<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-08-26T07:04:30+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[சோனல் தினுஷா சாதனை சதம்; 290 ஓட்டங்கள் குவித்து பாலோ ஆன் ஆன இலங்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/sonal-dinusha-record-by-century-vs-india-2nd-test-1787727427"></link>
            <id>https://news.lankasri.com/article/sonal-dinusha-record-by-century-vs-india-2nd-test-1787727427</id>
            <summary type="text">sonal dinusha record century in india vs srilanka 2nd test: 290 ஓட்டங்கள் குவித்து இலங்கை பாலோ ஆன் ஆன நிலையில், சதமடித்த சோனல் தினுஷா சாதனை பட்டியலில்...</summary>
            <content type="html"><![CDATA[<p>sonal dinusha record century in india vs srilanka 2nd test: 290 ஓட்டங்கள் குவித்து இலங்கை பாலோ ஆன் ஆன நிலையில், சதமடித்த சோனல் தினுஷா சாதனை பட்டியலில் இணைந்துள்ளார்.
</p><h3>
290 ஓட்டங்கள் குவித்து பாலோ ஆன் ஆன இலங்கை</h3><p> 

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி கொழும்பு மைதானத்தில் நடைபெற்று வருகிறது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bf0c01d7-4bd1-4d4a-a41f-9de09cfdf0a3/26-6a8e8e459efda.webp' /></p><p>

முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 503 ஓட்டங்கள் குவித்து டிக்ளேர் செய்துள்ளது. தேவ்தத் படிக்கல் மற்றும் துருவ் ஜுரெல் சதம் விளாசியுள்ளனர்.&nbsp;</p><p></p><p>

இதனையடுத்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய இலங்கை அணி, 290 ஓட்டங்களுக்கு ஆல் அவுட் ஆனது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/42750cd7-aa59-46ba-a61e-8fab993631e9/26-6a8e8e44e7452.webp' /></p><p>

213 ஓட்டங்கள் பின் தங்கிய நிலையில் இருந்த இலங்கை அணி பாலோ ஆன் ஆனது. இதையடுத்து, இலங்கை அணி 2வது இன்னிங்ஸை ஆடி வருகிறது.</p><h3>

 சோனல் தினுஷா சாதனை </h3><p>

இலங்கை தரப்பில் 103 ஓட்டங்கள் குவித்து சதம் விளாசிய சோனல் தினுஷா புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். </p><p>

இந்தியாவுக்கு எதிரான தனது முதல் 3 டெஸ்ட் இன்னிங்ஸ்களிலும் 80 அல்லது அதற்கு மேற்பட்ட ஓட்டங்களை எடுத்த மூன்றாவது வீரர் என்ற பெருமையை சோனல் தினுஷா பெற்றுள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1fba8233-c447-4409-a9e8-08ef213293ea/26-6a8e8e443310b.webp' /></p><p>

முன்னதாக மேற்கிந்தியத் தீவுகளின் ஜாம்பவான் எவர்டன் வீக்ஸ் மற்றும் பாகிஸ்தான் ஜாம்பவான் ஜாகீர் அப்பாஸ் ஆகியோர் இந்த சாதனையை படைத்திருந்தனர்.&nbsp;</p><p></p><p>
எவர்டன் வீக்ஸ் 1948 ஆம் ஆண்டிலும், ஜாகீர் அப்பாஸ் 1978 ஆம் ஆண்டிலும் இந்த சாதனையை படைத்துள்ளனர். </p><p>48 ஆண்டுகளுக்கு பிறகு சோனல் தினுஷா இந்த சாதனையை முறியடித்துள்ளார்.</p><p>

மேலும், இந்தியாவிற்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிகளிலும் சதமடித்துள்ள வீரர்களின் பட்டியலிலும் சோனல் தினுஷா இடம் பிடித்துள்ளார்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-26T07:00:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஓணம் ஸ்பெஷலாக நடிகை அசின் வெளியிட்ட தனது மகளின் லேட்டஸ்ட் போட்டோ...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/asin-shares-her-daughter-photo-onam-special-1787722155"></link>
            <id>https://cineulagam.com/article/asin-shares-her-daughter-photo-onam-special-1787722155</id>
            <summary type="text">நடிகை அசின்சினிமாவில் இப்போது எத்தனையோ நடிகைகள் வருகிறார்கள், களத்தில் சாதிக்கிறார்கள், சிலர் வந்த வேகம் தெரியாமல் காணாமல் போய்விடுகிறார்கள். அப்படி ப...</summary>
            <content type="html"><![CDATA[<h2>நடிகை அசின்</h2><p>சினிமாவில் இப்போது எத்தனையோ நடிகைகள் வருகிறார்கள், களத்தில் சாதிக்கிறார்கள், சிலர் வந்த வேகம் தெரியாமல் காணாமல் போய்விடுகிறார்கள். </p><p>அப்படி பல வருடங்களுக்கு முன் இளம் நாயகியாக களமிறங்கி இப்போது ரசிகர்களால் இவர் சினிமாவை விட்டு விலகாமல் இருந்திருக்கலாம் என ஏங்கும் ஒரு நடிகையாக இருப்பவர் தான் நடிகை அசின்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5f73f420-8f92-4e63-b33e-a252a78a81c2/26-6a8e88a274ad6.webp' /></p><p> </p><p>இயக்குனர் ஜீவாவின் உள்ளம் கேட்குமே படத்தின் மூலம் தமிழில் நடிக்க துவங்கியவர் அந்த படம் ரிலீஸ் ஆக தாமதமானதால் ஜெயம் ரவிக்கு ஜோடியாக அவர் நடித்த எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி படம் வெளியானது. </p><p>அதன்பின் கஜினி, சிவகாசி, போக்கிரி, காவலன், ஆழ்வார், வரலாறு, வேல், தசாவதாரம் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்தார்.
கஜினி படத்தின் ஹிந்தி ரீமேக் படம் மூலம் பாலிவுட்டிலும் அறிமுகமானார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2908a1c3-734b-4aea-af58-9f59cc1b1d79/26-6a8e88a190d3e.webp' /></p><h2>மகள் போட்டோ
</h2><p>நடிகை அசின் மைக்ரோமேக்ஸ் நிறுவனர் ராகுல் சர்மாவை கடந்த 2016ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
</p><p>இவர்களுக்கு ஆரின் என்ற மகள் இருக்கிறார். தற்போது ஓணம் ஸ்பெஷலாக நடிகை அசின் தனது மகளின் போட்டோவை வெளியிட்டுள்ளார்.&nbsp;</p><p><br></p>]]></content>
            <updated>2026-08-26T07:00:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[கணவனை பழி வாங்க இளம் மனைவி மீது அசிட் தாக்குதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/young-women-attacked-by-acid-attack-1787711052"></link>
            <id>https://tamilwin.com/article/young-women-attacked-by-acid-attack-1787711052</id>
            <summary type="text">ஹொரணையில் இடம்பெற்ற அசிட் தாக்குதலில் 29 வயதுடைய பெண் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். படுகாயமடைந்த பெண் ஹொரணை மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹொரணையில் இடம்பெற்ற அசிட் தாக்குதலில் 29 வயதுடைய பெண் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். </p><p>படுகாயமடைந்த பெண் ஹொரணை மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p> இரு தரப்பினரிடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றியதன் காரணமாக ஏற்பட்ட மோதலின் விளைவாகவே இந்த அசிட் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. </p><h2><b>இரு தரப்புக்கு இடையில் மோதல்</b></h2><p>எனினும், தகராறு ஏற்பட்ட சந்தர்ப்பத்தில் குறித்த பெண் எந்தவிதத்திலும் தலையிடவில்லை என்பது பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9e8e4f13-ebdb-451e-b0d3-29e76a63fe17/26-6a8e872d794e2.webp' /></p><p>இரு தரப்பினரிடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தின் போது ஒருவருக்கு தாக்கப்பட்டமையே இந்த சம்பவத்திற்கு காரணமாகும். பின்னர், தாக்குதலுக்கு உள்ளான நபர், தன் மீது தாக்குதல் தாக்கிய நபரின் வீட்டிற்கு அசிட் போத்தலையும் எடுத்துச்சென்றுள்ளார்.</p><p>இந்த சந்தர்ப்பத்தில் தாக்குதல் மேற்கொண்ட நபர் வீட்டில் இல்லாத காரணத்தினால், குறித்த நபரின் மனைவியின் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளப்பட்டுள்ளது. </p><p> அசிட் தாக்குதலை மேற்கொண்ட நபர் உள்ளிட்ட மூன்று சந்தேகநபர்களை ஹொரணை தலைமையகப் பொலிஸார் கைது செய்துள்ளனர். </p><p>இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளவர்கள் ஹொரணை பகுதியைச் சேர்ந்த 30, 28 மற்றும் 27 வயதுடைய மூவராகும்.</p><p> சந்தேகநபர்களை ஹொரணை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p><p><br></p><p><br></p><p> </p>]]></content>
            <updated>2026-08-26T06:50:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/low-quality-fertilizer-import-scam-case-adjourned-1787726868"></link>
            <id>https://jvpnews.com/article/low-quality-fertilizer-import-scam-case-adjourned-1787726868</id>
            <summary type="text">முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில், சீனாவிடமிருந்து தரம் குறைந்த 20,000 மெட்ரிக் டன் உரம் இறக்குமதி செய்யப்பட்டதன் மூலம் அரசுக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில், சீனாவிடமிருந்து தரம் குறைந்த 20,000 மெட்ரிக் டன் உரம் இறக்குமதி செய்யப்பட்டதன் மூலம் அரசுக்கு 6.7 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமான இழப்பு ஏற்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து நடந்து வருவதாக கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணையம் கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.</p><p>
</p><p></p><p>முன்னாள் விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் சில நபர்களுக்கு எதிராக இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6e6c2d3f-028c-4f31-8bf6-d4d9c176e1b5/26-6a8e8c159a5fc.webp' /></p><p>இந்தநிலையில் வேறு வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் அளுத்கமகே, சிறைச்சாலை அதிகாரிகளால் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
</p><p>
கொழும்பு பிரதான நீதிவான் அசாங்க எஸ். போதரகம முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
</p><p>
இதன்போது, வழக்கு தொடர்பான விசாரணைகள் இன்னும் முடிவடையவில்லை என்பதால், விசாரணையை நிறைவு செய்து தொடர்புடைய அறிக்கைகளைச் சமர்ப்பிக்க மேலதிக கால அவகாசத்தை, கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைய அதிகாரிகள் கோரினர்.
</p><p>
சமர்ப்பிக்கப்பட்ட கோரிக்கைகளை ஏற்றுக்கொண்ட நீதிவான், வழக்கை எதிர்வரும் டிசம்பர் 4ஆம் திகதிக்கு ஒத்தி வைத்தார்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-26T06:48:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பலாலி , குரும்பசிட்டி காணிகள் விடுவிப்பு; வங்குரோத்து அரசியல் செய்யும் தோற்றுப்போன அரசியல்வாதிகள்; அமைச்சர் சாடல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/release-of-palaly-and-kurumbasiddy-lands-1787720484"></link>
            <id>https://jvpnews.com/article/release-of-palaly-and-kurumbasiddy-lands-1787720484</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் வலி. வடக்கில் ஒரு சில வாரங்களில் பெருமளவான காணிகளை அரசாங்கம் விடுவிக்க நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் , தோற்றுப்போன அரசியல்வாதிகள் , காண...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் வலி. வடக்கில் ஒரு சில வாரங்களில் பெருமளவான காணிகளை அரசாங்கம் விடுவிக்க நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் , தோற்றுப்போன அரசியல்வாதிகள் , காணி விடுவிப்பு தொடர்பில் போராட்டங்களை முன்னெடுத்து , தமது போராட்டங்கள் ஊடாகவே காணி விடுவிக்கப்பட்டது போன்றதான வங்குரோத்து அரசியலை செய்ய முற்படுகின்றனர் என கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் குற்றம் சாட்டியுள்ளார்.
</p><p>
 
சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு, காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வு நேற்றைய தினம் (25) யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a1fc3c3b-5ffa-4875-beea-16b12ade7a05/26-6a8e732620708.webp' /></p><h2>வீடுகளைக் கட்டிக்கொள்வதற்கான முழுமையான அனுமதி</h2><p>
</p><p>
 இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 
இதன்போது பலாலி மற்றும் குரும்பசிட்டி பகுதிகளில் உள்ள விவசாய மற்றும் குடியிருப்பு காணிகள் உடனடியாக மீளளிக்கப்படுவதுடன், மக்கள் அங்கு வீடுகளைக் கட்டிக்கொள்வதற்கான முழுமையான அனுமதி வழங்கப்படவுள்ளது.</p><p></p><p> </p><p>

மேலும், 1981 மற்றும் 1988ஆம் ஆண்டுகளில் சுவீகரிக்கப்பட்ட காணிகளுக்கு தற்போதைய சந்தை மதிப்பிட்டின்படி இழப்பீடு வழங்கப்படுவதுடன், அவர்கள் அக்காணிகளைப் பயன்படுத்த முடியாமல் போன காலத்திற்கான கூடுதல் நஷ்டஈடும் வழங்க ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.</p><p></p><p>
</p><p>
 எதிர்வரும் ஆண்டில் தேவைப்படும் 13,000 வீடுகளையும் முழுமையாகக் கட்டிமுடித்து "மீள்குடியேற்ற வீடுகள்" எனும் நாமத்தையே நாட்டின் வரலாற்றில் இருந்து அகற்ற அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது.</p><p></p><p>
</p><p>
கடந்த காலங்களில் ஆட்சியில் இருந்தபோது காணி விடுவிப்பைப் பற்றிப் பேசினால் தென்னிலங்கை கொதித்துவிடும் என்று கூறி அமைதி காத்த தமிழ் அரசுக்கட்சியின் சுமந்திரன் போன்ற தலைவர்கள், தற்போது காணி விடுவிப்பு அரசாங்கத்தால் உறுதியாகியுள்ள நிலையில் போராட்டங்களை அறிவித்து அரசியல் நாடகமாடுகின்றனர்.</p><p> 

மக்கள் இனிமேலும் இத்தகைய அரசியல்வாதிகளின் பகடைக்காய்களாக மாற மாட்டார்கள் என்ற நம்பிக்கை உண்டு என தெரிவித்தார்.&nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-08-26T06:47:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சமூக வலைத்தாளங்களில் ஆபாசம்; பிரபல நடிகைக்கு பொலிஸார் வலைவீச்சு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/obscenity-on-social-media-actress-dharsha-gupta-1787724309"></link>
            <id>https://jvpnews.com/article/obscenity-on-social-media-actress-dharsha-gupta-1787724309</id>
            <summary type="text">&amp;nbsp; சமூக வலைத்தாளங்களில் ஆபாச பேசியமை தொடர்பில் நடிகை தர்ஷா குப்தாவை கைது செய்ய பொலிஸார் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றதாக இந்திய ஊடகங்க்கள...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; சமூக வலைத்தாளங்களில் ஆபாச பேசியமை தொடர்பில் நடிகை தர்ஷா குப்தாவை கைது செய்ய பொலிஸார் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றதாக இந்திய ஊடகங்க்கள் தெரிவித்துள்ளன.
</p><p>
சமூக வலைத்தளங்களில் ஆபாசமாக பேசுதல் போன்ற பதிவுகளை வெளியிட்ட திருச்சி சாதனா, நடிகை தர்ஷா குப்தா உள்பட 12 பேர் மீது பொலிஸார் வழக்கு பதிவுசெய்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8b39bea3-5b5a-4a14-b53f-72119e5c5430/26-6a8e8217ecf35.webp' /></p><p> </p><h2>&nbsp;திருச்சி சாதனா, நடிகை தர்ஷா குப்தா உள்பட 12 பேர் மீது வழக்கு</h2><p>

மேலும் அவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் பொலிஸார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். 

சேலத்தை சேர்ந்த சட்டத்தரணி அஜித் என்பவர், மாநகர சைபர் கிரைம் பொலிஸில் புகார் மனு ஒன்றை அளித்தார்.</p><p></p><p> </p><p>

அதில் இன்ஸ்டாகிராம், யூடியூப் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் சிலர், 18 வயதுக்கும் கீழ் உள்ள இளம் வயதுடையவர்களுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் ஆபாசமாக பேசுதல் உள்ளிட்டவைகளை பதிவிட்டு வெளியிடுகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6d4f95e5-14bf-4492-b1c8-c30003582c3c/26-6a8e82173f69a.webp' /></p><p> 

குறிப்பாக திருச்சி சாதனா, நடிகை தர்ஷா குப்தா உள்பட 12 பெண்கள் சமூக வலைத்தளங்களில் நேரடியாக வந்து ஆபாசத்தை தூண்டும் வகையில் பேசுகின்றனர். 

அவர்கள் பல லட்சம் ரூபாய் வரை சம்பாதிக்கின்றனர்.</p><p> இவர்களின் நடவடிக்கையால் இளைஞர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். 

எனவே சமூக வலைத்தளங்களில் ஆபாசமாக பேசுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.</p><p></p><p> </p><p>அதன்பேரில் பொலிஸ் இன்ஸ்பெக்டர் மெட்டில்டா ஜோசி தலைமையிலான பொலிஸார் விசாரணை நடத்தினர். </p><p>

இதையடுத்து சமூக வலைத்தளங்களில் ஆபாசமாக பேசுதல் போன்ற பதிவுகளை வெளியிட்ட திருச்சி சாதனா, நடிகை தர்ஷா குப்தா உள்பட 12 பேர் மீது பொலிஸார் வழக்கு பதிவுசெய்தனர். 

