<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-07-20T12:03:37+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[குடிநீரும் கழிப்பறையும் குற்றப்பொருளா... பலாலி மக்களின் கேள்வி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/jaffna-palali-tourist-police-investigation-1784547740"></link>
            <id>https://ibctamil.com/article/jaffna-palali-tourist-police-investigation-1784547740</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் பலாலி சந்தியில் அமைந்துள்ள பொது நோக்கு மண்டபத்தில், பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் பயன்பாட்டிற்காக வலி. வடக்கு பிரதேச சபையினால் வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் பலாலி சந்தியில் அமைந்துள்ள பொது நோக்கு மண்டபத்தில், பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் பயன்பாட்டிற்காக வலி. வடக்கு பிரதேச சபையினால் வைக்கப்பட்டிருந்த குடிநீர் தாங்கி மற்றும் தற்காலிக மலசலக் கூடத்தை பலாலி காவல்துறை அகற்றிய சம்பவம் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
</p><p>
காவல்துறை தெரிவித்துள்ளபடி, குறித்த வசதிகள் தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. சட்டம் தனது கடமையைச் செய்வது அவசியமானதே. </p><p>ஆனால், எந்த நடவடிக்கையும் பொதுமக்களின் அடிப்படைத் தேவைகள் மற்றும் மனிதாபிமான அம்சங்களை கருத்தில் கொண்டு மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதும் அதே அளவு முக்கியமானதாகும்.</p><p>இது குறித்து தெரியவருகையில்,</p><p>யாழ்ப்பாணம் பலாலி சந்தியில் அமைந்துள்ள பொது நோக்கு மண்டபத்தில் , இளைப்பாற ,
பொழுது போக்குக்காக வரும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் பயன்பாட்டிற்காக
வலி.வடக்கு பிரதேச சபையினால், வைக்கப்பட்டிருந்த குடிநீர் தாங்கி மற்றும்
தற்காலிக மலசல கூடம் என்பவற்றை பலாலி காவல்துறை அங்கிருந்து எடுத்து
சென்றுள்ளனர்.
</p><p>
அதேவேளை குறித்த இடத்தில் குடிநீர் தாங்கி மற்றும் தற்காலிக மலசல கூடம்
என்பவற்றை வைத்தமை தொடர்பில் வலி. வடக்கு பிரதேச சபை தவிசாளரிடம் வாக்கு மூலம்
பெற்ற பின்னர் அவற்றை மல்லாகம் நீதிமன்றில் ஒப்படைத்து , சட்ட நடவடிக்கை
எடுக்க உள்ளதாக பலாலி காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.
</p><p>
யாழ்ப்பாண சுற்றுலாத்துறையை மேம்படுத்த சுற்றுலா தளங்களில் பொதுச் சுகாதார
வசதிகளைஏற்படுத்தி உள்ளூராட்சி மன்றங்கள் அவற்றை தினசரி கண்காணித்து
முறையாகப் பராமரிக்க வேண்டும் என வடக்கு மாகாண சுற்றுலாப் பணியகத்தின் தலைவர்
கலாநிதி ஜே.விவேகானந்தன் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கபடுகிறது.&nbsp;</p><p>இந்நிலையிலேயே பலாலி பொது நோக்கு
மண்டபம் பகுதியில் சுற்றுலா பயணிகளின் பாவனைக்காக வைக்கப்பட்டிருந்த, குடிநீர்
தாங்கி மற்றும் தற்காலிக மலசல கூடம் என்பவற்றை பொலிஸார் எடுத்து சென்றுள்ளனர்.&nbsp;</p><p>
அதேவேளை , கடந்த ஐந்து ஞாயிற்றுக்கிழமைகளாக பலாலி சந்தியில் , பலாலி மக்கள்
தமது காணிகளை விடுவிக்க வேண்டும் என கோரி போராட்டம் நடாத்தினர். </p><p>எதிர்வரும்
ஞாயிறுகளிலும் போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளனர்.</p><p>

இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபடும் மக்கள் அப்பகுதியில் கொட்டகை அமைக்க
காவல்துறையினர் தடை விதித்துள்ள நிலையில் , போராட்டக்காரர்கள் , குறித்த பொது நோக்கு
மண்டபத்தில் இளைப்பாறுவதுடன் , மதிய உணவுகளை அந்த மண்டபத்தில் இருந்து
உட்கொள்வதுடன் , அங்கிருக்கும் குடிநீர் தாங்கி மற்றும் , தற்காலிக மலசல
கூட்டத்தினையே பயன்படுத்தி வந்துள்ளனர். </p><p>அதனாலேயே பலாலி காவல்துறை அவற்றை
அங்கிருந்து அகற்றியதாகவும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.&nbsp;</p><p>
வயோதிப பெண்கள் , முதியவர்கள் என போராட்டத்தில் கலந்து கொள்ளும் நிலையில்
,அங்கிருந்த மலசல கூடம் மற்றும் தண்ணீர் தாங்கி என்பவற்றை பலாலி காவல்துறையினர் எடுத்து சென்றமை அப்பகுதி மக்களிடம் கடும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-20T12:01:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்க பாடசாலைகளில் அறிமுகப்படுத்தப்படவுள்ள செயற்கை நுண்ணறிவு ஆசிரியர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/ai-teacher-to-teach-american-children-to-read-1784547521"></link>
            <id>https://ibctamil.com/article/ai-teacher-to-teach-american-children-to-read-1784547521</id>
            <summary type="text">அமெரிக்காவின் நியூயோர்க் மாநிலத்தில் உள்ள பள்ளிகளில், அடுத்த கல்வியாண்டு முதல் செயற்கை நுண்ணறிவால் இயங்கும் மனித உருவ ரோபோ ஆசிரியர்களை அறிமுகப்படுத்த ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவின் நியூயோர்க் மாநிலத்தில் உள்ள பள்ளிகளில், அடுத்த கல்வியாண்டு முதல் செயற்கை நுண்ணறிவால் இயங்கும் மனித உருவ ரோபோ ஆசிரியர்களை அறிமுகப்படுத்த நியூயோர்க் பள்ளி அதிகாரிகள் தயாராகி வருகின்றனர். உள்ளூர் ஊடக அறிக்கைகளின்படி, அமெரிக்காவில் உள்ள பள்ளிகளில் செயற்கை நுண்ணறிவால் இயங்கும் ஒரு ரோபோ ஆசிரியர் அறிமுகப்படுத்தப்படுவது இதுவே முதல் முறையாகும்.</p><p>பள்ளிகளில் அறிமுகப்படுத்தப்படவுள்ள இந்த ரோபோ ஆசிரியருக்கு 'சாலி' எனப் பெயரிடப்பட்டுள்ளது. நியூயோர்க்கின் சலமன்கா மாவட்டத்தில் உள்ள பல பள்ளிகளில், பல 'சாலி' ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட உள்ளனர்.</p><h2>'சாலி' ரோபோ ஆசிரியர்&nbsp;</h2><p>
</p><p>
பல வெற்றிகரமான முன்னோட்டத் திட்டங்களுக்குப் பிறகு, 'சாலி' ரோபோ ஆசிரியர் பள்ளிகளில் பணியமர்த்தப்படுவார். இந்த ரோபோ ஆசிரியர், சிறு குழந்தைகளுக்குப் பாடப்புத்தக அறிவை மட்டுமல்லாமல், நல்ல பழக்கவழக்கங்களையும் கற்பிக்கும் திறன் கொண்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d1e2c14b-d335-4ddb-81c4-95a1817393be/26-6a5e0b486240c.webp' /></p><p>
</p><p>
'சாலி ஒரு உதவி ஆசிரியர். வகுப்பறை ஆசிரியருக்கு உதவுவதற்காக சாலி வடிவமைக்கப்பட்டுள்ளது. மேல்நிலைப் பள்ளிகளில் சாலியை ஒரு உதவி ஆசிரியராகப் பணியமர்த்த நாங்கள் நம்புகிறோம். சாலிக்குத் தெரியாதது எதுவும் இல்லை,' என்று நியூயோர்க் பள்ளி அதிகாரிகள் விளக்குகின்றனர்.</p><p>

57,600 அமெரிக்க டொலர்கள் (சுமார் 10 லட்சம் ரூபாய்) மதிப்புள்ள சாலி ரோபோவை, கனடாவின் டொராண்டோவைச் சேர்ந்த 'ரியல்பாட்டிக்ஸ்' என்ற ரோபோட்டிக்ஸ் நிறுவனம் உருவாக்கியுள்ளது.</p><p></p><p>
</p><p>
</p><h2>சாலி ஒரு நிலையான ரோபோ</h2><p>முதல் பார்வையில், சாலியை ஒரு ரோபோ பெண் என்று அழைக்க முடியாது. அதன் தோல் சிலிக்கனால் ஆனது, மேலும் வடிவமைப்பாளர்கள் அதற்கு ஒரு நீண்ட வாலையும் சேர்த்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/20d3dc90-6e9b-43ca-85ad-666e696b134b/26-6a5e0b4911d17.webp' /></p><p> </p><p>சாலிக்கு சைகைகள் செய்யும் திறன் உள்ளது. இருப்பினும், சாலி ஒரு நிலையான ரோபோ. அதனால் நடக்க முடியாது.

