<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-08-30T07:19:36+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sudaron</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பகுதியில் தீச்சட்டி ஏந்தி போராட்டத்தில் குதித்த மக்கள் - அரசாங்கத்திடம் விடுத்துள்ள முக்கிய கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/protest-in-kilinochchi-1788073852"></link>
            <id>https://tamilwin.com/article/protest-in-kilinochchi-1788073852</id>
            <summary type="text">சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான இன்று(30) வடக்கு - கிழக்கு வலிந்து காணாமல்
ஆக்கப்பட்டோர் சங்கத்தின் ஏற்பாட்டில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான இன்று(30) வடக்கு - கிழக்கு வலிந்து காணாமல்
ஆக்கப்பட்டோர் சங்கத்தின் ஏற்பாட்டில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. </p><p>

இந்த போராட்டத்தை தொடர்ந்து, ஆவண நூல் வெளியீடும் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> 

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான அனுஷ்டிக்கப்படும் இன்றைய நாளில் கிளிநொச்சி 
155ஆம் கட்டை காளி கோயில் முன்பாக குறித்த போராட்டம் ஆரம்பமாகியுள்ளது. </p><h2>

 தீச்சட்டியை ஏந்தியவாறு போராட்டம்</h2><p>இதன்போது, இதுவரை காலமும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளால் கையளிக்கப்பட்ட மனுக்கள் 
உள்ளடங்கிய ஆவண நூல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6b89685e-1e53-4298-be87-1a88b7418a21/26-6a93d7ed77f88.webp' /></p><p> 

இதனைத் தொடர்ந்து, தீச்சட்டிகளை ஏந்தியவாறு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

போராட்டக்களத்தில், ஓ எம் பி அலுவலகம் வேண்டாம், இழப்பீடும் வேண்டாம் காணாமல்
ஆக்கப்பட்டோருக்கு நீதி வேண்டும், சர்வதேசமே நீதியை பெற்றுத்தா உள்ளிட்ட பல்வேறு கோஷங்கள் போராட்டக்காரர்களால் எழுப்பப்பட்டிருந்தன.</p><p>

இந்த நிலையில், போராட்டத்தில் சர்வதேச மன்னிப்பு சபையின் பிரதிநிதி,
நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின்
உறவினர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/29e4faf7-1a7c-4127-8270-3136f9720ee6/26-6a93d7ee4f516.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e7032f05-4814-4444-9775-9cb8c0f50c68/26-6a93d7ef27c24.webp' /></p><p></p><p></p><p><br></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-30T07:13:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[புதன் பெயர்ச்சியால் பொற்காலம் தொடங்கும் 3 ராசிகள்: பணவரவும் வெற்றியும் அதிகரிக்கும்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/mercury-transit-in-virgo-who-get-huge-luck-1788070073"></link>
            <id>https://manithan.com/article/mercury-transit-in-virgo-who-get-huge-luck-1788070073</id>
            <summary type="text">வேத ஜோதிடத்தில் கிரகங்களின் இளவரசனாகக் கருதப்படுபவர் புதன். இவர் புத்திசாலித்தனம், பேச்சு, கல்வி, வியாபாரம் ஆகியவற்றின் காரணியாவார். மிதுனம் மற்றும் க...</summary>
            <content type="html"><![CDATA[<p>வேத ஜோதிடத்தில் கிரகங்களின் இளவரசனாகக் கருதப்படுபவர் புதன். இவர் புத்திசாலித்தனம், பேச்சு, கல்வி, வியாபாரம் ஆகியவற்றின் காரணியாவார். மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியான புதன், குறுகிய காலத்திலேயே தனது நிலையை மாற்றக்கூடியவர். </p><p>தற்போது புதன் சிம்ம ராசியில் பயணித்து வருகிறார்.

இந்நிலையில், செப்டம்பர் 07 ஆம் தேதி புதன் தனது சொந்த ராசியான கன்னிக்குள் நுழைகிறார். சுமார் 1 ஆண்டுக்குப் பிறகு புதன் தனது சொந்த ராசிக்கு திரும்புவதால், பத்ர ராஜயோகம் உருவாகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8dd2c9cd-e133-4907-b05e-aac6a7e9a48f/26-6a93d788a947d.webp' /></p><p> பஞ்ச மகாபுருஷ யோகங்களில் ஒன்றான இந்த யோகம், அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.எனினும், சில ராசிக்காரர்கள் இந்த யோகத்தின் மூலம் நல்ல வெற்றி, புகழ், பணம் உள்ளிட்ட பல்வேறு நன்மைகளைப் பெறவுள்ளனர். </p><p>அப்படி செப்டம்பர் 07 ஆம் தேதி புதன் பெயர்ச்சியால் உருவாகும் பத்ர மகாபுருஷ ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.</p><h2>மேஷம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c11c4239-ec82-49b6-959e-83f54ac94eb5/26-6a93d7895d38f.webp' /></p><p></p><p>
மேஷ ராசியின் 6-வது வீட்டிற்கு புதன் சென்று பத்ர ராஜயோகத்தை உருவாக்கியுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் செல்வாக்கு அதிகரிக்கும். </p><p>பணியில் எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளது. </p><p>மேற்கொள்ளும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி கிடைக்கும். ஏற்கனவே செய்த முதலீடுகளிலிருந்து நல்ல லாபம் கிடைக்கும். வணிகர்களுக்கு எதிர்பாராத அளவில் லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது. மேலும், குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடும் வாய்ப்பும் கிடைக்கும்.
</p><h2>
சிம்மம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7dce3e29-905c-44cf-9ac7-17238435e8dc/26-6a93d78a0e33f.webp' /></p><p>
சிம்ம ராசியின் 2-வது வீட்டிற்கு புதன் சென்று பத்ர ராஜயோகத்தை உருவாக்கியுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் வாழ்க்கையில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். </p><p>வேலை தொடர்பான முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். புதிய வீடு அல்லது வாகனம் வாங்கும் வாய்ப்புகள் உருவாகும்.</p><p> குறிப்பாக, புதனின் அருளால் புதிய தொழிலைத் தொடங்கும் முடிவையும் எடுக்கக்கூடும். பணிபுரிபவர்களுக்கு அலுவலகத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
</p><h2>தனுசு&nbsp;</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8ffd4fea-bf66-4060-afe6-a7c7a30f4c06/26-6a93d78ab45a1.webp' /></p><p></p><p>தனுசு ராசியின் 10-வது வீட்டிற்கு புதன் சென்று பத்ர ராஜயோகத்தை உருவாக்கியுள்ளார். இதனால் நீண்ட காலமாக மேற்கொண்ட கடின உழைப்பிற்கான பலன் கிடைக்கும்.</p><p>அதேசமயம், நல்ல நிதி ஆதாயங்களும் கிடைக்க வாய்ப்புள்ளது. ஏற்கனவே செய்த முதலீடுகளிலிருந்து லாபம் கிடைக்கும்.</p><p> புதிய முதலீடுகளை மேற்கொண்டாலும் நல்ல வருமானம் கிடைக்கக்கூடும். நீண்ட நாட்களாக முடிக்க முடியாமல் இருந்த பணிகள் மீண்டும் தொடங்கி வெற்றிகரமாக நிறைவடையும். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும்.</p><p><b>இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;&nbsp;</b></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b>&nbsp;.</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-30T07:11:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாளத்தை உலுக்கிய அனர்த்தம் ; 700ஐ கடந்த பலி எண்ணிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/nepal-disaster-death-toll-surpasses-700-1788073800"></link>
            <id>https://jvpnews.com/article/nepal-disaster-death-toll-surpasses-700-1788073800</id>
            <summary type="text">நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளப் பேரிடரில் தற்போது 734 பேர் உயிரிழந்துள்ளனர். 

மேலும் சுமார் 3,000 பேரின் நிலை என்னவென்று தெரியவில்லை என அந்த நாட்டு தகவ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளப் பேரிடரில் தற்போது 734 பேர் உயிரிழந்துள்ளனர். </p><p style="text-align: justify; ">

மேலும் சுமார் 3,000 பேரின் நிலை என்னவென்று தெரியவில்லை என அந்த நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p style="text-align: justify;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cbdd3df4-d62e-425f-939b-da0bc59ca77d/26-6a93d74a609cc.webp' /></p><h2 style="text-align: justify;">&nbsp;நிரம்பி வழியும்&nbsp;பிரேத அறைகள்</h2><p> </p><p style="text-align: justify;">

நேபாளம் - திபெத் எல்லை அருகே கடந்த 26 திகதி ஏற்பட்ட பனிச்சரிவு போடேகோஷி நதியில் மிகப்பெரிய வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தியது. </p><p style="text-align: justify;">

மத்திய நேபாளத்தை புரட்டிப்போட்ட வரலாறு காணாத இந்த பேரழிவு நூற்றுக்கணக்கானோரின் உயிர்களை காவு வாங்கி விட்டது. நேற்று வரை 600-க்கும் அதிகமான உடல்கள் மீட்கப்பட்டன.</p><p style="text-align: justify;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7f1fd3d9-8b67-4b90-abb3-32b33e77517c/26-6a93d74b1df78.webp' /></p><p> </p><p style="text-align: justify;">&nbsp;பலரது உடல்கள் மீட்கப்பட்டதால், உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 734 ஆக அதிகரித்துள்ளது. 

இடிபாடுகள் மற்றும் சேற்றுக்குவியலில் இருந்து மீட்கப்பட்ட உடல்கள் வைத்தியசாலைகளின் பிரேத அறைகளில் குவிந்துள்ளன. </p><p style="text-align: justify;">இதனால் புதிதாக வரும் உடல்களை வைக்க இடம் இல்லாமல் வைத்தியசாலை நிர்வாகங்கள் தவித்து வருகின்றன. 

