<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-08-07T21:38:00+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[சியூட்டா விவகாரம்: இத்தாலிக்கு கெடு விதித்த ஸ்பெயின்: பதிலடி நடவடிக்கை உறுதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/spain-italy-diplomatic-friction-over-ceuta-1786124101"></link>
            <id>https://news.lankasri.com/article/spain-italy-diplomatic-friction-over-ceuta-1786124101</id>
            <summary type="text">சியூட்டா தொடர்பான விவகாரத்தில் இத்தாலிக்கு ஸ்பெயின் அரசாங்கம் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது. சியூட்டா விவகாரம்
கடந்த வாரம் ஸ்பெயின் எல்லை மாகாணமா...</summary>
            <content type="html"><![CDATA[<p>சியூட்டா தொடர்பான விவகாரத்தில் இத்தாலிக்கு ஸ்பெயின் அரசாங்கம் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது.</p><h2> சியூட்டா விவகாரம்</h2><p>
கடந்த வாரம் ஸ்பெயின் எல்லை மாகாணமான சியூட்டாவிற்குள் மொராக்கோவில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் அத்துமீறி நுழைந்தனர்.</p><p> இது தொடர்பான காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலானதை தொடர்ந்து ஐரோப்பிய நாடுகளிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/53dfef55-7c2b-4b9a-ad4e-ffe074bc40b4/26-6a761746ab023.webp' /></p><p> இதையடுத்து ஸ்பெயினில் இருந்து வரும் பயணிகளுக்கு எல்லை சோதனைகளை அமல்படுத்தி இத்தாலிய பிரதமர் ஜார்ஜியா மெலோனி உத்தரவிட்டு இருந்தது.</p><p> இந்த விவகாரம் ஸ்பெயின் மற்றும் இத்தாலி இடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.</p><p> ஸ்பெயினில் இருந்து வரும் மக்களை சோதனைக்கு உட்படுத்தப்படும் என்ற இத்தாலியின் முடிவு கண்டிக்கத்தக்கது என்று ஸ்பெயின் நேரடியாக குற்றஞ்சாட்டியது.</p><p> அத்துடன் இந்த நடவடிக்கை தேவையற்றது, மற்றும் ஐரோப்பிய யூனியனின் நலனுக்கு எதிரானது மற்றும் ஸ்பெயின் மக்களுக்கு எதிரானது என்று ஸ்பெயின் அரசு கண்டித்தது.</p><p></p><h2> இத்தாலிக்கு கெடு விதித்த ஸ்பெயின்</h2><p>
இந்நிலையில் இத்தாலி தன்னுடைய புதிய எல்லை கட்டுப்பாடுகளை உடனடியாக நீக்காவிட்டால், இத்தாலிய பயணிகளுக்கு எதிராக அதே போன்ற சோதனை கட்டுப்பாடுகளை ஸ்பெயின் விதிக்கும் என்று அந்நாட்டு அரசு கடுமையாக எச்சரித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5a27ffe9-b16d-4a29-8961-7ffe975cc779/26-6a7617475ef7f.webp' /></p><p> அத்துடன் ஆகஸ்ட் 9ம் திகதிக்குள் இத்தாலிய அரசு இந்த நடவடிக்கையை கைவிட வேண்டும் என்றும் ஸ்பெயின் கெடு விதித்துள்ளது.</p><p> இத்தாலி அரசு இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், ஸ்பெயின் நாட்டு மக்களின் நலன்களையும், கவுரவத்தையும் பாதுகாக்க அதற்கான தக்க நடவடிக்கையை ஸ்பெயின் அரசு முன்னெடுக்கும் என்று ஸ்பெயின் அரசு தன்னுடைய அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவித்துள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-07T21:36:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானியாவில் ஒரு வயது குழந்தை உயிரிழப்பு: பெற்றோர்கள் மீது குற்ற வழக்கு பதிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/parents-charged-over-1-year-old-son-in-st-helens-1786138481"></link>
            <id>https://news.lankasri.com/article/parents-charged-over-1-year-old-son-in-st-helens-1786138481</id>
            <summary type="text">பிரித்தானியாவில் ஒரு வயது குழந்தை உயிரிழந்த சம்பவத்தில் பெற்றோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பிரித்தானியாவின் செயின்ட் ஹெலன்ஸ் பகுதியை சேர்ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரித்தானியாவில் ஒரு வயது குழந்தை உயிரிழந்த சம்பவத்தில் பெற்றோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.</p><p> பிரித்தானியாவின் செயின்ட் ஹெலன்ஸ் பகுதியை சேர்ந்த ஒரு வயது குழந்தை மா எரோ ஜான்சன்(Maero Johnson) உயிரிழந்த சம்பவத்தில், குழந்தையின் பெற்றோர்கள் கிரிமினல் வழக்குகளை எதிர்கொள்கின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/71409ebb-2052-42bc-87cb-d60f8e0c5d07/26-6a764f7357f06.webp' /></p><p> குழந்தை உயிரிழந்த சம்பவத்தில் கிரிமினல் வழக்கை எதிர்&nbsp; கொள்ளும் தாய் மற்றும் தந்தையின் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.</p><p>மெர்சிசைடு காவல்துறை வெளியிட்ட அறிக்கையில், கைலி ஸ்மித்(25) மற்றும் ஆடம் &nbsp;ஜான்சன்(26) ஆகிய இருவரும் குழந்தை மா எரோ ஜான்சன் உயிரிழந்ததற்கு காரணமானவர்கள் அல்லது அனுமதித்தவர்கள் என்று குற்றஞ்சாட்டியுள்ளது.</p><p> கடந்த 2023ம் ஆண்டு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்ததை அடுத்து பெற்றோர்கள் மீது இந்த குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0655f35f-302a-4886-86bd-262220c8f3f4/26-6a764f7408d8c.webp' /></p><p>குழந்தையின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், இந்த உயிரிழப்பு ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் கீட்டோனிக் ஹைப்போகிளிசீமியா இருப்பது உறுதி செய்யப்பட்டது.</p><p> இதையடுத்து பெற்றோர் மீது குழந்தையை பராமரிக்க தவறியது மற்றும் கஞ்சா போன்ற போதைப் பொருளை வைத்திருந்தல் ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.</p><p>ஆகஸ்ட் 13ம் திகதி இந்த வழக்கு லிவர்பூல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வரவுள்ள நிலையில் பெற்றோர்கள் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-07T21:35:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேட்டோ நாடுகளை புடின் குறிவைக்கலாம் – அமெரிக்க உளவுத்துறை அதிர்ச்சி எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/putin-could-strike-nato-allies-to-test-1786136185"></link>
            <id>https://tamilwin.com/article/putin-could-strike-nato-allies-to-test-1786136185</id>
            <summary type="text">&amp;nbsp;அமெரிக்காவின் புதிய உளவுத்துறை மதிப்பீட்டின்படி, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் அடுத்த சில ஆண்டுகளில் நேட்டோ (NATO) கூட்டணியின் ஒற்றுமையை சோதிக...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;அமெரிக்காவின் புதிய உளவுத்துறை மதிப்பீட்டின்படி, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் அடுத்த சில ஆண்டுகளில் நேட்டோ (NATO) கூட்டணியின் ஒற்றுமையை சோதிக்கும் நோக்கில் அதன் உறுப்பினர் நாடுகளில் ஒன்றின் மீது வரையறுக்கப்பட்ட தாக்குதலை நடத்தக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது.</p><p>

முன்னதாக, உக்ரைன் போரில் ரஷ்யா முழுமையாக ஈடுபட்டிருப்பதால் நேட்டோவுடன் நேரடி மோதலை புதின் தவிர்ப்பார் என அமெரிக்க அதிகாரிகள் கருதினர்.</p><p></p><h2>ரஷ்யாவின் நோக்கம்</h2><p> ஆனால் தற்போது அந்த மதிப்பீடு மாறியுள்ளது.


அமெரிக்க அதிகாரிகளின் கூற்றுப்படி, ரஷ்யாவின் நோக்கம் நிலப்பரப்பைக் கைப்பற்றுவது அல்ல; மாறாக, நேட்டோ கூட்டணியின் ஒற்றுமையிலும், அமெரிக்காவின் பாதுகாப்பு உறுதியிலும் பிளவை ஏற்படுத்துவதே முக்கிய நோக்கமாக இருக்கலாம்.</p><p>

அமெரிக்காவின் American Enterprise Institute-இன் மூத்த ஆய்வாளர் ஹெதர் கான்லி கூறுகையில்,</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c34c9763-6176-4e8a-9980-2c13a3033f89/26-6a764a0a3726f.webp' /></p><p>
"அப்படிப்பட்ட சூழ்நிலையில் அமெரிக்கா எப்படி பதிலளிக்கும் என்பதே மிகப்பெரிய கேள்வி. நேட்டோவின் நம்பகத்தன்மையை சவாலுக்கு உட்படுத்தி, அமெரிக்காவை அதன் கூட்டாளிகளிடமிருந்து பிரிப்பது ரஷ்யாவின் நீண்டகால இலக்காக இருந்து வருகிறது.</p><p>"




நேட்டோ நாடுகள் மீது சைபர் தாக்குதல்கள்
அடையாளம் தெரியாத ஆயுதக் குழுக்கள் மூலம் சிறிய எல்லைப் பகுதிகளை கைப்பற்றும் ரகசிய நடவடிக்கைகள்
நேட்டோவின் கிழக்கு எல்லையில் வரையறுக்கப்பட்ட இராணுவ ஊடுருவல்

இந்த வகை தாக்குதல்கள் 2026 இலையுதிர் காலம் முதல் 2029 வரை எந்த நேரத்திலும் நடைபெறக்கூடும் என மதிப்பிடப்பட்டுள்ளது.</p><p></p><h2>நேட்டோவின் பதில்&nbsp; எச்சரிக்கைகள்&nbsp;</h2><p>