அமெரிக்கக் கல்வி அதிகாரிகளின் ஒப்புதல் மற்றும் மேற்பார்வையின் கீழ், செயற்கை நுண்ணறிவு ரோபோக்கள் பள்ளிகளில் பயன்படுத்தப்படும் என்று ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-20T12:01:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெள்ளை புடவையின் அழகில் மயக்கும் நடிகை ஸ்ரீதேவியின் லேட்டஸ்ட் போட்டோஸ்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/actress-sridevi-vijayakumar-white-saree-photoshoot-1784541958"></link>
            <id>https://cineulagam.com/article/actress-sridevi-vijayakumar-white-saree-photoshoot-1784541958</id>
            <summary type="text">நடிகை ஸ்ரீதேவிபிரபல நடிகர் விஜயகுமாரின் மகளாக தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் நாயகியாக என்ட்ரி கொடுத்தவர் தான் நடிகை ஸ்ரீதேவி.படங்கள் தொடர்ந்து நடித...</summary>
            <content type="html"><![CDATA[<h2>நடிகை ஸ்ரீதேவி</h2><p>பிரபல நடிகர் விஜயகுமாரின் மகளாக தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் நாயகியாக என்ட்ரி கொடுத்தவர் தான் நடிகை ஸ்ரீதேவி.</p><p>படங்கள் தொடர்ந்து நடித்து வந்தவர் ஒரு கட்டத்தில் திருமணம் செய்து சினிமா பக்கமே வராமல் இருந்தார், அவருக்கு ஒரு பெண் குழந்தையும் பிறந்தது.</p><p>மகள் கொஞ்சம் வளர்ந்த பிறகு நடிகை ஸ்ரீதேவி படங்கள் நடிப்பதை தாண்டி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அதிகம் தலைக்காட்டி வந்தார். சமீபத்தில் அவர் வெள்ளை நிற புடவையில் ரசிகர்களை மயக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.</p><p>இதோ அந்த போட்டோஸ்,</p><p><br></p>]]></content>
            <updated>2026-07-20T12:00:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Manchu</name>
            </author>
            <title type="text"><![CDATA[சத்தமே இல்லாமல் சரித்திரம் படைக்கும் ராசிக்காரங்க யார் யார்னு தெரியுமா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/these-4-zodiac-signs-silent-achievers-1784538978"></link>
            <id>https://manithan.com/article/these-4-zodiac-signs-silent-achievers-1784538978</id>
            <summary type="text">சத்தமே இல்லாமல் சரித்திரம் படைக்கும் 4 ராசியினரைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.ஜோதிட சாஸ்திரத்தில் ஒவ்வொரு ராசிக்கும் தனித்துவமான குணம் உண...</summary>
            <content type="html"><![CDATA[<p>சத்தமே இல்லாமல் சரித்திரம் படைக்கும் 4 ராசியினரைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.</p><p>ஜோதிட சாஸ்திரத்தில் ஒவ்வொரு ராசிக்கும் தனித்துவமான குணம் உண்டு. அந்த வகையில் சிறிய காரியத்தை கூட மிகப்பெரியதாக விளம்பரப்படுத்துபவர்களும் உள்ளனர்.</p><p></p><p>ஆனால் சில ராசியினர் எவ்வளவு பெரிய காரியம் என்றாலும் அதனை ஆரவாரப்படுத்தவே மாட்டார்கள். அதனை வெளியே காட்டாமல், அமைதியாக சாதனை படைப்பார்கள்.</p><p>அதாவது பதுங்கி பாயும் புலி போன்று பல நபர்கள் சரியான நேரம் வரும் போதுதான் தனது விஸ்வரூபத்தினைக் காட்டி எதிரிகளைத் திணறடிக்கும் ராசியினர் யார் யார் என்பதை தெரிந்து கொள்வோம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a0b549b5-2230-4d51-99be-410a1733dc7f/26-6a5e0dbe606ee.webp' /></p><h2>ரிஷபம்</h2><p>விடாமுயற்சியின் சிகரமாக இருக்கும் ரிஷப ராசியினர் சுக்கிரனை அதிபதியாக கொண்டவர்கள். வெளித்தோற்றத்திற்கு மிகவும் அமைதியானவராகவும், மென்மையானவராகவும் இருப்பார்கள்.</p><p>இவர்களிடம் எவ்விதமான வீண் ஆரவாரமும் காட்டாமல், மனஉறுதிக்கு இவர்களுக்கு இமயநிலைக்கு எடுத்துக்காட்டாக இருப்பார்கள்.</p><p>ஜோதிடத்தில் ரிஷபம் என்பது ஒரு ஸ்திர ராசி மற்றும் நில தத்துவம் கொண்டதாகும். பொறுமை, நிதானம் இவர்களிடம் அதிகமாக இருப்பதுடன், இலக்கை நோக்கி இவர்கள் ஆமை வேகத்தில் செல்வது போன்று தெரிந்தாலும் முடிவில் கில்லியாக இருப்பார்கள்.</p><p>எந்தவொரு பின்னடைவிலும் சோர்ந்து போகாத இவர்கள், சமூகத்தில் மிகப்பெரிய அந்தஸ்தையும், சொத்துக்களையும் சேர்த்து கம்பீரமாக நிற்பார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d3044f64-74f0-4a78-995e-8ac1aa388a8e/26-6a5e0dbf116af.webp' /></p><h2>கடகம் </h2><p>சந்திரனை அதிபதியாக கொண்ட கடக ராசியினர் உணர்ச்சிப்பூர்வமான வியூகவாதியாகவும், மென்மையான இதயம் படைத்தவராகவும், உணர்ச்சிவசப்படுத்துபவராகவும் இருப்பதுடன், அசாத்திய நிர்வாக திறமையை கொண்டுள்ளதுடன், ரகசியங்களை காக்கும் குணம் கொண்டவர்கள்.</p><p>கடகம் என்பது சர ராசி மற்றும் நீர் தத்துவம் கொண்டது ஆகும். நீர் எப்படி பாறை இடுக்கிலும் தனக்கான வழியை கண்டுபிடிக்குமோ, அதே போன்று தனது தடைகளை தாண்டி செல்வார்களாம்.</p><p>அதுமட்டுமின்றி நண்டு எவ்வாறு தனது இரையை கவ்விப் பிடிக்குமோ, அதே போன்று தொழில் மற்றும் வியாபார உத்திகளை யாருக்கும் தெரியாமல் ரகசியமாகவே வைத்திருப்பார்கள்.</p><p>இவர்களின் மனநிலையில் என்ன இருக்கின்றது என்பதை யாராலும் கண்டுபிடிக்க முடியாது. எந்த நேரத்தில் எந்த காரியத்தை செய்ய வேண்டும் என்ற தெளிவு இவர்களிடம் இருக்குமாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/02e347cd-b4f5-4d82-be77-2750dab24655/26-6a5e0dbfbaee4.webp' /></p><h2>துலாம் </h2><p>சுக்கிரனின் மற்றொரு வீடான துலாம் ராசியினர் தந்திரமான ராஜதந்திரிகளாக இருப்பார்கள். தராசை குறியீடாக வைத்திருக்கும் இவர்கள் சண்டை, வீண் விவாதத்தினை விரும்புவதில்லை.&nbsp;</p><p>எந்த சூழ்நிலையையும் புன்னகையுடனும், அமைதியுடனும் எதிர்கொள்ளும் இவர்களின் வியூகம் வேறு மாதிரியாக இருக்குமாம்.</p><p>ஜோதிட ரீதியான காரணம்: துலாம் என்பது 'காற்று தத்துவம்' (Air Sign) கொண்ட ராசி. கால புருஷனுக்கு 7-ஆம் வீடான இது, கூட்டுத் தொழில் மற்றும் மக்கள் தொடர்பைக் குறிக்கும்.
செயல்படும் விதம்: இவர்களிடம் இருக்கும் மிகப்பெரிய ஆயுதம் 'இனிமையான பேச்சு' மற்றும் 'நிதானம்'. தங்களுக்கு ஒரு காரியம் ஆக வேண்டும் என்றால், எதிராளியைக் கூட அரவணைத்துச் சென்று காரியத்தைச் சாதித்துக் கொள்வார்கள். தங்களின் பலவீனங்களை ஒருபோதும் வெளியில் காட்டிக் கொள்ள மாட்டார்கள் என்கின்றன ஜோதிட நூல்கள்.
சொல்லி அடிக்கும் கில்லி: துலாம் ராசிக்காரர்கள் எந்தவொரு போட்டியிலும் நேரடியாக மோதாமல், ராஜதந்திர ரீதியாக காய்களை நகர்த்துவார்கள். இறுதிப் போட்டியில் எதிர்பாராத நேரத்தில் இவர்களே முதலிடத்தைப் பிடித்து, பார்ப்பவர்களை ஆச்சரியத்தில் மூழ்கடிப்பார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3e876b2e-3534-477e-80c9-03848f5b6133/26-6a5e0dc087df8.webp' /></p><h2>தனுசு </h2><p>இலக்கை நோக்கிப் பாயும் அம்பு
நவக்கிரகங்களின் குருவான வியாழனை (குரு பகவான்) அதிபதியாகக் கொண்ட தனுசு ராசி, வில்லில் இருந்து புறப்படும் அம்பைக் குறியீடாகக் கொண்டது. இவர்கள் பார்ப்பதற்கு எப்போதும் கலகலப்பாக, விளையாட்டாக இருப்பது போல் தோன்றுவார்கள். ஆனால், இவர்களின் கவனம் எப்போதும் இலக்கின் மீதே இருக்கும்.</p><p>ஜோதிட ரீதியான காரணம்: தனுசு என்பது 'உபய ராசி' மற்றும் 'நெருப்பு தத்துவம்' (Fire Sign) கொண்டது. ஞானக் காரகனான குருவின் வீடு என்பதால், இவர்களிடம் அசாத்தியமான அறிவுக் கூர்மையும், தொலைநோக்குப் பார்வையும் இருக்குமாம்.
செயல்படும் விதம்: இவர்கள் தேவையில்லாத விஷயங்களில் தங்களின் ஆற்றலை வீணடிக்க மாட்டார்கள். மற்றவர்கள் இவர்களை சாதாரணமாக எடை போடும் போது, இவர்கள் தங்களின் அறிவையும் திறமையையும் வளர்த்துக் கொள்வதில் தீவிரமாக இருப்பார்கள்.
சொல்லி அடிக்கும் கில்லி: வில்லில் இருந்து புறப்பட்ட அம்பு எப்படி இலக்கைத் தப்பாமல் தாக்குமோ, அதேபோல தனுசு ராசியினர் தாங்கள் நினைத்த காரியத்தை, சரியான தருணத்தில் கச்சிதமாகச் செய்து முடிப்பார்கள். இவர்களின் வெற்றி என்பது திடீரென வானத்தில் தோன்றும் நட்சத்திரம் போல பிரகாசமாக இருக்கும் என்பதே ஜோதிடர்களின் கருத்து.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1f835a84-5afc-4277-be0a-20da1d132d03/26-6a5e0dc18714e.webp' /></p><p><i><b>இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).</b></i>&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;<br></p><table class="table table-bordered"><tbody><tr><td><i>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் <a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள் <a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"><b>FOLLOW NOW</b></a>&nbsp;&nbsp;</i><br></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-20T12:00:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[விஜய்யை பிரதமர் வேட்பாளராக்க முன்னெடுப்பு - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/rb-udhayakumar-says-tvk-trying-vijay-pm-candidate-1784548578"></link>
            <id>https://news.lankasri.com/article/rb-udhayakumar-says-tvk-trying-vijay-pm-candidate-1784548578</id>
            <summary type="text">முதல்வர் விஜய்யை பிரதமர் வேட்பாளராக்க முன்னெடுப்பு நடப்பதாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியுள்ளார். 


விஜய்யை வைத்து போலி செய்திகள் 

க...</summary>
            <content type="html"><![CDATA[<p>முதல்வர் விஜய்யை பிரதமர் வேட்பாளராக்க முன்னெடுப்பு நடப்பதாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியுள்ளார். </p><h3>


விஜய்யை வைத்து போலி செய்திகள்</h3><p> 

கட்சி தொடங்கி 3 ஆண்டுகளில், சந்தித்த முதல் தேர்தலிலே இரு பெரும் திராவிட கட்சிகளை வீழ்த்தி தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ளார் தவெக தலைவர் விஜய்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5997b863-704c-44f0-acbf-5dc935a4e77f/26-6a5e0ce3bd01f.webp' /></p><p>
கடந்த சில வாரங்களாக முதல்வர் விஜய் தமிழ்நாட்டில் செய்துள்ளதாக கூறி, பல்வேறு போலி செய்திகள் வட இந்திய மாநிலங்களில் உள்ள சமூகவலைத்தள பக்கங்களில் ஹிந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் பரப்பப்பட்டு வந்தது.&nbsp;</p><p></p><p>

இந்நிலையில், அதனை சுட்டிக்காட்டிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் முதல்வர் விஜய்யை பிரதமர் வேட்பாளர் ஆக்க முன்னெடுப்பு நடப்பதாக தெரிவித்துள்ளார்.</p><h3> 

விஜய்யை பிரதமர் வேட்பாளராக்க முன்னெடுப்பு</h3><p>

இது குறித்து பேசிய அவர், "முதலமைச்சர் விஜய் எப்படி செய்தார் பார்த்தீர்களா? அதையும் செய்தார் இதையும் செய்தார் எதையும் செய்வார் என செய்யாததை எல்லாம் narrative செய்ய போலி வீடியோக்களை தயார் செய்து, தமிழில் மட்டுமல்லாமல் பிற மொழிகளிலும் இன்ஃப்ளூயன்சர்களை வைத்துக்கொண்டு விஜய் பிம்பத்தை கட்டமைத்ததை தவிர தவெக அரசு இந்த 75 நாட்களில் வேறு எதுவும் செய்யவில்லை.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/657cc1f6-fe4c-470b-ad23-f0ba2ce34e50/26-6a5e0ce46f1b6.webp' /></p><p>

இந்த மாய பிம்பத்தை வைத்து தான், 2029 நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் வேட்பாளராக நம்ம முதல்வர் விஜய்யை முன்னிருந்த தவெக கட்சி முன்னெடுப்பு எடுத்து வருகிறது. டெல்லியில் இருப்பவர்கள் உடனடியாக விழித்துக்கொள்ள வேண்டும்.</p><p>

பிரதமர் வேட்பாளராக விஜய்யை முன்னெடுப்பு செய்கிறார்கள் என்று சொன்னால் உங்களால் நம்ப முடியாது. எந்த வித வரலாறும், தியாகமும், மக்களுக்கான உரிமை போராட்டமும் இல்லாமல் ரீல்ஸ் மூலம் மூளை சலவை செய்து, நிழல் எதுவும் நிஜம் எதுவும் தெரியாமல் குழப்பி முதலமைச்சர் ஆகியுள்ளார். </p><p></p><p> 

முதலமைச்சருக்கே தகுதியில்லாத அவரை தமிழ்நாடு முதல்வராக பெற்றுள்ள போது, போலி செய்திகளை ரீல்ஸ் மூலம் எல்லா மொழிகளிலும் இன்ஃப்ளூயன்சர்களை கூலிக்கு அமர்த்தி விஜய் விஜய் என கூப்பாடு போட வைத்து பாரத பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்த தவெக முன்னெடுப்பு எடுத்து வருகிறது.</p><p>

