<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-09-05T12:47:55+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாள சுரங்கப்பாதையில் 10 நாட்களின் பின் மீட்கப்பட்ட மூன்றாவது நபர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/third-person-rescued-nepal-tunnel-after-10-days-1788607462"></link>
            <id>https://canadamirror.com/article/third-person-rescued-nepal-tunnel-after-10-days-1788607462</id>
            <summary type="text">&amp;nbsp; நேபாள சுரங்கப்பாதையில் 10 நாட்களின் பின்னர் இருந்து மூன்றாவது நபர் உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 இயற்கையில...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; நேபாள சுரங்கப்பாதையில் 10 நாட்களின் பின்னர் இருந்து மூன்றாவது நபர் உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
</p><p>

 இயற்கையில் திடீர் கோர தாண்டவத்தால் நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் 1,300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தும், 5,600க்கும் மேற்பட்டோர் காணாமல் போன 10 நாட்களுக்குப் பின்னர், நேபாளத்தில் இன்று சனிக்கிழமையன்று ஒரு சீன நாட்டவர் சுரங்கப்பாதையிலிருந்து உயிருடன் மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1f70d942-b4d3-4477-b6b6-5eb4968a7d89/26-6a9bfbe7bae91.webp' /></p><p>
</p><p>
திரிசூலி ஆற்றில் உள்ள அதே நீர்மின் சுரங்கப்பாதையிலிருந்துதான் அந்த சீன நபர் மீட்கப்பட்டதாக நேபாள இராணுவம் கூறியது. முந்தைய நாள் இதே சுரங்கப்பாதையில்தான் இரண்டு நேபாளியர்கள் ஒரு பரபரப்பான மீட்பு நடவடிக்கையில் உயிருடன் மீட்கப்பட்டனர்.
</p><p>
ஆற்றின் மேல் பகுதிகளில் ஆகஸ்ட் 26 அன்று ஒரு பனியாறு சரிந்ததால், ஆறு நீர்மின் திட்டங்கள் தொடர்பான சுரங்கப்பாதைகளில் குறைந்தது 900 பேர் சிக்கியிருக்கலாம் என்று மீட்புப் பணியாளர்கள் நம்புவதாகக் கூறியுள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-09-05T12:42:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவில் தனது மூன்று குழந்தைகளை கொன்ற பெண் விடுவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/woman-killed-her-3-children-in-the-us-released-1788611206"></link>
            <id>https://canadamirror.com/article/woman-killed-her-3-children-in-the-us-released-1788611206</id>
            <summary type="text">&amp;nbsp; அமெரிக்காவில் தனது மூன்று குழந்தைகளைக் கழுத்தை நெரித்துக் கொன்ற வழக்கில் கைதான லிண்ட்சே கிளான்சி என்ற பெண் மீதான கொலை வழக்கில், விசாரணையை ரத்து...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; அமெரிக்காவில் தனது மூன்று குழந்தைகளைக் கழுத்தை நெரித்துக் கொன்ற வழக்கில் கைதான லிண்ட்சே கிளான்சி என்ற பெண் மீதான கொலை வழக்கில், விசாரணையை ரத்து செய்யப்பட்டுள்ளது. </p><p> 

மசாசூசெட்ஸ் மாகாணத்தில் உள்ள பிளைமவுத் நகரில் கடந்த 2023 ஜனவரி மாதம் நடந்த இந்த சம்பவத்தில், 36 வயதான முன்னாள் செவிலியரான லிண்ட்சே கிளான்சி தனது மூன்று குழந்தைகளைக் கொன்றுவிட்டு, தானும் தற்கொலைக்கு முயன்றார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9c827ebe-6cdd-4d9d-b30e-b0aef3bb0af1/26-6a9c0a87d897b.webp' /></p><h2>&nbsp;கடுமையான மனநலப் பாதிப்பு</h2><p>
</p><p>
பிரசவத்திற்குப் பிந்திய கடுமையான மனநலப் பாதிப்பு காரணமாகவே அவர் இந்தச் செயலில் ஈடுபட்டதாகவும், எனவே அவரை மனநலப் பாதிப்பின் அடிப்படையில் குற்றமற்றவராக அறிவிக்க வேண்டும் என்றும் அவரது தரப்பு சட்டத்தரணி வாதாடினார்.</p><p>

எனினும் கிளான்சிக்கு மனநலப் பிரச்சனைகள் இருந்தபோதிலும், அவர் திட்டமிட்டே தன் குழந்தைகளைக் கொன்றதாக அரசு தரப்பு சட்டத்தரணிகள் வாதிட்டனர்.
</p><p>
இந்த வழக்கு அமெரிக்காவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தநிலையில், குறித்த வழக்கு தொடர்பான விசாரணையை தொடர்வது குறித்து அரசு தரப்பு இன்னும் முடிவு செய்யவில்லை என்பதுடன், குற்றம் சுமத்தப்பட்டுள்ள கிளான்சி எதிர்வரும் 29 ஆம் திகதியன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-05T12:41:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[300ஆவது நாளை எட்டும் நாட்டு நடப்பு நிகழ்ச்சி.. நேரலையில் நீங்களும் கலந்து கொள்ளுங்கள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/nattu-nadappu-lankasri-300-days-passed-1788595513"></link>
            <id>https://tamilwin.com/article/nattu-nadappu-lankasri-300-days-passed-1788595513</id>
            <summary type="text">லங்காசிறியின் நாட்டு நடப்பு நிகழ்ச்சி தனது 300ஆவது நாளில் இன்று அடி எடுத்து வைக்கின்றது.&amp;nbsp;இந்த மகிழ்ச்சியான தருணத்தையொட்டி, தற்போது சிறப்பு நேரலை ...</summary>
            <content type="html"><![CDATA[<p>லங்காசிறியின் நாட்டு நடப்பு நிகழ்ச்சி தனது 300ஆவது நாளில் இன்று அடி எடுத்து வைக்கின்றது.&nbsp;</p><p>இந்த மகிழ்ச்சியான தருணத்தையொட்டி, தற்போது சிறப்பு நேரலை நிகழ்ச்சி ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கின்றது.&nbsp;</p><p>இந்நிகழ்ச்சியில், சிரேஷ்ட ஊடகவியலாளர் தமிழரசு மற்றும் ஊடகவியலாளர் டில்ஷானுடன் சிறப்பு விருந்தினராக கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரும் கலந்து கொண்டுள்ளார்.&nbsp;</p><p>நேரலையாக ஒளிபரப்பாகும் எமது நாட்டு நடப்பு நிகழ்ச்சியில் இணைந்து கொள்ள நீங்களும் அழைக்கலாம்.&nbsp;</p><p><b>076 - 8246255 </b>என்ற வட்ஸப் இலக்கத்திற்கு அழைத்து உங்களது கேள்விகளை கேட்கலாம். வாழ்த்துக்களையும் தெரிவிக்கலாம்.&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/VNz7RtIWc54" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-05T12:39:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறை சென்றார் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ; கைதால் நாம் முடங்க மாட்டோம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/mahinda-rajapaksa-visited-prison-namal-rajapaksa-1788605717"></link>
            <id>https://jvpnews.com/article/mahinda-rajapaksa-visited-prison-namal-rajapaksa-1788605717</id>
            <summary type="text">&amp;nbsp;


நாமலின் கைது ஒரு பழிவாங்கும் செயலாக இருக்கக்கூடும் அல்லது இல்லாமலும் போகலாம் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ ஊடகங்களுக்குக் கருத்து த...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;


நாமலின் கைது ஒரு பழிவாங்கும் செயலாக இருக்கக்கூடும் அல்லது இல்லாமலும் போகலாம் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்துள்ளார். </p><p>

சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷவை நேரில் சென்று சந்தித்த பின்னர், அவர் இவ்வாறு கூறியுள்ளார். மஹிந்த ராஜபக்‌ஷ இதன்போது மேலும் கூறுகையில்,</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/de8838cb-8db3-46ee-ae01-9a90e4e3f119/26-6a9bf51716aac.webp' /></p><h2>&nbsp;இது தமக்கு ஒரு புதிய விடயம் அல்ல...</h2><p> 
இச் சூழ்நிலையைச் சட்டரீதியாக எதிர்கொள்ளவுள்ளதாக தெரிவித்த அவர் 

எதிர்வரும் தினங்களில் நீதிமன்றத்தின் ஊடாக நாமல் ராஜபக்‌ஷவிற்குப் பிணை பெறுவதற்கு எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தார்.</p><p></p><p>ஒரு அரசியல் தலைவராக இதுபோன்ற சவாலான சூழ்நிலைகளுக்கு நாமல் ராஜபக்‌ஷ இதற்கு முன்னரும் முகங்கொடுத்துள்ளதாகவும், இது தமக்கு ஒரு புதிய விடயம் அல்ல என்றும் சுட்டிக்காட்டினார்.</p><p>
இக் கைதினால் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கு எந்தவித பின்னடைவும் ஏற்படாது எனக் கூறிய அவர், இச் சம்பவம் கட்சி மேலும் வலுப்பெற்று முன்னோக்கி நகர்வதற்கான ஒரு சந்தர்ப்பமாகவே அமையும் என்றும் நம்பிக்கை வெளியிட்டார்.
</p><p><b>
முதலாம் இணைப்பு</b></p><p> இலஞ்ச குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்டு, செப்டம்பர் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை பார்வையிடுவதற்காக அவரது தந்தை, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ சிறைச்சாலைக்கு சென்றுள்ளார்.
</p><p>


இலங்கை விமான நிறுவனத்தின் விமானக் கொள்வனவு தொடர்பான இலஞ்சக் குற்றச்சாட்டு விசாரணையின் அடிப்படையில் நாமல் ராஜபக்ஷ கடந்த 4ஆம் திகதி இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டார்.</p><p></p><p><span style="color: inherit; font-size: 1.5rem;">சிறை அதிகாரிகளின் அனுமதியுடன் நாமல் ராஜபக்‌ஷவை சந்திப்பு</span></p><p>
</p><p>


பின்னர் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நாமல் ராஜபக்க்ஷவை செப்டம்பர் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.</p><p>கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷவைச் சந்தித்து நலம் விசாரிப்பதற்காக, அவரது தந்தையான முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ இன்று சனிக்கிழமை (05) வெலிக்கடை சிறைச்சாலைக்குச் சென்றுள்ளார்.</p><p></p><p>


வெலிக்கடை சிறைச்சாலை வளாகத்திற்கு வருகை தந்த முன்னாள் ஜனாதிபதி, சிறை அதிகாரிகளின் அனுமதியுடன் நாமல் ராஜபக்‌ஷவை நேரில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.</p>]]></content>
            <updated>2026-09-05T12:36:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[Onslaught: திரை விமர்சனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/onslaught-movie-review-1788608706"></link>
            <id>https://cineulagam.com/article/onslaught-movie-review-1788608706</id>
            <summary type="text">Onslaught&amp;nbsp;திரை விமர்சனம்ஹாலிவுட்டில் ஆக்ஷ்ன் த்ரில்லர் திரைப்படமாக வெளியாகியுள்ள Onslaught எப்படி இருக்கிறது என்று பார்ப்போம் வாங்க.

