<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-08-28T02:32:55+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாள திடீர் வெள்ளப் பேரழிவுக்கு காரணம்! அதிகரிக்கும் பலி: சிக்கிய தமிழர்களின் நிலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/389-killed-in-flash-flood-disaster-in-nepal-1787882732"></link>
            <id>https://ibctamil.com/article/389-killed-in-flash-flood-disaster-in-nepal-1787882732</id>
            <summary type="text">சில மணி நேரங்களுக்கு முன்னர் அதிகாரிகளால் மரண எண்ணிக்கை 359 எனக் குறிப்பிடப்பட்டிருந்த நிலையில், நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால் உயிரிழந்...</summary>
            <content type="html"><![CDATA[<p>சில மணி நேரங்களுக்கு முன்னர் அதிகாரிகளால் மரண எண்ணிக்கை 359 எனக் குறிப்பிடப்பட்டிருந்த நிலையில், நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 389 ஆக அதிகரித்துள்ளதாக நேபாள காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p>புதன்கிழமை ஏற்பட்ட திடீர் வெள்ளம் வீடுகளை அழித்து, சாலைகளை மூழ்கடித்து, பாலங்களை அடித்துச் சென்றதை அடுத்து, நேபாளம் மற்றும் திபெத்தில் மீட்புக் குழுவினர் உயிர் பிழைத்தவர்களைத் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.</p><p>நேபாளத்தில் 900-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாக சர்வதேச ஊடகம் தெரிவித்துள்ளது.&nbsp;அதேசமயம் திபெத்தில் மூன்று பேர் கொல்லப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், 550-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.</p><p></p><h2>காணாமல் போனவர்களைத் தேடுதல்</h2><p>
</p><p>
 

இதேவேளை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு வரும் நேபாளப் பிரதமர் பாலேந்திர ஷா, நேபாள இராணுவம், ஆயுதப் காவல்துறை படை மற்றும் தேசிய காவல்துறையை சேர்ந்த 13,000க்கும் அதிகமான பாதுகாப்புப் படையினர் மீட்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d951c8b9-975a-404d-8758-14f11f04a3d0/26-6a90f1882841a.webp' /></p><p>இன்றைய தினத்தில் மட்டும் வான்வழியாக 573 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
 

தற்காலிக நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதோடு, காயமடைந்த மக்களுக்கு இலவசமாக சிகிச்சையளிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
</p><p>
 

உயிர்களைக் காப்பாற்றுதல், காணாமல் போனவர்களைத் தேடுதல் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குதல் ஆகியவற்றுக்கே அரசாங்கம் முதன்மை முக்கியத்துவம் அளிப்பதாக நேபாளப் பிரதமர் பாலேந்திர ஷா மேலும் தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>சிக்கியுள்ள தமிழர்கள்</h2><p>இந்த நிலையில் நேபாளத்தில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்பதற்கான ஆலோசனைக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b00c33c3-fd26-48a4-984b-1330367684fb/26-6a90f1876d6f3.webp' /></p><p>அதைத் தொடர்ந்து மீட்பு நடவடிக்கைகளைத் துரிதப்படுத்தும் வகையில் டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்ல உள்ளுறை ஆணையர் ஆஷிஷ் குமார் தலைமையிலான குழு நேபாளம் சென்று மீட்புப் பணிகளை ஒருங்கிணைக்க உத்தரவிடப்பட்டு இருப்பதாகவும் தமிழ்நாடு அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>நிலநடுக்கம் காரணமில்லை</h2><p>இவ்வாறான நிலையில், நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்திற்கு நிலநடுக்கம் காரணமில்லை என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் கூறியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f1d565dc-a7db-4c9b-83c5-bdd979be8f6f/26-6a90f18692a86.webp' /></p><p>நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கிற்கு நிலநடுக்கம் தான் காரணம் என்றும் அது ரிக்டர் அளவுகோலில் 4.4 எனப் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் முன்னதாக கூறியிருந்தது.</p><p>
</p><p>இந்த நிலையில் "நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கிற்கு நிலநடுக்கம் காரணம் அல்ல, பனிப்பாறை உடைந்து சரிவு ஏற்பட்டதால்தான் திடீர் வெள்ளம் ஏற்பட்டது. ஆனால் பனிப்பாறை ஏன் உடைந்தது என்பதற்கு காரணம் தெரியவில்லை. </p><p>அந்த பனிப்பாறை சரிவால் ஏற்பட்ட அதிர்வு 5.2 ரிக்டர் என்ற அளவில் பதிவாகியுள்ளது. நில அதிர்வு தரவுகள், அதிர்வு அலைகள், செயற்கைக் கோள் படங்கள் ஆகியவற்றின் மூலமாக இது கண்டறியப்பட்டுள்ளது." என்று விளக்கம் தெரிவித்துள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-28T02:32:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[நண்பரை கணவனாக தேர்ந்தெடுப்பது சிறந்தது!! நடிகை எமி ஜாக்சன் எமோஷனல்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/amy-jackson-says-best-choose-a-friend-as-a-husband-1787837311"></link>
            <id>https://viduppu.com/article/amy-jackson-says-best-choose-a-friend-as-a-husband-1787837311</id>
            <summary type="text">எமி ஜாக்சன்மதராசப்பட்டினம், 2.0, தெறி உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை எமி ஜாக்சன். இந்தி, தெலுங்கு மொழிகளிலும் நடித்த எமி, ஜார்ன்...</summary>
            <content type="html"><![CDATA[<h2>எமி ஜாக்சன்</h2><p>மதராசப்பட்டினம், 2.0, தெறி உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை எமி ஜாக்சன். இந்தி, தெலுங்கு மொழிகளிலும் நடித்த எமி, ஜார்ன் என்பவரை காதலிக்கும் போது கர்ப்பமாகி அதன்பின் நிச்சயதார்த்தம் செய்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aaed3d30-bf3b-49fb-ad41-86fbc9692a3e/26-6a903b8177882.webp' /></p><p> </p><p>ஆண் குழந்தை பிறந்த 2 வருடத்தில் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர். அதன்பின் 2024ல் ஆங்கில நடிகர் எட் வெஸ்ட்விக்கை காதலித்து இத்தாலியில் திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு 2025ல் ஒரு ஆண் குழந்தை பிறந்து, அவருக்கு ஆஸ்கர் அலெக்ஸாண்டர் என்ற பெயரையும் வைத்துள்ளனர். </p><p>இந்நிலையில் தன்னுடைய 2வது திருமண நாளை கொண்டாடியுள்ள எமி ஜான்சன், தன் கணவர் பற்றி பகிர்ந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0aba00e8-4363-4aa4-93e7-d2512783bda7/26-6a903b8229273.webp' /></p><p> </p><h2>நண்பரை கணவனாக</h2><p>அதில், நெருங்கிய நண்பரையே வாழ்க்கைத் துணையாக தேர்வு செய்வது சிறந்தது என்று இப்போது புரிகிறது. அன்பு, குழந்தைகள், சாகசங்கள், சற்று குழப்பமான முடிவுகள், அளவுக்கடந்த மகிழ்ச்சி என இந்த 2 ஆண்டுகள் கடந்திருக்கிறது. இந்த வாழ்க்கையை வேறு யாருடனும் பகிர்ந்து கொள்ள விரும்பமாட்டேன் என்று எமோஷனலாக பேசியுள்ளார்.</p>]]></content>
            <updated>2026-08-28T02:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[பேரழிவு ஏற்படலாம்! நேபாள வெள்ளப்பெருக்கையடுத்து இலங்கைக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/warning-issued-to-sri-lanka-following-nepal-floods-1787882170"></link>
            <id>https://tamilwin.com/article/warning-issued-to-sri-lanka-following-nepal-floods-1787882170</id>
            <summary type="text">நேபாளம் மற்றும் திபெத் எல்லை பகுதியில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு,
அப்பகுதியில் நிலநடுக்கம் மற்றும் பனிச்சரிவு காரணமாகவே உருவாகியுள்ளது என
பேரா...</summary>
            <content type="html"><![CDATA[<p>நேபாளம் மற்றும் திபெத் எல்லை பகுதியில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு,
அப்பகுதியில் நிலநடுக்கம் மற்றும் பனிச்சரிவு காரணமாகவே உருவாகியுள்ளது என
பேராதனை பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் முன்னாள் சிரேஷ்ட பேராசிரியர்
அத்துல சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
</p><p>
இந்திய மற்றும் சீன எல்லைப் பகுதிக்கு அருகில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட இந்த
நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, பனி மற்றும் பாறைகள் சரிந்து த்ரிசூலி ஆற்றில்
விழுந்ததால் இந்த பாரிய வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதுடன், பலரும் அடித்துச்
செல்லப்பட்டு பெருமளவிலான சேதங்களும் ஏற்பட்டுள்ளன.</p><p>

இத்தகைய இயற்கை பேரழிவுகள் உலகளவில் புதிதல்ல எனக் குறிப்பிட்ட அவர், 1980
களில் கொலம்பியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சேற்றுச்சரிவு
ஏற்பட்டு ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்த நிகழ்வை நினைவுகூர்ந்தார்.</p><h2>ஆபத்து ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள்</h2><p>

