<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-08-24T10:32:28+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Thileepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஒரே ஒரு மாம்பழம் மூன்று இலட்சமா..! வவுனியாவில் நடந்த சம்பவம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/mango-auctioned-for-3-lakh-rupees-in-vavuniya-1787567301"></link>
            <id>https://tamilwin.com/article/mango-auctioned-for-3-lakh-rupees-in-vavuniya-1787567301</id>
            <summary type="text">வவுனியாவில் ஆலய திருவிழா ஒன்றின் போது மூன்று இலட்சம் ரூபாய்க்கு விநாயருக்கு
படைத்த மாம்பழம் ஒன்று ஏலம் போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிகழ்வு...</summary>
            <content type="html"><![CDATA[<p>வவுனியாவில் ஆலய திருவிழா ஒன்றின் போது மூன்று இலட்சம் ரூபாய்க்கு விநாயருக்கு
படைத்த மாம்பழம் ஒன்று ஏலம் போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>

இந்த நிகழ்வு நேற்று(23.08.2026) இடம்பெற்றுள்ளது.</p><p> 

வவுனியா, உக்குளாங்குளம் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ
திருவிழா இடம்பெற்று வருகிறது.
</p><p>
இதன் ஆறாம் திருவிழாவான மாம்பழத் திருவிழா நேற்று(23) இடம்பெற்றது.
</p><p>
திருவிழாவில் விநாயகருக்கு படைக்கப்பட்ட மாம்பழம் ஒன்று கோவில் வளர்ச்சி
நிதிக்காக ஏலத்தில் விடப்பட்டது.
</p><h2>
மூன்று இலட்சம் ரூபாய்க்கு ஏலம் போன மாம்பழம்</h2><p>
மாம்பழத் திருவிழா நிறைவடைந்த பின்னர் குறித்த மாம்பழம் ஆலய நிர்வாக
சபையினரால் ஏலம் விடப்பட்டிருந்தது.

இதில் பத்தாயிரம் ரூபாய்க்கு மாம்பழம் முதலில் ஏலம் கூறப்பட்டு, சில நொடிகளில்
1 இலட்சம் ரூபா வரையில் சென்று பின்னர் படிப்படியாக உயர்ந்து சில நிமிடங்களில்
3 லட்சம் ரூபாவிற்கு இறுதியாக ஏலம் முடிவடைந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/12d86260-4af4-42c5-a597-02d2f8b12cb3/26-6a8c1d70c1116.webp' /></p><p>
</p><p>
இதன்போது, பலத்த போட்டிக்கு மத்தியில் வவுனியா, உக்குளாங்குளம் பகுதியில்
வசிக்கும் திருமதி சிந்துஜா உபாரிஸ் ஜெதீஸ்வரன் என்பவர், மூன்று இலட்சம்
ரூபாய்க்கு குறித்த மாம்பழத்தை ஏலத்தில் கொள்வனவு செய்தார்.
</p><p>
குறித்த ஆலய திருவிழாவின் போது மூன்றாவது வருடமாகவும் தொடர்ச்சியாக அவரே
ஆலயத்தில் ஏலம் விடப்பட்ட மாம்பழத்தை கொள்வனவு செய்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-24T10:31:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஓணம் ஸ்பெஷலாக நடிகை ரஜிஷா விஜயன் வெளியிட்ட ஸ்பெஷல் போட்டோஸ்...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/actress-rajisha-vijayan-onam-special-photos-1787567076"></link>
            <id>https://cineulagam.com/article/actress-rajisha-vijayan-onam-special-photos-1787567076</id>
            <summary type="text">ரஜிஷா விஜயன்ஓணம் பண்டிகை வந்தாலே போதும் எல்லோரும் புடவையில் போட்டோ ஷுட் எடுத்துவிடுவார்கள்.அதிலும் மலையாள சினிமா நடிகைகளை சொல்லவே வேண்டாம், ஓணம் பண்டி...</summary>
            <content type="html"><![CDATA[<h2>ரஜிஷா விஜயன்</h2><p>ஓணம் பண்டிகை வந்தாலே போதும் எல்லோரும் புடவையில் போட்டோ ஷுட் எடுத்துவிடுவார்கள்.</p><p>அதிலும் மலையாள சினிமா நடிகைகளை சொல்லவே வேண்டாம், ஓணம் பண்டிகை கொண்டாடி நிறைய புகைப்படங்கள் வெளியிடுவது, அந்த புடவையில் ஸ்பெஷல் போட்டோ ஷுட் நடத்துவது என மாஸ் காட்டுவார்கள்.</p><p>அப்படி தற்போது நடிகை ரஜிஷா விஜயன் ஓணம் ஸ்பெஷல்புடவையில் விதவிதமான போஸ் கொடுத்து போட்டோ ஷுட் வெளியிட்டுள்ளார்.</p><p>இதோ அந்த போட்டோஸ்,</p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-24T10:30:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஊடகவியலாளர்களுக்கான ஹோமகம வீட்டுத் திட்டத்திற்கு விண்ணப்பங்கள் கோரல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/applications-open-homagama-housing-scheme-1787563903"></link>
            <id>https://tamilwin.com/article/applications-open-homagama-housing-scheme-1787563903</id>
            <summary type="text">சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சு, “ஹோமகம பத்திரிகையாளர் வீட்டுவசதித் திட்டத்திற்காக” பத்திரிகையாளர்களிடமிருந்து விண்ணப்பங்களைக் கோரியுள்ளது.

அச்ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சு, “ஹோமகம பத்திரிகையாளர் வீட்டுவசதித் திட்டத்திற்காக” பத்திரிகையாளர்களிடமிருந்து விண்ணப்பங்களைக் கோரியுள்ளது.
</p><p>
அச்சு, மின்னணு மற்றும் இணைய ஊடக நிறுவனங்களில் பணியாற்றும் பத்திரிகையாளர்களுக்காக வீட்டுவசதித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
</p><h2>இலங்கையின் நிரந்தரக் குடியிருப்பாளர்கள்</h2><p>
அமைச்சகத்தின்படி, விண்ணப்பதாரர்கள் இலங்கையின் நிரந்தரக் குடியிருப்பாளர்களாக இருக்க வேண்டும் மற்றும் வீடு அல்லது வீடு கட்டுவதற்கு ஏற்ற நிலம் வைத்திருக்கக் கூடாது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e7f1d268-26f4-4117-aa65-da03f0d8df59/26-6a8c1c549f819.webp' /></p><p> விண்ணப்பதாரர்கள் ஊடகத் துறையில் குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் பணியாற்றியிருக்க வேண்டும்.
</p><p>
இத்திட்டத்தின் கீழ், தலா சுமார் 500 சதுர அடி கொண்ட 27 வீட்டு அலகுகள் வழங்கப்படும், மேலும் விண்ணப்பதாரர்கள் 30 முதல் 60 வயதுக்குள் இருக்க வேண்டும்.
</p><p>
தொழில்முறை அனுபவம் மற்றும் பிற தொடர்புடைய தகுதிகள் உள்ளிட்ட நிர்ணயிக்கப்பட்ட அளவுகோல்களின் அடிப்படையில் தேர்வுகள் செய்யப்படும் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.</p><h2>பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள்</h2><p>

2026 ஆம் ஆண்டு திட்டத்திற்கான விண்ணப்பங்களை, சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சகத்தின் அதிகாரபூர்வ இணையதளமான www.media.gov.lk இலிருந்து ஆகஸ்ட் 18 முதல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/07fd75cb-ea5c-45b1-b714-f989df82c0b8/26-6a8c1c55559ec.webp' /></p><p>
</p><p>
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, செயலர், சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சு, எண் 163, “அசிதிசி மெதுரா”, கிருலபொனே மாவத்தை, பொலங்கொட, கொழும்பு 05 என்ற முகவரிக்கு பதிவுத் தபால் மூலம் அனுப்ப வேண்டும்.</p><p>

