<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-08-22T07:40:18+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் குருத்வாராவுக்குள் தாக்குதல் நடத்திய நபர் கைது: அதிர்ச்சிப் பின்னணி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/man-arrested-in-edmonton-gurdwara-attack-1787384382"></link>
            <id>https://news.lankasri.com/article/man-arrested-in-edmonton-gurdwara-attack-1787384382</id>
            <summary type="text">Two injured in stabbing at Canada&#039;s Edmonton gurdwara: கனடாவில் குருத்வாராவுக்குள் ஒருவர் நடத்திய தாக்குதலில் இரண்டு பேர் காயமடைந்துள்ளனர்.

கனடாவின...</summary>
            <content type="html"><![CDATA[<p>Two injured in stabbing at Canada's Edmonton gurdwara: கனடாவில் குருத்வாராவுக்குள் ஒருவர் நடத்திய தாக்குதலில் இரண்டு பேர் காயமடைந்துள்ளனர்.</p><p>

கனடாவின் ஆல்பர்ட்டா மாகாண தலைநகரான எட்மண்டன் நகரில் அமைந்துள்ள குருத்வாரா ஒன்றிற்குள் நுழைந்த ஒருவர் நடத்திய தாக்குதலில் இருவர் காயமடைந்துள்ளனர்.
</p><h3>
அதிர்ச்சிப் பின்னணி
</h3><p>
நேற்று அதிகாலை 5.00 மணியளவில், எட்மண்டன் நகரில் அமைந்துள்ள குருத்வாரா ஒன்றிற்குள் நுழைந்த ஒருவர் பிரார்த்தனை செய்யும் அறைக்குள் நுழைய முயன்றுள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2257b669-c920-4b1d-9011-c0d1466db3fc/26-6a89523fe4ad2.webp' /></p><p>
அவரை இரண்டு பேர் தடுக்க முயல, அவர் தன் கையில் வைத்திருந்த ஸ்குரூ டிரைவரால் அவர்களை தாக்கியுள்ளார்.
</p><p>
உடனடியாக மற்றவர்கள் அவர் மீது பாய்ந்து அவரைப் பிடித்து பொலிசார் வரும்வரை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்திருக்கிறார்கள்.
</p><p>
காயமடைந்த 75 மற்றும் 51 வயதுடைய இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.&nbsp;</p><p></p><p>
இந்நிலையில், சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிசார் அந்த நபரைக் கைது செய்துள்ளார்கள்.
</p><p>
விடயம் என்னவென்றால், ஏற்கனவே தாக்குதல் தொடர்பில் சிறையிலடைக்கப்பட்டிருந்த அந்த 27 வயது நபர், முன் தினம்தான், அதாவது, வியாழக்கிழமைதான் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
</p><p>
அவர் எதற்காக அந்த குருத்வாராவுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தினார், இது இனவெறுப்புத் தாக்குதலா என்பது தெரியவில்லை.
</p><p>
பொலிசார் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுவரும் நிலையில், இந்த சம்பவம் சீக்கியர்களிடையே அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">The attack at the Nanaksar Gurdwara in Edmonton this morning is appalling. My thoughts are with the two people who were injured and the wider community that is shaken by this terrible event.<br><br>No one should ever feel unsafe in their place of worship. I want to thank the Edmonton…</p>&mdash; Mark Carney (@MarkJCarney) <a href="https://x.com/MarkJCarney/status/2090932007358652484?ref_src=twsrc%5Etfw">August 21, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>
இந்நிலையில், அந்த குருத்வாரா தாக்குதல் குறித்து அறிந்த பிரதமர் மார்க் கார்னி, காயமடைந்தவர்களுக்கு தனது இரங்கலைத் தெரிவித்துக்கொண்டுள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-22T07:40:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[41 வயதிலும் இளமை மாறாத நயன்தாரா.. வெள்ளை சேலையில் அசத்தல் லுக்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/nayanthara-new-trendy-look-in-white-saree-viral-1787382894"></link>
            <id>https://manithan.com/article/nayanthara-new-trendy-look-in-white-saree-viral-1787382894</id>
            <summary type="text">nayanthara new look: நடிகை நயன்தாரா வெள்ளை நிற சேலையில் செம கியூட் போஸ் கொடுத்து அதற்போது வெளியிட்டுள்ள புதிய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக...</summary>
            <content type="html"><![CDATA[<p>nayanthara new look: நடிகை நயன்தாரா வெள்ளை நிற சேலையில் செம கியூட் போஸ் கொடுத்து அதற்போது வெளியிட்டுள்ள புதிய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. </p><p>வழக்கம்போல் தனது அழகாலும் ஸ்டைலாலும் ரசிகர்களை கவர்ந்துள்ள நயன்தாராவின் இந்த புகைப்படங்கள் வெளியான வேகத்திலேயே லைக்குகளை அள்ளி வருகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e3ca6231-fdca-41c0-9e08-08434b60e7f2/26-6a8951aa6f165.webp' /></p><h2> நயன்தாரா</h2><p>
‘லேடி சூப்பர்ஸ்டார்’ என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் நயன்தாரா, இந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக தொடர்ந்து தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்தி வருகிறார். </p><p>திரையுலகில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக கதாநாயகியாக வெற்றிகரமாக பயணித்து வரும் அவர், இன்றும் இளம் நடிகைகளுக்கு இணையாக ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/462ea189-83d9-4761-b9fb-ad805d31db96/26-6a8951abdcc27.webp' /></p><p>
</p><p>
தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழிப் படங்களில் தனது நடிப்புத் திறமையை நிரூபித்த நயன்தாரா, தற்போது பாலிவுட்டிலும் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார்.
</p><p>
இயக்குநர் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் வெளியான ‘ஜவான்’ திரைப்படம் மூலம் ஹிந்தி சினிமாவில் அறிமுகமான நயன்தாரா, முதல் படத்திலேயே பிரம்மாண்ட வெற்றியை பதிவு செய்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/732f560e-3057-47b3-aa1b-b83c6a9a42ba/26-6a8951ac8fd67.webp' /></p><p></p><p> </p><p>உலகளவில் ரூ.1,000 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்த அந்த திரைப்படம், நயன்தாராவின் பாலிவுட் பயணத்திற்கும் வலுவான தொடக்கமாக அமைந்தது.
</p><p>தனது நீண்டகால காதலரான இயக்குநர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்துகொண்ட நயன்தாரா, தற்போது குடும்ப வாழ்க்கையையும் திரைப்பயணத்தையும் அழகாக சமநிலைப்படுத்தி வருகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0efd4bad-7688-4cd3-ba34-de95c4e628fd/26-6a8951ad438db.webp' /></p><p>
</p><p>
வாடகைத் தாய் முறையின் மூலம் இரட்டை ஆண் குழந்தைகளுக்கு பெற்றோர்களான இந்த தம்பதியினர், அவ்வப்போது தங்களது குடும்ப புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றனர்.
</p><p>
திரைப்படப் பணிகளில் பிஸியாக இருந்தாலும், தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் செலவிடும் நேரத்திற்கு நயன்தாரா எப்போதும் முக்கியத்துவம் அளித்து வருகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aed102a3-83c6-41b1-acea-548499d72504/26-6a8951adebb91.webp' /></p><p>இந்த நிலையில், 41 வயதிலும் தனது இளமைத் தோற்றத்தையும் அழகையும் கம்பீரமான ஸ்டைலையும் தக்கவைத்துள்ள நயன்தாரா, சமீபத்திய புரமோஷன் நிகழ்வில் அணிந்திருந்த வெள்ளை நிற சேலையில் அசத்தலான போட்டோஷூட் நடத்தியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3cfaa16d-9507-4ee7-994d-9dc4fbe4aa69/26-6a8951ab2f882.webp' /></p><p></p><p>குறித்த புகைப்படங்களை தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில வெளியிட்டுள்ள நிலையில், நயன்தாராவின் எளிமையான அதே நேரத்தில் கவர்ச்சியான தோற்றம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.நயன்தாரா&nbsp; மற்றும் கவின் நடிப்பில்&nbsp; Hi ஆகஸ்ட் 28, 2026 அன்று வெளியாகவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.</p><p><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/p/DcUN5oPk74D/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/p/DcUN5oPk74D/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/p/DcUN5oPk74D/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by N A Y A N T H A R A (@nayanthara)</a></p></div></blockquote> <script async src="//www.instagram.com/embed.js"></script></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b>&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-22T07:37:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Keethan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வறட்சியால் சடுதியாகக் குறையும் வவுனிக்குள நீர்மட்டம் – அடுத்த போக நெற்செய்கைக்கு நெருக்கடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/drought-causes-vavunikulam-water-level-drop-1787382889"></link>
            <id>https://tamilwin.com/article/drought-causes-vavunikulam-water-level-drop-1787382889</id>
            <summary type="text">நிலவும் கடுமையான வறட்சி மற்றும் மழையின்மை காரணமாக வவுனிக்குளத்தின் நீர்மட்டம் சடுதியாகக் குறைந்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

26 அடி கொள்ளளவைக் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நிலவும் கடுமையான வறட்சி மற்றும் மழையின்மை காரணமாக வவுனிக்குளத்தின் நீர்மட்டம் சடுதியாகக் குறைந்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
26 அடி கொள்ளளவைக் கொண்ட வவுனிக்குளத்தின் நீர்மட்டம், தற்போதைய வறட்சி மற்றும் அதிகரித்துள்ள வெப்பநிலை காரணமாக தொடர்ச்சியாகக் குறைந்து வருகிறது.</p><h2>விவசாயிகள் கவலை</h2><p>

சிறுபோக நெற்செய்கை நடவடிக்கைகள் நிறைவடையும் தருவாயில் உள்ள போதிலும், இன்னும் சில பகுதிகளில் அறுவடை நடவடிக்கைகள் நிறைவடையவில்லை.
</p><p>
இதேவேளை, மழையின்மை மற்றும் அதிகரித்துள்ள வெப்பநிலை காரணமாக அடுத்த போக நெற்செய்கையையும் மேற்கொள்ள முடியாத நிலை ஏற்படக்கூடும் என விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7245554e-12fd-40a4-8c6a-8a883c63f3a7/26-6a89502a9b7e8.webp' /></p><p>
</p><p>
கடந்த வருடம் ஏற்பட்ட டிட்வா புயலின் தாக்கத்தால் பெய்த கனமழை காரணமாக வவுனிக்குளத்தின் நீர்மட்டம் அதன் முழுக் கொள்ளளவையும் எட்டியிருந்தது.</p><p>

இதனடிப்படையில், இந்த வருட சிறுபோக பயிர்ச்செய்கைக்காக 5,500 ஏக்கர் நிலப்பரப்பில் நெற்செய்கை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டிருந்தது.
</p><p>
வழமையாக கடந்த வருடங்களில் 4,000 முதல் 4,500 ஏக்கர் வரையிலான நிலப்பரப்பிலேயே நெற்செய்கை மேற்கொள்ளப்பட்ட நிலையில், இந்த வருடம் ஆரம்பத்தில் 5,060 ஏக்கரில் நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டது.</p><h2>நெற்செய்கை</h2><p>
</p><p>
சிறுபோக விதைப்பு காலத்தில் வவுனிக்குளத்தின் நீர்க் கொள்ளளவு மேலும் அதிகரித்ததையடுத்து, மேலதிகமாக 460 ஏக்கர் நிலப்பரப்பிலும் நெற்செய்கை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டது.
</p><p>
இதனடிப்படையில், வவுனிக்குளத்தின் முழு விதைப்பு இலக்கான 6,600 ஏக்கர் நிலப்பரப்பிலும் சிறுபோக நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b79f74f8-b6e0-4afe-8e54-c4e920f62c1e/26-6a89502b7246b.webp' /></p><p>
</p><p>
தற்போது சிறுபோக அறுவடை நடவடிக்கைகள் நிறைவடையும் நிலையில், குளத்தின் நீர்மட்டம் வழமையாக 10 முதல் 12 அடியாகக் காணப்பட வேண்டும்.

