<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-08-05T13:39:01+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாளைய தினத்திலிருந்து காற்று மழை தீவிரம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/wind-and-rain-to-intensify-from-tomorrow-1785935018"></link>
            <id>https://jvpnews.com/article/wind-and-rain-to-intensify-from-tomorrow-1785935018</id>
            <summary type="text">நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் தற்போது காணப்படும் மழை மற்றும் காற்று நிலைமை நாளைய தினத்திலிருந்து எதிர்வரும் சில நாட்களுக்கு அதிகரிக்கும் என எதிர்பா...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் தற்போது காணப்படும் மழை மற்றும் காற்று நிலைமை நாளைய தினத்திலிருந்து எதிர்வரும் சில நாட்களுக்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. </p><p>

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7e19cf93-97e9-46b7-9dc1-4e29cf232eef/26-6a7334ab745e8.webp' /></p><p> </p><p>

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா மற்றும் காலி மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும். </p><p>

அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் மொனராகலை மாவட்டங்களில் பிற்பகல் 2.00 மணிக்குக்குப் பிறகு ஒருசில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.</p><p></p><p> 

வடமத்திய, சப்ரகமுவ, தென், மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 40-50 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். </p><p>

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களைக் குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-05T13:32:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[34 ஆண்டுகள் அயராத அர்ப்பணிப்பு; ஓய்வு பெறும் யாழ்ப்பாண சிரேஷ்ட மருத்துவர் ஸ்ரீஸ்கந்தராஜா!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/jaffna-hospital-senior-dr-sriskandarajah-retires-1785922577"></link>
            <id>https://jvpnews.com/article/jaffna-hospital-senior-dr-sriskandarajah-retires-1785922577</id>
            <summary type="text">&amp;nbsp; 34 ஆண்டுகள் மக்காளுக்கு மருத்துவ பணியாற்றிய யாழ்ப்பாண சிரேஷ்ட மருத்துவர் ஸ்ரீஸ்கந்தராஜா இன்று ஓய்வு பெறுகின்றார்.

இன்னிலையில் ஓய்வு பெற்று ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; 34 ஆண்டுகள் மக்காளுக்கு மருத்துவ பணியாற்றிய யாழ்ப்பாண சிரேஷ்ட மருத்துவர் ஸ்ரீஸ்கந்தராஜா இன்று ஓய்வு பெறுகின்றார்.

இன்னிலையில் ஓய்வு பெற்று செல்லும் மருத்துவர் ஸ்ரீஸ்கந்தராஜா தொடர்பில் , யாழ் போதனா வைத்தியசாலை பணைப்பாளர், மருத்துவர் தங்கமுத்து சத்தியமூர்த்தி முகநூலில் பதிவிட்டுள்ளதாவது,</p><h2>34 ஆண்டுகள் அர்ப்பணிப்பின் அடையாளம் டாக்டர் ஸ்ரீஸ்கந்தராஜா</h2><p> </p><p>

யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை என்பது வடக்கு மக்களின் நம்பிக்கையின் சின்னம் மட்டுமல்ல; எண்ணற்ற உயிர்களைக் காப்பாற்றிய மனிதநேயத்தின் ஆலயமாகவும் திகழ்கிறது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/53d510cc-3ee2-42aa-b997-ee0d7857f9e0/26-6a730414cc5d0.webp' /></p><p>குறிப்பாக யுத்தம் நிலவிய காலங்களில், குண்டுவெடிப்புகள், இடம்பெயர்வுகள், மருந்து மற்றும் உபகரணப் பற்றாக்குறைகள், மின்சாரத் தட்டுப்பாடுகள் போன்ற எண்ணற்ற சவால்களுக்கு மத்தியில் கூட, இந்த வைத்தியசாலை தனது சேவையை ஒருபோதும் நிறுத்தவில்லை.</p><p></p><p> </p><p>அந்த மகத்தான சேவையின் பின்னணியில், தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் கடமையாற்றிய மருத்துவர்கள், தாதியர்கள், துணை மருத்துவப் பணியாளர்கள் மற்றும் அனைத்து ஊழியர்களின் அர்ப்பணிப்பே இருந்தது.</p><p>உண்மையில், இவ்வாறான ஒவ்வொரு சேவையாளரும் சமூகத்தின் பாராட்டுக்கும் நன்றிக்கும் உரியவர்களே.
அவ்வாறான அர்ப்பணிப்புமிக்க சேவையாளர்களில் ஒருவர் தான் டாக்டர் ஸ்ரீஸ்கந்தராஜா அவர்கள்.
யாழ்ப்பாணத்தின் புகழ்பெற்ற மகாஜனக் கல்லூரியின் பழைய மாணவரான அவர், கடந்த 34 ஆண்டுகளாக யாழ்ப்பாணத்தில் சிரேஷ்ட மருத்துவ அதிகாரியாகப் பணியாற்றி, அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெறுகின்றார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/813b6323-6590-4cf8-8077-b0bf07bacd00/26-6a730414202a5.webp' /></p><p>
தனது பணிக்காலம் முழுவதும், குறிப்பாக யுத்தம் நிலவிய காலங்களிலும் அதன் பின்னரும், சத்திர சிகிச்சைக் கூடத்தில் சிரேஷ்ட மருத்துவ அதிகாரியாகவும், மயக்கமருந்தியல் பிரிவிலும் மிகுந்த பொறுப்புணர்வுடனும் அர்ப்பணிப்புடனும் சேவையாற்றினார். </p><p>
உயிருக்கும் மரணத்துக்கும் இடையில் போராடிய ஆயிரக்கணக்கான நோயாளிகளின் சிகிச்சையில் அவரது பங்களிப்பு அளப்பரியது.
அதுமட்டுமல்லாமல், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்கள் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் மருத்துவப் பயிற்சி பெற்ற காலங்களில், அவர்களில் பலருக்கு வழிகாட்டியாகவும், மருத்துவமனை நடைமுறைகள், ஒழுக்கம் மற்றும் தொழில்முறைப் பண்புகளை பொறுமையுடனும் அன்புடனும் கற்பித்த சிறந்த மூத்த மருத்துவ அதிகாரியாகவும் திகழ்ந்தார்.</p><p></p><p>இன்று நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வெளிநாடுகளிலும் சேவையாற்றும் பல வைத்தியர்களின் நினைவில் அவர் ஒரு சிறந்த ஆசிரியராகவும் வழிகாட்டியாகவும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1d6f0775-095e-41fc-942d-2b55648bb3d3/26-6a73041364f76.webp' /></p><p>
</p><p>இன்று நடைபெற்ற அவரது ஓய்வுபெறும் பாராட்டு விழாவில், அவருடன் பணியாற்றிய வைத்தியர்கள், தாதியர்கள், சுகாதார ஊழியர்கள் மற்றும் பலரும் அவரது தொழில்முறைத் திறமை, அமைதியான குணம், அன்பான அணுகுமுறை, மனிதநேயம் மற்றும் பொறுப்புணர்வை நெகிழ்ச்சியுடன் நினைவுகூர்ந்து பாராட்டினர்.
அவருடைய பாடசாலை நண்பர்கள் அவரை அன்புடன் "குட்டி" என்று அழைப்பார்கள். </p><p> செல்லப்பெயரிலேயே அவரது எளிமை, நட்புணர்வு மற்றும் பாசம் பிரதிபலிக்கின்றன.
அதேபோல், யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் அவருடன் கடமையாற்றிய பல மருத்துவர்கள் அவரை அன்போடும் மரியாதையோடும் "ஸ்ரீ அண்ணன்" என்று அழைப்பது, அவர் அனைவரிடமும் ஏற்படுத்திய நம்பிக்கை, பாசம் மற்றும் சகோதரத்துவ உறவிற்கு ஒரு சிறந்த சான்றாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/daf37792-6a02-4f52-8d65-c4ed80cca8c1/26-6a73041582106.webp' /></p><p> </p><p>பதவியால் மட்டுமல்ல, தனது பணிவு, வழிகாட்டுதல் மற்றும் அன்பான அணுகுமுறையால் இளைய மருத்துவர்களின் மனதில் என்றும் நிலைத்திருக்கும் ஒரு மூத்த சகோதரராகவே அவர் விளங்கினார்.
உண்மையில், யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் பெருமை அதன் கட்டிடங்களிலோ அல்லது மருத்துவ உபகரணங்களிலோ மட்டுமல்ல; அதன் ஒவ்வொரு சேவையாளரின் அர்ப்பணிப்பிலும் இருக்கிறது. </p><p>இவ்வாறான அமைதியாகவும் ஆரவாரமின்றியும் கடமையாற்றிய மருத்துவ அதிகாரிகளே ஒரு நிறுவனத்தின் உண்மையான பலம். அவர்கள் உருவாக்கிய சேவை மரபும் மனிதநேயமும் எதிர்கால தலைமுறைகளுக்கு என்றும் வழிகாட்டும் ஒளியாக இருக்கும்.</p><p></p><p>அன்பிற்குரிய டாக்டர் ஸ்ரீஸ்கந்தராஜா !
தங்களின் 34 ஆண்டுகால அர்ப்பணிப்பான சேவைக்கு வடக்கு மக்களின் சார்பிலும், யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக் குடும்பத்தின் சார்பிலும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
</p><p>தங்களுக்கு நல்ல ஆரோக்கியம், நீண்ட ஆயுள், குடும்ப மகிழ்ச்சி, மனநிறைவு மற்றும் இறைவனின் அருள் என்றும் கிட்ட வாழ்த்துகிறோம்.
"ஒரு நல்ல மருத்துவர் நோயாளிகளை மட்டும் குணப்படுத்துவதில்லை; மனிதர்களின் இதயங்களையும் வென்று விடுகிறார். </p><p>அந்த அரிய பெருமைக்குரியவர் டாக்டர் ஸ்ரீஸ்கந்தராஜா அவர்கள் என , யாழ் போதனா வைத்தியசாலை பணைப்பாளர், மருத்துவர் தங்கமுத்து சத்தியமூர்த்தி பதிவிட்டுள்ளார்.</p>]]></content>
            <updated>2026-08-05T13:30:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மாகாண சபைகளின் கீழுள்ள பாடசாலைகளை கல்வியமைச்சு சுவீகரிக்க சட்டமில்லை : கிடைத்தது வெற்றி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/provincial-councils-schools-issue-1785935617"></link>
            <id>https://ibctamil.com/article/provincial-councils-schools-issue-1785935617</id>
            <summary type="text">மாகாணசபைகளின் அதிகார வரம்புக்குட்பட்ட பாடசாலைகளைத் &#039;தேசிய பாடசாலைகள் என்ற
பெயரில் மத்திய கல்வி அமைச்சு சுவீகரிப்பதற்குச் சட்ட ரீதியான ஏற்பாடுகள்
எது...</summary>
            <content type="html"><![CDATA[<p>மாகாணசபைகளின் அதிகார வரம்புக்குட்பட்ட பாடசாலைகளைத் 'தேசிய பாடசாலைகள் என்ற
பெயரில் மத்திய கல்வி அமைச்சு சுவீகரிப்பதற்குச் சட்ட ரீதியான ஏற்பாடுகள்
எதுவும் இல்லை என சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான பிரதி சொலிசிட்டர்
ஜெனரல் மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டுள்ளார்.</p><p>அரசியல் யாப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தின் பிரகாரம் கல்வி என்பது மாகாண
சபைகளுக்கு ஒதுக்கப்பட்ட விடயமாகும். எனினும், யுத்தகாலத்தில் மத்திய கல்வி
அமைச்சு அரசியல் யாப்புக்கு முரணாக நாடு முழுவதிலும் ஏறத்தாழ 350
பாடசாலைகளையும் (வடக்கில் 20 பாடசாலைகள்) நிர்வாக வழிகளினூடாகத் தேசிய
பாடசாலைகளாகத் தன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்திருந்தது.
</p><p>
</p><h2>டலஸ் அழகப்பெருமவின் ஆயிரம் தேசிய பாடசாலைகள் திட்டம்</h2><p>அன்றைய கல்வி அமைச்சர் டளஸ் அழகப்பெரும மேலும் 650 பாடசாலைகளைச் சேர்த்து
'ஆயிரம் தேசிய பாடசாலைகள் திட்டத்தை அறிவித்தார். ஜி.எல்.பீரிஸ், தினேஷ்
குணவர்த்தன ஆகியோரும் இதனைத் தீவிரமாக முன்னெடுத்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dcdfa1fa-caec-41d3-be99-45eb34839ace/26-6a733930832a2.webp' /></p><p>
</p><p>
மாகாண அதிகாரங்களைப் பறிக்கும் இந்தச் சட்டவிரோத நடவடிக்கைக்கு எதிராக
கலாநிதி க. சர்வேஸ்வரன் 2022 மே மாதத்தில் மேல் முறையீட்டு நீதிமன்றத்தில்
வழக்குத் தாக்கல் செய்தார்.</p><h2>கல்வியமைச்சின் உத்தரவு</h2><p> </p><p>வழக்கின் தொடர்ச்சியாக, 18.08.2023 மற்றும்
20.02.2024 திகதியிடப்பட்ட சுற்றறிக்கைகள் மூலம், புதிதாகத் தேசிய பாடசாலைகளாக
அறிவிக்கப்பட்ட பாடசாலைகளின் பெயர்ப்பலகைகளை அகற்றுமாறும், அதிபர்கள் தேசிய
பாடசாலை முத்திரையைப் பயன்படுத்தக்கூடாது என்றும் மத்திய கல்வி அமைச்சு
உத்தரவிட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/eeaaa332-2b66-46de-8471-fb813258fc86/26-6a73392ef334c.webp' /></p><p>
</p><p>
2025 மே 23 அன்று மன்றில் முன்னிலையான பிரதி சொலிசிட்டர் ஜெனரல், "குறிப்பிட்ட
அமைச்சரவைத் தீர்மானத்தை நடைமுறைப்படுத்த தற்போது சட்டம் இல்லை” எனச் சட்டமா
அதிபர் தெரிவித்துள்ளதாக ஒப்புக்கொண்டார்.
</p><p>
</p><h2>சர்வேஸ்வரனால் தாக்கல் செய்யப்பட்ட சட்டப் போராட்டம் வெற்றி&nbsp;</h2><p>ஏற்கனவே சுவீகரிக்கப்பட்ட பாடசாலைகள் தவிர வேறு எதனையும் சுவீகரிக்கும்
உத்தேசம் மத்திய அரசுக்கு இல்லை என்ற எழுத்துமூல உறுதிப்பாட்டையும் சட்டமா
அதிபர் நீதிமன்றத்துக்குச் சமர்ப்பித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9a1064a5-cc93-41e6-8029-27af7ac38dcb/26-6a73392fcf84b.webp' /></p><p> </p><p>அதற்கமைய வடக்கு மாகாண முன்னாள்
கல்வி அமைச்சர் கலாநிதி கந்தையா சர்வேஸ்வரனால் தாக்கல் செய்யப்பட்ட சட்டப்
போராட்டம் வெற்றி பெற்று முடிவுக்கு வந்ததுடன் நாடு தழுவியரீதியில்
கையகப்படுத்தப்படவிருந்த 650 பாடசாலைகளும் (வடக்கில் 48 பாடசாலைகள்) மத்திய
அரசால் பறிக்கப்படாமல் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன.&nbsp; &nbsp; &nbsp;</p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-05T13:30:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாடசாலைகள் சுவீகரிப்பு தொடர்பில் மாகாண சபைகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/school-acquisition-1785936476"></link>
            <id>https://tamilwin.com/article/school-acquisition-1785936476</id>
            <summary type="text">மாகாண சபைகளின் அதிகார வரம்புக்குட்பட்ட பாடசாலைகளை “தேசிய பாட சாலைகள்” என்ற
பெயரில் மத்திய கல்வி அமைச்சு சுவீகரிப்பதற்குச் சட்ட ரீதியான ஏற்பாடுகள் எது...</summary>
            <content type="html"><![CDATA[<p>மாகாண சபைகளின் அதிகார வரம்புக்குட்பட்ட பாடசாலைகளை “தேசிய பாட சாலைகள்” என்ற
பெயரில் மத்திய கல்வி அமைச்சு சுவீகரிப்பதற்குச் சட்ட ரீதியான ஏற்பாடுகள் எதுவும் இடம்பெறவில்லை என சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டுள்ளார்.
</p><p>
அரசியல் யாப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தின் படி, கல்வி என்பது மாகாண
சபைகளுக்கு ஒதுக்கப்பட்ட விடயமாகும். எனினும், யுத்தகாலத்தில் மத்திய கல்வி
அமைச்சு அரசியல் யாப்புக்கு முரணாக நாடு முழுவதிலும் ஏறத்தாழ 350
பாடசாலைகளையும் (வடக்கில் 20 பாடசாலைகள்) நிர்வாக வழிகளினூடாகத் தேசிய
பாடசாலைகளாகத் தன் கட்டுப் பாட்டின் கீழ் கொண்டு வந்திருந்தது.</p><p>