Article 5 காரணமாக நேரடி போர் சாத்தியம் குறைவு

நேட்டோ ஒப்பந்தத்தின் Article 5-இன்படி, ஒரு உறுப்பினர் நாடு மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அது அனைத்து உறுப்பினர்களின் மீதான தாக்குதலாகக் கருதப்படும்.</p><p>

இதனால் நேரடி தரைப்படை தாக்குதல் நிகழும் வாய்ப்பு குறைவாக இருந்தாலும், சைபர் தாக்குதல் அல்லது மறைமுக (Hybrid) தாக்குதல்கள் சட்ட ரீதியாக சிக்கலான பகுதியாக இருப்பதால் அவை அதிகம் கவலை அளிக்கின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d9a031a9-d399-4a93-ac9f-995af39295ed/26-6a764a0adc4df.webp' /></p><p>
</p><p>
நேட்டோவின் பதில்

இந்த எச்சரிக்கைகள் குறித்து நேட்டோ செய்தித் தொடர்பாளர் கர்னல் மார்ட்டின் ஓ'டொனல் கூறியதாவது:

"எந்தவிதமான சூழ்நிலையையும் எதிர்கொள்ள நேட்டோ எப்போதும் தயாராக உள்ளது. </p><p>தேவையான நேரத்தில் தடுக்கவும், பாதுகாக்கவும் நாங்கள் முழுமையாக தயாராக இருக்கிறோம்."

இந்த உளவுத்துறை அறிக்கை வெளியாகும் நிலையில், உக்ரைனுக்கு தொடர்ந்து வழங்கப்பட்ட இராணுவ உதவி மற்றும் சமீபத்திய நடவடிக்கைகள் காரணமாக அமெரிக்காவின் சில முக்கிய ஏவுகணை கையிருப்புகள் குறைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p></p><h2>பற்றாக்குறையாக கூறப்படும் ஆயுதங்கள்</h2><p>

Precision Strike Missiles (PrSM)
ATACMS ஏவுகணைகள்
Stinger ஏவுகணைகள்
Patriot ஏவுகணை தடுப்பு அமைப்புகள்
SM-3
THAAD தடுப்பு அமைப்புகள்

ஆனால், அமெரிக்க பாதுகாப்புத் துறை (Pentagon) இந்த தகவல்களை மறுத்துள்ளது.

பென்டகன் செய்தித் தொடர்பாளர் ஷான் பார்னெல் கூறுகையில்,

"அமெரிக்க இராணுவத்திடம் தேவையான அனைத்து ஆயுதங்களும் போதுமான அளவில் உள்ளன. எங்கள் திறனை குறைத்து மதிப்பிடும் எந்த எதிரியும் அதன் விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9eda1b77-df78-4c8b-aee3-1c2e56f17545/26-6a764a0b8d658.webp' /></p><p>"

வாஷிங்டனில் அதிகரிக்கும் விவாதம்

இராணுவ நிபுணர்கள் கூறுவதாவது, தற்போது கையிருப்பு குறைந்துள்ளதாக கூறப்படும் இந்த ஏவுகணைகள், எதிர்காலத்தில் ரஷ்யாவுடன் மோதல் ஏற்பட்டால் மிகவும் அவசியமானவை.
</p><p>
மேலும், சீனாவுடனான சாத்தியமான மோதலையும் கருத்தில் கொண்டு, அமெரிக்காவின் ஆயுத கையிருப்பை பாதுகாப்பது குறித்து வாஷிங்டனில் தீவிர விவாதம் நடைபெற்று வருகிறது.</p>]]></content>
            <updated>2026-08-07T21:34:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Keethan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பெருந்தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சின் செயற்றிட்டங்கள் நம்பகத்தன்மை வாய்ந்தது - முல்லைத்தீவு அதிபர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/mullaitivu-chief-plantation-ministry-projects-1786130209"></link>
            <id>https://tamilwin.com/article/mullaitivu-chief-plantation-ministry-projects-1786130209</id>
            <summary type="text">தெங்கு உற்பத்தியாளர்களுக்கு பெருந்தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சின் முன்னெடுப்பு
நம்பிக்கையான எதிர்காலத்தினை ஏற்படுத்தியுள்ளது என முல்லைத்தீவு மாவட்ட
அர...</summary>
            <content type="html"><![CDATA[<p>தெங்கு உற்பத்தியாளர்களுக்கு பெருந்தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சின் முன்னெடுப்பு
நம்பிக்கையான எதிர்காலத்தினை ஏற்படுத்தியுள்ளது என முல்லைத்தீவு மாவட்ட
அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
</p><p>
நேற்று(07.08.2026) முல்லைத்தீவில் நடைபெற்ற தெங்கு உற்பத்தியாளர்களுக்கான மானியம் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>தென்னை உற்பத்தியாளர்கள்</h2><p>
</p><p>
அவர் மேலும் தெரிவிக்கையில், இன்று இந்த தென்னை உற்பத்தியாளர்கள் எதிர்நோக்குகின்ற பல பிரச்சினைகள் உள்ளன.

மக்களின் காணிகள் வனவளத்திணைக்களத்திடம் இருந்து விடுவிக்கும் காலம்
கிட்டியுள்ளது.</p><p>

குரங்கு, யானைகளால் ஏற்படும் தாக்கம் தெங்கு செய்கை விவசாயிகளை பாதிக்கின்றது.
காலநிலை மாற்றத்தினால் ஏற்பட்ட நோய்தாக்கம், வெள்ளை ஈ தாக்கம் என்பன தெங்கு
விவசாயிகளையும் தாக்கியுள்ளன.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ea9cbcbf-bfd0-43d9-a157-df77421a6661/26-6a76301deb88c.webp' /></p><p>இவ்வாறான தாக்கங்கள் இருந்தாலும் இன்று பெருந்தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சின்
முன்னெடுப்பு நம்பிக்கையான எதிர்காலத்தினை காட்டுகின்றது.

அரசாங்கம் மக்கள் மீதுகொண்டுள்ள அக்கறை ஈடுபாட்டிற்கு முன்னுதாரணமாக இந்த
நிகழ்வு அமைந்துள்ளது.
</p><p>

மாவட்டத்தில் சி.டி.ஓ மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான பற்றாக்குறை
காணப்படுகின்றது.

 தற்போதைய அரசாங்கம் ஆளணியினரை மீள சேர்க்கின்ற நடவடிக்கை
எடுத்துக்கொண்டிருக்கின்றார்கள்.</p><p> எதிர்காலத்தில் இந்த வெற்றிடங்கள்
நிரப்பப்படும் என்ற நம்பிகை இருக்கின்றது.


இந்த மக்கள் கடின உழைப்பாளிகள்
சிறந்த முறையில் அவர்களின் உற்பத்திகளை மேற்கொண்டு வருகின்றார்கள்
அரசாங்கத்தினால் செய்கின்ற இந்த உதவிகளை சிறந்த முறையில் நீங்கள் பயன்படுத்தி
எதிர்காலத்தினை சுவீட்சமாக மாற்றி அமைக்க வேண்டும் என 
குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-07T21:18:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாதுகாப்பு அளிக்கப்பட்டால் விசாரணையை எதிர்கொள்ளத் தயார்: சாகிப் அல் ஹசன் அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/shakib-ready-for-trial-if-security-assured-1786125650"></link>
            <id>https://tamilwin.com/article/shakib-ready-for-trial-if-security-assured-1786125650</id>
            <summary type="text">தனது உயிருக்கு உத்தரவாதம் வழங்கப்பட்டால், பங்களாதேஷிற்கு திரும்பி நீதிமன்ற விசாரணைகளை எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் க...</summary>
            <content type="html"><![CDATA[<p>தனது உயிருக்கு உத்தரவாதம் வழங்கப்பட்டால், பங்களாதேஷிற்கு திரும்பி நீதிமன்ற விசாரணைகளை எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் கிரிக்கெட் வீரருமான சாகிப் அல் ஹசன் தெரிவித்துள்ளார். </p><p>2024 ஆகஸ்டில் நடைபெற்ற மக்கள் எழுச்சியைத் தொடர்ந்து பிரதமர் ஷேக் ஹசீனாவின் ஆட்சி கவிழ்க்கப்பட்ட பின்னர், அவருக்கு எதிராக பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.&nbsp;</p><p></p><h2>வழக்கு நிலுவை</h2><p>
ஹசீனாவின் அவாமி லீக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த சாகிப் அல்
ஹசன், அதன்பின்னர் நாட்டில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள் காரணமாகக் கடந்த
இரண்டு வருடங்களாக அமெரிக்காவில் வசித்து வருகின்றார்.
</p><p>
அவர் மீது கொலை வழக்கும், ஊழல் தடுப்புப் பிரிவினரின் வழக்கும் நிலுவையில்
உள்ளன. இது குறித்து இலங்கையில் வைத்து சர்வதேச செய்திச் சேவையொன்றுக்குக்
கருத்துத் தெரிவித்துள்ள சாகிப், "நான் எந்தத் தவறும் செய்யவில்லை.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/baedbafb-779d-4da0-b0af-0e918b3ab3cd/26-6a761f7491d9a.webp' /></p><p>அரசாங்கம் எனது பாதுகாப்பை உறுதி செய்தால், நான் நாடு திரும்பி நீதிமன்ற
விசாரணையை எதிர்கொள்ளத் தயார்" எனத் தெரிவித்துள்ளார்.
</p><p>
மேலும், நாட்டின் தற்போதைய பிரதமர் தாரிக் ரஹ்மானுடன் பேச்சுவார்த்தை நடத்த விரும்புவதாகவும், சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு
பெறுவதற்கு முன்பாக தாய்நாட்டில் தனது விடைபெறும் போட்டியில் விளையாடவும்,
2027 ஒருநாள் உலகக் கிண்ணத் தொடரில் பங்கேற்கவும் விருப்பம் கொண்டுள்ளதாகவும்
சாகிப் அல் ஹசன் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-07T20:51:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரான் எவ்வித கட்டாயப்படுத்தலுக்கும் அடிபணியாது! பெசெஷ்கியன் அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/iran-will-not-bow-to-coercion-pezeshkian-1786134292"></link>
            <id>https://ibctamil.com/article/iran-will-not-bow-to-coercion-pezeshkian-1786134292</id>
            <summary type="text">
ஈரான் எவ்வித கட்டாயப்படுத்தலுக்கும் அடிபணியாது என அந்நாட்டின் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியன் அறிவித்துள்ளார்.