எனினும், தற்போதைய வறட்சி மற்றும் அதிகரித்துள்ள வெப்பநிலை காரணமாக, வவுனிக்குளத்தின் நீர்மட்டம் தற்போது 7 அடியாகக் குறைந்துள்ளது.</p><p>

சிறுபோக அறுவடை நடவடிக்கைகள் இம்மாத இறுதிக்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அதற்குள் நிலவும் வெப்பநிலை மற்றும் காலநிலை மாற்றம் காரணமாக வவுனிக்குளத்தின் நீர்மட்டம் சுமார் 5 அடி 5 அங்குலமாகக் குறையக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதாக வவுனிக்குளத்தின் நீர்ப்பாசன பொறியியலாளர் இந்திரமோகன் சுனோஜ் தெரிவித்துள்ளார்.</p><p>

இதனால், அடுத்த போக நெற்செய்கையை மேற்கொள்வது தொடர்பில் விவசாயிகள் மத்தியில் அச்சநிலை ஏற்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-22T07:31:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[64 ஓட்டங்களில் சுருண்ட வங்கதேசம் - தடுமாறும் அவுஸ்திரேலியா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/bangladesh-all-out-in-64-runs-vs-aus-in-2nd-test-1787383330"></link>
            <id>https://news.lankasri.com/article/bangladesh-all-out-in-64-runs-vs-aus-in-2nd-test-1787383330</id>
            <summary type="text">2வது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் வங்கதேசத்தை 64 ஓட்டங்களில் அவுஸ்திரேலியா சுருட்டியுள்ளது. 

64 ஓட்டங்களில் சுருண்ட வங்கதேசம்

அவுஸ்திரேலி...</summary>
            <content type="html"><![CDATA[<p>2வது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் வங்கதேசத்தை 64 ஓட்டங்களில் அவுஸ்திரேலியா சுருட்டியுள்ளது. </p><h3>

64 ஓட்டங்களில் சுருண்ட வங்கதேசம்</h3><p>

அவுஸ்திரேலியாவிற்கு சென்றுள்ள வங்கதேச அணி 2 போட்டிகளில் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. </p><p>

முதல் டெஸ்ட்டில் வங்கதேச அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அவுஸ்திரேலியாவை வீழ்த்தி அதிர்ச்சி அளித்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/90d39e8f-bf1d-42ea-85a1-747d02b3e8ba/26-6a894e249b43c.webp' /></p><p>
2வது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸை ஆட தொடங்கிய வங்கதேசம், 64 ஓட்டங்களில் ஆல் அவுட்.ஆனது.&nbsp;</p><p></p><p>

வங்கதேசம் தரப்பில் அதிகபட்சமாக ஷோரிஃபுல் இஸ்லாம் 14 ஓட்டங்கள் எடுத்துள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/91294ce5-b157-4400-be85-53f5cb6efbee/26-6a894e23ecf47.webp' /></p><p>

அவுஸ்திரேலியா தரப்பில் மிச்சேல் ஸ்டார்க், 6 விக்கெட்களை வீழ்த்தி அசத்தியுள்ளார். </p><p>

இதனை தொடர்ந்து, முதல் இன்னிங்ஸை ஆட தொடங்கிய அவுஸ்திரேலியா 151 ஓட்டங்கள் எடுத்து 8 விக்கெட்களை இழந்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3caa8825-d4a3-4ec2-a421-caa036abe921/26-6a894e254c876.webp' /></p><p>
வங்கதேசம் தரப்பில் ஷோரிஃபுல் இஸ்லாம் 6 விக்கெட்களை வீழ்த்தி அசத்தியுள்ளார்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-22T07:22:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடா - அமெரிக்க வர்த்தக பேச்சுவார்த்தை முறிவு: வரிவிதிப்பு மூலம் பதிலடி கொடுக்க திட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/canada-halts-us-trade-talks-1787380532"></link>
            <id>https://news.lankasri.com/article/canada-halts-us-trade-talks-1787380532</id>
            <summary type="text">Canada halts us trade talks: அமெரிக்கா - கனடா இடையே வர்த்தக பேச்சுவார்த்தைகள் முறிவை சந்தித்துள்ளன.அமெரிக்கா- கனடா பேச்சுவார்த்தை முறிவு
அமெரிக்காவுட...</summary>
            <content type="html"><![CDATA[<p>Canada halts us trade talks: அமெரிக்கா - கனடா இடையே வர்த்தக பேச்சுவார்த்தைகள் முறிவை சந்தித்துள்ளன.</p><h2>அமெரிக்கா- கனடா பேச்சுவார்த்தை முறிவு</h2><p>
அமெரிக்காவுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தைகளை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக கனேடிய பிரதமர் மார்க் கார்னி அறிவித்துள்ளார்.</p><p>கடுமையான வரி விதிப்பு கெடு முடிவடைவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு இந்த முடிவை கனடா அரசு எடுத்துள்ளது.</p><p> அமெரிக்காவின் தரப்பில் கடைசி நேரத்தில் மாற்றப்பட்ட சில திருத்தங்கள் ஏற்றுக் கொள்ள முடியாதவை என்று கனடா தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/737e3fa5-2256-423d-ae96-95996d48b1b2/26-6a8943367f941.webp' /></p><p> அமெரிக்காவின் தரப்பில் இருந்து மாற்றப்பட்ட இந்த நிபந்தனைகள் பொருளாதார ரீதியில் சாத்தியமற்றது மற்றும் நியாயமற்றது என்றும் எந்தவொரு ஒப்பந்தத்தின் மீதான நம்பகத்தன்மையையும் இது கேள்விக்குள்ளாக்கும் என்று கனடா பிரதமர் கார்னி கடுமையாக விமர்சித்துள்ளார்.</p><p> ஒப்பந்தத்தில் மேற்கொள்ளப்பட்ட திடீர் மாற்றங்கள் கனடாவின் நோக்கங்களை நிறைவேற்ற முடியாததாக மாற்றிவிட்டதாக குறிப்பிட்டுள்ளார்.</p><h2> 50% வரி விதிப்பு</h2><p>
அமெரிக்கா - கனடா இடையிலான வர்த்தக பேச்சுவார்த்தைகள் முடங்கியதை தொடர்ந்து கிட்டத்தட்ட 28 பில்லியன் டொலர் மதிப்பிலான கனேடிய பொருட்கள் மீது 50% வரி விதிப்பை அமெரிக்கா விதித்துள்ளது.</p><p> உள்ளூர் வணிகங்கள் மற்றும் தொழிலாளர்களை பாதுகாக்கும் நோக்கில் அமெரிக்கா விதித்த வரிகளுக்கு சமமான வரியானது விதிக்கப்பட்டு பதிலடி கொடுக்கப்படும் என்று கனேடிய பிரதமர் மார்க் கார்னி உறுதிபடத் தெரிவித்துள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-22T07:21:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜெலென்ஸ்கியின் சொந்த ஊர் மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதல்: 16 பேர் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/deadly-drone-strike-in-central-ukraine-16-dead-1787383269"></link>
            <id>https://news.lankasri.com/article/deadly-drone-strike-in-central-ukraine-16-dead-1787383269</id>
            <summary type="text">Deadly drone strike in central ukraine 16 dead: உக்ரைனின் மையப்பகுதியில் ஷாப்பிங் வளாகத்தில் நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் 16 பேர் வரை கொல்லப்பட்டுள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>Deadly drone strike in central ukraine 16 dead: உக்ரைனின் மையப்பகுதியில் ஷாப்பிங் வளாகத்தில் நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் 16 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர்.</p><h2> ரஷ்யாவின் ட்ரோன் தாக்குதல்</h2><p>
வெள்ளிக்கிழமை உக்ரைனின் மையப்பகுதியில் அமைந்துள்ள ஷாப்பிங் வளாகத்தின் மீது நடத்தப்பட்ட மிகப்பெரிய ட்ரோன் தாக்குதலில் குறைந்தது 16 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் 130 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.</p><p> உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கியின் சொந்த ஊரான க்ரிவி ரிஹ்(Kryvyi Rih) நகரில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டு இருப்பதை உக்ரைனிய அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.</p><p></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/49421645-bfe1-4dd4-aa0d-8b180debd820/26-6a894de6cd154.webp' /></p><p> இந்த சம்பவத்தில் காயமடைந்தவர்களில் 22 பேர் குழந்தைகள் என அப்பகுதி ஆளுநர் ஒலெக்சாண்டர் ஹன்ஷா தகவல் தெரிவித்துள்ளார்.</p><p> மேலும் காயமடைந்தவர்களில் 5 குழந்தைகள் உட்பட 29 பேர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> 2 குழந்தைகள் உட்பட 9 பேர் காணாமல் போயுள்ள நிலையில் அவர்களை மீட்கும் பணியில் அவசர கால மீட்பு குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p>&nbsp;<br></p>]]></content>
            <updated>2026-08-22T07:21:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வரலாற்று பிரசித்தி பெற்ற செல்வச்சந்நிதி ஆலயத்தில் வெற்றிலை மென்றவர்களுக்கு நடந்த சம்பவம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/fines-chewing-betel-leaves-selvachannithi-temple-1787373655"></link>
            <id>https://jvpnews.com/article/fines-chewing-betel-leaves-selvachannithi-temple-1787373655</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp; வரலாற்று பிரசித்தி பெற்ற தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலய சூழலில் தடையை மீறி வெற்றிலை மென்றவாறு நடமாடிய ஐவருக்கு ஐம்பதாயிரம் ரூபா தண்டப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp; வரலாற்று பிரசித்தி பெற்ற தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலய சூழலில் தடையை மீறி வெற்றிலை மென்றவாறு நடமாடிய ஐவருக்கு ஐம்பதாயிரம் ரூபா தண்டப்பணம் விதித்து பருத்தித்துறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p> 

தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலயத்தில் வருடாந்த மகோற்சவம் நடைபெற்றுவரும் சூழ்நிலையில், ஆலயத்தின் சுற்றுப்புறச்சூழலை வல்வெட்டித்துறை நகரசபையினர் சுகாதாரமாகப் பேணிவருவதுடன், ஆலய சுற்றுப்புறமானது புகையிலை அற்ற மண்டலமாகச் சுகாதாரத் தரப்பினரினால் அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/396ff764-1cbe-4f3c-a2f7-1a3e8b22f528/26-6a892d7679156.webp' /></p><h2>&nbsp;50,000 ரூபா தண்டப்பணம்</h2><p> 

குறித்த மண்டலத்தில் புகையிலை சார் பொருட்கள் விற்பனை செய்வதும் பயன்படுத்துவதும் முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது. </p><p>

