<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-09-03T18:44:07+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்க ஆயுத கையிருப்பு: ட்ரம்பின் அதிரடி பதில்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/trumps-latest-rant-reports-of-weapons-shortage-1788459354"></link>
            <id>https://tamilwin.com/article/trumps-latest-rant-reports-of-weapons-shortage-1788459354</id>
            <summary type="text">அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரானுடனான போரின் போது அமெரிக்காவின் ஆயுதக் கையிருப்பு குறைந்து வருவதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை மறுத்ததுட...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரானுடனான போரின் போது அமெரிக்காவின் ஆயுதக் கையிருப்பு குறைந்து வருவதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை மறுத்ததுடன், பெயர் குறிப்பிடாத நபர்கள் மற்றும் அமைப்புகளை துரோகக் கும்பல் என கடுமையாக விமர்சித்துள்ளார்.
</p><p>
வெடிமருந்துகள் மற்றும் ஆயுதங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக எச்சரித்த ஊடகங்கள் மற்றும் நபர்களை ட்ரம்ப் கடுமையாக சாடினார்.</p><h2>ட்ரம்ப் அதிரடி</h2><p> 

இத்தகைய கூற்றுகள் துரோகத்தனமானவை என்றும், அவை 100 சதவீதம் தவறானவை என்றும் அவர் குறிப்பிட்டார்.</p><p>நாங்கள் எளிதாக வெற்றி பெற்று வரும் போரில் அமெரிக்கா தோல்வியடைவதை அவர்கள் விரும்புகிறார்கள். நான் வெற்றி பெறுவதைப் பார்ப்பதைவிட அதையே அவர்கள் விரும்புகிறார்கள் என ட்ரம்ப் Truth Social தளத்தில் பதிவிட்டார்.</p><p><iframe src="https://truthsocial.com/@realDonaldTrump/117207687594983323/embed" class="truthsocial-embed" style="max-width: 100%; border: 0" width="600" allowfullscreen="allowfullscreen"></iframe><script src="https://truthsocial.com/embed.js" async="async"></script></p><p>
</p><p>
மற்றொரு பதிவில், துரோகக் கும்பல் எனக் குறிப்பிட்ட ட்ரம்ப், அமெரிக்காவிடம் கிட்டத்தட்ட வரம்பற்ற அளவில் ஆயுதங்கள் இருப்பதாக தெரிவித்தார்.</p><p>

மேலும், ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கை குறித்து சரியாக செய்தி வெளியிடாதவர்களை விமர்சித்த அவர், தங்களிடம் அதிக மற்றும் நடுத்தர தரத்திலான வெடிமருந்துகள் பெருமளவில் இருப்பதாகக் கூறினார்.</p><p>

ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் நீடித்த போர் தொடங்கியதிலிருந்து, ஆயுதங்கள் குறைவாகக் கிடைப்பது குறித்து நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். எனினும், இதுபோன்ற குற்றச்சாட்டுகளை ட்ரம்ப் தொடர்ந்து மறுத்து வருகிறார்.</p><h2>ஆயுதக் கையிருப்பு</h2><p>
</p><p>
வியாழக்கிழமை அவர் மீண்டும், அமெரிக்கா இதுவரை இல்லாத அளவுக்கு வெடிமருந்துகளை உற்பத்தி செய்து வருவதாக தெரிவித்தார்.

“எந்தவொரு சூழ்நிலையையும் எதிர்கொள்ளும் வகையில் நாங்கள் ஆயுதங்களை சேமித்து வருகிறோம். </p><p>அவற்றை மற்ற நாடுகளுக்கு விற்பனை செய்வதற்குப் பதிலாக, அமெரிக்காவுக்காகவே வைத்திருக்கிறோம். எனினும், நட்பு நாடுகளுக்கான ஆயுத விற்பனை விரைவில் மீண்டும் தொடங்கும்” என ட்ரம்ப் கூறினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cf4742c7-65f0-4c8d-90c7-a08c4fffc28c/26-6a99bda1551f9.webp' /></p><p>
</p><p>
அதேவேளை, அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடனின் நிர்வாகத்தையும் ட்ரம்ப் விமர்சித்தார். </p><p>தனது நிர்வாகம் ஈரானுடனான போரில் பயன்படுத்தியதைவிட அதிகமான ஆயுதங்களை பைடன் நிர்வாகம் உக்ரைனுக்கு இலவசமாக வழங்கியதாக அவர் குற்றம்சாட்டினார்.
</p><p>
மேலும், நூற்றுக்கணக்கான பில்லியன் டொலர் மதிப்பிலான ஆயுதங்கள் உக்ரைனுக்கும் நேட்டோவுக்கும் இலவசமாக வழங்கப்பட்டுள்ளன.</p><p> ஐரோப்பா கேட்டிருந்தால் அதற்கான பணத்தை செலுத்தியிருக்கும். தற்போது அந்தப் பணத்தை நாங்கள் கோரப் போகிறோம், சற்று தாமதமாக இருந்தாலும் என ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-03T18:34:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிம்பிளான புடவை போட்டோ ஷுட்டிலும் ரசிகர்களை மயக்கும் சீரியல் நடிகை தர்ஷனா ஸ்ரீபால்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/serial-actress-dharshna-sripal-saree-photoshoot-1788426989"></link>
            <id>https://cineulagam.com/article/serial-actress-dharshna-sripal-saree-photoshoot-1788426989</id>
            <summary type="text">தர்ஷனா ஸ்ரீபால்விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தமிழும் சரஸ்வதியும் சீரியல் மூலம் தமிழ் மக்களிடம் மிகவும் பிரபலமானவர் தான் நடிகை தர்ஷணா ஸ்ரீபால். அதன...</summary>
            <content type="html"><![CDATA[<h2>தர்ஷனா ஸ்ரீபால்</h2><p>விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தமிழும் சரஸ்வதியும் சீரியல் மூலம் தமிழ் மக்களிடம் மிகவும் பிரபலமானவர் தான் நடிகை தர்ஷணா ஸ்ரீபால். அதன்பின் சன் டிவி பக்கம் வந்தவர் மூன்று முடிச்சு சீரியலில் வில்லியாக நடித்து வந்தார்.</p><p>ஆனால் இப்போது அவரது காட்சிகள் வருவதில்லை. சீரியலை தாண்டி தர்ஷனா போட்டோ ஷுட்கள் மூலம் அதிகம் ரசிகர்களிடம் அதிகம் பிரபலமாகி வருகிறார் என்றே கூறலாம்.</p><p>அண்மையில் இலங்கை சென்று எடுத்த புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியிட அது செம வைரலானது.</p><p>இந்த நிலையில் சிம்பிளான புடவையில் நடிகை தர்ஷனா வெளியிட்ட போட்டோஸ் பார்ப்போம்.</p><p><br></p>]]></content>
            <updated>2026-09-03T18:30:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாள வெள்ளப்பெருக்கு: இரண்டு மாதங்களுக்கு முன்பே கணித்த பாதிரியார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/christian-priest-predicted-the-nepal-floods-1788459733"></link>
            <id>https://ibctamil.com/article/christian-priest-predicted-the-nepal-floods-1788459733</id>
            <summary type="text">நேபாளம் வெள்ளத்தால் பாதிக்கப்படும் எனப் பேரிடருக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பே கிறிஸ்தவ பாதிரியார் ஒருவர் கணித்துள்ள காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறத...</summary>
            <content type="html"><![CDATA[<p>நேபாளம் வெள்ளத்தால் பாதிக்கப்படும் எனப் பேரிடருக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பே கிறிஸ்தவ பாதிரியார் ஒருவர் கணித்துள்ள காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
</p><p>


 யேசுவா கோஸ்பல் மினிஸ்டிரிஸ் எனும் யூடியூப் பக்கத்தில் கிறிஸ்தவ பாதிரியார் ஒருவர் கடந்த ஜூன் மாதம் வெளியிட்ட காணொளியில், நேபாளம் வெள்ளத்தால் பாதிக்கப்படப் போவதாகக் கணித்துக் கூறியுள்ளார்.</p><h2>&nbsp;அவர் வெளியிட்டுள்ள காணொளி</h2><p>
</p><p>
இதுபற்றி, கடந்த ஜூன் 12 ஆம் திகதி அவர் வெளியிட்டுள்ள காணொளியில்,

“இன்று ஜூன் 12 2026. நேபாளத்தில் ஒரு பெரிய காட்டுத் தீ எரிவதை நான் பார்க்கிறேன். நேபாளத்தின் வனப்பகுதிகள் குறித்து எச்சரிக்கையாக இருக்கவும். நேபாளத்தைத் தாக்கும் நிலநடுக்கங்களை நான் பார்க்கிறேன்.</p><p><iframe src="https://www.facebook.com/plugins/video.php?height=526&href=https%3A%2F%2Fwww.facebook.com%2Freel%2F1523240569471077%2F&show_text=false&width=560&t=0" width="560" height="526" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share" allowFullScreen="true"></iframe></p><p> இந்த நிலநடுக்கம் 7 முதல் 8 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்தவையாக இருக்கும். இதனால், சிலர் பலியாவதையும் நான் பார்க்கிறேன்.



