<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-09-01T11:52:39+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதிவலு கொண்ட மோட்டார் சைக்கிள்களுடன் 04 இளைஞர்கள் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/04-youths-arrested-with-high-powered-motorcycles-1788261549"></link>
            <id>https://tamilwin.com/article/04-youths-arrested-with-high-powered-motorcycles-1788261549</id>
            <summary type="text">நிக்கவரெட்டிய பகுதியில் அதிவலு கொண்ட மோட்டார் சைக்கிள்களுடன் 04 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதிவேகத்துடன் பயணிக்கும் அதிவலு கொண்ட குறித்த மோ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நிக்கவரெட்டிய பகுதியில் அதிவலு கொண்ட மோட்டார் சைக்கிள்களுடன் 04 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>

அதிவேகத்துடன் பயணிக்கும் அதிவலு கொண்ட குறித்த மோட்டார் சைக்கிள்களில் அதிக ஒலி எழுப்பக்கூடிய சைலன்சர்களும் பொருத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.</p><h2>மேலதிக விசாரணை</h2><p>

பறிமுதல் செய்யப்பட்ட 04 மோட்டார் சைக்கிள்களிலும் போலியான இலக்கத்தகடுகள் பொருத்தப்பட்டிருந்தமை கண்டறிப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/df999720-aa59-4397-9468-1780882c7403/26-6a96bbe28cdcf.webp' /></p><p>
சம்பவம் தொடர்பில் 18, 19, 20 மற்றும் 22 வயதான இளைஞர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p>
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நிக்கவெரடிய பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-01T11:51:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[12 ஆம் திகதிக்கு முன்னர் நாமல் ராஜபக்ச கைது : அவரே வெளியிட்ட தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/namal-inside-before-the-12th-1788262543"></link>
            <id>https://ibctamil.com/article/namal-inside-before-the-12th-1788262543</id>
            <summary type="text">எதிர்வரும் 12ஆம் திகதி அனுராதபுரத்தில் நடைபெறவுள்ள மக்கள் பேரணிக்கு முன்னர் தன்னைக் கைது செய்ய அரசாங்கம் முயன்று வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ர...</summary>
            <content type="html"><![CDATA[<p>எதிர்வரும் 12ஆம் திகதி அனுராதபுரத்தில் நடைபெறவுள்ள மக்கள் பேரணிக்கு முன்னர் தன்னைக் கைது செய்ய அரசாங்கம் முயன்று வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
</p><p>
சிறிலங்கா பொதுஜன பெரமுன தலைமையகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.
</p><p>
12ஆம் திகதி அனுராதபுரத்திற்கு மக்கள் கூட்டம் வருவதைத் தடுப்பதற்காக, அரசாங்கம் ஒரு பெரும் ஒடுக்குமுறையைத் தொடங்கியுள்ளதாகவும், தன்னைச் சிறையில் அடைக்க அரசாங்கம் தயங்காது என்றும் அவர் கூறினார்.</p><h2>ராஜபக்சக்களின் பாரம்பரிய உடை</h2><p>ஜேவிபி-யின் அரசியல் பாணியை விமர்சித்த அவர், கொலை அல்லது தீவைப்பு மூலம் ஒருபோதும் அதிகாரத்தைக் கைப்பற்ற முயற்சிக்க மாட்டேன் என்று வலியுறுத்தினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/242c0f51-15ba-40c3-8f4e-c982784aa768/26-6a96bbafd9fd5.webp' /></p><p> </p><p>மேலும், ராஜபக்சக்களின் பாரம்பரிய உடையான 'சால்வை' குறித்த விமர்சனங்களுக்குப் பதிலளித்த அவர், தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு தங்கள் ஆடைகளை மாற்றிக்கொள்ளும் அரசியல்வாதிகளைப் போலல்லாமல், தனது அடையாளத்தையோ அல்லது பாரம்பரிய உடையையோ ஒருபோதும் மாற்றிக்கொள்ள மாட்டேன் என்றும் கூறினார்.</p><p></p><p>

</p><h2>கடுமையான மன அழுத்தத்தில்&nbsp;நீதி அமைச்சர்</h2><p>"சிலர் வெற்றிபெறும்போது ஒரு விதமாகவும், தோல்வியடையும்போது மற்றொரு விதமாகவும் நடந்துகொள்கிறார்கள். மக்கள் எதிர்ப்பு இருக்கும்போது, ​​அவர்கள் வேறுவிதமாக நடந்துகொள்கிறார்கள். ஆனால் நாங்கள் எங்கள் அடையாளத்தைப் பாதுகாத்துக்கொண்டு நேர்மையாக அரசியல் செய்கிறோம். எனவே, எங்கள் பாணியைக் களைவது எளிதல்ல," என்று நாடாளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/033ab7d3-4023-4a12-853b-c70a6b7e4fb2/26-6a96bbaf3321e.webp' /></p><p>
</p><p>
அரசியலமைப்பின் 22வது திருத்தம் அரசாங்கத்தின் தனிப்பட்ட நலன்களின் அடிப்படையில் செயல்படுத்தப்படுகிறது என்று கூறினார். இதன் காரணமாக நீதி அமைச்சர் கூட கடுமையான மன அழுத்தத்தில் இருக்கிறார் என்றும், அதனால்தான் அவர் சமீபகாலமாக ஊடகங்களுக்கு முன்னால் தோன்றவில்லை என்றும் நாமல் ராஜபக்ச சுட்டிக்காட்டினார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-01T11:49:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[திருமணத்தை மீறிய உறவில் மனைவி: வீடியோ மூலம் நிரூபித்த கணவருக்கு சிறை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/taiwan-man-jailed-who-captured-wife-cheating-1788262969"></link>
            <id>https://news.lankasri.com/article/taiwan-man-jailed-who-captured-wife-cheating-1788262969</id>
            <summary type="text">Taiwan man jailed who captured wife cheating with vacuum video: தைவானில் மனைவி ஏமாற்றுவதை படம்பிடித்த கணவர் தனியுரிமையை மீறியதாக சிறையில் அடைக்கப்பட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>Taiwan man jailed who captured wife cheating with vacuum video: தைவானில் மனைவி ஏமாற்றுவதை படம்பிடித்த கணவர் தனியுரிமையை மீறியதாக சிறையில் அடைக்கப்பட்டார். </p><p>

தைவானில் ரோபோட் Vacuum Cleaner மூலம் தன் மனைவி ஏமாற்றுவதை படம்பிடித்த நபருக்கு, தனியுரிமையை மீறியதாக சிறை தண்டனை விதிக்கப்பட்டது.&nbsp;</p><h2>கணவருக்கு சந்தேகம்&nbsp;</h2><p>

தைவானைச் சேர்ந்த நபர் ஒருவர், தன் மனைவியின் விடுமுறை இல்லத்தில் தொடர்பில்லாத பல் துலக்கும் தூரிகையை கண்டுள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/63d88aa9-d616-4f92-9e51-8d39cf7a559b/26-6a96bb6769d2f.webp' />&nbsp;</p><p></p><p>
இதனால் மனைவி மீது அவருக்கு சந்தேகம் ஏற்பட,வெளிப்புறத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தார். 

அதில், ஒருவர் தனது மனைவியை மீண்டும் மீண்டும் வீட்டில் கொண்டுபோய் விடுவது தெரியவந்தது. </p><p>

அதனைத் தொடர்ந்து, பல மாதங்கள் கழித்து டிசம்பர் 2023-யில் அந்தத் தம்பதியினர் வசித்து வந்த தனது பெற்றோர் வீட்டில் இருந்த செயலி மூலம், அந்த விடுமுறை இல்லத்தில் இருந்த ரிமோட் Vacuum Cleaner-ஐ அவர் இயக்கினார்.
</p><p>
ஆனால், அந்த சாதனத்தின் Audio செயல்பாட்டை இயக்க முயன்றபோது, அதற்கு பதிலாக Live கமெராவை இயக்கியுள்ளார்.</p><p> அதில் அவரது மனைவி தனது காதலருடன் இருப்பது பதிவானதாக சவுத் சைனா மார்னிங் போஸ்ட் பத்திரிக்கை கூறியது.</p><h2>

வீடியோவாக பதிவு</h2><p>குறித்த கணவர், தனது மனைவி மற்றும் அவரின் காதலர் இருவரும் ஆடையை களைந்து, அந்த இல்லத்தை சுற்றி நடமாடுவதை வீடியோவாக பதிவு செய்துள்ளார்.
</p><p>
பின்னர் தனது விவாகரத்து நடவடிக்கைகளின்போது, அந்த வீடியோ ஆதாரமாக சமர்ப்பித்த அவர், தனது மனைவியிடம் இருந்து 46,600 பவுண்டுகளுக்கும் சற்று அதிகமான தொகையை இழப்பீடாக கோரினார்.
</p><p>
அதனை விசாரித்த உரிமையியல் நீதிமன்றம், குறித்த கணவரின் மனைவி 11,600 பவுண்டுகளுக்கும் சற்று அதிகமான (500,000 தைவான் டொலர்கள்) அதிகமான தொகையை செலுத்த உத்தரவிட்டது. </p><p>

என்றாலும், குறித்த பெண் தனது தனியுரிமையை கணவர் மீறிவிட்டதாகக் கூறி, குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். </p><h2>

ஐந்து மாத சிறை</h2><p>பின்னர் அந்த ஆதாரம் ஏற்கனவே உரிமையியல் நீதிமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகக் கணவர் வாதிட்டார்.&nbsp;</p><p>

ஆனாலும், குற்றவியல் நீதிமன்றம் அவரது வாதத்தை நிராகரித்து, திருமணக் கடமைகள் ஒரு தனிநபரின் தனியுரிமை உரிமையை விட மேலானவை அல்ல என்று நீதிமன்றம் கூறியது.
</p><p>
அத்துடன் கணவருக்கு ஐந்து மாத சிறைத்தண்டனையும், மனைவிக்கு 3,500 பவுண்டுகள் செலுத்த வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/06aebc86-04b1-4e01-83d2-0c48be8a5cad/26-6a96bb669ed9f.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> </b>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-01T11:44:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை – சீனா இடையே புதிய குடிவரவு ஒப்பந்தம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/new-immigration-agreement-sri-lanka-and-china-1788262812"></link>
            <id>https://jvpnews.com/article/new-immigration-agreement-sri-lanka-and-china-1788262812</id>
            <summary type="text">&amp;nbsp;இலங்கை – சீனா இடையே புதிய குடிவரவு ஒப்பந்தம் மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 

இலங்கையின் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;இலங்கை – சீனா இடையே புதிய குடிவரவு ஒப்பந்தம் மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. </p><p>

இலங்கையின் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் மற்றும் சீனக் குடியரசின் தேசிய குடிவரவு நிர்வாகத்திற்கும் இடையிலான குடிவரவுக் கட்டுப்பாட்டு ஒத்துழைப்புக்கள் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்கு பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கே அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2f71b117-8e51-424a-b7c1-877c5bb0f0ac/26-6a96b99e12a42.webp' /></p><p> </p><p>



இலங்கையின் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் மற்றும் சீனக் குடியரசின் தேசிய ; குடிவரவு நிர்வாகத்திற்கும் இடையிலான குடிவரவுக் கட்டுப்பாட்டு ஒத்துழைப்புக்கள் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்காக இருதரப்பினர்களுக்கும் இடையில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.</p><p></p><p>
</p><p>


இரு நாடுகளுக்கிடையிலான நிறுவனங்களின் பிரதானிகள் மற்றும் உத்தியோகபூர்வ பிரதிநிதிகள் மட்டத்தில் மேற்கொள்ளப்படும் பேச்சுவார்த்தைகள் மற்றும் விஜயங்களுக்கான வசதிப்படுத்தல்களை மேற்கொள்ளல்.
</p><p>


