<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-08-20T16:26:40+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஒட்டாவா நகரில் கடைகளில் திருடிய 17 பேர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/17-people-arrested-in-police-operating-targeting-1787242184"></link>
            <id>https://canadamirror.com/article/17-people-arrested-in-police-operating-targeting-1787242184</id>
            <summary type="text">ஒட்டாவா நகரின் மத்திய பகுதியில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் தொடர்ந்து நடைபெற்று வந்த கடைத் திருட்டுகளைத் தடுக்கும் வகையில், ஒட்டாவா நகரக் காவல்துறை நடத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஒட்டாவா நகரின் மத்திய பகுதியில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் தொடர்ந்து நடைபெற்று வந்த கடைத் திருட்டுகளைத் தடுக்கும் வகையில், ஒட்டாவா நகரக் காவல்துறை நடத்திய சிறப்பு தீவிர நடவடிக்கையில் 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>
ஜூலை 12 முதல் ஆகஸ்ட் 18 வரையிலான காலகட்டத்தில், ரிடோ தெருவில் அமைந்துள்ள குறிப்பிட்ட வணிக நிறுவனத்தில் இந்தச் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. </p><p>
சில்லறை விற்பனைக் கடைகளில் நடைபெறும் திருட்டுகள் குறித்து எழுந்த புகார்களைத் தொடர்ந்து, காவல் பிரிவினர் இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9d5f2dec-1984-4f9d-b917-66a694979f59/26-6a8726c9cf483.webp' /></p><p>
பாதிக்கப்பட்ட நிறுவனத்தின் பாதுகாப்புப் பணியாளர்களுடன் இணைந்து, குறிப்பிட்ட இடைவெளிகளில் காவல்துறையினர் திடீர் சோதனைகளில் ஈடுபட்டனர்.
</p><p>இந்த நடவடிக்கையின் மூலம் 17 பேர் கைது செய்யப்பட்டு, அவர்கள் மீது 17 குற்றவியல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் 7 பேருக்கு மாகாண சட்ட மீறல் அறிவிக்கைகள் வழங்கப்பட்டுள்ளன.</p><p>காவல்துறை எந்த நிறுவனம் என்று அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை என்றாலும், இது ரிடோ தெருவின் 300வது தொகுதியில் அமைந்துள்ள ஒரு வணிக நிறுவனம் எனத் தெரியவந்துள்ளது.
</p><p>வணிக நிறுவனங்கள் இதுபோன்ற திருட்டுச் சம்பவங்கள் மற்றும் சந்தேகத்திற்குரிய நடவடிக்கைகளைப் உடனடியாகப் புகாரளிக்குமாறு காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது. </p><p>
உள்ளூர் வணிகர்களுடன் இணைந்து குற்றங்களைத் தடுப்பதற்கும், பொதுமக்கள் மற்றும் வர்த்தகர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் தொடர்ந்து தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் ஒட்டாவா காவல்துறை தெரிவித்துள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-20T16:25:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் இருந்து கொழும்பு சென்ற சொகுசுப் பேருந்தில் நள்ளிரவில் நடந்த சம்பவம்! கொதித்தெழுந்த பயணி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/without-route-permit-jaffna-colombo-bus-incident-1787227636"></link>
            <id>https://jvpnews.com/article/without-route-permit-jaffna-colombo-bus-incident-1787227636</id>
            <summary type="text">&amp;nbsp; யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த சொகுசுப் பேருந்து ஒன்றில், வீதி அனுமதிப்பத்திரம் (Route Permit) இல்லாத காரணத்தால் நள்ளிரவில் கா...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த சொகுசுப் பேருந்து ஒன்றில், வீதி அனுமதிப்பத்திரம் (Route Permit) இல்லாத காரணத்தால் நள்ளிரவில் காட்டுப் பகுதியில் பொலிஸாரால் நிறுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் பயணி ஒருவர் தனது அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.
</p><p>
குறித்த பயணி அண்மையில் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி இரவு நேரப் பயணத்துக்காக ஆசனங்களை முன்பதிவு செய்து பயணித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f7604fbc-3de7-4bef-b921-4076c1fb39a7/26-6a86edf694527.webp' /></p><h2>&nbsp;பயணிகளிடம் பொய் கூறுமாறு வற்புறுத்தல்</h2><p>

 எனினும், நள்ளிரவு 2.00 மணியளவில் கெப்பிட்டிகொல்லாவ அருகிலுள்ள காட்டுப் பகுதியில் பேருந்து நீண்ட நேரமாக நிறுத்தப்பட்டு , பொலிஸார் சோதனையிட்ட போது, "திருகோணமலைக்கு உல்லாசப் பயணம் செல்வதாகக் கூறுமாறு" பேருந்தில் இருந்த&nbsp; பயணிகளிடம் பொய் கூறுமாறு வற்புறுத்தியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p> </p><p> 

 பொலிஸார் மேற்கொண்ட பரிசோதனையில், அந்தப் பேருந்துக்கு உரிய வீதி அனுமதிப்பத்திரம் (Route Permit) இல்லை என்பது தெரியவந்துள்ளது.

 இதனையடுத்து பொலிஸார் அப்பேருந்தை மீண்டும் வவுனியாவுக்கு அனுப்பி வைத்து, பயணிகளுக்கு மாற்றுப் போக்குவரத்து ஏற்பாடுகளைச் செய்துள்ளனர்.</p><p>

இறுதியில் மற்றுமொரு பேருந்து மூலம் பயணிகள் கொழும்புக்கு அழைத்துச் செல்லப்பட்ட போதிலும், போதிய ஆசனங்கள் இன்மையால் பயணிகள் சிலர் நின்றுகொண்டே பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும், அந்த பயணி சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p></p><p>
</p><p>&nbsp;பேருந்து உரிமையாளர்கள் மற்றும் நடத்துனர்களின் அலட்சியப்போக்கைக் கடுமையாக விமர்சித்துள்ளார். பயணிகளின் அவசரத் தேவைகள் மற்றும் பாதுகாப்பைக் கருத்தில் கொள்ளாமல், அனுமதிப்பத்திரம் இல்லாத பேருந்தை இயக்கியமை மிகப்பெரிய தவறாகும் என&nbsp; பயணி&nbsp; சாடியுள்ளார்.</p><p>

அதேவேளை, சட்டப்படி தலையிட்டு நள்ளிரவில் பயணிகளின் பாதுகாப்புக்கு நடவடிக்கை எடுத்த பொலிஸாரின் செயலை அவர் பாராட்டியுள்ளார்.&nbsp; &nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-20T16:05:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரான் மீது அமெரிக்கா தடைக்கு சீனா கடும் கண்டனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/china-strongly-condemns-us-sanctions-on-iran-1787230980"></link>
            <id>https://canadamirror.com/article/china-strongly-condemns-us-sanctions-on-iran-1787230980</id>
            <summary type="text">ஈரானுக்கு எதிரான அமெரிக்க ஜனாதிபதியின் &quot;பொருளாதார டி-டே&quot; பிரச்சாரத்தை சீனா கடுமையாக சாடியுள்ளதுடன், கூடுதல் பொருளாதாரத் தடைகள் நிலுவையில் உள்ள பிரச்சி...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானுக்கு எதிரான அமெரிக்க ஜனாதிபதியின் "பொருளாதார டி-டே" பிரச்சாரத்தை சீனா கடுமையாக சாடியுள்ளதுடன், கூடுதல் பொருளாதாரத் தடைகள் நிலுவையில் உள்ள பிரச்சினைகளைத் தீர்க்க உதவாது என்றும் தெரிவித்துள்ளது.</p><p>



பீஜிங்கில் செய்தியாளர்களைச் சந்தித்த சீனாவின் வெளிவிவகார அமைச்சகப் பேச்சாளர் லின் ஜியான் (Lin Jian), இதனை தெரிவித்துள்ளார்.



இதன்போது, தடைகளை விதிப்பதும் அழுத்தம் கொடுப்பதும் பிரச்சினையைத் தீர்க்க உதவாது என்று தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/48deb9c5-8e7e-4287-9ac9-400a5f87cbb4/26-6a86fb05a28d2.webp' /></p><p> </p><p>



மேலும், பொறுப்பான நடவடிக்கைகளை எடுத்து, தூதரக மற்றும் அரசியல் வழிமுறைகள் மூலம் பிரச்சினைகளைத் தீர்க்க சம்பந்தப்பட்ட தரப்பினரை சீனா வலியுறுத்துகிறது என்றும் அவர் கூறினார்.
</p><p>


