<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-09-18T17:22:50+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[48 மணி நேர அடையாளப் போராட்டம் நிறைவு - கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டதாக அரசாங்கம்..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/48-hour-symbolic-protest-concludes-1789751559"></link>
            <id>https://tamilwin.com/article/48-hour-symbolic-protest-concludes-1789751559</id>
            <summary type="text">தொடருந்து பொது மேலாளரைப் பதவி நீக்கம் செய்வது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுக்காகத் தொடங்கப்பட்ட 48 மணி நேர அடையாளப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள...</summary>
            <content type="html"><![CDATA[<p>தொடருந்து பொது மேலாளரைப் பதவி நீக்கம் செய்வது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுக்காகத் தொடங்கப்பட்ட 48 மணி நேர அடையாளப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. </p><p>

இந்த போராட்டமானது, இன்று(18.09.2026) நள்ளிரவு முதல் நிறைவடையவுள்ளதாக இலங்கை தொடருந்து நிலைய அதிபர்கள் சங்கம் அறிவித்துள்ளது. </p><h2>

போராட்டம் நிறைவு</h2><p>
இந்தப் போராட்டம் வெற்றி பெற்றதாகவும், முந்தைய தொழிற்சங்கங்கள் செய்தது போன்று, மக்களைத் துன்புறுத்தி சீர்குலைக்கும் போராட்டத்தை நடத்தும் நோக்கம் தமக்கு இல்லை என்றும் அதன் தலைவர் சுமேத சோமரத்ன சுட்டிக்காட்டியுள்ளார்.&nbsp; &nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/107cd0c5-e8ac-4939-b1d3-ccb82336a5a1/26-6aad7138df729.webp' /></p><p></p><p></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-18T17:13:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுரேஷ் சலே தாக்கல் செய்த ரிட் மனு உத்தரவிற்கான திகதி அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/date-set-for-the-order-writ-petition-filed-sallay-1789751564"></link>
            <id>https://jvpnews.com/article/date-set-for-the-order-writ-petition-filed-sallay-1789751564</id>
            <summary type="text">உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கு அமைவாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தம்மைக் கைது செய்து தடுத்து வைத்துள்ளம...</summary>
            <content type="html"><![CDATA[<p>உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கு அமைவாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தம்மைக் கைது செய்து தடுத்து வைத்துள்ளமையை சவாலுக்குட்படுத்தி, அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே தாக்கல் செய்த ரிட் மனுவை விசாரணைக்கு ஏற்பதா? இல்லையா? என்பது தொடர்பான உத்தரவு நவம்பர் மாதம் 27 ஆம் திகதி அறிவிக்கப்படும் என மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது.</p><p> </p><p></p><p>நீண்ட பரிசீலனைகளின் பின்னர் வாய்மொழிச் சமர்ப்பணங்களை முன்வைப்பது இன்று (18) நிறைவுற்றதைத் தொடர்ந்து, மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவரான நீதியரசர் ரொஹான்த அபேசூரிய மற்றும் நீதியரசர் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய நீதியரசர்கள் குழாத்தினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/49205dbf-e3dc-40e4-894a-44d258d1f7b2/26-6aad710e26d46.webp' /></p><p>இன்றைய தினம் மனுதாரரான சுரேஷ் சலே சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சீவ ஜயவர்தனவின் பதில் வாய்மொழிச் சமர்ப்பணங்கள் முன்வைக்கப்பட்டு நிறைவுறுத்தப்பட்டன.</p><p> 

அதனைத் தொடர்ந்து, எழுத்துப்பூர்வ சமர்ப்பணங்கள் ஏதேனும் இருப்பின் அவற்றை அடுத்த மாதம் 20 ஆம் திகதிக்கு முன்னர் தாக்கல் செய்யுமாறு நீதிமன்றம் தரப்பினருக்கு உத்தரவிட்டது.</p><p> 

அதன் பின்னர், இம்மனுவை விசாரணைக்கு ஏற்பதா? இல்லையா? என்ற உத்தரவும் இடைக்கால நிவாரணக் கோரிக்கைகள் தொடர்பான உத்தரவும் நவம்பர் மாதம் 27 ஆம் திகதி அறிவிக்கப்படும் என்றும் நீதியரசர்கள் குழாம் திகதியிட்டது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-18T17:13:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[உச்சம் தொடும் பதற்றம்! சவூதியில் தரையிறங்கவுள்ள அமெரிக்காவின் 48 F-35 போர் விமானங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/48-usf35-fighter-jets-set-to-land-in-saudi-arabia-1789737625"></link>
            <id>https://ibctamil.com/article/48-usf35-fighter-jets-set-to-land-in-saudi-arabia-1789737625</id>
            <summary type="text">சவூதி அரேபியாவின் பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில், அந்நாட்டிற்கு 48 F-35 ரக போர் விமானங்களை விற்பனை செய்ய அமெரிக்க திட்டமிட்டுள்ளது.இந்த திட்டத்துக...</summary>
            <content type="html"><![CDATA[<p>சவூதி அரேபியாவின் பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில், அந்நாட்டிற்கு 48 F-35 ரக போர் விமானங்களை விற்பனை செய்ய அமெரிக்க திட்டமிட்டுள்ளது.</p><p>இந்த திட்டத்துக்கு டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது.
</p><p>
இந்த ஒப்பந்தம் அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கை மற்றும் தேசியப் பாதுகாப்பு இலக்குகளை வலுப்படுத்தும் என்று அமெரிக்க வெளியுறவுத் துறை அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.</p><p></p><h2>ஒப்பந்தத்தின் மதிப்பு</h2><p>
</p><p>
வெளிநாட்டு ஊடகங்களின் தகவலின்படி, இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு சுமார் 24.3 பில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/13426204-27fe-4aa6-9210-d6837a07d9b6/26-6aad5d1eb44f5.webp' /></p><p>

இதற்கிடையில், சவூதி அரேபியாவிற்குச் சொந்தமான F-15 ரக போர் விமானம் ஒன்றை ஏவுகணை மூலம் சுட்டு வீழ்த்தியதாக ஹவுதி அமைப்பு அறிவித்துள்ள சூழலில், அமெரிக்கா சவூதி அரேபியாவிற்கு 48 F-35 போர் விமானங்களை வழங்கியிருப்பது ஒரு குறிப்பிடத்தக்க அம்சமாகும்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp; செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-18T17:06:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Erimalai</name>
            </author>
            <title type="text"><![CDATA[தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் இருந்த ஒலிபெருக்கி உபகரணங்களை அகற்றிய காவல்துறை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/police-removed-the-speaker-thileepan-s-memorial-1789751090"></link>
            <id>https://ibctamil.com/article/police-removed-the-speaker-thileepan-s-memorial-1789751090</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில், உரிய அனுமதியின்றிப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறி ஒலிபெருக்கி சாதனங்களை யாழ்ப்பாணப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில், உரிய அனுமதியின்றிப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறி ஒலிபெருக்கி சாதனங்களை யாழ்ப்பாணப் காவல்துறையினர் அகற்றி சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் வாரத்தின் 4ஆம் நாள் நிகழ்வுகள் நினைவிடத்தில் அமைதியான முறையில் நடைபெற்றுக் கொண்டிருந்தபோதே இச்சம்பவம் அரங்கேறியுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.</p><p>திடீரென நினைவிடத்திற்கு வந்த யாழ்ப்பாணப் காவல்துறையினர் , பொது இடத்தில் ஒலிபெருக்கி சாதனங்களை இயக்குவதற்கு முறையான மற்றும் சட்டபூர்வமான அனுமதி பெறப்படவில்லை எனக் குறிப்பிட்டுள்ளனர்.</p><p></p><h2>நினைவேந்தல் நிகழ்வுகள்</h2><p> இதனைத் தொடர்ந்து, அங்கிருந்த ஒலிபெருக்கிகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய உபகரணங்களை உடனடியாகக் கழற்றி, காவல்துறை வாகனத்தில் ஏற்றி எடுத்துச் சென்றுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bb3feddc-12ca-4b06-80ea-fb0c61014757/26-6aad6f34f0e2c.webp' /></p><p>நினைவேந்தல் நிகழ்வுகள் நடந்துகொண்டிருந்த வேளையில் காவல்துறையினர்&nbsp; மேற்கொண்ட இந்த நடவடிக்கை, அங்கு கூடியிருந்தவர்கள் மத்தியிலும் அப்பகுதியிலும் சிறிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6368bf35-bc93-4a99-b50c-79956b6b83b9/26-6aad6f35ac79f.webp' /></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp; செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-18T17:05:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சவூதியில் அனோஜனிற்கு இறுதி நிமிடங்களில் நடந்த மறைக்கப்பட்ட உண்மைகள்..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/final-moments-for-anojan-in-saudi-arabia-1789750970"></link>
            <id>https://tamilwin.com/article/final-moments-for-anojan-in-saudi-arabia-1789750970</id>
            <summary type="text">சவூதி அரேபியாவில் உயிருக்கு போராடும் அனோஜனின் தாய் மற்றும் தந்தை, “எப்படியாவது எங்களுடைய மகனை மீட்டுத் தாருங்கள்” என இலங்கை அரசாங்கத்திடமும் மக்களிடமு...</summary>
            <content type="html"><![CDATA[<p>சவூதி அரேபியாவில் உயிருக்கு போராடும் அனோஜனின் தாய் மற்றும் தந்தை, “எப்படியாவது எங்களுடைய மகனை மீட்டுத் தாருங்கள்” என இலங்கை அரசாங்கத்திடமும் மக்களிடமும் கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p><p>

முகநூலில் பதிவிட்ட ஒரு பதிவுக்காக அனோஜனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக சிலர் தெரிவித்து வருகின்றனர். எனினும், அவருக்கு மரண தண்டனை விதிக்கப்படவில்லை என்றும், மாறாக 5 வருட சிறைத்தண்டனையும் 3,000 சவூதி ரியால் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளதாகவும் மற்றொரு தரப்பினர் கூறுகின்றனர்.
</p><p>
இவ்வாறு இருவேறு தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், உண்மை என்ன என்பது தொடர்பில் பலரும் குழப்பத்தில் உள்ளனர்.</p><p>

