<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-07-25T14:46:10+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[நியூயார்க் சிட்டியில் குட்டியான ஆடையில் போஸ்!! நடிகை திவ்யபாரதி புகைப்படங்கள்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/divyabharathi-wen-new-york-city-photos-post-1784985503"></link>
            <id>https://viduppu.com/article/divyabharathi-wen-new-york-city-photos-post-1784985503</id>
            <summary type="text">திவ்ய பாரதிமாடலிங் துறையில் இருந்து சினிமாத்துறைக்கு அறிமுகமாகி பிரபலமானவர்களில் ஒருவர் தான் நடிகை திவ்ய பாரதி. முப்பரிமாணம் படத்தில் ஹீரோயினுக்கு தோழ...</summary>
            <content type="html"><![CDATA[<h2>திவ்ய பாரதி</h2><p>மாடலிங் துறையில் இருந்து சினிமாத்துறைக்கு அறிமுகமாகி பிரபலமானவர்களில் ஒருவர் தான் நடிகை திவ்ய பாரதி. முப்பரிமாணம் படத்தில் ஹீரோயினுக்கு தோழியாக நடித்த திவ்ய பாரதி, பேச்சுலர், மகாராஜா, கிங்ஸ்டன் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/17f54f9f-9798-43ab-babb-e6f72cd3162a/26-6a64b7ab1a9b4.webp' /></p><p>
</p><p>
ஒருசில வெப் தொடர்களில் நடித்தும் வரும் திவ்ய பாரதி, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருந்து புகைப்படங்களை பகிர்ந்து வருவார். </p><p>தற்போது நியூயார்க் சிட்டிக்கு சென்றுள்ள திவ்யபாரதி, அங்குள்ள கஃபேவில் ஹாயாக போஸ் கொடுத்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-07-25T14:45:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரான்ஸில் சைக்கிள் பந்தயத்தில் வீரருக்கு நேர்ந்த அசம்பாவிதம்: அதிர்ச்சி காணொளி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/colombian-rider-rubio-crashing-face-to-car-video-1784990199"></link>
            <id>https://news.lankasri.com/article/colombian-rider-rubio-crashing-face-to-car-video-1784990199</id>
            <summary type="text">பிரான்ஸ் சைக்கிள் பந்தயத்தில் கொலம்பியா வீரர் படுகாயமடைந்ததால் பாதியில் விலகினார்.கொலம்பிய வீரர்

பிரான்ஸ், பாரிஸ் மற்றும் பார்சிலோனாவில் நடந்து வரு...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரான்ஸ் சைக்கிள் பந்தயத்தில் கொலம்பியா வீரர் படுகாயமடைந்ததால் பாதியில் விலகினார்.</p><h2>கொலம்பிய வீரர்
</h2><p>
பிரான்ஸ், பாரிஸ் மற்றும் பார்சிலோனாவில் நடந்து வரும் டூர் டி பிரான்ஸ் சைக்கிள் பந்தயத்தில், கொலம்பிய வீரர் ஐனர் ரூபியோ (Einer Rubio) கலந்துகொண்டார்.&nbsp;</p><p><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr">The crash of 🇨🇴 Einer Rubio from another angle...<br><br>Read more:<br>📰 <a href="https://t.co/TjchzYFuDV">https://t.co/TjchzYFuDV</a><br><br>🎥 IG Pamezcycling <a href="https://t.co/2Ay9VSFWIk">pic.twitter.com/2Ay9VSFWIk</a></p>&mdash; Domestique (@Domestique___) <a href="https://x.com/Domestique___/status/2080753347607269467?ref_src=twsrc%5Etfw">July 24, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>
நேற்றைய 19-வது கட்டப் பந்தயத்தின்போது ரூபியோவிற்கு முன்பு சென்றுகொண்டிருந்த கார், பார்வையாளர்கள் மீது மோதுவதை தவிர்ப்பதற்காக திடீரென நின்றது.&nbsp;</p><p></p><p>
இதனை சற்றும் எதிர்பாராத ஐனர் ரூபியோ காரின் பின்பக்க கண்ணாடியில் பலமாக மோதினார். 

இதில் அவரது முகத்தில் பலத்த காயம் ஏற்பட இரத்தம் கொட்டியது. </p><p>உடனே அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, கிரெனோபில்லில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார்.</p><h2> 

மேலாளர் பகிரங்க மன்னிப்பு </h2><p>அங்கு அவரது காயங்களின் தீவிரத்தைக் கண்டறிய புதிய சோதனைகள் மேற்கொள்ளப்படும் என்று கூறப்பட்டுள்ளது.</p><p>

இதற்கிடையில் ரூபியோ மோதிய காரினை ஒட்டிய XRG அணியின் மேலாளர் ஜோக்சியன் பெர்னாண்டஸ் பகிரங்க மன்னிப்பு கோரினார்.</p><p> 

எனினும், பார்வையாளர்களின் உயிரைக் காப்பாற்றவே அவ்வாறு செய்ததாகவும் தெளிவுபடுத்தினார்.

ரூபியோவிற்கு ஏற்பட்ட விபத்து குறித்த காணொளி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2ff7033f-c8d5-4468-b92c-81a2b7add29f/26-6a64cab74c4eb.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-25T14:38:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாலஸ்தீன மக்கள் மீதான இஸ்ரேலின் வன்முறை: ஐ.நா அதிகாரி கடும் கண்டனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/israel-s-violence-against-the-palestinian-people-1784989648"></link>
            <id>https://tamilwin.com/article/israel-s-violence-against-the-palestinian-people-1784989648</id>
            <summary type="text">ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரைப் பகுதியில் பாலஸ்தீன மக்களுக்கு எதிராக
அதிகரித்து வரும் வன்முறைகள் குறித்து பாலஸ்தீனப்
பகுதி்க்கான ஐ.நா சிறப்புப் பிர...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரைப் பகுதியில் பாலஸ்தீன மக்களுக்கு எதிராக
அதிகரித்து வரும் வன்முறைகள் குறித்து பாலஸ்தீனப்
பகுதி்க்கான ஐ.நா சிறப்புப் பிரதிநிதி பிரான்செஸ்கா அல்பானீஸ் கடும் கண்டனம்
தெரிவித்துள்ளார்.
</p><p>
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் இஸ்ரேலிய குடிமக்களும் இராணுவமும்
ஒன்றிணைந்து வன்முறையில் ஈடுபட்டு வருவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.</p><p></p><h2>வர்த்தக உறவு</h2><p>
</p><p>
இது குறித்து தனது எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ள அல்பானீஸ், காசா தொடர்
தாக்குதலுக்கு உள்ளாகி வரும் சூழலில், மேற்குக் கரையில் பாதுகாப்பற்ற அப்பாவி
மக்களுக்கு எதிராகப் படுகொலைகளும் கொடூர வன்முறைகளும் நிகழ்த்தப்பட்டு
வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/99809d47-e2c8-432d-83c9-34844bc3a0d0/26-6a64c9e14a682.webp' /></p><p>
</p><p>
மேலும், சர்வதேசச் சட்டங்களின் விதிகளுக்கு உட்பட்டு, இஸ்ரேல் மீது உடனடியாக
ஆயுதத் தடைகளை விதிக்க வேண்டும் என்றும், அந்நாடனுடனான வர்த்தக உறவுகளை
நிறுத்த வேண்டும் என்றும் அவர் சர்வதேச சமூகத்திற்கு வலியுறுத்தியுள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-25T14:38:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்த வருடத்தின் சூப்பர் ஹிட் நூறு சாமி படத்தின் ஓடிடி ரிலீஸ்... எப்போது தெரியுமா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/vijay-antony-nooru-saamy-ott-release-1784987646"></link>
            <id>https://cineulagam.com/article/vijay-antony-nooru-saamy-ott-release-1784987646</id>
            <summary type="text">நூறு சாமி‘சொல்லாமலே, ரோஜா கூட்டம், பிச்சைக்காரன் உள்ளிட்ட படங்களை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடம் கவனம் பெற்றவர் தான் இயக்குனர் சசி. இவரது ...</summary>
            <content type="html"><![CDATA[<h2>நூறு சாமி</h2><p>‘சொல்லாமலே, ரோஜா கூட்டம், பிச்சைக்காரன் உள்ளிட்ட படங்களை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடம் கவனம் பெற்றவர் தான் இயக்குனர் சசி. இவரது இயக்கத்தில் கடந்த ஜுன் 19ம் தேதி வெளியான திரைப்படம் தான் நூறு சாமி. </p><p>இந்தப் படத்தில் விஜய் ஆண்டனி, ஸ்வாசிகா, கருணாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவான இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0dac3328-fd42-48c8-b872-559a10e7e8f1/26-6a64c6659df64.webp' /></p><p> </p><p>அதாவது கணவர் மறைவுக்குப் பின் இரண்டு குழந்தைகளை வளர்க்கும் தாய், மறுமணம் செய்துகொள்ள யோசிக்கும் நேரத்தில் சிறுவனாக இருக்கும் மகனுக்கு அதில் உடன்பாடில்லை. </p><p>ஆனால் காலம் கடந்து தாய்க்காக யோசிக்க தொடங்குகிறார், கடைசியில் மகன்கள் தாய்க்கு திருமணம் செய்து வைக்கும் கதையாக அமைந்தது.</p><h2>ஓடிடி ரிலீஸ்</h2><p>
ரசிகர்களின் ஆதரவுடன் வெற்றிகரமாக ஒளிபரப்பாகிய இந்த படம் திரையரங்கில் சூப்பராக ஓடியது. அடுத்து படம் எப்போது ஓடிடியில் ரிலீஸாகும் என ரசிகர்கள் எதிர்ப்பார்க்க செய்தி வந்துவிட்டது.
</p><p>அதாவது வரும் ஆகஸ்ட் முதல் வாரம் ஜீ 5 ஓடிடியில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/2RZDeZY0hpo" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p> </p>]]></content>
            <updated>2026-07-25T14:30:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தங்க நகைக்காகப் பெண்ணை கொலை செய்து ஜனநாயகன்' பார்த்த தம்பதி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/couple-murdered-a-woman-watching-jananayagan-1784982582"></link>
            <id>https://jvpnews.com/article/couple-murdered-a-woman-watching-jananayagan-1784982582</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;இந்தியா புதுச்சேரியில் 6 பவுண் தங்க நகைக்காகப் பெண்ணின் உயிரைப் பறித்துவிட்டு &#039;ஜனநாயகன்&#039; திரைப்படத்திற்குச் சென்ற இளம் தம்பதியினரைக் காவல...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;இந்தியா புதுச்சேரியில் 6 பவுண் தங்க நகைக்காகப் பெண்ணின் உயிரைப் பறித்துவிட்டு 'ஜனநாயகன்' திரைப்படத்திற்குச் சென்ற இளம் தம்பதியினரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
</p><p>

