<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-09-02T08:52:27+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தர்ஷினி சொன்ன விஷயம், ராவணனின் அடுத்த டார்க்கெட்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/ethirneechal-thodargiradhu-promo-02-sep-2026-1788326906"></link>
            <id>https://cineulagam.com/article/ethirneechal-thodargiradhu-promo-02-sep-2026-1788326906</id>
            <summary type="text">எதிர்நீச்சல் தொடர்கிறதுகுணசேகரன் செய்த தவறுக்கு அவருக்கு தண்டனை வாங்கி தந்தே ஆக வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளார் ஜனனி. அதற்கு போராடுவதற்கு பதிலாக அவ...</summary>
            <content type="html"><![CDATA[<h2>எதிர்நீச்சல் தொடர்கிறது</h2><p>குணசேகரன் செய்த தவறுக்கு அவருக்கு தண்டனை வாங்கி தந்தே ஆக வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளார் ஜனனி. அதற்கு போராடுவதற்கு பதிலாக அவருக்கு வேறு வேறு பிரச்சனைகள் எல்லாம் வருகிறது, வழக்கும் திசைத்திருப்பப்படும் என தெரிகிறது.</p><p>குணசேகரன் ஆட்டமே இன்னும் முடியவில்லை அதற்குள் ராவணன் என்ற கதாபாத்திரத்தை உள்ளே கொண்டு வந்து கதையே மாறிவிட்டது. முன்பு குணசேகரன் எல்லோரையும் ஆட்டி வைப்பார், இப்போது ராவணன் எல்லோரையும் ஆட்டி வைக்கிறார்.</p><p>மற்றபடி கதையில் நியாயம், தர்மம் எல்லாம் நிலைநாட்டவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d9b55e47-3266-431d-948c-cfbacdc42f94/26-6a97e31bb20dd.webp' /></p><h2>புரொமோ</h2><p>இன்றைய எபிசோட் புரொமோவில், அறிவுக்கரசி, ராவணனுக்கு போன் செய்து அண்ணன்-தம்பிகள், ஜனனி எல்லாம் ஒன்று கூடுவார்கள் போல் தெரிகிறது என கூற ராவணன் அப்படி நடக்கக்கூடாது. அவர்கள் அடித்துக்கொள்வது போல் ஏதாவது செய் என்கிறார்.</p><p>அடுத்து தர்ஷினி தனது அப்பாவிடம் அவரவர் மாறினாலே பிரச்சனை தீரும் என கூற குணசேகரன் என்னை கூறுகிறாயா என கேட்கிறார்.</p><p>இதோ புரொமோ,</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/9aS-3IGWiVU" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-09-02T08:49:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[பழ விவசாயிகளுக்கு புதிய காப்புறுதித் திட்டம் அறிமுகம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/new-insurance-scheme-introduced-for-fruit-farmers-1788338683"></link>
            <id>https://jvpnews.com/article/new-insurance-scheme-introduced-for-fruit-farmers-1788338683</id>
            <summary type="text">பழப் பயிர்ச்செய்கையில் ஏற்படும் பல்வேறு அபாயங்களிலிருந்து விவசாயிகளைப் பாதுகாக்கும் நோக்கில் புதிய காப்புறுதித் திட்டமொன்றை விவசாய மற்றும் கமநல காப்பு...</summary>
            <content type="html"><![CDATA[<p>பழப் பயிர்ச்செய்கையில் ஏற்படும் பல்வேறு அபாயங்களிலிருந்து விவசாயிகளைப் பாதுகாக்கும் நோக்கில் புதிய காப்புறுதித் திட்டமொன்றை விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபை அறிமுகப்படுத்தியுள்ளது.</p><p>
</p><p></p><p>விவசாய அமைச்சின் கீழ் இயங்கும் விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபையினால் இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5a750851-0722-462b-9f21-80d9806c4046/26-6a97e1fcb8912.webp' /></p><p>

இதன் கீழ், விவசாயத் திணைக்களத்தினால் பரிந்துரைக்கப்பட்ட அன்னாசி, பப்பாளி மற்றும் வாழை உள்ளிட்ட பழப் பயிர்களுக்கு காப்புறுதி பெற்றுக்கொள்ள முடியும்.</p><p>விவசாயிகள் அடிப்படை காப்புறுதித் தொகையில் 7 சதவீதத்திற்கு சமமான காப்புறுதிக் கட்டணத்தை செலுத்தி இந்தப் பாதுகாப்பைப் பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இயற்கை அனர்த்தங்கள், நோய்கள், பூச்சி மற்றும் புழுத் தாக்குதல்கள் உள்ளிட்ட காரணங்களால் ஏற்படும் பயிர் சேதங்களுக்கு இந்தக் காப்புறுதித் திட்டத்தின் கீழ் இழப்பீடு வழங்கப்படும்.
</p><p>
அத்துடன், காட்டு யானைகளினால் ஏற்படும் பயிர் சேதங்களுக்கும் காப்புறுதி பாதுகாப்பு வழங்கப்படுவதாக விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபை தெரிவித்துள்ளது.</p><p>

பயிர்களுக்கு சேதம் ஏற்படும் பட்சத்தில், ஒரு ஏக்கருக்கு 3 இலட்சம் ரூபாய் முதல் 4 இலட்சம் ரூபாய் வரை இழப்பீடு வழங்கப்படலாம் என சபை தெரிவித்துள்ளது.
</p><p>
விவசாய அபாயங்களை சிறப்பாக முகாமைத்துவம் செய்வதற்கும், பழப் பயிர்ச்செய்கையில் விவசாயிகள் தொடர்ந்து ஈடுபடுவதை ஊக்குவிப்பதற்கும் இந்தத் திட்டம் முக்கிய பங்களிப்பை வழங்கும் என விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபை குறிப்பிட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-02T08:46:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[உடலுக்கு வலு தரும் உளுத்தங் கஞ்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/benefits-drinking-uluthankanji-twice-a-week-1788335192"></link>
            <id>https://news.lankasri.com/article/benefits-drinking-uluthankanji-twice-a-week-1788335192</id>
            <summary type="text">30 வருடம் முன்பு எடுத்துக் கொண்டால் பெரியவர்கள் வீட்டில் உள்ள குழந்தைகளுக்கு உணவுகளை பார்த்து பார்த்து கொடுத்து வந்தார்கள். அதாவது, எந்த கிழமையில் என்...</summary>
            <content type="html"><![CDATA[<p>30 வருடம் முன்பு எடுத்துக் கொண்டால் பெரியவர்கள் வீட்டில் உள்ள குழந்தைகளுக்கு உணவுகளை பார்த்து பார்த்து கொடுத்து வந்தார்கள். அதாவது, எந்த கிழமையில் என்ன உணவு கொடுக்க வேண்டும்? எந்த நேரத்தில் என்ன உணவு கொடுக்க வேண்டும் என்று ஆரோக்கியமாக தேடி கொடுத்தார்கள். </p><p>ஆனால், தற்போதைய காலகட்டங்களில் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவு கொடுத்தாலும் அதை அவர்கள் காலநிலை மாற்றத்தால் துரித உணவுகளையே தேடி விரும்பி சாப்பிடுகிறார்கள். அதற்கு அடிமையாக இருக்கிறார்கள். இதனால் குழந்தைகளுக்கு சிறுவயதில் இருந்தே கிடைக்க வேண்டிய ஆரோக்கியம் இல்லாமல் போகிறது.</p><p> அந்த வகையில், குழந்தைகள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால் அதற்கான உணவுகளை சரியான இடைவெளியில் தவறாமல் எடுக்க வேண்டும். அப்படியாக, குழந்தைகள் எடுத்துக்கொள்ள வேண்டிய ஒரு சத்தான கஞ்சி வகைகளை பற்றி பார்ப்போம்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/20ab23f3-7f69-48cb-ad49-7fbdbd4be709/26-6a97d45f05753.webp' /></p><p></p><h3>&nbsp;உளுந்தங்கஞ்சி:
</h3><p>
 குழந்தைகளுக்கு நிச்சயம் இந்த உளுந்தங்கஞ்சியை உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். வாரத்தில் இரு முறை நாம் கொடுக்கும் பொழுது குழந்தைகளுக்கு பல்வேறு வகையான நன்மைகள் கிடைக்கிறது. </p><p>இதனை தொடர்ந்து எடுத்துக் கொள்ளும் பொழுது குழந்தைகளுக்கும் பெரியவர்களும் மூட்டு வலி, இடுப்பு வலி, கை கால் வலி ஆகியவற்றிலிருந்து நிவாரணம் கிடைக்கிறது.

