<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-09-06T05:00:13+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[கோட்டாபயவுக்கு நடந்ததை சிந்தித்து பார்க்கவும்! அநுர தொடர்பில் கடும் குற்றச்சாட்டு முன்வைத்த சஜித்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/government-taking-our-deathbed-opposition-leader-1788669549"></link>
            <id>https://tamilwin.com/article/government-taking-our-deathbed-opposition-leader-1788669549</id>
            <summary type="text">திசைகாட்டி அரசு மக்களின் உரிமைகளை மீறி, ஜனநாயகத்தைச் சீரழித்து வருகின்றது
என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கடுமையாக குற்றம்சாட்டியுள்ளார்....</summary>
            <content type="html"><![CDATA[<p>திசைகாட்டி அரசு மக்களின் உரிமைகளை மீறி, ஜனநாயகத்தைச் சீரழித்து வருகின்றது
என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கடுமையாக குற்றம்சாட்டியுள்ளார்.
</p><p>
அம்பாந்தோட்டை மாவட்டம், தங்காலை தேர்தல் தொகுதி, லுனுகம்வெஹர புதிய நகரில்
விவசாயிகளின் பிரச்சினைகளை ஆராயும் மக்கள் சந்திப்பு நேற்று சனிக்கிழமை
நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர்
மேற்கண்டவாறு தெரிவித்தார்.அவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில்,</p><h2>இளைஞர் மன்றத்தேர்தல்</h2><p>

"மாறுபட்ட அரசே இன்று நாட்டை ஆட்சி செய்து வருகின்றது. சர்வாதிகார,
எதேச்சதிகார அரசாகவே இந்த அரசு காணப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a2681219-c899-40a7-8927-5288bb91cebb/26-6a9cf2d2a1413.webp' /></p><p> </p><p>அவ்வாறே ஜனநாயகத்தை மரணப்
படுக்கைக்குக் கொண்டு செல்லும் அரசாகவும் இது திகழ்கின்றது. தற்சமயம் இந்தப்
பிரஜைகளின் பங்களிப்பைக் குறைக்கும் தேசியத் வேலைத்திட்டமொன்றை முன்னெடுத்து,
ஜனநாயகத்துக்கான வெளியைச் சுருக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகின்றது.
</p><p>
இதன் ஆரம்பம் இளைஞர் மன்றத் தேர்தல் ஊடாக நடந்து, பின்னர் சிவில் பாதுகாப்பு
குழுக்கள் வரை சென்றது. அதன் தொடர்ச்சியாக தற்போது 22 ஆவது அரசமைப்புத்
திருத்தம் ஊடாக ஜனநாயகத்தை அழித்து, ஜனநாயகப் பாரம்பரியங்கள் அனைத்தையும்
நாசமாக்கி, தனிவழியில் எல்லா விடயங்களையும் செய்துகொள்ள இந்த அரசு முற்பட்டு
வருகின்றது.
</p><p>
சர்வாதிகாரப் போக்கில், தனிவழியில் செயற்படும் இந்த அரசு எடுக்கும்
தீர்மானங்கள் காரணமாகவே நாடே வீழ்ச்சியடைந்துள்ளது. </p><p>தனிக்கட்சி நாட்டை ஆட்சி
செய்வதே ஜனாதிபதிக்கு தற்போதுள்ள ஒரே நோக்கமாகக் காணப்படுகின்றது. முழு அரசும்
அரச இயந்திரமும் ஒரு கட்சியினது உத்தரவுகளுக்கு இணங்கச் செயற்பட இந்த அரசு
நடவடிக்கை எடுத்து வருகின்றது. </p><p>இதற்காகவே 22 ஆவது அரசமைப்புத் திருத்தத்தைக்
கொண்டுவந்துள்ளனர்.</p><h2>எரிபொருள் மற்றும் எரிவாயு விலை</h2><p>
</p><p>
எதிர்க்கட்சியாக இருந்தவேளை மின்சாரக் கட்டணத்தை 33 சதவீதத்தால்
குறைப்பதாகவும், துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்படும் அதே விலையில்
எரிபொருளைப் பெற்றுத் தருவதாகவும், இளைஞர் தலைமுறைக்கு 12 இலட்சத்துக்கு
விட்ஸ் ரக காரைப் பெற்றுக்கொள்வதற்கான வசதியை ஏற்படுத்தித் தருவதாகவும், நெல்
ஒரு கிலோவுக்கு 150 ரூபா நிலையான விலையைச் சட்ட ரீதியாக ஆக்கித் தருவதாகவும்
பிரஸ்தாபித்தனர். ஆனால், இன்று வரை இதில் எதையுமே செய்யவில்லை. நாட்டை
சர்வாதிகார ஆட்சி நோக்கியே அரசு நகர்த்திச் செல்கின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f6607421-f4bc-4971-8a52-517ac3d297d3/26-6a9cf32970250.webp' /></p><p>
</p><p>
எரிபொருள் மற்றும் எரிவாயு விலைகளைச் சொற்ப தொகையில் குறைத்துவிட்டு ஊடகக்
காண்பிப்புகளையே இவர்கள் செய்து வருகின்றனர்.</p><p> தமக்கு வாக்களித்த மக்கள்
துன்பப்பட வேண்டும் என்பதே இந்த மாறுபட்ட அரசின் ஆசையாகக் காணப்படுகின்றது.

விவசாயியின் மகன் என்று கூறிக்கொண்டு ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி அநுரகுமார
திஸாநாயக்க, இன்று சுழற்சி முறை விவசாயத்தைக்கூட தடை செய்து வருகின்றார்.</p><p> இதன்
மூலம் இலட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நெற்செய்கை, தோட்டப்
பயிர்கள், மரக்கறி மற்றும் பழங்கள், ஏற்றுமதிப் பயிர்ச்செய்கை உள்ளிட்ட
ஒட்டுமொத்த விவசாயமும் இன்று வீழ்ச்சியடைந்துள்ளது.
</p><h2>கோட்டாபய ராஜபக்சவுக்கு என்ன நடந்தது</h2><p>
நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை, உள்ளூராட்சி மன்றங்களின்
அதிகாரம், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவி ஆகியவை இவர்களிடம் இருப்பதால் அரசு
தங்களை அதிகாரம் படைத்தோராக நினைத்துக்கொண்டிருக்கின்றது.</p><p>

69 இலட்சம் வாக்குகளைப் பெற்ற முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு என்ன
நடந்தது என்பதை இந்த அரசு சிந்தித்துப் பார்க்க வேண்டும்.</p><p>மக்கள் வீதியில்
இறங்கியமையாலேயே அவர் வீட்டுக்குச் செல்ல நேரிட்டது. 2019 இலும் 2024 இலும்
மக்கள் ஏமாந்தனர். ஆகவே, உங்கள் உரிமைகளைப் பாதுகாத்துக்கொள்வதற்காக வீதியில்
இறங்கத் தயாராகுமாறு மக்களிடம் வேண்டுகோள் விடுக்கின்றேன்." - என்றார்.</p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-06T04:58:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்த ராசி ஆண்களிடம் ஜாக்கிறதையா இருங்க! பெண்களை ஏமாற்றுவதில் கில்லாடிகளாம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/which-zodiac-signs-men-are-cheat-girls-1788669220"></link>
            <id>https://manithan.com/article/which-zodiac-signs-men-are-cheat-girls-1788669220</id>
            <summary type="text">ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில், ஒருவருடைய பிறப்பு ராசி மற்றும் நட்சத்திரம் அவர்களின் வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில், ஒருவருடைய பிறப்பு ராசி மற்றும் நட்சத்திரம் அவர்களின் வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என நம்பப்படுகிறது. </p><p>குறிப்பாக, அவர்களின் எதிர்கால வாழ்க்கை, நிதி நிலை, காதல் மற்றும் திருமண வாழ்க்கை மட்டுமின்றி, அவர்களின் நேர்மறை மற்றும் எதிர்மறையான குணநலன்களிலும் ராசி மற்றும் நட்சத்திரத்தின் தாக்கம் இருப்பதாக ஜோதிடத்தில் கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/af077fd3-5068-485a-9a5a-ce412fe9801c/26-6a9cf2ab04c57.webp' /></p><p></p><p>

அந்த வகையில், குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்த ஆண்கள் இயல்பாகவே பெண்கள் மீதும் காதல் மீதும் அதிக ஈடுபாடு கொண்டவர்களாக இருப்பார்கள் என்றும், இவர்கள்&nbsp; தங்களின் காதல் உறவுகளில் நேர்மையாக இல்லாமல், துணையை ஏமாற்றும் அல்லது ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட உறவுகளைத் தொடரும் மனப்பான்மை கொண்டிருக்ப்பார்கள் என்றும் கணிக்கபபட்டுள்ளது.</p><p>அப்படி காதல் என்ற பெயரில் பெண்களை அதிகம் ஏமாற்றும் குணம் கொண்டவர்களாக ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் ஆண் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.&nbsp;</p><h2>மேஷம்
</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2830fc86-5615-403c-b72e-871807766ec1/26-6a9cf2abb4a77.webp' /></p><p>மேஷ ராசியின் அதிபதி செயல் மற்றும் போரின் கிரகமான செவ்வாய். இவர்கள் இயல்பிலேயே துணிச்சலும், ஆர்வமும், உத்வேகமும் கொண்டவர்கள். </p><p>உறவுகளில் தீவிரமாக ஈடுபட்டாலும், விரைவில் பொறுமையிழக்கவோ சலிப்படையவோ வாய்ப்புள்ளது. சவால்களையும் புதிய அனுபவங்களையும் விரும்புவதால், ஒரே பெண்ணிடம் நிலையான விசுவாசத்துடன் இருப்பது இவர்களுக்கு கடினம்.</p><p>ஆனால் இவர்கள் ஒருவரை&nbsp; உண்மையாக நேசிக்கும்போது, அவர்களின் காதலும் ஈடுபாடும் தீவிரமாக இருக்கும். இவர்களுக்கு எளிதில் சளிப்படையும் குணம் இருப்பதால் இவர்கள் பல பெண்களை விரும்ப அதிக வாய்ப்பு காணப்படும்.&nbsp;</p><h2>
மிதுனம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/54f4e612-bcc5-4df4-b210-b6e4434ba6db/26-6a9cf2ac6626b.webp' /></p><h2>
</h2><p>மிதுன ராசியின் அதிபதி கிரகங்களின் இளவரசரான புதன். இவர்கள் ஆர்வமுள்ளவர்களாகவும், துடிப்பானவர்களாகவும், மாற்றத்தை விரும்புபவர்களாகவும் இருப்பார்கள்.</p><p> புதிய இடங்கள் மற்றும் மனிதர்களைச் சந்திப்பதில் ஆர்வம் கொண்டதால், ஒரே பெண்ணுடன் நிலைத்து வாழ்வது சில நேரங்களில் கடினமாகலாம். </p><p>எப்போதும் புதுப்புது அனுபவங்களைத் தேடுவதால், எளிதில் சலிப்படையக்கூடியவர்களாகவும் இருப்பார்கள். இதனால் ஒரே துணைக்கு விசுவாசமாக இருப்பது கடினம்.&nbsp;</p><h2>