அன்றைய கல்வி அமைச்சர் டளஸ் அழகப்பெருமா சுமாராக 650 பாடசாலைகளைச் சேர்த்து
1000 தேசிய பாடசாலைகள் திட்டத்தை அறிவித்தார். 

இந்த திட்டத்தை ஜி.எல்.பீரிஸ், தினேஷ் குணவர்த்தன ஆகியோரும் தீவிரமாக முன்னெடுத்தனர்.
</p><h2>
மேல் முறையீட்டு நீதிமன்றில் வழக்கு தாக்கல்</h2><p>
மாகாண அதிகாரங்களைப் பறிக்கும் இந்தச் சட்டவிரோத நடவடிக்கைக்கு எதிராகக்
க. சர்வேஸ்வரன் 2022 மே மாதத்தில் மேல் முறையீட்டு நீதிமன்றத்தில்
வழக்குத் தாக்கல் செய்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5e7b7d8a-5adf-4bd0-84f9-ace2fede15cd/26-6a733ac686342.webp' /></p><p> 

இதனைத் தொடர்ந்து, வழக்கின் தொடர்ச்சியாக கடந்த 18.08.2023 மற்றும்
20.02.2024 திகதியிடப்பட்ட சுற்றறிக்கைகள் மூலம், புதிதாகத் தேசிய பாடசாலைகளாக
அறிவிக்கப்பட்ட பாடசாலைகளின் பெயர்ப்பலகைகளை அகற்றுமாறும், அதிபர்கள் தேசிய
பாடசாலை முத்திரையைப் பயன்படுத்தக்கூடாது என்றும் மத்திய கல்வி அமைச்சு
உத்தரவிட்டது.</p><h2>

தடுத்து நிறுத்தப்பட்ட 650 பாடசாலைகளிள் சுவீகரிப்பு</h2><p>
2025 மே 23 அன்று நீதிமன்றத்தில் முன்னிலையான பிரதி சொலி சிட்டர் ஜெனரல், 

"குறிப்பிட்ட அமைச்சரவைத் தீர்மானத்தை நடைமுறைப்படுத்தத் தற்போது சட்டம் இல்லை” எனச் சட்டமா
அதிபர் தெரிவித்துள்ளதாக ஒப்புக்கொண்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/13a15261-4e90-410d-870d-a2e03e02a68e/26-6a733ac754349.webp' /></p><p>
</p><p>
ஏற்கனவே சுவீகரிக்கப்பட்ட பாடசாலைகள் தவிர வேறு எதனையும் சுவீகரிக்கும்
உத்தேசம் மத்திய அரசுக்கு இல்லை என்ற எழுத்து மூல உறுதிப்பாட்டையும் சட்டமா
அதிபர் நீதி மன்றத்துக்குச் சமர்ப்பித்தார். </p><p>

இதற்கமைய, வடக்கு மாகாண முன்னாள்
கல்வி அமைச்சர் கந்தையா சர்வேஸ்வரனால் தாக்கல் செய்யப்பட்ட சட்டப்
போராட்டம் வெற்றி பெற்று முடிவுக்கு வந்துள்ளதுடன், நாடு தழுவிய ரீதியில்
கையகப்படுத்தப்படவிருந்த 650 பாடசாலைகளும் (வடக்கில் 48 பாடசாலைகள்) மத்திய
அரசால் பறிக்கப்படாமல் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-05T13:29:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[15 நாட்கள் கடலில் உணவு மற்றும் தண்ணீரின்றி 17 அகதிகள் உயிரிழந்த அவலம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/17-refugees-ship-sea-15-days-without-food-spain-1785932411"></link>
            <id>https://canadamirror.com/article/17-refugees-ship-sea-15-days-without-food-spain-1785932411</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;வட ஆப்பிரிக்காவில் இருந்து ஸ்பெயினின் பாலேரிக் தீவுகளுக்கு சென்றுகொண்டிருந்த படகு நடுவழியில் பழுதானதில் அதிலிருந்த 17 அகதிகள் 15 நாட்கள் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;வட ஆப்பிரிக்காவில் இருந்து ஸ்பெயினின் பாலேரிக் தீவுகளுக்கு சென்றுகொண்டிருந்த படகு நடுவழியில் பழுதானதில் அதிலிருந்த 17 அகதிகள் 15 நாட்கள் கடலில் உணவு மற்றும் தண்ணீரின்றி தத்தளித்து உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. </p><p>

ஸ்பெயின் செய்தி நிறுவனம் நேற்று (04) வெளியிட்டுள்ள செய்தியில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஸ்பெயினின் மல்லோர்கா தீவுக்கு தென்மேற்கே 12.7 நாட்டிக்கல் மைல் தொலைவில் நீர்ச்சத்து மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டால் படகு ஒன்றில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த இருவரை ஸ்பெயின் கடற்படை மீட்டு வைத்தியசாலையில் சேர்த்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9335bca7-9965-4efc-bde5-08ccac2a5ecf/26-6a732a7d11956.webp' /></p><h2>ஹெலிகாப்டர் மூலம்&nbsp; தீவிர தேடுதல்&nbsp;</h2><p> </p><p>

தாங்கள் பயணித்த படகில் மொத்தம் 19 பேர் இருந்ததாகவும், இன்ஜின் பழுதாகி 15 நாட்களாகக் கடலில் தத்தளித்ததால் உணவு மற்றும் தண்ணீரின்றி மற்ற 17 பேரும் இறந்துவிட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர். 

