<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-07-20T03:32:24+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[கோலாகலமாக கொண்டாடப்பட்ட மூன்று முடிச்சு சீரியல் நடிகர் நியாஸ் பிறந்தநாள்... புகைப்படங்கள் இதோ]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/moondru-mudichu-serial-niyaz-bday-celebration-1784517423"></link>
            <id>https://cineulagam.com/article/moondru-mudichu-serial-niyaz-bday-celebration-1784517423</id>
            <summary type="text">மூன்று முடிச்சுகடந்த 2024ம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக தொடங்கிய சீரியல் தான் மூன்று முடிச்சு. சூர்யா-சுந்தரவல்லி என்ற அம்மா-மகனின் கதையாக ம...</summary>
            <content type="html"><![CDATA[<h2>மூன்று முடிச்சு</h2><p>கடந்த 2024ம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக தொடங்கிய சீரியல் தான் மூன்று முடிச்சு. சூர்யா-சுந்தரவல்லி என்ற அம்மா-மகனின் கதையாக முதலில் தொடங்கப்பட்டது.</p><p>பின் அப்படியே கதை செல்ல செல்ல சூர்யா-நந்தினி ஜோடியின் கதையாக மாற தொடங்கியது. இப்போது கதையில் சுரேக்கா ரஞ்சித் சூழ்ச்சியால் கடத்தப்பட அந்த பழி முழுவதும் நந்தினி மேல் விழ இருக்கிறது.</p><p>இது பத்தாது என்று நந்தினி தங்கையால் அவருக்கு பிரச்சனை ஏற்பட இருக்கிறது. கதையில் ஒவ்வொரு நாளும் கதைக்களம் பரபரப்பின் உச்சமாகவே சென்றுகொண்டிருக்கிறது, எப்போது பெரியதாக சுரேக்காக கடத்தல் பிரச்சனை வெடிக்கும் என தெரியவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/433410e8-a0a6-455a-a19a-5c30db5b78b4/26-6a5d95bbb2b9e.webp' /></p><h2>கொண்டாட்டம்</h2><p>இந்த தொடரில் சூர்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்து மக்களின் மனதை வென்று வருகிறார் நடிகர் நியாஸ் கான். பாசத்திற்கு பாசம், அடிதடிக்கு அடிதடி, அதிரடிக்கு அதிரடி, அதாவது அவரிடம் என்ன காட்டுகிறார்களோ, அதை அவர் திரும்பி கொடுப்பார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ca5a0cfd-5cbe-4d7c-b8fb-1511317449c3/26-6a5d94226d9d8.webp' /></p><p>அவரின் இந்த கதாபாத்திரத்திற்கு ரசிகர்கள் பேராதரவு கொடுத்து வருகிறார்கள்.&nbsp;</p><p>இந்த நிலையில் சூர்யாவாக நடிக்கும் நியாஸ் கானின் பிறந்தநாளை சீரியல் குழுவினர் படப்பிடிப்பு தளத்தில் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர், அந்த புகைப்படங்கள் வெளியாக ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகிறார்கள்.</p><p>இதோ போட்டோ,</p><p><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/p/Da-4QVrSgWX/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/p/Da-4QVrSgWX/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/p/Da-4QVrSgWX/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by Hemalatha V (@tamilserialexpress)</a></p></div></blockquote> <script async src="//www.instagram.com/embed.js"></script></p>]]></content>
            <updated>2026-07-20T03:30:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Tony</name>
            </author>
            <title type="text"><![CDATA[மன்னை கவ்விய அர்ஜெண்டினா, மேட்ச் முடிந்து அடிதடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/argentina-vs-spain-world-cup-final-2026-1784514116"></link>
            <id>https://viduppu.com/article/argentina-vs-spain-world-cup-final-2026-1784514116</id>
            <summary type="text">பிஃபா உலககோப்பை போட்டிகள் கடந்த ஒரு மாதமாக அமெரிக்கா மற்றும் கனடா நாடுகளில் நடந்து வந்தது. இதில் எல்லோரும் கப் ஜெயிக்கும் என எதிர்பார்த்த ப்ரான்ஸ் அணி...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிஃபா உலககோப்பை போட்டிகள் கடந்த ஒரு மாதமாக அமெரிக்கா மற்றும் கனடா நாடுகளில் நடந்து வந்தது. </p><p>இதில் எல்லோரும் கப் ஜெயிக்கும் என எதிர்பார்த்த ப்ரான்ஸ் அணி 4வது இடம் பிடித்து அதிர்ச்சி கொடுத்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/12aad150-f502-40da-bf36-bb1d5f708409/26-6a5d8647543f2.webp' /></p><p>இந்நிலையில் நட்சத்திர ஆட்டக்காரர் மெஸ்ஸி-ன் அர்ஜெண்டினா, லாம்னி யாமல்-ன் ஸ்பெயின் ஆகிய அணிகள் நேற்று பைனலில் மோதியது, இதில் எல்லோரும் அர்ஜெண்டினா அணியே வெற்றி பெறும் என நினைத்த நிலையில் அந்த அணி ஒரு கோல் கூட போடாமல் ஸ்பெயினிடம் படுதோல்வியை தழுவியது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6ac88bde-7298-4310-b3d6-fc3ba32d81ce/26-6a5d86481ad9d.webp' /></p><p>இதனால் அர்ஜெண்டினா கோப்பை கணவு தகர மேட்ச் முடிந்து ஸ்பெயின் வீரர் அர்ஜெண்டினா வீரரிடம் ஏதோ சொல்ல வர அர்ஜெண்டினா வீரர் அவரை தாக்க, அரங்கமே போர்க்களமானது.</p><p><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr">🚨🥊 Full scenes after final whistle.<a href="https://x.com/MickyJnr__?ref_src=twsrc%5Etfw">@MickyJnr__</a> 🎥 <a href="https://t.co/ZXCvAFkHwy">pic.twitter.com/ZXCvAFkHwy</a></p>&mdash; Fabrizio Romano (@FabrizioRomano) <a href="https://x.com/FabrizioRomano/status/2078994500978905168?ref_src=twsrc%5Etfw">July 20, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr">Huge ban incoming for Paredes… 😳 <a href="https://t.co/L8bSgSy0hZ">pic.twitter.com/L8bSgSy0hZ</a></p>&mdash; Out of Context Football Manager (@nocontextfm1) <a href="https://x.com/nocontextfm1/status/2078966596890935654?ref_src=twsrc%5Etfw">July 19, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-20T03:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மரணத்தில் நீடிக்கும் மர்மம் - மறைந்த சி.டி.விக்ரமரத்னவின் இறுதி கிரியை இன்று]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/final-rites-of-ex-igp-cd-wickramaratne-held-today-1784516197"></link>
            <id>https://ibctamil.com/article/final-rites-of-ex-igp-cd-wickramaratne-held-today-1784516197</id>
            <summary type="text">முன்னாள் காவல்துறை மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் இறுதி கிரியைகள் இன்று (20) பிற்பகல் காவல்துறை மரியாதையுடன் பொரளை பொது மயானத்தில் நடைபெறவுள்ளது.&amp;nbs...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் காவல்துறை மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் இறுதி கிரியைகள் இன்று (20) பிற்பகல் காவல்துறை மரியாதையுடன் பொரளை பொது மயானத்தில் நடைபெறவுள்ளது.&nbsp;</p><p>முன்னாள் காவல்துறை மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன கடந்த வெள்ளிக்கிழமை துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்திருந்தார்.&nbsp;</p><p>முன்னாள் காவல்துறை மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் உயிரிழப்பு அரசியல் மற்றும் பாதுகாப்பு வட்டாரங்களில் மீண்டும் ஒரு சர்ச்சையான சூழ்நிலையை உருவாக்கியுள்ளது.</p><h2>மேலதிக விசாரணை</h2><p>அவரது மரணம் தற்கொலையாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதுடன், தமது பாதுகாப்பு அதிகாரியின் துப்பாக்கியாலேயே அவர் தன்னைத் தானே சுட்டுக்கொண்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்</p><p>சி.டி. விக்ரமரத்னவின் சடலம் மீதான கொழும்பு கிழக்கு வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியால் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது</p><p>இச்சம்பவம் தொடர்பில் மேல் மாகாண தெற்குப் பிராந்திய குற்றத்தடுப்புப் பிரிவினரும் மாலபே காவல்துறையினரும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், முன்னாள் காவல்துறை மா அதிபர் தன்னைத்தானே சுட்டுக்கொள்வதற்குப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் துப்பாக்கியும் அரச பகுப்பாய்வாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.</p><p>

விசாரணைகளுக்கு அமைவாக, அன்னாரின் மனைவி மற்றும் மூன்று பாதுகாப்பு அதிகாரிகளிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மேல் மாகாண தெற்குப் பிராந்திய குற்றத்தடுப்புப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-20T03:26:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[டெங்கு நோயாளிகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ள புதிய வைரஸ் தொற்று! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/new-virus-in-more-dengue-patients-1784513138"></link>
            <id>https://tamilwin.com/article/new-virus-in-more-dengue-patients-1784513138</id>
            <summary type="text">&amp;nbsp;இந்த ஆண்டு இதுவரை பதிவான டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 75,321 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதுவரை ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;இந்த ஆண்டு இதுவரை பதிவான டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 75,321 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.</p><p>

இதுவரை பதிவான டெங்கு நோயாளிகளில் 88% பேர் டெங்கு 2 வைரஸ் வகையால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் பணிப்பாளர் கபில கண்ணங்கர கூறியுள்ளார்.</p><p></p><h2>டெங்கு 2 வைரஸ் வகை</h2><p>
</p><p>
டெங்கு 2 வைரஸ் வகைக்கு எதிரான மனித உடலின் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்த அளவில் உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/525dd7c6-ad42-4f7a-937c-27b447104f94/26-6a5d927ba4f66.webp' /></p><p>

இந்த ஆண்டு நாட்டில் 53 டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>
டெங்கு நோய்த்தொற்றால் இதுவரை 53 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 37 பேர் பெண்கள் என்றும் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
</p><p>
ஜூலை மாதத்தின் முதல் 18 நாட்களில் மட்டும், 19,943 டெங்கு நோய்த்தொற்றுக்கு உள்ளான நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.</p><h2>நோயாளிகள் அடையாளம்&nbsp;</h2><p> அதிகபட்சமாக, மேற்கு மாகாணத்தில் 39,667 நோயாளிகள் பதிவாகியுள்ளனர்.

