<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-09-06T01:51:14+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[புதன் பகவானால் நல்ல மாற்றங்களை சந்திக்கக்கூடிய 5 ராசிகள் யார் யார் தெரியுமா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/puthan-zodiac-signs-experience-positive-change-1788657217"></link>
            <id>https://jvpnews.com/article/puthan-zodiac-signs-experience-positive-change-1788657217</id>
            <summary type="text">புதன் பகவான் செப்டம்பர் 7ஆம் திகதி முதல் 26 ஆம் திகதி வரை, தனது சொந்த ராசியான கன்னி ராசியில் ஆட்சி பெற்று சஞ்சாரம் செய்ய உள்ளார். அவருடைய வலிமையான அமை...</summary>
            <content type="html"><![CDATA[<p>புதன் பகவான் செப்டம்பர் 7ஆம் திகதி முதல் 26 ஆம் திகதி வரை, தனது சொந்த ராசியான கன்னி ராசியில் ஆட்சி பெற்று சஞ்சாரம் செய்ய உள்ளார். அவருடைய வலிமையான அமைப்பு, அவர் ஆட்சி பெறுவதால் ஏற்படும் பத்ர யோகம், காரணமாக இந்த காலத்தில் பல ராசிகள் முன்னேற்றத்தையும், நல்ல வாய்ப்புகள், மகிழ்ச்சியை பெறக்கூடிய நபர்களாக இருப்பார்கள். எந்தெந்த நபர்களின் அதிக நன்மையை பெறுவார்கள் என நாம் இங்கு பார்ப்போம்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/433d0e59-0282-427c-b9a2-98aedaaf206c/26-6a9cbe429d23a.webp' /></p><h3>ரிஷப ராசி&nbsp;</h3><p>ரிஷப ராசி சேர்ந்த நண்பர்களுக்கு புதன் பகவான் உங்கள் ராசிக்கு பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்ய உள்ளார். அது மட்டும் இல்லாமல், உங்களுடைய ராசி அதிபதி சுக்கிரனும் ஆட்சி பெற்று சஞ்சாரம் செய்து வரக்கூடிய காரணத்தால் உங்களுக்கு வேலை மற்றும் தொழில் தொடர்பான நல்ல வாய்ப்புகளை பெறுவீர்கள். பணியிடத்தில் அனுபவசாலிகளின் ஆதரவை பெறுவீர்கள். அதுமட்டுமல்லாமல் உங்களுடைய சிறப்பான திட்டமிடல், ஆலோசனைகள் மூலம் வேலையை நகர்த்த முடியும். உங்கள் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக நேரம் செலவிட வாய்ப்பு கிடைக்கும். குடும்பத்தின் வருடம் இனிய சுற்றுலா செவ்வாய்ப்புகள் உண்டு. உங்களுடைய முயற்சிகளுக்கு சரியான பாதை அமையும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3f8db758-f2d1-4aaa-8166-ad14ca553d25/26-6a9cbe43529fa.webp' /></p><h3>மிதுன ராசி</h3><p>மிதுன ராசி அதிபதியான புதன் பகவான், உங்களுடைய சுக ஸ்தானத்தில் ஆட்சி பெற்று சஞ்சாரம் செய்ய உள்ள காரணத்தால், பலவிதத்தை நன்மைகளை பெறுபவர்கள். குறிப்பாக உங்களுடைய எதிர்காலம் மனதில் வைத்து நீங்கள் எடுக்கும் முயற்சிகள் மற்றும் முதலீடு மூலம் நன்மைகள் தெரிவீர்கள். மேலும் கணிசமான லாபம் தரக்கூடிய திட்டங்கள் அல்லது ஒப்பந்தங்கள் உறுதி செய்யப்பட வாய்ப்புகள் உள்ளது. நீண்ட நாட்களாக நீங்கள் செய்து வரக்கூடிய கடின உழைப்பிற்கான அங்கீகாரம் கிடைக்கும். பல புதிய வருமான வரிகள் உருவாகும். அதன் மூலம் உங்களுடைய நிதிநிலைமை மேம்படும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a5199232-5177-4d72-bc20-13a122f11bf2/26-6a9cbe440b572.webp' /></p><h3>சிம்ம ராசி</h3><p>சூரிய பகவானை அதிபதியாகக் கொண்ட சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு, இந்த புதனின் பெயர்ச்சி நல்ல பலன்களை தரக்கூடியதாக இருக்கும். உங்கள் ராசிக்கு தன ஸ்தானத்தில் புதன் ஆட்சி பெற்று சஞ்சாரம் செய்ய உள்ள காரணத்தால், நிதிநிலை தொடர்பான முன்னேற்றங்களை பெறுவீர்கள். உங்களுக்கு மன மகிழ்ச்சி தரக்கூடிய விதத்தில் சில நல்ல நிகழ்வுகள் நடக்கும். மேலும் திட்டமிட்டபடி எல்லா விஷயங்களும் சரியாக நடக்கும் என்பதால் உங்களுடைய முயற்சிகள் மற்றும் திட்டமிடலை அதிகரிப்பதன் மூலம் நன்மை பெறலாம். உங்களுடைய மனம் மகிழ்ச்சியாக இருக்கும். நிதி விவாகங்களில் வலுவாக இருப்பீர்கள். நீங்கள் எந்த வித சிக்கலில் இருந்தாலும் அதிலிருந்து விடுபடுவீர்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/86055002-ff25-47e3-8eff-890a944dd475/26-6a9cbe44b2e96.webp' /></p><h3>கன்னி ராசி</h3><p>கன்னி ராசிக்கு உங்கள் ராசி அதிபதி புதன் பெயர்ச்சியாகி ஆட்சி பெற்று சஞ்சாரம் செய்ய உள்ள காரணத்தாலும், தன ஸ்தானத்தில் சுக்கிரன் ஆட்சி பெற்றுச் சஞ்சரிப்பதாலும், உங்களுடைய முன்னேற்றத்திற்கான பல சாதகமான சூழல்கள் உருவாகும். நீங்கள் செய்யக்கூடிய தொழில், வியாபாரம் தொடர்பாக நன்மைகள் பெறுவீர்கள். உங்களுடைய முக்கிய வேலைகளை முடிக்க நீங்கள் இருக்கும் கடின உழைப்பு நல்ல பலனைத் தரும். நம்பிக்கை அதிகரிக்க கூடிய காலம். உங்கள் நல்ல செயல்பாடுகளால் குடும்பத்திலும், பணியிடத்தில் மரியாதை பெறுவீர்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/80714478-9177-48bc-821a-ef9b9770d9ca/26-6a9cbe45657b1.webp' /></p><h3>விருச்சிக ராசி&nbsp;</h3><p>விருச்சிக ராசி அன்பர்களுக்கு லாப ஸ்தானத்தில் புதன் ஆட்சி பெற்று, சஞ்சாரம் செய்ய உள்ள காரணத்தால், உங்களுக்கு பணம் விதத்தில் நம்மை ஏற்படும். குறிப்பாக புதிய விஷயங்களை கற்றுக் கொள்வீர்கள். குடும்பத்தினருடன் மகிழ்ச்சியான பயணங்கள் செல்லவும், நிதி திட்டமிடலில் ஈடுபடவும் செய்வீர்கள். உங்கள் வாழ்க்கை துணையுடன் இணக்கம் அதிகரிக்கும். உங்கள் தந்தையின் ஆதரவு, ஆலோசனை கிடைக்கும். உங்கள் வீட்டில் சில சுப நிகழ்ச்சிகள் அல்லது ஆன்மீக நடவடிக்கைகளில் ஈடுபடுவீர்கள். உங்களுடைய மனதிற்கு அமைதியை தரக்கூடிய செயல்களை செய்து மகிழ்வீர்கள்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c3f112f3-9318-4731-8219-3f3a58e6030e/26-6a9cbe461837c.webp' /></p>]]></content>
            <updated>2026-09-06T01:47:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹொர்முஸ் நீரிணையில் கப்பல்கள் மீது ஈரான் அதிரடித் தாக்குதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/iran-launches-surprise-attack-ships-strait-hormuz-1788655698"></link>
            <id>https://canadamirror.com/article/iran-launches-surprise-attack-ships-strait-hormuz-1788655698</id>
            <summary type="text">ஹொர்முஸ் நீரிணை வழியே விதிமுறைகளை மீறிச் சென்ற 2 முதல் 5 கப்பல்கள் வரை தினமும் இரவு நேரத்தில் &quot;தண்டிக்கப்பட்டதாக&quot; ஈரானிய புரட்சிகர காவல் படையின் கடற்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹொர்முஸ் நீரிணை வழியே விதிமுறைகளை மீறிச் சென்ற 2 முதல் 5 கப்பல்கள் வரை தினமும் இரவு நேரத்தில் "தண்டிக்கப்பட்டதாக" ஈரானிய புரட்சிகர காவல் படையின் கடற்படை அதிகாரி தெரிவித்துள்ளார்.

2026 ஆகஸ்ட் 30-ஆம் திகதி வரையிலான 10 நாட்களில் இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.
</p><p>
இந்த தாக்குதல்களின் பின்னரும் கூட விதிமுறைகளை மீறும் கப்பல்கள் மீது தேவையான நேரங்களில் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ஈரானிய புரட்சிக்கர காவல்படை தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/84aeccc2-db4f-43b4-8b4c-19e67b48c22f/26-6a9cb85407a41.webp' /></p><p>