இந்நிலையில், அனோஜன் தான் செய்த தவறுக்காக மன்னிப்பு கோரி முகநூலில் காணொளியொன்றையும் வெளியிட்டுள்ளார்.</p><p>

அனோஜனுக்கு விதிக்கப்பட்டுள்ள தண்டனை என்ன? அவரை மீட்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளனவா? இந்த விடயம் தொடர்பில் மேலும் பல தகவல்களுடன், செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி ஆராய்கின்றது.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/jPMCFUTKFaI" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-18T17:03:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[சூடுபிடிக்கும் எயார்பஸ் விவகாரம்.. தப்பியோடிய நாமலின் உறவினர்களுக்கு இன்டர்போல் எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-rajapaksa-airbus-case-interpol-cid-1789735331"></link>
            <id>https://tamilwin.com/article/namal-rajapaksa-airbus-case-interpol-cid-1789735331</id>
            <summary type="text"> எயார்பஸ் கொள்வனவு இலஞ்ச ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் பிணை கோரிக்கை தொடர்பான...</summary>
            <content type="html"><![CDATA[<p> எயார்பஸ் கொள்வனவு இலஞ்ச ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் பிணை கோரிக்கை தொடர்பான உத்தரவு செப்டம்பர் 29ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. </p><p>அதுவரை அவரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு தலைமை நீதிவான் அசங்க எஸ். போதரகம உத்தரவிட்டதுடன், பாதுகாப்புத் தரப்பு செப்டெம்பர் 22க்குள்ளும், இலஞ்ச ஊழல் ஆணைக்குழு 25க்குள்ளும் எழுத்துப்பூர்வ சமர்ப்பிப்புகளை தாக்கல் செய்ய வேண்டும் எனப் பணித்தார்.</p><p>

வழக்கு விசாரணையின் போது முன்னிலையான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டார, பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் தொடரப்பட்ட வழக்கு தொடர்பிலும் நாமல் ராஜபக்ச விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.</p><h2>சமல் ராஜபக்சவிடம் வாக்குமூலம்</h2><p> </p><p>அத்துடன், முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்சவிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாகவும், அமெரிக்காவுக்குத் தப்பியோடிய ஷசீந்திர ராஜபக்ச மற்றும் அவுஸ்திரேலியாவுக்குத் தப்பியோடிய பிரியங்கா நியோமாலி விஜேநாயக்க ஆகியோருக்கு எதிராக இன்டர்போல் மூலம் 'சிவப்பு எச்சரிக்கை' (Red Notice) விடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fbddea59-2f6a-4f04-b5a6-9ca52b707b98/26-6aad3cdca58dd.webp' /></p><p> </p><p>மேலும், நாமல் ராஜபக்சவுக்கு பிணை வழங்குவதற்குரிய முக்கியமான சூழ்நிலைகள் எதுவும் முன்வைக்கப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>
நாமல் ராஜபக்ச சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி ஷவிந்திர பெர்னாண்டோ, எயார்பஸ் ஒப்பந்தம் தொடர்பான சர்வதேச விசாரணை அறிக்கையில் நாமலின் பெயர் இடம்பெறவில்லை என்றும், நிமல் பெரேராவின் வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>சர்வதேச பிடியாணை&nbsp;</h2><p> </p><p>அத்துடன், இந்திய அரசின் அழைப்பின் பேரில் இந்தியாவிற்குச் செல்லவிருந்த விஜயம் இரத்தாகின்றமை மற்றும் செப்டெம்பர் 26 அன்று ஹங்குரன்கெத்த விகாரையொன்றில் கொத்தணி சூட்டும் நிகழ்வில் பங்கேற்க முடியாமை ஆகியவற்றை சிறப்புச் சூழ்நிலைகளாகக் கருதி பிணை வழங்குமாறு கோரியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d9a2d4b1-6e37-472a-944f-4d2f6d1f88f2/26-6aad3cdd9806e.webp' /></p><p>

எனினும், இந்திய விஜயமோ அல்லது மதச் சடங்கோ பிணை வழங்குவதற்கான சிறப்புச் சூழ்நிலைகளாக அமையாது என இலஞ்ச ஊழல் ஆணைக்குழு சார்பில் முன்னிலையான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p> மேலும், "வெலிகம பே" சம்பவம் தொடர்பிலும் நிமல் பெரேராவின் கணக்கில் 175 மில்லியன் ரூபாவிற்கும் அதிக சந்தேகத்திற்கிடமான பணம் வைப்புச் செய்யப்பட்டுள்ளமை குறித்து விசாரணைகள் நடந்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார். </p><p>இருதரப்பு சமர்ப்பிப்புகளையும் பரிசீலித்த பின்னர் நீதிவான், நாமல் ராஜபக்சவை மேலும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.&nbsp;</p><p>you may like this</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/_7gpEcJPq9g" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p></p>]]></content>
            <updated>2026-09-18T16:56:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[சவுதி விமான தளம் மீது நடத்தப்பட்ட தாக்குதல்: சேதமடைந்த இத்தாலிய போர் விமானம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/italian-fighter-jet-get-attacked-in-saudi-1789750272"></link>
            <id>https://news.lankasri.com/article/italian-fighter-jet-get-attacked-in-saudi-1789750272</id>
            <summary type="text"> Italian Fighter Jet get attacked in Saudi: சவுதி விமான தளத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் இத்தாலிய போர் விமானம் சேதமடைந்து இருப்பது உறுதி செய்யப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p> Italian Fighter Jet get attacked in Saudi: சவுதி விமான தளத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் இத்தாலிய போர் விமானம் சேதமடைந்து இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.</p><h2> இத்தாலிய போர் விமானம் சேதம்</h2><p>ஹவுதி கிளர்ச்சியாளர்கள் படைக்கும் சவுதி அரேபியாவின் ராணுவத்திற்கும் இடையே மோதலானது தீவிரமடைந்து வருகிறது.</p><p> இந்த சூழ்நிலையில் வியாழக்கிழமை மேற்கு சவுதி அரேபியாவின் தைஃப் பகுதியில் அமைந்துள்ள கிங் பஹ்த் விமான தளத்தின் மீது வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டது.</p><p> இந்த தாக்குதலில் அங்கு நிறுத்தப்பட்டிருந்த இத்தாலிய ராணுவத்திற்கு சொந்தமான போர் விமானம் ஒன்று பலத்த சேதமடைந்துள்ளது.</p><p></p><p> இந்த தகவலை வெள்ளிக்கிழமை இத்தாலிய பாதுகாப்பு அமைச்சர் குவிடோ குரோசெட்டோ உறுதிப்படுத்தியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/27bf1d00-880a-4463-8fa7-010bbe0631ac/26-6aad6c022e425.webp' /></p><p> தாக்குதலுக்கு உள்ளான போர் விமானம், ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிரான கூட்டுப்படைக்காக இத்தாலியின் தரப்பாக வழங்கப்பட்ட போர் விமானம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> இதில் இத்தாலிய வீரர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும், வேறு எந்தவொரு உபகரணங்களும் சேதம் அடைய வில்லை என்றும் அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.</p><p> மேலும் பதற்றமான இந்த பகுதியில் இத்தாலிய வீரர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக நிலைமையை மிகவும் உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.</p><p><br></p>]]></content>
            <updated>2026-09-18T16:51:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வேகமாக உருகும் இமயமலை பனிப்பாறைகள் - பேரழிவுகள் அதிகரிக்கும் அபாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/himalayan-glaciers-near-dangerous-tipping-point-1789749105"></link>
            <id>https://news.lankasri.com/article/himalayan-glaciers-near-dangerous-tipping-point-1789749105</id>
            <summary type="text">Himalayan glaciers melting accelerates: இமயமலை பனிப்பாறைகள் வேகமாக உருகிவருகிறது.

புதிய ஆய்வு&amp;nbsp;எச்சரிக்கைஇமயமலைப் பனிப்பாறைகள் கடந்த பத்து ஆண்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>Himalayan glaciers melting accelerates: இமயமலை பனிப்பாறைகள் வேகமாக உருகிவருகிறது.</p><p>
</p><h2>
புதிய ஆய்வு&nbsp;எச்சரிக்கை</h2><p>இமயமலைப் பனிப்பாறைகள் கடந்த பத்து ஆண்டுகளை விட 65 சதவீதம் வேகமாக உருகி வருகின்றன என்று புதிய ஆய்வு எச்சரிக்கிறது.
</p><p>
இதனால் பனிப்பாறை ஏரிகள், நிலச்சரிவு, திடீர் வெள்ளம் போன்ற பேரழிவுகள் அதிகரிக்கும் அபாயம் உள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b43a4a35-0e31-4eb8-bba1-5f94b0a63e8b/26-6aad67742bf05.webp' /></p><p>தெற்கு ஆசியாவில் இருந்து வெளிப்படும் Black Carbon புகைத் துகள்கள், பனிப்பாறை உருக மூன்றில் ஒரு பங்கு காரணமாக உள்ளன. குறிப்பாக, செங்கல் அடுக்குகள் (brick kilns) மற்றும் தொழிற்சாலைகள் 32 முதல் 42 சதவீதம் வரை கார்பன் உமிழ்வை ஏற்படுத்துகின்றன. </p><p>இந்த துகள்கள் பனி மீது படிந்து, சூரிய வெப்பத்தை அதிகம் உறிஞ்சி, உருகலை வேகப்படுத்துகின்றன.
</p><p></p><h2>மிகுந்த ஆபத்தில் 56 ஏரிகள்&nbsp;</h2><p>இந்த அறிக்கை இந்தியாவில் உள்ள 189 ஆபத்தான பனிப்பாறை ஏரிகளை ஆய்வு செய்து, 56 ஏரிகள் மிகுந்த ஆபத்தானவை என வகைப்படுத்தியுள்ளது.</p><p> இவை உடைந்து போனால், கிராமங்கள், சாலைகள், பாலங்கள், அடிப்படை வசதிகள் அனைத்தும் திடீர் வெள்ளத்தால் பாதிக்கப்படலாம்.

மேலும், இமயமலைப் பகுதியில் சுமார் 40,000 பனிப்பாறைகள் உள்ளன.</p><p> ஆனால், 0.1 சதவீதம் மட்டுமே முறையாக கண்காணிக்கப்படுகின்றன. இதனால் எதிர்கால பேரழிவுகளை முன்கூட்டியே கணிக்க முடியாத நிலை உருவாகியுள்ளது.

