<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-09-09T03:33:50+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழ் குடும்ப பெண்ணுக்கு மர்ம நபர் அரங்கேற்றிய சம்பவம் ; இலட்ச கணக்கில் பறிபோன பணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/mysterious-man-s-act-against-tamil-woman-1788924663"></link>
            <id>https://jvpnews.com/article/mysterious-man-s-act-against-tamil-woman-1788924663</id>
            <summary type="text">ஏ.டி.எம்.இயந்திரத்தில் பணம் எடுக்க சென்ற பெண்ணுக்கு உதவுவது போல் நடித்து, அவரது வங்கி அட்டையை மாற்றிக் கொண்டு சென்று ரூ.6,13,920 பணத்தை மோசடியாக பெற்ற...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">ஏ.டி.எம்.இயந்திரத்தில் பணம் எடுக்க சென்ற பெண்ணுக்கு உதவுவது போல் நடித்து, அவரது வங்கி அட்டையை மாற்றிக் கொண்டு சென்று ரூ.6,13,920 பணத்தை மோசடியாக பெற்றதாகக் கூறப்படும் நபரை கைது செய்ய தெற்கு களுத்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
</p><p style="text-align: justify; ">


களுத்துறை, மஹீனட்டியங்கல, சவுசிறிபுர பகுதியைச் சேர்ந்த தமிழ்&nbsp; குடும்ப பெண்&nbsp; செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3c210c05-3d22-4ad3-9884-781eea5ecbd3/26-6aa0d2f9531ab.webp' /></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">


தனிப்பட்ட தேவைக்காக கடந்த 05ஆம் திகதி களுத்துறை இலங்கை வங்கியின் உயர் தரக் கிளைக்கு சென்று ஏ.டி.எம் அட்டை மூலம் பணம் எடுக்க முயன்றதாகவும், அட்டை மூலம் பணம் எடுக்கத் தெரியாததால் அங்கிருந்த பெண் ஒருவரிடம் தனது அட்டையையும் இரகசிய இலக்கத்தையும் வழங்கியதாகவும் அவர் பொலிஸில் தெரிவித்துள்ளார்.
</p><p style="text-align: justify; ">


எனினும், அந்தப் பெண்ணாலும் பணம் எடுக்க முடியாத நிலையில், அங்கிருந்த ஆண் ஒருவர் உதவ முன்வந்து பணம் எடுக்க முயன்றதாகவும், அந்த முயற்சியும் தோல்வியடைந்ததாகவும் முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
</p><p style="text-align: justify; ">


இதனையடுத்து கடந்த 07ஆம் திகதி வங்கிக்குச் சென்று தனது கணக்கை பரிசோதித்தபோது,நான்கு சந்தர்ப்பங்களில் மொத்தம் ரூ.6,13,920 பணம் தனது கணக்கிலிருந்து பெறப்பட்டிருந்தமை தெரியவந்துள்ளது.</p><p style="text-align: justify; ">



வங்கி அதிகாரிகளின் உதவியுடன் பரிசோதித்தபோது, தன்னிடம் இருந்த வங்கி அட்டை தனது கையொப்பத்துடன் கூடிய அட்டை அல்ல என்பது தெரியவந்ததாகவும், முன்னதாக உதவ முன்வந்த நபரே தனது வங்கி அட்டையை மாற்றிச் சென்றிருப்பது தெரியவந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
</p><p style="text-align: justify; ">


சம்பவம் தொடர்பில் தெற்கு களுத்துறை பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர் ஈ.டி.ஹேரத் மற்றும் குற்ற விசாரணைப் பிரிவின் உப பொலிஸ் பரிசோதகர் மதுஷங்க உள்ளிட்ட அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-09-09T03:31:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடும் வாகனங்களுக்கு கட்டாயமாக்கப்படும் நடைமுறை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/new-regulations-for-passanger-vehicles-1788923865"></link>
            <id>https://tamilwin.com/article/new-regulations-for-passanger-vehicles-1788923865</id>
            <summary type="text">&amp;nbsp;பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடும் வாகனங்கள் தொடர்பில் அரசாங்கம் புதிய நடைமுறையொன்றை அரசாங்கம் கட்டாயமாக்க உள்ளது.
பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடும்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடும் வாகனங்கள் தொடர்பில் அரசாங்கம் புதிய நடைமுறையொன்றை அரசாங்கம் கட்டாயமாக்க உள்ளது.
</p><p>பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடும் அனைத்து பேருந்துகள் மற்றும் வேன்கள் ஒவ்வொரு 5,000 கிலோமீற்றருக்கு ஒருமுறையோ அல்லது 3 மாதங்களுக்குள்ளோ அடிப்படை வாகன தகுதிப் பரிசோதனை சான்றிதழைப் பெறுவது கட்டாயமாக்கப்படும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.</p><p>இதற்கமைய, 3 மாதங்களுக்கு ஒருமுறை வாகனத்தின் அடிப்படைப் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், இதற்கான வர்த்தமானி அறிவித்தல் விரைவில் அங்கீகரிக்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/99ff6331-191b-46b2-a324-63cf2bf717da/26-6aa0cfdad1ce3.webp' /></p><p>
பயணிகள் பேருந்துகள், வேன்கள், பாடசாலை வேன்கள் மற்றும் சுற்றுலாப் பேருந்துகள் உட்பட பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடும் அனைத்து வாகனங்களுக்கும் இது பொருந்தும் என தெரிவித்துள்ளார்.
</p><p>எனினும், சொந்த பயன்பாட்டுக்கான தனிநபர் (தனியார்) வாகன உரிமையாளர்களுக்கு இந்த விதிமுறை பொருந்தாது.
இந்த வாகனப் பரிசோதனையை பொதுவாக 1,500 ரூபா முதல் 2,000 ரூபா வரையிலான கட்டணத்தில் செய்ய முடியும். </p><p>அண்மைக்காலமாக இடம்பெற்ற பல வீதி விபத்துக்களில் பயணிகள் பேருந்துகளின் பிரேக் (Brake) அமைப்பு முறையாகப் பராமரிக்கப்படாமையே காரணம் என்பது தெரியவந்துள்ளது. </p><p>
கடந்த கால விபத்து அறிக்கையொன்றில், பேருந்தின் ஒரு பக்க பிரேக் ஒரு வருடம் முழுமையாகச் செயலிழக்கச் செய்யப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
</p><p>மக்கள் மகிழ்ச்சியாக இருக்கவே சுற்றுலா பயணங்களை மேற்கொள்கின்றனர். ஆனால் இத்தகைய கவனக்குறைவுகளால் பலரின் உயிர்கள் விபத்துக்களில் பறிபோகின்றன என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>மேலும், என்.வீ.க்யூ தகுதி பெற்ற தொழில்வல்லுநர்கள் பணியாற்றும் பதிவு செய்யப்பட்ட வாகன பராமரிப்பு நிலையங்களில் இந்த வாகனப் பரிசோதனைகளை மேற்கொள்ள முடியும் எனவும், இதன் மூலம் அத்தகைய தொழில்வல்லுநர்கள் மேலதிக வருமானத்தைப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-09T03:20:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[பொலிஸ் அதிகாரியின் உயிரை பறித்த விபத்து ; விசாரணைகள் தீவிரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/crash-claims-police-officer-s-life-1788923591"></link>
            <id>https://jvpnews.com/article/crash-claims-police-officer-s-life-1788923591</id>
            <summary type="text">நேற்று (08) கொஸ்லந்த - வெல்லவாய வீதியில் ஏற்பட்ட விபத்தில் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.கொஸ்லந்த - வெல்லவாய வீதி...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">நேற்று (08) கொஸ்லந்த - வெல்லவாய வீதியில் ஏற்பட்ட விபத்தில் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p style="text-align: justify; ">கொஸ்லந்த - வெல்லவாய வீதியின் உடுமுல்ல பகுதியில் வெல்லவாய திசையை நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று, எதிர்திசையில் வந்த டிப்பர் லொறியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/265f43b6-f387-4272-83a0-b958469d9979/26-6aa0cec8b4815.webp' /></p><h2 style="text-align: justify; ">&nbsp;மேலதிக விசாரணை</h2><p style="text-align: justify; "> 

 

விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைகிள் செலுத்துனர் கொஸ்லந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.</p><p style="text-align: justify; ">இவ்வாறு உயிரிழந்தவர் அல்தும்முல்ல பகுதியைச் சேர்ந்த 58 வயதுடைய, கொஸ்லந்த பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவராவார்.</p><p style="text-align: justify; ">சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-09T03:13:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[முன்னாள் அமைச்சரின் செயலாளர் கொலை! வெளிநாட்டிலிருந்து நாடு கடத்தப்பட்ட ஆபத்தான நபர் சி.ஐ.டியினரால் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/konda-ranji-back-to-the-island-today-1788920335"></link>
            <id>https://tamilwin.com/article/konda-ranji-back-to-the-island-today-1788920335</id>
            <summary type="text">புதிய இணைப்புடுபாயில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு நாடுகடத்தப்பட்ட பாதாள உலகக் குழு உறுப்பினரான ரஞ்சித் குமார் என்ற ‘கொண்ட ரஞ்சி’ குற்றப்புலனாய்புத் த...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>டுபாயில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு நாடுகடத்தப்பட்ட பாதாள உலகக் குழு உறுப்பினரான ரஞ்சித் குமார் என்ற ‘கொண்ட ரஞ்சி’ குற்றப்புலனாய்புத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
 