இந்தநிலையில், ஈரானின் மூன்று எண்ணெய் கப்பல்கள் மீது அமெரிக்கப் படைகள் நடத்திய தாக்குதலை ஈரான் வெளியுறவு அமைச்சகம் "போர்க்குற்றம்" என கடுமையாகக் கண்டித்துள்ளது.
</p><p>
அத்துடன், பிராந்திய கடற்பகுதியில் அமெரிக்காவின் முற்றுகை மற்றும் தாக்குதல்கள் தொடர்ந்தால் அமெரிக்க போர்க்கப்பல்கள் மீது பதிலடித் தாக்குதல்கள் தீவிரப்படுத்தப்படும் என ஈரானிய ஆயுதப்படைகள் எச்சரித்துள்ளன.
</p><p>
எனினும், பிராந்திய கடற்பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த இரண்டு அமெரிக்க போர்க்கப்பல்களை இலக்கு வைத்து ஈரானிய புரட்சிகர காவல் படை பெலிஸ்டிக் ஏவுகணைகளை வீசித் தாக்கியதைத் தொடர்ந்தே ஈரானிய எண்ணெய் கப்பல்கள் மீது அமெரிக்க மத்திய கட்டளையகம் தாக்குதல் நடத்தியதாக தெரிவித்துள்ளது.
</p><p>
இதேவேளை, ஈரானின் நதான்ஸ் (Natanz) அணுசக்தி மையத்திற்கு அருகே அமைந்துள்ள 'பிக்அக்ஸ்' (Pickaxe Mountain) நிலத்தடி அணுசக்தி வளாகத்தின் மீது மிக விரைவில் (very soon) தாக்குதல் நடத்தக்கூடும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மீண்டும் எச்சரித்துள்ளார்.
</p><p>
கடந்த ஜூலை மாதத்திற்குப் பிறகு இத்தகைய எச்சரிக்கையை அவர் மீண்டும் விடுத்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-09-06T01:47:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறையில் அடைக்கப்பட்ட நாமலுக்கு எதிராக கிறிஷ் மோசடி வழக்கு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/fraud-case-against-imprisoned-namal-1788659168"></link>
            <id>https://jvpnews.com/article/fraud-case-against-imprisoned-namal-1788659168</id>
            <summary type="text">நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் முன்னாள் நெருங்கிய சகாவும் தொழிலதிபருமான நிமல் பெரேரா, அவருக்கு எதிராக நடைபெற்று வரும் இரண்டு தனித்தனி வழக்குக...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் முன்னாள் நெருங்கிய சகாவும் தொழிலதிபருமான நிமல் பெரேரா, அவருக்கு எதிராக நடைபெற்று வரும் இரண்டு தனித்தனி வழக்குகளில் முக்கிய சாட்சியாக சாட்சியமளிக்கத் தயாராக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p> </p><p></p><p>குறிப்பாக, Krrish Lanka நிறுவனத்தால் வழங்கப்பட்டதாகக் கூறப்படும் ரூ.70 மில்லியன் நிதி, நிமல் பெரேராவுடன் தொடர்புடைய கணக்குகள் ஊடாக நாமல் ராஜபக்சவுக்கு சென்றதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பான வழக்கிலும் அவர் முக்கிய சாட்சியாகக் கருதப்படுகிறார்.</p><p>

நாமல் ராஜபக்சவுக்கு எதிராக இடம்பெற்று வரும் விசாரணைகளில், நிமல் பெரேராவின் சாட்சியம் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என விசாரணைத் தரப்புகளுக்கு நெருக்கமான வட்டாரங்களை மேற்கோள்காட்டி தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fafefd79-6887-4fea-9116-59d7cb9e296d/26-6a9cc5e274911.webp' /></p><p>இதனிடையே, நாமல் ராஜபக்சவுக்கு எதிரான ஏர்பஸ் கொள்வனவு தொடர்பான ஊழல் விசாரணையிலும் நிமல் பெரேரா முக்கிய சாட்சியாகக் கருதப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>இந்த வழக்குடன் தொடர்புடையதாகக் கூறப்படும் சில முக்கிய ஆவணங்கள் மற்றும் வாக்குமூலங்கள் விசாரணைகளில் கவனம் பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், அவுஸ்திரேலியாவின் மெல்போர்னில் உள்ள சட்டத்தரணி இந்திக கருணாஜீவ, நிமல் பெரேராவைத் தொடர்புகொண்டு, ராஜபக்சவுக்கு எதிராக எந்தவொரு வாக்குமூலத்தையும் வழங்க வேண்டாம் எனக் கோரியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p> எனினும், அவரைத் தொடர்புகொள்ள மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளுக்கு நிமல் பெரேரா பதிலளிக்கவில்லை எனவும் கூறப்படுகிறது.

இதையடுத்து, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) மற்றும் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் (CIABOC) அதிகாரிகள் அவுஸ்திரேலியாவுக்குச் சென்று நிமல் பெரேராவிடம் சத்தியப்பிரமாண வாக்குமூலம் பதிவு செய்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
</p><p>
அத்துடன், நிமல் பெரேராவுக்கு பாதுகாப்பு வழங்குவது தொடர்பில் அவுஸ்திரேலிய அதிகாரிகளுடன் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், தேவையான சந்தர்ப்பத்தில் அவர் காணொளி தொழில்நுட்பம் ஊடாக நீதிமன்றத்தில் சாட்சியமளிக்கக்கூடும் எனவும் சட்டமா அதிபர் திணைக்களத்தைச் சேர்ந்த சிரேஷ்ட சட்டத்தரணி ஒருவரை மேற்கோள்காட்டி தகவல்கள் வெளியாகியுள்ளன.
</p><p>
ஏர்பஸ் விவகாரம் தொடர்பாக அவுஸ்திரேலியா, சிங்கப்பூர், பிரான்ஸ் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளிடமிருந்து பரஸ்பர சட்ட உதவி மூலம் சில தகவல்கள் மற்றும் ஆவணங்கள் பெறப்பட்டுள்ளதாகவும், விசாரணைகள் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bbb2438d-f181-4a89-9824-d83561bacf5e/26-6a9cc5e1b90ac.webp' /></p><p>இதேவேளை, ரூ.70 மில்லியன் நிதி முறைகேடு தொடர்பான மற்றொரு வழக்கிலும் நிமல் பெரேரா முக்கிய சாட்சியாகக் கருதப்படுகிறார். இந்தத் தொகை Krrish Lanka (Pvt) Ltd நிறுவனத்தால் வழங்கப்பட்டதாகவும், பின்னர் நிமல் பெரேராவுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் வங்கிக் கணக்குகளுக்கு மாற்றப்பட்டதாகவும் விசாரணைகளில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.</p><p>

அதன் பின்னர் குறித்த பணம் நாமல் ராஜபக்சவுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் கணக்குகளுக்கு சென்றதாகவும் விசாரணைத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பணத்தின் பரிமாற்றம் தொடர்பான தகவல்களை வெளிப்படுத்துவதில் நிமல் பெரேராவின் சாட்சியம் முக்கியமானதாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>

இந்த வழக்கு தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களம் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளதாகவும், வழக்கை விசாரிக்க மூன்று நீதிபதிகள் கொண்ட சிறப்பு மேல் நீதிமன்ற அமர்வை கோருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

எவ்வாறாயினும், நாமல் ராஜபக்சவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படும் வரை அவை குற்றச்சாட்டுகளாகவே கருதப்பட வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-06T01:47:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரசாங்கத்தின் நேட்டோவுடனான உறவுகள் தொடர்பில் கம்யூனிஸ்ட் கட்சி அதிருப்தி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/comunist-party-agaist-nato-1788658367"></link>
            <id>https://tamilwin.com/article/comunist-party-agaist-nato-1788658367</id>
            <summary type="text">இலங்கை இராணுவம் நேட்டோ அமைப்புடன் பாதுகாப்பு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திடத் தயாராகி வருவதாகவும், அதற்கு கடும் கண்டனத்தை வெளியிடுவதகாவும் இலங்கை கம்யூ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை இராணுவம் நேட்டோ அமைப்புடன் பாதுகாப்பு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திடத் தயாராகி வருவதாகவும், அதற்கு கடும் கண்டனத்தை வெளியிடுவதகாவும் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.</p><p>
நேட்டோ அமைப்புடன் இலங்கை இராணுவம் பாதுகாப்பு ஒப்பந்தம் மேற்கொள்வதற்கான முயற்சிகளை இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டித்துள்ளது.
</p><p>நேட்டோ என்பது காலணித்துவ நோக்கங்களைக் கொண்ட ஒரு அமைப்பு என்றும், இத்தகைய ஒப்பந்தங்கள் மூலம் தற்போதைய அரசாங்கத்தின் வெளியுறவுக் கொள்கை உலகிற்கு அம்பலமாகிவிட்டதாகவும் அக்கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b14a918e-a2b3-4c46-a64e-00d1a4e3337b/26-6a9cc2c20c4db.webp' /></p><p>
</p><p>பாதுகாப்பு அமைச்சு நேட்டோவுடன் மேற்கொள்ளவுள்ள ஒப்பந்தம் குறித்த விவரங்களை உடனடியாக நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.</p><p>
இலங்கையுடன் இணைந்து பணியாற்றுமாறு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் சம்பத் துயகொந்த, நேட்டோ அமைப்பிற்கு அழைப்பு விடுத்துள்ளதாக, செப்டம்பர் 01 ஆம் திகதி பாதுகாப்பு அமைச்சு வெளியிட்ட அதிகாரப்பூர்வ ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கம்யூனிஸ்ட் கட்சி குறிப்பிட்டுள்ளது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-06T01:34:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழக முதல்வர் விஜய் குறித்து அவதூறு ; டெல்லி விமான நிலையத்தில் தொழிலதிபர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/airport-businessman-arrested-for-defaming-vijay-1788658376"></link>
            <id>https://jvpnews.com/article/airport-businessman-arrested-for-defaming-vijay-1788658376</id>
            <summary type="text">தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாகக் கூறப்படும் வழக்கில் தொழிலதிபர் பிரவீன் கணேசன் என்பவரை சென்னை இணையக் க...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாகக் கூறப்படும் வழக்கில் தொழிலதிபர் பிரவீன் கணேசன் என்பவரை சென்னை இணையக் குற்றங்களுக்கான காவல்துறையினர் டெல்லி வானூர்தி நிலையத்தில் வைத்து கைது செய்துள்ளனர்.</p><p></p><p>

