<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-08-14T15:23:26+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானியாவை அணு ஆயுதம் பெற்ற முதல் இஸ்லாமிய குடியரசு என விம்சித்த நெதன்யாகு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/netanyahu-calls-uk-first-nuclear-islamic-state-1786720585"></link>
            <id>https://news.lankasri.com/article/netanyahu-calls-uk-first-nuclear-islamic-state-1786720585</id>
            <summary type="text">Netanyahu calls UK First Nuclear Islamic State: பெஞ்சமின் நெதன்யாகு பிரித்தானியாவை கடுமையாக விமர்சித்துள்ளார்.

பிரித்தானிய இஸ்லாமிய குடியரசுஇஸ்ரேல்...</summary>
            <content type="html"><![CDATA[<p>Netanyahu calls UK First Nuclear Islamic State: பெஞ்சமின் நெதன்யாகு பிரித்தானியாவை கடுமையாக விமர்சித்துள்ளார்.</p><h2>

பிரித்தானிய இஸ்லாமிய குடியரசு</h2><p>இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, சமீபத்தில் அளித்த பேட்டியில், பிரித்தானியாவை “the Islamic republic of Britain” எனக் குறிப்பிட்டு, அது “அணு ஆயுதம் பெற்ற முதல் இஸ்லாமிய குடியரசு” என விவரித்துள்ளார்.</p><p>இஸ்ரேல்-பிரித்தானியா இடையிலான உறவுகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள சூழலில் நெதன்யாகு இந்த கருத்துகளை வெளியிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7197af56-50d0-4aaf-bb7b-2bc1abef3d02/26-6a7f314ada7ff.webp' /></p><p>
</p><h2>
விளைவுகள்</h2><p>புதிய பிரித்தானிய பிரதமர் ஆன்டி பர்னாம், காசா போரில் இஸ்ரேலின் நடவடிக்கைகளை விமர்சித்து, சட்டவிரோத குடியேற்றப் பொருட்கள் மீது தடைகள் விதிக்கலாம் என அறிவித்துள்ளார்.</p><p>

இஸ்லாமோபோபிக் பேச்சுகள் அதிகரிப்பதால், தங்கள் சமூகத்திற்கு எதிரான வெறுப்பு குற்றங்கள் அதிகரித்துள்ளதாக பிரித்தானியாவின் முஸ்லிம் தலைவர்கள் எச்சரித்துள்ளனர்.</p><p></p><p>இஸ்ரேல் எதிர்க்கட்சித் தலைவர்கள், “இஸ்ரேலின் முக்கிய கூட்டாளியை இழிவுபடுத்தும் வகையில் நெதன்யாகு பேசியிருப்பது, கடுமையான தூதரகத் தோல்வி” எனக் கண்டித்துள்ளனர்.</p><p>இந்த கருத்துகள், நெதன்யாகுவின் அரசியல் எதிர்காலத்தைப் பாதிக்கக்கூடியதாகவும், உலகளாவிய அளவில் இஸ்ரேலின் தனிமைப்படுத்தலை மேலும் தீவிரப்படுத்தக்கூடியதாகவும் பார்க்கப்படுகின்றன.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-14T15:14:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரான்ஸில் காட்டுத்தீயை ஏற்படுத்திய 474 பேர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/474-people-arrested-causing-wildfires-in-france-1786716642"></link>
            <id>https://ibctamil.com/article/474-people-arrested-causing-wildfires-in-france-1786716642</id>
            <summary type="text">பிரான்ஸில் கடந்த ஜூலை 1ஆம் திகதி முதல் காட்டுத்தீ ஏற்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் 474 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரான்ஸில் கடந்த ஜூலை 1ஆம் திகதி முதல் காட்டுத்தீ ஏற்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் 474 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p> 

வரலாறு காணாத வெப்ப அலையால் பிரான்ஸ் உள்ளிட்ட பல ஐரோப்பிய நாடுகள் கடுமையான காட்டுத்தீயை எதிர்கொண்டு வரும் நிலையில், இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p><p>

கைது செய்யப்பட்டவர்களில் 183 பேர் சிறார்கள் என பிரான்ஸ் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

கைது செய்யப்பட்டவர்களில் சுமார் 70 சதவீதம் பேர் திட்டமிட்டு காட்டுத்தீ ஏற்படுத்தியதாகவும், ஏனையோர் தற்செயலாக தீ ஏற்படக் காரணமாக இருந்ததாகவும் சந்தேகிக்கப்படுகின்றனர்.</p><p></p><h2>பிரான்ஸின் தென்மேற்கு பகுதி</h2><p> </p><p>

பிரான்ஸ் ஊடகங்களின் தகவலின்படி, ''ஜூலை மாதம் போர்டோ விமான நிலையத்திற்கு அருகே ஏற்பட்ட காட்டுத்தீ சம்பவம் தொடர்பாக 15 வயது சிறுவன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4ad473ad-c651-4478-834a-846531dc6467/26-6a7f21e533953.webp' /></p><p> </p><p>அந்தத் தீ விபத்தில் இரண்டு தீயணைப்பு வீரர்கள் உயிரிழந்திருந்தனர்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, பிரான்ஸின் தென்மேற்குப் பகுதியில் உள்ள லாண்டெஸ் (Landes) பிராந்தியத்தில் புதிய காட்டுத்தீ வேகமாகப் பரவியதைத் தொடர்ந்து, லுக்லோன் (Luglon) பகுதியில் 525க்கும் மேற்பட்ட மக்கள் வெள்ளிக்கிழமை வெளியேற்றப்பட்டுள்ளனர்.
</p><p>
இந்நிலையில் 24 மணி நேரத்திற்கும் குறைவான காலப்பகுதியில் சுமார் 1,100 ஹெக்டேர் (2,700 ஏக்கர்) அளவிலான வறண்ட பைன் காடு தீக்கிரையாகியுள்ளது என்றும் தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
மேலும் தீயைக் கட்டுப்படுத்த சுமார் 500 தீயணைப்பு வீரர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் எனவும் கூறப்படுகிறது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-14T15:10:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாட்டில் சிக்கிய முக்கிய குற்றவாளி - இலங்கைக்கு இழுத்துவர நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/shiran-basik-he-is-set-to-be-brought-sl-1786720066"></link>
            <id>https://jvpnews.com/article/shiran-basik-he-is-set-to-be-brought-sl-1786720066</id>
            <summary type="text">துபாயில் கைது செய்யப்பட்ட பிரபல போதைப்பொருள் கடத்தல்காரர் எனக் குற்றம் சாட்டப்பட்ட &quot;ஷிரான் பாசிக்&quot;, இன்று (14) நாட்டிற்கு அழைத்து வரப்பட உள்ளதாகத் தெர...</summary>
            <content type="html"><![CDATA[<p>துபாயில் கைது செய்யப்பட்ட பிரபல போதைப்பொருள் கடத்தல்காரர் எனக் குற்றம் சாட்டப்பட்ட "ஷிரான் பாசிக்", இன்று (14) நாட்டிற்கு அழைத்து வரப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>கடந்த மே 26 ஆம் திகதி ஷிரான் பாசிக் துபாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
</p><p>
ஈரானின் போதைப்பொருள் வலையமைப்புடன் அவருக்கு உள்ள நேரடித் தொடர்புகள் காரணமாக, அவர் அமெரிக்காவால் கூட தேடப்படும் நபராக உள்ளார் என்றும் கூறப்படுகிறது.</p><p></p><h2>மேலதிக விசாரணை</h2><p>
</p><p>நாட்டிற்கு போதைப்பொருட்களை விநியோகிக்கும் ஐந்து மிகப்பெரிய போதைப்பொருள் கடத்தல்காரர்களில் ஒருவராக ஷிரான் பாசிக் கருதப்படுகிறார்.</p><p></p><p>
</p><p>மேலும் குறித்த சந்தேகநபர் உள்ளூர் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மேலதிக விசாரணைகளுக்காக அவரை இலங்கைக்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.</p><p></p>]]></content>
            <updated>2026-08-14T15:08:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாட்டில் படுகொலை செய்யப்பட்ட இலங்கை இளைஞன் - தந்தை வெளிப்படுத்திய தகவல்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-lankan-boy-dies-in-japan-revealed-details-1786715325"></link>
            <id>https://tamilwin.com/article/sri-lankan-boy-dies-in-japan-revealed-details-1786715325</id>
            <summary type="text">ஜப்பானில் படுகொலை செய்யப்பட்ட தனது மகனுக்கு நீதி பெற்றுத் தருவதாக டோக்கியோவிலுள்ள இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளதாக உயிரிழந்த இளைஞனின் தந்தை தெரிவித்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜப்பானில் படுகொலை செய்யப்பட்ட தனது மகனுக்கு நீதி பெற்றுத் தருவதாக டோக்கியோவிலுள்ள இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளதாக உயிரிழந்த இளைஞனின் தந்தை தெரிவித்துள்ளார். </p><p>

