<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-07-25T20:34:56+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை கிரிக்கெட் சபையின் முன்னாள் தலைவர் உபாலி தர்மதாச காலமானார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/former-lanka-cricket-president-upali-passes-away-1785011005"></link>
            <id>https://ibctamil.com/article/former-lanka-cricket-president-upali-passes-away-1785011005</id>
            <summary type="text">சிறிலங்கா கிரிக்கெட்டின் (Sri Lanka Cricket) முன்னாள் தலைவர் உபாலி தர்மதாச தனது 72ஆவது வயதில் காலமானார்.


சிறிலங்கா கிரிக்கெட் நிர்வாகத்தில் முக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிறிலங்கா கிரிக்கெட்டின் (Sri Lanka Cricket) முன்னாள் தலைவர் உபாலி தர்மதாச தனது 72ஆவது வயதில் காலமானார்.</p><p>


சிறிலங்கா கிரிக்கெட் நிர்வாகத்தில் முக்கிய பங்காற்றிய அவர், 1996 முதல் 1998 வரைக்கும் பின்னர் 2011 முதல் 2012 வரை இலங்கை கிரிக்கெட் தலைவராக பதவி வகித்தார்.</p><p> அவரது பதவிக்காலத்தில் இலங்கை கிரிக்கெட்டின் நிர்வாகம், உட்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் சர்வதேச உறவுகளை வலுப்படுத்துவதற்கான பல்வேறு முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன.</p><p></p><h2>சமூக சேவையாளர்</h2><p>கிரிக்கெட் நிர்வாகியாக மட்டுமன்றி, தொழிலதிபராகவும் சமூக சேவையாளராகவும் உபாலி தர்மதாச அறியப்பட்டவர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0ec90217-928e-4a7a-ac02-359c8f388ec7/26-6a651b3ed997b.webp' /></p><p> </p><p>இலங்கை விளையாட்டுத் துறையின் வளர்ச்சிக்காக அவர் ஆற்றிய பங்களிப்பு பலராலும் பாராட்டப்பட்டுள்ளது.
</p><p>
அவரது மறைவுக்கு இலங்கை கிரிக்கெட் சமூகத்தினர், முன்னாள் மற்றும் தற்போதைய வீரர்கள், விளையாட்டு நிர்வாகிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள I<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">BC தமிழ் WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-25T20:23:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ். பல்கலைக்கழக விவகாரம் ; பேராசிரியரின் முறைப்பாட்டை தள்ளுபடி செய்த மேன்முறையீட்டுச் சபை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/appeal-board-dismisses-jaffna-professor-complaint-1785010839"></link>
            <id>https://jvpnews.com/article/appeal-board-dismisses-jaffna-professor-complaint-1785010839</id>
            <summary type="text">யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா மற்றும் அப்போதைய பல்கலைக்கழகப் பேரவைக்கு எதிராக தாவரவியல் துறைப் பேர...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா மற்றும் அப்போதைய பல்கலைக்கழகப் பேரவைக்கு எதிராக தாவரவியல் துறைப் பேராசிரியர் ஆர். கபிலன் தாக்கல் செய்திருந்த மேன்முறையீட்டு முறைப்பாட்டை பல்கலைக்கழக சேவைகள் மேன்முறையீட்டுச் சபை தள்ளுபடி செய்துள்ளது.</p><p>
</p><p></p><p>இந்த உத்தரவு, கடந்த ஜூன் 30ஆம் திகதி பல்கலைக்கழக சேவைகள் மேன்முறையீட்டுச் சபையால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
</p><p>
பேராசிரியர் ஆர். கபிலன், 2022ஆம் ஆண்டு தாவரவியல் துறையின் தலைவராகப் பணியாற்றிய காலத்தில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அரச நிதி துஷ்பிரயோகம் இடம்பெற்றதாக பகிரங்கமாக வெளிப்படுத்தியிருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c93bc926-3d2b-4270-a9e1-1ef886a6c5b5/26-6a651a9927cbb.webp' /></p><p> இதனை பல்கலைக்கழக விதிமுறைகளுக்கு முரணான நடவடிக்கையாகக் கருதிய அப்போதைய பல்கலைக்கழகப் பேரவை, அவரை துறைத் தலைவர் பதவியில் இருந்து நீக்கியது.</p><p>

இந்த நீக்கத் தீர்மானம் சட்டவிரோதமானது எனக் கூறிய பேராசிரியர் ஆர். கபிலன், தம்மை 2022 ஆகஸ்ட் 27ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் மீண்டும் தாவரவியல் துறைத் தலைவராக நியமிக்குமாறு கோரி பல்கலைக்கழக சேவைகள் மேன்முறையீட்டுச் சபையில் முறைப்பாடு செய்திருந்தார்.
</p><p>
எனினும், முறைப்பாட்டாளரால் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை விசாரித்து தீர்மானிக்கும் அதிகார வரம்பு மேன்முறையீட்டுச் சபைக்கு இல்லை என்று ஜூரிகள் சுட்டிக்காட்டியதுடன், அந்த அடிப்படையில் மேன்முறையீட்டு முறைப்பாட்டை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர்.
</p><p>
இதனிடையே, இதே விவகாரம் தொடர்பாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கு எதிராக பேராசிரியர் ஆர். கபிலன் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த வழக்குகளையும் கடந்த ஆண்டு அவர் திரும்பப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-25T20:20:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானியாவில் உடனடியாக பொதுத் தேர்தல்! புதிய பிரதமரின் முக்கிய அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/immediate-general-election-in-britain-1785010270"></link>
            <id>https://tamilwin.com/article/immediate-general-election-in-britain-1785010270</id>
            <summary type="text">உடனடியாக பொதுத் தேர்தலை நடத்தும் எண்ணம் தனக்கு இல்லை என்று பிரித்தானியாவின் புதிய பிரதமர் ஆண்டி பர்ன்ஹாம் தெரிவித்துள்ளார். 

பத்திரிகை ஒன்றுக்கு வழ...</summary>
            <content type="html"><![CDATA[<p>உடனடியாக பொதுத் தேர்தலை நடத்தும் எண்ணம் தனக்கு இல்லை என்று பிரித்தானியாவின் புதிய பிரதமர் ஆண்டி பர்ன்ஹாம் தெரிவித்துள்ளார். </p><p>

பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
மேலும், தற்போது நாட்டைச் சிறப்பாக இயங்கச் செய்வதே எங்களுடைய மிகப்பெரிய முன்னுரிமையாகும். இந்த நேரத்தில் பொதுத் தேர்தலை நடத்தினால் அந்த முக்கியமான பணிகள் தாமதமாகும் வாய்ப்புக்கள் உள்ளன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>பொதுத் தேர்தல் இப்போதில்லை..</h2><p> 

பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் கியர் ஸ்டார்மர் பதவியில் இருந்து விலகியதை அடுத்து பிரித்தானியாவின் புதிய பிரதமராக ஆண்டி பர்ன்ஹாம் பொறுப்பேற்றார்.
</p><p>
இந்த நிலையில், புதிய பிரதமர் உனடியாக பொதுத் தேர்தலை நடத்த வேண்டும் என்று ஏனைய கட்சிகள் கோரிக்கை முன்வைத்திருந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cab2ae4e-d886-4b20-ab29-ea1034279188/26-6a65185fcdb5e.webp' /></p><p>

இது தொடர்பில் பதிலளித்த புதிய பிரதமர் ஆண்டி பர்ன்ஹாம், “நாங்கள் ஒரு ஜனநாயக நாட்டில் வாழ்கின்றோம். கடந்த 2024ஆம் ஆண்டு மக்களுக்கு வழங்கப்பட்ட தேர்தல் அறிக்கை இன்னும் நடைமுறையில் உள்ளது. </p><p>

அதையே நானும் பின்பற்றுகின்றேன். அதற்குள் எனது கொள்கைகளையும், செயல்திட்டங்களையும் முன்னெடுப்பேன்” என குறிப்பிட்டுள்ளார்.&nbsp; &nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-25T20:11:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[கல்குவாரியில் 17 வயது சிறுமியின் சடலமாக மீட்பு ; கொலையா? தற்கொலையா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/body-of-17-year-old-girl-recovered-from-quarry-1785009525"></link>
            <id>https://jvpnews.com/article/body-of-17-year-old-girl-recovered-from-quarry-1785009525</id>
            <summary type="text">இரத்தினபுரி - மஹாவலதென்னவின் கஜுவத்த பகுதியில் உள்ள ஒரு கல் குவாரியில் சிறுமி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணை23ஆம் திகதி முதல் அந்தச...</summary>
            <content type="html"><![CDATA[<p>இரத்தினபுரி - மஹாவலதென்னவின் கஜுவத்த பகுதியில் உள்ள ஒரு கல் குவாரியில் சிறுமி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p></p><h3>மேலதிக விசாரணை</h3><p>23ஆம் திகதி முதல் அந்தச் சிறுமி காணாமல் போனதாக அவரது தந்தை பலாங்கொடை காவல்நிலையத்தில் முறைப்பாடளித்திருந்தாக தெரியவருகிறது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c4e061de-f28d-4dbe-92f9-ca1abf38b93e/26-6a6515770f8a7.webp' /></p><p>இந்நிலையில், சடலமாக மீட்கப்பட்டவர், பலாங்கொடை மஹாவலதென்னவைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஆவார்.</p><p>எவ்வாறாயினும், குறித்த மரணம் எவ்வாறு ஏற்பட்டது என்பது தொடர்பில் இதுவரை எந்தத் தகவலும் வெளியாகவில்லை என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
</p><p>இது தொடர்பான பிரேதப் பரிசோதனை இன்று (25) பலாங்கொடை வைத்தியசாலையில் நடைபெற உள்ளதுடன், காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-25T19:59:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜேர்மனியில் வீட்டின் மீது மோதிய சிறிய விமானம்- ஒருவர் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/small-plane-crashes-into-german-house-1785009100"></link>
            <id>https://news.lankasri.com/article/small-plane-crashes-into-german-house-1785009100</id>
            <summary type="text">ஜேர்மனியின் லோயர் சாக்ஸனி மாநிலத்தில் உள்ள கான்டர்கீஸி (Ganderkesee) நகரில், ஒரு சிறிய விமானம் வீட்டின் மீது மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

விம...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜேர்மனியின் லோயர் சாக்ஸனி மாநிலத்தில் உள்ள கான்டர்கீஸி (Ganderkesee) நகரில், ஒரு சிறிய விமானம் வீட்டின் மீது மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.</p><p>

