<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-08-04T11:27:13+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரிட்டன் கடற்கரையில் நூற்றுக்கணக்கில் ஜல்லி மீன்கள்; பேரழிவுக்கான அறிகுறி ; அச்சத்தில் மக்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/hundreds-of-alien-jellyfish-on-british-beaches-1785823774"></link>
            <id>https://canadamirror.com/article/hundreds-of-alien-jellyfish-on-british-beaches-1785823774</id>
            <summary type="text">&amp;nbsp; பிரித்தானிய கடற்கரையில் நூற்றுக்கணக்கில் ஏலியன் ஜல்லி மீன்கள் கரை ஒதுங்கியிருப்பது பிரிட்டன் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

அசாதாரண...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; பிரித்தானிய கடற்கரையில் நூற்றுக்கணக்கில் ஏலியன் ஜல்லி மீன்கள் கரை ஒதுங்கியிருப்பது பிரிட்டன் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><p> 

அசாதாரண காலங்களில் மட்டுமே இப்படி நடக்கும் என்றும், இவ்வாறு ஏலியன் ஜல்லி மீன்கள் கரை ஒதுங்கியிருப்பது பேரழிவுக்கான அறிகுறியாக இது இருக்கலாம் எனவும் மக்கள் அச்சமடைந்திருக்கின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/601b065f-1887-4937-9a8d-e137b30bde07/26-6a71822007214.webp' /></p><h2>ஆபத்தான உயிரினத்துடன் தொடர்புடையது.</h2><p>
</p><p>
 பிரிட்டனில்&nbsp; நிலவும் கடும் வெப்பநிலை அதிகரிப்பு காரணமாக, பிரிட்டன் கடற்கரையில் ஏலியன் ஜல்லி மீன்கள் கரை ஒதுங்கியிருக்கின்றன. 

இவ்வாறு கரை ஒதுங்க்கியுள்ள இந்த ஜல்லி மீன்கள் பார்ப்பதற்கு ஏலியன்கள் மாதிரி இருப்பதால் மக்களிடையே அச்சம் ஏற்பட்டிருக்கிறது.</p><p>

 இது குறித்து ஆய்வாளர்கள் கூறுகையில், "இந்த வகை மீன்கள் 'வெலெல்லா வெலெல்லா' என அழைக்கப்படுகின்றன. கடல் பட்டம் என்றும் இது அழைக்கப்படுகிறது. வடமேற்கு பிரிட்டனின் கும்பிரியா பகுதியில் உள்ள செயின்ட் பீஸ் பீச் மற்றும் வேல்ஸ் பீச்சில் தற்போது இவை அதிக அளவில் கரை ஒதுங்கியிருக்கின்றன.</p><p> 

டார்க் ப்ளூ கலரில் இருப்பதால் மக்கள் கிட்ட நெருங்கவே பயப்படுகின்றனர். பார்ப்பதற்கு ஜல்லி மீன்கள் போன்று இருந்தாலும், இது ஜல்லி மீன்கள் கிடையாது. ஒருவகை சிறிய உயிரினம். இது மேன் ஓ வார் என்கிற ஆபத்தான உயிரினத்துடன் தொடர்புடையது.</p><p> 

எனவே இவற்றை தொட கூடாது. மீறி தொட்டால் கடுமையான வலியும், எரிச்சலும் ஏற்படும். இந்த வகை உயிரினங்களால் நீந்த முடியாது. </p><p>கடலின் அலைக்கு ஏற்ப நகர்ந்து செல்லும். தற்போது இதன் இனப்பெருக்கம் அதிகமாக இருப்பதால், அதிக அளவில் கரை ஒதுங்கியிருக்கலாம் என ஆய்வாளர்கள் கூறியுள்லதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-04T11:22:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஏர் இந்தியா விமானம் குலுங்கியதில் 12 பயணிகள் காயம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/12-passengers-injured-air-india-flight-turbulence-1785839287"></link>
            <id>https://canadamirror.com/article/12-passengers-injured-air-india-flight-turbulence-1785839287</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;தாய்லாந்தின் பூக்கெட்டிலிருந்து புது டெல்லிக்கு சென்ற ஏர் இந்தியா விமானம் ஒன்று, இன்றைய (04) பயணத்தின்போது பலத்த காற்றினால் குலுங்கியது. ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;தாய்லாந்தின் பூக்கெட்டிலிருந்து புது டெல்லிக்கு சென்ற ஏர் இந்தியா விமானம் ஒன்று, இன்றைய (04) பயணத்தின்போது பலத்த காற்றினால் குலுங்கியது. 

இதனால் விமானம் சிறிது நேரம் கீழே இறங்கியதுடன், இதன்போது குறைந்தது 12 பயணிகள் இலகுவான காயங்களுக்கு ஆளாகினர். </p><p>

பல்வேறு தகவல்களின்படி, இந்த சம்பவத்தின் போது விமானம் சுமார் 300 அடி உயரம் வரை கீழே இறங்கியதாக கூறப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0e32943e-2fac-41db-ba16-6714207c783e/26-6a71beb96dbcf.webp' /></p><p>
</p><p>
தேசியத் தலைநகரில் தரையிறங்கிய AI2379 விமானத்திலிருந்து அனைத்துப் பயணிகளும் விமானக் குழுவினரும் கீழே இறங்கியதாகவும், காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக விமான நிலையத்திலுள்ள மருத்துவ மையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் ஏர் இந்தியா நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
</p><p>
விமானத்தின் உள்ளே எடுக்கப்பட்ட காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.

ஜம்மு-காஷ்மீர் தலைநகரை நெருங்கும்போது, ​​டெல்லி-ஸ்ரீநகர் இண்டிகோ விமானம் ஒன்று கடுமையான ஆலங்கட்டி மழையால் ஏற்பட்ட கொந்தளிப்பில் சிக்கி, தரையிறங்க முயன்ற போது விமானத்தின் முன்பகுதி சேதமடைந்த ஒரு வருடத்திற்கும் மேலான காலத்திற்குப் பின்னர் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-04T11:21:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுரேஷ் சலே மனு ஒத்திவைப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/suresh-sallay-petition-hearing-postponed-1785842543"></link>
            <id>https://jvpnews.com/article/suresh-sallay-petition-hearing-postponed-1785842543</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp;அரச புலனாய்வு சேவையின் முன்னாள் தலைவர் சுரேஷ் சலே தனது கைது மற்றும் தடுப்புக்காவலை எதிர்த்தும், வழக்கில் தலையிட்டு தனது தரப்பை முன...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp; &nbsp;அரச புலனாய்வு சேவையின் முன்னாள் தலைவர் சுரேஷ் சலே தனது கைது மற்றும் தடுப்புக்காவலை எதிர்த்தும், வழக்கில் தலையிட்டு தனது தரப்பை முன்வைக்க அனுமதி கோரியும் தாக்கல் செய்துள்ள இடைக்கால மனுக்கள் தொடர்பான விசாரணை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
</p><p>
சாலெவின் இடைக்கால மனுக்கள் தொடர்பான விசாரணை மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இன்று (04) ஆரம்பமானது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/942475a3-1410-430c-9061-7bf684fd4940/26-6a71cb70e6b39.webp' /></p><p>
</p><p>


இதன்போது, இடைக்கால மனுக்களைத் தாக்கல் செய்த தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் மற்றும் தேசப்பற்றுள்ள மக்கள் இயக்கம் ஆகிய அமைப்புகளுக்காக ஆஜரான சட்டத்தரணிகள் தங்களது வாதங்களை முன்வைத்தனர்.</p><p>



இதையடுத்து, குறித்த இடைக்கால மனுக்கள் தொடர்பான மேலதிக விசாரணையை எதிர்வரும் 6ஆம் திகதி வரை ஒத்திவைக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-04T11:20:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[மார்கஸ் ஸ்டோய்னிஸின் அதிரடி வீண்: மேத்யூ ஷார்ட்டின் சரவெடி ஆட்டத்தில் வெல்ஷ் ஃபயர் வெற்றி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/marcus-stoinis-and-matthew-short-fifty-the-hundred-1785842170"></link>
            <id>https://news.lankasri.com/article/marcus-stoinis-and-matthew-short-fifty-the-hundred-1785842170</id>
            <summary type="text">சௌதர்ன் பிரேவ் அணிக்கு எதிரான The Hundred போட்டியில் வெல்ஷ் ஃபயர் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

ஸ்டோய்னிஸ் அதிரடி கார்டிஃப்பில் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சௌதர்ன் பிரேவ் அணிக்கு எதிரான The Hundred போட்டியில் வெல்ஷ் ஃபயர் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.</p><h2> 

ஸ்டோய்னிஸ் அதிரடி </h2><p>கார்டிஃப்பில் நடந்த The Hundred போட்டியில் வெல்ஷ் ஃபயர் மற்றும் சௌதர்ன் பிரேவ் அணிகள் மோதின.&nbsp;</p><p><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr">Marcus Stoinis brings up his 50 👏<a href="https://x.com/hashtag/TheHundred?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#TheHundred</a> <a href="https://t.co/mx3HBp5V8j">pic.twitter.com/mx3HBp5V8j</a></p>&mdash; The Hundred (@thehundred) <a href="https://x.com/thehundred/status/2084347254907781267?ref_src=twsrc%5Etfw">August 3, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p></p><p>

முதலில் ஆடிய சௌதர்ன் பிரேவ் அணியில் ஜேமி ஸ்மித், பென் மெக்கின்னி டக்அவுட் ஆகினர். </p><p>பின்னர் நிகில் 18 ஓட்டங்களில் வெளியேற, மார்கஸ் ஸ்டோய்னிஸ் அதிரடி காட்டினார்.

அவர் 39 பந்துகளில் 55 ஓட்டங்கள் (1 சிக்ஸர், 8 பவுண்டரிகள்) எடுக்க, சௌதர்ன் பிரேவ் 115 ஓட்டங்கள் சேர்த்தது. சாம் குக் 3 விக்கெட்டுகளும், ரச்சின் ரவீந்திரா, மேத்யூ ஷார்ட் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.</p><h2>
கடைசிவரை நின்ற ஷார்ட் </h2><p>பின்னர் களமிறங்கிய வெல்ஷ் ஃபயர் அணியில் பிலிப் சால்ட் (4), ஜோ ரூட் (17), ரச்சின் ரவீந்திரா (0) மற்றும் ஜோர்டான் கொக்ஸ் (6) ஆகியோர் சொதப்பினர்.&nbsp;</p><p><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr">What a way to bring up 50, Matt Short 🤩<a href="https://x.com/hashtag/TheHundred?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#TheHundred</a> <a href="https://t.co/fVGyxKZH5S">pic.twitter.com/fVGyxKZH5S</a></p>&mdash; The Hundred (@thehundred) <a href="https://x.com/thehundred/status/2084371441680547983?ref_src=twsrc%5Etfw">August 3, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>

எனினும், தொடக்க வீரரான மேத்யூ ஷார்ட் (Matthew Short) கடைசிவரை களத்தில் நின்று 41 பந்துகளில் 60 ஓட்டங்கள் (2 சிக்ஸர், 6 பவுண்ரிகள்) விளாச, வெல்ஷ் ஃபயர் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
</p><p>
ஜோப்ரா ஆர்ச்சர் 2 விக்கெட்டுகளும், கிறிஸ் ஜோர்டான் மற்றும் அடில் ரஷீத் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3ec18c4b-0fba-419d-96aa-217514adb968/26-6a71c9fd69cec.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-04T11:14:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Bavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறைக்குள் உணவு உண்ண முடியவில்லை - தாயுடன் பேச வேண்டும்! பிள்ளையானின் உருக்கமான கோரிக்கைகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/pillaiyaan-remand-continues-till-augest-18-1785838026"></link>
            <id>https://tamilwin.com/article/pillaiyaan-remand-continues-till-augest-18-1785838026</id>
            <summary type="text">பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட பிள்ளையான் என்றழைக்கப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தனை, ஒகஸ்ட் 12ஆம் த...</summary>
            <content type="html"><![CDATA[<p>பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட பிள்ளையான் என்றழைக்கப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தனை, ஒகஸ்ட் 12ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p>மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ. தர்ஷினி முன்னிலையில் இன்று (04)&nbsp;காணொளி&nbsp;மூலம் விசாரணை நடைபெற்றது.</p><p></p><h2>ஐந்து கொலைகள்</h2><p>இதன்போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4f32ac1b-e2cc-430b-b0f2-4b2d22e2b8c5/26-6a71bd24dce80.webp' /></p><p>2008ஆம் ஆண்டு மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நிகழ்ந்த 5 கொலைகள் தொடர்பாக, முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் மற்றும் பிற சந்தேக நபர்கள் மீது குற்றப் புலனாய்வுத் திணைக்களம் வழக்குப் பதிவு செய்திருந்தது.
</p><p>


