<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-07-20T09:58:03+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[டொனால்ட் ட்ரம்பின் குற்றச்சாட்டிற்கு கனடா பதிலடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/us-wildfires-responsible-for-much-of-the-smoke-1784541350"></link>
            <id>https://canadamirror.com/article/us-wildfires-responsible-for-much-of-the-smoke-1784541350</id>
            <summary type="text">&amp;nbsp;கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா (B.C.) மாகாணத்தின் தென்கிழக்குப் பகுதியில் நிலவும் மோசமான காற்றுத் தரக் குறைவிற்கும் புகை மூட்டத்திற்கும், அமெரிக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா (B.C.) மாகாணத்தின் தென்கிழக்குப் பகுதியில் நிலவும் மோசமான காற்றுத் தரக் குறைவிற்கும் புகை மூட்டத்திற்கும், அமெரிக்க-கனடா எல்லையின் தெற்குப் பகுதியில் (அமெரிக்காவில்) எரிந்து வரும் காட்டுத் தீயே முக்கியக் காரணம் என கனேடிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p>
மின்னல் காரணமாக உள்ளூர் காட்டுத் தீ சம்பவங்கள் அதிகரித்துள்ள போதிலும், எல்லைப் பகுதியில் புகையின் அளவு அதிகரிக்க அமெரிக்காவில் எரியும் காட்டுத் தீயே பிரதான காரணம் என மாகாண காட்டுத் தீ சேவை மையம் சனிக்கிழமை மாலை வெளியிட்ட அறிக்கையில் உறுதிப்படுத்தியுள்ளது.
</p><p>இதனைத் தொடர்ந்து, அப்பகுதியில் பார்வைத் திறன் குறைவதோடு காற்றுத் தரமும் கடுமையாகப் பாதிக்கப்படும் எனக் கூறி, கனடா சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அதிகாரப்பூர்வ எச்சரிக்கை விடுத்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2901a05a-7c24-4c5c-9b55-de4f9766c8b4/26-6a5df0a7993b8.webp' /></p><p>
அதேவேளையில், எல்லை தாண்டிப் பரவும் காட்டுத் தீ புகை மூட்டம் இரு நாடுகளுக்குமிடையே அரசியல் ரீதியான காரசார விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.</p><p>
 அமெரிக்க நகரங்களான சிகாகோ, நியூயார்க் மற்றும் டெட்ராய்ட் ஆகியவை புகையினால் சூழப்பட்ட நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது 'Truth Social' சமூக வலைத்தளப் பக்கத்தில் கனடாவைக் கடுமையாக விமர்சித்துள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-20T09:56:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கதிர்காமம் ஸ்ரீ தெய்வானை அம்மன் ஆலயத்தின் கொடியேற்றம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/flag-hoisting-ceremony-at-the-kathirgamam-temple-1784538468"></link>
            <id>https://ibctamil.com/article/flag-hoisting-ceremony-at-the-kathirgamam-temple-1784538468</id>
            <summary type="text">முருகன் ஆலயங்களில் புகழ்பெற்ற கதிர்காம ஆடிவேல் திருவிழாவின் ஸ்ரீ தெய்வானை அம்மன் ஆலயத்தின் கொடியேற்றம் இன்று நடைபெற்றது.&amp;nbsp;&amp;nbsp;ஆடிவேல் விழாவின் ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>முருகன் ஆலயங்களில் புகழ்பெற்ற கதிர்காம ஆடிவேல் திருவிழாவின் ஸ்ரீ தெய்வானை அம்மன் ஆலயத்தின் கொடியேற்றம் இன்று நடைபெற்றது.&nbsp;</p><p>&nbsp;ஆடிவேல் விழாவின் மிக முக்கியமான,
முதன்மையான ஆன்மீக நிகழ்வாக பாரம்பரிய முறைப்படி இந்த கொடியேற்ற விழா நடைபெற்றது.</p><p></p><h2>தெய்வானை அம்மன்&nbsp;கொடியேற்றம்</h2><p>
</p><p>14-15 நாட்கள் கொண்ட இந்த ஆடிப் பெருவிழா, தெய்வானை
அம்மன் கோயில் கொடியேற்றத்துடன்தான் பக்தர்களின் அரோகரா கோஷத்துடன் ஆரம்பமாகி உள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c5e2599a-ced6-4851-b29f-2ada79e94f4b/26-6a5def65e2acf.webp' /></p><p>தெய்வானை அம்மன் கதிர்காம முருகனின் மூத்த தேவியாகக் கருதப்படுவதால்,
அன்னைக்கு முதல் மரியாதை செலுத்தும் விதமாக இக்கொடியேற்றம் நடத்தப்படுகின்றது.
</p><p>
இதில் இலங்கையின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் முருக பக்தர்கள் கலந்து
கொண்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b95bb2a5-3b19-4011-9f21-792692d299e1/26-6a5def66aaee3.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/023b2e37-7e7d-47de-a8a4-86ecfd58829e/26-6a5def676ba28.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/28fef7d9-01eb-4294-b696-db1ae41d1712/26-6a5def6822556.webp' /></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-20T09:53:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இ.போ.ச ​பேருந்து மோதி இராணுவ கோப்ரல் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/army-corporal-killed-being-hit-by-an-sltb-bus-1784540886"></link>
            <id>https://jvpnews.com/article/army-corporal-killed-being-hit-by-an-sltb-bus-1784540886</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;புத்தளம் ஆனமடுவ நகருக்கு அருகிலுள்ள பரமாகந்த சந்தியருகே இ.போ.ச ​பேருந்து மோதிய விபத்தில் இராணுவ கோப்ரல் ஒருவர் இன்று (20) காலை உயிரிழந்து...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;புத்தளம் ஆனமடுவ நகருக்கு அருகிலுள்ள பரமாகந்த சந்தியருகே இ.போ.ச ​பேருந்து மோதிய விபத்தில் இராணுவ கோப்ரல் ஒருவர் இன்று (20) காலை உயிரிழந்துள்ளார்.</p><p> 

உயிரிழந்தவர் ஆனமடுவ, ஊரியாவ பிரதேசத்தை சேர்ந்த 38 வயதுடைய துமிந்த சந்தருவன் விக்ரமஆரச்சி எனும் இரண்டு பிள்ளைகளின் தந்தையாவார்.</p><p> 

திருகோணமலை பிரதேசத்தில் நடைபெற்ற நீண்ட இராணுவ பயிற்சியின் பின்னர் நேற்று (19) வீடு திரும்பிய அவர், இன்று மீண்டும் பணிக்கு செல்லவிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/003ea43e-3054-4842-9e22-bd3b4534ecbf/26-6a5deed7c1583.webp' /></p><p> </p><p>

இன்று காலை தனது இரு மகள்களையும் மோட்டார் சைக்கிளில் ஆனமடுவ கன்னங்கர மகா வித்தியாலயத்தில் விட்டுவிட்டு வீடு திரும்பும் போதே அவர் இந்த விபத்தை எதிர்கொண்டுள்ளார். </p><p>
 
 புத்தளத்தில் இருந்து குருநாகல் நோக்கிப் பயணித்த புத்தளம் இ.போ.ச டிப்போவுக்கு சொந்தமான பேருந்து ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து, கோப்ரல் மீது மோதியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. </p><p>

 பேருந்து சுமார் 100 மீற்றர் தூரம் முன்னோக்கி இழுத்துச் செல்லப்பட்டு நின்றதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். விபத்தில் மோட்டார் சைக்கிள் முற்றாக சேதமடைந்துள்ளதுடன், குறித்த கோப்ரல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.</p><p> 
 
 விபத்து தொடர்பில் ஆனமடுவ பொலிஸாரின் போக்குவரத்துப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதேவேளை விபத்து இடம்பெற்ற இடமும் அதனை சுற்றியுள்ள பகுதிகளும் அடிக்கடி கோர வாகன விபத்துக்கள் நிகழும் பகுதியென பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-20T09:46:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thevanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்ட டிப்பர் வண்டிகளுடன் ஐவர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/5-arrested-with-tipper-trucks-1784533481"></link>
            <id>https://tamilwin.com/article/5-arrested-with-tipper-trucks-1784533481</id>
            <summary type="text">தர்மபுர பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கல்லாறு பகுதியில் அனுமதிப்பத்திரத்திற்கு
முரணான வகையில் மணல் அகழ்வில் ஈடுபட்ட 4 டிப்பர் வண்டிகளுடன் ஐவர் பொலிஸாரால்...</summary>
            <content type="html"><![CDATA[<p>தர்மபுர பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கல்லாறு பகுதியில் அனுமதிப்பத்திரத்திற்கு
முரணான வகையில் மணல் அகழ்வில் ஈடுபட்ட 4 டிப்பர் வண்டிகளுடன் ஐவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>இந்தக் கைது நடவடிக்கையானது நேற்றைய தினம்(19.07.2026) இடம்பெற்றுள்ளது.</p><p></p><h2>சட்டவிரோத&nbsp;மணல் அகழ்வு</h2><p>சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபடுவதாக பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலொன்றை அடுத்து திருகோணமலை பொலிஸார் விசேட சுற்றிவளைப்பொன்றை மேற்கொண்டுள்ளனர். </p><p>