தனுசு</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2364c31e-daf5-4d2d-9a83-23a9bfc97057/26-6a9cf2ad180ec.webp' /></p><p>
தனுசு ராசியின் அதிபதி முன்னேற்றம் மற்றும் சாகசத்தின் கிரகமான குருபகவான். இவர்கள் சுதந்திரத்தையும் புதிய அனுபவங்களையும் அதிகம் விரும்புவார்கள். </p><p>புதிய இடங்கள், யோசனைகள் மற்றும் மனிதர்களை ஆராய்வதில் ஆர்வம் கொண்டதால், ஒரே பெண்ணுடன் முழுமையாகத் திருப்தி அடைவது சில நேரங்களில் கடினமாகலாம். </p><p>தங்களின் சுதந்திரத்தைப் புரிந்துகொள்ளும் துணையை விரும்புவார்கள். உறவில் கட்டுப்பட்டதாக உணர்ந்தால், அதிலிருந்து விலகிவிடும் மனநிலை ஏற்படலாம்.</p><h2>

துலாம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f7527ca5-1ee0-4114-8ea6-3079d240d02a/26-6a9cf2adc12cd.webp' /></p><p></p><p>
துலாம் ராசிக்காரர்கள் வசீகரமானவர்கள், காதல் உணர்வு கொண்டவர்கள் மற்றும் சமூகத்தில் எளிதில் பழகக்கூடியவர்கள்.</p><p> புதிய நபர்களைச் சந்திப்பதையும், காதல் வாழ்க்கையை ரசிப்பதையும் விரும்புவார்கள். இதனால் சில நேரங்களில் பல உறவுகளுக்கு இடையில் ஊசலாடக்கூடும்.</p><p> உறவுகளில் நல்லிணக்கத்தை விரும்பினாலும், ஒரே ஒரு பெண்ணிடம் மட்டும் நிலைத்திருப்பது அவர்களுக்கு சவாலாக இருக்கலாம்.</p><p><b>இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).</b></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்<b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"> FOLLOW NOW</a></u></b></td></tr></tbody></table><p><b><u><br></u></b></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-06T04:57:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[கோலகலமாக அரங்கேறிய போதை விருந்து ; 05 பெண்களுடன் கைதான 36 ஆண்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/lavish-drug-party-36-men-arrested-with-5-women-1788670628"></link>
            <id>https://jvpnews.com/article/lavish-drug-party-36-men-arrested-with-5-women-1788670628</id>
            <summary type="text">தெல்தெனிய, விக்டோரியா பகுதியில் நடத்தப்பட்ட பேஸ்புக் விருந்துபசாரம் ஒன்று முற்றுகையிட்ட பொலிஸார் 36 ஆண் சந்தேகநபர்களையும் 5 பெண் சந்தேகநபர்களையும் கைத...</summary>
            <content type="html"><![CDATA[<p>தெல்தெனிய, விக்டோரியா பகுதியில் நடத்தப்பட்ட பேஸ்புக் விருந்துபசாரம் ஒன்று முற்றுகையிட்ட பொலிஸார் 36 ஆண் சந்தேகநபர்களையும் 5 பெண் சந்தேகநபர்களையும் கைது செய்துள்ளனர். </p><p>

தெல்தெனிய பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைய இந்தச் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/20944071-f913-4a5d-93fc-2699c9dadd4e/26-6a9cf2a56de4d.webp' /></p><h2>&nbsp;போதைப்பொருள்</h2><p> </p><p>

சந்தேகநபர்களிடமிருந்து 947 மில்லிகிராம் கஞ்சா, 3 கிராம் 657 மில்லிகிராம் ஹேஷ் போதைப்பொருள், 1 கிராம் 276 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள், 18 போதை மாத்திரைகள், 21 சட்டவிரோத சிகரெட்டுகள், 500 மில்லி லீட்டர் கொள்ளளவு கொண்ட 35 பியர் கேன்கள் மற்றும் 750 மில்லி லீட்டர் கொள்ளளவு கொண்ட 13 மதுபான போத்தல்கள் என்பவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். </p><p>

கைது செய்யப்பட்ட ஆண் சந்தேகநபர்கள் 21 முதல் 40 வயதிற்கு இடைப்பட்டவர்களென்பதுடன், அவர்கள் கெலியோய, அலுத்வத்தை, வரகாபொல, பேராதனை, அம்பிட்டிய, கண்டி மற்றும் ஹங்குரன்கெத்த ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர்.</p><p> 

அத்துடன், கைது செய்யப்பட்ட பெண் சந்தேகநபர்கள் 22 முதல் 43 வயதிற்கு இடைப்பட்டவர்களென்பதுடன், அவர்கள் பல்லேகல, பேராதனை, ஹங்குரன்கெத்த, தெஹிவளை மற்றும் கட்டுக்கஸ்தோட்டை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்படுகிறது.</p>]]></content>
            <updated>2026-09-06T04:57:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[Gov Pay பயன்படுத்தும் பொது மக்களுக்கு அவசர எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/fraud-through-fake-gov-pay-website-police-warn-1788670106"></link>
            <id>https://tamilwin.com/article/fraud-through-fake-gov-pay-website-police-warn-1788670106</id>
            <summary type="text">&#039;Gov Pay&#039; அமைப்பைப் போன்ற போலி இணையதளத்தை உருவாக்கி பொதுமக்களின் பணம் மற்றும் முக்கியமான தகவல்களைத் திருடும் மோசடியொன்று இடம்பெற்று வருவதாக பொலிஸார் த...</summary>
            <content type="html"><![CDATA[<p>'Gov Pay' அமைப்பைப் போன்ற போலி இணையதளத்தை உருவாக்கி பொதுமக்களின் பணம் மற்றும் முக்கியமான தகவல்களைத் திருடும் மோசடியொன்று இடம்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p> 

'Gov Pay' மூலம் பணத்தைச் செலுத்துவதற்கு வேறு எந்த இணையதளமும் கிடையாது என்பதால், இத்தகைய நிதி மோசடிகளில் சிக்கி ஏமாற வேண்டாம் என்று பொலிஸார் அறிவுறுத்துகின்றனர்.</p><h2>புதிய நடைமுறை</h2><p> </p><p>பொதுமக்களின் சேவையை இலகுபடுத்தும் நோக்கிலும், நிதி மோசடிகளைக் குறைக்கும் நோக்கிலும் போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதங்களை 'Gov Pay' முறைமையின் மூலம் செலுத்தும் நடைமுறை இந்த ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. </p><p>இருப்பினும், 'Gov Pay' அமைப்பைப் போன்ற போலி இணையதளத்தை உருவாக்கி, பொதுமக்களின் பணம் மற்றும் ரகசியத் தரவுகளை தந்திரமாகத் திருடும் மோசடி இடம்பெற்று வருவதாக பொலிஸார் சுட்டிக்காட்டுகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9e987570-62f6-469f-975f-c9fb50e133cd/26-6a9cf28c7db66.webp' /></p><h2>மோசடி</h2><p> </p><p>இந்த போலி இணையதளத்தின் இணைப்புகள் (Links), குறுஞ்செய்திகள் (SMS) மற்றும் வாட்ஸ்அப் (WhatsApp) செய்திகள் மூலமாக கையடக்க தொலைபேசிகளுக்கு அனுப்பப்பட்டு, பொதுமக்களின் பணம் இவ்வாறு திருடும் மோசடி இடம்பெறுவதாக குறிப்பிடப்படுகிறது.</p><p> 'Gov Pay' மூலம் பணத்தைச் செலுத்துவதற்கு வேறு எந்த இணையதளமும் இல்லாததால், இவ்வாறான போலி நிதி மோசடிகளில் சிக்க வேண்டாம் என போக்குவரத்துப் பிரிவுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர் டபிள்யூ.பி.ஜே.சேனாதீர, பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-06T04:56:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[2032ஆம் ஆண்டளவில் இலங்கையில் ஏற்படவுள்ள மாற்றம்! வட மாகாண ஆளுநர் கூறும் விடயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/north-governor-statement-regarding-srilanka-1788669218"></link>
            <id>https://tamilwin.com/article/north-governor-statement-regarding-srilanka-1788669218</id>
            <summary type="text">&#039;கண்ணிவெடிகளற்ற இலங்கை&#039; என்ற இலக்கை அடைவதற்கு அரசாங்கம் முழுமையான ஆதரவை வழங்கி
வருகின்றது, போருக்குப் பின்னரான வட மாகாணத்தின் மீள்குடியமர்வு மற்றும்...</summary>
            <content type="html"><![CDATA[<p>'கண்ணிவெடிகளற்ற இலங்கை' என்ற இலக்கை அடைவதற்கு அரசாங்கம் முழுமையான ஆதரவை வழங்கி
வருகின்றது, போருக்குப் பின்னரான வட மாகாணத்தின் மீள்குடியமர்வு மற்றும்
மக்கள் தமது வாழ்விடங்களுக்குத் திரும்புவதற்கான செயன்முறைகள் விரைவாக
இடம்பெறுவதற்கு கண்ணிவெடி அகற்றும் நிறுவனங்களின் அர்ப்பணிப்பும் மனிதநேயப்
பணியும் பெரும் பங்களிப்பை வழங்கியுள்ளன என வட மாகாண ஆளுநர்
நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.</p><p>2032ஆம் ஆண்டளவில் இலங்கையை கண்ணிவெடிகளற்ற நாடாக மாற்றும் இலக்கை எட்ட முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p>

