<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-07-29T21:39:28+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Shan</name>
            </author>
            <title type="text"><![CDATA[செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் பௌர்ணமி தின சிறப்பு பூஜை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/special-pooja-at-neeraviyadi-pillayar-temple-1785356965"></link>
            <id>https://tamilwin.com/article/special-pooja-at-neeraviyadi-pillayar-temple-1785356965</id>
            <summary type="text">முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் பௌர்ணமி தினத்தை
முன்னிட்டு&amp;nbsp; (29.07.2026) சிறப்பு பூஜைகள் மற்றும் விசேட வழிபாட்டு
நிகழ்...</summary>
            <content type="html"><![CDATA[<p>முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் பௌர்ணமி தினத்தை
முன்னிட்டு&nbsp; (29.07.2026) சிறப்பு பூஜைகள் மற்றும் விசேட வழிபாட்டு
நிகழ்வுகள் பக்தர்களின் பங்கேற்புடன் பக்தி பூர்வமாக நடைபெற்றிருந்தது.</p><p>

இதனையடுத்து, எதிர்வரும் 2026 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 2 ஆம் திகதி நடைபெறவுள்ள
வருடாந்த பொங்கல் உற்சவத்தை முன்னிட்டு, ஆலய வளாகத்தை சுத்தம் செய்து
ஒழுங்குபடுத்தும் பணிகள் ஆலய நிர்வாகத்தினர், பக்தர்கள் மற்றும் பொதுமக்களின்
பங்களிப்புடன் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p><h2>ஆலயத்தின் வருடாந்த பெருவிழா</h2><p>

ஆலயத்தின் வருடாந்த பெருவிழாவை சிறப்பாக நடத்தும் நோக்கில் வளாகத்
தூய்மைப்படுத்தல், சுற்றுப்புற பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு முன்னேற்பாட்டு
நடவடிக்கைகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.</p><p>

பௌர்ணமி தின சிறப்பு பூஜையின் போது கொக்குளாய் பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி
உட்பட பொலிஸார் கலந்து கொண்டிருந்தனர்.</p><p> இதன்போது ஆலய பூசகர் ஆலய வளாகத்தினை
அண்டிய பகுதியில் மீன் ஏற்றும் கூலர்ரக வாகனங்கள் தரித்து நிற்பதனை அகற்றுமாறு
கோரிக்கை விடுத்திருந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fc9e1135-ac1b-4e97-b836-0a113351d7b5/26-6a6a631d6e936.webp' /></p><p> அதன்போது ஆலய பொங்கல் நிகழ்வுக்கும், பூஜை
வழிபாடுகளுக்கும் எவ்வித இடையூறும் விளைவிக்காமால் ஆதரவு வழங்குவதாகவும்
பொலிஸார் இதன்போது தெரிவித்திருந்தனர்.
</p><p>
முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகம் கடந்த காலங்களில்
அபகரிக்கப்பட்டு, அங்கு சட்டவிரோதமாக பௌத்த விகாரை அமைக்கப்பட்டதாகவும்,
அதனைத் தொடர்ந்து ஆலய வழிபாடுகளுக்கு பல்வேறு தடைகள் மற்றும் நெருக்கடிகள்
ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. </p><p>இருப்பினும், ஆலய நிர்வாகத்தினரின்
வழிநடத்தலிலும் பக்தர்களின் ஒத்துழைப்புடனும் தற்போது ஆலயத்தில் வழமையான
வழிபாடுகளும் சமய நிகழ்வுகளும் தொடர்ச்சியாக நடைபெற்று வருவது
குறிப்பிடத்தக்கதாகும்.</p>]]></content>
            <updated>2026-07-29T21:20:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[அநுர அரசாங்கத்திற்கு சஜித் விடுத்துள்ள பகிரங்க எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sajith-public-warning-to-anuradhapura-government-1785356352"></link>
            <id>https://tamilwin.com/article/sajith-public-warning-to-anuradhapura-government-1785356352</id>
            <summary type="text">&amp;nbsp;நீதிமன்றத்தை நிறைவேற்று அதிகாரத்தின் கைப்பொம்மையாக்கிக் கொள்ளும் நோக்கில்
அரசு கொண்டுவர முற்படும் அரசமைப்புத் திருத்தங்களை வன்மையாகக் கண்டிப்பத...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;நீதிமன்றத்தை நிறைவேற்று அதிகாரத்தின் கைப்பொம்மையாக்கிக் கொள்ளும் நோக்கில்
அரசு கொண்டுவர முற்படும் அரசமைப்புத் திருத்தங்களை வன்மையாகக் கண்டிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ&nbsp;தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p>
ஊடகங்களுக்கு நேற்று(29.07.2026) கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு
குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2> நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதெல்லை</h2><p>அவர் மேலும் தெரிவிக்கையில், “மக்களிடமிருந்து அரசுக்கு ஆணை கிடைத்தது நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி
முறையை ஒழிப்பதற்காகவே தவிர,&nbsp; நீதிமன்றத்தை நிறைவேற்று அதிகாரத்தின்
கைபொம்மையாக்கிக் கொள்வதற்காக அல்ல.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/15bb8fca-9520-4a71-be0b-983cce3bf098/26-6a6a61d5b603d.webp' /></p><p>அத்துடன் நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதெல்லையை மாற்றி, நீதிமன்றத்தின் மீது
நிறைவேற்று அதிகாரம் செல்வாக்குச் செலுத்த முற்படுவது வெட்கக்கேடான செயலாகும்.
</p><p>
சட்டம், நிறைவேற்று அதிகாரம் மற்றும் நீதித்துறை ஆகிய மூன்று தூண்களின் மீதே
ஜனநாயகம் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.&nbsp; அதிகாரப்
பகிர்வு மற்றும் சமன்பாடுகள் தொடர்பில் ஜனாதிபதிக்கோ அல்லது நீதி அமைச்சருக்கோ
புரிதல் இல்லாவிட்டால், மொன்டெஸ்கிவின் நூலைப் படித்துப் பாருங்கள்.</p><p></p><h2>சர்வாதிகார செயற்பாடு</h2><p>
</p><p>
அரசின் இந்த ஒருதலைபட்சமான சர்வாதிகாரப் போக்குக்காக நாட்டு மக்கள்
கைகட்டிக்கொண்டு பார்த்துக்கொண்டிருக்க மாட்டார்கள். இந்தியாவில் அண்மையில் வேலையற்ற இளம் சந்ததியினர் அவமதிக்கப்பட்ட
போது, இலட்சக்கணக்கான இளைஞர்கள் திரண்டு அரசுக்கு அழுத்தம் கொடுத்து
மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளனர்.</p><p>

அதேபோன்று, நீதிமன்றத்தின் சுயாதீனத்தைச் சீர்குலைக்கும் நடவடிக்கைகளுக்கு
எதிராக இலங்கையின் இளைஞர்களும் சிவில் சமூகமும் ஒன்றுபட்டு மக்கள் பலத்தால்
அதனைத் தோற்கடிப்பார்கள்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/67bdfeba-b119-4836-b744-cc021ed52eec/26-6a6a61d66a08d.webp' /></p><p>ஜனநாயகத்தை வலுப்படுத்துகின்றோம் என்ற பெயரில் நீதிமன்றத்தின் சுதந்திரத்தை
முடக்கும் சர்வாதிகாரச் செயற்பாட்டை உடனடியாக நிறுத்த வேண்டும்.</p><p>நாட்டின் சட்டத்தின் ஆட்சியைப் பாதுகாப்பதற்கும், நீதிமன்றத்தைப் பாதுகாப்பதற்கும் பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக ஐக்கிய மக்கள்
சக்தி எந்தவொரு தியாகத்துக்கும் முகம்கொடுக்கத் தயார்“ என குறிப்பிட்டுள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-29T21:19:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈராக் மீது அமெரிக்கா - சவூதி நடத்திய பயங்கர கூட்டுத் தாக்குதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/joint-us-saudi-attack-on-iraq-1785354470"></link>
            <id>https://tamilwin.com/article/joint-us-saudi-attack-on-iraq-1785354470</id>
            <summary type="text">அமெரிக்க இராணுவ இலக்குகள் மீது ஜோர்தானில் நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு
மிகக் கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட்
ட்ரம்ப் எச...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்க இராணுவ இலக்குகள் மீது ஜோர்தானில் நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு
மிகக் கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட்
ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.</p><p>