இந்த மாற்றங்கள் மலைப்பகுதிகளை மட்டுமல்லாமல், தெற்காசியாவின் நீர்வளத்தையும் பாதிக்கின்றன. </p><p>2050-க்குள் பெரும்பாலான இமயமலை நதிகள் “peak water” நிலையை அடைந்து, பின்னர் நீர்வரத்து குறையும் அபாயம் உள்ளது. நூற்றாண்டின் இறுதிக்குள் பனிப்பாறைகளின் 80 சதவீதம் வரை இழக்கப்படும் அபாயம் உள்ளது.
</p><p></p><p>இமயமலை சூழல் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 20 சதவீதத்திற்கும் மேல் ஆதரவு அளிக்கிறது. விவசாயம், உணவு உற்பத்தி, மின்சாரம், சுற்றுலா, வாழ்வாதாரம் அனைத்தும் இதனைச் சார்ந்துள்ளன.
</p><p>
கார்பன் உமிழ்வை குறைப்பது, பனிப்பாறைகளை கண்காணிப்பது, முன்கூட்டிய எச்சரிக்கை அமைப்புகளை வலுப்படுத்துவது, வன மேலாண்மை மற்றும் நிலையான சுற்றுலா திட்டங்களை உருவாக்குவது அவசியம் என இந்த ஆய்வறிக்கை வலியுறுத்துகிறது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-18T16:28:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டை உலுக்கிய சம்பவம்; 17 வயது சிறுமி கூட்டுப்பாலியல் பலாத்காரம்; உடலை நாய்கள் தின்ற கொடூரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/teen-gang-raped-girl-in-delhi-body-eaten-dogs-1789735928"></link>
            <id>https://jvpnews.com/article/teen-gang-raped-girl-in-delhi-body-eaten-dogs-1789735928</id>
            <summary type="text">&amp;nbsp; இந்தியா டெல்லியில் 17 வயது சிறுமியை கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்து கொடூரமாக கொலை செய்த சம்பவம் நாட்டையே அதிர வைத்துள்ளது.

சம்பவம் தொடர்பி...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; இந்தியா டெல்லியில் 17 வயது சிறுமியை கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்து கொடூரமாக கொலை செய்த சம்பவம் நாட்டையே அதிர வைத்துள்ளது.</p><p>

சம்பவம் தொடர்பில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களில் மூன்று பேர் சிறுவர்கள் என கூறப்படுகின்றமை மேலும் அதிர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் தொடர்பில் இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளதாவது,</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3a9ad39f-abf2-4e68-94b7-6130fe663c63/26-6aad33f9af371.webp' /></p><h2>&nbsp;முக்கியக் குற்றவாளி மற்றும் மூன்று சிறார்கள் கைது</h2><p> </p><p>
 
 
செப்டம்பர் 13-ஆம் தேதி வடமேற்கு தில்லி ஸ்வரூப் நகர் பகுதியில் உள்ள திறந்தவெளி மைதானத்தில் அழுகிய நிலையில் மீட்கப்பட்ட பெண்ணின் உடல் குறித்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.</p><p></p><p>
</p><p> 
பாதிக்கப்பட்ட சிறுமியும், குற்றவாளிகளும் முன்பே அறிமுகமானவர்கள் என்பதும், அவர்கள் ஒரு டெம்போவில் பயணித்தபோது இந்த கொடூர சம்பவம் அரங்கேறியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.</p><p> 
சிறுமி மது அருந்த செய்து வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டு, கத்திகளால் குத்திக் கொல்லப்பட்ட பிறகு உடல் அங்கு வீசப்பட்டுள்ளது. 
 
நாய்கள் உடலை சேதப்படுத்தியிருந்ததால் ஆரம்பத்தில் அடையாளம் காண்பதில் சிரமம் ஏற்பட்டது.</p><p></p><p> </p><p>குடும்பத்தினர் புகாரளிக்காத நிலையில், சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து நூதன முறையில் துப்பு துலக்கப்பட்டது.

 
50-க்கும் மேற்பட்ட கேமராக்களை ஆராய்ந்து டெம்போவை கண்டறிந்த காவல் துறையினர், தீவிர தேடுதல் வேட்டைக்கு பிறகு முக்கியக் குற்றவாளி மற்றும் மூன்று சிறார்களை கைது செய்துள்ளதாக கூறப்படுகின்றது.</p><p></p><p>
</p><p>
17 வயது சிறுமி கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்ததுடன், கொலை செய்யப்பட்டு வீசி எறிந்த உடலை நாய்கள் தின்ற கொடூர சம்பவம் நடுங்க்க வைத்துள்ளது.&nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-09-18T16:20:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[சவுதியில் அனுஜனுக்கு எதிரான வழக்கு ; இலங்கை அரசு தீவிர கண்காணிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/case-anujan-saudi-arabia-srilanka-government-watch-1789748226"></link>
            <id>https://jvpnews.com/article/case-anujan-saudi-arabia-srilanka-government-watch-1789748226</id>
            <summary type="text">சவுதி அரேபியாவில் தற்போது நீதிமன்ற நடவடிக்கைகளை எதிர்கொண்டுள்ள இலங்கைச் பிரஜையான அனுஜன் சிவராசாவின் வழக்கை தாம் உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக வெளிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>சவுதி அரேபியாவில் தற்போது நீதிமன்ற நடவடிக்கைகளை எதிர்கொண்டுள்ள இலங்கைச் பிரஜையான அனுஜன் சிவராசாவின் வழக்கை தாம் உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு தெரிவித்துள்ளது.</p><p> </p><p></p><p>அமைச்சின் கூற்றுப்படி, ரியாத்தில் உள்ள இலங்கைத் தூதரகம் இவ்வழக்கின் முன்னேற்றங்களைப் பின்பற்றி வருவதோடு, கொழும்பிலுள்ள சவுதி அரேபியத் தூதரகத்துடனும் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f6ae1c6e-db96-414c-9196-b928f2d5e9c4/26-6aad640472f8e.webp' /></p><p> </p><p>

இராஜதந்திர வழிகள் ஊடாகச் சம்பந்தப்பட்ட சவுதி அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும், அனுஜனின் நலன்களைப் பாதுகாப்பதற்கு உரிய நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் அமைச்சு கூறியுள்ளது. </p><p>

நீதிமன்ற நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், குறித்த இலங்கைப் பிரஜைக்கு சாத்தியமான அனைத்து உதவிகளும் வழங்கப்பட்டு வருவதாகவும் அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-18T16:17:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[அனோஜன் சிவராசவுக்கு பொதுமன்னிப்பு வழங்குங்கள்! அலி சப்ரி வலியுறுத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/grant-a-general-amnesty-to-anojan-sivarasa-1789748071"></link>
            <id>https://ibctamil.com/article/grant-a-general-amnesty-to-anojan-sivarasa-1789748071</id>
            <summary type="text">ஆட்சேபகரமான சமூக ஊடகக் கருத்து ஒன்றின் காரணமாக தண்டனை விதிக்கப்பட்ட, இலங்கையைச் சேர்ந்த அனோஜன் சிவராசவுக்கு பொதுமன்னிப்பு வழங்குமாறு முன்னாள் வெளியுறவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஆட்சேபகரமான சமூக ஊடகக் கருத்து ஒன்றின் காரணமாக தண்டனை விதிக்கப்பட்ட, இலங்கையைச் சேர்ந்த அனோஜன் சிவராசவுக்கு பொதுமன்னிப்பு வழங்குமாறு முன்னாள் வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி வலியுறுத்தியுள்ளார்.</p><p>

ஐந்தாண்டு சிறைத் தண்டனை மரண தண்டனையாக அதிகரிக்கப்பட்டதாக வெளியான செய்திகளை தொடர்ந்து அவர் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
</p><p>
இதன்படி தெரிவிக்கப்பட்டுள்ள இந்த முன்னேற்றம் குறித்து ஆழ்ந்த கவலை தெரிவித்த சப்ரி, இலங்கையின் வெளியுறவு அமைச்சகம் மரண தண்டனையை உறுதிப்படுத்தவில்லை என்றும், முறையான எழுத்துப்பூர்வ தீர்ப்பு இன்னும் எதிர்பார்க்கப்படுகிறது என்றும் கூறியுள்ளார்.</p><p></p><h2>மௌனம் காக்க வேண்டியதில்லை</h2><p>
</p><p>
சவூதி அரேபியாவின் இறையாண்மை மற்றும் சட்ட அமைப்புக்கு மரியாதை அளிப்பதற்கு, நியாயமற்ற தண்டனைகளை எதிர்கொண்டு மௌனம் காக்க வேண்டியதில்லை, என்றும் சப்ரி தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b5a882e7-d3de-43b5-b55a-5dbc2f5a59f4/26-6aad636947ebc.webp' /></p><p>

புண்படுத்தும் சமூக ஊடகக் கருத்துக்காக ஐந்தாண்டு சிறைத் தண்டனை விதிப்பது வரம்பு மீறிய செயல் என்று விவரித்த அவர், இதுபோன்ற ஒரு செயலுக்கு மரண தண்டனை விதிப்பது மிகவும் விகிதாச்சாரமற்றது, மனிதாபிமானமற்றது மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>
சிவராசா சில நிமிடங்களிலேயே அந்தக் கருத்தை நீக்கிவிட்டு, பகிரங்கமான காணொளி மன்னிப்பு ஒன்றை வெளியிட்டதாக வந்த செய்திகள் தீவிரமாகப் பரிசீலிக்கப்பட வேண்டும் என்றும் சப்ரி கூறியுள்ளார்.
</p><p>
“ஒரு முஸ்லிமாக, நான் அல்லாஹ்வின் கருணையில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டுள்ளேன். 

