<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-08-28T12:30:43+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாளப் பெருவெள்ளம்... மன்னர் சார்லஸ் வெளியிட்டுள்ள செய்தி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/king-charles-heartbroken-by-nepal-floods-1787919749"></link>
            <id>https://news.lankasri.com/article/king-charles-heartbroken-by-nepal-floods-1787919749</id>
            <summary type="text">King Charles heartbroken by deadly Nepal flash floods: நேபாளப் பெருவெள்ளம் தன் இதயத்தை நொறுக்கிவிட்டதாக மன்னர் சார்லஸ் தெரிவித்துள்ளார்.


நேபாள் -...</summary>
            <content type="html"><![CDATA[<p>King Charles heartbroken by deadly Nepal flash floods: நேபாளப் பெருவெள்ளம் தன் இதயத்தை நொறுக்கிவிட்டதாக மன்னர் சார்லஸ் தெரிவித்துள்ளார்.</p><p>


நேபாள் - திபெத் எல்லையில் ஏற்பட்டுள்ள பெருவெள்ளத்தின்போது, ஒரு 13 வயது சிறுமி மற்றும் ஒரு 14 வயதுப் பையன் உட்பட 33 பிரித்தானியர்கள் மாயமாகியுள்ளார்கள்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/29a2b59d-e3b5-42f1-940b-aff52d1f1c66/26-6a917d872dba7.webp' /></p><h3>
மன்னர் சார்லஸ் வெளியிட்டுள்ள செய்தி</h3><p>

இந்நிலையில், பிரித்தானிய மன்னர் சார்லஸ், நேபாள பெருவெள்ளம் தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.</p><p>

நேபாள பெருவெள்ளம் குறித்த செய்தி தங்கள் இதயத்தை நொறுக்கிவிட்டதாக மன்னர் சார்லசும் ராணி கமீலாவும் தெரிவித்துள்ள நிலையில், பெருவெள்ளத்தில் உயிரிழந்தவர்களுக்கு தங்கள் இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதாக மன்னர் சார்லஸ் தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/14bc57c6-0ee9-4a57-9d39-510e00eadbdb/26-6a917d87d52ac.webp' /></p><p>
மேலும், நேபாளத்துடன் பிரித்தானியர்கள் பலர் வலிமையான, ஆழ்ந்த மற்றும் தனிப்பட்ட முறையிலான உறவு வைத்துள்ளார்கள் என்று கூறியுள்ள மன்னர் சார்லஸ், தங்கள் உறவினர்கள், நண்பர்களுக்கு என்ன நேர்ந்தது என்று தெரியாமல், அவர்களைக் குறித்த தகவலுக்காக கவலையுடன் காத்திருக்கும் பல குடும்பங்களுக்கு தங்கள் ஆறுதலைத் தெரிவித்துக்கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p></p><p>
இந்நிலையில், இளவரசர் வில்லியமும் இளவரசி கேட்டும், நேபாள பெருவெள்ளம் குறித்து அறிந்து அதிர்ச்சியடைந்ததாகவும், இந்த பயங்கர இயற்கைச் சீற்றத்தால் பாதிக்கப்பட்டுள்ள அனைவரையும் நினைவுகூர்வதாகவும் தெரிவித்துள்ளனர்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-28T12:24:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிளிநொச்சியில் இரவோடு இரவாக இரகசியமாக எழுப்பப்படவிருந்த கோபுரம்! தடுத்து நிறுத்திய மக்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/secret-tower-in-kilinochchi-night-after-night-1787919211"></link>
            <id>https://ibctamil.com/article/secret-tower-in-kilinochchi-night-after-night-1787919211</id>
            <summary type="text">கிளிநொச்சி - பூநகரி கிராஞ்சி எல்லைப் பகுதியான எருமை தீவு பகுதியில் இரகசியமாக கோபுரம் ஒன்றை அமைப்பதற்கான முயற்சி தற்காலிகமாக தடுத்த நிறுத்தப்பட்ட்டுள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிளிநொச்சி - பூநகரி கிராஞ்சி எல்லைப் பகுதியான எருமை தீவு பகுதியில் இரகசியமாக கோபுரம் ஒன்றை அமைப்பதற்கான முயற்சி தற்காலிகமாக தடுத்த நிறுத்தப்பட்ட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>இரவு வேளை வாகனங்களில் வந்தவர்களால் இரகசியமாக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்ட நிலையில், அப்பகுதி மக்கள் ஒன்று கூடியதால் நடவடிக்கை நிறுத்தப்பட்டுள்ளது.
</p><p>
குறித்த விடயம் தொடர்பில் அப்பகுதியைச் சேர்ந்த பொது அமைப்பின் பிரதிநிதி ஒருவர் பின்வருமாறு கருத்து தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>பெரும்பான்மை இன நபர்கள்</h2><p>கிராஞ்சி பொன்னாவெளியை ஊடார்த்து சுமார் 238 ஏக்கர் பரப்பளவில் காற்றாலை
திட்டம் ஒன்று அமைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3b2b6bdf-a1c3-4358-8d03-2f5d1168ed45/26-6a917dc98e515.webp' /></p><p>அப்பகுதி மக்களின்
பாரிய எதிர்ப்பை மீறி திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக
அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளின் ஒத்துழைப்புடனும் 34 காற்றாலை அமைக்கும்
திட்டத்திற்கான ஏற்பாடுகள் மும்மரமாக இடம்பெற்று வருகிறது.</p><p>
இதன் பின்னணியில் இரவு வேளை வாகனத்தில் வந்த பெரும்பான்மை இன மொழியை பேசும்
நபர்கள் எருமை தீவுப் பகுதியில் நிற்பதாக தகவல் கிடைத்த நிலையில்&nbsp;காவல்துறையினர் உடனடியாக தகவல் வழங்கிய போதும் அவர்கள் இடத்துக்கு வரவில்லை.
</p><p>
இந்நிலையில் ஊர் மக்கள் பகுதிக்கு சென்று பார்வையிட்டபோது வாகனம்
ஒன்றில் ஐந்துக்கும் மேற்பட்ட நபர்கள் தங்குவதற்காக நிழல் கொட்டகை ஒன்றை இரவு
வேளை அமைத்துக் கொண்டிருந்தார்கள்.
</p><p>
அவர்களிடம் விடயத்தை வினவியபோது காற்றாலை திட்டத்தை கொழும்பிலிருந்து
பார்ப்பதற்கும் தகவல் வழங்குவதற்கும் கண்காணிப்பு கோபுரம் ஒன்றை அமைக்க
வந்ததாக தெரிவித்தனர்.
</p><p>
நாங்கள் காற்றாலை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறோம் என தெரிவித்து
அவர்களின் பொருட்களை மீட்கச் சென்ற போது தாங்கள் வெளியேறுகிறோம் எனத்
தெரிவித்து அவ்விடத்தில் இருந்து சென்றார்சென்றார்கள்.</p><p></p><h2>மக்களின் எதிர்ப்பு</h2><p>குறித்த விடயம் தொடர்பில் கிளிநொச்சி அரசாங்க அதிபரை மறுநாள் தொடர்பு கொண்டு
கேட்டபோது அவர் தனக்கு ஏதும் தெரியாது என பதிலளித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/37ccfafe-dab8-41e1-8a18-3a98028bf699/26-6a917dca48a60.webp' /></p><p>&nbsp;காற்றாலை திட்டம் கிராஞ்சி பொன்னாவெளியைச் சேர்ந்த சுமார் 2ஆயிரம்
குடும்பங்களை சேர்ந்த சுமார் பத்தாயிரம் பேர் திட்டத்தினால் நேரடியாக
பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.
</p><p>
குறித்த பகுதிகள் அதிகளவிலான தென்னை மரங்கள் காணப்படுகின்ற நிலையில் 12
காற்றாலை நிறுவும் இடங்களில் சுமார் 7 ஆயிரம் தென்னங்கன்றுகள் அழிக்கப்பட
உள்ளது.
</p><p>
ஒரு காற்றாலையின் விட்டம் 165 மீட்டர் நீளம் கொண்ட நிலையில் ஒரு காற்றாலை
அமைப்பதற்கு சுமார் 7 ஏக்கர் காணி கையகப்படுத்தப்படவுள்ளது.
</p><p>
ஒரு காற்றாலை 120 அடி நீளம் கொண்டதாக காணப்படுகின்ற நிலையில் நிலத்துக்கு கீழ்
சுமார் 60 அடி நீளத்தில் பொருத்தப்பட உள்ள நிலையில் ஒரு காற்றாலைக்கு சுமார்
3000 தொடக்கம் 4000 ஆயிரம் பொதியில் அடைக்கப்பட்ட சீமெந்து செலவாகும் என
கணிப்பிடப்பட்டுள்ளது.
</p><p>
இந்தத் திட்டம் மக்களின் எதிர்ப்பை மீறி நடைமுறைப்படுத்துவதற்கு முயற்சிகள்
மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் இந்தப் பிரதேசத்தின் வயல் நிலங்கள்
,வழிபாட்டு இடங்கள் , மற்றும் நல்ல தண்ணிக் கிணறு என்பன பாதிக்கப்படும் சூழல்
உருவாகியுள்ளது.
</p><p>
மக்கள் வாழுகின்ற வளமான பகுதியை அழித்து அபிவிருத்தி என்ற போர்வையில் கனிம
மண்ணையும் காற்றாலையையும் நிறுவும் திட்டத்தை கைவிட்டு பிரதேசத்தில்
மாற்றுக்காணியை தெரிவு செய்ய வேண்டும்.
</p><p>
ஆகவே மக்களுக்கு ஆபத்தை விளைவிக்க கடிய திட்டங்களை அடுத்த நிறுத்த வேண்டிய
பொறுப்பு அரசியல்வாதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் உள்ளது என்பதை சுட்டி காட்ட
விரும்புகிறேன் என அவர் மேலும் தெரிவித்தார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-28T12:23:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அனுராதபுரத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொன்ற கணவன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/husband-took-his-wife-forest-area-and-killed-her-1787917450"></link>
            <id>https://ibctamil.com/article/husband-took-his-wife-forest-area-and-killed-her-1787917450</id>
            <summary type="text">அனுராதபுரம், கொரக்கஹவெவ பகுதியில் உள்ள வனப்பகுதியில்&amp;nbsp; கணவர் ஒருவர் தனது மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிக் கொலை செய்துள்ளதுடன், பின்னர் அதே ஆயுதத்...</summary>
            <content type="html"><![CDATA[<p>அனுராதபுரம், கொரக்கஹவெவ பகுதியில் உள்ள வனப்பகுதியில்&nbsp; கணவர் ஒருவர் தனது மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிக் கொலை செய்துள்ளதுடன், பின்னர் அதே ஆயுதத்தால் தன்னையும் காயப்படுத்திக் கொண்டுள்ளார்.</p><p>குறித்த சம்பவம் இன்று (28.08.2026) காலை இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.&nbsp;</p><p>உலுக்குளம் பகுதியைச் சேர்ந்த 59 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.</p><p></p><h2>தனிப்பட்ட குடும்பத் தகராறு&nbsp;</h2><p>குறித்த நபர் இன்று காலை தனது மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் குறித்த வனப்பகுதிக்குச் சென்றுள்ளதாகவும், அங்கு வைத்து மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளதாகவும் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1a2a3e86-1d3b-4a78-86e9-6ca5f94c0140/26-6a917a0eac554.webp' /></p><p>மேலும் கூரிய ஆயுதத் தாக்கியதில் மனைவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.</p><p>இந்த நிலையில் படுகாயமடைந்த கணவர் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p><p>தனிப்பட்ட குடும்பத் தகராறு காரணமாக இந்தக் கொலை இடம்பெற்றிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
</p><p>
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அனுராதபுரம் காவல் அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-28T12:21:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[21 வயது அஜித்தின் ரீல் மகள் அனிகா சுரேந்திரன்!! ரீசெண்ட் சேரி கிளிக்ஸ்.]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/21-actress-anikha-onam-special-photos-with-family-1787919178"></link>
            <id>https://viduppu.com/article/21-actress-anikha-onam-special-photos-with-family-1787919178</id>
            <summary type="text">அனிகா சுரேந்திரன்மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அடுத்தடுத்த படங்களில் நடித்து பலரது கவனத்தையும் ஈர்த்தவர் தான் நடிகை அனிகா சுரேந்தி...</summary>
            <content type="html"><![CDATA[<h2>அனிகா சுரேந்திரன்</h2><p>மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அடுத்தடுத்த படங்களில் நடித்து பலரது கவனத்தையும் ஈர்த்தவர் தான் நடிகை அனிகா சுரேந்திரன்.
</p><p>
என்னை எறிந்தால், விஸ்வாசம் படங்களில் அஜித்தின் மகளாக நடித்த அனிகா, தெலுங்கில் தி கோஸ்ட் என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4f30417a-9d51-4eff-9485-b549ee9c08f7/26-6a917b524ebc5.webp' /></p><p>
</p><p>
அதன்பின் புட்ட மொம்மா, ஓ மை டார்லிங், PT சார், நிலவுக்கு என் மேல் என்னடி கோபம், இந்ரா போன்ற படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார்.
</p><p>
14 வயதில் போட்டோஷூட் பக்கம் சென்ற நடிகை அனிகா, கிளாமர் பக்கம் சென்று போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். தற்போது ஓணம் ஸ்பெஷலாக சேலையணிந்து தன் குடும்பத்துடன் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-08-28T12:15:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழ் சினிமாவின் டாப் இயக்குனர்கள் ஏ.ஆர்.முருகதாஸ்-ஷங்கர் கூட்டணி அமைக்கிறார்களா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/ar-murugadoss-shankar-2-top-directors-teaming-up-1787917025"></link>
            <id>https://cineulagam.com/article/ar-murugadoss-shankar-2-top-directors-teaming-up-1787917025</id>
            <summary type="text">இயக்குனர்கள்ஏ.ஆர்.முருகதாஸ், தமிழ் சினிமாவில் பல ஹிட் படங்களை இயக்கியவர். கடைசியாக முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க மதராஸி என்ற திரைப்படம...</summary>
            <content type="html"><![CDATA[<h2>இயக்குனர்கள்</h2><p>ஏ.ஆர்.முருகதாஸ், தமிழ் சினிமாவில் பல ஹிட் படங்களை இயக்கியவர். </p><p>கடைசியாக முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க மதராஸி என்ற திரைப்படம் வெளியாகி இருந்தது, ஆனால் படம் எதிர்ப்பார்த்த அளவு சரியான வரவேற்பு பெறவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d03d6c6b-f64e-4d88-9546-9a1e0604367f/26-6a91757240d1f.webp' /></p><p> </p><p>இப்படத்திற்கு முன் ஹிந்தியில் சல்மான் கானை வைத்து சிகந்தர் என்ற படம் இயக்கினார், ஆனால் அதுவும் சரியாக ஓடவில்லை.
தமிழ் சினிமா கொண்டாடும் இயக்குனர்களில் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரும் முக்கிய பங்கு வகிக்கிறார். </p><p>கடைசியாக ஷங்கர் இயக்கத்தில் கேம் சேஞ்சர் என்ற படம் வெளியானது. தெலுங்கில் ராம் சரண் நடிக்க வெளியாக சுத்தமாக படம் வரவேற்பு பெறவில்லை, பிளாப் ஆனது.
அடுத்து ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 3 வரும் என எதிர்ப்பார்க்கப்பட்டது, ஆனால் படம் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7600fe98-9f54-4e36-85bc-cd70921da237/26-6a91757175721.webp' /></p><h2>கூட்டணி
</h2><p>தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் மற்றும் ஷங்கர் கூட்டணியில் ஒரு படம் வெளியாக இருப்பதாக தகவல்கள் வருகின்றன. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b8193087-97d5-4c28-a772-5260aae2f7b0/26-6a91757065e3c.webp' /></p><p>அதாவது ஷங்கரின் கதைக் குழுவுடன் ஏ.ஆர்.முருகதாஸ் இணைந்து புதிய கமர்ஷியல் படத்திற்கான கதை உருவாக்கத்தில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏ.ஆர்.முருகதாஸ் கதையை ஷங்கர் இயக்க உள்ளாராம்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-28T12:10:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாளத்தில் நிரம்பி வழியும் சவக்கிடங்குகள் - செய்வதறியாது திணறும் அதிகாரிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/death-toll-in-nepal-floods-rises-1787899767"></link>
            <id>https://tamilwin.com/article/death-toll-in-nepal-floods-rises-1787899767</id>
            <summary type="text">புதிய இணைப்புநேபாள எல்லைப் பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 547 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன், இந்த இயற்கைப் ப...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>நேபாள எல்லைப் பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 547 ஆக அதிகரித்துள்ளது.</p><p>

