<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-09-12T22:32:53+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்திய மாலுமிகள் பயணித்த 3 வர்த்தக கப்பல் மீது தாக்குதல்: மத்திய கிழக்கில் பதற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/3-indian-sailors-carrying-ship-attacked-in-hormuz-1789252347"></link>
            <id>https://news.lankasri.com/article/3-indian-sailors-carrying-ship-attacked-in-hormuz-1789252347</id>
            <summary type="text">3 Indian Sailors Carrying Ship Attacked in Middle East: மத்திய கிழக்கில் இந்திய மாலுமிகள் பயணித்த கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.இந்திய மா...</summary>
            <content type="html"><![CDATA[<p>3 Indian Sailors Carrying Ship Attacked in Middle East: மத்திய கிழக்கில் இந்திய மாலுமிகள் பயணித்த கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.</p><h2>இந்திய மாலுமிகள் கப்பல் மீது தாக்குதல்</h2><p>மத்திய கிழக்கில் ஈரான் - அமெரிக்கா இடையிலான போர் நடவடிக்கை தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், இப்பகுதியில் கடந்த செப்டம்பர் 8ம் மற்றும் 9ம் திகதிகளில் இந்திய மாலுமிகள் பயணித்த 3 வர்த்தக கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.</p><p>அதிர்ஷ்டவசமாக இந்த தாக்குதலில் 3 வர்த்தக கப்பல்களில் இருந்த அனைத்து இந்திய மாலுமிகளும் காயமின்றி உயிர் பிழைத்தனர்.</p><p>கடல்சார் நிர்வாக இயக்குநரகம் வெளியிட்ட தகவலில், செப்டம்பர் 8ம் திகதி ஓமன் வளைகுடா பகுதியில் இரவு 11 மணியளவில் ஜிம்பாப்வே கொடியுடன் பயணித்த ரீஸ்கோ என்ற கச்சா எண்ணெய் கப்பலை அமெரிக்க கடற்படை தாக்கியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/218dc1a3-dd26-4c35-91ed-fd382a555d2f/26-6aa5d2fcecd57.webp' /></p><p> இந்த கப்பலில் கிட்டத்தட்ட 21 இந்திய மாலுமிகள் இருந்த நிலையில், அவர்கள் அனைவரும் தாக்குதலுக்கு முன்பாகவே கப்பலில் இருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.</p><p> இதைப்போல ஓமன் மற்றும் பாரசீக வளைகுடா பகுதியில் செப்டம்பர் 8 மற்றும் 9ம் திகதியில் தாக்குதலுக்கு உள்ளான மற்ற 2 படகுகளில் இருந்த இந்திய மாலுமிகளும் பத்திரமாக காயமின்றி மீட்கப்பட்டுள்ளனர்.</p><p></p><p> இருதரப்பிற்கும் இடையிலான மோதல் தீவிரமடைந்துள்ள பாரசீக மற்றும் அதனை சுற்றியுள்ள கடல் பகுதிகளில் இந்திய கொடியுடன் பயணிக்கும் கப்பல்கள் மற்றும் இந்தியா நோக்கி பயணிக்கும் கப்பல்கள் என மொத்தம் 10 கப்பல்கள் அடையாளம் காணப்பட்டு அதிலுள்ள மாலுமிகள் பத்திரமாக வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.</p><p> ஈரான் அமெரிக்கா இடையிலான போர் தொடங்கியதில் இருந்து இதுவரை இந்தியக் கொடி பொருத்தப்பட்ட 4 கப்பல்கள் மற்றும் இந்தியர்கள் பயணித்த 50 கப்பல்கள் இத்தகைய தாக்குதலை எதிர்கொண்டுள்ளன.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-12T22:32:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[லண்டனில் குடியிருப்பு கட்டிடத்தில் பரவிய தீ: ஒருவர் உயிரிழப்பு, 4 பேர் காயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/fire-at-east-london-residential-building-one-dead-1789252017"></link>
            <id>https://news.lankasri.com/article/fire-at-east-london-residential-building-one-dead-1789252017</id>
            <summary type="text">Fire at East London residential building One dead: கிழக்கு லண்டனில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் பரிதாபமாக...</summary>
            <content type="html"><![CDATA[<p>Fire at East London residential building One dead: கிழக்கு லண்டனில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.</p><h2> லண்டனில் தீ விபத்து</h2><p>லண்டனின் பிளாக்வால் வே(Blackwall Way) பகுதியில் அமைந்துள்ள 22 மாடி கொண்டு அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.</p><p>கட்டிடத்தின் 17 வது மாடியில் தீ பற்றியது தொடர்பாக அதிகாலை 4.35 மணிக்கு அவசர உதவிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> கிட்டத்தட்ட 10 தீயணைப்பு வாகனங்கள், 70 தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f73713d4-d1b2-42b7-8388-1fd91061e912/26-6aa5d1b339763.webp' /></p><p>தீயணைப்பு வீரர்கள் கடுமையாக போராடி காலை 6.41 மணிக்கு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.</p><p> ஆனால் அதற்குள் தீ பரவிய 17வது மாடியின் பாதி பரப்பளவு தீயில் எரிந்து சேதமடைந்தது.</p><p></p><h2> உயிரிழப்புகள் மற்றும் காயம்</h2><p>மருத்துவ சேவையினரின் துரித நடவடிக்கைக்கு மத்தியிலும் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டார்.</p><p> மேலும் மொத்தம் 4 பேர் காயமடைந்த நிலையில், அதில் இருவர் மேல் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.</p><p> தீ விபத்திற்கான காரணம் என்ன என்பது குறித்து இதுவரை எந்தவொரு தகவலும் வெளியாகவில்லை.</p><p> இந்நிலையில் தீ விபத்துக்கான காரணத்தை கண்டறிய பொலிஸார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விசாரணையை தொடங்கியுள்ளனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p>&nbsp;<br></p>]]></content>
            <updated>2026-09-12T22:27:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[போலந்தில் அவசர எச்சரிக்கை! ஐரோப்பா முழுவதும் விரைந்த நேட்டோ இராணுவ விமானங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/nato-military-aircraft-scrambled-across-europe-1789239900"></link>
            <id>https://ibctamil.com/article/nato-military-aircraft-scrambled-across-europe-1789239900</id>
            <summary type="text">உக்ரைனின் மேற்கு பகுதியில் உள்ள இலக்குகள் மீது ரஷ்ய ஆளில்லா விமானங்கள் தாக்குதல் நடத்திய நிலையில், போலந்து குடியரசின் வான்பாதுகாப்பு அமைப்பின் தேர்ந்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>உக்ரைனின் மேற்கு பகுதியில் உள்ள இலக்குகள் மீது ரஷ்ய ஆளில்லா விமானங்கள் தாக்குதல் நடத்திய நிலையில், போலந்து குடியரசின் வான்பாதுகாப்பு அமைப்பின் தேர்ந்தெடுக்கப்பட்ட படையணிகள் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளதாக ஐரோப்பிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p>போலந்தின் ஆயுதப்படைகளின் செயல்பாட்டுக் கட்டளை இதனைத் தெரிவித்துள்ளதுடன், நிலைமையை கண்காணித்து போலந்து வான்பரப்பின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இராணுவ ஹெலிகொப்டர் ஒன்று வானில் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் ஐரோப்பிய தரப்புகள் தெரிவித்துள்ளன.</p><p>

இந்த நடவடிக்கைகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக மேற்கொள்ளப்படுவதாகவும், குறிப்பாக ரஷ்ய தாக்குதல்களுக்கு உள்ளாகும் பகுதிகளுக்கு அருகிலுள்ள போலந்து வான்பரப்பின் பாதுகாப்பை உறுதி செய்வதே இதன் நோக்கம் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p></p><h2>அவசர எச்சரிக்கை</h2><p>
</p><p>
இதனிடையே, கிழக்கு போலந்தின் லுப்லின் மற்றும் போட்கார்பாக்கி மாகாண மக்களுக்கு அரசாங்க பாதுகாப்பு மையம் அவசர எச்சரிக்கையை விடுத்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/67f07e43-c650-4b0e-ae82-7486c537ebde/26-6aa5a25e86497.webp' /></p><p>

“உக்ரைனில் ரஷ்யாவின் வான்வழித் தாக்குதல் இடம்பெற்று வருகிறது. நிலைமை கண்காணிக்கப்பட்டு வருகிறது. போலந்து வான்பரப்பில் வான்படை நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன. தொடர்ந்து வெளியாகும் அறிவிப்புகளைப் பின்பற்றுங்கள்” என அந்த எச்சரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

