<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-08-23T16:35:58+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[8 வருட இரகசிய சேமிப்பு ; ஒரே இரவில் எலியால் நேர்ந்த விபரீதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/8-years-secret-storage-overnigh-disaste-caused-rat-1787478493"></link>
            <id>https://jvpnews.com/article/8-years-secret-storage-overnigh-disaste-caused-rat-1787478493</id>
            <summary type="text">இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில், நகை வாங்குவதற்காக குடும்பப் பெண் ஒருவர் 8 ஆண்டுகளாகச் சிறுகச் சிறுகச் சேமித்து வைத்த பணத்தை எலிகள் கடித்துச் ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில், நகை வாங்குவதற்காக குடும்பப் பெண் ஒருவர் 8 ஆண்டுகளாகச் சிறுகச் சிறுகச் சேமித்து வைத்த பணத்தை எலிகள் கடித்துச் சிதைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1b679495-fdb4-4d5e-9c2f-32a55de5a922/26-6a8ac1dee058c.webp' /></p><p>

கோண்டா மாவட்டத்தைச் சேர்ந்த குடும்பப் பெண் ஒருவர், தங்க நகை வாங்க வேண்டும் என்ற நோக்கில் தனது கணவருக்குத் தெரியாமல் கடந்த 8 ஆண்டுகளாக ஒரு பெட்டியில் இரகசியமாகப் பணத்தைச் சேமித்து வந்துள்ளார்.
</p><p>
சேமிப்புத் தொகை 12 இலட்சம் ரூபாயை எட்டிய நிலையில், நகை வாங்குவதற்காக நேற்று அந்தப் பெட்டியைத் திறந்து பார்த்துள்ளார்.
</p><p>
அப்போது, பெட்டிக்குள் இருந்த பணத்தாள்கள் அனைத்தும் எலிகளால் கடித்து சிதைந்திருந்ததைக் கண்டு அவர் பேரதிர்ச்சியடைந்தார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-23T16:32:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[உரிமமின்றி மானை வேட்டையாடிய கனேடியருக்கு அபராதம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/illegal-moose-harvest-leads-to-5k-fine-hunting-1787502196"></link>
            <id>https://canadamirror.com/article/illegal-moose-harvest-leads-to-5k-fine-hunting-1787502196</id>
            <summary type="text">கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தைச் சேர்ந்த மார்க் ஜோடோயின் என்பவர், முறையான உரிமமின்றி &#039;மூஸ்&#039; வகை மானை வேட்டையாடிய குற்றத்திற்காக 5,000 டொலர் அபராதமும், ஒ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தைச் சேர்ந்த மார்க் ஜோடோயின் என்பவர், முறையான உரிமமின்றி 'மூஸ்' வகை மானை வேட்டையாடிய குற்றத்திற்காக 5,000 டொலர் அபராதமும், ஒரு ஆண்டு வேட்டையாடத் தடையும் விதிக்கப்பட்டுத் தண்டிக்கப்பட்டுள்ளார்.
</p><p>அக்டோபர் 25, 2024 அன்று மாடாவா பகுதிக்கு அருகில் உள்ள முகாம் ஒன்றில் பாதுகாப்புக் அதிகாரிகள் சோதனை நடத்தியபோது, சட்டவிரோதமாகச் சுடப்பட்டுத் தொங்கவிடப்பட்டிருந்த ஆண் மூஸ் மானின் உடலைக் கண்டறிந்தனர்.
</p><p>விசாரணையில் ஜோடோயினைக் கண்டறிந்த அதிகாரிகள், அவரிடம் அந்த மானின் தலை இருப்பதைக் கண்டுபிடித்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a081c694-94be-4407-b6ee-67073228df6b/26-6a8b1e7645b80.webp' /></p><p> </p><p>ஆரம்பத்தில் மான் கிடைத்தது குறித்து முரணான தகவல்களைக் கூறிய அவர், பின்னர் அதைத் தானே வேட்டையாடியதாக ஒப்புக்கொண்டார்.
</p><p>வேட்டையாடுவதற்கான உரிமையைக் கோர ஒரு அமைப்பின் உறுப்பினர் அட்டையை அவர் காண்பித்தார். </p><p>
ஆனால், ஒன்டாரியோ சட்டப்படி வேட்டையாடுவதற்கான மரபுவழி உரிமையை நிரூபிக்க அந்த அட்டை போதுமானது அல்ல என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
</p><p>முறையான வேட்டை உரிமம் மற்றும் டேக் இல்லாததால், உரிமமின்றி பெரிய விலங்கை வேட்டையாடிய குற்றத்தை ஜோடோயின் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார்.</p><p> 
இதைத் தொடர்ந்து ஏப்ரல் 23, 2026 அன்று நார்த் பே நீதிமன்றத்தில் அவருக்கு அபராதமும் வேட்டைத் தடையும் விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-23T16:27:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[அவுஸ்திரேலியாவில் பாலூட்டி விலங்கிற்கு பரவிய ஆபத்தான பறவைக் காய்ச்சல்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/australia-confirms-first-h5n1-bird-flu-case-1787501196"></link>
            <id>https://canadamirror.com/article/australia-confirms-first-h5n1-bird-flu-case-1787501196</id>
            <summary type="text">அவுஸ்திரேலியாவில் முதன்முறையாக பாலூட்டி விலங்கு ஒன்றுக்கு H5N1 பறவைக் காய்ச்சல் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
தெற்கு அவுஸ்திரேலியா மாநிலத்தில் உள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>அவுஸ்திரேலியாவில் முதன்முறையாக பாலூட்டி விலங்கு ஒன்றுக்கு H5N1 பறவைக் காய்ச்சல் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. </p><p>
தெற்கு அவுஸ்திரேலியா மாநிலத்தில் உள்ள பீச்போர்ட் கடலோரப் பகுதியில் இறந்து கிடந்த நீண்ட மூக்கு ஃபர் சீல் என்ற கடல் பாலூட்டி ஒன்றின் உடலில் இந்த கொடிய வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது.</p><p>
ஜூன் மாதம் அவுஸ்திரேலியாவில் பரவத் தொடங்கிய இந்த வைரஸ், முதன்முதலில் இடம்பெயரும் கடல் பறவைகளிடம் கண்டறியப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f44e2252-654c-48d6-a124-e13aa79a443b/26-6a8b1a8e3dcba.webp' /></p><p> </p><p>தொடர்ந்து உள்ளூர் பறவைகளுக்கும் பரவிய நிலையில், தற்போது கடல் பாலூட்டியான சீல் வரை பரவியுள்ளது.</p><p>
இறந்து கிடந்த சீல் உடலின் வெளிப்புறத்தில் எந்தக் காயங்களும் இல்லை எனவும், பிற கடல் பாலூட்டிகள் இதனால் பாதிக்கப்பட்டது போல் உடனடியாகத் தெரியவில்லை என்றும் அவுஸ்திரேலிய விவசாயத் துறை அமைச்சர் ஜூலி காலின்ஸ் தெரிவித்துள்ளார்.
</p><p>பாறைப் பகுதிகளில் கடல் பறவைகளுக்கு மிக அருகில் வாழும் இயல்புடையதால், சீல் போன்ற விலங்குகளுக்கு இந்த வைரஸ் மிக எளிதாகப் பரவும் வாய்ப்புள்ளதாகத் தலைமை கால்நடை அதிகாரி ஸ்கை ஃப்ரூகன் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>கடந்த 2025-ஆம் ஆண்டின் இறுதியில் ஆஸ்திரேலியாவின் சப்-அண்டார்டிக் தீவான ஹெர்ட் தீவில் இந்த வைரஸ் பரவியதில் 13,000-க்கும் மேற்பட்ட குட்டி சீல்கள் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p>
அவுஸ்திரேலியா முழுவதும் இதுவரை 297 வழக்குகள் பதிவாகியுள்ள போதிலும், நாட்டின் கோழிப் பண்ணைகளிலோ அல்லது விவசாயத் துறையிலோ இந்த வைரஸ் இதுவரை கண்டறியப்படவில்லை என ஃபெடரல் அரசு அறிவித்துள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-23T16:26:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரயிலுடன் மோதிய முச்சக்கரவண்டி ; சாரதிக்கு நேர்ந்த கதி ; போராட்டத்தில் குதித்த மக்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/tuk-tuk-collides-with-train-driver-dies-1787502321"></link>
            <id>https://jvpnews.com/article/tuk-tuk-collides-with-train-driver-dies-1787502321</id>
            <summary type="text">இன்று (23) பிற்பகல் கடற்கரை வீதி புகையிரதப் பாதையின் அலுத்கம,விகாரை ஒன்றுக்கு அருகில் உள்ள புகையிரதக் கடவையில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">இன்று (23) பிற்பகல் கடற்கரை வீதி புகையிரதப் பாதையின் அலுத்கம,விகாரை ஒன்றுக்கு அருகில் உள்ள புகையிரதக் கடவையில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், நபரொருவர் பலத்த காயமடைந்துள்ளார். </p><p style="text-align: justify; ">