நாம் அவனை அளவற்ற அருளாளனாகவும், நிகரற்ற அன்பாளனாகவும் போற்றுகிறோம். மனிதத் தவறுகளுக்கு நாம் பதிலளிக்கும் விதத்திலும் அந்த விழுமியங்களே வழிகாட்ட வேண்டும்,” என்று அவர் தெரிவித்துள்ளார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-18T16:15:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>H. A. Roshan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சவூதி அரேபியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தமிழரக் கட்சியிடம் கோரிக்கை - அனோஜனின் உயிரைக் காப்பாற்ற போராடும் இலங்கை மக்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/request-regarding-anojan-s-death-1789745713"></link>
            <id>https://tamilwin.com/article/request-regarding-anojan-s-death-1789745713</id>
            <summary type="text">சவூதி அரேபியாவில் மரண தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் இலங்கை
கிழக்கு மாகாணத்தை சேர்ந்த இளைஞன் சிவராசா அனோஜன் தொடர்பில் இலங்கை
அரசாங்கம...</summary>
            <content type="html"><![CDATA[<p>சவூதி அரேபியாவில் மரண தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் இலங்கை
கிழக்கு மாகாணத்தை சேர்ந்த இளைஞன் சிவராசா அனோஜன் தொடர்பில் இலங்கை
அரசாங்கமும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் உடனடியாக தலையிட்டு, அவரது உயிரைக் காப்பாற்றுவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.</p><p> 

இந்த விடயம் தொடர்பில், இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற குழுவினரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளதாகவும் இலங்கையின் தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்ட உப தலைவரும் தம்பலாகாமம் பிரதேச சபையின் உப தவிசாளருமான வி. விஜயகுமார் தெரிவித்துள்ளார்.
</p><p>
 ஊடகங்களுக்கு இன்று(18.09.2026) வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். </p><h2>

அனோஜனுக்கு மரண தண்டனை</h2><p>
மேற்படி அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்படுவதாவது, </p><p>


அனோஜனுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக
வெளியாகும் செய்திகள் மிகவும் கவலையளிக்கின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/43a74cbe-f331-4acf-8706-143226ec3a72/26-6aad61a39ba1b.webp' /></p><p> </p><p>ஒரு இலங்கையரின் உயிர்
தொடர்பான விடயம் என்பதால், இந்த விடயத்தை மனிதாபிமான அடிப்படையில் அணுக
வேண்டியது அவசியமாகும்.
</p><p>
அனோஜனின் குடும்பத்தினரின் நிலைமையையும் கருத்தில் கொண்டு, அவருக்கு சட்ட உதவி
கிடைப்பதற்கும், மரண தண்டனையை தவிர்ப்பதற்கான சட்ட மற்றும் இராஜதந்திர
முயற்சிகளை மேற்கொள்வதற்கும் இலங்கை அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க
வேண்டும்.
</p><p>
சவூதி அரேபிய அரசாங்கத்துடன் தேவையான இராஜதந்திர மட்டத்திலான
பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து, இந்த விடயத்திற்கு சாத்தியமான மனிதாபிமான
தீர்வொன்றை பெற்றுக்கொடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். </p><p>அனோஜனின் குடும்பத்தினர் அனுபவித்து வரும் துயரமான சூழ்நிலையை கருத்தில்
கொண்டு, அவர்களின் எதிர்பார்ப்புக்கு உரிய பதில் கிடைக்க வேண்டும். இந்த
விடயத்தில் அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-18T16:07:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[உக்ரைன் போர் தொடங்கிய பிறகு ரஷ்யாவில் நடக்கும் முதல் நாடாளுமன்ற தேர்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/russia-holds-first-election-since-ukraine-war-1789746803"></link>
            <id>https://news.lankasri.com/article/russia-holds-first-election-since-ukraine-war-1789746803</id>
            <summary type="text">Russia holds first election since Ukraine war: ரஷ்யாவில் நாடாளுமன்ற தேர்தல் இன்று தொடங்கியுள்ளது.

ரஷ்யாவில் நாடாளுமன்ற தேர்தல்2022-ஆம் ஆண்டு உக்ரைன...</summary>
            <content type="html"><![CDATA[<p>Russia holds first election since Ukraine war: ரஷ்யாவில் நாடாளுமன்ற தேர்தல் இன்று தொடங்கியுள்ளது.</p><h2>

ரஷ்யாவில் நாடாளுமன்ற தேர்தல்</h2><p>2022-ஆம் ஆண்டு உக்ரைன் போர் தொடங்கியதில் இருந்து, ரஷ்யாவில் முதல் முறையாக நாடாளுமன்ற தேர்தல் தொடங்கியுள்ளது.
</p><p>
செப்டம்பர் 18 முதல் 20 வரை மூன்று நாட்கள் நடைபெறும் இந்த தேர்தலில், சுமார் 111 மில்லியன் மக்கள் வாக்களிக்க தகுதியுடையவர்களாக உள்ளனர்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/602da3b1-e75c-4956-a17d-f1cfc7dfb56a/26-6aad5e753cf7e.webp' /></p><p>இந்த தேர்தல் மூலம் 450 இடங்களைக் கொண்ட ஸ்டேட் டூமா (State Duma) எனப்படும் நாடாளுமன்றம் தேர்ந்தெடுக்கப்படுகிறது. இதில் பாதி இடங்கள் கட்சிப் பட்டியல் மூலம், மற்ற பாதி தனிப்பட்ட தொகுதிகள் மூலம் நிரப்பப்படுகின்றன.</p><p>
வாக்குப்பதிவு முறைமைகள் பாரம்பரிய வாக்குச்சாவடிகள் மற்றும் மின்னணு வாக்குப்பதிவு ஆகிய இரண்டையும் உள்ளடக்கியதாக இருக்கும்.

யுனைடெட் ரஷ்யா கட்சி (United Russia Party) பெரும்பான்மையைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. </p><p></p><p>போருக்கு எதிராக வெளிப்படையாகக் குரல் கொடுத்த யாப்லோகோ கட்சி (Yabloko Party) கட்சிப் பட்டியலில் போட்டியிட அனுமதிக்கப்படவில்லை. சிலர் தனிப்பட்ட தொகுதிகளில் போட்டியிடுகின்றனர்.
</p><h2>
மக்கள் ஆதரவு</h2><p>ஜனாதிபதி விளாடிமிர் புடின், தொலைக்காட்சி உரையில், இந்த தேர்தலை ரஷ்ய படைகளுக்கு மக்கள் ஆதரவு காட்டும் நிகழ்வாக&nbsp;இருக்கும் என கூறினார்.</p><p> அவர், “உங்கள் வாக்கு, எங்கள் வீரர்களுக்கு பின்னால் கோடிக்கணக்கான மக்கள் நிற்கிறார்கள் என்பதை உலகிற்கு காட்டும்” என்று தெரிவித்தார் .</p><p></p><p>இந்த தேர்தல், ரஷ்யாவின் பொருளாதார சவால்களுக்கும், மேற்கத்திய தடைகளுக்கும், எரிபொருள் பற்றாக்குறைகளுக்கும் நடுவே நடைபெறுகிறது.</p><p> உக்ரைன் தாக்குதல்களால் ரஷ்யாவின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

மேலும், ரஷ்யா தன்னுடைய கட்டுப்பாட்டில் கொண்டதாகக் கூறும் உக்ரைனின் நான்கு பிராந்தியங்களிலும், கிரிமியாவிலும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.</p><p> உக்ரைன் அரசு, இந்த தேர்தலை சட்டவிரோதமானது எனக் கூறி, சர்வதேச சமூகத்தை அங்கீகரிக்க வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளது.
</p><p>
முதல் நிலை முடிவுகள் செப்டம்பர் 20 இரவு வெளியாகும் எனவும், முழுமையான முடிவுகள் செப்டம்பர் 21 அன்று அறிவிக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.&nbsp; &nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-18T16:06:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[சொந்த அத்தையைக் கழுத்தறுத்துக் கொன்ற 7 வயது சிறுவன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/7-year-old-boy-slits-own-aunt-throat-and-kills-her-1789747083"></link>
            <id>https://canadamirror.com/article/7-year-old-boy-slits-own-aunt-throat-and-kills-her-1789747083</id>
            <summary type="text">பிரான்ஸின் வால்-து-மார்ன் (Val-de-Marne) பகுதியில், 7 வயது சிறுவன் ஒருவன் தனது சொந்த அத்தையை கத்தியால் குத்தியதில், அவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரான்ஸின் வால்-து-மார்ன் (Val-de-Marne) பகுதியில், 7 வயது சிறுவன் ஒருவன் தனது சொந்த அத்தையை கத்தியால் குத்தியதில், அவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><p>சென்-மோர்-டெ-போஸ் (Saint-Maur-des-Fossés) நகரில் இன்று வெள்ளிக்கிழமை (செப்டெம்பர் 18) அதிகாலை சுமார் 4.45 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.</p><p>சம்பவம் தொடர்பான தகவல் கிடைத்ததும் காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். </p><p>அப்போது, வீதியில் பெண் ஒருவர் பலத்த காயங்களுடன் இரத்த வெள்ளத்தில் கிடந்ததையும், மற்றொரு பெண் துணியொன்றைப் பயன்படுத்தி அவரது கழுத்துப் பகுதியில் ஏற்பட்டிருந்த காயத்தில் இருந்து வெளியேறிய இரத்தத்தை கட்டுப்படுத்த முயன்றுகொண்டிருந்ததையும் காவல்துறையினர் அவதானித்துள்ளனர்.
</p><p>
அவர்களுக்கு அருகில் சிறுவன் ஒருவனும் நின்றுகொண்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/07d1c20f-cd37-4965-af6c-daec0b1c07e3/26-6aad5f8ce5041.webp' /></p><p>பலத்த காயமடைந்திருந்த பெண்ணுக்கு அவசரகால மருத்துவக் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து உயிரைக் காப்பாற்ற முயன்ற போதிலும், அதிகளவான இரத்தப்போக்கு காரணமாக அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
</p><p>
உயிரிழந்தவர் நதியா எஸ். (Nadia S.) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
</p><p>
காவல்துறையினரின் ஆரம்பகட்ட விசாரணைகளின்படி, உயிரிழந்த நதியாவுக்கு உதவி செய்ய முயன்ற பெண் அவரது சொந்த சகோதரியான யாஸ்மினா எஸ். (Yasmina S.) என்பதும், அவருக்கு அருகில் நின்றுகொண்டிருந்தது யாஸ்மினாவின் 7 வயது மகன் என்பதும் தெரியவந்துள்ளது.</p><p>விசாரணையில் கிடைத்த தகவல்களின்படி, வியாழக்கிழமை இரவு யாஸ்மினாவின் வீட்டிற்கு நதியா தங்குவதற்காக சென்றுள்ளார்.
</p><p>
இதன்போது, நள்ளிரவு வேளையில் தலைமுடியை நேராக்குவது (Hair straightening) தொடர்பாக இரு சகோதரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
வாக்குவாதம் பின்னர் கடும் சண்டையாக மாறியதுடன், நதியா தனது சகோதரியான யாஸ்மினாவை தாக்கியதாகவும் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p>