இதன்போது சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வில் ஈடுபட்டிருந்த 4 டிப்பர் வண்டிகளும் ஒரு உளவு இயந்திரமும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன் 5 சாரதிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f6f07106-139e-4381-89cf-940ca507b5ba/26-6a5def2e03e97.webp' /></p><p>

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன் எதிர்வரும் (22.07.2026) ஆம் திகதி கிளிநொச்சி நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
</p><p>
குறித்த கல்லாறு பகுதியில் தற்போது வெளி மாவட்டங்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வரும் மணலானது கட்டுமானப் பணிகளுக்கு உகந்ததாக காணப்படவில்லை எனவும் உப்பு மணலினையே கல்லாறு பகுதியில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு விற்பனை செய்யப்படுவதாகவும் தர்மபுர பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம். திசாநாயக்க தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-20T09:44:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[குட்டிமணி - தங்கத்துரைக்கான உருவச்சிலை திறப்பு விவகாரம்! விசாரணையை ஆரம்பித்த காவல்துறை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/kuttimani-thangathurai-statue-unveiling-ceremony-1784539013"></link>
            <id>https://ibctamil.com/article/kuttimani-thangathurai-statue-unveiling-ceremony-1784539013</id>
            <summary type="text">வெலிக்கடை சிறை கலவரத்தின் போது படுகொலை
செய்யப்பட்ட குட்டிமணி, தங்கத்துரை ஆகியோரின் உருவச்சிலை திறப்பு விழா தொடர்பாக
வல்வெட்டித்துறை காவல்துறையினர் வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>வெலிக்கடை சிறை கலவரத்தின் போது படுகொலை
செய்யப்பட்ட குட்டிமணி, தங்கத்துரை ஆகியோரின் உருவச்சிலை திறப்பு விழா தொடர்பாக
வல்வெட்டித்துறை காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
</p><p>

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் முன்னாள் தலைவர் தங்கத்துரை மற்றும் தமிழ் ஈழ
விடுதலை இயக்கத்தின் முன்னாள் செயலதிபர் குட்டிமணி ஆகியோரின் உருவச்சிலை
எதிர்வரும் 25ம் திகதி வல்வெட்டித்துறையில் திறந்து வைக்க ஏற்பாடு
செய்யப்பட்டுள்ளது.</p><p></p><h2>வல்வெட்டித்துறை காவல்துறை</h2><p>
</p><p>
இந்நிலையில் ஏற்பாட்டு குழுவின் சார்பில் வல்வெட்டித்துறை நகர சபையின்
முன்னாள் உறுப்பினர் சதீஸ் வல்வெட்டித்துறை காவல்துறையினரால் விசாரணைக்கு
அழைக்கப்பட்டுள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6b9adcd5-3419-41e1-8a29-8872d39dffbe/26-6a5ded62bbf05.webp' /></p><p>1983ஆம் ஆண்டு&nbsp;கறுப்பு ஜூலை வன்முறை சம்பவங்களின் உச்ச கட்டமாக வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தங்கதுரை, குட்டிமணி உள்ளிட்ட 53 தமிழ் அரசியல் கைதிகள் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-20T09:42:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் வீட்டில் ஆபத்தான ஆயுதங்கள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/dangerous-weapons-found-police-s-home-in-jaffna-1784540390"></link>
            <id>https://jvpnews.com/article/dangerous-weapons-found-police-s-home-in-jaffna-1784540390</id>
            <summary type="text">&amp;nbsp; யாழில் கடமை புரியும் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரது வீட்டில் இருந்து வாள் மற்றும் குண்டு என்பன மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

 சம...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; யாழில் கடமை புரியும் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரது வீட்டில் இருந்து வாள் மற்றும் குண்டு என்பன மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
</p><p>
 சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் அழைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ea3abbf0-9c87-461b-92bb-f39ff9bb2a74/26-6a5ded3bc8e17.webp' /></p><p>
</p><p>

கடந்த சில தினங்களுக்கு முன்னர் குறித்த அதிகாரியின் கண்டி பகுதியில் உள்ள வீட்டில் இருந்து வாள் மற்றும் குண்டு என்பன கண்டி மாவட்ட குற்றத்தடுப்பு பொலிசாரால் மீட்கப்பட்டன.</p><p></p><p>
</p><p>
இந்நிலையில் வாக்குமூலம் வழங்குவதற்காக உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் கண்டி மாவட்ட குற்றத்தடுப்பு பொலிசாரால் அழைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.&nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-07-20T09:39:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yoosuf</name>
            </author>
            <title type="text"><![CDATA[விதை போன்ற உணவை சாப்பிட்ட 22 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/22-students-admitted-to-hospital-1784539416"></link>
            <id>https://tamilwin.com/article/22-students-admitted-to-hospital-1784539416</id>
            <summary type="text">கந்தளாய் பாடசாலை ஒன்றில் சிறுவன் ஒருவன் வீட்டிலிருந்து கொண்டுசென்ற விதை போன்ற உணவை பகிர்ந்து சாப்பிட்டதில், 22 பாடசாலை மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமத...</summary>
            <content type="html"><![CDATA[<p>கந்தளாய் பாடசாலை ஒன்றில் சிறுவன் ஒருவன் வீட்டிலிருந்து கொண்டுசென்ற விதை போன்ற உணவை பகிர்ந்து சாப்பிட்டதில், 22 பாடசாலை மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p><p>இந்த சம்பவம் இன்று (20) காலை இடம்பெற்றுள்ளது.</p><p></p><h2>உணவு ஒவ்வாமை</h2><p>
</p><p>கந்தளாய் பாடசாலை ஒன்றில் தரம் 6இல் கல்வி கற்கும் மாணவன் ஒருவன் வீட்டிலிருந்து கொண்டுசென்ற விதை போன்ற உணவை சக மாணவர்களுடன் பகிர்ந்து உண்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fb6b1586-de6a-47b0-8d64-84afb818a5e1/26-6a5dec6f56641.webp' /></p><p> </p><p>