விமானத்தில் இரண்டு பேர் பயணம் செய்தனர். அதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொருவரை தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p></p><p>விமானம் திடீரென உயரத்திலிருந்து கீழே சரிந்து, குடியிருப்பு பகுதியில் உள்ள ஒரு வீட்டின் கூரையில் மோதியது. அதிர்ஷ்டவசமாக, அந்த வீட்டில் வசித்தவர்கள் சம்பவ நேரத்தில் இல்லாததால், வேறு எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை.</p><p>சம்பவ இடத்தில் மீட்பு குழுக்கள் விரைவாக செயல்பட்டு, தீயணைப்பு மற்றும் அவசர உதவி நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ce2bdb0c-552b-4767-9bfa-196cdb782b66/26-6a6513ce56c10.webp' /></p><p>அருகிலுள்ள 100 மீட்டர் சுற்றளவில் வசித்த மக்கள் பாதுகாப்பு காரணமாக வெளியேற்றப்பட்டனர். மேலும், மின்சாரம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
</p><p>
இந்த விபத்தால் அப்பகுதி மக்கள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். சம்பவத்தை நேரில் கண்டவர்கள் மற்றும் அருகில் இருந்தவர்களுக்கு மனநலம் சார்ந்த உதவி வழங்க 'கிரைசிஸ் இன்டர்வென்ஷன்' குழு அனுப்பப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/af010d2b-69ba-4594-92d5-10701cef3c37/26-6a6513cf0d6cd.webp' /></p><p>விமானம் ஏன் உயரத்தை இழந்தது என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. தொழில்நுட்ப கோளாறா அல்லது வானிலை காரணமா என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை.&nbsp;&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-25T19:49:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[இதய நோய் வரக்கூடாதா? கட்டாயம் இந்த பழக்கவழக்கங்களை தவிர்த்துக் கொள்ளுங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/avoid-these-habits-to-prevent-heart-disease-1785008874"></link>
            <id>https://jvpnews.com/article/avoid-these-habits-to-prevent-heart-disease-1785008874</id>
            <summary type="text">நாம் பகல் நேரத்தில் எந்த வேலையை செய்தாலும் பரவாயில்லை, ஆனால் இரவு நேரத்தில் ஓய்வு எடுக்க உடல் முயற்சிக்கும் வேளையில் தொடர்ந்து குறிப்பிட்ட வேலையை செய்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாம் பகல் நேரத்தில் எந்த வேலையை செய்தாலும் பரவாயில்லை, ஆனால் இரவு நேரத்தில் ஓய்வு எடுக்க உடல் முயற்சிக்கும் வேளையில் தொடர்ந்து குறிப்பிட்ட வேலையை செய்யும் போது, அது இரத்த அழுத்தத்தை அதிகரித்து, இதயத்தின் ஆரோக்கியத்தை பாதித்து, இதய நோயின் அபாயத்தை மெதுவாக அதிகரிக்கும். </p><p>இப்போது இதய நோயைத் தவிர்க்க இரவு 8 மணிக்கு மேல் எந்த மாதிரியான பழக்கவழக்கங்களை ஒருவர் தவிர்க்க வேண்டும் என்பதை நாம் இங்கு பார்ப்போம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9f83482c-eaee-4e48-b820-8dd35e08fbcd/26-6a6512ec33a06.webp' /></p><h3>வயிறுமுட்ட உண்பது
</h3><p>இரவு நேரத்தில் பொதுவாக மிதமான உணவுகளை உட்கொள்ள வேண்டும். ஆனால் பலர் இரவு நேரத்தில் தான் பொறுமையாக சாப்பிட நேரம் கிடைக்கிறது என்று வயிறுமுட்ட உணவுகளை உட்கொள்கிறார்கள். அதுவும் இரவில் தாமதமாக உட்கொள்ளும் போது, அது ஓய்வு நேரத்திலும் செரிமான மண்டலத்தை வேலை செய்ய கட்டாயப்படுத்துகிறது. இதன் விளைவாக இரத்த ஓட்டத்தை செரிமான மண்டலத்திற்கு திசைதிருப்புகிறது, இதயத்தை கடினமாக்குகிறது மற்றும் இரவுநேர இரத்த அழுத்த ஒழுங்குமுறையை சீர்குலைக்கிறது.</p><h3>காபியை குடிப்பது</h3><p>பொதுவாக காபியில் உள்ள காஃப்பைன் நரம்பு மண்டலத்தை தூண்டுகிறது, இதய துடிப்பை அதிகரிக்கிறது மற்றும் தூக்கத்தில் இடையூறை ஏற்படுத்தும். ஒருவர் இப்படி இரவு தூக்கத்தை போதுமான அளவு மேற்கொள்ளாமல் இருந்தால், இது உயர் இரத்த அழுத்தத்தை அதிகரிப்பதோடு, இதயத்திலும் மோசமான பாதிப்பை ஏற்படுத்தும்.</p><h3>மொபைல், கணினி திரையை பார்ப்பது</h3><p>என்ன தான் ஓய்வு நேரத்தில் தான் மொபைலை நீங்கள் பார்ப்பவராக இருந்தாலும், இரவு தூங்குவதற்கு முன் மொபைலை பயன்படுத்துவது நல்லதல்ல. ஏனெனில் மொபைல் திரையின் நீல ஒளி வெளிப்பாடு மெலடோனின் உற்பத்தியை அடக்குகிறது. இது தூக்கத்தை தாமதப்படுத்துவது மட்டுமின்றி, உடலை எச்சரிக்கை நிலையில் வைத்திருக்கும். மேலும் இதயத்தை போதுமான ஓய்வு எடுக்கவிடாமலும் தடுக்கும்.</p><h3>இரவு நேர ஸ்நாக்ஸ்</h3><p>
இரவு நீண்ட நேரம் விழித்திருப்பது பசியைத் தூண்டும். அதுவும் அப்போது சிப்ஸ், ஸ்வீட் அல்லது பதப்படுத்தப்பட்ட உணவுகள் போன்ற ஆரோக்கியமற்ற உணவுகளை உண்ணத் தூண்டும். இவற்றை தொடர்ந்து உட்கொள்ளும் போது, அது ஆரோக்கியமற்ற கொழுப்புக்களின் அளவை அதிகரித்து, காலப்போக்கில் இதயத்தில் பிரச்சனையை வரத் தூண்டிவிடும்.</p><h3>மன அழுத்தம்</h3><p>
நைட் ஷிப்ட் வேலை செய்பவர்கள் அனைவருமே தங்கள் உடல்கள் துன்பப்படுவதை உணர்வதில்லை. இரவு நேர வேலைகள் அல்லது மாலை நேர உடற்பயிற்சிகள் மன அழுத்த அளவை அதிகரிப்பதோடு, கார்டிசோல் ஹார்மோனை அதிகரித்து, இதயத்தின் செயல்பாட்டில் பாதிப்பை ஏற்படுத்தும்.</p>]]></content>
            <updated>2026-07-25T19:48:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[நிவாரண காணொளிகளால் மக்களை ஏமாற்றும் என்.பி.பி! பகிரங்க குற்றச்சாட்டை முன்வைக்கும் சஜித்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sajith-makes-public-accusations-against-npp-1785008342"></link>
            <id>https://ibctamil.com/article/sajith-makes-public-accusations-against-npp-1785008342</id>
            <summary type="text">திசைகாட்டி அரசு மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்தது என்றும், தற்போது ஆட்சியைத்
தக்கவைக்கத் தினமும் பிழையான நகர்வில் பயணிக்கின்றது எனவும்
எதிர்க்கட்சித் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>திசைகாட்டி அரசு மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்தது என்றும், தற்போது ஆட்சியைத்
தக்கவைக்கத் தினமும் பிழையான நகர்வில் பயணிக்கின்றது எனவும்
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார்.</p><p>
டித்வா தாக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை வழங்குவதாகக்
கூறிவிட்டு, அரசினர் நிவாரணம் வழங்காமல் பாதிக்கப்பட்ட மக்களுடன் சமூக
வலைத்தளங்களில் படங்கள் மற்றும் காணொளிகளைப் பதிவிடுவதில் மட்டுமே கவனம்
செலுத்துகின்றனர் என்றும் அவர் கூறியுள்ளார்.</p><p>
ஹொரவ்பொத்தானை, வகொல்லாகொட போதிரூக்காராம மகா விகாரையில் தர்ம போதனை
மண்டபத்துக்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர்
இதனைக் குறிப்பிட்டார்.</p><p></p><h2>விவசாயிகளுக்கு நட்டம் </h2><p>விவசாயிகளை கடவுள் என்றும், நெல் கிலோ ஒன்றுக்கு 150 ரூபா உத்தரவாத விலை
தருவதாகக் கூறியவர்கள், இன்று விவசாயிகளைப் பார்த்து கசிப்புக்காரன் என்று
அவமதிக்கின்றனர் என்றும் அவர் தனது உரையில் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6c41805d-8834-4821-ab5d-579adc45305a/26-6a6510d8041a9.webp' /></p><p>மேலும், நெல் கிலோ ஒன்றுக்கு 137 ரூபா செலவாகும் என விவசாய அமைச்சரே கூறிய போதிலும்,
120 ரூபா விலையே வழங்கப்படுவதால் விவசாயிகளுக்குக் கிலோ ஒன்றுக்கு 17 ரூபா
நட்டம் ஏற்படுகின்றது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-25T19:39:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[செல்வ வளம் அதிகரிக்க வீட்டில் வைக்க வேண்டிய புகைப்படங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/photos-to-keep-at-home-to-increase-wealth-1785007641"></link>
            <id>https://jvpnews.com/article/photos-to-keep-at-home-to-increase-wealth-1785007641</id>
            <summary type="text">வாஸ்து சாஸ்த்திர படி, வீட்டில் நேர்மறை ஆற்றல் நிலவவும், செல்வ வளம் அதிகரிக்கவும் சில குறிப்பிட்ட படங்களை பொருத்தமான திசைகளில் வைப்பது நல்ல பலன்களைத் த...</summary>
            <content type="html"><![CDATA[<p>வாஸ்து சாஸ்த்திர படி, வீட்டில் நேர்மறை ஆற்றல் நிலவவும், செல்வ வளம் அதிகரிக்கவும் சில குறிப்பிட்ட படங்களை பொருத்தமான திசைகளில் வைப்பது நல்ல பலன்களைத் தரும் என வாஸ்து சாஸ்திரத்தில் குறிப்பிடப்படுகிறது. </p><p>குறிப்பாக, செல்வம், முன்னேற்றம் மற்றும் அதிர்ஷ்டத்தை ஈர்க்கும் அடையாளங்களைக் கொண்ட படங்களை வீட்டில் வைத்திருப்பது மனநிறைவு மற்றும் நம்பிக்கையையும் அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b407a14b-a9c2-4b6d-a6cc-980183d169ea/26-6a650e1c16a9e.webp' /></p><h3>

