<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-08-29T08:50:00+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாளத்தில் வெள்ளத்தின் கோரத்தாண்டவம் - அழிவுக்கு மத்தியில் நடந்த அதிசயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/nepal-flash-floods-a-house-stands-amid-destruction-1787991009"></link>
            <id>https://tamilwin.com/article/nepal-flash-floods-a-house-stands-amid-destruction-1787991009</id>
            <summary type="text">நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பேரழிவின் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. 

வெள்ளத்தில் வீடு...</summary>
            <content type="html"><![CDATA[<p>நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பேரழிவின் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.</p><p> 

வெள்ளத்தில் வீடுகள் மற்றும் கட்டடங்கள் அடித்துச் செல்லப்பட்டதுடன், பலர் உயிரிழந்தும் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.</p><h2>உயிர் தப்பிய சம்பவம்</h2><p>

இந்நிலையில், வெள்ளத்தால் ஏற்பட்ட பாரிய அழிவுக்கு மத்தியில் ஒரு குடும்பம் உயிர் தப்பிய சம்பவம் சமூக வலைத்தளங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது.</p><p>

வேகமாகப் பாய்ந்த வெள்ள நீரால் சூழப்பட்ட பச்சை நிற வீடொன்றின் காணொளி சமூக வலைத்தளங்களில் பரவி வந்தது.</p><p><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr">The House in Green which survived against all Odds.<br><br>Even the brutal wrath of Nature which destroyed everything in its path couldn&#39;t shake it&#39;s foundation.<a href="https://x.com/hashtag/Nepal?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#Nepal</a> <a href="https://x.com/hashtag/NepalDisaster?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#NepalDisaster</a> <a href="https://t.co/sgVRF57jsW">pic.twitter.com/sgVRF57jsW</a></p>&mdash; D (@Deb_livnletliv) <a href="https://x.com/Deb_livnletliv/status/2093366087236903044?ref_src=twsrc%5Etfw">August 28, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p> 

அந்த வீட்டிற்குள் குடும்பமொன்று சிக்கியிருந்த நிலையில், அவர்களின் பாதுகாப்பு குறித்து பலரும் கவலை வெளியிட்டனர்.

வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியபோது, வீட்டைச் சுற்றியிருந்த பல கட்டடங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.</p><h2>&nbsp;பேரழிவின் காட்சிகள்</h2><p>
</p><p>
 எனினும், கடுமையான வெள்ளப்பெருக்கையும் தாக்குப்பிடித்து குறித்த வீடு மட்டும் நிலைத்து நின்றது.

இதனைத் தொடர்ந்து, அந்த வீட்டின் உறுதித்தன்மை குறித்து சமூக வலைத்தளங்களில் பலரும் ஆச்சரியப்பட்டனர்.</p><p> 

அருகிலிருந்த கட்டடங்கள் சேதமடைந்த நிலையில், இவ்வளவு சக்திவாய்ந்த வெள்ளத்தையும் அந்த வீடு எவ்வாறு தாக்குப்பிடித்தது என பலர் கேள்வி எழுப்பினர்.</p><p><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr">Thank God that house survived the floods. <a href="https://t.co/Ph17xPcm6p">pic.twitter.com/Ph17xPcm6p</a></p>&mdash; Ngazekof (@Mghazake) <a href="https://x.com/Mghazake/status/2093236111665512746?ref_src=twsrc%5Etfw">August 28, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>

பின்னர் வெளியான மற்றொரு காணொளியில், வீட்டிற்குள் இருந்த குடும்பத்தினர் பாதுகாப்பாக உயிர் தப்பியதாக தெரிவிக்கப்பட்டது.</p><p> 


இந்த இரண்டு காணொளிகளும் சமூக வலைத்தளங்களில் மில்லியன் கணக்கான பார்வைகளைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p>

</p>]]></content>
            <updated>2026-08-29T08:42:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[அநுர ஆட்சியின் அதிரடி நடவடிக்கை - இலங்கையில் ஏற்பட்ட பாரிய மாற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/anura-government-s-action-changes-in-sri-lanka-1787992042"></link>
            <id>https://tamilwin.com/article/anura-government-s-action-changes-in-sri-lanka-1787992042</id>
            <summary type="text">இலங்கையில் இருந்து போதைப்பொருளை முற்றாக ஒழிக்கும் வேலைத்திட்டத்திற்கு அரசாங்கம் முழுமையான ஆதரவை வழங்கி வருவதாக துறைசார்ந்த நிபுணர் ஒருவர் தெரிவித்துள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் இருந்து போதைப்பொருளை முற்றாக ஒழிக்கும் வேலைத்திட்டத்திற்கு அரசாங்கம் முழுமையான ஆதரவை வழங்கி வருவதாக துறைசார்ந்த நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார். </p><p>அரசாங்கத்தின் முயற்சிகளால் இன்று சிகரெட் பாவனை குறைந்திருப்பதாக இலங்கை மருத்துவ சங்கத்தின் போதைப்பொருள் தடுப்பு குழு உறுப்பினரும், ரஜட்ட பல்கலைக்கழக பிரயோக விஞ்ஞான பீடாதிபதியுமான டொக்டர் மனோஜ் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். </p><p>முழு நாடும் ஒன்றாக தேசிய திட்டத்தின் பிரதான அலுவலகத்திலும், ஊடக நிலையத்திலும் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் அவர் கருத்து வெளியிட்டார்.</p><h2><b>போதைப்பொருள் பாவனை&nbsp;</b></h2><p>கடந்த கால அரசாங்கங்கள் போதைப்பொருட்களின் பாவனையை சட்டபூர்வமாக மாற்றும் முயற்சிகளில் ஈடுபட்டன. ஆனால் சமகால அரசாங்கம் போதைப்பொருள் கலாசாரத்தை வேறொடு களைவதற்கு நடவடிக்கை எடுத்தது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/57dbb9c4-ae8e-4698-b61d-1912596f4d5a/26-6a92990dcf206.webp' /></p><p>போதைப்பொருள் பழக்கத்தின் அடிமையானவர்களை புனர்வாழ்வுக்கு உட்படுத்துவதை விடவும், போதைப்பொருட்களை இல்லாதொழிப்பதன் மூலம் இளம் சமுதாயத்தை பாதுகாக்க முடியும் என டொக்டர் மனோஜ் பெர்னாண்டோ குறிப்பிட்டார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-29T08:41:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[முக்கிய புள்ளிகளை வைப்பதற்காக வெலிக்கடை சிறையில் சிறப்புப் பிரிவு! அமைச்சரின் அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/nalinda-jayatissa-about-special-prisons-1787990134"></link>
            <id>https://tamilwin.com/article/nalinda-jayatissa-about-special-prisons-1787990134</id>
            <summary type="text">பெரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர்களையும், பாதாள உலகத் தலைவர்களையும் தடுத்து வைப்பதற்காக வெலிக்கடை சிறையில் ஒரு சிறப்புப் பிரிவு நிறுவப்பட்டுள்ளத...</summary>
            <content type="html"><![CDATA[<p>பெரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர்களையும், பாதாள உலகத் தலைவர்களையும் தடுத்து வைப்பதற்காக வெலிக்கடை சிறையில் ஒரு சிறப்புப் பிரிவு நிறுவப்பட்டுள்ளதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
</p><p>
பொதுக்கூட்டம் ஒன்றில் உரையாற்றிய போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.</p><p>அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டில் போதைப்பொருள் வலையமைப்பையும் பாதாள உலக நடவடிக்கைகளையும் ஒழிப்பதற்கு அரசாங்கம் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.</p><h2>சிறப்புச் சிறை வசதிகள்</h2><p>'ஐஸ்' போன்ற போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ள முக்கிய குற்றவாளிகளைக் குறிவைப்பதற்காக இந்த சிறப்புச் சிறை வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/651262df-2f89-4045-8786-8cba46428b48/26-6a929474d42c5.webp' /></p><p>
</p><p>
பாதாள உலகக் கும்பல்களுக்கு இடையேயான மோதல்கள் தற்போது கணிசமான அளவிற்கு ஒடுக்கப்பட்டுள்ளன. </p><p>எவ்வித அரசியல் செல்வாக்குமின்றி அனைவருக்கும் சமமாகச் சட்டத்தை நடைமுறைப்படுத்தி குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-29T08:35:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாள வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 600ஐ கடந்தது!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/death-toll-from-the-floods-in-nepal-crossed-600-1787985747"></link>
            <id>https://canadamirror.com/article/death-toll-from-the-floods-in-nepal-crossed-600-1787985747</id>
            <summary type="text">&amp;nbsp; நேபாளத்தைத் தாக்கிய முன்னெப்போதும் இல்லாத வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 626 ஆக உயர்ந்துள்ளதாக நேபாள காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது....</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; நேபாளத்தைத் தாக்கிய முன்னெப்போதும் இல்லாத வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 626 ஆக உயர்ந்துள்ளதாக நேபாள காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது.
</p><p>
இந்த திடீர் பேரழிவின் விளைவாக குறைந்தது 1,924 பேர் இன்னும் காணாமல் போயுள்ளதாக நாட்டின் பேரிடர் மேலாண்மை ஆணையம் மேலும் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/95b1a0cd-2b9a-49c7-8088-4095fcf10959/26-6a927f547a9ee.webp' /></p><p>
</p><p>
இதற்கிடையில், வெளிநாட்டு மீட்புக் குழுக்களின் உதவியை நாட வேண்டாம் என்ற தனது முடிவை நேபாளம் மாற்றிக்கொள்ள முடிவு செய்துள்ளது.
</p><p>
பேரழிவில் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணிகளைத் தாங்களே ஒருங்கிணைப்பதாகவும், வெளிநாட்டு மீட்புக் குழுக்களின் உதவியை நாட வேண்டிய அவசியமில்லை என்றும் நேபாள வெளியுறவு அமைச்சகம் ஆரம்பத்தில் கூறியிருந்தது.
</p><p>
இருப்பினும், வெள்ளத்தில் காணாமல் போனவர்களில் வெளிநாட்டினரும் இருப்பதால், சம்பந்தப்பட்ட நாடுகளின் இராஜதந்திர அழுத்தத்தின் காரணமாக நேபாள அரசாங்கம் அந்த முடிவை மாற்ற வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகியுள்ளது.
</p><p>
அதன்படி, சுரங்கங்களில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் சிக்கலான நடவடிக்கைகளுக்கும், உடல்களை அடையாளம் காணும் தொழில்நுட்பப் பணிகளுக்கும் சர்வதேச நிபுணர் குழுக்களுக்கு நேபாள அதிகாரிகள் தற்போது அனுமதி வழங்கியுள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-08-29T08:35:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kowshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இயக்கச்சி றீச்சாவின் படைப்புக்களை கண்டு வியந்த பிரபல வானொலி அறிவிப்பாளர் அப்துல் ஹமீது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/an-interesting-post-by-a-person-about-reecha-1787989223"></link>
            <id>https://tamilwin.com/article/an-interesting-post-by-a-person-about-reecha-1787989223</id>
            <summary type="text">1985ம் ஆண்டு, நெதர்லாந்தில் ஒலிபரப்புத்துறை பயிற்சிக்காக சென்றிருந்த போது நான் பார்த்த உலகப்புகழ் பெற்ற கட்டிடங்கள் அனைத்தும் ஒரே இடத்தில் வடிவமைக்கப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>1985ம் ஆண்டு, நெதர்லாந்தில் ஒலிபரப்புத்துறை பயிற்சிக்காக சென்றிருந்த போது நான் பார்த்த உலகப்புகழ் பெற்ற கட்டிடங்கள் அனைத்தும் ஒரே இடத்தில் வடிவமைக்கப்பட்டிருப்பதை றீச்சாவில் கண்டு வியந்ததாக பிரபல வானொலி அறிவிப்பாளர் அப்துல் ஹமீது தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.</p><p>மேலும்&nbsp;தரிசு நிலமாய்க் கிடந்த நிலப்பகுதியை பசுமை பொங்கும் வேளாண் பூங்காவாக மாற்றியுள்ள அன்புச் சகோதரர் கரனின் உழைப்பையும், விடாமுயற்சியையும் எண்ணி வியந்தேன் எனவும் அவர்&nbsp; புகழுரைத்துள்ளார்.&nbsp;</p><h2>40 ஆண்டுகள்&nbsp;ஆசை நிறைவேறல்&nbsp;</h2><p>அவர் மேலும் தெரிவிக்கையில், உலகச்சின்னங்களைக் காண ஒவ்வொரு நாட்டுக்கும் பயணம்செய்ய இயலாதவர்கள் அவற்றின் மாதிரிகளை ஒரே இடத்தில் கண்டு குதூகலிக்க ஒரு வாய்ப்பளிக்கும் இதுபோன்ற ஒரு அமைப்பினை இலங்கையிலும் உருவாக்க மாட்டார்களா! என்ற எனது ஆசை 40 ஆண்டுகள் கழித்து நிறைவேறியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c06ff46f-fcb7-4f8b-b7c6-14a3bc348c0e/26-6a9293bcc4eb0.webp' /></p><p>நேற்று யாழ். மண்ணிலிருந்து திரும்பும் வழியில், என்மீது பேரன்பு வைத்துள்ள சகோதரர், கரனின் (தொழிலதிபர் பாஸ்கரன் கந்தையா) அன்பு அழைப்பினை ஏற்று, இயக்கச்சியில், அவர் உருவாக்கியுள்ள புதிய பூமியாம் “ReeCha” இயற்கை வேளாண் பூங்காவிற்குப் போயிருந்தேன்.</p><p> 
தரிசு நிலமாய்க் கிடந்த ஒரு நிலப்பகுதியை பசுமை பொங்கும் வேளாண் பூங்காவாக மாற்றியுள்ள அன்புச் சகோதரர் கரனின் உழைப்பையும், விடாமுயற்சியையும், தாய் மண்ணின் மீது கொண்டுள்ள பற்றையும் எண்ணி வியந்தேன்.</p><h2>றீச்சாவின் தோற்றம்</h2><p> </p><p>
வெறுமனே ஒரு கேளிக்கைப் பூங்காவாக மட்டும் அன்றி, உலக அதிசயச் சின்னங்களைப் பற்றிய அறிவினை இளைய தலைமுறைக்கு அறிமுகப்படுத்தும் ஒரு பொது அறிவுத் தளமாகவும், வீட்டுத் தோட்ட முயற்சிகளில் ஆர்வமுள்ளோருக்கு வேளாண்துறை பற்றிய அறிவை ஊட்டும் ஒரு திறந்த பல்கலைக் கழகமாகவும் அந்த இடம் காட்சியளித்தது.</p><p>அத்துடன் தேச எல்லைகளை கடந்து வருவோருக்கு இந்த மண்ணின் வாழ்வியலை அறிமுகப்படுத்தும் ஒரு பண்பாட்டு மையமாகவும், 5 நட்சத்திர விடுதிகளில் தனித்தனி அறைகளில் அடைபட்டு கிடக்காமல் இயற்கை எழில் நிறைந்த பூமியில் சுத்தமான காற்றைச் சுவாசித்துக் கொண்டு தங்கியிருக்கக் கூடிய இல்லங்களைக் கொண்ட சுற்றுலாத் தலமாகவும் அந்த இடம்மாற்றப்பட்டிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6b5d740f-4e1e-4b51-92d0-e841739f2cce/26-6a9293bd9b64a.webp' /></p><p>மேலும் குடும்பத்தோடு வந்து குதூகலிக்கக் கூடிய கேளிக்கை அம்சங்கள் பல நிறைந்த பொழுது போக்குப் பூங்காவாகவும் ‘ReeCha’ Organic Agricultural Theme Park திகழ்வதை, சில நிமிடத்துளிகள் அங்கு சுற்றி வந்ததில் அனுபவித்து அறிந்தேன். </p><p>
வெகு விரைவில் யாழ். மண்ணின் தனித்துவ அடையாளச் சின்னங்களில் ஒன்றாய் ReeCha மாறவேண்டுமென வாழ்த்தி விடைபெற்றேன் என குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-29T08:34:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கைக்கு அருகில் 20 ஈரானிய கப்பல்கள் ; அடுத்து நடக்கபோவது என்ன!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/20-iranian-ship-near-sri-lanka-water-1787992534"></link>
            <id>https://jvpnews.com/article/20-iranian-ship-near-sri-lanka-water-1787992534</id>
            <summary type="text">&amp;nbsp; இலங்கையின் பிரத்யேகப் பொருளாதார வலயத்திற்கு அருகில் நங்கூரமிட்டுள்ளதாகக் கூறப்படும் கப்பல்கள் குறித்து அரசாங்கம் அவதானத்துடன் இருப்பதாக வெளியுற...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; இலங்கையின் பிரத்யேகப் பொருளாதார வலயத்திற்கு அருகில் நங்கூரமிட்டுள்ளதாகக் கூறப்படும் கப்பல்கள் குறித்து அரசாங்கம் அவதானத்துடன் இருப்பதாக வெளியுறவு அமைச்சின் ஊடகப் பணிப்பாளர் நாயகம் துஷார ரொட்ரிகோ தெரிவித்துள்ளார்.</p><p>