இந்தச் சம்பவத்தை பார்த்துக்கொண்டிருந்த யாஸ்மினாவின் 7 வயது மகன், திடீரென வீட்டின் குளியலறைக்குச் சென்று அங்கிருந்த கத்தியை எடுத்துக்கொண்டு வந்து நதியாவின் கழுத்துப் பகுதியில் குத்தியதாக விசாரணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
</p><p>
கத்திக்குத்துக்கு உள்ளான நதியா, உதவி கோரி வீட்டிலிருந்து வெளியேறி வீதியை நோக்கி ஓடியுள்ளார். </p><p>எனினும், சிறிது தூரம் சென்ற நிலையில் அவர் இரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்ததாகவும், பின்னர் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c97667ea-1e17-479b-b57e-3e128d426a6c/26-6aad5f8da14eb.webp' /></p><p>சம்பவத்தின் போது யாஸ்மினாவின் இடது மணிக்கட்டிலும் வெட்டுக் காயம் ஏற்பட்டுள்ளது. அவருக்கும் அவசரகால மருத்துவக் குழுவினர் சிகிச்சை வழங்கியுள்ளனர்.
</p><p>
அதேவேளை, 7 வயது சிறுவனின் உடலில் வெளிப்புற காயங்கள் எதுவும் காணப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>எனினும், சம்பவத்தைத் தொடர்ந்து சிறுவன் மருத்துவப் பரிசோதனைகளுக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
</p><p>
இந்தச் சம்பவம் தொடர்பில் பிரான்ஸ் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p>

ஒரு குடும்பத்திற்குள் ஏற்பட்டதாகக் கூறப்படும் தகராறு, எதிர்பாராத வகையில் வன்முறையாக மாறி, இறுதியில் 7 வயது சிறுவனின் கைகளால் அவரது சொந்த அத்தை உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-18T15:58:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[பெருங்காயத்தில் கலப்படம்! பாதிப்பை ஏற்படுத்துமா? மருத்துவ நிபுணர் அருண் குமார் விளக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/how-to-find-fake-asafetida-1789743506"></link>
            <id>https://manithan.com/article/how-to-find-fake-asafetida-1789743506</id>
            <summary type="text">இந்திய சமையலில் பரவலாகப் பயன்படுத்தப்படும் முக்கியமான நறுமணப் பொருட்களில் ஒன்றான பெருங்காயத்தின் தரம் மற்றும் அதில் மேற்கொள்ளப்படுவதாகக் கூறப்படும் கல...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்திய சமையலில் பரவலாகப் பயன்படுத்தப்படும் முக்கியமான நறுமணப் பொருட்களில் ஒன்றான பெருங்காயத்தின் தரம் மற்றும் அதில் மேற்கொள்ளப்படுவதாகக் கூறப்படும் கலப்படம் தொடர்பில் சமீப காலங்களில் பல்வேறு சந்தேகங்களும் கேள்விகளும் எழுந்துள்ளன.
</p><p>
குறிப்பாக, சந்தையில் விற்பனை செய்யப்படும் பெருங்காயத்தின் உண்மையான தரம், அதன் தயாரிப்பு முறைகள், அதில் வேறு பொருட்கள் கலக்கப்படுகிறதா என்பதுடன், அவ்வாறான கலப்படம் மனித உடல்நலத்திற்கு ஏற்படுத்தக்கூடிய பாதிப்புகள் குறித்தும் நுகர்வோர் மத்தியில் கவலை அதிகரித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d48e29e5-4fc0-4712-9574-190b5bc8f02d/26-6aad579708558.webp' /></p><p></p><p>
</p><p>
இந்த நிலையில், பெருங்காயத்தின் தரம், அதில் ஏற்படக்கூடிய கலப்படம் மற்றும் அதனைப் பயன்படுத்துவதால் ஏற்படக்கூடிய உடல்நலத் தாக்கங்கள் தொடர்பாக மருத்துவ நிபுணர் அருண் குமார் விளக்கம் அளித்துள்ளார்.</p><h2>மருத்துவ நிபுணரின் விளக்கம்&nbsp;</h2><p>

நுகர்வோர் பெருங்காயத்தை வாங்கும்போது அதன் தரம், தயாரிப்பு மற்றும் பொதியிடல் தொடர்பான தகவல்கள் உள்ளிட்டவற்றில் கவனம் செலுத்த வேண்டும் என்றும், சந்தேகத்திற்கிடமான அல்லது தரம் குறித்து உறுதிப்படுத்த முடியாத பொருட்களைப் பயன்படுத்துவதில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/eff23f2a-c54b-4554-9703-7747615964fe/26-6aad5797b33d6.webp' /></p><p>

மேலும், பெருங்காயத்தின் தரம் தொடர்பான சந்தேகங்கள் எழும்போது, அதனை வெறுமனே சமூக ஊடகங்களில் பரவும் தகவல்களின் அடிப்படையில் தீர்மானிக்காமல், உரிய அதிகாரப்பூர்வ தகவல்கள் மற்றும் மருத்துவ அல்லது உணவு பாதுகாப்பு நிபுணர்களின் ஆலோசனைகளைப் பெறுவது அவசியம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.</p><p>சந்தையில் கிடைக்கும் பெரும்பாலான பெருங்காயங்கள் தூய வடிவில் இருப்பதில்லை. விலையைக் குறைப்பதற்காகவும், அளவை அதிகரிப்பதற்காகவும் தூய பெருங்காயப் பசையுடன் (Pure resin)&nbsp;மைதா, கோதுமை மாவு அல்லது அரிசி மாவு போன்றவை குறிப்பிடத்தக்க அளவில் கலகக்கப்டுகின்றது.</p><p>

பெருங்காயத்தின் தரம் மற்றும் கலப்படம் தொடர்பாக பேசுகையில்,&nbsp;ஒரிஜினல் பெருங்காயம் வலுவான மற்றும் கடுமையான மணம் கொண்டதாக இருக்கும். எனவே இதனை அப்படியே பயன்படுத்த முடியாது என்பதால் தான் இவ்வாறு சில பொருட்கள் கலப்படும்.</p><p> ஆனால் சில பிரபல நிறுவனங்கள் பெருங்காயத்தின் ப்ளேவரை மாத்திரம் பயன்படுத்தி வெறுமனே&nbsp;மைதா, கோதுமை மாவு அல்லது அரிசி மாவு போன்றவை பெருங்காயம் என விற்பனை செய்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e039309e-7915-4602-b127-f40c1288ca38/26-6aad579866dba.webp' /></p><p></p><p>இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையமான FSSAI, தூய பெருங்காயம் மற்றும் “Compounded Hing” எனப்படும் கலவைப் பெருங்காயத்துக்கு தனித்தனி தரநிலைகளை வகுத்துள்ளதால் சில பிரபல நிறுவனங்களின்&nbsp;பெருங்காயத்தினை தடை செய்துள்ளது.</p><p>அதனை வாங்கி பயன்படுத்துவதால் உடல் ஆரோக்கியத்துக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்பதை தெளிவுப்படுத்தியுள்ளதுடன், இவ்வாறான கலப்படம் நிறுவனங்கள் தங்களின் லாப நோக்கத்துக்காக செய்தவை இது குறித்து விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றும் மருத்துவர் அருண்குமார் வலியுறுத்தியுள்ளார்.</p><p><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/reel/DdWLrhygdmg/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/reel/DdWLrhygdmg/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/reel/DdWLrhygdmg/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by Doctor Arunkumar, MBBS, MD(Ped), PGPN (Boston) (@doctor.arunkumar)</a></p></div></blockquote> <script async src="//www.instagram.com/embed.js"></script></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b>&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-18T15:38:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ்ப்பாணம்- கல்லுண்டாய் குப்பை மேட்டில் தீ: மக்கள் தொடர் போராட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/fire-at-jaffna-s-kallundai-garbage-dump-protest-1789743732"></link>
            <id>https://tamilwin.com/article/fire-at-jaffna-s-kallundai-garbage-dump-protest-1789743732</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் மாநகர சபைக்குட்பட்ட கல்லுண்டாய் குப்பை மேடு நேற்று மாலை 6 மணி
முதல் தீப்பற்றி எரிந்து வருவதால் அந்தப் பகுதியில் பெரும் பதற்றமான நிலை
ஏற்...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் மாநகர சபைக்குட்பட்ட கல்லுண்டாய் குப்பை மேடு நேற்று மாலை 6 மணி
முதல் தீப்பற்றி எரிந்து வருவதால் அந்தப் பகுதியில் பெரும் பதற்றமான நிலை
ஏற்பட்டுள்ளது.
</p><p>
தீ பரவி நீண்ட நேரமாகியும் அதனைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியாமல்
தீயணைப்புப் படையினர் தொடர்ந்து சிரமப்பட்டு வருகின்றனர்.
</p><p>
குப்பை மேட்டிலிருந்து எழும் அடர்ந்த புகையின் காரணமாக, அந்த வீதியால்
பயணிக்கும் வாகன ஓட்டிகளும் பாதசாரிகளும் மிகுந்த சிரமங்களை எதிர்நோக்கி
வருகின்றனர்.</p><h2>போராட்டம்</h2><p> </p><p>இதன் காரணமாக, மாநகர சபைக்கு எதிராக அப்பகுதி மக்கள் தொடர்
எதிர்ப்பை வெளியிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8ec7cfd8-f636-4ca4-a807-f0cb866fbead/26-6aad54704ecba.webp' /></p><p>

சம்பவ இடத்திற்கு வருகை தந்த வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையின் தவிசாளர்
கந்தையா யெசீதன், பாதிக்கப்பட்ட மக்களின் பக்கமே நின்று தான் செயற்படப் போவதாக
உறுதியளித்தார்.
</p><p>
மேலும், மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு வருகை
தந்து நிலைமையை நேரில் பார்வையிட்டனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-18T15:23:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நிதியுதவியை குறைத்த பிரித்தானிய அரசு - ஏழை நாடுகள் கடும் பாதிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/uk-aid-cuts-hit-poorest-nations-hardest-1789741548"></link>
            <id>https://news.lankasri.com/article/uk-aid-cuts-hit-poorest-nations-hardest-1789741548</id>
            <summary type="text">UK aid cuts hit poorest nations hardest: ஏழ்மையான நாடுகளுக்கான நிதியுதவியை பிரித்தானிய அரசு குறைத்துள்ளது.

