<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-08-10T14:03:23+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாமல் ராஜபக்ச -சரித் அபேசிங்க ஆகியொருக்கிடைலான நட்பு! அம்பலமாகியுள்ள பல இரகசிய தகவல்கள்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-rajapaksa-charith-abeysinghe-1786368679"></link>
            <id>https://tamilwin.com/article/namal-rajapaksa-charith-abeysinghe-1786368679</id>
            <summary type="text">&amp;nbsp;போதைப்பொருள் கடத்தல்காரர் எனக் கூறப்படும் &#039;ஹரக் கட்டா&#039; என்பவரின் மனைவியிடம் இருந்து 12 கோடி ரூபா இலஞ்சம் பெற்ற சம்பவம் தொடர்பில் சிறையில் இருந்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;போதைப்பொருள் கடத்தல்காரர் எனக் கூறப்படும் 'ஹரக் கட்டா' என்பவரின் மனைவியிடம் இருந்து 12 கோடி ரூபா இலஞ்சம் பெற்ற சம்பவம் தொடர்பில் சிறையில் இருந்து பிணையில் வந்துள்ள சரித் அபேசிங்க முதன் முறையாக வலையொளி தளமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் தனக்கும் ராஜபக்ச குடும்பத்திற்கும் குறிப்பாக நாமல் ராஜபக்சவுடன் இருந்த நெருங்கிய தொடர்பு மற்றும் அவரிடம் இணைந்து பணியாற்றிமை தொடர்பில் முதல் முதலாக பல திடுக்கிடும் தகவல்களை தெரிவித்துள்ளார்.
</p><p> 2005-இல் தான் எனக்கு அரசியலில் முதல் நண்பர்கள் கிடைக்கிறார்கள். லண்டனில் நாமல் ராஜபக்ச. அவர் 2005-இல் இலங்கையிலிருந்து லண்டனுக்கு வருகிறார். அதற்குப் பிறகு 2006 முதல் 2008 வரையான காலப்பகுதியை நான் அவர்களோடுதான் கழித்தேன்.
</p><h2>
</h2><p></p><h2>லண்டனில் நெருக்கமான நாமலின் உறவு</h2><p>அதன் பின்னர் 2009 ஆம் ஆண்டு வரும்போது நான் திரைப்படம் தயாரிப்பில் ஈடுபட்டிருந்தேன். அந்தத் திரைப்படத்தின் பிரீமியர்&nbsp; காட்சிப் புகைப்படங்கள் வலையொளி தளத்தில்&nbsp; இருக்கின்றன. </p><p>அந்த பிரீமியர் காட்சியில் நாமல் உட்பட்ட அன்றைய அரசியல்வாதிகள் பலர் கலந்து கொண்டிருந்தனர்.
அந்த நேரத்தில் நான் இலங்கையின் கலாசாரக் குழுவில் இருந்தேன். மகிந்த யாப்பா அபேவர்தன என்னுடன் லண்டன் வந்தார். </p><p>அந்தச் சமயத்தில் ரன்மிதன்ன திரைப்பட கிராமம் தொடங்கப்பட்டிருந்தது. அதன் முதல் தலைவராக நான் இருந்தேன். ஆனால் இரண்டு மூன்று மாதங்களில் அவர்கள் என்னை அதிலிருந்து நீக்கினார்கள். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/439c6cae-2804-485a-a932-5363c9d24a0a/26-6a79d2a977344.webp' /></p><p>இளம் வயதான எனக்கு குறித்த பதவி பொறுத்தமில்லை என்ற வாதம் வலுப்பட்டது.
அப்போது மகிந்த ராஜபக்ச என்னை அழைத்து "சரித்இ நீங்கள் குடும்பத்திற்குத் தெரிந்த ஒருவர். </p><p>நீங்கள் என்னோடு கோபித்துக் கொண்டால் என்னால் அரசியல் செய்ய முடியும். ஆனால் எனது பங்குதாரர்கள் கோபித்துக் கொண்டால் என்னால் இந்த நேரத்தில் அரசியல் செய்ய முடியாது. </p><p>அதனால் நீங்கள் இதிலிருந்து விலகிக் கொள்ளுங்கள்" என்று கூறினார். நான் சரி என்று சொன்னேன்.
நாமல் ராஜபக்ச இன்னும் உயிரோடுதான் இருக்கிறார் அவரிடம் கேட்கலாம். </p><p>எனக்கும் நாமலுக்கிடையே மிக நெருக்கமான ஒரு நட்பு ரீதியான தொடர்பு மட்டுமே இருந்தது. எனக்கு அரசியல் செய்ய வேண்டும் என்ற நோக்கம் இருந்திருந்தால் அன்றே அவர்களிடம் சொல்லியிருக்கலாம் "மச்சான் எனக்கு அரசியல் செய்ய வேண்டும்" என்று. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/477d1bdc-e96c-493c-8ea5-b798600afc49/26-6a79d2aa28255.webp' /></p><p>2010ல் நாமல் முதல் முதலில் தேர்தலில் போட்டியிடும் போது முழுநேரப் பிரசாரத்தில் ஈடுபட்டேன்.பிரசாரத்தை முடித்துவிட்டே சென்றேன்.</p><p>நான் சமீபத்தில் தேர்தலில் போட்டியிடுகிறேன் என்று சொன்னவுடனேயே நாமலிடமிருந்து வந்த முதல் அழைப்பு "அடேய் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று இவ்வளவு நாளாக என்னிடம் சொல்லவே இல்லையே?" என்பதுதான். </p><p>நான் சொன்னேன் "உண்மையிலேயே எனக்கு அப்படி ஒரு எண்ணம் அப்போது இருக்கவில்லை" என்று குறிப்பிட்டிருந்தார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-10T13:57:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[முன்னாள் அமைச்சரின் பேச்சுக்கு குலுங்கி குலுங்கி சிரித்த முதல்வர் விஜய்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/cm-vijay-laugh-in-assembly-for-ex-minister-speech-1786369549"></link>
            <id>https://ibctamilnadu.com/article/cm-vijay-laugh-in-assembly-for-ex-minister-speech-1786369549</id>
            <summary type="text">திமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் சட்டசபையில் பேசியபோது அதனை கேட்டு முதல்வர் விஜய் குலுங்கி குலுங்கி சிரித்தார். 

குலுங்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>திமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் சட்டசபையில் பேசியபோது அதனை கேட்டு முதல்வர் விஜய் குலுங்கி குலுங்கி சிரித்தார்.</p><h3> 

குலுங்கி குலுங்கி சிரித்த முதல்வர் விஜய்</h3><p> 

தமிழக சட்டமன்றத்தில் பட்ஜெட் கூட்ட தொடரின் 5வது நாளான இன்று நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண் மீதான விவாதம் நடைபெற்றது.
</p><p>
இதில் பேசிய திமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், "நீங்கள் எல்லாம் பேப்பரை படிக்கவில்லையா? என்று அன்றைக்கு முதல்வர் சொன்னது எங்களுக்கு வருத்தம்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a318ad98-914b-4160-a387-d6fd1ba88338/26-6a79d60e81917.webp' /></p><p>

நாங்கள் திராவிட இயக்கம், பேசி பேசி ஆட்சியை பிடித்த இயக்கம். கலைஞர் காலத்திலும் சரி, மு.க.ஸ்டாலின் காலத்திலும் சரி அமைச்சர்களுக்கெல்லாம் ஒரு பதபதப்பு இருக்கும். 

ஏனென்றால் காலையிலேயே பேப்பரை படித்து எங்களுடைய தலைவர்கள் அந்த துறையினுடைய அதிகாரிகளுக்கும் அமைச்சர்களுக்கு நேரடியாக பேசுவார்கள். </p><p>அந்த துறை அமைச்சர்களை தொடர்பு கொண்டு பிரச்சனைகளை சரி செய்ய சொல்வார்கள். 

எனவே ஒரு டென்ஷனிலேயே 5 ஆண்டு காலம் ஆட்சி செய்தோம். ஆனால் நீங்கள் ரொம்ப ரிலாக்‌ஷாக இருக்கிறீர்கள், அது தான் ஆச்சரியமாக இருக்கிறது” என்று கூறினார். </p><p>

இதற்கு பதிலளித்த நீர்வளத்துறை அமைச்சர் என்.ஆனந்த், "எங்களுடைய முதல்வர் சின்ன வாய்க்கால் பிரச்சனைக்கு கூட போன் அடித்து அதை உடனே சரி செய்துவீட்டீர்களா என்று கேட்கிறார். நீங்களாவது 5 வருடம் தான் டென்ஷனாக இருக்கிறீர்கள், நாங்கள் தினந்தோறும் டென்ஷனில் இருக்கிறோம்” என்று கூறினார்.</p><p>
இதன் பின்னர் பேசிய எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் எங்கள் ஆட்சியில் விவசாயிகள் போராட்டம் நடைபெற்றதில்லை என பேசினார். </p><p>

இதற்கு பதிலளித்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், "கடந்த ஆட்சியில் நெல் சேமிப்பு கிடங்கு ஏன் அமைக்கவில்லையென்று தொடர்ந்து விவசாயிகள் கேட்டு போராடிக்கொண்டிருந்தார்கள்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/54f8a86f-8c6c-437f-839a-467c0eb6d205/26-6a79d60f33e84.webp' /></p><p>

குறிப்பாக, விவசாயிகளை பட்டியலைப் போட்டவர். ஒரு முக்கியமான விவசாயியை மறந்துவிட்டார். கரும்புத் தோட்டத்தில் கான்கீரிட் போட்டு நடந்த விவசாயி பற்றி அவர் சொல்ல மறந்துவிட்டார் என முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்து மறைமுகமாக விமர்சித்தார்.</p><p> 

இதற்கு பதிலளித்த எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், "இப்பதான் தெரியுது. நீங்க எப்படியெல்லாம் பிரச்சாரம் பண்ணிருக்கீங்கன்னு, மாண்புமிகு சாமி அமைச்சர், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்" என்று கூறினார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/65767026-a77a-4c9c-87f6-fa25ebb02790/26-6a79d60fd8763.webp' /></p><p>

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் எனக்கூறுவதற்கு பதிலாக சாமி அமைச்சர் எனகுறிப்பிட்டதும் அவையில் சிரிப்பலை எழுந்தது. முதல்வர் விஜய்யும் அதனை கேட்டு குலுங்கி குலுங்கி சிரித்தார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-10T13:46:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆகஸ்ட் 12-ஆம் திகதி வானில் நிகழவிருக்கும் 4 அரிய நிகழ்வுகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/rare-sky-events-align-on-august-12-1786369416"></link>
            <id>https://news.lankasri.com/article/rare-sky-events-align-on-august-12-1786369416</id>
            <summary type="text">Four rare sky events to light up Aug 12: ஆகஸ்ட் 12-ஆம் திகதி வானில் 4 அதிசய நிகழ்வுகள் நடக்கவுள்ளன.