கடந்த ஜூன் மாதம் தொழிலதிபர் பிரவீன் கணேசன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் முதல்வர் விஜய் குறித்து அவதூறு பரப்பும் வகையில் கருத்து பதிவிட்டு பின்னர் அதனை நீக்கியதாகக் கூறப்படுகிறது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1e2e62f4-5e7a-460b-93e3-b060de19af6d/26-6a9cc2c9c95ee.webp' /></p><p>எனினும் அந்தப் பதிவு வைரலானதை அடுத்து காவல்துறையினர் அவர் மீது வழக்கை பதிவு செய்தனர்.
</p><p>
இதனையடுத்து அவருக்கு எதிராக கண்காணிப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில், டெல்லி இந்திரா காந்தி சர்வதேச வானூர்தி நிலையத்தில் இருந்து வெளியேற முயன்ற பிரவீன் கணேசனை காவல்துறையினர் கைது செய்தனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-06T01:33:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Erimalai</name>
            </author>
            <title type="text"><![CDATA[டக்ளஸ் காலத்தில் மீன் ஏற்றுவதற்காக அனுப்பப்பட்ட பேருந்தே இப்போது பயணிகள் சேவையில்..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/bus-sent-to-load-fish-is-in-passenger-service-1788657944"></link>
            <id>https://ibctamil.com/article/bus-sent-to-load-fish-is-in-passenger-service-1788657944</id>
            <summary type="text">முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அமைச்சராகவிருந்த காலப்பகுதியில் மீன்
ஏற்றுவதற்காக அனுப்பப்பட்ட பேருந்துகளே இப்போதும் வடமராட்சி கிழக்கில்
சேவையில்...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அமைச்சராகவிருந்த காலப்பகுதியில் மீன்
ஏற்றுவதற்காக அனுப்பப்பட்ட பேருந்துகளே இப்போதும் வடமராட்சி கிழக்கில்
சேவையில் ஈடுபடுவதாக பருத்தித்துறை பிரதேசசபை உறுப்பினர் பி.அலஸ்ரன்
தெரிவித்துள்ளார்.
</p><p>
அரச பேருந்துகள் தொடர்சியாக பழுதடைவதால் பயணிகள் பாதிக்கப்படுவது தொடர்பாக
கருத்து தெரிவித்த போதே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.</p><p>
அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், “யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மக்கள் அரச பேருந்தை நாளாந்தம்
தள்ளித்திரிந்து இயக்கி பயணம் மேற்கொள்கின்றனர்.</p><p></p><h2>கட்டி இழுக்கப்படும்&nbsp;பேருந்து</h2><p>காலை 06.00 கட்டைக்காட்டில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணிக்கும் அரச
பேருந்தை பழுது காரணமாக சில நாட்களாக மாணவர்கள், மக்கள் சேர்ந்து
தள்ளித்திரிந்து ஸ்ராட் பண்ணும் சம்பவம் இடம்பெறுகின்றது.</p><p>மக்கள் தள்ளியும் பேருந்து இயங்காது போனால் சமநேரத்தில் பருத்தித்துறைக்கு
பயணிக்கும் அரச பேருந்தால் குறித்த பேருந்து கட்டி இழுக்கப்பட்டு ஸ்ராட்
செய்யப்படுகின்றது.</p><p> கடந்த வெள்ளிக் கிழமை காலை 06.00 மணிக்கு வழமை போன்று பாடசாலை மாணவர்களோடு
பொதுமக்கள் குறித்த பேருந்தை தள்ளி இயக்க முயன்றபோது பேருந்து இயங்கவில்லை.</p><p></p><h2>ரஜீவன் எம்.பி</h2><p>
</p><p>பின்பு பருத்தித்துறை நோக்கி பயணிக்கவிருந்த அரச பேருந்து மூலம் கட்டி இழுத்து
இயக்க முயன்ற வேளையும் பேருந்து இயங்கவில்லை
இதனால் காலை 06.00 மணிக்கு கட்டைக்காட்டில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி
பயணிக்கும் அரச பேருந்து பயணிக்காததால் மாணவர்கள், அரச உத்தியோகத்தர்கள் என
பலரும் பாதிப்படைந்தனர்.
</p><p>
வடமராட்சி கிழக்கில் சேவையிலீடுபடும் அரச பேருந்துகள் மிக பழமையானது, முன்னாள்
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அமைச்சராக இருந்த காலத்தில் மீனை ஏற்றி செல்வதற்காக
விடப்பட்ட பேருந்துகள் இவை. </p><p>தரமற்ற பேருந்துகளால் வடமராட்சி கிழக்கு மக்கள்
தொடர்ந்தும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். </p><p>இவ்வாறான அடிப்படை தேவைகளை
பூர்த்தி செய்யுமாறுதான் நாம் கேட்கின்றோம்
அதனைவிடுத்து மக்கள் விரும்பாத மசாஜ் நிலையங்களை கொண்டுவர துடிக்கிறார்கள்.</p><p>
சமூகத்தை சீரழிக்கும் மசாஜ் நிலையம் போன்ற அபிவிருத்திகளை செய்வதற்கு ஆர்வம்
காட்டுவதை விடுத்து ரஜீவன் எம்.பி போன்றவர்கள் மக்கள் கேட்கும் தரமான பேருந்து
சேவையை வளங்க வழி செய்ய வேண்டுமென தெரிவித்தார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-06T01:26:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஊழல் நபர்களைப் பாதுகாக்க முயல்கிறது ஐக்கிய தேசியக் கட்சி ; நலிந்த ஜயதிஸ்ஸ கடும் விமர்சனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/attempts-protect-corrupt-individuals-downtrodden-1788657773"></link>
            <id>https://jvpnews.com/article/attempts-protect-corrupt-individuals-downtrodden-1788657773</id>
            <summary type="text">ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளவர்களை பாதுகாக்க ஐக்கிய தேசியக்கட்சி முயற்சிப்பதாக சுகாதார அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ கடுமையாக விமர்சித்துள்ளார்.
...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளவர்களை பாதுகாக்க ஐக்கிய தேசியக்கட்சி முயற்சிப்பதாக சுகாதார அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ கடுமையாக விமர்சித்துள்ளார்.</p><p>
</p><p></p><p>ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ விளக்கமறியலில் வைக்கப்பட்டதைத் தொடர்ந்து ஐக்கிய தேசியக் கட்சி வெளியிட்ட அறிக்கையைக் சுட்டிக்காட்டி இந்த விமர்சனத்தை அவர் வெளியிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6a385d47-72e7-40b9-b47b-e237979a864c/26-6a9cc06ebde61.webp' /></p><p>

நாமல் ராஜபக்ஷ மீது குற்றஞ்சாட்டப்படுவதோ அல்லது அவர் விளக்கமறியலில் வைக்கப்படுவதோ புதிதல்ல

ரணில் விக்ரமசிங்க பிரதமராக இருந்த காலத்திலேயே அவர் ஒன்றுக்கும் மேற்பட்ட முறை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>
ஏர்பஸ் வானூர்திக் கொள்முதல் விவகாரத்தில் 100 மில்லியன் ரூபாய் கையூட்டல் பெறப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பான விசாரணைகளின் அடிப்படையிலேயே, நீதிமன்றமே நாமல் ராஜபக்சவை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டது.
</p><p>
இந்தநிலையில், நாமல் ராஜபக்ஷ விளக்கமறியலில் வைக்கப்பட்டதை எதிர்த்து ஐக்கிய தேசியக் கட்சி வெளியிட்ட அறிக்கை அந்தக் கட்சியின் தற்போதைய நிலையைத் தெளிவுபடுத்துகிறது என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>

ஐக்கிய தேசியக்கட்சியை உண்மையாக நேசிப்பவர்களும் அந்தக் கட்சிக்காக நீண்டகாலம் உழைத்தவர்களும் கூட இந்த அறிக்கையைப் பார்த்து அதிர்ச்சியடைவார்கள்" என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்</p><p></p>]]></content>
            <updated>2026-09-06T01:23:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[பதவிக்காலம் நிறைவடைவதற்கு முன்னர் முக்கிய வழக்குகளை இலக்குவைக்கும் பிரதம நீதியரசர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/chief-justice-target-key-cases-before-end-of-term-1788656535"></link>
            <id>https://ibctamil.com/article/chief-justice-target-key-cases-before-end-of-term-1788656535</id>
            <summary type="text">பிரதம நீதியரசர் தனது பதவிக்காலம் நிறைவடைவதற்கு முன்னர் தொடர்புடைய வழக்குகளை திறம்பட முன்னெடுத்து வருவதாக&amp;nbsp;அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரதம நீதியரசர் தனது பதவிக்காலம் நிறைவடைவதற்கு முன்னர் தொடர்புடைய வழக்குகளை திறம்பட முன்னெடுத்து வருவதாக&nbsp;அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.</p><p>மக்கள் சந்திப்பொன்றில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை கூறியுள்ளார்.</p><p>மேலும் கருத்து வெளியிட்ட அவர்,&nbsp;</p><p></p><h2>சட்டவிரோத சொத்துகள்</h2><p>“பொதுச் சொத்துகளைத் தவறாகப் பயன்படுத்திய மற்றும் ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபட்ட நபர்களுக்கு சட்டத்தின் மூலம் தண்டனை வழங்குவதுடன், அவர்கள் சட்டவிரோதமாக சம்பாதித்த சொத்துகள் மற்றும் பணத்தை மீண்டும் அரசிடம் பெற்றுக்கொள்வதற்கும் அரசு கடுமையான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/742c3aeb-e00e-40f7-9073-1fda1a11334f/26-6a9cbb99cc948.webp' /></p><p>திருட்டைத் தடுப்பது மட்டுமல்லாமல், முறைகேடாகப் பெற்ற சொத்துகளை மீண்டும் அரசிடம் கொண்டுவருவதற்கான சட்ட சீர்திருத்தங்களும் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p><p>
இதற்கமைய, குற்றச் செயல்கள் மூலம் சேர்க்கப்பட்ட சொத்துகளை மீளப் பெறுவதற்கான சட்டத்தின் கீழ், இதுவரை ரூ.4,000 மில்லியனுக்கும் அதிகமான பெறுமதியுடைய சொத்துகளை அரசுடைமையாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p>மேலும், நீதிபதிகள் தங்களது கடமைகளை உரிய முறையில் நிறைவேற்றி வருகின்றனர்.</p><p>[PGYK7RB
]</p><h2>நீதியரசரின் பணி</h2><p>
குறிப்பாக பிரதம நீதியரசரின் பணியைப் பாராட்டிய அவர், தனது பதவிக்காலம் நிறைவடைவதற்கு முன்னர் தொடர்புடைய வழக்குகளை திறம்பட முன்னெடுத்து வருகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a8555f0a-3899-4347-82d2-750de3658435/26-6a9cbb99207bd.webp' /></p><p>நீதித்துறையை மேலும் வலுப்படுத்தும் வகையில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதுடன், அவர்களுக்குத் தேவையான வசதிகளை வழங்கவும் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.</p><p>நீதிபதிகளின் சேவைக்காலத்தை நீடிப்பது உள்ளிட்ட பல்வேறு சீர்திருத்தங்களின் மூலம், மக்களுக்கு மேலும் நெருக்கமானதும் திறமையானதுமான நீதித்துறை அமைப்பை உருவாக்குவதே அரசின் நோக்கம்” என அவர் கூறியுள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...! </td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-06T01:10:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆகஸ்டில் அதிகம் விற்பனையான Top 10 மின்சார இருசக்கர வாகனங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/top-10-electric-two-wheeler-brands-august-2026-1788657178"></link>
            <id>https://news.lankasri.com/article/top-10-electric-two-wheeler-brands-august-2026-1788657178</id>
            <summary type="text">இந்தியாவில் மின்சார இருசக்கர வாகனங்களின் விற்பனை ஆகஸ்ட் 2026-இல் 1.83 லட்சம் யூனிட்கள் என பதிவாகியுள்ளது.

