<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-08-08T16:38:06+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ்ப்பாணத்தை அடிப்படையாக கொண்டு இன முறுகலை ஏற்படுத்தி சதி - களமிறக்கப்படும் கும்பல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/confusion-in-the-south-over-occupied-road-1786205072"></link>
            <id>https://tamilwin.com/article/confusion-in-the-south-over-occupied-road-1786205072</id>
            <summary type="text">யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரைக்காக ஆக்கிரமிக்கப்பட்ட பவானி வீதியை வைத்து தெற்கில்
குழப்பங்களை ஏற்படுத்தச் சதி இடம்பெற்று வருவதாகவும்,...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரைக்காக ஆக்கிரமிக்கப்பட்ட பவானி வீதியை வைத்து தெற்கில்
குழப்பங்களை ஏற்படுத்தச் சதி இடம்பெற்று வருவதாகவும், இதற்காக குழுவொன்று அழைத்து வரப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p>இதனையடுத்து பவானி வீதி விடுவிப்புக்கு தடைபோட முடியாது என நீதிமன்றம் திட்டவட்டமாக
அறிவித்துள்ளது.</p><p></p><h2>நீதிமன்ற&nbsp;தீர்ப்பு</h2><p> </p><p>

இந்தத் தீர்ப்பை அடிப்படையாக வைத்து, வட்ஸ்அப்
குழுக்கள் உருவாக்கப்பட்டு பிழையான தகவல்களைக் கூறி தெற்கில் இனவாதம்
பரப்பப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/58672393-344c-4c73-bf0b-f2fd8fb64ef8/26-6a775651bdbe2.webp' /></p><p>இவ்வாறாக போலித் தகவல்களைப் பரப்பி ஆட்கள் திரட்டப்பட்டுள்ள நிலையில்,
போராட்டக்காரர்கள் தற்போது யாழ்ப்பாணம் நோக்கி அழைத்து
வரப்படுகின்றனர்.</p><p>

திஸ்ஸ விகாரைக்காக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகளையும், வீதியையும்
விடுவித்தால் கலவரங்களும் குழப்பங்களும் ஏற்படும் என நீதிமன்றத்தை நாடும்
பொலிஸார், இத்தகைய அப்பட்டமான குழப்பச் செயல்கள் தொடர்பில் அமைதியாக உள்ளமை பல
தரப்பினரிடமும் கடும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><p></p><p></p><p>
</p>]]></content>
            <updated>2026-08-08T16:29:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்த வருட இறுதிக்குள் கைது செய்யப்படவுள்ள அரசியல்வாதிகள் உட்பட 50 முக்கிய பிரபலங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/50-prominent-figures-to-be-arrested-this-year-1786204723"></link>
            <id>https://ibctamil.com/article/50-prominent-figures-to-be-arrested-this-year-1786204723</id>
            <summary type="text">50 பில்லியன் ரூபாய்க்கும் அதிகமான பொது நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாகவும், பல்வேறு ஊழல் மோசடிகளில் ஈடுபட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்ட, சுமார் ஐம்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>50 பில்லியன் ரூபாய்க்கும் அதிகமான பொது நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாகவும், பல்வேறு ஊழல் மோசடிகளில் ஈடுபட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்ட, சுமார் ஐம்பது முன்னாள் அமைச்சர்கள், அரசியல்வாதிகள், அவர்களது நெருங்கிய கூட்டாளிகள் மற்றும் உயர் பதவியில் உள்ள அரசு அதிகாரிகள் அடங்கிய 50 பேர், இந்த ஆண்டு இறுதிக்குள் கைது செய்யப்பட உள்ளதாக உயர் மட்ட அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன என கொழும்பு ஊடகமொன்று தெரிவித்துள்ளது.</p><p>&nbsp;இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையம், குற்றப் புலனாய்வுத் துறை மற்றும் காவல்துறையின் பல சிறப்புப் புலனாய்வுப் பிரிவுகள் ஆகியவை இது தொடர்பான விசாரணைகளை ஏற்கனவே முடுக்கிவிட்டுள்ளன.</p><h2>இவர்களால் நாடு இழந்த ரூபா 50 மில்லியன்</h2><p>
</p><p>
இந்த அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் செய்ததாகக் கூறப்படும் நிதி முறைகேடுகளால், நாடு 50 பில்லியன் ரூபாய்க்கும் அதிகமான இழப்பைச் சந்தித்துள்ளது என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b20a8102-3666-4ad9-8e38-afc999a12784/26-6a7757efdc676.webp' /></p><p>
</p><p>
முன்னாள் அமைச்சர்கள் உட்பட சுமார் இருபது அரசியல்வாதிகள், கடந்த காலத்தில் செய்த பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக, நீதிமன்ற நடவடிக்கைகள் மூலம் ஏற்கனவே தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் உள்ளனர்.</p><p></p><h2>வெளிநாடுகளுக்கு செல்ல பயணத்தடை</h2><p>
</p><p>
புதிய விசாரணைகளின் கீழ் குற்றம் சாட்டப்படவுள்ள நபர்கள் வெளிநாடுகளுக்குப் பயணம் செய்வதைத் தடுக்கத் தேவையான நடவடிக்கைகள் ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ளன, மேலும் அவர்களின் நடமாட்டத்தைக் கண்காணிக்க சிறப்பு உளவாளிகளும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

 ​​</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/679e24c4-9530-4bc1-9e9e-422fad627e50/26-6a7757ee810df.webp' /></p><p>பொதுச் சொத்துக்களை வீணடித்தவர்கள் மற்றும் ஊழலில் ஈடுபட்டவர்கள் மீது காவல்துறை தொடர்ந்து விசாரணை நடத்தும் என்று பொதுப் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.</p><h2>அரசாங்கத்தின் முக்கிய நோக்கம்</h2><p>
</p><p>
மேலும், ஊழல்வாதிகளைத் தண்டிப்பதும், அவர்கள் நாட்டிற்கு ஏற்படுத்திய பொது நிதி இழப்பை மீட்பதும் அரசாங்கத்தின் முக்கிய நோக்கம் என்றும் அமைச்சர் வலியுறுத்தினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a0e82a39-8852-4491-9595-b8b6ad6d5b9a/26-6a7757ef323b9.webp' /></p><p>

மேலதிகமாக, முன்னர் பல்வேறு தொழில்நுட்பக் கோளாறுகளிலிருந்து விடுவிக்கப்பட்ட பல அரசியல்வாதிகள் மீதும் மீண்டும் கவனம் ஈர்க்கப்பட்டுள்ளது.

தொழில்நுட்பப் பிழைகளைச் சரிசெய்யவும், அவர்கள் மீது புதிய வழக்குகள் பதிவு செய்யவும் தற்போது திட்டங்கள் தீட்டப்பட்டு வருவதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-08T16:26:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[அந்த app-ல் என்ன நடக்குதுனு எனக்கு தெரியாது.. நடிகை தர்ஷா குப்தா சர்ச்சைக்கு பதில்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/dharsha-guptha-clarify-on-renown-app-controversy-1786205662"></link>
            <id>https://cineulagam.com/article/dharsha-guptha-clarify-on-renown-app-controversy-1786205662</id>
            <summary type="text">நடிகை தர்ஷா குப்தா இன்ஸ்டாவில் கவர்ச்சியான போட்டோக்களை அடிக்கடி வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருபவர்.அவர் சமீபத்தில் ஒரு app பற்றிய அறிவிப்பை வெளியிட...</summary>
            <content type="html"><![CDATA[<p>நடிகை தர்ஷா குப்தா இன்ஸ்டாவில் கவர்ச்சியான போட்டோக்களை அடிக்கடி வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருபவர்.</p><p>அவர் சமீபத்தில் ஒரு app பற்றிய அறிவிப்பை வெளியிட்டார். அதை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். </p><p>
அவர் தவறான விஷயம் செய்வதாக வந்த விமர்சனத்திற்கு பதில் கொடுத்து இருக்கிறார் அவர். அந்த app-ல் என்ன நடக்கிறது என்ன நடக்கிறது என எனக்கு தெரியாது என கூறியுள்ளார் அவர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/998ad73e-1e0a-447e-9188-8f32c2da6dab/26-6a7755e119171.webp' /></p><h2>தர்ஷா குப்தா கூறி இருப்பதாவது..
</h2><p>இத்தனை ஆண்டுகளாக என்னை நேசித்து வந்தவர்களிடம், நான் எப்படிப்பட்டவள் என்பதை விளக்க வேண்டிய நிலை வரும் என்று நான் ஒருபோதும் நினைத்ததில்லை. ❤️
</p><p>Renown செயலி என்பது, என் ரசிகர்கள், எனக்கு குடும்பம் போன்றவர்கள், என்னிடம் தங்களுடைய பிறந்தநாள் அல்லது திருமணநாள் வாழ்த்துகளைப் பெறவோ, அல்லது என்னுடன் தனிப்பட்ட முறையில் பேசவோ முடியும் என்றுதான் நான் நினைத்தேன். அதுதான் நான் அதில் இணைய சம்மதித்த ஒரே காரணம். நான் சொல்வது உண்மை என்பதற்கு முருகப்பெருமான் சாட்சியாக இருக்கிறார்.
</p><p>அந்த தளத்தில் வேறு என்ன நடக்கிறது என்பது எனக்கு ஒருபோதும் தெரியாது.
</p><p>என் அம்மா எனக்கு கற்றுக்கொடுத்த மதிப்புகளுடன்தான் நான் வாழ்ந்து வருகிறேன். நான் கவர்ச்சியான புகைப்படங்களைப் பகிரலாம், ஆனால் எனக்கென்று சில எல்லைகள் உள்ளன. எந்த அளவிலான பணமோ அல்லது புகழோ வந்தாலும், அந்த எல்லைகளை நான் ஒருபோதும் கடக்க மாட்டேன்.
</p><p>என்னைப் பற்றிய விமர்சனங்கள் என்னை அதிகமாக காயப்படுத்தவில்லை. ஆனால், இத்தனை ஆண்டுகளாக என்னை நேசித்து நம்பியவர்கள், நான் ஒருபோதும் இல்லாத ஒரு நபராக என்னை நினைத்திருக்கலாம் என்பதுதான் என்னை மிகவும் வேதனைப்படுத்துகிறது.
</p><p>இத்தனை ஆண்டுகளாக நீங்கள் அறிந்த அதே நபராகவே என்னை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்; நான் ஒருபோதும் செய்யாத ஒரு விஷயத்திற்காக என்னை நினைக்க வேண்டாம். ❤️&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-08T16:21:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[LPL 2026 இறுதிபோட்டி: ஜாஃப்னா கிங்ஸ் 123 ஓட்டங்களுக்கு ஆல்அவுட்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/jaffna-kings-123-all-out-vs-gag-lpl-2026-final-1786205901"></link>
            <id>https://news.lankasri.com/article/jaffna-kings-123-all-out-vs-gag-lpl-2026-final-1786205901</id>
            <summary type="text">காலி கல்லன்ட்ஸ் அணிக்கு எதிரான LPL 2026 இறுதிப்போட்டியில் ஜாஃப்னா கிங்ஸ் 123 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது. 

