<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-09-12T00:37:50+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[உக்ரைன் போரில் உயிரிழந்த ரஷ்ய வீரர்களின் எண்ணிக்கை: பிரித்தானிய உளவுத்துறை தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/half-million-russian-soldiers-killed-in-ukraine-1789149788"></link>
            <id>https://news.lankasri.com/article/half-million-russian-soldiers-killed-in-ukraine-1789149788</id>
            <summary type="text">Half Million Russian Soldiers Killed in Ukraine War: உக்ரைன் ரஷ்யா போரில் இதுவரை அரை மில்லியனுக்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டு இருப்பதாக பிரித்தானிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>Half Million Russian Soldiers Killed in Ukraine War: உக்ரைன் ரஷ்யா போரில் இதுவரை அரை மில்லியனுக்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டு இருப்பதாக பிரித்தானிய உளவுத்துறை தகவல் தெரிவித்துள்ளது.</p><h2> அரை மில்லியன் ரஷ்ய வீரர்கள் உயிரிழப்பு</h2><p>
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினால் உக்ரைனுக்கு எதிராக தொடங்கப்பட்ட போரில் இதுவரை அரை மில்லியன்(5 லட்சம்) ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டு இருப்பதாக பிரித்தானிய உளவுத்துறை தகவல் தெரிவித்துள்ளது.</p><p> ரஷ்ய வீரர்களின் உயிரிழப்பும், போரினால் ரஷ்ய பொருளாதாரத்தில் அதிகரித்து வரும் அழுத்தமும் உக்ரைனை ரஷ்யாவின் கட்டுப்பாட்டிற்கு கீழ் கொண்டு வரும் ரஷ்ய அதிபர் புடினின் திட்டத்தில் எந்தவொரு மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/62e416d0-e912-4833-bf79-344e4a907ba5/26-6aa4425dcf2d9.webp' /></p><p> பிரித்தானிய ஆயுதப் படைகளின் தலைவர் ஏர் சீப் மார்ஷல் சர் ரிச்சர்ட் நைட்டன் வழங்கிய தகவலில், கடந்த 2022ம் ஆண்டு பிப்ரவரியில் தொடங்கிய போரில் காயமடைந்தவர்கள் உட்பட கிட்டத்தட்ட 1.5 மில்லியன் ரஷ்ய வீரர்கள் பாதிப்படைந்து இருப்பதாக தெரிவித்துள்ளார்.</p><p> இதில் மிகப்பெரிய இழப்பு 2023ம் ஆண்டு ஜனவரியில் ஏற்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார். அத்துடன் இந்த போர் நடவடிக்கையில், உக்ரைனின் 2% நிலப்பரப்பை மட்டுமே ரஷ்யா கைப்பற்றி இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2> நீண்ட கால போராக தொடரும் உக்ரைன் போர்</h2><p>ரஷ்ய வீரர்கள் கிட்டத்தட்ட 1660 நாட்களாக உக்ரைனுடன் சண்டையிட்டு வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a4f10c8b-3b2d-47bb-a2fc-67d1bf63bf12/26-6aa4425e828ed.webp' /></p><p> இதனால் முதல் மற்றும் இரண்டாம் உலக போரில் ரஷ்ய வீரர்கள் சண்டையிட்ட நாட்களை விட உக்ரைன் போரில் ரஷ்ய வீரர்கள் அதிக நாட்கள் சண்டையிட்டு வருகின்றனர் என்பது உறுதியாகியுள்ளது.</p><p> இந்த போரினால் ரஷ்யாவின் பணவீக்கம் புதிய உச்சத்தை தொட்டுள்ளது. உள்நாட்டு நுகர்வோரின் தேவை பலவீனமாகியுள்ளது.</p><p> நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் படுவேகமாக சரிந்துள்ளது. இந்த போர் நடவடிக்கை தொடர்ந்தால் அது நாட்டு மக்களின் எதிர்காலத்திற்கு பெரும் சுமையாக மாறிவிடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-12T00:36:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[போக்குவரத்து காவல் ரோபோக்கள் முதல் இயந்திர ரோந்து நாய் வரை: அசத்தும் சீன கண்காட்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/china-s-public-security-technology-expo-1789173303"></link>
            <id>https://news.lankasri.com/article/china-s-public-security-technology-expo-1789173303</id>
            <summary type="text">China&#039;s Public security technology expo : சீனாவில் பொது பாதுகாப்புத் துறையில் ரோபோக்கள் பயன்படுத்துவது தொடர்பான கண்காட்சி தொடங்கியுள்ளது. பொது பாதுகாப...</summary>
            <content type="html"><![CDATA[<p>China's Public security technology expo : சீனாவில் பொது பாதுகாப்புத் துறையில் ரோபோக்கள் பயன்படுத்துவது தொடர்பான கண்காட்சி தொடங்கியுள்ளது.</p><h2> பொது பாதுகாப்புத் துறையில் ரோபோக்கள்</h2><p>

