<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-09-09T00:33:38+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[சீரியல் நடிகை நக்ஷத்திரா மாலத்தீவில் நீச்சல் உடையில் கவர்ச்சி போட்டோ]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/nakshathra-nagesh-swimsuit-photos-from-maldives-1788913957"></link>
            <id>https://cineulagam.com/article/nakshathra-nagesh-swimsuit-photos-from-maldives-1788913957</id>
            <summary type="text">சின்னத்திரையில் பிரபல நடிகைகளில் ஒருவர் நக்ஷத்திரா நாகேஷ். அவர் தற்போது அழகே அழகு என்ற சீரியலில் நடித்து வருகிறார்.விஜய்டிவியில் ஒளிபரப்பாகும் அந்த சீ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சின்னத்திரையில் பிரபல நடிகைகளில் ஒருவர் நக்ஷத்திரா நாகேஷ். அவர் தற்போது அழகே அழகு என்ற சீரியலில் நடித்து வருகிறார்.</p><p>விஜய்டிவியில் ஒளிபரப்பாகும் அந்த சீரியல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bec39134-e0b1-4fc0-ab65-7111862adbde/26-6aa0a928e16ce.webp' /></p><p>
</p><h2>
நீச்சல் உடை
</h2><p>
தற்போது நக்ஷத்திரா தனது கணவர் உடன் மாலத்தீவுக்கு ட்ரிப் சென்று இருக்கிறார்.

அங்கே நீச்சல் உடையில் குளித்த போட்டோக்களை தற்போது அவர் வெளியிட்டு இருக்கிறார். </p><p>அது வைரல் ஆகி இருக்கிறது.</p>]]></content>
            <updated>2026-09-09T00:33:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீதிபதிக்கு இலஞ்சம் கொடுத்த நீதிமன்ற ஊழியர்! சரண குணவர்தன வழக்கில் ஏற்பட்ட திருப்பம்...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sarana-gunawardena-bribery-and-corruption-1788913857"></link>
            <id>https://tamilwin.com/article/sarana-gunawardena-bribery-and-corruption-1788913857</id>
            <summary type="text">முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தனவிற்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இலஞ்ச -ஊழல் வழக்கில்,ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனைக்கு ...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தனவிற்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இலஞ்ச -ஊழல் வழக்கில்,ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனைக்கு உதவி செய்வதாக கூறி ரூ. 750,000 இலஞ்சமாகப் பெற்றதாகக் கூறப்படும் கொழும்பு மேல் நீதிமன்ற அலுவலக உதவியாளர் ஒருவர், இலஞ்ச - ஊழல் ஆணைக்குழுவினால் நேற்று (08.09.2026) கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.</p><p><span style="color: inherit; font-size: 1.75rem;"></span></p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">எவ்வாறு இலஞ்சம் கொடுக்கப்பட்டது</span></p><p>மேல் நீதிமன்ற நீதிபதி ரஷாந்த கொடவெல இது தொடர்பில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்ததையடுத்து சந்தேகநபர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
</p><p>
முன்னாள் அபிவிருத்தி லொத்தர் சபையின் தலைவரும் முன்னாள் பிரதி அமைச்சருமான சரண குணவர்தனவிற்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரஷாந்த கொடவெல முன்னிலையில் தற்போது மீண்டும் விசாரிக்கப்பட்டு வரும் "மாதிவெல வீடுகள்" ஊழல் வழக்கே இந்த இலஞ்சக் கொடுக்கல் வாங்கலுக்குப் பின்னணியாக அமைந்துள்ளது. </p><p>

இந்த பணப் பரிவர்த்தனை தொடர்பான முக்கியமான டிஜிட்டல் சான்றுகளும் புலனாய்வாளர்களிடம் உள்ளதாக தெரியவந்துள்ளது. வாட்ஸ்அப் (WhatsApp) மூலம் பரிமாறப்பட்ட செய்திகள் மற்றும் பணச் செலுத்தல்களை உறுதிப்படுத்தும் ரசீதுகளும் அடங்குவதாக கூறுகின்றனர்.
</p><p>
இங்கு மிக முக்கியமான விடயம் என்னவெனில், வழக்கினை விசாரணை செய்யும் மேல் நீதிமன்ற நீதிபதி ரஷாந்த கொடவெல இந்த இலஞ்சக் கொடுக்கல் வாங்கலுடன் தொடர்புப் பட்டுள்ளாரா என்பதில் இதுவரை எந்தவொரு சான்றும் வெளிவரவில்லை. இச்சம்பவம் குறித்து நீதிபதியே முறைப்பாடு செய்துள்ளார்.
</p><h2>
வழக்கின் பின்னணி
</h2><p>
2006-2007 காலப்பகுதியில் அபிவிருத்தி லொத்தர் சபையின் தலைவராகப் பணியாற்றியபோது இடம்பெற்றதாகக் கூறப்படும் கொடுக்கல் வாங்கல் தொடர்பானது.
</p><p>
மாதிவெலவில் அமைந்துள்ள வீடு ஒன்றை அபிவிருத்தி லொத்தர் சபைக்கு வாடகைக்கு எடுக்கும் போது, அதன் உரிமையாளருக்கு ரூ. 1,980,000 (19.8 இலட்சம்) குத்தகை முன்பணத்தை சட்டவிரோதமாக விடுவிக்க சபையின் அதிகாரிகளைத் தூண்டியதன் மூலம் சரண குணவர்தன இலஞ்ச சட்டத்தின் 70வது பிரிவின் கீழ் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு 2022 இல் இவ்வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
</p><p>
முறைப்பாட்டாளரின் சாட்சியங்களின்படி, அந்த வீடு சரண குணவர்தனவின் முன்னாள் மனைவியான குமாரி அபேவிக்ரம என்பவருக்குச் சொந்தமானது என்றும், பின்னர் அது வேறொருவருக்கு மாற்றப்பட்டு, அவரிடமிருந்து அபிவிருத்தி லொத்தரை் சபைக்கு வாடகைக்கு எடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
</p><p>

</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3124f060-49c8-4eeb-a987-807ced4533bd/26-6aa0a8c35aafe.webp' /></p><p>2026 ஜூன் 9 அன்று கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மொஹமட் மிஹால், நான்கு தனித்தனி வழக்குகளில் சரண குணவர்தனவைக் குற்றவாளியாகத் தீர்ப்பளித்தார். </p><p>18 குற்றச்சாட்டுகளில் குற்றவாளியாகக் காணப்பட்ட அவருக்குப் பெயரளவில் 72 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதுடன், அவை ஒவ்வொரு வழக்கிற்குள்ளும் ஒரே நேரத்தில் அனுபவிக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில் தண்டனை 16 ஆண்டுகளாக மாறியது. </p><p>ரூ. 1.8 மில்லியன் அபராதமும் விதிக்கப்பட்டது.

அந்தத் தீர்ப்பிற்கு எதிராக சரண குணவர்தன 2026 ஜூலை 1 அன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் நான்கு தனித்தனி மேன்முறையீடுகளைத் தாக்கல் செய்துள்ளார்.</p><p>&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-09-09T00:32:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானிய கப்பல்கள் தொடர்பில் அமெரிக்காவிடமிருந்து இலங்கைக்கு பறந்த செய்தி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/iranian-vessels-anchored-in-international-waters-1788913598"></link>
            <id>https://tamilwin.com/article/iranian-vessels-anchored-in-international-waters-1788913598</id>
            <summary type="text">சர்வதேச கடற்பரப்பில் பல ஈரானியக் கப்பல்கள் நடமாடி வருவதாக கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் இலங்கை வெளிவிவகார அமைச்சிற்கு அறிவித்துள்ளதாக வெளிவிவகார அமைச...</summary>
            <content type="html"><![CDATA[<p>சர்வதேச கடற்பரப்பில் பல ஈரானியக் கப்பல்கள் நடமாடி வருவதாக கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் இலங்கை வெளிவிவகார அமைச்சிற்கு அறிவித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.</p><p> 
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக்கூறியுள்ளார்.
</p><p>அமெரிக்க தூதரகத்தின் இந்த அறிவிப்பையடுத்து, இது குறித்து பாதுகாப்பு மற்றும் துறைமுக அமைச்சுக்களுக்கு உடனடியாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/52da0fcc-1b9d-42a2-b5c3-1a0d39845b6b/26-6aa0a7bfc34a4.webp' /></p><p>
</p><p>குறிப்பிட்ட கப்பல்கள் பயணிக்கக்கூடிய பாதைகள் குறித்து இலங்கை கடற்படை தற்போது தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது.</p><p>
அந்தக் கப்பல்கள் எவையும் இலங்கையின் பிராந்திய கடற்பரப்பிற்குள் நுழையவில்லை என அமைச்சர் திட்டவட்டமாக குறிப்பிட்டுள்ளார்.</p><p>
அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையிலான இராணுவ பதற்ற நிலைமைகளுக்கு மத்தியில், இலங்கையின் பிராந்திய கடற்பரப்பில் இருந்து 24 கடல் மைல்களுக்கு அப்பால் உள்ள சர்வதேச கடற்பரப்பில் சுமார் 47 கப்பல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
</p><p>இவற்றில் ஈரானியக் கொடி ஏந்திய கப்பல்களும், பிற வணிக மற்றும் சரக்குக் கப்பல்களும் அடங்கும். எனினும், அவை எவையும் இலங்கையின் உள்நாட்டு கடற்பரப்பிற்குள் வரவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
</p><p>இக்கப்பல்கள் இலங்கை அரசாங்கத்திடம் எந்தவித வசதிகளையோ அல்லது உதவிகளையோ கோரவில்லை; அரசாங்கமும் அத்தகைய வசதிகள் எதையும் வழங்கவில்லை என அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>பொதுவாக வணிக மற்றும் சரக்குக் கப்பல்கள் தமது அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்காக இலங்கை, தாய்லாந்து, மலேசியா மற்றும் இந்தோனேசியா போன்ற நாடுகளுக்கு அப்பால் உள்ள சர்வதேச கடற்பரப்பில் தங்கியிருப்பது சாதாரணமான ஒரு விடயமாகும்.
</p><p>குறித்த கப்பல்கள் குறித்துத் தொடர்ந்து அவதானம் செலுத்துவதைத் தவிர, அவை தொடர்பில் இலங்கை அரசாங்கம் வேறு எந்தவித தலையீடுகளையோ அல்லது நடவடிக்கைகளையோ மேற்கொள்ளவில்லை என அமைச்சர் விஜித ஹேரத் மீண்டும் தெளிவுபடுத்தினார்.&nbsp;&nbsp;</p><p>கடந்த மார்ச் மாதம் இலங்கையின் தென் கடற் பரப்பில் ஈரானிய கப்பல் மீது அமெரிக்க கடற்படை மேற்கொண்ட தாக்குதல்களில் பல ஈரானிய படையினர் கொல்லப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-09-09T00:26:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிளாமர் உடையில் ருக்மிணி வசந்த்.. ஹாட் ஸ்டில்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/rukmini-vasanth-glamour-photoshoot-1788913071"></link>
            <id>https://cineulagam.com/article/rukmini-vasanth-glamour-photoshoot-1788913071</id>
            <summary type="text">நடிகை ருக்மிணி வசந்த் தற்போது சென்சேஷன் நடிகையாக வலம் வருபவர். அவருக்கு மிகப்பெரிய அளவில் ரசிகர்களும் கிடைத்து இருக்கிறார்கள்.