வீடமைப்பு, நிர்மாணம் மற்றும் நீர்வழங்கல் அமைச்சின் கீழ் இயங்கும் தேசிய
கண்ணிவெடி நடவடிக்கை நிலையத்தால் ஒழுங்கு செய்யப்பட்ட ஊடகச் சந்திப்பு
நேற்றுமுன்தினம் (04.09.2026) மாலை கிளிநொச்சி மாவட்ட செயலகக் கேட்போர்
கூடத்தில் நடைபெற்றது. </p><p>இதில் வடக்கு மாகாணத்தின் கண்ணிவெடி அகற்றும்
செயற்பாடுகள், இதுவரையான முன்னேற்றம் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில்
கருத்துக்கள் பகிரப்பட்டன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2f302f55-1da4-4266-9d58-7ed597ac2fce/26-6a9ceef8ce7cd.webp' /></p><h2>கண்ணிவெடி அகற்றப்பட வேண்டிய இடம்</h2><p>
</p><p>
வீடமைப்பு, நிர்மாணம் மற்றும் நீர்வழங்கல் அமைச்சின் செயலாளர், பொறியியலாளர்
குமுது லால் போகஹவத்த கருத்துத் தெரிவிக்கையில், இலங்கையில் தற்போது 21 சதுர
கிலோமீற்றர் பரப்பளவில் கண்ணிவெடிகள் அகற்றப்பட வேண்டியுள்ளன என்று
தெரிவித்தார். </p><p>இதுவரையான கண்ணிவெடி அகற்றும் செயற்பாடுகளின்போது பல்வேறு
நிறுவனங்களைச் சேர்ந்த சுமார் 20 பணியாளர்கள் தமது உயிர்களைத் தியாகம்
செய்துள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார். </p><p>கண்ணிவெடி அகற்றும் பணியின்
அபாயத்தையும் அதில் பணியாற்றுவோரின் அர்ப்பணிப்பையும் இது
வெளிப்படுத்துகின்றது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9e28ade0-01e8-4bc7-8ca0-9f593fb641d4/26-6a9ceef9b69e6.webp' /></p><p>
</p><p>
இதன்போது கருத்துத் தெரிவித்த ஆளுநர், கண்ணிவெடி அகற்றும் பணியாளர்களின்
மனிதநேயத்தையும் அர்ப்பணிப்பையும் மனமுவந்து பாராட்டினார். போருக்குப்
பின்னரான காலப்பகுதியில் தாம் பல்வேறு மாவட்டங்களின் மாவட்ட செயலராகப்
பணியாற்றியபோது, மக்கள் தமது சொந்த இடங்களுக்குத் திரும்புவதற்கான
மீள்குடியமர்வுச் செயற்பாடுகள் விரைவாக முன்னெடுக்கப்படுவதில் கண்ணிவெடி
அகற்றும் நிறுவனங்கள் வழங்கிய ஒத்துழைப்பை நேரடியாகக் கண்டறிந்ததாகவும் அவர்
தெரிவித்தார்.
</p><p>
மிகவும் கடினமான மற்றும் ஆபத்தான பகுதிகளிலும் தமது உயிரைப் பணயம் வைத்து
கண்ணிவெடிகளை அகற்றி, ஆயிரக்கணக்கான மக்களின் பாதுகாப்பான
மீள்குடியமர்வுக்கும் அவர்களின் வாழ்வாதாரங்களை மீளக் கட்டியெழுப்புவதற்கும்
கண்ணிவெடி அகற்றும் பணியாளர்கள் பங்களித்துள்ளனர் என்றும் ஆளுநர் மெச்சினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/864032cc-25cd-41a9-a2d8-3195db045e81/26-6a9ceefaa1f1b.webp' /></p><h2>கண்ணிவெடிகள் இருக்கக்கூடிய வாய்ப்பு குறித்து கவனம்</h2><p>
</p><p>
இதேவேளை, சில வாரங்களுக்கு முன்னர் தமது தலைமையில் ஆளுநர் செயலகத்தில்
நடைபெற்ற கலந்துரையாடலில், தற்போது வனவளத் திணைக்களத்தின் எல்லைக்குட்பட்டதாக
அடையாளப்படுத்தப்பட்டுள்ள சில பகுதிகளில் காணப்படும் பங்கர்களுடன் தொடர்புடைய
கண்ணிவெடிகள் இருக்கக்கூடிய வாய்ப்பு குறித்து கவனம் செலுத்தப்பட்டது என்றும்
ஆளுநர் குறிப்பிட்டார். </p><p>அவ்வாறான பகுதிகளிலும் தேவையான ஆய்வுகளை மேற்கொண்டு
கண்ணிவெடிகளை அகற்ற வேண்டிய தேவை இருக்கின்றது என்றும் அவர் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் மாவட்டம் விரைவில் கண்ணிவெடியற்ற மாவட்டமாக அறிவிக்கப்படும்
நிலைக்கு முன்னேறி வருகின்றது என்று குறிப்பிட்ட ஆளுநர், 2032ஆம் ஆண்டளவில்
இலங்கையை கண்ணிவெடிகளற்ற நாடாக மாற்றும் இலக்கை எட்ட முடியும் என
எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2d766449-5bff-4604-8458-2ff5e94a46a1/26-6a9ceefb74cd3.webp' /></p><p> இதற்குத் தேவையான முழுமையான அரச ஆதரவு
தொடர்ந்து வழங்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.
</p><p>
இதேவேளை, ஊடக சந்திப்பின்போது இலங்கை அரசின் சார்பில் தேசிய கண்ணிவெடி
நடவடிக்கை நிலையத்துக்கும் ஹலோ ட்ரஸ்ட் நிறுவனத்துக்கும் இடையில்
புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது.

இந்த ஊடகச் சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன், யாழ்ப்பாணம்,
கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்ட செயலர்கள், வவுனியா மாவட்ட
மேலதிக மாவட்ட செயலர், தூய்மை இலங்கை செயலணியின் கிளிநொச்சி மாவட்ட இணைப்பாளர்
உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1615a6b8-d689-45d1-9311-ef34bb39b106/26-6a9ceefc485af.webp' /></p>]]></content>
            <updated>2026-09-06T04:43:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தோல்வியில் முடிந்த துப்பாக்கிச்சூடு ; அதிகாலையில் அரங்கேறிய சம்பவம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/failed-shooting-attempt-1788669664"></link>
            <id>https://jvpnews.com/article/failed-shooting-attempt-1788669664</id>
            <summary type="text">கொஸ்கொட பகுதியில் இன்று (06) அதிகாலை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. 

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்குழுவைச் சேர்ந்த &#039;கொஸ்கொட தாரக்க&#039;...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">கொஸ்கொட பகுதியில் இன்று (06) அதிகாலை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.</p><p style="text-align: justify; "> 

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்குழுவைச் சேர்ந்த 'கொஸ்கொட தாரக்க' என்பவரின் உறவினர் ஒருவரைக் இலக்கு வைத்தே இந்தத் துப்பாக்கிச் சூட்டை நடத்த முயற்சி செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b0bfad66-3a7a-452d-8317-e2777a6276ff/26-6a9ceee1f1959.webp' /></p><p style="text-align: justify; "> 

9 மில்லிமீட்டர் ரக துப்பாக்கியைப் பயன்படுத்தி இருமுறை சுடுவதற்கு முயற்சி செய்யப்பட்டுள்ள போதிலும், அந்த இரண்டு சந்தர்ப்பங்களிலும் துப்பாக்கி இயங்கவில்லை எனக் குறிப்பிடப்படுகிறது. </p><p style="text-align: justify; ">

இச்சம்பவம் தொடர்பில் கொஸ்கொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-09-06T04:41:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Fathima</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரதமர் வேட்பாளர் விஜயா? தொல்.திருமாவளவன் பதில்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/pm-candidate-tvk-ministers-thirumavalavan-1788669242"></link>
            <id>https://ibctamilnadu.com/article/pm-candidate-tvk-ministers-thirumavalavan-1788669242</id>
            <summary type="text">கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி அமைப்பது தொடர்பா...</summary>
            <content type="html"><![CDATA[<p>கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி அமைப்பது தொடர்பான கலந்தாய்வு கூட்டம் இரண்டாவது முறையாக நடைபெறுகிறது.</p><p>

கூட்டத்தில் யார் யார் பங்கேற்பார்கள், என்ன செய்ய போகிறார்கள் என்பது குறித்து நடைபெறும் போது தான் தெரியவரும் என தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a8142985-8ac0-4445-8069-178a9dc4b5da/26-6a9cedeea6eda.webp' /><br></p><p>
</p><p>
மேலும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், நீதிமன்ற உத்தரவின்படி ஆணவக்கொலை தடுப்பு மசோதா வரையறுக்கப்படும் என தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் அறிவிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது எனவும் தெரிவித்துள்ளார்.
</p><p>
இதன்போது தமிழக வெற்றி கழகத்தின் பிரதமர் வேட்பாளர் விஜய்-யா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது. தமிழக வெற்றிக்கழகத்தின் முன்னணி தலைவர்கள் பிரதமர் வேட்பாளர் விஜய் என இதுவரை பேசவில்லை, ஆனால் மற்றவர்கள் கூறிவருகின்றனர், அதை கட்சியின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடு என கூற முடியாது என தெரிவித்தார்.
</p><p>
பிரதமர் வேட்பாளர் தொடர்பாக பேச வேண்டிய நேரத்தில் பேசுவோம், 2029 தேர்தல் வரட்டும், அப்போது கூறுகிறேன் என தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ad9f9f83-733d-448f-9636-595cf60068a7/26-6a9cedef57215.webp' /><br></p>]]></content>
            <updated>2026-09-06T04:37:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரிடம் தமிழ்தேசியக் கட்சிகள் பகிரங்க கோரிக்கை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/un-must-apply-strong-pressure-on-the-sl-government-1788667470"></link>
            <id>https://ibctamil.com/article/un-must-apply-strong-pressure-on-the-sl-government-1788667470</id>
            <summary type="text">ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 63ஆவது கூட்டத் தொடர் ஆரம்பமாகவுள்ள நிலையில்&amp;nbsp;தமிழ்தேசிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள்&amp;nbsp; ஐக்கிய நாடுகள...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 63ஆவது கூட்டத் தொடர் ஆரம்பமாகவுள்ள நிலையில்&nbsp;தமிழ்தேசிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள்&nbsp; ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரிடம் முக்கிய கோரிக்கையை முன்வைத்துள்ளன.</p><p>அதன்படி, கடந்த கால கடத்தல்கள், காணாமல் போனோர் விவகாரம், நீதி மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பில் இதுவரை குறிப்பிடத்தக்க முன்னேற்றம் எதுவும் ஏற்படாத நிலையில் இலங்கை அரசின் மீது ஐ.நா மற்றும் சர்வதேச சமூகம் வலுவான அழுத்தத்தை பிரயோகிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.</p><p>அத்துடன் தமிழர்கள் மற்றும் ஏனைய சிறுபான்மை மக்கள் சார்ந்த விடயங்களில் அரசாங்கம் காட்டும் அலட்சியப் போக்கை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரது அறிக்கை வெளிப்படுத்தியுள்ளதை தமிழ்தேசிய அரசியல் கட்சிகள் வரவேற்றுள்ளன.</p><p></p><h2>செம்மணி மனிதப் புதைகுழி</h2><p>இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரது அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகள் சர்வதேச நியமங்களுக்கு அமைவாக மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், காணாமல் போனோர் தொடர்பான உண்மைகளை வெளிக்கொணர்வதில் அரசு தொடர்ந்தும் தாமதம் காட்டுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9273b056-9d6b-4116-85fc-4180393edd52/26-6a9ceac28d367.webp' /></p><p>
</p><p>
இதேவேளை, பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் தொடர்பில் அரசாங்கம் அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமையால் பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்ந்தும் நீதிக்காக காத்திருப்பதாகவும் தமிழ்தேசிய கட்சிகளின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
</p><p>
ஆகவே இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரத்தை கண்காணிப்பதற்கும், பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதற்கும் ஐ.நா மனித உரிமைகள் பேரவை தீர்மானமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-06T04:36:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வார ராசிபலன் - பேரதிர்ஷ்டம் காத்திருக்கும் 3 ராசியினர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/top-3-zodiac-signs-weekly-rasi-palan-in-tamil-1788669116"></link>
            <id>https://ibctamil.com/article/top-3-zodiac-signs-weekly-rasi-palan-in-tamil-1788669116</id>
            <summary type="text">வாரத்திற்கான ராசி பலனை நாம் முன்னரே அறிந்து கொண்டு அதற்கேற்றாற் போல் முன்னெச்சரிக்கையாக சில செயல்களை திட்டமிட்டு மேற்கொள்ளும் போது நினைத்த காரியங்கள் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>வாரத்திற்கான ராசி பலனை நாம் முன்னரே அறிந்து கொண்டு அதற்கேற்றாற் போல் முன்னெச்சரிக்கையாக சில செயல்களை திட்டமிட்டு மேற்கொள்ளும் போது நினைத்த காரியங்கள் வெற்றி பெறும்.</p><p>

