<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-08-25T01:13:19+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[அடுத்த தசாப்தத்திற்குள் 300 பில்லியன் டொலர் பொருளாதார இலக்கு!- பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க தெரிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-lanka-economic-crisis-2026-1787619475"></link>
            <id>https://tamilwin.com/article/sri-lanka-economic-crisis-2026-1787619475</id>
            <summary type="text">அடுத்த தசாப்தத்திற்குள் இலங்கையை 300 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான
பொருளாதாரமாக உயர்த்தும் லட்சிய இலக்குடன் அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது
என...</summary>
            <content type="html"><![CDATA[<p>அடுத்த தசாப்தத்திற்குள் இலங்கையை 300 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான
பொருளாதாரமாக உயர்த்தும் லட்சிய இலக்குடன் அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது
எனக் கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்திப் பிரதி அமைச்சர் சதுரங்க
அபேசிங்க தெரிவித்தார்.
</p><p>
கொழும்பில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத்
தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.</p><p>

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,&nbsp;</p><p> "பாரம்பரிய கல்வி முறைமைகள் மனிதர்களின் கற்பனைத்திறனையும் சுய சிந்தனையையும்
முடக்கியுள்ள நிலையில், தற்போதைய நவீன உலகம் சிக்கல்களுக்குத் தீர்வு காணும்
புதிய கல்வி மறுசீரமைப்பை எதிர்நோக்கியுள்ளது.</p><h2>பொருளாதார மறுமலர்ச்சி&nbsp;</h2><p>
</p><p>
முறையான கல்வி இல்லாத கால கட்டங்களிலேயே அறிவியல் மற்றும் தொழில்நுட்ப
மாபெரும் கண்டுபிடிப்புகள் உருவாக்கப்பட்டன.

எனவே, தற்போதைய கல்வி முறைமையானது குழந்தைகள் புதிய விஷயங்களை ஆராயவும், இரக்க
உணர்வுடன் சிக்கல்களுக்குத் தீர்வுகாணவும் வழிவகுக்கும் வகையில்
மாற்றியமைக்கப்பட்டு வருகின்றது" என குறிப்பிட்டார்.&nbsp;</p><p>

மேலும், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மனிதர்களின் பணிச்சுமையைக்
குறைக்கும் வகையில் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்திய அவர், 19ஆம்
நூற்றாண்டில் போராடிப் பெற்ற 8 மணிநேர வேலைத் திட்டம், இத்தனை தொழில்நுட்ப
வளர்ச்சிக்குப் பிறகும் தொடர்வது நியாயமற்றது என தெரிவித்தார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/574089a4-085b-4ef4-a200-746630a2bd65/26-6a8ceb969c961.webp' /></p><p>

செயற்கை நுண்ணறிவின் உதவியுடன் உற்பத்தித்திறனை அதிகரித்து வேலை நேரத்தைக்
குறைப்பதன் மூலம் மனிதர்கள் தங்கள் குடும்பத்தினருடன் அதிக நேரத்தைச் செலவிட
முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
</p><p>
இலங்கையின் பொருளாதார மறுமலர்ச்சி குறித்துக் குறிப்பிட்ட அவர், இலங்கை
இனிவரும் காலங்களில் பிராந்தியத்தின் மாபெரும் உருமாற்றக் கதையாக
உருவெடுக்கும் என்ற நம்பிக்கையை வெளியிட்டார்.</p><p>

உள்நாட்டுத் தொழில்முனைவோர்கள் உள்ளூர் சந்தையை மட்டும் இலக்காகக் கொள்ளாமல்,
சர்வதேச முதலீடுகளை ஈர்க்கும் வகையில் உலகளாவிய சிக்கல்களுக்குத் தீர்வு தரும்
வணிக உத்திகளை உருவாக்க வேண்டும் எனவும், இலங்கை இளைஞர்களுக்குத் தேவையான
அனைத்து ஆதரவுகளையும் அரசாங்கம் தொடர்ந்து வழங்கும் எனவும் பிரதி அமைச்சர்
சதுரங்க அபேசிங்க மேலும் உறுதியளித்தார்.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-25T01:10:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[H-1B விசா விண்ணப்ப கட்டணங்களில் ஏற்பட்டுள்ள மாற்றம் ; ட்ரம்ப் அதிரடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/h-1b-visa-application-fees-revised-1787620184"></link>
            <id>https://canadamirror.com/article/h-1b-visa-application-fees-revised-1787620184</id>
            <summary type="text">அமெரிக்காவில் H-1B விசா ஒதுக்கீட்டு வரம்பிற்கு உட்பட்ட அனைத்து விண்ணப்பங்களுக்கும் கூடுதலாக 1,03,265 டாலர் கட்டணம் விதிக்க அமெரிக்கா முன்மொழிந்தது. அம...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவில் H-1B விசா ஒதுக்கீட்டு வரம்பிற்கு உட்பட்ட அனைத்து விண்ணப்பங்களுக்கும் கூடுதலாக 1,03,265 டாலர் கட்டணம் விதிக்க அமெரிக்கா முன்மொழிந்தது. </p><p>அமெரிக்க நாடாளுமன்றம் தற்போது H-1B விசா திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 65,000 விசாக்கள் மட்டுமே வழங்கப்பட வேண்டும் என்ற வழக்கமான வரம்பை நிர்ணயித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c6d234c5-ec93-45c7-a75e-b8efeba348b5/26-6a8ceb5a22704.webp' /></p><p>

</p><p>H-1B விசா விண்ணப்பங்களுக்கு 1,00,000 அமெரிக்க டாலர் கட்டணம் விதிக்கும் டிரம்ப் நிர்வாகத்தின் திட்டத்தை ரத்து செய்து மாவட்ட நீதிபதியின் உத்தரவிட்டிருந்தார்.</p><p> இந்த உத்தரவை நிறுத்தி வைக்க கோரிய மனுவை மேல்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்த ஒரு மாதத்திற்குப் பிறகு, உள்நாட்டு பாதுகாப்பு துறையின் இந்த புது முன்மொழிவு வந்துள்ளது.</p><p>தற்போதுள்ள H-1B விண்ணப்ப கட்டணத்துடன் இணைப்பதற்கு பதிலாக, 1,03,265 அமெரிக்க டாலர் தொகையை ஒரு தனிப்பட்ட, கூடுதல் H-1B கட்டணமாக செயல்படுத்த உள்நாட்டு பாதுகாப்பு துறை முன்மொழிகிறது என்று 'ஃபெடரல் ரெஜிஸ்டர்' இதழில் வெளியிடப்பட்ட அறிவிப்பு தெரிவிக்கிறது.
</p><p>அடுத்த 30 நாட்களுக்குள் இந்த முன்மொழிவு குறித்து பொதுமக்களின் கருத்துக்களை தெரிவிக்குமாறு இத்துறை அழைப்பு விடுத்துள்ளது. </p><p>கருத்துக்கள் பரிசீலிக்கப்பட்ட பிறகு இறுதி விதிமுறை வெளியிடப்படும்.

இந்தக் கட்டணம் H-1B ஒதுக்கீட்டு வரம்பிற்கு உட்பட்ட மனுக்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும், வரம்பில் இருந்து விலக்கு அளிக்கப்பட்ட மனுக்களுக்குப் பொருந்தாது என்றும்&nbsp; கூறப்பட்டுள்ளது.</p><p>
முன்மொழியப்பட்ட விதியின் கீழ், குறிப்பிட்ட லாப நோக்கற்ற ஆராய்ச்சி நிறுவனங்கள், அரசு ஆராய்ச்சி அமைப்புகள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்கள் தாக்கல் செய்யும் மனுக்கள் போன்ற ஒதுக்கீட்டு வரம்பிற்கு உட்படாத H-1B மனுக்களுக்கு இந்தக் கூடுதல் கட்டணம் பொருந்தாது என்று உள்நாட்டு பாதுகாப்பு துறை தெரிவித்துள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-25T01:09:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்கப் படைகளில் பற்றாக்குறை! ரத்து செய்யப்பட்டுள்ள இராணுவ பயிற்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/us-cancels-military-exercises-with-south-korea-1787611767"></link>
            <id>https://ibctamil.com/article/us-cancels-military-exercises-with-south-korea-1787611767</id>
            <summary type="text">அடுத்த மாதம் தென் கொரியாவுடன் இணைந்து நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த “சாங்யோங்” கூட்டு நீர்நிலத் தரையிறக்கப் பயிற்சியை அமெரிக்கா ரத்து செய்துள்ளதாக தென்...</summary>
            <content type="html"><![CDATA[<p>அடுத்த மாதம் தென் கொரியாவுடன் இணைந்து நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த “சாங்யோங்” கூட்டு நீர்நிலத் தரையிறக்கப் பயிற்சியை அமெரிக்கா ரத்து செய்துள்ளதாக தென் கொரியக் கடற்படை தெரிவித்துள்ளது.
</p><p>
ஈரானில் நடைபெற்று வரும் போர் காரணமாக அமெரிக்கப் படைகளில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதன் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>