அத்துடன், இந்த இயற்கைப் பேரிடரால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,473 ஆக உயர்ந்துள்ளது.
</p><p>
இந்தப் பேரிடர் மீட்புப் பணிகளில் 4,473 பொலிஸ் அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.</p><p>

இதற்கமைய, 517 வெளிநாட்டவர்கள் உட்பட 977 பேர் இதுவரை காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

மீட்புப் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், அதன் முன்னேற்றம் தொடர்பான தனித்தனி தகவல்களை இரு அமைப்புகளும் அவ்வப்போது வெளியிட்டு வருகின்றன.</p><h2>முதலாம் இணைப்பு</h2><p>நேபாளம் - சீன எல்லைப் பகுதியில் இமயமலையில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 472 ஆக அதிகரித்துள்ளது. </p><p>

மேலும், 1,535 பேர் இதுவரை காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காணாமல் போனவர்களில் நேபாளத்தைச் சேர்ந்த 469 பேரும், திபெத்தைச் சேர்ந்த மூவரும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><h2>
 இயற்கைப் பேரழிவு</h2><p>
கடந்த 26ஆம் திகதி பாறைகள், பனி, மண் மற்றும் பெருக்கெடுத்த நீர் ஆகியவை ஒன்றிணைந்து ஏற்பட்ட இயற்கைப் பேரழிவினால் இப்பகுதி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.</p><p>

இந்நிலையில், “வான்டர்” என்ற வர்த்தக செயற்கைக்கோள் நிறுவனத்தால் வெளியிடப்பட்ட உயர் தெளிவுத்திறன் கொண்ட செயற்கைக்கோள் படங்கள், வெள்ளத்திற்கு முன்னரும் பின்னரும் அப்பகுதியில் ஏற்பட்டுள்ள பாரிய மாற்றங்களை வெளிப்படுத்தியுள்ளன.</p><p><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr">Our thoughts are with the communities affected by this week’s devastating flash floods in Nepal. <br><br>To support ongoing response and recovery efforts, Vantor has activated its Open Data Program, providing free access to high-resolution satellite imagery for frontline organizations… <a href="https://t.co/RqQJdqAghr">pic.twitter.com/RqQJdqAghr</a></p>&mdash; Vantor (@vantortech) <a href="https://x.com/vantortech/status/2093038515927842948?ref_src=twsrc%5Etfw">August 27, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>
</p><p>
2024ஆம் ஆண்டு ஏப்ரல் 19ஆம் திகதி எடுக்கப்பட்ட படங்களில், ஆற்றங்கரையில் அமைந்திருந்த பல அடுக்குகளைக் கொண்ட பெரிய எல்லைக் கட்டிடம், சாலைகள், நடைபாதைகள் உள்ளிட்ட பல்வேறு உள்கட்டமைப்புகள் தெளிவாகக் காணப்படுகின்றன.</p><h2>

வர்த்தக செயற்கைக்கோள் எடுத்த புகைப்படங்கள்</h2><p>

ஆனால், 2026ஆம் ஆண்டு ஆகஸ்ட் 27ஆம் திகதி, அதாவது பேரழிவு ஏற்பட்ட ஒரு நாளுக்குப் பின்னர் எடுக்கப்பட்ட படங்களில், அந்த உள்கட்டமைப்புகளில் பெரும்பாலானவை பாறைகள், மண் மற்றும் இடிபாடுகளால் முழுமையாக மூடப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/728aac89-81e9-46b2-a4e0-d509bc20daad/26-6a9130cfb93e9.webp' /></p><p>

பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து பெறப்பட்ட ஏனைய செயற்கைக்கோள் படங்களிலும் வீடுகள், பாலங்கள், சாலைகள் மற்றும் பல்வேறு உள்கட்டமைப்புகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதையோ அல்லது இடிபாடுகளுக்குள் புதையுண்டுள்ளதையோ காண முடிகிறது.
</p><p>
இந்தப் பேரழிவைத் தொடர்ந்து, நேபாளத்தில் 977 பேரும், திபெத்தில் 558 பேரும் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

இன்னும் கண்டுபிடிக்கப்படாதவர்களில், அப்பகுதி வழியாகப் பயணித்த சுற்றுலாப் பயணிகள் மற்றும் யாத்ரீகர்கள் உட்பட குறைந்தது 540 வெளிநாட்டவர்களும் உள்ளடங்குவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.&nbsp;</p><p></p><p></p><p><b>YOU MAY LIKE THIS VIDEO..</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/opvUtIueMWg" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-28T12:05:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரூ.2 லட்சம் ஊதியத்தில் தந்தையை வேலைக்கு அமர்த்திய 16 வயது சிறுவன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/16-yr-old-raul-john-aju-pay-2lakh-to-father-salary-1787918487"></link>
            <id>https://news.lankasri.com/article/16-yr-old-raul-john-aju-pay-2lakh-to-father-salary-1787918487</id>
            <summary type="text">16 year old raul john aju pay 2 lakhs salary for his dad: கேரளாவை சேர்ந்த 16 வயது சிறுவன் தனது நிறுவனத்தில், ரூ.2 லட்சம் ஊதியத்தில் தந்தையை வேலைக்கு அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>16 year old raul john aju pay 2 lakhs salary for his dad: கேரளாவை சேர்ந்த 16 வயது சிறுவன் தனது நிறுவனத்தில், ரூ.2 லட்சம் ஊதியத்தில் தந்தையை வேலைக்கு அமர்த்தியுள்ளார்.
</p><h3>
16 வயதில் AI நிறுவனம் நடத்தும் சிறுவன் </h3><p>

