<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-08-14T09:33:48+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Thileepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[புலனாய்வுத்துறை அதிகாரிகள் போர்வையில் சென்ற மர்ம நபர்கள் - ஏழாவது தடவையாக விடுக்கப்பட்டுள்ள அச்சுறுத்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/undercover-intelligence-officers-1786699093"></link>
            <id>https://tamilwin.com/article/undercover-intelligence-officers-1786699093</id>
            <summary type="text">தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வவுனியா மாவட்ட அமைப்பாளரின் வீட்டிற்கு சில மர்ம நபர்கள், புலனாய்வுத்துறை அதிகாரிகள் எனக் கூறிச் சென்று அச்சுறுத்தல் விட...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வவுனியா மாவட்ட அமைப்பாளரின் வீட்டிற்கு சில மர்ம நபர்கள், புலனாய்வுத்துறை அதிகாரிகள் எனக் கூறிச் சென்று அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
</p><p>


இந்த சம்பவம் தொடர்பில், கனகராயன்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><h2>

புலனாய்வுத்துறை அதிகாரிகள் போர்வையில்..</h2><p>
குறித்த முறைப்பாடு தொடர்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் வவுனியா மாவட்ட
அமைப்பாளர் எஸ்.தவபாலன் கருத்து தெரிவிக்கையில்,</p><p>

நான் அரசாங்கத்திற்கு எதிராக செயற்படுவதாகவும், அது தொடர்பான அறிக்கை
சமர்ப்பிக்குமாறு தமக்கு ஜனாதிபதி செயலகத்திலிருந்து கோரப்பட்டதாகக் கூறி, நான்
இல்லாத நேரத்தில் என் வீட்டிற்குச் சென்று எனது மனைவியிடம் புலனாய்வுத்துறை அதிகாரிகள் எனக் கூறி மூன்று மர்ம நபர்கள் தகவல்களை பெற்றுச் சென்றுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a60725e1-e1dc-4759-b897-487275420dc3/26-6a7ee013aded3.webp' /></p><p>
</p><p>
அவ்வாறு வீட்டிற்கு வந்தவர்கள் முச்சக்கரவண்டியில் வந்ததாக கூறப்படுகின்றது.
</p><h2>

ஏழாவது தடவையாக விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை</h2><p>
இந்த அச்சுறுத்தலுக்காக முறைப்பாடை பதிவு செய்ய கனகராயன் குளம் பொலிஸ் நிலையம்
சென்ற போது, அங்கு எனது முறைப்பாட்டை பதிவு செய்ய முடியாது என பொலிஸார் மறுப்பு தெரிவித்தனர்.



 நீண்ட விவாதத்தின் மத்தியில் எனது முறைப்பாட்டை பதிவு செய்துள்ளேன். </p><p>கடந்த 2011க்குப் பின்னர் ஏழாவது தடவையாக இந்த அச்சுறுத்தலை எதிர்கொள்கிறேன்.</p><p>


அச்சுறுத்தல்களாலும் எங்கள் பயணத்தை தடுக்க முடியாது. அநுர அரசுக்கும் மற்றைய
அரசுகளுக்கும் தமிழின அடக்கு முறையில் வித்தியாசம் இல்லை என்பதே இந்த சம்பவம் உணர்த்துகின்றது என்றார்.&nbsp;&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-14T09:31:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனேடியர் ஒருவருக்கு அரிய கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/canada-man-gets-rare-liver-transplant-1786699644"></link>
            <id>https://canadamirror.com/article/canada-man-gets-rare-liver-transplant-1786699644</id>
            <summary type="text">வட அமெரிக்காவிலேயே முதன்முறையாக கனேடியர் ஒருவருக்கு ஒரு அரிய கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.


பொதுவாக, ஒருவர் கல்லீரல் தானம்...</summary>
            <content type="html"><![CDATA[<p>வட அமெரிக்காவிலேயே முதன்முறையாக கனேடியர் ஒருவருக்கு ஒரு அரிய கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
</p><p>

பொதுவாக, ஒருவர் கல்லீரல் தானம் செய்யும்போது, மருத்துவர்கள் அந்த கல்லீரலை ஐஸில் வைத்து பாதுகாத்து, தகுதியான நோயாளி உடலில் அதை பொருத்துவார்கள்.
</p><p>
ஆனால், வட அமெரிக்காவிலேயே முதன்முறையாக கனேடியர் ஒருவருக்கு வித்தியாசமான கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை ஒன்றைச் செய்துள்ளார்கள் மொன்றியல் மருத்துவமனை ஒன்றின் மருத்துவர்கள்.
</p><p>
கியூபெக்கைச் சேர்ந்த ஜெரார்ட் (Gérard Landry, 65), 15 ஆண்டுகளாக கல்லீரல் நோய் மற்றும் புற்றுநோயால் அவதியுற்றுவந்துள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4ac2773c-bc90-4362-a175-7076465eb07d/26-6a7edf7e37d84.webp' /></p><p>
இந்நிலையில், மொன்றியலிலுள்ள Centre hospitalier de l’Université de Montréal என்னும் மருத்துவமனையின் மருத்துவர்கள், ஜெரார்டுக்கு ex-vivo organ perfusion என்னும் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அரியவகை அறுவை சிகிச்சை ஒன்றைச் செய்துள்ளார்கள்.</p><p>

இந்த நவீன தொழில்நுட்பத்தின்மூலம், தானம் செய்யப்பட்ட ஒரு கல்லீரலை கருவி ஒன்றுடன் இணைப்பார்கள்.
</p><p>
ஐஸில் வைக்கப்படுவதற்கு பதிலாக, உடல் வெப்பநிலையை ஒத்த ஒரு வெப்பநிலையில் வைக்கப்படும் அந்த கல்லீரல், உடலுக்குள் எப்படி இயங்குமோ, அதேபோல, உடலுக்கு வெளியே, அதற்கு உள்ளே, ஆக்சிஜன், ஊட்டச்சத்துக்கள் மற்றும் மருந்துகள் சேர்க்கப்பட்ட இரத்தம் அல்லது செயற்கை உடல் திரவங்கள் செலுத்தப்பட்டு, இயங்கும் நிலையிலேயே வைக்கப்படும்.
</p><p>
உடலுக்கு வெளியே அந்த கல்லீரல் இயங்கிக்கொண்டிருக்கும் நிலையில், அதற்கு பாதிப்பு ஏதேனும் உள்ளதா என்பதை கண்காணித்து, பிரச்சினை இருந்தால் அதை சரி செய்து, தக்க நேரத்தில் அதை நோயாளியின் உடலில் பொருத்துவார்கள்.</p><p>

பொதுவாக, ஒரு நோயாளிக்கு பொருத்தப்பட்ட கல்லீரலில் பிரச்சினை ஏற்பட்டால், அவருக்கு மீண்டும் அறுவை சிகிச்சை செய்யவேண்டிவரலாம்.
</p><p>
ஆனால், இந்த அரிய முறையால், அப்படி மீண்டும் மீண்டும் அறுவை சிகிச்சை செய்வதற்கான தேவை ஏற்படாமல் போவதுடன், குறைந்த நாட்களிலேயே நோயாளி குணமாகி வீட்டுக்குச் செல்லவும் முடியும்.
</p><p>
வட அமெரிக்காவிலேயே முதன்முறையாக ஜெரார்டுக்குதான் இந்த நவீன கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது என்பதுடன், அறுவை சிகிச்சைக்குப்பின், அவரது உடல் நிலையிலும் எதிர்பார்த்ததைவிட நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-14T09:27:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வட அமெரிக்காவிலேயே முதன்முறையாக ஒரு அரிய கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/north-america-1st-transplant-regenerated-liver-1786699333"></link>
            <id>https://news.lankasri.com/article/north-america-1st-transplant-regenerated-liver-1786699333</id>
            <summary type="text">வட அமெரிக்காவிலேயே முதன்முறையாக கனேடியர் ஒருவருக்கு ஒரு அரிய கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.


பொதுவாக, ஒருவர் கல்லீரல் தானம்...</summary>
            <content type="html"><![CDATA[<p>வட அமெரிக்காவிலேயே முதன்முறையாக கனேடியர் ஒருவருக்கு ஒரு அரிய கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p><p>


பொதுவாக, ஒருவர் கல்லீரல் தானம் செய்யும்போது, மருத்துவர்கள் அந்த கல்லீரலை ஐஸில் வைத்து பாதுகாத்து, தகுதியான நோயாளி உடலில் அதை பொருத்துவார்கள்.
</p><p>
ஆனால், வட அமெரிக்காவிலேயே முதன்முறையாக கனேடியர் ஒருவருக்கு வித்தியாசமான கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை ஒன்றைச் செய்துள்ளார்கள் மொன்றியல் மருத்துவமனை ஒன்றின் மருத்துவர்கள்.
</p><h3>
அரிய கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை
</h3><p>
கியூபெக்கைச் சேர்ந்த ஜெரார்ட் (Gérard Landry, 65), 15 ஆண்டுகளாக கல்லீரல் நோய் மற்றும் புற்றுநோயால் அவதியுற்றுவந்துள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2846dbdb-ed0e-4b3a-aeb0-6524208355da/26-6a7ede4696dc3.webp' /></p><p>
இந்நிலையில், மொன்றியலிலுள்ள Centre hospitalier de l’Université de Montréal என்னும் மருத்துவமனையின் மருத்துவர்கள், ஜெரார்டுக்கு ex-vivo organ perfusion என்னும் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அரியவகை அறுவை சிகிச்சை ஒன்றைச் செய்துள்ளார்கள்.
</p><p>
இந்த நவீன தொழில்நுட்பத்தின்மூலம், தானம் செய்யப்பட்ட ஒரு கல்லீரலை கருவி ஒன்றுடன் இணைப்பார்கள்.
</p><p>
ஐஸில் வைக்கப்படுவதற்கு பதிலாக, உடல் வெப்பநிலையை ஒத்த ஒரு வெப்பநிலையில் வைக்கப்படும் அந்த கல்லீரல், உடலுக்குள் எப்படி இயங்குமோ, அதேபோல, உடலுக்கு வெளியே, அதற்கு உள்ளே, ஆக்சிஜன், ஊட்டச்சத்துக்கள் மற்றும் மருந்துகள் சேர்க்கப்பட்ட இரத்தம் அல்லது செயற்கை உடல் திரவங்கள் செலுத்தப்பட்டு, இயங்கும் நிலையிலேயே வைக்கப்படும்.&nbsp;</p><p></p><p>
உடலுக்கு வெளியே அந்த கல்லீரல் இயங்கிக்கொண்டிருக்கும் நிலையில், அதற்கு பாதிப்பு ஏதேனும் உள்ளதா என்பதை கண்காணித்து, பிரச்சினை இருந்தால் அதை சரி செய்து, தக்க நேரத்தில் அதை நோயாளியின் உடலில் பொருத்துவார்கள்.
</p><p>
பொதுவாக, ஒரு நோயாளிக்கு பொருத்தப்பட்ட கல்லீரலில் பிரச்சினை ஏற்பட்டால், அவருக்கு மீண்டும் அறுவை சிகிச்சை செய்யவேண்டிவரலாம்.</p><p>

ஆனால், இந்த அரிய முறையால், அப்படி மீண்டும் மீண்டும் அறுவை சிகிச்சை செய்வதற்கான தேவை ஏற்படாமல் போவதுடன், குறைந்த நாட்களிலேயே நோயாளி குணமாகி வீட்டுக்குச் செல்லவும் முடியும்.
</p><p>
வட அமெரிக்காவிலேயே முதன்முறையாக ஜெரார்டுக்குதான் இந்த நவீன கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது என்பதுடன், அறுவை சிகிச்சைக்குப்பின், அவரது உடல் நிலையிலும் எதிர்பார்த்ததைவிட நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-14T09:22:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[உடலில் கடுமையான எரிச்சல் ; ஒரு மாதமாக நீருக்குள்ளேயே இருக்கும் சிறுவன்! விசித்திர சம்பவம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/a-boy-has-been-staying-in-water-for-a-month-india-1786697872"></link>
            <id>https://jvpnews.com/article/a-boy-has-been-staying-in-water-for-a-month-india-1786697872</id>
            <summary type="text">&amp;nbsp; இந்தியாவின் மேற்கு வங்கத்தில் 16 வயது சிறுவன் ஒருவன் தனது உடலில் ஏற்படும் கடுமையான எரிச்சல் காரணமாக, கடந்த ஒரு மாதமாக நீரில் முழ்கியபடி வாழும் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; இந்தியாவின் மேற்கு வங்கத்தில் 16 வயது சிறுவன் ஒருவன் தனது உடலில் ஏற்படும் கடுமையான எரிச்சல் காரணமாக, கடந்த ஒரு மாதமாக நீரில் முழ்கியபடி வாழும் விசித்திர சம்பவம் சமூகவலைத்தளங்க்களில் வைரலாகியுள்ளது.
</p><p>

மேற்கு வங்க மாநிலம், முர்ஷிதாபாத் மாவட்டம், பெல்டாங்கா பகுதியைச் சேர்ந்த இக்பால் என்ற 16 வயது சிறுவனே இவ்வாறு நீரில் முழ்கியபடி வாழ்ந்து வருகிறான்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0c688f24-5a48-4fc0-a7ef-d028a7a712fe/26-6a7ed8926781d.webp' /></p><h2>மருத்துவர்கள் எச்சரிக்கை</h2><p> நீரிலிருந்து வெளியே வந்தவுடனே தனது உடல் முழுவதும் கடுமையான எரிச்சல் ஏற்படுவதாகவும், ஏதோவொரு அமானுஷ்ய சக்தி தன்னை ஆட்கொண்டது போன்று உணர்வதாகவும் சிறுவன் தெரிவித்துள்ளான்.</p><p></p><p>

இதன் காரணமாகவே சிறுவன் குளத்திலிருந்து வெளியேற மறுத்துத் தொடர்ந்து தண்ணீரிலேயே தங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது.