இருப்பினும், குறித்த கப்பல்கள் இலங்கைக்குச் சொந்தமான நிலப்பரப்பிற்கு வெளியே இருப்பதால், அவை தொடர்பாக இலங்கைக்கு எந்தப் பொறுப்பும் இல்லை என்றும், அக்கப்பல்களுக்கு எந்தவொரு வசதிகளும் செய்து கொடுக்கப்படவில்லை என்றும் அவர் கூறினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4610db40-882b-4585-aa1a-05ff04d444cc/26-6a9299d81fc6d.webp' /></p><h2>தாக்குதல் நடத்தப்படும் அபாயம்</h2><p> 

 ஈரான் துறைமுகங்களை நோக்கி பயணிக்க முடியாமல் சுமார் 20 ஈரானிய எரிபொருள் கடற்போக்குவரத்து கப்பல்கள் தற்போது இலங்கையின் பிரத்யேக பொருளாதார வலயத்திற்கு அருகில் நங்கூரமிட்டுள்ளதாக 'TankerTrackers' இணையதளம் தெரிவித்துள்ளது. </p><p>

அமெரிக்கா விதித்துள்ள கடற்படைத் தடை காரணமாகவே குறித்த கப்பல்களால் ஈரானிய துறைமுகங்களை நோக்கி பயணிக்க முடியாமல் போயுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. </p><p>

இப்பின்னணியில், ஈரான் கொடியுடனான சுமார் 13 எரிபொருள் கடற்போக்குவரத்து கப்பல்களும், தடைகளைத் தவிர்க்கும் நிழற்படை ('Shadow Fleet') கப்பல்கள் சிலவும் பாதுகாப்புத் தேடி இலங்கையின் பிரத்யேக பொருளாதார வலயத்திற்கு அருகில் தற்போது நங்கூரமிட்டுள்ளதாக 'TankerTrackers' இணையதளம் கூறுகிறது.</p><p> 

எனினும், அந்த இணையதளம் சுட்டிக்காட்டுவது யாதெனில், குறித்த கப்பல்களில் தற்போது எரிபொருள் எதுவும் இல்லை என்பதாகும். </p><p>

அதேவேளை கடந்த மார்ச் மாதம் இலங்கை கரைக்கு 19 கடல் மைல் தொலைவில் இருந்த 'ஐரிஷ் டேனா' (Iris Dena) கப்பல் மீது அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் தாக்குதல் நடத்தி மூழ்கடித்த பின்னணியில், தற்போது இலங்கையை ஒட்டி நங்கூரமிட்டுள்ள கப்பல்கள் மீதும் தாக்குதல் நடத்தப்படும் அபாயம் உள்ளதாக&nbsp; &nbsp;தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> 

இருப்பினும், சர்வதேச சட்டத்தின் கீழ் நடுநிலை நாட்டின் கடற்கரையில் இருந்து 12 கடல் மைல்கள் வரை பரந்துள்ள அந்நாட்டின் பிராந்திய கடல் எல்லைக்குள் தங்கியிருக்கும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்த அமெரிக்காவிற்கு அனுமதி இல்லை என்றும் 'TankerTrackers' இணையதளம் குறிப்பிட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-29T08:32:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையின் முக்கிய பொருளாதார வலயத்திற்கருகில் நங்கூரமிட்டுள்ள ஈரானிய கப்பல்கள் - வெளியுறவு அமைச்சு விளக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/iranian-ships-near-sri-lanka-ministry-explanation-1787988207"></link>
            <id>https://tamilwin.com/article/iranian-ships-near-sri-lanka-ministry-explanation-1787988207</id>
            <summary type="text">இலங்கையின் பிரத்யேக பொருளாதார வலயத்திற்கு அருகில் நங்கூரமிட்டுள்ளதாக கூறப்படும் கப்பல்கள் குறித்து அரசாங்கம் அவதானத்துடன் இருப்பதாக வெளியுறவு அமைச்சின...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் பிரத்யேக பொருளாதார வலயத்திற்கு அருகில் நங்கூரமிட்டுள்ளதாக கூறப்படும் கப்பல்கள் குறித்து அரசாங்கம் அவதானத்துடன் இருப்பதாக வெளியுறவு அமைச்சின் ஊடகப் பணிப்பாளர் நாயகம் துஷார ரொட்ரிகோ தெரிவித்துள்ளார். </p><p> 

ஈரானிய கப்பல்கள் மீது அமெரிக்கா தொடர்ந்தும் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் இலங்கையிடம் பாதுகாப்பு கோரி பல கப்பல்கள் நங்கூரமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.</p><h2>இலங்கைக்கு எந்த பொறுப்பும் இல்லை</h2><p>
</p><p>
இந்நிலையில், குறித்த கப்பல்கள் இலங்கைக்கு சொந்தமான நிலப்பரப்பிற்கு வெளியே இருப்பதால், இலங்கைக்கு எந்த பொறுப்பும் இல்லை என்றும் அக்கப்பல்களுக்கு எந்தவொரு வசதிகளும் செய்து கொடுக்கப்படவில்லை என்றும் வெளியுறவு அமைச்சு விளக்கமளித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ae8931fd-46ba-4f95-949d-ede71f1b4f77/26-6a9295aa8ad00.webp' />&nbsp; &nbsp;</p><p>