எதிர்காலத்தில் பெரும்பாலான தொழில் மற்றும் வேலைகளில் செயற்கை நுண்ணறிவின் தாக்கம் இருக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இளம் தலைமுறையினர் பலரும் AI கருவிகளை பயன்படுத்த கற்று வருகின்றனர்.
</p><p>
ஆனால் 16 வயது சிறுவனான ரவுல் ஜான் அஜு(raul john aju0, 15க்கும் மேற்பட்ட AI கருவிகளை உருவாக்கி, AI நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/98fbe6a7-c569-438e-8e24-f9191bf52c12/26-6a917899b4dd5.webp' /></p><p>

ரவுல் ஜான் அஜு, கேரளாவின் கொச்சி, குன்னம்புரத்தில் உள்ள வடக்கு இடப்பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளியில் வணிகவியல் பிரிவில் 12 ஆம் வகுப்பு படித்து வருகிறார். </p><p>

இவரின் தந்தை அஜு ஜோசப், அடோப், அமேசான், விப்ரோ, ஐபிஎம் உள்ளிட்ட பெரு நிறுவனங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். </p><p>இதனால் 9 வயதிலே ரவுலிற்கு AI கருவிகளை பயன்படுத்தும் அனுபவம் கிடைத்தது. 

அந்த ஆர்வத்தில் AI குறித்து கற்றுக்கொண்ட அவர், AI கருவிகளை உருவாக்க தொடங்கியுள்ளார்.&nbsp;</p><p></p><p>

தனது 12 வயதிலேயே, பள்ளி அறிவியல் திட்டப்பணிக்காக மீபாட் (MeBot) என்ற ரோபோவை அவர் உருவாக்கியிருந்தார். 

அதைத்தொடர்ந்து, ரெஸ்க்யூ ஏஐ (RESQ AI), ஸாப்கேப் (ZapGap), இன்வெஸ்டோ ஏஐ (Investo AI) மற்றும் ஃபீட்ஃபை (FeedFye) உட்பட 15க்கும் மேற்பட்ட செயற்கை நுண்ணறிவு தயாரிப்புகளை உருவாக்கியுள்ளார்.
</p><p>
மேலும், AI டெக்னாலஜிஸ் என்ற நிறுவனத்தை உருவாக்கி 15 ஊழியர்களை வேலைக்கு அமர்த்தியுள்ளார். குறிப்பாக தனது தந்தையையும் மாதம் ரூ.2 லட்சம் ஊதியத்திற்கு வேலையில் அமர்த்தியுள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e3df7fc5-5f32-4a5e-9ed1-43913f7d78f1/26-6a917898439e4.webp' /></p><p>

மேலும், தனது நிறுவனத்தின் மூலம் திங்க்கிராஃப்ட் அகாடமியை நடத்தி வருகிறார். ஐஐடி, ஐஐஎம், முன்னணி வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் மற்றும் பெருநிறுவனங்களைச் சேர்ந்த மாணவர்கள், இதில் விளையாட்டு மூலம் எளிதாக செயற்கை நுண்ணறிவுத் திறன்களைக் கற்றுக்கொள்கிறார்கள். 

இதன் மூலம் உலகம் முழுவதும் சுமார் 5 லட்சம் பேர் AI திறனை கற்றுக்கொண்டுள்ளார்கள். </p><p>

டெல்லியில் நடைபெற்ற 2026 இந்திய செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சி மாநாட்டில், செயற்கை நுண்ணறிவு மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து ஐநா ஏற்பாடு செய்திருந்த அமர்வில் ரவுல் ஜான் அஜு பங்கேற்றார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a204b249-37bc-4412-ab0f-71406d3a880a/26-6a917898ec557.webp' /></p><p>
என்னால் செல்போனில் அறிவை கற்றுக்கொள்ள முடிந்தாலும், சந்தைப்படுத்தல் உள்ளிட்டவற்றில் தந்தையின் அனுபவம் காரணமாக அவரை என் நிறுவனத்தில் பணியமர்த்தியுள்ளேன்" என தெரிவித்துள்ளார். </p><p>

இளமை காலத்தில் பலரும் தன்னுடைய தேவைக்கு பெற்றோரிடம் பணம் பெற்று வரும் சூழலில், ரூ.2 லட்சம் ஊதியத்தில் தந்தைக்கு வேலை வழங்கிய சிறுவனை பலரும் பாராட்டி வருகின்றனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-28T12:01:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[திபெத்தில் உடைந்த அணை - மீட்பு பணிகளை நிறுத்திய சீனா, நேபாளம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/dam-burst-in-tibet-rescue-operations-halted-1787902009"></link>
            <id>https://news.lankasri.com/article/dam-burst-in-tibet-rescue-operations-halted-1787902009</id>
            <summary type="text">dam burst in tibet rescue operations halted for fresh flood warns: திபெத்தில் அணை உடைந்துள்ளதால் மீண்டும் பாரிய வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ள நிலை...</summary>
            <content type="html"><![CDATA[<p>dam burst in tibet rescue operations halted for fresh flood warns: திபெத்தில் அணை உடைந்துள்ளதால் மீண்டும் பாரிய வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ள நிலையில் மீட்பு பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது.&nbsp;</p><p>திபெத்தில் உடைந்த அணை

</p><p>

சீனா - நேபாள எல்லையில் நேற்று முன்தினம் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 469 ஆக அதிகரித்துள்ளது. 1,468 பேர் மாயமாகியுள்ளனர். </p><p>

நேபாள மற்றும் காவல்துறை, ராணுவம் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. உள்நாட்டு மக்கள் மற்றும் ஏராளமான வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் மாயமாகியுள்ளனர்.</p><p> 

இந்நிலையில், திபெத் பக்கத்தில் உள்ள கியிராங் எல்லைத் துறைமுகத்திற்கு மேலே உள்ள ஒரு நீர்த்தேக்க அணை ஒன்று உடைந்துஉள்ளதாக நேபாள காவல்துறை அறிவித்துள்ளது.&nbsp;</p><p><blockquote class="twitter-tweet"><p lang="no" dir="ltr">Alert !! <a href="https://t.co/grYxhc5N7Q">pic.twitter.com/grYxhc5N7Q</a></p>&mdash; Nepal Police (@NepalPoliceHQ) <a href="https://x.com/NepalPoliceHQ/status/2093216702121325051?ref_src=twsrc%5Etfw">August 28, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>

மேலும், "மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ள அனைத்துப் பாதுகாப்புப் பணியாளர்கள், மீட்புப் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் விழிப்புடன் இருக்குமாறும், உடனடியாகப் பாதுகாப்பான இடத்திற்குச் செல்லுமாறும் அறிவுறுத்தியுள்ளது. </p><p>

இதே போல், சீனாவும் மீண்டும் பாரிய வெள்ளம் ஏற்படும் வாய்ப்பு உள்ளதால் மீட்பு பணிகளை தற்காலிகமாக நிறுத்துவதாக அறிவித்துள்ளது.&nbsp;</p><p>வெள்ள அச்சம் காரணமாக உள்ளூர் மக்கள் மலை மீது விரைந்து ஏறி வருகின்றனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-28T12:00:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[மன்னாரில் சந்தேகத்தின் அடிப்படையில் மூன்று கடற்றொழிலாளர்கள் கைது!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/three-mannar-fishermen-held-over-dynamite-fishing-1787915713"></link>
            <id>https://ibctamil.com/article/three-mannar-fishermen-held-over-dynamite-fishing-1787915713</id>
            <summary type="text">மன்னாரில் சந்தேகத்தின் அடிப்படையில் மூன்று கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மன்னார் பிரதான பாலத்திற்கு அருகிலுள்ள கடற்படை சோதனைச் சாவடியில்...</summary>
            <content type="html"><![CDATA[<p>மன்னாரில் சந்தேகத்தின் அடிப்படையில் மூன்று கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>
மன்னார் பிரதான பாலத்திற்கு அருகிலுள்ள கடற்படை சோதனைச் சாவடியில்
கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது இந்த கைது முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><p> டைனமைட்
வெடிபொருளைப் பயன்படுத்தி கடற்றொழிலில் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின்
பேரில் குறித்த கடற்றெதழிலாளர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>
</p><p></p><h2>மேலதிக பரிசோதனை</h2><p>இதன்போது 500 கிலோகிராமுக்கும் அதிகமான மீன்கள், ஒரு வெளி இணைப்பு இயந்திரம்,
ஒரு படகு மற்றும் கடற்றொழிலில் உபகரணங்கள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dc628f0e-5a5f-4dbd-b6b4-fcae72573874/26-6a9174df782e1.webp' /></p><p>கைப்பற்றப்பட்ட பொருட்கள் மற்றும் கடற்றொழில் நடவடிக்கை தொடர்பில் மேலதிக
விசாரணைகள் முன்னெடுக்கப்பட்ட பின்னர், அவை கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளிடம்
ஒப்படைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>
மேலும், கைப்பற்றப்பட்ட மீன்கள் மேலதிக பரிசோதனைக்காக நாரா நிறுவனத்திற்கு
அனுப்பி வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p>]]></content>
            <updated>2026-08-28T11:59:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Bavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மோசடியில் ஈடுபடும் மட்டக்களப்பு அரச திணைக்கள சாரதிகள்..! ஈ.பி.டி.பி மட்டு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/fraud-in-fueling-government-department-vehicles-1787913240"></link>
            <id>https://tamilwin.com/article/fraud-in-fueling-government-department-vehicles-1787913240</id>
            <summary type="text">மட்டக்களப்பு அரச திணைக்கள சாரதிகள் சிலர் எரிபொருள் நிலைய உரிமையாளர்கள் சிலருடன் இணைந்து பண மோசடியில் ஈடுபடுவதாக&amp;nbsp;ஈ.பி.டி.பி மட்டு மாவட்ட ஒருங்கிணை...</summary>
            <content type="html"><![CDATA[<p>மட்டக்களப்பு அரச திணைக்கள சாரதிகள் சிலர் எரிபொருள் நிலைய உரிமையாளர்கள் சிலருடன் இணைந்து பண மோசடியில் ஈடுபடுவதாக&nbsp;ஈ.பி.டி.பி மட்டு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அந்தனிசில் ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.</p><p> </p><p>மட்டக்களப்பு - பாலமீன்மடுவில் உள்ள அவரது காரியாலயத்தில் இன்று (28.08.2026) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.</p><h2>எரிபொருளில் மோசடி</h2><p>அவர் மேலும் தெரிவிக்கையில், மாவட்டத்திலுள்ள அரச திணைக்களங்களின் வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்புவதற்கான பணத்தை அந்தந்த அரச திணைக்களங்கள் மாதாந்தம் வழங்குகிறது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e6333541-9146-4e52-826a-663db6108812/26-6a916de00f8d1.webp' /></p><p>உதாரணமாக ஒரு திணைக்களத்தின் அரச வாகனத்துக்கு எரிபொருள் நிரப்புவதற்கு 100 லீற்றர் டீசலுக்கான அனுமதியை பெற்றுக் கொண்டு 50 லீற்றர் டீசலை மட்டும் வாகனத்தில் நிரப்பிவிட்டு, மிகுதி 50 லீற்றர் எரிபொருளை, எரிபொருள் உரிமையாளரிடம் 1 லீற்றருக்கு 300 அல்லது 310 ரூபா வீதம் விற்று பணம் பெறுகின்றனர்.
</p><p>
இவ்வாறு பண மோசடிகளில் ஈடுபடுவோருக்கு உடந்தையாக இருக்கும் எரிபொருள் நிரப்பு நிலையங்களின் அனுமதி பத்திரத்தை இரத்து செய்ய வேண்டும்.</p><h2>சட்ட நடவடிக்கை</h2><p> </p><p>