கிரக நிலைக்கு ஏற்ப ராசிபலன் கணிக்கப்படுவதால், நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை சரியாக முடிவு செய்தால் வெற்றி நிச்சயமாகும்.
</p><p>
இந்நிலையில், திங்கள் முதல் வெள்ளி வரை எந்த ராசிக்காரர்களுக்கு அதிஷ்டம் கிட்டவுள்ளது என்பதை பார்க்கலாம்.</p><p></p><h2>மேஷ ராசி</h2><p>பணவரவுக்கு குறை இருக்காது. ஆனால், அவ்வப்போது சிறுசிறு குழப்பங்களின் காரணமாக சற்று சோர்வாகக் காணப்படுவீர்கள். சகோதர வகையில் சில சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1663140d-0c24-4b69-9631-4775e39ed975/26-6a9ced0ca640c.webp' /></p><p>பிள்ளைகளுக்காக செலவு செய்யவேண்டி வரும். உறவினர்கள் வருகை மகிழ்ச்சியுடன் செலவுகளும் ஏற்படுத்துவதாக இருக்கும். சிலருக்கு வெளிமாநிலங்களுக்கு ஆன்மிகப் பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பு ஏற்படும்.
</p><p>
அலுவலகத்தில் பணிச்சுமை குறையும். உங்களின் செயல்பாடுகளால் உயர் அதிகாரிகளின் பாராட்டுகளையும் அதனால் பதவிஉயர்வு ஊதிய உயர்வு போன்ற சலுகைகளை எதிர்பார்க்கலாம்.
</p><p>
வியாபாரத்தில் எதிர்பார்த்ததைவிடவும் லாபம் கூடுதலாகக் கிடைக்கும்.பணியாளர்கள் நல்ல முறையில் பணி செய்வார்கள்.</p><p></p><h2>கடக ராசி</h2><p>பொருளாதார வசதிக்கு குறைவில்லை. செலவுகள் ஏற்பட்டாலும் சமாளித்து விடுவீர்கள். நெருங்கிய உறவினர்களிடம் பக்குவமாக நடந்துகொள்ளவும். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4ad8ea48-3ade-40d9-bd92-e980dc453eb9/26-6a9cecbe0e7ed.webp' /></p><p>அதனால், தேவையற்ற பிரச்னைகளைத் தவிர்த்துவிடலாம். எதிரிகளால் ஏற்பட்ட இடையூறுகள் நீங்கும். பிள்ளைகளுக்காக செலவு செய்யவேண்டி வந்தாலும் அதனால் மகிழ்ச்சியே உண்டாகும்.</p><p> சிலருக்கு நண்பர்களுடன் வெளியூர்ச் சுற்றுலா செல்லும் வாய்ப்பு ஏற்படும்.

அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். இருக்கும் வேலையில் இருந்து வேறு வேலைக்கு இப்போது முயற்சிக்கவேண்டாம். </p><p>அலுவலகத்தில் சக பணியாளர்களை அனுசரித்துச் செல்லவும்.

வியாபாரத்தில் புதிய முதலீடுகள் செய்வதைத் தவிர்க்கவும். சக வியாபாரிகளின் பேச்சைக் கேட்டு புதிய முயற்சிகள் எதிலும் ஈடுபடவேண்டாம்.
</p><p>
குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு அதிக பொறுப்புகளால் மனதில் சோர்வும் உடல் அசதியும் உண்டாகும். அலுவலகத்துக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகச் சூழ்நிலை உற்சாகம் தரும்.</p><h2>சிம்ம ராசி </h2><p>வார முற்பகுதியில் நீங்கள் நீண்டநாள்களாக எதிர்பார்த்திருந்த நல்ல செய்தி வந்து சேரும். தந்தைவழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a151149f-8c7d-4793-9079-8e0bebe9e28b/26-6a9cecbebf1cc.webp' /></p><p>அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். செலவுகளைச் சமாளிப்பதற்கேற்ப பணவரவும் இருக்கும் என்பதால் உற்சாகமாக இருப் பீர்கள். பிள்ளை அல்லது பெண்ணின் திருமண முயற்சிகள் சாதகமாக முடியும். </p><p>பிள்ளைகள் மூலம் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.

அலுவலகத்தில் சுமுகமான சூழ்நிலையே காணப்படும். புதிய வேலைக்கு விண்ணப்பித்து இருப்ப வர்களுக்கு நல்ல நிறுவனத்தில் வேலைக்கான அழைப்புக் கடிதம் வரும்.
</p><p>
வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். புதிதாக வியாபாரம் தொடங்க நினைப்பவர்கள் அதற்கான முயற்சிகளைத் தொடங்கலாம். அனுகூலமாக முடியும்</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் W<a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>HATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-06T04:33:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பகுதியில் போதைப்பொருள் வியாபாரியை விடுவிக்க மனைவியை பாலியல் இலஞ்சம் கோரிய உயரதிகாரி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/officer-sought-sex-bribe-to-free-dealer-1788669087"></link>
            <id>https://jvpnews.com/article/officer-sought-sex-bribe-to-free-dealer-1788669087</id>
            <summary type="text">திருகோணமலையில் கைது செய்யப்பட்ட போதைப்பொருள் வியாபாரி ஒருவரை விடுதலை செய்வதற்காகப் பணத்தையும், அவரது மனைவியை பாலியல் இலஞ்சமாகவும் கோரிய குற்றச்சாட்டில...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">திருகோணமலையில் கைது செய்யப்பட்ட போதைப்பொருள் வியாபாரி ஒருவரை விடுதலை செய்வதற்காகப் பணத்தையும், அவரது மனைவியை பாலியல் இலஞ்சமாகவும் கோரிய குற்றச்சாட்டில் மட்டக்களப்பு, கல்குடா பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த பொலிஸ் உப பரிசோதகர் ஒருவர் சனிக்கிழமை (05) முதல் சேவையிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
</p><p style="text-align: justify; ">
ஓட்டமாவடி பகுதியைச் சேர்ந்த குறித்த பொலிஸ் உத்தியோகத்தரை உடனடியாகப் பணி இடைநீக்கம் செய்யுமாறு பொலிஸ் தலைமையகம் அறிவித்தல் விடுத்துள்ளதாகப் பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8df261ca-b115-4766-bad6-4ad83012bcaa/26-6a9cece6255e2.webp' /></p><h2 style="text-align: justify; ">&nbsp;விசாரணைகள்&nbsp;</h2><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
கடந்த 2021ஆம் ஆண்டு குறித்த உத்தியோகத்தர் திருகோணமலை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய போது, ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட வியாபாரி ஒருவரை விடுவிப்பதற்குப் பெருந்தொகை பணத்தையும், அவரின் மனைவியிடம் பாலியல் இலஞ்சத்தையும் கோரியுள்ளார்.
</p><p style="text-align: justify; ">

இச் சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட வியாபாரி திருகோணமலை மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் அளித்த முறைப்பாட்டின் பேரில் விசாரணைகள் இடம்பெற்று வந்தன.
</p><p style="text-align: justify; ">
விசாரணைகள் நிலுவையில் இருந்த காலத்தில் இவர் திருகோணமலையிலிருந்து வாழைச்சேனை, கந்தளாய் மற்றும் சில வாரங்களுக்கு முன்னர் கல்குடா பொலிஸ் நிலையத்திற்கும் இடமாற்றம் செய்யப்பட்டிருந்தார்.</p><p style="text-align: justify; ">

இந்நிலையில், பொலிஸ் தலைமையகத்தின் உத்தரவிற்கமைய அவர் தற்போது பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.</p>]]></content>
            <updated>2026-09-06T04:31:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[மக்கள் வீதியில் இறங்கிப் போராட வேண்டும்! மக்கள் போராட்ட முன்னணி அழைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/people-s-struggle-front-call-1788667622"></link>
            <id>https://tamilwin.com/article/people-s-struggle-front-call-1788667622</id>
            <summary type="text">அரசாங்கத்தின் 22ஆவது திருத்தச் சட்டமூலமானது தனிநபர்களினதும் ஒரு குறிப்பிட்ட
குழுவினதும் நலன்களுக்காகவே கொண்டுவரப்படுகின்றதே தவிர, இதனால் நாட்டுக்கும்...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரசாங்கத்தின் 22ஆவது திருத்தச் சட்டமூலமானது தனிநபர்களினதும் ஒரு குறிப்பிட்ட
குழுவினதும் நலன்களுக்காகவே கொண்டுவரப்படுகின்றதே தவிர, இதனால் நாட்டுக்கும்
மக்களுக்கும் எவ்வித நன்மையும் பயக்காது என மக்கள் போராட்ட முன்னணி
சுட்டிக்காட்டியுள்ளது.
</p><p>
அந்த முன்னணியின் தேசிய செயற்குழு உறுப்பினர் சட்டத்தரணி நுவன் போபகே
ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.</p><p>அவர் மேலும் கூறுகையில், அரசாங்கத்திற்கு இரண்டு ஆண்டுகள் நிறைவடைவதனை முன்னிட்டு விழாக்கள் நடத்தப்படும்
அதேநேரம், தற்போதைய நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை இரண்டு ஆண்டுகள்
நீடிப்பதற்காகவே இந்த 22ஆவது அரசமைப்புத் திருத்தம் தன்னிச்சையாக கொண்டுவரப்பட்டுள்ளது.</p><h2>மனு தாக்கல்</h2><p> </p><p>மக்கள் பங்கேற்பு ஜனநாயகம் பற்றிப் பேசும் அரசாங்கம், இந்தச்
சட்டமூலம் குறித்து எவ்வித பகிரங்க உரையாடலையும் நடத்தவில்லை.

இந்த சட்டமூலத்துக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் 50 இற்கும் மேற்பட்ட
மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அரசாங்கத்திற்கு ஆதரவாக மனுத்தாக்கல் செய்ய
ஜானக அதிகாரி, லக்ஷ்மன் நிபுணாரச்சி போன்ற தமக்கு நெருக்கமானவர்களைத் தேட
வேண்டிய நிலை ஏற்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/23cde69d-6bd8-4384-99d7-ea71551c47fe/26-6a9cec301d5d0.webp' /></p><p>
</p><p>
பொதுமக்களின் சார்பில் ஆதரவாக மனுக்கள் எதுவும் தாக்கல் செய்யப்படவில்லை.
மாறாக, எதிர்ப்பைத் தெரிவித்து அரசியல் கட்சிகள், வெகுஜன இயக்கங்கள் மற்றும்
பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் எனப் பலதரப்பட்டவர்கள் முன்வந்தனர்.

இந்தத் சட்டமூலத்தை மக்கள் தீர்ப்புக்கு கொண்டு செல்ல அரசாங்கம் பயப்படுகின்றது.</p><h2>அரசாங்கத்தின் நடவடிக்கை</h2><p>
</p><p>மக்கள் தீர்ப்புக்குச் சென்றால் நிச்சயமாகத் தோல்வியடைவோம் என்பதை அது
உணர்ந்துள்ளது. உயர்நீதிமன்றத்தின் தீர்மானம் சபாநாயகருக்கு அனுப்பி
வைக்கப்பட்ட பின்னர், நாடாளுமன்றத்திலுள்ள 159 பெரும்பான்மை உறுப்பினர்களைக்
கொண்டு இதனை நிறைவேற்ற அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும். மேலிடத்தில் இருப்பவர்கள்
கூறுவதை மட்டுமே செய்யும் பெரும்பாலான உறுப்பினர்கள், அடிப்படைச் சட்ட அறிவு
கூட இல்லாமல் இதனை நிறைவேற்றுவார்கள் என்றார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7cf25575-7e67-44ac-8669-5f0eb6a5fd00/26-6a9cec30ca948.webp' /></p><p>இது மக்கள் ஜனநாயகமல்ல, மாறாக அரசாங்கத்தின் தன்னிச்சையான ஜனநாயக விரோதப்
போக்காகும். சட்டமன்றம், நிறைவேற்றுத்துறை, நீதித்துறை ஆகிய அனைத்துக்கும்
மேலாக மக்களே முதன்மையானவர்கள் என்பதால், தனிநபர்களின் நலனுக்காகக்
கொண்டுவரப்படும் இந்த ஜனநாயக விரோத 22ஆவது அரசமைப்புச் சட்டமூலத்தைத்
தோற்கடிக்க மக்கள் வீதியிலிறங்கிப் போராட வேண்டும் என்றும் அவர் மேலும்
தெரிவித்தார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-06T04:30:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பு வருகின்றார் இந்தியப் பாதுகாப்பு அமைச்சர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/indian-defense-minister-arrives-in-colombo-1788668559"></link>
            <id>https://tamilwin.com/article/indian-defense-minister-arrives-in-colombo-1788668559</id>
            <summary type="text">இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், இரண்டு நாள் அதிகாரபூர்வ பயணமாக
நாளைமறுதினம் செவ்வாய்க்கிழமை கொழும்பு வரவுள்ளார்.

