<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-08-22T06:49:05+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[அநுர அரசு மீது கடும் அதிருப்தியில் மகிந்த]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/people-have-more-problems-mahinda-upset-1787373427"></link>
            <id>https://tamilwin.com/article/people-have-more-problems-mahinda-upset-1787373427</id>
            <summary type="text">22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை கொண்டு வருவதற்கு முன்னர் அரசாங்கம் மக்களுக்காக செய்ய வேண்டிய பல முக்கிய பணிகள் இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ரா...</summary>
            <content type="html"><![CDATA[<p>22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை கொண்டு வருவதற்கு முன்னர் அரசாங்கம் மக்களுக்காக செய்ய வேண்டிய பல முக்கிய பணிகள் இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
</p><p>
22ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் தற்போது அதிகளவில் பேசப்பட்டு வருகின்றது. </p><p>இது குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போது இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
</p><h2><b>
அதிருப்தியில் மகிந்த </b></h2><p>நாட்டில், 22ஆவது திருத்தத்தை கொண்டு வருவதை விட, அரசாங்கம் மக்களுக்காக செய்ய வேண்டிய பல பணிகள் இருக்கின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/27909829-c702-4572-9af6-6f5c0ccbffd7/26-6a894624c29b1.webp' /></p><p>அவற்றை செய்து முடித்த பின்னர் தேவையான எந்தவொரு சட்டப்பிரிவையும் கொண்டு வருவதில் பிரச்சினையில்லை என அவர் கூறியுள்ளார். </p><p>

அரசாங்கம் முன்னுரிமை வழங்க வேண்டிய விடயங்களுக்கு பதிலாக வேறு விடயங்களுக்கு முன்னுரிமை வழங்குகிறதா என ஊடகவியலாளர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
</p><p>
 அதற்கு பதிலளித்த அவர், “அதுதான் எங்களுக்கும் இருக்கும் பிரச்சினை. முன்னுரிமை வழங்க வேண்டிய பிரச்சினைகள் குறித்து பேசுவதில்லை. தேவையற்ற விடயங்களே முன்னிலைக்கு கொண்டு வரப்படுகின்றன. </p><h3><b>

அரசியலமைப்பு திருத்தம்</b></h3><p>மேலும், நாட்டின் பொதுமக்கள் தற்போது அரசியலமைப்பு திருத்தத்தை விட முக்கியமான பல பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றது. மக்களுக்கு இந்தப் பிரச்சினையை விட வேறு பல பிரச்சினைகள் உள்ளன. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e42bfb3e-b898-4141-a03a-deba8e47a424/26-6a894625754d6.webp' /></p><p>சிலர் உணவு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை தேவைகளுக்காக சிரமப்படுகின்றனர். 

அந்தப் பிரச்சினைகளை தீர்க்காமல் தேவையற்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காண முயற்சிப்பதுதான் பிரச்சினையாக உள்ளது. </p><p>மக்களின் அன்றாட வாழ்க்கையை பாதிக்கும் பொருளாதார மற்றும் சமூகப் பிரச்சினைகளுக்கு முதலில் தீர்வு காணப்பட வேண்டும் என்பதே எனது நிலைப்பாடாகும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார். </p>]]></content>
            <updated>2026-08-22T06:48:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[செல்வச்சந்நிதி ஆலய சூழலில் விதிமீறல்: ஐவருக்கு ரூ.50,000 அபராதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/50-000-chewing-betel-near-selvachannithi-temple-1787380363"></link>
            <id>https://tamilwin.com/article/50-000-chewing-betel-near-selvachannithi-temple-1787380363</id>
            <summary type="text">தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலய சூழலில் தடையை மீறி வெற்றிலை மென்றவாறு
நடமாடிய ஐவருக்கு ஐம்பதாயிரம் ரூபா தண்டப்பணம் விதித்து பருத்தித்துறை நீதவான்
நீ...</summary>
            <content type="html"><![CDATA[<p>தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலய சூழலில் தடையை மீறி வெற்றிலை மென்றவாறு
நடமாடிய ஐவருக்கு ஐம்பதாயிரம் ரூபா தண்டப்பணம் விதித்து பருத்தித்துறை நீதவான்
நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
</p><p>
வருடாந்த மகோற்சவம் நடைபெற்று வருகின்ற சூழ்நிலையில் ஆலயத்தின் சுற்றாடலினை
வல்வெட்டித்துறை நகரசபையினர் சுகாதாரமாக பேணி வருவதுடன் ஆலய சுற்றாடலானது
புகையிலை அற்ற மண்டலமாக சுகாதாரத்தரப்பினரினால் அறிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>முற்றாக தடை&nbsp;</h2><p>
</p><p>
குறித்த மண்டலத்தில் புகையிலை சார் பொருட்கள் விற்பனை செய்வதும்
பயன்படுத்துவதும் முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/acc1f767-e70b-4965-a230-3b085e2a34aa/26-6a8944f00bbae.webp' /></p><p>

இந்தநிலையில் குறித்த பகுதியில் வெற்றிலை மென்ற வண்ணம் ஆலய சுற்றாடலில்
காணப்பட்ட ஐந்து பேருக்கு எதிராக கடந்த 20/08/2026 வியாழக்கிழமை
வல்வெட்டித்துறை நகரசபையின் பொதுச்சுகாதார பரிசோதகரான ப. தினேஸினால்
பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
</p><p>
குறித்த வழக்கானது அன்றைய தினமே விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது
சம்பந்தவர்கள் குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்ட அடிப்படையில் தலா 10,000 ரூபா வீதம்
50,000 ரூபா தண்டப்பணம் அறவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-22T06:43:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடா - அமெரிக்க வர்த்தக பேச்சுவார்த்தை முறிவு: வரிவிதிப்பு மூலம் பதிலடி கொடுக்க திட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/canada-halts-us-trade-talks-1787380532"></link>
            <id>https://news.lankasri.com/article/canada-halts-us-trade-talks-1787380532</id>
            <summary type="text">Canada halts us trade talks: அமெரிக்கா - கனடா இடையே வர்த்தக பேச்சுவார்த்தைகள் முறிவை சந்தித்துள்ளன.அமெரிக்கா- கனடா பேச்சுவார்த்தை முறிவு
அமெரிக்காவுட...</summary>
            <content type="html"><![CDATA[<p>Canada halts us trade talks: அமெரிக்கா - கனடா இடையே வர்த்தக பேச்சுவார்த்தைகள் முறிவை சந்தித்துள்ளன.</p><h2>அமெரிக்கா- கனடா பேச்சுவார்த்தை முறிவு</h2><p>
அமெரிக்காவுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தைகளை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக கனேடிய பிரதமர் மார்க் கார்னி அறிவித்துள்ளார்.</p><p>கடுமையான வரி விதிப்பு கெடு முடிவடைவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு இந்த முடிவை கனடா அரசு எடுத்துள்ளது.</p><p> அமெரிக்காவின் தரப்பில் கடைசி நேரத்தில் மாற்றப்பட்ட சில திருத்தங்கள் ஏற்றுக் கொள்ள முடியாதவை என்று கனடா தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/737e3fa5-2256-423d-ae96-95996d48b1b2/26-6a8943367f941.webp' /></p><p> அமெரிக்காவின் தரப்பில் இருந்து மாற்றப்பட்ட இந்த நிபந்தனைகள் பொருளாதார ரீதியில் சாத்தியமற்றது மற்றும் நியாயமற்றது என்றும் எந்தவொரு ஒப்பந்தத்தின் மீதான நம்பகத்தன்மையையும் இது கேள்விக்குள்ளாக்கும் என்று கனடா பிரதமர் கார்னி கடுமையாக விமர்சித்துள்ளார்.</p><p> ஒப்பந்தத்தில் மேற்கொள்ளப்பட்ட திடீர் மாற்றங்கள் கனடாவின் நோக்கங்களை நிறைவேற்ற முடியாததாக மாற்றிவிட்டதாக குறிப்பிட்டுள்ளார்.</p><h2> 50% வரி விதிப்பு</h2><p>
அமெரிக்கா - கனடா இடையிலான வர்த்தக பேச்சுவார்த்தைகள் முடங்கியதை தொடர்ந்து கிட்டத்தட்ட 28 பில்லியன் டொலர் மதிப்பிலான கனேடிய பொருட்கள் மீது 50% வரி விதிப்பை அமெரிக்கா விதித்துள்ளது.</p><p> உள்ளூர் வணிகங்கள் மற்றும் தொழிலாளர்களை பாதுகாக்கும் நோக்கில் அமெரிக்கா விதித்த வரிகளுக்கு சமமான வரியானது விதிக்கப்பட்டு பதிலடி கொடுக்கப்படும் என்று கனேடிய பிரதமர் மார்க் கார்னி உறுதிபடத் தெரிவித்துள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-22T06:35:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் தேடப்பட்டு வரும் சீனப்பிரஜைகள் - பொது மக்களிடம் அவசர உதவிக்கோரும் பொலிஸார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/murder-of-chinese-national-03-suspects-arrested-1787363512"></link>
            <id>https://tamilwin.com/article/murder-of-chinese-national-03-suspects-arrested-1787363512</id>
            <summary type="text">கொழும்பு துறைமுக நகரில் தங்கியிருந்த மூன்று சீன நாட்டவர்கள் மீது தாக்குதல் நடத்தி, அவர்களில் ஒருவரை கடத்திச்சென்று கொலை செய்த சம்பவம் தொடர்பாக தேடப்பட...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு துறைமுக நகரில் தங்கியிருந்த மூன்று சீன நாட்டவர்கள் மீது தாக்குதல் நடத்தி, அவர்களில் ஒருவரை கடத்திச்சென்று கொலை செய்த சம்பவம் தொடர்பாக தேடப்பட்டு வரும் மூன்று சந்தேகநபர்களை கைது செய்ய பொலிஸார் பொதுமக்களிடம் உதவியை கோரியுள்ளனர்.</p><p>இவ்வாறு கொலை செய்யப்பட்ட சீன நாட்டவரின் உடல், எஹெலியகோடாவின் கரந்தான பகுதியில் வனப்பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டது&nbsp;&nbsp;</p><p>இச்சம்பவம் குறித்து கொழும்பு மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவு விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், சந்தேகநபர்களின் புகைப்படங்களையும் ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3f167eac-85bf-4175-a965-3cd9ba1fba06/26-6a89048ab3c50.webp' /></p><h2>வான் அல்லது கடல் வழி ஊடாக நாட்டைவிட்டுத்தப்பியோடக்கூடும்</h2><p>