சுகாதாரதுறைக்கு பெரும் தொகை பணத்தை அரசாங்கம் ஒதுக்கீடு செய்தும் இவ்வாறான
சில அரச அதிகாரிகளின் மோசடிகளால் அரசாங்கத்துக்கு பாரிய நட்டம் ஏற்படுகின்றது.</p><p>அரச திணைக்களங்களின் வாகனங்களுக்கு
தேவையான எரிபொருளை நிரப்பும் போது குறித்த திணைக்களத்தின் அதிகாரி ஒருவரை எரிபொருள் நிரப்பு
நிலையத்திற்கு அனுப்பி எரிபொருளை நிரப்பினால் இவ்வாறான மோசடியை தடுக்க
முடியும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/59d91fd6-33df-4167-a790-b29013e74e9c/26-6a916e2f78b4b.webp' /></p><p>

இந்த மோசடி தொடர்பாக பொலிஸாரே, குற்றப்புலனாய்வு பிரிவினரை அழைத்தால் எங்களிடம்
இருக்கும் ஆதாரத்தை வழங்க நாங்கள் தயாராக உள்ளோம்.
</p><p>
 எனவே இந்த விடயத்தில் கவனம் செலுத்தாவிட்டால் மக்கள் வரிப்பணம் வீணடிக்கப்படும். இலங்கை
தொடர்ந்தும் கடன் பெறுகின்ற நாடாகத்தான் இருக்கும் என சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-28T11:57:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாளப் பேரிடர் வெறும் தொடக்கம்... ஆபத்தை எதிர்நோக்கும் 15 மில்லியன் மக்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/nepal-flood-million-people-danger-zone-1787916480"></link>
            <id>https://news.lankasri.com/article/nepal-flood-million-people-danger-zone-1787916480</id>
            <summary type="text">15 million people in the danger zone: சுமார் 15 மில்லியன் மக்கள் ஆபத்தான மண்டலத்தில் உள்ளனர்.
நேபாளம்-திபெத் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட கடுமையான திடீர...</summary>
            <content type="html"><![CDATA[<p>15 million people in the danger zone: சுமார் 15 மில்லியன் மக்கள் ஆபத்தான மண்டலத்தில் உள்ளனர்.
</p><p>நேபாளம்-திபெத் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட கடுமையான திடீர் வெள்ளப்பெருக்கினால் நூற்றுக்கணக்கானோர் மரணமடைந்துள்ளதுடன் 1,500-க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை.</p><h2>அடிக்கடி நிகழும்</h2><p>
</p><p>லாங்டாங்-லிருங் மலையில் பனிப்பாறை ஒன்று சரிந்து விழுந்ததே இந்த பேரிடருக்குக் காரணம் என்றும், அந்த நிகழ்வு ரிக்டர் அளவில் 5.2 தீவிரத்தன்மை கொண்ட நிலநடுக்கமாகப் பதிவானது என்றும் விஞ்ஞானிகள் கருதுகின்றனர். </p><p>இதன் உண்மையான பின்னணியைக் கண்டறிய மாதக்கணக்கில் ஆய்வு தேவைப்படலாம் என்றாலும், இது ஒரே ஒரு முறை மட்டும் நிகழும் நிகழ்வு அல்ல என்று நிபுணர்கள் ஏற்கனவே எச்சரித்து வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/42ca267c-e0e2-4dc6-ac06-5e74c2402200/26-6a9170c28b867.webp' /></p><p> </p><p>நிபுணரின் கூற்றுப்படி, இத்தகைய நிகழ்வுகள், ஒருவேளை இன்னும் பெரிய அளவிலானவை அடிக்கடி நிகழும் சாத்தியத்தை அதிகரிக்கிறது. மொத்தத்தில், உலகம் முழுவதும் சுமார் 1.5 கோடி மக்கள் இதுபோன்ற ஆபத்தான பகுதிகளில் வசித்து வருவதாக ஆராய்ச்சியாளர்கள் மதிப்பிட்டுள்ளனர். </p><p>ஆசியாவில் உள்ள இமயமலை, காரகோரம், இந்துகுஷ் மற்றும் அதைச் சுற்றியுள்ள மலைத்தொடர்கள் அதிக ஆபத்தில் இருந்தாலும், அமெரிக்கா மற்றும் கனடாவில் வசிக்கும் மக்களும் ஆபத்தில் உள்ளனர்.</p><p></p><p> </p><p>இன்று நேபாளத்தில் ஏற்பட்ட பேரிடரைப் போன்ற ஒரு நிகழ்வை வட அமெரிக்காவும் சந்திக்கக்கூடும் என நிபுணர் ஒருவர் எச்சரித்துள்ளார். இந்தத் பேரிடரைப் புரிந்துகொள்ள விஞ்ஞானிகள் இன்னும் தீவிரமாக முயன்று வரும் நிலையில், நேபாளத்தில் ஏற்பட்ட இறப்புகளை ஏற்படுத்திய வெள்ளப்பெருக்கு பனிப்பாறை சரிவின் விளைவே என்று தற்போதைய சான்றுகள் தெரிவிக்கின்றன. </p><p>சுமார் 50 முன்னணி நிபுணர்களின் கூட்டு முயற்சியால் இயங்கும் 'அண்டார்டிக் பனிப்பாறைகள்' (Antarctic Glaciers) என்ற ஆராய்ச்சி குழுவின் கூற்றுப்படி, வெள்ளப்பெருக்குக்குச் சற்று முன்னதாக நிலச்சரிவு மற்றும் பனிப்பாறை சரிவு ஆகியவை ஏற்பட்டிருந்ததை ஆரம்பக்கட்ட ஆய்வுகள் காட்டுகின்றன. </p><p>இதனால் பனிக்கட்டியும் பாறைகளும் மலையிலிருந்து சரிந்து விழுந்து, முந்தைய வெள்ளப்பெருக்குகளால் படிந்திருந்த வண்டல் மண்ணுடன் கலந்து, லெண்டே கோலா (Lhende Khola) ஆற்றை தற்காலிகமாகத் தடுத்தன. </p><p>அது தற்காலிகமாக ஒரு பெரிய ஏரி உருவாகக் காரணமானது; பின்னர் அது உடைந்து பேரழிவை ஏற்படுத்தும் வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தியது. இது போன்ற உயிரிழப்புகளை ஏற்படுத்தும் நிகழ்வுகள் கடந்த காலங்களில் நடந்துள்ளன; பருவநிலை மாற்றம் தொடர்வதால், இத்தகைய நிகழ்வுகள் இனி மேலும் அடிக்கடி நிகழக்கூடும். </p><p>உதாரணமாக, 2021-இல் பாறை மற்றும் பனிக்கட்டியின் பெரும் சரிவு காரணமாக ஏற்பட்ட உயிரிழப்புகளை ஏற்படுத்திய குப்பைப் பெருக்கெடுப்பு (debris flow), 200-க்கும் மேற்பட்டோரின் உயிரைப் பறித்ததுடன், இரண்டு நீர்மின் நிலையங்களையும் சேதப்படுத்தியது.</p><h2>விஞ்ஞானிகள் எச்சரிக்கை</h2><p> </p><p>இதற்கிடையில், கனடாவில் 2020-ஆம் ஆண்டில் ஏற்பட்ட பாறைச் சரிவின்போது, ​​18 மில்லியன் கன மீற்றர் அளவிலான பாறைகள் பனிப்பாறை ஏரி ஒன்றில் சரிந்து விழுந்தன; இதனால் எழுந்த 100 மீற்றர் உயரமுள்ள அலைகள், 6 மைல் நீளமுள்ள ஒரு கால்வாயை அரித்து உருவாக்கின.</p><p> மலைப்பகுதிகளும் 'பனியாற்றுக் ஏரி உடைப்பு வெள்ளம்' (glacial lake outburst flood) எனப்படும் இதே போன்றதொரு அச்சுறுத்தலுக்கு ஆளாகும் அபாயம் அதிகரித்து வருவதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். </p><p>பனிப்பாறையிலிருந்து உருகி வரும் நீர் அதன் அடிப்பகுதியில் ஒரு பெரிய ஏரியை உருவாக்கும்போதும், அந்த ஏரி மெல்லிய மற்றும் நிலையற்ற ஒரு இயற்கையான அணையால் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கும்போதும் இப்படியானப் பேரிடர் நிகழ்கிறது. </p><p>பனிப்பாறை சரிந்தாலோ அல்லது உருகிய நீரின் அளவு மிக அதிகமாக உயர்ந்தாலோ, அந்தத் தடுப்பு உடைந்து, மலைச்சரிவில் பேரழிவை ஏற்படுத்தும் வகையிலான பெரும் நீரோட்டம் பாய்ந்து வரக்கூடும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/912b1a7b-6332-42e7-aff4-e4efd3038148/26-6a9170c33f4c4.webp' /></p><p> </p><p>இருப்பினும், உலகம் முழுவதும் உள்ள பனிப்பாறைகள் தற்போது மக்களை இத்தகைய வெள்ள அபாயத்திற்கு உள்ளாக்கி வருகின்றன; இது நேபாளத்தில் காணப்பட்டதை விடக் குறைவானதல்ல, சொல்லப்போனால் அதைவிட அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தக்கூடியதாகவும் அமையக்கூடும். </p><p>ஆய்வாளர்கள் குழு ஒன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், பனி ஏரி உடைப்பு வெள்ளத்தால் (GLOFs) அச்சுறுத்தலுக்குள்ளாகும் 1 கோடியே 50 லட்சம் மக்களில் பாதிக்கும் மேற்பட்டோர் இந்தியா, பாகிஸ்தான், பெரு மற்றும் சீனா ஆகிய நான்கு நாடுகளில் மட்டுமே வசிக்கின்றனர். </p><p>இமயமலை, காரகோரம், இந்துகுஷ் மற்றும் அவற்றையொட்டிய மலைத்தொடர்களை உள்ளடக்கிய 'உயர் மலை ஆசிய' (HMA) பகுதிகளில் வசிக்கும் மக்களே அதிக ஆபத்தில் உள்ளனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-28T11:55:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானியாவில் 22,000 டன் குப்பைகள் அகற்றம்: செலவு செய்யப்பட்ட 6 மில்லியன் பவுண்டுகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/22000-tonnes-of-illegal-dump-clears-in-oxfordshire-1787917909"></link>
            <id>https://news.lankasri.com/article/22000-tonnes-of-illegal-dump-clears-in-oxfordshire-1787917909</id>
            <summary type="text">பிரித்தானியாவின் ஆக்ஸ்போர்ட்ஷயர் சட்டவிரோத குப்பை குவியல் வெற்றிகரமாக அகற்றப்பட்டுள்ளது. 22,000 டன் குப்பைகள் அகற்றம்ஆக்ஸ்போர்ட்ஷயர்(Oxfordshire) கிட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரித்தானியாவின் ஆக்ஸ்போர்ட்ஷயர் சட்டவிரோத குப்பை குவியல் வெற்றிகரமாக அகற்றப்பட்டுள்ளது.</p><h2> 22,000 டன் குப்பைகள் அகற்றம்</h2><p>ஆக்ஸ்போர்ட்ஷயர்(Oxfordshire) கிட்லிங்டன்(Kidlington) பகுதியில் அமைந்திருந்த மிகப்பெரிய சட்டவிரோத குப்பை குவியல் வெற்றிகரமாக அகற்றப்பட்டுள்ளது.</p><p> அரசின் ஆதரவுடன் நடைபெற்ற இந்த சுத்தப்படுத்தும் நடவடிக்கையில் கிட்டத்தட்ட 22,000 டன்னுக்கு அதிகமான வணிக மற்றும் வீட்டுக் கழிவுகள் வெற்றிகரமாக அகற்றப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/64330a69-cd6b-41db-a888-b8416e16a725/26-6a917656a5210.webp' /></p><p></p><p>A34 நெடுஞ்சாலையை ஒட்டியும், Cherwell நதியின் கரையோரமாக அமைந்திருந்த 3 ஏக்கர் நிலம் குறுகிய காலத்தில் மிகப்பெரிய குப்பை மலையாக உருவெடுத்து இருந்தது.</p><p> செயற்கைகோள் புகைப்படங்கள் படி, இந்த இடம் 150 மீட்டர் நீளமும் 15 மீட்டர் அகலமும் கொண்ட குப்பை குவியலாக மாறியுள்ளது தெரியவந்துள்ளது.</p><h2> துப்புரவு பணிகள்</h2><p>கிட்டத்தட்ட வெம்ப்லி மைதானத்தை விட மிகப்பெரிய அளவில் குவிந்து கிடந்த குப்பைகளை அகற்ற 30 லொறி லோடு குப்பைகள் தினமும் வெளியேற்றப்பட்டன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/19a4c84b-efe5-4f8a-b346-2b6da02cc107/26-6a9176575a14b.webp' /></p><p> இந்த சுத்திகரிப்பு திட்டத்திற்காக சுற்றுச்சூழல் முகமை கிட்டத்தட்ட 6 மில்லியன் பவுண்டுகளை செலவு செய்துள்ளது.</p><p> இந்த சம்பவத்தில் குற்றவாளிகளாக கண்டறியப்படும் நபர்களிடம் இருந்து இந்த தொகை மீண்டும் வசூலிக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p> சம்பந்தப்பட்ட பகுதியில் குப்பை கொட்டியதுடன் தொடர்புடைய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். &nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள். &nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-28T11:52:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[இங்கிலாந்திற்கு பயத்தை காட்டிய பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள்: போராடிய அட்கின்ஸன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/england-290-runs-all-out-vs-pakistan-lord-s-test-1787917747"></link>
            <id>https://news.lankasri.com/article/england-290-runs-all-out-vs-pakistan-lord-s-test-1787917747</id>
            <summary type="text">England team allout for 290 runs at lord&#039;s ground:
பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து 290 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>England team allout for 290 runs at lord's ground:
பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து 290 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது.</p><p>

