<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-08-28T23:08:05+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[அம்பலமான சட்டவிரோத செயல் ; இரகசிய தகவலால் பிடிபட்ட இளைஞன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/youth-arrested-following-secret-information-1787954220"></link>
            <id>https://jvpnews.com/article/youth-arrested-following-secret-information-1787954220</id>
            <summary type="text">பாதுக்கை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உஸ்வெலி மாவத்தை பகுதியில் 75 லீற்றர் (100 போத்தல்கள்) சட்டவிரோத மதுபானத்துடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">பாதுக்கை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உஸ்வெலி மாவத்தை பகுதியில் 75 லீற்றர் (100 போத்தல்கள்) சட்டவிரோத மதுபானத்துடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p style="text-align: justify; ">வியாழக்கிழமை (27)&nbsp; வலான மத்திய ஊழல் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் நடத்தப்பட்ட விசேட சோதனையின்போதே இந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டு, மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக பாதுக்கை பொலிஸ் நிலையத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/062f00b7-3478-40a0-8bcc-9056b3500018/26-6a92042f280cb.webp' /></p><h2 style="text-align: justify; ">சட்டவிரோத மதுபானம்</h2><p style="text-align: justify; ">

கைது செய்யப்பட்டவர் பாதுக்கை பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய நபர் என பொலிஸார் தெரிவித்தனர்.</p><p style="text-align: justify; "> 

இதன்போது, சந்தேக நபரிடமிருந்து 75 லீற்றர் (100 போத்தல்கள்) சட்டவிரோத மதுபானம் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
இச்சம்பவம் தொடர்பில் பாதுக்கை பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-28T23:05:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[அடுத்த மாதம் இலங்கைக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ள சர்வதேசக் குழு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/imf-officers-to-visit-sri-lanka-next-month-1787949898"></link>
            <id>https://tamilwin.com/article/imf-officers-to-visit-sri-lanka-next-month-1787949898</id>
            <summary type="text">சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு ஒன்று அடுத்த மாதம் இலங்கைக்குப்
பயணம் மேற்கொள்ளவுள்ளது.கடன் தவணை

விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் கீழ் மேற...</summary>
            <content type="html"><![CDATA[<p>சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு ஒன்று அடுத்த மாதம் இலங்கைக்குப்
பயணம் மேற்கொள்ளவுள்ளது.</p><h2>கடன் தவணை</h2><p>
</p><p>
விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் கீழ் மேற்கொள்ளப்படும் அடுத்தகட்ட ஆய்வுக்கான
பயணமாகவே, சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு கொழும்பு வரவுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f5f36cd2-d2c6-4d49-912c-9e09ace9af82/26-6a91f34bc2ea2.webp' /></p><p>

இந்த வருகையின் போது, அந்தக் குழுவினர் ஏழாவது ஆய்வை நடத்துவதோடு, எட்டாவது
கடன் தவணையை விடுவிப்பது குறித்தும் பரிசீலிக்கவுள்ளனர்.
</p><p>
இந்த ஆய்வில் திருப்தியடைந்தால், இலங்கைக்கு சுமார் 330 மில்லியன் அமெரிக்க
டொலர் நிதியை சர்வதேச நாணய நிதியம் விடுவிக்கும் என்றும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-28T23:00:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[Jio உட்பட 7 IPO-க்களுக்கு SEBI அனுமதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/sebi-clears-7-ipos-including-jio-1787957622"></link>
            <id>https://news.lankasri.com/article/sebi-clears-7-ipos-including-jio-1787957622</id>
            <summary type="text">SEBI clears 7 IPOs including Jio: ஜியோ உட்பட 7 IPO-க்களுக்கு SEBI அனுமதி வழங்கியுள்ளது.

இந்திய பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான SEBI, Reliance ...</summary>
            <content type="html"><![CDATA[<p>SEBI clears 7 IPOs including Jio: ஜியோ உட்பட 7 IPO-க்களுக்கு SEBI அனுமதி வழங்கியுள்ளது.
</p><p>
இந்திய பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான SEBI, Reliance Industries ஆதரவு பெற்ற Jio Platforms உட்பட 7 நிறுவனங்களின் IPO-க்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது.</p><p>இதனால், இந்தியாவின் முதன்மை சந்தையில் புதிய முதலீட்டு வாய்ப்புகள் உருவாக உள்ளன.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6fce1801-33ee-4ffc-a92c-756b8a4bbf33/26-6a921178a2133.webp' /></p><h2>ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் IPO:
</h2><p>சுமார் ரூ.37,700 கோடி மதிப்பில் IPO வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மதிப்பீடு சுமார் ரூ.9.5 லட்சம் கோடி என கணிக்கப்பட்டுள்ளது. இது இந்தியாவின் மிகப்பெரிய IPO-களில் ஒன்றாக இருக்கலாம்.
</p><h2>
Paras Healthcare:
</h2><p>இந்த மருத்துவமனை சங்கம் ரூ.1,800 கோடி IPO-க்கு அனுமதி பெற்றுள்ளது. இதில் ரூ.500 கோடி புதிய பங்கு வெளியீடு மற்றும் ரூ.1,300 கோடி Offer for Sale அடங்கும். Paras Health தற்போது 8 மருத்துவமனைகள், 2,211 படுக்கைகள் கொண்டுள்ளது.</p><p></p><p>
</p><h2>
Bharat PET:
</h2><p>பேக்கேஜிங் தீர்வுகள் வழங்கும் இந்த நிறுவனம் ரூ.760 கோடி IPO-க்கு அனுமதி பெற்றுள்ளது. இதில் ரூ.120 கோடி புதிய பங்கு வெளியீடு மற்றும் ரூ.640 கோடி Offer for Sale அடங்கும். இது இந்தியாவில் 11 சதவீதம் சந்தைப் பங்கு கொண்டுள்ளது.</p><h2>
மற்ற IPO-க்கள்:
</h2><p>
Paramotor Digital Technology - Fintech மற்றும் Enterprise Technology சேவைகள்
</p><p>
Pushp Brand India - மசாலா பொருட்கள்
</p><p>
MK Sons Fine Jewels - நகை உற்பத்தி
</p><p>
Sadbhav Futuretech 1 தொழில்நுட்ப சேவைகள்
</p><p></p><p>இந்த IPO-க்கள், Healthcare, Packaging, Fintech, Consumer Brands, Jewellery போன்ற பல துறைகளில் முதலீட்டாளர்களுக்கு புதிய வாய்ப்புகளை வழங்குகின்றன.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-28T22:51:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[களுத்துறையில் பாரியளவிலான சட்டவிரோத மதுபான உற்பத்தி மையம் முற்றுகை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/illegal-liquor-production-center-busted-kalutara-1787949620"></link>
            <id>https://tamilwin.com/article/illegal-liquor-production-center-busted-kalutara-1787949620</id>
            <summary type="text">களுத்துறை மாவட்டத்தின் மொரொந்துடுவைப் பிரதேசத்தில் நீண்ட காலமாகச் செயற்பட்டு வந்த சட்டவிரோத மதுபானஉற்பத்தி மையமொன்றை பொலிசார் திடீர் முற்றுகையிட்டு, ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>களுத்துறை மாவட்டத்தின் மொரொந்துடுவைப் பிரதேசத்தில் நீண்ட காலமாகச் செயற்பட்டு வந்த சட்டவிரோத மதுபானஉற்பத்தி மையமொன்றை பொலிசார் திடீர் முற்றுகையிட்டு, சோதனை மேற்கொண்டுள்ளனர்.
</p><p>
இதன்போது அங்கிருந்த 6,048 லிட்டர் கோடாவுடன் 5 செப்புச் சுருள்கள் மற்றும் 3 எரிவாயு அடுப்புகள் என்பனவும் பொலிசாரினால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.</p><h2>பொலிஸ் விசாரணை&nbsp;</h2><p>
</p><p>
மொரொந்துடுவ பகுதியில் நடத்தப்பட்ட ஒரு விசேட சோதனையில், குறித்த சட்டவிரோத மதுபான மையம் கண்டறியப்பட்டு, திடீர் சுற்றிவளைப்பு மூலம் மேற்கண்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dd07ff51-dbc5-4b7f-b742-841148eece5c/26-6a91f23620ad7.webp' /></p><p>
</p><p>
களுத்துறை மாவட்டத்தில் இவ்வளவு பெரிய அளவிலான கோடா ஒரே நேரத்தில் பறிமுதல் செய்யப்பட்டது, இதுவே முதல் தடவையாகும் என்றும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.
</p><p>
குறிப்பிட்ட சட்டவிரோத மதுபான உற்பத்தி மையத்தின் பின்னால் உள்ள முக்கிய வலையமைப்பையும் சந்தேக நபர்களையும் அடையாளம் காண விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.</p>]]></content>
            <updated>2026-08-28T22:30:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[ட்ரம்ப் நிர்வாகத்திற்கு ஈரான் போரை உடனடியாக முடிவுக்கு கொண்டுவர அழைப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/call-for-immediate-end-to-iran-war-1787950598"></link>
            <id>https://ibctamil.com/article/call-for-immediate-end-to-iran-war-1787950598</id>
            <summary type="text">அமெரிக்க ஜனநாயகக் கட்சியின் செல்வாக்கு மிக்க செனட்டராக கருதப்படும் ஆடம் ஷிஃப், ஈரான் மீதான ட்ரம்ப் நிர்வாகத்தின் போரைக் கடுமையாக விமர்சித்துள்ளார்.
...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்க ஜனநாயகக் கட்சியின் செல்வாக்கு மிக்க செனட்டராக கருதப்படும் ஆடம் ஷிஃப், ஈரான் மீதான ட்ரம்ப் நிர்வாகத்தின் போரைக் கடுமையாக விமர்சித்துள்ளார்.
</p><p>
இந்தப் போரின் ஆறு மாத நிறைவைக் குறிக்கும் வகையில் X தளத்தில் பதிவிட்டுள்ள அவர், நீடித்த இந்த மோதலால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை விவரித்துள்ளார்.
</p><p>
“ஆறு மாதங்களாக எந்தவொரு திட்டமிட்ட உத்தியும் இல்லை, போரின் முடிவும் தெரியவில்லை; அனைத்துத் துறைகளிலும் செலவுகள் அதிகரித்துள்ளன; நமது படைவீரர்கள் தங்கள் குடும்பங்களை விட்டுப் பிரிந்து ஆறு மாதங்கள் ஆகிவிட்டன” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.'</p><p></p><h2>போரின் விளைவுகள்</h2><p>
</p><p>
போரை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர அழைப்பு விடுத்த அவர், “நமது படைவீரர்களைத் தாய்நாட்டிற்குத் திரும்பக் அழைத்து வாருங்கள்” என்றும் வலியுறுத்தியுள்ளார்.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Today marks six months of the Iran War.<br><br>Six months with no strategy and no end in sight.<br><br>Six months of higher costs across the board.<br><br>Six months of our servicemembers being away from their families.<br><br>Six months and 18 service members killed.<br><br>We must end this war and bring our… <a href="https://t.co/pZDbQlBBUj">https://t.co/pZDbQlBBUj</a> <a href="https://t.co/ou7NWywawx">pic.twitter.com/ou7NWywawx</a></p>&mdash; Senator Adam Schiff (@SenAdamSchiff) <a href="https://x.com/SenAdamSchiff/status/2093358027189428357?ref_src=twsrc%5Etfw">August 28, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>