இலங்கையிலும் இத்தகைய ஆபத்துகள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன என
எச்சரித்த அவர், டித்வா சூறாவளி காலத்தில் சரசவிகம பகுதியில் நிலச்சரிவு
காரணமாக நீர் செல்லும் வாய்க்கால்கள் அடைபட்டு, பின்னர் சேற்றுடன் கூடிய
வெள்ளம் கிராமத்திற்குள் பாய்ந்ததால் 20 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்த
சம்பவத்தைச் சுட்டிக்காட்டினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/86159bb0-79c2-4bf5-85d2-1143a64309cc/26-6a90f1964aca2.webp' />&nbsp;</p><p>
</p><p>
இலங்கையில் தளர்வான பாறை அடுக்குகள் கொண்ட மலைப்பாங்கான பகுதிகளில் நிலச்சரிவு
ஏற்படும் போது, அருகில் உள்ள ஆறுகள் அல்லது ஓடைகள் அடைபட்டு, பின்னர் நீர்
தேங்கி திடீரென உடைந்து பெருக்கெடுக்கும் போது பெரும் வெள்ளப்பெருக்கும்
பேரழிவும் ஏற்பட வாய்ப்புள்ளது.
</p><p>
எனவே, எதிர்காலத்தில் இவ்வாறான பேரழிவுகளிலிருந்து தப்பிக்க சாதாரண நிலச்சரிவு
மண்டலங்களை மட்டும் வரைபடமாக்குவது போதாது என்றும், நிலச்சரிவால் ஆறுகள்
அடைபட்டு திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடிய சாத்தியக்கூறுள்ள அபாயகரமான
பகுதிகளைக் கண்டறிந்து வரைபடமாக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.</p><p>

இத்தகைய முன்கூட்டிய எச்சரிக்கை அமைப்புகள் மூலம் எதிர்காலத்தில் சரசவிகம
போன்ற பேரழிவுகளைத் தடுக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-28T02:25:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆபத்தான நபரிடம் கோடிக்கணக்கில் பணம்பெற்ற பெண்கள் உட்பட பல அரசியல்வாதிகள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/10-politicians-to-investigate-1787879134"></link>
            <id>https://tamilwin.com/article/10-politicians-to-investigate-1787879134</id>
            <summary type="text">மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவின் தடுப்பு காவலில் உள்ள ஆபத்தான போதைப்பொருள் கடத்தல்காரர்களில் ஒருவரான ஷிரான் பாசிக்குடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணி...</summary>
            <content type="html"><![CDATA[<p>மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவின் தடுப்பு காவலில் உள்ள ஆபத்தான போதைப்பொருள் கடத்தல்காரர்களில் ஒருவரான ஷிரான் பாசிக்குடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணியவர்கள் தொடர்பில் விசாரணை பிரிவு அதிகாரிகள் கவனம் செலுத்தியுள்ளனர்.</p><p>

சந்தேகநபரிடமிருந்து கோடிக்கணக்கில் பணத்தையும் பல்வேறு சலுகைகளையும் பெற்றதாகக் கூறப்படும் 10 முக்கிய அரசியல்வாதிகள் எதிர்காலத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளனர். </p><p>ஷிரான் பாசிகிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது வெளிவந்த தகவல்களுக்கமைய, அரசியல்வாதிகளிடம் விசாரணை நடத்த மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவு நடவடிக்கை எடுத்து வருகிறது.</p><p> </p><h2><b>தேர்தல் பிரச்சார நடவடிக்கை</b></h2><p>முன்னாள் பெண் அமைச்சர்கள் இருவர், அமைச்சர்கள் இருவர், தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் உள்ளிட்ட பல பிரபல அரசியல்வாதிகள் இவ்வாறு விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c89b6e0c-7287-4e24-a30a-c07baf645852/26-6a90e0d7afab6.webp' /></p><p>விசாரணைகளில் சிக்கியுள்ள 10 அரசியல்வாதிகளுக்கும் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளின் போது ஷிரான் பாசிக்கினால் பல்வேறு சந்தர்ப்பங்களில் பெருமளவிலான பணம் வழங்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. </p><p>அத்துடன், கடந்த அரசாங்கத்தில் பிரதான அமைச்சராக செயற்பட்ட ஒருவர் ஷிரான் பாசிக்கிற்கு அனுமதியின்றி காணிகளில் பலமாடி தொடர்மாடிக் குடியிருப்புகள் மற்றும் ஹோட்டல்களை நிர்மாணிப்பதற்குத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது. </p><p>இந்த சட்ட விரோத நடவடிக்கைகளுக்காக குறித்த முன்னாள் அமைச்சர் ஷிரான் பாசிக்கிடமிருந்து பல்வேறு சந்தர்ப்பங்களில் பெருமளவு பணத்தைப் பெற்றுள்ளதாகவும் பதிவாகியுள்ளது. </p><p>ஷிரான் பாசிக் நீண்டகாலமாக இந்த அரசியல்வாதிகளுக்காக பாரிய அளவில் பணம் செலவிட்டுள்ளமையும் தெரியவந்துள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-28T02:03:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிக்பாஸ் 10ல் சின்ன மருமகள், பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகர்கள்... யாரெல்லாம் பாருங்க]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/serial-actors-entry-in-bigg-boss-10-1787841891"></link>
            <id>https://cineulagam.com/article/serial-actors-entry-in-bigg-boss-10-1787841891</id>
            <summary type="text">பிக்பாஸ் 10சின்னத்திரை, ஒட்டுமொத்த சினிமா ரசிகர்கள் அதிகம் பார்க்கும் ஒரு இடமாக உள்ளது. படங்கள் வாரா வாரம் தான் வருகிறது, ஆனால் சின்னத்திரையில் எப்போத...</summary>
            <content type="html"><![CDATA[<h2>பிக்பாஸ் 10</h2><p>சின்னத்திரை, ஒட்டுமொத்த சினிமா ரசிகர்கள் அதிகம் பார்க்கும் ஒரு இடமாக உள்ளது. படங்கள் வாரா வாரம் தான் வருகிறது, ஆனால் சின்னத்திரையில் எப்போதுமே பொழுதுபோக்கு விஷயங்கள் உள்ளது. </p><p>அப்படி விரைவில் மக்கள் 100 நாட்கள் ஆர்வமுடன் பார்க்கும் வகையில் நாம் எல்லோரும் எதிர்ப்பார்த்த பிக்பாஸ் நிகழ்ச்சி துவங்க உள்ளது. பிக்பாஸ் 10வது சீசன் வரும் செப்டம்பர் 6ம் தேதி மாலை 6 மணி முதல் தொடங்க உள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ba75c909-3ee7-413e-bca4-2bb40bd8878d/26-6a9050146333f.webp' /></p><p> </p><p>ஜியோ ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்திலும், விஜய் தொலைக்காட்சியிலும் ஒரே நேரத்தில் ஒளிபரப்பாகிறது.
இம்முறை பிரபலங்களை தாண்டி பொதுமக்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட போட்டியாளர்களும் கலந்துகொள்ள உள்ளார்கள்.</p><h2>போட்டியாளர்கள்</h2><p>
நிகழ்ச்சி விரைவில் தொடங்கவுள்ள நிலையில் வழக்கம் போல் போட்டியாளர்களின் லிஸ்ட் என பல வலம் வருகிறது. பிக்பாஸ் குழுவும் போட்டியாளர்கள் யார் என்று தெரியாத அளவிற்கு அவர்களின் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்கள். </p><p>தற்போது பிக்பாஸ் 10வது சீசனில் கலந்துகொள்ள போகும் சில போட்டியாளர்களின் விவரம் வெளியாகியுள்ளது, அதில் விஜய் டிவி சீரியல் நடிகர்கள் உள்ளனர். </p><p>
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மீனா கதாபாத்திரத்தில் நடிக்கும் ஹேமா, சின்ன மருமகள் சீரியல் நாயகன் நவீன், பாக்கியலட்சுமி சீரியலில் நடிக்க அக்ஷிதா ஆகியோர் கலந்துகொள்கிறார்கள் எனப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/50a33a4b-1b3c-48a6-84c9-79760916642d/26-6a9050152c533.webp' /></p>]]></content>
            <updated>2026-08-28T02:01:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டை விட்டு தப்பியோடிய 236 குற்றவாளிகளுக்கு எதிராக சர்வதேச சிவப்பு பிடியாணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/international-red-notices-for-236-criminals-1787879876"></link>
            <id>https://tamilwin.com/article/international-red-notices-for-236-criminals-1787879876</id>
            <summary type="text">இலங்கையில் செயற்பட்ட பாதாள உலக உறுப்பினர்கள் உள்ளிட்ட 236 குற்றவாளிகளுக்கு இன்டர்போல் ஊடாக சிவப்பு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ஆனந்த விஜ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் செயற்பட்ட பாதாள உலக உறுப்பினர்கள் உள்ளிட்ட 236 குற்றவாளிகளுக்கு இன்டர்போல் ஊடாக சிவப்பு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். </p><p>236 குற்றவாளிகளில் 110 பேருக்கு, தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னரே சிவப்பு அறிவித்தல்கள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். </p><p>சிவப்பு அறிவித்தல்கள் பிறப்பிக்கப்பட்ட குற்றவாளிகளில் 66 பேர் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p> </p><h2><b> சர்வதேச சிவப்பு அறிவிப்புகள்</b></h2><p>மேலும் 97 சந்தேக நபர்கள் குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/271ac9a4-c27c-41c3-8c67-012ab28324dc/26-6a90e3272a262.webp' /></p><p>அவர்களில் 39 பேர் தங்கியுள்ள நாடுகள் மற்றும் இடங்கள் குறித்த தெளிவான தகவல்கள் உள்ளது. எதிர்வரும் வாரத்தில் அவர்களில் ஒருவர் நாட்டுக்கு அழைத்து வரப்படுவார் என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார். </p><p>தொலைக்காட்சி ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார். </p>]]></content>
            <updated>2026-08-28T01:23:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[ட்ரம்பிற்கு ஷாக் கொடுத்த சீனா ; அமெரிக்காவை குறிவைக்கும் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/china-shocks-trump-hypersonic-missiles-targeting-1787873124"></link>
            <id>https://canadamirror.com/article/china-shocks-trump-hypersonic-missiles-targeting-1787873124</id>
            <summary type="text">சீனா தனது ராணுவ ரகசியங்களை மறைத்து வரும் வேளையில், அமெரிக்க உளவுத்துறை தற்போது ஒரு அதிர்ச்சி தரும் புதிய ரகசியத் தகவலை வெளியிட்டுள்ளது.