நான் வெள்ளத்தைப் பார்க்கிறேன், தண்ணீரைப் பார்க்கிறேன் </p><p>நேபாளத்தின் வீடுகள் நீரில் மூழ்கியுள்ளன. நேபாளத்துக்காகப் பிரார்த்தனை செய்யுங்கள்” எனக் கூறியுள்ளார்.

 வெள்ளம் ஏற்படுவதை முன்கூட்டியே கணித்த பாதிரியாரின் காணொளி இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.&nbsp; </p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p>&nbsp; &nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-03T18:22:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாளத்திற்கு இணையான ஆபத்து இலங்கையிலும்.. வெளியான எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/el-nino-threatens-sri-lanka-s-agriculture-1788453901"></link>
            <id>https://tamilwin.com/article/el-nino-threatens-sri-lanka-s-agriculture-1788453901</id>
            <summary type="text">எல் நினோ (El Nino) தாக்கத்தினால் ஏற்படக்கூடிய வறட்சி மற்றும் வெள்ளம் இலங்கையின் விவசாயத்துறையை கடுமையாகப் பாதிக்கும் என்று பேராசிரியர் கோபாலப்பிள்ளை அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>எல் நினோ (El Nino) தாக்கத்தினால் ஏற்படக்கூடிய வறட்சி மற்றும் வெள்ளம் இலங்கையின் விவசாயத்துறையை கடுமையாகப் பாதிக்கும் என்று பேராசிரியர் கோபாலப்பிள்ளை அமர்தலிங்கம் தெரிவித்தார்.
</p><p>
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.</p><p>

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,</p><p> 


இதனால் உணவு உற்பத்தி மற்றும் நாட்டின் பொருளாதாரம் பெரும் நெருக்கடியைச் சந்திக்கும். 

நேபாளத்தில் சமீபத்தில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தம் இலங்கைக்கு ஒரு எச்சரிக்கையாகக் கருதப்படுகிறது.
</p><p>
குறிப்பாக, பாதுகாப்பற்ற இடங்களில் மேற்கொள்ளப்படும் கட்டுமானங்கள் மலைப் பிரதேசங்களில் பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தலாம்.
</p><p>
 குளங்கள் புனரமைக்கப்பட்டாலும், முறையான நீர்வள முகாமைத்துவம் இல்லாததால் ஒரே மாவட்டம் வறட்சியையும் வெள்ளத்தையும் எதிர்கொள்ளும் நிலை ஏற்படுகிறது.

கொழும்பு போன்ற நகரங்களில் நீர் வரத்து குறைவதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டார்.</p><p>

இந்த விடயங்கள் தொடர்பில் விரிவாக பேசுகின்றது லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சி..&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/KY07L6-GGow" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-03T18:13:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[புதுமாப்பிள்ளைக்கு நடத்தப்பட்ட சம்பவம் ; இளம் பொறியிலாளருக்கு மனைவி கண் முன்னே நேர்ந்த கதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/young-engineer-meets-tragic-fate-before-wife-1788458718"></link>
            <id>https://jvpnews.com/article/young-engineer-meets-tragic-fate-before-wife-1788458718</id>
            <summary type="text">தூத்துக்குடியில் வீடுபுகுந்து வாலிபரை அவரது மனைவி கண்முன்னே சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடிய 4 பேர் கொண்ட முகமூடிக் கும்பலை பொலிசார் வலைவீச...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">தூத்துக்குடியில் வீடுபுகுந்து வாலிபரை அவரது மனைவி கண்முன்னே சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடிய 4 பேர் கொண்ட முகமூடிக் கும்பலை பொலிசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
</p><p style="text-align: justify; ">தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் பெரிய தெப்பக்குளம் அருகேயுள்ள வடக்கு ரதவீதியைச் சேர்ந்த மெக்கானிக்கல் பொறியியலாளர்.&nbsp;</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/27402e49-8c00-4441-ba7e-d9b22b6c42a0/26-6a99b6df9b926.webp' /></p><h2 style="text-align: justify; ">&nbsp;தீவிர சிகிச்சை</h2><p style="text-align: justify; ">இவருக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடைபெற்றது.&nbsp; குறித்த பொறியியலாளர் தினமும் மதியம் உணவருந்த வீட்டிற்கு வருவது வழக்கம். </p><p style="text-align: justify; ">அந்த வகையில் நேற்று மதியம் அவர் வீட்டிற்கு வந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, மோட்டார் சைக்கிள்களில் முகமூடி அணிந்தபடி வந்த 4 பேர் கொண்ட கும்பல், கண்இமைக்கும் நேரத்தில்&nbsp; உணவருந்திக் கொண்டிருந்த முத்துக்கணேசனை அரிவாளால் சரமாரியாக வெட்டியது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவரது மனைவி கதறி கூச்சலிட்டார்.

வாலிபருக்கு தீவிர சிகிச்சை
உடல் முழுவதும் பலத்த வெட்டுக்காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் முத்துக்கணேசன் உயிருக்குப் போராடினார்.&nbsp;</p><p style="text-align: justify; ">அங்கு ரத்த வெள்ளத்தில் கிடந்த முத்துக்கணேசனை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
</p><p style="text-align: justify; ">&nbsp; </p>]]></content>
            <updated>2026-09-03T18:05:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[கற்பிட்டியில் கொடூரம்! கணவனால் எட்டு மாத கர்ப்பிணித் தாய் படுகொலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/wife-and-unborn-child-killed-by-husband-1788457601"></link>
            <id>https://ibctamil.com/article/wife-and-unborn-child-killed-by-husband-1788457601</id>
            <summary type="text"> 

எட்டு மாத கர்ப்பிணியான இரண்டு குழந்தைகளின் தாயார் ஒருவர் தனது கணவரால் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவமானது, கற்பிட்டி...</summary>
            <content type="html"><![CDATA[<p> 

எட்டு மாத கர்ப்பிணியான இரண்டு குழந்தைகளின் தாயார் ஒருவர் தனது கணவரால் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.</p><p>
குறித்த சம்பவமானது, கற்பிட்டி, தலவில பிரதேசத்தில் உள்ள எஸ்.பி.ஆர் தோட்டத்தில் இடம்பெற்றுள்ளது.</p><p>
காவல்துறையினருக்கு கிடைத்த அவசர தகவலின் அடிப்படையில், 45 நிமிடங்களுக்குள் சந்தேக நபரைக் கண்டுபிடித்து, குற்றத்திற்குப் பயன்படுத்தப்பட்ட கத்தியுடன் அவரை கைது செய்துள்ளனர்.</p><p></p><h2>மேலதிக விசாரணை</h2><p>
</p><p>
இந்நிலையில், உயிரிழந்தவர், தலவில, கெலே பள்ளிய பகுதியை சேர்ந்த 26 வயதான திலினி தில்ருக்ஷி என்ற கர்ப்பிணித் தாய் என தெரியவருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8e1e6b91-99b1-4617-853a-d10b9e6c12e3/26-6a99b5a3c4e77.webp' /></p><p>
</p><p>
அதன்படி, சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-03T18:00:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவின் கடும் பொருளாதாரத் தடைகள்: கடும் நெருக்கடியில் ஈரான் பொருளாதாரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/severe-us-economic-sanctions-iran-s-economy-crisis-1788456156"></link>
            <id>https://tamilwin.com/article/severe-us-economic-sanctions-iran-s-economy-crisis-1788456156</id>
            <summary type="text">அமெரிக்காவின் கடுமையான பொருளாதாரத் தடைகள் மற்றும் எண்ணெய் ஏற்றுமதி முடக்கம்
காரணமாக ஈரானின் பொருளாதாரம் முன்னெப்போதும் இல்லாத வகையில் கடுமையான
நெருக...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவின் கடுமையான பொருளாதாரத் தடைகள் மற்றும் எண்ணெய் ஏற்றுமதி முடக்கம்
காரணமாக ஈரானின் பொருளாதாரம் முன்னெப்போதும் இல்லாத வகையில் கடுமையான
நெருக்கடியைச் சந்தித்து வருகிறது.</p><p>

அமெரிக்கா விதித்துள்ள கட்டுப்பாடுகளால் ஈரானின் மசகு எண்ணெய் ஏற்றுமதி
நாளொன்றுக்கு 1.7 மில்லியன் பீப்பாய்கள் இருந்து வெறும் 2.6 லட்சம்
பீப்பாய்கள் குறைந்துள்ளது.</p><h2>கடும் நெருக்கடி</h2><p>
</p><p>
மேலும், ஈரானுக்கு முக்கிய வர்த்தக மற்றும் நிதி மையமாக இருந்த ஐக்கிய அரபு
இராச்சியம் அனைத்து வணிகத் தொடர்புகளையும் தற்காலிகமாக நிறுத்தியுள்ளது அந்த
நாட்டிற்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/995054cb-11c7-4392-ba52-6d5919eebf60/26-6a99b37e3e82c.webp' /></p><p>
</p><p>
அமெரிக்க டொலருக்கு எதிரான ஈரானிய ரியால் மதிப்பு வரலாறு காணாத அளவுக்குச்
சரிந்துள்ள நிலையில், உணவுப் பொருட்களின் விலை இருமடங்காக உயர்ந்து பணவீக்கம்
69.9 சதவீதமாக அதிகரித்துள்ளது.
</p><p>
ஒரு குடும்பத்தின் குறைந்தபட்ச மாதச் செலவு 450 டொலராக இருக்கும் நிலையில்,
சராசரி மாதச் சம்பளம் 125 டொலராக மட்டுமே உள்ளதால் மக்கள் அன்றாடத்
தேவைகளைக்கூடப் பூர்த்தி செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர்.
</p><p>
சொந்தமாகச் சுத்திகரிப்புத் திறன் குறைவாக இருப்பதால், பெட்ரோலை இறக்குமதி
செய்யும் ஈரானிடம் இன்னும் இரண்டு மாதங்களுக்கு மட்டுமே பெட்ரோல் கையிருப்பு
உள்ளது.</p><p>