மருதானை புகையிரத நிலையத்திலிருந்து புறப்பட்ட 'சாகரிகா' புகையிரதத்துடன், முச்சக்கர வண்டி ஒன்று மோதுண்டதிலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/19739fdc-0de4-404b-ac92-d1776308a9fe/26-6a8b1ef3caec5.webp' /></p><h2 style="text-align: justify; ">போராட்டத்தில் மக்கள்</h2><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

விபத்தில் முச்சக்கர வண்டியின் சாரதி உயிரிழந்துள்ளதுடன், காயமடைந்த மற்றைய நபர் சிகிச்சைக்காக நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவிக்கின்றனர். </p><p style="text-align: justify; ">

குறித்த புகையிரதக் கடவையில் சமிக்ஞைகள் மற்றும் எச்சரிக்கை ஒலிகள் மட்டுமே உள்ளன என்றும், பாதுகாப்பு கடவை இல்லாத காரணத்தினால் தொடர்ச்சியாக இவ்வாறான விபத்துக்கள் இடம்பெறுவதாகவும், அதிகாரிகள் அதற்கு எவ்வித தீர்வும் வழங்கவில்லை எனவும் குற்றம் சாட்டி பிரதேச மக்கள் புகையிரதப் பாதையை மறித்துப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். </p><p style="text-align: justify; ">

இந்த எதிர்ப்பு நடவடிக்கை காரணமாகக் கடற்கரை வீதித் புகையிரதப் பாதையின் போக்குவரத்திற்குப் பாரிய இடையூறு ஏற்பட்டது.</p><p style="text-align: justify; "> 

பின்னர் பொலிஸார் தலையிட்டு, புகையிரதத் திணைக்கள அதிகாரிகளுடன் தொடர்புகொண்டு தேவையான தீர்வுகளை வழங்குவதாக அளித்த வாக்குறுதியின் பேரில் பிரதேச மக்கள் போராட்டத்தைக் கைவிட்டதுடன், தற்போது அந்தப் பாதையில் புகையிரதப் போக்குவரத்து வழமைக்கு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.&nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-08-23T16:25:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீதிபதியின் வருகை நுழைவாயிலின் இரகசியமாக நுழைந்த ஹேமரத்தன தேரர்! ஆரம்பமாகிறது அடுத்த விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/pallegama-hemarathana-thero-in-new-trouble-1787496981"></link>
            <id>https://ibctamil.com/article/pallegama-hemarathana-thero-in-new-trouble-1787496981</id>
            <summary type="text">அனுராதபுரத்தின் முன்னாள் அட்டமஸ்தானாதிபதி பல்லேகம ஹேமரத்தன தேரர், மேல் நீதிமன்ற வளாகத்திற்குள் நீதிபதி நுழையும் நுழைவாயிலின் ஊடாக எவ்வாறு நீதிமன்ற வளா...</summary>
            <content type="html"><![CDATA[<p>அனுராதபுரத்தின் முன்னாள் அட்டமஸ்தானாதிபதி பல்லேகம ஹேமரத்தன தேரர், மேல் நீதிமன்ற வளாகத்திற்குள் நீதிபதி நுழையும் நுழைவாயிலின் ஊடாக எவ்வாறு நீதிமன்ற வளாகத்திற்குள் வந்தார் என்பது குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.</p><p>

சிறுமி ஒருவரை தகாத செயற்பாட்டுக்கு உட்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சந்தேகநபர் எவ்வாறு கடந்த 21ஆம் திகதி நீமிமன்றுக்கு வருகைத்தந்தார் என்பது தொடர்பான விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது. </p><p>

இது குறித்து அனுராதபுர பிரதான நீதவான் சியபத் சசிந்து விக்ரமதன, அனுராதபுர மேல் நீதிமன்ற வளாகத்தின் காவல்துறை பாதுகாப்புப் பிரிவின் பொறுப்பதிகாரிக்கு உத்தரவிட்டுள்ளார்.</p><p></p><h2>ஹேமரத்தன தேரருக்கு எதிராக&nbsp;&nbsp;வழக்கு </h2><p><span style="color: inherit;">தகாத செயற்பாட்டு சம்பவம் தொடர்பில் பல்லேகம ஹேமரத்தன தேரருக்கு எதிராக அனுராதபுர பிரதான நீதவான் நீதிமன்றில் உள்ள வழக்கு கடந்த 21ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.</span></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/13584407-d1c1-4539-902a-b1e3d07813c3/26-6a8b0a1734ded.webp' /></p><p>இதன்போது, சட்டத்தரணி சானக அபேவிக்ரம நீதிமன்றில் முன்வைத்த விசேட கருத்துக்களை கருத்திற்கொண்டே பிரதான நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-23T16:10:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹபரனையில் காட்டுத்தீ ; 100 ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பு நாசம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/habarana-wildfire-destroys-over-100-acres-1787500643"></link>
            <id>https://jvpnews.com/article/habarana-wildfire-destroys-over-100-acres-1787500643</id>
            <summary type="text">ஹபரனை- ஹுருளு சுற்றாடல் பூங்கா காப்பகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (23) பிற்பகல் 2.30 மணியளவில் ஏற்பட்ட திடீர் காட்டுத்தீ காரணமாக 100 ஏக்கருக்கும் அதிக...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">ஹபரனை- ஹுருளு சுற்றாடல் பூங்கா காப்பகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (23) பிற்பகல் 2.30 மணியளவில் ஏற்பட்ட திடீர் காட்டுத்தீ காரணமாக 100 ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பு எரிந்து சாம்பலாகியுள்ளது.</p><p style="text-align: justify; ">

காட்டிற்குள் சட்டவிரோதமாக நுழைந்த வேட்டைக்காரர்களே தீ மூட்டியிருக்கலாம் என வனப்பாதுகாப்பு அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/51c4e804-e436-474c-a652-c544b798e09a/26-6a8b186620780.webp' /></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
வனப்பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் மற்றும் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் இணைந்து தீயைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக ஹபரனை பொலிஸார் தெரிவித்தனர்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
மேலும், சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படாத நிலையில், ஹபரணை வனப்பாதுகாப்பு அதிகாரிகளும் ஹபரனை பொலிஸாரும் விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-23T15:57:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[கயல் சீரியல் அடுத்த வார ப்ரோமோ! தீபிகாவிடம் இருந்து தப்பிய கயல் செய்த அதிரடி விஷயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/kayal-serial-next-week-promo-kayal-beats-deepika-1787500052"></link>
            <id>https://cineulagam.com/article/kayal-serial-next-week-promo-kayal-beats-deepika-1787500052</id>
            <summary type="text">சன் டிவியில் கயல் சீரியலில் எழிலை எப்படியாவது கண்டுபிடித்து விட வேண்டும் என கயல் தீவிரமாக போராடி வருகிறார்.இதே ஸ்டோரி லைனை வைத்து இன்னும் எத்தனை மாதங்...</summary>
            <content type="html"><![CDATA[<p>சன் டிவியில் கயல் சீரியலில் எழிலை எப்படியாவது கண்டுபிடித்து விட வேண்டும் என கயல் தீவிரமாக போராடி வருகிறார்.</p><p>இதே ஸ்டோரி லைனை வைத்து இன்னும் எத்தனை மாதங்கள் கதை செல்லும் என ஷோவின் ரசிகர்கள் சலிப்படையும் அளவுக்கு தான் கதை சென்று கொண்டிருக்கிறது.
</p><p>எழிலாக நடித்து வரும் சஞ்சீவ் சீரியலில் இருந்து விலகிவிட்டார் என ஒரு தகவல் ஏற்கனவே வந்தது குறிப்பிடத்தக்கது.
</p><p>இது ஒரு புறம் இருக்க தற்போது அடுத்த வார ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் என்ன நடந்தது என பார்க்கலாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c914a3b3-90a1-42f4-a1fb-b61cf720fff4/26-6a8b161653411.webp' /></p><p>
</p><h2>தப்பிய கயல்
</h2><p>கயலை எரித்து கொலை செய்ய வேண்டும் என தீபிகா முயற்சி செய்கிறார். ஆனால் அந்த நேரம் பார்த்து மழை வந்து அவரை காப்பாற்றி விடுகிறது. கயல் தற்போது எழுந்து கடும் கோபத்துடன் ரவுடிகளை கட்டையால் அடித்து துவைக்கிறார். மேலும் எழில் எங்கே என தீபிகாவையும் அடித்து கேட்கிறார் அவர். </p><p>
இப்போதாவது தெரிய வருமா? ப்ரோமோவை பாருங்கள்&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/XR0yuT5Xk-Y" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-08-23T15:48:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[செப்டம்பரில் உருவாகும் ராஜயோகங்கள்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பொற்காலமாக அமையப் போகுது!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/september-matha-rasipalan-zodics-who-get-luck-1787497482"></link>
            <id>https://manithan.com/article/september-matha-rasipalan-zodics-who-get-luck-1787497482</id>
            <summary type="text">ஜோதிடத்தின் படி, 2026 செப்டம்பர் மாதம் முக்கியமான கிரக மாற்றங்களால் சிறப்பாக அமையப் போகிறது. செப்டம்பர் 2ஆம் தேதி சுக்கிரன் தனது சொந்த ராசியான துலாமில...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜோதிடத்தின் படி, 2026 செப்டம்பர் மாதம் முக்கியமான கிரக மாற்றங்களால் சிறப்பாக அமையப் போகிறது. செப்டம்பர் 2ஆம் தேதி சுக்கிரன் தனது சொந்த ராசியான துலாமில் நுழைவதால் மாளவ்ய ராஜயோகம் உருவாகிறது. </p><p>தொடர்ந்து, செப்டம்பர் 7ஆம் தேதி புதன் கன்னியில் நுழைந்து பத்ரா ராஜயோகத்தை உருவாக்குகிறார்.