வானில் பற...</summary>
            <content type="html"><![CDATA[<p>சீனா தனது ராணுவ ரகசியங்களை மறைத்து வரும் வேளையில், அமெரிக்க உளவுத்துறை தற்போது ஒரு அதிர்ச்சி தரும் புதிய ரகசியத் தகவலை வெளியிட்டுள்ளது.


</p><p>வானில் பறந்து கொண்டே அமெரிக்காவின் அதிமுக்கிய உளவு விமானங்கள் மற்றும் எரிபொருள் நிரப்பும் டேங்கர் விமானங்களைத் துல்லியமாகக் குறிவைத்து அழிக்கும் 'ஹைப்பர்சோனிக்' ஆயுதங்களைச் சீனா ரகசியமாகத் தயாரித்துள்ளதாக அமெரிக்க உளவுத்துறை எச்சரித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6bd54970-c13d-4779-935b-a779fadbeefa/26-6a90c7667c616.webp' /></p><p>
</p><p>&nbsp;சீனாவின் இந்த ஆபத்தான ஏவுகணைகள் சுமார் 2 ஆயிரத்து 500 கி.மீ முதல் 8 ஆயிரம் கி.மீ தூரம் வரை பாய்ந்து சென்று, பசிபிக் கடலில் உள்ள அமெரிக்காவின் 'குவாம்' மற்றும் 'ஹவாய்' ராணுவத் தளங்களை நேரடியாகத் தாக்கும் வல்லமை கொண்டவை என உளவுத்துறை அறிக்கைகள் கூறுகின்றன.
</p><p>&nbsp;ஒலியை விடப் பல மடங்கு வேகத்தில் சென்று நடுவானில் தன் திசையைத் தானே மாற்றிக்கொள்ளும் இந்த விபரீத ஆயுதத்தை ரேடார்களால் கண்டுபிடிப்பது கடினம் என்பதால் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மற்றும் அந்நாட்டு பாதுகாப்புத்துறை தற்போது பெரும் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளது.</p><p>
ஹைப்பர் சோனிக் கிளைடு ஆயுதங்கள், ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் மூலம் அனுப்பப்படும். கீழ்வளிமண்டலத்தை எட்டியதும், இது ஏவுகணையில் இருந்து பிரிந்து செல்லும். அதன்பின், தன் இலக்கை நோக்கி பயணிக்கும். அதன்பின், ஒலியை விட பல மடங்கு வேகத்தில் வானில் உள்ள இலக்கை நோக்கி, எதிரியின் ரேடாரில் சிக்காத வகையில் தன் திசையை மாற்றியபடியே சீறிப்பாயும். சில சமயங்களில் திசை மாறி செல்லும்.</p>]]></content>
            <updated>2026-08-28T01:11:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாபா வங்காவின் கணிப்பில் சிக்கிய ராசிக்காரர்கள் ; கோடீஸ்வர யோகம் இவர்களுக்குத்தான்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/zodiac-signs-caught-in-baba-vanga-s-predictions-1787879076"></link>
            <id>https://jvpnews.com/article/zodiac-signs-caught-in-baba-vanga-s-predictions-1787879076</id>
            <summary type="text">&amp;nbsp; எதிர்காலத்தை கணிக்கும் தீர்க்கதரிசிகள் என்று வரும் போது அதில் எப்போதும் முதலிடத்தில் இருப்பவர்&amp;nbsp; பாபா வங்காதான். உலகின் வரலாற்றை மாற்றிய பல...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">&nbsp; எதிர்காலத்தை கணிக்கும் தீர்க்கதரிசிகள் என்று வரும் போது அதில் எப்போதும் முதலிடத்தில் இருப்பவர்&nbsp; பாபா வங்காதான். உலகின் வரலாற்றை மாற்றிய பல முக்கிய சம்பவங்களை அவர் முன்கூட்டியே கணித்ததன் மூலம் உலகப்புகழ் பெற்றார்.</p><p style="text-align: justify; ">குறிப்பாக, 2026-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் கிரகங்களின் அமைப்பானது, சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் வாய்ந்ததாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/184f9a79-eae3-4666-9cfd-e851554c46b5/26-6a90dea5b2dfd.webp' /></p><h2 style="text-align: justify; ">என்னென்ன தெரியுமா?</h2><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; "><b>&nbsp;ரிஷபம் :</b> பாபா வங்காவின் வைரலாகும் கணிப்பின்படி, செப்டம்பர் 2026 ரிஷப ராசிக்காரர்கள் தங்கள் முதலீடுகள் மற்றும் சொத்து தொடர்பான பரிவர்த்தனைகளில் லாபத்தை எதிர்பார்க்கலாம். அவர்களின் கடின உழைப்பிற்கான பெரும் பலன்களை இப்போது அடையலாம். வேலையில் இருப்பவர்களுக்கு இப்போது அலுவலகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கலாம். அதேசமயம், வியாபாரிகளுக்குப் புதிய வாய்ப்புகள் அமையக்கூடும். இந்த காலகட்டத்தில் அவர்கள் வாழ்க்கையில் திருப்தியாகவும், மகிழ்ச்சியாகவும் உணர்வார்கள்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; "><b>
சிம்மம் : </b>பாபா வங்காவின் கணிப்பின்படி, இந்த மாதத்தில் அவர்களின் தலைமைத்துவப் பண்புகள் அவர்களுடைய முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருக்கும். இது மட்டுமின்றி பதவி உயர்வு, புதிய தொழில் முயற்சிஆகியவை அவர்களின் வருமானத்தை கணிசமாக அதிகரிக்கக்கூடும். சோம்பேறித்தனத்தைத் தவிர்த்து சரியான நேரத்தில் சரியான நடவடிக்கைகளை மேற்கொள்வது அவர்களைச் செல்வந்தராக மாற்றக்கூடும்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">



</p><p style="text-align: justify; "><b>விருச்சிகம் :&nbsp;</b>இந்த மாதத்தில் அவர்கள் செய்யும் முதலீடுகள் அவர்களுக்கு கணிசமான லாபத்தைக் கொடுக்கக்கூடும். இந்தக் காலம் அவர்களை நிதிரீதியாக வலிமைமிக்கவராக மாற்றக்கூடும். இந்த மாதம் நீங்கள் ஒரு புதிய வாகனம் வாங்கலாம் அல்லது அவர்கள் எதிர்காலத்திற்கு உதவும் ஒரு முக்கியமான நபரின் நட்பைப் பெறலாம். புதிய வியாபாரம் தொடங்க நினைப்பவர்களுக்கு இந்த மாதம் சிறப்பான காலமாக இருக்கும்.&nbsp;</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-28T01:10:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பகுதியை உலுக்கிய சம்பவம் ; 19 வயது இளைஞனின் உயிரை பறித்த தொலைபேசி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/phone-claims-the-life-of-a-19-year-old-youth-1787877836"></link>
            <id>https://jvpnews.com/article/phone-claims-the-life-of-a-19-year-old-youth-1787877836</id>
            <summary type="text">கல்குடா கருங்காலிச்சோலை பகுதியில் கையடக்க தொலைபேசியை சார்ஜ் செய்தவாறு மார்பில் வைத்து கொண்டு உறங்கிய போது கையடக்க தொலைபேசி வெடித்ததில் 19 வயது இளைஞன் ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">கல்குடா கருங்காலிச்சோலை பகுதியில் கையடக்க தொலைபேசியை சார்ஜ் செய்தவாறு மார்பில் வைத்து கொண்டு உறங்கிய போது கையடக்க தொலைபேசி வெடித்ததில் 19 வயது இளைஞன் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்த சம்பவம் வியாழக்கிழமை (27) மாலை 6.00 மணிக்கு இடம்பெற்றுள்ளதாக பாசிக்குடா பொலிசார் தெரிவித்தனர்.</p><p style="text-align: justify;">கல்குடா கருங்காலிச்சோலை வீதியைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்</p><p style="text-align: justify;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8df9da5c-bd26-43a0-93e8-9378d669e5c7/26-6a90d9cdc4bf6.webp' /></p><h2 style="text-align: justify;">பிரேத பரிசோதனை</h2><p style="text-align: justify; ">

குறித்த இளைஞன் சம்பவ தினமான வியாழக்கிழமை (27) மாலை வீட்டில் உறங்குவதற்கு சென்ற நிலையில் அவரது கையடக்க தொலைபேசியை மின்சாரத்தின் ஊடாக சார்ஜ் செய்து கொண்டு கையடக்க தொலைபேசியை அவரது நெஞ்சில் இருதயம் இருக்கும் பகுதியில் வைத்து கொண்ட நிலையில் உறங்கி கொண்டுள்ளார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify;">