இந்தத் தீவிரப் பொருளாதார நெருக்கடி ஈரானில் மீண்டும் பெரிய அளவிலான மக்கள்
போராட்டத்தை உருவாக்கக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-03T17:51:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானியாவில் அடிமைத்தனத்திலிருந்து தப்பிய பராமரிப்பு பணியாளர்களுக்கு விசா சலுகை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/uk-visa-relief-for-modern-slavery-victims-1788457966"></link>
            <id>https://news.lankasri.com/article/uk-visa-relief-for-modern-slavery-victims-1788457966</id>
            <summary type="text">UK visa relief for modern slavery victims: பிரித்தானியாவில் அடிமைத்தனத்திலிருந்து தப்பிய பராமரிப்பு பணியாளர்களுக்கு விசா சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.
...</summary>
            <content type="html"><![CDATA[<p>UK visa relief for modern slavery victims: பிரித்தானியாவில் அடிமைத்தனத்திலிருந்து தப்பிய பராமரிப்பு பணியாளர்களுக்கு விசா சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><h2>
புதிய சலுகை</h2><p>பிரித்தானியாவில் பராமரிப்பு பணியாளர்கள், சமையலர்கள் மற்றும் பலர் நவீன அடிமைத்தன (Modern Slavery) சூழ்நிலையிலிருந்து தப்பிய நிலையில், தங்களின் குடியேற்ற நிலையை (migration status) இழக்காமல் பாதுகாப்பாக வேலையை தொடர Home Office புதிய சலுகையை அறிவித்துள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ae9fcbca-dd70-472d-bda8-4a13cd7b1af8/26-6a99b3f0855a9.webp' /></p><p>முன்பு, Brexit-க்கு பிறகு அறிமுகப்படுத்தப்பட்ட Skilled Worker Visa திட்டத்தின் கீழ், வெளிநாட்டுப் பணியாளர்கள் தங்களை ஸ்பான்சர் செய்த நிறுவனத்துடன் மட்டுமே வேலை செய்ய முடிந்தது.
</p><p>
அந்த நிறுவனத்திலிருந்து விலகினால், புதிய ஸ்பான்சரை விரைவாகக் கண்டுபிடிக்க முடியாவிட்டால், அவர்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
</p><p>
இதனால், பலர் தங்கள் migration status-ஐ இழக்கும் அச்சத்தில், குறைந்த சம்பளம், நீண்ட நேர வேலை, Zero-hour contract போன்ற சுரண்டல்களை சகித்துக் கொண்டனர்.
</p><p></p><p>இப்போது, பிரித்தானிய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ள புதிய மாற்றத்தின் படி, ஒருவர் “Modern Slavery victim” என அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டால், அவர்களுக்கு மீதமுள்ள விசா காலத்தில் எந்த நிறுவனத்திலும் வேலை செய்ய அனுமதி வழங்கப்படும். </p><p>இது, சுரண்டலிலிருந்து தப்பியவர்களுக்கு பாதுகாப்பாக வாழவும், தங்கள் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்பவும் உதவும்.</p><p>
</p><p></p><p>Salvation Army-யின் Anti-Trafficking பிரிவு துணை இயக்குநர் Heather Grinsted கூறியதாவது: “இந்த மாற்றம், பாதிக்கப்பட்டவர்களுக்கு புதிய வாய்ப்புகளை வழங்கி, அவர்களின் வாழ்க்கையை மரியாதையுடன் மீண்டும் தொடங்க உதவும்.”
</p><p>
ஆனால் Work Rights Centre நிறுவனத்தின் தலைவர் Dora-Olivia Vicol, “இது பெரிய மாற்றமாக இருக்கலாம். ஆனால் Modern Slavery framework எவ்வளவு எளிதில் அணுகக்கூடியது என்பதில்தான் அதன் பயன் இருக்கும்” என எச்சரித்துள்ளார்.
</p><p>
பிரித்தானிய அரசு, சுரண்டல் செய்த நிறுவனங்களின் உரிமங்களை ரத்து செய்து வருகிறது. கடந்த ஆண்டு மட்டும் 4,400-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் உரிமை இழந்துள்ளன.</p><p></p><p>Migration and Citizenship அமைச்சர் Jo White கூறியதாவது: “அடிமைத்தனத்திற்கு உள்ளானவர்கள், தங்கள் குடியேற்ற நிலை காரணமாக சுரண்டலுக்கு ஆளாகக் கூடாது. இந்த மாற்றம், அவர்களுக்கு சுதந்திரமாக வேலை செய்யும் வாய்ப்பை வழங்கும்.”
</p><p>
இந்த நடவடிக்கை, பராமரிப்பு பணியாளர்கள், சமையலர்கள், உணவக பணியாளர்கள் உள்ளிட்ட பலருக்கு நம்பிக்கையை அளிக்கிறது.&nbsp;&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-03T17:49:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[சலேவிற்கு எதிராகக் கருணா வாக்குமூலம்: நீதிமன்றில் அம்பலமான திடுக்கிடும் தகவல்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/karuna-tells-about-sallay-1788457241"></link>
            <id>https://tamilwin.com/article/karuna-tells-about-sallay-1788457241</id>
            <summary type="text">&amp;nbsp;தேசிய புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே தொடர்பில் கருணா அம்மான் பல திடுக்கிடும் தகவல்கள் அம்பலப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;தேசிய புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே தொடர்பில் கருணா அம்மான் பல திடுக்கிடும் தகவல்கள் அம்பலப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
</p><p>
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலின் பின்னணியில் இருந்த சதித்திட்டம் குறித்த வழக்கு விசாரணைகள் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டபோது இந்த தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>

உயிர்த்த ஞாயிறு விசாரணை தொடர்பாக முன்னாள் பிரதியமைச்சரும், தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதிகளில் ஓருவருமான விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) சிஐடியினருக்கு வழங்கிய மிக உணர்வுபூர்வமான வாக்குமூலத்தின் விபரங்கள் நேற்று நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d0707941-ee83-4b2a-92aa-c5d979e04cfe/26-6a99b11aacf4d.webp' /></p><p>
</p><p>
அதில், சுரேஷ் சலே இராணுவப் புலனாய்வுப் பிரிவில் இருந்த காலத்தில், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து பிரிந்து வந்த ஆயுதமேந்திய உறுப்பினர்களைத் தங்களது அரசியல் தேவைகளுக்காகப் பயன்படுத்திப் பல்வேறு சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டதாகக் கருணா அம்மான் தெரிவித்துள்ளார். </p><p>

மேலும், இல்லாத நபர்களின் பெயர்களைப் பட்டியலிட்டு, அவர்களுக்கு இராணுவப் புலனாய்வுப் பிரிவு மற்றும் அரச நிதியிலிருந்து சம்பளம் வழங்கப்பட்டதாகக் காட்டிப் பாரிய நிதி மோசடிகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் அம்பலப்படுத்தியுள்ளார்.
</p><p>
கருணா அம்மான் லண்டனுக்குச் செல்வதற்காகச் சிங்களப் பெயர் கொண்ட போலி கடவுச்சீட்டையும், அதற்கான விசா வசதிகளையும் சுரேஷ் சலேயே ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார் என குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
 கருணா லண்டன் சென்றடைந்த பின்னர், சுரேஷ் சலேயும் அங்கு சென்று, கருணாவின் இருப்பிடத்தை உறுதி செய்து கொண்டுள்ளார் என கருணா தெரிவித்துள்ளார். </p><p>

அதன் பின்னர், லண்டன் பொலிஸாருக்குக் கருணாவின் போலி கடவுச்சீட்டு விபரங்களை வழங்கி, அவரை அங்கு கைது செய்து சிறையிலடைக்க சுரேஷ் சலே திட்டமிட்டுச் செயல்பட்டதாகக் கருணா அம்மான் தனது வாக்குமூலத்தின் மூலம் திடுக்கிடும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார் என சிங்கள இணைய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
</p><p>
இதேவேளை, இந்த வழக்கின் மூன்றாவது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டுள்ள சுரேஷ் சலே, விசாரணைகளுக்கு முறையாக ஒத்துழைப்பு வழங்காமல் வேண்டுமென்றே தவிர்த்து வருவதாகச் சட்டமா அதிபர் திணைக்களk; நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.</p><p>