அமெரிக்கக் கடற்படை, படைப்பிரிவு அளவிலான இந்த கூட்டுப் பயிற்சிக்குத் தங்களின் படைகள் பங்கு கொள்வதில் சிக்கல் நிலவுவதாக ஜூன் மாதமே தென் கொரியக் கடற்படைக்கு முறைப்படித் தெரிவித்துவிட்டதாக சர்வதேச வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.</p><p></p><h2>ட்ரம்ப்பின் உத்தரவு&nbsp;</h2><p>
</p><p>
எவ்வாறாயினும், பயிற்சி மீண்டும் தொடங்கப்படுவது குறித்து இரு நாட்டுப் படைகளும் நெருங்கிய ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a11d3017-c397-414d-bccb-83e2d2bef28d/26-6a8ce90a50619.webp' /><br></p><p><i>Image Credit: Mlitarytimes</i></p><p>
</p><p>
இதேவேளை, அண்மையில் முடிந்த மற்றொரு வருடாந்திர கூட்டு இராணுவப் பயிற்சியையும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் திடீரெனக் குறைக்குமாறு உத்தரவிட்டிருந்தாக தெரியவருகிறது.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-25T00:59:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[உறவினர்களுடன் சென்ற தமிழர் பகுதி சிறுமிக்கு நொடிப்பொழுதில் நடந்தேறிய துயரம்; கதறும் பெற்றோர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/girl-faces-tragedy-while-travelling-with-relatives-1787619170"></link>
            <id>https://jvpnews.com/article/girl-faces-tragedy-while-travelling-with-relatives-1787619170</id>
            <summary type="text">வவுனியா செட்டிகுளம் பகுதியைச் சேர்ந்த&amp;nbsp;மூன்று வயது சிறுமி ஒருவர்&amp;nbsp;இரசாயன திரவமொன்றை குடித்த நிலையில் உயிரிழந்துள்ளாதாக தெரிவிக்கப்படுகின்றது.க...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">வவுனியா செட்டிகுளம் பகுதியைச் சேர்ந்த&nbsp;மூன்று வயது சிறுமி ஒருவர்&nbsp;இரசாயன திரவமொன்றை குடித்த நிலையில் உயிரிழந்துள்ளாதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p style="text-align: justify; ">கம்பளை, புப்புரஸ்ஸ&nbsp; பகுதியில் வவுனியாவிலிருந்து உறவினர்களுடன் வந்திருந்த மூன்று வயது சிறுமி ஒருவர் தண்ணீர் என நினைத்து இரசாயன திரவமொன்றை குடித்த நிலையில் உயிரிழந்துள்ளாதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5cf80ea4-844d-489f-855d-3802f0108554/26-6a8ce7640f684.webp' /></p><h2 style="text-align: justify; ">மேலதிக விசாரணை</h2><p style="text-align: justify; ">

குடும்பத்தினர் அனைவரும்&nbsp; வீட்டிற்கு வெளியே இருந்த சமயத்தில், அச்சிறுமி வீட்டிற்குள் சென்று&nbsp; &nbsp;வைக்கப்பட்டிருந்த திரவத்தைத் தண்ணீர் என குடித்துள்ளார்.</p><p style="text-align: justify; ">


இதனை தொடர்ந்து குறித்த சிறுமிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு, கம்பளை வைத்தியசாலையில்&nbsp; அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">

</p><p style="text-align: justify; ">எனினும் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக&nbsp; தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p style="text-align: justify; "> பசுவின் பாலைப் பதப்படுத்தப் பயன்படுத்தப்படும் ரசாயனத்தைக் குடித்ததால் சிறுமி உயிரிழந்துள்ளதாக பிரேதப் பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

</p><p style="text-align: justify; ">சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;&nbsp;</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-25T00:52:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[எல் நினோ தாக்கத்தால் இலங்கையைச் சூழவுள்ள கடல் வெப்பநிலை உயர்வு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/el-ni-o-raises-sea-temperatures-around-sri-lanka-1787617806"></link>
            <id>https://jvpnews.com/article/el-ni-o-raises-sea-temperatures-around-sri-lanka-1787617806</id>
            <summary type="text">எல் நினோ தாக்கத்தின் காரணமாக இலங்கையைச் சுற்றியுள்ள கடற்பரப்பின் வெப்பநிலை 1°C உயர்ந்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பசுபிக் பெர...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">எல் நினோ தாக்கத்தின் காரணமாக இலங்கையைச் சுற்றியுள்ள கடற்பரப்பின் வெப்பநிலை 1°C உயர்ந்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
</p><p style="text-align: justify; ">
பசுபிக் பெருங்கடலில் நிலவும் 3°C வெப்பநிலை உயர்வின் பின்னணியிலேயே இந்த மாற்றம் அவதானிக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5050b30d-4772-4669-8646-c31f08a4cf5c/26-6a8ce210b997e.webp' /></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
இந்தநிலையில், எதிர்வரும் 8 மாதங்கள் இலங்கைக்குக் மிக முக்கியமான காலகட்டமாக அமையும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
</p><p style="text-align: justify; ">
நாட்டின் சில பகுதிகளில் செப்டம்பர் இறுதி வரை மழை பெய்ய வாய்ப்பில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; ">

தற்போதைய நிலையில், நாட்டின் பகல் மற்றும் இரவு நேர வெப்பநிலைகள் கணிசமாக அதிகரித்துள்ளன.</p><p style="text-align: justify; ">

7 மாவட்டங்களில் உள்ள 22 பிரதேச செயலகப் பிரிவுகளில் 81,605 பேர் வறட்சியான வானிலையால் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மையம் தெரிவித்துள்ளது.</p><p style="text-align: justify; ">

இதன் காரணமாக, நீர்த்தேக்கங்களிலிருந்து குடிநீர் விநியோகம் தடையின்றி வழங்கப்படும் அதேவேளை, விவசாய நடவடிக்கைகளுக்கான நீர் விநியோகத்தைக் கட்டுப்படுத்த வேண்டிய நிலை ஏற்படலாம் என நீர்ப்பாசனத் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.</p><p style="text-align: justify; ">