எது எப்படி இருந்தாலும், என்னுடைய தனிப்பட்ட கருத்து என்னவென்றால் விஜய்யின் பருப்பு எங்கு வெந்தாலும், பிரதமர் மோடியிடம் வேகாது என்பதை கூறி நிறைவு செய்கிறேன்" என பேசியுள்ளார்.&nbsp;&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-20T11:56:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[விடை பெற்றார் பிரதமர் ஸ்டார்மர்... மன்னர் சார்லசுடன் சந்திப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/keir-starmer-meets-king-to-formally-resign-as-pm-1784546359"></link>
            <id>https://news.lankasri.com/article/keir-starmer-meets-king-to-formally-resign-as-pm-1784546359</id>
            <summary type="text">பிரித்தானிய பிரதமரான சர் கெய்ர் ஸ்டார்மர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ள நிலையில், மன்னர் சார்லசை சந்தித்து முறைப்படி தனது ராஜினாமாவைக் கையளித்தார்.
...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரித்தானிய பிரதமரான சர் கெய்ர் ஸ்டார்மர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ள நிலையில், மன்னர் சார்லசை சந்தித்து முறைப்படி தனது ராஜினாமாவைக் கையளித்தார்.</p><h3>

விடை பெற்றார் ஸ்டார்மர்...</h3><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f44d4df2-3316-4a4b-856f-c80565490fbc/26-6a5e0439d5930.webp' /></p><p>2024ஆம் ஆண்டு ஜூலை மாதம் 5ஆம் திகதி மக்கள் ஆதரவுடன் பிரித்தானிய பிரதமராக பொறுப்பேற்ற கெய்ர் ஸ்டார்மர், உள்ளாட்சித் தேர்தல் தோல்விகள், ரீஃபார்ம் யூகே கட்சியின் வளர்ச்சி, அரசில் கண்டுபிடிக்கப்பட்ட ஊழல்கள் மற்றும் சொந்தக் கட்சியினரிடையே ஆதரவை இழந்தது போன்ற பல்வேறு காரணங்களால் தனது பதவியை ராஜினாமா செய்ய நேர்ந்தது.&nbsp;</p><p></p><p>

இந்நிலையில், தனது ஆதரவாளர்களுடன் பிரதமர் இல்லம் முன் உரையாடிய ஸ்டார்மர் அவர்களிடமிருந்து விடைபெற்றுக்கொண்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/48072c2d-8d38-4c6e-98a3-dd342000382e/26-6a5e04392ed29.webp' /></p><p>அதைத் தொடர்ந்து, பக்கிங்காம் மாளிகைக்குச் சென்ற ஸ்டார்மர், மன்னர் சார்லசை சந்தித்து முறைப்படி தன் ராஜினாமாவை கையளிக்க, மன்னரும் அதை ஏற்றுக்கொண்டார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9bf2c991-78f1-4bcf-abe9-a0bff85e0909/26-6a5e04387e91b.webp' /></p><p>ஸ்டார்மர் பிரதமர் இல்லம் முன் உரையாற்றும் காட்சிகளும், மன்னரை சந்திக்கும் காட்சிகளும் தற்போது வெளியாகிவருகின்றன.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-20T11:45:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கூகுள் மேப்ஸ் செயலி குறித்து வெளியான அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/google-maps-said-a-hike-would-take-5-hours-1784547009"></link>
            <id>https://canadamirror.com/article/google-maps-said-a-hike-would-take-5-hours-1784547009</id>
            <summary type="text">கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா&amp;nbsp; மாகாணத்தில் மிகவும் சவாலான மலைப்பாதையில் ஆபத்தில் சிக்கிய மலைப்பயணிகள்&amp;nbsp; சிலர் மீட்புக் குழுவினரால் பாதுகாப்பா...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா&nbsp; மாகாணத்தில் மிகவும் சவாலான மலைப்பாதையில் ஆபத்தில் சிக்கிய மலைப்பயணிகள்&nbsp; சிலர் மீட்புக் குழுவினரால் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். </p><p>
இவர்கள் தங்கள் பயணத்தை திட்டமிட கூகுள் மேப்ஸ் செயலியை மட்டுமே நம்பியிருந்ததே இந்த ஆபத்திற்கு முக்கியக் காரணம் என தெரியவந்துள்ளது.</p><p>
இதனைத் தொடர்ந்து, கரடுமுரடான காட்டுப் பாதைகள் மற்றும் மலைப் பகுதிகளுக்குச் செல்லும் போது கூகுள் மேப்ஸை முழுமையாக நம்ப வேண்டாம் என 'லயன்ஸ் பே தேடுதல் மற்றும் மீட்புக் குழுவினர்' பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0d21219a-ed81-4dcb-bc31-b51ee9bacd96/26-6a5e06c2f032f.webp' /></p><p>
மீட்கப்பட்ட பயணிகள் பயன்படுத்திய கூகுள் மேப்ஸ் வரைபடத்தின் புகைப்படங்களைச் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ள மீட்புக் குழுவினர், கூகுள் மேப்ஸால் ஏற்படும் இதுபோன்ற ஆபத்துகள் இது முதன்முறையல்ல எனக் குறிப்பிட்டுள்ளனர்.
</p><p>'ஹவ் சவுண்ட் கிரெஸ்ட்' பாதையின் ஒரு பகுதியைக் கடக்க 5 மணி நேரமும் 13 நிமிடங்களும் மட்டுமே ஆகும் என கூகுள் மேப்ஸ் காட்டியிருந்தது.
</p><p>18 கிலோமீட்டர் நீளமுடைய அந்தப் பாதையானது 1,300 மீட்டருக்கும் அதிகமான செங்குத்தான ஏற்ற இறக்கங்கள், பாறைகள் நிறைந்த பகுதிகள் மற்றும் கரடுமுரடான நிலப்பரப்பைக் கொண்டது. </p><p>
இந்த மலையேற்றத்தை முழுமையாகக் கடக்க உண்மையில் 12 முதல் 14 மணி நேரம் வரை ஆகும்.
பயணக் காலம் குறித்து தவறான தகவல்களை நம்புவது தொடர்ச்சியான பல ஆபத்துகளுக்கு வழிவகுக்கும் என மீட்புக் குழு எச்சரித்துள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-20T11:40:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[15 ஆண்டுகளின் பின் தமிழ் அரசியல் கைதி ஒருவர் பிணையில் விடுதலை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/tamil-political-prisoner-on-bail-after-15-years-1784547705"></link>
            <id>https://jvpnews.com/article/tamil-political-prisoner-on-bail-after-15-years-1784547705</id>
            <summary type="text">பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ், சுமார் 15 ஆண்டுகளாக தடுத்து வைக்கப்பட்டிருந்த தம்பையா பிரகாஷ் என்ற தமிழ் அரசியல் கைதி, 41ஆவது வயதில் தற்போது பிணையி...</summary>
            <content type="html"><![CDATA[<p>பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ், சுமார் 15 ஆண்டுகளாக தடுத்து வைக்கப்பட்டிருந்த தம்பையா பிரகாஷ் என்ற தமிழ் அரசியல் கைதி, 41ஆவது வயதில் தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். </p><p> 

தம்பையா பிரகாஷ், 26 வயதில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு 41ஆவது வயதில் இன்று பிணையில் வெளிவந்துள்ளார்.

இந்த பாதிப்பின் வலியை, பிணை வழங்கிய, நீதிபதிகள் தமது தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f7570ab1-a774-4591-af10-324fc17a25fd/26-6a5e097b97d7a.webp' /></p><h2>கைது செய்யப்பட்டபோது அவருக்கு 26 வயது</h2><p>

இரண்டு இலட்சம் ரூபா ரொக்கப் பிணை, நான்கு சரீரப் பிணை, கடவுச் சீட்டை ஒப்படைத்தல், இரண்டு வாரங்களுக்கு ஒரு தடவை பயங்கரவாத எதிர்ப்பு விசாரணை பிரிவிற்கு சமூகமளித்தல் ஆகிய இறுக்கமான நிபந்தனைகளுடன் பிணையில் செல்வதற்கு கொழும்பு மேல்முறையீட்டு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.</p><p>

பிணை நிபந்தனைகளில் ஏதேனும் மீறல் ஏற்பட்டால், பிணை ரத்து செய்யப்படும் என்றும் மேன்முறையீட்டு நீதிமன்றம் எச்சரித்துள்ளது.</p><p></p><p>
</p><p>
கடந்த 2009ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்டு, பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த, தனுஷ் எனப்படும் தம்பையா பிரகாஷ் என்ற அரசியல் கைதியே இவ்வாறு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
</p><p>
கைது செய்யப்பட்டபோது அவருக்கு 26 வயது என்பதுடன் தற்போது 41 வயதில் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

விசாரணைகளுக்காகக் காத்திருந்தபோது, அவர் தனது இளமைப் பருவத்தின் பொன்னான காலத்தை சிறையில் கழித்துள்ளதாக மேன்முறையீட்டு நீதிமன்றம் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.</p><p></p><p>

நீதியரசர் பிரதீப் ஹெட்டியாராச்சி வழங்கிய இந்தத் தீர்ப்புடன், நீதியரசர் பி.குமாரரத்தினமும் உடன்பட்டிருந்தார்.

நீண்டகாலமாக நிலுவையிலிருந்த இந்த வழக்கில், மூன்றாவது பிரதிவாதியான தம்பையா பிரகாஷ் என்ற தனுஷுக்குப் பிணை மறுத்த கொழும்பு மேல்நீதிமன்றத்தின் உத்தரவை, மேன்முறையீட்டு நீதிமன்றம் இரத்து செய்துள்ளது.</p><h3>&nbsp;குற்றப்பத்திரிகையில் 230 குற்றச்சாட்டுகள்&nbsp;</h3><p>
</p><p>
கடந்த 2009ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்டு, 2012 ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் பயங்கரவாதத் தடைச் சட்டம் மற்றும் அவசரகால ஒழுங்குமுறைகளின் கீழ் குற்றம் சுமத்தப்பட்டு சுமார் 15 ஆண்டுகள் எந்த விதமான விசாரணைகளும் இன்றி தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.</p><p>

 தம்பையா பிரகாசிற்கு எதிரான குற்றப்பத்திரிகையில் 230 குற்றச்சாட்டுகள் உள்ளடக்கப்பட்டுள்ளதுடன் அவற்றில் 115 குற்றச்சாட்டுகள் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழும், மேலும் 115 குற்றச்சாட்டுகள் அவசரகால ஒழுங்குமுறைகளின் கீழும் சுமத்தப்பட்டுள்ளன.