மகனின் எதிர்பாராத மரணத்தால் குடும்பமே நிலைகுலைந்துள்ளதாக தந்தையான ஜே.ஏ. லயனல் சுசந்த ஜயகொடி தெரிவித்துள்ளார்.
</p><p>
வளமான எதிர்காலத்தை உருவாக்கும் நோக்கில் தனது மகன் ஜப்பான் சென்ற நிலையில், இப்படியான துயரம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.</p><p> </p><h2><b>

இலங்கை இளைஞன்&nbsp;கொலை</b></h2><p>கடந்த எட்டாம் திகதி ஜப்பானின் சிபா மாகாணத்தில் உள்ள நகரேயாமா நகரில் இடம்பெற்ற மோதலில் 21 வயதுடைய பிரவீன் இசுரு கொலை செய்யப்பட்டார். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/eacf8a83-3114-43cb-a824-61aead40c71c/26-6a7f2e4111491.webp' /></p><p>இது குறித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது, தந்தை இவ்வாறு தெரிவித்துள்ளார். </p><p>

வழமையாக தாய், தந்தையுடன் உரையாறும் பிரவீன் அன்றைய தினம் தொலைபேசி அழைப்பை எடுக்காத நிலையில் அவரை பெற்றோர் தேடியுள்ளனர்.</p><p> 

எனினும் மகனிடம் இருந்து எந்த பதிலும் கிடைக்காமையினால், தாய் மிகவும் கவலையடைந்தாக அவர் குறிப்பிட்டுள்ளார். </p><h3><b>

மற்றொரு இலங்கையர்&nbsp; கைது </b></h3><p>கடந்த 11 ஆம் திகதி பெருமளவில் எதிர்பார்த்திருந்தும் மகனிடமிருந்து அழைப்பு எதுவும் வரவில்லை. காலை 11:20 மணியளவில் பிரவீனின் கையடக்கத் தொலைபேசியிலிருந்து வந்த அழைப்பில் வேறு ஒருவரை உரையாடினார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/328b345c-5c83-45de-9145-cde65378e381/26-6a7f2e41dfa14.webp' /></p><p>வன்முறை சம்பவம் ஒன்றில் சிக்கிய பிரவீன் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறினார். அதனை நம்ப முடியவில்லை. ஒரு மணி நேரத்தின் பின்னர் அடுத்த அழைப்பில் பிரவீன் உயிரிழந்துவிட்டதாக குறிப்பிட்டுள்ளனர். </p><p>அந்த கணம் குடும்பம் அதிர்ச்சி அடைந்தது. அதிலிருந்து இன்னமும் மீளவில்லை என தந்தை வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.</p><p> 

ஜப்பானிய பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட ஆரம்ப விசாரணைகளில், சிபா மாகாணத்தின் நகரேயாமா நகரில் உள்ள வீடு ஒன்றில் இடம்பெற்ற இந்த கத்திக்குத்துச் சம்பவத்தினாலேயே பிரவீன் கொல்லப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. </p><p>

இந்த கொலை முயற்சி தொடர்பில் மற்றொரு இலங்கையர் ஜப்பானிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.</p>]]></content>
            <updated>2026-08-14T15:05:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[செம்மணி புதைகுழியில் 554 மனித எலும்புக்கூடுகள் அடையாளம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/554-human-skeletons-identified-chemmani-mass-grave-1786712960"></link>
            <id>https://jvpnews.com/article/554-human-skeletons-identified-chemmani-mass-grave-1786712960</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;இலங்கையில் மிக பெரிய மனித புதைகுழியான யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழியில் 554 மனித எலும்புக்கூடுகள் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளன.

...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;இலங்கையில் மிக பெரிய மனித புதைகுழியான யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழியில் 554 மனித எலும்புக்கூடுகள் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளன.
</p><p>
செம்மணி சித்துபாத்தி மனித புதைகுழி அகழ்வின் 52 வது நாளான இன்று (14) புதிதாக 2 மனித எலும்பு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 7 மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/80f01205-07bd-494b-a685-e1512da52309/26-6a7f1381d9524.webp' /></p><p></p><p>

யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்ற நீதிவான் எஸ். லெனின் குமார் முன்னிலையில் நடைபெற்ற அகழ்வு பணிகளில் இதுவரையில் 554மனித என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதில் அவற்றுள் 547 எலும்பு எச்சங்கள் துப்புரவாக்கப்பட்டு அடையாளம் இடப்பட்டு அகழ்ந்தெடுக்கப்பட்டு நீதிமன்றத்தின் கட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளன.</p><p></p><p>

2 குவியல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது. ஜி.பி.ஆர் பரிசோதனைகள் செய்யப்படாத 6 குழிகள் 1 மீற்றர் அகலமும் 1 மீற்றர் நீளமும் கொண்டவை தோண்டப்பட்ட தில், 3 குழிக்குள் மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-14T15:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[கரப்பான்பூச்சி இளைஞர்களை சாக்கடை தலைமுறைனு கூறல!! நடிகை கங்கனா விளக்கம்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/kangana-ranaut-i-am-not-criticizing-young-people-1786714391"></link>
            <id>https://viduppu.com/article/kangana-ranaut-i-am-not-criticizing-young-people-1786714391</id>
            <summary type="text">கங்கனா ரனாவத்பாலிவுட் நடிகையாகவும், பாராளுமன்ற உறுப்பினராக திகழ்ந்து வரும் நடிகை கங்கனா ரனாவத், டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் மற்றும் பெண...</summary>
            <content type="html"><![CDATA[<h2>கங்கனா ரனாவத்</h2><p>பாலிவுட் நடிகையாகவும், பாராளுமன்ற உறுப்பினராக திகழ்ந்து வரும் நடிகை கங்கனா ரனாவத், டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் மற்றும் பெண்களின் நடத்தை, ஆடைகள், மொழி, அவர்களை மேல்நாட்டு சிந்தனை கொண்ட 'சாக்கடை தலைமுறைகள்' என்று படுகேவலமாக விமர்சித்திருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7ffcbebf-b785-439d-87a8-e0b55ec32de5/26-6a7f1919bb159.webp' /></p><p> </p><p>இதற்கு பலரும் கங்கனாவை விமர்சித்த நிலையில், அதற்கான விளக்கத்தை கொடுத்துள்ளார். </p><p>இந்நிலையில் தான் அனைத்து இளைஞர்களையும், சாக்கடை தலைமுறை என்று விமர்சிக்கவில்லை என்றும் தங்களை கரப்பான்பூச்சி என்று கூறுபவர்கள் சாக்கடையில் வாழாமல் வேறு எங்கு வாழ்வார்கள் என்றும் கேள்வி எழுப்பியிருக்கிறார் கங்கனா.</p><p> மேலும் எல்லா இளைஞர்களும் சீரழிந்த நிலையில் இருப்பதாகவா நான் கூறினேன்? நான் குறிப்பிட்ட சில நபர்கள் அல்லது சில பெண்களைப் பற்றித்தான் குறிப்பிட்டேன் என்று கூறியிருக்கிறார் கங்கனா ரனாவத்.</p>]]></content>
            <updated>2026-08-14T14:45:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீதிக்கான ஓலம்: சர்வதேச விசாரணையை வலியுறுத்தி ஒன்றிணையும் தமிழர் தரப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/neethikkana-olam-porattam-1786714633"></link>
            <id>https://ibctamil.com/article/neethikkana-olam-porattam-1786714633</id>
            <summary type="text">கடந்த காலங்களில் இடம்பெற்ற படுகொலைகள், காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள்
மற்றும் ஏனைய மனித உரிமை மீறல்களுக்கு நீதியும் பொறுப்புக்கூறலும் கோரி, சர்வதேச
வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கடந்த காலங்களில் இடம்பெற்ற படுகொலைகள், காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள்
மற்றும் ஏனைய மனித உரிமை மீறல்களுக்கு நீதியும் பொறுப்புக்கூறலும் கோரி, சர்வதேச
விசாரணையை வலியுறுத்தி முன்னெடுக்கப்படும் நீதிக்கான ஓலம்” போராட்டம் இன்று
யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் ஆரம்பமானது.</p><p>

