<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-07-30T20:29:06+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[என்னை சித்திரவதை செய்து கொல்ல வேண்டும் ; பல இலட்சம் கொடுத்து விபரீத முடிவை தேடிய ஆசிரியை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/teacher-pays-huge-sum-in-shocking-incident-1785443266"></link>
            <id>https://jvpnews.com/article/teacher-pays-huge-sum-in-shocking-incident-1785443266</id>
            <summary type="text">இங்கிலாந்தின் போர்ட்ஸ்மவுத் பகுதியைச் சேர்ந்த 32 வயதான பெண், அமெரிக்க நபருக்கு 4,000 டாலர் பணம் கொடுத்து விபரீத முடிவை தேடிக்கொண்ட திடுக்கிடும் தகவல் ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">இங்கிலாந்தின் போர்ட்ஸ்மவுத் பகுதியைச் சேர்ந்த 32 வயதான பெண், அமெரிக்க நபருக்கு 4,000 டாலர் பணம் கொடுத்து விபரீத முடிவை தேடிக்கொண்ட திடுக்கிடும் தகவல் தற்போது நீதிமன்ற விசாரணையில் அதிகாரப்பூர்வமாக வெளிவந்துள்ளது.
</p><p style="text-align: justify; ">

இங்கிலாந்தின் போர்ட்ஸ்மவுத் பகுதியைச் சேர்ந்த 32 வயதான இசை ஆசிரியை, கடுமையான மன உளைச்சல் காரணமாக விசித்திரமான இணையதளம் ஒன்றில் அமெரிக்காவைச் சேர்ந்த நபருடன் பழகி வந்துள்ளார். அந்த பழக்கம் ஒரு விபரீதமான முடிவை நோக்கி தள்ளியுள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e89c278b-eba7-4b61-8421-3e08422650f8/26-6a6bb3c40190c.webp' /></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">

விசாரணையில் வெளிவந்துள்ள நீதிமன்ற ஆவணங்களின்படி, தன்னை கொடூரமான முறையில் சித்திரவதை செய்து கொலை செய்ய வேண்டும் என்பதற்காக, சோனியா அந்த அமெரிக்க நபருக்கு 4,000 டாலர்களை கொடுத்துள்ளார்.</p><p style="text-align: justify; "> 

அமெரிக்காவில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் வைத்து அந்த நபர் குறித்த ஆசிரியை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளார். </p><p style="text-align: justify; ">அப்போது ஆசிரியைக்கு தனது தவறு புரிய வந்துள்ளது. உடனே, தனது தோழி ஒருவருக்கு, ரகசியமாக குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார். </p><p style="text-align: justify; ">

அடுத்த சில நாட்களில் ஆசிரியை இங்கிலாந்து திரும்பாததால், அவரது குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். </p><p style="text-align: justify; ">அப்போது புளோரிடாவின் மேரியன் கவுண்டி காட்டுப் பகுதியில், 4 முறை கத்தியால் குத்தப்பட்டு, ஆழமற்ற ஒரு குழியில் கொடூரமான முறையில் புதைக்கப்பட்டுக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
</p><p style="text-align: justify; ">

இதனை தொடர்ந்து, சோனியாவின் வங்கி அட்டைகளை பயன்படுத்தி பணம் எடுக்க முயன்ற 53 வயதான சந்தேகநபரை அமெரிக்க பொலிஸார் கைது செய்துள்ளனர்.</p><p style="text-align: justify; "> அவர் மீது கடத்தல், பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்கில் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
</p><p style="text-align: justify; ">
இந்த வினோதமான கொலை வழக்கு தற்போது உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-30T20:27:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[உக்ரைன் பகுதிகளை தன்வசப்படுத்தி ரஷ்யா வெளியிட்ட அதிரடி அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/russia-capture-4-settlements-in-ukraine-1785440198"></link>
            <id>https://ibctamil.com/article/russia-capture-4-settlements-in-ukraine-1785440198</id>
            <summary type="text">
கிழக்கு மற்றும் வடகிழக்கு உக்ரேனில் உள்ள நான்கு குடியிருப்புப் பகுதிகளைத் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு அறிவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>
கிழக்கு மற்றும் வடகிழக்கு உக்ரேனில் உள்ள நான்கு குடியிருப்புப் பகுதிகளைத் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.</p><p>

உக்ரேனின் டொனெட்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள கிராஸ்நோயார்ஸ்கோயே என்ற குடியிருப்புப் பகுதியை ரஷ்யாவின் சென்டர் படைப்பிரிவு கைப்பற்றியுள்ளதாக ரஷ்ய அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
</p><p>
அத்துடன், நோர்த் படைப்பிரிவினர் சுமி பிராந்தியத்தில் உள்ள மாலா ஸ்லோபோட்கா மற்றும் மொக்ரிட்சியாவ் ஆகிய பகுதிகளையும், கார்கிவ் பிராந்தியத்தில் உள்ள யுர்சென்கோவே பகுதியையும் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>ரஷ்ய படைகள் தீவிர தாக்குதல்</h2><p>
</p><p>
எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் ஒரு தடுப்பு மண்டலத்தை உருவாக்குவதாக ரஷ்யா தெரிவித்து வரும் நிலையில், வடகிழக்கு சுமி பிராந்தியத்தில் தங்களது செயல்பாடுகளை விரிவுபடுத்திக் கொண்டே கிழக்கு உக்ரேன் முழுவதிலும் ரஷ்ய படைகள் தீவிர தாக்குதல்களைத் தொடர்ந்து முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4d0da72d-f0aa-449f-a4b1-26b792b96000/26-6a6bac1de1916.webp' /></p><p><i>Image Credit: Bloomberg</i></p><p>
</p><p>
இருப்பினும், ரஷ்ய முன்னேற்றங்களை வலுவாக எதிர்த்து நிற்பதாகவும், ரஷ்யப் படைகளுக்குப் பெரும் இழப்புகளை ஏற்படுத்தி வருவதாகவும் உக்ரேன் தரப்பு தெரிவித்து வருகிறது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-30T19:59:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹவாய் தீவில் 500 அடி உயரத்திற்கு வெடித்து சிதறும் எரிமலை குழம்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/volcano-erupts-lava-soars-500-feet-high-1785441280"></link>
            <id>https://canadamirror.com/article/volcano-erupts-lava-soars-500-feet-high-1785441280</id>
            <summary type="text">ஹவாய் தீவில் உள்ள கிலாவுவே எரிமலையில் இருந்து 500 அடி உயரத்திற்கு எரிமலை குழம்பு வெடித்து சிதறுவதாக என அமெரிக்க புவியியல் ஆய்வு அமைப்பு தெரிவிக்கின்றத...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹவாய் தீவில் உள்ள கிலாவுவே எரிமலையில் இருந்து 500 அடி உயரத்திற்கு எரிமலை குழம்பு வெடித்து சிதறுவதாக என அமெரிக்க புவியியல் ஆய்வு அமைப்பு தெரிவிக்கின்றது.
</p><p>
ஹவாய் தீவு எனப்படும் பிக் தீவில் உள்ள கிலாவுவே எரிமலையானது, உலகின் மிக துடிப்பான எரிமலைகளில் ஒன்றாக உள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d9f59e15-0acf-409a-ac06-ca1743c29514/26-6a6bac027ed79.webp' /></p><p> </p><p>இந்த எரிமலையில், கடந்த செவ்வாய் கிழமை இரவு 7.10 மணியளவில் வெடிப்பு ஏற்பட்டது. தொடர்ந்து 7 மணிநேரம் நடந்த இந்த எரிமலை வெடிப்பானது, நேற்று காலை 2.36 மணி வரை நீடித்தது என அமெரிக்க புவியியல் ஆய்வு அமைப்பு தெரிவிக்கின்றது.
</p><p>
சுமார் 500 அடி உயரத்திற்கு எரிமலை குழம்பு பீறிட்டு வெளியேறுகிறது. இதனால், பாதுகாப்பு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு தீவிர கண்காணிப்பு பணிகளும் மேற்கொள்ளப்படுகின்றன.