இந்நிலையில், குறித்த பகுதியில் வெற்றிலை மென்ற வண்ணம் ஆலய சுற்றுப்புறத்தில் காணப்பட்ட ஐந்து பேருக்கு எதிராக, கடந்த 2026.08.20 வியாழக்கிழமை அன்று வல்வெட்டித்துறை நகரசபையின் பொதுச்சுகாதாரப் பரிசோதகரான ப. தினேஸினால் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.</p><p></p><p> 

குறித்த வழக்கானது அன்றைய தினமே விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, சம்பந்தப்பட்டவர்கள் குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்டதன் அடிப்படையில், தலா 10,000 ரூபா வீதம் மொத்தம் 50,000 ரூபா தண்டப்பணம் அறவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-22T07:20:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[இன்ஸிடியஸ்: அவுட் ஆஃப் தி ஃபாதர் - திரை விமர்சனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/insidious-out-of-the-further-movie-review-1787382623"></link>
            <id>https://cineulagam.com/article/insidious-out-of-the-further-movie-review-1787382623</id>
            <summary type="text">ஹாலிவுட் ஹாரர் படங்களில் மிரள வைக்கும் இன்ஸிடியஸ் சீரிஸின் அடுத்த படமான &#039;இன்ஸிடியஸ்: அவுட் ஆப் தி ஃபர்தர்&#039; எப்படி இருக்கிறது என்று பார்ப்போம் வாங்க.கத...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹாலிவுட் ஹாரர் படங்களில் மிரள வைக்கும் இன்ஸிடியஸ் சீரிஸின் அடுத்த படமான 'இன்ஸிடியஸ்: அவுட் ஆப் தி ஃபர்தர்' எப்படி இருக்கிறது என்று பார்ப்போம் வாங்க.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/415c8086-0ecf-48ed-af41-3d8cd4332b71/26-6a894b627fd47.webp' /></p><h2>கதைக்களம் </h2><p>

தனது தாய் தன் கண்ணே முன்னேயே தற்கொலை செய்துகொண்டதைப் பார்த்த ஜெம்மா, அவரது நினைவுகளை சுமக்கும் வகையில் பொருட்களை சேகரித்து வைத்துள்ளார். 

பல் மருத்துவரான ஜெம்மா, தனது மகள் மாயாவுடன் தனியாக வாழ்ந்து வருகிறார். </p><p>சல்லிவன்ஸ் என்ற வயதான அண்டை வீட்டு தம்பதியினர் ஜெம்மாவுடன் நட்பு ரீதியில் உள்ளனர். 

தன் பாட்டியைப் பற்றி மாயா மேலும் தெரிந்துகொள்ளக் கூடாது என்று ஜெம்மா முற்பட, ஒருநாள் அவருக்கு தாய் உதவி கேட்பது போல் கனவு வருகிறது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/21bb9455-adf6-4233-bffa-afbda566c63b/26-6a894bf3bf4db.webp' /></p><p>அதே சமயம் வயதான மூன்று பேர் காலை வேளையில் விசித்திரமாக பெட்டிகளுடன் நடந்து செல்வதை ஜெம்மா காண்கிறார்.

அவர்கள் ஜெம்மாவின் கனவில் வந்து பயமுறுத்த, அவருக்கு நிஜ உலகில் ஒரு பொருள் கிடைக்கிறது. 

பின்னர் அந்த மூவரில் ஒரு முதியவர் ஜெம்மாவின் மருத்துவமனைக்கு அவரிடமே சிகிச்சைக்காக வருகிறார். </p><p>

அவரை பரிசோதிக்கும்போது திகிலான ஒரு நிகழ்வு நடக்க ஜெம்மா பயத்தில் உறைந்துபோகிறார். 

பிறகு ஒரு ஆன்மா மூலம் அவருக்கு தன்னைப் பற்றிய ஒரு விஷயம் தெரிய வருகிறது.

அதன் பின்னர் அந்த மூவர் யார்? தன்னை கனவில் தொந்தரவு செய்யும் நபருக்கு என்ன வேண்டும்? அதனை எப்படி ஜெம்மா முறியடித்தார்? என்பதே மீதிக்கதை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/df78cf58-10fd-41bf-879f-189e05fe177b/26-6a894bf4af964.webp' /></p><h2>படம் பற்றிய அலசல்</h2><p> 

இன்ஸிடியஸ்: தி ரெட் டோர் படத்தின் தொடர்ச்சியாக இந்த இன்ஸிடியஸ்: அவுட் ஆப் தி ஃபர்தர் திரைப்படத்தை ஜேக்கப் சேஸ் என்பவர் இயக்கியுள்ளார்.

இன்ஸிடியஸ் திரைப்படங்களுக்கே உரித்தான திகிலான காட்சிகள் ஆங்காங்கே நம்மை பயமுறுத்த முதல்பாதி நகர்கிறது.
</p><p>
ஒரு கட்டத்தில் ஹீரோயினுக்கு ஒரு சக்தி இருக்கிறது என்று தெரிந்த பின்னர் திரைக்கதை வேகமெடுக்கிறது.

சில முடிச்சுகள் அவிழும் காட்சிகள் சுவாரஸ்யமாக உள்ளது. குறிப்பாக எதற்காக இதெல்லாம் நடக்கின்றன என்ற விஷயம் தெரிய வரும் காட்சி மிரள வைக்கிறது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d0117c2b-233c-463f-89f5-ca99255d1084/26-6a894bf564fd9.webp' /></p><p></p><p>கிளைமேக்ஸில் ஹீரோயின் செய்யும் ஒரு விஷயம் அட என்று வியக்க வைக்கிறது. முதல் பாதியில் ஹீரோயின் பயமுறுத்தப்படும் காட்சிகள் அடுத்தடுத்து வருவது பொறுமையை சோதிக்கின்றன.
</p><p>
ஜெம்மாவாக எமிலியா ஈவ் அட்டகாசமாக நடித்துள்ளார். ஒவ்வொரு காட்சியிலும் நேர்த்தியான நடிப்பதை தந்துள்ளார். 

அவரது மகளாக நடித்திருக்கும் ஐலேண்ட் ஆஸ்டினும் சிறப்பான நடித்துள்ளார். ஏனைய நடிகர்கள் தங்கள் பங்களிப்பை சரியான முறையில் தந்துள்ளனர். 

படத்தின் திரைக்கதை வலுசேர்ப்பது பின்னணி இசைதான்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f0480bd7-b62e-4d55-b8f8-75d0689c9dc8/26-6a894bf617e73.webp' /></p><p> அந்த பணியை ஜோஸப் பிஷாரா மிகச்சிறப்பாக செய்துள்ளார். 

படத்தொகுப்பாளர் கிரேகோரி, முதல் பாதியில் கொஞ்சம் கத்திரி போட்டிருக்கலாம். டேவ் கார்பெட்டின் ஒளிப்பதிவு அருமை.</p><p><b><u>க்ளாப்ஸ் </u></b></p><p>
 
எமிலியா ஈவின் நடிப்பு </p><p>

முடிச்சுகள் அவிழும் காட்சிகள்</p><p> 

கிளைமேக்ஸ் </p><p>

திகில் மொமெண்ட்ஸ்</p><p><b><u> 

பல்ப்ஸ்</u></b></p><p> 

முதல் பாதியின் கனவு காட்சிகள் திரும்ப திரும்ப வருவது</p><h5><b>

மொத்தத்தில் திகில் பட விரும்பிகளை ஈர்க்கும் வகையில் இன்ஸிடியஸ்: அவுட் ஆப் தி ஃபர்தர் அமைந்துள்ளது. திரையரங்கில் ரசிக்கலாம்.</b></h5><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3fc12f13-a06b-4cc2-920c-afcab9feba67/26-6a894b61c82e9.webp' /></p>]]></content>
            <updated>2026-08-22T07:20:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சென்னையை உலுக்கிய பயங்கரம் ; பெண்ணை துண்டாக்கி பிரியாணி சமைத்த கொடுமை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/young-couple-chennai-woman-brutal-murder-cooked-1787381322"></link>
            <id>https://jvpnews.com/article/young-couple-chennai-woman-brutal-murder-cooked-1787381322</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;சென்னையில் பெண்ணை துண்டாக்கி பிரியாணி சமைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் கொடூர கொலைகார ஜோடியை போலீசார் தேடி வருவத...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;சென்னையில் பெண்ணை துண்டாக்கி பிரியாணி சமைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் கொடூர கொலைகார ஜோடியை போலீசார் தேடி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

சம்பவம் தொடர்பில் இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளதாவது, 

கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி சென்னையில் இருந்து ஆந்திராவுக்கு சென்ற ரயிலில் ரத்தக்கரையுடன் இருந்த ஒரு சிவப்பு நிற சூட்கேஸ் கண்டெடுக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2a8e23e5-05b9-41c3-8c16-33af23cf7690/26-6a89464b9aec3.webp' /></p><h2> சிவப்பு நிற சூட்கேஸ் - பெண்ணின்&nbsp; &nbsp;உடல் பாகங்கள்</h2><p> </p><p>அதனுள் ஒரு பெண்ணின் தலை மற்றும் கை கால்கள் மற்றும் உடல் பாகங்கள் கிடந்தன.

 
இதையடுத்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தபோது கண்ணாடி அணிந்த ஒரு இளம் பெண்ணும், குறுந்தாடி வைத்திருந்த ஒரு வாலிபரும் அந்த சிவப்பு நிற சூட்கேசை எடுத்து வந்தது பதிவாகியிருந்தது.</p><p></p><p> </p><p>

அந்த ஜோடி சென்ட்ரல் ஸ்டேசனுக்கு வந்து ஆக்ராவுக்கு செல்லும் ரயில் ஏறி அந்த பெட்டியை வைத்துவிட்டு உடனே இறங்கிவிட்டனர்.</p><p> அதன்பின் கூடுவாஞ்சேரி நோக்கி சென்ற மின்சார ரயில் பயணித்ததும் கண்டுபிடிக்கப்பட்டது

300க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களை போலீசார் ஆய்வு செய்ததில் அவர்கள் இருவரும் ஆட்டோவில் கூடுவாஞ்சேரி மசூதி பகுதிக்கு சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. ஒருவழியாக
அவர்களின் வீட்டை போலீசார் கண்டறிந்து சென்று பார்த்தபோது வெளியே பூட்டப்பட்டிருந்தது</p><p></p><p>.

பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்த போதுதான் போலீசாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அங்கு ஒரு பெண் கொலை செய்யப்பட்டு உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்டு தடங்களை மறைப்பதற்காக பிரியாணி செய்யும் பெரிய பாத்திரத்தில் போட்டு மைதா மாவு, காய்கறிளை சேர்த்து சமைக்கவும் முயற்சி செய்திருக்கிறார்கள். </p><p>

எஞ்சிய உடல் பாகத்தைத்தான் அவர்கள் சூட்கேசில் வைத்து ரயிலில் வைத்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதோடு அந்த பெண்ணின் தலை இதுவரை கிடைக்கவில்லை.

போலீசாரின் விசாரனையில், கண்ணாடி அணிந்த அந்த பெண்ணின் பெயர் பகவதி பாஜி எனவும், அந்த இளைஞரின் பெயர் மாணிக் லஸ்கர் என்பது தெரியவந்தது.</p><p></p><p> அதோடு, கடந்த 10 நாட்களாக அவர்களுடன் அதே வீட்டில் ஹைதுல் நிஷா என்கிற பெண்ணும் தங்கியிருந்தது தெரிய வந்தது. அவருடன் சண்டை வந்ததால் பகவதி பாஜி மற்றும் மாணிக் லஷ்கர் இருவரும் சேர்ந்து ஹைதுல் நிஷாவை கொலை செய்திருக்கலாம் என கருதப்படுகிறது.
 