மேலதிக தகவல்களை அமைச்சகத்தின் வெகுஜன ஊடகப் பிரிவிலிருந்து பெற்றுக்கொள்ளலாம்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-24T10:30:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Fathima</name>
            </author>
            <title type="text"><![CDATA[வங்கதேசத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் கொலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/4-members-killed-in-bangladesh-1787566795"></link>
            <id>https://ibctamilnadu.com/article/4-members-killed-in-bangladesh-1787566795</id>
            <summary type="text">4 Members Killed in Bangladesh: வங்​கதேசத்​தில் 4 பேர் கொடூர​மாக கொலை செய்​யப்​பட்ட சம்பவத்தில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.வங்​கதேசத்​தின் ரங்க்​ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>4 Members Killed in Bangladesh: வங்​கதேசத்​தில் 4 பேர் கொடூர​மாக கொலை செய்​யப்​பட்ட சம்பவத்தில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>வங்​கதேசத்​தின் ரங்க்​பூரை சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் கணபதி சக்​கர​வர்த்தி (65). இவரது மனைவி பிரீத்தி லதா (50). இத்​தம்​ப​தி​யின் மூத்த மகள் அகாமி (23). இளைய மகன் பிரி​யம் (12).</p><p>கடந்த சில நாட்களாக இவர்களது உறவினர்கள் போனில் தொடர்பு கொள்ள முயன்ற போது தொடர்புகொள்ள முடியவில்லை, அத்துடன் வீ்டும் வெளிப்புறமாக பூட்டியே கிடந்தது.</p><p>இதனால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் போலிசில் புகார் அளித்தனர், இதனையடுத்து நேற்று முன்தினம் இரவு போலிசார் வந்து சோதனை செய்த போது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் கணபதி இருந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/65e6080d-0123-44b0-bfd6-9502e24103cf/26-6a8c1c7db09b7.webp' /><br></p><p>மற்ற மூவரும் சடலமாக கிடந்துள்ளனர், இதனைதொடர்ந்து போலிசார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.</p><p>இதுகுறித்து ரங்க்​பூர் போலீஸ் கமிஷனர் முகமது அப்​துல் மபூத், கடந்த வியாழன்று இரவு முக்தோ மற்​றும் சித்​தார்த்தா ஆகிய இருவர் வீட்டின் மாடிக்கு சென்று போதைப்பொருள் பயன்படுத்தியுள்ளனர்.</p><p>சத்தம் கேட்டு மாடிக்கு சென்ற கணபதி அவர்களை கண்டித்துள்ளார், போதையில் அவரை கழுத்தை நெறித்து கொன்றுள்ளனர்.</p><p>அவரது சத்தம் கேட்டு வீட்டில் இருந்தவர்கள் வந்து பார்த்த போது, அவரது மனைவி மகளையும் அதே பாணியில் கொன்றுள்ளனர், பின் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர், தற்போது அவர்களை கைது செய்துள்ளோம் என தெரிவித்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-08-24T10:27:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஒன்ராறியோவில் காலியான கட்டிடத்தில் மனித எச்சங்கள் கண்டுபிடிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/dead-body-found-in-kirkland-lake-building-1787566958"></link>
            <id>https://canadamirror.com/article/dead-body-found-in-kirkland-lake-building-1787566958</id>
            <summary type="text">&amp;nbsp;கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்தில் உள்ள கிரிக்லான்ட் லேக் பகுதியில் காலியாக இருந்த கட்டிடம் ஒன்றில் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்தில் உள்ள கிரிக்லான்ட் லேக் பகுதியில் காலியாக இருந்த கட்டிடம் ஒன்றில் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஒன்ராறியோ மாகாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p>
கடந்த ஆகஸ்ட் 20ஆம் திகதி இரவு சுமார் 10 மணியளவில் அரசாங்க வீதிப் பகுதியில் உள்ள பயன்படுத்தப்படாத கட்டிடம் ஒன்றில் மனித எச்சங்கள் இருப்பதாக தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து பொலிஸார் அங்கு சென்றுள்ளனர்.
</p><p>சம்பவ இடத்துக்கு கிரிக்லான்ட் லேக் தீயணைப்புப் பிரிவினரும் அவசர மருத்துவ சேவைப் பிரிவினரும் சென்றிருந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6abf2280-2e9b-452f-913c-82c766b0a097/26-6a8c1b6feeaf5.webp' /></p><p>
</p><p>ஆரம்பகட்ட விசாரணைகளின் அடிப்படையில், இது தனிப்பட்ட சம்பவமாக இருக்கலாம் எனவும், பொதுமக்களுக்கு பரந்த அளவிலான அச்சுறுத்தல் இருப்பதற்கான எந்த அறிகுறிகளும் இதுவரை கண்டறியப்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>எனினும், விசாரணைகள் தொடர்ந்து நடைபெறுவதால் அந்தப் பகுதியில் பொலிஸாரின் பிரசன்னம் அதிகரிக்கக்கூடும் என உள்ளூர் மக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>கண்டுபிடிக்கப்பட்ட மனித எச்சங்கள் அந்தக் கட்டிடத்தில் எவ்வளவு காலமாக இருந்திருக்கலாம் என்பது குறித்தோ அல்லது இந்த சம்பவத்தில் குற்றச் செயல் இடம்பெற்றிருக்கிறதா என்பது குறித்தோ பொலிஸார் இதுவரை தகவல் வெளியிடவில்லை.
</p><p>இந்த சம்பவம் தொடர்பில் தகவல் அறிந்தவர்கள் 1-888-310-1122 என்ற தொலைபேசி இலக்கத்தில் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-24T10:26:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Bavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழ் மக்களை ஏமாற்றும் அரசாங்கத்தின் போலி உறுதிமொழிகள்! சைக்கிள் தரப்பு குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/t-suresh-national-organizer-tamil-national-people-1787557119"></link>
            <id>https://ibctamil.com/article/t-suresh-national-organizer-tamil-national-people-1787557119</id>
            <summary type="text">ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க வடக்கு, கிழக்கில் உள்ள தமிழ் மக்களுக்கு பல்வேறு நன்மைகளைச் செய்வதாகக் காட்டிக்கொண்டு, அவர்களை தமது பக்கம் ஈர்க்கும் நடவட...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க வடக்கு, கிழக்கில் உள்ள தமிழ் மக்களுக்கு பல்வேறு நன்மைகளைச் செய்வதாகக் காட்டிக்கொண்டு, அவர்களை தமது பக்கம் ஈர்க்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் த.சுரேஸ் குற்றம்சாட்டியுள்ளார்.</p><p>தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மக்கள் சந்திப்பு மட்டக்களப்பு, துறைநீலாவணை பகுதியில் நேற்று (23) மாலை இடம்பெற்றது.</p><p>இதன்போது உரையாற்றிய த.சுரேஸ், கடந்த காலங்களில் தேர்தல் காலங்களில் தமிழ் மக்களிடம் பல்வேறு வாக்குறுதிகள் வழங்கப்பட்ட போதிலும், தேர்தலுக்குப் பின்னர் அவர்களின் பிரச்சினைகள் உரிய முறையில் கவனிக்கப்படுவதில்லை எனத் தெரிவித்தார்.</p><p></p><h2>&nbsp;76 வருடங்களாக இன அடக்குமுறை</h2><p>&nbsp;மேலும் கருத்து தெரிவித்த அவர் பட்டிருப்பு தொகுதி என்றால் அது தமிழ் தொகுதி இங்கு தேசிய கட்சிகளே மாற்றுக்
கட்சிகளே ஆசனங்களை பெறமுடியாது துறைநீலாவணை, கல்லாறு , பட்டிருப்பு தமிழ்
தேசிய உணர்வுடன் தமிழ் என்ற ஒரு திமிருடன் இருக்கின்றோம் என்ற மக்கள் வாழும்
பகுதி.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bf34917b-432b-48fd-981c-08e6d1b79707/26-6a8c17a969e4b.webp' /></p><p>

அதனடிப்படையில் இந்த சந்தர்ப்பங்களை பாவித்து அந்த வாக்குகளை சூறையாடி
தங்களுடைய சுயலாபங்களுக்காக அந்த வாக்குகள் பயன் படுத்தப்படுகின்றது. தேர்தல்
காலங்களில் இங்கு வந்து போரடினோம் மாவீரர்களை இழந்திருக்கிறோம். </p><p>என கூறி
எங்கள் மக்களை நம்ப வைத்து வாக்குகளை பெற்றுக் கொண்டு நாடாளுமன்றம், பிரதேச
சபை பிரதிநிதித்துவத்தை பெற்று அதிகாரங்கள் கைக்கு கிடைத்த பின்னர் அந்த
மக்களின் குறைகளை கேட்டறிவதற்கு யாரும் வருவதில்லை.</p><p>
இந்த மண்ணில் 76 வருடங்களாக ஒரு மிக பெரிய இன அடக்குமுறைக்குள் இருக்கின்றோம்
சிங்கள பேரினவாதம் எங்களை அடக்கி ஒடுக்குகிறது ஒவ்வொரு தலைவர்களும் இந்த
நாட்டை ஆட்சி செய்ய வருகின்றனர் இவர்கள் ஒவ்வொருவரும் உரிமை தருகின்றோம்
பூனையை யானை ஆக்குவோம் என்று சொல்லிக் கொண்டு மாறாக தமிழர்களுடைய இருப்பை
இல்லாமல் செய்வதற்கான புதிய புதிய சட்டங்களை இயற்றி தமிழர்களை அடக்கி ஒடுக்கி
வந்தது தான் வரலாறு.
</p><p>
இதனைத்தான் இந்த புதிய அரசும் செய்கிறது உலகத்துக்கு சுபீட்சமாக இருப்பதாகக்
காட்டிக் கொண்டு தமிழர்களை தொடர்ச்சியாக வடக்கு கிழக்கில் மிக கட்சிதமாக எம்
இனத்தவர்களையே வாங்கி வெற்றி கண்டுள்ள தோற்றப்பாடு தெரிகிறது

உண்மையில் புது புது சட்டங்கள் என்பது எமது மக்கள் ஜனநாயக ரீதியாக
கருத்துக்களை பேச முடியாத அளவிற்கு ஊடகத்துறை மற்றும் மக்களின் கருத்துக்களை
வெளிப்படுத்தும் நிறுவனங்களை அடக்குவதற்காக இந்த சட்டங்கள் கொண்டு வரப்பட்டது
இதன் நோக்கம் இது சிங்கள பௌத்த நாடு என்ற சிங்கள பேரினவாதத்தின் அடிப்படை
சிந்தனையாக இருக்கின்றது.
</p><p>
தமிழர்கள் ஒரு தேசிய இனம் இந்த இனத்தின் தனித்துவம் பேனக்கூடாது என்பதற்காக
புதுபுது திணைக்களங்களை உருவாக்கி தமிழர்களின் காணிகளை அபகரித்து வருகின்றனர்.
</p><p>தமிழ்மக்கள் செறிந்து வாழும் பகுதியில் ஏன் புத்தவிகாரை என்றால் தமிழர்களை
இனழிப்பு செய்து பௌத்த நாடாக்குவது திட்டம் இதன் உள்நோக்கம் என தெரிவித்தார்.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-24T10:23:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[நிலவும் அதிக வெப்பம்: ஏற்படவுள்ள அபாய நிலை - பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/water-capacity-of-74-reservoirs-drops-1787562157"></link>
            <id>https://tamilwin.com/article/water-capacity-of-74-reservoirs-drops-1787562157</id>
            <summary type="text">உலர் வலயத்திலுள்ள நீர்த்தேக்கங்களின் நீர் கொள்ளளவு வேகமாக வீழ்ச்சியடைந்து வருவதாக நீர்ப்பாசன திணைக்களத்தின் நீர்ப்பாசன பணிப்பாளர் பொறியியலாளர் எல். எஸ...</summary>
            <content type="html"><![CDATA[<p>உலர் வலயத்திலுள்ள நீர்த்தேக்கங்களின் நீர் கொள்ளளவு வேகமாக வீழ்ச்சியடைந்து வருவதாக நீர்ப்பாசன திணைக்களத்தின் நீர்ப்பாசன பணிப்பாளர் பொறியியலாளர் எல். எஸ். சூரியபண்டார தெரிவித்துள்ளார்.</p><p>

குறிப்பாக ஹம்பாந்தோட்டை, மட்டக்களப்பு, மொனராகலை, மன்னார் மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களிலுள்ள சில நீர்த்தேக்கங்களின் நீர் கொள்ளளவு தற்போது 30 சதவீதத்தை விடவும் குறைந்த மட்டத்திற்கு வீழ்ச்சியடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><h2>நீர் கொள்ளளவு வீழ்ச்சி</h2><p>இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டின் 74 பிரதான நீர்த்தேக்கங்களின் ஒட்டுமொத்த நீர் கொள்ளளவு 36 சதவீதம் வரை வீழ்ச்சியடைந்துள்ளது. பொதுவாக ஆகஸ்ட் மாதத்தில் வறண்ட வானிலை நிலவியபோதிலும், இந்த ஆண்டில் நிலவும் எல் நினோ காலநிலை மாற்றத்தின் காரணமாக அந்த நிலைமை மேலும் தீவிரமடைந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2b55b5a2-55d6-4dda-869b-60d8d746a420/26-6a8c144c579e9.webp' /></p><p>அத்துடன் நிலவும் அதிக வெப்பம் காரணமாக குளங்கள் மற்றும் நீர்த்தேக்கங்களின் நீர் வேகமாக ஆவியாகி வற்றிப்போதல் இடம்பெறுகிறது. 

