<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-07-20T16:18:36+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாலின மாற்று சுற்றறிக்கை ; உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/supreme-court-order-on-gender-circular-1784563998"></link>
            <id>https://jvpnews.com/article/supreme-court-order-on-gender-circular-1784563998</id>
            <summary type="text">பெண்கள் மற்றும் ஆண்கள் தங்களது பாலினத்தை மாற்றிக்கொள்ள அனுமதி வழங்கி வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கைகளை செல்லுபடியற்றதாக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">பெண்கள் மற்றும் ஆண்கள் தங்களது பாலினத்தை மாற்றிக்கொள்ள அனுமதி வழங்கி வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கைகளை செல்லுபடியற்றதாக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாமல், நிராகரிப்பதற்கு உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.&nbsp;</p><p style="text-align: justify; "> முன்னாள் ஜனாதிபதிகளான மைத்திரிபால சிறிசேன மற்றும் ரணில் விக்கிரமசிங்க, அத்துடன் தற்போதைய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க உள்ளிட்டோர் இந்த மனுவில் பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்டிருந்தனர்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1933dde7-d8db-4088-a3f8-57d008356f34/26-6a5e491fb712c.webp' /></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

இலங்கை விமானப்படையின் ஓய்வுபெற்ற மாற்றுத்திறனாளி அதிகாரியான சாந்த ஜயதிலக என்பவரால் இந்த அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.</p>]]></content>
            <updated>2026-07-20T16:13:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜனநாயகன் லீக் பற்றி விஜய் சொன்ன அந்த வார்த்தை.. ஹெச்.வினோத் பேட்டி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/what-vijay-said-about-jananayagan-leak-h-vinoth-1784563572"></link>
            <id>https://cineulagam.com/article/what-vijay-said-about-jananayagan-leak-h-vinoth-1784563572</id>
            <summary type="text">விஜய்யின் ஜனநாயகன் படம் பல மாத தடங்கலுக்கு பிறகு இந்த வாரம் ரிலீஸ் ஆக இருக்கிறது. ஜூலை 23ம் தேதி ரிலீஸ் என்பதால் ரசிகர்கள் கொண்டாட தயாராகி வருகின்றனர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>விஜய்யின் ஜனநாயகன் படம் பல மாத தடங்கலுக்கு பிறகு இந்த வாரம் ரிலீஸ் ஆக இருக்கிறது. ஜூலை 23ம் தேதி ரிலீஸ் என்பதால் ரசிகர்கள் கொண்டாட தயாராகி வருகின்றனர்.</p><p>படம் ஏற்கனவே இணையத்தில் லீக் ஆகிவிட்ட நிலையில் தற்போது தியேட்டரில் ரிலீஸ் ஆகும்போது மேலும் பல காட்சிகள் இணைக்கப்பட இருப்பதாக தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.</p><p>இந்நிலையில் தற்போது படம் லீக் ஆனது பற்றி நடிகர் விஜய் என்ன கூறினார் என இயக்குனர் ஹெச்.வினோத் பேசி இருக்கிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3d76bd0e-c6be-42f0-8b2e-729346df5690/26-6a5e4775ad9a0.webp' /></p><p>
</p><h2>கவலை படாதீங்க
</h2><p>"சென்சார் சான்றிதழ் கிடைக்காமல் படம் ரிலீஸ் ஆகவில்லை. பின்னர் படம் லீக் ஆகிவிட்டது. விஜய் சாரும் அதனால் பாதிக்கப்பட்டார். </p><p>
ஆனால் உடனே எனக்கு கால் செய்து "கவலை படாதீங்க. இந்த மாதிரி தான் நடக்கும் இதெல்லாம். பாத்துக்கலாம்" என விஜய் கூறினாராம்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3721a1aa-6c52-4114-a0fa-390f3cb927cf/26-6a5e477685813.webp' /></p>]]></content>
            <updated>2026-07-20T16:06:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானியாவின் 59ஆவது பிரதமராக பதவியேற்றார் ஆன்டி பர்னாம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/andy-burnham-sworn-as-59th-pm-of-uk-1784550432"></link>
            <id>https://news.lankasri.com/article/andy-burnham-sworn-as-59th-pm-of-uk-1784550432</id>
            <summary type="text">பிரித்தானியாவின் 59ஆவது பிரதமராக பதவியேற்றுள்ளார் ஆன்டி பர்னாம்.

பிரதமராக பதவியேற்றார் ஆன்டி பர்னாம்

கிரேட்டர் மான்செஸ்டரின் மேயராக பதவி வகித்து...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரித்தானியாவின் 59ஆவது பிரதமராக பதவியேற்றுள்ளார் ஆன்டி பர்னாம்.</p><h3>

பிரதமராக பதவியேற்றார் ஆன்டி பர்னாம்</h3><p>

கிரேட்டர் மான்செஸ்டரின் மேயராக பதவி வகித்துவந்த ஆன்டி பர்னாம், சமீபத்தில் மேக்கர்ஃபீல்ட் தொகுதியில் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினரானார்.
</p><p>
அதைத் தொடர்ந்து, லேபர் கட்சியின் தலைவராக பொறுப்பேற்றுக்கொண்ட ஆன்டி பர்னாம், சற்று முன் மன்னரை சந்தித்து பிரித்தானியாவின் பிரதமராக பதவியேற்றுக்கொண்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1584e5d8-f391-49d3-b6fb-2f1afe9dbac3/26-6a5e14224174d.webp' /></p><p>ஆன்டி பர்னாம், பிரித்தானியாவின் 59ஆவது பிரதமர் ஆவார். அவருக்கு முன் பிரதமராக பதவி வகித்த சர் கெய்ர் ஸ்டார்மர் சற்று முன் மன்னர் சார்லசை சந்தித்து முறைப்படி தனது ராஜினாமாவைக் கையளிக்க, மன்னர் அதை ஏற்றுக்கொண்டார்.
</p><p>
அதைத் தொடர்ந்து, பக்கிங்காம் அரண்மனைக்குச் சென்ற ஆன்டி பர்னாம் மன்னர் சார்லசை சந்தித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d57ef349-120d-4165-8a58-08a33e55ec82/26-6a5e1423b781e.webp' /></p><p>மன்னர் சார்லஸ் முறைப்படி பிரித்தானியாவின் பிரதமராக பொறுப்பேற்கும்படி ஆன்டி பர்னாமைக் கேட்டுக்கொள்ள, அதை ஏற்றுக்கொண்ட ஆன்டி பர்னாம் பிரித்தானியாவின் பிரதமராகியுள்ளார்.</p><p></p><p>
</p><p>
அதற்கு அடையாளமாக, ஆன்டி பர்னாம், மன்னர் சார்லசுடன் கைகுலுக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d511e8aa-81b1-4f2c-b2c7-2d788a0ff59c/26-6a5e1422f3a9c.webp' /></p><p>ஆன்டி பர்னாம் பிரித்தானியாவின் பிரதமராக முறைப்படி மன்னர் சார்லசால் நியமிக்கப்பட்டதைக் குறித்து பக்கிங்காம் அரண்மனை வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடாளுமன்ற உறுப்பினரான மாண்புமிகு ஆன்டி பர்னாம், மேன்மை தங்கிய மன்னரை சந்தித்த நிலையில், புதிய நிர்வாகத்தை அமைக்குமாறு ஆன்டி பர்னாமை மன்னர் கேட்டுக்கொண்டார்.
</p><p>
மன்னரின் அழைப்பை ஏற்ற ஆன்டி பர்னாம், பிரதமராகவும் கருவூலத்தின் முதல் பிரபுவாகவும் பதவி வழங்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து மன்னரின் கைகளில் முத்தமிட்டார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
</p><p>
அடுத்ததாக, ஆன்டி பர்னாம், பிரதமர் இல்லம் முன் உரையாற்ற இருக்கிறார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-20T16:06:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Bavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மட்டக்களப்பு நீதிமன்ற சிறைக்கூண்டில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவரின் விபரீத முடிவால் பரபரப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/prisoner-attempts-suicide-in-batti-court-jail-1784557314"></link>
            <id>https://ibctamil.com/article/prisoner-attempts-suicide-in-batti-court-jail-1784557314</id>
            <summary type="text">மட்டக்களப்பில் பல திருட்டு சம்பவத்தில் கைது செய்யப்பட்டு சிறையில்
அடைக்கப்பட்ட யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கைதி ஒருவர் மட்டக்களப்பு நீதவான்
நீதிமன்ற கைத...</summary>
            <content type="html"><![CDATA[<p>மட்டக்களப்பில் பல திருட்டு சம்பவத்தில் கைது செய்யப்பட்டு சிறையில்
அடைக்கப்பட்ட யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கைதி ஒருவர் மட்டக்களப்பு நீதவான்
நீதிமன்ற கைதிகள் கூண்டுக்குள் விபரீத முடிவெடுத்து உயிரை மாய்க்க முயன்ற நிலையில் படுகாயமடைந்து மட்டு போதனா வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்ட சம்பவம் இன்று திங்கட்கிழமை (20) பிற்பகல் 3.00 மணியளவில்
இடம் பெற்றுள்ளது.
</p><p>
கைதியின் இந்த சம்பவம் நீதிமன்றில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><p>இது பற்றி மேலும் தெரியவருவதாவது</p><h2>யாழ்ப்பாணத்தில் கைது</h2><p>

 3 திருட்டுச் சம்பவங்கள் தொடர்பாக
குறித்த நபர் கடந்த வருடம் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில்
முற்படுத்தப்பட்டு நீதிமன்ற பிணையில் வெளிவந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/37d8081c-830e-45e4-9b28-20bd986afd9a/26-6a5e3551676d9.webp' /></p><p>

இந்த நிலையில் பிணையில் வெளிவந்தவர் வழக்கிற்கு நீதிமன்றத்தில்
முன்னிலையாகாமல் தலைமறைவாகி வந்துள்ளதையடுத்து நீதிமன்றம் பிடியாணை
பிறப்பித்ததையடுத்து கடந்த 13 ம் திகதி யாழ்ப்பாணத்தில் வைத்து காவல்துறையினர் அவரை கைது செய்தனர்.</p><p>
பின்னர் மட்டக்களப்பு நீதிமன்றில் கடந்த 15
ம்திகதி முற்படுத்தியதையடுத்து அவரை இன்றையதினம் (20ம் திகதிவரை) விளக்கமறியலில் வைக்குமாறு
நீதவான் உத்தரவிட்டார்.
</p><p>
இன்று திங்கட்கிழமை (20)
காலையில் சிறைச்சாலையில் இருந்து நீதிமன்றத்துக்கு சிறைச்சாலை அதிகாரிகளால் அவர்
அழைத்துவரப்பட்டு நீதிமன்ற சிறைக் கைதிகள் கூட்டில் அடைக்கப்பட்டார்</p><p></p><h2>விபரீத முடிவால் வைத்தியசாலையில் அனுமதி</h2><p>
</p><p>
இதனை தொடர்ந்து குறித்த நபரை திறந்த நீதிமன்றத்தில் முற்படுத்திய போது அந்த
வழக்கை விசாரணைக்கு எடுத்து கொண்ட நீதவான் அவரை எதிர்வரும் 3ம்
திகதி வரை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டதையடுத்து அவரை
நீதிமன்ற சிறைக்கூடத்தில் அடைத்தனர்</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ba18f737-3a9a-4191-9e5c-9e5e4c3acc95/26-6a5e35521a5bf.webp' /></p><p>