கதைக்களம்...</summary>
            <content type="html"><![CDATA[<h2>Onslaught&nbsp;திரை விமர்சனம்</h2><p>ஹாலிவுட்டில் ஆக்ஷ்ன் த்ரில்லர் திரைப்படமாக வெளியாகியுள்ள Onslaught எப்படி இருக்கிறது என்று பார்ப்போம் வாங்க.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4ff174db-259f-41ec-8928-14e1cafe34de/26-6a9c055079373.webp' /></p><h2>
கதைக்களம்</h2><p>

ஒரு காலத்தில் இராணுவத்தில் பணியாற்றிய செலெஸ்ட் (அட்ரியா அர்ஜோனா), வின்டி ஓயாஸிஸ் என்ற பகுதியில் வசித்து வருகிறார். 

அதே பகுதியில் சிலருக்கு வீடுகளை வாடகைக்கு விட்டு அவர் வருமானம் பார்க்கிறார். என்றாலும் துப்பாக்கிசூடுதல் பயிற்சியையும் செய்து வருகிறார்.

இந்த சூழலில் சூப்பர் சோல்ஜர் ஆய்வினை ஹன்ஸ் கம்லர் (டேன் ஸ்டீவன்ஸ்) என்ற மருத்துவர் மேற்கொண்டு வருகிறார். </p><p>

இதற்காக போர்க்களத்தில் மிகவும் மூர்க்கமாக செயல்பட்ட மூன்று இராணுவ வீரர்களை அவர் தேர்வு செய்து வைத்துள்ளார். 

அவர்களை சூப்பர் சோல்ஜர்ஸ் ஆக மாற்ற மூளையில் அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. </p><p>

பின்னர் அவர்களை சோதிக்க, ஆய்வுக்கூடத்தில் சிலரை விட்டு சண்டையிட வைக்கிறார்கள். எதிர்பாராத விதமாக அந்த 3 சூப்பர் சோல்ஜர்ஸும் பலரையும் அங்கு கொன்றுவிட்டு தப்பிக்கின்றனர். 

அவர்களிடம் இருந்து செலெஸ்ட் எப்படி தன்னையும், தன் மகளையும் தற்காத்துக் கொண்டார் என்பதே மீதிக்கதை.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4fa0126a-488b-4805-946f-b6a2540e7814/26-6a9c0651c18eb.webp' /></p><h2>
படம் பற்றிய அலசல்</h2><p> 

காட்ஸில்லா X காங்: தி நியூ எம்பையர் திரைப்படத்தின் பிளாக் பஸ்டர் வெற்றியைத் தொடர்ந்து ஆடம் வின்கார்ட் இயக்கியிருக்கும் படம் இது.

சைமன் பர்ரேட்டின் திரைக்கதை மற்றும் அவருடன் சேர்ந்து ஆடம் வின்கார்ட் கதையையும் எழுதியுள்ளார். </p><p>

படத்தின் தொடக்கத்திலேயே கதாநாயகி அட்ரியா அர்ஜோனா மும்முரமாக துப்பாக்கிச்சூடு பயிற்சியில் ஈடுபடுவதைக் காட்டும்போது, மாஸ் ஆக்க்ஷன் படத்தைப் பார்க்கப் போகிறோம் என்ற ஆர்வம் ஏற்படுகிறது. </p><p>

ஆனால், காட்சிகள் நகர நகர நமது பொறுமையை மிகவும் சோதிக்கிறது திரைக்கதை. பெரிதாக சுவாரஸ்யம் இல்லாத காட்சிகளாக படம் செல்கிறது.


சூப்பர் சோல்ஜர்ஸ் ஆய்வுக்கூடத்தில் இருந்து வெளியேறிய பின் படம் கொஞ்சம் வேகமெடுக்கிறது. ஆனால் யூகிக்கக் கூடிய வகையிலான எல்லாம் நடக்கின்றன.</p><p>

முன்னாளில் இராணுவத்தில் பணியாற்றிய அட்ரியா எப்படி சூப்பர் சோல்ஜர்ஸுடன் மோதி அவர்களை தோற்கடித்தார் என்ற எதிர்ப்பு படம் முழுக்க நிலவும்போது, மாறாக பயந்து ஓடி ஒளிவதை பார்க்கும்போது மிகுந்த ஏமாற்றம் ஏற்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/659b2c18-c2de-4bb9-8e0f-f3b9e8706e43/26-6a9c06529c568.webp' /></p><p>
</p><p>
கையில் கிடைக்கும் துப்பாக்கியை வைத்து சுடுவதைத் தவிர அவர் புத்திசாலித்தனமாக எதுவும் செய்யவில்லை. அதிலும் இருமுறை வேறொரு கதாபாத்திரம்தான் அட்ரியாவை காப்பாற்றுகிறது.

ட்ரீவ் ஸ்டார்கீயின் கதாபாத்திரத்திற்கு சரியான விளக்கம் கொடுக்கப்படவில்லை. </p><p>சிறுமி பிளாக் கென்னடி க்யூட் ஆக எதார்த்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

அட்ரியா அர்ஜோனாவுக்கு நடிக்க பெரிய வேலை இல்லை என்றாலும் நல்ல பெர்பார்மன்ஸை கொடுத்துள்ளார். அலெக்ஸ் பெரெய்ரா உடல்மொழியிலேயே மிரட்டுகிறார். 

இரத்தம் தெறிக்கும் வன்முறை அதிகம் உள்ளதால், கண்டிப்பாக இது குழந்தைகளுக்கான திரைப்படம் கிடையாது.
</p><p>
மேட் புஸ்டியின் பின்னணி இசை பல இடங்களில் டென்ஷனைக் கூட்டுகிறது. ஒரேன் சோஃபரின் ஒளிப்பதிவு நன்று.</p><h2>
 
க்ளாப்ஸ்</h2><p> 

நடிகர்களின் பங்களிப்பு 

பின்னணி இசை 

ஒளிப்பதிவு </p><h2>

பல்ப்ஸ் </h2><p>

வலுவில்லாத திரைக்கதை 

பார்த்து பழகிய காட்சிகள் 

மொத்தத்தில் இந்த Onslaught (தாக்குதல்) பார்வையாளர்களின் பொறுமையை சோதித்துவிட்டது. </p><h3>

ரேட்டிங்: 2/5</h3>]]></content>
            <updated>2026-09-05T12:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழ் நாட்டில் இருந்து தப்பியோடிய இலங்கை ஏதிலிகள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sri-lankan-refugees-fled-from-tamil-nadu-to-mannar-1788610017"></link>
            <id>https://jvpnews.com/article/sri-lankan-refugees-fled-from-tamil-nadu-to-mannar-1788610017</id>
            <summary type="text">&amp;nbsp; தமிழ் நாட்டில் இருந்து தப்பிசென்று தலைமன்னார் கடற்பரப்பில் வழிதவறித் தவித்துக் கொண்டிருந்த குழுவொன்றைக் கடற்படையினர் மீட்டுள்ளனர். 

குறிப்பி...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; தமிழ் நாட்டில் இருந்து தப்பிசென்று தலைமன்னார் கடற்பரப்பில் வழிதவறித் தவித்துக் கொண்டிருந்த குழுவொன்றைக் கடற்படையினர் மீட்டுள்ளனர்.</p><p> 

குறிப்பிட்ட கடற்பரப்பில் கடற்படையினர் மேற்கொண்ட ரோந்து நடவடிக்கையின் போது, மணல்திட்டு தொன்றில் வழிதவறி இருந்த இக்குழுவினர் அவதானிக்கப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/efef9430-176c-4f19-8c52-cba2902fc29f/26-6a9c05e31d168.webp' /></p><h2>பாதுகாப்பாக மீட்ட கடற்படையினர்&nbsp;</h2><p> </p><p>

இதனையடுத்து, அவர்களைப் பாதுகாப்பாக மீட்ட கடற்படையினர், இக்குழுவினர் தென்னிந்தியாவிலிருந்து கடல் வழியே இலங்கைக்கு வருகை தந்திருக்கலாம் என சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.</p><p> 

மீட்கப்பட்டவர்களில் ஒரு ஆண், நான்கு பெண்கள் மற்றும் 2 முதல் 14 வயதிற்குட்பட்ட மூன்று குழந்தைகள் அடங்குவதாகக் கடற்படை தெரிவித்துள்ளது.</p><p></p><p> 

இவ்வாறு மீட்கப்பட்டவர்கள் மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் காணப்பட்டதால், அவர்களுக்குத் தேவையான குடிநீர், உணவு மற்றும் தற்காலிக தங்குமிட வசதிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d719738b-72d5-4eba-b79b-015b0d885f24/26-6a9c06c2de319.webp' /></p><p> </p><p>

ஆரம்பக்கட்ட விசாரணைகளில், இவர்கள் இந்தியாவின் அனையூர் மற்றும் ஒக்கூர் அகதிகள் முகாம்களில் இருந்து இராமேஸ்வரம் வழியாக வந்துள்ளதாகவும், இவர்கள் முன்னர் இந்தியாவில் அகதி அந்தஸ்து கோரியிருந்தவர்கள் என்றும் தெரியவந்துள்ளது.</p><p></p><p> </p><p>

இவர்களை அடுத்தகட்ட சட்ட மற்றும் நிர்வாக நடவடிக்கைகளுக்காக உரிய அதிகாரிகளிடம் ஒப்படைக்க உள்ளதாகக் கடற்படை மேலும் தெரிவித்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-05T12:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாமலின் மேசையில் கிடந்த 08 இலட்சம் டொலர்கள் : கம்மன்பில வெளிப்படுத்திய விடயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/eight-hundred-thousand-dollars-on-namal-s-table-1788609425"></link>
            <id>https://ibctamil.com/article/eight-hundred-thousand-dollars-on-namal-s-table-1788609425</id>
            <summary type="text">நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் கைது மற்றும் விளக்கமறியலில் வைக்கப்பட்டது முற்றிலும் அநியாயமான மற்றும் சட்டவிரோதமான செயல் என்று முன்னாள் அமைச்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் கைது மற்றும் விளக்கமறியலில் வைக்கப்பட்டது முற்றிலும் அநியாயமான மற்றும் சட்டவிரோதமான செயல் என்று முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
</p><p>
கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் பேசிய அவர், எந்தவித ஆதாரமும் இன்றி, ஒரே ஒரு நபரின் வாக்குமூலத்தின் அடிப்படையில் மட்டுமே இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகக் கூறினார்.</p><h2>எட்டு இலட்சம் அமெரிக்க டொலர்கள் தரகுப் பணம்</h2><p>சிறிலங்கன் ஏர்லைன்ஸுக்காக ஏர்பஸ் விமானங்களை வாங்கும் பரிவர்த்தனையில், நாடாளுமன்ற உறுப்பினர் எட்டு இலட்சம் அமெரிக்க டொலர்கள் தரகுப் பணம் பெற்றார் என்பதே அவர் மீதான குற்றச்சாட்டு.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/34b6905c-6fe4-4f61-b51e-f33644f02cc3/26-6a9c0b23334aa.webp' /></p><p>