இந்த நிலைமையின் கீழ் நீர் தேவை அதிகரிக்கும் அதேவேளையில், நீர்வளம் வேகமாகச் சுருங்கி வருகிறது. </p><p>

இதனால் கடும் வறண்ட வானிலை நிலவும் பகுதிகளில் குடிநீர் தேவை மற்றும் சுற்றாடல் தேவைகளுக்காக நீரை ஒதுக்கீடு செய்ய நேரிடுவதால், விவசாய நடவடிக்கைகளுக்காக நீரை விநியோகிப்பது கடினமாக அமையக்கூடும்.</p><h2>குடிநீர் விநியோகம்</h2><p> </p><p>குடிநீர் விநியோகம் இதுவரை கட்டுப்படுத்தப்படவில்லை என்றபோதிலும், சில பகுதிகளுக்கான விவசாயத்திற்காக விநியோகிக்கப்படும் நீரின் அளவைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c4ccd6a1-c493-4f1f-88c4-73e6b43039c1/26-6a8c144d0dc51.webp' /></p><p>இந்த சவாலான நிலைமையை எதிர்கொள்வதற்கான ஒரே மாற்று வழி, நீரை மிகவும் சிக்கனமாகப் பயன்படுத்துவதும் சுற்றாடலுக்கு இணக்கமாக வாழ்வதும் ஆகும். நிலவும் அதிக வெப்பம் மற்றும் வறண்ட வானிலை காரணமாக காட்டுத்தீ போன்ற நிலைமைகள் ஏற்படக்கூடும் என்பதுடன், அது மிக வேகமாகப் பரவும் அபாயமும் காணப்படுகிறது.</p><p> எனவே இது குறித்து மிகுந்த கவனத்துடன் இருக்குமாறும் அவர் பொது மக்களை எச்சரித்துள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-24T10:22:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ashik</name>
            </author>
            <title type="text"><![CDATA[காணாமலாக்கப்பட்டோர் தினத்திற்கான மாநாட்டிற்கு தமிழ் தேசியத்தை விரும்பும் அனைவரும் கை கொடுக்க வேண்டும் என கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/mannar-association-of-relatives-of-the-disappeared-1787565630"></link>
            <id>https://tamilwin.com/article/mannar-association-of-relatives-of-the-disappeared-1787565630</id>
            <summary type="text">யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் 30ஆம் திகதி இடம்பெற உள்ள சர்வதேச காணாமலாக்கப்பட்டோர் தினத்தையொட்டி முன்னெடுக்கப்படவுள்ள மாநாட்டிற்கு தமிழ்
தேசியத்தை விரும...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் 30ஆம் திகதி இடம்பெற உள்ள சர்வதேச காணாமலாக்கப்பட்டோர் தினத்தையொட்டி முன்னெடுக்கப்படவுள்ள மாநாட்டிற்கு தமிழ்
தேசியத்தை விரும்பும் அனைவரும் கை கொடுக்க வேண்டும் என மன்னார் மாவட்டம்
வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா
தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p>

மன்னாரில் இன்று (24.08.2026) மதியம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில்
கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.&nbsp;</p><h2>போராட்டங்களுக்கான பலன்</h2><p>அவர் மேலும் தெரிவிக்கையில், ஒவ்வொரு வருடமும் ஆவணி மாதம் 30 ஆம் திகதி வலிந்து காணாமலாக்கப்பட்டோர்
தினம் சர்வதேச வலிந்து காணாமலாக்கப்பட்ட தினமாக அனுசரிக்கப்படுகிறது.

இந்த தினத்தன்று நாங்கள் ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு மாவட்டங்களிலும் எங்கள்
துன்பங்கள், துயரங்கள் அனைத்தையும் இந்த அரசாங்கத்துக்கும், எத்தனையோ
அரசாங்கங்கள் மாறி மாறி வந்த போதிலும் நாங்கள் தெரியப்படுத்திக் கொண்டு
இருக்கிறோம்.</p><p>

காணாமல்போன உறவுகளுக்கு என்ன நடந்தது? இந்த உறவுகள் இருக்கிறார்களா? அல்லது
அவர்கள் உயிருடன் இல்லையா? என்று சொல்லியே நாங்கள் கேட்டுக்
கொண்டிருக்கின்றோம்.

ஆனால் எத்தனையோ ஆர்ப்பாட்டங்கள், கவனயீர்ப்பு போராட்டங்கள் நாங்கள் செய்து
பார்த்து எங்களுக்கு ஒரு பிரயோசனமும் கிடைக்கவில்லை.</p><p>அதனால் தான் இந்த சர்வதேச
வலிந்து காணாமலாக்கப்பட்ட தினத்தை முன்னிட்டு நாங்கள் சர்வதேச மாநாடு நடத்த
தீர்மானித்திருக்கிறோம்.

எதிர்வரும் 30ஆம் திகதி காலை முதல் யாழ்ப்பாணத்தில் தந்தை
செல்வா கலையரங்கத்தில் மாநாடு செய்ய ஏற்பாடு செய்துள்ளோம்.

உறவுகளைத் தேடித் திரிந்த அம்மாக்கள், வலி சுமந்த இதயத்தோடு எல்லாம்
மரணித்துப் போனார்கள். அவர்களுடைய புத்தகம் நாங்கள் வெளியிடுவதற்கு
இருக்கிறோம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ca0de07a-1b6b-482a-8259-5e025af59432/26-6a8c1b024efe8.webp' /></p><h2>புத்தகம் வெளியிட தீர்மானம்</h2><p> </p><p>காணாமல்போன சிறுவர்கள், தொடர்பாகவும் அவர்களுடைய புத்தகம்
வெளியிடுவதற்கு இருக்கிறோம்.

காணாமலாக்கப்பட்ட உறவுகள் தொடர்பாக 17 வருடம் நாங்கள் யார் யாருக்கு
மகஜர் கையளித்தோம், காணாமலாக்கப்பட்ட உறவுகள் தொடர்பாக நாங்கள் யார்
யாரிடம் கதைத்தோம், எங்கெங்கே நின்று போராட்டம் செய்தோம், என்னென்ன நன்மைகள்
தீமைகள் எங்களுக்கு கிடைத்தது என்றதையும் முன்னிட்டு அதற்கும் ஒரு புத்தகம்
வெளியிடுவதற்கு நாங்கள் தீர்மானித்திருக்கிறோம்.
</p><p>
வருகிற 30ஆம் திகதி உங்கள் அனைவரையும் நாங்கள் கை கூப்பி அழைக்கின்றோம்.
காணாமல் போன உறவுகள் உங்களுக்கும் ஏதோ ஒரு வகையில் உறவுகள். 17000 உறவுகள் 8 மாவட்டத்திலும் இந்த காணாமல்போய் உள்ளனர். அவர்களின் அம்மாக்களும்
மரணித்துக் கொண்டு இருக்கின்றார்கள். இந்த முறை இந்த மகாநாட்டுக்கு
அனைவரையும் நாங்கள் கை கூப்பி அழைக்கின்றோம். </p><p>ஒவ்வொரு முறையும் நாங்கள் இந்த சர்வதேச தினத்தை முன்னெடுத்து
வருகின்றோம். இந்த முறையும் நாங்கள் இந்த சர்வதேச தினத்தை முன்னிட்டு தான் இந்த
மாநாட்டை செய்கிறோம்.

இந்த முறையாவது இந்த சர்வதேச உலகம் கண்ணை திறந்து எங்களுக்கு வலிசுமந்த
அம்மாக்களுக்கு கண்ணீரோடு இருக்கிற எங்கள் உறவுகளுக்கு ஒரு பதில் தருவீர்கள்
என்ற நம்பிக்கையோடு தான் நாங்கள் இந்த மகாநாட்டை செய்கிறோம் என குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-24T10:21:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[214,000 புலம்பெயர்ந்தோரை பிரித்தானியாவுக்குள் அனுமதித்த திட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/214000-migrants-have-been-let-into-the-uk-1787563838"></link>
            <id>https://news.lankasri.com/article/214000-migrants-have-been-let-into-the-uk-1787563838</id>
            <summary type="text">Thousands of migrants have been let into the UK under a scheme that shut five years ago: ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே முடிவடைந்த ஒரு திட்டத்தின் கீழ், ஆய...</summary>
            <content type="html"><![CDATA[<p>Thousands of migrants have been let into the UK under a scheme that shut five years ago: ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே முடிவடைந்த ஒரு திட்டத்தின் கீழ், ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோர் பிரித்தானியாவுக்குள் அனுமதிக்கப்பட்டுவருவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.</p><p>


பிரெக்சிட்டுக்குப் பிறகு, ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளைச் சேர்ந்தவர்களை பிரித்தானியாவில் வாழ அனுமதிப்பதற்காக, The EU Settlement Scheme என்னும் ஒரு திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.</p><h3>

ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோரை அனுமதித்த திட்டம்
</h3><p>
அந்த திட்டம், 2021ஆம் ஆண்டு ஜூன் மாதம் 30ஆம் திகதியுடன் முடிவடைந்துவிட்டது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d3e1d7ac-ad51-4659-9272-a0c0c627fd51/26-6a8c0f405a3a7.webp' /></p><p>
ஆனால், அதன்பிறகும், அத்திட்டத்தின் கீழ் ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோர் பிரித்தானியாவுக்குள் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.&nbsp;</p><p></p><p>
அதாவது, கால தாமதமாக வந்த விண்ணப்பங்கள் என்னும் பெயரில், 160,000 பேரின் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட, அவர்களுடைய குடும்ப உறுப்பினர்கள் 54,000 பேரை சேர்த்து, முடிவடைந்த The EU Settlement Scheme திட்டத்தின் கீழ், 214,000 பேர் பிரித்தானியாவுக்குள் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.</p><p>

இந்நிலையில், அந்த திட்டத்தை தவறாக பயன்படுத்தி ஏராளமானோர் பிரித்தானியாவுக்கு வந்துள்ளதாகவும், உள்துறை அலுவலகம் தூங்கிக்கொண்டிருப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளார் கன்சர்வேட்டிவ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான Neil O'Brien என்பவர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fbeb4900-ac78-44e9-aa70-215474c55912/26-6a8c0f3fa8f2b.webp' /></p><p>
ஐந்து ஆண்டுகளுக்கு முன் முடிவடைந்த ஒரு திட்டத்தின் கீழ், ஐரோப்பிய ஒன்றியத்தவர்களின் கணவன் அல்லது மனைவி என்னும் பெயரில் பிரித்தானியா வர விண்ணப்பிப்பவர்களின் விண்ணப்பங்களை ஏன் உள்துறை அலுவலகம் இன்னமும் ஏற்கிறது என்பதற்கு அமைச்சர்கள் பதிலளித்தாகவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார் அவர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-24T10:15:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[2026: புதனின் இரட்டை பெயர்ச்சி.. செப்டம்பரில் இந்த ராசிகளுக்கு பொற்காலம் ஆரம்பம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/2026-sept-7-virgo-transit-astrology-prediction-1787562589"></link>
            <id>https://manithan.com/article/2026-sept-7-virgo-transit-astrology-prediction-1787562589</id>
            <summary type="text">செப்டம்பர் மாதம் புதன் பகவான் இரண்டு முறை ராசியை மாற்றுகிறார். இதனால் இந்த காலகட்டம் இவர்களுக்கு தொழில் மற்றும் குடும்ப வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>செப்டம்பர் மாதம் புதன் பகவான் இரண்டு முறை ராசியை மாற்றுகிறார். இதனால் இந்த காலகட்டம் இவர்களுக்கு தொழில் மற்றும் குடும்ப வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் உண்டு.</p><p> அதாவது, கிரகங்களின் இளவரசர் என்று போற்றக்கூடிய புதன் பகவான் ஒருவருக்கு அறிவு, ஞானம், கணக்கு, பேச்சு திறன் ஆகியவற்றை வழங்கக் கூடியவர். </p><p>
அந்த நிலையில், தற்பொழுது புதன் பகவான் சிம்ம ராசியில் இருக்கிறார். இவர் செப்டம்பர் 7ஆம் தேதி புதன் கன்னி ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார்.</p><p> இந்த ராசியில் சுமார் 20 நாட்கள் அவர் இருக்கிறார். 
பிறகு செப்டம்பர் 26 ஆம் தேதி துலாம் ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். இந்த பெயர்ச்சி ஒரு சில ராசிகளுக்கு மிகப்பெரிய அளவில் நன்மைகள் கொடுக்கப்போகிறது. அவர்கள் யார் என்று பார்ப்போம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a205166c-6c91-4ab7-a4d5-28a23ef54181/26-6a8c0a5f6218b.webp' /></p><p><span style="color: inherit; font-size: 1.5rem;">மேஷம்:</span><br></p><p>
 மேஷ ராசியினருக்கு செப்டம்பர் மாதத்தில் நடக்கக்கூடிய இடமாற்றம் இவர்களுக்கு மிகப்பெரிய அளவில் சாதகமான பலன்களை கொண்டு வரப் போகிறது. </p><p>தொழில் மற்றும் பணம் சார்ந்த விஷயங்களில் இவர்கள் தெளிவாக முடிவெடுக்கக்கூடிய தன்மை உருவாகும். தன்னம்பிக்கை அதிகரித்து மனதில் நேர்மறை ஆற்றல் உயரும்.</p><h3> 


