<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-08-23T09:31:31+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பு ரயில்வே கடவை அருகே கோர விபத்து ; பரிதாபமாக உயிரிழந்த 8 வயது சிறுமி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/fatal-accident-near-railway-crossing-girl-dies-1787477330"></link>
            <id>https://jvpnews.com/article/fatal-accident-near-railway-crossing-girl-dies-1787477330</id>
            <summary type="text">கொழும்பு ராகம - கந்தானை வீதியில் வல்பொல ரயில்வே கடவைக்கு அருகில் இடம்பெற்ற வீதி விபத்தில் 8 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு ராகம - கந்தானை வீதியில் வல்பொல ரயில்வே கடவைக்கு அருகில் இடம்பெற்ற வீதி விபத்தில் 8 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><h3>மேலதிக விசாரணை</h3><p>
</p><p>


இந்த விபத்து நேற்று (22) இடம்பெற்றுள்ளது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d5b36508-2b0a-4748-88fe-d1af31feba2a/26-6a8abd53a8378.webp' /></p><p>வல்பொல கோவிலில் இருந்து வல்பொல ரயில் நிலையம் நோக்கி பயணித்த கழிவுப் பொருட்களை ஏற்றிச் சென்ற லொறி, ரயில்வே கடவையின் பாதுகாப்பு கதவுகள் மூடப்பட்டிருந்த நிலையில், சாரதியின் கட்டுப்பாட்டை இழந்துள்ளது.
</p><p>


இதையடுத்து, ரயில்வே கடவைக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு கார்கள் மற்றும் மற்றுமொரு லொறி மீது குறித்த லொறி மோதியுள்ளது.
</p><p>


அதேவேளை, அந்த சந்தர்ப்பத்தில் வீதியோரமாக நடந்து சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய் மற்றும் அவரது மகன், மகள் ஆகியோரும் விபத்தில் காயமடைந்து ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
</p><p>


இந்நிலையில், 8 வயதுடைய சிறுமி சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>


விபத்தில் தொடர்புடைய ஒரு லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், கழிவுப் பொருட்களை ஏற்றிச் சென்ற லொறியின் சாரதி திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
</p><p>


சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ராகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp; &nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-23T09:28:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[குருசு நகர் பகுதியில் தொடரும் குப்பை எரிப்பு...! வீடுகளை விட்டு வெளியேறும் மக்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/mannar-residents-suffer-due-to-dump-site-smoke-1787468526"></link>
            <id>https://ibctamil.com/article/mannar-residents-suffer-due-to-dump-site-smoke-1787468526</id>
            <summary type="text">மன்னார் சின்னக்கடை கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட குருசு நகர் பகுதியில் நகர
சபைக்கு சொந்தமான தினசரி கழிவகற்றல் நிலையத்தில் குப்பைகள் திடீரென
எரிக்கப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>மன்னார் சின்னக்கடை கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட குருசு நகர் பகுதியில் நகர
சபைக்கு சொந்தமான தினசரி கழிவகற்றல் நிலையத்தில் குப்பைகள் திடீரென
எரிக்கப்படுவதால் அப்பகுதி மக்கள் கடும் சிரமங்களை எதிர்கொண்டு வருவதாக
தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
குப்பைகள் எடுக்கப்பட்டதாகவும் தொடர்ச்சியாக புகை வெளியேறி குடியிருப்பு
பகுதிகளுக்குள் புகை பரவுவதால் பலர் தங்களது வீடுகளை விட்டு வெளியேறி
பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள்
தெரிவிக்கின்றனர்.
</p><p>
குறிப்பாக கர்ப்பிணிப் பெண்கள், சிறுவர்கள் மற்றும் வயோதிபர்கள் உள்ளிட்டோர்
புகையினால் அதிகளவில் பாதிக்கப்படுவதாகவும் சுவாசிப்பதில் சிரமம் உள்ளிட்ட
பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளை எதிர்கொள்வதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
இதனிடையே, குப்பைகள் தொடர்ந்து எரிவதை கட்டுப்படுத்தும் நோக்கில் மன்னார் நகர
சபையின் தீயணைப்பு வாகனம் மூலம் தீயணைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட
போதிலும் அதனால் எதிர்பார்த்த பயன் கிடைக்கவில்லை என அப்பகுதி மக்கள்
சுட்டிக்காட்டுகின்றனர்.
</p><p>
குப்பைகள் முழுமையாக அகற்றப்படாமல் மீண்டும் மீண்டும் தீப்பற்றுவதால் தீயணைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட பின்னரும் புகை வெளியேறும் நிலை
தொடர்வதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
</p><p>
மேலும், பொலித்தீன் உள்ளிட்ட பல்வேறு கழிவுகள் எரிக்கப்படுவதால் உருவாகும்
புகை சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பை ஏற்படுத்துவதுடன் குடியிருப்பாளர்களின்
அன்றாட வாழ்க்கையையும் பெரிதும் பாதித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>

பல ஆண்டுகளாக தொடரும் இந்தப் பிரச்சினைக்கு இதுவரை நிரந்தரத் தீர்வு காணப்படாத
நிலையில் மன்னார் நகர சபை மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக
தலையிட்டு குப்பை எரிப்பை முற்றாகத் தடுத்து முறையான கழிவு முகாமைத்துவ
நடவடிக்கையை முன்னெடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
</p><p>
தொடர்ச்சியாக வெளியேறும் புகையால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறும் நிலை
ஏற்பட்டுள்ள போதிலும் தீயணைப்பு நடவடிக்கைகள் மட்டுமே மேற்கொள்ளப்படுவதால்
பிரச்சினையின் அடிப்படை காரணம் தீர்க்கப்படவில்லை என மக்கள் கவலை
தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p>[SDHVIPC
]</p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/FJQcrzobjUcEaJJsEVOWpF" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-23T09:28:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thileepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[16,000 பல்கலைக்கழக மாணவர்களுக்கு விடுதி வசதி – அரசாங்கத்தின் புதிய திட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/government-provide-hostel16-000-uni-students-1787471026"></link>
            <id>https://tamilwin.com/article/government-provide-hostel16-000-uni-students-1787471026</id>
            <summary type="text">பல்கலைக்கழகங்களுக்குள் சுதந்திரமான கல்வி கலாச்சாரமொன்று நிலவும் சூழலை
உருவாக்குவதற்காக நாம் ஓர் அரசாங்கம் என்ற வகையில் முதலீட்டை செய்கின்றோம்
என பிர...</summary>
            <content type="html"><![CDATA[<p>பல்கலைக்கழகங்களுக்குள் சுதந்திரமான கல்வி கலாச்சாரமொன்று நிலவும் சூழலை
உருவாக்குவதற்காக நாம் ஓர் அரசாங்கம் என்ற வகையில் முதலீட்டை செய்கின்றோம்
என பிரதமர் ஹரிணி
அமரசூரிய தெரிவித்துள்ளார்.
</p><p>நேற்று (22.08.2026)
வவுனியா பல்கலைக்கழகத்தின் புதிய மாணவர் விடுதிக்காக அடிக்கல் நாட்டும்
நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.</p><h2>சுதந்திரமான கல்விச் சூழல்</h2><p>
</p><p>அவர் மேலும் தெரிவிக்கையில்,

பல தசாப்தங்களின் பின்னர் 2026 ஆம் ஆண்டிலேயே அரச பல்கலைக்கழக மாணவர்களின்
நலன்புரித் துறையினை மேம்படுத்துவதற்காக முதலீடு செய்ய எம்மால் முடிந்தது.
</p><p>இதன் மூலம் 55 விடுதிகளை நிர்மாணிப்பதற்கான பணிகளை நாம் ஆரம்பிக்க
எதிர்பார்க்கின்றோம்.

இந்தத்திட்டத்தின் ஆரம்பம் வவுனியா பல்கலைக்கழகத்திலிருந்து தொடங்குவது குறித்து
நான் உண்மையிலேயே மகிழ்ச்சியடைகின்றேன்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9156da79-6993-4088-b649-5ae0e0b74a5c/26-6a8abb2cf0284.webp' /></p><p>அதுமட்டுமன்றி, மேலும் 03 விடுதிகள் இந்தத்திட்டத்தின்
மூலம் வவுனியா பல்கலைக்கழகத்திற்கு கிடைக்க இருக்கின்றன. அதனூடாக இந்தப்
பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் எதிர்நோக்கிவரும் விடுதிப் பற்றாக்குறை
பிரச்சினைகளுக்கு நிலையான தீர்வுகளை வழங்கக்கூடியதாக இருக்கும் என நாம்
எதிர்பார்க்கின்றோம்.
</p><p>
பல்கலைக்கழகங்களுக்குள் உட்கட்டமைப்பு வசதிகளைக் கட்டியெழுப்பும் போது,
புதிதாக ஆரம்பித்த பல்கலைக்கழகங்கள் மற்றும் நகரப் பகுதிகளுக்கு வெளியில்
அமைந்துள்ள பல்கலைக்கழகங்களுக்கே முன்னுரிமை கொடுத்திருக்கின்றோம்.
</p><p>
அதற்கமைய ரஜரட்ட, தென்கிழக்கு மற்றும் கிழக்கு ஆகிய பல்கலைக்கழகங்களுக்கே இந்த
55 விடுதிகளை நிர்மாணிக்கும் திட்டத்தில் முன்னுரிமையளித்துள்ளோம்.</p><h2>விடுதி வழங்கும் திட்டம்</h2><p>
</p><p>இந்தத்திட்டத்தினூடாக இலங்கையின் ஒட்டுமொத்த பல்கலைக்கழகக் கட்டமைப்பிலுள்ள
சுமார் 16,000 மாணவர்களுக்கு விடுதி வசதிகளை வழங்க முடியும் என நாம்
எதிர்பார்க்கின்றோம்.</p><p>