அத்தோடு, ஈரான் போரையோ அல்லது எல்லை விரி...</summary>
            <content type="html"><![CDATA[<p>
ஈரான் எவ்வித கட்டாயப்படுத்தலுக்கும் அடிபணியாது என அந்நாட்டின் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியன் அறிவித்துள்ளார்.
</p><p>
அத்தோடு, ஈரான் போரையோ அல்லது எல்லை விரிவாக்கத்தையோ விரும்பவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>
ஈரானின் ஐ.ஆர்.ஐ.பி அரச ஒளிபரப்புச் சேவை வெளியிட்ட அறிக்கையில், ஈரான் தனது தற்காப்புத் திறன்களையும் பாதுகாப்பையும் உறுதிசெய்வதற்காக மட்டுமே செயல்படுவதாக பெஷெஷ்கியன் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>ஈரானுக்கு எதிரான அழுத்தங்கள்</h2><p> 

ஈரானைக் குறிவைப்பதற்காக அமெரிக்கா வளைகுடா நாடுகளில் உள்ள இராணுவத் தளங்களைப் பயன்படுத்துவதாகவும், ஈரானுக்கும் அதன் பிராந்திய அண்டை நாடுகளுக்கும் இடையே பிளவை ஏற்படுத்த முயல்வதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/37da9224-d2b4-4c29-a238-8769c14ecea7/26-6a7644e3302ef.webp' /></p><p>
</p><p>
இருப்பினும், ஈரான் தனது அண்டை நாடுகளுடனான பல பிரச்சினைகளைத் தீர்த்துவிட்டதாகத் தெரிவித்த பெஷெஷ்கியன், ஈரானுக்கு எதிரான அழுத்தங்களும் அச்சுறுத்தல்களும் நிறுத்தப்பட்டால் பிராந்தியத்தில் பதற்றங்கள் நீடிப்பதற்கு எந்தவொரு காரணமும் இருக்காது என்று வலியுறுத்தியுள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-07T20:49:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை சிறை தகர்பின் பின்னணியில் பிரான்சில் தீட்டப்பட்ட சதி! திடுக்கிடும் இரகசியம் அம்பலம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-lanka-prisoners-riot-prison-attack-sri-lanka-1786127991"></link>
            <id>https://tamilwin.com/article/sri-lanka-prisoners-riot-prison-attack-sri-lanka-1786127991</id>
            <summary type="text">அண்மைக் காலங்களில் இலங்கையின் பல்வேறு சிறைச்சாலைகளில் (நீர்கொழும்பு, மகர, மேகசின், குருவிட்ட மற்றும் பல்லன்சேனை) இடம்பெற்று வரும் தொடர்ச்சியான கலவரங்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>அண்மைக் காலங்களில் இலங்கையின் பல்வேறு சிறைச்சாலைகளில் (நீர்கொழும்பு, மகர, மேகசின், குருவிட்ட மற்றும் பல்லன்சேனை) இடம்பெற்று வரும் தொடர்ச்சியான கலவரங்கள் மற்றும் சிறை உடைப்பு முயற்சிகள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.
</p><p>
சிறைச்சாலைகளில் நடக்கும் இந்தக் கலவரங்கள் தற்செயலானவை அல்ல; இவை வெளிநாட்டிலிருந்து, குறிப்பாக பிரான்சில் மறைந்திருக்கும் குடு சலிது (Kudu Salidu) என்பவரால் முன்னாள் ஜனாதிபதி ஒருவரின் உறவினருடன் இணைந்து திட்டமிடப்படுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p>

இலங்கையிலிருந்து தப்பியோடிய இவர், பிரான்சில் இருந்தபடியே இக்கலவரங்களை இயக்கி வருவதாகவும், சிறைச்சாலைகளில் உள்ளவர்களுக்குத் தேவையான நிதி உதவிகளை அவரது குடும்பத்தினருக்கு வழங்குவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
</p><p>
முன்னாள் ஜனாதிபதி மற்றும் பிற அரசியல் பிரமுகர்கள் மீது நிலுவையில் உள்ள வழக்குகளில் இருந்து கவனத்தைத் திசைதிருப்புவதே இந்தச் சூழ்ச்சிகளின் முக்கிய நோக்கமாகக் கருதப்படுகிறது.
</p><p>
 சிறைச்சாலைக்குள் அடைக்கப்பட்டுள்ள போதைப்பொருள் வர்த்தகர்கள் மற்றும் பாதாள உலகக் குழுவினர், அரசியல்வாதிகளின் தூண்டுதலின் பேரில் இந்தக் குழப்பங்களை ஏற்படுத்துகின்றனர்.
</p><p>
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால, இந்தச் சூழலைச் சீர்குலைவு முயற்சிகளாகக் குறிப்பிடுகிறார். </p><p>

 இந்தச் சூழலைக் கட்டுப்படுத்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் விசேட கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்படுகின்றன. 

இந்த விடயங்கள் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி...</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/YuCqi6-ulDM" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-07T20:44:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரான் பயன்படுத்திய நாணய பரிமாற்ற நிறுவனங்களுக்கு தடை விதித்த அமெரிக்கா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/us-to-cut-off-iran-backed-financial-support-1786132083"></link>
            <id>https://ibctamil.com/article/us-to-cut-off-iran-backed-financial-support-1786132083</id>
            <summary type="text">
தடைகளைத் தவிர்ப்பதற்கும், நூற்றுக்கணக்கான மில்லியன் டொலர்களை இரகசியமாகப் பரிமாற்றுவதற்கும் ஈரான் பயன்படுத்தியதாகக் கூறப்படும் நாணயப் பரிமாற்ற நிறுவன...</summary>
            <content type="html"><![CDATA[<p>
தடைகளைத் தவிர்ப்பதற்கும், நூற்றுக்கணக்கான மில்லியன் டொலர்களை இரகசியமாகப் பரிமாற்றுவதற்கும் ஈரான் பயன்படுத்தியதாகக் கூறப்படும் நாணயப் பரிமாற்ற நிறுவனங்கள் மற்றும் போலி நிறுவனங்களின் சட்டவிரோத வலையமைப்பைக் கலைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அமெரிக்க அரசாங்கம் அறிவித்துள்ளது.</p><p>

பிராந்திய ஸ்திரமின்மையை உருவாக்கவும், பயங்கரவாதத்தை ஆதரிக்கவும், இராணுவத் திறன்களை மேம்படுத்தவும் ஈரான் பயன்படுத்தும் நிதியாதாரங்களைத் துண்டிக்கும் நோக்கில், ட்ரம்ப் நிர்வாகத்தின் அதிகபட்ச அழுத்தக் கொள்கையின் கீழ் அமெரிக்க திறைசேரி இந்நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>

இதன் ஒரு பகுதியாக, ஈரானின் புரட்சிகர காவல் படை (IRGC) மற்றும் அரச அமைப்புகளுக்குப் பயனளிக்கும் வகையில் நிதியைச் சட்டவிரோதமாகப் பணமாக்கிய குற்றச்சாட்டில், துபாயைத் தளமாகக் கொண்டு இயங்கும் ஷெல்பிட் (Shelbit) கிரிப்டோகரன்சி பரிமாற்ற நிறுவனம் மற்றும் அதன் நிறுவனரான ஈரானிய வெளிநாட்டவர் சியாவாஷ் கைவன்பூர் மீது அமெரிக்கா தடை விதித்துள்ளது.</p><p></p><h2>அமெரிக்க திறைசேரியின் அறிவிப்பு&nbsp;</h2><p>மேலும், முன்னர் தடைசெய்யப்பட்ட ஈரானிய டிஜிட்டல் சொத்து பரிமாற்றகங்கள் சார்ந்த மில்லியன் கணக்கான டொலர் மதிப்பிலான பரிவர்த்தனைகளைக் கையாண்ட குற்றச்சாட்டில், ஈரானைத் தளமாகக் கொண்ட அபான் டெதர் (Aban Tether) என்ற டிஜிட்டல் சொத்து பரிமாற்ற நிறுவனம் மீதும் தடை விதிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d1a75373-0b4e-4cc9-b090-c33737c8f61b/26-6a763a92b1b95.webp' /></p><p><i>Image Credit:&nbsp;Americas Quarterly</i></p><p>
இவற்றுடன், ஈரானிய வங்கிகள் சட்டவிரோதமாகப் பணத்தைப் பரிமாற உதவிய துபாயைச் சேர்ந்த மேலும் பல நாணயப் பரிமாற்ற நிறுவனங்கள் மீதும் தடைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.</p><p>

ஈரானிய ஆட்சியைத் தொடர்ந்து இயங்க வைக்கும் இத்தகைய சட்டவிரோத நிதி வலையமைப்புகளை அமெரிக்க திறைசேரி தொடர்ந்து வேட்டையாடி அழிக்கும் என அமெரிக்க திறைசேரி செயலாளர் ஸ்காட் பெசென்ட் வலியுறுத்தியுள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-07T20:09:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறைச்சாலை கலவரங்களால் நடுங்கும் அரசியல்வாதிகள்! அடுத்தடுத்து காத்திருக்கும் காட்சிகள்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-lanka-prisons-attack-updates-naatu-nadappu-1786132857"></link>
            <id>https://tamilwin.com/article/sri-lanka-prisons-attack-updates-naatu-nadappu-1786132857</id>
            <summary type="text">இலங்கையிலுள்ள சிறைச்சாலைகளில் சமீபகாலமாக இடம்பெறும் கலவரங்கள் மற்றும் குழப்பங்கள் மக்கள் மத்தியில் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

நிலுவையில் உள்ள வழக...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையிலுள்ள சிறைச்சாலைகளில் சமீபகாலமாக இடம்பெறும் கலவரங்கள் மற்றும் குழப்பங்கள் மக்கள் மத்தியில் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.</p><p>

நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவது மற்றும் நீதிமன்றத்தின் கடுமையான தீர்ப்புகள் சிறைச்சாலைச் சூழலில் பதற்றத்தை உருவாக்கியுள்ளன.
</p><p>
ஒகஸ்ட் 2, 2026 அன்று அனைத்து சிறைச்சாலைகளிலும் உடனடிச் சோதனைகளை மேற்கொள்ள அரசாங்கம் உத்தரவிட்டது. 