இந்தச் சம்பவம் தொடர்பான உண்மைகளை விளக்கிய கம்மன்பில, பிரியங்கா விஜேநாயக்க ஏர்பஸ் நிறுவனத்திடமிருந்து தரகுப் பணம் பெற்றதற்கும், அந்தப் பணத்தின் ஒரு பகுதியை அவுஸ்திரேலியாவில் வசிக்கும் நிமல் பெரேரா என்ற நபருக்குக் கொடுத்ததற்கும் ஆதாரம் இருப்பதாக ஒப்புக்கொண்டார்.
</p><p>
இருப்பினும், நிமல் பெரேரா, நாமல் ராஜபக்சவிடம் பணத்தைக் கொடுத்தார் என்ற வாக்குமூலத்தைத் தவிர, புலனாய்வாளர்களிடம் வேறு எந்த ஆதாரமும் இல்லை என்று அவர் வலியுறுத்தினார்.</p><p>

"யாரும் இல்லாதபோது,நாமல் ராஜபக்சவின் மேசையில் 800,000 டொலர்களை வைத்துவிட்டுச் சென்றதாக நிமல் பெரேரா கூறுகிறார். இந்தக் கூற்றைத் தவிர வேறு எந்த ஆதாரமும் இல்லை. இது உகண்டாவில் பணத்தை மறைப்பது, ரொக்கெட்டுகளை அனுப்புவது, தங்கக் குதிரைகளைக் கொண்டு வருவது, லம்போர்கினிகளைக் கொண்டு வருவது மற்றும் கூடுதலாக ஒரு திசைகாட்டியைக் கொண்டு வருவது போன்றதுதான்," என்று முன்னாள் அமைச்சர் கூறினார்.</p><p></p><h2>&nbsp;ஒட்டுமொத்த பொதுமக்களும் பாதுகாப்பற்றவர்களாகிவிட்டனர்</h2><p>
</p><p>
ஒரு அறிக்கையில் ஒருவரின் பெயரைக் குறிப்பிட்டாலே அவரைக் கைது செய்ய முடியும் என்றால், இந்த நாட்டின் எந்தவொரு குடிமகனும் இனி பாதுகாப்பாக இல்லை என்று கம்மன்பில சுட்டிக்காட்டினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/37067f0e-4340-4778-8a42-20aca5b0c2ad/26-6a9c0b23e5e1e.webp' /></p><p>
</p><p>
குறிப்பாக பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் வழக்குகள் பதிவு செய்வதன் மூலம், சந்தேக நபர்கள் பிணை பெறுவது மிகவும் கடினமாக்கப்பட்டுள்ளது என்றும், இது ஒரு அடக்குமுறை ஆட்சியின் அறிகுறி என்றும் அவர் மேலும் கூறினார்.
</p><p>
இந்தத் தன்னிச்சையான நடவடிக்கையால் நாமல் ராஜபக்ச மட்டுமல்ல, ஒட்டுமொத்த பொதுமக்களும் பாதுகாப்பற்றவர்களாகிவிட்டனர் என்று உதய கம்மன்பில தனது ஊடக மாநாட்டில் வலியுறுத்தினார்.&nbsp;</p><p></p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-05T12:29:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiva</name>
            </author>
            <title type="text"><![CDATA[நானுஓயாவில் நீரில் மூழ்கி இருவர் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/two-die-by-drowning-in-nanu-oya-1788610138"></link>
            <id>https://tamilwin.com/article/two-die-by-drowning-in-nanu-oya-1788610138</id>
            <summary type="text">நுவரெலியா- நானுஓயா கிளாஸ்சோ நீர்வீழ்ச்சி அமைந்துள்ள பகுதியில் உள்ள ஆற்றில்
குளிக்கச் சென்ற இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.குறித்த சம்பவமானது இ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நுவரெலியா- நானுஓயா கிளாஸ்சோ நீர்வீழ்ச்சி அமைந்துள்ள பகுதியில் உள்ள ஆற்றில்
குளிக்கச் சென்ற இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.</p><p>குறித்த சம்பவமானது இன்றையதினம்(5.9.2026) இடம்பெற்றது.</p><p>
</p><p>
நானுஓயா பகுதியைச் சேர்ந்த 24 வயது உடைய இளைஞர் ஒருவரும் 23 வயது உடைய ஹப்புத்தளை பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.</p><h2>உயிரிழப்புகள்</h2><p>குறித்த இருவரும் நுவரெலியா கிரகரி வாவியிலிருந்து வெளியேறி கொத்மலை ஆற்றில் சங்கமிக்கும் நானுஓயா கிளாஸ்சோ நீர்வீழ்ச்சி பகுதியில் குளிக்க சென்றபோதே இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.</p><p>

சடலங்களாக மீட்கப்பட்டுள்ளவர்கள் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட பொது
வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a64b900d-c245-4545-9425-1fd293219b46/26-6a9c0af8972df.webp' /></p><p>
</p><p>
இந்த உயிரிழப்புகள் தொடர்பான விசாரணைகளை நானுஓயா பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-05T12:29:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[தொடக்க விழா மேடையிலேயே எலிமிநேஷன்! பிக் பாஸ் 10ல் யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/bigg-boss-10-tamil-elimination-on-launch-day-1788611335"></link>
            <id>https://cineulagam.com/article/bigg-boss-10-tamil-elimination-on-launch-day-1788611335</id>
            <summary type="text">விஜய் டிவியின் பிக் பாஸ் 10ம் சீசன் நாளை ஒளிபரப்பை தொடுங்குகிறது. அதனால் அந்த ஷோவின் ரசிகர்கள் பெரிய எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.இந்த முறை மொத...</summary>
            <content type="html"><![CDATA[<p>விஜய் டிவியின் பிக் பாஸ் 10ம் சீசன் நாளை ஒளிபரப்பை தொடுங்குகிறது. அதனால் அந்த ஷோவின் ரசிகர்கள் பெரிய எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.</p><p>இந்த முறை மொத்தம் 24 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் வர இருக்கின்றனர். அதில் 21 பேர் பிரபலங்கள், 3 பேர் காமன் மேன் ஷோவில் ஜெயித்தவர்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9b099709-6c87-439c-b7e3-cbd4bc348321/26-6a9c0b0b1fa6e.webp' /></p><h2>ஷோவில் மாற்றம்
</h2><p>முந்தைய சீசன் போல இல்லாமல் இந்த முறை பிக் பாஸ் ஷோ formatல் மாற்றம் செய்து இருக்கின்றனர். அதன்படி தொடக்க நாளிலேயே எலிமினேஷனை தொடங்கி இருக்கின்றனர்.
</p><p>போட்டியாளர் உள்ளே செல்லலாமா இல்லையா என்பதை தொடக்க விழாவுக்கு வந்த ஆடியன்ஸ் vote செய்து தீர்மானிக்கும் வகையில் மாற்றம் செய்திருக்கின்றனர்.
</p><p> அதன்படி சீரியல் நடிகை லட்சுமி பிரியா மற்றும் ஷதிகா ஆகியோர் முதல் இரண்டு போட்டியாளர்களாக பிக் பாஸ் வீட்டுக்குள் சென்றனர். </p><p>
நடிகை ஷபி ஷப்னம் மேடையிலேயே எலிமினேட் ஆகி வெளியில் அனுப்பப்பட்டு இருக்கிறார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-05T12:29:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரான் எண்ணெய் கப்பல் மீது அமெரிக்கா ஏவுகணை தாக்குதல்! மீண்டும் மோதல் தீவிரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/us-missile-attack-iranian-oil-tanker-kharg-island-1788602342"></link>
            <id>https://canadamirror.com/article/us-missile-attack-iranian-oil-tanker-kharg-island-1788602342</id>
            <summary type="text">&amp;nbsp; ஈரானின் எண்ணெய் கப்பல் மீது அமெரிக்கா ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளமை மீண்டும் போர் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

முக்கிய எண்ணெய் ஏற்றுமதி ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; ஈரானின் எண்ணெய் கப்பல் மீது அமெரிக்கா ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளமை மீண்டும் போர் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

முக்கிய எண்ணெய் ஏற்றுமதி மையமான கார்க் (Kharg) தீவுக்கு அருகில் நங்கூரமிட்டிருந்த எண்ணெய் கப்பலை இலக்கு வைத்தே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. </p><p>

இந்தத் தாக்குதலில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை எனவும், கப்பலில் இருந்த ஊழியர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ddf5ec74-c90e-4dd1-913e-50edccd8c6ab/26-6a9be7e7ea349.webp' /></p><h2>அதிகாரப்பூர்வ&nbsp; அறிவிப்பில்லை..</h2><p> </p><p>

இருப்பினும், இது குறித்து ஈரானிய அதிகாரிகளோ அல்லது அமெரிக்க மத்திய கட்டளையகமோ (US Central Command) இதுவரை எவ்வித அதிகாரப்பூர்வ கருத்துக்களையும் வெளியிடவில்லை.</p><p> 

கடந்த ஓகஸ்ட் 31 அன்று, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கார்க் தீவு அழிக்கப்படுவது போன்ற ஒரு வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்திருந்தார்.</p><p> கார்க் தீவு மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அதற்கு மிகக் கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என்று ஈரான் முன்னதாக எச்சரித்திருந்தது. 

ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) ஈரான் மூடியதைத் தொடர்ந்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான கடற்படை முற்றுகையை அமெரிக்கா தொடங்கியது. </p><p>

இந்த சூழ்நிலையில், ஈரான் தனது கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் 90 சதவீதத்தை மேற்கொள்ளும் கார்க் தீவு பகுதியைச் சுற்றியுள்ள எண்ணெய் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதுடன், ஈரானின் பொருளாதாரம் மற்றும் எண்ணெய் தொழில்துறைக்கு மேலும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-05T12:24:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறைக்குள் கலவரம் உருவாக்கப்பட்டு நாமல் கொல்லப்படலாம்..! குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு சென்றுள்ள விடயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/threat-to-namal-s-life-complaint-filed-with-cid-1788609275"></link>
            <id>https://tamilwin.com/article/threat-to-namal-s-life-complaint-filed-with-cid-1788609275</id>
            <summary type="text">சிறைக்குள் திட்டமிட்டு கலவரம் உருவாக்கப்பட்டு நாமல் ராஜபக்ச கொல்லப்படலாமென தெரிவித்து முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. 