அதேபோல், பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஏற்படக்கூடிய சிரமங்களில் இருந்து ஒரு நல்ல நிவாரணம் கிடைக்கிறது. சிறுநீர் தொடர்பான தொற்றுகள் விலகுகிறது.&nbsp;</p><h3>உடல் எடை: </h3><p>
ஒரு சில குழந்தைகள் அல்லது ஒரு சிலர் மிகவும் மெலிந்த தோற்றத்தில் காணப்படுவார்கள். எவ்வளவு சாப்பிட்டும் உடல் எடை ஆத்திகரிப்பது இல்லை. அவர்கள் இந்த கஞ்சியை தினமும் எடுத்துக் கொள்கின்ற பொழுது ஆரோக்கியமான உடல் எடை அதிகரிக்கிறது. 
குறிப்பாக இதில் சேர்க்கப்படும் உளுந்து தோல் அகற்றப்பபடமால் இருக்கும் பட்சத்தில் எலும்புகளுக்கு வலு கிடைக்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/90086682-8bba-46f8-958d-ed51d34c8f66/26-6a97d45fb30b3.webp' /></p><h3>&nbsp;கஞ்சி செய்வதற்கு தேவையான பொருட்கள்:
</h3><p> உளுந்தங்கஞ்சி செய்வதற்கு தேவையான பொருட்கள் பார்ப்போம். இந்த கஞ்சியை செய்வதற்கு 100 கிராம் கருப்பு உளுந்து, வெல்லம் அல்லது கருப்பட்டி அரிசி கால் கப், துருவிய தேங்காய், ஏலக்காய் தூள் மற்றும் உப்பு சிறிதளவு எடுத்துக் கொள்ள வேண்டும். </p><p>பிறகு அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து உளுந்தை போட்டு சிவப்பு நிறம் மாறும் வரை வறுக்க வேண்டும். அதே போல், அரிசியையும் தனியாக அதில் போட்டு பொரிந்து வரும் வரை வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.&nbsp;&nbsp;</p><p></p><h3>செய்முறை: </h3><p>

இந்த இரண்டும் சூடு ஆறிய பிறகு மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக பொடித்து எடுத்துக் கொள்ள வேண்டும். அடுத்து அடுப்பில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி வெல்லம் போட்டு கரையும் வரை அதனை கொதிக்க விட்டு இறக்க வேண்டும். </p><p>அடுத்து நாம் பொடித்து வைத்துள்ள மாவு கெட்டி சேராமல் தண்ணீர் ஊற்றி கலக்கி கொள்ள வேண்டும். பிறகு, அடுப்பில் அடி கனமான பாத்திரத்தை வைத்து அதில் நாம் கரைத்து வைத்துள்ள மாவை ஊற்றி கைவிடாமல் மிதமான தீயில் கொதிக்க விட்டு கிளற வேண்டும். </p><p>பின்னர் அதில் நாம் உருக்கி வைத்துள்ள வெல்ல நீரையும் ஊற்றி நன்றாக கலந்து விடவும். பிறகு வாசனைக்காக ஏலக்காய் சிறிதளவு, உப்பு சிட்டிகை சேர்த்து இறக்க வேண்டும்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ac6139d1-f159-450c-aeca-ac2960ca1575/26-6a97d46070216.webp' /></p><h3>முந்திரி திராட்சை:</h3><p> 

இதனை குழந்தைகள் விரும்பி சாப்பிடும் வண்ணமாக அதன் சுவையை இன்னும் அதிகரிக்க நெய்யில் துருவிய தேங்காய், முந்திரி திராட்சை உள்ளிட்டவைகளை சேர்த்து வறுத்து எடுத்து காஞ்சியில் சேர்த்துக் கிளறினால் நல்ல சுவையான உளுந்தங்கஞ்சி தயார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-02T08:46:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[200 நாள் கடல் வாழ்க்கைக்கு முடிவு; ; ஓய்வெடுக்க தாய்லாந்து செல்லும் 5000 அமெரிக்க வீரர்கள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/uss-abraham-lincoln-5-000-troops-rest-in-thailand-1788328381"></link>
            <id>https://canadamirror.com/article/uss-abraham-lincoln-5-000-troops-rest-in-thailand-1788328381</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp; அமெரிக்க கடற்படை மற்றும் கடற்படை வீரர்கள் சுமார் 5,000 பேர், 200 நாட்களுக்கும் மேலான நீண்ட கடற்படை பணிக்கு பிறகு USS Abraham Lincoln விம...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp; அமெரிக்க கடற்படை மற்றும் கடற்படை வீரர்கள் சுமார் 5,000 பேர், 200 நாட்களுக்கும் மேலான நீண்ட கடற்படை பணிக்கு பிறகு USS Abraham Lincoln விமானம் தாங்கி கப்பலில் பட்டாயா அருகே உள்ள Laem Chabang துறைமுகத்தை சென்றடையவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
</p><p> 
வீரர்களுக்கு ஓய்வு மற்றும் புத்துணர்வு அளிக்கும் வகையில் கரையோர பகுதிகளில் நேரம் செலவிட அனுமதி வழங்கப்பட உள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/38fd0127-c144-418b-b476-03e53012010b/26-6a97b9bee0c34.webp' /></p><h2>சட்டவிரோத பாலியல் தொழில் அதிகரிக்கக்கூடும்&nbsp;&nbsp;</h2><p> இதனால் பட்டாயாவில் உள்ள ஹோட்டல்கள், உணவகங்கள், பார்கள், கடைகள் உள்ளிட்ட சுற்றுலா சார்ந்த தொழில்களுக்கு குறுகிய காலத்தில் கூடுதல் வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. </p><p>ஒவ்வொரு அமெரிக்க வீரரும் தினமும் சுமார் 1,000 முதல் 3,000 தாய் பாட் வரை செலவு செய்யக்கூடும் என பட்டாயா மேயர் தெரிவித்துள்ளார்.
</p><p> 
அதே நேரத்தில், வீரர்களின் வருகையால் சட்டவிரோத பாலியல் தொழில் அதிகரிக்கக்கூடும் என்ற அச்சமும் போலீசாரிடம் உள்ளது. </p><p>இதையடுத்து கடற்கரை மற்றும் முக்கிய இரவு நேர பொழுதுபோக்கு பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே நடத்தப்பட்ட சோதனைகளில் சுமார் 40 முதல் 50 பேர் பாலியல் தொழில் தொடர்பான சந்தேகத்தின் பேரில் பிடிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p>
 
வியட்நாம் போர் காலத்திலிருந்தே அமெரிக்க ராணுவ வீரர்களின் ஓய்வு சுற்றுலாவுடன் பட்டாயாவுக்கு நீண்ட தொடர்பு உள்ளது. 

தற்போது 200 நாட்களுக்கும் மேலாக கடலில் இருந்த USS Abraham Lincoln வீரர்களின் வருகை, நகரின் சுற்றுலா மற்றும் வர்த்தக நடவடிக்கைகளுக்கு தற்காலிக ஊக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p>]]></content>
            <updated>2026-09-02T08:42:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பின் பல பகுதிகளில் 24 மணி நேர நீர்வெட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/24-hour-water-cut-for-several-colombo-1788337365"></link>
            <id>https://tamilwin.com/article/24-hour-water-cut-for-several-colombo-1788337365</id>
            <summary type="text">அம்பத்தலை நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மேற்கொள்ளப்படும் அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள் காரணமாக, கொழும்பு மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளின் பல இடங்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>அம்பத்தலை நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மேற்கொள்ளப்படும் அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள் காரணமாக, கொழும்பு மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளின் பல இடங்களில் 24 மணி நேர நீர் விநியோகத் தடை விதிக்கப்படுவதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்புச் சபை அறிவித்துள்ளது.
</p><p>இந்தத் தடை&nbsp; செப்டெம்பர் 3, இரவு 8.00 மணி முதல் செப்டெம்பர் 4, இரவு 8.00 மணி வரை நடைமுறையில் இருக்கும்.
</p><h2>பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள்</h2><p>
நுகேகொடை, கொஹுவல, தெஹிவளை, கல்கிசை, இரத்மலானை, மொரட்டுவ, ராவதவத்தை, சொய்சாபுர, அங்குலான, இண்டிபெத்திய , கட்டுபெத்த, கல்தெமுல்ல, மோதர, கொரலவெல்ல, எகொட உயன மற்றும் கடுகுருண்டா ஆகிய பகுதிகளுக்கு நீர் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படவுள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0a98aace-d300-4479-9ff0-684e524d50fb/26-6a97e03a80342.webp' /></p><p>
செத்சிறிபாய, ஹிம்புட்டான, உடுமுல்ல வீதி, மாளிகைகொடெல்ல, வங்கி சந்தி வீதி, டபிள்யூ.ஏ. சில்வா மாவத்தை, ஹேவ்லாக் வீதி, கல்யாணி வீதி, கொழும்பு 06, வைத்தியசாலை சுற்றுவட்டார வீதி, ஜெயந்தி மாவத்தை மற்றும் சாந்தி மாவத்தை ஆகிய பகுதிகளிலும் நீர் விநியோகம் தடைபடும்.
</p><p>
தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்புச் சபை, நுகர்வோருக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு வருத்தம் தெரிவிப்பதோடு, பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களும் வணிக நிறுவனங்களும் முன்கூட்டியே ஏற்பாடுகளைச் செய்துகொள்ளவும், நீர் விநியோகத் தடைக்காலத்தில் தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தவும் வலியுறுத்தியுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-02T08:42:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஒரே ஒரு சன் கிளாஸ்; பட்டிதொட்டி எங்கும் வைரலாகும் மூதாட்டி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sunglass-gifted-cm-vijay-elderly-woman-goes-viral-1788338268"></link>
            <id>https://jvpnews.com/article/sunglass-gifted-cm-vijay-elderly-woman-goes-viral-1788338268</id>
            <summary type="text">&amp;nbsp; தமிழ்நாட்டின் முதலமைச்சர் விஜய் , சேலத்தில் தான் அணிந்திருந்த சன் கிளாஸை மூதாட்டி ஒருவருக்கு பரிசளித்த நிலையில், குறித்த மூதாட்டி சமூக வலைத்தளங...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; தமிழ்நாட்டின் முதலமைச்சர் விஜய் , சேலத்தில் தான் அணிந்திருந்த சன் கிளாஸை மூதாட்டி ஒருவருக்கு பரிசளித்த நிலையில், குறித்த மூதாட்டி சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளார்.
</p><p>
முதலமைச்சர் ஜோசப் விஜய் நேற்றையதினம் மேட்டூர் அணையை திறப்பதற்காக மேட்டூருக்கு சென்றார். 

