<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-07-21T09:12:35+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[உத்திர நட்சத்திரத்தில் சுக்கிரன்.., கோடிகளை அள்ளப்போகும் 3 ராசிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/3-zodiac-get-money-due-to-sukran-peyarchi-1784624269"></link>
            <id>https://news.lankasri.com/article/3-zodiac-get-money-due-to-sukran-peyarchi-1784624269</id>
            <summary type="text">நவகிரகங்களில் ஆடம்பர கிரகமாக விளங்ககூடியவர் சுக்கிரன் பகவான்.

இவர் காதல், ஆடம்பரம், சொகுசு, அழகு உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார்....</summary>
            <content type="html"><![CDATA[<p>நவகிரகங்களில் ஆடம்பர கிரகமாக விளங்ககூடியவர் சுக்கிரன் பகவான்.</p><p>

இவர் காதல், ஆடம்பரம், சொகுசு, அழகு உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார்.
</p><p>
இந்நிலையில், ஜூலை 29ஆம் திகதி அன்று அதிகாலை 4:56 மணிக்கு சுக்கிரன், பூர நட்சத்திரத்திலிருந்து உத்திர நட்சத்திரத்திற்குப் பெயர்ச்சியடைகிறார்.</p><p>

மேலும், சுக்கிரன் ஆகஸ்ட் 11ஆம் திகதி வரை இந்த நட்சத்திரத்திலேயே நிலைபெற்றிருப்பார்.
</p><p>
அந்தவகையில், உத்திர நட்சத்திரத்திற்கு செல்லும் சுக்கிரனால் குறிப்பிட்ட 3 ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர்.&nbsp;</p><p></p><h2>ரிஷபம்</h2><ul><li> 

வாழ்க்கையில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். </li><li>வருமானத்தை இரட்டிப்பாக்கும் வாய்ப்பு பெறுவீர்கள். </li><li>தன்னம்பிக்கை பலமடங்கு அதிகரிக்கும்.</li><li> இந்த காலகட்டத்தில் லாபம் ஈட்ட முடியும். </li><li>நிதிநிலை நன்றாக இருக்கும். </li><li>அனைத்து முயற்சிகளும் வெற்றியைக் கொடுக்கும்.</li><li>புதிய வேலைகளை மாற்ற முயற்சித்தால் வெற்றி பெறலாம். </li><li>குடும்பத்தினர் ஆதரவாக இருப்பார்கள். </li><li>வெளிநாடு செல்ல விரும்புபவர்களுக்கு இது சிறப்பான காலம்.</li></ul><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6228eab0-48b3-4d78-8602-13cffb749084/26-6a5f348fbdf5a.webp' /></p><h2>மிதுனம் </h2><ul><li>

தன்னம்பிக்கையை அளிக்கும். </li><li>நிலுவையில் உள்ள பணிகள் நடந்து முடியும். </li><li>திருமண வாழ்க்கையில் இணக்கமான சூழல் மேம்படும்.</li><li>மனதில் இருந்த குழப்பம் முடிவுக்கு வரும். </li><li>கல்வித் துறையில் நிறைய நன்மைகள் கிடைக்கும். </li><li>வாழ்க்கையில் பெரும் முன்னேற்றம் ஏற்படும். </li><li>மூத்த அதிகாரிகளுடன் உறவு சிறப்பாக இருக்கும். </li><li>லட்சியங்களை சிரமமின்றி அடையும் வாய்ப்பு அதிகரிக்கும். </li><li>பொருளாதரரீதியாக இந்த காலகட்டம் சிறப்பானதாக இருக்கும்.</li></ul><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ac0b02a9-3866-4dd5-a345-f97d501c0296/26-6a5f34907108e.webp' /></p><h2>சிம்மம் </h2><ul><li>

சாதகமான மாற்றங்களைக் கொண்டுவரக்கூடும்.</li><li> பொருத்தமான வாழ்க்கைத் துணை கிடைக்கும். </li><li>அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறுவார்கள். </li><li>சிறந்த பலன்களை எதிர்பார்க்கலாம்.</li><li> நீண்டகாலமாக நிலுவையில் உள்ள பணிகள் முடியும்.</li><li> பணியிடத்தில் புதிய பொறுப்பு கிடைக்கும். </li><li>திட்டங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். </li><li>வாழ்க்கையை புதிய உயரத்திற்கு கொண்டு செல்ல முடியும். </li><li>இந்த காலம் வியாபாரத்திற்கு சாதகமாக இருக்கும். </li><li>வாழ்க்கைத் துணையுடனான உறவுகள் வலுவடையும்.</li></ul><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8f63582b-3a6b-4b9d-af37-23baabe5cf3c/26-6a5f34911ee6f.webp' /></p><p>இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-21T09:01:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஸ்பெயின் அணிக்கு கிடைத்த ரோயல் வரவேற்பு! மாட்ரிட்டில் குவிந்த 18 இலட்சம் ரசிகர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/spain-s-world-cup-heroes-welcomed-millions-madrid-1784622446"></link>
            <id>https://tamilwin.com/article/spain-s-world-cup-heroes-welcomed-millions-madrid-1784622446</id>
            <summary type="text">நியூ ஜெர்சியில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் அர்ஜென்டினாவை கூடுதல் நேரத்தில் 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி 2026 கால்பந்து உலகக் கோப்பையை வென்று
 தாயக...</summary>
            <content type="html"><![CDATA[<p>நியூ ஜெர்சியில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் அர்ஜென்டினாவை கூடுதல் நேரத்தில் 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி 2026 கால்பந்து உலகக் கோப்பையை வென்று
 தாயகம் திரும்பிய ஸ்பெயின் தேசிய அணி,வீரர்களுக்கு மாட்ரிட்டில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.</p><p>

26 வீரர்களும் பயிற்சியாளர் குழுவினரும் முதலில் ஸ்பெயின் அரச குடும்பத்தினரையும், பின்னர் பிரதமர் பெட்ரோ சாஞ்சஸையும் சந்தித்தனர்.</p><p></p><h2>ஸ்பெயினின் உலகக் கோப்பை நாயகர்கள்</h2><p>
</p><p>
உங்களின் ஆட்ட பாணி, அர்ப்பணிப்பு மற்றும் இந்த வெற்றிக்காக நன்றி. உங்கள் ஆட்டத்தை நாடு முழுவதும் பெருமையுடன் ரசித்தது, என்று பிரதமர் சாஞ்சஸ் பாராட்டினார்.</p><p>

அதனைத் தொடர்ந்து திறந்த மேல் தள பேருந்தில் ("Stars Shine Together" என்ற வாசகத்துடன்) வீரர்கள் மாட்ரிட் நகரின் முக்கிய வீதிகள் வழியாக வெற்றி ஊர்வலத்தில் பங்கேற்றனர்.</p><p><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr">Spain’s World Cup victory parade has started in Madrid. Just look at the number of fans who came out to welcome the champions of the world! 🔥🇪🇸 <a href="https://t.co/H0TCyVM9Fk">pic.twitter.com/H0TCyVM9Fk</a></p>&mdash; Cleverly 💐 (@Cleverlydey4u) <a href="https://x.com/Cleverlydey4u/status/2079289698711687608?ref_src=twsrc%5Etfw">July 20, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>

 "Somos Campeones" (நாங்களே சாம்பியன்கள்) என்று எழுதப்பட்ட சீருடைகளை அணிந்திருந்த வீரர்கள் உலகக் கோப்பையுடன் ரசிகர்களை உற்சாகப்படுத்தினர்.</p><p>

பயிற்சியாளர் லூயிஸ் டெ லா ஃபுவென்டே, இந்த அற்புதமான நாட்டையும், உணர்ச்சிமிக்க ரசிகர்களையும் பிரதிநிதித்துவப்படுத்தியது பெருமையான அனுபவம். இந்த மகிழ்ச்சியை வார்த்தைகளால் விவரிக்க முடியாது என்றார்.
</p><p>
மாட்ரிட்டின் சிபிலெஸ் (Cibeles) சதுக்கத்தில் நடைபெற்ற சிறப்பு விழாவில் சுமார் 1.2 இலட்சம் ரசிகர்கள் நேரில் கலந்து கொண்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.மொத்தமாக 18 இலட்சம் மக்கள் அணியை வரவேற்றதாக மதிப்பிடப்பட்டுள்ளது.</p><p></p><h2>&nbsp;மீண்டும் உலகக் கோப்பை</h2><p>
</p><p>
வீரர்கள் ஒவ்வொருவரும் தனித்தனி இசையுடன் மேடைக்கு அழைக்கப்பட்டனர். 25-ஆவது பிறந்தநாளைக் கொண்டாடிய அலெக்ஸ் பயேனா உலகக் கோப்பையுடன் மேடையேறினார். </p><p>

பயிற்சியாளர் டெ லா ஃபுவென்டேவை வீரர்கள் தோளில் தூக்கி கொண்டாடினர். முன்னணி வீரர் போர்ஹா இக்லேசியஸ் டிஜேவாக மாறி இசையமைத்த நிலையில், சக வீரர்கள் மேடையில் நடனமாடினர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fa4bb3e0-f33e-46a9-8fa6-27b7f599f2d1/26-6a5f34f9e8a59.webp' /></p><p> </p><p>

இறுதியில், முழு அணியும் மீண்டும் உலகக் கோப்பையை உயர்த்தி ரசிகர்களுடன் வெற்றியை கொண்டாடியது.