அத்துடன், முக்கியமான உத்தியோகபூர்வ தகவல்கள் மற்றும் புலன் தகவல்கள், முனைப்பான மற்றும் சாதகமான அணுகுமுறைகள் ஊடாக இருநாடுகளுக்கிடையிலான வர்த்தகங்கள், முதலீடுகள், சுற்றுலாத்துறை, தொழிநுட்ப, விஞ்ஞானத் துறைகளில் ஈடுபடுகின்ற பிரஜைகள் தொடர்பான விடயதானங்களுக்கான விசாக்கள்,</p><p></p><p> குடிவரவு மற்றும் குடியகல்வு விவகாரங்கள் தொடர்பான வசதிப்படுத்தல்கள், திட்டமிட்ட குற்றச் செயல்களாகக் கருதப்படும் மனித வியாபாரம் மற்றும் மனிதக் கடத்தல்களுடன் தொடர்புடைய நபர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளல் மற்றும் அலுவலர்களின் அறிவு, </p><p>திறன் மற்றும் இயலளவுகளை அபிவிருத்தி செய்வதற்கான செயலமர்வுகளை ஒழுங்குபடுத்தல் போன்ற நோக்கங்களை அடைவதற்கு உத்தேச புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.</p><p> 



மேலும் இந்த உத்தேச ஒப்பந்த வரைபுக்கு வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு மற்றும் சட்டமா அதிபரின் ஒப்புதல் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.&nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-09-01T11:37:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[திருமணம் செய்ய வற்புறுத்தல் ; கர்ப்பிணிப் பெண்ணின் உடல் பாகங்கள் சூட்கேஸில்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/pregnant-woman-murdered-after-being-forced-marry-1788262507"></link>
            <id>https://jvpnews.com/article/pregnant-woman-murdered-after-being-forced-marry-1788262507</id>
            <summary type="text">சென்னையை அடுத்த கூடுவாஞ்சேரி பகுதியில் கர்ப்பிணிப் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டு, அவரது உடல் பாகங்கள் சூட்கேஸில் அடைக்கப்பட்டு ஆக்ராவிற்கு அனுப்பப்பட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>சென்னையை அடுத்த கூடுவாஞ்சேரி பகுதியில் கர்ப்பிணிப் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டு, அவரது உடல் பாகங்கள் சூட்கேஸில் அடைக்கப்பட்டு ஆக்ராவிற்கு அனுப்பப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><p>
</p><p></p><p>காவல்துறையினரின் விசாரணையில், ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த மாணிக் உத்தின் லஸ்கர் மற்றும் அவரது மனைவி பகபதி மாஜி ஆகியோர் இந்தக் கொலையில் ஈடுபட்டதாகத் தெரியவந்துள்ளது.
</p><p>
குறித்த பெண் தங்களைத் திருமணம் செய்து கொள்ளுமாறு தொடர்ந்து வலியுறுத்தியதால் ஏற்பட்ட ஆத்திரத்தில் இந்தக் கொலை இடம்பெற்றதாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாகக் கூறப்படுகிறது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ead16e40-e811-4819-ab52-356cad5c6f51/26-6a96b86c86f23.webp' /></p><p>சம்பவத்தன்று குறித்த பெண் தூங்கிக் கொண்டிருந்தபோது அவரை மயக்கமடையச் செய்து, பின்னர் கொலை செய்ததாக காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
கொலையின் பின்னர், உடலை மறைத்து அப்புறப்படுத்துவதற்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. </p><p>பின்னர் உடல் பாகங்கள் சூட்கேஸில் அடைக்கப்பட்டு ஆக்ராவிற்கு அனுப்பப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
</p><p>
இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களிடம் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
</p><p>
சம்பவத்தின் பின்னணி, கொலைக்கான காரணம் மற்றும் உடல் பாகங்கள் ஆக்ராவிற்கு அனுப்பப்பட்டமை தொடர்பில் மேலதிக தகவல்களை காவல்துறையினர் திரட்டி வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-01T11:35:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[செப்டம்பர் மாத தொழில் ராசிபலன்: யாருக்கு முன்னேற்றம், யாருக்கு சவால்?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/september-2026-career-horoscope-12-zodiac-signs-1788251006"></link>
            <id>https://manithan.com/article/september-2026-career-horoscope-12-zodiac-signs-1788251006</id>
            <summary type="text">பொதுவாக, ஒரு புதிய மாதத்தில் நாம் நுழையும் போது, அந்த மாதத்தில் ஏற்படும் கிரகங்களின் நிலைமாற்றங்கள், வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களில் குறிப்பிடத்தக்க ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொதுவாக, ஒரு புதிய மாதத்தில் நாம் நுழையும் போது, அந்த மாதத்தில் ஏற்படும் கிரகங்களின் நிலைமாற்றங்கள், வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.</p><p>அந்த வகையில், 2026 ஆம் ஆண்டின் செப்டம்பர் மாதத்தில் முக்கியமான சில கிரக நிலைகள் உருவாகின்றன. மாதத்தின் முதல் பாதியில் சுக்கிரன், புதன், சூரியன் போன்ற முக்கிய கிரகங்கள் தங்களுக்குச் சாதகமான அல்லது சொந்த ராசிகளில் இருப்பதுடன், குரு பகவானும் தனது உச்ச ராசியில் சஞ்சரிக்கிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b3f19526-4f00-4e99-ae1a-5291122acf8b/26-6a9696decbdf5.webp' /></p><p> இதனால் பல ராசிக்காரர்களுக்கும் தொழில் மற்றும் பணியிட வாழ்க்கையில் சாதகமான சூழ்நிலைகள் உருவாக வாய்ப்புள்ளது.

அதன்பிறகு, செப்டம்பர் மாதத்தின் இரண்டாம் பாதியில் கிரகங்களின் நிலைகளில் மேலும் சில முக்கிய மாற்றங்கள் ஏற்படுகின்றன. </p><p>செவ்வாய் கிரகம் குரு பகவானுடன் இணைந்து பயணிக்க, புதன் கிரகம் சுக்கிரனுடன் இணைந்து சஞ்சரிக்கிறார். இந்த கிரக சேர்க்கைகள் ஒவ்வொரு ராசிக்கும் வெவ்வேறு விதமான தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும்.&nbsp;</p><p>

இவ்வாறு செப்டம்பர் மாதத்தில் ஏற்படும் முக்கியமான கிரக நிலை&nbsp; மாற்றங்களில் தொழில் நிலையில், எந்த ராசிக்கு எப்படியான பலன்கள் கிடைக்கப்போகின்றது என 12 ராசிகளுக்குமான பலன்களை இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.</p><h2>12 ராசிகளுக்குமான சிறப்பு பலன்கள்&nbsp;</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/992ec310-68ba-4da0-a1da-7b2f4ff2ac6d/26-6a9696df815a5.webp' /></p><p><b>மேஷம்
</b></p><p>மேஷ ராசிக்காரர்கள் செப்டம்பர் மாதத்தின் முதல் பாதி தொழில் ரீதியாக சிறப்பாக இருக்கும். வேலை தொடர்பான பயணங்களால் நல்ல ஆதாயங்கள் கிடைக்கும்.</p><p>மாதத்தின் நடுப்பகுதியில் அன்றாடப் பணிகள் மற்றும் பொறுப்புகள் மீதான கவனம் அதிகரிக்கும். பணியிட விமர்சனங்களுக்கு பதிலளிக்கும்போது உணர்ச்சிவசப்படாமல், பொறுமையாக யோசித்து செயல்படுவது நல்லது.</p><p><b>

ரிஷபம்</b></p><p>
ரிஷப ராசிக்காரர்கள் செப்டம்பர் மாதத்தில் பொறுமையுடனும் விடாமுயற்சியுடனும் செயல்பட்டால் தொழில் வாழ்க்கை பயனுள்ளதாக அமையும். </p><p>பணியிடத்தில் சக ஊழியர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் முடிவுக்கு வரும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். விமர்சனங்களை மனதில் எடுத்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது.</p><p><b>

மிதுனம்</b></p><p>
மிதுன ராசிக்காரர்கள் செப்டம்பர் மாதத்தில் தொழில் சார்ந்த விஷயங்கள் சுறுசுறுப்பாக இருக்கும். புதிய வருமானத்துக்கான வழிகள் திறக்கும்.&nbsp;</p><p>மாத தொடக்கத்தில் தொழிலதிபர்கள் புதிய திட்டங்களை செயல்படுத்தவும், வாடிக்கையாளர்களை தொடர்பு கொள்ளவும் ஆர்வமாக இருப்பார்கள். இருப்பினும், அவசரப்பட்டு தொழில் முடிவுகளை எடுப்பதைத் தவிர்க்க வேண்டும்.
</p><p><b>
கடகம்
</b></p><p>கடக ராசிக்காரர்கள் செப்டம்பர் மாதத்தில் பொறுமையும் தெளிவான தகவல்தொடர்பும் தொழில் விஷயங்களில் நன்மை தரும். </p><p>பணியிடத்தில் சக ஊழியர்களின் முழு ஒத்துழைப்பு கிடைக்கும். உயர் அதிகாரிகளிடம் பணிவாக பேசுவது நல்லது. சூரியனின் நிலையால் தன்னம்பிக்கையும், செவ்வாயின் நிலையால் லட்சியமும் அதிகரிக்கும்.வேலை மாற்றம் குறித்து கவனமாக முடிவெடுக்க வேண்டும்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9665d736-f9cf-41b7-962c-01d142bd6e5f/26-6a9696e04ac42.webp' /></p><p></p><p><b>
சிம்மம்</b></p><p>
சிம்ம ராசிக்காரர்கள் செப்டம்பர் மாதம் தொழில் ரீதியாக நம்பிக்கையுடன் தொடங்கும். மாத தொடக்கத்தில் சூரியன் சொந்த ராசியில் இருப்பதால், புதிய யோசனைகளை செயல்படுத்துவீர்கள்.</p><p>புதிய திட்டங்களை பொறுப்பேற்கவும் உகந்த காலமாக இருக்கும். இம்மாதத்தில் அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பதை விட அமைதியாகப் பணியாற்ற விரும்புவீர்கள்.</p><p><b>
கன்னி
</b></p><p>கன்னி ராசிக்காரர்கள் செப்டம்பர் மாதத்தில் தொழில் வாழ்க்கை வலுவாக இருக்கும். மாத தொடக்கத்தில் நிலுவையில் உள்ள வேலைகளை முடிக்க மும்முரமாக செயல்படுவீர்கள். </p><p>வேலை தேடுபவர்களுக்கும், வேலை மாற்ற நினைப்பவர்களுக்கும் இம்மாதம் சாதகமாக இருக்கும். பணியிடத்தில் கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும்.
</p><p><b>
துலாம்
</b></p><p>துலாம் ராசிக்காரர்கள் செப்டம்பர் மாதத்தில் தொழில் சார்ந்த விஷயங்களுக்கு அதிக முக்கியத்துவம் கிடைக்கும். பணியிடத்தில் உங்களின் கருத்துகளைப் பகிரும் வாய்ப்புகள் கிடைக்கலாம். </p><p>தொழிலை அணுகும் விதம் மேம்படுவதால் பயனுள்ள தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்வது எளிதாகும். வேலை தேடுபவர்களுக்கு இம்மாதம் சிறப்பாக இருக்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/06ce36c3-5324-4136-aac7-6ece192a883a/26-6a9696e104282.webp' /></p><p>
</p><p><b>
விருச்சிகம்
</b></p><p>விருச்சிக ராசிக்காரர்கள் செப்டம்பர் மாதத்தில் தொழில் வாழ்க்கையில் முன்னேற்றம் காண்பீர்கள். அமைதியாகப் பணியாற்றி அடுத்த கட்டத்திற்கு செல்ல விரும்புவீர்கள். </p><p>பணியிடத்தில் சக ஊழியர்களுடன் இருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வந்து, அவர்களின் முழு ஆதரவும் கிடைக்கும். இதனால் வேலைகளை சரியான நேரத்தில் முடியும்.</p><p><b>
தனுசு</b></p><p>
தனுசு ராசிக்காரர்ளுக்கு&nbsp; செப்டம்பர் மாதம் தொழில் ரீதியாக வலுவாக இருக்கும். தொழில் விஷயங்களை ஒழுங்காகக் கையாள்வீர்கள். </p><p>வெறும் பாராட்டைப் பெறுவதை விட, தொடர்ச்சியான உழைப்பின் மூலம் உங்களை நிரூபிப்பது சிறந்தது. கடின உழைப்பை உயர் அதிகாரிகள் கவனித்து புதிய பொறுப்புகளை வழங்கலாம். மோசமான சூழ்நிலைகளில் அவசரப்படாமல் பொறுமையுடன் செயல்படுவது நல்லது.
</p><p><b>
மகரம்</b></p><p>
மகர ராசிக்காரர்கள்&nbsp; செப்டம்பர் மாதத்தில் தொழிலில் படிப்படியான முன்னேற்றம் காண்பீர்கள். இதனால் நிதி நிலையிலும் உயர்வு ஏற்படலாம். </p><p>வணிகர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் மூலம் நல்ல லாபம் கிடைக்கும். உணர்ச்சிகளின் அடிப்படையில் முடிவுகளை எடுப்பதைத் தவிர்க்க வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1413f310-7f71-430f-8761-6c600af02712/26-6a9696e1ab0a9.webp' /></p><p></p><p><b>