இச்சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு சீன நாட்டவர்கள் ஏற்கனவே கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். </p><p>

இதற்கமைய, மேலதிகமாக மூன்று சந்தேகநபர்களைக் கைது செய்வதற்கான விசாரணைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில்&nbsp;சந்தேகநபர்களை கைது செய்ய பொலிஸார் பொதுமக்களிடம் உதவியை கோரியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/725f6ad8-6e4e-4af9-82e9-12d4da94009d/26-6a89048b64725.webp' /></p><p>குறித்த மூன்று சீன நாட்டவர்களும் தற்போது இலங்கையில் தங்கியிருப்பதுடன், சுற்றுலா விசாவில் வருகை தந்த இவர்களின் செல்லுபடியாகும் விசா காலம் முடிவடைந்துள்ளமை தெரியவந்துள்ளது. </p><p>

எனவே மூன்று சீன நாட்டவர்களும் வான் அல்லது கடல் வழி ஊடாகச் சட்டவிரோதமான முறையில் நாட்டைவிட்டுத் தப்பியோடக்கூடும் என்பதால், அவர்களைக் கைது செய்யப் பொதுமக்களிடம் பொலிஸார் உதவி கோரியுள்ளனர்.</p><p>அதற்கமைய, குறித்த சந்தேகநபர்கள் தொடர்பான ஏதேனும் தகவல்கள் இருப்பின், பொறுப்பதிகாரி / கொழும்பு மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவு - 0718 591 735 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அறிவிக்குமாறு&nbsp; பொதுமக்களை கேட்டுக்கொள்கின்றனர்.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-22T06:31:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[முதலிரவு காட்சி..என் மகன் திட்டிட்டான்!! இயக்குநரிடம் மன்னிப்பு கேட்ட சுப்பிரமணியபுரம் நடிகை தனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/subramaniapuram-open-scene-of-the-first-night-1787380634"></link>
            <id>https://viduppu.com/article/subramaniapuram-open-scene-of-the-first-night-1787380634</id>
            <summary type="text">சுப்பிரமணியபுரம்தமிழ் சினிமாவில் சில படங்கள் வெளியாகி பல வருடமானாலும் அதில் நடித்த சில கதாபாத்திரங்களும் காட்சிகளும் இன்றும் பேசப்பட்டு வரும். அப்படி ...</summary>
            <content type="html"><![CDATA[<h2>சுப்பிரமணியபுரம்</h2><p>தமிழ் சினிமாவில் சில படங்கள் வெளியாகி பல வருடமானாலும் அதில் நடித்த சில கதாபாத்திரங்களும் காட்சிகளும் இன்றும் பேசப்பட்டு வரும். அப்படி 2008ல் வெளியான சுப்பிரமணியபுரம் படத்தின் முக்கிய கல்ட் கிளாசிக் பட காட்சிகள் இன்றும் கொண்டாடப்படும். அப்படி மைக் செட் ராசாத்தி ரோலில் நடித்த திண்டுக்கல் தனம், அப்படத்தில் நடித்த அனுபவங்களை பகிர்ந்துள்ளார். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4a8d8006-0960-4004-b883-3fc41558e532/26-6a89439cb809e.webp' /></p><p>அவர் கூறுகையில், அப்படத்தில் நடிக்க அலெக்ஸ் என்பவரிடம் இருந்து எனக்கு போன் கால் வந்தது. உடனடியாக பாரதிபுரம் வாங்க என்று சொன்னதும் ஒரு சுமோ காரில் சென்றுள்ளார். அப்போது தாடியுடன் ஒருவர் தனம் இறங்கி வருவதையே பார்த்துக் கொண்டிருந்தாராம். அவரை பார்த்ததும் இவர் என்ன கேடி மாதிரி இருக்கிறார் என்று தனத்திற்கு தோன்றியுள்ளது. அதன்பின் இவர் தான் இயக்குநர் சசிகுமார் என்று பக்கத்தில் இருந்தவர் கூறியிருக்கிறார். </p><p>அப்போது மனசில் சின்ன நெருடல் இருந்துள்ளது. முதல் நாளிலேயே திருவிழா காட்சிகள் என்பதால் அடுத்த நாளே வாங்க என்று கூறி 10 நாட்கள் சூட்டிங்கில் தனம் கலந்து கொண்டிருக்கிறார். கேமராவை பார்த்து சிரிக்க சொல்லி இருக்கிறார்கள், ஆனால் படத்தில் தனம் நாட்டாமையை பார்த்து சிரிப்பதுபோல் மாற்றி வைத்துவிட்டார்களாம். அதேபோல் தோட்டம் கொண்ட ராசாவே, சூடிக்கொண்ட ராசாத்தி என்ற பாடல் பின்னனி காட்சி படமாக்கப்பட்ட விதத்தை பற்றியும் தனம் கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b92bee87-22c8-4d0c-8415-69020fa443f8/26-6a89439d6a395.webp' /></p><p> </p><h2>முதலிரவு காட்சி</h2><p>ஆரம்பத்தில் நன் எந்த கேரக்டரில் நடிக்கிறேன் என்று எனக்கு தெரியாது. அந்த ஷூட்டிங் ஸ்பாட்டிலிருந்த ஒருசிலர் என்னை ராசாத்தி ராசாத்தி என்று கூப்பிடுவாங்க, அப்போது எதற்கு அப்படி கூப்பிடுறாங்கன்னு நினைச்சுக்கிட்டே இருந்தேன், ஆனால் பிறகுதான் எனக்கு விஷயமே தெரிந்தது. எனக்கு நாட்டாமையுடன் முதலிரவு காட்சி ஒன்று இருந்தது. அதில் நான் நடிக்கவே மாட்டேன் என்று சொல்லிவிட்டேன். </p><p>எனக்கு இந்த நடிப்பு போதும், இப்படி எல்லாம் என்னால் முடியவே முடியாது என்று சொன்னேன். அங்கு என்னோட சொந்தக்காரங்க எல்லோரும் வெளியில் இருந்தாங்க, எல்லோரும் நான் நடிக்க போறதை பார்க்கிறதுக்கு வந்துருக்காங்க, ஆனால் நான் நடிக்க போறது இப்படிப்பட்ட காட்சி என்று தெரிஞ்சா என்ன சொல்லுவாங்க, நமக்குன்னு ஒரு மரியாதை இருக்கு, நாம போய் இப்படி நடிக்கணுமா என்று நான் யோசித்துக் கொண்டிருந்தேன்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1d18e486-6d79-43d1-9281-42d01a6d55e4/26-6a89439e1f92f.webp' /></p><p> </p><p>அப்போது கஞ்சா கருப்பு வந்து என்னை திட்டுனாரு. இது எப்படிப்பட்ட படம் தெரியுமா? உனக்குன்னு ஒரு அடையாளம் கிடைக்கும். அதை நீயே கெடுத்துக்காத என்று சொன்னாரு. அந்நேரத்தில் என் மகனே கோபப்பட்டுட்டான். அம்மா நீ நடிக்கிறதுக்கு வந்துட்டு அந்த காட்சியில் நடிக்க மாட்டேன், இதில் நடிக்க மாடேன்னு சொல்றது நல்லாவா இருக்குன்னு திட்டுனான். </p><p>அதற்குமுன் நான் அக்காட்சியில் நடிக்க முடியாதுன்னு சொன்னதும் சசிகுமார் சார் வந்து என்கிட்ட, சமாதானம் பண்ணுனார். சார் என்னால இதுபோல நெகட்டிவாக நடிக்க முடியாதுன்னு சொன்னேன். அப்புறம் மகன் சொன்ன விஷயத்தை கேட்டு எனக்கு சரின்னு பட்டு, அவரிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு, பின் அக்காட்சியில் நடித்தேன். ஆனால் அப்பட கேரக்டர் எனக்கு பிறகு நல்ல ஒரு அடையாளத்தை கொடுத்தது என்று தனம் கூறினார்.</p>]]></content>
            <updated>2026-08-22T06:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு : நீதி அமைச்சரின் அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/prisoners-sentenced-to-death-and-life-imprisonment-1787378811"></link>
            <id>https://ibctamil.com/article/prisoners-sentenced-to-death-and-life-imprisonment-1787378811</id>
            <summary type="text">நாட்டில் தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்குவதற்காக முறையான பொறிமுறை ஒன்றை உருவாக்குவது தொடர்பில் நியமிக்கப்பட்ட குழுவின் அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டில் தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்குவதற்காக முறையான பொறிமுறை ஒன்றை உருவாக்குவது தொடர்பில் நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை விரைவில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர், சட்டத்தரணி ஹர்ஷண நாணயக்கார தெரிவித்துள்ளார். </p><p>

கொழும்பு விளக்கமறியல், புதிய மகசின் மற்றும் வெலிக்கடை சிறைச்சாலைகளின் செயற்பாடுகளைப் பார்வையிட்டு, கைதிகளின் பிரச்சினைகள் குறித்துக் கலந்துரையாடிய போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.</p><p>மரண தண்டனை மற்றும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்குவதற்கான முறையான பொறிமுறையைத் தயாரிக்கும் நோக்கில், ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் எஸ். துரைராஜா தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டதாக குறிப்பிட்டார்.</p><p></p><h2>அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும்</h2><p> 