மேலும் அவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் பொலிஸார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-26T06:45:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடற்பகுதிகளுக்கு மஞ்சள் எச்சரிக்கை ; வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்த அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/yellow-warning-issued-for-strong-winds-sea-areas-1787726898"></link>
            <id>https://jvpnews.com/article/yellow-warning-issued-for-strong-winds-sea-areas-1787726898</id>
            <summary type="text">&amp;nbsp; யாழ்ப்பாணம் காங்கேசன்துறையிலிருந்து மன்னார் வழியாக புத்தளம் வரையிலும், ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையிலும் உள்ள கடற்பகுதிகளுக்கு பலத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; யாழ்ப்பாணம் காங்கேசன்துறையிலிருந்து மன்னார் வழியாக புத்தளம் வரையிலும், ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையிலும் உள்ள கடற்பகுதிகளுக்கு பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் தொடர்பில் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
</p><p>


குறித்த கடற்பகுதிகளில் மணிக்கு 50 முதல் 60 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதுடன், கடல் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fd80eb41-7263-4ee7-a516-51567e5dd33b/26-6a8e8c336ab3b.webp' /></p><p>
</p><p>


மேலும், புத்தளத்திலிருந்து கொழும்பு, காலி, மாத்தறை வழியாக பொத்துவில் வரையிலான கடற்பகுதிகளில் அலைகளின் உயரம் 2 முதல் 2.5 மீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>


இதனால் கடற்படை மற்றும் மீனவத் தரப்பினர் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-26T06:45:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரஷ்யாவில் தரையிறங்கிய அமெரிக்க இராணுவ விமானம்: வாய் திறக்காத மாஸ்கோ]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/us-air-force-flight-landed-in-moscow-airport-1787714816"></link>
            <id>https://news.lankasri.com/article/us-air-force-flight-landed-in-moscow-airport-1787714816</id>
            <summary type="text">உக்ரைன் உடனான போர் பதற்றம் நீடித்து வரும் இந்த நேரத்தில் அமெரிக்க விமானம் ஒன்று ரஷ்யாவில் தரையிறங்கி இருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது. உக்ரைன் - ரஷ்யா மோ...</summary>
            <content type="html"><![CDATA[<p>உக்ரைன் உடனான போர் பதற்றம் நீடித்து வரும் இந்த நேரத்தில் அமெரிக்க விமானம் ஒன்று ரஷ்யாவில் தரையிறங்கி இருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது.</p><h2> உக்ரைன் - ரஷ்யா மோதல்</h2><p>
உக்ரைன் - ரஷ்யா இடையிலான போர் தாக்குதல் கடந்த 4 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.</p><p> இந்த போர் நடவடிக்கையில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா செயல்பட்டு வருகிறது.</p><p> அத்துடன் ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்கா பல கட்ட பொருளாதார தடைகள் விதித்து இருப்பதுடன், ரஷ்ய எண்ணெயை மற்ற நாடுகளும் வாங்க கூடாது என்று உலக நாடுகளுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7ab2bdea-c950-45b8-b4a1-1a5363ea1f02/26-6a8e5d017fc02.webp' /></p><p> இருப்பினும் ரஷ்ய ஜனாதிபதி புடின் இந்த அச்சுறுத்தல்களுக்கு கவலை படாமல் தீவிரமாக சண்டை போட்டு வருகிறார்.</p><h2> ரஷ்யாவில் தரையிறங்கிய அமெரிக்க விமானம்</h2><p>இந்நிலையில் அமெரிக்காவின் மிகப்பெரிய டிரான்ஸ்போர்ட் விமானம் ஒன்று ரஷ்யாவில் தரையிறங்கி இருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது.</p><p></p><p> இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், இது தொடர்பாக ரஷ்யா எந்தவொரு தகவலையும் தெரிவிக்கவில்லை.</p><p> தரவுகளின் படி, ரஷ்யாவில் தரையிறங்கிய அமெரிக்க விமானம் C-17A Globemaster III என தெரியவந்துள்ளது.</p><p> மேலும் இந்த விமானம் நேரடியாக அமெரிக்காவில் இருந்து ரஷ்யாவிற்கு வரவில்லை.</p><p> அமெரிக்காவில் உள்ள கேம்ப் ஸ்பிரிங்ஸ் என்ற ஆண்ட்ருவ்ஸ் விமானப்படை தளத்தில் இருந்து புறப்பட்ட&nbsp; C-17A Globemaster III விமானம், முதலில் லிட்வியாவில் உள்ள ரிகா விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது.</p><p> &nbsp;ஆண்ட்ருவ்ஸ் விமானப்படை தளம் அமெரிக்க ஜனாதிபதியின் ஏர் விமானப்படை தளத்தில் முக்கியமானதாகும்.</p><p> நேற்று முன்தினம் லிட்வியாவில் இருந்து புறப்பட்ட C-17A Globemaster III விமானம் ரஷ்யாவில் உள்ள வனுகோவா விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது.</p><p> இந்த C-17A Globemaster III விமானம் அமெரிக்கா விமானப்படையின் ராணுவ தளவாடங்கள், சரக்குகளுடன் நீண்ட தூரம் பறக்க கூடியது என்பது குறிப்பிடத்தக்கது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p>&nbsp;<br></p>]]></content>
            <updated>2026-08-26T06:44:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் தொடரும் மர்மம் - உருக்குலைந்த நிலையில் மீட்கப்பட்ட சடலம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/death-body-found-in-jaffna-beach-1787726214"></link>
            <id>https://ibctamil.com/article/death-body-found-in-jaffna-beach-1787726214</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் - புங்குடுதீவு கடற்கரையில் சடலம் ஒன்று கரையொதுங்கியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.சடலமானது இனங்காண முடியாத அளவிற்கு உருக்குலைந்து...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் - புங்குடுதீவு கடற்கரையில் சடலம் ஒன்று கரையொதுங்கியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p>சடலமானது இனங்காண முடியாத அளவிற்கு உருக்குலைந்து காணப்படுகிறது.
</p><p>
இன்று காலை கடற்தொழிலுக்கு சென்றவர்கள் குறித்த சடலத்தை கண்டுள்ளனர்.</p><p></p><h2>அடையாளம் காணப்படவில்லை</h2><p>
</p><p>அதன்பின்னர் ஊர்காவற்துறை காவல்துறையினருக்கு தகவல் வழங்கினர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cee5dc71-dd90-4f3c-8fce-772501bffad9/26-6a8e8b3727ada.webp' /></p><p>சடலமாக கரையொதுங்கிய குறித்த நபர் யாரென இதுவரை அடையாளம் காணப்படவில்லை.
</p><p>
குறித்த சடலத்தை மீட்டு உடற்கூற்று பரிசோதனைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா
வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகளை காவல்துறையினர் மேற்கொண்டு
வருகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-26T06:44:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dilshan Dk</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பு பள்ளிவாசலில் நபிகள் நாயகம் முஹம்மது பிறப்பை முன்னிட்டு விசேட நிகழ்வு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/birth-of-prophet-muhammad-event-colombo-1787725436"></link>
            <id>https://tamilwin.com/article/birth-of-prophet-muhammad-event-colombo-1787725436</id>
            <summary type="text">முஸ்லிம்களினால் கொண்டாடப்படும் புனித மீலாதுன் நபிகள் நாயகம் பிறப்பை முன்னிட்டு கொழும்பு உம்மு ஸாவியா பள்ளிவாசல் நிர்வாக சபையின் ஏற்பாட்டில் 124 ஆவது வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>முஸ்லிம்களினால் கொண்டாடப்படும் புனித மீலாதுன் நபிகள் நாயகம் பிறப்பை முன்னிட்டு கொழும்பு உம்மு ஸாவியா பள்ளிவாசல் நிர்வாக சபையின் ஏற்பாட்டில் 124 ஆவது வருடாந்த “ஷமாயிலுல் முஹம்மதிய்யா” நிகழ்வு நடைபெற்றுள்ளது.</p><p>
கொழும்பு உம்மு ஸாவியா பள்ளிவாசலில் நேற்று நடைபெற்ற இந்நிகழ்வு, அஜ்வர்த் அல்-பாஸி அரபுக் கல்லூரியின் அதிபரும் கலீபத்துல் ஷாதுலி அல்-ஆலிம் அல்ஹாஜ் மௌலவி அஹ்மத் சூஃபி (மஹ்லரி) தலைமையில் இடம்பெற்றுள்ளது.</p><h2>125ஆவது ஆண்டு விழா</h2><p>