அமெரிக்கா வரும் நவம்பரில் இடைக்காலத் தேர்தலைச் சந்திக்கவுள்ள நிலையில், இந்தப் போரின் விளைவுகள் தேர்தல் பிரச்சாரத்தில் முக்கியப் பிரச்சினையாக உருவெடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-28T22:20:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீதிபதிகளின் ஓய்வு வயது அதிகரிப்பு ; ஐக்கிய நாடுகள் சபைக்கு அரசாங்கத்தின் பதில்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/govt-responds-to-un-on-judges-retirement-age-1787953486"></link>
            <id>https://jvpnews.com/article/govt-responds-to-un-on-judges-retirement-age-1787953486</id>
            <summary type="text">நீதிபதிகளின் ஓய்வு வயதை நீடிக்கவும், நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் முன்மொழியப்பட்டுள்ள திருத்தமானது நீதித்துறையின் சுதந்திரத்தில் எந்தவொரு தா...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">நீதிபதிகளின் ஓய்வு வயதை நீடிக்கவும், நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் முன்மொழியப்பட்டுள்ள திருத்தமானது நீதித்துறையின் சுதந்திரத்தில் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. </p><p style="text-align: justify; ">

நீதிபதிகள் மற்றும் சட்டத்தரணிகளின் சுதந்திரம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் விசேட அறிக்கையாளர் மார்கரெட் சட்டெர்வெயிட் (Margaret Satterthwaite) வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றுக்குப் பதிலளிக்கும் விதமாகவே இலங்கை அரசாங்கம் தனது உத்தியோகபூர்வ நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0d62d7d2-11bf-4a42-94ec-4b89a89bc17c/26-6a920150dd256.webp' /></p><h2 style="text-align: justify; ">திருத்தங்கள்&nbsp;</h2><p style="text-align: justify; "> 

முன்மொழியப்பட்டுள்ள அரசியலமைப்புத் திருத்தத்தின் ஊடாக நீதித்துறையின் நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்துவதற்காக முன்மொழியப்பட்டுள்ள திருத்தங்கள் மூலம் தற்போது சேவையில் உள்ள நீதிபதிகளின் ஓய்வு வயதும் நீட்டிக்கப்படுவதாக விசேட அறிக்கையாளர் குறிப்பிட்டுள்ளார். </p><p style="text-align: justify; ">

இதன்போது, ​​இது நிறைவேற்றுத்துறையின் தலையீடு இன்றி இடம்பெறுவதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> 

நீதிமன்றங்களில் அதிகளவான வழக்குகள் தேங்கிக் கிடப்பதைக் குறைப்பதும் தாமதங்களைக் குறைப்பதும் இத்திருத்தங்களின் பிரதான நோக்கமாகும் என குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-28T22:15:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஐபோனுக்காக பறிபோன உயிர்கள் ; வைரலான காணொளி; விசாரணையில் புதிய தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/lives-lost-over-iphone-viral-video-emerges-1787946030"></link>
            <id>https://jvpnews.com/article/lives-lost-over-iphone-viral-video-emerges-1787946030</id>
            <summary type="text">சில நாட்களுக்கு முன்பு மகாராஷ்டிராவில் ஒரு மலை உச்சியில் குணால் என்கிற வாலிபர் நின்று கொண்டு ‘நான் கீழே குதித்து விடுவேன்’ என அவரது தந்தையையும், தாயைய...</summary>
            <content type="html"><![CDATA[<p>சில நாட்களுக்கு முன்பு மகாராஷ்டிராவில் ஒரு மலை உச்சியில் குணால் என்கிற வாலிபர் நின்று கொண்டு ‘நான் கீழே குதித்து விடுவேன்’ என அவரது தந்தையையும், தாயையையும் மிரட்டிய வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியானது. </p><p>அந்த சம்பவத்தில் அந்த வாலிபரை பிடிக்க அவரின் தந்தை அருகில் சென்ற போது அந்த வாலிபர் தனது தந்தையின் கையும் பிடித்து கீழே இழுத்து இருவரும் கீழே விழுந்து இறந்து போனார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ba3ca4e1-a935-4c25-9db8-c80b1a3fab85/26-6a91e4d163447.webp' /></p><h2>&nbsp;ஐபோன்</h2><p>
</p><p>
அதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அந்த குணாலின் தாயும் மேலே இருந்து குதித்து மொத்தம் குடும்பத்தில் மூன்று பேரும் உயிரிழந்து விட்டனர். </p><p>முதலில் அந்த வாலிபர் தனக்கு ஐபோன் வாங்கி தரசொல்லி கேட்டதாகவும் அதை பெற்றோர்கள் வாங்கி கொடுக்காததால் இப்படி மிரட்டியதாகவும் செய்திகள் வெளியானது..

gunal
அதன்பின் அந்த இளைஞர் ஐபோன் வைத்திருக்கிறார். </p><p>ஆனால் அதற்கு மாதத்தவனை கட்டவில்லை.. அதைக் கேட்டுதான் அவர் தற்கொலைக்கு செய்து கொள்வதாக மிரட்டினார் என சொல்லப்பட்டது..</p><p></p><p> ஆனால் தற்போது பொலிசாரின் விசாரணையில் உண்மை என்ன என்பது தெரிய வந்திருக்கிறது. குணாலின் தாயும், தந்தையும் பிரிந்து வாழ்ந்து வந்திருக்கிறார்கள். </p><p> பிரிந்து வாழ்ந்த தனது பெற்றோரை சமரசம் செய்து ஒன்றாக வாழ வேண்டும் என்று குணால் வலியுறுத்தியதாக அவரின் அத்தை ஊடகங்களிடம் கூறியிருக்கிறார்..
</p><p>
எனவே, நீங்கள் இருவரும் இணைந்து வாழ வேண்டும் என குணால் தனது பெற்றோறோரை வற்புறுத்தியே தற்கொலை செய்து கொள்வதாக அந்த இடத்தில் நின்று மிரட்டியிருக்கிறார்.. </p><p>ஐபோனுக்கும் அதற்கும் எந்த தொடர்பும் இல்லை.. வீட்டில் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாகவே இந்த சம்பவம் நிகழ்ந்திருக்கிறது என போலீசார் விளக்கமளித்துள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-28T22:07:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாளத்தில் கொத்துக் கொத்தாக மீட்கப்படும் சடலங்கள் ; நிரம்பி வழியும் சவக்கிடங்குகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/bodies-recovered-in-large-numbers-in-nepal-1787954698"></link>
            <id>https://canadamirror.com/article/bodies-recovered-in-large-numbers-in-nepal-1787954698</id>
            <summary type="text">நேபாளத்தில் தற்காலிக உடல் சேமிப்பு மையங்களை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.



வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்ட உடல்கள் அதிகளவில் மீட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நேபாளத்தில் தற்காலிக உடல் சேமிப்பு மையங்களை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.</p><p>



வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்ட உடல்கள் அதிகளவில் மீட்கப்படுவதால் சவக்கிடங்கில் இடப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1acb90bd-3682-44da-900b-093c94b8807c/26-6a92060c50b6d.webp' /></p><p>
</p><p>


பலரின் உடல்கள் மீட்கப்பட்டு வரும் நிலையில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 500 ஐ கடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>



அத்துடன், மாயமான 1,500 பேரை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக நேபாள தேசிய பேரிடர் அபாய குறைப்பு மற்றும் மேலாண்மை ஆணையம் தெரிவித்தது.
</p><p>


நேபாளத்தைப் புரட்டிப்போட்ட பெருவெள்ளத்தால் பல கிராமங்கள், கட்டடங்கள் இடிந்து விழுந்துள்ளன.&nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-08-28T22:06:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மனைவியை காட்டுக்குள் அழைத்து சென்று கொடூரமாகப் படுகொலை செய்த கணவன் !]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/husband-takes-wife-forest-and-brutally-murders-her-1787952081"></link>
            <id>https://tamilwin.com/article/husband-takes-wife-forest-and-brutally-murders-her-1787952081</id>
            <summary type="text">அநுராதபுரம் - கொரகஹவெவ பிரதேசத்திலுள்ள வனப்பகுதியில் பெண்ணொருவர் தனது கணவனால் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் தனது மனைவியை கொலை ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>அநுராதபுரம் - கொரகஹவெவ பிரதேசத்திலுள்ள வனப்பகுதியில் பெண்ணொருவர் தனது கணவனால் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
குறித்த நபர் தனது மனைவியை கொலை செய்துவிட்டு, தானும் காயப்படுத்திக் கொண்டுள்ளார்.
</p><p>
நேற்று (28) முற்பகல் குறித்த நபர் தனது மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் இந்த வனப்பகுதிக்குச் சென்றுள்ளதாகவும், அங்கு வைத்து அவர் மனைவியை கொலை செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.</p><h2>மேலதிக விசாரணை</h2><p>
</p><p>
தாக்குதலுக்குள்ளான மனைவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், படுகாயமடைந்த கணவன் அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/283fe285-64b3-4168-a701-45e6a8807660/26-6a91fe0919828.webp' /></p><p>
</p><p>
இவ்வாறு உயிரிழந்தவர் உளுக்குலம பிரதேசத்தைச் சேர்ந்த 59 வயதுடைய 3 பிள்ளைகளின் தாயாவார்.</p><p>

தனிப்பட்ட தகராறு காரணமாகவே இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாகப் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.</p><p>

இச்சம்பவம் குறித்து அநுராதபுரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-28T22:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[2026-இல் பிரித்தானியாவில் நிரந்தர குடியுரிமை பெற்ற 35,000 இந்தியர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/35000-indians-gain-uk-settlement-in-2026-1787953325"></link>
            <id>https://news.lankasri.com/article/35000-indians-gain-uk-settlement-in-2026-1787953325</id>
            <summary type="text">35000 Indians gain UK settlement in 2026: 2026 ஜூன் வரை 35,000 இந்தியர்கள் பிரித்தானியாவில் நிரந்தர குடியுரிமை பெற்றனர்.

35,384 இந்தியர்கள்2026-ஆம்...</summary>
            <content type="html"><![CDATA[<p>35000 Indians gain UK settlement in 2026: 2026 ஜூன் வரை 35,000 இந்தியர்கள் பிரித்தானியாவில் நிரந்தர குடியுரிமை பெற்றனர்.
</p><h2>
35,384 இந்தியர்கள்</h2><p>2026-ஆம் ஆண்டு ஜூன் மாதம் முடிவடையும் காலக்கட்டத்தில், 35,384 இந்தியர்கள் பிரித்தானியாவில் Indefinite Leave to Remain (ILR) எனப்படும் நிரந்தர குடியுரிமை அனுமதியை பெற்றுள்ளனர்.</p><p>இது கடந்த ஆண்டை விட 51 சதவீதம் அதிகம் என UK Home Office வெளியிட்ட புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7ee5bf85-b74a-4d69-83f3-5979232e8b01/26-6a9200af32134.webp' /></p><h2>ILR </h2><p>ILR என்பது பிரித்தானியாவில் காலவரையற்ற குடியிருப்பு மற்றும் வேலை செய்யும் உரிமையை வழங்கும் முக்கியமான நிலையாகும்.
</p><p>
இந்தியர்கள், பிரித்தானியாவில் நிரந்தர குடியுரிமை பெறும் மிகப்பெரிய குழுவாகத் திகழ்கின்றனர். குறிப்பாக வேலை வாய்ப்பு வழியாக பிரித்தானியாவிற்கு சென்றவர்கள், தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் வாழ்ந்த பின் ILR பெறும் தகுதியை பெற்றுள்ளனர்.
</p><h2>
குடியுரிமை விதிகளை கடுமையாக்க திட்டம்</h2><p>ஆனால், பிரித்தானிய அரசு விரைவில் குடியுரிமை விதிகளை கடுமையாக்க திட்டமிட்டுள்ளது. தற்போதைய 5 ஆண்டுகள் தகுதி காலம், 10 ஆண்டுகளாக நீட்டிக்கப்பட உள்ளது. </p><p>சில பிரிவுகளில், குறைந்த சம்பளம் பெறும் தொழிலாளர்களுக்கு 15 ஆண்டுகள், அரசு நிதி உதவிகளைப் பெறுவோருக்கு 20 ஆண்டுகள் வரை காத்திருக்க வேண்டிய நிலை உருவாகலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
</p><p></p><p>2025-26 காலகட்டத்தில், 24,851 இந்தியர்கள் பிரித்தானிய குடியுரிமை பெற்றுள்ளனர். இதைத் தொடர்ந்து 18,489 பாகிஸ்தான் குடிமக்கள் குடியுரிமை பெற்றுள்ளனர். </p><p>இதன் மூலம், இந்தியர்கள் மற்றும் பாகிஸ்தானியர்கள் பிரித்தானியாவில் குடியுரிமை பெறும் மிகப்பெரிய குழுவாகத் திகழ்கின்றனர்.</p><p></p><p>
</p><h2>
மாணவர்கள் </h2><p>இதே நேரத்தில், இந்திய மாணவர்கள் பிரித்தானியாவில் குறைந்துள்ளனர். 2026 ஜூன் மாதம் முடிவடையும் காலத்தில், 82,523 இந்திய மாணவர்கள் UK மாணவர் விசா பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டை விட 16 சதவீதம் குறைவு. சீனா, 86,368 மாணவர் விசா பெற்றதால், இந்தியாவை முந்தியுள்ளது. </p><p>மேலும், மாணவர்களின் dependent family members விசா வழங்கல் 81 சதவீதம் குறைந்துள்ளது.</p><p>

இந்த புள்ளிவிவரங்கள், இந்தியர்களின் பிரித்தானிய குடியேற்றத்தில் இரு விதமான மாற்றங்களை காட்டுகின்றன. வேலை வாய்ப்பு வழியாக சென்றவர்கள் அதிக அளவில் நிரந்தர குடியுரிமை பெறுகின்றனர். ஆனால், புதிய மாணவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு விதிகள் கடுமையாக்கப்பட்டதால், அவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-28T21:39:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தியாவில் உள்ள இலங்கை ஏதிலிகள் தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்ட தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/president-reveals-on-sri-lankan-refugees-in-india-1787952754"></link>
            <id>https://jvpnews.com/article/president-reveals-on-sri-lankan-refugees-in-india-1787952754</id>
            <summary type="text">இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகள் எமது நாட்டு பிரஜைகள். அவர்களுக்கும் சிறந்த எதிர்காலம் உண்டு. அவர்களுக்கு சிறந்த வாழ்க்கையை வழங்கும் பொறுப்பை அரசாங்கம்...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகள் எமது நாட்டு பிரஜைகள். அவர்களுக்கும் சிறந்த எதிர்காலம் உண்டு. அவர்களுக்கு சிறந்த வாழ்க்கையை வழங்கும் பொறுப்பை அரசாங்கம் என்ற அடிப்படையில் நாங்கள் ஏற்றுக்கொண்டுள்ளோம் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.
</p><p style="text-align: justify; ">
2023ஆம் ஆண்டு பண்டாரவளை பூனாகலை கபரகலை மலை நிலச்சரிவினால் வீடுகளை இழந்த குடும்பங்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட 'நவோதயா புரம்' வீட்டுத்திட்டம்&nbsp; வெள்ளிக்கிழமை (28) மக்கள் பயன்பாட்டிற்கு கையளிக்கப்பட்டது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7306a834-9a62-4f8c-b0ad-a5a327de8f7f/26-6a91fe742f311.webp' /></p><h2 style="text-align: justify; ">இலங்கை அகதிகள்</h2><p style="text-align: justify; ">

இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.</p><p style="text-align: justify; ">

அங்கு அவர் மேலும் கூறுகையில்,

</p><p style="text-align: justify; ">
யுத்தகாலத்தில் நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்தவர்கள் தாய்நாட்டுக்கு திரும்பும்போது கடந்த காலங்களில் பல சிக்கல்களுக்கு முகங்கொடுத்தார்கள்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
அந்த சகல தடைகளையும் நீக்குவதற்கு அமைச்சரவை ஊடாக தீர்மானம் எடுத்துள்ளேன். அதற்குரிய ஒத்துழைப்புக்களை வழங்க குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் சகல நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது.</p><p style="text-align: justify; ">

இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகள் எமது நாட்டுப் பிரஜைகள். அவர்களுக்கும் சிறந்த எதிர்காலம் உண்டு. இந்த நாட்டு மக்கள் அனைவருக்கும் சிறந்த வாழ்க்கையையும் எதிர்காலத்தையும் வழங்க வேண்டும்.</p><p style="text-align: justify; ">&nbsp;அவர்களுக்கு சிறந்த வாழ்க்கையை வழங்கும் பொறுப்பை அரசாங்கம் என்ற அடிப்படையில் நாங்கள் ஏற்றுக்கொண்டுள்ளோம் என்றார்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-28T21:32:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானுக்கு எதிரான ஆறு மாத கால போரின் விளைவு! அமெரிக்க இராணுவத்துக்கு நேர்ந்துள்ள கதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/six-month-us-war-against-iran-weakened-us-military-1787946275"></link>
            <id>https://ibctamil.com/article/six-month-us-war-against-iran-weakened-us-military-1787946275</id>
            <summary type="text">ஈரானுக்கு எதிரான ஆறு மாத கால அமெரிக்கப் போர், அமெரிக்க இராணுவத்தை வெகுவாகப் பலவீனப்படுத்தியுள்ளதாக அமெரிக்க செனட் சபையின் ஜனநாயகக் கட்சித் தலைவர் சக் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானுக்கு எதிரான ஆறு மாத கால அமெரிக்கப் போர், அமெரிக்க இராணுவத்தை வெகுவாகப் பலவீனப்படுத்தியுள்ளதாக அமெரிக்க செனட் சபையின் ஜனநாயகக் கட்சித் தலைவர் சக் ஷூமர் தெரிவித்துள்ளார்.</p><p>

இது குறித்து X தளத்தில் பதிவிட்டுள்ள அவர், ஈரான் மீதான போர் அமெரிக்க ஆயுதக் கிடங்குகளைக் குறைப்பதையும் நாட்டின் இராணுவ நிலையைப் பலவீனப்படுத்துவதையும் தவிர வேறு எதையும் சாதிக்கவில்லை என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>
அத்துடன், இந்த நடவடிக்கை ஒரு பேரழிவு மற்றும் தோல்வி எனக் குறிப்பிட்ட அவர், அதை "டிரம்பின் போர்" என்றும் கடுமையாகச் சாடியுள்ளார்.</p><p></p><h2>அமெரிக்க இடைக்காலத் தேர்தல்</h2><p>
</p><p>
ஈரானில் நடக்கும் அமெரிக்க-இஸ்ரேல் போரின் காரணமாக, ஐரோப்பாவில் உள்ள அமெரிக்க பேட்ரியாட் ஏவுகணைக் கையிருப்பு கடுமையாகக் குறைந்துவிட்டதாகக் கூறும் அசோசியேட்டட் பிரஸ்ஸின் பிரத்யேகச் செய்தியையும் அவர் பகிர்ந்துள்ளார்.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">6 months in, Trump’s disastrous war in Iran has accomplished nothing but the depletion of American stockpiles and the weakening of our military standing.<br><br>That’s what I call an abject failure. <a href="https://t.co/egyUeP6bia">pic.twitter.com/egyUeP6bia</a></p>&mdash; Chuck Schumer (@SenSchumer) <a href="https://x.com/SenSchumer/status/2093362871333802081?ref_src=twsrc%5Etfw">August 28, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>

வரவிருக்கும் அமெரிக்க இடைக்காலத் தேர்தல்களில் இந்த ஈரான் போர் ஒரு முக்கியப் பிரச்சினையாக உருவெடுக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-28T21:27:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாளத்துக்கு அனைத்து உதவிகளையும் அமெரிக்கா வழங்க தயார் ; ட்ரம்ப்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/trump-us-ready-to-provide-all-assistance-to-nepal-1787952122"></link>
            <id>https://canadamirror.com/article/trump-us-ready-to-provide-all-assistance-to-nepal-1787952122</id>
            <summary type="text">நேபாளத்துக்கு அனைத்து உதவிகளையும் அமெரிக்கா வழங்கும் என அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் கூறியுள்ளார்.&amp;nbsp; நேபாளத்தில் நேற்று முன் தினம் ஏற்பட்ட காட்டாற்று...</summary>
            <content type="html"><![CDATA[<p>நேபாளத்துக்கு அனைத்து உதவிகளையும் அமெரிக்கா வழங்கும் என அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் கூறியுள்ளார்.&nbsp;</p><p> நேபாளத்தில் நேற்று முன் தினம் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளம், அங்குள்ள மத்திய மாவட்டங்களை உருக்குலைந்து உள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cf3331ed-a2ad-458e-9775-88c9971107b2/26-6a91fbfcb01e7.webp' /></p><p>

இந்த காட்டாற்று வெள்ளத்தில் 32 நாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் உள்பட ஆயிரக்கணக்கானோர் அடித்து செல்லப்பட்டனர். </p><p>இதனையடுத்து மீட்புப்பணிகளில் நேபாள ராணுவம், போலீசார் மற்றும் மீட்புக்குழுக்கள் ஈடுபட்டு வருகின்றன.</p><p>

</p><p>
இந்தநிலையில், நேபாளத்துக்கு அனைத்து உதவிகளையும் அமெரிக்கா வழங்கும் என அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் கூறியுள்ளார். </p><p>இது குறித்து அவர் அளித்த பேட்டியில்,

வெள்ளத்தால் கடும் பாதிப்பை சந்தித்து உள்ள நேபாளத்தை நாங்கள் தொடர்புகொண்டு அவர்களுக்கு தேவையான எந்தவொரு உதவியையும் வழங்குவதாக கூறியுள்ளோம். நேபாளத்துடன் எங்களுக்கு மிக சிறந்த உறவு உள்ளது.
</p><p>
இது ஒரு கொடூரமான நிகழ்வு. அது வெறும் வெள்ளம் மட்டுமல்ல, சேறும் நீரும் கலந்த ஒரு பேரழிவு. இதுபோன்ற ஒன்றை யாரும் பார்த்திருக்க முடியாது. மிகவும் வலிமையான உறுதியான கட்டிடங்கள் கூட தீக்குச்சிகளை போல அடித்து செல்லப்பட்டன. </p><p>இது மிகவும் மோசமான ஒரு நிகழ்வு. நாங்கள் உதவிகளை அனுப்பி வருகிறோம். அவர்களுக்கு என்ன தேவையோ அதை வழங்குவோம் என்று அந்நாட்டு தலைவர்களிடம் தெரிவித்துள்ளோம் என்றார்.</p>]]></content>
            <updated>2026-08-28T21:22:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையின் ஆகக்கூடுதலான வருமானம் பெறும் அரச நிறுவனமாக சுங்கத்திணைக்களம் சாதனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-lanka-customs-sets-a-record-state-institution-1787949085"></link>
            <id>https://tamilwin.com/article/sri-lanka-customs-sets-a-record-state-institution-1787949085</id>
            <summary type="text">இலங்கை சுங்கத் திணைக்களம் நாட்டின் மிகப்பெரிய வரி வருமானம் ஈட்டும் நிறுவனமாக சாதனை படைத்துள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