இந்த வழக்கில் மூன்றாவது சந்தேக நபராகப் பெயரிடப்பட்டுள்ள அவர் மீது, கல்லடி பகுதியில் நடந்த ஐந்து கொலைகள் மற்றும் நிலத்தகராறு தொடர்பான மூன்று குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.</p><p>2008ஆம் ஆண்டு கல்லடியில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உட்பட இருவர் சுட்டுக்
கொலை செய்யப்பட்ட சம்பவம், ரி.எம்.வி.பி கட்சி உறுப்பினர் உட்பட இருவர் காத்தான்குடியில் வைத்து
சுட்டுக் கொலைசெய்யப்பட்ட சம்பவம், வவுணதீவு பகுதியைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவரை
கடத்தி கொடூரமாகக் கொலை செய்தமை உள்ளிட்ட சம்பவங்கள் தொடர்பில் இவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டது. </p><p>2025ஆம் ஏப்ரல், பயங்கரவாத
தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட பிள்ளையான் என அழைக்கப்படும் முன்னாள்
இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனையும் 2025 நவம்பர் மாதம், காத்தான்குடியை சேர்ந்த
இராணுவ புலனாய்வு பிரிவின் தகவலாளிகளான முகமட் சிபான், முகமட் சகீத், ஆகியோரையும் சிஜடியினர் கைது செய்தனர்.</p><h2>அதிகாரிகளின் சோதனை</h2><p>

இந்த 5 முக்கிய மனிதக் கொலைகளில் தொடர்பு இருப்பதாக, பிள்ளையான் மற்றும் இராணுவ புலனாய்வு
பிரிவின் தகவலாளிகளான இலண்டனில் உள்ள காத்தான்குடியைச் சேர்ந்த பொலிஸ் அதிகாரி முகம் பாய்ஸ்,
உட்பட 4 பேருக்கு எதிராக மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் கடந்த 2026 ஜீன் 17ஆம் திகதி சிஜடியினர் வழக்கு தாக்கல் செய்தனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/09de7a47-ed1d-4e97-973c-0834e9ed14da/26-6a71c926b9c9b.webp' /></p><p>இந்நிலையில் குறித்த வழக்கு இன்று&nbsp; (04) மட்டக்களப்பு
நீதவான் நீதிமன்றில் வழக்கு விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்ட போது சந்தேக
நபர்களான பிள்ளையான், இராணுவ புலனாய்வு பிரிவின் தகவலாளிகளான முகமட் சிபான்,
முகமட் சகீத், ஆகிய 3 பேரையும் சிறைச்சாலைகளில் இணையவழி காணொளி ஊடாக (Zoom)
முன்னிலைபடுத்தப்பட்டனர்.</p><p>

இதன்போது பிள்ளையான் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி சௌந்தரராஜா முன்னிலையாகி பிள்ளையான்
தற்போது வெலிசறை கடற்படை முகாம் சிறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவருக்கு
சிறைச்சாலையில் இருந்து செல்லும் உணவை அந்த முகாமில் இருக்கும் இராணுவம்
மற்றும் கடற்படையினர் பரிசோதனை செய்து அனுப்பபடுவதால் அது சிதைவடைந்து
செல்வதால் அதனை சாப்பிட முடியாமல் இருப்பதாகவும் குறிப்பிட்டார்.&nbsp;</p><p>எனவே, உணவை அவ்வாறு
பரிசோதனை செய்யாது தருமாறும்
73 வயதான அவரது தாயார் சுகயீனமடைந்துள்ளதாகவும் அவருடன் கையடக்க
தொலைபேசி ஊடாக 2 இல்லது 3 நிமிடம் கதைப்பதற்கு அனுமதி தருமாறும் கோரினார்.&nbsp;</p><p>இதன்போது, நீதவான், சிறைச்சாலை அதிகாரிகளுக்கு அங்கு எவ்வாறான
நடமுறை உள்ளதோ அதை சரியாக பின்பற்றுமாறு வலியுறுத்தினார்.&nbsp;</p><p></p><p></p><p>

</p>]]></content>
            <updated>2026-08-04T11:13:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[விமான பணிப்பெண்ணை ஏமாற்றிய சாமிக்க கருணாரத்ன; மரபணு பரிசோதனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/chamika-karunaratne-dna-test-paternity-case-1785834576"></link>
            <id>https://jvpnews.com/article/chamika-karunaratne-dna-test-paternity-case-1785834576</id>
            <summary type="text">இலங்கை கிரிக்கெட் வீரர் சாமிக்க கருணாரத்னவிடம் மரபணு பரிசோதனைக்காக இரத்த மாதிரியைப் பெறுமாறு முன்வைக்கப்பட்ட விண்ணப்பத்தை கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை கிரிக்கெட் வீரர் சாமிக்க கருணாரத்னவிடம் மரபணு பரிசோதனைக்காக இரத்த மாதிரியைப் பெறுமாறு முன்வைக்கப்பட்ட விண்ணப்பத்தை கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று நிராகரித்துள்ளது.
</p><p>
 விமான பணிப்பெண் ரசிகா செவ்வந்தி என்பவரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணை ஒன்றின் போதே இந்த வேண்டுகோள் முன்வைக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e2163f99-8870-4014-8ed4-31d670d1ce9b/26-6a71ac51a4ca5.webp' /></p><h2>தனது குழந்தையின் தந்தை சாமிக கருணாரத்ன</h2><p>
</p><p>
தனது குழந்தையின் தந்தை சாமிக கருணாரத்ன எனக் குறிப்பிட்டுப் பிறப்புச் சான்றிதழை வழங்குமாறு பதிவாளர் நாயகத்துக்கு உத்தரவிடக்கோரி அவர் இந்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளார்.</p><p></p><p>
</p><p>
வழக்கை விசாரித்த கொழும்பு மாவட்ட நீதிபதி லலித் கன்னங்கர, சாமிக கருணாரத்னவிடம் கட்டாயப்படுத்தி இரத்த மாதிரி பெற போதுமான ஆதாரங்களை மனுதாரர் சமர்ப்பிக்கத் தவறிவிட்டதாகக் கூறி அந்த விண்ணப்பத்தை நிராகரித்தார்.</p><p></p><p>
</p><p>
மரபணு பரிசோதனைக்கான கோரிக்கை விண்ணப்பம் தள்ளுபடி செய்யப்பட்ட போதிலும், மேலதிக விசாரணைகளுக்காக வழக்கைப் எதிர்வரும் ஒக்டோபர் 9 ஆம் திகதி மீண்டும் அழைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-04T11:11:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Bavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மட்டக்களப்பில் 5 மனித கொலை : பிள்ளையான் உட்பட மூவருக்கு நீதிமன்றின் உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/3-people-including-pillayan-remanded-in-custody-1785839842"></link>
            <id>https://ibctamil.com/article/3-people-including-pillayan-remanded-in-custody-1785839842</id>
            <summary type="text">&amp;nbsp;மட்டக்களப்பில் கடந்த 2008 ம் ஆண்டு ரி 56 ரக துப்பாக்கியால் சுட்டு 5 பேரை
கொலை செய்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பிள்ளையான் மற்றும் இராணுவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;மட்டக்களப்பில் கடந்த 2008 ம் ஆண்டு ரி 56 ரக துப்பாக்கியால் சுட்டு 5 பேரை
கொலை செய்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பிள்ளையான் மற்றும் இராணுவ
புலனாய்வு பிரிவின் தகவலாளிகள் இருவர் உட்பட 3 பேரை எதிர்வரும் 18 ம் திகதி
வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் இன்று
செவ்வாய்க்கிழமை (04) காணொளி ஊடாக உத்தரவிட்டு பெhலிஸ் பாயிஸ் என்பவருக்கு திறந்த
பிடிவிறாந்து பிறப்பித்து கட்டளையிட்டார்</p><p>2008 ம் ஆண்டு கல்லடியில் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் உட்பட இருவர் சுட்டுக்
கொலை, ரி.எம்.வி;.பி கட்சி உறுப்பினர் உட்பட இருவர் காத்தான்குடியில் வைத்து
சுட்டுக் கொலை, வவுணதீவு கரையாக்கன்தீவு பகுதியைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவரை
கடத்தி கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.</p><h2>சிஐடியால் பிள்ளையான் உட்பட மூவர் கைது</h2><p>இந்த கொலைச் சம்பவத்துடன் தொடர்புபட்ட ஏற்கனவே 2025 ம் ஏப்ரல் பயங்கரவாத
தடைச் சட்டத்தில் கைது செய்யப்பட்ட பிள்ளையான் என அழைக்கப்படும் முன்னாள்
இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன். மற்றும் காத்தான்குடியை சேர்ந்த
இராணுவ புலனாய்வு பிரிவின் தகவலாளிகளான முகமட் சிபான், முகமட் சகீத், ஆகியோரை
கடந்த 2025 நவம்பர் மாதம் சிஐடி கைது செய்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/294c60be-8d97-423c-8d16-138b13054e6e/26-6a71c84e0d009.webp' /></p><p>&nbsp;இந்த 5 முக்கிய மனிதக் கொலைகள் தொடர்புபட்ட பிள்ளையான் மற்றும் இராணுவ புலனாய்வு
பிரிவின் தகவலாளிகளான இலண்டனில் உள்ள காத்தான்குடியைச் சேர்ந்த முகம் பாய்ஸ்,
உட்பட 4 பேருக்கு எதிராக மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் கடந்த 2026 யூன் 17
ம் திகதி சிஐடி யினர் வழக்கு தாக்கல் செய்து அவர்கள் நீதிமன்றில்
முற்படுத்தப்பட்டு அவர்களை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டு
வருகின்றனர்</p><p></p><h2>&nbsp;மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில்&nbsp; வழக்கு </h2><p>இந்த நிலையில் குறித்த வழக்கு இன்று செவ்வாய்க்கிழமை (04) மட்டக்களப்பு
நீதவான் நீதிமன்றில் விசாரணைக்காக எடுத்துக் கொண்டபோது சந்தேக
நபர்களான பிள்ளையான் இராணுவ புலனாய்வு பிரிவின் தகவலாளிகளான முகமட் சிபான்,
முகமட் சகீத், ஆகிய 3 பேரையும் சிறைச்சாலைகளில் இணையவழி காணொளி ஊடாக (சூம்)
முற்படுத்தப்பட்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/767e3909-4486-4769-a8aa-ac695e6cefde/26-6a71c84eb2d0f.webp' /></p><p>இதன்போது பிள்ளையான் சார்பில் சிரேஷ சட்டத்தரணி சௌந்தரராஜா முன்னிலையாகி பிள்ளையான்
தற்போது வெலிசறை கடற்படை முகாம் சிறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவருக்கு
சிறைச்சாலையில் இருந்து செல்லும் உணவை அந்த முகாமில் இருக்கும் இராணுவம்
மற்றும் கடற்படையினர் பரிசோதனை செய்து அனுப்பப்படுவதால் அது சிதைவடைந்து
செல்வதால் அதனை சாப்பிட முடியாமல் இருப்பதாகவும் அதனால் சாப்பாட்டை அவ்வாறு
பரிசோதனை செய்யாது தருமாறும்</p><p>&nbsp; &nbsp;73 வயது கொண்ட பிள்ளையானின் தாயார் சுகயீனம் கொண்டவர் எனவும் அவருடன் கையடக்க
தொலைபேசி ஊடாக 2 இல்லது 3 நிமிடம் கதைப்பதற்கு அனுமதி கோரி சட்டத்தரணி வாதங்களை
முன்வைத்தார். இதன்போது நீதவான் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு அங்கு எவ்வாறான
நடமுறையோ அதனை சரியாக பின்பற்றுமாறு தெரிவித்தார்.</p><p>இதேவேளை சிஐடி சார்பில் முன்னிலையாகிய சிஐடி பொறுப்பதிகாரி கடந்த வழக்கு விசாரணையின்
போது குறித்த வழக்கு மட்டக்களப்பு நீதிமன்றில் தாக்கல் செய்துள்ளதால்
மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு மாற்றுமாறு முன்வைத்த கோரிக்கை தொடர்பாக குறித்த
நபர் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர் எனவும் அவரின் பாது
காப்பு உறுதி செய்யப்பட்டு பாதுகாப்பாக இருப்பதாகவும்</p><p></p><h2>பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது</h2><p>பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு வைக்கப்பட்டவரை மட்டு
சிறைச்சாலைக்கு மாற்றுவது தொடர்பாக சட்டமா திணைக்களத்திற்கு அறிக்கை ஒன்றை
 சமர்ப்பித்துள்ளதாக சிஐடி பொறுப்பதிகாரி நீதிமன்றில்
தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ffc5387d-06f8-4d8d-9d94-db4262810f21/26-6a71c84f6741b.webp' /></p><p>&nbsp;இதனை தொடர்ந்து நீதவான், பிள்ளையான் உட்பட 3 பேரையும் எதிர்வரும் 18ம் திகதிவரை
விளக்க மறியலில் வைக்குமாறும் உத்தரவிட்டு லண்டனில் உள்ள பொலிஸ் பாய்ஸ்க்கு
தொடர்ந்து பிடிவிறாந்து பிறப்பித்து கட்டளை பிறப்பித்தார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-04T11:09:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நுவரெலியாவில் நிலவும் வெள்ள அபாயம்; வெளியேற்றப்படும் வாவி நீர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/flood-threat-in-nuwara-eliya-reservoir-1785841854"></link>
            <id>https://jvpnews.com/article/flood-threat-in-nuwara-eliya-reservoir-1785841854</id>
            <summary type="text">&amp;nbsp; நுவரெலியா கிரகரி வாவியின் அணைகளின் நீர்மட்டம் அதிலகரித்துள்ளதால் கடந்த ஞாயிற்றுக்கிழமை (02) நள்ளிரவு முதல் வாவியின் வான்கதவு திறக்கப்பட்டு பெரு...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; நுவரெலியா கிரகரி வாவியின் அணைகளின் நீர்மட்டம் அதிலகரித்துள்ளதால் கடந்த ஞாயிற்றுக்கிழமை (02) நள்ளிரவு முதல் வாவியின் வான்கதவு திறக்கப்பட்டு பெருமளவு நீர் தொடர்ச்சியாக வெளியேற்றப்படுகிறது.</p><p>



