<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-09-06T00:55:07+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹொர்முஸ் நீரிணையில் கப்பல்கள் மீது ஈரான் அதிரடித் தாக்குதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/iran-launches-surprise-attack-ships-strait-hormuz-1788655698"></link>
            <id>https://canadamirror.com/article/iran-launches-surprise-attack-ships-strait-hormuz-1788655698</id>
            <summary type="text">ஹொர்முஸ் நீரிணை வழியே விதிமுறைகளை மீறிச் சென்ற 2 முதல் 5 கப்பல்கள் வரை தினமும் இரவு நேரத்தில் &quot;தண்டிக்கப்பட்டதாக&quot; ஈரானிய புரட்சிகர காவல் படையின் கடற்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹொர்முஸ் நீரிணை வழியே விதிமுறைகளை மீறிச் சென்ற 2 முதல் 5 கப்பல்கள் வரை தினமும் இரவு நேரத்தில் "தண்டிக்கப்பட்டதாக" ஈரானிய புரட்சிகர காவல் படையின் கடற்படை அதிகாரி தெரிவித்துள்ளார்.

2026 ஆகஸ்ட் 30-ஆம் திகதி வரையிலான 10 நாட்களில் இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.
</p><p>
இந்த தாக்குதல்களின் பின்னரும் கூட விதிமுறைகளை மீறும் கப்பல்கள் மீது தேவையான நேரங்களில் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ஈரானிய புரட்சிக்கர காவல்படை தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/84aeccc2-db4f-43b4-8b4c-19e67b48c22f/26-6a9cb85407a41.webp' /></p><p>

இந்தநிலையில், ஈரானின் மூன்று எண்ணெய் கப்பல்கள் மீது அமெரிக்கப் படைகள் நடத்திய தாக்குதலை ஈரான் வெளியுறவு அமைச்சகம் "போர்க்குற்றம்" என கடுமையாகக் கண்டித்துள்ளது.
</p><p>
அத்துடன், பிராந்திய கடற்பகுதியில் அமெரிக்காவின் முற்றுகை மற்றும் தாக்குதல்கள் தொடர்ந்தால் அமெரிக்க போர்க்கப்பல்கள் மீது பதிலடித் தாக்குதல்கள் தீவிரப்படுத்தப்படும் என ஈரானிய ஆயுதப்படைகள் எச்சரித்துள்ளன.
</p><p>
எனினும், பிராந்திய கடற்பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த இரண்டு அமெரிக்க போர்க்கப்பல்களை இலக்கு வைத்து ஈரானிய புரட்சிகர காவல் படை பெலிஸ்டிக் ஏவுகணைகளை வீசித் தாக்கியதைத் தொடர்ந்தே ஈரானிய எண்ணெய் கப்பல்கள் மீது அமெரிக்க மத்திய கட்டளையகம் தாக்குதல் நடத்தியதாக தெரிவித்துள்ளது.
</p><p>
இதேவேளை, ஈரானின் நதான்ஸ் (Natanz) அணுசக்தி மையத்திற்கு அருகே அமைந்துள்ள 'பிக்அக்ஸ்' (Pickaxe Mountain) நிலத்தடி அணுசக்தி வளாகத்தின் மீது மிக விரைவில் (very soon) தாக்குதல் நடத்தக்கூடும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மீண்டும் எச்சரித்துள்ளார்.
</p><p>
கடந்த ஜூலை மாதத்திற்குப் பிறகு இத்தகைய எச்சரிக்கையை அவர் மீண்டும் விடுத்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-09-06T00:48:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[பல மில்லியன் ரூபா பெறுமதியான சொத்துக்களை அதிரடியாக முடக்கிய அரசு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/15-mn-worth-properties-seized-1788620097"></link>
            <id>https://tamilwin.com/article/15-mn-worth-properties-seized-1788620097</id>
            <summary type="text">வெலிகம பிரதேசத்தில் சட்டவிரோத வழிகளில் ஈட்டப்பட்டதாக கூறப்படும் 15 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது. 

சட்டவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>வெலிகம பிரதேசத்தில் சட்டவிரோத வழிகளில் ஈட்டப்பட்டதாக கூறப்படும் 15 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது. </p><p>

சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினால் இந்த சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது.. </p><p>வெலிகம, பதேகம் பகுதியில் வசிக்கும் நபரொருவர் ஈஷி கேஷ் தளத்தைப் பயன்படுத்தி சட்டவிரோத போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வருவதாக பொலிஸ் மா அதிபருக்கு கிடைத்த தகவல் கிடைத்துள்ளது.</p><p> </p><h2><b>

சட்டவிரோத சொத்துக்கள்</b></h2><p>இதனை தொடர்ந்து, சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவின் கீழ் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் விசாரணை ஆரம்பிக்கப்பட்டது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d9b8e22c-1145-4fc2-8f33-8af30924c6bd/26-6a9c39461635c.webp' /></p><p>விசாரணைக்கமைய, வெலிகம, பதேகம் பகுதியில் அமைந்துள்ள 15 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான மதிப்புள்ள வீடு, போதைப்பொருள் கடத்தல் மூலம் சட்டவிரோதமாக பெற்ற பணத்தில் கொள்வனவு என்பது தெரியவந்துள்ளது. </p><p>

இதன் காரணமாக நேற்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில், 14 நாட்களுக்கு அந்தச் சொத்தை முடக்குமாறு பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. </p><p>இது தொடர்பான மேலதிக விசாரணைகளைச் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு மேற்கொண்டு வருகிறது.</p><p></p><p></p><p> </p>]]></content>
            <updated>2026-09-06T00:46:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[தேர்தல் நிதியை திரட்டத் திண்டாடும் அரசியல் கட்சிகள்! பொருளாதார நெருக்கடியில் புதிய சவால்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/political-parties-struggling-raise-election-funds-1788655321"></link>
            <id>https://ibctamil.com/article/political-parties-struggling-raise-election-funds-1788655321</id>
            <summary type="text">நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக, பிரதான அரசியல் கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் கடுமையான நிதி நெருக்கடியை எதிர்கொண்டு வருவதாகத...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக, பிரதான அரசியல் கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் கடுமையான நிதி நெருக்கடியை எதிர்கொண்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
</p><p>
இதன் காரணமாக, எதிர்வரும் தேர்தல் நடவடிக்கைகளுக்குத் தேவையான நிதியைத் திரட்டுவது அரசியல் கட்சிகளுக்கு பெரும் சவாலாக மாறியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
சில அரசியல் கட்சிகளுக்கு தங்களது தலைமையகங்கள் மற்றும் பிராந்திய அலுவலகங்களைப் பராமரிப்பதுடன், அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கான சம்பளங்களை வழங்குவதும் தற்போது மிகவும் சிரமமாகியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p></p><h2>கட்டணங்களை செலுத்த முடியாத நிலை</h2><p>
</p><p>மேலும், சில கட்சி அலுவலகங்களில் மின்சாரம் மற்றும் நீர் கட்டணங்களைக் கூட செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bce9aa0d-85c8-4f54-8bae-bd244568df9b/26-6a9cb6dbd334e.webp' /></p><p>

அதிகரித்துள்ள செலவினங்கள் காரணமாக, பல அரசியல் கட்சிகளின் நிதி கையிருப்புகள் தற்போது வெகுவாகக் குறைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. </p><p>இதனால் எதிர்வரும் தேர்தல்களை இலக்காகக் கொண்டு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செல்வந்தர்களின் நிதி ஆதரவைப் பெற்றுக்கொள்ள பல கட்சிகள் எதிர்பார்ப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
இதனிடையே, கடந்த தேர்தல் காலங்களில் வெளிநாடுகளில் இருந்து கிடைத்த நிதியுதவிகளில் சிலவற்றை குறிப்பிட்ட அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் தனிப்பட்ட தேவைகளுக்குப் பயன்படுத்தியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
</p><p>
கட்சி நிதியை செலவிடும்போது வெளிப்படைத்தன்மையுடன் கூடிய நடைமுறையை உருவாக்க சில கட்சித் தலைவர்கள் முயற்சித்து வருவதாகவும், எனினும் மற்றொரு தரப்பினர் அதற்கு தடைகளை ஏற்படுத்தி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
</p><p>இலங்கையில்&nbsp; தேர்தல்கள் ஆணைக்குழுவினால் இதுவரை 85 அரசியல் கட்சிகள் அங்கீகரிக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-06T00:42:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரான் போருக்குப் பிறகு மத்திய கிழக்கில் டிரம்ப் போட்டுள்ள மிகப்பெரிய திட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/trump-plans-bigger-strategy-post-iran-war-1788655453"></link>
            <id>https://news.lankasri.com/article/trump-plans-bigger-strategy-post-iran-war-1788655453</id>
            <summary type="text">Trump plans bigger middle east strategy after Iran war:


அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், ஈரானுடன் நடைபெற்று வரும் போருக்குப் பிறகு மத்திய கிழக...</summary>
            <content type="html"><![CDATA[<p>Trump plans bigger middle east strategy after Iran war:


அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், ஈரானுடன் நடைபெற்று வரும் போருக்குப் பிறகு மத்திய கிழக்கில் “மிகப் பெரிய திட்டம்” ஒன்றை செயல்படுத்தத் திட்டமிட்டுள்ளதாக Axios வெளியிட்ட தகவலில் கூறப்பட்டுள்ளது.
</p><p>
இந்த புதிய திட்டம் இன்னும் வடிவமைக்கப்பட்டுக் கொண்டிருப்பதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bcaa1678-9782-454e-bd1d-0d3eb99d03f0/26-6a9cb75f55394.webp' /></p><p>இதன் முக்கிய நோக்கம், ஈரானை கட்டுப்படுத்த பிராந்திய கூட்டணியை உருவாக்குவது மற்றும் இஸ்ரேலை அதன் அண்டை நாடுகளுடன் ஆழமான உறவுகளுக்கு அழைத்துச் செல்வது ஆகும்.
</p><p>
டிரம்ப் தனது நெருங்கிய ஆலோசகர்களிடம், “ஈரான் போருக்குப் பிறகு மத்திய கிழக்கில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தப் போகிறேன்” என்று கூறியுள்ளார்.
</p><p></p><h2>திட்டத்தின் மூன்று முக்கிய அம்சங்கள்:
</h2><p><b>ஈரானுக்கு எதிரான பிராந்திய கூட்டணி:</b> அமெரிக்கா பாதுகாப்பு உத்தரவாதம் வழங்கும் வகையில், தனது கூட்டாளிகளை ஒருங்கிணைக்க முயற்சி.</p><p><b>
பிராந்திய மோதல்களை குறைத்தல்:</b> காசா திட்டத்தின் அடுத்த கட்டம், இஸ்ரேல்-சிரியா பாதுகாப்பு ஒப்பந்தம், இஸ்ரேல்-லெபனான் ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துதல்.</p><p><b>

Abraham Accords விரிவாக்கம்:</b> இஸ்ரேல்-சவுதி அரேபியா இடையே உறவை சாதாரணப்படுத்தும் ஒப்பந்தம். இது டிரம்ப் நிர்வாகத்துக்கு மிகப்பெரிய சாதனையாக இருக்கும்.</p><p>
</p><p></p><p>இஸ்ரேல் தேர்தல் அக்டோபர் 27 அன்று நடைபெற உள்ளது. அதற்குப் பிறகு உருவாகும் அரசாங்கம் அமெரிக்காவின் புதிய திட்டத்துடன் இணைந்து செயல்படுமா என்பது கேள்வியாக உள்ளது. ஆனால், டிரம்ப் நிர்வாகம் தேர்தல் முடிவுகளை காத்திருக்காமல் திட்டத்தை முன்னெடுக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-06T00:41:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாமலை காட்டிக்கொடுத்த நபருக்கு உயிரச்சுறுத்தல் - வெளிநாடுகளில் இருந்து தொடரும் விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-arrest-case-updates-1788651523"></link>
            <id>https://tamilwin.com/article/namal-arrest-case-updates-1788651523</id>
            <summary type="text">நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தற்போது கொழும்பு மெகசின் சிறைச்சாலையில் எதிர்வரும் 18ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

ஏர்பஸ் (Ai...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தற்போது கொழும்பு மெகசின் சிறைச்சாலையில் எதிர்வரும் 18ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.</p><p>

ஏர்பஸ் (Airbus) விமான கொள்வனவு தொடர்பான ஊழல் வழக்கில், 8 லட்சம் அமெரிக்க டொலர்கள் நாமல் ராஜபக்சவிற்கு கமிஷன் தொகையாக வழங்கப்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில் அவர் கைது செய்ப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
</p><p>
இந்த வழக்கு நிமல் பெரேரா என்பவரின் வாக்குமூலத்தின் அடிப்படையில் அமைந்துள்ளது.
</p><p>
அவர் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக அஞ்சி அவுஸ்திரேலியாவிலிருந்து விசாரணை அதிகாரிகளிடம் சாட்சியம் அளித்துள்ளார்.

அவர் அவுஸ்திரேலிய சட்டத்தின் கீழ் சத்தியப் பிரமாண அறிக்கையையும் வழங்கியுள்ளார்.</p><p>

இந்த விசாரணை இலங்கை அதிகாரிகளால் மட்டுமல்லாது, பிரான்ஸ், சிங்கப்பூர், அமெரிக்கா மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளின் ஒத்துழைப்புடன் நடைபெறுவதாக அரசு தரப்பு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.</p><p>


சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு வந்த பணத்தில் இருந்து, 100 மில்லியன் ரூபாய் நாமல் ராஜபக்சவுக்கு வழங்கப்பட்டதாக நிமல் பெரேரா குற்றம் சாட்டியுள்ளார்.</p><p>

நாமல் ராஜபக்சவுக்கு எதிராக வாக்குமூலம் அளித்த பிறகு, தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக அவர் அஞ்சுவதால் தான் இலங்கை வரத் தயங்குகிறார் என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இந்த விடயங்கள் தொடர்பில் முழுமையாக பேசுகின்றது NewsInsightTamil நிகழ்ச்சி..</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/RFwKvZNB2Yo" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-06T00:37:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறை சென்ற நாமலுக்கு எதிராக புதிய வழக்கு! சாட்சியமளிக்கத் தயாராகும் நெருங்கிய சகா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/new-case-against-namal-who-went-to-prison-1788630600"></link>
            <id>https://ibctamil.com/article/new-case-against-namal-who-went-to-prison-1788630600</id>
            <summary type="text">நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் முன்னாள் நெருங்கிய சகாவும், தொழிலதிபருமான நிமல் பெரேரா, அவருக்கு எதிராக இரண்டு தனித்தனி வழக்குகளில் சாட்சியம் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் முன்னாள் நெருங்கிய சகாவும், தொழிலதிபருமான நிமல் பெரேரா, அவருக்கு எதிராக இரண்டு தனித்தனி வழக்குகளில் சாட்சியம் அளிக்கத் தயாராக இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. </p><p>விசாரணைக்கு நெருக்கமான வட்டாரங்களை மேற்கோள் காட்டி இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள நாமல் ராஜபக்சவின் ஏர்பஸ் ஊழல் வழக்கில் முக்கிய சாட்சியாக&nbsp;நிமல் பெரேரா குறித்து முன்வைக்கப்பட்ட பிரமாண பத்திரம் முக்கியத்துவம் பெற்றிருந்தது.</p><p></p><p>
</p><h2>வழக்கு ஒன்று: ஏர்பஸ் ஊழல்</h2><p><u><b>நிமல் பெரேராவைத் தொடர்புகொள்ள மேற்கொள்ளப்பட்ட முயற்சி</b></u></p><p> நாமல் ராஜபக்சவின் சகாவான, விக்டோரியா மாநிலம் மெல்போர்னில் வசிக்கும் சட்டத்தரணி இந்திக கருணாஜீவா, தற்போது அவுஸ்திரேலியாவில் வசிக்கும் ராஜபக்சவின் நீண்டகால நண்பரான நிமல் பெரேராவைத் தொடர்புகொள்ள பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f352e2f1-f75e-4a01-9029-a6b6e791f1af/26-6a9c564bbc750.webp' /></p><p> ராஜபகசவுக்கு எதிராக எந்தவொரு வாக்குமூலமும் அளிக்க வேண்டாம் என அவரிடம் கேட்டுக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.
</p><p>
கருணாஜீவா, Narre Warren, VIC 3805, 66 Victor Crescent, Level 2, Suite 319 என்ற முகவரியில் இயங்கும் ISK Law நிறுவனத்தின் பிரதான சட்டத்தரணியாக உள்ளதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது.</p><h2>தோல்வியடைந்த முயற்சி </h2><p>நன்கு அறிந்த வட்டாரங்களின் தகவலின்படி, கருணாஜீவாவால் நிமல் பெரேராவைத் தொடர்புகொள்ள முடியவில்லை. அவர் செய்த தொலைபேசி அழைப்புகளுக்கு பெரேரா பதிலளிக்கவில்லை என்றும், குறுஞ்செய்திகளுக்கும் பதில் அளிப்பதைத் தவிர்த்ததாகவும் கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3f1b1555-5e93-4876-b0c0-dc129ed0ac3c/26-6a9c564b0ee8a.webp' /></p><p>

இதனால் அவரைத் தொடர்புகொள்ள மேற்கொள்ளப்பட்ட முயற்சி தோல்வியடைந்ததாகக் கூறப்படுகிறது. </p><p>இந்தச் சம்பவம் நாமல் ராஜபக்சவை மிகவும் அதிருப்தியடையச் செய்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p></p><h2>CID அதிகாரிகள் அவுதிரேலியா பயணம்</h2><p>இந்த விவகாரம் தெரியவந்ததைத் தொடர்ந்து, குற்றப் புலனாய்வுத் துறை (CID) மற்றும் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் அதிகாரிகள் அவுதிரேலியாவுக்குச் சென்று நிமல் பெரேராவிடமிருந்து சத்தியப்பிரமாண வாக்குமூலம் பதிவு செய்ததாகக் கூறப்படுகிறது.</p><p>சட்டமா அதிபர் திணைக்களத்தின் மூத்த சட்டத்தரணி ஒருவரின் கூற்றுப்படி, நிமல் பெரேராவுக்கு சாட்சி பாதுகாப்பும் பாதுகாப்பு ஏற்பாடுகளும் வழங்க அவுதிரேலிய அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><p>
அவர் அவுதிரேலியாவில் இருந்தபடியே Zoom வழியாக சாட்சியம் அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><h2>சர்வதேச பரஸ்பர சட்ட உதவி</h2><p>அவுதிரேலியா, சிங்கப்பூர், பிரான்ஸ் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளிடமிருந்து பரஸ்பர சட்ட உதவி மூலம் விசாரணைக்கு ஆதரவு கிடைத்துள்ளதாகவும், விசாரணை தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகவும் கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a4c92a64-f88c-4b89-a08d-fa4e768bc4b5/26-6a9c564c72257.webp' /></p><p>

