<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-08-12T22:27:53+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ். கீரிமலையில் குவிக்கப்பட்ட குப்பைகளை அகற்றக் கோரி கவனயீர்ப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/protest-remove-garbage-piled-up-keerimalai-jaffna-1786572854"></link>
            <id>https://jvpnews.com/article/protest-remove-garbage-piled-up-keerimalai-jaffna-1786572854</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் – கீரிமலை பகுதியில் கொட்டப்பட்டுள்ள குப்பைகளை உடனடியாக அகற்றுமாறு கோரி, ஆடி அமாவாசை தினத்தை முன்னிட்டு நேற்று (12) புதன்கிழமை கவனயீர்ப்பு ...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் – கீரிமலை பகுதியில் கொட்டப்பட்டுள்ள குப்பைகளை உடனடியாக அகற்றுமாறு கோரி, ஆடி அமாவாசை தினத்தை முன்னிட்டு நேற்று (12) புதன்கிழமை கவனயீர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.</p><p></p><p>

வலி. வடக்கு பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்ட கீரிமலை பகுதியில், சுண்ணக்கல் அகழ்வினால் உருவான பாரிய பள்ளங்களுக்குள் வலி. தெற்கு பிரதேச சபையினால் இலத்திரனியல் கழிவுகள், மருத்துவக் கழிவுகள் உள்ளிட்ட பல்வேறு வகையான கழிவுகள் சட்டவிரோதமாகக் கொட்டப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dd3b727a-16dd-414a-86c0-6b07cf7d1e08/26-6a7cf03874ba0.webp' /></p><p>
</p><p>
இவ்வாறு கொட்டப்பட்டுள்ள கழிவுகளை உடனடியாக மீள அகற்றுமாறு கோரி, வலி. வடக்கு பிரதேச சபையின் 34 உறுப்பினர்களில் 26 உறுப்பினர்கள் கையொப்பமிட்டு, வடமாகாண ஆளுநர், வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர், மாவட்ட செயலாளர், மத்திய சுற்றாடல் அதிகார சபை மற்றும் தெல்லிப்பழை பிரதேச செயலாளர் ஆகியோரிடம் கடந்த வாரம் முறையிட்டிருந்தனர்.</p><p>எனினும், இதுவரை இந்த விடயம் தொடர்பில் காத்திரமான நடவடிக்கைகள் எதுவும் முன்னெடுக்கப்படவில்லை என குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஆடி அமாவாசை தினமான நேற்று, குப்பைகள் கொட்டப்பட்டுள்ள பகுதியில் கவனயீர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.</p><p>

இதன்போது, குறித்த குப்பைக் குவியல்களால் ஏற்படக்கூடிய சுற்றுச்சூழல் மற்றும் சமூகப் பாதிப்புகள் தொடர்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்வும் இடம்பெற்றது. </p><p>மேலும், விழிப்புணர்வு பதாகைகள் காட்சிப்படுத்தப்பட்டதுடன், துண்டுப் பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டன.

இந்த விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை விநியோகிக்கும் நடவடிக்கையில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் கலந்துகொண்டார்.
</p><p>
ஆடி அமாவாசை தினத்தில் முன்னோர்களுக்கான பிதிர்க்கடன்களை நிறைவேற்றுவதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் கீரிமலை பகுதிக்கு வருகை தருவது வழக்கமாகும்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5cad907a-38c4-490b-b1db-bb1bde4a8f38/26-6a7cf03a7e942.webp' /></p><p>அத்துடன், மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தின் தீர்த்தோற்சவத்தை முன்னிட்டு, பக்தர்கள் கீரிமலைப் பகுதியை ஊடறுத்து தீர்த்தமாடச் செல்வதும் குறிப்பிடத்தக்கது.</p><p>

இதனைக் கருத்திற்கொண்டு, ஆடி அமாவாசை தினத்திற்கு முன்னதாக கீரிமலையில் கொட்டப்பட்டுள்ள குப்பைகளை அகற்றுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டிருந்த போதிலும், அவற்றை அகற்றுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவில்லை என ஏற்பாட்டாளர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
</p><p>
இதனால், குறித்த பகுதியில் கொட்டப்பட்டுள்ள கழிவுகளை உடனடியாக அகற்றி, எதிர்காலத்தில் அப்பகுதியில் கழிவுகள் கொட்டப்படுவதைத் தடுப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.</p><p></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dd3b727a-16dd-414a-86c0-6b07cf7d1e08/26-6a7cf03874ba0.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5cad907a-38c4-490b-b1db-bb1bde4a8f38/26-6a7cf03a7e942.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fb98231a-7eb8-44ff-8069-a824c637c4b8/26-6a7cf03927878.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1e88f0b4-c07e-4c90-83a0-95840e71edb9/26-6a7cf039cd24d.webp' /></p>]]></content>
            <updated>2026-08-12T22:16:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுவிஸ் மக்களுக்கு முக்கிய அறிவுறுத்தல் ; வானில் பிரமிக்க வைக்கும் அரிய சூரிய கிரகணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/rare-solar-eclipse-in-swiss-skies-1786572136"></link>
            <id>https://canadamirror.com/article/rare-solar-eclipse-in-swiss-skies-1786572136</id>
            <summary type="text">சுவிட்சர்லாந்தில் இன்று (12) புதன்கிழமை மாலை அரிய பகுதி சூரிய கிரகணம் தென்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுவிஸ் நேரப்படி (CEST), பகுதி சூரிய கிர...</summary>
            <content type="html"><![CDATA[<p>சுவிட்சர்லாந்தில் இன்று (12) புதன்கிழமை மாலை அரிய பகுதி சூரிய கிரகணம் தென்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
சுவிஸ் நேரப்படி (CEST), பகுதி சூரிய கிரகணம் மாலை 7:23 மணியளவில் ஆரம்பித்து, இரவு 8:50 மணியளவில் நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>எனினும், கிரகணம் முடிவடைவதற்கு முன்னரே சில பகுதிகளில் சூரியன் அஸ்தமித்துவிடும் என்பதால், சரியான நேரம் இருப்பிடத்தைப் பொறுத்து மாறுபடும்.
</p><p>
கிரகணத்தின் உச்சநிலை சுமார் இரவு 8:15 முதல் 8:20 மணி வரை இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/abbd56c1-a1e9-40e0-b3ec-0e382de00d64/26-6a7ced6a87fb0.webp' /></p><p>இந்த நேரத்தில் சுவிட்சர்லாந்தின் பல பகுதிகளில் சந்திரன் சூரியனின் சுமார் 90 முதல் 93 சதவீதம் வரையிலான பகுதியை மறைக்கும். </p><p>சூரிச்சில் அதிகபட்ச மறைப்பு சுமார் 91.9 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

இந்த சூரிய கிரகணம், சந்திரன் பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் கடந்து செல்வதால் ஏற்படுகிறது. </p><p>சுவிட்சர்லாந்தில் இது பகுதி சூரிய கிரகணமாகவே தென்படும்; முழு சூரிய கிரகணம் அங்கு காணப்படாது.
</p><p>
மாலை நேரத்தில் சூரியன் மேற்கு முதல் வடமேற்கு திசையில் தாழ்வாகக் காணப்படும் என்பதால், கிரகணத்தை அவதானிக்க விரும்புவோர் கட்டிடங்கள், மரங்கள் அல்லது மலைகளால் மறைக்கப்படாத திறந்த வெளி, உயரமான பகுதிகள் மற்றும் ஏரிக்கரைகள் போன்ற இடங்களைத் தெரிவுசெய்வது சிறந்ததாகக் கருதப்படுகிறது.</p><h4>பாதுகாப்பு எச்சரிக்கை</h4><p>
முறையான ISO-certified (ISO 12312-2) கிரகணக் கண்ணாடிகள் (Eclipse Glasses) இல்லாமல் சூரியனை நேரடியாகப் பார்க்க வேண்டாம். </p><p>
சாதாரண கூலிங் கிளாஸ்கள் கண்களைப் பாதுகாக்காது.</p>]]></content>
            <updated>2026-08-12T22:02:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தோனேசியாவில் கடலில் தீப்பிடித்த படகு ; ஒருவர் பலி; காணாமல் போனோரை தேடும் பணி தீவிரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/boat-catches-fire-at-sea-in-indonesia-one-dead-1786571246"></link>
            <id>https://canadamirror.com/article/boat-catches-fire-at-sea-in-indonesia-one-dead-1786571246</id>
            <summary type="text">சுற்றுலாத் தீவான பாலியில் இருந்து பயணித்த படகு ஒன்று லோம்போக் கடற்பகுதியில் தீப்பிடித்து எரிந்ததில் 172 பேரை இந்தோனேசிய அதிகாரிகள் மீட்டுள்ளனர்.மேலும்...</summary>
            <content type="html"><![CDATA[<p>சுற்றுலாத் தீவான பாலியில் இருந்து பயணித்த படகு ஒன்று லோம்போக் கடற்பகுதியில் தீப்பிடித்து எரிந்ததில் 172 பேரை இந்தோனேசிய அதிகாரிகள் மீட்டுள்ளனர்.</p><p>மேலும், காணாமல் போன மற்ற பயணிகளைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b4a29fe3-c4c1-4d43-a95d-e926ea13df68/26-6a7ce9efa61de.webp' /></p><p>KM புத்ரி யாஸ்மின் படகு பாலியில் உள்ள பதங்பாய் துறைமுகத்தில் இருந்து மேற்கு நுசா தெங்கரா மாகாணத்தில் உள்ள லம்போக்கில் உள்ள லெம்பார் துறைமுகத்திற்கு புறப்பட்டது என்று உள்ளூர் மீட்பு அமைப்பின் தலைவர் முஹம்மது ஹரியாடி தெரிவித்தார்.</p><p>

இந்நிலையில், ஒரு இந்தோனேசியர் இறந்தது உறுதி செய்யப்பட்டது மற்றும் 172 பேர் பாலி மற்றும் லோம்போக்கில் உள்ள துறைமுகங்களுக்கு வெளியேற்றப்பட்டன.</p>]]></content>
            <updated>2026-08-12T21:47:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[59 வணிகக் கப்பல்களைத் திருப்பி அனுப்பிய அமெரிக்கா! ஹோர்முஸில் அதிரடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/us-navy-turns-back-59-ships-near-iran-1786570962"></link>
            <id>https://ibctamil.com/article/us-navy-turns-back-59-ships-near-iran-1786570962</id>
            <summary type="text">ஈரான் மீதான கடற்படை முற்றுகையை (Naval Blockade) மீண்டும் தீவிரப்படுத்தியதைத் தொடர்ந்து, அந்நாட்டுத் துறைமுகங்களுக்குச் செல்ல முயன்ற 59 வணிகக் கப்பல்கள...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரான் மீதான கடற்படை முற்றுகையை (Naval Blockade) மீண்டும் தீவிரப்படுத்தியதைத் தொடர்ந்து, அந்நாட்டுத் துறைமுகங்களுக்குச் செல்ல முயன்ற 59 வணிகக் கப்பல்களை அமெரிக்கப் படைகள் தடுத்து திருப்பி அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
அமெரிக்க மத்திய கட்டளையகம் இதனை தெரிவித்துள்ளது.