மோட்டார் வாகன இறக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை சுங்கத் திணைக்களம் நாட்டின் மிகப்பெரிய வரி வருமானம் ஈட்டும் நிறுவனமாக சாதனை படைத்துள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
</p><p>
மோட்டார் வாகன இறக்குமதிகள் தொடர்பான வரி வசூலில் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க அதிகரிப்பின் காரணமாக, இலங்கை சுங்கத் திணைக்களம் நாட்டின் மிகப்பெரிய வரி வருமானம் ஈட்டும் நிறுவனமாக மாறியுள்ளது.
</p><p>
நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் நிதிக் கொள்கைத் திணைக்களத்தால் வெளியிடப்பட்ட ஜனவரி-ஜூன் 2026 நிதியாண்டு மீளாய்வு அறிக்கையின்படி, ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் மொத்த வரி வருமானம் 25.9% அதிகரித்து 2,710.6 பில்லியன் ரூபாவாக உயர்ந்துள்ளது.</p><h2>வரி வருமானம்</h2><p> இது 4,910 பில்லியன் ரூபா என்ற ஆண்டு மதிப்பீட்டிலிருந்து 55.2% முன்னேற்றமாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4ce51ff3-b50d-4828-bbf3-529a3e4aebc2/26-6a91f01f75e97.webp' /></p><p>

இதில், இலங்கை சுங்கத் திணைக்களம் 1,290 பில்லியன் ரூபாவை வசூலித்துள்ளது. இது மொத்த வரி வருமானத்தில் 48% பங்களிப்பாகும். அதே நேரத்தில், மோட்டார் வாகன இறக்குமதி வரி வருமானம் இரண்டு மடங்கிற்கும் மேலாக அதிகரித்து 266.4 பில்லியன் ரூபாவாக உயர்ந்துள்ளது.
</p><p>
மேலும், சுங்கத் திணைக்களம் மூலம் வசூலிக்கப்பட்ட இறக்குமதி பெறுமதி சேர் வரியின் (VAT) அளவு 443.7 பில்லியன் ரூபாயாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-28T21:13:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள 24,000க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு நீர் விநியோகம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/water-supplied-to-over-24-000-drought-hit-families-1787950634"></link>
            <id>https://jvpnews.com/article/water-supplied-to-over-24-000-drought-hit-families-1787950634</id>
            <summary type="text">தற்போது நிலவும் வறட்சியான வானிலை காரணமாக 7 மாவட்டங்களைச் சேர்ந்த 25 பிரதேச செயலகப் பிரிவுகள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் த...</summary>
            <content type="html"><![CDATA[<p>தற்போது நிலவும் வறட்சியான வானிலை காரணமாக 7 மாவட்டங்களைச் சேர்ந்த 25 பிரதேச செயலகப் பிரிவுகள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.</p><p> 

நிலவும் வறட்சியான வானிலை காரணமாக இந்த 7 மாவட்டங்களிலும் உள்ள 26,457 குடும்பங்களைச் சேர்ந்த 84,545 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த நிலையம் குறிப்பிட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/832572e0-ca57-4b86-b533-191dc5f6b582/26-6a91f62bc5cb6.webp' /></p><h2>குடிநீர் விநியோகம்</h2><p> </p><p>

இதன் காரணமாக 6 மாவட்டங்களைச் சேர்ந்த 22 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு குடிநீர் விநியோகம் செய்வதற்கும் அந்த நிலையம் நடவடிக்கை எடுத்துள்ளது. </p><p>

இதன்படி, 24,144 குடும்பங்களைச் சேர்ந்த 75,734 பேருக்கு குடிநீர் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.</p><p></p><p> </p><p>

இவர்களில் அதிகளவானோர் மொனராகலை மாவட்டத்திலேயே பாதிக்கப்பட்டுள்ளதுடன், அம்மாவட்டத்தின் 11,074 குடும்பங்களைச் சேர்ந்த 35,639 பேருக்கு குடிநீர் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p> 

இதற்கு மேலதிகமாக, மட்டக்களப்பு மாவட்டத்தில் 9,547 குடும்பங்களைச் சேர்ந்த 28,253 பேருக்கும், அம்பாறை மாவட்டத்தில் 2,823 குடும்பங்களைச் சேர்ந்த 8,847 பேருக்கும், பொலன்னறுவை மாவட்டத்தில் 683 குடும்பங்களைச் சேர்ந்த 2,646 பேருக்கும், இரத்தினபுரி மாவட்டத்தில் 17 குடும்பங்களைச் சேர்ந்த 79 பேருக்கும் குடிநீர் விநியோகிக்கஅனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-28T20:57:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹமாஸ் அமைப்பின் மூத்த தளபதி ஒருவரை வீழ்த்தியது இஸ்ரேலிய இராணுவம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/israeli-army-kills-senior-hamas-commander-1787948599"></link>
            <id>https://ibctamil.com/article/israeli-army-kills-senior-hamas-commander-1787948599</id>
            <summary type="text">பாலஸ்தீன் நாட்டின் ஜெனின் நகரத்தில் நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில், ஹமாஸின் மூத்த தளபதி எனக் கூறப்படும் கைஸ் பிடாவி மற்றும் மேலும் இருவர் கொல்லப்பட்டத...</summary>
            <content type="html"><![CDATA[<p>பாலஸ்தீன் நாட்டின் ஜெனின் நகரத்தில் நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில், ஹமாஸின் மூத்த தளபதி எனக் கூறப்படும் கைஸ் பிடாவி மற்றும் மேலும் இருவர் கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.
</p><p>
தாக்குதல் நடந்த உடனே, இஸ்ரேலியப் படைகள் கூடுதல் படைகளை அனுப்பி, ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரை நகரில் குறிவைக்கப்பட்ட இடத்தைச் சுற்றித் தடுப்புகளை அமைத்ததாக தெரியருகிறது.</p><p>

அதன்போது, தாக்குதல் நடந்த இடத்திற்குத் தங்கள் மருத்துவக் குழுவினர் வந்தபோது, இஸ்ரேலிய இராணுவம் அவர்களைத் தடுத்து நிறுத்தியதாக பாலஸ்தீன செஞ்சிலுவைச் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.</p><p></p><h2>இஸ்ரேலிய இராணுவத்தின் உத்தரவு</h2><p>
</p><p>
அத்தோடு, அவர்களின் மருத்துவ உபகரணங்கள் பறிமுதல் செய்யப்பட்ட பின்னரே அவர்கள் விடுவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/45acb2c6-8894-4225-88d0-8e68b99663bd/26-6a91f242f280b.webp' /></p><p><i>Image Credit:&nbsp;aawsat</i></p><p>
</p><p>
மேலும், தாக்குதலில் காயமடைந்தவர்களை அழைத்துச் செல்ல அனுமதிக்காமல், மருத்துவக் குழுவினர் அங்கிருந்து உடனடியாக வெளியேற வேண்டும் என்று இஸ்ரேலிய இராணுவம் உத்தரவிட்டதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-28T20:40:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கோட்டாபய ஆட்சிக்காலத்தில் மக்களுக்காக குரல் கொடுத்தவர்களின் நிலை.. சஜித் தரப்பு குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sjb-kandy-organizer-hemapriya-kavirathna-speech-1787947554"></link>
            <id>https://tamilwin.com/article/sjb-kandy-organizer-hemapriya-kavirathna-speech-1787947554</id>
            <summary type="text">அரகலய போராட்டத்திற்காக அன்று குரல் கொடுத்த போது சட்ட வல்லுநர்களாகப் பாராட்டுப் பெற்றவர்கள், இன்று கறுப்பு அங்கிப் பேர்வழிகளாக அரசாங்கத்தினால் சித்தரிக...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரகலய போராட்டத்திற்காக அன்று குரல் கொடுத்த போது சட்ட வல்லுநர்களாகப் பாராட்டுப் பெற்றவர்கள், இன்று கறுப்பு அங்கிப் பேர்வழிகளாக அரசாங்கத்தினால் சித்தரிக்கப்படுவதாக ஐக்கிய மக்கள் சக்தி கண்டி அமைப்பாளர் ஹேமப்ரிய கவிரத்ன தெரிவித்துள்ளார்.</p><h2>முன்வைக்கும் குற்றச்சாட்டு&nbsp;</h2><p>
</p><p>மேலும் அவர்,

கோட்டாபய ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் மிரிஹானாவில் கைது செய்யப்பட்ட மக்களுக்காகக் குரல் கொடுத்து ஜனநாயகத்திற்காக நின்ற இலங்கை சட்ட வல்லுநர்கள் சங்கம், இன்று இந்த அரசாங்கத்தை ஆட்சிக்குக் கொண்டுவர உதவியதற்காக வருந்தும் அளவிற்கு மாறிவிட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a03d0bcf-4631-468d-9c91-2aee80b5d8fb/26-6a91ed63b83b0.webp' /></p><p>
</p><p>
அன்று மக்களுக்காகக் குரல் கொடுத்த அதே சட்ட வல்லுநர்கள் சங்கம், இன்று 'திருடர்களாகவும், மோசடிக்காரர்களாகவும், கறுப்பு அங்கி அணிந்தவர்களாகவும்' அரசாங்கத்தினால் விமர்சிக்கப்படும் அளவுக்கு நிலைமை மாறிவிட்டது.</p><p>