ரஷ்ய ட்ரோன் தாக்குதல்களின் தீவிரம் காரணமாக, கடந்த செப்டெம்பர் 10ஆம் திகதியும் போலந்து தனது போர் விமானங்களை வானில் களமிறக்கியிருந்தது.</p><p>மேலும், கடந்த மூன்று நாட்களுக்குள் இரண்டாவது முறையாக அந்நாடு இவ்வாறான வான்பாதுகாப்பு நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள I<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">BC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-12T22:24:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈராக்கில் இருந்து ட்ரோன் தாக்குதல் ; சவூதியின் முக்கிய எண்ணெய் குழாய் பாதை மூடல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/key-saudi-oil-pipeline-shut-down-1789251741"></link>
            <id>https://canadamirror.com/article/key-saudi-oil-pipeline-shut-down-1789251741</id>
            <summary type="text">ஈராக்கில் இருந்து ஏவப்பட்டதாக கூறப்படும் ட்ரோன் தாக்குதல்களைத் தொடர்ந்து, சவூதி அரேபியா தனது பிரதான கிழக்கு–மேற்கு எண்ணெய் குழாய் பாதையின் செயல்பாடுகள...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈராக்கில் இருந்து ஏவப்பட்டதாக கூறப்படும் ட்ரோன் தாக்குதல்களைத் தொடர்ந்து, சவூதி அரேபியா தனது பிரதான கிழக்கு–மேற்கு எண்ணெய் குழாய் பாதையின் செயல்பாடுகளை தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளது.
</p><p>
சவூதி அரேபியாவின் அப்கேக் எண்ணெய் வயலிலிருந்து செங்கடலில் அமைந்துள்ள யான்பு துறைமுகம் வரை சுமார் 1,200 கிலோமீட்டர் நீளத்திற்கு பரந்து விரிந்துள்ள இந்த எண்ணெய் குழாய் தொகுதி, ரியாத் மற்றும் மதினா பகுதிகளில் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f34b15ed-306a-43af-82ef-c11bd83ad0d9/26-6aa5d09ea0c8e.webp' /></p><p>பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குழாய் பாதையின் செயல்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக சவூதி அரேபியாவின் ஆற்றல் அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.
</p><p>
இந்த நிலையில், ஈராக்கின் மைசான் மாகாணத்தில் இருந்தே ட்ரோன்கள் ஏவப்பட்டதாக ஈராக் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.</p><p> தனது நாட்டின் எல்லைப் பகுதியை தாக்குதல்களுக்கு பயன்படுத்த அனுமதித்ததாக கூறி, சம்பந்தப்பட்ட இராணுவத் தளபதியை ஈராக் அரசு பதவி நீக்கம் செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>மேலும், ஈரான் எல்லையும் மூடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சவூதி அரேபியாவின் மொத்த எண்ணெய் ஏற்றுமதியில் சுமார் 4 முதல் 5 சதவீதம் வரை இந்த கிழக்கு–மேற்கு குழாய் பாதை ஊடாக கொண்டு செல்லப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
ஹோர்மூஸ் நீரிணை ஏற்கனவே முடக்கப்பட்டுள்ள நிலையில், சவூதி அரேபியா பயன்படுத்தி வந்த முக்கிய மாற்று எண்ணெய் விநியோகப் பாதையும் தற்போது தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.</p><p>

இதன் தாக்கமாக உலக சந்தையில் பிரெண்ட் மசகு எண்ணெயின் விலை பீப்பாய் ஒன்றுக்கு 104 அமெரிக்க டொலர்களைத் தாண்டி உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p> இதனால் உலகளாவிய எரிபொருள் விநியோகத்தில் மேலும் நெருக்கடி ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-12T22:22:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[AI வளர்ச்சி வேகத்தை குறைக்க ஆந்த்ரோபிக் CEO வலியுறுத்தல்: எலான் மஸ்க், சாம் ஆல்ட்மேன் ஆதரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/ai-growth-should-measured-anthropic-s-ceo-says-1789251682"></link>
            <id>https://news.lankasri.com/article/ai-growth-should-measured-anthropic-s-ceo-says-1789251682</id>
            <summary type="text">AI Growth Should Measured Anthropic&#039;s CEO Says: செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வேகத்தை குறைக்க வேண்டும் என பிரபல AI நிறுவனமான ஆந்த்ரோபிக்(Anthrop...</summary>
            <content type="html"><![CDATA[<p>AI Growth Should Measured Anthropic's CEO Says: செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வேகத்தை குறைக்க வேண்டும் என பிரபல AI நிறுவனமான ஆந்த்ரோபிக்(Anthropic) தலைமை நிர்வாக அதிகாரி டாரியோ அமோடி(Dario Amodei) வலியுறுத்தியுள்ளார்..</p><h2>AI வேகத்தை குறைக்க வேண்டும்</h2><p>செயற்கை நுண்ணறிவுத் துறையின் கட்டுப்பாடற்ற தொழில்நுட்ப வளர்ச்சி எதிர்காலத்தில் மனித குலத்தின் கட்டுப்பாட்டை மீறிச் சென்று விடும் அபாயம் இருப்பதாக பிரபல AI நிறுவனமான ஆந்த்ரோபிக்-கின் தலைமை நிர்வாக அதிகாரி டாரியோ அமோடி எச்சரித்துள்ளார்.</p><p> அத்துடன் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வேகத்தை குறைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9b7f5e40-5c64-4856-b0f5-6f2515326029/26-6aa5d063afc16.webp' /><br></p><p>செயற்கை நுண்ணறிவின் எதிர்கால அச்சுறுத்தல்களை கட்டுப்படுத்தும் வகையில் 3 கட்ட விரிவான திட்டத்தை டாரியோ அமோடி முன்வைத்துள்ளார்.</p><p>அதன்படி, வெளிப்புற குழுக்கள் பாதுகாப்பு விதிமுறைகளை கண்காணிப்பதுடன் நிகழ்வுகளை பதிவு செய்து நுண்ணறிவு மாடல்களை சோதிப்பார்கள்.</p><p></p><p> ஏஐ நிறுவனங்கள் இணைந்து தெளிவான அளவுகோலையும், வளர்ச்சியின் வேகத்தையும் நிர்ணயிக்க வேண்டும்.</p><p>ஜனநாயக நாடுகள் ஏஐ பாதுகாப்பு தர நிலைகளில் சர்வதேச ஒத்துழைப்பை வளர்த்துக் கொள்ள வேணும் என்று வலியுறுத்தியுள்ளார்.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">We Must Pace the Frontier: I’ve written a new essay on why the AI industry should slow down, with a three-part plan for doing so.<br><br>Anthropic is unilaterally committing to the first of these steps. We’ll provide third-party evaluators with permanent, employee-level access to our…</p>&mdash; Dario Amodei (@DarioAmodei) <a href="https://x.com/DarioAmodei/status/2098773920774074715?ref_src=twsrc%5Etfw">September 12, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p> ஆந்த்ரோபிக்-கின் தலைமை நிர்வாக அதிகாரி டாரியோ அமோடி முன்வைத்த இந்த திட்ட வழிமுறைகளுக்கு, ஓபன்ஏஐ(Open AI) நிறுவனத்தின் CEO சாம் ஆல்ட்மேன், டெஸ்லா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க் ஆகியோர் தங்களது ஆதரவை தெரிவித்துள்ளனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p>&nbsp;<br></p>]]></content>
            <updated>2026-09-12T22:21:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் திருடப்பட்ட வாகனங்களின் ஸ்மார்ட் கீ! வெளிச்சத்திற்கு வந்த மோசடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/smart-key-stolen-vehicles-found-at-hambantota-port-1789251508"></link>
            <id>https://ibctamil.com/article/smart-key-stolen-vehicles-found-at-hambantota-port-1789251508</id>
            <summary type="text">ஹம்பாந்தோட்டை துறைமுகம் ஊடாக நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் &#039;ஸ்மார்ட் கீ&#039; (Smart Key) சாவிகளைத் திருடி விற்பனை செய்த மோசடி சம்பவம் தொடர...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹம்பாந்தோட்டை துறைமுகம் ஊடாக நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் 'ஸ்மார்ட் கீ' (Smart Key) சாவிகளைத் திருடி விற்பனை செய்த மோசடி சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p>
சாவிகளைத் திருடிய துறைமுக ஊழியர் ஒருவரும், குறித்த சாவிகளைக் கொள்முதல் செய்த வியாபாரி ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>