லண்டன் லார்ட்'ஸில் நடந்து வரும் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்டில், இங்கிலாந்து அணி முதல் 290 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது.&nbsp;&nbsp;</p><h2>நெருக்கடி கொடுத்த அப்பாஸ்&nbsp;&nbsp;</h2><p><span style="font-size: 14px;">இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்'ஸ் மைதானத்தில் நடந்து வருகிறது.&nbsp;</span></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/77976c10-60f9-4330-a847-9c0437b3ea6b/26-6a91762b549b6.webp' /></p><p></p><p>
துடுப்பாட்டத்தை தொடங்கிய இங்கிலாந்து அணியில் எமிலியோ கே 8 ஓட்டங்களிலும், பென் டக்கெட் 17 ஓட்டங்களிலும் மொஹம்மது அப்பாஸின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர்.</p><p> 

பின்னர் வந்த அணித்தலைவர் ஜோ ரூட் 4 ஓட்டங்களில் அப்பாஸின் பந்துவீசில் lbw ஆகி வெளியேறினார். புரூக் (15), டென் லாரன்ஸ் (17) சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.&nbsp;</p><h2>கோக்ஸ்&nbsp;அரைசதம் </h2><p>

நிதானமாக ஆடிய ஜோர்டன் கோக்ஸ் 55 ஓட்டங்கள் எடுக்க, அதிரடி காட்டிய ஜேமி ஸ்மித் (Jamie Smith) 80 பந்துகளில் 10 பவுண்டரிகளுடன் 61 ஓட்டங்கள் எடுத்தார். </p><p>

கடைசி கட்டத்தில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய கஸ் அட்கின்ஸன் 45 (46) ஓட்டங்கள் எடுக்க, இங்கிலாந்து அணி 290 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது.
</p><p>
ஜோஷ் டங் 30 ஓட்டங்களுடன் களத்தில் இருந்தார். மொஹம்மது அப்பாஸ் (Mohammad Abbas) 4 விக்கெட்டுகளும், மொஹம்மது அலி 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bdeb261c-99b5-4ef0-8430-c643eafc7e34/26-6a91762c13e50.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-28T11:48:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நடிகை விஜயலட்சுமி எடுத்த முடிவால் சீமான் மகிழ்ச்சி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/seeman-happy-by-actress-vijayalakshmi-twist-video-1787900306"></link>
            <id>https://jvpnews.com/article/seeman-happy-by-actress-vijayalakshmi-twist-video-1787900306</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர்பாக நடிகை விஜயலட்சுமி வெளியிட்டுள்ள புதிய காணொளியில், சிலர் தன்னையும் சீமானையும்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர்பாக நடிகை விஜயலட்சுமி வெளியிட்டுள்ள புதிய காணொளியில், சிலர் தன்னையும் சீமானையும் தொடர்ந்து அவதூறாகப் பேசி வருவதாக குற்றம்சாட்டியுள்ளார்.</p><p>

தவறை உணர்ந்து ஒருவர் மன்னிப்பு கேட்கும்போது, அவரைத் தொடர்ந்து விமர்சிக்காமல் வாழவிடுவதுதான் மனிதநேயம் என அவர் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2cc6ce03-12c3-4161-a971-3f28027d397c/26-6a91319400afe.webp' /></p><h2>&nbsp;சீமானுக்கு ஆதரவாக உறுதியாக நிற்பேன்</h2><p>
</p><p>
மேலும், தன்னைப் பற்றியும் சீமான் குறித்தும் தொடர்ந்து அவதூறாகப் பேசினால், இனி சீமானுக்கு ஆதரவாக உறுதியாக நிற்பேன் என்றும் விஜயலட்சுமி கூறியுள்ளார்.</p><p></p><p>
</p><p>
நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவாகப் பேசுவதற்காக தனக்கு பணம் வழங்கப்பட்டதாக கூறப்படும் விமர்சனங்களை மறுத்துள்ள அவர்,பணத்தைக் கொடுத்து தன்னை யாராலும் வாங்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.</p><p></p><p>
</p><p>
இதுவரை சீமானுக்கு எதிரான கருத்துகளை வெளியிட்டு வந்த விஜயலட்சுமி, தற்போது அவருக்கு ஆதரவாக பேசியிருப்பது அரசியல் மற்றும் திரையுலக வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது.
</p><p>
முன்னதாக, சீமான் தன்னை ஏமாற்றிவிட்டதாக நடிகை விஜயலட்சுமி அளித்திருந்த முறைப்பாடு தொடர்பான வழக்கில், இருதரப்புக்கும் இடையே உச்சநீதிமன்றத்தில் சமரசம் எட்டப்பட்டது.</p><p></p><p>

 அதேசமயம் இந்த காணொளி மூலம் தமிழக வெற்றிக் கழகத்தினரை அவர் மறைமுகமாக விமர்சித்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் கருத்துகள் வெளியாகி வருகின்றன.</p>]]></content>
            <updated>2026-08-28T11:47:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[மனுஷவுக்கு எதிரான சட்டநடவடிக்கை: நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/investigations-against-ex-min-manusha-nanayakkara-1787915149"></link>
            <id>https://ibctamil.com/article/investigations-against-ex-min-manusha-nanayakkara-1787915149</id>
            <summary type="text">கடந்த காலத்தில் இஸ்ரேலுக்கு தொழிலாளர்களை அனுப்பும் போது இடம்பெற்ற முறைகேடு மூலம் ஊழல் குற்றத்தைச் செய்ததாகக் குற்றம் சுமத்தப்பட்ட, முன்னாள் அமைச்சர் ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>கடந்த காலத்தில் இஸ்ரேலுக்கு தொழிலாளர்களை அனுப்பும் போது இடம்பெற்ற முறைகேடு மூலம் ஊழல் குற்றத்தைச் செய்ததாகக் குற்றம் சுமத்தப்பட்ட, முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாக கொழும்பு நீதவான் நீதிமன்றுக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.</p><p> இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்யும் ஆணைக்குழு இன்று (28) குறித்த விடயத்தினை கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது. </p><p>