பத்து மாத காலத்திற்குள்ளான ஆய்வுக்குப் பின்னர் குறித்த குழுவின் அறிக்கை கிடைக்கப்பெற்றுள்ளதாக சுட்டிக்காட்டினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a1d06fc3-d5ef-41de-bc04-2864bee14108/26-6a89401e8e1a2.webp' /></p><p> 

ஜனாதிபதி பொதுமன்னிப்பை வழங்குவதற்கான முறையான பொறிமுறையைத் தயாரித்தல், மரண தண்டனை அனுபவிக்கும் கைதிகளின் தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்தல், ஆயுள் தண்டனை அனுபவிக்கும் கைதிகளின் தண்டனைக் காலத்தை 20 ஆண்டுகளாகக் குறைத்தல் மற்றும் கைதிகளுக்கு வீட்டு விடுமுறை வழங்குதல் போன்ற விடயங்கள் தொடர்பில் குறித்த குழுவினால் பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளன. </p><p>

இதன் மூலம் மரண தண்டனை மற்றும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட கைதிகள் விடுதலையாகிச் செல்வதற்கான முறையான பொதுமன்னிப்புப் பொறிமுறை ஒன்றை உருவாக்குவது தொடர்பான விடயங்கள் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும்.“ என தெரிவித்தார்.</p><p>இந்தநிலையில், அரசாங்க பகுப்பாய்வு அறிக்கைகளின் தாமதம் காரணமாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பெண் மற்றும் ஆண் கைதிகளைச் சந்தித்த அமைச்சர், அந்த அறிக்கைகளைக் விரைவாக வழங்குவதற்கான வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.</p><p>&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-22T06:29:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[இனி இருமுறை மட்டுமே திமுகவில் மாவட்ட செயலாளர் பதவி - செயற்குழுவில் முக்கிய தீர்மானம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/limit-for-district-secretary-in-dmk-executive-meet-1787380077"></link>
            <id>https://ibctamilnadu.com/article/limit-for-district-secretary-in-dmk-executive-meet-1787380077</id>
            <summary type="text">dmk executive committee: திமுகவில் மாவட்ட செயலாளர் பதவிக்கு வயது மற்றும் 2 முறை மட்டுமே பதவி என முக்கிய மாற்றங்கள் செய்து செயற்குழுவில் தீர்மானம் நிறை...</summary>
            <content type="html"><![CDATA[<p>dmk executive committee: திமுகவில் மாவட்ட செயலாளர் பதவிக்கு வயது மற்றும் 2 முறை மட்டுமே பதவி என முக்கிய மாற்றங்கள் செய்து செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.</p><h3>

திமுக செயற்குழு கூட்டம்
</h3><p>
2026 சட்டமன்ற தேர்தலுக்குப் பிறகு திமுகவின் முதல் செயற்குழு கூட்டம் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்று வருகிறது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1946c806-0e9e-42de-aff6-8bab02344ba8/26-6a89416f5db86.webp' /></p><p>

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில், கட்சியின் எதிர்கால செயல்பாடுகள், தேர்தல் தோல்விக்கான காரணங்கள் மற்றும் அமைப்பு ரீதியாக மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள் குறித்து முக்கிய ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன.
</p><p>
திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர். </p><p>

2 சட்டமன்றத் தொகுதிகளுக்கு ஒரு மாவட்டச் செயலர் என்ற அடிப்படையில், மாவட்டச் செயலர்கள் எண்ணிக்கையை 110 ஆக உயர்த்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. </p><p>

இதே போல் திமுக மாவட்டச் செயலாளர்களின் அதிகபட்ச வயது 70 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

திமுகவில் ஒருவர் அதிகபட்சம் இருமுறை மட்டுமே இனி மாவட்டச் செயலாளராக பணியாற்ற முடியும். </p><p>

திமுக ஒன்றியச் செயலாளர்கள், நகரச் செயலாளர்களின் அதிகபட்ச வயது இனி 60 ஆகவும், மாநகர, பேரூர் வட்டச் செயலாளர்களுக்கு அதிகபட்ச வயது 50 ஆகவும், கிளைச் செயலாளர்களுக்கு அதிகபட்ச வயது 45 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-22T06:28:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆகஸ்ட் 22 தங்கம் விலை நிலவரம்: சவரனுக்கு ரூ.800 உயர்வு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/today-august-22nd-gold-and-silver-price-in-chennai-1787378809"></link>
            <id>https://manithan.com/article/today-august-22nd-gold-and-silver-price-in-chennai-1787378809</id>
            <summary type="text">ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வருகிறது. குறிப்பாக, கடந்த சில நாட்களாக தங்கம் விலை உயர்ந்து வருவது ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வருகிறது. குறிப்பாக, கடந்த சில நாட்களாக தங்கம் விலை உயர்ந்து வருவது நகை வாங்குவோர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இன்றைய விலை நிலவரம் குறித்து இங்கு பார்க்கலாம்.</p><p>நேற்று (ஆகஸ்ட் 21) ஒரே நாளில் தங்கம் விலை இரண்டு முறை அதிரடியாக உயர்ந்தது. நேற்று காலை நிலவரப்படி, 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.110 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.14,710க்கும், ஒரு சவரன் ரூ.880 உயர்ந்து ரூ.1,17,680க்கும் விற்பனை செய்யப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7f96c9eb-687a-4ae1-8631-abc5e61bdb96/26-6a89402a510e2.webp' /></p><p></p><p>
இதைத்தொடர்ந்து நேற்று மாலை மீண்டும் தங்கம் விலை உயர்ந்தது. 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு மேலும் ரூ.140 அதிகரித்து ரூ.14,850 ஆகவும், சவரனுக்கு ரூ.1,120 உயர்ந்து ரூ.1,18,800 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது.</p><h2>இன்றைய நிலவரம்&nbsp;</h2><p>

இந்நிலையில், இன்றும் (ஆகஸ்ட் 22) தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்துள்ளது. இன்றைய நிலவரப்படி, 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.100 அதிகரித்து ரூ.14,950 ஆகவும், ஒரு சவரனுக்கு ரூ.800 உயர்ந்து ரூ.1,19,600 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0aab5d99-0965-4837-b744-cf3319ef77f9/26-6a89402b07462.webp' /></p><p>
</p><p>
அதேபோல், 18 காரட் தங்கத்தின் விலையும் இன்று உயர்ந்துள்ளது. 18 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.100 அதிகரித்து ரூ.12,730 ஆகவும், ஒரு சவரனுக்கு ரூ.800 உயர்ந்து ரூ.1,01,840 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.</p><p>

மறுபுறம், வெள்ளி விலையில் இன்று எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.270க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,70,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/215d9612-5197-41ce-a0d7-e3756238395b/26-6a89402babc23.webp' /></p><p></p><p>

தொடர்ந்து இரு நாட்களாக தங்கம் விலை உயர்ந்து வருவதால், தங்க நகை வாங்கத் திட்டமிட்டுள்ளவர்கள் விலை நிலவரத்தை உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.&nbsp;</p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW&nbsp;</a></u></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-22T06:26:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[2,500 கோடி ரூபாய் பெறுமதியான தங்க சிலை தொடர்பில் வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/story-of-the-burial-of-the-golden-statue-is-a-lie-1787278863"></link>
            <id>https://tamilwin.com/article/story-of-the-burial-of-the-golden-statue-is-a-lie-1787278863</id>
            <summary type="text">ஜா எல - மெல்வத்த பகுதியில் சுமார் 2,500 கோடி ரூபாய் பெறுமதியானதாக கருதப்படும் பழமையான தங்க முலாம் பூசப்பட்ட அனுமான் சிலை புதைக்கப்பட்டுள்ளதாக அண்மையில...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜா எல - மெல்வத்த பகுதியில் சுமார் 2,500 கோடி ரூபாய் பெறுமதியானதாக கருதப்படும் பழமையான தங்க முலாம் பூசப்பட்ட அனுமான் சிலை புதைக்கப்பட்டுள்ளதாக அண்மையில் செய்திகள் வெளியானது.</p><p>

எனினும், அது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் அத்தகைய சிலை எதுவும் அங்கு இல்லை என்பது தெரியவந்துள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
</p><p>
கோட்டை நீதவான் பசன் அமரசேன முன்னிலையில் நேற்று இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><h2><b>
 தங்க சிலை</b></h2><p>தங்கச் சிலை புதைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானதனை தொடர்ந்து ஜா எல மெல்வத்த பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரை பயன்படுத்தி சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/48f63bec-bbd6-42c1-81e1-59439ec0a5ae/26-6a87b6f330040.webp' /></p><p>இதன்போது, அங்கு ஏதேனும் அறியப்படாத பொருள் இருப்பதாக தெரியவந்திருந்தது.</p><p>