</p><p>இந்த வெடிப்பில், வாயு மற்றும் தீப்பிழம்புகள் வெளிப்பட்டன. எரிமலையின் வடக்கு பகுதியில் இருந்து வெளிப்பட்ட எரிமலை குழம்பு விரைவாக வெளியேறி எரிமலை பள்ளத்தில் 50 சதவீதம் அளவுக்கு நிரம்பி காணப்படுகிறது. </p><p>அதனால் ஏற்பட்ட வெப்பம் மற்றும் சாம்பல் கடல் மட்டத்தில் இருந்து 19 ஆயிரம் அடி உயரத்திற்கு மேலே எழும்பியது.
</p><p>
எனினும் இந்த எரிமலை வெடிப்பின்போது, மக்கள் அதிகம் கூட கூடிய பகுதிகளில், பெரிய திடப்பாறைகளோ அல்லது மக்மா துகள்களோ வெளியேறவில்லை என்றும் ஆனால் சாம்பல் படிவங்கள் கண்டறியப்பட்டு உள்ளன என்றும் தகவல் தெரிவிக்கின்றது.</p>]]></content>
            <updated>2026-07-30T19:54:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பகுதியில் கோர விபத்தால் பறிபோன உயிர் ; விசாரணைகள் ஆரம்பம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/fatal-accident-claims-life-in-tamil-area-1785440323"></link>
            <id>https://jvpnews.com/article/fatal-accident-claims-life-in-tamil-area-1785440323</id>
            <summary type="text">புல்மோட்டை - திருகோணமலை வீதியில் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியை விட்டு விலகி கால்வாய் தூணில் மோதியதில் அதன் ஓட்டுநர் உயிரிழந்துள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">புல்மோட்டை - திருகோணமலை வீதியில் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியை விட்டு விலகி கால்வாய் தூணில் மோதியதில் அதன் ஓட்டுநர் உயிரிழந்துள்ளார்.</p><p style="text-align: justify; ">புதன்கிழமை மாலை வேளையில் புல்மோட்டை நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் கட்டுப்படுத்த முடியாமல் வீதியை விட்டு விலகி கால்வாய் தூணில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/eae7d64b-da80-416f-bb21-b1dd5916f3d9/26-6a6ba844dc2c3.webp' /></p><p> </p><p style="text-align: justify; ">விபத்தில் படுகாயமடைந்த நபர் புல்மோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
</p><p style="text-align: justify; ">
உயிரிழந்தவர் குச்சவெளி பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய நபராவார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">சம்பவம் தொடர்பில் புல்மோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-07-30T19:45:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[அவசர தேவைக்காக சுவ செரிய அறிமுகப்படுத்தும் மோட்டார் சைக்கிள் சேவை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/suwa-seriya-launches-new-emergency-service-1785439223"></link>
            <id>https://jvpnews.com/article/suwa-seriya-launches-new-emergency-service-1785439223</id>
            <summary type="text">அவசர மருத்துவ உதவி தேவைப்படும் நோயாளர்களுக்கு இன்னும் விரைவாகச் சிகிச்சை அளிக்கும் நோக்கில், மோட்டார் சைக்கிள் அடிப்படையிலான புதிய அவசர மருத்துவச் சேவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அவசர மருத்துவ உதவி தேவைப்படும் நோயாளர்களுக்கு இன்னும் விரைவாகச் சிகிச்சை அளிக்கும் நோக்கில், மோட்டார் சைக்கிள் அடிப்படையிலான புதிய அவசர மருத்துவச் சேவையை அறிமுகப்படுத்தத் திட்டம் வகுத்துள்ளதாக '1990 சுவ செரிய' அறக்கட்டளை அறிவித்துள்ளது.
</p><p>

போக்குவரத்து நெரிசல் மற்றும் குறுகிய வீதிகள் காரணமாக ஆம்புலன்ஸ் வாகனங்கள் விரைவாகச் செல்வதில் ஏற்படும் தாமதத்தைத் தவிர்த்து, நோயாளர்களிடம் விரைவாக சென்றடைய இச்சேவை பெரிதும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/821a4fbd-4d00-469d-88eb-5b9ec0609a68/26-6a6ba3f8d9e9b.webp' /></p><h2>அவசர மருத்துவ உதவி&nbsp;&nbsp;</h2><p>

நோயாளர் காவு வண்டி சம்பவ இடத்திற்கு வந்து சேருவதற்கு முன்பாகவே, நோயாளருக்குத் தேவையான உடனடி முதலுதவி மற்றும் அடிப்படை மருத்துவ ஆதரவை வழங்குவதே இதன் முதன்மை நோக்கமாகும்.
</p><p>
இச்சேவையில் பயன்படுத்தப்படும் மோட்டார் சைக்கிள்களில் அத்தியாவசிய மருந்துகள் மற்றும் அவசர மருத்துவ உபகரணங்கள் பொருத்தப்பட்டிருக்கும்.
</p><p>
இதற்காகச் விசேடப் பயிற்சி பெற்ற வைத்திய அதிகாரிகள் மோட்டார் சைக்கிள் அவசரப் பிரிவுகளில் களமிறக்கப்படுவர்.</p><p></p><p>
</p><p>
அதிக சனத்தொகை கொண்ட பகுதிகள் மற்றும் கடுமையான போக்குவரத்து நெரிசல் நிலவும் முக்கிய நகர்ப்புறங்களில் இச்சேவை முதன்மையாகச் செயல்படுத்தப்படும்.

</p><p>இந்த ஆண்டின் இறுதிக்குள் இத்திட்டம் முன்னோடித் திட்டமாக ஆரம்பிக்கப்படவுள்ளது. ஆரம்பகட்டமாக கொழும்பு மற்றும் பிற முக்கிய நகரங்களில் ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது</p><p></p>]]></content>
            <updated>2026-07-30T19:30:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[அழிக்கப்பட்ட F-35 போர் விமானங்கள்! ஈரானின் அறிவிப்பை முற்றாக மறுத்தது அமெரிக்கா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/us-denies-iran-destroyed-f-35-fighter-jets-1785437858"></link>
            <id>https://ibctamil.com/article/us-denies-iran-destroyed-f-35-fighter-jets-1785437858</id>
            <summary type="text">ஈரானிய ஏவுகணைத் தாக்குதலில் F-35 போர் விமானங்கள் உட்பட பல அமெரிக்க விமானங்கள் அழிக்கப்பட்டதாக ஈரானிய ஊடகங்கள் வெளியிட்ட செய்திகளை அமெரிக்க இராணுவம் மு...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானிய ஏவுகணைத் தாக்குதலில் F-35 போர் விமானங்கள் உட்பட பல அமெரிக்க விமானங்கள் அழிக்கப்பட்டதாக ஈரானிய ஊடகங்கள் வெளியிட்ட செய்திகளை அமெரிக்க இராணுவம் முற்றாக மறுத்துள்ளது.</p><p>
ஈரானின் புரட்சிகர காவல்படை (IRGC) முன்வைத்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள அமெரிக்க மத்திய கட்டளையகம் (CENTCOM), சமீபத்திய தாக்குதல் முயற்சிகளில் அமெரிக்க விமானங்கள் எதுவும் அழிக்கப்படவோ அல்லது சேதமடையவோ இல்லை எனத் தெரிவித்துள்ளது. </p><p>

யோர்தானில் உள்ள அல்-அஸ்ராக் விமானப் தளத்தைக் இலக்கு வைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் மூன்று எஃப்-35 விமானங்கள் அழிக்கப்பட்டதாகவும், மேலும் மூன்று விமானங்கள் சேதமடைந்ததாகவும் ஈரான் தெரிவித்திருந்தது.</p><p></p><h2>இடைமறிக்கப்பட்ட ஏவுகணைகள்</h2><p> 

அத்துடன், அமெரிக்க அதிகாரிகள் மற்றும் தொழில்நுட்ப பராமரிப்புப் பணியாளர்கள் சிலர் கொல்லப்பட்டதாகவும் ஈரான் அறிவித்திருந்தது.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Over the past few hours, Iranian state media have continued to report false claims by the Islamic Revolutionary Guard Corps (IRGC) – three in particular.<br><br>🚫 FIRST CLAIM: The IRGC (again) claims free and open routes through the Strait of Hormuz are dangerous for commercial… <a href="https://t.co/J34ILmDvyk">pic.twitter.com/J34ILmDvyk</a></p>&mdash; U.S. Central Command (@CENTCOM) <a href="https://x.com/CENTCOM/status/2082850478572900753?ref_src=twsrc%5Etfw">July 30, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>
</p><p>
இந்நிலையில், ஈரானால் ஏவப்பட்ட ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் அனைத்தும் இடைமறிக்கப்பட்டு இலக்குகளை அடையத் தவறிவிட்டதாக அமெரிக்க மத்திய கட்டளையகம் தெரிவித்துள்ளது.</p><p>

இதேவேளை, ஈரானில் இருந்து யோர்தான் நோக்கி ஏவப்பட்ட ஐந்து ஏவுகணைகளை இடைமறித்து அழித்துள்ளதாக யோர்தான் இராணுவம் தெரிவித்துள்ளது.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-30T19:13:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இரவு சோதனையில் சிக்கிய பெண் ; சோதனையில் கிடைத்த பொருட்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/woman-detained-in-late-night-operation-1785438142"></link>
            <id>https://jvpnews.com/article/woman-detained-in-late-night-operation-1785438142</id>
            <summary type="text">கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லெயாட்ஸ் வீதி பகுதியில் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு அதிகாரிகளுக்குக் கிடைத்தத் தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சோத...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லெயாட்ஸ் வீதி பகுதியில் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு அதிகாரிகளுக்குக் கிடைத்தத் தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, ஹெரோயின் போதைப்பொருளுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p style="text-align: justify; ">