அதன் பின்னர், செப்டம்பர் 17ஆம் தேதி சூரியன் கன்னியில் நுழைந்து புதனுடன் இணைவதால் புதாதித்ய ராஜயோகம் உருவாகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/de3fd9dd-f557-4f3c-8cf7-a4c906f3c035/26-6a8b13c273a46.webp' /></p><p> செப்டம்பர் 18ஆம் தேதி செவ்வாய் கடகத்தில் நுழைந்து குருவுடன் சேர்ந்து பயணிக்கிறார். இந்த கிரக மாற்றங்கள் 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும், 3 ராசிக்காரர்களுக்கு செப்டம்பர் மாதம் குறிப்பாக அதிர்ஷ்டமானதாக இருக்கப் போகிறது.</p><p> தொழில், நிதி நிலை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் நல்ல முன்னேற்றங்களைக் காணும் வாய்ப்பு உள்ளது. அந்த அதிர்ஷ்ட ராசிகள் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.</p><p></p><h2>மேஷம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7d2e34fa-3aa3-4141-9afa-7eb95fb05671/26-6a8b13c3415b5.webp' /></p><p>
மேஷ ராசிக்காரர்களுக்கு செப்டம்பர் மாதம் சிறப்பாக அமையும். நிதி நிலை மேம்படுவதுடன், கடின உழைப்புக்கான நல்ல பலனும் கிடைக்கும். </p><p>பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. வியாபாரிகளுக்கு லாபமும், தொழிலை விரிவுபடுத்தும் வாய்ப்பும் கிடைக்கலாம். மொத்தத்தில் புதிய பொறுப்புகளும் வாய்ப்புகளும் தேடி வரும்.
</p><h2>
கன்னி</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/56f810a2-6829-4871-a3dc-f442587d6c82/26-6a8b13c3e63f3.webp' /></p><h2>
</h2><p>கன்னி ராசிக்காரர்களுக்கு செப்டம்பர் மாதம் வெற்றிகரமானதாக இருக்கும். வேலை, தொழில் என அனைத்திலும் உழைப்புக்கேற்ற பலன் கிடைக்கும். </p><p>முதலீடுகளில் லாபம் கிடைக்கவும், வியாபாரத்தை விரிவுபடுத்தவும் வாய்ப்புள்ளது. பரம்பரை சொத்து தொடர்பான பிரச்சனைகள் தீர்ந்து சாதகமான முடிவு கிடைக்கலாம். நிதி நிலை மேம்படுவதுடன், திட்டமிட்ட காரியங்களும் வெற்றியடையும்.</p><h2>

துலாம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/98ae87e0-5a0b-4623-ab71-fccfb014a93b/26-6a8b13c49a996.webp' /></p><p></p><h2>
</h2><p>துலாம் ராசிக்காரர்களுக்கு செப்டம்பர் மாதம் அதிர்ஷ்டமானதாக அமையும். தொழில், வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைப்பதுடன், சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கலாம். </p><p>புதிய வருமான வாய்ப்புகள் உருவாகும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்க வாய்ப்புள்ளது. இந்த மாத முதலீடுகளும் நல்ல பலனைத் தரக்கூடும். மொத்தத்தில் நிதி நிலை சிறப்பாக இருக்கும்.</p><p><b>இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;&nbsp;</b></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW&nbsp;</a></u></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-23T15:41:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[3 லட்சம் படை வீரர்களை கூடுதலாக அனுப்ப ரஷ்யா திட்டம் - ஜெலென்ஸ்கி எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/zelensky-warns-russia-mobilizing-300000-troops-1787499817"></link>
            <id>https://news.lankasri.com/article/zelensky-warns-russia-mobilizing-300000-troops-1787499817</id>
            <summary type="text">Zelensky warns Russia mobilizing 3,00,000 troops to Ukraine war: உக்ரைன் போரில் ரஷ்யாவின் அடுத்த நகரவே குறித்து ஜெலென்ஸ்கி எச்சரித்துள்ளார்.

3 லட்ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>Zelensky warns Russia mobilizing 3,00,000 troops to Ukraine war: உக்ரைன் போரில் ரஷ்யாவின் அடுத்த நகரவே குறித்து ஜெலென்ஸ்கி எச்சரித்துள்ளார்.</p><h2>

3 லட்சம் படை&nbsp;வீரர்கள்</h2><p>உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, ரஷ்யா இந்த ஆண்டு இறுதிக்குள் குறைந்தது 3 லட்சம் படையினரை கூடுதலாக உக்ரைன் போருக்கு அனுப்பும் வாய்ப்பு இருப்பதாக எச்சரித்துள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/06b85222-1961-4256-a1f5-de4c5c15dfe9/26-6a8b152aeb33f.webp' /></p><p>அவர் கூறியதாவது, “ரஷ்யா ஏற்கனவே 2,67,000 படைவீரர்களை இழந்துள்ளது. அதில் 1,55,000 பேர் உயிரிழந்துள்ளனர். இருந்தாலும், அவர்கள் டொனெட்ஸ்க் பகுதியை முழுமையாக கைப்பற்ற முயற்சி செய்கின்றனர். தேர்தலுக்குப் பிறகு புதிய படையினரை அனுப்புவார்கள்” என்று கூறியுள்ளார்.</p><h2> ஜெலென்ஸ்கி&nbsp;எச்சரிக்கை</h2><p>ஜெலென்ஸ்கி, “இந்த 3 லட்சம் புதிய படைவீரர்களையும் நாங்கள் அழித்துவிடுவோம். டொனெட்ஸ்க் பகுதியை முழுமையாக கைப்பற்ற ரஷ்யாவால் முடியாது” என்று தெரிவித்துள்ளார்.
</p><p>
தற்போது உக்ரைன் படைகள் டொனெட்ஸ்க் பகுதியின் 20 சதவீத இடங்களை, குறிப்பாக ஸ்லாவியன்ஸ்க் மற்றும் கிரமடோர்ஸ்க் போன்ற தொழிற்சாலை நகரங்களை பாதுகாத்து வருகின்றன.

மேலும், ரஷ்யா கார்கிவ் மற்றும் சுமி பகுதிகளிலும் தாக்குதல் நடத்தும் வாய்ப்பு இருப்பதாக அவர் கூறினார்.
</p><p></p><p>வான்வழி பாதுகாப்பு குறித்து பேசிய அவர், “2023-இல் 675 Patriot ஏவுகணைகள் கிடைத்தன. ஆனால் இந்த ஆண்டு 264 மட்டுமே கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது அமெரிக்காவின் முடிவுகளால் பாதிக்கப்படுகிறது” என்றார்.
</p><p>
அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், உக்ரைன் Patriot ஏவுகணைகளை உரிமம் பெற்று தயாரிக்கலாம் என்று கூறியிருந்தாலும், பின்னர் அந்த யோசனையை வாபஸ் பெற்றதாக ஜெலென்ஸ்கி தெரிவித்தார்.
</p><p>
ஐரோப்பிய நாடுகளிடமிருந்தும் Aster ஏவுகணைகள் குறைவாக கிடைக்கின்றன. இதனால், உக்ரைன் தனது சொந்த ட்ரோன்கள் மற்றும் க்ரூஸ் ஏவுகணைகளை உருவாக்கி, ரஷ்யாவின் பல்வேறு இலக்குகளை தாக்கி வருகிறது.</p><p>

