<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-08-12T06:32:04+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கைமாற்றப்பட்ட தங்காலை கால்டன் இல்லம்: மகிந்தவால் வழங்கப்பட்ட உறுதிப்பத்திரம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/tangalle-carlton-house-namal-rajapaksa-1786499235"></link>
            <id>https://tamilwin.com/article/tangalle-carlton-house-namal-rajapaksa-1786499235</id>
            <summary type="text">முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு சொந்தமான கால்டன் இல்லம்
கைமாற்றப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.வளையொளி தளமொன்றில் நடந்த அரசியல்
கலந்துரையாடலில்...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு சொந்தமான கால்டன் இல்லம்
கைமாற்றப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.வளையொளி தளமொன்றில் நடந்த அரசியல்
கலந்துரையாடலில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே நாமல் ராஜபக்ச எம்.பி
இதனை தெரிவித்துள்ளார். அதில் தொடருந்து கருத்து தெரிவித்த அவர்,</p><p>
எனக்கு 23 வயது முடிந்து 24 வயதாகும் போது நான்&nbsp; நாடாளுமன்றத்திற்கு வந்துவிட்டேன்.அன்று முதல் இன்று வரை நேர்த்தியாக சொத்து விபரங்களை சமர்ப்பித்து பாராளுமன்ற உறுப்பினர்களில் நானும் ஒருவன். </p><h2>

</h2><p></p><h2>ராஜபக்சக்களின் பரம்பரை சொத்து</h2><p>அதாவது இந்தச் சட்டங்கள் வருவதற்கு முன்பே சமர்ப்பித்துள்ளேன்.எனக்கு சொந்தமான பெரும்பான்மையான காணிகள் பெற்றோர் மற்றும் குடும்பத்தாரிடமிருந்து கிடைத்தவை.
</p><p>ஏனெனில் சிலர் ராஜபக்சக்கள் காணிகள் எதுவும் இல்லாத ஏழைகள் என்கின்றனர்.நாங்கள் ஒரு அரசியல் குடும்பத்திலிருந்து வந்த பரம்பரை.
எனவே பெற்றோரிடமிருந்து கிடைத்த சில சொத்துக்கள் உள்ளன. </p><p>அதேபோல் நான் ஒரு
காலத்தில் ஒரு ஆலோசனைக் நிறுவனம் ஒன்றை (Consultancy firm) நடத்தினேன். அதைத்
தொடங்கிய விதம் மற்றும் அதற்கு வருமானம் ஈட்டிய விதம்- வரிக் கணக்குகள் (Tax reports) உட்பட
அனைத்தையும் நான் ஒவ்வொரு வருடமும் சொத்து விபரப் பிரகடனத்தில் குறிப்பிட்டுள்ளேன்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/117ff23c-0c4a-41cd-a780-d0f378af5dfc/26-6a7bd0a5159b5.webp' /></p><p>மேலும் அது குறித்து இப்போது இரண்டு அரசாங்கங்களால் சுமார் 7 முதல் 10 வருடங்களாக
அதாவது நல்லாட்சி அரசாங்கம் மற்றும் தற்போதைய அரசாங்கம் என 2015 முதல் 2020
வரை. மீண்டும் 2025 முதல் இன்று வரையிலும் விசாரணைகள் நடத்தப்படுகின்றன.
</p><p>எனவே அந்த அனைத்து விடயங்கள் குறித்தும் நான் குறிப்பிட்டுள்ளேன்.
மேலும் அந்த வருமானம் கிடைத்த விதம் குறித்தும்&nbsp; சுட்டிக்காட்டியுள்ளேன். அத்தோடு நான் பெரும் வர்த்தக குடும்பத்திலே திருமணம் செய்து கொண்டேன்.
</p><h2> கால்டன் இல்லம் கைமாற்றப்பட்ட விதம்</h2><p>மனைவியின் சொத்துக்கள் நான் சம்பாதித்தவை அல்ல. மனைவியின் குடும்பத்திலிருந்து
அவருக்குக் கிடைத்தவை. மேலும் அவர்கள் இலங்கையில் சுற்றுலாத் துறையில் இன்றும் முதல்
ஐந்து இடங்களுக்குள் இருக்கிறார்கள்.</p><p>இப்போது அடுத்த சொத்து விபரங்கள் அறிக்கையில் நிச்சயமாகத் தங்காலை வீடும் அதில் சேர்க்கப்படும்.ஏனென்றால் அப்பா
அதை எனக்குக் கொடுத்து விட்டார்.கடந்த வாரமே எழுதப்பட்டது.
</p><p></p><p>அரசியல் இல்லம் என்பதால் அதை எனக்கு முன்பே தர முயன்றபோது நான் வேண்டாம்
அப்பாவிடமே இருக்கட்டும் என்று கூறினேன். ஏனென்றால் ஆயுட்கால
உரிமையை வைத்துக்கொண்டு பிள்ளைகளுக்குச் சொத்துக்களை எழுத வேண்டும் என்று நம்பும்
ஒருவன் நான். </p><p>ஆனால் அப்பா மறுபடியும் வலியுறுத்தி இது அரசியல் இல்லம்
என்பதாலும் தொடர்ந்து அரசியலுக்காகப் பயன்படுத்தப்படுவதாலும்&nbsp; நிச்சயமாகத் உனக்கு தரப்பட வேண்டும் என்று கூறினார். அதனாலே தங்காலை கால்டன் இல்லம் எனக்கு வழங்கப்பட்டமைக்கான காரணமாகும் என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-12T06:32:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[அநுரவின் தீர்மானத்திற்கு எதிராக அதிரடியாக களமிறங்கிய எதிர்க்கட்சிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/22nd-amendment-file-case-on-court-1786513574"></link>
            <id>https://tamilwin.com/article/22nd-amendment-file-case-on-court-1786513574</id>
            <summary type="text">நீதியரசர்களின் ஓய்வு பெறும் வயதை நீட்டிப்பதற்காக முன்மொழியப்பட்ட சட்டமூலத்திற்கு எதிராக அடுத்த வாரம் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று முன்னாள் அமைச்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீதியரசர்களின் ஓய்வு பெறும் வயதை நீட்டிப்பதற்காக முன்மொழியப்பட்ட சட்டமூலத்திற்கு எதிராக அடுத்த வாரம் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று முன்னாள் அமைச்சர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.
</p><p>
இன்று காலை (12.08.2026) ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p>
நீதியரசர்களின் ஓய்வு பெறும் வயதை நீட்டிப்பது குறித்த அரசாங்கத்தின் முன்மொழிவு பற்றி பிரித்தானிய உயர் ஆணையருக்குத் தெரிவிக்க, கூட்டு எதிர்க்கட்சியின் பிரதிநிதிகள் நடவடிக்கை எடுத்திருந்தனர்.</p><h2>நிலுவையிலுள்ள வழக்குகள்..&nbsp;</h2><p>
</p><p>இந்த சந்திப்பின் பின்னர், ஊடகங்களிடம் பேசிய ஜி.எல். பீரிஸ், "நாங்கள் அடுத்த வாரம் நீதிமன்றத்திற்குச் செல்வோம். இந்தப் பணியால் தேங்கியுள்ள வழக்குகளின் தேக்கத்தை இது தீர்க்காது என்பதை உயர் நீதிமன்றத்திற்கு எவ்வித சந்தேகமுமின்றிப் புரிய வைப்போம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1d8c71da-c914-44e1-80dc-fa2e71970246/26-6a7c11b291822.webp' /></p><p> </p><p>மொத்த வழக்குகளில் 1 சதவீதம் மட்டுமே உயர் நீதிமன்றத்திலும் மேல்முறையீட்டு நீதிமன்றத்திலும் உள்ளன.

நாங்கள் இந்த நாட்டிற்கான பிரித்தாினிய உயர் ஆணையர் ஆண்ட்ரூ பேட்ரிக்கை சந்தித்தோம். </p><p>இலங்கை நீதித்துறைக்கும் பிரித்தாினிய பொதுநலவாயத்திற்கும் இடையே மிக நீண்ட மற்றும் ஆழமான உறவு இருந்து வருகிறது. இன்று எங்கள் நாட்டில் நடப்பவற்றை எங்களால் நம்ப முடியவில்லை என்று அவரிடம் கூறினோம்.&nbsp;</p><p>சட்டத்தீர்வையாளர் சங்கம் ஜனாதிபதியைச் சந்திப்பது பயனற்றது. எல்லாம் முடிந்த பின்னரே அவர்கள் ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்துள்ளனர்" என்று குறிப்பிட்டார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-12T06:31:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதிகரிக்கும் பலி எண்ணிக்கை! நிலநடுக்கத்தால் நிலைகுலைந்த கொலம்பியா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/western-colombia-earthquake-death-toll-1786514969"></link>
            <id>https://ibctamil.com/article/western-colombia-earthquake-death-toll-1786514969</id>
            <summary type="text">
மேற்கு கொலம்பியாவில் ஏற்பட்ட 7.4 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 188 ஆக உயர்ந்துள்ளதுடன், 1,677 பேர் காயமடை...</summary>
            <content type="html"><![CDATA[<p>
மேற்கு கொலம்பியாவில் ஏற்பட்ட 7.4 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 188 ஆக உயர்ந்துள்ளதுடன், 1,677 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
</p><p>
அதன்போது, காலி (Cali) நகரில் 95 இறப்புகளும் 997 காயங்களும் பதிவாகியுள்ளதுடன், பெரேரா (Pereira) நகரில் 79 இறப்புகளும் 278 காயங்களும் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>