 இந்தச் சம்பவத்தில் புதுச்சேரி லாஸ்பேட்டை பகுதியைச் சேர்ந்த பெண்ணொருணொருவரே&nbsp; உயிரிழந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d743af9f-3038-4ac8-a52c-bae5f392018a/26-6a64ac3807995.webp' /></p><h2>&nbsp;6 பவுண் தங்க நகை&nbsp; கொள்ளை</h2><p>
</p><p>
 உயிரிழந்த அணிந்திருந்த 6 பவுண் தங்க நகைகளும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.

 சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய காவல்துறையினர், சந்தேகத்தின் பேரில் இளம் தம்பதியொன்றைக் கைது செய்தனர்.</p><p></p><p>
</p><p>
 பெண்ணிடம் பரிசொன்றைத் தருவதாகக் கூறி, அவரைக் தாக்கிய தம்பதியினர் , நகைகளைக் கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.


இந்தத் தாக்குதலில் குறித்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். </p><p>அதன்பின்னர், தம்பதியினர் எதுவுமே நடக்காதது போல் திரையரங்கிற்குச் சென்று 'ஜனநாயகன்' திரைப்படம் பார்த்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.</p><p></p><p>
</p><p>
 சம்பவம் தொடர்பில் அவர்கள் இருவரையும் கைது செய்துள்ள லாஸ்பேட்டை காவல்துறையினர்,&nbsp; &nbsp;கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகளைக் கைப்பற்றி மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-07-25T14:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[முள்ளங்கியை சாம்பார் இப்படி செய்து பாருங்க... கொஞ்சமும் மிஞ்சாது!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/healthy-and-tasty-mullangi-sambar-recipe-in-tamil-1784986911"></link>
            <id>https://manithan.com/article/healthy-and-tasty-mullangi-sambar-recipe-in-tamil-1784986911</id>
            <summary type="text">தென்னிந்திய உணவுகளில் சாம்பார் என்பது தவிர்க்க முடியாத ஒரு முக்கியமான இடத்தைப் பெற்றுள்ள பாரம்பரிய உணவாகும். இட்லி, தோசை, பொங்கல், பூரி, சப்பாத்தி, சா...</summary>
            <content type="html"><![CDATA[<p>தென்னிந்திய உணவுகளில் சாம்பார் என்பது தவிர்க்க முடியாத ஒரு முக்கியமான இடத்தைப் பெற்றுள்ள பாரம்பரிய உணவாகும். இட்லி, தோசை, பொங்கல், பூரி, சப்பாத்தி, சாதம் என எந்த உணவுடன் சேர்த்தாலும் சுவையை பல மடங்கு உயர்த்துவது சாம்பார்தான். </p><p>பொதுவாக முருங்கைக்காய், வெங்காயம், கேரட் போன்ற காய்கறிகளில் சாம்பார் செய்வது வழக்கம். ஆனால், ஒரே மாதிரியான சுவைக்கு பதிலாக அவ்வப்போது வித்தியாசமான சுவையில் செய்து கொடுத்தால் வீட்டில் உள்ளவர்களும் மகிழ்ச்சியாக சாப்பிடுவார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4306ddd7-fc71-4719-94cc-5415f34b55ec/26-6a64c7d35a123.webp' /></p><p>அந்த வகையில்,&nbsp; சற்று வித்தியாசமதகவும் ஆரோக்கியம் மற்றும் சுவை நிறைந்ம முள்ளங்கி சாம்பாரை எளிய எப்படி&nbsp; செய்வது என இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.</p><p></p><h2>




தேவையான பொருட்கள்</h2><p><b> வேக வைப்பதற்கு</b></p><p> துவரம் பருப்பு - 1/2 கப்&nbsp;</p><p> தக்காளி - 1 (நறுக்கியது)&nbsp;</p><p> பூண்டு - 5 பல்&nbsp;</p><p> மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்&nbsp;</p><p> உப்பு - சுவைக்கேற்ப </p><p>தண்ணீர் - தேவையான அளவு</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/046ce725-8169-482c-b3fc-fefb9db4ad16/26-6a64c7d40a8ca.webp' /></p><p><b>தாளிப்பதற்கு</b>..</p><p>எண்ணெய் - 1 1/2 டேபிள் ஸ்பூன் </p><p>உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்&nbsp;</p><p> சீரகம் - 1 டீஸ்பூன்&nbsp;</p><p> கடுகு - 1/2 டீஸ்பூன்&nbsp;</p><p> வரமிளகாய் - 2&nbsp;</p><p> பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்&nbsp;</p><p> வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)&nbsp;</p><p> கறிவேப்பிலை - 1 கொத்து&nbsp;</p><p> பச்சை மிளகாய் - 3 (கீறியது)&nbsp;</p><p> முள்ளங்கி - 2 (நறுக்கியது)&nbsp;</p><p> உப்பு - சுவைக்கேற்ப&nbsp;</p><p> மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்&nbsp;</p><p> மல்லித் தூள் - 1 டீஸ்பூன் </p><p>தண்ணீர் - 1/2 கப் + தேவையான அளவு </p><p>புளித்தண்ணீர் - 1/4 கப்&nbsp;</p><p> கொத்தமல்லி - சிறிது </p><p>துருவிய தேங்காய் - 1 ஸ்பூன்</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a9fb31cd-d246-4513-8abe-1501818a5239/26-6a64c7d4aa956.webp' /></p><p>
</p><h2>செய்முறை
</h2><p>
முதலில் துவரம் பருப்பை 2–3 முறை நன்றாகக் கழுவி, 15 நிமிடங்கள் நீரில் ஊறவைக்கவும்.

பிறகு, குக்கரில் ஊறவைத்த துவரம் பருப்புடன் நறுக்கிய தக்காளி, பூண்டு, மஞ்சள்தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.</p><p> பருப்பு மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி 5 விசில் வரும் வரை வேக வைக்கவும்.

விசில் அடங்கியதும் குக்கரைத் திறந்து, பருப்பை நன்றாக மசித்து தனியாக வைத்துக்கொள்ள வேண்டும்.</p><p>அடுத்து ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், உளுத்தம் பருப்பு, சீரகம், கடுகு, வரமிளகாய் மற்றும் பெருங்காயத்தூள் சேர்த்து தாளிக்கவும்.</p><p>[XFNH7P</p><p></p><p>பின்னர் நறுக்கிய வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும். அதன் பிறகு கீறிய பச்சை மிளகாய் மற்றும் நறுக்கிய முள்ளங்கியைச் சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கவும்.</p><p>
இப்போது தேவையான அளவு உப்பு, மிளகாய்த்தூள் மற்றும் மல்லித்தூள் சேர்த்து நன்றாகக் கிளறவும். அதன்பின் ½ கப் தண்ணீர் ஊற்றி, மூடி வைத்து 10 நிமிடங்கள் முள்ளங்கி மென்மையாகும் வரை வேக வைக்கவும்.
</p><p>
பிறகு புளிக்கரைசலை ஊற்றி, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாகக் கலக்கவும். அதனுடன் மசித்த துவரம் பருப்பையும் சேர்த்து, உப்பின் சுவையைச் சரிபார்த்து தேவைப்பட்டால் மேலும் சிறிதளவு உப்பு சேர்க்கவும்.</p><p>

இறுதியாக, சாம்பாரை 10 நிமிடங்கள் நன்றாகக் கொதிக்கவிட்டு, மேலே கொத்தமல்லித்தழை மற்றும் துருவிய தேங்காயைத் தூவி இறக்கினால், சுவையான முள்ளங்கி சாம்பார் தயார்.</p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"><b>FOLLOW NOW</b></a></u></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-25T14:28:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[புத்தளத்தில் கொலையில் முடிந்த வாக்குவாதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/a-worker-was-beaten-to-death-1784988001"></link>
            <id>https://tamilwin.com/article/a-worker-was-beaten-to-death-1784988001</id>
            <summary type="text">புத்தளம் மாவட்டம், முந்தலம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நவதம்குளம் பகுதியில்
நேற்று(24) வெள்ளிக்கிழமை நபர் ஒருவர் அடித்துக் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
...</summary>
            <content type="html"><![CDATA[<p>புத்தளம் மாவட்டம், முந்தலம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நவதம்குளம் பகுதியில்
நேற்று(24) வெள்ளிக்கிழமை நபர் ஒருவர் அடித்துக் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
இந்தச் சம்பவத்தில் பிங்கிரிய பகுதியைச் சேர்ந்த 47 வயதுடைய நபரே
உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய 52 வயதுடைய சந்தேகநபர் பொலிஸாரால் கைது
செய்யப்பட்டுள்ளார்.</p><p></p><h2>&nbsp;மேலதிக விசாரணை</h2><p>
</p><p>
உயிரிழந்தவரும் சந்தேகநபரும் தென்னந்தோட்டமொன்றில் தொழிலாளர்களாகப் பணியாற்றி
வந்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e7bbdbd4-15f7-4527-a7d8-3389689c038e/26-6a64c2d918eb0.webp' /></p><p> </p><p>அப்போது இருவருக்குமிடையே ஏற்பட்ட தகராறு முற்றிய நிலையிலேயே
இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது என்று முதற்கட்ட விசாரணைகளில்
தெரியவந்துள்ளது.
</p><p>
தாக்குதலின்போது காயமடைந்த சந்தேகநபர், தற்போது பொலிஸ் பாதுகாப்பின் கீழ்
புத்தளம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வருகின்றார்.
</p><p>
சம்பவம் குறித்து முந்தலம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து
வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-25T14:26:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[அன்று காய்கறி விற்றவர், இன்று இந்தியாவிற்காக பதக்கம் வென்றுள்ளார் - யார் இந்த ஜண்டு குமார்?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/vegtable-seller-jhandhu-kumar-won-medal-for-india-1784989549"></link>
            <id>https://news.lankasri.com/article/vegtable-seller-jhandhu-kumar-won-medal-for-india-1784989549</id>
            <summary type="text">&amp;nbsp;காய்கறி விற்று, இ-ரிக்ஸா ஓட்டி வறுமையில் இருந்த ஜண்டு குமார் காமன்வெல்த் தொடரில் இந்தியாவிற்காக பதக்கம் வென்றுள்ளார்.