இந்த அளவுக்கு கொடூரமாக கண்டதுண்டமாக வெட்டி பிரியாணி சமைத்த இருவரையும் போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகிறார்கள். </p><p>தற்போது அவர்கள் ஒடிசாவில் இருப்பதாக தகவல் கிடைத்தநிலையில் இருவரையும் தேடி தனிப்படை போலீசார் ஒடிசா சென்றுள்ளதாக கூறப்படும் நிலையில் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-22T07:18:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கைக் கடற்பரப்பில் குறையும் மீன் வளம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/declining-fish-stocks-in-sri-lankan-waters-1787383250"></link>
            <id>https://jvpnews.com/article/declining-fish-stocks-in-sri-lankan-waters-1787383250</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;இலங்கைக்குச் சொந்தமான கடற்பரப்பில் மீன் உற்பத்தி கிரமமாகக் குறைவடைந்து வருவதாக தேசிய நீர்வாழ் உயிரின வளங்கள் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;இலங்கைக்குச் சொந்தமான கடற்பரப்பில் மீன் உற்பத்தி கிரமமாகக் குறைவடைந்து வருவதாக தேசிய நீர்வாழ் உயிரின வளங்கள் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிறுவனம் (நாரா) தெரிவித்துள்ளது. </p><p>

இது இலங்கைக்கு மாத்திரமன்றி உலகின் பல நாடுகளின் சமுத்திரக் கட்டமைப்புகளுக்கும் தாக்கம் செலுத்தியுள்ள பொதுவான அபாயம் என்று அதன் தலைவர் கலாநிதி சனத் ஹெட்டியாராச்சி குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8b7fde3a-d983-436c-a9e2-4ff35a9cf87f/26-6a894dd84cbf3.webp' /></p><h2>இந்த நிலைமை திடீரென உருவானது அல்ல</h2><p> 

இந்த நிலைமை திடீரென உருவானது அல்ல எனவும், 2014 ஆம் ஆண்டு முதல் இலங்கையை அண்டிய கடற்பரப்பில் மீன் உற்பத்தியில் வீழ்ச்சி பதிவாகி வருவதாகவும் அவர் கூறுகிறார். </p><p>

மீன் உற்பத்தி குறைவடைந்தமைக்குக் குறிப்பிட்ட எந்தவொரு காரணமும் தாக்கம் செலுத்தவில்லை எனவும், உயிரியல் கட்டமைப்பில் ஏற்படும் மாற்றங்களே பிரதான காரணமாகியுள்ளன எனத் தெரிவித்தார்.</p><p></p><p> 

எவ்வாறாயினும், இதற்காக எல் நினோ (El Niño) நிலைமையின் தாக்கம் உள்ளதா என்பது இதுவரை குறிப்பாக அடையாளம் காணப்படவில்லை என்பதுடன், அதனால் இலங்கைக்கு நேரடித் தாக்கம் ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்படவில்லை. </p><p>

இந்த நெருக்கடி நீண்டகாலமாக வளர்ச்சியடைந்தால் மீனவ மக்களின் ஜீவனோபாயத்தைப் பாதுகாப்பதற்காக அவர்களை வேறு தொழிலவாய்ப்புகள் நோக்கி மாற்றியமைப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.</p><p></p><p> </p><p>

இதற்குத் தீர்வாக மீன் வளர்ப்பிற்கான விசேட வேலைத்திட்டம் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ள போதிலும், தற்போதைய முன்னேற்றம் தொடர்பில் திருப்தியடைய முடியாது எனத் தலைவர் மேலும் குறிப்பிட்டார். </p><p>

இதேவேளை, நிலவும் நிலைமை குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள தேசிய மீனவக் கூட்டுறவு இயக்கத்தின் அழைப்பாளர் ஹர்மன் குமார, மீன்பிடி நடவடிக்கைகளின் போது தடைசெய்யப்பட்ட வலைகள் மற்றும் அழிவுகரமான உபகரணங்களின் பயன்பாட்டுக்கு எதிராக விதிக்கப்பட்ட சட்டங்கள் முறையாக நடைமுறைப்படுத்தப்படாமை இந்த மீன்வளம் நசிந்துபோவதற்குப் பிரதான காரணமாக மாறியுள்ளதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-22T07:18:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[3 சீனர்களை பிடிக்க பொதுமக்களின் உதவி கோரும் பொலிஸார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/police-seek-public-apprehend-3-chinese-1787382686"></link>
            <id>https://jvpnews.com/article/police-seek-public-apprehend-3-chinese-1787382686</id>
            <summary type="text">&amp;nbsp; கொழும்பு துறைமுக நகரப் பகுதிக்கு அருகில் இடம்பெற்ற தாக்குதல், கடத்தல் மற்றும் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று சீன நாட்டவர்களை கைது செய்ய ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; கொழும்பு துறைமுக நகரப் பகுதிக்கு அருகில் இடம்பெற்ற தாக்குதல், கடத்தல் மற்றும் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று சீன நாட்டவர்களை கைது செய்ய பொலிஸார் பொதுமக்களின் உதவியை கோரியுள்ளனர்.
</p><p>


கடந்த ஜூலை 23ஆம் திகதி இடம்பெற்ற இந்தச் சம்பவம் தொடர்பில் கொழும்பு குற்றப் பிரிவினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/18eeac82-3289-470f-9623-c12b106b911a/26-6a894ba014d31.webp' /></p><h2>&nbsp;நாட்டை விட்டு தப்பிச் செல்ல முயற்சிக்கலாம்</h2><p> சம்பவத்தின்போது மூன்று சீன நாட்டவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதுடன், அவர்களில் ஒருவர் கடத்தப்பட்டு பின்னர் கொலை செய்யப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
</p><p>


இந்தக் குற்றச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் இருவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.



இந்நிலையில், தலைமறைவாக உள்ள மேலும் மூன்று சீன சந்தேகநபர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் தீவிரப்படுத்தியுள்ளனர்.</p><p></p><p>



தேடப்பட்டு வரும் மூவரும் தற்போது இலங்கையிலேயே இருப்பதாகவும், அவர்கள் நாட்டிற்குள் நுழைவதற்குப் பயன்படுத்திய சுற்றுலா விசா காலாவதியாகியுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
</p><p>


சந்தேகநபர்கள் வான் அல்லது கடல் மார்க்கமாக சட்டவிரோதமாக நாட்டை விட்டு தப்பிச் செல்ல முயற்சிக்கலாம் என பொலிஸார் எச்சரித்துள்ளனர்.</p><p></p><p>இதையடுத்து, சந்தேகநபர்களின் புகைப்படங்களை பொலிஸார் ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ளதுடன், அவர்களின் நடமாட்டம் தொடர்பில் தகவல் தெரிந்தால் உடனடியாக அறிவிக்குமாறும் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p><p>



 தகவல்களை கொழும்பு குற்றப் பிரிவின் பொறுப்பதிகாரியை 071 859 1735 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக தொடர்புகொண்டு தெரிவிக்குமாறும் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-22T07:08:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் இலட்சக்கணக்கான வேலை வாய்ப்பு வெற்றிடங்கள்: அமைச்சர் வெளியிட்ட தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/job-vacancies-in-sri-lanka-400-000-1787365984"></link>
            <id>https://tamilwin.com/article/job-vacancies-in-sri-lanka-400-000-1787365984</id>
            <summary type="text">&amp;nbsp;இலங்கையின் தொழிற்துறையில் சுமார் 400,000 வேலை வாய்ப்புகள் உள்ளதாக கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி தெரிவித்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;இலங்கையின் தொழிற்துறையில் சுமார் 400,000 வேலை வாய்ப்புகள் உள்ளதாக கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி தெரிவித்துள்ளார். </p><p>

கொழும்பில் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அங்கு மேலும் தெரிவிக்கையில்,</p><p>

இலங்கையின் தொழிற்துறையில் சுமார் 400,000 வேலை வாய்ப்புகள் உள்ள போதிலும், நாட்டின் வேலை வாய்ப்பின்மை பிரச்சினை தொடர்கின்றன.</p><h2>ஆயிரக்கணக்கான பணி வெற்றிடங்கள்</h2><p>

தொழிற்துறைகளில் கடுமையான திறன் பற்றாக்குறை நிலவுவதோடு, ஆயிரக்கணக்கான பணி வெற்றிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3ce3c9bd-5eef-4341-a8ef-bc2bda6d445f/26-6a894a3908c7d.webp' />&nbsp;</p><p> </p><p>இருப்பினும், தகுதியான தொழிலாளர்களை கண்டறிவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
</p><p>
தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் தொழிலாளர் கணக்கெடுப்பின்படி, 2026 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் நாட்டின் வேலையின்மை விகிதம் 3.7 சதவீதமாக பதிவாகியுள்ளது.
</p><p>
தற்போது வேலையற்ற நபர்களிடம் குறிப்பிட்ட தொழிற்தகைமைகளும் தொழில்நுட்ப நிபுணத்துவமும் இல்லை என்பதே யதார்த்தம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.</p><p>

இந்த சவாலை எதிர்கொள்ள வெளிநாட்டு ஊழியர்களை வரவழைப்பதில் அரசாங்கம் தயக்கம் காட்டுவதுடன்,வெளிநாடு செல்பவர்கள் மீண்டும் நாடு திரும்புவதில்லை என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
</p><p>
இதன் காரணமாக தொழிற்பயிற்சித் துறை மற்றும் பல்கலைக்கழகங்களுடன் தொடர்ச்சியான கலந்துரையாடல்களை அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றதாகவும் கூறியுள்ளார்.&nbsp; &nbsp;</p><p>&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-22T07:05:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நிர்வாகத்தின் மையம் மனிதநேயமே - AI உதவியாக இருக்க வேண்டும் – ஆளுநரின் கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ai-should-aid-not-replace-human-officials-governor-1787381494"></link>
            <id>https://tamilwin.com/article/ai-should-aid-not-replace-human-officials-governor-1787381494</id>
            <summary type="text">செயற்கை நுண்ணறிவானது (Artificial Intelligence) மனித அதிகாரிகளை
மாற்றுவதற்காக அல்லாமல், அவர்களின் வினைத்திறனை அதிகரித்து மக்களுக்கான
சேவைகளைத் துரிதப...</summary>
            <content type="html"><![CDATA[<p>செயற்கை நுண்ணறிவானது (Artificial Intelligence) மனித அதிகாரிகளை
மாற்றுவதற்காக அல்லாமல், அவர்களின் வினைத்திறனை அதிகரித்து மக்களுக்கான
சேவைகளைத் துரிதப்படுத்துவதற்காகவே பயன்படுத்தப்பட வேண்டும் எனவும்,
தொழில்நுட்பம் எத்துணை வளர்ச்சியடைந்தாலும் நிர்வாகத்தின் மையமாக மனிதநேயமே
தொடர்ந்தும் நிலைத்திருக்க வேண்டும் எனவும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன்
தெரிவித்தார்.
</p><p>
வடக்கு மாகாண நிர்வாகக் கட்டமைப்பில் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவது
தொடர்பான விசேட கலந்தாய்வுச் செயலமர்வு நேற்றையதினம் (21.08.2026) வெள்ளிக்கிழமை
வடக்கு மாகாண பிரதம செயலாளர் செயலகக் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.</p><h2>செயற்கை நுண்ணறிவு</h2><p>
</p><p>இந்நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றிய ஆளுநர்
மேற்கண்டவாறு தெரிவித்தார்.
</p><p>
தொடர்ந்து உரையாற்றிய ஆளுநர்,</p><p>
"உலகம் வேகமாக மாறிக்கொண்டிருக்கும் இக்காலத்தில், அரச நிர்வாகமும்
அதற்கேற்பத் தன்னை மாற்றிக்கொள்ள வேண்டும். மக்கள் தகவல்களையும் சேவைகளையும்
உடனடியாகப் பெறவே விரும்புகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3e3e67bb-9511-48a6-9e8a-ed41aa584b6b/26-6a8948568d044.webp' /></p><p> </p><p>இதற்காகப் பல அலுவலகங்களுக்குச் செல்வதையோ
அல்லது தேவையற்ற காலதாமதங்களையோ அவர்கள் விரும்புவதில்லை. ஒரு அதிகாரி
பெருமளவான ஆவணங்களை ஆராய்ந்து, தரவுகளை ஒப்பிட்டு முடிவெடுக்கும் நேரத்தைச்
செயற்கை நுண்ணறிவு கணிசமாகக் குறைக்கிறது.</p><p> மாகாண நிர்வாகத்தில் காணப்படும்
ஆளணி மற்றும் வளப் பற்றாக்குறைகளுக்கு மத்தியில், குறைந்த வளங்களைக் கொண்டு
அதிக சேவைகளை வழங்குவதற்கான வாய்ப்பையும் இது எமக்குத் தருகிறது.</p><p>