கீழக்கு சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் உள்ள லியானியுங்காங்(Lianyungang) நகரில் சிறப்பு கண்காட்சி ஒன்று தொடங்கியுள்ளது.</p><p>சீனாவின் பொது பாதுகாப்புத் துறையில் அதாவது காவல், ரோந்து மற்றும் வெடிகுண்டு அகற்றுதல் துறையில் ரோபோக்களை பயன்படுத்துவது தொடர்பான கண்காட்சி தொடங்கியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7e66b477-6e1e-4648-8901-2f5b30c44e71/26-6aa49e39a2fdb.webp' /></p><p> இந்த கண்காட்சியில் ரோந்து நாய் ரோபோக்கள், போக்குவரத்து காவலர் ரோபோக்கள் மற்றும் வெடிக்குண்டுகளை அகற்றும் சிறப்பு தடுப்பு ரோபோக்கள் ஆகியவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.</p><p>காவல்துறை மற்றும் பொதுப் பாதுகாப்புத் துறையின் இந்த கண்காட்சியில் கிட்டத்தட்ட 100 க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் ரோபோ தொழில்நுட்பங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.</p><p> இந்த கண்காட்சியில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட மனித ரோபோக்கள் பார்வையாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aec9eb58-1758-46d5-81ed-f0cdb39cc3f3/26-6aa49e3a59340.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள். &nbsp;&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-12T00:35:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவின் புதிய சாதனை ; நயகரா ஆற்றில் உருவாக்கப்பட்ட இயற்கை வாழ்விடங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/natural-habitats-along-canada-s-niagara-river-1789152185"></link>
            <id>https://canadamirror.com/article/natural-habitats-along-canada-s-niagara-river-1789152185</id>
            <summary type="text">கனடாவில் நயகரா ஆற்றின் கரையோர ஈரநிலங்களில் 75 சதவீதத்திற்கும் அதிகமானவை அழிவடைந்ததைத் தொடர்ந்து, மீள்சுழற்சி செய்யப்பட்ட கிறிஸ்துமஸ் மரங்கள் மற்றும் ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவில் நயகரா ஆற்றின் கரையோர ஈரநிலங்களில் 75 சதவீதத்திற்கும் அதிகமானவை அழிவடைந்ததைத் தொடர்ந்து, மீள்சுழற்சி செய்யப்பட்ட கிறிஸ்துமஸ் மரங்கள் மற்றும் மரக் கழிவுகளை ஆற்றுப் படுகையில் நிலைநிறுத்தி சுற்றுச்சூழல் அமைப்பை மீட்டெடுக்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.</p><p>

இந்தத் திட்டத்தின் மூலம், நயகரா பூங்காக்கள் நிறுவனம் மற்றும் சுற்றுச்சூழல் துறைகள் இணைந்து இதுவரை 1.64 கிலோமீற்றர் பரப்பளவில் நீர்வாழ் உயிரினங்களுக்கான இயற்கை வாழ்விடங்களை வெற்றிகரமாக உருவாக்கியுள்ளன.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c0d2c242-4191-4e7d-a71b-88963ae7e6ab/26-6aa44bbb1b5b5.webp' /></p><p>மேலும், 2025 கோடை காலத்தில் பிளாக் கிரீக் மற்றும் பொயர்ஸ் கிரீக் நதி முகத்துவாரப் பகுதிகளில் மரக் கட்டமைப்புகள் மற்றும் பாறைகளைப் பயன்படுத்தி மேலதிகமாக 240 மீற்றர் ஈரநிலப் பகுதி புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது.
</p><p>
இந்த ஆக்கபூர்வமான நடவடிக்கையினால் அந்த பகுதிகளில் மீன்கள் மற்றும் கரையோரப் பறவைகளின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளதுடன், நீரின் தரமும் மேம்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p>]]></content>
            <updated>2026-09-12T00:34:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆண்மைக்குறைபாடு சிகிச்சை ; 24 வயது இளைஞனின் வயிற்றுக்குள் கருப்பை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/uterus-found-inside-abdomen-of-a-24-year-old-man-1789162430"></link>
            <id>https://jvpnews.com/article/uterus-found-inside-abdomen-of-a-24-year-old-man-1789162430</id>
            <summary type="text">இந்தியா டெல்லியில் குழந்தையின்மை பிரச்சினைக்காக மருத்துவமனைக்கு சென்ற 24 வயது இளைஞரின் வயிற்றுப் பகுதியில் நன்கு வளர்ச்சியடைந்த கருப்பை மற்றும் பலோப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியா டெல்லியில் குழந்தையின்மை பிரச்சினைக்காக மருத்துவமனைக்கு சென்ற 24 வயது இளைஞரின் வயிற்றுப் பகுதியில் நன்கு வளர்ச்சியடைந்த கருப்பை மற்றும் பலோப்பியன் குழாய்கள் இருப்பது மருத்துவ பரிசோதனையில் கண்டறியப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><p>
</p><p></p><p>டெல்லி ராஜோரி கார்டன் பகுதியில் உள்ள மருத்துவமனை ஒன்றுக்கு, திருமணமாகி பல ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லாததால் சிகிச்சை பெறுவதற்காக 24 வயது இளைஞர் ஒருவர் சென்றுள்ளார்.
</p><p>
வெளிப்புறமாக அவருக்கு ஆணுக்குரிய உடல் அமைப்புகள் இயல்பாகவே இருந்த நிலையில், மருத்துவர்கள் மேற்கொண்ட பரிசோதனையில் அவரது விந்தணுக்களின் எண்ணிக்கை பூஜ்யமாக இருப்பது தெரியவந்தது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/017eb9d8-3690-4c1b-ac72-ee644af969fb/26-6aa473c087110.webp' /></p><p>இதையடுத்து மேற்கொள்ளப்பட்ட மேலதிக ஸ்கேன் பரிசோதனையில், அவரது வயிற்றுப் பகுதியில் பெண்களுக்கு காணப்படும் கருப்பை மற்றும் பலோப்பியன் குழாய்கள் இருப்பது கண்டறியப்பட்டது.</p><p>

மேலும், விதைப்பையில் இருக்க வேண்டிய இரண்டு விரைகளும் விதைப்பையில் இல்லாமல் வயிற்றுப் பகுதியிலேயே இருந்ததும் மருத்துவர்களின் கவனத்திற்கு வந்துள்ளது.</p><p>

