<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-09-18T11:14:10+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Erimalai</name>
            </author>
            <title type="text"><![CDATA[கவனயீர்ப்பு போராட்டத்தில் இறங்கிய கிளிநொச்சி நகர் மற்றும் கிளிநொச்சி சேவைச்சந்தை வர்த்தகர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/protest-at-kilinochchi-1789729275"></link>
            <id>https://tamilwin.com/article/protest-at-kilinochchi-1789729275</id>
            <summary type="text">கிளிநொச்சி நகர் மற்றும் கிளிநொச்சி சேவைச்சந்தை வர்த்தகர்கள் கவனயீர்ப்பு
போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.வர்த்தக நிலையங்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நட...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிளிநொச்சி நகர் மற்றும் கிளிநொச்சி சேவைச்சந்தை வர்த்தகர்கள் கவனயீர்ப்பு
போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.</p><p>வர்த்தக நிலையங்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்குமாறு கோரி அவர்கள் இந்த போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.&nbsp;</p><p>கிளிநொச்சி சேவைச்சந்தை முன்பாக ஆரம்பித்த கவனயீர்ப்பு பேரணி கிளிநொச்சி
மாவட்ட செயலகம் வரை சென்றுள்ளது.</p><h2>மகஜர் கையளிப்பு</h2><p>இதன்போது மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் நளாயினி இன்பராஜிடம் தமது கோரிக்கை அடங்கிய மகஜரை போராட்டக்காரர்கள் கையளித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/32163783-3fec-40d9-92a1-b857cd47e514/26-6aad1c8756d6b.webp' /></p><p> கிளிநொச்சி நகரில் தொடர்ச்சியாக வர்த்தகர்களை அச்சுறுத்தும் வகையில் வாள்
வெட்டுக்குழுக்கள் வாள் வெட்டுத்தாக்குதல்களை மேற்கொள்வதாகவும், கடந்த
வாரத்தில் மாத்திரம் தொடர்ச்சியாக இரண்டு சம்பவங்கள் நடைபெற்றுள்ளதாகவும்
வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-18T11:13:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ்ப்பாணத்தில் நூதன போராட்டத்தில் குதித்த பட்டதாரிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/jaffna-graduates-launch-novel-protest-1789729643"></link>
            <id>https://jvpnews.com/article/jaffna-graduates-launch-novel-protest-1789729643</id>
            <summary type="text">வேலையற்ற பட்டதாரிகள் தபால் பெட்டிக்கு மலர் மாலை அணிவித்து, தேங்காய் உடைத்து நூதன முறையில் போராட்டம் செய்தனர். 

யாழ். தபால் நிலையத்திற்கு முன்பாக இன...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">வேலையற்ற பட்டதாரிகள் தபால் பெட்டிக்கு மலர் மாலை அணிவித்து, தேங்காய் உடைத்து நூதன முறையில் போராட்டம் செய்தனர். </p><p style="text-align: justify; ">

யாழ். தபால் நிலையத்திற்கு முன்பாக இன்று (18) மதியம் 2 மணியளவில் ஒன்று கூடிய வேலையற்ற பட்டதாரிகள் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருக்கு பதிவு தபால் மூலம் உங்களுக்கு மகஜர் அனுப்பி வைத்துள்ளனர்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/50fb8596-f2b6-4467-9ed6-dd57fd687494/26-6aad1b6c71e70.webp' /></p><h2 style="text-align: justify; ">வேலைவாய்ப்பு</h2><p style="text-align: justify; "> 

1 லட்சம் பேருக்கான வேலைவாய்ப்பு வழங்கும் திட்டத்திற்கு, பட்டதாரிகள் 5 ஆயிரம் பேர் மட்டுமே உள்வாங்கப்படவுள்ளதாக அரசாங்கம் தீர்மானித்துள்ளதை கண்டித்து இந்த நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> 

தபால் நிலையத்தில் இருந்து மகஜர் அனுப்பிய போது, தபால் பெட்டிக்கு மலர் மாலை அணிவித்தும் மலர் தூவி, கற்பூரம் காட்டி, தேங்காய் உடைக்கும் போது, 225 நாடாளுமன்ற உறுப்பினர்களும், தமக்கான வேலைவாய்ப்பை உறுதிப்படுத்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளதுடன், தமது வேலை வாய்ப்பு தொடர்பில் கடவுளும், எமது தாய் தந்தையர்களுமான பொது மக்கள் ஆதரவை வழங்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-18T11:09:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[மீண்டும் பிரித்தானிய மண்ணில்.. ஆனாலும் நாங்கள் - இளவரசர் ஹரி கூறிய விடயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/prince-harry-said-back-on-british-soil-really-nice-1789727472"></link>
            <id>https://news.lankasri.com/article/prince-harry-said-back-on-british-soil-really-nice-1789727472</id>
            <summary type="text">Prince harry said back on british soil really nice: பிரித்தானிய மண்ணில் மீண்டும் இருப்பது அருமையாக உள்ளதாக இளவரசர் ஹரி ஊடகத்திடம் தெரிவித்தார். 

பி...</summary>
            <content type="html"><![CDATA[<p>Prince harry said back on british soil really nice: பிரித்தானிய மண்ணில் மீண்டும் இருப்பது அருமையாக உள்ளதாக இளவரசர் ஹரி ஊடகத்திடம் தெரிவித்தார். </p><p>

பிரித்தானியாவில் ஊடகத்திடம் பேசிய இளவரசர் ஹரி, தாய் மண்ணிற்கு திரும்பியது மகிழ்ச்சி என்று கூறியதுடன் சர்ச்சைக்குரிய புத்தகம் குறித்த கேள்விகளை புறக்கணித்தார்.&nbsp;</p><h2>சவால்கள்</h2><p>

இளவரசர் ஹரி மற்றும் மேகன் பிரித்தானியா திரும்பியதில் இருந்து பல சவால்களை சந்தித்து வருகின்றனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9e9d0812-6153-4036-9d0b-ad7b56c691d7/26-6aad14f34ab83.webp' />&nbsp;</p><p></p><p>

இந்த சூழலில், கிரீன்விச்சின் வரலாற்று சிறப்புமிக்க Old Royal Naval College வளாகத்தில் நடைபெற்ற முதல் Invictus Spirit Awards விழாவில் ஹரி கலந்துகொண்டார்.
</p><p>
அப்போது சிவப்பு கம்பள வரவேற்பு பாதையில் நின்றிருந்த செய்தியாளர் ஒருவர், "ஹரி, ஹரி...உங்கள் மாமாவின் புத்தகம் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?" என்று உரக்கக் கேட்டார். அதற்கு தீவிர முகபாவனையை ஹரி பதிலாக தந்தார். </p><h2>

நாங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறோம்</h2><p>எனினும், நேற்றிரவு அவர் அளித்த முதல் பேட்டியில், "இது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. மீண்டும் பிரித்தானிய மண்ணில் இருப்பதும், பல பழைய முகங்களையும், நண்பர்களையும் காண்பதும் மிகவும் அருமையாக இருக்கிறது.</p><p>

பல நிகழ்வுகள் நிறைந்ததாக இது அமைந்திருக்கிறது; ஆனாலும் நாங்கள் எங்கள் பணிகளில் முழுவீச்சில் ஈடுபடத் தொடங்கியுள்ளோம்.

குழந்தைகள் பாடசாலைகளில் இருக்கிறார்கள். நாங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறோம். </p><p>மேலும், நான் கூறியது போல் மீண்டும் பிரித்தானிய மண்ணிற்கு திரும்புவது அற்புதமாக இருக்கிறது. 

பிரித்தானியா திரும்பிய முதல் இரண்டு வாரங்கள் 'விறுவிறுப்பான நிகழ்வுகள் நிறைந்ததாக' இருந்தது. அடுத்த ஆண்டு பர்மிங்காமிற்கு செல்வதை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்" என்றார்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5fd2b7f6-cc54-4dc2-a15b-7281fcdd9695/26-6aad14f405ae6.webp' /></p>]]></content>
            <updated>2026-09-18T11:05:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[விமல் வீரவன்சவின் சர்ச்சைக்குரிய கருத்து : நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/court-directs-igp-to-probe-wimal-s-statement-1789728461"></link>
            <id>https://ibctamil.com/article/court-directs-igp-to-probe-wimal-s-statement-1789728461</id>
            <summary type="text">முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச நீதிமன்றத்தை அவமதிப்பு செய்துள்ளாரா என்பது தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு கொழும்பு பிரதான ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச நீதிமன்றத்தை அவமதிப்பு செய்துள்ளாரா என்பது தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் காவல்துறை மா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளது. </p><p>

இலஞ்ச ஊழல் ஆணைக்குழு விடுத்த கோரிக்கைக்கு அமைய, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று (18) இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.</p><p> 

கடந்த 12 ஆம் திகதி அநுராதபுரத்தில் இடம்பெற்ற சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் மக்கள் சந்திப்பொன்றின் போது, விமல் வீரவன்ச வெளியிட்ட கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.</p><p></p><h2>இலஞ்ச ஊழல் ஆணைக்குழு&nbsp;</h2><p> </p><p>