நேற்று (29) இரவு வேளையில் முன்னெடுக்கப்பட்ட இந்தச் சோதனையின் போது, 772 கிராம் ஹெரோயின் மற்றும் போதைப்பொருள் வியாபாரம் மூலம் கிடைத்ததாகச் சந்தேகிக்கப்படும் 75,000 ரூபா பணம் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c24995d6-f2c3-4971-8b79-22ed54f6a959/26-6a6b9fecaca7f.webp' /></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify;">
கைது செய்யப்பட்டவர் கொழும்பு 14 பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய பெண் ஆவார்.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;">

மேலும், இந்த சம்பவம் குறித்து பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.</p><p style="text-align: justify;"></p>]]></content>
            <updated>2026-07-30T19:02:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானிய கடற்கரையில் மீண்டும் சோகம்: கடல் நீரில் மூழ்கி ஒருவர் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/man-dies-at-frinton-coast-in-uk-essex-1785437185"></link>
            <id>https://news.lankasri.com/article/man-dies-at-frinton-coast-in-uk-essex-1785437185</id>
            <summary type="text">பிரித்தானியாவின் ஃப்ரின்டன் கடற்கரையில் நீரில் மூழ்கி நபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.நீரில் மூழ்கி உயிரிழந்த நபர்
ஃப்ரின்டன்...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரித்தானியாவின் ஃப்ரின்டன் கடற்கரையில் நீரில் மூழ்கி நபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><h2>நீரில் மூழ்கி உயிரிழந்த நபர்</h2><p>
ஃப்ரின்டன் கடற்கரையில் கடலில் சிக்கி தவித்த நபர் இறுதியில் நீரில் மூழ்கி உயிரிழந்து இருப்பதாக எசெக்ஸ் காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.</p><p> வியாழக்கிழமை பிற்பகல் 2.10 மணி அளவில் கடல் நீரில் மூழ்கிய நபர் மீட்கப்பட்டு கரைக்கு கொண்டு வரப்பட்டார். </p><p>&nbsp;அவருக்கு போதிய முதலுதவி சிகிச்சைகள் வழங்கியும் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/939fe37e-16b1-49d7-ab95-4dd3070a7756/26-6a6b9c028b37a.webp' /></p><p> தகவல் கிடைத்ததை அடுத்து, சம்பவ இடத்திற்கு மருத்துவ ஊர்தி மற்றும் வான்வழி அவசர ஊர்தி உட்பட 10 க்கும் மேற்பட்ட அவசர சேவை வாகனங்கள் வரவழைக்கப்பட்டன.</p><p> மேலும் சம்பவ இடத்தில் மீட்பு பணிகள் தடையின்றி நடைபெறும் விதமாக பொதுமக்கள் அப்பகுதியை தவிர்க்குமாறு உள்ளூர் காவல் துறையினர் கேட்டுக் கொண்டனர்.</p><p></p><h2> எசெக்ஸ் கடற்கரையில் தொடரும் சோகம்</h2><p>
இந்த உயிரிழப்பு சம்பவத்திற்கு முன்பு ஜூலை 22ம் திகதி மேற்கு பகுதியில் உள்ள மெர்சியாவில் நிகழ்ந்த விபத்தில் சிறுவன் ஒருவன் உயிரிழந்து இருந்தான்.</p><p> அத்துடன் ஏற்கனவே அந்த விபத்தில் 41 வயது பெண்ணும், அவரது 15 வயது மகளும் உயிரிழந்து இருந்தது குறிப்பிடத்தக்கது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p>&nbsp;<br></p>]]></content>
            <updated>2026-07-30T18:46:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[உக்ரைன் மீது ரஷ்யா ஏவுகணைத் தாக்குதல் ; முன்னரே எச்சரித்த ஜெலென்ஸ்கி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/zelensky-warned-before-russia-s-missile-attack-1785435302"></link>
            <id>https://canadamirror.com/article/zelensky-warned-before-russia-s-missile-attack-1785435302</id>
            <summary type="text">ரஷ்யா ஒரு &quot;பெரும் தாக்குதலுக்கு&quot; தயாராகி வருவதாக உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி நேற்று (29) எச்சரித்திருந்த நிலையில், இன்று (30) அதிகாலை இந்தத...</summary>
            <content type="html"><![CDATA[<p>ரஷ்யா ஒரு "பெரும் தாக்குதலுக்கு" தயாராகி வருவதாக உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி நேற்று (29) எச்சரித்திருந்த நிலையில், இன்று (30) அதிகாலை இந்தத் தாக்குதல்கள் நடந்துள்ளன.
</p><p>


பேட்ரியாட் வான் பாதுகாப்பு ஏவுகணைகளை உக்ரைனிலேயே தயாரிக்க அனுமதி பெறுவதற்காக, இந்த வாரம் வொஷிங்டனில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை ஜெலென்ஸ்கி நேரில் சந்தித்துப் பேசியதைத் தொடர்ந்து இத்தாக்குதல் தீவிரமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e2bfa777-cf26-4f40-9d0d-5820645b5886/26-6a6b94a77d571.webp' /></p><p>
</p><p>


உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய சக்திவாய்ந்த ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களில் இரண்டு குழந்தைகள் உட்பட எட்டு பேர் உயிரிழந்துள்ளனர் என அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p>



மத்திய உக்ரைனின் கிரிவி ரிஹ் நகருக்கு அருகில் உள்ள ஒரு கிராமத்தில் உள்ள வீட்டின் மீது வீசப்பட்ட பொலிஸ்டிக் ஏவுகணை தாக்குதலில் 5 மற்றும் 12 வயதுடைய இரு சிறுமிகள் உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இரண்டு குழந்தைகள் உட்பட 8 பேர் காயமடைந்துள்ளனர்.
</p><p>


தலைநகர் கீவ் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் மூன்று குடியிருப்பு அல்லாத கட்டிடங்களில் தீ விபத்து ஏற்பட்டது என மேயர் விட்டாலி கிளிட்ச்கோ தெரிவித்துள்ளார்.
</p><p>


போல்டாவா நகரில் நோவா போஷ்டா தபால் நிலையம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஒருவர் உயிரிழந்ததாக அந்நகர மேயர் தெரிவித்துள்ளமைக் குறிப்பிடத்தக்கது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-30T18:45:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈபிடிபியுடன் இணைந்தது போல் தமிழ் மக்கள் விடுதலை புலிகளுடனும் இணைகின்றதா தமிழரசுக் கட்சி..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/tamilarasu-katchi-sumanthiran-epdp-tmvp-1785434064"></link>
            <id>https://tamilwin.com/article/tamilarasu-katchi-sumanthiran-epdp-tmvp-1785434064</id>
            <summary type="text">தற்போது வடக்கு கிழக்கில் ஒரு புதிய கூட்டணியாக தமிழரசுக் கட்சியும் புதிய ஜனநாயகக் கூட்டமைப்பும் உருவாகியிருக்கின்றது எனலாம்.&amp;nbsp;இந்நிலையில், தமிழரசுக...</summary>
            <content type="html"><![CDATA[<p>தற்போது வடக்கு கிழக்கில் ஒரு புதிய கூட்டணியாக தமிழரசுக் கட்சியும் புதிய ஜனநாயகக் கூட்டமைப்பும் உருவாகியிருக்கின்றது எனலாம்.&nbsp;</p><p>இந்நிலையில், தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச்செயலாளர் சுமந்திரன், இந்த கூட்டணியில் இடம்பெற்ற ஒரு முக்கிய நகர்விற்கு ஆதரவு வழங்கியிருக்கவில்லை.&nbsp;</p><p>முன்னதாக அவர்களுக்கிடையில் வேறுபாடு இருந்திருக்கலாம் ஆனால், தற்போது&nbsp;சுமந்திரன் அந்த கூட்டணி தர்மத்தோடு செயற்பட்டிருக்கவில்லை என அரசியல் ஆய்வாளர்கள் பலர் விமர்சிக்கின்றனர்.&nbsp;</p><p>அதேநேரம், அவர் தனது தீர்மானங்கள் குறித்து வெளியிட்டுள்ள கருத்தும் அதிக கவனத்தை ஈர்த்துள்ளது. இவ்விடயங்கள் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி,&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/6UknUjBX6VE" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-30T18:29:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் குளவிக் கொட்டுக்கு இலக்கான முதியவர் பலி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/elderly-man-dies-after-being-stung-by-a-wasp-1785435670"></link>
            <id>https://ibctamil.com/article/elderly-man-dies-after-being-stung-by-a-wasp-1785435670</id>
            <summary type="text">யாழ்ப்பாணத்தில் குளவி கொட்டுக்கு இலக்கான முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இது குறித்து மேலும் தெரியவருகையில், இவர் புங்குடுதீவு காட்டுக்குள் நேற்ற...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணத்தில் குளவி கொட்டுக்கு இலக்கான முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.</p><p>