பெய்துவரும் தொடர் மழையினால் வெள்ளம் ஏற்படாமல் தடுக்கவும் , அணையின் பாதுகாப்பைக் கருதியும், நிர்ணயிக்கப்பட்ட கொள்ளளவுக்கு மேல் நீர் நிரம்பியதன் காரணமாகவும் கிரகரி வாவியின் வான் கதவு திறக்கப்பட்டு தொடர்ச்சியாக நீர் வெளியேற்றப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ab4d745d-5d0a-47eb-869c-c9d02d099511/26-6a71c8bfb101b.webp' /></p><p>
</p><p>

நுவரெலியா சென்/அன்றுஸ் மற்றும் ரேஸ்கோர்ஸ் கிராமத்தில் சிறிய அளவில் வெள்ளம் ஏற்பட்டு பல குடும்பங்களைச் சேர்ந்த பொது மக்கள் இரண்டு தற்காலிக இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.</p><p></p><p>
</p><p>

இதேவேளை சீரற்ற வானிலை காரணமாக, நுவரெலியா கிரகரி வாவியில் படகு சவாரிக்கு அனுமதி நிறுத்தப்பட்டுள்ளது.



நுவரெலியாவில் மழை குறைந்த பின் படகுகளில் செல்ல வழக்கம் போல சுற்றுலா பயணிகள் அனுமதிக்கபடுவார்கள் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-08-04T11:08:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நுவரெலியா செல்லும் சாரதிகளுக்கு எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/warning-to-drivers-heading-to-nuwara-eliya-1785841474"></link>
            <id>https://jvpnews.com/article/warning-to-drivers-heading-to-nuwara-eliya-1785841474</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;சீரற்ற வானிலை காரணமாக நுவரெலியாவில் பனிமூட்டம் நிலவி வருவதால், பிரதான வீதிகளில் பயணிக்கும் வாகன சாரதிகள் எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டும்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;சீரற்ற வானிலை காரணமாக நுவரெலியாவில் பனிமூட்டம் நிலவி வருவதால், பிரதான வீதிகளில் பயணிக்கும் வாகன சாரதிகள் எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டும் என பொலிஸார் அறிவிறுத்தியுள்ளனர்.
</p><p>

நுவரெலியா, கந்தப்பளை, இராகலை, நானு ஓயா, டொப்பாஸ் போன்ற பிரதேசங்களில் பனி மூட்டம் கடந்த இரண்டு தினங்களாக காலை மற்றும் மாலை வேளையில் வழமைக்கு மாறாக அதிகரித்து காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/42da6d82-622d-4f80-a312-ec79cc543b18/26-6a71c743c1d68.webp' /></p><p>
</p><p>


நுவரெலியா - பதுளை பிரதான வீதி ,நுவரெலியா - ஹட்டன் பிரதான வீதியில் மற்றும் நுவரெலியா - கண்டி பிரதான வீதியில் டொப்பாஸ் தொடக்கம் லபுக்கலை பிரதேசம் வரை கடும் பனி மூட்டம் காணப்படுகின்றன .</p><p> 



இதனால் அவ் வீதியில் மிக அவதானத்துடன் வாகனம் செலுத்துமாறும் , ஆபத்தான பகுதிகளில் வாகனங்களின் முன் விளக்குகளை ஒளிரச் செய்யுமாறும் சாரதிகளுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-04T11:02:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[மூதூரில் கொல்லப்பட்ட 17 ஏ.சி.எப் தொண்டர்களுக்கு பரிஸில் அஞ்சலி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/acf-volunteers-killed-in-muthur-tribute-in-paris-1785839619"></link>
            <id>https://ibctamil.com/article/acf-volunteers-killed-in-muthur-tribute-in-paris-1785839619</id>
            <summary type="text">இலங்கையின் மூதூர் பகுதியில் 2006 ஆம் ஆண்டில் செயற்பட்ட ஏசிஎப் எனப்படும் பட்டினிக்கெதிரான பிரெஞ்சு அமைப்பு தொண்டர்கள் 17பேர் படுகொலை செய்யப்பட்டு 20 ஆண...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் மூதூர் பகுதியில் 2006 ஆம் ஆண்டில் செயற்பட்ட ஏசிஎப் எனப்படும் பட்டினிக்கெதிரான பிரெஞ்சு அமைப்பு தொண்டர்கள் 17பேர் படுகொலை செய்யப்பட்டு 20 ஆண்டுகள் கடந்துள்ளன.</p><p>20 ஆம் ஆண்டு நினைவு நாளான இன்று (04) பரிசின் புறநகர் பகுதியான கிளிச்சியில் நிறுவப்பட்டுள்ள நினைவுக்கல்லின் முன்பாக நினைவேந்தல் முன்னெடுக்கப்பட்டது.</p><p>உயிரிழந்தவர்களை நினைவுகூரும் முகமாக இன்று முற்பகல் 11.00 மணிக்கு நினைவுச்சுடர் ஏற்றி வணக்கம் செலுத்தப்பட்டது.</p><p></p><h2>கொல்லப்பட்டவர்களுக்கு நீதி</h2><p>
2004 டிசம்பரில் ஏற்பட்ட சுனாமிக்கு பின்னார் நிவாரண நடவடிக்கையில் ஈடுப்பட்டிருந்த பிரெஞ்சு மனிதாபிமான அமைப்பான பட்டினிக்கு எதிரான நடவடிக்கை அமைப்பைச் சேரந்த குறித்த 17 உள்ளூர் உதவிப் பணியாளர்கள், மரணதண்டனை நிறைவேற்றும் பாணியில் சிறிலங்கா அதிரடிப்ப படையினரால் கொல்லப்பட்டிருந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b0e22316-24c1-433c-bc1d-423c256d6c7e/26-6a71c5e2bdc0b.webp' /></p><p>
உலகில் மனிதாபிமானப் பணியாளர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட மிகக் கொடூரமான இலக்கு வைக்கப்பட்ட குற்றத்திற்காக எந்தவொரு தனிநபர்மீது இதுவரை முறையாக வழக்குத் தொடரப்படவோ அல்லது தண்டிக்கப்படவோ இல்லை.</p><p>இந்த நிகழ்வில் ஏசிஎப் எனப்படும் பட்டினிக்கு எதிரான நடவடிக்கைஅமைப்பின் உறுப்பினர்கள், நகரசபை உறுப்பினர்கள், மற்றும் கொல்லப்பட்டவர்களின் உறவினர்களும் கலந்து கொண்டு நீதிகோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-04T11:02:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[சேலையில் நடிகை அபர்னா தாஸின் போட்டோஷூட்; ரசிகர்களை கவரும் புகைப்படங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/aparna-das-recent-saree-photoshoot-1785840222"></link>
            <id>https://cineulagam.com/article/aparna-das-recent-saree-photoshoot-1785840222</id>
            <summary type="text">ரசிகர்களின் மனம் கவர்ந்த இளம் நடிகைகளில் ஒருவரான அபர்ணா தாஸின் சமீபத்திய போட்டோஷூட் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

தளபதி விஜய்யின் நடிப்பில் வெளியான...</summary>
            <content type="html"><![CDATA[<p>ரசிகர்களின் மனம் கவர்ந்த இளம் நடிகைகளில் ஒருவரான அபர்ணா தாஸின் சமீபத்திய போட்டோஷூட் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
</p><p>
தளபதி விஜய்யின் நடிப்பில் வெளியான 'பீஸ்ட்' திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமானவர் நடிகை அபர்ணா தாஸ். இதன்பின், 'டாடா' திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து இளைஞர்களின் மனதில் இடம்பிடித்தார். </p><p>

தமிழ் சினிமாவில் அவ்வப்போது தலைகாட்டி வரும் அபர்ணா தாஸ், மலையாளத்தில் தொடர்ந்து படங்கள் நடித்து வருகிறார். மேலும், அடுத்ததாக இவர் நடிப்பில் 'வதந்தி' வெப் சீரிஸ் வரும் ஆகஸ்ட் 7-ஆம் தேதி வெளியாகிறது. </p><p>

இந்நிலையில், இன்ஸ்டாகிராமில் ஸ்லீவ்லெஸ் சேலையில் எடுத்துக்கொண்ட தனது சமீபத்திய போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். அபர்ணா தாஸின் இந்த புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்துள்ளன. </p><p>

இதோ அந்த போட்டோஷூட் புகைப்படங்கள்:</p>]]></content>
            <updated>2026-08-04T11:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வடக்கில் இலக்கைத் தாண்டிய சிறுபோக நெற்செய்கை - ஆளுநர் தெரிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/paddy-cultivation-target-in-the-north-exceeded-1785838175"></link>
            <id>https://tamilwin.com/article/paddy-cultivation-target-in-the-north-exceeded-1785838175</id>
            <summary type="text">வடக்கு மாகாணத்தில் 2026ஆம் ஆண்டுக்கான சிறுபோக நெற்செய்கை எதிர்பார்க்கப்பட்ட
இலக்கைத் தாண்டி வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டுள்ளதுடன், விவசாயிகளின்
வா...</summary>
            <content type="html"><![CDATA[<p>வடக்கு மாகாணத்தில் 2026ஆம் ஆண்டுக்கான சிறுபோக நெற்செய்கை எதிர்பார்க்கப்பட்ட
இலக்கைத் தாண்டி வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டுள்ளதுடன், விவசாயிகளின்
வாழ்வாதாரத்தையும் உணவுப் பாதுகாப்பையும் மேலும் வலுப்படுத்தும் நோக்கில்
மூன்றாம் போகச்செய்கையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர்
நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். </p><p>சிறுபோகத்தில் இலக்கிடப்பட்ட பரப்பளவை விட
அதிகளவான நிலப்பரப்பில் நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதுடன்,
கிடைக்கப்பெற்றுள்ள நீர்வளத்தை அறிவியல் அடிப்படையில் முகாமைத்துவம் செய்து
மூன்றாம் போகச் செய்கைக்குத் தேவையான ஏற்பாடுகள் வெற்றிகரமாக
முன்னெடுக்கப்பட்டிருப்பது வடக்கு மாகாண விவசாயத் துறையின் குறிப்பிடத்தக்க
முன்னேற்றமாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.</p><p></p><h2>நவீன பயிரிடல் முறைகள்</h2><p>வடக்கு மாகாண விவசாய அமைச்சின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் இன்று
(04.08.2026) செவ்வாய்க்கிழமை ஆளுநர் செயலகத்தில் ஆளுநர் தலைமையில்
நடைபெற்றது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/de388c9a-8959-43a3-b52a-c954db2b2c93/26-6a71c10b5dc67.webp' /></p><p>இக்கூட்டத்தில் விவசாய அமைச்சு மற்றும் அதன் கீழ் இயங்கும்
திணைக்களங்களின் 2026ஆம் ஆண்டுக்கான செயற்பாடுகள், அபிவிருத்தித் திட்டங்கள்,
நிதி மற்றும் பௌதிக முன்னேற்றங்கள் என்பன விரிவாக மீளாய்வு செய்யப்பட்டதுடன்,
எதிர்கால செயற்பாடுகளை மேலும் துரிதப்படுத்துவதற்கான வழிமுறைகளும் ஆராயப்பட்டன.</p><p>