உடல் பருமனாக இருக்கும் இக்பால், காலை முதல் இரவு வெகுநேரம் வரை குளங்களில் மிதந்தபடி காணப்படுகிறான்.</p><p></p><p> </p><p>சில நேரங்களில் சிறுவன் ஒரு குளத்திலிருந்து மற்றொரு நீர்நிலைக்குச் செல்வதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

சிறுவனின் இக்கட்டான நிலை குறித்து அவனது பெற்றோர் பெரும் கவலை வெளியிட்டுள்ளனர்.</p><p> 
சிறுவனை ஏற்கனவே வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தபோதிலும், அவனது உடல்நிலையில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர்.</p><p></p><p>
</p><p>

நீண்ட நாட்களாகத் தண்ணீரிலேயே இருந்து வருவதால் இக்பாலின் கை மற்றும் கால்களில் உள்ள தோல்கள் வெளிறிய நிலைக்கு மாறியுள்ள போதிலும், சிறுவன் தண்ணீரை விட்டு வெளியே வரத் தொடர்ந்து மறுத்து வருகிறான்.
</p><p>
சிறுவன் நீண்ட நேரம் தண்ணீரிலேயே இருப்பதால் தோலின்கீழ் பூஞ்சைத் தொற்றுகள் உள்ளிட்ட பல்வேறு தீவிரமான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக கொல்கத்தாவைச் சேர்ந்த மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.&nbsp; &nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-14T09:21:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[இரவோடு இரவாக திருக்கேதீஸ்வரம் ஆலயத்திற்குள் அத்துமீறிய அரச அதிகாரிகள்.. எழுந்துள்ள குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/thirukthiswaram-temple-antiquities-sathiyalingam-1786697497"></link>
            <id>https://tamilwin.com/article/thirukthiswaram-temple-antiquities-sathiyalingam-1786697497</id>
            <summary type="text">மன்னார் திருக்கேதீஸ்வரம் ஆலயத்தில் இரவோடு இரவாக, தொல்பொருட்திணைக்களம்&amp;nbsp;அத்துமீறல்&amp;nbsp;முயற்சி மேற்கொண்டதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்...</summary>
            <content type="html"><![CDATA[<p>மன்னார் திருக்கேதீஸ்வரம் ஆலயத்தில் இரவோடு இரவாக, தொல்பொருட்திணைக்களம்&nbsp;அத்துமீறல்&nbsp;முயற்சி மேற்கொண்டதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம் குற்றம் சாட்டியுள்ளார்.&nbsp;</p><p>நேற்றைய தினம் (13) மன்னார் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்தில் கலந்துகொண்டபோது இது தொடர்பில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.&nbsp;</p><p>இதன்போது அவர், "திருக்கேதீஸ்வரம் ஆலயத்தில் தொல்பொருட்திணைக்களம் ஆலய வளாகத்திற்குள் ஆலய நிர்வாகத்திற்கு தெரியாமல் இரவு நேரத்தில் 'இது தொல்பொருட்திணைக்களத்திற்குரிய இடம்' என்று பெயர்ப்பலகை நாட்டியுள்ளது.</p><p>
அந்த பெயர்ப்பலகையில் ஆலய வளாகத்தில் ஒரு அபிவிருத்தியும் மேற்கொள்ளக்கூடாது என குறிப்பிடப்பட்டுள்ளது.</p><h2>மறைக்கப்படும் வரலாறு..&nbsp;</h2><p> </p><p>இதனை எவ்வாறு இரவு நேரத்தில் செய்ய முடியும். இந்த ஆலயம் வரலாற்று சிறப்புமிக்க திருத்தலமாகும். ஆலயச்சூழல் தொல்பொருளுடன் தொடர்புடையது என்பதில் மாற்றுக்கருத்தில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/009e4018-7464-467f-9e6a-43a2914b2a3a/26-6a7edb993bf6b.webp' /></p><p>ஆனால், ஆலய நிர்வாகத்திற்கு தெரியாமல் குறித்த பெயர்ப்பலகையை நாட்டியது மட்டுமல்லாமல், அந்த பெயர்ப்பலகையில் குறிப்பிடப்பட்டுள்ள வாசகங்கள் கூட அந்த ஆலயத்தின் உண்மையான வரலாற்றை மாற்றியமைப்பதாக உள்ளன.&nbsp;</p><p>
குறித்த ஆலய வளாகத்தில் கண்டெடுக்கப்பட்ட மகாலிங்கம் தொடர்பாகவும் நந்தி தொடர்பாகவும் எதுவும் குறிப்பிடப்படாமல் முற்றிலுமாக வரலாறு மறைக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் மாவட்ட அரசாங்க அதிபருக்கு தெரியுமா என கேட்க விரும்புகிறேன். </p><p>ஏற்கனவே அங்கு அகழ்வாராய்ச்சிகள் நடந்த இடங்களில் சில பதாகைகள் தொல்பொருட்திணைக்களத்தால் நாட்டப்பட்டுள்ளன. அதற்கு மேலதிகமாகவே இவை தற்போது யாருக்கும் அறியப்படுத்தப்படாமல் நாட்டப்பட்டுள்ளன.
</p><p>
ஆகவே, இந்த விடயத்தினை கவனத்திலெடுத்து உரிய நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறு மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவரை கேட்டுக்கொள்கின்றேன்” என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-14T09:21:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[உணவு லாரியில் ஒழிந்த டிரம்ப்; ஈரானிய ஊடகங்கள் கேலி! அமெரிக்காவிற்கு மாபெரும் அவமானம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/trump-hid-in-a-food-truck-iranian-media-mocked-1786691766"></link>
            <id>https://canadamirror.com/article/trump-hid-in-a-food-truck-iranian-media-mocked-1786691766</id>
            <summary type="text">&amp;nbsp; அண்மையில் துருக்கியில் நடைபெற்ற நேட்டோ (NATO) உச்சிமாநாட்டின் போது, ஈரானின் ஏவுகணைத் தாக்குதல் அச்சுறுத்தலுக்குப் பயந்து அமெரிக்க அதிபர் டொனால்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; அண்மையில் துருக்கியில் நடைபெற்ற நேட்டோ (NATO) உச்சிமாநாட்டின் போது, ஈரானின் ஏவுகணைத் தாக்குதல் அச்சுறுத்தலுக்குப் பயந்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ‘ஏர் ஃபோர்ஸ் ஒன்’ (Air Force One) விமானத்திலிருந்து உணவு விநியோக லாரியில் (Catering Truck) ரகசியமாகத் தப்பிச் சென்ற சம்பவத்தை ஈரானிய அரசு ஊடகங்கள் கிண்டலடித்துள்ளன. </p><p>

ஈரானின் ராணுவ வலிமையைக் கண்டு டிரம்ப் அஞ்சி நடுங்குவதையே இந்நிகழ்வு வெளிப்படுத்துவதாகத் தெஹ்ரான் தொலைக்காட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/372b6ac6-7c5c-499f-82e3-e2e8ded6cbce/26-6a7ec0b79d3ce.webp' /></p><h2>அமெரிக்காவிற்கு நேர்ந்த மாபெரும் அவமானம்</h2><p>
</p><p>
துருக்கியில் டிரம்ப் தங்கியிருந்த ஹோட்டல் மற்றும் அவரது விமானத்தின் நடமாட்டங்களை ஈரானிய உளவுத்துறை துல்லியமாகக் கண்காணித்ததைத் தொடர்ந்து, அமெரிக்க ரகசியச் சேவை அதிகாரிகள் டிரம்பை உணவு லாரி மூலம் மற்றொரு சிறிய ராணுவ விமானத்திற்கு மாற்றினர். </p><p>

இந்தச் சம்பவத்தைக் குறிப்பிட்ட ஈரானிய ஊடகங்கள், “ஈரானின் அச்சுறுத்தலால் டிரம்ப் உணவு லாரியில் ஒளிந்து தப்பியுள்ளார், இது அமெரிக்காவிற்கு நேர்ந்த மாபெரும் அவமானம்” எனக் கூறிப் புகைப்படங்கள் மற்றும் மீம்களைப் (Memes) பகிர்ந்து கேலி செய்து வருகின்றன.</p><p>

அதேவேளையில், ஹோர்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) சர்வதேசக் கடல் பாதையைத் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளதாகக் கூறிவரும் அமெரிக்க அதிபர் டிரம்பின் வாதத்திற்கு ஈரான் கடும் மறுப்புத் தெரிவித்துள்ளது.</p><p>

 அதேசமயம் ஹோர்முஸ் ஜலசந்தி முற்றிலும் அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் உள்ளது” என்ற டிரம்பின் அறிக்கையைத் தள்ளுபடி செய்துள்ள ஈரானியப் புரட்சிப் படை (IRGC) அதிகாரிகள், அப்பகுதியில் அமெரிக்கக் கடற்படையின் அதிகாரம் செல்லாது என்றும், கடல்சார் வான்வெளியும் கடல் பாதையும் தங்களது முழுக் கண்காணிப்பில் தான் இயங்கி வருகிறது என்றும் பதிலடி கொடுத்துள்ளனர்.</p><p>
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே போர்ச் சூழல் நிலவி வரும் நிலையில், இரு நாடுகளுக்கும் இடையே நடைபெற்று வரும் இந்தச் சொல்லம்புப் போர் உலக நாடுகளிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><p> 