20 ஈரானிய எண்ணெய் கப்பல்கள் தங்கள் துறைமுகங்களுக்கு செல்ல முடியாமல், தற்போது இலங்கையின் பிரத்தியேகப் பொருளாதார மண்டலத்தில் நங்கூரமிட்டுள்ளதாக 'TankerTrackers' இணையதளம் தெரிவித்துள்ளது.
</p><p>
இந்த பின்னணியில், ஈரானிய கொடியுடன் கூடிய சுமார் 13 எண்ணெய் கப்பல்களும், நிழற்படை கப்பல்களும் பாதுகாப்புக்காக இலங்கைக்கு அருகில் தற்போது நங்கூரமிட்டுள்ளது.</p><h2>அமெரிக்கா விதித்துள்ள கடற்படை தடை</h2><p>

இந்த ஈரானிய கப்பல்கள் அமெரிக்கா விதித்துள்ள கடற்படை தடை காரணமாகவே துறைமுகங்களை நோக்கி பயணிக்க முடியாமல் உள்ளதாகவும், எனினும் கப்பல்களில் தற்போது எரிபொருள் எதுவும் இல்லை என்றும் இணையதளம் கூறுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2172c598-7862-4623-9073-dc7c136b3c27/26-6a9297406d01d.webp' /></p><p>கடந்த மார்ச் மாதம் இலங்கைக்கு 19 கடல் மைல் தொலைவில் 'ஐரிஷ் டேனா' (Iris Dena) கப்பல் மீது அமெரிக்க நீர்மூழ்கி கப்பல் தாக்குதல் நடத்தி மூழ்கடித்திருந்தது.</p><p>

இந்த பின்னணியில், தற்போது இலங்கைக்கு அருகில் நங்கூரமிட்டுள்ள கப்பல்கள் மீதும் தாக்குதல் நடத்தப்படும் அபாயம் உள்ளதாகவும் எச்சரித்துள்ளது.</p><p>

இருப்பினும், சர்வதேச சட்டத்தின் கீழ் நடுநிலை நாட்டின் கடற்கரையில் இருந்து 12 கடல் மைல்கள் வரை ஒரு நாட்டின் கடல் எல்லைக்குள் தங்கியிருக்கும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்த அமெரிக்காவிற்கு அனுமதி இல்லை என்றும் இணையதளம் குறிப்பிட்டுள்ளது.</p><p>&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-29T08:24:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாளத்தில் அவலம்; சடலங்களை அடையாளம் காண ‘க்யூஆர்’ குறியீடு !]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/bodies-identified-using-qr-codes-in-nepal-1787991932"></link>
            <id>https://jvpnews.com/article/bodies-identified-using-qr-codes-in-nepal-1787991932</id>
            <summary type="text">&amp;nbsp; நேபாளத்தில் ஏற்பட்டுள்ள பேரழிவை ஏற்படுத்திய வெள்ளத்தைத் தொடர்ந்து மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. 

ஆறுகளில் அடித்து வரப்பட்ட உ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; நேபாளத்தில் ஏற்பட்டுள்ள பேரழிவை ஏற்படுத்திய வெள்ளத்தைத் தொடர்ந்து மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. </p><p>

ஆறுகளில் அடித்து வரப்பட்ட உடல்கள் கரை ஒதுங்கி வருவதால், அங்குள்ள வைத்தியசாலை பிணவறைகள் அனைத்தும் உடல்களால் நிரம்பி வழிகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e852e5b3-77f1-4f81-9367-5e2aa35b6710/26-6a92977ddb914.webp' /></p><p>

இதனால் உயிரிழந்தவர்களின் உடல்களைப் பாதுகாக்கவும், அவர்களை உறவினர்கள் விரைவில் அடையாளம் காணவும் நேபாள காவல்துறை ‘க்யூஆர்’ (QR Code) குறியீடு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளது.
</p><p>
சித்வான் உள்ளிட்ட பகுதிகளில் மீட்கப்படும் உடல்கள் ஒவ்வொன்றிற்கும் தனித்துவமான க்யூஆர் குறியீடு ஒதுக்கப்படுகிறது.</p><p></p><p>
</p><p>
உடலின் விவரங்கள், எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் மீட்கப்பட்ட இடம் போன்ற தகவல்கள் இந்த க்யூஆர் குறியீட்டுடன் இணைக்கப்படுகின்றன.
</p><p>
இதன் மூலம் உறவினர்கள் பிணவறைகளுக்கு நேரடியாகச் சென்று தேடுவதற்குப் பதிலாக, க்யூஆர் குறியீட்டை ஸ்கேன் செய்து தங்களது உறவினர்களை எளிதில் அடையாளம் காண வழிவகை செய்யப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-29T08:23:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[மலையில் நிகழ்ந்த இரட்டை சரிவு: நேபாள பேரழிவிற்கு பனிப்பாறை சரிவு மட்டும் காரணம் இல்லை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/behind-the-reasons-of-nepal-s-devastating-floods-1787991671"></link>
            <id>https://news.lankasri.com/article/behind-the-reasons-of-nepal-s-devastating-floods-1787991671</id>
            <summary type="text">Uncovers Bedrock Collapse is Behind the Reasons of Nepal&#039;s Devastating Floods: நேபாளத்தில் ஏற்பட்ட பேரழிவுகரமான வெள்ளப்பெருக்கிற்கு பனிப்பாறை உடைப்பு ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Uncovers Bedrock Collapse is Behind the Reasons of Nepal's Devastating Floods: நேபாளத்தில் ஏற்பட்ட பேரழிவுகரமான வெள்ளப்பெருக்கிற்கு பனிப்பாறை உடைப்பு மட்டும் காரணம் இல்லை என்று புதிய செயற்கைக்கோள் புகைப்படங்கள் விளக்கியுள்ளன.</p><h2> நேபாளத்தை உலுக்கிய வெள்ளப்பெருக்கு</h2><p>
நேபாளத்தில் ஏற்பட்ட பேரழிவுகரமான வெள்ளப்பெருக்கிற்கு பனிப்பாறை உடைப்பு(Glacier Collapse) மட்டும் காரணம் இல்லை என்றும் பனிப்பாறைக்கு கீழே இருந்த பாறை பாளமும்(underlying bedrock) பெரிய அளவில் சரிந்ததே காரணம் என்று வல்லுநர்கள் கண்டறிந்துள்ளனர்.</p><p>புதன்கிழமை வெள்ளப்பெருக்கின் போது எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் புகைப்படங்கள் மேகங்கள் மற்றும் குப்பைகளால் மூடப்பட்டிருந்ததால், லாங்தாங் லிரூங்(Langtang Lirung) சிகரத்தின் அருகில் இருந்த பனிப்பாறை பகுதி மட்டும் உடைந்தது கண்டுபிடிக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8bc0e616-edd2-4fd9-843a-b76239f7e720/26-6a929678c2fec.webp' /></p><p> ஆனால் தற்போது எடுக்கப்பட்ட தெளிவான செயற்கைக்கோள் புகைப்படங்களில், மேலே இருந்த பனிப்பாறைகளுடன் அடியில் இருந்த பாறைகளும் சரிந்து விழுந்ததே ராட்சத வெள்ளப்பெருக்குக்கு காரணம் என்று தெரியவந்துள்ளது.</p><p>தீ விக்(The Week) நாளிதழில் வெளியான அறிக்கையில் கல்கரி பல்கலைக்கழக இணைப் பேராசிரியரான டான் சுகர்(Dan Shugar) இந்த தகவலை குறிப்பிட்டுள்ளார்.</p><p> அழிவின் பாதை))
பாறை மற்றும் பனிக்கட்டியின் மிகப்பெரிய பகுதி பள்ளத்தாக்கின் தரையில் விழுந்து மோதியது, அப்போது செங்குத்தான மற்றும் குறுகிய நிலப்பரப்பு குப்பைகள் மற்றும் இடிபாடுகளின் வேகத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது.</p><p></p><p> ஆனால் உருகிய பனியின் நீரோட்டமானது வெள்ள நீருக்கு மேலும் வலுசேர்த்தது சேரும் தண்ணீருமாக மாபெரும் வெள்ளப் பெருக்காக மாற்றியது.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Vantortech imagery shows the Rasuwagadhi crossing between Nepal and China completely wiped out by the glacial flood. <br><br> 359+ people are dead and nearly 1,000 remain missing.<br><br>This is the crossing, it’s gone. <a href="https://t.co/obmTgUWMwK">pic.twitter.com/obmTgUWMwK</a></p>&mdash; Open Source Intel (@Osint613) <a href="https://x.com/Osint613/status/2093088045272592847?ref_src=twsrc%5Etfw">August 27, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p> விரைவான பனி உருகுதலே இந்த பனிப்பாறை வெடிப்பிற்கான காரணம் என்று விஞ்ஞானிகள் முதலில் கூறினர்.</p><p> ஆனால் பனி மற்றும் பாறை கலவைகள் சரிவே இந்த பேரழிவுக்கு காரணம் என்று சர்வதேச ஒருங்கிணைந்த மலைப்பகுதி மேம்பாட்டு மையம் (ICIMOD) விளக்கியுள்ளது.</p><p> பனி மற்றும் பாறை சரிவுக்கு பல ஆராய்ச்சியாளர்கள் பருவநிலை மாற்றமே காரணம் என்று சுட்டிக்காட்டுகின்றனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-29T08:21:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[120 கிலோவில் இருந்து 67 கிலோவுக்கு… நடிகை சரண்யாவின் எடை குறைப்பு ரகசியம் இதுதான்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/actress-sharanya-nagh-35-plus-weight-loss-secret-1787990500"></link>
            <id>https://manithan.com/article/actress-sharanya-nagh-35-plus-weight-loss-secret-1787990500</id>
            <summary type="text">தமிழ் சினிமாவில் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்காவிட்டாலும், ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்த நடிகைகளில் ஒருவர் ‘காதல்’ சரண்யா. ‘காதல்’ படத்தில் நா...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழ் சினிமாவில் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்காவிட்டாலும், ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்த நடிகைகளில் ஒருவர் ‘காதல்’ சரண்யா. ‘காதல்’ படத்தில் நாயகி சந்தியாவின் தோழியாக நடித்ததன் மூலம் பிரபலமான இவர், தொடர்ந்து ‘பேராண்மை’ உள்ளிட்ட படங்களிலும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
</p><p>
ஆனால், தனிப்பட்ட காரணங்களால் ஏற்பட்ட இடைவெளிக்குப் பிறகு சரண்யாவுக்கு ஹார்மோன் சமநிலையின்மை, பிசிஓடி, ஹைப்போ தைராய்டு உள்ளிட்ட உடல்நலப் பிரச்சனைகள் ஏற்பட்டன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/394fe1bc-100a-4842-8a12-7e28b4608314/26-6a9295c325a21.webp' /></p><p></p><p> இதனால் அவரது உடல் எடை 113 முதல் 120 கிலோ வரை அதிகரித்தது. இதன் காரணமாக பல்வேறு விமர்சனங்களையும் மனவேதனைகளையும் சந்தித்ததாக அவர் முன்பு வெளிப்படையாகப் பேசியிருந்தார்.</p><h2>சரன்யாவின் எடை குறைப்பு ரகசியம்</h2><p>