கிளாஸ்கோ காமன்வெல்த்
...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;காய்கறி விற்று, இ-ரிக்ஸா ஓட்டி வறுமையில் இருந்த ஜண்டு குமார் காமன்வெல்த் தொடரில் இந்தியாவிற்காக பதக்கம் வென்றுள்ளார்.</p><h3>

கிளாஸ்கோ காமன்வெல்த்
</h3><p>
4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள், இந்த ஆண்டு ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் ஜூலை 23 ஆம் திகதி ஆகஸ்ட் 2 ஆம் திகதி வரை நடைபெறுகிறது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0dcd56d8-5a67-447f-a990-a8e63cc9431d/26-6a64c76e65819.webp' /></p><p> 

74 நாடுகளை சேர்ந்த சுமார் 3000 வீரர், வீராங்கனைகல் இதில் கலந்து கொள்கின்றனர். </p><h3> 

ஜண்டு குமார்</h3><p>

இதில், ஆடவர் ஹெவிவெயிட் பாரா பவர்லிப்டிங் பிரிவில் இந்தியாவின் ஜண்டு குமார்(jhandu kumar) வெண்கல பதக்கத்தை வென்றுள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c6d7c27e-9026-472c-966a-8bb0437feccc/26-6a64c76f17b3c.webp' /></p><p>

இது, 2026 காமன்வெல்த் விளையாட்டு தொடரில் இந்தியாவிற்கு கிடைத்துள்ள முதல் பதக்கம் ஆகும். </p><p>

பீகார் மாநிலம், நாலந்தா மாவட்டம், ஹர்நாத் என்ற ஊரில் பிறந்த 28 வயதான ஜண்டு குமார், தனது 5 வயதிலே போலியோ நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார்.</p><p> 

அவரது பெற்றோர் சிறிய காய்கறி ஒன்றை நடத்தி வந்துள்ளனர். அவரது பெற்றோருக்கு பக்கபலமாக இவரும் காய்கறி விற்று வந்துள்ளார். </p><p>

தினமும் காய்கறிகள் வாங்குவதற்காக பீகார் ஷெரீஃபிற்கு சுமார் 20 கி.மீ பயணம் செய்து, அவற்றை மீண்டும் கொண்டு வந்து சந்தையில் விற்பேன் என தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9459fd53-1985-42b9-8568-ac26aa7757bb/26-6a64c76fbd255.webp' /></p><p> 

அதன்பின்னர், மேம்பாலம் கட்டுவதற்காக அவரது காய்கறி கடை அங்கிருந்து அகற்றப்பட்டபோது தனது வருமானத்திற்காக, நண்பர்களிடம் கடன் பெற்று மின்சார ரிக்ஸா வாங்கி ஓட்டி வந்துள்ளார். </p><p>

2016 ஆம் ஆண்டு முதல் உடற்பயிற்சிக் கூடத்திற்குச் செல்லும் ஜண்டு குமாருக்கு அப்போது பாரா பவர்லிஃப்டிங் பற்றி எதுவும் தெரியவில்லை. 

2018 ஆம் ஆண்டில் அதுகுறித்து தெரிய வந்த போது, அதற்காக கடுமையாக பயிற்சி செய்ய தொடங்கியுள்ளார்.
</p><p>
2023 ஆம் ஆண்டில் தேசிய பாரா பளுதூக்கும் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்பதற்காக அவர் தனது மின்சார ஆட்டோவை விற்றார். </p><p>

ஜண்டுவின் ஆர்வத்தை கவனித்த தேசியப் பயிற்சியாளர் ராஜேந்தர் சிங் ரஹேலு, காந்திநகரில் உள்ள இந்திய விளையாட்டு ஆணையத்தின் தேசிய சிறப்பு மையத்தில் பயிற்சி பெறுமாறு ஜண்டுவை அழைத்தார்.
</p><p>
அதைத்தொடர்ந்து, முதல் கேலோ இந்தியா பாரா விளையாட்டுப் போட்டிகளில் வெள்ளிப் பதக்கம், ஆசியா-ஓசியானியா திறந்தநிலை பாரா பளுதூக்கும் சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலப் பதக்கம் என பல்வேறு போட்டிகளை பதக்கங்களை குவிக்க தொடங்கியுள்ளார். </p><p> 

பதக்கம் வென்ற பின்னர் பேசிய ஜண்டு குமார், "நான் பறப்பது போல் உணர்கிறேன். இது எனது முதல் பதக்கம். என் மனதில் ஒரே ஒரு எண்ணம் மட்டுமே ஓடிக்கொண்டிருந்தது: நான் இந்தப் பதக்கத்தை வென்றே ஆக வேண்டும் என தெரிவித்துள்ளார். </p><p>

மேலும், தனது குடும்பத்தினர், பயிற்சியாளர்கள் மற்றும் தனது விளையாட்டு வாழ்க்கை முழுவதும் தனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.</p><p> 

அவர்கள் என்னை இவ்வளவு பயிற்சி செய்ய அனுமதித்ததற்கும், என் மீது இவ்வளவு அன்பு காட்டியதற்கும் நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். நான் மிகவும் நன்றாக உணர்கிறேன். எதிர்காலத்தில் இன்னும் சிறப்பாகச் செயல்பட முயற்சிப்பேன் என தெரிவித்துள்ளார்.
</p><p>
இந்திய விளையாட்டு ஆணையம் (SAI) குறித்து பேசிய அவர், "நான் அவர்களுக்கு மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். நாங்கள் அங்கே பயிற்சி செய்கிறோம், ஒரு வகையில் இந்தப் பதக்கம் அவர்களுக்கே சொந்தமானது," என்று கூறினார்.&nbsp;</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">A spectacular performance by Jhandu Kumar, who has opened India’s medal tally at the <a href="https://x.com/hashtag/CWG2026?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#CWG2026</a> by winning a Bronze in the Men’s Heavyweight Para Powerlifting event! Congratulations to him. His achievement is a powerful reflection of immense strength, unwavering determination and… <a href="https://t.co/kMdkU6RRAF">pic.twitter.com/kMdkU6RRAF</a></p>&mdash; Narendra Modi (@narendramodi) <a href="https://x.com/narendramodi/status/2080873132559323405?ref_src=twsrc%5Etfw">July 25, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>
பதக்கம் வென்றுள்ள ஜண்டு குமாருக்கு இந்திய பிரதமர் மோடி உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-25T14:25:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாதாள உலகக்குழு குற்றவாளிகளை அதிரடியாக கைது செய்த பொலிஸ் அதிகாரி! மனைவி தொடர்பில் வழக்குத்தாக்கல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/senior-police-office-files-case-against-wife-1784940567"></link>
            <id>https://tamilwin.com/article/senior-police-office-files-case-against-wife-1784940567</id>
            <summary type="text">நாட்டை உலுக்கிய பிரபல பாதாள உலகக்குழு தலைவர்கள் பலரை கைது செய்த உயர் பொலிஸ் அதிகாரியொருவர், தனது மனைவியினால் வீட்டு வன்முறைக்கு உட்படுத்தப்படுவதாக நீத...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டை உலுக்கிய பிரபல பாதாள உலகக்குழு தலைவர்கள் பலரை கைது செய்த உயர் பொலிஸ் அதிகாரியொருவர், தனது மனைவியினால் வீட்டு வன்முறைக்கு உட்படுத்தப்படுவதாக நீதிமன்றில் வழக்குத்தாக்கல் செய்துள்ளார்.</p><p>நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சர்ச்சைக்குரிய சந்தேகநபர்களை கைது செய்யும் நடவடிக்கைகளுக்கு அண்மையில் தலைமை தாங்கிய சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவரே இவ்வாறு நீதிமன்றின் உதவியை நாடியுள்ளார்.</p><p></p><h2>வீட்டு வன்முறை தொடர்பாக வழக்குத்தாக்கல் </h2><p>
</p><p>குறித்த உயர் பொலிஸ் அதிகாரி, தனது மனைவிக்கு எதிராக தொடர்ந்த வீட்டு வன்முறை வழக்கு தொடர்பாக அவரது மனைவி நீதிமன்றத்தில் எழுத்துப்பூர்வ உரைகளை சமர்ப்பித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bbf89759-a4d7-44b9-ba69-e59f66bad80b/26-6a64409267cc4.webp' /></p><p>தனது மனைவியிடமிருந்து தனக்கும் தனது குழந்தைகளுக்கும் ஏற்படும் அச்சுறுத்தல்கள் மற்றும் வன்முறைச்செயல்கள் காரணமாக பாதுகாப்பு உத்தரவை வழங்குமாறு குறித்த பொலிஸ் அதிகாரி நீதிமன்றத்தை கேட்டுக்கொண்டுள்ளார்.</p><p>தான் பணிபுரியும் இடத்திற்கு வந்து இடையூறு விளைவிப்பது, தேவையற்ற தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டு தொந்தரவு செய்வது மற்றும் பல்வேறு அச்சுறுத்தல்களை விடுப்பது போன்ற காரணங்களால் தான் கடுமையான உளவியல் மற்றும் சுகாதார ரீதியிலான பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளதாக தனது முறைப்பாட்டில் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p>
எவ்வாறாயினும், குறித்த பொலிஸ் அதிகாரியின் மனைவி, கணவரால் சுமத்தப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளையும் நிராகரித்துள்ளார்.</p><h2>நீதிமன்றில் எழுத்துப்பூர்வ கடிதம் தாக்கல்</h2><p> 
இது தொடர்பில் தனது சட்டத்தரணி ஊடாக எழுத்துப்பூர்வ விளக்கத்தை நீதிமன்றில் தாக்கல் செய்துள்ளார்.</p><p>
இது ஒரு வீட்டு வன்முறை அல்ல என்றும், கணவரின் அதிகப்படியான பணிச்சுமை மற்றும் குழந்தைகளுக்காக நேரத்தை ஒதுக்காமை போன்ற காரணங்களை அடிப்படையாகக்கொண்ட ஒரு சாதாரண குடும்பத்தகராறு மட்டுமே என்றும் மனைவியின் சட்டத்தரணி நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டியுள்ளரார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5e24f9bf-82ad-47b2-9fba-52d8f39d64a1/26-6a6408191b65e.webp' />&nbsp;&nbsp;</p><p>
</p><p>பொலிஸ் அதிகாரி குறிப்பிடுவது போன்ற வன்முறைச்சம்பவங்கள் நடந்துள்ளன என்பதை உறுதிப்படுத்த எந்தவொரு மருத்துவ அறிக்கையோ அல்லது சுயாதீன சாட்சியங்களோ சமர்ப்பிக்கப்படவில்லை என்றும் மனைவியின் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளது.</p><p>
இதற்கமைய, தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ள தற்காலிக பாதுகாப்பு உத்தரவை இரத்து செய்யுமாறு அவர் நீதிமன்றத்திடம் மேலும் கோரிக்கை விடுத்துள்ளதாக சிங்கள இணைய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
</p><p>குறித்த உயர் பொலிஸ் அதிகாரியின் தரப்பிலிருந்து இந்த விவகாரம் தொடர்பில் இதுவரையில் அதிகாரபூர்வ அறிவிப்புக்கள் எதுவும் வெளியிடப்படவில்லை என்றும் கூறப்படுகின்றது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-25T14:24:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>H. A. Roshan</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தியா செல்லும் இலங்கையர்களுக்கு விசா தொடர்பில் வெளியான அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/visas-for-sri-lankans-traveling-to-india-1784987752"></link>
            <id>https://ibctamil.com/article/visas-for-sri-lankans-traveling-to-india-1784987752</id>
            <summary type="text">இலங்கையர்களுக்கு காலதாமதமின்றி மற்றும் சுமுகமாக விசாக்களை வழங்குவது எமது நிலையான கொள்கையாகும் என இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