புனிதமான மஞ்சள் அங்கியை ஒருபுறமும், சட்ட வல்லுநர்களின் கறுப்பு அங்கியை மறுபுறமும் ஊழல்வாதிகளின் குவியலில் வீசி, விமர்சனங்களை அடக்க தற்போதைய அரசாங்கம் முயற்சிக்கின்றது என்றும் கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-28T20:19:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாட்டு மீட்புக் குழுக்களின் உதவியை நிராகரித்த நேபாளம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/nepal-rejects-help-from-foreign-rescue-teams-1787946780"></link>
            <id>https://jvpnews.com/article/nepal-rejects-help-from-foreign-rescue-teams-1787946780</id>
            <summary type="text">பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணிகளைத் தானே நேரடியாக ஒருங்கிணைத்து வருவதாகவும், இச்சந்தர்ப்பத்தில் வெளிநாட்டு மீட்புக் குழுக்களின் உதவியைப் பெற வேண்டிய...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணிகளைத் தானே நேரடியாக ஒருங்கிணைத்து வருவதாகவும், இச்சந்தர்ப்பத்தில் வெளிநாட்டு மீட்புக் குழுக்களின் உதவியைப் பெற வேண்டிய அவசியமில்லை என்றும் நேபாள வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது. </p><p style="text-align: justify; ">

அனர்த்த நிலைகளின் போது வெளிநாடுகள் உதவி வழங்க முன்வருவது இயல்பானது என்றபோதிலும், நேபாள பாதுகாப்புப் படையினர் தற்போது தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை வெற்றிகரமாக முன்னெடுத்து வருவதாக வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் லோக் பகதூர் சேத்ரி தெரிவித்துள்ளார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/41aebf6c-30fe-4cae-8ac3-e3d5c42eee3d/26-6a91e71e69eaa.webp' /></p><h2 style="text-align: justify; ">வெளிநாட்டு உதவிகள்</h2><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

எனவே, தற்போது அத்தகைய வெளிநாட்டு உதவிகள் தேவைப்படவில்லை என்று அவர் மேலும் கூறியதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. </p><p style="text-align: justify; ">

இருப்பினும், இலங்கை, இந்தியா, சீனா, அமெரிக்கா, பிரித்தானியா, ஜப்பான், தென்கொரியா மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகள் தமது தேடுதல் மற்றும் மீட்புக் குழுக்களை நேபாளத்திற்கு அனுப்புவதற்கான அனுமதியைக் கோரியிருந்ததாக நேபாள ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. </p><p style="text-align: justify; ">

பாதிக்கப்பட்ட சீனா எல்லைக்கு அருகிலுள்ள ரசுவா (Rasuwa) மாவட்டம் உட்பட ஏனைய பகுதிகளில் சுமார் 500 பேர் வரை உயிரிழந்துள்ளதுடன், நூற்றுக்கணக்கான வெளிநாட்டவர்கள் காணாமல் போயுள்ளனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-28T20:15:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாள வெள்ளத்தில் கனடிய தம்பதி மாயம்: நல்ல செய்திக்காகக் காத்திருக்கும் குடும்பத்தினர்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/missing-in-nepal-after-deadly-flash-floods-1787928115"></link>
            <id>https://canadamirror.com/article/missing-in-nepal-after-deadly-flash-floods-1787928115</id>
            <summary type="text">&amp;nbsp;கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தைச் சேர்ந்த கனடிய தம்பதியினர், நேபாளத்தில் ஏற்பட்ட பயங்கர திடீர் வெள்ளத்தில் சிக்கி மாயமாகியுள்ளனர். 
இமய...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தைச் சேர்ந்த கனடிய தம்பதியினர், நேபாளத்தில் ஏற்பட்ட பயங்கர திடீர் வெள்ளத்தில் சிக்கி மாயமாகியுள்ளனர்.</p><p> 
இமயமலை பனிப்பாறை உடைப்பால் ஏற்பட்ட இந்த பேரிடரில் 30-க்கும் மேற்பட்ட கனடியர்கள் காணாமல் போயுள்ள நிலையில், இந்த தம்பதியின் நிலை என்னவென்று தெரியாமல் அவர்களது குடும்பத்தினர் பெரும் தவிப்பில் உள்ளனர்.
</p><p>பிரிட்டிஷ் கொலம்பியாவின் 'போர்ட் மூடி' பகுதியைச் சேர்ந்த தவால் ஷா மற்றும் அவரது மனைவி மேகா ஷா ஆகியோர் நேபாளத்திற்குச் சுற்றுலா சென்றிருந்த நிலையில் இந்த வெள்ளப் பெருக்கில் சிக்கியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a1a090e0-cabc-4b01-acc0-4299c4eb9757/26-6a919e3575bc5.webp' /></p><p>
</p><p>கடந்த ஞாயிற்றுக்கிழமைக்குப் பின்னர் அவர்களிடம் இருந்து எந்தத் தொடர்பும் இல்லை என்று தவாலின் சகோதரர் கேவல் ஷா வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
</p><p>அவர்கள் எப்படியாவது வெள்ளத்திலிருந்து தப்பித்து, உயிருடன் மீட்டெடுக்கப்பட்டார்கள் என்ற ஒரு நல்ல செய்தி வரக் கூடாதா என்று தான் நாங்கள் வழிமேல் விழிவைத்து காத்துக் கொண்டிருக்கிறோம்.</p><p> ஆனால், துரதிர்ஷ்டவசமாக இதுவரை எந்தத் தகவலும் வரவில்லை என காணாமல் போன கனடியரின் சகோதரர் கேவல் ஷா தெரிவித்துள்ளார்.
</p><p>திபெத்-நேபாள எல்லையில் ஏற்பட்ட இந்த திடீர் வெள்ளத்தில் 1,000-க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளனர்.
</p><p>இதில் தவால்-மேகா தம்பதி உட்பட குறைந்தபட்சம் 30 கனடியர்களும், நிரந்தரக் குடியுரிமை பெற்றவர்களும் அடங்குவர் என கனடா உலகளாவிய விவகாரங்கள் துறை உறுதிப்படுத்தியுள்ளது.
</p><p>மலைப் பகுதியில் பனிப்பாறை உடைந்ததால் ஏற்பட்ட இந்த வெள்ளத்தில் பல அடி உயரத்திற்குச் சேறும் சகதியும் அடர்த்தியாகக் குவிந்துள்ளது.
</p><p>பாதிக்கப்பட்ட பகுதிகள் மிகவும் தொலைதூரத்தில் அமைந்திருப்பதாலும், சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளதாலும் மீட்புக் குழுவினர் அங்குச் செல்வதில் பெரும் சிரமம் நிலவுகிறது. 
அடர்ந்த சேற்றுக்குள் சிக்கியவர்களைத் தேடிக் கண்டுபிடிப்பது மிகவும் கடினமான காரியமாக இருக்கும் என அஞ்சப்படுகிறது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-28T19:56:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாள வெள்ளப் பேரழிவில் 35 நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டவர்கள் காணாமல் போனது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/nepal-floods-35-nations-missing-citizens-1787945065"></link>
            <id>https://news.lankasri.com/article/nepal-floods-35-nations-missing-citizens-1787945065</id>
            <summary type="text">Nepal Floods - 35 nations missing citizens: நேபாள பெருவெள்ளத்தில் 35 நாடுகளை சேர்ந்தவர்கள் காணாமல் பொறியுள்ளனர்.

நேபாளம்-திபெத் எல்லைப் பகுதியில் ஏ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Nepal Floods - 35 nations missing citizens: நேபாள பெருவெள்ளத்தில் 35 நாடுகளை சேர்ந்தவர்கள் காணாமல் பொறியுள்ளனர்.
</p><p>
நேபாளம்-திபெத் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பெரும் பேரழிவு ஏற்பட்டுள்ளது. </p><p>