இதேவேளை, இந்த நிலநடுக்கத்தால் 1,575 வீடுகளும், ஆறு விமான நிலையங்களின் உள்கட்டமைப்புகளும் சேதமடைந்துள்ளதாக கொலம்பிய ஜனாதிபதி அபெலார்டோ டி லா எஸ்பிரியெல்லா முன்னதாக அறிவித்திருந்தார்.</p><p></p><h2>அவசர நிவாரணத் தேவைகள்</h2><p>
கொலம்பிய புவியியல் சேவையின் கூற்றுப்படி, இந்த நிலநடுக்கம் மேற்கு கொலம்பியாவில் 96 கி.மீ. ஆழத்தில், சோகோ (Chocó) மாகாணத்தில் உள்ள சான் ஜோஸ் டெல் பால்மர் அருகே மையப்புள்ளியைக் கொண்டு தாக்கியதாக தெரியவருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/85dfa1bf-9c3b-4400-b4ae-e8cd1f65b8ad/26-6a7c127a5745d.webp' /></p><p><i>Image Credit:&nbsp;CNN</i></p><p>
இந்நிலையில், பாதிக்கப்பட்ட மாகாணங்களின் தலைநகரங்களுடன் நெருங்கிய தொடர்பைப் பேணி வருவதாகவும், சேதங்களை மதிப்பிட்டு அவசர நிவாரணத் தேவைகளைக் கண்டறிய உள்ளூர் மேயர்கள் மற்றும் அவர்களது குழுக்களுடன் தொடர்புகொண்டு வருவதாகவும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-12T06:30:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Tony</name>
            </author>
            <title type="text"><![CDATA[மலையாள சினிமாவில் கால் பதித்த சென்சேஷ்னல் நடிகை ருக்மிணி, முன்னணி நடிகருக்கு ஜோடியாக]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/rukimini-vasanth-new-movie-update-1786511015"></link>
            <id>https://cineulagam.com/article/rukimini-vasanth-new-movie-update-1786511015</id>
            <summary type="text">ருக்மிணி&amp;nbsp;ருக்மிணி வசந்த் இந்திய சினிமாவின் வேகவேகமாக வளர்ந்து வரும் நடிகை. இவர் நடித்த காந்தாரா சாப்டர் ஒன் படம் இந்தியா முழுவதும் மிகப்பெரிய வெற...</summary>
            <content type="html"><![CDATA[<h2>ருக்மிணி</h2><p>&nbsp;ருக்மிணி வசந்த் இந்திய சினிமாவின் வேகவேகமாக வளர்ந்து வரும் நடிகை. இவர் நடித்த காந்தாரா சாப்டர் ஒன் படம் இந்தியா முழுவதும் மிகப்பெரிய வெற்றி வாகை சூடியது.</p><p> இதை தொடர்ந்து மதராஸி, ஏஸ் என பல படங்களில் தொடர்ந்து நடித்தார். கன்னடம், தமிழ், தெலுங்கு என 3 மொழிகளில் நடித்த இவர் அடுத்து மலையாள சினிமாவிலும் காலடி எடுத்து வைத்துவிட்டார்.</p><p> ஆம், மலையாள சினிமாவின் முன்னணி நடிகர் நிவின்பாலி நடிப்பில் உருவாகும் ஒரு படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க ருக்மிணி கமிட் ஆகியுள்ளார், இதை அவரே சந்தோஷமாக பகிர்ந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3e5affc8-e155-4f9c-b34e-1af821eff7cc/26-6a7bfeaa3112d.webp' /></p>]]></content>
            <updated>2026-08-12T06:30:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானின் தாக்குதல் அச்சுறுத்தல்: இரகசிய விமானத்தில் ஏறி ஐக்கிய இராச்சியத்திற்கு பறந்த ட்ரம்ப்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/donald-trump-confirms-catering-secret-service-1786514382"></link>
            <id>https://ibctamil.com/article/donald-trump-confirms-catering-secret-service-1786514382</id>
            <summary type="text">அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஈரானின் தாக்குதல் அச்சுறத்தல் காரணமாக துருக்கியில் இருந்து இரகசிய விமானத்தில் சென்றதாக உறுதிப்படுத்தி உள்ளார்.

...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஈரானின் தாக்குதல் அச்சுறத்தல் காரணமாக துருக்கியில் இருந்து இரகசிய விமானத்தில் சென்றதாக உறுதிப்படுத்தி உள்ளார்.
</p><p>
கடந்த ஜூலை மாதம் துருக்கியிலிருந்து திரும்பும் பயணத்தின்போதே இந்த இரகசிய பயணம் இட்ம்பெற்றதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.</p><p> 


இந்த விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்&nbsp;</p><p></p><h2>இரகசிய பயணத்தில்&nbsp;டொனால்ட் டிரம்ப்</h2><p>'அமெரிக்காவின் இரகசிய சேவை மற்றும் இராணுவம் தான் இந்த முடிவை எடுத்தார்கள். அவர்கள் என்னை வேறு விமானத்தில் செல்லச் சொன்னார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/67a7bacc-4392-44fa-8b5e-d00c967d2f11/26-6a7c10d263e0a.webp' /></p><p> </p><p>வெளியே ஏதோ அச்சுறுத்தல் இருந்ததாக நான் நினைக்கிறேன். உண்மையில் நான் பயணம் செய்த விமானத்திற்குத்தான் அதிக ஆபத்து இருந்தது என்று நான் நினைக்கிறேன்.</p><p> </p><p>ஏனென்றால், அவர்கள் குறிவைக்க அதிக வாய்ப்புள்ள விமானம் அதுவாகத்தான் இருக்கும் என நான் கருதுகிறேன்' என தெரிவித்துள்ளார்.</p><p>இது குறித்து அமெரிக்கா பத்திரிக்கைகளை மேற்கோள்காட்டி வெளியாகிய செய்திகளில்</p><p>“ஊடகங்கள் முன்னிலையில் ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் ஏறிய பிறகு, ஜூலை 8 அன்று ட்ரம்ப் ஒரு உணவு வழங்கும் வாகனத்தை பயன்படுத்தி அடையாளம் தெரியாத ஜெட் விமானத்திற்கு ரகசியமாகச் சென்றார்.</p><p>செய்தியாளர்களும் வெள்ளை மாளிகை ஊழியர்களும் அவர் ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் இருப்பதாக நம்பியிருந்த வேளையில், அவர் அந்த ஜெட் விமானத்தில் அங்காராவிலிருந்து ஐக்கிய இராச்சியத்தில் உள்ள ஒரு தளத்திற்குப் பறந்தார்” என செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.&nbsp; &nbsp;&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p><p> 

</p>]]></content>
            <updated>2026-08-12T06:27:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[A9 வீதியில் கோர விபத்து - லொறி உதவியாளர் சம்பவ இடத்திலேயே பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/horrific-accident-on-a9-road-men-dies-on-the-spot-1786511511"></link>
            <id>https://ibctamil.com/article/horrific-accident-on-a9-road-men-dies-on-the-spot-1786511511</id>
            <summary type="text">கிளிநொச்சியில் இடம்பெற்ற வீதி விபத்தில் லாரியின் உதவியாளர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்து இன்று (12.08.2026) அதிகாலை கி...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிளிநொச்சியில் இடம்பெற்ற வீதி விபத்தில் லாரியின் உதவியாளர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
</p><p>குறித்த விபத்து இன்று (12.08.2026) அதிகாலை கிளிநொச்சி காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட ஏ 9 வீதியின் 155 ஆவது மைல்கல் பகுதிக்கு அருகில் இடம்பெற்றுள்ளது.</p><h2>மேலதிக விசாரணை</h2><p>

ஏ9 வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த லொறி ஒன்றிலிருந்து பொருட்கள்
இறக்கப்பட்டு கொண்டிருந்த வேளையில் கொழும்பிலிருந்து வருகை தந்த
லொறி கட்டுப்பாட்டை இழந்து, வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியின்
மீது பலமாக மோதியுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9a6bd5aa-3a27-4cf4-9be1-ad0541d40e09/26-6a7c1136bc8ae.webp' /></p><p>குறித்த விபத்தை ஏற்படுத்திய லொறி சாரதியின் உதவியாளர் பலத்த காயமடைந்து
சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
</p><p>
சம்பவம் தொடர்பாக தகவலறிந்து கிளிநொச்சி காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு
விரைந்து சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். </p><p>மேலும்,
விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி காவல்துறையினர் தீவிரமாக முன்னெடுத்து
வருகின்றனர்.&nbsp;</p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-12T06:22:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதிக ஆபத்துள்ள சுகாதார அதிகாரி பிரிவுகள் அடையாளம்! பொதுமக்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/dengue-patients-in-the-country-increasing-1786514433"></link>
            <id>https://tamilwin.com/article/dengue-patients-in-the-country-increasing-1786514433</id>
            <summary type="text">நடப்பாண்டில் இதுவரை 90,695 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப்பிரிவு தெரிவித்துள்ளது.



ஜூலை மாதத்தில் 29,973 நோயாளர்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>நடப்பாண்டில் இதுவரை 90,695 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப்பிரிவு தெரிவித்துள்ளது.
</p><p>


ஜூலை மாதத்தில் 29,973 நோயாளர்களும், ஜூன் மாதத்தில் 21,533 நோயாளர்களும் பதிவான நிலையில், ஓகஸ்ட் 11 ஆம் திகதி நள்ளிரவு வரை மேலும் 5,348 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.</p><p>


நாட்டில் டெங்கு நோய்ப்பரவலின் மையமாக மேல் மாகாணம் தொடர்ந்து காணப்படுவதுடன், மொத்த நோயாளர்களில் 52.9 சதவீதம் இம்மாகாணத்தில் பதிவாகியுள்ளனர்.</p><h2>அதிகளவு நோயாளர்கள் அடையாளம்&nbsp;</h2><p>
</p><p>


கம்பஹா மாவட்டத்தில் 19,291 நோயாளர்களும், கொழும்பு மாவட்டத்தில் 16,909 நோயாளர்களும் பதிவாகியுள்ளனர். இவ்விரு மாவட்டங்களிலும் பதிவான நோயாளர்கள் தேசிய மொத்த எண்ணிக்கையில் சுமார் 40 சதவீதமாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b1581ae2-44be-4e77-bb99-dfece99157f5/26-6a7c10704fbca.webp' />&nbsp;</p><p>


அதேவேளை, கண்டியில் 6,466, மாத்தறையில் 5,990 மற்றும் களுத்துறையில் 5,416 நோயாளர்கள் பதிவாகியுள்ளார்கள்.