இன்று (09) காலை 8.00 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த நிலையில் அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.</p><h2>முதலாம் இணைப்பு</h2><p>ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்கும்பல் உறுப்பினரான ரஞ்சித் குமார் என்ற 'கொண்ட ரஞ்சி' டுபாயிலிருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

</p><p>இன்று (09) காலை 8.00 மணிக்கு அவர் டுபாயிலிருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>இத்தாலிக்கு தப்பிச்செல்ல முயற்சி</h2><p>'கொண்ட ரஞ்சி', இத்தாலிக்கு தப்பிச்செல்ல முயன்றபோது, ​​ஜனவரி 09 திகதி டுபாயில் கைது செய்யப்பட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d1f3d237-d22b-4484-83e9-bfe334436d18/26-6aa0c473cf192.webp' /></p><p>
</p><p>இதனைபோது அவரது மனைவியும் குழந்தைகளும் அந்நாட்டின் பாதுகாப்புப்படையினரால் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர். </p><p>கொண்டா ரஞ்சி', முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவின் ஒருங்கிணைப்புச்செயலாளர் கொலை வழக்கில் பொலிஸாரால் தேடப்படும் சந்தேகநபராகவும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-09T03:12:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[நல்லூர் அழகனவன் தேரேறி அருள்பாலிக்கும் ஆனந்தக் காட்சி - LIVE]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/nallur-festival-2026-1788923115"></link>
            <id>https://tamilwin.com/article/nallur-festival-2026-1788923115</id>
            <summary type="text">வரலாற்று சிறப்புமிக்க யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த தேர்த் திருவிழா இன்றாகும்.

கடந்த மாதம் 17ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான நல்ல...</summary>
            <content type="html"><![CDATA[<p>வரலாற்று சிறப்புமிக்க யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த தேர்த் திருவிழா இன்றாகும்.</p><p>

கடந்த மாதம் 17ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான நல்லூரானின் திருவிழா நாளையதினம்(10) கொடியிறக்கத்துடன் நிறைவுக்கு வருகின்றது. </p><p>

இந்த நிலையில், இன்று காலை வசந்தமண்டப பூஜைகளின் பின்னர் தேர் ஏறி ஊர்வலம் வரும் நல்லூர் அழகனவன் அலங்காரக் கந்தனாய் புறப்பட்டு மக்களுக்கு காட்சியளித்துள்ளார். </p><p>

நேற்றையதினம் சப்பரத் திருவிழா நிறைவுற்ற நிலையில், இன்றையத் தேர்த்திருவிழாவின் பின்னர் நாளையதினம் தீர்த்தத் திருவிழாவும், கொடியிறக்கமும் இடம்பெறவுள்ளது.
</p><p>
நாடளாவிய ரீதியில் இருந்து இலட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்துள்ள நிலையில், புலம்பெயர் மக்களும் நல்லூரானை தரிசிக்க படையெடுத்துள்ளனர்.&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/6F36aLxtwjU" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p>]]></content>
            <updated>2026-09-09T03:11:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ் அராலியில் அதிசயம்! பொங்கி வழியும் கிணறுகள்: ஐயனாரின் புதுமை எனும் மக்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/wells-overflowing-with-water-in-araly-jaffna-1788922562"></link>
            <id>https://ibctamil.com/article/wells-overflowing-with-water-in-araly-jaffna-1788922562</id>
            <summary type="text">அராலி கிழக்கு, மலையாளங்காடு ஐயனார் ஆலயத்தின் காணியில் உள்ள கிணறு மற்றும் அதனை அண்டியுள்ள மேலும் சில கிணறுகள் வழக்கத்துக்கு மாறாக பெருக்கெடுத்துள்ளன.கு...</summary>
            <content type="html"><![CDATA[<p>அராலி கிழக்கு, மலையாளங்காடு ஐயனார் ஆலயத்தின் காணியில் உள்ள கிணறு மற்றும் அதனை அண்டியுள்ள மேலும் சில கிணறுகள் வழக்கத்துக்கு மாறாக பெருக்கெடுத்துள்ளன.</p><p>குறித்த பகுதியில் உள்ள ஐயனார் ஆலய காணியில் உள்ள கிணறானது நில மட்டத்திற்கு மேலே தண்ணீர் வந்த நிலையில் கிணற்றில் இருந்து வெளியேறிய வண்ணம் உள்ளது.
</p><p>
அத்துடன் அதனை அண்டிய மேலும் ஒரு கிணறானது நில மட்டத்திற்கு தண்ணீர் மட்டம் வந்துள்ளதையும், ஏனைய இரண்டு கிணறுகள் வழமைக்கு மாறாக நீர் மட்டம் உயர்ந்து உள்ளதையும் அவதானிக்க முடிகின்றது.</p><p></p><h2>தண்ணீர் மிதமான சூடு</h2><p>
</p><p>இது குறித்து அந்த ஊரில் உள்ளவர்கள் கருத்து தெரிவிக்கையில், குறித்த கிணறுகளில் இந்த மாதங்களில் நீர்மட்டம் மிகவும் குறைவாகவே காணப்படும். குடிப்பதற்கு கூட தண்ணீர் கிடைக்காது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/72547092-5db5-4c71-ad03-8ba77f56fce4/26-6aa0ccdb4ba39.webp' /></p><p>
மூன்று அல்லது நான்கு பேர் குளித்தாலேயே கிணற்றில் உள்ள தண்ணீர் முடிந்து விடும்.&nbsp;</p><p>இவ்வாறான சூழ்நிலையில் வழமைக்கு மாறாக நீர்மட்டம் உயர்ந்துள்ளமை ஐயனாரின் புதுமை என்றே நாங்கள் பார்க்கின்றோம். எமது கிராமத்திற்கு எந்தவிதமான தீங்கும் வராமல் காக்க வேண்டும் என்றனர்.</p><p>மேலும் நீர்மட்டம் உயர்ந்து கிணறுகளின் தண்ணீரானது நன்னீராக மாறியுள்ளதுடன், ஒரு கிணற்றின் தண்ணீர் மிதமான சூட்டுடன் இருப்பதை உணர முடிகிறது.&nbsp; &nbsp; &nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-09T03:05:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரசு பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/futa-strike-on-today-1788922960"></link>
            <id>https://tamilwin.com/article/futa-strike-on-today-1788922960</id>
            <summary type="text">பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் இன்று நாடு தழுவிய ரீதியில் ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடத் தீர்மானித்துள்ளனர்.இலங்கையில் அரச பல்கலைக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் இன்று நாடு தழுவிய ரீதியில் ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடத் தீர்மானித்துள்ளனர்.</p><p>இலங்கையில் அரச பல்கலைக்கழக அமைப்பில் நிலவும் தீவிர பிரச்சினைகளுக்குத் தீர்வு கோரி இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.&nbsp;</p><p>
நிலவும் நெருக்கடிகள் தொடர்பாக அரசாங்கம் இதுவரை உரிய தீர்வை வழங்காத காரணத்தினால், இந்தத் தொழிற்சங்க நடவடிக்கையைத் தீவிரப்படுத்தத் தீர்மானித்ததாக பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனத்தின் செயலாளர் விரிவுரையாளர் சாருதத்த இலங்கசிங்க தெரிவித்துள்ளார்.
</p><p>புதிதாக 50 பல்கலைக்கழகங்களை ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் முன்வைத்துள்ள யோசனை குறித்தும் அவர் இங்கு கருத்து தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3d4e0472-5576-438e-a34b-64a261f9143c/26-6aa0cc523b368.webp' /></p><p> </p><p>
கல்வியை விரிவுபடுத்துவது ஒரு நேர்மறையான விடயம் என்ற போதிலும், தற்போதுள்ள 17 அரசு பல்கலைக்கழகங்களைக் கூட சீராகப் பராமரிக்க முடியாத சூழலில், புதிய பல்கலைக்கழகங்களை உருவாக்குவது நடைமுறைக்கு சாத்தியமற்றது என அவர் சுட்டிக்காட்டினார்.</p><p>
எனவே, தற்போதைய பல்கலைக்கழகங்களின் தரத்தைப் பாதுகாப்பதற்கே முதன்மை முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
</p><p>கடந்த வாரம் மதிய உணவு இடைவேளையின் போது கவனயீர்ப்புப் போராட்டங்களில் ஈடுபட்ட போதிலும், அரசாங்கத்தின் மௌனப் போக்கிற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையிலேயே இந்த நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுவதாக சாருதத்த இலங்கசிங்க மேலும் குறிப்பிட்டார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-09T03:03:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[ராஜபக்சர்களுக்கு நெருக்கமான மற்றுமொரு நபருக்கும் சிக்கல் - விசாரணைக்காக துரத்தும் அதிகாரிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/tissa-kuttiarachchi-investigation-ccib-1788921555"></link>
            <id>https://tamilwin.com/article/tissa-kuttiarachchi-investigation-ccib-1788921555</id>
            <summary type="text">ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாரச்சி விசாரணையொன்றிற்காக நேற்று (08) சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப்பிரிவி...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாரச்சி விசாரணையொன்றிற்காக நேற்று (08) சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப்பிரிவிற்கு அழைக்கப்பட்ட நிலையில் அவர் முன்னிலையாகவில்லை என்று பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.</p><p>ஊவா கேப்பிட்டல் கூட்டுறவு வங்கியில் (Uva Capital Co-operative Bank) நிகழ்ந்த சில முறைகேடுகள் தொடர்பான விசாரணையில் வாக்குமூலம் அளிப்பதற்காக அவர் அழைக்கப்பட்டதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி கூறியுள்ளார்.</p><h2>வாக்குமூலம் அளிக்கத்தவறினால் சட்ட நடவடிக்கை</h2><p>இருப்பினும், நேற்று (08) சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப்பிரிவிற்கு அழைக்கப்பட்ட போதும் அவர் முன்னிலையாகவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4b493b23-2fc2-4a5f-9aed-e1b121ab73e6/26-6aa0cc527e26b.webp' /></p><p>இதற்கமைய, அவரை மற்றொரு திகதியில் மீண்டும் அழைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்&nbsp;சிரேஷ்ட அதிகாரி கூறியுள்ளார்.</p><p>அவர் தொடர்ந்து வாக்குமூலம் அளிக்கத்தவறினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.</p><p></p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-09T03:02:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானின் ஐந்து எண்ணெய் தாங்கிக் கப்பல்கள் மீது தாக்குதல் ; ஆட்டத்தை ஆரம்பித்த அமெரிக்கா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/five-iranian-oil-tankers-come-under-attack-1788922851"></link>
            <id>https://canadamirror.com/article/five-iranian-oil-tankers-come-under-attack-1788922851</id>
            <summary type="text">அமெரிக்கப் போர்க்கப்பலை ஈரான் இருமுறை தாக்கியதற்குப் பதிலடியாக, அந்நாட்டின் ஐந்து எண்ணெய் தாங்கிக் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியதாக அமெரிக்க மத்திய...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்கப் போர்க்கப்பலை ஈரான் இருமுறை தாக்கியதற்குப் பதிலடியாக, அந்நாட்டின் ஐந்து எண்ணெய் தாங்கிக் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியதாக அமெரிக்க மத்திய கட்டளையகம் (Centcom) தெரிவித்துள்ளது.</p><p> 

