<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-09-09T06:36:49+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[இன்பத்திலும் துன்பத்திலும் இலங்கையுடன் துணை நிற்போம் - கொழும்பில் ராஜ்நாத் சிங் உறுதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/rajnath-singh-say-india-always-stand-with-srilanka-1788935597"></link>
            <id>https://news.lankasri.com/article/rajnath-singh-say-india-always-stand-with-srilanka-1788935597</id>
            <summary type="text">இன்பத்திலும் துன்பத்திலும் இலங்கையுடன் துணை நிற்போம் என கொழும்பு சென்றுள்ள இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியுள்ளார். 

இலங்கை வந்த ராஜ்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இன்பத்திலும் துன்பத்திலும் இலங்கையுடன் துணை நிற்போம் என கொழும்பு சென்றுள்ள இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியுள்ளார். </p><h3>

இலங்கை வந்த ராஜ்நாத் சிங்</h3><p> 

இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் 3 நாள் அரசுமுறை பயணமாக இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fb043bfe-fa37-4707-8b4a-e9a0e9860de7/26-6aa0fdaf29a42.webp' /></p><p>
38 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சர் ஒருவர் இலங்கை வருகை தந்துள்ளார். </p><p>

கடைசியாக ராஜிவ்காந்தி அமைச்சரவையில் பாதுகாப்பு அமைச்சராக இருந்த கே.சி. பந்த் 1988 ஆம் ஆண்டில் பேச்சுவார்த்தைகளுக்காக இலங்கை சென்றார்.</p><p> 

2023 ஆம் ஆண்டில் ராஜ்நாத் சிங் இலங்கை வர திட்டமிட்டிருந்த போது, இலங்கை துறைமுகத்துக்கு சீன உளவுக் கப்பல் வந்ததற்கு இந்தியா கடும் அதிருப்தி தெரிவித்ததால் அந்த கொழும்பு பயணம் ரத்தானது. </p><h3>

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவு</h3><p>

அங்குள்ள இந்திய வம்சாவளியினரிடையே உரையாற்றிய ராஜ்நாத் சிங், "ஆன்மிகமும் கலாசாரமும் இரண்டறக் கலந்த இலங்கை மண்ணில் உங்களைச் சந்திப்பதில் பெருமையடைகிறேன். 

தமிழ் மொழி மற்றும் அதன் பண்பாடு, வளர்ச்சி மீது பிரதமர் நரேந்திர மோடியும் நாங்களும் மிகுந்த மதிப்பு வைத்துள்ளோம்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8cbf0f67-cb7d-4589-aea9-fa47188c84bf/26-6aa0fdafd40d7.webp' /></p><p>

நேர்மையான ஆட்சியின் அடையாளமாக நாடாளுமன்றத்தில் "செங்கோல்' நிறுவப்பட்டதும், திருவள்ளுவர், பாரதியாரின் கொள்கைகளை நாடு முழுவதும் கொண்டு சேர்ப்பதும் தமிழ்ப் பாரம்பரியத்துக்கு மத்திய அரசு அளிக்கும் உயர் மரியாதையாகும்.
</p><p>
இந்தியாவின் எல்லைகள் இன்று முற்றிலும் பாதுகாப்பாக உள்ளன. நாம் யாரையும் முதலில் தாக்க மாட்டோம். ஆனால், நம்மைத் தாக்கத் துணிந்தால் விட்டுவைக்கவும் மாட்டோம் என்ற நமது கொள்கை மிகவும் தெளிவாக உள்ளது.&nbsp;</p><p></p><p>
தற்சார்பு பாரதம் திட்டத்தால் இந்தியா சொந்தமாக ஆயுதங்களைத் தயாரிக்கிறது. தமிழகத்தில் அமைக்கப்படும் "பாதுகாப்புத் தொழில்வழித்தடம்' நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதோடு தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பையும் அளிக்கிறது.
</p><p>
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவு, பகிரப்பட்ட வரலாறு, கலாச்சாரம் மற்றும் நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டது. இன்பத்திலும் துன்பத்திலும் இலங்கையுடன் துணை நிற்போம். மேலும் இரு நாடுகளின் அமைதி, செழிப்பு மற்றும் வளர்ச்சிக்கு உறுதியுடன் இருக்கிறோம்.
</p><p>
இரு நாடுகளும் நெருங்கிய கலாச்சார மற்றும் நாகரிகப் பிணைப்புகளைப் பகிர்ந்து கொள்கின்றன. அவை இருதரப்பு உறவின் வளர்ச்சிக்கு ஒரு வலுவான அடித்தளத்தை வழங்கியுள்ளன.&nbsp;</p><p> 2014 ஆம் ஆண்டில் சுமார் 2 டிரில்லியன் டொலர் மதிப்புடையதாக இருந்த இந்தியாவின் பொருளாதாரம், கடந்த பத்தாண்டுகளில் இரட்டிப்பாகி சுமார் 4 டிரில்லியன் டொலராக உயர்ந்துள்ளது. </p><p>

2014 ஆம் ஆண்டுக்கு முன்பு 4 நாடுகளுடன் மட்டுமே தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்கள் செய்யப்பட்டிருந்த நிலையில், கடந்த 12 ஆண்டுகளில் இந்தியா 38 நாடுகளுடன், 8 முக்கிய நாடுகளுடனான தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்கள் உட்பட, வர்த்தக ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளது" என தெரிவித்துள்ளார்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-09T06:34:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[அப்பத்தாவுக்கு எதிராக ஒன்று கூடும் அம்மாக்கள், நடக்கப் போவது என்ன? - வாகை சூடவா இன்றைய எபிசோட் அப்டேட்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/zee-tamizh-vaagai-sooda-vaa-serial-latest-episode-1788935046"></link>
            <id>https://cineulagam.com/article/zee-tamizh-vaagai-sooda-vaa-serial-latest-episode-1788935046</id>
            <summary type="text">வாகை சூடவாதமிழ் சின்னத்திரையில் Zee தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் வாகை சூடவா. இந்த...</summary>
            <content type="html"><![CDATA[<h2>வாகை சூடவா</h2><p>தமிழ் சின்னத்திரையில் Zee தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் வாகை சூடவா. </p><p>இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ஜீவா மீனாட்சி நெருக்கத்தை பார்த்து ஆதி கடுப்பான நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

அதாவது, மனோ தேன்மொழியை நினைத்து வருத்தத்தில் இருக்கிறான்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7eeb8d59-f1ad-4d70-b0c4-3ce63e1c86b0/26-6aa0fc1db953c.webp' /></p><p> </p><p>மேலும் தேன்மொழிக்கு எப்படி ஒரு நல்ல புருஷன் ஆக இருக்க வேண்டும் என நினைத்து பார்த்து வருந்துகிறான்.

மறுபக்கம் தேன்மொழியும் வருத்தமாக இருக்க மீனாட்சி அதை பார்த்துவிட்டு கண்டும் காணாமல் செல்ல தேன்மொழி எதுவுமே கேட்காம போற என்று கேட்க இது புருஷன் நெனச்சு வருத்தமா இருப்ப.. </p><p>அதை எதுக்கு நான் கேட்கணும் உன்னை பிரிச்சு கூட்டிட்டு வந்தது நான் தானே என்று சொல்கிறாள். 

பிறகு மனோ தேன்மொழிக்கு போன் செய்ய மீனாட்சி போனை பிடுங்கி ஏதாச்சும் பேசுனா.. அவ்வளவு தான் என போன் வாங்கி மனோவிடம் கோபப்பட்டு பேசிவிட்டு வைத்து விடுகிறாள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9ac0ddeb-6e4f-4355-99ea-34313fb20386/26-6aa0fc1ea825d.webp' /></p><p> 

அதன் பிறகு சக்தி மனோ வருத்தமாக இருப்பதை பார்த்து சுமதிக்கு போன் செய்து அப்பத்தாவுக்கு தெரியாம மனோவை நான் கோவிலுக்கு கூட்டிட்டு வரேன். நீங்கள் என் மீனாட்சிக்கு தெரியாமல் தேன்மொழியை கோவிலுக்கு கூட்டிட்டு வாங்க..</p><p> ரெண்டு பேரும் சந்திச்சு பேசி ஒரு முடிவு எடுக்கட்டும் என்று சொல்கிறாள். </p><p>

அங்கே சக்தி அப்பத்தாவுக்கு தெரியாமல் மனோவை அழைத்துக் கொண்டு கோவிலுக்கு கிளம்ப இங்கே சுமதி மீனாட்சியிடம் பொய் சொல்லி தடுமாற ஜீவா மீனாட்சி அழைத்துக் கொண்டு வெளியே சென்றுவிட சுமதி தேன்மொழி அழைத்துக்கொண்டு கோவிலுக்கு கிளம்புகிறார். </p><p>

இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய வாகை சூடவா சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-09T06:30:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[முகநூலில் தவறான தொழிலை ஊக்குவித்த இளைஞர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/18-year-old-arrested-for-promoting-work-facebook-1788933447"></link>
            <id>https://tamilwin.com/article/18-year-old-arrested-for-promoting-work-facebook-1788933447</id>
            <summary type="text">சமூகவிரோத நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் வாட்ஸ்அப் மற்றும் ஃபேஸ்புக் குழுக்களை நடத்தி வந்த 18 வயது இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குற்றப் புலனாய்வுத் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சமூகவிரோத நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் வாட்ஸ்அப் மற்றும் ஃபேஸ்புக் குழுக்களை நடத்தி வந்த 18 வயது இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>

குற்றப் புலனாய்வுத் துறையின் இணையக்கண்காணிப்பு மற்றும் புலனாய்வுப்பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
இதேவேளை, மேலும் பல சமூக ஊடகக்குழுக்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.</p><h2>குடும்ப உறுப்பினர்களை பற்றிய திரிபுபடுத்தப்பட்ட கருத்து</h2><p>
</p><p>
மேலும், அவற்றில் ஈடுபட்டுள்ள அனைவரும் எதிர்காலத்தில் கைது செய்யப்படுவார்கள் என்று குற்றப்புலனாய்வுத்துறை தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ab8d0b21-6153-4ebe-88a5-9a6ae3a9831c/26-6aa0fc5adb39a.webp' />&nbsp;</p><p>
</p><p>
சமூக விரோத பாலியல் நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் பல சமூக ஊடகக்குழுக்கள் இருப்பதாக குற்றப் புலனாய்வுத்துறையின் இணையக் கண்காணிப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின்படி, நடத்தப்பட்ட விசாரணைகளில் இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
இந்த குழுக்களில் ஈடுபட்டவர்கள் தங்கள் சொந்த குடும்ப உறுப்பினர்களை பற்றியே திரிபுபடுத்தப்பட்ட கருத்துக்களை வெளிப்படுத்தியிருந்ததும் தெரியவந்துள்ளது.</p><p>

குறித்த விசாரணைகளின் போது வெளிப்பட்ட தகவல்களின் அடிப்படையில், சமூக ஊடகக்குழுவை நடத்தி வந்த ஒருவர் வெயங்கொட பகுதியில் புலனாய்வு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-09T06:30:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[சாதாரண குடிமக்களா.. மன்னரின் அறிவிப்பால் ஆச்சரியமடைந்தோம் - ஹரி, மேகன் தம்பதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/king-s-letter-surprised-said-by-harry-and-meghan-1788868391"></link>
            <id>https://news.lankasri.com/article/king-s-letter-surprised-said-by-harry-and-meghan-1788868391</id>
            <summary type="text">Harry and Meghan says king&#039;s letter surprised: அரச குடும்பத்தாராக இல்லாமல் சாதாரண குடிமக்களாக நடத்தப்படுவீர்கள் என்ற மன்னரின் அறிவிப்பினால் தாங்கள் ஆச...</summary>
            <content type="html"><![CDATA[<p>Harry and Meghan says king's letter surprised: அரச குடும்பத்தாராக இல்லாமல் சாதாரண குடிமக்களாக நடத்தப்படுவீர்கள் என்ற மன்னரின் அறிவிப்பினால் தாங்கள் ஆச்சரியமடைந்ததாக ஹரி, மேகன் தெரிவித்துள்ளனர்.
</p><p>
பிரித்தானிய இளவரசர் ஹரி மற்றும் மேகன் சாதாரண குடிமக்களாக நடத்தப்படுவார்கள் என்ற மன்னரின் அறிவிப்பால் ஆச்சரியமடைந்துள்ளனர்.&nbsp;</p><h2>பிரதிநிதித்துவப்படுத்தக் கூடாது</h2><p>
அரச குடும்பத்தில் இருந்து இளவரசர் ஹரி வெளியேறியதைத் தொடர்ந்து அவருக்கு சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டன.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d362355c-b2fd-4eed-8505-c3b7fb471210/26-6a9ff89b1a159.webp' />
</p><p>
</p><p>