ஹோம்லி லுக் மட்டுமின...</summary>
            <content type="html"><![CDATA[<p>நடிகை ருக்மிணி வசந்த் தற்போது சென்சேஷன் நடிகையாக வலம் வருபவர். அவருக்கு மிகப்பெரிய அளவில் ரசிகர்களும் கிடைத்து இருக்கிறார்கள்.</p><p>

ஹோம்லி லுக் மட்டுமின்றி கிளாமர் ஆன ரோலிலும் அவர் ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

தற்போது ருக்மிணி கிளாமர் உடையில் இருக்கும் லேட்டஸ்ட் ஸ்டில்களை பாருங்க.</p>]]></content>
            <updated>2026-09-09T00:24:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[செவிப்புலன் வலுவிழந்தோருக்கு 119 அவசர சேவையில் புதிய வட்ஸ்அப் காணொளி வசதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/119-emergency-service-for-the-hearing-impaired-1788913300"></link>
            <id>https://jvpnews.com/article/119-emergency-service-for-the-hearing-impaired-1788913300</id>
            <summary type="text">செவிப்புலன் வலுவிழந்த சமூகத்தினர் 119 அவசர அழைப்புப் பிரிவுக்கு வாட்ஸ்அப் (WhatsApp) காணொளி அழைப்பு மூலம் முறைப்பாடுகளைச் சமர்ப்பிக்கும் புதிய சேவையை,...</summary>
            <content type="html"><![CDATA[<p>செவிப்புலன் வலுவிழந்த சமூகத்தினர் 119 அவசர அழைப்புப் பிரிவுக்கு வாட்ஸ்அப் (WhatsApp) காணொளி அழைப்பு மூலம் முறைப்பாடுகளைச் சமர்ப்பிக்கும் புதிய சேவையை, இலங்கை காவல்துறை அறிமுகப்படுத்துகிறது.</p><p></p><p>

எதிர்வரும் வியாழக்கிழமை (செப்டெம்பர் 10) முதல், இந்த வசதியை காவல்துறையினர் அறிமுகப்படுத்துகின்றனர்.
</p><p>
இலங்கை காவல்துறையின் 160 ஆவது வருடக் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையில் இந்த திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/47f7b9fc-0116-46f6-95ad-0a5f763e6dcf/26-6aa0a69673fc3.webp' /></p><p>செவிப்புலன் வலுவிழந்தோரின் பாதுகாப்பு மற்றும் வசதியை மேம்படுத்தும் நோக்கில் இந்த சேவை உருவாக்கப்பட்டுள்ளது.
</p><p>முறைப்பாடு அளிக்கும் வழிமுறைகள்: </p><p>இந்த சேவைக்காக பிரத்யேக குறுஞ்செய்தி இலக்கம் (Short-code number) அறிமுகப்படுத்தப்படும் வரை, பயனாளிகள் பின்வரும் நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்று கேட்கப்பட்டுள்ளனர்.
</p><p>
1. இலக்கத்தைச் சேமித்தல்: முதலில் **011-2809980** என்ற தொலைபேசி இலக்கத்தை உங்களது கைபேசியில் சேமித்துக் கொள்ள வேண்டும்.</p><p>

2. அழைப்பு மேற்கொள்ளல்: பின்னர், அந்த இலக்கத்திற்கு வாட்ஸ்அப் மூலம் ஒரு குரல் அழைப்பை (Audio call) மேற்கொள்ள வேண்டும்.</p><p>

3. இணைப்பைப் பெறுதல்: அந்த அழைப்பு தானாகவே துண்டிக்கப்பட்ட பின்னர், உங்களது கைபேசிக்கு ஒரு இணைய இணைப்பு (Link) குறுஞ்செய்தியாக அனுப்பி வைக்கப்படும்.
</p><p>
4. காணொளி அழைப்பில் இணைதல்: அந்த இணைப்பைத் திறந்து, **“Join Browser”** மற்றும் அதன் பின்னர் **“Join Meeting”** ஆகிய தெரிவுகளைத் தேர்வு செய்ய வேண்டும்.
</p><p>
இதன் மூலம் காவல்துறையினருடன் நேரடி காணொளி அழைப்பில் இணைந்து செவிப்புலன் வலுவிழந்தோர் தமது முறைப்பாடுகளை எளிதாகத் தெரிவிக்க முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது</p><p></p>]]></content>
            <updated>2026-09-09T00:22:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாமலை விடுவிக்க சர்வதேசத்தின் அழுத்தமா..! ஜெனிவாவில் நாமலுக்காக ஒலித்த குரல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-arrest-issue-discuss-in-geneva-un-1788912168"></link>
            <id>https://tamilwin.com/article/namal-arrest-issue-discuss-in-geneva-un-1788912168</id>
            <summary type="text">நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அவரை விடுவிப்பது குறித்து சர்வதேச நாடுகள் அழுத்தம் கொடுக்கின்றதா என்ற கேள்வி ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அவரை விடுவிப்பது குறித்து சர்வதேச நாடுகள் அழுத்தம் கொடுக்கின்றதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
</p><p>
மேலும், ராஜபக்ச ஆதரவாளரான மிலிந்த ராஜபக்ச என்பவர் நாமல் ராஜபக்சவின் விவகாரத்திற்காக ஐநா சபைக்கு சென்று உரையாற்றியுள்ளார்.
</p><p>
கடந்த காலங்களில், ஈழத் தமிழர் விவகாரங்கள் தொடர்பாக சர்வதேச அமைப்புகள் (ஐநா சபை) இலங்கையை விமர்சித்தபோது, ராஜபக்ச குடும்பத்தினர் அந்த அமைப்புகளைத் தாழ்வாகப் பேசி வந்தனர். </p><p>

ஆனால் தற்போது, நாமல் ராஜபக்சவின் விவகாரத்திற்காக அதே ஐநா சபையை அவர்கள் நாடியிருப்பது பேசுபொருளாகியுள்ளது.</p><p>

ஒரு அரசியல்வாதியின் கைதுக்காக சர்வதேச மட்டத்தில் இவ்வளவு தூரம் சென்று குரல் கொடுப்பது, பொதுவான நீதிக்காக இல்லாமல் ஒரு குறிப்பிட்ட குடும்பத்தின் நலனுக்காக மட்டுமே நடப்பதாக விமர்சிக்கப்படுகிறது.
</p><p>
ஜெனீவாவில் அவர்கள் மேற்கொண்ட நடவடிக்கையானது, வெறும் ஒரு நிமிடத்திற்கும் குறைவான காலமே பேசும் வாய்ப்பைப் பெற்றதாகவும் அல்லது பெரிய அளவில் மாற்றத்தை ஏற்படுத்தாத ஒரு மேலோட்டமான செயலாக பார்க்கப்படுகின்றது.</p><p>

இந்தவிடயங்கள் பற்றி கலந்துரையாடுகின்றது நாட்டு நடப்பு நிகழ்ச்சி..&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/sNebaLlHbak" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-09T00:09:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[தாக்கி அழிக்கப்பட்ட ஈரானின் கப்பல்கள்! அமெரிக்க இராணுவம் வெளியிட்ட காணொளிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/iranian-oil-tankers-destroyed-in-us-attacks-1788911546"></link>
            <id>https://ibctamil.com/article/iranian-oil-tankers-destroyed-in-us-attacks-1788911546</id>
            <summary type="text">ஈரானின் ஐந்து கச்சா எண்ணெய் கப்பல்களை தங்களது படைகள் அழித்துள்ளதாக அமெரிக்க மத்திய கட்டளையகம் (CENTCOM) தெரிவித்துள்ளது.

