<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-08-13T19:26:07+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[பெண்கள் கழிப்பறையில் ரகசிய கேமரா ; அதிர்ச்சியில் உறைந்த பெண்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/hidden-camera-in-the-women-s-toilet-1786648715"></link>
            <id>https://jvpnews.com/article/hidden-camera-in-the-women-s-toilet-1786648715</id>
            <summary type="text">இரத்தினபுரியில் உள்ள நிதி நிறுவனமொன்றில் பணிபுரியும் பெண்களின் நிர்வாணப் புகைப்படங்களை ரகசியமாக எடுத்ததாகக் கூறப்படும் நபர் ஒருவர் இரத்தினபுரி பொலிஸார...</summary>
            <content type="html"><![CDATA[<p>இரத்தினபுரியில் உள்ள நிதி நிறுவனமொன்றில் பணிபுரியும் பெண்களின் நிர்வாணப் புகைப்படங்களை ரகசியமாக எடுத்ததாகக் கூறப்படும் நபர் ஒருவர் இரத்தினபுரி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>
</p><p></p><h3>மேலதிக விசாரணை</h3><p>கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நிதி நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
குறித்த நிதி நிறுவனத்தில் பெண்கள் பயன்படுத்தும் கழிப்பறையில், அவர்கள் கவனிக்காத வகையில் கைபேசி ஒன்றை மறைத்து பொருத்தி, நிர்வாணப் புகைப்படங்கள் மற்றும் காட்சிகளை பதிவு செய்ததாக சந்தேகநபர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/50f0bf14-26d9-4bc3-b73a-68f6f5e7d159/26-6a7e188d79c18.webp' /></p><p>இந்த சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட நான்கு பெண்கள் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.</p><p> அதன் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் பின்னர் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
இந்நிலையில், குறித்த பெண்களில் ஒருவர் கழிப்பறைக்கு அருகில் இரண்டு துளைகள் காணப்பட்ட காகிதத் துண்டொன்றை அவதானித்துள்ளார். </p><p>அதனை பரிசோதித்தபோது, காகிதத்திற்குள் கைபேசி ஒன்று மறைத்து வைக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
இதனையடுத்து குறித்த கைபேசியை எடுத்துச் சென்ற அவர், சம்பவம் தொடர்பில் ஏனைய பெண்களுக்கும் தெரியப்படுத்தியுள்ளார்.
</p><p>
பின்னர், குறித்த கைபேசியில் இருந்த சிம் அட்டையை அகற்றி தனது தனிப்பட்ட மடிக்கணினியில் பயன்படுத்திப் பார்த்தபோது, அதில் பெண்களின் நிர்வாணப் புகைப்படங்கள் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><p>

இதனைத் தொடர்ந்து இரத்தினபுரி பொலிஸாருக்கு முறைப்பாடு செய்யப்பட்ட நிலையில், சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
</p><p>
விசாரணைகளின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர், இரத்தினபுரி நீதவான் சமன் டி.கே. பரணாலியனகே முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.
</p><p>
குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டதாகத் தெரிவிக்கப்படும் சந்தேகநபரை எதிர்வரும் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
</p><p>
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மற்றும் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தினர் முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-13T19:22:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[4 வினாடியில் ஒரு வருடச் சம்பளம் - மஸ்க்கின் வருமானம்...! வெளியான அறிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/elon-musk-paid-2-5m-times-more-than-staff-1786642063"></link>
            <id>https://ibctamil.com/article/elon-musk-paid-2-5m-times-more-than-staff-1786642063</id>
            <summary type="text">அமெரிக்காவின் மின்சார வாகனத் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லாவில் (Tesla) கடந்த 2025 ஆம் ஆண்டில் அதன் சராசரி ஊழியர் பெற்ற ஊதியத்தை விட அந்நிறுவனத்தின் தலைமை...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவின் மின்சார வாகனத் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லாவில் (Tesla) கடந்த 2025 ஆம் ஆண்டில் அதன் சராசரி ஊழியர் பெற்ற ஊதியத்தை விட அந்நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியான (CEO) எலான் மஸ்க்கிற்கு 25 லட்சம் மடங்கு கூடுதல் ஊதியம் வழங்கியுள்ளதாக புதிய அறிக்கை ஒன்று வெளிப்படுத்தியுள்ளது.</p><p>

அமெரிக்காவின் மிகப்பெரிய தொழிற்சங்க கூட்டமைப்பான AFL-CIO வெளியிட்ட நிர்வாகிகள் ஊதியக் கண்காணிப்பு (Executive Pay Watch) அறிக்கையில் இந்த தகவல் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
</p><p>
கடந்த ஆண்டில் எலான் மஸ்க்கின் மொத்த ஊதியப் தொகுப்பு 158.3 பில்லியன் அமெரிக்க டாலர்களாக ($158.3bn) இருந்தது.</p><p>
</p><p></p><h2>ஊதிய விகிதம்&nbsp;</h2><p>அறிக்கையின்படி, 2025 ஆம் ஆண்டில் ஒரு சாதாரண டெஸ்லா ஊழியர் ஒரு வருடம் முழுமையாக உழைத்து ஈட்டும் சராசரி ஊதியத்தை எலான் மஸ்க் வெறும் 4.23 வினாடிகளில் ஈட்டியுள்ளார்.</p><p>

எலான் மஸ்க்கின் ஊதியத்தையும் சேர்த்து கணக்கிட்டால், டெஸ்லாவின் CEO - ஊழியர் ஊதிய விகிதம் 5,387 : 1 ஆக உயர்ந்துள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/44358eb5-4213-47a5-b1e7-75c1e67fbf55/26-6a7e16723c335.webp' /></p><p>மஸ்க்கை விலக்கிப் பார்த்தால் S&amp;P 500 முன்னணி நிறுவனங்களின் சராசரி CEO - ஊழியர் ஊதிய விகிதம் 312 : 1 ஆக உள்ளது (இது 2024-இல் 285 : 1 ஆக இருந்தது).</p><p>

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னரான காலத்தில் அமெரிக்க தேசிய வருவாயில் தொழிலாளர்களின் பங்கு தற்போதைய அளவிற்குக் குறைந்ததே இல்லை என குறித்த அறிக்கை கவலை தெரிவித்துள்ளது.</p><p>
</p><p></p><h2>மிகப்பெரிய வரிவிலக்கு</h2><p>இவ்வறிக்கையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் வருமானமும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. </p><p>

கிரிப்டோ முதலீடுகள் மூலம் 2025 இல் ட்ரம்ப்பின் வருமானம் $2.2 பில்லியனாக (254% உயர்வு) அதிகரித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b0de0656-5165-41a8-ac8a-c7dfeba6d8a6/26-6a7e1672e09d2.webp' /></p><p> 

ஒரு சாதாரண அமெரிக்க ஊழியர் இந்தத் தொகையை ஈட்ட 43,154 ஆண்டுகள் தேவைப்படும்.</p><p>

AFL-CIO கூட்டமைப்பின் செயலாளர் ஃப்ரெட் ரெட்மண்ட் கூறுகையில், "கார்ப்பரேட்களுக்கும் கோடீஸ்வரர்களுக்கும் மிகப்பெரிய வரிவிலக்குகளை வழங்குவதற்காக ஏழை எளிய குடும்பங்களுக்கான சுகாதார மற்றும் உணவு உதவிகளை முடக்கி பொருளாதாரத்தை தங்களுக்கு சாதகமாக அமைத்துக் கொண்டுள்ளனர்" எனக் கடுமையாகச் சாடியுள்ளார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-13T19:22:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[இஸ்ரேலின் ‘படுகொலை சதி’ எச்சரிக்கை: ட்ரம்பின் விமான மாற்றத்தின் அதிரவைக்கும் பின்னணி..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/trump-jet-switch-after-israel-s-iran-warning-1786643461"></link>
            <id>https://tamilwin.com/article/trump-jet-switch-after-israel-s-iran-warning-1786643461</id>
            <summary type="text">அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், கடந்த மாதம் துருக்கியில் நடைபெற்ற நேட்டோ மாநாட்டில் பங்கேற்றுவிட்டு அமெரிக்கா திரும்பியபோது, ஈரான் தரப்பிலிருந்து ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், கடந்த மாதம் துருக்கியில் நடைபெற்ற நேட்டோ மாநாட்டில் பங்கேற்றுவிட்டு அமெரிக்கா திரும்பியபோது, ஈரான் தரப்பிலிருந்து அவருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக இஸ்ரேல் எச்சரித்ததைத் தொடர்ந்து ரகசியமாக விமானம் மாற்றப்பட்டதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
</p><p>
இஸ்ரேல் வழங்கிய உளவுத்தகவலின்படி, ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தை நோக்கி ஈரானிய ஏவுகணை தாக்குதல் நடத்தப்படலாம் என அமெரிக்க அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.</p><h2>ட்ரம்பின் பாதுகாப்பு</h2><p>

இதையடுத்து, ட்ரம்பின் பாதுகாப்பை உறுதி செய்ய அமெரிக்க இரகசிய சேவைப் பிரிவு, அவரை பெரிய ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்திலிருந்து சிறிய ராணுவ விமானத்திற்கு ரகசியமாக மாற்றியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
ஆனால், இந்த அச்சுறுத்தல் தொடர்பான இஸ்ரேலிய உளவுத்தகவல் குறித்து அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகள் சந்தேகம் கொண்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d734b81d-7149-4481-8c42-9a82a8ee265c/26-6a7e1252a5f71.webp' /></p><p>