நீடிக்கும் வறட்சி மற்றும் அதிக வெப்பம் காரணமாக 7 மாவட்டங்களில் நீரை ஆதாரமாகக் கொண்ட வாழ்வாதாரங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-25T00:30:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[இரண்டு ஆண்டுத் திட்டம் தயார்... ட்ரம்பின் திட்டம் தோல்வி: ஈரான் வெளிப்படை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/to-counter-us-sanctions-1787608940"></link>
            <id>https://news.lankasri.com/article/to-counter-us-sanctions-1787608940</id>
            <summary type="text">Two-Year Plan To Counter US Sanctions: அமெரிக்கத் தடைகளை எதிர்கொள்ள இரண்டு ஆண்டுத் திட்டம் உள்ளது என ஈரான்.
அமெரிக்கா மற்றொரு தோல்வியை எதிர்பார்க்கலா...</summary>
            <content type="html"><![CDATA[<p>Two-Year Plan To Counter US Sanctions: அமெரிக்கத் தடைகளை எதிர்கொள்ள இரண்டு ஆண்டுத் திட்டம் உள்ளது என ஈரான்.
</p><p>அமெரிக்கா மற்றொரு தோல்வியை எதிர்பார்க்கலாம் என ஈரான் பொருளாதார அமைச்சர் அலி மதனிசாதே திங்களன்று கணித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/266d5c24-45a7-4b19-9440-d60a75613c96/26-6a8cbf6e405eb.webp' /></p><p>
</p><p>அமெரிக்காவின் புதிய தடைகளை எதிர்கொள்வதற்கு ஈரான் நிர்வாகம் ஒரு ஈராண்டுத் திட்டத்தை வைத்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். </p><p>ஈரானிய மக்கள் மற்றும் அதிகாரிகளின் உறுதியைச் சோதிக்க அவர்களால் முடிந்த அனைத்தையும் செய்தார்கள், ஆனால் ஒவ்வொரு முறையும் அவர்கள் தோல்வியுற்றார்கள். </p><p>அவர்கள் மற்றுமொரு தோல்வியைச் சந்திக்க விரும்பியது போல் தெரிகிறது என்று மதனிசாதே அரசு தொலைக்காட்சியிடம் கூறினார். </p><p>மேலும், நாங்கள் இந்தத் தடைகள் தொடர்பில் நீண்ட காலமாக காத்திருந்தோம், மட்டுமின்றி இந்த நெருக்கடிகளை எதிர்கொள்வதற்கு அரசாங்கம் தயாராக இருந்ததுடன், ஒரு இரண்டாண்டுத் திட்டத்தையும் கொண்டுள்ளது என்று அவர் கூறினார்.</p><p></p><p> </p><p>எண்ணெய் ஏற்றுமதி மீதான அமெரிக்காவின் தடையால் ஏற்பட்ட மிகையான பணவீக்கம் மற்றும் அந்நியச் செலாவணி வருவாய் பற்றாக்குறை ஆகியவற்றின் விளைவாக, ஈரானின் பொருளாதாரம் மீண்டும் ஒருமுறை சரிவின் விளிம்பில் இருப்பதாக வெள்ளை மாளிகை கருதுகிறது. </p><p>கடந்த வாரம் அமெரிக்க ஜனாதிபதி ஈரானுக்கு எதிராகக் கடுமையான பொருளாதார நடவடிக்கையை அறிவித்ததிலிருந்து 4.5 சதவீதம் சரிவைச் சந்தித்துள்ள ரியால் நாணயம், திங்களன்று கட்டுப்பாடற்ற சந்தையில் ஒரு டொலருக்கு 1.992 மில்லியன் என்ற விகிதத்தில் வர்த்தகமானது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/52b866fd-5dfd-48fb-9de4-cc0d3cf04e79/26-6a8cbf6ee5d27.webp' /></p><p> </p><p>இதனிடையே, ஈரான் முற்றிலுமாகச் சரிந்து கொண்டிருக்கிறது என ட்ரம்ப் தனது ட்ரூத் சமூக வலைதளத்தில் பதிவிட்டார். ஆனால், ஈரான் 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஏதோ ஒரு வகையான அமெரிக்காவின் உச்சபட்ச பொருளாதார அழுத்தத்தின் கீழ் இருந்து வந்துள்ளதுடன், இதுவரை அந்த நாடு தப்பிப் பிழைத்துள்ளது. </p><p>இந்த நிலையில், அமெரிக்கா இந்த நடவடிக்கைகளைத் தொடர்ந்தால், பூகம்பம் போன்ற பதிலடியுடன் ஈரான் பதிலளிக்கும் என்று அந்நாட்டின் பாதுகாப்புத் தலைவர் மொஹ்சென் ரெஸாயி கூறியுள்ளார். </p><p>அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகள் நடவடிக்கையில் சேர வேண்டாம் என ஈரானின் வளைகுடா அண்டை நாடுகளுக்கும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-25T00:14:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரெஞ்சு கிராமத்தைத் தாக்கிய சூறாவளி... பலர் காயம், நூற்றுக்கணக்கான வீடுகள் சேதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/tornado-tears-french-village-1787616967"></link>
            <id>https://news.lankasri.com/article/tornado-tears-french-village-1787616967</id>
            <summary type="text">Tornado tears through French village: பிரெஞ்சு கிராமம் ஒன்றை மொத்தமாகப் புரட்டிய சூறாவளி.
பிரெஞ்சு கிராமம் ஒன்றை சூறாவளி தாக்கியதில், டசின் கணக்கானோர...</summary>
            <content type="html"><![CDATA[<p>Tornado tears through French village: பிரெஞ்சு கிராமம் ஒன்றை மொத்தமாகப் புரட்டிய சூறாவளி.
</p><p>பிரெஞ்சு கிராமம் ஒன்றை சூறாவளி தாக்கியதில், டசின் கணக்கானோர் காயமடைந்ததுடன் நூற்றுக்கணக்கான வீடுகளும் சேதமடைந்துள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3aeffe07-6ee6-4a5c-9b04-1820f7116215/26-6a8cdec955dea.webp' /></p><p>
</p><p>தென்மேற்கு பிரான்சில் உள்ள ஒரு கிராமத்தை சூறாவளி தாக்கியதில் சுமார் 41 பேர் காயமடைந்தனர். பிரெஞ்சு அதிகாரிகள் நாட்டின் தென்மேற்குப் பகுதியின் பெரும் பாகங்களுக்கு புயல் அபாய ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்திருந்ததால், பல பகுதிகளில் மின்வெட்டும் போக்குவரத்து குழப்பமும் ஏற்பட்டன.</p><p> போமாஸ் கிராமமே மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டது, அங்கு சுமார் 300 வீடுகள் சேதமடைந்தன. சுமார் 1,000 மக்கள்தொகை கொண்ட அந்த கிராமத்தில் சூறாவளியால் சில வீடுகளின் கூரைகள் பெயர்த்துப் போயின. </p><p>வீட்டின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் காயமடைந்தவர்களில் கர்ப்பிணிப் பெண்ணும் ஒருவர். காயமடைந்தவர்களில் பதினைந்து பேர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். </p><p>ஆட் பிராந்தியத்தில் உள்ள ஒரு பிரெஞ்சு நகரில், சூறாவளி பெரிதாக வளர்ந்து மண்ணைக் கிளப்புவதை திகைக்க வைக்கும் காணொளிக் காட்சிகள் காட்டுகின்றன.</p><p></p><p> </p><p>120க்கும் மேற்பட்ட அவசரக்காலப் பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர். இரவு முழுவதும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் காவலர்கள் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். </p><p>அதேவேளையில், தங்கள் வீடுகளில் தங்க முடியாத குடியிருப்பாளர்களுக்காக போமாஸ் மற்றும் லிமூக்ஸ் ஆகிய இடங்களில் தலா ஒரு தங்குமிடமும், மற்ற இரண்டு தங்குமிடங்களும் திறக்கப்பட்டன. </p><p>மரங்கள் மற்றும் கார்கள் வீதிகளில் சிதறிக் கிடந்ததால் பல சாலைகள் மூடப்பட்டன. இதனிடையே ஆட் பிராந்தியத்தில் ஆலங்கட்டி மழையும் பெய்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/55b81907-bb45-4c3a-b7df-5a12d8ebae8c/26-6a8cdeca0b2ad.webp' /></p><p> அருகிலுள்ள பகுதிகளில் 3 முதல் 5 செ.மீ வரை அளவுள்ள ஆலங்கட்டிகள் விழுந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அருகிலுள்ள Arquettes-en-Val கிராமத்தில் காற்றின் வேகம் மணிக்கு 73 மைல்கள் வரை எட்டியதாக தேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.</p><p> தெற்கு பிரான்ஸ் முழுவதும் வீசிய புயல்கள் போக்குவரத்து கட்டமைப்பைச் சீர்குலைத்தன; இதனால் ரயில்கள் தாமதமடைந்தன, சாலைகள் மூடப்பட்டன, மேலும் போர்டோ, மார்சேய், நீஸ், டுலூஸ் மற்றும் வடக்கே உள்ள பாரிஸ் ஆகிய நகரங்களின் விமான நிலையங்களிலும் விமானச் சேவைகளில் தாமதங்களும் ரத்துகளும் ஏற்பட்டன என்று போக்குவரத்து அமைச்சர் பிலிப் டபரோட் தெரிவித்தார். </p><p>புயல் காரணமாக பத்து கிராமங்களில் சுமார் 2,800 வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-25T00:13:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[உக்ரைனை தாக்கிய 376 ட்ரோன்கள் ; பல்லாயிரம் கோடி நிதியுதவி வழங்கிய ஐரோப்பிய ஒன்றியம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/ukraine-hit-by-376-drones-eu-pledges-billions-1787616507"></link>
            <id>https://canadamirror.com/article/ukraine-hit-by-376-drones-eu-pledges-billions-1787616507</id>
            <summary type="text">ரஷ்யாவின் தாக்குதல்கள் காரணமாக உக்ரைன் பாதிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, அதன் வான்வழி பாதுகாப்பை வலுப்படுத்த இந்திய மதிப்பில் ரூ. 68,000 கோடி நிதியுதவி...</summary>
            <content type="html"><![CDATA[<p>ரஷ்யாவின் தாக்குதல்கள் காரணமாக உக்ரைன் பாதிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, அதன் வான்வழி பாதுகாப்பை வலுப்படுத்த இந்திய மதிப்பில் ரூ. 68,000 கோடி நிதியுதவியை ஐரோப்பிய ஒன்றியம் வழங்கியுள்ளது.
</p><p>
உக்ரைன் மற்றும் அதன் நட்பு நாடுகளுக்கு இடையே இராணுவ ஆதரவை அதிகரிப்பது தொடர்பாக இன்று பேச்சுவார்த்தை நடைபெறும் நிலையில், அதற்கு முன்னதாக ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b52fcac1-32ff-46b2-834d-a312b9dc69c1/26-6a8cdcfe20d31.webp' /></p><p>