இன்று முன்வைக்கப்பட்டுள்ள 'ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டுக் கோபுர பூர்வீக
செயற்கை நுண்ணறிவு வடக்கு மாகாண நிர்வாகச் சூழலியல் தளம்' (Unified Control
Tower Native-AI Northern Province Governance Ecosystem Platform) என்ற
முன்மொழிவானது, மாகாண நிர்வாகத்தின் பல்வேறு துறைகளை ஒன்றிணைத்து டிஜிட்டல்
(Digital) மாற்றத்துக்குக் கொண்டு செல்லும் ஒரு விரிவான அணுகுமுறையாகும்.
எனினும், ஏ.ஐ. (AI) தொழில்நுட்பத்தின் வெற்றியானது அதன் தொழில்நுட்பத் திறனால்
மாத்திரம் அளக்கப்படக் கூடாது.</p><h2>&nbsp;தனிப்பட்ட தரவுகள்&nbsp;</h2><p>அது பொதுமக்களின் சிரமங்களை எவ்வளவுக்குக்
குறைத்து, அவர்களின் அனுபவத்தை மேம்படுத்துகிறது என்பதிலேயே தங்கியுள்ளது.

அரச நிறுவனங்களிடம் பொதுமக்களின் அடையாள, சுகாதார, நிதி மற்றும் காணி தொடர்பான
மிக முக்கியமான தனிப்பட்ட தரவுகள் காணப்படுகின்றன. </p><p>எனவே, நிர்வாகத்தில்
இவ்வாறான தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தும்போது தரவுப் பாதுகாப்பு,
தனியுரிமை, அணுகல் கட்டுப்பாடு மற்றும் பொறுப்புக்கூறல் ஆகிய விடயங்களில்
ஆரம்பம் முதலே அதீத கவனம் செலுத்தப்பட வேண்டும்.</p><p> தொழில்நுட்பம் பரிந்துரைகளை
வழங்கினாலும், இறுதி நிர்வாகத் தீர்மானம் ஒரு அரச அதிகாரியிடமே இருக்கும்
என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c20badb8-e609-4eb8-b30a-b0ab7532738e/26-6a89485770635.webp' /></p><p> </p><p>அத்தோடு, எமது மாகாணத்தின் தனித்துவமான சமூக,
மொழி, பண்பாட்டு மற்றும் புவியியல் சூழலுக்கு ஏற்றவாறே இவ்வாறான
கட்டமைப்புக்கள் உருவாக்கப்பட வேண்டும்" என வலியுறுத்தினார்.</p><p>
இந்தச் செயலமர்வில், இந்தியாவின் 'வாசா' தகவல் தொழில்நுட்ப சேவைகள் (VASA
InfoTech Services Pvt, Ltd) நிறுவனத்தின் ஸ்தாபகரும், முதன்மைச் செயற்கை
நுண்ணறிவு வியூகவியலாளருமான செந்தில்குமரன் மற்றும் தனசேகர் ஆகியோர்
வளவாளர்களாகக் கலந்துகொண்டு கருத்துரைகளை வழங்கினர்.
</p><p>
இந்நிகழ்வில் வடக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், பிரதிப் பிரதம
செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், திட்டமிடல் பணிப்பாளர்கள் உள்ளிட்ட மாகாண
அதிகாரிகள் பலரும் பங்கேற்றனர்.</p>]]></content>
            <updated>2026-08-22T06:57:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹரியால் கொடுமைக்கார சித்தி என அழைக்கப்பட்ட ராணி கமீலா: வியப்பூட்டும் ஒரு தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/prince-harry-blames-queen-camilla-cruel-stepmother-1787381755"></link>
            <id>https://news.lankasri.com/article/prince-harry-blames-queen-camilla-cruel-stepmother-1787381755</id>
            <summary type="text">Queen Camilla will be key figure in Harry and Meghan&#039;s return to royal family: ஹரியும் மேகனும் ராஜ குடும்பத்துக்குத் திரும்புவதில் ராணி கமீலா ஒரு முக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>Queen Camilla will be key figure in Harry and Meghan's return to royal family: ஹரியும் மேகனும் ராஜ குடும்பத்துக்குத் திரும்புவதில் ராணி கமீலா ஒரு முக்கியப் பங்கு வகிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
</p><p>

பிரித்தானிய இளவரசரான ஹரி ராஜ குடும்பத்திலிருந்து வெளியேறியபோது, தன் தந்தையின் இரண்டாவது மனைவியான ராணி கமீலாவை கொடுமைக்கார சித்தி என விமர்சித்திருந்தார்.
</p><p>
ஆனால், அந்த ராணி கமீலா தொடர்பில் ஒரு வியப்பூட்டும் செய்தி வெளியாகியுள்ளது.
</p><h3>
ராஜ குடும்பத்தைவிட்டு வெளியேறிய ஹரி
</h3><p>
இளவரசர் ஹரி ராஜ குடும்ப மரபை மீறி, விவாகரத்தான அமெரிக்க நடிகையான மேகன் மார்க்கலை திருமணம் செய்தது, மற்றும் மேகனால் ராஜ குடும்பத்தில் சமாளிக்க முடியாமல் போனதால் உருவான பிரச்சினைகள், ஹரியும் மேகனும் ராஜ குடும்பத்தை விட்டு வெளியேற வழிவகுத்தன.
</p><p>
பின்னர் ராஜ குடும்பத்தை மட்டுமல்ல, பிரித்தானியாவை விட்டே வெளியேறி மனைவியின் நாடாகிய அமெரிக்காவில் குடியேறினார் ஹரி.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4846de5f-459e-4be5-95d5-74d5ea616544/26-6a8947fce62cb.webp' /></p><p>
இந்நிலையில், ஆறு ஆண்டுகளுக்குப் பின், மீண்டும் ஹரி தன் குடும்பத்துடன் பிரித்தானியா திரும்ப இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
</p><p>
கொடுமைக்கார சித்தி என அழைக்கப்பட்ட ராணி கமீலா

விடயம் என்னவென்றால், ஹரியும் மேகனும் ராஜ குடும்பத்தை விட்டு வெளியேறியதுடன் நிற்கவில்லை. </p><p>ராஜ குடும்பத்தைப் பற்றி மோசமாக விமர்சித்தனர், தொலைக்காட்சிகளுக்கு பேட்டிகள் கொடுத்தனர், அதை உலகமே பார்த்தது.
</p><p>
அது போதாதென்று, ஹரி தன் பங்குக்கு ‘ஸ்பேர்’ என்னும் பெயரில் ஒரு சுயசரிதை புத்தகத்தை எழுதி வெளியிட்டார்.
</p><p>
அதில் தன் அண்ணன் வில்லியம், அண்ணி கேட் உட்பட அனைவரையும் மோசமாக விமர்சித்திருந்தார் ஹரி.&nbsp;</p><p></p><p>
குறிப்பாக, தன் தந்தையின் இரண்டாவது மனைவியான கமீலாவைக் குறித்து, கமீலா கொடுமைக்கார சித்தியாக இருப்பார் என்றும், ஆகவே அவரை திருமணம் செய்யவேண்டாம் என தான் தன் தந்தையான மன்னர் சார்லசைக் கெஞ்சியதாகவும் குறிப்பிட்டிருந்தார் ஹரி.</p><h3>

வியப்பூட்டும் ஒரு தகவல்
</h3><p>
விடயம் என்னவென்றால், இப்போது ஹரி, மேகன் தம்பதியர் தங்கள் பிள்ளைகளுடன் மீண்டும் பிரித்தானியாவுக்கே திரும்ப முடிவு செய்துள்ள நிலையில், அவர்களை மீண்டும் ராஜ குடும்பத்துக்கு அறிமுகம் செய்வதில் கமீலா முக்கியப் பங்காற்ற இருப்பதாக அரண்மனை வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளார்கள்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a529847c-2194-4262-8c9d-0b0e6b389cae/26-6a8947fd96614.webp' /></p><p>

கமீலா தன் முன்னாள் கணவரான ஆண்ட்ரூ பார்க்கரைப் பிரிந்தாலும், தன் பிள்ளைகள், பேரப்பிள்ளைகளுடன் இன்னமும் நெருக்கமான உறவு வைத்துள்ளார்.</p><p>