இது தொடர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிறைக்குள் திட்டமிட்டு கலவரம் உருவாக்கப்பட்டு நாமல் ராஜபக்ச கொல்லப்படலாமென தெரிவித்து முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. </p><p>

இது தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் செயற்பாட்டாளர் பசன் கஸ்தூரி இன்று (05.09.2026) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. </p><p>

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்‌சவின் உயிருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக குறித்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.</p><h2>சமூக வலைத்தள பிரச்சாரம்</h2><p>

சிறைச்சாலைக்குள் திட்டமிட்டுச் சலசலப்பை அல்லது கலவரத்தை உருவாக்கி நாமல் ராஜபக்‌சவைக் கொலை செய்வதற்கும், எதிர்வரும் வியாழக்கிழமை நடைபெறவுள்ள கூட்டத்தில் பங்கேற்கும் ஆதரவாளர்களை அச்சுறுத்துவதற்கும் சமூக வலைத்தளங்கள் வாயிலாகச் சில அரசியல் அமைப்புகளின் உறுப்பினர்கள் பிரசாரம் செய்து வருவதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b5c62d8d-cb52-40e5-a835-9ef6d160b101/26-6a9c07978477b.webp' /></p><p> </p><p>

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அதுகோரல படுகொலை செய்யப்பட முன்னரும் இவ்வாறானதொரு பின்னணியே நிலவியதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை</h2><p>
</p><p>
மேலும் இச்சம்பவத்தை தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
</p><p>
மேலும், இந்த சதித்திட்டம் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் உடனடி விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-05T12:16:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[தனிநபராக நதியை சுத்தப்படுத்திய 20 வயது இளைஞர் - வேலை வழங்கும் நெதர்லாந்து நிறுவனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/netherland-firm-job-offer-to-mp-guy-cleans-river-1788610214"></link>
            <id>https://news.lankasri.com/article/netherland-firm-job-offer-to-mp-guy-cleans-river-1788610214</id>
            <summary type="text">netherland firm job offer to bittu tabahi who cleaned river மத்தியப் பிரதேசத்தில், தனிநபராக நதியை சுத்தப்படுத்திய 20 வயது இளைஞருக்கு நெதர்லாந்தை சேர்ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>netherland firm job offer to bittu tabahi who cleaned river மத்தியப் பிரதேசத்தில், தனிநபராக நதியை சுத்தப்படுத்திய 20 வயது இளைஞருக்கு நெதர்லாந்தை சேர்ந்த நிறுவனம் வேலை வழங்க முன்வந்துள்ளது.</p><h3> 

நதியை சுத்தப்படுத்திய 20 வயது இளைஞர்</h3><p> 

மத்தியப் பிரதேசத்தின் ராஜ்கர் மாவட்டத்தில் உள்ள பியோராவைச் சேர்ந்த 20 வயது இளைஞரான பி.எஸ்சி மாணவர் சுரேந்திர சிங், சமூக ஊடகங்களில் பிட்டு தபாஹி(bittu tabahi) என்று அறியப்படுகிறார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3cad03b3-1b3f-469d-8dec-7dddc7983efb/26-6a9c06a7bc3e2.webp' /></p><p> 

இவர் அந்த பகுதியில் கடுமையாக மாசுபட்டிருந்த அஜ்நார் நதியை(Ajnar River) சுத்தம் செய்யும் முயற்சியில் தனிநபராக இறங்கியுள்ளார்.</p><p> 

தன்னுடைய சேமிப்பு ரூ.30,000 பயன்படுத்தி, சில மாதங்களாகவே நதியை சுத்தப்படுத்தி வந்துள்ளார்.&nbsp;</p><p></p><p>
அவர் சுத்தம் செய்யும் வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட, பலரும் அவர் பிரபலமாகவே இதனை செய்து வருவதாக விமர்சித்தனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7d8810e4-e8d3-45a8-8a9d-f81ae5d0e387/26-6a9c06a924de9.webp' /></p><p> 

ஆனால், அவர் விமர்சனங்களை பொருட்படுத்தாமல், நதிகளில் உள்ள குப்பைகளை அகற்றி தொடர்ச்சியாக தூய்மை பணியில் ஈடுபட்டு நதியை சுத்தமாக மாற்றியுள்ளார். </p><h3> 

வேலை வழங்கும் நெதர்லாந்து நிறுவனம்
</h3><p>
பிட்டு தபாஹியின் இந்த முயற்சிக்கு பிரபல தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா பாராட்டு தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b31c96d7-2e53-4e15-996a-41b7bb5790cc/26-6a9c06a872b18.webp' /></p><p>

மேலும், மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ், பிட்டு தபாஹியை தனது வீட்டிற்கு அழைத்து "உன்னால் இந்த மாநிலமே பெருமை கொள்கிறது" என பாராட்டியுள்ளார்.&nbsp;</p><p><blockquote class="twitter-tweet"><p lang="hi" dir="ltr">भोपाल निवास पर ब्यावरा के बेटे सुरेंद्र सिंह चौधरी ‘बिट्टू तबाही’ से आत्मीय भेंट की।<br><br>बिट्टू ने अपनी दृढ़ इच्छाशक्ति और संकल्प से सिर्फ अजनार नदी की सफाई ही नहीं की, बल्कि अपने प्रयासों से समाज को यह संदेश भी दिया है कि बदलाव के लिए बड़ी भीड़ नहीं, एक सच्ची पहल ही काफी है।<br><br>आपकी… <a href="https://t.co/hQVbdVYMMf">pic.twitter.com/hQVbdVYMMf</a></p>&mdash; Dr Mohan Yadav (@DrMohanYadav51) <a href="https://x.com/DrMohanYadav51/status/2096126383315435625?ref_src=twsrc%5Etfw">September 5, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>

அதுமட்டுமல்லாது, நெதர்லாந்தை சேர்ந்த The Ocean Cleanup என்ற நிறுவனம் அவரை அவருக்கு வேலை வழங்க முன்வந்துள்ளது.&nbsp;</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Come work for us <a href="https://x.com/Surendr75950620?ref_src=twsrc%5Etfw">@Surendr75950620</a></p>&mdash; Boyan Slat (@BoyanSlat) <a href="https://x.com/BoyanSlat/status/2095867736849104921?ref_src=twsrc%5Etfw">September 4, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>

இந்த நிறுவனம், 2040 ஆம் ஆண்டுக்குள் கடலில் மிதக்கும் 90% பிளாஸ்டிக்கை அகற்றுவதை நோக்கமாக கொண்டு இயங்கி வருகிறது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1f59dc4e-ef89-48c1-9a16-b700dceb2bfa/26-6a9c06a9dcd5d.webp' /></p><p>

இந்த நிறுவனத்தின் நிறுவனரான Boyan Slat, எங்களுடன் வந்து பணியாற்றுங்கள் என பிட்டு தபாஹிக்கு அழைப்பு விடுத்துள்ளார்.&nbsp; &nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-05T12:11:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[சான்ட்னரின் அணி சொதப்பல் ஆட்டம்: பதம் பார்த்த 3 பந்துவீச்சாளர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/edinburgh-castle-rockers-148-all-out-vs-rdd-1788610402"></link>
            <id>https://news.lankasri.com/article/edinburgh-castle-rockers-148-all-out-vs-rdd-1788610402</id>
            <summary type="text">Edinburgh castle rockers 148 allout: ஐரோப்பிய டி20 போட்டியில் எடின்பர்க் கேஸல் ராக்கர்ஸ் அணி 148 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது.

ரோட்டர்டம் டாக்கர்ஸ் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Edinburgh castle rockers 148 allout: ஐரோப்பிய டி20 போட்டியில் எடின்பர்க் கேஸல் ராக்கர்ஸ் அணி 148 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது.
</p><p>
ரோட்டர்டம் டாக்கர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், மிட்செல் சான்ட்னரின் எடின்பர்க் கேஸல் ராக்கர்ஸ் அணி 148 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது.&nbsp;</p><h2>எடின்பர்க் கேஸல் ராக்கர்ஸ்&nbsp;</h2><p>
மிட்செல் சான்ட்னரின் எடின்பர்க் கேஸல் ராக்கர்ஸ் மற்றும் பாப் டூ பிளெஸ்ஸின் ரோட்டர்டம் டாக்கர்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f2c0e53c-2bf1-4ffc-8a68-36f885f1e362/26-6a9c0b731c091.webp' /></p><p></p><p>

முதலில் ஆடிய எடின்பர்க் கேஸல் ராக்கர்ஸ் அணி 14 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. 

எனினும் பிரண்டன் மெக்முல்லன், லௌரி எவன்ஸ் கூட்டணி சரிவில் இருந்து அணியை மீட்டது. </p><p>மெக்முல்லன் 37 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

அடுத்து அதிரடி காட்டிய டெலனி 18 பந்துகளில் 31 ஓட்டங்கள் விளாசி வெளியேற, டாம் கர்ரன் 8 ஓட்டங்களில் அவுட் ஆனார்.
</p><h2> 
தாக்குதல் பந்துவீச்சு </h2><p>ஜெய் மூன்ரா, டேவிட் விஸே மற்றும் அன்ரிச் நோர்ஜே ஆகியோரின் தாக்குதல் பந்துவீச்சை சமாளித்து ஆடிய எவன்ஸ் 33 ஓட்டங்கள் எடுத்த நிலையில் வெளியேறினார்.
</p><p>
அணித்தலைவர் மிட்செல் சான்ட்னர் 8 பந்துகளில் 15 ஓட்டங்கள் எடுக்க, எடின்பர்க் கேஸல் ராக்கர்ஸ் அணி 19.3 ஓவர்களில் 148 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது.
</p><p>