 

ஓமன் வளைகுடாவில் ஈரானிய புரட்சிகர காவல் படையுடன் (IRGC) தொடர்புடைய நான்கு எண்ணெய் தாங்கிக் கப்பல்களும், ஈரானின் முக்கிய எண்ணெய் முனையமான கார்க் தீவுக்கு அருகே மற்றொரு கப்பலும் இலக்கு வைக்கப்பட்டன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/99817ad5-c382-4519-a019-cd1f0d9009d0/26-6aa0cbe57cac5.webp' /></p><p>

 

இதற்குப் பதிலடியாக ஜோர்தானில் உள்ள அமெரிக்க இராணுவத் தளத்தை நோக்கி ஈரான் ஏவுகணைகளை வீசித் தாக்கியது. </p><p>இருப்பினும், ஈரான் செலுத்திய 20 ஏவுகணைகளில் 18 ஏவுகணைகளைத் தனது வான் பாதுகாப்பு அமைப்புகள் மூலம் சுட்டு வீழ்த்தியதாக ஜோர்தான் பின்பு அறிவித்தது.</p><p>

 

கடந்த பெப்ரவரி 28 அன்று ஈரானுக்கு எதிராக அமெரிக்காவும் இஸ்ரேலும் தாக்குதல்களைத் தொடங்கிய ஆறு மாதங்களுக்குப் பிறகு, கடந்த வாரத்தில் இரு நாடுகளுக்கும் இடையிலான பரஸ்பரத் தாக்குதல்கள் மேலும் தீவிரமடைந்துள்ளன. </p><p>இந்த மோதல்கள் காரணமாக ஆசியாவின் ஆரம்ப வர்த்தகத்தில் கச்சா எண்ணெய் விலைகள் உயர்வடைந்தன.</p><p>

 

அமெரிக்கக் கப்பல்கள் மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டால், குவைத் மற்றும் பஹ்ரைன் துறைமுகங்களுக்கு அருகில் உள்ள எண்ணெய் தாங்கிக் கப்பல்கள் மீது மேலதிகப் பதில் தாக்குதல்கள் நடத்தப்படும் என்று ஈரான் எச்சரித்துள்ளது.</p><p> 

 

துறைமுகங்களில் அல்லது நங்கூரமிட்டுள்ள அமெரிக்காவுடன் தொடர்புடைய அனைத்து எண்ணெய் தாங்கிக் கப்பல்களின் ஊழியர்களும் உடனடியாக வெளியேறுமாறு ஈரானிய புரட்சிகர காவல் படை கேட்டுக்கொண்டுள்ளது.</p><p>

 

ஈரான் நடத்திய பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதலை அமெரிக்கக் கடற்படைக் கப்பல் வெற்றிகரமாகத் தவிர்த்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. </p><p>இந்தச் சம்பவத்தில் அமெரிக்க வீரர்கள் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என்று மத்திய கட்டளையகம் உறுதிப்படுத்தியுள்ளது.
</p><p>
 

தாக்கப்பட்ட ஐந்து எண்ணெய் தாங்கிக் கப்பல்களும் ஈரானிய புரட்சிகர காவல் படைக்கும் அதன் பிராந்திய அமைப்புகளுக்கும் நிதியளிக்கும் பில்லியன் டொலர் நிழல் வலையமைப்பின் ஒரு பகுதி என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-09T03:01:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[5 நாட்களில் உலகளவில் 'இம்மார்ட்டல்' திரைப்படம் செய்துள்ள வசூல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/immortal-movie-5-days-box-office-1788922603"></link>
            <id>https://cineulagam.com/article/immortal-movie-5-days-box-office-1788922603</id>
            <summary type="text">கடந்த வாரம் திரைக்கு வந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ள &#039;இம்மார்ட்டல்&#039; திரைப்படம், 5 நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல் எவ்வளவு என்பது குறித்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கடந்த வாரம் திரைக்கு வந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ள '<a href="https://www.youtube.com/watch?v=WxQOM5_OifY" target="_blank">இம்மார்ட்டல்</a>' திரைப்படம், 5 நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல் எவ்வளவு என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.<br></p><p></p><h2>'இம்மார்ட்டல்'</h2><p>

குட் நைட், டூரிஸ்ட் பேமிலி, டாடா, லப்பர் பந்து மற்றும் சமீபத்தில் வெளியான மொத ராத்திரி உள்ளிட்ட பல திரைப்படங்கள் கடந்த 5 ஆண்டுகளில் அறிமுக இயக்குநர்களின் இயக்கத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்றுள்ளன. அந்த வரிசையில் தற்போது 'இம்மார்ட்டல்' திரைப்படமும் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fa8f66b8-3f05-4ad5-b467-1e351b74b889/26-6aa0caee9c872.webp' /></p><p>அறிமுக இயக்குநர் மாரியப்பன் சின்னா இயக்கத்தில் உருவாகி கடந்த வாரம் திரைக்கு வந்த இப்படத்தில் ஜி.வி. பிரகாஷ் குமார் மற்றும் கயாடு லோஹர் இணைந்து நடித்துள்ளனர். 