பகுப்பாய்வு நிறுவனமான கெப்லர் (Kpler) வெளியிட்ட 2025 ஆம் ஆண்டுத் தரவுகளின்படி, ஈரான் ஏற்றுமதி செய்யும் எண்ணெயில் 80 சதவீதத்திற்கும் அதிகமானவற்றை சீனா வாங்குவதால், இந்த நடவடிக்கைகள் சீனாவைப் பிரதானமாகப் பாதிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-20T16:05:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[உயர் கல்வி வாய்ப்பைப் பெறாத மாணவர்களுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/good-news-students-wh-did-not-get-higher-education-1787241655"></link>
            <id>https://jvpnews.com/article/good-news-students-wh-did-not-get-higher-education-1787241655</id>
            <summary type="text">2023, 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டு உயர் கல்வி வாய்ப்பைப் பெறாத மாணவர்களுக்குத் தனியார் பல்கலைக்கழகங்களில் கல்வி பயில்வதற்காக அரசாங்கத்தினால் வட்டி இல்ல...</summary>
            <content type="html"><![CDATA[<p>2023, 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டு உயர் கல்வி வாய்ப்பைப் பெறாத மாணவர்களுக்குத் தனியார் பல்கலைக்கழகங்களில் கல்வி பயில்வதற்காக அரசாங்கத்தினால் வட்டி இல்லாக் கடன் வழங்கும் திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.</p><p>இக்கடனுக்காக அதிகபட்சமாக 15 லட்சம் ரூபா வரை வழங்கப்படுதுடன், கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கு 7 ஆண்டுகள் அவகாசம் அளிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/53a038c6-23de-439a-8ec8-bb1518846d82/26-6a8724b8cdc89.webp' /></p><p>இதன் மூலம் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட 16 தனியார் பல்கலைக்கழகங்களில் 130 பாடநெறிகளின் கீழ் பட்டப்படிப்பு அல்லது தேசிய மட்டத்திலான டிப்ளோமா படிப்புகளை மேற்கொள்வதற்கு மாணவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். </p><p>

இலங்கை முழுவதிலும் முன்னெடுக்க எதிர்பார்க்கப்படும் இத்திட்டத்தின் முதற்கட்டம், செப்டம்பர் 3 ஆம் திகதி களுத்துறை மாவட்ட செயலகத்தில் ஆரம்பமாகவுள்ளது.</p><p> 

அதேவேளை, கல்வி மற்றும் உயர் கல்வி அமைச்சு, மாவட்ட செயலகங்கள் மற்றும் பிரதேச செயலகங்கள் இணைந்து இத்திட்டத்தை ஏற்பாடு செய்வதாக களுத்துறை மாவட்ட செயலாளர் சுனந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-20T16:01:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[அழகே அழகு சீரியல் படப்பிடிப்பில் தனது பிறந்தநாளை கொண்டாடிய பிரவீன் பென்னட்... போட்டோஸ் இதோ]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/director-praveen-bennett-birthday-celebration-1787239126"></link>
            <id>https://cineulagam.com/article/director-praveen-bennett-birthday-celebration-1787239126</id>
            <summary type="text">அழகே அழகுவிஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ சீரியல்கள் ஒளிபரப்பாகிறது, அதில் ஒட்டுமொத்த பெண்களின் கவனத்தையும் பெற்ற தொடராக உள்ளது அழகே அழகு சீரியல்.பிரவீ...</summary>
            <content type="html"><![CDATA[<h2>அழகே அழகு</h2><p>விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ சீரியல்கள் ஒளிபரப்பாகிறது, அதில் ஒட்டுமொத்த பெண்களின் கவனத்தையும் பெற்ற தொடராக உள்ளது அழகே அழகு சீரியல்.</p><p>பிரவீன் பென்னட் இயக்கத்தில் 2026, அதாவது இந்த வருடம் தொடங்கப்பட்ட இந்த சீரியல் 3 பெண்களின் வாழ்க்கையை மையமாக கொண்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/04850784-a49b-44a3-b871-d8a2bb9443b9/26-6a8721c23c24d.webp' />&nbsp;&nbsp;</p><p>அடக்குமுறை எண்ணம் கொண்ட மாமனார்-மாமியாரிடம் சிக்கிய மதி-மலர் பற்றியும், ஆணாதிக்க எண்ணம் கொண்ட தங்கராசுவிடம் சிக்கியுள்ள ரேவதி என்ற கதாபாத்திரத்தை மையப்படுத்திய கதையாக இந்த சீரியல் உள்ளது.</p><p>தவறே செய்யாமல் கணவன் தன்னை அடித்தால் அழுதுகொண்டு இருக்காமல் திருப்பி அடித்த காட்சிகள் எல்லாம் சமூக வலைதளங்களில் செம வைரலானது.</p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">கொண்டாட்டம்</span></p><p>சீரியல் கதைக்களம் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் படப்பிடிப்பி தளத்தில் கொண்டாட்டம் நடந்துள்ளது. </p><p>அதாவது அழகே அழகு சீரியல் இயக்குனர் பிரவீன் பென்னட்டத்தின் பிறந்தநாளை தொடர் குழுவினர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இதோ போட்டோ,</p><p><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/p/DcQ9spoS-B5/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/p/DcQ9spoS-B5/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/p/DcQ9spoS-B5/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by Vijay TV Express (@vijaytvexpresss)</a></p></div></blockquote> <script async src="//www.instagram.com/embed.js"></script></p>]]></content>
            <updated>2026-08-20T16:00:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[12 வயது பேத்தி மீது அத்துமீறல் 81 வயது தாத்தாவிற்கு 15 ஆண்டுகள் கடுங்காவல் சிறை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/81-year-old-grandfather-15-years-in-prison-1787239976"></link>
            <id>https://ibctamil.com/article/81-year-old-grandfather-15-years-in-prison-1787239976</id>
            <summary type="text">12 வயதுடைய சொந்த பேத்தியைத் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 81 வயதுடைய
முதியவருக்கு 15 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்து வவுனியா மேல்
நீத...</summary>
            <content type="html"><![CDATA[<p>12 வயதுடைய சொந்த பேத்தியைத் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 81 வயதுடைய
முதியவருக்கு 15 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்து வவுனியா மேல்
நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ. ஆனந்தராஜா தீர்ப்பளித்துள்ளார்.
</p><p>

கடந்த 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், போகஸ்வெவ காவல்துறை பிரிவுக்குட்பட்ட
வெஹரதென்ன பகுதியில் இக்குற்றச்செயல் இடம்பெற்றுள்ளது.</p><p>சம்பவம் நடந்த போது எதிரிக்கு 76 வயதாகும். இது தொடர்பான வழக்கின்
குற்றச்சாட்டுப் பத்திரம் 2024 ஆம் ஆண்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு
விசாரணைகள் இடம்பெற்று வந்தன.</p><h2>கருணை காட்டுமாறு விண்ணப்பம் - நீதிமன்றின் தெளிவுபடுத்தல்</h2><p>

இவ்வழக்கு விசாரணையின் போது, எதிரி தரப்பில் அவரது 81 வயது முதுமையைக்
கருத்தில் கொண்டு கருணை காட்டுமாறு விண்ணப்பிக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a814a05d-cd55-45ef-bc6e-1a7925333404/26-6a8721b091fe9.webp' /></p><p>

எனினும், பாதிக்கப்பட்ட சிறுமியின் இயற்கை பாதுகாவலர்களில் ஒருவரான
பாட்டனாலேயே இக்குற்றச்செயல் புரியப்பட்டுள்ளமை, சிறுமிக்கு ஏற்பட்ட கடுமையான
உளவியல் பாதிப்புகள் மற்றும் கல்வி தடைப்பட்டிருந்தமை ஆகியவற்றை நீதிமன்றம்
சுட்டிக்காட்டியது.</p><p></p><p>
</p><p>
</p><h2>எதிரிக்கு விதிக்கப்பட்ட தண்டம்</h2><p>எதிரி மீதான குற்றச்சாட்டுகள் நியாயமான சந்தேகத்திற்கு அப்பால்
நிரூபிக்கப்பட்டதால், எதிரியின் வயதைப் புறக்கணித்து 15 ஆண்டுகள் கடுங்காவல்
சிறைத்தண்டனையும் 50,000 ரூபா அபராதமும் விதிக்கப்பட்டதுடன் அதனை செலுத்தத்
தவறின் மேலதிக 1 வருடம் சிறைத்தண்டனையும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு
1,000,000/- (ஒரு மில்லியன் ரூபாய்) நஷ்டஈடும் செலுத்த வேண்டும் எனவும் அதனை
செலுத்தத் தவறின் மேலதிகமாக 2 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c39341d7-bc16-4d9b-a1fc-a4d93fe73f5f/26-6a8721b1564da.webp' /></p><p>
</p><p>
அரச சட்டவாதியினால் முன்வைக்கப்பட்ட சாட்சிகள் மற்றும் ஆவணங்களின்
அடிப்படையில் குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு அப்பால் நிரூபிக்கப்பட்டதை
அடுத்து இத்தீர்ப்பு வழங்கப்பட்டதுடன் இவ்வழக்கினை சட்டமா அதிபர் திணைக்களம்
சார்பில் அரச சட்டவாதி ஸ்ரீ. சிவஸ்கந்தஸ்ரீ நெறிப்படுத்தியிருந்தார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-20T16:00:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சீனாவின் Visa-Free Entry பட்டியலில் 2 ஆசிய நாடுகள் சேர்ப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/china-grants-visa-free-entry-to-kyrgyzstan-vietnam-1787241629"></link>
            <id>https://news.lankasri.com/article/china-grants-visa-free-entry-to-kyrgyzstan-vietnam-1787241629</id>
            <summary type="text">Two asian countries join China&#039;s visa-free entry list: சீனாவின் Visa-Free Entry பட்டியலில் 2 ஆசிய நாடுகள் சேர்க்கப்பட்டுள்ளது.