இதனிடையே எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக நாமல் ராஜபக்சவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாடு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, இலஞ்ச ஊழல் ஆணைக்குழு சார்பில் முன்னிலையான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டார, குறிப்பிட்ட உரை அடங்கிய இறுவட்டை நீதிமன்றத்தில் சமர்ப்பித்து இந்தக் கோரிக்கையை முன்வைத்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7abac9af-0527-4e08-97da-1aa08847f8ff/26-6aad19a7112bc.webp' /></p><p> </p><p>

அதனை பரிசீலித்த கொழும்பு பிரதான நீதவான் அஸங்க எஸ்.போதரகம, அவர் நீதிமன்றத்தை அவமதிப்பு செய்துள்ளரா என்பது தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவைப் பிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.&nbsp;&nbsp;</p><p>&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-18T11:04:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[இரட்டைவேடம் போடும் அர்ச்சுனா எம்.பி..! குற்றஞ்சாட்டும் விமல் வீரவன்ச]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/wimal-weerawansa-make-controversial-remark-archuna-1789724921"></link>
            <id>https://tamilwin.com/article/wimal-weerawansa-make-controversial-remark-archuna-1789724921</id>
            <summary type="text">உதவி செய்யும் போது நல்லவராகத் தெரிந்த வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா, எதிர்க்கட்சிக் களத்தில் இணைந்த பின்னர் தமிழினப் பிரிவினைவாதத்திற்கு எதிரான நிலைப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>உதவி செய்யும் போது நல்லவராகத் தெரிந்த வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா, எதிர்க்கட்சிக் களத்தில் இணைந்த பின்னர் தமிழினப் பிரிவினைவாதத்திற்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.</p><p>

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கருத்து தெரிவித்த அவர், வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா தொடர்பில் பல்வேறு குற்றச்சாட்டுகளையும் முன்வைத்தார்.</p><h2>புலம்பெயர் தமிழர்கள்</h2><p>
</p><p>
கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது புலம்பெயர் தமிழர்களின் பணத்தைப் பயன்படுத்தி தேர்தல் பிரசாரங்களை முன்னெடுத்து, தற்போதைய அரசாங்கத்திற்கு ஆதரவளித்தவரே இராமநாதன் அர்ச்சுனா என விமல் வீரவன்ச தெரிவித்தார்.
</p><p>
அப்போது அனைவருக்கும் நல்லவராகத் தெரிந்த அவர், தற்போது எதிர்க்கட்சிக் களத்தில் இணைந்த பின்னர் வேறு விதமான நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதாகவும் அவர் கூறினார்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/znPLorqc7l0" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p>

அண்மையில் தெற்கில் நடைபெற்ற பொதுக்கூட்டமொன்றில் உரையாற்றிய அர்ச்சுனா, தனது வாழ்நாளில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தனியான தமிழீழம் உருவாக இடமளிக்கப் போவதில்லை என்றும், தமிழ் மக்கள் சிங்கள மக்களுடன் மோதலில் ஈடுபட ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை என்றும் தெரிவித்ததாக விமல் வீரவன்ச குறிப்பிட்டார்.
</p><p>
அர்ச்சுனாவின் குறித்த கருத்துக்கள் தொடர்பில் தற்போது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.</p><p>&nbsp;இதேவேளை, யாழ்ப்பாணம் நல்லூரில் தியாகி திலீபனுக்கு சிலை அமைக்கப்பட்டு, மக்கள் அவரை நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்துவதாகவும் பிரார்த்தனைகளில் ஈடுபடுவதாகவும் விமல் வீரவன்ச தெரிவித்தார்.</p><h2>திலீபனின் சிலை</h2><p>
</p><p>
திலீபனின் பெயரைப் பயன்படுத்தி சிங்கள மக்கள் யாழ்ப்பாணத்தில் குடியேறுவதைத் தடுப்பது உள்ளிட்ட பிரிவினைவாதக் கோரிக்கைகள் முன்வைக்கப்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
</p><p>
திலீபன் விடுதலைப் புலிகள் அமைப்பின் லெப்டினன்ட் கர்னல் தரத்தில் இருந்தவர் என்றும், அவர் ஒரு பயங்கரவாதி என்றும் விமல் வீரவன்ச குறிப்பிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/764e2daa-0acf-4bf8-aaf4-8f2a2c81dcc9/26-6aad0d44b7be5.webp' /></p><p>

இவ்வாறான நிலையில், திலீபனின் சிலையை நிறுவி அவருக்கு அஞ்சலி செலுத்தியதாகக் கூறப்படும் தமிழ் தேசியவாதக் குழுக்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படாதது ஏன் எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.</p><p>

மேலும், நாட்டின் சட்டத்தைப் பொருட்படுத்தாமல் மேற்கொள்ளப்படும் தீவிரவாத மற்றும் பிரிவினைவாத நடவடிக்கைகளுக்கு கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது பெறப்பட்டதாகக் கூறப்படும் சட்டவிரோத பணம் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் விமல் வீரவன்ச குற்றம் சாட்டினார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-18T11:02:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மகிந்த மேடையில் சர்ச்சை கருத்து ; விமல் வீரவங்ச குறித்து நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/court-order-issued-regarding-wimal-weerawansa-1789729491"></link>
            <id>https://jvpnews.com/article/court-order-issued-regarding-wimal-weerawansa-1789729491</id>
            <summary type="text">&amp;nbsp; முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச நீதிமன்றத்தை அவமதிப்பு செய்துள்ளாரா என்பது தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு கொழும்பு ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச நீதிமன்றத்தை அவமதிப்பு செய்துள்ளாரா என்பது தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றம் பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளது. </p><p>



இலஞ்ச ஊழல் ஆணைக்குழு விடுத்த கோரிக்கைக்கு அமைய, கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றம் இன்று (18) இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a8262e83-cf27-427c-8a40-22272c628da4/26-6aad1ad4c90e3.webp' /></p><p> 



கடந்த 12 ஆம் திகதி அநுராதபுரத்தில் இடம்பெற்ற ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மக்கள் சந்திப்பொன்றின் போது, விமல் வீரவங்ச வௌியிட்ட கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. </p><p>



இந்நிலையில், நீதிமன்றில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டார, குறிப்பிட்ட உரை அடங்கிய இறுவெட்டை நீதிமன்றத்தில் சமர்ப்பித்து இந்தக் கோரிக்கையை முன்வைத்தார்.</p><p></p><p> </p><p>



அதனை பரிசீலித்த கொழும்பு பிரதான நீதிவான் அஸங்க எஸ்.போதரகம, அவர் நீதிமன்றத்தை அவமதிப்பு செய்துள்ளரா என்பது தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவைப் பிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-09-18T11:01:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பின் முக்கிய பகுதியில் இருவாரத்திற்குள் அகற்றப்படவுள்ள ஹோட்டல்கள்! அமைச்சர் அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/hotels-to-be-removed-within-two-weeks-1789727413"></link>
            <id>https://tamilwin.com/article/hotels-to-be-removed-within-two-weeks-1789727413</id>
            <summary type="text">கொழும்பு - கல்கிஸ்சை கடற்கரையோரத்தை அண்மித்த பகுதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள 27 சட்டவிரோத ஹோட்டல்கள் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் முழுமையாக அகற்றப...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு - கல்கிஸ்சை கடற்கரையோரத்தை அண்மித்த பகுதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள 27 சட்டவிரோத ஹோட்டல்கள் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் முழுமையாக அகற்றப்படும் என அமைச்சர் ஆனந்த விஜேபால அறிவித்துள்ளார்.</p><p> 

குருநாகல் பகுதியில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கையில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.</p><h2>காணி உரித்து வழங்குவதற்கான நடவடிக்கை</h2><p>
</p><p>
அவர் மேலும் தெரிவிக்கையில், பொது மக்களுக்கு சட்டத்தின் பிரகாரம் காணி உரித்து வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. 

கடந்த காலங்களில் காணி மறுசீரமைப்பு ஆணைக்குழு ஊடாகவே காணி முறைகேடுகள் இடம்பெற்றன. அரசியல் தலையீடுகளுடன் தான் இவ்வாறான முறைகேடுகள் இடம்பெற்றன. </p><p>

பொலன்னறுவை மாவட்டத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான எஸ்.எம்.சந்திரசேன, துமிந்த திஸாநாயக்க ஆகியோர் அரசியல் அதிகாரத்துடன் அரச காணிகளை கைப்பற்றியுள்ளார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e36da5f8-0eef-40a4-b10e-74f3e00d9eec/26-6aad199073805.webp' /></p><p> </p><p>

அவர்களுக்கு எதிராகவும் தற்போது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. கடந்த காலங்களில் பிரதான பேசுபொருளாக காணப்பட்ட மல்வானை சொகுசு இல்லம் மற்றும் காணி, கதிர்காம பகுதியில் சொகுசு இல்லம் மற்றும் அதனுடனான காணி அரசுடமையாக்கப்பட்டுள்ளது.</p><h2>காணி வழங்கல்</h2><p> </p><p>

மல்வானை இல்லத்தை பல்கலைக்கழக விடுதியாக மாற்றுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. நாங்கள் ஆட்சிக்கு வந்து 2 வருட காலத்தில் ஒரு அடி நிலத்தை கூட சட்டவிரோதமான முறையில் எவருக்கும் வழங்கவில்லை. 