இசையமைப்பாளர் சாம் சி.எஸ் இப்படத்திற்கு இசையமைக்க, லொள்ளு சபா மாறன், கதிர், டி.எம். கார்த்திக் ஸ்ரீனிவாசன், குமார் நட்ராஜன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/19a5435a-1f4c-46fe-bda1-e738a97c81ce/26-6aa0caef55c4b.webp' /></p><p>ஹாரர் திரில்லர் கதைக்களத்தில் எடுக்கப்பட்ட இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனம் கிடைத்துள்ளது. மேலும், முதல் நாளிலிருந்தே வசூல் ரீதியாகவும் பாக்ஸ் ஆபிஸில் வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
</p><h3>
பாக்ஸ் ஆபிஸ் வசூல்</h3><p>

ஜி.வி. பிரகாஷ் மற்றும் கயாடு முதல் முறையாக இணைந்து நடித்து வெளிவந்த 'இம்மார்ட்டல்' திரைப்படம், 5 நாட்களை வெற்றிகரமாக பாக்ஸ் ஆபிஸில் கடந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2a15b4a2-3033-4b87-8197-b55d466986ba/26-6aa0caf011f0d.webp' /></p><p> </p><p>இந்த நிலையில், 5 நாட்களில் இப்படம் உலகளவில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 5 நாட்களில் உலகளவில் 'இம்மார்ட்டல்' திரைப்படம் ரூ. 8 கோடி வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் எவ்வளவு வசூல் செய்யும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.</p>]]></content>
            <updated>2026-09-09T03:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாமல் கைதால் gen-z இளைஞர்கள் கொந்தளிப்பு! முன்னாள் அமைச்சரின் விளக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/gen-z-is-not-angry-about-namal-s-arrest-vasudeva-1788921378"></link>
            <id>https://ibctamil.com/article/gen-z-is-not-angry-about-namal-s-arrest-vasudeva-1788921378</id>
            <summary type="text">நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கைது செய்யப்பட்டுள்ளமையை அரசியல்
பழிவாங்கல் நடவடிக்கையாக நான் கருதவில்லை&amp;nbsp;என்று ஜனநாயக இடதுசாரி முன்னணியின் த...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கைது செய்யப்பட்டுள்ளமையை அரசியல்
பழிவாங்கல் நடவடிக்கையாக நான் கருதவில்லை&nbsp;என்று ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.</p><p>அத்துடன் அவரது கைது இளைஞர்கள் மத்தியில் எவ்வித கோபத்தையும் ஏற்படுத்தவில்லை என வாசுதேவ குறிப்பிட்டார்.</p><p>ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே வாசுதேவ நாணயக்கார மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.</p><p></p><h2>அரசியல் பழிவாங்கல்</h2><p>அவர் மேலும் தெரிவித்ததாவது:-

"ஒருவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தாமல், பயங்கரவாதத் தடைச்
சட்டத்தின் கீழ் தடுத்து வைத்தால் மட்டுமே அதனை அரசியல் பழிவாங்கல் எனக் கூற
முடியும்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d7915330-79b8-48bd-8cd3-302ef8bd73a4/26-6aa0c860bc79d.webp' /></p><p>மாறாக, கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவது சாதாரண சட்ட
நடைமுறையாகும்.</p><p> எனவே, அதில் அரசியல் பழிவாங்கல் எதுவும் இல்லை.

அந்தவகையில், நாமல் ராஜபக்ஷவின் கைது நடவடிக்கையில் நான் எவ்வித தவறையும்
காணவில்லை. </p><p>சட்டத்தை நடைமுறைப்படுத்துவது பழிவாங்கும் நடவடிக்கையா அல்லது அரன்
கடமையா என்பது நீதிமன்றத் தீர்ப்பின் மூலமே தெளிவுபெறும் என்றார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-09T02:47:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தியாவில் பிடிபட்ட பிரபல போதை வர்த்தகரின் சகாக்கள் இலங்கையில் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/drug-lord-s-aides-arrested-in-sri-lanka-1788921815"></link>
            <id>https://jvpnews.com/article/drug-lord-s-aides-arrested-in-sri-lanka-1788921815</id>
            <summary type="text">இந்தியாவின் திருச்சி முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரும் பாதாள உலகக் குழு உறுப்பினருமான &#039;பழனி ஷிரான் குரோரியன்&#039; என்பவரி...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">இந்தியாவின் திருச்சி முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரும் பாதாள உலகக் குழு உறுப்பினருமான 'பழனி ஷிரான் குரோரியன்' என்பவரின் முக்கிய சகாக்கள் நால்வர் கொழும்பில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p style="text-align: justify; ">
புறக்கோட்டை பொலிஸ் விசேட பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் அவர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6b58e1c1-f786-44ea-aaad-530552e326b6/26-6aa0c7d9364b2.webp' /></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
அவர்கள் மட்டக்குளி, கெசல்வத்தை, மாளிகாவத்தை மற்றும் கொட்டாஞ்சேனை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.
</p><p style="text-align: justify; ">
பழனி ஷிரானின் போதைப்பொருட்களைக் கொழும்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு விநியோகிக்கும் பணியை அவர்கள் செய்து வந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.</p><p style="text-align: justify; ">

அவர்கள், ஒரு நாளைக்கு 50 கிராம் போதைப்பொருளை விற்பனை செய்வதன் மூலம் 15,000 ரூபாய் வரை வருமானம் ஈட்டி வந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-09T02:43:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறையிலுள்ள நாமலை பார்க்க சென்று சர்ச்சையில் சிக்கிய ஷிரந்தி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/shiranthi-in-struggle-after-visiting-prison-1788919351"></link>
            <id>https://tamilwin.com/article/shiranthi-in-struggle-after-visiting-prison-1788919351</id>
            <summary type="text">விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச பார்ப்பதற்காக அவரது தாயார் ஷிராந்தி ராஜபக்ச தனது சொந்த வாகனத்திலேயே சிறைச்சாலைக்குள...</summary>
            <content type="html"><![CDATA[<p>விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச பார்ப்பதற்காக அவரது தாயார் ஷிராந்தி ராஜபக்ச தனது சொந்த வாகனத்திலேயே சிறைச்சாலைக்குள் செல்ல அனுமதிக்கப்பட்ட விடயம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. </p><p>

இந்த விடயம் தொடர்பில் அமைச்சர் விஜித்த ஹேரத்திடம் நேற்று ஊடகவிலாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். </p><p>

அதற்கு பதிலளித்தவர், முன்னாள் ஜனாதிபதி ஒருவரின் மனைவியாக இருப்பதனால் ஷிரந்திக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கலாம் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>
</p><h2><b>சர்ச்சையில் சிக்கிய ஷிரந்தி</b></h2><p><i>“நாமல் ராஜபக்சவை பார்க்க ஷிராந்தி ராஜபக்ச தனது வாகனத்திலேயே சிறைச்சாலைக்குள் செல்வதை நாங்கள் கண்டோம். அது எப்படி சாத்தியம்? இப்போது ஏனைய கைதிகளையும் அவ்வாறே வாகனத்தில் சென்று பார்க்க முடியுமா..! அல்லது இது நாமலுக்கு மட்டும் கிடைக்கும் விசேட சலுகையா</i>..! என ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2bc742a5-fa7d-4a50-9aef-2c48b5106ee2/26-6aa0c09b01f70.webp' /></p><p>“<i>சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்கள் விளக்கமறியலில் உள்ளனர். அத்தகையவர்களைப் பார்ப்பதற்காக சிறைச்சாலை திணைக்களத்தின் முறையொன்று உள்ளது. அந்த முறையின் அடிப்படையில்தான் அது நடந்திருக்க வேண்டும், எனக்கு அது குறித்து சரியாகத் தெரியாது</i>” என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.</p><p><i>

வாகனத்தை உள்ளே கொண்டு செல்வது இருக்கட்டும், ஒரு சாதாரண நபர் அங்கு வாகனத்தை நிறுத்தக் கூட அனுமதிக்கப்படுவதில்லையே </i>என ஊடகவிலாளர் கேள்வி எழுப்பியுள்ளார். </p><p>
முன்னாள் ஜனாதிபதி ஒருவரின் மனைவியாக இந்த அனுமதி வழங்கப்பட்டிருக்கலாம். சரியான காரணத்தை விசாரித்துவிட்டு தகவல்களை வெளிப்படுத்துகிறேன் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-09-09T02:12:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாக்ஸ் ஆபிஸ்: விஸ்வநாத் &amp; சன்ஸ் திரைப்படத்தின் இறுதி வசூல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/vishwanath-and-sons-movie-final-box-office-1788860122"></link>
            <id>https://cineulagam.com/article/vishwanath-and-sons-movie-final-box-office-1788860122</id>
            <summary type="text">சூர்யா மற்றும் மமிதா பைஜூ நடிப்பில் கடந்த மாதம் வெளியான விஸ்வநாத் &amp;amp; சன்ஸ் திரைப்படத்தின் ஒவ்வொரு நாள் வசூல் குறித்து நாம் தொடர்ந்து பார்த்துள்ளோம்...</summary>
            <content type="html"><![CDATA[<p>சூர்யா மற்றும் மமிதா பைஜூ நடிப்பில் கடந்த மாதம் வெளியான விஸ்வநாத் &amp; <a href="https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/vishwanath-and-sons-ott-release-date-official-when-and-where-to-watch-the-suriya-and-mamitha-baiju-starrer-family-entertainer-online/articleshow/133914327.cms" target="_blank">சன்ஸ் </a>திரைப்படத்தின் ஒவ்வொரு நாள் வசூல் குறித்து நாம் தொடர்ந்து பார்த்துள்ளோம். இந்த நிலையில், தற்போது இப்படத்தின் இறுதி வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதைப்பற்றி விரிவாக பார்க்கலாம்.</p><p></p><h2>சூர்யாவின் கம்பேக்</h2><p>