போராட்டத்தின் ஆரம்ப நிகழ்வில், யாழ். மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட
உறவுகளின் சங்கத் தலைவி சிவபாதம் இளங்கோதை பொதுச்சுடரை ஏற்றி வைத்தார்.
</p><p>இதனைத் தொடர்ந்து படுகொலை செய்யப்பட்டவர்களை நினைவுகூரும் வகையில் மலர்
மாலைகள் அணிவிக்கப்பட்டதுடன், மலர் வணக்கமும் இடம்பெற்றது.</p><p></p><h2>பல்வேறு படுகொலைச் சம்பவங்கள்</h2><p>

இதன்போது செம்மணி உள்ளிட்ட தமிழர் தாயகப் பகுதிகளில் இடம்பெற்றதாகக்
கூறப்படும் பல்வேறு படுகொலைச் சம்பவங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களை
நினைவுகூரும் வகையில் காட்சிப்படுத்தல்கள் இடம்பெற்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b2f01077-8210-4b48-8c65-0a4c6ef68569/26-6a7f1b334832f.webp' /></p><p> </p><p>கடந்த காலத்தில்
உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்ததுடன், அவர்களுக்கான நீதி இதுவரை முழுமையாக
கிடைக்கவில்லை என்ற வலியையும் போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள்
வெளிப்படுத்தினர்.
</p><p>
இதேவேளை, இந்த நீதிக்கான போராட்டத்தின் அடுத்த முக்கிய கட்டமாக எதிர்வரும்
17ஆம் திகதி யாழ்ப்பாணம் பொது நூலகத்திலிருந்து பேரணி ஆரம்பிக்கப்பட்டு,
ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகம் வரை சென்று மனு கையளிக்கப்படவுள்ளது.</p><p>தமிழர் தாயகத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் படுகொலைகள், காணாமல்
ஆக்கப்பட்டோர் தொடர்பான விவகாரம் மற்றும் நீண்டகாலமாக தீர்வு காணப்படாத மனித
உரிமை மீறல்கள் தொடர்பில் உள்நாட்டு பொறிமுறைகளுக்கு அப்பால், சுயாதீனமான
சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதே போராட்டத்தின் முக்கிய
கோரிக்கையாக முன்வைக்கப்படுகிறது.
</p><p>
நீதியைத் தேடும் இந்தப் பயணம் எந்தவொரு தனிப்பட்ட தரப்பினருக்கோ அல்லது
அமைப்புக்கோ மாத்திரம் உரித்தானதல்ல என வலியுறுத்தும் ஏற்பாட்டாளர்கள், தமிழ்
அரசியல் கட்சிகள், சிவில் சமூக அமைப்புகள், மதத் தலைவர்கள், தொழிற்சங்கங்கள்,
மாணவர் அமைப்புகள், சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைத்து
தரப்பினரும் வேறுபாடுகளை கடந்து ஒன்றிணைந்து இந்த நீதிக்கான பயணத்தில்
பங்கேற்குமாறு அழைப்பு விடுத்துள்ளனர்.</p><p></p><h2>பொறுப்புக்கூறலை வலியுறுத்தும் போராட்டம் </h2><p>நீதிக்கான ஓலம் என்பது கடந்த காலத்தை மட்டும் நினைவுகூரும் நிகழ்வல்ல;
உண்மையை வெளிக்கொண்டு வந்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்கச்
செய்வதற்கான தொடர்ச்சியான குரல் என ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c477f511-ec27-43ed-b19c-a43ba5c86a26/26-6a7f1b33f08eb.webp' /></p><p>
எனவே, காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் குடும்பங்கள் மற்றும் படுகொலைகளில்
பாதிக்கப்பட்ட குடும்பங்களுடன் தோளோடு தோள் நின்று, சர்வதேச விசாரணை, உண்மை,
நீதி மற்றும் பொறுப்புக்கூறலை வலியுறுத்தும் இந்தப் பயணத்தில் அனைத்து
தரப்பினரும் இணைந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. </p><p>செம்மணியில் எழுந்த நீதிக்கான குரல், எதிர்வரும் 17ஆம் திகதி யாழ்ப்பாணம்
பொது நூலகத்திலிருந்து ஐ.நா. அலுவலகம் வரை செல்லும் பேரணியில் மேலும்
வலுப்பெறவுள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-14T14:44:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானுக்குள் ஊடுருவிய அமெரிக்க ட்ரோன்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/american-mq9drone-intrudes-into-iran-1786718123"></link>
            <id>https://ibctamil.com/article/american-mq9drone-intrudes-into-iran-1786718123</id>
            <summary type="text">ஈரானின் ஹோர்மோஸ்கான் மாகாணத்தின் வான்பரப்பில் ஊடுருவிய அமெரிக்கத் தயாரிப்பான MQ-9 ரக ஆளில்லா விமானம் ஒன்று, அழிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானின் ஹோர்மோஸ்கான் மாகாணத்தின் வான்பரப்பில் ஊடுருவிய அமெரிக்கத் தயாரிப்பான MQ-9 ரக ஆளில்லா விமானம் ஒன்று, அழிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
</p><p>
ஐ.ஆர்.ஜி.சி வான்வெளி படையால் இயக்கப்படும் மேம்பட்ட வான் பாதுகாப்பு அமைப்பு மூலம் இடைமறிக்கப்பட்டு குறித்த ஆளில்லா விமானம் அழிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
கடந்த மாதம், தென்மேற்கு நகரமான அஹ்வாஸுக்கு மேல் பறந்த மற்றொரு அமெரிக்க MQ-9 ஆளில்லா விமானத்தை தனது விண்வெளிப் படை சுட்டு வீழ்த்தியதாக ஐ.ஆர்.ஜி.சி. முன்னதாக அறிவித்தது.</p><p></p><h2>ஈரானின் எதிர்ப்பு நடவடிக்கை</h2><p>
</p><p>
இந்நிலையில் ஈரானின் எதிர்ப்பு நடவடிக்கைகள் விரிவடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/88c5b566-ba3d-4830-b406-98aaf733fb7f/26-6a7f27adbe2d0.webp' /></p><p>

எனினும் இந்த செய்தி குறித்து அமெரிக்கா எந்த வித தகவலையும் இதுவரையில் வெளிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-14T14:36:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[தூங்குவதற்கு குற்ற உணர்ச்சி வேண்டாம்: மருத்துவர்கள் கூறும் முக்கிய தகவல்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/rest-is-not-laziness-it-is-how-your-body-recover-1786715194"></link>
            <id>https://manithan.com/article/rest-is-not-laziness-it-is-how-your-body-recover-1786715194</id>
            <summary type="text">Rest Is Not Laziness: தூங்குவதற்கு குற்ற உணர்ச்சி வேண்டாம்: பரபரப்பான நவீன வாழ்க்கை முறையில், ஏழு முதல் எட்டு மணி நேரம் தூங்குவதற்குக்கூட பலர் குற்ற உ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Rest Is Not Laziness: தூங்குவதற்கு குற்ற உணர்ச்சி வேண்டாம்: பரபரப்பான நவீன வாழ்க்கை முறையில், ஏழு முதல் எட்டு மணி நேரம் தூங்குவதற்குக்கூட பலர் குற்ற உணர்வுக்கு உள்ளாகின்றனர். </p><p>குறிப்பாக மாணவர்கள், பணிபுரிபவர்கள் மற்றும் குடும்பப் பொறுப்புகளைச் சுமப்பவர்கள், தூங்கி எழுந்தவுடன் அன்றைய வேலைகள், படிப்பு, இலக்குகள் என பலவற்றை நினைத்து மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a21b9ff3-53a4-44cf-b267-bde2360d23b8/26-6a7f26fb5537a.webp' /></p><p>ஆனால், தூக்கம் என்பது நேரத்தை வீணடிப்பதல்ல; உடலையும் மூளையையும் சீராக இயங்கச் செய்யும் அடிப்படைத் தேவையாகும் என்று மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர். </p><p>உடல் ஆரோக்கியம் மாத்திரமன்றி உள ஆரோக்க்கியதுக்கும் சீரான தூக்கம் இன்றியமையாது. தூக்கம் ஆடம்பரம் அல்ல; அது உயிர்வாழ்வதற்கும், உடல் மற்றும் மனநலத்தைப் பாதுகாப்பதற்கும் அவசியமான ஒன்றாகும்.</p><p></p><h2>போதுமான&nbsp; தூக்கம் ஏன் அவசியம்?&nbsp;</h2><p> போதுமான தூக்கம் கிடைக்கும்போது மூளையின் செயல்பாடுகள் சீராகி, நினைவாற்றல், கவனம், கற்றல் திறன், முடிவெடுக்கும் திறன் போன்றவை மேம்படுகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d9de30e1-9ff7-47d2-837f-4083b0cd9298/26-6a7f26fc0857f.webp' /></p><p>அதேபோல், உடலுக்கும் தேவையான ஓய்வு கிடைப்பதால் அடுத்த நாளை சுறுசுறுப்பாக எதிர்கொள்ள முடிகிறது.