நீர்வீழ்ச்சி அல்லது ஓடும் நீர்
</h3><p>ஓடும் நீர் அல்லது நீர்வீழ்ச்சி காட்சியைக் கொண்ட படங்கள், பணப்புழக்கம் தொடர்ந்து நிலைத்திருக்க உதவும் என வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. இந்தப் படங்களை வீட்டின் வடக்கு திசையில் மாட்டுவது சிறந்ததாக கருதப்படுகிறது. இது செல்வ வளத்தை ஈர்த்து, பணப்பற்றாக்குறையை குறைக்கும் என்ற நம்பிக்கை நிலவுகிறது.</p><p>

<img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2524f57f-1281-41b2-ae50-36a30197aff1/26-6a650e1ab27ee.webp' /></p><h3>

ஓடும் 7 குதிரைகள்
</h3><p>ஏழு குதிரைகள் ஒன்றாக ஓடும் படம் வெற்றி, வேகம் மற்றும் தொடர்ச்சியான முன்னேற்றத்தின் அடையாளமாகக் கருதப்படுகிறது. இந்தப் படம் தொழில் வளர்ச்சி, வணிக முன்னேற்றம் மற்றும் பணியில் வெற்றியை ஈர்க்கும் என்று வாஸ்து சாஸ்திரம் குறிப்பிடுகிறது.</p><p>

<img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e006f018-4a30-4e80-a80e-45621faba839/26-6a650e1b65e5d.webp' /></p><h3>

உதிக்கும் சூரியன்
</h3><p>உதயமாகும் சூரியனின் படம் புதிய தொடக்கம், நம்பிக்கை மற்றும் நேர்மறை ஆற்றலைக் குறிக்கிறது. இதனை வீட்டில் வைத்திருப்பது வேலைவாய்ப்பு, தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றத்தை ஏற்படுத்தும் என நம்பப்படுகிறது.</p><p>


<img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9e7911e2-e5b9-41d9-a9d7-760674a547b7/26-6a650e1e2d77e.webp' /></p><h3>
தங்க நாணயங்கள்
</h3><p>தங்க நாணயங்கள் அல்லது மணி ட்ரீ தங்க நாணயங்கள் அல்லது மணி ட்ரீ (Money Tree) படங்கள் நிதி வளர்ச்சி, சேமிப்பு அதிகரிப்பு மற்றும் பொருளாதார நிலைத்தன்மையைப் பிரதிபலிப்பதாக கருதப்படுகின்றன. செல்வ வளத்தை ஈர்க்கும் சின்னங்களாக இவை பரவலாக பயன்படுத்தப்படுகின்றன.
</p><p>
<img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a87c9ca7-1e80-425a-9140-0300612f5a74/26-6a650e1d77d2c.webp' /></p><h3>

கொய் மீன் (Koi Fish)
</h3><p>கொய் மீன் அதிர்ஷ்டம், செழிப்பு மற்றும் வெற்றியின் அடையாளமாகப் பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தை வீட்டில் வைத்திருப்பது பொருளாதார முன்னேற்றம் மற்றும் நல்ல வாய்ப்புகளை ஈர்க்கும் என்ற நம்பிக்கை வாஸ்து மற்றும் ஃபெங் ஷுய் மரபுகளில் காணப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e497b657-f1dc-45d0-bd33-96f2e0e34593/26-6a650e1cc377f.webp' /></p>]]></content>
            <updated>2026-07-25T19:27:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிணைத்தொகை - அபராதம் செலுத்த பணமின்றி சிறையில் வாடும் 3 ஆயிரம் கைதிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/prisoners-languishing-in-jail-without-paying-fines-1785005953"></link>
            <id>https://tamilwin.com/article/prisoners-languishing-in-jail-without-paying-fines-1785005953</id>
            <summary type="text">தேசிய கணக்காய்வாளர் நாயகம் அலுவலகத்தின் சமீபத்திய அறிக்கை ஒன்றின்படி, 3,371 கைதிகள் பிணைத்தொகை செலுத்த முடியாமலும், விதிக்கப்பட்ட அபராதங்களைச் செலுத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>தேசிய கணக்காய்வாளர் நாயகம் அலுவலகத்தின் சமீபத்திய அறிக்கை ஒன்றின்படி, 3,371 கைதிகள் பிணைத்தொகை செலுத்த முடியாமலும், விதிக்கப்பட்ட அபராதங்களைச் செலுத்த முடியாமலும் பல ஆண்டுகளாக சிறைகளில் வாடி வருகின்றமை தெரியவந்துள்ளது.
</p><p>
இந்த நிலைமை சிறைச்சாலைகளில் நிலவும் நெரிசலிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
</p><p>
திரட்டப்பட்ட தகவல்களின்படி, 28 சிறைகளில் 1,940 கைதிகள் அபராதம் செலுத்த முடியாததாலும், 21 சிறைச்சாலைகளில் 1,431 கைதிகள் பிணைத்தொகை செலுத்த முடியாததாலும் வாடி வருகின்றனர்.</p><p></p><h2>ஜனாதிபதியின் பொது மன்னிப்பு&nbsp;</h2><p> </p><p>விடுதலை பெறமுடியாத நிலையில், கடுமையான அழுத்தத்தில் இருப்பவர்களே சிறைச்சாலைப் போராட்டங்களில் முன்னணியில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

மேலும், பிணை வழங்கப்பட்ட பிறகு ஐந்து மாதங்களுக்கும் மேலாக சிறையில் இருக்கும் கைதிகளின் எண்ணிக்கை 325 ஆகும். கடந்த ஆண்டு நிலவரப்படி, இலங்கை முழுவதும் உள்ள 21 சிறைச்சாலைகளில் இந்த நிலை காணப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/17afe90e-b689-402f-8c68-2b3901ee1a5d/26-6a650defa1cea.webp' /></p><p>
இவ்வாறாக எந்தக் காரணமும் இன்றி சிறையில் இருக்கும் மக்களின் உணவு மற்றும் பிற வசதிகளுக்காக அரசாங்கம் ஆண்டுதோறும் பெரும் தொகையைச் செலவழிக்க வேண்டியுள்ளது என்று சிறை அதிகாரிகள் கூறுகின்றனர்.
</p><p>
நிதி வசதியின்மை, பிணை நிபந்தனைகளை பூர்த்தி செய்ய இயலாமை மற்றும் பிணை வழங்க உறவினர்கள் இல்லாதது ஆகியவையே இதற்கான முக்கிய காரணங்கள் என கணக்காய்வாளர் நாயகம் திணைக்களத்தின் விசாரணைகள் உறுதிப்படுத்தியுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3bf941f2-df7f-474f-b9b2-13cd0430cb75/26-6a650df053295.webp' /></p><p> </p><p>இது குறித்துக் கேட்டபோது, ​​இதுபோன்ற சூழ்நிலைகள் பதிவாகி வருவதாகவும்இ தீர்வுகளைக் கண்டறிய பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் சிறைச்சாலை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
</p><p>
மேலும், இத்தகைய கைதிகளுக்கு விசேட கவனம் செலுத்தப்படும் என்றும்&nbsp; ஜனாதிபதியின் பொது மன்னிப்பு வழங்கப்படும்போது அவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-25T19:26:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[பெல்ஜியத்தில் உளவு பார்த்த கனேடிய பிரஜை! நேட்டோ பயிற்சி குறித்து முக்கிய தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/canadian-citizen-caught-spying-in-belgium-1785007495"></link>
            <id>https://ibctamil.com/article/canadian-citizen-caught-spying-in-belgium-1785007495</id>
            <summary type="text">நேட்டோ (NATO) அமைப்பில் பயிற்சியாளராக (Intern) பணியாற்றி வந்த கனேடிய பெண் ஒருவர், உளவு நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறப்படும் சந்தேகத்தின் பேரில் பெல்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நேட்டோ (NATO) அமைப்பில் பயிற்சியாளராக (Intern) பணியாற்றி வந்த கனேடிய பெண் ஒருவர், உளவு நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறப்படும் சந்தேகத்தின் பேரில் பெல்ஜிய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>

பெல்ஜிய கூட்டாட்சி அரசுத் தரப்பு வழக்கறிஞர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, சீன வம்சாவளியைச் சேர்ந்த அந்தப் பெண், மூன்றாவது ஒரு நாட்டிற்காக உளவு தகவல்களை சேகரித்ததாக சந்தேகிக்கப்படுகிறார்.
</p><p>
மேலும், அவர் குற்றவியல் அமைப்பொன்றின் உறுப்பினராகவும் இருந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையிலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.</p><p></p><h2>கைது செய்யப்பட்ட&nbsp;சந்தேகநபர் </h2><p>

கைது செய்யப்பட்ட பயிற்சியாளர், பெல்ஜியத்தின் தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ள மோன்ஸ் நகரில் உள்ள நேட்டோவின்ஐரோப்பிய கூட்டுப் படைகளின் மூலோபாயத் தலைமையகத்தில் (Supreme Headquarters Allied Powers Europe – SHAPE) பணியாற்றி வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/258fb38c-f265-44cc-accb-f1f34bdf0986/26-6a650d8894032.webp' /></p><p>
சந்தேகநபர் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டதாக பெல்ஜிய அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
</p><p>
இந்தச் சம்பவம் தொடர்பாக கனடாவின் தேசிய பாதுகாப்பு அமைச்சகத்திடம் கருத்து கோரப்பட்டபோதும், உடனடியாக எந்தப் பதிலும் வழங்கப்படவில்லை.</p><p>