இந்த 55 விடுதிகளைக் கட்டியெழுப்பும் திட்டத்தினூடாக, சபரகமுவா
பல்கலைக்கழகத்திற்கும் ரஜரட்ட பல்கலைக்கழகத்திற்கும் தலா 7 விடுதித்
திட்டங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9345683a-93be-43fe-8d3d-d317f3c1e607/26-6a8abb2dc1e56.webp' /></p><p>அதேபோன்று, தென்கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு
6 விடுதித் திட்டங்களும், கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு 5 திட்டங்களும், ஊவா
வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்திற்கு 6 திட்டங்களும் பெற்றுக்கொடுக்க நாம்
திட்டமிட்டிருக்கின்றோம்.
</p><p>
அதேபோல, ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்திற்கும் வயம்ப பல்கலைக்கழகத்திற்கும்
தலா 4 திட்டங்கள் வீதம் ஒதுக்கப்பட்டிருக்கின்றன. </p><p>ருஹுணு பல்கலைக்கழகத்திற்கு
4 திட்டங்களும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கு 2 திட்டங்களும் கிடைக்க
இருக்கின்றன. இறுதியாக, மொறட்டுவை, திருகோணமலை மற்றும் கம்பஹா விக்ரமாரச்சி
ஆகிய பல்கலைக்கழகங்களுக்கு தலா 2 விடுதித் திட்டங்கள் வீதம் இந்தத்திட்டத்தின்
மூலம் நாம் ஒதுக்கியுள்ளோம்.</p><h2>எதிர்காலத் தலைமையை உருவாக்கும் இடம்</h2><p>

அத்துடன், இந்த விடுதியை நிர்மாணிக்கும் திட்டமானது மாணவர்களுக்கு உரிய
நன்மைகளைப் பெற்றுக்கொள்ளக்கூடிய வகையில் குறிப்பிட்ட காலப்பகுதிக்குள்
நிறைவுசெய்யப்பட வேண்டும். </p><p>அதேபோன்று, உரிய முறையில் அந்த வளங்களைப்
பாதுகாத்து, பராமரிப்புப் பணிகளைச் சரியாக மேற்கொண்டு அடுத்த தலைமுறையிடம்
கையளிக்கும் பொறுப்பையும் நீங்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/67cbc001-44f3-455b-bcec-413eea936955/26-6a8abb2e8eedd.webp' /></p><p>பல்கலைக்கழகங்கள் என்பவை நாட்டின் எதிர்காலத் தலைமையை உருவாக்கும் இடங்கள்
என்பதால், பல்கலைக்கழக மாணவர்களுக்குத் தரமான கற்றல் செயற்பாடுகள், முழுமையான
உட்கட்டமைப்பு வசதிகளைப் போன்றே சரியான அரசியல் மற்றும் கலாச்சார
வாழ்க்கையையும் வழங்க வேண்டியுள்ளது. </p><p>அதனாலேயே பல்கலைக்கழகங்களுக்குள்
சுதந்திரமான கல்விக் கலாச்சாரமொன்று நிலவும் சூழலை உருவாக்குவதற்காக நாம் ஓர்
அரசாங்கம் என்ற வகையில் இந்த முதலீட்டை செய்கின்றோம் என குறிப்பிட்டுள்ளார்.ஷ</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-23T09:24:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[குறிவைக்கப்பட்ட வானாத்தே சத்துவின் நெருங்கிய சகாவின் வீடு..சிசிடிவியில் சிக்கிய மர்ம நபரால் பரபரப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/grenade-attack-carried-house-vanath-sathu-disciple-1787476214"></link>
            <id>https://tamilwin.com/article/grenade-attack-carried-house-vanath-sathu-disciple-1787476214</id>
            <summary type="text">பொரளை, லெஸ்லி ரணகல மாவத்தையில் உள்ள 141 வத்தை பகுதியில் அமைந்துள்ள வீடொன்றின் மீது கைக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

துபாயில் கைது செய்யப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொரளை, லெஸ்லி ரணகல மாவத்தையில் உள்ள 141 வத்தை பகுதியில் அமைந்துள்ள வீடொன்றின் மீது கைக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.</p><p>

துபாயில் கைது செய்யப்பட்ட ‘வானாத்தே சத்து’ எனப்படும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழு உறுப்பினரின் நெருங்கிய சகா ஒருவருக்குச் சொந்தமான வீட்டின் மீதே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும், வீசப்பட்ட கைக்குண்டு வெடிக்கவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><h2>மேலதிக விசாரணை</h2><p>

இன்று (23) காலை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், சந்தேகநபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் வந்து கைக்குண்டை வீசும் காட்சி அருகிலிருந்த CCTV கேமராவில் பதிவாகியுள்ளது.
</p><p>
சம்பவத்தைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6347ba3b-6e02-4e7a-993f-9eef66537a1c/26-6a8abbf2e19cc.webp' /></p><p>
</p><p>
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்களுக்கு இடையில் இவ்வாறான கைக்குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்படும் புதிய போக்கு தற்போது அதிகரித்து வருவதாக பாதுகாப்புத் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
</p><p>
கடந்த சில தினங்களுக்கு முன்னர் ரத்மலானை, ஸ்ரீ ஞானேந்திர மாவத்தையில் உள்ள வீடொன்றின் மீதும் இதேபோன்ற கைக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது. அதில் ஒரு கைக்குண்டு வெடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.<br><br><b><i><a href="https://youtu.be/6eC2li0RwTQ" target="_blank">காணொளிக்கு இங்கே அழுத்தவும்..</a></i></b></p>]]></content>
            <updated>2026-08-23T09:23:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாடெங்கும் அதிகரிக்கும் வெப்பநிலை ; வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/temperatures-to-rise-across-country-issues-warning-1787476637"></link>
            <id>https://jvpnews.com/article/temperatures-to-rise-across-country-issues-warning-1787476637</id>
            <summary type="text">நாட்டில் அதிகபட்சமாகப் பொலன்னறுவையில் 37.2 செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன், வவுனியாவில் 35.7...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டில் அதிகபட்சமாகப் பொலன்னறுவையில் 37.2 செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
</p><p>
அத்துடன், வவுனியாவில் 35.7 செல்சியஸ், அநுராதபுரத்தில் 33.7 செல்சியஸ், யாழ்ப்பாணத்தில் 33 செல்சியஸ், கொழும்பில் 31.4 செல்சியஸ் மற்றும் காலி 29.6 செல்சியஸ் என்ற அளவில் வெப்பநிலைகள் பதிவாகியுள்ளன.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5ef67f89-f6c6-4126-93b4-e72b229d72b3/26-6a8aba9f351a3.webp' /></p><p>நுவரெலியாவில் நாட்டின் மிகக் குறைந்தபட்ச அதிகபட்ச வெப்பநிலையாக 19.7 செல்சியஸ் பதிவாகியுள்ளது.
</p><p>
பண்டாரவளையில் 28.8 செல்சியஸ் கட்டுக்கஸ்தோட்டையில் 29.0 செல்சியஸ் வெப்பநிலையும் பதிவாகின.
</p><p>
நாட்டின் வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்குப் பகுதிகளிலேயே அதிகளவிலான வெப்பநிலை நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களத் தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-23T09:17:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Fathima</name>
            </author>
            <title type="text"><![CDATA[அந்த பெண் நானில்லை! அமைச்சர் கீர்த்தனா விளக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/tvk-minister-keerthana-about-viral-video-1787476346"></link>
            <id>https://ibctamilnadu.com/article/tvk-minister-keerthana-about-viral-video-1787476346</id>
            <summary type="text">கடந்த சில நாட்களாக காரில் இருந்து பெண் ஒருவர் இறங்குவது போன்ற வீடியோ வைரலான நிலையில் அதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார் அமைச்சர் கீர்த்தனா.

இதுதொடர...</summary>
            <content type="html"><![CDATA[<p>கடந்த சில நாட்களாக காரில் இருந்து பெண் ஒருவர் இறங்குவது போன்ற வீடியோ வைரலான நிலையில் அதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார் அமைச்சர் கீர்த்தனா.
</p><p>
இதுதொடர்பில் அவரது எக்ஸ் தள பதிவில், ஒரு பெண் தன் அன்றாட வேலையை பார்த்துக்கொண்டு இயல்பாக செல்லும் வீடியோ ஒன்று.. இந்த அளவிற்கு கொந்தளிப்பை ஏற்படுத்தும் போது அதன் பின்னணியில் உள்ள பலவீனமான பிற்போக்குத்தனமான மனநிலையை தெளிவாக காட்டுகிறது.</p><p>

ஆனால் எனக்கு இதில் ஆச்சரியம் எதுவும் இல்லை! பெண்களுக்கு எதிராக தொடர்ச்சியாக மிகவும் இழிவான கருத்துகளை தெரிவிக்கும் பின்னணி கொண்ட ஒரு தலைவரின் ஆதரவாளர்களிடம் இருந்து இதை தவிர வேறு எதை எதிர்பார்க்க முடியும்?</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8b5ea151-f2e4-4138-9619-2c144e42c12a/26-6a8aba36dce5e.webp' /><br></p><p>
</p><p>
தெளிவுபடுத்துவதற்காக கூறுகிறேன். அந்த வீடியோவில் இருக்கும் பெண் நான் இல்லை. ஒருவேளை அது நானாகவே இருந்தாலும் அதில் என்ன பிரச்சனை இருக்கப்போகிறது?
</p><p>
ஒரு பெண்ணின் உடை, அவரது தோற்றம் அல்லது அவரது மகிழ்ச்சி ஆகியவை ஏன் இன்னும் பொதுவெளியில் விமர்சனத்திற்குரிய விஷயங்களாக நடத்தப்படுகின்றன?</p><p>

எங்களது கொள்கைள், ஆட்சிமுறை அல்லது சாதனைகள் குறித்து எங்களை அவர்களால் எதிர்கொள்ள முடியாத போது, தலைவர்கள் மற்றும் அவர் தம் குடும்பத்தினரின் தனிப்பட்ட வாழ்க்கையை குறித்து போலிக் கதைகளை உருவாக்கத் தொடங்குகிறார்கள்.
</p><p>
நேர்மறையாக பங்களிக்க எந்தவொரு விஷயமும் இல்லாதவர்கள் கையாளும் மிகப்பழமையான ஆயுதமே பெண்களுக்கெதிரான வெறுப்புணர்வுதான் என்று பதிவிட்டிருக்கிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a1a82b8c-2742-4f2d-93dd-73e5c096aa40/26-6a8aba3792287.webp' /><br></p>]]></content>
            <updated>2026-08-23T09:15:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[மின்சார தொடருந்து திட்டம் தொடர்பில் வெளியான புதிய அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/electric-trains-to-start-next-year-1787474652"></link>
            <id>https://tamilwin.com/article/electric-trains-to-start-next-year-1787474652</id>
            <summary type="text">கொழும்பு நகரம் மற்றும் அதன் புறநகர் பகுதிகளை உள்ளடக்கிய புதிய மின்சார தொடருந்து திட்டத்திற்கான பணிகள் அடுத்த ஆண்டு தொடங்கும் என மாகாணசபைகள் மற்றும் உள...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு நகரம் மற்றும் அதன் புறநகர் பகுதிகளை உள்ளடக்கிய புதிய மின்சார தொடருந்து திட்டத்திற்கான பணிகள் அடுத்த ஆண்டு தொடங்கும் என மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி பிரதி அமைச்சர் ருவன் செனரத் தெரிவித்துள்ளார். </p><p>

ஹம்பாந்தோட்டையில் நடைபெற்ற ஒரு பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.</p><h2>அரசாங்கத்தின் நோக்கம்</h2><p>

மேலும் தெரிவிக்கையில், இத்திட்டத்திற்கு தேவையான ஆரம்பத் திட்டங்கள் ஏற்கனவே தயாரிக்கப்பட்டு விட்டன.