இது ஜூலை மாத விற்பனையை (2.05 லட்சம்) விட ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியாவில் மின்சார இருசக்கர வாகனங்களின் விற்பனை ஆகஸ்ட் 2026-இல் 1.83 லட்சம் யூனிட்கள் என பதிவாகியுள்ளது.
</p><p>
இது ஜூலை மாத விற்பனையை (2.05 லட்சம்) விட 11 சதவீதம் குறைவாக இருந்தாலும், கடந்த ஆண்டு ஆகஸ்ட் 2025 (1.10 லட்சம்) விற்பனைக்கு ஒப்பிடும்போது 67 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b5fdda99-0f58-4329-95cd-4376d4811a06/26-6a9cbe1b97afe.webp' /></p><p>
</p><h2>
முக்கிய பிராண்டுகள் மற்றும் விற்பனை விவரங்கள்:
</h2><ul><li>
TVS Motor Company - 48,873 யூனிட்கள் (91 சதவீதம் ஆண்டுக்கு ஆண்டு வளர்ச்சி (YoY) வளர்ச்சி). மார்க்கெட் ஷேர் 27 சதவீதம்.
</li><li>
Bajaj Auto - 41,019 யூனிட்கள் (235 சதவீதம் YoY வளர்ச்சி). 2026-இல் 3 லட்சம் யூனிட்களை கடந்த இரண்டாவது நிறுவனம்.
</li><li>
Ather Energy - 28,708 யூனிட்கள் (16 சதவீதம் மார்க்கெட் ஷேர்).
</li><li>
Hero MotoCorp (Vida) - 18,978 யூனிட்கள் (10 சதவீதம் மார்க்கெட் ஷேர்).
</li><li>
Ola Electric - 13,849 யூனிட்கள் (29 சதவீதம் YoY குறைவு). மார்க்கெட் ஷேர் 18-8 சதவீதமாக குறைந்தது.
</li><li>
Greaves Electric Mobility (Ampere) - 8,612 யூனிட்கள் (89 சதவீதம் YoY வளர்ச்சி).
</li><li>
River Mobility - 5,134 யூனிட்கள் (170 சதவீதம் YoY வளர்ச்சி).
</li><li>
BGauss Auto - 4,844 யூனிட்கள்.
</li><li>
Simple Energy - 1,635 யூனிட்கள்.
</li><li>
Motovolt Mobility - 1,365 யூனிட்கள்.</li></ul><p></p><p>
</p><h2>
சந்தை நிலை:
</h2><p>TVS மற்றும் Bajaj முன்னணி இடங்களை பிடித்துள்ளன. Ather மற்றும் Hero Vida தொடர்ந்து வளர்ச்சி கண்டுள்ளன. ஆனால் Ola Electric மட்டும் YoY விற்பனையில் வீழ்ச்சி கண்டுள்ளது.
</p><p>
இந்த தரவுகள், இந்தியாவில் மின்சார இருசக்கர வாகன சந்தை வேகமாக வளர்ந்து வருவதை காட்டுகின்றன. புதிய பிராண்டுகள் (River, BGauss, Simple Energy) கூட Top 10 பட்டியலில் இடம்பிடித்துள்ளன.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-06T01:09:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரான் போருக்குப் பிறகு மத்திய கிழக்கில் டிரம்ப் போட்டுள்ள மிகப்பெரிய திட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/trump-plans-bigger-strategy-post-iran-war-1788655453"></link>
            <id>https://news.lankasri.com/article/trump-plans-bigger-strategy-post-iran-war-1788655453</id>
            <summary type="text">Trump plans bigger middle east strategy after Iran war:


அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், ஈரானுடன் நடைபெற்று வரும் போருக்குப் பிறகு மத்திய கிழக...</summary>
            <content type="html"><![CDATA[<p>Trump plans bigger middle east strategy after Iran war:


அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், ஈரானுடன் நடைபெற்று வரும் போருக்குப் பிறகு மத்திய கிழக்கில் “மிகப் பெரிய திட்டம்” ஒன்றை செயல்படுத்தத் திட்டமிட்டுள்ளதாக Axios வெளியிட்ட தகவலில் கூறப்பட்டுள்ளது.
</p><p>
இந்த புதிய திட்டம் இன்னும் வடிவமைக்கப்பட்டுக் கொண்டிருப்பதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bcaa1678-9782-454e-bd1d-0d3eb99d03f0/26-6a9cb75f55394.webp' /></p><p>இதன் முக்கிய நோக்கம், ஈரானை கட்டுப்படுத்த பிராந்திய கூட்டணியை உருவாக்குவது மற்றும் இஸ்ரேலை அதன் அண்டை நாடுகளுடன் ஆழமான உறவுகளுக்கு அழைத்துச் செல்வது ஆகும்.
</p><p>
டிரம்ப் தனது நெருங்கிய ஆலோசகர்களிடம், “ஈரான் போருக்குப் பிறகு மத்திய கிழக்கில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தப் போகிறேன்” என்று கூறியுள்ளார்.
</p><p></p><h2>திட்டத்தின் மூன்று முக்கிய அம்சங்கள்:
</h2><p><b>ஈரானுக்கு எதிரான பிராந்திய கூட்டணி:</b> அமெரிக்கா பாதுகாப்பு உத்தரவாதம் வழங்கும் வகையில், தனது கூட்டாளிகளை ஒருங்கிணைக்க முயற்சி.</p><p><b>
பிராந்திய மோதல்களை குறைத்தல்:</b> காசா திட்டத்தின் அடுத்த கட்டம், இஸ்ரேல்-சிரியா பாதுகாப்பு ஒப்பந்தம், இஸ்ரேல்-லெபனான் ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துதல்.</p><p><b>

Abraham Accords விரிவாக்கம்:</b> இஸ்ரேல்-சவுதி அரேபியா இடையே உறவை சாதாரணப்படுத்தும் ஒப்பந்தம். இது டிரம்ப் நிர்வாகத்துக்கு மிகப்பெரிய சாதனையாக இருக்கும்.</p><p>
</p><p></p><p>இஸ்ரேல் தேர்தல் அக்டோபர் 27 அன்று நடைபெற உள்ளது. அதற்குப் பிறகு உருவாகும் அரசாங்கம் அமெரிக்காவின் புதிய திட்டத்துடன் இணைந்து செயல்படுமா என்பது கேள்வியாக உள்ளது. ஆனால், டிரம்ப் நிர்வாகம் தேர்தல் முடிவுகளை காத்திருக்காமல் திட்டத்தை முன்னெடுக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-06T00:59:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாமலுக்கு எதிராக புதிய வழக்கு! சாட்சியமளிக்கத் தயாராகும் நெருங்கிய சகா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/new-case-against-namal-who-went-to-prison-1788630600"></link>
            <id>https://ibctamil.com/article/new-case-against-namal-who-went-to-prison-1788630600</id>
            <summary type="text">நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் முன்னாள் நெருங்கிய சகாவும், தொழிலதிபருமான நிமல் பெரேரா, அவருக்கு எதிராக இரண்டு தனித்தனி வழக்குகளில் சாட்சியம் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் முன்னாள் நெருங்கிய சகாவும், தொழிலதிபருமான நிமல் பெரேரா, அவருக்கு எதிராக இரண்டு தனித்தனி வழக்குகளில் சாட்சியம் அளிக்கத் தயாராக இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. </p><p>விசாரணைக்கு நெருக்கமான வட்டாரங்களை மேற்கோள் காட்டி இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள நாமல் ராஜபக்சவின் ஏர்பஸ் ஊழல் வழக்கில் முக்கிய சாட்சியாக&nbsp;நிமல் பெரேரா குறித்து முன்வைக்கப்பட்ட பிரமாண பத்திரம் முக்கியத்துவம் பெற்றிருந்தது.</p><p></p><p>
</p><h2>வழக்கு ஒன்று: ஏர்பஸ் ஊழல்</h2><p><u><b>நிமல் பெரேராவைத் தொடர்புகொள்ள மேற்கொள்ளப்பட்ட முயற்சி</b></u></p><p> நாமல் ராஜபக்சவின் சகாவான, விக்டோரியா மாநிலம் மெல்போர்னில் வசிக்கும் சட்டத்தரணி இந்திக கருணாஜீவா, தற்போது அவுஸ்திரேலியாவில் வசிக்கும் ராஜபக்சவின் நீண்டகால நண்பரான நிமல் பெரேராவைத் தொடர்புகொள்ள பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f352e2f1-f75e-4a01-9029-a6b6e791f1af/26-6a9c564bbc750.webp' /></p><p> ராஜபகசவுக்கு எதிராக எந்தவொரு வாக்குமூலமும் அளிக்க வேண்டாம் என அவரிடம் கேட்டுக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.
</p><p>
கருணாஜீவா, Narre Warren, VIC 3805, 66 Victor Crescent, Level 2, Suite 319 என்ற முகவரியில் இயங்கும் ISK Law நிறுவனத்தின் பிரதான சட்டத்தரணியாக உள்ளதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது.</p><h2>தோல்வியடைந்த முயற்சி </h2><p>நன்கு அறிந்த வட்டாரங்களின் தகவலின்படி, கருணாஜீவாவால் நிமல் பெரேராவைத் தொடர்புகொள்ள முடியவில்லை. அவர் செய்த தொலைபேசி அழைப்புகளுக்கு பெரேரா பதிலளிக்கவில்லை என்றும், குறுஞ்செய்திகளுக்கும் பதில் அளிப்பதைத் தவிர்த்ததாகவும் கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3f1b1555-5e93-4876-b0c0-dc129ed0ac3c/26-6a9c564b0ee8a.webp' /></p><p>

இதனால் அவரைத் தொடர்புகொள்ள மேற்கொள்ளப்பட்ட முயற்சி தோல்வியடைந்ததாகக் கூறப்படுகிறது. </p><p>இந்தச் சம்பவம் நாமல் ராஜபக்சவை மிகவும் அதிருப்தியடையச் செய்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p></p><h2>CID அதிகாரிகள் அவுதிரேலியா பயணம்</h2><p>இந்த விவகாரம் தெரியவந்ததைத் தொடர்ந்து, குற்றப் புலனாய்வுத் துறை (CID) மற்றும் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் அதிகாரிகள் அவுதிரேலியாவுக்குச் சென்று நிமல் பெரேராவிடமிருந்து சத்தியப்பிரமாண வாக்குமூலம் பதிவு செய்ததாகக் கூறப்படுகிறது.</p><p>சட்டமா அதிபர் திணைக்களத்தின் மூத்த சட்டத்தரணி ஒருவரின் கூற்றுப்படி, நிமல் பெரேராவுக்கு சாட்சி பாதுகாப்பும் பாதுகாப்பு ஏற்பாடுகளும் வழங்க அவுதிரேலிய அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><p>
அவர் அவுதிரேலியாவில் இருந்தபடியே Zoom வழியாக சாட்சியம் அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><h2>சர்வதேச பரஸ்பர சட்ட உதவி</h2><p>அவுதிரேலியா, சிங்கப்பூர், பிரான்ஸ் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளிடமிருந்து பரஸ்பர சட்ட உதவி மூலம் விசாரணைக்கு ஆதரவு கிடைத்துள்ளதாகவும், விசாரணை தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகவும் கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a4c92a64-f88c-4b89-a08d-fa4e768bc4b5/26-6a9c564c72257.webp' /></p><p>