அதேவேளை, கனடாவின் பொதுப் பாதுகாப்பு அமைச்சர் கேரி ஆனந்தசங்கரியின் பேச்சாளர், “இந்த விவகாரம் குறித்து தற்போது எந்தக் கருத்தையும் தெரிவிக்க முடியாது” என்று குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-25T19:25:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜனாதிபதியைச் சந்திக்க நேர ஒதுக்கீடு கோரும் தமிழ்க்கட்சிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/six-tamil-speaking-parties-request-meet-anura-1785006278"></link>
            <id>https://tamilwin.com/article/six-tamil-speaking-parties-request-meet-anura-1785006278</id>
            <summary type="text">இந்த மாத ஆரம்பத்தில் ஒன்றிணைந்து செயற்படுவதற்கான தமது தீர்மானத்தை அறிவித்த
ஆறு தமிழ் பேசும் அரசியல் கட்சிகள், தமிழ் பேசும் மக்களைப் பாதிக்கும் முக்கி...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்த மாத ஆரம்பத்தில் ஒன்றிணைந்து செயற்படுவதற்கான தமது தீர்மானத்தை அறிவித்த
ஆறு தமிழ் பேசும் அரசியல் கட்சிகள், தமிழ் பேசும் மக்களைப் பாதிக்கும் முக்கிய
விடயங்களில் இணைந்து செயற்படுவதற்கான தமது உறுதிப்பாட்டை மீண்டும்
வலியுறுத்தியுள்ளன.
</p><p>
இதற்கமைய, மேற்படி கட்சிகள் தத்தமது சுயாதீனம், அரசியல் நிலைப்பாடுகள் மற்றும்
கொள்கைகளைப் பாதுகாத்துக் கொண்டு, பொதுவான இணக்கப்பாடு காணப்படும் விடயங்களில்
தமிழ் பேசும் மக்களின் நலனுக்காக ஆக்கபூர்வமான முறையில் இணைந்து செயற்பட
இணக்கம் தெரிவித்துள்ளன.
</p><p>
நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற சந்திப்பின்போதே இந்த முடிவு
எடுக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>கோரிக்கை</h2><p>
</p><p>
அத்துடன், தமிழ் பேசும் மக்களைப் பாதிக்கும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த
பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதியைச் சந்தித்துக் கலந்துரையாட இந்தக்
கட்சிகள் திட்டமிட்டுள்ளன. இதற்காக ஜனாதிபதியிடம் நேர ஒதுக்கீடும்
கோரப்பட்டுள்ளது.</p><p>

ஜனாதிபதியுடனான சந்திப்பைத் தொடர்ந்து, எதிர்க்கட்சித் தலைவரையும், இலங்கையில்
உள்ள வெளிநாட்டு இராஜதந்திரப் பிரதிநிதிகளையும் சந்தித்துப் பேச்சு நடத்தவும்
அந்தக் கட்சிகள் எதிர்பார்த்துள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/363cb93a-b2fa-4a84-ad18-93a0e655fbaa/26-6a650954dda3e.webp' /></p><p>
</p><p>
இதன் மூலம் இந்த விடயங்கள் தொடர்பாகக் கருத்துகளைப் பரிமாறிக்கொண்டு, ஜனநாயக
ரீதியிலான ஆக்கபூர்வமான கலந்துரையாடல்கள் ஊடாக பரந்த இணக்கப்பாட்டை உருவாக்க
முயற்சிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
</p><p>
தமது கோரிக்கைக்கு ஜனாதிபதி சாதகமான பதிலை வழங்குவார் என நம்பிக்கை
வெளியிட்டுள்ள அந்தக் கட்சிகள், இணக்கப்பாடு காணப்படும் விடயங்களில் தொடர்ந்து
ஒன்றிணைந்து செயற்பட்டு நீதி, நிலையான சமாதானம் மற்றும் நீடித்த அரசியல்
தீர்வை நோக்கிப் பயணிப்பதில் உறுதியாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளன.</p><p></p>]]></content>
            <updated>2026-07-25T19:21:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானிய அமைச்சரவை மாற்றம்: முக்கிய பதவிகளில் மூன்று இந்திய வம்சாவளி எம்.பிக்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/uk-cabinet-3-indian-origin-mps-rise-1785006564"></link>
            <id>https://news.lankasri.com/article/uk-cabinet-3-indian-origin-mps-rise-1785006564</id>
            <summary type="text">பிரித்தானிய பிரதமர் ஆன்டி பர்னாம் தனது புதிய அமைச்சரவையை அறிவித்துள்ளார். இதில் மூன்று இந்திய வம்சாவளி லேபர் எம்.பிக்கள் முக்கிய முன்னணி பதவிகளை பெற்ற...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரித்தானிய பிரதமர் ஆன்டி பர்னாம் தனது புதிய அமைச்சரவையை அறிவித்துள்ளார். இதில் மூன்று இந்திய வம்சாவளி லேபர் எம்.பிக்கள் முக்கிய முன்னணி பதவிகளை பெற்றுள்ளனர்.
</p><h2>
கனிஷ்கா நாராயண் (Kanishka Narayan)</h2><p>கனிஷ்கா நாராயண், செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
</p><p>
பீகாரின் முசஃபர்பூரில் பிறந்த அவர், 12 வயதில் குடும்பத்துடன் வேல்ஸுக்கு குடிபெயர்ந்தார். ஈட்டன் கல்லூரி, ஆக்ஸ்போர்டு மற்றும் ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகங்களில் கல்வி கற்றார். 2024-இல் எம்.பி. ஆனார்.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Kanishka Narayan has been appointed as Minister of State (Minister for Artificial Intelligence) jointly in the <a href="https://x.com/cabinetofficeuk?ref_src=twsrc%5Etfw">@cabinetofficeuk</a> and the Department for Business, Innovation, Science and Trade. He will attend Cabinet. <a href="https://t.co/IWxGwmSt2E">pic.twitter.com/IWxGwmSt2E</a></p>&mdash; UK Prime Minister (@10DowningStreet) <a href="https://x.com/10DowningStreet/status/2079350751965376774?ref_src=twsrc%5Etfw">July 20, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>
</p><h2>
சத்வீர் கௌர் (Satvir Kaur)</h2><p>சத்வீர் கௌர், சவுதாம்ப்டன் டெஸ்ட் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்துகிறார். அவர் சமத்துவம், பெண்கள் பாதுகாப்பு, சமூக நீதி போன்ற துறைகளில் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். அவரது பெற்றோர் பஞ்சாபில் இருந்து வந்தவர்கள். சவுதாம்ப்டனில் புடவைக் கடை நடத்தினர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1785215c-cfbf-44fb-89e2-91806f9d1a0f/26-6a650c0fd9628.webp' /></p><p>
</p><h2>ஹர்ப்ரீத் உப்பால் (Harpreet Uppal)</h2><p>ஹர்ப்ரீத் உப்பால், ஹட்ஸ்ஃபீல்டை பிரதிநிதித்துவப்படுத்துகிறார். அவர் துணை கொறடா (Assistant Whip) பதவியை பெற்றுள்ளார். இது லேபர் கட்சியின் பாராளுமன்ற நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கும் முக்கிய பொறுப்பு ஆகும்.
</p><p></p><p>இந்திய வம்சாவளி எம்.பிக்கள் முன்னணி பதவிகளில் இடம் பெற்றிருப்பது, பிரித்தானிய அரசியலில் இந்தியர்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கும் முக்கிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.
</p><p>
மேலும், உமா குமரன் (இலங்கைத் தமிழ் வம்சாவளி) வெளிவிவகாரத் துறை அலுவலகத்தில் ஜூனியர் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.</p><p>

முன்னாள் அமைச்சர்கள் சீமா மல்ஹோத்ரா மற்றும் ப்ரீத் கௌர் கில் பின்புறப் பெஞ்சுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இந்த மாற்றம், பிரித்தானிய அரசியலில் இந்திய வம்சாவளி எம்.பிக்களின் செல்வாக்கை வலுப்படுத்தும் வகையில் பார்க்கப்படுகிறது.&nbsp;&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-25T19:16:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானியாவுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல்! ஆங்கிலக் கால்வாய் வழி பாதைகளில் ஈரானின் உளவுத்துறை வலையமைப்பு...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/iran-intelligence-network-english-channel-routes-1785005231"></link>
            <id>https://ibctamil.com/article/iran-intelligence-network-english-channel-routes-1785005231</id>
            <summary type="text">ஆங்கிலக் கால்வாய் (English Channel) வழியாக நடைபெறும் சட்டவிரோத குடியேற்றப் பாதைகளில், ஈரானுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் கடத்தல் வலையமைப்புகள் செயல்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஆங்கிலக் கால்வாய் (English Channel) வழியாக நடைபெறும் சட்டவிரோத குடியேற்றப் பாதைகளில், ஈரானுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் கடத்தல் வலையமைப்புகள் செயல்பட்டு வருவதாக வெளியாகியுள்ள தகவல், பிரித்தானியாவின்&nbsp; தேசிய பாதுகாப்பு குறித்து புதிய கவலைகளை ஏற்படுத்தியுள்ளது.
</p><p>
லண்டனைத் தலைமையிடமாகக் கொண்ட பிரித்தானிய நாளிதழ் ஒன்று வெளியிட்ட செய்தியின்படி, ஈரானின் உளவுத்துறையுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் சிலரை பிரித்தானியாவின்&nbsp; அதிகாரிகள் தடுத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.</p><p>

மேலும், சில சட்டவிரோத குடியேற்றப் பாதைகள், இரகசிய செல்வாக்கு மற்றும் தளவாட வலையமைப்புகளை உருவாக்க பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்ற குற்றச்சாட்டுகளையும் விசாரணை அதிகாரிகள் ஆராய்ந்து வருவதாக அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரக் காவல்படை</h2><p>

அதேவேளை, இந்த நடவடிக்கைகளில் சில, ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரக் காவல்படை (IRGC) அமைப்பின் யூனிட் 700 பிரிவுடன் தொடர்புடையதாகவும், லண்டனில் செயல்படும் சில முகவர்கள் குறித்து பெயர் குறிப்பிடப்படாத ஒரு ஈரான் அதிகாரி தகவல் தெரிவித்ததாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/643b7de6-c5aa-4bbf-95bd-4ac90468f473/26-6a65064e95481.webp' /></p><p>எனினும், இந்தக் குற்றச்சாட்டுகள் எதுவும் இதுவரை சுயாதீனமாக உறுதிப்படுத்தப்படவில்லை.

பாதுகாப்பு நிபுணர்களின் கருத்துப்படி, இந்தக் குற்றச்சாட்டுகள் உண்மையென நிரூபிக்கப்பட்டால், அது பிரித்தானியாவுக்கு எல்லைப் பாதுகாப்பு மட்டுமல்லாது, தேசிய பாதுகாப்பு, எதிர்-உளவுப் பணிகள் மற்றும் வெளிநாட்டு அரசுகளின் ரகசிய நடவடிக்கைகள் தொடர்பிலும் குறிப்பிடத்தக்க சவாலாக அமையும்.</p><p>
மேலும், இதுபோன்ற தகவல்கள் உறுதிப்படுத்தப்பட்டால், பிரிட்டன் தனது எல்லைக் கண்காணிப்பு, உளவுத்துறை ஒத்துழைப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்தும் வாய்ப்பும் இருப்பதாக மதிப்பிடப்படுகிறது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-25T18:54:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிரியாவில் இரண்டு பேருந்துகள் மோதி கோர விபத்து : 35 பேர் பலி - 30 பேர் காயம்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/syria-bus-accident-today-1785005035"></link>
            <id>https://tamilwin.com/article/syria-bus-accident-today-1785005035</id>
            <summary type="text">சிரியாவில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் குறைந்தது 35
பேர் உயிரிழந்ததுடன் 30 பேர் பலத்த காயமடைந்தனர்.