அதன் அடிப்படையில் ஹரியும், மேகனும் இனி அரசு குடும்பத்தை பிரதிநிதித்துவப்படுத்தக் கூடாது என்று கூறப்பட்டது.&nbsp;</p><p>

பிரித்தானியாவிற்கு திரும்பியுள்ள ஹரி மற்றும் மேகன் சாதாரண குடிமக்களாகவே நடத்தப்படுவார்கள் என்று மன்னர் சார்லஸ் அறிவிப்பு மூலம் உறுதி செய்தார்.
</p><h2>
ஆச்சரியமாக இருக்கிறது&nbsp;</h2><p>இந்த நிலையில் ஹரி, மேகன் தம்பதியின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் இதுகுறித்து முன்கூட்டியே தெரிவிக்கப்படவில்லை; இது சற்று ஆச்சரியமாக இருக்கிறது என்று கூறியுள்ளார்.
</p><p>

மேலும், மன்னரின் அறிவிப்பு வெளியிடப்பட்டது தம்பதியினருக்கு எதிர்பாராத ஒன்றாக அமைந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
</p><p>
பிரித்தானிய தம்பதியரின் புதிய வாழ்க்கைக்கான திட்டங்கள் குறித்து, அவர்களுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊடகங்களுக்கு மீண்டும் மீண்டும் விளக்கமளித்ததைத் தொடர்ந்து இது வந்துள்ளது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7ebe61a6-dc07-4bb8-99ad-e6281f2c32d2/26-6a9ff89c12d29.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-09T06:30:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[முறையான நீதியை தள்ளிவைக்கும் பயங்கரவாதத்தடைச்சட்டம்! ஐ.நா கடும் கண்டனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/prevention-terrorism-act-delays-due-process-of-law-1788933664"></link>
            <id>https://ibctamil.com/article/prevention-terrorism-act-delays-due-process-of-law-1788933664</id>
            <summary type="text">இலங்கையில் முக்கிய வழக்குகள் குறித்த குற்றவியல் விசாரணைகள் தொடர்ந்து தாமதமடைவதாக ஐக்கிய நாடுகள் சபை கண்டனம் தெரிவித்துள்ளது.&amp;nbsp;ஐக்கிய நாடுகள் சபையி...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் முக்கிய வழக்குகள் குறித்த குற்றவியல் விசாரணைகள் தொடர்ந்து தாமதமடைவதாக ஐக்கிய நாடுகள் சபை கண்டனம் தெரிவித்துள்ளது.&nbsp;</p><p>ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கை தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.&nbsp;</p><p>மேலும் குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாவது,&nbsp;</p><p></p><h2>ஐக்கிய நாடுகள் சபை அறிக்கை</h2><p>ஏற்கனவே அளிக்கப்பட்ட வாக்குறுதிக்கு அமைவாக சட்டமா அதிபர் திணைக்களத்திலிருந்து வேறுபட்ட சுயாதீன வழக்குத்தொடுநர் அலுவலகம் இன்னமும் ஸ்தாபிக்கப்படவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bcdf8481-2612-4036-8ac0-49668cd78625/26-6aa0fbc25243e.webp' /></p><p>

 பயங்கரவாதத்தடைச்சட்டம் தொடர்ந்து பிரயோகிக்கப்படுவதாகவும், இதன் விளைவாக நியாயமான வழக்கு விசாரணை, முறையான நீதிமன்ற மேற்பார்வை என்பன உள்ளடங்கலாக நபர்களின் அடிப்படை உரிமைகள் மீறப்படுவதாகவும் சுட்டிக்காட்டிய அவர், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பாதிக்கப்பட்ட தரப்பினர், அவர்களது குடும்பத்தினர், சிவில் செயற்பாட்டாளர்களை இலக்குவைத்து கண்காணிப்பு நடவடிக்கைகள் தொடர்கிறது.&nbsp;</p><p>

அதேபோன்று அண்மைய காலங்களில் பல்வேறு பகுதிகளிலும் மனிதப்புதைகுழிகள் கண்டறியப்பட்டுள்ள நிலையில், காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் மீது மக்கள் நம்பிக்கை இழந்திருப்பதுடன், வலிந்து காணாமலாக்கப்பட்டோருக்கு என்ன நேர்ந்தது என்ற கேள்வி இன்னமும் பதிலின்றித் தொடர்கிறது.&nbsp;</p><p>இவ்வாறானதொரு பின்னணியில் காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் மீது மக்களின் நம்பிக்கையை மீளக்கட்டியெழுப்பும் வகையில் அதனைப் பலப்படுத்தவேண்டும்.</p><p>யுத்தகாலத்தில் இடம்பெற்ற பாலியல் வன்முறைகள் தொடர்பில் தாம் வெளியிட்ட அறிக்கையை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது.&nbsp;</p><p>'2026 ஆம் ஆண்டுக்கான வரவு, செலவுத்திட்டத்தின் பிரகாரம் நாட்டின் வருமானத்தில் 82 சதவீதமானவை ஏற்கனவே பெற்ற கடன்களை மீளச்செலுத்துவதற்காக ஒதுக்கப்பட்டுள்ளன. </p><p>எனவே சுகாதாரம், கல்வி மற்றும் இயற்கை அனர்த்தங்களால் சீர்குலைந்த நாட்டை மீளக்கட்டியெழுப்புதல் என்பவற்றுக்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்யப்படாமை தீவிர கரிசனைக்குரிய விடயமாகும். </p><p>இவ்விடயங்களுக்கும், குறிப்பாக மலையக சமூகத்தின் மேம்பாட்டுக்குமான நிதி ஒதுக்கீடு அவசியமாகும். </p><p>மேலும் இதயசுத்தியுடனான நீதி, பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்க செயன்முறைக்கு அவசியமான ஒத்துழைப்பை வழங்குவதற்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை தயாராக இருக்கிறது' என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-09T06:25:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் ஒரு நாள் பணிப்புறக்கணிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/university-lecturers-launch-one-day-strike-1788934858"></link>
            <id>https://jvpnews.com/article/university-lecturers-launch-one-day-strike-1788934858</id>
            <summary type="text">அரசாங்கப் பல்கலைக்கழகக் கல்வி முறையில் நிலவும் கடுமையான நெருக்கடிகளுக்குத் தீர்வு கோரி, பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கம் இன்று (09) ஒரு நாள் அடையாள...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">அரசாங்கப் பல்கலைக்கழகக் கல்வி முறையில் நிலவும் கடுமையான நெருக்கடிகளுக்குத் தீர்வு கோரி, பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கம் இன்று (09) ஒரு நாள் அடையாளப் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளது.
</p><p style="text-align: justify; ">
விரிவுரையாளர்களுக்கான வெற்றிடங்கள் மற்றும் போதிய தகுதியுள்ள கல்விசார் பணியாளர்கள் இன்மை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கடந்த வாரமும் தொடர்ச்சியான தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக சங்கத்தின் செயலாளர் சிரேஷ்ட&nbsp; தெரிவித்துள்ளார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f5afecc5-8951-479c-829b-06b346eea03b/26-6aa0facb99236.webp' /></p><h2 style="text-align: justify; ">நெருக்கடி நிலை</h2><p>
</p><p style="text-align: justify; ">
நிலவும் வளப் பற்றாக்குறை காரணமாக 2025 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை எழுதிய மாணவர்களைப் பல்கலைக்கழகங்களில் உள்வாங்க முடியாத நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
புதிய பல்கலைக்கழகங்களை உருவாக்குவதை விட, தற்போதுள்ள 17 பல்கலைக்கழகங்களின் தரத்தைப் பேணிப் பாதுகாப்பதே அரசாங்கத்தின் முன்னுரிமையாக இருக்க வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "><br></p>]]></content>
            <updated>2026-09-09T06:23:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[உள்ளக பொறிமுறைக்கே ஆதரவளியுங்கள் என ஜெனிவாக் கூட்டத் தொடரில் இலங்கை வலியுறுத்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-lanka-s-assertion-at-the-geneva-session-1788933189"></link>
            <id>https://tamilwin.com/article/sri-lanka-s-assertion-at-the-geneva-session-1788933189</id>
            <summary type="text">ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தால் முன்னெடுக்கப்பட்டு
வரும் கடந்த கால மீறல்கள் தொடர்பான ஆதாரங்களைத் திரட்டுதல் உள்ளிட்ட எந்தவொரு...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தால் முன்னெடுக்கப்பட்டு
வரும் கடந்த கால மீறல்கள் தொடர்பான ஆதாரங்களைத் திரட்டுதல் உள்ளிட்ட எந்தவொரு
வெளியகப் பொறிமுறையையும் இலங்கை அரசாங்கம் முற்றாக நிராகரிக்கின்றது என ஜெனிவாவுக்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி சுமித் திஸாநாயக்க
தெரிவித்தார்.
</p><p>
ஜெனிவாவில் நேற்றுமுன்தினம் ஆரம்பமான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின்
63 ஆவது கூட்டத் தொடரில் நேற்றைய அமர்வின்போது 'இலங்கையில் நல்லிணக்கம்,
பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துதல்' தொடர்பில்
அடையப்பட்டுள்ள முன்னேற்றங்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள்
உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க்கின் எழுத்து மூல அறிக்கை பிரதி உயர்ஸ்தானிகர்
அவா டபோவினால் வாசிக்கப்பட்டது.</p><p>

அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்ட விடயங்களுக்குப் பதிலளித்து இலங்கை
அரசாங்கத்தின் சார்பில் உரையாற்றும்போதே நிரந்தர வதிவிடப் பிரதிநிதி சுமித்
திஸாநாயக்க மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.</p><h2>வெளியகப் பொறிமுறை</h2><p>
</p><p>
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் பிரகாரம்
முன்னெடுக்கப்பட்டுவரும் ஆதாரங்களைத் திரட்டும் வெளியகப் பொறிமுறையானது
இனங்களைத் துருவமயப்படுத்துவதுடன், நாட்டுக்குள் தேவையற்ற பிளவுகளைத்
தோற்றுவிக்கும். எனவே, இத்தகைய பொறிமுறைகள் தேசிய செயன்முறைகளைப்
பலவீனப்படுத்தும் என்பதால் அவற்றை நாம் நிராகரிக்கின்றோம்.</p><p>