வரும் புதன்கிழமை (ஆகஸ்ட் 12) வானில் நான்கு அரிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>Four rare sky events to light up Aug 12: ஆகஸ்ட் 12-ஆம் திகதி வானில் 4 அதிசய நிகழ்வுகள் நடக்கவுள்ளன.
</p><p>
வரும் புதன்கிழமை (ஆகஸ்ட் 12) வானில் நான்கு அரிய விண்வெளி நிகழ்வுகள் ஒரே நாளில் நடைபெற உள்ளன. இதனால் உலகம் முழுவதும் வானியல் ஆர்வலர்கள் பெரும் உற்சாகத்தில் உள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c356b195-a034-4b16-9dbf-a23f5c2deee3/26-6a79d663ed5b5.webp' /></p><p>
</p><h2>
6 Planet Parade
</h2><p>
முதலில், அதிகாலை நேரத்தில் ஆறு கோள்களின் பேரணி (Planet Parade) நிகழும். வியாழன், புதன், செவ்வாய், சனி, யுரேனஸ் மற்றும் நெப்டியூன் ஆகிய ஆறு கோள்கள் வானில் ஒரே வரிசையில் தோன்றும். இதில் வியாழன், புதன், செவ்வாய், சனி ஆகியவை கண்களுக்கு எளிதில் தெரியும். ஆனால் யுரேனஸைக் காண பைனாக்குலர் தேவைப்படும். நெப்டியூனை காண தொலைநோக்கி அவசியம்.</p><p></p><p>
</p><h2>
முழு சூரிய கிரகணம்
</h2><p>
அதன்பின், முழு சூரிய கிரகணம் (Total Solar Eclipse) நிகழும். சந்திரன், பூமி மற்றும் சூரியன் இடையே நேரடியாக வந்து, சூரியனை முழுமையாக மறைக்கும். இந்த கிரகணம் கிரீன்லாந்து, ஐஸ்லாந்து மற்றும் ஸ்பெயின் பகுதிகளில் முழுமையாகக் காணப்படும். ஐரோப்பா, ஆப்ரிக்கா மற்றும் வட அமெரிக்காவின் சில பகுதிகளில் பகுதி கிரகணம் தெரியும். இந்தியாவில் இது இரவு நேரத்தில் நிகழுவதால் காண முடியாது.</p><p></p><p>
</p><h2>
New Moon</h2><p>

அதே நாளில், புதிய நிலவு (New Moon) நிகழும். இதனால் வானம் மிகவும் இருண்டதாக இருக்கும். இது விண்வெளி ஆர்வலர்களுக்கு விண்மீன்கள் (meteors) தெளிவாகக் காண சிறந்த வாய்ப்பாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4caa4eda-24a5-4f79-b04b-b1c6ca478624/26-6a79d664a2af8.webp' /></p><p>
</p><h2>
விண்மீன் மழை
</h2><p>
இறுதியாக, பெர்செய்ட் விண்மீன் மழை (Perseid Meteor Shower) உச்சத்தை அடையும். ஆண்டுதோறும் நிகழும் இந்த விண்மீன் மழை, ஆகஸ்ட் மாதத்தில் அதிகமாகக் காணப்படும். இருண்ட வானத்தில், நூற்றுக்கணக்கான விண்மீன்கள் வானில் பாயும் காட்சி, பார்ப்பவர்களுக்கு மறக்க முடியாத அனுபவமாக இருக்கும்.
</p><p>
இந்த நான்கு நிகழ்வுகளும் ஒரே நாளில் நடைபெறுவது மிகவும் அரிதானது. வானியல் ஆர்வலர்கள், தொலைநோக்கி, பைனாக்குலர் போன்ற கருவிகளுடன் தயாராகி, இந்த அற்புதமான விண்வெளி நிகழ்வுகளை ரசிக்கத் தயாராக உள்ளனர்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-10T13:44:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[செம்மணி புதைகுழியிலிருந்து மீட்கப்பட்ட கைவளையல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/chemmani-mass-graves-jaffna-1786368112"></link>
            <id>https://ibctamil.com/article/chemmani-mass-graves-jaffna-1786368112</id>
            <summary type="text">&amp;nbsp;செம்மணி மனித புதைகுழியின் 102 ஆவது நாள் அகழ்வு பணிகள் இன்றைய தினம்
திங்கட்கிழமை முன்னெடுப்பட்டன.

இதுவரையிலான 102 நாட்கள் முன்னெடுக்கப்பட்ட அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;செம்மணி மனித புதைகுழியின் 102 ஆவது நாள் அகழ்வு பணிகள் இன்றைய தினம்
திங்கட்கிழமை முன்னெடுப்பட்டன.</p><p>

இதுவரையிலான 102 நாட்கள் முன்னெடுக்கப்பட்ட அகழ்வு பணியில் 524 என்புக்கூடுகள்
அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், 513 என்புக்கூடுகள் அகழ்ந்து
எடுக்கப்பட்டுள்ளது.</p><p>செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை 56 நாட்கள்
முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், 48ஆவது நாளான இன்றைய தினம்
திங்கட்கிழமை 09 என்பு கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் ,
ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட 07 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.</p><h2>மீட்கப்பட்ட சான்றுப்பொருட்கள்</h2><p>
</p><p>
அத்துடன் மாட்டின் காலில் அடிக்கப்பட்டும் லாடம் ஒன்றும், கை வளையல் ஒன்றும்
சான்று பொருளாக மீட்கப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/962e6ad2-3943-4690-8057-6c67a13478e1/26-6a79d532072df.webp' /></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-10T13:42:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[எப்படியாவது நிலைத்து நின்று ஆட வேண்டும்: வங்காளதேசத்திற்கு எதிராக எச்சரிக்கையுடன் டிராவிஸ் ஹெட்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/travis-head-alert-for-bangladesh-test-series-1786369402"></link>
            <id>https://news.lankasri.com/article/travis-head-alert-for-bangladesh-test-series-1786369402</id>
            <summary type="text">வங்காளதேசத்திற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் நிச்சயமாக ஓட்டங்கள் குவிக்க வேண்டும் என டிராவிஸ் ஹெட் தெரிவித்துள்ளார்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிக...</summary>
            <content type="html"><![CDATA[<p>வங்காளதேசத்திற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் நிச்சயமாக ஓட்டங்கள் குவிக்க வேண்டும் என டிராவிஸ் ஹெட் தெரிவித்துள்ளார்.</p><p>

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகளுக்காக விளையாடுகிறோம்; நிச்சயமாக ஓட்டங்கள் குவிக்க வேண்டும் என வங்காளதேச டெஸ்ட் தொடர் குறித்து அவுஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட் தெரிவித்துள்ளார். </p><h2>

டிராவிஸ் ஹெட் </h2><p>வங்காளதேசத்திற்கு எதிரான பயிற்சி டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி இன்னிங்ஸ் மற்றும் 38 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0924b643-b5fa-49b5-a185-738858a048b5/26-6a79d57ebabe5.webp' /></p><p></p><p>
இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி டார்வினில் 13ஆம் திகதி தொடங்குகிறது. </p><p>இதன்மூலம் அவுஸ்திரேலிய அணி தனது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரை மீண்டும் தொடங்குகிறது.</p><p>

அவுஸ்திரேலியாவின் தொடக்க வீரரான டிராவிஸ் ஹெட் (Travis Head) இந்த தொடரின் அழுத்தம் குறித்து எச்சரிக்கையுடன் இருக்கிறார். </p><h2>

நான் நிச்சயம் ஓட்டங்கள் குவிக்க வேண்டும்</h2><p>அவர் கூறுகையில், "நடக்கவிருக்கும் நிகழ்வுகள் மீது மிகுந்த கவனம் இருக்கும் - இது ஒரு டெஸ்ட் போட்டி, மேலும் இதில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகளுக்காக நாங்கள் விளையாடுகிறோம். 

சில சமயங்களில் வலிமையான அணிகளுக்கு எதிராக விளையாடும்போது, ஒருவித எதிர்பார்ப்புடன் களமிறங்குவோம். </p><p>

அப்போது எப்படியாவது இந்தப் போட்டியில் நிலைத்து நின்று ஆட வேண்டும் என்ற எண்ணமே மேலோங்கியிருக்கும். 

ஆனால், வங்காளதேசம் போன்ற அணிகளுக்கு எதிராக விளையாடும்போது நிலைமை மாறுபடும். </p><p>அந்த அணி சமீபத்தில் எதிர்கொண்ட சூழல் மற்றும் நான் நிச்சயம் ஓட்டங்கள் குவிக்க வேண்டும் என்ற சுய எதிர்பார்ப்பு ஆகியவை ஒருவித நெருக்கடியை உருவாக்கும். </p><p>ஓட்டங்கள் எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் களமிறங்குவது சில சமயங்களில் மிகவும் சவாலானதாக அமையும். 

ஏனெனில், கிரிக்கெட் ஒரு கடுமையான விளையாட்டு. </p><p>எனவே, வரவிருக்கும் குறுகிய காலத்திலும், குறிப்பாக இந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும், எதிர்பார்ப்புகளைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொள்வதே முக்கியம் என்று நான் கருதுகிறேன்" என தெரிவித்துள்ளார்.&nbsp; &nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3d0f3cce-c5a8-4434-a984-f2e437ece768/26-6a79d57e10709.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-10T13:41:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[கைதிகளுக்கு புனர்வாழ்வு வழங்குவதற்கான திட்டங்கள் முன்னெடுப்பு; சிறைச்சாலைகள் திணைக்களம் தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/prisons-department-information-1786366668"></link>
            <id>https://tamilwin.com/article/prisons-department-information-1786366668</id>
            <summary type="text">தண்டனை விதிக்கப்பட்ட 4962 கைதிகளில் 1492 பேருக்குப் புனர்வாழ்வுத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகிறதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.நீதிமன்றத்தினால் உத்...</summary>
            <content type="html"><![CDATA[<p>தண்டனை விதிக்கப்பட்ட 4962 கைதிகளில் 1492 பேருக்குப் புனர்வாழ்வுத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகிறதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.</p><p>நீதிமன்றத்தினால் உத்தரவிடப்பட்டவர்களுக்கும், தன்னிச்சையாக முன்வரும் கைதிகளுக்குமே இவ்வாறு புனர்வாழ்வு வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p>பல்வேறு வழக்குகளுடன் தொடர்புபட்ட தண்டனைக் கைதிகளுக்குப் புனர்வாழ்வு அளிப்பதற்கான வாய்ப்புக்கள் தமக்கு இல்லை என சிறைச்சாலைகள் திணைக்களத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p> ஆளுகை, நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் முன்னிலையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><h2>விரிவாக கலந்துரையாடப்பட்ட விடயம்</h2><p>
நாட்டில் சிறைச்சாலைகளில் ஏற்படும் நெரிசலைக் குறைக்கும் நோக்கில் போதைக்கு அடிமையானவர்களுக்குப் புனர்வாழ்வளிக்கும் செயற்பாட்டை மேலும் வலுப்படுத்துவது குறித்து ஆளுகை, நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/87349493-72c0-49f8-a45f-e4e4626573a8/26-6a79d31820c03.webp' /></p><p>
</p><p>சிறைச்சாலைகள் திணைக்களம், சமுதாயம் சார் சீர்திருத்தத் திணைக்களம், புனர்வாழ்வுப் பணியகம், தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை ஆகிய அரசாங்க நிறுவனங்களினால் புனர்வாழ்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக அதிகாரிகள் குழுவில் விளக்கமளித்தனர்.
</p><p>போதைக்கு அடிமையானவர்களை அதிலிருந்து மீட்பதற்குத் தேவையான புனர்வாழ்வுச் செயற்பாடுகளை முன்னெடுத்திருப்பதாகத் தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் அதிகாரிகள் தெரிவித்தனர்.</p><h2>வகுக்கப்பட்டுள்ள திட்டங்கள்</h2><p> </p><p>இதற்குத் தேவையான அதிகாரிகளைச் சேவையில் இணைத்து, நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் பிரதேச செயலகப் பிரிவுகளில் இதற்கான நடவடிக்கைகளை வலுப்படுத்தும் திட்டங்கள் வகுக்கப்பட்டிருப்பதாகச் சுட்டிக்காட்டினர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ac1890ca-495a-438f-947e-e5940b503f4f/26-6a79d318cb977.webp' /></p><p>
</p><p>
புனர்வாழ்வு அளிக்கப்பட்டவர்களுக்குச் சமூகத்தில் காணப்படும் வரவேற்பு மற்றும் அவ்வாறானவர்களுக்கு நற்சான்றிதழ் வழங்குவதில் காணப்படும் குறைபாடுகள் குறித்து இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.</p><p> 

புனர்வாழ்வு நடவடிக்கைகளைத் திறமையான முறையில் முன்னெடுப்பதற்குச் சட்ட திட்டங்களில் மாற்றங்கள் கொண்டுவரப்படவேண்டியதன் அவசியமும் இங்கு வலியுறுத்தப்பட்டது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-10T13:39:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிளிநொச்சி ரீச்சா கேளிக்கை பூங்காவில் என்ன தவறு நடந்தது?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/kilinochchi-reecha-food-festival-what-went-wrong-1786355875"></link>
            <id>https://jvpnews.com/article/kilinochchi-reecha-food-festival-what-went-wrong-1786355875</id>
            <summary type="text">&amp;nbsp; கிளிநொச்சி ரீச்சாவில் இடம்பெற்ற உணவு திருவிழா இடை நடுவில் நிறுத்தப்பட்ட சம்பவம் சமூக வலைத்தளங்களில் பெரும் பேசுபொருளாகியுள்ளது. 