எனவே தற்காலிக பிணக்கிடங்குகள் உருவாக்கப்பட்டு உடல்களை சேமிக்கும் பரிதாப நிலை ஏற்பட்டு உள்ளது. </p><p style="text-align: justify;">

அதேநேரம் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட இன்னும் 3 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பற்றிய தகவல் இல்லை. இதனால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;"> </p><p style="text-align: justify;">இதற்கிடையே வெள்ளம் பாதித்த பகுதிகளில் 5-வது நாளாக இன்றும் முழு வீச்சில் மீட்புப்பணிகள் நடந்து வருகிறது. </p><p style="text-align: justify;">

இரவு-பகலாக நடந்து வரும் இந்த மீட்புப்பணிகளில் நேபாள ராணுவத்தினர் 5 ஆயிரம் பேர் உள்பட 11 ஆயிரத்துக்கும் அதிகமான வீரர்கள் ஈடுபட்டுள்ளனர் நேபாளத்திற்கு உலகளாவிய உதவிகள் குவிந்து வருகின்றன.</p><p style="text-align: justify;">அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, ஐ.நா., ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் சர்வதேச வனத்துறை ஆகியவை மனிதாபிமான உதவிகளுக்காக மில்லியன் கணக்கில் வழங்குவதாக உறுதியளித்துள்ளன. அதே நேரத்தில் சீனாவும் உதவி வழங்க முன்வந்துள்ளது.</p><p style="text-align: justify;"></p>]]></content>
            <updated>2026-08-30T07:10:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thileepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வவுனியா - பாவற்குளம் காட்டுப் பகுதியில் திடீர் தீப்பரவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sudden-fire-in-vavuniya-pavakulam-forest-area-1788070245"></link>
            <id>https://tamilwin.com/article/sudden-fire-in-vavuniya-pavakulam-forest-area-1788070245</id>
            <summary type="text">வவுனியா - பாவற்குளம் காட்டுப் பகுதியில் இன்று (29.08.2026) திடீரென தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.பொதுமக்களால் வழங்கப்பட்ட தகவலையடுத்து விரைந்து செயற்பட்ட பூ...</summary>
            <content type="html"><![CDATA[<p>வவுனியா - பாவற்குளம் காட்டுப் பகுதியில் இன்று (29.08.2026) திடீரென தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; ">பொதுமக்களால் வழங்கப்பட்ட தகவலையடுத்து விரைந்து செயற்பட்ட பூவரசங்குளம் பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று பொது மக்களின் உதவியுடன் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.</p><h2 style="text-align: justify; ">திடீர் தீப்பரவல்</h2><p>இதனையடுத்து தீயை கட்டுப்படுத்துவதற்காக வவுனியா மாநகரசபை தீயணைப்பு பிரிவினர்
மற்றும் இராணுவத்தினர் அங்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். </p><p>இதன்மூலம் மக்கள் குடிமனைகளுக்குள் தீ பரவாது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு
வரப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2ac101b4-1112-4eaa-a72b-91c72718df48/26-6a93cf585df6f.webp' /></p><p> வவுனியாவில் கடந்த சில நாட்களாக வெப்பநிலை அதிகரித்து காணப்படும்
நிலையில் பல்வேறு காட்டுப் பகுதிகளிலும் தீப்பரவல் ஏற்பட்டு வருகின்றமை
குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-30T07:08:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் குற்றவாளிகளுக்கு ரகசியத் தகவல் வழங்கிய முன்னாள் பொலிஸ் அதிகாரிக்கு சிறைத்தண்டனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/former-surrey-rcmp-officer-sentenced-to-18-months-1788067532"></link>
            <id>https://canadamirror.com/article/former-surrey-rcmp-officer-sentenced-to-18-months-1788067532</id>
            <summary type="text">கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில், பொலிஸ் ரகசியத் தரவுத்தளங்களைப் பயன்படுத்தி குற்றவாளிகளுக்குத் தகவல்களைப் பகிர்ந்து நம்பிக்கை மோசடியில் ஈடுப...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில், பொலிஸ் ரகசியத் தரவுத்தளங்களைப் பயன்படுத்தி குற்றவாளிகளுக்குத் தகவல்களைப் பகிர்ந்து நம்பிக்கை மோசடியில் ஈடுபட்ட முன்னாள் சர்ரே பொலிஸ் அதிகாரி தாவூட் அலாஎல்டின் சுகாரிக்கு 18 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. </p><p>
பிரிட்டிஷ் கொலம்பிய உயர் நீதிமன்ற நீதிபதி முர்ரே பி. பிளாக், அரசுத் தரப்பு மற்றும் பிரதிவாதித் தரப்பு வழக்கறிஞர்கள் இணைந்து முன்வைத்த பரிந்துரையை ஏற்று இத்தீர்ப்பை வழங்கினார்.</p><p> 
2020 ஆம் ஆண்டில் சுர்ரி பொலிஸ் பிரிவில் பயிற்சி அதிகாரியாகப் பணியாற்றிய சுகாரி, குற்றவாளிகளுக்காக போதைப்பொருள் வாங்குவதில் ஈடுபட்டதாக பொலிஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/01981800-41b8-4926-8056-45836b636c7d/26-6a93becda65bc.webp' /></p><p> 
மேலும், கண்காணிப்பின்றி பணியாற்றத் தொடங்கும் போது பொலிஸ் தரவுத்தளங்களை குற்றவாளிகளுக்குப் பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரியவந்தது. </p><p>
இதனையடுத்து, அவரைப் பொறிவைத்துச் பிடிக்க பொலிஸ் சிறப்பு ரகசிய நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டது. போலி போதைப்பொருள் வியாபாரி மற்றும் ஊழல் நிறைந்த பொலிஸ் அதிகாரி போன்று நடித்த மற்றொரு அதிகாரி ஆகியோரைக் கொண்டு 59 போலி சூழ்நிலைகள் உருவாக்கப்பட்டன. </p><p>
போலி போதைப்பொருள் வாங்குவதற்காக வழங்கப்பட்ட 72,000 டொலர்களில், சுகாரி பேரம் பேசி 63,000 டொலருக்குப் பொருட்களை வாங்கிவிட்டு, எஞ்சிய பணத்தில் 8,000 டொலர்களைத் தனது சொந்தப் பயன்பாட்டிற்காக எடுத்துக்கொண்ட போது கைது செய்யப்பட்டார்.
</p><p>சுகாரியின் கைப்பேசியைச் சோதனையிட்டதில், பொலிஸ் தரவுத்தளத்தில் இருந்த ரகசியத் தகவல்கள் மற்றும் ஆவணங்களைப் புகைப்படமெடுத்து குற்றவாளிகளுக்கு அவர் குறுஞ்செய்தி மூலம் அனுப்பிவைத்தது உறுதி செய்யப்பட்டது.</p><p> 
குற்றத்தை ஒப்புக்கொண்டமை, வாலிப வயது மற்றும் முன்னர் குற்றப் பின்னணி இல்லாதமை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு அவருக்கு 18 மாத சிறைத்தண்டனை, மரபணு மாதிரி வழங்குதல் மற்றும் 200 டொலர் அபராதம் விதிக்கப்பட்டது. அவர் மீதான ஏனைய 12 குற்றச்சாட்டுகளும் அரசுத் தரப்பினால் கைவிடப்பட்டன.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-30T07:00:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[சீரியல் நடிகை வினுஷா தேவிக்கு திருமணம் முடிந்தது.. கல்யாண வீடியோ வெளியிட்ட நடிகை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/serial-actress-vinusha-devi-marriage-1788072491"></link>
            <id>https://cineulagam.com/article/serial-actress-vinusha-devi-marriage-1788072491</id>
            <summary type="text">ரசிகர்களின் மனம் கவர்ந்த பிரபல சீரியல் நடிகை வினுஷா தேவிக்கு இன்று திருமணம் நடைபெற்றது. வினுஷா தேவி

விஜய் தொலைக்காட்சியில் மாபெரும் அளவில் வெற்றி ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>ரசிகர்களின் மனம் கவர்ந்த பிரபல சீரியல் நடிகை <a href="https://www.instagram.com/p/DcpsfdEJwYN/" target="_blank">வினுஷா </a>தேவிக்கு இன்று திருமணம் நடைபெற்றது.</p><p> </p><p></p><h2>வினுஷா தேவி</h2><p>

விஜய் தொலைக்காட்சியில் மாபெரும் அளவில் வெற்றி பெற்ற சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் கதாநாயகியாக நடித்து ரசிகர்களிடையே பிரபலமானவர் நடிகை வினுஷா தேவி.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ff2d8d6c-5066-445e-8dd1-60c7b4018edd/26-6a93d22e4652c.webp' /></p><p>பாரதி கண்ணம்மா சீரியலை தொடர்ந்து தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சுட்டும் விழி சுடரே சீரியலில் நடித்து வருகிறார். இந்த ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கப்பட்ட இந்த சீரியலுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து ஒளிபரப்பாகி வருகிறது.</p><h2>