இந்த விபத்து கிழக்கு சிரி...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிரியாவில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் குறைந்தது 35
பேர் உயிரிழந்ததுடன் 30 பேர் பலத்த காயமடைந்தனர்.
</p><p>
இந்த விபத்து கிழக்கு சிரியாவையும் தலைநகரையும் இணைக்கும் முக்கிய
நெடுஞ்சாலையான 'டீய்ர் அல் சூர் - டமாஸ்கஸ்' வீதியில், அல்-சுக்னா மற்றும்
பால்மைரா ஆகிய இடங்களுக்கு இடையே நேற்று சனிக்கிழமை நிகழ்ந்துள்ளது.</p><p></p><h2>பாதுகாப்பத் தரம் குறைவு&nbsp;</h2><p>
</p><p>
விபத்துக்குள்ளான ஒரு பேருந்தில் சிரிய உள்நாட்டு பாதுகாப்புப் படை
வீரர்களும், மற்றொரு பேருந்தில் சாதாரண பொதுமக்களும் பயணம் செய்ததாக சிரிய
உள்நாட்டு விவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e667c2c1-99f0-4712-8828-de9a7b6cf0db/26-6a6503ed45631.webp' /></p><p>
</p><p>
விபத்து நடந்த இடத்திற்கு உடனடியாக அம்பியூலன்ஸ்கள் அனுப்பி வைக்கப்பட்டன.</p><p>
</p><p>மேலும், காயமடைந்தவர்களை விரைவாக ஹோமரா இராணுவ மருத்துவமனைக்கு கொண்டு செல்ல
பல உலங்குவானூர்திகளும் பயன்படுத்தப்பட்டதாக அரசு செய்தி நிறுவனமான 'சானா'
தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/afc87092-e9bd-4647-b80c-912111fd54d1/26-6a6503ededfc2.webp' /></p><p>
</p><p>
சிரியாவில் நடந்த நீண்டகால உள்நாட்டுப் போரின் காரணமாக அங்குள்ள
உள்கட்டமைப்புகள் மற்றும் வீதிகள் சீரழிந்து காணப்படுவதால், இந்த
நெடுஞ்சாலையில் பாதுகாப்புத் தரம் மிகவும் குறைவாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-25T18:48:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[இரண்டு வாரங்களில் அமெரிக்காவிற்கு ஏற்பட்ட பேரிழப்பு : தாக்கி அழிக்கப்பட்ட விமானங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/iran-destroyed-11-us-fighter-jets-helicopters-1785004116"></link>
            <id>https://ibctamil.com/article/iran-destroyed-11-us-fighter-jets-helicopters-1785004116</id>
            <summary type="text">மீண்டும் போர் தொடங்கிய நிலையில் இந்தமாதத்தின் இரண்டு வாரங்களில் மட்டும் 11 அமெரிக்கப் போர் விமானங்களையும் உலங்குவானூர்திகளையும் தரையிலேயே தாக்கி அழித்...</summary>
            <content type="html"><![CDATA[<p>மீண்டும் போர் தொடங்கிய நிலையில் இந்தமாதத்தின் இரண்டு வாரங்களில் மட்டும் 11 அமெரிக்கப் போர் விமானங்களையும் உலங்குவானூர்திகளையும் தரையிலேயே தாக்கி அழித்ததாக ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகர காவலர் படையின் (IRGC) செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.</p><p>ஜூலை 6 முதல் ஜூலை 22 வரையிலான 15 நாள் காலகட்டத்தில் இந்த இழப்பு ஏற்பட்டுள்ளது.</p><h2>&nbsp;அமெரிக்காவிற்கு ஏற்பட்ட இழப்பு</h2><p> பிராந்தியத்தில் உள்ள அமெரிக்கத் தளங்களில் நிறுத்தப்பட்டிருந்த 11 அமெரிக்கப் போர் விமானங்களையும் உலங்குவானூர்திகளையும் ஈரானிய ஆயுதப் படைகள் தரையிலேயே அழித்ததாக ஜெனரல் ஹொசைன் மொஹெப்பி தஸ்னிம் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பிரத்யேகப் பேட்டியில் கூறினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/785b7457-73bd-4633-a750-3899858799a7/26-6a6502b679cf3.webp' /></p><p>
</p><p>
ஈரானியத் தாக்குதல்களில், 17 உளவு மற்றும் செயல்பாட்டு ட்ரோன்கள் (அவற்றில் 8 புத்தம் புதிய ட்ரோன்கள்), ஒரு பதுங்குகுழிக்குள் இருந்த F-15 ரக போர் விமானம், ஒரு P8 விமானம், ஒரு C17 போக்குவரத்து விமானம் மற்றும் 8 எரிபொருள் நிரப்பும் விமானங்கள் ஆகியவையும் அழிக்கப்பட்டதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-25T18:38:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[7.5 பில்லியன் அமெரிக்க டொலரைத் தாண்டிய இலங்கைக்கான இந்தியாவின் உதவிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/india-s-aid-to-sri-lanka-exceeds-us-7-5-billion-1785004275"></link>
            <id>https://jvpnews.com/article/india-s-aid-to-sri-lanka-exceeds-us-7-5-billion-1785004275</id>
            <summary type="text">இலங்கைக்கான இந்தியாவின் உதவிகள் 7.5 பில்லியன் அமெரிக்க டொலர்களைக் கடந்துள்ளதாகவும், இதில் 850 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமான தொகை நன்கொடைகள...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கைக்கான இந்தியாவின் உதவிகள் 7.5 பில்லியன் அமெரிக்க டொலர்களைக் கடந்துள்ளதாகவும், இதில் 850 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமான தொகை நன்கொடைகளாக வழங்கப்பட்டுள்ளதாகவும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p></p><p>“இலங்கையில் பாலி மொழி ஆய்வுகளை வலுப்படுத்துதல்” (Strengthening Pali Language Studies in Sri Lanka) என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
இந்தியாவின் உதவிகள் நாட்டின் 25 மாவட்டங்களிலும் உட்கட்டமைப்பு, வீடமைப்பு, சுகாதாரம், வாழ்வாதாரம், புனர்வாழ்வு, கல்வி, விவசாயம், புதுப்பிக்கத்தக்க சக்தி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பயன்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/30d47a96-6c69-4f8d-bf8f-f8e49dcfa7bd/26-6a6500f55b098.webp' /></p><p>இலங்கை, இந்தியாவின் 'அயல்நாடு முதலில்' (Neighbourhood First) என்ற கொள்கை மற்றும் 'விஷன் மஹாசாகர்' திட்டத்தின் முக்கிய அங்கமாக இருப்பதாகவும் சந்தோஷ் ஜா குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
பெரும் நெருக்கடிகளின்போது இலங்கைக்கு முதலில் உதவ முன்வந்த நாடாக இந்தியா செயற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
</p><p>
சமீபத்திய 'டித்வா' புயல் மீட்பு நடவடிக்கைகள், பொருளாதார நெருக்கடி மற்றும் கொரோனா தொற்றுக் காலங்களில் இந்தியா வழங்கிய உதவிகள் விரைவானதாகவும் சரியான நேரத்திலும் நிபந்தனையற்றதாகவும் இருந்ததாக அவர் கூறியுள்ளார்.
</p><p>
இலங்கையின் நெருங்கிய அயல்நாடாக இந்தியா, வரலாற்று மற்றும் கலாசார உறவுகளைத் தாண்டி வர்த்தகம், முதலீடு மற்றும் அபிவிருத்தி ஒத்துழைப்பிலும் உறவை விரிவுபடுத்தியுள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா தெரிவித்துள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-25T18:31:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் உணர்வு ரீதியாக முன்னெடுக்கப்பட்ட கறுப்பு ஜுலை நினைவேந்தல்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/black-july-commemoration-held-emotion-in-jaffna-1785000872"></link>
            <id>https://tamilwin.com/article/black-july-commemoration-held-emotion-in-jaffna-1785000872</id>
            <summary type="text">1983ஆம் ஆண்டு வெலிக்கடை சிறைச்சாலையில் படுகொலை செய்யப்பட்ட சிறைக் கைதிகளின்
கறுப்பு ஜூலை நினைவேந்தல் இன்றையதினம்(25.7.2026) யாழ்ப்பாணம் தந்தை செல்வா ...</summary>
            <content type="html"><![CDATA[<p>1983ஆம் ஆண்டு வெலிக்கடை சிறைச்சாலையில் படுகொலை செய்யப்பட்ட சிறைக் கைதிகளின்
கறுப்பு ஜூலை நினைவேந்தல் இன்றையதினம்(25.7.2026) யாழ்ப்பாணம் தந்தை செல்வா அரங்கில்
உணர்வு ரீதியாக முன்னெடுக்கப்பட்டது.
</p><p>
குரல் அற்றவர்களின் குரல் அமைப்பின் ஏற்பாட்டில் இந்த நினைவேந்தலானது
முன்னெடுக்கப்பட்டது.
</p><p>
இதன்போது ஆரம்பத்தில் பொதுச் சுடர் ஏற்றி வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து
ஏனைய சுடர்கள் ஏற்றி வைக்கப்பட்டதுடன் நினைவுரைகள் இடம்பெற்றன.</p><p></p><h2>நினைவேந்தல்</h2><p>
</p><p>
இதில் நாடாளுமன்ற உறுப்பினர்களான துரைராஜா ரவிகரன், சிவஞானம் சிறீதரன், குரல்
அற்றவர்களின் குரல் அமைப்பின் செயற்பாட்டாளர் முருகையா கோமகன், வேலன்
சுவாமிகள், ஜெபரட்ணம் அடிகளார் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப்
பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ், காணாமல் ஆக்கப்பட்டோரது சங்கத்தினர்,
பல்கலைக்கழக மாணவர்கள், முன்னாள் மாநகர சபை உறுப்பினர் வ.பார்த்தீபன், படுகொலை
செய்யப்பட்டோரது உறவுகள், தமிழ் தேசியம் சார் செயற்பாட்டாளர்கள் மற்றும்
பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/03f8aadd-5ffb-41b5-968d-bf9c1a58dd1b/26-6a64f3b2b6094.webp' /></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-25T18:26:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[12 ராசிக்காரர்களின் மிகப்பெரிய பலவீனங்கள்! உங்க ராசிக்கு என்ன தெரியுமா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/what-s-t-biggest-weakness-of-each-zodiac-signs-1784991622"></link>
            <id>https://manithan.com/article/what-s-t-biggest-weakness-of-each-zodiac-signs-1784991622</id>
            <summary type="text">ஜோதிட நம்பிக்கைகளின்படி, ஒவ்வொரு ராசிக்கும் தனித்துவமான பலம் மற்றும் பலவீனங்கள் இருப்பதாகக் கருதப்படுகிறது. ஒருவர் பிறந்த ராசியைப் பொறுத்து அவர்களின் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜோதிட நம்பிக்கைகளின்படி, ஒவ்வொரு ராசிக்கும் தனித்துவமான பலம் மற்றும் பலவீனங்கள் இருப்பதாகக் கருதப்படுகிறது. </p><p>ஒருவர் பிறந்த ராசியைப் பொறுத்து அவர்களின் குணநலன்கள், சிந்தனை முறை மற்றும் செயல்பாடுகள் அமையும் என்ற கருத்து தொன்று தொட்டு நம்பட்டு வருகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f7aa45f2-f4b6-49e6-9de2-36c3ee882ecf/26-6a64df9707cc0.webp' /></p><p>அந்தவகையில், சிலர் தன்னம்பிக்கையுடன் இருப்பார்கள்; சிலர் உணர்ச்சிவசப்படுபவர்களாகவும், எளிதில் கோபப்படுபவர்களாகவும் அல்லது முடிவெடுப்பதில் தயக்கம் காட்டுபவர்களாகவும் இருக்கலாம்.</p><p>