துலாம்:</h3><p>
 துலாம் ராசிக்கு இந்த புதன் பெயர்ச்சியானது இவர்களுக்கு பல்வேறு வகையில் நன்மையை கொடுக்கப்போகிறது. உங்களுடைய பேச்சுத் திறன் மேம்படும். </p><p>எளிதாக ஒவ்வொரு விஷயத்தையும் கையாள்வதற்கு கற்றுக் கொள்வீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். வீடு வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும்.</p><p><span style="color: inherit; font-size: 1.5rem;">மகரம்:</span><br></p><p>
 மகர ராசிக்காரர்களுக்கு செப்டம்பர் மாதத்தில் ஏற்படும் புதன் பெயர்ச்சி இவர்களுக்கு வேலையில் முன்னேற்றம் வருமானம் தொடர்பாக ஒரு நல்ல மாற்றம் வரப்போகிறது. எதிர்பார்த்து காத்திருந்த சாதகமான பலன்களை பெற போகிறார்கள். </p><p>வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் வந்து சேரும். பதிவு உயர்வு, சம்பள உயர்வு போன்ற அற்புதமான ஏற்றங்களை இந்த காலகட்டங்களில் பெறப்போகிறீர்கள்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-24T10:14:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் விமான விபத்து இருவர் காயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/small-seaplane-crashes-in-woods-near-st-johns-1787566407"></link>
            <id>https://canadamirror.com/article/small-seaplane-crashes-in-woods-near-st-johns-1787566407</id>
            <summary type="text">&amp;nbsp;கனடாவின் நியூஃபவுண்ட்லாந்து மற்றும் லாப்ரடோரின் தலைநகரான செயின்ட் ஜான்ஸ் நகருக்கு அருகே, நீரில் தரையிறங்க முயன்ற சிறிய விமானம் ஒன்று காட்டுப் பக...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கனடாவின் நியூஃபவுண்ட்லாந்து மற்றும் லாப்ரடோரின் தலைநகரான செயின்ட் ஜான்ஸ் நகருக்கு அருகே, நீரில் தரையிறங்க முயன்ற சிறிய விமானம் ஒன்று காட்டுப் பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது.
</p><p>மேர்லின் ஜீ.ரீ. ரகத்தைச் சேர்ந்த அந்த விமானம், செயின்ட் ஜான்ஸ் நகரிலிருந்து சுமார் 15 கிலோமீட்டர் தென்மேற்கில் அமைந்துள்ள பெடிஸ் பொன்ட் ஏரியில் தரையிறங்க முயன்றபோது திடீரென மின்சக்தியை இழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
</p><p>இதையடுத்து, சனிக்கிழமை இரவு சுமார் 7 மணியளவில் விமானம் ஏரிக்கு அருகிலுள்ள காட்டுப் பகுதியில் விழுந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/00bb59e4-ad5c-4b88-a549-902962ef24b4/26-6a8c1948e6834.webp' /></p><p>
</p><p>விமானத்தில் பயணித்த இரு ஆண்களும் மீட்புப் படையினர் சம்பவ இடத்தை அடையும் முன்னரே விமானத்தின் இடிபாடுகளில் இருந்து வெளியேறியிருந்தனர்.</p><p>
அவர்களில் ஒருவர் காட்டுப் பகுதியிலிருந்து நடந்து பிரதான வீதியை அடைந்த நிலையில், அங்கு ஆம்புலன்ஸ் தயார் நிலையில் இருந்தது. </p><p>மற்றொருவரை மீட்க ஹெலிகொப்டரின் உதவி தேவைப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.</p><p>
இருவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும், அவர்களுக்கு உயிருக்கு ஆபத்தான காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
கனடாவின் போக்குவரத்து பாதுகாப்புச் சபைவிசாரணைகளை முன்னெடுத்து வருகிறது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-24T10:13:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தியர்களை கரம்பிடிக்க பாகிஸ்தானின் இருந்து வந்த 150 மணப்பெண்கள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/150-brides-arrived-from-pakistan-to-marry-indians-1787566553"></link>
            <id>https://jvpnews.com/article/150-brides-arrived-from-pakistan-to-marry-indians-1787566553</id>
            <summary type="text">&amp;nbsp; இந்திய ஆண்களுடன் திருமணம் நிச்சயயிக்கப்பட்ட பாகிஸ்தானை சேர்ந்த 150 இற்கும் மேற்பட்ட சிந்தி சமூகத்தை சேர்ந்த மணப்பெண்கள் இந்தியா வந்து சேர்ந்துள...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; இந்திய ஆண்களுடன் திருமணம் நிச்சயயிக்கப்பட்ட பாகிஸ்தானை சேர்ந்த 150 இற்கும் மேற்பட்ட சிந்தி சமூகத்தை சேர்ந்த மணப்பெண்கள் இந்தியா வந்து சேர்ந்துள்ளதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது.
</p><p>
இது குறித்து இந்திய ஊடகங்க்கள் தெரிவித்துள்ளதாவது, 

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தை சேர்ந்த சிந்தி சமூகக் குடும்பங்கள், இந்தியாவில் உள்ள தங்களது உறவினர்கள் அல்லது சமூகத்தினருக்கு தங்கள் மகள்களைத் திருமணம் செய்து கொடுப்பது வழக்கமான ஒன்று.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3049c940-6cc3-4f26-a80f-725444aa0859/26-6a8c19db09f36.webp' /></p><h2>நீண்ட நாள் காத்திருப்பு&nbsp; முடிவுக்கு வந்துள்ளது</h2><p> </p><p>

கடந்த 2025 ஏப்ரல் 22 ஆம் திகதி பஹல்காமில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் 26 பேர் பலியானதை அடுத்து, இந்தியப் படைகள் 'ஆபரேஷன் சிந்தூர்' மூலம் பதிலடித் தாக்குதல் நடத்தின.</p><p></p><p> 

</p><p>தொடர்ச்சியாக, பாகிஸ்தானுடனான தூதரக உறவுகளை நிறுத்திய இந்தியா, பஞ்சாபில் உள்ள வாகா-அட்டாரி எல்லைப் பாதையை மூடியதுடன், பாகிஸ்தானியர்களுக்கான விசாக்களையும் நிறுத்தி வைத்தது. </p><p>

இதனால், நாக்பூர், ராய்ப்பூர், ஜோத்பூர், புனே உள்ளிட்ட இந்திய நகரங்களில் உள்ள ஆண்களுடன் நிச்சயிக்கப்பட்ட 150 இற்கும் மேற்பட்ட பாகிஸ்தான் பெண்களின் திருமணங்கள் முடங்கின.</p><p></p><p>மணப்பெண்களின் எதிர்காலம் கேள்விக் குறியான நிலையில், சிந்தி சமூக அமைப்புகள் பாகிஸ்தானின் கோட்கியில் உள்ள 'ஷடானி தர்பார்' சிந்தி புனித அமைப்பின் ஆன்மீகத் தலைவர் சாந்த் யுதிஷ்டிர்லால் ஷடானியை அணுகின.</p><p>

இந்தியாவில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட பாகிஸ்தான் பெண்களின் விவரப் பட்டியல் தயார் செய்யப்பட்டது. இந்தப் பட்டியலை இந்திய உள்துறை அமைச்சகத்திடம் வழங்கி, விசா கோரிக்கை விடுக்கப்பட்டது.</p><p> 

கோரிக்கையை ஏற்ற மத்திய அரசு, "இந்தியாவிற்குள் நுழைபவர்கள் தரைவழியாக வராமல், கட்டாயம் வான்வழியாக மட்டுமே பயணிக்க வேண்டும்" என்ற நிபந்தனையுடன் விசா வழங்க ஒப்புக்கொண்டது.</p><p></p><p> 

ஆனால் இந்தியா - பாகிஸ்தான் இடையே வான் சேவைகளும் முடங்கியுள்ள நிலையில் அவர்கள் நேரடியாக இந்தியா வர முடியாத சூழல் எழுந்தது.</p><p> 

எனவே மணப்பெண்களும் அவர்களது குடும்பத்தினரும் துபாய், மஸ்கட், இலங்கை மற்றும் பங்களாதேஷ் ஆகிய மூன்றாம் நாடுகளின் வழியாக விமானப் பயணம் மேற்கொண்டு இந்தியாவை வந்தடைந்துள்ளனர். </p><p>

நாக்பூரைச் சேர்ந்த சிந்தி சமூகத் தலைவர் ராஜேஷ் ஜாம்பியா தெரிவிக்கையில், 

"நீண்ட நாட்களாக நீடித்த காத்திருப்பு இறுதியாக முடிவுக்கு வந்துள்ளது. 

கடந்த ஏப்ரல் மாதம் முதல் இதுவரை 150 மணப்பெண்கள் இந்தியா வந்து சேர்ந்துள்ளனர்.</p><p> நாக்பூரில் மட்டும் 15 திருமணங்கள் நடந்துள்ளன" எனத் தெரிவித்துள்ளார். 