கடந்த இரண்டு நாட்களில் அமெ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானின் ஐந்து கச்சா எண்ணெய் கப்பல்களை தங்களது படைகள் அழித்துள்ளதாக அமெரிக்க மத்திய கட்டளையகம் (CENTCOM) தெரிவித்துள்ளது.
</p><p>
கடந்த இரண்டு நாட்களில் அமெரிக்க கடற்படைக் கப்பல் மீது ஈரானின் புரட்சிகர காவல்படை(IRGC) இரண்டு முறை பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவித் தாக்குதல் நடத்த முயன்றதற்கு பதிலடியாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>

மேற்படி இரு தாக்குதல் முயற்சிகளிலிருந்தும் அமெரிக்கப் போர்க்கப்பல் தப்பித்து, பிராந்திய கடற்பகுதியில் தொடர்ந்து ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருவதாகவும், அமெரிக்க வீரர்கள் எவருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் சென்ட்காம் (CENTCOM) தனது எக்ஸ் (X) தளத்தில் குறிப்பிட்டுள்ளது.</p><p>&nbsp;</p><h2>தாக்கப்பட்ட கப்பல்கள்</h2><p>

இந்நிலையில் பதிலடியாக, ஓமன் வளைகுடாவில் 'எம்/டி காவிஸ்' (M/T Kaviz), 'எம்/டி சர்மினார்' (M/T Charminar), 'எம்/டி ஹரைசன் 1' (M/T Horizon 1) மற்றும் 'எம்/டி ரீஸ்கோ' (M/T Riesco) ஆகிய எண்ணெய் கப்பல்களையும், கார்க் தீவுக்கு அருகே 'எம்/டி தர்யா' (M/T Derya) ஆகிய கப்பலையும் அமெரிக்கப் படைகள் தாக்கி அழித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">CENTCOM forces destroyed five Iranian crude oil carriers, Sept. 8, after the Islamic Revolutionary Guard Corps (IRGC) targeted a U.S. Navy warship with ballistic missiles twice over the past two days. The U.S. warship successfully evaded the attempted Iranian attacks and… <a href="https://t.co/Gi8a2tloN1">pic.twitter.com/Gi8a2tloN1</a></p>&mdash; U.S. Central Command (@CENTCOM) <a href="https://x.com/CENTCOM/status/2097448820099711412?ref_src=twsrc%5Etfw">September 8, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>

இதேவேளை, IRGC மற்றும் அதன் பிராந்தியப் படைகளுக்கு நிதி வழங்கும் பல பில்லியன் டொலர் மதிப்புள்ள நிழல் வலையமைப்பின் ஒரு பகுதியாகவே இந்தக் கப்பல்கள் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளதாகச் சுட்டிக்காட்டிய சென்ட்காம், இந்தக் கப்பல்களைப் பாதுகாப்பதற்கு ஈரானிடம் எந்த வழியும் இல்லை என்றும் தெரிவித்துள்ளது.
</p><p>
முன்னதாக, செப்டம்பர் 5 அன்றும் அமெரிக்க விமானம் தாங்கிக் கப்பல் மற்றும் வழிகாட்டப்பட்ட ஏவுகணை அழிப்புக் கப்பல் மீது தாக்குதல் நடத்த IRGC முயன்றது. அந்தத் தாக்குதல் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, ஈரானின் மூன்று எண்ணெய் கப்பல்களை சென்ட்காம் தாக்கி அழித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.&nbsp; &nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-09T00:08:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[லஞ்ச ஊழல் ஆணைக்குழுவும் சட்டங்களை பின்பற்ற வேண்டும் – நீதிமன்றின் உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ciaboc-must-follow-the-laws-says-court-1788912438"></link>
            <id>https://tamilwin.com/article/ciaboc-must-follow-the-laws-says-court-1788912438</id>
            <summary type="text">லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு விசாரணை ஆணைக்குழுவும் சட்டங்களை பின்பற்ற வேண்டியது அவசியமானது என நீதிமன்றம் அறிவித்துள்ளது.

நீதிமன்றத்தின் முன்னிலையில் ல...</summary>
            <content type="html"><![CDATA[<p>லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு விசாரணை ஆணைக்குழுவும் சட்டங்களை பின்பற்ற வேண்டியது அவசியமானது என நீதிமன்றம் அறிவித்துள்ளது.
</p><p>
நீதிமன்றத்தின் முன்னிலையில் லஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு என தனியான சட்டம் எதுவும் இருக்க முடியாது என தெரிவித்துள்ளது.
</p><p>நீதித்துறை நடைமுறைகளை முறையாகப் பின்பற்ற வேண்டிய பொறுப்பு ஆணைக்குழுவிற்கு உள்ளது என கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரமக சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fb7344f7-cb96-4f3e-9076-82e41e282693/26-6aa0a337b48b2.webp' /></p><p>லஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்படும் விசாரணைகளின் முன்னேற்றம் குறித்து நீதிமன்றத்திற்குத் துல்லியமாக அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும். அதைத் தவிர்த்து, "மேலதிக விசாரணைகள் இடம்பெறுகின்றன" என்று மட்டும் வெறுமனே குறிப்பிடுவதைத் தவிர்க்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.</p><p>
விசாரணைகள் தொடர்பான முன்னேற்ற அறிக்கைகள் அல்லது சாட்சியங்களின் சுருக்க அறிக்கைகளை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கத் தவறியமை தொடர்பாக ஆணைக்குழுவின் அதிகாரிகளுக்கு தெளிவுபடுத்தும்போதே தலைமை நீதவான் இதனைத் தெரிவித்துள்ளார்.
</p><p>லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் இரு அதிகாரிகள் நீதிமன்றத்தில் ஆஜராகும்போது, அவர்கள் முழு ஆணைக்குழுவையும் பிரதிநிதித்துவப்படுத்துவதாகவே நீதிமன்றம் கருதுகிறது என்பதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் வழக்குகள் தொடர்பாகத் தேவையான சரியான தகவல்களையும் சான்றுகளையும் சமர்ப்பிக்க அதிகாரிகள் கடமைப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளார்.
</p><p>அவ்வாறு தகவல்கள் சாட்சியங்களை சமர்ப்பிக்காமல் இருக்கக் கூடாது என நீதவான் மேலும் அறிவுறுத்தியுள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-09T00:07:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிக் பாஸ் 10ல் இருந்து வெளியேறிய முக்கிய போட்டியாளர்! ஷாக் தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/bigg-boss-10-tamil-black-pandi-quits-show-1788911691"></link>
            <id>https://cineulagam.com/article/bigg-boss-10-tamil-black-pandi-quits-show-1788911691</id>
            <summary type="text">பிக் பாஸ் 10ம் சீசன் தற்போது தமிழில் தொடங்கி இருக்கிறது. ஷோவின் தொடக்க விழாவிலேயே பல முக்கிய போட்டியாளர்கள் எலிமினேட் செய்யப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிக் பாஸ் 10ம் சீசன் தற்போது தமிழில் தொடங்கி இருக்கிறது. ஷோவின் தொடக்க விழாவிலேயே பல முக்கிய போட்டியாளர்கள் எலிமினேட் செய்யப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.</p><p>இந்நிலையில் ஷோ தொடங்கி சில தினங்கள் மட்டுமே ஆகும் நிலையில், தற்போது ஒரு முக்கிய போட்டியாளர் வெளியில் சென்றுவிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c8a1d308-1139-4cfa-90fd-83d4f342a9fe/26-6aa0a04d1f4a1.webp' /></p><h2>பிளாக் பாண்டி
</h2><p>நடிகர் பிளாக் பாண்டி உடல்நிலை மோசமான காரணமாக பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியில் சென்று இருக்கிறார்.

