<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-08-17T07:21:22+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[அனுதாபத்திற்காக பதவி விலகுவதாக கூறும் ஜனாதிபதி அநுர! மரிக்கார் குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/president-anura-seeking-sympathy-says-marikkar-1786950054"></link>
            <id>https://ibctamil.com/article/president-anura-seeking-sympathy-says-marikkar-1786950054</id>
            <summary type="text">


அனுதாபத்தைப் பெறுவதற்காக ஜனாதிபதி வேண்டுமென்றே தனது பதவி விலகல் தொடர்பில் பேசுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். எம். மரிக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>


அனுதாபத்தைப் பெறுவதற்காக ஜனாதிபதி வேண்டுமென்றே தனது பதவி விலகல் தொடர்பில் பேசுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். எம். மரிக்கார் குற்றம் சாட்டியுள்ளார். </p><p>

நேற்று (16) ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே அவர் இக்கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.</p><p>

ஜனாதிபதி தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், தரமற்ற நிலக்கரியை இறக்குமதி செய்ததன் மூலம் சுமார் 14,000 மில்லியன் ரூபாய் இழப்பைச் சந்தித்துள்ளதாகவும், சட்டவிரோதமான முறையில் சுமார் 300 கொள்கலன்களை நாட்டிற்குள் கொண்டு வந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.</p><p></p><h2>பொதுமக்களின் அனுதாபதம்&nbsp;</h2><p>
</p><p>
மேலும், திறைசேரியில் இருந்து 2.5 மில்லியன் டொலர் நிதி தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் மரிக்கார் குற்றஞ்சாட்டியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/75a56d20-ae23-4dea-9ecb-0941263e4ea3/26-6a82b59041bce.webp' /></p><p>
</p><p>
இந்நிலையில், அரசாங்கம் மக்களின் வாழ்க்கைத்தரத்தைக் கணிசமாகக் குறைத்து, பொய் வாக்குறுதிகள் மற்றும் நிறைவேற்ற முடியாத கனவுகளைக் காட்டி அவர்களைத் தவறான பாதையில் வழிநடத்தியுள்ளதாகக் கூறிய அவர், இத்தகைய காரணங்களால் ஜனாதிபதிக்கு பொதுமக்களிடமிருந்து எந்தவித அனுதாபமும் கிடைக்காது என்றும் சாடியுள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-17T07:17:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரயில் விபத்தில் இறந்ததாக கருதப்பட்ட இளம்பெண்: உடற்கூறு ஆய்வில் தெரியவந்த திடுக் தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/dhane-teens-death-in-train-accident-women-pregnant-1786949168"></link>
            <id>https://news.lankasri.com/article/dhane-teens-death-in-train-accident-women-pregnant-1786949168</id>
            <summary type="text">தானே நகரில் இளம்பெண்ணொருவர் ரயில் விபத்தில் இறந்ததாக கருதப்பட்ட நிலையில், அவர் மூன்று மாத கர்ப்பிணி என்பது உடற்கூறு ஆய்வில் தெரியவந்துள்ளது.


இம்ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>தானே நகரில் இளம்பெண்ணொருவர் ரயில் விபத்தில் இறந்ததாக கருதப்பட்ட நிலையில், அவர் மூன்று மாத கர்ப்பிணி என்பது உடற்கூறு ஆய்வில் தெரியவந்துள்ளது.
</p><p>

இம்மாதம், அதாவது, ஆகத்து மாதம் 2ஆம் திகதி, மஹாராஷ்ட்ரா மாநிலத்திலுள்ள தானே நகரில், 17 வயதுப் பெண்ணொருவர் ரயில் மோதி உயிரிழந்தார்.&nbsp;</p><p>
அது ஒரு விபத்து என பொலிசார் முதலில் எண்ணிய நிலையில், உடற்கூறு ஆய்வில் அவர் கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/28502882-4853-41e4-8578-ca17bd914e0f/26-6a82ae31b4039.webp' /></p><h3>
காதலர் கைது</h3><p>

அதைத் தொடர்ந்து பொலிசார் அவரது மொபைலை ஆய்வு செய்ய, அவர் டெலிவரி பாயாக வேலை செய்யும் ஒரு இளைஞருடன் தொடர்ந்து தொடர்பிலிருந்தது தெரியவந்தது.&nbsp;</p><p></p><p>
அந்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அந்த இளம்பெண் தன் உயிரைத் தானே மாய்த்துக்கொண்டிருக்கலாம் என சந்தேகிக்கும் பொலிசார், அவரது முடிவுக்கு, அவரது காதலர் என கருதப்படும் அந்த இளைஞர் காரணமாக இருந்திருக்கலாம் என்னும் கோணத்தில் விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-17T07:17:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[உக்ரைனில் லட்சுமி மிட்டலின் எஃகு ஆலையில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/russian-missile-hits-mittals-ukraine-steel-plant-1786951178"></link>
            <id>https://news.lankasri.com/article/russian-missile-hits-mittals-ukraine-steel-plant-1786951178</id>
            <summary type="text">Russian missile hits Mittals Ukraine steel plant: உக்ரைனில் லட்சுமி மிட்டலின் எஃகு ஆலையில் ஏவுகணை தாக்குதல் நடைபெற்றுள்ளது.

இந்திய வம்சாவளி தொழிலதி...</summary>
            <content type="html"><![CDATA[<p>Russian missile hits Mittals Ukraine steel plant: உக்ரைனில் லட்சுமி மிட்டலின் எஃகு ஆலையில் ஏவுகணை தாக்குதல் நடைபெற்றுள்ளது.</p><h2>

இந்திய வம்சாவளி தொழிலதிபர்</h2><p>உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியின் சொந்த ஊரான கிரிவி ரிஹ் நகரில் அமைந்துள்ள இந்திய வம்சாவளி தொழிலதிபர் லட்சுமி மிட்டலின் ArcelorMittal எஃகு ஆலையில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது.
</p><p>
இந்த தாக்குதலில் இரண்டு பேர் உயிரிழந்ததுடன், 14 தொழிலாளர்கள் காயமடைந்துள்ளனர்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0de759e8-142d-4511-9da3-85393fe6fb27/26-6a82b60c689a3.webp' /></p><p>ஆலையின் முக்கியமான ஆற்றல் மற்றும் உலைப்பிரிவுகள் சேதமடைந்ததால் உற்பத்தி பகுதியளவில் நிறுத்தப்பட்டுள்ளது.
</p><h2>
பதிலடி தாக்குதல் </h2><p>இந்த தாக்குதல், உக்ரைன் ரஷ்யாவிற்கு எதிராக நூற்றுக்கணக்கான ட்ரோன்களை அனுப்பியதற்கான பதிலடி என கூறப்படுகிறது.
</p><p>
அந்த ட்ரோன் தாக்குதலில் ரஷ்யாவில் குறைந்தது ஆறு பேர் உயிரிழந்தனர். ரஷ்யாவின் பாதுகாப்புத் துறை, 822 ட்ரோன்களை தடுத்து சுட்டு வீழ்த்தியதாக தெரிவித்துள்ளது.
</p><p>
மாஸ்கோ அருகே ஒரு வீட்டில் ட்ரோன் தாக்குதலால் 83 வயது முதியவர் உயிரிழந்தார். மேலும், ரஷ்யாவின் மிகப்பெரிய ஓன்லைன் விற்பனை நிறுவனம் Wildberries கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டது.
</p><p></p><p>உக்ரைனின் பல நகரங்களில் கடந்த வாரம் மட்டும் 1,550 ட்ரோன்கள், 1,560 குண்டுகள் மற்றும் 62 ஏவுகணைகள் தாக்கியதாக ஜனாதிபதி ஜெ;லென்ஸ்கி தெரிவித்துள்ளார். அவர் தனது கூட்டாளிகளிடம் கூடுதல் வான்வழி பாதுகாப்பு உதவி வழங்குமாறு மீண்டும் கேட்டுக்கொண்டார்.</p><p>

இந்த தாக்குதல்கள் உக்ரைன்-ரஷ்யா போரின் தீவிரத்தை மேலும் அதிகரித்துள்ளன. பொதுமக்கள் உயிரிழப்புகள் அதிகரித்து வருவதால், போரின் தாக்கம் இரு நாடுகளிலும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-17T07:17:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தேனிலவு சென்றபோது மாதவிடாய்.. மணமகன் செயலால் அதிர்ந்த மணமகள்; காப்பாற்றிய ஹோட்டல் ஊழியர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/menstruation-honeymoon-groom-strangles-bride-1786950927"></link>
            <id>https://jvpnews.com/article/menstruation-honeymoon-groom-strangles-bride-1786950927</id>
            <summary type="text">இந்தியா உத்திர பிரதேசத்தை சேர்ந்த புதுமண தம்பதிகள்&amp;nbsp; தேனிலவின்போது மாதவிடாய் ஏற்பட்டதால் தனது கணவர் தன்னைத் தாக்கியதாகப், உத்தரப்பிரதேச மாநிலம் கோ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியா உத்திர பிரதேசத்தை சேர்ந்த புதுமண தம்பதிகள்&nbsp; தேனிலவின்போது மாதவிடாய் ஏற்பட்டதால் தனது கணவர் தன்னைத் தாக்கியதாகப், உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூரை சேர்ந்த பெண் ஒருவர், பெண் ஒருவர் முறைப்பாடு செய்துள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
</p><p>
இதையடுத்து, அவரது கணவர், மாமியார் மற்றும் நாத்தனார் ஆகியோர் மீது போலீஸார் முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளதாவது,</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bdf20a8b-52fd-4b95-9f0a-030f61cf05cd/26-6a82b511a9314.webp' /></p><h2>கணவர் மற்றும்&nbsp; குடும்பத்தினர்&nbsp; துன்புறுத்தியதாக பெண் முறைப்பாடு</h2><p> </p><p>

 

கடந்த 2023-ஆம் ஆண்டு மே மாதம் நிகில் மிஸ்ரா என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்தின்போது வரதட்சணையாக லட்சக்கணக்கில் பணமும், காரும் கொடுக்கப்பட்ட போதிலும், கூடுதல் வரதட்சனை கேட்டு கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் தன்னை துன்புறுத்தியதாக அந்த பெண் புகாரில் தெரிவித்துள்ளார்.</p><p></p><p>
டெல்லியைச் சேர்ந்த தனது கணவர் நிகில் மிஸ்ரா, தனக்கு மாதவிடாய் ஏற்பட்டதால் ஆத்திரமடைந்து தன்னை அறைந்தும், உதைத்தும், குத்தியும் தாக்கியதுடன், கழுத்தை நெரிக்கவும் முயன்றதாகக் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
அவரது அலறல் சத்தம் கேட்டு ஹோட்டல் ஊழியர்கள் தலையிட்டு தாக்குதலை நிறுத்தியதாக அவர் கூறினார்.