இந்த சேவையின் மூலம் பொதுமக்களுக்கு மிகவும் திறமையான மற்றும் மேம்பட்ட போக்குவரத்து வசதிகளை வழங்குவதே அரசாங்கத்தின் நோக்கம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/197b2eb2-c89e-44bd-920e-4b10bd303625/26-6a8ab9b3eea5e.webp' /></p><p>
</p><p>
அதன்படி, பெலியட்டாவிலிருந்து 'ருஹுனு குமாரி' தொடருந்து மூலம் வரும் பயணிகள், பானந்துறையில் இறங்கி மின்சார தொடருந்து மூலம் கொழும்பை சென்றடையும் வாய்ப்பைப் பெறுவார்கள் என குறிப்பிட்டுள்ளார். </p><p>

மேலும், நாட்டின் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைப்பில் தாமதமான பல அபிவிருத்தி பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-23T09:13:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[மட்டக்களப்பில் இரவில் நடந்த கோர விபத்து - பறிபோன இரு உயிர்கள்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/batticalo-accident-2-young-boys-death-1787474610"></link>
            <id>https://tamilwin.com/article/batticalo-accident-2-young-boys-death-1787474610</id>
            <summary type="text">மட்டக்களப்பு –&amp;nbsp; கோட்டைக்கல்லாறு கண்ணகி அம்மன் ஆலயத்திற்கு அருகில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி, வீதியோரத்தில் இருந்த மாணவர்கள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>மட்டக்களப்பு –&nbsp; கோட்டைக்கல்லாறு கண்ணகி அம்மன் ஆலயத்திற்கு அருகில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி, வீதியோரத்தில் இருந்த மாணவர்கள் குழுவினரையும் மோதியதில் பயங்கர விபத்து இடம்பெற்றுள்ளது.
</p><p>
நேற்று (22) இரவு இடம்பெற்ற இந்த விபத்தில் ஒரு இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன், மேலும் 6 பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p><h2>பயங்கர விபத்து&nbsp;</h2><p>
</p><p>
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலும் ஒரு இளைஞர் உயிரிழந்துள்ளார்.

சிகிச்சை பெற்று வருபவர்களில் 3 சிறுமிகளும் 2 சிறுவர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2f2f0c74-b2c0-45e1-a7cb-9fc307b86ecd/26-6a8ab79393aa5.webp' /></p><p>
</p><p>நேற்று இரவு சுமார் 9.21 மணியளவில், கோட்டைக்கல்லாற்றில் நான்கு இளைஞர்கள் இரண்டு மோட்டார் சைக்கிள்களில் மட்டக்களப்பு – கொட்டக்கார் வீதியில் பயணித்துள்ளனர்.
</p><p>
கோட்டைக்கல்லாறு கண்ணகி அம்மன் ஆலயத்திற்கு அருகில் வைத்து இரண்டு மோட்டார் சைக்கிள்களும் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.</p><h2>வைத்தியசாலையில் அனுமதி</h2><p>
</p><p>
விபத்தில் சம்பந்தப்பட்ட ஒரு மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து, வீதியை கடப்பதற்காக காத்திருந்த மூன்று மாணவர்கள் மீது மோதியதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/814ce354-3e8d-49ca-b856-089c03527b7e/26-6a8ab7944337e.webp' /></p><p>
இம்முறை க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மூன்று மாணவர்கள், மேலதிக வகுப்புகள் முடிந்து வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தபோதே இந்த துரதிர்ஷ்டவசமான விபத்தில் சிக்கியுள்ளனர்.

படுகாயமடைந்த சிறுமி ஒருவரின் ஒரு காலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.</p><p>

விபத்தில் 18 வயதான கிஷோன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். </p><p>மேலும் 6 பேர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவர்களில் 17 வயதான கதிர்சன் என்ற சிறுவன் இன்று (22) காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-23T09:04:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Tony</name>
            </author>
            <title type="text"><![CDATA[மூக்குத்தி அம்மன் சீரியலில் முன்னணி சீரியல் நடிகர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/popular-actor-in-new-mookuthi-amman-serial-1787475163"></link>
            <id>https://cineulagam.com/article/popular-actor-in-new-mookuthi-amman-serial-1787475163</id>
            <summary type="text">மூக்குத்தி அம்மன்மூக்குத்தி அம்மன் என்ற டைட்டிலில் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் வெளிவந்து ரசிகர்களை கவர்ந்த படம். இதை தொடர்ந்து இந்த பெயர் செம பேமஸ் ஆனது...</summary>
            <content type="html"><![CDATA[<h2>மூக்குத்தி அம்மன்</h2><p>மூக்குத்தி அம்மன் என்ற டைட்டிலில் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் வெளிவந்து ரசிகர்களை கவர்ந்த படம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0a94fe92-7666-40e0-ad3d-9fcec0add746/26-6a8ab4de29be2.webp' /></p><p> இதை தொடர்ந்து இந்த பெயர் செம பேமஸ் ஆனது, உடனே ஜீ தமிழில் மூக்குத்தி அம்மன் என்ற டைட்டில் வைத்து ஒரு சீரியல் ஆரம்பித்துள்ளனர்.&nbsp;இந்த சீரியல் இன்னும் ஒளிபரப்பப்படவில்லை. ஆனால், இதில் நடிக்கும் நடிகர், நடிகைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/10675ec1-a745-437f-9eb6-de712151893c/26-6a8ab4df8ed39.webp' /></p><p></p><h2>நடிகர் ஸ்ரீ</h2><p> </p><p>இந்நிலையில் தற்போது மூக்குத்தி அம்மன் சீரியலில், பிரபல சீரியல் நடிகர் ஸ்ரீ ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் என்ற தகவல் கிடைத்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/48eb2de9-2ddb-40b2-a947-0e92c2532e9c/26-6a8ab4ded70a7.webp' /></p><p> அதி விரைவில் வரவிருக்கும் இந்த மூக்குத்தி அம்மன் சீரியல் கண்டிப்பாக ரசிகர்களுக்கு செம விருந்தாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-23T09:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிம்மத்தில் புதன் சஞ்சாரம்: இந்த ராசிகளுக்கு ராஜயோகம் உறுதி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/mercury-transit-in-leo-zodias-who-get-huge-luck-1787472423"></link>
            <id>https://manithan.com/article/mercury-transit-in-leo-zodias-who-get-huge-luck-1787472423</id>
            <summary type="text">Mercury Transit In Leo : ஜோதிடத்தின் படி, நவகிரகங்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றி மனித வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அவற்றில் புத...</summary>
            <content type="html"><![CDATA[<p>Mercury Transit In Leo : ஜோதிடத்தின் படி, நவகிரகங்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றி மனித வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அவற்றில் புத்திசாலித்தனம், பேச்சு, கல்வி, வியாபாரம் ஆகியவற்றின் காரணியாக புதன் கருதப்படுகிறார்.
</p><p>
சந்திரனுக்கு அடுத்தபடியாக குறுகிய காலத்தில் ராசி மாற்றம் செய்யும் புதன், மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியாவார். ஆகஸ்ட் 22 அன்று சிம்ம ராசிக்குள் நுழைந்த புதன், செப்டம்பர் 7 வரை அங்கு சஞ்சரிக்கிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b18de083-d94a-4aaa-a2cc-9ae9bde6c3de/26-6a8ab47e9e449.webp' /></p><p></p><p> </p><p>சிம்ம ராசியின் அதிபதியான சூரியனும் அங்கு இருப்பதால், புதாதித்ய ராஜயோகம் உருவாகியுள்ளது.