திருமணம்
</h2><p>
இந்நிலையில், சின்னத்திரையில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக வலம் வரும் வினுஷா தேவிக்கு லிங்கா என்பவருடன் இன்று திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c1991f0e-2d79-48cd-91d5-fe2d2edee3a7/26-6a93d22ef0d4f.webp' /></p><p>வினுஷா தேவி - லிங்கா திருமணத்தில் சின்னத்திரை பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டு வாழ்த்தியுள்ளனர். திருமணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளன, இதோ பாருங்க.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ac3535f1-6a4d-4442-9a8f-1e94d9429b7e/26-6a93d22fb9d71.webp' /></p><p><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/reel/DcpsfdEJwYN/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/reel/DcpsfdEJwYN/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/reel/DcpsfdEJwYN/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by Vinusha Devi (@vinusha_devi)</a></p></div></blockquote> <script async src="//www.instagram.com/embed.js"></script></p>]]></content>
            <updated>2026-08-30T07:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாள வெள்ளப்பெருக்கு... பிரான்ஸ் நாட்டவர்கள் நால்வர் காணாமல் போயுள்ளதாக தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/france-says-four-nationals-missing-1788073253"></link>
            <id>https://news.lankasri.com/article/france-says-four-nationals-missing-1788073253</id>
            <summary type="text">France says four missing after Nepal flood: நேபாள வெள்ளப்பெருக்கில் பிரான்ஸ் நாட்டவர்கள் நால்வர் காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வாரத் தொட...</summary>
            <content type="html"><![CDATA[<p>France says four missing after Nepal flood: நேபாள வெள்ளப்பெருக்கில் பிரான்ஸ் நாட்டவர்கள் நால்வர் காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>இந்த வாரத் தொடக்கத்தில் நேபாள-திபெத் எல்லையருகே பேரழிவுகரமான திடீர் வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து, நான்கு பிரெஞ்சு நாட்டினர் காணாமல் போயுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aef0e0c3-bcd3-48d8-89ac-8a5d271964b3/26-6a93d528bbc38.webp' /></p><p>
</p><p>வெளிநாடுகளில் உள்ள பிரெஞ்சு நாட்டினருக்கான பிரெஞ்சு அமைச்சர் பிரதிநிதி எலியனோர் கரோயிட் குறித்த தகவலை வெளியிட்டுள்ளார். </p><p>பேரிடர் ஏற்பட்டபோது அப்பகுதியில் 80 பிரெஞ்சுக்காரர்கள் இருந்ததாகவும், அவர்களில் 76 பேர் உயிர் தப்பியுள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சகம் அடையாளம் கண்டுள்ளதாக பிரதிநிதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.</p><p></p><p> </p><p>இதனிடையே, சனிக்கிழமை காலை நிலவரப்படி, நேபாளம் மற்றும் திபெத் ஆகிய இரு பகுதிகளிலும் காணாமல் போனவர்களின் எண்ணிக்கை ஏறக்குறைய 3,000-ஆக உயர்ந்திருந்தது. </p><p>இதுவரை நேபாளத்தில் 675 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன; எனினும், உயிர் பிழைத்தவர்களைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ள ராணுவ ஹெலிகொப்டர்கள் மட்டுமே பல தொலைதூரப் பகுதிகளைச் சென்றடைந்துள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/30dd37f2-1ea4-4733-95ed-69a09d516ad0/26-6a93d5280f159.webp' /></p><p> </p><p>சேற்றுக்கு அடியில் இன்னும் எத்தனை பேர் புதையுண்டிருக்கக்கூடும் என்பதை மதிப்பிடுவது மிகவும் கடினம் என்று மீட்புக் குழுவினர் தெரிவித்தனர். </p><p>இன்னும் காணாமல் போனவர்களில் குறைந்தது 900 பேர், இமயமலையின் உயரமான பகுதிகளில் உள்ள திரிசூலி ஆற்றுப் படுகையில் அமைந்திருந்த பிரம்மாண்டமான நீர்மின் திட்டங்களில் பணிபுரிந்து வந்தனர்; அந்தத் திட்டங்கள் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் முற்றிலுமாக அழிந்துவிட்டன. </p><p>இங்குள்ள தொழிலாளர்களில் பலர் குறைந்த ஊதியம் பெறும் தொழிலாளர்கள்; இவர்களில் குறைந்தது 63 பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-30T06:58:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மருத்துவக் குழுக்களிடையே மோதலைத் தூண்ட முயற்சி: அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/medical-groups-government-complain-1788071166"></link>
            <id>https://ibctamil.com/article/medical-groups-government-complain-1788071166</id>
            <summary type="text">மருத்துவர்களின் வெவ்வேறு பிரிவுகளுக்கு இடையே முரண்பாடுகளை ஏற்படுத்தி, மருத்துவ சேவையையும் இலவச சுகாதாரக் கட்டமைப்பையும் நெருக்கடிக்குள் தள்ளும் முயற்ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>மருத்துவர்களின் வெவ்வேறு பிரிவுகளுக்கு இடையே முரண்பாடுகளை ஏற்படுத்தி, மருத்துவ சேவையையும் இலவச சுகாதாரக் கட்டமைப்பையும் நெருக்கடிக்குள் தள்ளும் முயற்சி இடம்பெற்று வருவதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
</p><p>
விசேட வைத்திய நிபுணர்கள் மற்றும் ஏனைய மருத்துவப் பிரிவுகளுக்கு இடையே பிளவை ஏற்படுத்தும் அரசியல் நடவடிக்கை தற்போது முன்னெடுக்கப்படுவதாக அந்தச் சங்கம் தெரிவித்துள்ளது.
</p><p>இது குறித்து மேலும் தெரிவிக்கையில், 'நாட்டில் ஏற்பட்ட பொருளாதார, சமூக மற்றும் அரசியல் நெருக்கடிகளால் விசேட வைத்தியர்கள் உள்ளிட்ட மருத்துவர்களை நாட்டில் தக்கவைத்துக் கொள்வது சவாலாக இருந்த நிலையில், அதற்குத் தீர்வு காண சுகாதார அமைச்சு மற்றும் மருத்துவ தொழிற்சங்கங்கள் உள்ளிட்ட தரப்புகளை உள்ளடக்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டது.</p><p></p><h2>அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம்</h2><p>
</p><p>மேலும் அனைத்து மருத்துவர்களையும் நாட்டில் தக்கவைத்துக் கொள்வதற்காக “இலங்கை மருத்துவ சேவை” என்ற புதிய சேவைப் பிரிவையும் சம்பளக் கட்டமைப்பையும் உருவாக்குவதற்கு அப்போது இணக்கம் எட்டப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4f7d70b1-ee4d-436e-b0ae-2fab5dcf39e1/26-6a93d14d6e76d.webp' /></p><p>
</p><p>
இதற்கமைய, 2026ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பின்போது விசேட வைத்தியர்கள் உள்ளிட்ட அனைத்து மருத்துவர்களுக்குமான தனியான சேவைப் பிரிவு உருவாக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டிருந்தது.</p><p>

எனினும், விசேட வைத்தியர்களுக்கு மாத்திரம் தனியான சேவைப் பிரிவை உருவாக்கும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் மருத்துவர்களிடையே பிளவு ஏற்படும் அபாயம் இருக்கிறது.
</p><p>
ஒரு பிரிவுக்கு மாத்திரம் தனியான சேவைப் பிரிவை உருவாக்குவது இலவச சுகாதார சேவைக்கும் நோயாளர்களுக்கான மருத்துவ சேவைக்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்பதால், அந்த யோசனைக்கு தமது சங்கம் இணங்கவில்லை.
</p><p>
இந்நிலையில், எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் தீர்மானிப்பதற்காக சங்கத்தின் மாகாண மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களின் அவசரக் கூட்டம் கடந்த 28ஆம் திகதி நடைபெற்றுள்ளது.</p><p> மேலும், விசேட வைத்தியர்களின் உபகுழுவின் அவசரக் கூட்டம் நாளை (31) நடைபெறவுள்ளது.</p><p>

இந்தக் கூட்டத்தில் மருத்துவர்களின் உரிமைகள் மற்றும் சலுகைகளைப் பாதுகாத்து, அனைவரும் ஒற்றுமையுடன் பணியாற்றக்கூடிய “இலங்கை மருத்துவ சேவையை” உருவாக்குவதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்படும்' என அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b> WHATSAPP</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-30T06:52:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரசமைப்பின் 22ஆவது திருத்தத்துக்கு சர்வஜன வாக்கெடுப்பு தேவையில்லை! சட்டமா அதிபர் திணைக்களம் அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/referendum-on-the-22nd-amendment-to-constitution-1788068782"></link>
            <id>https://tamilwin.com/article/referendum-on-the-22nd-amendment-to-constitution-1788068782</id>
            <summary type="text">அரசமைப்பின் 22 ஆவது திருத்த சட்டமூலம் தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்த
வேண்டிய சூழ்நிலை ஏற்படாது என சட்டமா அதிபர் திணைக்களம் அரசுக்கு தெரியப்படுத்...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரசமைப்பின் 22 ஆவது திருத்த சட்டமூலம் தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்த
வேண்டிய சூழ்நிலை ஏற்படாது என சட்டமா அதிபர் திணைக்களம் அரசுக்கு தெரியப்படுத்தியுள்ளது.
</p><p>
இது குறித்து பொதுமக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சரும் சட்டத்தரணியுமான
சுனில் வட்டகல ஊடகங்களுக்குத் தகவல் வெளியிட்டுள்ளார்.</p><h2>சர்வஜன வாக்கெடுப்பு</h2><p>
"22ஆவது திருத்த சட்டமூலம் சர்வஜன வாக்கெடுப்புக்கு வழிவகுக்காது என்றே அரசு
உறுதியாக நம்புகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7751f446-8cff-4e9f-add2-a8ff260b5152/26-6a93d2f3279ad.webp' /></p><p> சர்வஜன வாக்கெடுப்பு அவசியமில்லை என்ற சட்ட
விளக்கத்தையே சட்டமா அதிபர் திணைக்களம் எமக்கு வழங்கியுள்ளது என்றும் அவர்
மேலும் தெரிவித்துள்ளார்.</p><p>

22ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பை நடத்துமாறு
உயர்நீதிமன்றம் உத்தரவிடும் பட்சத்தில் அரசு என்ன செய்யும் என எழுப்பப்பட்ட
கேள்விக்குப் பதிலளித்த அவர், உயர் நீதிமன்றத்தின் வழிகாட்டலுக்கு அமையவே
அரசின் இறுதி முடிவுகள் அமையும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.</p><p>&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-30T06:51:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[நிக்கோலஸ் பூரன், சுனில் நரைன் ருத்ரதாண்டவம்: ஆனாலும் DLS முறையில் தோல்வி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/pooran-and-narine-fifty-in-cpl-t20-2026-1788072365"></link>
            <id>https://news.lankasri.com/article/pooran-and-narine-fifty-in-cpl-t20-2026-1788072365</id>
            <summary type="text">கரீபியன் பிரீமியர் லீக் போட்டியில் ஜமைக்கா கிங்ஸ்மென் 7 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

போர்ட் ஆஃப் ஸ்பெயினில் நடந்த கரீபியன் பிரீமியர் ல...</summary>
            <content type="html"><![CDATA[<p>கரீபியன் பிரீமியர் லீக் போட்டியில் ஜமைக்கா கிங்ஸ்மென் 7 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
</p><p>
போர்ட் ஆஃப் ஸ்பெயினில் நடந்த கரீபியன் பிரீமியர் லீக் போட்டியில் ஜமைக்கா கிங்ஸ்மென் அணி DLS முறையில், 7 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸை வீழ்த்தியது.&nbsp;&nbsp;</p><h2>மன்ரோ, நரைன் கூட்டணி&nbsp;</h2><p>
</p><p>
குயின்'ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் நடந்த கரீபியன் பிரீமியர் லீக் போட்டியில் ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் மற்றும் ஜமைக்கா கிங்ஸ்மென் அணிகள் மோதின.&nbsp;</p><p><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr">Nicky P you are ridiculous!!!<br><br>Nicholas Pooran registers his first CPL26 fifty! 🇹🇹 x 🇯🇲<a href="https://x.com/hashtag/CPL26?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#CPL26</a> <a href="https://x.com/hashtag/TKRvJK?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#TKRvJK</a> <a href="https://x.com/hashtag/CricketPlayedLouder?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#CricketPlayedLouder</a> <a href="https://x.com/hashtag/BiggestPartyInSport?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#BiggestPartyInSport</a> <a href="https://x.com/hashtag/Visa?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#Visa</a> <a href="https://t.co/nrCC1Ro3tv">pic.twitter.com/nrCC1Ro3tv</a></p>&mdash; CPL T20 (@CPL) <a href="https://x.com/CPL/status/2093867163702419951?ref_src=twsrc%5Etfw">August 30, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>&nbsp;</p><p>
முதலில் களமிறங்கிய ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியில் காலின் மன்ரோ, சுனில் நரைன் கூட்டணி எதிரணி பந்துவீச்சை சிதறடித்தது. 