கடந்த ஜூன் 5 ஆம் திகதி முதல் அவர் உணவை உட்கொள்ள மறுத்து, தனது உடல்நிலையை பலவீனப்படுத்த முயற்சிப்பதாகவும், இதன் காரணமாகக் கடந்த மூன்று மாதங்களாக அவரிடம் எவ்வித வாக்குமூலமும் பெற முடியாதுபோயுள்ளதாகவும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் குற்றஞ்சாட்டியுள்ளது.
</p><p>
தற்போது விசேட அதிரடிப்படைப் பாதுகாப்பில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் சுரேஷ் சலேயை, மேலும் அங்கு தடுத்து வைத்து சிகிச்சை அளிக்க வேண்டுமா இல்லையா என்பது குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு வைத்தியசாலை பணிப்பாளருக்கு நீதவான் பசன் அமரசிங்க உத்தரவிட்டுள்ளார்.</p><p> 

அத்துடன், சுரேஷ் சலே தனது கைத்தொலைபேசி மற்றும் கணினிகளின் கடவுச்சொற்களை வழங்க தொடர்ந்து மறுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது தடுப்புக் காவல் காலம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p>சலே தொடர்பில் கருணா அம்மான் நீதிமன்றில் குற்றம் சுமத்தியதாக சிங்கள இணைய தளத்தில் வெளியிடப்பட்ட தகவல்கள் தொடர்பில் கருணா தரப்பில் எவ்வித கருத்துக்களும் இதுவரையில் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.</p><p>YOU MAY LIKE THIS VIDEO</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/MGfXDBgbP70" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-09-03T17:40:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றிய மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/entrance-applications-for-grade-six-1788456333"></link>
            <id>https://ibctamil.com/article/entrance-applications-for-grade-six-1788456333</id>
            <summary type="text">

2026 ஆம் ஆண்டு ஐந்தாம் வகுப்பு புலமைப்பரிசில் பரீட்சையின் முடிவுகளின் அடிப்படையில் மாணவர்களின் ஆறாம் வகுப்புக்கான விண்ணப்பங்களை அதிபர்கள் இணையவழிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>

2026 ஆம் ஆண்டு ஐந்தாம் வகுப்பு புலமைப்பரிசில் பரீட்சையின் முடிவுகளின் அடிப்படையில் மாணவர்களின் ஆறாம் வகுப்புக்கான விண்ணப்பங்களை அதிபர்கள் இணையவழியில் சமர்ப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
குறித்த அறிவிப்பானது, இன்று(03) கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது.</p><p>

இதன்படி, சம்பந்தப்பட்ட விண்ணப்பங்கள் சமர்பிக்கப்படவேண்டிய திகதிகள் மற்றும் வழிமுறைகள் எதிர்காலத்தில் வெளியிடப்படும் என கூறப்படுகிறது.</p><p></p><h2>56,000 மாணவர்கள் சித்தி</h2><p>
</p><p>
2026 ஆம் ஆண்டுக்கான 5 ஆம் வகுப்பு புலமைப்பரிசில் பரீட்சையின் நேற்றையதினம் வெளியாகியிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0122a10f-2f34-470f-8308-635cd4f8e06d/26-6a99b0984b66a.webp' /></p><p>
</p><p>
அதன்போது, குறித்தப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில் 56,000 பேர் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்றுள்ளதாக இலங்கை பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p>

இந்தப் பரீட்சைக்கு 294,132 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், அவர்களில் 289,867 பரீட்சைக்கு தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a>WHATSAPP CHANNE</a></b><a>L</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-03T17:38:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெறும் Heroine-ஆ மட்டும் பண்ணமாட்டேன் - மொத ராத்திரி Anishma Exclusive]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/modha-rathiri-fame-anishma-exclusive-interview-1788427636"></link>
            <id>https://cineulagam.com/article/modha-rathiri-fame-anishma-exclusive-interview-1788427636</id>
            <summary type="text">மொத ராத்திரிராஜா கருப்பசாமி இயக்கத்தில் ரிஷிகாந்த், அனிஷமா முக்கிய வேடத்தில் நடிக்க கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியான திரைப்படம் மொத ராத்திரி. ஒரே வீட்டில் ந...</summary>
            <content type="html"><![CDATA[<h2>மொத ராத்திரி</h2><p>ராஜா கருப்பசாமி இயக்கத்தில் ரிஷிகாந்த், அனிஷமா முக்கிய வேடத்தில் நடிக்க கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியான திரைப்படம் மொத ராத்திரி. </p><p>ஒரே வீட்டில் நடக்கும் கலகலப்பான நகைச்சுவை நிகழ்வுகளை மையமாக கொண்டு இந்த படம் உருவாகியுள்ளது, படத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.</p><p>படத்தை பார்த்த பல பிரபலங்களும் நல்ல கதைக்களம் உள்ள படங்களை ஆதரிக்கலாம் என தங்களது கருத்து கூறியிருந்தனர். இந்த மொத ராத்திரி படத்தில் நாயகியாக நடித்துள்ள அனிஷ்மா நமது சினிஉலகம் யூடியூப் பக்கத்தில் பேட்டி அளித்துள்ளார். இதோ அவரது பேட்டி,</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/bwchc-QZosY" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-09-03T17:30:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இணையத்தைப் பயன்படுத்தும் சுமார் 2 கோடி சிறுவர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/impact-on-20-million-children-using-the-internet-1788456139"></link>
            <id>https://jvpnews.com/article/impact-on-20-million-children-using-the-internet-1788456139</id>
            <summary type="text">உலகின் 21 நாடுகளில் இணையத்தைப் பயன்படுத்தும் சுமார் 2 கோடி சிறுவர்கள், ஒரே ஆண்டில் இணையவழி பாலியல் சுரண்டல் அல்லது தவறான நடத்தைக்கு உள்ளாகியுள்ளதாக ஐக...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">உலகின் 21 நாடுகளில் இணையத்தைப் பயன்படுத்தும் சுமார் 2 கோடி சிறுவர்கள், ஒரே ஆண்டில் இணையவழி பாலியல் சுரண்டல் அல்லது தவறான நடத்தைக்கு உள்ளாகியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியம் (UNICEF) வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p style="text-align: justify; ">
12 முதல் 17 வயதுக்குட்பட்ட சிறுவர்களில் ஐந்தில் ஒருவருக்கும் அதிகமானோர் இத்தகைய பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2f47d590-e527-4d5f-bb70-2abf08f5adbd/26-6a99acccb3d0b.webp' /></p><h2 style="text-align: justify; ">தவறான உரையாடல்கள்&nbsp;</h2><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
அவர்களில் சுமார் 1.5 கோடி சிறுவர்கள் தங்களது விருப்பத்திற்கு மாறாக பாலியல் ரீதியான அல்லது தவறான உள்ளடக்கங்களை எதிர்கொண்டுள்ளனர். </p><p style="text-align: justify; ">மேலும், சுமார் 90 இலட்சம் சிறுவர்கள் தவறான உரையாடல்கள் அல்லது படங்களைப் பகிருமாறு அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளனர்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">

அத்துடன், சுமார் 40 இலட்சம் சிறுவர்களின் தனிப்பட்ட அல்லது தவறான நிழற்படங்கள் அவர்களின் அனுமதியின்றி பகிரப்பட்டுள்ளதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
</p><p style="text-align: justify; ">
பதிவாகியுள்ள இத்தகைய சம்பவங்களில் சுமார் 60 சதவீதம் சமூக ஊடகத் தளங்கள் மூலம் இடம்பெற்றுள்ளதாகவும் UNICEF அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p style="text-align: justify; ">
மேலும், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சிறுவர்களைப் போன்ற தோற்றத்தில் உருவாக்கப்பட்ட தவறான படங்கள் அல்லது காணொளிகளால் சுமார் 11 இலட்சம் சிறுவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் UNICEF தெரிவித்துள்ளது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
இத்தகைய சம்பவங்களுக்கு உள்ளாகும் சிறுவர்களுக்கு உயிர் மாய்ப்பு அல்லது சுயகாயப்படுத்தல் குறித்த எண்ணங்கள் ஏற்படும் வாய்ப்பு சுமார் நான்கு மடங்கு அதிகமாக இருப்பதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; ">