இதனடிப்படையில் அமெரிக்காவின் உத்தரவை மீறிச் செல்ல முயன்ற 3 கப்பல்கள் செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளதுடன், 2 கப்பல்களில் நேரடிச் சோதனைகளும் நடத்தப்பட்டுள்ளன.
</p><p>
ஜூலை 14 முதல் மீண்டும் நடைமுறைக்கு வந்த இந்த முற்றுகை நடவடிக்கைகளை மத்திய கட்டளையகம் உறுதிப்படுத்தியுள்ளது.</p><p>

ஹோர்முஸ் நீரிணையில் அமெரிக்கக் கடற்படை அமைத்துள்ள இந்த முற்றுகையை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இரும்புச் சுவர் என வர்ணித்துள்ளார்.</p><p>

மறுபுறம், அமெரிக்கா விதித்துள்ள நிபந்தனைகளை ஏற்கும் வரை கடல் வழித்தடம் திறக்கப்படாது என ஈரான் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">An F/A-18 fighter jet launches from the flight deck of USS George H.W. Bush (CVN 77) while the ship sails in regional waters and supports enforcement of America’s 🇺🇸 steel wall blockade against Iran. As of Aug. 12, U.S. forces have redirected 59 commercial vessels, disabled 3 and… <a href="https://t.co/dH4BBshoTE">pic.twitter.com/dH4BBshoTE</a></p>&mdash; U.S. Central Command (@CENTCOM) <a href="https://x.com/CENTCOM/status/2087616031758103033?ref_src=twsrc%5Etfw">August 12, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-12T21:43:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலக சாதனை படைத்த சீனாவின் சோதனை புல்லட் ரயில்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/china-experimental-bullet-train-sets-world-record-1786570708"></link>
            <id>https://canadamirror.com/article/china-experimental-bullet-train-sets-world-record-1786570708</id>
            <summary type="text">சீனாவில் ஒரு சோதனை மாக்லேவ் ரயில் தனது சொந்த குறுகிய-தூர சாதனையை ஆறு மாதங்களில் மூன்றாவது முறையாக முறியடித்துள்ளது.

இது வெறும் 5.3 வினாடிகளில் 800 ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சீனாவில் ஒரு சோதனை மாக்லேவ் ரயில் தனது சொந்த குறுகிய-தூர சாதனையை ஆறு மாதங்களில் மூன்றாவது முறையாக முறியடித்துள்ளது.
</p><p>
இது வெறும் 5.3 வினாடிகளில் 800 கிமீ வேகத்தை எட்டி புதிய சாதனையை படைத்ததுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b23a64ac-051a-4d31-bc56-e4c9e6a17257/26-6a7ce7d64d58b.webp' /></p><p>1.1 டன் எடையுள்ள ரயில் ஹூபே மாகாணத்தில் உள்ள டோங்கு ஆய்வகத்தில் 1 கிமீ பாதையில் சோதனையை முடித்தது.</p><p>இருப்பினும், வழக்கமான பயணிகள் ரயில்களைப் போலல்லாமல், இந்த சோதனை வாகனம் மக்களை ஏற்றிச் செல்லும் வகையில் வடிவமைக்கப்படவில்லை. </p><p>

ராக்கெட்ரி, விண்வெளி மற்றும் பிற அதிவேக அமைப்புகளில் இறுதியில் பயன்பாடுகளைக் கொண்டிருக்கக்கூடிய தொழில்நுட்பங்களை சோதிக்க ஆராய்ச்சியாளர்கள் இதைப் பயன்படுத்துகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-08-12T21:42:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[இம்ரான் கான் சிறையிலேயே உயிரிழந்துவிட்டாரா..! போராட்டத்திற்கு தயாராகும் 20 லட்சம் பேர்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/imran-khan-dead-prison-us-pakistan-journalist-1786567775"></link>
            <id>https://tamilwin.com/article/imran-khan-dead-prison-us-pakistan-journalist-1786567775</id>
            <summary type="text">பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், அந்நாட்டு கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனுமான இம்ரான் கான், ஊழல் வழக்கில் 14 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று ராவல்பிண்டி...</summary>
            <content type="html"><![CDATA[<p>பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், அந்நாட்டு கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனுமான இம்ரான் கான், ஊழல் வழக்கில் 14 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று ராவல்பிண்டியில் உள்ள அடியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
</p><p>
 அவரது மனைவி புஷ்ரா பீபிக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.</p><h2>ஆதரவாளர்கள் கவலை</h2><p>
</p><p>
இந்நிலையில், இம்ரான் கான் சிறையிலேயே உயிரிழந்திருக்கலாம் என 3 ராணுவ அதிகாரிகள் தன்னிடம் தெரிவித்ததாக பாகிஸ்தான் பத்திரிகையாளர் வஜாஹத் சயீத் கான் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><p> 

எனினும், இந்த தகவல் இதுவரை உறுதி செய்யப்படவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1a880889-9cde-44e1-9cbe-29480a9efb28/26-6a7cde049a13c.webp' /></p><p>
</p><p>
இம்ரான் கானின் உடல்நிலை குறித்து ஏற்கனவே பல்வேறு தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், கடந்த சில நாட்களாக அவரது குடும்பத்தினருக்கும், PTI கட்சியின் முக்கிய நிர்வாகிகளுக்கும் அவரை சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. </p><p>

இதனால் அவரது ஆதரவாளர்களிடையே கவலை அதிகரித்துள்ளது.

இதற்கிடையே, இம்ரான் கானுக்கு ஏதேனும் நடந்தால் 20 லட்சம் பேர் தெருவில் இறங்கி போராட்டம் நடத்த தயாராக இருப்பதாக அவரது PTI கட்சி எச்சரித்துள்ளது. </p><p>

இம்ரான் கான் நலமாக இருப்பதாக உடனடியாக அறிவிக்க வேண்டும் என்றும், அவரது குடும்பத்தினரை சிறையில் சந்திக்க அனுமதிக்க வேண்டும் என்றும் கட்சி வலியுறுத்தியுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-12T21:36:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஐரோப்பாவில் ரத்தான நூற்றுக்கணக்கான விமானங்கள்... வெளிநாடுகளில் சிக்கிக்கொண்ட குடும்பங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/europe-hundreds-of-flights-cancelled-1786570530"></link>
            <id>https://news.lankasri.com/article/europe-hundreds-of-flights-cancelled-1786570530</id>
            <summary type="text">Flights have been cancelled across Europe: ஐரோப்பாவில் எரிமலை சீற்றம் காரணமாக நூற்றுக்கணக்கான விமானங்கள் ரத்து.
ஐரோப்பாவில் எரிமலை சீற்றம் காரணமாக நூ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Flights have been cancelled across Europe: ஐரோப்பாவில் எரிமலை சீற்றம் காரணமாக நூற்றுக்கணக்கான விமானங்கள் ரத்து.
</p><p>ஐரோப்பாவில் எரிமலை சீற்றம் காரணமாக நூற்றுக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால், பல குடும்பங்கள் வெளிநாடுகளில் சிக்கிக் கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.</p><h2>முழுமையாக முன்பதிவு</h2><p>
</p><p>எட்னா எரிமலையின் தற்போதைய சீற்றம் சிசிலியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது; இதன் காரணமாக வார இறுதி முதல் கட்டானியா விமான நிலையம் தனது செயல்பாடுகளை நிறுத்தி வைத்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/13828a81-12f9-4f5b-bcba-0357adb2854c/26-6a7ce72640a5a.webp' /></p><p> </p><p>இதன் விளைவாக விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன; நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வெளிநாடுகளில் சிக்கியுள்ளனர். </p><p>விமானங்கள் ரத்து மட்டுமல்லாமல், பேருந்துகள் மற்றும் ரயில்களில் இடங்கள் முழுமையாக முன்பதிவு செய்யப்பட்டுள்ளன, வாடகை வாகனங்களின் கட்டணம் மிக அதிகமாக உள்ளது, மேலும் விடுதிகளும் நிரம்பி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p></p><p> </p><p>தீவின் வடக்குப் பகுதியில் உள்ள பலெர்மோ விமான நிலையத்திலிருந்து விமானங்கள் தொடர்ந்து இயக்கப்பட்டு வருகின்றன; ஆனால், அங்கிருந்து செல்லும் விமானங்களில் அனைத்து இருக்கைகளும் முன்பதிவு செய்யப்பட்டுவிட்டதாகவே கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c97799ff-d12b-428a-b614-d86f162b4d8a/26-6a7ce724d9442.webp' /></p><h2>மாலை 4 மணி வரை</h2><p> </p><p>உள்ளூர் ஊடகங்களின் தகவலின்படி, ஆகஸ்ட் 8 முதல் 11-ஆம் திகதி வரை சுமார் 400 புறப்படும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டன; இன்று மேலும் 52 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a85a540e-5da6-40f6-89a1-cf3a10ad4f6e/26-6a7ce7258b5a5.webp' /></p><p> </p><p>250-க்கும் மேற்பட்ட விமானங்கள் வேறு விமான நிலையங்களுக்குத் திருப்பி விடப்பட்டன. கட்டானியா விமான நிலையத்திற்கான மற்றும் அங்கிருந்து புறப்படும் அனைத்து விமான சேவைகளும் குறைந்தது நாளை மாலை 4 மணி வரை இடைநிறுத்தப்பட்டுள்ளன. </p><p>எரிமலை சீற்றம் காரணமாக மால்டாவிற்கான விமானங்களும் ரத்து செய்யப்பட்டு தாமதமாவதால், சிசிலி மட்டுமல்லாமல் மால்டாவும் பாதிக்கப்பட்டுள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-12T21:33:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Bavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிழக்கை முஸ்லிம்களுக்கு தாரைவாத்து கொடுக்க ஆறுகட்சிகள் கூட்டு திட்டம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/eastern-tamil-people-party-1786569437"></link>
            <id>https://tamilwin.com/article/eastern-tamil-people-party-1786569437</id>
            <summary type="text">தமிழ்
மக்களின் பூர்வீகமான கிழக்கை முஸ்லிம்களுக்கு தாரைவார்த்து கொடுப்பதற்கான சதி
திட்டமே இந்த ஆறுகட்சிகள் கூட்டு என ஈழத்தமிழர் முன்னணி கட்சி தலைவர் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழ்
மக்களின் பூர்வீகமான கிழக்கை முஸ்லிம்களுக்கு தாரைவார்த்து கொடுப்பதற்கான சதி
திட்டமே இந்த ஆறுகட்சிகள் கூட்டு என ஈழத்தமிழர் முன்னணி கட்சி தலைவர் ஜெயா
சரவணா தெரிவிதத்தார்.</p><p>நேற்றையதினம்(12.8.2026) ஊடக அறிக்கை ஒன்றை
வெளியிட்டு அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.</p><p>அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, கிழக்கில் அம்பாறை மாவட்டத்தில் பொத்துவில் தொடக்கம் துறைநீலாவனை வரையும் உள்ள
பல சாய்ந்தமருது வீரமுனை, பொத்துவில், உட்பட பல கிராமங்களில் உள்ள
தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டு கட்டிடங்களுக்கு தீவைத்து
விரட்டியடிக்கப்பட்டு ஆலயங்கள் இருந்த
இடங்களில் பள்ளிவாசல் மற்றும் மீன்சந்தை அமைக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>தமிழர்கள் மீது அடாவடி</h2><p>&nbsp;அவ்வாறே ஓட்டுமாவடியில் காளிகோவிலை உடைத்து அதில் மீன்சந்தை கட்டியதாகவும்
அதற்கு நீதவானை கூட தனது அதிகாரத்தை பயன்படுத்து இடமாற்றம் செய்துள்ளதாக
நா.உறுப்பினர் எ.எல்.எம். ஹிஸ்புல்லா தெரிவித்த வீடியோ சமூக ஊடகங்களில்
வெளிவந்துள்ளது.
</p><p>
இவ்வாறு தமிழர்கள் மீது ஊர்காவல்படை என்ற போர்வையில் தமிழர்கள் மீது
கட்டவிழ்துவிடப்பட்டு தமிழர்களை படுகொலை செய்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ba3e0041-c87c-459b-bc25-eecc4d07e55c/26-6a7ce60db6c49.webp' /></p><p> இந்த தமிழர்கள் மீது
இடம்பெற்ற இந்த அடாவடிக்கு எதிராக அன்றில் இருந்து இன்று வரை தமிழர்களின்
பிரதி நிதிகள், தலைவர்கள் என தெரிவித்து வருபவர்கள் எவரும் குரல் கொடுக்காது
மௌனிகளாக இருந்து வருகின்றனர்.
</p><p>
கடந்த 2014ம் ஆண்டு கிழக்கு மாகாண சபை தேர்தலில் தமிழரசுகட்சி 11 ஆசனங்களை
பெற்று கொண்டு முஸ்லீம் கட்சிகளுடன் கூட்டு சேர்ந்து முஸ்லிம்களுக்கு
முதலமைச்சு பதவியை தாரைவாத்து கொடுத்தது தமிழரசு கட்சி