ஜெய் மூன்ரா, டேவிட் விஸே மற்றும் அன்ரிச் நோர்ஜே தலா 3 விக்கெட்டுகளும், ரோலோப் வான் டெர் மெர்வ் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.&nbsp; &nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5a443dfb-9b4e-4dfb-aa6b-bd5b0ef46dde/26-6a9c0b73cd59b.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-05T12:10:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thevanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிளிநொச்சியில் வாகனத்தில் நசியுண்ட ஒன்றரை வயது குழந்தை பரிதாப மரணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/one-year-old-child-died-in-kilonochchi-1788609583"></link>
            <id>https://tamilwin.com/article/one-year-old-child-died-in-kilonochchi-1788609583</id>
            <summary type="text">கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குற்பட்ட உருத்திரபுரம் சிவநகர் பகுதியில் வாகனத்தில் நசியுண்ட ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்துள்ளது.&amp;nbsp; வீட்டு
முற்றத்தில் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குற்பட்ட உருத்திரபுரம் சிவநகர் பகுதியில் வாகனத்தில் நசியுண்ட ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்துள்ளது.&nbsp;<br></p><p> வீட்டு
முற்றத்தில் நின்ற கப்ரக வாகனத்தை குழந்தையின் தாத்தா செலுத்திய நேரம்
வாகனத்திற்குள் ஓடிச்சென்ற குழந்தை வாகன சில்லில் நசியுண்டு உயிரிழந்துள்ளது.</p><h3>பொலிஸ் விசாரணை&nbsp;</h3><p>
குறித்த சம்பவம் இன்று காலை 11 மணியளவில் இடம்பெற்றுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2a9c2a23-f51d-4a33-b38a-cae43bcb7ba6/26-6a9c060634fc4.webp' /></p><p>ரூபன் அனாமிகா என்ற
ஒன்றரை வயதுடைய குழந்தையே இச்சம்பவத்தில் உயிரிழந்துள்ளது. </p><p>உயிரிழந்த குழந்தையின் சடலம்
கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. </p><p>சம்பவ இடத்திற்கு
கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற பதில் நீதவான் எஸ்.சிவபாலசுப்பிரமணியம் வருகை
தந்து விசாரணைகளை மேற்கொண்ட நிலையில் இது தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார்
விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-05T12:10:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Erimalai</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரச பேருந்தை தள்ளித்திரியும் யாழ் வடமராட்சி கிழக்கு மக்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/people-vadamarachchi-east-pushing-a-government-bus-1788608846"></link>
            <id>https://ibctamil.com/article/people-vadamarachchi-east-pushing-a-government-bus-1788608846</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு பகுதியில் பழுதடைந்த அரச பேருந்தை மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நாளாந்தம் தள்ளி இயக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ள சம்பவம் த...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு பகுதியில் பழுதடைந்த அரச பேருந்தை மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நாளாந்தம் தள்ளி இயக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ள சம்பவம் தற்போது பேசுபொருளாகியுள்ளது.
</p><p>
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,
</p><p>'நாளாந்தம் காலை 06.00மணிக்கு கட்டைக்காட்டில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணிக்கும்
அரச பேருந்தை பழுது காரணமாக சில நாட்களாக மாணவர்கள், மக்கள் சேர்ந்து தள்ளி
இயக்கும் சம்பவம் இடம்பெறுகின்றது.</p><p></p><h2>வடமராட்ச்சி கிழக்கு மக்கள் கோரிக்கை</h2><p>மக்கள் தள்ளி பேருந்து இயங்காது போனால் சம நேரத்தில் பருத்தித்துறைக்கு
பயணிக்கும் அரச பேருந்தால் குறித்த பேருந்து கட்டி இழுக்கப்பட்டு ஸ்ராட்
செய்யப்படுவது வழக்கம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d1df13aa-d5ec-41d1-bf5e-dccbd084e0a7/26-6a9c05aeb9fdb.webp' /></p><p>
இன்று(04.09.2026) காலை 06.00 மணிக்கு வழமை போன்று பாடசாலை மாணவர்களோடு பொதுமக்கள்
குறித்த பேருந்தை தள்ளி இயக்க முயன்றபோது பேருந்து இயங்கவில்லை. </p><p>பின்பு
பருத்தித்துறை நோக்கி பயணிக்கவிருந்த அரச பேருந்து மூலம் கட்டி இழுத்து இயக்க
முயன்ற வேளையும் பேருந்து இயங்கவில்லை
இதனால் இன்று காலை 06.00 மணிக்கு கட்டைக்காட்டில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி
பயணிக்கும் அரச பேருந்து பயணிக்காததால் மாணவர்கள், அரச உத்தியோகத்தர்கள் என
பலர் பாதிப்படைந்தனர்.</p><p>&nbsp;வடமராட்சி கிழக்கு மக்களின் தொடர் கோரிக்கையான, வடமராட்சி கிழக்கு பகுதிக்கு
சிறந்த தரமான பேருந்து சேவை ஒன்றை வழங்குமாறு ஒருங்கிணைப்பு குழு கூட்டம்
போன்ற பல சந்தர்ப்பங்களில் கோரிக்கை விடுக்கப்பட்டது. </p><p>ஆனாலும் மக்களின்
கோரிக்கை இன்று வரை தீர்க்கப்படவில்லை, இந்த அவல நிலையை கருத்தில் கொண்டு சிரமம் இன்றி சேவையில் ஈடுபடக் கூடிய நல்ல
தரமான ஒரு அரச பேருந்தை சேவையில் ஈடுபட செய்யுமாறு' வடமராட்ச்சி கிழக்கு மக்கள்
கோரிக்கை விடுத்துள்ளனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-05T12:09:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[கருப்புநிற டிரான்ஸ்பரண்ட் ஆடையில் கட்டா குஸ்தி 2 மோக்‌ஷா டீச்சர் புகைப்படங்கள்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/gatta-kushthi-2-meenu-mokksha-recent-photoshoot-1788608162"></link>
            <id>https://viduppu.com/article/gatta-kushthi-2-meenu-mokksha-recent-photoshoot-1788608162</id>
            <summary type="text">மோக்‌ஷாமேற்கு வங்கத்தில் பிறந்து ஆசிரியையாக பணியாற்றில் நடிப்பின் மீது ஆர்வம் கொண்டு நடிக்க வந்தவர் தான் நடிகை மோக்‌ஷா. கிளாசிக் நடன கலைஞராக திகழ்ந்த ...</summary>
            <content type="html"><![CDATA[<h2>மோக்‌ஷா</h2><p>மேற்கு வங்கத்தில் பிறந்து ஆசிரியையாக பணியாற்றில் நடிப்பின் மீது ஆர்வம் கொண்டு நடிக்க வந்தவர் தான் நடிகை மோக்‌ஷா. கிளாசிக் நடன கலைஞராக திகழ்ந்த மோக்‌ஷா, பெங்கால் மொழியில் ஒருசில படங்களில் துணை நடிகையாக நடிக்க ஆரம்பித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/af216159-d902-4056-b68f-e01d3a021c93/26-6a9bfeab51505.webp' /></p><p> </p><p>கர்மா போன்ற ஒருசில படங்களில் லீட் ரோலில் நடித்தவர், தெலுங்கியில் லக்கி லக்ஷமன் படத்தில் கதாநாயகியாக நடிக்க ஆரம்பித்தார். </p><p>மலையாலம், தெலுங்கு மொழிகளில் நடித்து வந்த மோக்‌ஷா, கட்டா குஸ்தி 2 படத்தில் மீனு ரோலில் நடித்து தமிழ் ரசிகர்களின் மனதை ஈர்த்தார். இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் அவர் டிரான்ஸ்பரண்ட் சேலையணிந்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.</p><p><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/p/Dc3u4WXH9AH/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/p/Dc3u4WXH9AH/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/p/Dc3u4WXH9AH/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by M O K K S H A (@mokksha_official)</a></p></div></blockquote> <script async src="//www.instagram.com/embed.js"></script></p>]]></content>
            <updated>2026-09-05T12:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Fathima</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாவல் பழத்தில் பாம்பின் விஷமா? சிறுவனின் உயிரை பறித்தது எது? மருத்துவர் பரூக் அப்துல்லா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/doctor-explains-snake-poison-in-jamun-fruit-1788609053"></link>
            <id>https://manithan.com/article/doctor-explains-snake-poison-in-jamun-fruit-1788609053</id>
            <summary type="text">மருத்துவரின் பதிவு இதோ,இலங்கையில் 
மட்டக்களப்பு ஊரில், பாம்பின் விஷம் பட்டதாக சந்தேகிக்கப்படும் நாவல் பழத்தை சாப்பிட்ட 11 வயது சிறுவன் உயிரிழந்துள்ளத...</summary>
            <content type="html"><![CDATA[<p>மருத்துவரின் பதிவு இதோ,</p><p>இலங்கையில் 
மட்டக்களப்பு ஊரில், பாம்பின் விஷம் பட்டதாக சந்தேகிக்கப்படும் நாவல் பழத்தை சாப்பிட்ட 11 வயது சிறுவன் உயிரிழந்துள்ளதாக செய்தி வருகிறது.
</p><p>நேற்று மாலை வீட்டிற்கு அருகிலுள்ள நாவல் மரத்தில் இருந்து நிலத்தில் விழுந்த பழத்தை எடுத்து சாப்பிட்ட சிறுவன், சிறிது நேரத்தில் மயங்கி விழுந்துள்ளார்.
</p><p>உடனடியாக களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோதும், அவர் ஏற்கனவே உயிரிழந்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>பாம்பின் விஷம் பட்டதாக சந்தேகிக்கப்படும் நாவல் பழத்தை உட்கொண்டதே உயிரிழப்புக்கான காரணமாக இருக்கலாம் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
</p><p>சிறுவனின் சடலம் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்புவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் வெல்லாவெளி போலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
</p><p>அன்னாரை இழந்து வாடும் அவர்தம் பெற்றோர் உற்றார் உறவினருக்கு ஆழ்ந்த இரங்கல் உரித்தாகுக.</p><p><iframe src="https://www.facebook.com/plugins/post.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2Ffarookabdulla1988%2Fposts%2Fpfbid02bRY2BRwNoxTuiafTxXPNuixgXnjvfHHma26ktPckWvhDYZkHuJareVDBHwBfxw36l&show_text=true&width=500" width="500" height="673" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share"></iframe><br></p><p> 
உண்மையில் 
பாம்பு பழங்களில் விஷத்தை ஏற்றுமா? 
அப்படியே பாம்பின் விஷம் பழங்களில் இருந்தாலும் அவற்றை உண்பதால் மனிதர்களுக்கு மரணம் ஏற்படுமா? இரண்டுக்கும் இல்லை என்பதே பதில்.</p><p>
பாம்புகள் தாவரப்பட்சினிகளோ பழமுண்ணிகளோ அன்று. 
அவை மாமிசத்தை மட்டுமே உண்டு பிழைக்கும் மாமிசப்பட்சினிகள். </p><p>
தவளைகள், கொரித்து உண்பவை, பறவைகள், மீன்கள், பூச்சிகள் இவற்றை மட்டுமே உண்ணும் வகையில் அவற்றின் ஜீரண மண்டலம் வடிவமைக்கப்பட்டுள்ளது. </p><p>
எனவே, நாவல் பழத்தை அவை உண்ணாது. 
முதல் தர்க்கமே பிழையானது. 
சரி ஒருவேளை தெரியாமல் அறியாமல் 
தனது விஷத்தை பழத்தில் அது இறக்கி வைத்திருந்தாலும் 
அந்த விஷம் என்பது புரதமும் பல்வேறு வகை நொதிகளும் அடங்கிய கலவையாகும்.</p><p> 
அந்த விஷத்தை 
தனது விஷப் பற்கள் மூலம் ஊசி போட்டு எதிரி விலங்கிற்குள் ஏற்றி ரத்தத்தில் கலக்கச் செய்தால் மட்டுமே விஷத்தன்மை இருக்கும். </p><p>
மற்றபடி பாம்பின் விஷத்தை மனிதர்கள் பருகினாலும் மனிதர்களுக்கு விஷம் ஏறாது. 
காரணம், நமது இரைப்பையில் இருக்கும் 
வீரியமான ஹைட்ரோ குளோரிக் அமிலம் 
பாம்பின் நஞ்சை முழுவதுமாக செரித்து விடும். </p><p>
ஒருவேளை வாய் பகுதியில் ஈறுகளில் காயம் இருந்து அதன் வழியாக உள்ளே சென்று ரத்தத்தில் கலந்தால் மட்டுமே பாதிப்பை ஏற்படுத்த முடியும். </p><p>
மற்றபடி பாம்பின் விஷம் ஏறிய பழம் அதை சாப்பிட்டதால் சிறுவன் மரணம் என்பது அறிவியல் ரீதியாகவும் தர்க்க ரீதியாகவும் 
பிழையானது 
பிரேதப் பரிசோதனை முடிவுகள் மட்டுமே உண்மையை வெளிக் கூறும் எனினும் 
சிறுவனின் இறப்பிற்கு பின்வரும் விஷயங்கள் காரணமாக இருக்கலாம்.
</p><p>நாவல் மரத்தில் பழங்களைப் பறிக்கும் போது நிஜமாகவே அங்கு நரம்பு மண்டலத்தைத் தாக்கி சில நிமிடங்களில் மரணத்தைக் கொண்டு வரும் நாகப்பாம்பு உள்ளிட்ட பாம்பு கடித்திருக்கலாம். 
பல நேரங்களில் பாம்பு கடித்த பற்கள் வெளியே தெரியாமலும் இருக்கலாம். </p><p>
பாம்பு கடித்ததை முள் தைத்ததாக சிறுவன் தவறாக எண்ணி நேரத்தை வீணடித்திருக்கலாம். அல்லது 
காலதாமதம் ஆனதால் சுவாசத்திற்கு தேவையான தசைகள் செயலிழந்து மரணித்திருக்கலாம். </p><p>
இரண்டாவது வாய்ப்பு 
அந்த மரத்தில் இருந்த குழவி அல்லது கட்டெறும்பு ஆகியவை கடித்து அதனால் அதி தீவிர ஒவ்வாமை (ANAPHYLAXIS) ஏற்பட்டு அதனால் மூச்சுக் குழாய் சுருங்கி மரணம் சம்பவித்திருக்கலாம். </p><p>
மூன்றாவது வாய்ப்பு 
மரத்தில் இருந்து கீழே விழுந்து அதனால் பின் மண்டையில் / கழுத்து தண்டு வட எலும்பு அடிபட்டு மூர்ச்சையாகி மரணம் சம்பவித்திருக்கலாம். பிரேதப் பரிசோதனை யில் மட்டுமே இவை தெரிய வரலாம். </p><p>
நான்காவது வாய்ப்பு 
அந்த சிறுவனுக்கு ஏற்கனவே இருந்த இதயம் சார்ந்த பாதிப்புகள் தீவிரமடைந்து அதனாலும் மரணம் சம்பவித்திருக்க சிறிய வாய்ப்புண்டு.</p><p> 
பாம்புகள் பழங்களையோ 
காய்கறிகளையோ தீண்டாது. 
அது அவற்றின் உணவன்று 
இது நம்மிடையே உள்ள மூடநம்பிக்கையாகும். </p><p>இன்னும் ஒரு மூடநம்பிக்கை உண்டு
வெள்ளரிக்காய், புடலங்காய் உள்ளிட்டவை 
திடீரென ரொம்ப கசக்கும். 
உடனே நம் பெற்றோர் " பாம்பு வாய் வைத்திருக்கும். சாப்பிடாத" என்பார்கள். </p><p>
உண்மையில் அவற்றில் பாம்பு வாய் வைப்பதில்லை. 
மாறாக வெள்ளரிக்காய், புடலங்காய் உள்ளிட்டவை குக்குர்பிட்டேசியே (Cucurbitaceae) குடும்பத்தைச் சேர்ந்த காய்கறிகள் ஆகும். </p><p>
வேறு விலங்குகள் சாப்பிடக் கூடாது 
தாங்கள் இனப்பெருக்கம் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த இனம் 
குக்குர்பிட்டேசின் எனும் நச்சுப் பொருளை 
சுரக்கும். </p><p>
இந்த குக்குர்பிட்டேசினை அதி வெயில், நீர் தேவையான அளவு போதாமை, மண் வளம் குன்றும் போது சற்று அளவுக்கு அதிகமாக உருவாக்கும். </p><p>
அதனால் அந்த காய்கறிகளில் அதிக கசப்புத் தன்மை இருக்கும். 
இந்த காய்கறிகளை சாப்பிட்டால் 
வயிற்றுப் போக்கு வாந்தி உள்ளிட்ட உணவு ஒவ்வாமை நிகழ்வுகள் ஏற்படும். </p><p>
இதற்கும் பாம்புகளுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. 
பாம்புகள் எப்போது தனது நஞ்சை உபயோகிக்கும்? </p><p>
பிற விலங்குகளால் பாதிப்பு ஏற்பட்டு 
தங்களை பாதுகாக்கவும் 
தங்களின் இரைகளை மூர்ச்சையாக்கவும் மட்டுமே நஞ்சை உபயோகிக்கும் 
மற்றபடி பழங்கள், காய்கறிகள் என்று தங்கள் உணவில்லாதவற்றில் நஞ்சை வீணாக்காது. </p><p>
பழங்கள் / காய்கறிகளில் பாம்பு வாய் வைக்கும், நஞ்சு கக்கும் என்பதில் அறிவியல் இல்லை.&nbsp;</p><p>நன்றி&nbsp;</p><p>பரூக் அப்துல்லா<br>பொது நல மருத்துவர்<br>சிவகங்கை</p>]]></content>
            <updated>2026-09-05T11:53:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[சீனாவில் நிலச்சரிவு: ஒருவர் பலி- பலர் மாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/landslide-in-china-11-missing-1788608121"></link>
            <id>https://tamilwin.com/article/landslide-in-china-11-missing-1788608121</id>
            <summary type="text">சீனாவின்- ஜியாங்சி மாகாணத்தில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட பயங்கர
நிலச்சரிவில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 11 பேர் காணாமல் போயுள்ளதாக அதிகாரிகள...</summary>
            <content type="html"><![CDATA[<p>சீனாவின்- ஜியாங்சி மாகாணத்தில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட பயங்கர
நிலச்சரிவில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 11 பேர் காணாமல் போயுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
</p><p>
சௌடெல் சூறாவளி காரணமாகப் பெய்த கடும் மழை வீழ்ச்சியினைத் தொடர்ந்து, ஜியாங்சி
மாகாணத்தின் சுய்ச்சுவான் கவுண்டிக்கு உட்பட்ட கோபிங் நகரத்தில் இன்று(5.9.2026) அதிகாலை 4.00 மணியளவில் இந்த நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.</p><h2>மீட்புப் பணிகள்</h2><p>