தெற்கு மாகாணத்தில் 11,610 நோயாளிகளும், மத்திய மாகாணத்தில் 6,325 நோயாளிகளும், சபரகமுவ மாகாணத்தில் 6,305 நோயாளிகளும் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு அறிவித்துள்ளது.</p><p>

ஜூலை மாதத்தில், கம்பஹா மாவட்டத்தில் 15,762 நோயாளிகளும், கொழும்பு மாவட்டத்தில் 15,000 நோயாளிகளும், மாத்தறை மாவட்டத்தில் 5,280 நோயாளிகளும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-20T03:14:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பெருவில் இரட்டை நிலநடுக்கம்., குறைந்தது ஆறு பேர் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/twin-earthquakes-kill-six-in-central-peru-1784506061"></link>
            <id>https://news.lankasri.com/article/twin-earthquakes-kill-six-in-central-peru-1784506061</id>
            <summary type="text">பெருவின் மத்திய பகுதியில் ஜூலை 19 அன்று இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டன.

இதில் குறைந்தது ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 21 பேர் காயமடைந்துள்ளனர் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பெருவின் மத்திய பகுதியில் ஜூலை 19 அன்று இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டன.

இதில் குறைந்தது ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 21 பேர் காயமடைந்துள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
</p><p>
ஐரோப்பிய நிலநடுக்க மையம் (EMSC) வெளியிட்ட தகவலின்படி, முதல் நிலநடுக்கம் 5.6 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது. அதன் பின்னர் சில மணி நேரங்களில் இரண்டாவது நிலநடுக்கமும் ஏற்பட்டது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c61fe7e4-e97e-40f4-aba8-cffc830b166e/26-6a5d66cfb74da.webp' /></p><p>இரண்டும் பெருவின் மத்திய பகுதியில் உள்ள Huancayo மற்றும் Ayacucho பகுதிகளை அதிகமாக பாதித்தன.
</p><p>
பல வீடுகள் இடிந்து விழுந்துள்ளன. சாலைகள் மற்றும் பாலங்கள் சேதமடைந்ததால் மீட்பு நடவடிக்கைகள் சிரமமாக நடைபெற்று வருகின்றன. பாதிக்கப்பட்ட பகுதிகளில் மின்சாரம் மற்றும் தொலைத்தொடர்பு சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளன.
</p><p>
பெருவின் ஜனாதிபதி, “இந்த பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு முழுமையான உதவிகளை வழங்கும்” என்று உறுதியளித்துள்ளார். </p><p>தற்போது தேசிய அவசர மேலாண்மை குழு மற்றும் படை வீரர்கள் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
</p><p></p><p>பெரு, பசிபிக்கின் “Ring of Fire” பகுதியில் அமைந்துள்ளதால், அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படும் நாடாகும். கடந்த சில ஆண்டுகளில் பல்வேறு நிலநடுக்கங்கள் பெருவில் உயிரிழப்புகளையும், பொருளாதார இழப்புகளையும் ஏற்படுத்தியுள்ளன.
</p><p>
இந்த சமீபத்திய நிலநடுக்கம், பெருவின் மக்கள் வாழ்க்கையை பெரிதும் பாதித்துள்ளது.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-20T03:07:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பில் தொடரூந்தில் பாய்ந்த இளைஞன் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/man-dies-in-bambalapitiya-1784512239"></link>
            <id>https://tamilwin.com/article/man-dies-in-bambalapitiya-1784512239</id>
            <summary type="text">கொழும்பு, பம்பலப்பிட்டி தொடரூந்து நிலையத்திற்கு அருகில் தொடரூந்தில் மோதுண்டு நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக&amp;nbsp; பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று மாலை...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு, பம்பலப்பிட்டி தொடரூந்து நிலையத்திற்கு அருகில் தொடரூந்தில் மோதுண்டு நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக&nbsp; பொலிஸார் தெரிவித்துள்ளனர். </p><p>நேற்று மாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். </p><p> மருதானை நோக்கி சென்ற தொடரூந்தில் குறித்த நபர் மோதியுள்ளதாக கிடைத்த தகவலை அடுத்து பம்பலப்பிட்டி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.</p><p> </p><h2><b>பிரேத அறை</b></h2><p>இவ்வாறு உயிரிழந்தவர் பிலியந்தலை பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய நபர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/35981eaa-f3f6-42d9-9d23-0f5c72b86a00/26-6a5d8fcdd002d.webp' /></p><p>உயிரிழந்த நபரின் சடலம் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. </p><p>பம்பலப்பிட்டி பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
</p>]]></content>
            <updated>2026-07-20T03:02:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[முன்பதிவில் வசூலை வாரிக்குவிக்கும் ஜனநாயகன்.. இதுவரை எவ்வளவு தெரியுமா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/jananayagan-pre-sales-box-office-collection-1784516237"></link>
            <id>https://cineulagam.com/article/jananayagan-pre-sales-box-office-collection-1784516237</id>
            <summary type="text">ஜனநாயகன்&amp;nbsp;தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நடிப்பில் கடைசியாக உருவாகியுள்ள ஜனநாயகன் திரைப்படம் வருகிற 23-ஆம் தேதி உலகமெங்கும் பிரம்மாண்டமாக வெளியாகிறது...</summary>
            <content type="html"><![CDATA[<h2>ஜனநாயகன்&nbsp;</h2><p>தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நடிப்பில் கடைசியாக உருவாகியுள்ள ஜனநாயகன் திரைப்படம் வருகிற 23-ஆம் தேதி உலகமெங்கும் பிரம்மாண்டமாக வெளியாகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ca27796b-d55a-4b48-838e-eed0372a8974/26-6a5d8e8fe3be1.webp' /></p><p></p><p> 

இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில், கே.வி.என் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் மமிதா பைஜூ, பூஜா ஹெக்டே, பாபி தியோல் என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.</p><h2>முன்பதிவு</h2><p> </p><p>

ஒவ்வொரு முன்னணி நட்சத்திரங்களின் திரைப்படம் வெளிவரும்போதும் அந்த படத்தின் முன்பதிவில் எவ்வளவு வசூல் செய்கிறது என்பதை தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆர்வமாக இருப்பார்கள்.

அந்த வகையில், தற்போது ஜனநாயகன் திரைப்படத்திற்கான முன்பதிவு வசூல் விவரம் வெளியாகியுள்ளது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/592875b3-dc19-4a09-81cf-031a5f2310eb/26-6a5d8e90a48fe.webp' /></p><p>அதன்படி, இதுவரை நடந்த முன்பதிவில் இப்படம் ரூ. 21 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இதன்மூலம் முதல் நாளே உலகளவில் ரூ. 100 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p>]]></content>
            <updated>2026-07-20T03:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[நகைச்சுவை தரப்பாக மாறிவிட்ட எதிர்க்கட்சியினர்! ஆளும் தரப்பு விமர்சனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/opposition-become-a-comedy-troupe-ruling-party-1784515333"></link>
            <id>https://tamilwin.com/article/opposition-become-a-comedy-troupe-ruling-party-1784515333</id>
            <summary type="text">எதிர்க்கட்சியினர் தற்போது நகைச்சுவை வழங்கும் தரப்பாக மாறிவிட்டனர் என்றும்,
நம்பிக்கையில்லாப் பிரேரணைகளைக் கூட வெறும் நகைச்சுவை விடயங்களாக
மாற்றியுள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>எதிர்க்கட்சியினர் தற்போது நகைச்சுவை வழங்கும் தரப்பாக மாறிவிட்டனர் என்றும்,
நம்பிக்கையில்லாப் பிரேரணைகளைக் கூட வெறும் நகைச்சுவை விடயங்களாக
மாற்றியுள்ளனர் என்றும் அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்துள்ளார்.
</p><p>
நீதி அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வரப்படவுள்ளது
என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி விடுத்து வரும்
கருத்துக்கள் குறித்து ஊடகங்களுக்குப் பதிலளிக்கும்போதே இவ்வாறு
குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><h2>வெறும் பிரேரணைகளைப் மட்டுமே பேசி</h2><p>இது தொடர்பில் அமைச்சர் மேலும் கூறியதாவது, "நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவத்துக்கு நீதி அமைச்சர்
பொறுப்பேற்றுள்ளதுடன், அது குறித்த விசாரணைகளை மேற்கொள்ளக் குழுவும்
அமைக்கப்பட்டுள்ளது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/507619d9-fff6-47eb-9efa-8dc4b0e75ae1/26-6a5d8f0bdc45f.webp' /></p><p>இத்தகைய சூழலில், அந்தச் சம்பவத்தின் பின்னணியைக்
கண்டறியுமாறு எதிர்க்கட்சியினர் அழுத்தம் கொடுத்திருக்க வேண்டும். ஆனால்,
அவர்கள் அதற்குப் பதிலாக வெறும் பிரேரணைகளைப் பற்றி மட்டுமே பேசி வருகின்றனர்.
</p><p>
இதற்கு முன்னரும் பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு
வரப்போவதாகக் கூறிவிட்டு, கடைசி வரை அதைச் சமர்ப்பிக்கவில்லை. </p><p>அவ்வாறே
தற்போதைய பிரேரணையும் வெறும் பேச்சுடன் முடிந்துவிடுமோ என்ற சந்தேகம்
எழுகின்றது. </p><p>எதிர்க்கட்சித் தரப்புக்கே தமது கட்சியின் மீதான நம்பிக்கை
குறைந்துள்ள ஒரு சூழலே இன்று உருவாகியுள்ளது" என்றும் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-20T02:59:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சி.டி.விக்ரமரத்ன மரணிப்பதற்கு முன் சந்தித்த பிரபல அரசியல்வாதி! மூன்று மணித்தியாலம் பேசிய விடயம் என்ன........]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/igp-c-d-wickramaratne-s-death-1784515899"></link>
            <id>https://tamilwin.com/article/igp-c-d-wickramaratne-s-death-1784515899</id>
            <summary type="text">முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன மரணிப்பதற்கு இரு கிழமைகளுக்கு முன் அவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை தனது நெருங்கிய நண்பருடன் சந...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன மரணிப்பதற்கு இரு கிழமைகளுக்கு முன் அவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை தனது நெருங்கிய நண்பருடன் சந்தித்து இரண்டு, மூன்று மணித்தியாலங்கள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
</p><p>முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சி.டி.விக்ரமரத்னவின் பூதவுடலுக்கு இறுதி மரியாதை செலுத்திய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவித்த கருத்துக்கள், </p><p>முன்னாள் பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்ன என்னுடைய மிக நெருங்கிய நண்பர். குறிப்பாக நான் ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில் தான் அவர் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டார். அவர் நேர்மையாகவும், நற்குணங்களுடன், அமைதியாகவும், சாந்தமானகவும் பணியாற்றினார்.</p><h2>
</h2><p></p><h2>சந்தித்து கலந்துரையாடிய விடயஙகள்</h2><p>அரசியல் கட்சிகளில் ஏற்படும் பிரச்சினைகள், மோதல்கள் மற்றும் சில சமயங்களில் அரசியல் தலைவர்கள் பிளவுபட்டு பல்வேறு விடயங்களை பொலிஸ் மா அதிபரிடம் கொண்டு செல்வார்கள். </p><p>ஆனால், அந்த அனைத்து சந்தர்ப்பங்களிலும் அவர் யாரையும் கோபத்துக்கு உள்ளாக்கவில்லை என்பதோடு யாரையும் பகைத்துக் கொள்ளவில்லை. அரகலய போராட்டக் காலத்தில் கூட மிக திறமையாக செயற்பட்டவர்.
</p><p>
இந்தச் சம்பவம் நடப்பதற்கு சுமார் இரண்டு, மூன்று வாரங்களுக்கு முன்பு, அவர் எனது மற்றொரு நண்பரான ரங்க கலன்சூரிய மற்றும் சில நண்பர்களுடன் சந்தித்து இரண்டு, மூன்று மணிநேரம் பல விடயங்கள் தொடர்பில் பேசிக் கொண்டிருந்தோம். </p><p>பேச்சுவார்த்தை முடிந்து நான் போகும் போது, "சேர், நான் உங்களுடைய வீட்டுப் பக்கமும் வந்து போக வேண்டும், சும்மா ஒரு கோப்பி குடிப்போம்" என்று கூறினார்.