அதன்பின்னர் அந்த உணவை உண்கொண்ட அனைவரும் உணவு ஒவ்வாமை காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். </p><p>அவர்களில் 20 ஆண் பிள்ளைகளும், 2 பெண் பிள்ளைகளும் அடங்குகின்றனர். இதில் 5 மாணவர்களை மேலதிக சிகிச்சைகளுக்காக திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
</p><p>இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட ஆரம்பக்கட்ட விசாரணைகளின் படி, குறித்த மாணவன் வழக்கமாக வெளிநாட்டில் இருந்து
கொண்டுவரப்பட்ட சூரியகாந்தி விதைகளை பாடசாலைக்கு கொண்டு வந்து நண்பர்களுடன்
பகிர்ந்து உண்பது வழமையாக இருந்துள்ளது.</p><h2>கந்தளாய் பொலிஸார் விசாரணை</h2><p>இன்றும் சூரியகாந்தி விதைகள் என
நினைத்து, வீட்டில் இருந்த ஆமணக்கு (Castor) விதைகளையும் அவற்றுடன் சேர்த்து
கொண்டு வந்து பகிர்ந்து உண்டுள்ளமை தெரியவந்துள்ளது.
</p><p>
இதன் காரணமாகவே மாணவர்களுக்கு உடல்நலப்பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என
சந்தேகிக்கப்படுகின்றது.
</p><p>
சம்பவம் தொடர்பில் கந்தளாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு
வருகின்றனர்.&nbsp; &nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-20T09:37:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈஸ்வரி சரமாரி கேள்வி கேட்ட ஜனனி, அவரின் பதில் என்ன... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/ethirneechal-thodargiradhu-serial-promo-20-july-1784532907"></link>
            <id>https://cineulagam.com/article/ethirneechal-thodargiradhu-serial-promo-20-july-1784532907</id>
            <summary type="text">எதிர்நீச்சல் தொடர்கிறதுகுணசேகரன், தனது குடும்ப தனது கட்டுப்பாட்டில் தான் இருக்க வேண்டும் என செய்யாத அநியாயம் இல்லை. அவரின் அடக்கு முறையை எதிர்த்து போர...</summary>
            <content type="html"><![CDATA[<h2>எதிர்நீச்சல் தொடர்கிறது</h2><p>குணசேகரன், தனது குடும்ப தனது கட்டுப்பாட்டில் தான் இருக்க வேண்டும் என செய்யாத அநியாயம் இல்லை. </p><p>அவரின் அடக்கு முறையை எதிர்த்து போராடி குணசேகரன் வீட்டில் ஏற்கெனவே சிக்கிக்கொண்டிருக்கும் பெண்களின் மரியாதையை காப்பாற்ற வேண்டும் என போராடுபவர் ஜனனி.</p><p>இயக்குனர் சீரியலை எடுக்கும் போதே இக்கதை பெண்கள் எழுச்சிக்கான தொடர் என கூற பெண்கள் மிகவும் ஆர்வமாக பார்க்க துவங்கினார்கள், ஆனால் போகப் போக கதை பெண்கள் கொண்டாடுவது போல் அமையவில்லை. அதற்கு மாறாக வில்லன்கள் ராஜ்ஜியம் செய்யும் கதையாக தொடர் மாறிவிட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d8a85202-aa6c-4155-87f9-5a4bf05f87b1/26-6a5ddc0de1ed3.webp' /></p><h2>புரொமோ</h2><p>இன்றைய எபிசோட் புரொமோவில், வீட்டில் நடக்கும் விஷயங்களை எல்லாம் பார்த்த ஜனனி வீட்டைவிட்டு வெளியே செல்ல முடிவு எடுக்க அதற்கும் பிரச்சனை செய்தார்கள். வீட்டில் இருந்தவர் தர்ஷினியிடம் என்ன நடந்தது என்ற உண்மையை சொல்லும்படி கேட்கிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7601bae9-6add-4bf7-9959-fdb891e9cb65/26-6a5ddc0d16ee8.webp' /></p><p>அந்த நேரம் வந்த ஈஸ்வரி என் மகளிடம் என்ன கேட்கிறீர்கள் என கேட்க அதற்கு அவர், என்னையும் பேச விடவில்லை, நீங்களும் மனம்விட்டு பேச மறுக்கிறீர்கள். இன்னும் எத்தனை நாள் இப்படியே இருக்கப்போகிறீர்கள்.</p><p>உங்கள் சுயமரியாதை, கௌரவம் எல்லாவற்றையும் உங்கள் கணவர் காலடியில் போட்டுவிட்டு எப்படி என் முன்னாடி நிற்கிறீர்கள் கேட்க ஈஸ்வரி, குணசேகரன் செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்டார் மன்னித்து விட்டேன் என்கிறார்.</p><p>இதோ அந்த புரொமோ,</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/sp-12d0hPxU" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-07-20T09:30:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[குட்டிமணி மற்றும் தங்கதுரை ஆகியோரின் உருவச்சிலை திறப்பு விழா - பொலிஸ் விசாரணை ஆரம்பம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/statue-ceremony-of-kuttimani-and-thangadurai-1784538302"></link>
            <id>https://tamilwin.com/article/statue-ceremony-of-kuttimani-and-thangadurai-1784538302</id>
            <summary type="text">குட்டிமணி, தங்கதுரை ஆகியோரின் உருவச்சிலை திறப்பு விழா தொடர்பாக
வல்வெட்டித்துறை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>குட்டிமணி, தங்கதுரை ஆகியோரின் உருவச்சிலை திறப்பு விழா தொடர்பாக
வல்வெட்டித்துறை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
</p><p>
தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் முன்னாள் தலைவர் தங்கதுரை மற்றும் தமிழ் ஈழ
விடுதலை இயக்கத்தின் முன்னாள் செயலதிபர் குட்டிமணி ஆகியோரின் உருவச்சிலை
எதிர்வரும் 25ஆம் திகதி வல்வெட்டித்துறையில் திறந்து வைக்க ஏற்பாடு
செய்யப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><h2>வெலிக்கடை சிறைக் கலவரத்தில்</h2><p>இந்நிலையில் ஏற்பாட்டு குழுவின் சார்பில் வல்வெட்டித்துறை நகர சபையின்
முன்னாள் உறுப்பினர் சதீஸ் வல்வெட்டித்துறை பொலிஸாரால் விசாரணைக்கு
அழைக்கப்பட்டுள்ளார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4b6d1e22-b672-4033-ab84-eb7d0d95bbbd/26-6a5de6752c963.webp' /></p><p>
வெலிக்கடை சிறை கலவரத்தின் போது குட்டிமணி மற்றும் தங்கதுரை ஆகியோர் படுகொலை
செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-20T09:25:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வேல்ஸில் முகாம் தளத்தில் இளைஞர் மரணம்; மூவர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/youth-dies-at-campsite-in-wales-three-arrested-1784539292"></link>
            <id>https://canadamirror.com/article/youth-dies-at-campsite-in-wales-three-arrested-1784539292</id>
            <summary type="text">&amp;nbsp; பிரித்தானியாவின் புகழ்பெற்ற ‘ரோயல் வேல்ஸ்’ (Royal Welsh) கண்காட்சி திடலுக்கு அருகே உள்ள முகாம் தளம் ஒன்றில் 25 வயதுடைய இளைஞர் ஒருவர் மர்மமான மு...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; பிரித்தானியாவின் புகழ்பெற்ற ‘ரோயல் வேல்ஸ்’ (Royal Welsh) கண்காட்சி திடலுக்கு அருகே உள்ள முகாம் தளம் ஒன்றில் 25 வயதுடைய இளைஞர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்தமை தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
</p><p>
இச்சம்பவம் தொடர்பாகப் போதைப்பொருள் விவகாரங்களுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் மூன்று ஆண்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cdc8d32d-c3c6-4747-ae09-d2af656eccfa/26-6a5de89de8c72.webp' /></p><p>

போவிஸ் (Powys) பகுதியில் உள்ள லான்எல்வெத் (Llanelwedd) கிராமத்தின் பென்மேனவ் பண்ணை (Penmaenau Farm) முகாம் தளத்தில் சனிக்கிழமை இரவு இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
</p><p>
சம்பவ இடத்திற்கு அவசரமாக அழைக்கப்பட்ட அவசர மருத்துவ உதவியாளர்கள் (Paramedics) அந்த இளைஞரைக் காப்பாற்றக் கடுமையான முயற்சிகளை மேற்கொண்ட போதிலும், துரதிர்ஷ்டவசமாக அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகப் பொலிஸார் தெரிவித்தனர்.</p><p>

 இச்சம்பவம் ஒரு தனிப்பட்ட விவகாரம் என்றும், இந்த மரணத்திற்கான சரியான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை (Unexplained) என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


 கைது செய்யப்பட்டுள்ள மூன்று சந்தேகநபர்களும் தற்போது பொலிஸ் காவலில் வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.&nbsp; &nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-20T09:19:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[எயார்பஸ் விவகாரம் - பணம் கைமாற்றப்பட்ட வங்கிக்கணக்குகளை கண்டுபிடிக்க அவுஸ்திரேலியா புறப்படும் முக்கிய குழு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/airbus-deal-arrives-australia-team-to-investigate-1784531842"></link>
            <id>https://tamilwin.com/article/airbus-deal-arrives-australia-team-to-investigate-1784531842</id>
            <summary type="text">ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கான எயார்பஸ் (Airbus) விமானக்கொள்வனவில் இலஞ்சம் பெற்றதாக கூறப்படும் விவகாரம் தொடர்பில் முக்கிய சந்தேகநபர்களையும், ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கான எயார்பஸ் (Airbus) விமானக்கொள்வனவில் இலஞ்சம் பெற்றதாக கூறப்படும் விவகாரம் தொடர்பில் முக்கிய சந்தேகநபர்களையும், சாட்சிகளையும் கண்டுபிடிக்க முக்கிய அதிகாரிகள் குழுவொன்று அவுஸ்திரேலியாவுக்கு பயணிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p>

இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு (CIABOC) மற்றும் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் சிறப்பு குழு அவுஸ்திரேலியாவுக்கு பயணிக்க உள்ளது.</p><p></p><h2>சாட்சிகளிடமிருந்து வாக்குமூலங்களை பதிவுசெய்ய திட்டம்</h2><p>ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் பத்து விமானங்களை கொள்வனவு செய்வதற்காக, 2013 ஆம் ஆண்டில் ஒரு ஐரோப்பிய விமான நிறுவனத்திடமிருந்து 2 மில்லியன் அமெரிக்க டொலர் இலஞ்சம் பெற்ற வழக்கில் முக்கிய சந்தேகநபர்களை தேடி குழு பயணிக்கவுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b0b35eab-cbd3-4786-9a6e-8af631157c2d/26-6a5dd54cb2495.webp' /></p><p>
எயார்பஸ் இலஞ்ச பரிவர்த்தனையில் பணம் மாற்றப்பட்டதாக கூறப்படும் வங்கிக்கணக்குகளை வைத்திருந்ததாக கூறப்படும், அவுஸ்திரேலியாவில் வசிக்கும் சந்தேகநபர்கள் மற்றும் சாட்சிகளிடமிருந்து வாக்குமூலங்களை பதிவு செய்வதற்கும், ஆதாரங்களை கண்டறிவதற்கும் இந்த கூட்டு நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது.
</p><p>
இலஞ்ச பணம் அனுப்பப்பட்டதாக கூறப்படும் வங்கிக்கணக்கின் உரிமையாளர் என்று கூறப்படும் டபிள்யூ. டி. நிமல் பெரேரா, அவுஸ்திரேலியாவில் வசித்து வருவதாக இலஞ்ச ஆணையம் முன்னதாக நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது.
</p><p>
இந்த சம்பவத்தின் பிரதான சந்தேகநபர்களான, காலஞ்சென்ற கபில சந்திரசேனவின் மனைவி பிரியங்கா நியோமாலி விஜேநாயக்க மற்றும் முன்னாள் அமைச்சர் சமல் ராஜபக்சவின் மகன் ஷமிந்திர ராஜபக்ச ஆகியோர் வெளிநாட்டில் உள்ளனர்.</p><h2>நீதிமன்றங்களால் பிடியாணை உத்தரவு</h2><p>