 மேட்டூர் அணையை திறந்து வைத்த பின் சின்னக்காவூரில் விவசாயிகளை முதல்வர் விஜய் சந்தித்து உரையாடிபோது மூதாட்டி ஒருவர் அவருடன் மிகவும் பாசமாக பேசி அவருடன் நடந்து சென்றார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4e5e19bd-81bf-4a6f-b583-c805266f6960/26-6a97e05e7ddc9.webp' /></p><h2>பட்டிதொட்டி எங்கும் வைரலாகும் மூதாட்டி&nbsp;</h2><p> அப்போது விஜய் தன்னிடமிருந்து சன் கிளாஸை அவருக்கு போட்டுவிட்டார். மூதாட்டி அந்த கண்ணாடியை அணிந்துகொண்டே விஜயுடன் வலம் வந்தார்.</p><p></p><p>

அந்த கண்ணாடியின் விலை இந்திய ரூபாயில் ,30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரை இருக்கலாம் என கூறப்படுகின்றது.

இன்னிலையில் முதலமைச்சரிடம் சண்கிளாஸ் வாங்கிய மூதாட்டியுடன் பலரும் புகைப்படங்க்கள் எடுத்து வெளியிட்ட நிலையில் சமூகவலைத்தளங்களில் அந்த மூதாட்டி வைரலாகியுள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-02T08:41:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>H. A. Roshan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வாழ்க்கை செலவை குறைக்க நடவடிக்கை எடுக்கவும்! அரசிடம் இம்ரான் எம். பி கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/living-cost-of-people-imran-mp-request-1788337659"></link>
            <id>https://tamilwin.com/article/living-cost-of-people-imran-mp-request-1788337659</id>
            <summary type="text">வாழ்க்கை செலவு அதிகரிப்பினால் பொதுமக்கள் பெரும் கஷ்டங்களை அனுபவித்து
வருகின்றனர். எனவே வாழ்க்கை செலவை குறைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க
வேண்டு...</summary>
            <content type="html"><![CDATA[<p>வாழ்க்கை செலவு அதிகரிப்பினால் பொதுமக்கள் பெரும் கஷ்டங்களை அனுபவித்து
வருகின்றனர். எனவே வாழ்க்கை செலவை குறைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க
வேண்டும் என திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப்
கோரிக்கை விடுத்துள்ளார்.
</p><p>
ஊடகங்களுக்கு இன்று (02) கருத்து தெரிவித்த அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது

அத்தியாவசியப் பொருட்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. </p><p>எனினும்
மக்களின் வருமானம் அதிகரிக்க வில்லை. இதனால் மூன்று வேளை உணவு உண்பதில் பல
குடும்பத்தினர் சிரமப் படுகின்றனர்.

நாட்டில் அதிகமான அரச உத்தியோகத்தர்கள் குறைந்த சம்பளம் பெறுவோராவர்.
</p><p>பிள்ளைகளின் கல்விச் செலவு, உணவுச் செலவு என்பவற்றை சமாளிக்க முடியாமல்
இவர்கள் கஷ்டப் படுகின்றனர்.

இந்த நிலைமையினால் பிள்ளைகளின் உணவுத்தேவையை சரியாகப் பூர்த்தி செய்ய முடியாத
நிலை பெற்றோருக்கு ஏற்படுகின்றது.</p><p> இதனால் போசாக்கு குறைந்த பிள்ளைகளின்
எண்ணிக்கை எதிர்காலத்தில் அதிகரிக்கும் ஆபத்து உள்ளது.

மக்களின் வாழ்க்கை தரத்தைப் பேணுவது அரசாங்கத்தின் பொறுப்பாகும். இந்தப்
பொறுப்பை அரசாங்கம் சரிவர நிறைவேற்ற வேண்டும்.

எனவே அரசாங்கம் இந்த விடயத்தில் உடன் கவனம் செலுத்த வேண்டும்</p>]]></content>
            <updated>2026-09-02T08:28:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட மொட்டுக்கட்சியின் முன்னாள் மேயர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/hambantota-municipal-council-eraj-fernando-dead-1788332953"></link>
            <id>https://ibctamil.com/article/hambantota-municipal-council-eraj-fernando-dead-1788332953</id>
            <summary type="text">அம்பாந்தோட்டை மாநகர சபையின் முன்னாள் மேயர் எராஜ் ரவீந்திர பெர்னாண்டோ, பம்பலப்பிட்டியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக காவல...</summary>
            <content type="html"><![CDATA[<p>அம்பாந்தோட்டை மாநகர சபையின் முன்னாள் மேயர் எராஜ் ரவீந்திர பெர்னாண்டோ, பம்பலப்பிட்டியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
</p><p>
அவரது சடலம் குறித்த அடுக்குமாடி குடியிருப்புக்குள் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.</p><p>
சடலம் இவ்வாறு மீட்டக்கப்பட்ட நிலையில், உயிரை மாய்த்துக்கொள்ள முயச்சி செய்திருக்கலாம் என்றும் காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.&nbsp;</p><p></p><h2>எராஜ் பெர்னாண்டோ&nbsp;</h2><p>தற்போது அவருக்கு 57 வயது என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d2c40d4e-8da3-453c-9fa4-d05fefd8d9bd/26-6a97ceb512be5.webp' /></p><p> </p><p>அம்பாந்தோட்டை மாநகரசபைக்கு மேயராக 2018 ஆம் ஆண்டில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவுடன், தெரிவாகியிருந்தார் என தெரிவிக்கபட்டுள்ளது. </p><p>

மேலும், இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-02T08:27:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஏழு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்த புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/channel-migrant-crossings-7-year-low-in-france-1788336408"></link>
            <id>https://news.lankasri.com/article/channel-migrant-crossings-7-year-low-in-france-1788336408</id>
            <summary type="text">Seven year low in Channel migrant crossings: பிரான்சிலிருந்து பிரித்தானியாவுக்கு புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கை, ஏழு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்துள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>Seven year low in Channel migrant crossings: பிரான்சிலிருந்து பிரித்தானியாவுக்கு புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கை, ஏழு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது.</p><p>


வழக்கமாக, ஜூன், ஜூலை மற்றும் ஆகத்து மாதங்களில், வானிலை ஆங்கிலக்கால்வாயில் பயணிப்பதற்கு சாதகமாக இருக்கும் என்பதால், பிரான்சிலிருந்து ஆங்கிலக்கால்வாய் வழியாக பிரித்தானியாவுக்குள் நுழையும் புலம்பெயர்வோர் எண்ணிக்கையும் அதிகமாக இருக்கும்.</p><h3>

ஏழு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு...
</h3><p>
ஆனால், இந்த ஜூன், ஜூலை மற்றும் ஆகத்து மாதங்களில், 7,371 புலம்பெயர்வோர் மட்டுமே பிரான்சிலிருந்து ஆங்கிலக்கால்வாய் வழியாக பிரித்தானியாவுக்குள் நுழைந்துள்ளார்கள்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e9f52c7a-dcd9-4bdb-ad86-97b0a71d05d2/26-6a97d919e06a7.webp' /></p><p>
பிரித்தானிய உள்துறை அலுவலகத் தரவுகளின்படி, 2020ஆம் ஆண்டுக்குப் பிறகு, அப்படி பிரான்சிலிருந்து ஆங்கிலக்கால்வாய் வழியாக பிரித்தானியாவுக்குள் நுழையும் புலம்பெயர்வோர் எண்ணிக்கையிலேயே இதுதான் குறைவான எண்ணிக்கை ஆகும்.</p><p>

பின்னணி

அதாவது, ஏப்ரல் மாதம், பிரான்சிலிருந்து பிரித்தானியாவுக்குள் நுழையும் புலம்பெயர்வோரைக் கட்டுப்படுத்துவதற்காக, பிரித்தானியாவும் பிரான்சும் மூன்று ஆண்டுகளுக்கான ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.</p><p>