 CIA ஆய்வாளர்கள் இந்தத் தகவல் போதுமான ஆதாரங்களைக் கொண்டதாக இல்லை என மதிப்பிட்டதுடன், தங்களது சந்தேகத்தையும் ட்ரம்ப் நிர்வாக அதிகாரிகளிடம் தெரிவித்ததாக Washington Post செய்தி வெளியிட்டுள்ளது.
</p><p>
மேலும், அச்சுறுத்தல் தொடர்பான தகவல் ஒரே ஒரு ஆதாரத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டதும், உறுதிப்படுத்தப்படாததும், குறைந்த நம்பகத்தன்மை கொண்டதுமாக இருந்ததாக அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
</p><p>
துருக்கி பாதுகாப்பு அதிகாரிகளும் இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தியதாகவும், அங்காராவில் ட்ரம்பை படுகொலை செய்யும் குறிப்பிட்ட சதித்திட்டம் எதுவும் கண்டறியப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>இஸ்ரேல் வழங்கிய எச்சரிக்கை</h2><p>
</p><p>

ட்ரம்பின் அமைச்சரவையில் முக்கிய பதவிகளில் உள்ள வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ மற்றும் முக்கிய அதிகாரியான ஸ்காட் பெசென்ட் ஆகியோர் பழைய ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்திலேயே பயணித்ததாகவும், ட்ரம்ப் மட்டும் வேறு சிறிய இராணுவ விமானத்திற்கு மாற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

ரூபியோ விமான மாற்றம் மற்றும் அதற்குப் பின்னிருந்த அச்சுறுத்தல் குறித்து அறிந்திருந்ததாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
</p><p>

இஸ்ரேல் வழங்கிய இந்த எச்சரிக்கை, ட்ரம்பின் பாதுகாப்புக்காக மட்டுமே வழங்கப்பட்டதா அல்லது அமெரிக்காவின் பிராந்திய கொள்கை மற்றும் ட்ரம்பின் முடிவெடுப்பில் தாக்கத்தை ஏற்படுத்தும் நோக்கத்தையும் கொண்டிருந்ததா என்ற கேள்விகளும் எழுந்துள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3d67e216-9616-405d-b512-85ca7fd6a93e/26-6a7e12535784e.webp' /></p><p>
</p><p>
சில அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகள், இந்த “படுகொலை சதி” எச்சரிக்கை உண்மையான அச்சுறுத்தலைத் தெரிவிப்பதைவிட, ட்ரம்பின் முடிவெடுப்பையும் மத்திய கிழக்கு தொடர்பான அமெரிக்க கொள்கையையும் பாதிக்கும் நோக்கத்துடன் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் எனக் கருதியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
</p><p>
துருக்கியில் இருந்து புறப்படுவதற்கு முன்பு ட்ரம்ப், புதிய கத்தார் பரிசாக வழங்கப்பட்டு மாற்றியமைக்கப்பட்ட விமானத்தை அங்கிருந்து முன்கூட்டியே அனுப்பிவிட்டு, பழைய ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் ஒரு பகுதி பயணத்தை மேற்கொள்வதாக கூறியிருந்தார்.</p><p>

ஆனால் பின்னர் வெளியான தகவலின்படி, ட்ரம்ப் அந்த பழைய ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் பயணிக்கவில்லை. பத்திரிகையாளர்களும் சில வெள்ளை மாளிகை ஊழியர்களும் ட்ரம்ப் அதே விமானத்தில் இருப்பதாக நம்ப வைக்கப்பட்ட நிலையில், அவர் ரகசியமாக வேறு விமானத்திற்கு மாற்றப்பட்டதாக கூறப்படுகிறது.</p>]]></content>
            <updated>2026-08-13T19:22:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[உயர்தரப் பரீட்சார்த்திகளுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு...!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/no-a-l-question-papers-leaked-examination-dept-1786636339"></link>
            <id>https://ibctamil.com/article/no-a-l-question-papers-leaked-examination-dept-1786636339</id>
            <summary type="text">கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் நாளை (14-08-2026) இடம்பெறவுள்ள பாடத்திற்கான வினாத்தாள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கசியவில்லை என உறுதிப்படுத்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் நாளை (14-08-2026) இடம்பெறவுள்ள பாடத்திற்கான வினாத்தாள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கசியவில்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
</p><p>
இலங்கை பரீட்சைகள் திணைக்களம் இதனை உறுதிப்படுத்தியுள்ளது.</p><p> 

எனவே பரீட்சார்த்திகள் தேவையற்ற விதத்தில் அச்சம் கொள்ள வேண்டாம் எனவும் வழமை போல் அந்தப் பரீட்சை இடம்பெறும் எனவும் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.</p><p> </p><p></p><h2>பரீட்சை வினாத்தாள்&nbsp;</h2><p>இதனிடையே அம்பாலாந்தோட்டையிலுள்ள உயர்தரப் பரீட்சை மையமொன்றில் பரீட்சை வினாத்தாள் பெட்டியொன்றிலிருந்து நாளை (14-08-2026) நடைபெறவிருந்த பௌதிகவியல் முதலாம் வினாத்தாள் அடங்கிய 06 பொதிகள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கல்வி அமைச்சு உடனடி விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4ddffd01-e66b-4881-bcc1-e578b82779b8/26-6a7dfc2768bfe.webp' /></p><p>எவ்வாறாயினும், அந்த வினாத்தாள்கள் அடங்கிய பொதிகள் திறக்கப்படவோ அல்லது வெளிப்படுத்தப்படவோ இல்லை என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி முன்னதாக உறுதிப்படுத்தினார்.</p><p> 

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை தற்போது நடைபெற்று வருகின்றது.</p><p></p><h2>பரீட்சைகள் திணைக்களம்</h2><p> 

இவ்வாறான பின்னணியில், உயர்தர ஒருங்கிணைப்பு மையமான அம்பாலாந்தோட்டையிலுள்ள பாடசாலையொன்றில், இன்று நடைபெறும் பாடங்களுக்குப் புறம்பாக நாளை நடைபெறவிருந்த பாடத்தின் 6 வினாத்தாள் பொதிகள் பெட்டியொன்றிலிருந்து கண்டெடுக்கப்பட்டிருந்தன.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a5311e45-2b34-47c1-a854-c6068355a147/26-6a7dfc281c1bc.webp' /></p><p>இன்று நடைபெறவுள்ள இசை, நடனம் மற்றும் விவசாய அறிவியல் ஆகிய பாடங்களுக்கான வினாத்தாள் பொதிகள் அடங்கிய பெட்டியில் இருந்தே, நாளை நடைபெறவிருந்த பௌதிகவியல் முதலாம் வினாத்தாள் அடங்கிய 6 பொதிகள் இவ்வாறு கண்டெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. </p><p>