எனினும், புவியியல் மற்றும் சுரங்கப் பணியகம் மேற்கொண்ட ஆய்வுகளின் மூலம், குறித்த இடத்தில் எந்தவொரு பொருளும் புதைக்கப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-22T06:22:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவின் தடைகள் ; பேரழிவுகரமாக இருக்கும் ; ஈரான் எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/us-sanctions-would-be-catastrophic-iran-warns-1787379771"></link>
            <id>https://canadamirror.com/article/us-sanctions-would-be-catastrophic-iran-warns-1787379771</id>
            <summary type="text">&amp;nbsp; ஈரான் மீது வரலாற்றில் மிகக் கடுமையான நிதித் தடைகளை விதிக்கப்போவதாக வொஷிங்டன் உறுதியளித்துள்ள நிலையில், புதிய அமெரிக்க அச்சுறுத்தல்களுக்கு அளிக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; ஈரான் மீது வரலாற்றில் மிகக் கடுமையான நிதித் தடைகளை விதிக்கப்போவதாக வொஷிங்டன் உறுதியளித்துள்ள நிலையில், புதிய அமெரிக்க அச்சுறுத்தல்களுக்கு அளிக்கப்படும் பதில் "பேரழிவுகரமாக" இருக்கும் என்று ஈரான் எச்சரித்துள்ளது.</p><p>&nbsp; ஈரானுக்கு "எந்தவிதமான உயிர்நாடியையும்" வழங்கும் எந்தவொரு நாடும் பொருளாதார விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என டொனால்ட் டிரம்ப் எச்சரித்ததைத் தொடர்ந்து, திங்கட்கிழமை திட்டமிடப்பட்ட தடைகள் குறித்த விபரங்களை வெளியிடவுள்ளதாக அமெரிக்க திறைசேரி செயலாளர் ஸ்காட் பெசென்ட் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4f5a771a-35c8-42f7-a8a1-fef3bd9249a1/26-6a89403cf062f.webp' /></p><h2>ஆயுதப் படைகள்&nbsp;பேரழிவுகரமான பதில்களை வழங்கும்</h2><p> 

ஈரானின் ஆயுதப் படைகளின் தலைமைத் தளபதி மேஜர் ஜெனரல் அலி அப்தொல்லாஹி, இஸ்லாமியக் குடியரசின் எதிர்வினை விரிவானதாகவும் தீர்க்கமானதாகவும் இருக்கும் என்று கூறினார். </p><p>

"நிலம், கடல், வான், வான் பாதுகாப்பு மற்றும் இணையவெளி முழுவதும் தயார் நிலையில் உள்ள ஈரானின் ஆயுதப் படைகள், எதிரியின் புதிய அச்சுறுத்தல்களுக்கு நசுக்கும், தண்டிக்கும் மற்றும் பேரழிவுகரமான பதில்களை வழங்கும்" என்று அப்தொல்லாஹியை மேற்கோள் காட்டி ஈரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. </p><p>

அமெரிக்காவும் இஸ்ரேலும் கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்கு முன்பு தொடங்கிய போரில் இரு தரப்பினரும் இன்னும் வெற்றிபெறவில்லை என்றாலும், ஈரானியத் தலைவர்களும் டிரம்பும் வெற்றிகரமான மற்றும் அச்சுறுத்தலான அறிக்கைகளை வெளியிட்டுள்ளனர். </p><p>

இந்தப் போர் ஆயிரக்கணக்கான மக்களைக் கொன்றதுடன், பிற வளைகுடா நாடுகளையும் ஈர்த்து உலகளாவிய எரிபொருள் விலையை உயர்த்தி வருகிறது.</p><p> 

அமெரிக்கத் தாக்குதல்கள் ஈரானின் பொருளாதாரத்தையும் அதன் வழக்கமான படைகளையும் கடுமையாகக் குறைத்துள்ளன, ஆயினும் ஹோர்முஸ் நீரிணையில் எண்ணெய் தாங்கி கப்பல் போக்குவரத்தைத் தடையின்றித் தடுக்கவும் பிராந்திய எதிரிகளைத் தாக்க ஏவுகணை மற்றும் ஆளில்லா விமானத் திறன்களைத் தெஹ்ரான் தொடர்ந்து தக்கவைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-08-22T06:20:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வரலாற்று பிரசித்தி பெற்ற செல்வச்சந்நிதி ஆலயத்தில் வெற்றிலை மென்றவர்களுக்கு நடந்த சம்பவம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/fines-chewing-betel-leaves-selvachannithi-temple-1787373655"></link>
            <id>https://jvpnews.com/article/fines-chewing-betel-leaves-selvachannithi-temple-1787373655</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp; வரலாற்று பிரசித்தி பெற்ற தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலய சூழலில் தடையை மீறி வெற்றிலை மென்றவாறு நடமாடிய ஐவருக்கு ஐம்பதாயிரம் ரூபா தண்டப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp; வரலாற்று பிரசித்தி பெற்ற தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலய சூழலில் தடையை மீறி வெற்றிலை மென்றவாறு நடமாடிய ஐவருக்கு ஐம்பதாயிரம் ரூபா தண்டப்பணம் விதித்து பருத்தித்துறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p> 

தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலயத்தில் வருடாந்த மகோற்சவம் நடைபெற்றுவரும் சூழ்நிலையில், ஆலயத்தின் சுற்றுப்புறச்சூழலை வல்வெட்டித்துறை நகரசபையினர் சுகாதாரமாகப் பேணிவருவதுடன், ஆலய சுற்றுப்புறமானது புகையிலை அற்ற மண்டலமாகச் சுகாதாரத் தரப்பினரினால் அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/396ff764-1cbe-4f3c-a2f7-1a3e8b22f528/26-6a892d7679156.webp' /></p><h2>&nbsp;50,000 ரூபா தண்டப்பணம்</h2><p> 

குறித்த மண்டலத்தில் புகையிலை சார் பொருட்கள் விற்பனை செய்வதும் பயன்படுத்துவதும் முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது. </p><p>

இந்நிலையில், குறித்த பகுதியில் வெற்றிலை மென்ற வண்ணம் ஆலய சுற்றுப்புறத்தில் காணப்பட்ட ஐந்து பேருக்கு எதிராக, கடந்த 2026.08.20 வியாழக்கிழமை அன்று வல்வெட்டித்துறை நகரசபையின் பொதுச்சுகாதாரப் பரிசோதகரான ப. தினேஸினால் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.</p><p></p><p> 

குறித்த வழக்கானது அன்றைய தினமே விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, சம்பந்தப்பட்டவர்கள் குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்டதன் அடிப்படையில், தலா 10,000 ரூபா வீதம் மொத்தம் 50,000 ரூபா தண்டப்பணம் அறவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-22T06:12:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் 400 இற்கும் மேற்பட்டோருக்கு கண்பிரச்சனை; மின்குமிழ் பற்ற வைத்தவருக்கு விளக்கமறியல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/eye-injury-in-jaffna-man-remanded-light-bulb-1787378840"></link>
            <id>https://jvpnews.com/article/eye-injury-in-jaffna-man-remanded-light-bulb-1787378840</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;யாழ்ப்பாணம் பண்டதரிப்பு பிரான்பற்று முருகன் ஆலய திருவிழாவில் பயன்படுத்தப்பட்ட அதிக ஒளியுடனான மின்குமிழ்களால் 400 க்கும் மேற்பட்டோர் கண்கள...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;யாழ்ப்பாணம் பண்டதரிப்பு பிரான்பற்று முருகன் ஆலய திருவிழாவில் பயன்படுத்தப்பட்ட அதிக ஒளியுடனான மின்குமிழ்களால் 400 க்கும் மேற்பட்டோர் கண்கள் பாதிக்கப்பட்ட நிலையில், சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.</p><p>



குறித்த அதிக ஒளியை ஏற்படுத்திய மின்குமிழ்களை தம்வசம் வைத்திருந்தவர் இளவாலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d2bcfd7d-dddc-4972-b884-a51884b1629d/26-6a893c9987851.webp' /></p><p>


விசாரணைகளின் பின்னர் அவர் இன்று மல்லாகம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.இதன்போது சந்தேகநபரை எதிர்வரும் 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.</p><p>



இதேவேளை, அதிகளவான ஒளிப்பாவனையால் கண்கள் பாதிக்கப்பட்ட 200க்கும் மேற்பட்டோர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-22T06:04:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA['அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே' திரைப்படத்திற்கு முன் கண்டிப்பாக பார்க்க வேண்டிய 15 மார்வல் திரைப்படங்கள்.. பட்டியல் இதோ]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/15-movies-to-watch-before-avengers-doomsday-1787374958"></link>
            <id>https://cineulagam.com/article/15-movies-to-watch-before-avengers-doomsday-1787374958</id>
            <summary type="text">&#039;அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே&#039; படத்தை காண திரையரங்கிற்கு வருவதற்கு முன் ரசிகர்கள் அனைவரும் கண்டிப்பாக இந்த 15 மார்வல் திரைப்படங்களை பார்க்க வேண்டும் என ஒரு பட...</summary>
            <content type="html"><![CDATA[<p>'அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே' படத்தை காண திரையரங்கிற்கு வருவதற்கு முன் ரசிகர்கள் அனைவரும் கண்டிப்பாக இந்த 15 மார்வல் திரைப்படங்களை பார்க்க வேண்டும் என ஒரு பட்டியல் வெளியாகியுள்ளது. அதை பற்றிய முழு விவரத்தை இந்த பதிவில் பார்க்கலாம் வாங்க.</p><p></p><h2>
'அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே'
</h2><p>
வருகிற டிசம்பர் 18-ஆம் தேதி உலகமே எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே திரைப்படம் வெளியாகிறது. இப்படம் வெளியாவதற்கு இன்னும் 4 மாதங்கள் உள்ள நிலையில், அப்படத்தை பார்க்க தயாராகும் வகையில் 15 மார்வல் திரைப்படங்களை கண்டிப்பாக பார்க்க வேண்டும் என பட்டியல் ஒன்றை டிஸ்னி வெளியிட்டுள்ளார்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ced35981-aefb-40a1-b5fb-0e4ac1b73de7/26-6a892d71c5f36.webp' /></p><p>அப்போதுதான் அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே திரைப்படத்தில் வரும் விஷயங்கள் புரியும் என்பதற்காக இந்த 15 திரைப்படங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளனர். அவை என்னென்ன திரைப்படங்கள் என்று இந்த பதிவில் பார்க்கலாம் வாங்க.</p><p style="text-align: center; "><b>