சீனாவின் தேசிய குடிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>Two asian countries join China's visa-free entry list: சீனாவின் Visa-Free Entry பட்டியலில் 2 ஆசிய நாடுகள் சேர்க்கப்பட்டுள்ளது.
</p><p>
சீனாவின் தேசிய குடியேற்ற நிர்வாகம் (NIA) அறிவித்துள்ள புதிய கொள்கையின் படி, கிற்கிஸ்தான் மற்றும் வியட்நாம் குடிமக்கள் இனி சீனாவிற்கு விசா இல்லாமல் நுழையலாம். </p><p>இந்த விதிமுறை இன்று முதல் (ஆகஸ்ட் 20, 2026) அமுலுக்கு வருகிறது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/911fce2d-2c81-455f-a5e1-2bce9ec7f58b/26-6a87249f1ee98.webp' /></p><h2>10 நாட்கள் வரை தங்கலாம்</h2><p>புதிய கொள்கையின் படி, இந்த இரண்டு நாடுகளின் குடிமக்கள் 240 மணி நேர visa-free transit அனுமதி பெறுவர். </p><p>அவர்கள் பீஜிங், ஷாங்காய் உள்ளிட்ட 65 திறந்த துறைமுகங்கள் வழியாக சீனாவிற்குள் நுழைந்து, குறிப்பிட்ட பகுதிகளில் 10 நாட்கள் (240 மணி நேரம்) வரை தங்கலாம்.

மேலும், ஹைனான் மாகாணத்தில் 30 நாட்கள் வரை விசா இல்லாமல் தங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.</p><p> </p><p></p><p>இந்த காலத்தில் அவர்கள் சுற்றுலா, வணிகம், குடும்ப சந்திப்பு போன்ற குறுகிய கால நடவடிக்கைகளில் ஈடுபடலாம். ஆனால் வேலை, படிப்பு, செய்தி சேகரிப்பு போன்ற செயல்களுக்கு முன்கூட்டியே விசா பெற வேண்டும்.
</p><h2>
57 நாடுகளுக்கு&nbsp;விரிவு</h2><p>சீனாவின் விசா கொள்கையை விரிவுபடுத்தும் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், அண்டை நாடுகளுடன் நம்பிக்கை, ஒத்துழைப்பு, வர்த்தகம் மற்றும் முதலீட்டை மேம்படுத்தும் நோக்கத்துடன் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
</p><p>
அதன்படி, சீனாவின் 240-hour visa-free transit policy தற்போது 57 நாடுகளுக்கு விரிவடைந்துள்ளது.</p><p>

இந்த புதிய விதிமுறைகள், சீனாவிற்கு வரும் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கையை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-20T15:57:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kumar</name>
            </author>
            <title type="text"><![CDATA[மட்டக்களப்பு- சத்துருக்கொண்டான் படுகொலை நினைவேந்தல் குழுவின் ஏற்பாட்டாளரிடம் விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/statements-were-recorded-cid-1787239511"></link>
            <id>https://tamilwin.com/article/statements-were-recorded-cid-1787239511</id>
            <summary type="text">மட்டக்களப்பு- சத்துருக்கொண்டான் படுகொலை நினைவேந்தல் குழுவின் ஏற்பாட்டாளரிடம்
மட்டக்களப்பில் குற்றப்புலனாய்வுத்துறையினரினால் சுமார் 03மணி நேரம்
வாக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>மட்டக்களப்பு- சத்துருக்கொண்டான் படுகொலை நினைவேந்தல் குழுவின் ஏற்பாட்டாளரிடம்
மட்டக்களப்பில் குற்றப்புலனாய்வுத்துறையினரினால் சுமார் 03மணி நேரம்
வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
</p><p>
சத்துருக்கொண்டான் படுகொலை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறும் குறித்த
புதைகுழி முகாம் அமைந்துள்ள பகுதியில் அகழ்வுப்பணிகளை
முன்னெடுக்குமாறும் கடந்த ஆண்டு கொக்குவில் பொலிஸ் நிலையத்தில்&nbsp; நினைவேந்தல் குழுவின் ஏற்பாட்டாளர் வைரமுத்து
குழந்தை வடிவேல் முறைப்பாடு ஒன்றினை பதிவு செய்திருந்தார்.</p><p>

இதனடிப்படையில் குறித்த முறைப்பாடு தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்கு கடந்த
14ஆம் திகதி குற்றப்புலனாய்வுத்துறைக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த
நிலையில் மனித உரிமைகள் ஆணைக்குழு ஊடாக தன்னால் பாதுகாப்பு காரணங்களினால்
அங்கு வரமுடியாது என தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து மட்டக்களப்பில் இன்றைய தினம்
குற்றப்புலனாய்வுத்துறையினரால் வாக்குமூலம் வழங்கப்பட்டுள்ளது.</p><h2>படுகொலை&nbsp;</h2><p>
</p><p>
இதன்போது மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினரும் சத்துருக்கொண்டான் படுகொலை
நினைவேந்தல் குழு உறுப்பினர் தயாளகௌரி,சிவில் சிவில் சமூக செயற்பாட்டாளர்
கண்டுமணி லவகுகராசா,மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர்
சிவம்பாக்கியநாதன்,மாநகரசபையின் பிரதி முதல்வர் வை.தினேஸ்குமார் ஆகியோரும்
வருகை தந்திருந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e2aaeac6-6f2b-46bb-84af-ee27d13473ca/26-6a87222d86a27.webp' /></p><p>
</p><p>வாக்குமூலம் வழங்கிய பின்னர் மட்டு.ஊடக அமையத்தில் இது தொடர்பான ஊடக
சந்திப்பும் நடைபெற்றது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-20T15:54:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[Easy Puttu Kothu Recipe : குழந்தைகளுக்கு குஷியாக்கும் சுவையான புட்டு கொத்து!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/easy-puttu-kothu-recipe-in-tamil-kids-breakfast-1787239936"></link>
            <id>https://manithan.com/article/easy-puttu-kothu-recipe-in-tamil-kids-breakfast-1787239936</id>
            <summary type="text">Easy Puttu Kothu Recipe for kids: பொதுவாகவே அம்மாக்களுக்கு தினசரி சமையல் செய்வது ஒரு சவால் தான் என்றால், குழந்தைகளை திருத்திப்படுத்தும் வகையில் சமைப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>Easy Puttu Kothu Recipe for kids: பொதுவாகவே அம்மாக்களுக்கு தினசரி சமையல் செய்வது ஒரு சவால் தான் என்றால், குழந்தைகளை திருத்திப்படுத்தும் வகையில் சமைப்பது பெரிய போராட்டம் தான்.</p><p>குழந்தைகளுக்கு பிடித்தமான உணவைச் சத்தானதாகவும், அதே நேரத்தில் ருசியாகவும் செய்து கொடுப்பது ஒவ்வொரு&nbsp; அம்மாவும் தினசரி எதிர்கொள்ளும் பிரச்சினை என்றால் மிகையாகாது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c2adada2-a116-4b7a-8cf4-0d9a3176d23b/26-6a87215b50479.webp' /></p><p></p><p>அந்த சவாலை எளிதாக சமாளிக்க உதவும் அருமையான உணவுதான் புட்டு கொத்து. மென்மையான புட்டுடன் காய்கறிகள், முட்டை போன்ற சத்தான பொருட்களைச் சேர்த்து செய்யப்படும் இந்த உணவு, சுவையிலும் மணத்திலும் குழந்தைகளின் கவனத்தை ஈர்க்கும்.</p><p> காலை உணவாகவோ, மாலை நேர சிற்றுண்டியாகவோ கொடுக்க ஏற்ற இந்த புட்டு கொத்து, “இன்னும் கொஞ்சம் வேண்டும்!” என்று குழந்தைகளையே கேட்க வைக்கும் அளவுக்கு சுவையாக இருக்கும்.</p><p> வாங்க, குழந்தைகளுக்காக அன்போடு ஒரு சூப்பரான சத்தான புட்டு கொத்து செய்முறையை எளிய படிமுறைகளில் இந்த காணொளியூடாக பார்க்கலாம்.</p><p></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/5ZLkDR4x3o4" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW&nbsp;</a></u></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-20T15:48:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[லண்டனில் அதிடி சுற்றிவளைப்பில் தமிழர்கள் உட்பட பெருந்தொகையானவர்கள் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/raid-in-london-tamil-people-arrested-1787232646"></link>
            <id>https://tamilwin.com/article/raid-in-london-tamil-people-arrested-1787232646</id>
            <summary type="text">பிரித்தானியாவில் லண்டனில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்புக்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சு தெரிவித்துள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரித்தானியாவில் லண்டனில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்புக்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
</p><p>
சட்டவிரோதமாக தங்கியிருந்த தமிழர்கள் உட்பட பல நாடுகளைச் சேர்ந்தவர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். </p><p>

2026 ஆம் ஆண்டின் கடந்த மாதம் வரையான காலப்பகுதியில் லண்டன் முழுவதும் இந்த சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p><p> </p><h2><b>