இதன் தாக்கம் 12 ராசிகளிலும் காணப்பட்டாலும், சில ராசிக்காரர்கள் வேலை மற்றும் நிதி நிலையில் நல்ல முன்னேற்றத்தைப் பெறக்கூடும். </p><p>சிம்ம ராசியில் சஞ்சரிக்கும் புதனால் அதிக பலன் பெறப்போகும் ராசிகள் யார் யார் என இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.</p><h2>கடகம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3c425aaa-fd11-4a57-b837-4d422e7ec8f4/26-6a8ab47f4dae5.webp' /></p><h2>
</h2><p>கடக ராசியின் 2-ம் வீட்டில் புதன் சஞ்சரிப்பதால், நிதி நிலை மேம்படும். புதன் மற்றும் சூரியனின் அருளால் தொழிலதிபர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். </p><p>நீண்ட காலமாக சிக்கியிருந்த பணம் கைக்கு வரும். வியாபாரிகளுக்கு எதிர்பாராத நிதி ஆதாயங்கள் கிடைக்கும் குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் நீங்கி, உறவுகள் வலுப்படும்.</p><p>புதிய வழிகளில் வருமானம் கிடைப்பதற்கான வழிகள் திறக்கும். குறிப்பாக புதிய தொழில் தொடங்குவதற்கான நேரம் கூடிவரும்.</p><p>
</p><h2>
ரிஷபம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d8e066ef-3a2c-49c0-b95a-cb0d459bd8b8/26-6a8ab47ff357f.webp' /></p><p>
ரிஷப ராசியின் 4-ம் வீட்டில் சூரியன் சஞ்சரிப்பதால், மகிழ்ச்சியும் செழிப்பும் அதிகரிக்கும். புதாதித்ய ராஜயோகம் இருந்தால், புதிய வீடு அல்லது வாகனம் வாங்கும் வாய்ப்பு கிடைக்கலாம். </p><p>பணியிடத்தில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் தேடி வரும். உங்களின் கடின உழைப்புக்கு உயர் அதிகாரிகளின் பாராட்டும் கிடைக்கும்.</p><p>திருமண வாழ்வில் நீண்ட காலமாக இரு்நது வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி, மகிழ்ச்சியான சூழல் உருவாகும்.&nbsp;</p><p>
</p><h2>
மீனம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0799b863-9e61-4032-9b2a-63fedd23dd86/26-6a8ab480a3ea7.webp' /></p><p></p><h2>
</h2><p>மீன ராசியின் 6-ம் வீட்டில் புதன் சஞ்சரிப்பதால், நீண்டகால உடல்நலப் பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கலாம். </p><p>வெளிநாடு தொடர்பான தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபமும், வியாபார விரிவாக்கத்திற்கான வாய்ப்புகளும் கிடைக்கும். </p><p>சிக்கிய பணம் வந்து சேரும். காதல் மற்றும் திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரித்து, வாழ்க்கைத்துணையின் ஆதரவு கிடைக்கும். புதிய சொத்து வாங்கும் திட்டங்களும் நிறைவேற வாய்ப்புள்ளது.</p><p><b>இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;</b> &nbsp; &nbsp; &nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW&nbsp;</a></u></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-23T08:51:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[நிக்கோலஸ் பூரனின் அதிரடி வீண்: வாணவேடிக்கை காட்டிய பாகிஸ்தான் வீரர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/shadab-khan-blast-52-runs-in-20-balls-cpl-2026-1787474786"></link>
            <id>https://news.lankasri.com/article/shadab-khan-blast-52-runs-in-20-balls-cpl-2026-1787474786</id>
            <summary type="text">Antigua and Barbuda won by 5 wickets: கரீபியன் டி20 போட்டியில், ஆன்டிகுவா அன்ட் பார்புடா ஃபால்கன்ஸ் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ட்ரின்பாகோ நைட் ரை...</summary>
            <content type="html"><![CDATA[<p>Antigua and Barbuda won by 5 wickets: கரீபியன் டி20 போட்டியில், ஆன்டிகுவா அன்ட் பார்புடா ஃபால்கன்ஸ் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தியது.
</p><p>
நார்த் சவுண்டில் நடந்த கரீபியன் டி20 போட்டியில், ஆன்டிகுவா அன்ட் பார்புடா ஃபால்கன்ஸ் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.&nbsp;</p><h2>நிக்கோலஸ் பூரன் 43</h2><p>
ஆன்டிகுவா அன்ட் பார்புடா ஃபால்கன்ஸ் மற்றும் ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி நார்த் சவுண்டின் சர் விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் நடந்தது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1ba7a773-43cf-4e97-b4bc-912b44f6c4b3/26-6a8ab40fba0e0.webp' />&nbsp;</p><p></p><p>
முதலில் ஆடிய ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 165 ஓட்டங்கள் எடுத்தது. </p><p>கோலின் முன்ரோ 46 (33) ஓட்டங்களும், நிக்கோலஸ் பூரன் 17 பந்துகளில் 2 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 43 ஓட்டங்களும் விளாசினர்.
</p><h2>
ஷதாப் கான்&nbsp;வாணவேடிக்கை </h2><p>கார்ன்வால், ஜோஷுவா தலா 2 விக்கெட்டுகளும், ஷாமர் மற்றும் ஷதாப் கான் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். </p><p>

பின்னர் ஆடிய ஆன்டிகுவா அன்ட் பார்புடா ஃபால்கன்ஸ் அணி 18.3 ஓவர்களில் 168 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.</p><p>

ஷதாப் கான் (Shadab Khan) 20 பந்துகளில் 5 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 52 ஓட்டங்கள் விளாசினார். குசல் பெரேரா 24 பந்துகளில் 34 ஓட்டங்கள் விளாசினார்.&nbsp; &nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/38854ebb-7dca-4a51-a423-f0fd6766c0f8/26-6a8ab4113b28b.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ed607d59-0aa8-4db8-8d90-b59233961d75/26-6a8ab4108b424.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-23T08:46:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானியாவில் வெற்றிகரமான சைபர் தாக்குதல் - மின் உற்பத்தி நிலையத்தை முடக்கிய ஈரான்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/iranian-hackers-shut-down-uk-power-plant-1787474496"></link>
            <id>https://news.lankasri.com/article/iranian-hackers-shut-down-uk-power-plant-1787474496</id>
            <summary type="text">Iranian hackers shut down UK power plant: பிரித்தானிய மின் உற்பத்தி நிலையத்தை ஈரான் ஹேக்கர்கள் முடக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரித்தானியாவில் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Iranian hackers shut down UK power plant: பிரித்தானிய மின் உற்பத்தி நிலையத்தை ஈரான் ஹேக்கர்கள் முடக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><h2>

பிரித்தானியாவில் இதுவரை நடந்த மிகப்பெரிய சைபர் தாக்குதல்</h2><p>பிரித்தானியாவில் உள்ள ஒரு சிறிய மின் நிலையம் மீது ஈரான் ஹேக்கர்கள் நடத்திய சைபர் தாக்குதல் காரணமாக அந்த நிலையம் நான்கு நாட்கள் செயலிழந்தது.</p><p>டெலிகிராப் செய்தி நிறுவனம் வெளியிட்ட தகவலின்படி, இது பிரித்தானியாவில் இதுவரை நடந்த மிகப்பெரிய மற்றும் வெற்றிகரமான சைபர் தாக்குதலாக கருதப்படுகிறது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8708f595-a908-4534-af47-4fb236437fb9/26-6a8ab241b61a4.webp' /></p><h2>எச்சரிக்கை மணி</h2><p>அந்த மின் நிலையம் சிறிய அளவிலானது என்பதால், நாட்டின் மொத்த மின்சார விநியோகத்தில் பெரிய பாதிப்பு ஏற்படவில்லை. ஆனால், இந்த சம்பவம் தேசிய பாதுகாப்பு அமைப்புகளுக்கு மிகுந்த எச்சரிக்கை மணியை அடித்துள்ளது.
</p><p>
இந்த தாக்குதல், கடந்த மாதம் அமெரிக்காவின் 12 மாநிலங்களில் நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது சைபர் தாக்குதல் நடந்த அதே நேரத்தில் நடந்ததாக கூறப்படுகிறது. அப்போது, அமெரிக்காவில் பல இடங்களில் குடிநீர் விநியோகத்தில் சிக்கல்கள் ஏற்பட்டன.
</p><p></p><p>பிரித்தானிய அரசு, மின் நிறுவனங்களின் தலைமை அதிகாரிகளுக்கு அவசர அறிவிப்புகளை அனுப்பி, பாதுகாப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்துமாறு அறிவுறுத்தியுள்ளது. தேசிய சைபர் பாதுகாப்பு மையம் (NCSC) இந்த சம்பவத்தை விசாரித்து வருகிறது.
</p><p>
பிரித்தானிய மற்றும் அமெரிக்க உளவுத்துறை அமைப்புகள், ஈரான், ரஷ்யா, சீனா, வட கொரியா போன்ற நாடுகளின் ஹேக்கர்கள் தொடர்ந்து முக்கியமான தேசிய அமைப்புகளை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருவதாக எச்சரித்துள்ளன.</p><p></p><h2>
திறனை வெளிப்படுத்திய ஈரான்</h2><p>இந்த தாக்குதல் பொதுமக்களுக்கு நேரடி பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்றாலும், ஈரான் ஹேக்கர்கள் பிரித்தானியாவின் முக்கிய அமைப்புகளை முடக்கக்கூடிய திறன் கொண்டவர்கள் என்பதை நிரூபிக்க முயன்றதாக நிபுணர்கள் கருதுகின்றனர்.</p><p>அரசாங்கம் வெளியிட்ட அறிக்கையில், “பிரித்தானியாவின் மின்சார அமைப்பு மிகவும் வலுவானது. இந்த சம்பவம் சிறிய அளவிலான நிலையத்தை மட்டுமே பாதித்தது. நாட்டின் மொத்த மின்சார விநியோகத்தில் எந்த ஆபத்தும் இல்லை” என்று தெரிவித்துள்ளது.
</p><p>
இந்த சம்பவம், எதிர்காலத்தில் பெரிய அளவிலான சைபர் தாக்குதல்கள் நிகழ வாய்ப்புகள் இருப்பதை உணர்த்துகிறது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-23T08:38:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[சந்தைக்கு வெளியிட தயார் நிலையிலிருந்த குடிநீர் போத்தல்கள் பறிமுதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/water-bottles-with-fake-sls-standard-logo-seized-1787471639"></link>
            <id>https://tamilwin.com/article/water-bottles-with-fake-sls-standard-logo-seized-1787471639</id>
            <summary type="text">SLS தரநிலை சின்னம் போலியாக பொறிக்கப்பட்ட சுமார் 8500 குடிநீர் போத்தல்களை நுகர்வோர் விவகார ஆணையகம் பறிமுதல் செய்துள்ளது. 