இந்த வழக்கின் முக்கிய அம்சமாக Airbus நிறுவனத்திடமிருந்து ஆவணங்களைப் பெறுவதற்கான நடவடிக்கை அமைந்துள்ளது.
</p><p>
சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஒரு தகவல் வட்டாரம் இந்த வழக்கு வலுவான நிலையில் இருப்பதாகவும், நாமல் ராஜபக்சவுக்கு எதிரான மேலும் பல ஆதாரங்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.</p><p></p><p>
</p><h2>வழக்கு இரண்டு: கிரிஷ் விவகாரம்
நிதி முறைகேடு</h2><p><b><u>கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை</u></b></p><h2> </h2><p>இரண்டாவது வழக்கு, ரக்பி விளையாட்டு மேம்பாட்டிற்காக வழங்கப்பட்டதாகக் கூறப்படும் ரூ.70 மில்லியன் தொடர்பானது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b6ded7ec-8a2f-4214-8f44-72f7bab52c63/26-6a9c564d2a0bd.webp' /></p><p>
</p><p>
இந்தப் பணம் Krrish Lanka (Pvt) Ltd நிறுவனத்தால் செலுத்தப்பட்டதாகவும், பின்னர் நிமல் பெரேராவுடன் தொடர்புடைய வங்கிக் கணக்குகளுக்கு மாற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அதன் பின்னர் அந்த நிதி நாமல் ராஜபக்சவுக்கு மாற்றப்பட்டதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
</p><p>இந்த நிதி தொடர்பாக சட்டமா அதிபர் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகளைத் தாக்கல் செய்துள்ளார்.

இந்தப் பணப் பரிவர்த்தனையின் ஓட்டம் தொடர்பான முக்கிய அரசுத் தரப்பு சாட்சியாக நிமல் பெரேரா பெயரிடப்பட்டுள்ளார்.
</p><p>இந்த வழக்கை விசாரிப்பதற்காக மேல் நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட சிறப்பு அமர்வை நியமிக்குமாறு சட்டமா அதிபர் பிரதம நீதியரசரிடம் கோரிக்கை விடுக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-06T00:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாமல் ராஜபக்சவின் மனைவி லிமினியை அரசியல் களமிறக்க பொதுஜன பெரமுன திட்டமா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/namal-remanded-will-limini-enter-political-arena-1788654357"></link>
            <id>https://jvpnews.com/article/namal-remanded-will-limini-enter-political-arena-1788654357</id>
            <summary type="text">நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் மனைவி லிமினி ராஜபக்ச, செயற்பாட்டு அரசியல் களத்தில் ஈடுபடுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தயாராகி வருவதாக அரசி...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் மனைவி லிமினி ராஜபக்ச, செயற்பாட்டு அரசியல் களத்தில் ஈடுபடுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தயாராகி வருவதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p>
</p><p></p><p>எதிர்வரும் 12ஆம் திகதி அனுராதபுரத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஏற்பாட்டில் மக்கள் போராட்டப் பேரணியொன்று நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
</p><p>
இந்த நிலையில், தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் நாமல் ராஜபக்சவுக்குப் பதிலாக, அவரது மனைவி லிமினி ராஜபக்ச இந்தப் பேரணியில் பங்கேற்று பிரதான மேடையில் மக்களிடம் உரையாற்றக்கூடும் என பொதுஜன பெரமுனவின் உள்வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c43c57d1-bfdf-4e0f-8d7a-b62fa2b65929/26-6a9cb316a86e5.webp' /></p><p>எனினும், லிமினி ராஜபக்சவின் அரசியல் பிரவேசம் தொடர்பான இந்தத் தகவல்கள் தொடர்பில் கட்சித் தரப்பிலிருந்து இதுவரை உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.</p><p>

அதேவேளை, எதிர்வரும் நாட்களில் கொழும்பில் லிமினி ராஜபக்ச தலைமையில் முக்கிய எதிர்ப்பு நடவடிக்கையொன்றை நடத்துவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
</p><p>
இதனுடன் இணைந்து, ஊடகங்களுடனான சந்திப்பொன்றையும் நடத்துவதற்கு கட்சித் தரப்பில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p>

நாமல் ராஜபக்சவின் அரசியல் செயற்பாடுகள் தொடர்பில் நிலவும் தற்போதைய சூழ்நிலையில், அவரது மனைவி லிமினி ராஜபக்ச பொதுமக்கள் முன்னிலையில் தோன்றி கட்சியின் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவாரா என்பது அரசியல் வட்டாரங்களில் முக்கிய பேசுபொருளாக மாறியுள்ளது.
</p><p>
குறிப்பாக, அனுராதபுரத்தில் நடைபெறவுள்ள பொதுஜன பெரமுனவின் மக்கள் போராட்டப் பேரணியில் லிமினி ராஜபக்ச பிரதான மேடையில் உரையாற்றுவாரா என்பதுடன், எதிர்வரும் நாட்களில் அவர் தொடர்ச்சியாக செயற்பாட்டு அரசியலில் ஈடுபடுவாரா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
</p><p>
எவ்வாறாயினும், லிமினி ராஜபக்சவின் அரசியல் பிரவேசம் மற்றும் எதிர்வரும் அரசியல் நடவடிக்கைகள் தொடர்பில் பொதுஜன பெரமுனவின் உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியாகிய பின்னரே நிலைமை தெளிவாகும் என அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-06T00:26:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[மணல் திட்டில் சிக்கித் தவித்த 11 இலங்கை ஏதிலிகள் - அதிரடியாக மீட்ட கடற்படையினர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-lanka-navy-rescues-11-people-including-1788652927"></link>
            <id>https://tamilwin.com/article/sri-lanka-navy-rescues-11-people-including-1788652927</id>
            <summary type="text">தலைமன்னார் அருகே உள்ள தொலைதூர மணல் திட்டில் தவித்துக் கொண்டிருந்த 5
குழந்தைகள் உட்பட 11 இலங்கை ஏதிலிகளை கடற்படையினர் சனிக்கிழமை (செப்டம்பர் 5)
மீட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>தலைமன்னார் அருகே உள்ள தொலைதூர மணல் திட்டில் தவித்துக் கொண்டிருந்த 5
குழந்தைகள் உட்பட 11 இலங்கை ஏதிலிகளை கடற்படையினர் சனிக்கிழமை (செப்டம்பர் 5)
மீட்டு மனிதாபிமான உதவி வழங்கியுள்ளனர்.
</p><p>
இந்த நிலையில் ​அதிகாலை வழக்கமான கடல் ரோந்துப் பணியின் போது, முதற்கட்டமாக
நான்கு பெண்கள், ஒரு ஆண் மற்றும் மூன்று குழந்தைகள் அடங்கிய 8 பேர் கொண்ட
குழுவை கடற்படையினர் கண்டறிந்த நிலையில்
அவர்களுக்குத் தேவையான குடிநீர், உணவு மற்றும் தற்காலிக இருப்பிட வசதிகள்
உடனடியாக வழங்கப்பட்டன.

​</p><h2>மனிதக் கடத்தல்</h2><p>அதைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட அடுத்தகட்ட ரோந்துப் பணியில், அதே பகுதியில்
தவித்துக் கொண்டிருந்த ஒரு தந்தை மற்றும் அவரது இரண்டு பிள்ளைகள் என மேலும்
மூவர் மீட்கப்பட்டுள்ளனர்.</p><p>

இதன் மூலம் மீட்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 11 ஆக (5 குழந்தைகள், 4
பெண்கள், 2 ஆண்கள்) உயர்ந்துள்ளது.
​</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/590e093a-fbaa-478d-8106-1576f4836e81/26-6a9cb089b516d.webp' /></p><p>
மேலும் முதற்கட்ட விசாரணையில், இவர்கள் இந்தியாவின் ராமேஸ்வரத்தில் இருந்து
கடல் வழியே பயணம் செய்ததும், சந்தேகத்திற்கிடமான மனிதக் கடத்தல் கும்பலால்
மணல் திட்டில் கைவிடப்பட்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.</p><p>

அத்துடன், இவர்கள் தென்னிந்தியாவில் உள்ள அனயூர் மற்றும் ஒக்கூர் அகதிகள்
முகாம்களில் தங்கியிருந்த இலங்கையர்கள் என நம்பப்படுகிறது.</p><p>