பெருந்தொகையானவர்கள் கைது</b></h2><p>உள்துறை அமைச்சின் புள்ளிவிபரங்களுக்கு அமைய 2026ஆம் ஆண்டின் முதல் பாதியில் பிரித்தானியாவில் சட்டவிரோத வேலைவாய்ப்பு தொடர்பான சோதனைகளின் எண்ணிக்கை 7,270 ஆக உயர்ந்துள்ளது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e0d6e08b-9667-4b0b-9dbb-677d35188e6b/26-6a87168605130.webp' /></p><p>இது 2025 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 31 சதவீத அதிகரிப்பாகும். இச்சோதனைகள் மூலம் 4,756 கைதுகள் இடம்பெற்றுள்ளதுடன், 2024 ஜூலைக்குப் பின்னரான மொத்தக் கைதுகளின் எண்ணிக்கை 17,000 ஆக உயர்ந்துள்ளது.
</p><p>
கடந்த ஜூன் மாதம் பிரித்தானியா முழுவதும் குடிவரவு குற்றங்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட கூட்டுச் சோதனைகளைத் தொடர்ந்தே இந்த புதிய புள்ளிவிவரங்கள் வெளியாகியுள்ளன.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-20T15:40:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சோமாலியாவில் கடத்தப்பட்ட சரக்கு கப்பலில் சிக்கிய 6 இந்தியர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/six-indians-on-hijacked-somali-cargo-ship-1787240320"></link>
            <id>https://news.lankasri.com/article/six-indians-on-hijacked-somali-cargo-ship-1787240320</id>
            <summary type="text">Six Indians aboard cargo ship hijacked off Somalia: சோமாலியாவின் புன்ட்லாந்து கடற்கரையில் கடத்தல்காரர்கள் கைப்பற்றிய சரக்கு கப்பலில் ஆறு இந்தியர்கள் ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>Six Indians aboard cargo ship hijacked off Somalia: சோமாலியாவின் புன்ட்லாந்து கடற்கரையில் கடத்தல்காரர்கள் கைப்பற்றிய சரக்கு கப்பலில் ஆறு இந்தியர்கள் சிக்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.</p><p>M/V LUTUF என்ற கப்பல், காமெரூன் நாட்டின் கொடியுடன் பயணித்தது. இந்த கப்பல் துருக்கி இராணுவ பயிற்சி மையத்திற்காக ஆயுதங்கள் மற்றும் அதற்கு தொடர்புடைய சாதனங்களை எடுத்துச் சென்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p></p><p>இந்த சம்பவம் கடந்த திங்கட்கிழமை மாறையா அருகே நடந்தது. எட்டு ஆயுதம் ஏந்திய கடத்தல்காரர்கள் கப்பலை கைப்பற்றினர்.</p><p> கப்பலில் மொத்தம் 10 பேர் இருந்தனர். ஆறு இந்தியர்கள், ஒரு துருக்கியர், ஒரு ஜார்ஜியர் மற்றும் இரண்டு செர்பிய பாதுகாப்பு பணியாளர்கள்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/363df18e-1784-4fc5-9254-acebcfc834b8/26-6a871f82b1540.webp' /></p><p>கப்பலை கைப்பற்றிய கடத்தல்காரர்கள் அதை நுகால் கடற்கரை நோக்கி அழைத்துச் சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பின்னர், துருக்கிய ஹெலிகாப்டர்கள் மற்றும் ட்ரோன்கள் அந்த பகுதியில் கண்காணிப்பு செய்தன.</p><p> அப்போது, ஒரு சிறிய படகு கப்பலுக்கு அருகில் வந்து ‘காட்’ எனப்படும் போதைப்பொருளை வழங்கியது. அதற்குப் பிறகு நடந்த வான்வழி தாக்குதலில் நால்வர் உயிரிழந்தனர், இருவர் காயமடைந்தனர்.</p><p>

இந்த தாக்குதலை யார் மேற்கொண்டார்கள் என்பது தெளிவாக தெரியவில்லை. மேலும், கப்பலில் இருந்த ஆறு இந்தியர்களின் நிலைமை குறித்து இதுவரை உறுதியான தகவல் வெளியாகவில்லை.
</p><p></p><p>சோமாலிய அதிகாரிகள், இந்த கடத்தல்காரர்கள் ஏப்ரல் மாதம் கைப்பற்றப்பட்ட M/V Sward கப்பல் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கின்றனர். அந்த கப்பலும் இன்னும் விடுவிக்கப்படாமல் இருப்பதாக கடல் பாதுகாப்பு அறிக்கைகள் கூறுகின்றன.
</p><p>
இந்த சம்பவம், சோமாலிய கடற்கரையில் மீண்டும் கடத்தல் அச்சுறுத்தல் அதிகரித்திருப்பதை வெளிப்படுத்துகிறது. இந்தியர்களின் பாதுகாப்பு குறித்து கவலை அதிகரித்துள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-20T15:36:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[கவின்-நயன்தாரா முதன்முறையாக ஜோடி சேர்ந்து நடித்துள்ள ஹாய் பட டிரைலர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/hi-movie-official-trailer-tamil-1787239585"></link>
            <id>https://cineulagam.com/article/hi-movie-official-trailer-tamil-1787239585</id>
            <summary type="text">ஹாய் படம்அறிமுக இயக்குனர் விஷ்ணு எடவன் இயக்கத்தில் கவின் மற்றும் நயன்தாரா முதன்முறையாக ஜோடி சேர்ந்து நடித்துள்ள திரைப்படம் ஹாய். இந்த படத்தின் முக்கிய...</summary>
            <content type="html"><![CDATA[<h2>ஹாய் படம்</h2><p>அறிமுக இயக்குனர் விஷ்ணு எடவன் இயக்கத்தில் கவின் மற்றும் நயன்தாரா முதன்முறையாக ஜோடி சேர்ந்து நடித்துள்ள திரைப்படம் ஹாய். </p><p>இந்த படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் மறைந்த நடிகர் பாக்யராஜ், நடிகர்கள் பிரபு, ராதிகா சரத்குமார், விடிவி கணேஷ் போன்றோர் நடித்துள்ளார்கள்.
</p><p>ஆகஸ்ட் 14ம் தேதியே படம் வெளியாக இருந்த நிலையில் சில காரணங்களால் தள்ளிப்போய் இப்போது ஆகஸ்ட் 28ம் தேதி வெளியாக இருக்கிறது.</p><p>தற்போது இப்படத்தின் அட்டகாசமான டிரைலர் வெளியாகியுள்ளது, இதோ,</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/WKq3S2vvVEM" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-08-20T15:26:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கீரிமலையில் சட்டவிரோதமாக கொட்டப்பட்ட கழிவுகள்: அகற்ற காலக்கெடு - விடுக்கப்பட்ட கடும் எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/illegally-dumped-waste-in-keerimalai-1787238971"></link>
            <id>https://tamilwin.com/article/illegally-dumped-waste-in-keerimalai-1787238971</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் வலி.வடக்கு பிரதேச சபை ஆளுகைக்கு உட்பட்ட பகுதியில் சட்டவிரோதமான
முறையில் கழிவுகளை கொட்டிய , வலி.தெற்கு பிரதேச சபை எதிர்வரும் 13ஆம்
திகதிக...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் வலி.வடக்கு பிரதேச சபை ஆளுகைக்கு உட்பட்ட பகுதியில் சட்டவிரோதமான
முறையில் கழிவுகளை கொட்டிய , வலி.தெற்கு பிரதேச சபை எதிர்வரும் 13ஆம்
திகதிக்கு முன்னர் அவற்றை மீள அள்ள வேண்டும் என காலக்கெடு விதித்து வலி.
வடக்கு பிரதேச சபை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.</p><p>

வலி. வடக்கு பிரதேச சபையின் மாதாந்த அமர்வு இன்றைய தினம்(20.08.2026) தவிசாளர் சோ.சுகிர்தன் தலைமையில் இடம்பெற்றுள்ளது.
</p><h2>
கழிவுகளை அகற்ற நடவடிக்கை</h2><p>

இதன்போது, சபை ஆளுகைக்கு உட்பட்ட கீரிமலை பகுதியில் சுண்ணக்கல் அகழப்பட்ட
பாரிய பள்ளங்களுக்குள், வலி. தெற்கு பிரதேச சபையினர், சட்டவிரோதமான முறையில்
இலத்திரனியல் கழிவுகள், மருத்துவ கழிவுகள் உள்ளிட்ட பல்வேறு வகையான கழிவுகளை
கொட்டியமை தொடர்பில் பிரஸ்தாபிக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bc65aee8-98e6-4812-8738-9880dfa9101f/26-6a871acd4a1fa.webp' /></p><p>
</p><p>
இதனை தொடர்ந்து, கொட்டப்பட்ட கழிவுகளை வலி. தெற்கு பிரதேச சபையினர் எதிர்வரும்
13ஆம் திகதிக்கு முன்னர் மீள அள்ள வேண்டும் என்றும், அது
தொடர்பிலான அறிவித்தலை வலி. தெற்கு பிரதேச சபைக்கு உடனடியாக அனுப்ப வேண்டும் என்றுமு் சபையில் ஏக மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
</p><p>
அத்துடன் எதிர்வரும் 14ஆம் திகதி சிறப்பு கூட்டத்தினை நடத்துவது என்றும்,
13ஆம் திகதிக்கு முன்னர், வலி. தெற்கு பிரதேச சபையினர் கழிவுகளை மீள அள்ளாது
விடின் அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பில் அன்றைய கூட்டத்தில்
தீர்மானிப்பதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-20T15:18:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறுவர்கள் மீதான தாக்குதல் : காணொளி வைரலானதை அடுத்து ஒருவர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/man-arrested-after-video-of-child-assault-1787236159"></link>
            <id>https://ibctamil.com/article/man-arrested-after-video-of-child-assault-1787236159</id>
            <summary type="text">நான்கு வயது சிறுமியையும், ஏழு வயது சிறுவனையும் ஒருவர் தாக்கி, அந்தச் சம்பவத்தைப் பதிவுசெய்த அதிர்ச்சியூட்டும் காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் பரவி பெரும்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நான்கு வயது சிறுமியையும், ஏழு வயது சிறுவனையும் ஒருவர் தாக்கி, அந்தச் சம்பவத்தைப் பதிவுசெய்த அதிர்ச்சியூட்டும் காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் பரவி பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியதை அடுத்து, காவல்துறை சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுத்துள்ளது.
</p><p>
ஓகஸ்ட் 19 ஆம் திகதி இரவு நடந்ததாகக் கூறப்படும் இந்தத் தாக்குதல் தொடர்பாக, பின்னவல காவல்துறையினர் 26 வயது நபர் ஒருவரைக் கைது செய்தனர்.</p><h2>காணொளி பரவியதை அடுத்து கைது</h2><p>பலாங்கொடவில் உள்ள பின்னவல காவல் பிரிவைச் சேர்ந்த சந்தேக நபர், இந்தச் சம்பவம் தொடர்பான காணொளி சமூக ஊடகங்களில் பரவலாகப் பரவியதை அடுத்து கைது செய்யப்பட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/06c59b11-1efd-44a7-8b4b-73e68ec72705/26-6a871338847d8.webp' /></p><h2>சிறுவர்கள் மருத்துவமனையில் அனுமதி</h2><p>
</p><p>
இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து, இரண்டு சிறுவர்களும் மருத்துவப் பரிசோதனைக்காக பலாங்கொட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b8c62c07-c107-45c9-b036-9b554ccc29f9/26-6a87158410f28.webp' /></p><p>

