாளராகவும் கட்டுப்பாட்டாளராகவும் இருந்து, இஸ்ரேலுக்குச் செல்லும் ஆயுதங்களை இந்தியா தயாரித்து வழங்கி வருகிறது. </p><p>இந்த ஆயுதப் பரிமாற்றங்களை உடனடியாக நிறுத்த வேண்டும் என சர்வதேச மன்னிப்புச் சபையின் பொதுச் செயலாளர் ஆக்னஸ் காலமார்ட் தெரிவித்துள்ளார்.
</p><p>
2026-ஆம் ஆண்டின் மத்தியில், இது தொடர்பாக இந்திய அரசுக்கும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள 9 உற்பத்தி நிறுவனங்களுக்கும் கடிதம் எழுதியதாகவும், ஆனால் அறிக்கை வெளியாகும் வரை எந்தவொரு பதிலும் வரவில்லை என்றும் சர்வதேச மன்னிப்புச் சபை மேலும் தெரிவித்துள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-30T16:46:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[பேஸ்பால் போட்டி பார்த்த இடத்தில் அடித்த அதிர்ஷ்டம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/10m-lotto-max-prize-he-learned-he-became-1785428664"></link>
            <id>https://canadamirror.com/article/10m-lotto-max-prize-he-learned-he-became-1785428664</id>
            <summary type="text">&amp;nbsp;பேஸ்பால் விளையாட்டுப் போட்டியைக் கண்டு களித்துக் கொண்டிருந்தபோது, தாம் 10 மில்லியன் டாலர் லாட்டரி தொகையை வென்று மில்லியனரான செய்தியை அறிந்து ஒரு...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;பேஸ்பால் விளையாட்டுப் போட்டியைக் கண்டு களித்துக் கொண்டிருந்தபோது, தாம் 10 மில்லியன் டாலர் லாட்டரி தொகையை வென்று மில்லியனரான செய்தியை அறிந்து ஒருவர் வியப்பில் ஆழ்ந்துள்ளார்
கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்தைச் சேர்ந்த நபர் ஒருவரே இவ்வாறு லொத்தர் சீட்டிலுப்பில் பணப்பரிசு வென்றுள்ளார்.</p><p> 
ஒன்ராறியோவின் கிங் சிட்டி பகுதியைச் சேர்ந்த பிராண்டன் ஜி, தனது உறவினர் பங்கேற்ற பேஸ்பால் தொடரைப் பார்வையாளர் மாடத்திலிருந்து பார்த்துக் கொண்டிருந்தபோது, அவரது கைபேசிக்கு 'ஒன்ராறியோ லாட்டரி மற்றும் சூதாட்டக் கழகத்திடமிருந்து' தொடர்ச்சியாகப் பல மின்னஞ்சல்கள் வந்தன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/88f577be-bced-4e0b-bace-87e4c1ef4c29/26-6a6b7daed875d.webp' /></p><p> </p><p>
ஆரம்பத்தில் அவற்றில் சில தேவையற்றவை என்று அவர் நினைத்தபோதிலும், தனது கணக்கில் லாக்-இன் செய்து பார்த்தபோது உண்மை தெரியவந்தது. </p><p>
ஆரம்பத்தில் நான் 10,000 டொலர் மட்டுமே வென்றுள்ளதாக நினைத்தேன். ஆனால், பின்னர்தான் கூடுதல் பூஜ்ஜியங்களைக் கவனித்து, அது 10 மில்லியன் டொலர் என்பதை உணர்ந்து அதிர்ச்சியடைந்தேன் என தெரிவித்துள்ளார். </p><p>
உடனே ஆட்டம் நடந்த இடத்தில் இருந்து தனியாகச் சென்று, தனது துணைவியாரை அழைத்து இந்தச் செய்தியைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.
</p><p> வங்கிக் கணக்கில் பணம் வைப்பிலிடப்படும் வரை இந்த அதிர்ஷ்டத்தை இருவராலும் நம்பவே முடியவில்லையாம். 
10 மில்லியன் டொலர் காசோலையைப் பெற்றுக்கொண்ட பிராண்டன், இந்த வெற்றி தமக்கு எதிர்காலத்தைப் பற்றிய மன அமைதியையும் பாதுகாப்பையும் தந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.</p><p> 
எனினும், பணி ஓய்வு பெற இன்னும் சில ஆண்டுகள் இருப்பதால், தொடர்ந்து பணியில் ஈடுபடவே திட்டமிட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-30T16:37:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ் பிரபல பாடசாலையில் இடம்பெற்ற முறைகேடுகள் அம்பலம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/victoria-college-chulipuram-jaffna-fraud-prominent-1785416894"></link>
            <id>https://jvpnews.com/article/victoria-college-chulipuram-jaffna-fraud-prominent-1785416894</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;யாழ். சுழிபுரம் விக்டோரியா கல்லூரியில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் பெறப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;யாழ். சுழிபுரம் விக்டோரியா கல்லூரியில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் பெறப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில் இன்று பழைய மாணவன் சதாசிவம் ஊடக சந்திப்பை நடாத்திருந்தார். ஊடக சந்திப்பில் அவர் கருத்து தெரிவிக்கையில்,
</p><p>
பாடசாலையில் பழமையான மதிலை உடைப்பதற்கு பழைய மாணவர்கள் விரும்பாத நிலையில் சிலரின் தூண்டுதலின் பேரில் குறித்த மதில் உடைக்கப்பட்டு புதிய மதில் அமைக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5c03cba5-0e20-4eb6-887c-eb8d32078db9/26-6a6b4cbfddf75.webp' /></p><h2>முறையான விசாரணைகள் ஏதும் இடம்பெறவில்லை</h2><p>
</p><p>
குறித்த மதில் அமைப்பதற்கு பெறப்பட்ட அனுமதிகள் ஒன்றுக்கொன்று முரணாகவும் முறைகேடாகவும் பெறப்பட்டமை தகவலறையும் சட்ட மூலத்தில் வெளிக்கொண்டுவரப்பட்டிருக்கிறது.
</p><p>
அதாவது வலிகாம கல்வி வலயத்தால் இரண்டு கடிதத் தலைப்புக்கள் பரிமாறப்பட்டதுடன் ஒன்றில் திகதி இடப்படாமல் உயர் அதிகாரியின் கையெழுத்து இடப்பட்டுள்ளது.