பள்ளிவாசல் தலைவர் அல்-ஹாஜ் மக்கி ஹாஷிம், நம்பிக்கையாளர் சபை உறுப்பினர்கள், உலமாக்கள், முகத்த மீன்கள் மற்றும் இக்வான்கள் உள்ளிட்ட பலர் இம்மஜ்லிஸில் கலந்து கொண்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/de4af442-713d-450d-b15c-8638d726fd4f/26-6a8e8b20904aa.webp' /></p><p>
</p><p>இந்நிகழ்வில் உரையாற்றிய பள்ளிவாசல் சமயக் குழுவின் தலைவரும் முன்னாள் பாலஸ்தீன தூதுவருமான அல்-ஹாஜ் பவ்ஸான் அன்வர், கலீபத்துல் ஷாதுலி அல்-ஆலிம் அல்ஹாஜ் மௌலவி அஹ்மத் சூஃபி, நம்பிக்கையாளர் சபை தலைவர் அல்-ஹாஜ் மக்கி ஹாஷிம், நம்பிக்கையாளர் சபை உறுப்பினர்கள், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் தாபனத்தின் முஸ்லிம் சேவை உள்ளிட்ட அனைவருக்கும் தனது நன்றியை தெரிவித்துள்ளார்.
</p><p>
மேலும், இந்நிகழ்வு அடுத்த ஆண்டு 125ஆவது ஆண்டு விழாவாக கொண்டாட பட உள்ளதாகவும், இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வை குறிக்கும் வகையில் நினைவு முத்திரையொன்று வெளியிடப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
</p><p>
இலங்கையிலும் உலகெங்கிலும் அமைதி, நல்லிணக்கம் மற்றும் சகோதரத்துவம் நிலவ வேண்டி சிறப்பு துஆ பிரார்த்தனையும் இடம்பெற்றது.</p><p></p><p><iframe src="https://www.facebook.com/plugins/video.php?height=314&href=https%3A%2F%2Fwww.facebook.com%2FLankasriTv%2Fvideos%2F3197654387100957%2F&show_text=false&width=560&t=0" width="560" height="314" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share" allowFullScreen="true"></iframe></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-26T06:44:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நிவாரணம் வழங்குவது நீதிக்கான போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவரும் நடவடிக்கை அல்ல! ஆளுநர் எடுத்துரைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/action-to-end-the-fight-for-justice-1787726320"></link>
            <id>https://ibctamil.com/article/action-to-end-the-fight-for-justice-1787726320</id>
            <summary type="text">காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கான நீதியைத் தேடும் பயணத்துடன், அந்தக் குடும்பங்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்கான வாழ்வாதார உதவிகளும் சமாந்தர...</summary>
            <content type="html"><![CDATA[<p>காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கான நீதியைத் தேடும் பயணத்துடன், அந்தக் குடும்பங்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்கான வாழ்வாதார உதவிகளும் சமாந்தரமாக முன்னெடுக்கப்பட வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
</p><p>
நிவாரணம் வழங்குவது, காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதிக்கான போராட்டத்தை ஒருபோதும் முடிவுக்குக் கொண்டுவரும் நடவடிக்கையாக அமையாது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.</p><p>

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு, காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வு நேற்று (25.08.2026) யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது.</p><p></p><h2>உறவுகளைத் தேடித் தவிக்கும் குடும்பங்கள்</h2><p> </p><p>இதில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே ஆளுநர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6ee99cdb-b131-43cf-b8c2-aa48a56868b3/26-6a8e8aee12adc.webp' /></p><p>பல ஆண்டுகளாக தமது உறவுகளைத் தேடித் தவிக்கும் குடும்பங்களின் வலியை முழுமையாக உணர்வதாகக் குறிப்பிட்ட ஆளுநர், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தற்போதைய அரசாங்கம் காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்திற்கு அதிக முன்னுரிமை வழங்கி வருவதாகத் தெரிவித்துள்ளார்.</p><p>
இதன் வெளிப்பாடாக, காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் செயற்பாடுகளுக்குத் தேவையான நிதி தொடர்ச்சியாக ஒதுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

ஒரு குடும்பத்தின் பிரதான வருமானம் ஈட்டுபவர் காணாமல் போயிருக்கக்கூடிய நிலையில், உண்மையைத் தேடும் விசாரணைகளுடன், அந்தக் குடும்பங்களின் பொருளாதார மற்றும் சமூக வாழ்க்கையை மீளக் கட்டியெழுப்புவதற்கான உதவிகளும் வழங்கப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>உண்மை, நீதி, நிவாரணம், கண்ணியம் மற்றும் மீள்நிகழாமை ஆகியவை ஒன்றோடொன்று தொடர்புடையவை. உண்மையைத் தேடும் பொறுப்பிலிருந்து இந்த அரசாங்கம் ஒருபோதும் விலகாது என ஆளுநர் வலியுறுத்தியுள்ளார்.</p><p>
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மனிதப் புதைகுழிகள் தொடர்பான அகழ்வாராய்ச்சிகள் இடம்பெற்று வருவதாகவும், அவ்விடங்களில் கிடைக்கும் சான்றுகள் முறையாக ஆவணப்படுத்தப்பட்டு, நிபுணத்துவத்துடன் விசாரிக்கப்பட்டு நீதிச் செயல்முறைக்கு உட்படுத்தப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-26T06:43:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[தென் கொரியா எல்லைக்குள் நுழைந்த ரஷ்ய போர் விமானம்: எச்சரித்த ரேடார் அமைப்புகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/russian-aircraft-enters-into-south-korea-zone-1787717275"></link>
            <id>https://news.lankasri.com/article/russian-aircraft-enters-into-south-korea-zone-1787717275</id>
            <summary type="text">Russian aircraft enters into South Korea zone: தென் கொரியாவின் வான் பாதுகாப்பு மண்டலத்திற்குள் ரஷ்யாவின் போர் விமானங்கள் அத்துமீறி நுழைந்தது பதற்றத்தை...</summary>
            <content type="html"><![CDATA[<p>Russian aircraft enters into South Korea zone: தென் கொரியாவின் வான் பாதுகாப்பு மண்டலத்திற்குள் ரஷ்யாவின் போர் விமானங்கள் அத்துமீறி நுழைந்தது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><h2> தென் கொரிய வான் எல்லைக்குள் நுழைந்த ரஷ்ய விமானம்</h2><p>

தென் கொரியாவின் வான் பாதுகாப்பு அடையாள மண்டலத்திற்குள் ரஷ்யாவின் போர் விமானங்கள் சில நிமிட பொழுதில் அத்துமீறி நுழைந்ததை அடுத்து பரபரப்பு ஏற்பட்டது.</p><p> &nbsp;ரஷ்ய போர் விமானங்கள் கிழக்கு கடற்கரைக்கு மேலாக உள்ள வான் எல்லைப் பகுதிக்குள் நுழைந்ததாக கூறப்படுகிறது.</p><p> மேலும் இந்த விமானங்கள் டோக்டோ மற்றும் உல்லுங் தீவுகள் அருகே வந்து விட்டு அங்கிருந்து வெளியேறியதாக கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0644acfb-fdc3-447a-bf18-98f7ba832df9/26-6a8e669cdccec.webp' /></p><p> ஆனால் இந்த சம்பவத்தில் ரஷ்ய விமானங்கள் தென் கொரியாவின் வான்வெளிக்குள் நுழையவில்லை என்று அதிகாரிகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.</p><p></p><h2> தென் கொரியாவின் உடனடி நடவடிக்கை</h2><p>
ரஷ்ய விமானங்கள் நுழைந்ததை அடுத்து தென் கொரியா தன்னுடைய போர் விமானங்களை உடனடியாக அனுப்பி வைத்துள்ளனர்.</p><p> ரஷ்ய விமானங்கள் நெருங்கி வருவதை தென் கொரிய ரேடார் அமைப்புகள் முன்கூட்டியே அறிந்து போர் விமானங்களை அனுப்பியதாகவும், எத்தகைய சூழ்நிலைகளையும் எதிர்கொள்ளும் விமானப்படை இருப்பதால் சம்பந்தப்பட்ட பகுதிக்கு விமானங்களை உடனடியாக அந்த பகுதிக்கு அனுப்பியதாக தென் கொரியா தெரிவித்துள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-26T06:35:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாடாளுமன்ற சிறப்புரிமைகளின் கீழ் நீதித்துறையைத் தாக்குவதை நிறுத்துங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/parliment-privilege-must-not-be-miss-used-1787726075"></link>
            <id>https://tamilwin.com/article/parliment-privilege-must-not-be-miss-used-1787726075</id>
            <summary type="text">&amp;nbsp;நாடாளுமன்ற சிறப்புரிமைகளுக்குள்மறைந்துகொண்டு நீதித்துறை மீது தாக்குதல் நடத்தும் செயலை உடனடியாக நிறுத்த வேண்டும் என இடதுசாரி மையத்தின் அழைப்பாளர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;நாடாளுமன்ற சிறப்புரிமைகளுக்குள்மறைந்துகொண்டு நீதித்துறை மீது தாக்குதல் நடத்தும் செயலை உடனடியாக நிறுத்த வேண்டும் என இடதுசாரி மையத்தின் அழைப்பாளர் சமீர பெரேரா ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் தெரிவித்துள்ளார்.
</p><p>முன்மொழியப்பட்டுள்ள அரசியலமைப்பு திருத்தம் தொடர்பாக எதிர்க்கட்சிக்கு ஏதேனும் பிரச்சினை இருந்தால், அதற்கு தற்போதைய அரசியலமைப்பு ரீதியான வழிமுறைகளையே பின்பற்ற வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p>
நீதிமன்ற நடவடிக்கைகளை நாடுங்கள், அல்லது நாடாளுமன்றத்தில் இதனைத் தோற்கடிக்க முயற்சி செய்யுங்கள். அதை விடுத்து தேவையின்றி இடையூறு செய்யக் கூடாது என அவர் வலியுறுத்தியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2719b764-284f-4fe1-aca5-b65bf3a0896a/26-6a8e88fce830a.webp' /></p><p>
கடந்த காலத்தில் இந்நாட்டு மக்கள் பழைய அரசியல் வர்க்கத்தை நிராகரித்துள்ளதாகவும், தற்போதைய அரசாங்கம் மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு அமைவாகவே செயற்பட்டு வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>சஜித் பிரேமதாச தலைமையிலான எதிர்க்கட்சிக்கு மக்கள் மிகக் குறைந்த சதவீத ஆதரவையே வழங்கியுள்ளனர் என்பதை நினைவுகூர்ந்துள்ளார்.</p><p>
மக்கள் தீர்ப்பை மதித்துச் செயற்படுமாறு எதிர்க்கட்சியினரைக் கேட்டுக்கொள்வதாக சமீர பெரேரா தெரிவித்துள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-26T06:34:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கைக்கு அடுத்த பேரிடர் சவால் ; எதிர்க்கட்சித் தலைவர் எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sri-lanka-s-next-disaster-challenge-sajith-warning-1787725912"></link>
            <id>https://jvpnews.com/article/sri-lanka-s-next-disaster-challenge-sajith-warning-1787725912</id>
            <summary type="text">எல் நினோ மற்றும் லா நினா பருவநிலை சுழற்சியின் கடுமையான தாக்கங்களை எதிர்கொள்ள இலங்கை உடனடியாகத் தயாராக வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச...</summary>
            <content type="html"><![CDATA[<p>எல் நினோ மற்றும் லா நினா பருவநிலை சுழற்சியின் கடுமையான தாக்கங்களை எதிர்கொள்ள இலங்கை உடனடியாகத் தயாராக வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எச்சரித்துள்ளார்.</p><p></p><p>