எப்போதும் ஓய்வின்றி இயங்கிக்கொண்டிருப்பதையே வெற்றியின் அடையாளமாகவும், ஓய்வு எடுப்பதைச் சோம்பேறித்தனமாகவும் கருதுவது தவறான பார்வை என மருத்துவர்கள் கூறுகின்றனர்.</p><p> தொடர்ந்து வேலை செய்வதால் மட்டுமே அதிக உற்பத்தித்திறன் கிடைக்கும் என்பது உண்மையல்ல. உடலுக்கும் மூளைக்கும் தேவையான ஓய்வை வழங்குவது, அடுத்த நாள் சிறப்பாகச் செயல்படுவதற்கான முதலீடாகவே பார்க்கப்பட வேண்டும்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ae356492-499a-418d-b6d1-1ac0e367d330/26-6a7f26fcaccc8.webp' /></p><p>
மேலும், படுக்கைக்குச் செல்வதற்கு முன் மறுநாள் செய்ய வேண்டிய பணிகளை ஒரு பட்டியலாக எழுதிவைப்பது மனதில் ஓடும் எண்ணங்களையும் பதற்றத்தையும் குறைக்க உதவும். இதனால், “இதை மறந்துவிடக்கூடாது”, “நாளை இந்த வேலையை எப்படிச் செய்வது?” போன்ற எண்ணங்களுடன் படுக்கையில் புரண்டு கொண்டிருப்பதைத் தவிர்க்க முடியும்.
</p><p>
ஒவ்வொருவருக்கும் தூக்கத் தேவை ஒரே மாதிரியாக இருக்க வேண்டிய அவசியமில்லை. எனவே, மற்றவர்களின் சுறுசுறுப்பு அல்லது அவர்கள் தூங்கும் நேரத்தை நம்முடன் ஒப்பிடாமல், நமது உடலுக்கு உண்மையில் தேவையான ஓய்வை வழங்குவது முக்கியம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/60311eb1-15ed-4ea4-b540-b62f0dd6ee69/26-6a7f26fd5dd03.webp' /></p><p></p><p> </p><p>முக்கிமாக தூங்குவதற்காக குற்ற உணர்வு கொள்ள வேண்டிய அவசியமில்லை.

மூச்சுவிடுவதற்கு எப்படி குற்ற உணர்வு தேவையில்லையோ, அதேபோல் தூங்குவதற்கும் குற்ற உணர்வு தேவையில்லை. </p><p>நல்ல தூக்கம் என்பது சோம்பேறித்தனத்தின் அடையாளம் அல்ல; ஆரோக்கியமான வாழ்க்கைக்கும், தெளிவான சிந்தனைக்கும், சிறந்த செயல்திறனுக்கும் அடிப்படையான விடயம் என்பதை அனைவரும் புரிந்துக்கொள்ள வேண்டும்.</p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW&nbsp;</a></u></b> &nbsp; &nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-14T14:34:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[30 வருடங்களாக நண்பிகள்; டிவிஸ்ட் கொடுத்த டி.என்.ஏ சோதனை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/friends-30-years-without-knowing-they-were-sisters-1786711211"></link>
            <id>https://jvpnews.com/article/friends-30-years-without-knowing-they-were-sisters-1786711211</id>
            <summary type="text">30 வருடங்களுக்கு முன்பு இந்தியாவில் இருந்து நெதர்லாந்து நாட்டிற்கு தத்து கொடுக்கப்பட்ட மீனா, மினல் என்கிற இரண்டு பெண்கள் கடந்த 30 வருடங்களாக தாங்கள் ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>30 வருடங்களுக்கு முன்பு இந்தியாவில் இருந்து நெதர்லாந்து நாட்டிற்கு தத்து கொடுக்கப்பட்ட மீனா, மினல் என்கிற இரண்டு பெண்கள் கடந்த 30 வருடங்களாக தாங்கள் சகோதரிகள் என்பது தெரியாமலேயே தோழிகளாக பழகியிருக்கிறார்கள்.</p><p> 

சமீபத்தில் டி.என்.ஏ சோதனையில் அவர்கள் இருவரும் சகோதரிகள் என்பதும் அவர்கள் 30 வருடங்களுக்கு முன்பு இந்தியாவிலிருந்து தத்துக் கொடுக்கப்பட்டவர்கள் என்பதும் தெரியவந்திருக்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/84205643-724e-4387-b449-f9f94ac75938/26-6a7f0cad842e0.webp' /></p><h2>கண்ணீர் மல்க&nbsp; மகிழ்ச்சி</h2><p>
 

இதையடுத்து இரு தோழிகளும் கட்டியணைத்து, கண்ணீர் மல்க தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். 

நாங்கள் இருவரும் முப்பது வருடங்களாக சகோதரிகளாகவே இருந்திருக்கிறோம்.</p><p></p><p> ஆனால் எங்களுக்கு அது தெரியவில்லை என உணர்ச்சி பொங்க அவர்கள் உள்ளூர் ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்து வருகிறார்கள். 

இவர்கள் தொடர்பான புகைப்படங்களும், வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-14T14:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[டுபாயில் கைதான பிரபல போதைப்பொருள் கடத்தல்காரர் நாட்டிற்கு அழைத்து வரப்பட உள்ளதாக தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/shiran-basik-he-is-set-to-be-brought-sl-1786716134"></link>
            <id>https://tamilwin.com/article/shiran-basik-he-is-set-to-be-brought-sl-1786716134</id>
            <summary type="text">துபாயில் கைது செய்யப்பட்ட பிரபல போதைப்பொருள் கடத்தல்காரர் எனக் குற்றம் சாட்டப்பட்ட &quot;ஷிரான் பாசிக்&quot;, இன்று (14) நாட்டிற்கு அழைத்து வரப்பட உள்ளதாகத் தெர...</summary>
            <content type="html"><![CDATA[<p>துபாயில் கைது செய்யப்பட்ட பிரபல போதைப்பொருள் கடத்தல்காரர் எனக் குற்றம் சாட்டப்பட்ட "ஷிரான் பாசிக்", இன்று (14) நாட்டிற்கு அழைத்து வரப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>கடந்த மே 26 ஆம் திகதி ஷிரான் பாசிக் துபாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
</p><p>
ஈரானின் போதைப்பொருள் வலையமைப்புடன் அவருக்கு உள்ள நேரடித் தொடர்புகள் காரணமாக, அவர் அமெரிக்காவால் கூட தேடப்படும் நபராக உள்ளார் என்றும் கூறப்படுகிறது.</p><p></p><h2>மேலதிக விசாரணை</h2><p>
</p><p>நாட்டிற்கு போதைப்பொருட்களை விநியோகிக்கும் ஐந்து மிகப்பெரிய போதைப்பொருள் கடத்தல்காரர்களில் ஒருவராக ஷிரான் பாசிக் கருதப்படுகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d033e3f3-ffe7-499c-8101-90cd0e495b59/26-6a7f24b700506.webp' /></p><p>
</p><p>மேலும் குறித்த சந்தேகநபர் உள்ளூர் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மேலதிக விசாரணைகளுக்காக அவரை இலங்கைக்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.</p><p></p>]]></content>
            <updated>2026-08-14T14:27:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்திய பயனர்களுக்கு விளம்பரங்களை அறிமுகப்படுத்த உள்ள ChatGPT]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/chatgpt-users-in-india-will-start-seeing-ads-1786717094"></link>
            <id>https://news.lankasri.com/article/chatgpt-users-in-india-will-start-seeing-ads-1786717094</id>
            <summary type="text">இந்திய பயனர்களுக்கு ChatGPTயில் விளம்பரங்களை அறிமுகப்படுத்த உள்ளதாக OpenAI தெரிவித்துள்ளது.