இது குறித்து மேலும் தெரியவருகையில், இவர் புங்குடுதீவு காட்டுக்குள் நேற்றையதினம்(29) பனை வெட்டுவதற்காக சென்றபோது கருங்குளவி கொட்டுக்க இலக்கான நிலையில் அவரது மகன் அவரை புங்குடுதீவு வைத்தியசாலையில் சேர்ப்பித்துள்ளார்.
</p><p>
பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டதையடுத்து, சிகிச்சை பலனின்றி நேற்றிரவு அவர் உயிரிழந்துள்ளார்.</p><p></p><h2>மரண விசாரணை</h2><p>
</p><p>
இதன்போது, 10ஆம் வட்டாரம், புங்குடுத்வைச் சேர்ந்த கிறிஸ்தோத்திரம் பிரான்ஸிஸ் சேர்ச்சில் (வயது 67) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fd8b920f-5e08-4395-8bde-63437f1dc59d/26-6a6b97d26f641.webp' /></p><p>
</p><p>
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் மேற்கொண்டுள்ளார்.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</b></h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-30T18:28:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆகஸ்டில் உருவாகும் 3 சக்திவாய்ந்த ராஜயோகங்கள் : இந்த ராசிகளுக்கு பொற்காலம் ஆரம்பம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/powerful-3-rajayogas-forms-on-august-who-get-luck-1785407267"></link>
            <id>https://manithan.com/article/powerful-3-rajayogas-forms-on-august-who-get-luck-1785407267</id>
            <summary type="text">ஜோதிட சாஸ்திரத்தின் படி, அனைத்து கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளிக்குப் பிறகு தங்களின் ராசி மற்றும் நட்சத்திர நிலைகளை மாற்றிக்கொண்டே இருக்கின்றன. க...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜோதிட சாஸ்திரத்தின் படி, அனைத்து கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளிக்குப் பிறகு தங்களின் ராசி மற்றும் நட்சத்திர நிலைகளை மாற்றிக்கொண்டே இருக்கின்றன.</p><p> கிரகங்களின் இந்த இடமாற்றங்கள் ஜோதிடத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகின்றன. குறிப்பாக, ஒரு கிரகம் மற்றொரு கிரகத்துடன் இணையும் போது அல்லது ஒரே ராசியில் ஒன்றுசேரும் போது பல்வேறு யோகங்கள் உருவாகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6a1014f9-5efa-4d62-b37c-cd76af61f871/26-6a6b3659949af.webp' /></p><p></p><p> அவற்றில் சில யோகங்கள் மிகவும் சக்திவாய்ந்த மற்றும் மங்களகரமான ராஜயோகங்களாகக் கருதப்படுகின்றன. அதன் தாக்கம் 12 ராசிகளிலும் பிரதிபலிக்கும் என்று தொன்று தொட்டு நம்பப்பட்டு வருகின்றது.&nbsp;</p><p>
அந்த வகையில், ஆகஸ்ட் மாதத்தின் தொடக்கத்தில் புதன் கிரகம் கடக ராசியில் நுழைந்து, அங்கு ஏற்கனவே இருக்கும் சூரியன் மற்றும் குருவுடன் இணைகிறது. இந்த அரிய கிரகச் சேர்க்கையால் 'கஜலட்சுமி ராஜயோகம்', 'திரிகிரஹ யோகம்' மற்றும் 'புத ஆதித்ய ராஜயோகம்' ஆகிய மங்களகரமான யோகங்கள் உருவாகின்றன. </p><p>இந்த யோகங்களின் தாக்கம் ஆகஸ்ட் 22-ஆம் தேதி வரை நீடிக்கும். இதன் தாக்கமானது 12 ராசிகளிலும் பிரதிபலித்தாலும், தொழில் , நிதி நிலை, தனிப்பட்ட வாழ்க்கை என்பவற்றில் உச்சகட்ட சாதக பலன்களை பெறப்போகும் ராசிகள் யார் யார் என பார்க்கலாம்.</p><h2>மிதுனம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/17d084e9-97b9-4002-b293-0ec56a9d146e/26-6a6b365a47ac0.webp' /></p><p>

இந்த மூன்று ராஜயோகங்கள் மிதுன ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பல நல்ல மாற்றங்களை ஏற்படுத்தும். ராசி அதிபதியான புதனின் அருளால் தொழில் மற்றும் வேலைவாய்ப்பில் புதிய முன்னேற்றங்கள் கிடைக்கும்.</p><p> புத்திசாலித்தனமான முடிவுகள் நிதி வளர்ச்சியையும் மரியாதையையும் பெற்றுத் தரும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.</p><p> நிலம், சொத்து தொடர்பான நீண்டநாள் பிரச்சினைகள் தீரும். கடின உழைப்புக்கான பலன் கிடைத்து, உடல்நலக் குறைகளும் படிப்படியாக நீங்கும்.</p><h2>

கன்னி</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5ef5f46c-cc39-45f2-b7ac-3f2a66b3c613/26-6a6b365aecd6f.webp' /></p><h2>
</h2><p>
கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த ராஜயோகம் அதிர்ஷ்டமான காலத்தைத் தொடங்குகிறது. புதிய ஒப்பந்தங்கள் மூலம் வருமானம் அதிகரிக்கும். </p><p>தைரியமும் தன்னம்பிக்கையும் உயரும். பழைய கடன் பிரச்சினைகள் முடிவுக்கு வரலாம். திருமண வாழ்க்கை இனிமையாகவும் அமைதியாகவும் இருக்கும்.</p><p>வாழ்க்கைத்துணையின் ஆதரவு முன்னேற்றத்திற்கு உதவும். தொழிலில் வெற்றி, மேலதிகாரிகளின் பாராட்டு மற்றும் நல்ல ஆரோக்கியம் கிடைக்கும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த நிதி உதவியும் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
</p><h2>
மகரம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9f28e3e7-8e29-4004-8a03-23cd26346be8/26-6a6b3844beeb1.webp' /></p><p></p><p>

மகர ராசிக்காரர்களுக்கு இந்த யோகங்கள் சிறப்பான பலன்களை வழங்கும். நிதி நிலை மேம்பட்டு, வேலை செய்பவர்களுக்கு சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. </p><p>நிலுவையில் இருந்த பணம் கைக்கு வரும். வியாபாரிகளுக்கு புதிய ஒப்பந்தங்கள் மூலம் எதிர்பாராத லாபம் கிடைக்கும். </p><p>வெளிநாட்டு பயண வாய்ப்புகளும் உருவாகலாம். பழைய முதலீடுகள் நல்ல வருமானத்தைத் தரும். குழந்தைகள் தொடர்பாக மகிழ்ச்சியான செய்தி கிடைக்கலாம். ஆரோக்கியமும் சிறப்பாக இருந்து, மேற்கொள்ளும் முயற்சிகளில் வெற்றி காண்பார்கள்.</p><p><b>இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;&nbsp;</b></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-30T18:25:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீர்கொழும்பு சிறை அதிகாரி அளித்த சாட்சியம் : நீதிமன்றம் விதித்த இறுக்கமான உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/jailor-testifies-court-negombo-prison-incident-1785431346"></link>
            <id>https://ibctamil.com/article/jailor-testifies-court-negombo-prison-incident-1785431346</id>
            <summary type="text">நீர்கொழும்பு சிறைச்சாலையில் நடந்த சம்பவம் தொடர்பாக தலைமை சிறை அதிகாரி நீதிமன்றத்தில் சாட்சியமளித்த நிலையில் அவர் தெரிவித்த விடயங்கள் தேசிய பாதுகாப்பிற...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீர்கொழும்பு சிறைச்சாலையில் நடந்த சம்பவம் தொடர்பாக தலைமை சிறை அதிகாரி நீதிமன்றத்தில் சாட்சியமளித்த நிலையில் அவர் தெரிவித்த விடயங்கள் தேசிய பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் வாய்ந்தவை எனவும் எனவே அவர் அளித்த சாட்சி விபரங்கள் எந்தவொரு ஊடகத்திலும் வரக்கூடாது எனவும் நீதிபதி ஷிலானி பெரேரா இறுக்கமான உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.</p><p>நீர்கொழும்பு சிறைச்சாலையில் நிகழ்ந்த சம்பவத்தில் 10 சிறை அதிகாரிகள் மற்றும் 22 கைதிகள் உயிரிழந்தது தொடர்பாக, சம்பவம் நடந்த நேரத்தில் சிறைச்சாலையில் பணியாற்றி வந்த தலைமை சிறை அதிகாரி, இன்று (30) நீதிமன்றத்தில் சாட்சியமளித்தார்.