இந்த வழக்கின் முக்கிய அம்சமாக Airbus நிறுவனத்திடமிருந்து ஆவணங்களைப் பெறுவதற்கான நடவடிக்கை அமைந்துள்ளது.
</p><p>
சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஒரு தகவல் வட்டாரம் இந்த வழக்கு வலுவான நிலையில் இருப்பதாகவும், நாமல் ராஜபக்சவுக்கு எதிரான மேலும் பல ஆதாரங்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.</p><p></p><p>
</p><h2>வழக்கு இரண்டு: கிரிஷ் விவகாரம்
நிதி முறைகேடு</h2><p><b><u>கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை</u></b></p><h2> </h2><p>இரண்டாவது வழக்கு, ரக்பி விளையாட்டு மேம்பாட்டிற்காக வழங்கப்பட்டதாகக் கூறப்படும் ரூ.70 மில்லியன் தொடர்பானது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b6ded7ec-8a2f-4214-8f44-72f7bab52c63/26-6a9c564d2a0bd.webp' /></p><p>
</p><p>
இந்தப் பணம் Krrish Lanka (Pvt) Ltd நிறுவனத்தால் செலுத்தப்பட்டதாகவும், பின்னர் நிமல் பெரேராவுடன் தொடர்புடைய வங்கிக் கணக்குகளுக்கு மாற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அதன் பின்னர் அந்த நிதி நாமல் ராஜபக்சவுக்கு மாற்றப்பட்டதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
</p><p>இந்த நிதி தொடர்பாக சட்டமா அதிபர் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகளைத் தாக்கல் செய்துள்ளார்.

இந்தப் பணப் பரிவர்த்தனையின் ஓட்டம் தொடர்பான முக்கிய அரசுத் தரப்பு சாட்சியாக நிமல் பெரேரா பெயரிடப்பட்டுள்ளார்.
</p><p>இந்த வழக்கை விசாரிப்பதற்காக மேல் நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட சிறப்பு அமர்வை நியமிக்குமாறு சட்டமா அதிபர் பிரதம நீதியரசரிடம் கோரிக்கை விடுக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-06T00:59:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[பல மில்லியன் ரூபா பெறுமதியான சொத்துக்களை அதிரடியாக முடக்கிய அரசு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/15-mn-worth-properties-seized-1788620097"></link>
            <id>https://tamilwin.com/article/15-mn-worth-properties-seized-1788620097</id>
            <summary type="text">வெலிகம பிரதேசத்தில் சட்டவிரோத வழிகளில் ஈட்டப்பட்டதாக கூறப்படும் 15 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது. 

சட்டவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>வெலிகம பிரதேசத்தில் சட்டவிரோத வழிகளில் ஈட்டப்பட்டதாக கூறப்படும் 15 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது. </p><p>

சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினால் இந்த சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது.. </p><p>வெலிகம, பதேகம் பகுதியில் வசிக்கும் நபரொருவர் ஈஷி கேஷ் தளத்தைப் பயன்படுத்தி சட்டவிரோத போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வருவதாக பொலிஸ் மா அதிபருக்கு கிடைத்த தகவல் கிடைத்துள்ளது.</p><p> </p><h2><b>

சட்டவிரோத சொத்துக்கள்</b></h2><p>இதனை தொடர்ந்து, சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவின் கீழ் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் விசாரணை ஆரம்பிக்கப்பட்டது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d9b8e22c-1145-4fc2-8f33-8af30924c6bd/26-6a9c39461635c.webp' /></p><p>விசாரணைக்கமைய, வெலிகம, பதேகம் பகுதியில் அமைந்துள்ள 15 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான மதிப்புள்ள வீடு, போதைப்பொருள் கடத்தல் மூலம் சட்டவிரோதமாக பெற்ற பணத்தில் கொள்வனவு என்பது தெரியவந்துள்ளது. </p><p>

இதன் காரணமாக நேற்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில், 14 நாட்களுக்கு அந்தச் சொத்தை முடக்குமாறு பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. </p><p>இது தொடர்பான மேலதிக விசாரணைகளைச் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு மேற்கொண்டு வருகிறது.</p><p></p><p></p><p> </p>]]></content>
            <updated>2026-09-06T00:46:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[தேர்தல் நிதியை திரட்டத் திண்டாடும் அரசியல் கட்சிகள்! பொருளாதார நெருக்கடியில் புதிய சவால்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/political-parties-struggling-raise-election-funds-1788655321"></link>
            <id>https://ibctamil.com/article/political-parties-struggling-raise-election-funds-1788655321</id>
            <summary type="text">நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக, பிரதான அரசியல் கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் கடுமையான நிதி நெருக்கடியை எதிர்கொண்டு வருவதாகத...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக, பிரதான அரசியல் கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் கடுமையான நிதி நெருக்கடியை எதிர்கொண்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
</p><p>
இதன் காரணமாக, எதிர்வரும் தேர்தல் நடவடிக்கைகளுக்குத் தேவையான நிதியைத் திரட்டுவது அரசியல் கட்சிகளுக்கு பெரும் சவாலாக மாறியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
சில அரசியல் கட்சிகளுக்கு தங்களது தலைமையகங்கள் மற்றும் பிராந்திய அலுவலகங்களைப் பராமரிப்பதுடன், அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கான சம்பளங்களை வழங்குவதும் தற்போது மிகவும் சிரமமாகியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p></p><h2>கட்டணங்களை செலுத்த முடியாத நிலை</h2><p>
</p><p>மேலும், சில கட்சி அலுவலகங்களில் மின்சாரம் மற்றும் நீர் கட்டணங்களைக் கூட செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bce9aa0d-85c8-4f54-8bae-bd244568df9b/26-6a9cb6dbd334e.webp' /></p><p>

அதிகரித்துள்ள செலவினங்கள் காரணமாக, பல அரசியல் கட்சிகளின் நிதி கையிருப்புகள் தற்போது வெகுவாகக் குறைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. </p><p>இதனால் எதிர்வரும் தேர்தல்களை இலக்காகக் கொண்டு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செல்வந்தர்களின் நிதி ஆதரவைப் பெற்றுக்கொள்ள பல கட்சிகள் எதிர்பார்ப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
இதனிடையே, கடந்த தேர்தல் காலங்களில் வெளிநாடுகளில் இருந்து கிடைத்த நிதியுதவிகளில் சிலவற்றை குறிப்பிட்ட அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் தனிப்பட்ட தேவைகளுக்குப் பயன்படுத்தியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
</p><p>
கட்சி நிதியை செலவிடும்போது வெளிப்படைத்தன்மையுடன் கூடிய நடைமுறையை உருவாக்க சில கட்சித் தலைவர்கள் முயற்சித்து வருவதாகவும், எனினும் மற்றொரு தரப்பினர் அதற்கு தடைகளை ஏற்படுத்தி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
</p><p>இலங்கையில்&nbsp; தேர்தல்கள் ஆணைக்குழுவினால் இதுவரை 85 அரசியல் கட்சிகள் அங்கீகரிக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-06T00:42:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாமலை காட்டிக்கொடுத்த நபருக்கு உயிரச்சுறுத்தல் - வெளிநாடுகளில் இருந்து தொடரும் விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-arrest-case-updates-1788651523"></link>
            <id>https://tamilwin.com/article/namal-arrest-case-updates-1788651523</id>
            <summary type="text">நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தற்போது கொழும்பு மெகசின் சிறைச்சாலையில் எதிர்வரும் 18ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

ஏர்பஸ் (Ai...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தற்போது கொழும்பு மெகசின் சிறைச்சாலையில் எதிர்வரும் 18ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.</p><p>

ஏர்பஸ் (Airbus) விமான கொள்வனவு தொடர்பான ஊழல் வழக்கில், 8 லட்சம் அமெரிக்க டொலர்கள் நாமல் ராஜபக்சவிற்கு கமிஷன் தொகையாக வழங்கப்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில் அவர் கைது செய்ப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
</p><p>
இந்த வழக்கு நிமல் பெரேரா என்பவரின் வாக்குமூலத்தின் அடிப்படையில் அமைந்துள்ளது.
</p><p>
அவர் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக அஞ்சி அவுஸ்திரேலியாவிலிருந்து விசாரணை அதிகாரிகளிடம் சாட்சியம் அளித்துள்ளார்.

அவர் அவுஸ்திரேலிய சட்டத்தின் கீழ் சத்தியப் பிரமாண அறிக்கையையும் வழங்கியுள்ளார்.</p><p>

இந்த விசாரணை இலங்கை அதிகாரிகளால் மட்டுமல்லாது, பிரான்ஸ், சிங்கப்பூர், அமெரிக்கா மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளின் ஒத்துழைப்புடன் நடைபெறுவதாக அரசு தரப்பு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.</p><p>


சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு வந்த பணத்தில் இருந்து, 100 மில்லியன் ரூபாய் நாமல் ராஜபக்சவுக்கு வழங்கப்பட்டதாக நிமல் பெரேரா குற்றம் சாட்டியுள்ளார்.</p><p>

நாமல் ராஜபக்சவுக்கு எதிராக வாக்குமூலம் அளித்த பிறகு, தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக அவர் அஞ்சுவதால் தான் இலங்கை வரத் தயங்குகிறார் என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இந்த விடயங்கள் தொடர்பில் முழுமையாக பேசுகின்றது NewsInsightTamil நிகழ்ச்சி..</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/RFwKvZNB2Yo" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-06T00:37:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாமல் ராஜபக்சவின் மனைவி லிமினியை அரசியல் களமிறக்க பொதுஜன பெரமுன திட்டமா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/namal-remanded-will-limini-enter-political-arena-1788654357"></link>
            <id>https://jvpnews.com/article/namal-remanded-will-limini-enter-political-arena-1788654357</id>
            <summary type="text">நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் மனைவி லிமினி ராஜபக்ச, செயற்பாட்டு அரசியல் களத்தில் ஈடுபடுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தயாராகி வருவதாக அரசி...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் மனைவி லிமினி ராஜபக்ச, செயற்பாட்டு அரசியல் களத்தில் ஈடுபடுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தயாராகி வருவதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p>
</p><p></p><p>எதிர்வரும் 12ஆம் திகதி அனுராதபுரத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஏற்பாட்டில் மக்கள் போராட்டப் பேரணியொன்று நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
</p><p>
இந்த நிலையில், தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் நாமல் ராஜபக்சவுக்குப் பதிலாக, அவரது மனைவி லிமினி ராஜபக்ச இந்தப் பேரணியில் பங்கேற்று பிரதான மேடையில் மக்களிடம் உரையாற்றக்கூடும் என பொதுஜன பெரமுனவின் உள்வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c43c57d1-bfdf-4e0f-8d7a-b62fa2b65929/26-6a9cb316a86e5.webp' /></p><p>எனினும், லிமினி ராஜபக்சவின் அரசியல் பிரவேசம் தொடர்பான இந்தத் தகவல்கள் தொடர்பில் கட்சித் தரப்பிலிருந்து இதுவரை உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.</p><p>