இந்த இயற்கை அசம்பாவிதத்தினால் அப்பகுதியிலுள்ள 12 வீடுகள் கடுமையான
சேதத்திற்குள்ளாகியுள்ளதுடன், நிலச்சரிவுப் பாறைகள் மற்றும் மண்ணுக்குள்
10-க்கும் மேற்பட்டோர் சிக்கியிருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/edd30cd0-68a7-4280-b402-f8f375bf0478/26-6a9c0273defb8.webp' /></p><p>
சம்பவ இடத்திற்கு மீட்புக் குழுவினர் விரைந்துள்ளதுடன், காணாமல் போனவர்களைக்
கண்டுபிடிப்பதற்கான தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் தீவிரமாக
முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-05T11:52:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆசியாவில் தனியான தடயவியல் ஆய்வகம் இல்லாத நாடாக இலங்கை! சிறைச்சாலைகளில் உள்ள சிக்கல்நிலை - அஜித் பி பெரேரா தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ajith-p-perera-statement-about-namal-1788608102"></link>
            <id>https://tamilwin.com/article/ajith-p-perera-statement-about-namal-1788608102</id>
            <summary type="text">இந்த அரசாங்கம் கொண்டுவந்துள்ள 22ஆவது அரசமைப்புத் திருத்தத்தின் மூலமாகவோ அல்லது
புதிய சட்டமூலங்கள் மூலமாகவோ நீதிமன்ற வழக்கு விசாரணைகள் எவையும்
விரைவு...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்த அரசாங்கம் கொண்டுவந்துள்ள 22ஆவது அரசமைப்புத் திருத்தத்தின் மூலமாகவோ அல்லது
புதிய சட்டமூலங்கள் மூலமாகவோ நீதிமன்ற வழக்கு விசாரணைகள் எவையும்
விரைவுபடுத்தப்பட மாட்டாது எனவும், ஊழல்வாதிகளைப் பாதுகாப்பதே அரசாங்கத்தின் உண்மையான
நோக்கம் எனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி
பெரேரா தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p>
இது தொடர்பில் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.</p><h2>வழக்கு விசாரணைகள்</h2><p>அவர் மேலும் கூறுகையில், அரசாங்கம் நீதித்துறையில் பெரும் சீர்திருத்தங்களைச் செய்திருப்பதாகக் கூறுவது
முற்றிலும் பொய்யானது. குற்றவியல் நடைமுறைச் சட்டத்திலோ அல்லது நீதிமன்ற
அமைப்புக் சட்டத்திலோ வழக்கு விசாரணைகளை விரைவுபடுத்தக்கூடிய எந்தவொரு
திருத்தமும் செய்யப்படவில்லை.</p><p> நீதியரசர்கள் மற்றும் நீதிபதிகளின் ஓய்வுபெறும்
வயதை உயர்த்தியதால் வழக்குகள் விரைவாக முடியப் போவதில்லை.

உயர்நீதிமன்றத்தில் பதவி வெற்றிடங்கள் இருந்தபோதிலும், அனுபவமிக்க
மேன்முறையீட்டு நீதிமன்றச் சிரேஷ்ட நீதியரசர்களுக்கு உயர்நீதிமன்ற நியமனங்கள்
வழங்கப்படாமல் அவர்கள் ஓய்வுபெற அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p><p>

பாதுகாப்புத் துறையின் திறனை மேம்படுத்துவதற்கோ குற்றத் தடுப்புக்கோ அரசாங்கம் எவ்வித காத்திரமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆசியாவிலேயே பாதுகாப்புத்
தரப்பிடம் தனியான தடயவியல் ஆய்வகம் இல்லாத நாடுகளாக இலங்கையும்
ஆப்கானிஸ்தானும் மட்டுமே உள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/491e0624-e714-404b-afee-ac98ab5f5397/26-6a9c013bd2d4a.webp' /></p><h2>சிறைச்சாலைகளில் முறையான மறுவாழ்வு நடவடிக்கைகள்</h2><p> பாதுகாப்புத் துறையிலுள்ள ஆயிரக்கணக்கான பதவி
வெற்றிடங்களை நிரப்பவும், அதிகாரிகளின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை
உயர்த்தவும் அரசாங்கம் தவறிவிட்டதுடன், சிறைச்சாலைகளில் முறையான மறுவாழ்வு
நடவடிக்கைகள் இல்லாததால் தண்டனை முடிந்து வருபவர்கள் மீண்டும் குற்றச்
செயல்களில் ஈடுபடும் சூழலே நிலவுகின்றது.
</p><p>
எளியவர்களாகக் காட்டிக்கொண்டு ஆட்சிக்கு வந்த அரச பிரதானிகளின் மாளிகைகள்
மற்றும் பெரும் சொத்து விவரங்கள் வெளியானதைத் தொடர்ந்து, பொதுமக்கள் மற்றும்
ஊடகங்கள் அந்தத் தகவல்களைப் பெறுவதைக் கட்டுப்படுத்தவே புதிய ஊழல் ஒழிப்புச்
சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.</p><p>