X-Men</b></p><p> </p><p style="text-align: center; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7c7c17ad-eaca-4806-b7af-b5d55089e3fc/26-6a892e7281ad9.webp' /></p><p style="text-align: center; "><b>X2</b></p><p style="text-align: center; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1ead30b6-02e3-431e-86ba-06cc90a0329f/26-6a892e7358fdc.webp' /></p><p> </p><p style="text-align: center; "><b>

கேப்டன் அமெரிக்கா: தி ஃபர்ஸ்ட் அவெஞ்சர்</b></p><p style="text-align: center; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/31696c69-428f-484f-b7e2-4e391b817d27/26-6a892e742dede.webp' /></p><p>
</p><p style="text-align: center; "><b>
தி அவெஞ்சர்ஸ்</b></p><p style="text-align: center; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/69b762b6-2950-487f-914b-b8ae0ccc9ef3/26-6a892f20eb4fa.webp' /></p><p style="text-align: center;"><b>

அவெஞ்சர்ஸ்: இன்ஃபினிட்டி வார்</b></p><p style="text-align: center;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9f0e72d8-29ac-44bd-895b-638aa2f8ba06/26-6a892f21d6d5a.webp' /></p><p style="text-align: center;">
</p><p style="text-align: center; "><b>
அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்</b></p><p style="text-align: center; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/66292914-7819-4f3e-9677-0a74f4996fe1/26-6a892f2297fa6.webp' /></p><p style="text-align: center; ">
</p><p style="text-align: center;"><b>
லோக்கி (வெப் சீரிஸ்) - சீசன் 1 மற்றும் சீசன் 2</b></p><p style="text-align: center;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9be0e4ce-9853-48fe-9b34-e0a8413709d8/26-6a8930b425b5a.webp' /></p><p style="text-align: center;">
</p><p style="text-align: center;"><b>
ஷாங்-சி அண்ட் தி லெஜண்ட் ஆஃப் தி டென் ரிங்க்ஸ்</b></p><p style="text-align: center;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8d35015e-7820-4c86-a0e7-4b3231ea81f8/26-6a8930b4e2f63.webp' /></p><p style="text-align: center;"><b>

ஸ்பைடர்-மேன்: நோ வே ஹோம்</b></p><p style="text-align: center;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e9ffeefa-fadc-4cc1-9ea8-40972fe3da1c/26-6a8930b59b7cb.webp' /></p><p style="text-align: center;"><b>

பிளாக் பேந்தர்: வகாண்டா ஃபார்எவர்</b></p><p style="text-align: center;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f799b632-e128-43f5-b952-17dc42bf8d82/26-6a8930b657fe5.webp' /></p><p style="text-align: center;"><b> 

கேப்டன் அமெரிக்கா: பிரேவ் நியூ வேர்ல்ட்</b></p><p style="text-align: center;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f4c589b0-7854-4ad8-be84-bf3d3b555eee/26-6a89319edaf7d.webp' /></p><p style="text-align: center;">
</p><p style="text-align: center;"><b>
டெட்பூல் &amp; வோல்வரின்</b></p><p style="text-align: center;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1143a5fa-ab20-4280-b18c-a38acad4c555/26-6a89319fc0575.webp' /></p><p style="text-align: center;">
</p><p style="text-align: center;"><b>
டாக்டர் ஸ்ட்ரேஞ்ச்: இன் தி மல்டிவர்ஸ் ஆஃப் மேட்நெஸ்</b></p><p style="text-align: center;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ea5dbcd3-497e-4403-a204-cba84c8a44e9/26-6a8931a07a3d1.webp' /></p><p style="text-align: center;"><b>

தண்டர்போல்ட்ஸ்*</b></p><p style="text-align: center;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7eabcf0a-f3fb-4a90-8d8d-ff62867fcf43/26-6a8931a1311fd.webp' /></p><p style="text-align: center;">
</p><p style="text-align: center;"><b>
தி ஃபென்டாஸ்டிக் 4: ஃபர்ஸ்ட் ஸ்டெப்ஸ்</b></p><p style="text-align: center;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1add5bfb-0a51-478f-ba78-5e3c43b8b607/26-6a8931a1dbd61.webp' /></p>]]></content>
            <updated>2026-08-22T06:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாடு கடத்தப்பட்ட சமித்புர சத்துவிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணை : சிக்கிய மற்றுமொரு துப்பாக்கி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/summitpura-chathu-revolver-type-firearm-recovered-1787375514"></link>
            <id>https://ibctamil.com/article/summitpura-chathu-revolver-type-firearm-recovered-1787375514</id>
            <summary type="text">ஓமானில் இருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான சமித்புர சத்து என்ற திமுத்து சதுரங்க தடுப்பு காவல் உத்தரவின் கீழ் கொழும்பு ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஓமானில் இருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான சமித்புர சத்து என்ற திமுத்து சதுரங்க தடுப்பு காவல் உத்தரவின் கீழ் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் பொறுப்பில் உள்ளார்.</p><p>இந்தநிலையில் இவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது பல புதிய தகவல்கள் வெளிவந்துள்ள நிலையில்&nbsp;உள்நாட்டில் தயாரிக்கப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் ரிவோல்வர் ரக துப்பாக்கி ஒன்றை விசாரணை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.</p><p>நேற்று (21) வெல்லம்பிட்டிய, சேதவத்தை பிரதேசத்தில் உள்ள பாழடைந்த வீடு ஒன்றில் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த குறித்த துப்பாக்கி மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p></p><h2>கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரால் விசாரணை</h2><p> 

28 வயதுடைய சந்தேகநபரான&nbsp;சமித்புர சத்து இலங்கையிலிருந்து தப்பியோடி ஓமானில் தலைமறைவாகியிருந்த நிலையில் கைது செய்யப்பட்டு, கடந்த 18 ஆம் திகதி நாட்டுக்கு அழைத்து வரப்பட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3aa8bd66-15ae-48d8-b029-ac58d80cc8d2/26-6a8939872ba7f.webp' /></p><p> </p><p>

அதன் பின்னர், கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரால் தடுப்பு காவல் உத்தரவின் கீழ் வைக்கப்பட்டு அவரிடம் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. </p><p>

இதற்கு முன்னர் சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போதும், வெளிநாட்டிலிருந்து நாட்டுக்குக் கொண்டுவரப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் ரிவோல்வர் ஒன்றும் 12 ரவைகளும் மட்டக்குளி பிரதேசத்திலுள்ள வீடு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரால் மீட்கப்பட்டிருந்தது.</p><p> 

இச்சம்பவம் தொடர்பாகக் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவு மேலதிக விசாரணைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-22T05:53:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆசிரியர்களின் இடமாற்றம் தொடர்பில் கல்வி அமைச்சின் முக்கிய முடிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/transfers-for-teachers-national-schools-8-years-1787375914"></link>
            <id>https://tamilwin.com/article/transfers-for-teachers-national-schools-8-years-1787375914</id>
            <summary type="text">தேசிய பாடசாலைகளில் எட்டு ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிய அனைத்து ஆசிரியர்களையும் அடுத்த ஆண்டு முதல் இடமாற்றம் செய்ய கல்வி அமைச்சு முடிவு செய்துள்ளது. ...</summary>
            <content type="html"><![CDATA[<p>தேசிய பாடசாலைகளில் எட்டு ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிய அனைத்து ஆசிரியர்களையும் அடுத்த ஆண்டு முதல் இடமாற்றம் செய்ய கல்வி அமைச்சு முடிவு செய்துள்ளது. </p><p>

இந்த ஆண்டு, தேசிய பாடசாலைகளில் ஒன்பது ஆண்டுகள் பணியாற்றிய ஆசிரியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
</p><p>
 மாகாண அளவில் இடமாற்ற சபைகளை கூட்டி இந்த ஆசிரியர்கள் இடமாற்றம் செய்யப்படவுள்ளனர்.</p><h2>ஆசிரியர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரல்</h2><p> </p><p>

அடுத்த ஆண்டு இடமாற்றம் செய்யப்படவுள்ள ஆசிரியர்களிடமிருந்து விண்ணப்பங்களைக் கோரியுள்ள கல்வி அமைச்சு, அதற்கான நடவடிக்கைகளை நிறைவு செய்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fc2634fd-e051-4379-9994-caa7cdf6eec4/26-6a893698aa1de.webp' /></p><p>
</p><p>
 இதற்கிடையில், தங்களது இடமாற்றங்களை இரத்து செய்யுமாறு பொதுச்சேவை ஆணையத்திடம் மேல்முறையீடு செய்த ஆசிரியர்களுக்கு இன்னும் முடிவுகள் அறிவிக்கப்படவில்லை.</p><p> 

எனவே, ஆசிரியர்கள் அடுத்த ஆண்டுக்கான இடமாற்றங்களுக்கும் விண்ணப்பிக்கவில்லை. இடமாற்ற சபையிடம் அவர்கள் செய்த மேல்முறையீடுகள் நிராகரிக்கப்பட்டதால், அவர்கள் பொதுச் சேவை ஆணையத்திடம் மேல்முறையீடு செய்துள்ளனர். </p><p>

இடமாற்ற சபையிடம் செய்த மேல்முறையீடுகள் நிராகரிக்கப்பட்ட பிறகு, அதே பாடசாலையில் தொடர்ந்து பணியாற்றும் நோக்கத்தில் அந்த ஆசிரியர்கள் பொதுச்சேவை ஆணையத்திடம் மேல்முறையீடு செய்துள்ளனர் என்று இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கூறுகிறார்.</p><p> 