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவரான சூர்யா இந்த ஆண்டு கருப்பு திரைப்படத்தின் மூலம் கம்பேக் கொடுத்தார். இப்படம் உலகளவில் ரூ. 335 கோடி வரை வசூல் செய்தது. சூர்யாவின் திரை வாழ்க்கையில் அதிக வசூல் செய்த திரைப்படம் இதுவே என்பது குறிப்பிடத்தக்கது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ed754761-1066-4819-a5d6-6900f2f599f0/26-6a9fd6df95eef.webp' /></p><p>
</p><h2>
விஸ்வநாத் &amp; சன்ஸ்
</h2><p>
கருப்பு திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து சூர்யாவிடம் இருந்து ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படம் விஸ்வநாத் &amp; சன்ஸ். இயக்குநர் வெங்கி அட்லூரி இப்படத்தை இயக்கியுள்ளார். இவர் இதற்கு முன் இயக்கிய லக்கி பாஸ்கர் திரைப்படம் எவ்வளவு பெரிய வெற்றி பெற்றது என்பதை சொல்லித்தான் தெரிய வேண்டுமா என்பது இல்லை.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bef348c6-3b34-4575-9649-48c7baab177c/26-6a9fd6de335e6.webp' /></p><p>வெங்கி அட்லூரி மற்றும் சூர்யா கூட்டணியில் உருவாகி கடந்த மாதம் 14-ஆம் தேதி வெளியான இப்படம் உலகமெங்கும் நல்ல வரவேற்பை பெற்று பாக்ஸ் ஆபிஸில் லாபத்தை எட்டியது. ஆனால், தமிழ்நாட்டில் மட்டும் லாபத்தை எட்டவில்லை. இதனால் தமிழ்நாட்டில் இப்படம் வசூல் ரீதியாக தோல்வியை சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது.
</p><h3>
இறுதி வசூல்
</h3><p>
இந்நிலையில், சூர்யாவின் விஸ்வநாத் &amp; சன்ஸ் திரைப்படத்தின் இறுதி வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் உலகளவில் ரூ. 220 கோடி மொத்தமாக வசூல் செய்துள்ளது. கருப்பு ரூ. 335 கோடி, விஸ்வநாத் &amp; சன்ஸ் ரூ. 220 கோடி என ஒரே ஆண்டில் ரூ. 555 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளார் சூர்யா.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1f65651e-e532-486c-acb8-d23a7255a70b/26-6a9fd6dd78eac.webp' /></p><p></p><h2>

ஜீது மாதவன் - சூர்யா
</h2><p>
கருப்பு மற்றும் விஸ்வநாத் &amp; சன்ஸ் திரைப்படத்தை தொடர்ந்து மலையாள இயக்குநர் ஜீது மாதவன் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் திரைப்படமும் இந்த ஆண்டு இறுதிக்குள் வெளியாகும் என கூறப்படுகிறது. அப்படமும் வெளிவந்தால் கண்டிப்பாக இந்த ஆண்டிற்குள் நடிகர் சூர்யா மாபெரும் வசூல் சாதனை படைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fdb5e1e1-21c6-42d2-9214-8c44748a3114/26-6a9fd6dedf25a.webp' /></p>]]></content>
            <updated>2026-09-09T02:09:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[முன்னாள் ஜனாதிபதியின் இரண்டு புதல்வர்களின் மற்றுமொரு பாரிய மோசடி அம்பலம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/former-president-s-sons-in-risk-1788916471"></link>
            <id>https://tamilwin.com/article/former-president-s-sons-in-risk-1788916471</id>
            <summary type="text">தேயிலைத் தோட்டத்தை தமக்கு சொந்தமாக்கிக் கொள்ள நடவடிக்கை எடுத்த முன்னாள் ஜனாதிபதியின் இரண்டு மகன்களுக்கு எதிராக விசாரணையை ஆரம்பிக்க, குற்றப் புலனாய்வு ...</summary>
            <content type="html"><![CDATA[<p>தேயிலைத் தோட்டத்தை தமக்கு சொந்தமாக்கிக் கொள்ள நடவடிக்கை எடுத்த முன்னாள் ஜனாதிபதியின் இரண்டு மகன்களுக்கு எதிராக விசாரணையை ஆரம்பிக்க, குற்றப் புலனாய்வு தீர்மானித்துள்ளது. </p><p>

குறித்த இருவரும் மூன்று வர்த்தகர்களை பயன்படுத்தி 135 ஏக்கர் தேயிலைத் தோட்டத்தை சொந்தமாக்கிக் கொள்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளனர். </p><p>

இது தொடர்பில் கிடைத்த முறைப்பாட்டிற்கமைய, விசாரணைகள் ஆரம்பிக்க குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் சொத்துக்கள் விசாரணைப் பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது.</p><p> </p><h2><b>

 ஊழல், மோசடி</b></h2><p>இந்த மோசடி தொடர்பில் ஊழல், மோசடி மற்றும் வீண்விரையத்திற்கு எதிரான பிரஜைகள் சக்தி அமைப்பின் தலைவர் ஜாமுனி சமந்த துஷார என்பவரால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b4ce03ee-f5b5-4aa1-b6d8-09df23d45259/26-6aa0b586b8501.webp' /></p><p> 

முறைப்பாட்டிற்கு அமைவாகவே இந்தப் பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன் இது தொடர்பில் வாக்குமூலம் அளிப்பதற்காக எதிர்வரும் 14 ஆம் திகதி முன்னிலையாகுமாறு ஜாமுனி சமந்த துஷாரவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.</p><p>&nbsp;முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் புதல்வர்களான யோசித ராஜபக்ச மற்றும் ரோகித ராஜபக்ச ஆகியோர் மீது இந்த குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><p></p><p> 
</p>]]></content>
            <updated>2026-09-09T02:02:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாடு முழுவதும் டீசல் நெருக்கடி! பல சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடுமென அவசர எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/diesel-crisis-srilanka-1788917242"></link>
            <id>https://tamilwin.com/article/diesel-crisis-srilanka-1788917242</id>
            <summary type="text">லங்கா ஐஓசி நிறுவனம், ஆர்.எம். பார்க் நிறுவனம் மற்றும் சினோபெக் நிறுவனம் ஆகியவற்றால் டீசல் விநியோகத்தில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளால் நாடு முழுவதும் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>லங்கா ஐஓசி நிறுவனம், ஆர்.எம். பார்க் நிறுவனம் மற்றும் சினோபெக் நிறுவனம் ஆகியவற்றால் டீசல் விநியோகத்தில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளால் நாடு முழுவதும் தட்டுபாடு ஏற்பட்டுள்ளதாக பெட்ரோலிய விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவிக்கின்றது.
</p><p>
தற்போது, ​​பெட்ரோலியம் கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான 650 எரிபொருள் நிலையங்களில் மட்டுமே டீசல் விநியோகிக்கப்பட்டு வருவதாக அந்த சங்கம் சுட்டிக்காட்டுகின்றது.</p><h2>அரசாங்கத்திற்கு சொந்தமான எரிபொருள் நிலைய விலைகள்&nbsp;</h2><p>அரசாங்கத்திற்கு சொந்தமான எரிபொருள் நிலையங்களில் விலைகள் குறைக்கப்படும்போது, ​​சம்பந்தப்பட்ட நிறுவனங்களும் அதே அளவிற்கு எரிபொருள் விலையை குறைக்கின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a349f9f7-11f9-45dc-ba26-6668951a77f1/26-6aa0bd9a74870.webp' /></p><p> </p><p>தங்களுக்கு ஏற்படும் நஷ்டங்களை ஈடுகட்ட அந்த தொகையை வழங்குவதாக அரசாங்கம் ஒப்புக்கொண்டு, நிறுவனங்களுடன் ஒரு ஒப்பந்தம் செய்துகொண்டதாக இந்த நிறுவனங்கள் கூறுகின்றன. </p><p>இருப்பினும், ஒப்புக்கொண்டபடி அரசாங்கம் அந்த தொகையை வழங்கத்தவறியதே எரிபொருள் விநியோகக் கட்டுப்பாட்டிற்கு வழிவகுத்துள்ளது என்று நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.
</p><p>
அதன்படி, லங்கா ஐஓசி நிறுவனத்திற்கு சொந்தமான 250 எரிபொருள் நிலையங்கள், சினோபெக் நிறுவனத்திற்குச் சொந்தமான 150 எரிபொருள் நிலையங்கள் மற்றும் ஆர்.எம். பார்க் நிறுவனத்திற்குச் சொந்தமான 100 எரிபொருள் நிலையங்கள் டீசல் விநியோகத்தைக் கட்டுப்படுத்தியுள்ளதாக விநியோகஸ்தர்கள் கூறுகின்றனர்.
</p><p>
இந்த நிறுவனங்கள் டீசல் விநியோகத்தை தொடர்ந்து கட்டுப்படுத்தினால், எதிர்காலத்தில் எரிபொருள் தொடர்பாக பல சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடும் என்று அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.</p><h2>லங்கா ஐஓசி விநியோகஸ்தர்கள் சங்கம் கடிதம்</h2><p>
</p><p>
இதற்கிடையில், லங்கா ஐஓசி விநியோகஸ்தர்கள் சங்கம், லங்கா ஐஓசியின் நிர்வாக பணிப்பாளருக்கு எழுதிய கடிதத்தில்,</p><p>செப்டம்பர் 3 ஆம் திகதி முதல் விநியோகஸ்தர்களுக்கு ஆட்டோ டீசல் விநியோகத்தைக் கட்டுப்படுத்தும் சமீபத்திய முடிவு, போக்குவரத்து, தொழில்துறை, நகர கட்டுமானம் மற்றும் பிற அத்தியாவசிய பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாததால், விநியோகஸ்தர்களுக்கு ஏற்கனவே கடுமையான சிரமங்களை ஏற்படுத்தியுள்ளது என்று குறிப்பிட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e783bb10-192b-4577-b65e-2130d228fd12/26-6aa0bd9b2931b.webp' /></p><p>
</p><p>
வாடிக்கையாளர்கள் ஏனைய விநியோகஸ்தர்களுக்கு மாறிவிட்டால், அவர்களின் வணிகத்தை மீண்டும் பெறுவது மிகவும் கடினமாகிவிடும் என்றும், இவை விநியோக வலையமைப்பு மற்றும் டீசல் விற்பனையில் நீண்டகால பாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் அந்த கடிதத்தில் மேலும் கூறப்பட்டுள்ளது.</p><p>