எவ்வாறாயினும், அந்த வினாத்தாள்கள் பாதுகாப்பாக முத்திரையிடப்பட்டுள்ளதாகவும், இது குறித்து பரீட்சார்த்திகள் தேவையற்ற விதத்தில் அச்சம் கொள்ள வேண்டாம் எனவம் பரீட்சைகள் திணைக்களம் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-13T19:22:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[சூரிய கிரகணம்... கண்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்பதற்கான முக்கிய அறிகுறிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/eclipse-warning-damaged-eyes-1786648261"></link>
            <id>https://news.lankasri.com/article/eclipse-warning-damaged-eyes-1786648261</id>
            <summary type="text">You may have damaged your eyes: சூரிய கிரகணத்தை அடுத்து, உங்கள் கண்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்பதற்கான முக்கிய அறிகுறிகள்.
சூரிய கிரகணத்தின்போது ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>You may have damaged your eyes: சூரிய கிரகணத்தை அடுத்து, உங்கள் கண்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்பதற்கான முக்கிய அறிகுறிகள்.
</p><p>சூரிய கிரகணத்தின்போது சூரியனைப் பார்ப்பதால் ஏற்படும் கண் பாதிப்புக்கான அறிகுறிகள் ஏதேனும் தென்பட்டால், அது குறித்து விழிப்புடன் இருக்குமாறு கண் மருத்துவ நிபுணர்கள் மக்களை எச்சரித்துள்ளனர்.</p><h2>70 பேரின் பார்வைத்திறன்</h2><p>
</p><p>உங்கள் கண்கள் பாதிக்கப்பட்டிருந்தால், மங்கலான பார்வை, பார்வையின் மையப்பகுதியில் தெரியும் மறைவு அல்லது கருப்புப் புள்ளி மற்றும் ஒளிக்கு அதிக உணர்திறன் ஆகியவை இதன் அறிகுறிகளாக இருக்கலாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e637208c-1baf-435f-be3f-a86a1b93f33a/26-6a7e16c855d92.webp' /></p><p> </p><p>1999-இல் பிரித்தானியாவில் காணப்பட்ட முந்தைய முழு சூரிய கிரகணத்திற்குப் பிறகு, சுமார் 70 பேரின் பார்வைத்திறன் பாதிக்கப்பட்டது. அவர்களில் பலர், தங்கள் கண்களுக்குப் பாதிப்பு ஏற்படுகிறது என்பதை உணராமலே, அந்த அற்புதக் காட்சியை ஒரு நிமிடத்திற்கும் குறைவான நேரமே பார்த்திருந்தனர்.</p><p> பாதுகாப்பு இன்றி சூரிய கிரகணத்தை உற்றுநோக்குவது ஆபத்தானது; ஏனெனில், இது கண்ணின் பின்புறத்தில் அமைந்துள்ள விழித்திரையையும் (retina), குறிப்பாகத் தெளிவான மையப் பார்மைக்குக் காரணமான செல்களையும் சேதப்படுத்தக்கூடும். </p><p>சந்திரனால் பகுதியளவு மறைக்கப்பட்டிருந்தாலும், சூரியன் நம்பமுடியாத அளவிற்குப் பிரகாசமாக இருக்கிறது. பொதுவாக, நாம் சூரியனை உற்று நோக்கினால், கண்களைச் சுருக்கிக்கொண்டு சட்டென்று பார்வையை விலக்கிக்கொள்வோம்.</p><p></p><p> </p><p>ஆனால் கிரகணத்தின்போது சூழல் இருட்டாக இருக்கும்போது, ​​நம் கண்கள் சேதமடையும் நிலையிலும் அந்த இயல்புணர்வு செயல்படாமல் போகலாம்.</p><p> சூரியனிலிருந்து வெளிப்படும் பிரகாசமான ஒளி மற்றும் புற ஊதாக் கதிர்கள், "சோலார் ரெட்டினோபதி" (solar retinopathy) எனப்படும் பாதிப்புக்கு வழிவகுக்கக்கூடும்.</p><h2>மற்ற அறிகுறிகள்</h2><p> </p><p>மேலும், விழித்திரையில் வலி உணர்விகள் இல்லாததால், பாதிப்பு ஏற்படும்போது அதை மக்களால் கண்டறிவது கடினமாகிறது; எனவே, அதன் அறிகுறிகள் பல மணிநேரங்களுக்குப் பிறகே தெரியவரும். </p><p>கிரகணத்துக்கு முன்னதாகவே, பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட உண்மையான சூரிய கிரகணக் கண்ணாடிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும், சாதாரண கண்ணாடிகளோ அல்லது பிற சாதனங்களோ ஏற்படக்கூடிய சேதங்களைத் தடுக்கப் போதுமானவை அல்ல என்றும் வல்லுநர்கள் எச்சரித்து வந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4b7faf9c-b8ff-4594-b321-b96f15c95d00/26-6a7e16c90d65e.webp' /></p><p> கவனத்தில் கொள்ள வேண்டிய மற்ற அறிகுறிகள்: கண் வலி, கண் சிவத்தல், கண்களில் எரிச்சல் அல்லது கூச்ச உணர்வு, பார்வையில் திடீர் மாற்றங்கள், ஒளிக்கு அதிக உணர்திறன் உள்ளிட்டவையாகும். </p><p>உங்கள் கண்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக நீங்கள் கருதினால், உடனடியாக மருத்துவ உதவியை நாட வேண்டும். </p><p>புதன்கிழமையன்று பிரித்தானியாவில் நிகழ்ந்தது போன்ற ஒரு பகுதி சூரிய கிரகணத்தின்போது சூரியன் தொடர்ந்து நல்ல பிரகாசத்துடன் இருந்ததால், அதை நேரடியாக உற்றுநோக்க முயன்றவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே இருந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-13T19:08:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Erimalai</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுதுமலை அம்மன் கோவிலுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி: சட்டத்தரணி மணிவண்ணன் குறிப்பிட்ட விடயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/case-filed-sudhumalai-amman-temple-dismissed-1786645361"></link>
            <id>https://tamilwin.com/article/case-filed-sudhumalai-amman-temple-dismissed-1786645361</id>
            <summary type="text">சுதுமலை அம்மன் கோவிலுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தள்ளுபடி
செய்யப்பட்டிருந்தாலும் அதனுடைய வரலாற்று முக்கியத்துவத்தை பாதுகாப்பதற்காக
தொடர்ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>சுதுமலை அம்மன் கோவிலுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தள்ளுபடி
செய்யப்பட்டிருந்தாலும் அதனுடைய வரலாற்று முக்கியத்துவத்தை பாதுகாப்பதற்காக
தொடர்ந்து முன் நிற்பேன் என்று சட்டத்தரணியும் தமிழ் மக்கள் கூட்டணியினுடைய
துணைப் பொதுச் செயலாளருமான விஸ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவித்துள்ளார். </p><p>வடமராட்சியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.</p><p>அவர் மேலும் தெரிவிக்கையில்,&nbsp;சுதுமலை அம்மன் கோவில் என்பது தமிழ் மக்கள் மத்தியிலே மிகவும் பிரபல்யமான
ஒருஆலயமாக இருக்கிறது.</p><p></p><h2>வேலைத்திட்டங்கள்</h2><p>தற்பொழுது அந்த ஆலயத்தினுடைய தர்ம கர்த்தார்கள் அந்த ஆலயத்தை முற்று முழுதாக
இடித்து அதனை அழித்துவிட்டு புதிதாக அதிலே கட்டடங்களை கட்டுவதற்கு
வேலைத்திட்டங்களை செய்து கொண்டிருக்கின்றார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d71e040b-99f0-4171-a31b-3049f85a554d/26-6a7e0efbd55e6.webp' /></p><p>அதன் அடிப்படையிலேயே ஆலயத்தினுடைய பின்பகுதி முற்று முழுதாக இடித்து
அழிக்கப்பட்டுள்ளது.ஆனால் அந்தக் கட்டுமானங்கள் பிரதேச சபையினுடைய எந்த விதமான அனுமதியும்
இல்லாமல் கட்டப்பட்டுக் கொண்டிருந்தது.</p><p>குறிப்பாக விடுதலைப் புலிகள் அமைப்பின் உடைய தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன்
பொதுமக்கள் எல்லோரும் அமர்ந்திருந்து பார்த்த ஆலயத்தினுடைய முன் பகுதி
அதனுடைய கூரைகள் ஏறி இருந்து பார்த்தது எல்லாம் நீங்கள் பத்திரிகைகளில்
பார்த்திருப்பீர்கள்.</p><p></p><h2>வழக்கு தள்ளுபடி</h2><p> தேர் முட்டி போன்றவற்றையும் இடித்தழிக்க
முற்படுகிறார்கள். தீர்மானம் எடுத்திருக்கிறார்கள் என்ற வகையிலே தமிழ்
தேசியத்தை நேசிக்கின்ற தரப்புக்கள் அதனை தடுத்து நிறுத்த வேண்டும் என்று
என்னோடு அணுகினார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/509a266a-4a06-4040-9f5d-7596017f3dc5/26-6a7e0efc9545f.webp' /></p><p>ஆகவே அதன் மூலம் வரலாற்று சிறப்புமிக்க சுதுமலை அம்மன் கோவில் உடைய
முன்பகுதியை காப்பாற்றுகின்ற நோக்கத்தோடும், மேலதிகமாக இடித்து அழிப்பதை
தடுத்து நிறுத்துகின்ற நோக்கத்தோடும் இந்த வழக்கை நாங்கள் தாக்கல்
செய்திருந்தோம். ஆனால் துரதிஷ்டவசமாக இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டு
இருக்கின்றார் எனக் குறிப்பிட்டார்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-13T19:07:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[அனுமதியின்றி காரை எடுத்துச் சென்று விபத்து: 13 வயது சிறுமியை கைது செய்தது கனடா காவல்துறை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/13-year-old-crashes-family-vehicle-after-nanaimo-1786643409"></link>
            <id>https://canadamirror.com/article/13-year-old-crashes-family-vehicle-after-nanaimo-1786643409</id>
            <summary type="text">&amp;nbsp;கனடாவின் நானைமோ நகரில், பெற்றோருக்குத் தெரியாமல் குடும்ப காரை எடுத்துக்கொண்டு, அனுமதிக்கப்பட்ட வேகத்தை விட இருமடங்கிற்கும் அதிகமான வேகத்தில் ஓட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கனடாவின் நானைமோ நகரில், பெற்றோருக்குத் தெரியாமல் குடும்ப காரை எடுத்துக்கொண்டு, அனுமதிக்கப்பட்ட வேகத்தை விட இருமடங்கிற்கும் அதிகமான வேகத்தில் ஓட்டிச் சென்று சாக்கடையில் மோதி விபத்துக்குள்ளாக்கிய 13 வயது சிறுமியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
</p><p>ஜூலை 25 அன்று அதிகாலை 2 மணியளவில் இச்சம்பவம் நடந்துள்ளது. டெர்மினல் அவென்யூ பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த நானைமோ போலீஸ் அதிகாரி ஒருவர், மணிக்கு 50 கி.மீ வேகம் மட்டுமே அனுமதிக்கப்பட்ட பகுதியில், கார் ஒன்று 118 கி.மீ வேகத்தில் அதிவேகமாகச் செல்வதைக் கண்டறிந்தார்.</p><p> 
காரை நிறுத்த அதிகாரி முயன்றபோது, அது அதிவேகத்தில் தப்பிச் சென்றது. இதையடுத்து, காரின் அதிவேகம் மற்றும் ஆபத்தான பயணத்தைக் கருத்தில் கொண்டு, பொதுமக்களின் பாதுகாப்பிற்காக அதனைப் பின்தொடர்ந்து துரத்த வேண்டாம் என காவல்துறை முடிவு செய்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6fd28ae0-8635-4fc9-97f6-a44c936db4e0/26-6a7e03d399d15.webp' /></p><p> </p><p>
அதிவேகம் மற்றும் காரை ஓட்டிய விதம் காரணமாக நாங்கள் அதனைப் பின்தொடர வேண்டாம் என முடிவு செய்தோம் எனபொலிஸார் தெரிவித்தனர்.
சிறிது நேரத்தில், அந்த கார் அருகிலுள்ள சாக்கடையில் மோதி விபத்துக்குள்ளானதாகக் காவல்துறைக்குத் தகவல் கிடைத்தது. </p><p>சம்பவ இடத்திலிருந்து தப்பிக்க முயன்ற சிறுமியைத் தேடிக் கண்டுபிடித்த காவல்துறையினர் அவரைக் கைது செய்தனர்.
காரை ஓட்டியவர் வெறும் 13 வயது சிறுமி என்பதைக் கண்டு அதிகாரிகள் பெரும் அதிர்ச்சியடைந்தனர்.</p><p> காரில் அந்த சிறுமி மட்டுமே இருந்தாரென்றும், அதிர்ஷ்டவசமாக அவருக்கு எவ்வித காயமும் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பொதுச் சொத்துக்கள் எதுவும் சேதமடையவில்லை. சேதமடைந்த கார் மீட்கப்பட்டு இழுத்துச் செல்லப்பட்டது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-13T19:04:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[VAT வரி செலுத்துவோருக்கு முக்கிய அறிவிப்பு ; இறைவரி திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/important-announcement-for-vat-taxpayers-warning-1786647547"></link>
            <id>https://jvpnews.com/article/important-announcement-for-vat-taxpayers-warning-1786647547</id>
            <summary type="text">2026ஆம் ஆண்டு ஜூலை மாதத்திற்கான பெறுமதி சேர் வரியான (VAT) வரியை எதிர்வரும் ஆகஸ்ட் 20ஆம் திகதிக்கு முன்னர் செலுத்துமாறு உள்நாட்டு இறைவரி திணைக்களம் வரி...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026ஆம் ஆண்டு ஜூலை மாதத்திற்கான பெறுமதி சேர் வரியான (VAT) வரியை எதிர்வரும் ஆகஸ்ட் 20ஆம் திகதிக்கு முன்னர் செலுத்துமாறு உள்நாட்டு இறைவரி திணைக்களம் வரி செலுத்துவோருக்கு அறிவித்துள்ளது.</p><p>
</p><p></p><p>குறித்த காலக்கெடுவுக்குள் VAT வரியை செலுத்தத் தவறினால் அல்லது தாமதமாகச் செலுத்தினால், சட்ட விதிகளுக்கு அமைய அபராதம் விதிக்கப்படும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/306c4818-5712-4aa7-b1ae-bca852d6a405/26-6a7e13fd2dea3.webp' /></p><p>அத்துடன், காசோலை, வங்கி வரைவோலை அல்லது கொடுப்பனவு ஆணை மூலம் மேற்கொள்ளப்படும் வரி செலுத்துகை, உரிய காலக்கெடுவுக்குப் பின்னர் திணைக்களத்திற்கு கிடைத்தால், அதுவும் தாமதமான வரி செலுத்துகையாகவே கருதப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இதேவேளை, ஜூலை மாதத்திற்கான VAT வரி அறிக்கையை ஆகஸ்ட் 31ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் உள்நாட்டு இறைவரி திணைக்களம் தெரிவித்துள்ளது.
</p><p>
குறித்த VAT வரி அறிக்கையை இணையவழி முறையில் சமர்ப்பிக்குமாறும் வரி செலுத்துவோர் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.</p><p>