இது நீர்கொழும்பு நீதிபதி ஷிலானி பெரேரா முன்னிலையில் நடைபெற்றது.</p><h2>நீதிபதியின் உத்தரவு</h2><p>

அப்போது நீர்கொழும்பு சிறைச்சாலையின் தலைமை சிறை அதிகாரியாக இருந்த விக்கிரம ஜயந்த குமார, சாட்சியமளித்தார்.

சாட்சியம் பிற்பகல் சுமார் 1.00 மணியளவில் தொடங்கி, பிற்பகல் சுமார் 3.00 மணி வரை தொடர்ந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c58a601b-a402-47f3-9e43-68a623b81d61/26-6a6b960e78ba6.webp' /></p><p>
</p><p>
சாட்சியத்தைப் பதிவு செய்த பின்னர், தலைமை சிறை அதிகாரி அளித்த சாட்சியத்தில் தேசியப் பாதுகாப்புக்கு மிகவும் முக்கியமான தகவல்கள் அடங்கியுள்ளன என்று நீதிபதி குறிப்பிட்டார்.

தகவல்களை வெளியிடுவது நாட்டின் தேசியப் பாதுகாப்பிற்குப் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடும் என்பதால், சாட்சியத்தின் உள்ளடக்கங்களை எந்த ஊடகத்திலும் வெளியிடக்கூடாது என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.</p><p>

மேலும், தொடர்புடைய சாட்சியத்தைப் பாதுகாப்பாக வைக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.&nbsp;</p><p></p><p> </p><h2>மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்கள் தொடர்பான அறிக்கை</h2><p>இதற்கிடையில், வெலிக்கடை சிறையிலிருந்து நீர்கொழும்பு சிறைக்கு வந்த 89 சிறைக் காவல்துறை அதிகாரிகள் தொடர்பான விரிவான அறிக்கையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aee2e9ce-2de7-4ea8-9933-9b3663028392/26-6a6b960f29cc3.webp' /></p><p>
</p><p>
மேலும், கொழும்பு தேசிய மருத்துவமனை மற்றும் நீர்கொழும்பு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நபர்கள் தொடர்பான அறிக்கையையும் சிறை அதிகாரிகள் நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளனர்.&nbsp;&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-30T18:21:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலகக் கோப்பை புறக்கணிக்க தயாராகும் ஐரோப்பிய நாடுகள்? FIFA-வின் சர்ச்சைக்குரிய புதிய திட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/europe-threat-to-boycott-fifa-world-cup-1785435271"></link>
            <id>https://news.lankasri.com/article/europe-threat-to-boycott-fifa-world-cup-1785435271</id>
            <summary type="text">ஃபிபா பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்தால் உலகக் கோப்பை போட்டிகளில் இருந்து விலகுவதாக ஐரோப்பிய நாடுகள் எச்சரித்துள்ளன. உலகக் கோப்பையை புறக்கணிக்கும் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஃபிபா பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்தால் உலகக் கோப்பை போட்டிகளில் இருந்து விலகுவதாக ஐரோப்பிய நாடுகள் எச்சரித்துள்ளன.</p><h2> உலகக் கோப்பையை புறக்கணிக்கும் ஐரோப்பா?</h2><p>ஃபிபா தலைவர் ஜியானி இன்பான்டினோ(Gianni Infantino) முன்மொழிந்த உலகக் கோப்பை கால்பந்து தொடரின் பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்யும் சர்ச்சைக்குரிய திட்டத்தை ஐரோப்பிய நாடுகளின் கூட்டமைப்பான UEFA எதிர்த்துள்ளது.</p><p>உலகக் கோப்பை பங்குகளை விற்பனை செய்யும் திட்டத்தை ஃபிபா தலைவர் ஜியானி இன்பான்டினோ முன் நகர்த்தி சென்றால் UEFA உறுப்பு நாடுகள் இனி ஃபிபா உலகக் கோப்பை போட்டிகளில் பங்கேற்காது என எச்சரித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5f8e9f20-bb1d-4254-acd6-45b8298f040e/26-6a6b948901139.webp' /></p><p> ஃபிபா பங்குகளை விற்பனை செய்யும் வணிக திட்டத்திற்கும், வெளிநாடு முதலீடுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக 55 உறுப்பு நாடுகளை கொண்ட UEFA கூட்டமைப்பு&nbsp; இந்த வாரம் அவசர கூட்டம் ஒன்றை கூட்டி ஃபிபா நடத்தும் தொடர்களை புறக்கணிப்பது தொடர்பான முக்கிய முடிவை எடுத்துள்ளனர்.</p><p> மேலும் உலகக் கோப்பை போட்டிகளை முதலீட்டு பொருளாக மாற்றக்கூடாது என்றும் UEFA திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.</p><p></p><h2> 20 பில்லியன் டொலரில் புதிய துணை நிறுவனம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6d77493b-f57d-42b8-bb4c-96eb2e1b1adb/26-6a6b9489ab6b2.webp' /></p><p>ஃபிபா தலைவர்&nbsp; ஜியானி இன்பான்டினோ 20 பில்லிய்ன் டொலர் மதிப்பிலான துணை நிறுவனத்தை தொடங்க திட்டமிட்டு இருப்பதை செவ்வாய்க்கிழமை ஃபிபா உறுதிப்படுத்தியது.</p><p> மேலும் ஃபிபா பார்வர்ட் என்டர்பிரைஸ் என்ற பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய முயற்சியின் கீழ் நிறுவனத்தின் 20%-க்கும் அதிகமான பங்குகளை விற்று கிட்டத்தட்ட 4.2 பில்லியன் டொலர்களை திரட்ட திட்டமிடப்பட்டுள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-30T18:14:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹரக் கட்டாவுக்கு எதிரான பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழான குற்றச்சாட்டுகள் தள்ளுபடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/court-dismiss-case-of-harakkata-1785427450"></link>
            <id>https://tamilwin.com/article/court-dismiss-case-of-harakkata-1785427450</id>
            <summary type="text">&amp;nbsp;பிரபல பாதாள உலகக் குழுத் தலைவரான ஹரக் கட்டாவிற்கு எதிராக பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வழக்கு தொடர முடியாது என ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;பிரபல பாதாள உலகக் குழுத் தலைவரான ஹரக் கட்டாவிற்கு எதிராக பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வழக்கு தொடர முடியாது என கொழும்பு மேல் நீதிமன்றம் அறிவித்துள்ளது.</p><p>ஹரக் கட்டா என அழைக்கப்படும் நதுன் சிந்தக விக்கிரமரத்ன மற்றும் நான்கு பிரதிவாதிகளுக்கு எதிராகப் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வழக்கினை முன்னெடுத்துச் செல்ல முடியாது என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.</p><p>
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்தபோது, அங்கிருந்து தப்பிச் செல்வதற்குச் சதித்திட்டம் தீட்டியதாகக் கூறி இந்த சந்தேகநபர்களுக்கு எதிராகப் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3b89806b-4480-440f-b2d2-af7f9a1df614/26-6a6b75fbd2086.webp' /></p><p> </p><p>
குற்றம் சாட்டப்பட்டவர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் முன்வைத்த முதற்கட்ட ஆட்சேபனைகளை ஏற்றுக்கொண்ட கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி புத்திக சி. ரகல இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.
</p><p>பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் இந்த வழக்கை நடத்த முடியாது என்றபோதிலும், சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளின் தன்மையைக் கருத்திற் கொண்டு, தண்டனைச் சட்டக்கோவையின் கீழ் பிரதிவாதிகளுக்கு எதிராகத் தொடர்ந்து வழக்கு விசாரணைகளை முன்னெடுப்பதற்கு எவ்வித சட்டத் தடையும் இல்லை என்று நீதிபதி சுட்டிக்காட்டினார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-30T18:06:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Erimalai</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் பெருந்தொகை போதைப்பொருள் மீட்பு! பின்னணியில் பிரபல கட்சியொன்றின் உறுப்பினர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/16-kg-kerala-cannabis-packages-seized-in-jaffna-1785433263"></link>
            <id>https://ibctamil.com/article/16-kg-kerala-cannabis-packages-seized-in-jaffna-1785433263</id>
            <summary type="text">
வடமராட்சி நெல்லியடி பிரதேசத்தில் உள்ள காட்டுப் பகுதியில் 20 லட்சம் ரூபா பெறுமதியா 16 கிலோகிராம் கேரள கஞ்சா பொதிகள் யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு...</summary>
            <content type="html"><![CDATA[<p>
வடமராட்சி நெல்லியடி பிரதேசத்தில் உள்ள காட்டுப் பகுதியில் 20 லட்சம் ரூபா பெறுமதியா 16 கிலோகிராம் கேரள கஞ்சா பொதிகள் யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினால் கைப்பற்றப்பட்டது.
</p><p>
வடமராட்சி அரச புலனாய்வுச் சேவை (SIS) வழங்கிய தகவலின்படி, இந்த போதைப்பொருள் தொகை மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
இந்த சட்ட விரோத கேரள கஞ்சா நாளைய தினம் கொழும்பு பிரதேசத்திற்கு கைமாற்றுவதற்கு இருந்த நிலையில் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>மேலதிக விசாரணை</h2><p>
</p><p>
இதேவேளை, மேற்படி போதைப்பொருள் கடத்தலில் பின்னணியில், பிரபல அரசியல் கட்சியின் பிரதேச சபை உறுபினர் ஒருவரும் சம்மந்தப்பட்டிருப்பதாக விசாரணைஅதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/84aaea56-540b-456d-80b8-6cc3244d9838/26-6a6b91a473f00.webp' /></p><p>