இந்த அரிய மருத்துவ நிலை, மருத்துவ ரீதியாக 'பெர்சிஸ்டண்ட் முல்லேரியன் டக்ட் சிண்ட்ரோம்' (Persistent Müllerian Duct Syndrome) என அழைக்கப்படுவதாக மருத்துவக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
</p><p>
வயிற்றுக்குள் இருக்கும் விரைகளுக்கு எதிர்காலத்தில் புற்றுநோய் உள்ளிட்ட சிக்கல்கள் ஏற்படும் அபாயம் இருக்கக்கூடும் என்பதால், உரிய மருத்துவ கண்காணிப்பு மற்றும் சிகிச்சை அவசியம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
</p><p>
இதனைத் தொடர்ந்து, குறித்த இளைஞருக்கு குறைந்த அளவு காயம் ஏற்படும் லேப்ராஸ்கோப்பிக் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு, வயிற்றுப் பகுதியில் இருந்த கருப்பை மற்றும் பிற தொடர்புடைய அமைப்புகள் தொடர்பில் மருத்துவ நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இந்த சம்பவம் மருத்துவ ரீதியாக மிகவும் அரிய ஒன்றாக கருதப்படுவதுடன், குழந்தையின்மை அல்லது இனப்பெருக்கம் தொடர்பான பிரச்சினைகள் காணப்படும் சந்தர்ப்பங்களில் உரிய மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்வதன் முக்கியத்துவத்தையும் எடுத்துக்காட்டுவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-12T00:34:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீண்டகாலமாக நடந்த கொலை வழக்கு! 11 வருடங்களுக்கு பின்னர் நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/2015-murder-case-death-sentence-in-sri-lanka-1789170751"></link>
            <id>https://tamilwin.com/article/2015-murder-case-death-sentence-in-sri-lanka-1789170751</id>
            <summary type="text">பிட்டிகல, மிரிஸ்வத்த பகுதியில் 2015ஆம் ஆண்டு இடம்பெற்ற மனிதக் கொலைச் சம்பவம் தொடர்பில் குற்றவாளியாகக் காணப்பட்ட ஒருவருக்கு பலபிட்டிய மேல் நீதிமன்றம் ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிட்டிகல, மிரிஸ்வத்த பகுதியில் 2015ஆம் ஆண்டு இடம்பெற்ற மனிதக் கொலைச் சம்பவம் தொடர்பில் குற்றவாளியாகக் காணப்பட்ட ஒருவருக்கு பலபிட்டிய மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.
</p><p>
கண்டி பகுதியைச் சேர்ந்த விந்துவ ராஜ் சந்திர மோகன் என்பவருக்கே இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
</p><h2>மரண தண்டனை</h2><p>
2015ஆம் ஆண்டு ஏப்ரல் 14ஆம் திகதி, மிரிஸ்வத்த பகுதியில் மாணிக்கம் மோகன் என்பவரைத் தடியால் தாக்கி பலத்த காயங்களை ஏற்படுத்தி கொலை செய்ததாக பிரதிவாதி மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/96e34bdc-d8ad-4cdf-8d71-833ac17b6590/26-6aa4953ac4194.webp' /></p><p>

வடக்கு பிட்டிகல பகுதியைச் சேர்ந்த சோமசுந்தரம் கிருஷ்ணகுமார் என்பவர் பிட்டிகல பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில், பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.
</p><p>
இந்த வழக்கு CRI 2264/2019 என்ற வழக்கு இலக்கத்தின் கீழ் பலபிட்டிய மேல் நீதிமன்றத்தில் நீண்டகாலமாக விசாரணை செய்யப்பட்டு வந்த நிலையில், அதன் தீர்ப்பு நேற்று (10) அறிவிக்கப்பட்டது.
</p><p>
இதன்போது, தண்டனைச் சட்டக்கோவையின் 32ஆம் பிரிவுடன் வாசிக்கப்படும் 296ஆம் பிரிவின் கீழ் பிரதிவாதி கொலைக் குற்றத்திற்கு குற்றவாளியாகக் காணப்பட்டதையடுத்து, அவருக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-12T00:30:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[தரம் 6 மாணவர்களின் புத்தகப்பை எடை குறைக்கப்படும் – பிரதமர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/weight-grade-6-students-schoolbags-will-be-reduced-1789164807"></link>
            <id>https://jvpnews.com/article/weight-grade-6-students-schoolbags-will-be-reduced-1789164807</id>
            <summary type="text">இலங்கையில் அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய கல்வி சீர்திருத்தங்களின் கீழ், பாடசாலை மாணவர்கள் சுமக்கும் புத்தகப்பைகளின் எடை கணிசமாகக் குறைக்கப்படும் என பி...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய கல்வி சீர்திருத்தங்களின் கீழ், பாடசாலை மாணவர்கள் சுமக்கும் புத்தகப்பைகளின் எடை கணிசமாகக் குறைக்கப்படும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p></p><p>நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த பிரதமர், புதிய சீர்திருத்தங்களின் கீழ் அறிமுகப்படுத்தப்படும் செயற்பாட்டு அடிப்படையிலான கற்றல் முறையின் மூலம் மாணவர்கள் வீட்டுக்கும் பாடசாலைக்கும் இடையில் எடுத்துச் செல்ல வேண்டிய புத்தகங்களின் எண்ணிக்கை குறைக்கப்படும் எனக் குறிப்பிட்டார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bdba1b5a-3562-439c-abd3-bcf7af1647f2/26-6aa47d098e16e.webp' /></p><p>வகுப்பறைச் செயற்பாடுகளுக்குப் பயன்படுத்தப்படும் புத்தகங்கள் பாடசாலையிலேயே வைக்கப்படும். இதனால், மாணவர்கள் அவற்றை தினமும் வீட்டுக்கு எடுத்துச் செல்ல வேண்டிய அவசியம் இருக்காது.
</p><p>
பாடசாலை தவணை முடிவடைந்த பின்னர், தங்களது கற்றல் செயற்பாடுகளை நிறைவு செய்த நிலையில், அந்தப் புத்தகங்களை மாணவர்கள் வீட்டுக்கு எடுத்துச் செல்ல முடியும் என பிரதமர் தெரிவித்தார்.
</p><p>
மேலும், 2027ஆம் ஆண்டு முதல் தரம் 6 மாணவர்களுக்காக தொகுதி அடிப்படையிலான கற்றல் முறை அறிமுகப்படுத்தப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.
</p><p>
இதன் கீழ், தற்போதுள்ள பெரிய அளவிலான பாடப்புத்தகங்களுக்குப் பதிலாக, ஒவ்வொரு பாடத்திற்கும் குறிப்பிட்ட தவணைக்குத் தேவையான பாடத்தொகுதிகள் மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ளன.
</p><p>
இந்த மாற்றங்களின் மூலம் மாணவர்கள் தினசரி பாடசாலைக்கு எடுத்துச் செல்லும் புத்தகப்பைகளின் எடை கணிசமாகக் குறையும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-12T00:30:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[காகிதமற்ற சுங்க ஆவண செயலாக்க முறைமை குறித்து IMFக்கு தெளிவுபடுத்தல்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/paperless-customs-document-processing-system-imf-1789166688"></link>
            <id>https://jvpnews.com/article/paperless-customs-document-processing-system-imf-1789166688</id>
            <summary type="text">இலங்கைச் சுங்கத் திணைக்களத்தினால் ஒக்டோபர் மாதம் 01ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள &quot;காகிதமற்ற சுங்க ஆவண செயலாக்க முறைமை&quot; குறித்து சர்வதேச நாண...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கைச் சுங்கத் திணைக்களத்தினால் ஒக்டோபர் மாதம் 01ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள "காகிதமற்ற சுங்க ஆவண செயலாக்க முறைமை" குறித்து சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பிரதிநிதிகளுக்கு தெளிவுபடுத்தும் விசேட கலந்துரையாடல் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.</p><p> </p><p></p><p>ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில், ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நேற்று (11) பிற்பகல் இந்த விசேட கலந்துரையாடல் நடைபெற்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/34e01e34-753a-4095-971a-b7de485e1347/26-6aa48461ec2f8.webp' /></p><p> </p><p>