குறித்த சம்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; கிளிநொச்சி <a href="https://jvpnews.com/article/reecha-food-festival-suspended-1786270923" target="_blank">ரீச்சாவில் இடம்பெற்ற உணவு திருவிழா</a> இடை நடுவில் நிறுத்தப்பட்ட சம்பவம் சமூக வலைத்தளங்களில் பெரும் பேசுபொருளாகியுள்ளது. 

குறித்த சம்பவம் தொடர்பில் சர்வதேச மனித உரிமை ஆர்வலர் முஹீத் ஜீரன் தனது முக நூலில் பதிவிட்டுள்ளதாவது,</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2e21cb00-9f80-49b9-8b6c-6ff7b62331bf/26-6a79a0a4b4956.webp' /></p><p><b> 

கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள பி.கே.யின் ரீச்சா கேளிக்கை பூங்காவில் என்ன தவறு நடந்தது?
</b></p><p>&nbsp;ரீச்சா கேளிக்கை பூங்கா மற்றும் உல்லாச விடுதி (ரீச்சா இயற்கை பண்ணை) என்பது இலங்கையின் கிளிநொச்சியில் அமைந்துள்ள 150 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஒரு சூழல் சுற்றுலா மற்றும் இயற்கை வேளாண் திட்டமாகும்.
</p><p>
 டிஸ்னிலேண்ட் பாணியிலான இந்தப் பூங்காவை, பி.கே. என அறியப்படும் பாஸ்கரன் கந்தையா என்ற இலங்கை-டச்சு தொழிலதிபர் 2018-ல் நிறுவினார். பி.கே., ஆறு நாடுகளில் செயல்படும் ஒரு ஐரோப்பிய தொலைத்தொடர்பு நிறுவனமான லெபாரா குழுமத்தின் இணை நிறுவனர் மற்றும் இயக்குனர் ஆவார். </p><p>மேலும், லண்டனைத் தளமாகக் கொண்ட பிரபலமான தமிழ் தொலைக்காட்சி அலைவரிசையான ஐபிசி தமிழின் தாய் நிறுவனமான லண்டன் தமிழ் மீடியாவின் தலைவராகவும் அவர் உள்ளார். </p><p>அண்மையில் அவர் தமிழ்வின், லங்காஸ்ரீ, சினியுலகம், மனிதன், ஐபிசி தமிழ், எல்பிசி தமிழ், விடுதலை, கனடாமிரர் மற்றும் ஜேவிபி நியூஸ் ஆகிய இணையதளங்களையும் வாங்கியதோடு, தமிழ் ஊடக சாம்ராஜ்யத்தில் கணிசமான பங்கையும் சொந்தமாகக் கொண்டுள்ளார்.
வட இலங்கையில் இந்த கேளிக்கை பூங்காவைக் கட்டுவதற்காக பி.கே. 1000 கோடி ரூபாய்க்கும் மேல் முதலீடு செய்துள்ளார். </p><p>சமீபத்தில் அவர் தனது கேளிக்கை பூங்காவில் நான்கு நாள் உணவுத் திருவிழாவை ஏற்பாடு செய்தார், அங்கு உணவுடன் கூடிய ஒவ்வொரு பொழுதுபோக்குக்கான நுழைவுச்சீட்டும் 3000 ரூபாய்க்கு விற்கப்பட்டது. </p><p>இருப்பினும், நேற்று அந்த கேளிக்கை பூங்காவிற்குள் பெரிய உணவு நெருக்கடி கலவரங்கள் ஏற்பட்டன, அங்கு வாடிக்கையாளர்கள் உணவுத் திருவிழாவில் உணவுப் பற்றாக்குறை குறித்து புகார் அளித்தனர். </p><p>நுழைவுச்சீட்டு வாங்கியவர்கள் உணவுத் திருவிழாவில் உணவு உண்ணாமலேயே திரும்பிச் சென்றனர். இத்தகைய பெரிய அவமானத்தையும் ஏமாற்றத்தையும் சந்தித்த பிறகு, எதிர்காலத்தில் இந்த கேளிக்கை பூங்காவிற்கு வருவதைப் புறக்கணிக்குமாறு வாடிக்கையாளர்கள் மற்றவர்களை வலியுறுத்தினர்.</p><p> வாடிக்கையாளர்களின் அதிருப்தி குறித்த பல சமூக ஊடக காணொளிகள் பரப்பப்பட்டு, அவை வைரலாகவும் பரவின.
உண்மையில், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நான் ஒரு நல்லெண்ணப் பயணமாக இந்த கேளிக்கை பூங்காவிற்குச் செல்லவிருந்தேன், ஆனால் அவ்வளவு நீண்ட பயணத்திற்கு என் நேரம் ஒருபோதும் அனுமதிக்கவில்லை.</p><p>
ஒரு நாளைக்கு 2500 வாடிக்கையாளர்கள் வருவார்கள் என்ற எதிர்பார்ப்புடன் 4 நாள் உணவுத் திருவிழா நிகழ்ச்சியை அவர்கள் ஏற்பாடு செய்திருந்ததாகவும், அந்த எண்ணிக்கைக்கு ஏற்ப உணவையும் ஏற்பாடு செய்திருந்ததாகவும் பி.கே. தரப்பிலிருந்து எனக்குக் கிடைத்தது. அவர்கள் 100 வகையான உணவுகளையும் 100 விதமான பொழுதுபோக்கு நடவடிக்கைகளையும் ஏற்பாடு செய்திருந்தனர். </p><p>முதல் நாளில் 10,000 பேரும், இரண்டாம் நாளில் 30,000-க்கும் மேற்பட்டோரும் வருகை தந்தனர். இது ஒரு எதிர்பாராத கூட்டமாக இருந்தது. உதாரணமாக, அவர்களிடம் 5 ஹாப்பர்ஸ் நிலையங்கள் இருந்தன, ஆனால் இரண்டு மணி நேரத்தில் 5,000 பேர் சாப்பிடுவதற்காகக் காத்திருந்தனர். </p><p>BK தரப்பின்படி, இதை நிர்வகிப்பது அவர்களுக்கு எளிதான காரியமல்ல. இருப்பினும், ஆன்லைன் முன்பதிவைத் தவிர, கவுண்டரில் நேரடியாக டிக்கெட் வாங்கியவர்களையும் அனுமதித்ததே BK தரப்பிலிருந்து நடந்த தவறு. அதுதான் மிகப்பெரிய தவறு. </p><p>அவர்கள் பணத்தைத் திருப்பிக் கொடுத்து, ஏற்பட்ட சிரமத்திற்காக மன்னிப்பும் கோரியுள்ளனர். அவர்களின் கூற்றுப்படி, BK-யின் எதிரிக் கும்பல் ஒன்று, யூடியூபர்களைப் பயன்படுத்தி அவரைத் தாக்கி, ஒரு பெரிய பிரச்சனையை உருவாக்கியுள்ளது.
</p><p>எப்படியிருந்தாலும், ஒரு வணிகத்தின் நிலைத்தன்மைக்கு நுகர்வோர் திருப்தி இன்றியமையாதது என்பதால், எதிர்காலத்தில் இதுபோன்ற பிரச்சனைகளைத் தவிர்க்க இது அமைப்பாளர்களுக்கு ஒரு பாடம் என்று நான் நினைக்கிறேன். </p><p>இதற்கிடையில், தனது தொழிலை அழிப்பதற்கான எதிரியின் சதித்திட்டத்தின் எல்லைக்குள் செல்லாமல், எதிர்காலத்தில் இது மீண்டும் நிகழக்கூடாது என்று எச்சரிக்கை விடுப்பதன் மூலம் மக்கள் பி.கே-யின் பொழுதுபோக்கு பூங்காவிற்கு ஆதரவளிக்க வேண்டும்.</p><p>
முஹீத் ஜீரன் 
சர்வதேச மனித உரிமை ஆர்வலர்&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-10T13:35:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[புற்றுநோய் அபாயகட்டத்தில் அமெரிக்க முன்னாள் அதிபர் ஜோ பைடன்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/former-us-president-joe-biden-at-risk-of-cancer-1786357155"></link>
            <id>https://canadamirror.com/article/former-us-president-joe-biden-at-risk-of-cancer-1786357155</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜோ பைடனைத் தாக்கியுள்ள கொடிய புற்றுநோய், தற்போது அவரின் எலும்புகளையும் தாண்டி உடலின் பிற பகுதிகளுக்கும் வேக...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜோ பைடனைத் தாக்கியுள்ள கொடிய புற்றுநோய், தற்போது அவரின் எலும்புகளையும் தாண்டி உடலின் பிற பகுதிகளுக்கும் வேகமாகப் பரவி வருவதாக அவரது மகன் அண்டர் பைடன் (Hunter Biden) மிகுந்த வேதனையுடன் தெரிவித்துள்ளார். </p><p> 

பிபிசி செய்தி நிறுவனத்திற்கு அளித்த நேர்காணலில் பேசிய அண்டர் பைடன், தனது தந்தையின் உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ளதை வெளிப்படுத்தினார். "புற்றுநோய் அவரது எலும்புகள் மற்றும் அதற்கும் அப்பால் பரவிவிட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0aff6e6a-5e55-4695-92e0-75ba6f11ad3b/26-6a79a5a49f42d.webp' /></p><h2>&nbsp; மிகவும் கடினமாகவும், பெருந்துயரமாகவும் உள்ளது&nbsp;</h2><p> </p><p>
இது அவருக்குக் கடுமையான வலியையும், பல வகைகளில் உடல் தளர்ச்சியையும் ஏற்படுத்தி வருகிறது" எனக் கூறிய அவர், தனது தந்தையின் தற்போதைய நிலையைப் பார்ப்பது "உண்மையிலேயே மிகவும் கடினமாகவும், பெருந்துயரமாகவும் உள்ளது" கண்ணீர் மல்கக் குறிப்பிட்டார்.</p><p> 

 83 அகவையுடைய மக்களாட்சிக் கட்சியின் தலைவரான ஜோ பைடன், 2021 முதல் 2025 வரை அமெரிக்காவின் 46-வது அதிபராகப் பணியாற்றினார். 