அதேபோல கிழக்கை முஸ்லிம்களுக்கு தாரைவார்த்து கொடுப்பதற்கே இந்த 6 கட்சி
கூட்டு . </p><p>அரசாங்கத்தால் வழங்கப்பட்ட தமிழ் மக்களின் பிரதேச செயலகமான கல்முனை
தமிழ் பிரதேசசெயலகத்தின் கணக்காளரை கூட வழங்க மறுக்கும் முஸ்லிம்
அரசியல்வாதிகள் தமிழ் மக்களின் நலனில் அல்லது உரிமைக்காக குரல்கொடுப்பார்களா
மக்களே சிந்தியுங்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-12T21:31:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்தும் திட்டம் ; இலங்கைக்கு ஐ.நா. விசேட கடிதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/un-special-letter-plan-raise-retirement-age-judges-1786557891"></link>
            <id>https://jvpnews.com/article/un-special-letter-plan-raise-retirement-age-judges-1786557891</id>
            <summary type="text">இலங்கையில் நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை மேலும் இரண்டு வருடங்களால் அதிகரிப்பதற்கு முன்மொழியப்பட்டுள்ள அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் ஐக்கிய நாடுகள...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை மேலும் இரண்டு வருடங்களால் அதிகரிப்பதற்கு முன்மொழியப்பட்டுள்ள அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை இலங்கை அரசாங்கத்துக்கு விசேட கடிதமொன்றை அனுப்பியுள்ளது.</p><p>
</p><p></p><p>நீதிபதிகள் மற்றும் சட்டத்தரணிகளின் சுதந்திரம் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் விசேட பிரதிநிதி மார்கரெட் சாட்டர்வைட் (Margaret Satterthwaite) இந்தக் கடிதத்தை அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fb5005b1-c254-4535-84a7-bb61d5c19a5d/26-6a7cb91e31ecb.webp' /></p><p>
</p><p>
தற்போதைய அரசியலமைப்பின் பிரகாரம், உயர் நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயது 65 ஆகவும், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயது 63 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.</p><p>முன்மொழியப்பட்டுள்ள அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம், உயர் நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை 67 ஆகவும், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை 65 ஆகவும் உயர்த்துவதற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
</p><p>
எனினும், அவசரமாக மேற்கொள்ளப்படும் இத்தகைய அரசியலமைப்புத் திருத்தம் நீதித்துறையின் சுதந்திரத்திற்கும், நியாயமான விசாரணைக்கான உரிமைக்கும் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என ஐக்கிய நாடுகள் சபையின் விசேட பிரதிநிதி தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளார்.
</p><p>
குறிப்பாக, முன்மொழியப்பட்டுள்ள மாற்றங்கள் எதிர்காலத்தில் நியமிக்கப்படவுள்ள நீதிபதிகளுக்கு மாத்திரம் பொருந்தாமல், தற்போது பதவியில் உள்ள நீதிபதிகளின் பதவிக்காலத்துக்கும் உடனடியாகப் பொருந்தும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளமை கவலைக்குரிய விடயம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3565a721-deef-446f-97dc-5abbf0cc704e/26-6a7cb5c50961d.webp' /></p><p>மேலும், நீதித்துறை தொடர்பான முக்கியமான சட்ட மற்றும் அரசியலமைப்பு மாற்றங்கள் உரிய கலந்தாலோசனைகள் மற்றும் வெளிப்படையான நடைமுறைகளின் ஊடாக முன்னெடுக்கப்பட வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.</p><p>

முறையான கலந்தாலோசனைகள் இன்றி இத்தகைய திருத்தங்கள் மேற்கொள்ளப்படுமானால், நீதித்துறையின் சுயாதீனம் தொடர்பில் பொதுமக்கள் மத்தியில் சந்தேகங்கள் ஏற்படுவதுடன், நீதித்துறை மீதான நம்பிக்கையும் பாதிக்கப்படக்கூடும் என ஐ.நா. விசேட பிரதிநிதி எச்சரித்துள்ளார்.
</p><p>
இதனையடுத்து, நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பதற்கான அரசியலமைப்புத் திருத்தத்தை முன்வைப்பதற்கான காரணங்கள், அதன் சட்டரீதியான அடிப்படை மற்றும் நீதித்துறையின் சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்காக அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் தெளிவுபடுத்துமாறு ஐக்கிய நாடுகள் சபை இலங்கை அரசாங்கத்திடம் கோரியுள்ளது.
</p><p>
நீதித்துறையின் சுயாதீனம் மற்றும் நீதிபதிகளின் பதவிக்காலம் தொடர்பான இந்த விவகாரம், இலங்கையில் முன்மொழியப்பட்டுள்ள அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பான முக்கியமான சர்வதேச கவனமாக பார்க்கப்படுகிறது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-12T21:11:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹோர்முஸ் நீரிணை இன்னும் எங்கள் பிடியில்...! ட்ரம்பிற்குப் பதிலடி கொடுத்த ஈரான்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/iran-denies-trump-strait-of-hormuz-claim-1786567039"></link>
            <id>https://ibctamil.com/article/iran-denies-trump-strait-of-hormuz-claim-1786567039</id>
            <summary type="text">ஹோர்முஸ் நீரிணையில் (Strait of Hormuz) முழுமையாக அமெரிக்காவின் கட்டுப்பாட்டிற்குள் வந்துவிட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்த கூற்றை ஈ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹோர்முஸ் நீரிணையில் (Strait of Hormuz) முழுமையாக <a href="https://ibctamil.com/article/putin-sends-special-gift-to-trump-1786550764" target="_blank">அமெரிக்காவின் கட்டுப்பாட்டிற்குள்</a> வந்துவிட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்த கூற்றை ஈரான் அதிகாரப்பூர்வமாக நிராகரித்துள்ளது.
</p><p>
ஹோர்முஸ் ஜலசந்தியின் கடல்வழிப் போக்குவரத்தை நிர்வகிக்கும் ஈரானிய அமைப்பான பாரசீக வளைகுடா ஜலசந்தி ஆணையம் (Persian Gulf Strait Authority) இது குறித்து கருத்து வெளியிட்டுள்ளது.
</p><p>
குறித்த ஆணையத்தின் கருத்தின்படி, “ஹோர்முஸ் நீரிணையின் முடக்கம் நீக்கப்பட்டுவிட்டதாக <a href="https://ibctamil.com/article/ukraine-attacks-russia-s-grain-port-1786556436" target="_blank">அமெரிக்க அதிகாரிகள்</a> கூறிவரும் கூற்றுகளும் சமூக வலைதளப் பதிவுகளும் எதார்த்த நிலையை மாற்றிவிட முடியாது.</p><p> </p><p></p><h2>ஹோர்முஸ் நீரிணை&nbsp;</h2><p>ஹோர்முஸ்&nbsp;நீரிணை தொடர்ந்து முடக்க நிலையிலேயே (Blocked) உள்ளது.
</p><p>
ஈரான் முன்வைத்துள்ள அனைத்து நிபந்தனைகளையும் அமெரிக்கா ஏற்றுக்கொண்டு நிறைவேற்றும் வரை, ஹோர்முஸ் ஜலசந்தி மீண்டும் திறக்கப்படாது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/29343c41-9e8c-43e5-bc20-bbff6144f0b3/26-6a7cdf78abb11.webp' /></p><p>முன்னதாக ட்ரம்ப், ஹோர்முஸ் ஜலசந்தி அமெரிக்காவின் முழுக் கட்டுப்பாட்டில் உள்ளது எனவும் எங்கள் கடற்படை முற்றுகையானது இரும்புச் சுவர் (Wall of Steel) போன்றது எனவும் ஈரானால் இனி எதுவும் செய்ய முடியாது எனவும் குறிப்பிட்டிருந்தார்.
</p><p>
அத்தோடு இருதரப்பு மோதல்கள் மற்றும் பதற்றம் காரணமாக இந்த முக்கிய சர்வதேச எண்ணெய் வர்த்தக வழித்தடத்தில் பயணிக்கும் வணிகக் கப்பல்களின் எண்ணிக்கை மிகக் குறைந்த அளவிற்கு சரிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-12T21:03:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[தந்தையின் மரணம்... ஓய்வு முடிவை அறிவிக்கவிருக்கும் மெஸ்ஸி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/messi-doubts-football-future-1786568541"></link>
            <id>https://news.lankasri.com/article/messi-doubts-football-future-1786568541</id>
            <summary type="text">Messi has hinted about football future: தனது விளையாட்டு வாழ்க்கையின் முடிவு நெருங்கிவிட்டிருக்கலாம் என்று லியோனல் மெஸ்ஸி குறிப்பால் உணர்த்தியுள்ளார். ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Messi has hinted about football future: தனது விளையாட்டு வாழ்க்கையின் முடிவு நெருங்கிவிட்டிருக்கலாம் என்று லியோனல் மெஸ்ஸி குறிப்பால் உணர்த்தியுள்ளார். </p><p>
தனது தந்தையின் மறைவுக்குப் பிறகு கால்பந்து விளையாட்டில் தனது எதிர்காலம் குறித்துப் பல சந்தேகங்கள் எழுந்துள்ளதாகக் கூறியுள்ள லியோனல் மெஸ்ஸி, தனது விளையாட்டு வாழ்க்கை முடிவுக்கு வரக்கூடும் என்பதற்கான அறிகுறியை வெளிப்படுத்தியுள்ளார்.</p><h2>தொழில்முறைப் பயணம்</h2><p>
</p><p>நீண்டகால நோய்க்குப் பிறகு, ஜார்ஜ் மெஸ்ஸி கடந்த வாரம் அர்ஜென்டினாவின் ரொசாரியோவில் தனது 68-வது வயதில் காலமானார். இந்த உலகக் கிண்ணம் தொடரின் போது அவருக்கு ஏற்பட்ட ஏற்பட்ட உடல்நலக் குறைவு, மெஸ்சியின் ஆட்டத்தைப் பாதித்ததாகத் தெரிகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c809dd79-8124-4ea2-9c6d-1832d5982234/26-6a7cdf5fdad28.webp' /></p><p>
</p><p>ஸ்பெயினிடம் இறுதிப் போட்டியில் அர்ஜென்டினா தோல்வியடைந்த அந்தத் தொடருக்குப் பிறகு மெஸ்ஸி தனது தந்தையுடன் சிறிது காலம் செலவிட்டார்; அதன்பின் தனது கிளப் அணியான இன்டர் மியாமிக்குத் திரும்பிய அவர், இம்மாதத் தொடக்கத்தில் கொலம்பஸ் அணிக்கு எதிரான போட்டியின் மூலம் முதன்மையான லீக் ஆட்டங்களில் மீண்டும் களமிறங்கினார். </p><p>பார்சிலோனாவில் தனது மகன் தனது தொழில்முறைப் பயணத்தைத் தொடங்கிய காலத்திலிருந்தே ஜார்ஜ் அவருடன் தொடர்ந்து பயணித்து வந்துள்ளார்; ஒரு முக்கியத் தொடரின்போது அவர் இல்லாதிருந்தது சமீபத்திய உலகக் கிண்ணம் தொடரின்போதுதான்.</p><p></p><p> </p><p>ஆகஸ்ட் 2005-ல் தனது நாட்டுக்காக அறிமுகமானதிலிருந்து, அர்ஜென்டினா அணிக்காக மெஸ்ஸி 207 போட்டிகளில் விளையாடியுள்ளார். </p><p>1986-இல் டியாகோ மாரடோனா படைத்த சாதனையைச் சமன் செய்யும் வகையில், 2022-இல் அவர் தனது அணியை உலகக் கிண்ணம் வெற்றிக்கு வழிநடத்தினார்; இருப்பினும், மாரடோனாவைப் போலவே அவரும் அடுத்தடுத்து இரண்டு முறை கிண்ணத்தை வெல்லும் முயற்சியில் இறுதித் தடையின்போது தோல்வியடைந்தார்.</p><h2>இன்னும் சிறிது காலம்</h2><p> இருப்பினும், உலகக் கிண்ணம் தொடரில் அதிக கோல்கள் அடித்த சாதனையை மெஸ்ஸி முறியடித்தார். காலிறுதிக்கு முந்தைய சுற்றில் எகிப்துக்கு எதிராக அவர் அடித்த கோல், இத்தொடரில் அவரது 21வது கோலாகவும், அர்ஜென்டினா அணிக்காக அவர் அடித்த மொத்த கோல்களின் 125வது கோலாகவும் அமைந்தது. </p><p>அவரது உலகக் கிண்ணம் கோல் எண்ணிக்கையை, பின்னர் மூன்றாம் இடத்திற்கான போட்டியில் பிரான்ஸின் கைலியன் எம்பாப்பே முறியடித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/601a4665-96a0-4b17-8cad-fa7d5ee62314/26-6a7cdf608cc5c.webp' /></p><p> புதன்கிழமை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள மெஸ்ஸி, ஆரம்பம் முதலே நீங்கள் என் கூடவே இருந்தீர்கள்; முடிவை நெருங்க இன்னும் சிறிது தூரம் மட்டுமே இருந்தது. </p><p>நாம் இருவரும் இணைந்து அதை நிறைவு செய்யும் வரை, இன்னும் சிறிது காலம் நீங்கள் ஏன் பொறுத்திருக்க முடியவில்லை என தமது மறைந்த தந்தை தொடர்பில் குறிப்பிட்டுள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-12T21:00:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிளிநொச்சியில் மணல் அகழ்வில் ஈடுபட்ட 6 வாகனங்கள் பறிமுதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/6-vehicles-involved-sand-mining-seized-kilinochchi-1786568351"></link>
            <id>https://jvpnews.com/article/6-vehicles-involved-sand-mining-seized-kilinochchi-1786568351</id>
            <summary type="text">கிளிநொச்சி – தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லாறு பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 5 டிப்பர் வாகனங்கள் மற்றும் உழவு இயந்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிளிநொச்சி – தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லாறு பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 5 டிப்பர் வாகனங்கள் மற்றும் உழவு இயந்திரம் ஒன்று சிறப்பு அதிரடிப்படையினரால் இன்று (12) பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.</p><p></p><p>