அவர்கள் இருவரும் நேற்று (11) ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து, எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.</p><p></p><h2>ஊழியரைப் பாதுகாப்பு&nbsp;</h2><p>
</p><p>
இந்த 'ஸ்மார்ட் கீ' காணாமல் போனமை தொடர்பாக ஹம்பாந்தோட்டை துறைமுகப் பாதுகாப்புப் பிரிவினர் மேற்கொண்ட நீண்ட தேடுதல் நடவடிக்கையின் போது, துறைமுக ஊழியர் ஒருவர் மீது சந்தேகம் எழுந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7925fc13-d66b-4134-833d-f6d3ba28576c/26-6aa5cfb5ee500.webp' /></p><p>
</p><p>
அதன்படி, குறித்த ஊழியரைப் பாதுகாப்பு அதிகாரிகள் பொறுப்பேற்று, மேலதிக விசாரணைகளுக்காக ஹம்பாந்தோட்டை துறைமுக காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.
</p><p>
துறைமுக ஊழியரிடம் நடத்திய விசாரணையில், திருடப்பட்ட ஸ்மார்ட் கீ சாவிகளைக் குருநாகல் பகுதியைச் சேர்ந்த வியாபாரி ஒருவருக்கு வாகன வகைக்கு ஏற்ப 6,000 ரூபாய் முதல் பல்வேறு விலைகளில் விற்பனை செய்துள்ளமை தெரியவந்துள்ளது.
</p><p>
இதன் மூலம் கடந்த சில மாதங்களில் சுமார் 45 'ஸ்மார்ட் கீ' சாவிகளை விற்பனை செய்து, சந்தேக நபரான ஊழியர் 15 இலட்சம் ரூபாய்க்கும் அதிகமான பணத்தைச் ஈட்டியுள்ளதாக காவல்துறை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
</p><p>
மேலும், கைது செய்யப்பட்ட துறைமுக ஊழியர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், குருநாகல் பகுதியைச் சேர்ந்த குறித்த வியாபாரியையும் காவல்துறையினர் கைது செய்ததுடன், அவர் அந்த 'ஸ்மார்ட் கீ' சாவிகளைக் கொள்முதல் செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார்.
</p><p>
அத்துடன் அவரிடமிருந்த 'ஸ்மார்ட் கீ' சாவிகளையும் காவல்துறையினர் தமது பொறுப்பில் எடுத்துள்ளனர்.
</p><p>
இந்த மோசடி நடவடிக்கை ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வாகனங்கள் இறக்குமதி செய்யத் தொடங்கிய காலத்திலிருந்தே இடம்பெற்று வந்துள்ளதாகத் துறைமுகப் பாதுகாப்புப் பிரிவினர் மற்றும் காவல்துறையினர் நடத்திய விசாரணைகளில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள I<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">BC தமிழ் WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-12T22:18:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவுடன் விரைவில் வர்த்தக ஒப்பந்தம் எட்டப்படலாம்: டிரம்ப் நம்பிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/trump-says-deal-with-canada-could-come-soon-1789251401"></link>
            <id>https://news.lankasri.com/article/trump-says-deal-with-canada-could-come-soon-1789251401</id>
            <summary type="text"> Trump Says Deal With Canada could come fairly soon: கனடா-அமெரிக்கா இடையே வர்த்தக பேச்சுவார்த்தைகள் குறித்து டிரம்ப் நம்பிக்கையான கருத்துக்களை வெளியிட...</summary>
            <content type="html"><![CDATA[<p> Trump Says Deal With Canada could come fairly soon: கனடா-அமெரிக்கா இடையே வர்த்தக பேச்சுவார்த்தைகள் குறித்து டிரம்ப் நம்பிக்கையான கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.</p><h2> தடைப்பட்ட பேச்சுவார்த்தை</h2><p>
கடந்த ஆகஸ்ட் 21ம் திகதி அமெரிக்கா முன்வைத்த புதிய கோரிக்கைகளை அடுத்து கனேடிய பிரதமர் மார்க் கார்னி தன்னுடைய பேச்சுவார்த்தை குழுவை திரும்ப பெறுவதாக அறிவித்தார்.</p><p> இதனால் அமெரிக்கா - கனடா இடையிலான வர்த்தக பேச்சுவார்த்தை முற்றிலுமாக முடங்கியது.</p><p> கனடாவின் இந்த முடிவுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, அமெரிக்கா கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது கனத்த வரிகளை விதித்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/62509da5-84c4-436f-bb8f-1bb09443d579/26-6aa5cf4b58d91.webp' /></p><p> கனடாவும் இதற்கு ஈடு கொடுக்கும் விதமாக உடனடி பதில் நடவடிக்கையை அறிவித்தது.</p><p>பின்னர் இதன் தொடர்ச்சியாக மதுபானங்கள் மற்றும் மால்ட் பானங்களை இறக்குமதிக்கு அமெரிக்கா தடை விதித்தது.</p><h2>பேச்சுவார்த்தைக்கு தயார்</h2><p>இந்த தீவிரமான மோதல்களுக்கு பிறகும், அமெரிக்கா மற்றும் கனடா தலைவர்கள் இருவரும் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக அறிவித்துள்ளனர்.</p><p>செப்டம்பர் 11ம் திகதி கல்கரியில் செய்தியாளர்களிடம் பேசிய கனேடிய பிரதமர் மார்க் கார்னி, இரு தரப்பிற்கு பலனை தரக்கூடிய பேச்சுவார்த்தைக்கு கனடா தயாராக இருப்பதாக தெரிவித்தார்.</p><p>ஆனால் கெடுபிடிகளுக்கு பயந்து இந்த பேச்சு வார்த்தையானது நடைபெறாது என்று கார்னி உறுதிப்படுத்தினார்.</p><p>இந்நிலையில் டப்ளினில் பேசிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், அமெரிக்கா விவசாயப் பொருட்கள் மீதான இறக்குமதி வரியை கனடா அரசு நீக்கினால் பேச்சுவார்த்தைக்கு தயார் என்றும், கனடாவுடன் கூடிய விரைவில் வர்த்தக ஒப்பந்தம் ஒன்று எட்டப்படலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-12T22:16:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிலிப்பைன்ஸ் கப்பல் விபத்தில் பெரும் சோகம்: 35 பேர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/death-toll-from-passenger-ship-fire-philippines-1789246869"></link>
            <id>https://tamilwin.com/article/death-toll-from-passenger-ship-fire-philippines-1789246869</id>
            <summary type="text">பிலிப்பைன்ஸ் கடற்பகுதியில் பயணிகள் கப்பல் ஒன்றில் ஏற்பட்ட பயங்கர
தீவிபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ளதுடன்,
காணாமல்போன 50க்கு...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிலிப்பைன்ஸ் கடற்பகுதியில் பயணிகள் கப்பல் ஒன்றில் ஏற்பட்ட பயங்கர
தீவிபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ளதுடன்,
காணாமல்போன 50க்கும் மேற்பட்டோரைத் தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று
வருகின்றன.
</p><p>
130க்கும் மேற்பட்ட பயணிகளுடன் பயணித்துக் கொண்டிருந்த ‘எம்.வி. ஜூன் ஆஸ்டர்’
என்ற பயணிகள் கப்பல், தனது 20 மணிநேரப் பயணத்தின் இறுதிக்கட்டத்தை
நெருங்கியவேளை பலவானில் உள்ள கோரோன் கடற்பகுதிக்கு அருகில் திடீரென தீப்பற்றி
எரிந்தது.</p><h2>விரிவான விசாரணை</h2><p>

தீயணைப்புப் படையினர் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு தீயைக் கட்டுப்பாட்டுக்குள்
கொண்டுவந்த நிலையில், கப்பலின் பொருளாதாரப் பகுதியில் இருந்து பல உடல்கள்
மீட்கப்பட்டுள்ளன.
</p><p>
மீட்கப்பட்ட சடலங்களை அடையாளம் காணும் பொருட்டு, தடயவியல் குழுவினர் கோரோன்
துறைமுகப் பகுதியில் தற்காலிக முகாம்களை அமைத்து சோதனைகளை ஆரம்பித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ccfe5843-bc92-4b46-a21e-413d06981f01/26-6aa5c20772120.webp' /></p><p>

கப்பலில் ஏற்பட்ட இரண்டு வெடிப்புச் சம்பவங்களைத் தொடர்ந்தே தீ அதிவேகமாக
பரவியதாகத் தப்பிப்பிழைத்த பயணிகள் தெரிவிக்கின்றனர்.</p><p>

சம்பவத்தில் 43 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ள போதிலும், கப்பலின் மாலுமி
குறித்த தெளிவான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. </p><p>விபத்துக்கான பின்னணி
குறித்து பிலிப்பைன்ஸ் கடலோரக் காவல் படையினர் விரிவான விசாரணைகளை
ஆரம்பித்துள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-12T22:00:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடலில் 2 நாட்களாக தத்தளித்த 15 வயது சிறுவன்: கவிழ்ந்த படகை பிடித்துக் கொண்டு உயிர் பிழைத்த சம்பவம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/15-year-old-boy-survives-two-days-in-bering-sea-1789234034"></link>
            <id>https://news.lankasri.com/article/15-year-old-boy-survives-two-days-in-bering-sea-1789234034</id>
            <summary type="text">15-year-old-boy-survives-two-days-in-bering-sea: 2 நாட்களாக கடலில் தத்தளித்த 15 வயது சிறுவன் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளான்.கடலில் உயிருக்கு போராடிய 15 ...</summary>
            <content type="html"><![CDATA[<p>15-year-old-boy-survives-two-days-in-bering-sea: 2 நாட்களாக கடலில் தத்தளித்த 15 வயது சிறுவன் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளான்.</p><h2>கடலில் உயிருக்கு போராடிய 15 வயது சிறுவன்</h2><p>

அமெரிக்காவின் அலாஸ்கா அருகில் உள்ள பெரிங் கடலில் படகு ஒன்று கவிழ்ந்த நிலையில், 2 நாட்களாக கடலில் தத்தளித்த 15வயது சிறுவன் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார்.</p><p> &nbsp;செயிண்ட லாரன்ஸ் தீவில் உள்ள சவோங்கா கிராமத்தை சேர்ந்த டெரெக் பார்க்கர் அக்னாங்கா என்ற 15 வயது சிறுவன் படகில் உறவினர்களுடன் மீன்பிடிக்க சென்ற போது அவரது படகு எதிர்பாராத விதமாக கடலில் கவிழ்ந்தது.</p><p>கடலில் நீரின் வெப்பநிலையானது வெறும் 10 டிகிரி செல்சியஸ் மட்டுமே இருந்த நிலையில், கவிழ்ந்த படகை இறுக்கமாக பிடித்துக் கொண்டு இரவு பகலாக உயிருக்கு போராடியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/594c2f50-a0e6-43f1-b91f-0cecd20798d9/26-6aa58b7424b8c.webp' /></p><p></p><h2> மீட்பு மற்றும் தேடுதல் பணி</h2><p>