இறுதிப்போட்டியில் கூடுதல் நேரத்தில் பெர்ரான் டோரெஸ் அடித்த கோல் மூலம் ஸ்பெயின் தனது இரண்டாவது உலகக் கோப்பையையும், 2010க்குப் பிறகு முதல் உலகக் கோப்பையையும் கைப்பற்றியது.
</p><p>
இந்த வெற்றிக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், மெக்சிகோ ஜனாதிபதி கிளாடியா ஷெய்ன்பாம் மற்றும் கனடா பிரதமர் மார்க் கார்னி உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.
</p><p>
2023 மகளிர் உலகக் கோப்பையையும், 2026 ஆண்கள் உலகக் கோப்பையையும் வென்றுள்ளதால், இரு உலகக் கோப்பைகளையும் ஒரே நேரத்தில் வைத்திருக்கும் முதல் நாடாக ஸ்பெயின் வரலாறு படைத்துள்ளது.</p><p>

எனினும், கொண்டாட்டத்தின் போது வடமேற்கு ஸ்பெயினின் சலமாங்காவில் நீரூற்றின் மீது ஏறியிருந்த 13 வயது சிறுவன் ஒருவர் நீரூற்று இடிந்து விழுந்ததில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><p></p><p><iframe src="https://www.facebook.com/plugins/video.php?height=476&href=https%3A%2F%2Fwww.facebook.com%2Freel%2F1018416397707770%2F&show_text=true&width=267&t=0" width="267" height="591" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share" allowFullScreen="true"></iframe></p>]]></content>
            <updated>2026-07-21T09:00:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[4 நாட்களில் 'தி ஒடிசி' திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/the-odyssey-4-days-box-office-collection-1784624219"></link>
            <id>https://cineulagam.com/article/the-odyssey-4-days-box-office-collection-1784624219</id>
            <summary type="text">&#039;தி ஒடிசி&#039;2026-ஆம் ஆண்டு சினிமா ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படங்களில் ஒன்று &#039;தி ஒடிசி&#039;. இப்படத்தை இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன் இயக்கியு...</summary>
            <content type="html"><![CDATA[<h2>'தி ஒடிசி'</h2><p>2026-ஆம் ஆண்டு சினிமா ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படங்களில் ஒன்று 'தி ஒடிசி'. இப்படத்தை இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன் இயக்கியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/942e788e-2677-41e5-9a82-476b732e3679/26-6a5f345e60494.webp' /></p><p></p><p>இப்படத்தில் Matt Damon, Anne Hathaway, Robert Pattinson, டாம் ஹொலாந்து, செண்டையா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்.</p><h2>வசூல்&nbsp;</h2><p> </p><p>கடந்த வாரம் திரைக்கு வந்த '<a href="https://www.youtube.com/watch?v=eq3GR1b8t-U" target="_blank">தி ஒடிசி</a>' முதல் நாளிலிருந்தே வசூலை வாரிக்குவிக்க தொடங்கியது. சிலர் இப்படத்தின் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்த போதிலும், ரசிகர்களின் அமோக வரவேற்பால் வசூல் நாளுக்கு நாள் குவிந்து வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a2eac634-6c38-4ba4-b203-0fd5425d5fc7/26-6a5f345f143c7.webp' /></p><p> இந்த நிலையில், 4 நாட்களில் 'தி ஒடிசி' திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 4 நாட்களில் இப்படம் உலகளவில் ரூ. 2650 கோடி வசூல் செய்துள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-21T09:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[பஹ்ரைனில் உள்ள அமெரிக்க தளங்கள் மீது ஈரான் தீவிர தாக்குதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/iran-launches-serious-attack-us-bases-in-bahrain-1784621799"></link>
            <id>https://ibctamil.com/article/iran-launches-serious-attack-us-bases-in-bahrain-1784621799</id>
            <summary type="text">பஹ்ரைனில் உள்ள அமெரிக்க ஷேக் ஈசா இராணுவத் தளத்தை ட்ரோன்கள் மூலம் தாக்கியதாக ஈரான் இராணுவம் உரிமை கோரியுள்ளது.

இராணுவத்தின் கூற்றுப்படி, இந்தத் தளம்...</summary>
            <content type="html"><![CDATA[<p>பஹ்ரைனில் உள்ள அமெரிக்க ஷேக் ஈசா இராணுவத் தளத்தை ட்ரோன்கள் மூலம் தாக்கியதாக ஈரான் இராணுவம் உரிமை கோரியுள்ளது.</p><p>

இராணுவத்தின் கூற்றுப்படி, இந்தத் தளம் அமெரிக்கக் கடற்படையின் ஐந்தாம் படைப்பிரிவின் முக்கிய மையங்களில் ஒன்றாகும் என தெரிவித்துள்ளது.</p><p></p><h2>அமெரிக்க நடவடிக்கைகள்</h2><p>

மேலும் இது அமெரிக்க நடவடிக்கைகளின் மையமாகவும் விளங்குகிறது என்றும் அதன் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/624ee99a-7234-4714-a31d-e9a700e96c24/26-6a5f2ae8cd14e.webp' /></p><p>
</p><p>
ஈரான் மீதான தாக்குதல்களைத் தொடர்வதிலிருந்து எதிரி தடுக்கப்படும் வரை தாக்குதல் நடவடிக்கைகள் தொடரும் என்றும் அறிக்கையில் மேலும் கூறியுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-21T08:55:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆசானுக்கு நாட்டியமே இறுதி மரியாதை ; நெகிழ வைத்த இறுதி நாட்டியம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/final-dance-tribute-the-aasan-moving-final-dance-1784623895"></link>
            <id>https://jvpnews.com/article/final-dance-tribute-the-aasan-moving-final-dance-1784623895</id>
            <summary type="text">இலங்கையின் புகழ்பெற்ற பரதநாட்டிய ஆசிரியரும், கலாபூசணம் மற்றும் பரதசூடாமணி பட்டங்களைப் பெற்றவருமான சுபித்ரா கிருபாகரனின் இறுதிச்சடங்குகள் நேற்று (20) த...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் புகழ்பெற்ற பரதநாட்டிய ஆசிரியரும், கலாபூசணம் மற்றும் பரதசூடாமணி பட்டங்களைப் பெற்றவருமான சுபித்ரா கிருபாகரனின் இறுதிச்சடங்குகள் நேற்று (20) திங்கட்கிழமை இடம்பெற்ற நிலையில், அவரது மாணவ, மாணவிகள் கண்ணீருடன் நிகழ்த்திய நாட்டியாஞ்சலி பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.</p><p>
</p><p></p><p>மட்டக்களப்பில் பரதகலாலயா என்ற நாட்டியப் பள்ளியை நிறுவி நடத்தி வந்த ஓய்வுபெற்ற ஆசிரியரான சுபித்ரா கிருபாகரன், இலங்கையில் மட்டுமன்றி வெளிநாடுகளிலும் அதன் கிளைகளை உருவாக்கி, ஏராளமான பரதநாட்டியக் கலைஞர்களையும் ஆசிரியர்களையும் உருவாக்கிய பெருமைக்குரியவர்.</p><p>

மட்டக்களப்பு மாவட்டத்தில் பரதநாட்டியக் கலையின் வளர்ச்சிக்கு அவர் ஆற்றிய பங்களிப்பு குறிப்பிடத்தக்கதாகும்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ab68fc87-c6f1-4f68-a6ef-d1723e371d79/26-6a5f33190a4ee.webp' /></p><p>பல தசாப்தங்களாக கலைப் பணியில் ஈடுபட்ட அவர், தனது மாணவர்கள் மூலம் பரதக் கலையின் பாரம்பரியத்தை அடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றார்.
</p><p>
கடந்த ஞாயிற்றுக்கிழமை (19) சுகவீனம் காரணமாக அவர் காலமானார்.