மேலும், தடுத்து வைக்கப்படும் வரியை (Withholding Tax) ஆகஸ்ட் 15ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் செலுத்துமாறும் உள்நாட்டு இறைவரி திணைக்களம் வரி செலுத்துவோரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
</p><p>
எனவே, வரி செலுத்துவோர் உரிய காலக்கெடுவிற்குள் வரிகளை செலுத்தி, தாமதம் காரணமாக ஏற்படக்கூடிய அபராதங்களைத் தவிர்த்துக்கொள்ளுமாறு திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-13T18:59:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[எல் நினோ தாக்கத்தால் இலங்கையில் வறட்சி தீவிரமடையலாம் ; வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/drought-sri-lanka-may-intensify-due-el-nino-impact-1786646693"></link>
            <id>https://jvpnews.com/article/drought-sri-lanka-may-intensify-due-el-nino-impact-1786646693</id>
            <summary type="text">நாட்டில் தற்போது நிலவி வரும் வறட்சியான காலநிலை, ‘எல் நினோ’ காலநிலை மாற்றத்தின் தாக்கத்தால் மேலும் தீவிரமடையக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரி...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டில் தற்போது நிலவி வரும் வறட்சியான காலநிலை, ‘எல் நினோ’ காலநிலை மாற்றத்தின் தாக்கத்தால் மேலும் தீவிரமடையக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.</p><p>
</p><p></p><p>இந்த எல் நினோ தாக்கத்தின் விளைவுகள் 2027ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை நீடிப்பதற்கான வாய்ப்புகள் காணப்படுவதாகவும் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.</p><p>

எதிர்வரும் நவம்பர், டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் சக்திவாய்ந்த எல் நினோ நிலைமை உருவாகுவதற்கான சாத்தியக்கூறுகள் 80 சதவீதத்திற்கும் அதிகமாக காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e6669526-199d-4891-8195-a8dc8e45ee00/26-6a7e10a6b2288.webp' /></p><p>இந்நிலையில், எதிர்வரும் ஒக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலப்பகுதியில் இலங்கையின் பெரும்பாலான பகுதிகளில் மழைவீழ்ச்சி அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
</p><p>
எனினும், 2027ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் மழைவீழ்ச்சி மீண்டும் குறைவடையக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இதனால், எல் நினோ நிலைமை உருவாகும் பட்சத்தில் நாட்டின் நீர்வளம், விவசாயம் மற்றும் அன்றாட நடவடிக்கைகளில் அதன் தாக்கம் ஏற்படக்கூடிய சாத்தியக்கூறுகள் குறித்து அவதானமாக இருக்க வேண்டிய நிலை ஏற்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
காலநிலை நிலைமைகள் தொடர்பில் தொடர்ந்து கண்காணிப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், எதிர்கால காலநிலை மாற்றங்கள் தொடர்பான தகவல்கள் அவ்வப்போது வெளியிடப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-13T18:45:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிவப்பு-கருப்பு நிற உடையில் சீரியல் நடிகை மஹிமா வெளியிட்ட லேட்டஸ்ட் க்ளிக்ஸ்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/serial-actress-mahima-black-red-attire-photoshoot-1786610383"></link>
            <id>https://cineulagam.com/article/serial-actress-mahima-black-red-attire-photoshoot-1786610383</id>
            <summary type="text">நடிகை மஹிமாசன் டிவியில் டிஆர்பியில் நம்பர் 1 சீரியலாக ஒளிபரப்பாகி வருகிறது மூன்று முடிச்சு சீரியல். இந்த தொடருக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது என்ப...</summary>
            <content type="html"><![CDATA[<h2>நடிகை மஹிமா</h2><p>சன் டிவியில் டிஆர்பியில் நம்பர் 1 சீரியலாக ஒளிபரப்பாகி வருகிறது மூன்று முடிச்சு சீரியல். இந்த தொடருக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது என்பதால் அரை மணி நேரத்திற்கு பதிலாக 1 மணி நேரம் தொடரை ஒளிபரப்பி வருகிறார்கள்.</p><p>நாளுக்கு நாள் விறுவிறுப்பான கதைக்களத்துடன் ஒளிபரப்பாகும் இந்த சீரியலில் சில மாதங்களுக்கு முன் வில்லியாக நடித்து வந்தவர் தான் மஹிமா. ரஞ்சித்தின் சகோதரியாக நடித்து வந்தார், ஆனால் அவரது கதாபாத்திரம் முடித்து வைக்கப்பட்டுள்ளது.</p><p>தற்போது நடிகை மஹிமா தனது இன்ஸ்டாவில் கருப்பு-சிவப்பு நிற உடையில் வெளியிட்ட கூல் புகைப்படங்களை காண்போம்.</p><p><br></p>]]></content>
            <updated>2026-08-13T18:30:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[35 ஆண்டுகளாகத் தலைமறைவாக இருந்த குற்றவாளி: அமெரிக்காவில் கைது!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/man-wanted-for-35-years-on-sexual-assault-1786644986"></link>
            <id>https://canadamirror.com/article/man-wanted-for-35-years-on-sexual-assault-1786644986</id>
            <summary type="text">கனடாவின் ஹேமில்டன் நகரக் காவல்துறையால் கடந்த 35 ஆண்டுகளாகத் தேடப்பட்டு வந்த 64 வயது நபர் ஒருவர், அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் குடிவரவு மற்றும...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் ஹேமில்டன் நகரக் காவல்துறையால் கடந்த 35 ஆண்டுகளாகத் தேடப்பட்டு வந்த 64 வயது நபர் ஒருவர், அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>
கைது செய்யப்பட்ட சார்லஸ் பீட்டர் பில்லோன் என்ற 64 வயது நபர், கலிபோர்னியாவின் சாண்டா குரூஸ் பகுதியில் பிடிபட்டதாக ஆகஸ்ட் 4 அன்று குடிவர மற்றும் சுகாதாரப் பிரச்சினைகளை உறுதிப்படுத்தியது. </p><p>
இவர் 1991 ஆம் ஆண்டு முதல் கனடாவில் இருந்து தப்பி ஓடிய தலைமறைவுக் குற்றவாளியாக இருந்துவந்துள்ளார்.
பில்லோன் மீது கனடா நாடு தழுவிய பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/56b0e7b7-a8b5-4a0e-b53c-825e19d77110/26-6a7e09fbebdd2.webp' /></p><p>
</p><p> 2 பாலியல் வன்கொடுமை வழக்குகள், 2 பாலியல் குறுக்கீடு சிறுவர் பாலியல் அத்துமீறல்) வழக்குகள்
ஆகியவை நிலுவையில் உள்ளன. குழந்தைகள் மீதான பாலியல் அத்துமீறல் தவிர, திருட்டுச் சொத்துக்களை வைத்திருந்தமை மற்றும் போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டுகளிலும் இவர் தண்டனை பெற்றவர் என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p>
தற்போது பில்லோன் அமெரிக்க குடிவரவுப் பிரிவின் காவலில் வைக்கப்பட்டுள்ளார்; அவரை கனடாவுக்குத் நாடு கடத்துவது தொடர்பான நடவடிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன.
</p><p>இது குறித்து ஹேமில்டன் காவல்துறையின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், பில்லோனின் வழக்கு தொடர்பாகக் அரசு வழக்கறிஞர் அலுவலகத்துடன் நெருக்கமாகப் பணியாற்றி வருவதாகத் தெரிவித்தார். இருப்பினும், தற்போதைக்கு முறையான ஒப்படைப்பு நடவடிக்கைகள் எதுவும் தொடங்கப்படவில்லை என்றும் காவல்துறை மின்னஞ்சல் மூலம் விளக்கமளித்துள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-13T18:22:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[வத்தளையில் துப்பாக்கிசூடு நடத்திவிட்டு இந்தியாவிற்கு தப்பிச் சென்றவர்களுக்கு நேர்ந்த கதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/two-suspects-involved-in-wattala-shooting-incident-1786641382"></link>
            <id>https://ibctamil.com/article/two-suspects-involved-in-wattala-shooting-incident-1786641382</id>
            <summary type="text">ஜூலை 23 ஆம் திகதி இரவு வத்தளையில் உள்ள ஒரு ஹோட்டலில் நடைபெற்ற பிறந்தநாள் விழாவில் புகுந்து, துப்பாக்கிச் சூடு நடத்தி ஒருவரைக் கொன்றுவிட்டு இந்தியாவுக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜூலை 23 ஆம் திகதி இரவு வத்தளையில் உள்ள ஒரு ஹோட்டலில் நடைபெற்ற பிறந்தநாள் விழாவில் புகுந்து, துப்பாக்கிச் சூடு நடத்தி ஒருவரைக் கொன்றுவிட்டு இந்தியாவுக்குத் தப்பிச் சென்ற இரண்டு சந்தேக நபர்கள் இன்று (13) கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டனர்.