இந்த நிலையில் தொடர்ந்து திறந்த நீதிமன்றம் இடம்பெற்றுக் கொண்டிருந்த போது
பிற்பகல் 3.00 மணியளவில் நீதிமன்ற சிறைக்கூடத்தில் உள்ள மலசல கூடத்திற்குள்
வைத்து குறித்த கைதி விபரீத முடிவெடுத்த நிலையில் படுகாயமடைந்து
உடனடியாக மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
</p><p>
குறித்த நபர் யாழ்ப்பாணம் காங்கேசன்துறை தையிட்டி பகுதியைச் சேர்ந்தவர் எனவும் இவருக்கு எதிராக மட்டக்களப்பில்
திருட்டுக்கள் தொடர்பாக 3 வழக்குகள் நீதிமன்றில் இடம்பெற்று வருவதாகவும்
காவல்துறையினர் தெரிவித்தனர்&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-20T16:00:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[2025 GIT பரீட்சை பெறுபேறுகள் வெளியானது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/2025-git-exam-results-released-1784562371"></link>
            <id>https://jvpnews.com/article/2025-git-exam-results-released-1784562371</id>
            <summary type="text">இலங்கை பரீட்சைத் திணைக்களத்தினால் நடாத்தப்பட்ட 2025 ஆம் ஆண்டுக்கான பொதுத் தகவல் தொழில்நுட்ப (GIT) பரீட்சையின் பெறுபேறுகள் இன்று (20) வெளியிடப்பட்டுள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify;">இலங்கை பரீட்சைத் திணைக்களத்தினால் நடாத்தப்பட்ட 2025 ஆம் ஆண்டுக்கான பொதுத் தகவல் தொழில்நுட்ப (GIT) பரீட்சையின் பெறுபேறுகள் இன்று (20) வெளியிடப்பட்டுள்ளன. </p><p style="text-align: justify;">

இம்முறை பரீட்சைக்காக மொத்தம் 200,235 விண்ணப்பதாரர்கள் பதிவு செய்திருந்ததோடு, அவர்களுள் பாடசாலை விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை 199,598 ஆகும். 

மேலும் 637 தனிப்பட்ட விண்ணப்பதாரர்களும் இதில் உள்ளடங்குவர்.</p><p style="text-align: justify;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d9aaf732-ef01-477a-a4d2-eeaa634ba3fb/26-6a5e42c4df98e.webp' /></p><h2 style="text-align: justify;">&nbsp;பெறுபேற்று ஆவணங்கள்</h2><p style="text-align: justify;"> நாடளாவிய ரீதியில் அமைந்துள்ள 1,669 பரீட்சை மத்திய நிலையங்களில், 325 இணைப்பு மத்திய நிலையங்களின் மேற்பார்வையின் கீழ் நடத்தப்பட்ட இப்பரீட்சைக்கு இம்முறை 147,407 மாணவர்கள் தோற்றியுள்ளனர்.</p><p style="text-align: justify;"> 

விண்ணப்பதாரர்கள் தங்களது பரீட்சை சுட்டிலக்கத்தை சரியாக உள்ளிடுவதன் மூலம் பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளங்களான <a href="http://www.doenets.lk" target="_blank">http://www.doenets.lk</a> மற்றும் <a href="http://www.results.exams.gov.lk" target="_blank">http://www.results.exams.gov.lk </a>ஆகியவற்றிற்குள் பிரவேசித்து பெறுபேறுகளைப் பெற்றுக்கொள்ள முடியும். </p><p style="text-align: justify;">

எதிர்வரும் ஜூலை 23 ஆம் திகதி முதல் பின்வரும் வழிமுறைகளின் ஊடாக பெறுபேறு ஆவணங்களைப் பதிவிறக்கம் செய்துகொள்வதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;"> அனைத்து பாடசாலை மற்றும் தனிப்பட்ட விண்ணப்பதாரர்களும் <a href="https://onlineexams.gov.lk/eic" target="_blank">https://onlineexams.gov.lk/eic </a>இணையத்தளத்தின் 'Personal Account Login' ஊடாக தங்களது பரீட்சை சுட்டிலக்கம் அல்லது தேசிய அடையாள அட்டை இலக்கத்தை உள்ளிட்டு பெறுபேறு ஆவணத்தை (Results Schedule) பதிவிறக்கம் செய்ய முடியும்.</p><p style="text-align: justify;"> 

அதிபர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பயனர் பெயர் (User Name) மற்றும் கடவுச்சொல் (Password) ஆகியவற்றைப் பயன்படுத்தி, https://onlineexams.gov.lk/eic இன் 'School Account Login' பகுதிக்குள் பிரவேசித்து, அந்தந்த பாடசாலையின் முழுமையான பெறுபேறு ஆவணத்தைப் பதிவிறக்கம் செய்து அச்சிடப்பட்ட பிரதியைப் பெற்றுக்கொள்ள முடியும்.</p><p style="text-align: justify;"> 

அனைத்து மாகாண மற்றும் வலய கல்விப் பணிப்பாளர்களுக்கும் தத்தமது வலயத்திற்குரிய பெறுபேறு ஆவணங்களைப் பதிவிறக்கம் செய்வதற்காக பயனர் பெயர்களும் கடவுச்சொற்களும் வழங்கப்பட்டுள்ளன.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;"> </p><p style="text-align: justify;">இந்த பரீட்சை பெறுபேறுகள் தொடர்பாக ஏதேனும் வினவல்களிருப்பின், பரீட்சைத் திணைக்களத்தின் பாடசாலை பரீட்சைகள் ஒழுங்கமைப்பு மற்றும் பெறுபேறுகள் கிளையின் பின்வரும் தொலைபேசி இலக்கங்களின் ஊடாக தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என பரீட்சை ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார். </p><p style="text-align: justify;">

உடனடி அழைப்பு இலக்கம்: 1911 </p><p style="text-align: justify;">

தொலைபேசி இலக்கங்கள்: 011284208 / 0112784537 / 0112785922 </p><p style="text-align: justify;">

தொலைநகல் (Fax) இலக்கம்: 0112784422</p>]]></content>
            <updated>2026-07-20T15:46:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறைக்குள் இலக்கு வைக்கப்படும் சுரேஷ் சலே! சி.டி.விக்ரமரத்னவின் சாட்சிகளை அழிக்கும் மர்ம நபர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/suresh-sallay-targeted-prison-wickramaratne-eviden-1784561866"></link>
            <id>https://tamilwin.com/article/suresh-sallay-targeted-prison-wickramaratne-eviden-1784561866</id>
            <summary type="text">உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மற்றும் பல்வேறு ஊழல் வழக்குகளுடன் தொடர்புடைய முக்கிய சாட்சிகள் திட்டமிட்டு தவறான முடிவெடுப்பதற்கு மாற்றப்படுவதாக பிரித்தானிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மற்றும் பல்வேறு ஊழல் வழக்குகளுடன் தொடர்புடைய முக்கிய சாட்சிகள் திட்டமிட்டு தவறான முடிவெடுப்பதற்கு மாற்றப்படுவதாக பிரித்தானியாவிலுள்ள ராணுவ ஆய்வாளர் அரூஸ் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.
</p><p>

லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
</p><p>
மேலும் தெரிவித்த அவர்,

இதில் முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் மரணம் மிக முக்கியமானது.
</p><p>
சிறைக்குள் இருக்கும் சுரேஷ் சலேவுக்கும் இதே போன்ற ஆபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளது. 

ஒரு சிறை கலவரத்தை உருவாக்கி அவரைத் தாக்குவதோ அல்லது படுகொலை செய்வதோ இலகுவாகச் செய்யப்படலாம்.
</p><p>
மரணமடைந்தவர்கள் எவரும் தவறான முடிவெடுக்கும் மனநிலையில் இல்லை என்றும், அவர்களது மரணங்களுக்கு முன் குடும்பப் பிரச்சனைகள் அல்லது தனிப்பட்ட காரணங்கள் ஊடகங்கள் மூலம் திட்டமிட்டு பரப்பப்படுகின்றது.
</p><p>

அரசியல்வாதிகள் தங்களுக்கு எதிரான சாட்சிகளை அழிப்பதன் மூலம் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்க முயல்வதாகவும், இவ்வாறான கொலைகள் ஒரு 'கொலை கலாச்சாரத்தை' மீண்டும் உருவாக்கி விடுமோ என்ற அச்சம் நிலவுகின்றது.
</p><p>
அநுரகுமார திசாநாயக்கவின் அரசாங்கம் இந்த விசாரணைகளை எவ்வளவு வேகமாக முன்னெடுக்கிறது என்பதில்தான் இந்த வழக்குகளின் வெற்றி தங்கியுள்ளது. </p><p>

சாட்சிகளுக்குப் பாதுகாப்பு வழங்கப்படாவிட்டால், விசாரணைகள் மர்மமாகவே முடிந்துவிடும் என குறிப்பிட்டார்.
</p><p>
மேலதிக தகவல்களுக்கு கீழுள்ள காணொளியை காண்க..</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/D49rkYHSU6A" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-20T15:44:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரான் பயணத்தைத் ஒத்திவைக்க இந்தியக் குடிமக்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/indian-citizens-to-postpone-travel-to-iran-1784562022"></link>
            <id>https://tamilwin.com/article/indian-citizens-to-postpone-travel-to-iran-1784562022</id>
            <summary type="text">ஈரானில் நிலவி வரும் பதற்றமான சூழ்நிலை மற்றும் அதிகரித்துள்ள பாதுகாப்பற்ற
சூழல் காரணமாக, இந்தியக் குடிமக்கள் தங்களது ஈரான் பயணத் திட்டங்களைத்
தற்காலி...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானில் நிலவி வரும் பதற்றமான சூழ்நிலை மற்றும் அதிகரித்துள்ள பாதுகாப்பற்ற
சூழல் காரணமாக, இந்தியக் குடிமக்கள் தங்களது ஈரான் பயணத் திட்டங்களைத்
தற்காலிகமாக ஒத்திவைக்குமாறு இந்தியத் தூதரகம் கேட்டுக்கொண்டுள்ளது.</p><p>

மேலும், ஏற்கனவே ஈரானில் இருக்கும் இந்தியர்கள், அங்கு கிடைக்கக்கூடிய விமானச்
சேவைகளைப் பயன்படுத்தி தற்காலிகமாக அந்நாட்டை விட்டு வெளியேறுவது குறித்துப்
பரிசீலிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
</p><p>
ஈரானின் தெற்குப் பகுதியில் உள்ள ஹோர்முஸ் நீரிணை வழியாகச் சென்ற இரண்டு
எண்ணெய் கப்பல்கள் "வெடித்துச் சிதறி" முடக்கப்பட்டதாக ஈரான் அறிவித்ததை
அடுத்து, அப்பகுதியில் கப்பல் போக்குவரத்தின் பாதுகாப்பு குறித்த கவலைகள்
அதிகரித்துள்ளன.</p><p></p><h2>தாக்குதல்கள்</h2><p>
</p><p>
இதன் பின்னணியில், திங்கட்கிழமை அன்று அமெரிக்கப் படைகள் தொடர்ந்து ஒன்பதாவது
நாளாக ஈரானிய இலக்குகள் மீது தாக்குதல்களை நடத்தியுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b4fe63bd-efe2-4e2f-9802-37e0b59a6a44/26-6a5e4168142b9.webp' /></p><p>