2026ஆம் ஆண்டுக்கான சிறுபோகத்தில் வடக்கு மாகாணத்தில் 37,961 ஹெக்டேயர்
பரப்பளவில் நெற்செய்கை மேற்கொள்ள இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில்,
38,405 ஹெக்டேயர் பரப்பளவில் நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டு இலக்கு
விஞ்சப்பட்டுள்ளது. </p><p>இதன் மூலம் சுமார் 156,326 மெட்ரிக் தொன் நெல் உற்பத்தி
கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது.</p><p>நெல் உற்பத்தித் திறனை மேலும் உயர்த்தும் நோக்கில் நாற்று மாற்று நெற்செய்கை
முறை, பராசூட் நாற்று நடவு முறை உள்ளிட்ட நவீன பயிரிடல் முறைகள்
விரிவுபடுத்தப்பட்டுள்ளதுடன், நெற்செய்கைத் திட்டங்களும்
பல மாவட்டங்களில் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.</p><h2>நீர்விநியோக முகாமைத்துவம்</h2><p>நீர்ப்பாசனத் திணைக்களத்தின் முன்னேற்றங்கள் தொடர்பில் ஆராயப்பட்டபோது,
நீர்த்தேக்கங்களில் காணப்படும் நீர் இருப்பு, நீர்விநியோக முகாமைத்துவம்
மற்றும் விவசாயிகளுடன் மேற்கொள்ளப்பட்ட ஒருங்கிணைந்த கலந்தாலோசனைகளின்
அடிப்படையில் வடக்கு மாகாணத்தில் மூன்றாம் போகச் செய்கை வன்னேரிக்குளத்தில்
ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/78ff40c9-f740-45ab-94ba-e2d45e7669b9/26-6a71c10a7fbdb.webp' /></p><p>விவசாய நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ் நிறுவப்பட்டுள்ள சில செயற்றிட்டங்கள்
தற்போது முழுமையான இயங்குநிலையை எட்டாதிருப்பது தொடர்பிலும் விரிவாக
ஆராயப்பட்டது.</p><p>அவற்றை விரைவாக மீளச் செயற்பாட்டு நிலைக்குக் கொண்டு வருவதற்கான
சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து, பொருத்தமான பரிந்துரைகளை மத்திய விவசாய
அமைச்சுக்கு சமர்ப்பித்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஆளுநர்
பணிப்புரை வழங்கினார்.&nbsp;</p><p>மேலும், வடக்கு மாகாண விவசாய அமைச்சின் கீழ் இயங்கும் அனைத்து அம்மாச்சி
உணவகங்களிலும் ஒரே தரமான நடைமுறையைப் பின்பற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக
விவசாய அமைச்சின் செயலாளர் தெரிவித்தார். </p><p>குறிப்பாக, பொலித்தீன் மற்றும்
பிளாஸ்ரிக் பயன்பாட்டை முற்றாகக் கட்டுப்படுத்தி, சுற்றுச்சூழலுக்கு உகந்த
மாற்று பயன்பாட்டு முறைகளை நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள்
முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.</p><p>இதேவேளை, விவசாய அமைச்சு, விவசாயத் திணைக்களம், நீர்ப்பாசனத் திணைக்களம்
மற்றும் கால்நடை உற்பத்தி, சுகாதாரத் திணைக்களங்களின் 2026ஆம் ஆண்டுக்கான
பெரும்பாலான வேலைத்திட்டங்கள் எதிர்வரும் ஒக்ரோபர் மாதத்துக்குள் நிறைவடையும்
என எதிர்பார்க்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.</p><p>இக்கூட்டத்தில் வடக்கு மாகாண பிரதம செயலாளர், ஆளுநரின் செயலாளர், விவசாய
அமைச்சின் செயலாளர், பிரதிப் பிரதம செயலாளர்கள் (நிதி, திட்டமிடல், பொறியியல்
மற்றும் நிர்வாகம்), நீர்ப்பாசனம் மற்றும் கால்நடை உற்பத்தி, சுகாதாரத்
திணைக்களங்களின் மாகாணப் பணிப்பாளர்கள், விவசாயத் திணைக்களத்தின் மேலதிக
மாகாணப் பணிப்பாளர், காணித் திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர், மாவட்ட மட்ட
பிரதிப் பணிப்பாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட உயரதிகாரிகள் பலர்
கலந்துகொண்டனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-04T10:50:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கண்டி, நுவரெலியா மாவட்ட பாடசாலைகள் நாளை மீண்டும் திறப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/govt-schools-in-some-district-to-remain-closed-1785809952"></link>
            <id>https://ibctamil.com/article/govt-schools-in-some-district-to-remain-closed-1785809952</id>
            <summary type="text">புதிய இணைப்புசீரற்ற வானிலை காரணமாக இன்று (04) மூடப்பட்டிருந்த கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலுள்ள அனைத்து அரச பாடசாலைகளும் நாளை (05) மீண்டும் திற...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>சீரற்ற வானிலை காரணமாக இன்று (04) மூடப்பட்டிருந்த கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலுள்ள அனைத்து அரச பாடசாலைகளும் நாளை (05) மீண்டும் திறக்கப்படவுள்ளதாக மத்திய மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
</p><p>
தொடர்ச்சியாக நிலவும் மழை மற்றும் பாதகமான வானிலை நிலைமைகளைக் கருத்தில் கொண்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டிருந்தது.
</p><p>
தற்போதைய நிலைமையை மீளாய்வு செய்ததன் பின்னர், பாடசாலை நடவடிக்கைகளை நாளை முதல் வழமைபோல் முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
எனினும், மாணவர்கள் மற்றும் பெற்றோர் வானிலை தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்புகளை தொடர்ந்து அவதானிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><h2>முதலாம் இணைப்பு</h2><h5>இன்றும் சில பாடசாலைகளுக்கு விடுமுறை! வெளியானது முக்கிய அறிவிப்பு&nbsp;</h5><p>நாட்டில் நிலவும் சீரற்ற <a href="https://ibctamil.com/article/colombo-kandy-main-road-reopened-1785809437" target="_blank">வானிலை </a>காரணமாக கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலுள்ள அனைத்து அரச பாடசாலைகளும் இன்று செவ்வாய்க்கிழமை மூடப்படவுள்ளதாக கல்வி அதிகாரிகள் அறிவித்துள்ளனர். </p><p>கண்டிமாவட்டத்தில் தொடர்ச்சியாக நிலவும்<a href="https://ibctamil.com/article/advisory-issued-heavy-rain-in-several-districts-1785806749" target="_blank"> கடும் மழை</a> மற்றும் சீரற்ற வானிலை நிலையை கருத்தில் கொண்டு மாவட்டத்திலுள்ள அனைத்து அரச பாடசாலைகளுக்கும் இன்று விடுமுறை வழங்க மாவட்ட நிர்வாகம் தீர்மானித்துள்ளது. </p><p>அதேவேளை, நுவரெலியா மாவட்டத்திலுள்ள அனைத்து அரச பாடசாலைகளும் இன்று மூடப்படவுள்ளதாக நுவரெலியா கல்விப் பணிப்பாளர் அறிவித்துள்ளார்.</p><p></p><h2>விடுமுறை&nbsp;</h2><p> </p><p>இதன்படி, நுவரெலியா மாவட்டத்தின் நுவரெலியா, ஹட்டன், வலப்பனை, கொத்தமலை மற்றும் ஹகுரங்கெத்த ஆகிய வலயங்களைச் சேர்ந்த பாடசாலைகள் அனைத்திற்கும் நாளைய தினமும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/78c195d7-07ba-4f98-b8ea-be5457219365/26-6a714e86867b4.webp' /></p><p>மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை ஊழியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். </p><p>பாடசாலைகளை மீண்டும் திறக்கும் திகதி மற்றும் கல்வி நடவடிக்கைகள் தொடர்பான மேலதிக அறிவுறுத்தல்கள் பின்னர் உரிய அதிகாரிகளால் அறிவிக்கப்படும் என்றும் கல்விப் பிரிவு தெரிவித்துள்ளது.&nbsp;&nbsp;</p><p></p><h2>உயர் தரப் பரீட்சை&nbsp;</h2><p>நிலவும் சீற்றமான வானிலைக்கு மத்தியில், எதிர்வரும் நாட்களில் நடைபெறவுள்ள தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சை என்பன தொடர்பாக நாளை (05) சிறப்பு கலந்துரையாடல் ஒன்று நடைபெறவுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0d4f6905-ce04-4710-bae9-b3f8113a866b/26-6a714e87807e4.webp' /></p><p> 

வளிமண்டலவியல் திணைக்களம், அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மற்றும் பரீட்சைத் திணைக்களம் ஆகியவற்றின் பிரதிநிதிகளுக்கு இடையே குறித்த கலந்துரையாடல் நடைபெறவுள்ளது.&nbsp;</p><p>மேலும் நிலவும் மழைக்கால வானிலையுடன் பரீட்சைப் பணிகள் தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அஜித் விஜேமான்ன தெரிவித்த்துள்ளார்.</p><p><b>You may like this</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/oO6wG-ebrg8" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-04T10:47:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thirumal</name>
            </author>
            <title type="text"><![CDATA[சீரற்ற வானிலையால் நுவரெலியாவில் பெரும் பாதிப்பு: 5 பேர் பலி - ஒருவர் மாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/severe-weather-major-damage-nuwara-eliya-1785837313"></link>
            <id>https://tamilwin.com/article/severe-weather-major-damage-nuwara-eliya-1785837313</id>
            <summary type="text">நுவரெலியா மாவட்டத்தில் தொடர்ந்து நிலவி வரும் சீரற்ற வானிலை காரணமாக இன்று
(04) நண்பகல் வரையான காலப்பகுதியில் 1,091 குடும்பங்களைச் சேர்ந்த 3,951 பேர்
...</summary>
            <content type="html"><![CDATA[<p>நுவரெலியா மாவட்டத்தில் தொடர்ந்து நிலவி வரும் சீரற்ற வானிலை காரணமாக இன்று
(04) நண்பகல் வரையான காலப்பகுதியில் 1,091 குடும்பங்களைச் சேர்ந்த 3,951 பேர்
கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்டச் செயலாளர் துஷாரி தென்னகோன்
தெரிவித்துள்ளார். </p><p>அத்துடன், இயற்கை அனர்த்தங்களில் சிக்கி 5 பேர்
உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் காணாமல் போயுள்ளார். மேலும் மூவர் காயமடைந்து
சிகிச்சை பெற்று வருகின்றனர்.</p><p>
கினிகத்தேனை, மொரஹேன கிராமப் பகுதியில் ஏற்பட்ட திடீர் மண்சரிவில் வீடொன்றின்
மீது மண்மேடு சரிந்து விழுந்ததில் நான்கு பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
</p><p>அதேபோன்று, அம்பகமுவ பகுதியில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் அடித்துச்
செல்லப்பட்டு ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றொருவர் வெள்ள நீரில் மூழ்கி
காணாமல் போயுள்ளார்.</p><p></p><h2>கடுமையான பாதிப்புக்கள்..&nbsp;</h2><p>

பாதிக்கப்பட்ட மக்களிலிருந்து 523 குடும்பங்களைச் சேர்ந்த 2,195 பேர் உடனடி
பாதுகாப்பு நடவடிக்கையாக 20 இடைத்தங்கல் நலன்புரி மையங்களில் தங்க
வைக்கப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d3eb7786-839e-4e5f-b0c4-affb3501968e/26-6a71c247c75f3.webp' /></p><p> </p><p>இவர்களுக்கான சமைத்த உணவு மற்றும் அத்தியாவசிய நிவாரண
உதவிகளை வழங்கும் பணிகள் மாவட்ட செயலகத்தினால் முன்னெடுக்கப்பட்டு
வருகின்றன.
</p><p>
இந்த சீரற்ற வானிலை மற்றும் அனர்த்தங்கள் காரணமாக மாவட்டத்தில் 2 வீடுகள்
முழுமையாகவும், 90 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன. அத்துடன், அவிசாவளை
- ஹட்டன் - நுவரெலியா வீதியின் 66 ஆம் கிலோமீற்றர் பகுதி, லக்ஷபான -
பொல்பிட்டிய வீதி, டன்சினன் - பூண்டுலோயா வீதி மற்றும் டிக்கோயா பகுதியில்
உள்ள வீதி ஆகிய பிரதான வீதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.</p><p>