மகர சிறைச்சாலையில் இடம்பெற்ற சம்பவத்திற்குப் பிறகு, சிறைச்சாலைகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
</p><p>
 இது கைதிகள் மற்றும் நிர்வாகத்திற்கு இடையே ஒருவித அழுத்தத்தை ஏற்படுத்தியிருக்கலாம்

 சிறைகளில் உள்ள கைதிகள் மற்றும் வெளியில் இருக்கும் குற்றப் பின்னணி கொண்டவர்களுக்கும் இடையே உள்ள தொடர்புகள், சட்ட விரோத பணப் பரிமாற்றங்கள் தொடர்பான விசாரணைகள் ஆகியவை சிறைச்சாலைகளில் அசாதாரணமான சூழலை உருவாக்கியுள்ளன.
</p><p>

இந்த விடயங்கள் தொடர்பில் பேசுகின்றது நாட்டு நடப்பு நிகழ்ச்சி...</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/gJYEZdz4PfI" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-07T20:06:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தியாவில் மாற்று எரிபொருள்- வாகன விற்பனை தீவிரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/alternative-fuel-vehicle-sales-surge-in-india-1786120282"></link>
            <id>https://tamilwin.com/article/alternative-fuel-vehicle-sales-surge-in-india-1786120282</id>
            <summary type="text">இந்தியாவில் 20% எத்தனோல் கலந்த E20 பெட்ரோல் அறிமுகமானதைத் தொடர்ந்து, வாகன உரிமையாளர்கள் மத்தியில் ஏற்பட்ட குழப்பம் காரணமாக மின்சார, ஹைபிரிட் மற்றும் ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியாவில் 20% எத்தனோல் கலந்த E20 பெட்ரோல் அறிமுகமானதைத் தொடர்ந்து, வாகன உரிமையாளர்கள் மத்தியில் ஏற்பட்ட குழப்பம் காரணமாக மின்சார, ஹைபிரிட் மற்றும் சி.என்.ஜி. வாகனங்களின் விற்பனை கணிசமாக உயர்ந்துள்ளது. </p><p>

இந்திய வாகன விற்பனையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் தரவுகளின்படி, கடந்த ஜூலை மாதத்தில் விற்பனையான மொத்த பயணிகள் வாகனங்களில் 40.59% மாற்று எரிபொருள் வாகனங்களாக பதிவாகியுள்ளன.&nbsp;</p><p></p><h2>E20 பெட்ரோல் அறிமுகம்</h2><p>
இது பெட்ரோல் வாகனங்களின் விற்பனைப் பங்கான 41.68 சதவீதத்திற்கு மிகவும்
நெருக்கமான அளவாகும்.

முந்தைய E10 பெட்ரோலுக்குப் பதிலாக E20 பெட்ரோல் அறிமுகம் செய்யப்பட்டுள்ள
நிலையில், பழைய ரக வாகனங்களின் எஞ்சின் செயற்பாடு மற்றும் எரிபொருள் சிக்கனம்
பாதிக்கப்படுவதாகப் பயனாளர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/31f854f0-6547-41e1-b5cc-bc58594c36ae/26-6a7618da5221f.webp' /></p><p>இதன் காரணமாகப் புதிய பெட்ரோல் வாகனங்களை வாங்குவதைத் தவிர்க்கும் நுகர்வோர்,
மாற்று எரிபொருள் வாகனங்களை நோக்கி நகர்ந்து வருகின்றனர்.
</p><p>
இருப்பினும், E20 பெட்ரோல் தொடர்பாகப் பரவும் தவறான தகவல்களே இந்த
அச்சத்திற்குக் காரணம் என்றும், இது தொடர்பில் வாகன உற்பத்தியாளர்களும்
விற்பனையாளர்களும் வாடிக்கையாளர்களுக்குத் தெளிவான விழிப்புணர்வை ஏற்படுத்த
வேண்டும் என்றும் வாகன விற்பனையாளர்கள் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-07T19:43:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரஷ்யா மீது புதிய பொருளாதார தடைகள்: அமெரிக்க செனட் சபையில் கிடைத்த ஒப்புதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/new-sanctions-against-russia-us-senate-approves-1786131424"></link>
            <id>https://news.lankasri.com/article/new-sanctions-against-russia-us-senate-approves-1786131424</id>
            <summary type="text">ரஷ்யா மீதான புதிய பொருளாதார தடைகளுக்கு அமெரிக்காவின் செனட் சபை ஒப்புதல் அளித்துள்ளது. ரஷ்யா மீது புதிய பொருளாதார தடைஅமெரிக்க செனட் சபையில் கொண்டு வரப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ரஷ்யா மீதான புதிய பொருளாதார தடைகளுக்கு அமெரிக்காவின் செனட் சபை ஒப்புதல் அளித்துள்ளது.</p><h2> ரஷ்யா மீது புதிய பொருளாதார தடை</h2><p>அமெரிக்க செனட் சபையில் கொண்டு வரப்பட்ட ரஷ்யாவிற்கு எதிராக புதிய மற்றும் கடுமையான பொருளாதார தடைக்கு எதிரான வாக்கெடுப்பு பெரும் ஆதரவுடன் வெற்றி பெற்றுள்ளது.</p><p> ரஷ்யாவிற்கு எதிராக புதிய பொருளாதார தடைகளுக்கு ஆதரவு அளித்து 86 வாக்குகளும், எதிராக 11 வாக்குகளும் பதிவாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f27629dc-14d4-4ac3-ae8c-ce98e1fda19a/26-6a7633e2aa8e1.webp' /></p><p> ரஷ்யாவுக்கு எதிராக இந்த முன்னெடுப்பை மறைந்த செனட்டர் லிண்ட்சே கிரஹாம்(Lindsey Graham) தீவிரமாக முன்னெடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.</p><p> கட்சிகளின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்ட இந்த தீர்மானம் குறித்து பேசிய ஜனநாயக கட்சி செனட்டர் ரிச்சர்ட் ப்ளூமென்டால்(Richard Blumenthal) முக்கியமான கருத்துக்களை முன்வைத்துள்ளார்.</p><p> அதில், உக்ரைனிய மக்களுக்கு நாம் இன்று சொல்வது இதுதான், “நீங்கள் தனியாக இல்லை”. அத்துடன் ரஷ்யாவிற்கு நாம் இன்று சொல்வது இதுதான், “உங்களால் உக்ரைனை வெல்ல முடியாது” என குறிப்பிட்டார்.</p><h2> விதிக்கப்படும் புதிய தடைகள்</h2><p>
ரஷ்யாவின் பெட்ரோலியம், இயற்கை எரிவாயு மற்றும் ரஷ்யாவிற்கு வருவாய் பெற்று தரும் பொருட்களை இறக்குமதி செய்யும் அனைத்து நாடுகளையும் இந்த புதிய பொருளாதார தடை நடவடிக்கை தண்டிக்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2dfc8fb2-e50d-4b42-b06c-8543856ac1af/26-6a7633e35c66a.webp' /></p><p>செனட் சபையில் இந்த மசோதா வெற்றிகரமாக நிறைவேறியுள்ள நிலையில், செப்டம்பர் மாதம் இந்த மசோதா பிரதிநிதிகள் சபையின் பரிசீலனைக்கு அனுப்பப்படும்.</p><p> புதிய சட்டம் பிரதிநிதிகள் சபையிலும் வெற்றி பெற்று என்னுடைய மேஜைக்கு வந்தால் கண்டிப்பாக நானும் அதனை ஏற்று கையெழுத்திட தயாராக இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-07T19:37:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஸ்காட்லாந்தில் கொடூர பாலியல் குற்றவாளி தப்பியோட்டம்: தேடுதல் வேட்டையில் காவல்துறையினர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/serious-offender-hunt-underway-in-scotland-1786129909"></link>
            <id>https://news.lankasri.com/article/serious-offender-hunt-underway-in-scotland-1786129909</id>
            <summary type="text">ஸ்காட்லாந்து கொடூர குற்றவாளி தப்பியோடியதை அடுத்து அவரை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டை தொடங்கியுள்ளது. தப்பியோடிய கொடூர குற்றவாளிசிறுவர்கள் மீதான பாலியல்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஸ்காட்லாந்து கொடூர குற்றவாளி தப்பியோடியதை அடுத்து அவரை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டை தொடங்கியுள்ளது.</p><h2> தப்பியோடிய கொடூர குற்றவாளி</h2><p>சிறுவர்கள் மீதான பாலியல் துஷ்பிரயோக குற்ற வழக்கில் தண்டனை பெற்றவரும், மனநல காப்பகத்தில் பல ஆண்டுகளாக அடைக்கப்பட்டவருமான கிளிஃபோர்ட் லியான்ஸ்(Clifford Lyons) பாதுகாப்பு அதிகாரிகளிடம் இருந்து தப்பியோடியுள்ளார்.</p><p> பெர்த் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள மருத்துவமனைக்கு பாதுகாப்புகளுடன் அழைத்து செய்யப்பட்ட கிளிஃபோர்ட் லியான்ஸ் யாரும் எதிர்பாராத வகையில் பாதுகாப்பாளர்களின் கண்ணில் படாமல் தப்பியோடியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8bef75d5-ce32-4669-817f-c10997cf6947/26-6a762df6e7b49.webp' /></p><p>கிளிஃபோர்ட் லியான்ஸ் என்ற இவர் கிளிஃபோர்ட் டொப்பி(Clifford Dobbie) என்றும் அழைக்கப்படுகிறார். </p><p>கிளிஃபோர்ட் லியான்ஸ் தப்பியோடியதை அடுத்து அப்பகுதி மிகுந்த பரபரப்புடன் காணப்பட்டது.</p><p> இதையடுத்து, அவரை பிடிக்க தேடுதல் வேட்டை ஒன்றை காவல்துறை முன்னெடுத்து வருகிறது. அதிகாரிகள் பொதுமக்களுக்கு அவசர அறிவிப்பு ஒன்றையும் வெளியிட்டுள்ளனர்.</p><p> அதில், கிளிஃபோர்ட் லியான்ஸை பொதுமக்கள் யாரும் பார்த்தால் அவரின் அருகில் செல்ல வேண்டாம் என்றும் உடனடியாக ஸ்காட்லாந்து காவல் துறையினருக்கு தகவல் அளிக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர்.</p><p> &nbsp;காஸ்டேர்ஸ் மாநில மருத்துவமனை மற்றும் கிளாஸ்கோ ரோவன் பேங்க் கிளினிக் ஆகியவற்றில் உள்ள உயர் பாதுகாப்பு மனநல மையங்களில் கிளிஃபோர்ட் லியான்ஸ் கடந்த பல ஆண்டுகளாக அடைத்து வைக்கப்பட்டிருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/75769faf-39de-42d2-a59e-dbbe960620cb/26-6a762df79a827.webp' /></p><p> 1990ம் ஆண்டு 12 வயது சிறுவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்து இந்த வழக்கில் ஜாமீனில் வெளியே இருந்த போது 10 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார்.</p><p>இதில் அவரது குற்றம் நிரூபிக்கப்பட்டதை அடுத்து&nbsp; குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டார்.</p><p></p><h2> கிளிஃபோர்ட் லியான்ஸ் அடையாளங்கள்</h2><p>கிளிஃபோர்ட் லியான்ஸ் 5 அடி 3 அங்குலம் உயரம் கொண்டவர் என்றும் வழுக்கைத் தலை, நீல நிறக் கண்கள் கொண்டவர்.</p><p> வலது கையில் இரண்டு நீல நிற புலிகள் போன்ற கண்கள் மற்றும் இடது கையில் ரேஞ்சர்ஸ் கால்பந்து அணியின் சின்னம் ஆகியவை பச்சை குத்தப்பட்டு(Tattoos) இருக்கும்.</p><p> மேலும், நீல நிற கிழிந்த ஜீன்ஸ் பேண்ட். நீல நிற கோல்ஃப் சட்டை அத்துடன் லேசான நீல நிற ஸ்வெட்டர், கருப்பு நிற தொப்பி ஆகியவற்றை அணிந்து இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-07T19:12:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[குடியுரிமையைக் கட்டுப்படுத்த ட்ரம்பின் புதிய உத்தரவு..! மீண்டும் எழுந்துள்ள சர்ச்சை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/trump-issues-new-order-restrict-citizenship-1786117054"></link>
            <id>https://tamilwin.com/article/trump-issues-new-order-restrict-citizenship-1786117054</id>
            <summary type="text">அமெரிக்காவில் பிறக்கும் குழந்தைகளுக்குத் தானாகவே கிடைக்கும் &#039;பிறப்புரிமை
அடிப்படையிலான குடியுரிமையை கட்டுப்படுத்தும்
வகையில், அமெரிக்க ஜனாதிபதி டொனா...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவில் பிறக்கும் குழந்தைகளுக்குத் தானாகவே கிடைக்கும் 'பிறப்புரிமை
அடிப்படையிலான குடியுரிமையை கட்டுப்படுத்தும்
வகையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 2 புதிய நிறைவேற்று
உத்தரவுகளில் கையெழுத்திட்டுள்ளார்.
</p><p>
முன்னதாக இத்தகைய முயற்சியை அமெரிக்க உச்ச நீதிமன்றம் நிராகரித்திருந்த
போதிலும், தற்போது வரையறுக்கப்பட்ட சில புதிய விதிகளுடன் இந்த உத்தரவுகளை அவர்
பிறப்பித்துள்ளார்.</p><p></p><h2>குடியுரிமை&nbsp;கட்டுப்பாடு</h2><p>
</p><p>
இதன்படி, வெளிநாட்டுத் தூதரக அதிகாரிகள், குறிப்பிட்ட அமைப்புகளுடன்
தொடர்புடையவர்கள் மற்றும் "எதிரி நாட்டவர்கள்" (Alien Enemy) என
வகைப்படுத்தப்படுபவர்களின் குழந்தைகளுக்குத் தானியங்கி முறையிலான அமெரிக்கக்
குடியுரிமை மறுக்கப்படும்.</p><p>