தொடர்ந்து டெல்லிக்கு திரும்பிய பின்னரும் கணவர் மற்றும் மாமியார், நாத்தனார் ஆகியோர் சேர்ந்து அவரை மனரீதியாக தொடர்ந்து சித்திரவதை செய்துள்ளனர்.</p><p></p><p> </p><p>மேலும், திருமணமான 45 நாட்களுக்குள் அதாவது ஜூலை 14 அன்று அவர் வீட்டைவிட்டு வெளியேற்றப்பட்டார். </p><p>
 
இதுகுறித்து காவல்துறையில் புகார் அளிக்க முயன்றும் பலனளிக்காத நிலையில், கோரக்பூர் மூத்த காவல் கண்காணிப்பாளர் டாக்டர் கௌஸ்துப் அவர்களின் தலையீட்டிற்கு பின் கணவர் நிகில் மிஸ்ரா மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது</p>]]></content>
            <updated>2026-08-17T07:12:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Tony</name>
            </author>
            <title type="text"><![CDATA[என்றைக்குமே உடலில் அழியாத காயங்கள் என்னிடம் உள்ளது, காதல் தோல்வி குறித்து அனுபமா அதிர்ச்சி தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/anupama-shared-her-love-failure-1786943288"></link>
            <id>https://cineulagam.com/article/anupama-shared-her-love-failure-1786943288</id>
            <summary type="text">அனுபமா&amp;nbsp;ப்ரேமம் என்ற ஒரே படத்தின் மூலம் ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமா ரசிகர்களையும் கவர்ந்து இழுத்தவர் அனுபமா. இவர் இதை தொடர்ந்து தமிழ், தெலுங்கு ...</summary>
            <content type="html"><![CDATA[<h2>அனுபமா</h2><p>&nbsp;ப்ரேமம் என்ற ஒரே படத்தின் மூலம் ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமா ரசிகர்களையும் கவர்ந்து இழுத்தவர் அனுபமா.</p><p> இவர் இதை தொடர்ந்து தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் கால் பதித்தார். தமிழில் கொடி, பைசன் ஆகிய படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். </p><p>இந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் காதல் தோல்வி குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/613261c2-c503-49fc-b41d-e98ddf3d9e98/26-6a82973bcc4aa.webp' /></p><p>அதில் தன் காதலர் கொடுத்த வலி மிகப்பெரியது, அது இன்றும் என்றுமே சரிசெய்ய படமுடியாத காயங்கள் என் உடலில் உள்ளது என்ற தகவலை கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.</p><p> இதை கேட்ட பலரும் மிகப்பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அனுபமா இதிலிருந்து கண்டிப்பாக மீண்டு வரவேண்டும் என கருத்து கூறி வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-08-17T07:10:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜனாதிபதி அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/mujiber-slams-npp-government-1786950523"></link>
            <id>https://tamilwin.com/article/mujiber-slams-npp-government-1786950523</id>
            <summary type="text">&amp;nbsp;ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
</p><p>ஜனாதிபதி தொடர்ந்தும் பதவியில் இருந்து அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் எனவும் அவரை இடையில் போக விடமாட்டோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
</p><p>எல்லாவற்றையும் விட்டுச் செல்வதாக ஜனாதிபதி அண்மையில் கூறியது வேறு அர்த்தத்தில் ஆகும் எனவும் அவர் பதவியை விட்டு விலகுவதாக அர்த்தப்படுத்த வில்லை எனவும் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4e8bab84-876b-4b48-9fd8-69bbf0c14458/26-6a82b37d6caea.webp' /></p><p>
</p><p>கடந்த காலங்களில் நாம் ஆட்சியில் இருந்தபோது திட்டங்களை முன்னெடுப்பதற்கு பல்வேறு வழிகளில் இடையூறு ஏற்படுத்தியதாகக் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>இந்த அரசாங்கம் கடந்த கால அரசாங்கங்கள் முன்னெடுத்த திட்டங்களையே முன்னோக்கி கொண்டு செல்வதாக தெரிவித்துள்ளார்.
</p><p>சர்வதேச நாணய நிதியம், மேற்குலக நாடுகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் அழுத்தங்களுக்கு இந்த அரசாங்கம் அடிபணிந்து செயற்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.</p><p>
எனவே எங்களால் செய்ய முடியாதவற்றை இவர்களைக் கொண்டேனும் இந்த நாட்டு மக்களுக்கு செய்து கொள்ள வேண்டும் எனவே இவர்கள் ஆட்சியில் இருக்க வேண்டும் என்றே விரும்புகின்றோம் அவ்வாறு இவர்களைப் போக விட முடியாது எனவும் முஜிபுர் ரஹ்மான் மேலும் தெரிவித்துள்ளார்.
</p><p>ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இந்த விடயங்களைக் குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-17T07:08:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[27 வயதில் தூக்கத்திலேயே உயிரிழந்த பிரபல இளம் நடிகை... ரசிகர்கள் ஷாக்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/actress-ananya-raj-dies-at-27-in-sleep-1786943591"></link>
            <id>https://cineulagam.com/article/actress-ananya-raj-dies-at-27-in-sleep-1786943591</id>
            <summary type="text">அனன்யா ராஜ்பிரபலங்களில் இறப்பு செய்தி எப்போதும் ரசிகர்களால் ஏற்றுக்கொள்ளவே முடியாது. அப்படி பாலிவுட் சினிமாவின் பிரபல நடிகை உயிரிழந்ததாக வந்த தகவல் ரச...</summary>
            <content type="html"><![CDATA[<h2>அனன்யா ராஜ்</h2><p>பிரபலங்களில் இறப்பு செய்தி எப்போதும் ரசிகர்களால் ஏற்றுக்கொள்ளவே முடியாது. </p><p>அப்படி பாலிவுட் சினிமாவின் பிரபல நடிகை உயிரிழந்ததாக வந்த தகவல் ரசிகர்களை கடும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ஹிந்தியில் 7 ஹவர்ஸ் டு ஹோ, தி பைனல் எக்சிட், கோஸ்ட் போன்ற படங்களில் நடித்தவர் தான் அனன்யா ராஜ்.</p><p> 27 வயதான இவர் தெலுங்கில் தஹ்டிலி என்ற படத்திலும் நடித்துள்ளார். மேலும் பல்வேறு குடும்படங்கள், இசை நிகழ்ச்சிகளிலும் தொகுப்பாளராக பணியாற்றியவர் வெப் தொடர்களிலும் நடித்துள்ளார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/80d04654-b157-4923-89d2-8d83d2e85511/26-6a829acb02e79.webp' /></p><h2>சோக செய்தி</h2><p>
பிஸியாக நடித்து வந்தவர் ஒரு கட்டத்தில் சினிமா பக்கமே காணவில்லை, சரி கொஞ்சம் இடைவேளை எடுத்துள்ளார் என ரசிகர்கள் நினைத்தார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d5258c32-efeb-4870-a3b7-e7bd15018257/26-6a829acbc023b.webp' /></p><p> </p><p>இந்த நேரத்தில் தான் அனன்யா ராஜ் பற்றி ஒரு திடுக்கிடும் தகவல் வந்தது. அதாவது அனன்யா ராஜ் மரணமடைந்துவிட்டதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். </p><p>உடல்நலம், மனநலம் தொடர்பான பிரச்சினைகளை சந்தித்து வந்த அனன்யா ராஜ் கடந்த மாதம் 15ம் தேதி வீட்டில் உறக்கத்திலேயே மரணமடைந்துவிட்டதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இந்த செய்தி ரசிகர்களுக்கு கடும் சோகத்தை கொடுத்துள்ளது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-17T07:03:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சமூக வலைத்தளங்களில் சர்ச்சையை ஏற்படுத்திய குரல் பதிவுக்கு எதிராக தமிழர் பகுதியில் போராட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/people-in-north-protest-against-voice-recording-1786949888"></link>
            <id>https://tamilwin.com/article/people-in-north-protest-against-voice-recording-1786949888</id>
            <summary type="text">அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள் தொடர்பில் விரும்பத்தகாத கருத்துக்களை தெரிவித்த
அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள் தொடர்பில் விரும்பத்தகாத கருத்துக்களை தெரிவித்த
அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
</p><p>
இந்த போராட்டமானது, இன்று(17.08.2026) வடமாகாண சபையின் முன்பாக முன்னெடுக்கப்பட்டது.</p><h2>