நல்லிணக்கத்தையும் சுபீட்சத்தையும் அடைவதற்கான தேசிய பொறிமுறைக்கே ஐ.நா. மனித
உரிமைகள் பேரவை தனது ஆதரவை வழங்க வேண்டும்.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையுடன் இலங்கை அரசு வெளிப்படைத்தன்மையுடனும்
ஒத்துழைப்புடனும் இணைந்து செயலாற்றி வருகின்றது. அதேவேளை, தேசிய ரீதியிலான
உள்ளகப் பொறிமுறைகளையே நாம் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றோம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/75619318-1c23-4213-8b63-6230fba46a18/26-6aa0fad3b5e1d.webp' /></p><p> </p><p>அதற்கமைவாக,
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கிவிட்டுப் புதிதாகக் கொண்டுவரப்படவுள்ள
சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. அடுத்த மாதம் அது
நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும். நிகழ்நிலைக் காப்புச் சட்டத்தில்
மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்களும் முழுமையாகப் பூரணப்படுத்தப்பட்டுள்ளன.</p><h2>அரசாங்கத்தின் முற்போக்கான நடவடிக்கை</h2><p>
</p><p>
காணாமல்போனோர் பற்றிய அலுவலகம், இழப்பீட்டுக்கான அலுவலகம் மற்றும் தேசிய
ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அலுவலகம் ஆகியவை அவற்றுக்கு வழங்கப்பட்டுள்ள
ஆணைக்கு அமைவாகத் தீவிரமாக இயங்கி வருகின்றன.
</p><p>
மேலும், உள்நாட்டு யுத்தக் காலத்தில் முறையான ஆவணங்களின்றி இந்தியாவுக்குச்
சென்றவர்களை மீண்டும் நாட்டுக்கு அழைத்து வருவதற்குரிய நடவடிக்கைகள்
முன்னெடுக்கப்பட்டுள்ளன.
</p><p>
வரலாற்றில் முதன்முறையாக மலையக மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதை
இலக்காகக் கொண்டு அரசாங்கம் முற்போக்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது.
</p><p>
அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம் ஆட்சிப்பீடமேறி இரண்டு ஆண்டுகள்
பூர்த்தியடைந்துள்ள நிலையில், டித்வா சூறாவளி மற்றும் உலகளாவிய நெருக்கடி நிலை
போன்ற பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும் நாட்டின் பொருளாதாரத்தை முன்னோக்கி
நகர்த்தி வெற்றிகரமான உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது என்றார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-09T06:21:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவுக்கு எதிராக அமெரிக்கா புதிய தடைகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/us-imposes-new-sanctions-against-canada-1788934885"></link>
            <id>https://canadamirror.com/article/us-imposes-new-sanctions-against-canada-1788934885</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பல்வேறு வகையான மதுபானங்கள், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் பால் பொருட்கள் ஆகியவற்றுக்கு அமெரிக்கா செவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பல்வேறு வகையான மதுபானங்கள், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் பால் பொருட்கள் ஆகியவற்றுக்கு அமெரிக்கா செவ்வாய்க்கிழமை (08) தடை விதித்தது.
</p><p>
அமெரிக்காவின் இந்த நடவடிக்கை இரு நாடுகளிடையே ஏற்கனவே கசப்பான நிலையில் இருந்த வர்த்தக மோதலைத் தீவிரப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6dca3e36-5ebe-4c4e-8648-1d0196149a78/26-6aa0fae6c09d1.webp' /></p><h2>கனடாவின் பதிலடி நடவடிக்கை</h2><p> </p><p>

செவ்வாய்க்கிழமை நள்ளிரவுக்குப் பின்னர் அமெரிக்கப் பொருட்கள் மீதான கனடாவின் பதிலடி நடவடிக்கையாக விதிக்கப்பட்ட மேலதிக வரிகள் நடைமுறைக்கு வந்ததைத் தொடர்ந்து, வெள்ளை மாளிகையின் இணையதளத்தில் வெளியிடப்பட்ட இந்த இறக்குமதித் தடைகள் செப்டம்பர் 29 அன்று அமுலுக்கு வருகின்றன.</p><p>

பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, கடந்த மாதம் சுமார் 20 பில்லியன் டொலர் மதிப்பிலான கனடியப் பொருட்கள் மீது அமெரிக்கா 50% சுங்க வரியை விதித்திருந்ததைத் தொடர்ந்தே கனடாவும் இந்த வரிகளை விதித்தது.
</p><p>
மேலும், கனடாவின் மிகப்பெரிய வர்த்தகப் பங்காளியுடனான உறவைக் குறைத்துக்கொள்ளுமாறு கனேடியப் பிரதமர் மார்க் கார்னி வலியுறுத்தவும், அமெரிக்கா-மெக்சிகோ-கனடா ஒப்பந்தத்தின் சாத்தியத்தன்மை குறித்த சந்தேகங்களை எழுப்பவும் இது வழிவகுத்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-09T06:18:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் விசித்திர உடையில் சிறுமியை துரத்திய நபருக்கு வலைவீச்சு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/bc-teen-chased-by-someone-wearing-cat-in-the-hat-1788934264"></link>
            <id>https://canadamirror.com/article/bc-teen-chased-by-someone-wearing-cat-in-the-hat-1788934264</id>
            <summary type="text">கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாநிலத்தில் உள்ள வெஸ்ட் கெலோனா பகுதியில், &#039;கேட் இன் த ஹேட்&#039; கதாபாத்திர உடையில் வந்து சிறுமி ஒருவரைத் துரத்திய நபரை கனடிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாநிலத்தில் உள்ள வெஸ்ட் கெலோனா பகுதியில், 'கேட் இன் த ஹேட்' கதாபாத்திர உடையில் வந்து சிறுமி ஒருவரைத் துரத்திய நபரை கனடிய பொலிஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.</p><p>
ஆகஸ்ட் 24 இரவு சுமார் 9.00 மணியளவில் ஷாம்ரோக் டிரைவ் பகுதியில் நடந்து சென்ற சிறுமி ஒருவரை, விசித்திர உடையணிந்த நபர் துரத்தியுள்ளார்.</p><p>
பாதிக்கப்பட்ட சிறுமி பாதுகாப்பாக வீட்டிற்குச் சென்று சேர்ந்த நிலையில், சந்தேகநபர் யார் என்று இதுவரை அடையாளம் காணப்படவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/32b02503-2c62-496e-81ef-5e6d4ebf3b71/26-6aa0f87a0e881.webp' /></p><p>
</p><p>இரவு வேளையில் சிவப்பு மற்றும் வெள்ளை நிறக் கோடுகள் போட்ட தொப்பியுடன் கூடிய 'கேட் இன் த ஹேட்' ஆடை அணிந்து நபர் ஒருவர் நிற்கும் புகைப்படத்தை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.
இந்தச் சம்பவத்தை ஒரு "கவலைக்குரிய விளையாட்டுச் செயலாக" பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
</p><p>இத்தகைய உடைகளை அணிவது குற்றமில்லை என்றாலும், மற்றொரு நபருக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் பின்தொடர்வது குற்றவியல் துன்புறுத்தலாக கருதப்படும் எனப் பொலிஸார் தெளிவுபடுத்தியுள்ளனர்.</p><p>
விளையாட்டாகச் செய்திருந்தாலும், ஒரு சிறுமியைப் பின்தொடர்ந்து அவருக்கு அச்சத்தை ஏற்படுத்துவது மிகவும் கவலைக்குரியது. இத்தகைய கேலிச் செயல்கள் தீவிரமான விளைவுகளை ஏற்படுத்தும் என பொலிஸ் அதிகாரி டெவோன் கெரிட்ஸ் எச்சரித்துள்ளார்.
</p><p>சம்பவப் பகுதியில் பொருத்தப்பட்டுள்ள பாதுகாப்பு கேமராக்கள் அல்லது வாகனங்களின் டேஷ்கேம் பதிவுகள் வைத்திருப்போர் உடனடியாகத் தம்மைத் தொடர்புகொள்ளுமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.</p><p>
குழந்தைகள் தங்களை யாராவது பின்தொடர்வதாக உணர்ந்தால், உடனடியாக மக்கள் நடமாட்டம் உள்ள பாதுகாப்பான இடத்திற்குச் செல்ல வேண்டும் எனவும், ஆபத்தான சூழலில் 911 என்ற அவசர எண்ணிற்கு அழைக்க வேண்டும் எனவும் பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-09T06:14:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[38 ஆண்டுகளுக்குப் பின் நடந்த சம்பவம்..! இந்திய பாதுகாப்பு அமைச்சர் - அநுர சந்திப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/indian-defence-minister-meets-the-president-anura-1788933353"></link>
            <id>https://ibctamil.com/article/indian-defence-minister-meets-the-president-anura-1788933353</id>
            <summary type="text">இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை சந்தித்துள்ளார்.இந்த சந்திப்பு...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை சந்தித்துள்ளார்.</p><p>இந்த சந்திப்பு இன்று (09) ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.&nbsp;&nbsp;</p><p>
</p><p>ஜனாதிபதியுடனான சந்திப்பின் போது, இந்தியா மற்றும் இலங்கை இடையே 03 ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்திருந்தார்.</p><p><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="ta" dir="ltr">கொழும்பில் இன்றைய தினம் இலங்கை ஜனாதிபதி அதி மேதகு அனுர குமார திசாநாயக்க அவர்களுடன், மிகவும் ஆக்கபூர்வமான சந்திப்பினை மேற்கொண்டிருந்தேன். பிரதமர் ஶ்ரீ நரேந்திர மோடி அவர்களது வாழ்த்துகளை அவருடன் பகிர்ந்துகொண்டதுடன், அவரது அரசாங்கம் இரண்டு வருடங்களை நிறைவு செய்தமையையிட்டு அவருக்கு… <a href="https://t.co/ffdck1kFcO">https://t.co/ffdck1kFcO</a></p>&mdash; Rajnath Singh (@rajnathsingh) <a href="https://x.com/rajnathsingh/status/2097568031757181404?ref_src=twsrc%5Etfw">September 9, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p></p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">இந்திய - இலங்கை பாதுகாப்பு ஒத்துழைப்பு</span></p><p>இந்த விஜயத்தின் போது இந்திய பாதுகாப்பு அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயர் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்த (ஓய்வு) உள்ளிட்ட பலரையும் சந்திக்கவுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/86911acf-2b0d-423f-9dd3-e5f6b4443c57/26-6aa0f83c3d4fa.webp' /></p><p>

 

கடந்த ஆண்டு இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்தின் போது கையெழுத்திடப்பட்ட இந்திய - இலங்கை பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவது குறித்தும் இந்த விஜயத்தின் போது மீளாய்வு செய்யப்படவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p>

 

38 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய பாதுகாப்பு அமைச்சர் ஒருவர் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்வது ஒரு சிறப்பு அம்சமாகும்.</p><p>மேலும் அவர் நாளை (10) காலை நுவரெலியா சீதையம்மன் கோவிலுக்கு விஜயம் செய்யவுள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-09T06:14:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தியா - இலங்கை உறவு வரலாற்றை அடிப்படையாக கொண்டது! ராஜ்நாத் சிங் சுட்டிக்காட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/rajnath-singhs-special-address-in-sri-lanka-1788934295"></link>
            <id>https://ibctamil.com/article/rajnath-singhs-special-address-in-sri-lanka-1788934295</id>
            <summary type="text">இந்தியா - இலங்கை இடையிலான உறவுகள் பகிரப்பட்ட வரலாறு, கலாசாரம் மற்றும் நம்பிக்கைகள் ஆகியவற்றினை அடிப்படையாகக் கொண்டதாகும் என இந்திய பாதுகாப்பு அமைச்சர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியா - இலங்கை இடையிலான உறவுகள் பகிரப்பட்ட வரலாறு, கலாசாரம் மற்றும் நம்பிக்கைகள் ஆகியவற்றினை அடிப்படையாகக் கொண்டதாகும் என இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
</p><p>
இலங்கைக்கு மூன்று நாள் விஜயம் மேற்கொண்டு வருகைத்தந்துள்ள அவர் இந்த விடயத்தை சுட்டிக்காட்டினார்.</p><p>

இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், “இந்தியாவும் இலங்கையும் மிகவும் நெருக்கமான நட்புநாடுகள். சகல இன்ப துன்பங்களிலும் இலங்கையுடன் இணைந்திருக்கும் நாம், இரு நாடுகளினதும் சமாதானம், செழுமை மற்றும் அபிவிருத்தி ஆகியவற்றுக்கான உறுதிப்பாட்டினைக் கொண்டிருக்கின்றோம்.
</p><p></p><h2>இந்திய புலம்பெயர் சமூகம்</h2><p>

இலங்கையின் கொழும்பில் உள்ள இந்திய சமூகத்தினருடன் கலந்துரையாடியமையையிட்டு மகிழ்வடைகின்றேன். 