ChatGPTயில் விளம்பரம் 

செயற்கை நுண்ணறிவு சாட்பாட்டான...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்திய பயனர்களுக்கு ChatGPTயில் விளம்பரங்களை அறிமுகப்படுத்த உள்ளதாக OpenAI தெரிவித்துள்ளது.
</p><h3>
ChatGPTயில் விளம்பரம் </h3><p>

செயற்கை நுண்ணறிவு சாட்பாட்டான ChatGPTயை உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர். </p><p>

இந்தியாவில் வாரத்திற்கு 100 மில்லியன் பயனர்கள் செயல்பாட்டில் உள்ளதாக OpenAI தெரிவித்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e4280d8a-ba64-4716-b684-669e5416272b/26-6a7f23a85c91f.webp' /></p><p>
பேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப் போன்ற மற்ற சமூகவலைத்தளங்களை போல ChatGPTயும் பயனர்களுக்கு விளம்பரங்களை காட்டி அதன் மூலம் வருமானம் ஈட்டி வருகிறது.</p><p>

தற்போது இந்தியாவில் உள்ள பயனர்களுக்கும் விளம்பரங்களை காட்டப்போவதாக OpenAI இந்திய பயனர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பி வருகிறது.
</p><p>
ChatGPT இலவச மற்றும் மாதம் ரூ.399 மதிப்புள்ள Go திட்டங்களுக்கு மட்டுமே விளம்பரங்கள் தோன்றும் என்றும், பிரீமியம் Plus, Enterprise, Pro மற்றும் Business பதிப்புகளில் விளம்பரங்கள் இருக்காது என்றும் உறுதிப்படுத்தியுள்ளது.&nbsp;</p><p></p><p>
இந்த விளம்பரங்கள் ChatGPT-யின் பதில்களால் பாதிக்கப்படுவதில்லை என்றும், உள்ளடக்கத்தின் தன்மையை தெரிவிக்கும் லேபிள்கள், ChatGPT பயனர்களுக்கு வழங்கும் பதில்களிலிருந்து பிரிக்கப்பட்டு தோன்றும் என்றும் உறுதியளிக்கிறது.</p><p>

ChatGPTயில் சேமிக்கப்பட்டிருக்கும் முந்தைய விளம்பரத் தொடர்புகள் மற்றும் பயனர்களின் உரையாடல் சூழல் உள்ளிட்ட தகவல்களைப் பயன்படுத்தி விளம்பரங்களைத் தனிப்பயனாக்க முடியும் என்று OpenAI கூறியுள்ளது.
</p><p>
அதே நேரத்தில், பயனர்களின் உரையாடல்கள், உரையாடல் வரலாறுகள், நினைவுகள் அல்லது தனிப்பட்ட தகவல்களுக்கு விளம்பரதாரர்களுக்கு அணுகல் கிடைக்காது என்று அந்த நிறுவனம் கூறியது.
</p><p>
விளம்பரப் பார்வைகள் மற்றும் கிளிக்குகளின் எண்ணிக்கை போன்ற விளம்பரத்தின் செயல்திறன் தகவல்களை மட்டுமே விளம்பரதாரர்கள் பெறுவார்கள் என தெரிவித்துள்ளது.&nbsp; &nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-14T14:18:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[செம்மணி மனித புதைகுழியின் 106 ஆவது நாள் அகழ்வு பணிகள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/106th-day-of-excavation-of-the-chemmani-grave-1786715336"></link>
            <id>https://ibctamil.com/article/106th-day-of-excavation-of-the-chemmani-grave-1786715336</id>
            <summary type="text">

செம்மணி மனித புதைகுழியின் 106 ஆவது நாள் அகழ்வு பணிகள் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை முன்னெடுப்பட்டுள்ளன.

இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்ட அகழ்வு பணி...</summary>
            <content type="html"><![CDATA[<p>

செம்மணி மனித புதைகுழியின் 106 ஆவது நாள் அகழ்வு பணிகள் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை முன்னெடுப்பட்டுள்ளன.
</p><p>
இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்ட அகழ்வு பணியில் 02 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், 07 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.</p><h2>நீதிமன்ற அனுமதி</h2><p>

செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை 56 நாட்கள் முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், 52ஆவது நாளான இன்றைய தினம் வெள்ளிக்கிழமை 554 என்பு கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட 547 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/040acd10-853d-42bc-b513-c20a57e834f6/26-6a7f2000a4ee8.webp' /></p><p>
</p><p>
அத்துடன் மனித என்புக்கூட்டு தொகுதி ஒன்றும் அடையாளம் காணப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2364b1fe-fd03-457b-ba4c-a511d8e29b91/26-6a7f200169019.webp' /></p><p>&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-14T14:04:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ட்ரோன்களுக்கு 100 சதவீதம் வரி - சீனாவை குறிவைத்து ட்ரம்ப் நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/trump-imposes-100-percent-tariffs-on-drones-1786716245"></link>
            <id>https://news.lankasri.com/article/trump-imposes-100-percent-tariffs-on-drones-1786716245</id>
            <summary type="text">Trump imposes 100 percent tariffs on drones: சீன ட்ரான்கள் இறக்குமதி செய்யப்படுவதை குறைக்க ட்ரம்ப் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொன...</summary>
            <content type="html"><![CDATA[<p>Trump imposes 100 percent tariffs on drones: சீன ட்ரான்கள் இறக்குமதி செய்யப்படுவதை குறைக்க ட்ரம்ப் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.</p><p>
அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப், சீனாவை குறிவைத்து, ட்ரோன்கள் மற்றும் அவற்றின் கூறுகளை இறக்குமதி செய்வதற்கு 100 சதவீதம் வரி விதிக்கப்படுவதாக அறிவித்துள்ளார்.</p><p>
</p><h2>
100 சதவீத வரி </h2><p>வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கையில், 25 கிலோ எடையைத் தாண்டும் ட்ரோன்கள் மற்றும் தேசிய பாதுகாப்பு பயன்பாடுகளுக்கான திறன்கள் கொண்ட ட்ரோன்களுக்கு (உதாரணமாக thermal cameras, docking stations) 100 சதவீத வரி விதிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0215fe3d-5141-4e73-b713-b6b5c1c34c00/26-6a7f205739a05.webp' /></p><p>சிறிய அளவிலான ட்ரோன்களுக்கு 25 சதவீதம் வரி விதிக்கப்படும்.
</p><p>
அமெரிக்காவில் உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவித்து, வெளிநாட்டு விநியோக சங்கிலிகளின் மீது இருக்கும் சார்பை குறைக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. </p><p>இந்த புதிய வரிகள் செப்டம்பர் 3, 2026 முதல் அமுலுக்கு வரும்.</p><p></p><p>இதன்மூலம், உள்நாட்டு ட்ரோன் உற்பத்தி, அனுமதியற்ற கண்காணிப்பு, தரவு திருட்டு மற்றும் தாக்குதல் அபாயங்களை குறைக்கும் என அமெரிக்காவின் Federal Communications Commission (FCC) வலியுறுத்தியுள்ளது.</p><p>
</p><h2>
சீன ட்ரோன்கள் ஆபத்தானவை</h2><p>ட்ரோன்கள் வணிகத்திற்கும், இராணுவத்திற்கும் பயன்படுத்தப்படும் “dual-use” தொழில்நுட்பம் என்பதால், சீனாவில் தயாரிக்கப்படும் ட்ரோன்கள் அமெரிக்க பாதுகாப்பிற்கு ஆபத்தானவை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
</p><p>
சீனாவின் DJI நிறுவனம் உலகளாவிய ட்ரோன் சந்தையில் மூன்றில் இரண்டு பங்கைக் கைப்பற்றியுள்ளது. இது, சீனாவின் இராணுவத்துடன் தொடர்புடைய நிறுவனங்களின் பட்டியலில் அமெரிக்கா சேர்த்துள்ளதால், அமெரிக்க சந்தையில் கடுமையான கட்டுப்பாடுகளை சந்தித்து வருகிறது.
</p><p>
சமீபத்தில், சீனாவும் அமெரிக்காவிற்கு ட்ரோன் ஏற்றுமதியில் கட்டுப்பாடுகளை விதித்து, ஆறு அமெரிக்க நிறுவனங்களை கருப்புப் பட்டியலில் சேர்த்துள்ளது. இதனால், அமெரிக்கா-சீனா இடையேயான ட்ரோன் வர்த்தகப் போர் மேலும் தீவிரமடைந்துள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-14T14:01:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thevanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பகுதியில் மரத்திற்கு மேல் பதுக்கி வைக்கப்பட்ட குண்டு மீட்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/bomb-recovered-in-kilinochchi-1786715659"></link>
            <id>https://tamilwin.com/article/bomb-recovered-in-kilinochchi-1786715659</id>
            <summary type="text">கிளிநொச்சி - தர்மபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரமந்தனாறு குளத்திற்கு அருகில் வெடிக்காத நிலையில் குண்டு ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிளிநொச்சி - தர்மபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரமந்தனாறு குளத்திற்கு அருகில் வெடிக்காத நிலையில் குண்டு ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
</p><p>
இந்த நடவடிக்கை இன்று(14.08.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><h2>
குண்டு செயலிழப்பு</h2><p>
சம்பவம் தொடர்பாக தருமபுர பொலிசாருக்கு வழங்கப்பட்ட
தகவலுக்கமைவாக கிளிநொச்சி நீதிமன்ற அனுமதியுடன் குறித்த பகுதியில் இருந்து குண்டு மீட்கப்பட்டு, செயலிழப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e676ed17-92fa-4164-9b8f-e86c62310de3/26-6a7f1eda3115c.webp' /></p><p>
</p><p>
இது தொடர்பான மேலதிக நடவடிக்கைகளை தர்மபுர பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.&nbsp; &nbsp; &nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-14T14:00:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரபல ஹோட்டலுக்குள் நுழைந்த முதலை; அழையா விருதாளியால் பரப்ரப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/unexpected-guest-crocodile-enters-hotel-1786709706"></link>
            <id>https://jvpnews.com/article/unexpected-guest-crocodile-enters-hotel-1786709706</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;கொழும்பு பத்தரமுல்லையில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றின் விருந்து மண்டபத்திற்குள் நுழைந்த முதலை ஒன்று பத்திரமாக அகற்றப்பட்டது.