​மீட்கப்பட்ட 11 பேரும் மேலதிக சட்டப்பூர்வ விசாரணைகள் மற்றும்
நடவடிக்கைகளுக்காகத் தலைமன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாக
கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-06T00:22:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பில் அனுமதியற்ற கட்டுமானங்களை அகற்ற அரசாங்கம் நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/illegal-constructions-are-being-demolished-colombo-1788653729"></link>
            <id>https://ibctamil.com/article/illegal-constructions-are-being-demolished-colombo-1788653729</id>
            <summary type="text">கொழும்பு மாவட்டத்தின் கடலோரப் பகுதியில் உள்ள அங்கீகரிக்கப்படாத கட்டுமானங்களை அகற்றும் பணி இந்த மாதம் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.சுற்றுச்சூழல் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு மாவட்டத்தின் கடலோரப் பகுதியில் உள்ள அங்கீகரிக்கப்படாத கட்டுமானங்களை அகற்றும் பணி இந்த மாதம் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>சுற்றுச்சூழல் அமைச்சர் தம்மிக பத்தபெண்டியின் கூற்றுப்படி, இந்த நடவடிக்கை இடம்பெறவுள்ளது.</p><p>காலிமுகத்திடல் முதல் பொல்கொட ஆறு வரையிலான பகுதி ஐந்து மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளதாகவும், இப்பணி அதனை உள்ளடக்கும் என்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் கூறியுள்ளார்.</p><p></p><h2>சட்ட ஆலோசனை</h2><p>இதன்படி இதனை அகற்றும் செயல்முறை குறித்த சட்ட ஆலோசனை சட்டமா அதிபரிடமிருந்து ஏற்கனவே பெறப்பட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d241a0de-f5ec-4dbc-8ded-10e9ead92ef0/26-6a9cb0a3b224e.webp' /></p><p>

கடலோரப் பகுதியில் உள்ள அனைத்து சட்டவிரோதக் கட்டுமானங்களையும் அகற்றி, அப்பகுதியை ஒரு கவர்ச்சிகரமான சுற்றுலாத் தலமாக மேம்படுத்துவதற்கான திட்டங்கள் நடைபெற்று வருவதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள I<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">BC தமிழ் WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-06T00:16:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாளத்தில் 64 வயது பெண் உயிருடன் மீட்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/nepal-mudslide-64-year-old-woman-rescued-1788653734"></link>
            <id>https://news.lankasri.com/article/nepal-mudslide-64-year-old-woman-rescued-1788653734</id>
            <summary type="text">Nepal mudslide 64-year-old woman rescued: நேபாள பேரழிவிலிருந்து மற்றோரு பெண் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.

 64 வயது நேபாள பெண்&amp;nbsp;மீட்புநேபாளத்தின...</summary>
            <content type="html"><![CDATA[<p>Nepal mudslide 64-year-old woman rescued: நேபாள பேரழிவிலிருந்து மற்றோரு பெண் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.
</p><h2>
 64 வயது நேபாள பெண்&nbsp;மீட்பு</h2><p>நேபாளத்தின் Nuwakot மாவட்டத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய மண்சரிவில் சிக்கியிருந்த 64 வயது நேபாள பெண் 10 நாட்கள் கழித்து உயிருடன் மீட்கப்பட்டார்.</p><p>மீட்பு குழுவினர், இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த அந்த பெண்ணை சனிக்கிழமை உயிருடன் வெளியே கொண்டு வந்தனர். ஆரம்ப சிகிச்சைக்குப் பிறகு, அவரை காத்மாண்டுவுக்கு மாற்றி மேலதிக சிகிச்சை அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/be2ee565-7afb-4984-ad11-ed91e1106301/26-6a9cb0a82c65b.webp' /></p><p>சனிக்கிழமையன்று, நேபாள சுரங்கத்தில் சிக்கியிருந்த சீன தொழிலாளி ஒருவரும் உயிருடன் மீட்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
</p><p>
நேபாள பொலிஸ் வெளியிட்ட சமீபத்திய தகவலின்படி, இதுவரை 1,344 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் 4,898 பேர் தொடர்பில் இல்லை என்றும், 8,631 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p>
</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">🇳🇵 Nepal | Woman Alive After 11 Days Under the Rubble<br><br>In a scene that restored hope, Nepal&#39;s Armed Police Force rescued a 68-year-old woman alive from inside a house destroyed by floods in Bhitravati, on the eleventh day of the disaster.<br><br>She was found in a state of severe… <a href="https://t.co/2sdmSnfxLE">pic.twitter.com/2sdmSnfxLE</a></p>&mdash; Siraj Noorani (@sirajnoorani) <a href="https://x.com/sirajnoorani/status/2096197674055995594?ref_src=twsrc%5Etfw">September 5, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>மீட்பு நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. நேபாள இராணுவம், ஆயுத பொலிஸ் படை மற்றும் உள்ளூர் தன்னார்வலர்கள் இணைந்து உயிர் பிழைத்தவர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p>&nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-09-06T00:12:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiva</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆற்றில் நீராட சென்ற இளைஞர்கள் நீரில் மூழ்கி பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/two-youths-drowned-nanu-oya-s-glasso-waterfall-1788652213"></link>
            <id>https://ibctamil.com/article/two-youths-drowned-nanu-oya-s-glasso-waterfall-1788652213</id>
            <summary type="text">நுவரெலியா – நானுஓயா கிளாஸ்கோ நீர்வீழ்ச்சிக்கு அருகே உள்ள ஆற்றில் நீராட சென்ற இரு இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p>நுவரெலியா – நானுஓயா கிளாஸ்கோ நீர்வீழ்ச்சிக்கு அருகே உள்ள ஆற்றில் நீராட சென்ற இரு இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p>இந்த துயரச்சம்பவம் நேற்று(05.09.2026) இடம்பெற்றுள்ளது.</p><p>
</p><p>
நண்பர்களுடன் குறித்த பகுதிக்கு சென்றிருந்ததாகக் கூறப்படும் குறித்த இருவரும் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த சந்தர்ப்பத்திலேயே நீரில் மூழ்கியுள்ளதாக காவல்துறை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p></p><h2>மீட்புப் பணி</h2><p>
சம்பவத்தை தொடர்ந்து அப்பகுதியில் இருந்தவர்கள் மற்றும் மீட்புப் பணியாளர்கள்
மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் பின்னர், இரு இளைஞர்களும் சடலங்களாக
மீட்கப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c0845e2e-6ca7-4693-af24-6ae16297ad6d/26-6a9caab8370ef.webp' /></p><p>உயிரிழந்தவர்கள், 24 வயதுடைய பெருமாள் திவாகர் மற்றும் 23
வயதுடைய அன்பழகன் நிக்சன்

என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.</p><p>

மீட்கப்பட்ட இரு சடலங்களும் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட பொது
வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p>
இதேவேளை, மலையக பகுதிகளில் காணப்படும் நீர்வீழ்ச்சிகள் மற்றும் ஆறுகளில்
மழைக்காலங்களில் நீரின் வேகம் திடீரென அதிகரிக்கக்கூடிய நிலையில், பொதுமக்கள்
மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
</p><p>
குறிப்பாக, நீரின் ஆழம் மற்றும் நீரோட்டத்தின் வேகம் குறித்து அறியாமல் ஆறுகள்
மற்றும் நீர்வீழ்ச்சிகளில் குளிப்பதை தவிர்க்குமாறும் கோரிக்கை
விடுக்கப்பட்டுள்ளது.
</p><p>
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நானுஓயா காவல்துறையினர் முன்னெடுத்து
வருகின்றனர்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-05T23:50:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஐரோப்பிய நிலத்தில் ஏவப்பட்ட முதல் செயற்கைக்கோள் - வரலாறு படைத்த ஜேர்மன் ரொக்கெட்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/german-rocket-makes-first-eu-orbital-launch-1788651477"></link>
            <id>https://news.lankasri.com/article/german-rocket-makes-first-eu-orbital-launch-1788651477</id>
            <summary type="text">German rocket makes first EU orbital launch: முதல் செயற்கைக்கோளை வெற்றிகரமாக ஏவி ஜேர்மனி வரலாறு படைத்துள்ளது.