அவிசாவளை பகுதியில் நடத்தப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>SLS தரநிலை சின்னம் போலியாக பொறிக்கப்பட்ட சுமார் 8500 குடிநீர் போத்தல்களை நுகர்வோர் விவகார ஆணையகம் பறிமுதல் செய்துள்ளது.</p><p> 

அவிசாவளை பகுதியில் நடத்தப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. </p><p>

குறித்த குடிநீர், அமித்திரிகல, ருவன்வெல்லவில் உள்ள ஒரு உற்பத்தி ஆலையில் தயாரிக்கப்பட்டு, அவிசாவளை பகுதியில் உள்ள ஒரு கிடங்கில் சேமித்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.</p><h2>போலி சின்னம் மற்றும் சான்றிதழ் எண்</h2><p> 

குடிநீர் போத்தல்களில் SLS தரநிலை சின்னமும், 894 என்ற சான்றிதழ் எண்ணும் போலியாக குறிப்பிடப்பட்டிருந்ததை அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d24dbd2e-025b-48e5-98d4-740f1d7a33d3/26-6a8ab0e83dc1d.webp' /></p><p>

இவை சந்தைக்கு வெளியிடுவதற்காக தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தவை என விசாரணைகளில் தெரியவந்துள்ளது. </p><p>

இதனை தொடர்ந்து சுமார் 8500 போத்தல்கள் சீல் வைக்கப்பட்டு அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், மேலதிக விசாரணைகள் முடிந்த பிறகு சம்பந்தப்பட்ட தரப்பினர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நுகர்வோர் ஆணையகம் தெரிவித்துள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-23T08:36:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கைக் குற்றவாளிகள் டுபாயில் கைது : காவல்துறை வெளியிட்ட அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sri-lankan-criminals-arrested-in-dubai-1787467574"></link>
            <id>https://ibctamil.com/article/sri-lankan-criminals-arrested-in-dubai-1787467574</id>
            <summary type="text">டுபாயில் மறைந்திருந்த இலங்கை குற்றவாளிகள் சிலர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு பாதுகாப்புப் படையினர் இலங்கை பாதுகாப்புப் பிரிவினருக்கு அதிகாரபூர்வம...</summary>
            <content type="html"><![CDATA[<p>டுபாயில் மறைந்திருந்த இலங்கை குற்றவாளிகள் சிலர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு பாதுகாப்புப் படையினர் இலங்கை பாதுகாப்புப் பிரிவினருக்கு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.</p><p>அதன்படி, குற்றவாளிகளான கொண்ட ரஞ்சி, எல்டோ தர்மே, பஸ் லலித் மற்றும் வனாதே சது ஆகியோர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக டுபாய் பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.</p><p>
 

இந்தநிலையில், பஸ் லலித் என்பவரை நாளை (24) நாட்டிற்கு அழைத்து வருவதற்காக விசேட காவல்துறை குழுவொன்று டுபாய் சென்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.</p><p></p><h2>டுபாய் பாதுகாப்புப் படை</h2><p>

 

டுபாயில் பல இலங்கை குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக கடந்த காலங்களில் தொடர்ந்து தகவல்கள் வெளியாகியிருந்தன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/08d94109-d2c2-45e1-a096-ce430a974f5d/26-6a8aac813efa5.webp' /></p><p>

 

அவற்றில், முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவின் தனிப்பட்ட செயலாளரைக் கொலை செய்ய முயன்ற குற்றச்சாட்டை எதிர்கொண்டுள்ள கொண்ட ரஞ்சி, மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் அணித் தலைவர் தனஞ்சய டி சில்வாவின் தந்தையைக் கொலை செய்த குற்றச்சாட்டை எதிர்கொண்டுள்ள எல்டோ தர்மே ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாக டுபாய் பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.</p><p>

 

அத்துடன், பொரளை வனாதமுல்ல பகுதியில் கடந்த காலத்தில் பல கொலைகளைச் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள வனாதே சத்து என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பாதுகாப்புப் படையினருக்கு காவல்துறையினர் தெரிவித்தனர்.

 

</p><p>இவ்வாறான பின்னணியில், கடந்த ஆண்டு டுபாயில் கைது செய்யப்பட்ட 'பஸ் லலித்' என்ற குற்றவாளி நாளை நாட்டிற்கு அழைத்து வரப்படவுள்ளார்.</p><p></p><h2>காவல்துறை மா அதிபரின் மேற்பார்வை</h2><p>

 

இலங்கையின் குற்றப் புலனாய்வுத் திணைக்களம், மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் மற்றும் அரச புலனாய்வு ​சேவை ஆகியவை அந்நாட்டு பாதுகாப்புப் படையினருடன் இணைந்து நடத்திய கூட்டு நடவடிக்கையிலேயே அவர் கைது செய்யப்பட்டதாக குறிப்பிடப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/623a390c-7ad6-448f-abc4-f3ecb487045b/26-6a8aac8064636.webp' /></p><p>
 

காவல்துறை மா அதிபர் பிரியந்த வீரசூரியவின் நேரடி மேற்பார்வையில், சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் ரன்மல் கொடிதுவக்குவின் வழிகாட்டலில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.</p><p>
</p><p>
 

மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் கமல் ஆரியவன்ச தலைமையிலான குழுவினர் சந்தேகநபரை நாட்டிற்கு அழைத்து வரவுள்ளனர்.</p><p>இதேவேளை ஹங்வெல்ல பகுதியில் கப்பம் கோரியமை மற்றும் பல கொலைகளைச் செய்தமை தொடர்பில் இவர் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-23T08:36:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Tony</name>
            </author>
            <title type="text"><![CDATA[சயமரியாதை தான் முக்கியம், பிக்பாஸ் காமன் மேன் நிகழ்ச்சியை தாக்கிய பாலாஜி முருகதாஸ்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/balaji-criticizes-bigg-boss-common-man-show-1787463950"></link>
            <id>https://viduppu.com/article/balaji-criticizes-bigg-boss-common-man-show-1787463950</id>
            <summary type="text">பிக்பாஸ் நிகழ்ச்சி ரியாலிட்டி ஷோவில் மிகப்பெரிய ஷோ. இந்த ஷோவை முதலில் கமல்ஹாசன் தொகுத்து வழங்க தற்போது விஜய் சேதுபதி தொகுத்து வழங்குகிறார். இதில் காமெ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிக்பாஸ் நிகழ்ச்சி ரியாலிட்டி ஷோவில் மிகப்பெரிய ஷோ. இந்த ஷோவை முதலில் கமல்ஹாசன் தொகுத்து வழங்க தற்போது விஜய் சேதுபதி தொகுத்து வழங்குகிறார். </p><p>இதில் காமென் மேன் கலந்துக்கொள்ளும் படி பிக்பாஸ் காமென் மேன் நிகழ்ச்சி நடக்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/feedd903-1ea6-433d-baa4-71e3d054ee6d/26-6a8a89121c69c.webp' /></p><p> </p><p>இதில் வரும் போட்டியாளர்களுக்கு சில எல்லை மீறிய டாஸ்க் வைக்கின்றனர்.</p><p>இதை பார்த்த பிக்பாஸ் போட்டியாளர் பாலாஜி முருகதாஸ் சுயமரியாதை முக்கியம், கொஞ்சம் சுயமரியாதையுடன் நடத்துங்கள் என கோபமாக தன் கருத்தை தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/781baf42-38f1-43ec-bff3-a3869cefb9cf/26-6a8a891165e9b.webp' /></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-23T08:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[தீர்வின்றி தொடரும் நிலமிழந்த பலாலி மக்களின் கோரிக்கை போராட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/palali-people-s-protest-1787472994"></link>
            <id>https://ibctamil.com/article/palali-people-s-protest-1787472994</id>
            <summary type="text">பலாலி மக்களின் பூர்வீக நிலங்களை இராணுவப் பிடியிலிருந்து விடுவித்து, தமது
இயல்பு வாழ்வை மீள உறுதிப்படுத்துமாறு கோரி, நிலமிழந்த பலாலி மக்கள் இன்று
10ஆ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பலாலி மக்களின் பூர்வீக நிலங்களை இராணுவப் பிடியிலிருந்து விடுவித்து, தமது
இயல்பு வாழ்வை மீள உறுதிப்படுத்துமாறு கோரி, நிலமிழந்த பலாலி மக்கள் இன்று
10ஆவது வாரமாகவும் அமைதிவழிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
</p><p>
பலாலிச் சந்தியில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள், “அனுர அரசே, மக்களின் இயல்பு
வாழ்வுக்கு இடையூறாக இருக்காதே”, “எங்கள் பூர்வீக நிலங்களை எங்களிடம் மீளக்
கையளி”, “எங்கள் நிலம் எங்களுக்கு வேண்டும்”, “இராணுவப் பிடியிலிருந்து எங்கள்
காணிகளை விடுவி” உள்ளிட்ட கோசங்களை எழுப்பியவாறு தமது கோரிக்கைகளை
வலியுறுத்தினர்.</p><p>

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க அண்மையில் காணி விடுவிப்பு தொடர்பில்
வெளியிட்டுள்ள கருத்துக்களை நடைமுறைப்படுத்தி, பலாலி மக்களின் பூர்வீக காணிகளை
அவர்களிடம் மீளக் கையளிக்க வேண்டும் என்றும் போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.</p><p></p><h2>நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல்</h2><p>
</p><p>
இதேவேளை, கடந்த வாரம் நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்ட மக்கள், பலாலி
செபஸ்ரியார் ஆலயம் அமைந்திருந்த இடத்திலிருந்து கறுப்பு உடை அணிந்து,
கறுப்புக் கொடிகளை ஏந்தியவாறு ஊர்வலமாக பலாலிச் சந்தி வரை சென்று,
பலாலிச் சந்தியில் அமைந்துள்ள வீதிச் சோதனைச் சாவடிக்கு முன்பாக ஒன்றுகூடிய
போராட்டக்காரர்கள், தமது பூர்வீக நிலங்களை விடுவிக்குமாறு கோரி பல்வேறு
கோசங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4426c4bc-d1c0-4a4a-a96a-19af0d900332/26-6a8aaf1a8e6d8.webp' /></p><p>
</p><p>
இந்நிலையில், காணி விடுவிப்பைக் கோரி முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின்போது
பொதுப் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதாகக் கூறி, வேலணை பிரதேச சபை
உறுப்பினர் அனுசியா ஜெயகாந்த், ஜனநாயகக் கட்சியின் தலைவர் வேந்தன் உள்ளிட்ட
ஐந்து பேருக்கு எதிராக&nbsp; காவல்துறையினர் மல்லாகம் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளனர்.
</p><p>
இந்த விடயம் தொடர்பில் சம்பந்தப்பட்ட ஒருவரிடம் காவல்துறை வாக்குமூலமும்
பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
எனினும், தமது பூர்வீக நிலங்களை மீட்டு, இயல்பு வாழ்க்கையை மீளப்
பெற்றுக்கொள்ளும் வரையில் தமது போராட்டம் தொடரும் என பலாலி நிலமிழந்த மக்கள்
தெரிவித்துள்ளனர்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-23T08:28:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[2028 ஆம் ஆண்டு முதல் வாகன புகை வெளியேற்ற சோதனையில் ஏற்படவுள்ள மாற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/roadworthiness-tests-to-replace-emission-tests-1787471929"></link>
            <id>https://tamilwin.com/article/roadworthiness-tests-to-replace-emission-tests-1787471929</id>
            <summary type="text">2028 ஆம் ஆண்டு முதல் அனைத்து வாகனங்களுக்கும் தற்போதைய புகை சோதனைக்குப் பதிலாக &#039;விரிவான சாலை தகுதி சான்றிதழை&#039; (Road Fitness Certificate) அறிமுகப்படுத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>2028 ஆம் ஆண்டு முதல் அனைத்து வாகனங்களுக்கும் தற்போதைய புகை சோதனைக்குப் பதிலாக 'விரிவான சாலை தகுதி சான்றிதழை' (Road Fitness Certificate) அறிமுகப்படுத்த மோட்டார் வாகனப்போக்குவரத்துத் திணைக்களம் திட்டமிட்டுள்ளது.
</p><p>
மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் வாகனப்புகை வெளியேற்ற சோதனைப்பிரிவின் பணிப்பாளர் தசுன் கமகே இதனை தெரிவித்துள்ளார்.</p><h2>300 தகுதிவாய்ந்த பணியாளர்கள் ஆட்சேர்ப்பு </h2><p>