இந்தப் பயணத்தின்போது,...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், இரண்டு நாள் அதிகாரபூர்வ பயணமாக
நாளைமறுதினம் செவ்வாய்க்கிழமை கொழும்பு வரவுள்ளார்.</p><p>

இந்தப் பயணத்தின்போது, இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு, கடல்சார் பாதுகாப்பு
மற்றும் பரஸ்பர நலன்சார்ந்த விடயங்கள் குறித்து இலங்கைத் தலைவர்களுடன் அவர்
விரிவான கலந்துரையாடல்களை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
</p><p>
வரும் 9ஆம் திகதி இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மற்றும் பிரதமர் ஹரிணி
அமரசூரிய ஆகியோரை இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்
சந்திக்கவுள்ளார்.</p><h2>நுவரெலியாவுக்கும் பயணம்</h2><p> </p><p>அத்துடன், இலங்கைப் பாதுகாப்புச் செயலாளர் எயர் வைஸ்
மார்ஷல் சம்பத் துயகொந்தாவுடனும் அவர் பேச்சு நடத்தவுள்ளார்.</p><p>
</p><p>
இந்திய - இலங்கை பாதுகாப்பு ஒத்துழைப்பை நடைமுறைப்படுத்துவது குறித்த
மீளாய்வும் இந்தப் பேச்சுகளில் அடங்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/883dbef2-7e17-4b4b-8dd1-b9d911417e71/26-6a9cea90bb7a5.webp' /></p><p>இருதரப்பு பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்துதல், இந்தியப் பெருங்கடலில்
கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துதல் மற்றும் இரு நாடுகளுக்கும்
மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துதல்
ஆகியவற்றிலும் இந்தச் சந்திப்பின்போது கவனம் செலுத்தப்படும் என
எதிர்பார்க்கப்படுகின்றது.</p><p>
கொழும்பில் அதிகாரபூர்வ சந்திப்புகளை மேற்கொள்ளும் இந்தியப் பாதுகாப்பு
அமைச்சர் ராஜ்நாத் சிங், நுவரெலியாவுக்கும் பயணம் மேற்கொள்ளவுள்ளார் எனத்
தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-06T04:22:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து புலம்பெயர்ந்தோரை வெளியேற்ற ஒப்பந்தமிடும் ஐந்து ஐரோப்பிய நாடுகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/five-european-nations-migrants-1788668565"></link>
            <id>https://news.lankasri.com/article/five-european-nations-migrants-1788668565</id>
            <summary type="text">European nations seek deals to send migrants out of the EU: புலம்பெயர்ந்தோரை ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வெளியே அனுப்ப ஒப்பந்தமிடும் ஐரோப்பிய நாடுகள்.
சட...</summary>
            <content type="html"><![CDATA[<p>European nations seek deals to send migrants out of the EU: புலம்பெயர்ந்தோரை ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வெளியே அனுப்ப ஒப்பந்தமிடும் ஐரோப்பிய நாடுகள்.
</p><p>சட்டப்பூர்வ வதிவிட உரிமை இல்லாத புலம்பெயர்ந்தோரை ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேற்றும் வகையிலான ஒப்பந்தங்களை முன்னெடுக்க ஐந்து ஐரோப்பிய நாடுகள் திட்டமிட்டுள்ளது.</p><h2>ஐவர் குழு</h2><p> டென்மார்க்கில் வெள்ளிக்கிழமை நடந்த கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளன. புலம்பெயர் மக்களின் எண்ணிக்கையைக் 
குறைப்பதற்கான ஐரோப்பிய நாடுகளின் சமீபத்திய முயற்சியாக, </p><p>ஐரோப்பிய ஒன்றியத்தைச் சாராத ஒரு நாட்டுடன் மக்களைத் திருப்பி அனுப்புவதற்கான நடைமுறைகள் குறித்த ஒப்பந்தத்தை எட்டுவதற்கான உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள ஜேர்மனி, ஆஸ்திரியா, கிரீஸ், டென்மார்க் மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகள் ஒப்புக்கொண்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d282ebfe-887a-49aa-9432-08a2b1388d75/26-6a9cea97bea6b.webp' /></p><p>
</p><p>ஐவர் குழு (Group of Five) என்று அழைக்கப்படும் இந்த நாடுகள், திருப்பி அனுப்பப்படுவோருக்கான மையங்களை நடத்தத் தாங்கள் எதிர்பார்க்கும் நாடுகளின் பெயர்களைக் குறிப்பிடவில்லை. </p><p>இந்த ஆண்டு அப்படியான நாடுகளுடன் ஒரு ஒப்பந்தத்தை எட்ட விரும்புவதாகவும், அது திருப்பி அனுப்பப்படுபவர்களுக்கான மையங்களை (return hubs) அமைக்க வழிவகுக்கும் என்றும் ஜேர்மனியின் உள்விவகார அமைச்சர் அலெக்சாண்டர் டோப்ரிண்ட் கோபன்ஹேகனில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.</p><p></p><p> </p><p>புலம்பெயர் மக்கள் தொடர்பான விவகாரத்தில் இந்த ஆண்டில் தொடர்ச்சியான கூட்டங்களை நடத்தியுள்ள இந்த ஐவர் குழு, செப்டம்பர் மாத இறுதியில் ஜேர்மனியின் மியூனிக் நகரில் மீண்டும் கூடத் திட்டமிட்டுள்ளது. </p><p>இதனிடையே, நாடு கடத்தும் நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துவதையும், உறுப்பு நாடுகள் வெளிநாடுகளில் மையங்களை அமைக்க அனுமதிப்பதையும் நோக்கமாகக் கொண்ட குடியேற்றக் கொள்கை சீர்திருத்தத்திற்கு ஐரோப்பிய நாடாளுமன்றம் ஜூன் மாதம் ஒப்புதல் அளித்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c532e0d8-361e-41d6-a662-3ca73124e405/26-6a9cea9871e89.webp' /></p><p> </p><p>இது புகலிடம் தேடுவோருக்கான பாதுகாப்புகளை பலவீனப்படுத்தக்கூடும் என்று விமர்சகர்கள் கூறுகின்றனர். மேலும், ஐரோப்பா கண்டம் முழுவதும் மனித உரிமைகள், ஜனநாயகம் மற்றும் சட்டத்தின் ஆட்சியை ஊக்குவிக்கும், ஐரோப்பிய ஒன்றியத்தைச் சாராத அமைப்பான 'ஐரோப்பிய அவை' (Council of Europe),</p><p> கடந்த ஜூலை மாதம் திரும்ப அனுப்பும் மையங்கள் (return hubs) குறிப்பிடத்தக்க மனித உரிமை அபாயங்களை ஏற்படுத்துவதாகத் தெரிவித்தது; அத்துடன் இந்த விவகாரத்தில் பல அமைப்புகளும் இத்திட்டத்தைக் விமர்சித்துள்ளன. </p><p>இந்த நிலையில், 
2027-ஆம் ஆண்டின் இறுதிக்குள் புலம்பெயர் மக்களை வெளியேற்றும் திட்டம் நடைமுறைக்கு வரும் என்று டென்மார்க் எதிர்பார்ப்பதாக, குடியேற்றம் மற்றும் ஒருங்கிணைப்புத் துறை அமைச்சர் மோர்டன் போட்ஸ்கோவ் தெரிவித்துள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-06T04:21:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Tony</name>
            </author>
            <title type="text"><![CDATA[அஜித்தின் கிளாடியேட்டர் ட்ரைலர் முன்பதிவு இவ்வளவா... ரெக்கார்ட் சாதனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/ajith-gladiators-documentary-trailer-pre-booking-1788668301"></link>
            <id>https://cineulagam.com/article/ajith-gladiators-documentary-trailer-pre-booking-1788668301</id>
            <summary type="text">கிளாடியேட்டர்&amp;nbsp;அஜித் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம். இவர் எப்போது சினிமாவில் மீண்டும் நடிப்பார் என ஒட்டு மொத்த அஜித் ரசிகர்களும் காத்திருக்கின்...</summary>
            <content type="html"><![CDATA[<h2>கிளாடியேட்டர்&nbsp;</h2><p>அஜித் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம். இவர் எப்போது சினிமாவில் மீண்டும் நடிப்பார் என ஒட்டு மொத்த அஜித் ரசிகர்களும் காத்திருக்கின்றனர்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dc13c74b-a647-47e3-b30a-26a5a09e5a44/26-6a9ce99175d13.webp' /></p><p>ஏனெனில் <a href="https://www.youtube.com/watch?v=5KZOvQc27B4&amp;t=1s" target="_blank">அஜித் </a>தற்போது தன் முழு கவனத்தையும் கார் ரேஸில் மட்டுமே செலுத்தி வருகிறார். அதிலும் தற்போது அஜித் தன் கார் ரேஸ் குறித்த டாக்குமெண்ட்ரியை தியேட்டரில் ரிலிஸ் செய்யவுள்ளார்.</p><p></p><h2>முன்பதிவு வசூல்&nbsp;</h2><p>
</p><p>
இயக்குனர் விஜய் இயக்க, ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த டாக்குமெண்ட்ரி ட்ரைலர் இன்று தமிழகம் முழுவதும் பல திரையரங்குகளில் வெளிவர, முன்பதிவு ரூ 10 லட்சத்திற்கு மேல் வசூல் செய்துள்ளதாம்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/80e9e7c6-d46c-4f1c-a67c-4f2e3ca4a003/26-6a9ce990b770c.webp' /></p><p>இதுவரை நடந்த ட்ரைலர் ரிலிஸில் தியேட்டரில் அதிக வசூல் செய்தது கிளாடியேட்டர் தானாம்.</p>]]></content>
            <updated>2026-09-06T04:20:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[குற்றக்குழு உறுப்பினரின் உறவினரை குறிவைத்த துப்பாக்கிச்சூட்டு முயற்சி தோல்வி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/kosgama-gun-shooting-today-1788666761"></link>
            <id>https://tamilwin.com/article/kosgama-gun-shooting-today-1788666761</id>
            <summary type="text">கொஸ்கொட பகுதியில் இன்று (06) அதிகாலை துப்பாக்கிச்சூட்டு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. 