</p><p>அவர் பேசுகையில், “உக்ரைனின் சுதந்திர நாளான இன்று அவர்களுக்கு முக்கியத் தேவையாக உள்ள வான் பாதுகாப்பு அமைப்புகள், ஏவுகணைகள், வெடிமருந்துகள் மற்றும் ரேடார்களுக்காக ரூ. 68,000 கோடி நிதியுதவியை வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது” என அவர் தெரிவித்தார்.</p><p>இந்த நிதி அவர்களுக்கான 90 பில்லியன் யூரோ கடனின் ஒரு பகுதியாகும். இதில், ராணுவ உதவிக்கான 60 பில்லியன் யூரோவும் அடங்கும். </p><p>இது முழுவதும் உக்ரைனுக்கு வழங்கப்படும் என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. இதில், ஏற்கனவே 16 பில்லியன் யூரோக்கள் ஒதுக்கப்பட்டு அதில் 8.5 பில்லியன் உக்ரைனுக்கு முன்பே அனுப்பட்டுள்ளது.</p><p>
</p><p>
ஐரோப்பிய ஒன்றிய ஆணையம் வெளியிட்ட அறிக்கையில், "ஜூலை மாதத்தில் மட்டும் உக்ரைன் மீது 376 ஏவுகணைத் தாக்குதல்களை ரஷ்யா நடத்தியுள்ள நிலையில், உக்ரைனின் பாதுகாப்பை வலுப்படுத்துவது முக்கியத் தேவையாக உள்ளது” என்று தெரிவித்துள்ளது.</p><p>உக்ரைன் தனது நகரங்களின் மீதான ரஷ்யாவின் தாக்குதல்களை முறியடிக்க, குறிப்பாக பேட்ரியாட் ரக வான் பாதுகாப்பு அமைப்புகள் போன்ற ஏவுகணைகளை இடைமறித்துத் தாக்கும் ஆயுதங்களை அதிகளவில் வாங்கவுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-25T00:08:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்திய விமான நிலையங்கள் ஊடாக வெளிநாடுகளுக்கு பயணிக்கும் தமிழர்களுக்கு முக்கிய அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/e-boarding-pass-introduce-in-indian-airports-1787581732"></link>
            <id>https://tamilwin.com/article/e-boarding-pass-introduce-in-indian-airports-1787581732</id>
            <summary type="text">இந்தியாவின் விமான நிலையங்களில் அடுத்த மாதம் முதலாம் திகதி (01.09.2026) முதல் &#039;ஈ-போர்டிங் பாஸ் நடைமுறை அறிமுகம் செய்யப்படவுள்ளது. 

இதற்கமைய வெளிநாட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியாவின் விமான நிலையங்களில் அடுத்த மாதம் முதலாம் திகதி (01.09.2026) முதல் 'ஈ-போர்டிங் பாஸ் நடைமுறை அறிமுகம் செய்யப்படவுள்ளது.</p><p> 

இதற்கமைய வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ளும் விமான பயணிகள் குடிவரவு கவுன்ட்டர்களில் அச்சிடப்பட்ட போர்டிங் பாஸ்&nbsp; (Boarding Pass) வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. </p><p>

இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பை மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் குடிவரவு பணியகம் விடுத்துள்ளது.</p><h2><b> 

ஈ-போர்டிங் பாஸ்</b></h2><p>புதிய நடைமுறையின் கீழ் அச்சிடப்பட்ட போர்டிங் பாஸ்களுக்கு பதிலாக, கையடக்க தொலைபேசி அல்லது மின்னணு சாதனங்களில் உள்ள ஈ-போர்டிங் பாஸ்களையும் குடிவரவு கவுண்டர்களில் பயணிகள் பயன்படுத்தலாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9be7ecb5-9405-4414-b968-f5def711eae7/26-6a8c5d9f0d848.webp' /></p><p>அச்சிடப்பட்ட போர்டிங் பாஸ் மூலம் முத்திரை குத்தப்படுவதால் விமான பயணிகளுக்கு நேர விரயம் ஏற்படுவதுடன் தாமதங்களும் ஏற்படுகிறன. </p><p>

இந்நிலையில் ஈ-போர்டிங் பாஸ் நடைமுறையால் அந்த குறைபாடு தீர்த்து வைக்கப்படும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.</p><h3><b> 

குடியேற்ற முத்திரை</b></h3><p>அதேவேளை பயணிகள் விரும்பினால் அச்சிடப்பட்ட போர்டிங் பாஸ்களை தொடர்ந்து பயன்படுத்தலாம். ஆனால், செப்டம்பர் 1ஆம் திகதி முதல் அவற்றில் குடியேற்ற முத்திரை குத்தப்பட மாட்டாது.
</p><p>
இலங்கை உட்பட பல நாடுகளை சேர்ந்தவர்கள் இந்திய விமான நிலையங்கள் ஊடாக வெளிநாடுகளுக்கான பயணங்களை மேற்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. 
</p>]]></content>
            <updated>2026-08-24T23:55:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[முகப்பரு முதல் நீரிழிவு வரை... மருத்துவ குணங்கள் நிறைந்த மணத்தக்காளி கீரை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/health-benefits-of-manathakkali-greens-1787615501"></link>
            <id>https://jvpnews.com/article/health-benefits-of-manathakkali-greens-1787615501</id>
            <summary type="text">&amp;nbsp;சத்து மிகுந்த கீரை வகைகளில் மணத்தக்காளி கீரை முக்கிய இடத்தை பிடிக்கின்றது. இக்கீரையை அவ்வப்போது உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டியது அவசியம் ஆகும். ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">&nbsp;சத்து மிகுந்த கீரை வகைகளில் மணத்தக்காளி கீரை முக்கிய இடத்தை பிடிக்கின்றது. இக்கீரையை அவ்வப்போது உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டியது அவசியம் ஆகும். </p><p style="text-align: justify; ">பாரம்பரிய காட்டு கீரையான இது சித்த மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றது.குறிப்பாக செரிமான பிரச்சனைகளுக்கு தீர்வு தருகின்றது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c85f5da5-3c97-492e-a95b-bf2a88b0a8d9/26-6a8cd91760c0f.webp' /></p><h2 style="text-align: justify; ">மருத்துவ குணங்கள்</h2><p style="text-align: justify; ">


சிறிய கருப்பு பழங்களும், பச்சை இலைகளும் கொண்ட தொடர்ந்து உணவாக உட்கொள்ளும்போது வயிற்று புண்கள், அஜீரணம், மலச்சிக்கலை குணப்படுத்தும். </p><p style="text-align: justify; ">தோல் நோய்கள், முகப்பரு, தோல் அரிப்பை நீக்கும். நீரிழிவு நோயை கட்டுப்படுத்துவதுடன், ரத்த அழுத்தம், கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
</p><p style="text-align: justify; ">


சளி, இருமல், கண் புரை பாதிப்புகளை தவிர்க்க உதவும். பொதுவாக, இதனை பயத்தம்பருப்புடன் வேகவைத்து மசித்து உண்ணலாம்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">இந்த கீரையில், ஆன்டி ஆக்சிடன்ட்கள், வைட்டமின்கள் ஏ, சி, இ, இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன.



மணத்தக்காளி கீரையின் தனித்துவம், அது பெண்களின் கருப்பையை வலுப்படுத்துகின்றது. </p><p style="text-align: justify; ">100 கிராம் மணத்தக்காளி கீரையில், நீர்ச்சத்து 82 சதவீதம், புரதம் 5.9 கிராம், கொழுப்பு, ரிபோப்ளாவின் 59 மி.கி. நியாசின் 0.9 மி.கி. நிறைந்துள்ளன.</p><p style="text-align: justify; "> 



நாட்டுக்கீரைகள் மிகப்பெரிய அளவில் மனிதனுக்கு ஏற்படும் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் பற்றாக்குறையை போக்கி நோய்களையும் வரவிடாமல் தடுக்கின்றன.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-24T23:52:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[தன்னை தானே கலாய்த்து கொண்ட விக்னேஷ் சிவன்.. என்ன சொன்னார் பாருங்க]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/you-are-lucky-kiara-didnt-act-in-lik-vignesh-1787615335"></link>
            <id>https://cineulagam.com/article/you-are-lucky-kiara-didnt-act-in-lik-vignesh-1787615335</id>
            <summary type="text">இயக்குனர் விக்னேஷ் சிவன் சமீப காலமாக ஹிட் கொடுக்க முடியாமல் திணறி வருகிறார். அவர் இயக்கத்தில் கடைசியாக வந்த LIK படம் படுதோல்வி அடைந்தது.நேற்று சென்னைய...</summary>
            <content type="html"><![CDATA[<p>இயக்குனர் விக்னேஷ் சிவன் சமீப காலமாக ஹிட் கொடுக்க முடியாமல் திணறி வருகிறார். அவர் இயக்கத்தில் கடைசியாக வந்த LIK படம் படுதோல்வி அடைந்தது.</p><p>நேற்று சென்னையில் டாக்சிக் படத்தின் விழா நடைபெற்றது. அதில் யாஷ், கியாரா அத்வானி, ருக்மிணி வசந்த் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bf8b6df7-a336-4528-8b19-879c7c234408/26-6a8cd868a54d4.webp' /></p><p>
</p><h2>நல்ல வேளை நீங்க நடிக்கல..
</h2><p>கியாரா அத்வானி பற்றி பேசிய விக்னேஷ் சிவன், "எனக்கு நினைவிருக்கிறது. கபீர் சிங் படத்திற்கு முன் நான் உங்களை சந்தித்து ஒரு கதை சொன்னேன். அதை இப்போது படமாக்கி இருக்கிறேன். லவ் இன்சூரன்ஸ் கம்பெனி."
</p><p>"நீங்க லக்கி, அதில் நீங்க நடிக்கவில்லை" என விக்னேஷ் சிவன் கூறியுள்ளார்.