கடலுக்கு சென்ற 3 பேரை காணவில்லை என உள்ளூர் மக்கள் தகவல் தெரிவித்ததும். அமெரிக்க கடலோரக் காவல்படை தீவிர தேடுதல் மற்றும் மீட்பு பணிகளை துரிதப்படுத்தினர்.</p><p> இதில் சிறுவனுடன் சென்ற மற்ற இரண்டு பேர் உயிரிழந்து விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p> கடலில் உயிருக்காக 2 நாட்களாக போராடிய சிறுவன் சுமார் 2 நாட்களுக்கு பிறகு செயிண்ட் லாரன்ஸ் தீவுக்கு அருகே மீட்கப்பட்டார்.</p><p> மீட்கப்பட்ட சிறுவன் உடனடியாக கரைக்கு அழைத்து வரப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டனர்.</p><p> 15 வயது சிறுவன் 2 நாட்களாக கடலில் மிதந்த படி உயிருடன் இருந்தது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-12T21:52:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாகிஸ்தானில் தொடரும் அவலம் ; 10 நாட்களில் 6 ஹிந்து சிறுமிகள் கடத்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/6-hindu-girls-abducted-in-pakistan-in-10-days-1789248163"></link>
            <id>https://canadamirror.com/article/6-hindu-girls-abducted-in-pakistan-in-10-days-1789248163</id>
            <summary type="text">பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில், ஹிந்து சிறுமியர் கடத்தப்பட்டு, கட்டாயமாக மதம் மாற்றப்பட்டு திருமணம் செய்யப்படும் அவலம் தொடர்கிறது.&amp;nbsp;பாகிஸ்தானின் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில், ஹிந்து சிறுமியர் கடத்தப்பட்டு, கட்டாயமாக மதம் மாற்றப்பட்டு திருமணம் செய்யப்படும் அவலம் தொடர்கிறது.&nbsp;</p><p>பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் ஹிந்து பெண்கள், குறிப்பாக கோலி, பீல், மேக்வார் போன்ற ஏழை சமூகத்தைச் சேர்ந்த சிறுமியர் அடிக்கடி காணாமல் போகின்றனர். </p><p>இவர்கள் கடத்தப்பட்டு, கட்டாய மத மாற்றம் செய்யப்பட்டு, பின் திருமணம் செய்து வைக்கப்படுவதாக புகார்கள் வருகின்றன.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c0371871-3fda-4777-8c76-8589fbd2fec6/26-6aa5c2a4af4cd.webp' /></p><p>இந்தத் திருமணங்கள் சட்டவிரோதமானவை என சிறுபான்மையினர் நல அமைப்புகள் குரல் கொடுத்தும், இதுபோன்ற அவலங்கள் தொடர்கின்றன.</p><p>


அந்த வகையில், சிந்து மாகாணத்தில் உள்ள டாண்டோ அல்லாயார் மாவட்டத்தில், 13 மற்றும் 14 வயதுடைய இரண்டு ஹிந்து சகோதரிகள் கடத்தப்பட்டனர். </p><p>சீதா, ரூபி என்ற இந்த இரு சிறுமியரையும் கடத்தி மதம் மாற்றி திருமணம் செய்துவைக்கப்பட்டதாக குடும்பத்தினர் குற்றஞ்சாட்டினர்.
</p><p>

இரு சிறுமியரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது, இருவரும் அழுதுகொண்டே, 'நாங்கள் வீட்டுக்குச் செல்ல வேண்டும்' என, கெஞ்சி யும், நீதிமன்றம் அவர்களை பெற்றோரிடம் ஒப்படைக்காமல், பாதுகாப்பு இல்லத்திற்கு அனுப்ப உத்தரவிட்டது.


இந்தக் காட்சி சமீபத்தில் வெளியாகி, பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. </p><p>இதற்கு அடுத்த நாளே 14 வயதான, பன்சி கோலி என்ற மற்றொரு ஹிந்து சிறுமி கடத்தப்பட்டுள்ளார்.
</p><p>செப்டம்பர் மாதம் தொடங்கி 10 நாட்களில் ஆறு ஹிந்து சிறுமியர் கடத்தப்பட்டு மதமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-09-12T21:22:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் இந்த ஆண்டு இறுதிக்குள் வரவுள்ள புதிய நடைமுறை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/big-change-coming-for-sim-card-users-in-sri-lanka-1789244833"></link>
            <id>https://tamilwin.com/article/big-change-coming-for-sim-card-users-in-sri-lanka-1789244833</id>
            <summary type="text">இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு சிம் அட்டை
விநியோகத்தில் புதிய கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்தவுள்ளது.

புதிய சிம் அட்டை பெறும்போத...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு சிம் அட்டை
விநியோகத்தில் புதிய கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்தவுள்ளது.
</p><p>
புதிய சிம் அட்டை பெறும்போது விண்ணப்பதாரரின் நேரலை (Live) புகைப்படம் எடுத்து
பதிவு செய்யும் நடைமுறை இந்த ஆண்டின் இறுதிக்குள் நடைமுறைக்கு வரவுள்ளதாக
ஆணைக்குழு தெரிவித்துள்ளது.</p><h2>சிம் அட்டை விநியோகம்</h2><p>
</p><p>
இதன்படி, போலி அடையாளங்களைப் பயன்படுத்தி குற்றங்கள் மற்றும் சட்டவிரோதச்
செயல்களில் ஈடுபடுவதைத் தடுப்பதே இதன் முக்கிய நோக்கம்.</p><p>

ஒரு தேசிய அடையாள அட்டையைக் கொண்டு ஒரு தொலைபேசி நிறுவனத்தில் 5 சிம்கள் வரை
(மொத்தம் 3 நிறுவனங்களில் 15 சிம்கள் வரை) பெற முடியும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9cd05c5e-1caa-4394-81de-a6f7ec9fa621/26-6aa5b7da12cae.webp' /></p><p>
</p><p>
அத்துடன் தொலைபேசி இலக்கத்தை மாற்றாமல் வேறு சேவைக்கு மாறும் வசதியை
அறிமுகப்படுத்துவதற்கான பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
</p><p>
2027-ஆம் ஆண்டிற்குள் நாட்டில் உள்ள அனைத்து சிம் பயனாளர்களின்
அடையாளத்தையும் 100% உறுதிப்படுத்த TRCSL திட்டமிட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-12T21:06:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[முதலமைச்சர் விஜய் கார் ரேஸை பார்த்து ரசித்து கொண்டிருந்த போது, திடீரென என்ட்ரி கொடுத்த திரிஷா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/trisha-enjoyed-ajith-s-car-race-alongside-vijay-1789238738"></link>
            <id>https://jvpnews.com/article/trisha-enjoyed-ajith-s-car-race-alongside-vijay-1789238738</id>
            <summary type="text">இங்கிலாந்தின் சில்வர்ஸ்டோன் மோட்டார் பந்தயக் களத்தில் நடிகர் அஜித்குமார் பங்கேற்ற ‘லீ மான்ஸ் கப்’ கார் பந்தயத்தை காண்பதற்காக நடிகை திரிஷா நேரில் சென்ற...</summary>
            <content type="html"><![CDATA[<p>இங்கிலாந்தின் சில்வர்ஸ்டோன் மோட்டார் பந்தயக் களத்தில் நடிகர் அஜித்குமார் பங்கேற்ற ‘லீ மான்ஸ் கப்’ கார் பந்தயத்தை காண்பதற்காக நடிகை திரிஷா நேரில் சென்றுள்ளார்.</p><p></p><p>

தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக தமிழக முதலமைச்சர் விஜய் பிரிட்டனுக்கு பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், நடிகரும் சர்வதேச கார் பந்தய வீரருமான அஜித்குமார் பங்கேற்கும் சில்வர்ஸ்டோன் கார் பந்தயத்தை அவர் இன்று பச்சைக்கொடியசைத்து தொடங்கி வைத்தார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5925547d-9bdb-42e0-9590-056855760a79/26-6aa59dd45056b.webp' /></p><p>அஜித்குமாரின் அழைப்பின் பேரில் முதலமைச்சர் விஜய் பந்தயத் தளத்துக்கு சென்றதாகத் தெரிவிக்கப்படுகிறது. </p><p>அங்கு அஜித்குமாரை சந்தித்த விஜய், அவரை ஆரத்தழுவி வாழ்த்து தெரிவித்தார். இருவரும் இணைந்து புகைப்படங்களும் எடுத்துக்கொண்டனர்.</p><p>

அப்போது அஜித்குமாரின் பந்தயக் காரின் மீது அமர்ந்தும் விஜய் புகைப்படம் எடுத்துக்கொண்டதுடன், பின்னர் அஜித்குமாருக்கு கைகொடுத்து தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.</p><p> இந்தக் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

இந்த நிலையில், கார் பந்தயம் நடைபெறும் தளத்திற்கு நடிகை திரிஷாவும் நேரில் வருகை தந்துள்ளார். </p><p>நடிகை ராதிகாவுடன் பிரிட்டனில் திரிஷா எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் நேற்று வெளியாகியிருந்த நிலையில், இன்று அவர் சில்வர்ஸ்டோன் பந்தயத் தளத்தில் தோன்றியுள்ளார்.