கடுமையான நிபந்தனைகளுக்கு உட்பட்டு, பிரதிவாதியான தம்பையா பிரகாசுக்கு நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.</p><p></p><p>
</p><p>
விதிவிலக்கான சூழ்நிலைகளில் பிணை வழங்க நீதிமன்றங்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில், 2022 ஆம் ஆண்டு பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் 15B என்ற திருத்தத்தை நாடாளுமன்றம் அறிமுகப்படுத்தியிருந்தபோதிலும், பிணையை மறுக்கும்போது மேல்நீதிமன்றம் அந்தத் திருத்தத்தின் பின்னணியில் உள்ள நோக்கத்தை முறையாகக் கருத்தில் கொள்ளத் தவறிவிட்டதாக மேன்முறையீட்டு நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.
</p><p>
குற்றம்சாட்டப்பட்டவர் கைது செய்யப்பட்டபோது அவரது மகளுக்கு ஒரு வயதே ஆகியிருந்தது என்றும், அவர் நீண்ட காலம் காவலில் வைக்கப்பட்டிருந்ததால், அந்தக் காலகட்டம் முழுவதும் அவரது குடும்பத்தினருக்கு அவரது கவனிப்பும் பாதுகாப்பும் கிடைக்காமல் போயுள்ளதாக தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
</p><p>
அதேசமயம் கடந்த காலத்தில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ், கைது செய்யப்பட்டிருந்த இளைஞர்கள், இன்று முதியவர்களாக மாறிய போதும் தொடர்ந்து சிறைச்சாலைகளில் விசாரணைகள் இன்றி காலத்தினை கடத்துகின்றனர்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-20T11:40:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆன்டி பர்னாமின் அமைச்சரவையில் யார் யாருக்கு வாய்ப்பு? வெளிவரும் தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/andy-burnham-cabinet-expected-1784547475"></link>
            <id>https://news.lankasri.com/article/andy-burnham-cabinet-expected-1784547475</id>
            <summary type="text">வெஸ்ட்மின்ஸ்டரில் பல வாரங்களாக நிலவி வந்த தீவிரமான ஊகங்களுக்கு மத்தியில், ஆன்டி பர்னாம் தனது முதல் அமைச்சரவையை அறிமுகப்படுத்த உள்ளார்.யார் யாருக்கு வா...</summary>
            <content type="html"><![CDATA[<p>வெஸ்ட்மின்ஸ்டரில் பல வாரங்களாக நிலவி வந்த தீவிரமான ஊகங்களுக்கு மத்தியில், ஆன்டி பர்னாம் தனது முதல் அமைச்சரவையை அறிமுகப்படுத்த உள்ளார்.</p><h2>யார் யாருக்கு வாய்ப்பு</h2><p>
</p><p>நாட்டின் புதிய பிரதமரான ஆன்டி பர்னாம் இன்று உத்தியோகப்பூர்வமாகப் பதவியேற்ற பிறகு, தனது முக்கியக் குழுவை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. </p><p>ஆன்டி பர்னாம் வெஸ்ட்மின்ஸ்டருக்குத் திரும்பியதிலிருந்து, அரசியல் களத்தில் ஒரு கேள்விதான் ஆதிக்கம் செலுத்தி வருகிறது: 'நம்பர் 11'-இன் சாவியைப் பெறப்போவது யார்? பல வாரங்களாக, எட் மிலிபண்ட் எதிர்பார்ப்புகளில் முன்னணியில் இருந்தார். </p><p>பர்னாமின் எழுச்சியில் லேபர் கட்சியின் முன்னாள் தலைவர் முக்கியப் பங்காற்றியுள்ளார்; மேலும், அரசாங்கத்தின் மிகச் சிறந்த அமைச்சர்களில் ஒருவராகவும் அவர் தனது கூட்டாளிகளால் கருதப்படுகிறார். </p><p>ஆனால், அவரது பதவி உயர்வு நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஆலோசகர்கள் மற்றும் சந்தை ஆய்வாளர்களையும் கவலைக்குள்ளாக்கியுள்ளது. </p><p>ஏனெனில், அவர் தொழிலாளர் கட்சியின் மிதவாத இடதுசாரிகளுடன் மிகவும் நெருங்கிய தொடர்புடையவர் என்று கருதுவதோடு, net zero இலக்கு குறித்த அவரது உறுதிப்பாடு முதலீட்டாளர்களை நிலைகுலையச் செய்துவிடுமோ என்றும் அவர்கள் கவலைப்படுகிறார்கள். </p><p>இருப்பினும், அவர் நிதி விடயத்தில் கட்டுப்பாட்டுடன் செயல்படுபவர் என்று அவரது ஆதரவாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர்; அத்துடன், அவர் அளவுக்கு அதிகமாகக் கடன் வாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவார் என்பதைக் குறிக்கும் வகையில் அவரது அமைச்சகப் பணிக்காலத்தில் எந்தச் சான்றும் இல்லை என்பதையும் அவர்கள் சுட்டிக்காட்டி வருகின்றனர். </p><p>இதனிடையே, உள்விவகாரத்திலேயே தொடர்ந்து பணியாற்ற விரும்பினாலும், உள்விவகாரச் செயலாளர் ஷபானா மஹ்மூத் தற்போது நிதி அமைச்சராக (Chancellor) நியமிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது. </p><p>லேபர் கட்சியின் வலதுசாரிப் பிரிவைச் சேர்ந்தவராகக் கருதப்படும் இவர், நிதிச் சந்தைகளுக்கு ஒரு நம்பிக்கையூட்டும் தெரிவாகப் பார்க்கப்படுகிறார். ஆனால், அவருக்குப் பொருளாதாரத் துறையில் அனுபவம் இல்லாததே மிகப்பெரிய கேள்விக்குறியாக உள்ளது. </p><p>வெளிவிவகாரத் துறையைத் தக்கவைத்துக்கொள்ள இவெட் கூப்பர் பல வாரங்களாகப் போராடி வருகிறார். ஆனால், மிலிபண்ட் நிதி அமைச்சர் பொறுப்பைப் பெறத் தவறினால், அவருக்கு ஆறுதல் பரிசாக வெளிவிவகார அமைச்சர் பொறுப்பை பர்னாம் வழங்கக்கூடும்.</p><h2>மிக முக்கியமான பதவி</h2><p> </p><p>பாதுகாப்புத் துறை முதலீட்டுத் திட்டம் தொடர்பாக சர் கெய்ர் ஸ்டார்மரின் அரசாங்கத்திலிருந்து எதிர்பாராத விதமாக விலகிய முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஜான் ஹீலியும் இந்தப் பதவிக்குக் பரிசீலிக்கப்படுகிறார். </p><p>இருப்பினும், ஜான் ஹீலிக்குப் பதிலாக, சில வாரங்களுக்கு முன்புதான் டான் ஜார்விஸ் பாதுகாப்புச் செயலாளராகப் பொறுப்பேற்றார். அவர் அந்தப் பதவியைத் தக்கவைக்கலாம் என்றே கூறப்படுகிறது. </p><p>முன்னாள் போக்குவரத்துச் செயலாளரான லூயிஸ் ஹேக் அமைச்சரவையில் இடம்பெற வாய்ப்புள்ளது. ஏஞ்சலா ரெய்னரும் அமைச்சரவைக்குத் திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. </p><p>பர்னாமின் தொகுதிக்கு அருகிலுள்ள தொகுதியைச் சேர்ந்தவரும், ஸ்டார்மரால் பதவி நீக்கம் செய்யப்பட்ட மற்றொரு அமைச்சருமான லூசி பவல், அமைச்சரவைக்கு மீண்டும் திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. </p><p>போக்குவரத்துத் துறை அமைச்சராகத் தொடர விரும்பினாலும், ஹைடி அலெக்சாண்டர் 'சீஃப் விப்' (Chief Whip) ஆக நியமிக்கப்படலாம் என்று பரவலாகப் பேசப்படுகிறது. பர்னாமின் அரசாங்கத்தில் மிக முக்கியமான பதவிகளில் ஒன்றுக்கு, வெஸ் ஸ்ட்ரீட்டிங் பெயரும் விவாதிக்கப்படுகிறது.
</p><p>கெய்ர் ஸ்டார்மரின் மிக நெருங்கிய ஆதரவாளர்கள் பலரும் பதவியிலிருந்து நீக்கப்படலாம் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது. வர்த்தகத் துறை அமைச்சர் பீட்டர் கைல் தனது அமைச்சரவைப் பதவியை இழக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. </p><p>தொழில்நுட்பத் துறைச் செயலாளர் லிஸ் கெண்டலும் பதவி நீக்கம் செய்யப்படக்கூடும் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-20T11:36:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சீனாவை அதிர்ச்சிக்குள்ளாக்கிய நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 8ஆக உயர்வு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/landslide-in-china-8-dead-34-people-missing-1784542552"></link>
            <id>https://ibctamil.com/article/landslide-in-china-8-dead-34-people-missing-1784542552</id>
            <summary type="text">சீனாவில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவால் தற்போதுவரை 8 பேர் பலியாகி உள்ளதுடன் 34 பேர் காணாமல் போயுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.&amp;nbsp;&amp;n...</summary>
            <content type="html"><![CDATA[<p>சீனாவில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவால் தற்போதுவரை 8 பேர் பலியாகி உள்ளதுடன் 34 பேர் காணாமல் போயுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p>கடந்த 17-ம் திகதி சீனாவின் தென்மேற்கில் சொங்சிங் (Chongqing) பெங்ஷி நகரில் உள்ள மலைப்பகுதியில் இந்த நிலச்சரிவு ஏற்பட்டது.&nbsp;</p><p>கனமழையின் போது ஏற்பட்ட இந்த நிலச்சரிவைத் தொடர்ந்து மூன்று நாட்களாகக் காணாமல் போனதாகக் கூறப்பட்ட 34 பேரை தேடும் பணிக்கு தடையாக இருந்த பெரிய பாறைகளை அகற்ற, மீட்புக் குழுவினர் வெடிபொருட்களைப் பயன்படுத்தி தகர்த்ததாக தெரிவிக்கப்படுகிறது.&nbsp;</p><p></p><p> </p><h2>சீனாவின் பயங்கர நிலச்சரிவு</h2><p> இந்நிலையில் பாதுகாப்பு காரணங்களுக்காக சம்பவ இடத்தைச் சுற்றி ஒரு கிலோமீட்டர் வரை குடிநீர், மின்சாரம், எரிவாயு விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>இந்த நிலச்சரிவில் 10-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் மண்ணில் புதைந்துள்ளதுடன் மக்களும் மண்ணுக்குள் சிக்கி உள்ளனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/509515ec-8713-4d72-9246-11acaa923d74/26-6a5e01ae5a8b0.webp' /></p><p>நிலச்சரிவில் காணாமல் போனவர்களை மீட்கும் பணிகளுக்காக 800-க்கும் மேற்பட்ட மீட்புப் பணியாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளதாக சீன பாதுகாப்பு தரப்புக்கள் தெரிவித்துள்ளது.</p><p>இதன்படி மேலும் உயிரிழப்புக்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என பாதுகாப்பு தரப்புக்கள் அச்சம் வெளியிட்டுள்ளது.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-20T11:34:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பலாலி பொதுநோக்கு மண்டபத்தில் பொலிஸார் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/police-action-at-palali-public-hall-1784543032"></link>
            <id>https://tamilwin.com/article/police-action-at-palali-public-hall-1784543032</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் - பலாலி சந்தியில் அமைந்துள்ள பொதுநோக்கு மண்டபத்தில் இளைப்பாறுவதற்காக வருபவர்களின் பயன்பாட்டிற்காக
வலி.வடக்கு பிரதேச சபையினால் வைக்கப்பட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் - பலாலி சந்தியில் அமைந்துள்ள பொதுநோக்கு மண்டபத்தில் இளைப்பாறுவதற்காக வருபவர்களின் பயன்பாட்டிற்காக
வலி.வடக்கு பிரதேச சபையினால் வைக்கப்பட்டிருந்த குடிநீர் தாங்கி மற்றும்
தற்காலிக மலசல கூடம் என்பவற்றை பலாலி பொலிஸார் அங்கிருந்து அகற்றியுள்ளனர்.</p><p>
அதேவேளை குடிநீர் தாங்கி மற்றும் தற்காலிக மலசல கூடம்
என்பவற்றை வைத்தமை தொடர்பில் வலி.வடக்கு பிரதேச சபை தவிசாளரிடம் வாக்கு மூலம்
பெற்ற பின்னர் அவற்றை மல்லாகம் நீதிமன்றில் ஒப்படைத்து, சட்ட நடவடிக்கை
எடுக்க உள்ளதாக பலாலி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p></p><h2>பலாலி பொதுநோக்கு மண்டபம்</h2><p>
</p><p>

யாழ்ப்பாண சுற்றுலாத்துறையை மேம்படுத்த சுற்றுலாத்தளங்களில் பொதுச் சுகாதார
வசதிகளை ஏற்படுத்தி உள்ளூராட்சி மன்றங்கள் அவற்றை தினசரி கண்காணித்து
முறையாகப் பராமரிக்க வேண்டும் என வட மாகாண சுற்றுலாப் பணியகத்தின் தலைவர் ஜே.விவேகானந்தன் கோரிக்கை விடுத்துள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9567662c-6662-4d7a-83f6-f5538a0e4c69/26-6a5df95fd592b.webp' /></p><p>இதனையடுத்து பலாலி பொதுநோக்கு
மண்டபத்தில் சுற்றுலா பயணிகளின் பாவனைக்காக வைக்கப்பட்டிருந்த, குடிநீர்
தாங்கி மற்றும் தற்காலிக மலசல கூடம் என்பவற்றை பொலிஸார் எடுத்து சென்றுள்ளமை
குறிப்பிடத்தக்கது.
</p><p>
அதேவேளை, கடந்த ஐந்து ஞாயிற்றுக்கிழமைகளாக பலாலி சந்தியில் , பலாலி மக்கள்
தமது காணிகளை விடுவிக்க வேண்டும் எனக் கோரி போராட்டம் நடாத்தியிருந்தனர்.</p><p></p><h2>போராட்டத்தில் ஈடுபடும் மக்கள்&nbsp;</h2><p> </p><p>எதிர்வரும்
ஞாயிறுகளிலும் போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளனர்.

இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபடும் மக்கள் அந்தப் பகுதியில் கொட்டகை அமைக்க
பொலிஸார் தடைவிதித்துள்ளனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/136ead30-d339-4b2e-b7c7-1217e9548a4c/26-6a5e057caf96b.webp' /></p><p>போராட்டக்காரர்கள் குறித்த பொதுநோக்கு
மண்டபத்தில் இளைப்பாறுவதுடன், மதிய உணவுகளை அந்த மண்டபத்தில் இருந்து
உட்கொள்வதுடன் அங்கிருக்கும் குடிநீர் தாங்கி மற்றும், தற்காலிக மலசல
கூட்டத்தினையே பயன்படுத்தி வந்துள்ளனர். அதனாலேயே பலாலி பொலிஸார் அவற்றை
அங்கிருந்து அகற்றியதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
வயோதிப பெண்கள், முதியவர்கள் எனப் பலர் இந்தப் போராட்டத்தில் கலந்து கொள்ளும் நிலையில் அங்கிருந்த மலசல கூடம் மற்றும் தண்ணீர் தாங்கி என்பவற்றை பலாலி பொலிஸார்
எடுத்து சென்றமை அந்தப் பகுதி மக்களிடம் கடும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-20T11:34:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[சகுனி பட நடிகையாக இது, அவரின் லேட்டஸ்ட் கிளாமர் போட்டோஸ்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/actress-pranitha-subash-latest-glamour-photoshoot-1784541421"></link>
            <id>https://cineulagam.com/article/actress-pranitha-subash-latest-glamour-photoshoot-1784541421</id>
            <summary type="text">நடிகை பிரணிதாதமிழில் உதயன் படத்தில் நடித்ததன் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நடிகை பிரணிதா. தொடர்ந்து கார்த்தியுடன் சகுனி, சூர்யாவுடன் மாஸ் உள்ளிட்ட படங்...</summary>
            <content type="html"><![CDATA[<h2>நடிகை பிரணிதா</h2><p>தமிழில் உதயன் படத்தில் நடித்ததன் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நடிகை பிரணிதா. </p><p>தொடர்ந்து கார்த்தியுடன் சகுனி, சூர்யாவுடன் மாஸ் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார். தமிழை தாண்டி கன்னடம், தெலுங்கு போன்ற மொழிகளிலும் படங்கள் நடித்தவர் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார்.</p><p>திருமணம் ஆகி 2 குழந்தைகளுக்கு அம்மாவாக இருக்கும் பிரணிதா சமீபத்தில் செம கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்,&nbsp;</p><p><br></p>]]></content>
            <updated>2026-07-20T11:30:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜப்பானில் வரலாற்றுத் திருப்பம்: மகப்பேறு விடுப்பு பெற்ற முதல் பெண் மேயர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/first-female-mayor-in-japan-to-take-maternity-1784545601"></link>
            <id>https://tamilwin.com/article/first-female-mayor-in-japan-to-take-maternity-1784545601</id>
            <summary type="text">&amp;nbsp;ஜப்பானில் மகப்பேறு விடுப்பு எடுத்த முதல் பெண் மேயர் 

எடுத்து புதிய சாதனை
படைத்த பெண் மேயர்









ஜப்பான் நாட்டின் வரலாற்றிலேயே ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;ஜப்பானில் மகப்பேறு விடுப்பு எடுத்த முதல் பெண் மேயர் 

எடுத்து புதிய சாதனை
படைத்த பெண் மேயர்









ஜப்பான் நாட்டின் வரலாற்றிலேயே முதல்முறையாக, பதவியில் இருக்கும் ஒரு மேயர்
மகப்பேறு விடுப்பு எடுத்து புதிய சாதனை செய்துள்ளார்.
</p><p>
மேற்கு ஜப்பானில் உள்ள சுமார் 69,000 மக்கள் தொகை கொண்ட யவதா நகரத்தின் மேயரான
ஷோகோ கவாடா எடுத்துள்ள இந்த முடிவு, நாடு முழுவதும் விவாதங்களை
ஏற்படுத்தியதோடு சர்வதேச ஊடகங்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.</p><p></p><p>

கடந்த 2023ஆம் ஆண்டில், தனது 33ஆவது வயதில் ஜப்பானின் மிக இள வயது பெண்
மேயராகப் பொறுப்பேற்ற போதே தமக்குக் குழந்தை பெற்றுக் கொள்ளும் எண்ணம்
இருந்ததாக கவாடா தெரிவித்துள்ளார்.</p><h2>
சட்டத்தில் இடமில்லை..</h2><p>
யவதா நகர சபை ஊழியர்களுக்கு 16 வாரங்கள் மகப்பேறு விடுப்பு எடுக்க அனுமதி உள்ள
போதிலும், மேயர் பதவிக்கு அத்தகைய விதிகள் எதுவும் ஜப்பானிய சட்டத்தில் இல்லை.
இதனால், கவாடா தனக்கான புதிய நடைமுறை விதியை முறைப்படி உருவாக்க
வேண்டியிருந்தது.
</p><p>
இது தொடர்பில் ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் அவர்
கூறியதாவது,


"மகப்பேறு விடுப்பு எடுக்கும் முதல் மேயர் நான்தான் என்பதை அறிந்து நானே
மிகவும் ஆச்சரியப்பட்டேன்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1cc39b2a-8a68-4951-a83c-c84742bec9b3/26-6a5e01b673701.webp' /></p><p>
</p><p>
இதன் மூலம், ஜப்பானில் இதுவரை இளம் பெண்களோ அல்லது பொதுவாகப் பெண்களோ மேயர்
போன்ற உயர்பதவிகளுக்கு மிகக் குறைந்த அளவிலேயே வந்துள்ளனர் என்பதை என்னால்
உணர்ந்து கொள்ள முடிந்தது” என்றார். </p><p>


கடந்த ஆண்டு ஜப்பானின் முதல் பெண் பிரதமராக சனாயே தகைச்சி பொறுப்பேற்ற
போதிலும், ஜப்பானிய அரசியலில் இன்னும் ஆண்களின் ஆதிக்கமே அதிகமாக உள்ளது.
</p><h2>
பிரசவத்திற்கான விடுமுறை</h2><p>

உலகப் பொருளாதார மன்றத்தின் பாலின இடைவெளி அறிக்கையில், அரசியல் அதிகாரப்
பகிர்வுப் பிரிவில் ஜப்பான் 125ஆவது இடத்தில்தான் உள்ளது என்பது
குறிப்பிடத்தக்கது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c302ac7c-9899-42b6-91f1-7c232fcd9520/26-6a5e01b747bf0.webp' /></p><p>

ஜப்பானில் பிறப்பு விகிதம் மிக வேகமாக வீழ்ச்சியடைந்து வரும் நிலையில், இந்த
அமைப்பில் பெரிய சீர்திருத்தங்கள் தேவை என்று கவாடா வலியுறுத்தியுள்ளார்.

பாலின சமத்துவம் மற்றும் வேலை நேரச் சீர்திருத்தங்கள் பற்றிப் பேசும் நாம்,
தலைமைப் பொறுப்பில் இருக்கும் பெண்கள் உட்பட எந்தத் துறையில் இருப்பவர்களும்
பயமின்றி குழந்தை பெற்றுக் கொள்ளும் சமூகச் சூழலை உருவாக்க வேண்டும் என்று
அவர் குறிப்பிட்டுள்ளார். </p><p>

அவ்வாறு செய்யத் தவறினால் மக்கள் தொகை சரிவும் பொருளாதார வீழ்ச்சியும்
தவிர்க்க முடியாததாகிவிடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
</p><h2>

மேயரின் முடிவிற்கு எதிர்ப்பு</h2><p>

வரும் செப்டெம்பர் மாதம் கவாடாவுக்குக் குழந்தை பிறக்கவுள்ள நிலையில், உள்ளூர்
மக்கள் மற்றும் சக அதிகாரிகள் பெரும்பாலானோர் இவரது முடிவுக்கு ஆதரவு
தெரிவித்துள்ளனர்.

இருப்பினும், இணையத்தில் சிலர் இதற்கு எதிர்மறையான விமர்சனங்களை
முன்வைத்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c302ac7c-9899-42b6-91f1-7c232fcd9520/26-6a5e01b747bf0.webp' /></p><p>

அவர் தனது கடமையைச் செய்யாமல் விடுப்பு எடுப்பதற்காகவே பதவியில் இருக்கிறார்
என்று சிலர் பதிவிட்டது தமக்கு ஏமாற்றமளிப்பதாக மேயர் வருத்தத்துடன்
தெரிவித்துள்ளார்.
</p><p>
அதேபோன்று, உள்ளூர் மக்கள் சிலர், ஒரு பெண் மேயர் மகப்பேறு விடுப்பு எடுப்பதை
வரவேற்தாகவும், ஆனால் விடுப்புக் காலத்தில் அவருக்கு 100% முழுச் சம்பளம்
வழங்கப்படுவதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் தங்களது கருத்துக்களைப்
பகிர்ந்துள்ளனர்.&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-20T11:29:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thirumal</name>
            </author>
            <title type="text"><![CDATA[முத்தமிழ் விழாவில் கலந்துக் கொண்ட அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/chandrasekhar-mp-attended-muthamil-festival-1784546460"></link>
            <id>https://tamilwin.com/article/chandrasekhar-mp-attended-muthamil-festival-1784546460</id>
            <summary type="text">சுவாமி விபுலானந்தர் அவர்களின் 79 ஆவது நினைவு தினத்தையும், 102 ஆவது துறவற ஆண்டினையும் முன்னிட்டு, மாத்தளை சுவாமி விபுலானந்தர் கலா மன்றத்தின் ஏற்பாட்டில...</summary>
            <content type="html"><![CDATA[<p>சுவாமி விபுலானந்தர் அவர்களின் 79 ஆவது நினைவு தினத்தையும், 102 ஆவது துறவற ஆண்டினையும் முன்னிட்டு, மாத்தளை சுவாமி விபுலானந்தர் கலா மன்றத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற முத்தமிழ் விழா, 19.07.2026 அன்று மாத்தளை அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தான திருமண மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.
</p><p>
இந்நிகழ்வில் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.</p><h2>முத்தமிழ் விழா</h2><p> </p><p>அதேவேளை, புத்தசமய, கலாசாரங்கள் மற்றும் சமய விவகாரங்கள் பிரதி அமைச்சர் கமகெதர திசாநாயக்க&nbsp; அதிதியாகக் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தார்.</p><p>

விழாவின் ஆரம்ப நிகழ்வாக, மாணவர்களின் கலை மற்றும் கலாசார நிகழ்ச்சிகளுடன் சுவாமி விபுலானந்தரின் நினைவைப் போற்றும் ஊர்வலம் நடைபெற்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/68ae04a7-52e0-46da-8034-20781e2e74b4/26-6a5e0658470a9.webp' /></p><p> </p><p>பின்னர் பிரதம அதிதிகளுக்கு பாரம்பரிய முறையில் வரவேற்பளிக்கப்பட்டதுடன், சுவாமி விபுலானந்தரின் திருவுருவப் படத்திற்கு மலர்மாலை அணிவித்து, சுடரேற்றி, மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
</p><p>
அதனைத் தொடர்ந்து மாணவர்களின் முத்தமிழ் கலைநிகழ்ச்சிகள், இசை, நடனம், இலக்கியம் உள்ளிட்ட பல்வேறு பண்பாட்டு நிகழ்வுகள் இடம்பெற்று பார்வையாளர்களின் பாராட்டைப் பெற்றன.</p><h2>&nbsp;இராமலிங்கம் சந்திரசேகர்</h2><p>
</p><p>
விபுலானந்தர் நினைவாக பாடசாலை மாணவர்களுக்கிடையே நடத்தப்பட்ட முத்தமிழ் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. மேலும், சமூக சேவையில் சிறப்பாகப் பணியாற்றியவர்களும் இந்நிகழ்வில் கௌரவிக்கப்பட்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bd4a0f66-fc9d-48d5-a6c8-0d6d8eacde18/26-6a5e06591674a.webp' /></p><p> </p><p>இதன்போது பிரதம அதிதி அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அவர்களும் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.</p><p>

நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், சுவாமி விபுலானந்தர் தமிழ் மொழி, கலை, கல்வி மற்றும் ஆன்மீகப் பணிகளில் ஆற்றிய பங்களிப்பு தலைமுறைகள் கடந்து நினைவுகூரப்பட வேண்டிய பெரும் பாரம்பரியமாகும் என்றும், இளம் தலைமுறையினரிடையே தமிழ் மொழி, முத்தமிழ், ஒழுக்கம் மற்றும் பண்பாட்டு விழுமியங்களை வளர்க்கும் இத்தகைய நிகழ்வுகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
</p><p>
இந்நிகழ்வில் மதத் தலைவர்கள், கல்வியாளர்கள், அரச அதிகாரிகள், சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பெருமளவிலான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.</p>]]></content>
            <updated>2026-07-20T11:28:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[செல்வந்த நாட்டை உருவாக்கும் அநுர தரப்பின் கனவில் சிக்கிச் சிதையும் இலங்கை மக்கள்! வெளிவரும் தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/the-increasing-burden-of-living-for-sri-lankans-1784545608"></link>
            <id>https://tamilwin.com/article/the-increasing-burden-of-living-for-sri-lankans-1784545608</id>
            <summary type="text">அரசாங்கம் நாட்டை செல்வந்த நாடாக மாற்ற&amp;nbsp; முயற்சிக்கும் நிலையில்,&amp;nbsp; அதற்கு எதிர்மாறாக இலங்கை மக்களின் வாழ்க்கைச் சுமை அதிகரித்துச் செல்கின்றது எ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரசாங்கம் நாட்டை செல்வந்த நாடாக மாற்ற&nbsp; முயற்சிக்கும் நிலையில்,&nbsp; அதற்கு எதிர்மாறாக இலங்கை மக்களின் வாழ்க்கைச் சுமை அதிகரித்துச் செல்கின்றது என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p>ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.</p><p>தொடர்ந்தும் தெரிவிக்கையில்,&nbsp;</p><p>செல்வந்த நாட்டை உருவாக்கும் அரசாங்கத்தின் தொலைநோக்குப் பார்வை உள்ள போதிலும், மக்கள் கட்டாயமாக வறுமைச் சுமையை சுமக்க நிர்ப்பந்திக்கப்படுகின்றனர்.&nbsp;</p><p></p><h2>அதிகரிக்கும் வாழ்க்கைச் சுமை</h2><p>அதிகரித்து வரும் வாழ்க்கைச் சுமை நாட்டு மக்கள் வாழ்க்கையை மேலும் கடினமாக்கியுள்ளது.&nbsp; அத்தியாவசியப் பொருட்கள் மீது விதிக்கப்பட்டுள்ள அனைத்து வரிகளையும் தளர்த்தி உடனடி நிவாரணம் வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f924ebf6-96bc-4b73-8ab9-4d76f81d9afd/26-6a5e05a72d32a.webp' /></p><p>மக்கள் மிகவும் கடினமான சூழ்நிலையின் கீழ் வாழ்ந்து வருகின்றனர்.&nbsp;</p><p>எரிபொருள் மீது விதிக்கப்பட்டுள்ள வரிகளை நீக்குவதற்கு அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும். இந்த வரி மின்சாரக் கட்டணங்களில் நேரடித் தாக்கத்தைச் செலுத்துகின்றது.&nbsp; வாழ்க்கைச் செலவையும் அதிகரிக்கின்றது என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-20T11:26:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையின் ஐந்து மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/severe-heat-warning-in-five-districts-in-sri-lanka-1784545336"></link>
            <id>https://ibctamil.com/article/severe-heat-warning-in-five-districts-in-sri-lanka-1784545336</id>
            <summary type="text">நாட்டின் கிழக்கு மாகாணத்திலும் மேலும் ஐந்து மாவட்டங்களிலும் கடும் வெப்ப அலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதன்படி, கி...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டின் கிழக்கு மாகாணத்திலும் மேலும் ஐந்து மாவட்டங்களிலும் கடும் வெப்ப அலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
</p><p>அதன்படி, கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, பொலன்னறுவை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களிலும் கிழக்கு மாகாணத்திலும் அதிக வெப்பநிலை நிலவக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
இதனால், பகல் வேளையில் மனித உடலால் உணரப்படும் வெப்பநிலையானது சில இடங்களில் "கவனம் செலுத்த வேண்டிய"மட்டத்திற்கு அதிகரிக்கும் எனத் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><p></p><h2>முன்னெச்சரிக்கை நடவடிக்கை</h2><p>

கடும் வெப்பத்தின் தாக்கத்தைக் குறைப்பதற்கான சுகாதாரப் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fdeebf61-e7a9-4975-8099-a188c6100abe/26-6a5e021ade002.webp' /></p><p>அதற்கமைய போதுமான அளவு தண்ணீர் குடித்தல், நாளின் வெப்பமான நேரங்களில் கடுமையான வெளிப்புறச் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துதல் போன்றவற்றைப் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-20T11:24:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை கவனத்தின் மையமாக சி.டி. விக்ரமரத்னவில் மரணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/easter-attack-investigation-c-t-wickramaratne-1784543553"></link>
            <id>https://ibctamil.com/article/easter-attack-investigation-c-t-wickramaratne-1784543553</id>
            <summary type="text">2019-ஆம் ஆண்டு ஈஸ்டர் அன்று நடந்த தொடர் தாக்குதல்கள், சஹ்ரான் உள்ளிட்ட ஒரு குழுவினரால் குறுகிய காலத்தில் திட்டமிடப்பட்ட ஒரு தனிப்பட்ட குற்றம் மட்டுமல்...</summary>
            <content type="html"><![CDATA[<p>2019-ஆம் ஆண்டு ஈஸ்டர் அன்று நடந்த தொடர் தாக்குதல்கள், சஹ்ரான் உள்ளிட்ட ஒரு குழுவினரால் குறுகிய காலத்தில் திட்டமிடப்பட்ட ஒரு தனிப்பட்ட குற்றம் மட்டுமல்ல என்று அப்போதைய காவல்துறை மா அதிபர் சி. டி. விக்ரமரத்ன ஒகஸ்ட் 25 2021அன்று தெரிவித்திருந்தார்.</p><p>

ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் குறித்து சிறப்பு அறிக்கை வெளியிட்டபோது, ​​காவல்துறைத் தலைவர் இந்த அறிக்கையை வெளியிட்டார்.
</p><p>
சம்பவம் நிகழ்வதற்கு முன்பு நடந்த பல நிகழ்வுகளையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும், அதன்படி இது நீண்ட காலமாகத் திட்டமிடப்பட்ட ஒரு பயங்கரவாதச் செயலாகத் தெரிகிறது என்றும் அவர் அப்போதைய விசாரணைக்குழுவின் முன் சாட்சியம் வழங்கியிருந்தார்.</p><p>

இந்தக் குற்றவியல் விசாரணை முழுமையான இரகசியமாக நடத்தப்பட்டு வருகின்றன என்றும், இதுகுறித்த தகவல்களைப் பொதுமக்களுக்கு வெளியிடுவது நீதித்துறை நடவடிக்கைகளுக்குத் தடையாக அமையக்கூடும் என்றும் அவர் கூறியிருந்தார்&nbsp;</p><p></p><h2>அனுர கருணாதிலக&nbsp;</h2><p>இந்நிலையிலேயே இதனை மையப்படுத்தி&nbsp; உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பாக முன்னாள் காவல்துறைத் தலைவர் சி.டி. விக்ரமரத்னவுக்கு ஏராளமான தகவல்கள் தெரிந்திருக்க கூடும் என துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அனுர கருணாதிலக தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/266991bd-b166-435a-90c6-ac0788a25d17/26-6a5e036c28d55.webp' /></p><p> முன்னாள் காவல்துறைமா அதிபரின் மரணம் குறித்து ஊடகங்களிடம் பேசிய அமைச்சர், ''இந்த மரணம் தொடர்பாக காவல்துறை தற்போது விரிவான விசாரணையை நடத்தி வருகிறது.</p><p> உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்குப் பிறகு திரு. சி.டி. விக்ரமரத்ன காவல்துறைமா அதிபராகப் பணியாற்றியதால், ஒரு உயர் பதவியில் உள்ள காவல்துறை அதிகாரி என்ற முறையில், அந்தச் சம்பவம் குறித்து அவரிடம் ஏராளமான தகவல்கள் இருந்திருக்க வேண்டும்.</p><p></p><h2>குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு வாக்குமூலம்</h2><p> </p><p>தாக்குதல்கள் குறித்து விசாரிக்கும் ஜனாதிபதி ஆணையத்தின் முன்பும் அவர் முன்னிலையாகி சாட்சியம் அளித்திருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c3a78dcb-8db9-4cad-b862-8dc0ab132a3f/26-6a5e036ccf9b7.webp' /></p><p> </p><p>இந்நிலையில் அவர் காவல்துறை விசாரணைகளில் இருந்து குறிப்பிட்ட தகவல்கள் இன்னும் வெளிப்படுத்தப்படவில்லை. இந்த விடயம் குறித்து விழிப்புடன் இருப்பது அவசியம்" என்று அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.</p><p>உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளில், முன்னாள் காவல்துறை மா அதிபர் (IGP) சி.டி. விக்ரமரத்ன ஏற்கனவே குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு (CID) வாக்குமூலம் வழங்கியதாக கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்த்துக்கு 11.03.2026 தெரியவந்தது.
</p><p>
தற்போது பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (PTA) கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் அரச புலனாய்வுச் சேவைப் பணிப்பாளர், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சல்லே தொடர்பான விசாரணையின் முன்னேற்ற அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டபோது இந்த தகவல் வெளியிடப்பட்டது.</p><p></p><h2>விசாரணை&nbsp;தலையீடு</h2><p>
</p><p>
விசாரணைகளின் போது ஏற்பட்டதாகக் கூறப்படும் தலையீடுகள் தொடர்பில், முன்னாள் CID பணிப்பாளர் நிஷாந்த சோய்சாவுடன் இணைந்து முன்னாள் ஐ.ஜி.பி. சி.டி. விக்ரமரத்னவும் ஏற்கனவே வாக்குமூலம் வழங்கியுள்ளதாக CID அதிகாரிகள் அன்று நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5ead96b7-0bda-47a8-9fd4-ef5970cc9eca/26-6a5e036d83d0c.webp' /></p><p>
</p><p>
தேசிய பாதுகாப்புச் சபை (National Security Council) ஊடாக விசாரணை அதிகாரிகள் மீது செல்வாக்கு செலுத்தப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பிலேயே இந்த வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் CID நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டியது.</p><p>

எனினும், இந்த நீதிமன்ற நடவடிக்கையில் முன்னாள் ஐ.ஜி.பி. சி.டி. விக்ரமரத்ன மீது எவ்வித நேரடி குற்றச்சாட்டும் முன்வைக்கப்படவில்லை.

அவர் விசாரணையின் ஒரு பகுதியாக வாக்குமூலம் வழங்கிய அதிகாரியாக மட்டுமே குறிப்பிடப்பட்டார்.</p><p>ஏப்ரல் 2019 இல் நடந்த குண்டுவெடிப்புகள் நாட்டின் பாதுகாப்பு மற்றும் காவல்துறை நிர்வாகத்தை ஒரு ஆழமான நெருக்கடிக்குள் தள்ளின.</p><p> 

தாக்குதல்களைத் தடுக்கத் தவறியதற்காகவும், புலனாய்வுத் தகவல்களைப் புறக்கணித்ததற்காகவும் அப்போதைய காவல்துறை மா அதிபர் ஜெனரல் புஜித் ஜெயசுந்தர கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்ட பின்னர், சீர்குலைந்த காவல்துறை திணைக்களத்தை வழிநடத்தும் பொறுப்பு, பதில் காவல்துறை மா அதிபர் ஜெனரல் சி.டி. விக்ரமரத்னவிடம் ஒப்படைக்கப்பட்டது.</p><p></p><h2>கடுமையான குறைபாடுகள்</h2><p>11.03.2026 நீதிமன்றில் முன்வைக்கப்பட்ட அறிக்கையில் தாக்குதல்களுக்கு முன்னும் பின்னும் காவல்துறை புலனாய்வாளர்களுக்கும் புலனாய்வு அமைப்புகளுக்கும் (குறிப்பாக அரச புலனாய்வு சேவை - SIS) இடையேயான தகவல் பரிமாற்றம் மற்றும் ஒருங்கிணைப்பில் இருந்த கடுமையான குறைபாடுகள் மற்றும் விடுபடல்கள் குறித்து இந்த அறிக்கைகள் விசாரிக்கப்பட்டு வந்தமை வெளிப்படுத்தப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/10fd51bb-5760-47bf-a160-bc0155804ef4/26-6a5e036e3bb32.webp' /></p><p>
</p><p>
இந்த வழக்குக் கோப்புகளில், அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே மீதான குற்றச்சாட்டுகளும் அடங்கியிருந்தன. </p><p>

ஆனால், சுரேஷ் சலே தனது சட்டத்தரணிகள் மூலம், இந்தக் குற்றச்சாட்டுகள் அரசியல் உள்நோக்கம் கொண்டவை என்று கூறி அவற்றை மறுத்திருந்தார்.