தனது படத்தையே மேடையில் அவர் இப்படி கலாய்த்து இருக்கும் வீடியோ வைரல் ஆகி இருக்கிறது.&nbsp;</p><p><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="zxx" dir="ltr"><a href="https://t.co/RO1e73Ff5W">pic.twitter.com/RO1e73Ff5W</a></p>&mdash; Laxmi Kanth (@iammoviebuff005) <a href="https://x.com/iammoviebuff005/status/2091919444696289443?ref_src=twsrc%5Etfw">August 24, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p>]]></content>
            <updated>2026-08-24T23:51:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமேசான், ஸ்விக்கி நிறுவனங்களின் உணவு உரிமங்களை இடைநிறுத்திய கர்நாடகா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/karnataka-suspends-food-licences-of-1787614052"></link>
            <id>https://news.lankasri.com/article/karnataka-suspends-food-licences-of-1787614052</id>
            <summary type="text">Karnataka suspends food licences of Amazon, Swiggy: கர்நாடகாவில் அமேசான், ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட், பிக்பாஸ்கெட் ஆகியவற்றின் உணவு உரிமங்கள் இடைநீக்கம். ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Karnataka suspends food licences of Amazon, Swiggy: கர்நாடகாவில் அமேசான், ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட், பிக்பாஸ்கெட் ஆகியவற்றின் உணவு உரிமங்கள் இடைநீக்கம். </p><p>
நச்சுத்தன்மை வாய்ந்த ஊமத்தையை ஒன்லைனில் விற்பனை செய்ததைத் தொடர்ந்து, அமேசான், ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட், பிக்பாஸ்கெட் ஆகியவற்றின் உணவு உரிமங்களை கர்நாடகா இடைநீக்கம் செய்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0e287156-0d28-448a-ad2b-0e3dec184f75/26-6a8cd366b4d4b.webp' /></p><p>
</p><p>மனித நுகர்வுக்காக நச்சுத்தன்மையுள்ள ஊமத்தை பழங்கள் மற்றும் விதைகளை ஒன்லைனில் விற்பனை செய்ததன் காரணமாக, கர்நாடக உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை, அமேசான், ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் மற்றும் பிக்பாஸ்கெட் ஆகியவற்றின் உணவு உரிமங்கள் மற்றும் பதிவுகளை மறு அறிவிப்பு வரும் வரை இடைநீக்கம் செய்துள்ளது. </p><p>மேலும், மூன்று மின் வணிகத் தளங்கள், ஊமத்தை தொடர்பான அனைத்துப் பட்டியல்களையும் விளம்பரங்களையும் உடனடியாக நீக்குமாறும், அதனை ஒரு உணவுப் பொருளாக விற்பனை செய்வதையும் விநியோகிப்பதையும் நிறுத்துமாறும் அத்துறை உத்தரவிட்டுள்ளது. </p><p>இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் (FSSAI) பதிவு அல்லது உரிம எண்களைப் பயன்படுத்தி, மின்னணு வர்த்தகத் தளங்கள் வாயிலாக ஊமத்தை பழங்கள் மற்றும் விதைகள் சேமித்து விற்கப்படுவதை உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வுகளின்போது கண்டறிந்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p></p><p> </p><p>ஆகஸ்ட் 24 அன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ​​சம்பந்தப்பட்ட வணிக நிறுவனங்களின் பிரதிநிதிகள் தீர்ப்பளிக்கும் அதிகாரியின் முன் ஆஜரானார்கள். </p><p>நடைபெற்ற நடவடிக்கைகளின்படி, அந்த அறிவிப்புக்கு அமேசான் எந்தப் பதிலையும் அளிக்கவில்லை. துறையின் அறிவிப்பைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விவரங்கள் அடங்கிய ஆவணங்களைச் சமர்ப்பிக்க ஸ்விகி இன்ஸ்டாமார்ட் (Swiggy Instamart) கூடுதல் அவகாசம் கோரியது. </p><p>இதனிடையே, ஊமத்தை விற்பனையை நிறுத்திவிட்டதாகவும், விற்பனை முறையை மாற்றிவிட்டதாகவும் பிக்பாஸ்கெட் அதிகாரிகளிடம் தெரிவித்தது. மேலும், மனித நுகர்வுக்கு அல்ல என்பதைத் தெளிவாகக் குறிப்பிடும் வகையில் அதன் லேபிளிங் மாற்றப்படும் என்றும் அது கூறியது. </p><p>இருப்பினும், ஊமத்தை பழங்கள் மற்றும் விதைகளின் நச்சுத்தன்மை மற்றும் பொது சுகாதாரத்திற்கு ஏற்படக்கூடிய ஆபத்து ஆகியவற்றைக் கருத்தில் கொள்ளும்போது, ​​பெறப்பட்ட பதில்கள் திருப்திகரமாக இல்லை என்று அந்தத் துறை தெரிவித்தது. </p><p>அத்துடன், வர்த்தகத் தளங்களுக்கு இதுபோன்ற பொருட்களை வழங்கும் விநியோகஸ்தர்கள் மற்றும் விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் அந்தத் துறை உத்தரவிட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/66be45cb-19d5-4c4d-a302-2f588a94c307/26-6a8cd36767e3d.webp' /></p><p> </p><p>மேலும், உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டத்தின் கீழ் அவர்களின் உணவு உரிமங்கள் மற்றும் பதிவுகளை இடைநீக்கம் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது. </p><p>சம்பந்தப்பட்ட உணவு வணிக நிறுவனங்கள் மற்றும் மின்னணு வர்த்தகத் தளங்கள் ஆகியவை இந்த அறிவுறுத்தல்களைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று துறை தெரிவித்துள்ளது. </p><p>இந்த உத்தரவை மீறினால், பொருந்தக்கூடிய சட்டங்களின் கீழ் மேல்நடவடிக்கை எடுக்கப்படும்.
ஆய்வுகளின்போது, ​​உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் ஊமத்தை பழங்கள் மற்றும் விதைகளைக் கொண்ட, உணவுப் பதிவு எண்கள் பொறிக்கப்பட்ட பொதிகளைக் கண்டறிந்தனர். </p><p>மேலும், இப்பொருட்கள் ஒரு கிடங்கில் சேமித்து வைக்கப்பட்டிருந்ததும், இணையவழி வணிகத் தளங்கள் மூலம் விற்பனை அல்லது விநியோகம் செய்யப்பட்டதும் கண்டறியப்பட்டது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-24T23:24:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானின் எச்சரிக்கைகளால் அதிரும் மத்திய கிழக்கு ; ட்ரம்பின் திட்டத்தால் காத்திருக்கும் ஆபத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/middle-east-shaken-by-iran-s-warnings-1787613090"></link>
            <id>https://canadamirror.com/article/middle-east-shaken-by-iran-s-warnings-1787613090</id>
            <summary type="text">அமெரிக்காவின் பொருளாதார தடை முடிவை ஆதரித்தால் ஒரு சொட்டு கச்சா எண்ணெய்கூட ஏற்றுமதி செய்ய முடியாதபடி கடும் பதிலடி தரப்படும் என்று வளைகுடா நாடுகளுக்கு ஈ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவின் பொருளாதார தடை முடிவை ஆதரித்தால் ஒரு சொட்டு கச்சா எண்ணெய்கூட ஏற்றுமதி செய்ய முடியாதபடி கடும் பதிலடி தரப்படும் என்று வளைகுடா நாடுகளுக்கு ஈரான் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது.</p><p>

அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் பிப்ரவரி மாதம் தொடங்கிய மோதல் தற்காலிகமாக முடிவுக்கு வந்தாலும் அவ்வப்போது மீண்டும் மோதல் ஏற்படுகிறது. இடையிடையே அமைதிப் பேச்சுவாா்த்தை நடைபெற்றாலும் அதில் இருதரப்புக்கும் சுமுக முடிவு எட்டப்படவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e2fd2f4e-ef1b-4ad5-bdec-394f32692288/26-6a8cd0f662898.webp' /></p><p>இதனால் ஈரானுக்கு எதிராக கடுமையான பொருளாதார ரீதியிலான நடவடிக்கைகளை மேற்கொள்ள அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் திட்டமிட்டுள்ளாா். </p><p>ஈரான் மீதும், ஈரானை ஆதரிக்கும் நாடுகள் மீதும் கடுமையான பொருளாதார தடைகளை விதிக்கப் போவதாக ட்ரம்ப் அண்மையில் அறிவித்தாா்.
</p><p>இந்த நிலையில், அமெரிக்காவின் பொருளாதார தடைகள் தொடா்பான புதிய நடவடிக்கைகளை வளைகுடா நாடுகள் ஆதரிக்கக் கூடாது என்றும், அப்படி ஆதரித்தால் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்றும் ஈரான் தொடா்ந்து எச்சரித்து வருகிறது.
</p><p>
இந்நிலையில், டெஹ்ரானில் செய்தியாளா்களிடம் பேசிய ஈரான் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் இஸ்மாயில் பகேயி, அமெரிக்காவின் பொருளாதார தடைகளால் இந்த பிராந்தியத்தில் அமைதி ஏற்படாது என்றும், அந்தத் தடைகளுக்கு ஈரான் கடுமையான பதிலடி தரும் என்றும் எச்சரித்தாா்.</p>]]></content>
            <updated>2026-08-24T23:17:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீதித்துறையின் சுயாதீனத்தைப் பாதுகாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் : நாமல் எம்.பி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/to-protect-the-independence-of-the-judiciary-1787612661"></link>
            <id>https://tamilwin.com/article/to-protect-the-independence-of-the-judiciary-1787612661</id>
            <summary type="text">சட்டம் மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகளை அரசியல்மயப்படுத்துவதைத் தடுத்து,
நீதித்துறைக்கான கௌரவத்தையும் சுயாதீனத்தையும் பாதுகாக்க அரசாங்கம் உடனடியாக
நடவட...</summary>
            <content type="html"><![CDATA[<p>சட்டம் மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகளை அரசியல்மயப்படுத்துவதைத் தடுத்து,
நீதித்துறைக்கான கௌரவத்தையும் சுயாதீனத்தையும் பாதுகாக்க அரசாங்கம் உடனடியாக
நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஸ்ரீலங்கா பொதுஜ பெரமுனவின் நாடாளுமன்ற
உறுப்பினர் நாமல் ராஜபக்ச வலியுறுத்தியுள்ளார்.
</p><p>
பத்தரமுல்ல நெலும் மாவத்தையிலுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின்
தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்குக்
கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.</p><h2>நீதித்துறையின் கௌரவத்தைப் பாதுகாக்க நடவடிக்கை&nbsp;</h2><p>
</p><p>
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், </p><p>&nbsp;"அரசியல்வாதிகள் நீதிமன்றத் தீர்ப்புகளை முன்கூட்டியே அறிவிப்பதும்,
குறிப்பிட்ட சிலரைக் கைது செய்யப்போவதாகக் கூறுவதும் நீதித்துறையின்
சுயாதீனத்தன்மையைக் கடுமையாகப் பாதித்துள்ளது. எனவே, நீதித்துறையின்
கௌரவத்தைப் பாதுகாக்க அரசாங்கம் உடனடியாக ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுக்க
வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார். </p><p>மேலும், அரசாங்கத்தின் தற்போதைய செயற்பாடுகளைக் கடுமையாக விமர்சித்த அவர்,
வாக்குறுதியளித்தபடி விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் உரங்களை விநியோகிக்கவோ,
நெல்லுக்கு நியாயமான விலையைப் பெற்றுக்கொடுக்கவோ அரசாங்கத்தால் முடியவில்லை
எனத் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/204bea86-36e1-4457-9bd9-810c9644f914/26-6a8ccdf782ba9.webp' /></p><p>
</p><p>
மீனவர்களுக்கான எரிபொருள் நிவாரணம் மற்றும் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்புத்
திட்டங்களை முறையான திட்டமிடலின்றிச் செயற்படுத்துவதில் அரசாங்கம்
தோல்வியடைந்துள்ளதாகவும், நாடாளுமன்ற விசாரணைகள் குறிப்பிட்ட நபர்களை
இலக்குவைத்து பழிவாங்கும் நோக்கில் நடத்தப்படுவதாகவும் அவர் குற்றம்
சாட்டினார்.
</p><p>
நாட்டில் நிலவும் எல் நினோ காலநிலை மாற்றம் மற்றும் வறட்சி
நிலைமை குறித்துப் பேசிய அவர், குடிநீர்த் பற்றாக்குறை மற்றும் விவசாய
நிலங்களுக்கான நீர் மேலாண்மை தொடர்பில் அரசாங்கம் அலட்சியப் போக்குடன்
செயற்படுவதாகச் சுட்டிக்காட்டினார்.</p><p>

அரசாங்கம் தனது தவறுகளை மறைக்க முற்படுவதை நிறுத்திவிட்டு, மக்களின் அன்றாடப்
பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வுகளை வழங்க முன்வர வேண்டும் எனவும் நாமல்
ராஜபக்ச கேட்டுக்கொண்டார்.</p><p></p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-24T23:04:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடிய இறக்குமதி வாகனங்கள் அனைத்திற்கும் 50 வீத வரி! ட்ரம்பின் அதிரடி அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/trump-threat-impose-tariffs-on-all-canada-vehicles-1787605959"></link>
            <id>https://ibctamil.com/article/trump-threat-impose-tariffs-on-all-canada-vehicles-1787605959</id>
            <summary type="text">கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்து கார்கள், இலகுரக மற்றும் கனரக லொரிகள், வாகன உதிரிபாகங்கள் மற்றும் உலோகங்கள்(எஃகு) மீதான அமெரிக்க இறக்குமத...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்து கார்கள், இலகுரக மற்றும் கனரக லொரிகள், வாகன உதிரிபாகங்கள் மற்றும் உலோகங்கள்(எஃகு) மீதான அமெரிக்க இறக்குமதி வரியை 2027 ஜனவரி 1 முதல் 50 வீதமாக உயர்த்தப் போவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
</p><p>
கடந்த வாரம் அமெரிக்காவிற்கும் கனடாவிற்கும் இடையிலான வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் முறிந்ததைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகப் போர் மேலும் தீவிரமடைந்து வருகிறது.
</p><p>
இந்நிலையில், அமெரிக்காவில் வாகனங்களை உற்பத்தி செய்தால் பூஜ்ஜிய வீத வரியே விதிக்கப்படும் என்றும், கனடாவை இனி ஒரு மாநிலத்தைப் போல அமெரிக்கா நடத்தாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். &nbsp;</p><p></p><h2>ஒப்பந்த முறிவு</h2><p> 

முன்னதாக முன்வைக்கப்பட்டிருந்த ஒப்பந்தத்தில், கனடிய கார்கள் மற்றும் இலகுரக லொரிகள் மீதான வரியை 25 வீதத்திலிருந்து 15 வீதமாக குறைக்கவும், அலுமினியம் மற்றும் எஃகு மீதான வரியை 50 வீதத்திலிருந்து 25% வீதமாக குறைக்கவும் திட்டமிடப்பட்டிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e6bc8f49-7954-423c-827c-b05baae85f6b/26-6a8cba5a3b8c9.webp' /></p><p> </p><p>

இருப்பினும், நடுத்தர மற்றும் கனரக லொரிகளுக்கான வரி விலக்குகள் உள்ளிட்ட பல கருத்து வேறுபாடுகள் காரணமாக வெள்ளிக்கிழமை அன்று பேச்சுவார்த்தை முறிந்தது.</p><p>அதனை தொடர்ந்து ஃபோர்டு, ஸ்டெல்லாண்டிஸ், ஜெனரல் மோட்டார்ஸ், டொயோட்டா மற்றும் ஹோண்டா போன்ற முக்கிய நிறுவனங்களின் பங்குகள் பங்குச் சந்தையில் சரிவைக் கண்டன.</p><h2>கனடாவின் பதிலடி</h2><p>
</p><p>
இவ்வாறானதொரு பின்னணியில், ட்ரம்பின் இந்த நடவடிக்கைக்குப் பதிலடியாக, செப்டம்பர் 8 முதல் $20 பில்லியன் மதிப்பிலான சில அமெரிக்கப் பொருட்கள் மீது இறக்குமதி வரிகளை விதிக்க கனடாவும் முடிவு செய்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d580cbde-68ab-4f97-b0fd-09a7f40ce384/26-6a8cba5ae6e9e.webp' /></p><p>
</p><p>
இதேவேளை, அமெரிக்கர்கள் கனடாவின் இறையாண்மையை மதித்தால் மட்டுமே மீண்டும் பேச்சுவார்த்தை மேசைக்கு வர முடியும் என்று கனடா பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank" style=""><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-24T22:54:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[படவிழாவுக்கு ட்ரெண்டியாக வந்த ப்ரியா பவானி ஷங்கர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/priya-bhavani-shankar-trendy-look-at-irumudi-event-1787611719"></link>
            <id>https://cineulagam.com/article/priya-bhavani-shankar-trendy-look-at-irumudi-event-1787611719</id>
            <summary type="text">பிரியா பவானி ஷங்கர் சமீபத்தில் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்ற இருமுடி படத்தில் ரவி தேஜா உடன் நடித்து இருந்தார்.

அந்த படத்தின் வெற்றி விழா நேற்று நட...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரியா பவானி ஷங்கர் சமீபத்தில் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்ற இருமுடி படத்தில் ரவி தேஜா உடன் நடித்து இருந்தார்.
</p><p>
அந்த படத்தின் வெற்றி விழா நேற்று நடைபெற்றது. </p><p>அதில் பிரியா பவானி ஷங்கர் ட்ரெண்டி உடையில் வந்து இருந்தார்.