எனவே, அவருடைய இந்த மறைவு, இவ்வாறு நடக்கும் என்று என்னால் நினைத்துப் பார்க்கக் கூட முடியவில்லை. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/487ced03-a716-4a0e-ab95-a4c06c157ca9/26-6a5d8d3d572c7.webp' /></p><p>இரண்டு வாரங்களுக்கு முன்பு தான் அவரைச் சந்தித்து பல மணிநேரம் ஒன்றாக இருந்ததால், இந்தச் செய்தியைக் கேட்டதும் எனது மனதை மிக ஆழமாகப் பாதித்ததோடு பெரும் மன வேதனையைத் தந்தது.
</p><p>
எனவே, இந்தச் சம்பவம் எவ்வாறு நடந்தது, என்ன காரணம் என்று இன்னும் சொல்ல முடியாது. விசாரணைகளின் மூலமே அது தெரியவரும். </p><p>இவரைப் போன்ற முக்கியமான மனிதர்கள் அரச சேவைக்கும், பொலிஸ் துறைக்கும், ஏனைய சேவைகளுக்கும் மிகவும் முன்மாதிரியான ஒருவராவார். </p><p>
அவருடைய ஓய்வுக் காலத்தில் கூட அவரால் பணியாற்ற முடியும். 63 வயது என்பது ஒருவரின் சிறந்த அறிவும், முதிர்ச்சியும் அதிகரிக்கும் காலம், நன்றாகப் பணியாற்றக்கூடிய காலம். </p><p>ஆனால், அப்படிப்பட்ட ஒரு தருணத்தில் தான் அவர் நம்மை விட்டுப் பிரிந்துள்ளார்.

எனவே தனிப்பட்ட முறையிலும், நான் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து மக்களின் சார்பிலும் எனது ஆழ்ந்த இரங்கலையும் துயரத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-20T02:54:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பில் மீண்டும் நேரில் சந்திக்கும் ரணில் மற்றும் சஜித்..! முக்கிய அரசியல் தலைவர்களும் பங்கேற்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ranil-and-sajith-to-meet-again-colombo-1784515288"></link>
            <id>https://tamilwin.com/article/ranil-and-sajith-to-meet-again-colombo-1784515288</id>
            <summary type="text">நீதியரசர்களின் ஓய்வு பெறும் வயதை அதிகரிப்பதற்கு அரசு மேற்கொண்டு வரும்
நடவடிக்கைகள் குறித்து விவாதிப்பதற்காக அனைத்து எதிர்க்கட்சிகளின்
பிரதிநிதிகளும்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீதியரசர்களின் ஓய்வு பெறும் வயதை அதிகரிப்பதற்கு அரசு மேற்கொண்டு வரும்
நடவடிக்கைகள் குறித்து விவாதிப்பதற்காக அனைத்து எதிர்க்கட்சிகளின்
பிரதிநிதிகளும் பங்கேற்கும் விசேட ஆலோசனை கூட்டமொன்று&nbsp;நடைபெறவுள்ளது.</p><p>எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவின் அலுவலகத்தில் எதிர்வரும் வியாழக்கிழமை கூட்டம் நடைபெறவுள்ளது.</p><p></p><h2>முக்கிய அரசியல் தலைவர்கள் பங்கேற்பு</h2><p>
</p><p>
எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவின் அலுவலகத்தில் இடம்பெறவுள்ள இந்த கூட்டத்தில், முக்கிய அரசியல் தலைவர்கள் பலரும் கலந்துகொள்ளவுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ee17dbe4-8444-4ff4-99d2-8e2887a638e8/26-6a5d8adb299be.webp' /></p><p>
</p><p>
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய
தேசியக்கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சித்தலைவர்
அலுவலகத்துக்கு செல்லவுள்ளார்.</p><p> சஜித் பிரேமதாச எதிர்க்கட்சித் தலைவராக பதவியேற்றதன் பின்னர், அவரது அலுவலகத்துக்கு ரணில் விக்ரமசிங்க விஜயம்
செய்யும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.</p><h2>அரசின் நகர்வுகள் குறித்து ஆராய்வு</h2><p>
</p><p>
நீதியரசர்களின் ஓய்வு வயதை நீடிக்கும் அரசின் நகர்வுகள் குறித்து ஆராய்வதற்கு,
அனைத்து எதிர்க்கட்சிகளையும் உள்ளடக்கிய கூட்டமொன்றை கூட்டுமாறு ஸ்ரீலங்கா
பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்‌ச, எதிர்க்கட்சித் தலைவர்
சஜித் பிரேமதாசவிடம் எழுத்துமூலம் கோரியிருந்தார். </p><p>அதனைத் தொடர்ந்து தொலைபேசி
ஊடாகவும் அவர் இந்த விடயத்தை வலியுறுத்தியிருந்தார். </p><p>இதற்கிணங்க, எதிர்வரும்
வியாழக்கிழமை நடைபெறவுள்ள இந்த கூட்டத்தில் நாமல் ராஜபக்‌சவும்
கலந்துகொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.</p><p>