கும்பம்
</b></p><p>கும்ப ராசிக்காரர்கள்&nbsp; செப்டம்பர் மாதத்தில் புதிய சூழ்நிலைகளைக் கற்றுக்கொண்டு, அதற்கேற்ப தங்களை மாற்றிக் கொள்ளும் ஆர்வம் தொழிலில் கைகொடுக்கும். </p><p>வேலையில் உள்ள பிரச்சனைகளைத் தீர்க்கும் ஆர்வம் அதிகரிக்கும். அதேசமயம் பணிச்சுமையும் அதிகரிக்கும். வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.</p><p><b>மீனம்
</b></p><p>மீன ராசிக்காரர்கள் செப்டம்பர் மாதத்தில் தனியாக முன்னேறுவதை விட, மற்றவர்களுடன் இணைந்து செயல்பட வேண்டியதன் அவசியத்தை உணர்வீர்கள். </p><p>வேலையில் பொறுமையுடன் செயல்பட வேண்டும். கூட்டுத்தொழில் செய்பவர்கள், கூட்டாளியுடனான நல்ல உறவால் தொழிலை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் வாய்ப்பு அமையும்.</p><p><b>இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).&nbsp;&nbsp;</b></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்<a href="https://chat.whatsapp.com/KPaiG8NNYogL3W9EipSjKP" target="_blank"> </a><b><u><a href="https://chat.whatsapp.com/KPaiG8NNYogL3W9EipSjKP" target="_blank">FOLLOW NOW&nbsp;</a></u></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-01T11:27:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறைகளில் தடுத்து வைப்பதற்கு பதிலாக வீட்டுக்காவலில் வைத்தல் : எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/house-arrest-instead-of-detention-in-prisons-1788261065"></link>
            <id>https://ibctamil.com/article/house-arrest-instead-of-detention-in-prisons-1788261065</id>
            <summary type="text">சிறைச்சாலைகளில் தடுத்து வைப்பதற்கு பதிலாக வீடுகளில் தடுத்து வைப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள சட்ட மறுசீரமைப்புகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக அம...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிறைச்சாலைகளில் தடுத்து வைப்பதற்கு பதிலாக வீடுகளில் தடுத்து வைப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள சட்ட மறுசீரமைப்புகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். </p><p>

இன்று (01) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார். </p><p>

இதற்காகப் பல சட்ட மறுசீரமைப்புகள் குறித்து தற்போது கலந்துரையாடப்பட்டு, தேவையான சட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார்.</p><p></p><h2>நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்தல்</h2><p>இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், "நீதித்துறை அமைப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல மறுசீரமைப்புகளுக்கு மத்தியில் இந்தச் சட்ட மறுசீரமைப்பும் இடம்பெறுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3bd7cbfb-5a37-4c9c-a1d2-f7745364b011/26-6a96b5f714bfd.webp' /></p><p> </p><p>சிறைச்சாலைகளின் நெருக்கடியைக் குறைத்தல், அரசாங்க பகுப்பாய்வாளர் திணைக்களத்தின் அறிக்கைகளை விரைவுபடுத்துதல், பிணை பெற முடியாதவர்களுக்குப் பிணை வழங்குவதற்குத் தேவையான சட்ட மறுசீரமைப்புகளைச் செய்தல், சிறைச்சாலைகளுக்கு வெளியே இவ்வாறானவர்களை வீடுகளில் தடுத்து வைத்து தண்டனைக் காலத்தைக் கழிப்பதற்கான வாய்ப்பை வழங்குதல் போன்ற பல மறுசீரமைப்புகள் குறித்து கலந்துரையாடப்பட்டு சட்டங்கள் இயற்றப்பட்டு வருகின்றன. </p><p>இந்தச் செயற்திட்டத்தின் ஒரு அங்கமாகவே நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்தவும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது." என தெரிவித்தார்.&nbsp;&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-01T11:27:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தியாவில் பின்னோக்கி பாயும் ஒரேயொரு நதி! சுவாரஸ்ய பின்னணி தெரியுமா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/which-river-flows-backwards-in-india-1788259700"></link>
            <id>https://manithan.com/article/which-river-flows-backwards-in-india-1788259700</id>
            <summary type="text">
India has a river that flows backwards: இந்தியாவின் ஆறுகள் வெறும் நீர் ஆதாரங்கள் மட்டுமல்ல. அவை விவசாயத்திற்குத் துணைபுரிகின்றன, குடிநீர் வழங்குகின்...</summary>
            <content type="html"><![CDATA[<p>
India has a river that flows backwards: இந்தியாவின் ஆறுகள் வெறும் நீர் ஆதாரங்கள் மட்டுமல்ல. அவை விவசாயத்திற்குத் துணைபுரிகின்றன, குடிநீர் வழங்குகின்றன, மின்சாரம் தயாரிக்க உதவுகின்றன மற்றும் நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரமாகவும் திகழ்கின்றன. </p><p>இந்தியாவில் 400-க்கும் மேற்பட்ட ஆறுகள் உள்ளன. அவற்றில் பெரும்பாலான முக்கிய நதிகள் இமயமலை அல்லது மத்திய உயர்நிலப் பகுதிகளில் உருவாகி, கிழக்கு நோக்கி பாய்ந்து வங்காள விரிகுடாவில் கலக்கின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/23270692-bc31-43ef-9b1e-de4574c935b4/26-6a96b55d4d28b.webp' /></p><p>ஆனால், இதற்கு மாறாக மேற்கு நோக்கிப் பாயும் முக்கிய நதிகளில் ஒன்றாக நர்மதை ஆறு விளங்குகிறது.

சுமார் 1,310 கிலோமீட்டர் நீளமுடைய நர்மதை, இந்தியாவின் ஐந்தாவது மிக நீளமான ஆறாக அறியப்படுகின்றது.&nbsp;</p><p>மத்தியப் பிரதேசத்தின் அமர்கண்டக் அருகே உருவாகும் இது, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா வழியாகப் பாய்ந்து குஜராத்தை அடைந்து, பரூச் அருகே அரபிக்கடலில் கலக்கிறது. தபதி உள்ளிட்ட சில ஆறுகளும் மேற்கு நோக்கிப் பாய்ந்தாலும், நர்மதை அதன் நீளம், புவியியல் தனித்துவம் மற்றும் பண்பாட்டு முக்கியத்துவத்தால் சிறப்பிடம் பெறுகிறது.</p><p></p><h2>பின்னோக்கி பாய காரணம்&nbsp;</h2><p>
</p><p>
நர்மதை மேற்கு நோக்கிப் பாய்வதற்குக் காரணம், பண்டைய புவித்தட்டுச் செயல்பாடுகளால் உருவான பிளவுப் பள்ளத்தாக்காகும். கிழக்கிலிருந்து மேற்காகச் சரிவாக அமைந்துள்ள இந்தப் பள்ளத்தாக்கைப் பின்பற்றியே நதி மேற்கு நோக்கிப் பாய்கிறது.</p><p> இதன் வடக்கில் விந்திய மலைத்தொடரும், தெற்கில் சத்புரா மலைத்தொடரும் அமைந்துள்ளன.

நர்மதைப் படுகையின் மேற்பகுதிகள் மலைகள் மற்றும் அடர்ந்த காடுகளைக் கொண்டுள்ளன. மேற்குப் பகுதிகளுக்குச் செல்லச் செல்ல நிலப்பரப்பு சமதளமாகவும் வளமாகவும் மாறுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/19885c65-e382-4cd6-b04e-bcc91fd6fe98/26-6a96b55e052ca.webp' /></p><p> </p><p>இங்கு ஆற்று நீரைச் சார்ந்து கோதுமை, பருத்தி மற்றும் பயறு வகைகள் அதிகளவில் பயிரிடப்படுகின்றன. சர்தார் சரோவர், இந்திரா சாகர், ஓம்காரேஷ்வர் உள்ளிட்ட அணைகள் நீர்வள மேலாண்மையில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
</p><p>
புவியியல் மற்றும் விவசாய முக்கியத்துவத்துடன், நர்மதை ஆறு ஆழமான ஆன்மீக மற்றும் பண்பாட்டு முக்கியத்துவத்தையும் கொண்டுள்ளது.</p><p> அமர்கண்டக், ஓம்காரேஷ்வர், மகேஷ்வர் போன்ற புனிதத் தலங்கள் அதன் கரையோரத்தில் அமைந்துள்ளன. மேலும், பக்தர்கள் மேற்கொள்ளும் நர்மதா பரிகிரமா யாத்திரை இதன் ஆன்மீகச் சிறப்பை வெளிப்படுத்துகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1a9272f8-d513-41ce-87ee-7c9b577b7661/26-6a96b5f4203bb.webp' /></p><p></p><p>

இவ்வாறு, இந்தியாவின் பெரும்பாலான நதிகள் கிழக்கு நோக்கிப் பாயும் நிலையில், நர்மதை தனது தனித்துவமான புவியியல் அமைப்பின் காரணமாக மேற்கு நோக்கிப் பாய்ந்து, இயற்கை, விவசாயம் மற்றும் ஆன்மீக&nbsp; ரீதியில் மிகுத்த முக்கியத்துவம் பெறுகின்றது.</p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://chat.whatsapp.com/KPaiG8NNYogL3W9EipSjKP" target="_blank">FOLLOW NOW&nbsp;</a></u></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-01T11:27:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரான் - அமெரிக்க ஏவுகணைத் தாக்குதல்களால் விலை உயர்வை சந்திக்கும் கச்சா எண்ணெய்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/crude-oil-prices-rise-due-to-iran-us-attacks-1788260487"></link>
            <id>https://ibctamil.com/article/crude-oil-prices-rise-due-to-iran-us-attacks-1788260487</id>
            <summary type="text">மத்திய கிழக்கில் மீண்டும் அதிகரித்த பதற்றத்தை தொடர்ந்து எண்ணெய் விலைகள் தொடர்ந்து உயர்ந்து உயர்வு மட்டத்தை அடைந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன...</summary>
            <content type="html"><![CDATA[<p>மத்திய கிழக்கில் மீண்டும் அதிகரித்த பதற்றத்தை தொடர்ந்து எண்ணெய் விலைகள் தொடர்ந்து உயர்ந்து உயர்வு மட்டத்தை அடைந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>

இதன்படி பிரென்ட் கச்சா எண்ணெய் விலை தற்போது நிலவரப்படி ஒரு பீப்பாய்க்கு 1.18 டொலர் (1.3 சதவீதம்) அதிகரித்து 91.67 டொலராக பதிவாகியுள்ளது.
</p><p>
அதே நேரத்தில் அமெரிக்க டபிள்யூ.டி.ஐ கச்சா எண்ணெய் பீப்பாய்க்கு 1.27 டொலர் (1.48 சதவீதம்) அதிகரித்து 87.03 91.67 பதிவாகியுள்ளது.
</p><p></p><h2>பதிலடி ஏவுகணைப் தாக்குதல்</h2><p>
அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான பதிலடி ஏவுகணை தாக்குதல் நகர்வுகள் இது ஒரு போர் நிறுத்த நிலையை கடந்து செல்வதாக ஆய்வாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f17d07bb-aba1-4057-a45c-02930a2db1e4/26-6a96b5cbc13da.webp' /></p><p>

உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் சுமார் ஐந்தில் ஒரு பங்கைக் கொண்டு சென்ற ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கான ஒரு உடன்பாட்டை ஏற்படுத்த, கட்டார் மற்றும் ஓமான் உள்ளிட்ட மத்தியஸ்தர்கள் மேற்கொண்ட முயற்சிகள் இதுவரை பலனளிக்கவில்லை.
</p><p>
எண்ணெய் விலையால் ஏற்படும் பணவீக்கம் குறித்து வர்த்தகர்கள் கவலை கொண்டதால், உலகளாவிய கடன் பத்திர விற்பனை தீவிரமடைந்து வரும் நிலையில், ஜப்பானின் முக்கிய 10 ஆண்டு காலப் பத்திர வருவாய், 1996-ஆம் ஆண்டுக்குப் பிறகு முதன்முறையாக செவ்வாயன்று 3 சதவீத தடையை அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
</p><p>
இந்நிலையில் மத்திய கிழக்கு நெருக்கடி உலகளவில் விலை அழுத்தங்களைத் தூண்டி வருவதால் , மத்திய வங்கிகள் வட்டி விகிதங்களை உயர்த்த வேண்டியிருக்கும் என முதலீட்டாளர்கள் எதிர்பார்ப்பதால், டோக்கியோ மற்றும் சிட்னியிலிருந்து நியூயார்க் மற்றும் லண்டன் வரை பத்திர வருவாய்கள் கடுமையாக உயர்ந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் விளக்கியுள்ளன.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-01T11:24:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[விடுதலைப் புலிகளின் அடுத்த தலைவராக தன்னை நினைத்த கே.பிக்கு கடும் பாதுகாப்பு! தென்னிலங்கையில் இருந்து கேள்வி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/kp-declares-himself-the-next-leader-of-ltte-1788254422"></link>
            <id>https://tamilwin.com/article/kp-declares-himself-the-next-leader-of-ltte-1788254422</id>
            <summary type="text">
பிரபாகரனுக்குப் பிறகு தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் என சொல்லிவந்த குமரன் பத்மநாதன்(கே.பி) இன்று கிளிநொச்சியில் விமானப்படையின் பாதுகாப்புக்குக் க...</summary>
            <content type="html"><![CDATA[<p>
பிரபாகரனுக்குப் பிறகு தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் என சொல்லிவந்த குமரன் பத்மநாதன்(கே.பி) இன்று கிளிநொச்சியில் விமானப்படையின் பாதுகாப்புக்குக் கீழ் இருக்கின்றார். அவருக்கு எதிராக எந்தவொரு வழக்கும் இல்லை முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.</p><p>

ஊடகவியலாளர் சந்திப்பொன்றின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.</p><h2>பொருளாதாரத்தை சீரழித்த யுத்தம்&nbsp;</h2><p>

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,</p><p> 

எமது நாடு விடுதலைப் புலிகளின் யுத்தத்திற்கு முன்னர் பொருளாதார ரீதியில் முன்னேற்றமடைந்து வந்தது. ஆனால், 87 மற்றும் 88ஆம் ஆண்டுகளின் போது மக்கள் விடுதலை முன்னணியின் கலவரத்தினால் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைய ஆரம்பித்தது. </p><p>

அதனைத் தொடர்ந்து விடுதலைப் புலிகளின் யுத்தம் காரணமாக, எமது நாடு வீழ்ச்சியடைந்தது. இந்த இரண்டு போராட்டங்களும் இடம்பெறாமல் இருந்திருந்தால், எமது நாடு அபிவிருத்தியடைந்த நாடாக மாறியிருக்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4d009302-99f0-40fe-8b56-77196dcd467d/26-6a96b59fdc24e.webp' /></p><p>
</p><p>
 ஆனால், இவ்வாறு நாட்டில் கலவரத்தை ஏற்படுத்தி நாட்டுக்கு பாதிப்பை ஏற்படுத்திய யாருக்காவது வழக்குகள் இருக்கின்றதா? மக்கள் விடுதலை முன்னணியைச் சேர்ந்த யாருக்காவது வழக்கு இருக்கின்றதா என கேட்கின்றோம்.
</p><p>
பிரபாகரனுக்குப் பிறகு தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் நான்தான் என சொல்லிக் கொண்ட குமரன் பத்மநாதன் இன்று கிளிநொச்சியில் விமானப்படையின் பாதுகாப்புக்குக் கீழ் இருக்கின்றார். அவருக்கு எதிராக ஒரு வழக்கும் இல்லை. </p><p>

ஆனால், விடுதலைப் புலிகளின் சாதாரண உறுப்பினர்கள் சிலரே இன்று சிறைச்சாலைகளில் அடைத்து வைக்கப்பட்டிருக்கின்றார்கள் என குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p><p> </p>]]></content>
            <updated>2026-09-01T11:23:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[காவல்துறை வழங்கிய துல்லிய தகவல் : வெளிநாடொன்றில் சிக்கிய முக்கிய புள்ளி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/dehibales-brother-kalu-malli-arrested-in-dubai-1788260313"></link>
            <id>https://ibctamil.com/article/dehibales-brother-kalu-malli-arrested-in-dubai-1788260313</id>
            <summary type="text">இலங்கை காவல்துறை வழங்கிய துல்லிய புலனாய்வுத் தகவலின் அடிப்படையில், துபாயில் பதுங்கியிருந்த, “கலு மல்லி” என அறியப்படும் துஷான் நெட்சரா என்ற ஒழுங்கமைக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை காவல்துறை வழங்கிய துல்லிய புலனாய்வுத் தகவலின் அடிப்படையில், துபாயில் பதுங்கியிருந்த, “கலு மல்லி” என அறியப்படும் துஷான் நெட்சரா என்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியும் போதைப்பொருள் கடத்தல்காரரும் அந்நாட்டின் பாதுகாப்புப் படைகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
சந்தேக நபர், “தெஹிபாலே” என அறியப்படும் ஷெஹான் சட்சராவின் சகோதரர் ஆவார். இவர் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் தலைவரும் போதைப்பொருள் கடத்தல்காரரும் ஆவார்.</p><h2>அடுத்த சில நாட்களில் இலங்கைக்கு கொண்டு வரப்படுவார்</h2><p>&nbsp; அதிகாரிகளின் முயற்சியை அடுத்து, சந்தேக நபர் அடுத்த சில நாட்களில் இலங்கைக்கு கொண்டு வரப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/42d2a731-fdf2-4101-9b43-d158ce832f66/26-6a96b4a5eff41.webp' /></p><p></p><p></p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-01T11:19:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[மனைவியை தொடர் துஸ்பிரயோகத்திற்கு இரையாக்கிய பிரித்தானியர்... 12 ஆண்களுக்கும் தொடர்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/husband-abusing-his-wife-stands-trial-1788261403"></link>
            <id>https://news.lankasri.com/article/husband-abusing-his-wife-stands-trial-1788261403</id>
            <summary type="text">UK husband accused of abusing his wife with 12 others: பிரித்தானியாவில், தனது மனைவியை மற்ற 12 பேருடன் சேர்ந்து துன்புறுத்தியதாக கணவன் மீது குற்றம் சாட...</summary>
            <content type="html"><![CDATA[<p>UK husband accused of abusing his wife with 12 others: பிரித்தானியாவில், தனது மனைவியை மற்ற 12 பேருடன் சேர்ந்து துன்புறுத்தியதாக கணவன் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
</p><p>இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாகத் தனது மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்து துஸ்பிரயோகத்திற்கு இரையாக்கியதாகக் குற்றம் சாட்டப்பட்ட கணவன், பிரித்தானியாவின் மான்செஸ்டரில் விசாரணையை எதிர்கொள்ளவுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c701a76a-ead5-4715-a859-2c3bb5c0a61a/26-6a96b41da797e.webp' /></p><p>
</p><p>துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டதாகவோ அல்லது அதற்குத் துணைபுரிந்ததாகவோ குற்றம் சாட்டப்பட்ட மற்ற பன்னிருவரும் விசாரணையை எதிர்கொள்கின்றனர். </p><p>அரசுத் தரப்பு சட்டத்தரணிகளின் தகவலின்படி, பிரித்தானியாவின் வடக்குப் பகுதியிலுள்ள ஸ்டாக்போர்ட்டைச் சேர்ந்த 60 வயது மதிக்கத்தக்க அந்த நபர் மீது, 2004-ஆம் ஆண்டு முதல் நிகழ்ந்ததாகக் கூறப்படும் 48 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. </p><p>அவரது மனைவியின் தனியுரிமையைப் பாதுகாப்பதற்காக, காவல்துறை அந்த நபரின் அடையாளத்தை பொதுவெளியில் வெளியிடவில்லை. அந்த கணவர் ஆரம்பத்தில் அனைத்துக் குற்றங்களையும் மறுத்தார். </p><p>அரசுத் தரப்பு சட்டத்தரணிகளின் கூற்றுப்படி, அவர் பின்னர் 15 குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டுள்ளார்: ஐந்து கற்பழிப்பு குற்றங்கள், ஆறு ஊடுருவல் தாக்குதல் குற்றங்கள், மூன்று பாலியல் வன்கொடுமை குற்றங்கள் மற்றும் மனைவியின் அனுமதியின்றி அவரது அந்தரங்கப் படங்களைப் பகிர்ந்த ஒரு குற்றம் ஆகியவை இதில் அடங்கும்.</p><p></p><p> </p><p>எஞ்சியுள்ள 33 குற்றச்சாட்டுகளை அவர் மறுத்துள்ளார். ஸ்கொட்லாந்தின் டண்டியைச் சேர்ந்த 59 வயதான கீத் ஃபோதரிங்ஹாம் (Keith Fotheringham) என்ற பதின்மூன்றாவது நபர், பாலியல் ரீதியான ஊடுருவலுடன் கூடிய தாக்குதல், அத்தகைய தாக்குதலை நடத்துவதற்கான சதி, பாலியல் வன்புணர்வுக்கான சதி ஆகிய குற்றச்சாட்டுகளைத் தனித்தனியாக ஒப்புக்கொண்டுள்ளார். </p><p>அவர் தொடர்ந்து காவலில் வைக்கப்பட்டுள்ளார்; அவருக்கான தண்டனை விவரம் பின்னர் அறிவிக்கப்படும். முதற்கட்ட விசாரணைகளில், மான்செஸ்டரிலிருந்து தென்கிழக்கே சுமார் 30 நிமிட பயணத் தொலைவில் உள்ள ஸ்டாக்போர்ட்டில் இருக்கும் தம்பதியரின் வீட்டிற்கு, கூறப்படும் குற்றங்களைச் செய்வதற்காக அந்த நபர்களில் சிலர் அழைக்கப்பட்டதாக அரசுத் தரப்பு சட்டத்தரணிகள் குற்றம் சாட்டுகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0c1c6e1f-c426-453b-9d1c-1d261fc806d6/26-6a96b41e5d31b.webp' /></p><p> </p><p>பிரித்தானியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த, 28 முதல் 73 வயதுக்குட்பட்ட 12 இணை பிரதிவாதிகளும், தங்கள் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளனர்.
</p><p>அவர்களில், ஸ்டாக்போர்ட்டைச் சேர்ந்த 43 வயதான மருத்துவ உதவியாளர் ஜொனாதன் கிர்க்கும் ஒருவர். மான்செஸ்டர் மற்றும் சால்ஃபோர்டில் நடந்த கலவரங்களைத் தொடர்ந்து, 2011-ல் அப்பகுதியில் உள்ள அவசரகாலப் பணியாளர்களை இளவரசர் ஹரி சந்தித்தபோது, ​​அவருடன் கிர்க் கைகுலுக்கிய புகைப்படம் ஒன்றும் வெளியானது. </p><p>கிர்க் மீது பாலியல் வன்கொடுமை, பாலியல் வன்கொடுமை செய்ய சதி செய்தல் மற்றும் ஊடுருவித் தாக்க சதி செய்தல் ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. மேலும், முன்னாள் கால்பந்து கிளப் தலைமை நிர்வாகியான 55 வயது கார்ல் லிண்ட்சே மீதும் விசாரணை நடைபெற்று வருகிறது.</p><p></p><p> </p><p>அவர் மீது பாலியல் வன்கொடுமை செய்ய சதித்திட்டம் தீட்டியது, பாலியல் ஊடுருவல் மூலம் தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டியது மற்றும் உள்நோக்கத்துடன் போதைப் பொருளை வழங்க சதித்திட்டம் தீட்டியது ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. </p><p>கென்ட்டைச் சேர்ந்த 42 வயதான டேனியல் ரேனர் மற்றும் டெர்பிஷயரைச் சேர்ந்த 59 வயதான டேவிட் கிரேவ்ஸ் ஆகிய இருவரும், பாலியல் வன்கொடுமை செய்ய சதித்திட்டம் தீட்டியது, பாலியல் ஊடுருவல் மூலம் தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டியது மற்றும் உள்நோக்கத்துடன் போதைப் பொருளை வழங்க சதித்திட்டம் தீட்டியது ஆகிய குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்; </p><p>செஷயரைச் சேர்ந்த 73 வயதான கிரஹாம் ப்ரோஹாம், பாலியல் வன்கொடுமை செய்தது, பாலியல் வன்கொடுமை செய்ய சதித்திட்டம் தீட்டியது மற்றும் பாலியல் ஊடுருவல் மூலம் தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டியது ஆகிய குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். </p><p>இந்த வழக்கில் நிர்ணயிக்கப்பட்ட 12 வார கால விசாரணையின்போது, ​​அவர்கள் மின்ஷல் ஸ்ட்ரீட் கிரவுன் நீதிமன்றத்தில் அந்த கணவருடன் இணைந்து வழக்கை எதிர்கொள்ள உள்ளனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-01T11:15:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதிகரிக்கும் வாழ்க்கைச் செலவு ; பணவீக்கத்தால் வாட்டப்படும் மக்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/rising-cost-living-people-suffering-inflation-1788261149"></link>
            <id>https://jvpnews.com/article/rising-cost-living-people-suffering-inflation-1788261149</id>
            <summary type="text">இலங்கையின் தேசிய அதிகாரபூர்வ வறுமைக் கோடு, கடந்த ஜூலை மாதத்தில் ஒருவருக்கான மாதாந்தத் தொகையாக 17,679 ரூபாயாக அதிகரித்துள்ளதாக மக்கள்தொகை கணக்கெடுப்பு ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் தேசிய அதிகாரபூர்வ வறுமைக் கோடு, கடந்த ஜூலை மாதத்தில் ஒருவருக்கான மாதாந்தத் தொகையாக 17,679 ரூபாயாக அதிகரித்துள்ளதாக மக்கள்தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.</p><p></p><p>