நேபாள அரசு வெளியிட்ட சமீபத்திய தகவலின்படி, 1,468 பேர் காணாமல் போயுள்ளனர். இதில் 517 வெளிநாட்டவர்கள் அடங்குவர். இதுவரை 392 பேர் உயிரிழந்தது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/09944d80-c2be-466f-82a2-cda6fe7b924f/26-6a91e82a97e7e.webp' /></p><p>நேபாள சுற்றுலா வாரியம் தெரிவித்ததாவது, 667 பேர் காணாமல் போயுள்ளனர் என பதிவாகியுள்ளது. இதில் 127 நேபாளர்கள் மற்றும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் அடங்குவர்.
</p><p><b>
இந்தியா:</b> வியாழன் நிலவரப்படி 178 இந்தியர்கள் காணாமல் போயுள்ளனர். 11 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
</p><p><b>அமெரிக்கா:</b> 90 பேர் காணாமல் போயுள்ளனர். 3 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
</p><p><b>பிரித்தானியா:</b> 33 பேர் காணாமல் போயுள்ளனர்.
</p><p><b>கனடா:</b> 25 பேர் காணாமல் போயுள்ளனர். ஆனால், கனடா அரசு 30 பேர் தொடர்பில் தகவல் இல்லை என தெரிவித்துள்ளது.
</p><p><b>அவுஸ்திரேலியா:</b> 39 பேர் காணாமல் போயுள்ளனர்.
</p><p><b>மலேசியா:</b> 51 பேர் தொடர்பில் தகவல் இல்லை.
</p><p><b>உக்ரைன்: </b>56 பேர் காணாமல் போயுள்ளனர்.
</p><p><b>சீனா:</b> 100-க்கும் மேற்பட்ட சீனர்கள் காணாமல் போயுள்ளனர்.
</p><p></p><p>மேலும், ஜேர்மனி (8), ரஷ்யா (8), சிங்கப்பூர் (9), தென் கொரியா (9), பிரான்ஸ் (4), ஸ்பெயின் (4), ஜப்பான் (5), நியூசிலாந்து (5), தென்னாப்பிரிக்கா (6), லாட்வியா (6), போர்ச்சுகல் (3), இத்தாலி (3), அயர்லாந்து (2), கசகஸ்தான் (2), இஸ்ரேல் (1), லிதுவேனியா (1), பிலிப்பைன்ஸ் (1), ஸ்வீடன் (1), பெல்ஜியம் (3), ஹங்கேரி (3),நெதர்லாந்து (2), பின்லாந்து (1) உள்ளிட்ட 35 நாடுகளைச் சேர்ந்தவர்கள் காணாமல் போயுள்ளனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d39788c1-a936-405d-866e-2ad39555284d/26-6a91e82b5605b.webp' /></p><p>சுவிற்சர்லாந்து (1), பல்கேரியா (1) ஆகிய நாடுக்ளிக் சேர்ந்தவர்கள் மீட்கப்பட்டுள்ளார்.
</p><p>
சிலர் மீட்கப்பட்டாலும், பலர் இன்னும் தொடர்பில் இல்லை. இரட்டை குடியுரிமை, உடல்களை அடையாளம் காணும் சிரமம், பேரழிவின் குழப்பம் ஆகிய காரணங்களால் எண்ணிக்கைகள் மாறக்கூடும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
</p><p>
இந்த பேரழிவு, நேபாளத்தின் சுற்றுலா துறைக்கு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் இருந்து வந்த சுற்றுலா பயணிகள் காணாமல் போனதால், பல நாடுகள் தங்கள் குடிமக்களை தேடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-28T19:54:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீதிக்கான நீள் பயணம் மாநாட்டிற்கு யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஆதரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/missing-persons-sri-lanka-tamils-conference-1787946037"></link>
            <id>https://tamilwin.com/article/missing-persons-sri-lanka-tamils-conference-1787946037</id>
            <summary type="text">வடக்கு கிழக்கு இணைந்த வலிந்து காணாமல்
ஆக்கப்பட்டோர் சங்கத்தினால் யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்படவுள்ள &quot;நீதிக்கான நீள் பயணம்&quot; மாநாட்டிற்கு நாங்கள் முழ...</summary>
            <content type="html"><![CDATA[<p>வடக்கு கிழக்கு இணைந்த வலிந்து காணாமல்
ஆக்கப்பட்டோர் சங்கத்தினால் யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்படவுள்ள "நீதிக்கான நீள் பயணம்" மாநாட்டிற்கு நாங்கள் முழுமையான ஆதரவினை வழங்க இருக்கின்றோம் என
யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் யோகராசா துஷாந்தன் தெரிவித்தார்.</p><p>
யாழ். ஊடக அமையத்தில் நேற்று மாலை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த
போது அவர் இதனை குறிப்பிட்டார்.&nbsp;</p><p>

மேலும் தெரிவிக்கையில், "பல ஆண்டு காலமாக தங்களுடைய உறவுகளுக்கு என்ன நடந்தது என்பது தெரியாமல்,
உண்மையையும் நீதியையும் வேண்டி நீண்ட காலமாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின்
உறவுகள் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றார்கள்.</p><h2>&nbsp;முழுமையான ஆதரவு&nbsp;</h2><p>
</p><p>
அந்த நிலையில், தமது உறவுகளின் நீதிக்காக வீதியில் நின்று போராடி வருகின்ற
தாய்மாரினுடைய குடும்பங்களின் குரலுக்கு வலுசேர்க்கும் வகையில், எங்களுடைய
அனைத்து மாணவர் சமூகமும், அத்துடன் இளைஞர்கள் இணைந்து அவர்களுக்கான முழுமையான
ஆதரவை வழங்க வேண்டியது அவசியமானதாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/673118aa-1a06-4ea7-96e7-b93f9756daaf/26-6a91e5e9c1ffd.webp' /></p><p>
</p><p>
அந்த நிலையிலே, எதிர்வருகின்ற ஞாயிற்றுக்கிழமை 9 மணிக்கு யாழ்ப்பாணம்
வீரசிங்கம் மண்டபத்திற்கு முன்பாக அமைந்துள்ள உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு
படுகொலை நினைவுத் தூபி இடத்தில் வைத்து, வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட ஒருவரது
உறவினரின் நினைவுப்படுத்தலோடு கவனயீர்ப்பு போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு,
பின்னர் தந்தை செல்வா கலையரங்கை அடைந்து, நீதிக்கான நீள் பயணம் என்ற பெயரிலே
ஒரு நாள் சர்வதேச மாநாடு, நீதியின் வலியுறுத்தலை நிலைப்படுத்தி நினைவு
நிகழ்வானது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.</p><p>

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளுக்கு உண்மையும் நீதியும் கிடைக்கும்
வரை, அவர்களினுடைய குடும்பங்கள் முன்னெடுத்து வருகின்ற போராட்டத்திற்கு எமது
ஆதரவு தொடரும்.
</p><p>
அவர்களுடைய கோரிக்கைகள் உள்ளூர் மட்டத்தை கடந்து சர்வதேச சமூகத்தின்
கவனத்திற்கு சென்றடைய வேண்டிய அவசியம் உள்ளது. எனவே பேரன்புமிக்க தமிழ்
சமூகமே, 30ஆம் திகதி நடைபெறவுள்ள இந்த முக்கிய நிகழ்விலே பல்கலைக்கழக
மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள், அரசியல் கட்சிகள், பிரதிநிதிகள், மதத்
தலைவர்கள், சமூகம் அனைத்து தரப்பினரும் இணைந்து கலந்துகொண்டு, இந்த காணாமல்
ஆக்கப்பட்ட அம்மாக்களினால் மேற்கொள்ளப்படுகின்ற இந்த பேரணிக்கும்
போராட்டத்திற்கும் வலுச்சேர்க்க வேண்டும் என்பதனை பல்கலைக்கழக மாணவர் சமூகமாக
நாங்கள் வலியுறுத்தி நிற்கின்றோம்” என்றார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-28T19:48:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[நௌஃபர் ஜேசுதாசனின் 7 கோடி ரூபாய் சட்டவிரோத சொத்துக்கள் முடக்கம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/assets-worth-7-cr-belonging-drug-trafficker-frozen-1787942815"></link>
            <id>https://ibctamil.com/article/assets-worth-7-cr-belonging-drug-trafficker-frozen-1787942815</id>
            <summary type="text">நௌஃபர் ஜேசுதாசன் என்ற போதைப்பொருள் கடத்தல்காரருக்கு சொந்தமானது எனக் கூறப்படும், 7 கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள சொத்துக்களின் பயன்பாட்டை தற்கால...</summary>
            <content type="html"><![CDATA[<p>நௌஃபர் ஜேசுதாசன் என்ற போதைப்பொருள் கடத்தல்காரருக்கு சொந்தமானது எனக் கூறப்படும், 7 கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள சொத்துக்களின் பயன்பாட்டை தற்காலிகமாக இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p>

சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப் பிரிவு நடத்திய விசாரணையைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
</p><p>
இதன்போது, மாத்தளை மீகஸ்தென்ன மற்றும் ஓவிலிகந்த பகுதிகளில் அமைந்துள்ள பல சொத்துக்கள் இவ்வாறு தற்காலிகமாகத் தடை செய்யப்பட்டுள்ளன.</p><p></p><h2>தொடர் விசாரணை</h2><p>
</p><p>
இடைநிறுத்தப்பட்ட சொத்துக்களில் 18 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 10 பேர்ச் நிலம், 4.14 கோடி ரூபாய் மதிப்புள்ள மூன்று மாடி வீடு அடங்கிய 10 பேர்ச் நிலம், 1.5 கோடி ரூபாய் மதிப்புள்ள 4 ஏக்கர் தேயிலைத் தோட்டம் மற்றும் 16 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 12.5 பேர்ச் நிலம் ஆகியவை அடங்குவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3c333198-42e4-4714-a03a-c9638fff2ce4/26-6a91d9af4d397.webp' /></p><p>