வாக்குறுதியளித்தபடி அந்தச் சட்ட மூலத்தில் எவ்வித மாற்றங்களும் செய்யப்படாமல்
அப்படியே நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ஊழலைத் தடுப்பதற்குப்
பதிலாக ஊழல்வாதிகளைப் பாதுகாக்கும் இந்தச் சட்டமூலத்தை ஐக்கிய மக்கள் சக்தி
முழுமையாக எதிர்க்கின்றது என்றார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-05T11:47:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[கருப்பு முகமூடியுடன் போராட்டத்தில் குதித்த மர்ம கும்பல்: டோவர் துறைமுகத்தில் பரபரப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/masked-men-stop-access-to-dover-port-1788608735"></link>
            <id>https://news.lankasri.com/article/masked-men-stop-access-to-dover-port-1788608735</id>
            <summary type="text">பிரித்தானியாவின் டோவர் துறைமுகத்தில் முகமூடி அணிந்தவர்களின் போராட்டம் காரணமாக போக்குவரத்து கடுமையாக பாதிப்படைந்துள்ளது. முகமூடி அணிந்தவர்களின் திடீர் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரித்தானியாவின் டோவர் துறைமுகத்தில் முகமூடி அணிந்தவர்களின் போராட்டம் காரணமாக போக்குவரத்து கடுமையாக பாதிப்படைந்துள்ளது.</p><h2> முகமூடி அணிந்தவர்களின் திடீர் போராட்டம்</h2><p>டோவர் துறைமுகப் பகுதியில் முகமூடி அணிந்த மர்ம கும்பல் ஒன்று திடீரென சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.</p><p>முகமூடி அணிந்த நபர்கள் திடீரென சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பயணிகள், சரக்கு வண்டி ஓட்டுநர்கள் அச்சத்தில் உறைந்த தோடு கடும் அவதிக்கும் உள்ளாகினர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/93d56da2-7971-4d0e-9cd2-00f46f713c35/26-6a9c00e0dabce.webp' /></p><p> இவர்களின் இந்த போராட்டத்தால் துறைமுகத்திற்கு செல்லும் முக்கிய சாலைகளான A2 மற்றும் A20 ஆகிய பகுதிகள் தீவிர போக்குவரத்து நெரிசலுக்கு உள்ளானது.</p><p>P&amp;O Ferries நிறுவனம் பயணிகள் துறைமுகத்திற்கு வருவதில் கட்டுப்பாடுகள் இருப்பதாக எச்சரித்து இருந்ததுடன், விடுமுறை சென்றவர்களும் லாரி ஓட்டுநர்களும் இதில் சிக்கி தவித்தனர்.</p><p></p><h2> வாகன ஓட்டிகளின் எதிர்வினை</h2><p>இந்த திடீர் ஆர்ப்பாட்டம் உள்ளூர் தலைவர்களிடையே கடும் கண்டனத்தை பெற்றுள்ளது.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">📢<a href="https://x.com/hashtag/PODOVER?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#PODOVER</a> UPDATE:<br><br>Access to the Port of Dover has been partially restored and traffic is currently able to access the port via the M2/A2. <br><br>access remains restricted from the M20/A20 ⛔️. <br><br>Our services are operating with some delay, but we will get you onto the next available…</p>&mdash; P&amp;O Ferries Travel Updates (@POferriesupdate) <a href="https://x.com/POferriesupdate/status/2096168788274135402?ref_src=twsrc%5Etfw">September 5, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>போக்குவரத்து நெரிசலில் சிக்கிய ஒருவர் தெரிவித்த கருத்தில், கருப்பு நிற உடையில் வந்தவர்கள் காரை சூழ்ந்து கொண்டதால், என்னுடைய உயிருக்கு ஆபத்து நேரிடுமோ என்று பயந்து விட்டதாக தன்னுடைய வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.</p><p> இதற்கிடையில் சம்பவ இடத்திற்கு விரைந்த கென்ட் காவல்துறையினர் இடத்தை இயல்பு நிலைக்கு கொண்டு வர தீவிரமாக செயல்பட்டனர்.</p><p> மேலும் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தை நிலைமையை கட்டுப்படுத்தினர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-05T11:45:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[விரைவில் நாமலுக்குப் பிணை..! மகனை சிறையில் சந்தித்த பின் மகிந்த வெளியிட்ட தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-rajapaksa-arrested-mahinda-visited-in-prison-1788604228"></link>
            <id>https://tamilwin.com/article/namal-rajapaksa-arrested-mahinda-visited-in-prison-1788604228</id>
            <summary type="text">புதிய இணைப்பு&amp;nbsp;சிறையில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌சவை நேரில் சென்று சந்தித்த பின்னர், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ச ஊடகங்களுக்கு...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு&nbsp;</h2><p>சிறையில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌சவை நேரில் சென்று சந்தித்த பின்னர், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ச ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்துள்ளார்.
</p><p>மேலும், நாமலின் கைது ஒரு பழிவாங்கும் செயலாக இருக்கக்கூடும் அல்லது இல்லாமலும் போகலாம், இச்சூழ்நிலையைச் சட்டரீதியாக எதிர்கொள்ளவுள்ளோம்.</p><p>

எதிர்வரும் தினங்களில் நீதிமன்றத்தின் ஊடாக நாமல் ராஜபக்‌சவிற்குப் பிணை பெறுவதற்கு எதிர்பார்க்கின்றோம்.&nbsp;</p><p>
ஒரு அரசியல் தலைவராக இதுபோன்ற சவாலான சூழ்நிலைகளுக்கு நாமல் ராஜபக்‌ச இதற்கு முன்னரும் முகங்கொடுத்துள்ளார், இது தமக்கு ஒரு புதிய விடயம் அல்ல.</p><p>

இக்கைதினால் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கு எந்தவித பின்னடைவும் ஏற்படாது, இச்சம்பவம் கட்சி மேலும் வலுப்பெற்று முன்னோக்கி நகர்வதற்கான ஒரு சந்தர்ப்பமாகவே அமையும்” என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><h2>முதலாம் இணைப்பு&nbsp;</h2><p>சிறையில் அடைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌சவை, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நேரில் சென்று சந்தித்துள்ளார்.&nbsp;</p><p>நேற்றைய தினம், கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நாமல் ராஜபக்‌சவை சந்தித்து நலம் விசாரிப்பதற்காக, அவரது தந்தையான முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இன்று (05) வெலிக்கடை சிறைச்சாலைக்குச் சென்றுள்ளார்.</p><p>அதன்படி, வெலிக்கடை சிறைச்சாலை வளாகத்திற்கு வருகை தந்த அவர், சிறை அதிகாரிகளின் அனுமதியுடன் நாமல் ராஜபக்‌சவை நேரில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.</p><h2>கைது செய்யப்பட்ட நாமல்..&nbsp;</h2><p>நாமல் ராஜபக்ச,&nbsp;நேற்றைய தினம் எயார்பஸ் விமானக் கொள்வனவின் போது இலஞ்சம் பெற்றதாக கூறப்படும் குற்றச்சாட்டில், இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையான நிலையில், நீண்ட நேர விசாரணைக்கு பின்னர் கைது செய்யப்பட்டார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0a4a1415-bb2c-439c-ae1a-af4ee6ce6d9d/26-6a9bf343325a2.webp' /></p><p>இதனை தொடர்ந்து நீதிமன்றில் முன்னிலைபடுத்தப்பட்ட அவர், எதிர்வரும் 18ஆம் திகதி வரை கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.&nbsp;</p><p>சிறைச்சாலையின் சிறப்பு பாதுகாப்பு அறையில், 10 கைதிகளுடன் பலத்த பாதுகாப்பில் அவர் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/yUiT2q5TrrU" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-05T11:40:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீராட சென்ற இரு இளைஞர்கள் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/two-youths-lost-their-lives-while-bathing-nanu-oya-1788608496"></link>
            <id>https://jvpnews.com/article/two-youths-lost-their-lives-while-bathing-nanu-oya-1788608496</id>
            <summary type="text">நுவரெலியா - நானுஓயா, கிளாஸ்சோ நீர்வீழ்ச்சி அமைந்துள்ள பகுதியில் உள்ள ஆற்றில் நீராடச் சென்ற இருவர் இன்று (05) நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். 

உயிரி...</summary>
            <content type="html"><![CDATA[<p>நுவரெலியா - நானுஓயா, கிளாஸ்சோ நீர்வீழ்ச்சி அமைந்துள்ள பகுதியில் உள்ள ஆற்றில் நீராடச் சென்ற இருவர் இன்று (05) நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.</p><p> 

உயிரிழந்தவர்கள் நானுஓயா பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய பெருமாள் திவாகர் மற்றும் ஹப்புத்தளை பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய அன்பழகன் நிக்சன் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/07e33348-5cbb-463a-81f6-3191707e5bc4/26-6a9bfff2435fe.webp' /></p><p> 

நுவரெலியா கிரிகோரி வாவியிலிருந்து வெளியேறி, கொத்மலை ஆற்றில் சங்கமிக்கும் நானுஓயா கிளாஸ்சோ நீர்வீழ்ச்சிப் பகுதியில் உள்ள ஆற்றில் குளிக்கச் சென்றபோதே இவர்கள் இருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.</p><p></p><p> 

மீட்கப்பட்ட இருவரின் சடலங்களும் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்படவுள்ளன. 