இலங்கைச் சுங்கத் திணைக்களத்தால் நடைமுறைப்படுத்தப்படவுள்ள காகிதமற்ற சுங்க ஆவண செயலாக்க முறைமை, அது தொடர்பான விழிப்புணர்வு திட்டங்கள் மற்றும் இலங்கைச் சுங்கத்தின் தொழில்நுட்ப தயார்நிலை குறித்து சுங்கத் திணைக்களம் மற்றும் வருமான நிர்வாக சீர்திருத்த அலகு என்பனவற்றினால் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கு இங்கு விரிவான விளக்கமளிக்கப்பட்டது. </p><p>

இலங்கைச் சுங்கத் திணைக்களம் மற்றும் ஜனாதிபதி செயலகத்தின் வருமான நிர்வாக சீர்திருத்த மற்றும் நவீனமயமாக்கல் பிரிவு இணைந்து இந்தச் செயற்பாட்டிற்காக வழங்கும் பங்களிப்பைச் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் பாராட்டியதுடன், இத்திட்டத்தை வெற்றிகரமாக முன்னோக்கி கொண்டு செல்வதற்குத் தேவையான ஒத்துழைப்பை வழங்கவும் உடன்பாடு தெரிவித்துள்ளனர். </p><p>

ஜனாதிபதி அலுவலகத்தின் வருமான நிர்வாக சீர்திருத்த மற்றும் நவீனமயமாக்கல் பிரிவின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் சீவலி அருக்கொட, இலங்கை சுங்க பணிப்பாளர் நாயகம் விமல் லியனகம மற்றும் வருமான நிர்வாக சீர்திருத்த மற்றும் நவீனமயமாக்கல் பிரிவு மற்றும் இலங்கை சுங்கத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் பலரும், சர்வதேச நாணய நிதியத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி டினார் பிரிஹார்தினி (Dinar Prihardini) மற்றும் கிளாக்கோவ் அகேபன்னிட்சாவோர்ன் (Klakow Akepannidtaworn) ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-12T00:00:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[போரை காட்டி கோட்டாபய ராஜபக்ச செய்த மிக் டீல்! உண்மைகளை அம்பலப்படுத்தியவர்கள் மரணம்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/gotabaya-rajapaksa-arrives-at-fcid-1789168115"></link>
            <id>https://tamilwin.com/article/gotabaya-rajapaksa-arrives-at-fcid-1789168115</id>
            <summary type="text">மிக்-27 போர் விமானங்களைக் கொள்முதல் செய்ததில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பில், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் குற்றப் புலனாய்...</summary>
            <content type="html"><![CDATA[<p>மிக்-27 போர் விமானங்களைக் கொள்முதல் செய்ததில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பில், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் குற்றப் புலனாய்வு பிரிவினரால் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
</p><p>
2006ஆம் ஆண்டு இடம்பெற்ற இந்த கொள்முதல் நடவடிக்கையின் போது, கோட்டாபய ராஜபக்ச பாதுகாப்புச் செயலாளராகவும், மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாகவும் பதவி வகித்திருந்தனர்.</p><p> 

இந்த கொள்முதல் நடவடிக்கையால் அரசுக்கு சுமார் 14 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி இழப்பு ஏற்பட்டதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
</p><p>
இந்த விவகாரத்தில் ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் உதயங்க வீரதுங்கவின் பங்கு குறித்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. </p><p>

கொள்முதல் நடவடிக்கையில் முறைகேடான கொடுப்பனவுகள் மற்றும் கமிஷன் தொடர்பான குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டுள்ளன.</p><p>