இந்த முழு சட்ட நடவடிக்கையும் இறுதித் தீர்ப்பு இன்றி நீதிமன்றங்களில் இன்னும் நிலுவையில் உள்ளது.</p><p>

37 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றிய 35-வது காவல்துறைத் தலைவரின் இந்த திடீர் மறைவுடன், இலங்கை காவல்துறையின் வரலாற்றில் ஒரு முக்கியமான மற்றும் சிக்கலான காலகட்டத்தை வழிநடத்திய ஒரு அதிகாரியின் அத்தியாயம் முடிவுக்கு வருகிறது. </p><p>

மேலும், அவரது மரணம் குறித்த விசாரணைகளும், உயிர்த்தஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான சட்ட நடவடிக்கைகளும் நீதிமன்றங்களில் தனித்தனியாகத் தொடர்ந்து நடைபெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.&nbsp;&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p> </p>]]></content>
            <updated>2026-07-20T11:16:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரஷ்யாவில் தேச துரோகக் குற்றச்சாட்டில் விண்வெளி ஆராய்ச்சியாளர்: விசாரணை காவலுக்கு உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/russian-space-researcher-arrested-for-treason-1784545951"></link>
            <id>https://news.lankasri.com/article/russian-space-researcher-arrested-for-treason-1784545951</id>
            <summary type="text">ரஷ்யாவில் கைது செய்யப்பட்ட விண்வெளி ஆராய்ச்சியாளரை காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.&amp;nbsp;வான் இயக்கவியல் நிபுணர் 

ரஷ்யாவில் வான் இயக்கவியல் நிபு...</summary>
            <content type="html"><![CDATA[<p>ரஷ்யாவில் கைது செய்யப்பட்ட விண்வெளி ஆராய்ச்சியாளரை காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.&nbsp;</p><h2>வான் இயக்கவியல் நிபுணர் </h2><p>

ரஷ்யாவில் வான் இயக்கவியல் நிபுணரான மாக்சிம் கிரவ்சுக், அரசு விண்வெளி நிறுவனமான ரோஸ்கோஸ்மோஸின் கீழ் செயல்படும், மாஸ்கோவைத் தளமாகக் கொண்ட ஆராய்ச்சி நிறுவனமான மத்திய இயந்திரக் கட்டுமான ஆராய்ச்சி நிறுவனத்தில் பணிபுரிகிறார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/579633b9-28e0-4ec7-8171-5f0bcd87a00e/26-6a5e02a2e809f.webp' /></p><p></p><p> 

35 வயதாகும் மாக்சிம், தேச துரோகக் குற்றச்சாட்டில் கடந்த மாதம் 24ஆம் திகதி கைது செய்யப்பட்டதாக Ostorozhno Novosti செய்தி நிறுவனம் தெரிவித்தது.&nbsp; </p><h2>விசாரணைக்கு முந்தைய காவல் </h2><p>
தற்போது அவரை விசாரணைக்கு முந்தைய காவலில் வைக்க மாஸ்கோ நீதிபதி ஒருவர் உத்தரவிட்டுள்ளார் என்று ரஷ்ய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
</p><p>
முன்னதாக, ஜூன் 29ஆம் திகதி அன்று மாக்சிம் தடுப்புக் காவல் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ததாக தெரிய வந்துள்ளது.</p><p>

அந்த மேல்முறையீட்டு விசாரணை ஜூலை 29-ஆம் திகதி நடைபெற உள்ளதாக RBC செய்தி வெளியிட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e7c5f3c6-84f7-4e3d-84fa-612494195edc/26-6a5e02a242fff.webp' />&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-20T11:13:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் கொலையுடன் தொடர்புடைய நபர்களை தேடும் பொலிஸார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/police-identify-man-woman-wanted-in-niagara-1784545933"></link>
            <id>https://canadamirror.com/article/police-identify-man-woman-wanted-in-niagara-1784545933</id>
            <summary type="text">&amp;nbsp;கனடாவின் நயாகரா நீர்வீழ்ச்சி பகுதியில் கடந்த வாரம் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் நபர் ஒருவர் கொல்லப்பட்ட வழக்கில், சந்தேகநபர்களான ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கனடாவின் நயாகரா நீர்வீழ்ச்சி பகுதியில் கடந்த வாரம் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் நபர் ஒருவர் கொல்லப்பட்ட வழக்கில், சந்தேகநபர்களான இருவரைக் பொலிஸார் உத்தியோகபூர்வமாக அடையாளம் கண்டுள்ளதுடன் அவர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
</p><p>ஜூலை 16 இரவு 9 மணியளவில் தொரோல்ட் ஸ்டோன் அமைந்துள்ள வீடு ஒன்றில் துப்பாக்கிச் சூடு நடந்ததாகக் கிடைத்த தகவலையடுத்து அதிகாரிகள் சம்பவ இடத்திற்குச் சென்றுள்ளனர்.</p><p>
அங்கு துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நபர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9b166332-2f37-440c-ad4c-b18b6ab1477e/26-6a5e028f3dc75.webp' /></p><p>
இந்தத் திட்டமிடப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் தொடர்புடைய சந்தேகநபர்கள் இரண்டாம் நிலை கொலைக் குற்றச்சாட்டின் கீழ் தேடப்பட்டு வருகின்றனர்:
</p><p>23வயதான மரூஃப் பாங்கி : மெலிந்த உடலமைப்பு மற்றும் இருண்ட நிறமுடைய இவர், தாடி மற்றும் தலைமுடியின் தோற்றத்தை மாற்றியமைக்க வாய்ப்புள்ளதாக பொலிஸார் எச்சரித்துள்ளனர்.
</p><p>30 வயதான ஜோஸ்டா கிரேஸ் மெக்நீல்: இவரது கழுத்தின் இடதுபுறத்தில் சிறகைக் குறிக்கும் பச்சை குத்தப்பட்ட தனித்துவமான அடையாளம் உள்ளது.</p><p>
இவர்கள் கைது செய்யப்படுவதைத் தவிர்ப்பதற்காக தங்கள் தாடி, தலைமுடியின் நிறம், ஒப்பனை மற்றும் ஆடை அமைப்புகளை மாற்றியமைக்கக் கூடும் என புலனாய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.</p><p>
குற்றத்திற்குப் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி இதுவரை கைப்பற்றப்படாததால், இவர்கள் இருவரும் ஆயுதமேந்திய ஆபத்தான நபர்களாகக் கருதப்படுகின்றனர்.
</p><p>எனவே, பொதுமக்கள் எவரும் இவர்களை அணுக வேண்டாம் என்றும், கண்டறிந்தால் உடனடியாக 911 என்ற அவசர இலக்கத்திற்கு அழைக்குமாறும் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.</p><p>
சம்பவம் தொடர்பாகப் பயன்படுத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்பட்ட வெள்ளை நிற நிசான் வாகனம் மற்றும் கருப்பு நிற மாஸ்டா வாகனம் ஆகியவற்றை பொலிஸார் மீட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் உடனடியாக வழக்கறிஞரைத் தொடர்புகொண்டு சரணடையுமாறு பொலிஸார் வலியுறுத்தியுள்ளனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-20T11:11:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தியாவின் முதல் டெங்கு தடுப்பூசி; சந்தைப்படுத்த ஒப்புதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/india-first-dengue-qdenga-tak-003-vaccine-approval-1784545956"></link>
            <id>https://jvpnews.com/article/india-first-dengue-qdenga-tak-003-vaccine-approval-1784545956</id>
            <summary type="text">இந்தியாவின் முதல் டெங்கு தடுப்பூசியான &#039;கியூடெங்கா&#039;வுக்கு (QDENGA) இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு பணிப்பாளர் நாயகம், சந்தைப்படுத்தல் ஒப்புதலை வழங்கியுள...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியாவின் முதல் டெங்கு தடுப்பூசியான 'கியூடெங்கா'வுக்கு (QDENGA) இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு பணிப்பாளர் நாயகம், சந்தைப்படுத்தல் ஒப்புதலை வழங்கியுள்ளது. </p><p>

இந்தியாவின் தாகேடா பயோபார்மாசூட்டிகல்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட இந்தத் தடுப்பூசி, 4 முதல் 60 வயதுடையவர்களுக்கு செலுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/59fb66ab-27d9-479c-add8-31289f426291/26-6a5e02a642925.webp' /></p><h2>பரிசோதனைகள் எதுவும் தேவையில்லை</h2><p>
</p><p>
முன்னர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் பாதிக்கப்படாதவர்களுக்கும் இந்தத் தடுப்பூசியைச் செலுத்த முடியும் என்பதால், தடுப்பூசி செலுத்துவதற்கு முன்னர் பரிசோதனைகள் எதுவும் தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
அதேவேளை 3 மாத இடைவெளியில் 0.5 மில்லிலீற்றர் அளவு கொண்ட இரண்டு ஊசிகளாக இது செலுத்தப்படுகிறது.

உலக அளவில் பதிவாகும் டெங்கு பாதிப்புகளில் சுமார் மூன்றில் ஒரு பங்கை இந்தியா கொண்டுள்ளதுடன், அங்கு டெங்குவின் 4 வகைகளும் பரவி வருகின்றன.</p><p></p><p>
</p><p>
இந்நிலையில், தாகேடாவின் சர்வதேச அளவிலான மற்றும் இந்தியாவில் நடத்தப்பட்ட 3-ஆம் கட்ட மருத்துவப் பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில், நான்கு வகை டெங்கு வைரஸ்களுக்கு எதிராகவும் பாதுகாப்பளிக்கும் இந்த தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
</p><p>
அதேசமயம் ஏற்கனவே உலக சுகாதார அமைப்பின் தகுதிச்சான்றைப் பெற்றுள்ள கியூடெங்கா தடுப்பூசி, 2022 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து உலகம் முழுவதும் 43 நாடுகளில் ஒப்புதல் பெறப்பட்டு, 3.2 கோடிக்கும் அதிகமான டோஸ்கள் விநியோகிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-20T11:10:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[கோட்டாபயவின் உத்தரவில் சலே செய்த வேலைகள்! விடுதலைப் புலிகள் தொடர்பில் கொடுக்கப்பட்ட பொய்யான அறிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/suresh-sallay-main-culprit-of-the-easter-attacks-1784541062"></link>
            <id>https://tamilwin.com/article/suresh-sallay-main-culprit-of-the-easter-attacks-1784541062</id>
            <summary type="text">அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் அனுமதியோடுதான் அனைத்து வேலைகளையும் செய்தார் என்று முன்னாள...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் அனுமதியோடுதான் அனைத்து வேலைகளையும் செய்தார் என்று முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
</p><p>
வலையொளித் தளம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
</p><p>
தொடர்ந்தும் தெரிவிக்கையில், </p><p>

ஆரம்பத்தில் இருந்தே சுரேஷ் சலே, கோட்டாபய ராஜபக்சவின் அருகிலேயே தான் இருப்பார். கோட்டாபய ராஜபக்சவிடம் கேட்காமல் எதனையும் சுரேஷ் சலே செய்ததில்லை. கோட்டாபய ராஜபக்சவுக்குத் தேவையானைத் தவிர வேறு எதனையும் சலே செய்ததும் இல்லை.</p><p></p><h2>சலேவை அழைத்த கோட்டாபய&nbsp;</h2><p>
ஆரம்ப காலங்களில் சுரேஷ் சலே போன்று மேலும் சிலர் இருந்தார்கள். அவர்களுக்கு நன்றாக தமிழ் பேசத் தெரியும். இதுபோன்றவர்கள்தான் பின்னர் புலனாய்வுச் சேவைக்குள் இணைத்துக் கொள்ளப்பட்டனர்.</p><p> 

நான் இராணுவத் தளபதியானதன் பின்னர் சுரேஷ் சலே எனக்கு கீழ் பணியாற்றவில்லை. சலே உள்ளிட்ட ஒரு சிலர் வழக்கமாக அலுவலகத்தில் இருந்து முக்கிய அறிக்கைகளை தயார்ப்படுத்தும் வேலைகளை செய்து கொண்டிருந்தனர். 

எனவே, எனக்கு கீழிருந்து வேறு ஒரு பிரிவிற்கு சுரேஷ் சலே உள்ளிட்டவர்களை மாற்றினோம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0c999a66-5272-46c0-bdca-b0ef2e2b5ec1/26-6a5df156a2e87.webp' /></p><p> </p><p> சலே எனக்குக் கீழ் பணியாற்றியிருக்கவில்லை. ஆனால், சலேயைப் பற்றி நன்றாக எனக்குத் தெரியும். 