தாக்குதலின் பின்னணி உட்பட, இந்தச் சம்பவத்தைச் சுற்றியுள்ள சூழ்நிலைகள் குறித்து காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர், மேலும் சந்தேக நபருக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கையைத் மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.&nbsp; </p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p>&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-20T15:16:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[Mood-ஆ பாடுங்க, பைட் பண்ணி பாடுங்கன்னு சொன்ன இயக்குநர்!! பிரபல பாடகி சுனிதா காட்டம்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/studio-directors-misconduct-singer-sunitha-sarathy-1787234741"></link>
            <id>https://viduppu.com/article/studio-directors-misconduct-singer-sunitha-sarathy-1787234741</id>
            <summary type="text">சுனிதா சாரதிதமிழில் பல இசையமைப்பாளர்கள் இசையில் பாடி பிரபலமானவர் தான் பாடகி சுனிதா சாரதி. சமீபத்தில் அவர் அளித்த பேட்டியொன்றில், ரெக்கார்டிங் ஸ்டூடியோ...</summary>
            <content type="html"><![CDATA[<h2>சுனிதா சாரதி</h2><p>தமிழில் பல இசையமைப்பாளர்கள் இசையில் பாடி பிரபலமானவர் தான் பாடகி சுனிதா சாரதி. சமீபத்தில் அவர் அளித்த பேட்டியொன்றில், ரெக்கார்டிங் ஸ்டூடியோவில் பெண் பாடகர்கள் சந்திக்கும் சங்கடங்கள் குறித்து மனம் திறந்து பேசியிருக்கிறார். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c3c0301f-6092-4838-9512-57bc66af0213/26-6a8709b874c2b.webp' /></p><p>அதில், அதுவொரு மிகவும் செக்ஸியான பாடல், நான் பாட சென்றபோது அந்த ரெக்கார்டிங் ஸ்டூடியோவில் முழுக்க முழுக்க ஆண்கள் மட்டும் இருந்தார்கள். ஒரு பெண்கள்கூட இல்லை. அப்போது அப்படத்தின் இயக்குநர் என்னிடம், கொஞ்சம் மூட்-ஆ(MOOD) பாடுங்கன்னு சொன்னார். </p><p>இசையமைப்பாளர் அதை சொல்லவில்லை. இயக்குநர் தான் அப்படி பாடச்சொன்னார். உடனே நான் என் முகத்தை மிகவும் கோபமாக வைத்துக்கொண்டு, அவரது முகத்திற்கு நேராகவே, எனக்கெல்லாம் மூடா பாட வராது என முகத்தில் அடித்தது போல் சொல்லிவிட்டேன். </p><p>உடனே அவர் அதிர்ச்சியாகி, என்ன மேடம் இப்படி சொல்லிட்டீங்க என்று கேட்டார். அப்பாடல் எதுவென்று வெளிப்படையாக சொல்ல விரும்பாத சுனிதா சாரதி, சினிமாத்துறையில் பயன்படுத்தப்படும் சில சொற்கள் அருவருப்பானதாக இருக்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/25951b52-575d-46ac-b42e-805ca9843e0d/26-6a8709b7be7a1.webp' /></p><p> </p><p>ஸ்டூடியோவில் மூடா பாடுங்க, கொஞ்சம் பைட் பண்ணி பாடுங்க என்ற வார்த்தைகளை பயன்படுத்தும்போது, பாடகர்களுக்கு எந்த மூடும் வராது, மாறாக அருவருப்பாகவும், மிகுந்த சங்கடமாகவும் தான் இருக்கும்.</p><p> அவர்கள் அப்படி பேசும்போது டென்ஷனாகிவிடும் பாடல் பாடுவதைவிட, எப்போது இந்த இடத்தைவிட்டு வெளியே போவோம் என்ற எண்ணம் தான் வரும். பாடகர்களிடம் இதுபோன்ற மலிவான வார்த்தைகளை பயன்படுத்துவதற்கு பதில், Sensuality, Sexuality என்ற வார்த்தைகளை தெளிவாக, மரியாதையாக பயன்படுத்தலாம். மூடா பாடுங்க, என்று சொல்வதெல்லாம் ஒரு பாடலை பாடுவதற்கான சரியான இசை வழிகாட்டலே கிடையாது என்று கூறியிருக்கிறார் சுனிதா சாரதி.</p>]]></content>
            <updated>2026-08-20T15:15:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[4 ராஜயோகங்கள் உருவாகும் செப்டம்பர்: அதிர்ஷ்டசாலி ராசிகள் இவர்கள் தான்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/september-2026-horoscope-3-zodiacsget-big-success-1787236776"></link>
            <id>https://manithan.com/article/september-2026-horoscope-3-zodiacsget-big-success-1787236776</id>
            <summary type="text">September 2026 Horoscope: ஜோதிட சாஸ்திரத்தின்படி, செப்டம்பர் மாதம் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. ஏனெனில் இந்த மாதத்தில் பல முக்கியமான கிரகப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>September 2026 Horoscope: ஜோதிட சாஸ்திரத்தின்படி, செப்டம்பர் மாதம் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. ஏனெனில் இந்த மாதத்தில் பல முக்கியமான கிரகப் பெயர்ச்சிகள் மற்றும் சேர்க்கைகள் நடைபெற உள்ளன.

சுக்கிரன் தனது சொந்த ராசியான துலாமில் நுழைந்து ‘மாளவ்ய ராஜயோகத்தை’ உருவாக்குகிறார். </p><p>மேலும், மாதத்தின் பிற்பகுதியில் சுக்கிரனும் புதனும் துலாமில் இணைந்து ‘லட்சுமி நாராயண யோகத்தை’ உருவாக்க உள்ளனர். அதேபோல், புதன் கன்னி ராசியில் நுழைந்து ‘பத்ர ராஜயோகத்தை’ உருவாக்குகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a46d2be5-3f1c-4dcc-9f6c-5c3cea0087a5/26-6a871714a4e75.webp' /></p><p>
இதற்கிடையில், கடகத்தில் செவ்வாயின் சஞ்சாரம் சில ராசிக்காரர்களுக்கு சவால்களை ஏற்படுத்தக்கூடும். சூரியன் கன்னியில் புதனுடன் இணைவதால் ‘புதாதித்ய ராஜயோகமும்’ உருவாகிறது.
</p><p>
இந்த முக்கியமான கிரக மாற்றங்கள் அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும், குறிப்பிட்ட சில ராசிக்காரர்களுக்கு மிகவும் மங்களகரமான பலன்கள் கிடைக்க உள்ளன. அந்த அதிர்ஷ்டசாலி ராசிகள் யார் யார் என இந்தப் பதிவில் பார்க்கலாம்.</p><p></p><h2>ரிஷபம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d71c88af-438d-472a-b62d-00e3d04e8cfc/26-6a87171563652.webp' /></p><h2> </h2><p>
ரிஷப ராசிக்காரர்களுக்கு செப்டம்பர் மாதம் மிகவும் சாதகமான காலகட்டமாக இருக்கும். ரிஷப ராசியின் அதிபதியான சுக்கிரன் தனது சொந்த ராசியிலேயே வலுவாக இருப்பதால், இது அவர்களுக்கு எதிரிகளை வீழ்த்தும் வாய்ப்புகள் நிறைந்த மற்றும் வெற்றிகளை குவிக்கக்கூடிய மாதங்கள் நிறைந்த மாதமாக இருக்கும். </p><p>இந்தக் காலகட்டத்தில் அவர்களின் ஆரோக்கியமும் சீராக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்த நேரத்தில் அவர்களின் புதிய முயற்சிகள் அனைத்தும் அவர்களுக்கு மிகப்பெரிய வெற்றியைக் கொடுக்கும்.</p><p> புதிய சொத்துக்கள் அல்லது வாகனங்கள் வாங்க இது சரியான காலமாக இருக்கும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். இந்த நேரத்தில் உங்கள் வாழ்க்கையில் பல மகிழ்ச்சியான மாற்றங்கள் உங்களுக்காக காத்திருக்கின்றன.</p><h2>

துலாம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/038ba564-5ce4-4b08-b82a-44ea79c7cfa4/26-6a87171616985.webp' /></p><h2>
</h2><p>துலாம் ராசிக்காரர்களுக்கு செப்டம்பர் மாதம் 2026-ன் மிகவும் சாதகமான மாதங்களில் ஒன்றாக அமையக்கூடும். துலாம் ராசியின் அதிபதியான சுக்கிரன் அவர்களின் முதல் வீட்டில் சஞ்சரித்து, தனது ஆதிக்கத்தை வலுப்படுத்துவார்.</p><p> செப்டம்பர் மாத இறுதியில், துலாம் ராசியில் சுக்கிரனும் புதனும் இணைந்து 'லட்சுமி நாராயண யோகத்தை' உருவாக்குவார்கள். இந்த யோகம் செழிப்பு மற்றும் சாதகமான முன்னேற்றங்களை வழங்கக்கூடியதாகும்.</p><p> பொருளாதார நிலை மேம்படும் அதே நேரத்தில், குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியான தருணங்கள் உருவாகலாம்.