மேலும், பாகிஸ்தானில் இதுபோன்று இன்னும் சுமார் 300 பெண்கள் காத்திருப்பதாகவும், அவர்களுக்கும் விசா வழங்கி உதவுமாறு இந்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content>
            <updated>2026-08-24T10:13:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பேருந்தில் தொலைந்த தங்கச் சங்கிலி...! சாரதி - நடத்துநரின் நேர்மையான செயல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sltb-staff-return-lost-gold-chain-worth-rs-1m-1787563052"></link>
            <id>https://ibctamil.com/article/sltb-staff-return-lost-gold-chain-worth-rs-1m-1787563052</id>
            <summary type="text">இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தில் பெண் பயணி ஒருவர் தொலைத்த 10 லட்சம் ரூபா பெறுமதியான தங்கச்
சங்கிலி, மீண்டும் அவரிடமே ஒப்படைக்கப்பட்டுள...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தில் பெண் பயணி ஒருவர் தொலைத்த 10 லட்சம் ரூபா பெறுமதியான தங்கச்
சங்கிலி, மீண்டும் அவரிடமே ஒப்படைக்கப்பட்டுள்ளது.</p><p>இந்தச் சம்பவம் நேற்றைய தினம் (23-08-2026) இடம்பெற்றுள்ளது.&nbsp;&nbsp;</p><p>பேருந்தின் நடத்துநரும் மற்றும் சாரதியுமே இவ்வாறு நகையை அந்த பெண்ணிடம் ஒப்படைத்துள்ளனர்.</p><p></p><h2>மரணச் சடங்கு</h2><p>குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், மேற்படி தினத்தன்று பருத்தித்துறை சாலையில் இருந்து வட்டுக்கோட்டை வரை
செல்லும் 767 வழித்தட (4241 இலக்க) இ.போ.ச பேருந்தின் மதிய சேவையின் போது பயணித்த
பெண் ஒருவர் வட்டுக்கோட்டையில் மரணச் சடங்கொன்றுக்குச் சென்றுவிட்டு இன்னொரு உறவினர்
வீட்டுக்குச் சென்றுள்ளார். </p><p>அங்கு சென்ற பின்னரே அவரது கழுத்தில் இருந்த
இரண்டரைப் பவுண் தங்கச்சங்கிலி இல்லாததை அவர் உணர்ந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/063c36dc-2b72-47ce-ad91-79cf72a44da3/26-6a8c189bab6df.webp' /></p><p>இதையடுத்து அவர் வழிநெடுகிலும் சென்று பார்த்தபோதும் சங்கிலியைக்
கண்டுபிடிக்கமுடியவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.</p><p>இதன்பின்பு, இனிச் சங்கிலி கிடைக்காது என்ற கவலையோடு மீண்டும்
வட்டுக்கோட்டையில் இருந்து பருத்தித்தித்துறை நோக்கிச் செல்ல அதே அதே பேருந்தில் ஏறியுள்ளார்.</p><p></p><h2>தங்கச்சங்கிலி&nbsp;</h2><p>அப்போது அவர் தனது தங்கச்சங்கிலி காணாமல் போன விடயத்தை பேருந்தின் நடத்துநருக்கும் மற்றும் சாரதிக்கும் தெரியப்படுத்தியுள்ளார்.</p><p>இதன்போது அவர்கள், நீங்கள்
அமர்ந்திருந்த ஆசனத்தில் அந்தச் சங்கிலி இருந்தது எனவும் அதைக் கண்டெடுத்து பத்திரமா
வைத்திருக்கிறோம் எனவும் கூறி அதனை ஒப்படைத்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3077f9df-f749-4a7d-a384-b86edbe5a084/26-6a8c189ad55df.webp' /></p><p>பின்னர் பருத்தித்துறை டிப்போவுக்குச் சென்ற பின்னர் பேருந்தை சுத்தம் செய்தபோது,
அந்தச் சங்கிலியின் எஸ்வடிவிலான இணைப்புப் பகுதியையும் கண்டெடுத்து அதனையும்
உரிய பெண்ணிடம் சேர்ப்பித்துள்ளனர்.</p><p>
இவ்வாறு 10 லட்சம் ரூபா பெறுமதியான நகையினைக் கண்டெடுத்து
உரியவர்களிடம் சேர்ப்பித்த பருத்தித்துறை டிப்போவைச் சேர்ந்த சாரதியான மனோகரன்
சயந்தன் மற்றும் நடந்துநரான இராசநாயகம் பிறின்சிராஜா ஆகியோரின் நேர்மைப்பண்பை பேருந்தில இருந்தவர்களும் மற்றும் பொதுமக்களும் வெகுவாகப் பாராட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p>]]></content>
            <updated>2026-08-24T10:13:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாடுகளில் உலங்கு வானூர்திகளை வைத்திருந்த குற்றவாளிகள் : பாதுகாப்பு பிரதி அமைச்சர் பகிரங்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/recent-shootings-are-acts-of-witness-suppression-1787562778"></link>
            <id>https://ibctamil.com/article/recent-shootings-are-acts-of-witness-suppression-1787562778</id>
            <summary type="text">வெளிநாடுகளில் ஆடம்பர மாளிகைகளில் வாழ்ந்துகொண்டு, வாகனங்கள் மற்றும் உலங்கு வானூர்திகளை வைத்திருந்த சிவப்பு அறிவித்தல் பிறப்பிக்கப்பட்ட 58 குற்றவாளிகள் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>வெளிநாடுகளில் ஆடம்பர மாளிகைகளில் வாழ்ந்துகொண்டு, வாகனங்கள் மற்றும் உலங்கு வானூர்திகளை வைத்திருந்த சிவப்பு அறிவித்தல் பிறப்பிக்கப்பட்ட 58 குற்றவாளிகள் கடந்த காலத்தில் இலங்கைக்கு அழைத்துவரப்பட்டதாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.</p><p>
தேசிய மக்கள் சக்தியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஓய்வுபெற்ற முப்படை உறுப்பினர்களுடனான சந்திப்பு களுத்துறையில் நேற்று (23) நடைபெற்ற போது அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
</p><p>
அங்கு மேலும் உரையாற்றிய அவர், "நாட்டில் அண்மைய நாட்களில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் அனைத்தும், சாட்சிகளை இல்லாதொழிக்கும் செயற்பாடுகள் என்றே கருதத் தோன்றுகின்றது.</p><p></p><h2>இலங்கைக்கு அழைத்துவரப்பட்டனர்</h2><p>சிவப்பு அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டிருந்த 58 பெரும் குற்றவாளிகள் கடந்த காலத்தில் வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு அழைத்துவரப்பட்டனர். அவர்கள் அந்த நாடுகளில் ஆடம்பர மாளிகைகளில் வாழ்ந்துகொண்டு, வாகனங்கள் மற்றும் உலங்கு வானூர்திகளை வைத்திருந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/94cebc62-b8b1-4f4d-8746-03f756d615b0/26-6a8c122acbd1f.webp' /></p><p>
அந்தக் காலகட்டத்தில் அரசியல்வாதிகள் அங்கு சென்று அவர்களுடன் அந்தச் சுகபோகங்களைப் பகிர்ந்துகொண்டே இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுத்து வந்தனர்.
</p><p>
இவற்றை எப்போதாவது தொலைக்காட்சிகளில் கண்டதுண்டா, அல்லது இது குறித்து யாராவது ஊடகவியலாளர் சந்திப்புகளை நடத்தினார்களா? நாம் முன்னெடுத்த நடவடிக்கைகளின் வெற்றி காரணமாகவே தற்போது எதிர்க்கட்சியினர் இவ்வாறு நடந்துகொள்கின்றனர்.</p><p></p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">பொருளாதார ரீதியாக முன்னேற்றம்</span></p><p>

நமது நாட்டில் சட்ட ஒழுங்கு சீர்குலைந்திருந்தது. ஏதோவொரு அரசியல் குழுவை அல்ல, பல குழுக்களையே மக்கள் விரட்டியடித்தனர். அத்துடன் அவர்கள் மிகவும் கொடூரமான திட்டமிட்ட குற்றக் கும்பல் என்று கூறினால் அது மிகையாகாது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/93fa4a7d-4b0d-44bd-bc36-4ddcdb191be2/26-6a8c13126905e.webp' /></p><p>
</p><p>
பாதிக்கப்பட்டு வீழ்ச்சியடைந்த நாடொன்றைப் பொறுப்பேற்று, நிதி ஒழுக்கத்துடன் நாம் முன்னோக்கிச் செல்கிறோம். அனைத்துத் துறைகளிலும் நிதியைச் சரியாகத் திரட்டி, பொருளாதார நிலையை உயர்த்தியுள்ளோம்.</p><p>

கடந்த 15 மாதங்களுக்குள் நாம் பொருளாதார ரீதியாகப் பாரிய முன்னேற்றத்தைக் கண்டுள்ளதுடன், உயர் பொருளாதார வளர்ச்சியடையும் நாடுகளின் பட்டியலிலும் இணைந்துள்ளோம்" எனத் தெரிவித்தார்.</p><p></p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-24T10:09:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[வன்னிக் காடுகளுக்குள் இருந்த தலைவர் பிரபாகரன்! அன்ரன் பாலசிங்கம் பீரிஸிடம் பகிர்ந்த தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/secret-shared-anton-balasingham-about-vprabhakaran-1787562574"></link>
            <id>https://ibctamil.com/article/secret-shared-anton-balasingham-about-vprabhakaran-1787562574</id>
            <summary type="text">தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் ஏன் சமாதானப் பேச்சுவார்த்தைகளின் போது உடன்பாடுகளுக்கு வரவில்லை என்பது குறித்த முக்கியத...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் ஏன் சமாதானப் பேச்சுவார்த்தைகளின் போது உடன்பாடுகளுக்கு வரவில்லை என்பது குறித்த முக்கியத் தகவல்களை முன்னாள் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி. எல். பீரிஸ் நேர்காணல் ஒன்றில் பகிர்ந்துள்ளார்.
</p><p>
மேலும் 'ஈழம்' கொள்கையிலிருந்து தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் பின்வாங்காத காரணத்தையும் அவர் கூறியுள்ளார்.</p><p>

இலங்கை அரசுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்கும் இடையிலான சமாதானப் பேச்சுவார்த்தையில் அரசாங்கத்தின் தலைமைப் பேச்சுவார்த்தையாளராகப் பங்கேற்ற தனது அனுபவங்கள் குறித்து கருத்து வெளியிட்ட ஜி. எல். பீரிஸ்,</p><p></p><h2>தனியாகப் பேசும் வாய்ப்பு</h2><p>
</p><p>
''பேச்சுவார்த்தையின் போது, தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கத்துடன் தனியாகப் பேசும் வாய்ப்பு கிடைத்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1c235e16-5c11-4fb4-9688-b4fe6ab6bd04/26-6a8c0f68c784b.webp' /></p><p> 

அப்போது, ''இந்தச் சூழல் எங்குப் போய் முடியப்போகிறது என்று நமக்குத் தெரிகிறது. ஒரு வாய்ப்பு இருக்கும்போதே ஏன் இதனைப் பயன்படுத்திக் கொள்ளக் கூடாது'' என்பதை அன்ரன் பாலசிங்கத்திடம் எடுத்துறைத்தேன்.</p><p>இதற்குப் பதிலளித்த அன்ரன் பாலசிங்கம், "எனது தலைவரை சமாதான பேச்சுவார்த்தைக்கு இட்டுச்செல்ல நான் என்னால் முடிந்த அனைத்தையும் செய்துவிட்டேன்" என கூறினார்.
</p><p>
அதற்கு மேலதிகமாக வேலுப்பிள்ளை பிரபாகரன் மற்றும் விடுதலைப்புலிகள் அமைப்பின் நிலைப்பாடுகள் குறித்து அன்ரன் பாலசிங்கம் தெளிவுபடுத்தினார்.</p><p></p><h2>தனிநாட்டுக் கொள்கை</h2><p>
</p><p>
இந்த காலத்தில் பிரபாகரன் வன்னிக் காடுகளுக்குள் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தார்.