லங்கா பிரீமியர் லீக் 2026 இறுதிப்போட்டிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>காலி கல்லன்ட்ஸ் அணிக்கு எதிரான LPL 2026 இறுதிப்போட்டியில் ஜாஃப்னா கிங்ஸ் 123 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது. </p><p>

லங்கா பிரீமியர் லீக் 2026 இறுதிப்போட்டியில் ஜாஃப்னா கிங்ஸ் அணி 19.3 ஓவர்களில் 123 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது.&nbsp;</p><h2>இறுதிப்போட்டி&nbsp;</h2><p>

கொழும்பில் லங்கா பிரீமியர் லீக் 2026 தொடரின் இறுதிபோட்டியில் ஜாஃப்னா கிங்ஸ் மற்றும் காலி கல்லன்ட்ஸ் அணிகள் மோதி வருகின்றன.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8982dc5e-f409-4428-bf49-b17570cd17e2/26-6a7756d08fb65.webp' />&nbsp;</p><p></p><p>

நாணய சுழற்சியில் வென்ற ஜாஃப்னா கிங்ஸ் அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்து களமிறங்கியது.

அவிஷ்கா பெர்னாண்டோ 20 (16) ஓட்டங்களில் ஆட்டமிழக்க, கவாஜா நபாய் டக்அவுட் ஆனார். </p><p>கமில் மிஷாரா (Kamil Mishara) பொறுப்புடன் ஆட ஏனைய வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.&nbsp;</p><h2>ஜாஃப்னா கிங்ஸ்</h2><p>
அணியின் ஸ்கோர் 87 ஆக இருந்தபோது, கமில் மிஷாரா 41 (32) ஓட்டங்களில் இஷான் மலிங்கா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். </p><p>

கடைசி கட்டத்தில் அதிரடி காட்டிய சமிந்து விக்ரமசிங்கே 16 பந்துகளில் 24 ஓட்டங்கள் விளாசினார். ஜாஃப்னா கிங்ஸ் அணி 19.3 ஓவர்களில் 123 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது.</p><p>

காலி அணியின் தரப்பில் சரித் அசலங்கா, இஷான் மலிங்கா தலா 3 விக்கெட்டுகளும், தரிந்து ரத்னாயகே 2 விக்கெட்டுகளும், ஆகிப் மற்றும் சச்சிந்து தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.&nbsp; &nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/448b2aea-b517-406a-a8d7-80b852679583/26-6a775795bb306.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-08T16:16:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிளாமரில் கலக்கும் நடிகை ரகுல் ப்ரீத் சிங்....]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/rakul-preet-singh-recent-photoshoot-post-1786197769"></link>
            <id>https://viduppu.com/article/rakul-preet-singh-recent-photoshoot-post-1786197769</id>
            <summary type="text">ரகுல் ப்ரீத் சிங்இந்திய அளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் ரகுல் ப்ரீத் சிங். இவர் நடிப்பில் அடுத்ததாக ராமாயணா திரைப்படம் வெளிவரவிருக்கிறது.

இப்படத்...</summary>
            <content type="html"><![CDATA[<h2>ரகுல் ப்ரீத் சிங்</h2><p>இந்திய அளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் ரகுல் ப்ரீத் சிங். இவர் நடிப்பில் அடுத்ததாக ராமாயணா திரைப்படம் வெளிவரவிருக்கிறது.

இப்படத்தில் ராவணனின் தங்கை சூர்ப்பனகை கதாபாத்திரத்தில் ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார்.&nbsp;சமீபத்தில் இப்படத்தின் டிரைலர் வெளியானது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/47fe4db4-df84-42e0-a908-1e9835058c04/26-6a77371526877.webp' /></p><p>இதில் இவருடைய கதாபாத்திரத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகை ரகுல் ப்ரீத் சிங், அவ்வப்போது போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிடுவார்.</p><p>அந்த புகைப்படங்களும் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்க்கின்றன.

அந்த வகையில், கிளாமர் லுக்கில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-08-08T16:15:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ashik</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறிய ஊடுருவல் தொடர்பில் குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/indian-fishermen-encroachment-rises-in-south-alam-1786204426"></link>
            <id>https://tamilwin.com/article/indian-fishermen-encroachment-rises-in-south-alam-1786204426</id>
            <summary type="text">இந்திய கடற்றொழிலாளர்களின் அத்து மீறிய வருகை தற்போது வட பகுதியை தாண்டி தென்
பகுதிக்குள் ஊடுருவியுள்ளது. எனவே அரசாங்கம் இனியாவது இவர்களின் வருகையை கட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்திய கடற்றொழிலாளர்களின் அத்து மீறிய வருகை தற்போது வட பகுதியை தாண்டி தென்
பகுதிக்குள் ஊடுருவியுள்ளது. எனவே அரசாங்கம் இனியாவது இவர்களின் வருகையை கட்டுப்படுத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள
வேண்டும் என வட மாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் செயலாளர் என்.எம்.ஆலம்
தெரிவித்துள்ளார்.
</p><p>
மன்னாரில் இன்று(08.08.2026) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு
குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>இந்திய கடற்றொழிலாளர்கள்</h2><p>

அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழக கடற்றொழிலாளர்கள் இலங்கை எல்லைக்குள் நுழைந்து அத்துமீறி கடற்றொழிலில் 
ஈடுபடுகின்ற விடயங்கள் இன்று வடபகுதியில் பூதாகரமான விடயமாக பார்க்கப்படுகிறது.
</p><p>
கடந்த காலங்களில் இவ்வாறு இந்திய கடற்றொழிலாளர்களின் வருகை தொடர்ந்தும் இடம்பெற்றிருந்த போது
 நாங்கள் அதனை கண்டித்து போராட்டங்களை நடத்தி அவர்களின் வருகையை கட்டுப்படுத்தி
இருந்தோம்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7af28595-0afb-406e-92e5-9bc6c86f4fb6/26-6a7752c33b1af.webp' /></p><p>ஆனால், இந்த தடைக்காலம் முடிந்து ஆறாம் மாதம் முதல் அவர்களின் வருகை மிக
மிஞ்சியதாக காணப்படுவதுடன் இலங்கை கடல் எல்லையாக இருக்கின்ற Sea of Sri Lanka கடல்
பகுதிக்குள் அவர்களின் அத்துமீறிய செயற்பாடுகள் அதிகரித்து வருகிறது.
</p><p>
இது தொடர்பாக அண்மையிலே தீவக கடற்றொழிலாளர்கள் பெரிய அளவிலான கடல் வழிப்
போராட்டம் ஒன்றை மேற்கொண்டு இருந்தார்கள்.
</p><p>
இருந்த போதிலும் இந்த போராட்டம் எந்த அளவுக்கு அவர்களால் செவிமடுக்க
பட்டிருக்கின்றது என்பது கேள்விக்குறியாகத் தான் இருக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-08T16:07:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பு - குவைத் ஸ்ரீலங்கன் விமான சேவைகள் மீண்டும் ஆரம்பம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/colombo-kuwait-srilankan-flight-services-resume-1786204447"></link>
            <id>https://jvpnews.com/article/colombo-kuwait-srilankan-flight-services-resume-1786204447</id>
            <summary type="text">கொழும்புக்கும் குவைத்திற்கும் இடையிலான விமான சேவைகள் இன்று (08) பிற்பகல் முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படுவதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்புக்கும் குவைத்திற்கும் இடையிலான விமான சேவைகள் இன்று (08) பிற்பகல் முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படுவதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.</p><p></p><p> 