ஏழை நாடுகள் கடும் பாதிப்புமுன்னாள் பிரதம...</summary>
            <content type="html"><![CDATA[<p>UK aid cuts hit poorest nations hardest: ஏழ்மையான நாடுகளுக்கான நிதியுதவியை பிரித்தானிய அரசு குறைத்துள்ளது.
</p><h2>
ஏழை நாடுகள் கடும் பாதிப்பு</h2><p>முன்னாள் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தலைமையிலான அரசின் நிதியுதவி குறைப்புகள், உலகின் மிக ஏழை நாடுகளை கடுமையாக பாதித்துள்ளன.
</p><p>
புதிய புள்ளிவிவரங்களின்படி, குறைந்த வருமான நாடுகளுக்கான நிதியுதவி 6.7 சதவீதம் குறைக்கப்பட்டு, 118 மில்லியன் பவுண்டு நிதி இழப்பு ஏற்பட்டுள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/70d148f1-7782-4cad-b828-7af808f1d33b/26-6aad49eeb177e.webp' /></p><p>2025-ஆம் ஆண்டில், பிரித்தானியாவின் மொத்த உதவி நிதி (Official Development Assistance) தேசிய வருமானத்தின் 0.44 சதவீதமாகக் குறைந்தது. இது 2024-இல் இருந்த 0.5 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் 987 மில்லியன் பவுண்டு குறைவு. </p><p>ஸ்டார்மர் அரசு, இந்த நிதியை பாதுகாப்புத் துறைக்கு மாற்றும் திட்டத்தை அறிவித்திருந்தது.
</p><p></p><p>Bond என்ற தொண்டு அமைப்பின் கொள்கை இயக்குநர் கிடியன் ராபினோவிட்ஸ், “இந்த நிதி குறைப்புகள் ஏழை நாடுகளுக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்துகின்றன. சியாரா லியோனில் தாய்மை சுகாதார சேவைகள், ஆப்பிரிக்காவில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான கல்வி திட்டங்கள் மூடப்படுகின்றன” என்று தெரிவித்தார்.</p><p>

உதவி நிதியின் மிகப்பெரிய பகுதி (18.4%) பிரித்தானியாவில் அகதிகளுக்கான செலவுகளுக்கு பயன்படுத்தப்பட்டது. உக்ரைன், ஏமன், ஆப்கானிஸ்தான் ஆகியவை முக்கிய உதவி பெறும் நாடுகளாகும். ஆனால், எதிர்காலத்தில் ஏமனுக்கு 28 சதவீதம் மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு 39 சதவீதம் குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
</p><p></p><p>அமெரிக்கா, ஐரோப்பா ஆகியவற்றின் உதவி குறைப்புகளும் சேர்ந்து, உலகளாவிய மனிதாபிமான அமைப்புகள் மிகப்பெரிய நிதி பற்றாக்குறையை சந்திக்கின்றன. கடந்த ஆண்டு, 64 மில்லியன் மக்கள் உதவி பெற முடியாமல் போனதாக Alnap அறிக்கை தெரிவித்துள்ளது.</p><p>

Bond அமைப்பு, புதிய பிரதமர் ஆன்டி பர்னாம், ஸ்டார்மர் அரசு மேற்கொண்ட உதவி குறைப்புகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-18T15:23:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[அனோஜன் சிவராசா குறித்து வெளிவிவகார அமைச்சின் சிறப்பு அறிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/special-statement-ministry-foreign-affairs-anojan-1789738611"></link>
            <id>https://ibctamil.com/article/special-statement-ministry-foreign-affairs-anojan-1789738611</id>
            <summary type="text">சவூதி அரேபியாவில் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொண்டு வரும் இலங்கை நாட்டவரான அனோஜன் சிவராசாவுக்கு, மேல்முறையீட்டுக்குப் பின்னர் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p>சவூதி அரேபியாவில் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொண்டு வரும் இலங்கை நாட்டவரான அனோஜன் சிவராசாவுக்கு, மேல்முறையீட்டுக்குப் பின்னர் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள விடயத்தை&nbsp;இலங்கை வெளிவிவகார அமைச்சு உன்னிப்பாகக் கவனித்து வருவதாகத் தெரிவித்துள்ளது.</p><p>

செப்டம்பர் 18 அன்று வெளியிடப்பட்ட அறிக்கையில், கொழும்பிலுள்ள சவூதி அரேபியத் தூதரகத்துடன் இணைந்து ரியாத்திலுள்ள இலங்கைத் தூதரகம் இவ்விவகாரம் தொடர்பான முன்னேற்றங்களைத் தொடர்ந்து கண்காணித்து வருவதாக அமைச்சு கூறியது.
</p><p>
ராஜதந்திர வழிகள் ஊடாக சவூதி அதிகாரிகளுடன் தொடர்பில் இருப்பதாகவும், சிவராசாவின் நலன்களைப் பாதுகாக்கவும் அவருக்கு இயன்ற அனைத்து உதவிகளையும் வழங்கவும் தகுந்த நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் அமைச்சு கூறியுள்ளது.</p><p></p><h2>மரண தண்டனை</h2><p>
இருப்பினும், அந்த அறிக்கையானது மரண தண்டனை விதிக்கப்பட்டதாகக் கூறப்படும் தகவலை உறுதிப்படுத்தவோ அல்லது அவர் மீதான குற்றச்சாட்டுகள், மேல்முறையீட்டின் முடிவு அல்லது அவரது தற்போதைய சட்ட நிலை குறித்த விவரங்களை வழங்கவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b3c89032-b4f0-42ea-be45-7f6a347eb44d/26-6aad5dd85b959.webp' /></p><p>
சவூதி அரேபியாவில் பணிபுரிந்தபோது சிவராசா சமூக ஊடகத்தில் பதிவிட்டதாகக் கூறப்படும் கருத்து ஒன்றிலிருந்தே இவ்வழக்கு தொடரப்பட்டது.</p><p>அக்குறிப்பிட்ட கருத்து இஸ்லாம் மதத்தையும் நபிகள் நாயகத்தையும் அவமதிப்பதாகக் கருதப்பட்டது.</p><p> இலங்கையிலுள்ள மத சமூகங்களுக்கு இடையிலான இணையவழி விவாதத்தின்போது அவர் அக்குறிப்பை வெளியிட்டதாக தெரியவருகிறது.</p><p>

ஜூலை 15 அன்று, சவூதி நீதிமன்றம் அவருக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 3 மில்லியன் சவூதி ரியால் அபராதமும் விதித்தது.</p><p></p><h2>இலங்கை வெளிவிவகார அமைச்சு</h2><p>இந்நிலையில் தண்டனையைக் குறைக்குமாறு கோரி, இலங்கை வெளிவிவகார அமைச்சின் ஆதரவுடன் அவரது சட்டத்தரணி பின்னர் மேல்முறையீடு செய்தார்.
</p><p>இதற்கமைய இடம்பெற்ற விசாரணைகளில் தற்போது அத்தண்டனை மரண தண்டனையாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக</p><p>அதிகரிக்கப்பட்ட தண்டனைக்கான சட்ட அடிப்படையை தெளிவுபடுத்தும் என எதிர்பார்க்கப்படும் அதிகாரப்பூர்வ எழுத்துமூலத் தீர்ப்பிற்காக இலங்கைத் தூதரகம் காத்திருப்பதாக கூறப்படுகிறது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-18T15:15:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடற்கரையில் கணவருடன் ரொமான்ஸ்.. நயன்தாரா லேட்டஸ்ட் புகைப்படங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/nayanthara-beach-photos-with-vignesh-shivan-1789743679"></link>
            <id>https://cineulagam.com/article/nayanthara-beach-photos-with-vignesh-shivan-1789743679</id>
            <summary type="text">நடிகை நயன்தாரா எப்போதும் அவரது குடும்பத்திற்கு முக்கியத்துடம் கொடுப்பவர். ஷூட்டிங்கில் பிசியாக இருந்தாலும் குழந்தைகள் கணவருடன் நேரம் செலவிட தவறுவதில்ல...</summary>
            <content type="html"><![CDATA[<p>நடிகை நயன்தாரா எப்போதும் அவரது குடும்பத்திற்கு முக்கியத்துடம் கொடுப்பவர். ஷூட்டிங்கில் பிசியாக இருந்தாலும் குழந்தைகள் கணவருடன் நேரம் செலவிட தவறுவதில்லை.</p><p>அடிக்கடி குடும்பத்துடன் அவர்கள் வெளிநாட்டுக்கு ட்ரிப் செல்லும் புகைப்படங்களையும் வெளியிட்டு வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f39ac487-ba7f-4472-a3ee-6ef3f02c51fe/26-6aad55e7bb849.webp' /></p><h2>கணவர் பிறந்தநாள்
</h2><p>தற்போது கணவர் விக்னேஷ் சிவன் பிறந்தநாளுக்கு கடற்கரையில் ரொமான்ஸ் செய்யும் புகைப்படங்களை நயன்தாரா வெளியிட்டு வாழ்த்து கூறி இருக்கிறார்.
</p><p>வைரலாகும் புகைப்படங்கள் இதோ.&nbsp;</p><p><br></p>]]></content>
            <updated>2026-09-18T15:01:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[தீவிரமடைந்துள்ள ஈரான் போர்: உலகத் தலைவர்களைச் சந்திக்கவுள்ள ட்ரம்ப்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/conflict-involving-iran-donald-trump-un-1789742345"></link>
            <id>https://tamilwin.com/article/conflict-involving-iran-donald-trump-un-1789742345</id>
            <summary type="text">ஈரானுடனான போர் ஏழாவது மாதமாக நீடித்து வரும் பின்னணியில், அமெரிக்க ஜனாதிபதி
டொனால்ட் ட்ரம்ப் ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தொடரில் உலகத்
தலைவர்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானுடனான போர் ஏழாவது மாதமாக நீடித்து வரும் பின்னணியில், அமெரிக்க ஜனாதிபதி
டொனால்ட் ட்ரம்ப் ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தொடரில் உலகத்
தலைவர்களைச் சந்திக்கவுள்ளார்.
</p><p>
ஈரானின் அணுசக்தி திட்டத்தை முழுமையாக அழித்துவிட்டதாக அமெரிக்கா அறிவித்த
போதிலும், அப்பிராந்தியத்தில் தொடரும் பதற்ற நிலைமை உலக நாடுகளிடையே பெரும்
சந்தேகத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.
</p><p>
ஹோர்முஸ் நீரிணை ஊடான எண்ணெய் விநியோகத்தை ஈரான் கட்டுப்படுத்தி வரும்
அதேவேளை, யேமனின் ஹூதி கிளர்ச்சியாளர்கள் செங்கடல் பகுதியில் தங்கள் பிடியை
இறுக்கியுள்ளனர்.</p><h2>எரிபொருள் விலைகள்&nbsp;</h2><p>
</p><p>
இதன் காரணமாக உலக அளவில் எரிபொருள் விலைகள் உயர்ந்து வருவதுடன், செங்கடல்
பகுதியில் அமெரிக்கக் கப்பல் போக்குவரத்துக்குப் பெரும் அச்சுறுத்தல்
ஏற்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5e5f4109-b50c-4015-a099-654b00d19149/26-6aad4f793e236.webp' /></p><p>
</p><p>
ஹூதிகளுக்கு எதிராக நேரடி இராணுவ நடவடிக்கை எடுக்க அமெரிக்கா தயங்குவது,
வளைகுடா பிராந்திய நட்பு நாடுகளிடையே அதிருப்தியை உருவாக்கியுள்ளது.</p><p>