மீட்புக் குழுவினர் ஹெலிகாப்டர் மூலம் அப்பகுதியில் தீவிர தேடுதல் நடத்தி வருகின்றனர்.</p><p> 

இந்நிலையில் ஸ்பெயினின் இபிஸா தீவுக்கு தென்மேற்கே 30 நாட்டிக்கல் மைல் தொலைவில் 15 வட ஆப்பிரிக்க அகதிகளுடன் வந்த மற்றொரு படகை மீட்புக் குழுவினர் மீட்டனர். 

இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 3,935 அகதிகளுடன் 211 படகுகள்ஸ் பெயினின் பாலேரிக் தீவுகளுக்கு வந்துள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவிக்கிறது.</p><p> 

ஸ்பெயின் நாட்டின் கட்டுப்பாட்டில் உள்ள ஆப்பிரிக்க எல்லைப் பகுதியான செவுடாவில் அகதிகள் நெருக்கடி தீவிரமடைந்துள்ளது. 

கடந்த வாரம் மொராக்கோவில் இருந்து சுமார் 72,000 அகதிகள் செவுடாவிற்குள் நுழைந்தனர்.</p><p> 

இதில் இதுவரை 70,000 பேர் செவுடாவிலிருந்து வெளியேறியுள்ள நிலையில், எல்லையைக் கடக்கும் முயற்சியில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 75 ஆக உயர்ந்துள்ளது. 

மனித கடத்தல் கும்பல்களின் சட்டவிரோத நடவடிக்கைகளே இந்த மனித உரிமை நெருக்கடிக்குக் காரணம் என ஸ்பெயின் அரசு குற்றம்சாட்டியுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-05T13:29:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[டுபாயில் 20 நிமிடங்களில் 7 இடங்களில் சக்திவாய்ந்த தாக்குதல் ; அதிரும் மத்திய கிழக்கு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/7-blast-within-20-minutes-in-dubai-1785935592"></link>
            <id>https://canadamirror.com/article/7-blast-within-20-minutes-in-dubai-1785935592</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;டுபாயின் ஜெபல் அலி துறைமுகப் பகுதியில் 20 நிமிடங்களில் 7 இடங்களில் சக்திவாய்ந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக சர்வதேச தகவ்ல்கள் தெரிவிக்கி...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;டுபாயின் ஜெபல் அலி துறைமுகப் பகுதியில் 20 நிமிடங்களில் 7 இடங்களில் சக்திவாய்ந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக சர்வதேச தகவ்ல்கள் தெரிவிக்கின்றன. 


தாக்கப்பட்ட இடங்களில் இருந்து விண்ணை முட்டும் அளவுக்கு கரும்புகை வெளியேறியது. </p><p>20 நிமிட இடைவேளையில் 7 முறை வெடிச்சத்தம் கேட்டதாக ஐக்கிய அரபு அமீரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால், இந்த வெடிச்சம்பவம் குறித்தோ, இதனால் ஏற்பட்ட பாதிப்புகள் பற்றியோ அதிகாரிகள் எந்தத் தகவலும் அளிக்கவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/18b20023-a580-4cd1-8c51-ebab27ab7a6e/26-6a7336e9cb165.webp' /></p><p>
</p><p>
அமெரிக்காவுக்கு உதவும் வளைகுடா நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகின்றது. ஈரான் சார்பில் அதன் கூட்டாளி அமைப்பான ஏமன் ஹவுதி அமைப்பினருக்கும், வளைகுடா நாடுகள் மீது தாக்குதல் நடத்துகின்றனர்.
</p><p>

இந் நிலையில் டுபாய் துறைமுகமான ஜெபல் அலி மற்றும் தொழில் மண்டலப் பகுதியில் இன்று அடுத்தடுத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.


ஏமனிலிருந்து ஏவப்பட்ட ஏவுகணைத் தாக்குதல் தான் இதற்கு காரணம் என்று ஈராக் ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன.</p><p> 

இருப்பினும், ஐக்கிய அரபு அமீரக அதிகாரிகள் எந்த உத்தியோகபூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை. அதேபோல, ஏமனின் தலைநகரான சனாவிலும் குண்டுவெடிப்புகள் நிகழ்ந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
</p><p>


அதேவேளை இந்த தாக்குதலில் , துறைமுகத்திற்கு அருகில் உள்ள எரிபொருள் சேமிப்பு மற்றும் விநியோகக் கிடங்கு ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டதை நாசாவின் போட்டோக்கள் காட்டுவதாக ஈரானின் மெஹ்ர் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-05T13:29:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ashik</name>
            </author>
            <title type="text"><![CDATA[மன்னாரில் அறிவிக்கப்படாத தொடர் மின்வெட்டு.. மின்சக்தி அமைச்சருக்கு பறந்த அவசர கடிதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/continuous-power-cuts-mannar-letter-to-minister-1785935589"></link>
            <id>https://tamilwin.com/article/continuous-power-cuts-mannar-letter-to-minister-1785935589</id>
            <summary type="text">மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு
வரும்&amp;nbsp;மின்வெட்டு தொடர்பில் மின்சக்தி அமைச்சர் அனுர கருணாத்திலக்கவுக்கு மன்னார் மாவட்ட பொது ...</summary>
            <content type="html"><![CDATA[<p>மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு
வரும்&nbsp;மின்வெட்டு தொடர்பில் மின்சக்தி அமைச்சர் அனுர கருணாத்திலக்கவுக்கு மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர்
வி.எஸ்.சிவகரன் அவசர கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். </p><p>குறித்த கடிதத்தில், "மன்னார் மாவட்டத்தில் அறிவிக்கப்படாத தொடர் மின்வெட்டு காரணமாக மக்கள்
பல்வேறு விதமான பாதிப்புகளுக்கு உள்ளாகின்றனர்.</p><p>பாடசாலை மாணவர்கள், சிறுவர்கள், முதியவர்கள் என பாதிக்கப்படுவதுடன் பல இலட்சம் பெறுமதியான மின் உபகரணங்கள்
செயலிழப்பதுடன் தொழில் முனைவோர் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
</p><p>
குறிப்பாக ஆண்டு ஐந்து மற்றும் கா.பொ.த உயர்தர பரீட்சைக்கு தயாராகும்
மாணவர்களும் சிரமத்தை எதிர்நோக்குகின்றனர். அத்துடன் மின்வெட்டு சட்டவிரோத நடவடிக்கைக்கும்
சாதகமாக அமைந்து விடுகிறது. ஒவ்வொரு நாளும் பல தடவைகள் மின் துண்டிப்பு
ஏற்படுகிறது.</p><h2>கடும் சிரமத்தில் மக்கள்..&nbsp;</h2><p>
</p><p>
அரசியல்வாதிகளும் மாவட்ட நிர்வாகமும் உறக்கத்தில் உள்ளனர். மக்கள் நிலை பற்றி
அவர்கள் புரிந்து கொள்வதாக இல்லை. மன்னார் மக்களின் விருப்பமின்றி அதிகார
வர்க்கத்தின் அடக்குமுறையால் அமைக்கப்பட்ட 40 காற்றாலைகளில் தினமும் பல
மில்லியன் ரூபாவை வருமானமாக பெறுகிறீர்கள். ஆனால் மன்னார் மக்களை வேண்டுமென்றே
வஞ்சிக்கிறது மின்சார சபை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/94958c61-381f-4e50-b272-f9402aa44edf/26-6a7339be0601a.webp' /></p><p>
</p><p>
தடையற்ற மின்சாரம் தருவோம் என உத்தரவாதம் அளித்த அரசாங்கம் மின் தடையை
ஏற்படுத்துகிறது. பல அமைச்சர்கள் மன்னாருக்கு வருகை தந்து மக்களுக்கு ஏமாற்று
கதைகள் கூறிவிட்டு போகிறார்களே தவிர இந்த மக்களுக்கு எந்தப் பலனும்
கிடைப்பதில்லை.
</p><p>
வட கிழக்கிற்கு வெளியே இவ்வாறு ஏமாற்று வேலையை மின்சார சபையால் செயல்படுத்த
முடியுமா? அரசியல் ரீதியிலும் சரி நிர்வாக ரீதியிலும் எமது மக்களை ஏமாற்றி
வஞ்சிக்கிறார்கள்.பல மாதங்களாக ஜனநாயக ரீதியாக போராடிய எமது மக்களின்
உணர்வுகளை மதிக்காத அரசும் மின்சார சபையும் இப்பொழுது மன்னார் மக்களை
தொடர்ந்து வஞ்சிப்பதாகவே நாம் உணர்கிறோம்.
</p><p>
எம்மிடமிருந்து வருமானம் பெறும் தாங்கள் எமது மக்களுக்கு போதிய மின்சார
கட்டமைப்பை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டிய தார்மீக கடமையும் பொறுப்பும்
ஆகும்.அந்தப்
பொறுப்பில் இருந்து மின்சார சபை விலகுவது வேதனைக்குரிய விடயம்.</p><p>

ஆகவே உடனடியாக மின் கட்டமைப்புகள் சீர் செய்யப்பட்டு தடையற்ற மின்சாரம்
கிடைப்பதற்கு வழி ஏற்படுத்தப்பட வேண்டும். இல்லையேல் தினமும்
பாதிக்கப்படுகின்ற மக்களுக்கு நட்ட ஈடு வழங்க வேண்டும்.</p><p>இல்லையேல் இழப்பீடு
கோரி நீதிமன்றம் நாட வேண்டி வரும்.

தொடர்ந்து மன்னார் மக்களை வஞ்சிப்பது அரசு நிர்வாகத்தின் இயலாமை.