ஆக, கமீலா குடும்பம் என்னும் விடயத்தில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டவர். </p><p>ஆக, மன்னர் சார்லஸ், ஹரியின் பிள்ளைகளான தன் பேரப்பிள்ளைகளுக்காக ஏங்கும் நிலையில், மீண்டும் ஹரியை தங்கள் குடும்பத்துக்குள் அனுமதிக்க மன்னரைத் தூண்டியதே கமீலாவின் அமைதியை ஏற்படுத்தும் வகையிலான தாக்கம்தான் என்கிறார்கள் அரண்மனை வட்டாரத்தைச் சேர்ந்த சிலர்.
</p><p>
அதாவது, ஹரி தன்னை கொடுமைக்கார சித்தி என விமர்சித்தாலும், அதை எல்லாம் மனதில் வைத்துக்கொள்ளாமல், ஹரி மீண்டும் ராஜ குடும்பத்தில் இணைவது தன் கணவரான மன்னர் சார்லசுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்குமானால், அதை செய்ய அவர் தயாராக உள்ளதாக அரண்மனை வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளார்கள்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-22T06:56:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மூன்று சீன சந்தேகநபர்களை தேடும் இலங்கை காவல்துறையினர்: பொதுமக்களின் உதவி நாடல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sri-lankan-police-searching-3-chinese-nationals-1787377548"></link>
            <id>https://ibctamil.com/article/sri-lankan-police-searching-3-chinese-nationals-1787377548</id>
            <summary type="text">கடத்தல் மற்றும் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மூன்று சீன நாட்டவர்களை கைது செய்வதற்கு இலங்கை காவல்துறையினர் பொதுமக்களின் உதவியை ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>கடத்தல் மற்றும் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மூன்று சீன நாட்டவர்களை கைது செய்வதற்கு இலங்கை காவல்துறையினர் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.</p><p>கொழும்பு துறைமுக நகரப் பகுதிக்கு அருகில் கடந்த ஜூலை 23ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதல் தொடர்பிலேயே இந்த நபர்கள் கைது செய்யப்படவுள்ளனர்.&nbsp;</p><p>
சம்பவத்தன்று மூன்று சீன நாட்டவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதுடன், அவர்களில் ஒருவர் கடத்தப்பட்டு பின்னர் கொலை செய்யப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p></p><h2>பொதுமக்கள் உதவியை நாடும் காவல்துறை</h2><p>இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் இரண்டு சீன நாட்டவர்கள் ஏற்கனவே கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c8fd2d9b-de2c-4cf9-bf33-8f8daff036c9/26-6a89435d9287c.webp' /></p><p>மேலும் மூன்று சந்தேகநபர்கள் தலைமறைவாக உள்ள நிலையில், அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p><p>
காவல்துறை விசாரணைகளன்படி, தேடப்பட்டு வரும் மூன்று சந்தேகநபர்களும் இலங்கையிலேயே இருப்பதாக தெரியவந்துள்ளது. </p><p>மேலும் அவர்கள் நாட்டிற்குள் நுழைய பயன்படுத்திய சுற்றுலா விசாக்கள் காலாவதியாகியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.</p><p>
இதனால், சந்தேகநபர்கள் விமானம் அல்லது கடல் மார்க்கமாக சட்டவிரோதமாக நாட்டை விட்டு தப்பிச் செல்லக்கூடும் என காவல்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.</p><p>இந்த நிலையில் அவர்களை அடையாளம் காணவும் கைது செய்யவும் உதவும் வகையில், மூன்று சந்தேகநபர்களின் புகைப்படங்களையும் காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர்.</p><p>

சந்தேகநபர்கள் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால், கொழும்பு குற்றப் பிரிவின் பொறுப்பதிகாரியை <b>071 859 1735</b> என்ற தொலைபேசி இலக்கத்தில் தொடர்புகொள்ளுமாறு பொதுமக்களிடம் காவல்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
</p><p>
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொழும்பு குற்றப் பிரிவினர் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-22T06:53:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாக்ஸ் ஆபிஸ்: 15 நாட்களில் டிசி திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/dc-movie-15-days-worldwide-box-office-1787381380"></link>
            <id>https://cineulagam.com/article/dc-movie-15-days-worldwide-box-office-1787381380</id>
            <summary type="text">டிசி திரைப்படத்தின் வசூல் குறித்து தொடர்ந்து ஒவ்வொரு நாளும் பார்த்து வரும் நிலையில், 15 நாட்களில் எவ்வளவு வசூலித்துள்ளது என்பதை இந்த பதிவில் பார்க்கலா...</summary>
            <content type="html"><![CDATA[<p>டிசி திரைப்படத்தின் வசூல் குறித்து தொடர்ந்து ஒவ்வொரு நாளும் பார்த்து வரும் நிலையில், 15 நாட்களில் எவ்வளவு வசூலித்துள்ளது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.</p><p></p><p>
</p><h2>
டிசி
</h2><p>
இயக்குநராக பல பிளாக்பஸ்டர் திரைப்படங்களை கொடுத்த <a href="https://www.youtube.com/watch?v=-n96oYVQz4Y&amp;t=2539s" target="_blank">லோகேஷ் </a>கனகராஜ் ஹீரோவாக அறிமுகமான திரைப்படம் டிசி. இப்படத்தை இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்க, சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5de5139d-d042-45f6-909e-bcfd598b9434/26-6a8946880e06d.webp' /></p><p>அனிருத் இப்படத்திற்கு இசையமைக்க, வாமிகா கேபி, சஞ்சனா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளிவந்த இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்தது. </p><h2>

பாக்ஸ் ஆபிஸ்
</h2><p>
விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பட்டையை கிளப்பி வரும் டிசி திரைப்படம், உலகளவில் 15 நாட்களை வெற்றிகரமாக கடந்துள்ளது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6756988f-88f1-4730-93e0-5b531099b9ec/26-6a8946875a268.webp' /></p><p>இந்நிலையில், 15 நாட்களில் உலகளவில் இப்படம் செய்துள்ள வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 15 நாட்களில் டிசி ரூ. 95 கோடி வசூல் செய்துள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-22T06:50:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[அநுர அரசு மீது கடும் அதிருப்தியில் மகிந்த]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/people-have-more-problems-mahinda-upset-1787373427"></link>
            <id>https://tamilwin.com/article/people-have-more-problems-mahinda-upset-1787373427</id>
            <summary type="text">22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை கொண்டு வருவதற்கு முன்னர் அரசாங்கம் மக்களுக்காக செய்ய வேண்டிய பல முக்கிய பணிகள் இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ரா...</summary>
            <content type="html"><![CDATA[<p>22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை கொண்டு வருவதற்கு முன்னர் அரசாங்கம் மக்களுக்காக செய்ய வேண்டிய பல முக்கிய பணிகள் இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
</p><p>
22ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் தற்போது அதிகளவில் பேசப்பட்டு வருகின்றது. </p><p>இது குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போது இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
</p><h2><b>
அதிருப்தியில் மகிந்த </b></h2><p>நாட்டில், 22ஆவது திருத்தத்தை கொண்டு வருவதை விட, அரசாங்கம் மக்களுக்காக செய்ய வேண்டிய பல பணிகள் இருக்கின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/27909829-c702-4572-9af6-6f5c0ccbffd7/26-6a894624c29b1.webp' /></p><p>அவற்றை செய்து முடித்த பின்னர் தேவையான எந்தவொரு சட்டப்பிரிவையும் கொண்டு வருவதில் பிரச்சினையில்லை என அவர் கூறியுள்ளார். </p><p>

அரசாங்கம் முன்னுரிமை வழங்க வேண்டிய விடயங்களுக்கு பதிலாக வேறு விடயங்களுக்கு முன்னுரிமை வழங்குகிறதா என ஊடகவியலாளர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
</p><p>
 அதற்கு பதிலளித்த அவர், “அதுதான் எங்களுக்கும் இருக்கும் பிரச்சினை. முன்னுரிமை வழங்க வேண்டிய பிரச்சினைகள் குறித்து பேசுவதில்லை. தேவையற்ற விடயங்களே முன்னிலைக்கு கொண்டு வரப்படுகின்றன. </p><h3><b>

அரசியலமைப்பு திருத்தம்</b></h3><p>மேலும், நாட்டின் பொதுமக்கள் தற்போது அரசியலமைப்பு திருத்தத்தை விட முக்கியமான பல பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றது. மக்களுக்கு இந்தப் பிரச்சினையை விட வேறு பல பிரச்சினைகள் உள்ளன. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e42bfb3e-b898-4141-a03a-deba8e47a424/26-6a894625754d6.webp' /></p><p>சிலர் உணவு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை தேவைகளுக்காக சிரமப்படுகின்றனர். 

அந்தப் பிரச்சினைகளை தீர்க்காமல் தேவையற்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காண முயற்சிப்பதுதான் பிரச்சினையாக உள்ளது. </p><p>மக்களின் அன்றாட வாழ்க்கையை பாதிக்கும் பொருளாதார மற்றும் சமூகப் பிரச்சினைகளுக்கு முதலில் தீர்வு காணப்பட வேண்டும் என்பதே எனது நிலைப்பாடாகும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார். </p>]]></content>
            <updated>2026-08-22T06:48:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[செல்வச்சந்நிதி ஆலய சூழலில் விதிமீறல்: ஐவருக்கு ரூ.50,000 அபராதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/50-000-chewing-betel-near-selvachannithi-temple-1787380363"></link>
            <id>https://tamilwin.com/article/50-000-chewing-betel-near-selvachannithi-temple-1787380363</id>
            <summary type="text">தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலய சூழலில் தடையை மீறி வெற்றிலை மென்றவாறு
நடமாடிய ஐவருக்கு ஐம்பதாயிரம் ரூபா தண்டப்பணம் விதித்து பருத்தித்துறை நீதவான்
நீ...</summary>
            <content type="html"><![CDATA[<p>தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலய சூழலில் தடையை மீறி வெற்றிலை மென்றவாறு
நடமாடிய ஐவருக்கு ஐம்பதாயிரம் ரூபா தண்டப்பணம் விதித்து பருத்தித்துறை நீதவான்
நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
</p><p>
வருடாந்த மகோற்சவம் நடைபெற்று வருகின்ற சூழ்நிலையில் ஆலயத்தின் சுற்றாடலினை
வல்வெட்டித்துறை நகரசபையினர் சுகாதாரமாக பேணி வருவதுடன் ஆலய சுற்றாடலானது
புகையிலை அற்ற மண்டலமாக சுகாதாரத்தரப்பினரினால் அறிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>முற்றாக தடை&nbsp;</h2><p>
</p><p>
குறித்த மண்டலத்தில் புகையிலை சார் பொருட்கள் விற்பனை செய்வதும்
பயன்படுத்துவதும் முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/acc1f767-e70b-4965-a230-3b085e2a34aa/26-6a8944f00bbae.webp' /></p><p>

இந்தநிலையில் குறித்த பகுதியில் வெற்றிலை மென்ற வண்ணம் ஆலய சுற்றாடலில்
காணப்பட்ட ஐந்து பேருக்கு எதிராக கடந்த 20/08/2026 வியாழக்கிழமை
வல்வெட்டித்துறை நகரசபையின் பொதுச்சுகாதார பரிசோதகரான ப. தினேஸினால்
பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
</p><p>
குறித்த வழக்கானது அன்றைய தினமே விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது
சம்பந்தவர்கள் குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்ட அடிப்படையில் தலா 10,000 ரூபா வீதம்
50,000 ரூபா தண்டப்பணம் அறவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-22T06:43:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் தேடப்பட்டு வரும் சீனப்பிரஜைகள் - பொது மக்களிடம் அவசர உதவிக்கோரும் பொலிஸார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/murder-of-chinese-national-03-suspects-arrested-1787363512"></link>
            <id>https://tamilwin.com/article/murder-of-chinese-national-03-suspects-arrested-1787363512</id>
            <summary type="text">கொழும்பு துறைமுக நகரில் தங்கியிருந்த மூன்று சீன நாட்டவர்கள் மீது தாக்குதல் நடத்தி, அவர்களில் ஒருவரை கடத்திச்சென்று கொலை செய்த சம்பவம் தொடர்பாக தேடப்பட...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு துறைமுக நகரில் தங்கியிருந்த மூன்று சீன நாட்டவர்கள் மீது தாக்குதல் நடத்தி, அவர்களில் ஒருவரை கடத்திச்சென்று கொலை செய்த சம்பவம் தொடர்பாக தேடப்பட்டு வரும் மூன்று சந்தேகநபர்களை கைது செய்ய பொலிஸார் பொதுமக்களிடம் உதவியை கோரியுள்ளனர்.</p><p>இவ்வாறு கொலை செய்யப்பட்ட சீன நாட்டவரின் உடல், எஹெலியகோடாவின் கரந்தான பகுதியில் வனப்பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டது&nbsp;&nbsp;</p><p>இச்சம்பவம் குறித்து கொழும்பு மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவு விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், சந்தேகநபர்களின் புகைப்படங்களையும் ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3f167eac-85bf-4175-a965-3cd9ba1fba06/26-6a89048ab3c50.webp' /></p><h2>வான் அல்லது கடல் வழி ஊடாக நாட்டைவிட்டுத்தப்பியோடக்கூடும்</h2><p>