சுனில் நரைன் (Sunil Narine) 24 பந்துகளில் 3 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 53 ஓட்டங்கள் விளாசினார்.&nbsp;</p><p></p><p>அடுத்து வந்த அணித்தலைவர் நிக்கோலஸ் பூரன் (Nicholas Pooran) வாணவேடிக்கை காட்ட, காலின் மன்ரோ (Colin Munro) 52 (42) ஓட்டங்கள் குவித்து லாவ்ஸ் பந்துவீச்சில் அவுட் ஆனார்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bfedf026-9086-4803-82af-8d72a48f1246/26-6a93d35a0f3a5.webp' /></p><h2>பூரன்&nbsp;ருத்ரதாண்டவம் </h2><p>
அதன் பின்னர் களமிறங்கிய வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழக்க, பூரன் 37 பந்துகளில் 3 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 60 விளாசினார்.

இதன்மூலம் ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 180 ஓட்டங்கள் குவித்தது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f7f8fb01-dcee-48a5-9eef-25b778655be2/26-6a93d8dd857ee.webp' /></p><p>விட்டல் லாவ்ஸ் 3 விக்கெட்டுகளும், ஹுசைன் ஷா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். 

பின்னர் மழைகுறுக்கிட DLS விதிப்படி இலக்கு மாற்றியமைக்கப்பட்டது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2779e2f1-5115-4e70-8a17-909d307dbf33/26-6a93d8de3c081.webp' /></p><p>ஜமைக்கா கிங்ஸ்மென் 14.4 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 127 ஓட்டங்கள் எடுத்து, 7 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. </p><p>

கேசி கார்ட்டி 42 (33) ஓட்டங்களும், மெக்கென்சி 30 (25) ஓட்டங்களும் எடுத்தனர். சைம் அயூப் 18 பந்துகளில் 24 ஓட்டங்கள் விளாசினார்.&nbsp; &nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f339d84a-5f2e-440e-ba41-bd2bea9c0197/26-6a93d8dcb2ece.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/35bd9b70-2630-476b-958a-e911ba1842a1/26-6a93d8dee4f92.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-30T06:50:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[டித்வா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கப்படவில்லை - வணிகத்தரப்பினர் குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/no-relief-yet-for-ditwa-hit-traders-govt-blamed-1788065614"></link>
            <id>https://tamilwin.com/article/no-relief-yet-for-ditwa-hit-traders-govt-blamed-1788065614</id>
            <summary type="text">டித்வா புயல் அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட உள்ளூர் வணிகர்களுக்கு இதுவரை காலமும் நிவாரணம் வழங்கப்படவில்லை என தேசிய வணிகர்களை வலுவூட்டுவதற்கான அமைப்பி...</summary>
            <content type="html"><![CDATA[<p>டித்வா புயல் அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட உள்ளூர் வணிகர்களுக்கு இதுவரை காலமும் நிவாரணம் வழங்கப்படவில்லை என தேசிய வணிகர்களை வலுவூட்டுவதற்கான அமைப்பின் செயலாளர் புஷ்பகுமார கருணாரத்ன குற்றம்சாட்டியுள்ளார்.
</p><p>அத்துடன் டித்வா புயலால் பாதிக்கப்பட்ட உள்ளூர் வணிகர்களுக்கான இழப்பீடு தொடர்பாக அதே நாளில் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையை அரசாங்கம் இரத்து செய்துவிட்டு, மற்றொரு சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.</p><p>இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,&nbsp;</p><h2>இழப்பீடு வழங்காமை&nbsp;</h2><p>அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை அவர்களின் திறமையின்மையையும் தகுதியின்மையையும் தெளிவாகக் காட்டுகிறது.
</p><p>
டித்வா புயல் காரணமாக பாதிக்கப்பட்ட தேசிய வணிகர்களுக்கு இழப்பீடு வழங்குமாறு பரிந்துரைத்து 2026 ஜூன் 3ஆம் திகதி அன்று ஒரு சுற்றறிக்கை வெளியிடப்பட்டிருந்தாலும், அதே நாளில் மற்றொரு சுற்றறிக்கை மூலம் அதை ரத்து செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f2fae86a-5cbb-4fe3-ae66-32619593c943/26-6a93c8940afdd.webp' /></p><p>ஆட்சியாளர்கள் பின்பற்றும் இதுபோன்ற இரட்டைக் கொள்கைகளால் கடுமையான நெருக்கடியை எதிர்கொண்டுள்ள உள்ளூர் வணிக சமூகம் மேலும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளது.
</p><p>
தற்போதைய சூழ்நிலையில் வணிகர்கள் மிகவும் நெசருக்கடியான நிலையில் உள்ளனர். பொறுப்பற்ற முறையில் சுற்றறிக்கைகளை வெளியிடும் அதிகாரிகள் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்காதது ஏன்?</p><p> அதிகாரப்பூர்வ அரசு நிறுவனமான சமாகம்மெதுர அலுவலகத்தில் முறையாகப் பதிவுசெய்யப்பட்ட வணிக நிறுவனங்களுக்கு இழப்பீடு வழங்குவதைத் தவிர்ப்பதற்காக அதிகாரிகள் பல்வேறு தடங்கல்களை ஏற்படுத்தி வருகின்றனர் என குற்றம்சாட்டியுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-30T06:46:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[03 நாட்களுக்குப் பின் மண்ணுக்குள் கேட்ட அழுகுரல் ; நேபாள பேரழிவில் 6 வயது சிறுமிக்கு நடந்த சம்பவம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/6-year-old-girl-dies-in-nepal-disaster-1788072282"></link>
            <id>https://jvpnews.com/article/6-year-old-girl-dies-in-nepal-disaster-1788072282</id>
            <summary type="text">நேபாளத்தில் ஏற்பட்ட பயங்கர வெள்ளம், சேறு மற்றும் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த 6 வயது சிறுமி மூன்று நாட்களுக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">நேபாளத்தில் ஏற்பட்ட பயங்கர வெள்ளம், சேறு மற்றும் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த 6 வயது சிறுமி மூன்று நாட்களுக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. </p><p style="text-align: justify; ">ராசுவா மாவட்டத்தின் திமுரே கிராமத்தில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8687c614-329e-4347-918e-33b0b15cd391/26-6a93d15b86352.webp' /></p><h2 style="text-align: justify; ">மீட்புப் படை</h2><p style="text-align: justify; "><br></p><p>
</p><p style="text-align: justify; "> 
போதே கோஷி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் அந்தப் பகுதி முழுவதும் சேறும் சகதியும் நிறைந்திருந்தது. </p><p style="text-align: justify; ">வெள்ளத்தில் சிக்கியவர்களை தேடும் பணியில் ஈடுபட்டிருந்த ஆயுத காவல் படையினர், மண்ணுக்கு அடியில் இருந்து மெல்லிய அழுகுரல் கேட்பதை கவனித்தனர்.</p><p style="text-align: justify; "> உடனடியாக அந்த இடத்தில் தோண்டத் தொடங்கிய அவர்கள், மண்ணுக்குள் சிக்கியிருந்த சிறுமியை பத்திரமாக வெளியே கொண்டு வந்தனர்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
 