அரசின் இந்த ஓய்வு வயது நீடிப்புத் திட்டம் நீதித்துறையின் சுதந்திரத்தைப்
பாதிக்கும் என்று எதிர்க்கட்சிகள் கருதுவதால், இது குறித்த பொதுவான
நிலைப்பாட்டை எடுப்பதற்காகவே இந்த கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று
தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p></p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-20T02:41:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Manchu</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜூலை கடைசியில் 5 ராசிகளுக்கு ஜாக்பாட்... அதிர்ஷ்டம் எந்தெந்த ராசியினருக்கு?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/baba-vanga-prediction-jackpot-these-zodiac-signs-1784483335"></link>
            <id>https://manithan.com/article/baba-vanga-prediction-jackpot-these-zodiac-signs-1784483335</id>
            <summary type="text">பாபா வங்காவின் கணிப்பின்படி ஜுலை மாதத்தில் கடைசி 10 நாட்களில் எந்தெந்த ராசியினருக்கு அதிர்ஷ்ட கதவு தட்டப்போகின்றது என்பதை தெரிந்து கொள்ளவும்.பல்கேரிய ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பாபா வங்காவின் கணிப்பின்படி ஜுலை மாதத்தில் கடைசி 10 நாட்களில் எந்தெந்த ராசியினருக்கு அதிர்ஷ்ட கதவு தட்டப்போகின்றது என்பதை தெரிந்து கொள்ளவும்.</p><p>பல்கேரிய நாட்டைச் சேர்ந்த தீர்க்கதரிசியான பாபா வங்காவின் கணிப்பின் படி ஜுலை மாதம் கடைசி 10 நாட்களில் சில ராசியினருக்கு அதிர்ஷ்டம் ஏற்படவிருக்கின்றது.</p><p>அந்த வகையில் தீர்க்கதரிசி கூறும் அதிர்ஷ்டத்தினை பெறும் ஐந்து ராசியினரைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.</p><h2>மேஷம்</h2><p>மேஷ ராசியினருக்கு ஜுலை மாதம் கடைசி 10 நாட்கள் புதிய வாய்ப்புகள் கிடைப்பதுடன், நீண்ட நாள் தடைபட்ட வேலைகள் அனைத்தும் முடிவிற்கு வருமாம்.</p><p>எதிர்காலத்திற்கு பயனளிக்கும் முக்கிய நபர்களை சந்திப்பதுடன், தொழில் செய்பவர்ளுக்கு புதிய வாடிக்கையாளர்களும் கிடைப்பார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a96adf50-451c-4832-993f-eeea8bf0ee3d/26-6a5d89ab40e63.webp' /></p><h2><span style="color: inherit; font-size: 1.75rem;">கன்னி</span></h2><p>கன்னி ராசியினருக்கு இந்த காலக்கட்ட உழைப்பிற்கான பலன் கிடைக்குமாம். வீடு, வாகனம் வாங்க நினைப்பவர்களின் ஆசை நிறைவேறுவதுடன், புதிய பொறுப்புகளும் உங்களது கதவை தட்டுமாம்.</p><p>மாணவர்களுக்கு படிப்பில் நல்ல முன்னேற்றம் கிடைப்பதுடன், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் கிடைக்க வாய்ப்புள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2e05f892-a997-4e4b-928b-4b380a041340/26-6a5d89abe5376.webp' /></p><h2><span style="color: inherit; font-size: 1.75rem;">தனுசு</span></h2><p>தனுசு ராசியினருக்கு ஜுலை கடைசி 10 நாட்கள் வெற்றி மற்றும் நம்பிக்கை நிறைந்ததாக இருப்பதுடன், தடைபட்டு வேலைகள் அனைத்தும் முடிவிற்கு வருமாம்.&nbsp;</p><p>புதிய தொழில் மற்றும் வேலை தொடங்குவதற்கு இவை சரியான நேரமாம். திருமண வாழ்வில் மகிழ்ச்சி அதிகரிக்குமாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c3f80f42-e94a-48a3-80cf-07a27524f50b/26-6a5d89ac975b3.webp' /></p><h2>கும்பம்</h2><p>கும்ப ராசிக்காரர்களுக்கு தொழில் மற்றும் நிதி விஷயங்களில் இந்த வாரம் சிறப்பாக இருக்கும். அலுவலகத்தில் சூழல் இனிமையாக இருக்கும். நீண்ட நாட்களுக்குப் பிறகு குடும்பத்துடன் நேரம் செலவிடுவீர்கள். பழைய முதலீடுகள் மூலம் லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது. இது உங்கள் நிதி நிலையை வலுப்படுத்தும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8a9c748e-3e9d-4408-bc0b-01c2d8d5591d/26-6a5d89ad444e1.webp' /></p><h2>மீனம்</h2><p>மீன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் பல வழிகளில் சாதகமாக இருக்கும். நிதி நிலைமை வலுப்பெறும், புதிய வருமான வழிகள் உருவாகும். நீதிமன்ற வழக்குகளில் சிக்கியிருந்தால், இந்த வாரம் உங்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d3bea84d-3379-4e7e-ac84-034ac981fd77/26-6a5d89ae06365.webp' /></p><p><b><i>இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).</i></b>&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;<br></p><table class="table table-bordered"><tbody><tr><td><i>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் <a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள் <a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"><b>FOLLOW NOW</b></a>&nbsp;</i><br></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-20T02:38:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[Red card ஆல் கலைந்த அர்ஜென்டினாவின் கனவு - கண்ணீர் சிந்திய மெஸ்ஸி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/messi-cries-after-argentina-loses-world-cup-final-1784513533"></link>
            <id>https://ibctamil.com/article/messi-cries-after-argentina-loses-world-cup-final-1784513533</id>
            <summary type="text">தொடர்ச்சியாக இரண்டாவது ஃபிஃபா உலகக் கோப்பையை வென்று விடைபெற வேண்டும் என்ற அர்ஜென்டினா அணித்தலைவர் லியோனல் மெஸ்ஸியின் கனவு பெரும் ஏமாற்றத்தில் முடிந்தத...</summary>
            <content type="html"><![CDATA[<p>தொடர்ச்சியாக இரண்டாவது ஃபிஃபா உலகக் கோப்பையை வென்று விடைபெற வேண்டும் என்ற அர்ஜென்டினா அணித்தலைவர் லியோனல் மெஸ்ஸியின் கனவு பெரும் ஏமாற்றத்தில் முடிந்தது.</p><p>2026 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஸ்பெயினிடம் கூடுதல் நேரத்தில் 0-1 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினா அணி தோல்வியடைந்தது.</p><p>போட்டியின் ஆரம்பம் முதலே இரு அணிகளும் கோல் அடிக்க கடுமையான போராட்டத்தை வெளிப்படுத்தின. நிர்ணயிக்கப்பட்ட 90 நிமிடங்கள் வரை இரு அணிகளாலும் கோல் எதுவும் அடிக்க முடியவில்லை.</p><h2>அணிக்கு பெரும் பின்னடைவு</h2><p> இதற்கிடையே, போட்டியின் கூடுதல் நேரத்தில் (90+3' நிமிடம்) அர்ஜென்டினா வீரர் பெர்னாண்டஸ் முரட்டு ஆட்டம் விளையாடியதால், ரெட் கார்டு காட்டப்பட்டு மைதானத்திலிருந்து வெளியேற்றப்பட்டார். இது அர்ஜென்டினா அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">🚨🎥 What an emotional moment! 🥹😢<br><br>• The legend Lionel Messi cries after the defeat in his final World Cup match. ❌ <a href="https://t.co/EjkVJq29Mb">pic.twitter.com/EjkVJq29Mb</a></p>&mdash; Tiger eye 👁️ (@Tigereye_ball) <a href="https://x.com/Tigereye_ball/status/2078976496576729225?ref_src=twsrc%5Etfw">July 19, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>மெஸ்ஸியின் உலகக் கோப்பை பயணத்தில் மிகுந்த உணர்ச்சி பூர்வமான தருணமாக அமைந்தது. அவர் உலகக் கோப்பை வரலாற்றில் 21 கோல்கள் அடித்துள்ளார். எனினும் பிரான்ஸ் வீரர் Kylian Mbappé 22 கோல்களுடன் அவரை முந்தியுள்ளார்.</p><p>அர்ஜென்டினா அணியின் தோல்வியைத் தொடர்ந்து உணர்ச்சிவசத்தால் கண்ணீர் சிந்திய மெஸ்ஸியின் புகைப்படங்களும் காணொளிகளும் சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகின்றன.</p><p>ஸ்பெயின் எங்களை விட சிறந்த அணி. அவர்கள் முழுமையாக ஆட்டத்தை கட்டுப்படுத்தினர்” என&nbsp;அர்ஜென்டினா அணித்தலைவர் Lionel Messi</p>]]></content>
            <updated>2026-07-20T02:37:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[தொடரும் சர்ச்சைக்குரிய மரணங்கள்: FBI உதவியை நாடுமாறு மொட்டுக்கட்சி கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/continuing-controversial-deaths-request-fbi-help-1784512294"></link>
            <id>https://tamilwin.com/article/continuing-controversial-deaths-request-fbi-help-1784512294</id>
            <summary type="text">இறுதிப்போரின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் விவகாரங்கள் தொடர்பில் சர்வதேச
விசாரணைகளைத் தொடர்ச்சியாக நிராகரித்து வந்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, தற்போத...</summary>
            <content type="html"><![CDATA[<p>இறுதிப்போரின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் விவகாரங்கள் தொடர்பில் சர்வதேச
விசாரணைகளைத் தொடர்ச்சியாக நிராகரித்து வந்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, தற்போது
நாட்டில் இடம்பெற்று வரும் தொடர்ச்சியான மர்ம மரணங்கள் தொடர்பில் சர்வதேச
விசாரணை தேவை என்று வலியுறுத்தியுள்ளது.
</p><p>
அக்கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேம்நாத் சி. தொலவத்த,
ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கும்போதே இந்த விடயத்தைக் குறிப்பிட்டார்.</p><p></p><h2>சர்ச்சைக்குரிய உயிரிழப்புகள்</h2><p>

நாட்டில் இடம்பெற்றுள்ள சர்ச்சைக்குரிய உயிரிழப்புகளைச் சுட்டிக்காட்டிய அவர்,
இது குறித்துத் தனது கடும் சந்தேகங்களை வெளிப்படுத்தினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/50cadd64-f7b3-442c-b93b-5dd9bf165878/26-6a5d84721104b.webp' /></p><p>
</p><p>
"323 கொள்கலன் விவகாரத்தில் முறைப்பாடுகளைத் தெரிவித்த டான் பிரியசாத் மர்மமான
முறையில் உயிரிழந்தார்.</p><p> எயார் பஸ் கொடுக்கல் வாங்கல் விவகாரத்தில் விசாரணைக்கு
உட்படுத்தப்பட்ட முன்னாள் அதிகாரியும் மரணித்தார். </p><p>2.5 மில்லியன் அமெரிக்க
டொலர் விவகாரத்தில் தொடர்புடைய திறைசேரி அதிகாரி ரங்க நிஷாந்த ராஜபக்‌ஷவின்
மரணத்திலும் பலத்த சந்தேகங்கள் நிலவுகின்றன. </p><p>தற்போது முன்னாள் பொலிஸ்மா அதிபர்
உயிரிழந்துள்ளார். இவை அனைத்தையும் சாதாரண தற்கொலைச் சம்பவங்களாகக் கடந்துவிட
முடியாது." - என்று அவர் குறிப்பிட்டார்.</p><h2>தொடர் மரணங்களின் பின்னணி</h2><p>
</p><p>"இத்தகைய தொடர் மரணங்களின் பின்னணியில் உள்ள உண்மையை வெளிக்கொண்டுவர, தற்போதைய
அரசுக்குப் போதிய திறனோ அல்லது வலிமையோ இல்லை என்பது தெளிவாகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7f8f6c6e-7f10-4b04-9993-05eea1a5ebcc/26-6a5d8472b4aa1.webp' /></p><p> எனவே,
இவற்றை முறையாக விசாரணை செய்வதற்கு எவ்.பி.ஐ. போன்ற சர்வதேச விசாரணை
அமைப்புகளின் உதவியை அரசு நாட வேண்டும்." - என்று கோரிக்கை விடுத்தார்.
</p><p>
கடந்த காலங்களில் சர்வதேச விசாரணைகளை எதிர்த்து வந்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன,
தற்போது அதேபோன்றதொரு கோரிக்கையை முன்வைத்துள்ளமை அரசியல் வட்டாரங்களில்
பேசுபொருளாகியுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-20T02:14:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[தங்க நகைகளை அடகு வைக்க குவியும் இலங்கையர்கள்..! ஏற்பட்டுள்ள வரலாறு காணாத நெருக்கடி நிலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/srilanka-gold-jewellery-loan-amont-increase-1784510794"></link>
            <id>https://tamilwin.com/article/srilanka-gold-jewellery-loan-amont-increase-1784510794</id>
            <summary type="text">இலங்கை மக்கள் தங்க நகைகளை அடமானம் வைத்து வர்த்தக வங்கிகளிடமிருந்து பெறப்பட்ட கடன்களின் அளவு சுமார் ரூ. 351.45 பில்லியனாக அதிகரித்துள்ளதாக பேராதனைப் பல...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை மக்கள் தங்க நகைகளை அடமானம் வைத்து வர்த்தக வங்கிகளிடமிருந்து பெறப்பட்ட கடன்களின் அளவு சுமார் ரூ. 351.45 பில்லியனாக அதிகரித்துள்ளதாக பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளியல் மற்றும் புள்ளியியல் திணைக்களப் பேராசிரியர் வசந்த அதுகோரல தெரிவித்துள்ளார்.
</p><p>
இலங்கை மத்திய வங்கியின் அறிக்கைகளில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். </p><p>இவை சதவீத அடிப்படையில் இது சுமார் 54 சதவிகித அதிகரிப்பு என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p></p><h2>நாட்டின் பொருளாதார பணவீக்கம்&nbsp;</h2><p>
</p><p>
2024 ஆம் ஆண்டில், நகைகளை அடமானம் வைத்து வர்த்தக வங்கிகளிடமிருந்து பெறப்பட்ட கடன்களின் அளவு ரூ. 660 பில்லியனாக இருந்துள்ளதாக பேராசிரியர் கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9bca91d0-3de0-4126-a99f-07fa83bbedcd/26-6a5d7d7b705f6.webp' /></p><p>
</p><p>
இந்த ஆண்டு மார்ச் மாத நிலவரப்படி, வர்த்தக வங்கிகளிடம் நகைகளை அடமானம் வைத்துப் பெறப்பட்ட கடன்களின் அளவு ரூ. 101.1 பில்லியனாக அதிகரித்துள்ளதாக மத்திய வங்கியின் அறிக்கைகள் குறிப்பிடுகின்றன.</p><p>