அமெரிக்காவில் எரிபொருள் விலை உயர்வு மற்றும் பொருளாதாரப் பாதிப்புகள் காரணமாக
ஜனாதிபதி ட்ரம்பின் செல்வாக்கு சரிவடைந்து வரும் நிலையில், வரவிருக்கும்
இடைக்காலத் தேர்தலிலும் இது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என
எதிர்பார்க்கப்படுகின்றது.</p><h2>பேச்சுவார்த்தை&nbsp;</h2><p>
</p><p>
ஐரோப்பிய மற்றும் ஆசிய நட்பு நாடுகளின் ஆதரவின்றி ஆரம்பிக்கப்பட்ட இந்தப்
போர், தற்போது இருதரப்புக்கும் இடையே இழுபறி நிலையாக மாறியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/634f602b-d659-4787-aba6-de751831fa0b/26-6aad4f79e9fa6.webp' /></p><p>
எதிர்வரும் வாரம் நியூயோர்க்கில் நடைபெறவுள்ள ஐ.நா பொதுச் சபைக் கூட்டத்தின்
போது, வளைகுடா நாடுகளின் தலைவர்களைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்த
ட்ரம்ப் திட்டமிட்டுள்ளார்.
</p><p>
எனினும், போரை விரைவில் முடிவுக்குக் கொண்டுவருவது அமெரிக்காவிற்குப் பெரும்
சவாலாகவே அமையும் என அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-18T14:49:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுரேஷ் சலே மனு தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றம் முக்கிய உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/appeals-court-to-rule-on-suresh-sallay-s-1789741127"></link>
            <id>https://tamilwin.com/article/appeals-court-to-rule-on-suresh-sallay-s-1789741127</id>
            <summary type="text">உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (PTA) கீழ் தாம் கைது செய்யப்பட்டு தடுத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (PTA) கீழ் தாம் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டதை எதிர்த்து முன்னாள் அரச புலனாய்வுச் சேவை (SIS) பணிப்பாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) சுரேஷ் சலே ரிட் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.
</p><p>
குறித்த மனுவை தொடர்ந்து விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்கான அனுமதி வழங்குவதா என்பது தொடர்பான உத்தரவை நவம்பர் 27ஆம் திகதி பிறப்பிக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
</p><h2>&nbsp;ரிட் மனு</h2><p>
மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் நீதியரசர் ரோஹந்த அபேசூரிய மற்றும் நீதியரசர் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய இரு நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இன்று (18) இந்த மனு பரிசீலிக்கப்பட்டது.
</p><p>
இதன்போது, வழக்கு தொடர்பான வாய்மூல சமர்ப்பணங்கள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, குறித்த உத்தரவு நவம்பர் 27ஆம் திகதி வழங்கப்படும் என நீதிமன்றம் அறிவித்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9bb72dcc-db6e-4d74-8c9d-2a76fea99668/26-6aad4d16bf6e2.webp' /></p><p>
</p><p>மனுதாரரான சுரேஷ் சலே சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சீவ ஜயவர்தன, இன்று தனது பதில் சமர்ப்பணங்களை நிறைவு செய்தார்.</p><p>

மேலும், வழக்கில் தொடர்புடைய தரப்பினர் தங்களது எழுத்துமூல சமர்ப்பணங்களை எதிர்வரும் ஒக்டோபர் 20ஆம் திகதிக்குள் தாக்கல் செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
</p><p>
மனுவை தொடர்ந்து விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்கான அனுமதி வழங்குவதா என்பது தொடர்பான உத்தரவுடன், இடைக்கால நிவாரணம் கோரி முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகள் தொடர்பான தீர்மானமும் நவம்பர் 27ஆம் திகதி அறிவிக்கப்படும் என நீதியரசர்கள் குழாம் தெரிவித்துள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-18T14:39:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[இவர் கத்ரீனா கைஃப் தானா? உடல் எடை விமர்சனத்துக்கு கத்ரீனா அளித்த நெத்தியடி பதில்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/why-did-katrina-kaif-s-face-changed-new-look-viral-1789737792"></link>
            <id>https://manithan.com/article/why-did-katrina-kaif-s-face-changed-new-look-viral-1789737792</id>
            <summary type="text">பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப்பின் சமீபத்திய புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருவதுடன், அவரது உடல் எடை குறித்து விமர்சனங்களும் எழு...</summary>
            <content type="html"><![CDATA[<p>பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப்பின் சமீபத்திய புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருவதுடன், அவரது உடல் எடை குறித்து விமர்சனங்களும் எழுந்துள்ளது.</p><p>அவரது தோற்றத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம் குறித்து ரசிகர்கள் பல்வேறு கருத்துகளைப் பதிவிட்டு வரும் நிலையில், அவர் அளித்துள்ள பதில் இணையத்தில் வைரலாகி வருகின்றது. பிரசவத்துக்குப் பிறகு தனது உடல் மற்றும் சருமத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்து கத்ரீனா மனம் திறந்து பேசியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/50e48c0f-8fc8-47ef-bd9e-2b1a54939018/26-6aad4cbed3865.webp' /></p><h2>&nbsp;நடிகை கத்ரீனா கைஃப்</h2><p>

2003ஆம் ஆண்டு வெளியான ‘பூம்’ திரைப்படம் மூலம் பாலிவுட்டில் நடிகையாக அறிமுகமானவர் கத்ரீனா கைஃப். தொடர்ந்து ஷாருக்கான், சல்மான் கான், ஆமீர்கான், ஹிருத்திக் ரோஷன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.
</p><p>
குறிப்பாக, ஹிருத்திக் ரோஷன் நடிப்பில் வெளியான ‘அக்னிபத்’ திரைப்படத்தில் கத்ரீனா ஆடிய நடனம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. அதேபோல், ஆமீர்கானுடன் இணைந்து நடித்த ‘தூம் 3’ திரைப்படத்திலும் அவரது நடனம் வெகுவாகப் பேசப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cd5673e8-4a0c-4a08-beeb-5219eb851562/26-6aad4cbf862a7.webp' /></p><p>
</p><p>
கத்ரீனா கைஃப் கடைசியாக விஜய் சேதுபதியுடன் இணைந்து ‘மெரி கிறிஸ்துமஸ்’ திரைப்படத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர் அவரது நடிப்பில் எந்தப் புதிய திரைப்படமும் வெளியாகவில்லை. இதனால் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக அவரை வெள்ளித்திரையில் ரசிகர்கள் காண முடியவில்லை.
</p><p>
இதற்கிடையே, 2021ஆம் ஆண்டு பாலிவுட் நடிகர் விக்கி கௌஷலை திருமணம் செய்துகொண்ட கத்ரீனா கைஃப், கடந்த ஆண்டு இறுதியில் ஆண் குழந்தைக்கு தாயானார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0a946281-5cf2-4007-96ff-d1f0ee56785b/26-6aad4cc03cadb.webp' /></p><p> </p><p>அந்தக் குழந்தைக்கு விஹான் கௌஷல் என பெயரிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பிரசவத்துக்குப் பின்னர் கத்ரீனாவின் உடல் எடையில் மாற்றம் ஏற்பட்டது. இதனால் அவரது தோற்றத்திலும் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டுள்ளது&nbsp;</p><p>சமீபத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கத்ரீனா கலந்துகொண்டார். அப்போது எடுக்கப்பட்ட அவரது புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின.</p><p></p><h2>விமர்சனத்துக்கு கத்ரீனா அளித்த பதில்</h2><p>
</p><p>
அந்தப் புகைப்படங்களைப் பார்த்த சில ரசிகர்கள், “இவர் கத்ரீனா கைஃப் தானா?” என ஆச்சரியத்துடன் கருத்துகளைப் பதிவிட்டனர். அதேவேளை, அவரது தோற்றம் குறித்து சமூக வலைதளங்களில் விமர்சனங்களும் எழுந்தன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/973c739c-2a40-4840-88a9-51e0189773ca/26-6aad4cc0e82e3.webp' /></p><p>

இந்நிலையில், தன் மீதான விமர்சனங்கள் குறித்து அண்மைய பேட்டி ஒன்றில் பேசிய கத்ரீனா, பிரசவத்துக்குப் பிறகு தனது சருமம் மிகவும் சென்சிட்டிவாக மாறியதாக தெரிவித்துள்ளார்.</p><p>

இதுகுறித்து அவர் கூறுகையில், “பிரசவத்துக்குப் பிறகு என்னுடைய சருமம் மிகவும் சென்சிட்டிவாக மாறிவிட்டது. எனது சருமத்துக்கு எது சிறந்தது என்பதை கண்டுபிடிப்பது எனக்கு சவாலாக இருந்தது. என் சருமத்துக்கு இதமளிக்கும் மற்றும் புத்துணர்வு தரும் பொருட்களைத் தேடி கண்டுபிடித்தேன்” என தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/86fd1504-6356-4208-ab2b-7ba94bccd842/26-6aad4cc19bbba.webp' /></p><p></p><p>
</p><p>
மேலும், தனது உடல் எடை குறித்து முன்வைக்கப்படும் விமர்சனங்கள் பற்றியும் கத்ரீனா பேசியுள்ளார்.