இந்தியா - இலங்கை இடையிலான நட்புறவை வலுவாக்குவதில் இந்திய புலம்பெயர் சமூகம் மிகவும் முக்கியமான வகிபாகத்தினைக் கொண்டிருக்கின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/30e15692-1a16-4ff3-b2e5-c0d698ba2e86/26-6aa0f8991d024.webp' /></p><p> 

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான 'சேதுவாக (பாலமாக)" இந்திய சமூகம் திகழ்கின்றது. இலங்கை எப்போதெல்லாம் நெருக்கடியினை எதிர்கொள்கின்றதோ, அப்போதெல்லாம் இந்தியா இலங்கையுடன் தோளோடு தோள் துணை நிற்கும்.
</p><p>
இந்தியாவில் இலத்திரனியல் உற்பத்தித் துறை ஒரு தொழில் புரட்சியாகும். 2014 இல் இந்திய ரூபா 1.9 லட்சம் கோடியாக இருந்த இலத்திரனியல் பொருட்களின் உற்பத்தி, தற்போது இந்திய ரூபா 11 இலட்சம் கோடியைத் தாண்டியுள்ளது.</p><p><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="ta" dir="ltr">இந்தியா இலங்கை இடையிலான உறவுகள் பகிரப்பட்ட வரலாறு, கலாசாரம் மற்றும் நம்பிக்கைகள் ஆகியவற்றினை அடிப்படையாகக் கொண்டதாகும். இந்தியாவும் இலங்கையும் மிகவும் நெருக்கமான நட்புநாடுகள். சகல இன்ப துன்பங்களிலும் இலங்கையுடன் இணைந்திருக்கும் நாம், இரு நாடுகளினதும் சமாதானம், செழுமை மற்றும்… <a href="https://t.co/yMT3v0WlIj">https://t.co/yMT3v0WlIj</a></p>&mdash; India in Sri Lanka (@IndiainSL) <a href="https://x.com/IndiainSL/status/2097496459746934990?ref_src=twsrc%5Etfw">September 9, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p> 

அத்துடன் இலத்திரனியல் பொருட்களின் ஏற்றுமதியும் இந்திய ரூபா 38,000 கோடியிலிருந்து இந்திய ரூபா 3 லட்சம் கோடிக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. 

அதேபோல, கைத்தொலைபேசி உற்பத்தியில், இந்தியா இன்று உலகின் இரண்டாவது பாரிய உற்பத்தியாளராகத் திகழ்கிறது” என்றார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-09T06:12:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[பட்டதாரி ஆசிரியர் நேர்முகத் தேர்வு : வடக்கு மாகாண ஆளுநரால் விடுக்கப்பட்ட பணிப்புரை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/graduate-teacher-interview-northern-province-1788932525"></link>
            <id>https://tamilwin.com/article/graduate-teacher-interview-northern-province-1788932525</id>
            <summary type="text">பட்டதாரிகளை இலங்கை ஆசிரியர் சேவைக்கு இணைத்துக் கொள்வதற்காக நடத்தப்பட்ட
போட்டிப் பரீட்சையின் பெறுபேறுகள் வெளியிடப்படவுள்ள நிலையில், அமைச்சரவைத்
தீர்ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>பட்டதாரிகளை இலங்கை ஆசிரியர் சேவைக்கு இணைத்துக் கொள்வதற்காக நடத்தப்பட்ட
போட்டிப் பரீட்சையின் பெறுபேறுகள் வெளியிடப்படவுள்ள நிலையில், அமைச்சரவைத்
தீர்மானத்துக்கு அமைவாக அடுத்தகட்டமாக முன்னெடுக்க வேண்டிய நேர்முகத்
தேர்வுகளைத் நடத்துவதற்கான ஏற்பாடுகள் தொடர்பில் ஆராயும் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.</p><p>குறித்த கலந்துரையாடலானது வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் நேற்று (08.09.2026) ஆளுநர்
செயலகத்தில் நடைபெற்றது.
</p><h2>பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில்&nbsp;</h2><p>
நாட்டிலுள்ள தேசிய மற்றும் மாகாணப் பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர்
வெற்றிடங்களை நிரப்பும் நோக்கில், இலங்கை ஆசிரியர் சேவைக்கு 23 ஆயிரத்து 344
பட்டதாரிகளை இணைத்துக்கொள்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/393690cc-231b-4cc0-bb18-367d510b8299/26-6aa0f4f469350.webp' /></p><p>
இதனடிப்படையில், சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழிமூலப் பாடசாலைகளுக்கான
ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்பும் வகையில் போட்டிப் பரீட்சை
நடத்தப்பட்டிருந்தது.</p><p>அமைச்சரவைத் தீர்மானத்துக்கு அமைவாக, பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில்
நேர்முகத் தேர்வுக்குத் தகுதி பெறும் பட்டதாரிகளை அழைத்தல், நேர்முகத்
தேர்வுகளை நடத்துவதற்கான நடைமுறைகள் உள்ளிட்ட விடயங்கள் விரிவாக ஆராயப்பட்டன.</p><p>
இவற்றை காலதாமதமின்றி மேற்கொள்வதற்கான முன்னாயத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு
ஆளுநர் இதன்போது பணிப்புரை விடுத்தார்.
</p><p>
இந்தக் கலந்துரையாடலில் மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவின் தலைவர், ஆளுநரின்
செயலாளர், கல்வி அமைச்சின் செயலாளர், மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவின்
செயலாளர், பிரதம செயலாளருக்காக பிரதிப் பிரதம செயலாளர் - நிர்வாகம், மாகாண
கல்விப் பணிப்பாளர், ஆளுநரின் பிரத்தியேகச் செயலாளர், ஆளுநரின் உதவிச்
செயலாளர் ஆகியோர் பங்கேற்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-09T06:04:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆபத்தான நபரை விடுவிக்க 500 கோடி ரூபா பேரம்! மகிந்தவின் நெருங்கிய நண்பருடன் டீல் - சிக்கப்போகும் அரசியல்வாதிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/shiran-basik-case-politicians-in-risk-1788929226"></link>
            <id>https://tamilwin.com/article/shiran-basik-case-politicians-in-risk-1788929226</id>
            <summary type="text">டுபாய் மற்றும் பாகிஸ்தானை தளமாகக் கொண்ட சர்வதேச போதைப்பொருள் கடத்தல்காரர் ஷிரான் பாஸிக்கை விடுவிப்பதற்காக 500 கோடி ரூபாய் பணத்தை லஞ்சமாக வழங்க முயற்சி...</summary>
            <content type="html"><![CDATA[<p>டுபாய் மற்றும் பாகிஸ்தானை தளமாகக் கொண்ட சர்வதேச போதைப்பொருள் கடத்தல்காரர் ஷிரான் பாஸிக்கை விடுவிப்பதற்காக 500 கோடி ரூபாய் பணத்தை லஞ்சமாக வழங்க முயற்சித்தமை தொடர்பில் விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
</p><p>
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய பலம் வாய்ந்த அரசியல்வாதிகளுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.</p><p> 

ஷிரான் பாசிக் வழங்கிய வாக்குமூலங்களின் அடிப்படையில், சிலரிடம் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.</p><p>
</p><h2><b>
கறுப்புப் பணம்</b></h2><p>அதற்கமைய, தெஹிவளை, கல்கிஸ்சை முன்னாள் மேயர் தனசிறி அமரதுங்க மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் புத்தளம் மாவட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோவிடம் விசாரணைக் குழுக்கள் அண்மையில் வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c3c81b70-feeb-45a3-97b1-4fd1f2d1dcfb/26-6aa0e808903fb.webp' /></p><p>முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் நெருங்கிய நண்பராக கருதப்படும் தனசிறி அமரதுங்க, ஷிரான் பாஸிக்கின் போதைப்பொருள் வர்த்தக மூலம் ஈட்டப்பட்ட கறுப்புப் பணத்தை சட்டப்பூர்வ சொத்துகளாக மாற்ற உதவி செய்தாரா என்பது குறித்து பொலிஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
</p><p>
தெஹிவளை மற்றும் வெள்ளவத்தை கடற்கரைகளில் ஹோட்டல்களை அமைக்க ஷிரான் பாஸிக்கிற்கு எவ்வாறு அனுமதி வழங்கப்பட்டது என்பது குறித்து முன்னாள் இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோவிடம் அதிகாரிகளால் விசாரித்து வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.</p><p>
</p><h3><b>
அநுர அரசின் நடவடிக்கை</b></h3><p>ஷிரான் பாஸிக்கின் தொலைபேசி மற்றும் வங்கிப் பரிமாற்றங்களின் தரவுகளும் பகுப்பாய்வு செய்யப்படவுள்ளன.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/408a329a-07ff-4b2b-bbd4-1c2937549901/26-6aa0e809441cc.webp' /></p><p>பாஸிக்குடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணிய மேலும் 3 முன்னணி அரசியல்வாதிகளிடம் எதிர்வரும் நாட்களில் நேரடியாக வாக்குமூலம் பெற விசாரணைக் குழுக்கள் அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளன.</p><p>வெள்ளவத்தை முதல் தெஹிவளை, கல்கிஸ்ஸ கடற்கரையோரங்களில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத ஹோட்டல்களை நீக்கப் போவதாக சமகால அநுர அரசாங்கம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p><i><b>you may like this video </b></i></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/3P6P7mu8JVo" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><i></i></b></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-09T06:02:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[80-s லுக்கில் கிளாமர் காட்டும் நடிகை ரம்யா பாண்டியன்!! புகைப்படங்கள்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/ramya-pandian-80s-look-photoshoot-post-1788934337"></link>
            <id>https://viduppu.com/article/ramya-pandian-80s-look-photoshoot-post-1788934337</id>
            <summary type="text">ரம்யா பாண்டியன்சோசியல் மீடியாவில் கிளாமர் புகைப்படங்கள், வீடியோக்களை பகிர்ந்து பிரபலமான நடிகை ரம்யா பாண்டியன், டம்மி பட்டாசு, ஜோக்கர், ஆண் தேவதை உள்ளி...</summary>
            <content type="html"><![CDATA[<h2>ரம்யா பாண்டியன்</h2><p>சோசியல் மீடியாவில் கிளாமர் புகைப்படங்கள், வீடியோக்களை பகிர்ந்து பிரபலமான நடிகை ரம்யா பாண்டியன், டம்மி பட்டாசு, ஜோக்கர், ஆண் தேவதை உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/abd3c54f-8ae1-495d-b6cc-d6282a8717fb/26-6aa0f8c8370f9.webp' /></p><p>
குக் வித் கோமாளி சீசன் 1ல் கலந்து கொண்டு 2வது ரன்னர் அப் இடத்தை பிடித்தார். அதன்பின் பிக்பாஸ் சீசன் 4ல் கலந்து கொண்டு 3வது ரன்னர் அப்பும், பிக்பாஸ் அல்டிமேட் 1ல் கலந்து கொண்டு 2வது ரன்னர் அப் இடத்தையும் பிடித்தார்.
</p><p>
கடந்த 2024ல் யோகா பயிற்சியாளர் லோவல் தவான் என்பவரை திருமணம் செய்து கொண்டார். தற்போது, 80ஸ் லுக்கில் எடிட் செய்யப்பட்ட புகைப்படங்களை பகிர்ந்து டிரெண்ட் செய்துள்ளார் ரம்யா.</p>]]></content>
            <updated>2026-09-09T06:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Tony</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தியாவில் Spiderman: Brand New Day, Odyssey இரண்டு படங்களின் இறுதி வசூல்.. முழு விவரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/spider-man-brand-new-day-odyssey-final-box-office-1788932355"></link>
            <id>https://cineulagam.com/article/spider-man-brand-new-day-odyssey-final-box-office-1788932355</id>
            <summary type="text">ஸ்பைடர் மேன்ஹாலிவுட் படங்களுக்கு இந்தியாவில் எப்போதும் மிகப்பெரிய மார்க்கெட் இருக்கும். அந்த வகையில் சூப்பர் ஹீரோ படங்களுக்கு நாங்கள் சொல்லி தெரிய வேண...</summary>
            <content type="html"><![CDATA[<h2>ஸ்பைடர் மேன்</h2><p>ஹாலிவுட் படங்களுக்கு இந்தியாவில் எப்போதும் மிகப்பெரிய மார்க்கெட் இருக்கும். அந்த வகையில் சூப்பர் ஹீரோ படங்களுக்கு நாங்கள் சொல்லி தெரிய வேண்டிய அவசியமில்லை. அதிலும் மார்வல் காமிக்ஸ் ஸ்பைடர் மேன் சீரிஸுக்கு இந்தியாவில் மிகப்பெரிய ரசிகர்கள் வட்டம் உள்ளது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1fe6e894-160b-4a1a-b734-a42f415651a1/26-6aa0f1065f584.webp' /></p><p>அந்த வகையில், ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே படம் இந்தியாவில் மட்டுமே ரூ. 650 கோடிகள் வசூல் செய்து இந்தியாவில் அதிகம் வசூல் செய்த ஹாலிவுட் படங்கள் லிஸ்டில் நம்பர் 1 இடத்தில் உள்ளது. இத்தகைய சாதனையை அவெஞ்சர்ஸ் தூம்ஸ் டே படம் முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
</p><h2>
ஒடிசி
</h2><p>
சூப்பர் ஹீரோ படங்களுக்கு எப்படி ஒரு எதிர்பார்ப்பு இருக்குமோ, அதே எதிர்பார்ப்பு கிறிஸ்டோபர் நோலன் என்ற இயக்குனருக்கு இந்தியாவில் உண்டு, அவர் இயக்கத்தில் பிரம்மாண்ட பொருட்செலவில் வெளிவந்த ஒடிசி படம் இந்தியாவில் மட்டுமே ரூ. 250 கோடி வசூல் செய்து மிகப்பெரிய சாதனையை நிகழ்த்தியுள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/af819696-0e47-4eae-be58-fdb8416573c2/26-6aa0f10717597.webp' /></p><p>
கண்டிப்பாக எந்த ஒரு சீக்குவள், சூப்பர் ஹீரோ கான்செப்ட் இல்லாமல் இத்தகைய வசூல் பிரமிக்க வைத்துள்ளது. இதன் மூலம் இந்தியாவில் நோலனின் புகழ் என்ன என்பதை அறிந்துகொள்ளலாம்.</p>]]></content>
            <updated>2026-09-09T06:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கைக்கு அப்பால் ஈரானியக் கப்பல்கள் ; அமெரிக்க தூதரகத்தின் முக்கிய தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/iranian-ships-off-lanka-key-us-embassy-update-1788933056"></link>
            <id>https://jvpnews.com/article/iranian-ships-off-lanka-key-us-embassy-update-1788933056</id>
            <summary type="text">இலங்கைக்கு அப்பால் சர்வதேச கடற்பரப்பில் பல ஈரானியக் கப்பல்கள் தரித்து நிற்பது தொடர்பில் கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் இலங்கை வெளியுறவு அமைச்சகத்திற்க...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">இலங்கைக்கு அப்பால் சர்வதேச கடற்பரப்பில் பல ஈரானியக் கப்பல்கள் தரித்து நிற்பது தொடர்பில் கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் இலங்கை வெளியுறவு அமைச்சகத்திற்கு தகவல் வழங்கியுள்ளதாக வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
</p><p style="text-align: justify; ">
இதையடுத்து, பாதுகாப்பு மற்றும் துறைமுக அமைச்சகங்களுக்கு உடனடியாக தகவல் வழங்கப்பட்டதுடன், இலங்கை பொலிஸ் மற்றும் கடற்படையினரால் குறித்த கப்பல்களின் நடமாட்டம் கண்காணிக்கப்பட்டு வருவதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2246ba31-ff09-4f2d-9221-32b17e07a235/26-6aa0f4f713f60.webp' /></p><h2 style="text-align: justify; ">கண்காணிக்கப்படும் கப்பல்</h2><p style="text-align: justify; ">