காணி வழங்கல் நடவடிக்கைகள் சட்டத்தின் பிரகாரமே முன்னெடுக்கப்படுகிறது. </p><p>கல்கிஸ்சை கடற்கரையோரத்தை அண்மித்த பகுதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள 27 சட்டவிரோத ஹோட்டல்கள் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் முழுமையாக அகற்றப்படும். சட்டத்தின் பிரகாரமே உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன என்றார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-18T10:59:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறையில் வாடும் நாமலுக்கு இந்திய அரிசிடமிருந்து அழைப்பு.. பிணைக்காக போராடும் மொட்டுதரப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-airbus-case-bail-application-reasons-given-1789726135"></link>
            <id>https://tamilwin.com/article/namal-airbus-case-bail-application-reasons-given-1789726135</id>
            <summary type="text">நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் பிணை கோரிக்கையில், இந்திய அரசின் அழைப்பு மற்றும் திட்டமிடப்பட்ட பௌத்த மத சடங்கு ஆகியவை முக்கிய காரணங்களாக சட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் பிணை கோரிக்கையில், இந்திய அரசின் அழைப்பு மற்றும் திட்டமிடப்பட்ட பௌத்த மத சடங்கு ஆகியவை முக்கிய காரணங்களாக சட்டத்தரணிகளால் முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.&nbsp;</p><p>எயார்பஸ் இலஞ்ச ஊழல் வழக்கின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அவர், இன்று (18) கொழும்பு தலைமை நீதிவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் முன்னிலைபடுத்தப்பட்டார்.</p><p>நீதிமன்றம் அவரது பிணை மனுவை நிராகரித்த நிலையில், தற்போது விதிவிலக்கான சூழ்நிலைகள் உருவாகியுள்ளதாக நாமல் ராஜபக்ச சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி ஷமிந்திர பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><h2>முக்கிய நிகழ்வுகள்..&nbsp;</h2><p> இந்தியாவிற்கு விஜயம் செய்யுமாறு இந்திய அரசாங்கத்திடம் இருந்து ராஜபக்சவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள போதிலும், அவர் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளமையினால் அந்த விஜயத்தை இரத்து செய்ய வேண்டிய நிலை ஏற்படும் என நீதிமன்றத்திற்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a284b1dc-f852-4c3a-882e-7b6c823e1bd4/26-6aad1844cca28.webp' /></p><p> </p><p>அதுமாத்திரமன்றி, வருடாந்த ஹிங்குராக்கொட எசல பெரஹரவின் போது இடம்பெறும் மதச்சடங்கில் கலந்துகொள்ளுமாறும் பிரதம பௌத்த மதகுரு ஒருவரால் நாமல் ராஜபக்சவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் மன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.&nbsp;</p><p>இந்நிலையில் பாதுகாப்புத் தரப்பின் கூற்றுப்படி, செப்டெம்பர் 26ஆம் திகதி அன்று இரவு 7:42 மணிக்கு விகாரையொன்றில் கொத்தணி சூட்டும் நிகழ்வில் பங்கேற்க நாமல் ராஜபக்ச திட்டமிட்டிருந்தார் என்றும், அதில் கலந்துகொள்ள முடியாமை அழைப்பு விடுத்த மதகுருவை அவமதிப்பதாக அமையும் என்றும் அவரது சட்டத்தரணி குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1efba68a-9014-4cdb-88e6-c9207a51ed19/26-6aad1845bb5a3.webp' /></p><p> மேலும், எயார்பஸ் ஒப்பந்தம் தொடர்பான சர்வதேச விசாரணை அறிக்கையில் ராஜபக்சவின் பெயர் இடம்பெறவில்லை என்றும், தொழிலதிபர் நிமல் பெரேராவின் வாக்குமூலங்களின் நம்பகத்தன்மையை கேள்விக்குட்படுத்தியும் சட்டத்தரணி வாதிட்டுள்ளார்.</p><p> இந்தச் சமர்ப்பிப்புகளுக்குப் பதிலளித்த இலஞ்ச ஊழல் ஆணைக்குழு சார்பில் முன்னிலையான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டார, இந்திய விஜயமோ அல்லது மதச் சடங்கோ பிணை வழங்குவதற்குரிய விதிவிலக்கான சூழ்நிலைகளாக அமையாது என குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-18T10:58:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாகிஸ்தானில் மசூதிக்கு அருகில் வெடிகுண்டு தாக்குதல் ; 15 பேர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/bomb-blast-near-mosque-in-pakistan-1789728958"></link>
            <id>https://canadamirror.com/article/bomb-blast-near-mosque-in-pakistan-1789728958</id>
            <summary type="text">பாகிஸ்தானில், மசூதி அருகில் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைபர் பக்துன்குவா மாகாணத்தின் கோஹட் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பாகிஸ்தானில், மசூதி அருகில் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
கைபர் பக்துன்குவா மாகாணத்தின் கோஹட் மாவட்டத்தில் காவல் துறையினரின் குடியிருப்புப் பகுதியில் அமைந்துள்ள மசூதியின் அருகில் இன்று (18) மதியம் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ceea49d4-140e-49a6-954f-305a4058185f/26-6aad18c04b5a1.webp' /></p><p>


</p><p>இதனைத் தொடர்ந்து, வெள்ளிக்கிழமையை முன்னிட்டு நடைபெற்ற சிறப்புத் தொழுகையின்போது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டதாகவும், சுமார் 50 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
இந்தத் தாக்குதலால், அந்தப் பகுதியில் பெரும் பள்ளம் ஏற்பட்டுள்ள நிலையில், கூடுதல் பாதுகாப்புப் படையினர் அங்கு குவிக்கப்பட்டு தீவிர கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பாகிஸ்தானிய ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
</p><p>
இத்துடன், இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் பெறுப்பேற்கவில்லை. மேலும், சமீபகாலமாக பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினருக்கு எதிரான பயங்கரவாதத் தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன.</p><p>

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் பாகிஸ்தானின் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட 199 பயங்கரவாதத் தாக்குதகளில் 158 பேர் கொல்லப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-09-18T10:56:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள World Of 'வேட்டுவம்' - An Introduction வீடியோ]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/world-of-vettuvam-an-introduction-video-1789728764"></link>
            <id>https://cineulagam.com/article/world-of-vettuvam-an-introduction-video-1789728764</id>
            <summary type="text">World Of Vettuvam&amp;nbsp; - An Introduction video: இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா, தினேஷ், சோபிதா ஆகியோர் நடித்துள்ள &#039;வேட்டுவம்&#039; திரைப்படத்தின்...</summary>
            <content type="html"><![CDATA[<p>World Of Vettuvam&nbsp; - An Introduction video: இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா, தினேஷ், சோபிதா ஆகியோர் நடித்துள்ள 'வேட்டுவம்' திரைப்படத்தின் Introduction வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.</p><p></p><h2>வேட்டுவம்</h2><p>

அட்டகத்தி, மெட்ராஸ், சார்பட்டா பரம்பரை, தங்களான் உள்ளிட்ட பல தரமான திரைப்படங்களை தமிழ் திரையுலகிற்கு கொடுத்தவர் இயக்குநர் பா. ரஞ்சித். இவர் இயக்கத்தில் அடுத்ததாக உருவாகியுள்ள திரைப்படம் '<a href="https://www.youtube.com/watch?v=oZnAxf_5qYw" target="_blank">வேட்டுவம்</a>'.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7dde8bb5-f60f-4e37-885b-36c719f160b9/26-6aad17fff1688.webp' /></p><p></p><p>Sci-Fi ஆக்ஷன் கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் நடிகர் ஆர்யா, அட்டகத்தி தினேஷ், நடிகை சோபிதா துளிபாளா, கலையரசன், ஷபீர் ஆகியோர் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் குமார் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ரூபேஷ் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4edc5bff-0cea-4617-9d3f-f761e0e0ec96/26-6aad1800aa722.webp' /></p><p></p><p>மேலும் ஸ்டண்ட் திலீப் சுப்பராயன், கலை இயக்குநராக எஸ்.எஸ். மூர்த்தி மற்றும் செல்வா ஆர்.கே எடிட்டராக பணியாற்றியுள்ளனர். 