உடனடியாக மின் தடையை நிவர்த்தி செய்ய வழி ஏற்படுத்த வேண்டும் என
கேட்டுக்கொள்கிறோம்” என குறிப்பிடப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-05T13:25:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்கா - ஈரான் மோதல்: ஹோர்முஸ் நீரிணை தொடர்பில் ட்ரம்பின் அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/iran-america-war-1785935101"></link>
            <id>https://tamilwin.com/article/iran-america-war-1785935101</id>
            <summary type="text">அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே கடந்த ஐந்து மாதங்களாக நீடித்து வரும் மோதலை
முடிவுக்குக் கொண்டுவரும் வகையில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் மிகவும்
சாதக...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே கடந்த ஐந்து மாதங்களாக நீடித்து வரும் மோதலை
முடிவுக்குக் கொண்டுவரும் வகையில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் மிகவும்
சாதகமாக அமைந்ததாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.</p><p>
இந்த ஆலோசனைகளின் மூலம், சர்வதேச மசகு எண்ணெய் போக்குவரத்திற்கு மிக
முக்கியமான ஹோர்முஸ் நீரிணை விரைவில் கப்பல் போக்குவரத்திற்காக மீண்டும்
திறக்கப்படும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.</p><p>செய்தி நிறுவனமொன்றுக்கு அளித்த நேர்காணலில், பேச்சுவார்த்தைகள்
நல்ல முறையில் நகர்ந்து கொண்டிருப்பதாகவும், ஒருவேளை ஈரான் ஒப்பந்தத்தில்
இருந்து மீண்டும் பின்வாங்கினால் கடுமையான தாக்குதல்களை எதிர்கொள்ள நேரிடும்
என்றும் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.</p><h2>அமைதிப் பேச்சுவார்த்தை</h2><p>
</p><p>
இந்த அமைதிப் பேச்சுவார்த்தைகள் குறித்த நேர்மறையான தகவல்களைத் தொடர்ந்து,
சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை சரிவைச் சந்தித்துள்ளதோடு
பங்குச்சந்தைகளும் ஏற்றம் கண்டுள்ளன.
</p><p>
ஓமன் நாட்டின் மத்தியஸ்தத்துடன் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கான
இடைக்கால ஒப்பந்தத்தை எட்டுவதில் அமெரிக்காவும் ஈரானும் இறுதி கட்டத்தை
நெருங்கியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/832e8ba6-768b-41c0-aadf-d56afd52c4a5/26-6a73389009f55.webp' /></p><p>
</p><p>
எனினும், அமெரிக்கா தொடர்ந்து அச்சுறுத்தல்களை விடுத்து வரும் வரை ஒப்பந்தம்
இறுதியாவதில் தாமதம் ஏற்படும் என ஈரானிய அரசு ஊடகங்கள் தரப்பில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>பாதுகாப்பான கப்பல் பாதை</h2><p>
</p><p>
ஈரானின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாயி கூறுகையில்,
பாதுகாப்பான கப்பல் பாதைகளை அமைப்பது தொடர்பாக ஓமன் நாட்டுடன் நடத்தப்படும்
பேச்சுவார்த்தைகள் நேர்மறையாகத் தொடர்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
இதனிடையே, கத்தார் அமீர் ஷேக் தமீம் பின் ஹமாத் அல் தானியுடன் தொலைபேசியில்
உரையாடிய ஜனாதிபதி ட்ரம்ப், இருநாடுகளுக்கும் இடையிலான கருத்து வேறுபாடுகளைக்
குறைப்பது குறித்தும் பிராந்திய அமைதியை ஏற்படுத்துவது குறித்தும்
ஆலோசித்துள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-05T13:24:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹிந்தி சீரியலில் நடிக்கும் சன் டிவி மருமகள் சீரியல் ஹீரோ ராகுல்... நாயகி இவர்தானா...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/marumagal-fame-rahul-ravi-new-serial-in-hindi-1785933933"></link>
            <id>https://cineulagam.com/article/marumagal-fame-rahul-ravi-new-serial-in-hindi-1785933933</id>
            <summary type="text">மருமகள்சன் டிவியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகும் தொடர்களில் ஒன்று தான் மருமகள். கேப்ரியல்லா மற்றும் ராகுல் ரவி இருவரும் முதன்முறையாக ஜோடி சேர்ந்து நடிக்க...</summary>
            <content type="html"><![CDATA[<h2>மருமகள்</h2><p>சன் டிவியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகும் தொடர்களில் ஒன்று தான் மருமகள். கேப்ரியல்லா மற்றும் ராகுல் ரவி இருவரும் முதன்முறையாக ஜோடி சேர்ந்து நடிக்கிறார்கள். </p><p>இப்போது பிரபுவின் தங்கை ரோஹினியின் வாழ்க்கை பிரச்சனையின் கதை தான் ஒளிபரப்பாகி வருகிறது. </p><p>அவரை அவரது கணவருடன் சேர்த்து வைக்க வேண்டும் என பிரபு மற்றும் ஆதிரை போராடி வருகிறார்கள்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b1e51f90-5c93-41e2-8422-5a83d510d051/26-6a7338432453a.webp' /></p><h2>புதிய சீரியல்</h2><p>
இந்த நிலையில் மருமகள் சீரியல் புகழ் ராகுல் ரவி நடிக்கும் புதிய தொடர் குறித்த தகவல் வந்துள்ளது. </p><p>அதாவது சன் டிவியில் ஒளிபரப்பான நந்தினி சீரியலின் சூப்பர் ஜோடி ராகுல் ரவி மற்றும் நித்யா ராம் இருவரும் ஜோடியாக ஹிந்தியில் புதிய சீரியல் நடிக்க கமிட்டாகியுள்ளார்களாம். ராஜ் நந்தினி என பெயரிடப்பட்டுள்ள இந்த தொடர் விரைவில் ஒளிபரப்பாக உள்ளது.</p><p><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/p/DboDyVdyC5W/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/p/DboDyVdyC5W/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/p/DboDyVdyC5W/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by Hemalatha V (@tamilserialexpress)</a></p></div></blockquote> <script async src="//www.instagram.com/embed.js"></script></p>]]></content>
            <updated>2026-08-05T13:19:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[Philippines : 10 ஆண்டுகள் படுக்கைக்கு அடியில் இருந்த பல கோடி மதிப்புள்ள அரிய முத்து!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/fisherman-found-giant-100-million-pearl-1785934636"></link>
            <id>https://manithan.com/article/fisherman-found-giant-100-million-pearl-1785934636</id>
            <summary type="text"> Philippines : பிலிப்பைன்ஸின் பளவான் தீவைச் சேர்ந்த ஒரு மீனவர், 2006ஆம் ஆண்டு கடலில் கண்டெடுத்த 34 கிலோ எடையுள்ள மிகப்பெரிய இயற்கை முத்தை அதன் உண்மையா...</summary>
            <content type="html"><![CDATA[<p> Philippines : பிலிப்பைன்ஸின் பளவான் தீவைச் சேர்ந்த ஒரு மீனவர், 2006ஆம் ஆண்டு கடலில் கண்டெடுத்த 34 கிலோ எடையுள்ள மிகப்பெரிய இயற்கை முத்தை அதன் உண்மையான மதிப்பு தெரியாமல் சுமார் 10 ஆண்டுகள் தனது வீட்டில் படுக்கைக்கு அடியில் அதிர்ஷ்டப் பொருளாக வைத்திருந்தார்&nbsp; என்றால் உங்களால் நம்ப முடிகின்றதா?&nbsp;</p><p>கடந்த 2006ஆம் ஆண்டு, பளவான் கடற்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, கடல் சிப்பிக்குள் சிக்கியிருந்த இந்தப் பிரம்மாண்ட முத்தை அந்த மீனவர் கண்டெடுத்ததாக கூறப்படுகிறது. அதன் அரிய தன்மையை அறியாத அவர், அதை தனக்கு அதிர்ஷ்டத்தைத் தரும் பொருளாக நம்பி, தனது வீட்டில் படுக்கைக்கு அடியில் பாதுகாப்பாக வைத்திருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3572addc-1867-4eb6-aca0-cf0a3d431c36/26-6a7336ed2bc34.webp' /></p><h2>உலகின் மிகப்பெரிய இயற்கை முத்து</h2><p>

இந்த அரிய முத்து சுமார் 2.2 அடி (67 செ.மீ) நீளம், 1 அடி (30 செ.மீ) அகலம் மற்றும் 34 கிலோ எடை கொண்டதாகும். இதன் அளவும் எடையும் உலகின் மிகப்பெரிய இயற்கை முத்துகளில் ஒன்றாக இதைத் தனித்துவமாக்குகின்றன.
</p><p>
இந்நிலையில், மீனவரின் வீடு தீ விபத்தில் சேதமடைந்ததைத் தொடர்ந்து, அந்தப் பொருளை அவர் பாதுகாப்பு கருதி உள்ளூர் சுற்றுலா அதிகாரிகளிடம் ஒப்படைத்தார். அப்போது அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வில், அது மிகவும் அரிய மற்றும் விலைமதிப்பற்ற இயற்கை முத்து என்பது தெரியவந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cf21c009-7f00-4115-9622-866a750accb8/26-6a7336edd34f9.webp' /></p><p>

இந்த முத்தின் மதிப்பு சுமார் 100 மில்லியன் அமெரிக்க டாலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்திய மதிப்பில் இது தோராயமாக 950 கோடி மதிப்புள்ளது. சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு கண்டறிப்பட்ட இந்த விடயம் தற்போது சமூக ஊடகங்களில் மீண்டும் வைரலாகி வருகின்றது.</p><p><iframe width="315" height="576" src="https://www.youtube.com/embed/5mKZ30fioco" title="10 ஆண்டுகள் படுக்கையறையில் புதைந்து கிடந்த புதையல்..!😱 | உலகையே வியக்க வைத்த கதை!" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share" referrerpolicy="strict-origin-when-cross-origin" allowfullscreen></iframe></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்<b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"> FOLLOW NOW</a></u></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-05T13:14:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தியாவின் வெளியுறவுச் செயலாளர் வெளிவிவகார அமைச்சருடன் சந்திப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/vikram-misri-meets-with-foreign-affairs-minister-1785934284"></link>
            <id>https://tamilwin.com/article/vikram-misri-meets-with-foreign-affairs-minister-1785934284</id>
            <summary type="text">ஒரு நாள் பயணமாக இன்று(05.08.2026) கொழும்பை வந்தடைந்த இந்தியாவின் வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி, இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்தைச் சந்தி...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஒரு நாள் பயணமாக இன்று(05.08.2026) கொழும்பை வந்தடைந்த இந்தியாவின் வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி, இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்தைச் சந்தித்துப்
பேச்சு நடத்தியுள்ளார்.
</p><p>
இந்தச் சந்திப்பின்போது, இரு நாடுகளுக்கும் இடையிலான முக்கிய மற்றும்
முன்னுரிமை பெற்ற துறைகளில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் கூட்டு
ஒத்துழைப்பு நடவடிக்கைகள் குறித்து இருவரும் விரிவாகக் கலந்தாலோசித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2fc72c8e-2730-4fb6-a3eb-a40649a51c26/26-6a7335a625722.webp' /></p><p>முன்னதாக இந்திய வெளியுறவுச் செயலாளர் ஸ்ரீ விக்ரம் மிஸ்ரி, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை சந்தித்தமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-05T13:08:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கேப்டன் விஜய்காந் திரைப்பட சம்பவம்; உயிரிழந்த நபருக்கு உணவு கட்டணம்: மருத்துவமனைக்கு ரூ.65.62 லட்சம் அபராதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/food-charges-deceased-person-hospital-fined-1785925596"></link>
            <id>https://jvpnews.com/article/food-charges-deceased-person-hospital-fined-1785925596</id>
            <summary type="text">&amp;nbsp;உயிரிழந்த நபருக்கு உணவு கட்​ட​ணம் வசூலித்​த​ மருத்துவமனைக்கு ரூ.65.62 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;உயிரிழந்த நபருக்கு உணவு கட்​ட​ணம் வசூலித்​த​ மருத்துவமனைக்கு ரூ.65.62 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.</p><p>

மறைந்த கேப்டன் விஜயகாந் நடித்த திரைப்படம் ஒன்றில் உயிரிழந்தவருக்கு மருத்துவம் பார்த்து மருத்துவமனை பெரும் தொகை பணத்தை கோரிய காட்சி ஒன்று இருக்கும். அதேபோல உயிரிழந்த நபருக்கு உணவு கட்​ட​ணம் வசூலித்​த சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0f0d9753-3d16-4fc6-b55e-716bfe7e77f2/26-6a730fddbbc17.webp' /></p><p></p><h2>கோமா நிலை​யில் சிகிச்சை&nbsp;கோமா நிலை​யில் சிகிச்சை </h2><p> </p><p>

கோமா நிலை​யில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி உயி​ரிழந்த பிறகும், அவருக்கு உணவு மற்​றும் பராமரிப்பு வழங்​கிய​தாகக் கூறி கூடு​தல் கட்​ட​ணம் வசூலித்​த​தாக தொடரப்​பட்ட வழக்​கில், சென்னை வடபழனி​யில் செயல்​படும் தனியார் மருத்​து​வ​மனைக்கு ரூ.65 லட்​சத்து 62 ஆயிரத்து 500 அபராதம் விதித்து செங்​கல்​பட்டு மாவட்ட நுகர்​வோர் குறைதீர் ஆணை​யம் தீர்ப்​பளித்​தது.</p><p></p><p>
</p><p> 

சென்னை மாடம்​பாக்​கத்​தைச் சேர்ந்த கோபால​கிருஷ்ணன், தனது தாய் சுசிலாவை 2003-ம் ஆண்டு பிப்​ர​வரி 5-ம் தேதி சிகிச்​சைக்​காக மருத்​து​வ​மனை​யில் சேர்த்​திருந்​தார்.