குறித்த கப்பல்கள் இலங்கையின் கடல் எல்லைக்குள் இல்லை எனத் தெரிவித்த அமைச்சர், இலங்கையிலிருந்து 24 கடல் மைல்களுக்கு அப்பால் உள்ள சர்வதேச கடற்பரப்பில் மொத்தம் 47 கப்பல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.
</p><p style="text-align: justify; ">
அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான இராணுவ மோதல்கள் தொடரும் நிலையில், அடையாளம் காணப்பட்டுள்ள இந்தக் கப்பல்களில் பல ஈரானியக் கொடியைத் தாங்கிய கப்பல்களும், ஏனைய வணிக மற்றும் சரக்குக் கப்பல்களும் உள்ளடங்குவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
எனினும், குறித்த கப்பல்களிலிருந்து இலங்கை அரசாங்கத்திடம் எந்தவொரு வசதியோ அல்லது உதவியோ கோரப்படவில்லை என்றும், அவற்றுக்கு எந்தவிதமான வசதிகளும் வழங்கப்படவில்லை என்றும் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
</p><p style="text-align: justify; ">
கப்பல்களின் நடமாட்டத்தைக் கண்காணிப்பதைத் தவிர, இலங்கை அரசாங்கம் அவற்றில் வேறு எந்த வகையிலும் தலையிடவில்லை என்றும், மேலதிக நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை என்றும் அமைச்சர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-09T05:58:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலகின் அதிக சம்பளம் பெறும் அரசியல் தலைவர் யார் தெரியுமா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/worlds-highest-paid-prime-minister-awrence-wong-1788931896"></link>
            <id>https://manithan.com/article/worlds-highest-paid-prime-minister-awrence-wong-1788931896</id>
            <summary type="text">world&#039;s highest-paid political leader: உலகிலேயே அதிக சம்பளம் பெறும் அரசுத் தலைவராக அறியப்படும் சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங்கின் (Lawrence Wong) ஆண...</summary>
            <content type="html"><![CDATA[<p>world's highest-paid political leader: உலகிலேயே அதிக சம்பளம் பெறும் அரசுத் தலைவராக அறியப்படும் சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங்கின் (Lawrence Wong) ஆண்டு சம்பளம் தற்போது சுமார் 64 சதவிகிதம் உயர்த்தப்பட்டுள்ளது.
</p><p>
இந்தச் சம்பள உயர்வின் மூலம், பிரதமரின் ஆண்டு சம்பளம் 2.2 மில்லியன் சிங்கப்பூர் டாலரிலிருந்து 3.6 மில்லியன் சிங்கப்பூர் டாலராக அதிகரித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7d35d88e-e4a4-4f59-80c1-1b1673344eb1/26-6aa0f435b3a70.webp' /></p><p></p><p> </p><p>இந்திய ரூபாய் மதிப்பில் இது தோராயமாக ரூ.26.9 கோடியாகும். அதாவது, ஒரு ஆண்டில் ரூ.26 கோடிக்கும் அதிகமான சம்பளத்தைப் பெறும் உலகின் முக்கிய அரசுத் தலைவராக லாரன்ஸ் வோங் தொடர்ந்தும் தன் நிலையை தக்கவைத்துள்ளார்.</p><h2>பின்னணி காரணம்</h2><p>சிங்கப்பூர் அரசாங்கத்தைப் பொறுத்தவரை, இந்தச் சம்பள உயர்வுக்கு பல்வேறு காரணங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, திறமையும் தகுதியும் கொண்டவர்களை அரசாங்கத்தின் முக்கியப் பொறுப்புகளுக்கு ஈர்ப்பதற்கும், அவர்கள் நீண்ட காலம் அரசுப் பணியில் தொடர்வதை உறுதி செய்வதற்கும், ஊழலைத் தடுப்பதற்கும் இந்தச் சம்பள உயர்வு அவசியம் என சிங்கப்பூர் அரசு தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/68f33f74-c43f-4747-bcc4-bf5e818b5ad0/26-6aa0f4366a3f7.webp' /></p><p></p><p> </p><p>

</p><p>

எனினும், நாட்டில் தற்போது நிலவும் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு மற்றும் பொருளாதாரச் சூழலை கருத்தில் கொண்டு, இந்தச் சம்பள உயர்வுக்கு பொதுமக்கள் மத்தியில் எதிர்ப்பும் எழுந்துள்ளது.</p><p>

இதற்கிடையே, இந்தச் சம்பள உயர்வின் மூலம் தனக்குக் கூடுதலாகக் கிடைக்கும் தொகையை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடையாக வழங்கப் போவதாக பிரதமர் லாரன்ஸ் வோங் அறிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/86cbb819-cd06-4b37-837d-37b50e6d3793/26-6aa0f43720e0b.webp' /></p><p>
</p><p>
மேலும், சிங்கப்பூரில் பிரதமருக்கு மட்டுமல்லாமல், அந்நாட்டின் அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளின் சம்பளமும் உயர்த்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-09T05:56:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[22ஆவது திருத்தத்தை நிறைவேற்றுவதில் ஜனாதிபதியின் கருத்தில் எந்த முரண்பாடும் இல்லை : சுனில் ஹந்துன்நெத்தி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/22nd-amentment-1788929705"></link>
            <id>https://tamilwin.com/article/22nd-amentment-1788929705</id>
            <summary type="text">அரசமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலத்தை விரைவாக நாடாளுமன்றத்தில்
நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி குறிப்பிட்டதில் எந்த
முரண்பாடும் இல...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரசமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலத்தை விரைவாக நாடாளுமன்றத்தில்
நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி குறிப்பிட்டதில் எந்த
முரண்பாடும் இல்லை என்று அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்தார்.</p><p>

களுத்துறை, புளத்சிங்கள பகுதியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் ஜனாதிபதி
அநுரகுமார திஸாநாயக்க ஆற்றிய உரை தொடர்பில் எதிர்க்கட்சியினர் எழுப்பிய
விமர்சனங்களுக்குப் பதிலளிக்கும் வகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.</p><h2>22 தொடர்பில் ஜனாதிபதியின் அறிவிப்பு</h2><p>
</p><p>
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவிக்கையில்,&nbsp;</p><p>
"உயர்நீதிமன்றம் வழங்கும் தீர்ப்பு எதுவாக இருந்தாலும், அரசமைப்புத்
திருத்தத்தை நிறைவேற்ற நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை
வாக்குகள் அவசியமானவை என்பதால், அதனை நாடாளுமன்றத்தில் விரைவாகச் சமர்ப்பித்து
நிறைவேற்றுவதாகவே ஜனாதிபதி குறிப்பிட்டார்.
</p><p>
ஒருவேளை உயர்நீதிமன்றம் இந்தச் சட்டமூலத்துக்குச் சர்வஜன வாக்கெடுப்பு (மக்கள்
தீர்ப்பு) அவசியம் என உத்தரவிட்டால், அதனை எதிர்கொள்வதிலும் அரசுக்கு எவ்வித
ஆட்சேபனையும் இல்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ea47dfc9-43ea-49ef-9cd9-aec5404ecce2/26-6aa0f3ca511c9.webp' /></p><p>
</p><p>
இதற்கிடையில், அரசின் இந்தத் திருத்தச் சட்டமூலத்துக்கு எதிர்ப்புத்
தெரிவித்து மேற்கொள்ளப்பட வேண்டிய சட்ட மற்றும் அரசியல் ரீதியிலான
நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்காகச் சுதந்திர செயற்பாட்டு மையம், இலங்கை
கம்யூனிஸ்ட் கட்சியுடன் கலந்துரையாடல் ஒன்றையும் நடத்தியுள்ளது.</p><p>