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்குழுவை சேர்ந்த &#039;கொஸ்கொட தாரக்க&#039; என்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொஸ்கொட பகுதியில் இன்று (06) அதிகாலை துப்பாக்கிச்சூட்டு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. </p><p>

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்குழுவை சேர்ந்த 'கொஸ்கொட தாரக்க' என்பவரின் உறவினரை இலக்கு வைத்து இந்த துப்பாக்கிச்சூட்டை நடத்த முயற்சி செய்யப்பட்டுள்ளன.</p><h2>பொலிஸார் விசாரணை</h2><p> </p><p>

9 மில்லிமீட்டர் ரக துப்பாக்கியைப் பயன்படுத்தி இருமுறை சுடுவதற்கு முயற்சி செய்யப்பட்டுள்ள போதிலும், அந்த இரண்டு சந்தர்ப்பங்களிலும் துப்பாக்கி இயங்கவில்லை என குறிப்பிடப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/842e13b1-810e-48c9-bf77-95bd596cdc42/26-6a9ce8d702d8a.webp' /></p><p> </p><p>

இச்சம்பவம் தொடர்பில் கொஸ்கொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-06T04:13:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பில் சுயாதீன சர்வதேச விசாரணை வேண்டும் : பிரித்தானிய எம்.பி. வலியுறுத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/chemmani-manitha-puthaikuli-1788667910"></link>
            <id>https://tamilwin.com/article/chemmani-manitha-puthaikuli-1788667910</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பில் போதிய நிதியுதவியுடன் கூடிய
முழுமையானதும் சுயாதீனமானதுமான சர்வதேச விசாரணை ஒன்று முன்னெடுக்கப்பட
வேண்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பில் போதிய நிதியுதவியுடன் கூடிய
முழுமையானதும் சுயாதீனமானதுமான சர்வதேச விசாரணை ஒன்று முன்னெடுக்கப்பட
வேண்டும் என்று பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் பொப் பிளக்மென்
வலியுறுத்தியுள்ளார்.
</p><p>
பாடசாலை மாணவி கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலை செய்யப்பட்டு நாளை
திங்கட்கிழமையுடன் 30 ஆண்டுகள் நிறைவடையவுள்ள நிலையில் அவர் இந்தக் கோரிக்கையை
விடுத்துள்ளார்.</p><h2>மிகப்பெரிய மனிதப் புதைகுழி</h2><p>

சுமார் மூன்று தசாப்தங்களுக்கு முன்னர் இடம்பெற்ற கிருஷாந்தி குமாரசுவாமியின்
சோகமான படுகொலையே செம்மணி மனிதப் புதைகுழி கண்டறியப்படுவதற்கு அடிப்படைக்
காரணமாக அமைந்தது என்பதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p>

செம்மணிப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சிகளில் 600 இற்கும்
மேற்பட்ட மனித எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில், இலங்கையில்
இதுவரை அடையாளம் காணப்பட்ட மிகப்பெரிய மனிதப் புதைகுழியாகச் செம்மணி
மாறியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/153e2852-67e7-45b7-88e5-f96d86bd7007/26-6a9ce8088356e.webp' /></p><p>
"இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கும், வலிந்து காணாமல்
ஆக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கும் உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறல்
முழுமையாக உறுதிப்படுத்தப்பட வேண்டும். </p><p>செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான
அனைத்து உண்மைகளையும் வெளிக்கொண்டு வருவதற்காக, போதிய நிதியுதவியுடன் கூடிய
சுயாதீனமான சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும்" என்றும் பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் பொப் பிளக்மென் கோரிக்கை விடுத்துள்ளார்.</p><p></p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-06T04:11:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாடசாலை சின்னங்களைப் பயன்படுத்தும் நிகழ்வுகளில் கல்வி அமைச்சு விதித்துள்ள தடை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/alcohol-ban-on-events-using-school-symbols-moe-1788664958"></link>
            <id>https://ibctamil.com/article/alcohol-ban-on-events-using-school-symbols-moe-1788664958</id>
            <summary type="text">பாடசாலை ஒன்றின் சின்னத்தைப் பயன்படுத்தி ஏற்பாடு செய்யப்படும் நிகழ்வுகள் தொடர்பில்&amp;nbsp;கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு முக்கிய அறிவிப்பொன...</summary>
            <content type="html"><![CDATA[<p>பாடசாலை ஒன்றின் சின்னத்தைப் பயன்படுத்தி ஏற்பாடு செய்யப்படும் நிகழ்வுகள் தொடர்பில்&nbsp;கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு முக்கிய அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.</p><p>அதன்படி, பாடசாலை சின்னத்தைப் பயன்படுத்தும் எந்தவொரு நிகழ்விலும் மது மற்றும் போதைப்பொருட்களைப் பயன்படுத்துவதற்கும் விளம்பரப்படுத்துவதற்கும் அமைச்சு முழுமையான தடையை விதித்துள்ளது.</p><p>
அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள 2026/10 இலக்க புதிய சுற்றறிக்கையின் ஊடாக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><p></p><h2>கல்வி அமைச்சின் செயலாளருக்கு அதிகாரம்&nbsp;</h2><p> </p><p>இத்தகைய விதிகளை மீறி மதுபானம் அல்லது போதைப்பொருட்கள் பயன்படுத்தப்படும் நிகழ்வுகள் ஏதேனும் ஏற்பாடு செய்யப்பட்டால், அந்த நிகழ்வை உடனடியாகத் தடை செய்வதற்கான முழுமையான அதிகாரம் குறித்த சுற்றறிக்கையின் மூலம் கல்வி அமைச்சின் செயலாளருக்கு வழங்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c756cbf3-f736-4d1d-be51-0e7f81efb3cf/26-6a9ce32d990ba.webp' /></p><p>

‘ரடம எகட’ (Rata Ma Ekata) தேசிய செயற்திட்டத்தின் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, கல்வி அமைச்சின் இணைப் பாடவிதான வழிகாட்டல் மற்றும் ஆலோசனைப் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் மகேஷ் ரத்நாயக்க இந்தத் தகவலை வெளியிட்டார்.
</p><p>
நாட்டின் முன்னணிப் பாடசாலைகளுக்கு இடையே நடாத்தப்படும் 'கிரிக்கெட் சமர்' தொடர்பில் மாணவர்கள் போதைப்பொருட்களுக்கு அடிமையாவது குறித்துப் பெற்றோர்களிடமிருந்தும் பல்வேறு தரப்பினரிடமிருந்தும் தொடர்ச்சியாகக் குற்றச்சாட்டுகள் எழுந்து வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
</p><p>
எனவே, பாடசாலையின் சின்னம் பயன்படுத்தப்பட்டு நடத்தப்படும் எந்தவொரு நிகழ்ச்சியும் பாடசாலை நிகழ்வாகவே கருதப்படும் என்றும், அத்தகைய நிகழ்வுகளில் மது அல்லது போதைப்பொருட்களைப் பயன்படுத்துவது இனி முழுமையாகத் தடை செய்யப்படும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-06T03:55:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[குட்டி ஸ்ரீலீலாவின் பரதநாட்டிய வீடியோ.. 9 வயதில் எப்படி நடனமாடியுள்ளார் பாருங்க.. வீடியோ இதோ]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/actress-sreeleela-9-year-old-bharatanatyam-video-1788666013"></link>
            <id>https://cineulagam.com/article/actress-sreeleela-9-year-old-bharatanatyam-video-1788666013</id>
            <summary type="text">நடிகை ஸ்ரீலீலா தனது 9 வயதில் ஆடிய பரதநாட்டிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஸ்ரீலீலா

தனது நடிப்பாலும், நடனத்தாலும் ரசிகர்களை கவர்ந்தவர் நடி...</summary>
            <content type="html"><![CDATA[<p>நடிகை ஸ்ரீலீலா தனது 9 வயதில் ஆடிய பரதநாட்டிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.</p><p></p><p>
</p><h2>
ஸ்ரீலீலா</h2><p>

தனது நடிப்பாலும், நடனத்தாலும் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை ஸ்ரீலீலா. இதில், நடிப்பை தாண்டி இவருடைய நடனத்திற்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளமே உண்டு. 'புஷ்பா 2' திரைப்படத்தில் 'கிஸிக்' என்கிற பாடலுக்கு இவர் ஆடிய நடனம் மிகவும் பிரபலமான ஒன்றாகும்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5dcefa85-e291-40e0-a95b-76d730113e63/26-6a9ce0a0a6fcb.webp' /></p><p>தெலுங்கில் தொடர்ந்து படங்கள் நடித்து முன்னணி நடிகைகளில் ஒருவராக உயர்ந்துள்ள ஸ்ரீலீலா, தமிழில் 'பராசக்தி' திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இப்படத்திற்கு எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பு கிடைக்கவில்லை என்றாலும், இதுவரை இவருடைய நடனத்தை பார்த்து வியந்த ரசிகர்கள், முதல் முறையாக இப்படத்தில் ஸ்ரீலீலாவின் நடிப்பை பாராட்டினார்கள்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/42471c70-8b9e-46e6-aba9-bff99d34a6d0/26-6a9ce0a15d9cf.webp' /></p><p>இதனை தொடர்ந்து, தற்போது தனுஷுடன் இணைந்து 'ஓம்' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும், ஹிந்தியில் கார்த்திக் ஆர்யனுடன் இணைந்து இவர் நடித்து வரும் படமும் பெரும் எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ளது.
</p><h2>
பரதநாட்டிய வீடியோ</h2><p>

இந்நிலையில், நடிகை <a href="https://www.instagram.com/p/Dc38gceqBFs/" target="_blank">ஸ்ரீலீலா </a>தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது 9-வது வயதில் ஆடிய பரதநாட்டிய வீடியோவை வெளியிட்டுள்ளார். கடந்த 4-ஆம் தேதி கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்பட்ட நிலையில், அதற்கு அனைவரும் வாழ்த்து தெரிவித்து இந்த வீடியோவை ஸ்ரீலீலா வெளியிட்டுள்ளார். குட்டி ஸ்ரீலீலாவின் இந்த பரதநாட்டிய வீடியோ ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.</p><p><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/reel/Dc38gceqBFs/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/reel/Dc38gceqBFs/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/reel/Dc38gceqBFs/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by SREELEELA (@sreeleela14)</a></p></div></blockquote> <script async src="//www.instagram.com/embed.js"></script></p>]]></content>
            <updated>2026-09-06T03:44:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[2026 உயர்தர பரீட்சை பெறுபேறுகள் - பரீட்சைத் திணைக்களத்தின் அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/2026-a-l-results-to-be-released-before-year-end-1788664680"></link>
            <id>https://ibctamil.com/article/2026-a-l-results-to-be-released-before-year-end-1788664680</id>
            <summary type="text">2026 ஆண்டின் இறுதிப் பகுதிக்குள் உயர்தர பரீட்சைப் பெறுபேறுகளை வெளியிடுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.அதற்கமைய, உயர...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026 ஆண்டின் இறுதிப் பகுதிக்குள் உயர்தர பரீட்சைப் பெறுபேறுகளை வெளியிடுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.</p><p>அதற்கமைய, உயர்தரப் பரீட்சையின் விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.</p><p>குறித்த விடயத்தை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார்.</p><p></p><p>
</p><h2>மதிப்பீட்டுப் பணிகள்</h2><p>இந்த மதிப்பீட்டுச் செயற்பாடுகள் மூன்று கட்டங்களாக முன்னெடுக்கப்படவுள்ளதுடன், எதிர்வரும் அக்டோபர் மாதம் 25 ஆம் திகதிக்குள் மதிப்பீட்டுப் பணிகளை முழுமையாக நிறைவுசெய்வதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e71bc350-7634-44bc-8002-5b919c758757/26-6a9cdd93aac50.webp' /></p><p>அத்துடன், உயர்தரப் பரீட்சைக்கான செய்முறைப் பரீட்சைகள் செப்டம்பர் மாதம் 24 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளன.