இந்த நிலையில் கையடக்க தொலைபேசியின் பற்றி சூடாகி வெடித்ததையடுத்து படுகாயமடைந்த அவரை வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற அனுமதித்தபோது அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளதாக பொலிசாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;">
</p><p style="text-align: justify;">
இதனையடுத்து உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
</p><p style="text-align: justify;">
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்குடா பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;</p><p style="text-align: justify;"></p>]]></content>
            <updated>2026-08-28T01:10:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[அழகு நிலையத்திற்குள் தம்பதியரின் தகாத செயல் ; கட்டுக்கட்டாக மீட்க்கப்பட்ட பணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/couple-engages-in-improper-act-inside-beauty-salon-1787876374"></link>
            <id>https://jvpnews.com/article/couple-engages-in-improper-act-inside-beauty-salon-1787876374</id>
            <summary type="text">மாத்தறை ரயில் நிலைய வீதியில் அமைந்துள்ள அழகு நிலையம் ஒன்றில் வைத்து நேற்று (27) சுமார் 7 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">மாத்தறை ரயில் நிலைய வீதியில் அமைந்துள்ள அழகு நிலையம் ஒன்றில் வைத்து நேற்று (27) சுமார் 7 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன் தம்பதி ஒன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p style="text-align: justify; ">
 

கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலுக்கு அமைவாக, குறித்த அழகுநிலையைத்தை முற்றுகையிட்டு மேற்கொண்ட சோதனையின்போதே இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளதாக மாத்தறை பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1e285455-824d-4b52-825a-d76a60c0a6b9/26-6a90d418236bb.webp' /></p><h2 style="text-align: justify; ">போதைப்பொருள் வியாபாரம்</h2><p>
</p><p style="text-align: justify; ">
 

மாத்தறை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் சந்தன விஜேசேகரவுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய, மாத்தறை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மேற்பார்வையில் இந்த முற்றுகை மேற்கொள்ளப்பட்டது.
</p><p style="text-align: justify; ">
 

இதன்போது மாத்தறை வெலேகொட பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயதுடைய சந்தேகநபரிடமிருந்து 02 கிலோகிராம் 45 கிராம் ஹெரோயின் மற்றும் 50 கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அவரது 26 வயதுடைய மனைவியிடமிருந்து 06 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
 

கூடுதலாக, போதைப்பொருள் வியாபாரம் மூலம் ஈட்டப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 6,25,000 ரூபாய் பணம், இரண்டு மின்னணு தராசுகள் மற்றும் நான்கு கைப்பேசிகளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
</p><p style="text-align: justify; ">
 

ஒரு கிராம் ஹெரோயின் 25,000 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸாருக்குத் தகவல் கிடைத்துள்ளதுடன், கைது செய்யப்பட்ட தம்பதியினர் நீண்டகாலமாக இப்போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்துள்ளமை ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-28T01:10:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[உணவு சாப்பிட்டவுடன் என்னவெல்லாம் செய்யக்கூடாது தெரியுமா? இதை பாருங்க..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/what-not-to-do-right-after-eating-1787874946"></link>
            <id>https://jvpnews.com/article/what-not-to-do-right-after-eating-1787874946</id>
            <summary type="text">&amp;nbsp;பொதுவாக உணவு அருந்திய உடனேயே பலரும் பல வேலைகளை வேகமாக செய்கிறார்கள். ஆனால் அது தவறு. உணவருந்திய பின் நாம் என்னவெல்லாம் செய்யக்கூடாது என்பதை பற்ற...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;பொதுவாக உணவு அருந்திய உடனேயே பலரும் பல வேலைகளை வேகமாக செய்கிறார்கள். </p><p>ஆனால் அது தவறு. உணவருந்திய பின் நாம் என்னவெல்லாம் செய்யக்கூடாது என்பதை பற்றி இந்த கட்டுரையில் பார்ப்போம்</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/49ed863b-7889-4f9e-a2cb-5db86a8a6c35/26-6a90ce845d382.webp' /></p><h2>என்னவெல்லாம் செய்யக்கூடாது&nbsp;</h2><p><b> குளித்தல்: சாப்பிட்ட </b>உடனே குளித்தால் ரத்த ஓட்டம் தோலின் பகுதிக்கு சென்று வயிற்றுக்கான ரத்த ஓட்டம் குறைந்து செரிமானம் தாமதமாகும்.
</p><p><b>
உடனே படுப்பது:</b> சாப்பிட்டுவுடன் படுப்பது நெஞ்சு எரிச்சல் மற்றும் அஜீரணத்தை ஏற்படுத்தும். குறைந்தபட்சம் 30 நிமிடங்கள் கழித்து படுக்க வேண்டும். இரவு உணவுக்கும் தூங்க செல்வதற்கும் இடையே 2 மணி நேரம் இருப்பது மிகவும் நல்லது. அதுவும் தூக்கத்திற்கு முன் சிறிது நேரம் நடந்து விட்டு படுப்பது இன்னும் நல்லது..</p><p></p><p><b>அதிக தண்ணீர் குடித்தல்:</b> உணவருந்தியதும் உடனே அதிகமாக தண்ணீர் கொடுத்தால் செரிமான நீரில் நீர்த்துப் போய் செரிமானம் மந்தமாகும்.


டீ அல்லது காபி குடித்தல்: உணவுக்கு பின் தேநீர் அல்லது காபி குடிப்பது உணவில் உள்ள சத்துக்கள் உறிஞ்சப்படுவதை தடுத்து அமிலத்தன்மையை உருவாக்கும். இதனாலும் செரிமானம் பாதிக்கப்படும்.</p><p><b>
பழங்கள் சாப்பிடுதல்: </b>உடனடியாக பழங்கள் சாப்பிடுவது வாயு தொல்லை அல்லது செரிமான கோளாறை உண்டாக்கும்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-28T01:09:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[பணத்திற்காக சிறுமிக்கு ஆடையின்றி பூஜை; ஆறு மாதகாலம் அரங்கேறிய சம்பவம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/ritual-involving-girl-incident-continued-1787857589"></link>
            <id>https://jvpnews.com/article/ritual-involving-girl-incident-continued-1787857589</id>
            <summary type="text">ஆந்திராவில் நடந்துள்ள ஒரு சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பூஜை என்ற பெயரில் சிறுமி ஒருவர் ஆறு மாதங்களாக பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகியுள்ளா...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">ஆந்திராவில் நடந்துள்ள ஒரு சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பூஜை என்ற பெயரில் சிறுமி ஒருவர் ஆறு மாதங்களாக பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகியுள்ளார்.&nbsp; </p><p style="text-align: justify; ">ஆந்திர மாநிலம் அனந்தபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர், அனந்தபுரம் நகரத்திற்கு ஓட்டல் வைப்பதற்காக குடிபெயர்ந்துள்ளார். </p><p style="text-align: justify;">அப்போது மகாலட்சுமி என்ற உள்ளூர் பெண் ஒருவர் அறிமுகமாகியுள்ளார். மகாலட்சுமி குடும்பத்தினருடன் நன்கு பழகிய நிலையில், அவர்களின் வறுமை நிலையை பயன்படுத்தத் தொடங்கியுள்ளார்.</p><p style="text-align: justify;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0d22fd00-84b7-493d-a6f3-6efa959ae20c/26-6a908ab74750c.webp' /></p><h2 style="text-align: justify;">&nbsp;சிறப்புப் பூஜைகள்</h2><p style="text-align: justify; ">ஓட்டல் தொழிலில் பெரிதாக லாபம் வராது, எளிதாக நீங்கள் செல்வந்தர் ஆவதற்கு என்னிடம் யோசனை உள்ளது என, “உங்கள் மகள் நிர்வாணமாக அமர்ந்து சிறப்புப் பூஜைகள் செய்தால், அளவற்ற செல்வத்தையும், செழிப்பையும் பெறலாம்” என தெரிவித்துள்ளார்.</p><p style="text-align: justify;">ஆரம்பத்தில் பெற்றோர்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தாலும், பின்பு மகாலட்சுமியின் வற்புறுத்தலின்பேரில் ஒப்புக்கொண்டுள்ளனர்.