சர்ச்சையை தூண்டிய குரல் பதிவு</h2><p>
வடக்கில் பணியாற்றும் அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள் தொடர்பில்,
வடக்கில் முக்கிய பொறுப்புக்களில் உள்ள அதிகாரிகள் சிலர் கூடி விரும்பத்தகாத
கருத்துக்களை தங்களிடையே பகிர்ந்து கொண்டமை தொடர்பிலான ஒலி பதிவு சமூக
ஊடகங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பி இருந்தன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3f6a8007-8643-40ab-9e4c-230735daa619/26-6a82b23734af4.webp' /></p><p>
</p><p>
குறித்த ஒலிப்பதிவில் , உள்ள குரல்கள் தொடர்பில் ஆய்வு செய்து ,
அந்த குரல்களுக்கு உரிய அதிகாரிகளை அடையாளம் கண்டு அவர்களுக்கு எதிராக கடுமையான
ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அபிவிருத்தி
உத்தியோகஸ்தர்கள் வலியுறுத்தி வந்தனர்.</p><h2>

நேரில் சந்தித்த எம்.பி</h2><p>

இந்த நிலையில், சுகவீன விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்ட வடமாகாண அபிவிருத்தி
உத்தியோகஸ்தர்கள் , வடமாகாண சபையின் முன்பாக
கண்டன போராட்டத்திலும் ஈடுபட்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/17e5b111-c474-42ba-b7e1-818e879881d6/26-6a82b2381d19a.webp' /></p><p>

போராட்டத்தில் ஈடுபட்டவர்களை நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் நேரில் சந்தித்து , அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து கொண்டார்.
</p><p>
இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரனுக்கும் வடமாகாண ஆளுநர் ஊடாக
ஜனாதிபதிக்கும் அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள் மனு ஒன்றையும் கையளித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e3f396c7-60ec-49fb-ac36-ee1f99fa172c/26-6a82b238eb95b.webp' /></p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-17T07:03:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Fathima</name>
            </author>
            <title type="text"><![CDATA[நரம்பில் ஏறிய பாம்பின் விஷம்: தம்பியை காப்பாற்ற அண்ணனின் பாசப்போராட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/brothers-150-slaps-save-sibling-snake-bite-1786949859"></link>
            <id>https://manithan.com/article/brothers-150-slaps-save-sibling-snake-bite-1786949859</id>
            <summary type="text">இந்தியாவின் உத்தரபிரதேசத்தில் தம்பியை காப்பாற்ற அண்ணன் போராடிய செயல் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.உத்தரபிரதேசத்தின் ஹார்டோய் மாவட்டத்தை சேர்ந்தவர் அர...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியாவின் உத்தரபிரதேசத்தில் தம்பியை காப்பாற்ற அண்ணன் போராடிய செயல் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.</p><p>உத்தரபிரதேசத்தின் ஹார்டோய் மாவட்டத்தை சேர்ந்தவர் அருண்(வயது 21), சமீபத்தில் வயலில் வைக்கோல் கட்டுகளை எடுக்கும்போது எதிர்பாராதவிதமாக பாம்பு தீண்டியுள்ளது.
</p><p>
இதனால் அவருக்கு விஷம் வேகமாக பரவியதால் மயக்கம் அடையத் தொடங்கினார், இதனை கவனித்த அவரது அண்ணன் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/370c3240-eaaa-4cb6-9f8b-1f984bf9575e/26-6a82b1f48de0f.webp' /><br></p><p>

அவரை பரிசோதித்த மருத்துவர்கள் விஷம் நரம்பு மண்டலத்தை பாதித்துள்ளதால் சுயநினைவை இழக்கக்கூடும் என எச்சரித்துள்ளனர், மேலும் தூங்கவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என கூறியுள்ளனர்.
</p><p>
இதனால் பதறிப்போன அண்ணன் ஒரு மணிநேரத்துக்கு மேலாக தம்பியை தூங்கவிடாமல் பார்த்துக்கொண்டார், அவர் கண்ணை மூடும்போதெல்லாம் கன்னத்தில் அறைந்து எழுப்பிக்கொண்டே இருந்தார்.
</p><p>
அந்நேரத்தில் மருத்துவரின் தீவிர சிகிச்சையால் அருண் உயிர்பிழைத்தார், தம்பியை காப்பாற்ற அண்ணன் சுமார் 150 முறை அவர் கன்னத்தில் அறைந்தார், அவரது பாசப்போராட்டம் அங்கிருந்தவர்களை நெகிழவைத்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7cab980c-b6ab-4b2d-9432-faf12b635259/26-6a82b1f3dcf25.webp' /><br></p>]]></content>
            <updated>2026-08-17T07:02:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[புதிதாக வீடுகளை நிர்மாணிப்போர் அவதானம் - விளம்பர மோசடி தொடர்பில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/police-warn-of-online-building-material-scams-1786949016"></link>
            <id>https://tamilwin.com/article/police-warn-of-online-building-material-scams-1786949016</id>
            <summary type="text">சமூக வலைத்தளங்கள் ஊடாக கட்டடப்பொருட்களை விற்பனை செய்வதாகக்கூறி முன்னெடுக்கப்படும் நிதி மோசடிகள் குறித்து பொதுமக்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>சமூக வலைத்தளங்கள் ஊடாக கட்டடப்பொருட்களை விற்பனை செய்வதாகக்கூறி முன்னெடுக்கப்படும் நிதி மோசடிகள் குறித்து பொதுமக்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
</p><p>
கூரைத்தகடுகள், சிமெந்து மற்றும் ஏனைய கட்டடப்பொருட்களை சந்தை விலையை விட கணிசமாக குறைந்த விலைக்கு தருவதாக விளம்பரம் செய்து மோசடியில் ஈடுபடுவதாக பொலிஸ் தலைமையகம் எச்சரித்துள்ளது.</p><h2>போலியாக பணப்பரிவர்த்தனை&nbsp;</h2><p> 

குறித்த பொருட்களை சந்தேகநபர்கள் ஒப்பந்த அடிப்படையில் வழங்குவதாக வாடிக்கையாளரின் பகுதியில் உள்ள வியாபாரியை தொடர்புகொண்டு, அந்த பொருட்களை வாடிக்கையாளரின் முகவரிக்கு விநியோகிக்க ஏற்பாடு செய்வதாக போலியாக பணப்பரிவர்த்தனை செய்கின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1beafc29-18a6-45f9-b6a4-fbdc456fac7a/26-6a82b1c29177a.webp' /></p><p>இதனையடுத்து பொருட்கள் வாடிக்கையாளர்களின் முகவரிக்கு வந்ததும் சாரதி பணம் கேட்கும் போதே தாம் ஏமாற்றப்பட்டதை வாடிக்கையாளர்கள் அறிவதாகவும் கூறப்படுகின்றது.</p><p>

இத்தகைய சம்பவங்கள் தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. </p><p>

 சமூக வலைத்தளங்கள் மூலம் குறைந்த விலையில் பொருட்களைக் கொள்முதல் செய்யும் போது விற்பனையாளர்களின் அடையாளம் மற்றும் விளம்பரங்களின் உண்மைத் தன்மையை உறுதிப்படுத்துமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.</p><p>&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-17T07:01:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ். நயினாதீவு அருகே படகு விபத்து - உடனடி விசாரணைக்கு அமைச்சர் உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/boat-accident-near-nainativu-jaffna-1786948027"></link>
            <id>https://ibctamil.com/article/boat-accident-near-nainativu-jaffna-1786948027</id>
            <summary type="text"> யாழ். நெடுந்தீவு நோக்கிப் பயணித்த படகு விபத்துக்குள்ளானமைக்கான காரணம் என்ன என்பது தொடர்பில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அதிகாரிகளிடம் விரிவான தக...</summary>
            <content type="html"><![CDATA[<p> யாழ். நெடுந்தீவு நோக்கிப் பயணித்த படகு விபத்துக்குள்ளானமைக்கான காரணம் என்ன என்பது தொடர்பில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அதிகாரிகளிடம் விரிவான தகவல்களை கோரியுள்ளார்.</p><p>இதேவேளை, நயினாதீவுக்கு அருகில் படகு விபத்துக்குள்ளானதில் மீட்கப்பட்ட 10 பேரும் மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.&nbsp;&nbsp;</p><p>யாழ்ப்பாணம், குறிக்கட்டுவான் இறங்குதுறையிலிருந்து நெடுந்தீவு நோக்கிப்
பயணித்த 10 பயணிகளைக் கொண்ட படகு, நயினாதீவு அருகே இன்று 16.08.2026 மாலை
விபத்துக்குள்ளானது.</p><p></p><h2>மீட்பு நடவடிக்கை</h2><p>

இரண்டு பெண்கள் மற்றும் எட்டு ஆண்கள் பயணித்த குறித்த படகு விபத்துக்குள்ளானமை
தொடர்பில் தகவல் கிடைத்த உடனேயே, கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள்
அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் இலங்கை கடற்படையினரைத் தொடர்புகொண்டு,
உடனடியாக மீட்பு நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு அறிவுறுத்தினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/26cf0417-714d-4d83-9b4c-010380592bd0/26-6a82b0886a02b.webp' /></p><p>