பிரபாகரனைச் சுற்றியிருந்தவர்கள், அரசாங்கத்தால் ஒரு சில சிறிய போர்களில் மட்டுமே வெல்ல முடியுமே தவிர, ஒட்டுமொத்தப் போரையும் வெல்ல முடியாது என்று கூறி அவரை நம்ப வைத்த்துள்ளனர் என கூறவேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/11251f41-9dd1-4b0b-87d2-3d9464576810/26-6a8c0f697c9e4.webp' /></p><p>

தான் இராணுவ ரீதியாக எவராலும் வெல்ல முடியாதவர் என்ற நம்பிக்கையில் பிரபாகரன் இருந்துள்ளார்.</p><p> ஈழம் என்ற தனிநாட்டுக் கொள்கைக்குக் குறைவாகக் கிடைக்கும் எந்தவொரு தீர்வையும் அல்லது சமரசத்தையும் ஏற்க அவர் தயாராக இருக்கவில்லை" என தெரிவித்துள்ளார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-24T10:07:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Bavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[அநுர ஆட்சியில் தொடரும் போலி வாக்குறுதிகள் - ஏமாந்து விட்டார்களா தமிழ் மக்கள்..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/false-promises-continue-under-anura-s-rule-1787565468"></link>
            <id>https://tamilwin.com/article/false-promises-continue-under-anura-s-rule-1787565468</id>
            <summary type="text">ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வடக்கு கிழக்கில் இருக்கின்ற தமிழர்களுக்கு ஏதே நல்லது செய்வதாக காட்டிக் கொண்டு தன் பக்கம் ஈர்க்கும் செயல்பாட்டை செய்து
வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வடக்கு கிழக்கில் இருக்கின்ற தமிழர்களுக்கு ஏதே நல்லது செய்வதாக காட்டிக் கொண்டு தன் பக்கம் ஈர்க்கும் செயல்பாட்டை செய்து
வருகின்றார்.
</p><p>
எனவே தமிழ் மக்கள் ஏமாந்து விடக்கூடாது என்பதுடன் வரப்போகும்
ஒற்றையாட்சி அரசியல் அமைப்புக்கு தொடர்பான பொதுசன வாக்கெடுப்புக்கு எதிராக
அனைத்து அரசியல் தலைவர்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தமிழ் தேசிய
மக்கள் முன்னணி தேசிய அமைப்பாளர் த.சுரேஸ் தெரிவித்தார்.
</p><p>
தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியின் மக்கள் சந்திப்பு மட்டக்களப்பு
துறைநீலாவணை பிரதேசத்தில் நேற்று(23.08.2026) மாலை இடம்பெற்றது.

இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். </p><h2>

போலி வாக்குறுதிகள்</h2><p>
அவர் மேலும் தெரிவிக்கையில்,</p><p> 

“பட்டிருப்பு தொகுதி என்றால் அது ஒரு தமிழ் தொகுதி. இங்கு தேசிய கட்சிகளோ அல்லது மாற்றுக் கட்சிகளோ ஆசனங்களைப் பெற முடியாது. துறைநீலாவணை, களுவாஞ்சிக்குடி, பட்டிருப்பு போன்ற பகுதிகளில் தமிழ் தேசிய உணர்வுடன், தமிழர்கள் என்ற ஒரு திமிருடன் இருக்கின்றோம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/87f0c0db-19f0-4bc7-bad4-3c61b5247f12/26-6a8c163eaa04f.webp' /></p><p>
</p><p>
அந்த உணர்வையும், சந்தர்ப்பங்களையும் பயன்படுத்தி, எங்களுடைய வாக்குகளைச் சூறையாடி, தங்களுடைய சுயலாபங்களுக்காக அந்த வாக்குகள் பயன்படுத்தப்படுகின்றன.
</p><p>
தேர்தல் காலங்களில் இங்கு வந்து போராடினோம், மாவீரர்களை இழந்திருக்கிறோம் என்று கூறி எங்கள் மக்களை நம்ப வைத்து வாக்குகளைப் பெற்றுக்கொள்கின்றனர். </p><p>பின்னர் நாடாளுமன்றம் மற்றும் பிரதேச சபைகளில் பிரதிநிதித்துவத்தைப் பெற்று அதிகாரம் கைக்கு கிடைத்ததும், அந்த மக்களின் குறைகளைக் கேட்டறிவதற்கு யாரும் வருவதில்லை.</p><h2>

76 வருடங்களாக தொடரும் அடக்குமுறை</h2><p>
இதுதான் இன்று வடக்கு, கிழக்கில் காணப்படும் ஒரு துர்ப்பாக்கியமான நிலை. தமிழர்கள் நம்பி வாக்களித்த, தமிழர்களுக்குப் பொறுப்பாக இருக்க வேண்டிய இந்த மண்ணின் தரப்புகள், தமிழர்களுடைய விவகாரங்களைக் கையாளாமல், தங்களுடைய சொந்த நலனுக்காகவும் அரசாங்கத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காகவும் தங்களை முழுமையாக அர்ப்பணித்துக்கொள்கின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e227e1b0-84bf-431d-a81d-f99cb698d885/26-6a8c163f78f77.webp' /></p><p>

எமது மக்களின் தியாகங்களை நிறைவேற்றுவதற்கும், அவர்களின் உரிமைகளுக்காக குரல் கொடுப்பதற்கும் கிழக்கில் எந்தவொரு தரப்பும் இல்லை.
</p><p>
இந்த மண்ணில் கடந்த 76 வருடங்களாக மிகப்பெரிய இன அடக்குமுறைக்குள் வாழ்ந்து வருகின்றோம். சிங்களப் பேரினவாதம் எங்களை அடக்கி ஒடுக்கி வருகின்றது” என்றார்.&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-24T10:01:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Tony</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரியோ ராஜ் நடித்த ராம் அண்ட் லீலா படத்தின் 3 நாள் வசூல் விவரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/rio-raj-ram-in-leela-box-office-collection-1787564632"></link>
            <id>https://cineulagam.com/article/rio-raj-ram-in-leela-box-office-collection-1787564632</id>
            <summary type="text">Ram and leela&amp;nbsp;ரியோ ராஜ் சின்னத்திரையில் இருந்து சிவகார்த்திகேயன் போல் வெள்ளிதிரை வந்து ஹீரோ ஆனவர். இவர் நடிப்பில் ஜோ, ஆண்பாவம் பொல்லாதது ஆகிய படங...</summary>
            <content type="html"><![CDATA[<h2>Ram and leela</h2><p>&nbsp;ரியோ ராஜ் சின்னத்திரையில் இருந்து சிவகார்த்திகேயன் போல் வெள்ளிதிரை வந்து ஹீரோ ஆனவர். இவர் நடிப்பில் ஜோ, ஆண்பாவம் பொல்லாதது ஆகிய படங்கள் செம ஹிட் அடித்தது.</p><p> இந்த ஹிட்டை தொடர்ந்து கடந்த வாரம் ராம் அண்ட் லீலா படம் திரைக்கு வந்தது. இந்த படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. </p><p>இதை தொடர்ந்து வசூலில் எதிர்பார்த்த அளவுக்கு இப்படம் இல்லை என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றது. ஆம் ராம் அண்ட் லீலா 3 நாட்களில் ரூ 3.5 கோடிகள் வரை தான் வசூல் செய்திருக்கும் என கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ae1ea945-d027-4583-b254-26f62f1c9100/26-6a8c125b7d68d.webp' /></p><p> இதனால் இந்த படம் கண்டிப்பாக வரும் நாட்களில் நல்ல வசூலை தந்தால் மட்டுமே ஹிட் ஸ்டேட்டஸ் செல்ல முடியும், பொறுத்திருத்து பார்ப்போம் வார நாட்களில் இப்படம் என்ன வசூல் செய்கிறது என்பதை, ராம் அண்ட் லீலா சமீபத்தில் வந்த டபுள் ஆக்குபென்சி போலவே உள்ளதால் அதுவே இப்படத்திற்கு ஒரு பின்னடைவு என்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-08-24T10:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[மலபார் சேலையில் நனைந்தபடி போஸ்!! நடிகை ரஜிஷா விஜயன் கிளிக்ஸ்...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/rajisha-vijayan-onam-special-photoshoot-post-1787563507"></link>
            <id>https://viduppu.com/article/rajisha-vijayan-onam-special-photoshoot-post-1787563507</id>
            <summary type="text">ரஜிஷா விஜயன்மலையாளத்தில் அறிமுகமாகி பின் தமிழில் தனுஷின் கர்ணன் படத்தின் மூலம் எண்ட்ரி கொடுத்தவர் நடிகை ரஜிஷா விஜயன்.

இப்படத்தை தொடர்ந்து கார்த்திய...</summary>
            <content type="html"><![CDATA[<h2>ரஜிஷா விஜயன்</h2><p>மலையாளத்தில் அறிமுகமாகி பின் தமிழில் தனுஷின் கர்ணன் படத்தின் மூலம் எண்ட்ரி கொடுத்தவர் நடிகை ரஜிஷா விஜயன்.

இப்படத்தை தொடர்ந்து கார்த்தியுடன் சர்தார் படத்தில் நடித்திருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7d8bf41f-f390-4daf-843e-f4dda5caaeeb/26-6a8c0dff7a9b4.webp' /></p><p> பைசன் படத்தில் த்ருவ் விக்ரமின் அக்கா ரோலில் நடித்து நல்ல வரவேற்பை பெற்றார்.

சர்தார் 2 மற்றும் ஒருசில படங்களில் நடித்து வருகிறார். </p><p>ரசிகர்களுக்கு ஷாக் கொடுக்கும் வகையில் ரஜிஷா விஜயன், ஓணம் ஸ்பெஷலாக மலபார் சேலையணிந்து நனைந்தபடி எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-08-24T10:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[பொரளையில் பரபரப்பை ஏற்படுத்திய கைக்குண்டு - சிசிடிவியில் சிக்கிய சந்தேகநபர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/four-suspects-in-borella-grenade-incident-1787564505"></link>
            <id>https://tamilwin.com/article/four-suspects-in-borella-grenade-incident-1787564505</id>
            <summary type="text">பொரளை, லெஸ்லி ரணகல மாவத்தையில் உள்ள 141 வத்தை பகுதியில் அமைந்துள்ள வீடொன்றின் மீது கைக்குண்டு தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் நால்வர் கைது செய...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொரளை, லெஸ்லி ரணகல மாவத்தையில் உள்ள 141 வத்தை பகுதியில் அமைந்துள்ள வீடொன்றின் மீது கைக்குண்டு தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>டுபாயில் கைது செய்யப்பட்ட ‘வனாத்தே சத்து’ எனப்படும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழு உறுப்பினரின் நெருங்கிய சகா தட்சிண கப்புகே என்ற ராணாவிற்கு சொந்தமான வீட்டின் மீதே (23) நேற்று தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. </p><p>எனினும், வீசப்பட்ட கைக்குண்டு வெடிக்கவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><h2>மோட்டார் சைக்கிள்&nbsp;கண்டெடுப்பு</h2><p>சந்தேகநபர் மோட்டார் சைசைக்கிளில் பிரவேசித்து கைக்குண்டை வீசிச் செல்லும் காட்சி அருகிலிருந்த CCTV கமராவில் பதிவாகியுள்ளது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/81e829b5-4d5e-45ac-a1e3-441f65b5e5d9/26-6a8c158f77f4f.webp' /></p><p>இதற்கமைய, குண்டுத்தாக்குதலுக்கு உடந்தையாக இருந்ததற்காக பெண் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொரளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><h2>பொலிஸார் விசாரணை&nbsp;</h2><p>

குண்டுத் தாக்குதலை நடத்தப் பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் கொட்டிகாவத்தை பகுதியில் பொலிஸாரால் கைவிடப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0cb2e7b3-1060-4033-b760-856051275432/26-6a8c15902af2d.webp' /></p><p>மோட்டார் சைக்கிளின் பதிவு எண் சிசிடிவி கமராவில் தெரியவந்ததையடுத்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் கூறுகின்றனர்.&nbsp;&nbsp;</p><p>