தற்போது இவ்வீதிகளைச் சீரமைத்து, போக்குவரத்தை மீண்டும் இயல்பு நிலைக்குக்
கொண்டு வரும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.</p><p> அதேவேளை, கொத்மலை -
பனம்ஹம்மன வீதியில் மண்சரிவு அபாயம் தீவிரமடைந்துள்ளதால், பாதுகாப்பு நிமித்தம்
அவ்வீதி போக்குவரத்திற்காக முற்றாக மூடப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட செயலகம்
மேலும் அறிவித்துள்ளது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-04T10:45:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானுக்கு கடைசி வாய்ப்பு; ட்ரம்ப் பகிரங்க மிரட்டல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/last-chance-for-iran-trump-issues-open-threat-1785840149"></link>
            <id>https://canadamirror.com/article/last-chance-for-iran-trump-issues-open-threat-1785840149</id>
            <summary type="text">ஈரானுக்கு கடைசி வாய்ப்பு; ட்ரம்ப் பகிரங்க மிரட்டல்

 நட்பு நாடுகளின் வேண்டுகோளை ஏற்று ஈரானுடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டுள்ளோம். இந்த விவகாரத்தில் ஒர...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானுக்கு கடைசி வாய்ப்பு; ட்ரம்ப் பகிரங்க மிரட்டல்

 நட்பு நாடுகளின் வேண்டுகோளை ஏற்று ஈரானுடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டுள்ளோம். இந்த விவகாரத்தில் ஒரு ஒப்பந்தத்தை எட்ட அவர்களுக்கு இதுவே கடைசி வாய்ப்பு என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
</p><p>
வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த ட்ரம்ப், 

ஈரானுக்கு இதுவே கடைசி வாய்ப்பு. இந்த பேச்சுவார்த்தை போர் நிறுத்த ஒப்பந்தத்தை இறுதி செய்ய வேண்டும். அப்படி இல்லையென்றால் சர்வ நாசத்தை எதிர்கொள்ள வேண்டி இருக்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/870a9b0b-4fdc-4f33-a8db-ca75da7f73e1/26-6a71c2173a3c7.webp' /></p><p>

சவுதி அரேபியா, கத்தார், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகளின் வேண்டுகோளை ஏற்று ஈரானுடன் பேச்சுவார்த்தை மேற்கொள்ள சம்மதம் தெரிவித்தேன் என்றார்.
</p><p>
இந்த பேச்சுவார்த்தை மூலம் ஹார்முஸ் ஜலசந்தியின் தடையற்ற கப்பல் போக்குவரத்து, ஈரானின் வசம் உள்ள அணுசக்தி விவகாரம் குறித்து இறுதி உடன்பாடு எட்டப்படும். பேச்சுவார்த்தையின் நிலை குறித்த விவரம் ஓரிரு நாட்களில் தெரிந்துவிடும் என்று ட்ரம்ப் உறுதிபட தெரிவித்துள்ளார்.
</p><p>
அதேவேளை அமெரிக்காவுடன் தங்கள் தரப்பில் பேச்சுவார்த்தை எதுவும் மேற்கொள்ளவில்லை என்று ஈரான் வெளியுறவு அமைச்சகம் மறுத்துள்ளது.</p><p> 

ஈரான் அதன் எல்லையை பாதுகாக்கும் பணியில் கவனம் செலுத்துகிறது. எங்களுக்கு போரை விரிவுபடுத்த விரும்பவில்லை என்று ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன் கூறியுள்ளதாக அந்த நாட்டு அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

</p>]]></content>
            <updated>2026-08-04T10:40:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆயிரம் பாடசாலைகளைத் தேசிய பாடசாலைகளாகத் தரமுயர்த்தும் முயற்சி - நிபந்தனையுடன் முடிவுற்ற வழக்கு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/no-law-to-incorporate-schools-national-schools-1785835012"></link>
            <id>https://tamilwin.com/article/no-law-to-incorporate-schools-national-schools-1785835012</id>
            <summary type="text">ஆயிரம் பாடசாலைகளைத் தேசிய பாடசாலைகளாகத் தரமுயர்த்தும் (மாகாணத்திடமிருந்து
கபளீகரம் செய்யும்) மத்திய கல்வி அமைச்சின் முயற்சிக்கெதிராக மேன்முறையீட்டு
...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஆயிரம் பாடசாலைகளைத் தேசிய பாடசாலைகளாகத் தரமுயர்த்தும் (மாகாணத்திடமிருந்து
கபளீகரம் செய்யும்) மத்திய கல்வி அமைச்சின் முயற்சிக்கெதிராக மேன்முறையீட்டு
நீதிமன்றத்தில் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி சார்பில் அதன் துணைச்
செயலாளராகிய கலாநிதி கந்தையா சர்வேஸ்வரனால் தாக்கல் செய்யப்பட்ட
வழக்கு வெற்றி பெற்றுள்ளது.
</p><p>
அரசியல் யாப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தின் பிரகாரம் கல்வி மாகாணங்களுக்கு
ஒதுக்கப்பட்ட விடயமாகும். </p><p>எனினும் யுத்த காலங்களில் மத்திய கல்வி அமைச்சு
அரசியல் யாப்புக்கு முரணாக இலங்கை முழுவதிலும் ஏறத்தாழ 350 வரையிலான
பாடசாலைகளையும் குறிப்பாக வடக்கு மாகாணத்தில் 20 பாடசாலைகளையும் அமைச்சரவைப்
பத்திரம் மற்றும் நிர்வாக வழிமுறைகள் மூலம் தேசிய பாடசாலை என்ற பெயரில் தனது
ஆளுமையின்கீழ் கொண்டு வந்திருந்தது.
</p><p>
மைத்திரிபால சிறிசேனவின் தலமையிலான ஆட்சியின்கீழ் மகிந்த ராஜபக்சவைப்
பிரதமராகக் கொண்டு நடைபெற்ற ஐம்பது நாள் ஆட்சியில் டலஸ் அழகப்பெருமா கல்வி,
அமைச்சராக இருந்தார்.</p><p></p><h2>தேசிய பாடசாலை</h2><p> </p><p>அவர் ஏற்கனவே தேசியப் பாடசாலை என்ற பெயரில் செயற்பட்டு
வந்த 350 வரையிலான பாடசாலைகளுக்கு மேலதிகமான 650 வரையிலான பாடசாலைகளை
உள்ளீர்த்து நாடு தழுவிய வகையில் ஆயிரம் பாடசாலைகளை தேசிய பாடசாலை என்ற
பெயரில் மாகாணங்களிடமிருந்து கபளீகரம் செய்து மத்திய கல்வி அமைச்சின்
கட்டுப்பாட்டில் செயற்படுத்தும் நோக்குடன் ஆயிரம் தேசிய பாடசாலைத் திட்டத்தை
அறிவித்தார். </p><p>அவரைத் தொடர்ந்து கல்வி அமைச்சர்களாகச் செயற்பட்ட ஜி.எல்.பீரிஸ்
மற்றும் தினேஷ் குணவர்த்தன போன்றவர்களும் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில்
தீவிரமாகச் செயற்பட்டனர்.</p><p>
</p><p>
இந்தத் திட்டம் 13ஆவது திருத்தச் சட்டத்தில் மாகாணத்திற்கு வழங்கப்பட்ட
அதிகாரத்தை மீறும் செயல். எனவே இத்திட்டமானது அரசியல் யாப்புக்கு முரணானதும்
சட்டவிரோதமானதுமாகும். </p><p>எனவே இத்திட்டம் செயற்படுத்தப்படாமல் தடை
செய்யவேண்டும் என மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் முன்னாள் கல்வி அமைச்சரான
கலாநிதி கந்தையா சர்வேஸ்வரன் 2022ஆம் ஆண்டு வைகாசி (மே) மாதத்தில் வழக்குத்
தாக்கல் செய்திருந்தார். </p><p>நீதிமன்றம் இத்திட்டத்திற்கு தடையுத்தரவு வழங்க
மறுத்தது. ஆனால் வழக்கை ஏற்றுக் கொண்டது.

இந்த வழக்கில் மத்திய கல்வி அமைச்சர் அவரது செயலாளர் உட்பட பதினாறு பேர்
பிரதிவாதிகளாக பிரஸ்தாபிக்கப்பட்டிருந்தனர். பிரதிவாதிகள் சார்பில்
முன்னிலையான அரச தரப்பு சட்டத்தரணி தனது தரப்பு வாதம் 6168 எதனையும்
முன்வைக்கவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/55ba6130-870c-4666-b791-cf3546fd0fff/26-6a71c06f801e5.webp' /></p><p> </p><p>மாறாக இத்திட்டத்தினைச் செயற்படுத்துவார்களா இல்லையா என்பது
பற்றி அமைச்சரிடம் பேசிப் பதில் சொல்ல கால அவகாசம் வேண்டும் எனக் கோரி ஒவ்வொரு
அமர்விலும் கால இழுத்தடிப்பையே செய்து வந்தார்.
</p><p>
இந்நிலையில் 18.08.2023 திகதியிடப்பட்ட சுற்றறிக்கை அனைத்து மாகாண ஆளுநர்களின்
செயலாளர்கள், பிரதம செயலாளர்கள் மற்றும் மாகாணப் பணிப்பாளர்களுக்கு மத்திய
கல்வி அமைச்சின் செயலாளரினால் அனுப்பி வைக்கப்பட்டது. </p><p>இதில் ஆயிரம்
பாடசாலைகளைத் தேசிய பாடசாலைகளாக்கும் பட்டியலிலுள்ள பாடசாலைகளில் ஏற்கனவே
சுவீகரிக்கப்பட்ட (கபளீகரம் செய்யப்பட்ட) பாடசாலைகள் தவிர்ந்த ஏனைய
பாடசாலைகளின் தேசிய பாடசாலை என்ற பெயர்ப் பலகைகளை அகற்றும்படியும்
அப்பாடசாலைகளின் அதிபர்கள் தேசிய பாடசாலை என்ற பதவி முத்திரையோ கடிதத் தலைப்போ
பயன்படுத்தக் கூடாது என்றும் இதனை
நடைமுறைப்படுத்துமாறும் அறிவுறுத்தி இருந்தது. </p><p>மேலும் சுற்றறிக்கையில்
இப்பாடசாலைகள் தொடர்ந்தும் மாகாணக் கல்வி நிர்வாகத்தின் கீழேயே இயங்கும்
எனவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது. எனினும் கணிசமான பாடசாலைகள் இவற்றைச்
செயற்படுத்தத் தவறியமையால் அவற்றை விரைந்து செயற்படுத்துமாறு 20.02.2024
திகதியிட்ட நினைவூட்டல் கடிதம் மத்திய கல்வி அமைச்சினால் அனைத்து மாகாண கல்வி
நிர்வாக தலைவர்களுக்கும் அனுப்பப்பட்டது.</p><h2>வழக்குத் தாக்கல்</h2><p></p><p>
</p><p>
இச்சுற்றறிக்கை மூலம் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டதற்கு முன்னர் தேசிய
பாடசாலையாக உள்ளீர்க்கப்பட்ட பாடசாலைகள் தவிர ஏனைய அனைத்துப் பாடசாலைகளும்
தொடர்ந்தும் மாகாண கல்வி அமைச்சின் நிர்வாகத்தின் கீழேயே இயங்கும் என்பது
நிர்வாக ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
</p><p>
ஆனால் நீதிமன்றத்தில் பதிலளிக்கப்படாமல் கால இழுத்தடிப்பே தொடர்ந்தும்
மேற்கொள்ளப்பட்டு வந்தது. வழக்கு தாக்கல் செய்யப்பட்டு ஏறத்தாழ 3 வருடங்கள்
களித்து 23.05.2025இல் பிரதிவாதிகள் சார்பில் முன்னிலையான பிரதி சொலிசிட்டர்
ஜெனரல் நீதிமன்றத்தில்