அதேவேளை, எதிர்வரும் நாட்களில் கொழும்பில் லிமினி ராஜபக்ச தலைமையில் முக்கிய எதிர்ப்பு நடவடிக்கையொன்றை நடத்துவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
</p><p>
இதனுடன் இணைந்து, ஊடகங்களுடனான சந்திப்பொன்றையும் நடத்துவதற்கு கட்சித் தரப்பில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p>

நாமல் ராஜபக்சவின் அரசியல் செயற்பாடுகள் தொடர்பில் நிலவும் தற்போதைய சூழ்நிலையில், அவரது மனைவி லிமினி ராஜபக்ச பொதுமக்கள் முன்னிலையில் தோன்றி கட்சியின் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவாரா என்பது அரசியல் வட்டாரங்களில் முக்கிய பேசுபொருளாக மாறியுள்ளது.
</p><p>
குறிப்பாக, அனுராதபுரத்தில் நடைபெறவுள்ள பொதுஜன பெரமுனவின் மக்கள் போராட்டப் பேரணியில் லிமினி ராஜபக்ச பிரதான மேடையில் உரையாற்றுவாரா என்பதுடன், எதிர்வரும் நாட்களில் அவர் தொடர்ச்சியாக செயற்பாட்டு அரசியலில் ஈடுபடுவாரா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
</p><p>
எவ்வாறாயினும், லிமினி ராஜபக்சவின் அரசியல் பிரவேசம் மற்றும் எதிர்வரும் அரசியல் நடவடிக்கைகள் தொடர்பில் பொதுஜன பெரமுனவின் உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியாகிய பின்னரே நிலைமை தெளிவாகும் என அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-06T00:26:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[மணல் திட்டில் சிக்கித் தவித்த 11 இலங்கை ஏதிலிகள் - அதிரடியாக மீட்ட கடற்படையினர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-lanka-navy-rescues-11-people-including-1788652927"></link>
            <id>https://tamilwin.com/article/sri-lanka-navy-rescues-11-people-including-1788652927</id>
            <summary type="text">தலைமன்னார் அருகே உள்ள தொலைதூர மணல் திட்டில் தவித்துக் கொண்டிருந்த 5
குழந்தைகள் உட்பட 11 இலங்கை ஏதிலிகளை கடற்படையினர் சனிக்கிழமை (செப்டம்பர் 5)
மீட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>தலைமன்னார் அருகே உள்ள தொலைதூர மணல் திட்டில் தவித்துக் கொண்டிருந்த 5
குழந்தைகள் உட்பட 11 இலங்கை ஏதிலிகளை கடற்படையினர் சனிக்கிழமை (செப்டம்பர் 5)
மீட்டு மனிதாபிமான உதவி வழங்கியுள்ளனர்.
</p><p>
இந்த நிலையில் ​அதிகாலை வழக்கமான கடல் ரோந்துப் பணியின் போது, முதற்கட்டமாக
நான்கு பெண்கள், ஒரு ஆண் மற்றும் மூன்று குழந்தைகள் அடங்கிய 8 பேர் கொண்ட
குழுவை கடற்படையினர் கண்டறிந்த நிலையில்
அவர்களுக்குத் தேவையான குடிநீர், உணவு மற்றும் தற்காலிக இருப்பிட வசதிகள்
உடனடியாக வழங்கப்பட்டன.

​</p><h2>மனிதக் கடத்தல்</h2><p>அதைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட அடுத்தகட்ட ரோந்துப் பணியில், அதே பகுதியில்
தவித்துக் கொண்டிருந்த ஒரு தந்தை மற்றும் அவரது இரண்டு பிள்ளைகள் என மேலும்
மூவர் மீட்கப்பட்டுள்ளனர்.</p><p>

இதன் மூலம் மீட்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 11 ஆக (5 குழந்தைகள், 4
பெண்கள், 2 ஆண்கள்) உயர்ந்துள்ளது.
​</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/590e093a-fbaa-478d-8106-1576f4836e81/26-6a9cb089b516d.webp' /></p><p>
மேலும் முதற்கட்ட விசாரணையில், இவர்கள் இந்தியாவின் ராமேஸ்வரத்தில் இருந்து
கடல் வழியே பயணம் செய்ததும், சந்தேகத்திற்கிடமான மனிதக் கடத்தல் கும்பலால்
மணல் திட்டில் கைவிடப்பட்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.</p><p>

அத்துடன், இவர்கள் தென்னிந்தியாவில் உள்ள அனயூர் மற்றும் ஒக்கூர் அகதிகள்
முகாம்களில் தங்கியிருந்த இலங்கையர்கள் என நம்பப்படுகிறது.</p><p>

​மீட்கப்பட்ட 11 பேரும் மேலதிக சட்டப்பூர்வ விசாரணைகள் மற்றும்
நடவடிக்கைகளுக்காகத் தலைமன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாக
கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-06T00:22:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பில் அனுமதியற்ற கட்டுமானங்களை அகற்ற அரசாங்கம் நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/illegal-constructions-are-being-demolished-colombo-1788653729"></link>
            <id>https://ibctamil.com/article/illegal-constructions-are-being-demolished-colombo-1788653729</id>
            <summary type="text">கொழும்பு மாவட்டத்தின் கடலோரப் பகுதியில் உள்ள அங்கீகரிக்கப்படாத கட்டுமானங்களை அகற்றும் பணி இந்த மாதம் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.சுற்றுச்சூழல் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு மாவட்டத்தின் கடலோரப் பகுதியில் உள்ள அங்கீகரிக்கப்படாத கட்டுமானங்களை அகற்றும் பணி இந்த மாதம் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>சுற்றுச்சூழல் அமைச்சர் தம்மிக பத்தபெண்டியின் கூற்றுப்படி, இந்த நடவடிக்கை இடம்பெறவுள்ளது.</p><p>காலிமுகத்திடல் முதல் பொல்கொட ஆறு வரையிலான பகுதி ஐந்து மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளதாகவும், இப்பணி அதனை உள்ளடக்கும் என்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் கூறியுள்ளார்.</p><p></p><h2>சட்ட ஆலோசனை</h2><p>இதன்படி இதனை அகற்றும் செயல்முறை குறித்த சட்ட ஆலோசனை சட்டமா அதிபரிடமிருந்து ஏற்கனவே பெறப்பட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d241a0de-f5ec-4dbc-8ded-10e9ead92ef0/26-6a9cb0a3b224e.webp' /></p><p>

கடலோரப் பகுதியில் உள்ள அனைத்து சட்டவிரோதக் கட்டுமானங்களையும் அகற்றி, அப்பகுதியை ஒரு கவர்ச்சிகரமான சுற்றுலாத் தலமாக மேம்படுத்துவதற்கான திட்டங்கள் நடைபெற்று வருவதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள I<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">BC தமிழ் WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-06T00:16:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாளத்தில் 64 வயது பெண் உயிருடன் மீட்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/nepal-mudslide-64-year-old-woman-rescued-1788653734"></link>
            <id>https://news.lankasri.com/article/nepal-mudslide-64-year-old-woman-rescued-1788653734</id>
            <summary type="text">Nepal mudslide 64-year-old woman rescued: நேபாள பேரழிவிலிருந்து மற்றோரு பெண் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.

 64 வயது நேபாள பெண்&amp;nbsp;மீட்புநேபாளத்தின...</summary>
            <content type="html"><![CDATA[<p>Nepal mudslide 64-year-old woman rescued: நேபாள பேரழிவிலிருந்து மற்றோரு பெண் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.
</p><h2>
 64 வயது நேபாள பெண்&nbsp;மீட்பு</h2><p>நேபாளத்தின் Nuwakot மாவட்டத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய மண்சரிவில் சிக்கியிருந்த 64 வயது நேபாள பெண் 10 நாட்கள் கழித்து உயிருடன் மீட்கப்பட்டார்.</p><p>மீட்பு குழுவினர், இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த அந்த பெண்ணை சனிக்கிழமை உயிருடன் வெளியே கொண்டு வந்தனர். ஆரம்ப சிகிச்சைக்குப் பிறகு, அவரை காத்மாண்டுவுக்கு மாற்றி மேலதிக சிகிச்சை அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/be2ee565-7afb-4984-ad11-ed91e1106301/26-6a9cb0a82c65b.webp' /></p><p>சனிக்கிழமையன்று, நேபாள சுரங்கத்தில் சிக்கியிருந்த சீன தொழிலாளி ஒருவரும் உயிருடன் மீட்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
</p><p>
நேபாள பொலிஸ் வெளியிட்ட சமீபத்திய தகவலின்படி, இதுவரை 1,344 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் 4,898 பேர் தொடர்பில் இல்லை என்றும், 8,631 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p>
</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">🇳🇵 Nepal | Woman Alive After 11 Days Under the Rubble<br><br>In a scene that restored hope, Nepal&#39;s Armed Police Force rescued a 68-year-old woman alive from inside a house destroyed by floods in Bhitravati, on the eleventh day of the disaster.<br><br>She was found in a state of severe… <a href="https://t.co/2sdmSnfxLE">pic.twitter.com/2sdmSnfxLE</a></p>&mdash; Siraj Noorani (@sirajnoorani) <a href="https://x.com/sirajnoorani/status/2096197674055995594?ref_src=twsrc%5Etfw">September 5, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>மீட்பு நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. நேபாள இராணுவம், ஆயுத பொலிஸ் படை மற்றும் உள்ளூர் தன்னார்வலர்கள் இணைந்து உயிர் பிழைத்தவர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p>&nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-09-06T00:12:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiva</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆற்றில் நீராட சென்ற இளைஞர்கள் நீரில் மூழ்கி பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/two-youths-drowned-nanu-oya-s-glasso-waterfall-1788652213"></link>
            <id>https://ibctamil.com/article/two-youths-drowned-nanu-oya-s-glasso-waterfall-1788652213</id>
            <summary type="text">நுவரெலியா – நானுஓயா கிளாஸ்கோ நீர்வீழ்ச்சிக்கு அருகே உள்ள ஆற்றில் நீராட சென்ற இரு இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p>நுவரெலியா – நானுஓயா கிளாஸ்கோ நீர்வீழ்ச்சிக்கு அருகே உள்ள ஆற்றில் நீராட சென்ற இரு இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p>இந்த துயரச்சம்பவம் நேற்று(05.09.2026) இடம்பெற்றுள்ளது.</p><p>
</p><p>
நண்பர்களுடன் குறித்த பகுதிக்கு சென்றிருந்ததாகக் கூறப்படும் குறித்த இருவரும் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த சந்தர்ப்பத்திலேயே நீரில் மூழ்கியுள்ளதாக காவல்துறை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p></p><h2>மீட்புப் பணி</h2><p>
சம்பவத்தை தொடர்ந்து அப்பகுதியில் இருந்தவர்கள் மற்றும் மீட்புப் பணியாளர்கள்
மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் பின்னர், இரு இளைஞர்களும் சடலங்களாக
மீட்கப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c0845e2e-6ca7-4693-af24-6ae16297ad6d/26-6a9caab8370ef.webp' /></p><p>உயிரிழந்தவர்கள், 24 வயதுடைய பெருமாள் திவாகர் மற்றும் 23
வயதுடைய அன்பழகன் நிக்சன்