இச்சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு சீன நாட்டவர்கள் ஏற்கனவே கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். </p><p>

இதற்கமைய, மேலதிகமாக மூன்று சந்தேகநபர்களைக் கைது செய்வதற்கான விசாரணைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில்&nbsp;சந்தேகநபர்களை கைது செய்ய பொலிஸார் பொதுமக்களிடம் உதவியை கோரியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/725f6ad8-6e4e-4af9-82e9-12d4da94009d/26-6a89048b64725.webp' /></p><p>குறித்த மூன்று சீன நாட்டவர்களும் தற்போது இலங்கையில் தங்கியிருப்பதுடன், சுற்றுலா விசாவில் வருகை தந்த இவர்களின் செல்லுபடியாகும் விசா காலம் முடிவடைந்துள்ளமை தெரியவந்துள்ளது. </p><p>

எனவே மூன்று சீன நாட்டவர்களும் வான் அல்லது கடல் வழி ஊடாகச் சட்டவிரோதமான முறையில் நாட்டைவிட்டுத் தப்பியோடக்கூடும் என்பதால், அவர்களைக் கைது செய்யப் பொதுமக்களிடம் பொலிஸார் உதவி கோரியுள்ளனர்.</p><p>அதற்கமைய, குறித்த சந்தேகநபர்கள் தொடர்பான ஏதேனும் தகவல்கள் இருப்பின், பொறுப்பதிகாரி / கொழும்பு மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவு - 0718 591 735 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அறிவிக்குமாறு&nbsp; பொதுமக்களை கேட்டுக்கொள்கின்றனர்.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-22T06:31:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[முதலிரவு காட்சி..என் மகன் திட்டிட்டான்!! இயக்குநரிடம் மன்னிப்பு கேட்ட சுப்பிரமணியபுரம் நடிகை தனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/subramaniapuram-open-scene-of-the-first-night-1787380634"></link>
            <id>https://viduppu.com/article/subramaniapuram-open-scene-of-the-first-night-1787380634</id>
            <summary type="text">சுப்பிரமணியபுரம்தமிழ் சினிமாவில் சில படங்கள் வெளியாகி பல வருடமானாலும் அதில் நடித்த சில கதாபாத்திரங்களும் காட்சிகளும் இன்றும் பேசப்பட்டு வரும். அப்படி ...</summary>
            <content type="html"><![CDATA[<h2>சுப்பிரமணியபுரம்</h2><p>தமிழ் சினிமாவில் சில படங்கள் வெளியாகி பல வருடமானாலும் அதில் நடித்த சில கதாபாத்திரங்களும் காட்சிகளும் இன்றும் பேசப்பட்டு வரும். அப்படி 2008ல் வெளியான சுப்பிரமணியபுரம் படத்தின் முக்கிய கல்ட் கிளாசிக் பட காட்சிகள் இன்றும் கொண்டாடப்படும். அப்படி மைக் செட் ராசாத்தி ரோலில் நடித்த திண்டுக்கல் தனம், அப்படத்தில் நடித்த அனுபவங்களை பகிர்ந்துள்ளார். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4a8d8006-0960-4004-b883-3fc41558e532/26-6a89439cb809e.webp' /></p><p>அவர் கூறுகையில், அப்படத்தில் நடிக்க அலெக்ஸ் என்பவரிடம் இருந்து எனக்கு போன் கால் வந்தது. உடனடியாக பாரதிபுரம் வாங்க என்று சொன்னதும் ஒரு சுமோ காரில் சென்றுள்ளார். அப்போது தாடியுடன் ஒருவர் தனம் இறங்கி வருவதையே பார்த்துக் கொண்டிருந்தாராம். அவரை பார்த்ததும் இவர் என்ன கேடி மாதிரி இருக்கிறார் என்று தனத்திற்கு தோன்றியுள்ளது. அதன்பின் இவர் தான் இயக்குநர் சசிகுமார் என்று பக்கத்தில் இருந்தவர் கூறியிருக்கிறார். </p><p>அப்போது மனசில் சின்ன நெருடல் இருந்துள்ளது. முதல் நாளிலேயே திருவிழா காட்சிகள் என்பதால் அடுத்த நாளே வாங்க என்று கூறி 10 நாட்கள் சூட்டிங்கில் தனம் கலந்து கொண்டிருக்கிறார். கேமராவை பார்த்து சிரிக்க சொல்லி இருக்கிறார்கள், ஆனால் படத்தில் தனம் நாட்டாமையை பார்த்து சிரிப்பதுபோல் மாற்றி வைத்துவிட்டார்களாம். அதேபோல் தோட்டம் கொண்ட ராசாவே, சூடிக்கொண்ட ராசாத்தி என்ற பாடல் பின்னனி காட்சி படமாக்கப்பட்ட விதத்தை பற்றியும் தனம் கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b92bee87-22c8-4d0c-8415-69020fa443f8/26-6a89439d6a395.webp' /></p><p> </p><h2>முதலிரவு காட்சி</h2><p>ஆரம்பத்தில் நன் எந்த கேரக்டரில் நடிக்கிறேன் என்று எனக்கு தெரியாது. அந்த ஷூட்டிங் ஸ்பாட்டிலிருந்த ஒருசிலர் என்னை ராசாத்தி ராசாத்தி என்று கூப்பிடுவாங்க, அப்போது எதற்கு அப்படி கூப்பிடுறாங்கன்னு நினைச்சுக்கிட்டே இருந்தேன், ஆனால் பிறகுதான் எனக்கு விஷயமே தெரிந்தது. எனக்கு ஊர் தலைவருயுடன் முதலிரவு காட்சி ஒன்று இருந்தது. அதில் நான் நடிக்கவே மாட்டேன் என்று சொல்லிவிட்டேன். </p><p>எனக்கு இந்த நடிப்பு போதும், இப்படி எல்லாம் என்னால் முடியவே முடியாது என்று சொன்னேன். அங்கு என்னோட சொந்தக்காரங்க எல்லோரும் வெளியில் இருந்தாங்க, எல்லோரும் நான் நடிக்க போறதை பார்க்கிறதுக்கு வந்துருக்காங்க, ஆனால் நான் நடிக்க போறது இப்படிப்பட்ட காட்சி என்று தெரிஞ்சா என்ன சொல்லுவாங்க, நமக்குன்னு ஒரு மரியாதை இருக்கு, நாம போய் இப்படி நடிக்கணுமா என்று நான் யோசித்துக் கொண்டிருந்தேன்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1d18e486-6d79-43d1-9281-42d01a6d55e4/26-6a89439e1f92f.webp' /></p><p> </p><p>அப்போது கஞ்சா கருப்பு வந்து என்னை திட்டுனாரு. இது எப்படிப்பட்ட படம் தெரியுமா? உனக்குன்னு ஒரு அடையாளம் கிடைக்கும். அதை நீயே கெடுத்துக்காத என்று சொன்னாரு. அந்நேரத்தில் என் மகனே கோபப்பட்டுட்டான். அம்மா நீ நடிக்கிறதுக்கு வந்துட்டு அந்த காட்சியில் நடிக்க மாட்டேன், இதில் நடிக்க மாடேன்னு சொல்றது நல்லாவா இருக்குன்னு திட்டுனான். </p><p>அதற்குமுன் நான் அக்காட்சியில் நடிக்க முடியாதுன்னு சொன்னதும் சசிகுமார் சார் வந்து என்கிட்ட, சமாதானம் பண்ணுனார். சார் என்னால இதுபோல நெகட்டிவாக நடிக்க முடியாதுன்னு சொன்னேன். அப்புறம் மகன் சொன்ன விஷயத்தை கேட்டு எனக்கு சரின்னு பட்டு, அவரிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு, பின் அக்காட்சியில் நடித்தேன். ஆனால் அப்பட கேரக்டர் எனக்கு பிறகு நல்ல ஒரு அடையாளத்தை கொடுத்தது என்று தனம் கூறினார்.</p>]]></content>
            <updated>2026-08-22T06:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு : நீதி அமைச்சரின் அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/prisoners-sentenced-to-death-and-life-imprisonment-1787378811"></link>
            <id>https://ibctamil.com/article/prisoners-sentenced-to-death-and-life-imprisonment-1787378811</id>
            <summary type="text">நாட்டில் தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்குவதற்காக முறையான பொறிமுறை ஒன்றை உருவாக்குவது தொடர்பில் நியமிக்கப்பட்ட குழுவின் அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டில் தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்குவதற்காக முறையான பொறிமுறை ஒன்றை உருவாக்குவது தொடர்பில் நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை விரைவில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர், சட்டத்தரணி ஹர்ஷண நாணயக்கார தெரிவித்துள்ளார். </p><p>

கொழும்பு விளக்கமறியல், புதிய மகசின் மற்றும் வெலிக்கடை சிறைச்சாலைகளின் செயற்பாடுகளைப் பார்வையிட்டு, கைதிகளின் பிரச்சினைகள் குறித்துக் கலந்துரையாடிய போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.</p><p>மரண தண்டனை மற்றும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்குவதற்கான முறையான பொறிமுறையைத் தயாரிக்கும் நோக்கில், ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் எஸ். துரைராஜா தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டதாக குறிப்பிட்டார்.</p><p></p><h2>அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும்</h2><p> 

பத்து மாத காலத்திற்குள்ளான ஆய்வுக்குப் பின்னர் குறித்த குழுவின் அறிக்கை கிடைக்கப்பெற்றுள்ளதாக சுட்டிக்காட்டினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a1d06fc3-d5ef-41de-bc04-2864bee14108/26-6a89401e8e1a2.webp' /></p><p> 

ஜனாதிபதி பொதுமன்னிப்பை வழங்குவதற்கான முறையான பொறிமுறையைத் தயாரித்தல், மரண தண்டனை அனுபவிக்கும் கைதிகளின் தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்தல், ஆயுள் தண்டனை அனுபவிக்கும் கைதிகளின் தண்டனைக் காலத்தை 20 ஆண்டுகளாகக் குறைத்தல் மற்றும் கைதிகளுக்கு வீட்டு விடுமுறை வழங்குதல் போன்ற விடயங்கள் தொடர்பில் குறித்த குழுவினால் பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளன. </p><p>