அவரது இறுதிக்கிரியைகள் நேற்று மாலை அவரது இல்லத்தில் நடைபெற்றன. </p><p>இதன்போது, அவரது மாணவ, மாணவிகள் தமது குருவுக்கு இறுதி மரியாதை செலுத்தும் வகையில் கண்ணீருடன் நாட்டிய சமர்ப்பணத்தை நிகழ்த்தினர்.
</p><p>
குருவின் நினைவாக இடம்பெற்ற இந்த நாட்டியாஞ்சலி, அங்கு கூடியிருந்த அனைவரையும் உருகச் செய்ததுடன், அதன் காணொளிகள் சமூக வலைத்தளங்களிலும் பரவலாக பகிரப்பட்டு வருகின்றன.
</p><p>
இறுதிச்சடங்கில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞா. சிறிநேசன் உள்ளிட்ட அரசியல் பிரதிநிதிகள், கலைஞர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.</p><p>
பரதக் கலையின் வளர்ச்சிக்காக வாழ்நாள் முழுவதும் அர்ப்பணித்த சுபித்ரா கிருபாகரனின் கலைச் சேவை, அவரது மாணவர்களின் மூலம் என்றும் தொடரும் எனப் பலரும் தெரிவித்துள்ளனர்.</p><p></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ab68fc87-c6f1-4f68-a6ef-d1723e371d79/26-6a5f33190a4ee.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6af4c1de-bfa8-45f0-bd9a-985d77dce650/26-6a5f3319aecf8.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/516871e0-b710-4813-9ec4-8e1b6182cddf/26-6a5f331a5ffe6.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/14588538-b750-497d-925b-b34345c8972c/26-6a5f331b1331b.webp' /></p>]]></content>
            <updated>2026-07-21T08:52:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹோமாகம தலைக்கவச உற்பத்தி தொழிற்சாலையில் தீ விபத்து : ஐவர் பலி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/5-killed-in-fire-at-factory-in-industrial-zone-1784622403"></link>
            <id>https://ibctamil.com/article/5-killed-in-fire-at-factory-in-industrial-zone-1784622403</id>
            <summary type="text">ஹோமாகம - கட்டுவான கைத்தொழில் வலயத்தில் உள்ள தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளதாக ஹோமாகம காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.குறித்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹோமாகம - கட்டுவான கைத்தொழில் வலயத்தில் உள்ள தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளதாக ஹோமாகம காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p>குறித்த பகுதியில் அமைந்துள்ள தலைக்கவச உற்பத்தி தொழிற்சாலை ஒன்றிலேயே இன்று (21) இந்த தீப்பரவல் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p> </p><p>தீப்பரவலை கட்டுப்படுத்துவதற்கு கோட்டை மற்றும் தெஹிவளை மாநகர சபைகளிலிருந்து ஆறு தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு அனுப்பப்பட்ட நிலையில் தற்போது தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.</p><p></p><h2>&nbsp;80க்கும் மேற்பட்ட ஊழியர்கள்&nbsp;</h2><p>இந்த தீ விபத்து ஏற்பட்ட நேரத்தில் 80க்கும் மேற்பட்ட ஊழியர்கள் அங்கு இருந்துள்ள நிலையில் எவரேனும் உள்ளே சிக்கியுள்ளனரா என்பதைக் கண்டறிவதற்காக தொடர்ந்து மீட்புப் பணிகள் இடம்பெற்று வருகின்றன.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1ab32fba-93a7-481f-bed8-d3b605afc4b7/26-6a5f313c7aef2.webp' /></p><p>தீ பரவத் தொடங்கிய தருணத்தில் அங்கிருந்த சிலரை ஒருவர் காப்பாற்றியதாகவும் மேலும் சிலர் பின்புற வாயில் வழியாக வெளியேறியிருக்கக் கூடும் எனச் சந்தேகிப்பதாகவும் அவர் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p>இந்தநிலையில், குறித்த தொழிற்சாலையிலிருந்து 5 பேரின் உடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p><br></p><p><br></p><hr><p><b>you may like this</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/vYd-KlkmqgQ" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-21T08:51:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாடாளுமன்றம் செல்லும் மாகாண சபை முதலமைச்சர்கள்..! டக்ளஸ் முன்வைத்துள்ள கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/douglas-opini-onprovincial-council-chief-ministers-1784623684"></link>
            <id>https://tamilwin.com/article/douglas-opini-onprovincial-council-chief-ministers-1784623684</id>
            <summary type="text">நாட்டின் அரசியலமைப்பை செம்மைப்படுத்தி, மாகாண சபை தேர்தல் மூலம் தெரிவுச் செய்யப்படும், முதலமைச்சர்களும் அமைச்சர்கள் போன்று நாடாளுமன்றத்திற்குச் செல்ல வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டின் அரசியலமைப்பை செம்மைப்படுத்தி, மாகாண சபை தேர்தல் மூலம் தெரிவுச் செய்யப்படும், முதலமைச்சர்களும் அமைச்சர்கள் போன்று நாடாளுமன்றத்திற்குச் செல்ல வேண்டும் என ஈ.பி.டி.பி. கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p>பல்வேறு துறைசார்ந்த நிபுணர்கள் உள்ளடக்கிய அரசா சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற சந்திப்பில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p> </p><p>புதிய அரசியலமைப்பு தொடர்பில் நாடளாவிய ரீதியில் உள்ள அரசியல் தரப்புகளுக்கிடையில் பொது நிலைப்பாட்டை உருவாக்கும் நோக்கில், ஈ.பி.டி.பி. கட்சியுடன் அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் சந்திப்பொன்றை நடத்தியுள்ளனர்.</p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">நாடாளுமன்றத்தில் முதலமைச்சர்களுக்கு அங்கம்</span></p><p>

இதன்போது டக்ளஸ் கருத்து தெரிவிக்கையில், </p><p>

மாகாணங்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களை செழுமைப்படுத்துவதற்கும்,
இனங்களுக்கும் சமூகங்களுக்கும் இடையிலான புரிந்தணர்வை ஏற்படுத்துவதற்கும்,
சீரான வளர்ச்சியை வேகமாக ஏற்படுத்துவதற்கும், மாகாணங்களின் முதலமைச்சர்கள்
நாடாளுமன்றிலும் அமைச்சரவையிலும் அங்கம் வகிக்கும் ஏற்பாடு அர்த்தபூர்வமான
களத்தினை ஏற்படுத்தும்.
</p><p>
அதேபோன்று, யுத்தம் காரணமாக 18 வயதினை அடைந்த பின்னர் புலம்பெயர்ந்து
சென்றவர்களுக்கும், தொழில் நிமித்தம் வெளிநாடுகளில் தங்கி இருப்போருக்கும்
வாக்குரிமையை வழங்க வேண்டும்.
</p><p>
அர்த்தபூர்வமான அதிகாரப் பகிர்வே புதிய அரசியலமைப்பின் அடிப்படையாக இருக்க
வேண்டுமே தவிர, ஒற்றையாட்சி, சமஸ்டி என்ற பெயர் பலகையில் கவனத்தினை குவிப்பது,
பிடிவாதமாக இருப்பது நாட்டின் எதிர்காலத்திற்கு ஆரோக்கியமாக இருக்காது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4bba011f-29d7-4afd-8924-1b2e521949d0/26-6a5f32d647442.webp' /></p><p>
கடந்த காலங்களில் மத்திய அரசினால் எடுக்கப்பட்ட மாகாணங்களுக்கான அதிகாரங்களை
மீளக் கையளிப்பதுடன், பொலிஸ் மற்றும் காணி உட்பட்ட மாகாண சபை அதிகாரங்கள்
முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.</p><h2>


மாகாண சபை அதிகார பகிர்வு</h2><p>
அதேபோன்று, மாகாணங்களுக்கான அதிகார பகிர்வில் உள்ள இணைப்பு பட்டியல்
நீக்கப்பட்டு, அதில் இருக்கின்ற விடயங்களுள் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த
சிலவற்றை தவிர்த்த அனைத்தும், மாகாண பட்டியலில் இணைக்கப்பட வேண்டும்.</p><p>

மாகாண சபைகளுக்கான அதிகார பகிர்வானது, வடக்கு - கிழக்கு மக்களுக்காக
உருவாக்கப்பட்டது என்ற அடிப்படையில் குறித்த இரண்டு மாகாணங்களுக்கும் விசேட
அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/af9e8840-039c-415e-9a70-4222a8c7e584/26-6a5f32d712e2c.webp' /></p><p>
</p><p>
அத்துடன், மாகாண சபை என்பது மாகாண அரசு என்று
அடையாளப்படுத்தப்பட வேண்டும். தேசிய நிதி ஆணைக்குழு என்பது நிதி ஒதுக்கீடுகளில் காத்திரமான தாக்கம்
செலுத்தும் நிலையில், ஒவ்வொரு மாகாணங்களினதும் எதிர்பார்ப்புக்களை
உணர்வுபூர்வமாக புரிந்து கொண்ட அதே மாகாணத்தை பூர்வீகமாகக் கொண்டவர்கள் நிதி
ஆணைக்குழுவில் உறுப்பினர்களாக இருப்பதனையும்,&nbsp; அதேபோன்று, அந்தந்த மாகாணங்களை
பூர்வீகமாக கொண்டவர்களையே ஒவ்வொரு மாகாணத்தின் ஆளுநராக நியமிக்கப்படுவதும்
அரசியலமைப்பு மூலம் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.</p><p>

அதேபோன்று, தற்போதைய நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை நீக்கப்பட்டு, ஜனாதிபதி
நாடாளுமன்றால் தெரிவு செய்யப்பட வேண்டும் என்பது போன்ற மேலும் பல விடயங்களை
உள்ளன.

 இதுதொடர்பான எழுத்து மூல ஆவணம் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-21T08:50:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[உயர்வைப் பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை குறியீடுகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/stock-exchange-indices-record-gains-lankafinancial-1784623846"></link>
            <id>https://ibctamil.com/article/stock-exchange-indices-record-gains-lankafinancial-1784623846</id>
            <summary type="text">இலங்கையின் கொழும்பு பங்குச் சந்தைக் குறியீடுகள் இன்று நண்பகல் சிறிய உயர்வை பெற்றுள்ளது.

இதில், முக்கிய குறியீடான அனைத்துப் பங்கு விலைக் குறியீடும் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் கொழும்பு பங்குச் சந்தைக் குறியீடுகள் இன்று நண்பகல் சிறிய உயர்வை பெற்றுள்ளது.
</p><p>
இதில், முக்கிய குறியீடான அனைத்துப் பங்கு விலைக் குறியீடும் 0.06 சதவீதம் உயர்ந்துள்ளது.
</p><p>
இன்றைய நண்பகல் வர்த்தகத்தின் மொத்த பெறுமதி 358.7 மில்லியன் ரூபாவாக பதிவாகியுள்ளது.&nbsp;</p><p></p><h2>மில்லியன் ரூபா வர்த்தகப் பெறுமதி</h2><p>இதில் உணவு, பானங்கள் மற்றும் புகையிலை துறை 201.3 மில்லியன் ரூபா வர்த்தகப் பெறுமதியுடன் முன்னிலை வகித்த்துள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1f42357c-49da-4c76-ac1d-50960da2c4da/26-6a5f33e0a4162.webp' /></p><p>இதன்படி, All Share Price Index (ASPI) 13.19 புள்ளிகள் (0.06%) அதிகரித்து 21,221.29 புள்ளிகளாக பதிவாகியுள்ளது.
</p><p>
அதேவேளை, S&amp;P SL20 குறியீடு 7.90 புள்ளிகள் (0.13%) உயர்ந்து 5,951.12 புள்ளிகளாக பதிவாகியுள்ளது.
</p><p>
ASPI குறியீட்டின் உயர்வுக்கு John Keells Holdings, Dialog Axiata, Aitken Spence மற்றும் Browns Investments ஆகிய நிறுவனங்களின் பங்குகள் முக்கிய பங்களிப்பை வழங்கியதாக சந்தை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.</p><p></p><h2>தனியார் பங்கு ஒதுக்கீடு </h2><p>
</p><p>
மறுபுறம், Hatton National Bank (HNB), DFCC Bank மற்றும் Ceylon Grain Elevators நிறுவனங்களின் பங்குகள் விலை சரிவை பதிவு செய்து சந்தையில் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/015e068c-f1e4-47bf-9a05-e04f99693ad0/26-6a5f33e16d19c.webp' /></p><p>