அது மட்டும் அல்லாது குறித்த மதிலை மீள புனரமைப்பதற்கு மட்டும் வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ஆனால் அனுமதிக்கப்பட்ட கடிதம் வழங்கப்பட்ட நிலையில் யாருடைய தூண்டுதலின் பேரில் முழுமையாக மதில் இடித்து அழைக்கப்பட்டது.
</p><p>
மேலும் தற்போது இடம் பெற்ற 150வது ஆண்டு விழாவுக்கான நிதி பாடசாலையில் அங்கீகரிக்கப்பட்ட முறைமைகளை பின்பற்றாது தனியார் கணக்குகளில் பெறப்பட்டமை தொடர்பிலும் பொலிசாருக்கு தகவல் வழங்கியுள்ளோம்.
</p><p>

எமது முறைப்பாடுகள் வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் , மாகாண கல்வித் திணைக்கலாம் மற்றும் வடமாகாண ஆளுநருக்கு தெரியப்படுத்தியுள்ள நிலையில் இதுவரை முறையான விசாரணைகள் ஏதும் இடம்பெறவில்லை.
</p><p>
குறித்த மதில் கட்டுவதற்கு பிரதேச சபையின் அனுமதி பெறப்பட முன்னரே தவிசாளர் பாடசாலை நிர்வாகத்திற்கு பதில் கட்டுவதற்கான அனுமதி வழங்கப்பட்டமை ஆதாரங்களுடன் தெரியவந்துள்ளது.</p><p>

ஆகவே குறித்த பாடசாலையின் பழமையைப் பேணுவதோடு புதிய விடயங்களை மேற்கொள்ளும்போது உரிய அனுமதிகள் வராது தன்னிச்சையாக செயல்படும் செயற்பாடுகளுக்கு எதிராக உரிய தரப்பினர்கள் சரியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.</p><p>

இவர்களை நடவடிக்கை போதாது இடத்து நீதிமன்றம் செல்ல வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்படுவோம் என அவர் மேலும் தெரிவித்தார்.</p>]]></content>
            <updated>2026-07-30T16:36:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[தளபதிகளுடன் முரண்பாடு : முகாமைவிட்டே வெளியேறிய இஸ்ரேல் இராணுவத்தினர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/israeli-soldiers-leavesde-base-dispute-commanders-1785427887"></link>
            <id>https://ibctamil.com/article/israeli-soldiers-leavesde-base-dispute-commanders-1785427887</id>
            <summary type="text">தெற்கு இஸ்ரேலில் உள்ள ஸ்தே தைமான் இராணுவத் தளத்திலிருந்து, மூத்த தளபதிகளுடனான முரண்பாட்டைத் தொடர்ந்து டசின் கணக்கான இஸ்ரேலிய வீரர்கள் இன்று வியாழக்கிழ...</summary>
            <content type="html"><![CDATA[<p>தெற்கு இஸ்ரேலில் உள்ள ஸ்தே தைமான் இராணுவத் தளத்திலிருந்து, மூத்த தளபதிகளுடனான முரண்பாட்டைத் தொடர்ந்து டசின் கணக்கான இஸ்ரேலிய வீரர்கள் இன்று வியாழக்கிழமை வெளியேறினர் என்று இஸ்ரேலிய செய்தித்தாளான 'தி ஜெருசலேம் போஸ்ட்' செய்தி வெளியிட்டுள்ளது.

அந்த வீரர்கள் கிவாட்டி படைப்பிரிவின் சபர் பட்டாலியனைச் சேர்ந்தவர்கள் என்று அந்த ஊடகம் தெரிவித்தது.</p><p>"கிவாட்டி படைப்பிரிவில் உள்ள வட்டாரங்களின்படி, பட்டாலியனின் படைப்பிரிவுகளால் காட்சிப்படுத்தப்பட்ட சின்னங்களை அகற்றி அழிக்க கட்டளைத் தளபதிகள் முடிவு செய்தனர்," என்று அந்த செய்தித்தாள் கூறியது.</p><h2>&nbsp;இணக்கப்பாடு ஏற்படாததால் தளத்தைவிட்டு வெளியேறிய வீரர்கள்</h2><p>