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குவதில் அரசின் சார்பில் திட்டமிட்ட தாமதம்
எதுவும் இல்லை. சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் நீதித்துறைகளில் ஏற்படும்
இயல்பான நடைமுறைத் தாமதங்களே இதற்குக் காரணம். இது நீண்டகால யுத்தம்,
பயங்கரவாதம் மற்றும் தேசிய பாதுகாப்புடன் தொடர்புடைய பரந்த விடயமாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/315872ef-7922-430f-a1fa-ff0528e9763a/26-6aa0f3c98296a.webp' /></p><p>
</p><p>
மேலும், அரசியல் கட்சிகள், சிவில் சமூக அமைப்புகள் மற்றும் வடக்கு, கிழக்கு
மக்களுக்கு நேரடியாகத் தொடர்புடையது என்பதால், அனைத்துத் தரப்பினரின்
கருத்துகளையும் கேட்டு விரிவான விவாதம் நடத்தப்பட வேண்டியுள்ளது.
</p><p>
சந்தேகநபர்களைக் கைது செய்வது தொடர்பான பொலிஸாரின் நடைமுறை விளக்கங்களும் சட்ட
வரையறைகளும் சிக்கலானதாக அமைந்திருப்பதும் தாமதத்துக்கு மற்றொரு காரணமாகும்.
</p><p>எவ்வாறாயினும், அரசு அளித்த வாக்குறுதியின்படி, பொதுமக்களின் ஆலோசனைகளைப்
பெற்று நாட்டின் அனைத்துத் தரப்பினருக்கும் நீதி கிடைக்கும் வகையில் மிக
விரைவில் இதற்கான திருத்தங்கள் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்படும்" என குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-09T05:54:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடா ஒருபோதும் 51வது மாநிலமாகாது என அமெரிக்க எல்லைகளை பெயர் பலகை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/eby-announces-never-51st-state-signs-as-canada-1788933065"></link>
            <id>https://canadamirror.com/article/eby-announces-never-51st-state-signs-as-canada-1788933065</id>
            <summary type="text">&amp;nbsp;கனடா மற்றும் அமெரிக்காவிற்கு இடையிலான வர்த்தகப் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், அமெரிக்க எல்லையோரங்களில் &quot;கனடா ஒருபோதும் அமெரிக்காவின் 51வது மாநி...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கனடா மற்றும் அமெரிக்காவிற்கு இடையிலான வர்த்தகப் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், அமெரிக்க எல்லையோரங்களில் "கனடா ஒருபோதும் அமெரிக்காவின் 51வது மாநிலமாக மாறாது" என்ற வாசகம் அடங்கிய புதிய அறிவிப்புப் பலகைகளை நிறுவ உள்ளதாக பிரிட்டிஷ் கொலம்பியா மாகாண முதல்வர் டேவிட் ஈபி அறிவித்துள்ளார்.
</p><p>அமெரிக்க எல்லைச் சாவடிகளில் நிறுவப்படவுள்ள இந்தப் பலகைகளில் "பிரிட்டிஷ் கொலம்பியாவிற்கு வரவேற்பு. வலிமையான, பெருமைமிக்க கனடா ஒருபோதும் 51வது மாநிலமாகாது. மன்னிக்கவும்" என்று எழுதப்பட்டிருக்கும் என தெரிவித்துள்ளார்.
</p><p>மேலும், வனவிலங்குகள் பற்றிய எச்சரிக்கைகள் மற்றும் "கனடியர்களின் அன்பை பலவீனம் எனத் தவறாக நினைக்க வேண்டாம்" போன்ற விழிப்புணர்வு செய்திகளும் அதில் இடம்பெற்றுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/19f458b5-740a-41b9-b9d7-f99d77a06ffe/26-6aa0f3cacf2ed.webp' /></p><p>
</p><p>கனடாவின் சுமார் 28 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்களுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் 50 சதவீத வரி விதித்ததைத் தொடர்ந்து, கனடாவும் பதிலடியாக 27.8 பில்லியன் டொலர் மதிப்பிலான அமெரிக்கப் பொருட்களுக்கு 15% முதல் 50% வரை இறக்குமதி வரிகளை அமல்படுத்தியுள்ளது.
</p><p>இந்த வர்த்தகப் போரினால் இரு நாடுகளிலுமுள்ள வேலைவாய்ப்புகளும் வணிகங்களும் பாதிக்கப்படும் எனக் குறிப்பிட்ட முதல்வர், பொதுமக்கள் மற்றும் நிறுவனங்கள் உள்ளூர் தயாரிப்புகளையும் சேவைகளையும் பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் பிரிட்டிஷ் கொலம்பிய பொருட்களை கொள்வனவு செய்யுங்கள் என்ற திட்டத்தை விரிவுபடுத்த உள்ளதாகத் தெரிவித்தார்.
</p><p>அமெரிக்கா மீதான தங்கிவாழும் தன்மையைக் குறைப்பது பொருளாதார ரீதியாகச் சவாலானது என்றாலும், அதை ஏற்றுக்கொள்ளாமல் விடுவது அதைவிட மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என கனடியப் பிரதமர் மார்க் கார்னி எச்சரித்துள்ளார்.</p><p>
அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்த வர்த்தகப் போரைத் தொடங்கியதைச் சுட்டிக்காட்டிய டேவிட் ஈபி, கனடியர்கள் இந்த மோதலைத் தொடங்கவில்லை என்றாலும், நாட்டின் பொருளாதாரம் மற்றும் தொழிலாளர்களின் நலன்களைப் பாதுகாக்க உறுதியுடன் நிற்பார்கள் எனத் தெரிவித்துள்ளார்.&nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-09-09T05:50:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை பொலிசார் என போலி விளம்பரங்கள்! மக்களுக்கு எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/fake-advertisements-sri-lanka-police-warning-1788933190"></link>
            <id>https://jvpnews.com/article/fake-advertisements-sri-lanka-police-warning-1788933190</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp;இலங்கை பொலிஸின் பெயரைப் பயன்படுத்தி, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் தயாரிக்கப்பட்ட போலி விளம்பரங்கள் பேஸ்புக் சமூக வலைத...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp; &nbsp;இலங்கை பொலிஸின் பெயரைப் பயன்படுத்தி, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் தயாரிக்கப்பட்ட போலி விளம்பரங்கள் பேஸ்புக் சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வருவதாக இலங்கை பொலிஸ் திணைக்களம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
</p><p>


இவ்வாறான விளம்பரங்கள் மற்றும் தகவல்கள் அதிகாரப்பூர்வமானவை அல்ல எனவும், பொதுமக்கள் இவற்றைக் கண்டு ஏமாற வேண்டாம் எனவும் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2929e3dc-ad50-4da1-999a-606964373f3c/26-6aa0f4475cc33.webp' /></p><p>
</p><p>
இலங்கை பொலிஸின் பெயர் மற்றும் அடையாளங்களைப் பயன்படுத்தி செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்படும் அனைத்து விளம்பரங்களும் உண்மையானவை அல்ல.</p><p></p><p>
</p><p>
இலங்கை பொலிஸின் உத்தியோகபூர்வ இலச்சினையுடன், 'Sri Lanka Police' இன் உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்படும் விளம்பரங்கள் மற்றும் அறிவித்தல்களை மட்டுமே பொதுமக்கள் கருத்தில் கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-09T05:50:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[பேராசிரியர் ரவீந்திரநாத் படுகொலை விசாரணையை மையப்படுத்திய ஐ.நா அறிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/un-report-on-the-murdr-of-professor-ravindranath-1788931917"></link>
            <id>https://ibctamil.com/article/un-report-on-the-murdr-of-professor-ravindranath-1788931917</id>
            <summary type="text">2006ஆம் ஆண்டு இடம்பெற்ற கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தரின் படுகொலை மற்றும், உயிர்த்த ஞாயிறுதினப் பயங்கரவாதத் தாக்குதல்கள் குறித்த விசாரணைகளில் இலங்கையின்...</summary>
            <content type="html"><![CDATA[<p>2006ஆம் ஆண்டு இடம்பெற்ற கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தரின் படுகொலை மற்றும், உயிர்த்த ஞாயிறுதினப் பயங்கரவாதத் தாக்குதல்கள் குறித்த விசாரணைகளில் இலங்கையின் நடவடிக்கை குறித்து ஐ.நா மனித உரிமை ஆணையகம் கவனம் செலுத்தியுள்ளது.
</p><p>
சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் கடந்த 07 ஆம் திகதி ஆரம்பமான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 63வது அமர்வின் இரண்டாம் நாளான நேற்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின், பிரதி உயர்ஸ்தானிகர் அவா டபோவால் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
</p><p>
இதில் இலங்கை தொடர்பான மானித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் 16 பக்கங்களைக் கொண்ட புதுப்பிக்கப்பட்ட அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.
</p><p>

</p><h2>பொறுப்புக்கூறல் உறுதி</h2><p>



இதன்படி பின்வரும் விடயங்கள் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

“ஆயுதமோதல் இடம்பெற்ற காலப்பகுதியில் அரச படையினராலும், தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பினராலும் நிகழ்த்தப்பட்ட மீறல்கள் தொடர்பில் இன்னமும் பொறுப்புக்கூறல் உறுதிப்படுத்தப்படவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6fe4b6b5-b296-4700-a8d6-c954242f4c1b/26-6aa0f29d520ee.webp' /></p><p>
</p><p>
முக்கிய வழக்குகள் குறித்த குற்றவியல் விசாரணைகள் தொடர்ந்து தாமதமடைகின்றன. வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களுக்கு என்ன நேர்ந்தது என்ற கேள்வி இன்னமும் பதிலின்றித் தொடர்கிறது.</p><p>

சுமார் ஒரு வருடத்துக்கு முன்னர் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க் பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கத்தை உறுதிப்படுத்துவதற்கும், தண்டனைகளிலிருந்து விடுபடும் போக்கு மற்றும் சமத்துவமின்மை என்பவற்றை முடிவுக்குக்கொண்டுவருவதற்கும் தற்போதைய அரசாங்கத்துக்கு வலுவான மக்களாணை வழங்கப்பட்டிருப்பதாகச் சுட்டிக்காட்டினார்.</p><p></p><p>
</p><h2>கட்டமைப்பு ரீதியான மறுசீரமைப்பு</h2><p>
அவரது விஜயத்தின் பின்னர் சுமார் ஒரு மாதகாலத்துக்குள் நடைபெற்ற ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரின்போது இலங்கையில் மனித உரிமைகள், நீதி மற்றும் பொறுப்புக்கூறல் என்பன உறுதிசெய்யப்படவேண்டியதன் அவசியம் குறித்து வலியுறுத்தப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/59762475-f3b8-4e04-b71d-384d00ef2a39/26-6aa0f29c9ae39.webp' /></p><p>

அதேபோன்று நாட்டில் இனவாதத்துக்கு எவ்வகையிலும் இடமில்லை என்றும், இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கம் மற்றும் சகவாழ்வுக்கே முன்னுரிமை அளிக்கப்படும் என்ற ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் கூற்று தொடர்பில் வரவேற்கத்தக்கது.</p><p>

இருப்பினும் நாட்டில் ஆழமான கட்டமைப்பு ரீதியான மறுசீரமைப்புக்கள் மேற்கொள்ளப்படவேண்டியிருக்கின்றது” என்றுள்ளது.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-09T05:47:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>H. A. Roshan</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை நெருக்கடியை எதிர்கொள்ளும் போதெல்லாம் இந்தியா உறுதியாகத் துணை நிற்கும்! பாதுகாப்புத் துறை அமைச்சர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/indian-defence-minister-statement-1788930351"></link>
            <id>https://tamilwin.com/article/indian-defence-minister-statement-1788930351</id>
            <summary type="text">இலங்கை எப்போது நெருக்கடியை எதிர்கொண்டாலும், இந்தியா எப்போதும் உறுதியாக இலங்கையின் பக்கத்தில் நிற்கும் என இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சி...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை எப்போது நெருக்கடியை எதிர்கொண்டாலும், இந்தியா எப்போதும் உறுதியாக இலங்கையின் பக்கத்தில் நிற்கும் என இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். </p><p> 

இலங்கைக்கான விஜயத்தின் போது நேற்றைய தினம் (08.09.2026) கொழும்பில் இந்திய வம்சாவளியினருடன் நடைபெற்ற சந்திப்பில் வைத்து இந்த விடயத்தை கூறியுள்ளார்.</p><h2>இருதரப்பு உறவுகளின் வளர்ச்சி</h2><p>
</p><p>
இந்தியாவும் இலங்கையும் நெருங்கிய கலாசார மற்றும் நாகரிகத் தொடர்புகளைப் பகிர்ந்து கொள்வதாகவும், இந்த உறவுகள் இருதரப்பு உறவுகளின் வளர்ச்சிக்கு வலுவான அடித்தளமாக அமைந்துள்ளதாகவும் அவர் வலியுறுத்தினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/faa4754e-f3d5-475c-b233-bc9c5ad0d998/26-6aa0f1ca0e7fd.webp' /></p><p> </p><p>