</p><p style="text-align: justify;">
மகாலட்சுமியின் பேச்சை நம்பி சிறுமியை பூஜைக்கு அனுப்பியுள்ளனர். அங்கு போலி மந்திரவாதி பூஜைக்காக வரவழைக்கப்பட்டு, சிறுமியை ரகசிய இடம் ஒன்றிற்கு அழைத்துச் சென்றுள்ளறனர்.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;">

அங்கு சிறுமியின் ஆடையை முழுமையாக அகற்றி, தவறான நடத்தைக்கு உட்படுத்தப்பட்டு்ள்ளார்.</p><p style="text-align: justify;">இதனைத்தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில்,&nbsp; புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சிறுமியை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியது மற்றும் மாந்திரீக வழிபாடு ஆகிய குற்றங்களுக்காக, மகாலட்சுமி, ஹேமந்த், பாலசுப்ரமணியம் மற்றும் வெங்கடேஷ் யாதவ் ஆகியோர் மீது போக்சோ சட்டம் மற்றும் இன்னும் சில பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.</p><p style="text-align: justify;">

சிறப்புப் படைகள் அமைத்து குற்றவாளிகளை காவல்துறை தேடிவருகிறது. இந்த சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.&nbsp;&nbsp;</p><p style="text-align: justify;"></p>]]></content>
            <updated>2026-08-28T01:09:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[வடக்கு கிழக்கை சுட்டெரிக்கப்போகும் வெயில்! வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/the-southward-movement-of-the-sun-today-weather-1787878698"></link>
            <id>https://ibctamil.com/article/the-southward-movement-of-the-sun-today-weather-1787878698</id>
            <summary type="text">சூரியனின் தெற்கு நோக்கிய நகர்வின் காரணமாக இன்று முதல் செப்டம்பர் 07 ம் திகதி வரையில் சூரியன் இலங்கையின் பல இடங்களுக்கு மேலாக உச்சம் கொடுக்கும் என வளிம...</summary>
            <content type="html"><![CDATA[<p>சூரியனின் தெற்கு நோக்கிய நகர்வின் காரணமாக இன்று முதல் செப்டம்பர் 07 ம் திகதி வரையில் சூரியன் இலங்கையின் பல இடங்களுக்கு மேலாக உச்சம் கொடுக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
</p><p>
இதன் அடிப்படையில் இன்று(28) மதியம் சுமார் 12.11 மணியளவில் கொக்குவில், நல்லூர், கொடிகாமம் மற்றும் நாகர்கோவில் போன்ற இடங்களுக்கு மேலாக சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>அதிகரித்த வெப்பநிலை</h2><p>
</p><p>
கிழக்கு மாகாணத்திலும் அத்துடன் பொலனறுவை, யாழ்ப்பாணம், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் பகல் வேளையில் வெப்பச் சுட்டெண் காரணமாக அதிகரித்த வெப்பநிலையை மனித உடலினால் உணரக்கூடியதாக இருக்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3624e375-6e87-47ff-9b6c-b36cf93214fe/26-6a90dfaba7f48.webp' /></p><p>

இந்த நிலையில், சப்ரகமுவ, மேல், வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும் என திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
</p><p>
அதன்போது, சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் 
 75 mm இலும் கூடிய ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் என கூறப்படுகிறது.</p><h2>இடியுடன் கூடிய மழை</h2><p>
</p><p>
இதேவேளை, ஊவா மாகாணத்தின் சில இடங்களிலும் அத்துடன் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் சில இடங்களிலும் பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/543c48e3-19a8-43b8-a207-b5be47c9281c/26-6a90dfac817f8.webp' /></p><p>
நாட்டின் ஏனைய பிராந்தியங்களில் வறட்சியான வானிலை நிலவக்கூடும்.</p><p>

அத்தோாடு, மத்திய மலைப் பிராந்தியத்தின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் திருகோணமலை, மொனராகலை, ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் மணித்தியாலத்திற்கு சுமார் 40 - 50 km வேகத்தில் அடிக்கடி பலத்த காற்று வீசக் ஓரளவு கூடும்.
</p><p>
இந்நிலையில், பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...! '</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-28T01:09:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[பச்சிளம் குழந்தையின் உயிரை பறித்த சம்பவம்; தாய்க்கும் நேர்ந்த துயரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/tragedy-claims-infant-s-life-mother-also-suffers-1787865181"></link>
            <id>https://jvpnews.com/article/tragedy-claims-infant-s-life-mother-also-suffers-1787865181</id>
            <summary type="text">கெப்பித்திகொல்லாவ பகுதியில் உள்ள விகாரை ஒன்றுக்கு அருகில் நேற்று (27) முற்பகல் இடம்பெற்ற வாகன விபத்தில் 10 நாட்களேயான கைக்குழந்தை உட்பட மூவர் உயிரிழந்...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">கெப்பித்திகொல்லாவ பகுதியில் உள்ள விகாரை ஒன்றுக்கு அருகில் நேற்று (27) முற்பகல் இடம்பெற்ற வாகன விபத்தில் 10 நாட்களேயான கைக்குழந்தை உட்பட மூவர் உயிரிழந்தனர்.</p><p style="text-align: justify; "> 

பதவிய சிறிபுர பகுதியில் இருந்து அநுராதபுரம் நோக்கிப் பயணித்த முச்சக்கரவண்டியும், அநுராதபுரத்திலிருந்து கெப்பித்திகொல்லாவ நோக்கிப் பயணித்த கெப் வண்டியும் நேருக்கு நேர் மோதியதிலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bb23d020-f6ba-4725-a536-569305948535/26-6a90a85ed5d2b.webp' /></p><p> </p><p style="text-align: justify; ">

இந்த விபத்தில் முச்சக்கரவண்டியின் சாரதி, அவரது தாய் மற்றும் 10 நாட்களேயான கைக்குழந்தை ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. </p><p style="text-align: justify; ">

முச்சக்கரவண்டியில் பயணித்தவர்கள் அநுராதபுரம் போதனா வைத்தியசாலைக்குச் சென்று கொண்டிருந்த போதே இந்த கோர விபத்திற்கு முகங்கொடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். </p><p style="text-align: justify; ">

இந்த விபத்து தொடர்பில் கெப்பித்திகொல்லாவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-08-28T01:09:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் பிரபல கிரிக்கெட் வீரர் பெயரில் அவதூறு ; பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/defamation-using-famous-sri-lankan-cricketer-s-1787868454"></link>
            <id>https://jvpnews.com/article/defamation-using-famous-sri-lankan-cricketer-s-1787868454</id>
            <summary type="text">முன்னாள் தேசிய கிரிக்கெட் வீரர் டி.எம். தில்ஷான், தனது நற்பெயருக்குக் களங்கம் விளைவித்ததாகக் கூறப்படும் பொய்யான மற்றும் அவதூறான சமூக ஊடகப் பதிவுகள் கு...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">முன்னாள் தேசிய கிரிக்கெட் வீரர் டி.எம். தில்ஷான், தனது நற்பெயருக்குக் களங்கம் விளைவித்ததாகக் கூறப்படும் பொய்யான மற்றும் அவதூறான சமூக ஊடகப் பதிவுகள் குறித்து கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தில் புகார் அளித்துள்ளார்.</p><p style="text-align: justify; ">நாட்டிற்கு 20 ஆண்டுகள் அர்ப்பணிப்புடன் சேவையாற்றி தனது நற்பெயரைக் கட்டியெழுப்பியதாகவும், கூறப்படும் பொய்யான கூற்றுகள் தனது பெயருக்கும், கடினமாக உழைத்து நிலைநாட்டிய நற்பெயருக்கும் குறிப்பிடத்தக்க பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் தில்ஷான் கூறினார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c303b774-f3d6-44fd-8776-a5d6803e4869/26-6a90b527c6a2e.webp' /></p><h2 style="text-align: justify; ">விரைவான விசாரணை</h2><p style="text-align: justify; ">

ஆஸ்திரேலியாவிலிருந்து இலங்கை திரும்பிய பின்னர் இந்தப் புகாரை அளித்ததாகவும், தனது பெயரைத் தூய்மைப்படுத்த நியாயமான மற்றும் விரைவான விசாரணைக்குக் கோரிக்கை விடுத்ததாகவும் தில்ஷான் கூறினார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">