இந்த மாதத்தில் அவர்கள் கடந்த கால முதலீடுகளிலிருந்து லாபம் ஈட்டுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. </p><p>மேலும் பல்வேறு ஒப்பந்தங்கள் மூலம் பெரிய அளவில் வருமானம் ஈட்ட முடியும். உடல்நலப் பிரச்சினைகளால் அவதிப்படுபவர்கள் தங்கள் பிரச்சனைகளில் இருந்து எளிதாக நிவாரணம் பெறலாம். </p><p>அலுவலகத்தில் பெரிய வெற்றிகள் சாத்தியமாகும், மேலும் இந்த காலகட்டத்தில் எதிர்பார்த்ததை விட அதிக சம்பள உயர்வைப் பெறலாம். திருமண வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சிகரமாக இருக்கும். </p><h2>

மீனம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d0501ef8-84d7-4492-bbe0-51e13d1c4b6c/26-6a871716ba1da.webp' /></p><p></p><h2> </h2><p>செப்டம்பர் மாதம் மீன ராசிக்காரர்களுக்கு முன்னேற்றத்தையும் புதிய வாய்ப்புகளையும் கொண்டு வரக்கூடும். வளர்ச்சி, கல்வி மற்றும் ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளுக்குச் சாதகமாகக் கருதப்படும் ஐந்தாம் வீட்டில் குரு பகவான் வலுவான நிலையில் சஞ்சரிக்க உள்ளார்.</p><p> இந்த மாதத்தில் வேலையில் தங்கள் வேலையில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கலாம். அதேவேளையில், மாணவர்களுக்கு இக்காலம் படிப்பில் சாதகமான விளைவுகளைக் கொடுக்கும்.</p><p> இருப்பினும், செப்டம்பர் 18 அன்று செவ்வாய் மற்றும் குரு ஆகிய கிரகங்களின் சேர்க்கை நிகழ்வதால், கோபம், அவசர முடிவுகள் மற்றும் தேவையற்ற மோதல்களைத் தவிர்ப்பது அவசியம்.</p><p><b>இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).&nbsp; &nbsp; &nbsp; </b>&nbsp; &nbsp; &nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்<b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"> FOLLOW NOW&nbsp;</a></u></b></td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-20T15:03:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வினாடிக்கு 25,000 கி.மீ அதிவேக நட்சத்திரம் கண்டுபிடிப்பு - ஐன்ஸ்டீன் கோட்பாட்டை சோதிக்க வாய்ப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/fastest-star-found-near-black-hole-1787238259"></link>
            <id>https://news.lankasri.com/article/fastest-star-found-near-black-hole-1787238259</id>
            <summary type="text">Scientists found the world’s fastest star: வானியலாளர்கள் மிக வேகமான நட்சத்திரத்தை கண்டுபிடித்துள்ளனர்.

Star S301வானியலாளர்கள், Milkyway விண்மீன் மண...</summary>
            <content type="html"><![CDATA[<p>Scientists found the world’s fastest star: வானியலாளர்கள் மிக வேகமான நட்சத்திரத்தை கண்டுபிடித்துள்ளனர்.
</p><h2>
Star S301</h2><p>வானியலாளர்கள், Milkyway விண்மீன் மண்டலத்தில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டதிலேயே அதிவேக நட்சத்திரத்தை (Star S301) கண்டறிந்துள்ளனர்.
</p><p>
இந்த நட்சத்திரம், நமது மில்கிவே விண்மீன் மண்டலத்தின் மையத்தில் உள்ள Sagittarius A* எனப்படும் மிகப்பெரிய கருந்துளையைச் சுற்றி, வினாடிக்கு 15,500 மைல்கள் (சுமார் 25,000 கி.மீ) வேகத்தில் பயணிக்கிறது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a3c6c098-9662-48c2-b727-1088e98950ab/26-6a8717755b6e3.webp' /></p><h2>ஒளியின் வேகத்தை விட...</h2><p>இது ஒளியின் வேகத்தை விட 8 சதவீதம் அதிக வேகம் ஆகும்.
</p><p>S301 நட்சத்திரம், வெறும் 8.7 ஆண்டுகளில் கருந்துளையைச் சுற்றி ஒரு முழு சுற்றை முடிக்கிறது. அதன் பாதை மிகவும் நீளமான elliptical orbit ஆகும். மிக அருகில் வரும் போது, அது கருந்துளைக்கு சுமார் 1.8 பில்லியன் கி.மீ நெருக்கமாக வருகிறது.
</p><p></p><h2>ஐன்ஸ்டீன் கோட்பாட்டை சோதிக்க வாய்ப்பு</h2><p>இந்த கண்டுபிடிப்பு, ஐன்ஸ்டீனின் பொதுச் சார்பு கோட்பாட்டை (General Relativity) சோதிக்க ஒரு அரிய வாய்ப்பை வழங்குகிறது. குறிப்பாக, “Frame Dragging” எனப்படும் நிகழ்வை, கால-விண்வெளி அமைப்பை இழுத்துச் செல்லும் விளைவுகளை ஆராய்வதற்கான வாய்ப்பு கிடைக்கிறது.
</p><h2>
கண்டுபிடிப்பு விவரங்கள்:
</h2><ul><li>
S301 நட்சத்திரம் சூரியனை விட 1.5 மடங்கு நிறை (mass) கொண்டது.
</li><li>
சூரியனை விட 5 மடங்கு பிரகாசமானது.
</li><li>
2017 முதல் 2023 வரை சேகரிக்கப்பட்ட தரவுகள் மூலம், ESO-வின் GRAVITY கருவி பயன்படுத்தி கண்டறியப்பட்டது.</li></ul><p></p><p>ஆராய்ச்சியாளர்கள், இது முன்பு இரட்டை நட்சத்திர அமைப்பில் இருந்திருக்கலாம் என்றும், கருந்துளை அதை பிரித்து, S301-ஐ பிடித்துக்கொண்டிருக்கலாம் என்றும் கருதுகின்றனர்.
</p><p>
அடுத்த முக்கியமான வாய்ப்பு 2031-ல் கிடைக்கும். அப்போது S301 மீண்டும் கருந்துளைக்கு மிக அருகில் வரும். ESO-வின் Extremely Large Telescope மூலம் அதன் இயக்கத்தை மிகத் துல்லியமாக கண்காணிக்க திட்டமிடப்பட்டுள்ளது.</p><p>

இந்த கண்டுபிடிப்பு, கருந்துளையின் சுழற்சி வேகத்தை நேரடியாக அளவிடும் வாய்ப்பை வழங்குவதால், வானியலின் வரலாற்றில் மிகப் பெரிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-20T15:01:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[விண்வெளியில் கீரை; நாசாவின் சாதனை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/indian-origin-greens-in-space-1787224124"></link>
            <id>https://jvpnews.com/article/indian-origin-greens-in-space-1787224124</id>
            <summary type="text">&amp;nbsp; எதிர்காலத்தில், விண்வெளியில் விவசாயம் செய்வது குறித்த ஆராய்ச்சியில் நாசா விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். 