இதனிடையே, Tess Agro PLC நிறுவனத்தின் 125 மில்லியன் சாதாரண வாக்குரிமைப் பங்குகள், தனியார் பங்கு ஒதுக்கீட்டின் (Private Placement) மூலம் 2026 ஜூலை 21 முதல் கொழும்பு பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-21T08:50:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[கயானா படகு விபத்துக்குள்ளானதில் 27 பேர் பலி, 83 பேர் மாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/27-dead-83-missing-in-guyana-ferry-accident-1784622951"></link>
            <id>https://canadamirror.com/article/27-dead-83-missing-in-guyana-ferry-accident-1784622951</id>
            <summary type="text">தென் அமெரிக்க நாடான கயானாவின் வட அத்திலாந்திக் கடற்கரைக்கு அப்பால் இடம்பெற்ற பயணிகள் படகு விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27 ஆக அதிகரித்துள்ளது....</summary>
            <content type="html"><![CDATA[<p>தென் அமெரிக்க நாடான கயானாவின் வட அத்திலாந்திக் கடற்கரைக்கு அப்பால் இடம்பெற்ற பயணிகள் படகு விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27 ஆக அதிகரித்துள்ளது.
</p><p>கடந்த சனிக்கிழமை (18) இரவு இடம்பெற்ற இந்த விபத்தில், மீட்புப் பணியாளர்கள் இதுவரை 69 பேரை உயிருடன் மீட்டுள்ள நிலையில், மேலும் 83 பேர் கடலில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
ஆரம்பத்தில் குறித்த படகில் 133 பேர் பயணித்ததாக பதிவுகள் தெரிவிக்கப்பட்டிருந்தன. எனினும், மீட்கப்பட்டவர்களில் பலரின் பெயர்கள் உத்தியோகபூர்வ பயணிகள் பட்டியலில் இடம்பெறாததால், படகில் 179 பேர் வரை பயணித்திருக்கலாம் என கயானா பிரதமர் மார்க் பிலிப்ஸ் தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e31e2509-a985-4b19-8233-a0aca0028196/26-6a5f2f69080db.webp' /></p><p>விபத்துக்குப் பின்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், படகின் ஓட்டுநர் மற்றும் ஊழியர் ஒருவர் கஞ்சா போதைப்பொருள் பயன்படுத்தியிருந்தமை வைத்திய பரிசோதனைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொதுப்பணித்துறை அமைச்சர் ஜுவான் எட்ஜில் தெரிவித்துள்ளார்.
</p><p>
பணிநேரத்தில் போதைப்பொருள் பயன்படுத்தியமை மற்றும் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை விட அதிகமான பயணிகளை ஏற்றிச் சென்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், படகோட்டி மற்றும் ஊழியர்கள் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.&nbsp;</p><p>கயானா தலைநகர் ஜோர்ஜ்டவுனில் இருந்து போர்ட் கைடூமா பகுதிக்குச் சென்றுகொண்டிருந்த படகு, சனிக்கிழமை இரவு 11.01 மணியளவில் ஆபத்து சமிக்ஞையை அனுப்புவதற்கு முன்பே கவிழ்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
விபத்தில் உயிர் தப்பிய பயணி எலினா மூன்சாமி, மிகப்பெரிய அலை ஒன்று மோதிய சில விநாடிகளிலேயே படகுக்குள் நீர் புகுந்து அது கவிழ்ந்ததாக தெரிவித்துள்ளார்.

"மிதந்து வந்த மரப்பெட்டி ஒன்றைப் பிடித்துக்கொண்டு உயிர் பிழைத்தேன்.</p><p>ஆனால், எனது 2 வயது குழந்தையின் கையை பிடித்திருந்தபோதும், அலையின் வேகத்தில் எனது கை நழுவி குழந்தை நீரில் மூழ்கியது" என அவர் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3b6b2ae4-5462-443a-94da-3fa3c7573fa9/26-6a5f2f69ad7b1.webp' /></p><p>மீட்புப் பணிகளுக்கு உதவுவதற்காக அருகிலுள்ள பிரெஞ்சு கயானாவில் இருந்து பிரெஞ்சு இராணுவம் 12 அனுபவமிக்க உயிர்காப்புப் பணியாளர்கள், இரண்டு வைத்தியர்கள் மற்றும் ஒரு மெக்கானிக் ஆகியோரை அனுப்பியுள்ளது.
</p><p>
மேலும், அப்பகுதியைச் சேர்ந்த சிறிய தனியார் மீன்பிடிப் படகுகள் கடலில் மிதந்து கொண்டிருந்த 17-க்கும் மேற்பட்டவர்களை மீட்டுள்ளன.
</p><p>
மீட்கப்பட்ட 69 பேரில் 15 சிறுவர்களும் அடங்குகின்றனர். அவர்களில் பெரும்பாலானோர் சிறிய காயங்களுடன் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p>காணாமல் போனவர்களைத் தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ள பிரதமர் மார்க் பிலிப்ஸ்,

"காணாமல் போனவர்களை தேடிக் கண்டுபிடிப்பதே எங்களின் முழு கவனமாக உள்ளது. இன்னும் நம்பிக்கை உள்ளது. </p><p>இந்த துயரச் சம்பவத்திற்கு அதிகாரிகளின் அலட்சியம், விதிமீறல் அல்லது குற்றவியல் தவறுகள் காரணமாக இருந்தால், சம்பந்தப்பட்டவர்கள் கடுமையான சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும்" என எச்சரித்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-07-21T08:36:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Malaivanjan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹட்டன் நகரில் தற்காலிக கடைகளை அகற்ற முயன்றபோது பதற்றநிலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/tensions-rise-in-hatton-town-as-temporary-shops-1784617444"></link>
            <id>https://tamilwin.com/article/tensions-rise-in-hatton-town-as-temporary-shops-1784617444</id>
            <summary type="text">ஹட்டன் - டிக்கோயா நகர சபைத் தலைவர் அசோக கருணாரத்னவின் பணிப்புரையின்
பேரில், ஹட்டன் - டிக்கோயா நகர சபை எல்லைக்குட்பட்ட சந்தை
வளாகத்தில் நிரந்தர வர்த்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹட்டன் - டிக்கோயா நகர சபைத் தலைவர் அசோக கருணாரத்னவின் பணிப்புரையின்
பேரில், ஹட்டன் - டிக்கோயா நகர சபை எல்லைக்குட்பட்ட சந்தை
வளாகத்தில் நிரந்தர வர்த்தக நிலையங்களின் முன்பாக அமைக்கப்பட்டிருந்த
அனுமதியற்ற தற்காலிக கடைகளை அகற்றுவதற்காக நகர சபை அதிகாரிகள்
நடவடிக்கை மேற்கொண்டபோது இன்று(21) காலை பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
</p><p>நகர சபை ஊழியர்கள், வருவாய் பரிசோதகர்கள் மற்றும் கடை உரிமையாளர்கள் இடையே
ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக அங்கு சிறிது நேரம் பரபரப்பான நிலை காணப்பட்டுள்ளது.</p><p></p><h2>தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் நடவடிக்கை</h2><p>
இந்த பதற்றநிலைக்கு முக்கிய காரணமாக, சந்தை வளாகத்தில் இதுபோன்ற அனுமதியற்ற
தற்காலிக கடைகள் பல இருந்தபோதிலும், அவற்றில் ஐந்து கடைகளை மட்டும் குறிவைத்து
அதிகாரிகள் அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டதாக கடை உரிமையாளர்கள்
குற்றஞ்சாட்டியதே என தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/af8fab0f-8935-4460-b5f1-0b7bdfad6cd9/26-6a5f2ecc760e1.webp' /></p><p>இதன்போது, நகர சபை அதிகாரிகள் தனிநபர்களைத் தெரிவுசெய்தும் பக்கச்சார்பாகவும்
அரசியல் அல்லது தரப்புவாத அடிப்படையிலும் இந்த அகற்றும் நடவடிக்கைகளை
முன்னெடுத்து வருவதாக வர்த்தகர்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டனர்.
</p><p>சம்பவம் தொடர்பான தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, ஹட்டன் - டிக்கோயா நகர சபையின்
உப தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்கள் சம்பவ இடத்திற்குச் சென்று நிலைமையை
பார்வையிட்டனர். </p><p>பின்னர் அங்கிருந்த அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கிய அவர்கள்,
எந்தவித பாகுபாடும் இன்றி அனைத்து வர்த்தகர்களுக்கும் சமமாகவும் நியாயமான
முறையிலும் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று வலியுறுத்தினர்.
</p><p>இதனிடையே, சம்பவ இடத்திற்கு வந்திருந்த ஹட்டன் - டிக்கோயா நகர சபையின் வருவாய்
பரிசோதகர் ஜி.ஜி.யூ.பி. கமகே உள்ளிட்ட அதிகாரிகள், இது தொடர்ச்சியாக
முன்னெடுக்கப்படும் நடவடிக்கையின் ஒரு பகுதியாகும் என்று தெரிவித்துள்ளனர்.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-21T08:33:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையின் இன்றைய தங்க நிலவரம் என்ன? (21-07-2026)]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/today-gold-price-in-sri-lanka-1784622560"></link>
            <id>https://news.lankasri.com/article/today-gold-price-in-sri-lanka-1784622560</id>
            <summary type="text">இலங்கையின் இன்றைய தங்க நிலவரம் (21-07-2026) என்னவென்று தெரிந்து கொள்வோம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் இன்றைய தங்க நிலவரம் (21-07-2026) என்னவென்று தெரிந்து கொள்வோம்.
</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p>
தங்கம் அவுன்ஸ் விலை ரூபாய் 1,302,477.00 ஆகும்.
</p><p>
24 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 45,950.00.
</p><p>
24 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 367,550.00.
</p><p>
22 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 42,130.00.</p><p>