இந் நிலையில் டிரம்பின் பாதுகாப்பு விவகாரத்தை ஈரான் சர்வதேச அளவில் பகிரங்கமாகக் கேலி செய்து வருவது, அமெரிக்க அரசு மற்றும் வெள்ளை மாளிகை வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-14T09:15:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[விஜய்யால் கதறி அழுத சுந்தர்.சி மகள்!! நடிகை குஷ்பூ சொன்ன உண்மை சம்பவம்...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/khushbu-sundar-recalls-funny-incidents-in-her-life-1786699399"></link>
            <id>https://viduppu.com/article/khushbu-sundar-recalls-funny-incidents-in-her-life-1786699399</id>
            <summary type="text">குஷ்பூதென்னிந்திய சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்து தற்போது அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார் நடிகை குஷ்பூ. தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமாருடன் நேர்காணல் ...</summary>
            <content type="html"><![CDATA[<h2>குஷ்பூ</h2><p>தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்து தற்போது அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார் நடிகை குஷ்பூ. தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமாருடன் நேர்காணல் ஒன்றில் பங்கேற்றுள்ளார். அப்போது குஷ்பூவுக்கு தமிழே தெரியாமல் இருந்தது. அப்போதெல்லாம் நாங்கள் செய்யாத கிண்டலே கிடையாது. இப்போது மைக் பிடித்து எந்தளவுக்கு பேசுகிறார் என்பது அனைவருக்கும் தெரியும். அதை பார்க்கும் போது எனக்கு பெருமையாக இருக்கும் என்று சுஜாதா தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cce33f8b-7c30-4b2d-9e57-a68189a25a1e/26-6a7ede8a01c45.webp' /></p><p> தொடர்ந்து பேசிய குஷ்பூ, எந்தளவுக்கு எனக்கு தமிழ் தெரியாது என்பதற்கு ஒரு சம்பவம் உள்ளது. அவந்திகா குழந்தையாக இருந்தபோது அவளை தூங்க வைத்துவிட்டு மேலே போர்த்தியிருந்த போர்வையை சரியாக சொருகிவிடுங்க என்று சொல்வதற்கு பதில் சொரிஞ்சு விடுங்க என்று சொல்லிவிட்டேன். அவரும் பாப்பாவை சொரிந்துவிட்டுக் கொண்டிருந்தார். நான் போர்வையை சொருகிவிடச் சொன்னேன், இதுகூட தெரியாதா என்று கூறினேன். </p><p>சமையலறையில் எலி வந்ததை 'ஏலி' வந்தது என்று சொல்வேன். நான் ஒருமுரை சுந்தருக்கு கடிதம் எழுதினேன். எனக்கு முழுதாக தமிழ் எழுத தெரியாது. அதனால் ஆங்கிலத்தில் எழுதிவிட்டு கடைசியில் உங்கள் அன்புடன் பொண்டாட்டி எனூர் எழுதியும் அனுப்பிவிட்டேன். பொள்ளாச்சியிலிருந்து அவர் எனக்கு போன் பண்ணி வடை பஜ்ஜி எப்போது வருகிறது என்று கேட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/11bd2295-4c41-445e-ad79-6326a3a33ed2/26-6a7ede8aa742e.webp' /></p><p> </p><p>நான் ஏன் சென்னையிலிருந்து வாணு, எனூர் கெட்க, நீதானே பொண்டாட்டியை 'போண்டா டீ' என்று எழுதி அனுப்பியிருக்க என சொல்லவும் எனக்கு ஒருமாதிரியாகிவிட்டது எனூர் குஷ்பூ பகிர்ந்துள்ளார். </p><h2>அனந்திகா</h2><p>மேலும் குஷ்பூவிடம் சில புகைப்படங்களை காட்டியபோது, விஜய்யின் புகைப்படத்தை காட்டியுள்ளனர். அது குறித்து குஷ்பூ, இளைய மகள் அனந்திகா தீவிர விஜய் ரசிகை, சட்டமன்ற தேர்தலில் சுந்தரும் போட்டியிட்டு தோல்வியடைந்தார். இதனை தொடர்ந்து ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3d4d1cb8-36cc-45bc-8e22-42efff3f50b3/26-6a7ede8b58632.webp' /></p><p>அப்போது அங்கு அனந்திகா அப்பாவை கட்டிப்பிடித்து கதறி அழுதாள். அப்பா தோற்றதை நினைத்து மகள் அழுகிறாள் என்று சுந்தரும் சமாதானப்படுத்தினார்.</p><p>ஆனால் தான் அதற்கு அழவில்லை, விஜய் தேர்தலில் ஜெயித்துவிட்டார், இனிமேல் சினிமாவில் நடிக்க மாட்டாரே என்று அழுததாக தெரிவித்தபோது எங்களுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை என்று குஷ்பூ தெரிவித்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-08-14T09:15:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[தாமதமாகும் மாகாண சபைத் தேர்தல் : எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/special-committee-on-provincial-council-elections-1786693245"></link>
            <id>https://ibctamil.com/article/special-committee-on-provincial-council-elections-1786693245</id>
            <summary type="text">இலங்கையில் மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவது குறித்து ஆய்வு செய்வதற்காக நியமிக்கப்பட்ட விசேட குழுவின் முன் தேர்தல் ஆணைக்குழு அதிகாரிகள் மீண்டும் முன்னி...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவது குறித்து ஆய்வு செய்வதற்காக நியமிக்கப்பட்ட விசேட குழுவின் முன் தேர்தல் ஆணைக்குழு அதிகாரிகள் மீண்டும் முன்னிலையாகுமாறு அழைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p>
இந்தக் கலந்துரையாடல் எதிர்வரும் 20ஆம் திகதி நடைபெற உள்ளதாகத் தேர்தல் ஆணையாளர் நாயகம் ரசிக்கா பீரிஸ் தெரிவித்துள்ளார்.
</p><p>இதன்போது மாகாண சபைத் தேர்தல்களை எந்த நடைமுறையின் கீழ் நடத்த வேண்டும் என்பது குறித்தும் மேலதிக கலந்துரையாடல்கள் நடைபெறும் என அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.</p><p></p><h2>&nbsp;சட்டமா அதிபர் திணைக்களத்துடன் கலந்துரையாடல்</h2><p>
மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதற்கு எந்தத் தேர்தல் முறையைப் பயன்படுத்த வேண்டும் என்பதை ஆய்வு செய்து பரிந்துரைகளைச் சமர்ப்பிப்பதற்காக, அமைச்சர் விஜித ஹேரத் தலைமையில் இந்த விசேட குழு அண்மையில் நியமிக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/56942a39-19d9-44c4-9d28-6457bb9a6738/26-6a7ed99f05bc5.webp' /></p><p>
</p><p>
இந்தநிலையில் குறித்த குழு இதுவரை சட்டமா அதிபர் திணைக்களம் உள்ளிட்ட பல தரப்பினருடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>அத்துடன் தேர்தல்கள் ஆணைக்குழுவும் இதற்கு முன்னர் இந்தக் குழுவின் முன் முன்னிலையாக அழைக்கப்பட்டிருந்த நிலையில் மீண்டும் அழைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-14T09:11:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் உளவுத் தகவல்கள் கையாளப்பட்ட விதம்! திலீப பீரிஸ் வெளிப்படுத்திய விடயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/how-easter-sunday-attack-intelligence-was-handled-1786697222"></link>
            <id>https://ibctamil.com/article/how-easter-sunday-attack-intelligence-was-handled-1786697222</id>
            <summary type="text">
2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களுக்கு முன்னதாக பெறப்பட்ட உளவுத் தகவல்கள் கையாளப்பட்ட விதத்தைச் சுட்டிக்காட்டி, முக்கியமான உத்தியோகப்பூர்வ ஆவணங்களை &quot;FN...</summary>
            <content type="html"><![CDATA[<p>
2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களுக்கு முன்னதாக பெறப்பட்ட உளவுத் தகவல்கள் கையாளப்பட்ட விதத்தைச் சுட்டிக்காட்டி, முக்கியமான உத்தியோகப்பூர்வ ஆவணங்களை "FNA" (தேவையான நடவடிக்கைக்காக - For Necessary Action) என்ற குறிப்புடன் வெறுமனே கீழ் அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கும் நடைமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஜனாதிபதி சட்டத்தரணி திலீப பீரிஸ் வலியுறுத்தியுள்ளார்.
</p><p>
முக்கியமான உளவுத் தகவல்கள் கிடைக்கும்போது, அதிகாரிகள் அதை வெறுமனே மற்றவர்களுக்கு அனுப்பிவிட்டு ஒதுங்கிக் கொள்ளாமல், அதன் மீது உரிய நடவடிக்கை எடுப்பதற்கான பொறுப்பை நேரடியாக ஏற்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>அதிகாரிகளின் கடமை</h2><p>
</p><p>
2019 ஏப்ரல் 9 அன்று அப்போதைய அரச புலனாய்வுச் சேவையின் தலைவரால் அனுப்பப்பட்ட தீவிர பாதுகாப்பு அச்சுறுத்தல் தொடர்பான முக்கியத் தகவல், அப்போதைய காவல்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவினால் "FNA" என்ற குறிப்புடன் முக்கியப் பிரமுகர்களின் பாதுகாப்பிற்குப் பொறுப்பான பிரிவு உட்பட நான்கு பிரிவுகளுக்கு வெறுமனே அனுப்பி வைக்கப்பட்டதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/67992cbe-958b-4b68-85aa-d8cf91f870fb/26-6a7ed95d2a6ef.webp' /></p><p>

இத்தகைய ஆபத்தான தருணங்களில் வெறும் குறிப்பை எழுதி அனுப்புவது மட்டும் போதுமான நடவடிக்கையாகுமா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.</p><p>
</p><p>
முன்கூட்டியே உளவுத் தகவல் கிடைத்திருந்தும் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறிய குற்றச்சாட்டின் பேரில், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிரி பெர்னாண்டோ மற்றும் முன்னாள் காவல்துறை மா அதிபர்&nbsp; பூஜித் ஜயசுந்தர ஆகியோருக்கு எதிராக சட்டமா அதிபர் திணைக்களத்தால் 855 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டதை நினைவு கூர்ந்த அவர், கடமை மற்றும் பொறுப்புள்ள அதிகாரிகள் வெறும் "FNA" என எழுதி ஆவணங்களை நகர்த்துவது மட்டுமே தமது கடமை என கருதக்கூடாது என்பதற்கு இந்தச் சம்பவமே சிறந்த சான்றாகும் எனத் தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-14T09:11:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வீதியில் அனாதரவாக விடப்பட்ட சிறுமி; தாயாரும் கள்ள காதலனும் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/wattegama-abandoned-girl-mother-arrest-1786696101"></link>
            <id>https://jvpnews.com/article/wattegama-abandoned-girl-mother-arrest-1786696101</id>
            <summary type="text">&amp;nbsp; வத்தேகம பகுதியில் நான்கு வயது சிறுமியை முச்சக்கர வண்டியில் அழைத்துச் சென்று பின்னர் வீதியில் கைவிட்டதாகக் கூறப்படும் சந்தேகநபரும் தாயும் ஹாலிஎல...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;<a href="https://jvpnews.com/article/wattegama-abandoned-girl-on-the-road-1786612004" target="_blank"> வத்தேகம பகுதியில் நான்கு வயது சிறுமியை</a> முச்சக்கர வண்டியில் அழைத்துச் சென்று பின்னர் வீதியில் கைவிட்டதாகக் கூறப்படும் சந்தேகநபரும் தாயும் ஹாலிஎல பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>



நேற்று (13) வீதியில் கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட சிறுமியை வத்தேகம பொலிஸார் மீட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/af3b08f7-5f23-46a7-896a-1d8c3545be6b/26-6a7ed1a7126da.webp' /></p><p>
</p><p>


சிறுமியை தாக்கி வீதியில் கைவிட்டதாக சந்தேகிக்கப்படும் தாயாரையும் அவருடன் தொடர்பில் இருந்த நபரையும் கைது செய்வதற்காக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வந்தனர்.</p><p></p><p>



இந்நிலையில், சந்தேகநபர்கள் இருவரும் இன்று (14) ஹாலிஎல – கெட்டவல வீதியில் முச்சக்கரவண்டியில் பயணித்துக்கொண்டிருந்தபோது ஹாலிஎல பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-14T09:09:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீங்கள் கழிவறையில் அதிக நேரம் செலவு செய்பவரா?இந்த பதிவு உங்களுக்கு தான்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/how-many-minutes-one-can-sit-in-toilet-1786697135"></link>
            <id>https://news.lankasri.com/article/how-many-minutes-one-can-sit-in-toilet-1786697135</id>
            <summary type="text">நம்மில் பலரும் கழிவறையை நம்முடைய ஓய்வறையை போல் பயன்படுத்தி வருகின்றோம். அதாவது ஒரு சிலர் கழிவறைக்கு சென்றால் நீண்ட நேரம் கழித்து அவர்கள் வெளியே வருகிற...</summary>
            <content type="html"><![CDATA[<p>நம்மில் பலரும் கழிவறையை நம்முடைய ஓய்வறையை போல் பயன்படுத்தி வருகின்றோம். அதாவது ஒரு சிலர் கழிவறைக்கு சென்றால் நீண்ட நேரம் கழித்து அவர்கள் வெளியே வருகிறார்கள். அப்படியாக, கழிவறையில் எவ்வளவு நேரத்திற்கு மேல் அமர்ந்தால் நமக்கு பாதிப்பு என்று பார்ப்போம்.</p><p> பொதுவாகவே, இன்றைய இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை கழிவறைக்கு சென்று மொபைல் போன் அதிக நேரம் பயன்படுத்துவதை நாம் பார்க்க முடிகிறது. இது ஆரம்ப காலகட்டத்தில் பெரிய பிரச்சனை கொடுக்காவிட்டாலும் காலப்போக்கில் இது நமக்கு மிகப்பெரிய அளவில் ஒரு பிரச்சனையை உருவாக்குகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/762e3117-5c73-4374-9039-4fdb6dfe98ea/26-6a7ed5b673c57.webp' /></p><p>&nbsp;</p><h2>மூலநோய் ஆபத்து</h2><p> கழிவறையில் நீண்ட நேரம் ஒருவர் அமர்ந்து இருக்கின்ற பொழுது அவர்களுக்கு மலக்குடல் மற்றும் ஆசனவாய் பகுதியில் இருக்கும் ரத்த நாளங்களில் அதிகம் அழுத்தம் ஏற்படுகிறது. இவ்வாறு தொடர்ந்து ஏற்படுகின்ற பொழுது அந்த அழுத்தத்தால் ஆசனவாயில் வீக்கம் ஏற்பட்டு மூல நோய் உருவாகிறது.</p><p>இதை தான் நாம் பைல்ஸ் என்று சொல்கின்றோம். இதனால் மலம் கழிக்கும் போது கடுமையான வீக்கம் அரிப்பு மற்றும் ரத்தப்போக்கு பிரச்சனைகள் வருகிறது. அதோடு குடலை தாங்குவதிலும் சிறுநீர்ப்பையை தாங்குவதிலும் பெல்விக் தசைகள்தான் முக்கிய பங்கு பெறுகிறது.</p><h2>தசைகள் பலவீனம்</h2><p> </p><p>நீண்ட நேரம் அமர்ந்து இருக்கின்ற பொழுது இந்த தசைகள் பலவீனம் ஆகக்கூடும். அதனால் மலம் கழிப்பதில் சிக்கலை ஏற்படுத்துவதோடு இடுப்பு பகுதியில் பலவீனத்தை உண்டாக்குகிறது. மேலும், கழிவறையில் ஒரே நிலையில் நீண்ட நேரம் அமர்ந்திருக்கின்ற பொழுது உடலுக்குக் சீரான ரத்த ஓட்டம் என்பது முற்றிலும் குறைந்து விடுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ee453cb7-90b1-43ec-93f5-1b7d2c347f8f/26-6a7ed5b7259bd.webp' /></p><p></p><p> இதனால் தான் இடுப்பு மற்றும் தொடை பகுதிகளுக்கு தேவையற்ற அழுத்தம் ஏற்பட்டு கால்கள் மரத்துப் போகும். ஆதலால், ஒருவர் கழிவறையில் ஐந்து முதல் பத்து நிமிடங்கள் மட்டுமே செலவிட வேண்டும் என்று மருத்துவர் சொல்கிறார்கள்.</p><h2>மொபைல்போனை தவிர்க்கவும்</h2><p> </p><p>ஒருவருக்கு இயல்பாக மலம் கழிக்க வரவில்லை என்றால் தொடர்ந்து கழிவறையில் அமர்ந்திருக்கக் கூடாது. நாம் அதனை கட்டாயப்படுத்தியும் செயல்படுத்தக் கூடாது. அவ்வாறு நாம் கட்டாயப்படுத்தி மலம் கழிக்கின்ற வேலையில் தான் நிறைய பிரச்சனைகளை சந்திக்கின்றோம். அதைவிட குறிப்பாக கழிவறை செல்லும் பொழுது மொபைல் போன் பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்ப்பது எதிர்காலத்தில் வரக்கூடிய பிரச்சனைகளை குறைக்கலாம்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-14T09:09:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[இஸ்ரேலை கைவிடுகிறதா அமெரிக்கா? கோபமான மொசாப் யூசப்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/mosab-yousef-angry-about-us-israel-relationship-1786698463"></link>
            <id>https://news.lankasri.com/article/mosab-yousef-angry-about-us-israel-relationship-1786698463</id>
            <summary type="text">இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இடையேயான உறவில் ஏற்பட்டுள்ள விரிசல் குறித்து இஸ்ரேல் உளவு அமைப்பில் பணியாற்றிய, ஹமாஸ் இணை நிறுவனர் ஹசன் யூசுப்பின் மகன் மொசா...</summary>
            <content type="html"><![CDATA[<p>இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இடையேயான உறவில் ஏற்பட்டுள்ள விரிசல் குறித்து இஸ்ரேல் உளவு அமைப்பில் பணியாற்றிய, ஹமாஸ் இணை நிறுவனர் ஹசன் யூசுப்பின் மகன் மொசாப் யூசப் பேசியுள்ளார்.</p><h3>