இதேவேளை, மேல்முறையீடுகள் மீதான முடிவுகள் எவ்வளவு தாமதமாகின்றனவோ, அந்த ஆசிரியர்கள் தங்கள் இலக்குகளை அடைவது அவ்வளவு எளிதாகிவிடும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p></p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-22T05:41:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நந்தா மாலனிக்கு ஜனாதிபதி இறுதி அஞ்சலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/president-pays-final-respects-to-nanda-malini-1787377380"></link>
            <id>https://jvpnews.com/article/president-pays-final-respects-to-nanda-malini-1787377380</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp; மறைந்த பிரபல பாடகி விசாரத கலாநிதி நந்தா மாலனியின் பூதவுடலுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நேற்று (21) இரவு இறுதி அஞ்சலி செலுத்தினார்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;<a href="https://jvpnews.com/article/nanda-malini-passed-away-nationalflag-at-half-mast-1787288578" target="_blank"> மறைந்த பிரபல பாடகி விசாரத கலாநிதி நந்தா மாலனியி</a>ன் பூதவுடலுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நேற்று (21) இரவு இறுதி அஞ்சலி செலுத்தினார்.
</p><p>


நுகேகொட, நாவல வீதியில் அமைந்துள்ள அவரது வீட்டிற்குச் சென்று அன்னாரின் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்திய ஜனாதிபதி, அவரது குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள் மற்றும் கலைஞர்களுக்குத் தனது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொண்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a2f3dea5-198d-4d63-b552-d31c0e160f7a/26-6a8936e5b9945.webp' /></p><p>இலங்கையின் புகழ்பெற்ற பாடகி நந்தா மாலினி தனது 82 ஆவது வயதில் நாவலையில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று (20) காலமானார்.</p><p></p><p>
</p><p>
மூத்த இசைக்கலைஞர் நந்தா மாலினியின் மறைவையடுத்து ஒகஸ்ட் 21, 22 மற்றும் 23 ஆகிய தினங்களை தேசிய துக்க தினங்களாக அரசாங்கம் பிரகடனப்படுத்தியுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-22T05:41:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வட மாகாணத்தில் கடும் வறட்சி ; தாகம் தீர்க்கும் கடற்படையினர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/severe-drought-in-the-northern-province-el-nino-1787377129"></link>
            <id>https://jvpnews.com/article/severe-drought-in-the-northern-province-el-nino-1787377129</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;வட மாகாணத்தில் நிலவும் கடும் வறட்சி காரணமாக குடிநீர் தட்டுப்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ள யாழ்ப்பாணம் நெடுந்தீவு போனி குதிரைகளுக்கு இலங்கை க...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;வட மாகாணத்தில் நிலவும் கடும் வறட்சி காரணமாக குடிநீர் தட்டுப்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ள யாழ்ப்பாணம் நெடுந்தீவு போனி குதிரைகளுக்கு இலங்கை கடற்படையினர் குடிநீர் வழங்கும் திட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
</p><p>


‘க்ளீன் ஸ்ரீலங்கா’ தேசிய திட்டத்தின் கீழ், நெடுந்தீவின் இயற்கை சூழலையும் பல்லுயிர்ப் பெருக்கத்தையும் பாதுகாக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை நேற்று (21) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c48cd01b-7b51-4676-9b6d-15576a46e966/26-6a8935eb6cdec.webp' /></p><p></p><h2>&nbsp;குடிநீர் தட்டுப்பாட்டை எதிர்கொண்டுள்ள&nbsp;வனவிலங்குகள்</h2><p>
</p><p>
கடும் வறட்சி காரணமாக நெடுந்தீவில் உள்ள நீர்நிலைகள் வற்றியுள்ளதால், வனவிலங்குகள் குடிநீர் தட்டுப்பாட்டை எதிர்கொண்டுள்ளன.</p><p>


நெடுந்தீவில் அமைந்துள்ள இலங்கை கடற்படைக் கப்பல் வசப நிறுவனத்தின் ஊடாக போனி குதிரைகளுக்கு குடிநீர் வழங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9a411b76-3228-4b21-a9d8-6c051ec11255/26-6a8935ec27215.webp' /></p><p>



நெடுந்தீவின் மேற்குப் பகுதியில் உள்ள வெள்ளைப் பகுதியில் வாழும் போனி குதிரைகளின் எண்ணிக்கையைப் பாதுகாப்பதற்கும், தீவின் இயற்கை அழகையும் பல்லுயிர்ப் பெருக்கத்தையும் எதிர்கால சந்ததியினருக்காகப் பாதுகாப்பதற்கும் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><p></p><p>



அத்துடன், யாழ்ப்பாண மாவட்ட மக்களின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், தீவுப் பகுதிகளில் கடற்படையினரால் நிறுவப்பட்டுள்ள நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மூலம் சுத்தமான குடிநீரை தினசரி வழங்கும் பணியும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-22T05:36:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாடொன்றில் பாடசாலையில் வாள்வீச்சுத் தாக்குதல் : ஒருவர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sword-attack-at-a-sweden-school-death-1787372938"></link>
            <id>https://ibctamil.com/article/sword-attack-at-a-sweden-school-death-1787372938</id>
            <summary type="text">மத்திய சுவீடனின் ஃபேகர்ஸ்டா (Fagersta) நகரில் உள்ள பிரினெல் மேல்நிலைப் பாடசாலையில் இடம்பெற்ற வாள்வீச்சு தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>மத்திய சுவீடனின் ஃபேகர்ஸ்டா (Fagersta) நகரில் உள்ள பிரினெல் மேல்நிலைப் பாடசாலையில் இடம்பெற்ற வாள்வீச்சு தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.</p><p>

இந்தச் சம்பவம் வெள்ளிக்கிழமை (21.08.2026) மதியம் இடம்பெற்றதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. </p><p>18 வயதுடைய இளைஞர் ஒருவர் வாளுடன் பாடசாலைக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><h2>சுவீடன் பாடசாலை</h2><p>
</p><p>
தாக்குதலில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் மேலும் 12 மற்றும் 17 வயதுடைய இரு சிறுவர்கள் உள்ளிட்ட மூவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4ca6c662-b0a5-4386-9ffa-5a98f10cfa81/26-6a8933b137e87.webp' /></p><p>தாக்குதல் நடத்தியதாக சந்தேகிக்கப்படும் இளைஞரை அந்நாட்டு காவல்துறை அதிகாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்தி கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து கைது செய்துள்ளனர்.</p><p>
</p><p>
கிட்டதட்ட 450 மாணவர்கள் கல்வி கற்கும் இந்தப் பாடசாலையில், கோடைக்கால விடுமுறைக்குப் பின்னர் பாடசாலை மீண்டும் திறக்கப்பட்ட முதல் நாளிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
</p><p>
சந்தேகநபர் குறித்த பாடசாலையின் முன்னாள் மாணவர் எனவும், அவர் தலைக்கவசம் அணிந்து வாளுடன் பாடசாலைக்குள் நுழைந்ததாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.&nbsp;</p><p>மேலும், அவருக்கு எதிராக ஏற்கனவே தாக்குதல் தொடர்பான வழக்குகள் நிலுவையில் இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
</p><p>இந்த தாக்குதலுக்கான காரணம் இதுவரை உறுதியாக வெளியாகவில்லை என்பதுடன் சம்பவம் தொடர்பாக சுவீடன் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-22T05:33:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[மாடர்ன் உடை ப்ளஸ் சேலையில் படு கவர்ச்சி போட்டோக்கள் வெளியிட்டுள்ள நிகிதா ஷர்மா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/nikita-sharma-glamour-photos-1787375467"></link>
            <id>https://cineulagam.com/article/nikita-sharma-glamour-photos-1787375467</id>
            <summary type="text">நிகிதா ஷர்மாஇன்ஸ்டாகிராம் குயினாக பல நடிகைகள் மற்றும் Influencerகள் வலம் வருகிறார்கள். அப்படி ரசிகர்களிடம் பிரபலமானவர்களில் ஒருவர் தான் நிகிதா ஷர்மா. ...</summary>
            <content type="html"><![CDATA[<h2>நிகிதா ஷர்மா</h2><p>இன்ஸ்டாகிராம் குயினாக பல நடிகைகள் மற்றும் Influencerகள் வலம் வருகிறார்கள். அப்படி ரசிகர்களிடம் பிரபலமானவர்களில் ஒருவர் தான் நிகிதா ஷர்மா. </p><p>இவர் லேட்டஸ்ட்டாக சேலையில் வீடு கட்டவா என்ற பாடல் வரிகளை போல படு கவர்ச்சியாக புடவை அணிந்து விதவிதமான போஸ்களில் போட்டோ ஷுட் நடத்தியுள்ளார். </p><p>அதேபோல் கடற்கரையில் மாடனாக கிளாமர் உடை அணிந்து போட்டோ ஷுட் நடத்தியுள்ளார். </p><p>இதோ அந்த போட்டோஸ்,</p><p><br></p>]]></content>
            <updated>2026-08-22T05:30:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வாகனங்கள் , உந்துருளிகள் திருட்டு சம்பவங்கள் அதிகரிப்பு; பொலிசார் எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/increase-of-vehicle-parking-theft-srilanka-1787376597"></link>
            <id>https://jvpnews.com/article/increase-of-vehicle-parking-theft-srilanka-1787376597</id>
            <summary type="text">&amp;nbsp; வாகன ஓட்டுநர்கள் மற்றும் உந்துருளிகளின் பயணிகள் வாகனங்களை கவனிக்காமல் விட்டுச் செல்வதால், வாகனங்கள் மற்றும் உந்துருளிகள் திருடப்படும் சம்பவங்கள...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; வாகன ஓட்டுநர்கள் மற்றும் உந்துருளிகளின் பயணிகள் வாகனங்களை கவனிக்காமல் விட்டுச் செல்வதால், வாகனங்கள் மற்றும் உந்துருளிகள் திருடப்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக இலங்கை காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.
</p><p>
இந்தநிலையில், வாகனங்களுக்குள் வைக்கப்பட்டிருந்த முக்கிய ஆவணங்கள் மற்றும் பொருட்களும் திருடப்பட்டுள்ளதாகவும் காவல்துறை ஊடகப் பேச்சாளர் எப்.யு. வூட்லர் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c0e6b232-93be-48ed-814e-a23fd6e9340a/26-6a8933d6e62ce.webp' /></p><h2>பொதுமக்கள் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்</h2><p>
</p><p>
குறிப்பாக, சில முச்சக்கர வண்டி ஓட்டுநர்கள் மற்றும் உந்துருளி ஓட்டுநர்கள் இயந்திரம் இயக்கிய நிலையிலேயே வாகனத்தை விட்டுச் செல்வதாகவும், இதனை பயன்படுத்தி குற்றவாளிகள் வாகனங்களை திருடுவதாகவும் அவர் கூறியுள்ளார்.</p><p></p><p>
</p><p>
இந்தநிலையில், இரவு நேரங்களில் அல்லது ஆள் நடமாட்டம் குறைந்த இடங்களில் வாகனங்களை நிறுத்தும்போது பொதுமக்கள் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் காவல்துறையினர் கோரியுள்ளனர்.</p><p></p><p>
</p><p>
வாகனம் திருடப்பட்டால் உடனடியாக 119 அல்லது 118 காவல்துறையின் அவசர தொலைபேசி இலக்கங்களுக்கோ, அல்லது அருகில் உள்ள காவல் நிலையத்துக்கோ தகவல் தெரிவிக்குமாறும் காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-08-22T05:27:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள்: அறுவை சிகிச்சைக்குப் பின் நிகழ்ந்த துயரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/twin-girls-born-as-joined-head-die-after-separated-1787375591"></link>
            <id>https://news.lankasri.com/article/twin-girls-born-as-joined-head-die-after-separated-1787375591</id>
            <summary type="text">Twin girls born joined at the head die minutes after being separated: தலை ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகளை பிரிக்கும் அறுவை சிகிச்சை பலனளிக்காமல் பி...</summary>
            <content type="html"><![CDATA[<p>Twin girls born joined at the head die minutes after being separated: தலை ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகளை பிரிக்கும் அறுவை சிகிச்சை பலனளிக்காமல் பிள்ளைகள் உயிரிழந்துவிட்டார்கள்.
</p><p>