ஃபொக்ஸ் நியூஸ் ஊடகத்திற்கு அளித்த பிரத்யேக பேட்டியில் பேசிய அவர், "நாங்கள்
அவர்களை மிகக் கடுமையாகத் தாக்குவோம் அவர்கள் பலத்த அடியை வாங்குவார்கள்"
என்று காட்டமாகத் தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>கூட்டுத் தாக்குதல்</h2><p>
</p><p>
இதற்கிடையே, சவூதி அரேபியாவின் எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீது நடத்தப்பட்ட
தாக்குதல்களுக்குப் பதிலடியாக, ஈராக்கில் இயங்கி வரும் ஈரான் ஆதரவு பெற்ற
ஆயுதமேந்திய குழுக்கள் மீது அமெரிக்காவும் சவூதி அரேபியாவும் இணைந்து இரவோடு
இரவாகக் கூட்டு வான்வழித் தாக்குதல்களை நடத்தியள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/93fa925a-45ae-44a6-a9d9-f1e8c6b3bb9e/26-6a6a5a93c03cd.webp' /></p><p>

இந்தத் திடீர் தாக்குதல்களாலும், இரு நாட்டு அதிகாரிகளின் தீவிரமான
எச்சரிக்கைகளாலும் பிராந்தியத்தில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

இருப்பினும், வெள்ளை மாளிகையின் தற்போதைய நிலைப்பாட்டில் பெரிய மாற்றம்
எதுவுமில்லை என்றே தெரிகிறது.</p><p> இராணுவ ரீதியிலான அழுத்தத்தையும் பொருளாதாரத் தடைகளையும் தொடர்ந்து பராமரித்து
வரும் அதே வேளையில், ஈரானுடன் இராஜதந்திர ரீதியிலான அமைதி
பேச்சுவார்த்தைக்குத் தாங்கள் "மிக மிக அருகில்" இருப்பதாக ஜனாதிபதி ட்ரம்ப்
நம்பிக்கை தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-29T21:17:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜெர்மனியில் பெரும் பதற்றம் - மக்கள் வீதியில் இறங்கி தீவிர போராட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/thousands-of-audi-employees-in-germany-protest-1785353587"></link>
            <id>https://tamilwin.com/article/thousands-of-audi-employees-in-germany-protest-1785353587</id>
            <summary type="text">ஜெர்மனியின் முன்னணி சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான &#039;அவுடி&#039; (Audi), தனது
நெக்கார்சல்ம் நகரில் உள்ள தொழிற்சாலையை மூடக்கூடும் என்ற தகவலைத் தொடர்ந்து,
...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜெர்மனியின் முன்னணி சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான 'அவுடி' (Audi), தனது
நெக்கார்சல்ம் நகரில் உள்ள தொழிற்சாலையை மூடக்கூடும் என்ற தகவலைத் தொடர்ந்து,
ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வீதியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.</p><p>நேற்று(29.07.2026) நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் சுமார் 6,000 தொழிலாளர்கள் கலந்துகொண்டுள்ளனர்.</p><p></p><h2>நெக்கார்சல்ம் ஆலை</h2><p>

அவுடி நிறுவனத்தின் தாய் நிறுவனமான 'வோக்ஸ்வேகன்', தொழில்துறையில் நிலவும்
கடும் சவால்களைச் சமாளிக்க பல்லாயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளைக் குறைக்கவும்,
செலவினங்களைக் கட்டுப்படுத்தவும் திட்டமிட்டு வருகிறது.</p><p>தொழிற்சாலையின் எதிர்காலம் குறித்து வோக்ஸ்வேகன் நிர்வாகம்
உடனடியாகத் தெளிவுபடுத்த வேண்டும் எனப் போராட்டக்காரர்கள் வலியுறுத்தியுள்ளனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3721e257-0cef-4b3b-bf60-da0671903880/26-6a6a56e8453e5.webp' /></p><p>மாற்று வழிகள் எதுவும் கிடைக்காத பட்சத்தில், 2030-க்குப் பிறகு ஜெர்மனியில்
மூடப்பட வாய்ப்புள்ள 4 தொழிற்சாலைகளில் நெக்கார்சல்ம் ஆலை ஒன்றாகும் என
வோக்ஸ்வேகன் தலைமைச் செயல் அதிகாரி ஆலிவர் புளூம் எச்சரித்துள்ளார்.
</p><p>
நெக்கார்சல்ம் ஆலையில் தற்போது சுமார் 15,000 பேர் பணியாற்றி வருகின்றனர்.
இங்கு அவுடி A5, A6, A8 மற்றும் மின்சார காரான e-tron GT ஆகியவை
தயாரிக்கப்பட்டு வருகின்றன.</p><p></p><h2>பொருளாதாரப் பேரழிவு</h2><p>

இந்த ஆலையை மூடினால் அப்பகுதியில் பெரும் பொருளாதாரப் பேரழிவு ஏற்படும்
என்றும், பிற வர்த்தகங்கள் கடுமையாகப் பாதிக்கப்படும் என்றும் அப்பகுதியின்
மேயர் ஸ்டீபன் ஹெர்ட்விக் எச்சரித்துள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/77c9f346-4628-4a60-9e0d-96c22733a6e4/26-6a6a56e8efdb0.webp' /></p><p>உயர் உற்பத்திச் செலவு, சீன நிறுவனங்களின் கடும் போட்டி மற்றும் அமெரிக்காவின்
வரி விதிப்புகள் போன்ற காரணங்களால் ஜெர்மனியின் கார் உற்பத்தித்துறை கடுமையான
நெருக்கடியைச் சந்தித்து வருகிறது.
</p><p>
அவுடி நிறுவனம் மட்டுமின்றி, பிஎம்டபிள்யூ, போர்ஷே மற்றும் மெர்சிடீஸ்-பென்ஸ்
ஆகிய முன்னணி நிறுவனங்களும் ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவது
தொழிலாளர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-29T21:16:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[உக்ரைனுக்கு பேரிழப்பு! விழுந்து நொறுங்கியது F-16 போர் விமானம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/ukrainian-f-16-fighter-jet-crashed-1785359066"></link>
            <id>https://ibctamil.com/article/ukrainian-f-16-fighter-jet-crashed-1785359066</id>
            <summary type="text">போர்ப் பணியில் ஈடுபட்டிருந்த உக்ரைனின் F-16 போர் விமானம் ஒன்று விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

...</summary>
            <content type="html"><![CDATA[<p>போர்ப் பணியில் ஈடுபட்டிருந்த உக்ரைனின் F-16 போர் விமானம் ஒன்று விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
</p><p>
அவசர கால வெளியேற்றத்தை பயன்படுத்தி விமானி விமானத்தில் இருந்து பாதுகாப்பாக வெளியேறியுள்ள நிலையில், மருத்துவப் பரிசோதனைகளுக்காக அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக உக்ரைன் விமானப்படை தெரிவித்துள்ளது.</p><p>

ரஷ்யாவின் வான்வழி இலக்குகளை இடைமறிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது ஏற்பட்ட தொழிநுட்ப கோளாறு காரணமாக இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளாக கூறப்படுகிறது.</p><p></p><h2>தீவிர ஆய்வு</h2><p>எவ்வாறாயினும், குறித்த விபத்துக்கான காரணத்தை கண்டறிய விமானம் விழுந்து நொறுங்கிய இடத்தில் நிபுணர்கள் தீவிர ஆய்வை நடத்தி வருவதாக உக்ரைனிய வட்டாரங்கள்&nbsp; தெரிவிக்கின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/38ed93fd-5e67-44ce-878f-58c0a8efaa15/26-6a6a6adbba451.webp' /></p><p><i>Image Credit: Defense News</i></p><p>

இதேவேளை, இச்சம்பவத்தால் தரையில் பொதுமக்களுக்கோ அல்லது உடமைகளுக்கோ எவ்வித சேதமும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
</p><p>
உக்ரைன் மீது ரஷ்யா நடத்தும் வான்வழித் தாக்குதல்களின் போது ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை இடைமறிக்கவும், முன்னணிப் பகுதியில் உள்ள ரஷ்ய நிலைகள் மீது ஏவுகணைகளை வீசித் தாக்கவும் இந்த F-16 விமானங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-29T21:14:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திற்கும் நீதியமைச்சருக்கும் இடையில் சந்திப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/bar-association-meets-sri-lanka-justice-minister-1785359263"></link>
            <id>https://jvpnews.com/article/bar-association-meets-sri-lanka-justice-minister-1785359263</id>
            <summary type="text">உயர் நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றம் உள்ளிட்ட நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பதற்காக முன்மொழியப்பட்டுள்ள அரசியலமைப்புத் திருத்தம...</summary>
            <content type="html"><![CDATA[<p>உயர் நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றம் உள்ளிட்ட நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பதற்காக முன்மொழியப்பட்டுள்ள அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பாக, நீதி அமைச்சர் ஊடாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு அறியப்படுத்தவுள்ளதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p> 

சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ரஜீவ் அமரசூரிய உள்ளிட்ட அச்சங்கத்தின் பிரதிநிதிகள் குழுவினர் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவுடன் நடத்திய விசேட கலந்துரையாடலின் பின்னரே, இந்த தகவல் வௌியாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/37807a71-30b4-4859-a9f4-6fa5918e2326/26-6a6a6ba06b1ab.webp' /></p><h2>கோரிக்கைகள்</h2><p> </p><p>

இக்கலந்துரையாடலைத் தொடர்ந்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த ரஜீவ் அமரசூரிய, குறித்த கலந்துரையாடல் ஏறத்தாழ ஒரு மணித்தியாலம் வரை நீடித்ததாகக் அவர் குறிப்பிட்டார். </p><p>

இதன்போது, ஓய்வுபெறும் வயதை அதிகரிக்கும் குறித்த அரசியலமைப்புத் திருத்தத்தை இச்சந்தர்ப்பத்தில் மேற்கொள்ள வேண்டாம் எனத் தமது சங்கத்தின் நிலைப்பாட்டை முன்வைத்து வேண்டுகோள் விடுத்ததாக அவர் தெரிவித்தார்.</p><p></p><p> </p><p>

மேலும், இது தொடர்பாக ஜனாதிபதிக்குத் தெளிவுபடுத்த வேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டியதாக அவர் கூறினார். </p><p>

இதற்குப் பதிலளிக்கும் வகையில், குறித்த கோரிக்கைகள் தொடர்பாக ஜனாதிபதிக்குத் தெரியப்படுத்தி, அது தொடர்பான முடிவை அறிவிக்க நடவடிக்கை எடுப்பதாக சட்டத்தரணிகள் சங்கப் பிரதிநிதிகளிடம் நீதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-29T21:08:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[Anbe Diana திருட்டு கதைனு சொல்லி 'ஒரு கோடி' கேட்டாங்க😡 - Pari Elavazhagan]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/anbe-diana-director-pari-elavazhagan-interview-1785331902"></link>
            <id>https://cineulagam.com/article/anbe-diana-director-pari-elavazhagan-interview-1785331902</id>
            <summary type="text">அன்பே டயானாகடந்த ஜுலை 23ம் தேதி நடிகர் விஜய்யின் கடைசிப் படமான ஜனநாயகன் ரிலீஸ் ஆகி இருந்தது.அண்ணன் வரார் வழி விடு என அன்று ரிலீஸ் ஆக இருந்த எல்லா புது...</summary>
            <content type="html"><![CDATA[<h2>அன்பே டயானா</h2><p>கடந்த ஜுலை 23ம் தேதி நடிகர் விஜய்யின் கடைசிப் படமான ஜனநாயகன் ரிலீஸ் ஆகி இருந்தது.</p><p>அண்ணன் வரார் வழி விடு என அன்று ரிலீஸ் ஆக இருந்த எல்லா புதுப்படங்களின் ரிலீஸும் தள்ளிப்போனது. ஆனால் ஒரேஒரு படம் ரிலீஸ் ஆனது, அதாவது இளம் கலைஞர்கள் நடிக்க உருவான அன்பே டயானா படம் தான்.</p><p>குடும்பம், காதல் என குடும்பங்கள் பார்க்கும் ஒரு கதையாக படம் உருவாகி வெளியாக வசூலிலும் பட்டய கிளப்பியது. தற்போது இந்த படத்தை இயக்கி, நடித்துள்ள பாரி இளவழகன் படம் எடுத்த விதம், சினிமா பயணம் போன்ற விஷயங்கள் குறித்து நமது சினிஉலகம் யூடியூப் பக்கத்திற்கு பேட்டி கொடுத்துள்ளார்.</p><p>இதோ கேளுங்கள்,</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/RUILT38tqFM" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-07-29T20:50:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரான் மீது தாக்குதல் நடத்துவோம் ; எச்சரிக்கும் ட்ரம்ப்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/trump-warns-of-possible-strike-on-iran-1785358165"></link>
            <id>https://canadamirror.com/article/trump-warns-of-possible-strike-on-iran-1785358165</id>
            <summary type="text">ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து கடந்த பெப்ரவரி 28ம் திகதி தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல், அரபு நாடுகள் மீது ஈரான் தாக்குதல்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து கடந்த பெப்ரவரி 28ம் திகதி தாக்குதல் நடத்தின.</p><p> இந்த தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல், அரபு நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. மேலும், ஹோர்முஸ் நீரிணையை ஈரான் மூடியது. இதனால், கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டு சர்வதேச அளவில் மசகு எண்ணெய் விலை உயர்ந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8a291cfc-edcf-4d7e-bbb1-592ded05a94e/26-6a6a675680526.webp' /></p><p>
</p><p>


இதையடுத்து, இரு தரப்பு பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டது. ஆனால், ஹோர்முஸ் நீரிணை வழியாக செல்லும் சரக்கு கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலுக்கு பதிலடியாக கடந்த 12ம் திகதி ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. </p><p>இதனால் இரு தரப்பும் இடையே மீண்டும் மோதல் வெடித்தது. ஈரான் மீது கடந்த 25ம் திகதி வரை தொடர்ந்து 13 நாட்களாக அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. இதற்கு ஈரான் பதிலடி கொடுத்தது. இதையடுத்து இரு தரப்பும் கடந்த 26ம் திகதி முதல் எந்த தாக்குதலையும் நடத்தவில்லை. </p><p>இதனால் மத்திய கிழக்கில் அமைதி திரும்பி இருந்தது.



ஆனால் ஜோர்தானில் உள்ள அமெரிக்க படைத்தளத்தை குறிவைத்து ஈரான் இன்று ஏவுகணை தாக்குதல் நடத்தியது.</p><p> இந்த ஏவுகணைகள் அனைத்தும் வான்பாதுகாப்பு அமைப்பால் நடுவானில் சுட்டு வீழ்த்தப்பட்டன.



இந்நிலையில், ஏவுகணை தாக்குதலுக்கு பதிலடியாக ஈரான் மீது தாக்குதல் நடத்துவோம் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். </p><p>ஈரான் மீது வலிமையான தாக்குதல் நடத்த அமெரிக்க படையினருக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். </p><p>இதனால் இன்று இரவு ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p>]]></content>
            <updated>2026-07-29T20:49:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானுக்கு ஏற்பட்ட பேரிடி! கொல்லப்பட்ட புரட்சிகர காவல் படை வீரர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/igrc-members-killed-in-us-saudi-strikes-1785356708"></link>
            <id>https://ibctamil.com/article/igrc-members-killed-in-us-saudi-strikes-1785356708</id>
            <summary type="text">

ஈராக்கில் நடத்தப்பட்ட அமெரிக்க-சவுதி வான்வழித் தாக்குதல்களில், ஈரானின் புரட்சிகர காவல் படையை சேர்ந்த நான்கு உறுப்பினர்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஈரானி...</summary>
            <content type="html"><![CDATA[<p>

ஈராக்கில் நடத்தப்பட்ட அமெரிக்க-சவுதி வான்வழித் தாக்குதல்களில், ஈரானின் புரட்சிகர காவல் படையை சேர்ந்த நான்கு உறுப்பினர்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஈரானிய ஊடகங்கள் ஈரானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
</p><p>
கிழக்கு ஈராக்கின் தியாலா மாகாணத்தில் அர்பயீன் புனிதப் பயணச் சடங்குகளுக்குப் பாதுகாப்பு வழங்கி வந்தபோதே இந்த நால்வரும் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.</p><p>

இதேவேளை, இந்தத் தாக்குதல்களில் ஆறு ஈரானியப் புனிதப் பயணிகள் கொல்லப்பட்டதாக ஈராக்கின் மக்கள் திரட்டல் படைகளின் (PMF) ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.</p><p></p><h2>20 பேர் கொலை</h2><p>
ஈரானில் அவர்களின் தொழில் எதுவாக இருந்தாலும், அவர்கள் போராளிகளாகவோ அல்லது ஆலோசகர்களாகவோ இல்லாமல், யாத்ரீகர்களாகவே ஈராக்கிற்குள் நுழைந்ததாக கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4a57f32f-969b-4a63-9d4a-f84b47e9728d/26-6a6a6564825dc.webp' /></p><p>
</p><p>
ஈரானிய ஆதரவுப் படைகளின் கூட்டமைப்பான PMF-இன் தகவல்படி, புதன்கிழமை அதிகாலையில் நடந்த இந்த அமெரிக்க-சவுதி தாக்குதல்களில் குறைந்தது 20 பேர் கொல்லப்பட்டதுடன் சுமார் 32 பேர் காயமடைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-29T20:49:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[எச்சரிக்கை மட்டத்தை எட்டும் வெப்பம் ; பல பகுதிகளுக்கு எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/heat-reaches-warning-level-across-regions-1785357387"></link>
            <id>https://jvpnews.com/article/heat-reaches-warning-level-across-regions-1785357387</id>
            <summary type="text">இலங்கையின் கிழக்கு மாகாணம் உள்ளிட்ட ஆறு பகுதிகளில் இன்று வியாழக்கிழமை (30) வெப்பச் சுட்டெண் ‘எச்சரிக்கை’ மட்டத்தை அடையக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">இலங்கையின் கிழக்கு மாகாணம் உள்ளிட்ட ஆறு பகுதிகளில் இன்று வியாழக்கிழமை (30) வெப்பச் சுட்டெண் ‘எச்சரிக்கை’ மட்டத்தை அடையக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
</p><p style="text-align: justify; ">