 இந்த புதிய அமைப்பு வாகனப்புகை வெளியேற்றத்தை மட்டுமல்லாமல், பிரேக்கிங் அமைப்புகள், முகப்பு விளக்குகள், டயர்கள் மற்றும் பிற தொழில்நுட்ப நிலைகள் உள்ளிட்ட முக்கிய பாதுகாப்பு கூறுகளையும் மதிப்பிடும் என்று கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4ff9dcc1-362f-41a8-9d85-3a2179fc9b41/26-6a8aae8e47499.webp' />&nbsp;</p><p>
</p><p>
திட்டத்தின் முதல் கட்டத்தின் கீழ், பயணிகள் போக்குவரத்து வாகனங்கள், பாடசாலைப் போக்குவரத்து வாகனங்கள், அலுவலகப் போக்குவரத்து வான்கள் மற்றும் சிறப்பு சுற்றுப்பயணங்களுக்கு பயன்படுத்தப்படும் பேருந்துகள் ஆகியவற்றை உள்ளடக்கும் வகையில் சோதனை விரிவுபடுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
</p><p>
இந்த திட்டத்தை செயல்படுத்த தேவையான சுமார் 300 தகுதிவாய்ந்த பணியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களை இத்துறை ஏற்கனவே ஆட்சேர்ப்பு செய்ய தொடங்கியுள்ளது.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-23T08:25:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Fathima</name>
            </author>
            <title type="text"><![CDATA[தவெக அரசை கடுமையாக விமர்சித்த உதயநிதி ஸ்டாலின்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/udhayanidhi-stalin-speaks-about-tvk-govt-1787473080"></link>
            <id>https://ibctamilnadu.com/article/udhayanidhi-stalin-speaks-about-tvk-govt-1787473080</id>
            <summary type="text">திமுக ஆட்சியில் 11.19 சதவிகிதத்துடன் இந்தியாவில் முன்னேற்றமடைந்த முதல் மாநிலமாக இருந்த தமிழ்நாட்டை இன்று பாதாளத்தில் தள்ளிவிட்டனர் என தெரிவித்துள்ளார்...</summary>
            <content type="html"><![CDATA[<p>திமுக ஆட்சியில் 11.19 சதவிகிதத்துடன் இந்தியாவில் முன்னேற்றமடைந்த முதல் மாநிலமாக இருந்த தமிழ்நாட்டை இன்று பாதாளத்தில் தள்ளிவிட்டனர் என தெரிவித்துள்ளார் உதயநிதி ஸ்டாலின்</p><p>தஞ்சாவூரில் நடந்த திருமண நிகழ்வொன்றில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், தஞ்சாவூரில் பேசும் போது கவனமாக பேச வேண்டியுள்ளது. </p><p>கைது நடவடிக்கைக்கு பயந்தவன் கிடையாது.

விவசாயிகளுக்கு ஆதரவாக நடந்த போராட்டத்தின் போது காவிரியில் தண்ணீர் வரவில்லை என்று தான் பேசினேன், டம்மி முதல்வர், கேடுகெட்ட அரசாங்கம், வெக்கங்கெட்ட முதல்வர் என்றெல்லாம் பேசினேன், அதற்கெல்லாம் கோபம் வரவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/064899fd-93c9-4de2-af9e-8c6fb88694ac/26-6a8aad3ecb91b.webp' /><br></p><p>

காவிரியில் தண்ணீர் வரவில்லை என்று சொன்னதும் கோபம் வந்துவிட்டது, இரவோடு இரவாக போலிசாரை அனுப்பி கைது செய்தனர்.

ஆனால் நீதிமன்ற விசாரணையில் கைது செய்யவில்லை, விசாரணை என பல்டி அடித்தனர்.
</p><p>
விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் அளிக்க நிதி இல்லை ஆனால் கார் வழங்க முடிவு செய்துள்ளனர்.
</p><p>
தேர்தல் வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றுவதற்கு பதில் இல்லை, சட்டப்பேரவையில் கேட்கும் கேள்விகளுக்கு முதல்வர் பதில் அளிப்பதில்லை, அமைச்சர்கள் பதில் கொடுத்தாலும் திசைதிருப்புகின்றனர்.

ஆளும்கட்சி அமைச்சர்களுக்கு தேவை 4 ரீல்ஸ்.</p><p>திமுக ஆட்சியில் 11.19 சதவிகிதத்துடன் இந்தியாவில் முன்னேற்றமடைந்த முதல் மாநிலமாக இருந்த தமிழ்நாட்டை இன்று பாதாளத்தில் தள்ளிவிட்டனர் என தெரிவித்தார்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/lbqfe4HhTbY" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-08-23T08:20:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாக்ஸ் ஆபிஸ்: 16 நாட்களில் டிசி திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/dc-movie-16-days-worldwide-box-office-1787469497"></link>
            <id>https://cineulagam.com/article/dc-movie-16-days-worldwide-box-office-1787469497</id>
            <summary type="text">டிசி திரைப்படத்தின் 16 நாட்கள் வசூல் எவ்வளவு என்று இந்த பதிவில் பார்க்கலாம் வாங்க.
டிசி

2026-ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் ஒவ்வொரு மாதமும் பிளாக்பஸ்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>டிசி திரைப்படத்தின் 16 நாட்கள் வசூல் எவ்வளவு என்று இந்த பதிவில் பார்க்கலாம் வாங்க.</p><p>
</p><p></p><h2>டிசி
</h2><p>
2026-ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் ஒவ்வொரு மாதமும் பிளாக்பஸ்டர் திரைப்படங்கள் வெளியாகி வருகிறது. அந்த வகையில் கடந்த ஆகஸ்ட் 7-ஆம் தேதி வெளிவந்து மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ள திரைப்படம் <a href="https://www.youtube.com/watch?v=DSmdlruqxMg&amp;t=2s" target="_blank">டிசி</a>.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cfce19e8-e4b6-4e96-b3cd-295754479bdf/26-6a8a9ebbe2a54.webp' /></p><p>இப்படத்தை இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்க, லோகேஷ் கனகராஜ், வாமிகா கேபி மற்றும் சஞ்சனா ஆகியோர் நடித்துள்ளனர். ராக்ஸ்டார் அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். </p><h2>

பாக்ஸ் ஆபிஸ்
</h2><p>
பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளிவந்த இப்படத்திற்கு விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் அமோக வரவேற்பு கிடைத்தது. இதனால் நாளுக்கு நாள் வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது டிசி.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0283d526-6a11-45b8-a7c4-8fffc7971383/26-6a8a9ebc9c5e7.webp' /></p><p>இந்நிலையில், 16 நாட்களை வெற்றிகரமாக பாக்ஸ் ஆபிஸில் கடந்திருக்கும் டிசி திரைப்படம் உலகளவில் இதுவரை செய்துள்ள வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 16 நாட்களில் உலகளவில் ரூ. 98 கோடி வசூலித்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-23T08:20:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[காலி கடற்பரப்பில் குவிந்துள்ள 16 ஈரானிய கப்பல்களால் சர்ச்சை.. இலங்கைக்கு கடலில் காத்திருக்கும் பாரிய ஆபத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sixteen-iranian-oil-tankers-positioned-sri-lanka-1787470651"></link>
            <id>https://tamilwin.com/article/sixteen-iranian-oil-tankers-positioned-sri-lanka-1787470651</id>
            <summary type="text">ஈரானியக் கொடியைத் தாங்கிய 16 பாரிய எண்ணெய் கப்பல்கள் பல வாரங்களாக இலங்கையின் கடல் எல்லைக்கு அருகில் நங்கூரமிட்டு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானியக் கொடியைத் தாங்கிய 16 பாரிய எண்ணெய் கப்பல்கள் பல வாரங்களாக இலங்கையின் கடல் எல்லைக்கு அருகில் நங்கூரமிட்டு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>

இந்தக் கப்பல்களுக்கு சேவைகளை வழங்கும் இலங்கையைச் சேர்ந்த நிறுவனங்கள் அமெரிக்கத் தடைகளுக்கு உள்ளாகும் அபாயம் இருப்பதாகவும் தனியார் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.</p><h2> ஈரானிய எண்ணெய் கப்பல்கள்</h2><p>