ஜெலென்ஸ்கி, “இந்த போருக்கு முடிவு காணும் வாய்ப்பு அடுத்த கோடைக்காலம் வரை உள்ளது. அதற்குப் பிறகு அமெரிக்க தேர்தல் பிரச்சாரம் தொடங்கும்” என்று கூறினார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-23T15:41:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரஷ்யா மேலதிகமாக 300,000 வீரர்களை திரட்டத் திட்டம்: உக்ரைன் ஜனாதிபதி ஸெலென்ஸ்கி எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ukrainian-president-zelensky-warns-1787498711"></link>
            <id>https://tamilwin.com/article/ukrainian-president-zelensky-warns-1787498711</id>
            <summary type="text">ரஷ்யா, உக்ரைன் போருக்காக செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ள நாடாளுமன்றத்
தேர்தலுக்குப் பிறகு மேலதிகமாக 300,000 இராணுவ வீரர்களைத் திரட்டுவதற்குத்
திட்டமிட...</summary>
            <content type="html"><![CDATA[<p>ரஷ்யா, உக்ரைன் போருக்காக செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ள நாடாளுமன்றத்
தேர்தலுக்குப் பிறகு மேலதிகமாக 300,000 இராணுவ வீரர்களைத் திரட்டுவதற்குத்
திட்டமிட்டுள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.</p><p>

செய்தியாளர்களிடம் கருத்துத் தெரிவித்த போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.</p><h2>ஆட்சேர்ப்பு நடவடிக்கை</h2><p> அவர் மேலும் தெரிவிக்கையில், மத்திய நகரங்களைத் தவிர்த்து
ரஷ்யாவின் தொலைதூரப் பிராந்தியங்களைக் குறிவைத்து இந்த ஆட்சேர்ப்பு நடவடிக்கை
முன்னெடுக்கப்படலாம் எனக் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/08f60b3c-3588-4687-9993-c0d5472e8911/26-6a8b1373f3b91.webp' /></p><p>
</p><p>
அத்துடன், ரஷ்யாவின் வான்வழித் தாக்குதல்களை எதிர்கொள்ள உக்ரைனுக்கு ஏவுகணை
எதிர்ப்பு அமைப்புகளின் பற்றாக்குறை நிலவுவதாகவும், நடப்பு ஆண்டில்
பாதுகாப்புச் செலவீனங்களுக்காக 27 பில்லியன் டொலர்கள் நிதிப் பற்றாக்குறை
ஏற்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-23T15:38:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையின் பணவீக்கத்தில் பதிவான அதிகரிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/rise-in-inflation-recorded-in-sri-lanka-1787499138"></link>
            <id>https://jvpnews.com/article/rise-in-inflation-recorded-in-sri-lanka-1787499138</id>
            <summary type="text">இலங்கையின் பணவீக்கம் ஜூலை மாதத்தில் 7.2 சதவீதமாக அதிகரித்துள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தேசிய நுகர்வோர் விலை...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">இலங்கையின் பணவீக்கம் ஜூலை மாதத்தில் 7.2 சதவீதமாக அதிகரித்துள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p style="text-align: justify; ">

தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் அடிப்படையிலான வருடாந்த பணவீக்கம், ஜூன் மாதத்தில் 6.5 சதவீதமாக காணப்பட்ட நிலையில், ஜூலையில் 0.7 சதவீதப் புள்ளிகளால் அதிகரித்துள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/59768d7d-f832-412a-90df-e041a0d1121a/26-6a8b1283f123c.webp' /></p><h2 style="text-align: justify; ">உணவுப் பணவீக்கம்&nbsp;</h2><p>
</p><p style="text-align: justify; ">
ஜூன் மாதத்தில் 3.3 சதவீதமாக இருந்த உணவுப் பணவீக்கம், ஜூலையில் 4.9 சதவீதமாக உயர்ந்துள்ளது.</p><p style="text-align: justify; ">

அதேவேளை, உணவல்லாத பொருட்களுக்கான பணவீக்கம் 9.3 சதவீதத்திலிருந்து 9.2 சதவீதமாக சிறிதளவு குறைந்துள்ளது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
உணவுப் பணவீக்கம் அதிகரித்த போதிலும், ஜூலை மாதத்தில் பதிவான ஒட்டுமொத்த பணவீக்கத்திற்கு உணவல்லாத பொருட்களே பிரதான பங்களிப்பை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-23T15:34:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[இராணுவத் தோல்வியை ஒப்புக்கொள்கிறது அமெரிக்கா! IRGC சுட்டிக்காட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/us-admits-military-defeat-1787496482"></link>
            <id>https://ibctamil.com/article/us-admits-military-defeat-1787496482</id>
            <summary type="text">ஈரானுக்கு எதிரான பொருளாதாரப் போரைத் தீவிரப்படுத்துவோம் என்ற அமெரிக்காவின் அச்சுறுத்தலை, தனது இராணுவத் தோல்வியை மறைமுகமாக ஒப்புக்கொள்வதாக இஸ்லாமியப் பு...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானுக்கு எதிரான பொருளாதாரப் போரைத் தீவிரப்படுத்துவோம் என்ற அமெரிக்காவின் அச்சுறுத்தலை, தனது இராணுவத் தோல்வியை மறைமுகமாக ஒப்புக்கொள்வதாக இஸ்லாமியப் புரட்சிக் காவலர் படையின் (IRGC) செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.</p><p>மேலும், அமெரிக்கா பல தசாப்தங்களாக ஈரானுக்கு எதிராகப் பொருளாதாரப் போரை நடத்தி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.</p><p>ஈரானில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய பிரிகேடியர் ஜெனரல் ஹொசைன் மொஹெப்பி,</p><p></p><h2>இராணுவ நடவடிக்கை</h2><p>“அந்த அறிவிப்பு இராணுவ நடவடிக்கையின் தோல்வியை ஒப்புக்கொள்வதற்குச் சமம். பொருளாதாரப் போர் என்பது ஒன்றும் புதிதல்ல.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cb5b450d-b88d-4d98-9264-41465d586f56/26-6a8b082404394.webp' /></p><p> அமெரிக்கா 47 ஆண்டுகளாக ஈரானின் பொருளாதாரத் துறைகள் மீது தடைகளை விதித்து வருகிறது. </p><p>தற்போதைய இந்த நடவடிக்கை, முதன்மையாகப் பொதுமக்களின் கண்ணோட்டத்தை வடிவமைப்பதையும், அமெரிக்கா&nbsp; மேலோங்கி நிற்கிறது என்ற நம்பிக்கையை உருவாக்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது</p><p>பொருளாதாரப் போர் உட்பட, ஈரானுக்கு எதிரான ஒவ்வொரு விரோத நடவடிக்கைக்குமான செயல்திட்டங்களை ஐ.ஆர்.ஜி.சி தயாரித்துள்ளது.</p><p>எதிரியின் போரினால் ஏற்படும் பாதகமான விளைவுகளை எதிர்கொள்வதற்கான திட்டங்கள் எங்களிடம் உள்ளன. மேலும் நாடுகளுடன் பொருளாதார உறவுகளை எளிதாக ஏற்படுத்திக்கொள்ள முடியும்," என்றும் அவர் கூறியுள்ளார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-23T15:30:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[அடுத்த ஐந்தாண்டுகளில் துறைமுக நகர இலக்கு! அரசாங்கத்தின் விசேட அறிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/port-city-target-government-s-special-report-1787494048"></link>
            <id>https://ibctamil.com/article/port-city-target-government-s-special-report-1787494048</id>
            <summary type="text">கொழும்பு துறைமுக நகரம் 2.1 பில்லியன் அமெரிக்க டொலர் உறுதிசெய்யப்பட்ட முதலீடுகளைப் பெற்றுள்ளது என்றும், அடுத்த ஐந்தாண்டுகளில் மேலும் 4.1 பில்லியன் அமெர...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு துறைமுக நகரம் 2.1 பில்லியன் அமெரிக்க டொலர் உறுதிசெய்யப்பட்ட முதலீடுகளைப் பெற்றுள்ளது என்றும், அடுத்த ஐந்தாண்டுகளில் மேலும் 4.1 பில்லியன் அமெரிக்க டொலர் முதலீடுகளைத் திரட்ட அரசாங்கம் இலக்கு நிர்ணயித்துள்ளது என்றும் கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க தெரிவித்துள்ளார்.</p><p>

 

துறைமுக நகரத்தில் தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் பல முக்கிய வளர்ச்சித் திட்டங்களின் மூலம் இந்த முதலீட்டு இலக்கு ஆதரிக்கப்படும் என்று துணை அமைச்சர் தெரிவித்துள்ளார்.</p><p>

 