பிரான்சிலிருந்து ஆங்கிலக்கால்வாய் வழியாக பிரித்தானியாவுக்குள் நுழைய முயலும் புலம்பெயர்வோரைத் தடுத்து நிறுத்துவதற்காக, பிரான்சுக்கு பிரித்தானியா 766 மில்லியன் பவுண்டுகள் அளிக்க சம்மதம் தெரிவித்துள்ளது.&nbsp;</p><p></p><p>
அதன் தொடர்ச்சியாக பிரான்ஸ் எடுத்துவரும் நடவடிக்கைகளைத் தொடர்ந்தே பிரான்சிலிருந்து பிரித்தானியாவுக்குள் நுழையும் புலம்பெயர்வோர் எண்ணிக்கை குறைந்துள்ளதாக நம்பப்படுகிறது.
</p><p>
விடயம் என்னவென்றால், இப்படி இந்த கோடையின்போது பிரான்சிலிருந்து பிரித்தானியாவுக்குள் நுழையும் புலம்பெயர்வோர் எண்ணிக்கை ஏழு ஆண்டுகளில் இல்லாத அளவுக்குக் குறைந்துள்ளது என்றாலும், பெரிய படகுகளில் எக்கச்சக்கமான புலம்பெயர்வோர் பிரித்தானியாவுக்குள் நுழைவது சமீபத்தில் அதிகரித்துள்ளது என்பதையும் மறுப்பதற்கில்லை.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-02T08:25:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[எதிர்கால உலகை மாற்றப்போகும் ரோபோக்கள் ; எலான் மஸ்க் வெளியிட்ட அதிர்ச்சி கணிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/robots-will-change-the-future-world-elon-musk-s-1788337426"></link>
            <id>https://canadamirror.com/article/robots-will-change-the-future-world-elon-musk-s-1788337426</id>
            <summary type="text">அடுத்த 10 ஆண்டுகளில் உலகளவில் 100 கோடிக்கும் அதிகமான மனித உருவ ரோபோக்கள் பயன்பாட்டுக்கு வரும் என டெஸ்லா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க் த...</summary>
            <content type="html"><![CDATA[<p>அடுத்த 10 ஆண்டுகளில் உலகளவில் 100 கோடிக்கும் அதிகமான மனித உருவ ரோபோக்கள் பயன்பாட்டுக்கு வரும் என டெஸ்லா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான கருத்தை அவர் தனது சமூக வலைத்தளப் பதிவொன்றில் வெளியிட்டுள்ளார்.
</p><p>
ரோபோக்களே புதிய ரோபோக்களை உற்பத்தி செய்யத் தொடங்கும் பட்சத்தில், அவற்றின் எண்ணிக்கையும் வளர்ச்சியும் கற்பனை செய்ய முடியாத வேகத்தில் அதிகரிக்கும் என எலான் மஸ்க் குறிப்பிட்டுள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e96ec324-159c-4362-8b88-223ee1a8bee9/26-6a97dd133c415.webp' /></p><p>அத்துடன், எதிர்காலத்தில் ஒரு மனித உருவ ரோபோவின் செயல்திறன் மனிதனை விட சுமார் ஐந்து மடங்கு அதிகமாக இருக்கக்கூடும் எனவும் அவர் கணித்துள்ளார்.
</p><p>
மேலும், இன்னும் ஒரு வருடத்திற்குள் செயற்கை நுண்ணறிவு அனைத்து துறைகளிலும் மனிதனின் அறிவாற்றல் திறன்களை விஞ்சிவிடும் எனவும், இந்த தசாப்தத்தின் இறுதிக்குள் மனிதகுலத்தின் ஒட்டுமொத்த நுண்ணறிவையும் செயற்கை நுண்ணறிவு மிஞ்சக்கூடும் எனவும் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
</p><p>
எனினும், இவை எலான் மஸ்க் வெளியிட்டுள்ள எதிர்காலம் தொடர்பான கணிப்புகளே என்பதும் குறிப்பிடத்தக்கது.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">ELON MUSK: A billion humanoid robots will be more productive than all humans combined within 10 years.<br><br>“There will be at least a billion robots in 10 years, and each will produce at least five times the output of a human.” <a href="https://t.co/4N6etC48L5">pic.twitter.com/4N6etC48L5</a></p>&mdash; DogeDesigner (@cb_doge) <a href="https://x.com/cb_doge/status/2094793785523962255?ref_src=twsrc%5Etfw">September 1, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p>]]></content>
            <updated>2026-09-02T08:24:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கட்டுகடங்காத வெள்ளத்தில் மூழ்கிய 100 ஆண்டுகள் பழமையான ஆலயம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/100-year-old-durga-temple-submerged-in-flood-bihar-1788337528"></link>
            <id>https://jvpnews.com/article/100-year-old-durga-temple-submerged-in-flood-bihar-1788337528</id>
            <summary type="text">&amp;nbsp; இந்தியாவின் பீகார் மாநிலம் பாகல்பூர் மாவட்டம் ராகோபூர் கிராமத்தில் கங்கை நதிக்கரையில் இருந்த 100 ஆண்டுகள் பழமையான சைதி துர்கை கோவில், வெள்ளத்தி...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; இந்தியாவின் பீகார் மாநிலம் பாகல்பூர் மாவட்டம் ராகோபூர் கிராமத்தில் கங்கை நதிக்கரையில் இருந்த 100 ஆண்டுகள் பழமையான சைதி துர்கை கோவில், வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.
</p><p>
 அதிவேக நீரோட்டம் மற்றும் கடுமையான கரை அரிப்பால் அடிப்பகுதி பலவீனமடைந்து நொடிகளில் இடிந்து ஆற்றில் முழுவதும் மூழ்கியது. பல தலைமுறைகள் வழிபட்ட இந்த கோவில் அழிவால் உள்ளூர் மக்கள் பெரும் துயரத்தில் ஆழ்ந்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3222e6c5-f04c-447c-8f09-ce4819dec2ca/26-6a97dd7a48c94.webp' /></p><h2>கோவில் அழிவால் உள்ளூர் மக்கள் பெரும் துயரம்</h2><p> 

பீகார் மாநிலம் பாகல்பூர் மாவட்டம் ராகோபூர் கிராமத்தில், கங்கை நதியில் ஏற்பட்ட கடுமையான கரை அரிப்பு மற்றும் சீற்றத்தின் காரணமாக 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த சைதி துர்க்கை கோவில் முற்றிலுமாக இடிந்து ஆற்று நீரில் மூழ்கியது.</p><p></p><p> </p><p>

 கங்கை நதியில் நிலவி வரும் அதிவேக நீர்ரோட்டம் காரணமாகக் கரைகளில் தீவிர மண் அரிப்பு ஏற்பட்டு வந்தது. ஆற்றின் கரையில் அமைந்திருந்த பழமையான இக்கோவிலின் அடிப்பகுதி மண்ணரிப்பால் பலவீனமடைந்து, நொடிப் பொழுதில் கங்கை நதியின் சுழலில் சிக்கி சரிந்து விழுந்தது.</p><p>

பல தலைமுறைகளாக உள்ளூர் மக்களால் வழிபடப்பட்டு வந்த நூற்றாண்டு பழமை வாய்ந்த கோவில் ஆற்றில் மூழ்கிய சம்பவம் பக்தர்களுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.&nbsp;&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-09-02T08:22:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 18 ப்ரோ சீரிஸ் அறிமுகம்: வெளியான அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/apple-to-launch-iphone-18-pro-series-on-sept-9-1788334301"></link>
            <id>https://ibctamil.com/article/apple-to-launch-iphone-18-pro-series-on-sept-9-1788334301</id>
            <summary type="text">ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 18 ப்ரோ சீரிஸ் கையடக்கத்தொலைபேசிகள் வெளியிடுவதற்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.இதனடிப்படையில் எதிர்வரும் செப்டம்பர் ஒன்பதாம...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 18 ப்ரோ சீரிஸ் கையடக்கத்தொலைபேசிகள் வெளியிடுவதற்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இதனடிப்படையில் எதிர்வரும் செப்டம்பர் ஒன்பதாம் திகதி&nbsp; நடைபெறவுள்ள சிறப்பு நிகழ்வில் அவை அறிமுகப்படுத்தப்படவுள்ளன.</p><p>இந்த நிகழ்வை apple.com மற்றும் Apple TV செயலி ஊடாக நேரலையில் பார்வையிட முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>முன்பதிவுகள்&nbsp;</h2><p>இந்நிலையில், புதிய ஐபோன் 18 ப்ரோ சீரிஸ் கையடக்கத்தொலைபேசிகளுக்கான முன்பதிவுகள் செப்டம்பர் 12 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளன.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6a81dc5c-f32a-4c1e-bfa6-bfb8a3eccd71/26-6a97da6c0f515.webp' /></p><p>அத்துடன், இவற்றின் நேரடி விற்பனை செப்டம்பர் 18 ஆம் திகதி முதல் ஆரம்பிக்க ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p>]]></content>
            <updated>2026-09-02T08:18:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[மிக்விமான இறக்குமதியில் நிதி மோசடி : உதயங்க வீரதுங்கவிற்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/udayanga-weeratunga-s-foreign-travel-ban-1788335693"></link>
            <id>https://tamilwin.com/article/udayanga-weeratunga-s-foreign-travel-ban-1788335693</id>
            <summary type="text">மிக்விமான இறக்குமதியில் நிதி மோசடி செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக, ரஷ்யாவுக்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க மற்றும் ஒரு குழுவினர...</summary>
            <content type="html"><![CDATA[<p>மிக்விமான இறக்குமதியில் நிதி மோசடி செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக, ரஷ்யாவுக்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க மற்றும் ஒரு குழுவினருக்கு எதிராக குற்றப் புலனாய்வுத் துறையின் நிதிக்குற்றப் பிரிவால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை&nbsp;ஜனவரி 6 அன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.</p><p>