இந்த வாரம் இந்தியாவில் இருந்து சட்டவிரோதமாக பருத்தித்துறை வல்லிபுரம் கடற்கரை பகுதிக்கு கொண்டுவரப்பட்ட 250 kg விற்கு மேற்பட்ட கேரள கஞ்சாவின் சிறு தொகையே இவ்வாறு பிடிபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. </p><p>

அந்த வகையில், இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> WHATSAPP CHANNEL </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-30T18:02:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[மரத்தில் தொங்கிய மனைவியின் தலை ; கணவர் கூறிய காரணத்தில் காத்திருந்த அதிர்ச்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/husband-arrested-after-wife-found-beheaded-1785434501"></link>
            <id>https://jvpnews.com/article/husband-arrested-after-wife-found-beheaded-1785434501</id>
            <summary type="text">உணவு பரிமாறுவதற்கு தாமதமானதால் கோபமடைந்த நபர் தனது ச மனைவியின் தலையை வெட்டி மரத்தில் மாட்டிய சம்பவம் பீகாரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.பீகார்...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">உணவு பரிமாறுவதற்கு தாமதமானதால் கோபமடைந்த நபர் தனது ச மனைவியின் தலையை வெட்டி மரத்தில் மாட்டிய சம்பவம் பீகாரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.</p><p style="text-align: justify;">பீகார் மாநிலம் ஜகர்கன்ட் மாவட்டத்தில்தான் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/206baf78-020d-4847-a1e1-c77038f2a2a8/26-6a6b918f809b0.webp' /></p><h2 style="text-align: justify; ">மதுபோதை</h2><p> </p><p style="text-align: justify;"> சகோதரர்கள் இருவர் வசித்து வந்த நிலையில் இதில் சகோதரர் ஒருவர் திருமணம் முடித்துள்ளார். குனல் குமாருக்கு மதுப்பழக்கத்திற்கு அடிமையானவர் என சொல்லப்படுகிறது.
</p><p style="text-align: justify; ">&nbsp;வீட்டிற்கு மதுபோதையில் சாப்பிட சென்றபோது, மனைவி&nbsp; அவருக்கு சாப்பாடு போடவில்லை எனவும்&nbsp; நீண்ட நேரம் சாப்பாட்டுக்காக காத்திருந்ததில் கோபமடைந்த குனல் குமார் பெண்ணின் தலையில் கோடாரியால் அடித்து கொலை செய்துள்ளார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify;">
அதன்பின்&nbsp; தலையை வீட்டின் முன் இருந்த மரத்தில் தொங்க விட்டுள்ளார்.</p><p style="text-align: justify;">குணால் குமாரை கைது செய்து பொலிசார் விசா ரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

</p><p style="text-align: justify;"></p>]]></content>
            <updated>2026-07-30T18:01:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[எரிபொருள் ஏற்றுமதிக்கான தடையை நீட்டித்த ரஷ்யா: அறிவிக்கப்பட்ட சில முக்கிய தளர்வுகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/russia-extent-fuel-export-ban-to-2027-january-1785430050"></link>
            <id>https://news.lankasri.com/article/russia-extent-fuel-export-ban-to-2027-january-1785430050</id>
            <summary type="text">உள்நாட்டு விநியோக சந்தையை பாதுகாக்க எரிபொருள் ஏற்றுமதிக்கான தடையை ரஷ்யா நீட்டித்துள்ளது. அடுத்த ஆண்டு வரை நீட்டிக்கப்பட்ட எரிபொருள் ஏற்றுமதி
உக்ரைன் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>உள்நாட்டு விநியோக சந்தையை பாதுகாக்க எரிபொருள் ஏற்றுமதிக்கான தடையை ரஷ்யா நீட்டித்துள்ளது.</p><h2> அடுத்த ஆண்டு வரை நீட்டிக்கப்பட்ட எரிபொருள் ஏற்றுமதி</h2><p>
உக்ரைன் - ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கை மற்றும் பொருளாதார தடைகள் காரணமாக ரஷ்யாவில் வழக்கத்திற்கு மாறாக எரிபொருள் விநியோகம் பெரும் சிரமத்தை சந்தித்து வருகிறது.</p><p>இந்நிலையில் உள்நாட்டு எரிபொருள் விநியோகத்தை உறுதிப்படுத்தும் விதமாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் எரிபொருள்களுக்கு ரஷ்ய அரசு அதிகாரப்பூர்வமாக தடை விதித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/820fb5c9-8ad7-4524-9011-e3555e789354/26-6a6b8023abc70.webp' /></p><p>இது தொடர்பாக வியாழக்கிழமை வெளியான அறிவிப்பில், பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருள் ஏற்றுமதிக்கான தடை 2027ம் ஆண்டு ஜனவரி 1ம் திகதி வரை அமுலில் இருக்கும் என்று அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> முன்னர் அறிவிக்கப்பட்ட எரிபொருள் ஏற்றுமதி தடை ஜூலை மாத இறுதியுடன் நிறைவடையும் நிலையில், தற்போது எரிபொருள் ஏற்றுமதிக்கான தடை 2027 ம் ஆண்டு ஜனவரி 1ம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.</p><p>சமீபத்தில் உள்நாட்டு சந்தை நிலவரம் சீரடைந்த பிறகே எரிபொருள் ஏற்றுமதி மீதான தடை தளர்த்தப்படும் என்று ரஷ்ய துணை பிரதமர் அலெக்சாண்டர் நோவாக் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cf2b6783-0b97-41df-8dd5-f2deedeb12e9/26-6a6b80247e1dd.webp' /></p><h2>எரிபொருள் ஏற்றுமதியில் சில முக்கிய தளர்வுகள்</h2><p>அறிவிக்கப்பட்டுள்ள எரிபொருள் ஏற்றுமதி தடையில் சில முக்கிய விதிவிலக்குகளும் வழங்கப்பட்டுள்ளது.</p><p> அதன்படி, நேரடியாக உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களின் எரிபொருள் ஏற்றுமதி மீதான தடை செப்டம்பர் 1, 2026 வரை மட்டுமே அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>அதைப்போல நாடுகளுக்கு இடையே மேற்கொள்ளப்பட்ட சர்வதேச ஒப்பந்தங்களில் கீழ் எரிபொருள் ஏற்றுமதிக்கு அனுமதி உண்டு.</p><p> மேலும் மனிதாபிமான நோக்கில் வழங்கப்படும் உதவிகளுக்கு அரசு ஒப்புதலுடன் அனுமதி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td><br></td></tr></tbody></table><p> &nbsp;<br></p>]]></content>
            <updated>2026-07-30T17:39:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[கோர விபத்தில் பலியான இரு இளைஞர்கள் ; லொறிக்கு தீ வைத்த பொதுமக்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/young-men-killed-in-tragic-accident-1785432449"></link>
            <id>https://jvpnews.com/article/young-men-killed-in-tragic-accident-1785432449</id>
            <summary type="text">நீர்கொழும்பு போலவலான பிசிஐ கெம்பஸ் அருகே இன்று (30) அதிகாலை 1.45 மணியளவில் இடம்பெற்ற கோர விபத்தில், மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்கள் சம்பவ இட...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">நீர்கொழும்பு போலவலான பிசிஐ கெம்பஸ் அருகே இன்று (30) அதிகாலை 1.45 மணியளவில் இடம்பெற்ற கோர விபத்தில், மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.</p><p style="text-align: justify; ">
சம்பவம் தொடர்பாக பொலிஸார் தெரிவித்ததாவது,

கண்டெய்னர் லொறிக்கும் மோட்டார் சைக்கிளுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலினால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9cb18d0c-475c-4d69-a7b9-af0c0c4508bb/26-6a6b8b70c62ea.webp' /></p><h2 style="text-align: justify; ">&nbsp;மேலதிக விசாரணை</h2><p style="text-align: justify; ">

இந்த விபத்தைத் தொடர்ந்து ஆத்திரமடைந்த அப்பிரதேச மக்கள், விபத்தில் தொடர்புடைய கண்டெய்னர் லொறிக்கு தீ வைத்துள்ளனர். </p><p style="text-align: justify; ">இதனை அடுத்து கட்டான பொலிஸார் மற்றும் நீர்கொழும்பு மாநகர சபையின் தீயணைப்பு பிரிவு அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்று தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து நிலைமையை சீர்செய்துள்ளனர்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
விபத்தில் உயிரிழந்த இருவரின் சடலங்களும் நீர்கொழும்பு மாவட்ட பொது வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதுடன், கண்டெய்னர் லொறியின் சாரதி கட்டான பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p style="text-align: justify; ">