வேறு பகுதியைச் சேர்ந்த மணல் அனுமதிப் பத்திரத்தைப் பயன்படுத்தி குறித்த பகுதியில் தொடர்ச்சியாக மணல் அகழ்வு இடம்பெற்று வருவதாக சிறப்பு அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இந்த திடீர் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9af2c559-3e0d-4271-8524-916307868a8f/26-6a7cdea13afde.webp' /></p><p>இதன்போது மணல் அகழ்வில் ஈடுபட்டிருந்த 5 டிப்பர் வாகனங்களும் உழவு இயந்திரம் ஒன்றும் கைப்பற்றப்பட்டதுடன், அவற்றின் சாரதிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p>


கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களும், பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக தர்மபுரம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.</p><p>



சம்பவம் தொடர்பில் தர்மபுரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன், சம்பந்தப்பட்ட டிப்பர் வாகனங்கள் மற்றும் உழவு இயந்திரத்தின் சாரதிகள் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
</p><p>


பறிமுதல் செய்யப்பட்ட தடயப் பொருட்களை கிளிநொச்சி நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தர்மபுரம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.</p><p></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9af2c559-3e0d-4271-8524-916307868a8f/26-6a7cdea13afde.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/49987b70-1809-43fc-acd8-fcf09f40f211/26-6a7cdea1e1d0b.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/36f38c59-509a-45b4-a872-469884ffc40f/26-6a7cdea29771f.webp' /></p>]]></content>
            <updated>2026-08-12T20:59:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thevanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிளிநொச்சி மாவட்ட கடற்றொழில் அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/kilinochchi-district-fisheries-development-meeting-1786567888"></link>
            <id>https://tamilwin.com/article/kilinochchi-district-fisheries-development-meeting-1786567888</id>
            <summary type="text">கிளிநொச்சி மாவட்டத்தின் இரண்டாவது கடற்றொழில் அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்
குழுக் கூட்டம் கிளிநொச்சி மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில்
நடைபெற்றது.
...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிளிநொச்சி மாவட்டத்தின் இரண்டாவது கடற்றொழில் அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்
குழுக் கூட்டம் கிளிநொச்சி மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில்
நடைபெற்றது.

​</p><p>குறித்த கலந்துரையாடலில், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற
உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் பங்கேற்றதுடன், பல்வேறு விடயங்கள் தொடர்பில்
துறை சார்ந்தவர்களுடன் கலந்துரையாடியதோடு, கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள
கடற்றொழிலாளர்களது பிரச்சினைகள் தொடர்பில் பல விடயங்களை முன்வைத்திருந்தார்.

​</p><p>குறிப்பாக, தட்டுவன்கொட்டி பகுதியில் மக்களின் வாழ்வாதாரக் காணிகள்
வனஜீவராசிகள் திணைக்களத்தினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள விடயம் தொடர்பில் உரிய
தீர்வினை வழங்குமாறு வலியுறுத்திய நிலையில், அதற்கு ஒரு வார காலத்திற்குள்
உடனடித் தீர்வு எட்டப்படும் என அமைச்சரினால் உறுதியளிக்கப்பட்டது.</p><p></p><h2>வாழ்வாதாரப் பிரச்சினைகள்&nbsp;</h2><p>

​அதேபோன்று இரணைமடு நன்னீர் மீன்பிடித் தொழிலாளர்கள், சாந்தபுரம் பகுதி கடற்றொழிலாளர்கள், பள்ளிக்குடா கடற்றொழில் உறவுகள் எதிர்கொள்ளும் வாழ்வாதாரப் பிரச்சினைகள்
குறித்தும் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு அமைச்சர்களினால் பதிலளிக்கப்பட்டதுடன்,
அவற்றுக்கான தீர்வுகள் விரைவாக வழங்கப்படும் எனவும் உறுதியளிக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e90e5023-6f08-4ff8-a14f-ea9e8a32abd9/26-6a7cde325096a.webp' /></p><p>

​கடற்றொழில் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும் மாவட்ட ஒருங்கிணைப்புக்
குழுத் தலைவருமான இராமலிங்கம் சந்திரசேகரின் தலைமையில் நடைபெற்ற
குறித்த கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்,
கடற்றொழில் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சின் செயலாளர் கலாநிதி
பி.கே.கோலித கமல் ஜினதாச, மாவட்ட அரசாங்க அதிபர் சுப்பிரமணியம் முரளிதரன்
ஆகியோர் கலந்துகொண்டனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-12T20:57:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை நீட்டிக்கும் முடிவு குறித்து ஐ.நா கவலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/un-on-the-decision-retirement-age-of-judges-1786560214"></link>
            <id>https://tamilwin.com/article/un-on-the-decision-retirement-age-of-judges-1786560214</id>
            <summary type="text">இலங்கை நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பது தொடர்பான முடிவு குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் நீதிபதிகள் மற்றும் சட்டத்தரணிகளின் சுதந்திரம் பற்றிய ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பது தொடர்பான முடிவு குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் நீதிபதிகள் மற்றும் சட்டத்தரணிகளின் சுதந்திரம் பற்றிய சிறப்புப் பிரதிநிதி மார்கரெட் செட்டர்வைட் கவலை வெளியிட்டுள்ளார். </p><p>

ஜனாதிபதிக்கான நீண்ட கடிதம் ஒன்றை விடுத்து அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.</p><p>

இந்த நடவடிக்கை அமுல்படுத்தப்பட்டால், நீதித்துறையின் சுதந்திரம் மற்றும் நீதித்துறை மீதான பொதுமக்களின் நம்பிக்கை பலவீனமடையக்கூடும் என அந்த கடிதத்தின் மூலம் அவர் எச்சரித்துள்ளார்.</p><p>[MB6HOBB</p><h2>&nbsp;நீதிபதிகளின் பதவிக்காலம்</h2><p> </p><p>