பிரேசில் நாட்டில், தலை ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகளை பிரிக்கும் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்த நிலையிலும், குழந்தைகளை காப்பாற்றமுடியாமல் போய்விட்டது.
</p><h3>
ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள்</h3><p>

பிரேசில் நாட்டில் அமரில்டோ டி சில்வா (Amarildo Batista da Silva) என்னும் நபருக்கு பிறந்த இரட்டைக் குழந்தைகள், தலை ஒட்டிப் பிறந்துள்ளன.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a8ef1fa7-01a7-49d4-971b-a8c826b3ed69/26-6a892fe8d175f.webp' /></p><p>
பிள்ளைகள் மூன்று வயதை எட்ட இருந்த நிலையில், பிள்ளைகளை பிரிக்கும் அறுவை சிகிச்சைகளை மருத்துவர்கள் மேற்கொண்டுள்ளார்கள்.
</p><p>
உண்மை என்னவென்றால், இரண்டு ஆண்டுகளாக குழந்தைகளை தங்கள் கண்காணிப்பிலேயே வைத்திருந்த மருத்துவர்கள், பிள்ளைகளை தனித்தனியாக பிரிப்பதற்கான அறுவை சிகிச்சைகளை ஓராண்டாக மேற்கொண்டு வந்துள்ளார்கள்.
</p><p>
அதாவது, இதற்கு முன் பிள்ளைகளுக்கு நான்கு அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளன. கடைசியாக, அவர்களை தனியாக பிரிக்கும் கடைசி அறுவை சிகிச்சை, இம்மாதம், அதாவது, ஆகத்து மாதம் 15ஆம் திகதி நடைபெற்றுள்ளது.&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/TqgxS8HHJi8" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p>
விடயம் என்னவென்றால், வெற்றிகரமாக மருத்துவர்கள் இரண்டு குழந்தைகளையும் தனித்தனியாக பிரித்துள்ளார்கள்.
</p><p>
ஆனால், ஒரு உடல் போல செயல்பட்டுவந்த அந்தக் குழந்தைகளின் உடல் பிரிக்கப்பட்டபோது, அதைத் தாங்கிக்கொள்ளும் சக்தி அந்த உடலுக்கு இல்லாமல் போயுள்ளது.
</p><p>
ஒரு குழந்தைக்கு இரத்த அழுத்தம் அதிகரிக்க, மற்ற குழந்தைக்கு இரத்த அழுத்தம் குறைய, உடலின் உள்ளுறுப்புகளுக்கு போதுமான இரத்தம் செல்லாமல், உள்ளுறுப்புகள் செயலிழந்து, மாரடைப்பு ஏற்பட்டு குழந்தைகள் இருவரும் உயிரிழந்துவிட்டனர்.
</p><p>
அவர்களில் ஒரு குழந்தையின் பெயர் ஹெலனா, அவளது சகோதரியின் பெயர், ஹெலோய்ஸா.

ஆகத்து மாதம் 15ஆம் திகதி, தங்கள் மூன்று வயதை எட்டும் முன், ஹெலனா 11.37 மணிக்கும், ஹெலோய்ஸா 11. 51 மணிக்கும் உயிரிழந்துள்ளனர்.&nbsp;</p><p></p><p>
அறுவை சிகிச்சை வெற்றியாக முடிந்த நிலையிலும், பிள்ளைகளின் உடல் நிலை மிகவும் பலவீனமாக இருந்ததால், அவர்களைக் காப்பாற்ற முடியாமல் போயுள்ளது.
</p><p>
ஏற்கனவே, பிள்ளைகள் இருவருக்கும் நிமோனியா பிரச்சினை இருந்ததால் அவர்கள் தொண்டையில் துவாரமிடப்பட்டு சுவாசிப்பதற்காக குழாய்கள் பொருத்தப்பட்டிருந்திருக்கின்றன.
</p><p>
அதேபோல, குழந்தைகளால் சாப்பிட முடியாததால், அவர்கள் வயிற்றில் துவாரமிடப்பட்டு குழாய் வழியாகத்தான் உணவு செலுத்தப்பட்டு வந்துள்ளது.
</p><p>
ஆக, நீண்ட காலமாக பலவீனமாக இருந்த உடல்கள் பிரிக்கப்பட, அதை அவர்களால் தாங்கிக்கொள்ள இயலாமல், மாரடைப்பு ஏற்பட, பிள்ளைகள் உயிரிழந்துவிட்டார்கள்!&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-22T05:17:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடா பொருட்களுக்கு இன்று நள்ளிரவு முதல் 50% வரி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/u-s-impose-50-tax-on-canadian-goods-1787375969"></link>
            <id>https://canadamirror.com/article/u-s-impose-50-tax-on-canadian-goods-1787375969</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;கனடா பொருட்களுக்கு 50% வரி விதிக்க அமெரிக்கா தீர்மாநித்துள்ள நிலையில் இன்று நள்ளிரவு முதல் குறித்த வரி அமுலுக்கு வருவதாக தெரிவிக்கப்படுகி...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;கனடா பொருட்களுக்கு 50% வரி விதிக்க அமெரிக்கா தீர்மாநித்துள்ள நிலையில் இன்று நள்ளிரவு முதல் குறித்த வரி அமுலுக்கு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. </p><p>

கனடா மற்றும் அமெரிக்காவுக்கு இடையில் இந்த வார தொடக்கத்தில் எட்டப்பட்ட வர்த்தக உடன்படிக்கையை இறுதி செய்து கையெழுத்திடுவதில் கனடா தோல்வியடைந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5c5aa699-3254-43f1-a98b-276f1757b512/26-6a8931632588e.webp' /></p><p>
</p><p>
இதனையடுத்து, கனேடிய பொருட்களுக்கு மேலதிக 50 சதவீத அமெரிக்க வரி இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரவுள்ளதாக அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி ஜேமிசன் கிரியர் தெரிவித்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-08-22T05:16:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[புதன் அஸ்தமனம்: செப்டம்பர் 18 வரை இந்த ராசிக்காரர்கள் ஜாக்கிரதை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/mercury-combust-who-get-huge-luck-1787373822"></link>
            <id>https://manithan.com/article/mercury-combust-who-get-huge-luck-1787373822</id>
            <summary type="text">ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் நவகிரகங்களின் பெயர்ச்சிக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது. அந்தவகையில், புத்திசாலித்தனம், பேச்சு, படிப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் நவகிரகங்களின் பெயர்ச்சிக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது. அந்தவகையில், புத்திசாலித்தனம், பேச்சு, படிப்பு, வியாபாரம் ஆகியவற்றின் காரணியாக கருதப்படுபவர் புதன்.</p><p> இவர் மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியாவார்.சந்திரனுக்கு அடுத்தபடியாக குறுகிய காலத்தில் ராசிகளை கடக்கும் புதன், அவ்வப்போது வக்ரம் மற்றும் அஸ்தமன நிலையிலும் பயணிப்பார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f501372c-4f6d-4942-80fe-7db88a98c7b1/26-6a893059aebb0.webp' /></p><p> எனவே புதனின் நிலையில் ஏற்படும் மாற்றங்கள் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