சிகிச்சை பலனின்றி பிப். 9-ம் தேதி அதி​காலை 2.30 மணி​யள​வில் சுசிலா உயி​ரிழந்​தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/91992eb7-bd58-4d22-9878-093eb5414b9c/26-6a731074b379b.webp' /></p><p> ஆனால் காலை 10.30 மணிவரை உடலை ஒப்​படைக்​காத மருத்​து​வ​மனை நிர்​வாகம், அந்த இடைப்​பட்ட நேரத்​தில் உணவு மற்​றும் பராமரிப்பு வழங்​கிய​தாகக் கூறி கூடு​தலாக வசூலித்​த​தாக புகார் எழுந்​தது.</p><p></p><p>
</p><p>
இது தொடர்​பாக கோபால கிருஷ்ணன் தொடர்ந்த வழக்​கில், ‘ரூ.61,644 கூடு​தலாக வசூலித்​திருப்​ப​தாக மருத்​து​வ​மனை தரப்பே நீதி​மன்​றத்​தில் ஒப்​புக்​கொண்​டு, அந்​தத் தொகையை திருப்​பிச் செலுத்​து​வ​தாக தெரி​வித்​தும் இது​வரை வழங்​க​வில்​லை’ எனக் கூறப்​பட்​டது.</p><p>

வழக்கை விசா​ரித்த செங்​கல்​பட்டு மாவட்ட நுகர்​வோர் குறைதீர் ஆணை​யத் தலை​வர் காசி பாண்​டியன், மருத்​து​வ​மனைக்கு ரூ.65.62 லட்​சம் அபராதம் விதித்​ததுடன், கூடு​தலாக வசூலித்த ரூ.61,644-ஐ மனு​தா​ரருக்கு வழங்​கவும் உத்தரவிட்டார்.</p>]]></content>
            <updated>2026-08-05T13:03:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலகளவில் ஜனநாயகன் திரைப்படம் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/jananayagan-movie-worldwide-box-office-collection-1785927056"></link>
            <id>https://viduppu.com/article/jananayagan-movie-worldwide-box-office-collection-1785927056</id>
            <summary type="text">விஜய் நடிப்பில், இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் உருவாகி கடந்த ஜூலை 23-ஆம் தேதி வெளியான திரைப்படம் ஜனநாயகன். 

பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளிவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>விஜய் நடிப்பில், இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் உருவாகி கடந்த ஜூலை 23-ஆம் தேதி வெளியான திரைப்படம் ஜனநாயகன். </p><p>

பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளிவந்த இப்படத்திற்கு மாபெரும் கொண்டாட்டம் இருந்தாலும், கலவையான விமர்சனங்களும் கிடைத்தன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4f9c6e00-ebc4-4d2a-9884-f295d1bcfb8e/26-6a7315930e35a.webp' /></p><p> </p><p>

இந்நிலையில், ஜனநாயகன் திரைப்படம் உலகளவில் 14 நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
</p><p>
அதன்படி, 14 நாட்களில் உலகளவில் இப்படம் ரூ. 300 கோடி வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் எவ்வளவு வசூல் செய்யும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.</p>]]></content>
            <updated>2026-08-05T13:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மியான்மர் முன்னாள் தலைவர் ஆங் சாங் சூ கி தொடர்பில் ஒரு புதிய தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/aung-san-suu-kyi-meeting-with-red-cross-official-1785934746"></link>
            <id>https://news.lankasri.com/article/aung-san-suu-kyi-meeting-with-red-cross-official-1785934746</id>
            <summary type="text">மியான்மரின் முன்னாள் தலைவரான ஆங் சாங் சூ கியின் நிலை குறித்து பல ஆண்டுகளாக யாருக்கும் தெரியாமலிருந்த நிலையில், தற்போது அவர் குறித்த காணொளி ஒன்று வெளிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>மியான்மரின் முன்னாள் தலைவரான ஆங் சாங் சூ கியின் நிலை குறித்து பல ஆண்டுகளாக யாருக்கும் தெரியாமலிருந்த நிலையில், தற்போது அவர் குறித்த காணொளி ஒன்று வெளியாகியுள்ளது.</p><p>

மியான்மரின் முன்னாள் தலைவரான ஆங் சாங் சூ கி எங்கிருக்கிறார், எப்படி இருக்கிறார் என்பது பல ஆண்டுகளாக யாருக்கும் தெரியாமலேயே இருந்து வந்தது.</p><h3>

ஒரு புதிய தகவல்</h3><p>

2021ஆம் ஆண்டு மியான்மரில் நடைபெற்ற ஆட்சி கவிழ்ப்பைத் தொடர்ந்து மியான்மர் ராணுவத்தால் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார் ஆங் சாங் சூ கி (81).&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c7b8f34f-f8a2-40c1-8d02-beb747ac3d75/26-6a73339becfc3.webp' /></p><p>

அவர் எங்கிருக்கிறார், எப்படி இருக்கிறார் என்பது கூட யாருக்கும் தெரியாத நிலையில், அவரது உடல் நிலை குறித்து அவரது குடும்பத்தினர் கவலை தெரிவித்துவந்தார்கள்.&nbsp;</p><p></p><p>

பின்னர், மே மாதம், அவர் சிறைச்சாலையிலிருந்து வீட்டுச் சிறைக்கு மாற்றப்பட்டுள்ளதாக மியான்மர் அரசு தொலைக்காட்சி தெரிவித்தது. ஆனாலும், அவரை யாரும் பார்த்ததாக தகவல் இல்லை.</p><p>

இந்நிலையில், நேற்று முன்தினம், அதாவது, ஆகத்து மாதம் 3ஆம் திகதி, அவர் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் பிரதிநிதி ஒருவரை சந்திக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dfa3d1b0-2c4d-4517-8fd3-823dd6a291a5/26-6a73339b47b55.webp' /></p><p>
ஆங் சாங் சூ கி, மியான்மருக்கான சர்வதேச செஞ்சிலுவைச் சங்க பிரதிநிதியான Arnaud de Baecque என்பவருடன் கைகுலுக்குவதை அந்த புகைப்படம் காட்டினாலும், அவர் எங்கிருக்கிறார் என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-05T12:59:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹட்டன் கல்வி வலயத்தின் பாடசாலைகள் நாளை முதல் ஆரம்பம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/schools-in-hatton-education-zone-to-reopen-1785932648"></link>
            <id>https://ibctamil.com/article/schools-in-hatton-education-zone-to-reopen-1785932648</id>
            <summary type="text">நாட்டில் கடந்த சில தினங்களாக நிலவிய சீரற்ற கால நிலை அதனால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக விடுமுறை அளிக்கப்பட்டிருந்த ஹட்டன் கல்வி வலயத்தின் அனைத்துப...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டில் கடந்த சில தினங்களாக நிலவிய சீரற்ற கால நிலை அதனால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக விடுமுறை அளிக்கப்பட்டிருந்த ஹட்டன் கல்வி வலயத்தின் அனைத்துப் பாடசாலைகளும் நாளை (06)முதல் மீண்டும் ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. </p><p>

அதன்படி குறித்த பாடசாலைகளின் கற்றல் செயற்பாடுகள் நாளை வழமை போல் இடம்பெறும் என ஹட்டன் வலயக் கல்வி அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.</p><p>சீரற்ற வானிலை பாதிப்பை கருத்திற் கொண்டு நேற்று முன்தினம் முதல் குறித்த வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-05T12:58:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வேலை வாய்ப்பு தேடி கனடா சென்ற இளைஞர்களுக்கு நேர்ந்த கதி - பிரதான சந்தேக நபர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/canada-in-search-of-employment-kidnapped-1785934214"></link>
            <id>https://tamilwin.com/article/canada-in-search-of-employment-kidnapped-1785934214</id>
            <summary type="text">கனடாவில் வேலை வாய்ப்பு வழங்குவதாகக் கூறி 3 வடக்கு இளைஞர்களை
எத்தியோப்பியாவுக்கு அழைத்துச் சென்று கடத்த முற்பட்ட, ஆள்கடத்தல்
வலையமைப்புடன் தொடர்புடைய...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவில் வேலை வாய்ப்பு வழங்குவதாகக் கூறி 3 வடக்கு இளைஞர்களை
எத்தியோப்பியாவுக்கு அழைத்துச் சென்று கடத்த முற்பட்ட, ஆள்கடத்தல்
வலையமைப்புடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் ஒருவர் குற்றப் புலனாய்வுத்
திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,</p><p> 

கிளிநொச்சிப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரின் ஆலோசனையின் பேரில், துபாய் ஊடாக
எத்தியோப்பியாவுக்கு மூவர் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். </p><p>

இவர்கள், சர்வதேச ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்
கும்பல் ஒன்றினால் எத்தியோப்பியாவில் வைத்து கடத்தப்பட்டிருந்ததுடன், இது
தொடர்பில் முறைப்பாடு ஒன்று கடந்த மே 27ஆம் திகதி பதிவாகியிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aac94175-758c-471f-a517-059a972cfd69/26-6a7332066d603.webp' /></p><p>
</p><p>
குறித்த சந்தேக நபர், பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து சுமார் 64 இலட்சம் ரூபா
பணத்தைப் பெற்றுள்ளதாகவும், கடத்தப்பட்டவர்களை மீட்க வேண்டும் எனக் கூறி,
பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களிடம் இருந்தும் சுமார் 20 மில்லியன் ரூபா
பணத்தையும் பெற்றுக் கொண்டதாக விசாரணைகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
</p><h2>