தற்போது சேவையில் உள்ள நீதிபதிகளின் பதவிக்காலத்தை மாற்றுவதன் மூலம், நிறைவேற்று அதிகாரம் மற்றும் சட்டவாக்கத்துறை ஆகியவை நீதித்துறையில் தகாத செல்வாக்கைச் செலுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து கேள்விகள் எழலாம் என ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு பிரதிநிதி அந்த கடித்தில் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/53ffc97d-32e5-4bd8-a99a-78c4574cfea4/26-6a7cdae93713d.webp' /></p><p> </p><p>

அதன்படி, நீதித்துறையின் சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்கு பொருத்தமான பாதுகாப்பு வழிமுறைகளுடன், வெளிப்படையான, அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் ஆலோசனைகளுடன் கூடிய நீதி மறுசீரமைப்பு செயல்முறையின் மூலமே ஓய்வுபெறும் வயதில் ஏதேனும் மாற்றங்களை மேற்கொள்ளுமாறு அவர் இலங்கை அரசாங்கத்திடம் கேட்டுக்கொண்டுள்ளார்.&nbsp;</p><p>முன்மொழியப்பட்டுள்ள இந்தத் திருத்தமானது, சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கையின் (ICCPR) 14(1) பிரிவுக்கும், நீதித்துறை சுதந்திரம் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் கொள்கைகளுக்கும் முரணாக அமையும் அபாயம் உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-12T20:43:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[நிலத்தகராறில் பெண்ணின் காதை கடித்த நபர் ; மனித உரிமைகள் ஆணைக்குழு தலையீடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/man-bites-off-woman-s-ear-over-land-dispute-1786567041"></link>
            <id>https://jvpnews.com/article/man-bites-off-woman-s-ear-over-land-dispute-1786567041</id>
            <summary type="text">நுவரெலியா – சீத்தாஎலிய, போலகந்த பகுதியில் நிலத் தகராறு காரணமாக பெண்ணொருவரின் காதைக் கடித்த நபருக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கத் தவறியதாக நுவரெ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நுவரெலியா – சீத்தாஎலிய, போலகந்த பகுதியில் நிலத் தகராறு காரணமாக பெண்ணொருவரின் காதைக் கடித்த நபருக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கத் தவறியதாக நுவரெலியா பொலிஸார் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு நுவரெலியா பிரதேச செயலாளருக்கு பரிந்துரைகளை அனுப்பியுள்ளது.</p><p>
</p><p></p><p>சீத்தாஎலிய பகுதியைச் சேர்ந்த நோனா பட்டோன் என்பவரின் காணிக்கு முன்பாக அமைந்துள்ள பாதையைப் பயன்படுத்துவது தொடர்பாக, கடந்த மார்ச் 4ஆம் திகதி அயல் வீட்டாருடன் ஏற்பட்ட தகராறின்போது அவரது காதைக் கடித்து காயப்படுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
சம்பவம் தொடர்பில் நுவரெலியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்த போதிலும், பொலிஸாரும் கிராம உத்தியோகத்தரும் ஒருதலைப்பட்சமாகச் செயற்பட்டு, மத அடிப்படையில் பாரபட்சம் காட்டி சந்தேகநபருக்கு ஆதரவாக செயற்பட்டதாக பாதிக்கப்பட்ட தரப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dc69981d-93bb-4c58-a798-fed91473a2a9/26-6a7cd9830c812.webp' /></p><p>

இதனையடுத்து, ‘United Human Rights Organization’ அமைப்பினால் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இது தொடர்பில் முறைப்பாடு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
</p><p>
குறித்த முறைப்பாட்டை விசாரணைக்கு உட்படுத்திய இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, 1996ஆம் ஆண்டு 21ஆம் இலக்க மனித உரிமைகள் ஆணைக்குழுச் சட்டத்தின் கீழ், நுவரெலியா பொலிஸார் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் அணுகுமுறை தொடர்பில் பரிந்துரைகளை முன்வைத்துள்ளது.
</p><p>
இதன் தொடர்ச்சியாக, கடந்த ஜூலை 31ஆம் திகதி நுவரெலியா பிரதேச செயலாளருக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு கடிதமொன்றை அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

சம்பவம் இடம்பெற்று சுமார் ஆறு மாதங்கள் நெருங்கியுள்ள நிலையிலும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இதுவரை உரிய நீதி கிடைக்கவில்லை என ‘United Human Rights Organization’ அமைப்பின் பணிப்பாளர் பிரணீதா வர்ணகுலசூரிய தெரிவித்துள்ளார்.
</p><p>
அரச அதிகாரிகள் எந்தவிதமான மதப் பாகுபாடுகளுக்கும் இடமளிக்காமல், வெளிப்படையானதும் நியாயமானதுமான விசாரணைகளை முன்னெடுத்து, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உடனடியாக நீதியைப் பெற்றுக்கொடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.</p><p>

இந்நிலையில், மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பரிந்துரைகளுக்கு அமைய சம்பவம் தொடர்பில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படுமா என்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-12T20:37:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[அல்லாஹ்வுக்கே புகழ்..! ஹோர்முஸ் குறித்து ட்ரம்பின் பரபரப்பு பதிவு..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/praise-be-to-allah-i-think-well-keep-it-trump-says-1786555216"></link>
            <id>https://tamilwin.com/article/praise-be-to-allah-i-think-well-keep-it-trump-says-1786555216</id>
            <summary type="text">அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஹோர்முஸ் நீரிணை தற்போது அமெரிக்காவின் முழுமையான கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், அதனை தொடர்ந்து தக்கவைத்துக்கொள்ளலாம...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஹோர்முஸ் நீரிணை தற்போது அமெரிக்காவின் முழுமையான கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், அதனை தொடர்ந்து தக்கவைத்துக்கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளார்.
</p><p>
Truth Social தளத்தில் வெளியிட்ட பதிவில், </p><p>அமெரிக்காவின் கடற்படை முற்றுகையைப் பாராட்டிய ட்ரம்ப், அதனை “எஃகு சுவர்” என பலரும் அழைப்பதாகக் குறிப்பிட்டார்.</p><h2>ஹோர்முஸ் நீரிணை</h2><p> </p><p>மேலும், ஈரானால் இதற்கு எதுவும் செய்ய முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.

மத்திய கிழக்கிலிருந்து உலக நாடுகளுக்கு எரிசக்தி உள்ளிட்ட பொருட்களின் போக்குவரத்துக்கு முக்கியமான ஹோர்முஸ் நீரிணை தொடர்பாக, அமெரிக்கா கட்டுப்பாட்டை பெற்றுள்ளதாக ட்ரம்ப் தொடர்ந்து கூறி வருகிறார்.</p><p> எனினும், ஈரான் இந்தக் கூற்றை கடுமையாக நிராகரித்து வருகிறது.

ஈரானிடம் தற்போது கடற்படை மற்றும் விமானப்படை இல்லை என்றும், அந்நாட்டு வீரர்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை என்றும் ட்ரம்ப் கூறினார்.</p><p><iframe src="https://truthsocial.com/@realDonaldTrump/117083017680231697/embed" class="truthsocial-embed" style="max-width: 100%; border: 0" width="600" allowfullscreen="allowfullscreen"></iframe><script src="https://truthsocial.com/embed.js" async="async"></script></p><p> மேலும், ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) பெருமளவில் சிதைக்கப்பட்டு பின்வாங்கி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
</p><p>
தனது பதிவின் இறுதியில், “ஈரான் இனி மத்திய கிழக்கின் கொடுமைப்படுத்துபவன் அல்ல” என்று கூறிய ட்ரம்ப், “அல்லாஹ்வுக்கே புகழ்!” என குறிப்பிட்டார்.
</p><p>
ஹோர்முஸ் நீரிணையை திறக்க ஈரானின் நிபந்தனைகள்

அமெரிக்காவின் கடற்படை முற்றுகை நீக்கப்பட வேண்டும், முடக்கப்பட்ட ஈரானிய சொத்துக்கள் விடுவிக்கப்பட வேண்டும், பொருளாதாரத் தடைகள் நீக்கப்பட வேண்டும் மற்றும் போரினால் ஏற்பட்ட சேதங்களுக்கு அமெரிக்கா இழப்பீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட நிபந்தனைகளை ஈரான் முன்வைத்துள்ளது.</p><h2>&nbsp;ட்ரம்ப் நிர்வாகம்</h2><p>
</p><p>
ஈரானின் புரட்சிகர காவல்படை, இந்த நிபந்தனைகள் அனைத்தையும் அமெரிக்கா ஏற்றுக்கொள்ளும் வரை தனது முற்றுகை தொடரும் என்று தெரிவித்துள்ளது.
</p><p>
ஈரானுடன் பேச்சுவார்த்தை குறித்து ட்ரம்ப்

ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டுள்ளதால் அமெரிக்காவில் எரிபொருள் மற்றும் பிற பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1a761fa3-315b-42a7-b701-a74250c99de6/26-6a7cad7eba04a.webp' /></p><p> </p><p>இது நவம்பர் இடைக்காலத் தேர்தல்கள் நெருங்கும் நிலையில் ட்ரம்ப் நிர்வாகத்துக்கு அரசியல் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
</p><p>
இந்நிலையில், ஈரானுடன் “அமைதியாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்” என ட்ரம்ப் கூறியுள்ளார். ஈரானில் பணவீக்கம் அதிகரித்து வருவதையும், அந்நாட்டிடம் பணம் இல்லை என்பதையும் அமெரிக்கா கவனித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
</p><p>
ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி, அமெரிக்காவுடன் நேரடி பேச்சுவார்த்தை நடைபெறவில்லை என்றும், இடைத்தரகர்கள் மூலம் செய்திகள் மட்டுமே பரிமாறப்பட்டு வருவதாகவும் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.</p>]]></content>
            <updated>2026-08-12T20:34:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[27 ஆண்டுகளுக்குப் பின் நிகழ்ந்த முழு சூரிய கிரகணம்! வியப்பில் ஆழ்ந்த ஐரோப்பா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/europe-sees-rare-total-solar-eclipse-1786561040"></link>
            <id>https://ibctamil.com/article/europe-sees-rare-total-solar-eclipse-1786561040</id>
            <summary type="text">1999-ஆம் ஆண்டிற்குப் பிறகு கடந்த 27 ஆண்டுகளில் ஐரோப்பிய நிலப்பரப்பில் தென்பட்ட முதல் முழு சூரிய கிரகணத்தை (Total Solar Eclipse) உலகமே வியப்புடன் கண்டு...</summary>
            <content type="html"><![CDATA[<p>1999-ஆம் ஆண்டிற்குப் பிறகு கடந்த 27 ஆண்டுகளில் ஐரோப்பிய <a href="https://ibctamil.com/article/putin-sends-special-gift-to-trump-1786550764" target="_blank">நிலப்பரப்பில் </a>தென்பட்ட முதல் முழு சூரிய கிரகணத்தை (Total Solar Eclipse) உலகமே வியப்புடன் கண்டு ரசித்துள்ளது. </p><p>

ஐரோப்பாவின் முக்கிய நகரங்கள், வானியல் ஆய்வகங்கள் மற்றும் பொது இடங்களில் மக்கள் திரண்டு இந்த அரிய நிகழ்வைக் கொண்டாடினர்.
</p><p>