மேலும், போலி ஆவணங்கள் மூலம் குடியுரிமை பெற முயன்ற பெற்றோரின்
குழந்தைகளுக்கும் இக்கட்டுப்பாடு பொருந்தும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1f5722c1-6eef-4970-b6b9-0641394cca80/26-6a76015b88f8f.webp' /></p><p>

அத்துடன், பிரசவத்திற்காகவே சுற்றுலா விசா மூலம் அமெரிக்காவிற்கு வருகை தந்து
குழந்தையைப் பெற்றெடுக்கும் "பிறப்பு சுற்றுலா" (Birth Tourism) முறையைத்
தடுக்கும் வகையிலும் இரண்டாவது உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.</p><p>

எனினும், இந்த புதிய கட்டுப்பாடுகளின் சட்டப்பூர்வத் தன்மை குறித்து மீண்டும்
சர்ச்சைகள் எழுந்துள்ளன.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-07T19:12:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[டொராண்டோ மேயர் தேர்தல் கருத்துக் கணிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/olivia-chow-leads-toronto-mayoral-race-1786113237"></link>
            <id>https://canadamirror.com/article/olivia-chow-leads-toronto-mayoral-race-1786113237</id>
            <summary type="text">கனடாவின் டொராண்டோ மேயர் தேர்தலுக்கான ரேஸில் தற்போதைய மேயர் ஒலிவியா சௌ தொடர்ந்து முன்னிலையில் உள்ளார்.
 புதிதாகக் களமிறங்கியுள்ள முன்னாள் மத்திய அமைச்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் டொராண்டோ மேயர் தேர்தலுக்கான ரேஸில் தற்போதைய மேயர் ஒலிவியா சௌ தொடர்ந்து முன்னிலையில் உள்ளார்.
</p><p> புதிதாகக் களமிறங்கியுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் கிறிஸ் அலெக்ஸாண்டர் 10 சதவீத ஆதரவுடன் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளதாக புதிய கருத்துக்கணிப்பு ஒன்று தெரிவிக்கிறது.</p><p> 
லியாசன் ஸ்ட்ராடஜீஸ் நிறுவனம் ஆகஸ்ட் 4 மற்றும் 5-ஆம் திகதிகளுக்கு இடையில் 1,000 டொராண்டோவாசிகளிடம் நடத்திய ஆய்வின் அடிப்படையில் இந்த முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/56d96f90-6f08-46fa-9f71-e417102f0cd8/26-6a75ecd789724.webp' /></p><p>
</p><p>ஒலிவியா சௌ: 47% , பிராட் பிராட்போர்ட்: 40% , கிறிஸ் அலெக்ஸாண்டர்: 10% மற்றும் மற்ற வேட்பாளர்கள்: 3% வாக்குகள் பெற்றுக்கொள்வார்கள் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
</p><p>கிறிஸ் அலெக்ஸாண்டர் தேர்தலில் போட்டியிடுவதற்கு முன் நடத்தப்பட்ட முந்தைய ஆய்வில், 'மற்ற வேட்பாளர்களுக்கு' 10% ஆதரவு இருந்தது. </p><p>தற்போது அந்த ஆதரவு அலெக்ஸாண்டரை நோக்கி நகர்ந்துள்ளதாக லியாசன் ஸ்ட்ராடஜீஸ் தலைவர் டேவிட் வலன்டின் தெரிவித்துள்ளார். </p><p>
முடிவெடுக்காத வாக்காளர்கள் உட்பட அனைத்து மக்களிடமும் நடத்தப்பட்ட கணிப்பில், ஒலிவியா சௌ 38%, பிராட்போர்ட் 32%, அலெக்ஸாண்டர் 8% ஆதரவைப் பெற்றுள்ளனர்.
</p><p> இன்னும் 20 சதவீத வாக்காளர்கள் யாருக்கு வாக்களிப்பது என்று முடிவெடுக்காமல் உள்ளனர். தேர்தல் முடிவை தீர்மானிப்பதில் இந்த 20% வாக்காளர்கள் முக்கிய பங்கு வகிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-07T19:05:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட 19 வயது இளைஞன் ; பொலிஸார் தீவிர விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/19-year-old-youth-found-dead-in-jaffna-home-1786121241"></link>
            <id>https://jvpnews.com/article/19-year-old-youth-found-dead-in-jaffna-home-1786121241</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் நாரந்தனை பகுதியில் இளைஞர் ஒருவர் வீட்டினுள் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் நாரந்தனை பகுதியில் இளைஞர் ஒருவர் வீட்டினுள் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><p>
</p><p></p><p>உயிரிழந்த இளைஞனின் தாயாரும் சகோதரியும் தற்போது யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் வசித்து வருகின்றனர். </p><p>அதேவேளை, நாரந்தனையில் அமைந்துள்ள குடும்ப வீட்டில் அவரது தந்தை மட்டுமே தனியாக வசித்து வந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
சம்பவம் இடம்பெற்ற நாளில், தந்தை வேலை நிமித்தமாக வீட்டை விட்டு வெளியே சென்றிருந்ததாகவும், வேறொரு இடத்தில் வசித்து வந்த இளைஞன் அவ்வப்போது வந்து செல்லும் அந்த வீட்டிற்கு வந்திருந்ததாகவும் ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f1b234ed-fdad-40ce-8da1-01ce7e5e7c62/26-6a760c1b52cf9.webp' /></p><p>இந்நிலையில், இன்று காலை அப்பகுதி வழியாக ஆடுகளை மேய்ப்பதற்காகச் சென்ற நபர் ஒருவர் வீட்டிற்குள் இளைஞன் தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். </p><p>இதையடுத்து அவர் உடனடியாக ஊர்காவற்துறை பொலிஸாருக்கு தகவல் வழங்கினார்.
</p><p>
தகவலையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் முதற்கட்ட விசாரணைகளை மேற்கொண்டனர். </p><p>மேலும், மரணத்திற்கான காரணத்தை உறுதிப்படுத்தும் நோக்கில் உடற்கூற்றுப் பரிசோதனை மேற்கொள்ள இளைஞனின் சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.</p><p>