அவரது உடல்நலம் குறித்த பல்வேறு ஐயங்கள் எழுந்ததால், 2024-ஆம் ஆண்டு தேர்தலில் அவர் போட்டியிடவில்லை. </p><p>அவருக்குப் பதிலாகப் போட்டியிட்ட கமலா ஹாரிஸ் , குடியரசுக் கட்சியின் டொனால்ட் டிரம்பிடம் தோற்றார். 
வெள்ளை மாளிகையிலிருந்து விடைபெற்று நான்கு மாதங்களுக்குப் பிறகு, கடந்த 2025-ஆம் ஆண்டு மே மாதம் தனக்கு முன்னிற்குஞ்சுரப்பிப் புற்றுநோய் (Prostate cancer) இருப்பதை ஜோ பைடன் உலகிற்கு அறிவித்தார்.
</p><p> தொடரும் மருத்துவப் போராட்டங்கள்அதன்பின்னர் கதிர்வீச்சு மருத்துவம் மற்றும் இயக்குநீர் மருத்துவக் (Hormone therapy) கட்டமைப்புக்குள் அவர் உட்படுத்தப்பட்டார். </p><p>

கடந்த மாதம் கூட, தனது பணிக்காலம் குறித்த புதிய நூல் ஒன்றின் வெளியீட்டு அறிவிப்பின்போது, தனது மருத்துவம் "மிகவும் நன்றாக" சென்று கொண்டிருப்பதாக அவர் கூறியிருந்தார். ஆனால், நோயின் வீரியம் தற்போது கட்டற்ற நிலையை எட்டியுள்ளதை அண்டர் பைடனின் சொற்கள் உறுதிப்படுத்துகின்றன</p>]]></content>
            <updated>2026-08-10T13:34:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் 12 வயது சிறுவனின் உடல் மீட்பு: கொலை வழக்குப்பதிவு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/death-of-12-year-old-edmonton-boy-1786349779"></link>
            <id>https://canadamirror.com/article/death-of-12-year-old-edmonton-boy-1786349779</id>
            <summary type="text">கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்தில் உள்ள ஆதாபாஸ்கா பகுதியில் மனித உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, பொலிஸார் அது தொடர்பில் கொலை வழக்கு...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்தில் உள்ள ஆதாபாஸ்கா பகுதியில் மனித உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, பொலிஸார் அது தொடர்பில் கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
</p><p>கடந்த ஆகஸ்ட் 6-ஆம் திகதி அதிகாலை 3:26 மணியளவில், ஆதாபாஸ்கா பகுதியில் மனித உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டதாகக் கிடைத்த தகவலை அடுத்து, பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
</p><p>எட்மண்டன் நகரில் ஆகஸ்ட் 7 அன்று மேற்கொள்ளப்பட்ட உடற்கூறாய்வு பரிசோதனையின் மூலம், உயிரிழந்தவர் எட்மண்டனைச் சேர்ந்த பைசல் ஹுசைன் 12 வயது சிறுவன் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4ac86ad2-f056-4ba7-a227-dbbf9e842053/26-6a7988d5498fe.webp' /></p><p>
</p><p>இக்கொலைச் சம்பவம் தொடர்பாக 'ஆர்சிஎம்பி'யின் முக்கிய குற்றப் பிரிவு விசாரணையைத் தன்வசப்படுத்தியுள்ளது.</p><p>
இச்சம்பவம் தொடர்பாக ஏதேனும் தகவல்கள் தெரிந்தால், ஆதாபாஸ்கா பொலிஸாரை 780-675-4252 என்ற எண்ணிலோ அல்லது இரகசியம் காக்கும் 'க்ரைம் ஸ்டாப்பர்ஸ்' அமைப்பை 1-800-222-8477 என்ற எண்ணிலோ தொடர்புகொள்ளுமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-10T13:34:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[எனது தாயார் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்; இயக்குனர் ஜேசன் சஞ்சய் நெகிழ்ச்சி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/cm-vijay-jason-sanjay-talk-sangeetha-roots-jaffna-1786345121"></link>
            <id>https://jvpnews.com/article/cm-vijay-jason-sanjay-talk-sangeetha-roots-jaffna-1786345121</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;நடிகரும் தமிழ் நாட்டின் முதலமைச்சருமான விஜய்யின் மகன்&amp;nbsp;இயக்குனர் ஜேசன் சஞ்சய், தனது இலங்கை பூர்வீகம் மற்றும் யாழ்ப்பாணத்துடனான தொடர்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;நடிகரும் தமிழ் நாட்டின் <a href="https://jvpnews.com/article/jason-sanjay-emotional-about-his-father-cm-vijay-1785559667" target="_blank">முதலமைச்சருமான விஜய்யின் மகன்&nbsp;இயக்குனர் ஜேசன் சஞ்சய்</a>, தனது இலங்கை பூர்வீகம் மற்றும் யாழ்ப்பாணத்துடனான தொடர்பு குறித்தும் நேர்காணலில் நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார்.
</p><p>
நேர்காணல் ஒன்றில் பேசிய இயக்குனர் ஜேசன், தனது தாயார் இலங்கையின் வடக்கே உள்ள யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர் என்றும், குடும்பத்தினர் வெளிநாட்டில் குடியேறும் முன்பு அவர் அங்கேயே வளர்ந்தவர் என்றும் கூறினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/711527ed-dbcf-45f5-82d0-a319af02cb49/26-6a7976a2d23c8.webp' /></p><p></p><h2>&nbsp;எதிர்காலத்தில் இலங்கையில் படப்பிடிப்பு</h2><p>
</p><p>
"என் அம்மா யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர், அதாவது இலங்கையின் வடக்குப் பகுதியைச் சேர்ந்தவர். அவர் அங்கு பிறந்து வளர்ந்தார்; பின்னர் அவர்கள் வெளிநாட்டில் குடியேறினர்," என்று அவர் குறிப்பிட்டார்.</p><p></p><p>
</p><p>
இலங்கைக்குச் செல்லும்போது, ​​தனது தாத்தாவின் சொத்துக்களில் ஒன்று தனது குடும்பத்தின் கடந்த காலத்துடனான ஒரு முக்கியத் தொடர்பை நினைவூட்டும் இடமாகத் திகழ்வதாக இயக்குனர் ஜேசன் சஞ்சய்&nbsp; கூறினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/63aa0c9d-07e7-4cc8-94c1-36c8858cb4f7/26-6a7976a38731f.webp' /></p><p>
</p><p>
மேலும், தனது 'சிக்மா' (Sigma) திரைப்படத் திட்டத்திற்காக இலங்கையை ஒரு படப்பிடிப்புத் தளமாகக் கருதியதாகவும், அதற்கான இடங்களைப் பார்வையிட படக்குழுவினர் அங்கு சென்றிருந்ததாகவும் இயக்குனர் ஜேசன் சஞ்சய்&nbsp; தெரிவித்தார்.</p><p></p><p> </p><p>இருப்பினும், அந்தத் திட்டம் கைகூடவில்லை.

எனினும் எதிர்காலத்தில் இலங்கையில் படப்பிடிப்பு நடத்தி, அந்நாட்டின் அழகை வெளிப்படுத்த விரும்புவதாகவும் இயக்குனர் ஜேசன் சஞ்சய்&nbsp; கூறியுள்ளார்.</p><p>முதலமைச்சர்&nbsp; விஜயின் மனைவி&nbsp; சங்கீதா,&nbsp; &nbsp;யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக&nbsp; கொண்ட லண்டன் வாழ்&nbsp; புலம்பெயர் தமிழர் என்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-08-10T13:32:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[போதைப்பொருள் குற்றங்களுக்கு மரண தண்டனை; ஜனாதிபதி அநுரகுமார]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/death-penalty-drug-related-crimes-srilanka-review-1786368845"></link>
            <id>https://jvpnews.com/article/death-penalty-drug-related-crimes-srilanka-review-1786368845</id>
            <summary type="text">&amp;nbsp; பாரிய போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு மரண தண்டனையை விதிப்பது குறித்துக் கலந்துரையாடப்பட்டுள்ளது.



ஜனாதிபதி அநுரகும...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; பாரிய போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு மரண தண்டனையை விதிப்பது குறித்துக் கலந்துரையாடப்பட்டுள்ளது.
</p><p>


ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று (10) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற "தேசமே ஒன்றிணைந்த" தேசிய செயற்பாட்டுச் சபைக் கூட்டத்தில்,இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a6796d95-f1d3-46ba-8669-dfa785db5e1a/26-6a79d34ea345a.webp' /></p><p>


நாட்டின் போதைப்பொருள் தொடர்பான குற்றச் செயல்களுக்கு எதிரான நடவடிக்கைகளைப் பலப்படுத்துவது குறித்தும் இக்கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-10T13:31:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[போதைப்பொருள் குற்றங்களுக்கு மரண தண்டனை.. அரசாங்கத்தின் அதிரடி தீர்மானம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/death-penalty-drug-crimes-government-decision-1786367709"></link>
            <id>https://tamilwin.com/article/death-penalty-drug-crimes-government-decision-1786367709</id>
            <summary type="text">போதைப்பொருட்களால் அதிகரித்து வரும் அச்சுறுத்தலுக்கு எதிரான கடுமையான நடவடிக்கையின் ஒரு பகுதியாக, போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்கு மரண தண்டனை விதிப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>போதைப்பொருட்களால் அதிகரித்து வரும் அச்சுறுத்தலுக்கு எதிரான கடுமையான நடவடிக்கையின் ஒரு பகுதியாக, போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்கு மரண தண்டனை விதிப்பது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.</p><p>ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இன்று (10) நடைபெற்ற “ரதம ஏகத” தேசிய செயல்பாடுகள் ஆணைய கூட்டத்தில் இந்த விவகாரம் விவாதிக்கப்பட்டது.&nbsp;&nbsp;</p><p> </p><p>இதன்போது, போதைப்பொருள் கடத்தல் மற்றும் அது தொடர்பான குற்றச் செயல்கள் பொருளாதாரம், சுற்றுலாத் துறை மற்றும் சமூகச் சூழலில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து இந்தக் கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டது.&nbsp;</p><h2>மிகக் கடுமையான நடவடிக்கை..&nbsp; &nbsp;</h2><p>அத்துடன், போதைப்பொருள் பரவலைக் கட்டுப்படுத்த வலுவான சட்டங்கள் மற்றும் நடவடிக்கைகள் தேவை என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6acda245-eaec-4673-9278-225447f3b734/26-6a79d11c4b2d8.webp' /></p><p>இதன்போது, போதைப்பொருள் நெருக்கடியைக் கையாள்வதிலும், போதைப்பொருள் மற்றும் அது தொடர்பான குற்றங்கள் குறித்த பொதுமக்களின் மனப்பான்மையில் மாற்றத்தை ஊக்குவிப்பதிலும், மதத் தலைவர்கள், பெற்றோர்கள் மற்றும் சமூக அமைப்புகளின் அதிகப்படியான ஈடுபாட்டிற்கு ஜனாதிபதி திசாநாயக்க அழைப்பு விடுத்தார்.</p><p>
</p><p>
போதைப்பொருள் கட்டுப்பாடு மற்றும் பிணை தொடர்பான சட்டங்களில் திருத்தங்களை அரசாங்கம் தயாரித்து வருகிறது. இந்தத் திருத்தங்கள் இறுதிக்கட்டத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.&nbsp;</p><p>எனவே, இது தொடர்பில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பு அரசிதழில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><h2>தீவிர பணியில் அதிகாரிகள்</h2><p>