உயிரிழந்தவர்கள், நீர்கொழும்பைச் சேர்ந்த 18 வயதுடைய மற்றும் 19 வயதுடைய&nbsp; இரு இளைஞர்கள் ஆவர்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
கைது செய்யப்பட்ட கண்டெய்னர் லொறியின் சாரதி பன்னில தென்ன பகுதியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p style="text-align: justify; ">
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கட்டான பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;&nbsp;</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-07-30T17:35:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹோர்முஸ் நீரிணையில் ஈரானின் அதிரடி: அதிகரிக்கும் போர்ப் பதற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/iran-grip-strait-of-hormuz-drone-attack-1785432423"></link>
            <id>https://tamilwin.com/article/iran-grip-strait-of-hormuz-drone-attack-1785432423</id>
            <summary type="text">அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே தீவிரமடைந்து வரும் போர், உலகளாவிய கடல்வழி
வர்த்தகம் மற்றும் மசகு எண்ணெய் விநியோகத்தை முடக்கும் அபாயத்தை
ஏற்படுத்தி...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே தீவிரமடைந்து வரும் போர், உலகளாவிய கடல்வழி
வர்த்தகம் மற்றும் மசகு எண்ணெய் விநியோகத்தை முடக்கும் அபாயத்தை
ஏற்படுத்தியுள்ளது.
</p><p>
எகிப்தின் டமியேட்டா துறைமுகத்தில் நின்றுகொண்டிருந்த அமெரிக்காவுக்குச்
சொந்தமான எரிவாயுக் கப்பல் மீது அடையாளம் தெரியாத ட்ரோன் தாக்குதல்
நடத்தப்பட்டது.
</p><p>
சுயஸ் கால்வாய் பகுதிக்கு மிக அருகில் நடந்த இத்தாக்குதல், சவூதி அரேபியாவின்
எண்ணெய் ஏற்றுமதிக்கு எஞ்சியிருந்த பாதுகாப்பான வழியான சுயஸ் கால்வாய் மூலமான
கப்பல் போக்குவரத்திற்கும் புதிய அச்சுறுத்தலை உருவாக்கியுள்ளது.
</p><p>
உலகின் மிக முக்கியமான எண்ணெய் வர்த்தகப் பாதையான ஹோர்முஸ் நீரிணை தற்போது
ஈரானின் கட்டுப்பாட்டில் உள்ளது.</p><p></p><h2>ஈரான் நடத்திய தாக்குதல்</h2><p>அனுமதி பெறாமல் இந்த ஹோர்முஸ் நீரிணை
வழியாகச் செல்ல முயன்ற மூன்று எண்ணெய் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல்
நடத்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c6428219-ffa8-45d5-b959-38f3fc1dc7b4/26-6a6b8a7fc832b.webp' /></p><p>
</p><p>
ஓமன் நாடு ஹோர்முஸ் நீரிணை போக்குவரத்தைச் சீரமைக்க முன்வைத்த திட்டத்தை ஈரான்
நிராகரித்துள்ள போதிலும், பேச்சுவார்த்தைகள் தொடர்வதாகத்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
அமெரிக்கப் படைகள் மீது ஈரான் நடத்திய தாக்குதல்களுக்குப் பதிலடியாக, ஈரானின்
இராணுவத் தளங்கள் மீது அமெரிக்கா குண்டுவீசியது.
</p><p>
இப்போரில் முதன்முறையாகச் சவூதி அரேபியா, அமெரிக்காவுடன் இணைந்து ஈராக்கில்
உள்ள ஈரான் ஆதரவுப் படைகள் மீது வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது.</p><p>

இதற்குப் பதிலடியாக, ஜோர்தானில் உள்ள அமெரிக்க இராணுவத் தளம் மீதும்,
குவைத்தில் உள்ள சீனாவுக்குச் சொந்தமான கட்டிடம் மீதும் ஈரான் தாக்குதல்
நடத்தியுள்ளது.
</p><p>
ஹோர்முஸ் நீரிணை முடக்கம் மற்றும் சுயஸ் கால்வாய் அருகேயான தாக்குதல்கள்
காரணமாக உலகளாவிய எரிபொருள் சந்தை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

சர்வதேசச் சந்தையில் பிரெண்ட் மசகு எண்ணெய் விலை ஒரே நாளில் 8% வரை உயர்ந்து,
ஒரு பீப்பாய் 90 டொலரை நெருங்கியுள்ளது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-30T17:33:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[பயங்கரவாத தடை சட்டத்திலிருந்து தப்பிய ஹரக் கட்டா!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/court-drops-pta-charges-against-harak-kata-1785431837"></link>
            <id>https://ibctamil.com/article/court-drops-pta-charges-against-harak-kata-1785431837</id>
            <summary type="text">பிரபல பாதாள உலக குற்றவாளியான நந்துன் சிந்தக்க விக்கிரமரத்ன என்ற ஹரக் கட்டா மற்றும் அவருடன் குற்றம் சாட்டப்பட்டுள்ள மேலும் நால்வருக்கு எதிராக பயங்கரவாத...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரபல பாதாள உலக குற்றவாளியான நந்துன் சிந்தக்க விக்கிரமரத்ன என்ற ஹரக் கட்டா மற்றும் அவருடன் குற்றம் சாட்டப்பட்டுள்ள மேலும் நால்வருக்கு எதிராக பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (PTA) கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளைத் தொடர முடியாது என கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.</p><p>