இந்தச் சம்பவத்திற்குப் பிறகு, இருவரும் படகு மூலம் இந்தியாவுக்குத் தப்பிச் சென்றனர்.</p><p>அங்கு, அந்நாட்டின் பாதுகாப்புப் படைகள் இவர்களை கைது செய்து இலங்கைக்கு நாடு கடத்தின. வத்தளையைச் சேர்ந்த இருவரில் ஒருவர் 30 வயதுடையவர், மற்றவர் 34 வயதுடையவர்.</p><h2>&nbsp; கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது</h2><p> </p><p>

அவர்கள் சென்னையிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அனுப்பப்பட்டிருந்தனர். இதுகுறித்து இந்தியப் பாதுகாப்புப் படைகள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்திருந்தன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/df72ee03-6fa9-46d6-87d8-d3642128d2bc/26-6a7e0b130bfd5.webp' /></p><p> அதன்படி, இரண்டு சந்தேக நபர்களை ஏற்றிச் சென்ற விமானம் கட்டுநாயக்க வந்தடைந்ததும், அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
</p><p>
குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகளிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்ட பின்னர், மேலதிக விசாரணைக்காக இரு சந்தேக நபர்களையும் பலத்த பாதுகாப்புடன் மேற்கு மாகாண வடக்கு குற்றப் பிரிவுக்கு அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-13T18:21:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[போலந்தில் கைதான ரஷ்யர்... பிரதமர் டஸ்க் வெளியிட்ட பகீர் பின்னணி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/poland-says-arrested-russian-1786644676"></link>
            <id>https://news.lankasri.com/article/poland-says-arrested-russian-1786644676</id>
            <summary type="text">Russian hired to kill Ukrainian: உக்ரேனிய அமெரிக்கக் குடிமகனைக் கொல்லப் பணியமர்த்தப்பட்ட ரஷ்யரைக் கைது செய்துள்ளதாக போலந்து தெரிவித்துள்ளது. 

வார்ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>Russian hired to kill Ukrainian: உக்ரேனிய அமெரிக்கக் குடிமகனைக் கொல்லப் பணியமர்த்தப்பட்ட ரஷ்யரைக் கைது செய்துள்ளதாக போலந்து தெரிவித்துள்ளது. </p><p>

வார்சாவில் உக்ரேனிய-அமெரிக்கக் குடிமகன் ஒருவரைக் கொல்ல மாஸ்கோவால் பணியமர்த்தப்பட்ட ரஷ்ய நபர் ஒருவரை போலந்து கைது செய்துள்ளது.</p><h2>புடின் ஆட்சிக்கு</h2><p>
குறித்த தகவலை போலந்து பிரதமர் டொனால்ட் டஸ்க் வியாழக்கிழமை அன்று வெளியிட்டுள்ளார். மேலும், புடின் ஆட்சிக்கு இடையூறாக இருந்த ஒருவரைக் கொல்வதற்காகப் பணியமர்த்தப்பட்ட அந்த ரஷ்யர் ஆகஸ்ட் 7-ஆம் திகதி கைது செய்யப்பட்டார் என்று டஸ்க் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c97acd07-a1ab-4af5-9c82-af39cb2512b8/26-6a7e08c65f5ff.webp' /></p><p> </p><p>இந்த நிலையில், மேற்கு நாடுகள் ரஷ்ய எதிர்ப்புப் பீதியைத் தூண்டிவிடுவதாகக் கூறி, ஐரோப்பிய சக்திகளின் தாக்குதல் குற்றச்சாட்டுகளை ரஷ்யா தொடர்ந்து நிராகரித்து வருகிறது. </p><p>இதனிடையே, எங்கள் பாதுகாப்புப் பிரிவினரின் மிகச் சிறந்த நடவடிக்கைக்கு நன்றி... ரஷ்ய உளவுத்துறையால் பணியமர்த்தப்பட்ட ரஷ்யக் குடிமகன் ஒருவரை நாங்கள் கைது செய்தோம் என்று டஸ்க் கூறியுள்ளார்.</p><p></p><p> </p><p>உக்ரைன் மற்றும் அமெரிக்கக் குடியுரிமைக் கொண்டிருந்த ஒருவரைக் கொல்வதற்காக அந்த ரஷ்யர் பணியமர்த்தப்பட்டிருந்தார் என்று டஸ்க் கூறினார்; எனினும், அந்த நபர் குறித்த கூடுதல் விவரங்கள் எதையும் அவர் தெரிவிக்கவில்லை.</p><h2>தடுக்க முடிந்தது</h2><p> </p><p>கடைசி நிமிடத்தில், உள்நாட்டுப் பாதுகாப்பு முகமை மற்றும் காவல்துறையின் நடவடிக்கையால், இந்தப் படுகொலையை, தாக்குதலை எங்களால் தடுக்க முடிந்தது என்று டஸ்க் மேலும் கூறியுள்ளார். </p><p>ஜூன் மாதத்தில், ஜனாதிபதி விளாடிமிர் புடினை விமர்சித்த ரஷ்யக் கலைஞர் ஒருவர் கிழக்கு போலந்தின் பியலா போடலாஸ்கா (Biala Podlaska) நகரில் சுட்டுக் கொல்லப்பட்டதாக அரசுத் தரப்பு சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3dfb251d-9e55-41c0-9044-1efeed01c92d/26-6a7e08c71552a.webp' /></p><p> </p><p>அண்டை நாடான உக்ரைனுக்கு இராணுவ மற்றும் இதரப் பொருட்களை வழங்கும் மையமாகத் தங்களது பங்கு விளங்குவதால், ரஷ்ய உளவு மற்றும் தாக்குதல்களுக்கு தாங்கள் இலக்காகி இருப்பதாக போலந்து கூறுகிறது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-13T18:09:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் முக்கிய சிறுவர் சுரண்டல் குற்றச்சாட்டில் 46 வயது நபர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/historic-child-exploitation-assault-charges-1786644062"></link>
            <id>https://canadamirror.com/article/historic-child-exploitation-assault-charges-1786644062</id>
            <summary type="text">கனடாவின் ஒன்டாரியோ மாகாணம் காக்ரேன் பகுதியில், நெருங்கிய துணைக்கு எதிரான வன்முறை தொடர்பாகத் தொடங்கப்பட்ட விசாரணை, பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சிறுவர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் ஒன்டாரியோ மாகாணம் காக்ரேன் பகுதியில், நெருங்கிய துணைக்கு எதிரான வன்முறை தொடர்பாகத் தொடங்கப்பட்ட விசாரணை, பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சிறுவர் சுரண்டல் மற்றும் பாலியல் குற்ற வழக்ககாக உருவெடுத்துள்ளது. </p><p>
இது தொடர்பாக 46 வயது நபரைக் காவல் துறையினர் கைது செய்து பல பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கடந்த மே 17 அன்று, முன்னாள் துணைவியார் மீது தொடர்ச்சியாக நடத்தப்பட்ட தாக்குதல்கள் குறித்து ஒன்டாரியோ மாகாணக் காவல் துறை விசாரணையைத் தொடங்கியது.</p><p>
 இந்த விசாரணையில், பாதிக்கப்பட்டவர் சிறுமியாக இருந்த காலம் முதலே பல ஆண்டுகளாக இந்த அத்துமீறல்களும் தாக்குதல்களும் தொடர்ந்து நடைபெற்று வந்தது அம்பலமானது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fc1fb474-a874-4498-b32c-adf2149c61b6/26-6a7e065fec34c.webp' /></p><p>
</p><p>கைது செய்யப்பட்ட நபர் மீது பின்வரும் பலத்த குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன:
</p><p>பாலியல் சுரண்டல், கணினி மூலம் 18 வயதுக்குட்பட்ட சிறுமியை வலைவீசி ஈர்த்தல், சட்டவிரோதமாகச் சிறைப்பிடித்தல், குற்றவியல் துன்புறுத்தல் மற்றும் உளவு பார்த்தல், பாலியல் குறுக்கீடு மற்றும் குடும்பத் தாக்குதல், கடுமையான தாக்குதல் மற்றும் 3 பிரிவுகளின் கீழ் பாலியல் வன்கொடுமை ஆகிய குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.
</p><p>பிணை விசாரணைக்குப் பிறகு, காக்ரேனில் உள்ள ஒன்டாரியோ நீதிமன்றத்தில் ஆஜராகும் நிபந்தனையுடன் அந்த நபர் தற்காலிகமாக விடுவிக்கப்பட்டார்.
விசாரணை தீவிரமடைந்த நிலையில், பழைய பாலியல் அத்துமீறல்கள் தொடர்பான கூடுதல் ஆதாரங்களைக் காவல்துறையினர் சேகரித்தனர். </p><p>அதன் தொடர்ச்சியாக, டிஜிட்டல் சேமிப்பக சாதனம் ஒன்றைக் கைப்பற்றி, பொலிஸாரின் டிஜிட்டல் தடயவியல் குழு பகுப்பாய்வு செய்தது.
இதன் அடிப்படையில், ஜூலை 28 அன்று அதே நபர் மீது குழந்தை ஆபாசப் படங்களை உருவாக்குதல், வைத்திருத்தல் மற்றும் வெளியிடுதல் ஆகிய கூடுதல் குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
</p><p>பாதிக்கப்பட்டவர்கள் உதவி மற்றும் வழிகாட்டுதலுக்கு காக்ரேன் மாவட்டப் பாதிக்கப்பட்டோர் சேவை மையத்தின் 24 மணி நேர அவசர உதவி எண்ணை (1-877-264-4208) தொடர்பு கொள்ளலாம் என்றும், அவசர நிலைகளில் உடனடியாக 911 என்ற எண்ணை அழைக்கலாம் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-13T18:06:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[செயற்கை உணவுகளால் காத்திருக்கும் ஆபத்து ; தீவிரமடையும் குடல் நோய் குறித்து மருத்துவர்கள் எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/danger-waiting-artificial-foods-intestinal-disease-1786644359"></link>
            <id>https://jvpnews.com/article/danger-waiting-artificial-foods-intestinal-disease-1786644359</id>
            <summary type="text">இளைஞர்கள் மத்தியில் குடல் தொடர்பான நோய்கள் அதிகரித்து வருவதாக இரைப்பை, குடல் மற்றும் கல்லீரல் மருத்துவ நிபுணர் மருத்துவர் சுபுன் குலதுங்க தெரிவித்துள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இளைஞர்கள் மத்தியில் குடல் தொடர்பான நோய்கள் அதிகரித்து வருவதாக இரைப்பை, குடல் மற்றும் கல்லீரல் மருத்துவ நிபுணர் மருத்துவர் சுபுன் குலதுங்க தெரிவித்துள்ளார்.</p><p></p><p>