வீரர்களின் எதிர்ப்பையும் மீறி, பட்டாலியன் தளபதி அந்த முடிவைச் செயல்படுத்துவதில் பிடிவாதமாக இருந்தார் என்றும் அது தெரிவித்தது.</p><p><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="iw" dir="rtl">מרד בחטיבת גבעתי: לוחמים מגדוד צבר השאירו את נשקיהם ועזבו את בסיס שדה תימן שבו היו בימים האחרונים אחרי שיצאו מלבנון. מרד החל לאחר שמפקד הגדוד, שניתץ בפטיש סמלים בפלוגה, אותם דרש להסיר.<br><br>תגובת דובר צה״ל: &quot;לפני זמן קצר מספר חיילים בגדוד לוחם החלו לצאת מבסיסם ללא אישור מפקדיהם; זאת… <a href="https://t.co/oUTOSb2yoe">pic.twitter.com/oUTOSb2yoe</a></p>&mdash; איתי בלומנטל 🇮🇱 Itay Blumental (@ItayBlumental) <a href="https://x.com/ItayBlumental/status/2082789279470649407?ref_src=twsrc%5Etfw">July 30, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>
</p><p>
"தளபதிகளில் ஒருவர், சின்னங்களில் ஒன்றை அழிக்க ஐந்து கிலோகிராம் எடையுள்ள சுத்தியலைப் பயன்படுத்தினார்," என்று அந்தப் பிரிவில் பணியாற்றும் ஒரு வீரர் இஸ்ரேலிய செய்தி இணையதளமான 'வல்லா'விடம் கூறினார்.
</p><p>
இரு தரப்பினரும் ஒரு உடன்பாட்டிற்கு வரத் தவறியதால், வீரர்கள் அந்தப் பிரிவை விட்டு வெளியேறி, தளத்தை விட்டு நடந்து சென்றனர் என்று 'தி ஜெருசலேம் போஸ்ட்' செய்தி வெளியிட்டுள்ளது.</p><p></p><h2>கொடூர சித்திரவதைக்கு பேர்போன முகாம்</h2><p>
</p><p>
இஸ்ரேலின் நெகேவ் பாலைவனத்தில் உள்ள ஸ்தே தைமான் என்ற இராணுவத் தளம், காசா பகுதியிலிருந்து தடுத்து வைக்கப்பட்ட பாலஸ்தீனியர்களுக்கு எதிரான தொடர்ச்சியான துஷ்பிரயோகக் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகி வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/571d2d56-c76f-413b-b857-bf20d27512d5/26-6a6b7d1c43b41.webp' /></p><p>

பாலஸ்தீனிய மற்றும் இஸ்ரேலிய ஊடகங்களும், உரிமை அமைப்புகளும், அந்தத் தளத்தில் காவலில் இருக்கும்போது நிகழும் தாக்குதல்கள், நீண்டகாலக் கட்டுப்பாடு, மருத்துவப் புறக்கணிப்பு மற்றும் மரணங்களை ஆவணப்படுத்தியுள்ளன. </p><p>இந்தத் தளம், கியூபாவின் குவாண்டநாமோ விரிகுடாவில் உள்ள அமெரிக்கத் தடுப்பு மையத்துடன் ஒப்பிடப்படுகிறது.
</p><p>
பாலஸ்தீனிய உரிமை அமைப்புகளின்படி, சித்திரவதை, மருத்துவப் புறக்கணிப்பு மற்றும் கொடுமைகள் குறித்த தொடர்ச்சியான அறிக்கைகளுக்கு மத்தியில், சுமார் 350 சிறுவர்கள் மற்றும் 84 பெண்கள் உட்பட 9,600-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் தற்போது இஸ்ரேலிய சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-30T16:34:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தலைக்கவசங்கள் தொடர்பில் வெளியான முக்கிய தகவல் ; கடுமையாக்கப்படும் சட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/authorities-issue-notice-on-helmet-rules-1785429263"></link>
            <id>https://jvpnews.com/article/authorities-issue-notice-on-helmet-rules-1785429263</id>
            <summary type="text">தரமற்ற தலைக்கவசங்களுக்கு எதிராக சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும் என நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.

 

அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">தரமற்ற தலைக்கவசங்களுக்கு எதிராக சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும் என நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.
</p><p style="text-align: justify; ">
 

அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அந்த அதிகாரசபை, SLS முத்திரை இல்லாத தலைக்கவசங்களை உற்பத்தி செய்தல், இறக்குமதி செய்தல், விநியோகித்தல், களஞ்சியப்படுத்துதல், காட்சிப்படுத்துதல் அல்லது விற்பனை செய்தல் சட்டவிரோதமானது எனத் தெரிவித்துள்ளது.</p><p style="text-align: justify;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e95b4513-378e-4411-a1bf-14275ee236ee/26-6a6b7f2b07a70.webp' /></p><h2 style="text-align: justify;">வர்த்தமானிப் பத்திரிகை</h2><p>
</p><p style="text-align: justify;">
 

2015.07.16 ஆம் திகதியுடைய 1923/65 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானிப் பத்திரிகையின் 59 ஆம் இலக்கக் கட்டளைக்கு அமைய, இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் அல்லது இறக்குமதி செய்யப்படும் மோட்டார் சைக்கிள் பாதுகாப்புத் தலைக்கவசங்களுக்கு SLS 517 தரநிலைக்குரிய SLS தரச்சான்றிழ் முத்திரை இருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify;">

 

இதற்கமைய, கடந்த 27ஆம் திகதி தீவு முழுவதும் 98 சிறப்புச் சோதனைகள் நடத்தப்பட்டதாகவும், இதன்போது SLS முத்திரை இல்லாத 431 க்கும் மேற்பட்ட தலைக்கவசங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் நுகர்வோர் விவகார அதிகாரசபை குறிப்பிட்டுள்ளது.</p><p style="text-align: justify;"></p><p>
</p><p style="text-align: justify;">
 