ஒரு மாதத்திற்கு முன்பு கையெழுத்தான தற்காலிக போர்நிறுத்த ஒப்பந்தம்
முறிந்ததைத் தொடர்ந்து, அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே இந்தத்
தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ளன.
</p><p>
உலகளாவிய எரிசக்தி விநியோகத்தில் முக்கியப் பங்குவகிக்கும் ஹோர்முஸ் நீரிணையை
கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கான இந்த மோதல், சர்வதேச அளவில் எரிபொருள்
தட்டுப்பாடு மற்றும் பணவீக்க அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-20T15:40:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீதிபதிகள் பயன்படுத்தும் அறிவியல் கையேடு குறித்து மறுஆய்வு செய்ய டொனால்ட் ட்ரம்ப் உத்தரவு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/donald-trump-orders-used-by-judges-1784558946"></link>
            <id>https://tamilwin.com/article/donald-trump-orders-used-by-judges-1784558946</id>
            <summary type="text">பருவநிலை மாற்றம் தொடர்பான வழக்குகளில் அமெரிக்காவின் ‘பெடரல் ஜூடிசியல்
சென்டர்’ வழங்கும் அறிவியல் குறிப்புக் கையேடு குறித்து மறுஆய்வு செய்யுமாறு
அமெர...</summary>
            <content type="html"><![CDATA[<p>பருவநிலை மாற்றம் தொடர்பான வழக்குகளில் அமெரிக்காவின் ‘பெடரல் ஜூடிசியல்
சென்டர்’ வழங்கும் அறிவியல் குறிப்புக் கையேடு குறித்து மறுஆய்வு செய்யுமாறு
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கோரியுள்ளார்.</p><p>

இந்த கையேட்டில் உள்ள "நம்பகத்தன்மையற்ற" தகவல்கள் நாட்டிற்கு "பெரிய
இழப்புகளை" ஏற்படுத்தியுள்ளதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.</p><p>

இதுகுறித்து ட்ரம்ப் தனது ‘ட்ரூத் சோஷியல்’ சமூக ஊடகப் பக்கத்தில்
வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது, "நமது நாட்டின் மத்திய நீதிபதிகள் உண்மைகளையும் அறிவியலையும் பெற
தகுதியானவர்கள்; பருவநிலை மாற்றம் குறித்த அரசியல் மோசடிகளையோ அல்லது போலி
அறிவியலையோ அல்ல.</p><p></p><h2>விசாரணை</h2><p>

இந்த உண்மையின் அடிப்படையில், மத்திய அரசின் சஸ்பென்ஷன் மற்றும் விநியோகத்
தடை அதிகாரிகளை இந்த நடவடிக்கை குறித்து மறுஆய்வு செய்ய நான் உத்தரவிடுகிறேன்."

ட்ரம்பின் இந்த உத்தரவு எத்தகைய "நடவடிக்கை" அல்லது யாருடைய செயல்பாடுகள்
குறித்த விசாரணைக்கானது என்பது உடனடியாகத் தெளிவாகத் தெரியவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0de964fb-f848-46e8-901b-32f3cd1e8d5b/26-6a5e3d66292b4.webp' /></p><p>
</p><p>
இது குறித்து கருத்து தெரிவிக்க வெள்ளை மாளிகையும் உடனடியாக முன்வரவில்லை.

முன்னதாக, அமெரிக்காவின் மத்திய நீதித்துறை, அறிவியல் சான்றுகள் குறித்த தனது
புதிய கையேட்டில் இருந்து பருவநிலை மாற்றம் தொடர்பான அத்தியாயத்தை
நீக்கியிருந்தது.</p><p></p><h2>நடவடிக்கை</h2><p>
</p><p>
இந்த அத்தியாயம் புதைபடிவ எரிபொருள் நிறுவனங்களுக்கு எதிராக ஒருதலைப்பட்சமாக
இருப்பதாக குடியரசுக் கட்சி மாநில வழக்கறிஞர்கள் வாதிட்டதை அடுத்து இந்த
நடவடிக்கை எடுக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9c9cad9e-2ba6-4048-a9a5-7592279e26c4/26-6a5e3d66cbb98.webp' /></p><p>
நீதிமன்ற வழக்குகளில் சமர்ப்பிக்கப்படும் அறிவியல் சாட்சியங்களை மதிப்பீடு
செய்ய நீதிபதிகள் இத்தகைய கையேடுகளையே பெரிதும் நம்பியிருக்கிறார்கள் எனக் குறிப்பிட்டார்.</p><p>
கொலம்பியா சட்ட கல்லூரியை சேர்ந்த ஜெசிகா வென்ட்ஸ் மற்றும் ராட்லி ஹார்டன்
ஆகியோரால் எழுதப்பட்ட இந்த சர்ச்சைக்கரிய அத்தியாயம், நீதிபதிகளுக்கு பருவநிலை
அறிவியல் தொடர்பான வழக்குகளைக் கையாள உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தது
குறிப்பிடத்தக்கது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-20T15:23:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[கருங்கடலில் வர்த்தகக் கப்பலை குறி வைத்தது ரஷ்யா : பலர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/russian-attack-on-merchant-ship-in-black-sea-1784560154"></link>
            <id>https://ibctamil.com/article/russian-attack-on-merchant-ship-in-black-sea-1784560154</id>
            <summary type="text">உக்ரைனின் ஒடெசா கடற்கரைக்கு அப்பால், கினியா-பிசாவ் கொடியை ஏந்திய வர்த்தகக் கப்பல் மீது ரஷ்யா நடத்திய குரூஸ் ஏவுகணைத் தாக்குதலில் 10 பேர் கொல்லப்பட்டனர...</summary>
            <content type="html"><![CDATA[<p>உக்ரைனின் ஒடெசா கடற்கரைக்கு அப்பால், கினியா-பிசாவ் கொடியை ஏந்திய வர்த்தகக் கப்பல் மீது ரஷ்யா நடத்திய குரூஸ் ஏவுகணைத் தாக்குதலில் 10 பேர் கொல்லப்பட்டனர்.</p><p>

இறந்தவர்களில் ஒன்பது கப்பல் ஊழியர்களும் ஒரு விமானியும் அடங்குவதாக உக்ரைனிய அதிகாரிகள் கூறுகின்றனர்.</p><h2>தொடர்ச்சியான தாக்குதல்</h2><p>சமீபத்திய வாரங்களில் ஒடெசா பகுதி தொடர்ச்சியான தாக்குதல்களுக்கு உள்ளாகி வருகிறது, ஜூலை மாதத்தில் மட்டும் ரஷ்யத் தாக்குதல்களில் 28 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/939afb56-7dec-49c7-824e-33e8cfa3315c/26-6a5e3d51ba951.webp' /></p><p>கினியா-பிசாவ் கொடியை ஏந்திய கோல்டன் லியோ கப்பல் மீது ஞாயிற்றுக்கிழமை நடந்த தாக்குதல், இதுவரை நடந்தவற்றிலேயே மிகவும் கொடூரமானதாகும்.
</p><p>

உக்ரைனிய விவசாய ஏற்றுமதிகளில் மூன்றில் இரண்டு பங்கிற்கும் மேலானவை கடல்வழி ஏற்றுமதிகளே ஆகும். இதன் மதிப்பு சுமார் $9 பில்லியன் (£6.7 பில்லியன்) ஆகும் - இது கீவ்விற்கு ஒரு முக்கிய வருவாய் ஆதாரமாக விளங்குகிறது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-20T15:23:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[2030 உலகக்கிண்ணக் கால்பந்து போட்டி திகதி அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/dates-announced-for-the-2030-fifa-world-cup-1784553128"></link>
            <id>https://jvpnews.com/article/dates-announced-for-the-2030-fifa-world-cup-1784553128</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;2030ஆம் ஆண்டிற்கான 24ஆவது உலகக் கிண்ணக் கால்பந்து போட்டிகள் மொராக்கோ, போர்த்துக்கல் மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளில் நடைபெறவுள்ளது.

இந்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;2030ஆம் ஆண்டிற்கான 24ஆவது உலகக் கிண்ணக் கால்பந்து போட்டிகள் மொராக்கோ, போர்த்துக்கல் மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளில் நடைபெறவுள்ளது.
</p><p>
இந் நிலையில், இப்போட்டிகள் 2030 ஜூன் 8 முதல் ஜூலை 21 ஆம் திகதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8675654c-fd88-40be-abcd-0351727e3bd6/26-6a5e1ea9acba6.webp' /></p><h2>&nbsp;கால்பந்து போட்டி தொடங்கி 100 ஆண்டுகள்</h2><p>
</p><p>


உலகக் கிண்ணக் கால்பந்து போட்டி தொடங்கி 100 ஆண்டுகள் நிறைவடைவதைக் கொண்டாடும் விதமாக, 1930-ல் முதல் தொடர் நடைபெற்ற உருகுவே, மற்றும் அண்டை நாடுகளான ஆர்ஜென்டினா, பராகுவே ஆகிய நாடுகளில் தலா ஒரு சிறப்புப் போட்டி நடத்தப்படவுள்ளது.</p><p></p><p> 



இதன் மூலம் உலகக் கிண்ண வரலாற்றிலேயே முதல் முறையாக போட்டிகள் ஒன்றுக்கும் மேற்பட்ட கண்டங்களில் நடைபெறுகின்றன.
</p><p>


அமெரிக்கா, கனடா, மெக்சிகோ ஆகிய நாடுகளில் நடந்து முடிந்த 23ஆவது உலகக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டியில், ஸ்பெயின் அணி 1-0 என்ற கோல் கணக்கில் ஆர்ஜென்டினாவை வீழ்த்தி 2ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-07-20T15:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[முன்னாள் பொலிஸ்மா அதிபரின் மர்மமான மரணம்! சடலம் பொலிஸ் மரியாதையுடன் நல்லடக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/for-inspector-general-police-rest-police-honours-1784556864"></link>
            <id>https://tamilwin.com/article/for-inspector-general-police-rest-police-honours-1784556864</id>
            <summary type="text">காலமான முன்னாள் பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் இறுதிச் சடங்குகள் பொரளை மயானத்தில் முழுமையான பொலிஸ் மரியாதையுடன் இடம்பெற்றுள்ளன. 