ரூ. 75 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள இப்படம் இந்த ஆண்டு வெளியாகிறது.</p><h3>An Introduction</h3><p> </p><p>இந்த நிலையில், பலருடைய கடுமையான உழைப்பில் உருவாகியுள்ள 'வேட்டுவம்' திரைப்படத்தின் An Introduction வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இதோ பாருங்க:</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/oZnAxf_5qYw" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-09-18T10:54:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Farook Sihan</name>
            </author>
            <title type="text"><![CDATA[காலாவதியான உணவுப் பொருட்கள் மீட்பு: உரிமையாளருக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/seizure-expired-food-items-legal-against-owner-1789727412"></link>
            <id>https://ibctamil.com/article/seizure-expired-food-items-legal-against-owner-1789727412</id>
            <summary type="text">கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைப் பிரிவுக்குட்பட்ட
உணவக/வர்த்தக நிலையமொன்றில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த காலாவதியான
பெருந்தொகையான ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைப் பிரிவுக்குட்பட்ட
உணவக/வர்த்தக நிலையமொன்றில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த காலாவதியான
பெருந்தொகையான உணவுப் பொருட்கள் பொதுச் சுகாதார பரிசோதகர்களால்
கைப்பற்றப்பட்டுள்ளன.
</p><p>
குறித்த வர்த்தக நிலையத்தில் மனித நுகர்வுக்குப் பொருத்தமற்ற மற்றும்
காலாவதியான உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாகப் பொதுமக்களிடமிருந்து
நேற்று முன்தினம் (16.09.2026) முறைப்பாடு ஒன்று கிடைக்கப்பெற்றிருந்தது.</p><p>

இம்முறைப்பாட்டையடுத்து, கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்
வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸடீன் அவர்களின் அவசர உத்தரவிற்கமைய,
பிராந்திய மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் ஐ.எல்.எம். லபீர் தலைமையிலான
பொதுச் சுகாதார பரிசோதகர்கள் உடனடியாகச் செயற்பட்டு குறித்த கடையில் திடீர்ச்
சோதனையை மேற்கொண்டனர்.</p><p></p><h2>அதிகாரிகளால் பறிமுதல் </h2><p>
</p><p>
இதன்போது, பொதுமக்களின் சுகாதாரத்திற்குத் தீவிர அச்சுறுத்தலை
ஏற்படுத்தக்கூடிய வகையில் காலாவதி திகதி முடிவடைந்த பல்வேறு உணவுப் பொருட்கள்
விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டு அதிகாரிகளால் பறிமுதல்
செய்யப்பட்டன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e59b6fb9-d520-45bc-8b83-08a94efe2b52/26-6aad17fa2fc83.webp' /></p><p>
</p><p>
உணவுப் பாதுகாப்புச் சட்ட விதிகளை மீறிச் செயற்பட்டமைக்காகச் சம்பந்தப்பட்ட
வர்த்தக நிலையத்தின் உரிமையாளருக்கு எதிராக நீதிமன்றத்தில் சட்ட நடவடிக்கை
எடுப்பதற்குரிய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகச் சுகாதாரத் திணைக்கள
அதிகாரிகள் தெரிவித்தனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-18T10:52:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Farook Sihan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மகனை உயிருடன் மீட்டுத் தாருங்கள்..! அனோஜனின் தாயாரின் உருக்கமான வேண்டுகோள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/anojan-s-mother-s-heartfelt-plea-1789713484"></link>
            <id>https://tamilwin.com/article/anojan-s-mother-s-heartfelt-plea-1789713484</id>
            <summary type="text">சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள கல்முனை, நட்பிட்டிமுனையைச் சேர்ந்த சிவராசா அனோஜன் எனும் இலங்கை இளைஞரை ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள கல்முனை, நட்பிட்டிமுனையைச் சேர்ந்த சிவராசா அனோஜன் எனும் இலங்கை இளைஞரை உயிருடன் மீட்டுத் தருமாறு அவரது தாயார் கண்ணீர் மல்க உருக்கமான கோரிக்கை விடுத்துள்ளார்.
</p><p>
சமூக ஊடகமொன்றில் வெளியிடப்பட்ட கருத்து தொடர்பான வழக்கு விசாரணை ஒன்றின் போதே குறித்த இளைஞர் சவூதி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டதாகக் குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.</p><h2>பகிரங்கமாக மன்னிப்பு</h2><p>
</p><p>
குறித்த பதிவை அவர் உடனடியாகவே சமூக ஊடகத்திலிருந்து நீக்கியதுடன், அதற்காகப் பகிரங்கமாக மன்னிப்பும் கோரியிருந்தார்.</p><p>

மேன்முறையீட்டில் அதிகரித்த தண்டனை

இந்த வழக்கின் ஆரம்பகட்ட விசாரணைகளின் போது, நீதிமன்றத்தினால் 5 வருட சிறைத்தண்டனையும் 3 மில்லியன் சவூதி ரியால் அபராதமும் விதிக்கப்பட்டிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/28e7b630-3fb0-4e09-b293-92fb421af0a2/26-6aad17f5663c7.webp' /></p><p> </p><p>எனினும், அதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட மேன்முறையீட்டு விசாரணைகளின் போது இத் தண்டனை மரண தண்டனையாக அதிகரிக்கப்பட்டுள்ளதாகக் குடும்பத்தினர் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.</p><h2>கோரிக்கை</h2><p>

இது குறித்துக் கருத்துத் தெரிவித்த அவரது தாயார்,</p><p> “எனது மகன் தெரியாமல் ஏதேனும் தவறு செய்திருந்தால் அதற்காக நாங்கள் பகிரங்கமாக மன்னிப்பு கோருகிறோம். அவனை மன்னித்து, உயிருடன் மீண்டும் எங்களிடம் ஒப்படைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அழுது புலம்பியவாறு வேண்டுகோள் விடுத்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2883528b-e08e-4955-87b4-ddbe64906b74/26-6aad17f644ee9.webp' /></p><p>
</p><p>
இளைஞர் அனோஜனின் உயிரைப் பாதுகாப்பதற்காக இலங்கை அரசாங்கம் சவூதி அதிகாரிகளுடன் அவசரமாக உயர்மட்ட இராஜதந்திர பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க வேண்டும் என அவரது குடும்பத்தினரும் பிரதேச சமூக தலைவர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-18T10:52:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ட்ரம்பின் மகன்களுடன் பாகிஸ்தான் இராணுவ ட்ரோன் ஒப்பந்தம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/drone-contract-pakistan-companies-trump-s-sons-1789728793"></link>
            <id>https://canadamirror.com/article/drone-contract-pakistan-companies-trump-s-sons-1789728793</id>
            <summary type="text">&amp;nbsp; அமெரிக்க ட்ரோன் தயாரிப்பு நிறுவனமான Powerus, பாகிஸ்தான் இராணுவத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டு, ட்ரோன் தொடர்பான ஆரம்பகட்ட ஓர்டரையும் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; அமெரிக்க ட்ரோன் தயாரிப்பு நிறுவனமான Powerus, பாகிஸ்தான் இராணுவத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டு, ட்ரோன் தொடர்பான ஆரம்பகட்ட ஓர்டரையும் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> 



ஒப்பந்தத்தின் மதிப்பு மற்றும் ட்ரோன்களின் எண்ணிக்கை உள்ளிட்ட விவரங்கள் வெளியிடப்படவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5744c3c0-8166-4b54-92df-c9539031fd8e/26-6aad181adc67e.webp' /></p><p>
</p><p>


Powerus, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் மகன்களான டொனால்ட் ட்ரம்ப் ஜூனியர் மற்றும் எரிக் ட்ரம்ப் முதலீடு செய்துள்ள Aureus Greenway Holdings நிறுவனத்துடன் அக்டோபரில் இணையத் திட்டமிட்டுள்ளது.
</p><p>


பாகிஸ்தானில் ட்ரோன் தொழில்நுட்பத்தை உருவாக்குவதற்கும் எதிர்காலத்தில் உற்பத்தி நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கும் வாய்ப்புகளை ஆராய்ந்து வருவதாக Powerus தெரிவித்துள்ளது.</p><p> 