பிரதான சந்தேக நபர் கைது</h2><p>

இதனைத் தொடர்ந்து, சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர், நெடுங்கேணிப் பகுதியில் தலைமறைவாகியிருந்த நிலையில், கைது செய்யப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
</p><p>
குற்றப் புலனாய்வுத் திணைக்களம், உரிய இராஜதந்திர அதிகாரிகளுடன் இணைந்து
மேற்கொண்ட ஒருங்கிணைந்த நடவடிக்கையின் மூலமாக பாதிக்கப்பட்டவர்கள்
மீட்கப்பட்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ea89d865-71b9-46f0-848b-0c133754caed/26-6a7332072b62d.webp' /></p><p> </p><p>

இதற்கமைய, கடந்த ஜூன் 06 ஆம் திகதி எத்தியோப்பிய அதிகாரிகளால்
இந்த 3 இலங்கையர்களும் மீட்கப்பட்டனர்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய 4 பாகிஸ்தான் பிரஜைகளும், ஒரு எத்தியோப்பியப்
பிரஜையும் இதன்போது கைது செய்யப்பட்டனர்.</p><p>

 மேலும், யாழ்ப்பாணம், வவுனியா
மற்றும் கிளிநொச்சி ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 26 முதல் 34 வயதுக்கு
இடைப்பட்ட இந்த 3 இலங்கை இளைஞர்களும் கடந்த முதலாம் திகதி மீள நாட்டிற்கு
அழைத்து வரப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-05T12:53:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[சாகர காரியவசம் குற்றச்சாட்டிற்கு பதிலடிக் கொடுத்த அரச தரப்பு - விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/npp-warns-againt-sara-kariyavasam-1785934246"></link>
            <id>https://tamilwin.com/article/npp-warns-againt-sara-kariyavasam-1785934246</id>
            <summary type="text">ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசத்திற்கு ஆளும் கட்சி கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இலங்கையின் தற்போதைய பொலிஸ் மா அதிபருக...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசத்திற்கு ஆளும் கட்சி கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
</p><p>
இலங்கையின் தற்போதைய பொலிஸ் மா அதிபருக்கு மொட்டு கட்சியின் பொதுச்செயலாளர் பகிரங்கமாக அச்சுறுத்தல் விடுத்துள்ளமை நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. </p><p>

அச்சுறுத்தலுக்கான பிரதான காரணம் தற்போதைய பொலிஸ் மா அதிபரின் தலைமையின் கீழ் நாடு முழுவதும் மிகத் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வரும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளே பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.</p><h2>மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட ஊழல் மோசடி விசாரணை</h2><p>நீண்டகாலமாக ஊழல், இலஞ்சம் மற்றும் மோசடிகளில் சிக்கியிருந்த இந்த நாட்டில், பல அரசியல்வாதிகள் சம்பந்தப்பட்ட மூடிமறைக்கப்பட்ட வழக்குகளும் விசாரணைகளும் தற்போது மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6b614096-bc6b-4e4b-a715-06de93bf81d9/26-6a7331a793f43.webp' />&nbsp; &nbsp;</p><p>
இலங்கையிலும் வெளிநாடுகளிலும் இயங்கி வரும் பாதாள உலகக் குழு உறுப்பினர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.</p><p>

அவர்களை நாட்டுக்கு அழைத்து வந்து சட்டத்தின் பிடியில் சிக்க வைப்பதற்கான முனைப்புகள் தீவிரமடைந்துள்ள நிலையில், இந்த விசாரணைகளைத் தடுப்பதற்காகவே இவ்வாறான அச்சுறுத்தல்கள் விடுக்கப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.</p><p>“நடு வீதியில் வைத்து கொல்ல வேண்டும்" என்ற கொடூரமான வார்த்தை பிரயோகம் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் இவ்வாறான ஒரு கருத்தை வெளியிடுவது நீதிக்கும், சட்டவாட்சிக்கும் விடுக்கப்பட்ட நேரடி சவாலாகும் என அமைச்சர் சாடியுள்ளார்.
</p><p>போதைப்பொருள் வர்த்தகர்களிடம் பணம் பெற்றுக்கொண்டு, மக்களின் சொத்துக்களை அபகரித்த நபர்களே இவ்வாறு பொலிஸ் அதிகாரிகளை அச்சுறுத்துவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.</p><h2>படுகொலை சம்பவங்களுடன் தொடர்புட்ட அரசியல்வாதிகள்</h2><p>
</p><p>
சாகர காரியவசம் பிரதிநிதித்துவம் செய்யும் அரசியல் கட்சியின் சில அரசியல்வாதிகள், உண்மையில் நாட்டின் பாரிய படுகொலைச் சம்பவங்கள் மற்றும் பாரிய கொள்ளைகளுக்குப் பொறுப்பு கூற வேண்டியவர்கள் எனச் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9ab72ddc-8c40-4ea0-8a78-49de2dafacbd/26-6a73385d4db78.webp' /></p><p>
</p><p>
எந்தவொரு தரப்பினரின் அச்சுறுத்தல்களுக்கும் அடிபணிந்து ஆரம்பிக்கப்பட்டுள்ள விசாரணைகள் நிறுத்தப்பட மாட்டாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>

இந்த விசாரணை நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவிக்கவோ அல்லது அவற்றைக் குழப்பவோ எந்தவொரு அரசியல் கட்சிக்கும் உரிமை கிடையாது அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-05T12:51:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Erimalai</name>
            </author>
            <title type="text"><![CDATA[குட்டிமணி - தங்கத்துரை ஆகியோரின் சிலை தொடர்பான தடை.. நீதிமன்றம் எடுத்துள்ள தீர்மானம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/kuttymani-thangadhurai-statue-ban-court-order-1785931605"></link>
            <id>https://tamilwin.com/article/kuttymani-thangadhurai-statue-ban-court-order-1785931605</id>
            <summary type="text">வல்வெட்டித்துறையில் குட்டிமணி, தங்கத்துரை ஆகியோருக்கு சிலை அமைப்பதற்கு
பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ளது.&amp;nb...</summary>
            <content type="html"><![CDATA[<p>வல்வெட்டித்துறையில் குட்டிமணி, தங்கத்துரை ஆகியோருக்கு சிலை அமைப்பதற்கு
பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p>வேலிக்கடை சிறையில் படுகொலை செய்யப்பட்ட குட்டிமணி மற்றும் தங்கத்துரை ஆகியோருக்கு சிலை அமைப்பதற்கு எதிராக வல்வெட்டித்துறை பொலிஸாரால் அதன் ஏற்பாட்டாளரும், முன்னாள் வல்வெட்டித்துறை நகர சபை உப தவிசாளருமான
கந்தசாமி சதீஷுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது.&nbsp;</p><h2>கால அவகாசம்&nbsp;</h2><p>இந்நிலையில், குறித்த வழக்கில் இன்று வரை
வழங்கப்பட்டிருந்த சிலை அமைப்பதற்கான தற்காலிக தடை உத்தரவு நீக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/766eb7ac-fb09-4838-be84-ab6fd01b3ac0/26-6a732e17b9b64.webp' /></p><p>
</p><p>
கடந்த 22.7.2026 அன்று வல்வெட்டித்துறை பொலிஸாரால் பருத்தித்துறை நீதவான்
நீதிமன்றில் இவ்வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.&nbsp;</p><p>வழக்கானது விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு
நேற்றும் வாத பிரதிவாதங்கள் இடம்பெற்றிருந்த நிலையில் குறித்த வழக்கு தொடர்பில் மேலும்
ஆதாரங்களை சமர்ப்பிக்க 14 நாட்கள் கால அவகாசம் கோரப்பட்டது. </p><p>எனினும், 106ஆம் இலக்க சட்ட
பிரிவின் கீழ் 14 நாட்களுக்கு மேல் தடை உத்தரவு வழங்க முடியாது என்ற
அடிப்படையில், பொலிஸார் எந்தவிதமான ஆதாரங்களையும் சமர்ப்பிக்காத நிலையில் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்டிருந்த தற்காலிக தடை
உத்தரவு இல்லாதாக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-05T12:50:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[உடல் ஆரோக்கியத்திற்கு சிறந்த இரு பழங்கள்! எவை தெரியுமா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/apples-and-bananas-excellent-for-physical-health-1785933074"></link>
            <id>https://jvpnews.com/article/apples-and-bananas-excellent-for-physical-health-1785933074</id>
            <summary type="text">&amp;nbsp; ஒவ்வொரு நாளும் ஒரு பழம் சாப்பிடும் பழக்கம் ஆரோக்கியமான வாழ்க்கையின் மிக முக்கியமான பகுதிகளில் ஒன்றாகும். தினமும் ஆப்பிள் அல்லது வாழைப்பழம் சாப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; ஒவ்வொரு நாளும் ஒரு பழம் சாப்பிடும் பழக்கம் ஆரோக்கியமான வாழ்க்கையின் மிக முக்கியமான பகுதிகளில் ஒன்றாகும்.</p><p> தினமும் ஆப்பிள் அல்லது வாழைப்பழம் சாப்பிடுவது உடலுக்கு மிகவும் நன்மை பயக்கும். 

 ஆப்பிள் மற்றும் வாழைப்பழம் இரண்டும் வெவ்வேறு ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7fc05588-0eb7-4194-924c-46ccde536e70/26-6a732d146c13a.webp' /></p><p><b>&nbsp;எடை குறைப்பு</b></p><p> </p><p>

ஆப்பிள்கள் நீண்ட காலமாக ஆரோக்கியமான பழங்களில் இடம் பெற்றுள்ளன. இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளது, குறிப்பாக பெக்டின், நல்ல குடல் ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகிறது. </p><p>இதில் வைட்டமின் சி, பொட்டாசியம், சக்தி வாய்ந்த ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன, இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1b291bd9-55b7-469a-b8ec-fa3464424993/26-6a732e9c12a69.webp' /></p><p> </p><p>

ஆப்பிளின் வழக்கமான நுகர்வு கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்த உதவுகிறது, இதய நோய் அபாயத்தைக் குறைக்கிறது மற்றும் எடையைக் கட்டுப்படுத்த உதவுகிறது.</p><p> ஒப்பீட்டளவில் கலோரிகள் குறைவாக இருப்பதால் எடை குறைக்க விரும்புவோருக்கு ஆப்பிள் ஒரு சிறந்த பழமாகும்.</p><p><b>இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும்</b></p><p> </p><p>

வாழைப்பழங்கள் எளிதில் கிடைக்கக்கூடியவை, விலை மலிவானவை மற்றும் உடனடி ஆற்றலைத் தரும் சிறந்த பழங்களில் ஒன்றாகும். </p><p>இதில் பொட்டாசியம், வைட்டமின் பி6, வைட்டமின் சி, மெக்னீசியம் மற்றும் இயற்கையான சர்க்கரைகள் நிறைந்துள்ளன, இவை உடலுக்கு உடனடி ஆற்றலை வழங்குகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/659cb6ea-a6ad-4901-b2f2-18bce7791710/26-6a732e9d051ca.webp' /></p><p> </p><p>வாழைப்பழங்களைத் தொடர்ந்து உட்கொள்வது இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும், தசை செயல்பாட்டை மேம்படுத்தவும், உடற்பயிற்சிக்கு முன்னும் பின்னும் உடல் விரைவாக ஆற்றலை மீட்டெடுக்கவும் உதவுகிறது.</p><p><b>செரிமானத்திற்கும் உதவுகிறது&nbsp;</b></p><p> </p><p>