இந்த செய்தி பிக் பாஸ் ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0a02154d-5316-49e2-93fc-160e6ca18819/26-6aa0a04e8b45a.webp' /></p>]]></content>
            <updated>2026-09-09T00:01:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[டிரம்ப் வெளியிட்ட சர்ச்சைக்குரிய வரைபடம்: அமெரிக்க தூதரை அழைத்து கண்டித்த ஐஸ்லாந்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/trump-post-a-controversial-map-include-iceland-1788909662"></link>
            <id>https://news.lankasri.com/article/trump-post-a-controversial-map-include-iceland-1788909662</id>
            <summary type="text">Trump Post a Controversial Map include Iceland: அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வெளியிட்ட சர்ச்சைக்குரிய புகைப்படத்திற்கு ஐஸ்லாந்து கண்டனம் தெரிவித...</summary>
            <content type="html"><![CDATA[<p>Trump Post a Controversial Map include Iceland: அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வெளியிட்ட சர்ச்சைக்குரிய புகைப்படத்திற்கு ஐஸ்லாந்து கண்டனம் தெரிவித்துள்ளது.</p><h2>அமெரிக்க கொடியால் மூடப்பட்ட வரைபடம்</h2><p>அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தன்னுடைய சமூக வலைதளப்&nbsp;பக்கமான ட்ரூத் சோஷியலில் வெளியிட்ட புகைப்படம் ஒன்று சர்ச்சையை கிளப்பியுள்ளது.</p><p> டிரம்ப் வெளியிட்ட அந்த வரைபடத்தில் கனடா, கிரீன்லாந்து, ஐஸ்லாந்து, மெக்சிகோ, மத்திய அமெரிக்கா மற்றும் கரீபியன் ஆகிய பகுதிகள் அமெரிக்க கொடியால் போர்த்தப்பட்டு இருப்பது போன்று சித்தரிக்கப்பட்டிருந்தது.</p><p><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr">🚨 LMFAO! Iceland has reportedly summoned the US Ambassador after Donald Trump posted a map of the United States laying claim to the entire continent of North America — and Iceland<br><br>Are they fearing an invasion 😂<br><br>Trump is a master troll. There is nobody else like him. <a href="https://t.co/pLGI7RRep9">pic.twitter.com/pLGI7RRep9</a></p>&mdash; Eric Daugherty (@EricLDaugh) <a href="https://x.com/EricLDaugh/status/2097309831900156297?ref_src=twsrc%5Etfw">September 8, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p> மேலும் அதில் &nbsp;அமெரிக்க ஐக்கிய நாடுகள் என பெயரிடப்பட்டிருந்ததும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.</p><h2> ஐஸ்லாந்து கண்டனம்</h2><p>
இந்நிலையில், டிரம்ப் வெளியிட்ட வரைபடம் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என ஐஸ்லாந்து வெளியுறவு அமைச்சகம் குற்றஞ்சாட்டியுள்ளது.</p><p> அத்துடன் ஐஸ்லாந்திற்கான அமெரிக்க தூதரை நேரில் அழைத்து ஐஸ்லாந்து வெளியுறவு அமைச்சகம் தனது அதிருப்தியை தெரிவித்துள்ளது.</p><h2> அமெரிக்கா - டென்மார்க் இடையிலான இராஜதந்திர பதற்றம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ee8e3089-1c3c-47bc-abac-c707da7fb358/26-6aa0986002183.webp' /></p><p></p><p>ஏற்கனவே கிரீன்லாந்தை அமெரிக்காவின் ஒருப்பகுதியாக சித்தரித்து வரும் அமெரிக்காவின் நடவடிக்கைகள் காரணமாக டென்மார்க் இடையே ராஜதந்திர பதற்றங்களை ஏற்படுத்தியிருந்தன.</p><p> கிரீன்லாந்து மக்கள் அமெரிக்காவின் அங்கமாக இருக்க எப்போதும் விரும்பவில்லை என்று டென்மார்க் பிரதமரும் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.</p><p> ஐரோப்பிய ஒன்றியம் கிரீன்லாந்தில் 200 மில்லியன் யூரோ முதலீட்டை அறிவித்த சில மணி நேரங்களிலேயே ட்ரம்பின் இந்தப் பதிவு வெளியாகியுள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-09T00:00:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பு–லண்டன் விமானத்துக்கு ஏற்பட்ட திடீர் மாற்றம் ; ஆயிரக்கணக்கான பயணிகள் பாதிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sudden-change-to-the-colombo-london-flight-1788911939"></link>
            <id>https://jvpnews.com/article/sudden-change-to-the-colombo-london-flight-1788911939</id>
            <summary type="text">பிரித்தானியாவின் வான்வழிப் போக்குவரத்து கட்டுப்பாட்டு சேவை மையத்தில் (NATS) ஏற்பட்ட தொழில்நுட்ப பிரச்சினை காரணமாக, செப்டம்பர் 8 அன்று அந்த நாட்டின் 1,...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரித்தானியாவின் வான்வழிப் போக்குவரத்து கட்டுப்பாட்டு சேவை மையத்தில் (NATS) ஏற்பட்ட தொழில்நுட்ப பிரச்சினை காரணமாக, செப்டம்பர் 8 அன்று அந்த நாட்டின் 1,000-க்கும் மேற்பட்ட வானூர்தி சேவைகள் பாதிக்கப்பட்டு பெரும் தாமதத்தையும் ரத்து நடவடிக்கைகளையும் சந்தித்தன.</p><p>
</p><p></p><p>இந்தநிலையில் கொழும்பில் இருந்து லண்டன் நோக்கிப் பயணித்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் UL503 வானூர்தி, இந்தத் தடங்கல் காரணமாக ஜெர்மனியின் பிராங்பர்ட் (Frankfurt) வானூர்தி நிலையத்திற்குத் திருப்பி விடப்பட்டது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/675a8480-d500-4035-9510-2efec0c23232/26-6aa0a1458e23d.webp' /></p><p>வானூர்திப் போக்குவரத்து செயலாக்க அமைப்பில் ஏற்பட்ட இந்தத் தவறு உள்ளூர் நேரப்படி மாலை 16:40 மணிக்குச் சரிசெய்யப்பட்டதாக, பிரித்தானிய NATS தெரிவித்துள்ளது.</p><p>

பிரச்சினை சரிசெய்யப்பட்ட போதிலும், வானூர்திகள் மற்றும் ஊழியர்கள் உரிய இடங்களில் இல்லாததால் மேலும் தாமதங்கள் தொடரும் என வானூர்தி நிறுவனங்கள் எச்சரித்துள்ளன.

இந்த நிலையில், குறித்த தடங்களுக்கு NATS மீது கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
அத்துடன்,இந்தத்தவறு குறித்து முழுமையான அறிக்கை சமர்ப்பிக்குமாறு பிரித்தானிய சிவில் வானூர்திப் போக்குவரத்து அதிகாரசபை (UK CAA) உத்தரவிட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-08T23:59:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[16 மணி நேரம் பணயக்கைதி ; உயிர் தப்பிய சிறுமியின் வாழ்க்கைப் போராட்டம் 40 ஆண்டுகளுக்குப் பின் வைரல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/life-struggle-girl-who-survived-viral-40-years-1788911108"></link>
            <id>https://canadamirror.com/article/life-struggle-girl-who-survived-viral-40-years-1788911108</id>
            <summary type="text">1986ஆம் ஆண்டு செப்டெம்பர் 5ஆம் திகதி, விடுமுறைக்காக இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு தனியாகப் பயணம் மேற்கொண்டிருந்தபோது, தாம் பயணித்த Pan Am 73 வான...</summary>
            <content type="html"><![CDATA[<p>1986ஆம் ஆண்டு செப்டெம்பர் 5ஆம் திகதி, விடுமுறைக்காக இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு தனியாகப் பயணம் மேற்கொண்டிருந்தபோது, தாம் பயணித்த Pan Am 73 வானூர்தி கடத்தப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p></p><p>கடத்தலுக்குப் பின்னர் பயணிகள் சுமார் 16 மணி நேரம் பணயக்கைதிகளாக வைக்கப்பட்டிருந்தனர்.
</p><p>
இந்தச் சம்பவத்தின்போது பயணிகள் வானூர்தியின் நடுப்பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும், பின்னர் துப்பாக்கிச் சூடு இடம்பெற்றதாகவும் அவர் நினைவுகூர்ந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b389c2d3-f37d-4be9-aee0-d2a6ba9eeaab/26-6aa09e05809c6.webp' /></p><p>

இந்த கொடூரமான சம்பவத்தில் 21 பேர் உயிரிழந்ததுடன், நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
வானூர்தி கடத்தப்பட்டிருந்த நிலையில், அவசரகால வெளியேறும் கதவு வழியாக தாம் தப்பியதாக குறித்த பெண் தெரிவித்துள்ளார்.</p><p> வானூர்தியின் இறக்கையில் நின்றிருந்த தமக்கு பணிப்பெண் ஒருவர் உதவி செய்து பாதுகாப்பாக வெளியேறுவதற்கு வழிவகுத்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
எனினும், அந்தப் பயங்கரமான அனுபவம் தனது வாழ்க்கையை முடக்குவதற்கு தாம் ஒருபோதும் அனுமதிக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
</p><p>
இதன் ஒரு பகுதியாக, கரீபியன் கடலில் ஆழ்கடல் நீச்சல், சுவிஸ் ஆல்ப்ஸ் மலைப்பகுதியில் பனிச்சறுக்கு உள்ளிட்ட பல்வேறு சாகசப் பயணங்களை தொடர்ந்து மேற்கொண்டு வருவதாக தனது Instagram பக்கத்தில் காணொளி ஒன்றின் மூலம் பகிர்ந்துள்ளார்.</p><p>

“குணமடைதல் என்பது நடந்ததை மறந்துவிடுவது அல்ல. நாம் வாழத் தொடங்குவதற்கு முன்பே குணமடைய வேண்டும் என்ற அவசியம் இல்லை; நாம் வாழ்வதன் மூலமே குணமடைதல் இடம்பெறுகிறது” என்ற கருத்தையும் அவர் பகிர்ந்துள்ளார்.</p><p>

அவரது இந்தக் காணொளி சமூக வலைத்தளங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
</p><p>
கடுமையான அனுபவத்தை எதிர்கொண்ட போதிலும், வாழ்க்கையை தைரியத்துடனும் மனவலிமையுடனும் தொடர்ந்து முன்னெடுத்து வரும் அவரது முயற்சிக்கு சமூக வலைத்தளப் பயனர்கள் பலரும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-08T23:45:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழ் மக்களின் முக்கிய பிரச்சினைகளை சுட்டிக்காட்டிய ஐ.நா. அறிக்கையை வரவேற்ற சுமந்திரன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sumanthiran-criticizes-government-tamil-issues-1788910653"></link>
            <id>https://tamilwin.com/article/sumanthiran-criticizes-government-tamil-issues-1788910653</id>
            <summary type="text">ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர் ஆரம்ப அமர்வில் இலங்கையில் யுத்த காலத்தில் இடம்பெற்ற குற்றங்களுக்கு பொறுப்புக்கூறல் தொடர்பில் எந்தவித முன்னே...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர் ஆரம்ப அமர்வில் இலங்கையில் யுத்த காலத்தில் இடம்பெற்ற குற்றங்களுக்கு பொறுப்புக்கூறல் தொடர்பில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளதை வரவேற்பதாக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் மா.ஆ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.</p><p>

இராணுவத்தால் கையகப்படுத்தப்பட்ட காணிகளை விடுவித்தல், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம், அரசியல் கைதிகளின் விடுதலை மற்றும் செம்மணி மனிதப் புதைகுழி உள்ளிட்ட தமிழ் மக்களின் முக்கிய பிரச்சினைகள் தொடர்பிலும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதை வரவேற்பதாக அவர் தெரிவித்துள்ளார்.</p><h2>சுமந்திரன் வரவேற்பு</h2><p>
</p><p>
அத்துடன், மாகாண சபைத் தேர்தல்கள் நீண்ட காலமாக நடத்தப்படாமல் இருப்பது தொடர்பில் ஐ.நா. சுட்டிக்காட்டியுள்ளதையும் அவதானித்துள்ளதாக சுமந்திரன் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a3035f94-87be-4290-ac38-6721d652fa63/26-6aa09e059d281.webp' /></p><p>