22 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 337,000.00.
</p><p>
21கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 40,210.00.</p><p>

21 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 321,650.00.</p>]]></content>
            <updated>2026-07-21T08:29:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலகக் கோப்பை வெற்றி கொண்டாட்டத்தில் 13 வயது சிறுவனுக்கு நேரந்த கதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/fate-boy-during-the-world-cup-victory-celebration-1784610079"></link>
            <id>https://jvpnews.com/article/fate-boy-during-the-world-cup-victory-celebration-1784610079</id>
            <summary type="text">ஃபிஃபா உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் அர்ஜென்டினாவை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ஸ்பெயின் சாம்பியன் பட்டத்தை வென்றதைத் தொடர்ந்து, நாடு முழுவதும் ர...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஃபிஃபா உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் அர்ஜென்டினாவை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ஸ்பெயின் சாம்பியன் பட்டத்தை வென்றதைத் தொடர்ந்து, நாடு முழுவதும் ரசிகர்கள் உற்சாகமாக வெற்றியைக் கொண்டாடினர்.</p><p>

இதன் ஒரு பகுதியாக, ஸ்பெயினின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள சியுடாட் ரோட்ரிகோ நகரின் ஆர்போல் கோர்டோ நீரூற்று அருகே ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டிருந்தனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d3b63d8a-ede0-41f0-ace4-50325bdbbb3b/26-6a5efd2069bd8.webp' /></p><p>திங்கட்கிழமை அதிகாலை கொண்டாட்டங்கள் உச்சத்தை எட்டியபோது, பலர் நீரூற்றின் மேல் பகுதியில் ஏறி நின்றதால் அதன் மேல்தளம் திடீரென இடிந்து விழுந்தது. </p><p>இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த 13 வயது சிறுவன், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட வழியிலேயே உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். </p><p>மேலும் இருவர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவத்தைத் தொடர்ந்து சியுடாட் ரோட்ரிகோ நகர மன்றம், உயிரிழந்த சிறுவனின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளது.</p><p>மேலும், உயிரிழப்புக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நகரில் மூன்று நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்றும், மாநகரக் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

இந்த துயர சம்பவம் தொடர்பில் அதிகாரிகள் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-07-21T08:26:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Fathima</name>
            </author>
            <title type="text"><![CDATA[தேச துரோகி என்பார்கள்: டெல்லி மாணவர்கள் போராட்டத்துக்கு பெருகும் ஆதரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/delhi-protest-latest-updates-1784621083"></link>
            <id>https://ibctamilnadu.com/article/delhi-protest-latest-updates-1784621083</id>
            <summary type="text">நீட் தேர்வு முறைகேடு உட்பட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் நடத்திய போராட்டத்திற்கு இந்தியா முழுவதும் ஆதரவு ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீட் தேர்வு முறைகேடு உட்பட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் நடத்திய போராட்டத்திற்கு இந்தியா முழுவதும் ஆதரவு பெருகுகிறது.</p><p>

நீட் வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வு முடிவுகளில் நடந்த முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வியமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும் என மாணவர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1c675bd7-1f9c-4dbb-a416-dbc541ddcff3/26-6a5f29a32b797.webp' /><br></p><p>
</p><p>
நேற்று டெல்லியில் நடந்த பேரணியின் போது போலிசார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் போராட்டத்தை கலைத்தனர்.</p><p>

இது ஜனநாயகத்துக்கு எதிரானது என இந்தியா முழுவதும் ஆதரவு பெருகிவரும் நிலையில், பிரபல பஞ்சாபி பாடகரான தில்ஜித் தோசாஞ்ச் ஆதரவை தெரிவித்துள்ளார்.
</p><p>
இதுகுறித்து இன்ஸ்டாகிராமில், மாணவர்களை இப்படி நடத்தியிருக்க கூடாது, அவர்களின் கோரிக்கைகளை கேட்டு பரிசீலிக்க வேண்டும், மக்களின் குரலே கடவுளின் குரல், என்னை தேசவிரோதி என அழைக்கக்கூடும் என பதிவிட்டுள்ளார்.&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/O8X1lLk3xI0" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-07-21T08:25:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை சபாநாயகரிடம் கையளிப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/submitted-no-confidence-motion-against-justice-min-1784620899"></link>
            <id>https://ibctamil.com/article/submitted-no-confidence-motion-against-justice-min-1784620899</id>
            <summary type="text">நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவிற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.எதிர்க்கட்சியால் கொண்டுவரப்பட...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவிற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.</p><p>எதிர்க்கட்சியால் கொண்டுவரப்பட்ட குறித்த பிரேரணை இன்று (21) சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.</p><p>அண்மையில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலில் கைதிகள் மற்றும் அதிகாரிகள் உட்பட மொத்தமாக 31 பேர் உயிரிழந்தனர்.</p><p></p><h2>எதிர்க்கட்சி தீர்மானம்</h2><p>
</p><p>
சிறை அதிகாரிகள் மற்றும் கைதிகளின் பாதுகாப்பு தொடர்பான தமது பொறுப்பையும் கடமையையும் நிறைவேற்றத் தவறியதன் காரணமாக, நீதி அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை சமர்ப்பிக்க எதிர்க்கட்சி தீர்மானித்திருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aaa1abfe-cb0e-4cbc-8a8e-b76ec2b4d6ea/26-6a5f2b369c05e.webp' /></p><p>
</p><p>
இந்தநிலையில் குறித்த சம்பவத்துக்கு பொறுப்பேற்று அமைச்சு பொறுப்பிலிருந்து ஹர்சன நாணயக்கார விலக வேண்டும் என எதிர்கட்சிகள் வலியுறுத்தி வந்த பின்னணியில் இந்த நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்பட்டுள்ளது.</p><p>எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், நீதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் ஜூலை 10 அன்று நாடாளுமன்றத்தில் வைத்து கையெழுத்திட்டமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-21T08:24:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய விளையாட்டு வீரர்: இருவர் பலியான பரிதாபம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/2-dies-in-candian-footballer-drives-car-accident-1784622047"></link>
            <id>https://canadamirror.com/article/2-dies-in-candian-footballer-drives-car-accident-1784622047</id>
            <summary type="text">கனடாவில் கார் விபத்தொன்றில் இருவர் பலியான நிலையில், அவர்களில் ஒருவர் இந்தியர் என்பதும் மற்றவர் கனேடிய கால்பந்து விளையாட்டு வீரர் என்பதும் தெரியவந்துள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவில் கார் விபத்தொன்றில் இருவர் பலியான நிலையில், அவர்களில் ஒருவர் இந்தியர் என்பதும் மற்றவர் கனேடிய கால்பந்து விளையாட்டு வீரர் என்பதும் தெரியவந்துள்ளது.
</p><p>
கனடாவின் சஸ்காட்செவன் மாகாணத்திலுள்ள நெடுஞ்சாலை 11இல், சனிக்கிழமை இரவு 9.00 மணியளவில், தவறான திசையில் சென்ற ஒரு கார், எதிரே வந்துகொண்டிருந்த கார் மீது மோதியுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9e4b8f61-af96-40fc-8463-3ec26e978754/26-6a5f2be0cca81.webp' /></p><p>
அந்த கோர விபத்தில், இரண்டு கார்களின் சாரதிகளும் பலியானார்கள். </p><p>அவர்களில், தவறான திசையில் காரை செலுத்தியவர் ஒரு கனேடியர். அவரது பெயர் ஜேடன் (Jayden Dalke, 30). ஜேடன், பிரபல கால்பந்து அணியான Saskatchewan Roughriders அணி வீரர்.
</p><p>
விடயம் என்னவென்றால், ஜேடனின் காரில் கஞ்சாவும், மதுபானமும் இருந்துள்ளன. அவர் பெட்ரோல் நிலையம் ஒன்றில் எரிபொருள் நிரப்பிவிட்டு, பணம் கொடுக்காமலே அங்கிருந்து சென்றுவிட்டதாக பொலிசாருக்கு புகாரளிக்கப்பட்டுள்ளது.</p><p>

ஆனால், அவர் போதையிலிருந்தாரா என்பது உடற்கூறு ஆய்வுக்குப் பிறகே தெரியவரும் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2313f198-1971-4a56-8c3e-b77c8a3b2eb1/26-6a5f2be027975.webp' /></p><p>
ஜேடனின் கார் மோதி உயிரிழந்தவர், பீஷ்மா ராஜ்யகுரு (22) என்னும் இந்தியர். பொலிசார் ராஜ்யகுருவைக் குறித்து தெரிவித்த தகவல் அவ்வளவே!</p><p>