அரசுப் பகுப்பாய்வாளர் அறிக்கைகளைச் செயலாக்கும் பணியை அதிகாரிகள் துரிதப்படுத்தியுள்ளனர், இது போதைப்பொருள் தொடர்பான வழக்குகளில் தாமதங்களுக்கு வழிவகுத்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cfa43308-8306-484b-a48b-7e29de2a9a50/26-6a79d11d0cc44.webp' /></p><p> </p><p>அதிகாரிகளின் கூற்றுப்படி, ஜூலை மாதத்தில் மட்டும் மொத்தம் 6,414 பகுப்பாய்வாளர் அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன.
</p><p>
கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை 5 கிராமுக்கும் குறைவானவை மற்றும் 10 கிராமுக்கும் குறைவானவை என அவற்றின் அளவுகளுக்கு ஏற்ப வகைப்படுத்துவதற்கான ஒரு முறையை நிறுவுமாறும், மேலும் முறைப்பாடுகள் கிடைத்தவுடன் சந்தேக நபர்கள் உடனடியாக நீதிமன்றங்களில் முன்னிலைடுத்தப்படுவதை உறுதி செய்வதற்காக அரசாங்கப் பகுப்பாய்வாளர் திணைக்களம், பொலிஸார் மற்றும் சிறைச்சாலைகளுக்கு இடையே ஒருங்கிணைப்பை மேம்படுத்துமாறும் ஜனாதிபதி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
</p><p>
அரசுப் பகுப்பாய்வாளர் துறையின் திறன் மற்றும் வசதிகளை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் குறித்தும் இக்கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது. போதைப்பொருள் தொடர்பான ஆதாரங்களைப் பரிசீலிப்பதற்கு ஆதரவளிக்க, கடற்படையின் உதவியும் பெறப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.</p>]]></content>
            <updated>2026-08-10T13:30:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[போதைப்பொருள் கொடுத்து நடிகைக்கு பாலியல் வன்கொடுமை!! 73 வயது தயாரிப்பாளர் கைது..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/shakeel-noorani-arrested-actress-actress-complaint-1786367653"></link>
            <id>https://viduppu.com/article/shakeel-noorani-arrested-actress-actress-complaint-1786367653</id>
            <summary type="text">1991, 1993ல் வெளியான விஷ்ணு-தேவா, ஸ்ரீமான் ஆஷிக் போன்ற படங்களை தயாரித்தவர் தான் ஷகீல் நூரானி அதன்பின் 1999ல் படே தில்வாலா படத்தினை இயக்கினார். அதன்பின...</summary>
            <content type="html"><![CDATA[<p>1991, 1993ல் வெளியான விஷ்ணு-தேவா, ஸ்ரீமான் ஆஷிக் போன்ற படங்களை தயாரித்தவர் தான் ஷகீல் நூரானி அதன்பின் 1999ல் படே தில்வாலா படத்தினை இயக்கினார். அதன்பின் 2002ல் ஜோரு கா குலாம் உள்ளிட்ட பல படங்களை இயக்கி வந்தார். அவர் மீது 33 வயது நடிகை ஒருவர் பாலியல் புகாரளித்துள்ளது அதிர்ச்சியை அளித்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e2d0dca8-bfcf-4db6-8aa1-fd540fcddf48/26-6a79cea734728.webp' /></p><p> </p><h2>ஷகீல் நூரானி</h2><p>பட வாய்ப்பு தேடிச் சென்றபோது சினிமாவில் நடிக்க வைப்பதாக ஆசை வார்த்தை கூறி பலமுறை தன்னை பாலியல் வன்கொடுமை செய்தார். சில சந்தர்ப்பங்களில் தனக்கு போதைப்பொருல் கொடுத்து, தான் மயக்கமடைந்தபோது ஆபாச வீடியோ எடுத்து மிரட்டியதாகவும் அந்த நடிகை புகாரளித்துள்ளார். தொடர்ந்து அந்த வீடியோகளை காட்டி, தன்னுடைய பாலியல் இச்சைக்கு பிளாக்மெயில் செய்ததாகவும் கூறினார்.</p><p>இதற்கிடையில் தனக்கு கருச்சிதைவு நடந்ததாகவும் அதிகாரிகளுக்கு அதிர்ச்சி கொடுத்தார். நடிகையின் புகாரில் பேரில் இயக்குநர் ஷகீல் நுரானி மீது மல்வானி போலிசார் வழக்கு பதிவு செய்ததை அறிந்த நூரானி 40 நாட்களாக தலைமறைவாகினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/00d51031-2d8f-4f26-92cb-9671b9b45cd5/26-6a79cea7e780d.webp' /></p><p> </p><h2>கைது</h2><p>இந்நிலையில் நுரானி, சதாரா மாவட்டத்திலுள்ள ஒரு பண்ணை வீட்டில் பதுங்கியிருப்பதாக போலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. உடனே மல்வானி போலிசார் அங்கு சென்று நூரானியை கைது செய்து, நடிகை அளித்த பாலியல் வன்கொடுமை, போதைப்பொருள், பிளாக்மெயில் உள்ளிட்ட வழக்குகள் போடப்பட்டு விசாரணை நடத்தி வருகிறார்கள்.</p>]]></content>
            <updated>2026-08-10T13:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈ-ஸ்கூட்டர் விதிமீறல்கள்: ஒட்டாவா பொலிஸார் தீவிர நடவடிக்கை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/underage-operation-and-misuse-of-e-scooters-1786349268"></link>
            <id>https://canadamirror.com/article/underage-operation-and-misuse-of-e-scooters-1786349268</id>
            <summary type="text">&amp;nbsp;கனடாவின் ஒட்டாவா நகரில் ஈ-ஸ்கூட்டர்களின் தவறான பயன்பாடு மற்றும் விதிமீறல்களைத் தடுக்கும் வகையில், பொலிஸார் நகரம் முழுவதும் தீவிரக் கண்காணிப்பு ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கனடாவின் ஒட்டாவா நகரில் ஈ-ஸ்கூட்டர்களின் தவறான பயன்பாடு மற்றும் விதிமீறல்களைத் தடுக்கும் வகையில், பொலிஸார் நகரம் முழுவதும் தீவிரக் கண்காணிப்பு மற்றும் சோதனைகளைத் தொடங்கியுள்ளனர்.
</p><p>குறிப்பாக ஃபைண்ட்லே க்ரீக் மற்றும் ரிவர்சைடு சவுத் ஆகிய பகுதிகளில் சிறுவர்கள் ஸ்கூட்டர் ஓட்டுவது, அதிக வேகம் மற்றும் பாதுகாப்பற்ற முறையில் பயணிப்பது ஆகியவற்றைக் கண்காணிக்க சிறப்பு ரோந்து நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
</p><p>ஒட்டாவாவில் ஈ-ஸ்கூட்டர் ஓட்டுவதற்கு குறைந்தபட்ச வயது 16 ஆகும். 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் இதனைப் பயன்படுத்த முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d6d4e4e9-8e11-41fc-864f-70fee151575f/26-6a7986d65fc16.webp' /></p><p>18 வயதுக்குட்பட்ட அனைத்துப் பயனர்களும் கட்டாயம் பாதுகாப்பு தலைக்கவசம் அணிய வேண்டும். தவறினால் 80 டாலர் அபராதம் விதிக்கப்படும்.
16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் ஈ-ஸ்கூட்டர் ஓட்டினால் சுமார் 170 டொலர் வரை அபராதம் விதிக்கப்படும்.ஈ-ஸ்கூட்டர்களின் அதிகபட்ச வேகவரம்பு மணிக்கு 24 கிலோ மீற்றராகும்.</p><p>அண்மையில் அதிகபட்சமாக மணிக்கு 52 கிலோ மீற்றர் வேகத்தில் பயணித்த நபரை பொலிஸார் பிடித்துள்ளனர்.</p><p>அதிவேகமாகச் செல்பவர்கள் மீது நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
மாற்றுத்திறனாளிகளின் பாதுகாப்பைக் கருதி, நடைபாதைகளில் ஈ-ஸ்கூட்டர்களை ஓட்டக் கூடாது எனவும் ஒரு ஸ்கூட்டரில் ஒருவர் மட்டுமே பயணிக்க வேண்டும். பிற வாகனங்களையோ அல்லது ஸ்கேட்போர்டுகளையோ இழுத்துச் செல்லக் கூடாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>ஒட்டாவா கிழக்கு ஒன்டாரியோ சிறுவர் மருத்துவமனை, டோரண்டோவின் சிக்-கிட்ஸ் மற்றும் மொண்ட்ரியால் சிறுவர் மருத்துவமனைகள் வெளியிட்ட தகவலின்படி, ஈ-ஸ்கூட்டர் விபத்துகளால் காயமடைந்து வரும் குழந்தைகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது.</p><p> 
மே 2025 வரை வரையிலான ஓராண்டு காலத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 50% அதிகரித்துள்ளது.
சிறுவர்கள் அறியாமையால் ஆபத்தான முறையில் ஸ்கூட்டர்களை இயக்கக்கூடும்.</p><p> எனவே, 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஈ-ஸ்கூட்டர்களை வாங்கித் தருவதற்கு முன்பாக பெற்றோர் இருமுறை யோசிக்க வேண்டும்," என ஒட்டாவா பொலிஸ் அதிகாரி ஜோஷ் கலாஹன் வலியுறுத்தியுள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-10T13:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சீனாவை சூறையாடிய டால்பின் புயல் ;1000க்கு மேற்பட்ட விமானங்கள் இரத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/typhoon-dolphin-china-1000-flights-canceled-1786368494"></link>
            <id>https://canadamirror.com/article/typhoon-dolphin-china-1000-flights-canceled-1786368494</id>
            <summary type="text">சீனாவில்&amp;nbsp; டால்பின் புயல் வலுவிழந்த போதிலும், திங்கட்கிழமை அன்று சீனா முழுவதும் பெய்த கனமழை மற்றும் பலத்த காற்று காரணமாக வெள்ள அபாய எச்சரிக்கைகள் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சீனாவில்&nbsp; டால்பின் புயல் வலுவிழந்த போதிலும், திங்கட்கிழமை அன்று சீனா முழுவதும் பெய்த கனமழை மற்றும் பலத்த காற்று காரணமாக வெள்ள அபாய எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டன, மேலும் 1,000-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன .</p><p>
ஞாயிற்றுக்கிழமை சீனாவின் ஜெஜியாங் மாகாணத்தில் கரையைக் கடந்த பின்னர் வலுவிழந்த புயலை அடுத்து, சீனாவின் தேசிய வானிலை மையம் (NMC) திங்கட்கிழமை காலை மிகக் குறைந்த தீவிரமான புயல் எச்சரிக்கையை விடுத்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/71cf7c4d-c7ea-4cf5-91a3-7bb4bb1bd178/26-6a79d1f739603.webp' /></p><p>
</p><p>
புயல் வலுவிழந்த போதிலும், கிழக்கு மற்றும் மத்திய சீனாவின் சில பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்யும் என தேசிய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. </p><p>