தற்போது புதன் அஸ்தமன நிலையில் உள்ளார். இந்த நிலையில் செப்டம்பர் 18-ம் தேதி வரை இருப்பார்.</p><p> அஸ்தமன நிலையில் புதன் பலவீனமாக இருப்பதால், அதன் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களுக்கும் ஏற்படும். </p><p>சிலருக்கு சாதகமாகவும், சிலருக்கு பாதகமாகவும் இந்த தாக்கம் அமையலாம். எனவே தற்போது புதன் அஸ்தமன நிலையில் இருப்பதால், எந்த ராசிக்காரர்கள் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும் என்பதைப் பார்ப்போம்.&nbsp;</p><p></p><h2>மேஷம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cdc862a7-9b6b-4da8-ba8a-b62ee2bfee71/26-6a89305a6034b.webp' /></p><h2>
</h2><p>புதன் அஸ்தமன நிலையில் இருப்பதால், மேஷ ராசிக்காரர்கள் பேசும்போது கவனமாக இருக்க வேண்டும். அலுவலகத்தில் உங்கள் வார்த்தைகள் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டு வாக்குவாதங்கள் ஏற்படலாம். எனவே பேச்சில் கவனம் தேவை. </p><p>வேலை அழுத்தம் தனிப்பட்ட வாழ்க்கையையும் பாதிக்க வாய்ப்புள்ளது. எனவே தொழில் தொடர்பான முக்கிய முடிவுகளை அவசரமாக எடுக்காமல், பொறுமையுடன் செயல்படுவது நல்லது.</p><h2>
கன்னி</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/08a01053-ce5a-4a0d-8c55-6c84db1012da/26-6a89305b13528.webp' /></p><p>
புதன் அஸ்தமன நிலையில் இருப்பதால், பண விஷயங்களில் கன்னி ராசிக்காரர்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். நிதி பரிவர்த்தனைகள் மற்றும் பெரிய முதலீடுகளில் அவசரப்பட வேண்டாம். </p><p>வணிகர்கள் ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் முன் ஆவணங்களை முழுமையாகப் படித்துப் பார்க்க வேண்டும். செப்டம்பர் 18 வரை பொறுமையுடன் செயல்படுவது நல்லது.
</p><h2>
சிம்மம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c2e12766-d050-49a7-95b2-ab5700f2b476/26-6a89305bb9a04.webp' /></p><p></p><p>சிம்ம ராசிக்காரர்கள் தொழில் மற்றும் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய காலம் இது. பணியிடத்தில் சக ஊழியர்கள் அல்லது உயர் அதிகாரிகளுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம்.</p><p> எனவே அவசர முடிவுகளைத் தவிர்த்து, அமைதியாகச் செயல்படுங்கள். அலுவலகத் தகராறுகளை பெரிதுபடுத்தாமல், கவனத்துடன் முடிவெடுப்பது நல்லது. பெரிய முடிவுகளை இந்த காலகட்டத்தில் தவிர்ப்பது சிறப்பு&nbsp;</p><p><b>இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;&nbsp;</b></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW&nbsp;</a></u></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-22T05:16:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுவீடன் பாடசாலையில் பரபரப்பு சம்பவம்; ஒருவர் பலி மூவர் படுகாயம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/swedish-school-sword-attack-1787375495"></link>
            <id>https://canadamirror.com/article/swedish-school-sword-attack-1787375495</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;மத்திய சுவீடனில் உள்ள பாடசாலை ஒன்றில் வாளுடன் புகுந்த 18 வயது இளைஞர் ஒருவர் நடத்திய வாள்வீச்சு தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலு...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;மத்திய சுவீடனில் உள்ள பாடசாலை ஒன்றில் வாளுடன் புகுந்த 18 வயது இளைஞர் ஒருவர் நடத்திய வாள்வீச்சு தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 3 பேர் படுகாயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. </p><p>

ஃபேகர்ஸ்டா (Fagersta) நகரில் உள்ள பிரினெல் (Brinell High School) மேல்நிலைப் பாடசாலையில் வெள்ளிக்கிழமை (21) மதியம் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது. 

 தாக்குதல் நடத்திய சந்தேக நபரைக் அந்நாட்டு பொலிஸார் கைது செய்துள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9d7a2932-e1c0-498d-a819-477968f5ff12/26-6a892f88a1162.webp' /></p><h2>ஒருவர் பலி மூவர் படுகாயம்</h2><p> 

கோடைக்கால விடுமுறைக்குப் பிறகு பாடசாலை மீண்டும் திறக்கப்பட்ட முதல் நாளிலேயே இந்தத் துயரம் நிகழ்ந்துள்ளது.

16 முதல் 20 வயதுடைய சுமார் 450 மாணவர்கள் பயிலும் அந்தப் படசாலைக்குள் புகுந்த 18 வயது இளைஞரை அந்நாட்டு பொலிஸார் துப்பாக்கியால் சுட்டுக் தங்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.
</p><p>
இந்தத் தாக்குதலில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், 12 மற்றும் 17 வயதுடைய இரு சிறுவர்கள் உட்பட மூன்று பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p><p>

தாக்குதல் நடத்திய நபர் அப்பாடசாலையின் முன்னாள் மாணவர் என்றும், ஹெல்மெட் அணிந்து வாளுடன் பாடசாலைக்குள் நுழைந்த அவர் மீது ஏற்கனவே தாக்குதல் வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. </p><p>

தாக்குதலுக்கான துல்லியமான காரணம் என்னவென்று அந்நாட்டு பொலிஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-08-22T05:08:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[கள்ள நோட்டு விவகாரத்தில் சிக்கிய ஜீவா.. வீட்டை விட்டு வெளியேற்றிய அப்பத்தா.. வாகை சூடவா சீரியல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/zee-tamizh-vaagai-sooda-vaa-serial-episode-1787372080"></link>
            <id>https://cineulagam.com/article/zee-tamizh-vaagai-sooda-vaa-serial-episode-1787372080</id>
            <summary type="text">வாகை சூடவாZee தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் வாகை சூடவா. கடந்த எபிசோடில் கள்ள நோட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<h2>வாகை சூடவா</h2><p>Zee தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் வாகை சூடவா. </p><p>கடந்த எபிசோடில் கள்ள நோட்டு விவகாரத்தில் பணத்தை எடுத்தது ஜீவாதான் என்பது தெரியவந்த நிலையில், இன்றைய எபிசோடில் அதிரடி திருப்பங்கள் காத்திருக்கின்றன.

உண்மை வெளிவந்ததைத் தொடர்ந்து ஆவேசமடையும் அப்பத்தா, ஜீவாவை வீட்டிற்குள் வரக் கூடாது என்று கூறி வெளியே அனுப்பிவிடுகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c051165e-b9bc-417d-9dbb-28d7195cdbf5/26-6a89237468168.webp' /></p><p> </p><p>இதனால் ஜீவா வீட்டிற்கு வெளியே தங்க வேண்டிய சூழ்நிலை உருவாகிறது.

இதையடுத்து அப்பத்தாவும் தேவியும் வாசுதேவனுக்கு போன் செய்து, ஜீவாவை வீட்டிலிருந்து அனுப்பிவிட்டதாக தெரிவிக்கின்றனர். இதைக் கேட்டு மகிழ்ச்சியடையும் வாசுதேவன், இனி ஜீவாவும் மீனாட்சியும் நெருக்கமாகும் வாய்ப்பு இருக்காது என்று நினைத்து சந்தோஷப்படுகிறார்.
</p><p>
அதே நேரத்தில், தான் கேட்ட வைர மோதிரத்தை வாங்கித் தருமாறு தேவி கூற, ஜீவாவை முழுமையாக வீட்டை விட்டு வெளியேற்றினால் அதை வாங்கித் தருவதாக வாசுதேவன் உறுதியளிக்கிறார். இதன் பின்னர் மீனாட்சியையும் வீட்டிலிருந்து வெளியேற்ற திட்டம் தீட்டப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/09668d67-8520-4793-aaf1-98ba3ce64dd8/26-6a8923753f551.webp' /></p><p>
</p><p>
ஜீவா எடுத்த பணம் குறித்து மீனாட்சிக்கு தெரியாமல் இருக்க முடியாது என்று கூறி, குடும்பத்தினர் அவர்மீதும் சந்தேகத்தை திருப்ப முயல்கிறார்கள். ஆனால், இந்த விவகாரத்தில் தனக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்று மீனாட்சி தெளிவுபடுத்துகிறார். அப்போது மீனாட்சிக்கு ஆதரவாக தேன்மொழி பேச, அப்பத்தா மேலும் கோபமடைந்து, ஜீவா எடுத்த பணத்தை மீனாட்சியிடமே கொடுத்திருக்கலாம் என்று குற்றச்சாட்டு முன்வைக்கிறார்.
</p><p>
இந்த குற்றச்சாட்டால் வேதனையடையும் மீனாட்சி, இப்படி அவமானப்படுத்தப்படும் வீட்டில் தன்னால் இருக்க முடியாது என்று கூறுகிறார். அதற்கு அப்பத்தா, "பிடிக்கவில்லை என்றால் வீட்டை விட்டு வெளியே போ" என்று பதிலளித்து அதிர்ச்சி கொடுக்கிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/767d9e74-07f3-49b2-a9e2-644e5c3f9fbd/26-6a892376115c8.webp' /></p><p>
</p><p>
மறுபுறம், வீட்டின் திண்ணையில் படுத்திருக்கும் ஜீவாவை அங்கிருந்தும் விரட்ட முயலும் தேவி, ஒரு வாளி தண்ணீரை அவன் மீது ஊற்றுகிறார். இதைப் பார்த்த கயல், ஜீவாவுக்கு ஆதரவாக பேசி சண்டை போடுகிறாள்.

பிறகு மீனாட்சி ஜீவாவிடம் கண்டிப்பா உனக்காக நீ பணத்தை எடுத்து இருக்க மாட்ட யாருக்காக எடுத்த அந்த உண்மையை சொல்லு என்று கேள்வி கேட்க ஜீவா சொல்ல மறுக்கிறான். </p><p>

ஜீவாவும் மீனாட்சியும் இந்த சிக்கலை எப்படி சமாளிக்கப் போகிறார்கள்? குடும்பத்தினரின் அடுத்த கட்ட திட்டம் என்ன? பரபரப்பான திருப்பங்களுடன் இன்றைய வாகை சூடவா எபிசோட் ஒளிபரப்பாக உள்ளது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-22T05:00:29+00:00</updated>
        </entry>
    </feed>