மேலும், சமூக ஊடகப் பயனர்கள் பொறுப்புடன் செயல்படுமாறும், கருத்துக்களுக்காகவோ அல்லது விளம்பரத்திற்காகவோ தவறான தகவல்களைப் பரப்புவதற்குப் பொது நபர்களின் பெயர்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">&nbsp;அவதூறான பதிவுகளுக்குப் பொறுப்பானவர்கள் மீது தனது வழக்கறிஞர்கள் மேலும் சட்ட நடவடிக்கை எடுக்கத் தயாராகி வருவதாகவும், தனது நற்பெயருக்கு ஏற்பட்ட சேதத்திற்கு சட்டரீதியான தீர்வு காணப்போவதாகவும் தில்ஷான் கூறினார்.</p>]]></content>
            <updated>2026-08-28T01:08:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[காலியில் ஏற்பட்ட கோர விபத்தில் பெண் உட்பட இருவர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/two-people-including-a-woman-die-in-accident-galle-1787878820"></link>
            <id>https://tamilwin.com/article/two-people-including-a-woman-die-in-accident-galle-1787878820</id>
            <summary type="text">காலி, அம்பலன்வத்தை, அனகாரிக தர்மபால மாவத்தையில் நடந்த மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கரவண்டி விபத்தில் பெண் ஒருவரும்
ஆண் ஒருவரும் பரிதாபமாக உயிரிழந...</summary>
            <content type="html"><![CDATA[<p>காலி, அம்பலன்வத்தை, அனகாரிக தர்மபால மாவத்தையில் நடந்த மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கரவண்டி விபத்தில் பெண் ஒருவரும்
ஆண் ஒருவரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
</p><p>
அம்பலன்வத்தையிலிருந்து கராப்பிட்டிய நோக்கிச் சென்ற முச்சக்கரவண்டியும், எதிரே
கராப்பிட்டியவிலிருந்து அம்பலன்வத்தை நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிளும்
நேருக்கு நேர் மோதியே இந்தக் கோர விபத்து இடம்பெற்றுள்ளது.</p><h2>பொலிஸ் விசாரணை&nbsp;&nbsp;</h2><p>
</p><p>
விபத்தின்போது முச்சக்கரவண்டியின் பின்னாசனத்தில் பயணித்த கனம்பிட்டியைச் சேர்ந்த 59
வயதுடைய பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/26d10404-eee8-495c-aa85-65bb429ea2b4/26-6a90df4c5b48a.webp' /></p><p> </p><p>மேலும், மோட்டார் சைக்கிளில்
பயணித்த ஹீன்பந்தலையைச் சேர்ந்த 49 வயதுடைய ஆண் பலத்த காயங்களுடன் காலி தேசிய
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று
வந்த நிலையில் உயிரிழந்தார்.
</p><p>
அம்பலன்வத்தையிலிருந்து கராப்பிட்டிய நோக்கிச் சென்ற முச்சக்கரவண்டி கட்டுப்பாட்டை
இழந்து வீதியை விட்டு விலகி அருகிலிருந்த மின்சாரக் கம்பத்தில் மோதியதோடு,
மோட்டார் சைக்கிளுடனும் மோதியுள்ளது.
</p><p>
இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைக் காலி போக்குவரத்துப் பொலிஸார்
முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-28T01:07:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பரீட்சை முறைகேடு: அதிரடியாக கறுப்புப் பட்டியலில் இணைக்கப்பட்ட 461 அதிகாரிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/examination-irregularities-461-officials-blacklist-1787878257"></link>
            <id>https://tamilwin.com/article/examination-irregularities-461-officials-blacklist-1787878257</id>
            <summary type="text">பல்வேறு தவறுகள் மற்றும் முறைகேடுகளில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 461 அதிகாரிகளின் பரீட்சை பணிகள் இடைநிறுத்தப்பட்டு, அவர்கள் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப...</summary>
            <content type="html"><![CDATA[<p>பல்வேறு தவறுகள் மற்றும் முறைகேடுகளில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 461 அதிகாரிகளின் பரீட்சை பணிகள் இடைநிறுத்தப்பட்டு, அவர்கள் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் வெளியிட்டுள்ள கணக்காய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
எனினும், கறுப்புப் பட்டியலில் இடம்பெற்றுள்ள அதிகாரிகளின் தகவல்கள், பரீட்சை பணிகளுக்காக அதிகாரிகளை நியமிக்கும் போது முறையாகக் கருத்தில் கொள்ளப்பட்டதற்கான ஆதாரங்கள் கணக்காய்வின்போது கிடைக்கவில்லை எனவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
</p><p>
கறுப்புப் பட்டியலில் இடம்பெற்றுள்ள 461 அதிகாரிகளில் 133 பேரின் தேசிய அடையாள அட்டை இலக்கங்களும், 182 அதிகாரிகளின் பரீட்சை பணித் தடையை ஆரம்பித்த திகதியும் பட்டியலில் பதிவு செய்யப்படவில்லை என கணக்காய்வில் தெரியவந்துள்ளது.
</p><p>
மேலும், ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக கறுப்புப் பட்டியலில் இடம்பெற்றிருந்த சில அதிகாரிகளின் பெயர்கள் கடந்த நவம்பர் 21ஆம் திகதியுடன் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பில் இந்த ஆண்டு ஜூன் 5ஆம் திகதி கணக்காய்வாளர் நாயகத்திற்கு வழங்கப்பட்ட பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><h2>கறுப்புப் பட்டியல்&nbsp;&nbsp;</h2><p>
</p><p>
எனினும், குறித்த பெயர்கள் நீக்கப்பட்டமை கறுப்புப் பட்டியலை முறையாகப் பராமரிக்காததன் காரணமாக இடம்பெற்றுள்ளதாக கணக்காய்வு அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b5c092df-3cfc-417f-b83a-13e3a7b9186f/26-6a90dc8d1282b.webp' /></p><p>
</p><p>
இதனால், கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்ட அதிகாரிகள் தொடர்ந்து பரீட்சை பணிகளில் ஈடுபடவில்லை என்பதை உறுதிப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது.
</p><p>
இதற்கிடையே, 1993 மற்றும் 1996ஆம் ஆண்டுகளில் க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றிய ஐந்து பரீட்சார்த்திகள் போலியான பரீட்சை பெறுபேறுகளை தயாரித்த குற்றச்சாட்டில் குற்றவாளிகளாக உறுதி செய்யப்பட்டிருந்த போதிலும், அவர்களுக்கு எதிராக சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் கணக்காய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
</p><p>
இதனிடையே, க.பொ.த. சாதாரண தரம் 2024 (2025) பரீட்சையின் நான்கு பரீட்சை நிலையங்களில், பரீட்சை நடைபெறும் போது கையடக்கத் தொலைபேசிகளைப் பயன்படுத்திய ஆறு மேற்பார்வையாளர்களின் தொலைபேசிகள் விசாரணைப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டிருந்த போதிலும், அவர்களுக்கு எதிராக இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.
</p><p>
இந்த விடயங்கள் இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் 2025ஆம் ஆண்டுக்கான வருடாந்த செயலாற்றுகை அறிக்கையில் இணைக்கப்பட்டுள்ள கணக்காய்வு அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-28T00:57:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹூண்டாய் அடுத்த தலைமுறை Creta, i10 மற்றும் மின்சார SUV அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/hyundai-confirms-creta-i10-ev-for-india-1787878614"></link>
            <id>https://news.lankasri.com/article/hyundai-confirms-creta-i10-ev-for-india-1787878614</id>
            <summary type="text">Hyundai confirms Creta, i10 and EV for India: ஹூண்டாய் நிறுவனம், இந்தியாவில் அடுத்த தலைமுறை Creta, i10 மற்றும் புதிய மின்சார SUV-ஐ அறிமுகப்படுத்த இருப...</summary>
            <content type="html"><![CDATA[<p>Hyundai confirms Creta, i10 and EV for India: ஹூண்டாய் நிறுவனம், இந்தியாவில் அடுத்த தலைமுறை Creta, i10 மற்றும் புதிய மின்சார SUV-ஐ அறிமுகப்படுத்த இருப்பதாக அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளது.</p><p>

2026 ஆகஸ்ட் 27 அன்று தென் கொரியாவில் நடைபெற்ற CEO Investor Day நிகழ்வில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.
</p><p>
ஹூண்டாய், 2030க்குள் இந்தியாவில் 26 புதிய மாடல்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. அதில் முக்கியமானவை - அடுத்த தலைமுறை Creta, i10 மற்றும் புதிய A-செக்மெண்ட் மின்சார SUV ஆகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/44c2206d-6d1e-4a2a-a6f4-929465e1b908/26-6a90dcd859276.webp' /></p><p>
</p><h2>
அடுத்த தலைமுறை Creta:
</h2><ul><li>
Kia Seltos-ஐ அடிப்படையாகக் கொண்ட K3 பிளாட்ஃபார்மில் உருவாக்கப்படுகிறது.
</li><li>
1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின்களுடன், புதிய strong-hybrid மாடலும் அறிமுகமாகும்.
</li><li>
இந்தியாவில் மிகவும் பிரபலமான SUV என்பதால், புதிய Creta-க்கு பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.</li></ul><p></p><p>
</p><h2>
அடுத்த தலைமுறை i10:
</h2><ul><li>
புதிய பிளாட்ஃபார்மில் உருவாக்கப்படும்.
</li><li>
1.2 லிட்டர் இயல்பான பெட்ரோல் என்ஜின் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
</li><li>
சிறிய கார் பிரிவில் ஹூண்டாய் தனது நிலையை வலுப்படுத்தும் முயற்சியாக பார்க்கப்படுகிறது.</li></ul><p></p><p>
</p><h2>
புதிய மின்சார SUV:
</h2><ul><li>
2026-ஆம் ஆண்டின் நான்காவது காலாண்டில் அறிமுகமாகும்.
</li><li>
பல்வேறு பேட்டரி விருப்பங்களுடன் வரும்.
</li><li>
ஹூண்டாய் Pleos இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் Level 2 ADAS வசதிகள் வழங்கப்படும்.
</li><li>
Tata Punch.ev-க்கு நேரடி போட்டியாக இருக்கும்.</li></ul><p>

இந்த அறிவிப்புகள், இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் ஹூண்டாய் தனது நிலையை மேலும் வலுப்படுத்தும் முயற்சியாகக் கருதப்படுகின்றன.&nbsp;&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-28T00:54:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Bavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கல்குடாவில் மார்பில் வைத்திருந்த தொலைபேசி வெடித்து 19 வயதுடைய இளைஞன் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/young-man-dies-after-mobile-phone-explodes-1787875982"></link>
            <id>https://ibctamil.com/article/young-man-dies-after-mobile-phone-explodes-1787875982</id>
            <summary type="text">




கல்குடா கருங்காலிச்சோலை பகுதியில் கையடக்க தொலைபேசியை சார்ஜ் செய்தவாறு மார்பில் வைத்து கொண்டு உறங்கிய போது கையடக்க தொலைபேசி வெடித்ததில் 19 வய...</summary>
            <content type="html"><![CDATA[<p>




கல்குடா கருங்காலிச்சோலை பகுதியில் கையடக்க தொலைபேசியை சார்ஜ் செய்தவாறு மார்பில் வைத்து கொண்டு உறங்கிய போது கையடக்க தொலைபேசி வெடித்ததில் 19 வயது இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
</p><p>
குறித்த சம்பவமானது, நேற்று வியாழக்கிழமை (27( மாலை 6.00 மணிக்கு இடம்பெற்றுள்ளதாக பாசிக்குடா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். </p><p> 