ரஷ்யாவின் ஆர்க்டிக் பகுதிகள், கிரீன்லாந்து, மேற்கு ஐஸ்லாந்து மற்றும் வடக்கு ஸ்பெயின் ஆகிய பகுதிகள் வழியாக <a href="https://ibctamil.com/article/ukraine-attacks-russia-s-grain-port-1786556436" target="_blank">முழுமையான இருள்</a> பரவிய பாதை கடந்து சென்றது.</p><p>
</p><p></p><h2>அஸ்தமன கிரகணம்</h2><p>மேற்கு ஐஸ்லாந்து கடற்கரையில் சூரியன் சுமார் 2 நிமிடங்கள் 18 வினாடிகள் வரை நிலவால் முற்றிலுமாக மறைக்கப்பட்டு முழுமையான இரவு போன்ற சூழல் நிலவியது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/85543c4c-33e6-40dc-95a1-475749708c3a/26-6a7ccdb7358cd.webp' /></p><p>ஸ்பெயினின் வடக்கு மற்றும் மத்தியப் பிராந்தியங்களில் சூரிய அஸ்தமன நேரத்திற்கு சற்று முன்னதாக நிகழ்ந்ததால், கண்கவர் சூரிய அஸ்தமன கிரகணம் (Sunset Eclipse) காட்சியளித்தது.
</p><p>
இங்கிலாந்தில் முழு கிரகணப் பாதை அமையாவிட்டாலும், மிகச் சிறந்த பகுதி சூரிய கிரகணம் (Partial Eclipse) தென்பட்டது.</p><p>
</p><p></p><h2>கிரகணக் கண்ணாடிகள்</h2><p>லண்டனில் 92% வரையிலும், கார்ன்வால் பகுதியில் 96% வரையிலும் சூரியன் நிலவினால் மறைக்கப்பட்டது.
</p><p>
சூரியனை வெறும் கண்களால் பார்ப்பதைத் தவிர்க்க, மக்கள் ஐஎஸ்ஓ (ISO) சான்றளிக்கப்பட்ட விசேட சூரிய கிரகணக் கண்ணாடிகள் மற்றும் தொலைநோக்கிகளைப் பயன்படுத்திப் பார்வையிட்டுள்ளனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/103ae8cb-58f7-4e2c-b25c-e9b920ee6949/26-6a7ccdb64446e.webp' /></p><p>ஸ்பெயின் மற்றும் ஐஸ்லாந்து போன்ற நாடுகளுக்குப் பல நாடுகளிலிருந்தும் லட்சக்கணக்கான வானியல் ஆர்வலர்கள் குவிந்ததால் விமான நிலையங்கள் மற்றும் தங்கும் விடுதிகள் முழுமையாக நிரம்பியதாக தெரிவிக்கப்படுகின்றது.
</p><p>
சில பகுதிகளில் லேசான மேகமூட்டம் இருந்தபோதிலும், பெரும்பாலான முக்கிய பகுதிகளில் சூரியனின் வெளிப்புற வளையமான கொரோனா (Corona) மற்றும் வைர மோதிர வடிவம் (Diamond Ring effect) மிகத் தெளிவாகக் காட்சியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-12T20:31:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[இறுதி கட்டத்தை எட்டியுள்ள விசாரணைகள்..! அரச தரப்பு சாட்சியாக மாறி உண்மைகளை அம்பலப்படுத்திய சஹ்ரான் குழு உறுப்பினர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/easter-sunday-terrorist-attack-investigations-1786564751"></link>
            <id>https://tamilwin.com/article/easter-sunday-terrorist-attack-investigations-1786564751</id>
            <summary type="text">உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான பிரதான வழக்கில், முறைப்பாட்டுத் தரப்பின் சாட்சிய விசாரணை நிறைவடைந்துள்ளது.

நௌஃபர் மௌலவி உள்ளிட்ட 24 ...</summary>
            <content type="html"><![CDATA[<p>உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான பிரதான வழக்கில், முறைப்பாட்டுத் தரப்பின் சாட்சிய விசாரணை நிறைவடைந்துள்ளது.
</p><p>
நௌஃபர் மௌலவி உள்ளிட்ட 24 பிரதிவாதிகளுக்கு எதிரான முக்கிய வழக்கின் சாட்சி விசாரணைகள் நிறைவடைந்துள்ளன. </p><p>

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளில், சஹ்ரான் ஹாஷிமின் தற்கொலைத் தாக்குதல் குழுவில் இருந்த ஒருவர் அரச தரப்பு சாட்சியாக மாறியுள்ளார்.
</p><p>

இந்த விசாரணையில் சஹ்ரான் குழுவைச் சேர்ந்த ஒருவர் அரச தரப்பு சாட்சியாக மாறியது வழக்கில் ஒரு பெரிய திருப்பமாக கருதப்படுகிறது.
</p><p>

சஹ்ரான் ஹாஷிமின் குழுவோடு இருந்த காலகட்டத்தில், அவர் அவதானித்த பல ரகசியமான உண்மைகளை நீதிமன்றத்தில் வாக்குமூலமாக வழங்கியுள்ளார்.</p><p>

 சஹ்ரான் ஹாஷிம் யாருடைய தேவைக்காகச் செயற்பட்டார் என்பது போன்ற பல மர்மமான விடயங்கள் குறித்து அவர் தகவல்களை வெளியிட்டுள்ளார்.
</p><p>

 சில பிரதிவாதிகள் வழங்கிய வாக்குமூலங்கள், அவர்களால் சுயமாக (தன்னார்வமாக) வழங்கப்பட்டவை என்பது உண்மைத்தன்மை பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>

மேலும்,
 கடந்த காலங்களில் மெதுவாக நடந்த விசாரணை, தற்போதைய அரசாங்கத்தின் கீழ் தினசரி அடிப்படையில் நடத்தப்பட்டு வருவதால், விரைவில் தீர்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. </p><p>

இந்த விடயங்கள் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது லங்காசிறியின் NewsInsightTamil நிகழ்ச்சி..&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/gyrukzsZj6M" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-08-12T20:05:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[சவுதியில் தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு ; ஒருவர் பலி, 3 பேர் காயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/tamil-nadu-fishermen-shot-saudi-arabia-one-killed-1786564295"></link>
            <id>https://canadamirror.com/article/tamil-nadu-fishermen-shot-saudi-arabia-one-killed-1786564295</id>
            <summary type="text">சவுதி அரேபியாவில் ஈரான் எல்லையை ஒட்டிய கடற்பகுதியில் தமிழக மீனவர்கள் மீது ஈரான் கடற்கொள்ளையர்கள் நடத்தியதாகக் கூறப்படும் துப்பாக்கிச் சூட்டில், மயிலாட...</summary>
            <content type="html"><![CDATA[<p>சவுதி அரேபியாவில் ஈரான் எல்லையை ஒட்டிய கடற்பகுதியில் தமிழக மீனவர்கள் மீது ஈரான் கடற்கொள்ளையர்கள் நடத்தியதாகக் கூறப்படும் துப்பாக்கிச் சூட்டில், மயிலாடுதுறையைச் சேர்ந்த மீனவர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மூவர் காயமடைந்துள்ளனர்.
</p><p>
சவுதி அரேபியாவின் ஈரான் எல்லையை ஒட்டிய கடற்பகுதிகளில், தனியார் நிறுவனங்களின் சார்பில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் ஆழ்கடல் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0d62ab07-7b0f-4ee2-8573-393c40ee1637/26-6a7cceca45cb6.webp' /></p><p>

இந்நிலையில், மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த சில மீனவர்கள் குறித்த கடற்பகுதியில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிருந்தபோது, அவர்களை நோக்கி ஈரான் கடற்கொள்ளையர்கள் சிலர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>இந்த துப்பாக்கிச் சூட்டில் மயிலாடுதுறையைச் சேர்ந்த மாவீரன் என்ற மீனவர் உயிரிழந்துள்ளார்.</p><p>

மேலும், கீழமூவர்கரையைச் சேர்ந்த சங்கர் உள்ளிட்ட மூவர் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு அருகிலுள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.</p><p>