மேலும், SLS அனுமதிப்பத்திரத்தைப் புதுப்பிக்காத காலப்பகுதியில் தலைக்கவசங்களை உற்பத்தி செய்த இரு தொழிற்சாலைகளின் 3,520 தலைக்கவசங்களின் விற்பனையும் தடை செய்யப்பட்டுள்ளது.
</p><p style="text-align: justify;">
 

2026 ஆம் ஆண்டில் இதுவரை 151 சோதனைகளும் சட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், 4,038 க்கும் மேற்பட்ட தலைக்கவசங்கள் தொடர்பில் கைப்பற்றுதல், விற்பனையை நிறுத்துதல் உள்ளிட்ட சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் நுகர்வோர் விவகார அதிகாரசபை மேலும் தெரிவித்துள்ளது.</p><p style="text-align: justify;"></p>]]></content>
            <updated>2026-07-30T16:34:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் நாயைக் காப்பாற்ற முயன்று ஏரியில் மூழ்கிய நபர்: சடலமாக மீட்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/man-drowns-in-bc-lake-while-trying-to-save-dog-1785428422"></link>
            <id>https://canadamirror.com/article/man-drowns-in-bc-lake-while-trying-to-save-dog-1785428422</id>
            <summary type="text">கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள ஏரியில் மூழ்கிப் பலியான நபரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள ஏரியில் மூழ்கிப் பலியான நபரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p> 
'எல்க் வேலி' பொலிஸாருக்கு கூகனூசா ஏரியில் நபர் ஒருவர் நீரில் மூழ்கியதாகத் தகவல் கிடைத்தது.</p><p> 
அல்பெர்ட்டா மாகாணத்தைச் சேர்ந்த 63 வயதான நபர் ஒருவர், நீரில் தவித்துக் கொண்டிருந்த தனது நாயைக் காப்பாற்றுவதற்காக ஏரியில் குதித்துள்ளார்.அப்போது அவர் எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3e62d20a-d9c2-4062-92b9-9326d933385c/26-6a6b79c8769f7.webp' /></p><p> </p><p>
ஆரம்பத்தில் காவல் துறையினரின் படகுகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் தீவிரத் தேடுதல் வேட்டை நடத்தப்பட்ட போதிலும், அந்த நபரை உடனடியாகக் கண்டுபிடிக்க முடியவில்லை.</p><p>எனினும், அவரது நாய் பாதுகாப்பாக நீந்தி கரை சேர்ந்துள்ளது. 
தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் பலனாக, 'ஹட்டேரியன் அவசரகால நீர்சார் மீட்புக் குழுவின்' உதவியுடன் அவரது சடலம் மீட்கப்பட்டது. </p><p>உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்குக் காவல் துறையினர் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டனர்.</p><p> 
மாகாண அரசின் புள்ளிவிவரங்களின்படி, நடப்பு ஆண்டில் மே 1 முதல் ஜூலை 16 வரை 40 பேர் நீரில் மூழ்கி விபத்தாக உயிரிழந்துள்ளனர்.
</p><p> 2025-ஆம் ஆண்டின் இதே காலகட்டத்தில் 26 பேர் மட்டுமே உயிரிழந்திருந்த நிலையில், இந்த ஆண்டு உயிரிழப்புகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்திருப்பது கவலையளிப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-30T16:24:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[49 வயதில் 25 இல் ஆடிய அதே பாடலுக்கு மேடையில் குத்தாட்டம் போட்ட சிம்ரன்! வைரலாகும் வீடியோ]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/49-years-old-actress-simran-dance-video-viral-1785427035"></link>
            <id>https://manithan.com/article/49-years-old-actress-simran-dance-video-viral-1785427035</id>
            <summary type="text">49 வயதிலும் குறையாத இளமையுடன் ரசிகர்களை ஈர்த்து வரும் நடிகை&amp;nbsp; சிம்ரன் தற்போது&amp;nbsp; Dance Jodi Dance நிகழ்சியில் நடுவராக பங்கேற்று வருகின்றார். இந...</summary>
            <content type="html"><![CDATA[<p>49 வயதிலும் குறையாத இளமையுடன் ரசிகர்களை ஈர்த்து வரும் நடிகை&nbsp; சிம்ரன் தற்போது&nbsp; Dance Jodi Dance நிகழ்சியில் நடுவராக பங்கேற்று வருகின்றார்.</p><p> இந்நிகழ்ச்சியின்&nbsp;தளபதி கச்சேரி Round இல் தான் 25 வயதில் இருக்கும் போது நடனமாடிய யூத் திரைப்பட பாடலுக்கு மேடையில் அதே எனர்ஜியுடன் குத்தாட்டம் போட்டு அசத்திய காணொளி இணையத்தில் படு வைராலாகி வருகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9798f260-f515-47a4-95f8-4089136afc77/26-6a6b7852df84e.webp' /></p><p></p><h2>

நடிகை சிம்ரன்
</h2><p>
தமிழ் சினிமாவில் VIP படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை சிம்ரன். இதன்பின், நேருக்கு நேர், வாலி படங்கள் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென தனித்துவமான இடத்தையும் அடையாளத்தையும் உருவாக்கிக்கொண்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7ff6139f-8f73-4992-b454-930208f6a75f/26-6a6b7853937d7.webp' /></p><p>விஜய், அஜித், கமல், ரஜினி என பல முன்னணி நட்சத்திரங்களுடன் ஜோடி சேர்ந்து பல ஹிட் படங்களை கொடுத்தவர்.