அதன் ஒரு பகுதியாக, சர்வதேச விண்வெளி நி...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; எதிர்காலத்தில், விண்வெளியில் விவசாயம் செய்வது குறித்த ஆராய்ச்சியில் நாசா விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.</p><p> 

அதன் ஒரு பகுதியாக, சர்வதேச விண்வெளி நிலையத்தில் முட்டைக்கோஸ் மற்றும் வசாபி கடுகு கீரைகளை வெற்றிகரமாக விளைவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cf1c93d9-6e1b-46ff-bb84-ae0150792b4c/26-6a86e03dad1ce.webp' /></p><p>

இந்நிலையில், அந்த கீரைகளை இந்திய வம்சாவளி விண்வெளி வீரர் அனில் மேனன் சாப்பிடும் காணொளி தற்போது வெளியாகி, சமூக ஊடகங்களில் வைரலாகிறது.&nbsp;&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-20T15:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹோர்முஸ் நீரிணையை வைத்து மிரட்டும் நடவடிக்கைகளை நிறுத்துமாறு கட்டார் வெளியுறவு அமைச்சர் கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/threatening-actions-involving-the-strait-of-hormuz-1787237090"></link>
            <id>https://tamilwin.com/article/threatening-actions-involving-the-strait-of-hormuz-1787237090</id>
            <summary type="text">அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே ஏற்பட்ட போருக்கு முன்னர்
இருந்த நிலைக்கு ஹோர்முஸ் நீரிணை வழியிலான கப்பல் போக்குவரத்து மீண்டும்
கொண...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே ஏற்பட்ட போருக்கு முன்னர்
இருந்த நிலைக்கு ஹோர்முஸ் நீரிணை வழியிலான கப்பல் போக்குவரத்து மீண்டும்
கொண்டுவரப்பட வேண்டும் என்று கட்டார் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான ஷேக் முகமது பின் அப்துல்ரஹ்மான் பின் ஜாசிம் அல் தானி தெரிவித்துள்ளார். </p><p>அத்தோடு, மோதலில் ஈடுபட்டுள்ள எந்தவொரு தரப்பும்
மற்றுமொரு தரப்பை மிரட்டக்கூடாது என்றும் கட்டார் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>எகிப்தின் எல் அலமைன் நகரில் நடைபெற்ற உயர் மட்டப் பேச்சுவார்த்தையின் பின்னர்
ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு
குறிப்பிட்டுள்ளார்.</p><h2>கடுமையான பாதிப்பு</h2><p>
</p><p>
இந்த போரின் விளைவுகள் வளைகுடா பிராந்தியத்திற்கு மட்டுமல்லாது உலகளாவிய
ரீதியில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளதாக சுட்டிக்காட்டினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f99b2328-a57e-4279-b867-ddb409231811/26-6a87156ee753e.webp' /></p><p>நிலைமை மீண்டும் பழைய நிலைக்குத் திரும்ப வேண்டியது அவசியமானது என்றும், இதில்
ஏற்படுத்தப்படும் எந்தவொரு அச்சுறுத்தல்களையும் தடைகளையும் தமது நாடு
கண்டிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-20T14:55:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[போராட்டத்தின் இலக்கை அடையும் வரை பின்வாங்கப் போவதில்லை – வட மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/development-officers-union-vows-continue-protest-1787236371"></link>
            <id>https://tamilwin.com/article/development-officers-union-vows-continue-protest-1787236371</id>
            <summary type="text">கடந்த திங்கட்கிழமை (17.08.2026) தமது சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம், தங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புக்கான தீர்வு கிடைக்கும் வரை எவ்வித விட்டுக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>கடந்த திங்கட்கிழமை (17.08.2026) தமது சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம், தங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புக்கான தீர்வு கிடைக்கும் வரை எவ்வித விட்டுக்கொடுப்புகளுமின்றி தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என வட மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.</p><p>

ஊடகங்கள் வாயிலாக அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு இதனைத் தெரியப்படுத்துவதாகவும் சங்கம் குறிப்பிட்டுள்ளது.</p><h2>பல்வேறு நெருக்கடி</h2><p>

நேற்றைய தினம் (19.08.2026) ஆளுநருடன் இடம்பெற்ற சந்திப்புக்கும், பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் தமது சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்துக்கும் எவ்வித தொடர்பும் இல்லை எனவும் அந்தச் சங்கம் தெரிவித்துள்ளது.</p><p>

தமது போராட்டத்தின் பிரதான கோரிக்கையான, குறித்த அதிகாரிகளின் செயற்பாடுகள் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட்டு, அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற கோரிக்கையிலிருந்து ஒருபோதும் பின்வாங்கப் போவதில்லை எனவும் சங்கம் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2a81ffc1-2b97-4fc9-90ef-a5eba540706e/26-6a87122da7579.webp' /></p><p>

இதனை தமது சக உத்தியோகத்தர்கள், போராட்டத்திற்கு ஆதரவு வழங்கிய ஏனைய தொழிற்சங்கங்கள் மற்றும் சமூக அக்கறை கொண்ட அனைவருக்கும் தெரியப்படுத்துவதாகவும் குறிப்பிட்டுள்ளது.</p><p>தொழிற்திணைக்களத்தில் முறையாகப் பதிவு செய்யப்பட்டு, வடக்கு மாகாணம் முழுவதும் மாகாண மற்றும் மத்திய சேவைகளில் கடமையாற்றும் 3,000-க்கும் மேற்பட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்களை உள்ளடக்கி கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக தமது சங்கம் செயற்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் நலன்களை மாத்திரமே முன்னிறுத்தி தமது செயற்பாடுகள் தொடரும் எனவும், போராட்டத்தின் இலக்கை அடைவதற்காக ஏற்கனவே திட்டமிடப்பட்ட நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் எனவும் சங்கம் அறிவித்துள்ளது.</p><h2>முறையான அழைப்பு</h2><p>

இதேவேளை, நேற்றைய தினம் (19.08.2026) ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றதாக ஊடகங்கள் மூலம் அறியப்பட்ட கலந்துரையாடலுக்கு வட மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கத்திற்கு முறையான அழைப்பு விடுக்கப்படவில்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
</p><p>
தமது சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தை தமக்கு சாதகமாக பயன்படுத்தி, அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும் தமது போராட்டத்தையும் மலினப்படுத்தும் நோக்கில் பிரதான தொழிற்சங்கமான தங்களை தவிர்த்து பிறிதொரு தரப்பினரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியமைக்கு கண்டனம் தெரிவிப்பதாகவும் சங்கம் குறிப்பிட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bbc2b11a-e1ea-4297-8c0f-53c4184bdf1a/26-6a87122e5af31.webp' /></p><p>

இவ்வாறான முறையற்ற செயற்பாடுகளை இனிவரும் காலங்களில் ஆளுநர் முன்னெடுக்க மாட்டார் என தாம் நம்புவதாகவும், ஜனாதிபதியினால் வடமாகாண ஆளுநராக நியமிக்கப்பட்ட அவர்,</p><p> தமக்கு வழங்கிய வாக்குறுதிகளின் அடிப்படையில் நேர்மையான செயற்பாடுகளை முன்னெடுப்பார் என ஆணித்தரமாக நம்புவதாகவும் சங்கம் தெரிவித்துள்ளது.
</p><p>
“வாய்மையே வெல்லும்” என்ற நோக்குடன் தமது செயற்பாடுகள் தொடரும் எனவும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-20T14:41:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thevanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நெல் கொள்வனவு மேற்கொள்வது தொடர்பான கலந்துரையாடல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/paddy-held-by-farmers-will-be-procured-1787236852"></link>
            <id>https://tamilwin.com/article/paddy-held-by-farmers-will-be-procured-1787236852</id>
            <summary type="text">கிளிநொச்சி மாவட்டத்தில் நெல்
கொள்வனவு மேற்கொள்வது தொடர்பான கலந்துரையாடல் மாவட்ட அரசாங்கதிபர்
சுப்பிரமணியம் முரளிதரன் தலைமையில் மாவட்ட செயலகத்தில் நட...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிளிநொச்சி மாவட்டத்தில் நெல்
கொள்வனவு மேற்கொள்வது தொடர்பான கலந்துரையாடல் மாவட்ட அரசாங்கதிபர்
சுப்பிரமணியம் முரளிதரன் தலைமையில் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.</p><p> குறித்த கலந்துரையாடலில் கமநல அபிவிருத்தி உதவி
ஆணையாளர், வடமாகாண நெல் சந்தைப்படுத்தல் சபை முகாமையாளர், அரிசி ஆலை
உரிமையாளர்கள்,,பலநோக்கு கூட்டுறவுச்சங்க முகாமையாளர்கள் ,கமக்காரர்
அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர்.</p><p>கலந்துரையாடலின் போது

கிளிநொச்சி மாவட்டத்தில் சிறுபோக நெல் அறுவடை ஆரம்பிக்கப்பட்ட பின்னர், மாவட்ட
நெல் சந்தைப்படுத்தும் திணைக்களத்தின் ஊடாக இதுவரை ஏறத்தாழ 2,600 மெட்ரிக்
தொன் நெல் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.</p><h2>நெல் கொள்வனவு</h2><p>

இருப்பினும், மாவட்டத்தில் சுமார் 30,000 ஏக்கரில் விவசாயம்
மேற்கொள்ளப்பட்டுள்ளதால், விவசாயிகள் தங்களின் உற்பத்தியை நியாயமான விலையில்
விற்பனை செய்ய அரசாங்கத்தால் மீண்டும் ஒரு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
</p><p>இதன்படி, மாவட்டத்தில் உள்ள தனியார் சிறு நெல் ஆலை உரிமையாளர்கள் ஊடாக நெல்
கொள்வனவு செய்ய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/695326bf-9a27-4776-9f07-2987ce57be92/26-6a8711f654c94.webp' /></p><p>
</p><p>கலந்துரையாடலில், பலநோக்கு கூட்டுறவுச் சங்கங்கள் சார்பில் 3 நெல்
ஆலை உரிமையாளர்களும், தனியார் தரப்பில் 8 நெல் ஆலை உரிமையாளர்களும்
பங்கேற்றிருந்தனர். </p><p>இவர்கள் ஊடாக விரைவாக நெல் கொள்வனவு செய்வதற்கான
ஒழுங்குகள் செய்யப்பட்டு வருகின்றன.