அதேவேளை, ட்ரம்பின் மகன்களுக்கு ஒப்பந்தத்தில் எந்தவித நேரடி தொடர்பும் இல்லை என நிறுவனத் தரப்பு கூறியுள்ளது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-18T10:49:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thevanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நெல் கொள்வனவில் அரசாங்கம் எடுத்த அதிரடி நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/government-s-move-regarding-paddy-procurement-1789727095"></link>
            <id>https://tamilwin.com/article/government-s-move-regarding-paddy-procurement-1789727095</id>
            <summary type="text">விவசாயிகளிடமிருந்து நியாய விலைக்கு நெல்லை கொள்வனவு செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ள நிலையில் கிளிநொச்சி மாவட்டத்தில்
குறித்த செயற்பாட்டின் ஊ...</summary>
            <content type="html"><![CDATA[<p>விவசாயிகளிடமிருந்து நியாய விலைக்கு நெல்லை கொள்வனவு செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ள நிலையில் கிளிநொச்சி மாவட்டத்தில்
குறித்த செயற்பாட்டின் ஊடாக நெல் கொள்வனவு பணிகளை அரிசி ஆலை உரிமையாளர்கள்
இன்று (18.09.2026) மேற்கொண்டிருந்தனர்.&nbsp;</p><p>நெல் சந்தைப்படுத்தல் சபை தவிர்ந்து சிறிய மற்றும் நடுத்தர அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு மாவட்ட செயலகம் மூலம் முதற்கட்டமாக 25 மில்லியன் ரூபா வழங்கப்பட்டு&nbsp;விவசாயிகளிடமிருந்து நியாய விலைக்கு நெல்லை கொள்வனவு செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.&nbsp;</p><p>இந்த நிலையிலேயே இதற்கான நடவடிக்கை கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4a221276-8d2c-419b-8065-2f5c3b1ee957/26-6aad1646d3902.webp' /></p><h2>நெல் கொள்வனவு&nbsp;</h2><p>கமநல சேவை நிலைய உத்தியோகத்தர்கள், விவசாயத் திணைக்கள உத்தியோகத்தர்கள் முன்னிலையில் குறித்த நெல் கொள்வனவு
இடம்பெற்றது.</p><p>குறித்த நெல் கொள்வனவு தொடர்பாக நெல் உரிமையாளர்கள் மற்றும் விவசாயிகள்
கருத்து தெரிவிக்கையில், முன்பு எந்த அரசாங்கத்தாலும் மேற்கொள்ளப்படாத நடவடிக்கையை
தற்போதைய அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/760db5cb-cde2-4793-8397-d7b14e6554be/26-6aad1647cb708.webp' /></p><p> </p><p>அந்த வகையில் கிளிநொச்சி
மாவட்டத்தில் நெல் சந்தைப்படுத்தல் சபையினர் களஞ்சியங்கள் பற்றாக்குறை காரணமாக
நெல் கொள்வனவினை நிறுத்தியதை அடுத்து தனியார் அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு
எந்த அரசாங்கமும் வழங்காத 25 மில்லியன் ரூபாய் நிதியினை எந்த வட்டியும் இன்றி
வழங்கி விவசாயிகளிடம் நெல்லினை அரச விலைக்கு கொள்வனவு செய்வதற்கான ஏற்பாடுகளை
செய்துள்ளது. </p><p>இதேபோன்று இனி வரும் காலங்களில் குறித்த நடவடிக்கை தொடர்ச்சியாக
மேற்கொள்ளப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/000895f5-bf41-4921-96fd-533cd392e921/26-6aad16f6d2a75.webp' /></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-18T10:48:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாருக்கும் உதவ, ஆறுதல் கூற நான் வரவில்லை!! நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் ஓபன் டாக்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/even-silence-becomes-heavy-jacqueline-fernandez-1789724034"></link>
            <id>https://viduppu.com/article/even-silence-becomes-heavy-jacqueline-fernandez-1789724034</id>
            <summary type="text">ஜாக்குலின் பெர்னாண்டஸ்பாலிவுட் சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ், கடந்த சில ஆண்டுகளாக சர்ச்சைகளில் சிக்கி பரபரப்பை...</summary>
            <content type="html"><![CDATA[<h2>ஜாக்குலின் பெர்னாண்டஸ்</h2><p>பாலிவுட் சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ், கடந்த சில ஆண்டுகளாக சர்ச்சைகளில் சிக்கி பரபரப்பை ஏற்படுத்தினார். குறிப்பாக மோசடி வழக்கில் கைதான சுகேஷ் சந்திரசேகருடன் இருந்த தொடர்பு குறித்த விசாரணை நடந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d797e4dc-6961-4897-990d-f333c6229f39/26-6aad05846d4fa.webp' /></p><p> </p><p>சுகேஷ் ஜாக்குலினுக்கு கொடுத்த பரிசு பொருட்கள், பணம் வழங்கியதாக விசாரணையில் தெரியவந்தது. இந்த விவகாரம் முடிந்த சில மாதங்களில் நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசிய கருத்து தற்போது பலரது கவனத்தையும் பெற்றுள்ளது. </p><p>அதில், சமீபகாலமாக நான் எந்த விஷயத்திலும் கருத்து சொல்வதை நிறுத்திவிட்டேன், சில சமயங்களில் அமைதியாக இருப்பதும் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.</p><p> இருந்தாலும் நான் செல்ல வேண்டிய பாதையில் தெளிவாக இருக்கிறேன், யாருக்கும் உதவவோ, ஆறுதல் கூறவோ நான் வரவில்லை, இது என் வாழ்க்கை, என் போக்கில் வாழும் வாழ்க்கை, எனக்காக மட்டுமே வாழ்கிறேன் என்று வெளிப்படையாக பேசியுள்ளர்.</p>]]></content>
            <updated>2026-09-18T10:45:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiva</name>
            </author>
            <title type="text"><![CDATA[பின் ஓயா தோட்டத்தில் தேயிலை பறித்துக் கொண்டிருந்த தொழிலாளர்களுக்கு நேர்ந்த கதி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/workers-admitted-to-hospital-stung-by-wasps-1789727950"></link>
            <id>https://tamilwin.com/article/workers-admitted-to-hospital-stung-by-wasps-1789727950</id>
            <summary type="text">வட்டவளை பொலிஸ் பிரிவின் கீழ் உள்ள பின் ஓயா தேயிலைத் தோட்டத்தில் தொழிலாளர்கள் ஐந்து பேர் குளவி கொட்டுக்கு இலக்கான
நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>வட்டவளை பொலிஸ் பிரிவின் கீழ் உள்ள பின் ஓயா தேயிலைத் தோட்டத்தில் தொழிலாளர்கள் ஐந்து பேர் குளவி கொட்டுக்கு இலக்கான
நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
</p><p>
இன்று (18.9.2026) பிற்பகல் வட்டவளை பொலிஸ் பிரிவின் கீழ் உள்ள பின் ஓயா தோட்டத்தில்
தேயிலை பறிக்கும் போது, தேயிலைச் செடிகளுக்குள் இருந்த குளவி கூடு கலைந்ததைத்
தொடர்ந்து, அவர்கள் இந்த அனர்த்தத்துக்கு முகம் கொடுத்தனர்.</p><p>