மாத்தறை - ஹம்பாந்தோட்டை, தல்ப பற்று பகுதியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் முதல் உலகளாவிய பல்வேறு நெருக்கடிகள் வரை இலங்கை ஏற்கனவே ஐந்து பெரிய பேரிடர்களைச் சந்தித்துள்ளதாகவும், விரைவில் ஆறாவது சவாலை எதிர்கொள்ள நேரிடலாம் என்றும் அவர் தெரிவித்தார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/54e1a3fc-8b0c-45f2-bc7f-cf52d4397c35/26-6a8e885962618.webp' /></p><p>கடுமையான வறட்சியைத் தொடர்ந்து பலத்த மழை பெய்யும் அபாயம் இருப்பதாகவும், குறுகிய காலத்திற்குள் இந்த இரண்டு தீவிர வானிலை மாற்றங்களையும் எதிர்நோக்க நேரிடலாம் எனவும் நிபுணர்கள் எச்சரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
</p><p>
நிவாரண நடவடிக்கைகளுடன் மாத்திரம் நின்றுவிடாமல், இந்தியாவின் ஒடிசா மாநிலத்தின் முறைகளைக் கற்றுக்கொண்டு புதிய பேரிடர் முகாமைத்துவ கட்டமைப்பு, புதிய திட்டங்கள் மற்றும் நிறுவனங்களை உருவாக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.</p><p>

பொருளாதார ரீதியில் வீழ்ச்சியடைந்த நாடுகள் வெளிநாட்டு அழுத்தங்களுக்கு எளிதில் இலக்காகக்கூடும் என்றும், சர்வதேச நிதி நிறுவனங்கள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களின் தாக்கங்களை எதிர்கொள்ள அனைவரும் ஒன்றிணைய வேண்டும் எனவும் சஜித் பிரேமதாச எச்சரித்தார்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-26T06:31:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[மீண்டும் கருப்பு பக்கம் நடிகை ஸ்ருதிஹாசன்... லேட்டஸ்ட் போட்டோ ஷுட்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/actress-shruti-haasan-black-attire-photoshoot-1787721716"></link>
            <id>https://cineulagam.com/article/actress-shruti-haasan-black-attire-photoshoot-1787721716</id>
            <summary type="text">ஸ்ருதிஹாசன்தமிழ் சினிமாவில் பிரபலத்தின் வாரிசாக களமிறங்கிய நடிகை தான் ஸ்ருதிஹாசன்.கருப்பு நிறம் எந்த ஒரு விசேஷத்திற்கும் அணிய கூடாது என்பார்கள், ஆனால்...</summary>
            <content type="html"><![CDATA[<h2>ஸ்ருதிஹாசன்</h2><p>தமிழ் சினிமாவில் பிரபலத்தின் வாரிசாக களமிறங்கிய நடிகை தான் ஸ்ருதிஹாசன்.</p><p>கருப்பு நிறம் எந்த ஒரு விசேஷத்திற்கும் அணிய கூடாது என்பார்கள், ஆனால் நடிகை ஸ்ருதிஹாசன் கடந்த சில வருடங்களாகவே ஒரே கருப்பு நிற உடைகளாகவே அணிந்து வந்தார்.&nbsp;</p><p>கடந்த சில போட்டோ ஷுட்களில் வேறு நிறங்கள் சில பயன்படுத்திய ஸ்ருதிஹாசன் மீண்டும் கருப்பு நிறத்தில் மாடர்ன் உடையில் போட்டோ ஷுட் நடத்தியுள்ளார், இதோ அந்த போட்டோஸ்,</p><p><br></p>]]></content>
            <updated>2026-08-26T06:30:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நிலத்தை தோண்டியபோது சக்தி வாய்ந்த மோட்டார் குண்டு ; மட்டக்களப்பில் ஷாக்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/powerful-mortar-shell-in-kattankudy-home-1787726003"></link>
            <id>https://jvpnews.com/article/powerful-mortar-shell-in-kattankudy-home-1787726003</id>
            <summary type="text">&amp;nbsp; மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தாழங்குடா பிரதேசத்தில் ​நேற்று (25) சக்தி வாய்ந்த குண்டு ஒன்று பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ள ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தாழங்குடா பிரதேசத்தில் ​நேற்று (25) சக்தி வாய்ந்த குண்டு ஒன்று பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. </p><p>

தாழங்குடா வேடர் குடியிருப்பு சமுர்த்தி வீதியில் வீடொன்றின் முற்றத்தில் வீட்டு உரிமையாளர் பயிர்ச் செய்கைக்காக நிலத்தை தோண்டிக் கொண்டிருந்த போது, சக்தி வாய்ந்த 81 ரக மோட்டார் கொண்டு மீட்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/44993f9e-d301-40dd-8cb3-625416ecda54/26-6a8e88b502d4e.webp' /></p><p> </p><p>

வீட்டு உரிமையாளர் காத்தான்குடி பொலிஸாருக்கு குறித்த குண்டு தொடர்பாக அறிவித்ததையடுத்து ஸ்தலத்துககு வந்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர். </p><p>