இந்தியாவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையர்களுக்கு காலதாமதமின்றி மற்றும் சுமுகமாக விசாக்களை வழங்குவது எமது நிலையான கொள்கையாகும் என இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
</p><p>
இந்தியாவிற்குப் பயணிக்கும் இலங்கையர்களும் இ-விசா வசதியைப் பெற முடியும். எனினும், இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் ஊடாக விண்ணப்பிக்க விரும்பும் இலங்கைப் பிரஜைகள், ஒன்லைனில் விண்ணப்பித்து இந்திய துணைத்தூதரக விண்ணப்ப மையங்களில் தங்களது விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் இந்திய உயர்ஸ்தானிகராலயம் குறிப்பிட்டுள்ளது.&nbsp;</p><p>உயர்ஸ்தானிகராலயத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்ககையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,,</p><p>&nbsp;இந்தியாவிற்குப் புனித யாத்திரைக்காக, குறிப்பாக பௌத்த புனிதத்
தலங்களுக்குச் செல்லும் இலங்கையர்களுக்கு, விசாக்கள் விரைவாக
வழங்கப்படுகின்றன.</p><h2>&nbsp;புத்தசாசன,&nbsp; அமைச்சினால் பரிந்துரைக்கப்படும் விண்ணப்பங்கள்</h2><p> </p><p>இயன்றவரை, புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள்
அமைச்சினால் பரிந்துரைக்கப்படும் விண்ணப்பங்கள், 10 அல்லது அதற்கு மேற்பட்ட
யாத்திரிகர்களைக் கொண்ட குழுக்களுக்கு கட்டணமின்றி (Gratis) வழங்கப்படுகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a545183d-177e-4b6b-9edc-4eecbc15ce5d/26-6a64c5681bc69.webp' /></p><p>இந்திய உயர்ஸ்தானிகராலயத்திற்காகச் செயல்பட்ட விசா சேவை வழங்குநர் நிறுவனம்
மாற்றப்பட்டிருந்த காரணத்தால், குறுகிய காலத்திற்கு இந்நடைமுறை
நிறுத்தப்பட்டிருந்தது. தற்போது, 2026 ஜூலை 7 ஆம்திகதி முதல் புதிய சேவை
வழங்குநர் தனது பணிகளைத் தொடங்கியுள்ளதையடுத்து, இலங்கை யாத்திரிகர்களுக்கான
கட்டணமில்லா விசா வழங்கும் நடைமுறை மீண்டும் அறிமுகப்படுத்தப்படுகிறது.</p><p>&nbsp;முன்னர் இருந்த நடைமுறையைப் போலவே, இவ்வாறான கோரிக்கைகள் புத்தசாசன, சமய
மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் ஊடாக அனுப்பப்பட வேண்டும். 10 அல்லது
அதற்கு மேற்பட்டோர் கொண்ட குழுவாக விண்ணப்பிக்க முடியும்.</p><p></p><p> </p><h2>உயிரியல் அடையாளத் தகவல்</h2><p>மேலும்,
விண்ணப்பதாரர்கள் தங்களது உயிரியல் அடையாளத் தகவல்களை (Biometrics) பதிவு
செய்வதற்காக குழுவாகவோ அல்லது தனித்தனியாகவோ தமக்குச் சௌகரியமான முறையில் ICAC
மையங்களுக்கு வரலாம். இது இந்திய அரசின் புதிய விதிமுறைகளின் கீழ்
கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எனினும், 12 வயது முதல் 70 வயது வரையிலானவர்களுக்கே
உயிரியல் அடையாளப் பதிவு அவசியமாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ed31ae86-d63e-42a0-99e1-58ef5b457e5c/26-6a64c568bfd52.webp' /></p><p>&nbsp;உயிரியல் அடையாளப் பதிவுக்காக ICAC மையங்களுக்கு வருகை தரும் ஏனைய மூத்த
குடிமக்களுக்காக, அவர்களின் காத்திருப்பு நேரத்தை இயன்றவரை குறைக்கும் வகையில்
சிறப்பு மற்றும் விரைவுபடுத்தப்பட்ட நடைமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
</p><p>உயிரியல் அடையாளத் தகவல்களைப் பதிவு செய்வதன் மூலம், அவர்கள் இந்தியாவிற்கு
வந்தடைந்தபோது குடிவரவு செயல்முறைகளை சுலபமாகவும் வசதியாகவும் நிறைவு செய்ய
முடியும்.
</p><p> மேலே குறிப்பிடப்பட்ட நடைமுறையின்படி விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கும்
இலங்கை யாத்திரிகர்களுக்கு எந்தவித விசா கட்டணமும் இல்லை. </p><p>எனவே, இலங்கை
யாத்திரிகர்களுக்கான விசா கட்டணத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளது என்ற கேள்வியே
எழுவதில்லை. இருப்பினும், ICAC வழங்கும் சேவைகளுக்காக, விண்ணப்பதாரர்கள்
இலங்கை ரூபாய் 1,855/- சேவைக் கட்டணத்தைச் செலுத்த வேண்டியுள்ளது.&nbsp; &nbsp; &nbsp; &nbsp; </p><p>[Q7ZEERM[</p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p>&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;&nbsp;</p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-25T14:17:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[கம்பளை- மகாவலி ஆற்றில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/male-body-found-floating-in-the-gampola-river-1784988505"></link>
            <id>https://tamilwin.com/article/male-body-found-floating-in-the-gampola-river-1784988505</id>
            <summary type="text">கம்பளைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட போத்தலாப்பிட்டிய –
பாத்திமா காடன் பகுதிக்கு அருகிலுள்ள மகாவலி ஆற்றில் இருந்து ஆண் ஒருவரின்
சடலம் மீட்கப்பட்டுள்ள பொ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கம்பளைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட போத்தலாப்பிட்டிய –
பாத்திமா காடன் பகுதிக்கு அருகிலுள்ள மகாவலி ஆற்றில் இருந்து ஆண் ஒருவரின்
சடலம் மீட்கப்பட்டுள்ள பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>