அஜித்குமாரின் அழைப்பின் பேரிலேயே திரிஷா பந்தயத்தை காண வந்ததாக கூறப்படுகிறது.
</p><p>
முதலமைச்சர் விஜய் கார் பந்தயத்தை நேரில் பார்த்து ரசித்துக்கொண்டிருந்த நிலையில், அங்கு வந்த திரிஷாவும் அவருடன் இணைந்து பந்தயத்தை கண்டு ரசித்தார்.
</p><p>
விஜய்யும் திரிஷாவும் இணைந்து சில்வர்ஸ்டோன் கார் பந்தயத்தை பார்வையிடும் காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் கவனம் பெற்றுள்ளன.</p><p></p>]]></content>
            <updated>2026-09-12T20:51:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[லண்டனில் அஜித் பங்கேற்கும் சிற்றூந்து பந்தயத்தை தொடங்கி வைத்தார் தமிழக முதலமைச்சர் விஜய்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/chief-minister-vijay-flagged-off-mini-vehicle-race-1789233383"></link>
            <id>https://canadamirror.com/article/chief-minister-vijay-flagged-off-mini-vehicle-race-1789233383</id>
            <summary type="text">இங்கிலாந்தின் லண்டன் சில்வர்ஸ்டோன் மோட்டார் பந்தயக் களத்தில் நடிகர் அஜித்குமார் பங்கேற்ற ‘லீ மான்ஸ் கப்’ கார் பந்தயத்தை தமிழக முதலமைச்சர் விஜய் பச்சைக...</summary>
            <content type="html"><![CDATA[<p>இங்கிலாந்தின் லண்டன் சில்வர்ஸ்டோன் மோட்டார் பந்தயக் களத்தில் நடிகர் அஜித்குமார் பங்கேற்ற ‘லீ மான்ஸ் கப்’ கார் பந்தயத்தை தமிழக முதலமைச்சர் விஜய் பச்சைக்கொடியசைத்து தொடங்கி வைத்துள்ளார்.</p><p>
</p><p></p><p>தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக தமிழக முதலமைச்சர் விஜய் பிரிட்டனுக்கு பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், சில்வர்ஸ்டோனில் நடைபெற்ற சர்வதேச கார் பந்தயத்தில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.
</p><p>
நடிகர் அஜித்குமார் பங்கேற்கும் ‘லீ மான்ஸ் கப்’ தொடரின் சில்வர்ஸ்டோன் சுற்றுப் போட்டியையே முதலமைச்சர் விஜய் இன்று பச்சைக்கொடியசைத்து ஆரம்பித்து வைத்தார். இலங்கை நேரப்படி இரவு 9.45 மணிக்கு தொடங்கிய இந்தப் போட்டி இரவு 11.45 மணிக்கு நிறைவடைய உள்ளது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/028e2d7b-185a-47e1-8112-68d69405e5d3/26-6aa588e96a348.webp' /></p><p>பந்தயத்திற்கு முன்னதாக முதலமைச்சர் விஜய் மற்றும் நடிகர் அஜித்குமார் இருவரும் சந்தித்து புகைப்படங்கள் எடுத்துக்கொண்டனர். அப்போது அஜித்குமாரின் பந்தயக் காரின் மீது அமர்ந்தும் விஜய் புகைப்படம் எடுத்துக்கொண்டார். </p><p>பின்னர் அஜித்குமாருக்கு கைகொடுத்து தனது வாழ்த்துகளையும் தெரிவித்தார்.

இருவரின் சந்திப்பு மற்றும் பந்தயத்தை விஜய் தொடங்கி வைத்த காட்சிகள் தொடர்பான காணொலிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. </p><p>இதனால் இருவரது ரசிகர்களும் பெரும் உற்சாகமடைந்துள்ளனர்.
</p><p>
இதனிடையே, முதலமைச்சர் விஜய்யின் வருகை குறித்து நடிகர் அஜித்குமார் கூறுகையில், தனது பிஸியான பணிகளுக்கு மத்தியிலும் நேரம் ஒதுக்கி லண்டனுக்கு வந்தமை மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்தார்.
</p><p>
மேலும், தானும் விஜய்யும் ஒரே துறையில் 34 ஆண்டுகளாக பணியாற்றி வருவதாகவும், விஜய் தமிழக முதலமைச்சராக பதவியேற்றதில் தமக்கு மிகுந்த மகிழ்ச்சி இருப்பதாகவும் அஜித்குமார் குறிப்பிட்டார்.
</p><p>
விளையாட்டுத் துறையை மேம்படுத்துவதற்காக விஜய் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும், தனது அழைப்பை ஏற்று லண்டனுக்கு வந்து பந்தயத்தை தொடங்கி வைத்தமை மகிழ்ச்சியளிப்பதாகவும் அஜித்குமார் தெரிவித்துள்ளார்.
</p><p>
சர்வதேச மோட்டார் பந்தயக் களத்தில் நடைபெற்ற இந்த விஜய்–அஜித் சந்திப்பு தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-12T20:51:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[6 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/worker-sexually-harassed-a-young-girl-1789245933"></link>
            <id>https://jvpnews.com/article/worker-sexually-harassed-a-young-girl-1789245933</id>
            <summary type="text">இந்தியா விழுப்புரம் மாவட்டத்தில் 6 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்ட 65 வயதான கூலித்தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டன...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியா விழுப்புரம் மாவட்டத்தில் 6 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்ட 65 வயதான கூலித்தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து விழுப்புரம் போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.</p><p>
</p><p></p><h4>&nbsp;20 ஆண்டுகள் சிறை</h4><p>விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா அச்சரம்பட்டு மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த செல்வம் (65) என்பவர் கூலித்தொழிலாளியாக பணியாற்றி வந்துள்ளார்.
</p><p>
கடந்த 2020ஆம் ஆண்டு நவம்பர் 7ஆம் திகதி, அச்சரம்பட்டு பகுதியில் முதலாம் வகுப்பு படித்து வந்த 6 வயது சிறுமி விளையாடிக் கொண்டிருந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/53df1f0f-3dee-41cb-aa86-fc33e2f1d43a/26-6aa5b9ef47a22.webp' /></p><p>

அப்போது அங்கு சென்ற செல்வம், சிறுமியிடம் சாக்லேட் வாங்கித் தருவதாகக் கூறி அருகிலுள்ள அங்கன்வாடி மையத்தின் பின்புறம் அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது.</p><p>

சம்பவத்துக்குப் பின்னர் சிறுமி அழுதுகொண்டே வீட்டுக்குச் சென்று பெற்றோரிடம் நடந்தவற்றைத் தெரிவித்துள்ளார். </p><p>இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், வானூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகாரின் அடிப்படையில் பொலிஸார் செல்வத்துக்கு எதிராக போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
</p><p>
இந்த வழக்கு விழுப்புரம் போக்சோ வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. </p><p>வழக்கில் அரசு தரப்பு சாட்சிகளின் விசாரணை உள்ளிட்ட சட்ட நடவடிக்கைகள் நிறைவடைந்த நிலையில், நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
</p><p>
வழக்கை விசாரித்த நீதிபதி வினோதா, குற்றம் சாட்டப்பட்ட செல்வத்துக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் ரூ.5,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
</p><p>
அபராதத் தொகையை செலுத்தத் தவறினால் மேலும் 4 மாதங்கள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.
</p><p>
மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு சார்பில் ரூ.4 இலட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-12T20:45:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாடொன்றில் ஈழத்தமிழ் பெண்ணொருவருக்கு முதல் முறையாக கிடைத்துள்ள முக்கிய பதவி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/kamzy-gunaratnam-named-norway-s-transport-minister-1789242707"></link>
            <id>https://tamilwin.com/article/kamzy-gunaratnam-named-norway-s-transport-minister-1789242707</id>
            <summary type="text">இலங்கை உள்நாட்டுப் போரின்போது தனது மூன்று வயதில் அகதியாக நோர்வே சென்ற கம்சி குணரத்னம், அந்நாட்டின் புதிய போக்குவரத்து அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்....</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை உள்நாட்டுப் போரின்போது தனது மூன்று வயதில் அகதியாக நோர்வே சென்ற கம்சி குணரத்னம், அந்நாட்டின் புதிய போக்குவரத்து அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.</p><p>

38 வயதான கம்சி குணரத்னம், நோர்வே தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினராவார். </p><p>ஒஸ்லோவை பிரதிநிதித்துவப்படுத்தும் இவர், கடந்த செப்டெம்பர் 11ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் போக்குவரத்து அமைச்சராக நியமிக்கப்பட்டதுடன், அன்றைய தினமே பதவியை பொறுப்பேற்றுள்ளார்.</p><h2>போக்குவரத்து அமைச்சர்</h2><p>

இதற்கு முன்னர் 2021ஆம் ஆண்டு ஒக்டோபர் முதல்&nbsp; போக்குவரத்து அமைச்சராக பதவி வகித்த ஜோன்-இவர் நிகார்டை பதிலாக கம்சி குணரத்னம் நியமிக்கப்பட்டுள்ளார். </p><p>நோர்வே பிரதமர் ஜோனாஸ் கார் ஸ்டோரின் அமைச்சரவை மறுசீரமைப்பின் ஒரு பகுதியாக இந்த நியமனம் இடம்பெற்றுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4d2287bd-4a69-4543-b69d-d6a46729340d/26-6aa5b13b3df2d.webp' /></p><p>
கம்சி குணரத்னத்தின் பொறுப்பின் கீழ் நோர்வேயின் வீதிகள், தொடருந்து, பொது போக்குவரத்து, விமானப் போக்குவரத்து மற்றும் கடல் போக்குவரத்து உள்ளிட்ட முக்கிய துறைகள் வருகின்றன.

அவரது நியமனம் தொடர்பில் சில விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டுள்ளன. </p><p>கம்சி குணரத்னத்திடம் சாரதி அனுமதிப்பத்திரம் இல்லை என்பதுடன், அவர் பொது போக்குவரத்தையே பயன்படுத்தி வருகிறார். </p><p>கடந்த சில தசாப்தங்களில் சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாமல் நோர்வேயின் போக்குவரத்து அமைச்சராக பதவியேற்கும் இரண்டாவது நபர் இவர் என தெரிவிக்கப்படுகிறது.</p><p>மேலும், நாடாளுமன்றத்தின் போக்குவரத்துக் குழுவில் 11 மாதங்கள் பணியாற்றிய அனுபவத்தைத் தவிர, போக்குவரத்துத் துறையில் அவருக்கு விரிவான அனுபவம் இல்லை என்றும் விமர்சகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.</p><h2>ஈழத்தமிழர்</h2><p>
இலங்கையில் இருந்து நோர்வேக்கு

கம்சி குணரத்னம் 1988ஆம் ஆண்டு மார்ச் மாதம் யாழ்ப்பாணத்தில் பிறந்தார். இலங்கையின் உள்நாட்டுப் போரிலிருந்து தப்பிய அவரது குடும்பம், 1991ஆம் ஆண்டு நோர்வேக்கு சென்றது.
</p><p>
அவர்கள் ஆரம்பத்தில் நோர்வேயின் வடக்குப் பகுதியில் உள்ள ஹம்மர்ஃபெஸ்ட் நகரில் குடியேறிய பின்னர், ஒஸ்லோவுக்கு இடம்பெயர்ந்தனர். அங்கு கிரோருட்டலன் பகுதியில் கம்சி குணரத்னம் வளர்ந்தார்.
</p><p>
அவர் ஒஸ்லோ நகர சபையில் 14 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். அதில் 2015 முதல் 2021ஆம் ஆண்டு வரை ஆறு ஆண்டுகள் பிரதி மேயராகவும் பதவி வகித்துள்ளார்.</p><p>

2021ஆம் ஆண்டு முதல் நோர்வே நாடாளுமன்ற உறுப்பினராக செயற்பட்டு வரும் அவர், 2025ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலிலும் மீண்டும் தெரிவு செய்யப்பட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e9be9014-1359-458e-80fe-806f09fedac4/26-6aa5b13be7e01.webp' /></p><p>
</p><p>
கடந்த ஆண்டு ஒக்டோபர் முதல் நாடாளுமன்றத்தின் போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்புகளுக்கான நிலைக்குழுவின் முதலாவது பிரதி தலைவராகவும் அவர் செயற்பட்டிருந்தார்.