ஒருவரின் பலவீனங்களை அறிந்து கொள்வது குறைகளை சுட்டிக்காட்டுவதற்காக அல்ல; மாறாக, தங்களை நன்றாகப் புரிந்து கொண்டு, முன்னேற்றம் தேவைப்படும் பகுதிகளை அறிந்து கொள்வதற்கான வாய்ப்பாகவே எடுத்துக்கொள்ள வேண்டும்.</p><p>அப்படி மேஷம் முதல் மீனம் வரையான 12&nbsp; ராசிக்குரிய மிகப்பெரிய பலவீனம் என்ன என்பதை இந்த பதிவி்ல் விரிவாக பார்க்கலாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4347021d-9895-416e-a454-f732b5141090/26-6a64df97ad489.webp' /></p><h2>12 ராசிகளுக்குமான பலவீனங்கள்</h2><p><b>மேஷம்</b></p><p>
மேஷ ராசியின் அதிபதி செவ்வாய். செவ்வாயின் ஆற்றல் காரணமாக மேஷ ராசிக்காரர்கள் துணிச்சலானவர்களாகவும், வேகமாக செயல்படுபவர்களாகவும் இருப்பார்கள். ஆனால் இவர்களின் மிகப்பெரிய பலவீனம் என்னவென்றால், எந்த ஒரு விஷயத்தையும் முழுமையாக யோசிக்காமல் அவசரமாக முடிவெடுத்து விடுவார்கள். பின்னர் அந்த முடிவு சரியானதா என்று சிந்தித்து வருத்தப்படுவதும் இவர்களின் இயல்பாக இருக்கும்.</p><p><b>
ரிஷபம்</b></p><p>
ரிஷப ராசியின் அதிபதி சுக்கிரன். இந்த ராசிக்காரர்கள் பொறுமை, நிலைத்தன்மை மற்றும் உறுதியான மனப்பான்மை கொண்டவர்கள்.ஆனால் அதுவே சில நேரங்களில் இவர்களின் பலவீனமாக மாறிவிடும். ஒரு விஷயத்தில் தங்கள் நிலைப்பாட்டை எளிதில் மாற்றிக்கொள்ள மாட்டார்கள்.இதனால் சமரசம் செய்வதும், மற்றவர்களின் கருத்தை ஏற்றுக்கொள்வதும் இவர்களுக்கு சற்று கடினமாக இருக்கும்.</p><p><b>
மிதுனம்
</b></p><p>மிதுன ராசியின் அதிபதி புதன்.புதனின் அருளால் மிதுன ராசிக்காரர்கள் புத்திசாலிகளாகவும், வேகமாக சிந்திக்கக்கூடியவர்களாகவும் இருப்பார்கள்.ஆனால் இவர்களின் மிகப்பெரிய பலவீனம் மனம் அடிக்கடி மாறுவதுதான்.</p><p> ஒரே முடிவில் நீண்ட நேரம் உறுதியாக இருக்க முடியாமல், சூழ்நிலைக்கு ஏற்ப தங்கள் எண்ணங்களை மாற்றிக் கொள்வார்கள்.இதனால் முக்கியமான முடிவுகளை எடுப்பதில் குழப்பம் ஏற்படலாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e04be8a0-2c22-42bc-b74e-e996a7d26d36/26-6a64df985d8ae.webp' /></p><p><b>
கடகம்
</b></p><p>கடக ராசியின் அதிபதி சந்திரன். இந்த ராசிக்காரர்கள் மிகவும் உணர்ச்சிவசப்படக்கூடியவர்கள்.இவர்களின் மிகப்பெரிய பலவீனம் என்னவென்றால், சிறிய விஷயங்களைக்கூட மனதில் வைத்துக்கொண்டு நீண்ட நேரம் அதைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருப்பார்கள். இதனால் தேவையற்ற மனஅழுத்தத்தையும் கவலையையும் சந்திக்க நேரிடலாம்.</p><p><b>சிம்மம் </b></p><p>சிம்ம ராசியின் அதிபதி சூரியன். இந்த சூரியனை அதிபதியாக கொண்ட சிம்ம ராசிக்காரர்களிடம் இருக்கும் பலவீனமே அதிக பிடிவாதம், கோபம் மற்றும் ஆதிக்கம் ஆகும். இது தவிர தன்னைப் பற்றி யார் எதைச் சொன்னாலும் இவர்களால் எளிதில் ஏற்றுக்கொள்ள முடியாது. இது இவர்களின் உறவில் பாதிப்பை ஏற்படுத்தலாம்.</p><p><b> கன்னி</b></p><p> கன்னி ராசியின் அதிபதி புதன். இந்த கன்னி ராசியைச் சேர்ந்தவர்களிடம் உள்ள மிகப்பெரிய பலவீனம் எல்லாவற்றையும் சிறப்பாக செய்ய முயற்சிப்பது. ஒருவேளை செய்ய முடியாவிட்டால் மிகுந்த வருத்தப்படுவார்கள். இதனால் வாழ்வில் அதிக பிரச்சினைகளை சந்திப்பார்கள்.</p><p><b>
துலாம்
</b></p><p>துலாம் ராசியின் அதிபதி சுக்கிரன். இந்த ராசிக்காரர்கள் சமநிலையையும் நீதியையும் விரும்புபவர்கள். ஆனால் ஒரு முடிவை எடுப்பதற்கு முன் அனைத்து கோணங்களிலும் அதிகமாக யோசிப்பது இவர்களின் பலவீனமாகும். இதன் காரணமாக சரியான நேரத்தில் முடிவெடுக்க முடியாமல், வாழ்க்கையில் கிடைக்கும் சில நல்ல வாய்ப்புகளை தவறவிடும் சூழல் ஏற்படலாம்.
</p><p><b>
விருச்சிகம்
</b></p><p>விருச்சிக ராசியின் அதிபதி செவ்வாய். இந்த ராசிக்காரர்கள் ஆழமான உணர்வுகளையும், உறுதியான நம்பிக்கையையும் கொண்டவர்கள். ஆனால் ஒருவர்மீது வைத்த நம்பிக்கை உடைந்துவிட்டால், அதை மீண்டும் உருவாக்குவது இவர்களுக்கு மிகவும் கடினம். ஒருமுறை மனதில் ஏற்பட்ட காயத்தை எளிதில் மறக்க மாட்டார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/92a65f68-8c01-4db0-a841-711c838f90a9/26-6a64df990c330.webp' /></p><p>
</p><p><b>
தனுசு</b></p><p>
தனுசு ராசியின் அதிபதி குரு பகவான். இந்த ராசிக்காரர்கள் நேர்மையையும் உண்மையையும் மிகவும் மதிப்பவர்கள். மனதில் இருப்பதை நேரடியாகப் பேசும் பழக்கம் இவர்களிடம் இருக்கும். ஆனால் அந்த வெளிப்படையான பேச்சு சில நேரங்களில் மற்றவர்களின் மனதை புண்படுத்தும். இதுவே இவர்களின் முக்கிய பலவீனமாக கருதப்படுகிறது.</p><p><b>