இந்தியாவின் வேகமான பொருளாதார மாற்றத்தை எடுத்துரைத்த பாதுகாப்புத்துறை அமைச்சர், உலகின் வேகமாக வளர்ந்து வரும் முக்கிய பொருளாதார நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக இருப்பதாகவும், உலகளாவிய பொருளாதார வளர்ச்சியில் இந்தியா 16 சதவீதத்திற்கும் அதிகமான பங்களிப்பை வழங்குவதாகவும் தெரிவித்தார்.</p><h2>இந்தியாவின் பொருளாதாரம்</h2><p>
</p><p>
2014ஆம் ஆண்டு இந்தியாவின் பொருளாதாரம் சுமார் 2 டிரில்லியன் அமெரிக்க டொலராக இருந்த நிலையில், கடந்த பத்தாண்டுகளில் அது இரட்டிப்பாகி தற்போது சுமார் 4 டிரில்லியன் அமெரிக்க டொலராக உயர்ந்துள்ளதாக அவர் கூறினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4d75d2e0-ca5e-45a5-b7db-733a75454fee/26-6aa0f1cae0864.webp' /></p><p> </p><p>மேலும், உலகளாவிய பொருளாதார சவால்களுக்கு மத்தியில், 2026-27 நிதியாண்டின் முதல் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-09T05:43:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நல்லிணக்கத்தை உள்ளடக்கிய சீர்த்திருத்தமே தொடர்கிறது! ஐ.நா. மனித உரிமைகள் சபையிடம் இலங்கை சுட்டிக்காட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/journey-healing-continues-sri-lanka-human-rights-1788929128"></link>
            <id>https://ibctamil.com/article/journey-healing-continues-sri-lanka-human-rights-1788929128</id>
            <summary type="text">மோதல்களின் முடிவானது சவால்களின் முடிவல்ல, மாறாக ஒன்றுபட்ட தேசத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான நீண்ட மற்றும் கடினமான பயணத்தின் தொடக்கத்தையே குறிக்கிற...</summary>
            <content type="html"><![CDATA[<p>மோதல்களின் முடிவானது சவால்களின் முடிவல்ல, மாறாக ஒன்றுபட்ட தேசத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான நீண்ட மற்றும் கடினமான பயணத்தின் தொடக்கத்தையே குறிக்கிறது என்று&nbsp; ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையிடம் இலங்கை தனது நிலைப்பாட்டை அறிவித்துள்ளது.&nbsp;</p><p>நல்லிணக்கம் மற்றும் சீர்திருத்தம் ஆகியவற்றை உள்ளடக்கிய தேசிய அளவிலான செயல்முறைக்குத் தொடர்ந்து உறுதியுடன் இருப்பதாகவும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் இந்த ஆண்டுக்கான கூட்டத்தில் இலங்கை சுட்டிக்காட்டியுள்ளது.&nbsp;</p><p>இதன்படி மனித உரிமைகள் பேரவையில் உரையாற்றிய ஐக்கிய நாடுகள் சபையின் நிரந்தரப் பிரதிநிதியான தூதர் சுமித் தசநாயக்க,</p><p></p><h2>ஐக்கிய நாடுகள் சபை</h2><p> </p><p>இலங்கையானது பேரவை மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் வழிமுறைகளுடன் வெளிப்படைத்தன்மை மற்றும் ஒத்துழைப்பு உணர்வுடன் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாகவும், அதேவேளையில் மனித உரிமைகள், பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் ஆகியவற்றில் நீடித்த முன்னேற்றமானது தேசிய அளவில் முன்னெடுக்கப்படுவதாகவும், உள்நாட்டு யதார்த்தங்களுக்கு ஏற்ப பதிலளிப்பதாகவும் இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5cc083d5-640c-456a-93f0-d2ab52a12ad4/26-6aa0ebdeaec79.webp' /></p><p>
</p><p>
பொருளாதார, சமூக மற்றும் அரசியல் மாற்றத்திற்கான ஆணையின் பேரில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தேர்ந்தெடுக்கப்பட்டு செப்டம்பர் மாதத்துடன் இரண்டு ஆண்டுகள் நிறைவடைகிறது என்று குறிப்பிட்ட அவர், தித்வா புயலின் தாக்கம் மற்றும் தொடரும் உலகளாவிய பொருளாதார நிச்சயமற்ற தன்மைகள் உள்ளிட்ட பல சவால்கள் இருந்தபோதிலும் அரசாங்கம் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளது என்றும் கூறினார்.
</p><p>
தூதரின் கூற்றுப்படி, இலங்கை 2025-ஆம் ஆண்டில் ஐந்து சதவிகித உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதுடன், இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவை வலுப்படுத்துதல் மற்றும் 2025-2029-ஆம் ஆண்டுக்கான தேசிய ஊழல் ஒழிப்பு செயல் திட்டத்தை செயல்படுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மூலம் தனது ஊழல் ஒழிப்பு நடவடிக்கையைத் தொடர்ந்து வருகிறது.
</p><p>
மனித உரிமைகள் பேரவையின் தீர்மானம் 60/1 குறித்துப் பேசிய தூதர் தசநாயக்க, வெளிப்புறச் சான்றுகளைச் சேகரிக்கும் பொறிமுறையின் அதிகார வரம்பை நீட்டிக்கும் விதிகள் உட்பட, அத்தீர்மானத்தை இலங்கை ஆதரிக்கவில்லை என்று மீண்டும் வலியுறுத்தினார்.</p><h2>குற்றவியல் விசாரணைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம்</h2><p> </p><p>அத்தகைய வெளிப்புறப் பொறிமுறைகள் பிளவுகளை உருவாக்குவதற்கும், ஏற்கனவே நடைபெற்று வரும் தேசிய செயல்முறைகளைச் சீர்குலைப்பதற்கும் வழிவகுக்கும் என்று அவர் வாதிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/049ef177-2ed9-403e-b4f9-fa68eb057b90/26-6aa0ed8082c46.webp' /></p><p>
</p><p>
குற்றவியல் விசாரணைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம், ஊழல் ஒழிப்பு முயற்சிகள், நல்லிணக்க முன்னெடுப்புகள் மற்றும் நினைவுகூர்தல் முயற்சிகள் உள்ளிட்ட இலங்கையின் நேர்மறையான முன்னேற்றங்களை மனித உரிமைகள் உயர் ஆணையரின் அலுவலகம் அங்கீகரித்திருப்பதை அவர் வரவேற்றார்.</p><p>

கடந்த ஆண்டில் அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட தொடர்ச்சியான சீர்திருத்தங்கள் மற்றும் முன்னெடுப்புகளைத் தூதர் கோடிட்டுக் காட்டினார்.
</p><p>
ஐக்கிய நாடுகள் சபை மற்றும் சர்வதேச கூட்டாளிகளுடனான கலந்தாலோசனைகளைத் தொடர்ந்து, பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் ரத்து செய்யப்பட்டு, அடிப்படை சுதந்திரங்களைப் பாதுகாக்கவும், அவற்றின் தவறான பயன்பாடுகளைத் தடுக்கவும் வடிவமைக்கப்பட்ட புதிய சட்டத்தால் மாற்றீடு செய்யப்படும் என்று அவர் தெரிவித்தார்.</p><p> </p><p>முன்மொழியப்பட்ட இந்தச் சட்டம் தற்போது இறுதி செய்யப்பட்டு வருகிறது, மேலும் இது வரும் மாதத்தில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
</p><p>
இணையப் பாதுகாப்புச் சட்டத் திருத்தங்கள் தொடர்பான பங்குதாரர் கலந்தாலோசனைகள் நிறைவடைந்துவிட்டதாகவும், முன்மொழியப்பட்ட திருத்தங்கள் தற்போது இறுதி செய்யப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
</p><p>
தூதர் தசநாயக்கவின் கூற்றுப்படி, காணாமல் போனோர் அலுவலகம், இருசீர் வழங்கும் அலுவலகம் மற்றும் தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்க அலுவலகம் உள்ளிட்ட சுதந்திரமான நல்லிணக்க நிறுவனங்கள், வலுப்படுத்தப்பட்ட வளங்கள் மற்றும் ஆதரவுடன் தமது கடமைகளைத் தொடர்ந்து நிறைவேற்றி வருகின்றன.</p><h2>மலையாக தமிழ் சமூகத்தினர்</h2><p>
</p><p>
தற்போதுள்ள நல்லிணக்க அமைப்புகளின் அதிகார வரம்புகளுடன் ஒன்றுடன் ஒன்று முரண்படுவதைத் தடுப்பதற்காக, உண்மை மற்றும் நல்லிணக்க ஆணையத்திற்கான வரைவுக் கட்டமைப்பு தற்போது மதிப்பாய்வில் உள்ளது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5c48b473-5cfa-427a-8164-eeb2b8270e59/26-6aa0ed813a970.webp' /></p><p>

ஒரு சுதந்திரமான அரசு வழக்கறிஞர் அலுவலகத்தை நிறுவுவதற்கான முன்மொழிவுகளை உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையிலான குழு ஒன்று தொடர்ந்து பரிசீலித்து வருவதாகவும், அதேவேளையில், நிலம் விடுவிப்பு, மதிப்பீடு மற்றும் இழப்பீடு தொடர்பான பிரச்சினைகளை அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட அமைச்சகங்களுக்கு இடையிலான குழு ஒன்று மறுஆய்வு செய்து வருவதாகவும் தூதர் தெரிவித்தார்.
</p><p>
மோதலின் போது செல்லுபடியாகும் பயண ஆவணங்கள் இல்லாமல் நாட்டை விட்டு வெளியேறிய, இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகள் தாமாகவே முன்வந்து பாதுகாப்பாகத் திரும்புவதை எளிதாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட சிறப்பு குடிவரவு நடவடிக்கைகளுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்ததையும் அவர் சுட்டிக்காட்டினார்.
</p><p>
மலையாக தமிழ் சமூகத்தினரிடையே நிலவி வரும் நீண்டகாலக் குறைகளைக் குறிப்பிட்டு, அரசாங்கம் முதன்முறையாக அவர்களின் கவலைகளை விரிவாகவும் விரைவாகவும் நிவர்த்தி செய்து வருகிறது என்று தூதர் தசநாயக்க தெரிவித்தார்.</p><p>

ஒரு தனிநபரின் சமூக அந்தஸ்து அல்லது பின்னணியைப் பொருட்படுத்தாமல், குற்றம் சாட்டப்பட்ட எந்தவொரு சட்டவிரோதச் செயலையும் சுதந்திரமான தேசிய செயல்முறைகள் மூலம் விசாரித்து, வழக்குத் தொடர்வதில் அரசாங்கம் உறுதியாக உள்ளது என்று அவர் வலியுறுத்தினார்.</p><h3>மனித உரிமைகள் பேரவையின் கோட்பாடு</h3><p>

தூதரின் கூற்றுப்படி, பல முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளில், விசாரணைகளை மீண்டும் தொடங்குதல் மற்றும் நடைபெற்று வரும் சட்ட நடவடிக்கைகள் உள்ளிட்ட சமீபத்திய நடவடிக்கைகள், பொறுப்புக்கூறல் மற்றும் சட்டத்தை சமமாகப் பயன்படுத்துவதில் அரசாங்கத்தின் அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cb182ba7-6be9-44cd-ba20-1486792fa329/26-6aa0ed81e863c.webp' /></p><p>

இனவாதம், மதத் தீவிரவாதம் அல்லது பிளவுபடுத்தும் அரசியல் ஆகியவை மீண்டும் தலைதூக்குவதைத் தடுப்பதில் அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை அவர் சுட்டிக்காட்டினார்; மேலும், இந்த உறுதிமொழியை ஜனாதிபதி திசாநாயக்க பலமுறை வலியுறுத்தியுள்ளார் என்றும் குறிப்பிட்டார்.
</p><p>
நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கும், நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை உயர்த்துவதற்கும் முன்மொழியப்பட்ட சட்ட சீர்திருத்தங்கள் உள்ளிட்ட, நீதி அமைப்பை வலுப்படுத்துவதற்கான முயற்சிகளைத் தூதர் மேலும் எடுத்துரைத்தார். </p><p>இந்த சீர்திருத்தங்கள், செயல்திறனை மேம்படுத்துவதற்கும், தேங்கிக் கிடக்கும் வழக்குகளைக் குறைப்பதற்கும், நீதித்துறை நிபுணத்துவத்தைத் தக்கவைப்பதற்கும், நாடு முழுவதும் நீதி கிடைப்பதை மேம்படுத்துவதற்கும் நோக்கம் கொண்டவை என்று அவர் கூறினார்.
</p><p>
சிறைச்சாலைகள் தொடர்பான கவலைகளுக்குப் பதிலளித்த அவர், சிறை நிர்வாகத்தை மேம்படுத்தவும், நெரிசலைக் குறைக்கவும், புனர்வாழ்வுத் திட்டங்களை வலுப்படுத்தவும் அரசாங்கம் துரிதப்படுத்தப்பட்ட நடவடிக்கைகளைச் செயல்படுத்தி வருவதாகக் கூறினார். </p><p>மேலும், நீர்கொழும்பு சிறையில் சமீபத்தில் நடந்த சம்பவங்கள் குறித்து ஒரு விசாரணைக் குழு விசாரித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.</p><p>