“குற்றம் சாட்டப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்தை நடைமுறைப்படுத்த தற்போது சட்டம்
இல்லை..." என சட்டமா அதிபர் அறிவுறுத்தி உள்ளார் என ஒப்புதலளித்தார். </p><p>ஆயிரம்
பாடசாலைகளைத் தேசிய பாடசாலைகளாக்கும் திட்டம் அரசியல் யாப்பிற்கு
விரோதமானதும், FLL விரோதமானதுமாகும் என்பதே வழக்கின் அடிப்படையாகும்.
இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த தற்போது சட்டம் இல்லை என்பதைச் சட்டமா அதிபர்
ஏற்றுக்கொண்டதன் அடிப்படையில் இவ்வழக்கை கைவாங்குமாறு (வாபஸ் பெறுமாறு) இரண்டு
நீதிபதிகள் கொண்ட இம்மன்று வழக்காளியின் சட்டத்தரணியிடம் கோரியது.
</p><p>
எனினும் சட்டமா அதிபரின் சமர்ப்பணத்துக்கு முரணாக நாடாளுமன்றத்தில் கல்வி
அமைச்சர் "இவ்வாயிரம் பாடசாலைகளை மீண்டும் மாகாண சபைகளிடம் கையளிக்கும்
உத்தேசம் இல்லை” என கருத்து வெளியிட்டமை நீதிமன்றத்திற்குச்
சமர்ப்பிக்கப்பட்டது. சில மாதங்கள் களித்து மத்திய கல்வி அமைச்சு ஏற்கனவே
சுவீகரிக்கப்பட்ட பாடசாலைகள் தவிர எவற்றையும் சுவீகரிக்கும் உத்தேசம் இல்லை
என்ற எழுத்து மூல அறிவித்தலை சட்டமா அதிபரூடாக நீதிமன்றத்திற்கு
சமர்ப்பித்தது. </p><p>எனவே,</p><p>1. பாடசாலைகளை தேசிய பாடசாலை என்ற பெயரில் மத்திய கல்வி அமைச்சு தனது
நிர்வாகத்தின் கீழ் எடுப்பதற்கு சட்டம் இல்லை என்பது ஏற்றுக்கொள்ளப்பட்டதன்
அடிப்படையிலும்,</p><p>
2. வழக்குத் தாக்கல் செய்ய முன்னர் சுவீகரிக்கப்பட்ட பாடசாலைகள் தவிர ஏனையவை
சுவீகரிக்கப்படும் உத்தேசம் இல்லை என்ற மத்திய கல்வி அமைச்சு மேன்முறையீட்டு
நீதிமன்றத்திற்களித்த உறுதிப்பாட்டையும் கருத்திற் கொண்டு.
</p><p>
3. பாடசாலைகளை தேசிய பாடசாலைகள் என்ற பெயரில் மத்திய கல்வி அமைச்சு எடுத்துக்
கொள்வதற்குச் சட்டம் இல்லை என்றால் வழக்குத் தொடுப்பதற்கு முன்னர்
சுவீகரிக்கப்பட்ட பாடசாலைகளும் சட்டவிரோதமானவேயே. </p><p>எனவே அவை மீண்டும் மாகாண
நிர்வாகத்திற்குரியதாக விடுவிக்கப்பட வேண்டும் என புதிய வழக்கைத் தொடுப்பதன்
மூலமே சாத்தியம் என்பதாலும் அல்லது அரசியல் ரீதியில் மீளப்பெறப்படலாம் என்ற
இரு வழிகளே உள்ள யதார்த்தத்தின் அடிப்படையிலும்

அவசியமேற்படின் இவ்விடயம் தொடர்பில் மீண்டும் புதிதாக வழக்குத் தொடரப்படும்
என்ற நிபந்தனையுடன் வழக்கு முடிவுற்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/48b4b7ca-8be8-480b-ab26-a774b79395be/26-6a71c0703b64d.webp' /></p><h2>போராட்டத்தின் முதல்படி</h2><p>
</p><p>
ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி சார்பில் மத்திய அரசால் பறிக்கப்பட்ட
மாகாண அதிகாரங்களை மீளப்பெறும் போராட்டத்தின் முதற்படியான இச்சட்டப்
போராட்டத்தின் முடிவுகளின் முக்கியத்துவம் :
</p><p>
1. பாடசாலைகளை மத்திய அரசு உள்ளீர்ப்பதற்கு சட்டம் இல்லை. எனவே தேசிய பாடசாலை
என்ற பெயரில் மத்திய கல்வி அமைச்சு பாடசாலைகளை எடுத்தமை மற்றும் எடுக்க
முயற்சிப்பது சட்டவிரோதமானது என்பது நிரூபிக்கப்பட்டது.
</p><p>
2. மத்திய கல்வி அமைச்சு நாடு தழுவிய வகையில் கையகப்படுத்த முனைந்த ஏறத்தாழ
அறுநூற்றி ஐம்பது வரையான பாடசாலைகளும் குறிப்பாக வடக்கு மாகாணத்திலிருந்து
எடுக்க முனைந்த நாற்பத்தியெட்டு பாடசாலைகளும் மத்திய அரசால் பறிக்கப்படாமல்
தடுக்கப்பட்டிருக்கிறது.
</p><p>
3. வழக்குத் தாக்கல் செய்வதற்கு முன்னர் கையகப்படுத்தப்பட்டு இன்று தேசிய
பாடசாலை 61601 மத்திய நிர்வாகத்தின்கீழ் இயங்கும் பாடசாலைகளும் சட்டவிரோதமாகவே
கையகப்படுத்தப்பட்டவை. சட்டப்படி அவையும் மாகாண நிர்வாகத்திடம் கையாளிக்கப்பட
வேண்டியவை என்பதற்கான சட்டரீதியான சான்று நிறுவப்பட்டுள்ளது.</p><p>

4. இது வரை காலம் மாகாணத்திற்கு உரித்தான ஆனால் மத்திய அமைச்சர்களால்
கையகப்படுத்தப்பட்ட அதிகாரங்கள் அனைத்தும் சட்டவிரோதமானவை.</p><p></p><p> </p><p>அரசியல் யாப்பிற்கு
விரோதமானவை அவை சம்பந்தப் அமைச்சர்களால் மாகாண நிர்காகத்திற்கு மீண்டும்
கையளிக்கப்பட வேண்டும் என்பதற்கான கதவுகளைத் திறந்து விட்டிருக்கிறது.</p><p>

இவ்வழக்கைத் தாக்கல் செய்வதில் உதவிய அனைவருக்கும் குறிப்பாக இவ்வழக்கில்
முன்னிலையாகி வாதாடியா சிரேஷ்ட சட்டத்தரணி கனக ஈஸ்வரன் அவரது கனிஸ்ட
சட்டத்தரணி லக்ஸ்மணன் மற்றும் வழக்கைப் பதிவு செய்தலுட்பட்ட நிர்வாக ரீதியாக
விடயங்களை கையாண்ட சட்டத்தரணி ரட்ணவேல் மற்றும் அவரது சட்டக்கு
ழுவினர்க்கும் இந்த இடத்தில் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.</p>]]></content>
            <updated>2026-08-04T10:36:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[வாழைப்பழத் தோலுடன் பேக்கிங் சோடா.., எப்படி பயன்படுத்தலாம்?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/banana-peels-and-baking-soda-household-uses-1785838199"></link>
            <id>https://manithan.com/article/banana-peels-and-baking-soda-household-uses-1785838199</id>
            <summary type="text">வாழைப்பழத் தோலில் நார்ச்சத்து, பொட்டாசியம், மெக்னீசியம், ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளிட்ட பல சத்துகள் உள்ளன. 

2022ஆம் ஆண்டு வெளியான ஒரு ஆய்வின்படி, வாழ...</summary>
            <content type="html"><![CDATA[<p>வாழைப்பழத் தோலில் நார்ச்சத்து, பொட்டாசியம், மெக்னீசியம், ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளிட்ட பல சத்துகள் உள்ளன. </p><p>

2022ஆம் ஆண்டு வெளியான ஒரு ஆய்வின்படி, வாழைப்பழத் தோலை இயற்கை உரம் தயாரிக்கவும், கம்போஸ்ட் செய்யவும், கழிவுகளை பயனுள்ள வகையில் பயன்படுத்தவும் முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
</p><p>
பேக்கிங் சோடாவை தண்ணீரில் கலந்து வாழைப்பழத் தோலை 10 முதல் 15 நிமிடங்கள் ஊறவைத்தால், அதில் இருக்கும் அழுக்கு, பூச்சிக்கொல்லி எச்சங்கள் மற்றும் மெழுகு படலம் நீங்க உதவும். </p><p>அந்தவகையில், வாழைப்பழத்தோல் மாற்று பேக்கிங் சோடாவை எப்படி பயன்படுத்தலாம் என்று பார்க்கலாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/41fe09a7-9c19-4ca1-b506-cd7893aa40cc/26-6a71bac7b8d39.webp' /></p><h2>1. கறைகளை சுத்தம் செய்யலாம்
</h2><p>
3 முதல் 5 வாழைப்பழத் தோல்களை சிறிய துண்டுகளாக நறுக்கி, 1 அல்லது 2 ஸ்பூன் பேக்கிங் சோடா சேர்த்து பேஸ்ட் போல அரைக்கவும்.
</p><p>
இந்த பேஸ்ட்டை ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் சிங்க் அல்லது பீங்கான் மேற்பரப்பில் தடவி, சில நிமிடங்கள் கழித்து கழுவினால் கறைகள் மற்றும் துர்நாற்றம் குறைய உதவும்.
</p><h2>
2. செடிகளுக்கு இயற்கை உரம்
</h2><p>
சுத்தம் செய்த வாழைப்பழத் தோல்களை சிறிய துண்டுகளாக நறுக்கி, செடிகளின் வேர்களுக்கு அருகில் மண்ணுக்குள் புதைத்து வைக்கலாம்.
</p><p>
இதில் உள்ள பொட்டாசியம் மற்றும் பாஸ்பரஸ் மெதுவாக மண்ணில் கலந்து செடிகளின் வளர்ச்சிக்கு உதவும்.
</p><h2>
3. குப்பைத் தொட்டி துர்நாற்றம் குறையும்
</h2><p>
வாழைப்பழத் தோல் - பேக்கிங் சோடா பேஸ்ட்டை குப்பைத் தொட்டியின் உள்ளே தடவி 10 நிமிடங்கள் கழித்து கழுவலாம்.
</p><p>
மேலும், பேக்கிங் சோடாவால் சுத்தம் செய்யப்பட்ட உலர்ந்த வாழைப்பழத் தோல்களை குப்பைத் தொட்டியின் அடியில் வைத்தால் துர்நாற்றம் குறையவும், பழ ஈக்கள் வருவதும் குறையவும் உதவும்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-04T10:32:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[விஸ்வநாத் &amp; சன்ஸ் திரைப்படத்தில் நடிக்க சூர்யா மற்றும் மமிதா பைஜூ வாங்கிய சம்பளம்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/suriya-mamitha-baiju-salary-vishwanath-and-sons-1785838957"></link>
            <id>https://cineulagam.com/article/suriya-mamitha-baiju-salary-vishwanath-and-sons-1785838957</id>
            <summary type="text">வருகிற 14-ஆம் தேதி வெளியாகவிருக்கும் விஸ்வநாத் &amp;amp; சன்ஸ் திரைப்படத்தில் நடிப்பதற்காக சூர்யா மற்றும் மமிதா பைஜூ வாங்கிய சம்பளம் எவ்வளவு என்று தெரியும...</summary>
            <content type="html"><![CDATA[<p>வருகிற 14-ஆம் தேதி வெளியாகவிருக்கும் விஸ்வநாத் &amp; சன்ஸ் திரைப்படத்தில் நடிப்பதற்காக சூர்யா மற்றும் மமிதா பைஜூ வாங்கிய சம்பளம் எவ்வளவு என்று தெரியுமா? வாங்க இந்த பதிவில் பார்க்கலாம்.</p><p>
</p><p></p><h2>விஸ்வநாத் &amp; சன்ஸ்
</h2><p>
லக்கி பாஸ்கர் திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் விஸ்வநாத் &amp; சன்ஸ். இப்படத்தில் சூர்யா கதாநாயகனாக நடிக்க, மமிதா பைஜூ கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் இணைந்து ரவீனா டாண்டன், ராதிகா சரத்குமார் நடித்துள்ளனர்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2a289c19-9cd5-44b5-9466-7c32e9cfd788/26-6a71bd7085311.webp' /></p><p>ஜி.வி. பிரகாஷ் குமார் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். 

இப்படத்திலிருந்து இதுவரை வெளிவந்த பாடல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. குறிப்பாக 'பட்டாம்பூச்சி' எனும் பாடல் உலகளவில் டிரெண்ட் ஆனது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/61aa000c-9b4a-4f97-8a36-564200f045f6/26-6a71bd6fcdc96.webp' /></p><p>மேலும், சமீபத்தில் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் 'தி ஒன்' என்கிற பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. ஆகஸ்ட் 14-ஆம் தேதி வெளியாகவிருக்கும் இப்படத்தை திரையரங்கில் கொண்டாட ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.</p><h2>

சம்பளம்
</h2><p>
ஒவ்வொரு முன்னணி நட்சத்திரங்களின் திரைப்படங்கள் வெளியாகும்போது, அந்த படத்தில் பணியாற்றிய பிரபலங்களின் சம்பளம் குறித்த விவரம் வெளிவரும். அந்த வகையில், இப்படத்தில் நடித்த சூர்யா மற்றும் மமிதா பைஜூவின் சம்பள விவரம் வெளியாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cca63d5d-9d43-4905-ad67-413ebb14ab53/26-6a71bd714034a.webp' /></p><p>

இந்நிலையில், விஸ்வநாத் &amp; சன்ஸ் திரைப்படத்தில் நடிக்க நடிகர் <a href="https://www.youtube.com/watch?v=oOnYddVcTfI" target="_blank">சூர்யா</a>விற்கு ரூ. 60 கோடி முதல் ரூ. 70 கோடி வரை சம்பளம் வாங்கியுள்ளார். மேலும், கதாநாயகி மமிதா பைஜூ ரூ. 2 கோடி சம்பளம் வாங்கியுள்ளார் என தகவல் கூறப்படுகிறது. 