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நானுஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-05T11:38:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[முதன்முறையாக அரசியலில் குதிக்கும் நாமலின் மனைவி : அனுராதபுர பேரணியில் களமிறக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/limini-to-replace-namal-at-anuradhapura-rally-1788607477"></link>
            <id>https://ibctamil.com/article/limini-to-replace-namal-at-anuradhapura-rally-1788607477</id>
            <summary type="text">பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்சவின் மனைவி லிமினி வீரசிங்க ராஜபக்ச,எதிர்வரும் 12ஆம் திகதி அனுராதபுரத்தில் சிறிலங்கா பொதுஜன பெரமு...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்சவின் மனைவி லிமினி வீரசிங்க ராஜபக்ச,எதிர்வரும் 12ஆம் திகதி அனுராதபுரத்தில் சிறிலங்கா பொதுஜன பெரமுன நடத்தும் மாபெரும் பேரணியின் மேடையில் கலந்துகொள்ள உள்ளார் என கட்சியின் உள்ளக வட்டாரங்கள் தெரிவிப்பதாக கொழும்பு ஊடகமொன்று தெகவல் வெளியிட்டுள்ளது.
</p><p>
நேற்று (04) இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட நாமல் ராஜபக்ச, 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சூழ்நிலையில், சிறிலங்கா பொதுஜன பெரமுன இந்த முடிவை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.</p><h2>மகிந்தவும் பங்கேற்பு</h2><p>கட்சித் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்சவும் அனுராதபுர பேரணியில் கலந்துகொள்ள உள்ளார். ஆனால், அவர் பிரதான மேடையில் நின்று மக்களிடையே உரையாற்றுவதற்குப் பதிலாக, மேடைக்கு முன்னால் மக்களிடையே நின்றோ அல்லது மற்றொரு மேடையிலோ பேரணியில் கலந்துகொள்ள முடிவு செய்துள்ளதாக வட்டாரங்கள் தெரிவித்தன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/99af565e-707e-445c-aea7-9f0e73ec09f0/26-6a9bfeab8aa87.webp' /></p><p>
</p><p>
கட்சியின் பிரதான மேடையில் லிமினி வீரசிங்க ராஜபக்ச முதன்முறையாக மக்களிடையே உரையாற்ற உள்ளார் எனத் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.</p><p></p><h2>லிமினியின் ஜாதகத்தை கணித்த புகழ்பெற்ற சோதிடர்</h2><p>
</p><p>
மேலும், கடந்த காலத்தில் லிமினியின் ஜாதகத்தை ஆய்வு செய்த ஒரு புகழ்பெற்ற ஜோதிடர், அவரது ஜாதகமானது உலகின் முதல் பெண் பிரதமரான சிறிம ரத்வத்த டயஸ் பண்டாரநாயக்க மற்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆகியோரின் ஜாதகங்களைப் போல வலிமையானது என்று கூறியதாக அரசியல் வட்டாரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/953c6e29-5c91-4cdd-94d8-b6b2a9b423ed/26-6a9bfeaabf7d9.webp' /></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-05T11:36:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாமலின் கைது புதிய விடயமல்ல: சிறையில் நாமலைச் சந்தித்த பின் மகிந்த கருத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/mahinda-rajapaksa-visited-namal-rajapaksa-prison-1788604093"></link>
            <id>https://ibctamil.com/article/mahinda-rajapaksa-visited-namal-rajapaksa-prison-1788604093</id>
            <summary type="text">புதிய இணைப்புசிறையில் அடைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷவை நேரில் சென்று சந்தித்த பின்னர், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ச ஊடகங்க...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>சிறையில் அடைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷவை நேரில் சென்று சந்தித்த பின்னர், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ச ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்துள்ளார்.
</p><p>இது தொடர்பாக கருத்து தெரிவித்த அவர், 'நாமலின் கைது ஒரு பழிவாங்கும் செயலாக இருக்கக்கூடும் அல்லது இல்லாமலும் போகலாம் இச் சூழ்நிலையைச் சட்டரீதியாக எதிர்கொள்ளவுள்ளோம்.</p><p>எதிர்வரும் தினங்களில் நீதிமன்றத்தின் ஊடாக நாமல் ராஜபக்‌சவிற்குப் பிணை பெறுவதற்கு எதிர்பாகின்றேன்.</p><p>
ஒரு அரசியல் தலைவராக இதுபோன்ற சவாலான சூழ்நிலைகளுக்கு நாமல் ராஜபக்‌ஷ இதற்கு முன்னரும் முகங்கொடுத்துள்ள்ளார்.</p><p>இது தமக்கு ஒரு புதிய விடயம் அல்ல, இக் கைதினால் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கு எந்தவித பின்னடைவும் ஏற்படாது இச் சம்பவம் கட்சி மேலும் வலுப்பெற்று முன்னோக்கி நகர்வதற்கான ஒரு சந்தர்ப்பமாகவே அமையும் என்று' மகிந்த ராஜபக்ச நம்பிக்கை வெளியிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b14ff446-b2f7-442d-8dd2-179d9f26f456/26-6a9bff411fb46.webp' /></p><h2>முதலாம் இணைப்பு</h2><p>சிறையில் அடைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌சவை, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நேரில் சென்று சந்தித்துள்ளார்.</p><p> </p><p>
நேற்றைய தினம், கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நாமல் ராஜபக்‌சவை சந்தித்து நலம் விசாரிப்பதற்காக, அவரது தந்தையான முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இன்று (05.09.2026) வெலிக்கடை சிறைச்சாலைக்குச் சென்றுள்ளார்.
</p><p>அதன்படி, வெலிக்கடை சிறைச்சாலை வளாகத்திற்கு வருகை தந்த முன்னாள் ஜனாதிபதி, சிறை அதிகாரிகளின் அனுமதியுடன் நாமல் ராஜபக்‌சவை நேரில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.</p><p></p><h2>மகனிடம் நலம் விசாரித்த&nbsp;மகிந்த ராஜபக்ச</h2><p>
</p><p>நாமல் ராஜபக்ச, நேற்றைய தினம் எயார்பஸ் விமானக் கொள்வனவின் போது இலஞ்சம் பெற்றதாக கூறப்படும் குற்றச்சாட்டில், இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையான நிலையில், நீண்ட நேர விசாரணைக்கு பின்னர் கைது செய்யப்பட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/92595b85-cd5c-4908-9016-399153410c29/26-6a9bf46c6126a.webp' /></p><p> </p><p>
இதனை தொடர்ந்து நீதிமன்றில் முன்னிலைபடுத்தப்பட்ட அவர், எதிர்வரும் 18ஆம் திகதி வரை கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.&nbsp;</p><p>மேலும் சிறைச்சாலையின் சிறப்பு பாதுகாப்பு அறையில், 10 கைதிகளுடன் பலத்த பாதுகாப்பில் அவர் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/yUiT2q5TrrU" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-05T11:35:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[பளபளப்பான சருமத்திற்கு அரிசியை பயன்படுத்தும் 3 சிறந்த வழிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/3-ways-to-use-rice-for-sking-glowing-1788598958"></link>
            <id>https://manithan.com/article/3-ways-to-use-rice-for-sking-glowing-1788598958</id>
            <summary type="text">பொதுவாக, எல்லோருமே சரும பராமரிப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். அதில் அரிசி மிக நீண்ட காலமாகவே சரும பராமரிப்பு ஒரு சிறந்த மற்றும் இயற்கை பொருளா...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொதுவாக, எல்லோருமே சரும பராமரிப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். அதில் அரிசி மிக நீண்ட காலமாகவே சரும பராமரிப்பு ஒரு சிறந்த மற்றும் இயற்கை பொருளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதிலும், குறிப்பாக கொரியன் பியூட்டி முறைகள் தற்பொழுது பிரபலம் அடைந்து வருகின்றது.</p><p> அதனால் சரும பராமரிப்பில் அரிசியின் பயன்பாடும் அதிகரித்துள்ளது. 
அதாவது அரிசியில் உள்ள ஆன்டிஆக்சிடென்ட், வைட்டமின் மற்றும் சருமத்தை அமைதிப்படுத்தும் சேர்மங்கள் நம்முடைய சருமத்தின் பொலிவை அதிகரிக்க உதவுகிறது.</p><p> மேலும், அரிசியை ஊற வைத்து அல்லது வேகவைத்து கிடைக்கும் அரிசி நீர், அரிசி மாவு மற்றும் புளிக்க வைக்கப்பட்ட அரிசி சாறு போன்ற பல்வேறு வடிவங்களில் நாம் சரும பராமரிப்புக்கு பயன்படுத்தலாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4ec06f7e-713e-4ea2-a98d-61a771ac0b67/26-6a9bdab02b8c6.webp' /></p><p></p><p>
</p><p>

அதை பயன்படுத்துகின்ற பொழுது சருமத்தில் ஏற்படும் எரிச்சலை குறைக்கவும் மந்தமான தோற்றத்தை போக்கவும் சருமத்திற்கு பாதுகாப்பை கொடுக்கிறது.

இந்த அரிசி ஒரு மென்மையான இயற்கை உரிப்பு பொருளாகவும் செயல்படுகிறது. </p><p>அதனால், நம்முடைய சருமத்தில் இருக்கக்கூடிய இறந்த செல்களை நீக்கி சருமத்தை மென்மையாகவும் பொலிவாகவும் வைக்க உதவுகிறது. 

இந்த அரிசியை எப்பேர்பட்ட சரும வகைகளுக்கு நாம் பயன்படுத்தலாம். அந்த வகையில், நாம் இந்த அரிசியை கொண்டு முகத்தை பொலிவு படுத்தக்கூடிய ஒரு 3 முறை பற்றி பார்ப்போம்.</p><h3>&nbsp; 1. அரிசி நீர்:</h3><p>அரிசி நீர் என்பது சரும பராமரிப்பில் அதிக நன்மைகளை வழங்க கூடிய இடம். இதில் உள்ள ஆக்ஸிஜனேற்றத் தடுப்புப் பொருட்கள், வைட்டமின்கள் மற்றும் அமினோ அமிலங்கள் சருமத்தின் பொலிவையும் தன்மையையும் படிப்படியாக மேம்படுத்துகிறது. </p><p>அரிசியை தண்ணீரில் ஊற வைத்தோ அல்லது வேகவைத்தால் கிடைக்கக்கூடிய நீரை வடிகட்டி எடுத்துக்கொண்டு அதனை இரண்டு முதல் மூன்று நாட்கள் புளிக்க வைக்கலாம். பிறகு புளிக்க வைக்கும் முறையில் சில இயற்கை சத்துக்கள் ஆக்ஸிஜனேற்றத் தடுப்புப் பொருட்களின் அளவு அதிகரிக்கக்கூடும்.</p><p>
பிறகு, தயாரான அரிசி நீரை ஒரு சுத்தமான பாட்டிலில் சேமித்து முகத்தில் தினமும் தெளித்து பயன்படுத்தலாம். இது நமக்கு புத்துணர்ச்சியையும் சருமத்தை ஈரப்பதத்துடனும் வைப்பதற்கு உதவுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bb200a12-8852-4863-998a-e03f81716fc4/26-6a9bdab0db201.webp' /></p><h3> 

 2. சரும பொலிவிற்கு :
</h3><p>அரிசியை நன்றாக அரைத்து அதனுடன் கடலை மாவு அல்லது தயிர் சேர்த்து ஒரு பேஸ்ட் போல் தயாரிக்கலாம். வீட்டிலேயே தயாரிக்க கூடிய இந்த பேஸ்ட் நமக்கு சருமத்தில் இருக்கக்கூடிய இறந்த செல்களை அகற்றுவதோடு சருமத்திற்கு நல்ல ஊட்டச்சத்து அளிக்கிறது. </p><p>அதோடு அதில் இருக்கக்கூடிய கடலை மாவு சருமத்தில் இருக்கும் அதிகப்படியான எண்ணெய் மற்றும் அழுக்குகளை நீக்குகிறது. </p><p>தயிர் நம்முடைய சருமத்திற்கு ஈரப்பதத்தை வழங்குகிறது. இந்த கலவையை நாம் முகத்தில் சீராக தடவி சிறிது நேரம் கழித்து தண்ணீரால் மெதுவாக கழுவலாம். பிறகு நம்முடைய முகம் பொலிவாக இருப்பதையும் புத்துணர்ச்சி இருப்பதையும் பார்க்க முடியும். </p><h3>

3. அரிசி நீர் ஐஸ் கட்டிகள்:</h3><p>
கோடை காலங்களில் அரிசி நீரில் தயாரிக்கப்படும் அந்த ஐஸ் கட்டிகள் முகத்திற்கு குளிர்ச்சியையும் புத்துணர்ச்சியையும் சருமத்தை பராமரிக்கவும் உதவுகிறது. இதற்கு முதலில் அரிசியை தண்ணீரில் ஊற வைத்து பிறகு அந்த நீரை வடிகட்டி நம்முடைய ஐஸ் கட்டி தயாரிக்க கூடிய அந்த தட்டில் ஊற்றி ஊற வைக்கலாம். </p><p>பிறகு உறைந்த அந்த ஐஸ்கட்டியை நேரடியாக முகத்தில் தேய்க்காமல் அதற்கு பதிலாக மென்மையான துணியில் சுற்றி உதட்டில் மெதுவாக பயன்படுத்துவது 

குளிர்ச்சியான தன்மை முகத்தில் ஏற்படக்கூடிய வீக்கத்தையும் சருமத்திற்கு தற்காலிகமான புத்துணர்ச்சிகளையும் கொடுக்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1b6f4cdb-b748-489b-8926-418f687fd757/26-6a9bdab19453c.webp' /></p><p></p><h3> 

முக்கியக் குறிப்பு:
</h3><p>இவையெல்லாம் இயற்கையான பொருட்கள் என்றாலும் அனைவரது சருமமும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. ஆதலால் எந்த ஒரு பொருளையும் பயன்படுத்துவதற்கு முன்னதாக சிறியதாக ஒரு பகுதியில் பயன்படுத்தி பரிசோதனை செய்த பிறகு முகத்தில் நீங்கள் முழுவதுமாக பயன்படுத்தலாம்.</p><p> மேலும், வீடுகளில் தயாரிக்கும் அரிசி நீர் போன்ற பொருட்களை நீண்ட நாட்கள் சேமித்து வைக்காமல் சுத்தமான முறையில் குறுகிய நாட்களுக்குள் பயன்படுத்துவது பாதுகாப்பை கொடுக்கும். வெறும் சரும பராமரிப்பு மட்டும் எப்பொழுதும் பாதுகாக்காது. </p><p>போதுமான தண்ணீர் சுத்தமான உணவு சூரிய ஒளியில் இருந்து சருமத்தை பாதுகாத்தல் ஆரோக்கிய உணவுகள் எடுத்துக் கொள்ளுதல் தேவை இல்லாமல் மன அழுத்தத்திற்கு ஆளாகுதல் இவையெல்லாம் முறையாக பின்பற்றும் பொழுது தான் நாம் நினைத்த சருமத்தை அடைய முடியும்.&nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-09-05T11:30:40+00:00</updated>
        </entry>
    </feed>