காயமடைந்தவர்கள் அனைவரும் வட்டவளை மாவட்ட வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">மேலதிக விசாரணை</span></p><p>
</p><p>
தேயிலை மலையில் உள்ள மரம் ஒன்றில் இருந்த குளவி கூடு கலைந்து வந்து
தொழிலாளர்களை தாக்கியுள்ளதாக காயங்களுக்கு உள்ளான தொழிலாளர்கள் தெரிவித்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/eb607651-bb87-4b10-8fca-c5d12baff0dc/26-6aad14d26ab5b.webp' /></p><p>வைத்தியசாலை வட்டாரங்களின் தகவலின்படி, இரண்டு ஆண்கள் மற்றும் மூன்று பெண்கள்
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் அவர்கள் எவரும் கவலைக்கிடமான
நிலையில் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p>
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை வட்டவளை பொலிஸார் மேற்கொண்டு
வருகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-18T10:43:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆழமாகும் டாடா அறக்கட்டளை உடனான விரிசல்... நீண்ட சட்டப் போராட்டத்திற்கு டாடா சன்ஸ்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/deepens-rift-with-tata-trusts-1789728190"></link>
            <id>https://news.lankasri.com/article/deepens-rift-with-tata-trusts-1789728190</id>
            <summary type="text">The deepening confrontation between Tata Sons and Tata Trusts: டாடா சன்ஸ் மற்றும் டாடா அறக்கட்டளை இடையே ஆழமடைந்து வரும் மோதல்.
நிர்வாகத் தலைவராக என்....</summary>
            <content type="html"><![CDATA[<p>The deepening confrontation between Tata Sons and Tata Trusts: டாடா சன்ஸ் மற்றும் டாடா அறக்கட்டளை இடையே ஆழமடைந்து வரும் மோதல்.
</p><p>நிர்வாகத் தலைவராக என். சந்திரசேகரன் மீண்டும் நியமிக்கப்படுவது தொடர்பாக டாடா சன்ஸ் மற்றும் டாடா அறக்கட்டளை இடையே தீவிரமடைந்து வரும் மோதல் ஒரு நீண்ட சட்டப் போராட்டத்திற்கு வழிவகுக்கக்கூடும் என்றே கூறப்படுகிறது.</p><h2>நிர்வாகக் குழு</h2><p>
</p><p>இறுதியில் நீதிமன்றத்தின் விளக்கம் தேவைப்படக்கூடிய பல கேள்விகள் இதில் அடங்கியுள்ளதாக சட்டத்தரணிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a91c16a7-198e-46e9-ac66-9a8156e6bb38/26-6aad15c01272c.webp' /></p><p> </p><p>பிப்ரவரி 20, 2027 அன்று சந்திரசேகரனின் தற்போதைய பதவிக்காலம் நிறைவடைந்த பிறகு, அவருக்கு மேலும் ஐந்து ஆண்டுகள் பதவிக்காலத்தை நீட்டித்து வழங்க டாடா சன்ஸ் நிர்வாகக் குழு செப்டம்பர் 17 அன்று எடுத்த முடிவே இந்த உடனடி மோதலுக்குக் காரணமாக அமைந்துள்ளது. </p><p>இந்த விவகாரத்தில் நான்கு இயக்குநர்கள் ஆதரவாக வாக்களித்தனர்; அதேவேளையில், டாடா அறக்கட்டளைத் தலைவர் நோயல் டாடா அந்தத் தீர்மானத்தை எதிர்த்தார். </p><p>டாடா சன்ஸ் நிறுவனத்தின் சுமார் 66 சதவீதப் பங்குகளைக் கூட்டாக வைத்திருக்கும் டாடா அறக்கட்டளை, அந்தத் தீர்மானத்தை சட்டவிரோதமானது மற்றும் சட்டப்படி செல்லாதது என்று கூறியதுடன், ஒரு தலைவரின் நியமனம் அல்லது மறுநியமனத்திற்கு அறக்கட்டளையின் நியமன இயக்குநர்களில் பெரும்பான்மையினரின் ஆதரவு தேவை என்று நிறுவனத்தின் சங்க விதிகளில் வாதிடுகிறது.</p><p></p><p> </p><p>ஆனால், டாடா சன்ஸ் நிறுவனம் ஒரு மாறுபட்ட நிலைப்பாட்டை எடுத்துள்ளது. கூட்டத்தைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட அறிக்கையில், மற்றொரு பதவிக்காலத்தைப் பெற வேண்டாம் என்று ஆகஸ்ட் மாதம் எடுத்த முடிவை மறுபரிசீலனை செய்ய சந்திரசேகரன் ஒப்புக்கொண்டதாகவும், அதைத் தொடர்ந்து அவரது மறுநியமனத்திற்கு நிர்வாகக் குழு பெரும்பான்மை வாக்குகளுடன் ஒப்புதல் அளித்ததாகவும் அந்நிறுவனம் தெரிவித்தது. </p><p>முற்றிலும் முரண்பட்ட இந்த நிலைப்பாடுகள், 'டாடா சன்ஸ்' நிறுவனத்தின் விதிமுறைகளை (Articles) விளக்குவது குறித்தும், நிறுவனத்தின் நிர்வாகக் குழுவிற்கும் அதன் கட்டுப்பாட்டைக் கொண்ட பங்குதாரருக்கும் இடையிலான அதிகாரச் சமநிலை குறித்தும் ஒரு சட்டப் போராட்டத்திற்கு வழிவகுக்கக்கூடும் என்று சட்ட நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.</p><h2>வாக்களிக்க வேண்டும்</h2><p> </p><p>இந்த சர்ச்சையின் மையத்தில் டாடா சன்ஸ் நிறுவனத்தின் சிறப்பு நிர்வாகக் கட்டமைப்பு உள்ளது. ஒரு தலைவரின் முதல் நியமனத்திற்கும், பதவியில் இருப்பவரின் மறுநியமனத்திற்கும், நிறுவனத்தின் விதிகளில் பரிந்துரைக்கப்பட்ட செயல்முறையே பொருந்தும் என்று டாடா அறக்கட்டளை வலியுறுத்துகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/72a6443e-137f-4fb8-a05b-f67b8bcee1e9/26-6aad15c0be611.webp' /></p><p> மேலும், தலைவரை நியமிக்கும் அல்லது மறுநியமனம் செய்யும் தீர்மானம் செல்லுபடியாவதற்கு, அதன் பரிந்துரைக்கப்பட்ட இயக்குநர்கள் இருவரும் ஆஜராக வேண்டும் என்றும், அந்தப் பரிந்துரைக்கப்பட்டவர்களில் பெரும்பான்மையானோர் அதற்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என்றும் அந்த அறக்கட்டளை தெரிவித்துள்ளது. </p><p>சந்திரசேகரனுக்கு எதிராக நோயல் வாக்களித்த நிலையில், செப்டம்பர் 17-ஆம் தேதி நிறைவேற்றப்பட்ட தீர்மானம் அந்தச் சோதனையில் தோல்வியடைந்துவிட்டதாக அறக்கட்டளைகள் வாதிடுகின்றன.</p><p></p><p> </p><p>டாட்டா அறக்கட்டளையின் நிலைப்பாட்டை ஆதரிக்கும் வகையில், இந்தியாவின் முன்னாள் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் வழங்கிய சட்டக் கருத்து ஒன்றையும் நோயல் வாரியத்தின் முன் சமர்ப்பித்தார். </p><p>டாட்டா அறக்கட்டளையின் கூற்றுப்படி, வாரியம் அந்தக் கருத்தைக் கருத்தில் கொள்ளவில்லை. இரு நியமனதாரர்களுக்கும் இடையிலான கருத்து வேறுபாடே, எந்தவொரு சட்ட நடவடிக்கையிலும் ஒரு முக்கிய அங்கமாக மாறக்கூடும்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-18T10:39:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சவுதியில் மரணதண்டனை ; கண்ணீருடன் மன்றாடும் அனோஜனின் தாயார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sentence-in-saudi-arabia-anojan-mother-tearfully-1789722739"></link>
            <id>https://jvpnews.com/article/sentence-in-saudi-arabia-anojan-mother-tearfully-1789722739</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp; சவுதியில் மரணதண்டனை விதிக்கப்பட்டதாகக் கூறப்படும் அனோஜனின் தாயார் , எமது குடும்பத்தை வாழவைக்கும் எனது அருமை மகனை எப்படியாவது உயிரோடு மீட...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp; சவுதியில் மரணதண்டனை விதிக்கப்பட்டதாகக் கூறப்படும் அனோஜனின் தாயார் , எமது குடும்பத்தை வாழவைக்கும் எனது அருமை மகனை எப்படியாவது உயிரோடு மீட்டுத்தாருங்கள் என்று அனைவரிடம் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்" எனச் கதறி அழுது வேண்டுகோள் விடுத்துள்ளார்.</p><p>

கல்முனையையடுத்துள்ள நற்பிட்டிமுனையில் உள்ள அவரது இல்லத்தில் வெள்ளிக்கிழமை (18) நடந்த ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு கதறி அழுதார். இதன் போது அவர் கூறுகையில்,</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f9f92128-3c8c-4800-9047-19110a9da38c/26-6aad007568f60.webp' /></p><p></p><h2>எமது குடும்பத்தின் ஆணிவேராக இருப்பவர் அவர்தான்</h2><p> </p><p>

 

"அவர் செய்தது தவறுதான்&nbsp; அதற்காக அவரும்&nbsp; மன்னிப்பு கேட்டிருந்தார். நாங்களும் மன்னிப்பு கேட்கின்றோம். ஜம்மியத்துல் உலமா சபை, இலங்கை அரசாங்கம், சவுதி அரசாங்கம், முஸ்லிம், தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தயவுசெய்து மீண்டும் ஒருமுறை மன்னித்து, எனது மகனை உயிரோடு மீட்டுத்தாருங்கள். இல்லாவிட்டால் நாங்கள் மூவரும் மரணிப்போம்" என்று கதறி அழுது கூறினார்.</p><p></p><p>

"எமது குடும்பத்தின் ஆணிவேராக இருப்பவர் அவர்தான். அவரது உழைப்பில்தான் நாம் வாழ்க்கையை ஓட்டுகின்றோம். அவருக்கு இந்த கதி என்றால் நாங்கள் நிர்க்கதியாகிவிடுவோம். செய்த தவறுக்கு இது மிகவும் பெரிய தண்டனையாக நினைக்கிறோம். தயவுசெய்து அவர் செய்த தவறை மன்னித்து, அனைவரும் இந்த விடயத்தில் ஒத்துழைத்து அவரை விடுவித்துத்தாருங்கள்" என அனோஜனின் சகோதரர் கூறினார்.</p><p>


 ஊடக சந்திப்பில் ஜனாதிபதி, பிரதமர், வெளிநாட்டு அமைச்சகம் என்பவற்றோடு கடந்த காலத்தில் இடம்பெற்ற தொடர்புகள் பற்றிய ஆவணங்கள் காண்பிக்கப்பட்டன.
</p><p>
 அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கவிந்திரன் கோடீஸ்வரன், 

"இது மிகவும் வேதனைக்குரிய தருணமாகப் படுகின்றது.</p><p></p><p> </p><p>இது ஓர் உயிருக்கான போராட்டம். இதனையிட்டு நாங்கள் ஏற்கனவே எமது சக முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள், வெளிநாட்டு அமைச்சர் என்று பலருடனும் பேசியிருக்கின்றோம்; அவர்களும் இணைந்து செயற்படுவதாகக் கூறியுள்ளனர்.
</p><p>
இந்த வேளையில் தேவையற்ற முகநூல் பதிவுகள், கூட்டங்கள், போராட்டங்களைத் தவிர்த்து மனிதாபிமானத்திற்கு வழிவிடுங்கள். தமிழ், முஸ்லிம் மக்கள் அமைப்புக்கள் இணைந்து இந்த விடயத்திலே கோரிக்கை விடுத்து, அனோஜனை உயிரோடு மீட்டெடுக்க வேண்டும். </p><p>இதற்காக எங்களது உச்சகட்ட ஆதரவைத் தருவோம்" என்றார்.