முன்னாள் பொ...</summary>
            <content type="html"><![CDATA[<p>காலமான முன்னாள் பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் இறுதிச் சடங்குகள் பொரளை மயானத்தில் முழுமையான பொலிஸ் மரியாதையுடன் இடம்பெற்றுள்ளன. </p><p>

முன்னாள் பொலிஸ் மா அதிபர் கடந்த 17 ஆம் திகதி காலை அவரது வீட்டில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்திருந்தார்.</p><p></p><h2>பிரேத பரிசோதனை</h2><p> </p><p>

அவரது மரணம் தவறான முடிவெடுத்து உயிர் மாய்த்திருக்கலாம்&nbsp; என சந்தேகிக்கப்படுவதுடன், தனது பாதுகாப்பு அதிகாரியின் துப்பாக்கியால் அவர் சுட்டுக்கொண்டுள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர். </p><p>

சி.டி.விக்ரமரத்னவின் சடலம் தொடர்பாக நடத்தப்பட்ட பிரேத பரிசோதனையின் போது திறந்த தீர்ப்பு வழங்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/455e0262-d3a2-49ca-ac6c-1f4d8dd9c8a7/26-6a5e3607b8e5f.webp' /></p><p> </p><p>

நாட்டின் 35 ஆவது பொலிஸ் மா அதிபராகப் பணியாற்றிய சி.டி. விக்ரமரத்ன உயிரிழக்கும் போது 63 வயதாகும்.</p><p> 

1986 ஆம் ஆண்டு பொலிஸ் சேவையில் இணைந்த அவர், 2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலின் பின்னர் அப்போதைய பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் சேவை இடைநிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து, பதில் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டார்.</p><p></p><h2>துப்பாக்கிச் சூடு</h2><p> 

அதனைத் தொடர்ந்து 2020 ஆம் ஆண்டு நவம்பர் 27 ஆம் திகதி அவர் பொலிஸ் மா அதிபர் பதவிக்கு நியமிக்கப்பட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9abd8168-e49e-41a3-bad8-3475fca64dbf/26-6a5e36086ab3e.webp' /></p><p> 

2023 ஆம் ஆண்டு மார்ச் 25 ஆம் திகதி ஓய்வுபெறவிருந்த போதிலும், புதிய பொலிஸ் மா அதிபர் ஒருவர் நியமிக்கப்படும் வரை அப்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் பல தடவைகள் சேவை நீடிப்பு வழங்கப்பட்டதன் காரணமாக, சி.டி. விக்ரமரத்ன மேலும் சுமார் 8 மாதங்கள் பொலிஸ் மா அதிபர் பதவியில் பணியாற்றினார்.</p><p> 

எனினும் அவர் 2023 ஆம் ஆண்டு நவம்பர் 23 ஆம் திகதி பொலிஸ் மா அதிபர் பதவியிலிருந்து ஓய்வு பெற்றார்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-20T14:51:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Manchu</name>
            </author>
            <title type="text"><![CDATA[மணமணக்கும் பன்னீர் பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/how-to-prepare-tasty-paneer-biryani-at-home-1784558143"></link>
            <id>https://manithan.com/article/how-to-prepare-tasty-paneer-biryani-at-home-1784558143</id>
            <summary type="text">Paneer Biryani Recipe In Tamil: தினமும் மதிய வேளையில் சாம்பார், குழம்பு என்று செய்து போரடித்துவிட்டதா? மதிய நேரத்தில் சிம்பிளாக, அதே சமயம் வாய்க்கு ரு...</summary>
            <content type="html"><![CDATA[<p>Paneer Biryani Recipe In Tamil: தினமும் மதிய வேளையில் சாம்பார், குழம்பு என்று செய்து போரடித்துவிட்டதா? மதிய நேரத்தில் சிம்பிளாக, அதே சமயம் வாய்க்கு ருசியான ஒரு சமையலை சமைத்து சாப்பிட நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் பன்னீரும், காய்கறிகளும் இருந்தால், அவற்றைக் கொண்டு பன்னீர் பிரியாணியை செய்யுங்கள். இந்த பிரியாணியை பிள்ளைகளுக்கு லன்ச் பாக்ஸிலும் வைத்துக் கொடுக்கலாம். இந்த பிரியாணி குழந்தைகளும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும்.

</p><p>உங்களுக்கு பன்னீர் பிரியாணியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பன்னீர் பிரியாணி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4da77887-4115-45b6-82fb-683c6e6aaf1e/26-6a5e34cdece28.webp' /></p><h2>தேவையான பொருட்கள்: </h2><h3>ஊற வைப்பதற்கு...&nbsp;</h3><p> பன்னீர் - 400 கிராம்<br>மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்&nbsp;<br>&nbsp;காஷ்மீரி மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்&nbsp;<br>&nbsp;உப்பு - 1 டீஸ்பூன்&nbsp;<br>&nbsp;சாட் மசாலா - 1 டீஸ்பூன் </p><h3>பிரியாணி தாளிப்பதற்கு... </h3><p>எண்ணெய் - 1 1/2 டேபிள் ஸ்பூன்&nbsp;<br>&nbsp;நெய் - 2 டேபிள் ஸ்பூன் <br>பட்டை - 2 துண்டு <br>கிராம்பு - 5&nbsp;<br>&nbsp;ஏலக்காய் - 3&nbsp;<br>&nbsp;பிரியாணி இலை - 2&nbsp;<br>&nbsp;பெரிய வெங்காயம் - 3 (நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கியது)<br>இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன் <br>பச்சை மிளகாய் - 3<br>பெரிய தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)<br>&nbsp;பீன்ஸ் - 1 கப் (பொடியாக நறுக்கியது)&nbsp;<br>&nbsp;கேரட் - 1 கப் (பொடியாக நறுக்கியது)&nbsp;<br>&nbsp;பச்சை பட்டாணி - 1 கப்&nbsp;<br>&nbsp;குடைமிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது) <br>உப்பு - சுவைக்கேற்ப <br>மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்&nbsp;<br>&nbsp;காஷ்மீரி மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் <br>மிளகுத் தூள் - 1 டீஸ்பூன் <br>மல்லித் தூள் - 1 1/2 டீஸ்பூன்&nbsp;<br>&nbsp;சீரகத் தூள் - 1 டீஸ்பூன்<br>&nbsp;கரம் மசாலா - 1 டீஸ்பூன் <br>ஊற வைத்த பன்னீர்&nbsp;<br>&nbsp;புதினா - 1 கையளவு <br>கொத்தமல்லி - 1 கையளவு <br>தண்ணீர் - 2 கப்<br>&nbsp;பாசுமதி அரிசி - 1 கப் (1/2 மணிநேரம் ஊற வைத்தது)&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f2e52be1-8641-42ed-b999-1fc971ff33e8/26-6a5e34cea0b5a.webp' /></p><h2>செய்முறை: </h2><p>முதலில் ஒரு பாத்திரத்தில் பன்னீரை சற்று பெரிய துண்டுகளாக்கி எடுத்து, அத்துடன் மஞ்சள் தூள், காஷ்மீரி மிளகாய் தூள், சுவைக்கேற்ப உப்பு மற்றும் சாட் மசாலாவை சேர்த்து பிரட்டி, சிறிது நேரம் ஊற வைக்க வேண்டும். </p><p>பின்னர் பிரியாணி செய்ய ஒரு அகலமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் மற்றும் நெய் சேர்த்து சூடானதும், பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை சேர்த்து தாளிக்க வேண்டும். </p><p>அதன் பின் அதில் நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்க வேண்டும். </p><p>பின்பு அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட், பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்க வேண்டும். பிறகு அதில் பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து 1 நிமிடம் வதக்க வேண்டும்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/51523853-0f71-4437-bf08-d6519a4f545e/26-6a5e34cf52b72.webp' /></p><p>அடுத்து அதில் நறுக்கிய பீன்ஸ், கேரட், பச்சை பட்டாணி, குடைமிளகாய் ஆகியவற்றை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கிளறி, மூடி வைத்து 3 நிமிடம் காய்கறிகளை வேக வைக்க வேண்டும்.&nbsp;</p><p>பின்னர் அதில் மஞ்சள் தூள், காஷ்மீரி மிளகாய் தூள், மிளகுத் தூள், மல்லித் தூள், சீரகத் தூள், கரம் மசாலா ஆகியவற்றை சேர்த்து நன்கு கிளறி, மூடி வைத்து 2 நிமிடம் வேக வைக்க வேண்டும்.&nbsp;</p><p> அதன் பின் மூடியைத் திறந்து அதில் பன்னீரை சேர்த்து கிளறி, புதினா மற்றும் கொத்தமல்லியை சேர்த்து நன்கு வதக்க வேண்டும். </p><p>அடுத்து அதில் 2 கப் நீரை ஊற்றி, நீர் கொதிக்க ஆரம்பித்ததும், 1/2 மணிநேரம் ஊற வைத்த பாசுமதி அரிசியை நீரில் கழுவிவிட்டு சேர்த்து கிளறி, மூடி வைத்து மிதமான தீயில் 20 நிமிடம் வேக வைக்க வேண்டும்.&nbsp;</p><p> அதன் பின் அடுப்பை அணைத்துவிட்டு 15 நிமிடம் அப்படியே தம் போட வேண்டும். * 15 நிமிடம் கழித்து மூடியைத் திறந்து கிளறினால், சுவையான பன்னீர் பிரியாணி தயார்.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><i>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் <a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள் <a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"><b>FOLLOW NOW&nbsp; &nbsp;&nbsp;</b></a><br></i></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-20T14:50:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[டெல்லியில் பெரும் பரபரப்பு! நாடாளுமன்றம் முற்றுகை - பிரதமர் மோடி அவசரமாக வெளியேற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/delhi-battlefield-besieg-parliament-modi-evacuated-1784549845"></link>
            <id>https://tamilwin.com/article/delhi-battlefield-besieg-parliament-modi-evacuated-1784549845</id>
            <summary type="text">நீட் (NEET) உள்ளிட்ட தேசியத் தேர்வுகளில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள், வினாத்தாள் கசிவுகள் மற்றும் தொழில்நுட்பக் கோளாறுகளுக்கு எதிர்ப்பு தெரி...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீட் (NEET) உள்ளிட்ட தேசியத் தேர்வுகளில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள், வினாத்தாள் கசிவுகள் மற்றும் தொழில்நுட்பக் கோளாறுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, காக்ரோச் ஜனதா கட்சி (CJP) மற்றும் பல்வேறு மாணவர் அமைப்புகள் இணைந்து இன்று (20) புது டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டன.</p><p>

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கிய நாளில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில், கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாக பதவி விலக வேண்டும் என்றும், தேசியத் தேர்வு முறையில் வெளிப்படையான சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் மாணவர்கள் வலியுறுத்தினர்.</p><p></p><h2>டெல்லியில்&nbsp;பதற்றம்</h2><p>

ஜந்தர் மந்தர் பகுதியில் இருந்து நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாகச் செல்ல முயன்ற போராட்டக்காரர்களை டெல்லி பொலிஸார் தடுத்து நிறுத்தினர்.