ஆனால், இந்த சம்பள விவரம் அதிகாரப்பூர்வமானது அல்ல, இணையத்தில் உலாவரும் தகவல் என்பது குறிப்பிடத்தக்கது.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/oOnYddVcTfI" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-08-04T10:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[27வது பர்த்டேவை கொண்டாடும் நடிகை யாஷிகா ஆனந்த்!! வீடியோ..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/yashikaa-annand-27th-birthday-party-video-post-1785837617"></link>
            <id>https://viduppu.com/article/yashikaa-annand-27th-birthday-party-video-post-1785837617</id>
            <summary type="text">யாஷிகா ஆனந்த்இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் தான் நடிகை யாஷிகா ஆனந்த். பிக்பாஸ் நிக...</summary>
            <content type="html"><![CDATA[<h2>யாஷிகா ஆனந்த்</h2><p>இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் தான் நடிகை யாஷிகா ஆனந்த். பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்று அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்தார் யாஷிகா.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d1fabbdb-acbc-4d55-a4b8-9cf87720616b/26-6a71b83325360.webp' /></p><p>இதற்கிடையில் கார் விபத்தில் சிக்கி தன்னுடைய தோழியை இழந்து படுத்தப்படுகையில் இருந்தார். 4 மாதங்களுக்கு பின் மீண்டு வந்த யாஷிகா, மீண்டும் நடிக்க ஆரம்பித்தார்.</p><p> இணையத்தில் ஆக்டிவாக இருந்து கிளாமர் பதிவுகளை பகிர்ந்து வரும் யாஷிகா, தற்போது 27 வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். கேக் வெட்ட வாயிலிருந்து தீப்பொறியை பறக்கவிட்டு கொண்டாடி வீடியோவை பகிர்ந்துள்ளார் யாஷிகா.</p><p><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/reel/DbnLT63u4gX/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/reel/DbnLT63u4gX/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/reel/DbnLT63u4gX/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by Yash 🔱⭐️🌙 (@yashikaaannand)</a></p></div></blockquote> <script async src="//www.instagram.com/embed.js"></script></p>]]></content>
            <updated>2026-08-04T10:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[உதயநிதி ஸ்டாலினை இன்றே விடுவிக்க வேண்டும் - நீதிபதி உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/court-orderedto-release-udhayanidhi-stalin-today-1785834256"></link>
            <id>https://news.lankasri.com/article/court-orderedto-release-udhayanidhi-stalin-today-1785834256</id>
            <summary type="text">கைது செய்யப்பட்டுள்ள உதயநிதி ஸ்டாலினை இன்றே விடுவிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார். 

உதயநிதி ஸ்டாலினை விடுவிக்க நீதிபதி உத்தர...</summary>
            <content type="html"><![CDATA[<p>கைது செய்யப்பட்டுள்ள உதயநிதி ஸ்டாலினை இன்றே விடுவிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார். </p><h3>

உதயநிதி ஸ்டாலினை விடுவிக்க நீதிபதி உத்தரவு</h3><p> 

தஞ்சாவூரில் நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நடிகை திரிஷா குறித்து இரட்டை அர்த்தத்தில் பேசியதாக உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டுள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ba356c61-848f-425e-8b60-59cc10f6546e/26-6a71ab1242c4e.webp' /></p><p> 

உதயநிதி ஸ்டாலினை விசாரணைக்காக காவல்துறையினர் தஞ்சாவூர் அழைத்து செல்கின்றனர். </p><p>

இந்த கைது நடவடிக்கைக்கு எதிராக திமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.&nbsp;</p><p></p><p>

வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி இளந்திரையன், "எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதியை விசாரணைக்குப் பின் இன்றே விடுவிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/188bd523-0c0c-4d5e-875f-e8a2312a98e3/26-6a71ab12e817b.webp' /></p><p>
விசாரணைக்கு பின் காவல்நிலைய ஜாமினில் விடுவிக்கபடுவார் என அரசு தலைமை வழக்கறிஞர் பதில் அளித்துள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-04T10:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[உதயநிதி ஸ்டாலினை சிறைப்படுத்துவதை தவிர்க்க வேண்டும் : திருமாவளவன் தெரிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/udhayanidhi-stalin-arrested-thirumavalavan-x-post-1785836478"></link>
            <id>https://ibctamil.com/article/udhayanidhi-stalin-arrested-thirumavalavan-x-post-1785836478</id>
            <summary type="text">தமிழக சட்டமன்றம் நாளை (05) கூடவுள்ள நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பிலிருப்பவரைச் சிறைப்படுத்துவதைத் தவிர்ப்பது நல்லது என விடுதலை சிறுத்தைகள் க...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழக சட்டமன்றம் நாளை (05) கூடவுள்ள நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பிலிருப்பவரைச் சிறைப்படுத்துவதைத் தவிர்ப்பது நல்லது என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.</p><p>தமிழக முதல்வர் விஜய்யை தரக்குறைவாக பேசியதாக உதயநிதி ஸ்டாலின் சற்றுமுன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பாக, திருமாவளவன் தனது எக்ஸ் தள பதிவில் வெளியிட்ட பதிவில் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.</p><p>மேலும் அந்தப் பதிவில், அண்மையில் திமுக சார்பில் காவிரி நீர் உரிமைக்காக தஞ்சையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள், 'இரட்டுற மொழிதல்' என்னும் வகையில் எள்ளி நகையாடும் கருத்தொன்றைக் கூறியிருக்கிறார்.</p><p></p><h2>தேசிய அளவிலான பிரச்சினை</h2><p>

எதிர்க்கட்சிகளின் மீது பொய்வழக்குப் போடுவதிலேயே முதலமைச்சரின் கவனம் இருக்கிறது என்று அவர் சொல்லியபோது, ஆங்கே திரண்டிருந்தவர்கள் பிரபல நடிகை ஒருவரின் பெயரைச் சொல்லிக் கூச்சலிடுகின்றனர்.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">அண்மையில் திமுக சார்பில் காவிரி நீர் உரிமைக்காக தஞ்சையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள், &#39;இரட்டுற மொழிதல்&#39; என்னும் வகையில் எள்ளி நகையாடும் கருத்தொன்றைக் கூறியிருக்கிறார்.<br><br>எதிர்க்கட்சிகளின் மீது பொய்வழக்குப் போடுவதிலேயே…</p>&mdash; Thol. Thirumavalavan (@thirumaofficial) <a href="https://x.com/thirumaofficial/status/2084553115643084985?ref_src=twsrc%5Etfw">August 4, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p> </p><p>அப்போது அவர் கிண்டலாகப் பேசும் முனைப்பில் தவறான பொருள்படும்படி ஒரு கருத்தைப் பேசியுள்ளார். இது ஆங்கில ஊடகங்களில் விவாதிக்கும் அளவுக்கு - கண்டிக்கும் அளவுக்கு தேசிய அளவிலான பிரச்சினையாக மாறியுள்ளது. </p><p>

எதிர்க்கட்சித் தலைவர் என்கிற பொறுப்பு வாய்ந்த இடத்தில் இருப்பவர் இதுபோல இரட்டை பொருள் தரும் 'எள்ளல் நடையில்' பேசும் முறையைத் தவிர்த்திருக்க வேண்டும். </p><p>ஒரு பெண்ணைக் குறித்து இழிவாகப் பேசும் இத்தகைய அணுகுமுறை அவரது அரசியல் தகுதிக்குப் பொருத்தமானதில்லை. நாகரிக அரசியலுக்கு ஏற்புடையதல்ல.</p><p></p><h2>நாளை கூடவுள்ள சட்டமன்றம்</h2><p>
</p><p>
சூழ்ந்திருப்பவர்களின் சுவைக்கேற்ப சொல்லாடல் செய்வது என்கிற உந்துதலால் உணர்ச்சிவயப்பட்ட - தன்னிலை மறந்த அணுகுமுறையைக் கைவிட வேண்டும். பெண்மையைக் கொச்சைப்படுத்தும் வகையில் புரிதலை ஏற்படுத்திய அந்த அணுகுமுறை கண்டிக்கத் தக்கதாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/926318fe-7007-4e8c-9e9d-0828cac363b4/26-6a71bd5266843.webp' /></p><p> 

நாளை (05) சட்டமன்றம் கூடும் சூழ்நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பிலிருப்பவரைச் சிறைப்படுத்துவதைத் தவிர்ப்பது ஆளுங்கட்சியின் மீதான நன்மதிப்பை உயர்த்தும்.</p><p> 

தற்போதைய நிலையில், காவிரிநீர் உரிமைக்காக அனைத்துக் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் என யாவரும் இணைந்து குரல் கொடுப்பதற்கும்; இந்திய ஒன்றிய அரசின் கவனத்தை ஈர்ப்பதற்கும் இது ஏதுவாக அமையும் என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.” என குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-04T10:27:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[மஹர சிறைச்சாலையில் வெடித்த மோதல் - உறவினர்களுக்கு கைதிகளிடமிருந்து சென்ற அவசர அழைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/clashes-mahara-prison-relative-protest-1785821883"></link>
            <id>https://tamilwin.com/article/clashes-mahara-prison-relative-protest-1785821883</id>
            <summary type="text">மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதல்களுக்கு பின்னர் கைதிகள் தங்கள் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் கைபேசிகள் மூலம் நிலைமை குறித்து தகவல் வழங்கியுள்ளதாக...</summary>
            <content type="html"><![CDATA[<p>மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதல்களுக்கு பின்னர் கைதிகள் தங்கள் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் கைபேசிகள் மூலம் நிலைமை குறித்து தகவல் வழங்கியுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளதாக தென்னிலங்கை ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.</p><p>

சிறையின் முற்பகுதிக்கு உறவினர்களையும் நண்பர்களையும் அழைத்து, அவர்களை பயன்படுத்தி போராட்டத்தை நடத்த கைதிகள் திட்டமிட்டிருந்தமையும் தெரியவந்துள்ளது.</p><p>&nbsp;</p><h2>சிறையின் நிர்வாக பணிகள் கட்டுப்பாட்டில்&nbsp;</h2><p>
</p><p>
மஹர சிறைச்சாலையில் கைபேசிகள் மிகவும் சாதாரணமாகிவிட்டதாகவும், பழைய கைதிகள் கைபேசிகளை புதிய கைதிகளுக்கு அதிக விலைக்கு அழைப்புகளை மேற்கொள்ள கொடுப்பதாகவும் கூறப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/25b72316-419e-410c-ad10-96871f279d7e/26-6a71be2375448.webp' /></p><p>
</p><p>
கைபேசிகளில் இருந்து அழைப்புகளை மேற்கொள்வதற்காக செலுத்தப்படும் பணம், பழைய கைதிகளால் வழங்கப்பட்ட கணக்குகளில் வரவு வைக்கப்படுவதாகவும் சிறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
</p><p>
மேலும், சிறை வட்டாரங்களின்படி, மஹர சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள், சிறையின் பெரும்பாலான நிர்வாக பணிகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளமையும் தெரியவந்துள்ளது.</p><p>

மஹர சிறையில் கைதிகளிடையே கைபேசி பயன்பாடு குறித்து தற்போது விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
</p><p>
மேலும், சில சிறை அதிகாரிகள் பெரும் தொகையைப் பெற்றுக்கொண்டு கைதிகளுக்குக் கைபேசிகளை வழங்கியுள்ளனர் என்பதும் தெரியவந்துள்ளது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-04T10:25:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் இரவுநேரம் இடம்பெற்ற விபத்து : பரிதாபகரமாக பறிபோன முதியவரின் உயிர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/elderly-man-dies-in-jaffna-1785837754"></link>
            <id>https://ibctamil.com/article/elderly-man-dies-in-jaffna-1785837754</id>
            <summary type="text">காரைநகரில் நேற்றிரவு (03) இடம்பெற்ற விபத்து ஒன்றில் முதியவர் ஒருவர் சம்பவ
இடத்திலேயே உயிரிழந்தார்.