இந்த வழக்கு இன்று கொழும்பு பிரதான நீதவான் அஸங்க எஸ். போதரகம முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.</p><p></p><h2>இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழு</h2><p> </p><p>

இதன்போது, மனுஷ நாணயக்காரவுக்கு எதிரான விசாரணை நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளதாகவும், விசாரணைக் கோப்புகள் ஆணைக்குழுவின் ஆணையாளர்களிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் அதிகாரிகள் நீதிமன்றத்திற்குத் தெரிவித்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/baa29a37-5347-401c-900c-9331c4681927/26-6a91708c33840.webp' /></p><p> </p><p>

அவர் தொடர்பில் எடுக்கப்படவுள்ள நடவடிக்கைகள் குறித்து அறிவிப்பதற்காக ஒரு நாளை வழங்குமாறும் இதன்போது அந்த அதிகாரிகள் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்தனர். </p><p>

சமர்ப்பிக்கப்பட்ட சமர்ப்பணங்களை ஆராய்ந்த கொழும்பு பிரதான நீதவான், இந்த வழக்கை எதிர்வரும் டிசம்பர் மாதம் 18 ஆம் திகதி மீண்டும் அழைக்குமாறு உத்தரவிட்டார்.</p><p></p><h2>இஸ்ரேலுக்கு ஊழியர்களை அனுப்புதல்&nbsp;</h2><p> </p><p>

அன்றைய தினம் குறித்த நடவடிக்கைகளின் முன்னேற்றத்தை நீதிமன்றத்திற்கு அறிவிக்குமாறும் நீதவான் ஆணைக்குழுவிற்குப் பணித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fc156d53-f3d4-45b3-ba1f-2364c2ab91a2/26-6a91708b60d36.webp' /></p><p> </p><p>

கடந்த அரசாங்க காலத்தில் இஸ்ரேலுக்கு விவசாயப் பணிகளுக்காக ஊழியர்களை அனுப்பும் போது, தனக்கு அரசியல் ரீதியில் அனுதாபமுள்ள ஊழியர்களைத் தெரிவு செய்து அனுப்பியதன் மூலம் தனது அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்து ஊழல் குற்றத்தைச் செய்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டு, மனுஷ நாணயக்கார ஆணைக்குழுவினால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-28T11:47:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/increase-in-the-number-of-dengue-patients-1787915623"></link>
            <id>https://tamilwin.com/article/increase-in-the-number-of-dengue-patients-1787915623</id>
            <summary type="text">இலங்கையில் இந்த ஆண்டு இதுவரை பதிவான டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 94805ஆக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.டெங்கு ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் இந்த ஆண்டு இதுவரை பதிவான டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 94805ஆக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.</p><p>டெங்கு நோய் தாக்கம் காரணமாக இதுவரை 72 மரணங்கள் பதிவாகியுள்ளதாக தெரியவருகிறது.</p><p>
ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 9469 டெங்கு நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர், அதேசமயம் ஜூலையில் 29,962 நோயாளிகளும், ஜூன் மாதத்தில் 21,533 நோயாளிகளும் பதிவாகியுள்ளனர்.
</p><p>
மொத்த நோயாளிகளில், 52.92 சதவீதம், அதாவது 50,167 நோயாளிகள், மேற்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்கள்.</p><h2>நோயாளிகள் பதிவு</h2><p>
</p><p>
மேலும், தெற்கு மாகாணத்திலிருந்து 13,823 நோயாளிகளும், மத்திய மாகாணத்திலிருந்து 8,624 நோயாளிகளும் பதிவாகியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/019a2837-5f2c-4fa6-a669-3514f74f18c3/26-6a9175792e714.webp' /></p><p>

மாவட்ட அளவில், கம்பஹா மாவட்டத்தில் அதிகபட்சமாக 20,207 நோயாளிகள் பதிவாகியுள்ளனர்.
</p><p>
மேலும், கொழும்பு மாவட்டத்தில் 18,794 நோயாளிகளும், கண்டி மாவட்டத்தில் 6,913 நோயாளிகளும், களுத்துறை மாவட்டத்தில் 6,117 நோயாளிகளும், காலி மாவட்டத்தில் 6,111 நோயாளிகளும் பதிவாகியுள்ளனர்.</p><p>நாடு முழுவதும் உள்ள 76 சுகாதார மருத்துவ அதிகாரி பகுதிகள் மேலும் உயர் அபாய மண்டலங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-28T11:45:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் வழக்கு : மெட்டா ரூ.1.5 லட்சம் கோடி இழப்பீடு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/meta-to-pay-17-billion-in-teen-social-media-1787916627"></link>
            <id>https://manithan.com/article/meta-to-pay-17-billion-in-teen-social-media-1787916627</id>
            <summary type="text">ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பயன்பாடு சிறார்களின் மனநலனைப் பாதிப்பதாக தொடரப்பட்ட வழக்கில், சுமார் ரூ.1.5 லட்சம் கோடி இழப்பீடு வழங்க மெட்டா நிறுவனம்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பயன்பாடு சிறார்களின் மனநலனைப் பாதிப்பதாக தொடரப்பட்ட வழக்கில், சுமார் ரூ.1.5 லட்சம் கோடி இழப்பீடு வழங்க மெட்டா நிறுவனம் சம்மதித்துள்ளது.</p><p>

இந்தச் செயலிகளின் அதிகப்படியான பயன்பாடு பதின்ம வயதினரிடையே மன அழுத்தம் மற்றும் தீவிர மனச்சோர்வை ஏற்படுத்துவதாகவும், பெற்றோர் அனுமதியின்றி சிறார்களின் தனிப்பட்ட தரவுகள் சேகரிக்கப்பட்டு AI மற்றும் மெஷின் லேர்னிங் பயன்பாடுகளுக்கு பயன்படுத்தப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a07ac78c-483b-4435-b38b-29e1fd081272/26-6a91741e58911.webp' /></p><p></p><h2>2 மணி நேரம் மட்டுமே பயன்படுத்த அனுமதி</h2><p>
</p><p>
அமெரிக்காவின் கலிபோர்னியா நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையைத் தொடர்ந்து இந்த உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. </p><p>மெட்டா வழங்கும் இழப்பீட்டுத் தொகை அமெரிக்க மாநிலங்களுக்கு பிரித்து வழங்கப்படவுள்ள நிலையில், அதிகபட்ச தொகையை கலிபோர்னியா பெறவுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2e193c19-f4db-4300-8b2f-61951133933f/26-6a91741f08897.webp' /></p><p></p><p>
</p><p>
மேலும், சிறார்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் தளங்களின் பயன்பாட்டில் கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்கவும் மெட்டா ஒப்புக்கொண்டுள்ளது. </p><p>அதன்படி, சிறார்கள் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமை நாளொன்றுக்கு 2 மணி நேரம் மட்டுமே பயன்படுத்த முடியும். பெற்றோர் அனுமதியின்றி நள்ளிரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை பயன்படுத்தவும் தடை விதிக்கப்படவுள்ளது.</p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <u style=""><b>FOLLOW NOW&nbsp;</b></u></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-28T11:43:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாளத்தில் நிரம்பி வழியும் சவக்கிடங்குகள்; திணறும் அதிகாரிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/morgues-overflowing-in-nepal-officials-struggling-1787917409"></link>
            <id>https://jvpnews.com/article/morgues-overflowing-in-nepal-officials-struggling-1787917409</id>
            <summary type="text">&amp;nbsp; இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள நேபாளத்தில் தற்காலிக உடல் சேமிப்பு மையங்களை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.



வெள்ளத்தால் அட...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள நேபாளத்தில் தற்காலிக உடல் சேமிப்பு மையங்களை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.</p><p>



வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்ட உடல்கள் அதிகளவில் மீட்கப்படுவதால் சவக்கிடங்கில் இடப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/05dc0ae5-41d1-4d1a-b24e-4c027c19b286/26-6a917462d5e80.webp' /></p><p></p><h2>&nbsp;உயிரிழந்தோரின் எண்ணிக்கை 500 ஐ நெருங்கியுள்ளது</h2><p>



பலரின் உடல்கள் மீட்கப்பட்டு வரும் நிலையில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 500 ஐ நெருங்கியுள்ளதுடன் காணாமல்போனோரை தேடி மீட்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.</p><p></p><p>



அத்துடன், மாயமான 1,500 பேரை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக நேபாள தேசிய பேரிடர் அபாய குறைப்பு மற்றும் மேலாண்மை ஆணையம் தெரிவித்தது.
</p><p>


நேபாளத்தைப் புரட்டிப்போட்ட பெருவெள்ளத்தால் பல கிராமங்கள், கட்டடங்கள் இடிந்து விழுந்துள்ளன.&nbsp; &nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-28T11:40:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிக்பாஸ் 10வது சீசனில் பிரபல கிரிக்கெட் வீரர் கலந்துகொள்கிறாரா?... யார் தெரியுமா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/is-cricketer-participating-in-bigg-boss-10-1787914821"></link>
            <id>https://cineulagam.com/article/is-cricketer-participating-in-bigg-boss-10-1787914821</id>
            <summary type="text">பிக்பாஸ் 10தமிழ் சின்னத்திரையில் எத்தனையோ ரியாலிட்டி ஷோக்கள் ஒளிபரப்பாகிறது. அதிலும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் எல்லா ரியாலிட்டி ஷோக்களுக்கு...</summary>
            <content type="html"><![CDATA[<h2>பிக்பாஸ் 10</h2><p>தமிழ் சின்னத்திரையில் எத்தனையோ ரியாலிட்டி ஷோக்கள் ஒளிபரப்பாகிறது. </p><p>அதிலும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் எல்லா ரியாலிட்டி ஷோக்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. பிக்பாஸ் 10, விஜய் தொலைக்காட்சியில் விரைவில் ஒளிபரப்பாக போகும் ஒரு ஷோ. </p><p>முதல் சீசன் கமல்ஹாசன் தொகுத்து வழங்க தொடங்கிய நிகழ்ச்சி இப்போது 10வது சீசனை எட்டிவிட்டது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ed03eb11-12cd-4bf2-ac51-9eace98165d3/26-6a917034472e5.webp' /></p><h2>போட்டியாளர்</h2><p>
வரும் செப்டம்பர் 6ம் தேதி பிக்பாஸ் 10வது சீசன் ஒளிபரப்பாக துவங்குகிறது. </p><p>இந்த 10வது சீசனில் பிரபலங்கள் அல்லாத பொது மக்கள் சிலரும் கலந்துகொள்ள உள்ளனர். கடந்த சில நாட்களாக போட்டியாளர்கள் பற்றிய விவரங்கள் சமூக வலைதளங்களில் வலம் வந்து கொண்டிருக்க இப்போது ஒரு புதிய தகவல் வந்துள்ளது. </p><p>அதாவது பிரபல கிரிக்கெட் வீரர் முரளி விஜய் பிக்பாஸ் 10வது சீசனில் கலந்துகொள்ள இருப்பதாக கூறப்படுகிறது, ஆனால் உறுதியாக தெரியவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3916cbaa-270b-44c0-a3b6-c91e58b2e77f/26-6a9170353a168.webp' /></p><p> </p><p>அதேபோல் தற்போது ஜீ தமிழில் பாரிஜாதம் தொடரில் நடித்துவரும் நடிகை ஆல்யா மானசாவும் பிக்பாஸ் 10ல் பங்குபெற இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/272cbefb-5dec-4053-8120-9d034c23cba5/26-6a9170360919a.webp' /></p>]]></content>
            <updated>2026-08-28T11:33:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[திபெத்தில் ஏற்பட்ட பனிச்சரிவு - மீண்டும் வெள்ளப்பெருக்கு அபாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/avalanche-in-tibet-renewed-risk-of-flooding-1787916857"></link>
            <id>https://canadamirror.com/article/avalanche-in-tibet-renewed-risk-of-flooding-1787916857</id>
            <summary type="text">&amp;nbsp;திபெத்தில் ஏற்பட்ட பனிச்சரிவால் மீண்டும் வெள்ளப்பெருக்கு அபாயம் ஏற்பட்டுள்ளதால் சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