 கல்குடா கருங்காலிச்சோலை வீதியைச் சேர்ந்த 19 வயதுடைய கமலேஸ்வரன் சங்கீதன் என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.</p><p></p><h2>மேலதிக விசாரணை</h2><p>
</p><p>
குறித்த இளைஞன் சம்பவ தினமான நேற்று மாலை வீட்டில் உறங்குவதற்கு சென்ற நிலையில் அவரது கையடக்க தொலைபேசியை சார்ஜ் செய்தவாறு நெஞ்சில் இருதயம் இருக்கும் பகுதியில் வைத்து கொண்ட நிலையில் உறங்கி கொண்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/566f612a-8c6d-4467-a512-71cf4d01e2da/26-6a90d8b5e8fbe.webp' /></p><p>
இந்த நிலையில், கையடக்க தொலைபேசியின் பற்றி சூடாகி வெடித்ததையடுத்து படுகாயமடைந்த அவரை வைத்தியசாலைக்கு கொண்டு சென்று அனுமதித்தபோது அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
</p><p>
இதனையடுத்து உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
</p><p>
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்குடா காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...! '</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-28T00:39:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானியாவில் புதிய விதி: சாக்கெட்டில் நேரடியாக சோலார் பேனல்களை இணைக்கும் வசதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/uk-allows-plug-in-solar-panels-for-homes-1787870892"></link>
            <id>https://news.lankasri.com/article/uk-allows-plug-in-solar-panels-for-homes-1787870892</id>
            <summary type="text">UK allows plug-in solar panels for homes: பிரித்தானியாவில் வீடுகளுக்கு மின்சாரச் செலவை குறைக்கும் புதிய முயற்சி இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
...</summary>
            <content type="html"><![CDATA[<p>UK allows plug-in solar panels for homes: பிரித்தானியாவில் வீடுகளுக்கு மின்சாரச் செலவை குறைக்கும் புதிய முயற்சி இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
</p><p>
இங்கிலாந்து, ஸ்காட்லாந்து மற்றும் வேல்ஸ் பகுதிகளில் உள்ள குடும்பங்கள், 800 வாட் திறன் கொண்ட சோலார் பேனல் கிட்களை நேரடியாக வீட்டின் சாக்கெட்டில் இணைத்து மின்சாரம் உற்பத்தி செய்யலாம்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5df6b62c-5740-4b78-98de-46d7445fde4c/26-6a90bf9748679.webp' /></p><p>இந்த விதிமாற்றம் 27 ஆகஸ்ட் 2026 முதல் அமுலுக்கு வந்துள்ளது.</p><p> இதன் மூலம், வீடுகள் தங்களின் மின்சார தேவையின் 20 சதவீதம் வரை சோலார் மூலம் பூர்த்தி செய்ய முடியும். மேலும், வருடத்திற்கு 110 பவுண்டு வரை மின்சாரச் செலவை குறைக்கலாம் என எரிசக்தி பாதுகாப்பு மற்றும் நெட் சீரோ துறை தெரிவித்துள்ளது.
</p><p></p><p>இதுவரை, சோலார் பேனல்கள் நிறுவுவதற்கு ஆயிரக்கணக்கான பவுண்டுகள் செலவாகி, பெரும்பாலும் வீட்டு உரிமையாளர்களுக்கே மட்டுமே சாத்தியமாக இருந்தது. ஆனால், புதிய விதிமுறையால் வாடகை வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் சிறிய வீடுகளிலும் சோலார் பேனல்கள் பயன்படுத்தும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
</p><p>
இந்த சோலார் கிட்கள், இரண்டு பேனல்கள் வரை இணைக்கக்கூடிய 800 வாட் மைக்ரோ-இன்வெர்டரை கொண்டுள்ளன. பேனல்கள் உற்பத்தி செய்யும் DC மின்சாரத்தை, இன்வெர்டர் AC-ஆக மாற்றி, வீட்டின் சாதாரண மின்சார வலையமைப்பில் பயன்படுத்த முடியும்.</p><p>
</p><p></p><p>பிரித்தானிய எரிசக்தி செயலாளர் மியாட்டா ஃபான்புல்லா, “இந்த கோடைக்காலத்திலிருந்து, மேலும் பல குடும்பங்களுக்கு சுத்தமான, வீட்டிலேயே உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை பயன்படுத்தும் வாய்ப்பு கிடைக்கிறது. இது எளிமையானதும், மலிவானதும்” என தெரிவித்துள்ளார்.</p><p>

இந்த மாற்றத்தை வரவேற்றுள்ள பசுமை ஆற்றல் அமைப்புகள், “சோலார் மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றலை அனைவருக்கும் எளிதாகக் கிடைக்கச் செய்யும் முக்கிய முன்னேற்றம்” எனக் கூறியுள்ளன.</p><p>

பாதுகாப்பு விதிமுறைகளும் கடுமையாக உள்ளன. ஒவ்வொரு வீட்டிலும் ஒரு சோலார் கிட் மட்டுமே பயன்படுத்த அனுமதி உள்ளது. மேலும், நீட்டிப்பு வயர் அல்லது மல்டி-அடாப்டர்களில் இணைக்க முடியாது.
</p><p>
இந்த புதிய முயற்சி, பிரித்தானியாவில் சோலார் பயன்பாட்டை அதிகரித்து, எரிசக்தி தற்சார்பையும், குடும்பங்களின் செலவையும் குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-28T00:37:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[20 லொட்டரி டிக்கெட் வாங்கி 100,000 டொலர் வென்ற விர்ஜீனியா நபர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/virginia-man-wins-100000-usd-20-lottery-tickets-1787877583"></link>
            <id>https://news.lankasri.com/article/virginia-man-wins-100000-usd-20-lottery-tickets-1787877583</id>
            <summary type="text">Virginia man wins 100000 usd with 20 lottery tickets: 20 லொட்டரி டிக்கெட் வாங்கியவருக்கு 100,000 டொலர் பரிசு விழுந்துள்ளது.


அமெரிக்காவின் விர்ஜீன...</summary>
            <content type="html"><![CDATA[<p>Virginia man wins 100000 usd with 20 lottery tickets: 20 லொட்டரி டிக்கெட் வாங்கியவருக்கு 100,000 டொலர் பரிசு விழுந்துள்ளது.
</p><p>

அமெரிக்காவின் விர்ஜீனியா மாநிலத்தில் வாழும் ஒருவர், ஒரே லொட்டரி டிராவில் 20 ஒரே மாதிரியான டிக்கெட்டுகளை வாங்கி, மொத்தம் 100,000 டொலர் வென்றுள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0c1c77b3-1f00-427f-81e2-4a51c78e8b9b/26-6a90d8d17efc3.webp' /></p><p>Nelson County-யைச் சேர்ந்த அந்த நபர், Pick 4 லாட்டரி டிராவில் 2-1-0-4 என்ற எண்கள் வெற்றி பெறும் என நம்பினார்.</p><p> அதனால், ஜூலை 30-ஆம் திகதி Lynchburg நகரில் உள்ள Justis Convenient Store-இல் 20 டிக்கெட்டுகளை வாங்கினார்.
</p><p>
ஒவ்வொரு டிக்கெட்டும் 5,000 டொலர் பரிசுத் தொகையை பெற்றதால், மொத்தம் 100,000 டொலர் வெற்றி தொகையை அவர் பெற்றார்.</p><p>
</p><p></p><p>விர்ஜீனியா லொட்டரி அதிகாரிகளிடம் அவர் கூறியதாவது: “இந்த எண்கள் வெற்றி பெறும் என எனக்கு நல்ல உணர்வு இருந்தது. அதனால் தான் 20 டிக்கெட்டுகளை வாங்கினேன். கிடைத்த பரிசுத் தொகையை கட்டணங்களை செலுத்தவும், சேமிப்பை அதிகரிக்கவும் பயன்படுத்துவேன்” என தெரிவித்தார்.</p><p>

“Pick 4 லாட்டரி, தினசரி நடைபெறும் பிரபலமான டிரா. ஒரே எண்களை பல டிக்கெட்டுகளில் வாங்குவது அபாயகரமானது. ஆனால், வெற்றி பெற்றால் பரிசுத் தொகை பல மடங்கு அதிகரிக்கும்” என லொட்டரி அதிகாரிகள் கூறியுள்ளனர்.&nbsp;&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-28T00:36:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இரவிரவாக நடத்தப்பட்ட தாக்குதல் ; உக்ரைன் ஜனாதிபதி ஸெலென்ஸ்கியின் கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/zelenskyy-s-appeal-for-ukraine-1787877087"></link>
            <id>https://canadamirror.com/article/zelenskyy-s-appeal-for-ukraine-1787877087</id>
            <summary type="text">உக்ரைன் தலைநகா் கீவ் உள்பட 9 முக்கிய நகரங்களைக் குறிவைத்து, ரஷ்யா வியாழக்கிழமை அதிகாலை நடத்திய தீவிர ஏவுகணை, ட்ரோன் தாக்குதலில் ஒரு பெண் உள்பட இருவா் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>உக்ரைன் தலைநகா் கீவ் உள்பட 9 முக்கிய நகரங்களைக் குறிவைத்து, ரஷ்யா வியாழக்கிழமை அதிகாலை நடத்திய தீவிர ஏவுகணை, ட்ரோன் தாக்குதலில் ஒரு பெண் உள்பட இருவா் உயிரிழந்தனா்; 14-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா்.
</p><p>
கடந்த புதன்கிழமை இரவு தொடங்கி வியாழக்கிழமை காலை வரை நீடித்த இத்தாக்குதலில், உக்ரைன் ராணுவம் சாா்ந்த தொழிற்பேட்டைகள், எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள், துறைமுகங்கள் ஆகியவற்றை இலக்கு வைத்து தாக்கியதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/99f924f4-68a5-4578-925d-5ca9d0ffa872/26-6a90d6e153859.webp' /></p><h2>உட்கட்மைப்புகள் சேதம்&nbsp;</h2><p> </p><p>ஆனால், ரஷ்யாவின் தாக்குதலில் குடியிருப்புப் பகுதிகள், பள்ளிகள், தானியக் கிடங்குகள், மருத்துவமனைகளும் சேதமடைந்துள்ளன.</p><p>
உக்ரைனின் வான்பாதுகாப்பு அமைப்புகளைப் பலவீனப்படுத்தும் நோக்கில், ரஷ்யா இந்த மிகப் பெரிய வான்வழித் தாக்குதலை முன்னெடுத்துள்ளதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
</p><p>
இதையொட்டி, உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி மேலும் கூறுகையில், ‘ரஷ்யாவின் ‘பாலிஸ்டிக்’ ஏவுகணைகளை எதிா்கொள்ள, உக்ரைனுக்கு ‘பேட்ரியாட்’ வான் பாதுகாப்பு ஏவுகணைகள் உடனடியாகத் தேவைப்படுகிறது. </p><p>ஐரோப்பிய நாடுகள் இதை அமெரிக்காவிடம் இருந்து பெற்றுத் தரவேண்டும்’ என்று கோரிக்கை விடுத்தாா்.</p><p>