தென் மாகாணத்தில் 12,206 நோயாளர்களும், மத்திய மாகாணத்தில் 7,475 நோயாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். </p><p>சபரகமுவவில் 5,114, வடமேல் மாகாணத்தில் 4,050 மற்றும் ஊவா மாகாணத்தில் 4,137 நோயாளர்கள் பதிவாகியுள்ளன.
</p><p>


வடக்கு மாகாணத்தில் 1,287 நோயாளர்களும், கிழக்கு மாகாணத்தில் 2,799 நோயாளர்களும் பதிக்கப்பட்டுள்ளனர்.</p><h2>அதிக ஆபத்துள்ள பிரிவுகள் அடையாளம்</h2><p>


இதேவேளை, இந்த ஆண்டு டெங்கு நோயினால் 65 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். இறப்பு விகிதம் 0.07 சதவீதமாகப் பதிவாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/67f89059-3808-494c-9aaf-517d92de55cd/26-6a7c107102966.webp' />&nbsp;</p><p>


31ஆவது வாரத்தில் அதிக ஆபத்துள்ள சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளின் எண்ணிக்கை 119 ஆக காணப்பட்டதுடன், நாளாந்தம் சராசரியாக 1,509 புதிய நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
</p><p>


நுளம்புகள் பெருகும் இடங்கள் அதிகமாகக் காணப்படும் நகர்ப்புற மற்றும் அரை நகர்ப்புற பகுதிகளில் சமூக மட்டத்திலான டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்துமாறு சுகாதார அதிகாரிகள் பொதுமக்களிடம் வலியுறுத்தியுள்ளனர்.&nbsp;&nbsp;</p><p></p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-12T06:21:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[31 வயதை எட்டிய நடிகை சாரா அலி கான்!! சொத்து மதிப்பு, சம்பள விவரம் இதோ..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/sara-ali-khan-has-an-estimated-net-worth-between-1786515647"></link>
            <id>https://viduppu.com/article/sara-ali-khan-has-an-estimated-net-worth-between-1786515647</id>
            <summary type="text">சாரா அலி கான்பாலிவுட் சினிமாவில் டாப் நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் சைஃப் அலி கானின் மகளான சாரா அலி கான், 2018ல் இருந்து நடிக்க ஆரம்பித்தார்.

இதனை...</summary>
            <content type="html"><![CDATA[<h2>சாரா அலி கான்</h2><p>பாலிவுட் சினிமாவில் டாப் நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் சைஃப் அலி கானின் மகளான சாரா அலி கான், 2018ல் இருந்து நடிக்க ஆரம்பித்தார்.

இதனையடுத்து டாப் நடிகர்களின் படங்களில் நடித்து வருகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/17e8a769-03cb-4643-81f1-c9f2283c56b9/26-6a7c10c164e75.webp' /></p><p> </p><p>நடிகர் வருண் தவான், ரகுல் ப்ரீத் சிங், வாமிகா கேபி நடித்துள்ள Pati Patni Aur Woh Do என்ற படத்தில் நடித்திருந்தார் சாரா. </p><p>இந்நிலையில், ஆகஸ்ட் 12 ஆம் தேதி இன்று தன்னுடைய 31வது வயதை எட்டியுள்ளார் சாரா. தற்போது அவரின் சொத்து மதிப்பு எவ்வளவு என்ற தகவல் வெளியாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ac2a0103-3b60-4c97-990e-cdf9d8b14b40/26-6a7c10c215a9f.webp' /></p><p> ஒரு படத்திற்கு ரூ. 3 கோடி அளவில் சம்பளத்தை பெற்று வரும் சாரா அலி கானின் சொத்து மதிப்பு சுமார் ரூ. 41 கோடி முதல் ரூ. 55 கோடி வரை இருக்கும் என்று கூறப்படுகிறது.</p>]]></content>
            <updated>2026-08-12T06:20:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வறட்சியால் வற்றிவரும் நதி: சுவிஸ் இறக்குமதி பாதிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/swiss-import-to-affect-due-to-river-drought-1786515327"></link>
            <id>https://news.lankasri.com/article/swiss-import-to-affect-due-to-river-drought-1786515327</id>
            <summary type="text">சுவிட்சர்லாந்திலுள்ள முக்கிய நதி ஒன்றில் தண்ணீர் வற்றிவருவதால் சுவிஸ் இறக்குமதி பாதிக்கப்பட்டுள்ளது.


நான்கு பக்கமும் நிலம் சூழ்ந்த சுவிட்சர்லாந்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>சுவிட்சர்லாந்திலுள்ள முக்கிய நதி ஒன்றில் தண்ணீர் வற்றிவருவதால் சுவிஸ் இறக்குமதி பாதிக்கப்பட்டுள்ளது.
</p><p>

நான்கு பக்கமும் நிலம் சூழ்ந்த சுவிட்சர்லாந்தை கடலுடன் இணைக்கும் ஒரே விடயம் ரைன் நதிதான்.
</p><p>
அந்த நதியே வற்றிவருவதால், நாட்டுக்குள் கப்பல் மூலம் நடைபெறும் சரக்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டுவருகிறது.</p><h3>

வறட்சியால் வற்றும் நதி
</h3><p>
உலக நாடுகள் பலவற்றிலுள்ள மக்கள் கோடைக்காலத்தில் சுற்றுலா செல்ல விரும்பித் தேர்ந்தெடுக்கும் நாடுகளில் முக்கியமான நாடு சுவிட்சர்லாந்து.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e05018d0-b1b1-446a-aec0-3956ba86141f/26-6a7c0f81093d4.webp' /></p><p>
ஆனால், மழைப்பொழிவு குறைந்துள்ளதால் சுவிட்சலாந்தில் வறட்சி உருவாகியுள்ளது.
</p><p>
இந்த வறட்சி, இறக்குமதியையும் பாதித்துள்ளதுதான் கவலையை ஏற்படுத்தியுள்ள விடயம்!
</p><p>
அதாவது, சுவிட்சர்லாந்தில், எண்ணெய் தொடர்புடைய தயாரிப்புகள், கால்நடைத் தீவனங்கள் மற்றும் உரம் ஆகியவற்றில் 8 முதல் 10 சதவிகிதம், ரைன் நதி மூலமாகத்தான் இறக்குமதி செய்யப்படுகின்றன.&nbsp;</p><p></p><p>
ஆனால், ரைன் நதியில் தண்ணீர் மட்டம் வெகுவாக குறைந்துவிட்டது. ஆகவே பல கப்பல்கள் நின்றுவிட்டன. சில குறைவான சரக்குகளுடன் பயணிக்கின்றன.
</p><p>
ஆக, சரக்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டுவருகிறது. என்றாலும், அத்தியாவசிய பொருட்கள் கப்பல்களுக்கு பதிலாக தற்போது ரயில் மூலம் கொண்டு வரப்படுவதால் கூடுதல் செலவு ஏற்படுவதாக ஃபெடரல் தேசிய பொருளாதார வழங்கல் அலுவலகம் தெரிவித்துள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-12T06:17:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சர்வதேச கராத்தே போட்டியில் களமிறங்கும் யாழ்.இளைஞர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/jaffna-youth-in-international-karate-competition-1786513700"></link>
            <id>https://tamilwin.com/article/jaffna-youth-in-international-karate-competition-1786513700</id>
            <summary type="text">யாழ்ப்பாணத்தைப் பூர்வீகமாகக் கொண்ட கராத்தே வீரரும், அவுஸ்திரேலியாவில்
பொறியியலாளராகப் பணியாற்றி வருபவருமான ரத்னம் ரோஸி ஹரிந்த், அவுஸ்திரேலிய
தேசிய க...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணத்தைப் பூர்வீகமாகக் கொண்ட கராத்தே வீரரும், அவுஸ்திரேலியாவில்
பொறியியலாளராகப் பணியாற்றி வருபவருமான ரத்னம் ரோஸி ஹரிந்த், அவுஸ்திரேலிய
தேசிய கராத்தே அணிக்குத் தெரிவாகி. தாய்லாந்தில் ஆரம்பமாகவுள்ள, சர்வதேச
கராத்தே போட்டியில் பங்கேற்கவுள்ளார்.
</p><p>
யாழ்.சென்.ஜோன்ஸ் கல்லூரியில் ஆரம்பக் கல்வியையும், யாழ். இந்துக்
கல்லூரியில் உயர்கல்வியையும் தொடர்ந்த இவர், மொறட்டுவப் பல்கலைக்கழகத்தில்
பொறியியல் பட்டப்படிப்பை நிறைவு செய்தவராவார்.&nbsp;</p><h2>ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள்</h2><p>அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து கிறிபித் பல்கலைக்கழகத்தில் பொறியியல்
முதுகலைப் பட்டப்படிப்பை நிறைவு செய்ததுடன், தற்போது அவுஸ்திரேலியாவில்
புவித்தொழில்நுட்பப் பொறியியலாளராகப் பணியாற்றி வருகின்றார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f8f86eef-e71d-42ad-9b95-9f52b4e15ef6/26-6a7c0d5c9ca35.webp' /></p><p>
கராத்தே துறையில் 6ஆம் டான் தரத்தைப் பெற்றுள்ள இவர், இலங்கையின் பல்வேறு
பகுதிகளில் இயங்கிவரும் கராத்தே பாடசாலைகளின் ஊடாக, ஆயிரத்துக்கும்
மேற்பட்ட மாணவர்களுக்கு கராத்தே பயிற்சி வழங்கி வருகிறார் என்பது
குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-12T06:09:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[தென்னிலங்கையில் மீண்டும் துப்பாக்கி சூடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/gunmen-open-fire-at-house-in-tangalle-1786514260"></link>
            <id>https://jvpnews.com/article/gunmen-open-fire-at-house-in-tangalle-1786514260</id>
            <summary type="text">கடுவலை - தங்காலை, குடவெல்ல பகுதியில் உள்ள வீடொன்றின் மீது இனந்தெரியாத நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