மத்திய கிழக்கில் நிலவிய பதற்றமான சூழ்நிலை காரணமாக இந்த விமான சேவைகளை இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f3f8da31-072d-495b-aaa9-890128decb49/26-6a7751217f466.webp' /></p><p>எனினும், தற்போது போர்ச் சூழல் ஓரளவுக்குத் தணிந்துள்ளமையால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-08T15:54:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[மூன்று சிறைச்சாலைகளில் மோதலில் ஈடுபட்ட கும்பல்கள் அடையாளம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/gangs-involved-in-clashes-three-prisons-identified-1786203932"></link>
            <id>https://jvpnews.com/article/gangs-involved-in-clashes-three-prisons-identified-1786203932</id>
            <summary type="text">குருவிட்ட, பல்லன்சேனை மற்றும் புதிய மெகசின் சிறைச்சாலைகளில் பதற்றமான சூழ்நிலையையும் மோதலையும் ஏற்படுத்திய குழுவினர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகப் பொலிஸா...</summary>
            <content type="html"><![CDATA[<p>குருவிட்ட, பல்லன்சேனை மற்றும் புதிய மெகசின் சிறைச்சாலைகளில் பதற்றமான சூழ்நிலையையும் மோதலையும் ஏற்படுத்திய குழுவினர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p> </p><p></p><p>அத்துடன், அவர்களை வேறு சிறைச்சாலைகளுக்கு இடமாற்றுவது உள்ளிட்ட மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனச் சிறைச்சாலைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.</p><p> 

குருவிட்ட, பல்லன்சேனை மற்றும் புதிய மெகசின் ஆகிய மூன்று சிறைச்சாலைகளிலும் நேற்று (07) மற்றும் அதற்கு முதல் நாள் (06) மோதல் சம்பவங்கள் இடம்பெற்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/42085397-53fa-4b6b-8565-8ad09e329f25/26-6a774f1ea1758.webp' /></p><p> 

இச்சம்பவங்களில் 3 சிறைக்கைதிகள் உயிரிழந்ததுடன், மேலும் 54 கைதிகள் காயமடைந்துள்ளனர். </p><p>

இதனிடையே, குருவிட்ட சிறைச்சாலையின் கைதிகள் நேற்று (07) ஏற்படுத்திய பதற்றத்தின் போது, சிறைக்கூடங்களின் கூரைகளை உடைத்துச் சேதப்படுத்தியமையால் தற்போது சிக்கலான நிலைமை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. </p><p>

அப்பகுதியில் அடிக்கடி மழை பெய்து வருவதால், கைதிகளை அந்த இடங்களில் வைத்திருக்க முடியாமையே இதற்குக் காரணமாகும். </p><p>

இதற்கமைய, இன்றைய தினமும் (08) இரத்தினபுரி பிரிவுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரேணுகா ஜயசுந்தரவின் தலையீட்டில் இது குறித்து ஆராயப்பட்டு, சிறைச்சாலையின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. </p><p>

குறித்த மோதலின் போது இரண்டு கைதிகள் உயிரிழந்ததுடன், அவர்களின் உடல்களில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்கள் காணப்படுவதாகப் பொலிஸார் தெரிவித்தனர். </p><p>

அத்துடன், அங்கு உறவினர்கள் பார்வையிடுவதற்கான வாய்ப்பு இன்னமும் வழங்கப்படவில்லை எனச் சிறைச்சாலைகள் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-08T15:45:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[மறைந்த டயானாவின் வைரம், நீலக்கல் காதணிகளை அணிந்திருந்த மேகன் மார்க்கல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/meghan-spotted-with-diana-s-earrings-in-canada-1786203967"></link>
            <id>https://news.lankasri.com/article/meghan-spotted-with-diana-s-earrings-in-canada-1786203967</id>
            <summary type="text">கனடாவில் ஹாரியுடன் நிகழ்வில் கலந்துகொண்ட மேகன் மார்க்கல், மறைந்த இளவரசி டயானாவின் வைரம் மற்றும் நீலக்கல் காதணிகளை அணிந்திருந்ததாக புகைப்படம் எடுக்கப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவில் ஹாரியுடன் நிகழ்வில் கலந்துகொண்ட மேகன் மார்க்கல், மறைந்த இளவரசி டயானாவின் வைரம் மற்றும் நீலக்கல் காதணிகளை அணிந்திருந்ததாக புகைப்படம் எடுக்கப்பட்டார்.</p><p>பிரிட்டிஷ் கொலம்பியாவில் நடைபெற்ற விழாவில் கணவர் ஹரியுடன் கலந்துகொண்ட மேகன் மார்க்கல், மறைந்த இளவரசி டயானாவின் அணிகலன்களை அணிந்திருந்த புகைப்படம் வெளியாகியுள்ளது. </p><h2>ஹரி மற்றும் மேகன் </h2><p>

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் இசைத்துறையில் ஜாம்பவானான டேவிட் ஃபாஸ்டரின் அறக்கட்டளையின் 40-வது ஆண்டு விழாக் கொண்டாட்டம் நடந்தது.

அதில் இளவரசர் ஹரி மற்றும் மேகன் மார்க்கல் இருவரும் ஜோடியாக கலந்துகொண்டனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1834d1a0-7b09-46a2-ae87-481b18d5effe/26-6a774f42d91fb.webp' />&nbsp;</p><p></p><p>இந்தத் தம்பதியினர் டேவிட் ஃபாஸ்டர் மற்றும் அவரது மனைவி கேத்தரின் மெக்ஃபீ ஆகியோருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
</p><p>
ஹரி, மேகன் இருவரும் டேவிட் மற்றும் கேத்தரினின் நீண்டகால நண்பர்கள் ஆவர். 

அப்போது மேகன் மார்க்கல், மறைந்த தனது மாமியார் இளவரசி டயானாவிற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, அவரது வைரம் மற்றும் நீலக்கல் காதணிகளை அணிந்திருந்தார்.</p><h2> 

தனிப்பட்ட சேகரிப்பில்</h2><p>மேகனின் கூந்தல் கொண்டையாகப் பின்னி விடப்பட்டிருந்ததால், அவர் அணிந்திருந்த காதணிகள் தனித்து தெரிந்தன.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/65247a68-d824-41d1-bc19-681f4d17756f/26-6a774f4389dc3.webp' /></p><p>

இளவரசி மேகன் மார்க்கல், மறைந்த டயானாவின் தனிப்பட்ட சேகரிப்பில் இருந்து பல நகைகளை வைத்திருக்கிறார். </p><p>மேலும், இதற்கு முன்பும் பொது நிகழ்ச்சிகளில் டயானாவின் காதணிகளை அணிந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d0e7d650-c652-41ee-aa11-64c802d6ac33/26-6a774f4236eaa.webp' />&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-08T15:43:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுவிஸ் - கொழும்புக்கு இடையில் மேம்படுத்தப்பட்ட நேரடி விமான சேவை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/edelweiss-air-increases-colombo-flights-1786156141"></link>
            <id>https://tamilwin.com/article/edelweiss-air-increases-colombo-flights-1786156141</id>
            <summary type="text">சுவிட்ஸர்லாந்தின் லீஷர் விமான சேவையான எடல்வெய்ஸ், சூரிச் - கொழும்பு ஆகிய நகரங்களுக்கு இடையிலான விமான சேவையை விரிவுபடுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது. 

...</summary>
            <content type="html"><![CDATA[<p>சுவிட்ஸர்லாந்தின் லீஷர் விமான சேவையான எடல்வெய்ஸ், சூரிச் - கொழும்பு ஆகிய நகரங்களுக்கு இடையிலான விமான சேவையை விரிவுபடுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது. </p><p>