கைது செய்யப்பட்டவர்களில், மோட்டார் சைக்கிளின் பதிவு செய்யப்பட்ட உரிமையாளர், அதை அடகு வைத்ததாக கூறப்படும் அவரது சகோதரர், மற்றும் அடகு வாங்கியதாக கூறப்படும் ஒரு பெண்ணும் ஒரு ஆணும் அடங்குவதாக கூறப்படுகின்றது.</p><p></p><p></p><p><b>YOU MAY LIKE THIS VIDEO</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/inhdnMV3aNw" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p>]]></content>
            <updated>2026-08-24T09:57:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[எரிபொருளுக்காக கோடிக்கணக்கில் செலவிட்ட முன்னாள் சபாநாயகர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/parliament-of-sri-lanka-national-audit-office-1787564883"></link>
            <id>https://tamilwin.com/article/parliament-of-sri-lanka-national-audit-office-1787564883</id>
            <summary type="text">மகிந்த யாப்பா அபேவர்தன சபாநாயகராகப் பதவி வகித்த 9ஆவது நாடாளுமன்றத்தின் 2023 மற்றும் 2024 ஆகிய இறுதி இரண்டு ஆண்டுகளில் வரம்பற்ற முறையில் எரிபொருளை பயன்...</summary>
            <content type="html"><![CDATA[<p>மகிந்த யாப்பா அபேவர்தன சபாநாயகராகப் பதவி வகித்த 9ஆவது நாடாளுமன்றத்தின் 2023 மற்றும் 2024 ஆகிய இறுதி இரண்டு ஆண்டுகளில் வரம்பற்ற முறையில் எரிபொருளை பயன்படுத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.</p><p>தேசிய கணக்காய்வு அலுவலகம் வெளியிட்டுள்ள விசேட அறிக்கையில் இந்த விடயம் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
</p><p>குறிப்பிட்ட இரண்டு ஆண்டுகளில் சபாநாயகரால் சராசரியாக மாதந்தோறும் முறையே 3,994 லீட்டர் மற்றும் 6,122 லீட்டர் வரை எரிபொருள் பயன்படுத்தப்பட்டுள்ளது.</p><p> இந்த எரிபொருள் பயன்பாட்டு அதிகரிப்பானது 2022 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் முறையே 66 சதவீதம் மற்றும் 155 என்றளவில் பாரிய அதிகரிப்பு அவதானிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
</p><h2>
</h2><p></p><h2>2023-2024 காலப்பகுதியில் பாவிக்கப்பட்ட எரிபொருள்</h2><p>2023 ஆம் ஆண்டில் சபாநாயகரின் எரிபொருளுக்காக வருடத்திற்கு ரூ. 19,373,866 செலவிடப்பட்டுள்ளது.</p><p> 2024 ஆம் ஆண்டில் ரூ. 26,045,103 செலவிடப்பட்டுள்ளது. 
ஏனைய ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது இது கணிசமான அளவு அதிகரிப்பாகும.</p><p>இந்த கணக்காய்வு அறிக்கை கடந்த ஆகஸ்ட் 18 ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ளது. 9-வது நாடாளுமன்றத்தின் பிரதிச் சபாநாயகருக்கு ஒதுக்கப்பட்ட 3 உத்தியோகபூர்வ வாகனங்களுக்கான எரிபொருளுக்கு மேலதிகமாக அவரது தனிப்பட்ட சொகுசு காரிற்காக ரூ. 8,545,032 பெறுமதியான 21,299 லீட்டர் எரிபொருள் பெறப்பட்டுள்ளது. </p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3f380d44-ccf0-4a31-9319-69a71b1f36d6/26-6a8c1355d44bd.webp' /></p><p>2024 ஆம் ஆண்டில் 2 உத்தியோகபூர்வ வாகனங்களுக்கு அனுமதிக்கப்பட்ட அளவை விட 1,515 லீட்டர் எரிபொருள் அதிகமாகப் பெறப்பட்டுள்ளது.</p><p> 
2022 மற்றும் 2024 இற்கு இடைப்பட்ட காலத்தில் நாடாளுமன்றச் செயலாளர் நாயகம் ரூ. 6,071,690 பெறுமதியான 15,063 லீட்டர் எரிபொருளைப் பயன்படுத்தியுள்ளார். </p><p>இதன் வருடாந்த சராசரி 5,021 லீட்டர்களாகும். தற்போது அரச சேவையில் அதிகபட்ச எரிபொருள் நுகர்வைக் கொண்ட அமைச்சின் செயலாளரின் பதவியைக் கருத்திற்கொள்ளும்போது இது சுமார் 2,300 லீட்டர் மேலதிகப் பயன்பாடாகும்.&nbsp;</p><p></p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-24T09:57:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[இம்ரான் கானின் ஆரோக்கியம் குறித்து அர்ஜுன ரணதுங்க உள்ளிட்ட முன்னாள் வீரர்கள் மீண்டும் கடிதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/former-ranatunga-players-write-aga-regarding-imran-1787565395"></link>
            <id>https://canadamirror.com/article/former-ranatunga-players-write-aga-regarding-imran-1787565395</id>
            <summary type="text">சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், முன்னாள் கிரிக்கெட் அணித் தலைவருமான இம்ரான் கானின் சுகாதாரம் மற்றும் மருத்துவ சிகிச்சை தொடர்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், முன்னாள் கிரிக்கெட் அணித் தலைவருமான இம்ரான் கானின் சுகாதாரம் மற்றும் மருத்துவ சிகிச்சை தொடர்பில், இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் அணித் தலைவர் அர்ஜுன ரணதுங்க உள்ளிட்ட சர்வதேச முன்னாள் கிரிக்கெட் தலைவர்கள் குழுவொன்று பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பிடம் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளது.
</p><p>
இம்ரான் கானை மருத்துவமனையில் அனுமதித்து, அவரது தனிப்பட்ட மருத்துவர்கள் மற்றும் அவரது சகோதரியான மருத்துவர் உஸ்மா கான் உள்ளிட்ட மருத்துவக் குழுவினரால் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என பாகிஸ்தான் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த போதிலும், அந்த உத்தரவு முறையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை என முன்னாள் கிரிக்கெட் தலைவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e59e0327-aa19-4129-bdfe-d46f197f50d7/26-6a8c1554b6f2c.webp' /></p><p>இம்ரான் கான் சில மணிநேரங்கள் மட்டுமே மருத்துவமனையில் வைக்கப்பட்ட பின்னர், அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட மருத்துவக் குழுவினரால் பரிசோதிக்கப்பட்டு மீண்டும் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, இம்ரான் கானின் மருத்துவ சிகிச்சை தொடர்பில் மூன்று முக்கிய கோரிக்கைகளை அவர்கள் முன்வைத்துள்ளனர்.
</p><p>
அதன்படி, அவரது வலது கண் பார்வை இழப்பு தொடர்பில் உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட மருத்துவக் குழுவின் மூலம் சுயாதீன மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட வேண்டும் என கோரப்பட்டுள்ளது.
</p><p>
மேலும், இம்ரான் கானின் குடும்பத்தினருக்கான வாராந்த சந்திப்புகள் தடையின்றி அனுமதிக்கப்பட வேண்டும் என்றும், மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படும் சிகிச்சைகள் எவ்வித தாமதமும் இன்றி வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
</p><p>
அரசியல்வாதிகளாக அல்லாமல், முன்னாள் சக வீரர்களாகவும் கிரிக்கெட் போட்டியாளர்களாகவும் இந்தக் கோரிக்கையை முன்வைப்பதாக முன்னாள் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். </p><p>பாகிஸ்தானின் உள்நாட்டு சட்ட நடைமுறைகளில் தலையிடும் நோக்கம் தங்களுக்கு இல்லை என்றும் அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர்.</p><p>

இந்தக் கோரிக்கையில் இலங்கையின் முன்னாள் உலகக் கிண்ணத் தலைவர் அர்ஜுன ரணதுங்கவுடன் இந்தியாவின் முன்னாள் தலைவர்கள் சுனில் கவாஸ்கர், கபில் தேவ், அவுஸ்திரேலியாவின் ஆலன் போடர், ஸ்டீவ் வோ, கிரெக் செப்பல், இங்கிலாந்தின் அலஸ்டயர் குக், ஆடம் கில்கிறிஸ்ட், நாசர் ஹுசைன் மற்றும் டேவிட் கோவர் உள்ளிட்ட பல முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கையெழுத்திட்டுள்ளனர்.
</p><p>
இம்ரான் கானின் கண் பாதிப்பு மற்றும் சிறையில் அவருக்கு போதிய மருத்துவ சிகிச்சை வழங்கப்படவில்லை எனக் கூறப்படும் விவகாரம் தொடர்பில் பாகிஸ்தான் பிரதமரிடம் முன்னாள் கிரிக்கெட் தலைவர்கள் விடுக்கும் இரண்டாவது முறையீடு இதுவாகும்.</p>]]></content>
            <updated>2026-08-24T09:56:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[முருகன் முப்பாட்டனா .... சீமானுக்கு குட்டு வைத்த யாழ் சிறுவன்; நாடு கடந்து வைரலாகும் காணொளி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/jaffna-boy-speech-goes-viral-sannathi-murugan-1787564643"></link>
            <id>https://jvpnews.com/article/jaffna-boy-speech-goes-viral-sannathi-murugan-1787564643</id>
            <summary type="text">&amp;nbsp; முருகன் முப்பாட்டனா .....இறைவனா... என்ற தலைப்பில் மிகச்சிறப்பான ஒரு பேருரையை இந்த யாழ்ப்பாணத்துச் சிறுவன் நிகழ்த்திப் பல போலித் தமிழ் தேசியவாதி...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; முருகன் முப்பாட்டனா .....இறைவனா... என்ற தலைப்பில் மிகச்சிறப்பான ஒரு பேருரையை இந்த யாழ்ப்பாணத்துச் சிறுவன் நிகழ்த்திப் பல போலித் தமிழ் தேசியவாதிகளின் பொய் பிரச்சாரங்களை தவிடுபொடி ஆக்கியுள்ளான். </p><p>