 யுத்த காலத்தில் இக்குண்டு புதைக்கப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-08-26T06:30:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பகுதியில் கொடூரம்: கணவனின் கத்திக் குத்துக்கு இலக்காகி மனைவி பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/husband-stabs-wife-with-knife-in-mannar-1787725067"></link>
            <id>https://ibctamil.com/article/husband-stabs-wife-with-knife-in-mannar-1787725067</id>
            <summary type="text">கணவனின் கத்திக்குத்திற்கு இலக்காகி மனைவி உயிரிழந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவம்&amp;nbsp; இன்று புதன்கிழமை (26) காலை 9 மணியளவில் தலைமன்னார் தொடர...</summary>
            <content type="html"><![CDATA[<p>கணவனின் கத்திக்குத்திற்கு இலக்காகி மனைவி உயிரிழந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
</p><p>இந்த சம்பவம்&nbsp; இன்று புதன்கிழமை (26) காலை 9 மணியளவில் தலைமன்னார் தொடருந்து நிலையப் பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் இடம்பெற்றுள்ளது.</p><p>இவ்வாறு உயிரிழந்தவர் இரண்டு பிள்ளைகளின் தாய் ஆவார்.</p><p></p><h2>கணவர் கைது</h2><p>
கணவனின் கத்தி குத்துக்கு இலக்காகிய மனைவி தலை மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d8a64116-e201-46bb-a64e-399fffc72e93/26-6a8e87f5d3285.webp' /></p><p>தாக்குதலில் உயிரிழந்த பெண்ணின் கணவர் தலைமன்னார் பகுதியில் வைத்து தலைமன்னார் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
மேலும், இச் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளில் தலைமன்னார் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/FJQcrzobjUcEaJJsEVOWpF" target="_blank">WHATSAPP </a>CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-26T06:30:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஐ.ம. சக்தி -ஐ.தே.க இணைப்பில் ஏற்பட்டுள்ள திடீர் திருப்பம்! முதல்நிலையை விடுத்து தீட்டப்படும் திட்டம்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/united-nations-party-samagi-jana-balawegaya-1787724480"></link>
            <id>https://tamilwin.com/article/united-nations-party-samagi-jana-balawegaya-1787724480</id>
            <summary type="text">ஐக்கிய தேசியக் கட்சியும் ஐக்கிய மக்கள் சக்தியும் இணைந்து செயற்படுவதாக ஆங்காங்கே பல கதைகள் பேசப்பட்ட போதிலும் இணைப்பு சாத்தியமாகவில்லை.&amp;nbsp; தற்போதைய ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஐக்கிய தேசியக் கட்சியும் ஐக்கிய மக்கள் சக்தியும் இணைந்து செயற்படுவதாக ஆங்காங்கே பல கதைகள் பேசப்பட்ட போதிலும் இணைப்பு சாத்தியமாகவில்லை.&nbsp; தற்போதைய அரசியல் நிலைமையை கருத்தில் கொண்டு ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் இரண்டாம் மூன்றாம் நிலை உறுப்பினர்கள் இணைந்து புதிய தலைவரைத் தேட திட்டமிடப்படுவதாக அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர்.</p><p>அது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது
ஐக்கிய மக்கள் சக்தி - ஐக்கிய தேசியக் கட்சி ஒன்றாக இணைந்து செயற்படப்போவதாக கடந்த வருடத்தில் இருந்தே பேசப்பட்டது.அதனை தொடர்ந்து இரு பிரிவினருக்கும் இடையே உத்தியோகபூர்வ மற்றும் உத்தியோகபூர்வமற்ற மட்டங்களில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன.
</p><h2>
</h2><p></p><h2>இரண்டாம் நிலை உறுப்பினர்களின் இணைப்பு</h2><p>தலைவர்கள் சந்தித்ததாகக் கூறப்பட்டது இரண்டாம் நிலை உறுப்பினர்கள் சந்தித்ததாகக் கூறப்பட்டது.யார் யாரைச் சந்தித்தாலும் இறுதியில் கிடைத்த விடை எதுவும் இல்லை என்பதுதான் அரசியல் மேடையில் பேசப்பட்ட விடயமாகும்.
</p><p>இருப்பினும் இரு கட்சிகளும் இணைந்தால் யார் தலைவர் என்பது தொடர்பான பிரச்சினை ஒன்று இருப்பதாக ஒரு தரப்பும் கூறுகிறது. இந்த இரு தலைவர்களுக்கும் நெருக்கமாக இருக்கும் சிரேஷ்டர்கள் என கூறிக்கொள்ளும் ஒரு குழுவினர் இந்த இணைப்பை சீர்குலைப்பதாக மற்றொரு தரப்பு கூறுகிறது.
</p><p>எனவே யார் தடை போட்டாலும் இப்போது இதைப் பார்த்துப் பார்த்து சலித்துப்போன இந்த இரு கட்சிகளினதும் இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலையில் உள்ளவர்கள் 'தலைவர்கள் விரும்புவதைச் செய்யட்டும் நாங்கள் இணைகிறோம்' என்று தீர்மானித்துள்ளதாகத் தகவல்கள் தெரியவந்துள்ளன. </p><p>
அவர்கள் கூறுவது போல் 'நாம் இணையாவிட்டால் முன்னோக்கி செல்வதற்கு வேறு வழியில்லை என்பதோடு பலமான ஒரு அணியை உருவாக்க முடியாது. இது யாருக்கும் புரிவதில்லை. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c9023abe-4eed-429a-83e8-951c234a5442/26-6a8e82c23e34c.webp' /></p><p>இந்தப் புரியாத விடயத்தைப் புரியவைக்க குறைந்தபட்சம் நாமாவது இணைந்து இந்த இணைப்பை உருவாக்க வேண்டும். இல்லையெனில் எம்மால் இந்தப் பயணத்தை முன்னெடுத்துச் செல்ல முடியாது' என்று இரண்டாம் - மூன்றாம் நிலை உறுப்பினர்கள் பேசியுள்ளனர்.
</p><p>இதன் மூலம் எப்படியாவது தலைவர்களுக்குச் செய்தியை அனுப்ப ஆயத்தமாகிறார்கள். 'தலைவர்கள் இணையாவிட்டாலும் சிரேஷ்ட தலைவர்கள் எனத் தங்களைக் கூறிக்கொள்பவர்கள் தடைபோட்டாலும் நாமாவது இணைகிறோம்' என்றுதான் அவர்கள் கூறுகிறார்கள்.
</p><p>அப்படியென்றால் 'தலைவர் யார் என்ற கேள்வி எழுந்தால்இ அதை அந்த நேரத்தில் பார்த்துக்கொள்வோம். நமது இரண்டாம் நிலையிலிருந்தோ அல்லது மூன்றாம் நிலையிலிருந்தோ ஒரு தலைவரைக் கண்டபிடிக்க முடியாதா என்ன? </p><p>தலைவரைப் பின்னர் கண்டபிடித்துக் கொள்ளலாம் முதலில் இந்த இணைப்பை உருவாக்கி நாம் ஒன்றாக இருக்க வேண்டும் என்பதுதான் அவர்களின் நிலைப்பாடாகும்.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-26T06:28:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[தேசியக் கொடியில் மாற்றம் செய்ய வேண்டுமென அமைச்சர் கூறினாரா!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/fake-statement-regarding-the-national-flag-1787723863"></link>
            <id>https://tamilwin.com/article/fake-statement-regarding-the-national-flag-1787723863</id>
            <summary type="text">தேசியக் கொடியில் மாற்றம் செய்யப்பட வேண்டும் எனத் தான் கூறியதாகப் பரப்பப்படும் செய்தி முற்றிலும் பொய்யானது என அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் அமைச்சர் டொக்டர...</summary>
            <content type="html"><![CDATA[<p>தேசியக் கொடியில் மாற்றம் செய்யப்பட வேண்டும் எனத் தான் கூறியதாகப் பரப்பப்படும் செய்தி முற்றிலும் பொய்யானது என அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் அமைச்சர் டொக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
</p><p>இந்த பிரசாரம் குறித்து குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
</p><p>தேசியக் கொடி மாற்றம் குறித்துப் பரப்பப்பட்ட போலிச் செய்திகள் தொடர்பான இணையதள இணைப்புகள் ஊடகவியலாளர்களிடம் இருந்தால், அவற்றை தன்னிடம் ஒப்படைக்குமாறு அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/14431723-67a9-40ec-8c72-badd59cc32dd/26-6a8e805957e6a.webp' /></p><p>
இதேவேளை, முச்சக்கரவண்டிகளை இயக்குவதற்கான குறைந்தபட்ச வயதை 40 ஆக உயர்த்தும் யோசனை குறித்து அரசாங்கம் இதுவரை பரிசீலிக்கவில்லை என ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த அமைச்சர் தெளிவுபடுத்தினார்.</p><p>
பாடசாலைக் கல்வியை இடைநிறுத்தியவர்கள் மற்றும் உயர்தரப் பரீட்சைக்குப் பிந்திய மாணவர்களுக்கு தொழிற்பயிற்சிகளை வழங்குவது தொடர்பாக பல்வேறு தரப்பினரிடமிருந்தும் யோசனைகள் கிடைத்துள்ளதாகவும், எனினும் இது குறித்த இறுதித் தீர்மானத்தை அரசாங்கமே எடுக்கும் எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-26T06:25:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலக சாம்பியன் கார்ல்சனை வீழ்த்திய 15 வயதான இந்திய இளம் சதுரங்க வீரர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/15-year-old-indian-teen-stuns-world-magnus-carlsen-1787723020"></link>
            <id>https://ibctamil.com/article/15-year-old-indian-teen-stuns-world-magnus-carlsen-1787723020</id>
            <summary type="text">ஐந்து முறை உலக சதுரங்க சாம்பியனான Magnus Carlsen-ஐ 15 வயதான இந்திய சதுரங்க வீரர் வந்தன் அலங்கார் சவாய் 50 நகர்வுகளில் வீழ்த்தி சிறப்பான வெற்றியைப் பதி...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஐந்து முறை உலக சதுரங்க சாம்பியனான Magnus Carlsen-ஐ 15 வயதான இந்திய சதுரங்க வீரர் வந்தன் அலங்கார் சவாய் 50 நகர்வுகளில் வீழ்த்தி சிறப்பான வெற்றியைப் பதிவு செய்துள்ளார்.
</p><p>
2,288 தரவரிசை புள்ளிகளைக்கொண்ட இந்திய வீரர் வந்தன், 2,823 புள்ளிகளுடன் போட்டியில் பங்கேற்ற கார்ல்சனை இரண்டாவது சுற்றில் இவ்வாறு தோற்கடித்தார்.</p><p>

26ஆவது நகர்வு வரை ஆட்டம் சமநிலையில் இருந்த நிலையில், கார்ல்சன் செய்த முக்கிய தவறை பயன்படுத்திக் கொண்ட வந்தன், தனது சாதகமான நிலையை வெற்றியாக மாற்றினார்.</p><p></p><h2>சர்வதேச மாஸ்டர் (IM) பட்டம்</h2><p>
</p><p>
இந்த வெற்றி குறித்து வந்தன் தெரிவிக்கும்போது, கார்ல்சனுக்கு எதிராக விளையாடுகையில் தன்னிடம் இழப்பதற்கு எதுவும் இல்லை என்பதால் வழக்கமான அணுகுமுறையுடன் நிதானமாக விளையாடியதாகத் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0c618468-af11-4420-9c69-0bd7a8ae0feb/26-6a8e852a153b2.webp' /></p><p>
</p><p>
வந்தனின் பெற்றோருக்குக்கூட அவர் கார்ல்சனுடன் விளையாடியது முதலில் தெரியவில்லை. போட்டி குறித்து குடும்பத்தினர் கேட்டபோதுதான் அவர் கார்ல்சனை தோற்கடித்த செய்தியை அறிந்துள்ளனர்.</p><p>