இதேவேளை , சிறுவர்களின் இணையப் பாதுகாப்பை வலுப்படுத்துவதுடன், செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்படும் தவறான உள்ளடக்கங்கள் உள்ளிட்ட புதிய வகையான இணையவழி துஷ்பிரயோகங்களைத் தடுக்கும் வகையில் சட்டங்களை மேம்படுத்த வேண்டும் எனவும் UNICEF வலியுறுத்தியுள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-03T17:30:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவிற்கு ஏற்பட்டுள்ள பேராபத்து - நிபுணர்கள் எச்சரிக்கை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/new-hazards-nepal-disaster-highlights-emerging-1788446835"></link>
            <id>https://canadamirror.com/article/new-hazards-nepal-disaster-highlights-emerging-1788446835</id>
            <summary type="text">நேபாளத்தில் ஏற்பட்ட பாறை மற்றும் பனிப்பாறை சரிவு காரணமாக உண்டான பேரழிவு, கனடாவின் மாறுபடும் மலைப்பகுதிகளிலும் இத்தகைய ஆபத்துகள் ஏற்படக்கூடும் என்ற அச்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நேபாளத்தில் ஏற்பட்ட பாறை மற்றும் பனிப்பாறை சரிவு காரணமாக உண்டான பேரழிவு, கனடாவின் மாறுபடும் மலைப்பகுதிகளிலும் இத்தகைய ஆபத்துகள் ஏற்படக்கூடும் என்ற அச்சத்தை அதிகரித்துள்ளது. </p><p>
புவி வெப்பமயமாதல் காரணமாக பனிப்பாறைகள் உருகுவதும், உறைபனி நிலம் தளர்வதும் புதிய இயற்கை பேரிடர்களை உருவாக்கி வருவதாகக் கனடாவின் முன்னணி ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.</p><p> 
சஸ்காட்செவன் பல்கலைக்கழகத்தின் 'க்ளோபல் வாட்டர் ஃபியூச்சர்ஸ் அப்சர்வேட்டரீஸ்' திட்டத்தின் இயக்குனர் ஜான் பொமரோய் இது குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6cfad184-9b0c-4d04-a78c-10e59fff7101/26-6a99887554bee.webp' /></p><p> 
உலகில் அதிக பனிப்பாறைகளையும், பரந்த உறைபனி நிலங்களையும் கொண்ட நாடான கனடாவில் பனி உருகும் வேகம் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருவதாகவும், இதுவரை கண்டிராத புதிய ஆபத்துகள் உருவாகி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.</p><p> 
நேபாளம் மற்றும் திபெத் எல்லையோரப் பகுதிகளில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் 1,100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கானோரைக் காணவில்லை. </p><p>
இமயமலையில் உறைந்த நிலையில் இருந்த பாறைப் பாளம் உடைந்து, பனிப்பாறையோடு சேர்ந்து சுமார் 1 கிலோமீட்டர் ஆழப் பள்ளத்தாக்கில் விழுந்தது. </p><p>
இதனால் பனியில் தேங்கியிருந்த நீர் வெளியாகி, பாறை மற்றும் படிவுகளுடன் சேர்ந்து மணிக்கு 160 கி.மீ-க்கும் அதிகமான வேகத்தில் பாய்ந்தது.</p><p> சில இடங்களில் 50 மீட்டர் உயரத்திற்கு ராட்சத அலை போல வெள்ளம் சீறிப்பாய்ந்து எல்லையோரச் சாவடிகளை அழித்தது.
கனடாவிலும் இத்தகைய ஆபத்துகள் ஏற்கெனவே சிறிய அளவில் தொடங்கிவிட்டதாக பொமரோய் சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>ஆற்று நீர்மட்டத்தை அளவிடும் வழக்கமான அமைப்புகளைத் தாண்டி, ஆபத்தான மலைப்பகுதிகளைக் கண்காணிக்க புதிய செயற்கைக்கோள் தொழில்நுட்பங்களை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என ஆய்வாளர்கள் வலியுறுத்துகின்றனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-03T17:30:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[முன்னாள் காதலர்கள் ஒன்று கூடும் வினோத காதல் சந்தை; எங்கே தெரியுமா!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/the-khau-vai-love-market-in-ha-giang-vietnam-1788442705"></link>
            <id>https://jvpnews.com/article/the-khau-vai-love-market-in-ha-giang-vietnam-1788442705</id>
            <summary type="text">&amp;nbsp; வியட்நாமின் ஹா ஜியாங் (Ha Giang) மலைப்பகுதியில் ஆண்டுதோறும் நடைபெறும் &#039;காவ் வாய் காதல் சந்தை&#039; (Khau Vai Love Market) குறித்த தகவல் இணையவாசிகளின...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; வியட்நாமின் ஹா ஜியாங் (Ha Giang) மலைப்பகுதியில் ஆண்டுதோறும் நடைபெறும் 'காவ் வாய் காதல் சந்தை' (Khau Vai Love Market) குறித்த தகவல் இணையவாசிகளின் கவனத்தைப் பெற்றுள்ளது.
</p><p>
காதலையும் பழைய நினைவுகளையும் கொண்டாடும் இந்த விசித்திரமான பாரம்பரிய நிகழ்வு, வியட்நாம் நாட்டின் முக்கிய கலாசார அடையாளமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/907adc64-37ba-46ee-a95d-7c88ffaa628e/26-6a99785311a1f.webp' /></p><h2>எந்தவித வணிகப் பொருட்களும் விற்கப்படாத&nbsp; &nbsp;சந்தை</h2><p> 

எந்தவித வணிகப் பொருட்களும் விற்கப்படாத இந்த சந்தை, பிரிந்துசென்ற முன்னாள் காதலர்கள் மீண்டும் சந்தித்துக் கொள்வதற்காகவே பிரத்தியேகமாக நடத்தப்படுகிறது.
</p><p>
சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பாக, வேறுபட்ட பழங்குடியினத்தைச் சேர்ந்த இரு காதலர்கள் குடும்பப் பின்னணி மற்றும் கலாசார வேறுபாடுகளால் இணைய முடியாமல் பிரிந்தனர்.</p><p></p><p>
</p><p>
எனினும், தங்கள் அன்பைப் போற்றும் வகையில் ஆண்டுக்கு ஒருமுறை சந்திர நாட்காட்டியின் 3 ஆம் மாதம் 27 ஆம் திகதியன்று சந்தித்துப் பேசுவது என வாக்குறுதி அளித்தனர்.
</p><p>
அவர்களின் இந்த அரிய நினைவைப் போற்றும் வகையிலேயே இத்திருவிழா தொடங்கப்பட்டது.

திருமணமான தம்பதிகள் தங்கள் தற்போதைய துணையின் முழு சம்மதத்துடனும் மரியாதையுடனும் தங்களின் முன்னாள் காதலர்களைச் சந்திக்க இங்கு வருகை தருகின்றனர்.</p><p>

3 நாட்களாக நடைபெறும் இந்த விழாவில் பாரம்பரிய இசை, நடனம், உணவு வகைகள் மற்றும் கலாசார நிகழ்வுகள் இடம்பெறுகின்றன.</p><p></p><p>
</p><p>
இங்கு பழைய நினைவுகளைப் பகிர்ந்து கொள்ளும் முன்னாள் காதலர்கள், தற்போதைய குடும்ப வாழ்க்கையைப் பாதிக்காத வகையில் அன்புடன் மீண்டும் விடைபெற்றுச் செல்வதாகவும் கூறப்படுகின்றது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-03T17:25:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரசியலமைப்புத் திருத்தம் செய்யத் தயங்க மாட்டோம்: ஜனாதிபதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/government-will-pursue-constitutional-changes-1788455923"></link>
            <id>https://tamilwin.com/article/government-will-pursue-constitutional-changes-1788455923</id>
            <summary type="text">போதைப்பொருள் கடத்தல் மற்றும் குற்றங்களைக் கட்டுப்படுத்தி, அமைதியான நாட்டை உருவாக்கத் தேவையான அரசியலமைப்புத் திருத்தங்களை அறிமுகப்படுத்தத் தமது அரசாங்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>போதைப்பொருள் கடத்தல் மற்றும் குற்றங்களைக் கட்டுப்படுத்தி, அமைதியான நாட்டை உருவாக்கத் தேவையான அரசியலமைப்புத் திருத்தங்களை அறிமுகப்படுத்தத் தமது அரசாங்கம் தயங்காது என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். </p><p>