இந்த மரணம் தொடர்பான சூழ்நிலைகள் குறித்து ஊர்காவற்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர். </p><p>உடற்கூற்றுப் பரிசோதனை அறிக்கையும் விசாரணை முடிவுகளும் வெளியாகிய பின்னரே மரணத்திற்கான துல்லியமான காரணம் உறுதிப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-07T19:04:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலம் வர்த்தமானியில் வெளியீடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/publication-of-the-22nd-amendment-bill-gazette-1786129448"></link>
            <id>https://jvpnews.com/article/publication-of-the-22nd-amendment-bill-gazette-1786129448</id>
            <summary type="text">உயர் நீதிமன்ற மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயது மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் எண்ணிக்கையில் மாற்றங்களை ...</summary>
            <content type="html"><![CDATA[<p>உயர் நீதிமன்ற மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயது மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் எண்ணிக்கையில் மாற்றங்களை முன்மொழியும் 22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்தை அரசாங்கம் இன்று (07) அதிவிசேட வர்த்தமானி மூலம் உத்தியோகபூர்வமாக வெளியிட்டுள்ளது.</p><p>
</p><p></p><p>நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சரின் உத்தரவுக்கமைய வெளியிடப்பட்டுள்ள இந்த வர்த்தமானி அறிவித்தலின்படி, உயர் நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயது 67 ஆக உயர்த்தப்படவுள்ளதுடன், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயது 65 ஆக நிர்ணயிக்கப்படவுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cd0dda35-1a03-41ec-8400-93af3d3215bd/26-6a762c2a7b2c1.webp' /></p><p>மேலும், பிரதம நீதியரசர் தனது 67ஆவது வயதை எட்டும் போது அல்லது பதவியில் 6 ஆண்டுகளை நிறைவு செய்யும் போது, இவ்விரண்டில் எது முதலில் நிகழ்கிறதோ அப்போது ஓய்வுபெற வேண்டும் எனவும் சட்டமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p>

அத்துடன், இந்த அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதியரசர்களின் அதிகபட்ச எண்ணிக்கையை தற்போதைய 19 இலிருந்து 24 ஆக உயர்த்தவும் முன்மொழியப்பட்டுள்ளது.
</p><p>
இந்தச் சட்டமூலம் தொடர்பான அடுத்தகட்ட அரசியலமைப்பு மற்றும் நாடாளுமன்ற நடைமுறைகளின் பின்னரே இம்மாற்றங்கள் அமுலுக்கு வரும்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-07T19:04:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுற்றுலா விசாவில் வேலை! 94 வெளிநாட்டவர்களுக்கு 7 மில்லியன் ரூபா அபராதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/chinese-nationals-worked-tourist-visa-fined-1786128232"></link>
            <id>https://ibctamil.com/article/chinese-nationals-worked-tourist-visa-fined-1786128232</id>
            <summary type="text">
இலங்கையில் சுற்றுலா விசாக்களில் பணியாற்றியதாகக் குற்றம் சாட்டப்பட்ட 94 சீன நாட்டினருக்கு, கொழும்பு மேலதிக நீதிபதி நுவன் கௌசல்ய 7 மில்லியன் ரூபா அபரா...</summary>
            <content type="html"><![CDATA[<p>
இலங்கையில் சுற்றுலா விசாக்களில் பணியாற்றியதாகக் குற்றம் சாட்டப்பட்ட 94 சீன நாட்டினருக்கு, கொழும்பு மேலதிக நீதிபதி நுவன் கௌசல்ய 7 மில்லியன் ரூபா அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளார்.
</p><p>
மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்துடன் இணைக்கப்பட்ட நிதி மற்றும் வர்த்தகக் குற்றப் பிரிவின் பொறுப்பதிகாரி விடுத்த கோரிக்கையை ஏற்று நீதிபதி இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.</p><p>

சுற்றுலா விசாக்களில் இலங்கையில் பணியாற்றுவதும், விசா நிபந்தனைகளை மீறுவதும் இலங்கைப் பொருளாதாரத்திற்கு பாரிய பாதிப்பு என்று அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.</p><p></p><h2>ஒப்பு கொள்ளப்பட்ட குற்றம்&nbsp;</h2><p>

அதன்படி, ராஜகிரிய பகுதியில் தங்கியிருந்தபோது கைது செய்யப்பட்டு, விசா நிபந்தனைகளை மீறிப் பணியாற்றியதாகக் குற்றம் சாட்டப்பட்டு நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டபோது 94 சீன நாட்டவர்களும் தங்கள் குற்றத்தை ஒப்பு கொண்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2dd46ef5-4e24-48fa-8515-d0f56a734d44/26-6a762ba22c301.webp' /></p><p>

இந்த நிலையில், குற்றத்தை ஒப்புக்கொண்ட ஒரு சீன நாட்டவருக்கு தலா ரூ. 75,000/- அபராதம் வீதம் 94 சீன நாட்டவர்களுக்கும் ரூ. 70,50,000/- அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-07T19:01:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்திய நிதியமைச்சரை சந்தித்த செந்தில் தொண்டமான்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/senthil-thondaman-meets-indian-finance-minister-1786128913"></link>
            <id>https://jvpnews.com/article/senthil-thondaman-meets-indian-finance-minister-1786128913</id>
            <summary type="text">இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டமான், இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை மரியாதை நிமித்தமாக சந்தித்துள்ளார்.
இந்த சந்திப்பின்போது,...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டமான், இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை மரியாதை நிமித்தமாக சந்தித்துள்ளார்.</p><p>
</p><p></p><p>இந்த சந்திப்பின்போது, சமூக சேவையாளர் கம்பம் ஜெயராஜுக்கு இந்தியாவின் உயரிய குடிமக்கள் விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ விருதை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு செந்தில் தொண்டமான் கோரிக்கை விடுத்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3310728e-7aeb-44c7-87f6-b0046cb181c2/26-6a762a136c6e5.webp' /></p><p>

இதற்கு பதிலளித்த நிர்மலா சீதாராமன், இந்த விடயத்தை இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இந்திய துணை ஜனாதிபதி சி.பி. இராதாகிருஷ்ணன் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக தெரிவித்ததாக கூறப்பட்டுள்ளது.
</p><p>
மேலும், அண்மையில் இலங்கையை பாதித்த இயற்கை அனர்த்த காலத்தில் இந்தியா வழங்கிய மனிதாபிமான உதவிகளுக்கு செந்தில் தொண்டமான் நன்றி தெரிவித்ததுடன், அவற்றை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் பங்களித்த இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவையும் பாராட்டியுள்ளார்.
</p><p>
இதன்போது செந்தில் தொண்டமான் பல்வேறு கோரிக்கைகளையும் இந்திய நிதியமைச்சரிடம் முன்வைத்தார்.
</p><p>
அவற்றில், பெருந்தோட்ட மக்களுக்காக OCI (Overseas Citizen of India) அட்டையை கட்டணச் சலுகையுடன் அல்லது இலவசமாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதும், இந்தியாவின் ஆயுஷ்மான் பாரத் மருத்துவக் காப்புறுதி திட்டத்தின் பயன்களை இலங்கையில் லங்கா எல்.ஐ.சி. ஊடாக பெருந்தோட்ட மக்களுக்கு வழங்க வேண்டும் என்பதும் அடங்கும்.</p><p>