சம்பவத்தின் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;கொழும்பு பத்தரமுல்லையில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றின் விருந்து மண்டபத்திற்குள் நுழைந்த முதலை ஒன்று பத்திரமாக அகற்றப்பட்டது.
</p><p>
சம்பவத்தின் போது அங்கு எத்தகைய நிகழ்வுகளும் நடைபெறவில்லை என்றபோதிலும், அந்த முதலை விருந்து மண்டபத்திற்குள் நுழைந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து ஹோட்டல் ஊழியர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குத் தகவல் அளித்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/44e1fdd3-5bca-47e9-ab61-0dbe8061e89e/26-6a7f06cb8045a.webp' /></p><p></p><p> இதனையடுத்து, அந்த முதலை&nbsp; வளாகத்திலிருந்து அகற்றப்பட்டது.

இந்தச் சம்பவம் தொடர்பாக எத்தகைய காயங்களோ அல்லது சேதங்களோ ஏற்பட்டதாகப் முறைப்பாடுகள் எதுவும் பதிவாகவில்லை.</p><p></p>]]></content>
            <updated>2026-08-14T14:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[வாகன இறக்குமதி மீதான 50% கூடுதல் கட்டணம்! வெளியாகியுள்ள புதிய அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/govt-extended-vehicle-import-surcharge-1786713109"></link>
            <id>https://ibctamil.com/article/govt-extended-vehicle-import-surcharge-1786713109</id>
            <summary type="text">
தேர்ந்தெடுக்கப்பட்ட மோட்டார் வாகன இறக்குமதிகளுக்கு விதிக்கப்பட்ட சுங்க இறக்குமதி வரியின் மீதான தற்காலிக 50% கூடுதல் கட்டணத்தை 2026 டிசம்பர் 31 ஆம் த...</summary>
            <content type="html"><![CDATA[<p>
தேர்ந்தெடுக்கப்பட்ட மோட்டார் வாகன இறக்குமதிகளுக்கு விதிக்கப்பட்ட சுங்க இறக்குமதி வரியின் மீதான தற்காலிக 50% கூடுதல் கட்டணத்தை 2026 டிசம்பர் 31 ஆம் திகதி வரை நீடிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.</p><p>

நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பிறப்பித்துள்ள உத்தரவுக்கு அமைய, இந்த நீட்டிப்பு ஓகஸ்ட் 15 முதல் நடைமுறைக்கு வருகிறது. </p><p>

இதன்படி, தொடர்புடைய அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள மோட்டார் வாகன இறக்குமதிகளுக்கு, பொது மற்றும் முன்னுரிமை ஆகிய இரு அடிப்படைகளின் கீழும் பொருந்தக்கூடிய சுங்க இறக்குமதி வரியின் மீது இந்த 50% கூடுதல் கட்டணம் விதிக்கப்படும்.</p><p></p><h2>விலக்கு அளிக்கப்பட்ட வாகனங்கள்</h2><p>
</p><p>
பெட்ரோல், டீசல், ஹைப்ரிட் மற்றும் மின்சாரத்தில் இயங்கும் மோட்டார் கார்கள் மற்றும் பயணிகள் வாகனங்கள் உள்ளிட்ட பலதரப்பட்ட வாகனப் பிரிவுகள் இந்த அட்டவணையில் அடங்குகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/799652ae-9463-4016-bfb9-bd840e3da0e9/26-6a7f193dbdf4c.webp' /></p><p>
</p><p>
இருப்பினும், 2026 மே 15 அன்று அல்லது அதற்கு முன்னர் கடன் கடிதங்கள் திறக்கப்பட்ட வாகனங்களுக்கு பொதுவாக இந்த கூடுதல் கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. </p><p>

ஆனால், அத்தகைய கடன் கடிதங்களில் வாகன எண்கள், அடையாள எண்கள், விவரங்கள், தொழில்நுட்ப விவரக்குறிப்புகள் அல்லது காலாவதியாகும் திகதிகள் போன்ற விவரங்கள் பின்னர் திருத்தப்பட்டிருந்தால், அவற்றுக்கு இந்த கூடுதல் கட்டணம் பொருந்தும்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table><p>
</p>]]></content>
            <updated>2026-08-14T13:36:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் மகன்களைக் கொன்ற தந்தைக்கு ஆயுள் தண்டனை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/sentencing-hearing-underway-for-new-brunswick-man-1786675932"></link>
            <id>https://canadamirror.com/article/sentencing-hearing-underway-for-new-brunswick-man-1786675932</id>
            <summary type="text">&amp;nbsp;கனடாவின் நியூ பிரன்ஸ்விக் மாகாணத்திலுள்ள செயிண்ட் ஜான் நகரில், தனது இரு மகன்களைக் கொடூரமாகக் கொலை செய்த 46 வயதான ரோமன் காமிஷ்னி என்பவருக்கு ஆயுள...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கனடாவின் நியூ பிரன்ஸ்விக் மாகாணத்திலுள்ள செயிண்ட் ஜான் நகரில், தனது இரு மகன்களைக் கொடூரமாகக் கொலை செய்த 46 வயதான ரோமன் காமிஷ்னி என்பவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
</p><p>கடந்த 2025 ஆம் ஆண்டு ஜனவரி 29 ஆம் திகதி அதிகாலை, காமிஷ்னி தனது 10 மற்றும் 17 வயதுடைய இரு மகன்களையும் கத்தியால் குத்திக் கொலை செய்தார்.</p><p> 
பின்னர், 'நெயில் கன்' ஆணி அடிக்கும் கருவி மூலம் தனது தலையில் தானே அடித்துக்கொண்டு தற்கொலைக்கும் முயன்றார்.
கடந்த ஜூன் 24 அன்று இவர் மீதான முதல் நிலை கொலைக் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்ட நிலையில், தற்போது இவருக்கு இரண்டு ஆயுள் தண்டனைகள் விதிக்கப்பட்டு, அவை ஒரே நேரத்தில் அனுபவிக்கப்பட வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c13f2e43-2828-4500-9573-9d5cb3d0fccd/26-6a7e82de9aefe.webp' /></p><p> </p><p>கனடாவின் சட்டப்படி முதல் நிலை கொலைக் குற்றவாளிக்கு 25 ஆண்டுகளுக்குப் பிணை பெற முடியாது.
</p><p>விவாகரத்து செய்த தனது மனைவியைப் பழிவாங்குவதற்காகவும், அவருக்குத் தண்டனை அளிப்பதற்காகவுமே காமிஷ்னி இந்த கொடூரச் செயலைச் செய்துள்ளார் என அரசுத் தரப்பு வழக்கறிஞர் சுட்டிக்காட்டினார்.
</p><p>கொலை செய்வதற்கு முன்பாக, "நான் அனைவரையும் கொன்றுவிட்டேன், பொலிஸாரையும் ஆம்புலன்ஸையும் வரச் சொல்" என்று மனைவிக்கு அனுப்பிய குறுஞ்செய்தி மற்றும் கடிதங்கள் நீதிமன்றத்தில் ஆதாரங்களாகச் சமர்ப்பிக்கப்பட்டன.
</p><p>எனினும், நீதிமன்றத்தில் பேசிய காமிஷ்னி, "எனக்கு அன்றைய தினம் நடந்தது எதுவும் நினைவில் இல்லை, என் குழந்தைகளைக் கொல்லும் திட்டம் எனக்கு இருக்கவில்லை" என்று வாதிட்டார்.
</p><p>இதைக் கேட்ட நீதிபதி டேரல் ஸ்டீபன்சன், "உம்மீது மேலும் வார்த்தைகளை வீணடிக்க விரும்பவில்லை. நீர் ஒரு திட்டமிட்டு அதைச் செயல்படுத்தியுள்ளீர், அதற்கான தண்டனையை அனுபவிக்கும் நேரம் இது" என்று கூறி தண்டனையை அறிவித்தார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-14T13:33:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[செம்மணி மனித புதைகுழியின் 106 ஆவது நாள் அகழ்வு பணிகள் முன்னெடுப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/semmani-mass-grave-excavation-106th-day-1786711510"></link>
            <id>https://tamilwin.com/article/semmani-mass-grave-excavation-106th-day-1786711510</id>
            <summary type="text">செம்மணி மனித புதைகுழியின் 106 ஆவது நாள் அகழ்வு பணிகள் இன்றைய தினம்(14.08.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளன.
குறித்த அகழ்வு பணியின்போது முன்னெடுக்கப்பட்ட அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>செம்மணி மனித புதைகுழியின் 106 ஆவது நாள் அகழ்வு பணிகள் இன்றைய தினம்(14.08.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளன.
</p><p>குறித்த அகழ்வு பணியின்போது முன்னெடுக்கப்பட்ட அகழ்வு பணியில் 07 என்புக்கூடுகள் அடையாளம்
காணப்பட்டுள்ள நிலையில், 02 என்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.</p><h2>செம்மணி அகழ்வுப் பணி</h2><p>
செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை 56 நாட்கள்
முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/21986854-7ebb-4d70-9ca1-c77319a72594/26-6a7f160d8ab7e.webp' /></p><p>இதுவரையில் 554 என்பு கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன.</p><p> ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட 547 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதுடன் இன்றைய தினம் மனித என்புக்கூட்டு தொகுதி ஒன்றும் அடையாளம் காணப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-14T13:33:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[நான் தான் சினிமாவின் மூத்த Gen Z! - 67 ஆண்டுகள் சினிமா பயணம் குறித்து கமல்ஹாசன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/kamalhaasan-post-about-his-66-years-cinema-journey-1786712110"></link>
            <id>https://manithan.com/article/kamalhaasan-post-about-his-66-years-cinema-journey-1786712110</id>
            <summary type="text">kamalhaasan 66-years cinema journey: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான கமல்ஹாசன், கடந்த 1960ஆம் ஆண்டு வெளியான களத்தூர் கண்ணம்மா திரைப்படத்தின் மூலம் கு...</summary>
            <content type="html"><![CDATA[<p>kamalhaasan 66-years cinema journey: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான கமல்ஹாசன், கடந்த 1960ஆம் ஆண்டு வெளியான களத்தூர் கண்ணம்மா திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் அறிமுகமானார். அந்த வகையில், திரைத்துறையில் நடிகராக தனது 66 ஆண்டுகளை நிறைவு செய்து, 67ஆவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளார். </p><p>இதையொட்டி திரையுலகினரும் ரசிகர்களும் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