இஸ்ரேலை கைவிடுகிறாதா அமெரிக்கா? </h3><p>

கடந்த பிப்ரவரி 28 ஆம் திகதி இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து ஈரான் மீது தாக்குதலை தொடங்கியது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ff1a48ff-6789-4c99-be5c-f2c08938ba18/26-6a7edae1613a1.webp' /></p><p>
இந்த தாக்குதலுக்கு பதிலடியாக மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்கா ராணுவ தளங்கள் மற்றும் இஸ்ரேல் ஈரான் தாக்குதல் நடத்தியது.&nbsp;</p><p></p><p>

இந்த போரில் ஏராளமான அமெரிக்கா வீரர்கள் உயிரிழந்துள்ள நிலையில், இஸ்ரேலுக்காக அமெரிக்கா ஏன் இந்த போரில் ஈடுபட வேண்டும் என போரை நிறுத்த அமெரிக்காவில் டிரம்ப்பிற்கு கடும் அழுத்தம் உருவானது.&nbsp;</p><p>

அதேவேளையில், ஆயுத பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் ஈரான் மீதான தாக்குதலை அமெரிக்கா நிறுத்தியுள்ளது.
</p><p>
ஆனால், ஈரான் மீது அமெரிக்கா தொடர்ந்து கடுமையான தாக்குதலை தொடுக்க வேண்டுமென இஸ்ரேல் வலியுறுத்திய நிலையில், தற்போது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. </p><p>

டிரம்ப்பின் காசா அமைதி ஒப்பந்தத்தை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நிராகரித்தது அவர் மீதான கோபத்தை அதிகரித்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/14cd5dd8-2c5a-4948-b6ad-5415ca00d14b/26-6a7edae2176aa.webp' /></p><p>
இந்நிலையில், இஸ்ரேல் உளவு அமைப்பில் பணியாற்றி, தற்போது அமெரிக்காவில் வசித்து வரும் ஹமாஸ் இணை நிறுவனர் ஹசன் யூசுப்பின் மகன் மொசாப் ஹசன் யூசப், ஜெருசலேமில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் ஈரான் உடனான போரில் அமெரிக்காவின் ஈடுபாடு குறித்தும், இஸ்ரேல் அமெரிக்கா இடையே உள்ள உறவு குறித்தும் சற்று ஆவசேமாக பேசியுள்ளார்.</p><p>&nbsp;<iframe frameborder="0" src="//www.youtube.com/embed/gJwLWLiY9mM" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-14T09:08:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[30 வருடங்களாக தாம் சகோதரிகள் என தெரியாது பழகிய நண்பிகள்; ஆச்சர்ய செய்தி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/friends-30-years-without-knowing-they-were-sisters-1786698595"></link>
            <id>https://canadamirror.com/article/friends-30-years-without-knowing-they-were-sisters-1786698595</id>
            <summary type="text">30 வருடங்களுக்கு முன்பு இந்தியாவில் இருந்து நெதர்லாந்து நாட்டிற்கு தத்து கொடுக்கப்பட்ட மீனா, மினல் என்கிற இரண்டு பெண்கள் கடந்த 30 வருடங்களாக தாங்கள் ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>30 வருடங்களுக்கு முன்பு இந்தியாவில் இருந்து நெதர்லாந்து நாட்டிற்கு தத்து கொடுக்கப்பட்ட மீனா, மினல் என்கிற இரண்டு பெண்கள் கடந்த 30 வருடங்களாக தாங்கள் சகோதரிகள் என்பது தெரியாமலேயே தோழிகளாக பழகியிருக்கிறார்கள்.</p><p> 

சமீபத்தில் டி.என்.ஏ சோதனையில் அவர்கள் இருவரும் சகோதரிகள் என்பதும் அவர்கள் 30 வருடங்களுக்கு முன்பு இந்தியாவிலிருந்து தத்துக் கொடுக்கப்பட்டவர்கள் என்பதும் தெரியவந்திருக்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f8e4c393-5d7f-4b2b-a243-b8ad82ffab3d/26-6a7edb650a4cd.webp' /></p><p>
 

இதையடுத்து இரு தோழிகளும் கட்டியணைத்து, கண்ணீர் மல்க தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். 

நாங்கள் இருவரும் முப்பது வருடங்களாக சகோதரிகளாகவே இருந்திருக்கிறோம்.</p><p> ஆனால் எங்களுக்கு அது தெரியவில்லை என உணர்ச்சி பொங்க அவர்கள் உள்ளூர் ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்து வருகிறார்கள். 

இவர்கள் தொடர்பான புகைப்படங்களும், வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.</p>]]></content>
            <updated>2026-08-14T09:07:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சூரிய கிரகணத்தைப் பார்த்தவர்களுக்கு ஒரு அவசர எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/expert-eye-warning-for-solar-eclipse-watchers-1786696064"></link>
            <id>https://news.lankasri.com/article/expert-eye-warning-for-solar-eclipse-watchers-1786696064</id>
            <summary type="text">முறையான கண்ணாடி இல்லாமல் சூரிய கிரகணத்தைப் பார்த்தவர்களுக்கு சுவிஸ் மருத்துவர்கள் அவசர எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர்.


புதன்கிழமையன்று நிகழ்ந்த ...</summary>
            <content type="html"><![CDATA[<p>முறையான கண்ணாடி இல்லாமல் சூரிய கிரகணத்தைப் பார்த்தவர்களுக்கு சுவிஸ் மருத்துவர்கள் அவசர எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர்.</p><p>


புதன்கிழமையன்று நிகழ்ந்த சூரிய கிரகணத்தைப் பார்க்க உலக நாடுகள் பலவற்றின் மக்கள் ஆர்வம் காட்டிய நிலையில், அவர்களில் பலர் அதற்கான முறையான கண்னாடி அணியாமலே சூரிய கிரகணத்தைப் பார்த்துள்ளனர்.</p><h3>

ஒரு அவசர எச்சரிக்கை
</h3><p>
இந்நிலையில், அப்படி முறையான கண்ணாடி இல்லாமல் சூரிய கிரகணத்தைப் பார்த்தவர்களுக்கு சுவிஸ் மருத்துவர்கள் அவசர எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர்.&nbsp;</p><p></p><p>
அதாவது, கண்ணின் பின் புற உள் சுவரிலுள்ள விழித்திரைக்கு வலியை உணரும் திறன் கிடையாது. ஆகவே, விழித்திரைக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் அது உடனடியாக தெரியவராது. பல நாட்களுக்குப் பின்பே விழித்திரை பாதிக்கப்பட்டுள்ளது தெரியவரும்.</p><p>

ஆக, 99 சதவிகித பாதுகாப்பு இருந்தாலும், ஒரு சதவிகித பாதுகாப்புக் குறைவு இருந்தால்கூட, விழித்திரையின் மையத்திலுள்ள macula என்னும் பாகம் விநாடிகளில் சூரியனால் பாதிக்கப்பட்டுவிடக்கூடும் என்கிறது சுவிஸ் ஃபெடரல் பொது சுகாதார அலுவலகம்.&nbsp;</p><p>
கண் பார்வை மங்குதல், பார்வையின் மையத்தில் கரும்புள்ளி அல்லது தெளிவற்ற கோடுகள், வண்ணங்களைக் காண்பதில் பிரச்சினை மற்றும் வெளிச்சத்தைப் பார்த்தால் பயங்கரமாக கண் கூசுதல் ஆகிய அறிகுறிகள் தோன்றுமானால், அவை ஆபத்தான அறிகுறிகள் ஆகும்.&nbsp;</p><p></p><p>
சூரிய கிரகணத்தைப் பார்த்ததால் லேசான பாதிப்பு ஏற்பட்டிருந்தாலே, அது குணமாக ஆறு மாதங்கள் வரை ஆகலாம் என்று கூறும் கண் மருத்துவ நிபுணரான மார்ட்டின் (Martin Zinkernagel) என்பவர், சூரிய கிரகணத்தின்போது அதிக நேரம் சூரிய ஒளியைப் பார்த்திருந்தால் நிரந்தர பார்வை இழப்பு கூட ஏற்படலாம் என எச்சரிக்கிறார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/53de2869-c6cc-4db9-8c69-5c65a3cb9245/26-6a7ed182b6797.webp' /></p><p>
ஆகவே, சூரிய கிரகணத்தைப் பார்த்த யாருக்காவது மேற்குறிப்பிட்ட அறிகுறிகள் ஏதாவது இருக்குமானால், உடனடியாக மருத்துவரை அணுகுமாறு அவர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
</p><p>
மோசமான செய்தி என்னவென்றால், சேதமடைந்த விழித்திரை செல்களை குணமாக்க எந்த சிகிச்சையும் கிடையாது!&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-14T09:00:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானியாவில் கிளாக்டன் இடைத்தேர்தல்: நைஜல் ஃபராஜ் அமோக வெற்றி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/nigel-garage-won-the-clacton-by-election-1786697973"></link>
            <id>https://news.lankasri.com/article/nigel-garage-won-the-clacton-by-election-1786697973</id>
            <summary type="text">பிரித்தானியாவின் கிளாக்டன் இடைத் தேர்தலில் நைஜல் ஃபராஜ்(Nigel Farage) வெற்றி பெற்றுள்ளார்.நைஜல் ஃபராஜ் வெற்றி
பிரித்தானியாவின் சீர்திருத்தக் கட்சியின...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரித்தானியாவின் கிளாக்டன் இடைத் தேர்தலில் நைஜல் ஃபராஜ்(Nigel Farage) வெற்றி பெற்றுள்ளார்.</p><h2>நைஜல் ஃபராஜ் வெற்றி</h2><p>
பிரித்தானியாவின் சீர்திருத்தக் கட்சியின்(Reform UK) தலைவர் நைஜல் ஃபராஜ்(Nigel Farage) கிளாக்டன்(Clacton) பகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் அபார வெற்றி பெற்றுள்ளார்.</p><p> நைஜல் ஃபராஜ் பெற்ற நிதி உதவிகள் மற்றும் நன்கொடைகள் குறித்து பல்வேறு குற்றச்சாட்டுக்கள் எழுந்ததை அடுத்து கடந்த ஜூலை மாதம் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்து இருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/21090256-b106-48fe-a67c-bba8d2e043d3/26-6a7ed8f6d351f.webp' /></p><p> இதையடுத்து இப்பகுதிக்கு அறிவிக்கப்பட்ட இடைத்தேர்தலில் நைஜல் ஃபராஜ் மீண்டும் போட்டியிட்டார்.</p><p> இந்நிலையில் நைஜல் பராஜ் கிட்டத்தட்ட 22,239 வாக்குகள் பெற்று அபார வெற்றி பெற்றுள்ளார்.</p><p></p><p> இவரை எதிர்த்து போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளர் கவுண்ட் பின்ஃபேஸ் 9,455 வாக்குகள் பெற்றுள்ளார்.</p><p> நைஜல் பராஜ் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துவிட்டு மீண்டும் இடைத்தேர்தலில் போட்டியிடுவதை அரசியல் நாடகம் என்று குறிப்பிட்டு வெஸ்ட்மின்ஸ்டர் பிரதான கட்சிகள் இந்த தேர்தலை புறக்கணித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-14T08:59:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ashik</name>
            </author>
            <title type="text"><![CDATA[காணி சுவீகரிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழர் பகுதிகளில் வெடிக்கும் தொடர் போராட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/goverment-against-protest-today-1786696420"></link>
            <id>https://tamilwin.com/article/goverment-against-protest-today-1786696420</id>
            <summary type="text"> காணி சுவீகரிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழர் பகுதிகளில் வெடிக்கும் தொடர் போராட்டம்சாங்கம் விடுவிக்க துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்
என சமூ...</summary>
            <content type="html"><![CDATA[<p> காணி சுவீகரிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழர் பகுதிகளில் வெடிக்கும் தொடர் போராட்டம்சாங்கம் விடுவிக்க துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்
என சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் பணிப்பாளர் ஜாட்சன் பிகிராடோ
தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p>மட்டக்களப்பு காந்தி பூங்காவில் இன்று(14.08.2026) காலை இடம்பெற்ற போராட்டத்தில்
கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
</p><h2>