மாறிவரும் வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கவழக்கங்களுடன், செயற்கை மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை அதிகளவில் உட்கொள்வதும் இவ்வாறான நோய்கள் அதிகரிப்பதற்கு முக்கிய காரணிகளாக இருக்கலாம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/62314e2f-ba06-4988-97e3-7502bda70044/26-6a7e078916047.webp' /></p><p>சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
</p><p>
இன்றைய இளைஞர்கள் மத்தியில் அதிகரித்து வரும் துரித உணவு மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளின் பயன்பாடு குடல் ஆரோக்கியத்தில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என மருத்துவர் தெரிவித்துள்ளார்.
</p><p>
அத்துடன், மன அழுத்தம் மற்றும் பதற்றம் போன்ற உளவியல் காரணிகளும் குடல் ஆரோக்கியத்தில் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்துவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
குறிப்பாக, மன அழுத்தம் மற்றும் பதற்றம் காரணமாக எரிச்சலூட்டும் குடல் நோய்க்குறி (IBS) ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கக்கூடும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p>

எனவே, இளைஞர்கள் தங்களது உணவுப் பழக்கவழக்கங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என மருத்துவர் அறிவுறுத்தியுள்ளார்.</p><p>

காய்கறிகள், பழங்கள், கீரைகள் மற்றும் தானியங்கள் உள்ளிட்ட இயற்கை உணவுகளை அதிகளவில் உணவில் சேர்த்துக்கொள்வதுடன், செயற்கை மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளின் பயன்பாட்டை முடிந்தவரை குறைத்துக்கொள்ளுமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
</p><p>
மேலும், ஆரோக்கியமான உணவுப் பழக்கம் மற்றும் சீரான வாழ்க்கை முறையைப் பின்பற்றுவதன் மூலம் குடல் ஆரோக்கியத்தைப் பாதுகாத்துக்கொள்ள முடியும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-13T18:06:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் ஈ-பைக் பயன்பாடு அதிகரிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/0-children-died-as-a-result-of-e-scooter-incidents-1786642931"></link>
            <id>https://canadamirror.com/article/0-children-died-as-a-result-of-e-scooter-incidents-1786642931</id>
            <summary type="text">&amp;nbsp;மின்சார ஸ்கூட்டர் மற்றும் மின்சார பைக் பயன்பாடு கனடாவில் வேகமாக அதிகரித்து வரும் நிலையில், அவற்றுடன் தொடர்புடைய விபத்துகள், உயிரிழப்புகள் மற்றும...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;மின்சார ஸ்கூட்டர் மற்றும் மின்சார பைக் பயன்பாடு கனடாவில் வேகமாக அதிகரித்து வரும் நிலையில், அவற்றுடன் தொடர்புடைய விபத்துகள், உயிரிழப்புகள் மற்றும் போக்குவரத்து விதிமீறல்களும் கணிசமாக உயர்ந்துள்ளது தீவிர கவலையை ஏற்படுத்தியுள்ளது.
</p><p>ஹாலிஃபாக்ஸ் நகரின் மையப்பகுதியில் ஈ-ஸ்கூட்டரை வாடகைக்கு எடுத்துப் பயன்படுத்தும் கிறிஸ் மில்லிகன் என்பவர் கூறுகையில், "வெயில் காலத்தில் நடப்பதை விட ஈ-ஸ்கூட்டரில் செல்வது மிகவும் சௌகரியமாகவும், குறைந்த செலவிலுமே அமைகிறது" என்று தெரிவித்தார்.
</p><p>இருப்பினும், இந்த வசதிக்கு மத்தியில் ஆபத்துகளும் அதிகரித்து வருகின்றன. கனடிய குழந்தை மருத்துவ சங்கம் வெளியிட்டுள்ள சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, 2025 ஆம் ஆண்டில் ஈ-ஸ்கூட்டர் விபத்துகளால் 57 பேர் படுகாயமடைந்தனர். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/50087578-1f19-4015-b3f0-715018f71609/26-6a7e01f5402f4.webp' /></p><p>
இதில் 18 வயதுக்குட்பட்ட 10 சிறுவர்கள் உயிரிழந்தனர் என்பது அதிர்ச்சியளிக்கும் தகவலாகும். </p><p>மேலும், கனடிய சுகாதார தகவல் நிறுவனத்தின் தரவுகளின்படி, 2023 முதல் 2024 வரையிலான காலகட்டத்தில் 498 பேர் ஈ-ஸ்கூட்டர் விபத்துகளால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
</p><p>விபத்துகளைக் கட்டுப்படுத்த கனடாவின் பல்வேறு நகரங்கள் தீவிர நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளன:
டொராண்டோ காவல் துறை நடத்திய இரண்டு வார போக்குவரத்து பாதுகாப்பு பிரச்சாரத்திற்கு முன்பாகவே, ஈ-ஸ்கூட்டர் மற்றும் ஈ-பைக் விதிமீறல்களுக்காக 447 அபராத செல்லான்கள் மற்றும் எச்சரிக்கைகளை வழங்கியுள்ளது.</p><p>
வரும் இலையுதிர் காலம் (Fall) முதல் 14 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் ஈ-பைக் ஓட்டுவதற்குத் தடை விதிக்கப்படுவதாக நோவா ஸ்கோஷியா மாகாணம் அறிவித்துள்ளது. 2022 ஆம் ஆண்டிலேயே ஈ-ஸ்கூட்டர்களுக்கு இந்த வயதுக் கட்டுப்பாடு அமல்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
</p><p>இது குறித்து நோவா ஸ்கோஷியா பொதுப்பணித்துறை அமைச்சர் ஃப்ரெட் டில்லி கூறுகையில், "பாரம்பரிய மிதிவண்டிகளை விட இவை மணிக்கு 30 முதல் 32 கி.மீ அல்லது அதற்கு மேற்பட்ட வேகத்தில் செல்லக்கூடியவை. எனவே இவற்றைக் கையாள கூடுதல் முதிர்ச்சி தேவைப்படுகிறது" என்றார்.</p><p>
14 வயதுக் கட்டுப்பாட்டுக்கு ஆதரவு தெரிவித்த கிறிஸ் மில்லிகன், "எனக்கும் அந்த வயதில் குழந்தைகள் உள்ளனர்; 14 வயது என்பது சரியான எல்லைதான்" என்றார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-13T17:51:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்கத் தூதுவரை வெளியேற்றக் கோரி கனடாவில் 70,000 பேர் கையெழுத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/canada-sign-petition-expulsion-of-us-ambassador-1786642349"></link>
            <id>https://tamilwin.com/article/canada-sign-petition-expulsion-of-us-ambassador-1786642349</id>
            <summary type="text">கனடாவுக்கான அமெரிக்கத் தூதுவர் பீட் ஹோக்ஸ்ட்ராவை தூதுவர் பதவியிலிருந்து நீக்கி
நாட்டிலிருந்து வெளியேற்ற வேண்டும் என வலியுறுத்தி 70,000-க்கும் மேற்பட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவுக்கான அமெரிக்கத் தூதுவர் பீட் ஹோக்ஸ்ட்ராவை தூதுவர் பதவியிலிருந்து நீக்கி
நாட்டிலிருந்து வெளியேற்ற வேண்டும் என வலியுறுத்தி 70,000-க்கும் மேற்பட்ட
கனடா குடிமக்கள் இணையவழி மனுவில் கையெழுத்திட்டுள்ளனர்.</p><p>கனடாவின் உள்நாட்டு அரசியல் விவகாரங்களில் தலையிடுவதாகக் கூறி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>கூடுதல் வரி</h2><p>

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகம் கனடாவை அமெரிக்காவின் '51-வது
மாநிலமாக' இணைப்பது குறித்துப் பேசிய கருத்துகளைத் தூதுவர் ஹோக்ஸ்ட்ரா
நியாயப்படுத்திப் பேசியதே இந்த எதிர்ப்பிற்குக் முக்கியக் காரணம் எனக்
கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ca377534-424e-4067-9052-6fb6b7bb30ab/26-6a7e020f17b6d.webp' /></p><p>