அத்துடன், தமிழகம் மற்றும் இலங்கைக்கு இடையிலான கடல்வழிப் போக்குவரத்து சேவைகளை மேலும் விரிவுபடுத்தி, பயணிகள் மற்றும் வர்த்தக நடவடிக்கைகளுக்கு கூடுதல் வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-07T18:55:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் இளம் பேராசிரியர் பதவி விலகல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/youngest-professor-at-cambridge-university-resigns-1786115754"></link>
            <id>https://tamilwin.com/article/youngest-professor-at-cambridge-university-resigns-1786115754</id>
            <summary type="text">பிரித்தானியாவின் புகழ்பெற்ற கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் மிக இளம் வயது பேராசிரியரான ஜேசன் ஆர்டே , தன் மீதான
கல்வித்துறைசார் முறைகேட்டுக் குற்றச்சாட...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரித்தானியாவின் புகழ்பெற்ற கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் மிக இளம் வயது பேராசிரியரான ஜேசன் ஆர்டே , தன் மீதான
கல்வித்துறைசார் முறைகேட்டுக் குற்றச்சாட்டுகளை அடுத்து பதவி விலகியுள்ளார்.
</p><p>
அவரது கல்வித் தகுதிகள் மற்றும் ஆய்வுக் கட்டுரைகள் தொடர்பில் "புதிய
தகவல்கள்" கிடைத்துள்ளதாகக் கூறி கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் உத்தியோகபூர்வ
விசாரணைகளை ஆரம்பித்ததை அடுத்து அவர் இந்த முடிவை எடுத்துள்ளார்.</p><p></p><h2>தேவையற்ற விமர்சனங்கள்</h2><p>
</p><p>
கடந்த 2015-ஆம் ஆண்டு அவர் சமர்ப்பித்த (Ph.D.) பட்ட ஆய்வேட்டில், பிற
ஆராய்ச்சியாளர்களின் கட்டுரைகளில் இருந்து தகவல்கள் திருடப்பட்டதாகக்
குற்றச்சாட்டுகள் எழுந்தன.
</p><p>
அத்துடன், தொண்டு நிறுவனங்களுக்காக மரதன் ஓட்டங்கள் மூலம் 5.5 மில்லியன்
பவுண்டுகளை நிதியாகத் திரட்டியதாக அவர் கூறிய கூற்றுகள் குறித்தும்
சந்தேகங்கள் எழுப்பப்பட்டிருந்தன.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9e9da7f3-5a40-49f1-949f-02fe28958ee8/26-6a75f9eb097aa.webp' /></p><p>ஆட்டிசம் உள்ளிட்ட கற்றல் குறைபாடுகளை வென்று பேராசிரியர் நிலையை அடைந்த ஜேசன்
ஆர்டே, தன் மீதான குற்றச்சாட்டுகளை முற்றாக மறுத்துள்ளார்.</p><p>

எனினும், ஊடகங்கள் மற்றும் வெளித்தரப்பினரால் முன்னெடுக்கப்படும் தேவையற்ற
விமர்சனங்கள் மற்றும் மன உளைச்சல்கள் காரணமாகவே தாம் இந்த பதவியிலிருந்து
விலகுவதாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-07T18:40:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடா - அமெரிக்கா இடையே பேச்சுவார்த்தை: குறைக்கப்படும் வரிகள்: எதிர்பார்க்கப்படும் சலுகைகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/canada-usa-interim-trade-deal-talk-happens-1786120266"></link>
            <id>https://news.lankasri.com/article/canada-usa-interim-trade-deal-talk-happens-1786120266</id>
            <summary type="text">வரியை குறைப்பது தொடர்பான இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் குறித்து கனடாவும், அமெரிக்காவும் தீவிர பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.கனடா - அமெரிக்கா இட...</summary>
            <content type="html"><![CDATA[<p>வரியை குறைப்பது தொடர்பான இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் குறித்து கனடாவும், அமெரிக்காவும் தீவிர பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.</p><h2>கனடா - அமெரிக்கா இடையே பேச்சுவார்த்தை</h2><p>
&nbsp;விகிதாச்சார வரிகள் மற்றும் கட்டண மோதல்களை குறைப்பது தொடர்பான இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் குறித்து கனடாவும், அமெரிக்காவும் தீவிர பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக தி குளோப் அண்ட் மெயில் செய்தி தகவல் வெளியிட்டுள்ளது.</p><p> வரிகளை குறைப்பதற்காக அல்லது விலக்கு பெறுவதற்காக அமெரிக்காவின் சில வர்த்தக கோரிக்கைகளுக்கு கனடா இணங்க கூடும் என்று தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/34511ba8-814d-4a7e-8f53-642555a1f6c9/26-6a76084c5a42c.webp' /></p><h2>கனடாவின் சாத்தியமான சலுகைகள்</h2><p>அமெரிக்க கார்கள் மீதான வரிகளை திரும்ப பெறுதல், அமெரிக்க மதுபானங்கள் மீதான தடையை நீக்குதல், அமெரிக்க நிறுவனங்களுக்கான கொள்முதல் தடையை தளர்த்துவது. பால் பொருட்கள் ஒதுக்கீட்டை தீர்மானிப்பதில் அமெரிக்காவிற்கு கூடுதல் பங்கு வழங்குவது, சீனாவுடனான வர்த்தக கொள்கையை சீரமைப்பது ஆகியவற்றில் கனடா சலுகைகள் வழங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4036562a-5b19-48b9-b2c0-aab047ebf43b/26-6a76084ba9bc1.webp' /></p><p></p><h2> அமெரிக்காவின் பதில் நடவடிக்கை</h2><p>கனடாவின் இந்த சலுகைகளுக்கு மாற்றாக, ஸ்டீல் மற்றும் அலுமினியம் மீதான தற்போதைய வரியை அமெரிக்கா நீக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p> அத்துடன் ஆகஸ்ட் 19ம் திகதி முதல் அமெரிக்கா அமுல்படுத்தும் என எச்சரித்துள்ள வரிகளில் இருந்தும் கனடாவுக்கு விலக்கு அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p>&nbsp;<br></p>]]></content>
            <updated>2026-08-07T18:40:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[கையெறி குண்டு உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் அறுவர் கைது!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/six-arrested-with-weapons-1786125761"></link>
            <id>https://ibctamil.com/article/six-arrested-with-weapons-1786125761</id>
            <summary type="text">ரத்மலான கொனா கோவில் பகுதியில் 3 வாள்கள், ஒரு கோடரி, 3 கத்திகள் மற்றும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஒரு கையெறி குண்டுடன் 6 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட...</summary>
            <content type="html"><![CDATA[<p>ரத்மலான கொனா கோவில் பகுதியில் 3 வாள்கள், ஒரு கோடரி, 3 கத்திகள் மற்றும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஒரு கையெறி குண்டுடன் 6 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p>
குறித்த கைது நடவடிக்கையானது, கல்கிசை ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p><p>

அத்தோடு, போதைப்பொருள் கடத்தல் மூலம் சம்பாதித்த பணம் என சந்தேகிக்கப்படும் ரூ. 3 லட்சம் மற்றும் 8 கைபேசிகளும் அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.</p><p></p><h2>கைது நடவடிக்கை</h2><p>
</p><p>
இந்த கைது நடவடிக்கை தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, ரத்மலான ஆர்தர் பகுதியில், கல்கிசை காவல்துறை சிறப்பு மோட்டார் சைக்கிள் படை அதிகாரி ஒருவர் 1,000 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவரை கைது செய்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c18dae82-310d-48e1-ad07-4f1467f0c830/26-6a762048d3909.webp' /></p><p>
</p><p>
பின்னர், போதைப்பொருள் பெறப்பட்ட இடம் குறித்து விசாரணை செய்தபோது, ​​போதைப்பொருள் விற்கப்பட்ட வீடு பற்றிய தகவல் தெரியவந்துள்ளது.</p><p>

அதன்படி, அந்த இடத்தில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, ​​காவல்துறையினரால் இந்த ஆயுதங்களையும் பணத்தையும் மீட்க முடிந்தாக கூறப்படுகிறது.</p><h2>தடுப்பு காவல் உத்தரவு</h2><p>
</p><p>
அங்கு கைது செய்யப்பட்ட பிரதான சந்தேக நபர் 29 வயதுடையவர் என்றும் மற்ற சந்தேக நபர்கள் 33, 22, 24, 51 மற்றும் 36 வயதுடையவர்கள் எனவும் தெரியவருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/82101e9e-9eae-4d56-9da1-e1e7945433d2/26-6a762049cb639.webp' /></p><p>

சந்தேகநபர்கள், ரத்மலான, நாவலப்பிட்டிய மற்றும் எஹெலியகொட ஆகிய பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்படுகிறது.</p><p>

இதன்படி, சந்தேகபர்களை நீதிபதி முன் முற்படுத்தி தடுப்பு காவல் உத்தரவை பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.&nbsp;&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-07T18:18:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பகுதியில் மர்ம மரணம்; புதருக்குள் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/body-of-a-man-recovered-from-bushes-1786126246"></link>
            <id>https://jvpnews.com/article/body-of-a-man-recovered-from-bushes-1786126246</id>
            <summary type="text">மன்னார் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட, பேசாலை பொலிஸ் பிரிவைச் சேர்ந்த பேசாலை 8 ஆம் வட்டாரத்தில் உள்ள புதர் பகுதி ஒன்றிலிருந்து இன்று (7) மதியம் ஆண்...</summary>
            <content type="html"><![CDATA[<p>மன்னார் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட, பேசாலை பொலிஸ் பிரிவைச் சேர்ந்த பேசாலை 8 ஆம் வட்டாரத்தில் உள்ள புதர் பகுதி ஒன்றிலிருந்து இன்று (7) மதியம் ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p></p><p>குறித்த பகுதியில் சடலம் ஒன்று இருப்பதை அவதானித்த அப்பகுதி மக்கள், உடனடியாக கிராம உத்தியோகத்தர் ஊடாக பேசாலை பொலிஸாருக்குத் தகவல் வழங்கினர்.
</p><p>
 