இவர்களுக்கு எதிராக கொழும்பு மற்றும் கோட்டை நீதவான் நீதிமன்றங்களால் பிடியாணை உத்தரவுகளும் பிறப்பிக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6f8a46e5-8424-4e57-9ee0-708067be1b83/26-6a5dd54d629a4.webp' /></p><p>
</p><p>
கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் இலஞ்ச ஆணைக்குழுவும், கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் சி.ஐ.டி.யும் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளன.
</p><p>
புருனேயில் போலி நிறுவனத்தை நிறுவியமை மற்றும் ஒரு புகழ்பெற்ற ஐரோப்பிய சிவில் விமானப் போக்குவரத்து நிறுவனத்திடமிருந்து (ஐரோப்பிய வானூர்தி பாதுகாப்பு மற்றும் விண்வெளி நிறுவனம் (EADS)) 1,454,645.54 யூரோக்கள் (இரண்டு மில்லியன் அமெரிக்க டொலர்கள்) இலஞ்சம் பெற்றமை தொடர்பாக இந்த விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-20T09:17:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[திருமலை கடற்றொழிலாளர்கள் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/trinco-fishermen-complaint-human-rights-commission-1784536523"></link>
            <id>https://ibctamil.com/article/trinco-fishermen-complaint-human-rights-commission-1784536523</id>
            <summary type="text">திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த கடற்றொழிலாளர் சமூகத்தினர், நீண்டகாலமாகத் தமக்கு
நிலவி வரும் குறைபாடுகள் மற்றும் பிரச்சினைகளுக்குத் தீர்வு கோரி மனித உ...</summary>
            <content type="html"><![CDATA[<p>திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த கடற்றொழிலாளர் சமூகத்தினர், நீண்டகாலமாகத் தமக்கு
நிலவி வரும் குறைபாடுகள் மற்றும் பிரச்சினைகளுக்குத் தீர்வு கோரி மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளனர்.</p><p>மனித உரிமைகள் ஆணைக்குழுவின் திருகோணமலை மாவட்டக் காரியாலயத்தில்
இன்று (20) காலை குறித்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>

திருகோணமலை பகுதியில் தடைசெய்யப்பட்ட மீன்பிடி முறைகளை ஒடுக்குவதற்கு
அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமைக்கு எதிராகவே இந்த மனு
சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>பிரதி அமைச்சராகப் பதவியேற்றுள்ளார்</h2><p>மனுவைக் கையளித்த பின்னர் ஊடகங்களுக்குக்
கருத்துத் தெரிவித்த அவர்கள், ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் திருகோணமலை
 கடற்றொழிலாளர்களின் பிரச்சினைகளுக்காகக் ரத்ன கமகே குரல் கொடுத்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/40a1deab-d248-4e7d-93d6-5d1797a3bbc3/26-6a5de4f281f13.webp' /></p><p>தற்போது அவர் இந்த
அரசாங்கத்தின் மீன்பிடி பிரதி
அமைச்சராகப் பதவியேற்றுள்ள போதிலும், அவர் திருகோணமலைப் பக்கமே தலைவைத்துப்
பார்ப்பதில்லை.

</p><p>பல வருட காலமாகத் நாம் எதிர்கொண்டு வரும் பல்வேறு குறைபாடுகள் குறித்து
திருகோணமலை மாவட்ட அரசியல் தலைமைகள் நன்கு அறிந்திருந்தும், அவை தொடர்பாக
எவ்வித சாதகமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.</p><p></p><h2>எமக்கான நீதியைப் பெற்றுத்தர வேண்டும்&nbsp;</h2><p>
</p><p>மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் எமது வாழ்வாதாரப் பிரச்சினைகள்
மற்றும் குறைபாடுகள் குறித்துப் பேசுவதற்குத் நாம் முற்படும் போதெல்லாம்,
'உங்களது பிரச்சினைகள் பற்றி எமக்கு நன்கு தெரியும்' எனக் கூறி அரசியல்
தலைமைகள் எங்களை அமரச்செய்து விடுகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ca520c5b-2484-4768-b921-1cbcd849e850/26-6a5de4f16b591.webp' /></p><p> </p><p>எமது குரல் அங்கே
ஒடுக்கப்படுகிறது. அரசியல் தலைமைகளின் இத்தகைய அணுகுமுறையினால் எங்களது நியாயமான கோரிக்கைகள்
தொடர்ச்சியாகப் பாராமுகமாகவே காணப்படுவதாகவும், இதன் காரணமாகவே மாற்று வழியாக
மனித உரிமைகள் ஆணைக்குழுவை நாடி இன்று முறைப்பாடு செய்துள்ளோம்.</p><p> இவ்விடயம் தொடர்பாக மனித உரிமைகள் ஆணைக்குழு உரிய விசாரணைகளை மேற்கொண்டு, எமக்கான நீதியையும் வாழ்வாதாரப் பாதுகாப்பையும் பெற்றுத்தருமாறு கோருகின்றோம்“ என தெரிவித்தனர்.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-20T09:14:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெற்றி பெற்ற ஸ்பெயின் அணியை தாக்கிய அர்ஜென்டினா ; மைதானத்தில் பரபரப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/argentina-confronts-spanish-commotion-field-fifa-1784532526"></link>
            <id>https://jvpnews.com/article/argentina-confronts-spanish-commotion-field-fifa-1784532526</id>
            <summary type="text">&amp;nbsp; 2026 பிஃபா உலகக் கிண்ண கால்பந்து இறுதிப் போட்டியில் ஸ்பெயின் அணியிடம் அர்ஜென்டினா 
தோல்வியை அடுத்து மைதானத்தில் அர்ஜென்டினா நட்சத்திர வீரர் லி...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; 2026 பிஃபா உலகக் கிண்ண கால்பந்து இறுதிப் போட்டியில் ஸ்பெயின் அணியிடம் அர்ஜென்டினா 
தோல்வியை அடுத்து மைதானத்தில் அர்ஜென்டினா நட்சத்திர வீரர் லியாண்ட்ரோ பரேடெஸ், ஸ்பெயின் வீரர்களை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><p>

கூடுதல் ஆட்ட நேரத்தின் 106 ஆவது நிமிடத்தில் மாற்று ஆட்டக்காரர் பெரான் டோரஸ் அடித்த கோலால் ஸ்பெயின் அணி 1 - 0 என்ற கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c82d0c00-d3f5-4eea-bbd9-1006648c151a/26-6a5dce2f911a6.webp' /></p><p></p><h2>மைதானத்தில் பரபரப்பு</h2><p> </p><p>

ஆட்ட முடிவில் நடுவர் இறுதி விசிலை ஊதியதும், ஸ்பெயின் வீரர்கள் தங்களது வெற்றியை மைதானத்தில் துள்ளிக் குதித்துக் கொண்டாடத் தொடங்கினர். </p><p>

அப்போது விரக்தியில் இருந்த அர்ஜென்டினாவின் லியாண்ட்ரோ பரேடெஸ், ஸ்பெயின் தற்காப்பு ஆட்டக்காரர் எரிக் கார்சியாவை நோக்கி ஆவேசமாக பாய்ந்து மோதலில் ஈடுபட்டார்.</p><p></p><p> </p><p>

கார்சியாவின் கழுத்தைப் பிடித்து பரேடெஸ் இரண்டு முறை தாக்கினார். 