கனடாப் பொருட்களுக்கு அமெரிக்கா 50% கூடுதல் வரி விதிக்கத் திட்டமிட்டுள்ளதால்
இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தகப் போர் தீவிரமடைந்துள்ள சூழலில், இந்த மனு
விரைவில் கனடா நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-13T17:51:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[தவணையில் வீடு கட்டித் தருவதாகக் கூறி கோடிக்கணக்கில் மோசடி ; பொலிஸாரிடம் சிக்கிய சந்தேகநபர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/fraud-crores-pretext-building-house-installments-1786643475"></link>
            <id>https://jvpnews.com/article/fraud-crores-pretext-building-house-installments-1786643475</id>
            <summary type="text">தவணை முறையில் வீடுகளை நிர்மாணித்துத் தருவதாக சமூக ஊடகங்களில் விளம்பரங்களை வெளியிட்டு, பொதுமக்களிடம் இருந்து கோடிக்கணக்கான ரூபாய் பணத்தை மோசடி செய்ததாக...</summary>
            <content type="html"><![CDATA[<p>தவணை முறையில் வீடுகளை நிர்மாணித்துத் தருவதாக சமூக ஊடகங்களில் விளம்பரங்களை வெளியிட்டு, பொதுமக்களிடம் இருந்து கோடிக்கணக்கான ரூபாய் பணத்தை மோசடி செய்ததாகக் கூறப்படும் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>
</p><p></p><p>இரண்டு நிறுவனங்களை நடத்தி வந்ததாகக் கூறப்படும் குறித்த சந்தேகநபர், இலகுவான தவணை முறையில் வீடுகளை நிர்மாணித்துத் தருவதாகக் குறிப்பிட்டு, முகநூல் உள்ளிட்ட பல்வேறு சமூக ஊடகங்களில் விளம்பரங்களை வெளியிட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6efd09eb-7a35-41f3-ae9d-471e4a02fd38/26-6a7e0414685a7.webp' /></p><p>இந்த விளம்பரங்களை நம்பிய பலர், வீடுகளை நிர்மாணிப்பதற்காக சந்தேகநபரின் நிறுவனங்களுக்கு பணம் செலுத்தியுள்ளனர்.
</p><p>
எனினும், பணத்தைப் பெற்றுக்கொண்ட பின்னர் வாக்குறுதியளித்தபடி வீடுகளை நிர்மாணித்துக் கொடுக்காமல், பொதுமக்களிடம் இருந்து கோடிக்கணக்கான ரூபாய் பணத்தை மோசடி செய்துள்ளதாக சந்தேகநபர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.</p><p>

இதனையடுத்து, பாதிக்கப்பட்டவர்கள் வழங்கிய முறைப்பாடுகளின் அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.</p><p>

விசாரணைகளின் அடிப்படையில், குறித்த சந்தேகநபர் மிரிஹான சிறப்பு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
சந்தேகநபரால் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் இரண்டு நிறுவனங்கள் மற்றும் அவற்றின் ஊடாக இடம்பெற்றதாகக் கூறப்படும் பணப் பரிமாற்றங்கள் தொடர்பிலும் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p>

மேலும், இந்த மோசடியால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பிலும், மோசடி செய்யப்பட்டதாகக் கூறப்படும் மொத்த பணத் தொகை தொடர்பிலும் விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-13T17:51:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[Fat Reducing Foods: கெட்ட கொழுப்பை அகற்ற உதவும் 5 எளிய உணவுகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/5-foods-which-reduce-cholesterol-1786619528"></link>
            <id>https://news.lankasri.com/article/5-foods-which-reduce-cholesterol-1786619528</id>
            <summary type="text">Fat Reducing Foods: நமது உடலில் கொலஸ்ட்ரால் எனப்படும் கொழுப்பானது இரண்டு விதமாக இருக்கிறது. நல்ல கொழுப்பு (HDL High Density Lipoprotein) மற்றும் கெட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>Fat Reducing Foods: நமது உடலில் கொலஸ்ட்ரால் எனப்படும் கொழுப்பானது இரண்டு விதமாக இருக்கிறது. நல்ல கொழுப்பு (HDL High Density Lipoprotein) மற்றும் கெட்ட கொழுப்பு (LDL – டow Density Lipoproteins) என்று இரண்டு வகையில் அவை செயல்படுகிறது.
</p><p>
அந்த வகையில், நமது உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அளவானது அதிகரிக்கும் பொழுது இரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு அவை ரத்த ஓட்டம் தடைப்பட்டு ஹார்ட் அட்டாக் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. </p><p>

ஆனால், நல்ல கொழுப்பானது ரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பினை அகற்ற உதவுகிறது. அப்படியாக, நாம் கெட்ட கொழுப்பை நம்முடைய உடலில் இருந்து அகற்றி வாழ்வதற்கு எடுத்துக்கொள்ள வேண்டிய எளிய உணவு முறைகளை பற்றி பார்ப்போம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0300a33f-d852-4942-bc20-eea82303413d/26-6a7da68ae262d.webp' /></p><p>&nbsp;</p><p>
</p><h3>1. பூண்டு:
</h3><p> பூண்டு கெட்ட கொழுப்பை குறைப்பது மிகப்பெரிய அளவில் பங்கு வகிக்கிறது. தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான உணவுகளில் பூண்டு சேர்க்கப்படுகிறது. பூண்டில் உள்ள அல்லிசன் என்ற பொருள் இதயம் சிறப்பாக செயல்பட உதவுகிறது.
</p><h3>2. தக்காளி:
</h3><p>தக்காளியில் அதிக அளவில் லைகோபின் உள்ளது. இது வளர்சிதை மாற்றத்தில் பெரிதும் உதவுகிறது. குறிப்பாக தக்காளி உடலின் இடையே குறைக்கவும் ரத்தத்தில் கெட்ட கொலஸ்ட்ராலின் அளவை குறைக்கவும் உதவுகிறது.
</p><h3>3. இஞ்சி: </h3><p>
நம்முடைய தமிழ்நாட்டின் உணவுகளில் அதிகம் சேர்க்கக்கூடிய முக்கியமான இன்னொரு பொருட்களில் இஞ்சியும் ஒன்று. இஞ்சியில் உள்ள ஆன்ட்டி ஆக்ஸிடண்ட்ஸ் கெட்ட கொழுப்பினை கரைக்க பெரிதும் உதவுகிறது. சமையலில் தினமும் நாம் சிறிது அளவு இஞ்சி சேர்த்துக் கொள்ளும் பொழுது நம் உடலில் இருக்கக்கூடிய கெட்ட கொழுப்பினை அவை முற்றிலும் குறைக்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ceb2bf99-3e5b-412c-9b38-81725de75c54/26-6a7da68a2f910.webp' /></p><p></p><p>
</p><h3>4. சீரகம்:
</h3><p> தமிழ்நாட்டு சமையலறை பட்டியல் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் இந்த சீரகம் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. இந்த சீரகம் நம்முடைய உடலில் சேரக்கூடிய கெட்ட கொழுப்பினை வெகுவாக குறைத்து உடல் எடையை பராமரிப்பதற்கு உதவுகிறது. மேலும், சீரகத்தை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து குடிக்கின்ற பொழுது நல்ல பலன் வந்து சேரும்.
</p><h3>5. ஆளி விதை:
</h3><p> ஆளி விதைகளில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நார்ச்சத்து ஆகியவை அதிக அளவில் இருக்கிறது. இவற்றை நாம் அவ்வப்பொழுது எடுத்துக் கொள்கின்ற பொழுது கெட்ட கொழுப்பின் உடைய 