இவற்றில் இரண்டு பெரிய அளவிலான குடியிருப்புத் திட்டங்கள், ஒரு நவீன ஹோட்டல் மற்றும் ஒரு மாநாட்டு மையம் ஆகியவை அடங்கும் என அபேசிங்க விவரித்துள்ளார்.</p><p></p><h2>உறுதிசெய்யப்பட்ட பல முதலீடுகல்</h2><p>இது குறித்து அவர் வெளியிட்ட சமூக ஊடக பதிவில்,&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c2138f7b-95ee-462d-af86-6adde411de7b/26-6a8afea3d3643.webp' /></p><p>“பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க, கடந்த வாரம் நடைபெற்ற அவுஸ்திரேலிய முதலீட்டு மாநாட்டில் கொழும்பு துறைமுக நகரம் ஒரு முக்கிய முதலீட்டு வாய்ப்பாக முன்வைக்கப்பட்டது .</p><p>ஏற்கனவே உறுதிசெய்யப்பட்ட பல முதலீடுகளில் முன்னணி சர்வதேச முதலீட்டாளர்கள் ஈடுபட்டுள்ளனர் .</p><p>துறைமுக நகரத்தில் வழங்கப்படும் வரிச் சலுகைகளை சர்வதேச தரத்திற்கு இணையாகக் கொண்டுவரும் நோக்கிலும், அதேவேளையில் முதலீட்டாளர்களை ஈர்க்கும் அதன் கவர்ச்சியைத் தக்கவைத்துக் கொள்ளும் வகையிலும், அரசாங்கம் அதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளது” என அபேசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-23T15:07:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[அவதானம் செலுத்த வேண்டிய மட்டத்திற்கு அதிகரிக்கும் மனித உடலால் உணரப்படும் வெப்பம்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/some-districts-to-remain-extremely-hot-tomorrow-1787495865"></link>
            <id>https://tamilwin.com/article/some-districts-to-remain-extremely-hot-tomorrow-1787495865</id>
            <summary type="text">நாட்டின் பல பகுதிகளுக்கு வெப்பமான வானிலை தொடர்பான எச்சரிக்கை அறிவித்தலை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது. 

இன்றைய தினம் (23.08.2026) வெளியி...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டின் பல பகுதிகளுக்கு வெப்பமான வானிலை தொடர்பான எச்சரிக்கை அறிவித்தலை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.</p><p> 

இன்றைய தினம் (23.08.2026) வெளியிடப்பட்ட இந்த அறிவித்தல் நாளைய தினம் (24.08.2026) பி.ப 4 மணி வரை செல்லுபடியாகும் என அத்திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.</p><h2>எச்சரிக்கை அறிவித்தல்</h2><p> </p><p>

இதற்கமைய, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களுக்கும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு மற்றும் மொனராகலை மாவட்டங்களுக்கும் இந்த எச்சரிக்கை அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ccea5eaf-8411-4068-a61d-6cbf76924809/26-6a8b0a827a770.webp' /></p><p> </p><p>

அப்பகுதிகளின் சில இடங்களில் பகல் வேளையில் மனித உடலால் உணரப்படும் வெப்பம் அல்லது வெப்பச் சுட்டெண் அவதானம் செலுத்தப்பட வேண்டிய மட்டத்திற்கு அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. </p><p>

இதன் காரணமாகப் பொதுமக்கள் இது குறித்து அவதானத்துடன் இருக்குமாறும், வெப்பமான வானிலை நிலைமையிலிருந்து பாதுகாத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-23T14:58:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலக முதலீட்டாளர்களை குறிவைக்கும் இலங்கை - துறைமுக நகரில் குவியும் பில்லியன் டொலர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/tax-reforms-investments-amounting-us-2-1-billion-1787496130"></link>
            <id>https://tamilwin.com/article/tax-reforms-investments-amounting-us-2-1-billion-1787496130</id>
            <summary type="text">புதிய வரி சீர்திருத்தங்களின் பின்னணியில், இதுவரை கொழும்பு துறைமுக நகரில் 2.1 பில்லியன் அமெரிக்க டொலர் முதலீடுகள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தொழில் மற்று...</summary>
            <content type="html"><![CDATA[<p>புதிய வரி சீர்திருத்தங்களின் பின்னணியில், இதுவரை கொழும்பு துறைமுக நகரில் 2.1 பில்லியன் அமெரிக்க டொலர் முதலீடுகள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தொழில் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க தெரிவித்துள்ளார்.</p><p>

அடுத்த 5 ஆண்டுகளில் 4.1 பில்லியன் அமெரிக்க டொலர் முதலீடுகளை பெற்றுக்கொள்வதை இலக்கு வைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><h2>&nbsp;முக்கிய முதலீடு</h2><p>

இந்த இலக்கை அடைவதற்காக தற்போது இரண்டு பாரிய வீடமைப்புத் திட்டங்கள், நவீன ஹோட்டல் ஒன்றின் திட்டம் மற்றும் மாநாட்டு மையம் ஒன்றை அமைக்கும் திட்டம் உள்ளிட்ட பல அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7f63fc0f-a651-44ef-b337-ba24231b023e/26-6a8b09760c105.webp' /></p><p>
தனது சமூக ஊடக கணக்கில் பதிவொன்றை வெளியிட்டு பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.</p><p>

கடந்த வாரம் நடைபெற்ற அவுஸ்திரேலிய முதலீட்டு மாநாட்டில், துறைமுக நகரம் முக்கிய முதலீட்டு வாய்ப்பாக அறிமுகப்படுத்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
தற்போது உறுதி செய்யப்பட்டுள்ள முதலீடுகளில் உலகின் முன்னணி நிறுவனங்கள் மற்றும் முதலீட்டாளர்களின் பல முக்கிய முதலீடுகளும் உள்ளடங்குவதாக பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.</p><h2>&nbsp;புதிய முறை</h2><p>
</p><p>
துறைமுக நகரில் வழங்கப்பட்டு வந்த வரிச் சலுகைகளை சர்வதேச தரங்களுக்கு ஏற்பவும், முதலீட்டாளர்களை ஈர்க்கும் வகையிலும் மாற்றுவதற்கு தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
</p><p>
இதன்படி, முதன்மை முதலீடுகளுக்கு 15 முதல் 23 ஆண்டுகள் வரையிலான வரிச் சலுகைகளும், இரண்டாம் நிலை முதலீடுகளுக்கு 4 ஆண்டுகளுக்கு குறைந்த வரி விகிதமும் வழங்கப்படும் புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9b308c3b-f389-455f-8870-794b8a77cf59/26-6a8b0976be96f.webp' /></p><p>

இந்த முதலீடுகள் அனைத்தும் இலங்கை முதலீட்டு சபை (BOI) ஊடாக கிடைக்கும் முதலீடுகளுக்கு மேலதிகமானவை எனவும் பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.
</p><p>
முதலீட்டாளர்களை ஈர்ப்பதில் வரிச் சலுகைகள் மட்டுமன்றி, நிலைத்தன்மை, நம்பிக்கை, தொடர்பாடல் மற்றும் தெளிவான பொருளாதார நோக்கு ஆகியவையும் முக்கியமானவை எனவும், தற்போதைய அரசாங்கம் இத்தகைய முதலீட்டுக்கு சாதகமான சூழலை உருவாக்கி வருவதாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-23T14:57:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஒரே நாளில் 416 திருமணங்கள் - கேரளா குருவாயூர் கோயிலில் சாதனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/416-weddings-in-one-day-at-guruvayur-1787496383"></link>
            <id>https://news.lankasri.com/article/416-weddings-in-one-day-at-guruvayur-1787496383</id>
            <summary type="text">416 weddings in one day at Guruvayur temple: குருவாயூர் கோயிலில் இன்று 416 திருமணங்கள் நடந்துள்ளன.

கேரளாவின் புகழ்பெற்ற குருவாயூர் ஸ்ரீகிருஷ்ணர் கோ...</summary>
            <content type="html"><![CDATA[<p>416 weddings in one day at Guruvayur temple: குருவாயூர் கோயிலில் இன்று 416 திருமணங்கள் நடந்துள்ளன.
</p><p>
கேரளாவின் புகழ்பெற்ற குருவாயூர் ஸ்ரீகிருஷ்ணர் கோயிலில் ஒரே நாளில் 416 திருமணங்கள் நடைபெற்றுள்ளன. இது அந்த கோயிலின் வரலாற்றில் மிகப்பெரிய சாதனையாகும்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3dde296e-24a2-4067-bc1b-b0a73f3ab3f3/26-6a8b095e6bc68.webp' /></p><p><b>கோயில் நிர்வாகம் தெரிவித்ததாவது,
</b></p><p>
மலையாள மாதமான சிங்கம் (Chingam) மாதத்தின் முதல் ஞாயிறு திருமணங்களுக்கு மிகவும் சுப நாளாக கருதப்படுகிறது. அதனால், ஆயிரக்கணக்கான குடும்பங்கள் திருமண நிகழ்ச்சிக்காக கோயிலுக்கு வந்தனர்.</p><p>