காலி துறைமுகத்திலிருந்து 12 கடல் மைல் தொலைவில் அமைந்துள்ள இலங்கையின் பிராந்திய கடல் எல்லைக்கு அருகே இந்தக் கப்பல்கள் வரிசையாக நிறுத்தப்பட்டுள்ளன.</p><p>அமெரிக்க கருவூலத் திணைக்களத்தின் வெளிநாட்டு சொத்துக் கட்டுப்பாட்டு அலுவலகம் (OFAC) விதித்துள்ள தடைகளுக்கு உட்பட்ட ஈரானின் ‘Dark Fleet’ உடன் தொடர்புடைய இந்தக் கப்பல்கள், அமெரிக்காவின் சர்வதேச தடைகளை மீறி எண்ணெயை ஏற்றிச் செல்வதாக சந்தேகிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7187a046-e3c8-4bd5-ad6c-ed61cdc0b34f/26-6a8aa92b6a806.webp' /></p><p>
</p><p>
குறித்த பத்திரிகைக்கு கருத்து தெரிவித்த துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் பிரதி அமைச்சர் டொக்டர் ஜனித ருவன் கொடிதுவக்கு, குறித்த கப்பல்கள் தற்போது இலங்கையின் பிராந்திய கடல் எல்லைக்கு வெளியே இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
</p><p>
எனினும், இந்த எண்ணெய் கப்பல்களுக்கு உணவு மற்றும் பிற பொருட்களை வழங்கும் உள்ளூர் தனியார் நிறுவனங்கள் அல்லது அவற்றுக்கு வங்கிச் சேவைகளை வழங்கும் நிறுவனங்கள் அமெரிக்கத் தடைகளுக்கு உள்ளாகும் அபாயம் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.</p><h2>அமெரிக்கா தடை</h2><p>

“அமெரிக்காவால் தடைவிதிக்கப்பட்ட கப்பல்கள் எவை என்பதை அடையாளம் காண எங்களிடம் நேரடி வழிமுறை இல்லை. தற்போது ஐக்கிய நாடுகள் சபையின் தடைகள் பட்டியல் மட்டுமே எங்களுக்குக் கிடைக்கிறது.</p><p>
</p><p>
 அமெரிக்கத் தூதரகம் வெளிவிவகார அமைச்சின் ஊடாக அதிகாரப்பூர்வமாக எங்களுக்குத் தகவல் வழங்கினால், அந்தக் கப்பல்கள் தொடர்பில் உள்ளூர் விநியோகஸ்தர்களுக்கு எச்சரிக்கை விடுக்க முடியும்” என பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b355a6c0-b124-406b-81a1-8a24c28625dd/26-6a8aa92ab7573.webp' /></p><p>

இதற்கிடையில், இலங்கை கடற்படை இந்தக் கப்பல்கள் தொடர்பில் மிகுந்த கவனம் செலுத்தி வருவதாக பாதுகாப்புத் துறையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.</p><p>

சர்வதேச கடற்பரப்பில் அமெரிக்க கடற்படை இவ்வாறான கப்பல்களை இடைமறிக்க முயற்சித்தால், இலங்கையின் கடற்கரைக்கு அருகில் மோதல் நிலைமை ஏற்படக்கூடும் எனவும், இதன் காரணமாக 2020ஆம் ஆண்டு MT New Diamond கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தைப் போன்ற பாரிய கடல் மாசுபாடு ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.</p><h2>காலி கடற்பரப்பு</h2><p>
</p><p>
நிபுணர்களின் கருத்துப்படி, மலேசியாவுக்கு அருகிலுள்ள கடற்பரப்பில் எண்ணெய் பரிமாற்றத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் இந்தக் கப்பல்கள், ஈரானிய துறைமுகங்களுக்குள் நுழைவதைத் தடுக்கும் அமெரிக்கக் கட்டுப்பாடுகள் நீக்கப்படும் வரை இலங்கையின் தென்பகுதி கடற்பரப்பில் தங்கியிருக்கக்கூடும் என நம்பப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/91f47919-9636-4f97-8951-3426c3034cb5/26-6a8aa929e2f78.webp' /></p><p>
</p><p>
‘MT Amber’ உள்ளிட்ட சில கப்பல்கள் ஜூலை மாதத்தின் நடுப்பகுதியிலிருந்தே காலி கடற்பரப்புக்கு அருகில் தங்கியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

இந்த தீவிரமான நிலைமை தொடர்பில் வெளிவிவகார அமைச்சு அல்லது துறைமுக அதிகார சபையின் உயர்மட்ட அதிகாரிகளிடம் கருத்துகளைப் பெற மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் இதுவரை வெற்றியளிக்கவில்லை என்றும் அந்தப் பத்திரிகை மேலும் தெரிவித்துள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-23T08:15:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[விமானத்தில் தீப்பற்றிய லேப்டாப் - 5 பயணிகள் காயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/laptop-fire-mid-flight-injures-5-passengers-1787472964"></link>
            <id>https://news.lankasri.com/article/laptop-fire-mid-flight-injures-5-passengers-1787472964</id>
            <summary type="text">Laptop fire mid-flight injures 5 passengers: நடுவானில் விமானத்தில் லேப்டாப் தீப்பற்றியது.

விமானத்தில் தீஅமெரிக்காவின் அட்லாண்டா நகரிலிருந்து டல்லாஸ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Laptop fire mid-flight injures 5 passengers: நடுவானில் விமானத்தில் லேப்டாப் தீப்பற்றியது.
</p><h2>
விமானத்தில் தீ</h2><p>அமெரிக்காவின் அட்லாண்டா நகரிலிருந்து டல்லாஸ் நோக்கி புறப்பட்டிருந்த American Airlines Flight 2398 விமானத்தில் பயணித்த ஒருவரின் லேப்டாப் திடீரென தீப்பற்றியதால், விமானத்தில் பரபரப்பு நிலவியது.
</p><p>
விமானம் தரையிறங்கும் முன்பாக, பின்புறத்தில் புகை மற்றும் தீக்கனல்கள் எழுந்தன. உடனடியாக விமானி, “விமானத்தின் பின்புறத்தில் தீ ஏற்பட்டுள்ளது” என்று ஏர் டிராஃபிக் கட்டுப்பாட்டிற்கு தகவல் தெரிவித்தார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/078be744-cd4f-4f03-9078-3614f27c1c4c/26-6a8aac45dbb59.webp' /></p><p>விமானத்தில் இருந்த 133 பயணிகள் மற்றும் குழுவினருக்கு அச்சம் ஏற்பட்டது. விமானப் பணியாளர்கள் விரைவாக செயல்பட்டு, தீப்பற்றிய லேப்டாப்-ஐ விமானத்தின் நடுப்பகுதிக்கு மாற்றி, தீ பரவாமல் தடுத்தனர்.</p><p>
</p><h2>பயணிகள் கைகளில் தீக்காயம் </h2><p>இந்த சம்பவத்தில் 4 முதல் 5 பயணிகள் கைகளில் சிறிய தீக்காயம் அடைந்தனர். மருத்துவர்கள் உடனடியாக விமானம் தரையிறங்கியதும் காயமடைந்தவர்களை பரிசோதித்து, ஒருவருக்கு உடனடி சிகிச்சை அளித்தனர்.
</p><p>
விமானம் பாதுகாப்பாக Dallas Fort Worth International Airport -இல் தரையிறங்கியது. </p><p></p><p>விமான நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், “எங்கள் குழுவினர் மிகுந்த தொழில்முறை திறனுடன் விரைவாக செயல்பட்டு, ஆபத்தான சூழ்நிலையை கட்டுப்படுத்தினர்” என்று தெரிவித்துள்ளது.</p><p>

இச்சம்பவம், விமானங்களில் பயணிகள் எடுத்துச் செல்லும் மின்னணு சாதனங்களின் பாதுகாப்பு குறித்து மீண்டும் கேள்விகளை எழுப்பியுள்ளது.</p><h2>

எச்சரிக்கை</h2><p>லேப்டாப் மற்றும் மொபைல் சாதனங்களில் பயன்படுத்தப்படும் பேட்டரிகள் அதிக வெப்பம் ஏற்படுத்தினால் தீப்பற்றும் அபாயம் இருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.</p><p>

பயணிகள், விமானப் பயணத்தின் போது மின்னணு சாதனங்களை சரியான முறையில் பயன்படுத்த வேண்டும் என்றும், விமான நிறுவனங்கள் கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தப்படுகிறது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-23T08:13:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பில் போலி விமானப்படை சீருடையில் பல கோடி ரூபாய் மோசடி செய்த பெண் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/woman-arrested-for-fake-air-force-scam-1787472320"></link>
            <id>https://jvpnews.com/article/woman-arrested-for-fake-air-force-scam-1787472320</id>
            <summary type="text">விமானி எனப் போலியாக அடையாளப்படுத்திக் கொண்டு வெளிநாட்டு வேலைவாய்ப்புகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி பல கோடி ரூபாய் பணத்தை மோசடி செய்ததாகக் கூறப்படும் 44...</summary>
            <content type="html"><![CDATA[<p>விமானி எனப் போலியாக அடையாளப்படுத்திக் கொண்டு வெளிநாட்டு வேலைவாய்ப்புகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி பல கோடி ரூபாய் பணத்தை மோசடி செய்ததாகக் கூறப்படும் 44 வயதுடைய பெண் ஒருவர் கொழும்பு மோசடி விசாரணைப் பணியகத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>

அனுராதபுரம் – நொச்சியாகம பகுதியைச் சேர்ந்த குறித்த பெண், புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/76ad008d-e4bb-48a3-8d56-12e66271ec4b/26-6a8aa9c18bac2.webp' /></p><p>

பிலியந்தலை பகுதியைச் சேர்ந்த பேருந்து உரிமையாளர் ஒருவர் கடந்த மே மாதம் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் கொழும்பு மோசடி விசாரணைப் பணியகம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
</p><p>
விசாரணைகளின்போது, சந்தேகநபரான பெண் தான் ரத்மலானை விமான நிலையத்தில் விமானியாகப் பணியாற்றுவதாகக் கூறி, தனது உறவினர்கள் வெளிநாடுகளில் பணிபுரிவதாகவும், அவர்களின் ஊடாக வெளிநாட்டு வேலைவாய்ப்புகளைப் பெற்றுத் தர முடியும் என்றும் தெரிவித்து பணம் பெற்றுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
</p><p>
இதனை நம்பிய பேருந்து உரிமையாளர் ஒருவர் தனது பேருந்தை விற்று கிடைத்த 60 இலட்சம் ரூபாய் பணத்தை சந்தேகநபரிடம் வழங்கியுள்ளார்.
</p><p>
குறித்த பணத்தைப் பெற்றுக்கொள்ளும் போது, சந்தேகநபர் போலியான விமானப்படை சீருடை அணிந்து வந்திருந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
</p><p>
பணத்தைப் பெற்றுக்கொண்ட பின்னர், தான் வெளிநாடு சென்றுவிட்டதாகக் கூறி பேருந்து உரிமையாளரைத் தவிர்த்து வந்த நிலையில், அவர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
</p><p>
இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், சந்தேகநபரான பெண்ணும், அவரது கணவர் எனக் கூறப்படும் நபரும் குருநாகல் பகுதியில் வைத்து அண்மையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>
</p><p></p><p>வெளிநாட்டு வேலைவாய்ப்பைப் பெற்றுத் தருவதாகக் கூறி குறித்த பேருந்து உரிமையாளரிடம் பல்வேறு சந்தர்ப்பங்களில் 1 கோடியே 35 இலட்சம் ரூபாய்க்கும் அதிகமான தொகையை சந்தேகநபர் மோசடி செய்துள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
</p><p>
மேலும், இதற்கு முன்னரும் வெளிநாட்டு வேலைவாய்ப்பைப் பெற்றுத் தருவதாகக் கூறி மாத்தறை பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரிடம் இருந்து 22 இலட்சம் ரூபாய் பணத்தைப் பெற்றுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p>