இந்த வாழ்த்துகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் கமல்ஹாசன் இன்று தனது சமூக வலைதளப் பக்கத்தில் சுவாரஸ்யமான பதிவு ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/02a0527e-cce1-4689-a6ab-1efc6d2d84a5/26-6a7f14dc46c94.webp' /></p><p></p><h2>கமல்ஹாசன் பதிவு&nbsp;</h2><p>
</p><p>
அதில் அவர், "திரைத்துறையில் எனது 67 ஆண்டுகாலப் பயணத்திற்கு வாழ்த்துகள் தெரிவித்த அனைவருக்கும் நன்றி. ஆனால், இந்த 67 ஆண்டுகளில் உண்மையான கற்றல் என்று நான் கருதுவது சுமார் 20 ஆண்டுகளை மட்டுமே" எனத் தனது பயணத்தை சுயவிமர்சனத்துடன் திரும்பிப் பார்த்துள்ளார்.</p><p>

தொடர்ந்து, "மீதமுள்ள காலம், கழிவுநீர் ஓட்டத்தோடு அடித்துச் செல்லப்பட்டதைப் போன்றது. இருப்பினும், அதிலும் ஒரு நம்பிக்கை தரும் விஷயம் இருக்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/994e6fc3-bc9a-4838-8c48-daa7d6b65bf4/26-6a7f14dcebf48.webp' /></p><p> </p><p>அந்த நீரோட்டம் எவ்வளவு இருண்டதாக இருந்தாலும், 'கூட்டுச் சினிமா' எனும் பேராற்றலில், அதாவது எல்லையற்ற கடலில், கலப்பதற்கான காத்திருப்புதான் அது. கலைஞர்களாகவும் ரசிகர்களாகவும் நாம் அனைவரும் அந்தக் கடலை நோக்கியே பயணித்துக் கொண்டிருக்கிறோம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
மேலும், "இத்துறையில் நான் கடந்த ஆண்டுகளை மக்கள் கணக்கிடுவதை நிறுத்திவிட்டு, வேறு இடங்களில் சிறந்த எண்களைத் தேடத் தொடங்குவதற்கு முன்பாகவே, அனுபவமாக நான் சேகரித்தவற்றை இன்னும் மேம்படுத்திக்கொள்ள முடியும் என நினைக்கிறேன்" என்றும் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5c1cd778-2be0-433b-af23-48a7b8e6a88e/26-6a7f14dd9fd19.webp' /></p><p></p><p>திரைப்பட உலகின் நீண்ட வரலாற்றையும் தனது பயணத்துடன் ஒப்பிட்டுப் பார்த்துள்ள கமல்ஹாசன், 1895ஆம் ஆண்டு டிசம்பரில் லுமியர் சகோதரர்கள் முதல் பொதுத் திரைப்படக் காட்சியை நடத்தியதிலிருந்து, உலக சினிமா சுமார் 130 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருவதைச் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p>
"அத்துறையின் ஒட்டுமொத்த வரலாற்றில் பாதிக்கும் மேலான காலமான 67 ஆண்டுகளை நான் கடந்துவிட்டேன் என்பதை என் குழுவினர் எனக்கு நினைவூட்டினர். இது உண்மையிலேயே வியக்க வைக்கும் விஷயம். </p><p>ஆயினும், எனது சொந்தக் கணக்கீட்டின்படி, உண்மையான கற்றலாக நான் கருதுவது சுமார் 20 ஆண்டுகளை மட்டுமே" எனக் கூறியுள்ளார்.

இறுதியில், தனது வழக்கமான நகைச்சுவை கலந்த பாணியில், "ஒருவேளை, சினிமாத் துறையின் 'Gen Z' பிரிவில் நான்தான் மிக மூத்தவனாக இருப்பேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Thanks to all who wished me well on my 67 years of cinema.<br><br>Out of those 67, I think I can only salvage about 20 years as my actual learning. The rest was going with the flow of the wastewater.<br><br>The uplifting hope is, however dark the waterway turns out to be, the wait for a…</p>&mdash; Kamal Haasan (@ikamalhaasan) <a href="https://x.com/ikamalhaasan/status/2087841974997201226?ref_src=twsrc%5Etfw">August 13, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்<b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"> FOLLOW NOW</a></u></b>&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-14T13:30:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[பேக்லஸ் கிளாமர் ஆடையில் நடிகை க்ரித்தி ஷெட்டி!! புகைப்படங்கள்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/krithi-shetty-black-dress-photoshoot-post-1786712393"></link>
            <id>https://viduppu.com/article/krithi-shetty-black-dress-photoshoot-post-1786712393</id>
            <summary type="text">க்ரித்தி ஷெட்டிஇந்தியில் 2019ல் வெளியான சூப்பர் 30 படத்தில் சிறு ரோலில் நடித்து நடிகையாக அறிமுகமாகி க்ரித்தி ஷெட்டி, உப்பனா படத்தின் மூலம் கதாநாயகியாக...</summary>
            <content type="html"><![CDATA[<h2>க்ரித்தி ஷெட்டி</h2><p>இந்தியில் 2019ல் வெளியான சூப்பர் 30 படத்தில் சிறு ரோலில் நடித்து நடிகையாக அறிமுகமாகி க்ரித்தி ஷெட்டி, உப்பனா படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகினார்.</p><p> அதன்பின் தெலுங்கு படங்களில் நடித்து பிரபலமான க்ரித்தி கஸ்டடி படத்திலும் முக்கிய ரோலில் நடித்தார். தமிழில் வா வாத்தியார், LIK உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/76a9372f-5d07-45f6-9f19-8752855438c3/26-6a7f11518a99f.webp' />]</p><p> தற்போது ஒருசில படங்களில் நடித்து வரும் க்ரித்தி ஷெட்டி, இணையத்தில் ஆக்டிவாக இருந்து கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து வருவார். </p><p>தற்போது கருப்புநிற பேக்லஸ் கிளாமர் ஆடையணிந்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-08-14T13:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/grade-5-scholarship-examination-paper-correction-1786711959"></link>
            <id>https://jvpnews.com/article/grade-5-scholarship-examination-paper-correction-1786711959</id>
            <summary type="text">&amp;nbsp; நடந்து முடிந்த தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணிகள் எதிர்வரும் ஓகஸ்ட் 20 ஆம் திகதி ஆரம்பமாகும் என பரீட...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; நடந்து முடிந்த தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணிகள் எதிர்வரும் ஓகஸ்ட் 20 ஆம் திகதி ஆரம்பமாகும் என பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.
</p><p>