இலஞ்சம், ஊழல் மற்றும் போதைப்பொருள் தொடர்புடைய பாதாள உலகக் குழுக்களுக்கு எதிராக அரசாங்கம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை வரவேற்பதாக கூறிய அவர், ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் கடந்தும் தமிழ் மக்களின் நீண்டகால அரசியல் அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்கான புதிய அரசியலமைப்பு உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகள் நடைமுறைப்படுத்தப்படாதது குறித்து கடும் ஏமாற்றம் அடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-08T23:45:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானுக்கு எதிரான முக்கிய நகர்வில் பிரித்தானியா! வெளியிடப்பட்ட புதிய சட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/uk-published-legislation-against-iran-1788899576"></link>
            <id>https://ibctamil.com/article/uk-published-legislation-against-iran-1788899576</id>
            <summary type="text">ஈரானின் அணுசக்தித் திட்டம் மற்றும் பிற விரோதச் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்துவதற்கான பரந்த முயற்சியின் ஒரு பகுதியாக, ஈரான் மீதான கடுமையான தடைகளை அறிமுக...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானின் அணுசக்தித் திட்டம் மற்றும் பிற விரோதச் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்துவதற்கான பரந்த முயற்சியின் ஒரு பகுதியாக, ஈரான் மீதான கடுமையான தடைகளை அறிமுகப்படுத்துவதற்கான சட்டத்தை பிரித்தானியா வெளியிட்டுள்ளது.</p><p> 

இச்சட்டம் வர்த்தகக் கட்டுப்பாடுகளை விரிவுபடுத்துவதோடு, ஈரானிய கப்பல்களைக் குறிவைப்பதற்கான அதிகாரங்களையும் வழங்குவதாக கூறப்படுகிறது.</p><p>

அத்தோடு, ஈரானின் பிரித்தானிய நிதி அமைப்புக்கான அணுகலைக் கட்டுப்படுத்துதல், கூடுதல் பொருட்கள், தொழில்நுட்பம் மற்றும் சேவைகளை உள்ளடக்கிய வகையில் வர்த்தகத் தடைகளை விரிவுபடுத்துதல் மற்றும் சிறப்பு விதிவிலக்குகள் இல்லாத பட்சத்தில் ஈரானிய விமானங்கள் பிரித்தானியாவில் தரையிறங்குவதைத் தடை செய்தல் ஆகிய நடவடிக்கைகளை இச்சட்டம் உள்ளடக்கியுள்ளது என்று அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.</p><p></p><h2>துறைசார் கட்டுப்பாடுகள்</h2><p>

“ஸ்னாப்பேக்” (snapback) எனப்படும் பொறிமுறையின் கீழ் ஈரான் மீது ஐ.நா. தடைகள் மீண்டும் விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு அரசாங்கம் அறிவித்த திட்டங்களின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கைகள் அமைந்துள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c07c6ecd-4a88-46cd-a21f-e73f11f96346/26-6aa0725f12873.webp' /></p><p> </p><p>

நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்குப் பிறகு, இச்சட்டம் 2015-ஆம் ஆண்டு ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தின் கீழ் நீக்கப்பட்ட பல்வேறு துறைசார் கட்டுப்பாடுகளை மீண்டும் நடைமுறைக்குக் கொண்டுவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><h2>ஈரானின் அணுசக்தித் திட்டம்</h2><p>
</p><p>
அத்துடன், ஈரானின் அணுசக்தித் திட்டத்துடன் தொடர்புடைய நிதி திரட்டும் திறன் மற்றும் தொழில்நுட்பப் பொருட்களைப் பெறும் திறனையும் மேலும் மட்டுப்படுத்தும் என்றும் கருதப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0f861c6c-e737-4acb-9585-55b321373903/26-6aa0725ff1992.webp' /></p><p><i>Image Credit: Reuters</i></p><p>
</p><p>
இந்நிலையில், “ஈரானின் அணுசக்தி லட்சியங்களைக் கட்டுப்படுத்துவதற்கான எங்கள் நடவடிக்கைகளை இச்சட்டம் மேலும் வலுப்படுத்துகிறது” என்றும், ஈரான் ஒருபோதும் அணு ஆயுதத்தைப் பெற முடியாது என்பதை உறுதிப்படுத்த இது உதவும் என்றும் பிரிட்டிஷ் வெளியுறவுத் துறை அமைச்சர் ஸ்டீபன் டவுட்டி தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-08T23:44:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[உக்ரைனில் ரஷ்யா பயங்கர தாக்குதல்! சீறிப்பாயும் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/russia-resumed-air-strikes-on-ukraine-1788910503"></link>
            <id>https://ibctamil.com/article/russia-resumed-air-strikes-on-ukraine-1788910503</id>
            <summary type="text">


அமெரிக்க அமைதிப் பேச்சாளர்களின் வருகைக்காகத் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த உக்ரைன் மீதான வான்வழித் தாக்குதல்களை ரஷ்யா மீண்டும் தொடங்கியுள்ளது....</summary>
            <content type="html"><![CDATA[<p>


அமெரிக்க அமைதிப் பேச்சாளர்களின் வருகைக்காகத் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த உக்ரைன் மீதான வான்வழித் தாக்குதல்களை ரஷ்யா மீண்டும் தொடங்கியுள்ளது.</p><p> 

செவ்வாய்க்கிழமை அன்று உக்ரைன் தலைநகர் கீவ் மீது ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் நடத்தப்பட்ட இந்தத் தீவிரத் தாக்குதலில் 5 பேர் உயிரிழந்ததாக மேயர் விட்டாலி கிளிட்ச்கோ தெரிவித்துள்ளார்.
</p><p>
இரவு முழுவதும் நீடித்த இந்தத் தாக்குதலால் தலைநகரின் பல மாவட்டங்களில் தீப்பற்றி எரிந்ததாகவும் சுமார் 14 உயரடுக்குக் கட்டிடங்கள், ஒரு விடுதி, பாடசாலை, கிளினிக், சேமிப்புக் கிடங்குகள் உள்ளிட்ட பல இடங்கள் சேதமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p></p><h2>ஜெட் ஆற்றலில் இயங்கும் ட்ரோன்கள்</h2><p>
</p><p>
இந்நிலையில், "கீவ் நகரம் வெடித்துச் சிதறி எரியும் நிலைக்குள்ளானது" என்று உக்ரைனுக்கான ஐரோப்பிய ஒன்றியத் தூதுவர் கதரீனா மாதெர்னோவா தனது சமூக வலைதளப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cdf00c66-f57a-41f6-94c5-6072dd9de4e3/26-6aa09dc49a47e.webp' /></p><p><i>Image Credit:&nbsp;intelligenceonline</i></p><p>

இந்தத் தாக்குதல்களில் தலைநகரில் 35 பேர் காயமடைந்துள்ளதாக மாநில அவசரக்கால சேவைகள் பிரிவு தெரிவித்துள்ளது.
</p><p>
செவ்வாய்க்கிழமை பிற்பகல் வரையிலும் ஜெட் ஆற்றலில் இயங்கும் ட்ரோன்கள் மூலம் ரஷ்யா தொடர்ந்து அச்சுறுத்தல் விடுத்து வந்ததால், நகரம் முழுவதும் வெடிப்புச் சத்தங்கள் எதிரொலித்துக் கொண்டே இருந்தாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-08T23:44:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[3 ஆண்டுகளாக படுக்கையில் காவல் அதிகாரி ; உரிமைகளை பெற்றுத்தர மனைவி கண்ணீர்க் கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/police-officer-bedridden-for-three-years-1788909960"></link>
            <id>https://jvpnews.com/article/police-officer-bedridden-for-three-years-1788909960</id>
            <summary type="text">விபத்தில் சிக்கி கடந்த மூன்று ஆண்டுகளாக படுக்கையிலேயே சிகிச்சை பெற்று வரும் காவல் அதிகாரி ஒருவருக்குச் சேர வேண்டிய ஓய்வூதியம், விபத்து நிவாரண நஷ்டஈடு ...</summary>
            <content type="html"><![CDATA[<p>விபத்தில் சிக்கி கடந்த மூன்று ஆண்டுகளாக படுக்கையிலேயே சிகிச்சை பெற்று வரும் காவல் அதிகாரி ஒருவருக்குச் சேர வேண்டிய ஓய்வூதியம், விபத்து நிவாரண நஷ்டஈடு உள்ளிட்ட அனைத்து உரிமைகளையும் விரைவாக பெற்றுத்தருமாறு அவரது மனைவி பொலிஸ் மா அதிபரிடம் (IGP) அவசரக் கோரிக்கை விடுத்துள்ளார்.</p><p>
</p><p></p><p>குறித்த காவல் அதிகாரி, பொரளை பகுதியில் அமைந்துள்ள பொலிஸ் பயிற்சிக் கல்லூரியில் நடைபெற்ற பொலிஸ் சார்ஜன்ட் பயிற்சியில் கலந்துகொள்வதற்காகச் சென்றுகொண்டிருந்தபோதே விபத்தில் சிக்கியதாக அவரது மனைவி தெரிவித்துள்ளார்.
</p><p>
விபத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட கடுமையான உடல்நலப் பாதிப்புகள் காரணமாக, அதிகாரியால் அன்றாடச் செயற்பாடுகளைக் கூட சுயமாக மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d2b81f10-863d-43c5-a384-8eec59ee4217/26-6aa09989e2975.webp' /></p><p>அவருக்கு இதுவரை முழுமையான சுயநினைவு திரும்பவில்லை எனவும், உணவு மற்றும் சுவாசத்திற்காக தொண்டைப் பகுதியில் குழாய்கள் பொருத்தப்பட்டுள்ளதாகவும் அவரது மனைவி சமூக ஊடகப் பதிவொன்றில் குறிப்பிட்டுள்ளார்.</p><p>&nbsp;கணவரை முழுநேரமும் பராமரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதால், தம்மால் வேறு எந்தவொரு தொழிலிலும் ஈடுபட முடியவில்லை என அவரது மனைவி தெரிவித்துள்ளார்.
</p><p>
வாடகை வீட்டில் வசித்து வரும் தமது குடும்பத்திற்கு தற்போது நிலையான வருமானம் எதுவும் இல்லாத நிலையில், கணவரின் மருத்துவச் செலவுகள் மற்றும் அன்றாட வாழ்க்கைச் செலவுகளை சமாளிப்பதில் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>