ஆற்றின் கரையோரத்தில் சடலம் ஒன்று கிடப்பதை அவதானித்த பொதுமக்கள், உடனடியாக
இது குறித்துக் கம்பளைப் பொலிஸாருக்குத் தகவல் வழங்கியுள்ளனர்.</p><p>மீட்கப்பட்ட சடலம், நாவலப்பிட்டி சேலம்பிரிட்ஜ் பகுதியைச் சேர்ந்த சுமார் 48
வயதுடைய நபர் ஒருவருடையது என ஆரம்பகட்ட விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.</p><p></p><h2>மேலதிக விசாரணை</h2><p>
</p><p>
மரணத்துகான காரணம் இதுவரை உறுதிப்படுத்தப்படாத நிலையில், மேலதிக
விசாரணைகளுக்கும் பிரேத பரிசோதனைக்கும் உட்படுத்துவதற்காகச் சடலம் கம்பளை ஆதார
மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8be2ac43-411d-4cc3-8088-c9e4fb54aad7/26-6a64c51b529a7.webp' /></p><p>
</p><p>
சம்பவம் குறித்துக் கம்பளைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து
வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-25T14:16:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கூகுள் நிறுவனத்திற்கு 1 பில்லியன் டொலர் அபராதம்: ஐரோப்பிய ஒன்றியத்திற்கு ட்ரம்ப் கடும் எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/1-billion-fine-for-google-trump-european-union-1784987736"></link>
            <id>https://tamilwin.com/article/1-billion-fine-for-google-trump-european-union-1784987736</id>
            <summary type="text">கூகுள் நிறுவனம் தனது தேடல் முடிவுகளில் சொந்த சேவைகளுக்கு முன்னுரிமை
அளித்ததாகவும், போட்டி நிறுவனங்களை முடக்கியதாகவும் கூறி, ஐரோப்பிய ஒன்றியம் 1
பில்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கூகுள் நிறுவனம் தனது தேடல் முடிவுகளில் சொந்த சேவைகளுக்கு முன்னுரிமை
அளித்ததாகவும், போட்டி நிறுவனங்களை முடக்கியதாகவும் கூறி, ஐரோப்பிய ஒன்றியம் 1
பில்லியன் டொலர் (சுமார் 890 மில்லியன் யூரோ) அபராதம் விதித்துள்ளது.</p><p>

இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடும் கண்டனம்
தெரிவித்துள்ளார்.</p><p>

ஐரோப்பிய ஒன்றியத்தின் டிஜிட்டல் சந்தை சட்டத்தை கூகுள் மீறியதாக இந்த அபராதம்
விதிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>கூகுள் நிறுவனம்</h2><p>

கூகுள் நிறுவனம் தனது தேடல் பக்கங்களில் பிற நிறுவனங்களின் சேவைகளை விடத் தனது
ஷொப்பிங், சுற்றுலா மற்றும் பிற சேவைகளுக்கு முன்னுரிமை அளித்ததாகவும், பிளே
ஸ்டோர் மூலம் பிற ஆப் உருவாக்கிகள் தங்களது வாடிக்கையாளர்களுக்குச் சலுகைகளை
நேரடியாக வழங்குவதைத் தடுத்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/febeba52-be44-4d87-b42c-3341943cfe9c/26-6a64c1abd37d5.webp' /></p><p>

இந்த முடிவுக்கு உடனடியாகப் பதிலடி கொடுத்த ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்,
ஐரோப்பிய ஒன்றியம் அமெரிக்கத் தொழில்நுட்ப நிறுவனங்களை இலக்கு வைத்துச்
செயல்படுவதாகவும், அமெரிக்கா ஐரோப்பாவிற்கான பணப்பெட்டி அல்ல என்றும்
சாடியுள்ளார்.</p><p>

மேலும், சட்டவிரோதமான இந்த நடவடிக்கைகளுக்காக ஐரோப்பிய ஒன்றியம் மிகப் பெரிய
விலையைக் கொடுக்க வேண்டி வரும் என்றும், விரைவில் ஐரோப்பிய பொருட்கள் மீது
கணிசமான வரி விதிக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.</p><p></p><h2>வணிக நடைமுறைகள்</h2><p>

ஐரோப்பிய ஒன்றியத்தின் வணிக நடைமுறைகள் குறித்து விசாரிக்க அமெரிக்க வர்த்தகப்
பிரதிநிதி அலுவலகத்திற்கு உத்தரவிடப் போவதாகவும் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்
தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f62e778e-9033-4367-90d7-a2e8dfd128e5/26-6a64c1ac87da0.webp' /></p><p>
</p><p>
கூகுள் நிறுவனத்தின் உலகளாவிய விவகாரங்களுக்கான தலைவர் கென் வாக்கர், இந்தத்
தீர்ப்பு நுகர்வோருக்கு வழங்கப்படும் சேவையின் தரத்தைக் குறைக்கும் வகையில்
உள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-25T14:01:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[அபூர்வ மருத்துவ பிரச்சினையால் வெளிநாட்டில் இந்தியர் திடீர் மரணம்: அதிர்ச்சியில் குடும்பம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/indian-techie-dies-in-us-rare-aortic-dissection-1784984558"></link>
            <id>https://news.lankasri.com/article/indian-techie-dies-in-us-rare-aortic-dissection-1784984558</id>
            <summary type="text">அமெரிக்காவில் வாழ்ந்துவந்த மென்பொருள் பொறியாளரான இந்தியர் ஒருவர், அபூர்வ மருத்துவ பிரச்சினை ஒன்றின் காரணமாக திடீரென உயிரிழந்துள்ளார்.

வெளிநாட்டில் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவில் வாழ்ந்துவந்த மென்பொருள் பொறியாளரான இந்தியர் ஒருவர், அபூர்வ மருத்துவ பிரச்சினை ஒன்றின் காரணமாக திடீரென உயிரிழந்துள்ளார்.</p><h3>

வெளிநாட்டில் இந்தியர் மரணம்</h3><p>

அமெரிக்காவின் ஒஹையோ மாகாணத்தில் வாழ்ந்து வந்தவர், வெங்கட ரவிதேஜா ரவிபதி (34).&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/856ed422-088a-4c58-8f3d-1e4b5cfc99a4/26-6a64b3f00c31a.webp' /></p><p>
கடந்த வாரம், ரவிக்கு திடீரென இடது காலில் கடுமையான வலி ஏற்பட்டுள்ளது. வலி அப்படியே நெஞ்சு வரை பரவ, உடனடியாக அவரது குடும்பத்தினர் அவசர உதவியை அழைத்துள்ளனர்.
</p><p>
மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட ரவியை பரிசோதித்த மருத்துவர்கள், அவருக்கு ’Type A Aortic Dissection’ என்னும் அபூர்வ பிரச்சினை இருப்பதைக் கண்டறிந்துள்ளனர்.&nbsp;</p><p></p><p>
உடனடியாக அவருக்கு அறுவை சிகிச்சை ஒன்று மேற்கொள்ளப்பட்ட நிலையிலும், மருத்துவர்களால் அவரைக் காப்பாற்ற முடியாமல் போயுள்ளது.
</p><p>
திடீரென ரவி இப்படி ஒரு அபூர்வ பிரச்சினையால் உயிரிழந்ததால், அவரது குடும்பத்தினர் கடும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
</p><p>
ரவிக்கு 26 வயதில் மனைவியும், 2 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-25T14:00:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஒரே வீட்டில் வாழ்ந்தும் 20 ஆண்டுகள் பேசாத தம்பதி ; பிள்ளைகளுக்கு ஷாக் கொடுத்த காரணம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/japan-couple-who-didn-t-speak-for-20-years-viral-1784984403"></link>
            <id>https://jvpnews.com/article/japan-couple-who-didn-t-speak-for-20-years-viral-1784984403</id>
            <summary type="text">&amp;nbsp; ஜப்பானில் 20 ஆண்டுகளாக ஒரே வீட்டில் வசித்தும், மனைவியுடன் ஒரு வார்த்தைகூட பேசாமல் இருந்த கணவர் தொடர்பான சம்பவம், சமூக வலைத்தளங்களில் வைரலாகி கவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; ஜப்பானில் 20 ஆண்டுகளாக ஒரே வீட்டில் வசித்தும், மனைவியுடன் ஒரு வார்த்தைகூட பேசாமல் இருந்த கணவர் தொடர்பான சம்பவம், சமூக வலைத்தளங்களில் வைரலாகி கவனத்தை ஈர்த்துள்ளது.
</p><p>
ஜப்பானின் ஹொக்கைடோ (Hokkaido) பகுதியைச் சேர்ந்த ஒடோ கடாயாமா (Otou Katayama) மற்றும் அவரது மனைவி யுமி கடாயாமா (Yumi Katayama) ஆகியோர், தங்களது மூன்று பிள்ளைகளுடன் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/db30253c-2cf1-4361-b67d-4c1df67a9e5e/26-6a64b35533f0e.webp' /></p><h2>மனைவி,பிள்ளைகள் மீது அன்பு செலுத்தியதால் பொறாமை&nbsp;</h2><p>


குடும்ப வாழ்க்கை வழக்கம்போல தொடர்ந்த போதிலும், கணவர் கடந்த 20 ஆண்டுகளாக மனைவியுடன் நேரடியாகப் பேசாமல் இருந்ததாக கூறப்படுகிறது.