தமது உரையின் மிக முக்கியமான பகுதிகளில் ஒன்றில், இலங்கையின் போருக்குப் பிந்தைய பயணம் ஒரு நீண்டகால செயல்முறையாகக் கருதப்பட வேண்டும் என்று தூதர் தசநாயக்க வலியுறுத்தினார்.
</p><p>
"இலங்கை ஒரு நீண்ட மற்றும் சவாலான பாதையைக் கடந்து வந்துள்ளது. மோதலின் முடிவானது சவால்களின் முடிவைக் குறிக்கவில்லை, மாறாக குணமடைதல், புனரமைப்பு மற்றும் நல்லிணக்கம் ஆகிய நீண்ட செயல்முறையின் தொடக்கத்தைக் குறித்தது," என்று அவர் கூறினார்.</p><p>

தேசிய உரிமையுணர்வைச் சீர்குலைக்கும் அணுகுமுறைகளுக்குப் பதிலாக, அத்தகைய செயல்முறைக்கு முன்னேற்றத்தை அங்கீகரித்தல், புரிந்துகொள்ளுதல் மற்றும் ஊக்குவித்தல் ஆகியவை தேவைப்படுகின்றன என்று அவர் மேலும் கூறினார்.
</p><p>
மனித உரிமைகள் பேரவையின் கோட்பாடுகளுக்கு இணங்க, இலங்கையை ஒரு சமச்சீரான, புறநிலையான மற்றும் ஆக்கப்பூர்வமான முறையில் மதிப்பிடுமாறு தூதர் பேரவையை வலியுறுத்தி தனது உரையை நிறைவு செய்தார்.</p><p>

அனைத்துக் குடிமக்களுக்கும் அமைதியான, நல்லிணக்கமான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய எதிர்காலத்தைக் கட்டமைப்பதற்கான தனது முயற்சிகளில் சர்வதேச சமூகத்தின் ஆதரவை நாடும் அதே வேளையில், தேசிய நிறுவனங்கள் மற்றும் தேசிய செயல்முறைகள் மூலம் நீதி, நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் செழிப்பை மேம்படுத்துவதில் இலங்கை உறுதியாக உள்ளது என்று அவர் கூறினார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-09T05:35:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் ஆயுத மோதல் மீறல்களுக்கான பொறுப்புக்கூறலில் முன்னேற்றமில்லை : ஜெனிவாக் கூட்டத் தொடரில் விசனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/no-progress-violations-armed-conflict-sri-lanka-1788930706"></link>
            <id>https://tamilwin.com/article/no-progress-violations-armed-conflict-sri-lanka-1788930706</id>
            <summary type="text">இலங்கையில் ஆயுத மோதல் இடம்பெற்ற காலப்பகுதியில் அரச படையினராலும், தமிழீழ
விடுதலைப் புலிகள் அமைப்பினராலும் நிகழ்த்தப்பட்ட மீறல்கள் தொடர்பில் இன்னமும்
...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் ஆயுத மோதல் இடம்பெற்ற காலப்பகுதியில் அரச படையினராலும், தமிழீழ
விடுதலைப் புலிகள் அமைப்பினராலும் நிகழ்த்தப்பட்ட மீறல்கள் தொடர்பில் இன்னமும்
பொறுப்புக்கூறல் உறுதிப்படுத்தப்படவில்லை எனவும், முக்கிய வழக்குகள் குறித்த
குற்றவியல் விசாரணைகள் தொடர்ந்து தாமதமடைந்து வருகின்றன என்றும் ஐக்கிய
நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
</p><p>
ஜெனிவாவில் ஆரம்பமான ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 63ஆவது
கூட்டத்தொடரில், 'இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித
உரிமைகளை மேம்படுத்துதல்' தொடர்பில் அடையப்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்த
மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க்கின் எழுத்துமூல அறிக்கை பிரதி
உயர்ஸ்தானிகர் அவா டபோவினால் நேற்று(08.09.2026) வாசிக்கப்பட்டது.
</p><h2>பொறுப்புக்கூறலில் தாமதம்</h2><p>
அவர் மேலும் உரையாற்றுகையில்,&nbsp;ஆயுதமோதல் காலத்து மீறல்கள் தொடர்பில் பொறுப்புக்கூறல் இன்னும்
உறுதிப்படுத்தப்படவில்லை. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0bffab68-3030-4cd0-80ce-a36bf2959fc9/26-6aa0ee52b63d0.webp' /></p><p>ஏற்கனவே அளிக்கப்பட்ட வாக்குறுதிக்கு அமைவாகச்
சட்டமா அதிபர் திணைக்களத்திலிருந்து வேறுபட்ட சுயாதீன வழக்குத்தொடுநர்
அலுவலகம் இன்னமும் ஸ்தாபிக்கப்படவில்லை. </p><p>எனினும், கிழக்கு பல்கலைக்கழக
உபவேந்தர் படுகொலை மற்றும் உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்கள் தொடர்பான சில
முக்கிய வழக்குகளில் முன்னேற்றம் எட்டப்பட்டுள்ளது.</p><p>பயங்கரவாதத் தடைச் சட்டம் தொடர்ந்து பிரயோகிக்கப்படுவதால் நியாயமான வழக்கு
விசாரணை மற்றும் முறையான நீதிமன்ற மேற்பார்வை உள்ளிட்ட நபர்களின் அடிப்படை
உரிமைகள் மீறப்படுகின்றன. </p><p>மேலும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில்
பாதிக்கப்பட்ட தரப்பினர் மற்றும் சிவில் செயற்பாட்டாளர்களை இலக்குவைத்துத்
தொடர் கண்காணிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p><h2>காணாமல்போனோர் அலுவலகம்</h2><p>அண்மைய காலங்களில் பல்வேறு பகுதிகளிலும் மனிதப் புதைகுழிகள் கண்டறியப்பட்டுள்ள
நிலையில், காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் மீது மக்கள் நம்பிக்கையை
இழந்துள்ளனர். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a2a79f81-9f35-4994-a2f2-eddb9c9852fb/26-6aa0ee538f49a.webp' /></p><p>வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு என்ன நேர்ந்தது என்ற கேள்வி
இன்னமும் பதிலின்றித் தொடர்வதால், அந்த அலுவலகத்தின் மீது மக்களின்
நம்பிக்கையை மீளக்கட்டியெழுப்பும் வகையில் அதனைப் பலப்படுத்த வேண்டியது
அவசியமாகும்.
</p><p>
போர்க் காலத்தில் இடம்பெற்ற பாலியல் வன்முறைகள் குறித்த ஐ.நா. மனித உரிமைகள்
பேரவையின் அறிக்கையை இலங்கை அரசு நிராகரித்தமை சுட்டிக்காட்டத்தக்கது.</p><h2>மலையக சமூகத்துக்கு நிதி ஒதுக்கீடு</h2><p>2026ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தின் பிரகாரம் நாட்டின்
வருமானத்தில் 82 வீதமானவை கடன் மீள்செலுத்துதலுக்காக ஒதுக்கப்பட்டுள்ள
நிலையில், சுகாதாரம், கல்வி மற்றும் அனர்த்தங்களால் சீர்குலைந்த நாட்டை
மீளக்கட்டியெழுப்புவதற்குப் போதிய நிதி ஒதுக்கீடு செய்யப்படாமை தீவிர
கரிசனைக்குரியது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/755702bc-c1ea-4733-ad56-9f375bdc3e91/26-6aa0ee5448ba8.webp' /></p><p>குறிப்பாக மலையகச் சமூகத்தின் மேம்பாட்டுக்கான நிதி
ஒதுக்கீடு அவசியமாகும்.
</p><p>
நாட்டில் இனவாதத்துக்கு இடமில்லை என்ற ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின்
கூற்றுக்கு வரவேற்கத்தக்கது.</p><p>

இலங்கையில் ஆழமான கட்டமைப்பு ரீதியான மறுசீரமைப்புக்கள் மேற்கொள்ளப்பட
வேண்டும்.

இதயசுத்தியுடனான நீதி, பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கச் செயன்முறைக்குத்
தேவையான ஒத்துழைப்பை வழங்க ஐ.நா. மனித உரிமைகள் பேரவை தயாராக இருக்கின்றது“ என்றும் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-09T05:33:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரான்ஸ் ரெனுவா அருங்காட்சியகத்தில் ஓவியங்கள் கொள்ளை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/paintings-stolen-from-the-renoir-museum-in-france-1788932188"></link>
            <id>https://canadamirror.com/article/paintings-stolen-from-the-renoir-museum-in-france-1788932188</id>
            <summary type="text">&amp;nbsp; பிரான்ஸ் ரெனுவா அருங்காட்சியகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை புகுந்த இரு கொள்ளையர்கள், நான்கு கலைப்படைப்புகளைத் திருடிச் சென்ற நிலையில், அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; பிரான்ஸ் ரெனுவா அருங்காட்சியகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை புகுந்த இரு கொள்ளையர்கள், நான்கு கலைப்படைப்புகளைத் திருடிச் சென்ற நிலையில், அவற்றில் இரண்டு ஓவியங்களைத் தப்பிச் செல்லும்போது கைவிட்டதாக நகர மேயர் தெரிவித்துள்ளார்.</p><p>
 அருங்காட்சியகத்திற்குள் நுழைந்த இரு திருடர்களும், சுமார் 9 மில்லியன் யூரோ மதிப்புடைய நான்கு கலைப்படைப்புகளை எடுத்துச் சென்றதாக மேயர் பிரையன் மாஸன் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ed0f042a-4dd2-42a1-89aa-7d99cc23d129/26-6aa0f05d4f849.webp' /></p><h2>&nbsp;சுமார் 9 மில்லியன் யூரோ மதிப்புடைய&nbsp; ஓவியங்கள் </h2><p>
</p><p>
நகரின் வீடியோ கண்காணிப்பு காட்சிகளின் உதவியுடன் கொள்ளையர்களை அதிகாரிகள் அடையாளம் கண்டு அவர்களைத் துரத்திச் சென்றனர். எனினும், இருவரும் தப்பிச் சென்றுள்ளனர்.
</p><p>
தப்பிச் செல்லும் போது திருடப்பட்ட ஓவியங்களில் ஒன்றை அவர்கள் கைவிட்டுச் சென்றதாக மேயர் தெரிவித்துள்ளார். இதனால் இரண்டு கலைப்படைப்புகள் தற்போது காணாமல் போயுள்ளதாகக் கூறப்படுகிறது.
</p><p>
திருடப்பட்டதாகக் கூறப்படும் கலைப்படைப்புகளின் முழுமையான விவரங்கள் மற்றும் அவற்றின் அடையாளங்கள் குறித்து அதிகாரிகள் உடனடியாக தகவல் வெளியிடவில்லை.&nbsp;</p><p>
இந்தக் கொள்ளைச் சம்பவம், ஐரோப்பாவின் பல்வேறு பகுதிகளில் அண்மைக்காலமாக இடம்பெற்று வரும் முக்கியமான கலை மற்றும் கலாச்சாரச் சொத்துத் திருட்டுகளுக்கு மத்தியில் இடம்பெற்றுள்ளது.
</p><p>
ரெனுவா அருங்காட்சியகம், பிரபல பிரெஞ்சு இம்ப்ரஷனிஸ்ட் ஓவியரான பியர்-அகஸ்ட் ரெனுவார் தனது வாழ்வின் இறுதி ஆண்டுகளைக் கழித்த முன்னாள் இல்லம் மற்றும் கலைக்கூடத்தில் அமைந்துள்ளது.
 
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க இடம், ரெனுவாரின் வாழ்க்கை மற்றும் கலைப் பாரம்பரியத்துடன் நெருங்கிய தொடர்புடையதாகக் கருதப்படுகிறது.

</p><p>சம்பவம் தொடர்பாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p>]]></content>
            <updated>2026-09-09T05:33:21+00:00</updated>
        </entry>
    </feed>