இந்நிலையில், தனது உடல்நலப் பிரச்சனைகளை முறையாகக் கவனித்து, சுமார் ஒரு வருடத்தில் 35 கிலோவுக்கும் அதிகமாக எடையைக் குறைத்துள்ளார் சரண்யா. தற்போது சுமார் 67 கிலோ எடையுடன் இருக்கும் அவர், தொடர்ந்து உடற்பயிற்சி செய்து வருகிறார்.
</p><p>
தனது எடை குறைப்பின் ரகசியம் குறித்து சரண்யா கூறும்போது, “உடல் எடை அதிகமாக இருக்கிறது என்பதற்காக மட்டும் எடையைக் குறைக்க வேண்டாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/23b0a547-b2ef-4133-9ab8-bb0d11d47df1/26-6a9295c3cd2d0.webp' /></p><p> </p><p>முதலில் உடல்நலம் முக்கியம்” என்கிறார். தனக்கு இருந்த தைராய்டு மற்றும் மாதவிடாய் தொடர்பான பிரச்சனைகளுக்கு மருத்துவர்களின் ஆலோசனையைப் பெற்று, தொடர்ந்து சிகிச்சை எடுத்துக் கொண்டதாகவும், ஊட்டச்சத்து நிபுணரின் ஆலோசனையுடன் உணவுமுறையை மாற்றியதாகவும் தெரிவித்துள்ளார்.</p><p>உணவுமுறையுடன் உடற்பயிற்சிக்கும் முக்கியத்துவம் கொடுத்த சரண்யா, தொடர்ந்து ஜிம்முக்கு சென்று வருகிறார். “எடை குறைக்கும்போது உடலில் தசைகள் தளர்வாக மாறாமல் இருக்க உடற்பயிற்சி அவசியம். அதை தவிர்க்கக் கூடாது” என்றும் அவர் அறிவுறுத்துகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4485ba3e-756b-44c0-9f0c-e575e619f285/26-6a9295c488225.webp' /></p><p></p><p>
ஒருகாலத்தில் XXXL ஆடைகளை அணிந்த சரண்யா, தற்போது L–M அளவுக்கு வந்துள்ளார். இந்த மாற்றம் தனக்கு மிகப்பெரிய நம்பிக்கையை அளித்துள்ளதாகக் கூறும் அவர், முன்பைவிட தற்போது தன்னம்பிக்கையுடனும் மகிழ்ச்சியுடனும் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
</p><p>
சரண்யா மேலும் குறிப்பிடுகையில், எடை குறைப்பை விட, உடல்நலத்தைச் சீர்படுத்துவதுதான் முதன்மை. சரியான மருத்துவ ஆலோசனை, உணவுமுறை மற்றும் தொடர் உடற்பயிற்சி ஆகியவற்றின் மூலம் இந்த மாற்றத்தை தான் சாத்தியப்படுத்தியதாக குறிப்பிட்டுள்ளார்.</p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b>&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-29T08:18:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[30 ஆண்டுகளுக்கு முன் செய்த குற்றம்... ஜேர்மானியருக்கு ஆயுள் தண்டனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/german-man-life-prison-for-kill-us-girl-30-yrs-ago-1787991454"></link>
            <id>https://news.lankasri.com/article/german-man-life-prison-for-kill-us-girl-30-yrs-ago-1787991454</id>
            <summary type="text">Man gets life in prison for the murder of a US young woman over 30 years ago: 30 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்க இளம்பெண்ணை சீரழித்துக் கொலை செய்த நபருக்கு...</summary>
            <content type="html"><![CDATA[<p>Man gets life in prison for the murder of a US young woman over 30 years ago: 30 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்க இளம்பெண்ணை சீரழித்துக் கொலை செய்த நபருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.</p><p>


1994ஆம் ஆண்டு, ஜேர்மனிக்கு சுற்றுலா வந்த ஏமி லோபஸ் (24) என்னும் அமெரிக்க இளம்பெண்ணை மர்ம நபர் ஒருவர் சீரழித்துக் கொலை செய்தார்.</p><p>

32 ஆண்டுகளுக்குப் பின் அந்த வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
</p><h3>
ஜேர்மானியருக்கு ஆயுள் தண்டனை</h3><p>

சுற்றுலா சென்ற ஏமிக்கு, தங்குவதற்கு ஹாஸ்டல் ஒன்றைக் காட்டுவதாகக் கூறி அழைத்துச் சென்ற அந்த நபர், அவரை ஒரு பாழடைந்த கட்டிடத்தில் கட்டிப்போட்டு, வன்புணர்ந்து, கொலை செய்துள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fa2aa06f-3322-4ebc-9550-89e29778adbb/26-6a9295a045da2.webp' /></p><p>
ஜேர்மனியின் பிரபலமான Ehrenbreitstein என்னும் கோட்டைக்கு விளையாடச் சென்ற சிறுவர்கள் சிலர், அங்கு சடலமாகக் கிடந்த ஏமியைக் கண்டு பொலிசாருக்கு தகவலளித்துள்ளனர்.
</p><p>
கத்தியால் 9 முறை குத்தப்பட்டு, தலையில் அடிக்கப்பட்டு, கழுத்து நெறிக்கப்பட்டுக் கொல்லப்பட்டிருந்தார் ஏமி.&nbsp;</p><p></p><p>
இந்த வழக்கில் குற்றவாளி சிக்காமலே இருந்த நிலையில், சமீபத்தில், ஹான்ஸ் (Hans. S) என்னும் 81 வயது நபர், தான் செய்த குற்றச்செயல் தனக்கு பெரும் பாரமாக இருப்பதாகவும், தனக்கு தெளிவு வேண்டும் என்றும் கூறி, தனது DNA மாதிரியை பொலிசாருக்குக் கொடுக்க முன்வந்துள்ளார்.
</p><p>
அவர், பல ஆண்டுகளாக பல பாலியல் குற்றங்களில் ஈடுபட்டுவந்துள்ளார். அதற்காக பல ஆண்டுகள் சிறைக்கும் சென்றுள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/daf14216-9e42-4183-910b-ea5a41e0e892/26-6a9295a0eca7f.webp' /></p><p>
அந்த DNA மாதிரியை சோதனை செய்த பொலிசார், அது ஏமியின் உடைகளில் கண்டுபிடிக்கப்பட்ட அதே DNA என்பதை உறுதி செய்துள்ளார்கள்.
</p><p>
அதைத் தொடர்ந்து, ஹான்ஸ் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கைது செய்யப்பட்டார்.
</p><p>
இந்நிலையில், நேற்று Koblenz நகர உள்ளூர் நீதிமன்றம், ஏமி கொலை வழக்கில் ஹான்ஸுக்கு ஆயுள் தண்டனை விதித்துள்ளது.
</p><p>
தீர்ப்பு வழங்கப்படும்போது, ஏமியின் பெற்றோரும் நீதிமன்றத்தில் இருந்த நிலையில், அவர்களுடைய சட்டத்தரணியான கேத்ரின் (Kathrin Kienle) என்பவர், இந்த தீர்ப்பு, நடந்ததை இல்லாமல் செய்துவிடாது, ஏமியைத் திரும்பக் கொண்டு வந்தும் விடாது என்பது உண்மைதான் என்கிறார்.
</p><p>
என்றாலும், தங்கள் பிள்ளையை சீரழித்துக் கொன்றவன் இதுவரை வெளியே உலவிக்கொண்டிருக்கிறான் என்பதால், தங்களுக்கு இதுவரை அமைதி கிடைக்கவில்லை என ஏமியின் பெற்றோர் தன்னிடம் கூறியதாகவும் தெரிவிக்கிறார் கேத்ரின்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-29T08:17:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாஞ்சில விஜயனை சபித்தது உண்மைதான்..ஆனால்!! விஜே வைஷு பதிலடி...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/vaishu-about-nanjil-vijayan-separate-his-wife-1787991274"></link>
            <id>https://viduppu.com/article/vaishu-about-nanjil-vijayan-separate-his-wife-1787991274</id>
            <summary type="text">நாஞ்சில் விஜயன் -&amp;nbsp;வைஷுவிஜய் டிவியில் பிரபலமான நாஞ்சில் விஜயன் என்னுடன் நெருங்கி பழகி என்னை ஏமாற்றி விட்டதாக சமீபகாலமாக திருநங்கை வைஷு புகாரளித்து...</summary>
            <content type="html"><![CDATA[<h2>நாஞ்சில் விஜயன் -&nbsp;வைஷு</h2><p>விஜய் டிவியில் பிரபலமான நாஞ்சில் விஜயன் என்னுடன் நெருங்கி பழகி என்னை ஏமாற்றி விட்டதாக சமீபகாலமாக திருநங்கை வைஷு புகாரளித்து, வீடியோக்களில் மோசமாக பேசியும் வந்தார்.</p><p> இதனையடுத்து நாஞ்சில் விஜயன் சமீபத்தில் தான் மனைவியைவிட்டு பிரிந்து தனிமையில் வாழ்கிறேன் என்றும் திருநங்கை சாபம் உன்னை சும்மா விடாதுன்னு. அந்த சாபம் இன்று பலித்துவிட்டது என்கிற சந்தோஷம். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ad50644f-c3d5-4f95-a3c5-6e480ef24b8f/26-6a9294eca47ee.webp' /></p><p>நிச்சயமாக இன்று உங்களுக்கு நல்ல உறக்கம் வரும் என்று நினைக்கிறேன், நீங்கள் ஜெயித்து விட்டீர்கள், நன் தோற்றுவிட்டேன் என்று அதங்கத்துடன் இரு பதிவினை பகிர்ந்திருந்தார். </p><p>இதற்கு பலரும் வைஷுவை விமர்சித்து வந்த நிலையில், தற்போது ஒரு வீடியோவை அவர் பகிர்ந்துள்ளார்.</p><h2>சபித்தது உண்மைதான்</h2><p> அதில், என் சாபத்தால் மனைவியை பிரிந்துவிட்டேன் என்கிறார்.