இதன்படி, கிழக்கு மாகாணம் மற்றும் கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, பொலன்னறுவை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கு வெப்பமான காலநிலை தொடர்பான அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2efa29b2-ad40-42ff-a672-fd5c22360a5f/26-6a6a644d6c4b2.webp' /></p><p style="text-align: justify; ">



மனித உடலால் உணரப்படும் வெப்பநிலையை பிரதிபலிக்கும் வெப்பச் சுட்டெண்,&nbsp; பகல் நேரங்களில் சில பகுதிகளில் ‘எச்சரிக்கை’ மட்டத்தை அடையக்கூடும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">



எனவே, நிலவும் அதிக வெப்பமான காலநிலையால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.&nbsp;&nbsp;</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-07-29T20:36:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[ட்ரம்பின் அறிவிப்பால் அதிகரித்த பதற்றம்! ஈரானுக்கு கடுமையான எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/trump-threatens-to-hit-iran-very-hard-1785353965"></link>
            <id>https://ibctamil.com/article/trump-threatens-to-hit-iran-very-hard-1785353965</id>
            <summary type="text">

அமெரிக்க இராணுவ நிலைகள் மீது ஈரான் நடத்திய தாக்குதல் முயற்சிக்கு வலுவான பதிலடி கொடுக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார...</summary>
            <content type="html"><![CDATA[<p>

அமெரிக்க இராணுவ நிலைகள் மீது ஈரான் நடத்திய தாக்குதல் முயற்சிக்கு வலுவான பதிலடி கொடுக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.</p><p>

அண்மைகாலமாக இராஜதந்திரத் தீர்வை எட்ட மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளால் தாக்குதல்கள் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், ட்ரம்பின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.</p><p></p><h2>முதலில் தாக்கிய ஈரான்</h2><p>
</p><p>
ஓவல் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், “நாங்கள் அவர்களை மிகக் கடுமையாகத் தாக்கப் போகிறோம், ஏனெனில் அவர்களைத் தாக்குவது இப்போது நமது முறை. அது வரப்போகிறது என்பது அவர்களுக்கும் தெரியும்” என தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3b566e1d-16cd-4cbd-93a1-5738239e7ee7/26-6a6a5d6dcb8c7.webp' /></p><p>
</p><p>
அமெரிக்க இராணுவத்தின் கூற்றுப்படி, அப்பகுதியில் உள்ள அமெரிக்கப் படைகளை இலக்கு வைத்து ஈரான் இரவோடு இரவாக ஏவுகணைகளை ஏவியது.எனினும், அவை அனைத்தும் இடைமறித்து அழிக்கப்பட்டன.</p><p>
வழக்கமாக அமெரிக்கத் தாக்குதல்களுக்குப் பிறகே ஈரான் பதிலடி கொடுத்து வந்த நிலையில், இம்முறை ஈரானே முதலில் தாக்குதலைத் தொடங்கியிருப்பது வழக்கமான போக்கிலிருந்து மாறுபட்டுள்ளதுடன், போரை மீண்டும் தொடங்க ஈரான் முற்படுவதையும் காட்டுவதாக சர்வதேச வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.</p><h2>மிகக் கடுமையான தாக்குதல்</h2><p>
</p><p>
மேலும் பதிலடி குறித்துப் பேசிய ட்ரம்ப், “பதிலடி கொடுக்க வேண்டாம் என்று அவர்கள் நம்மிடம் கேட்டுக்கொள்கிறார்கள்” எனக் குறிப்பிட்டதுடன், ஈரானின் ஏவுகணைகள் அனைத்தும் தரையிலேயே வீழ்த்தப்பட்டுவிட்டதாக விமர்சித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4766ce91-ea72-4759-8981-23b7148d4d44/26-6a6a5d6ec829c.webp' /></p><p>
</p><p>
இந்நிலையில், எதிர்காலத்தில் ஏதேனும் ஒரு கட்டத்தில் உடன்பாட்டை எட்ட முடிகிறதா என்று பார்க்கவுள்ளதாகவும், ஆனால் அதற்குள் அவர்களை தாங்கள் மிகக் கடுமையாகத் தாக்கப்போவதாக ட்ரம்ப் கூறியுள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-29T20:17:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பகுதி மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை ; கைதான 25 வயது இளைஞன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/warning-issued-to-people-in-tamil-area-1785355704"></link>
            <id>https://jvpnews.com/article/warning-issued-to-people-in-tamil-area-1785355704</id>
            <summary type="text">களுவாஞ்சிக்குடியில் வைத்து திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் பாணமை பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிஸார்&amp;nbsp; புதன்கிழமை (29) தெரி...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">களுவாஞ்சிக்குடியில் வைத்து திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் பாணமை பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிஸார்&nbsp; புதன்கிழமை (29) தெரிவித்தனர்.</p><p style="text-align: justify; "> 


இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களுவாஞ்சிக்குடி கிராமத்தைச் சேர்ந்த நபர் ஒருவரின் மோட்டார் சைக்கிள் கடந்த வாரம் புதன்கிழமை (22) களுவாஞ்சிக்குடி கண்ணகை அம்மன் ஆலயத்தில் வைத்து காணாமல்போயுள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9928c51d-be1f-48bd-b5eb-3b3d4471d841/26-6a6a5db9c012d.webp' /></p><h2 style="text-align: justify; ">அறிவுறுத்தல்</h2><p style="text-align: justify; "> 

இவ்விடயம் தொடர்பில் அந்த நபர் களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார். </p><p style="text-align: justify; ">



அதனையடுத்து, விசாரணையில் ஈடுபட்ட பொலிஸார், செவ்வாய்க்கிழமை (28) அந்த மோட்டார் சைக்கிளையும் அதனைத் திருடிச் சென்றதாகக் கருதப்படும் சந்தேக நபரையும் பாணமை பகுதியில், பாணமை பொலிஸாருடன் இணைந்து கைது செய்துள்ளதோடு, மோட்டார் சைக்கிளையும் மீட்டுள்ளனர்.&nbsp;</p><p style="text-align: justify; ">
கைது செய்யப்பட்டவர் 25 வயது இளைஞர் எனவும், கண்டுபிடிக்கப்பட்ட மோட்டார் சைக்கிள் 8 இலட்சத்துக்கும் அதிக பெறுமதி கொண்டது எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> 

மோட்டார் சைக்கிளை திருடிச் சென்ற நபர், வாகனத்தின் இலக்கத்தகட்டை மாற்றிவிட்டு கதிர்காமம் நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்தபோதே கைது செய்யப்பட்டதாக பொலிஸார் கூறியுள்ளனர். </p><p style="text-align: justify; ">