வரலாறு படைத்த ஜேர்மனி ஜேர்மனியின் த...</summary>
            <content type="html"><![CDATA[<p>German rocket makes first EU orbital launch: முதல் செயற்கைக்கோளை வெற்றிகரமாக ஏவி ஜேர்மனி வரலாறு படைத்துள்ளது.
</p><h2>

வரலாறு படைத்த ஜேர்மனி </h2><p>ஜேர்மனியின் தனியார் விண்வெளி நிறுவனம் Isar Aerospace, தனது Spectrum ரொக்கெட்டை நோர்வேயின் Andoya Spaceport-இல் இருந்து 2026 செப்டம்பர் 5 அன்று வெற்றிகரமாக விண்வெளிக்கு அனுப்பியது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4787aa85-e99f-4e56-8006-da094d9435bf/26-6a9ca7d75c9bd.webp' /></p><p>இது ஐரோப்பிய நிலத்தில் இருந்து நடந்த முதல் orbital launch ஆகும். இதன் மூலம், ஐரோப்பா தனது செயற்கைக்கோள் ஏவுதல் திறனில் புதிய அத்தியாயத்தை தொடங்கியுள்ளது.
</p><p>
இந்த ரொக்கெட், ஐந்து CubeSats மற்றும் ஒரு அறிவியல் பரிசோதனையை எடுத்துச் சென்றது. TU Berlin, University of Maribor, NTNU Norway போன்ற பல்கலைக்கழகங்கள் உருவாக்கிய செயற்கைக்கோள்கள் இதில் அடங்கும். </p><p>European Space Agency-யின் Boost! திட்டத்தின் கீழ் இந்த முயற்சி நடைபெற்றது.
</p><p></p><h2>இரண்டாவது முயற்சி&nbsp;வெற்றி </h2><p>2025-இல் நடந்த முதல் முயற்சி தோல்வியடைந்தது. புறப்பட்ட ஒரு நிமிடத்திற்குள் ரொக்கெட் கட்டுப்பாட்டை இழந்து கடலில் விழுந்தது. ஆனால், Isar Aerospace அந்த பிழைகளை சரிசெய்து, 2026-இல் இரண்டாவது முயற்சியில் வெற்றி பெற்றது.
</p><p>
இந்த வெற்றியால், ஐரோப்பா SpaceX மற்றும் பிற வெளிநாட்டு நிறுவனங்களின் மீது வைத்திருந்த சார்பை குறைக்க முடியும். Isar Aerospace நிறுவனம், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான செயற்கைக்கோள்களை சுற்றுவட்ட பாதைக்கு அனுப்பும் திறனை பெற்றுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6855e1c2-5e40-4e0a-bdbc-e80a719daf7e/26-6a9ca7d818f36.webp' /></p><p>
நிறுவனத்தின் CEO Daniel Metzler கூறியதாவது: “விண்வெளிக்கு அணுகுதல் என்பது தேசிய பாதுகாப்புக்கும், தொழில்துறைக்கும் மிகப்பெரிய சவாலாக உள்ளது. இந்த வெற்றி, ஐரோப்பாவுக்கு தன்னாட்சி வழங்கும்” என்று தெரிவித்தார்.
</p><p>
இந்த முயற்சி, ஐரோப்பிய விண்வெளி துறைக்கு புதிய வாய்ப்புகளைத் திறக்கிறது. பிரித்தானியா, சுவீடன் போன்ற நாடுகளும் விரைவில் தங்கள் சொந்த spaceports-இல் இருந்து செயற்கைக்கோள் ஏவுதலை தொடங்க திட்டமிட்டுள்ளன.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><br>]]></content>
            <updated>2026-09-05T23:34:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[பசிபிக் பெருங்கடலில் மூன்று சக்திவாய்ந்த சூறாவளிகள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/name-of-hurricanes-forming-in-the-pacific-ocean-1788651136"></link>
            <id>https://ibctamil.com/article/name-of-hurricanes-forming-in-the-pacific-ocean-1788651136</id>
            <summary type="text">தற்போது உருவாகிவரும், எல் நினோ காலநிலை மாற்றத்தின் தாக்கத்தால் பசிபிக் பெருங்கடலில் ஒரே நேரத்தில் மூன்று வெப்பமண்டல சூறாவளிகள் உறுவாகியுள்ளமை சர்வதேசத...</summary>
            <content type="html"><![CDATA[<p>தற்போது உருவாகிவரும், எல் நினோ காலநிலை மாற்றத்தின் தாக்கத்தால் பசிபிக் பெருங்கடலில் ஒரே நேரத்தில் மூன்று வெப்பமண்டல சூறாவளிகள் உறுவாகியுள்ளமை சர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது.</p><p>லோவெல் (Lowell), கரினா (Karina) மற்றும் மரி (Marie) என பெயரிடப்பட்ட மூன்று சூறாவளிகளும் தற்போது பசிபிக் பகுதியில் உறுவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>இதன்படி நாசாவின் செயற்கைக்கோள் அவதானிப்புகளும் ஒரே நேரத்தில் மூன்று வெப்பமண்டல சூறாவளிகள் பசிபிக் பகுதியில் காணப்பட்டதை உறுதிப்படுத்தியுள்ளன.</p><p></p><h2>&nbsp;ஹவாய் தீவுகள்</h2><p>இந்த மூன்றில் லோவெல் சூறாவளியே ஹவாய் தீவுகளுக்கு அதிக அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடியதாக கணிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c6897b1e-85f4-4e8c-a148-15c6aab3c5be/26-6a9ca6834718b.webp' /></p><p> </p><p>அதன் பாதை ஹவாயின் மேற்குப் பகுதிகளை நோக்கி திரும்பக்கூடும் என முன்னறிவிப்புகள் தெரிவிக்கின்றன. </p><p>இருப்பினும், சூறாவளி நேரடியாக நிலப்பரப்பைத் தாக்குமா என்பது இன்னும் உறுதியாக தெரியவில்லை.</p><p>லோவெல் சூறாவளி ஒரு கட்டத்தில் மணிக்கு 160 மைல் (சுமார் 257 கி.மீ.) வேகத்திலான காற்றுடன் Category 5 வலிமையை எட்டியதாகவும், பின்னர் அதன் வலிமையில் மாற்றங்கள் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>ஆபத்தான நீரோட்டங்கள்</h2><p> </p><p>ஹவாயில் கடுமையான அலைகளுக்கு எச்சரிக்கை
சூறாவளியின் நேரடி தாக்கம் குறித்த நிச்சயமற்ற நிலை தொடர்ந்தாலும், ஹவாய் தீவுகளில் கடுமையான கடல் அலைகள் மற்றும் ஆபத்தான நீரோட்டங்கள் தொடர்பில் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.</p><p>

சில கடற்கரைகளில் 12 அடி வரை உயரமான அலைகள் உருவாகக்கூடும் என முன்னறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சில பகுதிகளில் அலை உயரம் 14 அடியை எட்டக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>மேலும், கனமழை, திடீர் வெள்ளம், கடல் நீர் உள்வருதல் மற்றும் பலத்த காற்று உள்ளிட்ட அபாயங்கள் குறித்தும் அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-05T23:32:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாமலை காப்பாற்ற சென்று சிக்கலில் மாட்டிய உதய கம்மன்பில! மகனை சந்தித்த பின் தடுமாறிய மகிந்த]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/gammanpila-lands-trouble-trying-to-rescue-namal-1788634276"></link>
            <id>https://tamilwin.com/article/gammanpila-lands-trouble-trying-to-rescue-namal-1788634276</id>
            <summary type="text">ஏர்பஸ் (Airbus) விமான கொள்வனவு தொடர்பான ஊழல் வழக்கில், 8 லட்சம் அமெரிக்க டொலர்கள் நாமல் ராஜபக்சவிற்கு கமிஷன் தொகையாக வழங்கப்பட்டதாகக் குற்றம் சாட்டப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஏர்பஸ் (Airbus) விமான கொள்வனவு தொடர்பான ஊழல் வழக்கில், 8 லட்சம் அமெரிக்க டொலர்கள் நாமல் ராஜபக்சவிற்கு கமிஷன் தொகையாக வழங்கப்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில் அவர் கைது செய்ப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
</p><p>
இந்தநிலையில், நாமல் ராஜபக்சவை பாதுகாப்பதற்காகப் பேசிய உதய கம்மன்பில, அந்தப் பணம் அலுவலக மேசையில் வைக்கப்பட்டதாகக் கூறியது, அவர் மீதுள்ள குற்றச்சாட்டை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. </p><p>8 லட்சம் அமெரிக்க டொலர்கள் நாமல் ராஜபக்சவின் அலுவலகத்திற்குச் சென்றதாகவும், அவர் அங்கு இல்லாதபோது மேசையில் வைக்கப்பட்டதாகவும் உதய கம்மன்பில வெளிப்படையாகக் கூறியது, பணம் நாமல் ராஜபக்சவின் வசம் சென்றதை உறுதிப்படுத்தும் ஆதாரமாக மாறிவிட்டது.</p><p>

இந்த வழக்கில் உதய கம்மன்பிலவின் இந்த கூற்று முக்கியமானதாக பார்க்கப்படுகின்றது.