முதலில் திமுரே எல்லை பாதுகாப்பு முகாமில் சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் உடல்நிலை மோசமடைந்ததால் மேல் சிகிச்சைக்காக காத்மாண்டுவுக்கு அழைத்து செல்ல முடிவு செய்யப்பட்டது.</p><p style="text-align: justify; "> மோசமான வானிலை காரணமாக ஹெலிகாப்டர் பயணம் தாமதமானாலும், வானிலை சீரானதும் சிறுமி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; "> 
சிறுமியின் பெயர் மணிஷா மகர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது குடும்பத்தினரை அதிகாரிகள் தீவிரமாக தேடி வருகின்றனர். </p><p style="text-align: justify; ">இந்த மீட்பு வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி, மீட்புப் படையினரின் அர்ப்பணிப்புக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.</p>]]></content>
            <updated>2026-08-30T06:44:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் அதிகரித்துச் செல்லும் குடிவரவு வழக்குகள்: தலைமை நீதிபதி எச்சரிக்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/federal-court-staff-work-weekends-on-vacation-1788066919"></link>
            <id>https://canadamirror.com/article/federal-court-staff-work-weekends-on-vacation-1788066919</id>
            <summary type="text">கை
கனடா நீதிமன்றத்தில் குடிவரவு தொடர்பான வழக்குகள் முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகரித்துள்ளதால், நீதிமன்றத்தின் பணிச்சுமை கட்டுக்கடங்காத நிலையை எட...</summary>
            <content type="html"><![CDATA[<p>கை
கனடா நீதிமன்றத்தில் குடிவரவு தொடர்பான வழக்குகள் முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகரித்துள்ளதால், நீதிமன்றத்தின் பணிச்சுமை கட்டுக்கடங்காத நிலையை எட்டியுள்ளதாக தலைமை நீதிபதி ஆலன் டினர் தெரிவித்துள்ளார்.
</p><p>2014 ஆம் ஆண்டில் ஆண்டிற்கு 5,000 முதல் 6,000 வரை மட்டுமே பதிவான குடிவரவு வழக்குகள், 2021 இல் 9,700 ஆக உயர்ந்தன.
</p><p>நடப்பாண்டில் இந்த எண்ணிக்கை 33,000 ஐத் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டின் முதல் பாதியில் மட்டும் 14,000 க்கும் அதிகமான வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன், 28,000 வழக்குகள் நிலுவையில் உள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4ff7af5e-ac1c-4019-82c8-0ed3d1ebc1b5/26-6a93bc68e0b7f.webp' /></p><p>
நீதிமன்றத்தில் உள்ள 44 நீதிபதிகளின் எண்ணிக்கையில் எந்த மாற்றமும் இல்லாத நிலையில், 2020 ஆம் ஆண்டிற்குப் பின்னர் வழக்குகள் 600% வரை அதிகரித்துள்ளன.</p><p>
இதனால் நீதிபதிகளும் நீதிமன்ற ஊழியர்களும் இரவு பகலாகவும், வார இறுதி நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களிலும் தொடர்ந்து பணியாற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
</p><p>மார்ச் மாதம் கொண்டுவரப்பட்ட கனடாவின் C-12 எல்லை பாதுகாப்புச் சட்டம் நிலைமையை மேலும் தீவிரமாக்கியுள்ளது.</p><p> கனடாவிற்கு வந்து ஒரு வருடத்திற்குப் பின்னர் அகதி உரிமை கோருபவர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால், இச்சட்டத்தின் அரசியலமைப்புச் செல்லுபடியாகும் தன்மையை எதிர்த்து 2,000 க்கும் மேற்பட்ட வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.</p><p>
வழக்கமாக ஆண்டிற்கு 300 முதல் 400 வரை மட்டுமே பதிவாகும் நாடுகடத்தலை நிறுத்துவதற்கான கோரிக்கைகள், தற்போது 1,100 ஐத் தாண்டியுள்ளன.
</p><p>ஆவணங்களைச் செயலாக்குவதற்கான வழக்கமான 48 மணிநேர இலக்கு மாறி, தற்போது 8 வாரங்கள் வரை தாமதம் ஏற்படுகிறது. </p><p>நீதிமன்றப் பணிகளைச் சீரமைக்க கூடுதல் நீதிபதிகளை நியமிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், செயற்கை நுண்ணறிவு மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தவும் நீதிமன்றம் பரிசீலித்து வருகிறது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-30T06:30:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[தாமரை மலர் பறிக்கச்சென்ற குடும்பஸ்தர் முதலை தாக்கி பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/pick-lotus-flowers-was-attacked-by-a-crocodile-1788070522"></link>
            <id>https://tamilwin.com/article/pick-lotus-flowers-was-attacked-by-a-crocodile-1788070522</id>
            <summary type="text">கொழும்பு - பெல்லன்வில வாவியை அண்டிய கிளைக் கால்வாய் ஒன்றில் மிதந்த நிலையில்
ஆண் ஒருவரின் சடலம் நேற்று (29.08.2026) பிற்பகல் மீட்கப்பட்டுள்ளது என பொரல...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு - பெல்லன்வில வாவியை அண்டிய கிளைக் கால்வாய் ஒன்றில் மிதந்த நிலையில்
ஆண் ஒருவரின் சடலம் நேற்று (29.08.2026) பிற்பகல் மீட்கப்பட்டுள்ளது என பொரலஸ்கமுவ பொலிஸார் தெரிவித்தனர்.
</p><p>
தாமரை மலர் பறிப்பதற்காக கடந்த வியாழக்கிழமை பெல்லன்வில வாவியை அண்டிய கிளைக்
கால்வாயில் இறங்கிய போதே ஹொரண, கணன்வில பகுதியைச் சேர்ந்த 44 வயதுடைய இரண்டு
பிள்ளைகளின் தந்தை முதலைத் தாக்குதலுக்கு இலக்காகிக் காணாமல்போயிருந்தார்.</p><h2>சடலம் மீட்பு</h2><p>
</p><p>
பிரதேச மக்கள் அளித்த தகவலின் பேரில் அன்று தேடுதல் நடத்தப்பட்ட போதிலும்
தகவல்கள் கிடைக்காத நிலையில், நேற்று பிற்பகல் அவர் காணாமல்போன இடத்திலிருந்து
சுமார் 100 மீற்றர் தொலைவில் உள்ள கால்வாயில் சடலம் மிதப்பதாகக் கிடைத்த தகவலை
அடுத்துப் பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0716c862-43b8-44f2-a55f-5b4ba8262c6c/26-6a93cda5bfae3.webp' /></p><p>
</p><p>
மீட்கப்பட்ட சடலத்தின் தலை மற்றும் நெஞ்சுப் பகுதியில் முதலை தாக்கியதற்கான
காயங்கள் காணப்படுகின்றன என்று பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.</p><p>

நுகேகொடை குற்றவியல் ஆய்வக அதிகாரிகள் சம்பவ இடத்தில் சோதனைகளை
மேற்கொண்டதுடன், பொரலஸ்கமுவ பொலிஸார் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை
முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-30T06:29:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தாமரை மலர் பறிக்கச்சென்ற இரண்டு பிள்ளைகளின் தந்தைக்கு நேர்ந்த கதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/father-of-two-dies-while-picking-lotus-flowers-1788071127"></link>
            <id>https://jvpnews.com/article/father-of-two-dies-while-picking-lotus-flowers-1788071127</id>
            <summary type="text">கொழும்பு - பெல்லன்வில வாவியை அண்டிய கிளைக் கால்வாய் ஒன்றில் மிதந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் நேற்று சனிக்கிழமை பிற்பகல் மீட்கப்பட்டுள்ளது என்று பொரல...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">கொழும்பு - பெல்லன்வில வாவியை அண்டிய கிளைக் கால்வாய் ஒன்றில் மிதந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் நேற்று சனிக்கிழமை பிற்பகல் மீட்கப்பட்டுள்ளது என்று பொரலஸ்கமுவ பொலிஸார் தெரிவித்தனர்.</p><p style="text-align: justify; ">

தாமரை மலர் பறிப்பதற்காக கடந்த வியாழக்கிழமை பெல்லன்வில வாவியை அண்டிய கிளைக் கால்வாயில் இறங்கியபோதே ஹொரண, கணன்வில பகுதியைச் சேர்ந்த 44 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தை முதலைத் தாக்குதலுக்கு இலக்காகிக் காணாமல்போயிருந்தார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4591a306-37d6-454c-97a2-5040b3d62caf/26-6a93ccd8c15ea.webp' /></p><h2 style="text-align: justify; ">&nbsp;மேலதிக விசாரணை</h2><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
பிரதேச மக்கள் அளித்த தகவலின் பேரில் அன்று தேடுதல் நடத்தப்பட்ட போதிலும் தகவல்கள் கிடைக்காத நிலையில், நேற்று பிற்பகல் அவர் காணாமல்போன இடத்திலிருந்து சுமார் 100 மீற்றர் தொலைவில் உள்ள கால்வாயில் சடலம் மிதப்பதாகக் கிடைத்த தகவலை அடுத்துப் பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர்.</p><p style="text-align: justify; ">

மீட்கப்பட்ட சடலத்தின் தலை மற்றும் நெஞ்சுப் பகுதியில் முதலை தாக்கியதற்கான காயங்கள் காணப்படுகின்றன என்று பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">

நுகேகொடை குற்றவியல் ஆய்வக அதிகாரிகள் சம்பவ இடத்தில் சோதனைகளை மேற்கொண்டதுடன், பொரலஸ்கமுவ பொலிஸார் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.&nbsp;&nbsp;</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-30T06:25:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Tony</name>
            </author>
            <title type="text"><![CDATA[GV பிரகாஷ் Immortal படத்தின் முதல் விமர்சனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/immortal-movie-first-review-1788068774"></link>
            <id>https://cineulagam.com/article/immortal-movie-first-review-1788068774</id>
            <summary type="text">இம்மார்டல்

ஜிவி பிரகாஷ் தென்னிந்திய சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர். இவர் இந்த வருடம் இசையமைத்த யூத், இருமுடி, ஹாப்பி ராஜ், விஸ்வநாத் &amp;amp; சன்ஸ் ...</summary>
            <content type="html"><![CDATA[<h2>இம்மார்டல்</h2><p>

ஜிவி பிரகாஷ் தென்னிந்திய சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர். இவர் இந்த வருடம் இசையமைத்த யூத், இருமுடி, ஹாப்பி ராஜ், விஸ்வநாத் &amp; சன்ஸ் என பல படங்கள் ஹிட் அடித்துள்ளன.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d339ba05-cf14-468a-b6da-510c7632c53f/26-6a93c3a9acd9f.webp' /></p><p>இந்நிலையில் இவர் நடிப்பில் இந்த வாரம் இம்மார்டல் (<a href="https://x.com/varusath2003/status/2093768864933032361" target="_blank">Immortal</a>) படம் திரைக்கு வரவுள்ளது. இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக கயாடு நடித்துள்ளார். அதோடு ஒரு வித்தியாசமான கிரியேச்சர் இந்த படத்தில் இடம்பெற, இந்த ட்ரைலர் சமீபத்தில் வந்து மிகப்பெரிய வரவேற்பு பெற்றது.</p><p></p><p>
</p><h2>முதல் விமர்சனம்
</h2><p>
இந்நிலையில் இப்படத்தை பார்த்த விநியோகஸ்தர் ஒருவர், இந்த வருடத்தின் மிகச்சிறந்த திரில்லர் படம் என பதிவு செய்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/75dff9e5-25df-41e7-8d11-4d81d7404f70/26-6a93c3aa696fd.webp' /></p><p>