 2026 மற்றும் 2027ஆம் ஆண்டிற்கான குளிர்கால அட்டவணையின் போது வாரத்திற்கு 3 விமான சேவைகளாக விரிவுபடுத்தவுள்ளது.</p><p> இது கடந்த குளிர்காலப் பருவத்தில் வழங்கப்பட்ட வாரத்திற்கு 2 முறை என்ற சேவையிலிருந்து அதிகரிப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><h2><b> பருவகாலத்தின் முதல் விமானம்</b></h2><p>அதற்கமைய, மேம்படுத்தப்பட்ட அட்டவணையானது சுவிட்சர்லாந்து மற்றும் இலங்கை இடையேயான பயணத்திற்கான அதிகரித்துவரும் தேவையை காட்டுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2c536398-8284-4314-bda9-407b3e70725f/26-6a76b2387061f.webp' /></p><p>பருவகாலத்தின் முதல் விமானம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதியன்று சூரிச்சிலிருந்து கொழும்பு நோக்கி புறப்படத் திட்டமிடப்பட்டுள்ளது. </p><p>அத்துடன், இந்த சேவைகள் 2027ஆம் ஆண்டு மே மாதம் வரை தொடர்ந்து இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. </p><p>சூரிச்சிலிருந்து கொழும்பிற்கு திங்கட்கிழமை, புதன்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமைகளில் விமான சேவைகள் முன்னெடுக்கப்படும்.</p><p> </p><h3><b>விமான சேவைகள்</b></h3><p>கொழும்பில் இருந்து சூரிச்சுக்கான விமான சேவைகள் செவ்வாய்க்கிழமை, வியாழக்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் புறப்படும். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/994d18c5-0c91-46e2-bf3c-c4ea0d0362b6/26-6a76b23920486.webp' /></p><p>இந்த அதிகரிப்பு இலங்கைக்கும் சுவிட்சர்லாந்துக்கும் இடையிலான வான்வழி இணைப்பை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. </p><p>அத்துடன், குளிர்காலப் பயணப் பருவத்தில் பயணிகளுக்குக் கூடுதல் பயணத் தெரிவுகளையும் இது வழங்கும். </p><p>மேலும், லுப்தான்சா குழுமத்தின் மூலம் ஐரோப்பா மற்றும் அதற்கு அப்பால் உள்ள பல இடங்களுக்குச் செல்வதற்கான வசதியான இணைப்புகளையும் சூரிச் விமான நிலையம்&nbsp; வழங்குகின்றமை குறிப்பிடத்தக்கது. </p>]]></content>
            <updated>2026-08-08T15:35:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[மெகசின் சிறைச்சாலையில் கைதிகளுக்கு போதைப்பொருள் வழங்க முயன்ற இருவர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/two-trying-supply-drugs-inmates-magazine-prison-1786197000"></link>
            <id>https://tamilwin.com/article/two-trying-supply-drugs-inmates-magazine-prison-1786197000</id>
            <summary type="text">மெகசின் சிறைச்சாலையில் கைதிகளுக்கு போதைப்பொருள் வழங்க முயன்ற இரண்டு சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மெகசின் சிறைச்சாலையின் பக்கவாட்டுச் சு...</summary>
            <content type="html"><![CDATA[<p>மெகசின் சிறைச்சாலையில் கைதிகளுக்கு போதைப்பொருள் வழங்க முயன்ற இரண்டு சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
</p><p>மெகசின் சிறைச்சாலையின் பக்கவாட்டுச் சுவருக்கு அருகே இன்று பிற்பகல் (08) நடத்தப்பட்ட சோதனையின் போது அந்த இரண்டு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p>
அவர்கள் அந்த இடத்தில் சிறைக்குள் 02 பொட்டலங்களை வீச முயன்றபோது, ​​பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><h2>முன்னெடுக்கப்படும் விசாரணைகள்&nbsp;</h2><p>
</p><p>
சந்தேக நபர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட 02 பொட்டலங்களை சோதனையிட்ட போது, ​​22 கிராம் மற்றும் 250 மில்லிகிராம் ஐஸ் என்ற போதைப்பொருள், 02 மில்லிகிராம் ஆஷ் என்ற போதைப்பொருள், 02 தொலைபேசி மின்னேற்றிகள், 02 ஜோடி காதணிகள், 10 லைட்டர்கள் மற்றும் 02 சிறிய கைபேசிகள் ஆகியவையும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b38f9024-7b63-44cd-b14f-4ee71af95e98/26-6a77374253419.webp' /></p><p>
</p><p>
கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்களும் 29 வயதுடையவர்கள் என்றும், கொம்பா 14 பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் நாளை (09) மாளிககந்த நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட உள்ளனர். மேலும், பொரளை பொலிஸார் இது குறித்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-08T15:26:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[Tea Kadai Sweet Bonda : டீக்கடை ஸ்டைல் இனிப்பு போண்டா – வீட்டிலேயே செய்வது எப்படி?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/crispy-tea-kadai-sweet-bonda-recipe-1786201851"></link>
            <id>https://manithan.com/article/crispy-tea-kadai-sweet-bonda-recipe-1786201851</id>
            <summary type="text">Tea Kadai Sweet Bonda : மாலை வேளையில் காபி, டீ குடிக்கும் போது வீட்டில் உள்ளவர்கள் ஏதாவது ஸ்நாக்ஸ் கேட்கிறார்களா?அப்படியானால், ஒருமுறை இந்த டீக்கடை ஸ்...</summary>
            <content type="html"><![CDATA[<p>Tea Kadai Sweet Bonda : மாலை வேளையில் காபி, டீ குடிக்கும் போது வீட்டில் உள்ளவர்கள் ஏதாவது ஸ்நாக்ஸ் கேட்கிறார்களா?அப்படியானால், ஒருமுறை இந்த டீக்கடை ஸ்டைல் இனிப்பு போண்டா செய்து பாருங்கள். </p><p>

செய்வதற்கு மிகவும் சுலபமாக இருப்பதோடு, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் சுவையாக இருக்கும்.

டீ கடை இனிப்பு போண்டா செய்முறையை எளிய படிமுறைகளாக இந்த பதிவில் பார்க்கலாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4fce5408-2c31-41ae-8de2-309730cb0d1f/26-6a774a59c4988.webp' /></p><p></p><p>
</p><h2>
தேவையான பொருட்கள்</h2><p>
பால் - 300 ml
</p><p>பால் பவுடர் - 1/ 4கப் </p><p>
சர்க்கரை - 100 கிராம்
</p><p>
மைதா – 200 கிராம்
</p><p>ஏலக்காய் தூள் – ½ டீஸ்பூன்
</p><p>நெய்- 2 தே.கரண்டி</p><p>
உப்பு – 1 சிட்டிகை</p><p>
எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு</p><h2>

செய்முறை
</h2><p>முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து பால் மற்றும் பால் பவுடர் சேர்த்து நன்றாக கலந்துவிட வேண்டும் பால் கெட்டியாக ஆரம்பித்ததும் அதில் சர்க்கரை சேர்த்து நன்றாக கலந்துவிட்டு அதை இறக்கி ஆறவிட வேண்டும். </p><p>

பின்னர் ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, ஏலக்காய் தூள், நெய் சேர்த்து நன்றாக கலந்துவிட்டு, ஏற்கனவே தயார் செய்து வைத்துள்ள பாலை சேர்த்து நன்றாக கலந்துவிட்டுக்கொள்ள வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0cfe1026-240f-4d84-9932-091bd14e41a0/26-6a774a5a7d064.webp' /></p><p></p><p>

மாவு மிகவும் தளர்வாக இல்லாமல், கையில் எடுத்துப் போண்டா போடும் அளவுக்கு இருக்க வேண்டும்.

அதன் பிறகு ஒரு கடாயில் எண்ணெயை ஊற்றி மிதமான தீயில் சூடாக்கவும். </p><p>கையில் சிறிது எண்ணெய் தடவி, மாவை சிறு சிறு உருண்டைகளாக எடுத்து சூடான எண்ணெயில் போடவும்.</p><p>

போண்டாக்களை மிதமான தீயில் திருப்பித் திருப்பி பொன்னிறமாகவும், நன்றாக வெந்து மொறுமொறுப்பாகவும் வரும் வரை பொரித்தெடுத்தால் அவ்வளவு தான்சுவையான டீக்கடை இனிப்பு போண்டா தயார். </p><p>சூடான காபி அல்லது டீயுடன் இந்த இனிப்பு போண்டாவை பரிமாறினால், மாலை நேர ஸ்நாக்ஸ் இன்னும் சிறப்பாக இருக்கும். ஒருமுறை செய்து பாருங்கள் வீட்டில் உள்ளவர்கள் மீண்டும் மீண்டும் செய்து தரச் சொல்வார்கள்.&nbsp; &nbsp;</p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்<u> <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank" style="">FOLLOW NOW</a>&nbsp;</b></u> &nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-08T15:25:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பில் காதலர்கள் போன்று இளம் தம்பதியின் அதிர்ச்சி செயல் - பெற்றோர்களே எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/couple-arrested-for-selling-drugs-1786196085"></link>
            <id>https://tamilwin.com/article/couple-arrested-for-selling-drugs-1786196085</id>
            <summary type="text">கொழும்பின் புறநகர் பகுதியில் ஹோமாகம பிரதேசத்தில் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்து குறுக்கு வழிகளில் பாழடைந்த இடங்களில் காதலர்கள் போன்று தங்கியிருந்து,...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பின் புறநகர் பகுதியில் ஹோமாகம பிரதேசத்தில் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்து குறுக்கு வழிகளில் பாழடைந்த இடங்களில் காதலர்கள் போன்று தங்கியிருந்து, நீண்ட காலமாக பாரியளவில் போதை மாத்திரை வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்த தம்பதி கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p>
சந்தேக நபர்கள் 90 போதை மாத்திரைகளுடன் ஹோமாகம கொட்டாவ போதை மாத்திரைகள் ஒழிப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p>
சந்தேக நபர்கள் பாதுக்க பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயதுடைய தம்பதியினராகும்.</p><p></p><p> </p><h2><b>

 போதை மாத்திரை விற்பனை&nbsp;&nbsp;</b></h2><p>பாழடைந்த இடங்களை தெரிவு செய்து காதலர்கள் போன்ற பாவனையில் போதை மாத்திரை விற்பனை செய்யும் வலையமைப்பு ஒன்று செயற்பட்டு வருவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சுற்றிவளைப்பு நடத்தப்பட்டுள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/81de2f82-7397-4ea5-9459-46979798e9a9/26-6a77354f3c661.webp' /></p><p>அதற்கமைய செயற்பட்ட அதிகாரிகள் குழுவினர், பாதுக்க மாவத்தகம பாடசாலை வீதியில் தந்திரோபாய நபர் ஒருவர் மூலம் 1000 ரூபா பணத்திற்கு 10 போதை மாத்திரைகள் அடங்கிய அட்டை ஒன்றை கொள்வனவு செய்துள்ளனர். </p><p>

அதன் பின்னர் அவை போதை மாத்திரை என உறுதிப்படுத்தப்பட்டதன் பின்னர், வழங்கப்பட்ட சைகையின் அடிப்படையில் அருகில் கண்காணிப்பு கடமையில் ஈடுபட்டிருந்த ஏனைய அதிகாரிகள் உடனடியாகச் செயற்பட்டு குறித்த தம்பதியை கைது செய்துள்ளனர்.</p><p>

சந்தேகநபர்களைச் பரிசோதனை செய்தபோது, போதை மாத்திரை விற்பனை மூலம் பெறப்பட்ட 1000 ரூபா பணத்திற்கு மேலதிகமாக, அவர்கள் வசமிருந்த மேலும் 80 போதை மாத்திரைகளும், வர்த்தகத்திற்காகப் பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளும் பொலிஸ் காவலில் எடுக்கப்பட்டுள்ளன.</p><p></p><p> </p><h3><b>

பெற்றோர்களே எச்சரிக்கை </b></h3><p>கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இதற்கு முன்பும் போதை மாத்திரை வர்த்தகம் தொடர்பில் மீகொட பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டவர் என்பது தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9a993ba1-c958-4ba3-ad87-690e6899a851/26-6a7735cf5e0d8.webp' /></p><p>இந்தத் தம்பதியினர் தங்களது வாழ்வாதாரத்திற்கான நீண்ட காலமாக இந்த வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர். 