அன்றாட பணத்தேவை அதிகரிப்பிற்கு நாட்டின் பொருளாதார பணவீக்கமே முக்கிய காரணம் என்றும் தெரிவித்துள்ளார்.
</p><p>
இதற்கிடையில், நகைகளை அடமானம் வைத்தல் அல்லது விற்பனை செய்தல் காரணமாக நாட்டின் 60 சதவிகிதத்திற்கும் மேற்பட்ட வீடுகளில் நகைகள் இல்லாமல் போய்விட்டதாக நிதி நிறுவன அறிக்கைகள் குறிப்பிடுகின்றன.</p><p></p><h2>வாகனங்கள் விற்பனை&nbsp;</h2><p>பணவீக்கம் மற்றும் உயர்ந்த வாழ்க்கைச்செலவு காரணமாக, ஏராளமான இலங்கையர்கள் தங்களது தங்க நகைகளை விற்பனை செய்யவும் அடகு வைக்கவும் தூண்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b14cd672-d3c8-494b-a994-6d225fe0deac/26-6a5d7d7c22d6c.webp' /></p><p>
</p><p>
நாட்டில் விற்கப்பட்ட தங்கத்தின் சரியான அளவு (கிலோகிராம் அல்லது பவுண்டுகளில்) குறித்து மத்திய வங்கியோ அல்லது அரசாங்கமோ அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களை வெளியிடவில்லை என்றாலும், பொருளாதார நெருக்கடியின் போது தங்க அடகு 356 பில்லியன் ரூபாயாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
உலகளாவிய சந்தை மற்றும் ரூபாயின் மதிப்பில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களின் காரணமாக, நாட்டில் தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளதாக அந்த அறிக்கைகள் குறிப்பிடுகின்றன.
</p><p>
இதற்கிடையில், பொருளாதாரப் பணவீக்கத்தின் காரணமாக, பல்வேறு வகையான கிட்டத்தட்ட பத்து இலட்சம் வாகனங்கள் பல்வேறு தரப்பினருக்கு விற்கப்பட்டுள்ளதையும் கணக்கெடுப்பு வெளிப்படுத்தியுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-20T02:06:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[முதலமைச்சர் விஜய் முதல் மமிதா பைஜூ வரை.. ஜனநாயகன் திரைப்படத்தில் நடிக்க பிரபலங்கள் வாங்கிய சம்பளம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/jananayagan-movie-actors-remuneration-details-1784451222"></link>
            <id>https://cineulagam.com/article/jananayagan-movie-actors-remuneration-details-1784451222</id>
            <summary type="text">ஜனநாயகன்&amp;nbsp;பல தடைகளை தாண்டி முதலமைச்சர் விஜய்யின் ஜனநாயகன் திரைப்படம் வரும் வருகிற ஜூலை 23-ஆம் தேதி வெளியாகிறது. 

இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்...</summary>
            <content type="html"><![CDATA[<h2>ஜனநாயகன்&nbsp;</h2><p>பல தடைகளை தாண்டி முதலமைச்சர் விஜய்யின் ஜனநாயகன் திரைப்படம் வரும் வருகிற ஜூலை 23-ஆம் தேதி வெளியாகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5c547780-bd3b-4b7e-9099-9de9ed5ee615/26-6a5c9099a71a0.webp' /></p><p> 

இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் மமிதா பைஜூ, பூஜா ஹெக்டே, பாபி தியோல், பிரகாஷ் ராஜ், பிரியாமணி என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். மேலும் இசையமைப்பாளர் அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.</p><h2>சம்பளம்&nbsp;</h2><p> </p><p>

இந்த நிலையில், ஜனநாயகன் திரைப்படத்தில் நடிக்க விஜய் முதல் மமிதா பைஜூ வரை பிரபலங்கள் வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e30d0670-70ba-4b8f-af72-37f3656d9c67/26-6a5c909a5e0de.webp' /></p><p> 

ஜனநாயகன் படத்தின் கதாநாயகன் விஜய்க்கு ரூ. 220 கோடி சம்பளம். பூஜா ஹெக்டேவிற்கு ரூ. 3 கோடி மற்றும் பாபி தியோலுக்கு ரூ. 5 கோடி சம்பளமாக வழங்கப்பட்டுள்ளது. நடிகை மமிதா பைஜூ ரூ. 60 லட்சம் சம்பளம் வாங்கியுள்ளார்.</p><p></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5c85d631-c520-4f8d-b79b-d05bb406de8a/26-6a5c909b135af.webp' /></p><p> 

இப்படத்தின் இயக்குநர் ஹெச். வினோத் ரூ. 25 கோடி சம்பளம் வாங்கியுள்ளார். மேலும், படத்தின் இசையமைப்பாளர் அனிருத்துக்கு ரூ. 15 கோடி சம்பளம் என தகவல் வெளியாகியுள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-20T01:59:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாடொன்றை உலுக்கிய இரட்டை நிலநடுக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/twin-earthquakes-strike-peru-killing-at-least-five-1784511973"></link>
            <id>https://ibctamil.com/article/twin-earthquakes-strike-peru-killing-at-least-five-1784511973</id>
            <summary type="text">பெருவில் ஏற்பட்ட இரட்டை நிலநடுக்கங்களில் குறைந்தது ஆறு பேர் உயிரிழந்ததாகவும், 21 பேர் காயமடைந்ததாகவும் அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.பெருவின் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பெருவில் ஏற்பட்ட இரட்டை நிலநடுக்கங்களில் குறைந்தது ஆறு பேர் உயிரிழந்ததாகவும், 21 பேர் காயமடைந்ததாகவும் அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p>பெருவின் தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் X தளத்தில் வெளியிட்ட பதிவின்படி, முதல் நிலநடுக்கம் 5.1 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது. </p><p>அதன் பின்னர் சில மணி நேரங்களில் 3.7 ரிக்டர் அளவில் இரண்டாவது நிலநடுக்கமும் ஏற்பட்டது.</p><p></p><h2>எளிதில் இடிந்து விழும் தன்மை</h2><p>இந்த நிலநடுக்கம் சனிக்கிழமை இரவு 9.24 மணிக்கு ஏற்பட்டதாகவும், இதன் மையப்புள்ளி ஹுவான்காயோ மாகாணத்தில் உள்ள சிகாயா நகருக்கு மேற்கு-தென்மேற்கே 2 கி.மீ (1.2 மைல்) தொலைவில் அமைந்திருந்ததாகவும் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bab84097-45c7-4a92-8967-ff7acaf58dbf/26-6a5d7fe217bb9.webp' /></p><p>காணாமல் போனவர்களின் மொத்த எண்ணிக்கை இன்னும் தெரியவில்லை என்று பெருவின் தேசிய குடிமைப் பாதுகாப்பு நிறுவனம் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.&nbsp;&nbsp;</p><p>சூபாக்கா நகரில், வீடுகள் பெரும்பாலும் களிமண் செங்கற்களால் கட்டப்படுவதால், அவை எளிதில் இடிந்து விழும் தன்மை கொண்டவையாக உள்ளன.&nbsp;உள்ளூர் தேவாலயம் மற்றும் கன்னியர் மடம் உட்பட பல கட்டிடங்கள் இடிந்து விழுந்தன அல்லது கட்டமைப்பு ரீதியாக சேதமடைந்தன.</p><p>

"நிலநடுக்கம் எங்கள் வீட்டை அழித்துவிட்டது. இங்கு பல களிமண் வீடுகள் இடிந்து விழுந்துள்ளன," என்று சோங்கோஸ் பாஜோவைச் சேர்ந்த பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு குடியிருப்புவாசி N தொலைக்காட்சி நிறுவனத்திடம் கூறினார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-20T01:54:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[கோர விபத்தில் 2 இளைஞர்கள் பலி - ஆபத்தான நிலையில் மேலும் இருவர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/2-persons-killed-in-accident-1784510354"></link>
            <id>https://tamilwin.com/article/2-persons-killed-in-accident-1784510354</id>
            <summary type="text">தங்காலை - மாத்தறை பிரதான வீதியின் வெல்லமடம பகுதியில் நேற்று பிற்பகல் சம்பவித்த கோர விபத்தில் 2 இளைஞர்கள் உயிரிழந்துள்ளார்.

நேற்று பிற்பகல் 03.50 மண...</summary>
            <content type="html"><![CDATA[<p>தங்காலை - மாத்தறை பிரதான வீதியின் வெல்லமடம பகுதியில் நேற்று பிற்பகல் சம்பவித்த கோர விபத்தில் 2 இளைஞர்கள் உயிரிழந்துள்ளார்.
</p><p>
நேற்று பிற்பகல் 03.50 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. </p><p>மாத்தறையில் இருந்து தங்காலை நோக்கிச் சென்ற டிபென்டர் ஜீப் ஒன்றும், தங்காலையில் இருந்து மாத்தறை நோக்கி சென்ற லொறி ஒன்றும் நேருக்கு நேர் மோதியதனால் விபத்து ஏற்பட்டுள்ளது.</p><p>
</p><h2><b>
கோர விபத்து</b></h2><p>விபத்து இடம்பெற்ற சமயத்தில் டிபென்டர் வாகனத்தில் ஐந்து பேரும், லொறியில் சாரதி மற்றும் உதவியாளர் உள்ளிட்ட இருவர்களும் பயணம் செய்துள்ளனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/759c71d5-3d49-4ea3-b4e4-4fd510c7a68f/26-6a5d79e39f4c8.webp' /></p><p>விபத்தினால் டிபென்டரில் பயணித்த அனைவரும் மற்றும் லொறியில் இருந்த இருவரும் என மொத்தம் ஏழு பேர் காயமடைந்துள்ளனர். </p><p>இந்த நிலையில், அவர்களில் தற்போது இருவர் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்த இருவரில் ஒருவர் டிபென்டர் வாகனத்தின் சாரதியான மாத்தறையை சேர்ந்த 37 வயதுடைய வேதமுல்ல கங்கானம்கே தினேஷ் உதயங்க என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
</p><p>
மற்றைய நபர் அதில் பயணித்த 36 வயதுடைய மாத்தறையை சேர்ந்த எஸ்.எம்.வி. சுபாஷ் எனவும் தெரியவந்துள்ளது.</p><p>

காயமடைந்தவர்களில் மேலும் இருவரின் நிலைமை தொடர்ந்தும் கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
</p><p>
பொலிஸாரின் ஆரம்ப விசாரணைகளில், விபத்துக்குள்ளான டிபென்டர் வாகனம் குறித்த இளைஞர் குழுவினால் ஒரு நாள் வாடகை அடிப்படையில் பெற்றுள்ளனர்.
</p><p>
விபத்தினால் டிபென்டர் வாகனத்திற்கும் லொறிக்கும் பாரிய சேதங்கள் ஏற்பட்டுள்ளது.

விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-07-20T01:29:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[FIFA உலகக் கோப்பை வரலாற்றில் மகுடம் சூடிய ஸ்பெயின்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/spain-beat-argentina-to-win-fifa-world-cup-2026-1784500087"></link>
            <id>https://ibctamil.com/article/spain-beat-argentina-to-win-fifa-world-cup-2026-1784500087</id>
            <summary type="text">23 ஆவது Fifa உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப்போட்டியில் அர்ஜென்டினாவை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய ஸ்பெயின், இரண்டாவது முறையாக சாம்பியன் பட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>23 ஆவது Fifa உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப்போட்டியில் அர்ஜென்டினாவை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய ஸ்பெயின், இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.</p><p> அமெரிக்காவின் நியூஜெர்சியில் உள்ள மெட்லைப் ஸ்டேடியத்தில் இந்த இறுதிப்போட்டி நடைபெற்றது. </p><p>

இதில் நடப்பு சாம்பியன் அர்ஜெண்டினாவும் முன்னாள் சாம்பியன் ஸ்பெயினும் பலப்பரீட்சை நடத்தின.</p><p></p><h2>நான்காவது முறை</h2><p>

நான்காவது முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் அர்ஜென்டினாவும், இரண்டாவது முறையாக உலகக் கோப்பையை கைப்பற்றும் இலக்குடன் ஸ்பெயினும் களமிறங்கின. 

போட்டி தொடங்கியதிலிருந்தே இரு அணிகளும் தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்தின. </p><p>

இருப்பினும் முதல் பாதியில் எந்த அணியாலும் கோல் அடிக்க முடியவில்லை.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/356eb2a5-4f67-43a5-88bb-4434d3f61e94/26-6a5d56cc61c1f.webp' /></p><p>தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதியிலும் இரு அணிகளும் பல வாய்ப்புகளை உருவாக்கினாலும் அவற்றை கோலாக மாற்றத் தவறின.</p><p>

இதனால் 90 நிமிடங்கள் முடிவில் ஆட்டம் கோல் இன்றி சமநிலையில் இருந்தது.

இதையடுத்து வழங்கப்பட்ட கூடுதல் நேரத்தின் (90+3) போது அர்ஜெண்டினா வீரர் என்சோ பெர்னாண்டஸ் சிவப்பு அட்டை பெற்று வெளியேற்றப்பட்டார்.</p><p> </p><p></p><h2>உலகக் கோப்பை&nbsp;</h2><p>இதனால் அந்த அணி மீதி ஆட்டத்தை 10 வீரர்களுடன் விளையாட வேண்டிய நிலை ஏற்பட்டதுடன் ஆட்டம் கூடுதல் 30 நிமிடங்களுக்கு சென்றது.
</p><p>
கூடுதல் நேரத்தின் போது ஸ்பெயின் வீரர் பெர்ரான் டோரஸ் அபாரமான கோல் அடித்து அணிக்கு முன்னிலை பெற்று கொடுத்தார்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c03ec0b0-18d4-404d-a34c-88793e23ec33/26-6a5d56cd1787a.webp' /></p><p>அதன் பிறகு அர்ஜென்டினா சமநிலை கோலுக்காக கடுமையாக போராடிய போதிலும் ஸ்பெயின் வீரர்கள் சிறப்பாக தற்காப்பில் செயல்பட்டு முன்னிலையை தக்க வைத்தனர்.
</p><p>
இறுதியில் 1-0 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினாவை வீழ்த்திய ஸ்பெயின், 23 ஆவது பிபா உலகக் கோப்பை கால்பந்து தொடரின் சாம்பியன் பட்டத்தை வென்று வரலாறு படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-20T01:16:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[FIFA உலகக் கோப்பை ; அர்ஜென்டினாவை வீழ்த்தி சாம்பியனானது ஸ்பெயின்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/spain-beat-argentina-to-win-fifa-world-cup-1784499369"></link>
            <id>https://canadamirror.com/article/spain-beat-argentina-to-win-fifa-world-cup-1784499369</id>
            <summary type="text">23-வது Fifa உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப்போட்டியில் அர்ஜென்டினாவை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய ஸ்பெயின், 2-வது முறையாக சாம்பியன் பட்டத்தை...</summary>
            <content type="html"><![CDATA[<p>23-வது Fifa உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப்போட்டியில் அர்ஜென்டினாவை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய ஸ்பெயின், 2-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது,</p><p>&nbsp;அமெரிக்காவின் நியூஜெர்சியில் உள்ள மெட்லைப் ஸ்டேடியத்தில் நடைபெற்ற இந்த இறுதிப்போட்டியில் நடப்பு சாம்பியன் அர்ஜெண்டினாவும், முன்னாள் சாம்பியன் ஸ்பெயினும் பலப்பரீட்சை நடத்தின.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/01079a1d-0604-42e3-a3b7-92aa579fe180/26-6a5d4cab6e36d.webp' /></p><p> </p><p>4-வது முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் அர்ஜென்டினாவும், 2-வது முறையாக உலகக் கோப்பையை கைப்பற்றும் இலக்குடன் ஸ்பெயினும் களமிறங்கின.&nbsp;</p><p> போட்டி தொடங்கியதிலிருந்தே இரு அணிகளும் தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்தின. இருப்பினும் முதல் பாதியில் எந்த அணியாலும் கோல் அடிக்க முடியவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d05b374a-051c-4e2a-b65f-a18de9e98018/26-6a5d54260a67c.webp' /></p><p>தொடர்ந்து நடைபெற்ற 2-வது பாதியிலும் இரு அணிகளும் பல வாய்ப்புகளை உருவாக்கினாலும், அவற்றை கோலாக மாற்றத் தவறின. இதனால் 90 நிமிடங்கள் முடிவில் ஆட்டம் கோல் இன்றி சமநிலையில் இருந்தது.</p><p>

இதையடுத்து வழங்கப்பட்ட கூடுதல் நேரத்தின் (90+3) போது அர்ஜெண்டினா வீரர் என்சோ பெர்னாண்டஸ் சிவப்பு அட்டை பெற்று வெளியேற்றப்பட்டார். இதனால், அந்த அணி மீதி ஆட்டத்தை 10 வீரர்களுடன் விளையாட வேண்டிய நிலை ஏற்பட்டது.&nbsp; தொடர்ந்து ஆட்டம் கூடுதல் 30 நிமிடங்களுக்கு சென்றது.</p><p> கூடுதல் நேரத்தின் போது ஸ்பெயின் வீரர் பெர்ரான் டோரஸ் அபாரமான கோல் அடித்து அணிக்கு முன்னிலை பெற்று கொடுத்தார். அதன் பிறகு அர்ஜென்டினா சமநிலை கோலுக்காக கடுமையாக போராடிய போதிலும், ஸ்பெயின் வீரர்கள் சிறப்பாக தற்காப்பில் செயல்பட்டு முன்னிலையை தக்க வைத்தனர்.</p><p>இறுதியில் 1-0 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினாவை வீழ்த்திய ஸ்பெயின், 23-வது பிபா உலகக் கோப்பை கால்பந்து தொடரின் சாம்பியன் பட்டத்தை வென்று வரலாறு படைத்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-20T01:14:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பகுதியில் இப்படியும் ஒரு சம்பவம் ; பல காலம் இளைஞன் அரங்கேற்றிய மோசமான செயல் அம்பலம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/such-an-incident-reported-in-batticaloa-1784507125"></link>
            <id>https://jvpnews.com/article/such-an-incident-reported-in-batticaloa-1784507125</id>
            <summary type="text">மட்டக்களப்பில் விற்பனைக்கு உள்ள மோட்டார் சைக்கிள் வழங்குவதாக தெரிவித்து அதனை ஓடிப்பார்பதாக எடுத்துக் கொண்டு திருடிச் சென்ற நூதனமான சத்துருக்கொண்டான் ப...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">மட்டக்களப்பில் விற்பனைக்கு உள்ள மோட்டார் சைக்கிள் வழங்குவதாக தெரிவித்து அதனை ஓடிப்பார்பதாக எடுத்துக் கொண்டு திருடிச் சென்ற நூதனமான சத்துருக்கொண்டான் பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய சந்தேகநபர் ஒருவரை நேற்று (19) கைது செய்துள்ளதுடன் திருடிச் சென்ற 3 மோட்டார் சைக்கிள்களை மீட்டுள்ளதாக மட்டு தலைமையக பொலிசார் தெரிவித்தனர்.
</p><p style="text-align: justify; ">
இதுபற்றி தெரியவருவதாவது,</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/42990249-3bf7-41d5-b187-fdc720932de1/26-6a5d6af7151de.webp' /></p><h2 style="text-align: justify; ">விளம்பரம்</h2><p>
</p><p style="text-align: justify; ">
குறித்த நபர் காத்தான்குடி பிரதேசத்தில் மோட்டார் சைக்கிள் வாங்கி விற்பனை செய்யும் கடை ஒன்றுக்கு கடந்த 2 வாரங்களுக்கு முன்னர் சென்று அங்கு விற்பனைக்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை வாங்குவதாகவும் அதனை ஓடி பார்க்க வேண்டும் என்றதையடுத்து நிறுத்தி வைத்திருந்த மோட்டார் சைக்கிளை கடை உரிமையாளர் குறித்த நபரிடம் கொடுத்தார்.
</p><p style="text-align: justify; ">
இதனையடுத்து குறித்த நபர் மோட்டார் சைக்கிளை அங்கிருந்து எடுத்து கொண்டு மட்டு திருகோணமலை வீதியில் உள்ள வீதி சமிக்கை விளக்குக்கு அருகில் நிறுத்தி கொண்டு&nbsp; இணையத்தளத்தில் மோட்டார் சைக்கிள் விற்பனைக்கு என விளம்பரப்படுத்திய கொக்கட்டிச் சோலை பகுதியைச் சேர்ந்த வரை தொடர்பு கொண்டு அந்த மோட்டார் சைக்கிளை வாங்குவதாகவும் உடன் குறித்த வீதி சமிக்கை விளக்குக்கு அருகில் வருமாறு அழைத்துள்ளார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">