சந்தேக நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளதோடு, கைப்பற்றப்பட்ட மோட்டார் சைக்கிள், போலி இலக்கத்தகடு உள்ளிட்ட சான்றுப் பொருட்களையும் மன்றில் முன்னிலைப்படுத்தியுள்ளதாகவும், பொதுமக்கள் தமது வாகனங்களை நிறுத்தும்போது சரியான முறையில் பூட்டி, குறிப்பாக, மோட்டார் சைக்கிள் கென்ரின் பூட்டு செய்து, பாதுகாப்பாக நிறுத்தி வைக்கவேண்டும் எனவும், கள்வர்கள் நடமாடுவதனால் அவதானத்துடன் செயற்படுமாறும் பொலிஸார் அறிவுறுத்துகின்றனர்.&nbsp; &nbsp;</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-07-29T20:08:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[அடுத்து கைதாகப் போவது யார்..! அநுரவின் அதிரடியால் திணறும் அரச அதிகாரிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/government-officers-anura-kumara-decision-1785348860"></link>
            <id>https://tamilwin.com/article/government-officers-anura-kumara-decision-1785348860</id>
            <summary type="text">தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தேர்தல் காலத்தில் வாக்குறுதி அளித்தது போல் ஊழல் குற்றச்சாட்டுக்களை எதிர்த்து நடவடிக்கை எடுத்து வருகின்றது.&amp;nbsp;...</summary>
            <content type="html"><![CDATA[<p>தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தேர்தல் காலத்தில் வாக்குறுதி அளித்தது போல் ஊழல் குற்றச்சாட்டுக்களை எதிர்த்து நடவடிக்கை எடுத்து வருகின்றது.&nbsp;</p><p>இந்நிலையில், முந்தைய அரசாங்கங்களில் நடந்த பல்வேறு&nbsp;ஊழல் முறைக்கேடுகள் தொடர்பில் அம்பலப்படுத்தப்பட்டும் வருகின்றது.&nbsp;</p><p>இதற்கிடையில், அரசாங்க அதிகாரிகள் பலரின் மீதான குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலும் தகவல்கள் திரட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.&nbsp;</p><p>ஜனாதிபதி அநுர குமாரவுடனான கலந்துரையாடலின் போது சில முக்கிய அதிகாரிகளிடம் அவர் எழுப்பிய கேள்விகளின் மூலம் இவை அம்பலமாகியுள்ளன.&nbsp;</p><p>இது உள்ளிட்ட பல முக்கிய அரசியல் நகர்வுகளை ஆராய்கின்றது நாட்டு நடப்பு நிகழ்ச்சி,&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/2iVdgos_NAE" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-29T20:03:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kowshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரகீத் எக்னெலிகொட வழக்கில் திருப்பம் - விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் சுரேஷ்குமாரின் அதிர்ச்சி சாட்சியம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/eknaligoda-case-member-shocking-testimony-1785351370"></link>
            <id>https://tamilwin.com/article/eknaligoda-case-member-shocking-testimony-1785351370</id>
            <summary type="text">அண்மையில் நாட்டில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய நீர்கொழும்பு கலவரம் சம்மந்தமான வழக்கு விசாரணை நீதிமன்றத்திலே எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில் சிஐடி தரப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>அண்மையில் நாட்டில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய நீர்கொழும்பு கலவரம் சம்மந்தமான வழக்கு விசாரணை நீதிமன்றத்திலே எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில் சிஐடி தரப்பிலிருந்து பல முக்கியமான தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p>

இந்த விவகாரம் குறித்து குஷ் போதைப்பொருளை நாட்டிற்கு கொண்டு வந்தமை தொடர்பில் கைது செய்யப்பட்ட பிக்கு ஒருவர் பல முக்கிய விடயங்களை சாட்சிகளாக தெரிவித்திருக்கின்றார்.
</p><p>
அவர் தனது வாக்குமூலத்தில், ஜூலை 15ஆம் திகதி மதிய உணவு வேளையில் முகத்தை மூடிய சுமார் 15 பேர் கதவுகளை உடைத்துக் கொண்டு உள்ளே நுழைந்ததாக குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
இதனை அடுத்து மறுநாள் காலை சிறை அதிகாரிகள் இல்லாமல் கைதிகளே உணவை பகிர்ந்து கொண்டதாக தெரிவித்துள்ளார். பின்பு துப்பாக்கிச் சத்தம் கேட்டதாகவும் கைதிகள் தாக்கப்பட்டதாகவும் அவர் மேலும் தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.</p><p>இந்த நீர்கொழும்பு கலவரம் குறித்து இன்னும் சிலர் சாட்சியங்களாக மாறி தனது கருத்துக்களை வெளிப்படுத்தி இருந்தனர். அவ்வாறான பல முக்கிய சாட்சியங்களின் பதிவுகளை கொண்டு வருகிறது நியூஸ் இன்சைட் நிகழ்ச்சி..</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/Q56Hn1ODi7Q" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-29T19:59:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kowshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தென்மராட்சியில் இராணுவத்தின் கொடூரம் - ஐரோப்பிய தூதுக்குழுவின் சந்திப்பு தவறானது!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/thenmarachchi-abuse-witness-alleges-eu-meeting-1785350817"></link>
            <id>https://tamilwin.com/article/thenmarachchi-abuse-witness-alleges-eu-meeting-1785350817</id>
            <summary type="text">வடக்குக் கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் ஆராய்வதற்காக உருவாக்கப்பட்ட சங்கங்கள் மற்றும் ஒன்றியங்களில் அனுபவம் மிக்கவர்கள் தற்பொழுது இல்லை என ...</summary>
            <content type="html"><![CDATA[<p>வடக்குக் கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் ஆராய்வதற்காக உருவாக்கப்பட்ட சங்கங்கள் மற்றும் ஒன்றியங்களில் அனுபவம் மிக்கவர்கள் தற்பொழுது இல்லை என காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கத்தின் உதவிச் செயலாளர் விஜயகுமார் தெரிவித்திருந்தார்.
</p><p>
ஐபிசி தொலைகாட்சின் களம் நிகழ்ச்சிக்கு வழங்கிய பேட்டி ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
அவர் மேலும் தெரிவிக்கையில், "இப்பொழுது காணப்படுகின்ற காணாமல் ஆக்கப்பட்டோர் சம்மந்தமான ஒன்றியங்கள் மற்றும் சங்கங்களில் அன்றைய காலங்களில் இருந்தவர்கள் இருப்பதாகத் தெரியவில்லை.</p><p>
நாங்கள் நீண்டகாலமாக காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் குறித்து பல போரட்டங்களை முன்னெடுத்திருந்ததுடன் பல்வேறுபட்ட தரப்பினரை நேரிலும் சந்தித்து அவர்களுக்கான நியாயங்களை கேட்டிருந்தோம்.</p><p> 

ஆனால் எங்களுக்கான நியாயம் இதுவரையிலும் கிடைக்கவில்லை. இதனால் ஏற்பட்ட விரக்தியினாலேயே தற்போதைய காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கங்களில் எங்களுடைய காலத்தில் இருந்தவர்கள் பங்கேற்பதில்லை" என தான் நினைப்பதாக குறிப்பிட்டிருந்தார்.</p><p>

இந்த விவகாரம் தொடர்பில் அவர் வழங்கிய இன்னும் பல விடயங்கள் மற்றும் அவருடைய அனுபவங்களை தொகுத்து வழங்குகிறது களம் நிகழ்ச்சி..&nbsp; &nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/HjyzbYWrhvI" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-29T19:55:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவுடனான மோதலுக்கு மத்தியில் சீனாவிடம் இருந்து வான் பாதுகாப்பு ஏவுகணைகளைப் பெறும் ஈரான்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/iran-air-defense-missiles-china-standoff-us-1785346534"></link>
            <id>https://tamilwin.com/article/iran-air-defense-missiles-china-standoff-us-1785346534</id>
            <summary type="text">அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான மோதலுக்கு மத்தியில் தனது வான் பாதுகாப்பு
அமைப்புகளைப் பலப்படுத்தும் நோக்கில், சீனாவிடமிருந்து தோளில் வைத்து இயக்கும்
4...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான மோதலுக்கு மத்தியில் தனது வான் பாதுகாப்பு
அமைப்புகளைப் பலப்படுத்தும் நோக்கில், சீனாவிடமிருந்து தோளில் வைத்து இயக்கும்
400 வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்புகளைப் பெற ஈரான் ஒப்பந்தம் செய்துள்ளது.</p><p>

சுமார் 60 முதல் 70 மில்லியன் டொலர் மதிப்பிலான இந்த ஒப்பந்தத்தின் கீழ்,
சீனாவின் QW-12 மற்றும் FN-16 வகை ஏவுகணைகள் அடங்கிய 300 முதல் 400 மேன்பேட்ஸ் அமைப்புகள் இன்னும் சில வாரங்களில் ஈரானுக்கு முதற்கட்டமாக
விநியோகிக்கப்படவுள்ளன.</p><p></p><h2>பாதுகாப்பு நடவடிக்கைகள்&nbsp;</h2><p>
</p><p>
ஹொங்கொங்கைச் சேர்ந்த இடைத்தரகு நிறுவனம் ஒன்றின் மூலம் இந்த ஒப்பந்தம்
கையெழுத்தாகியுள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/830b9d8e-ffa2-4975-b9e1-711127125054/26-6a6a56e4a638c.webp' /></p><p>
குறைந்த உயரத்தில் பறக்கும் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் மற்றும் ட்ரோன்களைத்
தாக்கி அழிக்கும் திறன் கொண்ட இந்த ஏவுகணைகள், ஈரானின் இராணுவ மற்றும்
எரிசக்தி உள்கட்டமைப்பு மையங்களைப் பாதுகாக்கப் பயன்படும் என பாதுகாப்பு
வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.</p><p>