இவ்விவகாரத்தில் சந்தேக நபர் இன்று (02.09.2026) நீதிமன்றத்தில் முன்னிலையானதைத் தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.</p><h2>தற்காலிகமாக நீக்குமாறு உத்தரவு</h2><p>

சந்தேக நபரின் சார்பில் நீதிமன்றத்தில் முன்னிலையான ஜனாதிபதி சட்ட ஆலோசகர், அவர் ஒரு வணிகத்தில் ஈடுபட்டுள்ள நபர் என்பதால், தனது கட்சிக்காரர் அவசியமான பணிக்காக வெளிநாடு செல்ல வேண்டியிருப்பதால், பயணத் தடையை தற்காலிகமாக நீக்குமாறு நீதிமன்றத்தைக் கேட்டுக்கொண்டார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3d7c3421-6150-4578-a393-5958eef14cdd/26-6a97d9d622fa4.webp' /></p><p>
அதன்படி, சந்தேக நபரின் பயணத் தடையை அடுத்த நீதிமன்றத் திகதி வரை தற்காலிகமாக நீக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-02T08:16:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அடுக்குமாடி குடியிருப்பில் முன்னாள் மேயர் சடலமாக மீட்பு; நடந்தது என்ன?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/hambantota-former-mayor-found-dead-apartments-1788332892"></link>
            <id>https://jvpnews.com/article/hambantota-former-mayor-found-dead-apartments-1788332892</id>
            <summary type="text">&amp;nbsp; ஹம்பாந்தோட்டை முன்னாள் மேயர் எராஜ் ரவீந்திர பெர்னாண்டோ(57), பம்பலப்பிட்டியில் உள்ள சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
முன்னா...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; ஹம்பாந்தோட்டை முன்னாள் மேயர் எராஜ் ரவீந்திர பெர்னாண்டோ(57), பம்பலப்பிட்டியில் உள்ள சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>முன்னாள் மேயர் எராஜ் ரவீந்திர பெர்னாண்டோ சடலம் குறித்த அடுக்குமாடி குடியிருப்புக்குள் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e89fcb00-2483-4940-b79f-f0d51c25530f/26-6a97cb5e54782.webp' /></p><h2>பொலிஸார் சந்தேகம்</h2><p> </p><p>

இந்தச் சம்பவம் தற்கொலையாக இருக்கலாம் என்றும் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.</p><p></p><p>
</p><p>


 எராஜ் ரவீந்திர பெர்னாண்டோ, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு (UPFA) சார்பில் தேர்தலில் போட்டியிட்டு, 2014ஆம் ஆண்டு ஹம்பாந்தோட்டை மாநகர சபையின் மேயராக தெரிவுசெய்யப்பட்டார்.
</p><p>


2018ஆம் ஆண்டு, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) ஆதரவுடன் மீண்டும் ஹம்பாந்தோட்டை மாநகர சபையின் மேயராக தெரிவுசெய்யப்பட்டார்.&nbsp;&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-09-02T08:10:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[தேசிய மக்கள் சக்தியின் 159 எம்.பிக்களுக்கு எதிராக முறைப்பாடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/complaint-against-159-mps-of-npp-1788335963"></link>
            <id>https://ibctamil.com/article/complaint-against-159-mps-of-npp-1788335963</id>
            <summary type="text">தேசிய மக்கள் சக்தியின் சார்பில் நாடாளுமன்றத்திற்குத் தெரிவுசெய்யப்பட்ட உறுப்பினர்களுக்கு எதிராக “தினன தகுண” (Dinana Dakuna) அமைப்பு, இலஞ்சம் அல்லது ஊழ...</summary>
            <content type="html"><![CDATA[<p>தேசிய மக்கள் சக்தியின் சார்பில் நாடாளுமன்றத்திற்குத் தெரிவுசெய்யப்பட்ட உறுப்பினர்களுக்கு எதிராக “தினன தகுண” (Dinana Dakuna) அமைப்பு, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அவர்களது பதவிக்காக வழங்கப்படும் கொடுப்பனவுகள், அவை வழங்கப்படுவதன் நோக்கமான பொதுமக்களின் நலனுக்காக பயன்படுத்தப்படாமல், மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) கட்சியின் வங்கிக் கணக்கில் வைப்பிலிடப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் 2023ஆம் ஆண்டின் 09ஆம் இலக்க ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் இழைக்கப்பட்டுள்ளதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
</p><p>
இதுதொடர்பில், 2023ஆம் ஆண்டின் 09ஆம் இலக்க ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் துரித விசாரணையொன்றை முன்னெடுக்குமாறு கோரி, “தினன தகுண” அமைப்பு இன்று (02) காலை இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிடம் குறித்த முறைப்பாட்டை சமர்ப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><h2>வாக்குமூல&nbsp;பதிவு </h2><p>
</p><p>
மேலும், தேசிய மக்கள் சக்தியைச் சேர்ந்த 159 நாடாளுமன்ற உறுப்பினர்களையும் அழைத்து வாக்குமூலங்களைப் பதிவு செய்து விசாரணை நடத்துவதுடன், குறித்த அரசியல் கட்சியின் வங்கிக் கணக்குகளையும் பரிசோதிக்குமாறும் முறைப்பாட்டில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c3eb839a-c27f-4b98-9614-c36e17fe1ac7/26-6a97d9ca0bb90.webp' /></p><p>
</p><p>
மொத்தம் ஐந்து விடயங்களை அடிப்படையாகக் கொண்டு குறித்த முறைப்பாடு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-02T08:10:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[எகிப்தில் பேருந்து விபத்தில் 16 பேர் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/16-killed-in-bus-accident-in-egypt-1788336769"></link>
            <id>https://canadamirror.com/article/16-killed-in-bus-accident-in-egypt-1788336769</id>
            <summary type="text">&amp;nbsp; எகிப்தின் தெற்கு சினாய் மாகாணத்தில் பயணிகள் பேருந்து ஒன்று கவிழ்ந்ததில் 16 பேர் உயிரிழந்துள்ளதுடன், 28 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்க்கள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; எகிப்தின் தெற்கு சினாய் மாகாணத்தில் பயணிகள் பேருந்து ஒன்று கவிழ்ந்ததில் 16 பேர் உயிரிழந்துள்ளதுடன், 28 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்க்கள் தெரிவித்துள்ளன.</p><p>



தஹாப்–நுவைபா வீதியில், அல்-சாதா பகுதிக்கு முன்னதாக நுவைபா நோக்கிச் சென்ற பேருந்து கவிழ்ந்ததாக எகிப்து சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.



விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் 20 அவசர ஊர்திகள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f21469c9-fb29-4833-9cbe-5eedce16fad9/26-6a97da82529c7.webp' /></p><p> காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக வைத்தியசாலைகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.</p><p>



உயிரிழந்த 16 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.



காயமடைந்தவர்களுக்கு தேவையான வைத்திய சிகிச்சை, மருந்துகள் மற்றும் மருத்துவப் பொருட்களை வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சுகாதார அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.</p>]]></content>
            <updated>2026-09-02T08:09:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பத்தரமுல்ல சீலரத்ன தேரர் மீது தாக்குதல்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/attack-on-battaramulle-seelarathana-thero-1788336530"></link>
            <id>https://canadamirror.com/article/attack-on-battaramulle-seelarathana-thero-1788336530</id>
            <summary type="text">&amp;nbsp; ஜனசேத பெரமுன கட்சியின் தலைவர் பத்தரமுல்ல சீலரத்ன தேரர், அடையாளம் தெரியாத நபர்களால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் காயமடைந்த நிலையில் கம்பஹா மாவட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; ஜனசேத பெரமுன கட்சியின் தலைவர் பத்தரமுல்ல சீலரத்ன தேரர், அடையாளம் தெரியாத நபர்களால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் காயமடைந்த நிலையில் கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
</p><p>

பத்தரமுல்ல சீலரத்ன தேரர், தற்போது வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d4e95a61-133a-4da9-9bf8-499c0c378c91/26-6a97d9941051e.webp' /></p><p> </p><p>



இறுதிச் சடங்கு ஒன்றின் ஏற்பாடுகள் தொடர்பாக விகாரை வளாகத்துக்குள் இடம்பெற்ற கூட்டம் ஒன்றின் போதே இந்தத் தாக்குதல் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது

.</p><p> சம்பவத்தைத் தொடர்ந்து, தாக்குதலை மேற்கொண்ட சந்தேகநபர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.</p><p>