மகரம்
</b></p><p>மகர ராசியின் அதிபதி சனி பகவான். இந்த ராசிக்காரர்கள் கடின உழைப்பாளிகள். தங்கள் இலக்கை அடைவதற்காக முழுமையாக வேலையில் கவனம் செலுத்துவார்கள். ஆனால் இதன் காரணமாக குடும்பத்தினரையும், நண்பர்களையும், உறவுகளையும் கவனிக்க தவறிவிடுவார்கள். இதனால் உறவுகளில் இடைவெளி அல்லது கருத்து வேறுபாடுகள் உருவாக வாய்ப்பு உள்ளது.
</p><p><b>
கும்பம்
</b></p><p>கும்ப ராசியின் அதிபதி சனி பகவான். இந்த ராசிக்காரர்கள் ஆழமாக சிந்திப்பவர்கள். ஆனால் தங்கள் மனதில் இருக்கும் உணர்வுகளையும் கவலைகளையும் வெளிப்படையாக பகிர்ந்து கொள்ள மாட்டார்கள். எல்லாவற்றையும் மனதிற்குள்ளேயே வைத்துக்கொள்வதால், இவர்களை மற்றவர்கள் முழுமையாக புரிந்துகொள்வது சற்று சிரமமாக இருக்கும்.
</p><p><b>
மீனம்
</b></p><p>மீன ராசியின் அதிபதி குரு பகவான். இந்த ராசிக்காரர்கள் கற்பனைத் திறன் அதிகம் கொண்டவர்களாகவும், மிகவும் கருணை உள்ளவர்களாகவும் இருப்பார்கள். ஆனால் சில நேரங்களில் யதார்த்தத்தை எதிர்கொள்வதை விட கற்பனை உலகில் அதிகமாக வாழ விரும்புவார்கள். அதோடு, சிறிய விஷயங்களுக்குக்கூட எளிதில் உணர்ச்சிவசப்படுவதால் மனஅழுத்தத்தையும் ஏமாற்றத்தையும் சந்திக்க நேரிடலாம்.</p><p><b>இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;&nbsp;</b></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-25T18:25:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கோட்டாபய ராஜபக்சவுக்கு புதிய சிக்கலா! அடிக்கடி வெளிநாடு சென்று வந்த முக்கியஸ்தர்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/gotabaya-rajapaksa-cid-law-and-order-namal-1785002637"></link>
            <id>https://tamilwin.com/article/gotabaya-rajapaksa-cid-law-and-order-namal-1785002637</id>
            <summary type="text">முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தொடர்பான புதிய சட்டநடவடிக்கைகள் மற்றும் விசாரணைகள் குறித்து தற்போது அதிகமாகப் பேசப்பட்டு வருகின்றது.அத்தோடு, கோட்டா...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தொடர்பான புதிய சட்டநடவடிக்கைகள் மற்றும் விசாரணைகள் குறித்து தற்போது அதிகமாகப் பேசப்பட்டு வருகின்றது.</p><p>அத்தோடு, கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான ஆட்சிக்காலத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் ஒரு சம்பள மற்றும் அரச நிதி தொடர்பான விவகாரம் தற்போது மீண்டும் அரசியல் மற்றும் சட்ட வட்டாரங்களில் பேசுபொருளாகியுள்ளது.</p><p>இந்தநிலையிலே,&nbsp;கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக அவரது சகோதரியின் மகன் மாலக்க சந்திரதாஸ் என்பவர் கொழும்பு மத்திய புலனாய்வுப்பிரிவில் வாக்குமூலம் வழங்கியுள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.</p><p>முன்னாள் ஜனாதிபதியின் தனிப்பட்ட செயலாளர் சுகீஸ்வர பண்டார தொடர்பான சம்பவம் குறித்து சிஐடியினர் விசாரணை நடாத்தி வருகின்றனர்.</p><p>அத்தோடு, கோட்டாபயவின் ஆட்சிக்காலத்தில்&nbsp; சுகீஸ்வர பண்டார அடிக்கடி சீனா சென்று வந்துள்ளதாகவும் அந்த விடயம் தொடர்பில் விசாரணை நடாத்த வேண்டும் எனவும் கூறப்படுகின்றது.</p><p>இந்த விடயம் தொடர்பான விரிவான தகவல்களை நியூஸ் இன்சைட் நிகழ்ச்சியில் காணலாம்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/Ii4CdKrNkJE" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-25T18:22:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை கிரிக்கெட்டின் முன்னாள் தலைவர் உபாலி தர்மதாச காலமானார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sri-lanka-cricket-president-upali-passes-away-1785003159"></link>
            <id>https://jvpnews.com/article/sri-lanka-cricket-president-upali-passes-away-1785003159</id>
            <summary type="text">இலங்கை கிரிக்கெட்டின் (SLC) முன்னாள் தலைவர் மற்றும் பிரபல தொழிலதிபரான உபாலி தர்மதாச, தனது 71ஆவது வயதில் காலமானார்.
இலங்கையின் முன்னணி தொழிலதிபர்களில்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை கிரிக்கெட்டின் (SLC) முன்னாள் தலைவர் மற்றும் பிரபல தொழிலதிபரான உபாலி தர்மதாச, தனது 71ஆவது வயதில் காலமானார்.</p><p>
</p><p></p><p>இலங்கையின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவராக விளங்கிய அவர், பல தசாப்தங்களாக வணிக நிர்வாகத் துறையில் அனுபவத்தையும் நிபுணத்துவத்தையும் பெற்றிருந்தார்.</p><p> நாட்டின் உயர்மட்ட வணிக சமூகத்தில் தனக்கென ஒரு தனித்துவமான இடத்தைப் பெற்றிருந்த அவர், பல்வேறு துறைகளில் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை வழங்கியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2743386b-76db-497f-a9c0-87c387d35dfe/26-6a64fc990eb4a.webp' /></p><p>

இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (BCCSL) தலைவராகவும், பின்னர் இலங்கை கிரிக்கெட்டின் (SLC) தலைவராகவும் பணியாற்றிய அவர், நாட்டின் கிரிக்கெட் வளர்ச்சிக்காக பல்வேறு முக்கிய முயற்சிகளை முன்னெடுத்ததுடன், விளையாட்டுத் துறையின் முன்னேற்றத்திற்கும் அர்ப்பணிப்புடன் சேவையாற்றினார்.
</p><p>
அத்துடன், இலங்கை காப்பீட்டு கூட்டுத்தாபனம் (SLIC) நிறுவனத்தின் தலைவராகவும் அவர் பணியாற்றியுள்ளார்.
</p><p>
வணிகத் துறையில், நவாலொக்க குழும நிறுவனங்களின் நிர்வாக இயக்குநராக நீண்டகாலம் செயற்பட்ட அவர், நவாலொக்க பைலிங் லிமிடெட், நவாலொக்க டிம்பர் ஸ்டோர்ஸ் லிமிடெட், நவாலொக்க பாலிசாக்ஸ் லிமிடெட், நவாலொக்க இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட், நியூ நவாலொக்க டிரேடிங் கோ லிமிடெட் மற்றும் நவாலொக்க டெவலப்மெண்ட்ஸ் லிமிடெட் உள்ளிட்ட பல நிறுவனங்களின் வளர்ச்சிக்கு தலைமை தாங்கியுள்ளார்.</p><p>

உபாலி தர்மதாசவின் மறைவு, இலங்கையின் கிரிக்கெட் மற்றும் வணிகத் துறைகளுக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பாகக் கருதப்படுகிறது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-25T18:12:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[லஞ்சம் வாங்கும் அதிகாரிகளுக்கு ஆதரவாக பேசிய சீனு ராமசாமி.. வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/seenu-ramasamy-gets-trolled-for-supporting-bribe-1785002744"></link>
            <id>https://cineulagam.com/article/seenu-ramasamy-gets-trolled-for-supporting-bribe-1785002744</id>
            <summary type="text">தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குனர்களில் ஒருவர் சீனு ராமசாமி. அவரது பல படங்கள் ரசிகர்களை கவர்ந்தவை.தற்போது சீனு ராமசாமி x தளத்தில் பதிவிட்ட கருத்துக்கா...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குனர்களில் ஒருவர் சீனு ராமசாமி. அவரது பல படங்கள் ரசிகர்களை கவர்ந்தவை.</p><p>தற்போது சீனு ராமசாமி x தளத்தில் பதிவிட்ட கருத்துக்காக நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a4da3894-33e9-4770-98c3-3f46825121e2/26-6a64fafbe35b7.webp' /></p><p>
</p><h2>லஞ்சத்துக்கு ஆதரவான பேச்சு
</h2><p>லஞ்சம் கொடுத்து வேலை வாங்கிய அதிகாரிகளை, "முதலீடு செய்து வேலை பெற்ற அதிகாரிகள்" என குறிப்பிட்டு இருக்கும் சீனு ராமசாமி, முதலீட்டை திரும்ப எடுக்கும் நேரத்தில் லஞ்சம் வாங்காதே என சொன்னால் சரியா என்பது போல அவர் கேட்டிருக்கிறார்.
</p><p>அது மட்டுமின்றி கிம்பளம் வாங்குவதை தடுக்க அதிகாரிகளின் சம்பளத்தை அதிகரிக்க வேண்டும், ஓவர் டைம் சம்பளம் கொடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
</p><p>லஞ்ச அதிகாரிகளுக்கு ஆதரவாக பேசிய சீனு ராமசாமியை நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-25T18:05:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தை விவகாரம்: ஈரான் - அரசுத் தொலைக்காட்சி இடையே கருத்து மோதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/conflict-between-iran-and-its-state-television-1785002232"></link>
            <id>https://ibctamil.com/article/conflict-between-iran-and-its-state-television-1785002232</id>
            <summary type="text">அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகள் மற்றும் போர் தொடர்பான அரசின் நிலைப்பாட்டை எவ்வாறு பொதுமக்களிடம் எடுத்துரைப்பது என்பது குறித்து ஈரான் அரசு மற்றும் அர...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகள் மற்றும் போர் தொடர்பான அரசின் நிலைப்பாட்டை எவ்வாறு பொதுமக்களிடம் எடுத்துரைப்பது என்பது குறித்து ஈரான் அரசு மற்றும் அரசுக்குச் சொந்தமான தொலைக்காட்சி நிறுவனமான IRIB இடையே வெளிப்படையான கருத்து மோதல் ஏற்பட்டுள்ளதாக மத்திய கிழக்கு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p>
அமெரிக்கா - ஈரான் இடையிலான பதற்றத்தைத் தணித்து, இரு நாடுகளையும் மீண்டும் இராஜதந்திர பேச்சுவார்த்தை பாதைக்கு கொண்டுவர சர்வதேச நடுநிலை முயற்சிகள் நடைபெற்று வரும் நிலையில் இந்த சர்ச்சை உருவாகியுள்ளது.
</p><p>
கடந்த வாரம் ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் ஆற்றிய உரையின் சில பகுதிகளை ஒளிபரப்பாமல் நீக்கியதாகக் கூறி, அரசு தகவல் கவுன்சில் வெள்ளிக்கிழமை IRIB மீது தணிக்கை செய்ததாக குற்றம்சாட்டியது.&nbsp;</p><p></p><h2>நீக்கப்பட்ட ஒளிபரப்பு</h2><p>இதற்கு பதிலளித்த IRIB, அரசின் குற்றச்சாட்டுகளை நிராகரித்ததுடன், நாட்டின் உயர்மட்ட ஆட்சித் தலைமைகளுக்கிடையே பிளவு இருப்பதாக தவறான எண்ணம் பொதுமக்களிடையே உருவாகாத வகையில் செயல்படுவது தங்களது பொறுப்பு என சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.</p><p>&nbsp;பெசெஷ்கியான் தனது உரையில், கடந்த ஆண்டு இஸ்ரேலுடன் நடைபெற்ற 12 நாள் போருக்குப் பிறகு, முன்னாள் உச்சத் தலைவர் ஆயத்துல்லா அலி காமனெய் பொதுவெளியில் அமெரிக்காவுடன் எந்தப் பேச்சுவார்த்தையும் நடத்தப்படாது என்று அறிவித்திருந்தாலும், தனிப்பட்ட முறையில் பேச்சுவார்த்தையைத் தொடங்க அனுமதி வழங்கியதாகக் குறிப்பிட்டிருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/afb25d1f-372a-489f-ae7f-046eb0871827/26-6a64f9709c34d.webp' /></p><p>
</p><p>
“நாங்கள் உச்சத் தலைவரைச் சந்தித்து, ‘போர் இல்லை, அமைதியும் இல்லை’ என்ற நிலைமை நாட்டுக்கு பாதகமாக இருப்பதாக விளக்கினோம். </p><p>அதன்பின் அவர் பேச்சுவார்த்தையைத் தொடங்குமாறு உத்தரவிட்டார். அந்த உத்தரவின் அடிப்படையில்தான் நாங்கள் பேச்சுவார்த்தையை ஆரம்பித்தோம்,” என்று தெரிவித்திருந்தார்.
</p><p>
இந்தக் கருத்துகள் இடம்பெற்ற பகுதியை ஒளிபரப்பிலிருந்து நீக்கியது, அரசுத் தலைவர்கள், நாடாளுமன்ற சபாநாயகர் மற்றும் நீதித்துறைத் தலைவரின் சமீபத்திய கருத்துகள் தொடர்பாக அரசுத் தொலைக்காட்சி மேற்கொண்ட வழக்கத்திற்கு மாறான நடவடிக்கைகளின் தொடர்ச்சியாகும் என்று ஈரான் அரசு தெரிவித்துள்ளது.</p><p>மேலும், இந்த மாத தொடக்கத்தில் நாடாளுமன்ற சபாநாயகரும் தலைமை பேச்சுவார்த்தையாளருமான முகம்மது பாகர் கலிபாஃப் அளித்த பேட்டியில், அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகள் குறித்த பகுதியும் ஒளிபரப்பிலிருந்து நீக்கப்பட்டதாக சுட்டிக்காட்டியுள்ளது.
</p><p>
அதேபோல், நீதித்துறைத் தலைவர் கோலாம்-ஹொசைன் மொஹ்செனி-எஜெய், அதிபருக்கு ஆதரவு தெரிவித்து இந்த வாரம் ஆற்றிய உரையின் ஒரு பகுதியும் ஒளிபரப்பப்படவில்லை என்றும் அரசு குற்றம்சாட்டியுள்ளது.
</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="http://செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!" target="_blank"> WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-25T18:05:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பில் சற்றுமுன்னர் துப்பாக்கிசூடு : படுகாயமடைந்த தொழிலதிபர் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/bellanwila-holiday-resort-owner-shot-1784995532"></link>
            <id>https://ibctamil.com/article/bellanwila-holiday-resort-owner-shot-1784995532</id>
            <summary type="text">புதிய இணைப்பு 