குறித்த ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கடுவலை - தங்காலை, குடவெல்ல பகுதியில் உள்ள வீடொன்றின் மீது இனந்தெரியாத நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். </p><p>

குறித்த சம்பவம்&nbsp;நேற்று(11.08.2026) இரவு இடம்பெற்றுள்ளது.</p><h2>பொலிஸார் மேலதிக விசாரணை</h2><p>இதில் எவ்வித உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.</p><p></p><p>இந்நிலையில், தங்காலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-12T05:59:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[மீண்டும் திரையில் இணையும் விஜய் - த்ரிஷா ஜோடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/vijay-trisha-blockbuster-thirupaachi-re-release-1786511674"></link>
            <id>https://manithan.com/article/vijay-trisha-blockbuster-thirupaachi-re-release-1786511674</id>
            <summary type="text">thirupaachi re release : விஜய் ரசிகர்களின் மனதில் தனி இடம் பிடித்த ‘திருப்பாச்சி’ திரைப்படம், மீண்டும் திரையரங்குகளில் மாஸ் காட்ட வருகிறது. இத் திரைப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>thirupaachi re release : விஜய் ரசிகர்களின் மனதில் தனி இடம் பிடித்த ‘திருப்பாச்சி’ திரைப்படம், மீண்டும் திரையரங்குகளில் மாஸ் காட்ட வருகிறது. இத் திரைப்படம் அக்டோபர் 1-ம் தேதி மீண்டும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.</p><h2>திருப்பாச்சி</h2><h2> </h2><p> விஜய் – திரிஷா ஜோடியில் வெளியான இப்படத்தில், விஜய்யின் தங்கையாக நடிகை மல்லிகா நடித்திருந்தார். இவர்களுடன் பசுபதி, மனோஜ் கே. ஜெயன், கோட்டா ஸ்ரீனிவாச ராவ், பெஞ்சமின், லிவிங்ஸ்டன், சாயா சிங் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5d3b46d1-3137-49de-bb38-ecbc259cfb2d/26-6a7c0405c72e6.webp' /></p><p></p><p>

விஜய்யின் அதிரடியான ஆக்‌ஷன் காட்சிகள், தங்கச்சி சென்டிமென்ட், காமெடி என அனைத்து அம்சங்களும் ரசிகர்களை கவர்ந்ததுடன், தீனா, மணிசர்மா, தேவி ஸ்ரீ பிரசாத் ஆகியோரின் துள்ளலான இசையும் படத்தின் வெற்றிக்கு கூடுதல் பலமாக அமைந்தது.</p><p> 2005-ம் ஆண்டு வெளியான இந்தப் படம், விஜய்யின் வெற்றிப் படங்களில் முக்கியமான ஒன்றாக மாறியது. இதன் வெற்றியைத் தொடர்ந்து, தெலுங்கில் பவன் கல்யாண் நடிப்பில் ‘அன்னவரம்’ என்றும், கன்னடத்தில் ‘தங்கிகாகி’ என்றும் ரீமேக் செய்யப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/705b7b8a-fb6c-4ad8-8469-6ca2b0106583/26-6a7c040696dc4.webp' /></p><p></p><p><b>
மீண்டும் திரையரங்குகளில் ‘திருப்பாச்சி’</b></p><p>கடந்த ஆண்டு விஜய்யின் ‘கில்லி’ திரைப்படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டபோது, ரசிகர்கள் அதனை திருவிழா போல கொண்டாடினர். அந்த ரீ-ரிலீஸ் உலகம் முழுவதும் சுமார் ரூ.26 முதல் ரூ.30 கோடி வரை கூடுதல் வசூல் செய்ததாக தகவல்கள் வெளியாகின.
</p><p>
அந்த வெற்றியைத் தொடர்ந்து, தற்போது விஜய்யின் மற்றொரு மாஸ் படமான ‘திருப்பாச்சி’ ரீ-ரிலீஸுக்கு தயாராகியுள்ளது. </p><p>வரும் அக்டோபர் 1-ம் தேதி இப்படம் மீண்டும் திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தை திருப்பதி பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்<b> <u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW&nbsp;</a></u></b></td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-12T05:58:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கோட்டாவின் முன்னாள் செயலாளர் நீதிமன்றத்தில் முன்னிலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sugeeswara-bandara-appears-in-court-1786513612"></link>
            <id>https://ibctamil.com/article/sugeeswara-bandara-appears-in-court-1786513612</id>
            <summary type="text">முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் முன்னாள் பிரத்தியேக செயலாளரான சுகீஸ்வர பண்டார நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.சுகீஸ்வர பண்டார சற்ற...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் முன்னாள் பிரத்தியேக செயலாளரான சுகீஸ்வர பண்டார நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.</p><p>சுகீஸ்வர பண்டார சற்று முன்னர் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.</p><h2>வழக்கு விசாரணை</h2><p>கடந்த ஜூலை மாதம் 18 ஆம் திகதி முதல் இன்று (12) வரை அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே, வழக்கு விசாரணைக்காக மீண்டும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/666b4e3b-0ef8-4a2c-b4bf-0bc9d2f06dc4/26-6a7c0b721ac95.webp' /></p><p>இந்நிலையில், இன்று இந்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.</p><p>கோட்டாபய ஜனாதிபதியாக இருந்த காலப்பகுதியில் இரண்டு அரச நிறுவனங்களில் இருந்து சம்பளம் பெற்றுக்கொண்டமை தொடர்பான விசாரணைக்காக மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தினால் சுகீஸ்வர பண்டார கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-12T05:53:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[பயங்கர ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருளுடன் இளைஞன் கைது!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/youth-arrested-narcotics-and-weapons-in-digana-1786512841"></link>
            <id>https://ibctamil.com/article/youth-arrested-narcotics-and-weapons-in-digana-1786512841</id>
            <summary type="text">


கண்டி - திகன பிரதேசத்தில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டு, ஐஸ் போதைப்பொருள் மற்றும் கூர்மையான ஆயுதங்களை வைத்திருந்த 25 வயதுடைய இளைஞர் ஒரு...</summary>
            <content type="html"><![CDATA[<p>


கண்டி - திகன பிரதேசத்தில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டு, ஐஸ் போதைப்பொருள் மற்றும் கூர்மையான ஆயுதங்களை வைத்திருந்த 25 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
</p><p>
தெல்தெனிய காவல் நிலைய அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், நேற்று(11) மாலை நடத்தப்பட்ட சோதனையின்போதே இச்சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>

கைது செய்யப்பட்ட போது, அவரிடமிருந்து 5,155 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளும், போதைப்பொருள் வியாபாரம் மூலம் ஈட்டப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் 63,000 ரூபாய் பணமும் கைப்பற்றப்பட்டுள்ளன.</p><p></p><h2>மேலதிக விசாரணை</h2><p>
</p><p>
தொடர்ந்து சந்தேகநபரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் பேரில் அவரது வீட்டில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது, மறைத்து வைக்கப்பட்டிருந்த வெளிநாட்டு கைக்குண்டு, 1,250 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள், இரண்டு வாள்கள் மற்றும் ஒரு கூர்மையான கத்தி ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8d1c1cd2-00ba-4f57-b744-98f0fefca7c6/26-6a7c0a17c49bc.webp' /></p><p>