இதை பார்த்த எல்லோரும் இந்த படத்தின் மீது மேலும் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளனர். கண்டிப்பாக ஜிவி இசை தாண்டி நடிப்பிலும் இந்த படம் வெற்றி அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr"><a href="https://x.com/hashtag/Immortal?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#Immortal</a> We bought the movie after watching it and will be one best thrillers for Tamil Cinema this year. Congrats <a href="https://x.com/gvprakash?ref_src=twsrc%5Etfw">@gvprakash</a> and <a href="https://x.com/FilmFactoryAK?ref_src=twsrc%5Etfw">@FilmFactoryAK</a> and Arunkumar producer. <a href="https://t.co/m78fypfMXs">https://t.co/m78fypfMXs</a></p>&mdash; Varun (@varusath2003) <a href="https://x.com/varusath2003/status/2093768864933032361?ref_src=twsrc%5Etfw">August 29, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p>]]></content>
            <updated>2026-08-30T06:20:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kumar</name>
            </author>
            <title type="text"><![CDATA[மாற்றம் எங்களுக்குள் இருந்து வர வேண்டும்! சிறிநாத் எம்பி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/srinath-mp-statement-about-economy-1788068461"></link>
            <id>https://tamilwin.com/article/srinath-mp-statement-about-economy-1788068461</id>
            <summary type="text">பொருளாதாரமாக இருந்தாலும் சரிதான், தொழில் துறையில்
இருந்தாலும் சரிதான், அரசியலில் இருந்தாலும் சரிதான் மற்றவர்களைக் குற்றம்
சாட்டுவதை அல்லது மற்றவர்கள...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொருளாதாரமாக இருந்தாலும் சரிதான், தொழில் துறையில்
இருந்தாலும் சரிதான், அரசியலில் இருந்தாலும் சரிதான் மற்றவர்களைக் குற்றம்
சாட்டுவதை அல்லது மற்றவர்களிடம் இருந்து மாற்றத்தை எதிர்பார்ப்பதை விடுத்து
எங்களுக்குள் இருந்து மாற்றம் வர வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்
டாக்டர் இ.சிறிநாத் தெரிவித்தார்.
</p><p>மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் தலைவர்களுக்கும், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும்
இடையிலான “குரலிலிருந்து கொள்கை நோக்கி உரையாடல்” என்ற விசேட கலந்துரையாடல் நேற்று (29.08.2026) மட்டக்களப்பில் நடைபெற்றது.
</p><p>இந்த நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.&nbsp;</p><h2>பொருளாதார பிரச்சினை</h2><p>மேலும் தெரிவிக்கையில், மிக முக்கியமாக இந்த அரசியல் உரிமையும், பொருளாதார உரிமையும் ஒன்றோடொன்று
பின்னிப் பிணைந்தவை. இந்த அரசியல் உரிமைகள் வழங்கப்படுகின்ற பொழுது, அதாவது
அதிகாரப் பரவலாக்கம் - நீங்கள் மாகாண சபை என்று கேட்ட விடயம் - பொதுவாக அதிகாரப்
பரவலாக்கம், ஏனென்றால் எங்களுடைய அதிகாரத்தை எல்லா மட்டங்களுக்கும் கொண்டு
செல்கின்ற பொழுது, இந்த பொருளாதாரப் பிரச்சினைகளை மிக இலகுவாக முன்னெடுத்துத்
தீர்க்கக்கூடியதாக இருக்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/41d45354-854d-467f-9a69-020f7bd2eadb/26-6a93c7fdc431a.webp' /></p><p>
</p><p>ஒரு நாட்டில் வந்து பல அபிவிருத்தி அடைந்த நாடுகளிலே இந்த பொருளாதாரப்
பிரச்சினைகள் எவ்வாறு தீர்க்கப்பட்டிருக்கின்றன என்றால், அங்கு அரசியல்
பிரச்சினைகள், அரசியல் ஸ்திரத்தன்மை இருக்கின்ற பொழுதுதான் அங்கு பொருளாதார
ஸ்திரத்தன்மை இருக்கும்.
</p><p>முக்கியமாக எங்களது நாட்டில் வந்து மிக முக்கியமாகத் தேவையாக இருக்கின்ற இந்த நாடாளுமன்றத்தின் ஊடாகக் கொண்டுவரப்பட வேண்டிய, கடந்த காலங்களிலே பொருளாதார
நெருக்கடியிலே சிக்கித் தவித்த நாடு இப்போது தற்காலிகமாக ஒரு நிலைக்கு
வந்திருக்கின்றது என்றாலும் கூட, அது நிரந்தரமாக உங்களுடைய இந்த நீங்கள்
முன்னிலைப்படுத்திய அல்லது முகவரியிட்ட விடயங்கள் அடையாளப்படுத்தப்பட வேண்டும்
என்றால், மிக முக்கியமாக அந்தச் சமத்துவமும் எல்லாரும் இங்கு பல்லினம்
வாழுகின்ற சமூகச் சமத்துவம் அது பெரும்பான்மையாக இருந்தாலும் சரிதான்,
சிறுபான்மையாக இருந்தாலும் சரிதான் எல்லோருக்கும் உரிய சமத்துவம் இருக்க
வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/48a04d7c-9d81-447b-8c64-a85ce263438f/26-6a93c7febd4bd.webp' /></p><h2>பொருளாதார ஸ்திரத்தன்மை</h2><p>
</p><p>இளைஞர், யுவதிகளுக்கான சமத்துவம், மதங்களுக்கான சமத்துவம், இன்னும் எல்லா
வகையிலும் அந்தச் சமத்துவம் ஆண், பெண் சமத்துவம் இருக்க வேண்டும் என்ற
அடிப்படையிலே இந்த அரசியல் உரிமைகள் வந்து உண்மையாக அதிகாரப் பரவலாக்கங்கள்
மூலம் கொண்டு செல்லப்படுகின்ற பொழுது, பொருளாதார ஒரு ஸ்திரத்தன்மை அங்கு
அடையப்படும்.</p><p>
பல விடயங்கள் வேலைவாய்ப்பு அல்லது போதைப்பொருள் கட்டுப்பாடு, மற்றது
விளையாட்டு இந்த விடயங்களெல்லாம் நீங்கள் சொன்னதில் எனக்கு நிறைய உடன்பாடு
இருக்கின்றது. மாகாண சபைகள் பலப்படுத்தப்படுகின்ற பொழுது, அந்த விடயங்களை
ஒவ்வொன்றும் ஒரு கள நிலைகளிலும் பிரதேச சபை என்றால் அதற்கு ஒரு குறிப்பிட்ட
அதிகாரம், மாவட்டங்களில் ஒரு குறிப்பிட்ட அதிகாரம், மாகாணங்களின் ஊடாக இந்த
அடிப்படை விடயங்கள் உண்மையாக உங்களுடைய குரலாக வருகின்ற பொழுது நிச்சயமாக
வரவேற்கப்பட வேண்டிய விடயம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/512540bd-156b-4a2e-9f8f-fa8a8b3be9de/26-6a93c7ff946a6.webp' /></p><p>
இந்த எண்ணக்கருக்கள் பலப்படுத்தப்படுகின்ற பொழுது, அந்த நாட்டில அந்த
மாற்றங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும். நாடாளுமன்றத்தின் ஊடாக குரலாக இந்த
எண்ணப்பாடுகளை நாங்களும் வெளிப்படுத்த வேண்டிய தேவை இருக்கிறது,
வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றோம்.
</p><p>ஆகவே, உண்மையாக ஒரு வலுவான நிலையில் இருக்கின்ற அரசு நான் அரசாங்கக் கட்சியைப்
பற்றிச் சொல்லவில்லை, அரசாங்கம் இந்த இளைஞர்கள், ஏனென்றால் ஒவ்வொரு வருடமும்
நீங்கள் தான் அந்த வாக்குகளைச் செலுத்துகின்ற தீர்மானிக்கின்ற சக்திகளாக
வருகின்றீர்கள். உங்களுடைய எண்ணப்போக்கு எவ்வாறு இருக்கின்றதோ அதைச் சார்ந்து
செயல்பட வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு இருக்கின்றது என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/91c07b43-0970-4c16-ace4-2f5a1c73f6a5/26-6a93c8006ae1f.webp' /></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-30T06:06:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாளத்திற்கு நிவாரணக் குழுக்களை அனுப்ப இலங்கை திட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-lanka-plans-to-send-relief-team-1788069820"></link>
            <id>https://tamilwin.com/article/sri-lanka-plans-to-send-relief-team-1788069820</id>
            <summary type="text">&amp;nbsp;பாரிய வெள்ளப் பெருக்கினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நேபாளத்திற்கு உதவும் வகையில், எதிர்வரும் நாட்களில் அவசரகால நிவாரணக் குழுக்களை அனுப்ப இலங...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;பாரிய வெள்ளப் பெருக்கினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நேபாளத்திற்கு உதவும் வகையில், எதிர்வரும் நாட்களில் அவசரகால நிவாரணக் குழுக்களை அனுப்ப இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது என பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.</p><p>
நேபாளத்திற்கு அனுப்பப்படும் நிவாரணக் குழுக்களில் இலங்கை பாதுகாப்புப் படையினரின் உறுப்பினர்கள் உள்ளடங்குவர் என அனுராதபுரத்தில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போது அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>
நேபாளத்தின் தற்போதைய தேவைகளின் அடிப்படையில் நிவாரணக் குழுக்களின் எண்ணிக்கை மற்றும் எந்த வகையான குழுக்களை அனுப்புவது என்பது குறித்துத் தொடர்ந்து ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும், இன்னும் சில நாட்களில் இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நிறைவடையும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ee80a01c-0394-4fcc-a456-9314723f8d46/26-6a93c7bd8f496.webp' /></p><p>.
நிவாரணக் குழுக்களுடன் சேர்த்து, பேரழிவைச் சந்தித்துள்ள நேபாளத்திற்கு 1 மில்லியன் அமெரிக்க டொலர்களை நிதியுதவியாக வழங்க இலங்கை அரசாங்கம் பூர்வாங்க ஏற்பாடுகளைச் செய்து வருகிறது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-30T06:03:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[லேக் ஒன்றாரியோ புதிய பெயர் பலகையை திறந்து வைத்து டிரம்பிற்கு அதிர்ச்சி கொடுத்த கனடா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/well-never-ever-back-down-doug-ford-1788068254"></link>
            <id>https://canadamirror.com/article/well-never-ever-back-down-doug-ford-1788068254</id>
            <summary type="text">&amp;nbsp;அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், வட அமெரிக்காவின் புகழ்பெற்ற &#039;லேக் ஒன்ராறியோ&#039; ஏரியின் பெயரை &#039;லேக் அமெரிக்கா&#039; என மாற்றியதற்கு கனடா அரசு மற்றும...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், வட அமெரிக்காவின் புகழ்பெற்ற 'லேக் ஒன்ராறியோ' ஏரியின் பெயரை 'லேக் அமெரிக்கா' என மாற்றியதற்கு கனடா அரசு மற்றும் ஒன்ராறியோ மாகாண அரசு ஆகியவை மிகக் கடுமையான பதிலடியைக் கொடுத்துள்ளன.
</p><p>டிரம்பிற்கு பதிலடி வழங்கும் நோக்கில் ஒன்ராறியோ மாகாண முதல்வர் டக் ஃபோர்ட் புதிய 'லேக் ஒன்ராறியோ' பெயர்ப்பலகையைத் திறந்து வைத்துள்ளார்.</p><p>
அதிபர் டிரம்ப் இதை என்ன பெயர் வேண்டுமானாலும் அழைக்கலாம், ஆனால் உலகம் முழுவதும் இதனை எப்போதும் 'லேக் ஒன்ராறியோ' என்றுதான் அழைக்கும் என குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b6146e12-bd08-402e-aec8-d45877a25c50/26-6a93c19fb253f.webp' /></p><p>
</p><p>கனடா தனது இறையாண்மையை எப்போதும் பாதுகாக்கும். மிரட்டல்களுக்கு நாங்கள் ஒருபோதும் பணியமாட்டோம் என டிரம்பிற்கு நேரடியாகவே பதிலடி கொடுத்துள்ளார்.
</p><p>கனேடிய பிரதமர் மார்க் கார்னி, டிரம்பின் இந்த அறிவிப்பை முற்றாக நிராகரித்துள்ளார்.
 'ஒன்ராறியோ' என்ற பெயர் 'வெண்டாட்' பழங்குடியின மொழியிலிருந்து வந்த 'ஒன்டாரியோ' (Ontari'io - அதாவது 'அழகான, பெரிய ஏரி') என்ற சொல்லாகும். இது கனடா கூட்டமைப்பு மற்றும் அமெரிக்காவின் சுதந்திரப் பிரகடனத்திற்கு முன்பே, 400 ஆண்டுகளுக்கும் மேலாகப் பயன்படுத்தப்பட்டு வரும் வரலாற்றுப் பெயர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>அமெரிக்க அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ வரைபடங்கள் மற்றும் தரவுத்தளங்களில் இந்த ஏரியின் பெயரை 'லேக் அமெரிக்கா' என மாற்றுமாறு டிரம்ப் நிறைவேற்று உத்தரவு பிறப்பித்துள்ளார். </p><p>
முன்னதாக 'மெக்சிகோ வளைகுடா'வை 'கல்ஃப் ஆஃப் அமெரிக்கா' என மாற்ற முயன்றதன் தொடர்ச்சியாகவே இச்செயல் பார்க்கப்படுகிறது.</p><p>
அமெரிக்காவுடனான வர்த்தகப் பதற்றங்கள் குறித்துப் பேசிய டக் ஃபோர்ட், கனடிய தொழிலாளர்களின் நலன்களைப் பாதிக்கும் மோசமான ஒப்பந்தத்தை விட ஒப்பந்தமே இல்லாமல் இருப்பது மேல் எனக் குறிப்பிட்டதுடன், உருக்கு மற்றும் வாகன உற்பத்தித் துறைகளைப் பாதுகாக்க கனடா அனைத்து முடிவுகளையும் எடுக்கத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தார்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-30T06:02:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[அனர்த்த நிவாரண சேவைகளுக்காக நேபாளம் செல்லும் இலங்கை பாதுகாப்புப் படையினர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/troops-prepare-for-nepal-disaster-relief-1788069679"></link>
            <id>https://jvpnews.com/article/troops-prepare-for-nepal-disaster-relief-1788069679</id>
            <summary type="text">அனர்த்த நிவாரண சேவைகளுக்காக அனுப்பி வைக்கப்படும் இலங்கை குழுக்களை எதிர்வரும் சில நாட்களுக்குள் நேபாளத்திற்கு அனுப்பத் திட்டமிடப்பட்டுள்ளதாக பிரதிப் பா...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">அனர்த்த நிவாரண சேவைகளுக்காக அனுப்பி வைக்கப்படும் இலங்கை குழுக்களை எதிர்வரும் சில நாட்களுக்குள் நேபாளத்திற்கு அனுப்பத் திட்டமிடப்பட்டுள்ளதாக பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.</p><p style="text-align: justify; "> 