ஜூன் மாதத்தில் 17,592 ரூபாயாக இருந்த இந்தத் தொகை, ஜூலை மாதத்தில் 87 ரூபாய் அல்லது 0.5 சதவீதம் அதிகரித்துள்ளது.

கடந்த ஆண்டு ஜூலை மாதத்துடன் ஒப்பிடுகையில், இது 1,195 ரூபாய் அல்லது 7.2 சதவீத அதிகரிப்பாகும். </p><p>அதேவேளை, 2026 ஜனவரி மாதத்தில் 16,730 ரூபாயாக இருந்த வறுமைக் கோடு, தற்போது 949 ரூபாய் அல்லது 5.7 சதவீதம் அதிகரித்துள்ளது.

மாவட்ட ரீதியில், ஜூலை மாதத்தில் அதிகபட்ச அதிகாரபூர்வ வறுமைக் கோடு கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c33e9d92-b952-435f-9fac-3db3af09f4da/26-6a96b31edf679.webp' /></p><p>அங்கு ஒருவருக்கான மாதாந்தத் தொகை 19,067 ரூபாயாக உள்ளது.

கம்பஹா மாவட்டத்தில் 18,969 ரூபாயாகவும், நுவரெலியா மாவட்டத்தில் 18,592 ரூபாயாகவும் வறுமைக் கோடு பதிவாகியுள்ளது.
</p><p>
குறைந்தபட்ச வறுமைக் கோடு மொனராகலை மாவட்டத்தில் 16,904 ரூபாயாகப் பதிவாகியுள்ளது. கிளிநொச்சியில் 17,080 ரூபாயாகவும், ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் 17,177 ரூபாயாகவும் உள்ளது.
</p><p>
இதன்படி, அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச மாவட்ட வறுமைக் கோடுகளுக்கு இடையிலான வித்தியாசம் ஒருவருக்கு மாதம் 2,163 ரூபாயாகும்.

வறுமைக் கோட்டின் அதிகரிப்பு, நுகர்வோர் விலைகள் உயர்வுடன் தொடர்புடையதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

ஜூலை மாதத்தில் தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் 223.4 ஆக உயர்ந்ததுடன், வருடாந்த பணவீக்கமும் 7.2 சதவீதமாக அதிகரித்துள்ளதாக புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
</p><p>
எனினும், அதிகாரபூர்வ வறுமைக் கோடு என்பது ஒரு குடும்பத்தின் சராசரி மாதச் செலவையோ அல்லது சாதாரண வாழ்க்கைத் தரத்தைப் பேணுவதற்குத் தேவையான வருமானத்தையோ பிரதிபலிக்கும் அளவுகோல் அல்ல.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e1c016c2-860a-45dc-abe2-a96d66cf130c/26-6a96b31f90bef.webp' /></p><p>

மாறாக, அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு ஒருவருக்குத் தேவைப்படும் குறைந்தபட்ச செலவைப் பிரதிபலிக்கும் புள்ளிவிபர ரீதியான அளவுகோலாக இது பயன்படுத்தப்படுகிறது.
</p><p>
இதற்கிடையில், 2025ஆம் ஆண்டுக்கான குடும்ப வருமானம் மற்றும் செலவின ஆய்வின் இறுதி அறிக்கை ஆகஸ்ட் 31 முதல் ஒக்டோபர் 30ஆம் திகதிக்குள் வெளியிடப்படவுள்ளதாகவும், 2025ஆம் ஆண்டுக்கான வறுமைக் குறியீட்டு அறிக்கை ஒக்டோபர் 30 முதல் டிசம்பர் 30ஆம் திகதிக்குள் வெளியிடப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
புதிய தரவுகள் மூலம் தற்போதைய குடும்பங்களின் செலவினங்கள், நுகர்வு முறைகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் மற்றும் வாழ்க்கைச் செலவு தொடர்பான அழுத்தங்கள் குறித்து மேலும் துல்லியமான மதிப்பீட்டை மேற்கொள்ள முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-01T11:12:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[திருகோணமலையில் வறட்சியின் பிடியில் விவசாயிகள்...! கால்நடை வளர்ப்பாளர்கள் பாதிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/drought-dries-up-puliuuthu-tank-in-trincomalee-1788260740"></link>
            <id>https://ibctamil.com/article/drought-dries-up-puliuuthu-tank-in-trincomalee-1788260740</id>
            <summary type="text">திருகோணமலை மாவட்டத்திலும் தற்போது நிலவி வரும் எல் நினோ தாக்கம் மற்றும்
தொடர்ச்சியான மழையின்மை காரணமாக நிலவும் கடும் வரட்சியான காலநிலையால்
புளிஊத்து ...</summary>
            <content type="html"><![CDATA[<p>திருகோணமலை மாவட்டத்திலும் தற்போது நிலவி வரும் எல் நினோ தாக்கம் மற்றும்
தொடர்ச்சியான மழையின்மை காரணமாக நிலவும் கடும் வரட்சியான காலநிலையால்
புளிஊத்து குளத்தின் நீர்மட்டம் வெகுவாகக் குறைந்து குளம் தற்போது வறண்டு
வரும் நிலை ஏற்பட்டுள்ளது.
</p><p>
நீண்டகாலமாக போதிய மழைவீழ்ச்சி இல்லாத நிலையில், குளத்தின் நீர்மட்டம்
நாளுக்கு நாள் குறைந்து வருவதால் இப்பகுதியை நம்பி விவசாய நடவடிக்கைகளில்
ஈடுபட்டு வரும் விவசாயிகள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.</p><p>அத்துடன் குளத்து நீரை கால்நடைகளுக்காக பயன்படுத்தி வந்த கால்நடை வளர்ப்பாளர்களும் கடுமையான நீர்ப்பற்றாக்குறையை எதிர்நோக்கியுள்ளனர்.&nbsp;&nbsp;</p><p></p><h2>கடுமையான நீர்ப்பற்றாக்குறை</h2><p> குளம்
முற்றாக வறண்டு போகும் நிலை ஏற்பட்டால் விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு
நடவடிக்கைகள் மேலும் பாதிக்கப்படும் அபாயம் காணப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/478921cb-b0fa-44a8-ada4-7928539c946d/26-6a96b18609cd9.webp' /></p><p>

எனவே, நிலவும் வரட்சியான காலநிலையை கருத்தில் கொண்டு பாதிக்கப்பட்ட
மக்களுக்கும் கால்நடைகளுக்கும் தேவையான குடிநீர் மற்றும் நீர் வசதிகளை
ஏற்படுத்துவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க
வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p><p></p><p></p><p>அத்தோடு&nbsp;எல் நினோ காலநிலைத் தாக்கம் மற்றும் நிலவும் கடும் வறட்சி காரணமாக குடிநீர்
பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ள கிண்ணியா பிரதேச சபைக்குட்பட்ட சின்ன
மகமார் பகுதி மக்களுக்கு குடிநீர் விநியோகமும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
</p><p>
கிண்ணியா பிரதேச சபையின் ஏற்பாட்டில் நேற்று (31) மாலை பிரதேச சபை உறுப்பினர்
எம்.ஏ.அப்துல் ஹாதி அவர்களின் மூலமாக குடிநீர் பவுசர் மூலமாக நீர் விநியோகம்
இடம் பெற்றன.</p><p>நீண்ட காலமாக நிலவி வரும் வரட்சியால் அப்பகுதியில் உள்ள நீர்நிலைகள்
வற்றியுள்ளதுடன் குடிநீரைப் பெற்றுக்கொள்வதில் மக்கள் பெரும் சிரமங்களை
எதிர்நோக்கி வருகின்றனர்.</p><p>
</p><p></p><h2>குடிநீர் பற்றாக்குறை</h2><p>இதனையடுத்து, குடிநீர் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் குடும்பங்களுக்கு அவசர
தேவையாக குடிநீர் பவுசர்கள் மூலம் குடிநீர் விநியோகிக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9cb2f9fa-4e58-4919-963e-fa636b867358/26-6a96b186e236a.webp' /></p><p>