ரசிகர்களை கவரும் அழகிய புகைப்படங்களை பாருங்க.
</p>]]></content>
            <updated>2026-08-24T22:48:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணைகள்! சலேவின் தாயார் முன்வைத்துள்ள கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/verdict-in-the-easter-attacks-case-on-september-22-1787594002"></link>
            <id>https://tamilwin.com/article/verdict-in-the-easter-attacks-case-on-september-22-1787594002</id>
            <summary type="text">ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணைகள் இடம்பெறும் காலத்தில் தனது மகன் சுரேஷ் சலேவுக்கு விதிக்கப்பட்டுள்ள தடுப்புக் காவல் உத்தரவை மேலும் நீட்டிக்க வேண்டா...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணைகள் இடம்பெறும் காலத்தில் தனது மகன் சுரேஷ் சலேவுக்கு விதிக்கப்பட்டுள்ள தடுப்புக் காவல் உத்தரவை மேலும் நீட்டிக்க வேண்டாம் எனக் கோரி, அவரது தாயார் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.</p><p>அத்தோடு, தனது மகன் தொடர்பான எந்தவொரு விசாரணைணையும் நிறுத்துமாறு தான் கோரவில்லை எனவும் அவர் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.</p><p>சுரேஷ் சலே மீது குற்றச்சாட்டுக்கள் இருந்தால் அவை முறையாக விசாரிக்கப்பட வேண்டும்.ஆதாரங்கள் இருந்தால் விசாரணை நடத்தி உண்மையை கண்டறிய வேண்டும் எனவும் கூறினார்.</p><p>மேலும், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை நேரில் சந்திப்பதற்கான அனுமதியினை வழங்குமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.</p><p>&nbsp;இந்தக் கடிதத்தின் பின்னணி என்ன, சுரேஷ் சலேவின் தாயார் முன்வைத்துள்ள முக்கிய கோரிக்கைகள் என்ன என்பது தொடர்பான முழுமையான தகவல்களை நியூஸ் இன்சைட் நிகழ்ச்சியில் காணலாம்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/ZJlN94HPz_M" width="640" height="360" class="note-video-clip"></iframe>&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-24T22:48:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜனநாயகன் லீக் பற்றி டாக்சிக் பட விழாவில் பேசிய யாஷ் Full Video]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/yash-at-toxic-event-in-chennai-1787611495"></link>
            <id>https://cineulagam.com/article/yash-at-toxic-event-in-chennai-1787611495</id>
            <summary type="text">டாக்சிக் படத்தின் விழா நேற்று சென்னையில் நடந்தது. அதில் பேசிய நடிகர் யாஷ் தமிழ் சினிமா ரசிகர்கள் பற்றி பேசினார்.

லீக் ஆன ஜனநாயகன் படத்தை மக்கள் திய...</summary>
            <content type="html"><![CDATA[<p>டாக்சிக் படத்தின் விழா நேற்று சென்னையில் நடந்தது. அதில் பேசிய நடிகர் யாஷ் தமிழ் சினிமா ரசிகர்கள் பற்றி பேசினார்.
</p><p>
லீக் ஆன ஜனநாயகன் படத்தை மக்கள் தியேட்டரில் சென்று பார்த்தது பற்றியும் நெகிழ்ச்சியாக பேசியுள்ளார். முழு வீடியோ.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/8k-Kqg5UUq8" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-08-24T22:45:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[நிகழ்ச்சிக்கு சேலையில் அழகாக வந்த வாணி போஜன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/vani-bhojan-cute-in-green-saree-1787611159"></link>
            <id>https://cineulagam.com/article/vani-bhojan-cute-in-green-saree-1787611159</id>
            <summary type="text">ஹோம்லியாக வலம் வரும் நடிகை வாணி போஜனுக்கு அதிகம் ரசிகர்கள் இருக்கிறார்கள். அவர் சீரியல் நடிகையாக இருந்து ஹீரோயின் ஆனவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹோம்லியாக வலம் வரும் நடிகை வாணி போஜனுக்கு அதிகம் ரசிகர்கள் இருக்கிறார்கள். அவர் சீரியல் நடிகையாக இருந்து ஹீரோயின் ஆனவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
</p><p>
வாணி போஜன் தற்போது பச்சை நிற சேலையில் கியூட் ஆக நிகழ்ச்சிக்கு வந்திருக்கும் லேட்டஸ்ட் ஸ்டில்களை பாருங்க.</p>]]></content>
            <updated>2026-08-24T22:39:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானுக்கு எதிராக வெற்றி! மீண்டும் அறிவித்த ட்ரம்ப்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/trump-claim-again-us-is-winning-against-iran-1787609656"></link>
            <id>https://ibctamil.com/article/trump-claim-again-us-is-winning-against-iran-1787609656</id>
            <summary type="text">அமெரிக்கா ஈரானுக்கு எதிராக வெற்றி பெற்று வருகிறது என்ற தனது கூற்றை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

ட்ரம்ப் தனது ட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்கா ஈரானுக்கு எதிராக வெற்றி பெற்று வருகிறது என்ற தனது கூற்றை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.</p><p>

ட்ரம்ப் தனது ட்ரூத் சோஷியல் சமூக வலைதளப் பதிவில் இதனை தெரிவித்துள்ளார்.</p><p>

நாடாளுமன்றத் தேர்தல்கள் நெருங்கி வரும் நிலையில், குடியரசுக் கட்சியினரின் மன உறுதியைக் குலைப்பதற்காக ஜனநாயகக் கட்சியினர் போலி கருத்துக்கணிப்புகளை வெளியிடுவதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.</p><p></p><h2>போலி கருத்துக்கணிப்புகள்</h2><p>

இது குறித்து அவர் தனது பதிவில் மேலும் தெரிவித்துள்ளதாவது, “தீவிர இடதுசாரி ஜனநாயகக் கட்சியினர் போலி கருத்துக்கணிப்புகளால் வெறித்தனமாகச் செயல்படுகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/067d0cbe-be18-4d89-bbf0-0e2c651bcfe6/26-6a8cc7a268ee1.webp' /></p><p> இதற்கு முன் கண்டிராத அளவிற்கு அவர்கள் அவற்றை வெளியிட்டு வருகின்றனர்.

குடியரசுக் கட்சியினர் வெளியே வந்து வாக்களிப்பதைத் தடுப்பதற்காக, அவர்களின் மன உறுதியைக் குலைக்கும் நோக்கில் நடத்தப்படும் மன உறுதி குலைப்பு நடவடிக்கைகள் இவை. </p><p>ஆனால், உண்மையான கருத்துக்கணிப்புகள் நமக்கு சாதகமாக மிகச் சிறப்பாக உள்ளன. 

நமது நாட்டின் மன உறுதியும் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது.</p><p> பொருளாதார மற்றும் இராணுவ ரீதியாக வீழ்ச்சியின் விளிம்பில் (Death Spiral) இருக்கும் ஈரான் உட்பட, அனைவருக்கும் எதிராக நாம் வெற்றி பெற்று வருகிறோம்”&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-24T22:38:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[நடிகை நிகிலா விமல் சேலையில் அழகிய போட்டோஷூட்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/nikhila-vimal-saree-photoshoot-1787610586"></link>
            <id>https://cineulagam.com/article/nikhila-vimal-saree-photoshoot-1787610586</id>
            <summary type="text">நடிகை நிகிலா விமல் மலையாளம் தமிழ் என இரண்டு மொழிகளிலும் பாப்புலர் நடிகையாக இருப்பவர். ஹோம்லியாக நடித்து தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார் அவர்.
...</summary>
            <content type="html"><![CDATA[<p>நடிகை நிகிலா விமல் மலையாளம் தமிழ் என இரண்டு மொழிகளிலும் பாப்புலர் நடிகையாக இருப்பவர். ஹோம்லியாக நடித்து தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார் அவர்.</p><p>
நிகிலா விமல் தற்போது சேலையில் அழகாக போஸ் கொடுத்து இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி இருக்கிறது.
</p><p>
அழகிய ஸ்டில்கள் இதோ.</p>]]></content>
            <updated>2026-08-24T22:32:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீதி அமைச்சர் இன்று யாழ்ப்பாணம் விஜயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/justice-minister-visits-jaffna-today-1787604357"></link>
            <id>https://tamilwin.com/article/justice-minister-visits-jaffna-today-1787604357</id>
            <summary type="text">யாழ்ப்பாணத்துக்கு இன்று விஜயம் செய்யும் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார,
யாழ். சிறைச்சாலைக்கும் சென்று அங்குள்ள நிலைமைகளைப் பார்வையிடவுள்ளார்.யாழ். மாவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணத்துக்கு இன்று விஜயம் செய்யும் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார,
யாழ். சிறைச்சாலைக்கும் சென்று அங்குள்ள நிலைமைகளைப் பார்வையிடவுள்ளார்.</p><p>யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று பிற்பகல் 2 மணிக்குக் காணாமற்போனோர் பற்றிய
அலுவலகம் நடத்தும் நிகழ்வில் கலந்துகொள்ளும் நீதி அமைச்சர், அந்த நிகழ்வு
நிறைவுற்றதும் யாழ். சிறைச்சாலையைப் பார்வையிடவுள்ளார்.</p><h2>வன்முறைகள்&nbsp; &nbsp;&nbsp;</h2><p>
நாட்டில் உள்ள பல சிறைச்சாலைகளில் அண்மையில் ஏற்பட்ட வன்முறைகளையடுத்துப் பலர்
உயிரிழந்தனர்.</p><p> இதனையடுத்துச் சகல சிறைச்சாலைகளினதும் பாதுகாப்பு
பலப்படுத்தப்பட்ட நிலையில், நீதி அமைச்சர் இன்று யாழ்ப்பாணம் சிறைச்சாலையைப்
பார்வையிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7676931a-0b2c-438a-a728-a4709c183f03/26-6a8cad86df293.webp' /></p>]]></content>
            <updated>2026-08-24T22:20:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கைக்கு சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட நறுமணப் பொருட்கள் பறிமுதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/illegally-imported-spices-seized-in-sri-lanka-1787606968"></link>
            <id>https://jvpnews.com/article/illegally-imported-spices-seized-in-sri-lanka-1787606968</id>
            <summary type="text">இலங்கைக்கு சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 264 கிலோகிராம் உலர்ந்த இஞ்சி மற்றும் 69 கிலோகிராம் ஏலக்காய் தோல்கள் உள்ளிட்ட நறுமணப் பொருட்கள் கற்பிட்டி, பத்தல...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கைக்கு சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 264 கிலோகிராம் உலர்ந்த இஞ்சி மற்றும் 69 கிலோகிராம் ஏலக்காய் தோல்கள் உள்ளிட்ட நறுமணப் பொருட்கள் கற்பிட்டி, பத்தலங்குண்டுவ – சின்ன குண்டு கடற்கரைப் பகுதியில் வைத்து இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
</p><p>