சந்தேகநபரை கைது செய்ய வீரகுல பொலிஸார் பல விசேட பொலிஸ் குழுக்களை ஈடுபடுத்தி தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக தெரிவித்துள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வீரகுல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-09-02T08:06:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[எகிப்தில் கோரமான பேருந்து விபத்து: 16 பேர் உயிரிழப்பு, 28 பேர் படுகாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/egypt-south-sinai-bus-crash-16-dead-1788336360"></link>
            <id>https://news.lankasri.com/article/egypt-south-sinai-bus-crash-16-dead-1788336360</id>
            <summary type="text"> Egypt South Sinai Bus Crash 16 Dead: எகிப்தின் தெற்கு சினாய் நகரில் நடந்த கோரமான பேருந்து விபத்தில் 16 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர். பேருந்து விபத்துஎ...</summary>
            <content type="html"><![CDATA[<p> Egypt South Sinai Bus Crash 16 Dead: எகிப்தின் தெற்கு சினாய் நகரில் நடந்த கோரமான பேருந்து விபத்தில் 16 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர்.</p><h2> பேருந்து விபத்து</h2><p>எகிப்தின் தெற்கு சினாய்(Sinai) பகுதியில் நிகழ்ந்த கோரமான பேருந்து விபத்தில் கிட்டத்தட்ட 16 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர்.</p><p> அத்துடன் இந்த பேருந்து விபத்தில் 28 பேர் வரை காயமடைந்து இருப்பதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.</p><p> இது தொடர்பாக அந்நாட்டின் சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில், பேருந்து விபத்தானது தாஹாப் - நுவைபா நெடுஞ்சாலையில் ஏற்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/83e80ce5-b58e-40c6-9654-7bfcef9d4839/26-6a97d8e9b8312.webp' /></p><p></p><p>ஸ்கூபா டைவிங் மற்றும் ஸ்நோர்கெல்லிங் ஆகியவற்றிக்கு தெற்கு சினாய் தீபகற்பமானது சர்வதேச அளவில் புகழ் பெற்று வருகிறது.</p><p> தாஹாப் பிராந்தியத்தில் அமைந்துள்ள தங்க மணல் கடற்கரைகள் சுற்றுலா பயணிகளை பெரும் அளவு&nbsp; கவர்ந்து வருகிறது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி W<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">HATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள். &nbsp;&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-02T08:06:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[விகாரைக்குள் மர்ம நபர்களால் சீலரத்ன தேரர் மீது தாக்குதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/venerable-seelarathna-thero-attacked-by-mysterious-1788336331"></link>
            <id>https://jvpnews.com/article/venerable-seelarathna-thero-attacked-by-mysterious-1788336331</id>
            <summary type="text">ஜன சேத பெரமுனவின் தலைவர் பத்தரமுல்ல சீலரத்ன தேரர் மீது அடையாளம் தெரியாத நபர் ஒருவரால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.மேலதிக வி...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜன சேத பெரமுனவின் தலைவர் பத்தரமுல்ல சீலரத்ன தேரர் மீது அடையாளம் தெரியாத நபர் ஒருவரால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p></p><h3>மேலதிக விசாரணை</h3><p>

விகாரையொன்றில் இடம்பெற்ற கூட்டத்தின் போதே இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8aa1f382-fffa-4f30-809d-4dfe39ab3194/26-6a97d8cd33938.webp' /></p><p>இறுதிச்சடங்கு நிகழ்வொன்றை ஏற்பாடு செய்வது தொடர்பில் கலந்துரையாடுவதற்காக குறித்த கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
தாக்குதலில் காயமடைந்த சீலரத்ன தேரர் கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, தற்போது அங்கு தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
</p><p>
இதேவேளை, தாக்குதலுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் சந்தேகநபர் சம்பவத்தையடுத்து அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>

சந்தேகநபரை கைது செய்வதற்காக பல விசேட பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>

தாக்குதலுக்கான உறுதியான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், சம்பவம் தொடர்பில் வீரகுல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-02T08:05:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[57 பந்துகளில் 106 ஓட்டங்கள் விளாசியும் வீண்: ஷானகா, சார்லஸ் அதிரடியில் செயின்ட் கிட்ஸ் அபார வெற்றி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/quinton-de-kock-106-in-57-balls-in-cpl-t20-1788335638"></link>
            <id>https://news.lankasri.com/article/quinton-de-kock-106-in-57-balls-in-cpl-t20-1788335638</id>
            <summary type="text">Quinton de Kock blast century in cpl t20: கரீபியன் பிரீமியர் லீக் போட்டியில் குயிண்டன் டி காக் 57 பந்துகளில் 106 ஓட்டங்கள் விளாசினார்.

வார்னர் பார்...</summary>
            <content type="html"><![CDATA[<p>Quinton de Kock blast century in cpl t20: கரீபியன் பிரீமியர் லீக் போட்டியில் குயிண்டன் டி காக் 57 பந்துகளில் 106 ஓட்டங்கள் விளாசினார்.
</p><p>
வார்னர் பார்க் மைதானத்தில் நடந்த கரீபியன் டி20 போட்டியில், செயின்ட் கிட்ஸ் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பார்படோஸ் ட்ரிடென்ட்ஸை வீழ்த்தியது.&nbsp;</p><h2>கார்டர், குயிண்டன் டி காக் சிக்ஸர் மழை</h2><p>

கரீபியன் பிரீமியர் லீக் தொடரின் 23வது போட்டியில், பார்படோஸ் ட்ரிடென்ட்ஸ் மற்றும் செயின்ட் கிட்ஸ் அன்ட் நேவிஸ் பேட்ரியோட்ஸ் அணிகள் மோதின.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/143a7afe-6965-4a5d-910c-602c0a2d310b/26-6a97d6b843911.webp' />&nbsp;</p><p></p><p>
முதலில் ஆடிய பார்படோஸ் ட்ரிடென்ட் அணியில் ஸகாரி கார்டர் சிக்ஸர் மழைபொழிந்தார். அவர் 36 பந்துகளில் 7 சிக்ஸர்கள், 1 பவுண்டரியுடன் 57 ஓட்டங்கள் விளாசினார்.</p><p>

அடுத்து ரூதர்போர்டு 16 பந்துகளில் 26 ஓட்டங்கள் எடுக்க, குயிண்டன் டி காக் மறுமுனையில் வாணவேடிக்கை காட்டினார். </p><p>

சிக்ஸர், பவுண்டரிகள் என பறக்கவிட்ட டி காக் 57 பந்துகளில் 106 ஓட்டங்கள் விளாசினார். அவரது ஸ்கோரில் 6 சிக்ஸர்கள், 11 பவுண்டரிகள் அடங்கும்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/490e6883-d7fb-46d3-b41f-3ee52ecbaaad/26-6a97d6b78d691.webp' /></p><p>
இதன்மூலம் பார்படோஸ் ட்ரிடென்ட்ஸ் அணி 217 ஓட்டங்கள் குவித்தது. நசீம் ஷா 2 விக்கெட்டுகளும், ஹோல்டர் மற்றும் ஹசரங்கா தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.&nbsp;</p><h2>ருத்ரதாண்டவம் ஆடிய ஜான்சன்</h2><p>

பின்னர் ஆடிய செயின்ட் கிட்ஸ் அணியில் கைல் மேயர்ஸ் 29 ஓட்டங்கள் எடுத்து வெளியேற, ருத்ரதாண்டவம் ஆடிய ஜான்சன் சார்லஸ் (Johnson Charles) 45 பந்துகளில் 78 ஓட்டங்கள் (7 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகள்) விளாசினார். </p><p>

அடுத்து வந்த தசுன் ஷானகா அதிரடியில் மிரட்ட, ஹோல்டர் 18 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அணியின் ஸ்கோர் 185 ஓட்டங்களாக உயர, ஷானகா (Shanaka) 36 (22) ஓட்டங்களில் அவுட் ஆனார். </p><p>

அதனைத் தொடர்ந்து ஆந்த்ரே ஃப்ளெட்சர் 8 பந்துகளில் 22 ஓட்டங்களும், ஹசரங்கா 4 பந்துகளில் 18 ஓட்டங்களும் விளாச, செயின்ட் கிட்ஸ் அணி 19.1 ஓவர்களில் 220 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.&nbsp; &nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bb74524c-5095-491a-b791-65b895758fb8/26-6a97d6b6bf665.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-02T07:53:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[தேர்தல் ஜனநாயக குறியீடு; 50 ஆண்டுகளில் இல்லாத அளவு பின்னுக்கு சென்ற இந்தியா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/india-at-106th-place-in-electoral-democracy-index-1788335318"></link>
            <id>https://news.lankasri.com/article/india-at-106th-place-in-electoral-democracy-index-1788335318</id>
            <summary type="text">electoral democracy index: india at 106th place lowest since 1975: தேர்தல் ஜனநாயக குறியீட்டில் இந்தியா 179 நாடுகளில் 106 வது இடத்தை பிடித்துள்ளது. 
...</summary>
            <content type="html"><![CDATA[<p>electoral democracy index: india at 106th place lowest since 1975: தேர்தல் ஜனநாயக குறியீட்டில் இந்தியா 179 நாடுகளில் 106 வது இடத்தை பிடித்துள்ளது. </p><h3>