திகன பகுதியைச் சேர்ந்த குறித்த சந்தேகநபர் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில், தெல்தெனிய காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-12T05:52:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் அடுத்து வெடிக்கப்போகும் சொத்து பிரச்சனை... சக்திவேல் போட்ட திட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/pandian-stores-2-serial-august-12-episode-1786511872"></link>
            <id>https://cineulagam.com/article/pandian-stores-2-serial-august-12-episode-1786511872</id>
            <summary type="text">பாண்டியன் ஸ்டோர்ஸ் 2பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இந்த பிரச்சனை முடிந்தது என யோசிப்பதற்குள் பெரியதாக பிரச்சனை வெடித்துள்ளது. செந்தில் தனது வேலையில் ல...</summary>
            <content type="html"><![CDATA[<h2>பாண்டியன் ஸ்டோர்ஸ் 2</h2><p>பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இந்த பிரச்சனை முடிந்தது என யோசிப்பதற்குள் பெரியதாக பிரச்சனை வெடித்துள்ளது. </p><p>செந்தில் தனது வேலையில் லஞ்சம் வாங்கிய விஷயம் தெரிந்து முதலில் மீனா செம ஷாக் ஆனார், பின் வீட்டிற்கு இந்த விஷயம் தெரியவர பாண்டியன் செம கோபப்பட்டார். </p><p>அதோடு லஞ்சமாக வாங்கிய பணம் அனைத்தையும் வாங்கியவர்களிடம் கொடுத்துவிட்டு வர சொல்ல அது முடியாது என்ற செந்தில், பின் கஷ்டப்படுபவர்களுக்கு அந்த பணத்தை செலவு செய்தார். </p><p>ஆனால் இப்போது லஞ்ச ஒழிப்பு அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட ஒருவர் செந்தில் பெயரை கூறியதால் தற்போது அவரது வேலைக்கு பிரச்சனை வந்துள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f153ad68-0039-43f8-b704-6fa7775c5d68/26-6a7c0b8c5da49.webp' /></p><h2>எபிசோட்</h2><p>
பாண்டியன் வீட்டில் இப்படியொரு பிரச்சனை என்றால் முத்துவேல் வீட்டில் வேறொரு விஷயம் நடக்கிறது. அதாவது முத்துவேல் தங்களது சொத்தை பிடிக்க முடிவு எடுத்து யார் யாருக்கு என்ன என கூறுகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e3a82d8d-2050-48fb-a211-f16483d3fa62/26-6a7c0b8abeb90.webp' /></p><p> </p><p>அப்போது முத்துவேல் இந்த வீடு அம்மா இருக்கும் வரை அவரது பெயரில் தான் இருக்கும், அதன்பின் பழனிவேலுக்கு சொந்தமானது என்கிறார். </p><p>அதைக்கேட்ட சக்திவேல், பழனி என்ன செய்தான் இந்த வீட்டிற்காக, அவனுக்கு எப்படி இந்த வீட்டை கொடுக்க முடியும். பல கோடி மதிப்புள்ள இந்த வீடு குமாருக்கு சொந்தமானது, அண்ணனிடம் இதுகுறித்து கேட்பேன் என்கிறார். முத்துவேல் வீட்டில் அடுத்து சொத்து பிரச்சனை வெடிக்கும் என்பது மட்டும் நன்றாக தெரிகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1e529665-2cdb-4f97-978d-ff0fb41c9c56/26-6a7c0b8b92f19.webp' /></p>]]></content>
            <updated>2026-08-12T05:50:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[தொகுதி மறுவரையறை தனித்தீர்மானம் - அதிமுக எதிர்ப்பு, திமுக ஆதரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/admk-oppose-cm-vijay-delimitation-resolution-1786513821"></link>
            <id>https://news.lankasri.com/article/admk-oppose-cm-vijay-delimitation-resolution-1786513821</id>
            <summary type="text">resolution against delimitation in TN assembly : தமிழ்நாடு சட்டமன்றத்தில் முதல்வர் விஜய் கொண்டு வந்துள்ள தொகுதி மறுவரையறை தனித்தீர்மானத்திற்கு திமுக, ...</summary>
            <content type="html"><![CDATA[<p>resolution against delimitation in TN assembly : தமிழ்நாடு சட்டமன்றத்தில் முதல்வர் விஜய் கொண்டு வந்துள்ள தொகுதி மறுவரையறை தனித்தீர்மானத்திற்கு திமுக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
</p><h3>
தொகுதி மறுவரையறை தனித்தீர்மானம்</h3><p> 

தமிழ்நாடு சட்டமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஆகஸ்ட் 5 ஆம் திகதி முதல் நடைபெற்று வருகிறது. </p><p>

இன்று நடைபெற்று வரும் 5 ஆம் நாள் விவாதத்தில், தொகுதி மறுவரையறை மசோதா குறித்த தனித்தீர்மானத்தை முதல்வர் விஜய் கொண்டு வந்துள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/80fe01a4-5005-4df1-9d8d-76b01fa3ce13/26-6a7c099ecad69.webp' /></p><p> 

 தனித்தீர்மானத்தை முன்மொழிந்து பேசிய முதல்வர் விஜய், "நம்முடைய குடும்பத்தில், நம்முடைய வீட்டில் இருக்கிற பாட்டி, அம்மா, அக்கா, தங்கச்சி என பெண்களைப் பற்றிய ஒரு தீர்மானம் இது. அவர்களுக்காகவும், அவர்களைப் பற்றியும் என் மனதிலிருந்தும், இதயத்திலிருந்தும் பேசுகிறேன்.</p><p> 

இதற்கு முன்பு கிடைத்த வெற்றிக்கும், இன்று இந்த இடத்திற்கும் மிகப்பெரிய காரணமாக இருந்தவர்கள் பெண்கள்தான்.
</p><p>
சங்ககாலம் தொடங்கி இன்றுவரை அடையாளமாக விளங்குகிற பெண் ஆளுமைகள் குறித்து பேசினார்.

நம்முடைய தமிழ்நாட்டு மண்ணில் சங்ககாலம் தொடங்கி இன்று வரை மிகப்பெரிய அடையாளமாக விளங்கிய பெண் ஆளுமைகள் ஏராளம். சங்ககாலத்தில் அவ்வையார், இலக்கியத்தில் கண்ணகி, மணிமேகலை, குண்டலகேசி போன்றோர் நிலைத்து நிற்பவர்கள்.&nbsp;</p><p></p><p>
ஆண்டாள், காரைக்கால் அம்மையார் போன்றவர்கள் ஆன்மிகத்திலும் இலக்கியத்திலும் உயர்ந்த இடத்தைப் பெற்றவர்கள். ராணி வேலுநாச்சியார், குயிலி, டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி, அஞ்சலையம்மாள் உள்ளிட்டோர் நாட்டின் விடுதலைப் போராட்டத்தில் முக்கியப் பங்காற்றியவர்கள்.</p><p>

இவ்வாறு நம்முடைய தமிழ்நாட்டுப் பெண்கள் சுதந்திரப் போராட்டம் தொடங்கி சமூகநீதிப் போராட்டம் வரை பல்வேறு தளங்களில் பங்களித்துள்ளனர். </p><p>

அதுமட்டுமல்லாமல், கல்வி, அறிவியல், அரசியல், நீதி, நிர்வாகம், தொழில்நுட்பம் என அனைத்து துறைகளிலும் இன்று தமிழ்நாட்டுப் பெண்களின் பங்களிப்பு மிகப்பெரிய அளவில் இருப்பதை யாராலும் மறுக்க முடியாது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9319e255-b4d4-481f-9fbd-2836037e218d/26-6a7c099f7d781.webp' /></p><p> 

தமிழ்நாட்டில் ஆண்களை விட பெண்களை அதிக வாக்காளர்களாக உள்ளனர். பெண்களுக்கான அரசியல் இடம் என்பது சலுகை அல்ல அது உரிமை.</p><p> பெண்களுக்கான 33 சதவீத இட ஒதுக்கீட்டு சட்டத்தை நிறைவேற்றாமல் காலம் தாழ்த்தப்படுகிறது. 

பெண்களுக்கான அரசியல் அதிகாரம் வழங்குவதில் முன்னோடி மாநிலமாக தவெக அரசு உள்ளது. பேரவையில் 4 பெண் அமைச்சர்கள் உள்ளனர்.
</p><p>
பெண்களுக்கான பாதுகாப்பிலும் அவர்களுக்கான முக்கியத்துவத்திலும் தவெக அரசு கவனமாக தான் உள்ளது. உள்ளாட்சியில் பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீட்டை கொடுத்ததால் ஆயிரக்கணக்கான பெண்கள் மக்கள் பிரதிநிதிகளாக அமர்ந்துள்ளனர். </p><p>

பெண்களுக்கான 33 சதவீத இட ஒதுக்கீட்டை இனியும் தாமதிக்காமல் நடைமுறைப்படுத்த வேண்டும் என ஒன்றிய அரசை வலியுறுத்துகிறோம். இது பெண்களுக்கான சலுகை அல்ல, அவர்களுக்கான ஜனநாயக உரிமை. </p><p>

தொகுதி மறு சீரமைப்பு தொடர்பாக நடத்தப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் 6 கட்சிகளை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் டிலிமிட்டேஷன் காரணமாக தென் மாநிலங்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து பேசப்பட்டது.&nbsp;</p><p></p><p>
ஒவ்வொரு மாநிலத்திலும் 50 சதவிகித மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரித்தாலும், புதிய மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கு பிறகு அதன் அடிப்படையில் தொகுதி மறு சீரமைக்கப்படும். இவ்வாறு செய்தால் தென் மாநிலங்களின் உறுப்பினர்களின் எண்ணிக்கை நாடாளுமன்றத்தில் குறையும்.</p><p>

தொகுதி மறு சீரமைப்பு சட்டத்தை நிறைவேற்றினால் மக்கள் தொகை கட்டுப்பாட்டு திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திய தென்மாநிலங்களுக்கு அரசியல் பிரதிநிதித்துவ அநீதி ஏற்படும். எனவே 543 என்ற மக்களவை உறுப்பினர் எண்ணிக்கையை நிரந்தரமாக நிலைநிறுத்த வேண்டும்" என பேசினார். </p><h3>

எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு
</h3><p>
இந்த தீர்மானம் குறித்து கட்சிகளின் சார்பில் அதன் உறுப்பினர்கள் பேசி வருகின்றனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/63f3365c-ab5c-4d29-b597-81bbd473e803/26-6a7c09a030302.webp' /></p><p>

இந்த தீர்மானம் குறித்து பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்த், பாமக எம்எல்ஏ கணேஷ் குமார், பாஜக எம்எல்ஏ போஜராஜன், உள்ளிட்டோர் மகளிர் இடஒதுக்கீட்டை வரவேற்றாலும், தனித்தீர்மானத்தை எதிர்ப்பதாக தெரிவித்துள்ளனர்.&nbsp; &nbsp;</p><p>தீர்மானம் மீது பேசிய எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தீர்மானத்தை ஆதரித்துள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-12T05:50:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈஸ்டர் தாக்குதல் வழக்கின் அடுத்த தீர்ப்பு விரைவில்: நிறைவடைந்த 245 நாள் சாட்சிய விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/next-verdict-in-easter-case-soon-1786512420"></link>
            <id>https://ibctamil.com/article/next-verdict-in-easter-case-soon-1786512420</id>
            <summary type="text">நௌஃபர் மௌலவி உட்பட 24 பிரதிவாதிகளுக்கு எதிரான ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் வழக்கின் தீர்ப்பு விரைவில் அறிவிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது....</summary>
            <content type="html"><![CDATA[<p>நௌஃபர் மௌலவி உட்பட 24 பிரதிவாதிகளுக்கு எதிரான ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் வழக்கின் தீர்ப்பு விரைவில் அறிவிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
அரசுத் தரப்பின் இறுதி சாட்சியங்கள் நேற்று இரவு (11) சமர்ப்பிக்கப்பட்ட நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கிட்டத்தட்ட 5 ஆண்டுகளில் 245 நாட்கள் நீடித்த அரசுத் தரப்பு வழக்கு நேற்று முடிவடைந்தது. </p><p>

இவ்வழக்கு, மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மராசிங்க (தலைவர்), சுஜீவ நிஸ்ஸங்க மற்றும் இராமநாதன் கண்ணன் உள்ளிட்ட பிற மேல் நீதிமன்ற நீதிபதிகளை உள்ளடக்கிய கொழும்பு நிரந்தர மூவர் அடங்கிய மேல் நீதிமன்றத்தின் முன் விசாரிக்கப்படும்.</p><p></p><h2>எதிர் தரப்பின் சாட்சியங்கள்</h2><p>

அரசுத் தரப்பு வாதம் முடிவடைந்த பிறகு, எதிர் தரப்பின் சாட்சியங்கள் விசாரிக்கப்படும். 