கடந்த ஆகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகள் நேற்றைய தினத்துடன் (05) நிறைவடைந்தன.</p><p>

இந்தமுறை நடைபெற்ற பரீட்சையில் மொத்தம் 372,310 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
</p><p>
பரீட்சை மதிப்பீட்டுப் பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, நடப்பு ஆண்டின் இறுதிப் பகுதிக்குள் பரீட்சைப் பெறுபேறுகளை வெளியிடுவதற்குத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் மேலும் குறிப்பிட்டார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-06T03:32:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்.. ஒரே மேடையில் நடனமும் நடிப்பும்! டான்ஸ் ஜோடி டான்ஸ் - மகா நடிகை மகா சங்கமம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/dance-jodi-dance-mahanadigai-mahasangamam-1788664790"></link>
            <id>https://viduppu.com/article/dance-jodi-dance-mahanadigai-mahasangamam-1788664790</id>
            <summary type="text">தமிழ் சின்னத்திரை ரசிகர்களின் மனதை கவர்ந்து வரும் Zee தமிழ் தொலைக்காட்சியின் இரண்டு பிரபல ரியாலிட்டி நிகழ்ச்சிகளான ‘டான்ஸ் ஜோடி டான்ஸ்’ மற்றும் ‘மகா ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழ் சின்னத்திரை ரசிகர்களின் மனதை கவர்ந்து வரும் Zee தமிழ் தொலைக்காட்சியின் இரண்டு பிரபல ரியாலிட்டி நிகழ்ச்சிகளான ‘டான்ஸ் ஜோடி டான்ஸ்’ மற்றும் ‘மகா நடிகை’ இந்த வாரம் சிறப்பு மகா சங்கமம் நிகழ்ச்சியாக ஒன்றிணைய உள்ளன.</p><p>‘டான்ஸ் ஜோடி டான்ஸ்’ நிகழ்ச்சியை மணிமேகலை மற்றும் அசார் இணைந்து உற்சாகமாக தொகுத்து வழங்கி வருகின்றனர். இந்த நிகழ்ச்சியில் நடிகைகள் சினேகா, சிம்ரன் மற்றும் நடிகர் பிரசாந்த் ஆகியோர் நடுவர்களாக பங்கேற்று போட்டியாளர்களை ஊக்குவித்து வருகிறார்கள். திறமையான நடனக் கலைஞர்களின் அசத்தலான ஆட்டங்களால் இந்த நிகழ்ச்சி ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.
</p><p>அதேபோல், நடிப்பு திறமைகளை வெளிப்படுத்தும் ‘மகா நடிகை’ நிகழ்ச்சியில் நடிகைகள் ராதிகா மற்றும் சங்கீதா நடுவர்களாக பங்கேற்று வருகின்றனர். தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள இந்த நிகழ்ச்சி, இந்த வாரம் ‘டான்ஸ் ஜோடி டான்ஸ்’ குழுவினருடன் இணைந்து பிரம்மாண்டமான மகா சங்கமமாக ஒளிபரப்பாக உள்ளது.
</p><p>நடனமும் நடிப்பும் ஒரே மேடையில் சங்கமிக்கும் இந்த சிறப்பு எபிசோட் ரசிகர்களுக்கு மறக்க முடியாத அனுபவமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, இந்த வாரம் ஒளிபரப்பாகும் ‘டான்ஸ் ஜோடி டான்ஸ் - மகா நடிகை மகா சங்கமம்’ நிகழ்ச்சியை Zee தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.
&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-06T03:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாள சகதிக்குள் அதிசயம் - 10 நாட்களுக்குப் பின் உயிருடன் மீட்கப்பட்ட தொழிலாளி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/two-more-rescued-after-nepal-floods-1788661727"></link>
            <id>https://ibctamil.com/article/two-more-rescued-after-nepal-floods-1788661727</id>
            <summary type="text">நேபாள வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு 10 நாட்களுக்குப் பிறகு நீர்மின் நிலையத்தின் சுரங்கப்பாதையிலிருந்து ஒரு சீன ஆண் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங...</summary>
            <content type="html"><![CDATA[<p>நேபாள வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு 10 நாட்களுக்குப் பிறகு நீர்மின் நிலையத்தின் சுரங்கப்பாதையிலிருந்து ஒரு சீன ஆண் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p>திரிஷூலி நீர்மின் திட்டத்தில் இருந்து உயிருடன் மீட்கப்பட்ட தொழிலாளர்களின் மொத்த எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளதாக, அந்நாட்டுப் பிரதமரின் அலுவலகம் வெளியிட்டுள்ள சமூக ஊடகப் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp; &nbsp;</p><p>நேபாளத்தில் மற்றொரு நீர்மின் சுரங்கப்பாதையிலிருந்து இரண்டு பேர் அதிசயமாக உயிருடன் மீட்கப்பட்ட ஒரு நாள் கழித்து இந்த மீட்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது.</p><p></p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">மீண்டும் மீண்டும் கத்திய</span></p><p>225 மீட்டர் ஆழமுள்ள சுரங்கப்பாதையில் இருந்து நேபாள இராணுவத்தினர் மற்றும் தென் கொரிய பேரிடர் நிபுணர்கள் அடங்கிய கூட்டு மீட்புக் குழு அந்த நபரை மீட்டதாகவும், அவருக்கு மருத்துவப் பரிசோதனை நடைபெற்று வருவதாகவும் நேபாள இராணுவம் தெரிவித்துள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2e703f11-b164-467c-a587-e404a3bdb9fb/26-6a9cd27841741.webp' /></p><p>உலங்கு வானூர்தி மூலம் அவர் மீட்கப்படுவதும், பயணத்தின் போது இராணுவ மருத்துவ உதவியாளர் ஒருவர் அவரைப் பரிசோதிப்பதும் புகைப்படங்களில் காணப்பட்டன.</p><p>மீட்புக் குழுவினரின் விளக்குகளைப் பார்க்கும் போதெல்லாம் தான் மீண்டும் மீண்டும் கத்தியதாகவும், ஆனால் அவர்களால் தன் குரலைக் கேட்க முடியவில்லை என்றும் லூ ஒரு அதிகாரியிடம் பேசும் ஓடியோவை சிசிடிவி பகிர்ந்துள்ளது.&nbsp;&nbsp;</p><p>எனினும் இன்று அவர்கள் என்னைக் காப்பாற்றிய போது, ​​என் கண்களுக்கு முன்பாக அந்த ஒளியைப் பாய்ச்சிய போது ​​என்னால் அதை நம்பவே முடியவில்லை என அவர் தெரிவித்தாக சர்வதேச ஊடகம் தெரிவித்துள்ளது</p><p></p><h2>தேடும் பணிகள்&nbsp;</h2><p>ஒகஸ்ட் 26 அன்று நேபாள - திபெத் பிராந்தியத்தைத் தாக்கிய வெள்ளப்பெருக்கிற்குப் பிறகு, 5,000க்கும் மேற்பட்டோர் இன்னும் காணாமல் போயுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d73e2df1-58e0-443c-8040-3575c2e2ecb8/26-6a9cd2778840e.webp' /></p><p>காணாமல் போன ஆயிரக்கணக்கானோரைத் தேடும் பணிகள் மீட்புக் குழுக்களால் தொடர்ந்து மேற்கொள்ளப்படுகின்றன.&nbsp;</p><p>நேபாள மற்றும் சீன அதிகாரிகள் வெளியிட்ட புள்ளிவிவரங்களை சிஎன்என் ஊடக தரவுகளின் படி, கடந்த வாரம் ஏற்பட்ட பேரழிவுகரமான திடீர் வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,350-ஐத் தாண்டியுள்ளது .&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-06T03:28:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[பத்து கைதிகளுடன் காவலில் மகிழ்ச்சியாக நாமல்..! உடல்நிலை தொடர்பில் வெளியான அறிக்கையினால் மீண்டும் சிக்கல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-rajapaksa-remand-valikada-prisons-1788660520"></link>
            <id>https://tamilwin.com/article/namal-rajapaksa-remand-valikada-prisons-1788660520</id>
            <summary type="text">சர்ச்சைக்குரிய எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளுக்கு அமைய கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளு...</summary>
            <content type="html"><![CDATA[<p>சர்ச்சைக்குரிய எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளுக்கு அமைய கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச சிறைச்சாலை வைத்தியரால் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
</p><p>
அதன்படி, நாடாளுமன்ற உறுப்பினரின் உடல்நலத்தில் எந்த பிரச்சினையும் இல்லை என்பது தெரியவந்துள்ளது. </p><p>

அதன்படி, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கொழும்பு காவல் சிறைச்சாலையில் தொடர்ந்து காவலில் வைக்கப்பட்டுள்ளார்.</p><h2>சர்ச்சைக்குரிய எயார்பஸ் கொடுக்கல் வாங்கல்&nbsp;</h2><p>
</p><p>
சர்ச்சைக்குரிய எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளுக்கு அமைய வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்ச அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களை விசாரணை செய்யும் ஆணைக்குழுவிற்கு வருகை தந்த பின்னர் (04) திகதி கைது செய்யப்பட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/255c5a9e-4b1f-4075-8e8a-a95a01216689/26-6a9cd748660f0.webp' /></p><p>

இதனையடுத்து எதிர்வரும் செப்டம்பர் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.</p><p>

இதற்கமைய, கொழும்பு காவல் சிறைச்சாலையில் வைக்கப்பட்டுள்ள நாமல் ராஜபக்ச ஒரு சிறப்புப்பிரிவில் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது. இது அவரது பாதுகாப்பை கருத்தில்கொண்டு செய்யப்பட்டுள்ளது.</p><h2>கைதிகள் தொடர்பில் வெளியான தகவல்</h2><p>