இருப்பினும், இந்தச் செய்தியை முற்றிலுமாக மறுத்துள்ள சீன வெளியுறவு
அமைச்சகம், "இந்த அறிக்கை முற்றிலும் ஆதாரமற்றது. </p><p>பிராந்தியத்தில் அமைதியை
ஏற்படுத்தவே சீனா தொடர்ந்து முயன்று வருகிறது" எனத் தெரிவித்துள்ளது.
</p><p>
மேலும், பாகிஸ்தான் வழியே இந்த ஏவுகணைகள் கொண்டு செல்லப்படவுள்ளதாக வெளியான
தகவல்களையும் பாகிஸ்தான் இராணுவம் முற்றிலும் பொய் என மறுத்துள்ளது.</p><p>&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-29T19:51:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[வாய்ப்பு கொடுக்க படுக்கைக்கு அழைத்த நபர், அய்யனார் துணை நடிகை வேதனை... சொன்ன திடுக்கிடும் தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/ayyanar-thunai-serial-reshma-about-casting-couch-1785333181"></link>
            <id>https://cineulagam.com/article/ayyanar-thunai-serial-reshma-about-casting-couch-1785333181</id>
            <summary type="text">அய்யனார் துணைஅய்யனார் துணை, விஜய் தொலைக்காட்சியில் ரசிகர்களின் பேராதரவுடன் வெற்றிகரமாக ஒளிபரப்பாகும் சீரியல். 4 அண்ணன்-தம்பிகளின் வாழ்க்கை கதையாக தொடங...</summary>
            <content type="html"><![CDATA[<h2>அய்யனார் துணை</h2><p>அய்யனார் துணை, விஜய் தொலைக்காட்சியில் ரசிகர்களின் பேராதரவுடன் வெற்றிகரமாக ஒளிபரப்பாகும் சீரியல்.</p><p> 4 அண்ணன்-தம்பிகளின் வாழ்க்கை கதையாக தொடங்கப்பட்ட இந்த தொடர் இப்போது உள்ள கதைக்களம் பொறுத்த வரை நிலா-சோழன் வாழ்க்கை கதையாக ஒளிபரப்பாகி வருகிறது. நிலாவிற்கு சர்ப்ரைஸ் கொடுக்க சோழன் ஒன்று செய்ய அது கடைசியில் பிரச்சனையாக மாறிவிட்டது. </p><p>ஆனால் சோழன் எப்படியோ அட்வான்ஸ் பணத்தை வாங்கிவிட்டார், அந்த பணத்தில் வீட்டிற்கு ஒரு தொலைக்காட்சியும் வாங்கியுள்ளார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/de82b47c-3463-4d78-a837-cdb65ee12f9c/26-6a6a0a3dc8ce2.webp' /></p><h2>நடிகை வேதனை
</h2><p>இந்த அய்யனார் துணை சீரியலில் கார்த்திகா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் நடிகை ரேஷ்மா. இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில், Casting Couch பற்றி பேசியுள்ளார். </p><p>அதில் அவர், நான் நடிக்க தொடங்கிய சமயத்தில் சின்ன ரோலில் நடிக்கக்கூட அட்ஜெஸ்ட்மென்ட் பண்ண முடியுமா என கேட்பார்கள், அதை கேட்டதும் எனக்கு அதிர்ச்சியாக இருக்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3b4f7e86-d009-43f0-9ace-69c78ffb0173/26-6a6a0a3c1ebaa.webp' /></p><p> </p><p>அட்ஜெஸ்ட்மென்ட் ஓகேவா என்று கேட்பார்கள், நாம் வேண்டாம் என்று சொன்னாலும் மேனேஜர் ஃபோன் செய்து ஓகேவா என கேட்பார். எங்களுக்கு மேலிடத்திலிருந்து கேட்பார்கள் அதை சொல்லத்தான் உங்களிடம் கேட்கிறோம் என்பார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cbdf8e14-29ca-48a7-87da-43a64a131d77/26-6a6a0a3d0ad97.webp' /></p><p> </p><p>நோ சொன்னால் உடனே ஃபோன் வைத்துவிடுவார்கள், வாய்ப்பு இருக்காது என கூறியுள்ளார்.</p>]]></content>
            <updated>2026-07-29T19:50:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் ஏரியில் தொலைந்த திருமண மோதிரம்: மீட்ட கடற்படை வீரர்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/find-louisiana-mans-submerged-wedding-band-1785332641"></link>
            <id>https://canadamirror.com/article/find-louisiana-mans-submerged-wedding-band-1785332641</id>
            <summary type="text">அமெரிக்காவின் லூசியானா மாநிலத்தைச் சேர்ந்த ஜெஃப் டக்ளாரிஸ் என்பவர், கனடாவின் நோவா ஸ்கோஷியாவில் உள்ள ஏரியொன்றின் ஆழத்தில் தவறவிட்ட தனது திருமண மோதிரத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவின் லூசியானா மாநிலத்தைச் சேர்ந்த ஜெஃப் டக்ளாரிஸ் என்பவர், கனடாவின் நோவா ஸ்கோஷியாவில் உள்ள ஏரியொன்றின் ஆழத்தில் தவறவிட்ட தனது திருமண மோதிரத்தை, நெய்ட் மெக்லாகன் என்பவரின் உதவியுடன் பத்திரமாக மீட்டுள்ளார்.
</p><p>கனடிய ராயல் கடற்படையில் ஆயுதத் தொழில்நுட்பக் கலைஞராகப் பணியாற்றி வரும் நெய்ட் மெக்லாகன், கடந்த 20 ஆண்டுகளாக 'மெட்டல் டிடெக்டர்' கருவி மூலம் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறார். </p><p>
இந்த ஆண்டு மட்டும் தொலைந்துபோன 25 பொருட்களையாவது உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற இலக்குடன் அவர் செயல்பட்டு வருகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fcb43dd6-05be-4510-9ceb-daaa14611abb/26-6a6a03a2c2654.webp' /></p><p>
</p><p>ஜெஃப் டக்ளாரிஸ் பயிற்சிக்காக கனடாவிற்கு வந்திருந்தபோது, தனது நண்பர்களுடன் 'கேஜிம்குஜிக் தேசியப் பூங்காவில்' உள்ள ஏரியில் காயாக்கிங் படகுச் சவாரி செய்தார். பாறைகளில் ஏறி ஏரி நீரில் குதித்தபோது, அவரது விரலிலிருந்த 14-காரட் தங்கத் திருமண மோதிரம் நழுவி ஏரிக்குள் விழுந்தது.
</p><p>திருமணமாகி மூன்றரை ஆண்டுகளாகத் தனது விரலை விட்டுப் பிரியாத மோதிரம் தொலைந்ததால் மனமுடைந்த டக்ளாரிஸ், அதைத் தேட முயன்றும் நீர் தெளிவில்லாமல் இருந்ததால் கண்டுபிடிக்க முடியவில்லை. </p><p>
உடனே அந்த இடத்தைக் குறிப்பாய்வு செய்து, புகைப்படங்களை எடுத்துக்கொண்டு இணையத்தில் உதவி தேடியபோது, மெக்லாகனின் அறிமுகம் கிடைத்துள்ளது.
</p><p>டக்ளாரிஸ் தனக்கு அனுப்பிய தகவல்களின் அடிப்படையில், அடுத்த வார இறுதியில் டைவிங் உடைகள் மற்றும் மெட்டல் டிடெக்டருடன் அந்த ஏரிக்குச் சென்றார் மெக்லாகன்.
ஆச்சரியப்படும் விதமாக, ஏரியின் அடியில் தேடத் தொடங்கிய சில நிமிடங்களிலேயே பாறைகளுக்கு இடையே மின்னிய அந்தத் தங்க மோதிரத்தைக் கண்டெடுத்தார்.
</p><p>கடந்த ஆண்டில் 13 தொலைந்த பொருட்களை மீட்டுத் தந்த மெக்லாகன், இதை ஒரு பொழுதுபோக்காகவும் தன்னார்வத் தொண்டாகவுமே செய்து வருகிறார்.</p><p> 
இதற்காக அவர் யாரிடமும் பெருந்தொகையைக் கட்டணமாகப் பெறுவதில்லை; தூரப் பயணங்களுக்கான எரிபொருள் செலவை மட்டுமே ஏற்றுக்கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.</p><p>
மோதிரங்கள், கைபேசிகள், சாவிக்கொத்துகள் மட்டுமின்றி, முதல் உலகப்போருக்குப் பிந்தைய வரலாற்றுச் சிறப்புமிக்க வெள்ளிப் பதக்கங்கள், பீரங்கி உதிரிபாகங்கள் எனப் பல அரிய பொருட்களையும் இவர் ஏரிகளிலிருந்து கண்டெடுத்துள்ளார்.<b>டி</b>&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-29T19:48:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இதற்காக விவாகரத்தா? லிப்ஸ்டிக்கால் வந்த பிரச்சினை ; நள்ளிரவில் மனைவி செய்த சம்பவம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/lipstick-sparks-divorce-shocking-dispute-1785349068"></link>
            <id>https://jvpnews.com/article/lipstick-sparks-divorce-shocking-dispute-1785349068</id>
            <summary type="text">இந்தியாவின் ஜார்க்கண்ட் மாநிலத்தில், மனைவியிடம் இருந்து விவாகரத்து கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணையின்போது, கணவர் முன்வைத்த காரணம் தொடர்பாக ஜா...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">இந்தியாவின் ஜார்க்கண்ட் மாநிலத்தில், மனைவியிடம் இருந்து விவாகரத்து கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணையின்போது, கணவர் முன்வைத்த காரணம் தொடர்பாக ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றம் முக்கியக் கருத்தை வெளியிட்டுள்ளது. </p><p style="text-align: justify; ">வழக்கில், தனது மனைவி மனநலப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டவர் எனக் கூறி கணவர் விவாகரத்து கோரி மனுத் தாக்கல் செய்திருந்தார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/633cea64-409e-4a44-b0d1-4fa48083a679/26-6a6a43ce844b1.webp' /></p><h2 style="text-align: justify; ">மனநலக் குறைபாடு</h2><p style="text-align: justify; ">