போட்டியில் வந்தன் மொத்தம் 3 வெற்றிகளையும் ஒரு தோல்வியையும் பதிவு செய்த நிலையில், நான்காவது சுற்றுக்குப் பின்னர் சோர்வாக உணர்ந்ததால் போட்டியில் இருந்து விலகியதாக தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p>
தற்போது தனது முக்கிய இலக்கு சர்வதேச மாஸ்டர் (IM) பட்டத்தை பெறுவதே என வந்தன் குறிப்பிட்டுள்ளார்.</p><p> எனினும், எதிர்காலத்தில் சதுரங்கத்தை முழுநேரத் தொழிலாகத் தொடர்வாரா என்பது குறித்து அவர் இன்னும் முடிவு செய்யவில்லை.
</p><p>
குறிப்பாக, கார்ல்சனின் 2,823 தரவரிசை புள்ளிகளுடன் ஒப்பிடுகையில் 2,288 தரவரிசை புள்ளிகளை கொண்டிருந்த 15 வயது வீரரின் இந்த வெற்றி, அவரது இளம் சதுரங்க வாழ்க்கையின் குறிப்பிடத்தக்க சாதனையாக அமைந்துள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-26T06:19:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[சொந்த ஊர் செல்ல கொழும்பு பேருந்து நிலையத்தில் அலைமோதும் பயணிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/passengers-crowd-at-colombo-bus-station-1787724892"></link>
            <id>https://jvpnews.com/article/passengers-crowd-at-colombo-bus-station-1787724892</id>
            <summary type="text">நீண்ட வார இறுதி விடுமுறையையொட்டி, கொட்டாவ மாகும்புர பல்நோக்கு போக்குவரத்து நிலையத்திற்கு அதிகளவிலான பயணிகள் வருகை தருவதாக தெரிவிக்கப்படுகிறது.

விடு...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீண்ட வார இறுதி விடுமுறையையொட்டி, கொட்டாவ மாகும்புர பல்நோக்கு போக்குவரத்து நிலையத்திற்கு அதிகளவிலான பயணிகள் வருகை தருவதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><p>

விடுமுறையைக் கழிப்பதற்காக தங்களது சொந்த ஊர்களுக்கும் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் பயணிக்கும் மக்கள் அதிகரித்துள்ளதால், மாகும்புர போக்குவரத்து நிலையத்தில் இன்று (26) கடும் பயணிகள் நெரிசல் ஏற்பட்டுள்ளது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1b15fd49-0876-4cba-a133-1211fc396577/26-6a8e845e3f65d.webp' /></p><p>பேருந்துகளைப் பயன்படுத்தி பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், நிலையத்தில் நீண்ட வரிசைகளும் பரபரப்பான சூழலும் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
நீண்ட வார இறுதி விடுமுறையை முன்னிட்டு பயணிகள் அதிகளவில் பயணிக்கக்கூடும் என்பதால், போக்குவரத்து நிலையங்களுக்கு செல்லும் மக்கள் தங்களது பயணங்களை முன்கூட்டியே திட்டமிடுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-26T06:15:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீண்ட வார இறுதி விடுமுறை! அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிப்போருக்கு முக்கிய அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/notice-issued-to-travelers-on-expressways-1787723961"></link>
            <id>https://tamilwin.com/article/notice-issued-to-travelers-on-expressways-1787723961</id>
            <summary type="text">அதிவேக நெடுஞ்சாலைகளின் பல வெளியேறும் இடங்களில் தற்போது கடுமையான போக்குவரத்து நெரிசல் காணப்படுவதாக தெரிவிகக்ப்படுகின்றது. வீதி அபிவிருத்தி அதிகார சபை இ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அதிவேக நெடுஞ்சாலைகளின் பல வெளியேறும் இடங்களில் தற்போது கடுமையான போக்குவரத்து நெரிசல் காணப்படுவதாக தெரிவிகக்ப்படுகின்றது.</p><p> வீதி அபிவிருத்தி அதிகார சபை இதனை தெரிவித்துள்ளது.</p><p>



இதன்படி,, தெற்கு அதிவேக நெடுஞ்சாலை, வெளிவட்ட அதிவேக நெடுஞ்சாலை மற்றும் மத்திய அதிவேக நெடுஞ்சாலை ஆகியவற்றின் பல வெளியேறும் இடங்களிலே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.</p><h2>சாரதிகளுக்கு முக்கிய அறிவிப்பு&nbsp;</h2><p>தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் மத்தள வெளியேறும் இடம், வெளிவட்ட அதிவேக நெடுஞ்சாலையின் கடவத்தை வெளியேறும் இடத்தில் இவ்வாறு நெரிசல் ஏற்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b28c61af-bd07-4975-8dd9-c8719bd85dbd/26-6a8e8339925c7.webp' /></p><p> </p><p>



அத்துடன் மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் மீரிகம நுழைவு இடம் மற்றும் யக்கபிட்டிய வெளியேறும் இடம் ஆகிய பகுதிகளுக்கு அருகிலும் இவ்வாறு போக்குவரத்து நெரிசல் நிலவுகின்றது.
</p><p>


குறித்த பகுதிகள் ஊடாக பயணிக்கும் சாரதிகள் அவதானத்துடனும் கவனமாகவும் வாகனங்களைச் செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.</p><p>இன்று தொடங்கும் நீண்ட வார இறுதி விடுமுறை காரணமாக, அதிவேக நெடுஞ்சாலைகளின் நுழைவு மற்றும் வெளியேறும் வாயில்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக அந்த அதிகாரசபை மேலும் கூறியுள்ளது.</p><p>&nbsp;</p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-26T06:10:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ்ப்பாணம் - புங்குடுதீவு கடற்கரையில் உருக்குலைந்த சடலம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/mutilated-body-found-on-the-beach-at-pungudutivu-1787724721"></link>
            <id>https://jvpnews.com/article/mutilated-body-found-on-the-beach-at-pungudutivu-1787724721</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;யாழ்ப்பாணம் - புங்குடுதீவு கடற்கரையில் இன்று காலை சடலம் ஒன்று கரையொதுங்கியுள்ளது. 



சடலமானது அடையாளம் காண முடியாத அளவிற்கு உருக்குல...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;யாழ்ப்பாணம் - புங்குடுதீவு கடற்கரையில் இன்று காலை சடலம் ஒன்று கரையொதுங்கியுள்ளது. 



சடலமானது அடையாளம் காண முடியாத அளவிற்கு உருக்குலைந்து காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>


இன்று காலை கடற்தொழிலுக்கு சென்றவர்கள் குறித்த சடலத்தை கண்டுள்ளனர். அதன்பின்னர் ஊர்காவற்துறை பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.



சடலமாக கரையொதுங்கிய குறித்த நபர் யாரென இதுவரை அடையாளம் காணப்படவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e061b441-a68f-4612-86a1-dc264fb7c65c/26-6a8e83b2c9515.webp' /></p><p>
</p><p>


குறித்த சடலத்தை மீட்டு உடற்கூற்று பரிசோதனைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-26T06:09:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[புனர்பூசம் நட்சத்திரத்தில் செவ்வாய்: இந்த 3 ராசிகளுக்கு பணவரவு அதிகரிக்கும்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/mars-transit-in-punarpoosam-who-get-huge-luck-1787720914"></link>
            <id>https://manithan.com/article/mars-transit-in-punarpoosam-who-get-huge-luck-1787720914</id>
            <summary type="text">ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில், நவகிரகங்களின் நிலையானது மனித வாழ்க்கையில் ஆழமான தாக்கத்தை கொண்டிருக்கும் என்று தொன்று தொட்டு நம்பப்பட்டு வருகின்றது....</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில், நவகிரகங்களின் நிலையானது மனித வாழ்க்கையில் ஆழமான தாக்கத்தை கொண்டிருக்கும் என்று தொன்று தொட்டு நம்பப்பட்டு வருகின்றது. </p><p>நவகிரகங்களின் தளபதியாகக் கருதப்படும் செவ்வாய், தைரியம், வீரம், வலிமை, துணிச்சல் ஆகியவற்றின் காரணியாக விளங்குகிறார். மேலும் மேஷம் மற்றும் விருச்சிக ராசிகளின் அதிபதியாகவும் உள்ளார்.செவ்வாய் ஒரு ராசியில் சுமார் 45 நாட்கள் தங்கி, அவ்வப்போது நட்சத்திரத்தையும் மாற்றுவார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bcbe1cf2-d5d9-4a44-8a00-6166eb314f80/26-6a8e7bee54225.webp' /></p><p></p><p>அந்த வகையில், செப்டம்பர் 2 ஆம் தேதி செவ்வாய் புனர்பூசம் நட்சத்திரத்தில் நுழைகிறார். இதன் அதிபதி குரு பகவான். </p><p>செவ்வாய் இந்த நட்சத்திரத்தில் செப்டம்பர் 24 ஆம் தேதி வரை இருப்பார்.