இதனை தொடர்ந்து மோட்டார் சைக்கிளை விற்பனை செய்யும் நபர் குறித்த பகுதிக்கு வந்ததும் அவரிடம் அந்த மோட்டார் சைக்கிளை ஓடி பார்க்க வேண்டும் என தெரிவித்து காத்தான்குடியில் இருந்து ஓடி பார்ப்பதாக திருடி வந்த மோட்டார் சைக்கிளை அவரிடம் கொடுத்துவிட்டு குறித்த நபரின் மோட்டார் சைக்கிளை எடுத்துச் சென்று வாகரையில் விற்பனை செய்துள்ளார்.</p><p style="text-align: justify; ">இவ்வாறு 2023ம் ஆண்டு ஒரு மோட்டார் சைக்கிளையும் திருடி விற்பனை செய்துள்ளதாக பொலிசாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
இதனையடுத்து குறித்த நபரை கைது செய்ததுடன் திருடப்பட்ட 3 மோட்டார் சைக்கிள்களையும் மீட்டதுடன் குறித்த நபர் கடந்த காலத்தில் 8 குற்றச் செயல்களுடன் தொடர்புபட்டு கைது செய்யப்பட்டு நீதிமன்ற பிணையில் வெளிவந்துள்ளதாகவும் இவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
</p><p style="text-align: justify; ">
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-07-20T01:13:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[மனைவியால் பணக்காரராகும் அதிர்ஷ்டம் இவர்களுக்கு தான் ; உங்க ராசியும் இருக்கா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/lucky-zodiac-signs-to-become-rich-through-wife-1784510019"></link>
            <id>https://jvpnews.com/article/lucky-zodiac-signs-to-become-rich-through-wife-1784510019</id>
            <summary type="text">வேத ஜோதிடத்தின் படி ஒவ்வொருவரின் ராசியும் அவரவரின் ஆளுமை குணங்களை வெளிப்படுத்தும் என்று சொல்லப்படுகிறது. குறிப்பாக ஒருவரின் ராசியின் அடிப்படையில் அவர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>வேத ஜோதிடத்தின் படி ஒவ்வொருவரின் ராசியும் அவரவரின் ஆளுமை குணங்களை வெளிப்படுத்தும் என்று சொல்லப்படுகிறது. குறிப்பாக ஒருவரின் ராசியின் அடிப்படையில் அவர்களின் எதிர்காலம் மற்றும் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்ளலாம் என்று சொல்லப்படுகிறது.</p><p>

அந்த வகையில், ஜோதிடத்தின்படி, சில ராசிகளைச் சேர்ந்த ஆண்களுக்கு மனைவியால் அதிர்ஷ்டமும், பணக்கார யோகமும் வீடு தேடி வரும் என்று சொல்லப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3fdb6f57-224b-4a0d-a4d4-29b5ff9f8bf2/26-6a5d76444c9b0.webp' /></p><p> </p><h2>அது எந்தெந்த ராசிகள் </h2><p><b>
ரிஷபம்: </b>ரிஷப ராசிக்காரர்கள் ஆடம்பர வசதியையும் பெறுவதற்கு பெயர் பெற்றவர்கள். இந்த ராசி ஆண்கள் நிதியை வளர்க்ககூடிய துணையை பெறுவார்கள். இவர்களுக்கு ஆடம்பர வாழ்க்கை என்றால் பிடிக்கும். இதன் காரணமாக இவர்கள் பணக்கார பெண்களை ஈர்ப்பார்கள். இவர்கள் எப்போது நிதி ரீதியாக பலமாக இருக்க வேண்டும் என்பதை நினைத்துக் கொண்டு இருப்பார்கள்.</p><p></p><p>
</p><p><b>

சிம்மம்:</b> சிம்ம ராசிக்காரர்கள் அதிகாரம் மற்றும் அந்தஸ்து மீது அதிக ஈர்ப்பு கொண்டவர்கள். இவர்களை சுற்றியுள்ளவர்கள் எப்போதும் செல்வந்தராக இருப்பார்கள். இவர்களுக்கு ஆடம்பரம் என்றால் பிடிக்கும் அதற்காக செலவு செய்வார்கள். நிதியில் பலமாக இருக்க ஆசைப்படுவார்கள். இதன் காரணமாக இந்த ஆண்களுக்கு பணக்கார மனைவி கிடைக்க வாய்ப்புள்ளது. மனைவி மூலம் இவர்களுக்கு நிதி பிரச்சனை வராது. மேலும், இருவரும் சேர்ந்து அதிக வருமானத்தை ஈட்டுவார்கள்.</p><p></p><p> </p><p><b>

துலாம்:</b> துலாம் ராசியைச் சேர்ந்த சிறுவயதில் இருந்து கஷ்டப்பட்டாலும், தங்களது துணை வந்த பின்பு அவர்களது வாழ்க்கை நன்றாக இருக்கும். இவர்கள் இருக்கும் இடத்தில் லட்சுமி தேவி குடியிருந்து, அனைத்து நிதி ரீதியான பிரச்னையையும் தீர்த்து வைப்பாராம். மேலும், திருமண உறவில் சமநிலையையும், அன்பையும் உருவாக்குவார்கள். இவர்கள் தேவையில்லாமல் செலவு செய்ய மாட்டார்கள். இதன் காரணமாக, துலாம் ராசியைச் சேர்ந்த ஆண்களுக்கு பணக்கார மனைவி கிடைக்கும் என கூறப்படுகின்றது.</p><p></p><p>
</p><p><b>
மகரம்:</b> மகர ராசிக்காரர்கள் உயர்ந்த பதவிகளை கொண்டிருப்பார்கள். இவர்கள் தங்கள் பணியில் முழு அர்ப்பணிப்புடன் செய்வார்கள். வாழ்க்கையை பொறுப்பாக வழிநடத்தும் குணம் கொண்டவர்கள். மிகவும் அமைதியாகவும், நிதானமாக இவர்கள் செயல்படுவார்கள். இப்படிப்பட்ட குணம் கொண்ட மகர ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர மனைவி கிடைப்பார்கள். இவர்கள் தங்கள் துணையை மதிப்பார்கள். எடுக்கும் முடிவுகள் குறித்து அவர்களிடமும் கலந்து ஆலோசிப்பார்கள். இவர்களுக்கு எதிர்காலத்தை பற்றிய தெளிவான சிந்தனை இருக்கும்.</p>]]></content>
            <updated>2026-07-20T01:13:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[மீன்பிடிக்கச் சென்ற இடத்தில் நேர்ந்த விபரீதம்: முதியவர் சடலமாக மீட்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/elderly-man-found-dead-in-anuradhapura-pond-1784509963"></link>
            <id>https://ibctamil.com/article/elderly-man-found-dead-in-anuradhapura-pond-1784509963</id>
            <summary type="text">அனுராதபுரத்தில் முதியவர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அந்தரக்குளம் பகுதியைச் சேர்ந்த 62 வயதுடைய முதியவர் ஒருவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அனுராதபுரத்தில் முதியவர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.</p><p>

அந்தரக்குளம் பகுதியைச் சேர்ந்த 62 வயதுடைய முதியவர் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.</p><p>

நொச்சியாகம காவல் பிரிவுக்குட்பட்ட அந்தரக்குளம் பகுதியில், நீர் நிரம்பிய குழியொன்றில் இருந்தே அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.</p><p>
</p><p></p><h2>காவல்துறையினர் விசாரணை</h2><p>சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த பகுதியில் மேற்படி நபர் மீன்பிடிக்கச் சென்றுள்ளார்.</p><p>

நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பாததால் பதற்றமடைந்த குடும்பத்தினர் அவரைத் தேடிச் சென்றுள்ளனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/83b18938-2d2d-4307-be69-905d0c38f6b5/26-6a5d760d23df0.webp' /></p><p>இதன்போது, அவர் சடலமாகக் கிடப்பதைக் கண்டு உடனடியாகக் காவல்துறையினருக்குத் தகவல் வழங்கியுள்ளனர்.</p><p>இதையடுத்துச் சடலம் மீட்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-20T01:12:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலகக் கிண்ண போட்டிகளில் வரலாறு படைத்தார் எம்பாப்பே!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/mbappe-makes-world-cup-history-1784509470"></link>
            <id>https://tamilwin.com/article/mbappe-makes-world-cup-history-1784509470</id>
            <summary type="text">2026 உலகக் கிண்ண கால்பந்து தொடரில் அதிக கோல்களை அடித்த வீரராக முதலிடம் பிடித்து, ஃபிஃபா உலகக் கிண்ண வரலாற்றில் இரண்டு முறை &#039;கோல்டன் பூட்&#039; (Golden Boot...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026 உலகக் கிண்ண கால்பந்து தொடரில் அதிக கோல்களை அடித்த வீரராக முதலிடம் பிடித்து, ஃபிஃபா உலகக் கிண்ண வரலாற்றில் இரண்டு முறை 'கோல்டன் பூட்' (Golden Boot) விருதை வென்ற முதல் வீரர் என்ற சாதனையை பிரான்ஸ் அணியின் நட்சத்திர வீரர் கிலியன் எம்பாப்பே படைத்துள்ளார்.</p><p>
இத்தொடரில் 8 போட்டிகளில் விளையாடிய எம்பாப்பே 10 கோல்களை அடித்து, லியோனல் மெஸ்ஸியுடனான கடுமையான போட்டியை முறியடித்து இவ்விருதைக் கைப்பற்றினார். </p><p>
இதற்கு முன்னர் 2022 கட்டார் உலகக் கிண்ண தொடரிலும் 8 கோல்களை அடித்து எம்பாப்பே கோல்டன் பூட் விருதை வென்றிருந்தார்.</p><p></p><h2>விருதை வென்ற முதல் வீரர் என்ற பெருமை</h2><p> 
இதன் மூலம் அடுத்தடுத்த உலகக் கிண்ண தொடர்களில் இவ்விருதை வென்ற முதல் வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.
1970 ஆம் ஆண்டு மேற்கு ஜெர்மனியின் கெர்ட் முல்லருக்குப் பின்னர், ஒற்றை உலகக் கிண்ணத் தொடரில் 10 கோல்களை அடித்த முதல் வீரர் என்ற பெருமையை 27 வயதான எம்பாப்பே பெற்றுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9a4495fd-0f67-4163-98fb-1bbf142c56c2/26-6a5d742440139.webp' /></p><p> </p><p>
உலகக் கிண்ண வரலாற்றில் இவரை விட பிரான்ஸின் ஜஸ்ட் ஃபோன்டைன் (1958 இல் 13 கோல்கள்) மற்றும் ஹங்கேரியின் சாண்டோர் கோக்சிஸ் (1954 இல் 11 கோல்கள்) ஆகிய இருவர் மட்டுமே ஒரே தொடரில் அதிக கோல்களை அடித்துள்ளனர்.
</p><p>உலகக் கிண்ண வரலாற்றில் ஒட்டுமொத்தமாக அதிக கோல்களை அடித்த ஆண்கள் பிரிவின் சாதனையாளராக எம்பாப்பே (22 கோல்கள்) உருவெடுத்துள்ளார். இதன் மூலம் லியோனல் மெஸ்ஸியை (21 கோல்கள்) அவர் முந்தியுள்ளார்.</p><p>
சனிக்கிழமை நடைபெற்ற மூன்றாவது இடத்திற்கான ஆட்டத்தில் இங்கிலாந்திடம் பிரான்ஸ் 6-4 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்து நான்காம் இடத்தைப் பிடித்தது.</p><p> எனினும், இப்போட்டியில் எம்பாப்பே இரண்டு கோல்களை அடித்து மெஸ்ஸியை விட முன்னிலை பெற்றார்.
</p><h2>உலகக் கிண்ண இறுதிப் போட்டி</h2><p>முன்னதாக குழு நிலைப் போட்டிகளில் செனகல் மற்றும் ஈராக் அணிகளுக்கு எதிராக தலா இரண்டு கோல்களையும், 32 அணிகள் சுற்றில் சுவீடனுக்கு எதிராகவும் அவர் கோல் அடித்தார். தொடர்ந்து, பராகுவேக்கு எதிரான 16 அணிகள் சுற்றில் 70ஆவது நிமிடத்தில் பெனால்டி மூலம் வெற்றி கோலையும், காலிறுதியில் மொராக்கோவுக்கு எதிராகவும் அவர் கோல் அடித்திருந்தார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5fa6435c-2352-4ab7-88ce-7359b44e85c8/26-6a5d870b5fb41.webp' /></p><p>ஞாயிற்றுக்கிழமை நியூஜெர்சியில் நடைபெற்ற உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் ஸ்பெயினிடம் அர்ஜென்டினா 1-0 எனத் தோல்வியடைந்தது. இப்போட்டியில் 39 வயதான லியோனல் மெஸ்ஸி ஹேட்ரிக் கோல் அடித்திருந்தால் எம்பாப்பேயை முந்தியிருக்கலாம், ஆனால் அவரால் கோல் எதுவும் அடிக்க முடியவில்லை.</p><p>மெஸ்ஸி இத்தொடரில் 8 போட்டிகளில் 8 கோல்களுடன் நிறைவு செய்தார்.
 இங்கிலாந்தின் ஜூட் பெலிங்ஹாம் மற்றும் நார்வேயின் எர்லிங் ஹாலாண்ட் ஆகியோர் தலா 7 கோல்களையும், பிரான்ஸின் உஸ்மான் டெம்பேலே மற்றும் இங்கிலாந்து அணியின் தலைவர் ஹரி கேன் ஆகியோர் தலா 6 கோல்களையும் அடித்து இத்தொடரை நிறைவு செய்துள்ளனர்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-20T01:04:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Bavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மட்டக்களப்பில் சினிமா பாணியில் திருட்டு: மூன்று மோட்டார் சைக்கிள்களுடன் சிக்கிய இளைஞர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/man-arrested-for-motorbike-theft-in-batticaloa-1784508785"></link>
            <id>https://ibctamil.com/article/man-arrested-for-motorbike-theft-in-batticaloa-1784508785</id>
            <summary type="text">மட்டக்களப்பில் மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்ட இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சத்துருக்கொண்டான் பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞர் ஒர...</summary>
            <content type="html"><![CDATA[<p>மட்டக்களப்பில் மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்ட இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
சத்துருக்கொண்டான் பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>