என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.</p><p>

மீட்கப்பட்ட இரு சடலங்களும் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட பொது
வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p>
இதேவேளை, மலையக பகுதிகளில் காணப்படும் நீர்வீழ்ச்சிகள் மற்றும் ஆறுகளில்
மழைக்காலங்களில் நீரின் வேகம் திடீரென அதிகரிக்கக்கூடிய நிலையில், பொதுமக்கள்
மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
</p><p>
குறிப்பாக, நீரின் ஆழம் மற்றும் நீரோட்டத்தின் வேகம் குறித்து அறியாமல் ஆறுகள்
மற்றும் நீர்வீழ்ச்சிகளில் குளிப்பதை தவிர்க்குமாறும் கோரிக்கை
விடுக்கப்பட்டுள்ளது.
</p><p>
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நானுஓயா காவல்துறையினர் முன்னெடுத்து
வருகின்றனர்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-05T23:50:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஐரோப்பிய நிலத்தில் ஏவப்பட்ட முதல் செயற்கைக்கோள் - வரலாறு படைத்த ஜேர்மன் ரொக்கெட்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/german-rocket-makes-first-eu-orbital-launch-1788651477"></link>
            <id>https://news.lankasri.com/article/german-rocket-makes-first-eu-orbital-launch-1788651477</id>
            <summary type="text">German rocket makes first EU orbital launch: முதல் செயற்கைக்கோளை வெற்றிகரமாக ஏவி ஜேர்மனி வரலாறு படைத்துள்ளது.


வரலாறு படைத்த ஜேர்மனி ஜேர்மனியின் த...</summary>
            <content type="html"><![CDATA[<p>German rocket makes first EU orbital launch: முதல் செயற்கைக்கோளை வெற்றிகரமாக ஏவி ஜேர்மனி வரலாறு படைத்துள்ளது.
</p><h2>

வரலாறு படைத்த ஜேர்மனி </h2><p>ஜேர்மனியின் தனியார் விண்வெளி நிறுவனம் Isar Aerospace, தனது Spectrum ரொக்கெட்டை நோர்வேயின் Andoya Spaceport-இல் இருந்து 2026 செப்டம்பர் 5 அன்று வெற்றிகரமாக விண்வெளிக்கு அனுப்பியது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4787aa85-e99f-4e56-8006-da094d9435bf/26-6a9ca7d75c9bd.webp' /></p><p>இது ஐரோப்பிய நிலத்தில் இருந்து நடந்த முதல் orbital launch ஆகும். இதன் மூலம், ஐரோப்பா தனது செயற்கைக்கோள் ஏவுதல் திறனில் புதிய அத்தியாயத்தை தொடங்கியுள்ளது.
</p><p>
இந்த ரொக்கெட், ஐந்து CubeSats மற்றும் ஒரு அறிவியல் பரிசோதனையை எடுத்துச் சென்றது. TU Berlin, University of Maribor, NTNU Norway போன்ற பல்கலைக்கழகங்கள் உருவாக்கிய செயற்கைக்கோள்கள் இதில் அடங்கும். </p><p>European Space Agency-யின் Boost! திட்டத்தின் கீழ் இந்த முயற்சி நடைபெற்றது.
</p><p></p><h2>இரண்டாவது முயற்சி&nbsp;வெற்றி </h2><p>2025-இல் நடந்த முதல் முயற்சி தோல்வியடைந்தது. புறப்பட்ட ஒரு நிமிடத்திற்குள் ரொக்கெட் கட்டுப்பாட்டை இழந்து கடலில் விழுந்தது. ஆனால், Isar Aerospace அந்த பிழைகளை சரிசெய்து, 2026-இல் இரண்டாவது முயற்சியில் வெற்றி பெற்றது.
</p><p>
இந்த வெற்றியால், ஐரோப்பா SpaceX மற்றும் பிற வெளிநாட்டு நிறுவனங்களின் மீது வைத்திருந்த சார்பை குறைக்க முடியும். Isar Aerospace நிறுவனம், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான செயற்கைக்கோள்களை சுற்றுவட்ட பாதைக்கு அனுப்பும் திறனை பெற்றுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6855e1c2-5e40-4e0a-bdbc-e80a719daf7e/26-6a9ca7d818f36.webp' /></p><p>
நிறுவனத்தின் CEO Daniel Metzler கூறியதாவது: “விண்வெளிக்கு அணுகுதல் என்பது தேசிய பாதுகாப்புக்கும், தொழில்துறைக்கும் மிகப்பெரிய சவாலாக உள்ளது. இந்த வெற்றி, ஐரோப்பாவுக்கு தன்னாட்சி வழங்கும்” என்று தெரிவித்தார்.
</p><p>
இந்த முயற்சி, ஐரோப்பிய விண்வெளி துறைக்கு புதிய வாய்ப்புகளைத் திறக்கிறது. பிரித்தானியா, சுவீடன் போன்ற நாடுகளும் விரைவில் தங்கள் சொந்த spaceports-இல் இருந்து செயற்கைக்கோள் ஏவுதலை தொடங்க திட்டமிட்டுள்ளன.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><br>]]></content>
            <updated>2026-09-05T23:34:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[பசிபிக் பெருங்கடலில் மூன்று சக்திவாய்ந்த சூறாவளிகள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/name-of-hurricanes-forming-in-the-pacific-ocean-1788651136"></link>
            <id>https://ibctamil.com/article/name-of-hurricanes-forming-in-the-pacific-ocean-1788651136</id>
            <summary type="text">தற்போது உருவாகிவரும், எல் நினோ காலநிலை மாற்றத்தின் தாக்கத்தால் பசிபிக் பெருங்கடலில் ஒரே நேரத்தில் மூன்று வெப்பமண்டல சூறாவளிகள் உறுவாகியுள்ளமை சர்வதேசத...</summary>
            <content type="html"><![CDATA[<p>தற்போது உருவாகிவரும், எல் நினோ காலநிலை மாற்றத்தின் தாக்கத்தால் பசிபிக் பெருங்கடலில் ஒரே நேரத்தில் மூன்று வெப்பமண்டல சூறாவளிகள் உறுவாகியுள்ளமை சர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது.</p><p>லோவெல் (Lowell), கரினா (Karina) மற்றும் மரி (Marie) என பெயரிடப்பட்ட மூன்று சூறாவளிகளும் தற்போது பசிபிக் பகுதியில் உறுவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>இதன்படி நாசாவின் செயற்கைக்கோள் அவதானிப்புகளும் ஒரே நேரத்தில் மூன்று வெப்பமண்டல சூறாவளிகள் பசிபிக் பகுதியில் காணப்பட்டதை உறுதிப்படுத்தியுள்ளன.</p><p></p><h2>&nbsp;ஹவாய் தீவுகள்</h2><p>இந்த மூன்றில் லோவெல் சூறாவளியே ஹவாய் தீவுகளுக்கு அதிக அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடியதாக கணிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c6897b1e-85f4-4e8c-a148-15c6aab3c5be/26-6a9ca6834718b.webp' /></p><p> </p><p>அதன் பாதை ஹவாயின் மேற்குப் பகுதிகளை நோக்கி திரும்பக்கூடும் என முன்னறிவிப்புகள் தெரிவிக்கின்றன. </p><p>இருப்பினும், சூறாவளி நேரடியாக நிலப்பரப்பைத் தாக்குமா என்பது இன்னும் உறுதியாக தெரியவில்லை.</p><p>லோவெல் சூறாவளி ஒரு கட்டத்தில் மணிக்கு 160 மைல் (சுமார் 257 கி.மீ.) வேகத்திலான காற்றுடன் Category 5 வலிமையை எட்டியதாகவும், பின்னர் அதன் வலிமையில் மாற்றங்கள் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>ஆபத்தான நீரோட்டங்கள்</h2><p> </p><p>ஹவாயில் கடுமையான அலைகளுக்கு எச்சரிக்கை
சூறாவளியின் நேரடி தாக்கம் குறித்த நிச்சயமற்ற நிலை தொடர்ந்தாலும், ஹவாய் தீவுகளில் கடுமையான கடல் அலைகள் மற்றும் ஆபத்தான நீரோட்டங்கள் தொடர்பில் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.</p><p>

சில கடற்கரைகளில் 12 அடி வரை உயரமான அலைகள் உருவாகக்கூடும் என முன்னறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சில பகுதிகளில் அலை உயரம் 14 அடியை எட்டக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>மேலும், கனமழை, திடீர் வெள்ளம், கடல் நீர் உள்வருதல் மற்றும் பலத்த காற்று உள்ளிட்ட அபாயங்கள் குறித்தும் அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-05T23:32:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாமலை காப்பாற்ற சென்று சிக்கலில் மாட்டிய உதய கம்மன்பில! மகனை சந்தித்த பின் தடுமாறிய மகிந்த]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/gammanpila-lands-trouble-trying-to-rescue-namal-1788634276"></link>
            <id>https://tamilwin.com/article/gammanpila-lands-trouble-trying-to-rescue-namal-1788634276</id>
            <summary type="text">ஏர்பஸ் (Airbus) விமான கொள்வனவு தொடர்பான ஊழல் வழக்கில், 8 லட்சம் அமெரிக்க டொலர்கள் நாமல் ராஜபக்சவிற்கு கமிஷன் தொகையாக வழங்கப்பட்டதாகக் குற்றம் சாட்டப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஏர்பஸ் (Airbus) விமான கொள்வனவு தொடர்பான ஊழல் வழக்கில், 8 லட்சம் அமெரிக்க டொலர்கள் நாமல் ராஜபக்சவிற்கு கமிஷன் தொகையாக வழங்கப்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில் அவர் கைது செய்ப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
</p><p>
இந்தநிலையில், நாமல் ராஜபக்சவை பாதுகாப்பதற்காகப் பேசிய உதய கம்மன்பில, அந்தப் பணம் அலுவலக மேசையில் வைக்கப்பட்டதாகக் கூறியது, அவர் மீதுள்ள குற்றச்சாட்டை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. </p><p>8 லட்சம் அமெரிக்க டொலர்கள் நாமல் ராஜபக்சவின் அலுவலகத்திற்குச் சென்றதாகவும், அவர் அங்கு இல்லாதபோது மேசையில் வைக்கப்பட்டதாகவும் உதய கம்மன்பில வெளிப்படையாகக் கூறியது, பணம் நாமல் ராஜபக்சவின் வசம் சென்றதை உறுதிப்படுத்தும் ஆதாரமாக மாறிவிட்டது.</p><p>

இந்த வழக்கில் உதய கம்மன்பிலவின் இந்த கூற்று முக்கியமானதாக பார்க்கப்படுகின்றது.