இந்த நிதி மோசடி தொடர்பாக கொள்ளுப்பிட்டி உள்ளிட்ட 15 பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொழும்பு மோசடி விசாரணைப் பணியகம் முன்னெடுத்து வருகிறது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-23T08:05:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்களின் பணப்பரிமாற்றத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/growth-in-remittances-sri-lankans-working-abroad-1787468318"></link>
            <id>https://tamilwin.com/article/growth-in-remittances-sri-lankans-working-abroad-1787468318</id>
            <summary type="text">வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்களின் பணப்பரிமாற்றம் கணிசமான வளர்ச்சியைக் காட்டியுள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் தகவல்கள் தெரிவிக்கின்றன.&amp;nbsp;எனின...</summary>
            <content type="html"><![CDATA[<p>வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்களின் பணப்பரிமாற்றம் கணிசமான வளர்ச்சியைக் காட்டியுள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் தகவல்கள் தெரிவிக்கின்றன.&nbsp;</p><p>எனினும்&nbsp;நாட்டின் சுற்றுலாத் துறை மூலம் கிடைக்கும் வருமானம் குறைவடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><h2>சுற்றுலா வருமானம்</h2><p>இது தொடர்பில் மத்திய வங்கி வெளியிட்டுள்ள அண்மைய அறிக்கையில் மேலும், சுற்றுலாத்துறை மூலம் இந்த ஆண்டின் முதல் 7 மாதங்களில் 1,796.7 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வருமானமாக கிடைத்துள்ளது.

இது கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 11.5% குறைவடைவு ஆகும்.</p><p>

கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் 318.5 மில்லியன் டொலர்களாகக் காணப்பட்ட சுற்றுலா வருமானம், இந்த ஆண்டு ஜூலையில் 285.5 மில்லியன் டொலர்களாகக் குறைவடைந்துள்ளது.

இதேவேளை புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் வெளிநாட்டுப் பணப்பரிமாற்றம் கணிசமாக உயர்ந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/41bf91bf-59af-49f9-b864-7ae486fa2ba2/26-6a8aa9a916cf5.webp' /></p><h2>வெளிநாட்டுப் பணப்பரிமாற்றத்தின் வளர்ச்சி</h2><p>
</p><p>
கடந்த ஆண்டு 4,435.2 மில்லியன் டொலர்களாக இருந்த வருமானம், இந்த ஆண்டு 8,382.4 மில்லியன் டொலர்களாக உயர்வடைந்துள்ளது.

கடந்த ஆண்டு ஜூலையில் பெறப்பட்ட 697.3 மில்லியன் டொலர்களுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு ஜூலை மாதத்தில் 777.6 மில்லியன் டொலர்கள் வருமானமாகப் பதிவாகியுள்ளது.
</p><p>
சுற்றுலாத்துறை வருமானத்தில் சரிவு ஏற்பட்டுள்ள போதிலும், வெளிநாட்டுப் பணப்பரிமாற்றத்தின் வளர்ச்சி நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு பலம் சேர்ப்பதாக அமைந்துள்ளது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-23T08:05:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாலஸ்தீனக் கொடியை உயர்த்துவதாக வாக்குறுதி அளித்த ஒட்டாவா நகர மேயர் வேட்பாளர் – நீல் சரவணமுத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/mayoral-candidate-promises-raise-palestinian-flag-1787471235"></link>
            <id>https://canadamirror.com/article/mayoral-candidate-promises-raise-palestinian-flag-1787471235</id>
            <summary type="text">&amp;nbsp;ஒட்டாவாவில் நடைபெறவுள்ள மேயர் தேர்தலில் வெற்றி பெற்றால், மாநகராட்சி அலுவலகக் கட்டிடத்தில் பாலஸ்தீனத்தின் தேசியக் கொடி உயர்த்தப்படும் என மேயர் வே...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;ஒட்டாவாவில் நடைபெறவுள்ள மேயர் தேர்தலில் வெற்றி பெற்றால், மாநகராட்சி அலுவலகக் கட்டிடத்தில் பாலஸ்தீனத்தின் தேசியக் கொடி உயர்த்தப்படும் என மேயர் வேட்பாளர் நீல் சரவணமுத்து வாக்குறுதி அளித்துள்ளார்.</p><p> 
சர்வதேச மோதலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் துயரங்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்படும் என்றும், கனடா அரசு பாலஸ்தீனத்தை அங்கீகரித்துள்ள நிலையில், பிற நாடுகளின் தேசிய தினங்களைப் போலவே பாலஸ்தீனக் கொடியும் ஏற்றப்படுவது நியாயமானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>
எனினும், இவரது இந்த அறிவிப்புக்கு சக மேயர் வேட்பாளர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e59b8e72-cb2d-452c-9531-ab40e1e74796/26-6a8aa584e707c.webp' /></p><p> 
மேயர் வேட்பாளர் அலெக்ஸ் லாசன் கூறுகையில், மாநகராட்சி கட்டிடத்தில் ஒட்டாவா, ஒன்டாரியோ மற்றும் கனடாவின் கொடிகள் மட்டுமே பறக்க வேண்டும் என்றும், உள்ளாட்சித் தேர்தலில் சர்வதேச விவகாரங்களை அரசியலாக்கக் கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளார். </p><p>
தற்போதைய மேயர் மார்க் சட்க்ளிஃப், கொடியேற்றுவதற்கு மாநகராட்சியில் நீண்டகாலக் கொள்கைகள் உள்ளதைச் சுட்டிக்காட்டி, நகரின் உள்கட்டமைப்பு மற்றும் பாதுகாப்பிலேயே தனது கவனம் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.</p><p>
எனவே நீல் சரவணமுத்துவின் கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-23T07:57:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[எட்மண்டன் சீக்கிய ஆலயத்தில் அதிகாலை கொடூர தாக்குதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/two-men-stabbed-at-edmonton-sikh-temple-1787470671"></link>
            <id>https://canadamirror.com/article/two-men-stabbed-at-edmonton-sikh-temple-1787470671</id>
            <summary type="text">கனடாவின் அல்பெர்ட்டா மாகாணம் எட்மண்டன் நகரில் உள்ள நானக்சர் சீக்கிய குருத்வாராவில் பிரார்த்தனையின் போது புகுந்த நபர் ஒருவர், அங்கிருந்த இருவரைக் கொடூர...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் அல்பெர்ட்டா மாகாணம் எட்மண்டன் நகரில் உள்ள நானக்சர் சீக்கிய குருத்வாராவில் பிரார்த்தனையின் போது புகுந்த நபர் ஒருவர், அங்கிருந்த இருவரைக் கொடூரமாகத் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
</p><p>வெள்ளிக்கிழமை அதிகாலை 5 மணியளவில், வழிபாட்டுக் கூடத்திற்குள் நுழைய முயன்ற 27 வயது இளைஞரை அங்கிருந்தவர்கள் தடுத்துள்ளனர்.</p><p> இதனால் ஆத்திரமடைந்த அவர், கையில் வைத்திருந்த திருகையாணியால் அங்கிருந்தவர்களைத் தாக்கியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/82824f16-db62-4597-a829-e069d451cb78/26-6a8aa350b3a46.webp' /></p><p>
இதில் 51 மற்றும் 75 வயதுடைய இருவர் காயமடைந்தனர். உடனடியாக அவர்கள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அவர்களின் உயிர்க்கு ஆபத்து எதுவுமில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
2015 முதலே பல்வேறு வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்ட குற்றப் பின்னணி கொண்ட இந்த 27 வயது நபர், சிறையிலிருந்து விடுதலையாகி ஒருநாளே ஆன நிலையில் இத்தாக்குதலை நடத்தியுள்ளார். விடுதலையான பின் அவர் செல்ல வேண்டிய மறுவாழ்வு மையத்திற்குச் செல்லாமல் இங்கு வந்துள்ளார்.
</p><p>சம்பவ இடத்தில் இருந்த மக்கள் அந்த நபரைப் பிடித்துப் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். </p><p>இச்சம்பவம் வெறுப்பு உணர்வால் தூண்டப்பட்ட தாக்குதலா என்ற கோணத்திலும் பொலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p>
ஏனெனில், கடந்த ஆகஸ்ட் 15 அன்று கல்கரி நகரில் உள்ள இரு சீக்கிய குருத்வாராக்களுக்குத் தொலைபேசி வாயிலாகக் கட்டிடங்களை இடித்துத் தள்ளுவதாக மிரட்டல்கள் வந்திருந்தன. 
எனவே, அந்தச் சம்பவங்களுக்கும் இதற்கும் தொடர்புள்ளதா என்றும் ஆராயப்பட்டு வருகிறது.
</p><p>அச்சுறுத்தல்கள் மற்றும் இந்த வன்முறைச் சம்பவத்தையும் மீறி, சீக்கிய சமூகத்தினர் மனவுறுதியுடன் குருத்வாராவில் திட்டமிட்டபடி திருமணச் சடங்குகள் உள்ளிட்ட நிகழ்வுகளைத் தொடர்ந்து நடத்தினர். </p><p>
எனினும், அல்பெர்ட்டா முழுவதிலும் உள்ள சீக்கிய ஆலயங்களில் தற்போது பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-23T07:57:38+00:00</updated>
        </entry>
    </feed>