போரின் நினைவுகளை பகிர்ந்த கம்சி

இலங்கையின் உள்நாட்டுப் போரிலிருந்து தப்பிச் சென்ற தனது அனுபவங்களை கம்சி குணரத்னம் பல சந்தர்ப்பங்களில் பகிரங்கமாகப் பேசியுள்ளார்.
</p><p>
கடந்த பெப்ரவரி மாதம் நோர்வே நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், போரால் பாதிக்கப்பட்ட நாட்டில் தான் பிறந்ததாகவும், வான்வழித் தாக்குதல் எச்சரிக்கை ஒலி எழுப்பப்பட்டபோது கர்ப்பிணியாக இருந்த தனது தாய் பாதுகாப்புக்காக பதுங்கியதாகவும் நினைவுகூர்ந்திருந்தார்.
</p><p>
அத்துடன், யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் கண்டெடுக்கப்பட்ட மனித எச்சங்கள் மற்றும் போரின்போது காணாமல் போனவர்கள் தொடர்பான தீர்க்கப்படாத பிரச்சினைகள் குறித்தும் அவர் தனது உரையில் குறிப்பிட்டிருந்தார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-12T20:10:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் சட்ட நடவடிக்கை ; ஜனாதிபதி அநுர எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/legal-action-against-anyone-who-commits-wrongdoing-1789243685"></link>
            <id>https://jvpnews.com/article/legal-action-against-anyone-who-commits-wrongdoing-1789243685</id>
            <summary type="text">தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும், குடும்பப் பின்னணியைப் பாராது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க எச்சரித்துள்ளார்.

ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும், குடும்பப் பின்னணியைப் பாராது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க எச்சரித்துள்ளார்.</p><p></p><p>

பொலன்னறுவையில் இன்று (12) நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் (NPP) விவசாயிகளின் பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3fab08fb-7c5b-4fb4-8f98-fec9be305f23/26-6aa5b127258dd.webp' /></p><p>

ராஜபக்ஷ குடும்பத்தினர் மற்றும் அவர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணைகள் பற்றிப் பேசிய ஜனாதிபதி, "இப்போது வந்து அழுவதை விட்டுவிட்டு, திருட வேண்டாம் என்று அன்றே தந்தை, மகனுக்கு சொல்லியிருக்க வேண்டும்.</p><p>

தாயாக இருந்தாலும் சரி, பாட்டியாக இருந்தாலும் சரி, சட்டம் அனைவருக்கும் சமமாகவே பிரயோகிக்கப்படும்.
</p><p>

பொதுப் பணத்தைக் கொள்ளையடித்த எவர் மீதும் எமக்கு எந்த இரக்கமும் இல்லை" எனக் காரசாரமாகத் தெரிவித்தார்.</p><p>

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் அனுராதபுரத்தில் நடத்தப்பட்ட பேரணியை விமர்சித்த ஜனாதிபதி, "ஊழல் குற்றச்சாட்டுகளுக்காகத் தேடப்பட்டு வரும் பலரை அந்தப் பேரணியில் ஒரே இடத்தில் காண முடியும். குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் அங்கு சென்றால் அனைவரையும் ஒரே இடத்தில் கைது செய்ய முடியும்" எனக் குறிப்பிட்டார்.</p><p>

அனுராதபுரப் பேரணியானது மக்கள் நலனுக்காக நடத்தப்படவில்லை என்றும், குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள நபர்கள் சட்டத்திலிருந்து தங்களைத் தற்காத்துக் கொள்வதற்காகவே அதனை நடத்துவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-12T20:08:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[2029இல் நாமல் ஜனாதிபதியாவது உறுதி ; அர்ச்சுனா திட்டவட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/it-certain-namal-will-become-president-2029-arjuna-1789242340"></link>
            <id>https://jvpnews.com/article/it-certain-namal-will-become-president-2029-arjuna-1789242340</id>
            <summary type="text">2029ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் நாமல் ராஜபக்ஷ வெற்றிபெற்று நாட்டின் ஜனாதிபதியாவார் என நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.
...</summary>
            <content type="html"><![CDATA[<p>2029ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் நாமல் ராஜபக்ஷ வெற்றிபெற்று நாட்டின் ஜனாதிபதியாவார் என நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.</p><p></p><p>

அனுராதபுரத்தில் இன்று நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மக்கள் பேரணியில் கலந்துகொண்டு அவர் இதனை குறிப்பிட்டார்.

தனக்கு "கருநாக்கு" (சொல் பலிக்கும் வாக்கு) இருப்பதாகக் குறிப்பிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா, தான் முன்னர் கூறிய பல அரசியல் கணிப்புகள் உண்மையாகியுள்ளதாகச் சுட்டிக்காட்டினார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b67acaa8-ff6d-43a2-b482-dec43c22d348/26-6aa5abe67b542.webp' /></p><p>அந்தவகையில், எதிர்காலத்தில் சிறையில் அடைக்கப்பட்டாலும் அல்லது என்ன தடைகள் ஏற்படுத்தப்பட்டாலும் 2029 ஆம் ஆண்டில் நாமல் ராஜபக்ஷ ஜனாதிபதியாவதைத் தடுக்க முடியாது எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
</p><p>
இந்த நாட்டிற்கு ஒரே ஒரு ஜனாதிபதியை மட்டும் பெயரிட முடியும் என்றால், அது இன்றோ, நாளையோ, என்றைக்கோ அது நமது மஹிந்த ராஜபக்ஷ மட்டுமே என்றும் அவர் குறிப்பிட்டார்.
</p><p>
நாட்டின் தற்போதைய அரசியல் சூழல் மற்றும் ஆட்சியாளர்களின் நடவடிக்கைகள் தொடர்பாகப் பேசிய அவர், மக்கள் மத்தியில் நிலவும் அதிருப்தியானது மீண்டும் ராஜபக்ஷ குடும்பத்தினரை ஆட்சியில் அமர்த்துவதற்கான களத்தையே தயார் செய்து வருவதாகக் குறிப்பிட்டார்.
</p><p>
தமிழ் மற்றும் சிங்கள மக்களுக்கு இடையிலான நீண்டகாலப் பிரச்சினைகளுக்கு உரிய அரசியல் தீர்வு காண்பதற்கு, வடக்கையும் தெற்கையும் இணைக்கும் தலைவராக நாமல் ராஜபக்ஷவே திகழ்வார் என்றும், அவருக்குத் தேவையான ஆதரவை வழங்கத் தான் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
</p><p>
அத்துடன், தான் உயிருடன் இருக்கும் வரை தனி ஈழக் கோரிக்கையை முன்வைக்கப்போவதில்லை என்றும் அவர் இதன்போது உறுதியளித்தார்.
</p><p>
மேலும், தற்போதைய அரசாங்கம் தனது அரசியல் பயணத்தைத் தடுப்பதற்காக தன் மீது 29 வழக்குகளைப் பதிவு செய்துள்ளதாகக் குற்றம்சாட்டிய அவர், தற்போதைய ஆட்சிமுறைகள் மற்றும் எதிர்க்கட்சிகளின் அணுகுமுறைகள் குறித்தும் கடுமையாக விமர்சித்தார்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-12T19:45:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவை அதிர வைத்த 9/11 - 25 ஆண்டுகளுக்குப் பின் வெளிவந்த இரகசியங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/us-intelligence-know-before-the-9-11-attacks-1789231346"></link>
            <id>https://tamilwin.com/article/us-intelligence-know-before-the-9-11-attacks-1789231346</id>
            <summary type="text">அமெரிக்காவில் இடம்பெற்ற செப்டெம்பர் 11 தாக்குதல்களின் 25 வது ஆண்டு நினைவை
முன்னிட்டு, ஒசாமா பின்லேடன் மற்றும் அல்-கொய்தா அமைப்பு குறித்து
சேகரிக்கப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவில் இடம்பெற்ற செப்டெம்பர் 11 தாக்குதல்களின் 25 வது ஆண்டு நினைவை
முன்னிட்டு, ஒசாமா பின்லேடன் மற்றும் அல்-கொய்தா அமைப்பு குறித்து
சேகரிக்கப்பட்ட பல டஜன் இரகசிய உளவுத்துறை ஆவணங்களை அமெரிக்க மத்திய புலனாய்வு
முகவரகமான சிஐஏ (CIA) பகிரங்கப்படுத்தியுள்ளது.
</p><p>
3,000 க்கும் மேற்பட்ட உயிரிழப்புகளுக்குக் காரணமான 9/11 தாக்குதலுக்கு
முன்னர், அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பில் கிளிண்டன் உள்ளிட்ட நாட்டின்
உயர் தலைவர்களுக்கு வழங்கப்பட்ட தினசரி இரகசிய உளவு அறிக்கைகளே இவ்வாறு
வெளியிடப்பட்டுள்ளன.</p><h2>இரகசிய ஆவணங்கள்</h2><p>
</p><p>
சிஐஏ இயக்குநர் ஜான் ரட்க்ளிஃப் இதனைத் தனது அமைப்பின் வெளிப்படைத்தன்மைக்கான
முக்கிய நகர்வாகக் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b9a9df96-2d08-4884-a335-46a1170d0dcb/26-6aa588348cec8.webp' /></p><p>
</p><p>
வெளியிடப்பட்டுள்ள ஆவணங்களில் 1998 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட அறிக்கையொன்றில்,
பின்லேடனின் முக்கிய இலக்கு அமெரிக்க மண்ணில் உள்ள வொஷிங்டன் நகரைத் தாக்குவதே
என்றும், வெடிமருந்துகள் நிரப்பப்பட்ட விமானமொன்றை அமெரிக்க நகரம் மீது மோதித்
தாக்குதல் நடத்தப்படலாம் என்றும் எச்சரிக்கப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது.</p><p>