நேபாளத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் நிவாரணப் பணிகளுக்காக இந்நாட்டு பாதுகாப்புப் படையினரைக் கொண்ட நிவாரணக் குழுக்களை அனுப்பத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/10f2f919-8b49-49a4-9f95-246e8568a769/26-6a93c730a303e.webp' /></p><h2 style="text-align: justify; ">நிவாரணப் பணி</h2><p style="text-align: justify; "> 

அநுராதபுரம் பகுதியில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் அருண ஜயசேகர இதனைக் குறிப்பிட்டுள்ளார். </p><p style="text-align: justify; ">

நேபாளத்தில் நடந்த சம்பவம் ஒரு துரதிர்ஷ்டவசமான சம்பவமாகும். ஜனாதிபதி தனது அனுதாபங்களைத் தெரிவித்துள்ளார். </p><p style="text-align: justify; ">அத்துடன், அரசாங்கம் என்ற வகையில் ஒரு மில்லியன் அமெரிக்க டொலர்களை நிதி ரீதியாக நிவாரணமாக வழங்குவதற்கான ஆரம்பக்கட்டப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. </p><p style="text-align: justify; ">

அதேபோன்று, பாதுகாப்பு அமைச்சின் நிவாரணக் குழுக்கள் மற்றும் தேசிய அனர்த்த முகாமைத்துவ நிவாரண நிலையம் என்பன உள்ளன.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> 

அங்குள்ள தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு எவ்வாறான நிவாரணக் குழுக்களை அனுப்புவது என்பது குறித்து திட்டமிடப்பட்டு வருகிறது. </p><p style="text-align: justify; ">

இன்னமும் திட்டமிடப்பட்டு வருகிறதே தவிர, அனுப்பப்படும் படையினரின் எண்ணிக்கை அல்லது எவ்வாறான நிவாரணக் குழுக்கள் என்பது குறித்து இன்னும் முடிவாகவில்லை. </p><p style="text-align: justify; ">

ஓரிரு நாட்களில் அதற்கான நடவடிக்கைகளை ஏற்பாடு செய்யவே அரசாங்கம் என்ற ரீதியில் நாங்கள் செயற்பட்டு வருகின்றோம். எனவே, அருகிலுள்ள ஒரு தெற்காசிய நாடாக நாம் மிகவும் உணர்வுபூர்வமாகச் செயற்படுகின்றோம்.</p>]]></content>
            <updated>2026-08-30T06:01:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சற்றுமுன்னர் யாழில் ஆரம்பமான நீதிக்கான நீள் பயண சர்வதேச மாநாடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/long-journey-for-justice-awareness-rally-in-jaffna-1788069111"></link>
            <id>https://tamilwin.com/article/long-journey-for-justice-awareness-rally-in-jaffna-1788069111</id>
            <summary type="text">புதிய இணைப்புசர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு, &quot;நீதிக்கான
நீள்பயணம்&quot; எனும் தொனிப்பொருளில் சர்வதேச மாநாடு தற்போது யாழ்ப்பாணம் ...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு, "நீதிக்கான
நீள்பயணம்" எனும் தொனிப்பொருளில் சர்வதேச மாநாடு தற்போது யாழ்ப்பாணம் தந்தை
செல்வா கலையரங்கில் நடைபெற்று வருகின்றது.&nbsp;</p><p>வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தின்
ஏற்பாட்டில் மாநாடு நடைபெற்று வருகின்றது.</p><p>இதில் நாடாளுமன்ற உறுப்பினர்கள்,
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், வலிந்து காணாமல்
ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், அரசியல் பிரதிநிதிகள் என பலர்
கலந்துகொண்டுள்ளனர்.</p><h2>முதலாம் இணைப்பு</h2><p>சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு, "நீதிக்கான நீள்
பயணம்" எனும் தொனிப்பொருளில் யாழ்ப்பாணத்தில் இன்று கவனயீர்ப்புப் பேரணி
நடைபெற்று வருகின்றது.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/ejyJXTi2tFs" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p>
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட
குடும்பங்களின் பங்கேற்புடன் நடைபெற்ற இந்த பேரணி, யாழ்ப்பாணம் உலகத்
தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலையில் உயிரிழந்தவர்களின் நினைவிடத்தில்
சுடரேற்றி அஞ்சலி செலுத்தியதைத் தொடர்ந்து ஆரம்பமானது.</p><p>
</p><p>
காணாமல் ஆக்கப்பட்டோரின் புகைப்படங்கள் பொறிக்கப்பட்ட விசேட வாகனம் பேரணியின்
முன்னிலையில் சென்றதுடன், உறவினர்கள் தமது அன்புக்குரியவர்களின் புகைப்படங்களை
ஏந்தியவாறு பேரணியில் பங்கேற்றனர்.</p><h2>உண்மை மற்றும் நீதியை வலியுறுத்தி பேரணி</h2><p>
</p><p>
பல ஆண்டுகளாக காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளைத் தேடி வரும் குடும்பங்கள்,
உண்மை மற்றும் நீதியை வலியுறுத்தி பேரணியில் கலந்துகொண்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/197f43f3-3b8c-4f3c-83ae-34df0549769a/26-6a93c66a82665.webp' /></p><p>

உலகளவில் அதிகளவான வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான சம்பவங்கள்
பதிவாகியுள்ள நாடுகளில் இலங்கை இரண்டாவது இடத்தில் உள்ளதாகக் கூறப்படும்
நிலையில், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் நீதி கோரிக்கை இதுவரை
நிறைவேற்றப்படவில்லை.
</p><p>
யாழ்ப்பாண நகரின் ஊடாக முன்னேறிய பேரணி, தந்தை செல்வா கலையரங்கைச்
சென்றடைந்தது. அங்கு சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை
முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட சர்வதேச மாநாட்டு நிகழ்வுகள் ஆரம்பமாகின.</p><p>