தொடர்ந்து பல ஆண்டுகளாக நாயகியாகவும் கேரக்டர் ஆர்ட்டிஸ்ட், வில்லி என பல்வேறு கதாப்பாத்திரங்களில் நடித்து மாஸ் காட்டி வருகின்றார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5f2d6f2f-45db-44d9-b688-5154464ba128/26-6a6b785446206.webp' /></p><p>கடந்த 2003 ஆம் ஆண்டு தீபக் என்பவரை திருமணம் செய்துக் கொண்டார். குழந்தைகள் உள்ள நிலையிலும் படங்களில் நடித்து வருகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0b97a493-1e33-40a1-bef6-a3f8001cc262/26-6a6b7854ec0f6.webp' /></p><p>திருமணத்திற்கு பிறகு சில படங்களை மட்டுமே தேர்ந்து எடுத்து நடித்து வரும் நடிகை சிம்ரன் தற்போது ஜீ தமிழில் ஒளிப்பரப்பாகும் Dance Jodi Dance நடன நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்று வருகின்றார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b3682ad5-1218-4445-acb4-cfeac9404441/26-6a6b7855a2aa8.webp' /></p><p></p><p>இந்நிலையில் djd மேடையில்,&nbsp; தளபதி கச்சேரி Round இல் தான் 25 வயதில் இருக்கும் போது நடனமாடிய யூத் திரைப்பட பாடலுக்கு மேடையில் அதே எனர்ஜியுடன் குத்தாட்டம் போட்டு ரசிகர்களை வாய்பிளக்க வைத்துள்ளார். குறித்த காணொளி தற்போது இணையத்தில் அசுர வேகத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.</p><p><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/reel/DbUoeC2gS9u/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/reel/DbUoeC2gS9u/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/reel/DbUoeC2gS9u/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by zeetamil (@zeetamizh)</a></p></div></blockquote> <script async src="//www.instagram.com/embed.js"></script></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b></td></tr></tbody></table><p><iframe width="325" height="578" src="https://www.youtube.com/embed/jbRkYGOxT1w" title="Successful Business ஆரம்பிக்க இந்த 3 விஷயம் இருந்தா போதும்! 💼🚀" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share" referrerpolicy="strict-origin-when-cross-origin" allowfullscreen></iframe></p>]]></content>
            <updated>2026-07-30T16:16:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹீல் பண்ணா ஹீல்ஸ்ல அடிச்சு தொரத்து!! ஆர்த்தி ரவியின் ஸ்டோரி...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/aarthis-cryptic-instagram-story-goes-viral-1785417051"></link>
            <id>https://viduppu.com/article/aarthis-cryptic-instagram-story-goes-viral-1785417051</id>
            <summary type="text">ஆர்த்தி ரவிநடிகர் ரவி மோகன் கடந்த ஆண்டு தான் மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்வதாக கூறி விவாகரத்து வழக்கு தொடர்ந்த நிலையில், நீதிமன்றம் அதிரடி உத்தரவை ச...</summary>
            <content type="html"><![CDATA[<h2>ஆர்த்தி ரவி</h2><p>நடிகர் ரவி மோகன் கடந்த ஆண்டு தான் மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்வதாக கூறி விவாகரத்து வழக்கு தொடர்ந்த நிலையில், நீதிமன்றம் அதிரடி உத்தரவை சமீபத்தில் பிறப்பித்து இருந்தது.</p><p> அதாவது வழக்கு முடியும் வரை மாதம் 3 லட்சம் ஜீவனாம்சமாக ஆர்த்திக்கு கொடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bae7a99a-5b25-449e-b6f2-76df3457dc61/26-6a6b4d5e25641.webp' /></p><p>
</p><p>
ஆர்த்தி தனக்கு ரூ. 40 லட்சம் வேண்டும் என்று கேட்ட நிலையில் நீதிபதி இப்படியொரு உத்தரவிட்டுள்ளார். மேலும் மகன்களை ரவி மோகனை சந்திக்க அனுமதிக்கவும் உத்தரவிட்டுள்ளனர்.</p><p> இந்நிலையில், ஆர்த்தி ரவி பலநாட்கள் கழித்து இன்ஸ்டாகிராமில் ஒரு ஸ்டோரியை பகிர்ந்துள்ளார். அதில், எவளா(னா)ச்சும் உன்னை ஹீல் பண்றேனு வந்தால்; ஹீல்ஸிலேயே அடிச்சு துரத்திடு என்று போட்டுள்ளார்.</p>]]></content>
            <updated>2026-07-30T16:15:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் ; தேசிய பாதுகாப்பிற்காக சாட்சிய தகவல்களை வெளியிட தடை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/prison-clash-court-bars-release-of-evidence-1785427863"></link>
            <id>https://jvpnews.com/article/prison-clash-court-bars-release-of-evidence-1785427863</id>
            <summary type="text">நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பாக, சம்பவம் நிகழ்ந்தபோது கடமையில் இருந்த பிரதம சிறைச்சாலை அதிகாரி வழங்கிய சாட்சியத்தில் தேசி...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பாக, சம்பவம் நிகழ்ந்தபோது கடமையில் இருந்த பிரதம சிறைச்சாலை அதிகாரி வழங்கிய சாட்சியத்தில் தேசிய பாதுகாப்பை பாதிக்கக்கூடிய மிகுந்த உணர்வுபூர்வமான தகவல்கள் உள்ளதாக நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
</p><p style="text-align: justify; ">
இதனையடுத்து, அந்தச் சாட்சியத்தில் இடம்பெற்றுள்ள தகவல்களை எந்தவொரு ஊடகமும் வெளியிடக் கூடாது என நீர்கொழும்பு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/66ab781d-0acd-4060-aa1f-b2b659a62675/26-6a6b77998c2eb.webp' /></p><h2 style="text-align: justify; ">சாட்சிப் பதிவு</h2><p style="text-align: justify; ">