இலங்கை பொலிஸ் சேவையின் 160வது ஆண்டு நிறைவு விழாவில் உரையாற்றிய ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.</p><h2>போதைப்பொருள் சோதனை</h2><p>
</p><p>சந்தேகநபர்களைச் சட்டத்தின் முன் நிறுத்தும் நடைமுறையை அரசாங்கம் வலுப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளபோதிலும், கைது செய்யப்படுவதற்கும் தண்டனை வழங்கப்படுவதற்கும் இடையிலான காலதாமதம் இருப்பதாக ஜனாதிபதி ஒப்புக்கொண்டுள்ளார்.</p><p>
</p><p>கடந்த இரண்டு ஆண்டுகளில் பொலிஸார் சாதனை அளவிலான போதைப்பொருள் சோதனைகளை நடத்தியுள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/537f0ecd-cdc9-46a5-a6a4-3850801afe26/26-6a99abf8cfc67.webp' /></p><p>எனினும், வழக்கு விசாரணைகளும் தண்டனை வழங்குவதும் நீண்ட காலம் நீடித்தால், இந்தக் கைதுகளால் பெரிய பலன் இருக்காது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>தண்டனை கிடைக்கத் தாமதமாகும் என்பது குற்றவாளிகளுக்குத் தெரியும்" என்று குறிப்பிட்ட ஜனாதிபதி, நீதிச் செயல்பாட்டில் ஈடுபட்டுள்ள அனைத்து நிறுவனங்களும் மேலும் திறம்படச் செயல்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளார்.
</p><p>இந்த நடைமுறைகளை மேம்படுத்தும் நோக்கில் அரசாங்கம் ஏற்கனவே புதிய சட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு தேவையான அரசியலமைப்புத் திருத்தங்களைச் செய்ய அரசாங்கம் தயங்காது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-03T17:19:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆயுதக் கையிருப்பு குறைவதாக வரும் செய்திகள் குறித்து டிரம்பின் பதில்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/trump-says-reports-of-low-us-weapons-stockpiles-1788453762"></link>
            <id>https://canadamirror.com/article/trump-says-reports-of-low-us-weapons-stockpiles-1788453762</id>
            <summary type="text">அமெரிக்க ராணுவத்தின் ஆயுதக் கையிருப்பு குறைந்து வருவதாக வெளியான ஊடகச் செய்திகளையும் சுயேச்சை ஆய்வுகளையும் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கடுமையாக மறுத்துள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்க ராணுவத்தின் ஆயுதக் கையிருப்பு குறைந்து வருவதாக வெளியான ஊடகச் செய்திகளையும் சுயேச்சை ஆய்வுகளையும் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கடுமையாக மறுத்துள்ளார்.</p><p> 
மேலும், இத்தகைய அறிக்கைகள் "தேசத்துரோகமானவை" என்றும் அவர் சாடியுள்ளார். </p><p>
அல் ஜசீரா மற்றும் பல அமெரிக்க ஊடகங்கள், அமெரிக்கா தனது சக்திவாய்ந்த ஆயுதங்களான டோமாஹாக், பேட்ரியாட் ஏவுகணைகள் மற்றும் தாட் பாலிஸ்டிக் ஏவுகணை எதிர்ப்பு அமைப்பு ஆகியவற்றின் கையிருப்பில் பற்றாக்குறையைச் சந்தித்து வருவதாகச் செய்தி வெளியிட்டிருந்தன. </p><p>
தனது 'ட்ரூத் சோஷியல்' பக்கத்தில் பதிவிட்டுள்ள டிரம்ப், இந்த அறிக்கைகள் "100% தவறானவை" என்று குறிப்பிட்டுள்ளார்.
</p><p>அமெரிக்க ராணுவத்திடம் நடுத்தர மற்றும் உயர்தர வெடிமருந்துகளின் கையிருப்பு "வரம்பற்ற அளவில்" உள்ளதாகவும், நாட்டின் ஆயுத உற்பத்தியை அமெரிக்கா மேலும் தீவிரப்படுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/823f45c2-9144-4ad2-bd0d-4352db97260d/26-6a99a383dcc23.webp' /></p><p> 
ஈரான் மீதான அமெரிக்கப் போரின் காரணமாக, சுவிட்சர்லாந்து மற்றும் ஜப்பான் உள்ளிட்ட நட்பு நாடுகளுக்கான ஆயுத விநியோகம் சில மாதங்கள் தாமதமான நிலையில், அந்த நாடுகளுக்கான ஆயுத விற்பனை விரைவில் மீண்டும் தொடங்கப்படவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-03T17:00:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[அபாயம் இன்னும் நீங்கவில்லை ; பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/danger-remains-public-warning-issued-1788453990"></link>
            <id>https://jvpnews.com/article/danger-remains-public-warning-issued-1788453990</id>
            <summary type="text">டெங்கு நோய் பரவும் அபாயம் இன்னும் நீங்கவில்லை என தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.



எனவே, தமது சுற்றுப்புறங்களில் டெங்கு நுளம...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">டெங்கு நோய் பரவும் அபாயம் இன்னும் நீங்கவில்லை என தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
</p><p style="text-align: justify; ">


எனவே, தமது சுற்றுப்புறங்களில் டெங்கு நுளம்புகள் பெருகக்கூடிய இடங்கள் தொடர்பில் அதிக அவதானத்துடன் செயற்படுமாறு சமூக வைத்திய விசேட நிபுணர் வைத்தியர் பிரஷிலா சமரவீர பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9bdaf295-e6c4-4da8-b924-6b0631134611/26-6a99a467b9ca6.webp' /></p><h2 style="text-align: justify; ">&nbsp;நோயாளர்களின் எண்ணிக்கை</h2><p>
</p><p style="text-align: justify; ">


சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
</p><p style="text-align: justify; ">


அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போது டெங்கு நோயாளர்களின் பதிவுகள் குறைந்த மட்டத்தில் காணப்படுகின்ற போதிலும், டெங்கு நோய் பரவும் அபாயம் இன்னும் நீங்கவில்லை என தெரிவித்துள்ளார்.</p><p style="text-align: justify; ">



சில மாவட்டங்களில் முதலில் நுளம்புகளின் பெருக்கம் அதிகரிப்பதை அவதானிக்க முடிவதுடன், அதனைத் தொடர்ந்து டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையும் அதிகரிப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">


டெங்கு நுளம்புகள் பெருகும் இடங்கள் தொடர்பில் பொதுமக்கள் கவனயீனமாக செயற்பட்டால், அது எதிர்காலத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.</p><p style="text-align: justify; ">



எனவே, பொதுமக்கள் தமது வீடுகள் மற்றும் சுற்றுப்புறச் சூழலை தூய்மையாக வைத்திருப்பதுடன், நுளம்புகள் பெருகக்கூடிய இடங்களை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வைத்தியர் பிரஷிலா சமரவீர கோரிக்கை விடுத்துள்ளார்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-03T17:00:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாளத்தை மிரட்டும் இயற்கை பேரிடர் : வெள்ளப்பெருக்கை அடுத்து நிலநடுக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/earthquake-hits-tibet-1788452672"></link>
            <id>https://ibctamil.com/article/earthquake-hits-tibet-1788452672</id>
            <summary type="text">&amp;nbsp;நேபாளத்தில் மட்டும் 1200க்கும் மேற்பட்டோர் உயிரிழக்கும் அளவுக்குப் பேரழிவை ஏற்படுத்திய திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட சில நாட்களுக்குப் பிறகு, இ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;நேபாளத்தில் மட்டும் 1200க்கும் மேற்பட்டோர் உயிரிழக்கும் அளவுக்குப் பேரழிவை ஏற்படுத்திய திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட சில நாட்களுக்குப் பிறகு, இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
</p><p>
 14 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது என்றும், ரிக்டர் அளவில் 5.0 ஆகப் பதிவாகியுள்ளது என்றும் தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.</p><h2>போராடும் மீட்பு படையினர்</h2><p>&nbsp;இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1c06af4b-8e2c-485d-9950-94ac84c604d8/26-6a99a68d734fc.webp' /></p><p>நேபாளம் மற்றும் திபெத் எல்லைப் பகுதிகளில் தொடர்ச்சியாக ஏற்படும் நிலச்சரிவுகள் மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக மீட்பு படையினர் போராடி வருகின்றனர். அப்பகுதி மக்களை பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கும் ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-03T16:58:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் 44 வயது நபரின் மோசமான செயல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/nb-man-charged-with-child-sexual-abuse-material-1788453070"></link>
            <id>https://canadamirror.com/article/nb-man-charged-with-child-sexual-abuse-material-1788453070</id>
            <summary type="text">&amp;nbsp;கனடாவின் நியூ பிரன்சுவிக் மாகாணத்திலுள்ள ஒரோமொக்டோவைச் சேர்ந்த 44 வயது நபர் மீது, குழந்தைகள் மீதான பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் சுரண்டல் தொடர்பா...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கனடாவின் நியூ பிரன்சுவிக் மாகாணத்திலுள்ள ஒரோமொக்டோவைச் சேர்ந்த 44 வயது நபர் மீது, குழந்தைகள் மீதான பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் சுரண்டல் தொடர்பான காட்சிகளை வைத்திருந்ததாகவும் பரப்புரை செய்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.</p><p>
வயதான எரிக் எட்வார்ட் கிரிகோயர் என்ற நபர் மீது இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
</p><p>புதன்கிழமை ஃபிரெட்ரிக்டன் மாகாண நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இவர் மீது, இத்தகைய சட்டவிரோதப் பொருட்களை வைத்திருந்தது மற்றும் பிறருக்குப் பகிர்ந்தளித்தது ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5b42fd8a-8c51-4292-8a9b-6b901dc86c31/26-6a99a0d065623.webp' /></p><p>
கனடிய காவல் துறையின் இணையக் குழந்தை சுரண்டல் தடுப்புப் பிரிவினால் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கையின் ஒரு பகுதியாக, ஆகஸ்ட் 2025-ல் இந்த விசாரணை தொடங்கியது.
</p><p>ஜனவரி 21, 2026 அன்று ஒரோமொக்டோவில் உள்ள இவரது வீட்டில் சோதனை ஆணை மூலம் ஆய்வு நடத்திய காவல்துறை, கிரிகோயாரைக் கைது செய்து அவரிடமிருந்த பல மின்னணு சாதனங்களைப் பறிமுதல் செய்தது.</p><p>
இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணைக்காக இவர் அக்டோபர் 7 அன்று மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராகவுள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-03T16:48:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிருஷ்ண ஜெயந்திக்கு என்ன செய்யணும் என்ன செய்ய கூடாதுன்னு தெரியுமா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/what-to-do-and-not-to-do-on-krishna-janmashtami-1788450538"></link>
            <id>https://manithan.com/article/what-to-do-and-not-to-do-on-krishna-janmashtami-1788450538</id>
            <summary type="text">மும்மூர்த்திகளுள் ஒருவரான மகாவிஷ்ணுவின் அவதாரங்களில் ஒன்றான பகவான் கிருஷ்ணர் அவதரித்த தினமே கிருஷ்ண ஜெயந்தியாகக் கொண்டாடப்படுகிறது. இதனை கோகுலாஷ்டமி, ...</summary>
            <content type="html"><![CDATA[<p>மும்மூர்த்திகளுள் ஒருவரான மகாவிஷ்ணுவின் அவதாரங்களில் ஒன்றான பகவான் கிருஷ்ணர் அவதரித்த தினமே கிருஷ்ண ஜெயந்தியாகக் கொண்டாடப்படுகிறது. </p><p>இதனை கோகுலாஷ்டமி, கிருஷ்ண ஜென்மாஷ்டமி என்றும் அழைப்பர்.