சீனாவின் திபெத் பகுதியில் உள...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;திபெத்தில் ஏற்பட்ட பனிச்சரிவால் மீண்டும் வெள்ளப்பெருக்கு அபாயம் ஏற்பட்டுள்ளதால் சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
</p><p>
சீனாவின் திபெத் பகுதியில் உள்ள கியிராங் பகுதியில் ஏற்பட்ட பாரிய பனிச்சரிவு காரணமாக சுமார் 50,000 கன மீட்டர் பனிக்கட்டிகள் அருகிலுள்ள ஏரிக்குள் சரிந்து விழுந்துள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/eabb348b-3b92-43fc-a82c-d9d33497ff6e/26-6a91723ad2045.webp' /></p><p>
</p><p>


இதனால் ஏரியின் நீர்மட்டம் அதிகரித்து மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
</p><p>


இந்நிலையில், பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றுவதற்கான அவசர நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p>]]></content>
            <updated>2026-08-28T11:31:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[சர்வதேச துறைமுக தரவரிசையில் கொழும்பு துறைமுகத்துக்கு கிடைத்த வளர்ச்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/colombo-port-growth-in-rankings-1787915877"></link>
            <id>https://ibctamil.com/article/colombo-port-growth-in-rankings-1787915877</id>
            <summary type="text">சர்வதேச துறைமுக வரிசையில், 2026 ஆம் ஆண்டின் முதல் பாதியில் கொள்கலன் கையாளுதலில் கொழும்பு துறைமுகம் முன்னேற்றம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>சர்வதேச துறைமுக வரிசையில், 2026 ஆம் ஆண்டின் முதல் பாதியில் கொள்கலன் கையாளுதலில் கொழும்பு துறைமுகம் முன்னேற்றம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
சமீபத்திய Alphaliner புள்ளிவிவரங்களின்படி, ஆண்டுக்கு ஆண்டு 11.9 சதவிகித அதிகரிப்பைப் பதிவு செய்ததைத் தொடர்ந்து, கொழும்பு துறைமுகம் உலகின் முக்கிய கொள்கலன் துறைமுகங்களில் 20வது இடத்திற்கு முன்னேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
இலங்கை துறைமுக அதிகாரசபையின் (SLPA) தகவலின்படி, இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூன் வரையிலான ஆறு மாத காலப்பகுதியில் கொழும்பு துறைமுகம் மொத்தம் 4,444,034 TEUs கொள்கலன்களை கையாண்டுள்ளது.</p><p></p><h2>TEUs அதிகரிப்பு&nbsp;</h2><p> </p><p>

2025ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியில் இந்த எண்ணிக்கை 3,972,053 TEUs ஆக இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, ஓராண்டுக்குள் 471,981 TEUs அதிகரிப்பு பதிவாகியுள்ளதுடன், இது 11.9 சதவீத வளர்ச்சியாகும் என அதிகாரசபை தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7c1a656b-752a-476d-86f7-5712fbe56eab/26-6a91711809e1e.webp' /></p><p>
இந்த வளர்ச்சியின் காரணமாக, 2025ஆம் ஆண்டு இறுதியில் உலகளவில் 26வது இடத்தில் இருந்த கொழும்பு துறைமுகம், 2026ஆம் ஆண்டின் முதல் பாதியில் 20வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. </p><p>

உலகின் முக்கிய கொள்கலன் துறைமுகங்களிடையே குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை பதிவு செய்த துறைமுகங்களில் கொழும்பு துறைமுகமும் ஒன்றாக தற்போது மாறியுள்ளது.
</p><p>
2025ஆம் ஆண்டு கொழும்பு துறைமுகம் சுமார் 8.3 மில்லியன் TEUs கொள்கலன்களை கையாண்டு சாதனை படைத்திருந்தது. </p><p>

அதன் தொடர்ச்சியாகவே இந்த ஆண்டும் துறைமுகத்தின் வளர்ச்சி வேகம் நீடித்து வருவதாக இலங்கை துறைமுக அதிகாரசபை தெரிவித்துள்ளது.</p><p></p><h2>மொத்த கொள்கலன் கையாளுதல்</h2><p>
</p><p>
இந்த வளர்ச்சி, இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் கொழும்பு துறைமுகத்தின் முக்கியமான மாற்றுக் கப்பல் போக்குவரத்து மையம் (Transshipment Hub) என்ற நிலையை மேலும் வலுப்படுத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4d8e3c93-2791-4607-a299-cef7f16dffae/26-6a9171174dcf6.webp' /></p><p>
</p><p>
கொழும்பு துறைமுகத்தின் மொத்த கொள்கலன் கையாளுதலில் பெரும்பகுதி மாற்றுக் கப்பல் போக்குவரத்து மூலம் இடம்பெறுகிறது. </p><p>