சவுதி அரேபியா – ஈரான் எல்லையை ஒட்டிய கடற்பகுதிகளில் ஆழ்கடல் மீன்பிடியில் ஈடுபடும் தமிழக மீனவர்கள் மீது ஈரான் கடற்கொள்ளையர்கள் மற்றும் கடலோரக் காவல் படையினரால் அவ்வப்போது துப்பாக்கிச் சூடு நடத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
இதன் காரணமாக, கடந்த காலங்களிலும் தமிழக மீனவர்கள் உயிரிழந்துள்ளதுடன், பலர் காயமடைந்த சம்பவங்களும் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/468d2bd3-e258-4547-88ce-50c7cb6fa921/26-6a7ccecaeb5df.webp' /></p><p>தற்போதைய துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தமிழக மீனவர் சமூகத்தினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. </p><p>வெளிநாட்டு கடற்பரப்புகளில் தொழிலில் ஈடுபடும் தமிழக மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
</p><p>
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதுடன், துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் மற்றும் சம்பவம் தொடர்பான மேலதிக விவரங்கள் வெளியாக வேண்டியுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-12T19:51:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[இரண்டு முதன்மை சம்பவங்கள்... அதிரடியாக உயர்ந்த பனாமா கால்வாய் கட்டணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/panama-canal-fees-soar-1786563325"></link>
            <id>https://news.lankasri.com/article/panama-canal-fees-soar-1786563325</id>
            <summary type="text">Panama canal fees soar: ஈரான் போர் மற்றும் எல் நினோ காரணமாக பனாமா கால்வாய் கட்டணம் உயர்வு.
ஈரான் போர் மற்றும் இந்த ஆண்டின் தீவிரமான &#039;எல் நினோ&#039; (El Ni...</summary>
            <content type="html"><![CDATA[<p>Panama canal fees soar: ஈரான் போர் மற்றும் எல் நினோ காரணமாக பனாமா கால்வாய் கட்டணம் உயர்வு.
</p><p>ஈரான் போர் மற்றும் இந்த ஆண்டின் தீவிரமான 'எல் நினோ' (El Niño) வானிலை அமைப்பால் நீர்மட்டம் குறைதல் ஆகியவற்றுக்கு மத்தியில், பனாமா கால்வாய் வழியாகச் செல்லும் வணிகக் கப்பல்கள் கட்டண உயர்வை எதிர்கொண்டு வருகின்றன.</p><h2>மிகப்பெரிய தேக்கம்</h2><p>
</p><p>உலகளாவிய வர்த்தகத்தின் நிலையற்ற தன்மையை வெளிப்படுத்தும் வகையில், முக்கியமான கடல்வழிப் பாதையைக் கடக்கக் காத்திருந்த கப்பல்களின் வரிசையை முந்திச் செல்வதற்காக, ஒரு வணிகக் கப்பல் சுமார் 4 மில்லியன் டொலர் கட்டணம் செலுத்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/098cee4b-4c41-4b1a-af1a-63d65d3f95ef/26-6a7ccaff863f0.webp' /></p><p> </p><p>வெளியாகியுள்ள தரவுகளின் அடிப்படையில், பசிபிக் மற்றும் அட்லாண்டிக் பெருங்கடல்களை இணைக்கும் வர்த்தகப் பாதையில் செல்வதற்கான தங்கள் முறைக்காகக் கப்பல்கள் தற்போது சுமார் 10 நாட்கள் காத்திருக்கின்றன; இது கடந்த மே மாதத்திற்குப் பிறகு ஏற்பட்டுள்ள மிகப்பெரிய தேக்கநிலையாகும்.</p><p> ஆசியா மற்றும் அமெரிக்காவிற்கு இடையே வர்த்தகம் மேற்கொள்ளும் பெரிய சில்லறை விற்பனை நிறுவனங்கள் மற்றும் எரிசக்தி நிறுவனங்களுக்கு, செலவு மற்றும் பயண நேரத்தைக் குறைக்கும் என்பதால், இந்த வழித்தடம் சரக்கு அனுப்புநர்களால் விரும்பப்படுகிறது.
</p><p>கால்வாயைக் கடப்பதற்கான இடத்தை முன்பதிவு செய்யக் கப்பல் நிறுவனங்கள் வழக்கமாக ஒரு நிலையான கட்டணத்தைச் செலுத்தினாலும், இக்கால்வாயை நிர்வகிக்கும் பனாமா கால்வாய் ஆணையம் (ACP) தினசரி ஏலங்களையும் நடத்துகிறது; இதன் மூலம் கப்பல் உரிமையாளர்கள் வரிசையில் காத்திருப்பதைத் தவிர்த்துச் செல்வதற்கான ஏலங்களை மேற்கொள்ள முடிகிறது. </p><p>சிறிய சரக்குக் கப்பல்களுக்கு சுமார் 15,000 டொலர்களிலும், மிகப்பெரிய கப்பல்களுக்கு 55,000 டொலர்களிலும் ஆரம்ப ஏல விலைகள் தொடங்குகின்றன; இருப்பினும், கடும் நெரிசல் அல்லது அதிகத் தேவை நிலவும் காலங்களில் இவிலைகள் வெகுவாக உயரக்கூடும்.
</p><p>
ப்ளூம்பெர்க் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், 4 மில்லியன் டொலர் மதிப்பிலான போக்குவரத்துக்கான வாய்ப்பை வாங்கிய கப்பல் 'சீஸ்பான் பெனிஃபேக்டர்' (Seaspan Benefactor) என்றே தெரிய வருகிறது. இது 10,100 TEU (20-அடிக்கு இணையான அலகு) கொள்ளளவு கொண்ட ஒரு கப்பலாகும்.</p><p></p><p> </p><p>செலுத்தப்பட்ட 4 மில்லியன் டொலர் தொகை என்பது, கடந்த ஏழு நாட்களில் வைக்கப்பட்ட சராசரி ஏலத்தொகையை விட இரண்டு மடங்குக்கும் அதிகமாக இருந்ததாகக் கூறப்படுகிறது. </p><p>ஈரான் போர் காரணமாக ஹார்முஸ் நீரிணையும் பாப் அல்-மண்டாபும் வலுக்கட்டாயமாக மூடப்பட்டுள்ளதால், அதிகமான கப்பல்கள் வளைகுடா மற்றும் செங்கடல் பகுதிகளிலிருந்து விலகி பயணிக்கின்றன. </p><p>இதனால், வரிசைகளைத் தவிர்ப்பதற்காக கப்பல் உரிமையாளர்கள் ஏலத்தில் கணிசமாக அதிக தொகையைச் செலுத்தத் தயாராக உள்ளனர். தீவிரமடையும் எல் நினோ வானிலை அமைப்பின் காரணமாக நீர்மட்டம் குறைந்து வரும் வேளையில், </p><p>பனாமா கால்வாயின் மிகவும் பரபரப்பான கப்பல் போக்குவரத்துப் பாதைகளில் பயணம் செய்வதற்கான கட்டணங்கள் வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளதாக ஃபைனான்சியல் டைம்ஸ் தெரிவித்துள்ளது.</p><h2>போக்குவரத்து நெரிசல்</h2><p> </p><p>இதனிடையே, 2023-ல் மத்திய அமெரிக்க நாட்டில் ஏற்பட்ட நீண்ட வறட்சியின் காரணமாகப் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதைப் போல, இந்த நீர்வழிப்பாதையில் பயணிக்க அனுமதிக்கப்படும் கப்பல்களின் எண்ணிக்கையில் பனாமா கால்வாய் ஆணையம் கட்டுப்பாடுகளை விதிக்கக்கூடும் என்று சில கப்பல் உரிமையாளர்கள் கவலைப்படுகின்றனர். </p><p>அக்டோபர் முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில், கடந்துசெல்லும் கப்பல்களின் எண்ணிக்கையில் 5 சதவீத அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக பனாமா கால்வாய் ஆணையம் பதிவு செய்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/44fb7339-17cc-49dd-b6a9-69f8ff6bf684/26-6a7ccb0038fa8.webp' /></p><p> </p><p>இது ஒரு நாளைக்கு சராசரியாக 35 ஆகும். இந்தக் காலகட்டத்தில் கால்வாய் வழியாக அதிக டன் சரக்குகள் கொண்டு செல்லப்பட்டதாகவும், வணிகக் கப்பல்கள் மற்றும் திரவ பெட்ரோலிய எரிவாயு கப்பல்களே இந்த அதிகரிப்புக்குக் காரணம் என்றும் பனாமா கால்வாய் ஆணையம் கூறியது. </p><p>தீவிரமடையும் எல் நினோவால் பாதிக்கப்பட்டுள்ளது பனாமா கால்வாய் மட்டுமல்ல, ஐரோப்பா முழுவதும் நீண்ட காலமாக நிலவும் வறண்ட வானிலையின் காரணமாக, ரைன் நதியில் நீர்மட்டம் வரலாறு காணாத அளவிற்கு குறைந்துள்ளது.
</p><p>ரைன் நதி வழியில் சில சரக்கு அனுப்பீடுகளை முன்பதிவு செய்ய இயலாததால், அதற்குப் பதிலாக சாலை மற்றும் ரயில் வழியாகப் பொருட்களைக் கொண்டு செல்ல அதிக செலவு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக வர்த்தகர்கள் எச்சரித்துள்ளனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-12T19:33:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[அவுஸ்திரேலியாவில் ஐபோன் வடிவிலான இரகசிய துப்பாக்கிகள் பறிமுதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/secret-iphone-shaped-guns-seized-in-australia-1786562311"></link>
            <id>https://canadamirror.com/article/secret-iphone-shaped-guns-seized-in-australia-1786562311</id>
            <summary type="text">அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகருக்கு வடக்கே உள்ள டிசெப்ஷன் பே பகுதியில் காவல்துறை மேற்கொண்ட அதிரடி சோதனையின் போது, ஐபோன் (iPhone) போன்று மடித்து வைக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகருக்கு வடக்கே உள்ள டிசெப்ஷன் பே பகுதியில் காவல்துறை மேற்கொண்ட அதிரடி சோதனையின் போது, ஐபோன் (iPhone) போன்று மடித்து வைக்கக்கூடிய இரண்டு விசித்திரமான இரகசிய கைத்துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
</p><p>
அண்மையில், குறித்த பகுதியில் உள்ள வீடொன்றில் மோர்ட்டன் தந்திரோபாய குற்றத்தடுப்புப் பிரிவினர், பொது பாதுகாப்புப் படையினர் மற்றும் மோப்ப நாய்ப் பிரிவினருடன் இணைந்து இந்த சோதனையை முன்னெடுத்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a2b123ec-4dc9-4568-8127-a36780f66624/26-6a7cc709797e6.webp' /></p><p>
</p><p>
இதன்போது, கைபேசி போன்ற தோற்றமளிக்கும் இரு துப்பாக்கிகள் உட்பட மொத்தம் நான்கு கைத்துப்பாக்கிகள் மற்றும் பல தோட்டாக்கள் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டன.</p><p>

தூரத்தில் இருந்து பார்க்கும்போது ஐபோன் போன்று காட்சி அளிக்கும் வகையில் இந்த துப்பாக்கிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
</p><p>
மேலும், இந்த சோதனையின் போது பல வகையான போதைப்பொருட்களும், திருடப்பட்ட உந்துருளியொன்று ஒன்றும் மீட்கப்பட்டுள்ளன.
</p><p>
இந்தச் சம்பவம் தொடர்பில் நான்கு நபர்கள் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக குயின்ஸ்லாந்து காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-12T19:32:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[யால தேசிய பூங்காவில் துப்பாக்கிச் சூடு ; வேட்டைக்காரர் ஒருவருக்கு காயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/shooting-in-yala-national-park-one-hunter-injured-1786561498"></link>
            <id>https://jvpnews.com/article/shooting-in-yala-national-park-one-hunter-injured-1786561498</id>
            <summary type="text">யால தேசிய பூங்காவில் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட விசேட வனவிலங்கு பாதுகாப்பு நடவடிக்கையின் போது, அதிகாரிகளுக்கும் வேட்டைக்காரர...</summary>
            <content type="html"><![CDATA[<p>யால தேசிய பூங்காவில் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட விசேட வனவிலங்கு பாதுகாப்பு நடவடிக்கையின் போது, அதிகாரிகளுக்கும் வேட்டைக்காரர்களுக்கும் இடையில் ஏற்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p><p>
</p><p></p><p>மொனராகலை - தனமல்வில யால தேசிய பூங்கா தலைமையக அலுவலகத்தைச் சேர்ந்த வனஜீவராசிகள் அதிகாரிகள் குழுவினர், நேற்று(11) யால காப்பகத்தில் விலங்குகளை வேட்டையாடிக் கொண்டிருந்த மூவரைக் கைது செய்ய முயன்றபோதே இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d4197768-2e2f-4838-b6cf-740afc23bb3e/26-6a7cc3dc66cfb.webp' /></p><p>துப்பாக்கிச் சூட்டின் போது இரு சந்தேகநபர்கள் தப்பிச் சென்றுள்ள நிலையில், திஸ்ஸமஹாராம - எல்லகல இடதுகரை பகுதியைச் சேர்ந்த 44 வயதுடைய ஒருவர் வனஜீவராசிகள் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து பெருமளவிலான மான் இறைச்சி மற்றும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இரண்டு துப்பாக்கிகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
</p><p>
அத்துடன், சந்தேகநபர் திஸ்ஸமஹாராம நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-12T19:05:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[பொண்டி கடற்கரை துப்பாக்கிச் சூடு..! தாக்குதலாளியை மடக்கிய ‘கதாநாயகன்’ மீதான வழக்குகள் ரத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/bondi-beach-shooting-dropped-against-self-defence-1786559000"></link>
            <id>https://tamilwin.com/article/bondi-beach-shooting-dropped-against-self-defence-1786559000</id>
            <summary type="text">சிட்னியின் பொண்டி கடற்கரையில் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் போது,
கொடூரத் தாக்குதல் நடத்தியவரை மடக்கிப் பிடித்து &#039;கதாநாயகனாக&#039; போற்றப்பட்ட
...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிட்னியின் பொண்டி கடற்கரையில் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் போது,
கொடூரத் தாக்குதல் நடத்தியவரை மடக்கிப் பிடித்து 'கதாநாயகனாக' போற்றப்பட்ட
அகமது அல் அகமது மீதான வழக்குகளை அவுஸ்திரேலிய பொலிஸார் திரும்பப்
பெற்றுள்ளனர்.</p><p>

கடந்த டிசம்பர் மாதம் சிட்னியில் நடந்த யூத சமூக நிகழ்வில் நடத்தப்பட்ட
தீவிரவாதத் தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டனர்.
</p><h2>கொடூரத் தாக்குதல்&nbsp;</h2><p>
அப்போது, துப்பாக்கி ஏந்திய தாக்குதலாளியை உயிரைப் பணயம் வைத்து அகமது அல்
அகமது தடுத்து நிறுத்தி, அவரிடமிருந்த துப்பாக்கியைப் பறித்தார்.