இந்த மோதலைத் தடுக்க வந்த ஸ்பெயின் அணியின் இளம் நட்சத்திரம் காவி ஓடி வந்தார். ஆனால், இதனால் மேலும் ஆத்திரமடைந்த பரேடெஸ், காவியின் முகத்தில் பலமாக ஒரு குத்து விட்டார். </p><p>

இதனுடன் அர்ஜென்டினாவின் தியாகோ அல்மாடா, தலையிட்டு காவியை கீழே தள்ளியது மேலும் பதற்றத்தை அதிகரித்தது.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Argentina players even fighting after the game, can’t believe people supported this Nazi, racist and THUGGERY team. So embarrassing <a href="https://t.co/DnxaHGR9iX">pic.twitter.com/DnxaHGR9iX</a></p>&mdash; Chiesa🏴󠁧󠁢󠁥󠁮󠁧󠁿 (@Hazariio) <a href="https://x.com/Hazariio/status/2078965246216020295?ref_src=twsrc%5Etfw">July 19, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p> 

இதனையடுத்து நிலைமை மோசமாவதைக் கண்ட அர்ஜென்டினா அணியின் பயிற்சியாளர் லியோனல் ஸ்கலோனிஉடனடியாக மைதானத்திற்குள் விரைந்து வந்து தன் அணி வீரர்களைக் கட்டாயப்படுத்தி அங்கிருந்து இழுத்துச் சென்றார்.</p>]]></content>
            <updated>2026-07-20T09:11:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[100 கோடி கொடுத்தாலும் வேண்டாம்; சமூகவலைத் தளங்களை வெறுக்கும் பிரபல நடிகை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/toxic-aishwarya-lekshmi-detests-social-media-1784538264"></link>
            <id>https://jvpnews.com/article/toxic-aishwarya-lekshmi-detests-social-media-1784538264</id>
            <summary type="text">&amp;nbsp; நடிகை ஐஸ்வர்யா லட்சுமி தமிழ் திரையுஅலகில் தற்போது பிரபலமான நடிகைகளில் ஒருவராவார்.

100 கோடி கொடுத்தாலும் சமூகவலைத்தளங்கள் பக்கம் வர மாட்டேன் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; நடிகை ஐஸ்வர்யா லட்சுமி தமிழ் திரையுஅலகில் தற்போது பிரபலமான நடிகைகளில் ஒருவராவார்.

100 கோடி கொடுத்தாலும் சமூகவலைத்தளங்கள் பக்கம் வர மாட்டேன் என அவர் கூறியுள்ளமை ரசிகர்களுக்கு மன வருத்ததை ஏற்படுத்தியுள்ளது.</p><p> இதற்கான காரணத்தையும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

தனது நிழற்படங்களை மார்பிங் செய்து அவதூறாகப் பதிவிட்டமையால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாகவே சமூக வலைதளங்களிலிருந்து முழுமையாக விலகியதாக நடிகை ஐஸ்வர்யா லட்சுமி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில்,</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2bd22f7e-d6fc-41e6-ad7e-87713c7226c0/26-6a5de49a09712.webp' /></p><p> "என்னுடைய நிழற்படங்களை மார்பிங் செய்து, ஆபாசமான மற்றும் தரக்குறைவான கருத்துகளைப் பதிவிட்டது என்னை மிகவும் பாதித்தது.

யாராவது தனக்கு ரூ. 100 கோடி கொடுத்தாலும் சமூக வலைத்தளங்கள் பக்கம் வர மாட்டேன்.</p><p> இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட அனைத்து சமூக வலைதளங்களிலிருந்து விலகியது எனக்கு மிகுந்த மன அமைதியைக் கொடுத்துள்ளது" எனவும் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி தெரிவித்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-07-20T09:03:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[அனமடுவவில் கோர விபத்து: இராணுவ வீரர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/army-corporal-killed-bus-collision-near-anamaduwa-1784536988"></link>
            <id>https://tamilwin.com/article/army-corporal-killed-bus-collision-near-anamaduwa-1784536988</id>
            <summary type="text">புத்தளம் மாவட்டம் அனமடுவ, பரமகண்ட சந்தி அருகில் இன்று காலை இடம்பெற்ற வீதி விபத்தில் இராணுவ கோப்ரல் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இலங்கை போக்குவரத்து சபைக்கு...</summary>
            <content type="html"><![CDATA[<p>புத்தளம் மாவட்டம் அனமடுவ, பரமகண்ட சந்தி அருகில் இன்று காலை இடம்பெற்ற வீதி விபத்தில் இராணுவ கோப்ரல் ஒருவர் உயிரிழந்துள்ளார்.</p><p>இலங்கை போக்குவரத்து சபைக்கு (SLTB) சொந்தமான பேருந்து ஒன்று அவரது மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.</p><p></p><p>
</p><h2>&nbsp;நீண்டகால இராணுவப் பயிற்சி</h2><p>
உயிரிழந்தவர் அனமடுவ, உறியாவ பகுதியைச் சேர்ந்த 38 வயதான இராணுவ கோப்ரல் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
</p><p>
திருகோணமலையில் இடம்பெற்ற நீண்டகால இராணுவப் பயிற்சியை நிறைவு செய்து நேற்று வீட்டிற்கு திரும்பிய அவர், இன்று மீண்டும் கடமைக்கு செல்லவிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fac7d553-5d20-4d34-8730-4be7c9a71ac1/26-6a5de38e5d932.webp' /></p><p>
</p><p>
இன்று காலை தனது இரு மகள்களையும் மோட்டார் சைக்கிளில் பாடசாலைக்கு அழைத்துச் சென்று இறக்கிவிட்ட பின்னர் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. </p><p>புத்தளம் சாலையிலிருந்து குருநாகல் நோக்கிப் பயணித்த புத்தளம் டிப்போவுக்கு சொந்தமான SLTB பேருந்தே விபத்துடன் தொடர்புபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p></p><h2>பேருந்தின் சாரதி&nbsp;</h2><p>

பேருந்தின் சாரதி கட்டுப்பாட்டை இழந்த நிலையில் அது மோட்டார் சைக்கிளில் மோதியதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
</p><p>
மோதலின் பின்னர் பேருந்து சுமார் 100 மீற்றர் தூரம் பயணித்த பின்னரே நிறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிள் முற்றாக சேதமடைந்ததுடன், இராணுவ கோப்ரல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2642c24d-408c-48a2-8781-da5d8a418363/26-6a5de38f0d499.webp' /></p><p>
</p><p>
உயிரிழந்தவரின் மகள்களில் ஒருவர் இவ்வருடம் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
விபத்து இடம்பெற்ற வீதிப் பகுதி கடந்த சில ஆண்டுகளில் பல உயிரிழப்பு விபத்துகள் இடம்பெற்ற இடமாக காணப்படுவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
</p><p>
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அனமடுவ பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவு மேற்கொண்டு வருகின்ற நிலையில், இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-20T09:00:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[நடிக்க வருவதற்கு முன்பு நடிகை சிம்ரன் இப்படியொரு வேலை செய்துள்ளாரா?... அவரே ஷேர் செய்த விஷயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/is-actress-simran-worked-as-an-anchor-1784531061"></link>
            <id>https://cineulagam.com/article/is-actress-simran-worked-as-an-anchor-1784531061</id>
            <summary type="text">நடிகை சிம்ரன்மும்பையில் இருந்து தமிழ் சினிமாவிற்கு வந்த நடிகைகளில் ஒருவர் தான் சிம்ரன். ஒன்ஸ்மோர் படத்தில் நாயகியாக அறிமுகமானவர் நேருக்கு நேர், விஐபி ...</summary>
            <content type="html"><![CDATA[<h2>நடிகை சிம்ரன்</h2><p>மும்பையில் இருந்து தமிழ் சினிமாவிற்கு வந்த நடிகைகளில் ஒருவர் தான் சிம்ரன். </p><p>ஒன்ஸ்மோர் படத்தில் நாயகியாக அறிமுகமானவர் நேருக்கு நேர், விஐபி என தொடர்ந்து வெற்றிப் படங்கள் கொடுத்தவர் முன்னணி நடிகர்களுடனும் இணைந்து நடித்தார். </p><p>தமிழ் சினிமாவின் டாப் நாயகர்களான ரஜினி, கமல், அஜித், விஜய், சூர்யா போன்ற நடிகர்களுடனும் தெலுங்கில் சிரஞ்சீவி, வெங்கடேஷ் போன்ற ஹீரோக்களுடனும் நடித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a05adf6f-07be-4286-b640-ad12694ce987/26-6a5dccf2bd52e.webp' /></p><p>பீக்கில் இருந்த போதே நடிகை சிம்ரன் தீபக் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். 2003ம் ஆண்டு இவர்களுக்கு திருமணம் நடக்க 2 மகன்களும் உள்ளனர். எல்லா நடிகைகளை போல திருமணத்திற்கு பிறகு சில காலம் கேப் எடுத்தவர் வாரணம் ஆயிரம் படம் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார்.
</p><p>பின் அடுத்தடுத்து படங்கள் நடித்து வருபவர் கடைசியாக நடிகர் ரஜினியின் தர்மன் படத்தில் கமிட்டாகியுள்ளார். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c8ba9d2d-8786-4534-b62d-e1c5218eee02/26-6a5dccf386f88.webp' /></p><h2>
முதல் வேலை</h2><p>
படங்கள் நடிப்பதை தாண்டி நடிகை சிம்ரன் இப்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் நடுவராக கலக்கி வருகிறார். நடிகை சிம்ரன் ஒரு பேட்டியில் நடிக்க வருவதற்கு முன்பு செய்த வேலை குறித்து பேசியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/13ebefac-14a2-4655-87ce-20d835e49818/26-6a5dccf1d8ed6.webp' /></p><p> </p><p>அதில் அவர், என்னுடைய கரியர் தொகுப்பாளினியாக தான் ஆரம்பம் ஆனது, அது டிடி சேனலில் 1995ல் தொடங்கியது. நான் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சியின் பெயர் சூப்பர் ஹிட் முக்காபுல்லா பாடல்கள். </p><p>பாடல் நம்பர் ஒன்று, இரண்டு என்று நான் தொகுத்து வழங்குவேன், அதனால்தான் நான் வணக்கம் சொல்லும்போது அந்த தொகுப்பாளினி ஸ்டைல் இருக்கும் என்றார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-20T09:00:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கிய விடுதி: சுற்றிவளைப்பில் 4 பெண்கள் கைது!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/brothel-operating-massage-parlor-in-seeduwa-raided-1784531787"></link>
            <id>https://ibctamil.com/article/brothel-operating-massage-parlor-in-seeduwa-raided-1784531787</id>
            <summary type="text">மசாஜ் நிலையம் என்ற பெயரில் செயற்பட்ட சமூக பிறழ்வான விடுதி ஒன்று சீதுவையில் காவல்துறையால் சுற்றி வளைக்கபட்டுள்ளது.சீதுவை காவல்துறை பிரிவிற்குட்பட்ட நீர...</summary>
            <content type="html"><![CDATA[<p>மசாஜ் நிலையம் என்ற பெயரில் செயற்பட்ட சமூக பிறழ்வான விடுதி ஒன்று சீதுவையில் காவல்துறையால் சுற்றி வளைக்கபட்டுள்ளது.</p><p>சீதுவை காவல்துறை பிரிவிற்குட்பட்ட நீர்கொழும்பு வீதி பகுதியில் இந்த மசாஜ் நிலையம் இயங்கி வந்துள்ளது.&nbsp;</p><p>காவல்துறையினரால் நேற்று (19.07.2026)முன்கெடுக்கபட்ட சோதனையின் போது ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.&nbsp;</p><p></p><h2>விபச்சார விடுதி</h2><p>காவல்துறை நிலைய அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைய இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2695c2d8-23a6-42bb-91ef-0d40c7a57534/26-6a5dd1b6441ec.webp' /></p><p> </p><p>இதில் குறித்த சமூக பிறழ்வான விடுதியை நிர்வகித்து வந்த முகாமையாளர் (ஆண்) மற்றும் சந்தேகத்திற்கிடமான முறையில் தங்கியிருந்த 4 பெண்கள் உட்பட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p>
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களில் ஹதுந்தாவ பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய முகாமையாளர் மற்றும் கொஸ்கம, மாத்தளை, குருநாகல் மற்றும் அம்பகமுவ ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 22 முதல் 30 வயதிற்குட்பட்ட 4 பெண்கள் என காவல்துறை தெரிவித்துள்ளது.
</p><p>இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சீதுவை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-20T08:58:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் இன்று ஒரு கிராம் தங்க விலை எவ்வளவு? (20-07-2026)]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/today-gold-price-in-sri-lanka-1784537836"></link>
            <id>https://news.lankasri.com/article/today-gold-price-in-sri-lanka-1784537836</id>
            <summary type="text">இலங்கையின் இன்றைய தங்க நிலவரம் (20-07-2026) என்னவென்று தெரிந்து கொள்வோம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் இன்றைய தங்க நிலவரம் (20-07-2026) என்னவென்று தெரிந்து கொள்வோம்.
</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p>
 தங்கம் அவுன்ஸ் விலை ரூபாய் 1,297,805.00 ஆகும்.</p><p>