இதேவேளை, மிக்-27 கொள்முதல் தொடர்பான தகவல்களை வெளிக்கொண்டு வந்திருந்த ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க , பின்னர் படுகொலை செய்யப்பட்ட சம்பவமும் இந்த விவகாரத்துடன் தொடர்புபடுத்தி பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.</p><p>

மிக்-27 கொள்முதல் விவகாரம் தொடர்பாக முன்னாள் விமானப்படை தளபதிகள் மற்றும் அதிகாரிகளிடமும் விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளன.
</p><p>
அரசாங்கத்தின் ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த முன்னாள் ஆட்சியாளர்கள் தொடர்பான பல்வேறு விவகாரங்கள் குறித்த விசாரணைகளும் தற்போது தீவிரமடைந்துள்ளன.</p><p>

இந்த விடயங்கள் தொடர்பில் பேசுகின்றது நியூஸ் இன்சைட் நிகழ்ச்சி...</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/U28cBjQXzNE" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-11T23:57:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[மக்களின் குரலாக அனுராதபுரத்தில் பிரம்மாண்ட பேரணி! அரசுக்கு எதிராக களமிறங்கும் பொதுஜன பெரமுன]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/slpp-to-hold-mass-rally-in-anuradhapura-1789169577"></link>
            <id>https://tamilwin.com/article/slpp-to-hold-mass-rally-in-anuradhapura-1789169577</id>
            <summary type="text">ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசு அதிகாரத்துக்கு வந்து இரண்டு
ஆண்டுகள் நிறைவடையும் நிலையில், மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றத்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசு அதிகாரத்துக்கு வந்து இரண்டு
ஆண்டுகள் நிறைவடையும் நிலையில், மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றத்
தவறியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், பாதிக்கப்பட்ட மக்களின் குரலை
வெளிப்படுத்தும் வகையிலும் அனுராதபுரத்தில் பிரம்மாண்டமான
எதிர்ப்புப் பேரணி நடத்தப்படுகின்றது என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்
பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
</p><p>
கொழும்பிலுள்ள கட்சித் தலைமையகத்தில் நேற்று(11) வெள்ளிக்கிழமை நடைபெற்ற
ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர்
மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.</p><h2>பெரும் பேரணி</h2><p>
</p><p>
அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது,</p><p>
"அரசு வெளிநாடுகளிலிருந்து அரிசியை இறக்குமதி செய்வதால், உள்ளூர் விவசாயிகள்
தாங்கள் அறுவடை செய்த நெல்லை விற்றுக்கொள்ள முடியாமலும், அவசியமான உரத்தைப்
பெற்றுக்கொள்ள முடியாமலும் பெரும் நெருக்கடிக்குள்ளாகியுள்ளனர். </p><p>அதேபோன்று,
தொடரும் எரிபொருள் விலை உயர்வின் காரணமாக கடற்றொழிலாளர்கள் தங்களது அன்றாட
வாழ்வாதாரத்தை முன்னெடுக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f1e0d150-d09c-45a7-933e-20d7b2e92a86/26-6aa49176a4143.webp' /></p><p>
</p><p>
பட்டதாரிகள் அனைவருக்கும் வேலைவாய்ப்பு வழங்குவதாக வாக்குறுதியளித்த அரசு,
தற்போது அவர்களை முற்றாகப் புறக்கணித்துள்ளது. நாட்டில் வேலையின்மை, வறுமை
மற்றும் வாழ்க்கைச் செலவு என்பன பாரியளவில் அதிகரித்துள்ளன. </p><p>அரச ஊழியர்களுக்கு
வாழ்க்கைச் செலவுக்கு ஏற்ப சம்பளம் வழங்குவதாகக் கூறிய அரசு, தற்போது அவர்கள்
வாழ முடியாத சூழலையே உருவாக்கியுள்ளது.
</p><p>
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆட்சிக் காலத்திலேயே நாட்டின் பிரதான பாதாள உலகக்
குழுக்கள் ஒடுக்கப்பட்டு நாட்டைவிட்டுத் தப்பியோடினர். ஆனால், தற்போதைய
ஆட்சியில் தினமும் துப்பாக்கிச்சூடுகளும் குண்டுவெடிப்புகளும் இடம்பெற்று
வருகின்றன.</p><h2>ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க</h2><p> வரலாற்றில் இல்லாத வகையில் தற்போது கொள்கலன்களில் போதைப்பொருள்கள்
நாட்டுக்குள் கைப்பற்றப்படுகின்றன. அண்மையில் கொண்டுவரப்பட்ட 323
கொள்கலன்களில் போதைப்பொருள்களும் ஆயுதங்களுமே இருந்தனவா என்ற நியாயமான
சந்தேகம் மக்களுக்கு எழுந்துள்ளது.
</p><p>
துறைமுகங்கள், விமான நிலையங்கள், அதிவேக நெடுஞ்சாலைகள் போன்ற நீண்டகால
பொருளாதாரப் பலன்களைத் தரும் திட்டங்களே உண்மையான அபிவிருத்தித்
திட்டங்களாகும். வீதியில் மெட்ரோ பஸ்களை இறக்குவது மக்களுக்கு வசதிகளை
வழங்கும் ஒரு சேவையே தவிர, அது அபிவிருத்தித் திட்டம் அல்ல.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d058e251-9c13-4384-867e-58ffc1373f05/26-6aa4917797423.webp' /></p><p> அபிவிருத்தி
பற்றிய அறிவோ திறமையோ இல்லாததால், பஸ்களை வீதியில் விட்டுவிட்டு அதையே
அபிவிருத்தி எனக் கூறி அரசு மக்களை ஏமாற்றுகின்றது.</p><p>