இந்து மத நம்பிக்கைகளின்படி, பகவான் கிருஷ்ணர் ஆவணி மாத கிருஷ்ணபட்ச அஷ்டமி திதி, ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d02a195c-a9f7-4c1a-af70-8dd835211215/26-6a99a0ba88189.webp' /></p><p></p><p> </p><p>அந்த வகையில், இந்த ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி செப்டம்பர் 04ஆம் தேதி வெள்ளிக்கிழமை வருகிறது.

மதுரா நகர சிறைச்சாலையில் தேவகி–வசுதேவர் தம்பதிக்கு மகனாக கிருஷ்ணர் பிறந்ததாக புராணங்கள் கூறுகின்றன.</p><p> பொதுவாக அஷ்டமி திதியும், ரோகிணி நட்சத்திரமும் ஒரே நாளில் வராது. ஆனால் இந்த ஆண்டு இரண்டும் ஒரே நாளில் அமைவது சிறப்பாகக் கருதப்படுகிறது.

கிருஷ்ண ஜெயந்தியையொட்டி, வீடுகளில் குழந்தைகளுக்கு கிருஷ்ணர், ராதை வேடமிட்டு அழகு பார்ப்பது வழக்கம்.</p><p> </p><p>மேலும், கிருஷ்ணருக்கு பிடித்த அவல், வெண்ணெய் உள்ளிட்டவற்றைக் கொண்டு பலகாரங்கள் செய்து படைத்து பூஜை செய்து வழிபடுவார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7939c54b-ed1a-4791-b795-81651863b076/26-6a99a0bb3e41e.webp' /></p><p>
</p><p>
இந்நிலையில், கிருஷ்ண ஜெயந்தி நாளில் என்னென்ன செய்ய வேண்டும், எவற்றைத் தவிர்க்க வேண்டும் என்பது குறித்து பலருக்கும் சரியாகத் தெரிவதில்லை. நாளைய தினம் கிருஷ்ண ஜெயந்தியன்று கடைப்பிடிக்க வேண்டியவை மற்றும் தவிர்க்க வேண்டியவை குறித்து விரிவாக இந்தப் பதிவில் பார்க்கலாம்.</p><p><b>வீட்டை சுத்தம் செய்யவும்
</b></p><p>கிருஷ்ண ஜெயந்திக்கு முன்னதாக வீட்டை சுத்தம் செய்து, பூஜை அறையை அழகாக அலங்கரித்துக் கொள்ளவும். வெள்ளிக்கிழமை கிருஷ்ண ஜெயந்தி வருவதால், வியாழக்கிழமையே வீட்டை பெருக்கி, துடைத்து சுத்தம் செய்து விடுவது நல்லது. இந்த தினத்தில் வீட்டை சுத்தம் செய்வது கூடாது.&nbsp;</p><p><b>
கிருஷ்ணரின் பாதங்களை வரையவும்</b></p><p>
கிருஷ்ண ஜெயந்தியின் முக்கிய வழக்கங்களில் ஒன்று, குட்டி கிருஷ்ணர் வீட்டிற்குள் வருவது போல் பாதங்களை வரைவதாகும். பச்சரிசி மாவை நீரில் கரைத்து, வீட்டு வாசலில் இருந்து பூஜை அறை வரை கிருஷ்ணரின் பாதங்களை வரையலாம். இந்த தினத்தில் பூஜை அறையை அலங்கரிக்காமல் இருப்பது அசுபம்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0feab5e6-80e6-48c3-84e6-842eb3f2978d/26-6a99a0bbea1f5.webp' /></p><p><b>
கிருஷ்ணரின் படங்கள் அல்லது சிலைகளை அலங்கரிக்கவும்
</b></p><p>வீட்டில் உள்ள கிருஷ்ணரின் படங்கள் அல்லது சிலைகளை பூக்கள் மற்றும் மாலைகளால் அலங்கரிக்கலாம்.கிருஷ்ணருக்கு பிடித்ததாகக் கருதப்படும் பால் பொருட்களைக் கொண்டு பலகாரங்கள் செய்து படைத்து, சிறப்பு பூஜை செய்து வழிபடலாம்.நேரம் இல்லையெனில், வெண்ணெய், அவல் மற்றும் வெல்லம் ஆகியவற்றை படைத்து வழிபடலாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3801cf26-c7e9-4c98-a2b2-1460f5313e6e/26-6a99a0bc9da4a.webp' /></p><p></p><p><b>
எப்போது பூஜை செய்ய வேண்டும்?</b></p><p>
கிருஷ்ணர் நள்ளிரவில் பிறந்ததாகக் கருதப்படுவதால், வடஇந்தியாவில் நள்ளிரவில் பூஜை செய்வது வழக்கம். தமிழ்நாட்டில் பொதுவாக மாலை சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு விளக்கேற்றி, பிரசாதங்களைப் படைத்து கிருஷ்ணரை மனதார வழிபடுவது சகல செல்வ செழிப்பையும் கொடுக்கும் என்பது ஐதீகம்.</p><p><b>இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).</b></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW&nbsp;</a></u></b> &nbsp;</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-03T16:31:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கன்சர்வேடிவ் கட்சியில் தொடரும் நெருக்கடி: மேலும் 2 சட்ட மன்ற உறுப்பினர்கள் பதவி விலகல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/bc-conservative-exodus-continues-with-2-more-mlas-1788445210"></link>
            <id>https://canadamirror.com/article/bc-conservative-exodus-continues-with-2-more-mlas-1788445210</id>
            <summary type="text">&amp;nbsp;கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாண எதிர்க்கட்சியான கன்சர்வேடிவ் கட்சியின் மேலும் இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சியிலிருந்து விலகி சுயேச்சைகள...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாண எதிர்க்கட்சியான கன்சர்வேடிவ் கட்சியின் மேலும் இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சியிலிருந்து விலகி சுயேச்சைகளாகச் செயல்படத் தீர்மானித்துள்ளனர். </p><p>
அதேவேளையில், கட்சித் தலைவர் கெர்ரி-லின் ஃபைண்ட்லேயின் தலைமை அதிகாரி கிறிஸ் டெலானியும் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.</p><p> 
பவுண்டரி-சிமில்கமீன் தொகுதி சட்டமன்ற உறுப்பினரான வில்சன் புதன்கிழமை காலை தனது விலகலை அறிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b73b66a3-46da-4e2b-8ca8-7942f8f5d29f/26-6a99821b844e0.webp' /></p><p> </p><p>
ஃபைண்ட்லே தலைவரானபோது திறந்த மனதுடன் அவருக்கு 3 மாத காலம் அவகாசம் கொடுக்க முடிவெடுத்தேன். 3 மாதங்களுக்குப் பிறகு எனக்குப் பதில் கிடைத்துவிட்டது. நிலைமை இவ்வளவு விரைவாக இவ்வளவு மோசமடையும் என்று நான் நினைக்கவில்லை" எனக் குறிப்பிட்டுள்ளார். </p><p>
கொலம்பியா ரிவர்–ரெவெல்ஸ்டோக் தொகுதி சட்டமன்ற உறுப்பினரான மெக்கின்னிஸ் பிற்பகலில் விலகினார்.</p><p>
"தற்போதைய தலைமையின் கீழ் பிரிட்டிஷ் கொலம்பியா மக்களுக்குச் சேவையாற்றும் எனது இலக்கை அடைய முடியாது என நம்புகிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.</p><p> 
மே மாதம் ஃபைண்ட்லே தலைவராகப் பொறுப்பேற்றதில் இருந்து, கடந்த மூன்று வாரங்களில் மட்டும் கட்சியிலிருந்து விலகும் 8-வது மற்றும் 9-வது சட்ட மன்ற உறுப்பினர்கள் இவர்களாவர். </p><p>
விலகிய உறுப்பினர்கள் அனைவரும் சுயேச்சைகளாகச் செயல்பட முடிவெடுத்துள்ளனர். </p><p>
தலைவர் ஃபைண்ட்லே, தனது தலைமை அதிகாரி கிறிஸ் டெலானியின் ராஜினாமாவை ஏற்றுக்கொண்டதாகத் தெரிவித்தார்.</p><p> அவருக்குப் பதிலாக, ஃபைண்ட்லே இடைத்தேர்தலில் போட்டியிட வழிவிடும் வகையில் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்த முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் ரியான் காஸ்பர் புதிய தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-03T16:30:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்த சண்டே விஜய் டிவியில் ஒரே மாஸ் தான்... என்னென்ன ஷோ, படம் லிஸ்ட் இதோ]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/this-week-sunday-special-in-vijay-tv-1788424308"></link>
            <id>https://cineulagam.com/article/this-week-sunday-special-in-vijay-tv-1788424308</id>
            <summary type="text">விஜய் டிவிவிஜய் டிவி, இளைஞர்களுக்கு என்ன பிடிக்குதோ, அவர்களின் பல்ஸை புரிந்துகொண்டு அதற்கு ஏற்றார் போல் நிகழ்ச்சிகள், சீரியல்கள் ஒளிபரப்பி முன்னணி தொல...</summary>
            <content type="html"><![CDATA[<h2>விஜய் டிவி</h2><p>விஜய் டிவி, இளைஞர்களுக்கு என்ன பிடிக்குதோ, அவர்களின் பல்ஸை புரிந்துகொண்டு அதற்கு ஏற்றார் போல் நிகழ்ச்சிகள், சீரியல்கள் ஒளிபரப்பி முன்னணி தொலைக்காட்சியாக வலம் வருகிறார்கள். </p><p>வார நாட்களில் சிறகடிக்க ஆசை, அய்யனார் துணை, பாண்டியன் ஸ்டோர்ஸ் 2, சின்ன மருமகள் என விதவிதமான கதைக்களம் கொண்ட தொடர்களும், வார இறுதி நாட்களில் சூப்பர் சிங்கர், கேம் ஷோக்கள் எனவும் ஒளிபரப்பாகி வருகிறது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/606e8fe6-4d0e-4736-8e02-94b2439863d5/26-6a9936294b4a5.webp' /></p><h2>சண்டே ஸ்பெஷல்</h2><p>
தற்போது வரும் செப்டம்பர் 6ம் தேதி ஒளிபரப்பாக போகும் ஸ்பெஷல் ஷோக்கள், படங்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. </p><p>வரும் செப்டம்பர் 6, சண்டே மதியம் 1.30 மணிக்கு சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா சரத்குமாரில் தரமான நடிப்பில் வெளியாகி செம சூப்பர் டூப்பர் ஹிட்டான தாய் கிழவி திரைப்படம் ஒளிபரப்பாக உள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0da95059-4b16-4e47-98fa-339b31e1227c/26-6a9936284ba4a.webp' /></p><p> </p><p>அதனை தொடர்ந்து பிக்பாஸ் காமென் மேன் பைனல் எபிசோட் மாலை 4.30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளதாம். </p><p>அதோடு கடந்த சில வாரங்களாக ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்த பிக்பாஸ் 10வது சீசனின் ஆரம்ப நிகழ்ச்சி பிரம்மாண்டமாக மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாக துவங்குகிறது.</p>]]></content>
            <updated>2026-09-03T16:30:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிக்பாஸ் நடிகை பூர்ணிமா ரவியின் கிளாமர் லுக் ஷூட்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/biggboss-poornima-ravi-recent-photoshoot-post-1788445431"></link>
            <id>https://viduppu.com/article/biggboss-poornima-ravi-recent-photoshoot-post-1788445431</id>
            <summary type="text">பூர்ணிமா ரவிடப்ஸ்மாஷ் மற்றும் டிக்டாக்கில் வீடியோக்களை பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்து பிரபலமானவர் பூர்ணிமா ரவி. யூடியூப் சேனலில் பல வீடியோக்களை...</summary>
            <content type="html"><![CDATA[<h2>பூர்ணிமா ரவி</h2><p>டப்ஸ்மாஷ் மற்றும் டிக்டாக்கில் வீடியோக்களை பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்து பிரபலமானவர் பூர்ணிமா ரவி. யூடியூப் சேனலில் பல வீடியோக்களை பகிர்ந்து தனக்கென ஒரு ஃபேமை உருவாக்கி பிக்பாஸ் சீசன் 7ல் போட்டியாளராக கலந்து கொண்டார் பூர்ணிமா.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/525de681-b9b2-4dd6-8912-c83288efc004/26-6a99830265f22.webp' /></p><p>
</p><p>
பிக்பாஸ் வீட்டில் 96 நாட்கள் உள்ளே இருந்து வெளியேறிய பூர்ணிமா ரவி, 16 லட்சம் ரொக்கத்துடன் வெளியேறினார். தபிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் செவப்பி, எல்லோ உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.
</p><p>
சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். தற்போது, கிளாமர் லுக்கில் எடுத்த அழகிய புகைப்படங்களை பகிர்ந்து பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-09-03T16:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/key-announcement-for-scholarship-exam-students-1788452528"></link>
            <id>https://jvpnews.com/article/key-announcement-for-scholarship-exam-students-1788452528</id>
            <summary type="text">2026 ஆம் ஆண்டின் 5 ஆம் தரப் புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில், 6 ஆம் தரத்திற்கான விண்ணப்பங்களை அதிபர்கள் ஊடாக இணையவழி (Online) முறைய...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026 ஆம் ஆண்டின் 5 ஆம் தரப் புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில், 6 ஆம் தரத்திற்கான விண்ணப்பங்களை அதிபர்கள் ஊடாக இணையவழி (Online) முறையில் சமர்ப்பிக்க முடியும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.</p><p> 