அளவு குறைய துவங்கி நல்ல கொழுப்பின் அளவு அதிகரிக்கிறது. இதன் விலையும் மிகவும் குறைவுதான்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-13T17:45:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஷகீலா செத்தா கூட யாரும் வரமாட்டாங்கனு சொல்லிட்டாங்க😭- Shakeela Emotional Interview]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/actress-shakeela-emotional-interview-1786639957"></link>
            <id>https://cineulagam.com/article/actress-shakeela-emotional-interview-1786639957</id>
            <summary type="text">நடிகை ஷகீலாபடங்களில் நடிப்பதை விடுத்து சின்னத்திரையில் அதிகம் தலைக்காட்டி வருபவர் தான் நடிகை ஷகீலா.
சொந்தமாக யூடியூப் சேனல் வைத்தும் நிறைய வீடியோக்கள...</summary>
            <content type="html"><![CDATA[<h2>நடிகை ஷகீலா</h2><p>படங்களில் நடிப்பதை விடுத்து சின்னத்திரையில் அதிகம் தலைக்காட்டி வருபவர் தான் நடிகை ஷகீலா.
</p><p>சொந்தமாக யூடியூப் சேனல் வைத்தும் நிறைய வீடியோக்கள் வெளியிட்ட வண்ணம் உள்ளார். இந்த நிலையில் அவருக்கு சமீபத்தில் கழுத்தில் அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளது. </p><p>கழுத்தின் முக்கிய நரம்புகளில் பாதிப்பு ஏற்பட்டு அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டதாக ஷகீலா அண்மையில் கூறியிருந்தார்.</p><p>ஆபரேஷன் செய்யப்பட்ட சில நாளில் ஷகிலா என்ன நடந்தது என்ற விஷயத்தை நம்முடன் ஷேர் செய்துள்ளார். அதனை இப்போது காண்போம்,</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/2bG8ylHx-nk" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-08-13T17:30:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[வத்தளை துப்பாக்கிச் சூடு தொடர்பில் புதிய திருப்பம் ; இந்தியாவில் கைது செய்யப்பட்ட இருவர் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டனர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/new-twist-in-wattala-shooting-case-brought-country-1786642144"></link>
            <id>https://jvpnews.com/article/new-twist-in-wattala-shooting-case-brought-country-1786642144</id>
            <summary type="text">கொழும்பு வத்தளை, கதிரான பாலத்திற்கு அருகில் கடந்த மாதம் 23ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு வத்தளை, கதிரான பாலத்திற்கு அருகில் கடந்த மாதம் 23ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் இரண்டு இலங்கையர்கள் இந்தியாவில் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்கள் மேலதிக விசாரணைகளுக்காக இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.</p><p>
</p><p></p><p>இந்திய பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்ட குறித்த இருவரும், அந்நாட்டு அதிகாரிகளின் நடவடிக்கைகளுக்குப் பின்னர் இலங்கை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/73c87f75-970f-4393-b04d-0e29dc24f1dc/26-6a7dfee20d2b2.webp' /></p><p>இதனையடுத்து, இருவரும் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளதுடன், துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் அவர்களிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
வத்தளை, கதிரான பாலத்திற்கு அருகில் கடந்த மாதம் 23ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் இலங்கை பொலிஸார் முன்னெடுத்து வரும் விசாரணைகளின் ஒரு பகுதியாகவே குறித்த இருவரும் விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
</p><p>
இந்நிலையில், இந்தியாவில் கைது செய்யப்பட்டு தற்போது இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ள இருவரிடமும் சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்கள் பெறப்படவுள்ளதாகவும், அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமா என்பது விசாரணைகளின் பின்னர் தீர்மானிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-13T17:29:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிளைமேக்ஸ் எட்டிய சிந்து பைரவி, புதிய தொடரின் நேரம் மாற்றம்... முழு விவரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/vijay-tv-serial-new-time-change-alert-1786637175"></link>
            <id>https://cineulagam.com/article/vijay-tv-serial-new-time-change-alert-1786637175</id>
            <summary type="text">சிந்துபைரவிவிஜய் தொலைக்காட்சியில் கடந்த வருடம் ஜனவரி மாதம் தொடங்கப்பட்ட சீரியல் சிந்துபைரவி. இதில் பவித்ரா, திரவியம், ஆர்த்தி சுபாஷ் மற்றும் ஆனந்த கிர...</summary>
            <content type="html"><![CDATA[<h2>சிந்துபைரவி</h2><p>விஜய் தொலைக்காட்சியில் கடந்த வருடம் ஜனவரி மாதம் தொடங்கப்பட்ட சீரியல் சிந்துபைரவி.</p><p> இதில் பவித்ரா, திரவியம், ஆர்த்தி சுபாஷ் மற்றும் ஆனந்த கிருஷ்ணன் ஆகியோர் முக்கிய ஜோடிகளாக நடித்தார்கள்.
A Tele Factory தயாரித்துள்ள இந்த சீரியல் மலையாளத்தில் சிந்துபைரவி என்ற பெயரில் டப் செய்யப்பட்டு வெளியானது.
</p><p>வெற்றிகரமாக ஓடிய இந்த சீரியல் தற்போது கிளைமேக்ஸ் எட்டிவிட்டது. விருப்பமே இல்லாமல் கல்யாண பந்தத்தில் இணைந்த இரண்டு ஜோடிகள் பல போராட்டங்களுக்கு பிறகு இணைவதாக காட்டப்பட்டு இந்த தொடர் முடிவுக்கு வந்துவிட்டது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7383614e-9d3a-4c23-a4d8-6e89ba769d79/26-6a7ded6b2dec7.webp' /></p><h2>மாற்றம்</h2><p>
சிந்துபைரவி சீரியல் விஜய் டிவியில் மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகி வந்தது. </p><p>தற்போது சீரியல் முடிவுக்கு வந்த நிலையில் மாலை 6 மணிக்கு எந்த தொடர் ஒளிபரப்பாகும் என்று ரசிகர்கள் யோசித்து வந்தார்கள், இப்போது தகவல் வந்துள்ளது. </p><p>அதாவது சமீபத்தில் புதியதாக தொடங்கப்பட்ட காதல் காதல் காதல் என்ற சீரியல் தான் இனி மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளதாம்.</p><p><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/p/Db-urihz892/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/p/Db-urihz892/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/p/Db-urihz892/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by Tamil Tellywood (@tamiltellywood)</a></p></div></blockquote> <script async src="//www.instagram.com/embed.js"></script></p>]]></content>
            <updated>2026-08-13T17:25:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rusath</name>
            </author>
            <title type="text"><![CDATA[மட்டக்களப்பில் நடைபெற்ற கடற்றொழிலாளர்களின் ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/fisheries-coordination-committee-meeting-1786640449"></link>
            <id>https://tamilwin.com/article/fisheries-coordination-committee-meeting-1786640449</id>
            <summary type="text">மட்டக்களப்பு மாவட்ட கடற்றொழிலாளர்களின் ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் கடற்றொழில், நீரியல் வள அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் இடம்பெற்றது.

ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>மட்டக்களப்பு மாவட்ட கடற்றொழிலாளர்களின் ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் கடற்றொழில், நீரியல் வள அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் இடம்பெற்றது.</p><p>

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜின் ஏற்பாட்டில், மாவட்ட பழைய செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று (13.08.2026) இந்த கூட்டம் நடைபெற்றது.</p><h2>&nbsp;ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம்</h2><p>
</p><p>
மாவட்ட கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் இதன்போது ஆராயப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e9432c1c-8e38-44c6-b2a3-3d226b24cba1/26-6a7dfd43b2633.webp' /></p><p>
</p><p>
குறிப்பாக, சட்டவிரோத கடற்றொழில், காலநிலை மாற்றத்தால் கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுதல், மானிய முறையில் எரிபொருள் வழங்குதல் மற்றும் கடற்றொழில் வளங்களை ஏற்றுமதி செய்தல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன.
</p><p>
இதன்போது மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், திணைக்களத் தலைவர்கள், பிரதேச செயலாளர்கள், கடற்றொழில் திணைக்கள அதிகாரிகள் மற்றும் மாவட்ட கடற்றொழில் சங்கங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.</p>]]></content>
            <updated>2026-08-13T17:22:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[துணை மருத்துவ சேவையின் எட்டு கற்கை நெறிகளுக்கு விண்ணப்பம் கோரல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/invited-for-8-courses-in-the-paramedical-service-1786638961"></link>
            <id>https://ibctamil.com/article/invited-for-8-courses-in-the-paramedical-service-1786638961</id>
            <summary type="text">நோயாளி பராமரிப்பின் தரத்தை மேம்படுத்துவதற்காக, துணை மருத்துவ சேவையின் (Paramedical) 8 தொழிற்துறைகளுக்கான பயிற்சிப் பாடநெறிகளுக்கு மாணவர்களை இணைத்துக் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நோயாளி பராமரிப்பின் தரத்தை மேம்படுத்துவதற்காக, துணை மருத்துவ சேவையின் (Paramedical) 8 தொழிற்துறைகளுக்கான பயிற்சிப் பாடநெறிகளுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
</p><p>
துணை மருத்துவ சேவையின் (Paramedical) புதிய பயிற்சிப் பாடநெறிகளுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்காக விண்ணப்பங்களைக் கோருவதற்கு சுகாதார மற்றும் ஊடக அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.</p><h2>08 தொழிற்துறை பிரிவுகளுக்கான பயிற்சிப் பாடநெறி</h2><p>
</p><p>
அதற்கமைய, துணை மருத்துவ சேவையின் கீழ்வரும் 08 தொழிற்துறை பிரிவுகளுக்கான பயிற்சிப் பாடநெறிகளுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்ள விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன:</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/92817a5e-e93c-470a-aec6-c0b71eb8cfc7/26-6a7df770d94dc.webp' /></p><p>

பல் தொழில்நுட்பவியலாளர் (Dental Technician)

பொது சுகாதார பரிசோதகர் (Public Health Inspector - PHI)

செயற்கை உறுப்பு மற்றும் பொருத்துறுப்பு நிபுணர் (Prosthetist and Orthotist)

சுகாதார பூச்சியியல் அதிகாரி (Health Entomology Officer)

பாடசாலை பல் சிகிச்சை நிபுணர் (School Dental Therapist)

மின்விசையலைவரைவு தொழில்நுட்பவியலாளர் (Electro Cardiographer - ECG)

மருந்து தயாரிப்பாளர் / மருந்தாளர் (Dispenser)

மின்மூளை வரைவு தொழில்நுட்பவியலாளர் (Electro Encephalographer - EEG)
</p><p>
மேலும், 2026 ஓகஸ்ட் 07 ஆம் திகதியிடப்பட்ட 2501 ஆம் இலக்க அரசாங்க வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைவாக, 2019 முதல் 2023 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் க.பொ.த (உயர்தரம்) பரீட்சையில் விஞ்ஞானம் அல்லது கணிதப் பாடத்துறைகளில் சித்தியடைந்த மாணவர்களிடமிருந்து இப்பயிற்சிப் பாடநெறிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
</p><p>
இப்பயிற்சிப் பாடநெறிகளுக்காக விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் இறுதித் திகதி 2026 ஓகஸ்ட் 31 ஆகும்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-13T16:57:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ். செம்மணி அகழ்வுப் பணி தீவிரம் ; ஒரே நாளில் 10 எலும்புக்கூடுகள் மீட்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/jaffna-chemmani-10-skeletons-recovered-single-day-1786639595"></link>
            <id>https://jvpnews.com/article/jaffna-chemmani-10-skeletons-recovered-single-day-1786639595</id>
            <summary type="text">செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 51 வது நாள் அகழ்வு பணி இன்று இடம்பெற்றது. அதற்கமைய இன்றைய தினம் புதிதாக 8 எலும்புக் கூடுகள் அடையாளம் காண...</summary>
            <content type="html"><![CDATA[<p>செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 51 வது நாள் அகழ்வு பணி இன்று இடம்பெற்றது.</p><p> </p><p></p><p>அதற்கமைய இன்றைய தினம் புதிதாக 8 எலும்புக் கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், 10 எலும்புக் கூடுகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9cd7dd26-ade1-4bca-820b-fb298f1d478f/26-6a7df4ec9f885.webp' /></p><p>

மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளுக்காக நீதிமன்றம் 56 நாட்களுக்கு அனுமதி வழங்கியது.</p><p>அதனடிப்படையில் கடந்த ஏப்ரல் மாதம் 27ஆம் திகதி மூன்றாம் கட்ட பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. </p><p>

செம்மணியில் இதுவரையில் மேற்கொள்ளப்பட்ட முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டங்களின் கீழான அகழ்வு பணிகளின் போது, 552 எலும்புக் கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.</p><p> 

அவற்றில் 540 எலும்புக் கூடுகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.</p><p></p>]]></content>
            <updated>2026-08-13T16:46:49+00:00</updated>
        </entry>
    </feed>