காரைநகர் - கருங்காலி பகுதியை சேர்ந்த
குமாரன் ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>காரைநகரில் நேற்றிரவு (03) இடம்பெற்ற விபத்து ஒன்றில் முதியவர் ஒருவர் சம்பவ
இடத்திலேயே உயிரிழந்தார்.

காரைநகர் - கருங்காலி பகுதியை சேர்ந்த
குமாரன் மகேந்திரலிங்கம் (வயது 66) என்பவரே உயிரிழந்தவராவார்.
</p><p>
இது குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த முதியவர் நேற்றிரவு கருங்காலி பகுதியில் துவிச்சக்கர வண்டியில்
சென்றுகொண்டிருந்தபோது அவ் வீதியால் வந்த மோட்டார் சைக்கிளானது வேகக்
கட்டுப்பாட்டை இழந்து முதியவர் மீது மோதியது.</p><h2>சம்பவ இடத்தில் உயிரிழப்பு</h2><p>&nbsp;முதியவரை உடனடியாக யாரும் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லாத
நிலையில் அவர் அங்கேயே உயிரிழந்தார். பின்னர் அவரது சடலமானது காரைநகர்
வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0863d09b-fa6b-4e3a-a41e-d7cdeb9bfded/26-6a71bd47cbeba.webp' /></p><p>
</p><p>
இதேவேளை மோட்டார் சைக்கிளில் பயணித்தவரும் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம்
போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
</p><p>
இது குறித்து விசாரணைகளை ஊர்காவற்துறை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-04T10:25:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>H. A. Roshan</name>
            </author>
            <title type="text"><![CDATA[திருகோணமலை மான் பூங்காவில் குவியும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/foreign-tourists-flock-to-the-trinco-deer-park-1785837416"></link>
            <id>https://tamilwin.com/article/foreign-tourists-flock-to-the-trinco-deer-park-1785837416</id>
            <summary type="text">திருகோணமலை பிரதான கடற்கரை பகுதியை அண்டிய பிரதேசத்தில் காணப்படும் மான் பூங்காவிற்கு அதிகளவிலான வெளிநாட்டு சுற்றுலாப்
பயணிகள் அதிகம் வருகை தருவதாக தெரி...</summary>
            <content type="html"><![CDATA[<p>திருகோணமலை பிரதான கடற்கரை பகுதியை அண்டிய பிரதேசத்தில் காணப்படும் மான் பூங்காவிற்கு அதிகளவிலான வெளிநாட்டு சுற்றுலாப்
பயணிகள் அதிகம் வருகை தருவதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>இதனால் சுற்றுலாத் துறை விருத்தி செய்யப்படுவதை திருகோணமலை
மாவட்டத்தில் சிறந்த எடுத்துக்காட்டாக காணப்படுகிறது.</p><p>
உள்நாட்டு வெளிநாட்டு சுற்றுலாத் துறையின் வளர்ச்சிக்கு திருகோணமலை மான்
பூங்காவும் சான்று பகிர்கின்றன. இதனால் மான் இனங்களை பாதுகாக்க வேண்டியது
ஒவ்வொருவரினதும் தலையாய கடப்பாடாகும்.</p><p></p><h2>சுற்றுலாத்துறை விருத்தி</h2><p>
</p><p>குறித்த மான் பூங்கா தொடக்கம் திருகோணமலை கோணேஸ்வரா கோயில் கோட்டை பகுதி,
திருகோணமலை பஸ் நிலையம் என பல இடங்களிலும் குறித்த மான் இனங்கள்
காணப்படுகிறது.</p><p> இதனை பாதுகாக்க பொலித்தீன் பை உள்ளிட்ட சூழலில் மான்கள் உண்ண
பொருத்தமற்ற உணவு பண்டங்களை உண்ணாமல் அதிலிருந்து பாதுகாக்க சூழலை சுத்தமாக
பேணப்பட வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/da5e6725-7c12-4e00-85f5-22cb9e9bdb24/26-6a71ba23e5f67.webp' /></p><p>மொத்த மான் இனங்களின் தொகையினை ஒவ்வொரு வருடமும் உரிய அரச தரப்பு துறைசார்
நிறுவனங்கள் கணக்கெடுக்க வேண்டும் என்பதுடன் இது போன்ற விடயங்களை மக்கள்
மத்தியில் விழிப்பூட்ட வேண்டும்.</p><p> இதன் மூலம் மேலும் உள்நாட்டு வெளிநாட்டு
சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க முடியும் என
எதிர்பார்க்கப்படுகிறது.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-04T10:18:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[உதயநிதி ஸ்டாலினை இன்றே விடுவிக்க வேண்டும் : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/tamil-nadu-police-have-reached-dmk-leader-1785821765"></link>
            <id>https://ibctamil.com/article/tamil-nadu-police-have-reached-dmk-leader-1785821765</id>
            <summary type="text">புதிய இணைப்புஎதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினை விசாரித்துவிட்டு இன்றே விடுவிக்க வேண்டும் எனவும் உதயநிதியும் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என செ...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினை விசாரித்துவிட்டு இன்றே விடுவிக்க வேண்டும் எனவும் உதயநிதியும் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p>உதயநிதி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட முன்பிணை மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் பிற்பகலில் விசாரணைக்கு வந்தது.</p><p>இதன்போது, அரச தலைமை சட்டத்தரணி கூறுகையில், எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி விசாரணைக்கு பின்னர் விடுவிக்கப்படுவார். உதயநிதியை சிறையிலடைக்கும் எண்ணம் இல்லை. உதயநிதி விசாரணைக்கு பின் காவல்துறை பிணையில் விடுவிக்கப்படுவார்“ என்று தெரிவித்தார்.
</p><p>
இதனையடுத்து, விசாரணைக்கு பின்னர் உதயநிதியை இன்றே விடுவிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி இளந்திரையன் உத்தரவிட்டார்.</p><p> மேலும், காவல்துறை விசாரணைக்கு உதயநிதி முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/591de09a-1c1e-43f2-96e4-ff58203641c9/26-6a71bb605d7bb.webp' /></p><h2>நான்காம் இணைப்பு</h2><h4>உதயநிதியின் கைது ஜனநாயக விரோதம்.... கொந்தளிக்கும் தி.மு.க : மு.க. ஸ்டாலின் முக்கிய ஆலோசனை</h4><p>உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து அறிவாலயத்தில் கட்சி நிர்வாகிகளுடன் மு.க. ஸ்டாலின் முக்கிய ஆலோசனை நடத்தி வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p>உதயநிதி ஸ்டாலின் கைதுசெய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, தி.மு.க.வினர் பல்வேறு நகரங்களிலும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.</p><p> இதனால், பல்வேறு பகுதிகளிலும் கடைகள் அடைக்கப்பட்டு வருவதுடன் போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் கலவரம் பரவி விடாமல் இருப்பதற்காக, அதிரடிப்படையினர் களமிறக்கப்பட்டுள்ளனர்.</p><p>உதயநிதி கைது தொடர்பாக தி.மு.க. வெளியிட்ட செய்தியில், உதயநிதி கைது நடவடிக்கை ஜனநாயக விரோதம். அவர் மீது பொய் வழக்கு போடப்பட்டு உள்ளது. கைது நடவடிக்கையால், உதயநிதியையோ, தி.மு.க.வையோ முடக்க முடியாது.
</p><p>
நாளை தமிழக சட்டசபை கூடவுள்ள நிலையில், இன்று கைது நடவடிக்கை ஏன்? சட்டசபை கூட்டத்தொடரில் உதயநிதி எழுப்பவுள்ள கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாது என்ற அச்சத்தில் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது“ என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>மூன்றாம் இணைப்பு</h2><h4>தமிழகத்தில் வெடித்த போராட்டம்: உதயநிதி கைதால் கொந்தளித்த மேயர் பிரியா - அரசின் மீது பாய்ச்சல்</h4><p>தி.மு.க. தொண்டர்கள் மீது லத்திச்சார்ஜ் நடத்தும் அளவுக்கு நாங்கள் என்ன தீவிரவாதிகளா என்று சென்னை மேயர் பிரியா கேள்வி எழுப்பியுள்ளார்.</p><p> </p><p>உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து, தமிழகம் முழுவதும் தி.மு.க.வினர் சாலை மறியல் மற்றும் கண்டன ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். </p><p>சென்னை நீலாங்கரையில் உள்ள உதயநிதியின் இல்லம் முன்பும் ஏராளமான திமுக தொண்டர்கள் திரண்ட நிலை&nbsp;அவர்களை காவல்துறையினர் அப்புறப்படுத்தி கைது செய்தனர்.</p><h2>கைதுக்கு கடும் கண்டனம்</h2><p>இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த சென்னை மேயர் பிரியா, உதயநிதி ஸ்டாலின் கைதுக்கு கடும் கண்டனம் தெரிவித்தார்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7cf76288-74e2-4e66-9ef7-1614c94fe32f/26-6a719c639e16d.webp' /></p><p>மேலும், "தி.மு.க. தொண்டர்கள் மீது லத்திச்சார்ஜ் நடத்தும் அளவுக்கு நாங்கள் என்ன தீவிரவாதிகளா? தியேட்டருக்கு சென்று&nbsp;'ஜனநாயகன்' படம் பார்த்து அழுகிறார்கள். </p><p>ஆனால் இன்று காவல்துறையினரை வைத்து ரத்தம் வரும் அளவுக்கு அடிக்கிறார்கள்&nbsp; இதுதான் ஜனநாயகமா? காவல்துறை&nbsp; உங்கள் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்பதற்காக எதை வேண்டுமானாலும் செய்ய முடியாது. இந்த அராஜக அரசியலை கண்டு நாங்கள் ஒருபோதும் அஞ்ச மாட்டோம்" என்று கூறினார்.</p><h2>இரண்டாம் இணைப்பு</h2><p>தமிழக முதல்வர் விஜய்யை தரக்குறைவாக பேசிய&nbsp;விவகாரம் தொடர்பில் திமுக இளைஞரணி செயலாளரும் சட்டசபை எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p>காவிரி விவகாரம் தொடர்பாக தவெக அரசைக் கண்டித்து தஞ்சாவூரில் திமுக சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

இந்தக் கூட்டத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து உதயநிதி ஸ்டாலின் கடுமையாகப் பேசியது சர்ச்சையாகியுள்ளது.</p><p>முதல்வர் விஜய்யை, உதயநிதி ஸ்டாலின் இழிவாக பேசியதாக அவர் மீது பல்வேறு காவல்நிலையங்களில் தவெகவினர் புகார் கொடுத்திருந்த நிலையில் இந்த கைது இடம்பெற்றுள்ளது.</p><p></p><h2>முதலாம் இணைப்பு&nbsp;</h2><h3>குவிக்கப்பட்ட&nbsp;காவல்துறையினர்</h3><p>சென்னையில் உள்ள உதயநிதி ஸ்டாலின் வீடு முன்பாக இன்று காலை முதலே ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d5fcf744-5df0-4ce9-8c88-d8b86d099e49/26-6a71867c8db65.webp' /></p><p>காவிரி விவகாரம் தொடர்பாக தவெக அரசைக் கண்டித்து தஞ்சாவூரில் திமுக சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.</p><p> சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 8 மாவட்டங்களைச் சேர்ந்த திமுகவினர் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.
</p><p>
இந்தக் கூட்டத்தில் முதல்வர் ஜோசப் விஜய் மற்றும் பெண்களை விமர்சித்து, உதயநிதி ஸ்டாலின் இழிவாகப் பேசியது சர்ச்சையாகியுள்ளது.</p><p></p><h2>கடும் வாக்குவாதம்</h2><p>அதேபோல உதயநிதி மீது தவெக மகளிரணியினர், காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். தஞ்சாவூர் காவல் நிலையத்தில் உதயநிதி ஸ்டாலின் மீது 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cba76b4d-b14f-4f2c-a463-c8c8a4f44fbe/26-6a71867d460b1.webp' /></p><p>இதனால் உதயநிதி ஸ்டாலின் வீட்டுக்கு திமுக முன்னாள் அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, எ.வ.வேலு, மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் சென்றனர். </p><p>ஆனால் காவல்துறையினர் அவர்களை தடுத்ததால் திமுக முன்னாள் அமைச்சர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். திமுகவின் வழக்கறிஞர்களும் காவல்துறையினரால் தடுக்கப்பட்டனர்.
</p><p>
இதையடுத்து சென்னை நீலாங்கரையில் உள்ள உதயநிதியின் வீட்டின் முன்பாக இன்று காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். அவரது வீட்டின் உள்ளே சென்ற காவல்துறையினர், அவரது குடும்பத்தினரிடம் பேசி வருகின்றனர்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-04T10:13:22+00:00</updated>
        </entry>
    </feed>