மனைவி ஏதேனும் கேள்வி கேட்டால், தலையசைப்பதன் மூலமாகவோ அல்லது சைகைகள் மூலமாகவோ மட்டுமே அவர் பதிலளித்து வந்துள்ளார். </p><p>இருப்பினும், குடும்பத்தில் பெரிய அளவிலான மோதல்கள் எதுவும் இடம்பெறவில்லை என தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><p>
</p><p>
பெற்றோர் இருவரும் ஒருவருடன் ஒருவர் உரையாடுவதை தாம் ஒருபோதும் பார்த்ததில்லை எனக் கூறிய அவர்களது இளைய மகன், இந்த நிலையை மாற்றுவதற்காக ஜப்பானின் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றின் உதவியை நாடியுள்ளார்.
</p><p>
இதையடுத்து, தம்பதியர் முதன்முதலில் சந்தித்த பூங்காவில் மீண்டும் சந்திக்கும் வகையில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.</p><p></p><p>
</p><p>
அந்த சந்திப்பில், நீண்டகால மௌனத்திற்கான காரணத்தை விளக்கிய கணவர், மனைவி,பிள்ளைகள் மீது அதிக அன்பும் கவனமும் செலுத்தியதால், தனக்குள் பொறாமை உணர்வு ஏற்பட்டதாகவும், அந்த உணர்வின் காரணமாகவே மனைவியிடம் பேசாமல் இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.</p><p>

அத்துடன், 20 ஆண்டுகளுக்குப் பின்னர் முதன்முறையாக மனைவியிடம் பேசிய அவர்,
"நாம் பேசி நீண்ட காலமாகிவிட்டது. இத்தனை ஆண்டுகளாக பிள்ளைகளை சிறப்பாக வளர்த்ததற்கு நன்றி. இனி மீண்டும் பேசி மகிழ்ச்சியாக வாழ்வோம்"
என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.</p><p></p><p>
</p><p>
அந்த தம்பதியரின் மீள்சந்திப்பு காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் மீண்டும் பரவி, உலகம் முழுவதும் பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.</p>]]></content>
            <updated>2026-07-25T14:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜனாதிபதி அநுரகுமார பணிப்புரை ; அதிவிசேட வர்த்தமானி வெளியீடு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/president-anura-extraordinary-gazette-issued-1784983128"></link>
            <id>https://jvpnews.com/article/president-anura-extraordinary-gazette-issued-1784983128</id>
            <summary type="text">&amp;nbsp; ஜனாதிபதி அநுரகுமார பணிப்புரைக்கமைய ஜனாதிபதி சட்டத்தரணிகளை நியமிப்பது தொடர்பான வழிகாட்டல்களில் திருத்தங்களை மேற்கொண்டு அதிவிசேட வர்த்தமானி அறிவி...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; ஜனாதிபதி அநுரகுமார பணிப்புரைக்கமைய ஜனாதிபதி சட்டத்தரணிகளை நியமிப்பது தொடர்பான வழிகாட்டல்களில் திருத்தங்களை மேற்கொண்டு அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
</p><p>
இந்த வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதியின் செயலாளர் என்.எஸ். குமாநாயக்கவினால் வெளியிடப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/75e3b03b-1a00-409e-9388-a7c792d4d2b5/26-6a64ae5a89fe9.webp' /></p><p>

அதற்கமைய, உரிய சட்டத்தரணி குறைந்தபட்சம் 20 வருடங்களாவது உயர் நீதிமன்ற சட்டத்தரணியாகப் பணியாற்றவில்லை எனின், அவர் ஜனாதிபதி சட்டத்தரணியாக நியமிக்கப்படக் கூடாது என குறிப்பிடப்பட்டுள்ளது.
</p><p>
இதேவேளை, ஜனாதிபதி சட்டத்தரணிகளை நியமிப்பதற்கான விண்ணப்பங்களும் கோரப்பட்டுள்ளன.</p><p></p><p>

இதற்கமைய, தகுதிவாய்ந்த சட்டத்தரணிகள் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னர் தமது விண்ணப்பங்களை அனுப்பிவைக்க வேண்டும் எனவும் வர்த்தமானி அறிவித்தலில் அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-25T14:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பில் கொல்லப்பட்ட சீன பிரஜை : வெளிவரும் அதிர்ச்சி தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/chinese-national-killed-in-colombo-1784981649"></link>
            <id>https://ibctamil.com/article/chinese-national-killed-in-colombo-1784981649</id>
            <summary type="text">கொழும்பில் சீனர்களால் கொல்லப்பட்ட சக சீன பிரஜை தொடர்பில் பல்வேறு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

இதன்படி கொல்லப்பட்ட கோடீஸ்வரரான சீன பிரஜை இணையக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பில் சீனர்களால் கொல்லப்பட்ட சக சீன பிரஜை தொடர்பில் பல்வேறு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

இதன்படி கொல்லப்பட்ட கோடீஸ்வரரான சீன பிரஜை இணையக்குற்றவலையமைப்பில் முக்கிய புள்ளி என தெரியவந்துள்ளது.
</p><p>
சர்வதேச கணினி குற்ற வலையமைப்பின் தலைவரும் கோடீஸ்வரருமான ஹாவோ போன் என்ற சீனப் பிரஜையே கொல்லப்பட்டவராவார்.</p><p>இந்த கொலை சம்பவத்திற்குப் பின்னால் சர்வதேச மாஃபியா கும்பல் ஒன்று இருப்பதாக விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.</p><p> </p><h2>&nbsp;பணம் தொடர்பான கடுமையான தகராறு</h2><p>கணினி குற்றங்கள் மூலம் சம்பாதித்த கோடிக்கணக்கான ரூபாய் பணம் தொடர்பான கடுமையான தகராறு இந்த மனிதாபிமானமற்ற கொலைக்கு காரணம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7faa28e9-37a6-4396-89e6-48e8032ac4cd/26-6a64aa752d8cc.webp' /></p><p>
</p><p>





இந்த குற்றத்தில் சுமார் இருபது சீனப் பிரஜைகள் சம்பந்தப்பட்டுள்ளனர். சம்பவம் நடந்த அன்று நண்பர்களாக நடித்த இரண்டு சீனப் பிரஜைகள் பாதிக்கப்பட்ட கோடீஸ்வரரை துறைமுக நகரில் உள்ள ஒரு பாலத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.</p><p></p><h2>கொடூரமான சித்திரவதைகளைச் செய்து, வெட்டி கொலை</h2><p> அவர்கள் ஒன்றாக மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட சீனக் கும்பல் அவரைக் கடத்திச் சென்றுள்ளது. அதன் பின்னர் எஹலியகொட கரதன பிரதேசத்தில் உள்ள அடர்ந்த காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்று, கைகால்களைக் கட்டி, கொடூரமான சித்திரவதைகளைச் செய்து, வெட்டி கொலை செய்து உடலை கற்களால் மூடிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c8e57a38-4480-4737-8005-5d9c572ee253/26-6a64aa747c0f9.webp' /></p><p>
</p><p>
சம்பவம் தொடர்பாக கொழும்பு குற்றப் பிரிவு மற்றும் எஹலியகொட காவல்துறையினர் இணைந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp; &nbsp; &nbsp; </p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p>&nbsp; &nbsp; &nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-07-25T13:59:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[லண்டன் வாழ் தமிழ் மக்களுக்கு எச்சரிக்கை - பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/police-warned-tamil-people-in-london-1784985953"></link>
            <id>https://tamilwin.com/article/police-warned-tamil-people-in-london-1784985953</id>
            <summary type="text">பிரித்தானியாவின் லண்டனில் வசிக்கும் தமிழர்கள் உட்பட தெற்காசிய நாட்டவர்கள் தங்களது வீடுகளின் பாதுகாப்பு குறித்து மிகவும் அவதானமாக இருக்குமாறு பொலிஸார் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரித்தானியாவின் லண்டனில் வசிக்கும் தமிழர்கள் உட்பட தெற்காசிய நாட்டவர்கள் தங்களது வீடுகளின் பாதுகாப்பு குறித்து மிகவும் அவதானமாக இருக்குமாறு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
</p><p>
இலங்கை மற்றும் இந்திய மக்கள் அடங்கலாக தெற்காசிய நாட்டவர்கள் அதிகளவான தங்கத்தை தம்வசம் வீடுகளில் வைத்துள்ளனர்.</p><p> 

திருட்டு சம்பவங்களில் பல தமிழ் குடும்பங்கள் தாலிக்கொடி உட்பட பெறுமதியான தங்கம் மற்றும் பணத்தை இழந்துள்ளனர்.</p><h2><b> திருட்டு சம்பவங்கள்</b></h2><p>இவ்வாறான நிலையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/30df7e02-9b25-4915-9e6f-9a6e150aaba7/26-6a64bead2c331.webp' /></p><p>இந்நிலையில் லண்டனின் ஈலிங் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் திருட்டு சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக பொலிஸார் எச்சரித்துள்ளனர்.
</p><p>
வீடுகளை நோட்டமிடும் கொள்ளையர்கள், அங்கு யாரும் இல்லாத சமயங்களில் உள்நுழைந்து கைவரிசையை காட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h3><b> 

முக்கியமான வழிமுறை</b></h3><p>பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே செல்லும் போது மட்டுமன்றி, வீட்டிற்குள் இருக்கும் போதும் கதவுகள் மற்றும் ஜன்னல்களை எப்போதும் பூட்டி வைத்திருப்பதை உறுதிப்படுத்துமாறு கோரப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d02b0380-35fd-486b-816a-3bc2f934b4e0/26-6a64beadf3bf9.webp' /></p><p>திருட்டுச் சம்பவங்களில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள பொதுமக்கள் முக்கியமான வழிமுறைகளைப் பின்பற்றுமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்:</p>]]></content>
            <updated>2026-07-25T13:49:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஐ.நா மனித உரிமைகள் தலைவராக வோல்கர் டர்க் தேர்வு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/volker-t-rk-selected-as-un-human-rights-chief-1784986586"></link>
            <id>https://tamilwin.com/article/volker-t-rk-selected-as-un-human-rights-chief-1784986586</id>
            <summary type="text">அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளின் கடும் எதிர்ப்புகளுக்கு
மத்தியிலும், ஆஸ்திரியாவைச் சேர்ந்த சர்வதேச வழக்கறிஞரான வோல்கர் டர்க் ஐக்கிய
ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளின் கடும் எதிர்ப்புகளுக்கு
மத்தியிலும், ஆஸ்திரியாவைச் சேர்ந்த சர்வதேச வழக்கறிஞரான வோல்கர் டர்க் ஐக்கிய
நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையராக இரண்டாவது முறையாகத்
தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.</p><p>