மதிப்பீட்டுப் பணிகள் ஒப்பீட்டளவில் குறுகிய காலத்தில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாகவும், இதன் மூலம் சுமார் ஒரு மாதத்திற்குள் பெறுபேறுகளை வெளியிட அதிகாரிகளுக்கு இயலுமாகும் எனவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.இந்திக்கா குமாரி லியனகே தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4209f9f4-bbff-4713-b9d1-6d3c5720d826/26-6a7f0f9e0f30c.webp' /></p><p></p><p>
</p><p>


தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை ஓகஸ்ட் 9 ஆம் திகதி நடைபெற்றதுடன், நாடு முழுவதும் இப் பரீட்சைக்கு மொத்தம் 294,089 மாணவர்கள் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.&nbsp;&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-14T13:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yoosuf</name>
            </author>
            <title type="text"><![CDATA[திருகோணமலையில் உலாவும் மான்களை பார்வையிட படையெடுக்கும் சுற்றுலா பயணிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/tourists-flock-to-see-deer-in-trincomalee-1786713551"></link>
            <id>https://tamilwin.com/article/tourists-flock-to-see-deer-in-trincomalee-1786713551</id>
            <summary type="text">திருகோணமலையின் அடையாளங்களில் ஒன்றாக விளங்கும் மான் பூங்கா மற்றும் அதனைச்
சுற்றியுள்ள பகுதிகளில் நடமாடித் திரியும் மான்கள், தற்போது வெளிநாட்டு
சுற்று...</summary>
            <content type="html"><![CDATA[<p>திருகோணமலையின் அடையாளங்களில் ஒன்றாக விளங்கும் மான் பூங்கா மற்றும் அதனைச்
சுற்றியுள்ள பகுதிகளில் நடமாடித் திரியும் மான்கள், தற்போது வெளிநாட்டு
சுற்றுலாப் பயணிகளின் கவனத்தை ஈர்த்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>


திருகோணமலைக்கு பல நாடுகளிலிருந்து மக்கள் தினம் தினம் வருகை தருகின்றனர்.</p><p>இந்த நிலையில், நகரப் பகுதியில் உள்ள மான் பூங்காவிலும் எவ்வித அச்சமுமின்றி சுதந்திரமாக உலா
வரும் இந்த மான்களை பார்வையிடுவதற்காகவே அண்மைக்காலமாக திருகோணமலைக்கு
வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக
அதிகரித்துள்ளது.</p><h2>

மான்களை காண ஆவலுடன் வரும் பயணிகள்</h2><p>
இங்கு வரும் பயணிகள் மான்களுக்கு உணவளித்தும், அவற்றுடன் புகைப்படங்கள்
மற்றும் சுயவிவரப் படங்கள் எடுத்தும், மிகவும் மகிழ்ச்சியோடு
பொழுதைக் கழித்து வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c36744a9-8171-4bbb-b34d-46488a159297/26-6a7f170e38928.webp' /></p><p> </p><p>

மனிதர்களோடு மிகவும் இயல்பாகப் பழகும் இந்த
மான்களின் குணம், தங்களுக்கு ஒரு புதுவிதமான மற்றும் மறக்க முடியாத அனுபவத்தைத் தருவதாக வெளிநாட்டுப் பயணிகள் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.
</p><p>
திருகோணமலையின் இயற்கை எழிலோடு, இந்த மான்களின் பிரசன்னமும் இணைந்து
பிராந்தியத்தின் சுற்றுலாத்துறையை மேலும் ஒரு படி முன்னோக்கி எடுத்துச்
சென்றுள்ளதாக அப்பகுதி மக்கள் மற்றும் சுற்றுலாத்துறை சார்ந்தோர் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளனர்.</p><p><iframe src="https://www.facebook.com/plugins/video.php?height=476&href=https%3A%2F%2Fweb.facebook.com%2Freel%2F1400771052196101%2F&show_text=true&width=267&t=0" width="267" height="591" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share" allowFullScreen="true"></iframe>&nbsp; &nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-14T13:28:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[30 வருடங்களாக தாம் சகோதரிகள் என தெரியாது பழகிய நண்பிகள்; ஆச்சர்ய செய்தி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/friends-30-years-without-knowing-they-were-sisters-1786698595"></link>
            <id>https://canadamirror.com/article/friends-30-years-without-knowing-they-were-sisters-1786698595</id>
            <summary type="text">30 வருடங்களுக்கு முன்பு இந்தியாவில் இருந்து நெதர்லாந்து நாட்டிற்கு தத்து கொடுக்கப்பட்ட மீனா, மினல் என்கிற இரண்டு பெண்கள் கடந்த 30 வருடங்களாக தாங்கள் ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>30 வருடங்களுக்கு முன்பு இந்தியாவில் இருந்து நெதர்லாந்து நாட்டிற்கு தத்து கொடுக்கப்பட்ட மீனா, மினல் என்கிற இரண்டு பெண்கள் கடந்த 30 வருடங்களாக தாங்கள் சகோதரிகள் என்பது தெரியாமலேயே தோழிகளாக பழகியிருக்கிறார்கள்.</p><p> 

சமீபத்தில் டி.என்.ஏ சோதனையில் அவர்கள் இருவரும் சகோதரிகள் என்பதும் அவர்கள் 30 வருடங்களுக்கு முன்பு இந்தியாவிலிருந்து தத்துக் கொடுக்கப்பட்டவர்கள் என்பதும் தெரியவந்திருக்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f8e4c393-5d7f-4b2b-a243-b8ad82ffab3d/26-6a7edb650a4cd.webp' /></p><p>
 

இதையடுத்து இரு தோழிகளும் கட்டியணைத்து, கண்ணீர் மல்க தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். 

நாங்கள் இருவரும் முப்பது வருடங்களாக சகோதரிகளாகவே இருந்திருக்கிறோம்.</p><p> ஆனால் எங்களுக்கு அது தெரியவில்லை என உணர்ச்சி பொங்க அவர்கள் உள்ளூர் ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்து வருகிறார்கள். 

இவர்கள் தொடர்பான புகைப்படங்களும், வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.</p>]]></content>
            <updated>2026-08-14T13:27:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரான்சில் காட்டுத்தீயால் அழிந்த 1,100 ஹெக்டேர் நிலம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/1-100-hectares-destroyed-by-wildfires-in-france-1786714136"></link>
            <id>https://canadamirror.com/article/1-100-hectares-destroyed-by-wildfires-in-france-1786714136</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;தென்மேற்கு பிரான்சில் பரவிவரும் காட்டுத்தீ 1,100 ஹெக்டேர் நிலத்தை அழித்துள்ளது.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து சுமார் 525 பேரை அதிகா...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;தென்மேற்கு பிரான்சில் பரவிவரும் காட்டுத்தீ 1,100 ஹெக்டேர் நிலத்தை அழித்துள்ளது.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து சுமார் 525 பேரை அதிகாரிகள் வெளியேற்றியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
</p><p>
காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த சுமார் 500 தீயணைப்பு வீரர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரான்சின் 75 பிராந்தியங்களுக்கு தீ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9566a50b-90f7-48aa-8525-a3640af8a1f5/26-6a7f1819cbb2d.webp' /></p><p>

இதற்கிடையில், மேற்கு ஜெர்மனியில் பரவிவரும் காட்டுத்தீ காரணமாக, 2,000-க்கும் மேற்பட்ட மக்களை அவர்களது வீடுகளில் இருந்து வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளை அதிகாரிகளும் எடுத்துள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-08-14T13:26:41+00:00</updated>
        </entry>
    </feed>