அரசு தனது திறமையின்மையை மறைப்பதற்காக, சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்தித்
தங்களுக்கு எதிராகச் செயற்படும் அரசியல் தலைவர்களைச் சிறையில் அடைக்கும்
அடக்குமுறையையே செய்கின்றது.
</p><p>
ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அபிவிருத்திகளைச்
செய்யாமல் நாடு முழுவதும் பேரணிகளை நடத்தி வருகின்றார். அனுராதபுரத்தில்
நடத்தப்படும் எமது பேரணிக்கு எதிர்க்கட்சியிலுள்ள பெரும்பாலான அரசியல்
கட்சிகள் தங்களது ஆதரவைத் தெரிவித்துள்ளன என குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-11T23:44:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[செவ்வாயால் டபுள் ஜாக்பாட் ; உங்க ராசியும் இதுல இருக்கா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sevvayal-double-jackpot-your-zodiac-sign-on-this-1789167518"></link>
            <id>https://jvpnews.com/article/sevvayal-double-jackpot-your-zodiac-sign-on-this-1789167518</id>
            <summary type="text">ஜோதிட சாஸ்திரத்தில் செவ்வாய் கிரகங்களின் தளபதி என்று அறியப்படுகிறார். செவ்வாய் தைரியம் மற்றும் ஆற்றலின் அதிபதியாகக் கருதப்படுகிறது. செவ்வாயின் இயக்கத்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜோதிட சாஸ்திரத்தில் செவ்வாய் கிரகங்களின் தளபதி என்று அறியப்படுகிறார். செவ்வாய் தைரியம் மற்றும் ஆற்றலின் அதிபதியாகக் கருதப்படுகிறது. செவ்வாயின் இயக்கத்தில் ஏற்படும் மாற்றங்கள் ஜோதிடத்தில் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. செவ்வாயின் ராசி மாற்றம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் மாற்றத்தை ஏற்படுத்தும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fd6d7aef-b855-4f8d-a341-b88790e792c1/26-6aa487a12e803.webp' /></p><p> சில ராசிக்காரர்கள் இந்த கிரக மாற்றத்தால் நேர்மறையான விளைவுகளை அனுபவிப்பார்கள், சில ராசிக்காரர்கள் எதிர்மறையான விளைவுகளை அனுபவிப்பார்கள். இந்த பதிவில் செவ்வாய் கடக ராசிக்குள் நுழைவதால் அதிர்ஷ்டமடையப் போகும் ராசிகள் என்னென்னெ என்று தெரிந்து கொள்ளலாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/12008d73-ad87-4c8d-87ac-546325b15f6f/26-6aa487a06b0cd.webp' /></p><h4>ரிஷபம்</h4><p>
செவ்வாய் கிரகம் ரிஷப ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமான பலன்களை அளிக்கும் கிரகமாக கருதப்படுகிறது. இந்த மாற்றத்தால் அவர்கள் அனைத்து வகையான நிதி நன்மைகளையும் அடையப்போகிறார்கள். பல மகிழ்ச்சியான மாற்றங்கள் அவர்கள் வாழ்க்கையில் ஏற்படப்போகிறது. நிலுவையில் உள்ள அனைத்துப் பணிகளையும் முடிக்க இதுவே சிறந்த நேரம்.

வேலையில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. மேலும், ஒரு புதிய வேலை உங்களைத் தேடி வருகிறது. நிதி நிலைமை அவர்கள் முற்றிலும் எதிர்பாராத அளவிற்கு அதிகரிக்கும். புதிய சொத்து மற்றும் வாகனம் வாங்க இந்த காலகட்டம் சாதகமாக இருக்கும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும். நீண்ட கால ஆசைகளை நிறைவேற்ற இது மிகவும் பொருத்தமான நேரமாகும். அவர்களின் கடின உழைப்பிற்கான பலனை இப்போது அறுவடை செய்யலாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e59737d5-deb5-4fe7-a241-596c57dfcaa4/26-6aa487a1e1f1c.webp' /></p><h4>துலாம்
</h4><p>துலாம் ராசிக்காரர்களுக்கு செவ்வாய் கிரகம் இரண்டு மற்றும் ஏழாம் வீடுகளுக்கு அதிபதியாக உள்ளார். தற்போது செவ்வாய் அவர்களின் பத்தாவது வீட்டிற்குள் நுழையப்போகிறார். இதனால் அவர்கள் வணிகம் மற்றும் வேலையில் பெரிய வெற்றியை எதிர்பார்க்கலாம். வேலையில் இருப்பவர்களுக்கு பணியிடத்தில் சகஊழியர்களின் ஆதரவு முழுமையாக கிடைக்கும். இந்த காலகட்டத்தில் பதவி உயர்வுகள் கிடைக்கும். இது நிதி நிலையை அதிகரிக்கும் மற்றும் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்களைக் கொண்டுவரும்.