1993-ஆம் ஆண்டு ஐ.நா மனித உரிமைகள் ஆணையர் பதவி உருவாக்கப்பட்ட பிறகு,
தொடர்ச்சியாக இரண்டாவது முழு பதவிக் காலத்திற்குத் தேர்ந்தெடுக்கப்படும் முதல்
நபர் என்ற பெருமையை வோல்கர் டர்க் பெற்றுள்ளார்.
</p><p>
ஐ.நா பொதுச்செயலாளர் அந்தோனியோ குட்டேரஸ் சமர்ப்பித்த முன்மொழிவின்
அடிப்படையில் ஐ.நா பொதுச்சபையில் வாக்கெடுப்பு நடைபெற்றது.</p><p></p><h2>கோரிக்கை</h2><p>
</p><p>
இந்த வாக்கெடுப்பில் 144 நாடுகள் வோல்கர் டர்க்கிற்கு ஆதரவாகவும், 10 நாடுகள்
எதிராகவும் வாக்களித்தன. 13 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ea6ea6cb-5b23-4415-9c9d-5f8eee343f8c/26-6a64bdd4eede6.webp' /></p><p>
</p><p>
வாக்கெடுப்பை அடுத்த வாரம் வரை ஒத்திவைக்க அமெரிக்கா மேற்கொண்ட முயற்சியும்,
அவரது பதவிக் காலத்தை இந்த ஆண்டின் இறுதி வரை மட்டுமே நீட்டிக்க வேண்டும் என்ற
ரஷ்யாவின் கோரிக்கையும் பொதுச்சபையால் நிராகரிக்கப்பட்டன.
</p><p>
மனித உரிமைகள் ஆணையர் என்ற முறையில், உறுப்பு நாடுகளின் மனித உரிமை மீறல்களைப்
பகிரங்கமாக விமர்சித்ததே இவரது தேர்வுக்கு வல்லரசு நாடுகள் எதிர்ப்புகளைப்
பதிவு செய்ய முக்கியக் காரணமாக அமைந்தது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-25T13:47:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்த வார சண்டே எல்லா தொலைக்காட்சியிலும் விஜய் பட ஸ்பெஷல் தான்... என்னென்ன படங்கள் பாருங்க...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/actor-vijay-movies-sunday-special-1784987069"></link>
            <id>https://cineulagam.com/article/actor-vijay-movies-sunday-special-1784987069</id>
            <summary type="text">நடிகர் விஜய்தளபதி விஜய், சினிமாவில் இளம் வயதில் நடிக்க துவங்கி 69வது படங்கள் வரை நடித்துள்ளார். இன்னமும் இவர் நடித்தால் படங்கள் பார்க்க, அதை கொண்டாட க...</summary>
            <content type="html"><![CDATA[<h2>நடிகர் விஜய்</h2><p>தளபதி விஜய், சினிமாவில் இளம் வயதில் நடிக்க துவங்கி 69வது படங்கள் வரை நடித்துள்ளார். இன்னமும் இவர் நடித்தால் படங்கள் பார்க்க, அதை கொண்டாட கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.</p><p>ஆனால் அவரோ நடிப்பு போதும், என்னை வாழ வைத்த மக்களுக்கு நல்லது செய்ய நான் வேறு களம் இறங்குகிறேன் என அரசியலில் களமிறங்க நிறைய விஷயங்கள் செய்து வருகிறார். இத்தனை வருட ஆட்சி காலத்தில் நடக்காத விஷயங்கள் எல்லாம் விஜய் ஆட்சி காலத்தில் நடந்து வருகிறது.</p><p>மக்களும் விஜய்யின் புதிய பயணத்திற்கு முழு ஆதரவு கொடுத்து வருகிறார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8c6572c2-7535-48c3-a3be-ebdd8c0622ab/26-6a64bdbf49d12.webp' /></p><h2>சண்டே ஸ்பெஷல்</h2><p>சண்டேவோ, ஸ்பெஷல் தினமோ எதுவாக இருந்தாலும் தொலைக்காட்சியில் விஜய் படங்கள் இல்லாமல் இருக்காது. </p><p>ஆனால் இந்த வாரம் இன்னும் செம ஸ்பெஷல் தான், விஜய்யின் நிறைய படங்கள் ஒளிபரப்பாகிறது. </p><p>
ஜெயா மூவிஸ்- சனிக்கிழமை நிலாவே வா, இரவு 7 மணிக்கு
</p><p>ஜீ திரை- ஞாயிற்றுக்கிழமை மெர்சல், மாலை 4 மணி
</p><p>ஜெயா டிவி- ஞாயிற்றுக்கிழமை வசீகரா, மாலை 6.30 மணி
</p><p>சன் டிவி- ஞாயிற்றுக்கிழமை பைரவா, மாலை 6.30 மணி</p><p>ஜீ தமிழ்- தளபதி கச்சேரி, டான்ஸ் ஜோடி டான்ஸ் நடன நிகழ்ச்சி</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/j_uvC8MiYs0" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-07-25T13:44:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[போதைப்பொருள் கடத்தல் மூலம் கிடைத்த சொத்துக்கள் : காவல்துறை எடுத்த முடிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/freezing-of-assets-through-drug-trafficking-1784985542"></link>
            <id>https://ibctamil.com/article/freezing-of-assets-through-drug-trafficking-1784985542</id>
            <summary type="text">போதைப்பொருள் கடத்தல் மூலம் கிடைத்த பணத்தில் சொத்துக்களைச் சேர்த்தமை தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையை அடுத்து அந்த சொததுக்களை முடக்க நடவடிக்கை எடுக்கப்பட...</summary>
            <content type="html"><![CDATA[<p>போதைப்பொருள் கடத்தல் மூலம் கிடைத்த பணத்தில் சொத்துக்களைச் சேர்த்தமை தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையை அடுத்து அந்த சொததுக்களை முடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p>


 இப்பகமுவ பகுதியைச் சேர்ந்த ஒருவர் அளித்த புகாரின் பேரில், சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப் பிரிவு இது தொடர்பாக விசாரணை நடத்தியுள்ளது.</p><h2>சொத்துக்கள் முடக்கம்</h2><p>விசாரணையின் போது, ​​சந்தேக நபர் சட்டவிரோதமாகப் பெற்ற பணத்தில் சுமார் 5 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள ஒரு உழவு இயந்திரத்தை வாங்கியதும், 10 மில்லியன் ரூபாயை (10,000,000/=) ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்ததும் தெரியவந்துள்ளது என்று காவல்துறை தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/207ff367-789e-4f15-a098-840ef3aa3822/26-6a64bd1fd3409.webp' /></p><p>