கடவுள் மீது சத்தியமாக சொல்கிறேன், நான் நியாயம் கிடைக்க தான் போராடினேன், கணவன் - மனைவி பிரிய வேண்டும் என ஒருபோதும் சபிக்கவில்லை. நீங்க ரெண்டு பேரும் பிரிந்து போக வேண்டும் என நான் சத்தியமாக எதையும் செய்யவில்லை. தயவு செய்து உங்களை கேட்டுக்கொள்கிறேன், எனக்கு நிறைய கால் வந்து திட்டுகிறார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0af75852-a39f-4892-831b-9692890e552f/26-6a9294ed55743.webp' /></p><p>பிக்பாஸுக்காகத் தான் இதை செய்கிறேன் என்று சொல்கிறார்கள், என்னை பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு கூப்பிட்டார்கள், ஆனால் நான் போகவில்லை. என்னை வாழவிடுங்கள், என் வேலையை முடக்கிவிட்டீர்கள். என்னை அசிங்கப்படுத்தி பிக்பாஸுக்கு போவதை தடுக்கிறீர்கள், நான் பிக்பாஸுக்கு போகவில்லை. நான் சபித்தது உண்மைதான், ஆனால்எனக்கு நடந்த அநீயாயம் உங்களுக்கு உணரணும் என்று தான் செய்தேன் என வீடியோ பதிவு செய்துள்ளார். இதற்கும் பலரும் தங்களை விமர்சனங்களை முன் வைத்து வருகிறார்கள்.</p><p><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/reel/DcmMWYOTT3y/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/reel/DcmMWYOTT3y/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/reel/DcmMWYOTT3y/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by Vaishulisa vallal (@vj_vaishu_143)</a></p></div></blockquote> <script async src="//www.instagram.com/embed.js"></script></p>]]></content>
            <updated>2026-08-29T08:15:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[வங்காள விரிகுடாவில் உருவாகவுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலங்கள் : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/major-change-in-the-weather-in-sept-and-oct-in-sl-1787985307"></link>
            <id>https://ibctamil.com/article/major-change-in-the-weather-in-sept-and-oct-in-sl-1787985307</id>
            <summary type="text">இலங்கையில் எதிர்வரும் ஒக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் வங்காள விரிகுடா மற்றும் இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் அடிக்கடி காற்றழுத்தத் தாழ்வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் எதிர்வரும் ஒக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் வங்காள விரிகுடா மற்றும் இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் அடிக்கடி காற்றழுத்தத் தாழ்வு மண்டலங்கள் உருவாகி, அவை வலுப்பெற்று சூறாவளி மற்றும் கனமழைக்கு வழிவகுக்கும் என&nbsp;முன்னாள் புவியியல் துறை பேராசிரியர் அண்டனி நோர்பர்ட் தெரிவித்துள்ளார்.</p><p>அத்துடன் எதிர்வரும் செப்டம்பர் மற்றும் ஒக்டோபர் மாதங்களில் நாட்டின் காலநிலை மற்றும் மழைப்பொழிவில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்படக்கூடும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p>
</p><p>ஊடகமொன்றின் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>அதிகளவு வெப்பநிலை</h2><p>அவர் மேலும் தெரிவித்ததாவது, தற்போது இலங்கையில் தென்மேற்கு பருவக்காற்று நிலவி வருகின்ற போதிலும், அதன் தாக்கம் காரணமாக வடகிழக்கு மற்றும் தென்பகுதிகளில் மட்டுமே மழைப்பொழிவு கிடைத்து வருகின்றது.</p><p>அதேவேளை, வழக்கமாக வடகிழக்குப் பகுதிகளில் நிலவும் வறட்சிக்கு மாறாக, இம்முறை அந்தப் பகுதிகளில் அதிகளவு வெப்பநிலை பதிவாகி வருகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8b856462-8658-4513-bf34-8ad8ac9b34b7/26-6a929145ef90a.webp' /></p><p>படிம எரிபொருட்களின் அதிகப்படியான பயன்பாடு மற்றும் பசுமைக்குடில் வாயுக்களின் அதிகரித்த உமிழ்வு ஆகியவை புவி வெப்பமடைதலுக்கு முக்கிய காரணிகளாக உள்ளது.
</p><p>
புவி வெப்பமடைதலின் பின்னணியில் எல் நினோ (El Niño) போன்ற காலநிலை காரணிகளின் தாக்கம் அதிகரித்துள்ளதுடன், இதன் விளைவாக வழக்கமாக மிதமான வெப்பநிலை நிலவ வேண்டிய காலப்பகுதிகளிலும் 37 முதல் 38 டிகிரி செல்சியஸ் வரையான அதிக வெப்பநிலை பதிவாகி வருகின்றது.</p><p>இதனால் நீர்நிலைகள் வற்றுவதுடன், விலங்குகள் மற்றும் விவசாயத் துறையும் பாதிக்கப்படக்கூடும்” என தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-29T08:06:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவுடன் வர்த்தகப்போர்; கனடாவை எச்சரிக்கும் வல்லுனர்கள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/trade-war-with-the-us-experts-warn-canada-1787990920"></link>
            <id>https://canadamirror.com/article/trade-war-with-the-us-experts-warn-canada-1787990920</id>
            <summary type="text">&amp;nbsp; அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கனடா மீது ஆரம்பித்துள்ள வர்த்தகப் போர் இரண்டு நாடுகளின் வணிகங்களையும் பாதிக்கும் எனவும், இதில் , கனேடியப் பொ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கனடா மீது ஆரம்பித்துள்ள வர்த்தகப் போர் இரண்டு நாடுகளின் வணிகங்களையும் பாதிக்கும் எனவும், இதில் , கனேடியப் பொருளாதாரம் கடுமையான மந்தநிலையைச் சந்திக்கும் அபாயம் உள்ளதாக வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.</p><p>

 அமெரிக்கா - கனடா இடையேயான வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் முறிந்ததைத் தொடர்ந்து, அமெரிக்கா, கனடாவின் 20 பில்லியன் டொலர் மதிப்புள்ள பொருட்கள் மீது 50 சதவீத வரியை விதித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cca8eaa8-5272-4bb9-b034-e571ca00f6f7/26-6a929389e49a5.webp' /></p><h2>&nbsp;20 பில்லியன் டொலர் மதிப்பிலான பழிவாங்கல் வரி</h2><p>
</p><p>
ஜனவரி 1 முதல் அனைத்து சிற்றுந்து தயாரிப்புகள் மீதும் 50 சதவீத வரி விதிக்கப்படும் என்றும் ட்ரம்ப் எச்சரித்துள்ளார் .</p><p>அதேநேரம், அமெரிக்காவின் நடவடிக்கைக்குப் பதிலடியாக, கனேடியப் பிரதமர் மார்க் கார்னி (Mark Carney), 700-க்கும் மேற்பட்ட அமெரிக்கப் பொருட்கள் மீது 15, 25 மற்றும் 50 சதவீத அடிப்படையில் 20 பில்லியன் டொலர் மதிப்பிலான பழிவாங்கல் வரிகளை அறிவித்துள்ள நிலையில் இந்த வரிகள் எதிர்வரும் செப்டம்பர் 8 முதல் அமுலுக்கு வரவுள்ளன.</p><p>

இதற்கிடையில், அமெரிக்காவைக் காட்டிலும் கனடாவின் பொருளாதாரம் பத்தில் ஒரு பங்கு மட்டுமே உள்ளதாலும், தனது ஏற்றுமதியில் 70 சதவீதத்தை அமெரிக்காவிற்கே அனுப்புவதாலும் கனடா இந்த வர்த்தகப் போரால் அதிகம் பாதிக்கப்படக்கூடும்.
</p><p>
அதன்படி ஒன்ராறியோ, கியூபெக், பிரிட்டிஷ் கொலம்பியா மற்றும் நியூ பிரன்சுவிக் மாகாணங்களைச் சேர்ந்த உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் இதனால் பெரிதும் பாதிக்கப்படுவர்.</p><p>

இந்த வர்த்தகப் போரால் கனடாவில் 100,000-க்கும் மேற்பட்ட வேலைகள் இழக்கப்படலாம் என சர்வதேச வர்த்தக ஆலோசகர்கள் அஞ்சுகின்றனர்.</p><p>

இதேவேளை, கனடாவிற்கு எதிரான தனது அதிருப்தியை வெளிப்படுத்தும் விதமாக, ஒன்ராறியோ ஏரியை (Lake Ontario) இனி அமெரிக்க அரசு "அமெரிக்கா ஏரி" (Lake America) என்று அழைக்கும் என டிரம்ப் அறிவித்துள்ளார்.
</p><p>
இதற்குப் பிரதமர் மார்க் கார்னி மற்றும் மனிட்டோபா மாகாணத்தின் முதல்வர் வாப் கினே (Wab Kinew) ஆகியோர் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-08-29T08:05:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாளப் பெருவெள்ளத்தில் மாயமான கனேடியர்கள்: அமைச்சர் தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/minister-anita-about-missing-canadians-in-nepal-1787990443"></link>
            <id>https://canadamirror.com/article/minister-anita-about-missing-canadians-in-nepal-1787990443</id>
            <summary type="text">Foreign affairs minister Anita Anand says 32 Canadians unaccounted for after Nepal floods: நேபாளப் பெருவெள்ளத்தில் மாயமான 32 கனேடியர்கள் மாயமாகியுள்ளத...</summary>
            <content type="html"><![CDATA[<p>Foreign affairs minister Anita Anand says 32 Canadians unaccounted for after Nepal floods: நேபாளப் பெருவெள்ளத்தில் மாயமான 32 கனேடியர்கள் மாயமாகியுள்ளதாக கனடா வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
</p><p>

நேபாளப் பெருவெள்ளத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 600ஐக் கடந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், சுமார் 2,500 பேர் மாயமாகியுள்ளார்கள்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8c30e3d6-1815-4952-a159-f322feae9ab7/26-6a9291ad54601.webp' /></p><p>

நேபாளப் பெருவெள்ளத்தின்போது மாயமானவர்களில் பாதி பேர் வெளிநாடுகளிலிருந்து சுற்றுலா அல்லது புனித யாத்திரை சென்றவர்கள் என கூறப்படுகிறது.</p><p>

இந்நிலையில், நேபாளம் சென்ற 32 கனேடியர்கள் வரை மாயமாகியுள்ளதாக கனடா வெளியுறவுத்துறை அமைச்சரான அனிதா ஆனந்த் தெரிவித்துள்ளார்.</p><p>