திருமண நிகழ்ச்சிகள் காலை 4.10 மணிக்கு தொடங்கி, மதியம் 12.45 மணி வரை நடைபெற்றன. இடையில் உஷபூஜை மற்றும் பந்தீரடி பூஜை காரணமாக சிறிய இடைவெளி இருந்தது.</p><p>
</p><p></p><p>முதல் திருமணத்தை கோயில் தேவஸ்வம் வாரியத் தலைவர் ஏ.வி. கோபிநாத் கிழக்கு வாசலில் விளக்கேற்றி தொடங்கினார். பின்னர், பல மண்டபங்களில் திருமணங்கள் ஒரே நேரத்தில் நடைபெற்றன.</p><p>
</p><h2>
முறியடிக்கப்பட்ட சாதனை&nbsp;</h2><p>முன்னதாக, 2024 செப்டம்பர் 8-ஆம் திகதி 334 திருமணங்கள் நடைபெற்றது சாதனையாக இருந்தது. இப்போது அந்த சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.</p><p>

மொத்தம் 442 திருமணங்கள் பதிவு செய்யப்பட்டிருந்தாலும், 416 திருமணங்கள் வெற்றிகரமாக நடைபெற்றன.
</p><p>
திருமண நிகழ்ச்சிகள் பாரம்பரிய இசையுடன், மங்கள்யதார அணிவிக்கும் சடங்குகளுடன் நடைபெற்றன. தலசேரியைச் சேர்ந்த அர்னவ் மோகன் குமார் மற்றும் பாழயங்காடியைச் சேர்ந்த வித்யா ஆனந்த் ராஜ் ஆகியோரின் திருமணம், முதல் நிகழ்வாக அமைந்தது.
</p><p>
இந்த சாதனை, குருவாயூர் கோயிலின் ஆன்மீக முக்கியத்துவத்தையும், திருமண நிகழ்ச்சிகளுக்கான மக்கள் நம்பிக்கையையும் வெளிப்படுத்துகிறது.&nbsp;&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-23T14:51:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[தனுஷ் அரசியல் கட்சி பெயர்.. 5 பெயர்களை தேர்வு செய்த தனுஷ்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/dhanush-to-register-political-party-soon-1787495930"></link>
            <id>https://cineulagam.com/article/dhanush-to-register-political-party-soon-1787495930</id>
            <summary type="text">நடிகர் தனுஷ் அரசியல் என்ட்ரிக்கான பணிகளை தீவிரப்படுத்தி இருக்கிறார். தற்போது முதலமைச்சராக இருக்கும் விஜய் எப்படி தனது ரசிகர் மன்றத்தை முதலில் பலப்படுத...</summary>
            <content type="html"><![CDATA[<p>நடிகர் தனுஷ் அரசியல் என்ட்ரிக்கான பணிகளை தீவிரப்படுத்தி இருக்கிறார். தற்போது முதலமைச்சராக இருக்கும் விஜய் எப்படி தனது ரசிகர் மன்றத்தை முதலில் பலப்படுத்தி அதன் பின் அதை அரசியல் கட்சியாக மாற்றினாரோ அதே போல தனுஷும் காய்நகர்த்த தொடங்கி இருக்கிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b615a578-6637-4b21-8d33-54ad829e5ad3/26-6a8b05fc65a3f.webp' /></p><h2>கட்சி பெயர்
</h2><p>இந்நிலையில் தனுஷ் தனது கட்சிக்கு ஐந்து பெயர்களை தற்போது தேர்வு செய்து இருக்கிறாராம். அதை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய டெல்லிக்கு வழக்கறிஞர்களை தனுஷ் அனுப்பி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
</p><p>அதனால் 2031 தேர்தலில் தனுஷ் போட்டியிடுவது கிட்டத்தட்ட உறுதி என அரசியல் வட்டாரத்தில் பேச்சு அதிகமாகி இருக்கிறது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-23T14:39:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ்ப்பாணத்தில் உள்ள மூன்று வணிக நிறுவனங்களுக்கு 6 இலட்சம் அபராதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/6-lakh-fine-imposed-on-companies-in-jaffna-1787484925"></link>
            <id>https://ibctamil.com/article/6-lakh-fine-imposed-on-companies-in-jaffna-1787484925</id>
            <summary type="text">நிர்ணயிக்கப்பட்ட அல்லது அச்சிடப்பட்ட விலையை விட அதிக விலையில் பொருட்களை விற்பனை செய்ததற்காக, யாழ்ப்பாணத்தில் உள்ள மூன்று வணிக நிறுவனங்களுக்கு யாழ்ப்பா...</summary>
            <content type="html"><![CDATA[<p>நிர்ணயிக்கப்பட்ட அல்லது அச்சிடப்பட்ட விலையை விட அதிக விலையில் பொருட்களை விற்பனை செய்ததற்காக, யாழ்ப்பாணத்தில் உள்ள மூன்று வணிக நிறுவனங்களுக்கு யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றம் மொத்தம் ரூ. 668,000 அபராதம் விதித்துள்ளது.
</p><p>
நுகர்வோர் விவகார ஆணையத்தின் (CAA) மாவட்ட புலனாய்வு அதிகாரிகள் நடத்திய சோதனைகளைத் தொடர்ந்து இந்த அபராதங்கள் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>
யாழ்ப்பாணத்தில் உள்ள ஒரு உணவகம் மற்றும் மதுபானக் கடை ஒன்றில், ஒரு லிட்டர் குடிநீர் போத்தலின் அதிகபட்ச சில்லறை விலை ரூ. 120 ஆக இருந்தபோதிலும், அதை ரூ. 200-க்கு விற்பனை செய்ததற்காக ரூ. 300,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>CAA வலியுறுத்து</h2><p>
இதற்கிடையில், மற்றொரு உணவகத்தில், ஒரு குளிர்பான போத்தலை அதன் அச்சிடப்பட்ட சில்லறை விலையை விட அதிக விலைக்கு விற்றதற்காக ரூ. 100,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/13fe1d63-5e85-4160-b7b0-d89f022c9d8f/26-6a8ae176405d8.webp' /></p><p>
</p><p>மேலும், ஒரு கிலோ பொன்னி சம்பா அரிசியை அதிகபட்ச சில்லறை விலையான ரூ. 255-க்கு மேல் விற்றதற்காக வழக்குத் தொடரப்பட்டதைத் தொடர்ந்து, மற்றொரு வியாபாரிக்கு ரூ. 268,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.</p><p>

நீதிமன்ற நடவடிக்கைகளின் போது, ​​அந்த அரிசி பால் பொன்னி அரிசி என்று உரிமையாளர் கூறியதாகவும், இருப்பினும், நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, சி.ஏ.ஏ சமர்ப்பித்த ஒரு மாதிரியை அரிசி ஆராய்ச்சி நிறுவனம் பரிசோதித்ததில், அந்த இருப்பு இறக்குமதி செய்யப்பட்ட பொன்னி சம்பா அரிசி என்பது உறுதி செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.</p><p>
பொருட்களை வாங்குவதற்கு முன் அச்சிடப்பட்ட விலை மற்றும் அதிகபட்ச சில்லறை விலையைச் சரிபார்க்குமாறும், முறைபாடுகளை வழங்கும்போது ஆதாரமாக ரசீதுகளைப் பெற்றுப் பாதுகாத்து வைக்குமாறும் நுகர்வோரை CAA வலியுறுத்தியுள்ளது.
</p><p>மேலும், நுகர்வோர், வர்த்தக விதிமீறல்கள் எனச் சந்தேகப்படுபவற்றை, நுகர்வோர் விவகார ஆணையத்தின் 1977 என்ற உதவி எண் மூலம், பணி நேரங்களில் முறைபாடளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-23T14:39:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[மத்திய கிழக்கு போரில் ஒரு முடிவை தேடும் சர்வதேசம்! நோக்கி தெஹ்ரானுக்கு விரையும் ஆசிம் முனீர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/an-end-to-the-middle-east-war-1787492677"></link>
            <id>https://ibctamil.com/article/an-end-to-the-middle-east-war-1787492677</id>
            <summary type="text">மத்திய கிழக்கு போருக்கு ஒரு தீர்வைக் காண பாகிஸ்தான் மத்தியஸ்தம் செய்ய முயன்று வரும் நிலையில், அந்நாட்டின் இராணுவத் தளபதி ஆசிம் முனீர் ஈரானுக்கு திடீர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>மத்திய கிழக்கு போருக்கு ஒரு தீர்வைக் காண பாகிஸ்தான் மத்தியஸ்தம் செய்ய முயன்று வரும் நிலையில், அந்நாட்டின் இராணுவத் தளபதி ஆசிம் முனீர் ஈரானுக்கு திடீர் விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார்.</p><p>இதன்படி நாளை&nbsp;ஆசிம் முனீர் தனது விஜயத்தை மேற்கொள்வார் என்று ஈரான் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.</p><p>ஈரான்-பாகிஸ்தான் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தும் முயற்சிகளின் ஒரு பகுதியாக முனீர் ஈரானிய தலைநகருக்கு ஒரு தூதுக்குழுவிற்குத் தலைமை தாங்குவார் என்று அமைச்சக செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாயி ஒரு அறிக்கையில் கூறியுள்ளார்.</p><p></p><h2>பாகிஸ்தானின் தொடர்ச்சியான முயற்சி</h2><p>பிராந்தியத்தில் அமைதி மற்றும் பாதுகாப்பை வலுப்படுத்த உதவும் பாகிஸ்தானின் தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாகவும் இந்த வருகை அமைந்தது என்று அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/09d2d457-9571-4f7d-8e58-7e1253b7ecc1/26-6a8afad007f83.webp' /></p><p>

ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான போரை நிறுத்தும் முயற்சிகளில் பாகிஸ்தான் முக்கியப் பங்கு வகித்துள்ளது.</p><p>குறிப்பாக ஜூன் மாதம் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு அது மத்தியஸ்தம் செய்தது, ஆனால் அமைதிப் பேச்சுவார்த்தைகள் தற்போது முடங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><p>இந்த மாதத் தொடக்கத்தில் பாகிஸ்தான், சவூதி அரேபியா மற்றும் துருக்கியுடன் ஒரு கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இந்த நடவடிக்கை ஈரானின் செல்வாக்கை எதிர்கொள்வதை நோக்கமாகக் கொண்டது என்று தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-23T14:37:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[போர்க்காலத் தேர்தல் உக்ரைனை அழித்துவிடும்: ஜெலென்ஸ்கி எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/wartime-elections-will-destroy-ukraine-1787495808"></link>
            <id>https://ibctamil.com/article/wartime-elections-will-destroy-ukraine-1787495808</id>
            <summary type="text">ரஷ்யாவுடன் தீவிரமான போர் தொடர்ந்துகொண்டிருக்கும் வேளையில், உக்ரைனில் போர்க்காலத் தேர்தலை நடத்துவது உக்ரைனியர்களைப் பிளவுபடுத்தி நாட்டை அழித்துவிடும் அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ரஷ்யாவுடன் தீவிரமான போர் தொடர்ந்துகொண்டிருக்கும் வேளையில், உக்ரைனில் போர்க்காலத் தேர்தலை நடத்துவது உக்ரைனியர்களைப் பிளவுபடுத்தி நாட்டை அழித்துவிடும் அந்நாட்டு ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி கூறியுள்ளார்.</p><p>செய்தியாளர்களிடம் இன்று வெளியிடப்பட்ட அவரது கருத்துக்களில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><p>கடந்த வாரம் பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் மைக்கலோ ஃபெடோரோவ் ஒரு பரபரப்பான உரையில் போர்க்காலத் தேர்தலுக்கு அழைப்பு விடுத்ததிலிருந்து, இந்த விடயம் குறித்து ஜெலென்ஸ்கி தெரிவித்த முதல் கருத்து இதுவாகும்.</p><p></p><h2>பரவலான போராட்டங்கள்</h2><p>கடந்த மாதம் ஃபெடோரோவின் திடீர் பதவி நீக்கம் பரவலான போராட்டங்களைத் தூண்டியது. ஆனால், அவரை மீண்டும் பதவியில் அமர்த்தக் கோரிய அவரது ஆதரவாளர்கள், பின்னர் அவர் விடுத்த தேர்தல் அழைப்பைக் கண்டு தயங்கியதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/db7fdcb2-f46f-4c14-9eba-e0f8d8c4a59b/26-6a8b058191f65.webp' /></p><p>2022-ல் ரஷ்யா தனது முழு அளவிலான படையெடுப்பைத் தொடங்கியதிலிருந்து, ஒரு முக்கிய உக்ரேனிய அரசியல் பிரமுகர் விடுத்த முதல் தேர்தல் கோரிக்கை இதுவாகும்.
</p><p>இதற்கு பதில் வழங்கும் விதமாக"நாம் நாட்டை அழிக்க விரும்பினால், இதுபோன்ற போரின்போதே தேர்தல்களை நோக்கி நகரலாம் என்று நான் நம்புகிறேன்," என்று ஜெலென்ஸ்கி கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td> செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-23T14:36:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறைச்சாலை மோதல்கள்! உயர் அதிகாரிகளுக்கு இடையில் முக்கிய கலந்துரையாடல் - எடுக்கப்படும் அதிரடி நடவடிக்கைகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/preventing-prison-conflicts-protecting-prisoners-1787492450"></link>
            <id>https://tamilwin.com/article/preventing-prison-conflicts-protecting-prisoners-1787492450</id>
            <summary type="text">சிறைச்சாலைகளில் வன்முறைகள் மீண்டும் ஏற்படுவதை தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும்...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிறைச்சாலைகளில் வன்முறைகள் மீண்டும் ஏற்படுவதை தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் இடையில் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
</p><p>

கடந்த ஜூலை 5 மற்றும் 6ஆம் திகதிகளில் நீர்கொழும்பு சிறைச்சாலையிலும் ஆகஸ்ட் 18ஆம் திகதி மஹர சிறைச்சாலை உள்ளிட்ட மேலும் சில சிறைச்சாலைகளிலும் இடம்பெற்ற மோதல் சம்பவங்கள் தொடர்பில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.
</p><p>

பாதுகாப்பு, நீதி மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர்களின் பிரதிநிதிகள், சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர், பொலிஸ் மா அதிபரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதி பொலிஸ் மா அதிபர், சிறைச்சாலைகளின் பதில் ஆணையாளர் நாயகம் மற்றும் பல சிறைச்சாலை ஆணையாளர்கள் இதன்போது கலந்துகொண்டனர்.</p><h2>கவனத்திற்கு கொண்டு வரப்பட்ட விடயம்</h2><p>
</p><p>

2018ஆம் ஆண்டில் சிறைச்சாலைகள் மற்றும் தடுப்பு மையங்கள் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்பட்ட விரிவான ஆய்வின் பின்னர் வெளியிடப்பட்ட அறிக்கையும் 2020ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட அறிக்கையின் பரிந்துரைகளும் ஆணைக்குழுவின் தலைவரால் இதன்போது கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bc331086-0355-4a4f-980d-d2c263b4f5da/26-6a8b0486a1016.webp' /></p><p>

இதன்போது 2021 மற்றும் 2025ஆம் ஆண்டுகளுக்கான மூலோபாயத் திட்டங்களைத் தயாரிக்கும்போது, குறித்த அறிக்கையில் உள்ள பரிந்துரைகள் கவனத்திற்கொள்ளப்பட வேண்டுமென ஆணைக்குழு ஏற்கனவே யோசனை முன்வைத்துள்ளதோடு, அந்த பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளது.
</p><p>

அத்துடன், கைதிகள் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்பு, சிறைச்சாலைகளில் நிலவும் நெரிசல் மற்றும் போதுமான சுகாதார பாதுகாப்பு மற்றும் நீர் வசதிகள் இன்மை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.</p><h2>புதிய கட்டடங்களைக் கட்டுவதற்கான நடவடிக்கை</h2><p>


போகம்பரை மற்றும் மஹமோதர ஆகிய சிறைச்சாலைகளின் புனர்நிர்மாணப் பணிகள், காலி, மாத்தறை மற்றும் வாரியபொல சிறைச்சாலைகளை பரந்த அளவிலான இடங்களுக்கு மாற்றுவது மற்றும் களுத்துறை மற்றும் பூசா சிறைச்சாலைகளில் புதிய கட்டடங்களைக் கட்டுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் பதில் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் இதன்போது மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cda59b08-0498-48ef-8310-57d474adab03/26-6a8b04875931a.webp' /></p><p>

சிறைச்சாலை நெரிசல் பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில் சம்பந்தப்பட்ட சட்டங்களை திருத்துவதற்கும், வீட்டுக் காவலில் வைப்பதற்காக தடுப்பு காவலுக்கான மாற்று வசதிகளை வழங்குவதற்குத் தகுந்த தொழில்நுட்ப நடவடிக்கைகளை அறிமுகப்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் சிறைச்சாலைத் திணைக்கள அதிகாரிகள் இதன்போது தெரிவித்துள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-23T14:34:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[அனிமல் பட புகழ் நடிகை த்ரிப்தி டிம்ரியின் அசத்தலான கிளாமர் போட்டோஷூட்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/tripti-dimri-latest-glamour-photos-1787481216"></link>
            <id>https://viduppu.com/article/tripti-dimri-latest-glamour-photos-1787481216</id>
            <summary type="text">இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் பிரபலங்களில் ஒருவர் நடிகை த்ரிப்தி டிம்ரி. 

இவர் பாலிவுட்டில் ரன்பீர் கபூர் நடிப்பில் வெளிவந்த அனிமல் திரைப்படத்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் பிரபலங்களில் ஒருவர் நடிகை த்ரிப்தி டிம்ரி. </p><p>

இவர் பாலிவுட்டில் ரன்பீர் கபூர் நடிப்பில் வெளிவந்த அனிமல் திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். </p><p>

முன்னணி நட்சத்திரமாக உயர்ந்து வரும் த்ரிப்தி டிம்ரி இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது புகைப்படங்களை பதிவு செய்வார். </p><p>

அந்த வகையில், தற்போது அசத்தலான கருப்பு நிற உடையில் எடுத்துக்கொண்ட கிளாமர் போட்டோஷூட் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். 