இதனையடுத்து, இலங்கை கடற்படையினர், நயினாதீவு மற்றும் நெடுந்தீவு மக்களின்
ஒத்துழைப்புடன் துரிதமாக மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டு, விபத்தில் சிக்கிய 10
பயணிகளையும் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.</p><p>
மீட்கப்பட்ட அனைவரும் மேலதிக சிகிச்சைகளுக்காக நயினாதீவு வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.</p><p></p><h2>விபத்துக்குள்ளானமைக்கான காரணம்</h2><p>
இந்நிலையில், குறித்த படகு விபத்துக்குள்ளானமைக்கான காரணம் என்ன என்பது
தொடர்பில் அமைச்சர் அதிகாரிகளிடம் விரிவான தகவல்களை கோரியுள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f0f96608-2e5d-4aab-8c5e-fb09c22eb82b/26-6a82b0879a0d2.webp' /></p><p>அத்துடன், படகில் பயணித்தவர்களுக்கு போதுமான பாதுகாப்பு அங்கிகள் (Life
Jackets) வழங்கப்பட்டிருந்தனவா, படகின் பாதுகாப்பு ஏற்பாடுகள் உரிய முறையில்
மேற்கொள்ளப்பட்டிருந்தனவா என்பன தொடர்பிலும் விசாரணை நடத்தி தகவல் தருமாறு
அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார்</p><p>பயணிகளின் உயிர் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் கடற்பயணங்களுக்கான
பாதுகாப்பு நடைமுறைகள் கடுமையாக பின்பற்றப்பட வேண்டும் எனவும், இவ்வாறான
சம்பவங்கள் மீண்டும் இடம்பெறாத வகையில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள
வேண்டும் எனவும் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அதிகாரிகளுக்கு
அறிவுறுத்தியுள்ளார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-17T06:56:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஸ்பெயின் நாட்டுக்குள் நுழைய படையெடுக்கும் அகதிகள்; படையினர் முறியடிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/refugees-storming-into-spain-troops-repel-1786949858"></link>
            <id>https://canadamirror.com/article/refugees-storming-into-spain-troops-repel-1786949858</id>
            <summary type="text">ஸ்பெயின் நாட்டுக்குள் நுழைய படையெடுக்கும் அகதிகள்; படையினர் முறியடிப்பு

 மொராக்கோ நாட்டின் எல்லை வழியாக நூற்றுக்கணக்கான அகதிகள் மற்றும் புலம்பெயர்ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஸ்பெயின் நாட்டுக்குள் நுழைய படையெடுக்கும் அகதிகள்; படையினர் முறியடிப்பு

 மொராக்கோ நாட்டின் எல்லை வழியாக நூற்றுக்கணக்கான அகதிகள் மற்றும் புலம்பெயர்ந்தோர்கள் ஒரே நேரத்தில் ஸ்பெயின் நாட்டுக்குள் ஊடுருவ முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><p> 

ஆப்பிரிக்க கண்டத்தின் வடகோடியில் அமைந்துள்ள ஸ்பெயின் நாட்டின் தன்னாட்சி நகரமான செவுட்டாவிற்குள் (Ceuta),அகதிகள் மற்றும் புலம்பெயர்ந்தோர்கள் ஊடுருவ முயன்றுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/02b71a6b-8150-4c2e-9aa7-335cea405b8e/26-6a82b0e3f17d3.webp' /></p><h2>முன்கூட்டியே உளவுத்துறை தகவல்கள்</h2><p> </p><p>

சமூக வலைதளங்கள் வாயிலாகத் திட்டமிடப்பட்டு முன்னெடுக்கப்பட்ட இந்தத் திரளான எல்லைக் கடக்கும் முயற்சியை, மொராக்கோ நாட்டுப் பாதுகாப்புப் படையினர் அதிரடியாகத் தடுத்து நிறுத்தியுள்ளனர்.</p><p>

மொராக்கோவின் எல்லை நகரமான ஃபினிடெக் (Fnideq) பகுதியில் உள்ள மலைப்பகுதிகளில் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் திரண்டு, ஸ்பெயின் எல்லையை நோக்கி முன்னேற முயன்றனர்.</p><p> இதனை முன்கூட்டியே உளவுத்துறை தகவல்கள் மூலம் அறிந்த மொராக்கோ காவல்துறையினர் மற்றும் எல்லைப் பாதுகாப்புப் படையினர், ட்ரோன்கள் மற்றும் நவீன தடுப்புக் காவல்கள் மூலம் ஒட்டுமொத்தப் பகுதியையும் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.
</p><p>
முன்னதாக, ஜூலை மாத இறுதியில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கடல் வழியாக நீந்தியும், தடுப்புச் சுவர்களைக் கடந்தும் செவுட்டாவிற்குள் புகுந்த சம்பவம் பெரும் அரசியல் மற்றும் சமூக நெருக்கடியை ஏற்படுத்தியிருந்தது.</p><p> 

தொடர்ந்து, ஆகஸ்ட் 15-ஆம் தேதி மீண்டும் மாபெரும் அளவில் எல்லையை முற்றுகையிட்டு ஊடுருவுமாறு சமூக வலைதளங்களில் மர்மக் கணக்குகள் மூலம் பிரசாரம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, இரு நாட்டு எல்லைகளிலும் இராணுவ வீரர்களும் காவல்துறையினரும் பெருமளவில் குவிக்கப்பட்டிருந்தனர்.</p><p>

ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒரே ஆப்பிரிக்கப் நில எல்லையாகச் செயல்படும் செவுட்டா மற்றும் மெலில்லா பகுதிகள், சட்டவிரோதமாக ஐரோப்பாவிற்குள் நுழைய முனையும் அகதிகளின் முதன்மை இலக்காக இருந்து வருகின்றன. </p><p>அசம்பாவிதங்களைத் தவிர்க்கவும், சட்டவிரோதக் கடத்தல்களைத் தடுக்கவும் ஸ்பெயின் மற்றும் மொராக்கோ நாடுகள் இணைந்து எல்லைப் பகுதிகளில் தீவிரக் கண்காணிப்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றன.</p>]]></content>
            <updated>2026-08-17T06:55:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Bavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை விவகாரம்..! முன்னெடுக்கப்பட்டுள்ள கவனஈர்ப்புப் போராட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/kalmunai-hospital-issue-protest-today-1786945803"></link>
            <id>https://tamilwin.com/article/kalmunai-hospital-issue-protest-today-1786945803</id>
            <summary type="text">கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் சிற்றூழியர்களின் உடைவிவகாரத்தினை
பூதாகரமாக்கி வைத்தியசாலைக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டுவரும் இனரீதியான
பிரசாரத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் சிற்றூழியர்களின் உடைவிவகாரத்தினை
பூதாகரமாக்கி வைத்தியசாலைக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டுவரும் இனரீதியான
பிரசாரத்தினை கண்டித்து கல்முனை ஆதார வைத்தியசாலையில் கவனஈர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
</p><p>
கல்முனை வடக்கு ஆதார வைத்திய சாலையில், சிற்றூழியர்களின் சீருடை அணியாமல்
மதசார்பு ஆடை அணிந்து வருகை தரும் புதிய நியமனம் பெற்ற 9 பேரின் சீருடை
அவமதிப்பை எதிர்த்து இன்று (17) இடம்பெற்ற எதிர்ப்பு நடவடிக்கை 6 தொழில்
சங்கங்களின் ஆதரவுடன் அமைதியாக சிற்றூழியர்களின் சங்கத்தினரால்
நடாத்தப்பட்டுள்ளது.</p><h2>&nbsp;சிற்றூழியர்களின் உடைவிவகாரம்</h2><p>
</p><p>
அரச சுற்று நிரூபத்தின் அடிப்படையில் தாங்கள் சீருடைகளை அணிவந்துவரும்
நிலையில் சுகாதார அமைச்சினால் 06-08-2026அன்று சிலர் நியமனங்களைப்பெற்று
வைத்தியசாலைக்குவந்த சுகாதார சிற்றூழியர்கள் சிலர் சீருடை தொடர்பில்
ஏற்படுத்திய குழப்பங்களை சில சக்திகள் இனவாத ரீதியில் முன்னெடுக்கும்
செயற்பாடுகளை கண்டித்தும் அவ்வாறான செயற்பாடுகளை நிறுத்தகோரியும் இதன்போது
கோசங்கள் எழுப்பப்பட்டன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/05684751-6668-4afb-a23e-e0965a20fadb/26-6a82a266c3240.webp' /></p><p>
</p><p>
இதன்போது சீருடையின்றி வருபவர்களை கடமைக்கு அனுமதிக்காதே,சமூக வலைத்தளங்களே
எங்களைக்கொல்லதே,அனைவருக்கும் பொதுவான சீரூடையை அணிய அனுமதியுங்கள்,சீருடை
தொடர்பான சுற்றுநிரூபத்தினை உடன் அமுல்படுத்து,வைத்தியசாலைக்கு எதிராக
அவதூருகளை பரப்பாதீர்கள் போன்ற சுலோகங்களை ஏந்தியவாறு போராட்டம்
முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது மத ரீதியான சீருடைக்கு அனுமதி இல்லை, நிர்வாகத்திற்கு கட்டுப்படாத
புதிய பெண் ஊழியர்களுக்கு சட்ட நடவடிக்கை எடுங்கள், சட்டம் கலாச்சார உடையை
அங்கிகரிக்குமானால் இனி சீருடை என்ற விதியை அகற்றுங்கள்,சகல மதத்தவருக்கும்
சீருடை விலக்கை தாருங்கள் போன்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
</p><p>
இந்த கோரிக்கைகளுக்கான தீர்வுகள் வழங்கப்படாவிட்டால் தேசிய ரீதியில்
போராட்டங்களை முன்னெடுக்கப்போவதாக இங்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p><br><br><b><i>மேலதிக தகவல் - குமார்</i></b></p>]]></content>
            <updated>2026-08-17T06:53:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாசிக்கிடம் 250 மில்லியன் ரூபா லஞ்சம் கோரியுள்ள தேசபந்து! மீண்டும் சர்ச்சையில் விஜயதாச ராஜபக்ச]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/shiran-basik-case-updates-1786947874"></link>
            <id>https://ibctamil.com/article/shiran-basik-case-updates-1786947874</id>
            <summary type="text">
துபாயில் கைது செய்யப்பட்ட சர்வதேச போதைப்பொருள் கடத்தல்காரரான ஷிரான் பாசிக் இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டதன் பின்னணியில் பல அதிர்ச்சித் தகவல்கள் வெளிச்...</summary>
            <content type="html"><![CDATA[<p>
துபாயில் கைது செய்யப்பட்ட சர்வதேச போதைப்பொருள் கடத்தல்காரரான ஷிரான் பாசிக் இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டதன் பின்னணியில் பல அதிர்ச்சித் தகவல்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.
</p><p>
அவர் இலங்கையிலிருந்து 2018 ஆம் ஆண்டு துபாய்க்குத் தப்பிச் சென்ற போதிலும், அக்காலகட்டத்தில் இருந்த அரசியல் செல்வாக்கு மற்றும் அரசின் ஆசி காரணமாக உள்ளூர் உயர் நீதிமன்றங்களில் அவர் மீது பலமான குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்படாமல் தவிர்க்கப்பட்டதாக கூறப்படுகிறது.</p><p>