அச்சமயம், நாவிதன்வெளி பிரதேச சபை தவிசாளர் இ. ரூபசாந்தன், கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன் மற்றும் ஆலயத் தலைவர்கள் பலரும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டார்கள்.&nbsp;&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-09-18T10:37:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆசிரியர் போட்டிப்பரீட்சை பெறுபேறுகள் : கல்வி அமைச்சு வெளியிட்ட அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/recruitment-of-graduates-to-the-slts-exam-results-1789724497"></link>
            <id>https://ibctamil.com/article/recruitment-of-graduates-to-the-slts-exam-results-1789724497</id>
            <summary type="text">பட்டதாரிகளை ஆசிரியர் சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான போட்டிப் பரீட்சையின் 
பெறுபேறுகள் குறித்து கல்வி அமைச்சு அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.நாட்டின்...</summary>
            <content type="html"><![CDATA[<p>பட்டதாரிகளை ஆசிரியர் சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான போட்டிப் பரீட்சையின் 
பெறுபேறுகள் குறித்து கல்வி அமைச்சு அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.</p><p>நாட்டின் தேசிய மற்றும் மாகாணப் பாடசாலைகளில் நிலவும் சிங்கள, தமிழ் மற்றும் ஆங்கில மொழிமூல ஆசிரியர் வெற்றிடங்களுக்கு பட்டதாரிகளை இணைத்துக்கொள்வதற்கான போட்டிப் பரீட்சை கடந்த மே மாதம் நாடளாவிய ரீதியில் நடைபெற்றது.</p><p>இந்த நிலையில் குறித்த பரீட்சைப் பெறுபேறுகள் இந்த மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.</p><p></p><h2>கல்வி அமைச்சு&nbsp;</h2><p>இவ்வாறு நியமிக்கப்படவுள்ள 23,344 பட்டதாரி ஆசிரியர்களில் சுமார் 15,000 வெற்றிடங்களை மட்டுப்படுத்தப்பட்ட அடிப்படையிலும் சுமார் 8,000 வெற்றிடங்கள் திறந்த அடிப்படையிலும் நிரப்பப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/07d839b0-ea88-461f-a036-33211e065029/26-6aad1477d0d40.webp' /></p><p>மேலும் இந்த ஆட்சேர்ப்பிற்கான நேர்முகப் பரீட்சைகள் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.</p><p>அத்துடன் ஆசிரியர் நியமனங்களை எதிர்வரும் டிசம்பர் மாதம் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-18T10:36:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் நாளை றிஷாட் பதியுதீனிடம் விளக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/rishad-bathiudeen-explanation-easter-attacks-1789727928"></link>
            <id>https://jvpnews.com/article/rishad-bathiudeen-explanation-easter-attacks-1789727928</id>
            <summary type="text">&amp;nbsp; ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் தற்காலத்தில் பரவி வரும் செய்திகள் தொடர்பில் விளக்கமளிக்கும் விஷேட ஊடக சந்திப்பொன்று நடைபெறவுள்ளது.

அகில இலங்கை மக...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் தற்காலத்தில் பரவி வரும் செய்திகள் தொடர்பில் விளக்கமளிக்கும் விஷேட ஊடக சந்திப்பொன்று நடைபெறவுள்ளது.
</p><p>
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் கலந்துகொள்ளும் இவ்விஷேட ஊடக சந்திப்பு நிந்தவூர் பிரதேச சபை கேட்போர் கூடத்தில் நாளை (19) சனிக்கிழமை காலை 10 மணிக்கு நடைபெறும் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மாவட்ட செயலாளர் எம். எம். ஏ. காதர் அறிவித்துள்ளார்.&nbsp; &nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/57b04152-d2d1-4f6d-a54f-f53e5547703e/26-6aad14ba36809.webp' /></p><p></p>]]></content>
            <updated>2026-09-18T10:35:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[திருகோணமலையில் வாகனத்தை முந்திச் செல்ல முற்பட்டவருக்கு காத்திருந்த அதிர்ச்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/trincomalee-overtaking-attempt-ends-in-tragedy-1789727324"></link>
            <id>https://jvpnews.com/article/trincomalee-overtaking-attempt-ends-in-tragedy-1789727324</id>
            <summary type="text">திருகோணமலை – சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சேருநுவர பகுதியில் பட்டா ரக வாகனம் ஒன்று புரண்டு வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.



சேருநுவர – கந...</summary>
            <content type="html"><![CDATA[<p>திருகோணமலை – சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சேருநுவர பகுதியில் பட்டா ரக வாகனம் ஒன்று புரண்டு வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
</p><p>


சேருநுவர – கந்தளாய் பிரதான வீதியில் இன்று வெள்ளிக்கிழமை (18) பிற்பகல் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a8284a83-572c-4e35-8d2b-8a0226461bae/26-6aad12ed183fd.webp' /></p><p>



மற்றுமொரு வாகனத்தை முந்திச் செல்ல முற்பட்டபோது, குறித்த வாகனம் கட்டுப்பாட்டை இழந்து வீதியில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>


விபத்தில் வாகனத்தின் சாரதி தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளார்.</p><p></p><p>
</p><p>


சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சேருநுவர பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.&nbsp;&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-09-18T10:31:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவின் கிரேவன்ஹர்ஸ்ட்டில் வாகனங்கள் மீது கல்வீச்சு: 3 சிறுவர்கள் மீது வழக்குப்பதிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/teens-charged-in-connection-with-throwing-rocks-1789714698"></link>
            <id>https://canadamirror.com/article/teens-charged-in-connection-with-throwing-rocks-1789714698</id>
            <summary type="text">&amp;nbsp;கனடாவின் ஒன்டாரியோ மாகாணம், கிரேவன்ஹர்ஸ்ட் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் மீது கற்களை வீசி கண்ணாடிகளை உடைத்துச் சேதப்படுத்திய சம...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கனடாவின் ஒன்டாரியோ மாகாணம், கிரேவன்ஹர்ஸ்ட் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் மீது கற்களை வீசி கண்ணாடிகளை உடைத்துச் சேதப்படுத்திய சம்பவத்தில் மூன்று சிறுவர்களைக் காவல்துறையினர் கைது செய்து வழக்குப் பதிவு செய்துள்ளனர். </p><p>
புதன்கிழமை அதிகாலை கிரேவன்ஹர்ஸ்ட்டில் உள்ள பல தெருக்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மொத்தம் 10 வாகனங்கள் மீது கற்கள் வீசப்பட்டு அவற்றின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டுச் சேதப்படுத்தப்பட்டன. </p><p>
இச்சம்பவம் தொடர்பாகப் போர்ட் சிட்னி பகுதியைச் சேர்ந்த 14, 16 மற்றும் 17 வயதுடைய மூன்று சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9d324882-9ff8-4792-8e87-d9d5c297f30b/26-6aace10bb7292.webp' /></p><p> </p><p>
10 வாகனங்களைச் சேதப்படுத்திய குற்றத்திற்காக, இவர்கள் ஒவ்வொருவர் மீதும் தலா 10 'குறும்புத்தனமான குற்றம்' வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.</p><p> 
கைது செய்யப்பட்ட சிறுவர்கள் அனைவரும் பின்னர் ஒரு குறிப்பிட்ட திகதியில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.</p><p> 
இச்சம்பவம் தொடர்பாக ஏதேனும் தகவலோ அல்லது கண்காணிப்பு கேமரா காட்சிகளோ வைத்திருப்பவர்கள் பிரேஸ்பிரிட்ஜ் காவல்துறையைத் தொடர்பு கொள்ளுமாறு புலனாய்வு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-18T10:30:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிலிப்பைன்ஸ் நாட்டில் மீண்டும் பள்ளி ஒன்றில் துப்பாக்கிச்சூடு: மூவர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/3-dies-8-injured-in-philippines-school-shooting-1789727019"></link>
            <id>https://news.lankasri.com/article/3-dies-8-injured-in-philippines-school-shooting-1789727019</id>
            <summary type="text">Three dead, eight injured in Philippines school shooting: பிலிப்பைன்ஸ் நாட்டிலுள்ள பள்ளி ஒன்றில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதில் மூன்று பேர் பலியாகிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>Three dead, eight injured in Philippines school shooting: பிலிப்பைன்ஸ் நாட்டிலுள்ள பள்ளி ஒன்றில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதில் மூன்று பேர் பலியாகியுள்ளார்கள், எட்டு பேர் காயமடைந்துள்ளார்கள்.
</p><p>