இந்த மோதலில் அகமது பலத்த காயமடைந்தார்.</p><p> இதனிடையே, கடந்த மார்ச் மாதம் தனது
தந்தையுடன் ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக அவர் மீது வழக்கு பதிவு
செய்யப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/324aa324-297f-428a-a8d5-be85092a65f0/26-6a7cc1300b8df.webp' /></p><p>
</p><p>
புதன்கிழமை சிட்னி உள்ளூர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த இந்த வழக்கில்,
தந்தையுடன் 12 மாதங்களுக்குச் சில கட்டுப்பாடுகளுடன் சுமுகமாக நடப்பதாக
ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, பொலிஸார் அவர் மீதான குற்றச்சாட்டுகளைத்
திரும்பப்பெற்றுள்ளனர்.
</p><p>
நீதிமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய அகமது, தான் இப்போது
சுதந்திரமான மனிதன் என்றும் அமைதியை மட்டுமே விரும்புவதாகவும் தெரிவித்தார்.</p>]]></content>
            <updated>2026-08-12T18:53:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[உக்ரைனின் அதிரடி ட்ரோன் தாக்குதல்: ரஷ்யாவின் பிரதான தானிய ஏற்றுமதி முனையங்கள் முடக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/ukraine-attacks-russia-s-grain-port-1786556436"></link>
            <id>https://ibctamil.com/article/ukraine-attacks-russia-s-grain-port-1786556436</id>
            <summary type="text">ரஷ்யாவின் பிரதான கருங்கடல் துறைமுக நகரமான நோவோரோசிஸ்க் (Novorossiysk) மீது உக்ரைன் இராணுவம் பாரிய தாக்குதலை நடத்தியுள்ளது.

குறித்த இரவுநேர ட்ரோன் ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>ரஷ்யாவின் பிரதான கருங்கடல் துறைமுக நகரமான நோவோரோசிஸ்க் (Novorossiysk) மீது உக்ரைன் இராணுவம் <a href="https://ibctamil.com/article/putin-sends-special-gift-to-trump-1786550764" target="_blank">பாரிய தாக்குதலை</a> நடத்தியுள்ளது.
</p><p>
குறித்த இரவுநேர ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதலில், அந்நாட்டின் இரண்டு முக்கிய தானிய ஏற்றுமதி முனையங்கள் பலத்த சேதமடைந்து தங்களின் செயல்பாடுகளை முழுமையாக நிறுத்தியுள்ளன.
</p><p>
உலகின் மிகப்பெரிய கோதுமை ஏற்றுமதியாளரான ரஷ்யாவின் முக்கிய துறைமுகம் மீது நடத்தப்பட்ட இந்த நேரடித் தாக்குதல், உலகச் சந்தையில் உணவு தானிய விநியோகத்தில் பெரும் <a href="https://ibctamil.com/article/europe-sees-rare-total-solar-eclipse-1786561040" target="_blank">தட்டுப்பாட்டையும் </a>விலையேற்றத்தையும் ஏற்படுத்தும் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><p>
</p><p></p><h2>அவசரநிலை பிரகடனம்</h2><ol><li>ஆண்டுக்கு 8.5 மில்லியன் மெட்ரிக் டன் ஏற்றுமதித் திறன் கொண்ட டெமெட்ரா ஹோல்டிங் (Demetra Holding) நிறுவனத்திற்குச் சொந்தமான முனையம்.</li><li>

ஆண்டுக்கு 7.1 மில்லியன் மெட்ரிக் டன் திறன் கொண்ட என்.கே.எச்.பி (NKHP) தானிய முனையம்.
</li></ol><p>
இந்த இரண்டு பிரதான முனையங்களும் சேதமடைந்துள்ளதால் அங்கிருந்து தானியங்களை ஏற்றுமதி செய்யும் பணிகள் காலவரையறையின்றி இடைநிறுத்தப்பட்டுள்ளன.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2c0b22eb-d5a3-45fd-9a65-fd84a7bba662/26-6a7cb6cba0ce0.webp' /></p><p>ட்ரோன்கள், ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா கடல்வழிப் படகுகள் (Unmanned surface vessels) மூலம் இந்த ஒருங்கிணைந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.</p><p>

கிராஸ்னோடார் (Krasnodar) பிராந்திய ஆளுநர் வெளியிட்ட தகவலின்படி, இந்தத் தாக்குதலில் 8 வயது சிறுமி உட்பட குறைந்தது 2 பேர் உயிரிழந்துள்ளனர்.</p><p> 

மேலும் துறைமுகப் பகுதியில் நீர் விநியோகம் தடைபட்டு, அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.</p><p>
</p><p></p><h2>வர்த்தக நிபுணர்கள்</h2><p>இத்தாக்குதல் செய்தி வெளியான உடனேயே, சிகாகோ வர்த்தகச் சந்தையில் (Chicago Wheat Futures) கோதுமையின் சர்வதேச விலை உடனடியாக 3% வரை அதிகரித்துள்ளது.
</p><p>
இந்தநிலையில் ரஷ்யாவின் கோதுமை ஏற்றுமதியில் பெரும்பகுதி நோவோரோசிஸ்க் துறைமுகம் வழியாகவே ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கு அனுப்பப்படுகிறது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/961fec8a-bb68-41ce-a813-4b2a09bc43e5/26-6a7cb6cc54798.webp' /></p><p>இந்த வழித்தடம் முடங்கினால் ஏழை நாடுகளில் கடுமையான உணவுப் பஞ்சம் ஏற்படும் என சர்வதேச உணவு வர்த்தக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.</p><p>

கிரிமியா பகுதியில் உள்ள ரஷ்யாவின் கருங்கடல் கடற்படை தளங்கள் மீது உக்ரைன் தொடர்ச்சியாகத் தாக்குதல் நடத்தியதால், ரஷ்யா தனது பெரும்பாலான போர்க்கப்பல்களை நோவோரோசிஸ்க் துறைமுகத்திற்கு மாற்றியிருந்தது.</p><p> 

இதனைத் தொடர்ந்து தற்போது அத்துறைமுகத்தையே இலக்கு வைத்து உக்ரைன் தனது தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-12T18:53:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[ட்ரம்பிற்குப் புடின் அனுப்பிய விசேட பரிசு...! ரஷ்யாவின் இராஜதந்திர நகர்வு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/putin-sends-special-gift-to-trump-1786550764"></link>
            <id>https://ibctamil.com/article/putin-sends-special-gift-to-trump-1786550764</id>
            <summary type="text">அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் விசேட பரிசொன்றை அனுப்பி வைத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்க ஜனாதிபதி <a href="https://ibctamil.com/article/trump-says-planes-were-switched-1786542046" target="_blank">டொனால்ட் ட்ரம்பிற்கு</a> ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் விசேட பரிசொன்றை அனுப்பி வைத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p>

இந்த இராஜதந்திர நகர்வின் மூலம் ட்ரம்ப்பிடமிருந்து ரஷ்யா எத்தகைய விட்டுக்கொடுப்புகளையும் பலன்களையும் எதிர்பார்க்கிறது என்பது குறித்த அரசியல் ஆய்வுகள் வெளியாகியுள்ளன.
</p><p>
இதனடிப்படையில் இரு நாட்டுத் தலைவர்களுக்கிடையிலான<a href="https://ibctamil.com/article/us-iran-agree-to-extend-60-day-ceasefire-1786538899" target="_blank"> தனிப்பட்ட உறவை </a>வெளிப்படுத்தும் வகையிலும், அடுத்தகட்ட உயர்மட்ட பேச்சுவார்த்தைகளுக்கான பாதையைத் திறந்து வைக்கும் வகையிலும் கிரெம்ளின் மாளிகையிலிருந்து ட்ரம்பிற்கு இந்தப் பரிசு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>பொருளாதாரத் தடை</h2><p>

உக்ரைன் மீதான மேற்கத்திய நாடுகளின் இராணுவ உதவிகளைக் குறைத்து தற்போதைய கள நிலவரங்களை ஏற்றுக்கொண்டு ஒரு போர்நிறுத்த உடன்படிக்கையை முன்னெடுக்க அமெரிக்கா முன்வர வேண்டும் என்பது மாஸ்கோவின் பிரதான எதிர்பார்ப்பாக உள்ளது.
</p><p>
அத்தோடு ரஷ்யா மீது அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் விதித்துள்ள கடுமையான பொருளாதாரத் தடைகளில் (Economic Sanctions) தளர்வுகளைப் பெறுதலும் இதில் அடங்குகின்றது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/35de55ff-c98b-4a40-8eb6-753a7b373428/26-6a7cab7fc973c.webp' /></p><p>இதனுடன் உக்ரைன் அல்லது பிற அண்டை நாடுகள் நேட்டோ (NATO) அமைப்பில் இணைக்கப்படாது என்ற சர்வதேச உத்தரவாதத்தை ட்ரம்ப் நிர்வாகத்திடமிருந்து பெறுதலும் ரஷ்யாவின் முக்கிய எதிர்பார்ப்புகளில் அடங்குகின்றது.</p><p> 

முந்தைய காலங்களிலிருந்தே புடினுடன் நல்லுறவை விரும்புவதாகக் கூறிவந்த ட்ரம்ப், இத்தகைய இராஜதந்திர சமிக்ஞைகளை எவ்வாறு கையாளுவார் மற்றும் அமெரிக்காவின் நட்பு நாடுகளான ஐரோப்பிய யூனியனின் கவலைகளை எவ்வாறு சமன் செய்வார் என்பது சர்வதேச அரங்கில் உன்னிப்பாகக் கவனிக்கப்படுகிறது.
</p><p>
இந்தநிலையில் குறித்த பரிசளிக்கும் நகர்வு வெறும் சம்பிரதாய ரீதியானது மட்டுமல்லாது, சர்வதேச அழுத்தங்களுக்கு மத்தியில் அமெரிக்காவுடன் நேரடிப் பேரம் பேசும் சூழலை உருவாக்குவதற்கான ரஷ்யாவின் திட்டமிட்ட நடவடிக்கை என அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-12T18:52:47+00:00</updated>
        </entry>
    </feed>