புதிய முயற்சிகள் சிறப்பான பலன்களைக் கொடுக்கும், மேலும் வணிகர்கள் புதிய ஆர்டர்களைப் பெறலாம். கடக ராசிக்காரர்களுக்கு பல்வேறு ஒப்பந்தங்கள் மூலம் பண ஆதாயத்திற்கான வாய்ப்புகள் உள்ளன. அவர்களின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும், இதனால் பல்வேறு பணிகளில் தடையின்றி பங்கேற்க முடியும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ba36a56c-fec4-45d6-bcc5-b873e5d6c1b5/26-6aa487a295a95.webp' /></p><h4>கும்பம்</h4><p>
கும்ப ராசிக்காரர்களுக்கு செவ்வாய் கிரகம் மூன்றாம் மற்றும் பத்தாம் வீடுகளுக்கு அதிபதியாக இருந்து, தற்போது ஆறாம் வீட்டில் சஞ்சரிக்கிறார். ஆறாம் வீட்டில் செவ்வாயின் சஞ்சாரம் சாதகமான பலன்களைத் தருவதாகக் கருதப்படுகிறது. இந்த காலகட்டத்தில் அவர்கள் வேலை மற்றும் வணிகத்தில் சிறப்பான முன்னேற்றத்தை அனுபவிப்பார்கள். செவ்வாயின் ராசி மாற்றத்தால் சமூகத்தில் அவர்களின் மரியாதை அதிகரிக்கும். பணியிடத்திலிருந்து குடும்பம் வரை அனைத்து விஷயங்களிலும் சிறப்பான பலன்களை பெறுவார்கள்.</p><p>அதே நேரத்தில் வேலையில்லாதவர்களுக்கு சரியான வேலைகள் கிடைக்கும், இந்த காலகட்டத்தில் வணிகர்கள் நல்ல லாபம் சம்பாதிக்கலாம். கும்ப ராசிக்காரர்கள் தங்கள் கடின உழைப்பால் வேலையில் நல்ல நற்பெயரைப் பெறலாம், மேலும் பல்வேறு திட்டங்களை முடிப்பதில் அதிர்ஷ்டம் அவர்களுக்கு சாதகமாக இருக்கும். மொத்தத்தில் இது அவர்களுக்கு பொற்காலமாக இருக்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b9bd97cd-6290-4c70-a1f0-bd4b1dcda1c4/26-6aa487a34e53f.webp' /></p>]]></content>
            <updated>2026-09-11T23:00:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு நுழைந்த இலங்கை மகளிர் அணி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sl-w-vs-pak-w-sri-lanka-enters-second-final-1789165207"></link>
            <id>https://tamilwin.com/article/sl-w-vs-pak-w-sri-lanka-enters-second-final-1789165207</id>
            <summary type="text">மகளிர் ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் பாகிஸ்தான் மகளிர் அணியை வீழ்த்திய இலங்கை மகளிர் அணி, இறுதிப் போட்டிக்கு தகுதி ...</summary>
            <content type="html"><![CDATA[<p>மகளிர் ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் பாகிஸ்தான் மகளிர் அணியை வீழ்த்திய இலங்கை மகளிர் அணி, இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
</p><p>
டுபாயில்&nbsp; நேற்று(11) நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி, முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது.</p><h2>வெற்றி இலக்கு</h2><p>
இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் மகளிர் அணி, 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகளை இழந்து 130 ஓட்டங்களைப் பெற்றது.

பாகிஸ்தான் அணியின் தலைவி ஃபாத்திமா சனா&nbsp; ஆட்டமிழக்காமல் 47 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e05daf22-9e9e-4f15-b6b2-26c95429ad14/26-6aa480cf282f0.webp' /></p><p>

இலங்கை அணியின் பந்துவீச்சில் சமரி அத்தபத்து மற்றும் சாமுடி பிரபோதா&nbsp; ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.</p><p>

இதனையடுத்து, 131 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை மகளிர் அணி, 18.4 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை எட்டியது.
</p><h2>இறுதிப் போட்டி</h2><p>
இலங்கை அணியின் வெற்றிக்கு ஹர்ஷிதா சமரவிக்ரம&nbsp; 36 ஓட்டங்களையும், கவிஷா தில்ஹாரி 33 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/463adf97-da31-4998-b6a4-6e33cc15f168/26-6aa480cfd6587.webp' /></p><p>
</p><p>
பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சில் ஃபாத்திமா சனா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
</p><p>
இதன்மூலம் மகளிர் ஆசியக் கிண்ண தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கை மகளிர் அணியும் இந்திய மகளிர் அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-11T22:29:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் குறித்து பொலிஸார் வெளியிட்டுள்ள சந்தேகம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/six-grenade-attacks-reported-1789144772"></link>
            <id>https://tamilwin.com/article/six-grenade-attacks-reported-1789144772</id>
            <summary type="text">தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதங்களை பாதாள உலகக் குழு உறுப்பினர்கள் பயன்படுத்துகின்றார்களா என்ற சந்தேகம் எழுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இலங்கையில...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதங்களை பாதாள உலகக் குழு உறுப்பினர்கள் பயன்படுத்துகின்றார்களா என்ற சந்தேகம் எழுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>இலங்கையில் இந்த ஆண்டில் இதுவரை ஒழுங்கமைக்கப்பட்ட பாதாள உலகக் குழுக்களினால் 06 கைக்குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>இதில் 3 தாக்குதல்கள் கல்கிஸ்ஸ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியிலேயே பதிவாகியுள்ளன. 
யுத்த காலத்தில் விடுதலைப் புலிகளிடமிருந்து பெறப்பட்ட கைக்குண்டுகளே இவ்வாறான தாக்குதல்களுக்குப் பயன்படுத்தப்படுவதாக பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளதாக தெற்கு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.</p><h2>குற்றவியல் பின்னணி</h2><p>
</p><p>இதன்காரணமாக, பாதாள உலகக் குற்றங்களைக் கட்டுப்படுத்த எதிர்காலத்தில் முப்படைகளின் உதவியைப் பெறுவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்று (11) அதிகாலை 3.00 மணியளவில், தெஹிவளை, சிறிசங்கபோ மாவத்தையில் உள்ள வீடு ஒன்றின் கதவை அடையாளம் தெரியாத நபர் தட்டியுள்ளார். </p><p>வீட்டார் கதவைத் திறந்ததும் அந்நபர் கைக்குண்டை வீட்டிற்குள் வீசிவிட்டுத் தப்பிச் சென்றுள்ளார்.
வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த 17 வயதுடைய கசுன் ரஷ்மிக மற்றும் அவரது 11 வயதுடைய சகோதரரான துமிந்த கீஹான் ஆகிய இரு சிறுவர்களும் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/165ea34e-213d-4db0-905c-cfee39a99058/26-6aa42ec60c3a0.webp' /></p><p>
</p><p>இச்சிறுவர்களின் தந்தையான 55 வயதுடைய நளின் துசாந்த பெரேரா என்பவரின் காலில் காயமேற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். </p><p>இவர் மீது எவ்வித குற்றவியல் பின்னணியோ குற்றச்சாட்டுகளோ இல்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>அருகில் உள்ள வீடொன்றில் வசிக்கும் உறவினர்கள் சிலர் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வருவதாகவும், அவர்கள் வெளிநாட்டில் தலைமறைவாக இருக்கும் "படவிட்ட அசாங்க" என்ற பாதாள உலகக் கும்பல் தலைவனின் நெருங்கிய சகாக்கள் என்றும் தகவல்கள் கிடைத்துள்ளன.</p><h2>விசாரணைகள்</h2><p> 
நேற்று முன்தினம் களுபோவில பகுதியில் உள்ள வீடு ஒன்றின் மீது படவிட்ட அசாங்கவின் சகாக்களால் நடத்தப்பட்ட கைக்குண்டுத் தாக்குதலுக்குப் பழிவாங்கும் வகையிலேயே இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.</p><p> 
எனினும், தாக்குதல் நடத்தியவர் இலக்கை மாற்றி, தவறுதலாக இச்சிறுவர்களின் வீட்டின் மீது குண்டை வீசியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e0203a34-7e85-4344-ba5d-cda7eee17aa3/26-6aa4348c25f6a.webp' /></p><p> </p><p>
இச்சம்பவம் தொடர்பில் நீதவான் விசாரணை நடத்தப்பட்டுள்ளதுடன், மூன்று பொலிஸ் குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
</p><p> மேலும், தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் முச்சக்கர வண்டி பஹல போபே பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-11T22:08:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[பயம் இல்லாவிட்டால் மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துங்கள்! அரசிடம் சஜித் வலியுறுத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/fear-provincial-council-elections-immediately-1789141132"></link>
            <id>https://tamilwin.com/article/fear-provincial-council-elections-immediately-1789141132</id>
            <summary type="text">மாகாண சபைத் தேர்தல் முறைமை தொடர்பான குழுவின் கால அவகாசத்தை நீடிப்பது
தேர்தலை நடத்துவதைத் தடுக்கும் செயலாகும் எனவும், இது மக்களின் அடிப்படை
உரிமைகளைப...</summary>
            <content type="html"><![CDATA[<p>மாகாண சபைத் தேர்தல் முறைமை தொடர்பான குழுவின் கால அவகாசத்தை நீடிப்பது
தேர்தலை நடத்துவதைத் தடுக்கும் செயலாகும் எனவும், இது மக்களின் அடிப்படை
உரிமைகளைப் பறிப்பதுடன் நாட்டின் இறைமையை மீறும் செயலாகும் எனவும்
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.</p><p>