இன்று வெள்ளிக்கிழமை மதியம், பிலிப்பைன்ஸ் நாட்டிலுள்ள Banga என்னுமிடத்தில் அமைந்துள்ள பள்ளி ஒன்றில் இந்த அதிர்ச்சியை ஏற்படுத்தும் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
</p><h3>
நண்பர்களை வீட்டுக்கு போகச் சொன்ன மாணவர்
</h3><p>
மதிய உணவு இடைவேளையின்போது, மாணவர் ஒருவர் தன் நண்பர்களிடம் வீட்டுக்குப் போகுமாறு கூறியுள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/121297c6-d143-484e-bca6-859633c5757a/26-6aad112d5cec4.webp' /></p><p>
ஏனென்றால், தான் உணவு இடைவேளைக்குப் பிறகு துப்பாக்கிச்சூடு நடத்த இருப்பதாக அந்த 16 வயது மாணவர் கூறியுள்ளார்.
</p><p>
அவர் எப்போதும் வேடிக்கையாக பேசுபவர் என்பதால், அவர் கூறியதை யாரும் சீரியஸாக எடுத்துக்கொள்ளவில்லையாம்.&nbsp;</p><p></p><p>
ஆனால், சொன்னதுபோலவே, உணவு இடைவேளைக்குப் பிறகு துப்பாக்கியால் மாணவர்களைத் தாக்கத் துவங்கியுள்ளார் அவர்.
</p><p>
மொத்தம் 10 மாணவர்கள் தாக்கப்பட்ட நிலையில், 14 வயதுடைய இரண்டு மாணவர்கள் உயிரிழந்துள்ளார்கள், எட்டு பேர் காயமடைந்துள்ளார்கள். அவர்களில் நான்கு பேருடைய நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.</p><p>

சக மாணவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய அந்த மாணவர், பின் தன்னைத்தான் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு உயிரிழக்க, உயிரிழந்தோர் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது.
</p><p>
ஜூன் மாதம் பள்ளி ஒன்றில் மாணவர்கள் சிலர் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவத்தைத் தொடர்ந்து, இது பிலிப்பைன்ஸ் நாட்டில் நடக்கும் மூன்றாவது துப்பாக்கிச்சூடு சம்பவம் என்பது குறிப்பிடத்தக்கது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-18T10:24:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Erimalai</name>
            </author>
            <title type="text"><![CDATA[பருத்தித்துறையில் தியாக தீபம் திலீபனுக்கு நான்காவது நாள் அஞ்சலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/tribute-to-thileepan-the-martyr-s-lamp-in-pedro-1789726168"></link>
            <id>https://tamilwin.com/article/tribute-to-thileepan-the-martyr-s-lamp-in-pedro-1789726168</id>
            <summary type="text">தியாக தீபம் திலீபனின் 39வது ஆண்டு நினைவேந்தலின் 4ஆம் நாள் நினைவேந்தல் நிகழ்வு பருத்தித்துறையில் இடம்பெற்றுள்ளது.&amp;nbsp;குறித்த நிகழ்வு பருத்தித்துறை நக...</summary>
            <content type="html"><![CDATA[<p>தியாக தீபம் திலீபனின் 39வது ஆண்டு நினைவேந்தலின் 4ஆம் நாள் நினைவேந்தல் நிகழ்வு பருத்தித்துறையில் இடம்பெற்றுள்ளது.&nbsp;</p><p>குறித்த நிகழ்வு பருத்தித்துறை நகரசபை உறுப்பினர் ஜெயானந்தம் ஜெயகோபி தலைமையில் பருத்தித்துறை
நினைவுத் தூபியில் இன்று (18.09.2026) காலை 10 மணியளவில் இடம்பெற்றுள்ளது.</p><h2>அஞ்சலி நிகழ்வு</h2><p>

இதில் யாழ். மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகள் அமைப்பின்
தலைவி மலர் மாலை அணிவித்து அஞ்சலி நிகழ்வை ஆம்பித்து வைத்திருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f30289c3-b68d-4b50-81ee-223c2c1ebff5/26-6aad0f79ded4b.webp' /></p><p> பருத்தித்துறை நகர
பிதா வின்சன் டி போல் டக்ளஸ் போல் மலரஞ்சலி செலுத்தி மலர அஞ்சலி நிகழ்வை
ஆரம்பித்து வைத்தார். </p><p>அதனைத் தொடர்ந்து இந்த நிகழ்வில் பருத்தித்துறை நகர சபை உப தவிசாளர்
இந்திரன் மற்றும் நகரசபை உறுப்பினர்கள், சமூக அரசியல் செயற்பாட்டாளர்கள், பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியிருந்தனர்.</p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-18T10:19:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[13 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சமூக ஊடக தடை - ஐரோப்பிய ஒன்றியம் முன்மொழிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/eu-proposes-social-media-ban-for-under-13-kids-1789726740"></link>
            <id>https://news.lankasri.com/article/eu-proposes-social-media-ban-for-under-13-kids-1789726740</id>
            <summary type="text">eu proposes social media ban for under 13 kids: 13 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் சமூக ஊடக பயன்பாட்டிற்கு தடை விதிக்க ஐரோப்பிய ஒன்றியம் முன்மொழிந்துள்ளது...</summary>
            <content type="html"><![CDATA[<p>eu proposes social media ban for under 13 kids: 13 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் சமூக ஊடக பயன்பாட்டிற்கு தடை விதிக்க ஐரோப்பிய ஒன்றியம் முன்மொழிந்துள்ளது. </p><h3>

குழந்தைகளுக்கு சமூக ஊடக தடை விதிக்க உள்ள EU
</h3><p>
குழந்தைகள் சமூக ஊடகங்களை அதிகளவில் பயன்படுத்துவதன் காரணமாக பல்வேறு மன மற்றும் உடல் நல பாதிப்புகள் ஏற்படுவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6a5cfac1-cace-408a-85b7-35c9fdde9f25/26-6aad1015dbc69.webp' /></p><p>

இதனை கருத்தில் கொண்டு, அவுஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் குழந்தைகளுக்கு சமூக ஊடகப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த அல்லது முற்றிலுமாகத் தடைசெய்ய சட்டம் இயற்றியுள்ளன.</p><p> 

தற்போது ஐரோப்பிய ஒன்றியமும், 13 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகம் பயன்பாட்டிற்கு தடை விதிக்க முன்மொழிந்துள்ளது.</p><p> 

ஐரோப்பிய ஒன்றிய குழந்தைகள் சட்டம் (EU Kids Act) எனப்படும் இந்தச் சட்டம், "தங்கள் பிள்ளைகள் ஒரு பாதுகாப்பான உலகில் பயணிக்க உதவுவதற்கான வழிமுறைகளை பெற்றோர்களுக்கு வழங்கும்" என்று ஐரோப்பிய ஒன்றியத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c1a2b1d3-dbd0-4f05-bee0-6ee5754f5c33/26-6aad10169014f.webp' /></p><p> 

இந்த முன்மொழிவின்படி, 13 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை விதிக்கப்படும்.
</p><p>
13 முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள், பெற்றோர் அல்லது பாதுகாவலரின் கணக்கு மூலம் அமைக்கப்படும் வரையறுக்கப்பட்ட சமூக ஊடகக் கணக்குகளை மட்டுமே பயன்படுத்த அனுமதிக்கப்படுவார்கள்.&nbsp;</p><p></p><p>

இந்த கணக்குகளில், சமூகத் தொடர்புகள் மற்றும் ஒரு நாளைக்கு 1 மணி நேரம் வரையிலான திரைப் பயன்பாட்டுக் கட்டுப்பாடுகள் இருக்கும். </p><p> 

சுயவிவர அடிப்படையிலான பரிந்துரை ஊட்டங்கள், முடிவில்லாமல் திரையைப் புரட்டுதல், சில வெகுமதி வழிமுறைகள், முன்பின் தெரியாதவர்களிடமிருந்து வரும் வேண்டாத தொடர்புகள், மற்றும் உறங்கும் நேரங்களில் வரும் புஷ் அறிவிப்புகள் போன்ற அடிமையாக்கும் அம்சங்கள் கட்டுப்படுத்தப்படும். </p><p>

சிறார்களின் சுயவிவரங்கள் இயல்பாகவே தனிப்பட்டதாக இருக்க வேண்டும், மேலும் புவியிடக் கண்டறிதல், கேமரா மற்றும் ஒலிவாங்கி அணுகல், அரட்டை, செயற்கை நுண்ணறிவு உதவி ஆகியவை அணைக்கப்பட்டிருக்க வேண்டும். </p><p>

இந்த முன்மொழிவு, பரிசீலனை மற்றும் ஒப்புதலுக்காக ஐரோப்பிய நாடாளுமன்றம் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய மன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.</p><p> 

விதிகளை மீறும் நிறுவனங்களுக்கு, நிறுவனத்தின் மொத்த உலகளாவிய ஆண்டு வருவாயில் 6 சதவீதம் வரை அபராதம் விதிக்ககூடும். </p><p>

ஏற்கனவே ஸ்பெயின், பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடுகள் இது தொடர்பான சட்டங்களை இயற்றியுள்ள நிலையில், இந்த முன்மொழிவு சட்டமாகும் போது, அந்த நாடுகளின் சட்டங்களை ரத்து செய்து விடும்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-18T10:19:10+00:00</updated>
        </entry>
    </feed>