ஒரு வழக்கறிஞராக உதய கம்மன்பில இவ்வாறான வாக்குமூலங்களை வழங்குவது, நாமல் ராஜபக்சவின் தரப்பு வாதத்தையே பலவீனப்படுத்துவதாக விமர்சிக்கப்படுகிறது.&nbsp; &nbsp; </p><p>மேலும், நாமல் ராஜபக்சவின் கைதுக்கு எதிராக ஊடக சந்திப்புகளை நடத்தி, சட்டவிரோதமான முறையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக விமர்சித்தார்.</p><p>


அத்துடன் ஆதாரங்கள் இல்லாமல் பெயர்களைக் குறிப்பிட்டு கைது செய்யும் தற்போதைய முறையை அவர் கடுமையாகச் சாடியுள்ளார்.
</p><p>

இந்தநிலையில், சிறையில் உள்ள தனது மகனைச் சந்தித்த பிறகு மகிந்த ராஜபக்ச ஊடகவியலாளர்களைச் சந்தித்தபோது, அவர் மிகுந்த மன உளைச்சலுடனும், பதற்றத்துடனும் காணப்பட்டார். </p><p>பேசும்போது அவரது வார்த்தைகள் தடுமாறியதாகவும், சொற்கள் வெளிப்பட சிரமப்பட்டதையும் அவதானிக்க முடிந்தது.
</p><p>
இந்தவிடயங்கள் தொடர்பில் விரிவாக பேசுகின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி..&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/aUuUMhWwpcs" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-05T23:25:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Malaivanjan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நானுஓயா கிளாஸ்சோ நீர்வீழ்ச்சியில் சோகம்! நீரில் மூழ்கி இரு இளைஞர்கள் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/two-youths-drowned-nanu-oya-s-glasso-waterfall-1788649420"></link>
            <id>https://tamilwin.com/article/two-youths-drowned-nanu-oya-s-glasso-waterfall-1788649420</id>
            <summary type="text">நுவரெலியா – நானுஓயா கிளாஸ்சோ நீர்வீழ்ச்சி அமைந்துள்ள பகுதியில் ஆற்றில்
குளிக்கச் சென்ற இரு இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் சடலங்களாக
மீட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நுவரெலியா – நானுஓயா கிளாஸ்சோ நீர்வீழ்ச்சி அமைந்துள்ள பகுதியில் ஆற்றில்
குளிக்கச் சென்ற இரு இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் சடலங்களாக
மீட்கப்பட்டுள்ளனர்.</p><p>

இந்த துயரச் சம்பவம் நானுஓயா கிளாஸ்சோ நீர்வீழ்ச்சி பகுதியில் நேற்று(5) இடம்பெற்றுள்ளது.</p><h2>இரு இளைஞர்கள்</h2><p>
</p><p>
நண்பர்களுடன் குறித்த பகுதிக்கு சென்றிருந்ததாகக் கூறப்படும் இரு இளைஞர்களும்
ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த சந்தர்ப்பத்திலேயே நீரில் மூழ்கியுள்ளதாக
ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
</p><p>
சம்பவத்தை தொடர்ந்து அப்பகுதியில் இருந்தவர்கள் மற்றும் மீட்புப் பணியாளர்கள்
மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் பின்னர், இரு இளைஞர்களும் சடலங்களாக
மீட்கப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2a85d6ea-2d27-476e-9576-8872db878d7c/26-6a9ca1c5023f9.webp' /></p><p>உயிரிழந்தவர்கள், 24 வயதுடைய பெருமாள் திவாகர் மற்றும் 23
வயதுடைய அன்பழகன் நிக்சன்

என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
</p><p>
நீரில் மூழ்கியதற்கான காரணம் மற்றும் சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்களை
கண்டறியும் வகையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p><h2>மேலதிக விசாரணை</h2><p>

மீட்கப்பட்ட இரு சடலங்களும் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட பொது
வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/db1f62a9-65dd-4185-af04-d05eb346ff31/26-6a9ca1c5d2408.webp' /></p><p>
</p><p>
இதேவேளை, மலைநாட்டுப் பகுதிகளில் காணப்படும் நீர்வீழ்ச்சிகள் மற்றும் ஆறுகளில்
மழைக்காலங்களில் நீரின் வேகம் திடீரென அதிகரிக்கக்கூடிய நிலையில், பொதுமக்கள்
மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
</p><p>
குறிப்பாக, நீரின் ஆழம் மற்றும் நீரோட்டத்தின் வேகம் குறித்து அறியாமல் ஆறுகள்
மற்றும் நீர்வீழ்ச்சிகளில் குளிப்பதை தவிர்க்குமாறும் கோரிக்கை
விடுக்கப்பட்டுள்ளது.
</p><p>
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நானுஓயா பொலிஸார் முன்னெடுத்து
வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-05T23:12:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கைக் கடற்பரப்பில் நோர்வே ஆராய்ச்சிக் கப்பல்! கடற்றொழில் அமைச்சர் வெளிப்படை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/norwegian-research-vessel-in-sri-lankan-waters-1788632700"></link>
            <id>https://ibctamil.com/article/norwegian-research-vessel-in-sri-lankan-waters-1788632700</id>
            <summary type="text">அண்மையில் நோர்வே நாட்டுக்கு சொந்தமான ஆராய்ச்சி கப்பல், இலங்கையின் கடல் பிராந்தியத்தில் முக்கிய நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டதாக கடற்றொழில் அமைச்சர் இரா. ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>அண்மையில் நோர்வே நாட்டுக்கு சொந்தமான ஆராய்ச்சி கப்பல், இலங்கையின் கடல் பிராந்தியத்தில் முக்கிய நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டதாக கடற்றொழில் அமைச்சர் இரா. சந்திரசேகர் தெரிவித்தார்.
</p><p>
இந்த ஆராய்ச்சியின் அறிக்கை குறித்து அவரால் வெளிப்படுத்தப்பட்ட கருத்துக்கள், இலங்கையின் கடற்கரையை அண்டிய மக்களுக்கு சவாலாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
</p><p>
இலங்கையில் கரையோரத்தை அண்டிய பெரும்பாலான தொழிலாளர்கள் கடற்றொழிலை தனது ஜீவனோபாயமாக கொண்டுள்ள நிலையில் தற்போது மீன்களின் இருப்பு பாதிப்பு நிலையை அடைந்துள்ளதாக இந்த ஆய்வறிக்கையில் வெளிப்படுத்தப்பட்டதாக அவரால் விளக்கப்படுத்தப்பட்டது.
</p><p>
மேலும் எல் நினோவின் தாக்கமும் எதிர்காலத்தில் இலங்கையின் மீன் வளத்தில் தாக்கத்தை செலுத்தும் காரணியாக மாறக்கூடும் எனவும் கூறப்படுகிறது.
</p><p>
லங்காசிறி ஊடகத்தின் நாட்டு நடப்பு நிகழ்ச்சியின் 300 அத்தியாயத்தில் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு கருத்து வெளியிட்ட கடற்றொழில் அமைச்சர் இரா.சந்திரசேகரின் கருத்துக்கள், இந்த விடயத்தின் பாரதூரங்களை பின்வருமாறு தெளிவுப்படுத்தியிருந்தன...&nbsp;</p><p><iframe width="1337" height="752" src="https://www.youtube.com/embed/VNz7RtIWc54" title="🔴Special LIVE:நாட்டு நடப்பு 300 வது Episode சிறப்பு நேரலை | Naattu Nadappu" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share" referrerpolicy="strict-origin-when-cross-origin" allowfullscreen></iframe></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-05T23:10:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாள வெள்ளம்- 10 நாட்களுக்குப் பின் சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளி உயிருடன் மீட்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/nepal-floods-worker-trapped-tunnel-10-days-rescued-1788648693"></link>
            <id>https://tamilwin.com/article/nepal-floods-worker-trapped-tunnel-10-days-rescued-1788648693</id>
            <summary type="text">நேபாளத்தில் வெள்ளப் பெருக்கு மற்றும் நிலச்சரிவு காரணமாக உயிரிழப்புகள்
அதிகரித்து வரும் நிலையில், மீட்புப் படையினர் தீவிர மீட்புப் பணியில்
ஈடுபட்டு வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நேபாளத்தில் வெள்ளப் பெருக்கு மற்றும் நிலச்சரிவு காரணமாக உயிரிழப்புகள்
அதிகரித்து வரும் நிலையில், மீட்புப் படையினர் தீவிர மீட்புப் பணியில்
ஈடுபட்டு வருகின்றனர்.

​</p><p>இந்த நிலையில் திரிசூலி நீர்மின் திட்ட சுரங்கப்பாதையில் கடந்த 10 நாட்களாகக்
குடிதண்ணீர் கூட இன்றிச் சிக்கியிருந்த 'லுஹைடாவ்' என்ற சீனத் தொழிலாளியை
நேபாள இராணுவமும் தென் கொரிய பேரிடர் மீட்புக் குழுவும் இணைந்து உயிருடன்
மீட்டுள்ளன.

​</p><h2>சிக்கிய தொழிலாளி&nbsp;</h2><p>இதேவேளை நுவாகோட் பகுதியில் இடிந்த வீட்டின் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த
சந்திரிகா ஸ்ரேஸ்தா (64) என்ற நபரும் உயிருடன் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக உலங்குவானூர்தி மூலம் காத்மாண்டுவிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
​</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0ca3c5c8-d593-4474-8bb5-937766bfc2dd/26-6a9c9f0d1af86.webp' /></p><p>அத்துடன் இதேபோல நேற்றைய தினமும் சுரங்கப் பகுதியில் இருந்து இருவர்
பத்திரமாக மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-05T23:00:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹாட் லுக்கில் பிரியங்கா மோகன்.. லேட்டஸ்ட் போட்டோஷூட்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/priyanka-mohan-new-photoshoot-1788648562"></link>
            <id>https://cineulagam.com/article/priyanka-mohan-new-photoshoot-1788648562</id>
            <summary type="text">நடிகை பிரியங்கா மோகன் தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோயின்களில் ஒருவர். ஹோம்லியாக நடித்து தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

 தற்போது ஹாட் உடையில...</summary>
            <content type="html"><![CDATA[<p>நடிகை பிரியங்கா மோகன் தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோயின்களில் ஒருவர். ஹோம்லியாக நடித்து தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

 தற்போது ஹாட் உடையில் எடுத்த போட்டோஷூட் ஸ்டில்களை பிரியங்கா வெளியிட்டு இருக்கிறார்.