மேலும், குறித்த சாட்சிப் பதிவை பாதுகாப்பாக நீதிமன்றத்தின் பாதுகாப்புப் பெட்டகத்தில் வைக்குமாறும், நீதிமன்றப் பதிவாளருக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.</p><p style="text-align: justify; ">

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற சம்பவத்தில் 10 சிறைச்சாலை அதிகாரிகளும் 22 கைதிகளும் உயிரிழந்தமை தொடர்பான விசாரணையின் போது, சம்பவம் இடம்பெற்ற வேளையில் நீர்கொழும்பு சிறைச்சாலையின் பிரதம சிறைச்சாலை அதிகாரியாக பணியாற்றிய விக்ரம ஜயந்த குமார நீதிமன்றத்தில் சாட்சியமளித்தார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
இதற்கிடையில், வெலிக்கடை சிறைச்சாலையிலிருந்து நீர்கொழும்பு சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்ட 89 சிறைச்சாலை காவல் அதிகாரிகள் தொடர்பான விவரங்களும், கொழும்பு மற்றும் நீர்கொழும்பு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்கள் தொடர்பான விரிவான அறிக்கையும் சிறைச்சாலை திணைக்களத்தினால் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-07-30T16:11:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹரக் கட்டாவுக்கு எதிரான பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழான குற்றச்சாட்டுகள் தள்ளுபடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/court-dismiss-case-of-harakkata-1785427450"></link>
            <id>https://tamilwin.com/article/court-dismiss-case-of-harakkata-1785427450</id>
            <summary type="text">&amp;nbsp;பிரபல பாதாள உலகக் குழுத் தலைவரான ஹரக் கட்டாவிற்கு எதிராக பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வழக்கு தொடர முடியாது என ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;பிரபல பாதாள உலகக் குழுத் தலைவரான ஹரக் கட்டாவிற்கு எதிராக பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வழக்கு தொடர முடியாது என கொழும்பு மேல் நீதிமன்றம் அறிவித்துள்ளது.</p><p>ஹரக் கட்டா என அழைக்கப்படும் நதுன் சிந்தக விக்கிரமரத்ன மற்றும் நான்கு பிரதிவாதிகளுக்கு எதிராகப் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வழக்கினை முன்னெடுத்துச் செல்ல முடியாது என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.</p><p>
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்தபோது, அங்கிருந்து தப்பிச் செல்வதற்குச் சதித்திட்டம் தீட்டியதாகக் கூறி இந்த சந்தேகநபர்களுக்கு எதிராகப் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3b89806b-4480-440f-b2d2-af7f9a1df614/26-6a6b75fbd2086.webp' /></p><p> </p><p>
குற்றம் சாட்டப்பட்டவர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் முன்வைத்த முதற்கட்ட ஆட்சேபனைகளை ஏற்றுக்கொண்ட கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி புத்திக சி. ரகல இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.
</p><p>பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் இந்த வழக்கை நடத்த முடியாது என்றபோதிலும், சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளின் தன்மையைக் கருத்திற் கொண்டு, தண்டனைச் சட்டக்கோவையின் கீழ் பிரதிவாதிகளுக்கு எதிராகத் தொடர்ந்து வழக்கு விசாரணைகளை முன்னெடுப்பதற்கு எவ்வித சட்டத் தடையும் இல்லை என்று நீதிபதி சுட்டிக்காட்டினார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-30T16:05:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[அஸ்வெசும பயனாளிகளுக்கு மகிழ்ச்சி தகவல் ; நாளை வங்கிகணக்குகளில் வரவு வைக்கப்படவுள்ள பணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/aswesuma-allowance-credited-tomorrow-1785426347"></link>
            <id>https://jvpnews.com/article/aswesuma-allowance-credited-tomorrow-1785426347</id>
            <summary type="text">2026 ஜூலை மாதத்திற்குரிய 70 வயதிற்கு மேற்பட்ட முதியோர்களுக்கான &#039;அஸ்வெசும&#039; முதியோர் கொடுப்பனவு நாளை (31) பயனாளிகளின் அஸ்வெசும வங்கிக் கணக்குகளில் வைப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">2026 ஜூலை மாதத்திற்குரிய 70 வயதிற்கு மேற்பட்ட முதியோர்களுக்கான 'அஸ்வெசும' முதியோர் கொடுப்பனவு நாளை (31) பயனாளிகளின் அஸ்வெசும வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளது.</p><p style="text-align: justify; ">

 

இதற்கமைய, அஸ்வெசும நலன்புரிப் பலன்கள் செலுத்தும் திட்டத்தின் முதற்கட்டத்தின் கீழ் 70 வயதிற்கு மேற்பட்ட 621,638 முதியோர்களுக்காக 3,108,190,000 ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0d9b55ef-6d58-4ddf-b02c-0b17bb01c2f5/26-6a6b71aca99b2.webp' /></p><p>
</p><p style="text-align: justify; ">
 

மேலும், இதன் இரண்டாம் கட்டத்தின் கீழ் 70 வயதிற்கு மேற்பட்ட 77,324 முதியோர்களுக்காக 386,620,000 ரூபா நிதி வைப்பிலிடப்படவுள்ளது.
</p><p style="text-align: justify; ">
 

அதற்கமைய, இரண்டு கட்டங்களின் கீழ் 698,962 பயனாளிகளுக்குக் செலுத்தப்பட வேண்டிய மொத்தத் தொகை 3,494,810,000 ரூபாவாகும்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">