அவருக்குச் சொந்தமான சோல் பீச் ஹோட்டலுக்குத் தேவையான மதுபான உரிமங்கள் மற்றும் கடற்கரை பாதுகாப்புத் திணைக்களத்தின் அனுமதிகளைப் பெறுவதற்கு முன்னாள் அமைச்சர்கள், அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உயர் காவல்துறை அதிகாரிகளின் தொடர்புகள் முக்கியப் பங்காற்றியுள்ளதாக தெரியவருகிறது.</p><p></p><h2>250 மில்லியன் ரூபாய் லஞ்சம்</h2><p>
</p><p>
சிரேஷ்ட காவல்துறை அதிகாரிகள், எஸ்பி-க்கள் மற்றும் காவல்நிலையப் பொறுப்பதிகாரிகள் இந்த ஹோட்டலுக்கு அடிக்கடி வருகை தந்து இலவச உணவு மற்றும் உபசரிப்புகளைப் பெற்றுச் சென்றுள்ளதுடன், போதைப்பொருள் கடத்தல்காரர்களின் ஆதரவையும் அனுபவித்துள்ளதாக கண்டறியப்ப்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0f875004-0a41-4b50-901e-bd7be4056ba4/26-6a82ae46e9155.webp' /></p><p>

இந்நிலையில், தேஷபந்து தென்னகோன் பதில் காவல்துறை மா அதிபராகப் பொறுப்பேற்ற பின்னர், தனது பதவியை உறுதிப்படுத்துவதற்காக வேண்டிய கூட்டங்கள் மற்றும் பிரச்சாரங்களை இந்த சோல் பீச் ஹோட்டல் வசதிகளைப் பயன்படுத்தியே நடத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது. </p><p>

மேலும், பதில் காவல்துறை மா அதிபர் பதவியைப் பாதுகாத்துத் தருவதற்காக தேஷபந்து தென்னகோன், ஷிரான் பாசிக்கிடம் 250 மில்லியன் ரூபாய் லஞ்சம் கோரியதாகவும், அந்தப் பணத்தைக் கொடுக்க ஷிரான் பாசிக் மறுத்ததால் அதற்குப் பழிவாங்கும் நடவடிக்கையாகவே சோல் பீச் ஹோட்டல் இடிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.</p><h2>பாசிக் மகன் -&nbsp;விஜயதாச ராஜபக்ச தொடர்பு</h2><p>

இதற்கிடையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னதாக ஹேவ்லோக் சிட்டி குடியிருப்பு வளாகத்தில் ஷிரான் பாசிக்கின் மகன் நதீம் பாசிக் கைது செய்யப்பட்ட சம்பவமும் கவனத்தைப் பெற்றுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a31226c7-def8-4939-a498-dca564287ab5/26-6a82ae47a3dbd.webp' /></p><p> </p><p>

நதீம் பாசிக் அங்கு குடியேறுவதற்கு முன்னர், இலங்கையின் சர்ச்சைக்குரிய பிரபல நடிகை ஒருவர் அந்த வீட்டில் வசித்து வந்துள்ளார்.</p><p> </p><p>

ஷிரான் பாசிக்கின் கறுப்பு பணத்தை சலவை செய்வதற்கு இந்த நடிகை பயன்படுத்தப்பட்டதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், அவருக்கு முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச மற்றும் அவரது மகன் ஆகியோர் சட்ட ஆலோசனைகளை வழங்கியுள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளது.
</p><p>
இந்நிலையில், இவ்வாறு காவல்துறை மற்றும் அரசியல்வாதிகளின் தொடர்ச்சியான பாதுகாப்பும் ஆதரவுமே ஷிரான் பாசிக் போன்ற ஒரு கடத்தல்காரர் சர்வதேச அளவில் உருவெடுக்க முதன்மையான காரணியாக அமைந்துள்ளதாக கருதப்படுகிறது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-17T06:51:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இத்தாலியில் 770 கோடி பெறுமதியான அரிய ஓவியங்கள் திருட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/four-paintings-worth-7-7-billion-stolen-in-italy-1786944556"></link>
            <id>https://ibctamil.com/article/four-paintings-worth-7-7-billion-stolen-in-italy-1786944556</id>
            <summary type="text">இத்தாலியின் சிசிலி தீவில் உள்ள மெசினா அருங்காட்சியகத்தில் புகழ்பெற்ற ஓவியர் அன்டோனெல்லோ டா மெசினா வரைந்ததாகக் கூறப்படும் ரூ.770 கோடி மதிப்புள்ள நான்கு...</summary>
            <content type="html"><![CDATA[<p>இத்தாலியின் சிசிலி தீவில் உள்ள மெசினா அருங்காட்சியகத்தில் புகழ்பெற்ற ஓவியர் அன்டோனெல்லோ டா மெசினா வரைந்ததாகக் கூறப்படும் ரூ.770 கோடி மதிப்புள்ள நான்கு அரிய ஓவியங்கள் திருடப்பட்டுள்ளன.</p><p>

இந்தத் திருட்டுச் சம்பவம் நேற்று முன்தினம் (15.08.2026) இரவு&nbsp; 10 மணியளவில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

அருங்காட்சியகத்தில் பாதுகாப்புப் பணியாளர்கள் கடமையில் இருந்தபோதிலும், மர்ம நபர்கள் பாதுகாப்பு மற்றும் எச்சரிக்கை அலாரம் அமைப்புகளை முறியடித்து அருங்காட்சியகத்திற்குள் நுழைந்துள்ளனர்.</p><p></p><h2>&nbsp;770 கோடி பெறுமதியான 4 ஓவியங்கள்&nbsp;</h2><p>

அதன்பின்னர், ஓவியங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த கண்ணாடிப் பாதுகாப்புப் பெட்டியை உடைத்து, அதற்குள் வைக்கப்பட்டிருந்த நான்கு ஓவியங்களையும் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2bc6d400-8853-46c4-94ae-59c0e8876bdc/26-6a82a76411952.webp' /></p><p>எனினும், தப்பிச் செல்லும் அவசரத்தில் திருடப்பட்ட ஓவியங்களில் இரண்டு ஓவியங்களை சம்பவ இடத்திலேயே விட்டுச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>மீதமுள்ள இரண்டு ஓவியங்கள் தற்போது காணாமல் போயுள்ள நிலையில், அவற்றை மீட்பதற்காக இத்தாலிய காவல்துறையினர் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.</p><p>
</p><p>
கொள்ளையர்கள் அருங்காட்சியகத்திற்குள் எவ்வாறு நுழைந்தனர், பாதுகாப்பு மற்றும் அலாரம் அமைப்புகளை எவ்வாறு செயலிழக்கச் செய்தனர், மேலும் திருடப்பட்ட ஓவியங்களை எங்கு கொண்டு சென்றிருக்கலாம் என்பது தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
</p><p>
வரலாற்று மற்றும் கலைத்துறை ரீதியாக மிகுந்த பெறுமதி வாய்ந்ததாகக் கருதப்படும் இந்த ஓவியங்கள் சர்வதேச கலைச் சந்தையில் விற்பனை செய்யப்படுவதைத் தடுக்கும் வகையிலும் அதிகாரிகள் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr">Three paintings by Renoir, Cézanne and Matisse worth millions of euros that were stolen earlier this year in a three-minute heist were recovered by Italian police — and five suspects were arrested. <a href="https://t.co/LiHKuJ7Q7a">pic.twitter.com/LiHKuJ7Q7a</a></p>&mdash; CBS Mornings (@CBSMornings) <a href="https://x.com/CBSMornings/status/2088679648586588470?ref_src=twsrc%5Etfw">August 15, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-17T06:47:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையை அவுஸ்திரேலியாவாக மாற்றுவோம்..! அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி உறுதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/handunneththi-vows-transform-sri-lanka-australia-1786947371"></link>
            <id>https://tamilwin.com/article/handunneththi-vows-transform-sri-lanka-australia-1786947371</id>
            <summary type="text">சுதந்திரம், சட்டத்தின் முன் சமத்துவம் மற்றும் அவுஸ்திரேலியாவைப் போன்ற வாய்ப்புகளைக் கொண்ட ஒரு நாடாக இலங்கை மாற்றப்படும் என்று கைத்தொழில் மற்றும் தொழில...</summary>
            <content type="html"><![CDATA[<p>சுதந்திரம், சட்டத்தின் முன் சமத்துவம் மற்றும் அவுஸ்திரேலியாவைப் போன்ற வாய்ப்புகளைக் கொண்ட ஒரு நாடாக இலங்கை மாற்றப்படும் என்று கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.
</p><p>
மெல்பேர்னில் நடைபெற்ற Sri Lankan Entrepreneurs’ Night 2026 நிகழ்வில் வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களிடம் உரையாற்றிய போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.</p><h2>சுதந்திரமான வாழ்க்கை</h2><p>
</p><p>
“இங்கு இருப்பவர்களில் பெரும்பாலானவர்கள் இலங்கையர்கள். நாம் பேசும் மொழி வேறுபட்டாலும், ஒரே நாட்டைச் சேர்ந்தவர்கள். கல்வி, தொழில் அல்லது சுதந்திரமான வாழ்க்கைக்காக நீங்கள் அவுஸ்திரேலியாவுக்கு வந்திருக்கலாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f5a30210-2091-4573-8468-03aec696952d/26-6a82adf998ef7.webp' /></p><p>
</p><p>
 உங்களுடனும் எங்களுக்கு வாக்களித்த 18 மில்லியன் மக்களுடனும் இணைந்து, குறுகிய காலத்திற்குள் இலங்கையை அவுஸ்திரேலியாவைப் போன்ற நாடாக மாற்றுவோம் என நான் உறுதியளிக்கிறேன்” என அவர் தெரிவித்துள்ளார்.
</p><p>
எதிர்கால தலைமுறையினர் சுதந்திரமாக கல்வி கற்கவும் வாழவும், அனைவருக்கும் சமமான சட்டங்கள் நடைமுறையில் இருக்கும் வகையிலும், மக்கள் வாழ விரும்பும் நாடாக இலங்கையை உருவாக்குவதே நோக்கம் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.</p><h2>பொருளாதார சவால்</h2><p>
</p><p>
இலங்கையின் தற்போதைய பொருளாதார சவால்களை எதிர்கொள்ள வலுவான உற்பத்தி அடிப்படையிலான பொருளாதாரத்தை உருவாக்குவதில் வெளிநாடுகளில் உள்ள இலங்கை தொழில் முனைவோர் மற்றும் முதலீட்டாளர்களுக்கு முக்கிய பங்கு இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/33175ab9-8e22-40de-a581-5dfdca0531b2/26-6a82adfa59817.webp' /></p><p>