தமிழர் பகுதிகளில் வெடிக்கும் போராட்டம்</h2><p>
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
</p><p>
நீண்ட காலமாக மட்டக்களப்பு- மயிலத்தமடு மாதவணை மக்கள் தங்களுடைய
மேய்ச்சல் தரைக்காக போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
</p><p>
போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, கடந்த வெள்ளிக்கிழமை மன்னாரில்
முன்னெடுக்கப்பட்டது.

​</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/538a00d3-ce1d-414a-b0cd-13ca7995952d/26-6a7ed5b16eb4f.webp' /></p><p>அதே போன்று வலிவடக்கு யாழ்ப்பாணத்திலும் தங்களுடைய காணிக்காக போராடிக்
கொண்டிருக்கின்ற மக்களின் நியாயமான போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, இன்று
மட்டக்களப்பிலும் முன்னெடுக்கப்பட்டது.

​</p><p>இதேவேளை, முல்லைத்தீவு மாவட்டத்தில் கேப்பாப்பிலவு மக்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

அந்த காணிக்காக. அவர்களுடைய போராட்டத்தினுடைய நியாயத்தன்மைக்கும், அவர்களுடைய
நீதியான போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் விதமாகவும் போராட்டம்
முன்னெடுக்கப்பட்டது.
</p><h2>
காணி சுவீகரிப்பு</h2><p>ஆகவே, இந்த போராட்டமானது தொடர்ச்சியாக போராடிக் கொண்டிருக்கின்ற எங்களுடைய
மட்டக்களப்பு மக்களாக இருக்கலாம், மயிலத்தமடு மாதவணை மக்களாக இருக்கலாம்,
வலிவடக்கு யாழ்ப்பாண மக்களாக இருக்கலாம், முல்லைத்தீவு கேப்பாப்பிலவு மக்களாக
இருக்கலாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8088eec8-3750-450c-b9b3-d1afa40ef368/26-6a7ed5b223c71.webp' /></p><p>
</p><p>
இவர்களின் போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் முகமாக காணி இழந்த மக்கள்
தங்களுடைய போராட்டங்களை முன்னெடுத்துக் கொண்டு வருகின்றார்கள்.</p><p>

இலங்கையின் வடக்கு கிழக்கில் அரச தரப்பினரால் கையகப் படுத்தப்பட்டு இருக்கின்ற
மக்களின் காணிகளை அரசாங்கம் விடுவிக்க துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள
வேண்டும் என்றார்.&nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-08-14T08:46:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானியாவில் இலங்கை இளைஞனுக்கு நேர்ந்த கதி; சுற்றுலா சென்ற இடத்தில் துயரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sri-lankan-youth-drowns-in-east-sussex-sea-uk-1786686591"></link>
            <id>https://jvpnews.com/article/sri-lankan-youth-drowns-in-east-sussex-sea-uk-1786686591</id>
            <summary type="text">&amp;nbsp; பிரித்தானியாவின் கிழக்கு சசெக்ஸ் (East Sussex) பகுதியில் உள்ள கேம்பர் சான்ட்ஸ் (Camber Sands) கடற்கரையில், ஞாயிற்றுக்கிழமை மாலையில் கடலில் சிக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; பிரித்தானியாவின் கிழக்கு சசெக்ஸ் (East Sussex) பகுதியில் உள்ள கேம்பர் சான்ட்ஸ் (Camber Sands) கடற்கரையில், ஞாயிற்றுக்கிழமை மாலையில் கடலில் சிக்கிக்கொண்ட பிரிட்டிஷ்-இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த பதின்ம வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
பிரிட்டிஷ் ஊடகங்களின் தகவல்படி, நீரில் சிக்கிக்கொண்ட மூவருக்கு உதவ அவசர சேவைகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதை சசெக்ஸ் காவல்துறை உறுதிப்படுத்தியது.

சுமார் 30 நிமிடங்களுக்குப் பிறகு 18 வயதுடைய அந்த இளைஞர் கடலிலிருந்து மீட்கப்பட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/23e822b1-a1c3-4ac1-98c4-0ba5277af7ec/26-6a7eac812bf1d.webp' /></p><h2>லண்டனிலிருந்து கடற்கரைக்குச் சென்றிருந்தனர்&nbsp;</h2><p> மருத்துவக் குழுவினரின் முயற்சிகள் இருந்தபோதிலும், சிறிது நேரத்திலேயே அவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. அவரது குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
பாதிக்கப்பட்டவர் 24 வயதுடையவர் என்று காவல்துறை முதலில் தெரிவித்திருந்தாலும், பின்னர் அவரது வயது 18 என்று தெளிவுபடுத்தியது. 16 வயது சிறுவன் மற்றும் 24 வயதுடைய நபர் என மற்ற இருவரும் பாதுகாப்பாக கரைக்குத் திரும்பினர்.</p><p></p><p>
</p><p>
ஒருவருக்கொருவர் அறிமுகமான அந்த மூவரும் லண்டனிலிருந்து கடற்கரைக்குச் சென்றிருந்தனர்.

கடலோரக் காவல் படை, பெட் லெவல் (Pett Level) உயிர்காக்கும் படகுப் பிரிவு மற்றும் தென்கிழக்கு கடற்கரை ஆம்புலன்ஸ் சேவை ஆகியவையும் இந்தச் சம்பவத்தில் மீட்புப் பணிகளில் ஈடுபட்டன.</p><p>

அந்தப் பகுதியில் அவசர சேவைக் குழுவினரின் நடமாட்டம் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், இது குறித்த விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக சசெக்ஸ் காவல்துறை தெரிவித்துள்ளது.</p><p></p><p>

இறப்பில் எந்தவிதமான சந்தேகத்திற்கிடமான சூழலும் இல்லை என்றும், இது குறித்து மரண விசாரணை அதிகாரி (coroner) மூலம் விசாரணை நடத்தப்படும் என்றும் காவல்துறை மேலும் தெரிவித்தது.</p>]]></content>
            <updated>2026-08-14T08:41:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஒரு நாடே கடல் நீரில் மூழ்கும் அபாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/which-country-will-suffer-most-from-sea-level-rise-1786695282"></link>
            <id>https://manithan.com/article/which-country-will-suffer-most-from-sea-level-rise-1786695282</id>
            <summary type="text">Tuvalu and sea level rise : கடல் உயர்ந்துகொண்டே சென்றால், ஒரு நாடே வரைபடத்திலிருந்து மறைந்துவிடுமா?தெற்குப் பசிபிக் பெருங்கடலின் மத்தியில் வெறும் 26 ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>Tuvalu and sea level rise : கடல் உயர்ந்துகொண்டே சென்றால், ஒரு நாடே வரைபடத்திலிருந்து மறைந்துவிடுமா?தெற்குப் பசிபிக் பெருங்கடலின் மத்தியில் வெறும் 26 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்புடன் அமைந்துள்ள துவாலு, அந்த அச்சுறுத்தலை நிஜமாக எதிர்கொண்டு வருகிறது.</p><p>உலகின் கடல் மட்ட உயர்வால் மிகப்பெரிய ஆபத்தை எதிர்நோக்கும் நாடுகளில் ஒன்றாகத் திகழும் இந்தச் சிறிய தீவு நாடு, எதிர்காலத்தில் தனது நிலத்தையும் வாழ்விடத்தையும் கடலிடம் இழக்கும் அபாயத்தில் உள்ளது. தெற்குப் பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள இந்நாட்டின் மொத்த நிலப்பரப்பு வெறும் 26 சதுர கிலோமீட்டர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b779d452-c75b-41e1-8ff1-57a1fe4eea10/26-6a7ed3ae6e185.webp' /></p><p></p><h2>அழிவின் விளிம்பில் துவாலு</h2><p>சுமார் 10,000 பேர் வசிக்கும் துவாலுவின் சராசரி உயரம் கடல் மட்டத்திலிருந்து 2 மீட்டருக்கும் குறைவாக உள்ளது.

காலநிலை மாற்றத்தால் இப்பகுதியில் கடல் மட்டம் ஆண்டுக்கு சுமார் 3.9 மில்லிமீட்டர் உயர்ந்து வருகிறது. </p><p>இதனால் கடல் நீர் நிலத்தடி நீரில் கலப்பது, குடிநீர் தட்டுப்பாடு, விவசாய நிலங்களின் பாதிப்பு மற்றும் கடற்கரை அரிப்பு போன்ற பிரச்னைகள் தீவிரமடைந்துள்ளன. தற்போதைய நிலை தொடர்ந்தால், 2050 முதல் 2100-க்குள் துவாலுவின் பெரும்பாலான பகுதிகள் வாழத் தகுதியற்றதாக மாறக்கூடும் என எச்சரிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ea950b9c-f7d9-48f1-ba27-c2c32a50ed0a/26-6a7ed3adbc127.webp' /></p><p>