இதனால் பதற்றம் ஏற்பட்ட நிலையில், கூட்டத்தைக் கலைக்க பொலிஸார் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசியதுடன் தடியடியும் நடத்தினர்.</p><p>

பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டதைத் தொடர்ந்து பல மாணவர்கள் சிதறி ஓடியதுடன், சிலர் காயமடைந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0003c8be-e11f-4586-a478-3eb634ab82c5/26-6a5e17228a7f6.webp' /></p><p>
</p><p>
மே மாதத்தில் தொடங்கப்பட்ட காக்ரோச் ஜனதா கட்சி (CJP), இந்தியாவின் கல்வி முறை, வேலைவாய்ப்பின்மை மற்றும் இளைஞர்களின் எதிர்காலம் தொடர்பான அதிருப்தியை மையமாகக் கொண்டு அண்மைக் காலங்களில் பெரும் ஆதரவைப் பெற்று வருகிறது.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/UlpTg2bKG2g" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p>

இந்தப் போராட்டம், CJP-க்கு ஆதரவாக 20 நாட்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த சமூக செயற்பாட்டாளர் சோனம் வாங்சுக் சனிக்கிழமை கட்டாயமாக மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டதைத் தொடர்ந்து மேலும் தீவிரமடைந்தது.
</p><p>
இதற்கிடையில், போராட்டத்துக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்றும், மத்திய டெல்லியின் சில பகுதிகளில் அமலில் இருந்த தடையுத்தரவை மீறுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் டெல்லி பொலிஸார் தெரிவித்தனர்.</p><p></p><h2>இணைய சேவைகள்&nbsp;நிறுத்தம்</h2><p>
</p><p>
அரசு தரப்புடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக CJP-யின் இரண்டு பிரதிநிதிகள் மூத்த அமைச்சரொருவரைச் சந்தித்து, தங்களது கோரிக்கைகள் அடங்கிய மனுவை கையளித்ததாக இயக்கம் தெரிவித்துள்ளது.
</p><p>
இதனிடையே, போராட்டத்தை ஒட்டி மத்திய டெல்லியின் சில பகுதிகளில் இணைய சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/280812eb-bac0-4151-b311-a89f5e49cd8f/26-6a5e17236e89d.webp' /></p><p>
</p><p>
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் பதவி விலகலை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பியதுடன், மாணவர்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர்.</p><p>போராட்டம் மிகத் தீவிரமடைந்து, மாணவர்கள் நாடாளுமன்றத்தின் பிரதான நுழைவு வாயில்களை நெருங்கியதை அடுத்து, நாடாளுமன்றம் மற்றும் குடியரசுத் தலைவர் மாளிகையின் அனைத்து பாதுகாப்புக் கதவுகளும் அவசரமாக மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டன.</p><p> பாதுகாப்பு காரணங்களுக்காக நாடாளுமன்றத்திற்குள் இருந்த மூத்த அரசு அதிகாரிகள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.</p><p></p><h2>பிரதமர் மோடி</h2><p>
</p><p>
பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் மிக அருகில் திரண்டு முழக்கமிட்டுக் கொண்டிருந்த அதே நேரத்தில், பிரதமர் நரேந்திர மோடியின் வாகன அணிவகுப்பு, நாடாளுமன்ற வளாகத்தை விட்டு அவசரமாக வெளியேறியது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/965c1b5a-9c62-4311-b383-15f35286068f/26-6a5e17242a98f.webp' /></p><p>
பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக ராஜீவ் சவுக், ஜன்பத், படேல் சவுக், மத்திய செயலகம் உள்ளிட்ட 5 முக்கிய டெல்லி மெட்ரோ தொடருந்து&nbsp; நிலையங்களின் நுழைவு வாயில்களும் உடனடியாக மூடப்பட்டன.</p><p> நாடாளுமன்றத்தின் உள்ளேயும் எதிர்க்கட்சி எம்பிக்கள் நீட் முறைகேடு தொடர்பாக பிரதமர் மோடிக்கு எதிராக கடும் முழக்கங்களை எழுப்பியதால் அவையும் சிறிது நேரம் ஒத்திவைக்கப்பட்டது.

தற்போது நாடாளுமன்றப் பகுதி பலத்த ராணுவக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-20T14:40:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஸ்பெயின் - மொராக்கோ போட்டிகள்: ஹோட்டல் கட்டணத்தை உயர்த்தி பொருளாதாரத்தை வளர்க்கும் போர்த்துக்கல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/spain-morocco-matches-1784558076"></link>
            <id>https://tamilwin.com/article/spain-morocco-matches-1784558076</id>
            <summary type="text">ஸ்பெயின் - மொராக்கோ நாடுகளுடன் இணைந்து 2030ஆம் ஆண்டு FIFA உலகக்
கோப்பை கால்பந்து தொடரை நடத்தவுள்ள போர்த்துக்கல், அதற்குள் தனது நாட்டு
ஹோட்டல்களின் ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஸ்பெயின் - மொராக்கோ நாடுகளுடன் இணைந்து 2030ஆம் ஆண்டு FIFA உலகக்
கோப்பை கால்பந்து தொடரை நடத்தவுள்ள போர்த்துக்கல், அதற்குள் தனது நாட்டு
ஹோட்டல்களின் படுக்கை வசதிகளை 60,000- ஆக உயர்த்த திட்டமிட்டுள்ளது.</p><p>

இது அந்நாட்டின் தற்போதைய மொத்த கொள்ளளவில் ஐந்தில் ஒரு பங்காகும் (20%) என்று
சுற்றுலாத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.</p><p></p><p>
</p><h2>

2030 -ல் உலகக் கிண்ணக் கால்பந்து&nbsp;</h2><p>

உலகக் கிண்ணக் கால்பந்து தொடரின் மூலம் கிடைக்கும் சர்வதேச கவனத்தைத் தன்
சுற்றுலாத்துறையின் நீண்டகால வளர்ச்சிக்காகப் பயன்படுத்த போர்த்துக்கல்
தீவிர முயற்சியில் இறங்கியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dc6a78e5-1b98-49c7-9fdd-b4c198343cce/26-6a5e3299ef3bf.webp' /></p><p> 

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) சுமார் 7% பங்களிப்பை வழங்கும்
சுற்றுலாத்துறை, இலட்சக்கணக்கான மக்களுக்கு வேலைவாய்ப்புகளையும் வழங்கியுள்ளது. </p><p>

2030 உலகக் கிண்ணத் தொடரை முன்னிட்டு, தொடருந்து சாலை, விமான நிலையங்கள்,
விளையாட்டு மைதானங்கள் மற்றும் இதர நகர்ப்புற உள்கட்டமைப்புகளை மேம்படுத்த
போர்த்துக்கல் அரசு 190 பில்லியன் திர்ஹம்களை (சுமார் 20 பில்லியன் டொலர்)
முதலீடு செய்துள்ளது. </p><h2>

நாட்டு வருமானத்தை பல மடங்கு உயர்த்த நடவடிக்கை</h2><p>
கடந்த நான்கு ஆண்டுகளில் 45,000 படுக்கை வசதிகளைக் கூட்டி, தற்போது
போர்த்துக்கல்லில் 3,00,000க்கும் அதிகமான ஹோட்டல் படுக்கை வசதிகள் உள்ளன.

கடந்த ஆண்டு கிட்டத்தட்ட 20 மில்லியன் (2 கோடி) சுற்றுலாப் பயணிகளை ஈர்த்து
ஐரோப்பாவின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக போர்த்துக்கல் பார்க்கப்படுகின்றது. </p><p> இதனை 2030க்குள் 26 மில்லியனாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bcca988f-bbef-4577-ac23-d844f745ccc5/26-6a5e329ac07b1.webp' /></p><p>
</p><p>
மேலும், சுற்றுலாத்துறை மூலமான வருவாய் 2025ஆம் ஆண்டு, 138 பில்லியன் திர்ஹம்களாக
இருந்த நிலையில், 2027ஆம் ஆண்டில் அதனை சாதனை அளவாக 161 பில்லியன் திர்ஹம்களை எட்டும் என அந்நாட்டின் மத்திய வங்கி கணித்துள்ளது.</p><p>

சீனா, அமெரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுடனான விமானப் போக்குவரத்தை
அதிகரிப்பதன் மூலம் அடுத்தகட்ட வளர்ச்சியை எட்ட போர்த்துக்கல்
திட்டமிட்டுள்ளது.</p><p>

மேலும், பாரம்பரிய சுற்றுலாத் தலங்களைத் தாண்டி, வரலாற்றுச் சிறப்புமிக்க பிற
நகரங்களையும் கலாச்சாரம் மற்றும் வணிகப் பயணங்களுக்கான முக்கிய மையமாக மாற்ற புதிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-20T14:37:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[பூச நட்சத்திரத்தில் உதித்த சூரியன்.., பணக்காரராக மாறப்போகும் 3 ராசிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/3-zodiac-get-money-due-to-sun-transit-1784550885"></link>
            <id>https://news.lankasri.com/article/3-zodiac-get-money-due-to-sun-transit-1784550885</id>
            <summary type="text">நவகிரகங்களில் சூரியன் மகிழ்ச்சி, செழிப்பு, புத்திசாலித்தனம், அறிவாற்றல் ஆகியவற்றின் காரணி கிரகமாக பார்க்கப்படுகிறார்.

ஜூலை மாதத்தில் சூரியன் தனது ர...</summary>
            <content type="html"><![CDATA[<p>நவகிரகங்களில் சூரியன் மகிழ்ச்சி, செழிப்பு, புத்திசாலித்தனம், அறிவாற்றல் ஆகியவற்றின் காரணி கிரகமாக பார்க்கப்படுகிறார்.</p><p>

ஜூலை மாதத்தில் சூரியன் தனது ராசியை மாற்றியுள்ள அதே நேரத்தில் ஜூலை 20ஆம் திகதியான இன்று தனது நட்சத்திரத்தை மாற்றியுள்ளார்.</p><p>

இந்நிலையில், ஜூலை 20ஆம் திகதியான இன்று சூரியன் பூச நட்சத்திரத்திற்குள் நுழைந்துள்ளார். </p><p>

அந்தவகையில், சூரியன் பூச நட்சத்திரத்திற்கு சென்றதால் குறிப்பிட்ட 3 ராசிகள் பணயோகத்தை பெறப்போகின்றனர்.</p><p></p><h2>கடகம் </h2><ul><li>

முடிவெடுக்கும் திறன் மேம்படும். </li><li>
தொழில் வாழ்க்கையில் அங்கீகாரமும் கிடைக்கும்.</li><li> 
தொழில் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.
</li><li>வேலையில் பல புதிய வாய்ப்புகள் தேடி வரும்.
</li><li>பணியிடத்தில் பெரிய பொறுப்பு கிடைக்கும்.</li><li> 
வேலையில் திருப்தி அடைவீர்கள்.
</li><li>வணிகர்களுக்கு ஒப்பந்தங்களிலிருந்து வருமானம் கிடைக்கும். </li><li>
நிதி நிலைமை நிலையானதாக இருக்கும்.</li><li> 
வருமானத்தில் முன்னேற்றம் உண்டாகும்.</li></ul><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6e6e0806-81b9-405a-8e25-b491ac574a63/26-6a5e1760077e6.webp' /></p><p>
</p><h2>துலாம் </h2><ul><li>