ஒரு வழக்கறிஞராக உதய கம்மன்பில இவ்வாறான வாக்குமூலங்களை வழங்குவது, நாமல் ராஜபக்சவின் தரப்பு வாதத்தையே பலவீனப்படுத்துவதாக விமர்சிக்கப்படுகிறது.&nbsp; &nbsp; </p><p>மேலும், நாமல் ராஜபக்சவின் கைதுக்கு எதிராக ஊடக சந்திப்புகளை நடத்தி, சட்டவிரோதமான முறையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக விமர்சித்தார்.</p><p>


அத்துடன் ஆதாரங்கள் இல்லாமல் பெயர்களைக் குறிப்பிட்டு கைது செய்யும் தற்போதைய முறையை அவர் கடுமையாகச் சாடியுள்ளார்.
</p><p>

இந்தநிலையில், சிறையில் உள்ள தனது மகனைச் சந்தித்த பிறகு மகிந்த ராஜபக்ச ஊடகவியலாளர்களைச் சந்தித்தபோது, அவர் மிகுந்த மன உளைச்சலுடனும், பதற்றத்துடனும் காணப்பட்டார். </p><p>பேசும்போது அவரது வார்த்தைகள் தடுமாறியதாகவும், சொற்கள் வெளிப்பட சிரமப்பட்டதையும் அவதானிக்க முடிந்தது.
</p><p>
இந்தவிடயங்கள் தொடர்பில் விரிவாக பேசுகின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி..&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/aUuUMhWwpcs" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-05T23:25:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Malaivanjan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நானுஓயா கிளாஸ்சோ நீர்வீழ்ச்சியில் சோகம்! நீரில் மூழ்கி இரு இளைஞர்கள் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/two-youths-drowned-nanu-oya-s-glasso-waterfall-1788649420"></link>
            <id>https://tamilwin.com/article/two-youths-drowned-nanu-oya-s-glasso-waterfall-1788649420</id>
            <summary type="text">நுவரெலியா – நானுஓயா கிளாஸ்சோ நீர்வீழ்ச்சி அமைந்துள்ள பகுதியில் ஆற்றில்
குளிக்கச் சென்ற இரு இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் சடலங்களாக
மீட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நுவரெலியா – நானுஓயா கிளாஸ்சோ நீர்வீழ்ச்சி அமைந்துள்ள பகுதியில் ஆற்றில்
குளிக்கச் சென்ற இரு இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் சடலங்களாக
மீட்கப்பட்டுள்ளனர்.</p><p>

இந்த துயரச் சம்பவம் நானுஓயா கிளாஸ்சோ நீர்வீழ்ச்சி பகுதியில் நேற்று(5) இடம்பெற்றுள்ளது.</p><h2>இரு இளைஞர்கள்</h2><p>
</p><p>
நண்பர்களுடன் குறித்த பகுதிக்கு சென்றிருந்ததாகக் கூறப்படும் இரு இளைஞர்களும்
ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த சந்தர்ப்பத்திலேயே நீரில் மூழ்கியுள்ளதாக
ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
</p><p>
சம்பவத்தை தொடர்ந்து அப்பகுதியில் இருந்தவர்கள் மற்றும் மீட்புப் பணியாளர்கள்
மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் பின்னர், இரு இளைஞர்களும் சடலங்களாக
மீட்கப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2a85d6ea-2d27-476e-9576-8872db878d7c/26-6a9ca1c5023f9.webp' /></p><p>உயிரிழந்தவர்கள், 24 வயதுடைய பெருமாள் திவாகர் மற்றும் 23
வயதுடைய அன்பழகன் நிக்சன்

என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
</p><p>
நீரில் மூழ்கியதற்கான காரணம் மற்றும் சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்களை
கண்டறியும் வகையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p><h2>மேலதிக விசாரணை</h2><p>

மீட்கப்பட்ட இரு சடலங்களும் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட பொது
வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/db1f62a9-65dd-4185-af04-d05eb346ff31/26-6a9ca1c5d2408.webp' /></p><p>
</p><p>
இதேவேளை, மலைநாட்டுப் பகுதிகளில் காணப்படும் நீர்வீழ்ச்சிகள் மற்றும் ஆறுகளில்
மழைக்காலங்களில் நீரின் வேகம் திடீரென அதிகரிக்கக்கூடிய நிலையில், பொதுமக்கள்
மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
</p><p>
குறிப்பாக, நீரின் ஆழம் மற்றும் நீரோட்டத்தின் வேகம் குறித்து அறியாமல் ஆறுகள்
மற்றும் நீர்வீழ்ச்சிகளில் குளிப்பதை தவிர்க்குமாறும் கோரிக்கை
விடுக்கப்பட்டுள்ளது.
</p><p>
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நானுஓயா பொலிஸார் முன்னெடுத்து
வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-05T23:12:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கைக் கடற்பரப்பில் நோர்வே ஆராய்ச்சிக் கப்பல்! கடற்றொழில் அமைச்சர் வெளிப்படை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/norwegian-research-vessel-in-sri-lankan-waters-1788632700"></link>
            <id>https://ibctamil.com/article/norwegian-research-vessel-in-sri-lankan-waters-1788632700</id>
            <summary type="text">அண்மையில் நோர்வே நாட்டுக்கு சொந்தமான ஆராய்ச்சி கப்பல், இலங்கையின் கடல் பிராந்தியத்தில் முக்கிய நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டதாக கடற்றொழில் அமைச்சர் இரா. ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>அண்மையில் நோர்வே நாட்டுக்கு சொந்தமான ஆராய்ச்சி கப்பல், இலங்கையின் கடல் பிராந்தியத்தில் முக்கிய நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டதாக கடற்றொழில் அமைச்சர் இரா. சந்திரசேகர் தெரிவித்தார்.
</p><p>
இந்த ஆராய்ச்சியின் அறிக்கை குறித்து அவரால் வெளிப்படுத்தப்பட்ட கருத்துக்கள், இலங்கையின் கடற்கரையை அண்டிய மக்களுக்கு சவாலாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
</p><p>
இலங்கையில் கரையோரத்தை அண்டிய பெரும்பாலான தொழிலாளர்கள் கடற்றொழிலை தனது ஜீவனோபாயமாக கொண்டுள்ள நிலையில் தற்போது மீன்களின் இருப்பு பாதிப்பு நிலையை அடைந்துள்ளதாக இந்த ஆய்வறிக்கையில் வெளிப்படுத்தப்பட்டதாக அவரால் விளக்கப்படுத்தப்பட்டது.
</p><p>
மேலும் எல் நினோவின் தாக்கமும் எதிர்காலத்தில் இலங்கையின் மீன் வளத்தில் தாக்கத்தை செலுத்தும் காரணியாக மாறக்கூடும் எனவும் கூறப்படுகிறது.
</p><p>
லங்காசிறி ஊடகத்தின் நாட்டு நடப்பு நிகழ்ச்சியின் 300 அத்தியாயத்தில் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு கருத்து வெளியிட்ட கடற்றொழில் அமைச்சர் இரா.சந்திரசேகரின் கருத்துக்கள், இந்த விடயத்தின் பாரதூரங்களை பின்வருமாறு தெளிவுப்படுத்தியிருந்தன...&nbsp;</p><p><iframe width="1337" height="752" src="https://www.youtube.com/embed/VNz7RtIWc54" title="🔴Special LIVE:நாட்டு நடப்பு 300 வது Episode சிறப்பு நேரலை | Naattu Nadappu" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share" referrerpolicy="strict-origin-when-cross-origin" allowfullscreen></iframe></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-05T23:10:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாள வெள்ளம்- 10 நாட்களுக்குப் பின் சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளி உயிருடன் மீட்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/nepal-floods-worker-trapped-tunnel-10-days-rescued-1788648693"></link>
            <id>https://tamilwin.com/article/nepal-floods-worker-trapped-tunnel-10-days-rescued-1788648693</id>
            <summary type="text">நேபாளத்தில் வெள்ளப் பெருக்கு மற்றும் நிலச்சரிவு காரணமாக உயிரிழப்புகள்
அதிகரித்து வரும் நிலையில், மீட்புப் படையினர் தீவிர மீட்புப் பணியில்
ஈடுபட்டு வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நேபாளத்தில் வெள்ளப் பெருக்கு மற்றும் நிலச்சரிவு காரணமாக உயிரிழப்புகள்
அதிகரித்து வரும் நிலையில், மீட்புப் படையினர் தீவிர மீட்புப் பணியில்
ஈடுபட்டு வருகின்றனர்.

​</p><p>இந்த நிலையில் திரிசூலி நீர்மின் திட்ட சுரங்கப்பாதையில் கடந்த 10 நாட்களாகக்
குடிதண்ணீர் கூட இன்றிச் சிக்கியிருந்த 'லுஹைடாவ்' என்ற சீனத் தொழிலாளியை
நேபாள இராணுவமும் தென் கொரிய பேரிடர் மீட்புக் குழுவும் இணைந்து உயிருடன்
மீட்டுள்ளன.

​</p><h2>சிக்கிய தொழிலாளி&nbsp;</h2><p>இதேவேளை நுவாகோட் பகுதியில் இடிந்த வீட்டின் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த
சந்திரிகா ஸ்ரேஸ்தா (64) என்ற நபரும் உயிருடன் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக உலங்குவானூர்தி மூலம் காத்மாண்டுவிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
​</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0ca3c5c8-d593-4474-8bb5-937766bfc2dd/26-6a9c9f0d1af86.webp' /></p><p>அத்துடன் இதேபோல நேற்றைய தினமும் சுரங்கப் பகுதியில் இருந்து இருவர்
பத்திரமாக மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-05T23:00:37+00:00</updated>
        </entry>
    </feed>