மாயமானவர்களில் பலர் இந்தோ கனேடியர்கள், அவர்கள் கைலாச மலை மற்றும் மானசரோவருக்கு புனித யாத்திரை சென்றவர்கள் என கனேடிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.&nbsp;</p><p>
மாயமான கனேடிய குடிமக்கள் மற்றும் நிரந்தரக் குடியிருப்பு அனுமதி பெற்றவர்கள் எத்தனை பேர், அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்பது குறித்த தகவல்கள் இதுவரை உறுதி செய்யப்படவில்லை என்று கூறியுள்ளார் அனிதா ஆனந்த்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3934a179-8bfe-4233-949d-7f469f0a8886/26-6a9291ae0631d.webp' /></p><p>
விடயம் என்னவென்றால், சுற்றுலா அல்லது புனித யாத்திரை சென்ற தங்கள் குடும்பத்தினர் பெருவெள்ளத்தில் சிக்கிக்கொண்டார்கள் என்னும் செய்தி தங்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாக தெரிவித்துள்ள பலரும், அவர்களுக்கு என்ன ஆனது என்பது தெரியாததால் தாங்கள் கடும் மன அழுத்தத்துக்குள்ளானதாக தெரிவித்துள்ளது கவலையை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.
</p><p>
இந்நிலையில், கனடா தூதரக அதிகாரிகள், நேபாளத்தில் மாயமான கனேடியர்களைக் கண்டுபிடிக்கும் முயற்சியிலும் கனடாவிலிருக்கும் அவர்களுடைய குடும்பங்களுக்குத் தேவையான உதவிகள் வழங்குவதிலும் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ள அமைச்சர் அனிதா ஆனந்த், நேபாளப் பெருவெள்ளதால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் ஆறுதலைத் தெரிவித்துக்கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
இதற்கிடையில், நேபாளப் பெருவெள்ள நிவாரணப் பணிக்காக 5 இல்லியன் கனேடிய டொலர்களை கனடா வழங்குகிறது.</p>]]></content>
            <updated>2026-08-29T08:01:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Tony</name>
            </author>
            <title type="text"><![CDATA[நடிகர் ரியோவின் ராம் அண்ட் லீலா படத்தின் இறுதி வசூல் இதுதான்...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/actor-rio-raj-ram-and-leela-movie-bo-1787987105"></link>
            <id>https://cineulagam.com/article/actor-rio-raj-ram-and-leela-movie-bo-1787987105</id>
            <summary type="text">நடிகர் ரியோரியோ தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகர். இவர் நடிப்பில் ஜோ, ஆண்பாவம் பொல்லாதது ஆகிய படங்கள் மெகா ஹிட் ஆனது. இதை தொடர்ந்து நல்ல எதி...</summary>
            <content type="html"><![CDATA[<h2>நடிகர் ரியோ</h2><p>ரியோ தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகர். இவர் நடிப்பில் ஜோ, ஆண்பாவம் பொல்லாதது ஆகிய படங்கள் மெகா ஹிட் ஆனது. </p><p>இதை தொடர்ந்து நல்ல எதிர்பார்ப்பில் வெளிவந்த படம் ராம் அண்ட் லீலா. இப்படம் ரசிகர்களிடம் ட்ரைலர் மூலம் ஒரு எதிர்பார்ப்பை உருவாக்கியது. </p><p>ஆனால், படம் கலவையான விமர்சனங்களைப் பெற, வீக்கெண்ட் தொடர்ந்து பெரிய வசூல் எதுவுமில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4c87c388-4b60-474b-a9d7-b7bd1129153d/26-6a9284a29b42f.webp' /></p><h2>பாக்ஸ் ஆபிஸ்</h2><p>தற்போது தமிழகம் முழுவதும் இந்த படம் ரிலிஸான 90% தியேட்டரில் இருந்து எடுக்கப்பட்ட நிலையில், இறுதி வசூலாக இந்த படம் உலகம் முழுவதும் ரூ 4 கோடிகள் வரை வசூல் வந்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>கண்டிப்பாக இதிலிருந்து மீண்டு ரியோ வெற்றி பாதைக்கு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/iDXAMgj-Pso" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-08-29T08:00:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வரலாற்று பிரசித்தி பெற்ற செல்வ சந்நிதி ஆலய சூழலில் இப்படி ஒரு சம்பவம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/ice-blocks-vicinity-selva-sannidhi-temple-1787987355"></link>
            <id>https://jvpnews.com/article/ice-blocks-vicinity-selva-sannidhi-temple-1787987355</id>
            <summary type="text">வரலாற்று பிரசித்தி பெற்ற தொண்டமானாறு செல்வ சந்நிதி ஆலய சூழலில் உள்ள தாக சாந்தி நிலையத்தில் சுகாதார முறையற்ற நிலையில் காணப்பட்ட 12 பரல் ஐஸ் கட்டிகளை கை...</summary>
            <content type="html"><![CDATA[<p>வரலாற்று பிரசித்தி பெற்ற தொண்டமானாறு செல்வ சந்நிதி ஆலய சூழலில் உள்ள தாக சாந்தி நிலையத்தில் சுகாதார முறையற்ற நிலையில் காணப்பட்ட 12 பரல் ஐஸ் கட்டிகளை கைப்பற்ற முயன்ற சுகாதார பரிசோதகர்கள் மீது வாகனத்தால் மோத நபர் ஒருவர் முயன்றதாக வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.</p><p>சந்நிதி ஆலய வருடாந்திர மகோற்சவம் நடைபெற்று வரும் நிலையில் நேற்றைய தினம் தீர்த்த உற்சவம் நடைபெற்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ca701e79-0272-45a2-af55-d5934537bf1b/26-6a92859d3fa6b.webp' /></p><p></p><h2>வாகனத்தால் மோதி விபத்து</h2><p>
</p><p>
அதன் போது ஆலய சுற்றுப்புறங்களில் நடத்தப்பட்டு வந்த தாக சாந்தி நிலையங்களில் பொது சுகாதார பரிசோதகர்கள் திடீர் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.</p><p></p><p>
</p><p>
அதன் போது , புலம்பெயர் தமிழர் ஒருவரால் நடத்தப்பட்டு வந்த தாக சாந்தி நிலையத்தில் , காணப்பட்ட 12 பரல் ஐஸ் கட்டிகள் சுகாதாரமற்ற முறையில் காணப்பட்டுள்ளன.</p><p>

அவற்றை கைப்பற்றி அழிக்க முற்பட்ட சுகாதார பரிசோதகர்களை கடுமையான வார்த்தை பிரயோகங்களால் பேசி , அவர்களின் கடமைக்கு இடையூறு விளைவித்ததுடன் , அவர்கள் மீது வாகனத்தால் மோதி விபத்தினை ஏற்படுத்த முற்பட்டுள்ளார்.</p><p></p><p>
</p><p>
இது தொடர்பில் சுகாதர பரிசோதகர்களால் வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.</p><p>

அந்த முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன் , குறித்த நபரை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-08-29T07:56:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாளத்திற்கு மீண்டும் அபாயம்: இந்திய நதிகளில் மிதக்கும் சடலங்கள் - எச்சரிக்கும் சீனா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/nepal-tibet-flood-live-updates-rescue-resume-1787969144"></link>
            <id>https://ibctamil.com/article/nepal-tibet-flood-live-updates-rescue-resume-1787969144</id>
            <summary type="text">புதிய இணைப்புநேபாளத்தைத் தாக்கிய பேரழிவுத் தரக்கூடிய வெள்ளப்பெருக்கில் உயிரிழந்ததாக சந்தேகிக்கப்படும் 7 பேரின் சடலங்கள் இந்திய நதிகளிலிருந்து மீட்கப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>நேபாளத்தைத் தாக்கிய பேரழிவுத் தரக்கூடிய வெள்ளப்பெருக்கில் உயிரிழந்ததாக சந்தேகிக்கப்படும் 7 பேரின் சடலங்கள் இந்திய நதிகளிலிருந்து மீட்கப்பட்டுள்ளன.</p><p>நேபாளத்தின் தெற்குப் பகுதியான சிட்வான் எல்லைக்கு அருகில் அமைந்துள்ள இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தின் மகாராஜ்கஞ்ச் மற்றும் குஷிநகர் ஆகிய மாவட்டங்கள் ஊடாகப் பாயும் நதிகளில் மிதந்த நிலையிலேயே இச்சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். </p><p>

நேபாளத்தில் ஏற்பட்ட எதிர்பாராத வெள்ளப்பெருக்கு காரணமாகவே இச்சடலங்கள் இந்தியாவை நோக்கி அடித்து வரப்பட்டிருக்கலாம் என மகாராஜ்கஞ்ச் மாவட்ட ஆட்சியர் கெளரவ் சிங் சோகர்வால் வெளிநாட்டு ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார். </p><h2>முதலாம் இணைப்பு</h2><p>இந்தப் பேரிடர் குறித்து நேபாளத்துக்கு சீனா முன்கூட்டியே எச்சரிக்கை விடுக்காததால் தான் நேபாளத்தில் இவ்வளவு பெரிய அழிவு ஏற்பட்டதாக சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவலை நேபாளத்தில் உள்ள சீனத் தூதரகம் மறுத்துள்ளது.
</p><p>
எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், சீனத் தூதரகம் இந்தத் தகவல்களைப் போலியானவை என்று கூறி&nbsp; "ஆகஸ்ட் 26-ஆம் திகதி&nbsp; நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் அல்லது பனிப்பாறை சரிவால் நிலச்சரிவு ஏற்பட்டது. </p><p>இதில் பலர் உயிரிழந்ததுடன் நேபாளம் மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளின் பகுதிகளிலும் பலர் காணாமல் போயுள்ளனர்" என்று தெரிவித்துள்ளது.</p><p></p><h2>மீண்டும் வெள்ளப்பெருக்கு</h2><p>இதேவேளை, வெள்ளப்பெருக்கால் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ள நேபாளம் அடுத்த 72 மணி நேரத்திற்குள் மற்றொரு அபாயத்தை சந்திக்க வேண்டியிருக்கும் என சீனா எச்சரித்து உள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/825bd583-d60e-4f38-8e14-ba7832b0f9db/26-6a928ab956f99.webp' /></p><p>நேபாளத்தின் போடேகோஷி நதியின் கிளை நதியில் பனிச்சரிவு ஏற்பட்டு ஏரி உருவாகியதைத் தொடர்ந்து ஏற்பட்ட பெருவெள்ளத்தால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ள நிலையில், மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p><p>புதிய ஏரியில்&nbsp; சுமார் 20 இலட்சம் கனமீற்றர் நீர் காணப்பட்டதாகவும், அடுத்த மூன்று நாட்களில் இது 50 இலட்சம் கனமீற்றராக அதிகரிக்கக்கூடும் எனவும் சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஏரியின் நீர்மட்டம் அதிகரித்து வெள்ளம் பெருக்கெடுத்தால், நேபாளத்தில் மீண்டும் பாரிய பேரிடர் ஏற்படக்கூடும் என சீனா எச்சரித்துள்ளது.</p><p></p><h2>காணாமல் போயுள்ளனர்&nbsp;</h2><p>நேபாளத்திற்கும் சீனாவின் திபெத் பகுதிக்கும் இடையிலான எல்லையில் புதன்கிழமை ஏற்பட்ட பேரழிவுகரமான திடீர் வெள்ளப்பெருக்கில் குறைந்தது 579 பேர் உயிரிழந்ததாக நேபாள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p>கிட்டத்தட்ட 2,000 பேர் காணாமல் போயுள்ளனர் என்றும் இது முந்தைய மதிப்பீடுகளை விட கிட்டத்தட்ட இரு மடங்கு அதிகமாகும். காணாமல் போனவர்களில் நூற்றுக்கணக்கான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் அடங்குவர்&nbsp; என அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8b33180b-73e0-40a6-8561-f29cd46f8eb0/26-6a928aba13106.webp' /></p><p>நேபாளம் மற்றும் சீனாவில் 90 அமெரிக்கர்கள் காணாமல் போயுள்ளனர் என்றும், நேபாளத்தில் மூவர் மீட்கப்பட்டுள்ளனர் என்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.</p><p>இது தொடர்பாக நேபாள காவல் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘வெள்ளிக்கிழமை மாலை 3 மணி நிலவரப்படி 547 உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. நுவாகோட், ரசுவா, தாடிங், சித்வான், கோர்க்கா உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. வெள்ளப் பெருக்கில் சிக்கி 1,473 பேர் காயமடைந்துள்ளனர்</p><p>இவர்களில் பலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், சிகிச்சை முடிந்து 94 பேர் வீடு திரும்பியுள்ளனர். காணாமல் போனவர்களைத் தேடும் பணியில் 4,473 காவல் துறையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-29T07:50:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[32 கனேடியர்கள் மாயம்... நேபாளப் பெருவெள்ளம் தொடர்பில் அமைச்சர் அனிதா ஆனந்த் தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/anit-anand-says-32-canadians-missing-nepal-flood-1787989711"></link>
            <id>https://news.lankasri.com/article/anit-anand-says-32-canadians-missing-nepal-flood-1787989711</id>
            <summary type="text">Foreign affairs minister Anita Anand says 32 Canadians unaccounted for after Nepal floods: நேபாளப் பெருவெள்ளத்தில் மாயமான 32 கனேடியர்கள் மாயமாகியுள்ளத...</summary>
            <content type="html"><![CDATA[<p>Foreign affairs minister Anita Anand says 32 Canadians unaccounted for after Nepal floods: நேபாளப் பெருவெள்ளத்தில் மாயமான 32 கனேடியர்கள் மாயமாகியுள்ளதாக கனடா வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
</p><p>