ஊழலற்ற, முதலீட்டுக்கு உகந்த மற்றும் வெளிப்படையான புதிய பொருளாதார சூழல் ஏற்கனவே உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர், தொழில் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்தை முன்னெடுத்துச் செல்ல இலங்கை தொழில் முனைவோர் முன்வர வேண்டும் எனவும் அழைப்பு விடுத்துள்ளார்.</p><p>

அவுஸ்திரேலியா–இலங்கை வர்த்தக மன்றத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வு மெல்பேர்னில் உள்ள The Grandeur மண்டபத்தில் நடைபெற்றது.</p><p> இலங்கையின் மெல்பேர்ன் கொன்சல் ஜெனரல் பிரதீபா சாரம், அவுஸ்திரேலிய பெடரல் நாடாளுமன்ற உறுப்பினர் கசாண்ட்ரா, ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் தலைவர் மங்கள விஜேசிங்க மற்றும் முதலீட்டுச் சபையின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி சுலக்ஷன ஜயவர்தன உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-17T06:46:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[உறக்கத்திலேயே உயிரிழந்த இளம் நடிகை; ரசிகர்கள் ஷாக்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/actress-ananya-raj-passes-away-in-her-sleep-1786941633"></link>
            <id>https://jvpnews.com/article/actress-ananya-raj-passes-away-in-her-sleep-1786941633</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp; மும்பையை சேர்ந்த இளம் நடிகை அனன்யா ராஜ் கடந்த மாதம் உயிரிழந்தது குறித்து அவரது குடும்பத்தினர் தற்போது தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp; மும்பையை சேர்ந்த இளம் நடிகை அனன்யா ராஜ் கடந்த மாதம் உயிரிழந்தது குறித்து அவரது குடும்பத்தினர் தற்போது தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .</p><p>27 வயதான , மும்பையை சேர்ந்த இளம் நடிகை அனன்யா ராஜ் 7 Hours to Go, The Final Exit, Ghost உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர். இந்தி மட்டுமின்றி தெலுங்கு உள்ளிட்ட பிராந்திய மொழி படங்களிலும் நடித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7e271a7c-5456-463e-894c-06211870a040/26-6a8290c2ee797.webp' /></p><h2>ஜூலை 15-ம் தேதி உயிரிழந்ததாக தெரிவிப்பு</h2><p> திரைப்படங்கள் மட்டுமின்றி, பல்வேறு இசை வீடியோக்களிலும் அனன்யா ராஜ் நடித்துள்ளார். தெலுங்கில் Thaggede Le படத்திலும், Madrasi Gang என்ற மும்மொழி படத்திலும் நடித்திருந்தார்.</p><p></p><p>
 

இந்நிலையில், அனன்யா ராஜ் காலமானதாக அவரது குடும்பத்தினர் நேற்று (16) அறிவித்துள்ளனர். 

அனன்யா ராஜ், கடந்த ஜூலை 15-ம் தேதி உயிரிழந்ததாக தற்போது அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.</p><p></p><p> </p><p>ஆனால், அவரது மரணச் செய்தி உடனடியாக வெளியிடப்படவில்லை. சுமார் ஒரு மாதத்திற்குப் பிறகு, ஆகஸ்ட் 16-ம் தேதி குடும்பத்தினர் அவரது சமூக வலைதள பக்கத்தின் மூலம் மரணத்தை அறிவித்துள்ளனர்.</p><p>

அனன்யா ராஜ்-இன் மறைவு செய்தி அவரது ரசிகர்கள், திரைத்துறையினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.&nbsp; &nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-17T06:43:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தோனேசியாவில் இன்று மீண்டும் நிலநடுக்கம்; மக்கள் அச்சம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/5-9-earthquake-strikes-indonesia-again-1786942656"></link>
            <id>https://canadamirror.com/article/5-9-earthquake-strikes-indonesia-again-1786942656</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;இந்தோனேசியாவில் ஏற்பட்ட தொடர் நிலநடுக்கங்களைத் தொடர்ந்து, இன்று (17) மீண்டும் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளமை மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;இந்தோனேசியாவில் ஏற்பட்ட தொடர் நிலநடுக்கங்களைத் தொடர்ந்து, இன்று (17) மீண்டும் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளமை மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. </p><p>

அந்நாட்டின் புளோரஸ் (Flores) பகுதியில் இன்று அதிகாலை ரிக்டர் அளவுகோலில் 5.9 ஆக நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளதாக ஜேர்மன் புவியியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b5ef5754-a058-4fa5-857d-726e158c4988/26-6a8294c19df44.webp' /></p><h2>சேத விபரங்கள்&nbsp;வௌியாகவில்லை</h2><p> </p><p>

எனினும் இதனால் ஏற்பட்ட சேத விபரங்கள் தொடர்பில் இதுவரை எவ்வித தகவல்களும் வௌியாகவில்லை.</p><p> 

இந்தோனேசியாவில் கடந்த 15ஆம் திகதி ரிக்டர் அளவுகோலில் 7.7 ஆக பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதுடன், அதனைத் தொடர்ந்து பல பின்னதிர்வுகளும் ஏற்பட்டன. 

இதனால் 53 பேர் உயிரிழந்ததுடன், காயமடைந்த பலரை வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. </p><p>

மேலும், பாதிக்கப்பட்டவர்களுக்காக அமைக்கப்பட்ட பாதுகாப்பு மையங்களில் 9,200 இற்கும் மேற்பட்டோர் தங்கியுள்ளனர்.</p><p> 

நிலநடுக்கத்தின் பின்னர் அந்நாட்டின் சுற்றுலாப் பகுதிகள் தொடர்பில் கட்டுப்பாடுகளை விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்ததுடன், இந்தோனேசிய துறைமுக அதிகாரசபையினால் கடல்வழிப் போக்குவரத்துச் சேவைகளை இடைநிறுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. </p><p>

இதற்கிடையில், நிலநடுக்கம் காரணமாக குறித்த மாகாணங்களில் மின்தடை ஏற்பட்டிருந்த போதிலும், தற்போது அதனை வழமைக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-17T06:43:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மாஞ்செஸ்டர் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகில் பயங்கர விபத்து ; நடுரோட்டில் பற்றி எரிந்த கார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/m56-closed-after-crash-near-manchester-airport-1786949133"></link>
            <id>https://canadamirror.com/article/m56-closed-after-crash-near-manchester-airport-1786949133</id>
            <summary type="text">&amp;nbsp; இங்கிலாந்து மாஞ்செஸ்டர் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ள M56 அதிவேக நெடுஞ்சாலையில், இரண்டு கார்கள் ஒன்றோடொன்று மோதி பயங்கர விபத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; இங்கிலாந்து மாஞ்செஸ்டர் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ள M56 அதிவேக நெடுஞ்சாலையில், இரண்டு கார்கள் ஒன்றோடொன்று மோதி பயங்கர விபத்துக்குள்ளாகின. </p><p>இந்த விபத்தில் ஒரு கார் தலைகீழாகக் கவிழ்ந்த நிலையில், மற்றொரு கார் நடுரோட்டிலேயே தீப்பற்றி எரியத் தொடங்கியதால் பெரும் பரபரப்பும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/288a1531-9afa-4b52-b510-ff9e1ebf3ba0/26-6a82ae0ec1e75.webp' /></p><p>
</p><p>
 தகவலறிந்த மாஞ்செஸ்டர் நகரக் காவல் துறையினர், தீயணைப்புப் படையினர் மற்றும் அவசர ஆம்புலன்ஸ் பிரிவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.</p><h2>விபத்துக்கான காரணம் குறித்துக்&nbsp; &nbsp;விசாரணை </h2><p> 

நடுரோட்டில் எாிந்து கொண்டிருந்த காரின் தீயை அணைக்கும் முயற்சிகளுடன், விபத்தில் சிக்கியவர்களைப் பாதுகாப்பாக மீட்கும் பணிகளையும் மீட்புக் குழுவினர் தீவிரமாக மேற்கொண்டனர்.</p><p>

இந்த பயங்கர விபத்து காரணமாக M56 நெடுஞ்சாலையின் முக்கியப் பகுதிகள் இருபுறமும் தற்காலிகமாக மூடப்பட்டன. 