இதற்கிடையில், இந்தியாவிலிருக்கும் ராஜ்யகுருவின் பெற்றோர், தங்கள் மகனுடைய மரணச் செய்தி கேட்டு அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளதாக தெரிவித்துள்ள அவரது நண்பர்கள், எப்படியாவது பணம் திரட்டி அவரது உடலை இந்தியாவுக்கு அனுப்பும் முயற்சியில் இறங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்கள்.
</p><p>
ராஜ்யகுருவின் பெற்றோருக்கு தங்கள் மகனை அணைத்துக்கொள்ளும் ஒரு இறுதி வாய்ப்பையும், அவருக்கு இறுதிச்சடங்கு செய்யும் வாய்ப்பையும் எப்படியாவது ஏற்படுத்திக் கொடுத்துவிடுவது என்பதில் தாங்கள் உறுதியாக இருப்பதாகவும் அவரது நண்பர்கள் தெரிவித்துள்ளார்கள்.</p>]]></content>
            <updated>2026-07-21T08:23:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Manchu</name>
            </author>
            <title type="text"><![CDATA[Today Gold Rate: தொடர்ந்து அதிகரித்து வரும் தங்கத்தின் விலை... இன்று சவரன் எவ்வளவு?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/gold-rate-july-21-2026-india-and-srilanka-1784622006"></link>
            <id>https://manithan.com/article/gold-rate-july-21-2026-india-and-srilanka-1784622006</id>
            <summary type="text">ஆபரணத் தங்கத்தின் விலை அடுத்தடுத்து தாறுமாறாக அதிகரித்துள்ளது பாமர மக்களிடையே அதிர்ச்சியடைய வைத்துள்ளது.இன்றைய தங்கம் விலை
ஆபரணத் தங்கத்தின் விலை தொட...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஆபரணத் தங்கத்தின் விலை அடுத்தடுத்து தாறுமாறாக அதிகரித்துள்ளது பாமர மக்களிடையே அதிர்ச்சியடைய வைத்துள்ளது.</p><h2>இன்றைய தங்கம் விலை
</h2><p>ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து சில தினங்களாக குறைந்து வந்த நிலையில், இன்று சவரனுக்கு 560 ரூபாய் அதிகரித்துள்ளது. நேற்றைய தினத்தில் கிராம் ரூ 13,150 ஆகவும் சவரன், ரூ.1,05,200 ஆகவும் இருந்து வந்தது.</p><p></p><p>
</p><p>
இந்நிலையில் சென்னையில் இன்று 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.70 அதிகரித்து, 13,220 ரூபாயாகவும், சவரனுக்கு ரூபாய் 5600 அதிகரித்து, 1,05,760 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது.
</p><p>இதே போன்று வெள்ளியின் விலையில் சற்று அதிகரித்துள்ளது. இன்று கிராமுக்கு ரூ. 240.00ஆகவும், கிலோவிற்கு ரூ.2,40,000 ஆகவும் விற்கப்பட்டு வருகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/81c784f7-82a2-441c-8ede-67d0f7d969e0/26-6a5f2bb8352ba.webp' /></p><p>
</p><h2>
இலங்கையில் தங்கம் விலை
</h2><p>இலங்கையிலும் ஆபரணத்தங்கத்தின் விலை குறைந்துள்ளது. இன்று 24 காரட் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.3,66,240 அதுவே கிராமிற்கு ரூ.45,780க்கு விற்கப்படுகின்றது.
</p><p>
மேலும் 22 காரட் தங்கத்தின் விலை ரூ. 3,35,760க்கும் ஒரு கிராமிற்கு ரூ. 41,970க்கு விற்கப்படுகின்றது.
</p><p>
இலங்கையில் வெள்ளியின் விலை ஒரு கிராமிக்கு&nbsp;597.39 LKR என்றும் ஒரு அவுன்ஸ 18,580.85 LKR என்று விற்பனை ஆகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9dac8fe1-8a17-4076-8a26-b01366fc635a/26-6a5f2bb8ddb45.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td><i>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் <a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள் <a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"><b>FOLLOW NOW</b></a>&nbsp; &nbsp; &nbsp; &nbsp;&nbsp;</i><br></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-21T08:20:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்திய - அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம்: டெல்லி நோக்கி வந்த விவசாயிகள் தடுத்து நிறுத்தம்! சூடுபிடித்துள்ள போராட்டக்களம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/shambhu-farmers-march-delhi-stoped-haryana-border-1784620054"></link>
            <id>https://tamilwin.com/article/shambhu-farmers-march-delhi-stoped-haryana-border-1784620054</id>
            <summary type="text">இந்திய - அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் இன்று(21) விவசாயிகளின் &#039;மகாபஞ்சாயத்து&#039;...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்திய - அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் இன்று(21) விவசாயிகளின் 'மகாபஞ்சாயத்து' கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டது. </p><p>

இதற்காக பஞ்சாப், அரியானா, இமாச்சல பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் தலைநகர் நோக்கிப் புறப்பட்டனர்.</p><p></p><h2>பெரும் போராட்டம்&nbsp;</h2><p>
</p><p>
தேஷ் பச்சாவ் மோட்சா அமைப்பின் அழைப்பின் பேரில் நடைபெற்ற இந்தப் பேரணியைத் தடுக்க, பஞ்சாப் - அரியானா எல்லையான ஷம்பு பகுதியில்&nbsp;பொலிஸார் பலத்த பாதுகாப்பை ஏற்படுத்தினர். 

இரும்பு தடுப்புகள், பேரிக்கேட்கள் உள்ளிட்டவை அமைக்கப்பட்டு, டெல்லிக்குள் செல்ல விவசாயிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
</p><p>
இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள், ஷம்பு எல்லையிலேயே அமர்ந்து போராட்டத்தைத் தொடங்கினர்.

 கடந்த ஆண்டு இதே எல்லைப் பகுதியில் நடைபெற்ற நீண்டகால விவசாயிகள் போராட்டம் நாடு முழுவதும் பெரும் கவனம் பெற்றிருந்த நிலையில், மீண்டும் அதே இடம் போராட்டக் களமாக மாறியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/69ebff7d-bb1a-4fa1-b91b-5aa45d191d94/26-6a5f2bbda3e29.webp' /></p><p>
</p><p>
இதற்கிடையில், அரியானாவின் அம்பாலா, குருக்ஷேத்ரா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்த விவசாயிகள் தொடர்ந்து டெல்லி நோக்கிப் பயணித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
</p><p>
மறுபுறம், டெல்லியில் நீட் உள்ளிட்ட தேர்வு முறைகேடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து கரப்பான்பூச்சி ஜனதா கட்சி தலைமையில் நடைபெற்று வரும் போராட்டமும் பதற்றத்தை அதிகரித்துள்ளது. </p><p>

நேற்று நாடாளுமன்றம் நோக்கிச் செல்ல முயன்ற போராட்டக்காரர்களை பொலிஸார் தடியடி மற்றும் கண்ணீர் புகைகுண்டுகளைப் பயன்படுத்தி கலைத்தனர்.</p><p>

 இந்த மோதலில் 118 பொலிஸாரும், 70 போராட்டக்காரர்களும் காயமடைந்ததாகவும், பலர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.</p><p></p><h2>அனுமதி மறுப்பு&nbsp;</h2><p>

இன்றும் பேரணி தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பாதுகாப்பு காரணங்களால் விவசாயிகள் டெல்லிக்குள் நுழைவது முன்கூட்டியே தடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்திய - அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக விவசாயிகள் ஆரம்பம் முதலே எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
</p><p>
 இந்த ஒப்பந்தத்தின் மூலம் அமெரிக்க வேளாண் பொருட்களுக்கு இந்திய சந்தையில் அதிக வாய்ப்பு கிடைக்கும் என்றும், இறக்குமதி வரிகள் குறைக்கப்பட்டால் சோயாபீன், சோளம், பருத்தி, ஆப்பிள், பாதாம் மற்றும் பால் பொருட்கள் போன்றவை இந்திய சந்தையில் அதிகளவில் நுழையும் என்றும் அவர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3870eb08-2f31-463f-a014-9743e1511486/26-6a5f2bbe534fb.webp' /></p><p>
</p><p>
அதன் விளைவாக, இந்தியச் சிறு விவசாயிகள் மற்றும் பால் உற்பத்தியாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள் என்றும், கிராமப்புற பொருளாதாரம் சீர்குலையும் அபாயம் இருப்பதாகவும் விவசாய அமைப்புகள் எச்சரிக்கின்றன.
</p><p>
மேலும், இந்த வர்த்தக ஒப்பந்தத்தின் முழு விவரங்களையும் மத்திய அரசு பொதுமக்கள் பார்வைக்கு வெளியிட வேண்டும் என்றும், விவசாயிகள், தொழிலாளர்கள், பால் உற்பத்தியாளர்கள் மற்றும் சிறு வணிகர்களுடன் விரிவான ஆலோசனை நடத்தாமல் எந்தவொரு ஒப்பந்தத்திலும் கையெழுத்திடக் கூடாது என்பதே தங்களது முக்கிய கோரிக்கை என்றும் விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-21T08:20:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்த புகைப்படத்தில் உள்ள குழந்தை யார் தெரியுமா? இன்று தென்னிந்திய அளவில் முன்னணி நடிகை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/popular-south-indian-actress-childhood-photo-1784616416"></link>
            <id>https://cineulagam.com/article/popular-south-indian-actress-childhood-photo-1784616416</id>
            <summary type="text">புகைப்படம்தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவரின் சிறு வயது புகைப்படம் வெளியாகியுள்ளது. இவர் மலையாளத்தில் அறிமுகமாகி ரசிகர்கள...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புகைப்படம்</h2><p>தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவரின் சிறு வயது புகைப்படம் வெளியாகியுள்ளது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bb9acf70-fc02-43f8-93ef-4da5ba61af2d/26-6a5f15e3c7a12.webp' /></p><p>இவர் மலையாளத்தில் அறிமுகமாகி ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர். பின், தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளிலும் படங்கள் நடிக்க தொடங்கினார்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/17f75f0a-a955-4069-a449-dbfe8aefd06d/26-6a5f15e49b65a.webp' /></p><p>கிட்டதட்ட 10 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் பயணித்து வரும் இவருக்கு சமீபத்தில் காதல் முறிவு ஏற்பட்டதாகவும் கிசுகிசுக்கப்படுகிறது. ஆனால், அது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.</p><p></p><h2>அனுபமா பரமேஸ்வரன்</h2><p>