இந்த நிலையில், நாட்டைப் பாதுகாக்கும் முயற்சியாக ஐ.நா.வின் UNDP உதவியுடன் செயற்கை நில மீட்பு மற்றும் கடல் அலைத் தடுப்புச் சுவர் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. </p><p>அதேவேளை, துவாலு அரசு தனது கலாசாரம், வரலாறு மற்றும் இறையாண்மையை எதிர்காலத்திலும் பாதுகாக்கும் நோக்கில், நாட்டை முழுமையான டிஜிட்டல் வடிவில் (Digital Twin) மெட்டாவர்ஸ் தொழில்நுட்பத்தில் பதிவு செய்யும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/42653483-0721-4af5-b8c7-7efffe377ccd/26-6a7ed3ad14f3e.webp' /></p><p></p><p>
</p><p>
மேலும், உலகம் முழுவதும் பரவலாகப் பயன்படுத்தப்படும் “.tv” இணையதள டொமைன் துவாலுவுக்குச் சொந்தமானது என்பதும் குறிப்பிடத்தக்கது. அதை குத்தகைக்கு விடுவதன் மூலம் கிடைக்கும் வருவாய் அந்நாட்டின் பொருளாதாரத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது.
</p><p>எந்த நாடும் அழியக் கூடாது; அழியவும் விடக்கூடாது... அதற்கேற்ற உதவிகளைப் பிறநாடுகளும் செய்ய வேண்டும் என்பதே வல்லுநர்களின் நிலைப்பாடாக இருக்கின்றது.</p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்<b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"> FOLLOW NOW&nbsp;</a></u></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-14T08:38:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரேவதி நட்சத்திரத்தில் சனி பெயர்ச்சி : இந்த 4 ராசிகளுக்கு நல்ல காலம் ஆரம்பம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/saturn-transit-in-revati-nakshatra-who-get-luck-1786690949"></link>
            <id>https://manithan.com/article/saturn-transit-in-revati-nakshatra-who-get-luck-1786690949</id>
            <summary type="text">வேத ஜோதிடத்தில் சனி பெயர்ச்சிக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது. கரணம் சனி பகவான் நீதியின் கடவுளாக அறியப்படுகின்றார்.&amp;nbsp;&amp;nbsp;ஒவ்வொருவ...</summary>
            <content type="html"><![CDATA[<p></p><p>வேத ஜோதிடத்தில் சனி பெயர்ச்சிக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது. கரணம் சனி பகவான் நீதியின் கடவுளாக அறியப்படுகின்றார்.&nbsp;&nbsp;</p><p>ஒவ்வொருவரின் கரும வினைகளுக்கு ஏற்ற வகையில், பலன்களை பாரபட்சமின்றி கொடுப்பவர்.மற்ற கிரகங்களைவிட நீண்ட காலம் ஒரு ராசியிலும் நட்சத்திரத்திலும் பயணிக்கும் சனி, 2½ ஆண்டுகளுக்கு ஒருமுறை ராசியையும், 5–6 மாதங்களுக்கு ஒருமுறை நட்சத்திரத்தையும் மாற்றுகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b98b1950-cf5d-4293-a1aa-033133770761/26-6a7ec2865377a.webp' /></p><p>
</p><p>
சனியின் நிலையில் ஏற்படும் ஒவ்வொரு மாற்றமும் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். தற்போது மீன ராசியில் பயணித்து வரும் சனி பகவான், ஆகஸ்ட் 20-ம் தேதி ரேவதி நட்சத்திரத்தின் முதல் பாதத்திற்குள் நுழைந்து, அக்டோபர் 9-ம் தேதி வரை அங்கு இருப்பார்.</p><p>

இந்த நட்சத்திரப் பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் இருந்தாலும், 4 ராசிக்காரர்கள் வாழ்வில் பெரிய அளவில் நல்ல மாற்றங்களைக் காணவுள்ளனர்.</p><p></p><p> குறிப்பாக இதுவரை பிரச்சனைகளால் சிரமப்பட்டு வந்தவர்கள், அதிலிருந்து விடுபட்டு மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழும் வாய்ப்பைப் பெறுவார்கள். அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.</p><h2>ரிஷபம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4f48aabc-dfb9-4a4a-a9d1-ce1e60cc721b/26-6a7ec2870b3ed.webp' /></p><h2>
</h2><p>சனியின் நட்சத்திரப் பெயர்ச்சி ரிஷப ராசிக்காரர்களுக்கு பல்வேறு வகைகளில் சிறப்பான பலன்களைத் தரக்கூடிய காலமாக அமையப் போகிறது.</p><p> குறிப்பாக பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு அல்லது பணியில் முன்னேற்றம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகலாம். நீண்ட காலமாக வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு, தங்களது தகுதிக்கு ஏற்ற நல்ல வேலை கிடைக்கும்.</p><p>மேலும், எதிர்பாராத சில நல்ல செய்திகள் மனதிற்கு மகிழ்ச்சியைத் தரும். நிதி நிலைமையில் படிப்படியான முன்னேற்றம் ஏற்பட்டு, பணவரவு அதிகரிக்கும்.சமூகத்தில் உங்களின் மதிப்பும், கௌரவமும் உயரும்.</p><h2>மிதுனம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e965dddb-0914-4b31-b1f0-70e4f3b691c6/26-6a7ec287b70c5.webp' /></p><h2>
</h2><p>சனியின் நட்சத்திரப் பெயர்ச்சி மிதுன ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பல நல்ல மாற்றங்களை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கும். பல்வேறு வழிகளில் இருந்து எதிர்பாராத நல்ல செய்திகள் கிடைக்கும்.</p><p> இதுவரை இருந்த நிதி நெருக்கடிகள் படிப்படியாக குறைந்து, புதிய வருமான வாய்ப்புகள் உருவாகும் சூழல் காணப்படும்.
</p><p>
நீண்ட காலமாக சிக்கிக் கிடந்த பணம் இந்த காலகட்டத்தில் கைக்கு வந்து சேருவதற்கான வாய்ப்புள்ளது. பணியிடத்தில் நீண்ட நாட்களாக சந்தித்து வந்த பிரச்சனைகள் மற்றும் மனக்கசப்புகள் முடிவுக்கு வந்து, சுமுகமான சூழல் உருவாகும்.</p><h2>கன்னி</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a7d7d842-11ef-44b5-b059-8486614815bf/26-6a7ec28881b38.webp' /></p><h2>
</h2><p>சனியின் நட்சத்திரப் பெயர்ச்சி கன்னி ராசிக்காரர்களுக்கு பல வழிகளிலும் சாதகமான பலன்களை வழங்கக்கூடியதாக இருக்கும். </p><p>குறிப்பாக நீண்ட நாட்களாக மனதில் இருந்த கவலைகள் மற்றும் மன அழுத்தங்கள் குறைந்து, மனதில் நிம்மதியும் மகிழ்ச்சியும் அதிகரிக்கும்.
</p><p>
பணியிடத்தில் புதிய பொறுப்புகள் வழங்கப்படலாம். ஆரம்பத்தில் அவை சற்று சவாலாகத் தோன்றினாலும், அவற்றை சிறப்பாகச் செய்து முடிப்பதன் மூலம் உங்களின் திறமை வெளிப்படும்.</p><p> நீண்ட காலமாக உடல்நலப் பிரச்சனைகளை சந்தித்து வந்தவர்கள், இந்த பெயர்ச்சிக்குப் பிறகு ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றத்தை காண்பார்கள்.</p><h2>துலாம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7fff393c-1fb3-40c2-a69f-9b3b282da3f1/26-6a7ec28931f55.webp' /></p><p></p><h2>
</h2><p>சனியின் நட்சத்திரப் பெயர்ச்சி துலாம் ராசிக்காரர்களின் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தக்கூடிய காலமாக இருக்கும். </p><p>குறிப்பாக, இந்த மாற்றங்கள் பெரும்பாலும் நீங்கள் எதிர்பார்த்த ஒன்றாகவும், உங்கள் எதிர்கால வளர்ச்சிக்கு வழிவகுப்பதாகவும் அமையலாம்.

பணியிடத்தில் புதிய பொறுப்புகள் அல்லது முக்கியமான பணிகள் வழங்கப்படும்.</p><p> அவற்றை திறம்பட கையாள்வதன் மூலம் மேலதிகாரிகளின் பாராட்டையும், நல்ல அங்கீகாரத்தையும் பெறலாம். நிதி ரீதியாக முன்னேறுவதற்கான புதிய பாதைகள் திறக்கும். வருமானத்தில் ஏற்றம் உண்டாகும்.</p><b>இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).&nbsp; &nbsp; &nbsp; &nbsp;</b><p></p><p><b><br></b></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்<u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"> </a><b><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW&nbsp;</a></b></u></td></tr></tbody></table><p><br></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-14T08:37:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடற்கரையில் சடலமாக மீட்கப்பட்ட இந்தியர்! தொடரும் விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/indian-dies-after-drowning-at-sea-1786693796"></link>
            <id>https://ibctamil.com/article/indian-dies-after-drowning-at-sea-1786693796</id>
            <summary type="text">

பெந்தரை கடற்கரையில் நீரில் மூழ்கி காணாமல் போன இந்தியர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சடலமானது, இன்று(14) காலை மொரகல்லா கடற்கரையில் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>

பெந்தரை கடற்கரையில் நீரில் மூழ்கி காணாமல் போன இந்தியர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
</p><p>
குறித்த சடலமானது, இன்று(14) காலை மொரகல்லா கடற்கரையில் கரை ஒதுங்கிய நிலையில் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
பெந்தரை பகுதியில் உள்ள ஒரு சுற்றுலா விடுதியில் நண்பருடன் தங்கியிருந்த 24 வயது இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.</p><p></p><h2>மேலதிக விசாரணை</h2><p>
</p><p>
குறித்த நபர் விடுதிக்குப் பின்னாலுள்ள கடற்கரையில் குளித்துக் கொண்டிருந்தபோது, ​​கடல் நீரோட்டத்தில் சிக்கி காணாமல் போனதாக காவல்துறை தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aec042fd-09d4-4214-b1c7-560efafe8c49/26-6a7ed021ecf27.webp' /></p><p>

இந்நிலையில், அலுத்கம காவல்துறையினர் மற்றும் அலுத்கம சுற்றுலா காவல்துறையினர் இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.</p><p></p><p>&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table><p>

</p>]]></content>
            <updated>2026-08-14T08:36:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரான் மீது மீண்டும் தாக்குதல்: இஸ்ரேலிடம் செண்டகம் வலியுறுத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/attack-on-iran-again-sentagam-urges-israel-to-act-1786694771"></link>
            <id>https://ibctamil.com/article/attack-on-iran-again-sentagam-urges-israel-to-act-1786694771</id>
            <summary type="text">ஈரான் மீதான அழுத்தத்தை அதிகரிப்பதற்காக, எண்ணெய், எரிவாயு மற்றும் மின்சார வசதிகள் மீதான தாக்குதல்கள் உட்பட, ஈரான் மீதான தாக்குதல்களை மீண்டும் தொடங்க அம...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரான் மீதான அழுத்தத்தை அதிகரிப்பதற்காக, எண்ணெய், எரிவாயு மற்றும் மின்சார வசதிகள் மீதான தாக்குதல்கள் உட்பட, ஈரான் மீதான தாக்குதல்களை மீண்டும் தொடங்க அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவின் தலைவர் அழுத்தம் கொடுத்து வருவதாக இஸ்ரேலிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.</p><p> 

பெயர் குறிப்பிடப்படாத, தகவலறிந்த அரசியல் வட்டாரங்களை மேற்கோள் காட்டி, அமெரிக்க சென்ட்காம் தலைவர் கடந்த வாரம் இஸ்ரேலுக்கு வருகை தந்தபோது இந்த முன்மொழிவை முன்வைத்தார் என இஸ்ரேலின் அரச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
</p><p>
இஸ்ரேலிய இராணுவத்தின் உயர்மட்ட செயல்பாட்டுக் குழுவின் கூட்டத்தில், தலைமைத் தளபதி எயால் ஜமீர் மற்றும் பிற மூத்த தளபதிகளுடன் சென்ட்காம் தலைவர் கலந்துகொண்டதாக விளக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>சென்ட்காம் தலைவர் நிலைப்பாடு</h2><p>
</p><p>
அந்த சந்திப்பின் போது, ​​ஈரானுக்கு எதிராக மீண்டும் போரைத் தொடங்கவும், அந்நாட்டின் எரிவாயு, எண்ணெய் மற்றும் மின்சாரத் தொழில்களுடன் தொடர்புடைய வசதிகள் உள்ளிட்ட தேசிய உள்கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தவும் அழைப்பு விடுத்ததாக தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ae234320-2bcb-4b12-abff-0a79b1c1453b/26-6a7ecc75c3899.webp' /></p><p>
</p><p>
"ஈரானில் உள்கட்டமைப்புகளைத் தாக்குவது ஆட்டத்தின் விதிகளையே மாற்றிவிடும், ஈரானியர்களைக் கடுமையாகப் பாதிக்கும், மேலும் தற்போதைய சூழ்நிலையில் அவர்கள் தங்கள் நிலைப்பாடுகளை மாற்றிக்கொள்ள மாட்டார்கள்," என்று குறிப்பிட்ட சென்ட்காம் தலைவர் கூறியதாக மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.</p><p>

சண்டையை மீண்டும் தொடங்குவதே ஒரே வழியாக அமையக்கூடும் என்றும், ஈரானுக்கு எதிராக இஸ்ரேலுடன் இணைந்து அமெரிக்கா கூட்டுத் தாக்குதல்களை நடத்த வேண்டியிருக்கலாம் என்றும் சென்ட்காம் தலைவர் இஸ்ரேலிய இராணுவ அதிகாரிகளிடம் கூறியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-14T08:33:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை அரசியலில் பேசுபொருளாகியுள்ள 22ஆவது சட்டமூல திருத்தம்.. நீதியமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/22nd-amendment-harshana-nanayakkara-1786694076"></link>
            <id>https://tamilwin.com/article/22nd-amendment-harshana-nanayakkara-1786694076</id>
            <summary type="text">இலங்கையில் நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை நீட்டிப்பதற்கான விதிகளை உள்ளடக்கிய 22ஆவது அரசியலமைப்புத் திருத்த வரைவு சட்டமூலம், ஒகஸ்ட் 18 ஆம் திகதி நாடாளு...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை நீட்டிப்பதற்கான விதிகளை உள்ளடக்கிய 22ஆவது அரசியலமைப்புத் திருத்த வரைவு சட்டமூலம், ஒகஸ்ட் 18 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.&nbsp;</p><p>இது தொடர்பிலான அறிவிப்பை, நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சரும் சட்டத்தரணியுமான ஹர்ஷன நாணயக்கார இன்று வெளியிட்டுள்ளார்.&nbsp;</p><p>நீதித்துறை திருத்த சட்டமூலமூம் அதே நாளில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்பதை நீதி அமைச்சர் உறுதிப்படுத்தியுள்ளார்.&nbsp;</p><p>

நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை நீட்டிப்பது தொடர்பான அரசாங்கத்தின் முன்மொழிவு, தொடக்கத்திலிருந்தே மகாநாயக்க தேரர்கள், இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் (BASL), எதிர்க்கட்சி அரசியல் கட்சிகள் மற்றும் பல சர்வதேச அமைப்புகள் உட்பட பலரிடமிருந்து எதிர்ப்பைச் சந்தித்தது.</p><h2>தொடர் எதிர்ப்பு&nbsp;</h2><p>

இந்த எதிர்ப்புகளையும் மீறி, நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை நீட்டிப்பது தொடர்பாக முன்மொழியப்பட்ட 22ஆவது அரசியலமைப்புத் திருத்த சட்டமூலத்தை அரசாங்கம் வர்த்தமானியில் வெளியிட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f763cd0a-2b8e-49d5-a18f-59c991da4c2f/26-6a7ed12495d13.webp' /></p><p>
</p><p>
இதற்கிடையில், முன்மொழியப்பட்ட திருத்தத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்று ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க வலியுறுத்தி வருகிறார்.&nbsp;</p><p>சட்டத்தரணிகள் சங்க தலைவர் மற்றும் பிற பிரதிநிதிகளுடனான அண்மைய சந்திப்பின்போதும் அவர் இதே நிலைப்பாட்டை வெளிப்படுத்தியிருந்தார்.&nbsp;</p><p>
இந்தப் பின்னணியில், 22ஆவது அரசியலமைப்புத் திருத்த சட்டமூலமூம், நீதித்துறை திருத்த சட்டமூலமூம் ஒகஸ்ட் 18ஆம் திகதி அன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று ஹர்ஷன நாணயக்கார உறுதிப்படுத்தியுள்ளார்.&nbsp;</p><p>
அரசியலமைப்பின்படி, ஒரு சட்டமூலம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டவுடன், அதனை உயர் நீதிமன்றத்தில் எதிர்த்து வழக்குத் தொடர 14 நாட்கள் அவகாசம் உள்ளது.</p><p>

உயர் நீதிமன்றம் அத்தகைய மனுக்களை விசாரித்து, மூன்று முதல் 21 நாட்களுக்குள் தனது தீர்ப்பை நாடாளுமன்றத்திற்குத் தெரிவிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-14T08:31:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[விஸ்வநாத் &amp; சன்ஸ்: திரைவிமர்சனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/vishwanath-and-sons-movie-review-1786695657"></link>
            <id>https://cineulagam.com/article/vishwanath-and-sons-movie-review-1786695657</id>
            <summary type="text">இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா, மமிதா பைஜூ நடிப்பில் உருவாகி இன்று வெளியாகியுள்ள &#039;விஸ்வநாத் &amp;amp; சன்ஸ்&#039; திரைப்படம் எப்படி உள்ளது என்பதை ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா, மமிதா பைஜூ நடிப்பில் உருவாகி இன்று வெளியாகியுள்ள 'விஸ்வநாத் &amp; சன்ஸ்' திரைப்படம் எப்படி உள்ளது என்பதை விமர்சனத்தில் பார்க்கலாம், வாங்க.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7ec723c1-f622-471e-b8a0-b0c3be78207c/26-6a7ecfed78936.webp' /></p><h2>கதைக்களம்</h2><p>பரம்பரை பணக்காரரான சூர்யா (சஞ்சய் விஸ்வநாத்) ஒலிம்பிக் துப்பாக்கி சுடும் போட்டியில் தங்கம் வென்று நாடு திரும்புகிறார். தனது மகன் தங்கம் வென்று வந்த மகிழ்ச்சியில் ராதிகா இருந்தாலும், 42 வயதாகியும் திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கிறானே என்கிற கவலையில் இருக்கிறார்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fb340616-744a-4d5d-a686-77b37ae5f2a9/26-6a7ed059db60d.webp' /></p><p>ஆனால், இந்த குடும்பத்திற்கு ஒரு வாரிசு வேண்டும் என்று ராதிகா தொடர்ந்து சூர்யாவிடம் கூறி வருகிறார். இதனால் வாடகைத் தாய் மூலம் குழ்நதையை பெற்றெடுக்கிறார் சூர்யா. தனது பேரனை ராதிகா மகிழ்ச்சியாக பார்த்துக்கொள்கிறார்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/91b88aa6-1887-4753-9cac-846c9f46f146/26-6a7ed05ab419d.webp' /></p><p>இந்த சமயத்தில் அந்த குழந்தைக்கு திடீரென உடல்நிலை சரியில்லாமல் போக, அவனுக்கு உடனடியாக bone marrow transplant அறுவை சிகிச்சை செய்யவேண்டும் என மருத்துவர் கூறுகிறார். ஆனால், குழந்தையின் தாயின் எலும்புதான் இதற்கு சரியாக இருக்கும், அவரை உடனடியாக அழைத்து வாருங்கள் என கூறுகிறார்கள்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ac0313bf-cfa8-4942-9236-3c5b37da7757/26-6a7ed05b6b486.webp' /></p><p>இதனால் உடனடியாக வெளிநாட்டிற்கு புறப்படும் சூர்யா, அங்கு தன் குழந்தையின் அம்மாவான மமிதா பைஜூவை சந்தித்து, சூழ்நிலையை எடுத்துக்கூறி, அவரை இந்தியாவிற்கு அழைத்து வருகிறார். குழந்தைக்காக வரும் மமிதா பைஜூவிற்கு சூர்யா மீது காதல் ஏற்படுகிறது; நான் உன்னை விட்டு எங்கும் செல்ல மாட்டேன் என அவர் கூறுகிறார். ஆனால், சூர்யா மமிதாவை ஏற்க மறுக்கிறார். சூர்யா மனம் மாறினாரா இல்லையா? இவர்களின் காதல் இணைந்ததா இல்லையா? என்பதே படத்தின் மீது கதை..
</p><h2>படத்தை பற்றிய அலசல்
</h2><p>கதாநாயகன் சூர்யா, இவருக்கு நடிப்பை சொல்லித்தர வேண்டிய அவசியமே இல்லை. வழக்கம்போல் இப்படத்திலும் தனது நடிப்பால் அனைவரையும் கவர்ந்துள்ளார். கண்டிப்பு, மறைந்திருந்து காதலை காட்டுவது, நகைச்சுவை என தனது நடிப்பால் திரைக்கதையை அழகாக கொண்டு சென்றுள்ளார். </p><p>
கதாநாயகி மமிதா பைஜூ, இப்படத்தில் சூர்யாவுக்கு நிகரான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். சுறுசுறுப்பான பெண்ணாக வரும் இவரது சேட்டைகளும் ரசிக்க வைக்கின்றன. நடிகை ராதிகா சரத்குமாரின் அனுபவ நடிப்பு படத்திற்கு மிகப்பெரிய பலம். மேலும், ரவீனா டாண்டன், சுனில் ரெட்டி உள்ளிட்ட அனைவரின் நடிப்பும் சிறப்பு.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9d526caa-2137-4b90-aa31-3bddafca6217/26-6a7ed05c2264d.webp' /></p><p>இயக்குநர் வெங்கி அட்லூரி, 20 வயது வித்தியாசம் உள்ள இருவரின் காதலை மையமாக வைத்து இப்படத்தை உருவாக்கியுள்ளார். இதில் குழந்தை, அம்மா, உறவுகள் என பல உணர்ச்சிகளை திரைக்கதையில் அடக்கிய விதம் நன்றாக இருந்தது. நகைச்சுவையாக காட்சிகளை கொண்டு சென்ற விதமும் ரசிக்க வைத்தது. </p><p>
ஆனால், திரைக்கதையில் சுவாரஸ்யம் குறைவாக இருந்தது. இதனால் சில நல்ல காட்சிகளில் கூட தொய்வு ஏற்படும்படி அமைந்துவிட்டது. மேலும், எமோஷனல் கனெக்ட் கதையோடு இன்னும் அழுத்தமாக இருந்திருக்க வேண்டும். சண்டை காட்சிகள் ஒர்ஸ்ட்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6109481a-e6ff-42e4-abe9-f1c9bf196d68/26-6a7ed05cd2e0a.webp' /></p><p>ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரிய பலம். சூர்யாவின் வீடு, மருத்துவமனை காட்சிகள், திருமண காட்சிகள் என அனைத்தையும் அழகாக காட்டியுள்ளார். ஜி.வி. பிரகாஷின் இசையில் உருவான இப்படத்தில், பட்டாம்பூச்சி மற்றும் அம்மாவுக்காக வந்த பாடலை தவிர்த்து வேறு எதுவும் மனதை தொடவில்லை. பின்னணி இசையும் இன்னும் நன்றாக இருந்திருக்கலாம்.
</p><p><b><u>பிளஸ் பாயிண்ட்ஸ்</u></b></p><p>

சூர்யா, மமிதா பைஜூ, ராதிகா சரத்குமார்</p><p> 

கதைக்களம்
</p><p>
இடைவேளை</p><p>

நகைச்சுவை காட்சிகள்</p><p>

ஒளிப்பதிவு </p><p><b><u>

மைனஸ் பாயிண்ட்</u></b></p><p>

திரைக்கதையில் சுவாரஸ்யம் குறைவு
</p><h5><b>
மொத்தத்தில், குறைகள் இருந்தாலும் இந்த 'விஸ்வநாத் &amp; சன்ஸ்' திரைப்படத்தை குடும்பத்தோடு கண்டிப்பாக பார்க்கலாம்.
&nbsp;</b></h5><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0cc11335-6656-47e4-8d0d-38203f6eead5/26-6a7ecfecc09b0.webp' /></p>]]></content>
            <updated>2026-08-14T08:23:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepachelvan</name>
            </author>
            <title type="text"><![CDATA[செஞ்சோலையில் 53 மாணவிகளை பலியெடுத்த கொடூரத்தை மறக்கத்தான் முடியுமா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/53-female-students-killed-at-sencholai-1786690356"></link>
            <id>https://ibctamil.com/article/53-female-students-killed-at-sencholai-1786690356</id>
            <summary type="text">எமது மாணவர்களுக்கு மிகுந்த சமூகப் பொறுப்பும் இனத் தார்மீகமும் இருக்கிறது. இந்த மண்ணில் தமிழ் மாணவர்கள் மாபெரும் இனப்படுகொலைகளை சந்தித்தமை நெடியதொரு வர...</summary>
            <content type="html"><![CDATA[<p>எமது மாணவர்களுக்கு மிகுந்த சமூகப் பொறுப்பும் இனத் தார்மீகமும் இருக்கிறது. இந்த மண்ணில் தமிழ் மாணவர்கள் மாபெரும் இனப்படுகொலைகளை சந்தித்தமை நெடியதொரு வரலாறு. வாழ்வு பற்றிய கனவு பிசுபிசுக்கும் அவர்களின் குருதி இந்த மண்ணில் கறையாகப் படிந்திருக்கின்றது.</p><p>இனப்படுகொலைக்கு எதிரான போராட்டக்களத்தில் மாணவர்கள் அணிதிரள்வதற்கு மாணவர்கள்மீதான படுகொலைகள் தூண்டுகோலாக இருந்தன.</p><p> பாடசாலைகள் மீதும் பள்ளி மாணவர்கள் மீதும் போரை தொடுக்கிற, குண்டுகளை கொட்டுகிற இனக்கொலை அரசின் இருண்ட பக்கங்களில் எங்கள் பெண் குழந்தைகளின் குருதியால் எழுதப்பட்டது செஞ்சோலை இனப்படுகொலை.</p><p></p><h2>இருண்ட யுகத்தின் கொடுநாள்
</h2><p>
ஒரே நாளில் ஒரு சில நிமிடங்களில் ஒருவரல்ல, இருவரல்ல 53 மாணவிகளை இனப்படுகொலைக்குப் பலிகொடுத்தது தமிழர் தேசம். சிங்களப் பேரினவாத்தின் இனக்கொலைப் பசிக்கு எங்கள் தேசத்தின் இளம் குருத்துக்களை வாரிக்கொடுத்த அந்த துயரத்தை மறக்க முடியாமல் நெஞ்சம் இன்றும் துடிக்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/801f8e6f-6561-4094-a815-969486506a01/26-6a7ecfce51aca.webp' /></p><p> </p><p>இனப்படுகொலையாலும் போராட்டத்தாலும் இளையவர்களின் குருதி சிந்திய இந்த மண்ணில் பிறக்கும் ஒவ்வொரு பிள்ளைக்கும் மண்ணுக்காகவும் அதன் மாண்புக்காகவும் வாழ்கின்ற பொறுப்பு இருக்கின்றது.</p><p>ஒகஸ்ட் 14, செஞ்சோலைப் படுகொலையின் நினைநாள். &nbsp;ஈழத் தமிழர்களின் வரலாற்றில் செஞ்சோலை மாணவர் படுகொலை மறக்க முடியாத வடு. 2006 ஆம் ஆண்டு ஒகஸ்ட் 14 ஆம் திகதி. வழக்கமான ஒரு பொழுதாக புலர்ந்தது. </p><p>நெஞ்சில் கனவுகளை சுமந்த பள்ளி மாணவிகள் முதலுதவிப் பரீட்சையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போதுதான் அந்தக் குழந்தைகள் கொன்று வீசப்பட்டனர்.</p><p> அந்த நாளே ஒரு இருண்ட யுகத்தின் நினைவுகள் போலத்தான் இருக்கின்றன. 2006 ஒகஸ்ட் 11 ஆம் திகதி சிங்கள அரசு வடக்கிற்கான பாதையை மூடி வடக்கை தனியொரு நாடாக துண்டித்து வலிந்த போரைத் தொடங்கியது.</p><p></p><h2>பாடசாலைகள்மீது குண்டு வீச்சு
</h2><p>
யாழ்ப்பாண மக்கள் பசியிலும் இருட்டிலும் துடித்த நாட்கள். சமாதான ஒப்பந்தம் நடைமுறையிலிருந்த காலம் ஏற்கனவே அவ்வப்போது, விடுதலைப் புலிகளின் நிலைகளை தாக்குவதாக சொல்லிக் கொண்டு வடக்கிலும் கிழக்கிலும் விமானததாக்குதல்களை சிங்கள அரசின் விமானப்படைகள் மேற்கொண்டு வந்தன. </p><p>போர் நிறுத்த ஒப்பந்தம் நடைமுறையில் இருந்தபோதும், விமானத்தாக்குதல்கள் பாடசாலைகளை அண்டியும் வீடுகள்மீதும் நடந்தன.