சலே உள்ளிட்டவர்களை எனக்கு கீழ் இருந்து நீக்கிய பிறகு அவர்களை, கோட்டாபய ராஜபக்ச தமக்கு கீழ் பணியாற்றுமாறு,&nbsp;கொழும்பில் பாதுகாப்பு அமைச்சின் செயலகத்திற்கு அழைத்துக் கொண்டார்.</p><p> 

இராணுவத்திற்குள் இருந்துகொண்டு, கொழும்பில் அலுவலகத்தில் இருந்து பணியாற்றுவது போல தான் அவர்கள் பணியாற்றினர். அவர்கள் கொடுத்த சில அறிக்கைகள் பிழையான தகவல்களைக் கொண்டிருந்தது.
</p><p>
உதாரணமாக, நான் இராணுவத் தளபதியானபோது, சலே உள்ளிட்டவர்கள் தந்த அறிக்கையின் படி, விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த மொத்த போராளிகள் 9 ஆயிரம் பேர் என்று இருந்தது. எனினும், அது ஒரு தவறான அறிக்கை என்பது எனக்குத் தெரியும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/595f83c1-e224-4083-bb23-2de1ecc05e76/26-6a5df15753da5.webp' /></p><p> எனவே, சலே, ஹெந்த விதாரண உள்ளிட்ட அதிகாரிகளை இடமாற்றி, அந்த இடத்திற்கு யுத்தக் களத்தில் நேரடியாக இருந்து பணியாற்றிய அதிகாரிகளை நியமித்தோம்.
</p><p>
அந்த நேரத்தில் விடுதலைப் புலிகள் அமைப்பில் மொத்தம் 30 ஆயிரம் பேர் வரை இருக்கலாம் என நான் கணித்திருந்தேன்.

அதேபோல, அதன் பின்னரான அறிக்கைகள் மற்றும் கணக்கெடுப்புகளின் ஊடாக கிட்டத்தட்ட 32ஆயிரம் பேருக்கும் அதிகமான விடுதலைப் புலிகள் அமைப்பின் போராளிகள் இருப்பதாக கண்டறியப்பட்டது. </p><p> 

எனவே, சலே உள்ளிட்டவர்கள் இராணுவத்திற்குள் இருந்து, இப்படியான வேலைகளைத் தான் செய்து கொண்டிருந்தனர் என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-20T11:10:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் சடுதியாக குறைவடைந்த திருமண பதிவுகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/marriage-registrations-in-sri-lanka-have-declined-1784544469"></link>
            <id>https://ibctamil.com/article/marriage-registrations-in-sri-lanka-have-declined-1784544469</id>
            <summary type="text">இலங்கையில் கடந்த 15 ஆண்டுகளில் பதிவு செய்யப்பட்ட திருமணங்களின் எண்ணிக்கை சுமார் 28 சதவீதம் குறைந்துள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் கடந்த 15 ஆண்டுகளில் பதிவு செய்யப்பட்ட திருமணங்களின் எண்ணிக்கை சுமார் 28 சதவீதம் குறைந்துள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் (Department of Census and Statistics)தகவல்கள் தெரிவிக்கின்றன.
</p><p>
அந்த திணைக்களத்தின் அறிக்கையின்படி, 2010-ஆம் ஆண்டில் 200,985 ஆக இருந்த பதிவு செய்யப்பட்ட திருமணங்களின் எண்ணிக்கை, 2025-ஆம் ஆண்டில் 144,182 ஆகக் குறைந்துள்ளது. இது சுமார் 28 சதவீத வீழ்ச்சியாகும்.</p><h2>கோவிட் பெருந்தொற்றில் குறைவடைந்த திருமண பதிவு</h2><p>2020-ஆம் ஆண்டிற்கு முன்னதாக, பல ஆண்டுகளில் திருமணங்களின் எண்ணிக்கை 170,000-க்கு மேலாகப் பதிவாகியிருந்தது. இருப்பினும், கோவிட்-19 (COVID-19) பெருந்தொற்று காலத்தில் இந்த எண்ணிக்கை கடுமையாக வீழ்ச்சியடைந்து, 2020-ஆம் ஆண்டில் 143,808 ஆகக் குறைந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7abbf9c0-2e03-4d79-8035-d9c5d55ebb89/26-6a5e01486cf87.webp' /></p><p>

பெருந்தொற்றுக்குப்பின், 2021-ஆம் ஆண்டில் 162,628 ஆகவும், 2022-ஆம் ஆண்டில் 171,140 ஆகவும் திருமணப் பதிவுகள் மீண்டும் அதிகரித்திருந்தன.</p><p> இருப்பினும், 2023-ஆம் ஆண்டில் 151,356 ஆகவும், 2024-ஆம் ஆண்டில் 139,290 ஆகவும் மீண்டும் சரிந்தன. இறுதியாக, 2025-ஆம் ஆண்டில் திருமணப் பதிவுகள் சிறிய அளவில் அதிகரித்து 144,182 ஆகப் பதிவாகியுள்ளன.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-20T11:07:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shan</name>
            </author>
            <title type="text"><![CDATA[புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் புதிய செயலாளர் நியமனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/new-secretary-pudukkudiyiruppu-appointed-1784540151"></link>
            <id>https://tamilwin.com/article/new-secretary-pudukkudiyiruppu-appointed-1784540151</id>
            <summary type="text">புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் புதிய செயலாளராக&amp;nbsp;விக்கினேஸ்வரன் கோபிமுகுந்தன்&amp;nbsp;உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.இந்த பதவியேற்றல்...</summary>
            <content type="html"><![CDATA[<p>புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் புதிய செயலாளராக&nbsp;விக்கினேஸ்வரன் கோபிமுகுந்தன்&nbsp;உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.</p><p>இந்த பதவியேற்றல் நிகழ்வானது&nbsp;இன்றையதினம்(20.07.2026) இடம்பெற்றுள்ளது.</p><p></p><h2>பிரதேச சபை செயலாளர்</h2><p>புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் செயலாளராக கடமையாற்றிய ச.கிருசாந்தன்,
முல்லைத்தீவு வலயக் கல்விப் பணிமனைக்கு இடமாற்றம் பெற்று சென்றதையடுத்தே இவர் புதிய செயலாளராக பொறுப்பேற்றுக்
கொண்டுள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3d8c48a1-f9d9-4d83-a0fb-5f4293bbaa16/26-6a5deeaaa54fc.webp' /></p><p>விக்கினேஸ்வரன் கோபிமுகுந்தன் துணுக்காய் வலயக் கல்வி அலுவலகத்தில் பிரதம முகாமைத்துவ உதவியாளராக பணியாற்றி
வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.</p><p> புதிய செயலாளரை புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் உபதவிசாளர் மற்றும் சபை
உறுப்பினர்கள் ஆகியோர் பொன்னாடை போர்த்து வரவேற்றிருந்தனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-20T11:06:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரிட்டிஷ் கொலம்பியாவில் காணாமல் போன பெண்: பொலிஸ் விசாரணையில் தெரியவந்த துயரச் செய்தி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/missing-bc-women-already-dies-in-2024-1784545231"></link>
            <id>https://canadamirror.com/article/missing-bc-women-already-dies-in-2024-1784545231</id>
            <summary type="text">கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் பெண்ணொருவரைக் காணவில்லை என அவரது உறவினர் ஒருவர் கடந்த மாதம் பொலிசில் புகாரளித்துள்ளார்.

பொலிஸ் விசாரணையில், அந்தப...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் பெண்ணொருவரைக் காணவில்லை என அவரது உறவினர் ஒருவர் கடந்த மாதம் பொலிசில் புகாரளித்துள்ளார்.</p><p>

பொலிஸ் விசாரணையில், அந்தப் பெண் இப்போது காணாமல் போகவில்லை, பல ஆண்டுகளுக்கு முன்பே காணாமல் போய்விட்டார் என்பது தெரியவந்துள்ளதுடன், ஒரு துயரச் செய்தியும் தெரியவந்துள்ளது!
</p><p>
ஜூன் மாதம் 14ஆம் திகதி, தன் உறவினரான மேரி (Mary Gadbois) என்னும் பெண்ணைக் காணவில்லை என அவரது உறவினர் ஒருவர் பொலிசில் புகாரளித்திருந்தார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a8ac2ba0-a843-43f0-bae6-5ecaf30d3bc0/26-6a5dffd09f8b5.webp' /></p><p>
பொலிசார் மேரியைத் தேடிவந்த நிலையில், உண்மையில் அவர் இப்போது காணாமல் போகவில்லை, அவர் பல ஆண்டுகளுக்கு முன்பே காணாமல் போய்விட்டார் என்பது தெரியவந்தது.
</p><p>
அதாவது, 2021ஆம் ஆண்டு மேரி Mission என்னுமிடத்தில் கடைசியாக காணப்பட்டுள்ளார்.
</p><p>
அதற்குப் பிறகு அவரைக் காணவில்லை, சோகம் என்னவென்றால், அவரை யாரும் தேடியதாகவும் தெரியவில்லை. சமீபத்தில்தான் அவரது உறவினர் ஒருவர் அவரைத் தொடர்பு கொள்ள இயலாததால், அவரைக் காணவில்லை என பொலிசில் புகாரளித்துள்ளார்.
</p><p>
பொலிசார் மேரியைத் தீவிரமாக தெடியும் அவரைக் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை.
</p><p>
இதற்கிடையில், 2024ஆம் ஆண்டு Mission நகருக்கருகிலுள்ள வனப்பகுதி ஒன்றில் ஒரு பெண்ணின் உடல் பாகங்கள் கிடைத்துள்ளன. அவை யாருடைய உடல் பாகங்கள் என தெரியாமலே இருந்துள்ளது.</p><p>

இந்நிலையில், மேரியும் கடைசியாக Mission நகரில் வாழ்ந்துவந்தது தெரியவந்ததால், 2024ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட உடல் பாகங்கள் மேரியுடையவையாக இருக்குமோ என பொலிசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
</p><p>
அதைத் தொடர்ந்து நீதிமன்ற அதிகாரிகள் உட்பட பலதரப்பினரும் மேற்கொண்ட ஆய்வில், அந்த உடல் பாகங்கள் மேரியுடையவைதான் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-20T11:06:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாடொன்றில் இருந்து இலங்கைக்கு நேரடி விமான சேவை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/vietjet-launches-direct-flights-to-colombo-1784544401"></link>
            <id>https://ibctamil.com/article/vietjet-launches-direct-flights-to-colombo-1784544401</id>
            <summary type="text">

இலங்கை மற்றும் வியட்நாம் இடையிலான விமான போக்குவரத்து இணைப்பு மேலும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

வியட்நாமின் முன்னணி விமான நிறுவனமான வியட்ஜெட் ஏர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>

இலங்கை மற்றும் வியட்நாம் இடையிலான விமான போக்குவரத்து இணைப்பு மேலும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
</p><p>
வியட்நாமின் முன்னணி விமான நிறுவனமான வியட்ஜெட் ஏர் (VietJet Air), கொழும்பு மற்றும் ஹோ சி மின் நகரங்களுக்கு இடையே தனது நேரடி விமான சேவைகளை இன்று(20) முதல் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.</p><p>

இந்த புதிய விமான வழித்தடமானது, இரு நாடுகளுக்கும் இடையிலான சுற்றுலாத் துறையின் வளர்ச்சிக்கு கணிசமான பங்களிப்பை வழங்கும் என எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.</p><p></p><h2>விமான சேவைகள்</h2><p> </p><p>

இதன்படி, வியட்ஜெட் ஏர் நிறுவனம் இவ்விரு நகரங்களுக்கும் இடையே வாரத்திற்கு மூன்று விமான சேவைகளை இயக்கவுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2934ad46-b0a9-42da-9476-8a22fbbf51d1/26-6a5e006da711d.webp' /></p><p><i>Image Credit:&nbsp;
Airline Ratings</i></p><p> 

அத்துடன், இலங்கை மற்றும் வியட்நாம் இடையிலான சுற்றுலாவை மேலும் ஊக்குவிக்கும் நோக்கில், இரு நாடுகளும் இணைந்து கூட்டு சுற்றுலா தொகுப்புகளை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளன.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-20T11:03:17+00:00</updated>
        </entry>
    </feed>