குறிப்பாக, குடிநீர் தட்டுப்பாட்டால் அன்றாட தேவைகளுக்குக் கூட நீரைப்
பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் இருந்த மக்களுக்கு இந்த நடவடிக்கை ஓரளவு
நிவாரணமாக அமைந்துள்ளது.
</p><p>
தொடர்ந்து வறட்சி நிலை நீடிக்கும் பட்சத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளில்
குடிநீர் விநியோகத்தை தொடர்ச்சியாக முன்னெடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள்
நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p>]]></content>
            <updated>2026-09-01T11:12:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனேமுல்ல சஞ்ஜீவவின் கொலையுடன் தொடர்புடைய பெண் சட்டத்தரணி தொடர்பில் அதிர்ச்சி தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/shocking-details-about-lawyer-arrested-1788235273"></link>
            <id>https://tamilwin.com/article/shocking-details-about-lawyer-arrested-1788235273</id>
            <summary type="text">கனேமுல்ல சஞ்ஜீவவின் கொலையுடன் தொடர்புடையதாக கைது செய்யப்பட்ட மஹர நீதவான் நீதிமன்றத்தின் முன்னாள் வழக்கறிஞரான தமரா குமரி அபேரத்ன விளக்கமறியலில் வைக்கப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனேமுல்ல சஞ்ஜீவவின் கொலையுடன் தொடர்புடையதாக கைது செய்யப்பட்ட மஹர நீதவான் நீதிமன்றத்தின் முன்னாள் வழக்கறிஞரான தமரா குமரி அபேரத்ன விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். </p><p>சந்தேகத்திற்கிடமான வழக்கறிஞர் 1970 ஆம் ஆண்டு பிறந்திருந்த போதிலும், அவர் 1972 ஆம் ஆண்டு பிறந்ததாக குறிப்பிட்டுப் போலியான தேசிய அட்டையைத் தயாரித்துள்ளார். </p><p>அதனை பயன்படுத்தி கஹவத்தை அரச வங்கி கிளையில் கணக்குகளை ஆரம்பித்து, பல சந்தர்ப்பங்களில் இலட்சக்கணக்கில் கடன்களை பெற்றுள்ளார்.</p><p> </p><h2><b>நீதிமன்றத்திடம் கோரிக்கை </b></h2><p>அத்துடன், சில கடன் தொகைகளை திருப்பிக் செலுத்தியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/97126076-28a8-415e-99f0-d09c1912775f/26-6a9653017dd26.webp' /></p><p>இதன்போது, குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் வணிகக் குற்றப் புலனாய்வுப் பிரிவின் உப பொலிஸ் பரிசோதகர் ஹேமந்த நீதிமன்றத்தில் விடயங்களை முன்வைத்து, இது தொடர்பான விசாரணைகள் இன்னும் நிறைவடையவில்லை என குறிப்பிட்டுள்ளார்.</p><p> மேலும் சந்தேகநபரின் தேசிய அடையாள அட்டை தொடர்பான விபர அறிக்கையை பெற்றுக்கொள்வதற்காக கொழும்பு கடன் தகவல் பணியகத்திற்கு உத்தரவொன்றை வழங்குமாறு நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. </p><p>முன்வைக்கப்பட்ட கருத்துக்களை கவனத்தில் கொண்ட பதில் நீதவான், விசாரணை நடவடிக்கைகளுக்காக குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு விபர அறிக்கையை வழங்குமாறு கொழும்பு கடன் தகவல் பணியகத்திற்கு உத்தரவிட்டுள்ளது.</p><p><b>YOU MAY LIKE THIS VIDEO..</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/T3tVooix_3g" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-01T11:12:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[22ஆவது திருத்தத்தால் ஜனநாயகம் சீரழிகின்றது! எதிர்க்கட்சித் தலைவர் பகிரங்கக் குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/democracy-is-being-undermined-by-22nd-amendment-1788260929"></link>
            <id>https://tamilwin.com/article/democracy-is-being-undermined-by-22nd-amendment-1788260929</id>
            <summary type="text">அரசமைப்பின் 22ஆவது திருத்தத்தின் ஊடாக ஜனநாயகம் நசுக்கப்பட்டு, நீதித்துறை
அவமதிக்கப்படுகின்றது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ
தெரிவித்தார...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரசமைப்பின் 22ஆவது திருத்தத்தின் ஊடாக ஜனநாயகம் நசுக்கப்பட்டு, நீதித்துறை
அவமதிக்கப்படுகின்றது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ
தெரிவித்தார்.</p><p>

கட்சித் தலைமையகங்களின் விருப்பத்துக்கு ஏற்ப நியமனங்கள் வழங்கும் போக்கு
உருவாகியுள்ளது என்றும், நாட்டின் பொருளாதாரம் மாத்திரமின்றி ஜனநாயகமும்
சமூகமும் சுருங்கிவிட்டது என்றும் அவர் குற்றம் சாட்டினார்.</p><p>

சிவில் அமைப்புகளுடன் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று(31.08.2026) மாலை
நடைபெற்ற சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். </p><h2>

22ஆவது திருத்தம்</h2><p>
அவர் மேலும் தெரிவிக்கையில்,
</p><p>
கட்சித் தலைமையகங்களின் விருப்பத்துக்கு ஏற்ப இளைஞர் சங்கங்கள் மற்றும்
சிவில் பாதுகாப்புக் குழுக்களை நியமிப்பது போன்ற மக்கள் உரிமைகள் மீறப்படும்
காலம் உருவாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7ddd69d4-6fc2-4deb-bbd7-4ce917a5dca7/26-6a96b2d02729f.webp' /></p><p>
</p><p>
22ஆவது திருத்தத்தின் மூலமாக இந்த நிலை மேலும் தீவிரமடைந்து நீதி வழங்கும்
செயல்முறையின் மீது செல்வாக்கு செலுத்தப்படுகின்றது.

நாட்டின் அபிவிருத்தி மற்றும் பேரிடர் காலங்களில் சிவில் அமைப்புகளும் அரச
சார்பற்ற நிறுவனங்களும் பிரதான பங்குதாரர்களாகச் செயற்படுகின்றன.
</p><p>
அரச இயந்திரத்தை விட மக்கள் அவற்றை அதிகமாக நம்புவதால், சர்வதேச தரத்துக்கு
ஏற்ப முறைப்படுத்தல் நடக்க வேண்டுமே தவிர பலவந்தமாக அவற்றை முடக்கக் கூடாது.
</p><p>
முறையை மாற்றப் போவதாகக் கூறி ஆட்சிக்கு வந்தவர்கள் இன்று விவசாயிகள்,
கடற்றொழிலாளர்கள் மற்றும் தொழில்முனைவோர்களைத் தமது அரசியல் தேவைகளுக்காகப்
பயன்படுத்துவதோடு அடக்குமுறைகளையும் கட்டவிழ்த்துவிட்டுள்ளனர்.
</p><h2>
மக்களின் பிரச்சினை</h2><p>

தரமான விதை நெல், உரங்கள், கிருமிநாசினிகள் இன்றித் தவிப்பதோடு, யானை - மனித
மோதல்களால் பாதிப்பு ஏற்படும் சூழலில் மேலதிகப் பயிர்ச் செய்கைகளை
மேற்கொள்ளவும் அரசு அனுமதி மறுத்து வருகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/de9bdcd6-7571-47df-8252-2f4183bc4eea/26-6a96b2d0ed13d.webp' /></p><p>
</p><p>
ஐக்கிய மக்கள் சக்தி எப்போதும் நீதிபதிகளைப் பாதுகாத்தது. ஷிராணி
பண்டாரநாயக்கவைப் பதவியிலிருந்து நீக்கிய தரப்பு நாங்கள் அல்லர்.

மாகாண சபைத் தேர்தலுக்காக நிதி ஒதுக்கப்பட வேண்டும் என நீதிபதிகள்
தீர்ப்பளித்தபோது அவர்களைத் தெரிவுக்குழுவுக்குக் கொண்டு செல்வதை
எதிர்க்கட்சியாக நாமே எதிர்த்தோம்.
</p><p>
தற்சமயம் உருவாகியுள்ள எல் நினோ மற்றும் லா நினோ காலநிலை நிலைமைகளுக்கு அரசால் மாத்திரம் தீர்வு காண முடியாது என்பதால், சிவில் சமூகங்கள் மற்றும் அரச
சார்பற்ற நிறுவனங்களின் பங்கும் அவசியம் என்றார்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8653154a-0da6-4d90-b315-88a3368f2bd7/26-6a96b2d1bdc47.webp' /></p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-01T11:11:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடிய தயாரிப்புகளுக்கு நுகர்வோரிடையே அதிகரிக்கும் வரவேற்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/local-demand-surges-for-canadian-made-food-1788261071"></link>
            <id>https://canadamirror.com/article/local-demand-surges-for-canadian-made-food-1788261071</id>
            <summary type="text">அமெரிக்காவுடனான வர்த்தக மோதல் நீடித்து வரும் நிலையில், கனடாவில் உள்ளூர் உணவு மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களுக்கான தேவை கணிசமாக அதிகரித்துள்ளதாக உற்பத...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவுடனான வர்த்தக மோதல் நீடித்து வரும் நிலையில், கனடாவில் உள்ளூர் உணவு மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களுக்கான தேவை கணிசமாக அதிகரித்துள்ளதாக உற்பத்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.</p><p> 
மளிகைக் கடைகளில் பொருட்களின் விலை அதிகரித்துள்ளபோதிலும், கனடா முழுவதும் உள்ள நுகர்வோர்கள் தங்கள் நாட்டில் தயாரிக்கப்படும் பொருட்களுக்கே முன்னுரிமை அளித்துத் தேடிச் சென்று வாங்கி வருகின்றனர்.</p><p> 
அமெரிக்காவின் வர்த்தக வரிகளால் தங்களது நிறுவனம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகத் ஒன்டாரியோவின் போமன்வில் பகுதியில் பாய்ச்ச்மென்ட் காகிதம் விநியோகிக்கும் 'ஏவென்கோ லிமிடெட்' நிறுவனத்தின் தலைவர் கேத்லீன் சேப்மேன் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b04795de-0631-4945-bd9c-888eac22e040/26-6a96b2d116f8a.webp' /></p><p> 
சுமார் 40 சதவீத வாடிக்கையாளர்களை அமெரிக்காவில் கொண்டுள்ள இந்நிறுவனம், பிரான்ஸிலிருந்து மூலப் பொருட்களை இறக்குமதி செய்வதால் ஆரம்பத்தில் ஐரோப்பிய பொருட்கள் மீதான அமெரிக்க வரிகளால் பாதிக்கப்பட்டது. </p><p>
தற்போது அப்பொருட்கள் கனடாவில் தயாரிக்கப்பட்டு மாற்றியமைக்கப்படுவதால், மேலும் 50 சதவீத கூடுதல் வரியை எதிர்கொண்டுள்ளது. </p><p>
எனினும், கனடிய மக்கள் நேரடியாகத் தங்கள் நிறுவனத்தைத் தொடர்புகொண்டு ஆதரவு தெரிவிப்பதுடன், ஆன்லைன் மூலமாக நேரடியாக ஆர்டர்களையும் வழங்கி வருகின்றனர்.</p><p>
இதனால், கடந்த இரண்டு ஆண்டுகளில் வெறும் 20 ஆக இருந்த நேரடி வாடிக்கையாளர் ஆர்டர்களின் எண்ணிக்கை, புதிய அமெரிக்க வரிகள் அமலுக்கு வந்த ஒரே வாரத்தில் நூற்றுக்கணக்கில் உயர்ந்துள்ளது. </p><p>
நுகர்வோர்கள் உள்நாட்டுப் பொருட்களை கொள்வனவு விரைவாக மாறிவரும் நிலையில், சில்லறை விற்பனைக் கடைகள் தங்களது விற்பனை அலமாரிகளில் கனடிய தயாரிப்புகளுக்குப் போதிய இட ஒதுக்கீட்டை வழங்குவதில் இன்னும் தாமதம் காட்டி வருவதாக சேப்மேன் சுட்டிக்காட்டியுள்ளார்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-01T11:10:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[காணமல் போன மூன்று மாணவிகள் திருகோணமலையில்; காட்டிக்கொடுத்த காணொளி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/missing-schoolgirls-found-in-trincomalee-video-led-1788248326"></link>
            <id>https://jvpnews.com/article/missing-schoolgirls-found-in-trincomalee-video-led-1788248326</id>
            <summary type="text">பலாங்கொடை, பின்னவல - எல்லராவ பிரதேசத்தைச் சேர்ந்த பிரபல பாடசாலையொன்றில் கல்வி பயிலும் 17 வயதுடைய கௌசல்யா, சர்மிளா மற்றும் சதுனி ஆகிய 3 மாணவிகளும் திரு...</summary>
            <content type="html"><![CDATA[<p>பலாங்கொடை, பின்னவல - எல்லராவ பிரதேசத்தைச் சேர்ந்த பிரபல பாடசாலையொன்றில் கல்வி பயிலும் 17 வயதுடைய கௌசல்யா, சர்மிளா மற்றும் சதுனி ஆகிய 3 மாணவிகளும் திருகோணமலைப் பகுதியில் வைத்துப் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.</p><p>
 