கிழக்கு ஆசியா, தெற்காசியா, மத்திய கிழக்கு, ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பாவை இணைக்கும் சர்வதேச பிரதான கப்பல் மற்றும் ஊட்டுக் கப்பல் வலையமைப்புகளுக்கு இடையிலான முக்கிய இணைப்பாக கொழும்பு துறைமுகம் செயல்பட்டு வருகிறது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-28T11:29:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் முதியவரைத் திசைதிருப்பி தங்க நகைகள் திருட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/senior-out-12k-after-custom-gold-jewelry-1787916276"></link>
            <id>https://canadamirror.com/article/senior-out-12k-after-custom-gold-jewelry-1787916276</id>
            <summary type="text">கனடாவின் ஒன்டாரியோ மாநிலத்தில் உள்ள போர்ட் பெர்ரி பகுதியில், 77 வயதான முதியவரிடம் முகவரி கேட்பது போல நடித்து, அவரிடமிருந்த சுமார் 12,000 டொலர் மதிப்பி...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் ஒன்டாரியோ மாநிலத்தில் உள்ள போர்ட் பெர்ரி பகுதியில், 77 வயதான முதியவரிடம் முகவரி கேட்பது போல நடித்து, அவரிடமிருந்த சுமார் 12,000 டொலர் மதிப்பிலான அரிய தங்க நகைகளை மர்ம நபர்கள் திசைதிருப்பித் திருடிச் சென்றுள்ளனர்.
</p><p>71 வயதான சூசன் பீட்சன் தனது நண்பர் பாப் (77) என்பவருடன் வீட்டில் இருந்தபோது, சாலையில் வந்த ஒரு காரில் இருந்த இருவர் மருந்துக்கடைக்குச் செல்ல வழி கேட்டுள்ளனர். </p><p>
பாப் அவர்களுக்கு வழி கூறியதும், "நன்றி" தெரிவிப்பதாகக் கூறி காரில் இருந்த நபர் போலி நகைகளைப் பரிசளிப்பது போல் நடித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/43595679-4041-44e9-af97-762babec5baf/26-6a916ff5740c5.webp' /></p><p>
</p><p>உரையாடலின் போது பாப்பின் கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியைக் கழற்றிவிட்டுப் போலிச் சங்கிலியை அணிவித்துள்ளனர்.</p><p> கார் புறப்பட்டுச் சென்ற சில நிமிடங்களிலேயே அவரது தங்கச் சங்கிலி மற்றும் பிரேஸ்லெட் திருடப்பட்டது தெரியவந்தது.
திருடப்பட்ட சங்கிலி 20 ஆண்டுகளுக்கு முன்பு சூசனால் சிறப்பு வடிவமைப்பு செய்யப்பட்டு பாப்பிற்குப் பரிசளிக்கப்பட்ட ஒன்றாகும். </p><p>அச்ச அச்சுக் கூடம் அழிக்கப்பட்டுவிட்டதால், உலகிலேயே அந்த ஒரு நகை மட்டுமே இருந்தது குறிப்பிடத்தக்கது.
டர்ஹாம் பிராந்திய காவல்துறையின் தகவல்படி, அப்பகுதியில் நடப்பு ஆண்டில் மட்டும் (ஆகஸ்ட் 26 வரை) 114 திசைதிருப்புத் திருட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
</p><p>முன்பின் தெரியாத நபர்கள் திடீரென அணுகிப் பேச முயன்றால் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
அவர்கள் கை குலுக்குவதையோ, தொட்டுப் பேசுவதையோ அல்லது நகைகளைப் பரிசளிக்க முயல்வதையோ முற்றிலுமாக மறுக்க வேண்டும்.
</p><p>சந்தேகத்திற்கிடமான சூழ்நிலையை உணர்ந்தால் உடனடியாக அவ்விடத்தை விட்டு விலகித் தற்காத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-28T11:27:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சட்டவிரோத சிகரெட்டுகளுடன் கட்டுநாயக்கவில் இரு சீனப்பெண்கள் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/arrested-with-counterfeit-cigarettes-worth-77-lakh-1787914017"></link>
            <id>https://ibctamil.com/article/arrested-with-counterfeit-cigarettes-worth-77-lakh-1787914017</id>
            <summary type="text">வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட சிகரெட்டுகளை சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டு வந்து&amp;nbsp;கட்டுநாயக்க விமான நிலையத்தின் ‘கிரீன் சேனல்’ ஊடாக வெளியேற முயன்ற இர...</summary>
            <content type="html"><![CDATA[<p>வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட சிகரெட்டுகளை சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டு வந்து&nbsp;கட்டுநாயக்க விமான நிலையத்தின் ‘கிரீன் சேனல்’ ஊடாக வெளியேற முயன்ற இரு சீனப் பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.&nbsp;</p><p>குறத்த பெண்களை சுங்க அதிகாரிகள் இன்று (28.08.2026) காலை கைது செய்துள்ளனர்.&nbsp;</p><p>சந்தேக நபர்களிடமிருந்து கைப்பற்றபட்ட சட்டவிரோத சிகரட்டுக்கள் சுமார் ரூ.77 இலட்சத்து 40 ஆயிரம் பெறுமதி என விசாரணைகளின் பின் தெரியவந்துள்ளது.&nbsp;</p><p></p><h2>சிகரெட்டுகளுடன் இரு பெண் கைது</h2><p>கைது செய்யப்பட்டவர்கள் 30 மற்றும் 35 வயதுடைய இரு சீன வர்த்தகப் பெண்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/61a1a309-65a3-43f3-97fb-7f57b2efdd7a/26-6a916dd2b55e2.webp' /></p><p>
சீனாவில் கொள்வனவு செய்யப்பட்ட சிகரெட்டுகளை மலேசியாவின் கோலாலம்பூர் ஊடாக, மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் அவர்கள் இலங்கைக்கு கொண்டு வந்துள்ளனர்.
</p><p>
அவர்களின் 4 பயணப் பொதிகளில் 258 அட்டைப்பெட்டிகளில் 51,600 சீனத் தயாரிப்பு சிகரெட்டுகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தமை சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இரு சந்தேகநபர்களையும் தடுத்து வைத்துள்ள சுங்க அதிகாரிகள், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-28T11:16:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாரையும் நம்பாதீங்க, யார் கவிழ்ப்பார்ன்னு சொல்ல முடியாது!! செல்வராகவன் உருக்கம்...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/dont-trust-anyoneanyone-directo-selvaraghavan-post-1787916269"></link>
            <id>https://viduppu.com/article/dont-trust-anyoneanyone-directo-selvaraghavan-post-1787916269</id>
            <summary type="text">செல்வராகவன்தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராகவும் தற்போது நடிகராகவும் திகழ்ந்து வருபவர் தான் செல்வராகவன். மென்டல் மனதில், 7ஜி ரெயின்போ காலனி 2 படத்தி...</summary>
            <content type="html"><![CDATA[<h2>செல்வராகவன்</h2><p>தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராகவும் தற்போது நடிகராகவும் திகழ்ந்து வருபவர் தான் செல்வராகவன். மென்டல் மனதில், 7ஜி ரெயின்போ காலனி 2 படத்தினை இயக்கியும் வருகிறார். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/064fe3be-d84a-43c3-b565-19b9c634a030/26-6a916fefea270.webp' /></p><p>இதற்கிடையில் பல வெற்றிப்படங்களில் நடித்துள்ள செல்வராகவன், சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து சில பதிவுகளை பகிர்ந்து வருவார். அவரின் பதிவில் சூசகமான கருத்துக்களை பகிர்ந்து ரசிகர்களை குழம்ப வைப்பார். </p><p>அந்தவகையில் தற்போது, எக்ஸ் தள பக்கத்தில், "யாரையும் யாரையும் யாரையும் வாழ்க்கையில் நம்பாதீர்கள். எப்பொழுது யார் கவிழ்ப்பார்கள் என்று சொல்லவே முடியாது" என்று பதிவிட்டுள்ளார். இதற்கு ரசிகர்கள், யார் உங்களை ஏமாற்றி, கவிழ்த்தார்கள் என்று கேல்வி எழுப்பி வருகிறார்கள்.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">யாரையும் யாரையும் யாரையும் வாழ்க்கையில் நம்பாதீர்கள். எப்பொழுது யார் கவிழ்ப்பார்கள் என்று சொல்லவே முடியாது.</p>&mdash; selvaraghavan (@selvaraghavan) <a href="https://x.com/selvaraghavan/status/2093226094082306384?ref_src=twsrc%5Etfw">August 28, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p>]]></content>
            <updated>2026-08-28T11:15:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thevanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[இரவோடு இரவாக கண்காணிப்பு கோபுரம் அமைக்க முயற்சி: மக்கள் எதிர்ப்பால் அடுத்தடுத்து நடந்த அதிரடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/attempt-to-set-up-a-watchtower-overnight-1787915298"></link>
            <id>https://tamilwin.com/article/attempt-to-set-up-a-watchtower-overnight-1787915298</id>
            <summary type="text">பூநகரி - கிராஞ்சி எல்லைப் பகுதியான எருமை தீவு பகுதியில் இரவு வேளை வாகனங்களில்
வந்தவர்களால் இரகசியமாக கோபுரம் ஒன்றை அமைப்பதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்ற...</summary>
            <content type="html"><![CDATA[<p>பூநகரி - கிராஞ்சி எல்லைப் பகுதியான எருமை தீவு பகுதியில் இரவு வேளை வாகனங்களில்
வந்தவர்களால் இரகசியமாக கோபுரம் ஒன்றை அமைப்பதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்ற
நிலையில் அப்பகுதி மக்கள் ஒன்று கூடியதால் கோபுரம் அமைக்கும் முயற்சி
தற்காலிகமாக தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
</p><p>
இந்த விடயம் தொடர்பில் அப்பகுதியைச் சேர்ந்த பொது அமைப்பின் பிரதிநிதி
ஒருவர் கருத்து தெரிவிக்கையில், </p><p>


 கிராஞ்சி பொன்னாவெளியை ஊடார்த்து சுமார் 238 ஏக்கர்
பரப்பளவில் காற்றாலை திட்டம் ஒன்று அமைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு
வருகின்றது.</p><p> 

அப்பகுதி மக்களின்
பாரிய எதிர்ப்பை மீறி குறித்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக
அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளின் ஒத்துழைப்புடனும் 34 காற்றாலை அமைக்கும்
திட்டத்திற்கான ஏற்பாடுகள் மும்மரமாக இடம்பெற்று வருகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/991106e6-4cd4-4285-afa2-ed891435a7fe/26-6a916cda342ca.webp' /></p><p>

இதன் பின்னணியில் இரவு வேளை வாகனத்தில் வந்த பெரும்பான்மை இனமொழியை பேசும்
நபர்கள் எருமை தீவுப் பகுதியில் நிற்பதாக தகவல் கிடைத்த நிலையில், பொலிஸாருக்கு
உடனடியாக தகவல் வழங்கிய போதும் அவர்கள் குறித்த இடத்துக்கு வரவில்லை.
</p><h2>

7ஆயிரம் தென்னங்கன்றுகள் அழியும் வாய்ப்பு</h2><p>
இந்த நிலையில் ஊர் மக்கள் குறித்த பகுதிக்கு சென்று பார்வையிட்டபோது வாகனம்
ஒன்றில் ஐந்துக்கும் மேற்பட்ட நபர்கள் தங்குவதற்காக நிழல் கொட்டகை ஒன்றை இரவு
வேளை அமைத்துள்ளனர்.</p><p>

அவர்களிடம் விடயத்தை வினவியபோது, காற்றாலை திட்டத்தை கொழும்பிலிருந்து
பார்ப்பதற்கும் தகவல் வழங்குவதற்கும் கண்காணிப்பு கோபுரம் ஒன்றை அமைக்க
வந்ததாக தெரிவித்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7f0d6312-c443-46a8-812d-637beba85298/26-6a916cdb2d39f.webp' /></p><p>
</p><p>
நாங்கள் காற்றாலை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறோம் என தெரிவித்து
அவர்களின் பொருட்களை மீட்கச் சென்ற போது தாங்கள் வெளியேறுகிறோம் எனத்
தெரிவித்து அந்த இடத்தில் இருந்து சென்றுள்ளனர்.
</p><p>
குறித்த விடயம் தொடர்பில் கிளிநொச்சி அரசாங்க அதிபரை மறுநாள் தொடர்பு கொண்டு
கேட்டபோது அவர், “தனக்கு ஏதும் தெரியாது” என பதிலளித்தார். இந்த காற்றாலை திட்டம் கிராஞ்சி பொன்னாவெளியைச் சேர்ந்த சுமார் 2ஆயிரம்
குடும்பங்களை சேர்ந்த சுமார் பத்தாயிரம் பேர் குறித்த திட்டத்தினால் நேரடியாக
பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.</p><p>

கற்றாலை அமைக்க திட்டம் போடப்பட்டிருக்கும் பகுதிகள் அதிகளவிலான தென்னை மரங்கள் காணப்படுகின்ற நிலையில், 12
காற்றாலை நிறுவும் இடங்களில் சுமார் 7 ஆயிரம் தென்னங்கன்றுகள் அழிக்கப்பட வாய்ப்பு உள்ளன.

ஒரு காற்றாலையின் விட்டம் 165 மீட்டர் நீளம் கொண்ட நிலையில் ஒரு காற்றாலை
அமைப்பதற்கு சுமார் 7 ஏக்கர் காணி கையகப்படுத்தப்படவுள்ளது.</p><h2>

பாதிக்கப்படும் மக்களின் வாழ்வாதாரம்</h2><p>
ஒரு காற்றாலை 120 அடி நீளம் கொண்டதாக காணப்படுகின்ற நிலையில், நிலத்துக்கு கீழ்
சுமார் 60 அடி நீளத்தில் பொருத்தப்படவுள்ள நிலையில் ஒரு காற்றாலைக்கு சுமார்
3000 தொடக்கம் 4000 ஆயிரம் பொதியில் அடைக்கப்பட்ட சீமெந்து செலவாகும் என
கணிப்பிடப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3b291ee9-5aca-4fdb-a334-bbf00e617db5/26-6a916cdc0a578.webp' /></p><p>
</p><p>
இந்தத் திட்டம் மக்களின் எதிர்ப்பை மீறி நடைமுறைப்படுத்துவதற்கு முயற்சிகள்
மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் இந்தப் பிரதேசத்தின் வயல் நிலங்கள்
,வழிபாட்டு இடங்கள், மற்றும் நல்ல தண்ணிக் கிணறு என்பன பாதிக்கப்படும் சூழல்
உருவாகியுள்ளன.</p><p>

மக்கள் வாழுகின்ற வளமான பகுதியை அழித்து அபிவிருத்தி என்ற போர்வையில் கனிம
மண்ணையும் காற்றாலையையும் நிறுவும் திட்டத்தை கைவிட்டு குறித்த பிரதேசத்தில்
மாற்றுக்காணியை தெரிவு செய்ய வேண்டும்.
</p><p>
ஆகவே மக்களுக்கு ஆபத்தை விளைவிக்க கடிய திட்டங்களை தடுத்து நிறுத்த வேண்டிய
பொறுப்பு அரசியல்வாதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் உள்ளது என்பதை சுட்டி காட்ட
விரும்புகிறேன் என்றார்.&nbsp;&nbsp;</p><p></p><p></p><p><b>YOU MAY LIKE THIS VIDEO</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/opvUtIueMWg" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-28T11:12:51+00:00</updated>
        </entry>
    </feed>