24 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 45,780.00.
</p><p>
24 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 366,250.00.</p><p>

22 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 41,970.00.
</p><p>
22 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 335,750.00.
</p><p>
21கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 40,060.00.</p><p>

21 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 320,500.00.</p>]]></content>
            <updated>2026-07-20T08:57:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரூ.153 கோடி லாட்டரி வெற்றி.., ஒரே மணி நேரத்தில் ஏழையான பெண்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/wins-153-crore-lottery-tragically-becomes-poor-1784445991"></link>
            <id>https://manithan.com/article/wins-153-crore-lottery-tragically-becomes-poor-1784445991</id>
            <summary type="text">இங்கிலாந்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு ரூ.153 கோடி லாட்டரி பரிசு கிடைத்தும், அதை பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

லாட்டரி வென்ற பெண் 

இங்கிலாந்தின்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இங்கிலாந்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு ரூ.153 கோடி லாட்டரி பரிசு கிடைத்தும், அதை பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.</p><h2>

லாட்டரி வென்ற பெண் </h2><p>

இங்கிலாந்தின் தெற்கு வேல்ஸில் வசிக்கும் கீத் மெயின் என்பவர் கடந்த 20 ஆண்டுகளாக லாட்டரி சீட்டுகளை வாங்கி வந்துள்ளார்.</p><p> 

ஜூன் 6ஆம் தேதி நடைபெற்ற லாட்டரி குலுக்கலில், கீத் வாங்கிய சீட்டுக்கு 12 மில்லியன் பவுண்டுகள் இந்திய மதிப்பில் சுமார் ரூ.153 கோடி ஆகும்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/eb4e8150-bee1-4b67-b6fe-6e3ddeb55fa5/26-6a5c7c293bf5c.webp' /></p><p>லாட்டரியில் வெற்றி பெற்றதை அறிந்த கீத், உடனடியாக தனது தாயிடம் தெரிவித்தார். </p><p>

கீத்தின் தாய், அந்த லாட்டரி சீட்டை இயந்திரத்தில் ஸ்கேன் செய்து பார்த்தபோது எந்தவிதமான எச்சரிக்கை ஒலியும் வரவில்லை.&nbsp;</p><h2>ஏழையான பெண் </h2><p>

அந்த சீட்டு வெற்றி பெற்றதாக தெரியவில்லை என நினைத்து, அதை லாட்டரி மையத்தில் இருந்த குப்பைத்தொட்டியில் வீசிவிட்டார்.</p><p>

இதையடுத்து, கீத் உடனடியாக லாட்டரி நிறுவனத்தை தொடர்பு கொண்டு, வெற்றி பெற்ற சீட்டு தங்களிடம் இருந்ததாக தெரிவித்தார்.</p><p>

இதனைத்தொடர்ந்து அந்த லாட்டரி சீட்டு கிடைக்காததால் ரூ.153 கோடி பரிசை வென்றும், அதை பெற முடியாமல் கீத் தவித்து வருகிறார்.
</p><p>
இந்நிலையில், லாட்டரி நிறுவனம் இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தி வருகிறது. </p><p>

இதற்காக 30 நாட்கள் காலக்கெடு வழங்கப்பட்டதை தொடர்ந்து கீத் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-20T08:55:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பில் வியாபாரிகளை குறிவைத்து பல மில்லியன் மோசடி! முக்கிய கட்சி பெண் உறுப்பினர் அதிரடி கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/woman-arrested-defrauding-businessmen-of-millions-1784536557"></link>
            <id>https://ibctamil.com/article/woman-arrested-defrauding-businessmen-of-millions-1784536557</id>
            <summary type="text">

புறக்கோட்டையில் உள்ள ஆறு துணிக்கடை வியாபாரிகளிடம் பல மில்லியன் ரூபாய் மோசடி செய்த குற்றச்சாட்டில், ஐக்கிய தேசியக் கட்சியின் (UNP) முன்னாள் ஹொரான ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>

புறக்கோட்டையில் உள்ள ஆறு துணிக்கடை வியாபாரிகளிடம் பல மில்லியன் ரூபாய் மோசடி செய்த குற்றச்சாட்டில், ஐக்கிய தேசியக் கட்சியின் (UNP) முன்னாள் ஹொரான நகர சபை உறுப்பினர் ரேணுகா தமயந்தி வத்தளை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>

குறித்த சந்தேக நபர் வியாபாரிகளை ஏமாற்றி, போலி காசோலைகளை வழங்கி சுமார் 160 மில்லியன் ரூபாய் வரை மோசடி செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><p> 

பாதிக்கப்பட்ட வியாபாரிகளை அவர் சில காலமாக தவிர்த்து வந்த நிலையில், அவர் சிறிகொத்தாவிற்கு வருகை தந்துள்ளதாக கிடைத்த தகவலின் பேரில் நேற்றுமுன்தினம் 18ஆம் திகதி வியாபாரிகள் காவல்துறையினருடன் அங்கு சென்றுள்ளனர்.</p><p></p><h2>விளக்கமறியல் உத்தரவு</h2><p>
</p><p>
அங்கு காவல்துறையினருக்கும் அந்தப் பெண்ணுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டதை அடுத்து, மிரிஹான காவல்துறையினர் அவர்கள் அனைவரையும் கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c6018ec6-2f96-4183-bf88-de5b868ac0d9/26-6a5de0e12ee03.webp' /></p><p>