அத்துடன், ஆப்கானிஸ்தானில் தங்கியிருந்த பின்லேடனை ஒப்படைக்க தலிபான்கள்
மறுத்தமை, நியூயோர்க் விமான நிலையத்தில் சந்தேகநபர்கள் மேற்கொண்ட பாதுகாப்புப்
சோதனை ஒத்திகைகள் மற்றும் கதிரியக்கப் பொருட்களைப் பயன்படுத்தி குண்டுகளைத்
தயாரிக்கும் முயற்சிகள் குறித்த முக்கிய தகவல்களும் இந்த ஆவணங்கள் மூலம்
வெளிச்சத்திற்கு வந்துள்ளன.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-12T19:35:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[தவழ்ந்து வந்த மகிந்த - தலைமறைவான கருணா! அநுரவிற்கு பகிரங்க எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/slpp-holds-rally-in-anuradhapura-1789240676"></link>
            <id>https://tamilwin.com/article/slpp-holds-rally-in-anuradhapura-1789240676</id>
            <summary type="text">அனுராதபுரத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஏற்பாட்டில் பிரமாண்ட மக்கள் கூட்டமொன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த கூட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ர...</summary>
            <content type="html"><![CDATA[<p>அனுராதபுரத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஏற்பாட்டில் பிரமாண்ட மக்கள் கூட்டமொன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த கூட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும் பங்கேற்றிருந்தார். </p><p>உடல்நலக் குறைவு காரணமாக அவர் சிரமங்களை எதிர்கொண்டு வரும் நிலையில், உதவியாளர்களின் உதவியுடன் கூட்டத்தில் கலந்துகொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இதன்போது, அவரது மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்சவின் அரசியல் எதிர்காலத்தை முன்னிறுத்தியே மகிந்த ராஜபக்ச கூட்டத்தில் பங்கேற்றதாக அரசியல் வட்டாரங்களில் கருத்துகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
</p><p>
இதேவேளை, கடந்த காலங்களில் மகிந்த ராஜபக்சவுடன் நெருக்கமாக செயற்பட்ட கருணா, பிள்ளையான் மற்றும் டக்ளஸ் தேவானந்தா உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் இந்தக் கூட்ட மேடையில் காணப்படவில்லை.</p><p>அதற்கு பதிலாக யாழ்ப்பாணத்தை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் அந்த மேடையை அலங்கரித்தார்</p><p>
</p><p>
மேலும், ராஜபக்ச ஆட்சிக்காலம் தொடர்பான விமர்சனங்கள் மற்றும் கடந்தகால யுத்தம் தொடர்பான அரசியல் விவகாரங்கள், அந்தக் குடும்பத்தின் தற்போதைய அரசியல் செல்வாக்கில் தாக்கத்தை ஏற்படுத்தி வருவதாகவும் அரசியல் அவதானிப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.</p><p><br></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/ymh_aupQIR4" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-12T19:24:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பகுதியில் திமிங்கில வாந்தியுடன் இருவர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/two-arrested-with-whale-vomit-in-tamil-area-1789239661"></link>
            <id>https://jvpnews.com/article/two-arrested-with-whale-vomit-in-tamil-area-1789239661</id>
            <summary type="text">மன்னார் சௌத் பார் கடற்கரைப் பகுதியில் கடற்படையினர் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, தடை செய்யப்பட்ட ஆம்பர் கிரீஸ் (Ambergris) தொகையுடன் இரு...</summary>
            <content type="html"><![CDATA[<p>மன்னார் சௌத் பார் கடற்கரைப் பகுதியில் கடற்படையினர் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, தடை செய்யப்பட்ட ஆம்பர் கிரீஸ் (Ambergris) தொகையுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>
</p><p></p><p>தாவர மற்றும் விலங்கின பாதுகாப்புச் சட்டத்தின் பிரகாரம் வர்த்தக ரீதியான பயன்பாட்டுக்காகக் கொண்டு வரப்பட்ட, பல இலட்சம் ரூபாய் பெறுமதியான 67 கிலோ எடையுடைய திமிங்கலத்தின் எச்சமான ஆம்பர் கிரீஸ் கைப்பற்றப்பட்ட நிலையிலேயே இவ்விருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0d42cdcb-7e51-4900-8e2a-d44d366d3dde/26-6aa5a16f5fc53.webp' /></p><p>
</p><p>
 

வடமத்திய கடற்படை கட்டளையின் 'இலங்கை கடற்படை கப்பல் கஜபா' பிரிவினரால் மன்னார் சௌத் பார் கடற்கரைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாகச் சேகரிக்கப்பட்டுக் கடத்தப்படவிருந்த 67 கிலோகிராமுக்கும் அதிகமான திமிங்கலத்தின் ஆம்பர் கிரீஸ் தொகையுடன் இரு சந்தேக நபர்கள் கடற்படையினரால் இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.
</p><p>
 

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 25 மற்றும் 36 வயதுடைய மன்னார் பகுதியைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். </p><p>

 

சந்தேக நபர்களும் கைப்பற்றப்பட்ட ஆம்பர் கிரீஸ் தொகையும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் வனஜீவராசிகள் திணைக்கள அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-12T19:01:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/north-korea-conducts-another-missile-test-1789239260"></link>
            <id>https://canadamirror.com/article/north-korea-conducts-another-missile-test-1789239260</id>
            <summary type="text">வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தியதால் கொரிய தீபகற்பத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.&amp;nbsp;அணு ஆயுதங்களுடன் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை சோதன...</summary>
            <content type="html"><![CDATA[<p>வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தியதால் கொரிய தீபகற்பத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.&nbsp;</p><p>அணு ஆயுதங்களுடன் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை சோதனை செய்து உலக நாடுகளுக்கு அவ்வப்போது அதிர்ச்சி கொடுத்து வரும் நாடு வடகொரியா.</p><p>

கொரிய தீபகற்பத்தில் வடகொரியா, தென்கொரியா இடையே பல ஆண்டுகளாக மோதல் நீடித்து வருகிறது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/12a60d84-102e-412e-bd00-31330abb4b39/26-6aa59fddc1f72.webp' /></p><p>தன் எதிரி நாடுகளாக கருதும் தென் கொரியா, ஜப்பான், அமெரிக்காவை சீண்டும் வகையில் வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. </p><p>மேலும், தங்கள் நாட்டின் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் வந்தால் தாக்குதல் நடத்துவோம் என வடகொரியா எச்சரித்து வருகிறது.</p><p> நடப்பு ஆண்டில் வடகொரியா பல முறை ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது.&nbsp;</p><p>இந்நிலையில், வடகொரியா இன்று மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது. </p><p>வடகொரியாவின் வன்சன் பகுதியில் இருந்து ஜப்பான் கடல் பகுதி நோக்கி இந்த பல ஏவுகணைகள் ஏவப்பட்டுள்ளன. இன்று அதிகாலை 5.20 மணிக்கு இந்த ஏவுகணைகள் ஏவப்பட்டுள்ளன.
</p><p>
அமெரிக்கா, ஜப்பான், தென் கொரியா இணைந்து கடந்த 5 நாட்களாக கூட்டு ராணுவ பயற்சி நடத்தியது.</p><p> இந்த கூட்டு ராணுவ பயிற்சி நேற்று நிறைவடைந்த நிலையில் வடகொரியா இன்று அதிகாலை ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது. </p><p>கூட்டு ராணுவ பயிற்சிக்கு பதிலடியாக இந்த ஏவுகணை சோதனை நடத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-12T18:54:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[2 நாட்களாக கடலில் தத்தளித்த 15 வயது சிறுவன்: அமெரிக்க படையின் நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/15-year-old-boy-adrift-at-sea-for-two-days-1789238967"></link>
            <id>https://ibctamil.com/article/15-year-old-boy-adrift-at-sea-for-two-days-1789238967</id>
            <summary type="text">அமெரிக்காவின் அலாஸ்கா அருகில் உள்ள பெரிங் கடலில் படகு ஒன்று கவிழ்ந்த நிலையில், 2 நாட்களாக கடலில் தத்தளித்த 15வயது சிறுவன் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார்...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவின் அலாஸ்கா அருகில் உள்ள பெரிங் கடலில் படகு ஒன்று கவிழ்ந்த நிலையில், 2 நாட்களாக கடலில் தத்தளித்த 15வயது சிறுவன் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார்.
</p><p>
 செயிண்ட லாரன்ஸ் தீவில் உள்ள சவோங்கா கிராமத்தை சேர்ந்த டெரெக் பார்க்கர் அக்னாங்கா என்ற 15 வயது சிறுவன் படகில் உறவினர்களுடன் மீன்பிடிக்க சென்ற போது அவரது படகு எதிர்பாராத விதமாக கடலில் கவிழ்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>
கடலில் நீரின் வெப்பநிலையானது வெறும் 10 செல்சியஸ் மட்டுமே இருந்த நிலையில், கவிழ்ந்த படகை இறுக்கமாக பிடித்துக் கொண்டு இரவு பகலாக உயிருக்கு போராடியுள்ளார் என அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.</p><p></p><h2>3 பேர் மாயம்</h2><p>கடலுக்கு சென்ற 3 பேரை காணவில்லை என உள்ளூர் மக்கள் தகவல் தெரிவித்ததும், அமெரிக்க கடலோரக் காவல்படை தீவிர தேடுதல் மற்றும் மீட்பு பணிகளை துரிதப்படுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ff4c920e-86f2-46ed-9a69-95398ae42259/26-6aa59eb8f0b4f.webp' /></p><p>
இதில் சிறுவனுடன் சென்ற மற்ற இரண்டு பேர் உயிரிழந்து விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இந்நிலையில் கடலில் உயிருக்காக 2 நாட்களாக போராடிய சிறுவன் சுமார் 2 நாட்களுக்கு பிறகு செயிண்ட் லாரன்ஸ் தீவுக்கு அருகே மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-12T18:50:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஏமனில் தீவிரமடைந்துள்ள மோதல்! 76,000-ஐத் தாண்டிய இடம்பெயர்வு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/displacement-in-yemen-exceeds-76-000-1789237707"></link>
            <id>https://ibctamil.com/article/displacement-in-yemen-exceeds-76-000-1789237707</id>
            <summary type="text">ஏமனில் மோதலானது தீவிரமடைந்துள்ள நிலையில், இடம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை 76,000-ஐத் தாண்டியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.யேமனின் நிலை ஒவ்வொர...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஏமனில் மோதலானது தீவிரமடைந்துள்ள நிலையில், இடம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை 76,000-ஐத் தாண்டியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.</p><p>யேமனின் நிலை ஒவ்வொரு மணி நேரமும் மிக வேகமாக மோசமடைந்து வருவதாகவும், இடம்பெயர்வு நெருக்கடி அதிகமாகுவதாகவும் ஐ.நா.வின் சர்வதேச இடம்பெயர்வு அமைப்பு (IOM) எச்சரித்துள்ளது.
</p><p>
ஜூலை மாதம் முதல் குறைந்தது 76,000 பேர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர் என்றும், இந்த எண்ணிக்கை ஒரே இரவில் கிட்டத்தட்ட இரட்டிப்பாகியுள்ளது என்றும் சர்வதேச இடம்பெயர்வு அமைப்பு (IOM) தெரிவித்துள்ளது.</p><p></p><h2>கடுமையான பாதிப்பு</h2><p> </p><p>“சில நாட்களுக்கு முன்பு இந்த மொத்த எண்ணிக்கை 46,000 ஆக இருந்தது.