அவர் வேறு யாருமில்லை, நடிகை அனுபமா பரமேஸ்வரன் தான். <a href="https://www.youtube.com/watch?v=U8a6c1TZrHo" target="_blank">பிரேமம் </a>திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி பின் தென்னிந்திய அளவில் படங்கள் நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்த அனுபமாவின் சிறு வயது புகைப்படம்தான் தற்போது வைரலாகி வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/302ae855-99fd-4014-ae5e-ac2e1dc54bfe/26-6a5f15e553d0f.webp' /></p>]]></content>
            <updated>2026-07-21T08:20:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kumar</name>
            </author>
            <title type="text"><![CDATA[கதிர்காம கந்தனின் ஆடிவேல் திருவிழாவில் குழப்பம் - மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் கண்டனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/confusion-at-kathirgama-kandan-s-aadivel-festival-1784621756"></link>
            <id>https://tamilwin.com/article/confusion-at-kathirgama-kandan-s-aadivel-festival-1784621756</id>
            <summary type="text">மட்டக்களப்பு ஈபிடிபி அமைப்பாளரால், மாநகரசபையினால் முன்னெடுக்கப்பட்டு வரும் அன்னதானச் செயற்பாடு தொடர்பில் உண்மைக்குப் புறம்பான கருத்துகள் வெளியிடப்பட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>மட்டக்களப்பு ஈபிடிபி அமைப்பாளரால், மாநகரசபையினால் முன்னெடுக்கப்பட்டு வரும் அன்னதானச் செயற்பாடு தொடர்பில் உண்மைக்குப் புறம்பான கருத்துகள் வெளியிடப்பட்டுள்ளதாகவும், அதன் மூலம் மாநகரசபைக்கும் அதன் முதல்வருக்கும் களங்கம் ஏற்படுத்த முயற்சிக்கப்பட்டுள்ளதாகவும் மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் சிவம்பாக்கியநாதன் குற்றம் சாட்டியுள்ளார்.</p><p>


 நேற்று(20.07.2026) மட்டக்களப்பு மாநகரசபையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். </p><h2>


கதிர்காம கந்தனின் ஆடிவேல் திருவிழா</h2><p>

அவர் மேலும் தெரிவிக்கையில், </p><p>

கதிர்காம கந்தனின் ஆடிவேல் திருவிழாவை முன்னிட்டு, பாத யாத்திரை செய்யும்
அடியார்களின் நலன்கருதி, மட்டக்களப்பு மாநகர சபை பாத யாத்திரீயர்களுக்கு
அன்னதானம் கொடுக்கும் பணியினை கடந்த ஐந்து வருடங்களாக தொடர்ச்சியாக செய்து
கொண்டு வருகிறோம்.
</p><p>

இந்த அன்னதான பணியினை ஒவ்வொருவருடைய அனுசரணையோடு, மாநகர சபையும் ஒரு
அனுசரணையையும் வழங்கி, ஒரு அன்னதான குழுவினரால் இந்த பணி செயல்படுத்தப்பட்டு
வருகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cae3acc3-23d6-4d7d-8cc1-6612986cf277/26-6a5f2adbda3b6.webp' /></p><p> 


கடந்த 2020ஆம் ஆண்டு எமது மாநகர சபையின் ஆட்சிக் காலத்திலேயே, அப்போது இருந்த
முதல்வர் தியாகராஜா சரவணபவன், ஆணையாளர் மதிவண்ணன் இருவரும் இணைந்து இந்தப் பணியை ஆரம்பித்தார்கள். </p><h2>



தொடர் விமர்சனம்</h2><p>
அதன் தொடர்ச்சியாக இந்த வருடமும் நாங்கள் இந்தப் பணிக்கான சேவைகளை கடந்த
8ஆம் திகதி ஆரம்பித்திருந்தோம். அன்று இந்தப் பணிக்காக எமது மாநகர சபை
வளாகத்திலிருந்து அண்மையிலே மாநகர சபைக்கு கொள்வனவு செய்யப்பட்ட, சுமாராக 
இரண்டே முக்கால் கோடி ரூபாய் செலவிலே நான்கு உழவு இயந்திரங்கள் புதிதாக
கொள்வனவு செய்திருந்தோம். </p><p>


அந்த உழவு இயந்திரத்திலே புதிய உழவு இயந்திரங்கள்
இரண்டையும், ஏனைய வேலைப் பகுதிக்குரிய உழவு இயந்திரங்களும், அதற்குரிய அந்த
பெட்டியையும் சேர்த்து மொத்தமாக நான்கு உழவு இயந்திரங்களும், அன்னதான பணிக்கனா சமையல் செய்யும் பொருட்களும் கொள்வனவு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> 

சமூக வலைத்தளங்களிலே மட்டக்களப்பு மாவட்ட ஈ.பி.டி.பி யின் அமைப்பாளர் ராஜ்குமார், உழவு இயந்திரம் மற்றும் சமையல் பொருட்கள் தொடர்பில் மோசமான வார்த்தைகளால் விமர்சித்துள்ளார்.
</p><p>

இதுபோன்ற விமர்சனங்களை முன்வைத்த குற்றச்சாட்டுக்காக அவர் மீது அவதூறு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், இந்த விவகாரம் தொடர்புடைய சட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்போம் என்றார்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-21T08:16:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் தங்க வாங்க காத்திருப்போருக்கான ஷாக் தகவல் ; தங்க விலை மீண்டும் உயர்வு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/shocking-news-for-those-gold-prices-rise-again-1784621676"></link>
            <id>https://jvpnews.com/article/shocking-news-for-those-gold-prices-rise-again-1784621676</id>
            <summary type="text">இலங்கையில் தங்கத்தின் விலை இன்று (21) மீண்டும் அதிகரித்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
நேற்று (20) 24 கரட் தங்கம் ஒரு ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் தங்கத்தின் விலை இன்று (21) மீண்டும் அதிகரித்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.</p><p>
</p><p></p><p>நேற்று (20) 24 கரட் தங்கம் ஒரு பவுண் ரூ.376,000 ஆக விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று அதன் விலை ரூ.1,000 அதிகரித்து ரூ.377,000 ஆக பதிவாகியுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fa6a2e2d-25ab-4970-8904-276255e342ff/26-6a5f2a6e3d181.webp' /></p><p>தற்போதைய விலை நிலவரப்படி, 22 கரட் தங்கம் ஒரு பவுண் ரூ.346,800 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
</p><p>
அதேவேளை, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராம் ரூ.47,125 ஆகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராம் ரூ.43,350 ஆகவும் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை மாற்றங்களுக்கு ஏற்ப, உள்நாட்டு தங்க விலைகளிலும் தொடர்ந்து ஏற்ற, இறக்கங்கள் பதிவாகி வருவதாக நகை வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-21T08:14:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[தவறான திசையில் காரை செலுத்திய கனேடியர்: விபத்தில் இந்திய இளைஞர் உட்பட இருவர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/indian-death-accident-in-canadian-drives-wrong-way-1784621582"></link>
            <id>https://news.lankasri.com/article/indian-death-accident-in-canadian-drives-wrong-way-1784621582</id>
            <summary type="text">கனடாவில் கார் விபத்தொன்றில் இருவர் பலியான நிலையில், அவர்களில் ஒருவர் இந்தியர் என்பதும் மற்றவர் கனேடிய கால்பந்து விளையாட்டு வீரர் என்பதும் தெரியவந்துள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவில் கார் விபத்தொன்றில் இருவர் பலியான நிலையில், அவர்களில் ஒருவர் இந்தியர் என்பதும் மற்றவர் கனேடிய கால்பந்து விளையாட்டு வீரர் என்பதும் தெரியவந்துள்ளது.</p><h3>

கார் விபத்தில் இருவர் பலி</h3><p>

கனடாவின் சஸ்காட்செவன் மாகாணத்திலுள்ள நெடுஞ்சாலை 11இல், சனிக்கிழமை இரவு 9.00 மணியளவில், தவறான திசையில் சென்ற ஒரு கார், எதிரே வந்துகொண்டிருந்த கார் மீது மோதியுள்ளது.
</p><p>
அந்த கோர விபத்தில், இரண்டு கார்களின் சாரதிகளும் பலியானார்கள்.
</p><p>
அவர்களில், தவறான திசையில் காரை செலுத்தியவர் ஒரு கனேடியர். அவரது பெயர் ஜேடன் (Jayden Dalke, 30). ஜேடன், பிரபல கால்பந்து அணியான Saskatchewan Roughriders அணி வீரர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/51b0675f-32aa-4a53-864c-4dd60493e864/26-6a5f2a0f7bdaa.webp' /></p><p>
விடயம் என்னவென்றால், ஜேடனின் காரில் கஞ்சாவும், மதுபானமும் இருந்துள்ளன. அவர் பெட்ரோல் நிலையம் ஒன்றில் எரிபொருள் நிரப்பிவிட்டு, பணம் கொடுக்காமலே அங்கிருந்து சென்றுவிட்டதாக பொலிசாருக்கு புகாரளிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><p>
ஆனால், அவர் போதையிலிருந்தாரா என்பது உடற்கூறு ஆய்வுக்குப் பிறகே தெரியவரும் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
ஜேடனின் கார் மோதி உயிரிழந்தவர், பீஷ்மா ராஜ்யகுரு (22) என்னும் இந்தியர். பொலிசார் ராஜ்யகுருவைக் குறித்து தெரிவித்த தகவல் அவ்வளவே!&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bd342388-cee6-4b79-ae36-c586a68d11ac/26-6a5f2a102da94.webp' /></p><p>