விபத்து இடம்பெற்ற பின்னர் மூன்று மாதங்களுக்கான சம்பளமும், விபத்து விடுப்பு அனுமதிக்கப்பட்டதன் பின்னர் மேலும் ஆறு மாதங்களுக்கான சம்பளமும் மாத்திரமே வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p>காவல் அதிகாரிக்குச் சேர வேண்டிய ஓய்வூதியம் மற்றும் விபத்து நஷ்டஈட்டைப் பெற்றுக்கொள்வதற்குத் தேவையான ஆவணங்கள் ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அவரது மனைவி தெரிவித்துள்ளார்.
</p><p>
எனினும், குறித்த நடவடிக்கைகள் இதுவரை நிறைவடையவில்லை எனவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
</p><p>
விசேட புலனாய்வுப் பிரிவின் (SIU) விசாரணை காரணமாக ஓய்வூதியம் வழங்குவதற்கான நடைமுறைகள் தாமதமடைந்துள்ளதாகவும், மருத்துவக் குழு தொடர்பான சிக்கல்கள் காரணமாக விபத்து நஷ்டஈடு தொடர்பான கோப்புகள் முன்னும் பின்னுமாக அனுப்பப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
</p><p>
இதனால், கடந்த மூன்று ஆண்டுகளாக குடும்பம் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>தமது குடும்பம் எவரிடமும் அனுதாபத்தை எதிர்பார்க்கவில்லை எனத் தெரிவித்துள்ள காவல் அதிகாரியின் மனைவி, தனது கணவருக்குச் சட்டரீதியாக கிடைக்க வேண்டிய உரிமைகள் மற்றும் குடும்பத்திற்கான நீதியையே கோருவதாக தெரிவித்துள்ளார்.
</p><p>
எனவே, குடும்பத்தின் இக்கட்டான நிலைமையை கருத்திற்கொண்டு பொலிஸ் மா அதிபர் தனிப்பட்ட முறையில் தலையிட்டு, ஓய்வூதியம், விபத்து நஷ்டஈடு உள்ளிட்ட அனைத்து உரிமைகளையும் தாமதமின்றி பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
</p><p>
மேலும், தமது நிலைமை உரிய அதிகாரிகளின் கவனத்திற்குச் செல்லும் வகையில் இந்தத் தகவலை பொதுமக்கள் பகிர்ந்துகொள்ளுமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-08T23:26:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>H. A. Roshan</name>
            </author>
            <title type="text"><![CDATA[திருகோணமலையில் இரவு நேரங்களில் வயல்களுக்கு தீ மூட்டப்படுவதால் விவசாயிகள் மத்தியில் அச்சம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/farmers-alarmed-as-fires-are-set-in-fields-night-1788909419"></link>
            <id>https://tamilwin.com/article/farmers-alarmed-as-fires-are-set-in-fields-night-1788909419</id>
            <summary type="text">&amp;nbsp;திருகோணமலை மாவட்டத்தில் உள்ள தம்பலாகாமம் கமநல சேவை பிரிவுக்குட்பட்ட சில
விவசாயப் பகுதிகளில் இரவு நேரங்களில் வயல்களுக்கு தீ
மூட்டப்படுவதனால் அத...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;திருகோணமலை மாவட்டத்தில் உள்ள தம்பலாகாமம் கமநல சேவை பிரிவுக்குட்பட்ட சில
விவசாயப் பகுதிகளில் இரவு நேரங்களில் வயல்களுக்கு தீ
மூட்டப்படுவதனால் அதனூடாக பயணிக்கும் பாதசாரிகள் அச்சம் கொண்டுள்ளனர்.
</p><p>
வயல் நிலங்களில் காணப்படும் களைகள் மற்றும் விவசாயக் கழிவுகளை அகற்றும்
நோக்கில் சிலர் தீ மூட்டுவதாக தெரிவிக்கப்படும் நிலையில், கட்டுப்பாடின்றி
பரவும் தீ காரணமாக அருகிலுள்ள விவசாய நிலங்கள், பயிர்கள் மற்றும்
சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் காணப்படுகிறது.</p><h2>&nbsp;விவசாயிகள் மத்தியில் அச்சம்</h2><p>

குறிப்பாக இரவு நேரங்களில் தீ மூட்டப்படுவதால், தீ பரவும் திசையை உடனடியாக
அவதானித்து கட்டுப்படுத்துவதில் சிரமம் ஏற்படுவதாகவும் விவசாயிகள்
தெரிவிக்கின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0abcd827-d416-465b-a68c-4cb74dcd428e/26-6aa098d445f29.webp' /></p><p>

மேலும், வறட்சியான காலநிலை நிலவி வரும் நிலையில் வயல் பகுதிகளில் தீ
மூட்டப்படுவது தீ வேகமாக பரவுவதற்கான வாய்ப்பை அதிகரிப்பதாகவும்
சுட்டிக்காட்டப்படுகிறது.</p><p>

எனவே, வயல் நிலங்களுக்கு தீ மூட்டும் நடவடிக்கைகளை பொறுப்புடன் மேற்கொள்ள
வேண்டும் என்றும், தீயை கட்டுப்பாடின்றி விட்டுச் செல்லாமல் உரிய பாதுகாப்பு
நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என்றும் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள்
கோரிக்கை விடுத்துள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-08T23:23:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹார்முஸ் நீரிணையில் ஆளில்லா நீர்மூழ்கியை கைப்பற்றிய ஈரான்? வெளியான வீடியோ]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/iran-media-reports-capture-of-unmanned-submarine-1788894679"></link>
            <id>https://news.lankasri.com/article/iran-media-reports-capture-of-unmanned-submarine-1788894679</id>
            <summary type="text">Iran media Reports Capture of Unmanned Submarine: நீர்மூழ்கி கப்பலை கைப்பற்றி இருப்பதாக ஈரானிய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.சிறைபிடிக்கப்பட்ட ஆளில்லா...</summary>
            <content type="html"><![CDATA[<p>Iran media Reports Capture of Unmanned Submarine: நீர்மூழ்கி கப்பலை கைப்பற்றி இருப்பதாக ஈரானிய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.</p><h2>சிறைபிடிக்கப்பட்ட ஆளில்லா நீர்மூழ்கி கப்பல்?</h2><p>ஈரானின் புரட்சிகர காவல் படையினரின் தகவலில், ஹார்முஸ் ஜலசந்தியில் வைத்து ஆளில்லா நீர்முழ்கி கப்பல் ஒன்று தடுத்து நிறுத்தப்பட்டு கைப்பற்றப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.</p><p> ஈரானிய இராணுவத்தின் கூற்றுப்படி இந்த ஆளில்லா நீர்மூழ்கி கப்பலானது ஆண்டுரில்(Anduril) நிறுவனத்தின் 'Dive LD' என்ற தன்னாட்சி நீர்மூழ்கி கப்பல் என தெரியவந்துள்ளது.</p><p>செவ்வாய்க்கிழமை ஈரானிய அரசு ஊடகமான IRNA மற்றும் பல செய்தி நிறுவனங்களும் ஆளில்லா நீர்மூழ்கி கப்பல் ஒன்றின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு இருந்தன.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">⚡️BREAKING: The IRGC has released Footage of the Seizure of US Navy&#39;s Advanced Dive-LD Autonomous Underwater Vehicle<br><br>The United States was using it to Detect Mines in the Strait of Hormuz<br><br>The Dive-LD contains Classified Technology and Iran will likely Share it with Russia and… <a href="https://t.co/JznS0A2C7T">pic.twitter.com/JznS0A2C7T</a></p>&mdash; Iran Observer (@IranObserver0) <a href="https://x.com/IranObserver0/status/2097388572042998093?ref_src=twsrc%5Etfw">September 8, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p> IRGC வெளியிட்ட காட்சிகளில், நீர்மூழ்கி கப்பல் எந்தவொரு சேதமும், பாதிப்புகளும் இல்லாமல் நல்ல நிலையில் இருப்பதை பார்க்க முடிந்தது.</p><p> Dive LD நீர்மூழ்கி கப்பல் கைப்பற்றப்பட்டது மட்டும் உறுதிப்படுத்தப்பட்டால் அதிநவீன ஆளில்லா நீர்மூழ்கி கப்பல் ஒன்றை நாடு ஒன்று கைப்பற்றும் முதல் சம்பவம் இதுவாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bfceedde-fcfe-4ff3-96f9-0784d2856645/26-6aa05dd8aa3c7.webp' /></p><p> &nbsp; ஈரானிய ராணுவம் மற்றும் ஊடகங்கள் இது தொடர்பான செய்தியை தீவிரமாக அறிவித்து வரும் நிலையில், இது தொடர்பாக அமெரிக்கா எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-08T23:16:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[அச்சத்தில் நாமலின் மனைவி! ரங்க திஸாநாயக்காவால் திணறும் மகிந்த குடும்பம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/airbus-issu-namal-arrest-mahinda-family-tiuble-1788898965"></link>
            <id>https://tamilwin.com/article/airbus-issu-namal-arrest-mahinda-family-tiuble-1788898965</id>
            <summary type="text">&amp;nbsp;ஏர்பஸ் கொடுக்கல் வாங்கல் விவகாரம் தொடர்பான சர்ச்சையில், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டுள்ள நிலையில், ராஜபக்ச குடும்பத்தினர...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;ஏர்பஸ் கொடுக்கல் வாங்கல் விவகாரம் தொடர்பான சர்ச்சையில், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டுள்ள நிலையில், ராஜபக்ச குடும்பத்தினரிடையே பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
</p><p>
லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் பணிப்பாளராக ரங்க திஸாநாயக்க பதவியேற்ற பின்னர், விசாரணைகளில் அதிரடி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், நவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது.</p><p>