 

உரிய பயனாளிகள் நாளை முதல் தங்களுக்கான முதியோர் கொடுப்பனவை அஸ்வெசும வங்கிக் கணக்குகள் ஊடாகப் பெற்றுக்கொள்ள முடியும்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-07-30T15:45:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாளையதினம் வங்கிகணக்கிற்கு வருகிறது பணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/aswesuma-welfare-benefit-payment-july-1785423403"></link>
            <id>https://ibctamil.com/article/aswesuma-welfare-benefit-payment-july-1785423403</id>
            <summary type="text">அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் 70 வயதிற்கு மேற்பட்ட முதியோர்களுக்கான 2026 ஜூலை மாதத்திற்குரிய கொடுப்பனவு நாளை (31) பயனாளிகளின் அஸ்வெசும வங்கிக் கணக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் 70 வயதிற்கு மேற்பட்ட முதியோர்களுக்கான 2026 ஜூலை மாதத்திற்குரிய கொடுப்பனவு நாளை (31) பயனாளிகளின் அஸ்வெசும வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படும் என நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.
</p><p>

 

இதற்கமைய, அஸ்வெசும நலன்புரிப் பலன்கள் செலுத்தும் திட்டத்தின் முதற்கட்டத்தின் கீழ் 70 வயதிற்கு மேற்பட்ட 621,638 முதியோர்களுக்காக 3,108,190,000 ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.</p><h2>நாளை முதல்&nbsp;&nbsp;கொடுப்பனவை&nbsp;பெற்றுக்கொள்ள முடியும்</h2><p>&nbsp;மேலும், இதன் இரண்டாம் கட்டத்தின் கீழ் 70 வயதிற்கு மேற்பட்ட 77,324 முதியோர்களுக்காக 386,620,000 ரூபா நிதி வைப்பிலிடப்படவுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0fa33f7f-57f7-4590-9fa7-35adad5c556e/26-6a6b6748d700f.webp' /></p><p>

 

அதற்கமைய, இரண்டு கட்டங்களின் கீழ் 698,962 பயனாளிகளுக்குக் செலுத்தப்பட வேண்டிய மொத்தத் தொகை 3,494,810,000 ரூபாவாகும்.</p><p>

 

உரிய பயனாளிகள் நாளை முதல் தங்களுக்கான முதியோர் கொடுப்பனவை அஸ்வெசும வங்கிக் கணக்குகள் ஊடாகப் பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-30T15:44:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாடொன்றில் சிக்கிய கஞ்சிபானி இம்ரானின் நிதிப்பொறுப்பாளர் : வெளிவரும் பல தகவல்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/saima-arrested-in-malaysia-reveals-many-secrets-1785425059"></link>
            <id>https://ibctamil.com/article/saima-arrested-in-malaysia-reveals-many-secrets-1785425059</id>
            <summary type="text">‘ரத்மலானே சைமா’என்பவர் மலேசியாவில் கைது செய்யப்பட்ட நிலையில்
கஞ்சிபானி இம்ரானின் நிதிப் பொறுப்பாளராகச் செயற்பட்டமை காவல்துறை விசாரணைகளில் இருந்து தெர...</summary>
            <content type="html"><![CDATA[<p>‘ரத்மலானே சைமா’என்பவர் மலேசியாவில் கைது செய்யப்பட்ட நிலையில்
கஞ்சிபானி இம்ரானின் நிதிப் பொறுப்பாளராகச் செயற்பட்டமை காவல்துறை விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
</p><p>
 
மலேசியாவில் தலைமறைவாக இருந்த கெஹல்பத்ர பத்மேவுக்கும் அவர் உதவி செய்துள்ளார் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.
</p><p>
மலேசிய காவல்துறையுடன் இணைந்து நடத்தப்பட்ட ஒரு சிறப்பு நடவடிக்கையில், தனுஷ்க கௌசல்யா என்ற ரத்மலானே சைமா உட்பட மூன்று பேரை இலங்கை காவல்துறை குழு ஒன்று சமீபத்தில் கைது செய்தது.</p><h2>கஞ்சிபானி இம்ரானின் நிதி பொறுப்பாளர்</h2><p>&nbsp;விசாரணையின் போது, ​​குற்றவாளி கஞ்சிபானி இம்ரானின் அனைத்து நிதி விவகாரங்களையும் அவரே கையாண்டது தெரியவந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4c7057f2-4881-40cf-a0cb-b197f118d22e/26-6a6b6ead04e38.webp' /></p><p>