நேபாளப் பெருவெள்ளத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 600ஐக் கடந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், சுமார் 2,500 பேர் மாயமாகியுள்ளார்கள்.
</p><h3>
32 கனேடியர்கள் மாயம்...
</h3><p>
நேபாளப் பெருவெள்ளத்தின்போது மாயமானவர்களில் பாதி பேர் வெளிநாடுகளிலிருந்து சுற்றுலா அல்லது புனித யாத்திரை சென்றவர்கள் என கூறப்படுகிறது.</p><p>

இந்நிலையில், நேபாளம் சென்ற 32 கனேடியர்கள் வரை மாயமாகியுள்ளதாக கனடா வெளியுறவுத்துறை அமைச்சரான அனிதா ஆனந்த் தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3ea0e125-04eb-47d9-a389-00c0acaf1f69/26-6a928ed11e6b9.webp' /></p><p>

மாயமானவர்களில் பலர் இந்தோ கனேடியர்கள், அவர்கள் கைலாச மலை மற்றும் மானசரோவருக்கு புனித யாத்திரை சென்றவர்கள் என கனேடிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.&nbsp;</p><p></p><p>
மாயமான கனேடிய குடிமக்கள் மற்றும் நிரந்தரக் குடியிருப்பு அனுமதி பெற்றவர்கள் எத்தனை பேர், அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்பது குறித்த தகவல்கள் இதுவரை உறுதி செய்யப்படவில்லை என்று கூறியுள்ளார் அனிதா ஆனந்த்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b57668ea-3dba-4a4d-9c29-a1e3d23d4506/26-6a928ed1cd37f.webp' /></p><p>
விடயம் என்னவென்றால், சுற்றுலா அல்லது புனித யாத்திரை சென்ற தங்கள் குடும்பத்தினர் பெருவெள்ளத்தில் சிக்கிக்கொண்டார்கள் என்னும் செய்தி தங்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாக தெரிவித்துள்ள பலரும், அவர்களுக்கு என்ன ஆனது என்பது தெரியாததால் தாங்கள் கடும் மன அழுத்தத்துக்குள்ளானதாக தெரிவித்துள்ளது கவலையை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.
</p><p>
இந்நிலையில், கனடா தூதரக அதிகாரிகள், நேபாளத்தில் மாயமான கனேடியர்களைக் கண்டுபிடிக்கும் முயற்சியிலும் கனடாவிலிருக்கும் அவர்களுடைய குடும்பங்களுக்குத் தேவையான உதவிகள் வழங்குவதிலும் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ள அமைச்சர் அனிதா ஆனந்த், நேபாளப் பெருவெள்ளதால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் ஆறுதலைத் தெரிவித்துக்கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
இதற்கிடையில், நேபாளப் பெருவெள்ள நிவாரணப் பணிக்காக 5 இல்லியன் கனேடிய டொலர்களை கனடா வழங்குகிறது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-29T07:49:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kowshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாளத்தை மீண்டும் கட்டியெழுப்ப பில்லியன் டொலர்கள் தேவை..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/nepal-flood-repairs-could-cost-10-of-economy-1787986573"></link>
            <id>https://tamilwin.com/article/nepal-flood-repairs-could-cost-10-of-economy-1787986573</id>
            <summary type="text">வெள்ளத்திற்குப் பிறகு, நேபாளத்தை மீண்டும் கட்டியெழுப்ப 4 பில்லியன் முதல் 5 பில்லியன் டொலர் வரை தேவைப்படலாம் என அந்த நாட்டின் நிதி அமைச்சர் ஸ்வர்னிம் வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>வெள்ளத்திற்குப் பிறகு, நேபாளத்தை மீண்டும் கட்டியெழுப்ப 4 பில்லியன் முதல் 5 பில்லியன் டொலர் வரை தேவைப்படலாம் என அந்த நாட்டின் நிதி அமைச்சர் ஸ்வர்னிம் வாக்லே இன்று(29.08.2026) தெரிவித்துள்ளார்.</p><p>இது அந்த நாட்டின் பொருளாதாரத்தில் கிட்டத்தட்ட பத்தில் ஒரு பங்கிற்கு சமமான செலவு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><h2>4-5 பில்லியன் டொலர்கள் தேவை</h2><p>அவர் மேலும் தெரிவிக்கையில்,&nbsp; ஆரம்பகட்ட மதிப்பீடு 4-5 பில்லியன் டொலர்களுக்கு இடையில் உள்ளது. இது ஒரு மதிப்பீடு மட்டுமே. 2015 ஆம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தின் போது தேவைப்பட்டதை விட மிகக் குறைவான தொகையே நமக்குத் தேவைப்படும் என குறிப்பிட்டுள்ளார்.</p><p>பனிப்பாறை சரிவினால், இமயமலை நதி அமைப்புகள் வழியாக பாறை, பனி, மண் மற்றும் சிதைவுகளின் ஒரு மாபெரும் வெள்ளம் பாய்ந்தது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0cbf6d0a-6900-44b6-b19f-e3405a9d797a/26-6a92882d0afab.webp' /></p><p>இதில் நேபாளம் மற்றும் சீனாவின் திபெத்தில் 600-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 2,000-க்கும் மேற்பட்டோர்&nbsp; காணாமல் போயுள்ளனர்.</p><p>
நேபாளத்தின் வரலாற்றில் பதிவு செய்யப்பட்ட மிக மோசமான பேரழிவான, 2015ஆம் ஆண்டு ஏற்பட்ட 7.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்திற்குப் பிறகு செலவிடப்பட்ட 9 பில்லியன் டொலரை விட, புனரமைப்புக்கான செலவு குறைவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>இது நாட்டின் மொத்த மின் உற்பத்தித் திறனில் 12 சதவீதத்திற்கும் அதிகமான பங்களிப்பை வழங்கும் மின் திட்டங்களையும் சேதப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p>[P8A12EU ]&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-29T07:43:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொலையில் முடிந்த சகோதரர்களுக்கு இடையேயான சண்டை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/35-year-killed-in-alleged-assault-family-dispute-1787983296"></link>
            <id>https://ibctamil.com/article/35-year-killed-in-alleged-assault-family-dispute-1787983296</id>
            <summary type="text">நபர் ஒருவர் தடியால் அடித்து படுகொலை செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் தங்காலை காவல்துறை பிரிவுக்குட்பட்ட மஹகொட பக...</summary>
            <content type="html"><![CDATA[<p>நபர் ஒருவர் தடியால் அடித்து படுகொலை செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p>

குறித்த சம்பவம் தங்காலை காவல்துறை பிரிவுக்குட்பட்ட மஹகொட பகுதியில் நேற்று (28) இரவு வேளையில் இடம்பெற்றுள்ளது.</p><p>மஹகொட பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.</p><p></p><h2>மேலதிக விசாரணை</h2><p>தாக்குதலில் படுகாயமடைந்த நபர் தங்காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8b4438af-c76b-48c7-8c64-564df89f4184/26-6a928c4b76026.webp' /></p><p> தங்காலை காவல் நிலையத்திற்குக் கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. </p><p>

உயிரிழந்த நபருக்கும் அவரது சகோதரருக்கும் இடையே ஏற்பட்ட தகராறு முற்றியதே இத்தாக்குதலுக்குக் காரணம் என இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.</p><p> 

28 வயதுடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், தங்காலை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-29T07:38:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் வளிமண்டலத்தில் ஏற்படும் மாற்றம்! செப்டெம்பர் மற்றும் ஒக்டோபரில் ஏற்படவுள்ள தாக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/el-nino-weather-alert-in-sri-lanka-1787987254"></link>
            <id>https://tamilwin.com/article/el-nino-weather-alert-in-sri-lanka-1787987254</id>
            <summary type="text">எதிர்வரும் செப்டெம்பர் மற்றும் ஒக்டோபர் மாதங்களில் நாட்டின் காலநிலை மற்றும் மழைப்பொழிவில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்படக்கூடும் என முன்னாள் சிரேஷ்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>எதிர்வரும் செப்டெம்பர் மற்றும் ஒக்டோபர் மாதங்களில் நாட்டின் காலநிலை மற்றும் மழைப்பொழிவில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்படக்கூடும் என முன்னாள் சிரேஷ்ட புவியியல் துறை பேராசிரியர் எஸ்.அண்டனி நோர்பர்ட் தெரிவித்துள்ளார். </p><p>

இலங்கையில் வளிமண்டலத்தின் வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் இந்த சூழல் ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். </p><p>

ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.</p><h2>மழைப்பொழிவு</h2><p> 

மேலும் தெரிவிக்கையில், 

தற்போது இலங்கையில் தென்மேற்கு பருவக்காற்று நிலவி வருகின்ற போதிலும், அதன் தாக்கம் காரணமாக வடகிழக்கு மற்றும் தென்பகுதிகளில் மட்டுமே மழைப்பொழிவு கிடைத்து வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/918a0d9e-2897-41dd-bff5-c05f7d873f99/26-6a928bf334ce9.webp' /></p><p> </p><p>

அதேவேளை, வழக்கமாக வடகிழக்குப் பகுதிகளில் நிலவும் வறட்சிக்கு மாறாக, இம்முறை அந்த பகுதிகளில் அதிகளவு வெப்பநிலை பதிவாகி வருகிறது.</p><h2>புவி வெப்பமடைதல்</h2><p> 

படிம எரிபொருட்களின் அதிகப்படியான பயன்பாடு மற்றும் பசுமைக்குடில் வாயுக்களின் அதிகரித்த உமிழ்வு ஆகியவை புவி வெப்பமடைதலுக்கு முக்கிய காரணிகளாக உள்ளன. </p><p>

புவி வெப்பமடைதலின் பின்னணியில் எல் நினோ போன்ற காலநிலை காரணிகளின் தாக்கம் அதிகரித்துள்ளது. </p><p>இதன் விளைவாக வழக்கமாக மிதமான வெப்பநிலை நிலவ வேண்டிய காலப்பகுதிகளிலும் 37 முதல் 38 டிகிரி செல்சியஸ் வரையான அதிக வெப்பநிலை பதிவாகி வருகிறது என்றுள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-29T07:36:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[மதுபான உரிமத்தில் பல மில்லியன் ரூபாய் ஊழல்..! ரணிலின் உறவினர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ranil-s-nephew-accused-over-liquor-licence-deal-1787987635"></link>
            <id>https://tamilwin.com/article/ranil-s-nephew-accused-over-liquor-licence-deal-1787987635</id>
            <summary type="text">முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உறவினர் ஒருவருக்கு வழங்கப்பட்ட மதுபான உற்பத்தி உரிமம் தொடர்பில்&amp;nbsp; குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உறவினர் ஒருவருக்கு வழங்கப்பட்ட மதுபான உற்பத்தி உரிமம் தொடர்பில்&nbsp; குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
</p><p>
குறித்த நபர் அந்த உரிமத்தை தனது நண்பர்கள் இருவருக்கு விற்பனை செய்து பல மில்லியன் ரூபாய் இலாபம் ஈட்டியதாக சிவில் புலனாய்வு முன்னணியின் ஒருங்கிணைப்பாளர் சஞ்சய மகாவத்த குற்றம் சாட்டியுள்ளார்.</p><h2>ரணிலின் சகோதரரின் மகன்</h2><p>
</p><p>
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் சஞ்சய மகாவத்த இந்தக் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். </p><p>