பெல்லன்வில பகுதியில் இன்று (25) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் காயமடைந்த நபர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெ...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p> 


பெல்லன்வில பகுதியில் இன்று (25) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் காயமடைந்த நபர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p>

 

துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி காயமடைந்த அவர், களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
</p><p>
 

அங்கு அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.&nbsp;</p><h2>முதலாம் இணைப்பு</h2><p>&nbsp;கொழும்பு பொரலஸ்கமுவவின் பெல்லன்வில பகுதியில் இன்றிரவு நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் தொழிலதிபர் ஒருவர் காயமடைந்து, களுபோவில போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
</p><p>
விடுமுறை விடுதியின் உரிமையாளரான 55 வயதுடைய நபர் ஒருவர் இந்தத் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தார்.</p><h2>காவல்துறை வெளியிட்ட தகவல்</h2><p>துப்பாக்கிச் சூடு நடந்தபோது, ​​காயமடைந்த நபர் தனது விடுதிக்கு முன்னால் நின்று கொண்டிருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6c383cf7-409d-46a4-b2ac-00d6a468168c/26-6a64e0368af52.webp' /></p><p>
</p><p>
துப்பாக்கிச் சூட்டை நடத்திய நபர்கள் அல்லது சுடுவதற்குப் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி குறித்து இதுவரை எந்தத் தகவலும் இல்லை என்று காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-25T18:04:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்கா விதித்த கூடுதல் வரி- சுவிட்சர்லாந்தின் பாரம்பரிய உணவுப் பொருளின் விற்பனை பாதிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/swiss-cheese-sales-hit-by-us-tariffs-1785001886"></link>
            <id>https://news.lankasri.com/article/swiss-cheese-sales-hit-by-us-tariffs-1785001886</id>
            <summary type="text">அமெரிக்கா விதித்த கூடுதல் வரியால் சுவிட்சர்லாந்தின் பாரம்பரிய உணவுப் பொருளான சீஸ் விற்பனை பாதிக்கப்பட்டுள்ளது.சுவிட்சர்லாந்தின் புகழ்பெற்ற க்ருயேரே (G...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்கா விதித்த கூடுதல் வரியால் சுவிட்சர்லாந்தின் பாரம்பரிய உணவுப் பொருளான சீஸ் விற்பனை பாதிக்கப்பட்டுள்ளது.</p><p>சுவிட்சர்லாந்தின் புகழ்பெற்ற க்ருயேரே (Gruyere) சீஸ் தயாரிப்பாளர்கள், அமெரிக்கா விதித்த புதிய இறக்குமதி வரிகளால் விற்பனை குறைந்ததால், உலகின் பிற பகுதிகளில் புதிய சந்தைகளை தேடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
</p><p>
அமெரிக்கா கடந்த ஆண்டு 10 சதவீதம் வரி விதித்திருந்த நிலையில், இவ்வாண்டு அது 12.5 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

இதனால் அமெரிக்க சந்தையில் சுவிஸ் சீஸின் தேவை பெருமளவில் குறைந்துள்ளது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9276337e-0f9e-429d-a7b6-b4af4439a134/26-6a64f7a00688d.webp' /></p><p>அமெரிக்கா, க்ருயேரே சீஸின் மொத்த விற்பனையில் சுமார் 13 சதவீதம் பங்கைக் கொண்டிருந்தது.

விற்பனை குறைவால், தயாரிப்பாளர்கள் 5 சதவீதம் உற்பத்தியை குறைத்துள்ளனர். இதன் மூலம் விலை நிலைத்தன்மையைப் பேணுவதோடு, அதிகப்படியான கையிருப்பு உருவாகாமல் தடுக்க முயற்சி செய்கிறார்கள்.
</p><p>
“சீஸ் விற்பனை குறைந்தாலும், விலையை குறைத்து விற்காமல், தரத்தைப் பேணுவது முக்கியம்,” என தயாரிப்பாளர் அலெக்சாண்டர் முரித் தெரிவித்துள்ளார்.
</p><p></p><p>சீஸ் வியாபாரிகள், அமெரிக்க சந்தையை மாற்றும் வகையில் புதிய சந்தைகளை உலகம் முழுவதும் தேடிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், அமெரிக்கா போன்ற பெரிய சந்தையை உடனடியாக மாற்றுவது சாத்தியமில்லை என அவர்கள் கூறுகின்றனர்.
</p><p>
சுவிஸ் ஆல்ப்ஸ் மலைப்பகுதிகளில் பசுக்களை மேய்த்து, இயற்கை பால் மூலம் தயாரிக்கப்படும் க்ருயேரே சீஸ், சுவிட்சர்லாந்தின் பாரம்பரிய உணவுப் பொருளாகும். அமெரிக்க வரி காரணமாக, இந்த பாரம்பரிய தொழில் கடுமையான சவால்களை எதிர்கொள்கிறது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-25T17:49:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானிலிருந்து ரஷ்யாவுக்கு சென்ற போர்க்கப்பல் மீது உக்ரைன் திடீர் தாக்குதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/ukraine-sudden-attack-warship-from-iran-to-russia-1784998770"></link>
            <id>https://ibctamil.com/article/ukraine-sudden-attack-warship-from-iran-to-russia-1784998770</id>
            <summary type="text">காஸ்பியன் கடலில் உக்ரைன், மேற்கொண்ட தொலைதூரத் தாக்குதலில், ஈரானிலிருந்து ரஷ்யாவுக்கு இராணுவப் பொருட்களைக் கொண்டு சென்ற கப்பல்கள் மற்றும் ஒரு போர்க்கப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>காஸ்பியன் கடலில் உக்ரைன், மேற்கொண்ட தொலைதூரத் தாக்குதலில், ஈரானிலிருந்து ரஷ்யாவுக்கு இராணுவப் பொருட்களைக் கொண்டு சென்ற கப்பல்கள் மற்றும் ஒரு போர்க்கப்பலை இலக்காகக் கொண்டு வெற்றிகரமாக தாக்கியுள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.</p><p>இது தொடர்பாக சமூக வலைத்தளமான X-ல் சனிக்கிழமை வெளியிட்ட பதிவில், “காஸ்பியன் கடலில் மேற்கொள்ளப்பட்ட தொலைதூரத் தாக்குதல்கள் மூலம் உக்ரைன் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றுள்ளது.</p><p> குறிப்பாக, ஈரானிலிருந்து இராணுவச் சரக்குகளை ஏற்றிச் சென்ற கப்பல்களும், ஒரு போர்க்கப்பலும் தாக்குதலுக்கு இலக்காகின,” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>ரஷ்ய கடற்படைத் தளங்கள்</h2><p>

காஸ்பியன் கடல், உக்ரைன் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளிலிருந்து ஆயிரம் கிலோமீட்டருக்கும் அதிக தொலைவில் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7fcf4489-47dd-4fd8-8dc6-b05b61c03cfa/26-6a64ee18da8e3.webp' /></p><p>
</p><p>
முன்னதாக, கடந்த ஆண்டு இறுதியில் காஸ்பியன் கடலில் உள்ள ரஷ்ய கடற்படைத் தளங்கள் மற்றும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் தெரிவித்திருந்தது. </p><p>மேலும், கடந்த டிசம்பர் மாதம், ஈரான்–ரஷ்யா இடையிலான இராணுவச் சரக்குப் போக்குவரத்தில் ஈடுபட்டதாக அமெரிக்கா தடைவிதித்திருந்த இரண்டு கப்பல்கள் தாக்கப்பட்டதாக உக்ரைனின் பாதுகாப்பு சேவை அறிவித்திருந்தது.
</p><p>
பகுப்பாய்வாளர்களின் தகவலின்படி, ஈரானிலிருந்து ரஷ்யாவுக்கு இராணுவ உபகரணங்களை கொண்டு செல்ல ரஷ்யா, அஸ்ட்ராகான் மற்றும் ஓல்யா துறைமுகங்களை முக்கியமாகப் பயன்படுத்தி வருகிறது. </p><p>மேலும், ட்ரோன் மற்றும் ஏவுகணை தொழில்நுட்பம் உள்ளிட்ட பாதுகாப்புத் துறைகளில் இரு நாடுகளும் நீண்டகால ஒத்துழைப்பை மேற்கொண்டு வருகின்றன.

எனினும், ஜெலென்ஸ்கி வெளியிட்டுள்ள இந்தக் கூற்றுக்கு ரஷ்யா தரப்பில் இதுவரை அதிகாரப்பூர்வ பதில் வெளியாகவில்லை.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a> </a><a href="http://செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!" target="_blank">WHATSAPP CHANNE</a><a>L </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-25T17:39:10+00:00</updated>
        </entry>
    </feed>