அதற்கான காரணமாக, தனது மனைவி நள்ளிரவு 2 மணியளவில் காஜல் மற்றும் உதட்டுச்சாயம் (லிப்ஸ்டிக்) பயன்படுத்துவதாக அவர் நீதிமன்றத்தில் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
</p><p style="text-align: justify; ">
எனினும், நள்ளிரவில் காஜல் மற்றும் லிப்ஸ்டிக் பயன்படுத்துவது மட்டுமே ஒருவரை மனநலப் பிரச்சினை கொண்டவர் எனக் கருதுவதற்கு போதுமான ஆதாரமாக அமையாது என்று ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
மேலும், மனநலக் குறைபாடு தொடர்பான குற்றச்சாட்டுகளை நிரூபிப்பதற்கு உரிய மருத்துவ ஆதாரங்களும் சட்டரீதியான சான்றுகளும் அவசியம் என்றும் நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-07-29T19:45:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[மாத்தறையில் உள்ள ஒரு பிளாஸ்டிக் பொருட்கள் கடையில் தீப்பரவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/fire-erupts-at-plastic-goods-store-in-matara-1785354226"></link>
            <id>https://jvpnews.com/article/fire-erupts-at-plastic-goods-store-in-matara-1785354226</id>
            <summary type="text">மாத்தறையில் உள்ள ஒரு பிளாஸ்டிக் பொருட்கள் கடையில் இன்று பிற்பகல் தீப்பரவல் ஏற்பட்டது.

தீயை அணைப்பதற்காக மாத்தறை மாநகர சபையைச் சேர்ந்த இரண்டு தீயணைப...</summary>
            <content type="html"><![CDATA[<p>மாத்தறையில் உள்ள ஒரு பிளாஸ்டிக் பொருட்கள் கடையில் இன்று பிற்பகல் தீப்பரவல் ஏற்பட்டது.
</p><p>
தீயை அணைப்பதற்காக மாத்தறை மாநகர சபையைச் சேர்ந்த இரண்டு தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டதாகக்&nbsp; பொலிஸார் தெரிவித்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ab88a7ec-e18d-480d-b710-f58a41bb6462/26-6a6a57f383e6d.webp' /></p><p>
</p><p>
தீப்பரவலுக்கான காரணம் குறித்த இதுவரை எந்தத் தகவலும் வெளியாகவில்லை.</p><p>மாத்தறை தீயணைப்புப் படை, மாத்தறை பொலிஸ் மற்றும் உள்ளூர் மக்கள் தற்போது தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.</p><p></p><p>

இதற்கிடையில், தீ விபத்தில் இதுவரை எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.&nbsp;&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-29T19:43:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானுக்கு எதிராக அமெரிக்காவின் அதிரடி நகர்வு! விதிக்கப்பட்ட புதிய தடை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/america-sanctions-against-iranian-companies-1785352397"></link>
            <id>https://ibctamil.com/article/america-sanctions-against-iranian-companies-1785352397</id>
            <summary type="text">
இரண்டு ஈரானிய நிறுவனங்களுக்கு எதிராக ட்ரம்ப் நிர்வாகம் தடைகளை விதித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஹோர்முஸ் நீரிணையின் பாதுகாப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>
இரண்டு ஈரானிய நிறுவனங்களுக்கு எதிராக ட்ரம்ப் நிர்வாகம் தடைகளை விதித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
</p><p>
ஹோர்முஸ் நீரிணையின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருக்கும் கும்பலுக்கு ஆதரவளித்ததாக குற்றஞ்சாட்டி இந்த தடைகளை அமெரிக்கா நடைமுறைப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.</p><p>

Persian Gulf Marine Insurance Company மற்றும் HormuzSafe Marine Services Authority ஆகிய இரு நிறுவனங்களும், ஹோர்முஸ் நீரிணையை கடக்கும் வணிகக் கப்பல்களிடம் இருந்து பணம் அறவிடும் ஈரானிய புரட்சிகர பாதுகாப்புப் படை சார்ந்த மிரட்டிப் பறிக்கும் திட்டத்தின் முக்கிய பிரிவாக செயற்படுவதாக அமெரிக்க திறைசேரி குற்றஞ்சாட்டியுள்ளது.</p><p></p><h2>ஈரானால் உருவாக்கப்படும் அபாயங்கள்</h2><p>

ஈரான் இந்த முக்கிய நீர்வழிப் பாதையின் மீதான தனது கட்டுப்பாட்டைத் தக்கவைக்க முயல்வதால், இங்கு தடையற்ற மற்றும் திறந்த போக்குவரத்தை மீண்டும் உருவாக்குவது அமெரிக்காவுக்கு ஒரு பாரிய பிரச்சினையாகவே நீடிக்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d59269dc-1422-4fe9-a29a-97f8d7ea5854/26-6a6a5484d563a.webp' /></p><p>