குறித்த கைது நடவடிக்கை நேற்று (19-07-2026) இடம்பெற்றுள்ளது.</p><p></p><h2>மோட்டார் சைக்கிள்</h2><p>

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த நபர் காத்தான்குடி பிரதேசத்தில் மோட்டார் சைக்கிள் வாங்கி விற்பனை செய்யும் கடை ஒன்றுக்குக் கடந்த 2 வாரங்களுக்கு முன்னர் சென்று, அங்கு விற்பனைக்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை வாங்குவதாகவும் அதைக் ஓட்டிப் பார்க்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
</p><p>
இதையடுத்து, நிறுத்தி வைத்திருந்த மோட்டார் சைக்கிளைக் கடை உரிமையாளர் குறித்த நபரிடம் கொடுத்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/05750930-b225-4171-837e-1c0a95baf849/26-6a5d7173e469f.webp' /></p><p>

பின்பு குறித்த நபர் மோட்டார் சைக்கிளை அங்கிருந்து எடுத்துக்கொண்டு மட்டு திருகோணமலை வீதியில் உள்ள வீதி சமிக்கை விளக்குக்கு அருகில் நிறுத்தியுள்ளார்.</p><p>
</p><p>இதன்பின்பு, இணையத்தளத்தில் மோட்டார் சைக்கிள் விற்பனைக்கு என விளம்பரப்படுத்திய கொக்கட்டிச்சோலை பகுதியைச் சேர்ந்த ஒரு நபரைத் தொடர்புகொண்டு, அந்த மோட்டார் சைக்கிளை வாங்குவதாகவும் உடன் குறித்த வீதி சமிக்கை விளக்குக்கு அருகில் வருமாறு அழைத்துள்ளார்.</p><p></p><h2>வாகரையில் விற்பனை</h2><p>

இதனைத் தொடர்ந்து மோட்டார் சைக்கிளை விற்பனை செய்யும் நபர் குறித்த பகுதிக்கு வந்ததும், அவரிடம் அந்த மோட்டார் சைக்கிளை ஓட்டிப் பார்க்க வேண்டும் எனத் தெரிவித்து காத்தான்குடியில் இருந்து ஓட்டிப் பார்ப்பதாகத் திருடி வந்த மோட்டார் சைக்கிளை அவரிடம் கொடுத்துவிட்டு குறித்த நபரின் மோட்டார் சைக்கிளை எடுத்துச் சென்று வாகரையில் விற்பனை செய்துள்ளார்.
</p><p>
இவ்வாறு 2023ஆம் ஆண்டு ஒரு மோட்டார் சைக்கிளையும் திருடி விற்பனை செய்துள்ளதாகக் காவல்துறையினரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d087de8b-3176-4fed-8448-54b6830b2081/26-6a5d71733f198.webp' /></p><p>இதனையடுத்துக் குறித்த நபரைத் கைது செய்ததுடன் திருடப்பட்ட 3 மோட்டார் சைக்கிள்களையும் மீட்டதுடன், குறித்த நபர் கடந்த காலத்தில் 8 குற்றச் செயல்களுடன் தொடர்புபட்டுக் கைது செய்யப்பட்டு நீதிமன்றப் பிணையில் வெளிவந்துள்ளதாகவும், இவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p>
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p>
</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-20T01:01:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Manchu</name>
            </author>
            <title type="text"><![CDATA[காரசாரமான செட்டிநாடு கோழி குழம்பு... ஊரே மணக்கும் வகையில் செய்வது எப்படி?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/spicy-chettinad-chicken-kulambu-in-tamil-1784480166"></link>
            <id>https://manithan.com/article/spicy-chettinad-chicken-kulambu-in-tamil-1784480166</id>
            <summary type="text">காரசாரமான செட்டிநாடு பாணியில் கோழி குழம்பு எவ்வாறு செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.பொதுவாக வீட்டில் அசைவ உணவுகள் செய்தால் குழந்தைகள் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>காரசாரமான செட்டிநாடு பாணியில் கோழி குழம்பு எவ்வாறு செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.</p><p>பொதுவாக வீட்டில் அசைவ உணவுகள் செய்தால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். அதிலும் சற்று காரசாரமான வகையில் செய்யும் அசைவத்திற்கு அதிக மவுசு என்று தான் கூற வேண்டும்.</p><p>அந்த வகையில் செட்டிநாடு பாணியில் காரசாரமான கோழி குழம்பு ஊரே மணக்கும் வகையில் செய்வது எப்படி என்பதை தெரிந்து கொள்வோம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/90e4eb40-06df-4f65-89d1-200be2b30e53/26-6a5d1b1d88066.webp' /></p><h2>தேவையான பொருட்கள்</h2><p>சிக்கன் - 1/2 கிலோ
<br>பெரிய வெங்காயம் - 2
பழுத்த தக்காளி <br>2
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
<br>காஷ்மீரி மிளகாய் தூள் - 1 1/2 டேபிள் ஸ்பூன்
<br>கரம் மசாலா - 1 டேபிள் ஸ்பூன்
<br>இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள் ஸ்பூன்
<br>எண்ணெய் - தேவையான அளவு
<br>கொத்தமல்லி இலைகள் - சிறிதளவு
<br>உப்பு - சுவைக்கேற்ப</p><h4>அரைப்பதற்கு </h4><p>துருவிய தேங்காய் - 1/2 மூடி
<br>முந்திரி - 1 டேபிள் ஸ்பூன்
<br>கசகசா - 1/2 டீஸ்பூன்&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/65d41563-b8bd-49d1-ba07-02b8591117d6/26-6a5d1b1e42118.webp' /></p><h4>தாளிப்பதற்கு </h4><p>கடுகு - 1/2 டீஸ்பூன்
<br>சீரகம் - 1/4 டீஸ்பூன்
<br>கருப்பு மிளகு - 1/2 டீஸ்பூன்
<br>எண்ணெய் - தேவையான அளவு</p><h2>செய்முறை </h2><p>மிக்ஸி ஜாரில் அரைப்பதற்கு கொடுத்த பொருட்களை சேர்த்து நன்றாக தண்ணீர் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.</p><p>அகலமான கடாய் ஒன்றினை அடுப்பில் வைத்து எண்ணெய் சேர்த்து பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். அதனுடன் இஞ்சி பூண்டு சேர்க்கவும்.</p><p>பின்பு மிளகாய், மஞ்சள், கரம் மசாலா ஆகிய பொடிகளை சேர்த்து மசாலா வாசனை செல்லும் வரை வதக்கவும் இதனுடன் தக்காளி மற்றும் உப்பு சேர்த்து வதக்கி, அலசி வைத்துள்ள சிக்கனை சேர்த்து நன்றாக கிளறிவிட்டு 5 நிமிடம் வேக வைக்கவும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5bc989e7-9c34-48a3-99b1-8a5b189274a3/26-6a5d1b1eecc3e.webp' /><br></p><p>சிக்கன் சற்று வெந்ததும் இதில் அரைத்து வைத்த தேங்காய் விழுதை சேர்த்து நன்றாக கலந்து மூடி வைத்து மீண்டும் மிதமான தீயில் வேக விடவும்.</p><p>மற்றொரு அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் சேர்த்து சூடானதும், கடுகு மற்றும் சீரகம், கருப்பு மிளகாய் சேர்த்து தாளித்து, கடைசியாக குழம்பில் சேர்க்கவும். இதனுடன் கொத்தமல்லி இலையினை தூவி இறக்கினால் காரசாரமான கோழி குழம்பு தயார்.</p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் <a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a>&nbsp; &nbsp;</b> &nbsp; &nbsp; &nbsp; &nbsp;&nbsp;<br></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-20T01:00:00+00:00</updated>
        </entry>
    </feed>