நற்பெயருக்குச் சாதகமாக அமையும்.</li><li>
பதவி உயர்வுகள் கிடைக்கக்கூடும். </li><li>
செயல்திறன் மேலதிகாரிகளை கவரக்கூடும். </li><li>
வாழ்க்கையில் பல மகிழ்ச்சியான மாற்றங்களை தரும். </li><li>
வாழ்க்கையில் பெரிய வெற்றியைப் பெறுவார்கள்.</li><li>
பல்வேறு ஒப்பந்தங்களிலிருந்து லாபம் கிடைக்கும். </li><li>
முதலீடுகளிலிருந்து வருமானம் கிடைக்கும். </li><li>
குடும்பத்தில் நல்லிணக்கம் நிலவும்.
</li><li>வாழ்க்கை துணையுடன் நேரத்தை செலவிட முடியும்.</li></ul><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b4f33309-2dab-4edb-bc6b-4514421b1629/26-6a5e1760baedf.webp' /></p><h2>மீனம்</h2><ul><li> 

நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடியும். </li><li>
அவர்களின் சமூக அந்தஸ்து அதிகரிக்கும்.</li><li> 
புதிய வருமான ஆதாரங்கள் திறக்கும்.
</li><li>பொருளாதார நிலை பல மடங்கு அதிகரிக்கும். </li><li>
 காதல் மற்றும் திருமண வாழ்க்கை அருமையாக இருக்கும்.</li><li> 
குழந்தைகள் படிப்பில் முன்னேற்றம் அடைவார்கள்.
</li><li>குறிப்பிடத்தக்க சாதனைகளை செய்வார்கள்.
</li><li>பல்வேறு ஒப்பந்தங்கள் மூலம் லாபம் கிடைக்கும். </li><li>
வாழ்க்கையில் சிறப்பான பலன்களை அளிக்கும்.</li></ul><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/61ca564b-7a84-412b-84cb-b2d0aa846b1e/26-6a5e1761676ca.webp' /></p><p>இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p>
&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-20T14:30:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பேய் வீட்டில் ஒரு இரவு தங்கினால் 52 ஆயிரம் சம்பளம்; எங்கே தெரியுமா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/japanese-pay-52-000-spend-night-haunted-house-1784551337"></link>
            <id>https://jvpnews.com/article/japanese-pay-52-000-spend-night-haunted-house-1784551337</id>
            <summary type="text">&amp;nbsp; ஜப்பானில் யாரும் தங்காத வீடுகளை விற்பதற்காக அந்த வீடுகளில் ஓர் இரவு மட்டும் தங்கினால் 52 ஆயிரம் சம்பளமாக வழங்குவதாக அறிவித்துள்ளதாக சர்வதேச தகவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; ஜப்பானில் யாரும் தங்காத வீடுகளை விற்பதற்காக அந்த வீடுகளில் ஓர் இரவு மட்டும் தங்கினால் 52 ஆயிரம் சம்பளமாக வழங்குவதாக அறிவித்துள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
</p><p>

ஜப்பான் நாட்டில் பல வீடுகள் குறிப்பாக கிராமப்புறங்களில் கட்டப்படும் பல வீடுகள் யாரும் குடியிருக்காமல் அப்படியே கைவிடப்பட்டு வருகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2fb8d0e1-58a9-4fbf-b41e-fd8a9b8cd9a1/26-6a5e17aa9a832.webp' /></p><h2>&nbsp;வயதானவர்கள்&nbsp; &nbsp;தனியாகவே&nbsp; வசிக்கிறார்கள்</h2><p> </p><p>

அதற்கு காரணம் தாய் தந்தை இறந்ததும் அவர்களின் மகன்கள் வேலை வாய்ப்புக்காகவும், தொழிலுக்காகவும் கிராமத்தை விட்டு வெளியேறி நகர பகுதிகளுக்கு சென்று விடுகிறார்கள்.
</p><p>
ஒருபக்கம் ஜப்பானில் வயதானவர்கள் அதிக வருடங்கள் தனியாகவே வீட்டில் வசிக்கிறார்கள்.</p><p></p><p>அவர்கள் இறப்புக்கு பின்னரும் பல வீடுகள் கைவிடப்படுகிறது.

அப்படிப்பட்ட வீடுகளில் பேய்கள் வசிப்பதாகவும் ஜப்பானியர்கள் நம்புகிறார்கள். ஒருபக்கம், ஜப்பானில் ஒரு வீடு வாடகைக்கு விடுவதோ அல்லது விற்பதோ சுலபமில்லை.</p><p> அங்கே நிறைய விதிமுறைககளை பின்பற்றவேண்டும். மேலும், அதிக வரி செலுத்த வேண்டும். இதனாலே பலரும் வீட்டை அப்படியே விட்டுவிடுகிறார்கள்..

இந்நிலையில்தான், ஜப்பானில் வீடுகளை விற்பதற்கு வீட்டின் சொந்தக்காரர்கள் ஒரு புதிய ஐடியாவை கண்டுபிடித்துள்ளனர்.</p><p></p><p> </p><p>வீட்டில் தனியாக இருப்பவர்கள் இறப்பது, தீ விபத்து, தற்கொலை செய்து கொள்வது போன்ற காரணங்களால் பல வருடங்களாக யாரும் தங்காத வீடுகளை விற்பதற்காக அந்த வீடுகளில் ஓர் இரவு மட்டும் தங்கினால் 52 ஆயிரம் சம்பளமாக வழங்குவதாக அறிவித்திருக்கிறார்கள்.</p><p> 
அப்படி தங்கவைத்தால் அந்த வீட்டை வாங்க முன்வருவார்கள் என ஜப்பானியர்கள்&nbsp; நம்புகிறார்கள்.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-20T14:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெள்ளை நிற ஆடையில் அசத்தலான போட்டோஷூட்.. நடிகை காஜல் அகர்வால் வெளியிட்ட புகைப்படங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/kajal-aggarwal-latest-white-dress-photoshoot-1784540538"></link>
            <id>https://viduppu.com/article/kajal-aggarwal-latest-white-dress-photoshoot-1784540538</id>
            <summary type="text">இந்திய அளவில் பிரபலமான நட்சத்திரங்களில் ஒருவர் காஜல் அகர்வால். இவர் திருமணத்திற்கு பின் முன்பு போல் தொடர்ந்து படங்களில் நடிக்காமல், சில கதைகளை மட்டுமே...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்திய அளவில் பிரபலமான நட்சத்திரங்களில் ஒருவர் காஜல் அகர்வால். இவர் திருமணத்திற்கு பின் முன்பு போல் தொடர்ந்து படங்களில் நடிக்காமல், சில கதைகளை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
</p><p>
அடுத்ததாக இவர் நடிப்பில் ராமாயணா திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் இராவணனின் மனைவி மண்டோதரி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.</p><p> </p><p>இதை தவிர்த்து பாலகிருஷ்ணாவின் புதிய படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் பிரபலம் ஆவார். இவர் வெளியிடும் போட்டோஷூட் புகைப்படங்கள் ரசிகர்களிடையே பெரும் கவனத்தை ஈர்க்கும்.</p><p> 

அந்த வகையில், தற்போது வெள்ளை நிற ஆடையில் எடுத்துக்கொண்ட அழகிய போட்டோஷூட் புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் நடிகை காஜல் பதிவிட்டுள்ளார். </p><p>

இதோ பாருங்க:</p>]]></content>
            <updated>2026-07-20T14:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜனாதிபதி ஜெலென்ஸ்கிக்கு உறுதியான ஆதரவு தொடரும்: பர்ன்ஹாம் உறுதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/zelenskyy-support-burnham-confirmed-1784556610"></link>
            <id>https://tamilwin.com/article/zelenskyy-support-burnham-confirmed-1784556610</id>
            <summary type="text">உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கிக்கு தாம் &quot;துணையாக இருப்பேன்&quot;
என்றும், தனது பிரதமரின் கீழ் உக்ரைனுக்கான பிரித்தானியாவின் ஆதரவு &quot;உறுதியாக&quot;
தொடர...</summary>
            <content type="html"><![CDATA[<p>உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கிக்கு தாம் "துணையாக இருப்பேன்"
என்றும், தனது பிரதமரின் கீழ் உக்ரைனுக்கான பிரித்தானியாவின் ஆதரவு "உறுதியாக"
தொடரும் என்றும் பர்ன்ஹாம் தெரிவித்துள்ளார்.</p><p>

பதவியேற்ற பிறகு தாம் பேசவிருக்கும் முதல் சில வெளிநாட்டுத் தலைவர்களில்
ஜனாதிபதி ஸெலென்ஸ்கியும் ஒருவராக இருப்பார் என்று அவர் கூறினார்.
</p><p>
மேலும், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உடனும் ஆரம்பத்திலேயே தொலைபேசி
வாயிலாக உரையாட உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>ஆதரவு</h2><p>
</p><p>
"இவைதான் எனது முதல் அழைப்புகளாக இருக்கும். பிரித்தானியாவின் கொள்கையில் எந்த
மாற்றமும் இல்லை என்பதை இன்று பிற்பகுதியில் ஜனாதிபதி ஸெலென்ஸ்கியிடம் நான்
மிகத் தெளிவாகத் தெரிவிப்பேன்," என்று அவர் கூறினார்.
</p><p>
அவர் மேலும் பேசுகையில், "கீர் ஸ்டார்மர் உக்ரைனை ஆதரித்ததுடன் மட்டுமின்றி,
தனிப்பட்ட முறையிலும் துணையாக நின்று ஒரு நம்பமுடியாத பணியைச் செய்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/92d4a496-4caa-46b3-953f-f36f92aaf54b/26-6a5e2d7a1d346.webp' /></p><p>
</p><p>அவரைப் போலவே நானும் 100 சதவீதம் ஸெலென்ஸ்கிக்கு துணையாக இருப்பேன்.

அரசாங்கத்தில் பர்ன்ஹாமிற்கு வெளியுறவுக் கொள்கை சார்ந்த அனுபவம் குறைவாகவே
உள்ளது. </p><p>இருப்பினும், தாம் கிரேட்டர் மான்செஸ்டர் பகுதியை நிர்வகித்தபோது,
உக்ரைனிய மேயர்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-20T14:27:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீர்கொழும்பு சிறைச்சாலை வெடித்த மோதல்: நீதி அமைச்சர் மீது அதிருப்தி தெரிவித்த எதிர்க்கட்சிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/motion-against-the-minister-of-justice-1784552940"></link>
            <id>https://tamilwin.com/article/motion-against-the-minister-of-justice-1784552940</id>
            <summary type="text">

நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை நாளை(21.07.2026) செவ்வாய்க்கிழமை சபாநாயகரிடம் கைய...</summary>
            <content type="html"><![CDATA[<p>

நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை நாளை(21.07.2026) செவ்வாய்க்கிழமை சபாநாயகரிடம் கையளிக்க ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது. </p><p>


நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற கலவரம் மற்றும் அதன் தொடர்ச்சியான சம்பவங்களை மையப்படுத்தியே இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை முன்வைக்கப்படவுள்ளது.</p><p></p><h2> 

நம்பிக்கையில்லாப் பிரேரணை</h2><p>

இந்தச் சம்பவம் தொடர்பில் அரசு பொறுப்புடன் செயற்படவில்லை என்றும், நீதி அமைச்சரின் நடவடிக்கைகள் திருப்தியற்றவை என்றும் ஐக்கிய மக்கள் சக்தி குற்றம் சாட்டியுள்ளது. 