நேற்று (01) தனியார் வகுப்பிற்குச் சென்ற வேளையில் இவர்கள் காணாமல் போயிருந்த நிலையில், பெற்றோரினால் பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

 

இதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட தீவிர தேடுதல் மற்றும் விசாரணைகளின் பலனாகவே மாணவிகள் திருகோணமலையில் மீட்கப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5dda028f-a585-4d1e-9c93-32e9573cd41c/26-6a9681081597a.webp' /></p><p><b>முதலாம் இணைப்பு</b></p><p> </p><p>இரத்தினபுரி பலாங்கொடையில் காணாமல்போன 3 மாணவிகள் திருகோணமலையில் மீட்பு முயற்சி பேருந்து நிலையத்தில் இருந்த காட்சி வெளியாகியுள்ளது.</p><p></p><p>


பலாங்கொடை, பின்னவல - எல்லராவ பிரதேசத்தைச் சேர்ந்த 17 வயதுடைய கௌசல்யா, சர்மிளா மற்றும் சதுனி ஆகிய 3 பாடசாலை மாணவிகள் நேற்று (31.08.2026) தனியார் வகுப்புக்குச் சென்ற நிலையில் காணாமல் போயிருந்தனர்.</p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">காட்டிக்கொடுத்த காணொளி&nbsp;&nbsp;</span></p><p> 

இது குறித்து மாணவிகளின் பெற்றோர்களால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில், குறித்த மூன்று மாணவிகளும் கண்டி ஊடாக திருகோணமலை சென்றடைந்து, அங்குள்ள பேருந்து தரிப்பிடத்தில் அமர்ந்திருக்கும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.</p><p>]</p><p>
</p><p>
மாணவிகள் திருகோணமலை பொலிஸ் நிலையத்தைத் தாண்டி இறங்கி, பின்னர் முச்சக்கர வண்டியில் சென்றதாகவும், பேருந்து நிலையத்தில் அவர்கள் இருப்பதை இனங்கண்ட நபர் ஒருவர் தங்களுக்கு தகவல் வழங்கியதாகவும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். </p><p>

 இதனையடுத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-01T11:09:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாள பேரிடரில் மாயமான புலம்பெயர் யாழ்ப்பாண குடும்பம்; தவிக்கும் உறவுகள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/migrant-jaffna-family-missing-in-nepal-disaster-1788248831"></link>
            <id>https://jvpnews.com/article/migrant-jaffna-family-missing-in-nepal-disaster-1788248831</id>
            <summary type="text">&amp;nbsp; நேபாள-திபெத் எல்லைப் பகுதிகளைப் பேரழிவுக்குள்ளாக்கிய வெள்ளப்பெருக்கிற்குப் பின்னர், காணாமல் போன டஜன் கணக்கான அவுஸ்திரேலியர்களில் இலங்கை வம்சாவள...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; நேபாள-திபெத் எல்லைப் பகுதிகளைப் பேரழிவுக்குள்ளாக்கிய வெள்ளப்பெருக்கிற்குப் பின்னர், காணாமல் போன டஜன் கணக்கான அவுஸ்திரேலியர்களில் இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த தம்பதியரும், அவர்களது இரண்டு இளம் மகன்களும் அடங்குவதாக அவுஸ்திரேலிய ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. </p><p>SouthAsians &amp; Diaspora

47 வயதான சந்திரசேகரன் முரளிதரன், அவரது மனைவி 42 வயதான ஷைலஜா முரளிதரன் மற்றும் அவர்களது மகன்களான அஸ்வின் (14), ஆருஷ் (11) ஆகியோர் ‘இமயமலை பனிப்பாறை சாகசப் பயணக் குழுவுடன் (Himalayan Glacier Adventures group) சென்றுகொண்டிருந்தபோது அவர்களுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/059ce3ae-bd99-4f58-9687-95a3d53691c5/26-6a968300dd4b8.webp' /></p><h2>ஆன்மீக சுற்றுலா சென்ற குடும்பம்...</h2><p>
</p><p>
அனர்த்தம் ஏற்பட்ட நாளன்று (புதன்கிழமை) காலை உணவு அருந்திய சிறிது நேரத்திலேயே அந்தக்குடும்பத்துடனான தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

இக்குடும்பத்தினர் சிட்னியின் வடமேற்குப் பகுதியில் வசித்து வந்தனர்.</p><p></p><p>
</p><p>
இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய ஊடகங்களின் தகவல்களின்படி, சந்திரசேகரன் பூர்வீகமாக யாழ்ப்பாணத்தின் கோப்பாயைச் சேர்ந்தவர்.

அவரும் அவரது மனைவியும் அவுஸ்திரேலியாவிற்கு இடம்பெயர்ந்த முதல் தலைமுறை இலங்கையர்கள் ஆவர். 

இவர்களது இரு மகன்களும் அவுஸ்திரேலியத் தமிழர் சமூகத்தில் பிறந்தவர்கள்.</p><p></p><p>

ஆகஸ்ட் 26 அன்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டபோது, ​​அந்தக்குடும்பத்தினர் கைலாச மலைப் பகுதிக்குத் தீர்த்த யாத்திரை மேற்கொண்டிருந்தனர்.

பேரிடர் நிகழ்ந்த நாளன்று காலையில்தான் அக்குடும்பத்தினருடன் கடைசியாகத் தொடர்பு கொள்ள முடிந்ததாக அவர்களது உறவினர்கள் தெரிவித்தனர். </p><p>

பாதிக்கப்பட்ட பகுதியின் பெரும் பகுதிகளில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் சாலைகள், மின்சார விநியோகம் மற்றும் தகவல் தொடர்புகளை அழித்ததால், அந்த அழைப்பிற்குப் பிறகு அவர்களது குடும்பத்தினரால் அவர்களைத் தொடர்பு கொள்ள முடியவில்லை.

முரளிதரன் குடும்பத்தினர், 15 அவுஸ்திரேலியர்கள் அடங்கிய ஒரு சுற்றுலாக் குழுவுடன் பயணம் செய்து கொண்டிருந்தனர்.</p><p></p><p> </p><p>
இந்தப் பேரழிவு ஏற்பட்டபோது, ​​அக்குழுவினர் நேபாள-சீன எல்லைக்கு அருகிலுள்ள ரசுவாகதிக்கு அருகே இருந்ததாக நம்பப்படுகிறது.

வெள்ளத்தைத் தொடர்ந்து 43 அவுஸ்திரேலியர்கள் இன்னும் காணாமல் போயுள்ளதாக அவுஸ்திரேலிய அதிகாரிகள் திங்களன்று தெரிவித்தனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-01T11:07:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[14 ஆண்டுகளுக்கு முன் கொல்லப்பட்ட பிரித்தானியக் குடும்பம்: வழக்கில் முக்கிய திருப்பம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/pistol-found-14-years-after-brit-family-shot-dead-1788260760"></link>
            <id>https://news.lankasri.com/article/pistol-found-14-years-after-brit-family-shot-dead-1788260760</id>
            <summary type="text">Breakthrough in murders mystery as pistol found 14 years after Brit family shot dead: 14 ஆண்டுகளுக்கு முன் பிரித்தானியக் குடும்பம் ஒன்று சுட்டுக்கொல்ல...</summary>
            <content type="html"><![CDATA[<p>Breakthrough in murders mystery as pistol found 14 years after Brit family shot dead: 14 ஆண்டுகளுக்கு முன் பிரித்தானியக் குடும்பம் ஒன்று சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் துப்பாக்கி ஒன்று கிடைத்துள்ளதைத் தொடர்ந்து வழக்கில் முக்கிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.</p><p>[<img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/86579e78-fb30-4100-a7b9-34f2dbe4cb29/26-6a96b19af2e3a.webp' />]</p><p>பிரான்சில் நடந்த பயங்கர கொலை சம்பவம் ஒன்று தொடர்பில், ஒரு முக்கிய திருப்பம் ஏற்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
</p><h3>
துப்பாக்கியால் சுட்ட மர்ம நபர்
</h3><p>
2012ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 5ஆம் திகதி, பிரான்சுக்கு சுற்றுலா சென்றிருந்த ஒரு பிரித்தானியக் குடும்பம் சென்ற காரை நோக்கி, மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார்.</p><p>

அவர் சுட்டதில், காரிலிருந்த Saad al-Hilli (50), அவரது மனைவி Iqbal (47) மற்றும் தாயார் Suhaila Al-Allaf (74) ஆகியோர் உயிரிழந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/86579e78-fb30-4100-a7b9-34f2dbe4cb29/26-6a96b19af2e3a.webp' /></p><p>தம்பதியரின் ஒரு மகளான Zainab (7) காயத்துடன் உயிர் பிழைக்க, மறு நாள் தடயவியல் நிபுணர்கள் இறந்தவர்களின் உடல்களை அகற்றும்போது, தாய் Iqbalஇன் கால்களுக்கிடையில் அவரது இரண்டாவது குழந்தையான Zeena (4) பயந்து நடுங்கிக்கொண்டு ஒளிந்திருப்பது தெரியவந்தது.&nbsp;</p><p></p><p>
இந்த துப்பாக்கிச்சூட்டில், அவ்வழியே சைக்கிளில் வந்துகொண்டிருந்த பிரான்ஸ் நாட்டவரான Sylvain Mollier (45) என்பவரும் கொல்லப்பட்டிருந்தார். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e47178fb-b4f3-4dab-8afb-daf1eb03c00f/26-6a96b19baa27d.webp' /></p><h3>வழக்கில் முக்கிய திருப்பம்
</h3><p>
இந்நிலையில், சம்பவம் நடந்த இடத்துக்கு அருகிலுள்ள ஏரி ஒன்றின் அடியிலிருந்து துப்பாக்கி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
</p><p>
விடயம் என்னவென்றால், அது ஒரு சுவிஸ் ராணுவ துப்பாக்கி. அத்துடன், 1935ஆம் ஆண்டு, அதே மொடலில் 940 துப்பாக்கிகள் மட்டுமே தயாரிக்கப்பட்டன.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6e5ba4aa-663d-4640-bdc4-22f155bfc54b/26-6a96b19a4bb4f.webp' /></p><p>மேலும், தாக்குதல்தாரி, ஒரு முறை தன் இலக்கை துப்பாக்கியால் சுட்டுவிட்டு, அவர் உயிரிழந்ததை உறுதி செய்யும் வகையில், இரண்டாவது முறை அதே நபரை சுடும் ஒரு கைதேர்ந்த, துப்பாக்கி சுடும் பயிற்சி பெற்ற நபர்.
</p><p>
அத்துடன், இந்த வகை துப்பாக்கிகளில் ஒரு சீரியல் நம்பர் இருக்கும். ஆகவே, அது எங்கு தயாரிக்கப்பட்டது என்பது முதல், அதை யார் பயன்படுத்தினார் என்பது வரை கண்டுபிடிக்கமுடியும்.
</p><p>
எல்லாவற்றிற்கும் மேல், தண்ணீருக்குள் எத்தனை ஆண்டுகள் கிடந்திருந்தாலும், அதிலுள்ள DNAவைக் கண்டுபிடிக்கும் வழிமுறைகள் தற்போது உள்ளதால், முன்பு கிடைத்த ஆதாரங்களை, தற்போது கிடைத்துள்ள ஆதாரத்துடன் இணைத்து குற்றவாளியைக் கண்டுபிடிப்பதை எளிதாக்கக்கூடும் என்பதே நல்ல செய்தி.
</p><p>
ஆக, அந்த துப்பாக்கி தடயவியல் ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளது. தடயவியல் நிபுணர்கள், Saad al-Hilli குடும்பத்தினரைக் கொல்ல குற்றவாளி பயன்படுத்திய துப்பாக்கி இதுதானா என்பதைக் கண்டறியும் ஆய்வில் ஈடுபட்டுவருகின்றனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-01T11:06:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Erimalai</name>
            </author>
            <title type="text"><![CDATA[வடமராட்சி கிழக்கு- மணக்காடு சவுக்கந்தோப்பில் தீப்பரவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/fire-breaks-out-in-manakkadu-vadamarachchi-1788258578"></link>
            <id>https://tamilwin.com/article/fire-breaks-out-in-manakkadu-vadamarachchi-1788258578</id>
            <summary type="text">யாழ்ப்பாணம்- வடமராட்சி கிழக்கு மணக்காடு பகுதியில் அமைந்துள்ள
சவுக்கந்தோப்பில் இன்றும் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.ஒரு சில நாட்களுக்கு முன்னர் ஏற்பட்ட தீப...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம்- வடமராட்சி கிழக்கு மணக்காடு பகுதியில் அமைந்துள்ள
சவுக்கந்தோப்பில் இன்றும் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.</p><p>ஒரு சில நாட்களுக்கு முன்னர் ஏற்பட்ட தீப்பரம்பல் விமான படையை உலங்கு
வானூர்த்தி மூலம் நீர் பாய்ச்சப்பட்டு கட்டுப்பாட்டுக்குள்
கொண்டுவரப்பட்டிருந்த நிலையில் இன்றைய தினமும் மீண்டும் தீ பரம்பல்
ஏற்பட்டிருக்கிறது.</p><h2>தீப்பரவல்</h2><p> தீயணைப்பதற்காக பருத்தித்துறை பிரதேச சபையின் நீர் தாங்கி
உழவு இயந்திரம் கொண்டுவரப்பட்டிருக்கின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a2538301-96fd-4ee4-b182-3b45d89a6098/26-6a96aef87b1f2.webp' /></p><p> யாழ். மாவட்டத்தின் அனர்த்த
முகாமைத்துவ பிரிவு அதிகாரி ஒருவரும் இங்கே சமூகமளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-01T11:06:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்க இராணுவ செயலாளர் இராஜினாமா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/us-army-secretary-resigns-1788259556"></link>
            <id>https://canadamirror.com/article/us-army-secretary-resigns-1788259556</id>
            <summary type="text">&amp;nbsp; அமெரிக்க இராணுவ செயலாளர் டான் டிரிஸ்கோல்(Dan Driscoll), தனது பதவியிலிருந்து விலகுவதற்கான இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிடம் சமர்ப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; அமெரிக்க இராணுவ செயலாளர் டான் டிரிஸ்கோல்(Dan Driscoll), தனது பதவியிலிருந்து விலகுவதற்கான இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிடம் சமர்ப்பித்துள்ளார்.
</p><p>