இதற்கிடையில், இந்தியாவிலிருக்கும் ராஜ்யகுருவின் பெற்றோர், தங்கள் மகனுடைய மரணச் செய்தி கேட்டு அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளதாக தெரிவித்துள்ள அவரது நண்பர்கள், பணம் திரட்டி அவரது உடலை இந்தியாவுக்கு அனுப்பும் முயற்சியில் தாங்கள் இறங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்கள்.</p><p>
ராஜ்யகுருவின் பெற்றோருக்கு தங்கள் மகனை அணைத்துக்கொள்ளும் ஒரு இறுதி வாய்ப்பையும், அவருக்கு இறுதிச்சடங்கு செய்யும் வாய்ப்பையும் எப்படியாவது ஏற்படுத்திக் கொடுத்துவிடுவது என்பதில் தாங்கள் உறுதியாக இருப்பதாகவும் அவரது நண்பர்கள் தெரிவித்துள்ளார்கள்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-21T08:13:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[நடிகை ரம்யா பாண்டியனின் சிகப்புநிற சேலை போட்டோஷூட்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/ramya-pandian-red-saree-photoshoot-post-1784620399"></link>
            <id>https://viduppu.com/article/ramya-pandian-red-saree-photoshoot-post-1784620399</id>
            <summary type="text">ரம்யா பாண்டியன்சோசியல் மீடியாவில் கிளாமர் புகைப்படங்கள், வீடியோக்களை பகிர்ந்து பிரபலமான நடிகை ரம்யா பாண்டியன், டம்மி பட்டாசு, ஜோக்கர், ஆண் தேவதை உள்ளி...</summary>
            <content type="html"><![CDATA[<h2>ரம்யா பாண்டியன்</h2><p>சோசியல் மீடியாவில் கிளாமர் புகைப்படங்கள், வீடியோக்களை பகிர்ந்து பிரபலமான நடிகை ரம்யா பாண்டியன், டம்மி பட்டாசு, ஜோக்கர், ஆண் தேவதை உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார். </p><p>குக் வித் கோமாளி சீசன் 1ல் கலந்து கொண்டு 2வது ரன்னர் அப் இடத்தை பிடித்தார்.

அதன்பின் கலக்கப்போவது யாரு சீசன் 9 நிகழ்ச்சியில் நடுவராக பணியாற்றினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4f7850ac-5047-41d8-afe9-19a6f628f089/26-6a5f257d761e7.webp' /></p><p> </p><p>அதன்பின் பிக்பாஸ் சீசன் 4ல் கலந்து கொண்டு 3வது ரன்னர் அப்பும், பிக்பாஸ் அல்டிமேட் 1ல் கலந்து கொண்டு 2வது ரன்னர் அப் இடத்தையும் பிடித்தார்.

கடந்த 2024ல் யோகா பயிற்சியாளர் லோவல் தவான் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.</p><p> யூடியூப் ஆரம்பித்து பல விஷயங்களை பகிர்ந்து வரும் ரம்யா பாண்டியன், நடிப்பில் அருள்வான் படம் ரிலீஸாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இன்ஸ்டாகிராமில் தற்போது சிகப்புநிற சேலையணிந்து எடுத்த க்யூட் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-07-21T08:05:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[கட்டுவான தலைக்கவச தொழிற்சாலையில் திடீர் தீ விபத்தில் ஐவர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/five-killed-in-sudden-fire-at-helmet-factory-1784620918"></link>
            <id>https://jvpnews.com/article/five-killed-in-sudden-fire-at-helmet-factory-1784620918</id>
            <summary type="text">ஹோமாகம, கட்டுவான கைத்தொழில் வலயத்தில் உள்ள தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளதாக ஹோமாகம பொலிஸார் தெரிவித்துள்ளனர். தற்போது தீ கட...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹோமாகம, கட்டுவான கைத்தொழில் வலயத்தில் உள்ள தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளதாக ஹோமாகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p> </p><p></p><p>தற்போது தீ கட்டுப்படுத்தப்பட்டு வரும் அதேவேளையில், தீயில் சிக்கியுள்ளவர்களைக் கண்டறிவதற்கான தேடுதல் நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/af92694d-a8af-4997-a8d3-ed149253be82/26-6a5f2777b0554.webp' /></p><p> 

இன்று (21) காலை இத்தீ விபத்து ஏற்பட்டுள்ளதுடன், அந்நேரத்தில் 80க்கும் மேற்பட்ட ஊழியர்கள் அங்கு இருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. </p><p>

இந்நிலையில் எவரேனும் உள்ளே சிக்கியுள்ளனரா? என்பதைக் கண்டறிவதற்காக தொடர்ந்து மீட்புப் பணிகள் இடம்பெற்று வருகின்றன. </p><p>

தலைக்கவசம் தயாரிக்கும் தொழிற்சாலையிலேயே இந்தத் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக ஹோமாகம தலைமையகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-21T08:01:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கயானாவில் கவிழ்ந்த பயணிகள் படகு: 27 பேர் பலி - 83 பேர் மாயம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/27-people-died-passenger-boat-capsized-in-guyana-1784618126"></link>
            <id>https://ibctamil.com/article/27-people-died-passenger-boat-capsized-in-guyana-1784618126</id>
            <summary type="text">தென் அமெரிக்கவில் கயானாவின் கடற்கரைக்கு அப்பால் பயணிகள் படகு ஒன்று கவிழ்ந்ததில் எயிரிழந்த 27 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் 83 பேர் காணாமல் போய...</summary>
            <content type="html"><![CDATA[<p>தென் அமெரிக்கவில் கயானாவின் கடற்கரைக்கு அப்பால் பயணிகள் படகு ஒன்று கவிழ்ந்ததில் எயிரிழந்த 27 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் 83 பேர் காணாமல் போயுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.&nbsp;</p><p> </p><p>'எம்வி பரிமா' என்ற படகில் பயணம் செய்த பயணிகளே இவ்வாறு விபத்துக்குள்ளாகியதாக அந்நாட்டு&nbsp; பிரதமர் மார்க் பிலிப்ஸ் வெளியிட்ட அறிக்கையை மேற்கோள்காட்டி இந்த செய்தி வெளியாகி உள்ளது.&nbsp;</p><p>கடந்த சனிக்கிழமை இரவு நடந்த விபத்தைத் தொடர்ந்து, 15 சிறு குழந்தைகள் உட்பட 69 பேர் இதுவரை மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>படகின் கேப்டன் கைது</h2><p> </p><p>விபத்துக்குள்ளாகிய படகில் 179 பேர் இருந்தனர் என்று மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/303d46ae-6e96-4581-81ab-ce6d3041789c/26-6a5f23a06899d.webp' /></p><p>பெரிய அலை ஒன்று தாக்கியதால் படகு திடீரென ஒருபுறம் சாய்ந்து, சில நொடிகளில் நீரால் நிரம்பியதாக உயிர் தப்பிய ஒருவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.&nbsp;</p><p>
இதுகுறித்த மேலதிக விசாரணைகளில் படகின் மாலுமியும் மற்றொரு குழு உறுப்பினர்களும் போதைப்பொருள் பயன்படுத்தி வந்ததை மருத்துவப் பரிசோதனைகள் உறுதி செய்துள்ளதாகக் தெரிவிக்கபட்டுள்ளது.&nbsp;</p><p>அவர்கள் அந்நாட்டு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன்&nbsp; பொறுப்பற்ற முறையில் செயல்பட்டவர்கள் சட்டப்படி கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என்று கயானா அரசு தெரிவித்துள்ளது.
</p><p>மேலும் காணாமல் போனவர்களைத் தேடும் பணியில், பிரான்ஸ் இராணுவத்தைச் சேர்ந்த மூழ்காளர்கள் மற்றும் மருத்துவர்கள் குழுவும் உதவி வருவதாகத்&nbsp; சர்வதேச ஊடக செய்திகள் தெரிவிக்கின்றது.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-21T08:01:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தங்கம் வாங்கவுள்ளோருக்கு முக்கிய அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/today-july-21st-gold-and-silver-price-rate-update-1784620471"></link>
            <id>https://ibctamil.com/article/today-july-21st-gold-and-silver-price-rate-update-1784620471</id>
            <summary type="text">சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை மாற்றங்களுக்கு ஏற்ப, உள்நாட்டு தங்க விலைகளிலும் தொடர்ந்து ஏற்ற, இறக்கங்கள் பதிவாகி வருவதாக நகை வியாபாரிகள் தெரிவிக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை மாற்றங்களுக்கு ஏற்ப, உள்நாட்டு தங்க விலைகளிலும் தொடர்ந்து ஏற்ற, இறக்கங்கள் பதிவாகி வருவதாக நகை வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.</p><p>அந்தவகையில், இலங்கையில் தங்கத்தின் விலை இன்று (21) மீண்டும் 1000 ரூபாயால் அதிகரித்துள்ளது.</p><p>அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் குறித்த விடயத்தினை தெரிவித்துள்ளது.&nbsp;&nbsp;</p><p></p><h2>தங்கத்தின் விலை&nbsp;</h2><p>
</p><p>
நேற்று (20) 24 கரட் தங்கம் ஒரு பவுண் ரூ.376,000 ஆக விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று அதன் விலை ரூ.1,000 அதிகரித்து ரூ.377,000 ஆக பதிவாகியுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b4e5d49c-a08f-4ee8-a303-656bf6ca3415/26-6a5f27006b091.webp' /></p><p>தற்போதைய விலை நிலவரப்படி, 22 கரட் தங்கம் ஒரு பவுண் ரூ.346,800 ஆக விற்பனை செய்யப்படுகிறது.</p><p>

அதேவேளை, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராம் ரூ.47,125 ஆகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராம் ரூ.43,350 ஆகவும் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-21T08:00:10+00:00</updated>
        </entry>
    </feed>