வாழைப்பழங்கள் குறிப்பாக குழந்தைகள், விளையாட்டு வீரர்கள் மற்றும் அதிக உடல் உழைப்பு செய்பவர்களுக்கு நன்மை பயக்கும். மேலும், வாழைப்பழங்களில் உள்ள நார்ச்சத்து செரிமானத்திற்கும் உதவுகிறது மற்றும் நீண்ட நேரம் வயிற்றை நிரம்பியதாக வைத்திருக்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/799ecffc-6773-4f6e-9229-b0296a17bf53/26-6a732e9dcc0c9.webp' /></p><p> 

நீங்கள் எடையைக் கட்டுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டால் ஆப்பிள்கள் சற்று முன்னோக்கி உள்ளன. ஏனெனில் அவை கலோரிகளில் குறைவாகவும், ஆக்ஸிஜனேற்றத்தில் அதிகமாகவும் உள்ளன.</p><p> வாழைப்பழத்தில் உள்ள அதிக பொட்டாசியம் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது, அதே சமயம் ஆப்பிளில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இதயத்திற்கு சமமாக பயனுள்ளதாக இருக்கும்.</p><p><b>நீரிழிவு நோயாளிகளுக்கும் சிறந்தது&nbsp;</b></p><p> 

நீரிழிவு நோயாளிகள் தங்கள் வைத்தியர் அல்லது ஊட்டச்சத்து நிபுணரின் ஆலோசனையின்படி இரண்டு பழங்களையும் மிதமாக சாப்பிடலாம். மென்மையான பழுத்த வாழைப்பழங்கள் பல் பிரச்சனைகள் இருந்தால் முதியவர்கள் சாப்பிடுவது எளிதாகும், மேலும் வளரும் குழந்தைகளுக்கு வாழைப்பழம் ஒரு சிறந்த சத்தான உணவாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4863363c-c7ac-41c3-95e2-1f125e5b6af8/26-6a732e9e9c463.webp' /></p><p> </p><p>



வைத்தியர்களின் கூற்றுப்படி, உடல் எடையைக் கட்டுப்படுத்துவதிலும் நோய்களைத் தடுப்பதிலும் ஆப்பிள்கள் ஓரளவு மேம்பட்டவையாக இருக்கும் அதே வேளையில், உடற்பயிற்சிக்குப் பிறகு ஆற்றலையும், பொட்டாசியத்தையும் பெறுவதற்கு வாழைப்பழங்கள் சிறந்தவை எங்கிறார்கள்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-05T12:49:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜேர்மன் விமான நிலையத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மர்ம ட்ரோன்: விமான சேவை பாதிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/drone-found-near-ukraine-plane-at-germany-airport-1785933695"></link>
            <id>https://news.lankasri.com/article/drone-found-near-ukraine-plane-at-germany-airport-1785933695</id>
            <summary type="text">ஜேர்மன் விமான நிலையம் ஒன்றில், உக்ரைன் விமானம் ஒன்றினருகே மர்ம ட்ரோன் ஒன்று காணப்பட்டதால் பரபரப்பு


ஜேர்மனியின் Leipzig-Halle விமான நிலையத்தில், ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜேர்மன் விமான நிலையம் ஒன்றில், உக்ரைன் விமானம் ஒன்றினருகே மர்ம ட்ரோன் ஒன்று காணப்பட்டதால் பரபரப்பு
</p><p>

ஜேர்மனியின் Leipzig-Halle விமான நிலையத்தில், நேற்று நள்ளிரவு ட்ரோன்கள் ஏற்படுத்திய பரபரப்பால் விமான சேவைகள் பாதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகிவருகின்றன.
</p><h3>
விமான நிலையத்தில் மர்ம ட்ரோன்</h3><p>

ஜேர்மனியின் Leipzig-Halle விமான நிலையம் நோக்கி வந்துகொண்டிருந்த விமானம் ஒன்றின் முன்பகுதியில் ஏதோ மோதியதைத் தொடர்ந்து அந்த விமானம் Leipzig-Halle விமான நிலையத்தில் தரையிறங்காமல், Hanover விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/33d78501-f429-4937-84f9-21f11488e7df/26-6a732f8077e07.webp' /></p><p>அது ஒரு சரக்கு விமானம்.

வானில் மர்மப் பொருள் ஒன்று தென்பட்டதைத் தொடர்ந்து, பயணிகள் விமானம் ஒன்று உட்பட பல விமானங்கள் வேறு விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.&nbsp;</p><p></p><p>

இதற்கிடையில், விமான நிலையத்தில், ஓடுபாதை ஒன்றில் மர்மப் பொருள் ஒன்று கிடப்பது தெரியவரவே, வெடிகுண்டுகளை செயலிழக்கச் செய்யும் ரோபோ ஒன்று அங்கு செல்வதைக் காட்டும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/67cc270e-a383-423f-aad0-ef93544d82a2/26-6a732f812ae15.webp' /></p><p>
அதைத் தொடர்ந்து அங்கும் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
</p><p>
விடயம் என்னவென்றால், Leipzig-Halle விமான நிலையம், ஜேர்மன் ராணுவம் மற்றும் நேட்டோ ராணுவத்துக்கான ராணுவ தளவாடங்கள் போக்குவரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் விமான நிலையம் ஆகும்.
</p><p>
அதுமட்டுமின்றி, உக்ரைனும் ரஷ்யாவும் மாறி மாறி ட்ரோன்கள் மூலம் தாக்கிக்கொள்ளும் சூழலில், அந்த விமான நிலையம், உக்ரைன் நாட்டின் Antonov ஏர்லைன்ஸ் விமானங்களின் தளமாகவும் செயல்படுவதாலேயே அங்கு ட்ரோன்கள் காணப்பட்ட விடயம் பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-05T12:48:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[குழந்தைகள் விரும்பி உண்ணும் தக்காளி சாஸ்.., வீட்டிலேயே எப்படி செய்வது?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/tomato-ketchup-recipe-in-tamil-1785933962"></link>
            <id>https://news.lankasri.com/article/tomato-ketchup-recipe-in-tamil-1785933962</id>
            <summary type="text">தக்காளி சாஸ் என்பது தக்காளியை முக்கிய மூலப்பொருளாகக் கொண்டு தயாரிக்கப்படும் ஒரு சுவையூட்டும் உணவுப் பொருள். 

இதனை சாமோசா, பிரெஞ்ச் ஃப்ரைஸ், பர்கர்,...</summary>
            <content type="html"><![CDATA[<p>தக்காளி சாஸ் என்பது தக்காளியை முக்கிய மூலப்பொருளாகக் கொண்டு தயாரிக்கப்படும் ஒரு சுவையூட்டும் உணவுப் பொருள்.</p><p> 

இதனை சாமோசா, பிரெஞ்ச் ஃப்ரைஸ், பர்கர், சாண்ட்விச் போன்ற சில உணவுகளில் சுவை கூட்டுவதற்கு பயன்படுத்தப்படுகிறது.</p><p>

அந்தவகையில், வீட்டிலேயே சுவையான தக்காளி சாஸ் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.</p><p></p><h2>
தேவையான பொருட்கள்</h2><ul><li> 

தக்காளி- 1kg</li><li> 
வெங்காயம்- 1 துண்டு</li><li> 
பூண்டு- 2</li><li>
பட்டை- 1 துண்டு</li><li>
கிராம்பு- 2
</li><li>வினிகர்- ¼ கப்</li><li> 
சர்க்கரை- ¼ கப்</li><li> 
உப்பு- 1 ஸ்பூன் </li><li>
மிளகாய் தூள்- ½ ஸ்பூன்</li></ul><h2> 

செய்முறை </h2><p>

முதலில் ஒரு அடிகனமான பாத்திரத்தில் நறுக்கிய தக்காளி, வெங்காயம், பூண்டு, பட்டை, கிராம்பு சேர்த்து மூடி போட்டு மிதமான தீயில் 20 நிமிடம் வேகவைத்துக்கொள்ளவும்.
</p><p>
பின் இதனை நன்கு ஆறவைத்து அரைத்து வடிகட்டி எடுத்துக்கொள்ளவும்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6f2a39cc-0cc2-420e-a53d-905338b0b369/26-6a73308c4529c.webp' /></p><p>அடுத்து ஒரு பாத்திரத்தில் அரைத்த கலவை, வினிகர், சர்க்கரை, உப்பு, மிளகாய் தூள் சேர்த்து மிதமான தீயில் வைத்து கொதிக்கவைக்கவும்.
</p><p>
இறுதியாக நன்கு கெட்டியாகி வந்ததும் அடுப்பை அனைத்து ஆறவைத்தால் சுவையான தக்காளி சாஸ் தயார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-05T12:47:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜனாதிபதி அனுரவை சந்தித்த இராணுவத் தளபதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/army-commander-meets-president-anura-1785933967"></link>
            <id>https://jvpnews.com/article/army-commander-meets-president-anura-1785933967</id>
            <summary type="text">&amp;nbsp; ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை இலங்கை இராணுவத்தின் 26 ஆவது இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்ட லெப்டினன்ட் ஜெனரல் நிலந்த பிரேமரத்ன சந்தித்தார்....</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை இலங்கை இராணுவத்தின் 26 ஆவது இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்ட லெப்டினன்ட் ஜெனரல் நிலந்த பிரேமரத்ன சந்தித்தார்.



ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (05) பிற்பகல் இந்த சந்திப்பு இடம்பெற்றது.
</p><p>


புதிய இராணுவத் தளபதியாக பொறுப்பேற்றதன் பின்னர், லெப்டினன்ட் ஜெனரல் நிலந்த பிரேமரத்ன ஜனாதிபதியை உத்தியோகபூர்வமாகச் சந்திக்கும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/98914c7a-cd41-451d-996d-15e0bccad4f2/26-6a73309111a1a.webp' /></p><p></p><p>



தனது பதவியைப் பொறுப்பேற்றதன் பின்னர், அரச தலைவரைச் சந்திக்கும் சம்பிரதாயப்படி ஜனாதிபதி அலுவலகத்திற்கு வருகை தந்த இராணுவத் தளபதி, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுடன் சம்பிரதாய ரீதியாக நினைவுச் சின்னங்களைப் பரிமாறிக்கொண்டதுடன், இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்ட நிலந்த பிரேமரத்னவுக்கு ஜனாதிபதி தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-05T12:44:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்ற மத்திய மாகாண ஆளுநர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/harsha-suranga-fernando-central-province-governor-1785932534"></link>
            <id>https://tamilwin.com/article/harsha-suranga-fernando-central-province-governor-1785932534</id>
            <summary type="text">மத்திய மாகாணத்தின் புதிய ஆளுநராக ஓய்வுபெற்ற சமூக சுகாதார சிகிச்சை நிபுணரான ஹர்ஷ சுரங்க பெர்னாண்டோ&amp;nbsp;பதவியேற்றுள்ளார் இன்று(05.08.2026) ஜனாதிபதி செய...</summary>
            <content type="html"><![CDATA[<p>மத்திய மாகாணத்தின் புதிய ஆளுநராக ஓய்வுபெற்ற சமூக சுகாதார சிகிச்சை நிபுணரான ஹர்ஷ சுரங்க பெர்னாண்டோ&nbsp;பதவியேற்றுள்ளார்</p><p> இன்று(05.08.2026) ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முன்னிலையில் புதிய ஆளுநராகப் பதவியேற்றுக் கொண்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/23a820c4-0e4f-469c-a682-d4ff51d5aff4/26-6a732f52b8575.webp' /></p><p>இவர் உலக சுகாதார அமைப்பில் பல நாடுகளில் தடுப்பூசி நிபுணராகப் பணியாற்றியதோடு, கண்டி மாவட்டத்தின் சமூக மருத்துவராகவும் பணியாற்றியுள்ளார்.
</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-05T12:41:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டிலிருந்து தப்பியோடிய முன்னாள் ஜனாதிபதியின் மகனும் அவரது மனைவியும்..! தொழிலதிபரின் திருமணத்தில் கசிந்த தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/maithripala-sirisena-case-easter-attack-issue-1785914995"></link>
            <id>https://tamilwin.com/article/maithripala-sirisena-case-easter-attack-issue-1785914995</id>
            <summary type="text">முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோருக்கு வழங்கப்பட்ட மரண தண்டனையினால் முன்னாள் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோருக்கு வழங்கப்பட்ட மரண தண்டனையினால் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கவலையடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>

பிரபல தொழிலதிபரின் மகனின் திருமணத்திற்கு மைத்திரிபால சிறிசேன அழைக்கப்பட்டிருந்த நிலையில், மிகவும் கவலையான தோற்றத்தில் இருந்துள்ளமை பலராலும் அவதானிக்கப்பட்டுள்ளது.</p><p>இதன்போது மைத்திரிபாலவை நன்கு அறிந்தவர்கள் திருமணத்தில் பாடலொன்றினை பாடுமாறு வற்புறுத்திய நிலையில், அவர் அங்கு தந்தை மகனை பற்றிய பாடலை பாடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p></p><h2>நாட்டை விட்டு தப்பியோடிய முன்னாள் ஜனாதிபதியின் மகனும் மருமகளும்</h2><p>

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகன் தஹாம் சிறிசேனவும் அவரது மனைவியும் நாட்டை விட்டு தப்பிச்சென்றுள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வரும் நிலையில், மைத்திரிபாலவின் பாடல் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cf444d5a-9f2f-4ade-acac-4f75659d87e1/26-6a72fbb614f80.webp' /></p><p>

தஹாம் சிறிசேன மற்றும் அவரது மனைவியின் குடும்பத்தினருக்கு எதிராக 500 கோடி ரூபாய்க்கும் அதிகமான வரி மோசடி தொடர்பான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
</p><p>
இதன் காரணமாக அவர் நாட்டை விட்டுத் தப்பியோடியுள்ளதாக கூறப்படும் நிலையில், இந்த செய்தியை வெளியிட்ட ஊடக நிறுவனத்திடம் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பேசியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.</p><h2>பிரபல அரசியல்வாதியின் மகனும் தொடர்பு</h2><p>

இருப்பினும், இந்த மோசடியில் பிரபல அரசியல்வாதியின் மகனும் சம்பந்தப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகின்றது.</p><p>2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி இலங்கையில் நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு குண்டுத்தாக்குதல் தொடர்பான விசாரணையில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அரச புலனாய்வு பிரிவின் பிரதானி நிலந்த ஜயவர்தன, பூஜித் ஜயசுந்தர, ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோர் பிரதிவாதிகளாக இருந்த நிலையில்,முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோருக்கு&nbsp; மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.</p><p>

இந்நிலையில், மகன் தொடர்பில் பரவும் தகவல் மற்றும் ஈஸ்டர் ஞாயிறு குண்டுத்தாக்குதல் விவகாரம் போன்ற விடயங்களினால்&nbsp;மைத்திரிபால சிறிசேன பெரும் குழப்பத்தில் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.&nbsp;</p><p></p><p></p><p> &nbsp; &nbsp; &nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-08-05T12:35:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[குழந்தையின் வயிற்றின் வெளியே வளர்ந்த குடல் - கருவிலே அறுவை சிகிச்சை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/unborn-baby-has-pioneering-surgery-inside-womb-1785932623"></link>
            <id>https://news.lankasri.com/article/unborn-baby-has-pioneering-surgery-inside-womb-1785932623</id>
            <summary type="text">கருவில் உள்ள குழந்தையின் வயிற்றின் வெளியே குடல் வளர்ந்த பாதிப்பிற்கு, அந்த கரு வெளியே வரும் முன்னே அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கருவின் வய...</summary>
            <content type="html"><![CDATA[<p>கருவில் உள்ள குழந்தையின் வயிற்றின் வெளியே குடல் வளர்ந்த பாதிப்பிற்கு, அந்த கரு வெளியே வரும் முன்னே அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
</p><h3>
கருவின் வயிற்றின் வெளியே வளர்ந்த குடல்
</h3><p>
லண்டனைச் சேர்ந்த மெய்ஸி சாவேஜ் என்ற கர்ப்பிணி பெண், அவரது 20வது வார ஸ்கேன் பரிசோதனையின் போது, கருப்பையில் உள்ள குழந்தைக்கு காஸ்ட்ரோஸ்கிசிஸ் என்னும் வயிற்றுக்கு வெளியே குடல் வளரும் அரிய குறைபாடு இருந்ததை கண்டறிந்தனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/44d56a02-7dfd-4a17-b496-5900d3431683/26-6a732b516d167.webp' /></p><p>

 குழந்தைக்கு தீவிர காஸ்ட்ரோஸ்கிசிஸ் உள்ளதால் கருவில் இருக்கும் போதே அதற்கான அறுவை சிகிச்சை மேற்கொள்ள திட்டமிடப்பட்டது.
</p><p>
இதனையடுத்து, ஹூஸ்டனில் உள்ள ஸ்பைனா பிஃபிடா குறைபாடுள்ள குழந்தைகளுக்கான கரு அறுவை சிகிச்சையில் அனுபவமுள்ள மருத்துவர் மைக்கேல் பெல்ஃபோர்ட் தலைமையிலான குழு மூலம் அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய பரிந்துரைக்குப்பட்டது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3d47fde1-73e5-434b-8a17-844e62f21943/26-6a732b52c4a31.webp' /></p><p>
அதற்கு முன்னதாக பெல்ஜியத்தில் உள்ள லூவன் மருத்துவமனையில் தசைகளைத் தளர்த்தி, காயம் வெற்றிகரமாகக் குணமடைவதற்கான வாய்ப்புகளை மேம்படுத்துவதற்காக, மருத்துவர்கள் குழந்தையின் வயிற்றுச் சுவரில் போடோக்ஸ் ஊசியைச் செலுத்தினர்.
</p><p>
26வது வார கர்ப்ப காலத்தில் மெய்சிக்கு இந்த சிக்கலான அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.&nbsp;</p><p></p><p>

இதில், மெய்சியின் கருப்பை பகுதியளவு திறக்கப்பட்டு, அறுவை சிகிச்சைக்கான இடத்தை விரிவுபடுத்துவதற்காக, பனிக்குட நீர் வெளியேற்றப்பட்டு அதற்குப் பதிலாக கார்பன் டை ஆக்சைடு(CO2) வாயு செலுத்தப்பட்டது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/32388383-b983-4b37-97d0-7065376b8f8c/26-6a732b50af524.webp' /></p><p>
கீஹோல் அறுவை சிகிச்சை மூலம் கருவில் உள்ள குழந்தையின் உறுப்புகள் மெதுவாக அதனது வயிற்றுக்குள் மீண்டும் தள்ளப்பட்டு, தையல் போடப்பட்டது.</p><p> 

இதன் காரணமாக குழந்தை வெளியே வர இன்னும் 14 வாரங்கள் இருந்த நிலையில், மெய்சிக்கு சிசேரியன் தழும்பின் அளவை விட 2 மடங்கு பெரிய ஒரு தழும்பு ஏற்பட்டது. அவ்வபோது அந்த குழந்தை தழும்பை உதைத்து வலியை ஏற்படுத்தியுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a1032062-21b1-47d5-a794-bbc0a9f7de5f/26-6a732b5220603.webp' />&nbsp;</p><p>

அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிவடைந்த நிலையில், கடந்த பிப்ரவரியில் டெக்சாஸில் வைத்து சுகப்பிரசவத்தின் மூலம் ஆண் குழந்தை பிறந்துள்ளது.</p><p> 

இந்த சிகிச்சை முறையால் பயனடைந்த முதல் பிரித்தானிய குழந்தை இதுவாகும். மேலும் உலகளவில் பயனடைந்த மூன்றாவது குழந்தை ஆகும். 
 இந்த குழந்தைக்கு தியோ என பெயரிட்டுள்ளனர்.</p><p>கடுமையான வயிற்றுப் பிளவு குறைபாட்டுடன் பிறக்கும் குழந்தைகளுக்கு வழக்கமாகத் தேவைப்படும் மருத்துவ சிகிச்சையை விட, இந்த குழந்தைக்கு மிகக் குறைவான சிகிச்சையே தேவைப்பட்டது. </p><p>

குழந்தை நன்றாகக் குணமடைந்ததாகவும், பிறந்த உடனேயே இயல்பாகப் பால் குடிக்கத் தொடங்கியதாகவும், சில நாட்களிலேயே மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/db24f4e9-3899-4e4a-83ab-bbf2d4a5e297/26-6a732b5372ed4.webp' /></p><p>

காஸ்ட்ரோஸ்கிசிஸ் எனப்படும் இந்தக் கடுமையான பிறவிக் குறைபாடு, பிரித்தானியாவில் ஒவ்வொரு ஆண்டும் 3,000 குழந்தைகளில் ஒருவரைப் பாதிக்கிறது.</p><p> 

குழந்தைகளுக்கு வாரக்கணக்கில் தீவிர சிகிச்சைப் பிரிவும், குழாய் அல்லது சிரைவழி ஊட்டச்சத்து உணவூட்டமும், சரிசெய்யும் அறுவை சிகிச்சையும் தேவைப்படலாம்.

தியோவின் நிலைமை போன்ற மிகவும் சிக்கலான நேர்வுகளில், விளைவுகள் மிகவும் மோசமாக இருக்கும். </p><p>

இதன் காரணமாக, 6 மாதங்கள் வரை பச்சிளங்குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவில் தங்குதல், பல அறுவை சிகிச்சைகள், 2 ஆண்டுகள் வரை நரம்பு வழி ஊட்டச்சத்து அளித்தல் மற்றும் குடல் மாற்று அறுவை சிகிச்சை தேவைப்படலாம்.</p><p> மிக உயர்ந்த தரத்திலான மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டாலும், 10 குழந்தைகளில் ஒன்று உயிரிழக்க நேரிடுகிறது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-05T12:29:26+00:00</updated>
        </entry>
    </feed>