பின்னர் மிரிஹான காவல்துறையினர் நடத்திய விசாரணையில் இந்த முன்னாள் நகர சபை உறுப்பினர் குறித்த உண்மை விவரங்கள் தெரியவந்துள்ளன.
</p><p>
இதனைத் தொடர்ந்து சந்தேக நபரை மேலதிக விசாரணைகளுக்காக வத்தளை காவல்துறையினரிடம் ஒப்படைக்க மிரிஹான காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.</p><p>

 அதன்படி, நேற்று (19) வத்தளை பதில் நீதவான் முன்னிலையில் முற்படுத்தப்பட்ட அந்தப் பெண்ணை, வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-20T08:50:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[வற்றிப்போன ஐரோப்பாவின் இரண்டாவது மிக நீளமான நதி... வேளாண் மக்களுக்கு கட்டுப்பாடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/danube-water-levels-reach-lowest-1784533881"></link>
            <id>https://news.lankasri.com/article/danube-water-levels-reach-lowest-1784533881</id>
            <summary type="text">ருமேனியாவில் டான்யூப் ஆற்றின் நீர்மட்டம் 1996-க்குப் பிறகு மிகக் குறைந்த அளவை எட்டிய நிலையில் வேளாண் மக்களுக்கு நீர்ப்பாசனக் கட்டுப்பாடுகள் விதிக்கப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>ருமேனியாவில் டான்யூப் ஆற்றின் நீர்மட்டம் 1996-க்குப் பிறகு மிகக் குறைந்த அளவை எட்டிய நிலையில் வேளாண் மக்களுக்கு நீர்ப்பாசனக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதோடு, கப்பல் போக்குவரத்தும் ஓரளவு பாதிக்கப்பட்டுள்ளது.</p><h2>வறட்சியால் பாதிப்பு</h2><p> </p><p>
இந்த ஆண்டு ஐரோப்பா முழுவதும் உள்ள நீர்வழிகள் நீண்டகால வெப்ப அலைகள் மற்றும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளன; மேலும், திங்களன்று மேற்கு ஐரோப்பாவில் சராசரி உச்ச வெப்பநிலை 26.2 டிகிரி செல்சியஸாக இருக்கும் என்று கணிக்கப்பட்டிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d7f5bef8-a9f7-463e-8b3f-1b8e10c9abdb/26-6a5dd476776ea.webp' /></p><p> </p><p>இது ஜூலை 20ம் திகதிக்கான இயல்பான அதிகபட்ச வெப்பநிலையை விட 2.7 டிகிரி அதிகமாகும்.&nbsp;இந்த நிலையில் ஐரோப்பாவின் இரண்டாவது மிக நீளமான நதி ருமேனியாவுக்குள் நுழையும் இடத்தில், ஞாயிற்றுக்கிழமையன்று நீரின் அளவு வினாடிக்கு 1,700 கன மீற்றராக இருந்ததாக அந்நாட்டின் அரசு நீர் மேலாண்மை முகமை தெரிவித்துள்ளது; ஜூலை மாதத்திற்கான சராசரி அளவு வினாடிக்கு 4,700 கன மீற்றராகும்.</p><p></p><p> </p><p>அண்டை நாடான பல்கேரியாவுடனான எல்லைக்கு அருகிலுள்ள கரைகளில் நீண்ட தூரத்திற்கு மணல் திட்டுக் காணபப்டுவதையும், பல படகு சேவைகள் நிறுத்தப்பட்டிருப்பதையும், தானியப் படகுகள் சேவை இல்லாமல் நின்றுகொண்டிருப்பதையும் ராய்ட்டர்ஸ் காணொளிக் காட்சிகளில் பதிவாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bf661d46-4b0a-4e82-adf0-462f8221d96c/26-6a5dd477df613.webp' /></p><h2>வேளாண் மக்கள்</h2><p> </p><p>ஐரோப்பிய ஒன்றியத்தின் மிகப்பெரிய தானிய விற்பனையாளர்கள் மற்றும் தீவிர ஏற்றுமதியாளர்களில் ருமேனியாவும் முதன்மையான நாடாகும்.</p><p> இதனிடையே, தென்கிழக்கு ருமேனியாவில் பயிர் நீர்ப்பாசனத்திற்காக வேளாண் மக்கள் தண்ணீர் பெறுவதை அதிகாரிகள் கட்டுப்படுத்தியதோடு, அரசுக்குச் சொந்தமான அணுமின் உற்பத்தியாளரான நியூக்ளியர் எலக்ட்ரிகாவின் இரண்டு அணு உலைகளைக் குளிர்விக்கத் தேவையான குறைந்தபட்ச நீர் அளவை உறுதி செய்வதற்காக நீர்த்தேக்கங்களையும் கட்டுப்படுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4ef85436-1b4e-4508-a215-31de0a358501/26-6a5dd47738036.webp' /></p><p> </p><p>இந்த நிலையில், பல மாவட்டங்களில் பெய்த கனமழையின் காரணமாக, திங்கட்கிழமை முதல் டான்யூப் நதியின் நீர்மட்டம் படிப்படியாக உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளதாக நீர் மேலாண்மை முகமை தெரிவித்துள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-20T08:50:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[குறைந்த விலையில் கிடைக்கும் பவளப்பாறை மீன்.., கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/pavala-parai-fish-health-benefits-in-tamil-1784534310"></link>
            <id>https://manithan.com/article/pavala-parai-fish-health-benefits-in-tamil-1784534310</id>
            <summary type="text">பொதுவாக, மீன் சாப்பிடுவது உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் மிகவும் நல்லது.

மீன்களில் உயர்தர புரதம், ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், வைட்டமின் டி மற...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொதுவாக, மீன் சாப்பிடுவது உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் மிகவும் நல்லது.</p><p>

மீன்களில் உயர்தர புரதம், ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், வைட்டமின் டி மற்றும் பி12 போன்ற அத்தியாவசிய சத்துக்கள் நிறைந்துள்ளன. </p><p>

அந்தவகையில் குறைந்த விலையிலும், அதிக சத்துக்கள் நிறைந்த பவளப்பாறை மீன் குறித்து பார்க்கலாம்.
</p><p>
பவளப்பாறைகளில் வளரும் பாசிகளை இந்த மீன்கள் உணவாக உட்கொள்வதனால் பவளப்பாறைகள் ஆரோக்கியமாக வளர உதவுகின்றன.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cb4e04e4-144d-4fae-b2ff-da514e9fedb1/26-6a5dd592b5425.webp' /></p><p>இந்த மீன்களில் அதிகம் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உடலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்கவும், டிரைகிளிசரைடு அளவைக் கட்டுப்படுத்தவும் உதவுகின்றன. </p><p>

மேலும், மூட்டுவலி அறிகுறிகளைக் குறைக்கவும், மனநலத்தை மேம்படுத்தவும் உதவுகின்றன.
</p><p>
குறிப்பாக இரத்த ஓட்டத்தை சீராக வைத்திருக்கவும், மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கவும் உதவுகின்றன.&nbsp;</p><p>மேலும், இந்த மீன்கள் உடலில் உள்ள கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்த உதவும். இதனால் இதய ஆரோக்கியம் மேம்படும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/86fdc9db-a867-4f70-a519-565bb251eb13/26-6a5dd59377b18.webp' /></p><p>

அதேபோல், இதில் உள்ள குறைந்த அளவு கொழுப்பு மற்றும் அதிக அளவு புரதம் இருப்பதால், உடல் எடையைக் கட்டுப்படுத்தவும் உதவுகின்றன. </p><p>

பவளப்பாறை மீன்களில் உள்ள அத்தியாவசிய கொழுப்புச் சத்துக்கள் மூளை ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவுகின்றன.
</p><p>
மேலும், இதில் உள்ள ஒமேகா-3 மற்றும் வைட்டமின் ஏ சத்துக்கள் கண் ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன.</p>]]></content>
            <updated>2026-07-20T08:50:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாடசாலை வளாகத்தில் பற்றி எரிந்த ஆசிரியரின் கார் - சிசிடிவி கேமராவில் சிக்கிய சம்பவம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/the-boy-who-started-the-teacher-s-car-1784533312"></link>
            <id>https://tamilwin.com/article/the-boy-who-started-the-teacher-s-car-1784533312</id>
            <summary type="text">ஆசிரியரின் வாகனம் தீப்பிடித்து எரியக் காரணமான தீக்குச்சிகளைப் பற்ற வைத்த எட்டு வயது சிறுவனின் வயதை கருத்திற் கொண்டு எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்போவத...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஆசிரியரின் வாகனம் தீப்பிடித்து எரியக் காரணமான தீக்குச்சிகளைப் பற்ற வைத்த எட்டு வயது சிறுவனின் வயதை கருத்திற் கொண்டு எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்போவதில்லை என சர் ஜொன் கொத்தலாவல கல்லூரியின் பழைய மாணவர் சங்கம் அறிவித்துள்ளது. </p><p>

இது தொடர்பில் வெளியிடப்பட்ட அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. </p><p>

மேற்படி அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்படுவதாவது, 

சிறுவன் மீது எந்தவிதக் குற்றச்சாட்டுகளோ அல்லது அழுத்தமோ கொடுக்கப்படாது என வலியுறுத்தியுள்ளதுடன், பாடசாலை அதிகாரிகள் முறையற்ற செல்வாக்கைப் பிரயோகித்ததாக சமூக ஊடகங்களில் கூறப்படும் குற்றச்சாட்டுகளையும் நிராகரித்துள்ளது.</p><p></p><p>
</p><h2>
தீப்பிடித்து எரிந்த கார்</h2><p>




 ஜூலை 3 ஆம் திகதி பிற்பகல் 2.55 மணியளவில், பாடசாலை வளாகத்திற்குள் ஆசிரியர் ஒருவரின் வாகனம் தீப்பிடித்து எறிந்துள்ளது. 