எல்லாம் புலிகளின் முகாம்கள் என்றே அரசால் கூறப்பட்டது. </p><p>இதனை வெறுமே பதிவு செய்து கொண்டிருந்தது போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு. தாம் இத்தகைய தாக்குதல்களை நடத்தினாலும் சர்வதேசத்தினாலும், போர் நிறுத்தக் கண்காணிப்பு குழுவினாலும் எதுவும் செய்ய முடியாது என்ற தைரியம் சிங்கள அரசுக்கு ஏற்பட்டது.</p><p></p><h2>இவர்களா பயங்கரவாதிகள்?</h2><p>

இதனால் ஒன்றல்ல இரண்டல்ல, 53 மாணவிகளை கொன்று கின்னஸ் சாதனை பதிக்கும் முயற்சியில் சிங்கள அரசு ஈடுபட்டு வெற்றி பெற்றது. உலகிலேயே ஒரே தடைவையில் அதிக பெண்கள் கொல்லப்பட்ட கொடூரச் செயல் செஞ்சோலைப் படுகொலையாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/956e1999-0f77-4a87-a2e2-cabda3743e67/26-6a7ecfcf0a208.webp' /></p><p> உலகிலேயே அதிக மாணவிகள் கொல்லப்பட்ட கொடூரச் செயல் செஞ்சோலைப் படுகொலையாகும். உலகிலேயே அதிக சிறுவர்கள் கொல்லப்பட்ட மனித விரோதச் செயல் செஞ்சோலைப் படுகொலையாகும்.
</p><p>
கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்ட பாடசாலை மாணவர்களுக்கு, வலயக் கல்வி அலுவலம் ஊடாக உரிய அனுமதி பெறப்பட்டு, தலைமைத்துவ அனர்த்த முகாமைத்துவப் பயிற்சி நடாத்தப்பட்டது. </p><p>இப் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பள்ளி மாணவர்கள்மீதுதான் சிங்கள அரசின் இன அழிப்பு விமானங்கள் தாக்குதல்களை நடாத்தினர். </p><p>இதில் சுமார் 50 மாணவிகள் ஸ்தலத்திலேயே கொல்லப்பட்டனர் அத்துடன் சில மாணவிகள் வவுனியா வைத்தியசாலைக்கும் கண்டி வைத்தியசாலைக்கும் கொண்டு செல்லப்பட்டார்கள். கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவியை அச்சுறுத்தி, அவரிடம் பொய்யான வாக்குமூலங்களை பெற்றது சிங்கள அரச ஊடகம்.</p><p></p><h2>மகிந்தவின் பதில்
</h2><p>
இறுதியில் அந்த மாணவியையும் அங்கு வைத்து கொன்றது. இந்த தாக்குதல் குறித்து அப்போதைய ஜனாதிபதி, தமிழ் இனப்படுகொலை மகிந்த ராஜபக்ச அன்றே வெளிநாட்டில் இருந்து என்ன கூறினார் தெரியுமா? செஞ்சோலையில் ஐம்பதிற்கும் மேற்பட்ட மாணவிகள் கொல்லப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d4273ba0-2045-41a8-99dc-34692a6d75d9/26-6a7ecfcfb51be.webp' /></p><p> இது குறித்து என்ன சொல்கிறீர்கள் என்று ஒரு சர்வதேச ஊடகவியலாளர் மகிந்த ராஜபக்சவிடம் கேட்டார். அதற்குப் பதில் அளித்த மகிந்த ராஜபக்ச, அவர்கள் புலிகள், அவர்கள் பயங்கரவாதிகள், அத் தாக்குதல் எனக்கு நூறு வீத திருப்தியை தருகின்றது.
</p><p>
நாங்கள் பயங்கரவாதிகளைத்தான் அழித்து வருகிறோம் என்று கூறினார். அந்தப் பிஞ்சு முகங்களை பார்த்து, மாணவிகளைப் பார்த்து மகிந்த ராஜபக்ச கூறினார் பயங்கரவாதிகள் என்று, புலிகள் என்று. </p><p>போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு மற்றும் ஐ.நா அதிகாரிகள் இந்த விடயம் தொடர்பில் ஆராய்ந்தனர். அவர்கள் பாடசாலை மாணவர்கள் என்றும் தலைமைத்துவ பயிற்சிக்காக ஒன்றிணைந்த போது அரச விமானங்கள் தாக்கி கொல்லப்பட்டனர் என்பதையும் பதிவு செய்தார்கள். இப்படுகொலை நடைபெற்று, ஓராண்டு.</p><p>நாங்கள் பயங்கரவாதிகளைத்தான் அழித்து வருகிறோம் என்று கூறினார். அந்தப் பிஞ்சு முகங்களை பார்த்து, மாணவிகளைப் பார்த்து மகிந்த ராஜபக்ச கூறினார் பயங்கரவாதிகள் என்று, புலிகள் என்று.</p><p> போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு மற்றும் ஐ.நா அதிகாரிகள் இந்த விடயம் தொடர்பில் ஆராய்ந்தனர். அவர்கள் பாடசாலை மாணவர்கள் என்றும் தலைமைத்துவ பயிற்சிக்காக ஒன்றிணைந்த போது அரச விமானங்கள் தாக்கி கொல்லப்பட்டனர் என்பதையும் பதிவு செய்தார்கள். இப்படுகொலை நடைபெற்று, ஓராண்டு.</p><p></p><h2>வாய்மூடி இருந்த சர்வதேசம்
</h2><p>
தமிழீழத் தேசியத் தொலைக்காட்சிக்காக ஒரு ஆவணப்படத்தை தயாரிப்பதற்காக அந்த மாணவிகளின் வீடுகளுக்குச் சென்றேன். </p><p>அவர்களின் பெற்றோர்கள் உறவினர்கள், நண்பர்களை சந்தித்தேன். பாடசாலை அதிபர்களிலிருந்து ஆசிரியர்களிலிருந்து காயப்பட்ட மாணவர்கள்வரை அந்த அதிர்ச்சியில் இருந்து மீள முடியாதிருந்தனர். </p><p>காலில் பெரும் காயத்தை அடைந்த மாணவி ஒருவர் பேசமுடியால் அழுத காட்சி இப்போதும் பெருவலி தருகின்றது. அவரும் முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்டார். அப் படுகொலை குறித்த ஆவணப்படத்தில் வாக்குமூலம் அளித்த மூன்று மாணவிகள் முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்டார்கள்.&nbsp;</p><p>53 மாணவிகளும் நன்றாக படிக்கக்கூடியவர்கள். சமூகத்தில் உயர்ந்த நிலையில் இருக்க கூடியவர்கள். இன்றிருந்தால், வைத்தியர்களாக, பொறியியலாளர்களாக, ஆசிரியர்களாக, தலைவர்களாக நம் சமூகத்திற்கு தொண்டாற்றியிருப்பார்கள்.</p><p> இந்த சமூகத்தை நடத்தியிருப்பார்கள். அவர்களை அழிப்பதும் இல்லாமல் செய்வதும்தான் சிங்கள அரசின் வேலை என்பதைதான் இப்படுகொலையும் உணர்த்துகின்றது.</p><h2>நீதிக்காக ஏங்கும் நிலம்
</h2><p>
கல்வி உரிமைக்காகப் போராடினோம். வேலை வாய்ப்புக்காக போராடினோம். ஆனால் சிங்கள அரசோ எமது மாணவர்களை பள்ளிக்கூடங்களில் வைத்தே படுகொலை செய்தது. சந்திரிக்கா அரசு நாகர் கோவில் பாடசாலையில் விமானத்தாக்குதல் நடத்தியதில் 39 மாணவச் சிறுவர்கள் கொல்லப்பட்டார்கள். </p><p>மகிந்த அரசு சமாதான ஒப்பந்தத்தை நடைமுறையில் வைத்துக் கொண்டு 53 மாணவிகளைப் படுகொலை செய்தது.</p><p>இது குறித்து சர்வதேச சமூகம் எந்த கண்டனங்களையும் விடுக்கவில்லை. </p><p>அப்படியிருந்தால் கொத்துக் கொத்தாக மாணவர்களையும் மக்களையும் முள்ளிவாய்க்காலில் இனப்படுகொலை செய்யும் துணிவு சிங்கள அரசுக்கு வருமல்லவா? இன்றைய இளைய தலைமுறை இளைஞர்கள், யுவதிகள், சிறுவர்கள் இந்தப் படுகொலைக்கான நீதிக்காக ஏங்குகிறார்கள். அது அவர்களின் எதிர்காலத்திற்கான பாதுகாப்பு குறித்ததும் ஆகும். </p><p>இவைகளுக்கான நீதி முன்வைக்கப்படுகிற நாளித்தான் &nbsp;இப்படுகொலையின் வடுக்கள் மறையக்கூடும். நினைவு கூர்தல் என்ற போராட்டத்தின் வழியாக செஞ்சோலைப் பிள்ளைகளுக்கு நீதியை அஞ்சலியாக்குவோம்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-14T08:21:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[நடிகை பவித்ரா லட்சுமியின் பாத்டப் புகைப்படங்கள் இதோ..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/pavithra-lakshmi-recent-bothdub-photoshoot-1786695808"></link>
            <id>https://viduppu.com/article/pavithra-lakshmi-recent-bothdub-photoshoot-1786695808</id>
            <summary type="text">பவித்ரா லட்சுமிநடிகை பவித்ரா லட்சுமி, விஜய் தொலைக்காட்சியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர். நாய் சேகர் திரைப்படத்தில் நடிகர் சதீஷ் ...</summary>
            <content type="html"><![CDATA[<h2>பவித்ரா லட்சுமி</h2><p>நடிகை பவித்ரா லட்சுமி, விஜய் தொலைக்காட்சியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர். நாய் சேகர் திரைப்படத்தில் நடிகர் சதீஷ் உடன் இணைந்து கதாநாயகியாக நடித்துள்ளார். அதை தொடர்ந்து, சில படங்களில் நடித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/13a3ed46-78ae-4287-a083-4d4ac117c7af/26-6a7ed08dbb3e1.webp' /></p><p>பவித்ரா லட்சுமி சமீப காலமாக உடல் மெலிந்து காணப்படும் நிலையில், தற்போது அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வண்ணம் பழைய நிலைக்கு மாறியிருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.</p><p>
தற்போது, பாத்டப்பில் ஹாயாக உட்கார்ந்து கிளாமர் போஸ் கொடுத்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-08-14T08:15:00+00:00</updated>
        </entry>
    </feed>