பாடசாலை மாணவர்கள் மற்றும் பெண்கள் கூட இவர்களிடமிருந்து போதை மாத்திரைகளைக் கொள்வனவு செய்துள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது. </p><p>

சந்தேகம் வராத வகையில் பாழடைந்த இடங்களில் காதலர்கள் போன்று தங்கியிருந்து இவர்கள் இந்த வர்த்தகத்தை நடத்தி வந்துள்ளனர்.
</p><p>
இவ்வாறான மோசடியாளர்களிடமிருந்து பாடசாலை மாணவர்களை அவர்களின் பெற்றோர் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><p></p><p> </p>]]></content>
            <updated>2026-08-08T15:24:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[இத்தாலி-கெடானியா விமான நிலையத்திற்கு விமானங்கள் வருவது இடைநிறுத்தம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/flights-to-italy-s-catania-airport-suspended-1786202479"></link>
            <id>https://tamilwin.com/article/flights-to-italy-s-catania-airport-suspended-1786202479</id>
            <summary type="text">உலகின் மிகவும் சுறுசுறுப்பான எரிமலைகளில் ஒன்றான இத்தாலியின் எட்னா மீண்டும்
சீற்றமடைந்து வருவதால், சிசிலி தீவிலுள்ள
கெடானியா சர்வதேச விமான நிலையத்திற...</summary>
            <content type="html"><![CDATA[<p>உலகின் மிகவும் சுறுசுறுப்பான எரிமலைகளில் ஒன்றான இத்தாலியின் எட்னா மீண்டும்
சீற்றமடைந்து வருவதால், சிசிலி தீவிலுள்ள
கெடானியா சர்வதேச விமான நிலையத்திற்கு விமானங்கள் வருவது தற்காலிகமாக
இடைநிறுத்தப்பட்டுள்ளது.
</p><p>
சுற்றுலாப் பயணிகளின் பிரதான மையமாக விளங்கும் சிசிலியின் கெடானியா பகுதி
வான்வெளியில் எரிமலைச் சாம்பல் படர்ந்துள்ளதால் பாதுகாப்பு கருதி வான்வெளி
மூடப்பட்டுள்ளதாக விமான நிலைய நிர்வாகம் சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில்
தெரிவித்துள்ளது.</p><p>

இதன்காரணமாக கெடானியா விமான நிலையத்திற்கு வரும் அனைத்து விமானங்களின்
வருகையும் உள்ளூர் நேரப்படி நண்பகல் 12.00 மணி வரை இடைநிறுத்தி
வைக்கப்பட்டுள்ளதுடன், ஏற்கனவே விமான நிலையத்தில் உள்ள விமானங்களின்
புறப்பாடுகள் வழமை போல் இடம்பெற்று வருகின்றன.</p><p></p><h2>புதிய கட்டுப்பாடுகள்</h2><p>

ஐரோப்பாவின் உயரமான மற்றும் செயலில் உள்ள எட்னா எரிமலை தொடர்ந்து சீற்றமடைந்து
வருவதால், கெடானியா பகுதியில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/56bbf871-e1a4-4f15-b3bb-dcefedebaf42/26-6a774971a72e2.webp' /></p><p>

எரிமலையின் லாவா குழம்பைப் பார்வையிட சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் செல்லும்
வழிகாட்டிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-08T15:21:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[அல்லைப்பிட்டிச் சூட்டுச் சம்பவம் : புலனாய்வுப் பிரிவினர் அளித்த அறிக்கை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/jaffna-allaipiti-gun-shooting-issue-1786200539"></link>
            <id>https://ibctamil.com/article/jaffna-allaipiti-gun-shooting-issue-1786200539</id>
            <summary type="text">&amp;nbsp;யாழ்ப்பாணம் – அல்லைப் பிட்டியில் ஊர்காவற்றுறை காவல்துறையினர் மேற்கொண்ட துப்பாக்கிச்
சூட்டுக்கு இலக்காகி 17 வயதான சிறுவன் உயிரிழந்த வழக்கில், 15...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;யாழ்ப்பாணம் – அல்லைப் பிட்டியில் ஊர்காவற்றுறை காவல்துறையினர் மேற்கொண்ட துப்பாக்கிச்
சூட்டுக்கு இலக்காகி 17 வயதான சிறுவன் உயிரிழந்த வழக்கில், 15 பேரிடம் ஆரம்ப
விசாரணை நடத்த வேண்டும் என மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவு அறிக்கை
வழங்கியுள்ளது.
</p><p>
ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தில் நீதிபதி அனிபாரஜீப் முன்னிலையில் நேற்று
இந்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டது. இதன்போது பாதிக்கப்பட்டவர்கள்
சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் இந்த விசாரணையை விரைவில் முன்னெடுக்க
வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தனர்.</p><h2>நீதிமன்றம் விடுத்த உத்தரவு</h2><p>இதனைக் கருத்தில் எடுத்த நீதிமன்றம் விரைவான விசாரணைக்கான கட்டளைகளைப்
பிறப்பித்தது. அதன்படி, இரண்டு பொதுமக்கள், ஊர்காவற்றுறை காவல்துறையினர், யாழ்.
குற்ற விசாரணைப் பிரிவினர், சட்ட மருத்துவ அதிகாரி உள்ளிட்ட 15 பேரை
நீதிமன்றத்துக்கு செப்ரெம்பர் 4ஆம் திகதி அழைத்து அவர்களிடம் ஆரம்ப விசாரணை
நடத்த வேண்டும் என்றும், இதற்கான அழைப்புக் கட்டளையை உடனடியாக அனுப்புமாறும்
நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8ae33ab4-8344-47cb-ac4c-9a2229dab92c/26-6a77493c4f296.webp' /></p><p>முன்பதாக, வேலணை அல்லைப்பிட்டிப் பகுதியில் கடந்த பெப்ரவரி மாதம் 10ஆம் திகதி
அதிகாலை பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்ட காவல்துறையினர், 1.15 மணியளவில் யாழ்ப்பாணம்
அல்லைப்பிட்டிப் பகுதியில் ஹைஏஸ் ஒன்றை இடைமறித்திருந்தனர். எனினும், அந்த
ஹைஏஸ் வாகனம் காவல்துறையினரின் உத்தரவுக்குக் கட்டுப்படாமல் வேகமாகப் பயணித்துள்ளது.</p><p>இதைத் தொடர்ந்து காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் வாகனத்தைச்
செலுத்திச் சென்ற 17 வயதான சிறுவன் உயிரிழந்திருந்தார் என்பது
குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-08T15:20:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[தவெக அரசை யார் இயக்குகிறார்கள்? திமுக எம்.பி கனிமொழி கேள்வி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/kanimozhi-questions-who-control-tvk-govt-1786200853"></link>
            <id>https://ibctamilnadu.com/article/kanimozhi-questions-who-control-tvk-govt-1786200853</id>
            <summary type="text">தவெக அரசை யார் இயக்குகிறார்கள் என திமுக எம்.பி கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழ்நாடு எம்.பிக்கள் கூட்டம்

தொகுதி மறுவரையறைச் சட்டத் திருத்தம்...</summary>
            <content type="html"><![CDATA[<p>தவெக அரசை யார் இயக்குகிறார்கள் என திமுக எம்.பி கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார்.
</p><h3>
தமிழ்நாடு எம்.பிக்கள் கூட்டம்
</h3><p>
தொகுதி மறுவரையறைச் சட்டத் திருத்தம் குறித்து கலந்தாலோசிக்க தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தலைமையில், தமிழ்நாடு எம்.பிக்கள் கூட்டம் சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/799f4cf9-1f53-4359-a212-46d8a4a9dc6c/26-6a77431722196.webp' /></p><p>

இதில், திமுக, அதிமுக, பாமக, தேமுதிக ஆகிய கட்சிகளை சேர்ந்த 37 எம்.பிக்கள் கூட்டத்தை புறக்கணித்தனர்.

காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகளை சேர்ந்த 19 எம்.பிக்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.</p><p>

இந்த கூட்டத்தில், தொகுதி மறுவரையறை மசோதாவை மத்திய அரசு கைவிட வேண்டும். மக்களவையில் 543 என்ற எண்ணிக்கையும், தமிழகத்துக்கான 39 என்ற எண்ணிக்கையும் தொடர வேண்டும் என்பது தொடர்பாக ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது" என திருமாவளவன் எம்பி தெரிவித்துள்ளார்.</p><h3> 

கனிமொழி கேள்வி</h3><p> 

இந்நிலையில் செய்தியாளர்களை பேசிய திமுக எம்பி கனிமொழி, "39 எம்பிக்கள் புறக்கணித்துள்ள சூழலில், முதல்வர் விஜய் தலைமையில் எம்.பிக்கள் கூட்டம் நடைபெற்றுள்ளது. தமிழ்நாடு அரசின் சார்பில் தற்போது தொகுதி மறுவரையறைக்கு எதிராக மீண்டும் ஒரு கூட்டத்தை நடத்த வேண்டிய அடிப்படைத் தேவை என்ன இருக்கிறது?&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/90805514-7289-44ad-83a3-faf1b4ab3527/26-6a774317cb4e2.webp' /></p><p>

கடந்த 2025 ஆம் ஆண்டு முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், த.வெ.க சார்பில் அதன் பொதுச்செயலாளர் அமைச்சர் ஆனந்த் கலந்து கொண்டு, தீர்மானத்தை ஆதரித்து கையெழுத்திட்டுள்ளார். அந்த தீர்மானம் சட்டமன்றத்தில் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டுள்ளது.</p><p>

அப்படி இருக்கும்போது, பெரும்பான்மை எம்.பி.க்கள் இல்லாத நிலையில், இந்தக் கூட்டத்தை தவெக அரசு ஏன் கூட்டுகிறது என்பதை விளக்க வேண்டும்.</p><p>

இதற்கு முன்னதாக தொகுதி மறுவரையறை மசோதா கொண்டு வரப்பட்டபோது 5 மாநில முதல்வர்களை சென்னைக்கு அழைத்து ஆலோசனை கூட்டம் நடத்தினோம்</p><p>. தி.மு.க எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் அந்த மசோதாவுக்கு எதிராக வாக்களித்தோம். 

இதன் மூலம், பாஜக ஆட்சியில் முதன்முறையாக ஒரு மசோதா தோற்கடிக்கப்பட்டதற்கு திமுகவினரின் தொடர் முன்னெடுப்புகளே காரணமாக அமைந்தன.
</p><p>
ஒன்றிய அரசு இதுவரை தொகுதி மறுவரையறையை இந்த கூட்டத்தொடரில் கொண்டுவரப் போவதாக எந்த தகவலும் தெரிவிக்கவில்லை. புதிய மசோதாவில் என்னென்ன மாற்றங்கள் இடம்பெறும் என்பது குறித்தும் எந்த தகவலும் இல்லை. 

அப்படி இருக்கும்போது, எந்த அடிப்படையில் இந்த மசோதா குறித்து அனைத்துக்கட்சி கூட்டம் கூட்டப்படுகிறது? </p><p>இந்தக் கூட்டத்தின் பின்னணியில் யார் இருக்கிறார்கள்? 

கூட்டத்திற்கு அழைப்பு விடுக்க கட்சியின் தலைமைக்கு தான் கடிதம் எழுதுவார்கள். ஆனால், தலைமை செயலாளர் எம்பிக்களுக்கு தனியாக கடிதம் எழுதியுள்ளார். </p><p>தலைமை செயலாளர் யாருக்கு பணியாற்றுகிறார்? அரசாங்கத்திற்காக இல்லை கழகத்திற்காக? 

மேகதாது, விவசாயி பிரச்சினைகள் உச்சத்தில் உள்ளபோது அதனை திசை திருப்ப வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக இந்த கூட்டம் நடத்தப்பட்டுள்ளது.
</p><p>
எங்களின் நோக்கம் தொகுதி மறுவரையறையை முற்றிலும் எதிர்ப்பது இல்லை. மக்கள் தொகை அடிப்படையில் கணக்கீடு செய்யக்கூடாது என்பதை வலியுறுத்துகிறோம்.

அப்படி செய்யப்பட்டால் தமிழ்நாட்டிற்கான எண்ணிக்கை குறையும். தமிழ்நாட்டிற்கான எண்ணிக்கை குறைக்கப்படாமல் நியாயமான முறையில் தொகுதி மறுவரையறை நடத்தப்பட வேண்டும்" என தெரிவித்துள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-08T14:55:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஸ்லீவ்லெஸ் ஆடையில் நடிகை பூனம் பாஜ்வா..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/poonam-bajwa-recent-sleeveless-photos-post-1786199130"></link>
            <id>https://viduppu.com/article/poonam-bajwa-recent-sleeveless-photos-post-1786199130</id>
            <summary type="text">பூனம் பாஜ்வாமும்பையில் பிறந்து தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகி பிரபலமானவர் தான் நடிகை பூனம் பாஜ்வா. தெலுங்கு, கன்னட மொழிகளில் நடித்த பூனம், தமிழில் சேவ...</summary>
            <content type="html"><![CDATA[<h2>பூனம் பாஜ்வா</h2><p>மும்பையில் பிறந்து தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகி பிரபலமானவர் தான் நடிகை பூனம் பாஜ்வா. தெலுங்கு, கன்னட மொழிகளில் நடித்த பூனம், தமிழில் சேவல், தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம், துரோகி, தம்பிகோட்டை போன்ற படங்களில் நடித்தார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/28842883-fce5-49b2-a6eb-5fa078adde26/26-6a773c600d9c4.webp' />]</p><p>அதன்பின் ஆள் அடையாளம் தெரியாமல் மாறிய பூனம், ஆம்பள படத்தில் குணச்சித்திர ரோலில் நடித்தார். அதன்பின் ரோமியோ ஜூலியட், அரண்மனை 2, முத்தின கத்திரிக்காய், குப்பத்து ராஜா, குருமூர்த்தி உள்ளிட்ட படங்களில் நடித்தார். </p><p>

இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் பூனம் பாஜ்வா, சப்ஸ்கிரிப்ஷன் மூலம் சம்பாதித்து வருகிறார். தற்போது ஸ்லீவ்லெஸான ஷார்ட் ஆடையணிந்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-08-08T14:45:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[தந்தையை இழந்த லியோனல் மெஸ்ஸி..ரசிகர்கள் இரங்கல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/lionel-messi-father-jorge-died-at-68-1786199639"></link>
            <id>https://news.lankasri.com/article/lionel-messi-father-jorge-died-at-68-1786199639</id>
            <summary type="text">பிரபல கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸியின் தந்தை ஜோர்ஜ் தனது 68 வயதில் காலமானார்.

அர்ஜென்டினா கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸியின் தந்தையான ஜோர்ஜ் மெஸ்...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரபல கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸியின் தந்தை ஜோர்ஜ் தனது 68 வயதில் காலமானார்.
</p><p>
அர்ஜென்டினா கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸியின் தந்தையான ஜோர்ஜ் மெஸ்ஸி உடல்நலப் பிரச்சனையால் காலமானார்.</p><h2>

லியோனல் மெஸ்ஸி</h2><p>உலகளவில் கால்பந்து ஜாம்பவானாக விளங்குபவர் லியோனல் மெஸ்ஸி (Lionel Messi). பிபா 2026 உலகக்கிண்ணத் தொடரில் அர்ஜென்டினாவை இறுதிப்போட்டி வரை அழைத்துச் சென்றார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d2b1e63d-9b54-4074-ad26-b33750ca24d9/26-6a773e5ac76c3.webp' />&nbsp;</p><p></p><p>
தற்போது மெஸ்ஸி தனது இன்டர் மியாமி கிளப் அணிக்காக லீக்ஸ் கிண்ணத் தொடரில் விளையாடி வருகிறார்.
</p><p>
இந்த நிலையில், மெஸ்ஸியின் தந்தையான ஜோர்ஜ் மெஸ்ஸி 68 வயதில் காலமானார். இந்த செய்தியை அர்ஜென்டினாவின் உள்ளூர் ஊடகங்கள் வெளியிட்டன.
</p><p>
பின்னர் மெஸ்ஸி விளையாடிய அணியான நியூவெல்ஸ் ஓல்ட் பாய்ஸ் அறிக்கை ஒன்றில் உறுதிப்படுத்தியுள்ளது. </p><p>

ஜோர்ஜ் மெஸ்ஸி 7ஆம் திகதி அன்று, குடும்ப இல்லத்திற்கு அருகிலுள்ள ரொசாரியோவில் உள்ள ஒரு மருத்துவமனையில் அவர் காலமானதாக கூறப்படுகிறது.
</p><p>
சமீபத்திய மாதங்களில் மெஸ்ஸியின் தந்தை உறுதிப்படுத்தப்படாத உடல்நலப் பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருந்தார். </p><p>

இதன் காரணமாக, அவர் தனது சொந்த நாட்டில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவசரமாக அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக அவரின் குடும்பத்தினர் தெரிவித்த இரண்டு மாதங்களுக்குப் பிறகு இந்த நிகழ்வு ஏற்பட்டுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/df680724-fa9f-4f2e-bdfa-4b6c5903fa5e/26-6a773e5b7e1d8.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-08T14:31:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[மேஷம் முதல் கன்னி வரை.., செய்யக்கூடாத விடயங்கள் என்னென்ன?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/mesham-to-kanni-rasi-palan-in-tamil-1786192127"></link>
            <id>https://news.lankasri.com/article/mesham-to-kanni-rasi-palan-in-tamil-1786192127</id>
            <summary type="text">ஜோதிடத்தில் ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு குணாதிசயங்கள் இருக்கும். 