இத்தகைய சூழலில், சுமார் பத்து கைதிகள் வைக்கப்பட்டுள்ள காவலில் நாடாளுமன்ற உறுப்பினர் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.&nbsp;&nbsp;</p><p>நாமல் &nbsp;ராஜபக்ச சிறையில் தனது நேரத்தை மகிழ்ச்சியாக கழித்து வருவதாகவும் சிறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0c1458bc-2d42-4eb4-b53d-c9b3624876a1/26-6a9ce2e702955.webp' /></p><p>மேலும் அவருடன் உள்ள ஏனைய 10 கைதிகள், பல்வேறு குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் அரசாங்க ஊழியர்கள் என்றும், அவர்களில் பாதுகாப்புப் படையினரும் அடங்குவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p>நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச எந்தவொரு சிறப்புரிமைகளையும் கோரவில்லை என்றும், சிறை அதிகாரிகளுடன் நல்லுறவில் இருப்பதாகவும் சிறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
</p><p>இதற்கிடையில், ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் சிறையில் உள்ள எந்தவொரு கைதியையும் வெளியிலிருந்து யாரும் சந்திக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று சிறைத்துறை தெரிவித்துள்ளது.</p><p></p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-06T03:28:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரான் போரில் அமெரிக்காவின் உண்மை நிலை... கசியவிட்ட அதிகாரிகளிடம் உண்மை கண்டறியும் சோதனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/iran-war-data-leaker-1788665161"></link>
            <id>https://news.lankasri.com/article/iran-war-data-leaker-1788665161</id>
            <summary type="text">Polygraph Tests Of Top Army Officials: ஈரான் போர் விவகாரத்தில் உயர்மட்ட இராணுவ அதிகாரிகளிடம் உண்மை கண்டறியும் சோதனை.
நவீன வரலாற்றிலேயே முதன்முறையாக, ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Polygraph Tests Of Top Army Officials: ஈரான் போர் விவகாரத்தில் உயர்மட்ட இராணுவ அதிகாரிகளிடம் உண்மை கண்டறியும் சோதனை.
</p><p>நவீன வரலாற்றிலேயே முதன்முறையாக, அமெரிக்க அரசாங்கத்தின் விசாரணை அதிகாரிகள், 50 உயர்மட்ட அமெரிக்க இராணுவ அதிகாரிகளிடம் உண்மை கண்டறியும் சோதனைகளை (polygraph tests) நடத்தியுள்ளனர்.</p><h2>கசியவிட்டார்களா</h2><p>
</p><p>ஈரான் போரின் காரணமாக அமெரிக்காவில் முக்கிய ஆயுதங்களுக்கு ஏற்பட்டுள்ள பற்றாக்குறை குறித்த தகவல்கள் உட்பட, ரகசியத் தரவுகள் பத்திரிகையாளர்களுக்குக் கசிந்தது தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாகவே இந்த விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f6c8289d-4959-4f2e-b1d8-605c4a1421a2/26-6a9cdd4b2dd6a.webp' /></p><p> </p><p>அமெரிக்க இராணுவத்தின் கூட்டுப் படைப் பிரிவின் இராணுவ அதிகாரிகள் மற்றும் குடிமைப் பணியாளர்களிடம், அவர்கள் பத்திரிகையாளர்களுக்கு இரகசியத் தகவல்களைக் கசியவிட்டார்களா என்று விசாரிக்கப்பட்டதாக நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
</p><p>வெளியாகியுள்ள தகவலின் அடிப்படையில், ஆகஸ்ட் மாதத்தில் நடத்தப்பட்ட உண்மை கண்டறியும் சோதனைகளின் நோக்கம், இரகசியத் தகவல்களை வெளியிட்ட நபர்களைக் கண்டறிவதும், எதிர்காலத்தில் அவ்வாறு செய்திருக்கக்கூடிய மற்றவர்களை அச்சுறுத்துவதுமாகும்.</p><p></p><p> </p><p>ஈரான் போரால் நீண்ட தூர ஏவுகணைகள் மற்றும் பேட்ரியாட் இடைமறிப்பு ஏவுகணைகள் போன்றவற்றின் எண்ணிக்கைப் பெருமளவில் குறைந்துவிட்டதாக வெளியான தொடர்ச்சியான செய்திகளுக்குப் பிறகு இந்த உண்மை கண்டறியும் சோதனைகள் நடத்தப்பட்டுள்ளது. </p><p>இந்த நிலையில், பென்டகன் செய்தித் தொடர்பாளர் ஷான் பார்னெல் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், உள் பணியாளர்கள் அல்லது விசாரணை விவகாரங்கள் குறித்துத் துறை கருத்துத் தெரிவிக்காது என்றும், ஆனால் வகைப்படுத்தப்பட்ட தேசியப் பாதுகாப்புத் தகவல்கள் கசிவதை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொண்டு அதற்கேற்ப விசாரிக்கும் என்றும் கூறினார். </p><p>மேலும், அமெரிக்காவின் பாதுகாப்பையும், உலகம் முழுவதும் களமிறக்கப்பட்டுள்ள நமது படைகளின் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்கு, ரகசியத் தகவல்களைப் பாதுகாப்பது மிக அவசியமாகும் என்றார்.</p><h2>மோசமடைந்து வரும் சூழல்</h2><p> </p><p>மே 5-ஆம் திகதி முதல், ஈரான் போர் குறித்த செய்தியாளர் சந்திப்பு எதையும் அமெரிக்கப் பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் நடத்தவில்லை; அத்துடன் பென்டகனில் செய்தியாளர்களின் அணுகலையும் அவர் மட்டுப்படுத்தியுள்ளார். </p><p>ஈரான் போரில் அமெரிக்கா பெரும் சாதனைப் படைத்து வருவதாக திரைப்பட பாணியில் நாளும் செய்தியாளர்களிடம் விளக்கமளித்தவர் இந்த பீட் ஹெக்செத்.</p><p> USS ஆபிரகாம் லிங்கன் கப்பலில் மோசமடைந்து வரும் சூழல் குறித்து 'ஸ்டார்ஸ் அண்ட் ஸ்ட்ரைப்ஸ்' (Stars and Stripes) இதழ் வெளியிட்ட விமர்சன ரீதியான செய்திகள் தொடர்பான சர்ச்சையைத் தொடர்ந்து, கடந்த மாதம் பென்டகன் அதன் தலைமை ஆசிரியர் எரிக் ஸ்லாவின், வெளியீட்டாளர் மேக்ஸ் லெடெரர் மற்றும் மத்திய கிழக்கு செய்தியாளர் லாரா கோர்டே ஆகியோரை உத்தியோகப்பூர்வமாகப் பணிநீக்கம் செய்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e85f3747-c33e-448f-a062-33dda2c7df61/26-6a9cdd4bd3498.webp' /></p><p>
</p><p>வியாழக்கிழமை அன்று, ஜனாதிபதி ட்ரம்ப் பெயர் குறிப்பிடப்படாத நபர்களையும் அமைப்புகளையும் தேசத்துரோக இழிபிறவிகள் என்று கடுமையாகச் சாடியதோடு, ஈரானுடனான போருக்கு மத்தியில் அமெரிக்காவின் ஆயுதக் கையிருப்பு குறைந்து வருவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளையும் மறுத்தார்.</p><p> அத்துடன், அமெரிக்கா முன்னெப்போதும் இல்லாத அளவிலான ஆயுதத் தளவாடங்களை உற்பத்தி செய்து வருவதாகவும் ட்ரம்ப் வியாழக்கிழமை மீண்டும் வலியுறுத்தினார். </p><p>மட்டுமின்றி, வெளிநாடுகளுக்கு ஆயுத விற்பனைகள் தற்போது முன்னெடுக்கப்படாது என்றும், நேச நாடுகளுக்கு மட்டும் ஆயுத விற்பனைத் தொடரும் என்றும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-06T03:24:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[பொலிஸாருக்கு வந்த இரகசிய தகவல்! இளம் பெண்கள் உட்பட 41 பேர் அதிரடியாக கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/facebook-party-bust-41-people-arrested-1788663997"></link>
            <id>https://tamilwin.com/article/facebook-party-bust-41-people-arrested-1788663997</id>
            <summary type="text">தெல்தெனிய - விக்டோரியா பகுதியில் நடத்தப்பட்ட பேஸ்பு விருந்துபசாரம் ஒன்று பொலிஸாரால் முற்றுகையிடப்பட்டுள்ளது.

இதன்போது 36 ஆண் சந்தேகநபர்களையும் 5 பெ...</summary>
            <content type="html"><![CDATA[<p>தெல்தெனிய - விக்டோரியா பகுதியில் நடத்தப்பட்ட பேஸ்பு விருந்துபசாரம் ஒன்று பொலிஸாரால் முற்றுகையிடப்பட்டுள்ளது.
</p><p>
இதன்போது 36 ஆண் சந்தேகநபர்களையும் 5 பெண் சந்தேகநபர்களையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
</p><p>
தெல்தெனிய பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய இந்த சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><h2>விசாரணையில் வெளியான தகவல்</h2><p> 

இதன்போது சந்தேகநபர்களிடமிருந்து 947 மில்லிகிராம் கஞ்சா, 3 கிராம் 657 மில்லிகிராம் ஹேஷ் போதைப்பொருள், 1 கிராம் 276 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள், 18 போதை மாத்திரைகள், 21 சட்டவிரோத சிகரெட்டுகள், 500 மில்லி லீட்டர் கொள்ளளவு கொண்ட 35 பியர் கேன்கள் மற்றும் 750 மில்லி லீட்டர் கொள்ளளவு கொண்ட 13 மதுபான போத்தல்கள் என்பவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6c6d3d95-31da-4fb1-9ca9-aeaa70a1829a/26-6a9cdbc66213b.webp' /></p><p>
</p><p>
இவ்வாறு கைது செய்யப்பட்ட ஆண் சந்தேகநபர்கள் 21 முதல் 40 வயதிற்கு இடைப்பட்டவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது.
</p><p>
அவர்கள் கெலியோய, அலுத்வத்தை, வரகாபொல, பேராதனை, அம்பிட்டிய, கண்டி மற்றும் ஹங்குரன்கெத்த ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர்.
</p><p>
 அத்துடன், கைது செய்யப்பட்ட பெண் சந்தேகநபர்கள் 22 முதல் 43 வயதிற்கு இடைப்பட்டவர்கள் என்பதுடன், அவர்கள் பல்லேகல, பேராதனை, ஹங்குரன்கெத்த, தெஹிவளை மற்றும் கட்டுக்கஸ்தோட்டை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-06T03:19:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாக்ஸ் ஆபிஸ்: இம்மார்ட்டல் திரைப்படம் 2 நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/immortal-movie-2-days-box-office-1788663146"></link>
            <id>https://cineulagam.com/article/immortal-movie-2-days-box-office-1788663146</id>
            <summary type="text">ஜி.வி. பிரகாஷ் மற்றும் கயாடு லோஹர் நடிப்பில் இந்த வாரம் வெளியான இம்மார்ட்டல் திரைப்படத்தின் 2 நாட்கள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

இம்மார்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜி.வி. பிரகாஷ் மற்றும் கயாடு லோஹர் நடிப்பில் இந்த வாரம் வெளியான இம்மார்ட்டல் திரைப்படத்தின் 2 நாட்கள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.</p><p></p><p>
</p><h2>
இம்மார்ட்டல்
</h2><p>
இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் இந்த ஆண்டு ஹாப்பி ராஜ் திரைப்படம் வெளியானது. இப்படம் மக்கள் மத்தியில் ஓரளவு நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து இவர் நடிப்பில் இந்த ஆண்டு வெளியாகியுள்ள அடுத்த திரைப்படம்தான் இம்மார்ட்டல். இப்படத்தில் கயாடு லோஹர் கதாநாயகியாக நடித்துள்ளார்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8d720f86-1b92-4b3e-a0c5-1e86b943ab19/26-6a9cd56e7d039.webp' /></p><p>அறிமுக இயக்குநர் மாரியப்பன் சின்னா இயக்கத்தில் உருவான இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். வித்தியாசமான கதைக்களத்தில் உருவான இப்படம் கடந்த 4-ஆம் தேதி திரைக்கு வந்தது. ரசிகர்களிடையே இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. </p><h2>

பாக்ஸ் ஆபிஸ்</h2><p>

இந்நிலையில், விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்று வரும் <a href="https://www.youtube.com/watch?v=9kuLqERF4Y0" target="_blank">இம்மார்ட்டல் </a>திரைப்படம் 2 நாட்களில் உலகளவில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1575d83d-74df-4cea-9fb7-ccc39c6af79c/26-6a9cd56db5c00.webp' /></p><p>அதன்படி, இப்படம் 2 நாட்களில் உலகளவில் ரூ. 3.5 கோடி வசூல் செய்துள்ளது. இது இப்படத்திற்கு கிடைத்துள்ள சிறந்த ஓப்பனிங் ஆகும். இனி வரும் நாட்களில் இம்மார்ட்டல் திரைப்படம் எவ்வளவு வசூல் செய்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
</p>]]></content>
            <updated>2026-09-06T03:00:00+00:00</updated>
        </entry>
    </feed>