அவர் பதவியேற்றபோது சுமார் 8,000 வழக்குகள் நிலுவையில் இருந்ததாகவும், தற்போது அவற்றில் 44 சதவீதமான வழக்குகள் முடிவுறும் கட்டத்தை எட்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதில் 29-க்கும் மேற்பட்ட வழக்குகள் ராஜபக்ச குடும்பத்தினருடன் தொடர்புடையவை என குறிப்பிடப்பட்டுள்ளது.
</p><p>
இந்நிலையில், 'சிரிலிய சவ்வியா' அமைப்பு மற்றும் மகரகம அபேக்ஷா வைத்தியசாலை தொடர்பான நிதி விவகாரங்கள் குறித்து குற்றத்தடுப்பு புலனாய்வுத் துறையினர் (CID) முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்சவிடம் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இந்த தொடர் நடவடிக்கைகள் காரணமாக ராஜபக்ச குடும்பத்தின் பல உறுப்பினர்கள் சட்ட ரீதியான விசாரணை வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டு, குடும்பம் கடும் நெருக்கடியை எதிர்கொள்வதாக கூறப்படுகிறது.</p><p>

இந்தநிலையில், எதிர்வரும் 12ஆம் திகதி நடைபெறவுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பேரணியில் அவரது இல்லாத குறையை ஈடுசெய்யும் வகையில், லிமினி ராஜபக்சவை அரசியல் களத்தில் முன்னிலைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
லிமினி ராஜபக்ச மீது பல்வேறு அவதூறுகள் பரப்பப்படுவதாகவும், இதனால் அவர் கடும் மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.</p><p> இது தொடர்பாக குற்றத்தடுப்பு புலனாய்வுப் பிரிவிலும் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>


இந்த விடயங்கள் தொடர்பில் விரிவாக பேசுகின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி..</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/oxkF3F-rgZc" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-08T23:06:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் பாரிய விபத்து: 4 இளைஞர்கள் பரிதாப பலி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/four-dead-after-two-vehicle-crash-near-1788886271"></link>
            <id>https://canadamirror.com/article/four-dead-after-two-vehicle-crash-near-1788886271</id>
            <summary type="text">கனடாவின் மேனிடோபா மாகாணத்தில் உள்ள வின்னிபெக் பீச் பகுதியில் இரண்டு வாகனங்கள் மோதிக்கொண்ட கொடூர விபத்தில் 4 இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக கி...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் மேனிடோபா மாகாணத்தில் உள்ள வின்னிபெக் பீச் பகுதியில் இரண்டு வாகனங்கள் மோதிக்கொண்ட கொடூர விபத்தில் 4 இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக கிம்லி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p> 
நெடுஞ்சாலை 229-ல் மேற்காகப் பயணித்த கார் ஒன்று, நெடுஞ்சாலை 8-ஐக் கடக்க முயன்றபோது, தெற்கு நோக்கி வந்த வேன் ஒன்றுடன் பலமாக மோதியது. </p><p>
இந்தச் சந்திப்பில் கிழக்கு மற்றும் மேற்கு நோக்கிச் செல்லும் வாகனங்களுக்கு 'நிற்குமாறு' எச்சரிக்கைப் பலகைகள் அமைக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3ca2f6d9-f1b1-4749-b10f-db90748128a8/26-6aa03d0187a1d.webp' /></p><p> 
மோதிய வேகத்தில் இரு வாகனங்களும் வீதியின் தென்மேற்குப் பகுதியில் உள்ள பள்ளத்தில் தூக்கி வீசப்பட்டன. </p><p>அதில் ஒரு வாகனம் தலைகீழாகக் கவிழ்ந்தது. 
மேற்கு நோக்கிச் சென்ற காரில் பயணித்த 4 பேருமே சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். </p><p>
காரை ஓட்டிவந்த வின்னிபெக்கைச் சேர்ந்த 18 வயது பெண், கிம்லியைச் சேர்ந்த 18 வயது இளைஞர், சேண்டி ஹூக்கைச் சேர்ந்த 18 வயது பெண் மற்றும் ஒன்டாரியோவின் இயர் ஃபால்ஸைச் சேர்ந்த 17 வயது சிறுவன் ஆகியோர் கொல்லப்பட்டுள்ளனர்.
</p><p>வேனில் பயணித்த வின்னிபெக்கைச் சேர்ந்த 49 வயது ஓட்டுநர், ஒரு பெண் மற்றும் இரு குழந்தைகள் என 4 பேருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டன. அவர்கள் அனைவரும் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் வின்னிபெக் மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காகக் கொண்டு செல்லப்பட்டனர்.
</p><p>இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள பொலிஸார், விபத்துக்கான முழுமையான காரணம் குறித்துத் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-08T22:54:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ். சுதுமலை வெள்ளப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி ; அதிரடி நடவடிக்கைக்கு முடிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/permanent-solution-flooding-problem-sudumalai-jaff-1788893010"></link>
            <id>https://jvpnews.com/article/permanent-solution-flooding-problem-sudumalai-jaff-1788893010</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் சுதுமலைப் பகுதியில் தொடர்ச்சியாக நிலவி வரும் வெள்ளப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வை ஏற்படுத்தும் வகையில், வாய்க்கால்களைப் புனரமைத்தல் உள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் சுதுமலைப் பகுதியில் தொடர்ச்சியாக நிலவி வரும் வெள்ளப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வை ஏற்படுத்தும் வகையில், வாய்க்கால்களைப் புனரமைத்தல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை உடனடியாக முன்னெடுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p></p><p>இதற்கமைய, வடக்கு மாகாண நீர்ப்பாசனத் திணைக்களமும் வலிகாமம் தென் - மேற்கு பிரதேச சபையும் இணைந்து குறித்த நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளன.
</p><p>
மேலும், மழைக்காலங்களில் அதிகளவில் தேங்கும் நீரைச் சேமித்து எதிர்காலத்தில் பயன்படுத்தும் வகையில், சுதுமலைப் பகுதியில் காணப்படும் பொருத்தமான குளங்களை உடனடியாகத் தூர்வாருவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/28ce9ad5-b51a-48c0-aa54-c206d311f259/26-6aa05753d6f91.webp' /></p><p>சுதுமலைப் பகுதியில் நிலவும் வெள்ளப்பெருக்கு மற்றும் வாய்க்கால்களில் காணப்படும் தடைகள் தொடர்பில், வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகன் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற கலந்துரையாடலின்போதே இந்தத் தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.</p><p>

இதன்போது, வெள்ளநீர் இயற்கையாக வழிந்தோடி செல்லும் வகையில் நீர்வழிகளைச் சீரமைப்பதுடன், மழைக்காலங்களில் தேங்கும் அதிகளவான நீரை முறையாகத் தேக்கி வைக்கும் திறனை மேம்படுத்துவதன் அவசியமும் வலியுறுத்தப்பட்டது.</p><p>

இதற்காக, அப்பகுதியில் உள்ள பொருத்தமான குளங்களை அடையாளம் கண்டு அவற்றைத் தூர்வாரி, நீர்த்தேக்க கொள்ளளவை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.</p><p>