அவர்களின் ராசிக்குரிய அதிர்ஷ்ட நிறம், அதிர்ஷ்ட எண், அதிர்ஷ்ட கிழமை என தனித்தனியாக ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜோதிடத்தில் ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு குணாதிசயங்கள் இருக்கும். </p><p>

அவர்களின் ராசிக்குரிய அதிர்ஷ்ட நிறம், அதிர்ஷ்ட எண், அதிர்ஷ்ட கிழமை என தனித்தனியாக இருக்கும்.</p><p>

அதேபோல், ஒவ்வொரு ராசிக்கும் நல்ல குணங்கள் என்றும் சில இருக்கும், எதிர்மறை குணங்கள் என்றும் சில இருக்கும்.</p><p> 

இந்நிலையில், 12 ராசிக்காரர்களும் தங்கள் இயல்புக்கு மாறாகத் தவிர்க்க வேண்டிய மற்றும் செய்யக்கூடாத சில செயல்கள் உள்ளன.</p><p> 

ஒவ்வொரு ராசியும் தனது பலவீனமான குணங்களைத் தவிர்க்க வேண்டும். </p><p>

அந்தவகையில், மேஷம் முதல் கன்னி வரை உள்ள ராசிகள் செய்யக்கூடாத சில விடயங்களை இராம்ஜி சுவாமிகள் இக்காணொளியில் பகிர்ந்துள்ளார்.
</p><h2>
மேஷம்</h2><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/MIgPijL2nTI" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><h2>ரிஷபம்</h2><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/EKNbnT-i4Cw" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><h2>மிதுனம்</h2><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/p_erJ9akPwI" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><h2>கடகம்</h2><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/TChUhD8alaI" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><h2>சிம்மம்</h2><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/qIbv766UlTg" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><h2>கன்னி&nbsp;</h2><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/-vXOtXWQgug" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-08T14:30:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[மகசின் சிறை கைதிகளுக்கு போதைப்பொருள் வழங்க முற்பட்ட இருவர் சிக்கினர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/two-arrested-deliver-drugs-inmates-magazine-prison-1786198620"></link>
            <id>https://ibctamil.com/article/two-arrested-deliver-drugs-inmates-magazine-prison-1786198620</id>
            <summary type="text">மகசின் சிறையில் கைதிகளுக்கு போதைப்பொருள் வழங்க முயன்ற இரண்டு சந்தேக நபர்களை காவல்துறை கைது செய்துள்ளது.

பேஸ்லைன் சாலை மகசின் சிறையின் பக்கவாட்டுச் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>மகசின் சிறையில் கைதிகளுக்கு போதைப்பொருள் வழங்க முயன்ற இரண்டு சந்தேக நபர்களை காவல்துறை கைது செய்துள்ளது.
</p><p>
பேஸ்லைன் சாலை மகசின் சிறையின் பக்கவாட்டுச் சுவருக்கு அருகே இன்று பிற்பகல் (08) நடத்தப்பட்ட சோதனையின் போது அந்த இரு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டனர்.
</p><p>
</p><h2>போதைப்பொருளுடன் கைது</h2><p>அவர்கள் அந்த இடத்தில் சிறைக்குள் 02 பொதிகளை வீச முயன்றதையடுத்து, அந்த இரு சந்தேக நபர்களையும் காவல்துறை கைது செய்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0b61fc70-031e-4dde-ba21-7ea966bfc64e/26-6a773d43b4b14.webp' /></p><p>சந்தேக நபர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட 02 பொதிகளை ஆய்வு செய்தபோது, ​​22 கிராம் மற்றும் 250 மில்லிகிராம் 'ஐஸ்' என்ற போதைப்பொருள், 02 மில்லிகிராம் 'ஆஷ்' என்ற போதைப்பொருள், 02 தொலைபேசி சாஜர்கள், 02 ஜோடி காதணிகள், 10 லைட்டர்கள் மற்றும் 02 சிறிய கைபேசிகள் ஆகியவையும் காவல்துறையின் காவலில் எடுக்கப்பட்டன.</p><p></p><h2>நீதிமன்றில் முன்னிலை</h2><p>
</p><p>
கைது செய்யப்பட்ட இரு சந்தேக நபர்களும் 29 வயதுடையவர்கள் என்றும், கொம்பா 14 பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/acc52064-46b5-4cfa-9279-d82f8ff7e629/26-6a773d4465c98.webp' /></p><p>

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் நாளை (09) மாளிககந்த நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட உள்ளனர். மேலும், பொள்ள காவல்துறையினர் இதுகுறித்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-08T14:29:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாஷ், நயன்தாரா நடிப்பில் &quot;டாக்சிக்&quot; தமிழ் ட்ரெய்லர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/yash-toxic-tamil-trailer-1786198446"></link>
            <id>https://cineulagam.com/article/yash-toxic-tamil-trailer-1786198446</id>
            <summary type="text">கேஜிஎப் பட புகழ் யாஷ் நடித்து இருக்கும் டாக்சிக் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி இருக்கிறது.

இதில் நயன்தாரா, கியாரா அத்வானி, ருக்மிணி வசந்த் உட்பட பலர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கேஜிஎப் பட புகழ் யாஷ் நடித்து இருக்கும் டாக்சிக் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி இருக்கிறது.

இதில் நயன்தாரா, கியாரா அத்வானி, ருக்மிணி வசந்த் உட்பட பலர் நடித்து இருக்கின்றனர். </p><p> 

 மிரட்டலான ட்ரெய்லர் தற்போது இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது. 4 நிமிடங்களுக்கு மேல் இருக்கும் ட்ரெய்லர் எப்படி இருக்கிறது என பாருங்க.</p><p><br></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/f5M1d7r2UNQ" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-08-08T14:14:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நோயினால் அவதியுற்ற குழந்தை: எலிசபெத் மகாராணியின் உறவினர் எடுத்த பயங்கர முடிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/queen-elizabeth-cousin-kill-daughter-dies-aged-89-1786193181"></link>
            <id>https://news.lankasri.com/article/queen-elizabeth-cousin-kill-daughter-dies-aged-89-1786193181</id>
            <summary type="text">தன் குழந்தை பயங்கர நோயால் அவதியுற்றுவந்ததை காண சகியாமல், குழந்தையைக் கொன்றுள்ளார் எலிசபெத் ராணியாரின் உறவினர் ஒருவர்.


மறைந்த பிரித்தானிய மகாராணி ...</summary>
            <content type="html"><![CDATA[<p>தன் குழந்தை பயங்கர நோயால் அவதியுற்றுவந்ததை காண சகியாமல், குழந்தையைக் கொன்றுள்ளார் எலிசபெத் ராணியாரின் உறவினர் ஒருவர்.
</p><p>

மறைந்த பிரித்தானிய மகாராணி எலிசபெத்தின் சகோதரி முறை உறவினரான பெண்ணொருவர், உடல் நலம் பாதிக்கப்பட்டு அவதியுற்றுவந்த தன் குழந்தையைக் கொன்றதைக் குறித்த செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.
</p><h3>
நோயினால் அவதியுற்ற குழந்தை</h3><p>

எலிசபெத் மகாராணியின் சகோதரி உறவு முறையினரான எலிசபெத் ஆலிஸ் வைஸ் (89), இம்மாதம், அதாவது, ஆகத்து மாதம் 2ஆம் திகதி மரணமடைந்ததாக செய்தி வெளியாகியுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cd4af423-2737-4a2a-bf55-14365c611d6d/26-6a77251e71230.webp' /></p><p>

ஆலிஸ் வைஸைக் குறித்து நினைவுகூரும்போது, அவரது வாழ்வில் மறக்கமுடியாத ஒரு நிகழ்வாக அவர் தனது குழந்தையைக் கொன்ற விடயம் நினைவுகூரப்படுவதை மறுப்பதற்கில்லை.</p><p>

ஆலிஸ் வைஸுக்கு 36 வயது இருக்கும்போது, அவர், எம்மா சார்லட் என்னும் பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார்.</p><p>

நீண்ட காலம் காத்திருந்து, கடவுளிடம் பிரார்த்தனை செய்து பெற்ற தன் மகள் மீது உயிரையே வைத்திருந்தார் ஆலிஸ் வைஸ்.
</p><p>
துரதிர்ஷ்டவசமாக, பிறந்து ஒன்பதே நாட்களில் சார்லட்டை வைரஸ் காய்ச்சல் தாக்கியது.

இருபத்து நான்கே மணி நேரத்தில் கோமாவுக்குச் சென்றாள் சார்லட்.</p><p> வைரஸ் பதிப்பு மூளையை எட்ட, மருத்துவமவமனையில் அனுமதிக்கப்பட்ட தன் குழந்தையை விட்டு அக்கம் பக்கம் நகரவில்லை ஆலிஸ் வைஸ்.