காணாமல் ஆக்கப்பட்டோரின் நிலை தொடர்பில் உண்மை வெளிப்படுத்தப்பட வேண்டும்
என்றும், அவர்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என்றும் பேரணியில் பங்கேற்ற
குடும்பங்கள் கோரிக்கை விடுத்தனர்.</p><p>வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தின்
ஏற்பாட்டில் நடைபெற்றுவரும் குறித்த மாநாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர்கள்,
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், வலிந்து காணாமல்
ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், அரசியல் பிரதிநிதிகள் என பலர்
கலந்துகொண்டுள்ளனர்.</p><p></p><p><br></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-30T05:58:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[களுத்துறை சிறைச்சாலையில் கைதியின் காதை வெட்டிய மற்றொரு கைதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/fellow-inmate-cuts-off-prisoner-s-ear-at-kalutara-1788066475"></link>
            <id>https://ibctamil.com/article/fellow-inmate-cuts-off-prisoner-s-ear-at-kalutara-1788066475</id>
            <summary type="text">பதுளை சிறைச்சாலையிலிருந்து களுத்துறை சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட கைதி ஒருவரின் காதுப் பகுதியை, அங்கிருந்த மற்றொரு கைதி கூர்மையான ஆயுதத்தால் வெட்டியுள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p>பதுளை சிறைச்சாலையிலிருந்து களுத்துறை சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட கைதி ஒருவரின் காதுப் பகுதியை, அங்கிருந்த மற்றொரு கைதி கூர்மையான ஆயுதத்தால் வெட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
</p><p>சக கைதியால் தாக்கப்பட்ட கைதி உடனடியாகக் களுத்துறை நாகொடை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
</p><p>
வைத்தியசாலையில் பாதிக்கபட்ட கைதிக்கு அவசர அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p><p></p><h2>காதை வெட்டிய சக கைதி</h2><p>
</p><p>குறித்த கைதி தற்போது காவல்துறையினர் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகளின் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார் என பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0e095ec9-ed1c-4703-8408-0b596d6d28f8/26-6a93c2d8a49a5.webp' /></p><p>மேலும் காயமடைந்த கைதி இன்று ஞாயிற்றுக்கிழமை (30.08.2026) காலை சட்ட வைத்திய அதிகாரி முன் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.&nbsp;</p><p>
</p><p>
அதன் பின்னரே அவர் வைத்தியசாலையிலிருந்து மீண்டும் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்படுவது குறித்து இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>எனினும் கைதிகளுக்கிடையில் இந்த பிரச்சனை வந்ததது தொடர்பான எந்த தகவலும் கிடைக்கவில்லை.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-30T05:52:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாள-திபெத் இறப்பு எண்ணிக்கை அதிகரிப்பு... இன்னொரு பெருவெள்ள அபாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/nepal-tibet-new-flood-fears-1788069004"></link>
            <id>https://news.lankasri.com/article/nepal-tibet-new-flood-fears-1788069004</id>
            <summary type="text">Nepal-Tibet death toll rises amid new flood fears: இன்னொரு வெள்ளப்பெருக்கு அச்சங்களுக்கு மத்தியில் நேபாளம்-திபெத்தில் இறப்பு எண்ணிக்கை அதிகரிப்பு.
நே...</summary>
            <content type="html"><![CDATA[<p>Nepal-Tibet death toll rises amid new flood fears: இன்னொரு வெள்ளப்பெருக்கு அச்சங்களுக்கு மத்தியில் நேபாளம்-திபெத்தில் இறப்பு எண்ணிக்கை அதிகரிப்பு.
</p><p>நேபாளம் மற்றும் திபெத்தில் பேரழிவுகரமான திடீர் வெள்ளத்தில் சிக்கி மரணமடைந்தவர்கள் எண்ணிக்கை 700 கடந்துள்ள நிலையில், காணாமல் போனவர்கள் எண்ணிக்கை 3,000 கடந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5a8bc801-c37f-4fec-90d9-6820ce3359b4/26-6a93c4907c25d.webp' /></p><p>
</p><p>வெளியாகியுள்ள தகவல்களின் அடிப்படையில், நேபாளம் மற்றும் திபெத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகளின் மொத்த எண்ணிக்கை 750 ஆக உயர்ந்துள்ளதுடன், 3,000-க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை. </p><p>ஞாயிற்றுக்கிழமையன்று சீன அதிகாரிகள் வெளியிட்டுள்ள தகவலில் 16 பேர் மரணமடைந்ததாகவும், 546 பேர் (அவர்களில் 261 பேர் வெளிநாட்டினர்) காணாமல் போனதாகவும் தெரிவித்தனர்; அதேவேளையில், நேபாள அதிகாரிகள் 734 பேர் மரணமடைந்ததையும், 2,498 பேர் காணாமல் போனதையும் உறுதிப்படுத்தியுள்ளனர். </p><p>சீனா வெளியிட்ட சமீபத்திய தகவலில், காணாமல் போன வெளிநாட்டினரில் நேபாளத்தைச் சேர்ந்த 104 பேர், இந்தியாவைச் சேர்ந்த 49 பேர், லாட்வியாவைச் சேர்ந்த 33 பேர், அமெரிக்காவைச் சேர்ந்த 18 பேர் மற்றும் 15 பிரித்தானியர்கள் அடங்குவர்.</p><p></p><p> </p><p>இந்த நிலையில், நம்பிக்கை அளிக்கும் வகையில் நேபாளத்தில் இதுவரை 3,700-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். சனிக்கிழமை இரவு ஏற்பட்ட ஒரு முக்கிய முன்னேற்றமாக, தொழிலாளர்கள் சிக்கியிருப்பதாகக் கருதப்படும் திரிசூலி 3A நீர்மின் நிலையத்தின் சுரங்கப்பாதைக்குள் நேபாள ராணுவத்தால் ஒரு குழாயைச் செலுத்த முடிந்தது. </p><p>இந்த விவகாரம் தொடர்பில் உள்விவகார அமைச்சர் சுதான் குருங் தெரிவிக்கையில், நாங்கள் ஏற்கனவே அந்தச் சிறிய துளை வழியாகக் காற்றைச் செலுத்தத் தொடங்கிவிட்டோம்; இனி அகழ்வுப் பணிகளைத் தொடங்கி, மீட்புக் குழுவினரை உள்ளே அனுப்பவுள்ளோம்என்றார். </p><p>திரிசூலி 3A மற்றும் 3B ஆகிய இடங்களில் மீட்புப் பணிகள் கவனம் செலுத்தி வரும் நிலையில், 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் அத்தகைய சுரங்கங்களுக்குள் இன்னும் உயிருடன் சிக்கியிருக்கக்கூடும் என்றே நம்பப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/213d7e78-c57d-4a2c-9c78-f9084b85911d/26-6a93c48fc85bb.webp' /></p><p> </p><p>இந்த நிலையில், வெள்ள நீர் மட்டம் உயர்ந்து வருவதாக நேபாள அதிகாரிகள் தரப்பு ஞாயிற்றுக்கிழமை எச்சரித்ததுடன், மீட்புக் குழுவினர் எச்சரிக்கையுடன் செயல்படுமாறும் வலியுறுத்தியுள்ளது. </p><p>பகல் 7.20 மணிக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கையில், ரசுவாவில் உள்ள போதேகோஷி ஆற்றில் வெள்ளப் பெருக்கு மேலும் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளனர். </p><p>பிரமாண்டமான எரிசக்தி உள்கட்டமைப்புத் திட்டங்கள் அமைந்துள்ள ஒரு பகுதியில், திபெத்தின் புனித கைலாஷ் மலைக்குச் சென்ற மலையேறுபவர்கள் மற்றும் இந்து யாத்ரீகர்கள் உட்பட 933 நீர்மின்சக்தித் தொழிலாளர்கள் காணாமல் போனதாக நேபாளத்தின் பேரிடர் ஆணையம் பட்டியலிட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/39408051-c851-465f-80a4-e90558f55990/26-6a93c48f21018.webp' /></p><p> இதனிடையே, காணாமல் போன தங்கள் உறவினர்களின் நிலை என்ன என்பதை அறியப் பேரவலத்துடன் காத்திருக்கும் அதே வேளையில், முற்றிலும் இல்லாத நிலையிலிருந்து தங்கள் வாழ்க்கையை மீண்டும் கட்டமைக்க வேண்டிய சவாலையும் உயிர் தப்பியவர்கள் எதிர்கொள்கின்றனர். </p><p>இன்னொரு பெருவெள்ளம் ஏற்படக்கூடும் என்ற அச்சம், காணாமல் போனவர்களைத் தேடும் பணியைச் சிக்கலாக்கியுள்ளது. பனிப்பாறை மற்றும் சேற்றின் பெருக்கினால் மாபெரும் ஏரிகள் உருவாயின, மேலும் இந்த ஏரி அமைப்புகளில் ஒன்று கூடுதல் வெள்ளப்பெருக்கு அபாயமாக மாறியுள்ளது. </p><p>கடுமையாகப் பாதிக்கப்பட்ட பகுதியில் 500-க்கும் மேற்பட்டோர் உட்பட, கியிராங் பகுதிக்கு அருகில் மொத்தம் 2,141 மீட்புப் பணியாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளதாக சீனாவின் சின்ஹுவா அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-30T05:47:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாக்ஸ் ஆபிஸ்: ஹாய் திரைப்படம் 2 நாட்களில் செய்துள்ள வசூல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/hi-movie-2-days-box-office-collection-1788068073"></link>
            <id>https://cineulagam.com/article/hi-movie-2-days-box-office-collection-1788068073</id>
            <summary type="text">கவின், நயன்தாரா நடிப்பில் வெளிவந்த ஹாய் திரைப்படத்தின் 2 நாட்கள் வசூல் குறித்த விவரம் வெளியாகியுள்ளது.

ஹாய்

அறிமுக இயக்குநர் விஷ்ணு எடவன் இயக்கத...</summary>
            <content type="html"><![CDATA[<p>கவின், நயன்தாரா நடிப்பில் வெளிவந்த ஹாய் திரைப்படத்தின் 2 நாட்கள் வசூல் குறித்த விவரம் வெளியாகியுள்ளது.</p><p></p><p>
</p><h2>
ஹாய்</h2><p>

அறிமுக இயக்குநர் விஷ்ணு எடவன் இயக்கத்தில் கவின் மற்றும் நயன்தாரா முதல்முறையாக இணைந்து நடித்து வெளியாகியுள்ள திரைப்படம் ஹாய். இப்படத்தில் மறைந்த நடிகர் பாக்யராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் ராதிகா சரத்குமார், பிரபு என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/281d2e3f-2406-4742-9934-20990418460a/26-6a93c0ec2b7ce.webp' /></p><p>ஜென் மார்ட்டின் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். 

காதல் கதைக்களத்தில் உருவாகி வெளிவந்துள்ள இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்கள் கிடைத்துள்ளன.</p><h2> 

பாக்ஸ் ஆபிஸ்</h2><p>

இந்நிலையில், ஹாய் திரைப்படம் 2 நாட்களில் செய்துள்ள வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 2 நாட்களில் இப்படம் ரூ. 5 கோடி வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் எவ்வளவு வசூல் செய்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b7ef4caf-9507-47b5-8ed7-745445ac8908/26-6a93c0ecd5193.webp' /></p>]]></content>
            <updated>2026-08-30T05:40:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[பொலிஸ் உயரதிகாரியின் மீது தாக்குதல் ; சிக்கிய சந்தேகநபர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/arrested-for-attacking-senior-police-officer-1788068280"></link>
            <id>https://jvpnews.com/article/arrested-for-attacking-senior-police-officer-1788068280</id>
            <summary type="text">கேகாலை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் நபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கேகாலை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் நபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>&nbsp;இச் சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசேட விசாரணைகளின் அடிப்படையில், சனிக்கிழமை (29) இக் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/db17ef1b-269f-4722-b030-cc911296d0a3/26-6a93c1b982630.webp' /></p><p>
</p><p>
கைது செய்யப்பட்ட சந்தேகநபருக்கு எதிராக, பொலிஸ் உத்தியோகத்தர்களின் கடமைக்கு இடையூறு விளைவித்தல் மற்றும் தாக்குதல் நடத்தல் ஆகிய சட்ட விதிகளின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.</p><p>

மேலும், இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் கேகாலை பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-30T05:38:09+00:00</updated>
        </entry>
    </feed>