அதேசமயம் கிழக்கு மற்றும் தெற்கு ஜெஜியாங்கின் சில பகுதிகளுக்கு திங்களன்று அதிகாரிகள் தங்களின் மிகக் கடுமையான திடீர் வெள்ள அபாய எச்சரிக்கையை விடுத்ததாக அரசு செய்தி நிறுவனமான சிசிடிவி தெரிவித்துள்ளது. </p>]]></content>
            <updated>2026-08-10T13:26:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[230 குடியேற்றவாசிகள் ஆங்கிலக் கால்வாயைக் கடந்து புதிய சாதனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/new-record-230-migrants-cross-the-english-channel-1786368055"></link>
            <id>https://canadamirror.com/article/new-record-230-migrants-cross-the-english-channel-1786368055</id>
            <summary type="text">&amp;nbsp; பிரான்ஸில் இருந்து ஒரு சிறிய ரப்பர் படகில் 230 குடியேற்றவாசிகள் ஆங்கிலக் கால்வாயைக் கடந்து பிரித்தானியாவை அடைந்து புதிய சாதனையைப் பதிவுசெய்துள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; பிரான்ஸில் இருந்து ஒரு சிறிய ரப்பர் படகில் 230 குடியேற்றவாசிகள் ஆங்கிலக் கால்வாயைக் கடந்து பிரித்தானியாவை அடைந்து புதிய சாதனையைப் பதிவுசெய்துள்ளனர்.</p><p>

போயிங் 737 பயணிகள் விமானத்தின் கொள்ளளவுக்குச் சமமான எண்ணிக்கையிலான மக்களை ஏற்றி சென்ற மெகா படகு எனவும் , பிரித்தானியாவை நோக்கிய சட்டவிரோதப் பயணங்களில் இதுவரை பதிவுசெய்யப்பட்ட மிகப்பெரிய எண்ணிக்கையாகும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aace4260-0148-4632-bb46-140adc0d14e6/26-6a79d03937119.webp' /></p><h2>&nbsp;2026 ஆம் ஆண்டில் 15,049 சட்டவிரோதக் குடியேறிகள்</h2><p> </p><p>

அதேசமயம் கடந்த ஜூலை மாதம் ஒரே படகில் 165 பேர் பயணித்ததே இதுவரை அதிகளவானவர்கள் பயணித்ததாக இருந்தது. தற்போதைய 230 பேர் பயணம் அந்த சாதனையை முறியடித்துள்ளது.
</p><p>
இந்த புதிய வருகையுடன், 2026 ஆம் ஆண்டில் இதுவரை 224 சிறிய படகுகள் மூலம் மொத்தம் 15,049 சட்டவிரோதக் குடியேறிகள் பிரித்தானியாவை அடைந்துள்ளனர்.

எல்லைப் பாதுகாப்புப் படையினரும் RNLI உயிர் மீட்புக் படகுகளும் இப் படகைக் கடலிலேயே இடைமறித்து டோவர் துறைமுகத்திற்கு அழைத்து சென்றுள்ளன. </p><p>கடந்த வார இறுதியில் மட்டும் சுமார் 950 குடியேற்றவாசிகள் டோவர் துறைமுகத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.


இது குறித்து பிரித்தானிய உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு கூறுகையில்,
</p><p>
"மனித கடத்தல் கும்பல்கள் மக்களின் உயிரைப் பணைய வைத்து, கடல் பயணத்திற்கு ஒத்துவராத படகுகளில் அதிகளவு மக்களைக் திணித்து ஆபத்தான செயல்களில் ஈடுபடுவதையே இது காட்டுகிறது. எனினும், கடந்த ஜூலை மாதத்தில் 2020க்குப் பின்னரான குறைந்தபட்ச வருகையே பதிவாகியுள்ளது. </p><p>பிரெஞ்சு கடற்கரைகளில் மேலதிகப் படைகளை நிறுத்துவதற்கு பிரான்ஸுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளது.



இச்சம்பவம் குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரித்தானியாவின் ரிஃபார்ம் யூகே கட்சித் தலைவர் நைஜல் பரேஜ் ,</p><p> "இந்தச் சட்டவிரோத ஊடுருவல் நாட்டின் தேசியப் பாதுகாப்பிற்கு விடுக்கப்பட்ட பெரும் அவசரநிலை என்பதற்கான மற்றொரு சான்றாகும்" எனக் கடுமையாக விமர்சித்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-08-10T13:18:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[அய்யனார் துணை சீரியலில் வந்த Train காட்சிகளை இப்படிதான் எடுத்தார்களா... படப்பிடிப்பு தள வீடியோ]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/ayyanar-thunai-serial-shooting-spot-video-1786365232"></link>
            <id>https://cineulagam.com/article/ayyanar-thunai-serial-shooting-spot-video-1786365232</id>
            <summary type="text">அய்யனார் துணைவிஜய் தொலைக்காட்சியில் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் தொடர்களில் ஒன்று தான் அய்யனார் துணை.&amp;nbsp;கடந்த வாரம் எல்லாம் நிலாவிற்கு சர்ப்ரைஸ் கொ...</summary>
            <content type="html"><![CDATA[<h2>அய்யனார் துணை</h2><p>விஜய் தொலைக்காட்சியில் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் தொடர்களில் ஒன்று தான் அய்யனார் துணை.&nbsp;</p><p>கடந்த வாரம் எல்லாம் நிலாவிற்கு சர்ப்ரைஸ் கொடுக்க நினைத்து சோழன் புதிய வீடு வாடகை பார்க்க ஆனால் கடைசியில் அவரது பிளான் பிளாப் ஆனது. நிலா எனக்கு அனைவருடனும் இருப்பது தான் பிடிக்கும், வீட்டிற்கு கொடுத்த அட்வான்ஸ் வாங்கிக்கொண்டு வாருங்கள் என்று கூறிவிட்டு சென்றுவிட்டார்.</p><p>பின் எப்படியோ சோழன் போராடி அந்த பணத்தை வாங்கி வீட்டிற்கு புதிய டிவியும் வாங்கிவிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bbfdf8e5-01ff-4397-a57a-a1c1320a0d35/26-6a79c53228bb3.webp' /></p><h2>எபிசோட்</h2><p>இந்த வாரம் சந்தாவிற்கு அவரது மாமாவுடன் திருமண நடக்க இருக்கிறது என்ற விஷயத்தை கூற அந்த திருமணத்தை தடுக்க அண்ணன்-தம்பிகள் நிலா அனைவரும் Trainல் உடனே கிளம்பினார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8926ddfd-f8cb-461a-8db3-695cb1323080/26-6a79c53174ea6.webp' /></p><p>மண்டபம் சென்ற சேரன் எப்படியோ திருமணத்தை நிறுத்திவிட்டார், சந்தா தான் கர்ப்பமாக இருப்பதாக கூற மொத்த குடும்பமும் ஷாக் ஆகிறார்கள். அடுத்து கதையில் என்ன நடக்கப்போகிறது, சந்தா-சேரன் திருமணம் நடக்குமா என்பதை பொறுத்திருந்து காண்போம்.</p><p>இந்த நிலையில் அய்யனார் துணை சீரியலில் வந்த Train காட்சிகள் எடுக்கப்பட்ட படப்பிடிப்பு தள வீடியோ வெளியாகியுள்ளது. இதோ எப்படி அந்த காட்சிகள் எடுத்துள்ளார்கள் பாருங்க,</p><p><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/reel/Db0nYTiS_Qk/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/reel/Db0nYTiS_Qk/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/reel/Db0nYTiS_Qk/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by Nila 🌙 Nizhan ❤️ (@ayyanarthunai_nila.fp)</a></p></div></blockquote> <script async src="//www.instagram.com/embed.js"></script></p>]]></content>
            <updated>2026-08-10T13:10:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிக் பாஸ் ஷோவில் யாரும் எதிர்பார்காத ட்விஸ்ட்.. இந்த வருடம் வரும் பெரிய மாற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/bigg-boss-show-update-elimination-format-to-change-1786363138"></link>
            <id>https://cineulagam.com/article/bigg-boss-show-update-elimination-format-to-change-1786363138</id>
            <summary type="text">பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு எந்த அளவுக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள் என சொல்லித் தெரிய வேண்டியது இல்லை. ஹிந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், மராத்தி ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு எந்த அளவுக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள் என சொல்லித் தெரிய வேண்டியது இல்லை. ஹிந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், மராத்தி என பல மொழிகளில் இந்த ஷோ நடைபெற்ற வருகிறது.</p><p>விரைவில் ஒரே நேரத்தில் ஐந்து மொழிகளில் பிக் பாஸ் ஷோவை தொடங்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5fe32e82-a404-48e3-989f-717416329b91/26-6a79bd03bc031.webp' /></p><p>
</p><h2>மாற்றம் </h2><p>ஹிந்தியில் சல்மான்கான் தொகுத்து வழங்க பிக் பாஸ் இருபதாவது சீசன் தொடங்குகிறது. அதில் யாரும் எதிர்பார்க்காத வகையில் ஒரு புதிய ட்விஸ்ட் ஒன்று வந்திருக்கிறது. அது என்னவென்றால் போட்டியாளர்கள் எலிமினேஷன் ஆனதும் உடனே வீட்டுக்கு நேரடியாக அனுப்பி விட மாட்டார்களாம்.
</p><p>அவர்களை இரண்டாவதாக ஒரு வீட்டில் வைத்து, அங்கு மேலும் போட்டிகள் நடக்கும், அதில் ஜெயிப்பவர்கள் மீண்டும் மெயின் வீட்டுக்குள் அனுப்பப்படுவார்களாம்.
</p><p>இப்படி பிக்பாஸ் ஷோவில் புதிய மாற்றம் வர இருப்பது ரசிகர்களுக்கு பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/213ece09-47c6-49e3-861b-e2d9fe7dfbb9/26-6a79bd04b8382.webp' /></p>]]></content>
            <updated>2026-08-10T13:01:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[மெசின் சிறையில் உயிரிழந்த கைதி.. அதிகாரிகள் குறித்து முன்வைக்கப்பட்டுள்ள கடுமையான குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/cause-death-inmate-borella-magazine-prison-1786363577"></link>
            <id>https://tamilwin.com/article/cause-death-inmate-borella-magazine-prison-1786363577</id>
            <summary type="text">பொரளை - மெசின் சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலின் போது உயிரிழந்த கைதி, சிறைச்சாலை அதிகாரிகளின் கொடூரமான தாக்குதலினாலேயே உயிரிழந்ததாக அவரது உறவினர்கள் கடும...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொரளை - மெசின் சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலின் போது உயிரிழந்த கைதி, சிறைச்சாலை அதிகாரிகளின் கொடூரமான தாக்குதலினாலேயே உயிரிழந்ததாக அவரது உறவினர்கள் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். </p><p>ஹோமாகம, கட்டுவன பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதுடைய மொஹமட் அஸ்மன் ஜெரால்டின் என்ற நபரே இவ்வாறு உயிரிழந்தார்.&nbsp;</p><h2>ஏற்பட்ட மோதல்..&nbsp;</h2><p>
கடந்த 6ஆம் திகதி சிறைச்சாலையில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து குறித்த கைதி தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cb5456cf-c4a4-452a-bb9d-589e82065616/26-6a79ca7dd3f5e.webp' /></p><p>இதன் பின்னர், உயிரிழந்தவரின் பிரேத பரிசோதனை கொழும்பு தேசிய வைத்தியசாலையின் மேலதிக சட்ட வைத்திய அதிகாரி பணிமனையில் கடந்த 8ஆம் திகதி முன்னெடுக்கப்பட்டது.
</p><p>தொடர்ந்து, சடலம் மத்தேகொட பகுதியில் உள்ள அவரது மனைவியின் வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்ட போது ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த உறவினர்கள், சிறைச்சாலையில் மேற்கொள்ளப்பட்ட மனிதநேயமற்ற தாக்குதலின் விளைவாகவே அவர் உயிரிழந்துள்ளதாக அவரின் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-10T12:58:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரஷ்யாவை கதறவிட்ட உக்ரைன் : ட்ரோன் தாக்குதலில் பலர்பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/ukraine-drone-strikes-in-russia-1786365929"></link>
            <id>https://ibctamil.com/article/ukraine-drone-strikes-in-russia-1786365929</id>
            <summary type="text">மத்திய ரஷ்யாவில் உள்ள டாடர்ஸ்டான் பிராந்தியத்தின் நிஸ்னேகாம்ஸ்க் நகரில் உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதலில்&amp;nbsp; 13 பொதுமக்கள் உயிரிழந்ததாகவும் மேலும்...</summary>
            <content type="html"><![CDATA[<p>மத்திய ரஷ்யாவில் உள்ள டாடர்ஸ்டான் பிராந்தியத்தின் நிஸ்னேகாம்ஸ்க் நகரில் உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதலில்&nbsp; 13 பொதுமக்கள் உயிரிழந்ததாகவும் மேலும் 75 பேர் காயம் அடைந்துள்ளனர். இதில் 21 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று ரஷ்யா தெரிவித்துள்ளது. </p><p>