வைரஸ் தொற்று காரணமாக, குழந்தையின் மூளை அனுப்பும் தகவல்கள் அதன் கை கால்களை எட்டவில்லை.&nbsp;</p><p></p><p>

அவளது வயிறும் தசைகளும் சரியாக வேலை செய்யாததால், குழந்தைக்கு மிகமெதுவாகவே உணவு ஊட்ட முடிந்தது. இல்லையென்றால் குழந்தை வாந்தியெடுக்கத் துவங்கிவிடுவாள்.
</p><p>
வெளிநாடுகளுக்கெல்லாம் சென்று தன் குழந்தையை எப்படியாவது காப்பாற்றிவிட ஆலிஸ் வைஸ் எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை.
</p><p>
சில மாதங்களில் வைரஸ் தொற்று குழந்தையின் மூளையின் முக்கால் பாகத்தை நாசம் செய்துவிட்டது.
</p><p>
அப்போது ஒரு முடிவெடுத்தார் ஆலிஸ் வைஸ். ஆம், இப்படி தன் குழந்தை அவஸ்தைப்படுவதைக் காண சகிக்காமல், குழந்தையைக் கொன்றுவிட முடிவு செய்தார் அவர்.
</p><p>
1974ஆம் ஆண்டு, ஜூன் மாதம் 3ஆம் திகதி, தன் மகள் தூக்கத்தில், அமைதியாக, வலியில்லாமல் இந்த உலகத்தை விட்டுக் கடந்து செல்லட்டும் என, அவளுக்கு அவளுக்கு மீறி தூக்கமாத்திரைகளைக் கொடுத்தார் ஆலிஸ் வைஸ்.
</p><p>
சில மாதங்களுக்குப் பின் நீதிமன்றத்தில் ஆஜராகி, தான் தன் குழந்தையைக் கொன்றுவிட்டதாக ஒப்புக்கொண்டார் ஆலிஸ் வைஸ்.
</p><p>
அவர் குழந்தையைக் காப்பாற்ற எடுத்த முயற்சிகளை அனைவரும் அறிந்திருந்ததால், அவர் மீது பலரும் இரக்கப்பட்டார்கள்.
</p><p>
நீதிபதியும், இது வழக்கத்துக்கு மாறான வழக்குகளிலேயே மிகவும் அசாதாரண வழக்கு என்று கூறி, ஆலிஸ் வைஸுக்கு ஓராண்டு சிறைத்தண்டனை வழங்கினார். ஆனால், அவர் சிறை செல்லவேண்டியதில்லை என்றும், ஓராண்டுக்கு அதிகாரிகளின் கண்காணிப்பின் கீழ் இருக்கவேண்டும் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டது.
</p><p>
ஆலிஸ் வைஸ், தனது 89ஆவது வயதில், யார்க்‌ஷையரிலுள்ள ஒரு மருத்துவமனையில், இம்மாதம் 2ஆம் திகதி மரணமடைந்துள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-08T14:06:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹோர்முஸ் நீரிணை திறப்பு : அமெரிக்காவிற்கு ஈரான் விதிக்கும் நிபந்தனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/iran-s-condition-to-the-us-open-strait-of-hormuz-1786196300"></link>
            <id>https://ibctamil.com/article/iran-s-condition-to-the-us-open-strait-of-hormuz-1786196300</id>
            <summary type="text">ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பது, ஓமானுடன் தற்போதுள்ள ஒப்பந்தத்தைச் சார்ந்தது அல்ல என்றும், மாறாக அமெரிக்கா &quot;ஈரானின் நிபந்தனைகளை முழுமையாக ஏற்றுக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பது, ஓமானுடன் தற்போதுள்ள ஒப்பந்தத்தைச் சார்ந்தது அல்ல என்றும், மாறாக அமெரிக்கா "ஈரானின் நிபந்தனைகளை முழுமையாக ஏற்றுக்கொள்வதையே" சார்ந்துள்ளது என்றும் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை (IRGC) தெரிவித்துள்ளது.</p><p>

ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் (IRGC) செய்தித் தொடர்பாளர் சர்தார் மொஹெப்பி இவ்வாறு கூறியதாக ஈரானின் அரசு செய்தி நிறுவனமான தஸ்னிம் மேற்கோள் காட்டியுள்ளது.</p><h2>ஹோர்முஸ் நீரிணை புவியியல் மற்றும் மூலோபாய சக்தி</h2><p>"எங்களைப் பொறுத்தவரை, ஹோர்முஸ் நீரிணை என்பது ஒரு பொருளாதார நீர்வழி மட்டுமல்ல, அது புவியியல் மற்றும் மூலோபாய சக்தியின் ஒரு அங்கமும் ஆகும்," என்று மொஹெப்பி தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fe4e685a-075e-4ecb-bfbe-f4d718144af2/26-6a7736aa4ea53.webp' /></p><p>
</p><p>
மேலும், "அமெரிக்கா ஈரானின் நிபந்தனைகளை முழுமையாக ஏற்றுக்கொண்டு, பிராந்தியப் பேச்சுவார்த்தைகளில் தலையிடுவதை நிறுத்தினாலேயே" இந்த நீர்வழி திறக்கப்படும் என்றும் அவர் கூறியதாக அந்த ஊடகம் தெரிவித்தது.</p><p>

"ஈரானின் நிபந்தனைகளை அமெரிக்கா ஏற்கும் பட்சத்தில், ஹோர்முஸ் நீரிணை நிச்சயமாகத் திறக்கப்படும்," என்று அவர் மேலும் கூறினார்.&nbsp; &nbsp;&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-08T14:01:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் குழப்பம் விளைவிக்க தெற்கிலிருந்து குழுவொன்று வருகை ; வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/southern-group-heads-to-jaffna-to-cause-unrest-1786194627"></link>
            <id>https://jvpnews.com/article/southern-group-heads-to-jaffna-to-cause-unrest-1786194627</id>
            <summary type="text">திஸ்ஸ விகாரைக்காக ஆக்கிரமிக்கப்பட்ட பவானி வீதியை வைத்து தெற்கில் குழப்பங்களை ஏற்படுத்தச் சதி இடம்பெற்று வருவதாகவும், இதற்காக குழுவொன்று யாழ்ப்பாணம் அழ...</summary>
            <content type="html"><![CDATA[<p>திஸ்ஸ விகாரைக்காக ஆக்கிரமிக்கப்பட்ட பவானி வீதியை வைத்து தெற்கில் குழப்பங்களை ஏற்படுத்தச் சதி இடம்பெற்று வருவதாகவும், இதற்காக குழுவொன்று யாழ்ப்பாணம் அழைத்து நோக்கி வரப்படுகிறது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
</p><p>

பவானி வீதி விடுவிப்புக்குத் தடைபோட முடியாது என்று நீதிமன்றம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1ca10411-8518-4bb7-8937-bdcb46c2ef02/26-6a772ac53b1a0.webp' /></p><h2>கடும் விசனம்</h2><p>&nbsp;இதையடுத்தே, இந்தத் தீர்ப்பை அடிப்படையாக வைத்து, வாட்ஸ்அப் குழுக்கள் உருவாக்கப்பட்டு பிழையான தகவல்களைக் கூறி தெற்கில் இனவாதம் பரப்பப்படுகின்றது எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
</p><p>
இவ்வாறாக போலித் தகவல்களைப் பரப்பி ஆட்கள் திரட்டப்பட்டுள்ள நிலையில், போராட்டம் நடத்துவதற்காக அவர்கள் தற்போது யாழ்ப்பாணம் நோக்கி அழைத்து வரப்படுகின்றனர்.</p><p></p><p>

திஸ்ஸ விகாரைக்காக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகளையும், வீதியையும் விடுவித்தால் கலவரங்களும் குழப்பங்களும் ஏற்படும் என்று நீதிமன்றத்தை நாடும் பொலிஸார், இத்தகைய அப்பட்டமான குழப்பச் செயல்கள் தொடர்பில் அமைதியாக உள்ளமை பல தரப்பினரிடமும் கடும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-08T14:00:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு: செப்டம்பர் 1 முதல் கோயில்களில் மொபைலுக்கு தடை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/mobile-phones-banned-in-tn-temples-from-september-1786196030"></link>
            <id>https://ibctamilnadu.com/article/mobile-phones-banned-in-tn-temples-from-september-1786196030</id>
            <summary type="text">கோயில்களில் ரீல்ஸ் மற்றும் புகைப்படங்கள் எடுப்பதைத் தடுக்கும் வகையில், இந்து சமய அறநிலையத்துறை புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.

அதன்படி, இந்து ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கோயில்களில் ரீல்ஸ் மற்றும் புகைப்படங்கள் எடுப்பதைத் தடுக்கும் வகையில், இந்து சமய அறநிலையத்துறை புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.
</p><p>
அதன்படி, இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள முதுநிலை திருக்கோயில்களில் வரும் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் மொபைல் போன்களை எடுத்துச் செல்ல முழுமையாகத் தடை விதிக்கப்பட உள்ளது. </p><p>கோயில் வளாகத்தில் ரீல்ஸ் எடுப்பது, வீடியோ பதிவு செய்வது மற்றும் புகைப்படம் எடுப்பதைத் தடுப்பதே இதன் முக்கிய நோக்கமாகக் கூறப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d7ec5fed-c954-4959-8073-d813e28d52d4/26-6a77327c482ba.webp' /></p><h2>ரீல்ஸ் மோகத்திற்கு முற்றுப்புள்ளி</h2><p>குறிப்பாக, கோயில்களில் உள்ள தெய்வச் சிலைகள் மற்றும் கருவறைகளை புகைப்படம் அல்லது வீடியோ எடுப்பதைத் தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p>
மேலும், நடிகர், நடிகைகள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் கோயிலுக்கு வருகை தரும் விவரங்களை ஒரு நாள் முன்பாக ஆணையருக்கு கோயில் நிர்வாகம் தெரிவிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. </p><p>இவர்களின் வருகையின்போது கோயில் வளாகத்தில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்க அனுமதி இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

மொபைல் போன்களை பாதுகாப்பாக வைப்பதற்கான மொபைல் பாதுகாப்பு வசதிகளை அடுத்த 20 நாட்களுக்குள் முதுநிலை கோயில்களில் ஏற்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
</p><p>
கோயில்களின் புனிதத்தன்மையைப் பாதுகாப்பதுடன், அனுமதியின்றி புகைப்படம், வீடியோ மற்றும் ரீல்ஸ் எடுப்பதை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-08T13:45:05+00:00</updated>
        </entry>
    </feed>