“நான் மாடலிங் துறையில் நுழைந்தபோது, அழகு என்பதற்கு பல்வேறு வரையறைகளும் அளவுகோல்களும் இருந்தன. என்னைப் பொறுத்தவரை, சிறந்த தோற்றத்துடன் இருப்பது எனக்கு நல்ல உணர்வைத் தருகிறது. </p><p>ஒருவர் ஆரோக்கியமாக உணரும்போது, அந்தத் தன்னம்பிக்கை இயல்பாகவே வெளிப்படும் என்று நான் நினைக்கிறேன்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கத்ரீனாவின் இந்தப் பேச்சும், அவரது சமீபத்திய புகைப்படங்களும் தற்போது சமூக வலைதளங்களில் பெரிதும் கவனம் ஈர்த்து வருகின்றது.</p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW&nbsp;</a></u></b>&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-18T14:38:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிக்ஸர் மழைபொழிந்த உகாண்டா வீரர்! நொறுங்கிய கென்யா அணி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/uganda-player-olipa-gerald-95-in-52-balls-1789742221"></link>
            <id>https://news.lankasri.com/article/uganda-player-olipa-gerald-95-in-52-balls-1789742221</id>
            <summary type="text">Olipa Gerald 95 runs vs kenya: கென்யா அணிக்கு எதிரான டி20 போட்டியில் உகாண்டா 47 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

ஆப்பிரிக்க கண்ட கிண்ணப் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Olipa Gerald 95 runs vs kenya: கென்யா அணிக்கு எதிரான டி20 போட்டியில் உகாண்டா 47 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. </p><p>

ஆப்பிரிக்க கண்ட கிண்ணப் போட்டியில் உகாண்டா அணி 47 ஓட்டங்கள் வித்தியாசத்தில் கென்யாவை வீழ்த்தியது.
</p><h2>
ஒலிபா ஜெரால்ட்</h2><p>உகாண்டா மற்றும் கென்யா அணிகளுக்கு இடையிலான ஆப்பிரிக்க கண்ட கிண்ண டி20 போட்டி கிகாலி சிட்டியில் நடந்தது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/46dc159f-6ef4-44db-b6e5-e371f744e72c/26-6aad4d19b634a.webp' />&nbsp;</p><p></p><p> 

முதலில் ஆடிய உகாண்டா அணியில் சரவெடி ஆட்டம் ஆடிய ஒலிபா ஜெரால்ட் (Olipa Gerald), 52 பந்துகளில் 8 சிக்ஸர்கள் மற்றும் 6 பவுண்டரிகளுடன் 95 ஓட்டங்கள் விளாசினார். </p><p>

அணித்தலைவர் ரியாஸத் அலி ஷா 19 பந்துகளில் 32 ஓட்டங்கள் விளாச, உகாண்டா அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 197 ஓட்டங்கள் குவித்தது.&nbsp;</p><h2>உகாண்டா வெற்றி </h2><p>

பின்னர் ஆடிய கென்யா 19 ஓவர்களில் 150 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆக, உகாண்டா அணி 47 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.</p><p>

கென்யா அணியில் அதிகபட்சமாக ராகேப் பட்டேல் 33 ஓட்டங்களும், சச்சின் கில் 22 ஓட்டங்களும் எடுத்தனர். </p><p>ஜுமா மியாகி மற்றும் எனோக் காசைஜா தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.&nbsp;மியூசிங்யுசி மற்றும் பகுமா தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6fb8e050-f3a5-4259-8a82-dd400ff7348c/26-6aad4d1a723bf.webp' /></p>]]></content>
            <updated>2026-09-18T14:36:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நிலவில் புதிய பள்ளம்; நூற்றாண்டில் ஒரு முறை! நாசா வெளியிட்ட தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/new-crater-moon-once-century-event-nasa-1789736506"></link>
            <id>https://jvpnews.com/article/new-crater-moon-once-century-event-nasa-1789736506</id>
            <summary type="text">&amp;nbsp; நிலவின் மேற்பரப்பில் 222 மீட்டர் அகலம் கொண்ட புதிய விண்கல் பள்ளம் ஒன்றை அமெரிக்க விண்வெளி Research அமைப்பான நாசா கண்டுபிடித்துள்ளது.

கடந்த 2...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; நிலவின் மேற்பரப்பில் 222 மீட்டர் அகலம் கொண்ட புதிய விண்கல் பள்ளம் ஒன்றை அமெரிக்க விண்வெளி Research அமைப்பான நாசா கண்டுபிடித்துள்ளது.
</p><p>
கடந்த 2024 ஆம் ஆண்டில் விண்கல் ஒன்று நிலவின் மீது மோதியதன் காரணமாகவே இந்தப் பள்ளம் உருவாகியுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/918eccab-bc6c-406d-89dc-78a5fa8cc104/26-6aad363ba9ced.webp' /></p><p>

இதுபோன்ற மிகப்பெரிய விண்கல் தாக்கங்கள் ஒரு நூற்றாண்டில் ஒருமுறை மட்டுமே நிகழக்கூடிய மிக அரிய நிகழ்வாகும் என்று ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.</p><p></p><p>

நிலவில் புதிதாகக் கண்டறியப்பட்டுள்ள இந்த விண்கல் பள்ளத்திற்கு 'McGetchin' எனப் பெயரிடப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p>]]></content>
            <updated>2026-09-18T14:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாடு கடத்தப்படவுள்ள பசில்! இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள செயன்முறை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/basil-rajapaksa-set-to-be-deported-1789734914"></link>
            <id>https://ibctamil.com/article/basil-rajapaksa-set-to-be-deported-1789734914</id>
            <summary type="text">முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவை அமெரிக்காவிலிருந்து இலங்கைக்கு நாடு கடத்தும் முறைசார்ந்த செயல்முறை தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவை அமெரிக்காவிலிருந்து இலங்கைக்கு நாடு கடத்தும் முறைசார்ந்த செயல்முறை தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>பல்வேறு குற்றவியல் வழக்குகள் மற்றும் நிதி முறைகேடுகள் தொடர்பாக நீதிமன்றங்களால் பிறப்பிக்கப்பட்ட கைது பிடியாணைகள் குறித்து முன்னிலையாப தவறியதன் காரணமாக அவருக்கு சர்வதேச பிடியானை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.</p><p>இந்த விடயத்தை தென்னிலங்கை ஊடகமொன்று காவல்துறையை மேற்கோள்காட்டி செய்தி வெளியிட்டுள்ளது.</p><p></p><h2>INTERPOL உதவி</h2><p>லொஸ் ஏஞ்சல்ஸில் வசித்து வருவதாகக் கூறப்படும் முன்னாள் அமைச்சரை இலங்கை நீதிமன்றங்களில் முன்னிலைப்படுத்த INTERPOL உதவியையும், சிவப்பு அறிவிப்பையும் கோருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1ab31da5-f8b9-4eae-bad9-1a9b79e0683b/26-6aad5a552bebd.webp' /></p><p> </p><p>இலங்கைக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் நிலவும் இருதரப்பு நாடு கடத்தல் ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்த இராஜதந்திர நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
</p><p>
மாத்தறை பகுதியில் காணி கொள்வனவு தொடர்பாக பல மில்லியன் ரூபாய் பெறுமதியான நிதி முறைகேடுகள் இடம்பெற்றதாக நிதிக் குற்ற விசாரணைப் பிரிவு (FCID) தாக்கல் செய்துள்ள வழக்குகளுடன் தொடர்புடைய நீதிமன்ற நடவடிக்கைகளில் முன்னிலையாக தவறியதன் காரணமாகவே இந்தக் கடுமையான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
</p><p>
அவர் அமெரிக்கக் குடிமகனாக இருந்தாலும், குறித்த இருதரப்பு ஒப்பந்தத்தின் சட்ட விதிகளின் அடிப்படையிலும், வெளிவிவகார அமைச்சுக்கும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்திற்கும் இடையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் இரகசிய கடிதப் பரிமாற்றங்களின் ஊடாகவும் நாடு கடத்தல் கோரிக்கை முறைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><h2>சர்வதேச சட்ட நடவடிக்கை&nbsp;</h2><p>

எவ்வாறாயினும், இந்த சர்வதேச சட்ட நடவடிக்கை தானாகவே கைது செய்வதற்கோ அல்லது அவரை இலங்கைக்கு அழைத்து வருவதற்கோ வழிவகுக்காது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ec58a2f3-980b-4a67-b94a-a6f19c4c762d/26-6aad5a562bd32.webp' /></p><p> </p><p>சம்பந்தப்பட்ட அமெரிக்க சட்ட நடைமுறைகள் மற்றும் சமர்ப்பிக்கப்படும் ஆதார ஆவணங்கள் பரிசீலிக்கப்பட்ட பின்னரே அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பில் தீர்மானிக்கப்படும்.
</p><p>
இத்தகைய உயர்மட்ட அரசியல் பிரமுகர் ஒருவருக்கு எதிராக சர்வதேச அளவில் சட்ட நடைமுறையாக்க&nbsp; நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படுவது, இலங்கையின் நீதித்துறை வரலாற்றிலும் ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகளிலும் முக்கியமான திருப்புமுனையாக அமையும் என தெரிவிக்கப்படுகிறது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-18T14:29:24+00:00</updated>
        </entry>
    </feed>