தகவலறிந்த பேசாலை பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சடலத்தைக் கைப்பற்றியதுடன், மேற்கொண்ட முதற்கட்ட விசாரணைகளில் உயிரிழந்தவர் பேசாலை 8 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த லோரன்ஸ் மோரிஸ் (வயது 41) என அடையாளம் காணப்பட்டார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ec658a90-04d7-4a17-9cbe-45f1f56ae953/26-6a761fa849e91.webp' /></p><p>இரண்டு பிள்ளைகளின் தந்தையான இவர், மீன்பிடித் தொழில் செய்து வந்தவர் என்பதும், அவர் சடலமாக மீட்கப்பட்ட இடத்திலிருந்து சற்றுத் தொலைவிலேயே அவரது வீடு அமைந்துள்ளது என்பதும் தெரியவந்துள்ளது.
</p><p>
 

சம்பவ இடத்திற்கு வருகை தந்த குற்றத்தடுப்புத் தடயவியல் பொலிஸாருடன் இணைந்து பேசாலை பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p>

 

உயிரிழந்த நபரின் தொலைபேசித் தொடர்பு நேற்று (6) காலை 7.30 மணிக்கு மேல் கிடைக்கவில்லை என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
</p><p>
 

சடலத்தைக் கைப்பற்றியுள்ள பேசாலை பொலிஸார், இம்மரணத்திற்கான காரணம் குறித்துத் தொடர்ந்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-07T18:10:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA['டொல்பின்' சூறாவளி அச்சுறுத்தல்: சீனத் தலைநகர் பீஜிங்கில் கனமழை எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/typhoon-dolphin-threat-heavy-rain-warning-chinese-1786124747"></link>
            <id>https://tamilwin.com/article/typhoon-dolphin-threat-heavy-rain-warning-chinese-1786124747</id>
            <summary type="text">சீனாவை நோக்கி &#039;டொல்பின்&#039; (Typhoon Dolphin) சூறாவளி நகர்ந்து வரும் நிலையில்,
தலைநகர் பீஜிங்கின் பல பகுதிகளில் பலத்த மழை மற்றும் வெள்ளப் பெருக்கு அபாய...</summary>
            <content type="html"><![CDATA[<p>சீனாவை நோக்கி 'டொல்பின்' (Typhoon Dolphin) சூறாவளி நகர்ந்து வரும் நிலையில்,
தலைநகர் பீஜிங்கின் பல பகுதிகளில் பலத்த மழை மற்றும் வெள்ளப் பெருக்கு அபாய
எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
</p><p>
எதிர்வரும் ஞாயிறு மற்றும் திங்கட்கிழமைகளில் சீனக் கடலோரப் பகுதிகளை டொல்பின்
சூறாவளி தாக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>&nbsp;கனமழை எச்சரிக்கை</h2><p>
</p><p>
இதன் முன்னெச்சரிக்கையாக பீஜிங்கின் டோங்செங், ஹைடியன் மற்றும் சியோயாங்
உள்ளிட்ட முக்கிய மாவட்டங்களில் மணிக்கு 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை
பெய்யக்கூடும் என அந்த நாட்டு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/eff6610a-88ae-4117-8b03-9dba64a67454/26-6a761c130b2e6.webp' /></p><p>
</p><p>
வெள்ளப் பெருக்கு, நிலச்சரிவு மற்றும் மண்சரிவு அபாயங்கள் குறித்து மக்களுக்கு
எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், வெள்ள நிவாரணப் பணிகளுக்காக 2,000-க்கும்
மேற்பட்ட ஊழியர்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளனர்.
</p><p>
சூறாவளி அச்சுறுத்தல் காரணமாகச் சீனாவின் கிழக்கு மற்றும் தெற்கு மாகாணங்களில்
படகுச் சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன், மீன்பிடிப் படகுகளும் பாதுகாப்பான
இடங்களுக்குத் திருப்பியனுப்பப்பட்டுள்ளன.
</p><p>
அதேவேளை, நாட்டின் மத்திய மற்றும் கிழக்குப் பகுதிகளில் 38 பாகை செல்சியஸைத்
தாண்டிய கடுமையான வெப்ப அலையும் வீசி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-07T17:55:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[போதைப்பொருள் விசாரணையில் அதிர்ச்சி திருப்பம் ; ஆயுதங்கள், பணம் கைப்பற்றல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/shocking-twist-in-drug-investigation-1786125175"></link>
            <id>https://jvpnews.com/article/shocking-twist-in-drug-investigation-1786125175</id>
            <summary type="text">கொழும்பிலுள்ள இரத்மலானை கொனா கோவில பகுதியில் 3 வாள்கள், 1 கோடரி, 3 கத்திகள் மற்றும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஒரு கைக்குண்டு ஆகியவற்றுடன் 6 சந்தேகநபர...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பிலுள்ள இரத்மலானை கொனா கோவில பகுதியில் 3 வாள்கள், 1 கோடரி, 3 கத்திகள் மற்றும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஒரு கைக்குண்டு ஆகியவற்றுடன் 6 சந்தேகநபர்களைக் கல்கிஸ்ஸ ஊழல் தடுப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.</p><p>
</p><p></p><p>அத்துடன், போதைப்பொருள் கடத்தல் மூலம் சம்பாதிக்கப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் 3 இலட்சம் ரூபாய் பணம் மற்றும் 8 கைப்பேசிகளும் அவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளன.</p><p>

 

கல்கிஸ்ஸ பொலிஸாரின் விசேட மோட்டார் சைக்கிள் படையணியின் அதிகாரி ஒருவர் இரத்மலானை ஆதர் பிரதேச பகுதியில் 1,000 மில்லிகிராம் 'ஐஸ்' போதைப்பொருளுடன் நபர் ஒருவரைக் கைது செய்திருந்தார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1715e97a-8841-4004-a6ef-adc1c176aaf9/26-6a761b7940811.webp' /></p><p>அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, போதைப்பொருள் கொள்முதல் செய்யப்பட்ட இடம் மற்றும் போதைப்பொருள் விற்பனை நடைபெறும் இந்த வீடு பற்றிய தகவல்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.
</p><p>
 

குறித்த வீட்டின் நுழைவாயிலில் "சுபுன் சர்பயா நுழைவது தடை" என எழுதப்பட்டிருந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
</p><p>
 

அதற்கமைய, அந்த இடத்தில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போதே இந்த ஆயுதங்களும் பணமும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.</p><p>

 

கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபர் 29 வயதுடையவர் என்பதோடு, ஏனைய சந்தேகநபர்கள் 33, 22, 24, 51, 36 ஆகிய வயதுடைய இரத்மலானை, நாவலப்பிட்டி மற்றும் எஹெலியகொட ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர்.</p><p>

 

சந்தேகநபர்களை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய பின்னர், தடுப்புக்காவல் உத்தரவைப் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-07T17:53:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[மன்னாரில் இருவேறு இடங்களில் மீட்கப்பட்ட இரண்டு சடலங்கள்! தொடரும் விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/two-bodies-recovered-in-mannar-1786123741"></link>
            <id>https://ibctamil.com/article/two-bodies-recovered-in-mannar-1786123741</id>
            <summary type="text">மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பேசாலை காவல்துறை பிரிவுக்குட்பட்ட பேசாலை 8 ஆம் வட்டாரம் பகுதியில் காணப்பட்ட பற்றைக்காட்டு பகுதியில் இருந்து இன்ற...</summary>
            <content type="html"><![CDATA[<p>மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பேசாலை காவல்துறை பிரிவுக்குட்பட்ட பேசாலை 8 ஆம் வட்டாரம் பகுதியில் காணப்பட்ட பற்றைக்காட்டு பகுதியில் இருந்து இன்று வெள்ளிக்கிழமை (7) மதியம் ஆண் ஒருவரின் சடலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.</p><p>

குறித்த பகுதியில் சடலம் ஒன்று காணப்படுவதை அவதானித்த அப்பகுதி மக்கள் உடனடியாக கிராம சேவையாளர் ஊடாக பேசாலை காவல்துறை தகவல் வழங்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>இரண்டு பிள்ளைகளின் தந்தை&nbsp;</h2><p>

இதையடுத்து பேசாலை காவல்துறையினர் குறித்த பகுதிக்கு சென்று சடலத்தை மீட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e7cea69e-38a7-4cd3-91f8-5ae40f35b2f0/26-6a76178d15487.webp' /></p><p>
</p><p>
பின்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது சடலமாக மீட்கப்பட்ட நபர் பேசாலை 8 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த லோரன்ஸ் மோரிஸ் ( வயது-41 ) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
</p><p>
அவர் இரண்டு பிள்ளைகளின் தந்தை என்றும், மீன்பிடி தொழிலை மேற்கொண்டு வரும் நிலையில் வீட்டில் இருந்து சற்று தொலைவில் உள்ள இடத்தில் இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.</p><h2>அடையாளம் தெரியாத சடலம்&nbsp;</h2><p>
</p><p>
இதேவேளை, மன்னார் வங்காலை காவல்துறை பிரிவுக்குட்பட்ட வங்காலை கடற்கரையில் இன்று வெள்ளிக்கிழமை (7) காலை உருக்குலைந்த நிலையில் கரை ஒதுங்கிய ஆண் ஒருவரின் சடலத்தை காவல்துறையினர் மீட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7836849d-25f3-42da-9da2-2485697589dd/26-6a76178dc4760.webp' /></p><p>
</p><p>
குறித்த சடலம் உருக்குலைந்த நிலையில் காணப்படுவதால் இதுவரை அதனை அடையாளம் காணமுடியவில்லை என கூறப்படுகிறது.</p><p>

இதன்படி, குறித்த சடலம் இந்திய மீனவர் ஒருவருடையதா? அல்லது தொழிலுக்குச் சென்று காணாமல் போன மீனவரா? என்பது குறித்து இதுவரை தெரியவராத நிலையில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-07T17:36:17+00:00</updated>
        </entry>
    </feed>