உக்ரைனில் எல்லையில் இருந்து சுமார் 1000 கி.மீ. தொலைவில் உள்ள தொழில் நகரமான நிஸ்னேகாம்ஸ்க்கில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.</p><h2>&nbsp;எண்ணெய் வளங்களுக்கான மிகப்பெரிய பிராந்தியம்</h2><p>ரஷ்யாவின் டாடர்ஸ்டான் எண்ணெய் வளங்களுக்கான மிகப்பெரிய பிராந்தியம் ஆகும். இங்கு ஏராளமான மிகப்பெரிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்த எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் உள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1e8085f5-6065-4a84-8efe-336993ed7a89/26-6a79cad84bc0e.webp' /></p><p> </p><p>ரஷ்யாவின் பதிலடி தாக்குதலுக்கான இந்த பகுதியை இலக்காக கொண்டு உக்ரைன் தாக்குதல் நடத்தியுள்ளது.

இதற்கிடையே உக்ரைன் மீதும் ரஷ்யா தாக்குதல் நடத்தியுள்ளது.கார்கீவ் பிராந்தியத்தின் வடகிழக்குப் பகுதியில் உள்ள கிராமத்தில் இந்த தாக்குதலை நடத்தியுள்ளது. இதில் 5 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.</p><p></p><h2>456 உக்ரைன் ட்ரோன்களை சுட்டு வீழ்த்திய ரஷ்யா</h2><p>
</p><p>
இலங்கை நேரப்படி நேற்றிரவில் இருந்து இன்று காலைவரை 456 உக்ரைன் ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியதாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dfebe66b-2560-4068-9899-0c489784517b/26-6a79cad7859c9.webp' /></p><p> இதில் எத்தனை ட்ரோன்கள் இலக்குகளை அடைந்து சேதம் விளைவித்தது என்பது குறித்து தெரிவிக்கப்படவில்லை. அதேவேளையில், ரஷ்யா 126ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் விமானப்படை தெரிவித்துள்ளது.&nbsp; &nbsp; </p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-10T12:58:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[மரண தண்டனையை ஏற்க முடியாது! ஆனால்...கர்தினால் மெல்கம் ரஞ்சித் வெளியிட்டுள்ள தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/cardinal-says-death-penalty-unacceptable-1786364349"></link>
            <id>https://ibctamil.com/article/cardinal-says-death-penalty-unacceptable-1786364349</id>
            <summary type="text">
கத்தோலிக்கத் திருச்சபையின் மறைக்கல்வி நூலின் 2267 ஆம் பத்தியின்படி மரண தண்டனை ஏற்றுக்கொள்ள முடியாதது என்று கொழும்பு மறைமாவட்டத்தின் பேராயர் கர்தினால...</summary>
            <content type="html"><![CDATA[<p>
கத்தோலிக்கத் திருச்சபையின் மறைக்கல்வி நூலின் 2267 ஆம் பத்தியின்படி மரண தண்டனை ஏற்றுக்கொள்ள முடியாதது என்று கொழும்பு மறைமாவட்டத்தின் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
</p><p>
ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பாக, கடமையில் இருந்து தவறியதற்காக முன்னாள் காவல்துறை மா அதிபர் மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளருக்கு வழங்கப்பட்ட மரண தண்டனைகள் குறித்த தனது நிலைப்பாட்டை விளக்கும்போது அவர் இந்தக் கருத்தைத் தெரிவித்துள்ளார்.</p><p>

மரண தண்டனை மனித மாண்பை மீறுவதாகவும், மரண தண்டனை விதிப்பதை திருபீடத்தின் போதனைகள் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் கர்தினால் வலியுறுத்தியுள்ளார்.</p><p></p><h2>நீதித்துறையின் சுதந்திரம்</h2><p>

எவ்வாறாயினும், இலங்கை நீதித்துறையின் சுதந்திரத்தில் தங்களுக்கு முழு நம்பிக்கை இருப்பதாகவும், அதன் முடிவுகளிலோ அல்லது ஆலோசனைகளிலோ எந்த வகையிலும் தலையிட எண்ணம் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/29123956-1090-41f0-8c10-bf80d9cc8592/26-6a79c9637633c.webp' /></p><p>
</p><p>
இதன்படி, இந்தத் தாக்குதல்களின் சூத்திரதாரி அல்லது சூத்திரதாரிகளையும், இதில் சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரையும் வெளிக்கொணர்வதற்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நாட்டின் சட்டப்படி நீதி கிடைக்கச் செய்வதற்கும் தொடர்ந்து பாடுபடுவதே கொழும்பு மறைவாட்டத்தின் வலுவான விருப்பம் என்று கர்தினால் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table><p>

</p>]]></content>
            <updated>2026-08-10T12:51:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆணாகப் பிறந்து பெண்ணாக மாறும் அதிசய மீன்! அரிய தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/barramundi-fish-change-sex-from-male-to-female-1786354606"></link>
            <id>https://jvpnews.com/article/barramundi-fish-change-sex-from-male-to-female-1786354606</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;ஆணாகப் பிறந்து பெண்ணாக மாறும் அதிசய மீன் தொடர்பில் வியக்க வைக்கும் தகவல் வெளியாகியுள்ளது.

கொடுவா மீன்களே இவ்வாறு ஆணாகப் பிறந்து பெண்ணா...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;ஆணாகப் பிறந்து பெண்ணாக மாறும் அதிசய மீன் தொடர்பில் வியக்க வைக்கும் தகவல் வெளியாகியுள்ளது.

கொடுவா மீன்களே இவ்வாறு ஆணாகப் பிறந்து பெண்ணாக மாறும் தன்மையை கொண்டுள்ளதாம்.
</p><p>
 மீன் வகைகளிலிருந்து முற்றிலும் மாறுபட்ட இனப்பெருக்க முறையைக் கொண்ட கொடுவா மீன்கள் என அழைக்கப்படும் ‘பாராமுண்டி’ (Barramundi) மீன்களின் அதிசயம் குறித்து அறிவோம்.

பாராமுண்டி மீன்கள் ஆரம்பகால வாழ்க்கையில் ஆண்களாகவே காணப்படுகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d3fcd6f7-085b-4c5f-b5c1-c95f7c5f7954/26-6a799bafaef90.webp' /></p><h2>இனப்பெருக்க காலத்தில் மில்லியன் கணக்கான முட்டை&nbsp;இடும் திறன்</h2><p> </p><p>பொதுவாக இவை 3 முதல் 5 ஆண்டுகளுக்குள் இனப்பெருக்கத்திற்குத் தயாராகின்றன.

உடல் வளர்ச்சி மற்றும் வயது அதிகரிக்கும் நிலையில், இவற்றில் சில மீன்கள் இயற்கையாகவே பெண் மீன்களாக மாறுகின்றன.</p><p></p><p> இந்த பாலின மாற்ற நிகழ்வு அறிவியல் ரீதியாக “புரோட்டாண்ட்ரி” (Protandry) என அழைக்கப்படுகிறது.

இவ்வாறு பெண்ணாக மாறும் பெரிய அளவிலான பாராமுண்டி மீன்கள், இனப்பெருக்க காலத்தில் மில்லியன் கணக்கான முட்டைகளை இடும் திறன் கொண்டவை.</p><p></p><p> சில சமயங்களில் ஒரு மீன் 3 கோடிக்கும் அதிகமான முட்டைகளை இடக்கூடும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

 அதேசமயம் , அனைத்து ஆண் பாராமுண்டி மீன்களும் பெண் மீன்களாக மாறுவதில்லை. அவற்றில் சில வாழ்நாள் முழுவதும் ஆண் மீன்களாகவே வாழும் என்று ம் கூறப்படுகின்றது.</p>]]></content>
            <updated>2026-08-10T12:50:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரசியல் பணிகளை தீவிரப்படுத்தும் தனுஷ் - சட்டமன்ற தொகுதி வாரியாக உறுப்பினர் சேர்க்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/dhanush-strengthens-fan-club-constituency-wise-1786366230"></link>
            <id>https://news.lankasri.com/article/dhanush-strengthens-fan-club-constituency-wise-1786366230</id>
            <summary type="text">கோவையில், சட்டமன்ற தொகுதிகள் வாரியாக தொகுதிகளுக்கு நற்பணி இயக்கத்தை தொடங்கவும், உறுப்பினர்களை சேர்க்கவும் தனுஷ் அறிவுறுத்தியுள்ளார். 