இதனால் மாஞ்செஸ்டர் விமான நிலையத்திற்குப் புறப்பட்டுச் சென்ற பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகள் கடுமையான போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவித்தனர்.</p><p>

 விமானத்தைப் பிடிக்கச் செல்லும் பயணிகள் கூடுதல் நேரத்தைக் கணக்கில் கொண்டு மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் அவசர எச்சரிக்கை விடுத்தனர்.</p><p>

விபத்து நடந்த பகுதியில் சாலையில் சிந்திய எரிபொருள் மற்றும் சேதமடைந்த தடுப்புச் சுவர்களைச் சீரமைக்கும் பணிகள் போர்க்கால அடிப்படையில் தொடங்கப்பட்டன. </p><p>மீட்புப் பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, நெடுஞ்சாலையில் துப்புரவுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுப் போக்குவரத்து மெதுவாக இயல்பு நிலைக்குத் திரும்பத் தொடங்கியது. 

 விபத்துக்கான காரணம் குறித்துக் காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-08-17T06:43:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை - வியட்நாம் இடையே நேரடி விமான சேவைகள் ஆரம்பம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/direct-flights-launch-between-vietnam-and-srilanka-1786943452"></link>
            <id>https://ibctamil.com/article/direct-flights-launch-between-vietnam-and-srilanka-1786943452</id>
            <summary type="text">இலங்கைக்கும் - வியட்நாமிற்கும் இடையிலான நேரடி விமான சேவைகளை வியட்நாம் எயார்லைன்ஸ்&amp;nbsp;உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துள்ளது. வியட்நாம் எயார்லைன்ஸ் நிறுவனத...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கைக்கும் - வியட்நாமிற்கும் இடையிலான நேரடி விமான சேவைகளை வியட்நாம் எயார்லைன்ஸ்&nbsp;உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துள்ளது.</p><p> வியட்நாம் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான முதலாவது விமானம் நேற்று (16) இரவு 11.02 மணிக்கு கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.</p><p> 

வியட்நாமின் ஹோ சி மின் நகரத்திலிருந்து வருகை தந்த VN-671 என்ற இலக்கத்தைக் கொண்ட இந்த எயார்பஸ் A-320 ரக விமானத்திற்கு பாரம்பரிய நீர் தாரை மரியாதை செலுத்தப்பட்டு அமோக வரவேற்பளிக்கப்பட்டது.</p><p></p><h2>&nbsp;விமானப் பயணங்கள்</h2><p>இந்த முதலாவது விமானப் பயணத்தின் மூலம் 164 பயணிகள் வருகை தந்திருந்த நிலையில் அதே விமானத்தில் 172 பயணிகள் மீண்டும் வியட்நாம் நோக்கிப் புறப்பட்டுச் சென்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3ad34760-4547-4ddf-8cf5-74230cc876e5/26-6a82ad4d77a44.webp' /></p><p>

இந்த நேரடி விமான சேவையின் கீழ் வாரத்தில் 03 நாட்கள், குறிப்பாக ஞாயிறு, புதன் மற்றும் வெள்ளி ஆகிய கிழமைகளில் கட்டுநாயக்கவிற்கும் வியட்நாமிற்கும் இடையில் விமானப் பயணங்கள் முன்னெடுக்கப்படவுள்ளது.</p><p>அத்துடன் இந்த விமானப் பயணத்திற்காக 04 மணித்தியாலங்களும் 30 நிமிடங்களும் எடுக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.</p><p>

புதிய விமான சேவையை வரவேற்பதற்காக கட்டுநாயக்க விமான நிலைய வளாகத்தில் விசேட நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் இதில் பிரதம அதிதியாக இலங்கைக்கான வியட்நாம் தூதுவர் திரின் தி டாம் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-17T06:41:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜேர்மனியில் இந்திய இளம்பெண்ணுக்குக் கிடைத்த மோசமான அனுபவம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/indian-women-face-disrespect-in-germany-restaurant-1786948630"></link>
            <id>https://news.lankasri.com/article/indian-women-face-disrespect-in-germany-restaurant-1786948630</id>
            <summary type="text">இந்திய இளம்பெண்ணொருவர் ஜேர்மன் ஹொட்டல் ஒன்றில் தான் மரியாதைக் குறைவாக நடத்தப்பட்டதாக தெரிவித்துள்ளார்.


பணி நிமித்தம் ஜேர்மனியில் தங்கியுள்ள இந்தி...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்திய இளம்பெண்ணொருவர் ஜேர்மன் ஹொட்டல் ஒன்றில் தான் மரியாதைக் குறைவாக நடத்தப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
</p><p>

பணி நிமித்தம் ஜேர்மனியில் தங்கியுள்ள இந்திய இளம்பெண்ணொருவர், சமீபத்தில் அங்குள்ள ஹொட்டல் ஒன்றிற்குச் சென்ற நிலையில், ஹொட்டல் ஊழியர் ஒருவர் அவரை மரியாதைக் குறைவாக நடத்தியுள்ளார்.
</p><h3>
இளம்பெண் சந்தித்த மோசமான அனுபவம்
</h3><p>
அறிவியலாளரான அனன்யா என்னும் அந்த இளம்பெண், தன் தோழி ஒருவருடன் Rostock நகரிலுள்ள Peter Pane Burger Grill என்னும் ஹொட்டலுக்குச் சென்றுள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/102f802f-1fe4-41ce-8717-573e1d49e56e/26-6a82ac18af7d7.webp' /></p><p>
வழக்கமாக, ஜேர்மன் ஹொட்டல்களில் ஊழியர் ஒருவர் வாசலில் நின்று, வருபவர்களை வரவேற்று இருக்கை இருந்தால் அங்கு அழைத்துச் சென்று அவர்களை அமரவைப்பார்.
</p><p>
ஆனால், அனன்யாவும் அவரது தோழியும் சென்ற ஹொட்டலில் யாரும் இல்லையாம். அவர்கள் சுமார் ஐந்து நிமிடங்கள் வாசலில் காத்திருக்க, அங்கு வந்த ஜேர்மன் குடும்பம் ஒன்று யாருக்கும் காத்திருக்காமல் நேரே சென்று இருக்கைகளில் அமர்ந்துகொண்டனராம்.
</p><p>
ஆக, காத்திருந்து யாரும் வராததால் அனன்யாவும் தன் தோழியுடன் ஹொடலுக்குள் சென்றிருக்கிறார். என்றாலும் எந்த இருக்கையிலும் அமராமல், யாராவது ஊழியர்கள் வருவார்களா என பார்த்துக்கொண்டிருந்திருக்கிறார்கள் இருவரும்.&nbsp;</p><p></p><p>
சற்று நேரத்தில் முகத்தை உம்மென்று வைத்துக்கொண்டு வந்த ஒருவர், அவர்களிடம் வந்து, நீங்கள் நேரே உள்ளே வரக்கூடாது என்று உங்களுக்குத் தெரியாதா, நீங்கள் வெளியே காத்திருக்கவேண்டும் என்று கூறியுள்ளார்.
</p><p>
நாங்கள் ஏற்கனவே சுமார் 5 நிமிடம் காத்திருந்தோம், யாரும் வராததால்தான் உள்ளே வந்தோம் என அனன்யா கூற, இல்லை, நீங்கள் பொய் சொல்கிறீர்கள், 10 விநாடிகள்தான் நீங்கள் காத்திருந்தீர்கள் என சத்தமிட்டுள்ளார் அந்த ஊழியர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/49c31494-1664-4c16-945e-c956939baed3/26-6a82ac180845e.webp' /></p><p>
அவரிடம் எவ்வளவு விளக்கமுயன்றும் அவர்கள் கூறியதை அவர் ஏற்காமல், உங்களுக்கு அவ்வளவு பசியா, நேரே வந்துவிட்டீர்களே என்பது போல கேலியாக பேசியதுடன், அவர்களை ஒரு மேசையருகே அமரவைத்துவிட்டு, மெனு கார்டை தொம்மென்று மேசையில் வைத்திருக்கிறார்.
</p><p>
அத்துடன் நிற்காமல், ஹொட்டலுக்கு வந்த மற்றவர்களிடம் சென்று, இவர்களை கைகாட்டி ஏதோ அவர் பேச, இதற்கு மேல் பொறுத்துக்கொள்ள முடியாது என முடிவு செய்து ஹொட்டலை விட்டு வெளியேறியுள்ளனர் அனன்யாவும் அவரது தோழியும்.
</p><p>
அனன்யா, தான் முதன்முறையாக ஜேர்மனியில் இப்படி ஒரு விரும்பத்தகாத சம்பவத்தை எதிர்கொண்டது குறித்து சமூக ஊடகம் ஒன்றில் பகிர்ந்துள்ளார்.</p><p>

இந்நிலையில், Peter Pane Burger Grill உணவகம், அனன்யாவிடம் மன்னிப்புக் கோரியுள்ளது.
</p><p>
அனன்யாவின் சமூக ஊடக இடுகைக்கு பதிலளித்துள்ள அந்த உணவகம், உங்கள் வீடியோவைப் பார்த்தோம், நீங்கள் சந்தித்த மோசமான அனுபவத்துக்காக மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளது.</p><p>

எங்கள் நிறுவனத்தில் 100 நாடுகளைச் சேர்ந்தவர்கள் பணி புரிந்துவருகிறார்கள். எங்கள் உணவகத்தில் எல்லோருக்கும் வரவேற்புண்டு என்று கூறியுள்ள அந்த உணவகம், உங்களுக்கு சரியான வரவேற்பும் மரியாதையும் கொடுக்கப்படாததற்காக வருந்துகிறோம் என்றும், இந்த விடயம் தொடர்பில் விசாரணை மேற்கொண்டுவருகிறோம் என்றும் கூறியுள்ளது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-17T06:37:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாடசாலை விடுமுறையிலுள்ள மாணவர்கள் தொடர்பில் அவசர எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/school-leave-in-sri-lanka-1786947211"></link>
            <id>https://tamilwin.com/article/school-leave-in-sri-lanka-1786947211</id>
            <summary type="text">பாடசாலை விடுமுறையிலுள்ள மாணவர்களின் பாதுகாப்பு தொடர்பில் விசேட கவனம் செலுத்த வேண்டுமென பெற்றோருக்கு லேடி ரிட்ஜ்வே குழந்தைகள் மருத்துவமனையின் பதில் இயக...</summary>
            <content type="html"><![CDATA[<p>பாடசாலை விடுமுறையிலுள்ள மாணவர்களின் பாதுகாப்பு தொடர்பில் விசேட கவனம் செலுத்த வேண்டுமென பெற்றோருக்கு லேடி ரிட்ஜ்வே குழந்தைகள் மருத்துவமனையின் பதில் இயக்குநர் டாக்டர் பிரதீப் ரத்னசேகர அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். </p><p>

பாடசாலை விடுமுறை நாட்களில் பட்டம் விடும் விபத்துகள் அடிக்கடி பதிவாகி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><h2>உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தலாம்</h2><p> </p><p>

அவர் மேலும் தெரிவிக்கையில், இப்போதெல்லாம் நிலவும் வறண்ட வானிலை மற்றும் பாடசாலை விடுமுறை காரணமாக, குழந்தைகளிடையே பட்டம் விடுவது பிரபலமாகியுள்ளது. 