தேர்தல் ஜனநாயக குறியீடு</h3><p>

V-Dem Institute என்ற நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் தேர்தல் ஜனநாயக குறியீட்டை வெளிட்டு வருகிறது. </p><p>

இந்நிலையில் 2025 ஆம் ஆண்டுக்கான தேர்தல் ஜனநாயகக் குறியீட்டில், 179 நாடுகளில் 0.9 புள்ளிகளுடன் டென்மார்க் முதலிடத்தில் உள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9d28d97f-7415-4fd5-acae-c91f4b7d4b4c/26-6a97d4d7dbab2.webp' /></p><p>
0.38 மதிப்பெண்ணுடன் இந்தியா 106 வது இடத்தில் உள்ளது. 1975 ஆம் ஆண்டுக்குப் பிறகு இதுவே இந்தியாவின் குறைந்தபட்ச மதிப்பெண் ஆகும்.&nbsp;</p><p></p><p> 

2009 ஆம் ஆண்டு முதல் இந்தக் குறியீட்டில் இந்தியாவின் செயல்திறன் படிப்படியாகக் குறைந்து வருகிறது.
</p><h3>
சர்வாதிகாரத்தை நோக்கிச் செல்லும்</h3><p> இந்தியா 

ஜனநாயக நிறுவனங்களைத் திட்டமிட்டுச் சிதைத்து, மெதுவாக சர்வாதிகாரத்தை நோக்கிச் செல்லும் நாடுகளில் இந்தியாவையும் வி-டெம் பட்டியலிட்டுள்ளது.
</p><p>
இனப் பாகுபாட்டை ஒழிப்பதற்கான ஐ.நா. குழு (CERD), சட்ட அமலாக்க அதிகாரிகளால் நிகழ்த்தப்பட்ட பெரிய அளவிலான மீறல்கள் குறித்த அறிக்கைகள் மீதும், வாக்காளர் பட்டியல்களின் சிறப்புத் தீவிரத் திருத்தத்தின் கீழ் பெருமளவிலான வாக்காளர்கள், குறிப்பாக முஸ்லிம்கள், விலக்கப்பட்டிருப்பது மீதும் ஆழ்ந்த கவலையைப் பதிவு செய்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7a2a6ffb-831c-4bc3-b058-f30d848ba46b/26-6a97d4d88d1b7.webp' /></p><p>
மேலும் இந்த அறிக்கையில், "2009 ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் நடைபெற்று வரும் சர்வாதிகாரப் போக்கு (autocratization), ஜனநாயக நிறுவனங்களை மெதுவாகவும் ஆனால் திட்டமிட்ட முறையிலும் சிதைக்கும் ஒரு செயல்முறையாகும். </p><p>

பன்முகத்தன்மையை ஏற்காத மற்றும் இந்து தேசியவாதக் கொள்கை கொண்ட ஆளும் பாரதிய ஜனதா கட்சியும் (BJP), பிரதமர் மோடியும் ஜனநாயகத்தை வலுவிழக்கச் செய்து வருகின்றனர்.&nbsp;</p><p></p><p>

இதில் கருத்துச் சுதந்திரம் மற்றும் ஊடகச் சுதந்திரம் சீர்குலைதல், அரசை விமர்சிக்கும் பத்திரிகையாளர்கள் துன்புறுத்தப்படுதல், மற்றும் சிவில் சமூகம் மற்றும் எதிர்க்கட்சிகள் மீதான தாக்குதல்கள் ஆகியவை அடங்கும். </p><p>

2017 ஆம் ஆண்டு முதல் இந்தியா 'தேர்தல் வழி சர்வாதிகாரம்' (electoral autocracy) கொண்ட நாடாக வகைப்படுத்தப்பட்டுள்ளது" என தெரிவித்துள்ளது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-02T07:49:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[யஷ் தீவிரவாதி கிடையாது..பணக்கார குடும்பத்தில் பிறந்தவர!! யஷின் தாய் புஷ்பா எமோஷனல்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/not-a-terrorist-son-of-a-bus-driver-yash-mother-1788335706"></link>
            <id>https://viduppu.com/article/not-a-terrorist-son-of-a-bus-driver-yash-mother-1788335706</id>
            <summary type="text">டாக்சிக்&amp;nbsp;இயக்குநர் கீது மோகன் தாஸ் இயக்கத்தில் யஷ், நயன்தாரா, கியாரா அத்வானி, ஹூமா குரேஷி, தாரா, ருக்மிணி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிப்பில் கட...</summary>
            <content type="html"><![CDATA[<h2>டாக்சிக்&nbsp;</h2><p>இயக்குநர் கீது மோகன் தாஸ் இயக்கத்தில் யஷ், நயன்தாரா, கியாரா அத்வானி, ஹூமா குரேஷி, தாரா, ருக்மிணி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 26 ஆம் தேதி டாக்சிக் படம் ரிலீஸாகி கலவையான விமர்சனத்தையும் பெற்று வருகிறது. படத்தில் படுமோசமான காட்சிகள் இருந்தை வைத்து பலரும் தங்களின் கண்டங்களையும் கருத்துகளையும் முன் வைத்து வருகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d82267a6-0e2e-463f-b181-8668a76c105a/26-6a97d65c531fb.webp' /></p><p>இந்நிலையில், நடிகர் அல்லு அர்ஜூன் தந்தை, கேஜிஎஃப் படங்களுக்கு முன் யஷ் என்பவர் யார்? அவர் என்னவாக இருந்தார்? என 2023ல் முன்வைத்த விமர்சனங்களுக்கு, மறைமுகமாக யஷின் தாயார் புஷ்பா மறைமுகமாக பதிலளித்திருந்தார். </p><h2>யஷ் தீவிரவாதி கிடையாது</h2><p>அதில், கேஜிஎஃப் படங்களுக்கு முன் கன்னட சினிமாவில் பேக் டூ பேக் ஹிட் கொடுத்தவர் யஷ், அவர் ஒன்றும் தீவிரவாதி இல்லை, அவர் யாருக்கும் எந்த தீங்கும் செய்யவில்லை. அவர்மீது வேண்டுமென்றே எதிர்மறையான விமர்சனங்களை முன் வைக்கிறார்கள். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/22df7316-a47c-4f5f-b3e5-480e8cccb89b/26-6a97d65d08997.webp' /></p><p>யஷ், மற்றவர்களைப்போல் பணக்கார குடும்பத்தில் பிறந்தவர் அல்ல. தன் சொந்த முயற்சியால் உயர்ந்த ஒரு பேருந்து ஓட்டுநரின் மகன் அவன். ஒரு தாயாக அவனை நினைத்து நான் பெருமைப்படுகிறேன் என்று கூறியிருந்தார். தற்போது, டாக்சிக் படத்தின் விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில், யஷின் தாயார் புஷ்பாவின் ஆதங்கமான கருத்து இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.</p>]]></content>
            <updated>2026-09-02T07:45:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிழக்கு கொள்கலன் முனையத் திட்ட முறைகேடுகள் ; கவனம் செலுத்துமாறு சஜித் கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/eastern-container-project-irregularities-sajith-1788334988"></link>
            <id>https://jvpnews.com/article/eastern-container-project-irregularities-sajith-1788334988</id>
            <summary type="text">கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையத்தின் இரண்டாவது கட்ட வளர்ச்சிப் பணிகளில் பல்வேறு முறைகேடுகளும் குறைபாடுகளும் காணப்படுவதாக துறைமுகத்தின் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையத்தின் இரண்டாவது கட்ட வளர்ச்சிப் பணிகளில் பல்வேறு முறைகேடுகளும் குறைபாடுகளும் காணப்படுவதாக துறைமுகத்தின் பொறியியலாளர்கள் மற்றும் தொழில்நுட்ப அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p></p><p>எதிர்க்கட்சித்தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற துறைமுக பொறியியலாளர்களுடனான சந்திப்பின்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c600dba0-9163-4382-9b36-f22109937ce8/26-6a97d38dc9ff3.webp' /></p><p>இந்தத் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகள் 2020-2022 காலப்பகுதியில் ஆரம்பிக்கப்பட்டு, 2025 ஜனவரி 03 ஆம் திகதியளவில் நிறைவடையவிருந்த போதிலும், மேலும் ஒன்றரை ஆண்டுகள் கடந்தாலும் இதனை முடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>
திட்ட முகாமைத்துவப் பிரிவும் ஆலோசனைக்குழுவும் தனித்தனியாகச் செயற்பட வேண்டும் என்ற போதிலும், ஒரே தரப்பினர் இரு பிரிவுகளிலும் செயற்படுவதால் பக்கச்சார்பற்ற தன்மை கேள்விக்குள்ளாகியுள்ளதாகவும், திட்டத்தின் வெளிப்படைத்தன்மை தொடர்பில் பாரிய சந்தேகங்கள் எழுந்துள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.</p><p>