அதுமட்டுமல்லாது முருகன் தனது முப்பாட்டன் என கூறும் சீமானுக்கும் போற போக்கில் ஒரு டொக்கு வைத்து விட்டான் யாழ் சிறுவன்.&nbsp; </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0812aefb-233e-42d2-9e05-94e4e275bdd6/26-6a8c12652be39.webp' /></p><h2>நாடு கடந்து வைரலாகும்&nbsp; காணொளி..</h2><p>வரலாற்று பிரசித்தி பெற்ற செல்வச்சன்னதி&nbsp; ஆலய வருடாந்த மகோற்சப பெருவிழா இடம்பெற்றுவரும் நிலையில்&nbsp; ஆலயத்தில் இடம்பெற்ற சிறுவனின்&nbsp; இந்த பேச்சானது சமூகவலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.</p><p><iframe src="https://www.facebook.com/plugins/video.php?height=476&href=https%3A%2F%2Fwww.facebook.com%2Freel%2F1092978783085202%2F&show_text=false&width=267&t=0" width="267" height="476" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share" allowFullScreen="true"></iframe></p><p>தமிழ் தேசியம் என கூறி சைவர்களை சிலர் பித்தலாட்டம் செய்து வழிமாற்றி வருகின்றதாகவும் சிறுவன் எச்சரித்துள்ளார்.
</p><p>
அத்துடன் முருகனை முப்பாட்டன் என கூறும்&nbsp; சீமான் ,சைமன், செபஸ்ரியான் போன்றவர்களின் போலி புழுகுகளை நம்பவேண்டாம் என்றும் சிறுவன் சீமானின் காலையும் வாரியுள்ளார்.</p><p></p><p>இத்தனை சிறிய வயதில் சிறுவனின்&nbsp; இந்த&nbsp;பேருரை சைவ மக்களை மெய் சிலிர்க்க&nbsp; வைத்துள்ளது.&nbsp;இந் நிலையில் சிறுவன் உருவில் வந்து முருகன் முப்பாட்டனா இறைவனா சிறப்பான பேருரையை வழங்கியது அந்த முருகனா என சமூகவலைத்தளங்களில் முருக பக்தர்கள் பதிவிட்டு வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-24T09:53:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மருத்துவமனையில் பொறியாளர் உயிரிழப்பு; இலங்கை பெண்ணின் வெளிநாட்டு கணவன் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/civil-engineer-killed-in-an-assault-korean-arrest-1787557078"></link>
            <id>https://jvpnews.com/article/civil-engineer-killed-in-an-assault-korean-arrest-1787557078</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp; தலங்கம, வெலி பாரா (Weli Para) பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிவில் பொறியாளர் ஒருவர் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp; தலங்கம, வெலி பாரா (Weli Para) பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிவில் பொறியாளர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, 60 வயதுடைய கொரிய நாட்டவர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக தலங்கம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>

சம்பவத்தில் உயிரிழந்தவர் தலங்கம, வெலி பாரா பகுதியைச் சேர்ந்த 58 வயது&nbsp; சிவில் பொறியாளர் ஆவார்.
இச்சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரான கொரிய நாட்டவர், இலங்கைப் பெண் ஒருவரைத் திருமணம் செய்து கொண்டு வெலி பாரா பகுதியில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f6f01d99-be87-4374-b401-78b050bd6cf0/26-6a8bf4d7df1a9.webp' /></p><h2>வாக்குவாதத்தின்போது தாக்குதல்</h2><p>
</p><p>
 தென் கொரியாவிற்குச் செல்ல விரும்பும் இலங்கை இளைஞர்களுக்கு இவர் கொரிய மொழியைக் கற்பித்து வருகிறார். </p><p>

உயிரிழந்த பொறியாளரும் சந்தேகநபரான கொரிய நாட்டவரும் அண்டை வீட்டார்களாக இருந்ததாகவும், ஒரு சம்பவம் தொடர்பாக இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தின்போது கொரிய நாட்டவர்&nbsp; பொறியாளரைத் தாக்கியதாகவும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.</p><p></p><p>
</p><p>
தாக்குதலில் பலத்த காயமடைந்த சிவில் பொறியாளர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். </p><p>கைது செய்யப்பட்ட கொரிய நாட்டவர் குறித்து தலங்கம பொலிஸ் நிலையத்தின் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-24T09:46:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுசுகி அறிமுகப்படுத்திய மினி மின்சார கார் - 310 கி.மீ. ரேஞ்ச்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/suzuki-e-sky-ev-310km-range-minicar-1787564832"></link>
            <id>https://news.lankasri.com/article/suzuki-e-sky-ev-310km-range-minicar-1787564832</id>
            <summary type="text">Suzuki launches electric mini vehicle e Sky EV: சுசுகி நிறுவனம் மினி மின்சார காரை அறிமுகப்படுத்தியுள்ளது.

Suzuki e Skyஜப்பானின் பிரபல வாகன உற்பத்தி...</summary>
            <content type="html"><![CDATA[<p>Suzuki launches electric mini vehicle e Sky EV: சுசுகி நிறுவனம் மினி மின்சார காரை அறிமுகப்படுத்தியுள்ளது.
</p><h2>
Suzuki e Sky</h2><p>ஜப்பானின் பிரபல வாகன உற்பத்தியாளரான சுசுகி மோட்டார், தனது முதல் மின்சார மினி வாகனமான “e Sky”-யை ஓன்லைனில் அறிமுகப்படுத்தியுள்ளது.</p><p>

இந்த வாகனம் 310 கிலோமீட்டர் பயண தூரம் (range) கொண்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e7c43dc9-7762-4113-bb44-19ae04ac1e84/26-6a8c13228c01f.webp' /></p><p>மினி வாகனங்களில் இதுவே மிக நீண்ட பயண தூரம் கொண்டதாகக் கருதப்படுகிறது.

சுசுகி, தனது மினி வாகன உற்பத்தி அனுபவத்தை பயன்படுத்தி, எடை குறைப்பு, அதிக எரிசக்தி திறன் ஆகியவற்றின் மூலம் இந்த நீண்ட பயண தூரத்தை அடைந்துள்ளது.
</p><p>
“பெட்ரோல் வாகனங்களைப் பயன்படுத்தும் பயனர்களுக்கும் எளிதாக ஓட்டக்கூடியதாக வடிவமைக்கப்பட்டது” என சுசுகி நிறுவனத்தின் மேம்பாட்டு அதிகாரி தெரிவித்துள்ளார்.
</p><p></p><p>இந்த வாகனத்தில், நேவிகேஷன் சிஸ்டம் மூலம் மீதமுள்ள பேட்டரி சக்தி மற்றும் போக்குவரத்து நிலையை அடிப்படையாகக் கொண்டு சிறந்த பாதையை பரிந்துரைக்கும் வசதி உள்ளது. இதனால், சார்ஜ் தீர்ந்துவிடும் பயம் இல்லாமல் பயணிகள் நிம்மதியாக பயணிக்க முடியும்.</p><h2>மக்களுக்கு ஏற்ற விலை</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/29d33d76-f1d0-4ceb-a132-6c791e5f16c6/26-6a8c13236324f.webp' /></p><p>சுசுகி நிறுவனம் இந்த வாகனத்தின் விலையை இன்னும் அறிவிக்கவில்லை. ஆனால், பெட்ரோல் வாகன பயனர்கள் மின்சார வாகனங்களுக்கு மாறும் வகையில், விலை மக்களுக்கு ஏற்றதாக இருக்கும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.
</p><p>
ஜப்பானில் மின்சார மினி வாகன சந்தை வேகமாக வளர்ந்து வருகிறது. சீனாவின் BYD நிறுவனம் கடந்த ஜூலையில் “Racco” எனும் மினி வாகனத்தை அறிமுகப்படுத்தியது. </p><p>மேலும், யோகோஹாமாவைத் தலைமையிடமாகக் கொண்ட EMT நிறுவனம் 2027ஆம் ஆண்டில் சந்தையில் நுழைய திட்டமிட்டுள்ளது.
</p><p>“போட்டி அதிகரிப்பது நுகர்வோருக்கு நல்லது. எங்கள் வலிமை மினி வாகனங்களில் உள்ளது, அதனை வலியுறுத்த விரும்புகிறோம்” என&nbsp;சுசுகி தெரிவித்துள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-24T09:44:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜேர்மன் சேன்ஸலருக்கு மக்களிடையே குறைந்துவரும் ஆதரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/majority-of-voters-predict-early-exit-for-merz-1787564648"></link>
            <id>https://news.lankasri.com/article/majority-of-voters-predict-early-exit-for-merz-1787564648</id>
            <summary type="text">Majority of Voters Predict Early Exit for Chancellor Merz: ஜேர்மன் சேன்ஸலரான பிரெட்ரிக் மெர்ஸ் விரைவில் பதவி விலகுவார் எனப் பெரும்பான்மையான வாக்காளர்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>Majority of Voters Predict Early Exit for Chancellor Merz: ஜேர்மன் சேன்ஸலரான பிரெட்ரிக் மெர்ஸ் விரைவில் பதவி விலகுவார் எனப் பெரும்பான்மையான வாக்காளர்கள் கணித்துள்ளனர்.</p><p>


ஜேர்மன் சேன்ஸலரான பிரெட்ரிக் மெர்ஸுக்கு மக்களிடையே ஆதரவு குறைந்துவருகிறது.
</p><h3>
ஆய்வு முடிவுகள்</h3><p>

YouGov என்னும் ஆய்வமைப்பு சமீபத்தில் மேற்கொண்ட ஆய்வொன்றில், சேன்ஸலர் மெர்ஸ், 2029ஆம் ஆண்டு நிகழவிருக்கும் பொதுத்தேர்தலுக்கு முன் பதவி விலகிவிடுவார் என கருதுவதாக பெரும்பான்மையான வாக்காளர்கள் கணித்துள்ளனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7646d54c-68bf-4422-babc-10cbe1827276/26-6a8c1269af567.webp' /></p><p>
36 சதவிகித வாக்காளர்கள், மெர்ஸ் 2026ஆம் ஆண்டு முடியும் வரை சேன்ஸலராக இருப்பார் என்றும், என்றாலும், 2029ஆம் ஆண்டு நிகழவிருக்கும் பொதுத்தேர்தலுக்கு முன் அவர் பதவி விலகிவிடுவார் என்றும் நம்புவதாகத் தெரிவித்துள்ளார்கள்.
</p><p>
ஆய்வில் பங்கேற்றவர்களில் 18 சதவிகிதம் பேர், இந்த ஆண்டு முடியும் முன்பே அவருக்கு பதிலாக வேறொருவர் சேன்ஸலராவார் என நம்புவதாகத் தெரிவித்துள்ளார்கள்.</p><p>

29 சதவிகிதம் பேர், அடுத்த தேர்தல் வரையாவது அவர் சேன்ஸலராக இருப்பார் என நம்புவதாகத் தெரிவித்துள்ளார்கள்.&nbsp;</p><p></p><p>
மொத்தத்தில், 54 சதவிகிதம் பேர், இந்த நாடாளுமன்ற பதவிக்காலம் முடியும் முன் மெர்ஸ் பதவி விலகிவிடுவார் என கணித்துள்ளார்கள்.
</p><p>
அத்துடன், மெர்ஸ் சமீபத்தில் தனது கேபினட்டில் மாற்றங்கள் செய்த நிலையிலும், தனது அதிகாரத்தை வலுப்படுத்தத் தவறிவிட்டதாக பெரும்பாலான மக்கள் தெரிவித்துள்ளனர்.
</p><p>
இதற்கிடையில், அடுத்து யார் சேன்ஸலராவார் என கேட்கப்பட்ட நிலையில், மெர்ஸின் CDU கட்சியைச் சார்ந்த, North Rhine-Westphalia மாகாண பிரீமியரான Hendrik Wüst என்பவரே அடுத்து சேன்ஸலராக பொருத்தமான நபர் என கருதுவதாக 25 சதவிகித மக்கள் தெரிவித்துள்ளனர்.
</p><p>
மெர்ஸே சேன்ஸலராக தொடர்வார் என 9 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ள நிலையில், 66 சதவிகிதம் பேர், அடுத்து யார் சேன்ஸலராவார் என தங்களுக்குத் தெரியவில்லை என்று கூறியுள்ளனர்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-24T09:44:14+00:00</updated>
        </entry>
    </feed>