 சட்டமன்ற தொக...</summary>
            <content type="html"><![CDATA[<p>கோவையில், சட்டமன்ற தொகுதிகள் வாரியாக தொகுதிகளுக்கு நற்பணி இயக்கத்தை தொடங்கவும், உறுப்பினர்களை சேர்க்கவும் தனுஷ் அறிவுறுத்தியுள்ளார்.</p><h3> 

 சட்டமன்ற தொகுதி வாரியாக உறுப்பினர் சேர்க்கை</h3><p>

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருந்த விஜய், கட்சி தொடங்கிய 3 ஆண்டுகளில், சந்தித்த முதல் தேர்தலிலே ஆட்சியை கைப்பற்றி தமிழ்நாட்டின் முதலமைச்சராகியுள்ளார்.</p><p> 

இதனைத்தொடர்ந்து பல்வேறு நடிகர்களுக்கும் அரசியல் ஆசை துளிர்விட்டுள்ளது. நடிகர் ராகவா லாரன்ஸும் அரசியலுக்கு வருவது குறித்து விருப்பம் தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7dae0757-3ff8-4773-80f9-aaae2bc7c888/26-6a79c917dfa84.webp' /></p><p>

அதே போல் நடிகர் தனுஷும் அரசியலுக்கு வர உள்ளதாக சமூக வலைதளங்களில் விவாதம் எழுந்துள்ளது. </p><p>

சமீபத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பேசிய தனுஷ், "இங்கே இவ்வளவு பேர் கூடியிருக்கிறீர்கள். நம் ஒற்றுமைக்குப் பெரிய சக்தி உண்டு. அதற்கு நோக்கமும் உண்டு. சும்மா வந்தோம், என்னைச் சந்தித்தோம், புகைப்படம் எடுத்தோம் என மட்டும் இருக்கக் கூடாது.&nbsp;</p><p></p><p>

உங்களைச் சுற்றியுள்ளவர்கள் சிக்கல்களில் இருந்தால் உதவுங்கள். அவர்களுக்கு நலத்திட்ட உதவிகளைச் செய்யுங்கள். அதற்கு எல்லாரும் கைகோர்க்க வேண்டும். நீங்கள் அதனைச் செய்வீர்கள் என நம்புகிறேன்" என பேசியிருந்தார்.
</p><p>
இது அரசியலுக்கு ரசிகர்களை தயார் செய்யும் பேச்சு என விவாதம் எழுந்த நிலையில், தற்போது சட்டமன்ற தொகுதி வாரியாக நற்பணி இயக்கம் தொடங்கி, உறுப்பினர்களை சேர்க்க அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். </p><p><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">நமது அன்புத் தலைவர் தனுஷ் அவர்களின் கோவை &amp; கோவை தெற்கு மாவட்ட தலைமைக்கு உட்பட்ட நற்பணி இயக்கங்கள் செயல்படும் தொகுதிகள் - விவரங்கள் !<br><br>Thalaivar <a href="https://x.com/dhanushkraja?ref_src=twsrc%5Etfw">@dhanushkraja</a> , <a href="https://x.com/hashtag/OM?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#OM</a> <a href="https://x.com/coimbatore_DFC?ref_src=twsrc%5Etfw">@coimbatore_DFC</a> <a href="https://x.com/Covaidhanushfc?ref_src=twsrc%5Etfw">@Covaidhanushfc</a> <a href="https://t.co/nXdvYo0RVg">pic.twitter.com/nXdvYo0RVg</a></p>&mdash; RAJA B RAJA (@B_RAJA_) <a href="https://x.com/B_RAJA_/status/2086694288013017332?ref_src=twsrc%5Etfw">August 10, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>

இது குறித்து அனைத்திந்திய தலைமை தனுஷ் நண்பர்கள் நற்பணி மன்றம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை தெற்கு மாவட்டம் மற்றும் கோவை வடக்கு மாவட்டம் கீழ் உள்ள தலா 5 சட்டமன்ற தொகுதிகள் வாரியாக தொகுதிகளுக்கு நற்பணி இயக்கத்தை தொடங்கவும், உறுப்பினர்களை சேர்க்கவும் கோவை மாவட்ட தலைவரை தொடர்பு கொள்ளுமாறு’ தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
விஜய் தமிழ்நாட்டின் முதல்வர் ஆகுவார் என கணித்த அவரது ஆஸ்தான ஜோதிடரான ரதன் பண்டிட் வெற்றிவேல், "நான் தனுஷின் ஜாதகத்தை பர்சனலா பார்த்திருக்கேன். </p><p> 

உறுதியாக இன்னொரு அதிர்ஷடமிகு ஆள் தனுஷ். ரிஸ்க் எடுக்க தனுஷ் சார் தயாரா இருந்தா 2031ல இது விஜய் சார் வெர்சஸ் தனுஷ் சார்ன்னு மாறும்" என சமீபத்தில் தெரிவித்துள்ளார்.&nbsp; &nbsp;&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-10T12:50:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானியாவில் எரிவாயு வெடிப்பில் முற்றிலும் அழிந்த பங்களா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/bungalow-blast-of-gas-explosion-in-uk-1786366148"></link>
            <id>https://news.lankasri.com/article/bungalow-blast-of-gas-explosion-in-uk-1786366148</id>
            <summary type="text">பிரித்தானியாவின் பக்கிங்ஹாம்ஷயரில் பங்களா ஒன்று எரிவாயு வெடிப்பில் சிதறியது.

பிரித்தானியாவின் பக்கிங்ஹாம்ஷயரில் உள்ள மில்டன் கெய்ன்ஸுக்கு அருகிலுள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரித்தானியாவின் பக்கிங்ஹாம்ஷயரில் பங்களா ஒன்று எரிவாயு வெடிப்பில் சிதறியது.
</p><p>
பிரித்தானியாவின் பக்கிங்ஹாம்ஷயரில் உள்ள மில்டன் கெய்ன்ஸுக்கு அருகிலுள்ள நியூட்டன் லாங்வில்லில் இருந்த பங்களா ஒன்று எரிவாயு வெடிப்பில் சிதறியது.&nbsp;</p><h2>செங்கற்களும், இடிபாடுகளும்&nbsp;</h2><p>
பக்கிங்ஹாம்ஷயரில் உள்ள மில்டன் கெய்ன்ஸுக்கு அருகிலுள்ள நியூட்டன் லாங்வில்லில், மாபெரும் எரிவாயு வெடிப்பில் பங்களா ஒன்று வெடித்தது.

அதில் செங்கற்களும், இடிபாடுகளும் எல்லா இடங்களிலும் சிதறின.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6192a771-eaf8-4582-adc7-48127f6780fa/26-6a79c8c82e5d6.webp' /></p><p></p><p> சந்தேகத்திற்கிடமான இந்த எரிவாயு வெடிப்பில் அந்த பங்களா முற்றிலுமாக அழிந்ததாக தெரிய வந்துள்ளது.
</p><p>
அதே சமயம் பங்களாவின் அருகிலுள்ள வீடுகளையும், கார்களையும் சிதறிய செங்கற்கள் சேதப்படும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
</p><h2>
மிகவும் பயங்கரமானது</h2><p>இந்த விபத்தில் பங்களாவில் வசித்து வந்ததாக நம்பப்படும் ஒருவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். மேலும், அவரது நாய் ஒன்று கால்நடை மருத்துவரிடம் கொண்டு செல்லப்பட்டது.</p><p>

இதற்கிடையில், பாதிக்கப்பட்டவர்களுக்கு அவசரகால சேவைகளால் சிகிச்சை அளிக்கப்பட்ட உள்ளூர் மதுபான விடுதியில் குடியிருப்பாளர்கள் கூடியதாகக் கூறப்படுகிறது. </p><p>

சம்பவத்தை நேரில் பார்த்த நபர் ஒருவர், இந்த எரிவாயு வெடிப்பை 'மிகவும் பயங்கரமானது' என்று விவரித்தார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e975ddc8-fcd4-497b-8258-c8fa93d4ca3f/26-6a79c8c76f922.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-10T12:47:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[நான்கு வருடப் போரில் உக்ரைன் நடத்திய மிகக் கொடூரமான தாக்குதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/deadliest-attacks-by-ukraine-1786361027"></link>
            <id>https://news.lankasri.com/article/deadliest-attacks-by-ukraine-1786361027</id>
            <summary type="text">Deadliest Attacks By Ukraine: நான்கு வருடங்களுக்கும் மேலாக நீடிக்கும் போரில் உக்ரைன் நடத்திய மிகக் கொடூரமான தாக்குதல்.

ரஷ்யாவின் மத்தியப் பகுதியான ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Deadliest Attacks By Ukraine: நான்கு வருடங்களுக்கும் மேலாக நீடிக்கும் போரில் உக்ரைன் நடத்திய மிகக் கொடூரமான தாக்குதல்.
</p><p>
ரஷ்யாவின் மத்தியப் பகுதியான தாதர்ஸ்தானில் நடத்தப்பட்ட உக்ரேனிய ட்ரோன் தாக்குதலில் குறைந்தது 12 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.</p><h2>பதிலடித் தாக்குதல்</h2><p>
</p><p>நான்கு ஆண்டு காலப் போரில் உக்ரைன் நடத்திய மிகக் கொடிய தாக்குதல்களில் ஒன்றாகவே இது பார்க்கப்படுகிறது. சமீபத்திய தகவல்களின்படி, ட்ரோன் தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் காயங்களுடன் 39 பேர் உயிர் தப்பியுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b56a869b-d3ea-4b7a-aab5-d63b9f3d3aea/26-6a79b4c5ab1b4.webp' /></p><p>
</p><p>உக்ரைனிய எல்லையிலிருந்து 620 மைல்களுக்கும் அதிகமான தொலைவில் அமைந்துள்ள தாதர்ஸ்தான் பகுதி எரிசக்தி வளங்கள் நிறைந்தது; மேலும், பதிலடித் தாக்குதல்களின் ஒரு பகுதியாக உக்ரைன் இராணுவம் இலக்கு வைத்துத் தாக்கி வரும் பல முக்கிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களும் இங்கு உள்ளன. </p><p>ஐக்கிய நாடுகள் சபையின் தகவலின்படி, இரு தரப்பினரும் இந்த ஆண்டு தங்கள் நீண்ட தூரத் தாக்குதல்களைக் கணிசமாகத் தீவிரப்படுத்தியுள்ளதால், பொதுமக்களின் உயிரிழப்புகள் அதிகரித்துள்ளன.</p><p></p><p> </p><p>உக்ரைனின் வடகிழக்கு கார்கிவ் பிராந்தியத்தில் உள்ள ஒரு கிராமத்தில், போர்முனைக்கு அருகில் நடத்தப்பட்ட ரஷ்ய பீரங்கித் தாக்குதலில் ஐந்து பேர் கொல்லப்பட்டதாக உள்ளூர் உக்ரேனிய அதிகாரிகள் தெரிவித்தனர். </p><p>ஆகஸ்ட் 10 அன்று, சுகுயிவ் (Chuguiv) மாவட்டத்தில் உள்ள புகாய்கா (Bugaivka) கிராமத்தின் குடியிருப்புப் பகுதியில் ரஷ்யப் படைகள் கடுமையான பீரங்கித் தாக்குதலை நடத்தின.</p><h2>456 உக்ரேனிய ட்ரோன்கள்</h2><p> </p><p>எதிரிகளின் இந்தத் தாக்குதலால் பல வீடுகள் சேதமடைந்தன. இதில் ஐந்து பேர் உயிரிழந்ததாகப் பிராந்திய அரசுத் தரப்பு சட்டத்தரணிகள் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b8745da3-8f82-4f0b-a899-d28cd4ad499a/26-6a79b4c659e6e.webp' /></p><p> </p><p>இதனிடையே, இரவு நேரத்தில் ஏவப்பட்ட 456 உக்ரேனிய ட்ரோன்களைச் சுட்டு வீழ்த்தியதாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. அவற்றில் எத்தனை ட்ரோன்கள் தங்கள் இலக்குகளை அடைந்தன என்பது குறித்து குறிப்பிடவில்லை. </p><p>
ரஷ்யா தனது இரவு நேரத் தாக்குதலில் 126 ட்ரோன்களைப் பயன்படுத்தியதாக உக்ரைன் விமானப்படை தெரிவித்துள்ளது. ரஷ்ய எல்லைப் பகுதியான பெல்கோரோடில் உக்ரைன் நடத்திய தாக்குதலில் ஒரு பெண்ணும் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது, மேலும் கெர்சன் பகுதியில் டாக்ஸி மீது ரஷ்ய ட்ரோன் தாக்குதலில் ஒரு ஆண் கொல்லப்பட்டதாக அங்குள்ள அதிகாரிகள் தெரிவித்தனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-10T12:45:17+00:00</updated>
        </entry>
    </feed>