இதனிடையே, இவ்வளவு பெரிய திட்டத்திற்கு இதுவரை நிலையான பணிப்பாளர் ஒருவர் நியமிக்கப்படவில்லை எனவும், அமைச்சரவை அனுமதியின்றி மூன்று முறை திட்டத்தின் காலம் நீடிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
</p><p>
மேலும், சில கொடுப்பனவுகள் இரகசியமாக மேற்கொள்ளப்படுவதாகவும், துறைமுக அதிகார சபையின் அனுமதியின்றி கொடுப்பனவுகள் வழங்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>

இந்த விவகாரம் தொடர்பில் துறைமுக அமைச்சர் உடனடியாக கவனம் செலுத்துமாறு எதிர்க்கட்சித் தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-02T07:43:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[குழந்தைக்கு ஒரு வயது கூட ஆகல... பிக் பாஸ் சீசன் 10-ல் ஜாய் கிரிஸில்டா? கொந்தளிக்கும் நெட்டிசன்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/netizens-criticize-joy-crizildaas-alleged-bb-entry-1788332972"></link>
            <id>https://manithan.com/article/netizens-criticize-joy-crizildaas-alleged-bb-entry-1788332972</id>
            <summary type="text">bigg boss tamil season10 : ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் 10-வது சீ...</summary>
            <content type="html"><![CDATA[<p>bigg boss tamil season10 : ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் 10-வது சீசன் வரும் செப்டம்பர் 6-ஆம் தேதி ஆரம்பமாக இருக்கின்றது.&nbsp;</p><p>இதுவரை 9 சீசன்கள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ள நிலையில், 10-வது சீசனையும் நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்க உள்ளார். இந்த முறை வழக்கமான திரையுலக பிரபலங்களுடன், சாதாரண மக்களும் போட்டியாளர்களாக பங்கேற்க இருப்பதாக கூறப்படுவதால், நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பே ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9750a486-4755-488e-998f-91ec42445e45/26-6a97d11792fa6.webp' /></p><p></p><p>

பிக் பாஸ் சீசன் 10-ல் யார் யார் போட்டியாளர்களாக களமிறங்க உள்ளனர் என்பது குறித்து சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன.</p><h2>ஜாய் கிரிஸில்டா</h2><p> அந்த வகையில், ஆடை வடிவமைப்பாளரான ஜாய் கிரிஸில்டா இந்த சீசனில் போட்டியாளராக கலந்து கொள்ள இருப்பதாக தற்போது தகவல் பரவி வருகிறது.எனினும், இந்த தகவல் இதுவரை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/daec9d41-7280-46d1-852c-ff55855524a8/26-6a97d11847645.webp' /></p><p><b>
ஜாய் கிரிஸில்டா – மாதம்பட்டி ரங்கராஜ் விவகாரம்</b></p><p>
ஜாய் கிரிஸில்டா, சமீபத்தில் மாதம்பட்டி ரங்கராஜை திருமணம் செய்து கொண்டு ஏமாற்றியதாகவும், தன்னையும் தனது குழந்தையையும் அவர் புறக்கணித்ததாகவும் புகார் தெரிவித்திருந்தார்.</p><p> இந்த விவகாரம் சமூக வலைத்தளங்களிலும், ஊடகங்களிலும் பெரும் கவனம் பெற்றது.

இதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட டிஎன்ஏ பரிசோதனையில், ஜாய் கிரிஸில்டாவின் குழந்தைக்கு மாதம்பட்டி ரங்கராஜ்தான் தந்தை என்பது உறுதி செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8c54258b-7845-4e99-bcc9-2a8d0b3c6bee/26-6a97d118ef71c.webp' /></p><p> </p><p>அதன் பின்னர் குழந்தையின் பொறுப்புகளை மாதம்பட்டி ரங்கராஜ் ஏற்றுக்கொண்டதாக கூறப்பட்டது.

மேலும், அண்மையில் குழந்தைக்கு மொட்டை அடித்து காது குத்தும் விழாவும் நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஜாய் கிரிஸில்டாவும் மாதம்பட்டி ரங்கராஜும் இணைந்து கலந்து கொண்டனர். இதனால், இருவருக்கும் இடையிலான விவகாரம் மீண்டும் பேசுபொருளானது.</p><p><b>
பிக் பாஸ் வாய்ப்புக்கு கடும் விமர்சனங்கள்&nbsp;</b></p><p>இந்த நிலையில், ஜாய் கிரிஸில்டா பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்க உள்ளதாக இணையத்தில் தகவல் பரவி வருகிறது. இந்த தகவல் உண்மையா என்பது இன்னும் உறுதியாகத் தெரியாத நிலையில், சமூக வலைத்தளங்களில் இதுகுறித்து பல்வேறு கருத்துகள் வெளியாகி வருகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/46c727d0-bbd4-401b-9281-3552e3c1b15a/26-6a97d119a3485.webp' /></p><p></p><p>
சில இணையவாசிகள், குழந்தையின் தந்தை பெயருக்காக போராடிய நிலையில், குழந்தைக்கு இன்னும் ஒரு வயது கூட ஆகாத சூழலில் பிக் பாஸ் போன்ற நீண்டகால ரியாலிட்டி நிகழ்ச்சியில் அவர் பங்கேற்க இருப்பதாக கூறப்படுவது குறித்து விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். </p><p>மேலும், அவர் மேற்கொண்ட போராட்டத்தின் பின்னணியில் விளம்பர நோக்கம் இருந்ததா என்ற கேள்வியையும் சிலர் எழுப்பி வருகின்றனர்.

அதே நேரத்தில், மற்றொரு தரப்பினர் ஜாய் கிரிஸில்டாவின் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் அவரது குழந்தை தொடர்பான முடிவுகளை வைத்து அவரை விமர்சிப்பது சரியல்ல என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.</p><p>பிக் பாஸ் சீசன் 10-ல் ஜாய் கிரிஸில்டா உண்மையிலேயே போட்டியாளராக பங்கேற்கிறாரா என்ற கேள்வி தற்போது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.&nbsp;</p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://chat.whatsapp.com/KPaiG8NNYogL3W9EipSjKP" target="_blank">FOLLOW NOW&nbsp;</a></u></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-02T07:33:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Tony</name>
            </author>
            <title type="text"><![CDATA[விஜய் அரசியலுக்கு போனதும் சினிமா எப்படி இருக்கு? கார்த்தி கொடுத்த ஷாக் பதில்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/actor-karthi-answers-to-question-about-cm-vijay-1788333868"></link>
            <id>https://cineulagam.com/article/actor-karthi-answers-to-question-about-cm-vijay-1788333868</id>
            <summary type="text">கார்த்தி நடிகர் கார்த்தி தமிழ் சினிமாவில் பல தரமான படங்களை கொடுத்தவர். ஆனால், சமீபகாலமாக கார்த்தியின் படங்கள் பெரிய ஹிட் ஆகாமல் இருக்க, அவர் தற்போது ச...</summary>
            <content type="html"><![CDATA[<h2>கார்த்தி </h2><p>நடிகர் கார்த்தி தமிழ் சினிமாவில் பல தரமான படங்களை கொடுத்தவர். ஆனால், சமீபகாலமாக கார்த்தியின் படங்கள் பெரிய ஹிட் ஆகாமல் இருக்க, அவர் தற்போது சர்தார் 2 படத்தை மிகவும் நம்பியுள்ளார். கண்டிப்பாக இந்த படம் பேன் இந்தியா ஹிட் அடிக்கும் என மிகுந்த நம்பிக்கையுடன் கார்த்தி உள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1bfb1222-d73c-406b-8e9f-3392d7a6f97b/26-6a97cf2f122b0.webp' /></p><p>

இந்நிலையில் கார்த்தி சர்தார் 2 படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் பிஸியாக இருக்க, அப்போது அவரிடம் விஜய் சினிமாவை விட்டு அரசியல் சென்றதும் சினிமா எப்படியிருக்கு? என கேட்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/34d20da5-f8c5-4bcc-83e2-c84879d4d22c/26-6a97cf3080d85.webp' /></p><p></p><h2>கார்த்தி கொடுத்த ஷாக் பதில்</h2><p> </p><p>

அதற்கு கார்த்தி, நீங்க தான் சொல்லனும் பாக்குறீங்க, நல்ல இருக்கு என கூறியுள்ளார். இதை பார்த்த ஒரு சிலர் என்ன விஜய் சினிமாவை விட்டு சென்றதும் சினிமா நல்ல இருக்குனு சொல்றார் என கார்த்தியை தாக்க ஆரம்பித்துவிட்டனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/48c1a127-7c45-4dda-991e-36762858a8b9/26-6a97cf2fbe333.webp' /></p><p>ஆனால், உண்மையாகவே கார்த்தி அவர்கள் சொன்னது, விஜய் சார் அரசியலுக்கு வந்ததும் சினிமா துறையும் நன்றாக இருக்கும் என்பது தான், ஆனால் அதை திரித்து சிலர் விஷமங்களை பரப்புகின்றனர் என ரசிகர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-09-02T07:30:00+00:00</updated>
        </entry>
    </feed>