சமீபத்தில் காவல்துறை போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இச்சந்தேக நபருக்குச் சொந்தமான மேலும் பல சொத்துக்கள் குறித்தும் தொடர்ந்து விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-28T19:37:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kumar</name>
            </author>
            <title type="text"><![CDATA[மட்டக்களப்பு மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் பழமை மிகு தீர்த்தோற்சவம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/mandur-kandaswamy-temple-batticaloa-1787945597"></link>
            <id>https://tamilwin.com/article/mandur-kandaswamy-temple-batticaloa-1787945597</id>
            <summary type="text">இலங்கையின் சின்னக்கதிர்காமம் எனப்போற்றப்படும் மட்டக்களப்பு மண்டூர்
கந்தசுவாமி ஆலயத்தின் பழமை மிகு தீர்த்தோற்சவம் நேற்று பல்லாயிரக்கணக்கான
அடியார்கள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் சின்னக்கதிர்காமம் எனப்போற்றப்படும் மட்டக்களப்பு மண்டூர்
கந்தசுவாமி ஆலயத்தின் பழமை மிகு தீர்த்தோற்சவம் நேற்று பல்லாயிரக்கணக்கான
அடியார்கள் புடைசூழ வெகுவிமர்சையாக நடைபெற்றது.
</p><p>இலங்கையில் கதிர்காமத்தின் காலத்தினை ஒத்ததாக கருதப்படும் மண்டூர் கந்தசாமி
ஆலயத்தின் பூசைமுறைகள் கதிர்காமத்தினை ஒத்ததாக நடைபெற்றுவருகின்றது.
கடந்த 08ஆம் திகதி சனிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 21தினங்கள் ஆலய
உற்சவம் நடைபெற்றுவந்தன.
</p><p>உலகிலேயே முருக வழிபாட்டில் தனித்துவமான முறையினையும் மிகவும் பழமையான
வழிபாட்டு முறையினையும் கொண்டதாக பூஜை முறைகளும் ஆலய நடைமுறைகளும் மண்டூர்
கந்தசுவாமி ஆலயத்தில் உள்ளது.</p><p>
நேற்று காலை விசேட பூஜைகள் நடைபெற்றதுடன் வேல்தாங்கிய பேழைக்கு சிறப்பு பூஜைகள்
நடைபெற்றன. இந்த பேழைக்கு ஆலயத்தினுள் சிறுமி ஒருவரும் தீபம் காட்டி
வழிபாடுகளை முன்னெடுத்த பின்னரே பேழையானது தீர்த்தக்கரை நோக்கி கொண்டு
செல்லப்பட்டது.
</p><p>பெருமளவான பக்தர்கள் அடியார்கள் புடைசூழ மட்டக்களப்பு வாவிக்கு அருகில் உள்ள
தீர்த்தக்கேணிக்கு முருகனின் வேல்தாங்கிய பேழை கொண்டுவரப்பட்டது.
போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் ரங்கநாதன் தலைமையில் இந்த வழிபாடுகள்
முன்னெடுக்கப்பட்டதுடன் தீர்த்தோற்சவம் சிறப்பாக நடைபெற்றது.
</p><p>தீர்த்தோற்சவம் நிறைவடைந்ததும் ஆலயத்திற்கு முருகப்பெருமானின் பேழை
கொண்டுவரப்படும்போது தெய்வானையம்மன் ஆலயத்திற்கு முன்பாக சிறுமிகள் தீப ஆராதனை
செய்யும் நிகழ்வு நடைபெறும்போது சிறுமிகள் மற்றும் வில்அம்பு தாங்கி வரும்
சிறுவன் மயங்கிவிழும் அற்புத நிகழ்வு காலம்காலமாக நடைபெற்றுவருகின்றது.
</p><p>மயங்கிய சிறுமிகள் வள்ளியம்மன் ஆலயத்திற்கு பிற்புறமாக கொண்டுசெல்லப்பட்டு
முருகப்பெருமானின் வேல் வள்ளியம்மன் ஆலயத்திற்குள் வைக்கப்பட்டது. இதன்போது
வள்ளியமனுக்கு தீர்த்தம் தெளிக்கும் சமயத்தில் மயங்கிய பிள்ளைகள் மயக்கம்
தெளிந்து எழும் அற்புத காட்சியும் இடம்பெற்றது.</p>]]></content>
            <updated>2026-08-28T19:34:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[பெரும் கைதுகளுக்கான கோப்புகள் தயார்! அதிரடியாக களமிறங்கும் புலனாய்வு அதிகாரிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/anura-government-cid-investigations-to-arrest-1787943637"></link>
            <id>https://tamilwin.com/article/anura-government-cid-investigations-to-arrest-1787943637</id>
            <summary type="text">தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரசாரங்களில் முன்வைக்கப்பட்ட முக்கிய வாக்குறுதி, கடந்த கால ஆட்சிகளில் இடம்பெற்ற ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் அம்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரசாரங்களில் முன்வைக்கப்பட்ட முக்கிய வாக்குறுதி, கடந்த கால ஆட்சிகளில் இடம்பெற்ற ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் அம்பலப்படுத்துவோம் என்பதே.&nbsp;</p><p>அந்தவகையில், தற்போதைய அரசாங்கம், முந்தைய அரசாங்கங்களில் இடம்பெற்ற குற்றச்சாட்டுக்களை அம்பலப்படுத்தி பலரை கைது செய்து வருவதில் அதிரடியாக செயற்பட்டு வருகின்றது.&nbsp;</p><p>குறிப்பாக, ராஜபக்சக்களின் பாரிய குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் பல முக்கிய தகவல்களை புலனாய்வு அதிகாரிகள் திரட்டி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.&nbsp;</p><p>முன்னெடுக்கப்பட்டு வந்த விசாரணைகளின் அடிப்படையில், விரைவில் பல முக்கிய அரசியல் புள்ளிகளை கைது செய்வதற்கான பட்டியல்களும் தயார்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.&nbsp;</p><p>இது உட்பட நாட்டில் இடம்பெற்ற பல முக்கிய அரசியல் நகர்வுகள் குறித்து ஆராய்கின்றது நாட்டு நடப்பு நிகழ்ச்சி,&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/4l94xWZPoc0" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-28T19:28:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் அடுத்தமாதம் இலங்கை வருகை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/imf-representatives-to-visit-sri-lanka-next-month-1787943985"></link>
            <id>https://tamilwin.com/article/imf-representatives-to-visit-sri-lanka-next-month-1787943985</id>
            <summary type="text">சர்வதேச நாணய நிதியத்தின் முக்கிய பிரதிநிதிகள் குழுவொன்று அடுத்த மாதம் இலங்கைக்கு வரவுள்ளதாக தெரியவந்துள்ளது.

இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள நிதியுதவித்...</summary>
            <content type="html"><![CDATA[<p>சர்வதேச நாணய நிதியத்தின் முக்கிய பிரதிநிதிகள் குழுவொன்று அடுத்த மாதம் இலங்கைக்கு வரவுள்ளதாக தெரியவந்துள்ளது.</p><p>

இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள நிதியுதவித் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதில் இலங்கை அடைந்துள்ள முன்னேற்றத்தைச் சரிபார்க்கும் நோக்கில், சர்வதேச நாணய நிதியத்தின் (ஐஆகு) பிரதிநிதிகள் குழுவொன்று அடுத்த மாதம் இறுதியில் நாட்டிற்கு வருகைதரவுள்ளது.
</p><p>
இலங்கை தொடர்பில் வகையில் மேற்கொள்ளவுள்ள ஏழாவது மதிப்பீட்டு நடவடிக்கைகளுக்காகவே சர்வதேச நாணயத்தின் பிரதிநிதிகள் குழு வருகை தரவுள்ளதாகத் தெரிய வந்துள்ளது.</p><h2>பொருளாதார நெருக்கடி</h2><p>

குறித்த மதிப்பீட்டு செயற்பாடுகள் நிறைவடைந்த பின்னர், அடுத்த தவணைக் கடன் வசதியாக மேலும் சுமார் 330 மில்லியன் அமெரிக்க டொலர் தொகை இலங்கைக்குக் கிடைக்கவுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7fa17f37-82fd-452a-b992-4e6d0cbd5649/26-6a91dc3369399.webp' /></p><p>
சர்வதேச நாணய நிதியம் இதுவரை இலங்கைக்கு வழங்கியுள்ள நிதியுதவித் திட்டத்தின் கீழ், இலங்கை ஆறு மதிப்பீடுகளை நிறைவு செய்துள்ளதுடன், அதனடிப்படையில் நாட்டிற்கு வழங்கப்பட்டுள்ள மொத்த நிதி சுமார் 2.4 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.</p><p>

நாட்டில் ஏற்பட்ட கடுமையான பொருளாதார நெருக்கடிக்குப் பின்னர், 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நான்கு வருட காலப்பகுதிக்கு தவணை முறையில் கிடைக்கும் 2.9 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் உதவியை இலங்கைக்கு வழங்க சர்வதேச நாணய நிதியம் அங்கீகாரம் வழங்கியிருந்தது.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-28T19:15:34+00:00</updated>
        </entry>
    </feed>