அதன் பின்னர், சிசிடிவி காட்சிகளை பார்த்த போது, எட்டு வயது சிறுவன் ஒருவன், 
 வாகனத்தின் அருகே சுற்றித் திரிந்து ஒரு தீப்பெட்டியை வீசியெறிவது தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fdbf4ad8-2cdc-4a64-992d-720ae667c502/26-6a5de025daacf.webp' /></p><p> </p><p>

காப்பீட்டு நோக்கங்களுக்காக, ஆசிரியர் குருநாகலை தலைமையக பொலிஸாரிடம் சிசிடிவி காட்சிகள் மற்றும் புகைப்படங்களைச் சமர்ப்பித்து முறைப்பாடு கொடுத்த நிலையில், 
ஆனால் அதில் சிறுவனின் பெயர் குறிப்பிடவில்லை. </p><p>

ஆசிரியர், குழந்தையையோ அல்லது பெற்றோரையோ எந்த வகையிலும் வற்புறுத்தவில்லை. அவர் தனது முறைப்பாடுகளில் குழந்தையின் பெயரைக் கூட விரும்பவில்லை.</p><h2>
தாயார் செய்த முறைப்பாடு</h2><p>
இருப்பினும், ஆசிரியருக்கு எதிரான முறைப்பாடுகளில் குழந்தையின் பெயரையும் தாய் சேர்த்திருப்பது வருந்தத்தக்கது.</p><p> 

 ஜூலை 4 ஆம் திகதி, குழந்தை தனது பெற்றோருடன் தலைமை ஆசிரியர் மற்றும் பிரதித் தலைமை ஆசிரியர் முன்னிலையில் விசாரணை நடத்தப்பட்டது, </p><p>

இதன்போது, சிறுவன் ​​பல தீக்குச்சிகளைப் பற்றவைத்து, அதில் ஒன்றை காரின் பம்பரில் வீசியதை அவன் ஒப்புக்கொண்டான். பெற்றோர் இந்தச் செயலை உறுதிப்படுத்தியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8874401b-4dd0-4e6d-8c9d-6813e0f2ce90/26-6a5de02693c42.webp' /></p><p>

மேலும் சிறுவனின் தந்தை சேதத்திற்கு இழப்பீடு வழங்குவதாக உறுதியளித்தார். 

குற்றப் புலனாய்வு அலுவலகத்தைச் (SOCO) சேர்ந்த பொலிஸ் அதிகாரிகள் ஆய்வு நடத்தி, காரைப் பழுதுபார்ப்பதற்காக எடுத்துச் செல்ல அனுமதியளித்துள்ளனர். </p><p>

இதனைத் தொடர்ந்து, குறித்த சிறுவன் பாடசாலைக்கு தவறாமல் வருகை தருவதாகவும், அவரின் பாதுகாப்பும் உரிமைகளும் பாதுகாக்கப்பட்டு வருவதாக பழைய மாணவர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.</p><p></p><p></p><p><br></p><p> 




</p>]]></content>
            <updated>2026-07-20T08:45:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[விண்வெளியில் குழந்தை பெற்றுக்கொள்வது சவாலானது; ஆய்வாளர்கள் எச்சரிக்கை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/giving-birth-in-space-is-challenging-1784536945"></link>
            <id>https://canadamirror.com/article/giving-birth-in-space-is-challenging-1784536945</id>
            <summary type="text">&amp;nbsp; விண்வெளியில் மனிதர்கள் நிரந்தரமாகக் குடியேறி, அங்கு குழந்தை பெற்றுக்கொள்வது எதிர்பார்த்ததை விட மிகவும் சவாலானதாக இருக்கும் என புதிய ஆய்வில் தெர...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; விண்வெளியில் மனிதர்கள் நிரந்தரமாகக் குடியேறி, அங்கு குழந்தை பெற்றுக்கொள்வது எதிர்பார்த்ததை விட மிகவும் சவாலானதாக இருக்கும் என புதிய ஆய்வில் தெரியவந்துள்ளதாக ஆய்வாளர்கள் கூருகின்றனர்.
</p><p>
ஆய்வின்படி, விண்வெளியில் நிலவும் பூஜ்ய ஈர்ப்புவிசை (Microgravity) மற்றும் அதிக கதிர்வீச்சு காரணமாக, இனப்பெருக்கத்திற்குத் தேவையான விந்து மற்றும் கருமுட்டை (அணு) உருவாக்கும் செல்களின் செயல்திறன் 50 சதவீதம் வரை குறையக்கூடும் எனக் கண்டறியப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a3be5d50-fcee-483a-b4cb-409fab35e9d8/26-6a5ddf7304dd0.webp' /></p><p>
</p><p>
உடலின் செல்கள் பெருகும் வேகம் 25 சதவீதம் வரை மந்தமடைவதால், கர்ப்பம், கருவின் வளர்ச்சி மற்றும் மனித இனப்பெருக்கம் தொடர்பான செயல்முறைகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
</p><p>
மேலும், எதிர்காலத்தில் சந்திரன் மற்றும் செவ்வாய் போன்ற கிரகங்களில் மனிதக் குடியிருப்புகளை அமைக்கும் திட்டங்களுக்கு, இந்த ஆய்வு முக்கியமான சவால்கள் எடுத்துக்காட்டுவதாகக் கருதப்படுகிறது.</p>]]></content>
            <updated>2026-07-20T08:40:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[திடீர் வெளிநாட்டு பயணத்தை மேற்கொண்ட நாமல் மற்றும் மனைவி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-rajapaksa-limini-rajapaksa-1784518526"></link>
            <id>https://tamilwin.com/article/namal-rajapaksa-limini-rajapaksa-1784518526</id>
            <summary type="text">மொட்டுக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச மற்றும் அவரின் மனைவி லிமினி ராஜபக்ச இருவரும் கடந்த வாரம் திடீர் வெளிநாட்டு பயணம் ஒன்று மேற்கொண்டிருந...</summary>
            <content type="html"><![CDATA[<p>மொட்டுக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச மற்றும் அவரின் மனைவி லிமினி ராஜபக்ச இருவரும் கடந்த வாரம் திடீர் வெளிநாட்டு பயணம் ஒன்று மேற்கொண்டிருந்ததாக தெரியவந்துள்ளது.
</p><p>
அவர்கள் இருவரும் கடந்த வார ஆரம்பத்தில் முதன்முதலாக மாலைதீவை சென்றடைந்துள்ளனர். அது சாதாரண ஒரு விஜயம் அல்ல, மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி இப்ராஹிம் மொஹமட் சோலிஹின் மகளின் திருமண விழாவில் கலந்து கொள்வதற்காகவே சென்றுள்ளனர்.</p><p>&nbsp;</p><h2>மாலைதீவில் நடந்த திருமண நிகழ்வு</h2><p>
மாலைதீவில் அமைந்துள்ள மிக ஆடம்பரமான உல்லாச விடுதி (Resort) ஒன்றில் நடைபெற்ற இந்த பிரம்மாண்டமான திருமண விழாவில் இலங்கையிலிருந்து விசேட விருந்தினர்களாக கலந்துகொள்ளும் வாய்ப்பு இவர்களுக்கு கிடைத்திருந்தது.
</p><p>
ஆனாலும், இந்த விஜயம் அத்துடன் முடிவடையவில்லை. மாலைத்தீவு திருமண நிகழ்வு முடிந்த உடன், நாமல் ராஜபக்ச அங்கிருந்து நேரடியாக சிங்கப்பூர் நோக்கிப் புறப்பட்டுச் சென்றுள்ளார்.
</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cbf689e4-2e03-4d6c-8bb8-ac8cdb8076cc/26-6a5d9780d382a.webp' /></p><p>சிங்கப்பூரில் நடைபெற்ற உலகளாவிய பொருளாதார ஒத்துழைப்புக்கான கிழக்காசிய மாநாட்டில் (Global Economic Cooperation East Summit) உரையாற்றுவதற்காகவே அவர் அங்கு சென்றுள்ளார்.
</p><p>
ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக அவர் அங்கு விசேட உரை ஒன்றையும் ஆற்றியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p></p><p></p><p><b><i>you may like this video</i></b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/3dNaOe5-MUg" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-07-20T08:39:50+00:00</updated>
        </entry>
    </feed>