பின்னர், இரு தரப்பினரும் தங்களது எழுத்துப்பூர்வ வாதங்களைச் சமர்ப்பித்த பிறகு, தீர்ப்புக்கான திகதி நிர்ணயிக்கப்படும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/337846f4-e5bc-4e81-9c87-0dde34e32f5c/26-6a7c09385140c.webp' /></p><p> </p><p>ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக 31 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 

இவற்றில், 5 வழக்குகள் மூன்று நீதிபதிகள் கொண்ட மேல் நீதிமன்றங்களில் விசாரிக்கப்பட்டு வருகின்றன.
</p><p>
 இந்த வழக்குகளில் 3 வழக்குகளின் தீர்ப்புகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு, குற்றவாளிகளுக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. </p><p>

முறையான உளவுத் தகவல் கிடைத்திருந்தும் கடமையில் இருந்து தவறியது உள்ளிட்ட 854 குற்றச்சாட்டுகளில் குற்றவாளிகளாகக் கண்டறியப்பட்ட முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் முன்னாள் காவல்துறைத் தலைவர் புஜித் ஜெயசுந்தர ஆகியோர், தங்களுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மூன்று நீதிபதிகள் கொண்ட மேல் நீதிமன்ற வழக்கில் குற்றவாளிகள் எனக் கண்டறியப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளனர். </p><p>

மேலும், மாவநெல்ல பகுதியில் 7 புத்தர் சிலைகளையும் ஒரு கடவுள் சிலையையும் சேதப்படுத்திய வழக்கில் சபரகமுவ மாகாண மேல் நீதிமன்றத்தில் குற்றவாளிகளாகக் கண்டறியப்பட்ட 11 பிரதிவாதிகளுக்கும் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.</p><p>இந்த மூன்று வழக்குகளின் தீர்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் மூன்று வழக்குகளின் தீர்ப்புகள் அறிவிக்கப்பட உள்ளன.</p><p></p><h2>&nbsp;​​ஷஹ்ரானின் தாக்குதல் படை</h2><p>

புத்தளத்தில் உள்ள லாக்டோஸ் வத்த பகுதியில் பயங்கரவாதப் பயிற்சி முகாம் மற்றும் வெடிபொருட்கள் கிடங்கு ஆகியவற்றை நடத்திய சம்பவம் தொடர்பாக, புத்தளம் மேல் நீதிமன்றத்தில் 6 பிரதிவாதிகளுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கும், கொழும்பு நிரந்தர மேல் நீதிமன்றத்தில் 24 பிரதிவாதிகளுக்கு எதிராக விசாரிக்கப்பட்டு வரும் பிரதான வழக்கும் நடைபெற்று வருகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9b474aad-52c9-4607-9323-95b7cb9dc12d/26-6a7c0939144f4.webp' /></p><p>
</p><p>
அந்த வழக்குகளைத் திறம்பட விசாரிக்கும் பொருட்டு, புத்தளம் மூன்றாண்டு மேல் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்த வழக்கு, கடந்த 2 மாதங்களாக கொழும்பு மேல் நீதிமன்றத்திலும் விசாரிக்கப்பட்டு வருகிறது. </p><p>

கொழும்பு நிரந்தர மூவரடங்கிய மேல் நீதிமன்றம், அலுத்கமவில் உள்ள பழைய நீதித்துறை நடுவர் நீதிமன்ற வளாகத்தில் நிறுவப்பட்ட புதிய கட்டிடத்திற்கு மாற்றப்பட்ட பின்னர், ஈஸ்டர் தாக்குதல் குறித்த நீதிமன்ற வழக்கு தினந்தோறும் விசாரிக்கப்பட்டு வருகிறது. </p><p>

கடந்த காலங்களில், இந்த வழக்கு தினமும் இரவு சுமார் 10 மணி வரை விசாரிக்கப்பட்டு வந்தது.

அரசுத் தரப்பு சாட்சியத்தின் போது பிரதிவாதிகள் அளித்த பல வாக்குமூலங்கள் தாமாக முன்வந்து அளிக்கப்பட்டவை என்பது உண்மை கண்டறியும் விசாரணையின் போது உறுதி செய்யப்பட்டது. </p><p>

விசாரணையின் போது, ​​ஷஹ்ரானின் தாக்குதல் படையைச் சேர்ந்த ஒருவர் அரசுத் தரப்பு சாட்சியாகி பல உண்மைகளை வெளிப்படுத்தினார். 

இந்த வழக்கு ஆரம்பத்தில் மாதத்திற்கு ஒரு முறை விசாரிக்கப்பட்டது.
</p><p>
 பின்னர், வாரத்திற்கு 2-3 நாட்கள் விசாரிக்கப்பட்டு, கடந்த ஆண்டு முதல் தினமும் விசாரணை நடைபெற்று வருகிறது.

 இதுவரை, அரசுத் தரப்பு சாட்சியங்கள் கிட்டத்தட்ட 245 நாட்களாகக் கேட்கப்பட்டுள்ளன.</p><p> 

விசாரணையை மேலும் திறம்படச் செய்வதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் காரணமாக, வழக்கமான நடைமுறைகளின்படி 10 ஆண்டுகள் அல்லது அதற்கும் மேலாக விசாரிக்கப்படவிருந்த இந்த வழக்கு, அரசுத் தரப்பு வாதம் முடிவடைந்ததால் ஒரு நெருக்கடியான கட்டத்தை எட்டியுள்ளது. </p><p>