எனவே, இது தொடர்பாக பொருத்தமான வழிமுறையை வகுக்குமாறு லங்கா ஐஓசி விநியோகஸ்தர்கள் சங்கம் நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.</p><p></p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-09T02:00:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாமலைத் தொடர்ந்து யோஷித மற்றும் ரோஹித தீவிர விசாரணை வலையில்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/acquisition-of-tea-estate-by-yoshitha-and-rohitha-1788917275"></link>
            <id>https://jvpnews.com/article/acquisition-of-tea-estate-by-yoshitha-and-rohitha-1788917275</id>
            <summary type="text">&amp;nbsp;முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர்களான யோஷித ராஜபக்ஷ மற்றும் ரோஹித ராஜபக்ஷ ஆகியோர், மூன்று நபர்களைப் பயன்படுத்தி 135 ஏக்கர் பரப்பளவு ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர்களான யோஷித ராஜபக்ஷ மற்றும் ரோஹித ராஜபக்ஷ ஆகியோர், மூன்று நபர்களைப் பயன்படுத்தி 135 ஏக்கர் பரப்பளவு கொண்ட தேயிலைத் தோட்டமொன்றைச் சொந்தமாக்கிக் கொண்டமை தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளப்பட உள்ளது.
</p><p>குற்றத்தால் ஈட்டப்பட்ட சொத்துக்கள் பற்றிய விசாரணைப் பிரிவு இவ்வாறு தீர்மானித்துள்ளது.</p><p>
'லஞ்சம், ஊழல் மற்றும் வீண்விரயத்திற்கு எதிரான பிரஜைகள் சக்தி' அமைப்பினால் அளிக்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5d271e30-98b8-45f8-b3b5-99bb9a3e220c/26-6aa0b61c624a3.webp' /></p><p> </p><p>
அவ்வமைப்பின் தலைவர் காமந்த துஷார என்பவரால் கடந்த ஆகஸ்ட் மாதம் 20 ஆம் திகதி இம்முறைப்பாடு குற்றத்தால் ஈட்டப்பட்ட சொத்துக்கள் பற்றிய விசாரணைப் பிரிவின் பணிப்பாளரிடம் கையளிக்கப்பட்டிருந்தது.</p><p>
குறித்த முறைப்பாடு தொடர்பில் முறையான விசாரணையை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளதாகக் குற்றத்தால் ஈட்டப்பட்ட சொத்துக்கள் பற்றிய விசாரணைப் பிரிவு முறைப்பாட்டாளருக்கு எழுத்துப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.</p><p>
முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ள அனைத்து விடயங்களுக்கும் உரிய ஆவணச் சான்றுகளுடன் வாக்குமூலமொன்றைப் பதிவு செய்வதற்காக, எதிர்வரும் 14 ஆம் திகதி காலை 9.00 மணிக்கு பொலிஸ் தலைமையகத்திற்குச் சமூகமளிக்குமாறு முறைப்பாட்டாளருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-09T01:32:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[வடக்கு - கிழக்கில் வெப்பநிலை அதிகரிப்பு தொடர்பில் பொதுமக்களுக்கு வெளியான எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/today-weather-sri-lanka-1788915943"></link>
            <id>https://ibctamil.com/article/today-weather-sri-lanka-1788915943</id>
            <summary type="text">கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, குருநாகல், மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, குருநாகல், மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் வெப்பச் சுட்டெண் காரணமாக இன்று பகல் வேளையில் அதிகரித்த வெப்பநிலையை மனித உடலினால் உணரக்கூடியதாக இருக்கும் என வளிமண்டலவியல்&nbsp; திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p>இதேவேளை, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் பல இடங்களிலும் அத்துடன் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் பொலனறுவை மாவட்டங்களின் பல இடங்களிலும் பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>பலத்த காற்றும் மின்னல் தாக்கம்</h2><p> </p><p>

சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என்றும் திணைக்களம் கூறியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/702c2a2c-bca4-43b0-bb64-5c8bd270f12e/26-6aa0b400d9795.webp' /></p><p> 