கவனக்குறைவாக பட்டம் விடுவது கடுமையான காயங்களையும், உயிருக்கே ஆபத்தான காயங்களையும் கூட ஏற்படுத்தக்கூடும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/59137caa-b808-4342-aa34-02253749769c/26-6a82aa5e4e3f1.webp' /></p><p>
</p><p>
குறிப்பாக உயரமான இடங்களில் இருந்து பட்டம் விட முயற்சிக்கும்போது கீழே விழ நேரிடலாம். குழுக்களாகப் பட்டம் விடும்போது மோதல்கள் மற்றும் கீழே விழுவதால் விபத்துகள் ஏற்படலாம். 

உயர் மின்னழுத்த மின் கம்பிகளுக்கு அருகில் பட்டம் விடுவது மிகவும் ஆபத்தான செயல்.</p><h2>எச்சரிக்கை</h2><p> </p><p>பட்டத்தின் நூல்கள் மின் கம்பிகளுடன் தொடர்பு கொண்டால், அந்த நூல் வழியாக மின்சாரம் நபருக்குப் பாயக்கூடும். 

இத்தகைய மின் அதிர்ச்சிகள், கைகள், புஜங்கள் மற்றும் மார்புப் பகுதிகளில் உள்ள உடல் திசுக்கள், இரத்த நாளங்கள் மற்றும் நரம்புகளுக்குக் கடுமையான சேதத்தை ஏற்படுத்தக்கூடும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b5c457d2-384a-494c-a8fe-7a2e2d1af23b/26-6a82aa5f06b23.webp' /></p><p>
</p><p>
சில சமயங்களில், சேதமடைந்த உடல் பாகங்களை அறுவை சிகிச்சை மூலம் அகற்ற வேண்டிய நிலை கூட ஏற்படலாம் என எச்சரிக்கை விடுத்துள்ளார். </p><p>

மேலும், மின் கம்பிகள் உள்ள பகுதிகளில் குழந்தைகள் பட்டம் விடுவதைத் தடுக்க பெற்றோர்களும் பெரியவர்களும் பொறுப்பேற்க வேண்டும்.

ஏனெனில் மின்சாரத்தைக் கடத்தும் நூல்கள் உடனடி உயிரிழப்பை ஏற்படுத்தக்கூடும் என சுட்டிக்காட்டியுள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-17T06:30:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிள்ளையான் உள்ளிட்ட நால்வருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/chargesheet-filed-pillaiyan-against-4-people-1786947374"></link>
            <id>https://tamilwin.com/article/chargesheet-filed-pillaiyan-against-4-people-1786947374</id>
            <summary type="text">கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) உள்ளிட்ட நால்வருக்கு எதிராகச் சட்டமா அதிபரினால் பொலன்னறுவை மேல் நீதிமன்றத்தில...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) உள்ளிட்ட நால்வருக்கு எதிராகச் சட்டமா அதிபரினால் பொலன்னறுவை மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.</p><p>

கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் சுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9edf12ea-4af4-4199-99c1-ce805f485e53/26-6a82a9ea4b213.webp' /></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-17T06:29:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பனிக்கரடியின் தூக்கத்தை கலைத்ததால் அபராதம்; கப்பல் உரிமையாளர் அதிர்ச்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/norway-fine-for-disturbing-a-polar-bear-s-sleep-1786948293"></link>
            <id>https://canadamirror.com/article/norway-fine-for-disturbing-a-polar-bear-s-sleep-1786948293</id>
            <summary type="text">&amp;nbsp; நோர்வேவுக்கு சொந்த மான தீவுக்கூடமான ஸ்வால்பார்ட் கடற்கரை பகுதி வழியாக சமீபத்தில் சுற்றுலாப்பயணியர் கப்பல் சென்றது. 

அப்போது கப்பலில் இருந்தவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; நோர்வேவுக்கு சொந்த மான தீவுக்கூடமான ஸ்வால்பார்ட் கடற்கரை பகுதி வழியாக சமீபத்தில் சுற்றுலாப்பயணியர் கப்பல் சென்றது. </p><p>

அப்போது கப்பலில் இருந்தவர்கள், கரையில் பனிக்கரடி ஒன்று ஓய்வெடுப்பதை கண்டனர். அவர்கள் அக்கரடி நகர்வதை பார்க்க விரும்பியதையடுத்து, கப்பல் உரிமையாளர் ஒருவர் மூடுபனியின் போது, எச்சரிக்கைக்காக ஒலிக்க செய்யும் கப்பலின் 'பாக் ஒலியை' ஒலிக்கச் செய்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cb2f2405-e2f1-4490-9f99-f7e9651d5b16/26-6a82aac72f7f3.webp' /></p><p>
</p><p>


இச்சத்தம் கேட்டு திடுக்கிட்டு எழுந்த கரடி அங்கிருந்து பயந்து ஓடியது. இச்சம்பவம் குறித்து உள்ளூர் அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. </p><p>

ஸ்வால் பார்ட் கவர்னரான லார்ஸ் பவுஸ், பனிக்கரடிக்கு தொந்தரவு கொடுத்த கப்பல் உரிமையாளருக்கு, ஐந்து இலட்சம் ரூபாய் அபராதம் விதித்தார். இந்த அபராதத்தால் கப்பல் உரிமையாளர் அதிர்ச்சியடைந்தார்.
</p><p>


ஸ்வால்பார்ட் பகுதியின், 1972ம் ஆண்டு சுற்றுச்சூழல் சட்டத்தின்படி, பனிக்கரடியை தேவையற்ற முறையில் அல்லது தொந்தரவு செய்வது, துரத்துவது குற்றமாகும்</p>]]></content>
            <updated>2026-08-17T06:29:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[மகிந்த அரசுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த கஞ்சிபானி இம்ரான்! அநுர அரசு அம்பலப்படுத்தும் இரகசியம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/kanjipani-s-connection-with-mahinda-government-1786934816"></link>
            <id>https://tamilwin.com/article/kanjipani-s-connection-with-mahinda-government-1786934816</id>
            <summary type="text">இலங்கையை விட்டுத் தப்பியோடிய ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான கஞ்சிபானி இம்ரான் இன்னும் சில நாட்களில் இலங்கைக்கு அழைத்து வரப்படுவார் என பாதுகாப்புப் பிர...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையை விட்டுத் தப்பியோடிய ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான கஞ்சிபானி இம்ரான் இன்னும் சில நாட்களில் இலங்கைக்கு அழைத்து வரப்படுவார் என பாதுகாப்புப் பிரதி அமைச்சர், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகர தெரிவித்துள்ளார்.
</p><p>
தற்போது இத்தாலியில் உள்ள அவரை இலங்கைக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>

ஹம்பாந்தோட்டையில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றிய அவர், இதனை குறிப்பிட்டுள்ளார்.</p><h2>இன்டர்போல் பிடியாணை&nbsp;</h2><p>
</p><p>
அதற்கமைய, இன்டர்போல் பிடியாணையின் கீழ் தேடப்பட்டுவரும் 58 குற்றவாளிகள் இதுவரை இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
</p><p>
“கஞ்சிப்பானி இம்ரான் முந்தைய மகிந்தவின் ஆட்சியின் போது அரசியல் பிரமுகர்கள் ஆபத்தான குற்றவாளிகள் மற்றும் பல நபர்களுடன் தொடர்புகளைப் பேணியுள்ளார். </p><p>இது அந்தக்காலகட்டத்தில் நாட்டின் சட்டத்தின் ஆட்சி குறித்து கேள்விகளை எழுப்புகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/403f5d07-bc81-43bc-b06b-49893e28903f/26-6a82a47b01293.webp' /></p><p>
</p><p>
இன்டர்போல் பிடியாணைகளின் கீழ் தேடப்பட்டுவந்த பல முக்கிய பாதாள உலக மற்றும் வர்த்தகக் குற்றவாளிகள் உட்பட 58 ஆபத்தான குற்றவாளிகள் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
</p><p>
பெரும் குற்றவியல் வலையமைப்பின் தலைவர்களை அரசாங்கம் தற்போது குறிவைத்து அவற்றை அகற்றி வருகின்றது. </p><p>இந்த முயற்சிகள் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளவர்கள் மத்தியில் பயத்தை ஏற்படுத்தியுள்ளன.
</p><p>
மிகவும் ஆபத்தான குற்றவாளிகளை மீண்டும் இலங்கைக்கு அழைத்து வருவதற்கு பாரிய முயற்சி தேவைப்பட்டது. அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைகள் சட்டத்தின் ஆட்சியின் மேலாதிக்கத்தையும் அதிகாரத்தையும் வெளிப்படுத்துகின்றன” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p><p>
 </p>]]></content>
            <updated>2026-08-17T06:28:49+00:00</updated>
        </entry>
    </feed>