சிரேஷ்ட மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஹரிபிரியா ஜயசுந்தர, மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் சுதர்சன டி சில்வா மற்றும் சட்டத்தரணிகளான சஜித்த பண்டார, சக்தி ஜாகொடஆராச்சி மற்றும் அகிலா தல்படடு ஆகியோர் அடங்கிய சட்டத்தரணிகள் குழுவினால் வழக்கு தொடரப்பட்டுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-12T05:49:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட கோட்டாபயவின் முன்னாள் தனிப்பட்ட செயலாளர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sugeeswara-bandara-to-court-gotabaya-rajapaksa-1786512409"></link>
            <id>https://tamilwin.com/article/sugeeswara-bandara-to-court-gotabaya-rajapaksa-1786512409</id>
            <summary type="text">முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் முன்னாள் தனிப்பட்ட செயலாளர் சுகீஸ்வர பண்டார நீதிமன்றத்திற்கு அழைத்து செல்லப்பட்டார்.&amp;nbsp;அவர், சற்று முன்னர் க...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் முன்னாள் தனிப்பட்ட செயலாளர் சுகீஸ்வர பண்டார நீதிமன்றத்திற்கு அழைத்து செல்லப்பட்டார்.&nbsp;</p><p>அவர், சற்று முன்னர் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.&nbsp;</p><p>இரு நிறுவனங்களில் இருந்து அரச சம்பளம் பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட அவர் கடந்த 18ஆம் திகதி முதல் இன்று (12.08.2026) வரை காவலில் வைக்கப்பட்டிருந்தார்.
</p><p>இந்நிலையில் இன்று இந்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.&nbsp;</p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-12T05:41:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாட்டிலிருந்து வரும் உத்தரவு! இரகசிய உளவுத்தகவலில் ஆபத்தான பொதிகளுடன் சிக்கிய நபர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/one-arrested-underworld-group-member-with-drugs-1786506625"></link>
            <id>https://tamilwin.com/article/one-arrested-underworld-group-member-with-drugs-1786506625</id>
            <summary type="text">வெளிநாட்டில் தலைமறைவாகியுள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியும் போதைப்பொருள் கடத்தல்காரருமான &#039;கங்கன&#039; என்பவரின் உள்நாட்டு போதைப்பொருள் வலையமைப்பை இயக்கும்...</summary>
            <content type="html"><![CDATA[<p>வெளிநாட்டில் தலைமறைவாகியுள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியும் போதைப்பொருள் கடத்தல்காரருமான 'கங்கன' என்பவரின் உள்நாட்டு போதைப்பொருள் வலையமைப்பை இயக்கும் பிரதான நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் குறித்த சந்தேகநபர் இன்று (12) கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>ஹோமாகமவின் கெண்டலந்த பகுதியில் நடத்தப்பட்ட சோதனையின் போது, ​​போதைப்பொருள் கையிருப்புடன் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>&nbsp;</p><h2>அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய உளவுத்தகவல்</h2><p>பொலிஸ் விசேட அதிரடிப்படையின் விசேஷ நடவடிக்கைப்பிரிவு III அதிகாரிகளுக்கு கிடைத்த உளவுத்தகவலின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0a37f0df-7346-4d93-9f7d-bbe40436b769/26-6a7c06c0ee778.webp' /></p><p>இதன்போது சந்தேகநபரிடமிருந்து 2 கிலோகிராம் 59 மில்லிகிராம் ஐஸ் மற்றும் 800 'எக்ஸ்டஸி' வகை போதைப்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.</p><p>இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர், ஹோமகம பகுதியை சேர்ந்த 44 வயதுடையவர் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.</p><p>வெளிநாட்டில் தலைமறைவாகியுள்ள 'கங்கன' என்பவரின் நேரடி உத்தரவுகளின் கீழ், இவர் நாட்டில் போதைப்பொருள் விநியோக வலையமைப்பை இரகசியமாக இயக்கி வந்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.</p><p>இதன்போது கைது செய்யப்பட்ட சந்தேகநபரும், கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் கையிருப்பும் மேலதிக விசாரணைக்காக ஹோமாகம பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டதாக பொலிஸ் விசேட அதிரடிப்படை தெரிவித்துள்ளது.</p><p>&nbsp;</p><p></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-12T05:38:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[திடீரென கீழே இறங்கிய விமானம் ;ஏர் இந்தியா விமானி போதைப்பொருள் பயன்படுத்தியமை உறுதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/air-india-pilot-confirmed-to-have-used-drugs-1786512733"></link>
            <id>https://jvpnews.com/article/air-india-pilot-confirmed-to-have-used-drugs-1786512733</id>
            <summary type="text">புக்கெட்டிலிருந்து (Phuket) டெல்லி நோக்கி பயணித்த ஏர் இந்தியா விமானத்தை இயக்கிய முதன்மை விமானியிடம் நடத்தப்பட்ட இரண்டாம் கட்ட போதைப்பொருள் உறுதிப்படுத...</summary>
            <content type="html"><![CDATA[<p>புக்கெட்டிலிருந்து (Phuket) டெல்லி நோக்கி பயணித்த ஏர் இந்தியா விமானத்தை இயக்கிய முதன்மை விமானியிடம் நடத்தப்பட்ட இரண்டாம் கட்ட போதைப்பொருள் உறுதிப்படுத்தல் பரிசோதனையிலும் அவர் போதைப்பொருள் பயன்படுத்தியமை உறுதியாகியுள்ளது.</p><p>கடந்த 4 ஆம் திகதி குறித்த வானூர்தி நடுவானில் பயணித்த போது, திடீரென சுமார் 300 அடிகள் வரை கீழே இறங்கி பலத்த குலுக்கலுக்கு உள்ளானது.</p><p>இதனால் விமானத்திலிருந்த பயணிகள் மற்றும் பணியாளர்கள் உட்பட 24 பேர் காயமடைந்தனர்.</p><p>இதனைத் தொடர்ந்து, டெல்லி விமான நிலையத்தை வந்தடைந்ததும் விமானிகளுக்கு முன்னெடுக்கப்பட்ட முதற்கட்ட போதைப்பொருள் பரிசோதனையில் குறித்த முதன்மை விமானியின் மாதிரி சந்தேகத்திற்குரியதாக அமைந்திருந்தது.</p><p>ஆய்வகத்தில் நடத்தப்பட்ட இரண்டாவது கட்ட உறுதிப்படுத்தல் பரிசோதனையில், விமானி கஞ்சா போதைப்பொருளை பயன்படுத்தியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.</p><p>இதனையடுத்து வானூர்தி போக்குவரத்து பணிப்பாய்வுச் செயலகத்தின் விதிமுறைகளின்படி, குறித்த விமானி உடனடியாகப் பணிப் பொறுப்புகளிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.</p>]]></content>
            <updated>2026-08-12T05:35:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[தங்காலையில் மர்ம நபர்களின் துப்பாக்கிச் சூடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/gunmen-open-fire-at-house-in-tangalle-1786511505"></link>
            <id>https://tamilwin.com/article/gunmen-open-fire-at-house-in-tangalle-1786511505</id>
            <summary type="text">கடுவலை - தங்காலை, குடவெல்ல பகுதியில் உள்ள வீடொன்றின் மீது இனந்தெரியாத நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

குறித்த ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கடுவலை - தங்காலை, குடவெல்ல பகுதியில் உள்ள வீடொன்றின் மீது இனந்தெரியாத நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். </p><p>

குறித்த சம்பவம்&nbsp;நேற்று(11.08.2026) இரவு இடம்பெற்றுள்ளது.</p><h2>பொலிஸார் மேலதிக விசாரணை</h2><p>இதில் எவ்வித உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/37154665-dd24-4e94-8e34-d507d512a553/26-6a7c04ae335f1.webp' /></p><p>இந்நிலையில், தங்காலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-12T05:29:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரஷ்யாவின் மிகப்பெரிய இரசாயன ஆலையைத் தாக்கிய ட்ரோன்கள்: உக்ரைன் மீது குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/ukraine-strike-russia-s-big-petrochemical-plant-1786512517"></link>
            <id>https://news.lankasri.com/article/ukraine-strike-russia-s-big-petrochemical-plant-1786512517</id>
            <summary type="text">மேற்கு சைபீரியாவில் ரஷ்யாவின் மிகப்பெரிய இரசாயன ஆலையை உக்ரைன் தாக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேற்கு சைபீரியாவின் ட்யூமென் பகுதியில் ரஷ்யாவின் மி...</summary>
            <content type="html"><![CDATA[<p>மேற்கு சைபீரியாவில் ரஷ்யாவின் மிகப்பெரிய இரசாயன ஆலையை உக்ரைன் தாக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p>

மேற்கு சைபீரியாவின் ட்யூமென் பகுதியில் ரஷ்யாவின் மிகப்பெரிய பெட்ரோ இரசாயன ஆலையை உக்ரைன் தாக்கியதாக கூறப்படுகிறது.&nbsp;</p><h2>பெட்ரோ இரசாயன ஆலை</h2><p>

ரஷ்யாவின் மிகப்பெரிய பெட்ரோ இரசாயன ஆலை மேற்கு சைபீரியாவின் ட்யூமென் பகுதியில் உள்ளது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e27f445b-d46a-4f91-b4da-eaee80619131/26-6a7c055768fac.webp' /></p><p></p><p>
ஆலை ஒன்றின் மீது பல ட்ரோன்கள் மோதியதாகவும், அதன் காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாகவும் ட்யூமென் பிராந்திய ஆளுநர் அலெக்சாண்டர் மூர் உறுதிப்படுத்தினார்.</p><p>ஆனால், அவர் அந்த இடத்தின் பெயரை குறிப்பிடவில்லை. அதே சமயம், சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட காணொளிகளில் பெட்ரோ இரசாயன ஆலைக்கு மேலே அடர்த்தியான புகை மேகங்கள் எழுவதாகக் கூறப்படுகிறது.
</p><p>
சிபூர் பெட்ரோ இரசாயன நிறுவனத்தின் ஒரு பகுதியான ஸாப்ஸிப்நெஃப்டெகிம் ஆலையை ட்ரோன்கள் குறிவைத்ததாக சரிபார்க்கப்படாத அறிக்கைகள் தெரிவிக்கின்றன.&nbsp;</p><h2>காலவரையின்றி&nbsp;</h2><p>
ரஷ்யாவின் மிகப்பெரிய பெட்ரோ இரசாயன ஆலை தாக்கப்பட்டதாக சுயாதீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p>தாக்குதலுக்கு உள்ளன ஆலை, சேதத்தின் அளவு மற்றும் அதன் விளைவுகள் மதிப்பிடப்பட்டு வரும் நிலையில் காலவரையின்றி மூடப்பட்டுள்ளதாக தொழிற்சாலை வட்டாரம் ஒன்று கூறியதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் மேற்கோள் காட்டியுள்ளது.</p><p>

இதற்கிடையில், திங்கட்கிழமை அதிகாலையில் இரண்டு ரஷ்ய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறிய உக்ரைன், ட்யூமென் பிராந்தியத்தில் நடந்த இந்தத் தாக்குதலுக்கு உடனடியாக பொறுப்பேற்கவில்லை.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dd56c86e-2b84-45ab-90f5-e47b03a4b0c9/26-6a7c055837cfd.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-12T05:26:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிளாமர் லுக்கில் நடிகை ரைசா வில்சன் ரீசெண்ட் போட்டோஸ்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/actress-raiza-wilson-recent-photos-1786512241"></link>
            <id>https://viduppu.com/article/actress-raiza-wilson-recent-photos-1786512241</id>
            <summary type="text">ரைசா வில்சன்கன்னட சினிமாவில் மாடலிங் மூலம் தனது சினிமா பயணத்தை துவங்கியவர் தான் ரைசா வில்சன். 

அந்த துறையில் பணிபுரிந்துகொண்டிருந்தபோதே தமிழ் பக்கம...</summary>
            <content type="html"><![CDATA[<h2>ரைசா வில்சன்</h2><p>கன்னட சினிமாவில் மாடலிங் மூலம் தனது சினிமா பயணத்தை துவங்கியவர் தான் ரைசா வில்சன். 

அந்த துறையில் பணிபுரிந்துகொண்டிருந்தபோதே தமிழ் பக்கம் வந்தவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மக்களின் கவனம் பெற்றார். </p><p>அந்நிகழ்ச்சி முடிந்த கையோடு ஹரிஷ் கல்யாணுடன் இணைந்து ஒரு காதல் திரைப்படம் நடித்தார்.