இடியுடன் கூடிய மழை பெய்கின்ற வேளைகளில் பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடும்.</p><p>இவ்வாறான சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-09T01:19:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sukran-natchathira-peyarchi-athirstam-perum-rasi-1788916474"></link>
            <id>https://jvpnews.com/article/sukran-natchathira-peyarchi-athirstam-perum-rasi-1788916474</id>
            <summary type="text">ஜோதிடத்தில் அசுரர்களின் குருவாக கருதப்படுபவர் சுக்கிரன்.&amp;nbsp;ராசிகளின் அதிபதியான சுக்கிரன், 30 நாட்களுக்கு ஒருமுறை ராசியை மாற்றுவதோடு, அவ்வப்போது நட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜோதிடத்தில் அசுரர்களின் குருவாக கருதப்படுபவர் சுக்கிரன்.&nbsp;ராசிகளின் அதிபதியான சுக்கிரன், 30 நாட்களுக்கு ஒருமுறை ராசியை மாற்றுவதோடு, அவ்வப்போது நட்சத்திரத்தையும் மாற்றுவார். அப்படி சுக்கிரனின் நிலையில் மாற்றம் ஏற்படும் போதெல்லாம் அதன் தாக்கம் 12 ராசிகளிலுமே காணப்படும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e80780a1-398d-4c3a-9c26-6a5e3216bfd0/26-6aa0b2fccfd5c.webp' /></p><p>சுக்கிரனின் இந்த பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். குறிப்பாக சில ராசிக்காரர்கள் இந்த பெயர்ச்சியால் நல்ல பலன்களைப் பெறவுள்ளனர்.&nbsp;இப்போது சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8ae87b4b-25f9-4efe-96ab-120c7382ea3e/26-6aa0b2fe37aca.webp' /></p><h4>ரிஷபம்
</h4><p>சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால் ரிஷப ராசிக்காரர்களுக்கு கடின உழைப்புக்கான முழு பலன்கள் கிடைக்கும். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படும். பல வழிகளில் இருந்து பணம் சம்பாதிக்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். பணியிடத்தில் செயல்திறன் பாராட்டப்படும். சிலருக்கு பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cdcfc042-4944-4f89-ae32-48909351c002/26-6aa0b2fedf63f.webp' /></p><h4>மிதுனம்
</h4><p>சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால் மிதுன ராசிக்காரர்களுக்கு சிறப்பாக இருக்கும். அதுவும் திடீர் நிதி ஆதாயங்கள் கிடைக்கும். முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் தேடி வரும். தடைபட்ட திட்டங்கள் வெற்றிகரமாக முடிவடையும். புதிய வீடு, வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். புதிய தொழிலை தொடங்க நினைத்தால், இக்காலம் உகந்ததாக இருக்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/48749e39-12d6-494a-b57f-d053c777efac/26-6aa0b2ff94457.webp' /></p><h4>துலாம்
</h4><p>சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால் துலாம் ராசிக்காரர்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும். ஏற்கனவே செய்த முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். கடனால் சிரமப்பட்டு வந்தால், கடன் தொல்லைகளில் இருந்து விடுபடுவீர்கள். கலை, ஊடகம், ஃபேஷன் துறையில் இருப்பவர்கள் பெரிய அளவில் பெற்றியைக் காண்பார்கள். தொழிலதிபர்களுக்கு நல்ல லாபத்தைத் தரும் புதிய திட்டங்கள் கிடைக்கும். வாழ்க்கைத் துணையுடனான உறவு வலுவடையும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e224651d-861a-497b-9490-adfc0db1f186/26-6aa0b300472ce.webp' /></p><h4>கும்பம்
</h4><p>சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால் கும்ப ராசிக்காரர்களுக்கு நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். ஒவ்வொரு செயலிலும் நல்ல அதிர்ஷ்டத்தைப் பெறக்கூடும். தொழில் ரீதியான பயணங்கள் நல்ல லாபத்தைத் தரும். வெளிநாட்டில் வேலை செய்ய வேண்டுமென்ற கனவு நனவாகும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கவாம். பணியிடத்தில் சம்பள உயர்வு, பதவி உயர்வு போன்றவை கிடைக்கும் வாய்ப்புள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fe76160b-e764-4339-b6c6-306a43925c45/26-6aa0b300efe55.webp' /></p>]]></content>
            <updated>2026-09-09T01:15:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரசாங்கம் டொலர் வருமானத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கத் தவறியுள்ளது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/govt-not-planning-to-get-dollar-1788916460"></link>
            <id>https://tamilwin.com/article/govt-not-planning-to-get-dollar-1788916460</id>
            <summary type="text">அரசாங்கம் டொலர் வருமானத்தை அதிகரிக்க நடவடிக்க எடுக்கத் தவறியுள்ளதாக &#039;சர்வஜன பலய&#039; கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திலித் ஜயவீர தெரிவித்துள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரசாங்கம் டொலர் வருமானத்தை அதிகரிக்க நடவடிக்க எடுக்கத் தவறியுள்ளதாக 'சர்வஜன பலய' கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திலித் ஜயவீர தெரிவித்துள்ளார்.
</p><p>நாட்டின் டாலர் வருமானத்தை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்காமல் அரசாங்கம் பேரணிகளை நடத்துவதால் மக்களுக்கு எவ்வித நன்மையும் ஏற்படப்போவதில்லை என குறிப்பிட்டுள்ளார்.
</p><p>மக்களின் கருத்தை அறிந்துகொள்வதற்குப் பேரணிகளை நடத்த வேண்டிய அவசியமில்லை என குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/66b3ed18-a99b-4c83-ac83-35cb07580736/26-6aa0b2ed679b3.webp' /></p><p>
நாடாளுமன்றத்தின் 1,500 ஊழியர்களிடையே ஒரு கருத்துக் கணிப்பை நடத்தினாலே நாட்டின் பொதுமக்களின் அபிப்பிராயத்தை தெளிவாக அறிந்துகொள்ள முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>பேரணிகளுக்கு யாரைக் கொண்டு வந்தாலும் அதில் எந்தப் பயனும் இல்லை எனவும், மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கு நீண்டகால, நடுத்தரகால மற்றும் குறுகியகால முறையான வேலைத்திட்டங்களே அவசியம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
</p><p>நாட்டின் டொலர்களைச் செலவழித்துப் பேருந்துகள் மூலம் ஆட்களைத் திரட்டி அரசாங்கம் பேரணிகளை நடத்தி வருகின்ற போதிலும், பொதுமக்கள் கடுமையான பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் பட்டினியால் தவித்து வருவதாக திலித் ஜயவீர மேலும் குற்றம் சாட்டியுள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-09T01:14:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பு–லண்டன் விமானத்துக்கு ஏற்பட்ட திடீர் மாற்றம் ; ஆயிரக்கணக்கான பயணிகள் பாதிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sudden-change-to-the-colombo-london-flight-1788911939"></link>
            <id>https://jvpnews.com/article/sudden-change-to-the-colombo-london-flight-1788911939</id>
            <summary type="text">பிரித்தானியாவின் வான்வழிப் போக்குவரத்து கட்டுப்பாட்டு சேவை மையத்தில் (NATS) ஏற்பட்ட தொழில்நுட்ப பிரச்சினை காரணமாக, செப்டம்பர் 8 அன்று அந்த நாட்டின் 1,...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரித்தானியாவின் வான்வழிப் போக்குவரத்து கட்டுப்பாட்டு சேவை மையத்தில் (NATS) ஏற்பட்ட தொழில்நுட்ப பிரச்சினை காரணமாக, செப்டம்பர் 8 அன்று அந்த நாட்டின் 1,000-க்கும் மேற்பட்ட வானூர்தி சேவைகள் பாதிக்கப்பட்டு பெரும் தாமதத்தையும் ரத்து நடவடிக்கைகளையும் சந்தித்தன.</p><p>
</p><p></p><p>இந்தநிலையில் கொழும்பில் இருந்து லண்டன் நோக்கிப் பயணித்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் UL503 வானூர்தி, இந்தத் தடங்கல் காரணமாக ஜெர்மனியின் பிராங்பர்ட் (Frankfurt) வானூர்தி நிலையத்திற்குத் திருப்பி விடப்பட்டது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/675a8480-d500-4035-9510-2efec0c23232/26-6aa0a1458e23d.webp' /></p><p>வானூர்திப் போக்குவரத்து செயலாக்க அமைப்பில் ஏற்பட்ட இந்தத் தவறு உள்ளூர் நேரப்படி மாலை 16:40 மணிக்குச் சரிசெய்யப்பட்டதாக, பிரித்தானிய NATS தெரிவித்துள்ளது.</p><p>

பிரச்சினை சரிசெய்யப்பட்ட போதிலும், வானூர்திகள் மற்றும் ஊழியர்கள் உரிய இடங்களில் இல்லாததால் மேலும் தாமதங்கள் தொடரும் என வானூர்தி நிறுவனங்கள் எச்சரித்துள்ளன.

இந்த நிலையில், குறித்த தடங்களுக்கு NATS மீது கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
அத்துடன்,இந்தத்தவறு குறித்து முழுமையான அறிக்கை சமர்ப்பிக்குமாறு பிரித்தானிய சிவில் வானூர்திப் போக்குவரத்து அதிகாரசபை (UK CAA) உத்தரவிட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-09T01:05:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் பாரிய விபத்து: 4 இளைஞர்கள் பரிதாப பலி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/four-dead-after-two-vehicle-crash-near-1788886271"></link>
            <id>https://canadamirror.com/article/four-dead-after-two-vehicle-crash-near-1788886271</id>
            <summary type="text">கனடாவின் மேனிடோபா மாகாணத்தில் உள்ள வின்னிபெக் பீச் பகுதியில் இரண்டு வாகனங்கள் மோதிக்கொண்ட கொடூர விபத்தில் 4 இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக கி...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் மேனிடோபா மாகாணத்தில் உள்ள வின்னிபெக் பீச் பகுதியில் இரண்டு வாகனங்கள் மோதிக்கொண்ட கொடூர விபத்தில் 4 இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக கிம்லி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p> 
நெடுஞ்சாலை 229-ல் மேற்காகப் பயணித்த கார் ஒன்று, நெடுஞ்சாலை 8-ஐக் கடக்க முயன்றபோது, தெற்கு நோக்கி வந்த வேன் ஒன்றுடன் பலமாக மோதியது. </p><p>
இந்தச் சந்திப்பில் கிழக்கு மற்றும் மேற்கு நோக்கிச் செல்லும் வாகனங்களுக்கு 'நிற்குமாறு' எச்சரிக்கைப் பலகைகள் அமைக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3ca2f6d9-f1b1-4749-b10f-db90748128a8/26-6aa03d0187a1d.webp' /></p><p> 
மோதிய வேகத்தில் இரு வாகனங்களும் வீதியின் தென்மேற்குப் பகுதியில் உள்ள பள்ளத்தில் தூக்கி வீசப்பட்டன. </p><p>அதில் ஒரு வாகனம் தலைகீழாகக் கவிழ்ந்தது. 
மேற்கு நோக்கிச் சென்ற காரில் பயணித்த 4 பேருமே சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். </p><p>
காரை ஓட்டிவந்த வின்னிபெக்கைச் சேர்ந்த 18 வயது பெண், கிம்லியைச் சேர்ந்த 18 வயது இளைஞர், சேண்டி ஹூக்கைச் சேர்ந்த 18 வயது பெண் மற்றும் ஒன்டாரியோவின் இயர் ஃபால்ஸைச் சேர்ந்த 17 வயது சிறுவன் ஆகியோர் கொல்லப்பட்டுள்ளனர்.
</p><p>வேனில் பயணித்த வின்னிபெக்கைச் சேர்ந்த 49 வயது ஓட்டுநர், ஒரு பெண் மற்றும் இரு குழந்தைகள் என 4 பேருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டன. அவர்கள் அனைவரும் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் வின்னிபெக் மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காகக் கொண்டு செல்லப்பட்டனர்.
</p><p>இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள பொலிஸார், விபத்துக்கான முழுமையான காரணம் குறித்துத் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-09T01:05:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[ராஜபக்சர்களை காப்பாற்ற துடிக்கும் ரணில்! நல்லாட்சி அரசாங்கத்தில் ராஜபக்சர்களுடன் நடந்துள்ள டீல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-arrest-ranil-support-ranil-mahinda-deal-1788892577"></link>
            <id>https://tamilwin.com/article/namal-arrest-ranil-support-ranil-mahinda-deal-1788892577</id>
            <summary type="text">நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் கைதினை தொடர்ந்து நாட்டில் அரசியல் களம் சூடிபிடித்துள்ளது.பல முக்கிய தகவல்களும் கடந்த காலங்களில் இடம்பெற்ற திரை...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் கைதினை தொடர்ந்து நாட்டில் அரசியல் களம் சூடிபிடித்துள்ளது.பல முக்கிய தகவல்களும் கடந்த காலங்களில் இடம்பெற்ற திரைமறைவு அரசியல் நகரவுகளும் அம்பலமாகின்றன.</p><p>
அந்தவகையில், ஐக்கிய தேசியக் கட்சி (UNP) ராஜபக்ச குடும்பத்திற்கு ஆதரவு வழங்குவதாகவும், அவர்களைப் பாதுகாப்பதாகவும் தற்போது கருத்துக்கள் வெளியாகின்றன.

ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாவதற்கு ராஜபக்ச குடும்பத்தின் ஆதரவு ஒரு காரணமாக இருந்ததாகக் கூறப்படுகிறது.</p><p> 

இந்தநிலையில்,அனுராதபுரத்தில் நடைபெறவிருக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) கட்சியின் மக்கள் கூட்டத்திற்கு, ஐக்கிய தேசியக் கட்சி அதிகாரப்பூர்வமாக வாழ்த்துத் தெரிவித்து கடிதம் அனுப்பியுள்ளது. </p><p>

நாமல் ராஜபக்சவின் கைது அரசியல் பழிவாங்கல் என்று கூறி, ஐக்கிய தேசியக் கட்சி அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.
</p><p>
இதேவேளை,
ராஜபக்ச குடும்பத்துடன் தொடர்புடைய 22 மில்லியன் அமெரிக்க டொலர் ஹொங்காங் வங்கி கணக்கு விவகாரத்தை, ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆசு மாரசிங்க அம்பலப்டுத்தியுள்ளார்</p><p>.

 நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர், 2015ஆம் ஆண்டில் இந்த ஹாங்காங் வங்கி கணக்கு முடக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

 இந்த விவகாரம் தொடர்பாக ஆரம்பகட்ட சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட போதிலும், அப்போதைய அரசாங்கத்தில் இருந்த சிலர் தலையிட்டு அந்த நடவடிக்கைகளைத் தடுத்ததாக ஆசு மாரசிங்க பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.</p><p>

 இந்தத் தகவல்கள் மூலம், முன்னாள் ஆட்சியாளர்களுக்கும் அப்போதைய நல்லாட்சி அரசாங்கத்திற்கும் இடையே நடந்ததாகக் கூறப்படும் 'டீலிங்' (Deal) குறித்த விடயங்களை ஆசு மாரசிங்க வெளிப்படுத்தியுள்ளார் .</p><p>

இந்த விடயங்கள் தொடர்பில் விரிவாக எடுத்து வருகின்றது நியூஸ் இன்சைட் நிகழ்ச்சி..</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/twa6VY8TL_U" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-09T01:02:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[நல்லூரான் தேர் திருவிழா ; கந்தனை தரிசிக்க அலைமோதும் பக்தர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/nallur-chariot-festival-devotees-throng-worship-1788915692"></link>
            <id>https://jvpnews.com/article/nallur-chariot-festival-devotees-throng-worship-1788915692</id>
            <summary type="text">வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவத்தின் முக்கிய நிகழ்வான தேர்த்திருவிழா இன்று புதன்கிழமை காலை வெகு விமரிசையாக நடைபெறவு...</summary>
            <content type="html"><![CDATA[<p>வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவத்தின் முக்கிய நிகழ்வான தேர்த்திருவிழா இன்று புதன்கிழமை காலை வெகு விமரிசையாக நடைபெறவுள்ளது.</p><p>
</p><p></p><p>கடந்த 17ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான ஆலய மகோற்சவம் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், இன்று காலை 6.15 மணிக்கு வசந்தமண்டப பூஜை ஆரம்பமாகவுள்ளது.</p><p>இதனைத் தொடர்ந்து ஆறுமுக சுவாமி தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருட்காட்சியளிக்கவுள்ளார்.</p><p>

தேர்த்திருவிழாவை முன்னிட்டு இலங்கையின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், வெளிநாடுகளில் வசிக்கும் புலம்பெயர் தமிழ் மக்களிடமிருந்தும் இலட்சக்கணக்கான பக்தர்கள் நல்லூரை நோக்கி வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/df876040-379a-417c-9c27-8bf4cdb06ba6/26-6aa0afeeceae1.webp' /></p><p>ஆறுமுக சுவாமியின் அருட்காட்சியை தரிசிப்பதற்காக பெருந்திரளான பக்தர்கள் ஒன்று கூடவுள்ளதுடன், காவடி எடுத்தல், அங்கப்பிரதட்சணம், கற்பூரச்சட்டி உள்ளிட்ட பல்வேறு நேர்த்திக்கடன்களையும் பக்தர்கள் நிறைவேற்றவுள்ளனர்.
</p><p>
இதனையொட்டி நல்லூர் ஆலயச் சுற்றுப்புறங்களில் பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள், போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளிட்ட நடவடிக்கைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
</p><p>
நல்லூர் கந்தசுவாமி ஆலய மகோற்சவத்தின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான தேர்த்திருவிழா, இன்று காலை ஆயிரக்கணக்கான பக்தர்களின் பக்தி பரவசத்துக்கு மத்தியில் கோலாகலமாக நடைபெறவுள்ளது.</p><p></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7b85a669-ebcb-4b03-b85b-7d53f95c8f51/26-6aa0afee25f13.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/df876040-379a-417c-9c27-8bf4cdb06ba6/26-6aa0afeeceae1.webp' /></p>]]></content>
            <updated>2026-09-09T01:01:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் தொடரும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்தின் அட்டகாசம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sltb-bus-issue-jaffna-1788913276"></link>
            <id>https://ibctamil.com/article/sltb-bus-issue-jaffna-1788913276</id>
            <summary type="text">கட்டைக்காட்டிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிய இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து சேவை சரியான நேரத்தில் இயக்கப்படாததால், தினமும் வேலைக்குச் செல்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கட்டைக்காட்டிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிய இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து சேவை சரியான நேரத்தில் இயக்கப்படாததால், தினமும் வேலைக்குச் செல்லும் பயணிகள் பெரும் சிரமங்களைச் சந்தித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
கட்டைக்காட்டிலிருந்து காலை வேளையில் யாழ்ப்பாணம் நோக்கிச் செல்லும் பேருந்து, வழமையான நேரத்திற்கு முன்னதாகவே புறப்பட்டுச் சென்றுவிடுவதாக பயணிகள் குற்றம்சாட்டுகின்றனர்.</p><p></p><h2>முறையீட்டுக் கடிதம்</h2><p> </p><p>

இதனால், பணி நிமித்தமாக யாழ்ப்பாணம் செல்லும் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் தினமும் உரிய நேரத்தில் சேவை பெற முடியாமல் பல சிரமங்களுக்கு மத்தியில் தாமதமாகவே தங்களது பணிமனைகளைச் சென்றடைவதாக கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2d10a8a2-6cb6-4832-bee2-fc57c53e4254/26-6aa0adfe09857.webp' /></p><p>
</p><p>
இந்நிலையில், பேருந்து புறப்படும் சரியான நேரத்தை பயணிகளுக்குத் தெளிவுபடுத்துவதுடன், இந்தத் தாமத நிலைமையைத் தவிர்க்கத் தேவையான தகுந்த நடவடிக்கைகளை உடனடியாக எடுக்குமாறு கோரி, யாழ்ப்பாணம் சாலை முகாமையாளருக்குப் பயணிகள் முறையீட்டுக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர்.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-09T00:53:20+00:00</updated>
        </entry>
    </feed>