செவ்வாயின் இந்த நட்சத்திர பெயர்ச்சி அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும், 3 ராசிக்காரர்களுக்கு குறிப்பாக மங்களகரமாக அமையவுள்ளது.</p><p> இவர்களுக்கு நிதி நிலையில் முன்னேற்றமும், வேலைவாய்ப்பு மற்றும் தொழிலில் வெற்றியும் கிடைக்க வாய்ப்புள்ளது. செப்டம்பர் முதல் வாரத்தில் நிகழும் இந்த பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் பெறும்&nbsp; ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.</p><h2>மேஷம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e53894de-9e1e-4bb5-8ec1-3e6c00f0f1f4/26-6a8e7bef08eec.webp' /></p><p>
செவ்வாயின் நட்சத்திரப் பெயர்ச்சியால் மேஷ ராசியைச் சேர்ந்தவர்களுக்கு செப்டம்பர் மாதத்தின் தொடக்கமே மிகவும் சிறப்பாக அமையப் போகிறது. </p><p>நீண்ட காலமாக முடிக்க முடியாமல் நிலுவையில் இருந்த வேலைகள் மற்றும் முயற்சிகள் அனைத்தும் இந்த காலகட்டத்தில் சாதகமாக முடிவடையும். </p><p>இதனால் மனதில் இருந்த கவலைகள் நீங்கி, நிம்மதியும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். முன்னைய முதலீடுகளில் இருந்து எதிர்ப்பாராத லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது.</p><h2>தனுசு</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7361a11c-36b8-42c5-a7cc-a9fa1351433d/26-6a8e7befae8c7.webp' /></p><p>செவ்வாயின் நட்சத்திரப் பெயர்ச்சியால் தனுசு ராசிக்காரர்களுக்கு செப்டம்பர் மாதத்தின் தொடக்கமே சாதகமாகவும் சிறப்பாகவும் அமையும்.</p><p>இந்த காலகட்டத்தில் மன தைரியம் அதிகரிப்பதுடன், எதையும் நம்பிக்கையுடன் எதிர்கொள்ளும் ஆற்றலும் வளரும். நீண்ட நாட்களாக மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கி, தெளிவான முடிவுகளை எடுக்க முடியும்.
</p><p>
வேலை செய்பவர்களுக்கு அவர்களின் சிறப்பான செயல்திறன் மற்றும் கடின உழைப்புக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். இதன் காரணமாக பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகளும் உருவாகலாம்.குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கி மகிழ்ச்சியான சூழல் உருவாகும்.</p><h2>

மிதுனம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/85cacb07-0c05-4850-85e9-c4608d461bdc/26-6a8e7bf060b51.webp' /></p><p></p><p>செவ்வாயின் நட்சத்திரப் பெயர்ச்சியால் மிதுன ராசிக்காரர்களின் வாழ்க்கையில் செப்டம்பர் மாதத்தின் முதல் வாரத்திலேயே பல நல்ல மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.</p><p>குறிப்பாக, நிதி ரீதியாக இந்த காலகட்டம் மிகவும் சாதகமாக அமையும். வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படுவதோடு, பல்வேறு வழிகளில் இருந்து எதிர்பாராத நிதி ஆதாயங்கள் கிடைக்கும்.&nbsp;</p><p>
நீங்கள் மேற்கொள்ளும் ஒவ்வொரு பணியையும் சிறப்பாகவும், திட்டமிட்டபடியும் செய்து முடிப்பீர்கள். இதன் மூலம் உங்கள் திறமை மற்றும் உழைப்புக்கு நல்ல அங்கீகாரம் கிடைக்கும்..இதுவரை தாமதமாகி வந்த சில காரியங்களும் சாதகமாக முடிவடையும்.</p><p><b>இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;&nbsp;</b></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b>&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-26T06:04:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடத்தப்பட்ட தனம்.. கையெழுத்து போட்ட கதிர், ரகுராம் செய்யப்போவது என்ன? - சந்தியா ராகம் இன்றைய எபிசோட் அப்டேட்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/sandhya-raagam-serial-today-episode-1787721878"></link>
            <id>https://viduppu.com/article/sandhya-raagam-serial-today-episode-1787721878</id>
            <summary type="text">Zee தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சந்தியா ராகம். நேற்றைய எபிசோடில் புவனேஸ்வரி தனத்தை...</summary>
            <content type="html"><![CDATA[<p>Zee தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சந்தியா ராகம். நேற்றைய எபிசோடில் புவனேஸ்வரி தனத்தை கடத்தி அதிர்ச்சி கொடுத்த நிலையில், இன்று நடக்கப்போவது என்ன என்று பார்க்கலாம் வாங்க.</p><p>அதாவது, கடத்தப்பட்ட தனத்தை ஒரு ஃப்ரீசர் ரூமுக்குள் அடைத்து வைக்கிறார்கள். அதன்பிறகு புவனேஸ்வரி, மாயாவுக்கு வீடியோ கால் செய்து, தனம் தன்னிடம் இருப்பதாக சொல்கிறாள். மேலும், கதிர்தான் ஜீவா என்ற உண்மையை ஒப்புக்கொண்டு கதிர் சில ஆவணங்களில் கையெழுத்து போட வேண்டும் என்று கண்டிஷன் போடுகிறாள்.
</p><p>இதை கேட்ட மாயா உடனே கதிரை சந்தித்து விஷயத்தை சொல்ல, தனத்தை காப்பாத்தணும் என்பதற்காக எங்கே வேண்டுமானாலும் கையெழுத்து போட தயார் என்று கதிர் சொல்கிறான். இதையடுத்து இருவரும் வீட்டில் யாருக்கும் தெரியாமல் புவனேஸ்வரியை சந்திக்க கிளம்புகிறார்கள்.
</p><p>மறுபக்கம், தனம் அடைக்கப்பட்டிருக்கும் ஃப்ரீசர் ரூமுக்குள் வரும் ரவுடி தனது செல்போனை தவறவிட்டு செல்கிறான். அந்த போன் தனத்தின் கையில் கிடைக்க, உடனே சீனுவுக்கு போன் செய்கிறாள். ஆனால் எதிர்பாராத விதமாக அந்த அழைப்பை மணி எடுக்கிறார். தனம் தான் கடத்தப்பட்டிருப்பதை சொல்ல, மணி உடனே இந்த விஷயத்தை வீட்டில் உள்ள அனைவரிடமும் தெரிவிக்கிறார்.</p><p>இதனால் வீட்டில் இருப்பவர்கள் எல்லோரும் அதிர்ச்சி அடைகிறார்கள். தனத்தை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்று முடிவு செய்து தேட ஆரம்பிக்கிறார்கள். ஒரு கட்டத்தில் மின்வாரிய அலுவலகத்துக்குச் சென்று ஒவ்வொரு ஏரியாவாக கரண்டை கட் செய்து, தனம் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்க முயற்சி செய்கிறார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f812bf25-488b-42a8-a1f3-0b7f8579ba54/26-6a8e7899b8c7b.webp' /></p><p>இதற்கிடையில் கதிரும் மாயாவும் புவனேஸ்வரியை சந்திக்கிறார்கள். புவனேஸ்வரி கொடுத்த ஆவணங்களில் கதிர் கையெழுத்து போடுகிறான். ஆனால் தனம் இருக்கும் இடத்தை மட்டும் சொல்லாமல் புவனேஸ்வரி தொடர்ந்து நக்கல் அடிக்கிறாள். இதனால் கடுப்பாகும் மாயா, "இவங்க சொல்லப் போற மாதிரி தெரியல, நாமளே தனத்தை தேடலாம்" என்று கதிருடன் அங்கிருந்து கிளம்புகிறாள்.</p><p>மறுபக்கம், கடும் குளிரில் ஃப்ரீசர் ரூமுக்குள் தவித்துக் கொண்டிருக்கும் தனம், கையில் இருக்கும் செயினை பார்த்து கண்கலங்குகிறாள். "நீதான் ஜீவா என்ற உண்மை ரகுராமுக்கு தெரியணும். அவர் தொலைச்ச தங்கை பையன் நீதான் என்பதை அவர் தெரிஞ்சுக்கணும். நான் இல்லாம போனாலும் நீ சந்தோஷமா இருக்கணும்" என்று மனதிற்குள் நினைத்து உருகுகிறாள்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4acaa0c9-8164-4c82-92ca-e9cff31839a8/26-6a8e789a6faca.webp' /></p><p>இப்படியான நிலையில் தனத்தை குடும்பத்தினர் காப்பாற்றுவார்களா? கதிர் போட்ட கையெழுத்தால் என்ன பிரச்சனை வரப்போகிறது? ரகுராம் அடுத்ததாக என்ன செய்யப் போகிறார்? என்பதை தெரிந்துகொள்ள சந்தியா ராகம் சீரியலை இன்று இரவு 10 மணிக்கு Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத் தவறாதீர்கள்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-26T06:00:00+00:00</updated>
        </entry>
    </feed>