தடுப்புக் காவல் உத்தரவின் பேரில் குற்றப் புலனாய்வுத் துறையின் காவலில் இருந்தபோது, ​​தப்பிச் செல்ல சதி செய்ததாக சந்தேகநபர்கள் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டிருந்தது.</p><p></p><h2>சட்டத் தடை</h2><p>
</p><p>
இந்நிலையில், சந்தேகநபர்கள் சார்பாக முன்னிலையான வழக்கறிஞர்களால் முன்வைக்கப்பட்ட ஆரம்பக்கட்ட ஆட்சேபனைகளை ஏற்றுக் கொண்ட கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி புத்திக சி. ராகல மேற்படி உத்தரவை பிறப்பித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d4664b1c-f1cf-474d-9767-2be23ee01650/26-6a6b8a28ada94.webp' /></p><p>
</p><p>
இருப்பினும், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தொடரப்பட்ட வழக்குகளை மட்டுமே பராமரிக்க முடியாது என்றும், குற்றவியல் தண்டனைச் சட்டக்கோவையின் கீழ் குற்றம் சாட்டப்பட்ட நபர்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கைத் தொடர்ந்து நடத்துவதற்கு எந்தவொரு சட்டத் தடையும் இல்லை என்றும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> WHATSAPP CHANNEL </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-30T17:30:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[வீட்டைச் சுற்றி தெய்வீக ஆற்றல் இருப்பதை உணர்த்தும் முக்கிய அறிகுறிகள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/spiritual-meaning-behind-hearing-these-sounds-1785417370"></link>
            <id>https://manithan.com/article/spiritual-meaning-behind-hearing-these-sounds-1785417370</id>
            <summary type="text">இந்து சாஸ்திரங்களின் படி, தொன்றுதொட்டு பல நம்பிக்கைகளும் பாரம்பரிய நடைமுறைகளும் பின்பற்றப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், ஆன்மீக ரீதியாக நம்மைச் சுற...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்து சாஸ்திரங்களின் படி, தொன்றுதொட்டு பல நம்பிக்கைகளும் பாரம்பரிய நடைமுறைகளும் பின்பற்றப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், ஆன்மீக ரீதியாக நம்மைச் சுற்றி நிகழும் சில சம்பவங்கள், தெய்வீக ஆற்றல் எப்போதும் நம்முடன் இருப்பதற்கான அறிகுறிகளாகக் கருதப்படுகின்றன.
</p><p>
அவ்வாறாக, இரவு நேரங்களில் வீட்டில் சில குறிப்பிட்ட சத்தங்கள் கேட்பதற்கு சாஸ்திரங்களின்படி என்ன அர்த்தம் கூறப்படுகிறது என்பதை இந்தப் பதிவில் விரிவாகப் பார்ப்போம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/30e849c5-5059-44f3-9ea9-9ec4507c9804/26-6a6b547b47fce.webp' /></p><p></p><p>
</p><h2>
தெய்வ நடமாட்டத்தை உணர்த்தும் சத்தங்கள்
</h2><p><b>சங்கு ஒலி:
</b>இரவு நேரத்தில் வீட்டில் சங்கு ஒலி கேட்பது, சிவபெருமானின் அருள் எப்போதும் நம்மீது பரிபூரணமாக இருப்பதற்கான அறிகுறியாகக் கருதப்படுகிறது.</p><p>
</p><p><b>
கொலுசு சத்தம்:
</b>இரவில் கொலுசு சத்தம் கேட்பதாக உணர்ந்தால், நம் வீட்டைச் சுற்றி தெய்வ நடமாட்டம் இருப்பதையும், குலதெய்வத்தின் அருள் எப்போதும் நம்மைக் காத்து வருவதையும் உணர்த்துவதாக நம்பப்படுகிறது.
</p><p><b>
கோவில் மணி ஓசை:</b>
இரவு நேரத்தில் கோவில் மணி ஒலி கேட்பது, அதிர்ஷ்டமும் நற்செய்திகளும் நம்மை நோக்கி வருவதற்கான அறிகுறியாக சாஸ்திரங்களில் கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e7a4ae5e-8862-41ca-85e9-1c4408b7922a/26-6a6b547c07eee.webp' /></p><p></p><p>
</p><p>
அதேபோல், சில நேரங்களில் எந்தவித வெளிப்படையான காரணமும் இல்லாமல் விபூதி, சந்தனம் போன்ற தெய்வீக நறுமணங்களை உணரலாம். இத்தகைய நறுமணங்களும் நம்மைச் சுற்றி தெய்வீக ஆற்றல் நிறைந்திருப்பதற்கான அறிகுறிகளாக நம்பப்படுகின்றன.</p><p><b>இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;&nbsp;</b></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-30T17:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[சீரியல் நடிகை கேப்ரியல்லா செல்லஸுக்கு என்னாச்சு.. மருத்துவமனையில் அனுமதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/serial-actress-gabrella-sellus-major-surgery-1785432205"></link>
            <id>https://cineulagam.com/article/serial-actress-gabrella-sellus-major-surgery-1785432205</id>
            <summary type="text">சன்டிவியின் சுந்தரி சீரியல் புகழ் நடிகை கேப்ரியல்லா செல்லஸ் சின்னத்திரையில் பாப்புலர் நடிகைகளில் ஒருவர்.அவர் சீரியல்கள் மட்டுமின்றி சில படங்களிலும் நட...</summary>
            <content type="html"><![CDATA[<p>சன்டிவியின் சுந்தரி சீரியல் புகழ் நடிகை கேப்ரியல்லா செல்லஸ் சின்னத்திரையில் பாப்புலர் நடிகைகளில் ஒருவர்.</p><p>அவர் சீரியல்கள் மட்டுமின்றி சில படங்களிலும் நடித்து இருக்கிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9e48d05d-eea2-4e8a-9fe6-1008ce599acd/26-6a6b888eab9ac.webp' /></p><p> </p><h2>
மேஜர் சர்ஜரி
</h2><p>
இரண்டு நாட்களுக்கு முன் தனக்கு நடைபெற்ற மேஜர் சர்ஜரிவாழ்க்கையையே மாற்றி விட்டது என கேப்ரியல்லா தெரிவித்துள்ளார்.
</p><p>"உடல்நலம் தான் மிகப்பெரிய சொத்து என்பதை அப்போது தான் உணர்ந்தேன். பலரது உண்மையான சுயரூபத்தையும் நான் பார்த்தேன். வாழ்க்கை கணிக்கமுடியாதது. மீண்டு வலிமையாக வருவேன். "</p><p>இவ்வாறு கேப்ரியல்லா தெரிவித்து இருக்கிறார்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-30T17:26:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை வந்த தொழிலதிபர் அதிரடி கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/businessman-arrested-upon-arrival-in-sri-lanka-1785430601"></link>
            <id>https://jvpnews.com/article/businessman-arrested-upon-arrival-in-sri-lanka-1785430601</id>
            <summary type="text">வெளிநாட்டுத் தயாரிப்புச் சிகரெட்டுகளைச் சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவந்த, இலங்கை பயணி ஒருவர் இன்று (30) சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">வெளிநாட்டுத் தயாரிப்புச் சிகரெட்டுகளைச் சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவந்த, இலங்கை பயணி ஒருவர் இன்று (30) சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p style="text-align: justify; ">

சிலாபம், மாரவில பகுதியைச் சேர்ந்த 43 வயதுடைய வியாபாரி ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ceb78aea-4fe1-4326-9fd9-ca0058258853/26-6a6b824b5122f.webp' /></p><h2 style="text-align: justify; ">மேலதிக விசாரணை</h2><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
இவர் இன்று காலை 10.00 மணியளவில் டுபாயிலிருந்து எமிரேட்ஸ் விமான சேவைக்குச் சொந்தமான EK-650 என்ற விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
</p><p style="text-align: justify; ">
இதன்போது, சந்தேகநபர் கொண்டு வந்த 02 பயணப் பைகளைச் சோதனையிட்ட போது, அவற்றுள் மறைத்து வைக்கப்பட்டிருந்த "மென்செஸ்டர்" மற்றும் "பிளாட்டினம்" வகையைச் சேர்ந்த 46 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பெறுமதியுடைய 31,000 சிகரெட்டுகள் அடங்கிய 155 சிகரெட் கார்டூன்கள் சுங்க அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
மேலும், கைது செய்யப்பட்ட சந்தேகநபரைத் தடுத்து வைத்துள்ள கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-07-30T17:15:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பெண்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் நோக்கில் யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்ட பயிற்சி நெறி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/women-s-livelihood-training-begins-in-jaffna-1785424860"></link>
            <id>https://tamilwin.com/article/women-s-livelihood-training-begins-in-jaffna-1785424860</id>
            <summary type="text">பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் செயற்பட்டு வரும் ஜீவ ஊற்று
அன்பின் கரம் அமைப்பின் நான்காவது கிளை அலுவலகம் இன்றையதினம் யாழ்ப்பாணம்,
அர...</summary>
            <content type="html"><![CDATA[<p>பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் செயற்பட்டு வரும் ஜீவ ஊற்று
அன்பின் கரம் அமைப்பின் நான்காவது கிளை அலுவலகம் இன்றையதினம் யாழ்ப்பாணம்,
அரியாலையில் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.</p><p>

அரியாலை சரஸ்வதி சனசமூக நிலைய கட்டிடத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வு தேசியக்
கொடியேற்றலுடன் ஆரம்பமானது.</p><h2>பெண்களின் வாழ்வாதார மேம்பாடு</h2><p> </p><p>அதனைத் தொடர்ந்து விருந்தினர்கள்
வரவேற்கப்பட்டதுடன், பிரதம அதிதியாக கலந்து கொண்ட யாழ்ப்பாணம் போதனா
வைத்தியசாலையின் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி அவர்கள் நாடா வெட்டி புதிய கிளை
அலுவலகத்தை திறந்து வைத்துள்ளார்.</p><p>
புதிய கிளை அலுவலகத்தின் ஊடாக பெண்களுக்கான தையல் பயிற்சி, ஆரி வேலைப்பாடு,
கேக் ஐசிங், அழகுக்கலை உள்ளிட்ட பல்வேறு தொழிற்பயிற்சி வகுப்புகள்
முன்னெடுக்கப்படவுள்ளதுடன் கிறிஸ்தோபர் எமி (கனடா ) அவர்களின்
நிதி அனுசரணையில் தையல் பயிற்சி நெறி முதற்கட்டமாக இன்றையதினம் உத்தியோக
பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a11e3780-2f60-42c3-9d02-a85c3996bf89/26-6a6b6bdf561ac.webp' /></p><p>பெண்களுக்கு தொழில்திறன்களை வழங்கி அவர்களின் பொருளாதார முன்னேற்றத்தையும்
தன்னம்பிக்கையையும் உயர்த்தும் நோக்கில் இந்த இலவச கற்கைநெறிகள் தொடர்ச்சியாக
முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், அதன் ஒரு பகுதியாக ஜீவ ஊற்று அன்பின் கரத்தின்
நான்காவது கிளை அலுவலகம் யாழ்ப்பாணத்தில் திறந்து வைக்கப்பட்டமை
குறிப்பிடத்தக்கதாகும்.</p><p>ஜீவ ஊற்று அன்பின் கரத்தின் யாழ் மாவட்ட உத்தியோகத்தர் கலையரசன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், தனிமனித மேம்பாட்டு வழிநடத்துனரும் பத்மஷாலா நல்வாழ்வு நிறுவனத்தின் நிறுவுனருமான நளினாசினி அம்பிகைபாகன், வன்னி தமிழ் மக்கள் ஒன்றியத்தின் நிறுவனர் தரன் ஶ்ரீ, வன்னி தமிழீழ மக்கள் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் நிரூபன் உள்ளிட்ட பல்வேறு சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள், ஜீவ ஊற்று அன்பின் கரத்தின் உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-30T17:07:00+00:00</updated>
        </entry>
    </feed>