அந்த புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இதோ பாருங்க.</p>]]></content>
            <updated>2026-09-05T22:49:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[லட்சுமி பிரியா முதல் பிளாக் பாண்டி வரை.. பிக் பாஸ் 10ல் நுழைந்த போட்டியாளர்கள் முழு லிஸ்ட்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/bigg-boss-10-launch-full-contestants-list-1788648442"></link>
            <id>https://cineulagam.com/article/bigg-boss-10-launch-full-contestants-list-1788648442</id>
            <summary type="text">விஜய் சேதுபதி தொகுத்து வழங்க பிக் பாஸ் 10 சீசன் இன்று மிக பிரம்மாண்டமாக தொடங்கி இருக்கிறது.மொத்தம் 24 போட்டியாளர்கள் என அறிவிக்கப்பட்ட நிலையில், தொடக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>விஜய் சேதுபதி தொகுத்து வழங்க பிக் பாஸ் 10 சீசன் இன்று மிக பிரம்மாண்டமாக தொடங்கி இருக்கிறது.</p><p>மொத்தம் 24 போட்டியாளர்கள் என அறிவிக்கப்பட்ட நிலையில், தொடக்க விழாவில் ஒரு அதிர்ச்சி எல்லோருக்கும் காத்திருந்தது.</p><p>மொத்தம் 35 போட்டியாளர்கள் கொண்டுவரப்பட்டு, மக்கள் வாக்கெடுப்பின் அடிப்படையில் தொடக்க விழா மேடையிலேயே 11 பேரை எலிமினேட் செய்து வீட்டுக்கு அனுப்பியிருக்கின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8facda88-96c2-4f41-b1b1-8c94106e518a/26-6a9cb1744490c.webp' /></p><p>அப்படி பிக் பாஸ் 10ல் நுழைந்த போட்டியாளர்கள் முழுலிஸ்ட் இதோ</p><ul><li>லட்சுமி பிரியா - சீரியல் நடிகை</li><li>
ஷத்திகா - சீரியல் நடிகை
</li><li>ப்ரித்விநாத் - மாடல்
</li><li>ஜாவித் - மாடல்
</li><li>அஸ்மிதா - மேக்கப் ஆர்ட்டிஸ்ட்</li><li>
முத்தழகி - நடிகை
</li><li>அவினாஷ் - சீரியல் நடிகர்</li><li>ராகவ் ரகுநாதன் - சீரியல் நடிகர்</li><li>குமரன் - பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகர்
</li><li>சாந்தினி தமிழரசன் - திரைப்பட நடிகை&nbsp;</li><li>வினோத் பாபு - சீரியல் நடிகர்</li><li>பிளாக் பாண்டி - சினிமா காமெடியன்</li><li>முனியம்மா</li><li>ஜேசன்</li><li>ஷமா</li></ul><h2>

வெளியேற்றப்பட்ட போட்டியாளர்கள்</h2><ul><li>

பிரஷாந்த் - விமர்சகர்
</li><li>அக்ஷிதா - சீரியல் நடிகை</li><li>
கவிதா மோகன் - யோகா மாஸ்டர்
</li><li>ஷப்னம் - சீரியல் நடிகை</li><li>மாளவிகா - மாடல்</li></ul>]]></content>
            <updated>2026-09-05T22:47:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிக் பாஸ் வாய்ப்பை நிராகரித்தது ஏன்.. ஜாய் கிரீஸில்டா விளக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/joy-crizildaa-reveal-why-she-rejected-bigg-boss-10-1788648289"></link>
            <id>https://cineulagam.com/article/joy-crizildaa-reveal-why-she-rejected-bigg-boss-10-1788648289</id>
            <summary type="text">பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரீஸில்டா சமீபத்தில் மாதம்பட்டி ரங்கராஜ் உடனான பிரச்சனையால் அதிகம் வைரல் ஆனவர்.தன்னை கர்ப்பமாக்கி அவர் ஏமாற்றிவிட்டதாக ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரீஸில்டா சமீபத்தில் மாதம்பட்டி ரங்கராஜ் உடனான பிரச்சனையால் அதிகம் வைரல் ஆனவர்.</p><p>தன்னை கர்ப்பமாக்கி அவர் ஏமாற்றிவிட்டதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். டிஎன்ஏ சோதனையில் அவருக்கு பிறந்த குழந்தை மாதம்பட்டி ரங்கராஜுடையது தான் என உறுதியானது.</p><p>அதன் பின் தற்போது அவர்கள் ஒன்று சேர்ந்து இருக்கின்றனர். இந்நிலையில் பிக்பாஸ் 10ல் போட்டியாளராக கலந்துகொள்ள வாய்ப்பு அவரை தேடி வந்ததாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4b5beeab-d1f7-4cbb-920b-a44077afbb12/26-6a9cadc9e2beb.webp' /></p><h2>நிராகரித்தது ஏன்</h2><p>இந்த மிகப்பெரிய வாய்ப்பை நிராகரித்தது ஏன் என தற்போது ஜாய் கிரிஸில்டா விளக்கம் கொடுத்திருக்கிறார்.</p><p>மகன் ராகா Small, அவரை விட்டுவிட்டு பிக்பாஸ் செல்வது எனக்கு சரியாக படவில்லை. அதனால் வாய்ப்பை நிராகரித்துவிட்டேன் என அவர் கூறியுள்ளார்.</p>]]></content>
            <updated>2026-09-05T22:44:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[லாஃப்ஸ் எரிவாயு விலை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/laugfs-gas-prices-1788626069"></link>
            <id>https://tamilwin.com/article/laugfs-gas-prices-1788626069</id>
            <summary type="text">செப்டெம்பர் மாதத்திற்கான லாஃப்ஸ் எரிவாயு விலைகளில் எந்தவித திருத்தமும் மேற்கொள்ளப்படமாட்டாது என லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.

இதன்படி, த...</summary>
            <content type="html"><![CDATA[<p>செப்டெம்பர் மாதத்திற்கான லாஃப்ஸ் எரிவாயு விலைகளில் எந்தவித திருத்தமும் மேற்கொள்ளப்படமாட்டாது என லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.
</p><p>
இதன்படி, தற்போதைய விலைகளிலேயே லாஃப்ஸ் வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர்கள் விற்பனை செய்யப்படும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.</p><h2>லாஃப்ஸ் எரிவாயு விலை</h2><p>

இறுதியாக கடந்த ஜூலை மாதத்திலேயே லாஃப்ஸ் எரிவாயு விலைகள் திருத்தப்பட்டிருந்தன.
</p><p>
அதன்படி, 12.5 கிலோகிராம் எடையுள்ள வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டரின் விலை 1,280 ரூபாவால் குறைக்கப்பட்டு, தற்போது 4,965 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d9a881cf-98ba-47ec-9b1a-65a733d32633/26-6a9c471d93eb3.webp' /></p><p>
</p><p>
அதேவேளை, 5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 512 ரூபாவால் குறைக்கப்பட்டு, தற்போது 1,988 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
</p><p>
எனவே, செப்டெம்பர் மாதத்திலும் குறித்த விலைகளிலேயே லாஃப்ஸ் எரிவாயு சிலிண்டர்கள் விற்பனை செய்யப்படவுள்ளன.</p><p></p><p></p><p>
</p>]]></content>
            <updated>2026-09-05T22:39:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவில் விமானத்தில் அட்டகாசம் செய்த பயணி ; இருக்கையுடன் டேப் போட்டு கட்டி வைத்த சக பயணிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/passenger-causes-a-scene-on-a-flight-in-the-us-1788646117"></link>
            <id>https://canadamirror.com/article/passenger-causes-a-scene-on-a-flight-in-the-us-1788646117</id>
            <summary type="text">அமெரிக்காவில், விமானத்தில் ஒழுங்கீனமாக நடந்துகொண்ட 67 வயதுடைய பயணி ஒருவர் சக பயணிகளால் இருக்கையுடன் டக்ட் டேப் மூலம் கட்டுப்படுத்தப்பட்ட சம்பவம் பரபரப...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவில், விமானத்தில் ஒழுங்கீனமாக நடந்துகொண்ட 67 வயதுடைய பயணி ஒருவர் சக பயணிகளால் இருக்கையுடன் டக்ட் டேப் மூலம் கட்டுப்படுத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
</p><p>
அமெரிக்கன் ஏர்லைன்ஸின் AA618 விமானம் கடந்த வியாழக்கிழமை டெக்சாஸின் டல்லாஸிலிருந்து நியூவர்க்கை நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்தபோது இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d581c9e8-412d-487a-8291-49b088d0017d/26-6a9c92e78ddd5.webp' /></p><p> </p><p>விமானத்தில் ஏற்பட்ட குழப்பத்தைத் தொடர்ந்து, பயணியின் கைகள் ஜிப் டைகளால் கட்டப்பட்டதுடன், அவர் இருக்கையுடன் டக்ட் டேப் மூலம் கட்டுப்படுத்தப்பட்டதாக மேரிலாந்து போக்குவரத்து ஆணைய காவல்துறை தெரிவித்துள்ளது.
</p><p>
அரிசோனாவைச் சேர்ந்த 67 வயதான ஆர்தர் லண்டீன் என்பவரே இவ்வாறு கட்டுப்படுத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். </p><p>சம்பவத்துக்கான முழுமையான காரணங்கள் ஆரம்பத்தில் வெளியிடப்படவில்லை என்றாலும், விமானத்தில் அவரது நடத்தை கடுமையாக இருந்ததாக பயணிகள் தெரிவித்துள்ளனர்.</p><p>