இதன் மூலம் மரண தண்டனை மற்றும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட கைதிகள் விடுதலையாகிச் செல்வதற்கான முறையான பொதுமன்னிப்புப் பொறிமுறை ஒன்றை உருவாக்குவது தொடர்பான விடயங்கள் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும்.“ என தெரிவித்தார்.</p><p>இந்தநிலையில், அரசாங்க பகுப்பாய்வு அறிக்கைகளின் தாமதம் காரணமாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பெண் மற்றும் ஆண் கைதிகளைச் சந்தித்த அமைச்சர், அந்த அறிக்கைகளைக் விரைவாக வழங்குவதற்கான வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.</p><p>&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-22T06:29:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[இனி 3 முறை மட்டுமே திமுகவில் மாவட்ட செயலாளர் பதவி - செயற்குழுவில் முக்கிய தீர்மானம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/limit-for-district-secretary-in-dmk-executive-meet-1787380077"></link>
            <id>https://ibctamilnadu.com/article/limit-for-district-secretary-in-dmk-executive-meet-1787380077</id>
            <summary type="text">dmk executive committee: திமுகவில் மாவட்ட செயலாளர் பதவிக்கு வயது மற்றும் 2 முறை மட்டுமே பதவி என முக்கிய மாற்றங்கள் செய்து செயற்குழுவில் தீர்மானம் நிறை...</summary>
            <content type="html"><![CDATA[<p>dmk executive committee: திமுகவில் மாவட்ட செயலாளர் பதவிக்கு வயது மற்றும் 2 முறை மட்டுமே பதவி என முக்கிய மாற்றங்கள் செய்து செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.</p><h3>

திமுக செயற்குழு கூட்டம்
</h3><p>
2026 சட்டமன்ற தேர்தலுக்குப் பிறகு திமுகவின் முதல் செயற்குழு கூட்டம் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்று வருகிறது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1946c806-0e9e-42de-aff6-8bab02344ba8/26-6a89416f5db86.webp' /></p><p>

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில், கட்சியின் எதிர்கால செயல்பாடுகள், தேர்தல் தோல்விக்கான காரணங்கள் மற்றும் அமைப்பு ரீதியாக மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள் குறித்து முக்கிய ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன.
</p><p>
திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர். </p><p>

2 சட்டமன்றத் தொகுதிகளுக்கு ஒரு மாவட்டச் செயலர் என்ற அடிப்படையில், மாவட்டச் செயலர்கள் எண்ணிக்கையை 110 ஆக உயர்த்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. </p><p>

இதே போல் திமுக மாவட்டச் செயலாளர்களின் அதிகபட்ச வயது 70 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

திமுகவில் ஒருவர் அதிகபட்சம் 3 முறை மட்டுமே இனி மாவட்டச் செயலாளராக பணியாற்ற முடியும். </p><p>

திமுக ஒன்றியச் செயலாளர்கள், நகரச் செயலாளர்களின் அதிகபட்ச வயது இனி 60 ஆகவும், மாநகர, பேரூர் வட்டச் செயலாளர்களுக்கு அதிகபட்ச வயது 50 ஆகவும், கிளைச் செயலாளர்களுக்கு அதிகபட்ச வயது 45 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-22T06:28:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆகஸ்ட் 22 தங்கம் விலை நிலவரம்: சவரனுக்கு ரூ.800 உயர்வு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/today-august-22nd-gold-and-silver-price-in-chennai-1787378809"></link>
            <id>https://manithan.com/article/today-august-22nd-gold-and-silver-price-in-chennai-1787378809</id>
            <summary type="text">ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வருகிறது. குறிப்பாக, கடந்த சில நாட்களாக தங்கம் விலை உயர்ந்து வருவது ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வருகிறது. குறிப்பாக, கடந்த சில நாட்களாக தங்கம் விலை உயர்ந்து வருவது நகை வாங்குவோர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இன்றைய விலை நிலவரம் குறித்து இங்கு பார்க்கலாம்.</p><p>நேற்று (ஆகஸ்ட் 21) ஒரே நாளில் தங்கம் விலை இரண்டு முறை அதிரடியாக உயர்ந்தது. நேற்று காலை நிலவரப்படி, 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.110 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.14,710க்கும், ஒரு சவரன் ரூ.880 உயர்ந்து ரூ.1,17,680க்கும் விற்பனை செய்யப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7f96c9eb-687a-4ae1-8631-abc5e61bdb96/26-6a89402a510e2.webp' /></p><p></p><p>
இதைத்தொடர்ந்து நேற்று மாலை மீண்டும் தங்கம் விலை உயர்ந்தது. 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு மேலும் ரூ.140 அதிகரித்து ரூ.14,850 ஆகவும், சவரனுக்கு ரூ.1,120 உயர்ந்து ரூ.1,18,800 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது.</p><h2>இன்றைய நிலவரம்&nbsp;</h2><p>

இந்நிலையில், இன்றும் (ஆகஸ்ட் 22) தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்துள்ளது. இன்றைய நிலவரப்படி, 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.100 அதிகரித்து ரூ.14,950 ஆகவும், ஒரு சவரனுக்கு ரூ.800 உயர்ந்து ரூ.1,19,600 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0aab5d99-0965-4837-b744-cf3319ef77f9/26-6a89402b07462.webp' /></p><p>
</p><p>
அதேபோல், 18 காரட் தங்கத்தின் விலையும் இன்று உயர்ந்துள்ளது. 18 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.100 அதிகரித்து ரூ.12,730 ஆகவும், ஒரு சவரனுக்கு ரூ.800 உயர்ந்து ரூ.1,01,840 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.</p><p>

மறுபுறம், வெள்ளி விலையில் இன்று எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.270க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,70,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/215d9612-5197-41ce-a0d7-e3756238395b/26-6a89402babc23.webp' /></p><p></p><p>

தொடர்ந்து இரு நாட்களாக தங்கம் விலை உயர்ந்து வருவதால், தங்க நகை வாங்கத் திட்டமிட்டுள்ளவர்கள் விலை நிலவரத்தை உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.&nbsp;</p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW&nbsp;</a></u></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-22T06:26:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[2,500 கோடி ரூபாய் பெறுமதியான தங்க சிலை தொடர்பில் வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/story-of-the-burial-of-the-golden-statue-is-a-lie-1787278863"></link>
            <id>https://tamilwin.com/article/story-of-the-burial-of-the-golden-statue-is-a-lie-1787278863</id>
            <summary type="text">ஜா எல - மெல்வத்த பகுதியில் சுமார் 2,500 கோடி ரூபாய் பெறுமதியானதாக கருதப்படும் பழமையான தங்க முலாம் பூசப்பட்ட அனுமான் சிலை புதைக்கப்பட்டுள்ளதாக அண்மையில...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜா எல - மெல்வத்த பகுதியில் சுமார் 2,500 கோடி ரூபாய் பெறுமதியானதாக கருதப்படும் பழமையான தங்க முலாம் பூசப்பட்ட அனுமான் சிலை புதைக்கப்பட்டுள்ளதாக அண்மையில் செய்திகள் வெளியானது.</p><p>

எனினும், அது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் அத்தகைய சிலை எதுவும் அங்கு இல்லை என்பது தெரியவந்துள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
</p><p>
கோட்டை நீதவான் பசன் அமரசேன முன்னிலையில் நேற்று இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><h2><b>
 தங்க சிலை</b></h2><p>தங்கச் சிலை புதைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானதனை தொடர்ந்து ஜா எல மெல்வத்த பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரை பயன்படுத்தி சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/48f63bec-bbd6-42c1-81e1-59439ec0a5ae/26-6a87b6f330040.webp' /></p><p>இதன்போது, அங்கு ஏதேனும் அறியப்படாத பொருள் இருப்பதாக தெரியவந்திருந்தது.</p><p>

எனினும், புவியியல் மற்றும் சுரங்கப் பணியகம் மேற்கொண்ட ஆய்வுகளின் மூலம், குறித்த இடத்தில் எந்தவொரு பொருளும் புதைக்கப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-22T06:22:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவின் தடைகள் ; பேரழிவுகரமாக இருக்கும் ; ஈரான் எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/us-sanctions-would-be-catastrophic-iran-warns-1787379771"></link>
            <id>https://canadamirror.com/article/us-sanctions-would-be-catastrophic-iran-warns-1787379771</id>
            <summary type="text">&amp;nbsp; ஈரான் மீது வரலாற்றில் மிகக் கடுமையான நிதித் தடைகளை விதிக்கப்போவதாக வொஷிங்டன் உறுதியளித்துள்ள நிலையில், புதிய அமெரிக்க அச்சுறுத்தல்களுக்கு அளிக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; ஈரான் மீது வரலாற்றில் மிகக் கடுமையான நிதித் தடைகளை விதிக்கப்போவதாக வொஷிங்டன் உறுதியளித்துள்ள நிலையில், புதிய அமெரிக்க அச்சுறுத்தல்களுக்கு அளிக்கப்படும் பதில் "பேரழிவுகரமாக" இருக்கும் என்று ஈரான் எச்சரித்துள்ளது.</p><p>&nbsp; ஈரானுக்கு "எந்தவிதமான உயிர்நாடியையும்" வழங்கும் எந்தவொரு நாடும் பொருளாதார விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என டொனால்ட் டிரம்ப் எச்சரித்ததைத் தொடர்ந்து, திங்கட்கிழமை திட்டமிடப்பட்ட தடைகள் குறித்த விபரங்களை வெளியிடவுள்ளதாக அமெரிக்க திறைசேரி செயலாளர் ஸ்காட் பெசென்ட் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4f5a771a-35c8-42f7-a8a1-fef3bd9249a1/26-6a89403cf062f.webp' /></p><h2>ஆயுதப் படைகள்&nbsp;பேரழிவுகரமான பதில்களை வழங்கும்</h2><p> 

ஈரானின் ஆயுதப் படைகளின் தலைமைத் தளபதி மேஜர் ஜெனரல் அலி அப்தொல்லாஹி, இஸ்லாமியக் குடியரசின் எதிர்வினை விரிவானதாகவும் தீர்க்கமானதாகவும் இருக்கும் என்று கூறினார். </p><p>

"நிலம், கடல், வான், வான் பாதுகாப்பு மற்றும் இணையவெளி முழுவதும் தயார் நிலையில் உள்ள ஈரானின் ஆயுதப் படைகள், எதிரியின் புதிய அச்சுறுத்தல்களுக்கு நசுக்கும், தண்டிக்கும் மற்றும் பேரழிவுகரமான பதில்களை வழங்கும்" என்று அப்தொல்லாஹியை மேற்கோள் காட்டி ஈரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. </p><p>

அமெரிக்காவும் இஸ்ரேலும் கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்கு முன்பு தொடங்கிய போரில் இரு தரப்பினரும் இன்னும் வெற்றிபெறவில்லை என்றாலும், ஈரானியத் தலைவர்களும் டிரம்பும் வெற்றிகரமான மற்றும் அச்சுறுத்தலான அறிக்கைகளை வெளியிட்டுள்ளனர். </p><p>

இந்தப் போர் ஆயிரக்கணக்கான மக்களைக் கொன்றதுடன், பிற வளைகுடா நாடுகளையும் ஈர்த்து உலகளாவிய எரிபொருள் விலையை உயர்த்தி வருகிறது.</p><p> 

அமெரிக்கத் தாக்குதல்கள் ஈரானின் பொருளாதாரத்தையும் அதன் வழக்கமான படைகளையும் கடுமையாகக் குறைத்துள்ளன, ஆயினும் ஹோர்முஸ் நீரிணையில் எண்ணெய் தாங்கி கப்பல் போக்குவரத்தைத் தடையின்றித் தடுக்கவும் பிராந்திய எதிரிகளைத் தாக்க ஏவுகணை மற்றும் ஆளில்லா விமானத் திறன்களைத் தெஹ்ரான் தொடர்ந்து தக்கவைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-08-22T06:20:15+00:00</updated>
        </entry>
    </feed>