இதனடிப்படையில், ஒவ்வொரு நெல் ஆலை உரிமையாளருக்கும் 25 மில்லியன் ரூபாய் கடன்
நிதியாக வழங்கப்பட்டு, விவசாயிகள் வசமுள்ள நெல் கொள்வனவு செய்யப்படும்.</p><p>இதன்
மூலம் மேலும் சுமார் 10,000 மெட்ரிக் தொன் நெல்லை விவசாயிகள் சந்தைப்படுத்த
முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
என தெரிவித்தார்.</p>]]></content>
            <updated>2026-08-20T14:41:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரசு திட்டங்களை பரப்பும் வீடியோவிற்கு ரூ.1 லட்சம் - வாரி வழங்கும் பீகார் அரசு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/bihar-to-pay-creators-lakh-for-govt-scheme-video-1787236482"></link>
            <id>https://news.lankasri.com/article/bihar-to-pay-creators-lakh-for-govt-scheme-video-1787236482</id>
            <summary type="text">bihar to pay creators for government scheme video: அரசு திட்டங்களை பரப்பும் வீடியோவிற்கு ரூ.1 லட்சம் வரை வழங்க பீகார் அரசு முன்வந்துள்ளது.

அரசு திட...</summary>
            <content type="html"><![CDATA[<p>bihar to pay creators for government scheme video: அரசு திட்டங்களை பரப்பும் வீடியோவிற்கு ரூ.1 லட்சம் வரை வழங்க பீகார் அரசு முன்வந்துள்ளது.
</p><h3>
அரசு திட்டங்களை பரப்பும் வீடியோவிற்கு பணம் </h3><p>

முன்னதாக அரசு தங்களது திட்டங்கள் மற்றும் சாதனைகளை நாளிதழ்கள் மற்றும் தொலைக்காட்சி ஊடங்கங்களில் மட்டுமே விளம்பரப்படுத்தி வந்தது.</p><p> 

இளைய தலைமுறையினர் சமூக ஊடகங்களை அதிகளவில் பயன்படுத்தி வருவதால், தற்போது சமூக ஊடகங்களிலும் விளம்பரப்படுத்தி வருகிறது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aeaf4c69-31e3-4280-ae10-e660251d5f02/26-6a8710843c67f.webp' /></p><p> 

இதே போல் அரசின் நலத்திட்டங்கள் குறித்து வீடியோ வெளியிடும் சமூகஊடக படைப்பாளிகளுக்கு பீகார் மாநில அரசு பணம் வழங்க உள்ளது. </p><p>

இதில் அரசின் திட்டங்கள் மற்றும் நிகழ்ச்சிகள் தொடர்பான வீடியோக்களுக்கு கிடைக்கும் ஒவ்வொரு 1 லட்சம் பார்வைகளுக்கும், சமூக ஊடகப் படைப்பாளிகளுக்கு ரூ.10,000 வழங்கும். ஒரு வீடியோவிற்கு அதிகபட்சமாக ரூ.1 லட்சம் வரை வழங்கப்படும்.&nbsp;</p><p></p><p>

மாநில அரசின் கீழ் பதிவு செய்யப்பட்ட சமூகஊடக பக்கங்கள் மற்றும் சேனல்கள் மட்டுமே இதில் பங்குபெற முடியும்.
</p><p>
வீடியோ சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்ட நாளிலிருந்து 30 நாட்கள் நிறைவடைந்த பின்னரே அதற்கான பார்வைகளை சரிபார்த்து அரசு பணத்தை வழங்கும்.
</p><p>
பிரிவுகள், தகுதி நிபந்தனைகள், கட்டண விதிகளை விவரிக்கும் ஒரு விரிவான அறிவிப்பை, தகவல் மற்றும் மக்கள் தொடர்புத் துறை வெளியிடும் என்று அமைச்சரவை தெரிவித்துள்ளது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-20T14:36:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறுவர்கள் இருவரைத் தாக்கி காணொளி ; பொலிசார் அதிரடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/video-of-2-children-being-assaulted-police-action-1787229727"></link>
            <id>https://jvpnews.com/article/video-of-2-children-being-assaulted-police-action-1787229727</id>
            <summary type="text">&amp;nbsp; ஆண் குழந்தை ஒன்றையும் பெண் குழந்தை ஒன்றையும் கொடூரமாகத் தாக்கி, அதனைத் தனது கைத்தொலைபேசியில் காணொளியாகப் பதிவு செய்த நபர் ஒருவர் பின்னவலை பொலிஸ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; ஆண் குழந்தை ஒன்றையும் பெண் குழந்தை ஒன்றையும் கொடூரமாகத் தாக்கி, அதனைத் தனது கைத்தொலைபேசியில் காணொளியாகப் பதிவு செய்த நபர் ஒருவர் பின்னவலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
குறித்த தாக்குதல் சம்பவம் அடங்கிய காணொளி சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், நேற்று (19) சந்தேகநபர் பின்னவலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/10bfea72-258f-4485-81ea-1a06628f9647/26-6a86f620deda4.webp' /></p><h2>பொலிஸாரால் கைது</h2><p>
</p><p>
கைது செய்யப்பட்டவர் பலாங்கொடை - பின்னவலை பொலிஸ் பிரிவைச் சேர்ந்த 26 வயதுடைய நபராவார்.
</p><p>
தாக்குதலுக்கு இலக்கான 04 வயதுடைய பெண் குழந்தையும் 07 வயதுடைய ஆண் குழந்தையும் வைத்திய பரிசோதனைகளுக்காகவும் சிகிச்சைக்காகவும் பலாங்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p><p></p><p>

இந்த தாக்குதலுக்கான பின்னணி மற்றும் காரணத்தைக் கண்டறிவதற்கும், சந்தேகநபருக்கு எதிராக மேலதிக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் பின்னவலை பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-20T14:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஞானசார தேரர் இருந்த விகாரையில் நடந்த துயரச் சம்பவம் - தீவிரப்படுத்தப்படும் விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/police-officer-commits-suicide-1787235749"></link>
            <id>https://tamilwin.com/article/police-officer-commits-suicide-1787235749</id>
            <summary type="text">நாவல சத்தர்ம ராஜமகா விகாரையைப் பாதுகாக்கும் பணியில் இருந்த பொலிஸ் அதிகாரி ஒருவர், தனது பணித் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தவறான முடிவெடுத...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாவல சத்தர்ம ராஜமகா விகாரையைப் பாதுகாக்கும் பணியில் இருந்த பொலிஸ் அதிகாரி ஒருவர், தனது பணித் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.</p><p> 

இந்த சம்பவம், இன்று(20.08.2026) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><h2>
பொலிஸ் அதிகாரி உயிரிழப்பு</h2><p>அத்துடன், நாவல சத்தர்ம ராஜமகா விகாரையில், கலகொடாத்தா ஞானசார தேரர் இருக்கிறார் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c75a2141-97ca-4388-bba9-fc6bcdee0e9c/26-6a870e3e41d32.webp' /></p><p>
</p><p>
இந்தச் சம்பவம் தொடர்பாக இன்று பிற்பகல் வேளையில், இராஜகிரிய பொலிஸாருக்குத் தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-20T14:25:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[உயர்கல்வி வாய்ப்புகளை தவறவிட்ட மாணவர்களுக்கு வட்டியில்லா கடன்! அரசாங்கத்தின் புதிய திட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/interest-free-loan-from-the-govt-for-education-1787233804"></link>
            <id>https://ibctamil.com/article/interest-free-loan-from-the-govt-for-education-1787233804</id>
            <summary type="text">

2023, 24, 25 ஆகிய ஆண்டுகளில் தனியார் பல்கலைக்கழகங்களில் உயர்கல்வி வாய்ப்புகளைப் பெறாத மாணவர்களுக்கு வட்டியில்லா கடன்களை வழங்கும் திட்டம் அரசாங்கத்...</summary>
            <content type="html"><![CDATA[<p>

2023, 24, 25 ஆகிய ஆண்டுகளில் தனியார் பல்கலைக்கழகங்களில் உயர்கல்வி வாய்ப்புகளைப் பெறாத மாணவர்களுக்கு வட்டியில்லா கடன்களை வழங்கும் திட்டம் அரசாங்கத்தால் தொடங்கப்பட்டுள்ளது.
</p><p>
அதிகபட்சமாக 1.5 மில்லியன் ரூபாய் வரையிலான கடனை 7 ஆண்டுகளில் திருப்பிச் செலுத்தும் கால அவகாசம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
</p><p>
இதன் மூலம், பல்கலைக்கழக ஆணைக்குழுவால் அங்கீகரிக்கப்பட்ட 16 தனியார் பல்கலைக்கழகங்களில் பட்டம் அல்லது தேசிய அளவிலான பட்டயப் படிப்புக்காக 130 பாடப்பிரிவுகளைப் படிக்கும் வாய்ப்பு மாணவர்களுக்குக் கிடைக்கும் என தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><h2>திட்டத்தின் முதற்கட்டம்</h2><p>

இலங்கை முழுவதும் செயல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படும் இந்த திட்டத்தின் முதற்கட்டம், செப்டம்பர் 3ஆம் திகதி களுத்துறை மாவட்டச் செயலகத்திலிருந்து தொடங்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/87456f24-eb13-45f6-a522-3bc27cc0a287/26-6a870c8b39a68.webp' /></p><p>

இதற்கிடையில், கல்வி மற்றும் உயர் கல்வி அமைச்சு, மாவட்டச் செயலகங்கள் மற்றும் பிரதேசச் செயலகங்கள் இணைந்து இத்திட்டத்தை ஏற்பாடு செய்யும் என களுத்துறை மாவட்டச் செயலாளர் சுனந்த ஹெரத் தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-20T14:17:55+00:00</updated>
        </entry>
    </feed>