சந்தேக நபரான சைமா, கஞ்சிபானி இம்ரானின் சமூக ஊடக நடவடிக்கைகளிலும் தீவிரமாக ஈடுபட்டு வந்துள்ளார்.
</p><p>
கஞ்சிபானி இம்ரானின் அறிவுறுத்தலின் பேரில், கடந்த ஆண்டு கெஹல்பத்தர பத்மே மலேசியாவில் பதுங்கிக்கொள்ள இவர் உதவியுள்ளார் என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது.</p><p></p><p>
</p><p>
</p><h2>கொலை அச்சுறுத்தலை அடுத்து மாறிய நட்பு</h2><p>தற்போது பிரான்சில் தலைமறைவாக உள்ள குடு அஞ்சுவின் நெருங்கிய கூட்டாளியாக இவர் சில காலமாக இருந்து வந்ததாகவும், பின்னர் கஞ்சிபானி இம்ரானுடன் கைகோர்த்ததாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c55a6eef-3b67-4765-aa5f-5a00ce9bb3cb/26-6a6b714f1eafb.webp' /></p><p>
</p><p>
சைமாவைக் கொல்ல குடு அஞ்சு திட்டமிட்டிருந்த நிலையில், கஞ்சிபானி இம்ரான் இதுகுறித்து சைமாவிடம் தெரிவித்த பிறகு, அவர் கஞ்சிபானியுடன் நட்பு பாராட்டினார்.</p><p>சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு இவர் மலேசியாவுக்குத் தப்பிச் சென்றதாக காவல்துறை தெரிவித்துள்ளது.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p><p>&nbsp; &nbsp; &nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-07-30T15:44:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[வரலாறு காணாத கடும் வெப்ப அலை: வெளிநாடுகளில் கட்டுக்கடங்காமல் எரியும் காட்டுத்தீ]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/raging-wildfires-in-spain-and-greece-1785424606"></link>
            <id>https://tamilwin.com/article/raging-wildfires-in-spain-and-greece-1785424606</id>
            <summary type="text">ஐரோப்பியக் கண்டம் முழுவதும் நிலவி வரும் வரலாறு காணாத கடும் வெப்ப அலை, வரண்ட
காலநிலை மற்றும் பலத்த காற்று காரணமாகப் பிரான்ஸ், ஸ்பெயின் மற்றும் கிரீஸ்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஐரோப்பியக் கண்டம் முழுவதும் நிலவி வரும் வரலாறு காணாத கடும் வெப்ப அலை, வரண்ட
காலநிலை மற்றும் பலத்த காற்று காரணமாகப் பிரான்ஸ், ஸ்பெயின் மற்றும் கிரீஸ்
ஆகிய நாடுகளில் காட்டுத்தீ தீவிரமடைந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தி வருகிறது.</p><p>

ஐரோப்பிய ஒன்றிய வரலாற்றிலேயே இந்த ஆண்டின் காட்டுத்தீச் சேதங்கள் முந்தைய
சாதனைகளை முறியடித்துள்ளன.</p><p> உலகிலேயே மிக வேகமாக வெப்பமடைந்து வரும் கண்டமாக
ஐரோப்பா மாறியுள்ளதாகக் காலநிலை ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.</p><p></p><h2>காட்டுத்தீ</h2><p>

கிரீஸ் நாட்டின் கிரீட் தீவில் பரவிய காட்டுத்தீக்கு இடையே சிக்கி மூன்று
தீயணைப்பு வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/df5c9090-6f1d-4c9b-abd5-fa56e2aa3275/26-6a6b6b67e1a1c.webp' /></p><p>
</p><p>
தீ வேகமாகப் பரவி வருவதால், அங்குள்ள சுற்றுலாத் தலங்களில் இருந்த
நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகளும் உள்ளூர் மக்களும் படகுகள் மூலமாகவும்
நிலவழியாகவும் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-30T15:38:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழ்நாட்டிற்கு 15 நாட்களுக்கு காவிரி நீர் திறக்க வேண்டும் - மேலாண்மை ஆணையம் அதிரடி உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/orders-karnataka-to-open-cauvery-for-tamil-nadu-1785424187"></link>
            <id>https://ibctamilnadu.com/article/orders-karnataka-to-open-cauvery-for-tamil-nadu-1785424187</id>
            <summary type="text">தமிழ்நாட்டின் நீர் தேவையை கருத்தில் கொண்டு, காவிரியில் இருந்து அடுத்த 15 நாட்களுக்கு விநாடிக்கு 3,500 கன அடி நீர் திறந்துவிட வேண்டும் என கர்நாடக அரசுக...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழ்நாட்டின் நீர் தேவையை கருத்தில் கொண்டு, காவிரியில் இருந்து அடுத்த 15 நாட்களுக்கு விநாடிக்கு 3,500 கன அடி நீர் திறந்துவிட வேண்டும் என கர்நாடக அரசுக்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.</p><p>

இதற்கு முன்பு காவிரி ஒழுங்காற்றுக் குழு இதே உத்தரவை பிறப்பித்திருந்த நிலையில், கர்நாடக அரசு அதனை ஏற்க மறுத்தது. மேலும், மேகதாது அணை விவகாரத்தையும் முன்வைத்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3dfd220d-9d5b-49d2-985c-0eac4fb77f71/26-6a6b6c4489f46.webp' /></p><h2>காவிரி நீர் திறப்பில் புதிய உத்தரவு&nbsp;</h2><p> </p><p>இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

காவிரி நீர் திறக்கப்படாததால், டெல்டா மாவட்டங்களில் விவசாயத்திற்குத் தேவையான நீர் பற்றாக்குறை ஏற்பட்டு வறட்சி நிலை உருவாகும் அபாயம் ஏற்பட்டது.</p><p>

இந்த நிலையில், டெல்லியில் நடைபெற்ற காவிரி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் தமிழ்நாடு மற்றும் கர்நாடக மாநில பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். </p><p>கூட்டத்தின் முடிவில், காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் பரிந்துரைப்படி, விநாடிக்கு 3,500 கன அடி வீதம் 15 நாட்களுக்கு நீர் திறக்க கர்நாடகாவுக்கு ஆணையம் உத்தரவிட்டது.
</p><p>
இதற்கிடையில், கர்நாடக முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் டெல்லியில் உள்ள நிலையில், ஆணையத்தின் உத்தரவு தொடர்பாக கர்நாடக பிரதிநிதிகள் அவரை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p><br></p>]]></content>
            <updated>2026-07-30T15:30:47+00:00</updated>
        </entry>
    </feed>