அப்படம் வெற்றி என்றாலும் அதன்பின் ரைசா நடித்த படங்கள் அவ்வளவாக வெற்றிப்பெறவில்லை.
</p><p>
ரைசா வில்சன் இன்று தனது இன்ஸ்டாவில் மிகவும் கவர்ச்சியான உடை அணிந்து போட்டோ ஷுட் நடத்தியுள்ளார். இதோ அந்த போட்டோஸ்..</p>]]></content>
            <updated>2026-08-12T05:23:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ட்ரம்ப்பிற்கு எதிராக நெதன்யாகு எடுத்துள்ள அதிரடி முடிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/netanyahu-s-bold-move-against-trump-for-gaza-1786512036"></link>
            <id>https://canadamirror.com/article/netanyahu-s-bold-move-against-trump-for-gaza-1786512036</id>
            <summary type="text">இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, தனது உள்நாட்டு அரசியல் எதிர்காலத்தைப் பாதுகாத்துக் கொள்வதற்காக டொனால்ட் ட்ரம்ப்பை எதிர்க்கத் தயாராக இருப்பதாக ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, தனது உள்நாட்டு அரசியல் எதிர்காலத்தைப் பாதுகாத்துக் கொள்வதற்காக டொனால்ட் ட்ரம்ப்பை எதிர்க்கத் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளமை உகல நாடுகளில் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><p>இத் தகவலை சவூதி அரேபியாவுக்கான முன்னாள் அமெரிக்கத் தூதரும் இஸ்ரேலுக்கான அமெரிக்கத் தூதரகத்தின் சார்ஜ் டி அஃபேர்ஸாகப் பணியாற்றியவருமான மைக்கேல் ராட்னி தெரிவித்துள்ளார்.</p><p>ட்ரம்ப்பிடமிருந்து எத்தகைய எதிர்வினை வந்தாலும் அதை எதிர்கொள்வதை விட, அத்திட்டத்தைப் பகிரங்கமாக நிராகரிப்பதே தனக்கு நல்லது என்று அவர் கணக்கிடுகிறார் என நான் நினைக்கிறேன் என்று ராட்னி தெரிவித்துள்ளார்.</p><p>இது முதன்மையாக அடுத்த சில மாதங்களில் வரவுள்ள நெதன்யாகுவின் தேர்தல் வாய்ப்புகள் பற்றியது என்று அவர் மேலும் கூறினார்.</p><p>ட்ரம்ப்புடன் அவருக்குள்ள உறவு எப்படியிருந்தது அல்லது இந்தத் திட்டத்தின் சில அம்சங்களை அவர் எந்த அளவுக்கு ஏற்றுக்கொள்வார் என்பதெல்லாம் இரண்டாம் பட்சமான விடயங்கள் என்றும் தனது வாக்காளர்களுக்கு அவர் பொதுவெளியில் என்ன சொல்கிறார் என்பதுதான் அவருக்கு இப்போது முக்கியம் என்றும் ராட்னி தெரிவித்துள்ளார்.</p><p><br></p>]]></content>
            <updated>2026-08-12T05:20:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மன்னர் சார்லஸ் இறந்துவிட்டதாக வெளியான அறிவிப்பு: பணியாளரின் ஆர்வத்தால் உருவான குழப்பம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/uk-radio-falsely-announced-king-charles-death-1786510321"></link>
            <id>https://news.lankasri.com/article/uk-radio-falsely-announced-king-charles-death-1786510321</id>
            <summary type="text">மே மாதத்தில், தனியார் வானொலி ஒன்று மன்னர் சார்லஸ் இறந்துவிட்டதாக வெளியிட்ட அறிவிப்பு, பணியாளர் ஒருவரின் ஆர்வத்தால் ஏற்பட்ட தவறு என விளக்கமளிக்கப்பட்டு...</summary>
            <content type="html"><![CDATA[<p>மே மாதத்தில், தனியார் வானொலி ஒன்று மன்னர் சார்லஸ் இறந்துவிட்டதாக வெளியிட்ட அறிவிப்பு, பணியாளர் ஒருவரின் ஆர்வத்தால் ஏற்பட்ட தவறு என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
</p><p>


இங்கிலாந்தை மையமாகக் கொண்டு இயங்கிவரும் தனியார் வானொலி, ரேடியோ கரோலின்.
</p><p>
மே மாதம் 19ஆம் திகதி, வானொலியில் வழக்கம்போல பாடல்கள் ஒலிபரப்பாகிக்கொண்டிருந்த நிலையில், திடீரென நிகழ்ச்சிகள் நிறுத்தப்பட்டன.</p><h3>

மன்னர் சார்லஸ் இறந்துவிட்டதாக வெளியான அறிவிப்பு
</h3><p>
அதைத் தொடர்ந்து, மன்னர் சார்லஸ் மரணடைந்து விட்டதால், நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாக, நிகழ்ச்சியைக் கேட்டுக்கொண்டிருந்தவர்கள் குழப்பமடைந்துள்ளார்கள்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/16b3a2a2-594f-464b-be81-84730efa84a6/26-6a7bfbf372fed.webp' /></p><p>
குழப்பத்தை அதிகரிக்கும் வகையில், தேசிய கீதமும் ஒலிக்கச் செய்யப்பட்டுள்ளது.
</p><p> 
பின்னர் மீண்டும் ஒரு முறை மன்னர் சார்லஸ் மரணமடைந்ததாக அறிவிக்கப்பட, 16 நிமிடங்களுக்கு நிகழ்ச்சிகள் நிறுத்தப்பட்டு அமைதி நிலவியுள்ளது.&nbsp;</p><p></p><p>
இந்நிலையில், அரை மணி நேரத்துக்குப் பின், மீண்டும் அறிவிப்பொன்றை வெளியிட்ட வானொலி அறிவிப்பாளர், மன்னர் மரணமடைந்துவிட்டதாக தவறுதலாக அறிவிப்பு வெளியானதாகக் கூறி, மன்னிப்புக் கேட்டுக்கொண்டுள்ளார்.
</p><h3>
நடந்தது என்ன?
</h3><p>
அதாவது, எல்லா பிரித்தானிய ஊடகங்களுமே, மன்னரின் மரணம் தொடர்பான ஒரு செய்தியை தயாராக வைத்திருக்குமாம்.
</p><p>
வானொலி நிலையத்தில் கணினி பராமரிப்புப் பணிக்காக வந்த ஒரு பணியாளர், கணினியில் மன்னர் மரணம் தொடர்புடைய மூன்று கோப்புகள் இருப்பதைக் கவனித்துள்ளார்.
</p><p>
அதில் என்ன உள்ளது என்பதை அறியும் ஆர்வத்தில், அந்த கோப்புகளை ஒலிக்கச் செய்துள்ளார் அந்த பணியாளர்.
</p><p>
விடயம் என்னவென்றால், அப்போது ஒலிபரப்பாகிக்கொண்டிருந்த பாடல் நிகழ்ச்சி, வேறொரு இடத்திலிருந்து ஒலிபரப்பாகிக்கொண்டிருந்திருக்கிறது.</p><p>

அப்போது, தொலைபேசியில் வாசகர் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர், வானொலி நிலையத்தில் என்ன நடக்கிறது என்று தெரியாமலே, பாடல் நிகழ்ச்சியை நிறுத்திவிட்டு, மன்னர் குறித்து வந்த செய்தியை ஒலிபரப்பியுள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/56ceb0cb-fee7-44e8-b144-43b75c710c29/26-6a7bfbf2c1a4e.webp' /></p><p>
இதற்கிடையில், அந்த பராமரிப்புப் பணியாளர் தான் தவறு செய்துவிட்டது தெரியவந்ததால், அங்கிருந்து ஓட்டம் பிடித்துள்ளார்.
</p><p>
நிகழ்ச்சியை வழங்குபவர் வானொலி நிலையத்தை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, அங்குள்ள நிலைய பொறியாளரிடம் விசாரிக்க, அவர் அந்த பராமரிப்புப் பணியாளர் செய்த தவறு குறித்து கூறியுள்ளார்.</p><p>

தவறை உணர்ந்த நிகழ்ச்சி தொகுப்பாளர், வாசகர்களிடம் மன்னர் குறித்து வெளியான தவறான செய்திக்காக மன்னிப்புக் கேட்டுக்கொண்டுள்ளார். ஆனால், அதற்குள் அரை மணி நேரம் கடந்துவிட்டிருக்கிறது.
</p><h3>
ஒழுங்குமுறை அமைப்புக்கு வந்த புகார்கள்
</h3><p>
இந்நிலையில், வானொலி, தொலைக்காட்சி முதலான தகவல் தொடர்பு அமைப்புகள் தொடர்பில் நடவடிக்கைகள் எடுக்கும் ஒழுங்குமுறை அமைப்பான Ofcom என்னும் அமைப்புக்கு இந்த தவறு தொடர்பில் புகார்கள் வர, அந்த அமைப்பு விசாரணை ஒன்றைத் துவக்கியுள்ளது.</p><p>

விசாரணையின் முடிவுகள், ரேடியோ கரோலின் வானொலி, இரண்டு விதி மீறல்களில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளன.
</p><p>
துல்லியமான, பாரபட்சமற்ற தகவல்களை வெளியிடுதல் மற்றும் தவறு நிகழ்ந்தால் உடனடியாக அதை திருத்திக்கொண்டு அது குறித்து விளக்கமளித்தல் என இரண்டு விதிகளை ரேடியோ கரோலின் வானொலி மீறியுள்ளதாக Ofcom தெரிவித்துள்ளது.
</p><h3>
என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன?</h3><p>

தவறு செய்த பராமரிப்புப் பணியாளர் உடனடியாக வரவழைக்கப்பட்டு கண்டிக்கப்பட்டதாக வானொலி நிலையம் தெரிவித்துள்ளதுடன், அவர் மன்னிப்புக் கோரியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
அத்துடன், மன்னர் மரணம் தொடர்பான கோப்புகள், ஏற்கனவே வைக்கப்பட்டிருந்த கணினியிலிருந்து அகற்றப்பட்டு, தனியாக ஒரு ஹார்ட் ட்ரைவுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், அந்த கோப்புகளை பயன்படுத்துதல் தொடர்பில் பணியாளர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் வானொலி நிலையம் தெரிவித்துள்ளது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-12T05:20:14+00:00</updated>
        </entry>
    </feed>