ஜூலை மாதத்துக்கான நாடாளுமன்ற அமர்வுகள் நாளை(21) முதல் எதிர்வரும் வெள்ளிக்கிழமை(24) வரை நடைபெறவுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2000c247-18a8-4631-84a0-8eda97c74508/26-6a5e2f0f2ec6e.webp' /></p><p>
</p><p>
இந்த நிலையில், நாளை பிரேரணையைச் சபாநாயகரிடம் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும், ஏதேனும் தவிர்க்க முடியாத காரணங்களால் நாளை கையளிக்க முடியாவிட்டால், இந்த நாடாளுமன்ற வாரத்துக்குள்ளேயே நிச்சயம் கையளிக்கப்படும் என்றும் ஐக்கிய மக்கள் சக்தி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இந்த விடயத்தை அவசரமானதாகக் கருதி, நாடாளுமன்றத்தில் விரைவாக விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளுமாறு சபாநாயகரை வலியுறுத்தவும் ஐக்கிய மக்கள் சக்தி திட்டமிட்டுள்ளது.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-20T14:22:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[படிப்பில் தங்கப்பதக்கம் வென்றும் அரசு வேலை கிடைக்கவில்லை - விபரீத முடிவெடுத்த இளைஞர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/gold-medalist-end-his-life-fails-to-get-govt-job-1784556993"></link>
            <id>https://news.lankasri.com/article/gold-medalist-end-his-life-fails-to-get-govt-job-1784556993</id>
            <summary type="text">பட்டப்படிப்பில் தங்கப்பதக்கம் வென்றும் அரசுவேலை கிடைக்காத விரக்தியில் இளைஞர் உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.&amp;nbsp;படிப்பில் தங்கப்பதக்கம்உத்தரப்பிரதேசம்...</summary>
            <content type="html"><![CDATA[<p>பட்டப்படிப்பில் தங்கப்பதக்கம் வென்றும் அரசுவேலை கிடைக்காத விரக்தியில் இளைஞர் உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.&nbsp;</p><h3>படிப்பில் தங்கப்பதக்கம்</h3><p>உத்தரப்பிரதேசம் மாநிலம் கான்பூரின் குஜைனி பகுதியில் வசித்து வந்தவர் 23 வயது பொறியியல் பட்டதாரியான ஆனந்த் குமார்.
</p><p>
2024 ஆம் ஆண்டு கான்பூரில் உள்ள பிரான்வீர் சிங் தொழில்நுட்பக் கல்லூரி (PSIT) என்ற தனியார் பொறியியல் கல்லூரியில் பிடெக் (மின் பொறியியல்) படிப்பில் முதலிடம் பிடித்ததுடன், மாநில அளவில் மூன்றாவது இடத்தையும் பெற்றிருந்தார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c59af7b2-5ade-408e-b080-60a3d5f2a4ab/26-6a5e2dc31d20e.webp' /></p><p>

இதற்காக உத்தரப்பிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேலிடம் தங்கப் பதக்கம் பெற்றார். </p><p>

இதனையடுத்து அரசுவேலைக்கு முயற்சித்த அவர், வேலை கிடைக்காத விரக்தியில் உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.&nbsp;</p><p></p><p> 

ஆனந்த் குமாரின் குடும்பத்தினர் அவருடைய மூத்த சகோதரரின் திருமணத்தை உறுதி செய்வதற்காக பீகாரில் உள்ள தங்களது சொந்த ஊருக்குச் சென்றுள்ளனர்.&nbsp;</p><h3>கைப்பற்றப்பட்ட கடிதம்&nbsp;&nbsp;</h3><p>

இந்த நேரத்தில், ஆனந்த் குமார் கான்பூரின் குஜைனி பகுதியில் உள்ள தங்களது 3 மாடி வீட்டில் மின்விசிறியில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.</p><p>

கதவைத் திரும்பத் திரும்பத் தட்டியும் பதில் வராததால், வீட்டுப் பணிப்பெண் அக்கம்பக்கத்தினருக்கும் காவல்துறைக்கும் தகவல் அளித்ததை அடுத்து, காவல்துறையினர் கதவை உடைத்து சடலத்தை மீட்டுள்ளனர். </p><p>

அறையில் கைப்பற்றப்பட்ட கடிதத்தில், "மன்னித்துவிடுங்கள் அப்பா, நான் அரசு வேலை பெறுவதற்காக கிட்டத்தட்ட 50 முறை முயற்சி செய்தும் என்னால் வெற்றி பெற முடியவில்லை. தயவுசெய்து என்னை மன்னித்துவிடுங்கள்" என குறிப்பிட்டுள்ளார். </p><p>

இது குறித்து பேசிய சிவில் இன்ஜினியரிங் மற்றும் உள்கட்டமைப்பு நிறுவனத்தின் ஓய்வுபெற்ற ஊழியரான ஆனந்த் குமாரின் தந்தை ராஜ்குமார், "போட்டித் தேர்வுகளுக்குத் தயாராவதற்கு முன்பு, பட்டப்படிப்புக்குப் பின் பவர் கிரிட் நிறுவனத்தில் ஓராண்டு தொழிற்பயிற்சியை முடித்திருந்தார். </p><p>

 ரயில்வே, பணியாளர் தேர்வு ஆணையம் (SSC), வங்கிகள் மற்றும் கல்வித் துறை நடத்திய ஆட்சேர்ப்புத் தேர்வுகளில் அவர் கலந்துகொண்டும் வெற்றி பெற முடியவில்லை. கடந்த பல மாதங்களாக அவர் கடுமையான மன அழுத்தத்தில் இருந்து வந்தார்," என்று தெரிவித்துள்ளார்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-20T14:16:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அடுத்தடுத்து வெளியாகும் ஊழல் குற்றச்சாட்டுகள்... மகிந்த தரப்பிலிருந்து NPP-க்கு ஆதரவு..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/support-for-npp-from-mahinda-s-side-1784556246"></link>
            <id>https://tamilwin.com/article/support-for-npp-from-mahinda-s-side-1784556246</id>
            <summary type="text">இலங்கையில் தற்போது சுதந்திரமாக நடமாடுகின்றோம் என்றால் அதற்கான வேலைகளை செய்தவர் மகிந்த ராஜபக்ச என்றும், தற்போது நாட்டு மக்கள் நிம்மதியாக இருக்கிறார்கள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் தற்போது சுதந்திரமாக நடமாடுகின்றோம் என்றால் அதற்கான வேலைகளை செய்தவர் மகிந்த ராஜபக்ச என்றும், தற்போது நாட்டு மக்கள் நிம்மதியாக இருக்கிறார்கள் என்றால் அதற்கு காரணம் அநுர என்றும் அக்குறணை பிரதேசம் அரசியல் செயற்பாட்டாளர் ரியாஷ் அகமர் தெரிவித்துள்ளார். </p><p>


லங்காசிறி ஊடகம் வழங்கும் நேருக்கு நேர் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p> </p><p>

அவர் மேலும் தெரிவிக்கையில்,</p><p> 

நான் மகிந்தவுடன் இணைந்து அரசியல் செய் வந்த பொழுது, எனக்கு சரியானதொரு வாய்ப்பு வழங்கப்படாமல் ஏமாற்றமே கிடைத்தது. </p><p> ஆகையால் மக்களுக்கு சேவை செய்வதற்காக தற்போது தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துடன் இணைந்துள்ளேன்.

இலங்கை நாட்டில் தற்போது மக்கள் சுதந்திரமாக நடமாடுகிறார்கள் என்றால் அதற்கு காரணம் மகிந்த தான்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/82389b91-e09d-4dae-bee0-fe922168d538/26-6a5e2c00aa07d.webp' /></p><p> </p><p>அதே போன்று, அப்போதைய ஆட்சிகளில் நடந்த ஊழல் குற்றங்களை வெளிச்சம் போட்டு காட்டியவர் என்றால் அது அநுர தான். 

நல்லாட்சி அரசாங்கம் எனக் கூறும் பொழுது, மக்களுக்கு தேவையான அனைத்தையும் கலவரம் இல்லாமல் அநுர குமார திஸாநாயக்க செய்துக் கொண்டிருக்கிறார். </p><p>அவருக்கு ஆதரவு வழங்க வேண்டும் என்று தான் நானும் நினைக்கின்றேன்.

ஒன்றும் இல்லாத அரசியல்வாதிகளை பற்றி நான் பேச விரும்பவில்லை. ராஜபக்சர்கள் ஆட்சிக் காலங்களில் ஊழல்வாதிகள் என்ற பெயரில் ஒரு சிலரே அகப்பட்டார்கள் என்றார்.&nbsp; &nbsp; &nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/K6TyCteP91w" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-20T14:09:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[செம்மணியில் இன்று சிசு உட்பட சிறுவர்களின் என்புக்கூடுகள் கண்டுபிடிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/chemmani-mass-graves-jaffna-1784554935"></link>
            <id>https://ibctamil.com/article/chemmani-mass-graves-jaffna-1784554935</id>
            <summary type="text">செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 38ஆம் நாள் அகழ்வு பணிகள்
இன்றைய தினம் திங்கட்கிழமை நடைபெற்றவேளை சிசுவின் என்புக்கூடு ஒன்று கண்டுபிடிக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 38ஆம் நாள் அகழ்வு பணிகள்
இன்றைய தினம் திங்கட்கிழமை நடைபெற்றவேளை சிசுவின் என்புக்கூடு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
</p><p>
செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை 56 நாட்கள்
முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், 38ஆவது நாளான இன்றைய தினம்
திங்கட்கிழமை புதிதாக சிறுவர்கள் இருவருடைய என்புக்கூடுகள் உட்பட 08 என்பு
கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.</p><h2>உட்கார்ந்த நிலையில் காணப்பட்ட என்புக்கூடு</h2><p>&nbsp;ஏற்கனவே அடையாளம் காணப்பட்டதில் 06 என்புக்கூடுகள் அகழ்ந்து
எடுக்கப்பட்டுள்ளன.

நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை உட்கார்ந்த நிலையில் காணப்பட்ட என்புக்கூட்டினை
சுத்தம் செய்யும் பணிகள் இன்றைய தினமும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d52100dd-c399-49e1-b4f6-6f9510564d26/26-6a5e2b957be0a.webp' /></p><p>
</p><p>
அதவேளை பெரிய என்புக்கூட்டிற்கு அருகில் சிறிய என்புக்கூடு அடையாளம் காணப்பட்ட
நிலையில், அதன் கீழிருந்து மேலும் ஒரு சிசுவின் என்புக்கூடும் அடையாளம்
காணப்பட்டுள்ளது.
</p><p>
அதன் அடிப்படையில் செம்மணி புதைகுழியில் முதலாம் இரண்டாம் மற்றும் மூன்றாம்
கட்டம் என இதுவரையில் 92 நாட்கள் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் ,
454 என்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் 440 என்பு கூடுகள் முற்றாக
அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன&nbsp; &nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-20T14:07:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[2027 உலகக் கிண்ணம் இலக்கு: ஓய்வு குறித்த வதந்திகளுக்கு ரோஹித் சர்மா முற்றுப்புள்ளி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/2027-world-cup-rohit-sharma-retirement-rumors-1784555095"></link>
            <id>https://tamilwin.com/article/2027-world-cup-rohit-sharma-retirement-rumors-1784555095</id>
            <summary type="text">தனது சர்வதேச கிரிக்கெட் எதிர்காலம் குறித்து எழுந்துள்ள வதந்திகளை மறுத்துள்ள
முன்னாள் இந்திய அணி தலைவர் ரோஹித் சர்மா, நாட்டுக்காக விளையாடி அணியின்
வெ...</summary>
            <content type="html"><![CDATA[<p>தனது சர்வதேச கிரிக்கெட் எதிர்காலம் குறித்து எழுந்துள்ள வதந்திகளை மறுத்துள்ள
முன்னாள் இந்திய அணி தலைவர் ரோஹித் சர்மா, நாட்டுக்காக விளையாடி அணியின்
வெற்றிக்கு பங்களிப்பது மட்டுமே தற்போது தனது ஒரே குறிக்கோள் என்று
தெரிவித்துள்ளார்.</p><p>

இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது மற்றும் இறுதி ஒருநாள் போட்டியில், ரோஹித்
சர்மா 110 பந்துகளில் 138 ஓட்டங்கள் விளாசினார்.</p><p></p><p>
</p><h2>ரோஹித் சர்மா</h2><p>
இந்த ஆட்டத்தில் இந்தியா தோல்வியடைந்த நிலையில், லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த
இப்போட்டி ரோஹித்தின் கடைசி சர்வதேச போட்டியாக இருக்கலாம் என்று பரவலாகப்
பேசப்பட்டது.
</p><p>
இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாகவே 39 வயதான ரோஹித் சர்மாவின் இந்த அறிக்கை
வெளியாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f6cc8a49-a07f-4eb3-9a50-c413736ffca9/26-6a5e2ae2e276f.webp' /></p><p>
தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே மற்றும் நமீபியா ஆகிய நாடுகள் இணைந்து நடத்தும்
2027 ஐசிசி உலகக் கிண்ணத் தொடரில் விளையாடத் திட்டமிட்டுள்ளதாக ரோஹித் ஏற்கனவே
பலமுறை தெரிவித்துள்ளார்.</p><p>

கடந்த 11 ஒருநாள் போட்டிகளில் சதம் அடிக்காமல் இருந்த ரோஹித்தின் ஃபார்ம்
குறித்து விமர்சனங்கள் எழுந்த நிலையில், இந்த சதம் அதற்கு முற்றுப்புள்ளி
வைத்துள்ளது.</p><p>

எனினும், இந்திய அணி நிர்வாகம் தொடர்ந்து அவருக்கு முழு ஆதரவை வழங்கி வருகிறது.</p><p></p><h2>இந்திய அணி</h2><p>

இதுகுறித்து பிசிசிஐ (BCCI) இணையதளத்திற்கு அளித்த நேர்காணலில் ரோஹித் சர்மா
கூறியிருப்பதாவது:
"பேட்டிங் செய்வது, களமிறங்கி விளையாடுவது, எனது நாட்டை மற்றும் அணியை
பிரதிநிதித்துவப்படுத்துவது மட்டுமே எனது வேலை.
</p><p>
கிரிக்கெட்டில் அறிமுகமான நாள் முதல் எனக்கு இதுதான் சொல்லிக்
கொடுக்கப்பட்டுள்ளது, அதைத்தான் நான் தொடர்ந்து செய்யப் போகிறேன்.

நான் அறிமுகமான காலத்தில் இருந்தே என்னைச் சுற்றி இந்த சலசலப்புகள் (Noise)
இருந்துகொண்டுதான் இருக்கின்றன.

நான் விளையாடும் வரை இது இருக்கத்தான் செய்யும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8fbecbff-de72-42c2-aaf1-a43e4e776cb9/26-6a5e2ae3ab1af.webp' /></p><p> </p><p>எனவே, இதைப் பற்றி நான்
கவலைப்படுவதில்லை. களத்தில் நான் என்ன செய்கிறேன், அணியின் வெற்றிக்கு
எப்படிப் பங்களிக்கிறேன் என்பது மட்டுமே முக்கியம்.

சலசலப்புகள் இருக்கட்டும், அது இல்லையென்றால் சுவாரஸ்யமே இருக்காது."
</p><p>இந்த போட்டியில் ரோஹித் சர்மாவின் சிறப்பான சதத்தையும் மீறி, இந்திய அணி
தோல்வியைத் தழுவி 2-1 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை இங்கிலாந்திடம் இழந்தது.

அடுத்ததாக, இந்திய அணி ஜிம்பாப்வேயில் நடைபெறவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட
டி20 தொடரில் பங்கேற்கிறது.
</p><p>
அதனைத் தொடர்ந்து, அடுத்த மாதம் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி
விளையாட உள்ளது.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-20T14:06:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஐரோப்பிய ஒன்றிய கதவுகள் திறப்பு: அமெரிக்கக் கனவை கைவிடும் இந்திய மாணவர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/indian-students-abandoning-american-dream-1784555597"></link>
            <id>https://tamilwin.com/article/indian-students-abandoning-american-dream-1784555597</id>
            <summary type="text">இந்திய மாணவர்களிடையே நீண்டகாலமாக இருந்து வந்த &#039;அமெரிக்கக் கனவு&#039; மெல்லக்
குறைந்து, தற்போது அவர்கள் ஐரோப்பிய நாடுகளை நோக்கித் தங்களின் கவனத்தைத்
திருப...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்திய மாணவர்களிடையே நீண்டகாலமாக இருந்து வந்த 'அமெரிக்கக் கனவு' மெல்லக்
குறைந்து, தற்போது அவர்கள் ஐரோப்பிய நாடுகளை நோக்கித் தங்களின் கவனத்தைத்
திருப்பத் தொடங்கியுள்ளனர்.</p><p>

அமெரிக்கா, கனடா, பிரித்தானியா போன்ற நாடுகள் விசா விதிமுறைகளைக்
கடுமையாக்கியுள்ள சூழலில், ஐரோப்பிய ஒன்றியம் (EU) இந்திய மாணவர்களுக்கான
புதிய கதவுகளைத் திறந்து வைத்துள்ளது.
</p><p>
சென்னை மற்றும் பெங்களூருவைச் சேர்ந்த கல்வி ஆலோசகர்கள் மற்றும் மாணவர்களின்
கூற்றுப்படி, அமெரிக்கா மற்றும் கனடாவை விட ஐரோப்பிய நாடுகளில் கல்விச் செலவு
50% முதல் 80% வரை குறைவாக இருப்பதுவே இதற்கு முக்கியக் காரணமாகும்.</p><p></p><h2>மாணவர்களுக்கான விசா</h2><p>

மேலும், அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பொறுப்பேற்ற பிறகு, வெளிநாட்டு
மாணவர்களுக்கான விசா கால அளவை அமெரிக்க அரசு அண்மையில் குறைத்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e78c25db-58fc-45b2-bfdc-62ca2f6aa52c/26-6a5e2aaf3c4a3.webp' /></p><p>

இதனால், இந்தியாவிலிருந்து கல்விக்காக வெளிநாடு செல்லும் மாணவர்களின்
எண்ணிக்கை 2023-ல் 9 இலட்சமாக இருந்த நிலையில், 2025-ல் 6 இலட்சமாகக்
குறைந்துள்ளது.
</p><p>
இந்த ஆண்டு ஜனவரியில் கையெழுத்தான இந்தியா - ஐரோப்பிய ஒன்றிய வர்த்தக
ஒப்பந்தம், இந்திய மாணவர்கள் மற்றும் திறமையாளர்கள் விசா பெறுவதை
எளிதாக்கியுள்ளது.</p><p></p><h2>ஐரோப்பிய ஒன்றியம்</h2><p> படிப்பை முடித்த பிறகு அங்கு வேலை செய்வதற்கான தெளிவான
வழிகளையும் இது உருவாக்கியுள்ளது.

முதியவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் ஏற்படும் தொழிலாளர்
பற்றாக்குறையை ஈடுகட்ட, ஐரோப்பிய ஒன்றியம் இந்தியத் திறமையாளர்களை வரவேற்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/af1f9a14-d5af-4bee-a5af-fb58812c4261/26-6a5e2aafe3ab7.webp' /></p><p>
</p><p>
கல்வி ஆலோசகர்களின் கணிப்புப்படி, அடுத்த 3 முதல் 5 ஆண்டுகளில்
இந்தியாவிலிருந்து ஐரோப்பாவிற்குச் செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை 60% முதல்
70% வரை உயரக்கூடும்.</p><p>

பொறியியல் படிப்புக்கு ஜெர்மனி, சிறந்த வாழ்க்கை முறைக்கு நெதர்லாந்து,
குறைந்த கட்டண ஆராய்ச்சிப் படிப்புகளுக்குப் போர்த்துக்கல் மற்றும்
முகாமைத்துவ படிப்புகளுக்குப் பிரான்ஸ் ஆகிய நாடுகளை இந்திய மாணவர்கள் அதிகம்
தேர்வு செய்கின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-20T14:03:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[செம்மணியில் இன்றும் 08 என்புக்கூடுகள் மீட்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/eight-more-skeletons-recovered-in-chemmani-today-1784552559"></link>
            <id>https://jvpnews.com/article/eight-more-skeletons-recovered-in-chemmani-today-1784552559</id>
            <summary type="text">&amp;nbsp; யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 38ஆம் நாள் அகழ்வு பணிகள் இன்றைய தினம் திங்கட்கிழமை நடைபெற்றது.
செம்மணி மனித புதைகுழி...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 38ஆம் நாள் அகழ்வு பணிகள் இன்றைய தினம் திங்கட்கிழமை நடைபெற்றது.
</p><p>செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை 56 நாட்கள் முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், 38ஆவது நாளான இன்றைய தினம் திங்கட்கிழமை புதிதாக சிறுவர்கள் இருவருடைய என்புக்கூடுகள் உட்பட 08 என்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/40581444-b574-4867-bed3-200f9f8a52a3/26-6a5e1c710ce16.webp' /></p><h2>என்புக்கூட்டினை சுத்தம் செய்யும் பணிகள்</h2><p>
</p><p>
அதேவேளை ஏற்கனவே அடையாளம் காணப்பட்டதில் 06 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை உட்கார்ந்த நிலையில் காணப்பட்ட என்புக்கூட்டினை சுத்தம் செய்யும் பணிகள் இன்றைய தினமும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><p></p><p>
</p><p>
அதவேளை பெரிய என்புக்கூட்டிற்கு அருகில் சிறிய என்புக்கூடு அடையாளம் காணப்பட்ட நிலையில், அதன் கீழிருந்து மேலும் ஒரு சிசுவின் என்புக்கூடும் அடையாளம் காணப்பட்டுள்ளது.</p><p></p><p>
</p><p>
அதன் அடிப்படையில் செம்மணி புதைகுழியில் முதலாம் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டம் என இதுவரையில் 92 நாட்கள் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் , 454 என்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் 440 என்பு கூடுகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன</p>]]></content>
            <updated>2026-07-20T14:00:00+00:00</updated>
        </entry>
    </feed>