நாட்டில் மதுபான உற்பத்தி உரிமங்கள் மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையிலேயே உள்ளதாகவும், தற்போது 13 உரிமங்கள் மட்டுமே இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d07e1fc4-a333-4086-bbf3-a473d80cdf49/26-6a928b18192b7.webp' /></p><p> 

இவ்வாறான பெறுமதிமிக்க உரிமத்தைப் பெறுவதற்கு பொதுவாக பெருமளவு நிதி முதலீடு தேவைப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
</p><p>
முன்னாள் ஜனாதிபதியின் உறவினருக்கு இவ்வாறான உரிமம் வழங்கப்பட்டமை, இதன் பின்னணியில் பாரிய ஊழல் இடம்பெற்றிருக்கலாம் என்பதற்கான அறிகுறியாகும் எனவும் மகாவத்த தெரிவித்தார்.</p><p>இந்த விவகாரம் தொடர்பில் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவில் (CIABOC) எதிர்வரும் வாரத்தில் முறையான முறைப்பாடு ஒன்றைச் சமர்ப்பிக்க உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.</p><h2>நெருங்கிய தொடர்பு</h2><p>
இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் எதிர்க்கட்சி உறுப்பினர் நிரஞ்சன் குமாரவும் கலந்துகொண்டார்.</p><p> 

முன்னாள் ஜனாதிபதி ரணிலுக்கும் சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவருக்கும் இடையிலான நெருங்கிய தொடர்புகளை அவர் விமர்சித்ததுடன், அதனை உறுதிப்படுத்தும் வகையில் புகைப்பட ஆதாரங்களையும் முன்வைத்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7a66e42a-7f9c-4ac1-bd74-3782e1efea05/26-6a928b18eb92e.webp' /></p><p>
</p><p>
மேலும், மாஃபியா உறுப்பினர்களிடமிருந்து இலஞ்சம் பெற்றதாக குற்றம் சாட்டப்படும் மூன்று சட்டத்தரணிகள் தொடர்பிலும் கேள்விகள் முன்வைக்கப்பட்டன.</p><p> 

அவர்கள் மீது இதுவரை சட்டத்தரணிகள் சங்கம் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்காதது ஏன் எனவும் நிரஞ்சன் குமார கேள்வி எழுப்பினார்.
</p><p>
இந்த ஊழல் மற்றும் திறமையின்மை குறித்த குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய அனைத்து தகவல்களையும் எதிர்காலத்தில் பொதுமக்களுக்கு வெளிப்படுத்துவதில் தாங்கள் உறுதியாக இருப்பதாகவும் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-29T07:36:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெனிசுலா மீது கைவைத்த டிரம்ப்; எண்ணெய் வளத்தை கட்டுப்படுத்த ஒப்பந்தம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/us-control65-billion-barrels-oil-venezuela-1787980866"></link>
            <id>https://canadamirror.com/article/us-control65-billion-barrels-oil-venezuela-1787980866</id>
            <summary type="text">&amp;nbsp; வெனிசுலாவின் 6,500 கோடி கொள்கலன் எண்ணெய் இருப்பை அமெரிக்காவின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக டொனால்ட் ட்ரம்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; வெனிசுலாவின் 6,500 கோடி கொள்கலன் எண்ணெய் இருப்பை அமெரிக்காவின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
</p><p>


இந்த ஒப்பந்தம் தொடர்பில் தனது சமூக ஊடகப் பக்கத்தில் பதிவிட்டுள்ள ட்ரம்ப், அமெரிக்கா மற்றும் வெனிசுலா இடையே உலக வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய எண்ணெய் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/55b7cb08-9c2c-40bc-ad65-d478ce664f11/26-6a926c43e0660.webp' /></p><h2>&nbsp;சர்வதேச எண்ணெய் சந்தையில் முக்கியத்துவம் வாய்ந்த ஒப்பந்தம்</h2><p>



தனது வழிகாட்டுதலின் கீழ், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் பீட் ஹெக்செத் ஆகியோர் வெனிசுலாவின் இடைக்கால ஜனாதிபதி டெல்சி ரோட்ரிக்ஸுடன் இணைந்து இந்த ஒப்பந்தத்தை நிறைவு செய்துள்ளதாகவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.</p><p>




இந்த ஒப்பந்தத்தின் மூலம் அமெரிக்காவின் எண்ணெய் இருப்பு இரண்டு மடங்குக்கும் அதிகமாக அதிகரிக்கும் என்றும், நாட்டின் எண்ணெய் விநியோகம் விரிவடையும் என்றும் ட்ரம்ப் கூறியுள்ளார்.
</p><p>


இதன் காரணமாக எதிர்காலத்தில் அமெரிக்க மக்களுக்கான எரிபொருள் விலையை கணிசமாகக் குறைக்க முடியும் எனவும், வெனிசுலாவை பொருளாதார ரீதியாக செழிப்பான பாதைக்கு கொண்டு செல்ல இது உதவும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p>



 இந்த ஒப்பந்தம் அமெரிக்கா மற்றும் வெனிசுலா இடையே வளர்ந்து வரும் நட்புறவை மேலும் வலுப்படுத்தும் என்றும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>


உலகளாவிய மசகு எண்ணெய் இருப்பில் சுமார் 17 சதவீதத்தை வெனிசுலா கொண்டுள்ளதாகக் கூறப்படும் நிலையில், இந்த ஒப்பந்தம் சர்வதேச எண்ணெய் சந்தையில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகின்றது.</p>]]></content>
            <updated>2026-08-29T07:32:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் போதகர் மீது கண்மூடித்தனாமான தாக்குதல் ; மருத்துவமனையில் அனுமதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/pastor-brutally-attacked-jaffna-admitted-hospital-1787979869"></link>
            <id>https://jvpnews.com/article/pastor-brutally-attacked-jaffna-admitted-hospital-1787979869</id>
            <summary type="text">&amp;nbsp;தென்னிந்திய திருச்சபை யாழ்ப்பாண ஆதீனத்தின் பிரதித் தலைவரான போதகர் அன்டனி செபஸ்டியன் மீது நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதலில் காயமடைந்த அவர், யாழ் போ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;தென்னிந்திய திருச்சபை யாழ்ப்பாண ஆதீனத்தின் பிரதித் தலைவரான போதகர் அன்டனி செபஸ்டியன் மீது நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதலில் காயமடைந்த அவர், யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். </p><p>

நேற்று பிற்பகல் (28) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/70c7fa9f-e88c-4e59-abf1-baff642d3aff/26-6a92685fe3eb8.webp' /></p><h2>போதகரின் மகன்&nbsp; தாக்குதல்</h2><p> </p><p> 
தென்னிந்திய திருச்சபையின் செயலாளரான போதகர்&nbsp; மகனே இத்தாக்குதலை நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது.</p><p> 

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் யாழ்ப்பாண ஆதீனத்தின் பிரதித் தலைவராகத் தெரிவுசெய்யப்பட்ட போதகர் செபஸ்டியன், திருச்சபையின் முக்கிய பொறுப்புகளை வகித்து வந்தார்.</p><p></p><p> 

இந்நிலையில் இந்தியாவிலிருந்து வருகை தந்திருந்த விசேட குழுவினரால், தென்னிந்திய திருச்சபையில் பணியாற்றும் போதகர்களின் குடும்பங்களுக்கான ஒன்றுகூடலும் பயிற்சிகளும் கடந்த சில தினங்களாக நடத்தப்பட்டு வந்தன. </p><p>

நிகழ்வின் இறுதி நாளான நேற்று, போதகர்களுக்கான விசேட கலந்துரையாடல் நடைபெற்றது. 

கலந்துரையாடல் நிறைவடைந்து வெளியேறியபோது, பேராயர் மற்றும் ஏனைய போதகர்கள் முன்னிலையிலேயே இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. </p><p>


தாக்குதலாளி போதகரின் தலைப்பகுதியை இலக்குவைத்து மூன்று முறை தாக்கியுள்ளார். போதகரின் மகனை வேறொரு போதகர் பிடித்து வைத்திருந்ததாகவும், செயலாளரான போதகர் சதீஸ் டானியல் இத்தாக்குதலைத் தடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்ததாகவும் நேரில் பார்த்தவர்கள் தெரிவிக்கின்றனர்.</p><p></p><p> </p><p>

இதனால் இது ஒரு திட்டமிட்ட தாக்குதல் எனக் கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. </p><p>

தென்னிந்திய திருச்சபை யாழ்ப்பாண ஆதீனத்தில் நிலவும் நிர்வாகக் குறைபாடுகள், நிதி முறைகேடுகள் மற்றும் நீதிக்குப் புறம்பான செயற்பாடுகளுக்கு எதிராக போதகர் செபஸ்டியன் தொடர்ச்சியாகக் குரல் கொடுத்து வந்தார்.</p><p> 

கடந்த 9 மாதங்களாகச் செயற்குழு மற்றும் நிதிக்குழுவைக் கூட்டாமல் நிதியைப் பயன்படுத்துவது தொடர்பாக அவர் அழுத்தம் கொடுத்து வந்தார்.</p><p> 

திருச்சபை யாப்பிற்கு முரணாகப் பிரதிச் செயலாளர் மற்றும் செயற்குழு உறுப்பினர் ஆகிய இருவர் இடைநிறுத்தப்பட்டமைக்கும், ஊழியர்களுக்கு ஏற்படுத்தப்படும் இடையூறுகளுக்கும் எதிராகச் செயற்பட்டார். </p><p>

கடந்த 2ஆம் திகதி இவரது பொறுப்பிலிருந்த தேவகிராமம் திருச்சபை பூட்டப்பட்டு வழிபாட்டிற்கு இடையூறு ஏற்படுத்தப்பட்டமை குறித்து சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.</p><p></p><p> </p><p>

நிர்வாகம் மற்றும் நிதிக்குழுவின் அனுமதியின்றி 96 இலட்சம் ரூபாய் பெறுமதியான கார் ஒன்று கொள்வனவு செய்யப்பட்டமை குறித்தும் கேள்விகளை எழுப்பினார். </p><p>

தென்னிந்திய திருச்சபை யாழ்ப்பாண ஆதீனம் இதுவரை இலங்கையில் பதிவு செய்யப்படாமல் இயங்கி வருவதாகவும், கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக நிதி முறைகேடுகள் நடந்துள்ளதாகவும் திருச்சபை மக்களால் குற்றஞ்சாட்டப்படுகிறது.</p><p> 

இத்தகைய பின்னணியில் மேற்கொள்ளப்பட்டுள்ள இத்தாக்குதல் சம்பவம், திருச்சபை போதகர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.&nbsp; &nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-29T07:30:40+00:00</updated>
        </entry>
    </feed>