முழு குடும்பங்களும், பெரும்பாலும் இரவில், இடம்பெயர்ந்து கொண்டிருக்கின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/514d69f9-108e-4842-b3fa-9004ac780faa/26-6aa59b2d80b4d.webp' /></p><p>அவர்களுக்குச் செல்வதற்குப் பாதுகாப்பான இடம் எதுவும் இல்லை என்றும், ஏமனின் தென்மேற்கில் உள்ள தைஸ் பகுதி மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது எனவும் கூறப்படுகிறது.</p><p>அங்கு கிட்டத்தட்ட 50,000 மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர் என்றும், தெற்கில் உள்ள லஹ்ஜ் நகரில் கிட்டத்தட்ட 17,000 பேர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p>தகவல் தொடர்புகள் பாதிக்கப்பட்டுள்ளன, மேலும் சண்டைகள் காரணமாக சாலைகள் பயணிக்க முடியாதவையாக மாறி வருகின்றன.
</p><p>12 ஆண்டுகால மோதலின்போது, ​​இந்தக் குடும்பங்களில் பல இதற்கு முன்பும், சில குடும்பங்கள் பலமுறை இடம்பெயர்ந்துள்ளன,.</p><p>நிலைமை நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது. மற்றும் நிலையற்றதாகவும் கணிக்க முடியாததாகவும். நீடிக்கிறது” என&nbsp;IOM அறிக்கையில் கூறியுள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> IBC தமிழ் WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-12T18:36:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[எரிபொருள் விலை உயருமா? பெற்றோலியக் கூட்டுத்தாபனம் வெளியிட்ட தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/information-released-by-the-petroleum-corporation-1789237561"></link>
            <id>https://jvpnews.com/article/information-released-by-the-petroleum-corporation-1789237561</id>
            <summary type="text">சர்வதேச சந்தையில் மசகு எண்ணெயின் விலை அதிகரித்துள்ள போதிலும், இலங்கையில் உள்நாட்டு எரிபொருள் விலையை உடனடியாக அதிகரிக்கப் போவதில்லை என இலங்கை பெற்றோலிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>சர்வதேச சந்தையில் மசகு எண்ணெயின் விலை அதிகரித்துள்ள போதிலும், இலங்கையில் உள்நாட்டு எரிபொருள் விலையை உடனடியாக அதிகரிக்கப் போவதில்லை என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.</p><p>
</p><p></p><h3>பெற்றோலியக் கூட்டுத்தாபனம்&nbsp;</h3><p>எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பில் அரசாங்கத்துடன் கலந்துரையாடிய பின்னர், விலை அதிகரிக்கப்படுமா என்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே. ராஜகருணா தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f65608f5-6ec1-4bb9-ba7d-38410e35b5b2/26-6aa5993b027a2.webp' /></p><p>மத்திய கிழக்கில் அதிகரித்துள்ள பதற்ற நிலை மற்றும் செங்கடல், பாப் அல்-மந்தப் நீரிணை தொடர்பான சமீபத்திய நிலவரங்கள் காரணமாக உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை பீப்பாய் ஒன்றுக்கு 100 அமெரிக்க டொலருக்கும் அதிகமாக அதிகரித்துள்ளது.</p><p>

இதன்படி, பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 104.06 அமெரிக்க டொலராகவும், WTI ரக மசகு எண்ணெய் சுமார் 100 அமெரிக்க டொலராகவும் விற்பனையாகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இலங்கையில் எரிபொருள் விலைகள் இந்த மாத இறுதியில் மீண்டும் திருத்தப்பட உள்ளன.
</p><p>
இதேவேளை, சில தனியார் எரிபொருள் விநியோகஸ்தர்கள் டீசல் விற்பனையை மட்டுப்படுத்துவதாக தகவல்கள் வெளியாகியுள்ள போதிலும், பெற்றோலிய கூட்டுதாபனத்தின் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் போதுமான எரிபொருள் கையிருப்பில் உள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ராஜகருணா தெரிவித்துள்ளார்.</p><p>[M1TSWYM
]</p>]]></content>
            <updated>2026-09-12T18:26:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thileepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெடுக்குநாறிமலையில் மீண்டும் புத்தர் சிலை! சந்தபோதி தேரரின் அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/vedukkunari-hill-temple-1789236169"></link>
            <id>https://tamilwin.com/article/vedukkunari-hill-temple-1789236169</id>
            <summary type="text">வெடுக்குநாறிமலை பௌத்த வழிபாட்டுத் தலம் எனவும், அங்கு முன்னர் 11 அடி உயரமான புத்தர் சிலை ஒன்று இருந்ததாகவும் சந்தபோதி தேரர் தெரிவித்துள்ளார்.

வவுனிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>வெடுக்குநாறிமலை பௌத்த வழிபாட்டுத் தலம் எனவும், அங்கு முன்னர் 11 அடி உயரமான புத்தர் சிலை ஒன்று இருந்ததாகவும் சந்தபோதி தேரர் தெரிவித்துள்ளார்.
</p><p>
வவுனியா வடக்கு, வெடுக்குநாறிமலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ள பகுதிக்கு, பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப் படையினரின் பாதுகாப்புக்கு மத்தியில், சுமார் 25 சிங்கள மக்களுடன் சந்தபோதி தேரர் தலைமையிலான குழுவினர் இன்று (12) காலை சென்றிருந்தனர்.</p><h2>&nbsp;பௌத்த வழிபாட்டுத் தலம்</h2><p>

அங்கு சென்ற குழுவினர், சூலம் அமைந்திருந்த பகுதியில் சுமார் ஒன்றரை மணி நேரம் பிரித் ஓதி பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டனர்.</p><p>

இதன்போது, சைவ மக்கள் மலை உச்சிக்கு செல்ல வேண்டாம் என பொலிஸார் அறிவுறுத்தியிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c71c921f-339d-43a4-82d2-1d53af89a763/26-6aa595c40fb51.webp' /></p><p>
</p><p>
இதனைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சந்தபோதி தேரர், 2012ஆம் ஆண்டுக்கு முன்னர் வெடுக்குநாறிமலையில் 11 அடி உயரமான புத்தர் சிலை ஒன்று இருந்ததாகவும், அந்த சிலை தற்போது தங்களிடம் இருப்பதாகவும் தெரிவித்தார்.
</p><p>
மேலும், அந்த புத்தர் சிலையை மீண்டும் வெடுக்குநாறிமலையில் நிறுவவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
</p><p>
அத்துடன், வெடுக்குநாறிமலையில் சைவ வழிபாடு 2013ஆம் ஆண்டுக்குப் பின்னரே ஆரம்பிக்கப்பட்டதாகவும், தமிழர்கள் போலியான நம்பிக்கையின் அடிப்படையில் வழிபாடுகளில் ஈடுபடுவதாகவும் சந்தபோதி தேரர் தெரிவித்தார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-12T18:24:07+00:00</updated>
        </entry>
    </feed>