இந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. </p><p>இதோ அந்த புகைப்படங்கள்:</p>]]></content>
            <updated>2026-08-23T14:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[முச்சக்கரவண்டி சாரதிகளின் குறைந்தபட்ச வயதை 40 ஆக உயர்த்த அரசாங்கம் திட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/minimum-age-for-three-wheeler-drivers-is-40-1787495322"></link>
            <id>https://ibctamil.com/article/minimum-age-for-three-wheeler-drivers-is-40-1787495322</id>
            <summary type="text">இலங்கையில் முச்சக்கர வண்டிகளை ஓட்டுவதற்கான குறைந்தபட்ச வயது எதிர்காலத்தில் 40 ஆண்டுகளாக உயர்த்தப்படலாம் என தொழிற்கல்வி பிரதி அமைச்சர் நலின் ஹெவாகே தெர...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் முச்சக்கர வண்டிகளை ஓட்டுவதற்கான குறைந்தபட்ச வயது எதிர்காலத்தில் 40 ஆண்டுகளாக உயர்த்தப்படலாம் என தொழிற்கல்வி பிரதி அமைச்சர் நலின் ஹெவாகே தெரிவித்துள்ளார்.
</p><p>பாடசாலை கல்வியை நிறைவு செய்தவுடனேயே அதிக இளைஞர்கள் முச்சக்கர வண்டி ஓட்டுவதைத் தடுப்பதையே இந்த முன்மொழியப்பட்ட நடவடிக்கை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று துணை அமைச்சர் கூறியுள்ளார்.</p><p>

 

கல்வி மற்றும் தொழிற்பயிற்சி மூலம் நாட்டின் மனிதவளத்தை மேம்படுத்துவதில் அரசாங்கம் கவனம் செலுத்துவதை எடுத்துரைக்கும்போது ஹெவாகே இந்தக் கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>ஆற்றல்மிக்க இளம் தலைமுறை</h2><p>
 

பிரதி அமைச்சரின் கூற்றுப்படி, இலங்கையின் எதிர்காலம், திறமையான மற்றும் ஆற்றல்மிக்க இளம் தலைமுறையை உருவாக்குவதில் தங்கியுள்ளது. இது நாட்டை ஒரு வளர்ந்த தேசமாக மாற்றுவதற்கு இன்றியமையாதது என்றும் அவர் விவரித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/52d36543-d377-415e-86c2-77499d242eaf/26-6a8b039cbf81d.webp' /></p><p>
 

எனவே, அரசாங்கம் மனிதவள மேம்பாட்டிற்கு முன்னுரிமை அளித்து, கல்வித் துறையில் ஒரு பெரிய மாற்றத்தைக் கொண்டுவரும் நோக்கில் புதிய கல்வி சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தியுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.</p><p>

 

மேலும் நமது நாட்டின் எதிர்காலம் நமது பிள்ளைகளின் கைகளில் உள்ளது. மேம்பட்ட மனிதவளமே இறுதியில் இலங்கையை ஒரு வளர்ந்த நாடாக மாற்றும். ஓர் அரசாங்கம் என்ற முறையில், நாங்கள் மனிதவள மேம்பாட்டிற்கு முன்னுரிமை அளிக்கிறோம். அதனால்தான் நாங்கள் கல்வி சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தியுள்ளோம். கல்வியில் ஒரு பெரிய மாற்றம் தேவை என்று நாங்கள் நம்புகிறோம் எனவும் அவர் கூறியுள்ளார்.&nbsp;&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-23T14:28:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[எதிரி நாடாக கருதப்படும் - அமெரிக்காவின் பொருளாதார போர் தொடர்பில் ஈரான் எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/iran-warns-nations-on-us-economic-war-1787494997"></link>
            <id>https://news.lankasri.com/article/iran-warns-nations-on-us-economic-war-1787494997</id>
            <summary type="text">Iran warns nations on US economic war: அமெரிக்காவின் பொருளாதார போரில் இணையும் நாடுகளுக்கு ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஈரான் எச்சரிக்கைஅமெரிக்கா...</summary>
            <content type="html"><![CDATA[<p>Iran warns nations on US economic war: அமெரிக்காவின் பொருளாதார போரில் இணையும் நாடுகளுக்கு ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.
</p><h2>
ஈரான் எச்சரிக்கை</h2><p>அமெரிக்கா, ஈரானை பொருளாதார ரீதியாக தனிமைப்படுத்தும் முயற்சியில் தனது கூட்டாளிகளை அழைத்துள்ள நிலையில், ஈரான் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a58bf5d3-c5e4-4bf3-a258-dbb034233b90/26-6a8b0256dd487.webp' /></p><p>ஈரானின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் தலைவர் மொஹ்சன் ரெசாய், “அமெரிக்கா நடத்தும் பொருளாதார போரில் எந்த நாடும் கலந்து கொண்டால், அது எங்களின் எதிரி நாடாக கருதப்படும்” என்று அரசுத் தொலைக்காட்சியில் தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>நிறுவனங்களை தாக்கப்படும்</h2><p>

அவர் மேலும், “அமெரிக்கா எங்கள்மீது பொருளாதார தடைகள் விதிக்க முயன்றால், அவர்களின் எண்ணெய் மற்றும் பொருளாதார நிறுவனங்களை தாக்குவோம். இதுவரை நாங்கள் அமெரிக்க இராணுவ தளங்களை மட்டுமே குறிவைத்துள்ளோம். ஆனால், பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டால், எங்கள் பதில் நிலநடுக்கம் போல இருக்கும்” என்று எச்சரித்தார்.
</p><p>
இந்த எச்சரிக்கை, அமெரிக்கா தனது கூட்டாளிகளை ஈரானின் பொருளாதாரத்தை தனிமைப்படுத்தும் முயற்சியில் இணைக்க அழைத்துள்ள சூழலில் வந்துள்ளது.
</p><p>
குறிப்பாக, சீனாவிடம் அமெரிக்கா அழுத்தம் கொடுத்துள்ளது. ஆனால், சீனா இந்த முயற்சியை விமர்சித்து, “தடைகள் மத்திய கிழக்கு பிரச்சினையை தீர்க்காது” என்று தெரிவித்துள்ளது.
</p><p></p><p>ஈரானின் முக்கிய வர்த்தக கூட்டாளியான ஐக்கிய அரபு அமீரகம், கடந்த வாரம் ஈரானுடன் உள்ள அனைத்து வர்த்தக மற்றும் நிதி பரிவர்த்தனைகளையும் நிறுத்துவதாக அறிவித்தது.</p><p>

இந்த நிலைமை, அமெரிக்கா-ஈரான் உறவுகளை மேலும் மோசமாக்குவதோடு, உலகளாவிய பொருளாதார மற்றும் அரசியல் சூழ்நிலைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-23T14:20:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[தலதா மாளிகை பெரஹெராவில் குழப்பம் விளைவித்த நபர் - உடனடியாக எடுக்கப்பட்ட நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/man-arrested-for-obstructing-kandy-perahera-1787492155"></link>
            <id>https://tamilwin.com/article/man-arrested-for-obstructing-kandy-perahera-1787492155</id>
            <summary type="text">கண்டி தலதா மாளிகை பெரஹெராவில் குழப்பம் விளைவித்த நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கண்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

குறித்த சம்பவம் இன்றைய தினம் (...</summary>
            <content type="html"><![CDATA[<p>கண்டி தலதா மாளிகை பெரஹெராவில் குழப்பம் விளைவித்த நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கண்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர். </p><p>

குறித்த சம்பவம் இன்றைய தினம் (23.08.2026) இடம்பெற்றுள்ளது. </p><p>

சந்தேகநபர் பெரஹெராவிற்காக பணியில் இருந்த பல பொலிஸ் அதிகாரிகளை வாய்மொழியாக திட்டியதோடு, அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் குழப்பமான முறையில் நடந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><h2>சந்தேகநபர் கைது</h2><p> </p><p>

</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bc3a9c54-f8f0-4f2d-b04c-480aeb3da031/26-6a8b0187b64a8.webp' /></p><p>தலதா மாளிகை வளாகத்தின் பிரதான நுழைவாயிலுக்கு முன்பாக, பணியில் இருந்த பொலிஸ் அதிகாரிகளை அந்த நபர் வாய்மொழியாகத் திட்டியதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.</p><p>
</p><p>
அதன்படி, சம்பந்தப்பட்ட சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
மேலும் அவர் மீது தேவையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-23T14:20:13+00:00</updated>
        </entry>
    </feed>