அறிக்கையொன்றை வெளியிட்டு அந்த அமைச்சு இதனைத் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3d93bbab-bd11-4ef5-a065-e4efd98368cf/26-6a999eb61926a.webp' /></p><p> </p><p>

இதற்கான உரிய திகதிகள் மற்றும் வழிகாட்டுதல்கள் எதிர்வரும் நாட்களில் வெளியிடப்படவுள்ளன.</p><p></p>]]></content>
            <updated>2026-09-03T16:24:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரசின் 22ஆவது திருத்தத்துக்கு எதிராக கொழும்பில் திரண்ட எதிர்க்கட்சியினர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/massive-protest-government-s-22nd-amendment-1788451207"></link>
            <id>https://tamilwin.com/article/massive-protest-government-s-22nd-amendment-1788451207</id>
            <summary type="text">அரசின் மக்கள் விரோத அரசமைப்பு 22ஆவது திருத்தச் சட்ட மூலத்துக்கு எதிராக,
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில் கொழும்பு கோட்டை தொடருந்து&amp;nbsp...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரசின் மக்கள் விரோத அரசமைப்பு 22ஆவது திருத்தச் சட்ட மூலத்துக்கு எதிராக,
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில் கொழும்பு கோட்டை தொடருந்து&nbsp; நிலையத்துக்கு முன்பாக இன்று மாபெரும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
</p><p>
ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் ஒருங்கிணைந்து ஏற்பாடு
செய்திருந்த இந்தப் போராட்டத்தில், நாட்டின் நாலாபாகங்களிலிருந்தும் திரண்டு
வந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள், அரசியல் ஆர்வலர்கள் மற்றும் ஆதரவாளர்கள்
பங்கேற்று அரசுக்கு எதிரான தமது பலமான எதிர்ப்பைக் காட்டினர்.</p><h2>மாபெரும் போராட்டம்</h2><p>
</p><p>
போராட்டத்தின் நடுவே மக்கள் வெள்ளத்தின் மத்தியில் கலந்துகொண்டு உரையாற்றிய
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, மக்களின் அடிப்படை உரிமைகளைப்
பறிக்கும் எந்தவொரு சட்டமூலத்துக்கும் நாடா ளுமன்றத்துக்குள்ளும் வெளியிலும்
தகுந்த பதிலடி கொடுப்போம் என்று சூளுரைத்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/babb0125-2625-42c2-81f9-c5cecf888503/26-6a999b57a2c02.webp' /></p><p>

தலைநகரின் முக்கிய போக்குவரத்து மையமான கோட்டை ரயில் நிலையச் சந்தியை
முற்றுகையிட்ட போராட்டக்காரர்கள், அரசமைப்பைத் துஷ்பிரயோகம் செய்யும் அரசின்
நடவடிக்கையைக் கண்டித்தும், ஜனநாயகத்தைப் பாதுகாக்குமாறு வலியுறுத்தியும்
கடுமையான கோஷங்களை எழுப்பினர்.
</p><p>
மிகக் கச்சிதமாகவும் கட்டுப்பாட்டுடனும் ஒழுங்கமைக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டம்
அந்தப் பகுதியைச் ஸ்தம்பிக்க வைத்தது.

எதிர்க்கட்சிகளின் இந்த அதிரடி நகர்வு அரசுக்குப் பாரிய அரசியல் அழுத்தத்தைக்
கொடுத்துள்ளது என்று அரசியல் ஆய்வாளர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-03T16:08:08+00:00</updated>
        </entry>
    </feed>