நிலைமை கட்டுக்கடங்கியதைத் தொடர்ந்து விமானம் அதன் பயணப் பாதையை மாற்றி, இரவு சுமார் 10.15 மணியளவில் Baltimore/Washington International Airport (BWI) விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. அங்கு காவல்துறையினர் விமானத்தில் ஏறி அவரை கைது செய்தனர்.
</p><p>
சம்பவம் தொடர்பாக Federal Aviation Administration (FAA) விசாரணை நடத்தி வருவதுடன், FBI-யும் விசாரணையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>பயணியை அகற்றிய பின்னர் விமானம் தனது இறுதி இலக்கான நியூவர்க்கை நோக்கி தொடர்ந்து பயணித்தது.
</p><p>
இந்த சம்பவம் தொடர்பான காணொளிகள் மற்றும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வரும் நிலையில், விமானப் பயணங்களின்போது கட்டுப்பாடற்ற பயணிகளால் ஏற்படும் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் குறித்தும் மீண்டும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-05T22:08:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[டைமண்ட் லீக் இறுதிப் போட்டியிலும் ருமேஷ் தரங்க வெற்றி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/rumesh-tharanga-wins-diamond-league-final-1788644964"></link>
            <id>https://jvpnews.com/article/rumesh-tharanga-wins-diamond-league-final-1788644964</id>
            <summary type="text">பெல்ஜியத்தின் பிரஸ்ஸல்ஸ் நகரில் நடைபெற்ற டைமண்ட் லீக் இறுதிப் போட்டியின் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் இலங்கையின் நட்சத்திர வீரர் ருமேஷ் தரங்க ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>பெல்ஜியத்தின் பிரஸ்ஸல்ஸ் நகரில் நடைபெற்ற டைமண்ட் லீக் இறுதிப் போட்டியின் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் இலங்கையின் நட்சத்திர வீரர் ருமேஷ் தரங்க முதலிடத்தை பெற்றுள்ளார்.</p><p> </p><p></p><p>இதில் அவர் 89.04 மீற்றர் தூரத்திற்கு ஈட்டியை எறிந்து இந்த திறமையை வெளிப்படுத்தினார்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/89e0c778-c110-46e2-9fd1-f87a8d325750/26-6a9c8e669fe89.webp' /></p><p>இப்போட்டியின் இரண்டாம் இடத்தை போலந்தின் டேவிட் வேக்னர் 87.47 மீற்றர் தூரத்திற்கு ஈட்டியை எறிந்து பெற்றுக்கொண்டார்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-05T21:49:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையர்களுக்கு புதிய வெளிநாட்டு வேலைவாய்ப்புகள்! பல நாடுகளில் வாய்ப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/announcement-of-new-overseas-job-opportunities-1788641859"></link>
            <id>https://tamilwin.com/article/announcement-of-new-overseas-job-opportunities-1788641859</id>
            <summary type="text">இலங்கைத் தொழிலாளர்களுக்காக ஜப்பான், தென் கொரியா, இஸ்ரேல் மற்றும் மத்திய
கிழக்கு நாடுகள் உள்ளிட்ட பல நாடுகளில் புதிய வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை
வழங்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கைத் தொழிலாளர்களுக்காக ஜப்பான், தென் கொரியா, இஸ்ரேல் மற்றும் மத்திய
கிழக்கு நாடுகள் உள்ளிட்ட பல நாடுகளில் புதிய வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை
வழங்கும் விசேட திட்டத்தை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவகம் (SLFEA)
அறிமுகப்படுத்தியுள்ளது.
</p><p>
இந்த நிலையில் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் நடைபெற்ற ஊடக
சந்திப்பில் பேசிய நிறுவகத்தின் தலைவர் லால் ஹெட்டியாராச்சி,</p><h2>இலங்கைத் தொழிலாளர்கள்</h2><p> கட்டுமானத் துறை,
திறன் மற்றும் தொழில்நுட்பத் துறைகள், சுகாதாரம், தகவல் தொழில்நுட்பம் (IT),
பொறியியல், போக்குவரத்து, விவசாயம், ஆடை உற்பத்தி மற்றும் பிற துறைகளுக்கான
ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் ஏற்கனவே தொடங்கிவிட்டதாகத் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4b20fd3b-3de9-4667-aab4-8d1c12938536/26-6a9c868012b37.webp' /></p><p>அத்துடன் திறன் வாய்ந்த, ஓரளவு திறன் வாய்ந்த மற்றும் தொழில்முறைத்
தொழிலாளர்கள் அனைவரும் இந்த வாய்ப்புகளுக்கு ஒப்பீட்டளவில் குறைந்த
கட்டணத்தில் விண்ணப்பிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
குறிப்பாக, பாடசாலைக் கல்வியை முடித்தவர்கள் தேவையான ஜப்பானிய மொழித் திறனைக்
கொண்டிருந்தால், ஜப்பானில் உள்ள லொரி ஓட்டுநர் பணிகளுக்கு விண்ணப்பிக்கத்
தகுதி பெறுவார்கள் என்றும் தலைவர் குறிப்பிட்டார்.</p><h2>வெளிநாட்டு வேலைவாய்ப்புகள்</h2><p>

இதேவேளை சர்வதேச தொழிலாளர் சந்தையில் இலங்கையின் இருப்பை வலுப்படுத்துவதும்,
திறமையான தொழிலாளர்களுக்குச் சிறந்த வாய்ப்புகளைப் பெற்றுத் தருவதுமே இதன்
பிரதான நோக்கமாகும் என்றும் அவர் இதன்போது தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7fa819e1-2589-4ba7-af55-a04377e50d58/26-6a9c8680c368f.webp' /></p><p>
</p><p>
மேலும், வெளிநாடு செல்லும் தொழிலாளர்கள் சந்தை விலையை விடக் குறைந்த
கட்டணத்தில் விமான டிக்கெட்டுகளைப் பெறுவதற்காக, முகமையின் சார்பில் விசேட
விமான டிக்கெட் விற்பனை மையம் ஒன்றும் நிறுவப்பட்டுள்ளது.
</p><p>
இதற்கமைய இவ்வாய்ப்புகளைப் பெற விரும்புவோர் மேலதிக தகவல்களைப் பெறவும்
நேரடியாக விண்ணப்பிக்கவும் நிறுவகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான
www.slfea.lk-ஐப் பயன்படுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-05T21:45:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறைக்குள் கலவரம் உருவாக்கப்பட்டு நாமல் கொல்லப்படலாம்..! குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு சென்றுள்ள விடயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/threat-to-namal-s-life-complaint-filed-with-cid-1788609275"></link>
            <id>https://tamilwin.com/article/threat-to-namal-s-life-complaint-filed-with-cid-1788609275</id>
            <summary type="text">சிறைக்குள் திட்டமிட்டு கலவரம் உருவாக்கப்பட்டு நாமல் ராஜபக்ச கொல்லப்படலாமென தெரிவித்து முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. 

இது தொடர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிறைக்குள் திட்டமிட்டு கலவரம் உருவாக்கப்பட்டு நாமல் ராஜபக்ச கொல்லப்படலாமென தெரிவித்து முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. </p><p>

இது தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் செயற்பாட்டாளர் பசன் கஸ்தூரி இன்று (05.09.2026) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. </p><p>

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்‌சவின் உயிருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக குறித்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.</p><h2>சமூக வலைத்தள பிரச்சாரம்</h2><p>

சிறைச்சாலைக்குள் திட்டமிட்டுச் சலசலப்பை அல்லது கலவரத்தை உருவாக்கி நாமல் ராஜபக்‌சவைக் கொலை செய்வதற்கும், எதிர்வரும் வியாழக்கிழமை நடைபெறவுள்ள கூட்டத்தில் பங்கேற்கும் ஆதரவாளர்களை அச்சுறுத்துவதற்கும் சமூக வலைத்தளங்கள் வாயிலாகச் சில அரசியல் அமைப்புகளின் உறுப்பினர்கள் பிரசாரம் செய்து வருவதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b5c62d8d-cb52-40e5-a835-9ef6d160b101/26-6a9c07978477b.webp' /></p><p> </p><p>

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அதுகோரல படுகொலை செய்யப்பட முன்னரும் இவ்வாறானதொரு பின்னணியே நிலவியதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை</h2><p>
</p><p>
மேலும் இச்சம்பவத்தை தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
</p><p>
மேலும், இந்த சதித்திட்டம் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் உடனடி விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-05T21:44:09+00:00</updated>
        </entry>
    </feed>