இராணுவத்தின் தற்போதைய நிலைமை தொடர்பாக ஜனாதிபதி ட்ரம்புடன் கலந்துரையாடிய பின்னரே டிரிஸ்கோல் (Dan Driscoll)&nbsp; தனது இராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்துள்ளதாக அமெரிக்க இராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a6b987a8-044f-4f00-9877-a1bbcc210ce7/26-6a96ace633f90.webp' /></p><p>



டிரிஸ்கோலுக்கும் (Dan Driscoll) அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத்துக்கும் இடையில், இராணுவத்தை நவீனமயமாக்குதல் மற்றும் இராணுவத் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்கள் தொடர்பாக பல மாதங்களாக கருத்து வேறுபாடுகள் நிலவி வந்ததாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன.</p><p>



இராணுவத்தின் தயார் நிலை மற்றும் நவீனமயமாக்கல் நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாக டிரிஸ்கோல் தனது இராஜினாமாவில் கவலை தெரிவித்ததாகவும் தகவல்&nbsp; வெளியாகியுள்ளன.
</p><p>


டிரிஸ்கோல்&nbsp;(Dan Driscoll) கடந்த 2025 பெப்ரவரி முதல் அமெரிக்க இராணுவ செயலாளராகப் பதவி வகித்து வந்தமை குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-09-01T11:05:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Erimalai</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ். மணற்காடு சவுக்கங்காட்டில் மீண்டும் தீப்பரவல்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/fire-breaks-out-again-in-the-manrkadu-forest-1788259802"></link>
            <id>https://ibctamil.com/article/fire-breaks-out-again-in-the-manrkadu-forest-1788259802</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு மணற்காடு பகுதியில் அமைந்துள்ள
சவுக்கந் தோப்பில் மீண்டும் தீப்பரம்பல் ஏற்பட்டுள்ளது.ஒரு சில நாட்களுக்கு முன்னர் ஏற்பட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு மணற்காடு பகுதியில் அமைந்துள்ள
சவுக்கந் தோப்பில் மீண்டும் தீப்பரம்பல் ஏற்பட்டுள்ளது.</p><p>ஒரு சில நாட்களுக்கு முன்னர் ஏற்பட்ட தீப்பரம்பல் விமான படையை உலங்கு
வானூர்தி மூலம் நீர் பாய்ச்சப்பட்டு கட்டுப்பாட்டுக்குள்
கொண்டுவரப்பட்டிருந்தது.</p><p>இந்த நிலையில் இன்றைய தினமும் மீண்டும் தீ பரம்பல்
ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p></p><h2>தீயைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கை</h2><p>குறித்த தீயைக் கட்டுப்படுத்துவதற்காக பருத்தித்துறை பிரதேச சபையின் நீர் தாங்கி
உழவு இயந்திரம் கொண்டுவரப்பட்டிருக்கின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/029c2e1d-4bb8-4ade-a912-7c9a72d806cd/26-6a96b1b129359.webp' /></p><p>அத்துடன் யாழ் மாவட்டத்தின் அனர்த்த
முகாமைத்துவ பிரிவு அதிகாரி ஒருவரும் சம்பவ இடத்திற்கு சமூகமளித்து இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-01T11:05:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[காவிரி தாயை மலர் தூவி வணங்கி மேட்டூர் அணையை திறந்த முதல்வர் விஜய்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/chief-minister-vijay-opened-the-mettur-dam-open-1788260691"></link>
            <id>https://jvpnews.com/article/chief-minister-vijay-opened-the-mettur-dam-open-1788260691</id>
            <summary type="text">&amp;nbsp;தமிழ் நாட்டில் காவிரி டெல்டா மாவட்டங்களில் பாசனத்திற்காகத் தண்ணீர் திறந்துவிடும் வகையில் தமிழ்நாட்டின் உயிர்நாடியான மேட்டூர் அணை வான் கதவுகளை தம...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;தமிழ் நாட்டில் காவிரி டெல்டா மாவட்டங்களில் பாசனத்திற்காகத் தண்ணீர் திறந்துவிடும் வகையில் தமிழ்நாட்டின் உயிர்நாடியான மேட்டூர் அணை வான் கதவுகளை <a href="https://jvpnews.com/article/chief-minister-vijay-travels-to-the-uk-1788239496" target="_blank">தமிழக முதல்வர் ஜோசப் விஜய்</a> இன்று (01) திறந்து வைத்தார்.
</p><p>

முதலமைச்சர் ஜோசப் விஜய், என். ஆனந்த் உள்ளிட்ட தனது அமைச்சரவை சகாக்கள் முன்னிலையில், வான் கதவுகளை திறப்பதற்கான பொத்தானை இயக்கி, வெளியேறிய காவிரி நீரின் மீது மலர்களைத் தூவி நீர்திறப்பைத் தொடங்கி வைத்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b7592244-0f5b-40ac-8eef-48d645e75fbb/26-6a96b1549b0d4.webp' /></p><h2>காவிரி நீரின் மீது மலர்களைத் தூவி வழிபட்ட முதல்வர் விஜய்</h2><p>
</p><p>
டெல்டா பகுதி விவசாயிகளின் வாழ்வாதாரமாகத் திகழும் வரலாற்றுச் சிறப்புமிக்க மேட்டூர் அணையை, முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பின்னர் விஜய் திறந்து வைப்பது இதுவே முதல் முறையாகும்.</p><p> 

 

விவசாயிகள் மற்றும் விவசாயத்தின் அடையாளமாகக் கருதப்படும் பச்சை நிறத் துண்டை அணிந்திருந்த அவர், விவசாயிகளுடன் கலந்துரையாடினார்.</p><p>

 


நீர்த்தேக்கப் பகுதிக்குச் செல்லும் வழியில், சாலையின் இருபுறமும் திரண்டிருந்த மக்களை நோக்கி உற்சாகத்துடன் கையசைத்து அவர் தனது பயணத்தை மேற்கொண்ட நிலையில் பல இடங்களில் மக்கள் அவர் மீது மலர்களைத் தூவி வரவேற்றனர்.</p>]]></content>
            <updated>2026-09-01T11:01:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Farook Sihan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாடசாலை மாணவர்களிடம் அத்துமீறல்...! பொதுச்சுகாதார பரிசோதகர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/pho-remanded-over-school-abuse-claims-in-kalmunai-1788257284"></link>
            <id>https://ibctamil.com/article/pho-remanded-over-school-abuse-claims-in-kalmunai-1788257284</id>
            <summary type="text">கல்முனையில் பாடசாலை மாணவிகளிடம் தவறான முறையில் நடந்துகொண்ட குற்றச்சாட்டில்&amp;nbsp;பொதுச்சுகாதார பரிசோதகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.சம்பவத்தில் 51 ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கல்முனையில் பாடசாலை மாணவிகளிடம் தவறான முறையில் நடந்துகொண்ட குற்றச்சாட்டில்&nbsp;பொதுச்சுகாதார பரிசோதகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>சம்பவத்தில் 51 வயதுடைய நபர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.&nbsp;&nbsp;</p><p>கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட பிரபல பாடசாலையொன்றில் உள்ள மாணவகளிடம் சுகாதாரப் பரிசோதனை என்ற போர்வையில் தவறான முறையில் நடந்துகொண்ட குற்றச்சாட்டிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p></p><h2>அதிகாரி வாக்குமூலம்</h2><p>சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், சந்தேகநபரான அதிகாரி வாக்குமூலம் வழங்குவதற்காக நேற்று (31-08-2026) கல்முனைத் தலைமையக காவல் நிலையத்திற்கு வருகை தந்தபோதே காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8ed2b7d8-600d-4712-9939-37b9e64bae88/26-6a96abcfbb120.webp' /></p><p>
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கல்முனை நீதிவான் நீதிமன்ற நீதிவான் கே.எல்.எம்.
சாஜித் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டார். </p><p>இதன்போது இரு தரப்பு
வாதப்பிரதிவாதங்களையும் செவிமடுத்த நீதிவான், சந்தேகநபரை எதிர்வரும்
செப்டம்பர் மாதம் 03 ஆம் திகதி வரை 3 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு
கட்டளையிட்டார்.</p><p>
</p><p></p><h2>சுகாதாரப் பரிசோதனை</h2><p>குறித்த பாடசாலையில் கடந்த 18 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மாணவர்களுக்கான
வழக்கமான சுகாதாரப் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது. </p><p>இதன்போது பரிசோதனையில்
ஈடுபட்ட அதிகாரி தமக்கு உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் தொல்லை
கொடுத்ததாகப் பாதிக்கப்பட்ட மாணவர்கள் தமது பெற்றோரிடம் முறையிட்டுள்ளனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/99c0247b-c200-4582-9c95-26a7642db8a8/26-6a96abcf10b2e.webp' /></p><p>இதனைத் தொடர்ந்து, பெற்றோர் ஒன்றிணைந்து கையொப்பமிட்ட முறைப்பாட்டுக்
கடிதத்தைப் பாடசாலை அதிபர் ஊடாகக் கல்முனைத் தலைமையகப் காவல் நிலையத்தில்
ஒப்படைத்திருந்தனர். </p><p>அம்மாணவர்களின் முறைப்பாட்டின் அடிப்படையில் காவல்துறையினர் மேற்கொண்ட தீவிர விசாரணைகளையடுத்தே இந்த கைது நடவடிக்கை
இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p>]]></content>
            <updated>2026-09-01T10:54:25+00:00</updated>
        </entry>
    </feed>