ரஷ்ய தாக்குதலுக்குப் பதிலடியாக, அந்நாட்டு எல்லைக்குள் உக்ரைன் ராணுவமும் நூற்றுக்கணக்கான தொலைதூர ட்ரோன்களை அனுப்பி, தாக்குதல் நடத்தியுள்ளது.</p><p> உக்ரைனின் 267 ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

இதனிடையே, அண்டை நாடான மால்டோவாவின் வான்வெளிக்குள் 5 ட்ரோன்கள் அத்துமீறி நுழைந்ததாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. </p><p>வியாழக்கிழமை சுதந்திர தினத்தைக் கொண்டாடிய மால்டோ நாட்டுக்கு உக்ரைன் அதிபா் ஸெலென்ஸ்கி பயணம் மேற்கொண்டதற்கு முன்னதாக இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது கூடுதல் கவனத்தை ஈா்த்துள்ளது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-28T00:31:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜனனி சொன்ன ஒரே வார்த்தை, செம ஷாக் ஆன ஈஸ்வரி.... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/ethirneechal-thodargiradhu-promo-28-aug-2026-1787852421"></link>
            <id>https://cineulagam.com/article/ethirneechal-thodargiradhu-promo-28-aug-2026-1787852421</id>
            <summary type="text">எதிர்நீச்சல் தொடர்கிறதுமுக்கோண கதையாக இப்போது&amp;nbsp;எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலின் கதைக்களம் செல்கிறது.ஜனனி, தனது சொந்த வாழ்க்கையை கூட கவனிக்காமல் த...</summary>
            <content type="html"><![CDATA[<h2>எதிர்நீச்சல் தொடர்கிறது</h2><p>முக்கோண கதையாக இப்போது&nbsp;எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலின் கதைக்களம் செல்கிறது.</p><p>ஜனனி, தனது சொந்த வாழ்க்கையை கூட கவனிக்காமல் தன்னை சுற்றியுள்ளவர்கள் வாழ்க்கை ஜெயிக்க வேண்டும் என போராடுபவர். தப்புக்கு மேல் தப்பு செய்த குணசேகரனை ஜெயிலுக்கு அனுப்பியே ஆக வேண்டும் என போராடும் ஜனனி.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6f46d183-3ae8-47a8-89b6-44459ae8d39b/26-6a9076875aaa0.webp' /></p><p>எவ்வளவு தான் தவறு செய்தாலும் சொத்தை கையில் வைத்துக்கொண்டு குடும்பத்தை மிரட்டிவரும் குணசேகரன் ஜனனியை எப்படியாவது அழித்தே ஆக வேண்டும் என என்னென்னமோ செய்து வருகிறார்.</p><p>தனது அம்மாவை கொன்று சொத்தை பிடுங்கிய குணசேகரன் மற்றும் அவரது குடும்பத்தை அழித்தே ஆக வேண்டும் என இருக்கும் ராவணன். இவர்கள் 3 பேரும் நகர்த்து காயில் யார் ஜெயிக்கப்போகிறார் என்பது தெரியவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/42f0f5d3-ee28-451a-b512-333c3a0f0222/26-6a9076880e2f9.webp' /></p><h2>புரொமோ</h2><p>தற்போது இன்றைய எபிசோடின் புரொமோ வெளியாகியுள்ளது. அதில் ஜனனி ராவணன் பற்றி வீட்டில் பேச ஆரம்பிக்க அந்த தம்பியை பற்றி நீ பேசக்கூடாது என குணசேகரன் தடுக்கிறார்.</p><p>உடனே ஜனனி இந்த வீட்டில் இருக்கும் பிரச்சனைகள் எல்லாம் தீர வேண்டும் என்றால் நீங்கள் ஜெயிலுக்கு போனால் தான் நல்லது என கூற ஈஸ்வரி செம ஷாக் ஆகிறார். இதோ புரொமோ,</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/-Lc2uOMDwoI" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-08-28T00:30:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[ட்ரம்பின் இளைய மகனை கொலை செய்ய திட்டம்! ஈரான் வெளியிட்டுள்ள அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/iran-denies-potential-plot-against-trump-s-son-1787863932"></link>
            <id>https://ibctamil.com/article/iran-denies-potential-plot-against-trump-s-son-1787863932</id>
            <summary type="text">அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் இளைய மகனான பெரொன் ட்ரம்பை (Barron Trump) கொலை செய்வதற்குச் சதித்திட்டம் தீட்டப்படுவதாக வெளியான செய்திகள் முற்றிலு...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் இளைய மகனான பெரொன் ட்ரம்பை (Barron Trump) கொலை செய்வதற்குச் சதித்திட்டம் தீட்டப்படுவதாக வெளியான செய்திகள் முற்றிலும் பொய்யானவை என
ஈரான் முற்றாக நிராகரித்துள்ளது.
</p><p>
 ஈரானின் பாதுகாப்பு தலைவர் மொஹ்சென் ரெஸாயி இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
</p><p>
லெபனான் ஊடகமொன்றுக்கு அளித்த சிறப்புப் பேட்டியில், இந்த விவகாரம் குறித்து பரப்பப்படும் தகவல்களில் எவ்வித உண்மையும் இல்லை என அவர் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.</p><p></p><h2>ஈரானின் விளக்கம்</h2><p>
முன்னதாக, அமெரிக்க ஜனாதிபதியின் 18 வயதான இளைய மகன் பெரொன் ட்ரம்பைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்துவது குறித்து ஈரானிய அரசு தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட காணொளிப்பதிவு தொடர்பாகத் தங்களுக்குத் தெரியவந்துள்ளதாக அமெரிக்க ரகசிய சேவை அமைப்பு தெரிவித்திருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e943b9d0-aee2-4832-85a7-23e72df359f0/26-6a90a6ac65620.webp' /></p><p> </p><p>

இந்த செய்தி சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையிலேயே, ஈரானிய தரப்பிலிருந்து இந்த விளக்கமும் மறுப்பும் வெளியாகியுள்ளது.&nbsp; </p><p>&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...! '</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-28T00:30:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹோர்முஸ் நீரிணையில் எண்ணெய் தாங்கிக் கப்பலின் மீது ஏவுகணை தாக்குதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/missile-attack-on-oil-tanker-in-strait-of-hormuz-1787875810"></link>
            <id>https://canadamirror.com/article/missile-attack-on-oil-tanker-in-strait-of-hormuz-1787875810</id>
            <summary type="text">ஹோர்முஸ் நீரிணையில் அடையாளம் தெரியாத ஏவுகணை தாக்கியதில் எண்ணெய் தாங்கிக் கப்பல் ஒன்றில் ஏற்பட்ட தீ அணைக்கப்பட்டதாக இங்கிலாந்து கடல்சார் வர்த்தகப் பணிக...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹோர்முஸ் நீரிணையில் அடையாளம் தெரியாத ஏவுகணை தாக்கியதில் எண்ணெய் தாங்கிக் கப்பல் ஒன்றில் ஏற்பட்ட தீ அணைக்கப்பட்டதாக இங்கிலாந்து கடல்சார் வர்த்தகப் பணிகள் (UKMTO) அமைப்பு தெரிவித்துள்ளது.</p><p>

நேற்றைய தினத்தில் உள்ளூர் அதிகாரிகளால் இந்தச் சம்பவம் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4d61e73c-97b4-48f1-929b-6bceaa074b82/26-6a90d1e40b1cd.webp' /></p><p>
</p><p>
சம்பவத்தில், உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

இந்தப் பகுதியில் பிராந்திய அச்சுறுத்தல் நிலை தீவிரமாக உள்ளதாகக் குறிப்பிட்டுள்ள UKMTO, ஹோர்முஸ் நீரிணையில் செல்லும் கப்பல்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும் சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகள் குறித்து முறையிடுமாறும் அறிவுறுத்தியுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-28T00:10:17+00:00</updated>
        </entry>
    </feed>