அதன்படி, பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ், நேற்று (24) முதல் 07 நாட்களுக்குக் குறிப்பிட்ட சொத்துக்களை முடக்க உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப் பிரிவால் மேலதிக விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-25T13:41:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ் பல்கலைகழக முகாமைத்துவ கற்கைகள் பீட விரிவுரையாளர் பேராசிரியராகப் பதவி உயர்வு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/jaffna-university-lecturer-promoted-professor-1784984588"></link>
            <id>https://tamilwin.com/article/jaffna-university-lecturer-promoted-professor-1784984588</id>
            <summary type="text">முகாமைத்துவ கற்கைகள் வணிக பீடத்தின் சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் கற்கை
அலகின் இணைப்பாளரும், சந்தைப்படுத்தல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளருமான சாதனா...</summary>
            <content type="html"><![CDATA[<p>முகாமைத்துவ கற்கைகள் வணிக பீடத்தின் சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் கற்கை
அலகின் இணைப்பாளரும், சந்தைப்படுத்தல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளருமான சாதனா வைகுந்தவாசன் பேராசிரியராகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.</p><p>நேற்றைய தினம்(24) பல்கலைக்கழகப் பேரவையினால் வழங்கப்பட்ட ஒப்புதலை அடுத்தே இவர் இன்று(25.07.2026) பேராசிரியராக நியமிக்கப்பட்டுள்ளார்.</p><p></p><h2>பேராசிரியராக பதவி உயர்வு</h2><p>பல்கலைக்கழகப் பேரவையின் மாதாந்தக் கூட்டம் இன்று 25 ஆம் திகதி சனிக்கிழமை,
துணைவேந்தர் சிரேஸ்ட பேராசிரியர் தி. வேல்நம்பி தலைமையில் இடம்பெற்றுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e0c4191b-378e-4f9b-aa86-670ec7012355/26-6a64b832dd241.webp' /></p><p>
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுச் சுற்றறிக்கை நியமங்களுக்கு அமைய திறமை
அடிப்படையில் பேராசிரியர் பதவிக்கு விண்ணப்பித்த சுற்றுலா மற்றும்
விருந்தோம்பல் கற்கை அலகின் இணைப்பாளரும், சந்தைப்படுத்தல் துறையின் சிரேஷ்ட
விரிவுரையாளருமான சாதனா வைகுந்தவாசனின் மதிப்பீடு மற்றும் நேர்முகத்
தேர்வு முடிவுகள் நேற்றைய பேரவைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
</p><p>
அவற்றின்படி, சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் கற்கை அலகின் இணைப்பாளரும்,
சந்தைப்படுத்தல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளருமான சாதனா
வைகுந்தவாசன், சந்தைப்படுத்தல் துறையில் பேராசிரியராகப் பதவி
உயர்த்தப்பட்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-25T13:37:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேட்டோ தளத்தில் உளவு! சீன வம்சாவளி கனடா பெண் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/canadian-citizen-arrested-in-belgium-1784983787"></link>
            <id>https://tamilwin.com/article/canadian-citizen-arrested-in-belgium-1784983787</id>
            <summary type="text">பெல்ஜியத்தில் உள்ள நேட்டோ தளத்தில் பயிற்சிப் பணியாளராக பணியாற்றிய சீன
வம்சாவளியைச் சேர்ந்த கனடா நாட்டுப் பெண் ஒருவர் உளவு பார்த்த குற்றச்சாட்டின்
பே...</summary>
            <content type="html"><![CDATA[<p>பெல்ஜியத்தில் உள்ள நேட்டோ தளத்தில் பயிற்சிப் பணியாளராக பணியாற்றிய சீன
வம்சாவளியைச் சேர்ந்த கனடா நாட்டுப் பெண் ஒருவர் உளவு பார்த்த குற்றச்சாட்டின்
பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பெல்ஜியம் அரசு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
</p><p>
மூன்றாம் நாடு ஒன்றிற்காக உளவு பார்த்ததாகவும், குற்றவியல் அமைப்பு ஒன்றில்
உறுப்பினராக இருந்ததாகவும் அவர் மீது சந்தேகம் எழுந்துள்ளதாக அரசு வழக்கறிஞர்
தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>கைது செய்யப்பட்டப் பெண்</h2><p>
</p><p>
இருப்பினும், கைது செய்யப்பட்ட பெண்ணின் பெயர் உள்ளிட்ட விவரங்கள் தற்போது
வெளிவிடப்பட மாட்டாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c5298fd9-6fe7-49bc-8b4b-7fce15de98bd/26-6a64b220a1adc.webp' /></p><p>பெல்ஜியத்தின் மான்ஸ் பகுதியில் அமைந்துள்ள 'ஷேப்' எனப்படும் நேட்டோ இராணுவத்
தலைமையகத் தளத்தில் அந்தப் பெண் பயிற்சிப் பணியாளராக பணியாற்றி வந்துள்ளார்
என்பது குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-25T13:35:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[திருமணமாகி 2 குழந்தைக்கு தாய்!! குறையாத கிளாமர் நடிகை பிரணிதா..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/after-2-child-pranita-subhash-recent-photos-post-1784983712"></link>
            <id>https://viduppu.com/article/after-2-child-pranita-subhash-recent-photos-post-1784983712</id>
            <summary type="text">பிரணிதா சுபாஷ்கன்னடம், தெலுங்கு மொழிகளில் நடித்து பின் தமிழில் உதயன் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியவர் தான் நடிகை பிரணிதா சுபாஷ். சகுனி, மாஸ்,...</summary>
            <content type="html"><![CDATA[<h2>பிரணிதா சுபாஷ்</h2><p>கன்னடம், தெலுங்கு மொழிகளில் நடித்து பின் தமிழில் உதயன் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியவர் தான் நடிகை பிரணிதா சுபாஷ். சகுனி, மாஸ், எனக்கு வாய்த்த அடிமைகள் என 4 படங்களில் மட்டுமே தமிழ் மொழியில் நடித்து வந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/30b7f49e-be90-4b02-bf90-69781cedaa41/26-6a64b0a28ac55.webp' /></p><p> அதன்பின் ஒருசில படத்தில் மட்டுமே நடித்த பிரணிதா, 2021ல் நிதின் ராஜு என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். 2022ல் ஒரு பெண் குழந்தையை பெற்ற பிரணிதா, 2024ல் ஒரு ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். </p><p>குழந்தைகள் பெற்றப்பின்பும் 33 வயதில் குறையாத அழகு மற்றும் கிளாமர் லுக்கில் வலம் வருகிறார். தற்போது ஜூலை மாதம் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார் பிரணிதா சுபாஷ்.</p><p><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/p/DbM-w_ukqOy/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/p/DbM-w_ukqOy/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/p/DbM-w_ukqOy/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by Pranita Subhash (@pranitha.insta)</a></p></div></blockquote> <script async src="//www.instagram.com/embed.js"></script></p>]]></content>
            <updated>2026-07-25T13:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிளிநொச்சியில் STF மக்கள் மோதல்; நடந்தது என்ன ! 9 பேர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/kilinochchi-people-oppose-stf-operation-1784981011"></link>
            <id>https://jvpnews.com/article/kilinochchi-people-oppose-stf-operation-1784981011</id>
            <summary type="text">&amp;nbsp; கிளிநொச்சி, அக்கராயன்குளம் பகுதியில் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் (STF) மேற்கொண்ட சோதனையின் போது, அவர...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; கிளிநொச்சி, அக்கராயன்குளம் பகுதியில் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் (STF) மேற்கொண்ட சோதனையின் போது, அவர்களின் கடமைக்கு இடையூறு விளைவித்து தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் சிலர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
</p><p>
அக்கராயன்குளம் மூக்கப்பன் பகுதியில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி ஒன்று சட்டவிரோதமாக அழிக்கப்பட்டு வருவதாகக் கிடைத்த தகவலுக்கு அமையவே அதிகாரிகள் சோதனையை மேற்கொண்டதாக கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/93e32b4c-5cdd-40a8-b6fb-f44b52c18f69/26-6a64a6147e82f.webp' /></p><p></p><h2>&nbsp;வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு -&nbsp; 9 பேர் கைது</h2><p>
</p><p>
இதன்போது அங்கு இருந்த சிலர் அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு விளைவித்து தாக்குதல் நடத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
</p><p>
நிலவிய பதற்றமான சூழ்நிலையைக் கட்டுப்படுத்துவதற்காக விசேட அதிரடிப்படை அதிகாரிகள் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்த வேண்டியிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><p>

இச்சம்பவத்தில் காயமடைந்த விசேட அதிரடிப்படை அதிகாரிகள் நால்வர் சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும், தற்போது நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதோடு, சம்பவம் தொடர்பில் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>

கைது செய்யப்பட்டவர்களில் ஒருவருக்கு திடீரென ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக அவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.</p><p></p><p> 

சந்தேகநபர்கள் காட்டை அழிப்பதற்குப் பயன்படுத்திய இயந்திரமொன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் அக்கராயன்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp; &nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-25T13:24:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரான்ஸ் - ஸ்பெயினில் விஸ்வரூபம் எடுத்த காட்டுத்தீ: 2 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் வெளியேற்றம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/wildfires-escalate-in-france-and-spain-1784984828"></link>
            <id>https://tamilwin.com/article/wildfires-escalate-in-france-and-spain-1784984828</id>
            <summary type="text">பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் ஆகிய ஐரோப்பிய நாடுகளில் கட்டுக்கடங்காமல் பரவி
வரும் காட்டுத்தீ காரணமாக, சுமார் 2 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் தங்கள்
வீட...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் ஆகிய ஐரோப்பிய நாடுகளில் கட்டுக்கடங்காமல் பரவி
வரும் காட்டுத்தீ காரணமாக, சுமார் 2 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் தங்கள்
வீடுகள் மற்றும் சுற்றுலா விடுதிகளை விட்டு பாதுகாப்பான இடங்களுக்கு
வெளியேற்றப்பட்டுள்ளனர்.
</p><p>
நிலைமையைச் சமாளிக்க பிரான்ஸ் சர்வதேச உதவியைக் கோரியுள்ள நிலையில், ஸ்பெயின்
தேசிய அவசரநிலையை பிரகடனம் செய்துள்ளது.
</p><p>பிரான்சின் போர்டோ மற்றும் கேப் ஃபெரட் உள்ளிட்ட தென்மேற்குப் பகுதிகளில்
காட்டுத்தீ அதிவேகமாகப் பரவி வருகிறது.

கிரோண்டே மற்றும் லேண்டெஸ் பிராந்தியங்களில் இருந்து இதுவரை 1,41,000க்கும்
அதிகமான மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாக பிரான்ஸ் பிரதமர் செபாஸ்டியன் லெகோர்னு
தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>தீவிர ஆலோசனை</h2><p>
</p><p>
நிலைமையைக் கட்டுப்படுத்த பிரெஞ்சு அரசு இராணுவத்தைக் களமிறக்கியுள்ளதுடன்,
ஐரோப்பிய ஒன்றியத்தின் உதவியையும் கோரியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b750830d-885c-4a45-91cf-4c9a99ed2a49/26-6a64b8b0226f8.webp' /></p><p>
</p><p>
தலைநகர் மாட்ரிட்டின் மேற்குப் பகுதியில் பரவி வரும் காட்டுத்தீ தீயணைப்பு
வீரர்களின் கட்டுப்பாட்டைத் தாண்டி எரிகிறது.

பலத்த காற்று காரணமாக இரண்டு பெரிய தீப்பிழம்புகள் ஒன்று சேர்ந்து மாட்ரிட்
பிராந்தியத்தை அச்சுறுத்தி வருகின்றன.அங்கு 25,000-க்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டுள்ளனர். </p><p>பிரதமர் பெட்ரோ
சான்செஸ் அவசர நிலவரங்கள் குறித்து அதிகாரிகளுடன் தீவிர ஆலோசனையில்
ஈடுபட்டுள்ளார்.</p><p></p><h2>கடுமையான வறட்சி</h2><p>
</p><p>
பிரான்சின் பிரசித்தி பெற்ற கடற்கரை சுற்றுலாப் பகுதியான கேப் ஃபெரட்
தீபகற்பத்தில் இருந்து சாலை வழி அடைக்கப்பட்டதால், நூற்றுக்கணக்கான மக்கள்
படகுகள் மூலம் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1903238b-7626-4198-b0a7-7eba6798303d/26-6a64b8b0c802a.webp' /></p><p>
</p><p>
மே மாதம் முதல் ஐரோப்பாவைத் தாக்கி வரும் தொடர் வெப்ப அலைகள் மற்றும் கடுமையான
வறட்சியே இத்தகைய பெரும் காட்டுத்தீக்கு முக்கியக் காரணம் என ஆய்வாளர்கள்
சுட்டிக்காட்டியுள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-25T13:23:17+00:00</updated>
        </entry>
    </feed>