அமெரிக்க திறைசேரியின் தகவல்படி, இந்த நிறுவனங்கள் வழங்கும் காப்பீடு, கப்பல்களைப் பறிமுதல் செய்வது போன்ற பெரும்பாலான ஈரானாலேயே உருவாக்கப்படும் அபாயங்களுக்கு துணைபோவதாக கூறப்படுகிறது.</p><h2>நிழல் கப்பற்படை</h2><p>
</p><p>
இதன் மூலம் கிடைக்கும் வருவாய், அந்நாட்டின் பயங்கரவாதம் மற்றும் ஊழல் நடவடிக்கைகளுக்கு நிதியளிக்கவே பயன்படுத்தப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/371dec2e-e78d-4f9e-bb4a-4a78baf83bc1/26-6a6a54858e444.webp' /></p><p>
</p><p>
மேலும், தடை செய்யப்பட்ட ஈரானிய கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோலியப் பொருட்களை சீனா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்திற்குக் கொண்டு செல்ல உதவும் நிழல் கப்பற்படை கப்பல்களை இயக்கும் நிறுவனங்கள் மீதும் அமெரிக்க நிர்வாகம் தடைகளை விதித்துள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-29T19:30:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[பரவும் புதுவித நோய் ; சினிமா பாணியில் மொட்டை அடித்து ஏமாந்த பெண்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/women-duped-in-movie-style-head-shaving-scam-1785352763"></link>
            <id>https://jvpnews.com/article/women-duped-in-movie-style-head-shaving-scam-1785352763</id>
            <summary type="text">சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள புதுக்கொத்தாம்பாடி கிராமத்தில், கொரோனா போன்ற புதுவித நோய் தலைமுடி வழியாகப் பரவுவதாகவும், தாலுகா அலுவலகத்தில் இருந்து...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள புதுக்கொத்தாம்பாடி கிராமத்தில், கொரோனா போன்ற புதுவித நோய் தலைமுடி வழியாகப் பரவுவதாகவும், தாலுகா அலுவலகத்தில் இருந்து பேசுவதாகவும் மர்ம நபர் ஒருவர் போனில் கூறியுள்ளார். </p><p style="text-align: justify; ">மொட்டை அடித்தால் ரூ.15,000 ஊக்கத்தொகையும், ஆண்களுக்கு ரூ.6,000 வழங்கப்படும் என்றும் அவர் ஆசை வார்த்தை காட்டியுள்ளார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/313c073a-944e-4602-8b4d-e3d590447397/26-6a6a523d1c638.webp' /></p><p style="text-align: justify; ">இதனை நம்ப வைப்பதற்காக ஏற்கனவே மொட்டை அடித்து பணம் பெற்றதாகக் கூறி சில புகைப்படங்களையும் அவர் அனுப்பியுள்ளார். மர்ம நபரின் பேச்சை நம்பி அப்பகுதியைச் சேர்ந்த 3 பெண்கள் மொட்டை அடித்துள்ளனர்.</p><p style="text-align: justify; ">மேலும் சிலர் மொட்டை அடிக்கத் தயாராக இருந்த நிலையில், பணம் தருவதாகக் கூறிய நபரைத் தொடர்பு கொள்ள முயன்றபோது அவரது செல்போன் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">இதன் பின்னரே தாங்கள் ஏமாற்றப்பட்டதை அவர்கள் உணர்ந்துள்ளனர்.
</p><p style="text-align: justify; ">&nbsp;இதுபோன்ற சம்பவங்கள் தொடர்கதையாகி வருவது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><p style="text-align: justify; "> எனவே, பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-07-29T19:19:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[லொட்டரியில் கொட்டிய $803 மில்லியன் அதிர்ஷ்ட மழை: புளோரிடாவை சேர்ந்த நபருக்கு கிடைத்த ஜாக்பாட்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/florida-lottery-ticket-claims-803-million-us-dolla-1785351876"></link>
            <id>https://news.lankasri.com/article/florida-lottery-ticket-claims-803-million-us-dolla-1785351876</id>
            <summary type="text">புளோரிடாவை சேர்ந்த லொட்டரி டிக்கெட் ஒன்றுக்கு $803 மில்லியன் டொலர்&amp;nbsp; மெகா ஜாக்பாட் பரிசு விழுந்துள்ளது. புளோரிடாவை சேர்ந்த நபருக்கு அடித்த மெகா ஜா...</summary>
            <content type="html"><![CDATA[<p>புளோரிடாவை சேர்ந்த லொட்டரி டிக்கெட் ஒன்றுக்கு $803 மில்லியன் டொலர்&nbsp; மெகா ஜாக்பாட் பரிசு விழுந்துள்ளது.</p><h2> புளோரிடாவை சேர்ந்த நபருக்கு அடித்த மெகா ஜாக்பாட்</h2><p>அமெரிக்காவின் புளோரிடாவில்&nbsp; வாங்கப்பட்ட லொட்டரி டிக்கெட் ஒன்றுக்கு செவ்வாய்க்கிழமை இரவு நடந்த குலுக்கலில் பிரம்மாண்டமான $803 மில்லியன் டொலர் என்ற மெகா ஜாக்பாட் பரிசாக விழுந்துள்ளது.</p><p>ஜூலை 28ம் திகதி நடந்த இந்த குலுக்கலில் வெள்ளை பந்துகள் 34,48, 49,59, 70 மற்றும் தங்க பந்து 12 என்ற எண்கள் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.</p><p>வெற்றி எண்கள் ஒரு சேர அமைந்த இந்த லொட்டரி டிக்கெட் புளோரிடாவின் பிரேடன்டன் நகரின் ஸ்டேட் ரோடு 70-ல் உள்ள WaWa என்ற கன்வீனியன்ஸ் கடையில் இருந்து விற்பனையாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1f59193e-3ea6-4f4c-b426-7dee7b6451f7/26-6a6a4ec584433.webp' /></p><p></p><p> இந்த வரலாற்று வெற்றியை அடைந்த நபருக்கு புளோரிடாவின் லொட்டரி செயலாளர் ரெஜினால்டு டிக்சன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.</p><h2> பரிசு தொகையை பெறும் முறைகள்</h2><p>இந்த பிரம்மாண்ட லொட்டரி வெற்றியை பெற்ற நபர் இரண்டு முறைகளில் தன்னுடைய பரிசை பெற்றுக் கொள்ளலாம்.</p><p>முதலாவது முறை, ஒரே தவணையாக வரிக்கு முந்தைய மதிப்பின் படி மொத்தமாக $345.5 மில்லியன் ரொக்க பணத்தை பெற்றுக் கொள்ளுதல்.</p><p>இரண்டாவது முறை, மொத்த பரிசுத் தொகையான $803 மில்லியனை 30 ஆண்டுகளுக்கு ஆண்டு தவணையாக பிரித்து பெற்றுக் கொள்ளுதல்.</p><p>லொட்டரி பரிசுகளுக்கு புளோரிடாவில் மாநில வரி என்பது கிடையாது, நேரடியாக மத்திய வரி மட்டும் தான் என்பது குறிப்பிடத்தக்கது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p>&nbsp;<br></p>]]></content>
            <updated>2026-07-29T19:04:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[பச்சை நிற புடவையில் தொகுப்பாளினி டிடியின் அழகிய போட்டோஸ்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/anchor-dd-simple-green-saree-photos-1785313254"></link>
            <id>https://cineulagam.com/article/anchor-dd-simple-green-saree-photos-1785313254</id>
            <summary type="text">தொகுப்பாளினி டிடிதமிழ் சின்னத்திரையில் ரசிகர்களின் ஆல் டைம் பேவரெட் தொகுப்பாளினியாக இருப்பவர் தான் டிடி.&amp;nbsp;20 வருடங்களுக்கு முன்பில் இருந்தே தொகுப்...</summary>
            <content type="html"><![CDATA[<h2>தொகுப்பாளினி டிடி</h2><p>தமிழ் சின்னத்திரையில் ரசிகர்களின் ஆல் டைம் பேவரெட் தொகுப்பாளினியாக இருப்பவர் தான் டிடி.&nbsp;</p><p>20 வருடங்களுக்கு முன்பில் இருந்தே தொகுப்பாளினியாக கலக்கி வருகிறார், இப்போதும் நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்கி வருகிறார். இடையில் தனது காலில் ஏற்பட்ட பிரச்சனையால் நிகழ்ச்சிகள் பக்கம் வராமல் இருந்தவர் இப்போது மீண்டும் நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்குவது என பிஸியாக உள்ளார்.</p><p>டிடியின் நிகழ்ச்சிகளுக்கு ஒரு ரசிகர் கூட்டம் என்றால் அவரின் போட்டோக்களுக்கு தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளது. டிடி சமீபத்தில் பச்சை நிற புடவையில் வெளியிட்ட அழகிய புகைப்படங்களை காண்போம்.</p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-29T18:50:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[விபத்தில் பலியான நபர் ; பொதுமக்களின் உதவி நாடும் பொலிஸார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/police-seek-help-to-identify-crash-victim-1785350646"></link>
            <id>https://jvpnews.com/article/police-seek-help-to-identify-crash-victim-1785350646</id>
            <summary type="text">மீரிகம பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் சிக்கி நபர் ஒருவர் உயிரிழந்ததையடுத்து, சடலம் அடையாளம் காண முடியாதவாறு சிதைவடைந்துள்ளமையால், உயிரிழந்தவரின் அ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">மீரிகம பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் சிக்கி நபர் ஒருவர் உயிரிழந்ததையடுத்து, சடலம் அடையாளம் காண முடியாதவாறு சிதைவடைந்துள்ளமையால், உயிரிழந்தவரின் அடையாளங்களை உறுதிப்படுத்துவதற்கு உதவுமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p><p style="text-align: justify; ">

மீரிகம கிரிவுல்ல - பஸ்யால வீதிப் பகுதியில் கடந்த 17ஆம் திகதி இடம்பெற்ற விபத்தில் குறித்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/94b6ac5e-cda2-4e95-846a-3a74a39d7401/26-6a6a49f86bd9b.webp' /></p><h2 style="text-align: justify; ">&nbsp;உயிரிழந்தவரின் அடையாளம்</h2><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
விபத்தினால் சடலம் கடுமையாக சிதைவடைந்துள்ளதால் உயிரிழந்தவரின் அடையாளத்தை இதுவரை உறுதிப்படுத்த முடிவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p style="text-align: justify; ">உயிரிழந்தவர் சுமார் 55 வயதுடையவர் என மதிப்பிடப்பட்டுள்ளது. 5 அடி 2 அங்குலம் உயரம் கொண்டவர் என கூறப்படுகிறது.</p><p style="text-align: justify; ">

உயிரிழந்த நபரின் முகத்தில் தாடி உள்ளதுடன், சடலமானது இளம்பச்சை நிற நீண்ட காற்சட்டையும், அதே நிறத்தில் அரைக்கை மேற்சட்டையும் அணிந்த நிலையில் காணப்படுவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p style="text-align: justify; ">

தற்போது சடலம் வதுபிட்டிவல வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
</p><p style="text-align: justify; ">
இந்த அடையாளங்கள் உள்ள நபர் தொடர்பாக ஏதேனும் தகவல் அறிந்திருப்பின்,</p><p style="text-align: justify; ">
மீரிகம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி - 071 8591625
</p><p style="text-align: justify; ">
மீரிகம பொலிஸ் நிலையம் - 033 2274322 ஆகிய இலக்கங்களைத் தொடர்புகொள்ளுமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.&nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-07-29T18:44:16+00:00</updated>
        </entry>
    </feed>