இலங்கை கடற்படையினர்&nbsp; மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின்போதே இந்தப் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ef8283d8-08e6-410b-a8fb-15b74ae534e7/26-6a8cb7bde665b.webp' /></p><h2>சட்ட நடவடிக்கை</h2><p>
</p><p>


வடமேற்கு கடற்படை கட்டளையின் கீழ் செயற்படும் இலங்கை கடற்படைக் கப்பலால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின்போது, கடற்கரைப் பகுதியில் சந்தேகத்திற்கிடமான நிலையில் காணப்பட்ட 13 பொதிகள் சோதனையிடப்பட்டன.
</p><p>


இதன்போது, அவற்றுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 264 கிலோகிராம் உலர்ந்த இஞ்சி மற்றும் 69 கிலோகிராம் ஏலக்காய் தோல்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.</p><p></p><p>
</p><p>


சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட நறுமணப் பொருட்கள் மீட்புசட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட நறுமணப் பொருட்கள் மீட்புகைப்பற்றப்பட்ட நறுமணப் பொருட்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கற்பிட்டி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-24T22:00:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[இம்ரான் கானுக்கு உரிய மருத்துவ சிகிச்சை வழங்க கிரிக்கெட் முன்னோடிகள் கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/imran-khan-not-shifted-to-private-hospital-1787604095"></link>
            <id>https://tamilwin.com/article/imran-khan-not-shifted-to-private-hospital-1787604095</id>
            <summary type="text">பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரும் அந்நாட்டின் முன்னாள் கிரிக்கெட் தலைவருமான
இம்ரான் கானிற்கு மனிதநேய அடிப்படையிலான சிகிச்சையும் முறையான மருத்துவப்
பரா...</summary>
            <content type="html"><![CDATA[<p>பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரும் அந்நாட்டின் முன்னாள் கிரிக்கெட் தலைவருமான
இம்ரான் கானிற்கு மனிதநேய அடிப்படையிலான சிகிச்சையும் முறையான மருத்துவப்
பராமரிப்பும் வழங்கப்பட வேண்டும் என சர்வதேச கிரிக்கெட் அணிகளின் முன்னாள்
தலைவர்கள் பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப்பிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
</p><p>
உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 21 முன்னாள் கிரிக்கெட் தலைவர்கள்
கையொப்பமிட்டு பாகிஸ்தான் பிரதமருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், சிறையிலுள்ள
73 வயதான இம்ரான் கானின் உடல்நிலை குறித்து கவலை வெளியிடப்பட்டுள்ளது.</p><h2>கடிதத்தில் கையெழுத்திட்ட முன்னாள் வீரர்கள்&nbsp;</h2><p>

சுயாதீன மருத்துவக் குழு மூலம் அவரது உடல்நிலையை பரிசோதிக்க அனுமதிப்பதுடன்,
அவரது குடும்பத்தினர் அவரை வாராந்தம் சந்திப்பதற்கான வாய்ப்பை தடையின்றி வழங்க
வேண்டும் என்றும் அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.</p><p>இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர்களான சுனில் கவாஸ்கர், கபில் தேவ்,
திலீப் வெங்சர்க்கார் மற்றும் இலங்கையின் முன்னாள் அணித்தலைவர் அர்ஜுன ரணதுங்க
உட்பட பல முன்னணி சர்வதேச வீரர்கள் இந்த கடிதத்தில் கையொப்பமிட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/13e77c0d-046a-4d2d-b4b5-ca1d09fe7005/26-6a8cac815556d.webp' /></p><p>
</p><p>
இருப்பினும், பாகிஸ்தானைச் சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் எவரும் இதில்
கையொப்பமிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
</p><p>
பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் கடந்த மூன்று வருடங்களாக சிறை
வைக்கப்பட்டுள்ள இம்ரான் கானை, இஸ்லாமாபாத்திலுள்ள தனியார் வைத்தியசாலை
ஒன்றிற்கு மாற்றுமாறு அந்நாட்டு உயர் நீதிமன்றம் அண்மையில்
உத்தரவிட்டிருந்தது.
</p><p>
எனினும், அவர் அரசு வைத்தியசாலை ஒன்றிற்கு அழைத்துச் செல்லப்பட்டு மீண்டும்
சிறைக்கு அனுப்பப்பட்டமை குறிப்பிடத்தக்கது&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-24T21:41:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[வாழ்நாள் முழுவதும் யாசகம் எடுத்த மூதாட்டி ; இறந்த பின்னர் வீட்டிற்குள் காத்திருந்த அதிர்ச்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/lifelong-beggar-dies-shocking-discovery-found-1787595366"></link>
            <id>https://jvpnews.com/article/lifelong-beggar-dies-shocking-discovery-found-1787595366</id>
            <summary type="text">கர்நாடக மாநிலம் மந்தியா மாவட்டத்தில் வசித்து வந்தவர் நூர் என்கிற மூதாட்டி. இவர் கடந்த பல வருடங்களாகவே அந்த பகுதி மக்களிடம் பிச்சை எடுத்து வந்தார். 68 ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கர்நாடக மாநிலம் மந்தியா மாவட்டத்தில் வசித்து வந்தவர் நூர் என்கிற மூதாட்டி. இவர் கடந்த பல வருடங்களாகவே அந்த பகுதி மக்களிடம் பிச்சை எடுத்து வந்தார்.</p><p> 68 வயதான நிலையில் வயது மூப்பு காரணமாக அவர் சமீபத்தில் மரணமடைந்தார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/969e4dca-ff83-41c3-a094-f2c4f371105e/26-6a8c8a67b1daf.webp' /></p><h2>&nbsp;கோடிக்கணக்கில் பணம்?&nbsp;</h2><p>இவர் மரணமடைந்த பின் அவரின் வீட்டில் 30க்கும் மேற்பட்ட சாக்களில் நிறைய பணங்களை அவர் வைத்திருந்ததாக சொல்லப்படுகிறது.</p><p> எண்ணிப் பார்த்ததில் அந்த தொகை ரூ.8.4 லட்சம் இருந்துள்ளது. தற்போது அந்த பணம் அவருடைய இரு சகோதரர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.</p><p></p><p>

சகோதரர்களில் ஒருவர் 6 லட்சத்தை எடுத்துக்கொண்டார். மற்றவருக்கு கொடுத்த 2.40 லட்சத்தை அவர் மசூதிக்கு நன்கொடையாக வழங்கியிருக்கிறார். </p><p>மூதாட்டியின் வீட்டில் கோடிக்கணக்கில் பணம் இருந்ததாக முதலில் சமூகவலைத்தளங்களில் செய்தி பரவியது.</p><p> ஆனால், அது உண்மை இல்லை. சில்லறை, பணம் என மொத்தமாக சேர்த்து 8.40 லட்சம் இருந்ததாக தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-24T21:31:57+00:00</updated>
        </entry>
    </feed>