சுதுமலைப் பகுதியில் வெள்ளப் பாதிப்பைத் தடுக்கும் வகையில் முன்னெடுக்கப்படவுள்ள பணிகள் எவ்வித தாமதமுமின்றி ஆரம்பிக்கப்படுவதுடன், நிலைமைகளுக்கு ஏற்ப மேலதிக நடவடிக்கைகளும் அடுத்த கட்டமாக முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-08T22:54:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆங்கில கால்வாய் அகதிகள் படகு விபத்து: 5 ஆண்டுகளுக்கு பிறகு பாரிஸில் தொடங்கும் வழக்கு விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/channel-disaster-trial-opens-in-paris-after-5-yrs-1788903776"></link>
            <id>https://news.lankasri.com/article/channel-disaster-trial-opens-in-paris-after-5-yrs-1788903776</id>
            <summary type="text">English Channel Disaster: trial opens in Paris after 5 years: ஆங்கில கால்வாயில் நடந்த மோசமான அகதிகள் படகு விபத்து தொடர்பில் 5 ஆண்டுகளுக்கு பிறகு 14 பே...</summary>
            <content type="html"><![CDATA[<p>English Channel Disaster: trial opens in Paris after 5 years: ஆங்கில கால்வாயில் நடந்த மோசமான அகதிகள் படகு விபத்து தொடர்பில் 5 ஆண்டுகளுக்கு பிறகு 14 பேர் மீது பாரிஸில் வழக்கு விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.</p><h2> மோசமான அகதிகள் படகு விபத்து</h2><p>கடந்த 2021ம் ஆண்டு நவம்பர் மாதம் சிறிய படகில் ஆங்கில கால்வாயை கடக்க முயன்று 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது.</p><p> பிரான்ஸ் கடற்கரைக்கு அருகில் உள்ள கலே பகுதியில் உடல்கள் மிதப்பதை பிரெஞ்சு மீன்பிடி கண்டறிந்ததை தொடர்ந்து அவசர சேவைகள் மீட்பு பணியில் களமிறங்கினர்.</p><p> இதில் 27 உடல்கள் வரை மீட்கப்பட்டனர். 4 பேரின் நிலை குறித்து இதுவரை கண்டறிய முடியவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/384a5655-5413-4fcc-bdbd-0c8ed1dca59b/26-6aa08161c35e6.webp' /></p><p> இந்த விபத்தில் 2 பேர் மட்டுமே உயிர் தப்பினர். விபத்தில் உயிரிழந்தவர்கள் பெரும்பாலானோர் ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டிருந்தது.</p><p> அத்துடன் இதில் எத்தியோப்பியா, எகிப்து, சோமாலியா, ஈரான் மற்றும் வியட்நாம் நாட்டை சேர்ந்தவர்களும் அடங்குவர் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.</p><p></p><h2>5 ஆண்டுகளுக்கு பிறகு விசாரணை</h2><p>
இந்த விபத்து சம்பவத்துக்கு கடலில் பயணிக்க தகுதியற்ற மற்றும் சான்றிதழ் பெறாத ரப்பர் படகுகளை பயன்படுத்தியதோடு அதிகப்படியான ஆட்களை ஏற்றியதே காரணம் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.</p><p> மேலும் நீதிமன்ற ஆவணங்கள் படி அந்த படகில் போதுமான உயிர்காக்கும் கவசங்கள் இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.</p><p> இந்நிலையில் இந்த விபத்து மற்றும் மனிதக் கடத்தல் சம்பவத்திற்கு காரணமானவர்களாக கூறப்படும் 14 பேர் மீது 5 ஆண்டுகளுக்கு பிறகு பாரிஸில் வழக்கு விசாரணையானது தொடங்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/384a5655-5413-4fcc-bdbd-0c8ed1dca59b/26-6aa08161c35e6.webp' /></p><p> அவர்கள் மீது சட்டவிரோத குடியேற்றத்திற்கு உடந்தையாக இருந்தது, கொலைக்கு அஞ்சாத குற்றம் செய்தல் ஆகிய தீவிரக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.</p><p> இந்த வழக்கு விசாரணையானது செப்டம்பர் 30ம் திகதி வரை நடைபெறும் என திட்டமிடப்பட்டுள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-08T22:25:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[எயார்பஸ் வழக்கு விசாரணை! இலஞ்ச ஆணைக்குழு அதிகாரிகளுக்கு நீதவான் கடும் உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/case-regarding-the-purchase-of-airbus-aircraft-1788903667"></link>
            <id>https://tamilwin.com/article/case-regarding-the-purchase-of-airbus-aircraft-1788903667</id>
            <summary type="text">ஏர்பஸ் விமானக் கொள்வனவு தொடர்பான வழக்கு இன்று (08) கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அதன்போதே வழக்கின் விசார...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஏர்பஸ் விமானக் கொள்வனவு தொடர்பான வழக்கு இன்று (08) கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. </p><p>அதன்போதே வழக்கின் விசாரணை தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்கத் தவறிய இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகளை நீதவான் அசங்க எஸ் போதரகம கடுமையாக கண்டித்துள்ளார்.
</p><h2>கடுமையான உத்தரவு</h2><p>
இன்றைய வழக்கு விசாரணையின் போது நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்த இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகள், வழக்கு தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும், விசாரணைகள் இன்னும் பூர்த்தியாகவில்லை என்றும் வாய்மூலமாக நீதிமன்றத்திற்கு அறிவித்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bc21afa3-fa89-42eb-8b83-c83d3c6a4966/26-6aa083651b925.webp' /></p><p>
</p><p>
அதன்போது கடுமையாக ஆத்திரமுற்ற நீதவான் அசங்க எஸ். போதரகம, இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு தனியான சட்டங்களோ அதிகாரங்களோ இல்லை என்றும், நீதிமன்றத்தின் முன்னர் குறித்த ஆணைக்குழுவும் பொறுப்புக் கூறும் கடமைப்பாட்டைக் கொண்டிருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.
</p><p>
அத்துடன் வழக்கொன்றின் விசாரணையின் முன்னேற்றங்கள் தொடர்பில் ஒவ்வொரு தவணையின் போதும் எழுத்து மூல அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டியது பொலிஸ் திணைக்களம் உள்ளிட்ட அனைத்து விசாரணையளார்களின் பொறுப்பாகும் என்றும் கடுமையாக அறிவுறுத்தியுள்ளார்.
</p><p>
அத்துடன் அவ்வாறான விசாரணை அமைப்புகளை பிரதிநிதித்துவப்படுத்தி நீதிமன்றத்தில் முன்னிலையாகும் அதிகாரிகள் வழக்கு விசாரணை தொடர்பான முழுமையான விபரங்களை அறிந்து கொண்டே நீதிமன்றத்தில் முன்னிலையாக வேண்டும் என்றும் அவர் கடுமையான உத்தரவொன்றைப் பிறப்பித்துள்ளார்.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-08T21:52:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை – இந்திய சுகாதார அமைச்சர்கள் இருதரப்பு பேச்சுவார்த்தை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-lanka-india-health-ministers-hold-talks-1788900436"></link>
            <id>https://tamilwin.com/article/sri-lanka-india-health-ministers-hold-talks-1788900436</id>
            <summary type="text">இலங்கையின் சுகாதார அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸவுக்கும், இந்திய
சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் ஜகத் பிரகாஷ் நட்டாவுக்கும் இடையே
இருத...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் சுகாதார அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸவுக்கும், இந்திய
சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் ஜகத் பிரகாஷ் நட்டாவுக்கும் இடையே
இருதரப்பு பேச்சுவார்த்தை நேற்று(8) நடைபெற்றது.</p><p>

கிழக்கு திமோரின் திலி நகரில் நடைபெற்று வரும் உலக சுகாதார அமைப்பின்
தென்கிழக்காசிய பிராந்தியக் குழுவின் 79 ஆவது மாநாட்டில் கலந்துகொண்டுள்ள
நிலையிலேயே, இம்மாநாட்டின் பக்க அம்சமாக இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.
</p><h2>இலங்கையின் சுகாதாரத் துறை</h2><p>
இலங்கை எதிர்கொண்ட அனைத்துக் கடினமான தருணங்களிலும் இந்திய அரசாங்கம் வழங்கிய
ஆதரவுக்கும் நட்புறவுக்கும், இலங்கை அரசு மற்றும் மக்கள் சார்பில் தனது
நன்றியைச் சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ
தெரிவித்துக்கொண்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f9cf69d7-b1c1-41e4-87aa-25c1fda8f7c1/26-6aa078be737ec.webp' /></p><p>
</p><p>
இலங்கையின் சுகாதாரத் துறையின் மேம்பாட்டுக்காக முன்னெடுக்கப்பட்டு வரும்
திட்டமிடப்பட்ட வேலைத்திட்டங்களுக்கு அமைவாக, குறிப்பாகக் காசநோய் ஒழிப்பு
நடவடிக்கைகளை மேலும் வெற்றியடையச் செய்வதற்குத் தேவையான தொழில்நுட்ப மற்றும்
ஏனைய உதவிகளைத் தொடர்ச்சியாக வழங்குவதற்கு இந்திய சுகாதார அமைச்சர் இதன்போது
இணக்கம் தெரிவித்தார்.</p><p>

இதற்கு இணையான வகையில், இலங்கையின் ஆரம்ப சுகாதாரச் சேவை அமைப்பை மேலும்
வலுப்படுத்துதல் மற்றும் அதன் தரத்தை உயர்த்துதல் தொடர்பிலும் இங்கு விரிவாகக்
கலந்தாலோசிக்கப்பட்டது.
</p><p>
கிராமப்புற மட்டத்தில் மக்களுக்கு வழங்கப்படும் சுகாதார வசதிகளை மேலும்
விரிவாக்குவதற்குத் தேவையான ஒத்துழைப்பை வளர்த்துக் கொள்வது குறித்தும், அது
தொடர்பில் இரு நாடுகளின் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வது பற்றியும் இதன்போது
மேலதிக கவனம் செலுத்தப்பட்டது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-08T21:06:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானின் எண்ணெய் கப்பல்களை தாக்கத் தொடங்கிய அமெரிக்கா!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/us-begins-attacking-iranian-oil-tankers-1788900824"></link>
            <id>https://ibctamil.com/article/us-begins-attacking-iranian-oil-tankers-1788900824</id>
            <summary type="text">ஈரானின் பல எண்ணெய் கப்பல்கள் அமெரிக்காவால் குறிவைக்கப்பட்டுள்ளதாக ஈரான் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இருப்பினும...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானின் பல எண்ணெய் கப்பல்கள் அமெரிக்காவால் குறிவைக்கப்பட்டுள்ளதாக ஈரான் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
</p><p>
இருப்பினும், அவற்றின் சரியான எண்ணிக்கை அறியப்படவில்லை என்றே கூறப்படுகிறது.
</p><p>
இதன்போது, ஈரானின் கார்க் தீவின் கடற்கரைப் பகுதியில் ஒரு கப்பல் குறிவைக்கப்பட்டுள்ளது என்பது தெரியவந்துள்ளது.</p><p>&nbsp;</p><h2>கப்பல்களை வெளியெற உத்தரவு</h2><p>குறிவைக்கப்பட்ட கப்பல்களின் பணியாளர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0d5e6143-b907-4773-839f-153561255a8c/26-6aa075d9e2a77.webp' /></p><p>

இதனைத் தொடர்ந்து, குவைத் மற்றும் பஹ்ரைன் துறைமுகங்களின் அருகில் உள்ள அனைத்து எண்ணெய் கப்பல்களுக்கும் (அவை நங்கூரமிடப்பட்டிருந்தாலும் இல்லாவிட்டாலும்) அங்கிருந்து வெளியேறுமாறு ஈரானின் புரட்சிகரப் படைப்பிரிவின் (IRGC) கடற்படை எச்சரிக்கை விடுத்துள்ளது.</p><p>ஹோர்முஸ் நீரிணையில் கார்க் தீவு மிக முக்கியமான இடமாகும். போருக்கு முன்பு, ஈரானின் எண்ணெய் ஏற்றுமதியில் 90 வீதம் இந்தத் தீவின் மூலமே கையாளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-08T20:57:59+00:00</updated>
        </entry>
    </feed>