நாடாளுமன்றத்தில் இன்று(11) வெள்ளிக்கிழமை உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு
குறிப்பிட்டார்.</p><h2>&nbsp;சஜித் வலியுறுத்து</h2><p>

அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது,</p><p>
"மாகாண சபைத் தேர்தலை நடத்துவதைத் தடுப்பதற்காகவே மாகாண சபைகள் தேர்தல் முறைமை
தொடர்பான குழு அமைக்கப்பட்டுள்ளது. எனவே, இந்தக் குழுவின் கால அவகாசத்தை
எந்தக் காரணம் கொண்டும் நீடிக்க வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கின்றேன். </p><p>கால
அவகாசத்தை நீடிப்பது என்பது மக்களுக்கு மாகாண சபை தேர்தலை நடத்தும் வாய்ப்பை
முற்றாக இழக்கச் செய்வதாகும்.

இவ்வேளையில் நிகழ வேண்டியது இந்தக் குழுவின் கால அவகாசத்தை நீட்டிப்பதல்ல,
மாறாக மாகாண சபை தேர்தலை விரைவாக நடத்துவதே ஆகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d70e99ca-fdb8-4ba5-861f-baed402e0a62/26-6aa423feee81a.webp' /></p><p> </p><p>அரசுக்கு மக்கள் மத்தியில்
பயம் இல்லாவிட்டால், உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு
கேட்டுக்கொள்கிறேன். புதிய முறைமை தாமதமானால், குறைந்தபட்சம் பழைய முறையின்
கீழாவது மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துங்கள்.</p><p>

மாகாண சபை தேர்தலைத் தொடர்ந்து ஒத்திவைப்பதற்காக இந்தக் குழுவின் கால
அவகாசத்தை நீடிப்பது மக்களின் அடிப்படை உரிமைகளைப் பறிப்பதாக அமைந்துள்ளது</p><p>
நாட்டு மக்களின் இறைமையை இது கடுமையாக மீறுவதால், ஜனநாயகத்துக்கு எதிரான இந்த
நடவடிக்கையை அரசு உடனடியாக நிறுத்த வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.</p><p>you may like this</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/LVliSlgYppE" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-11T22:07:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரசாங்கத்தின் இரண்டு ஆண்டு நிறைவு ; பொலன்னறுவையில் இன்று ஜனாதிபதி பங்கேற்கும் பேரணி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/rally-attended-by-the-president-polonnaruwa-today-1789164090"></link>
            <id>https://jvpnews.com/article/rally-attended-by-the-president-polonnaruwa-today-1789164090</id>
            <summary type="text">பொலன்னறுவையில் இன்று (12) நடைபெறவுள்ள தேசிய மக்கள் சக்தியின் விவசாயிகள் பேரணியில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க கலந்துகொண்டு உரையாற்றவுள்ளார்.

&quot;மக...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொலன்னறுவையில் இன்று (12) நடைபெறவுள்ள தேசிய மக்கள் சக்தியின் விவசாயிகள் பேரணியில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க கலந்துகொண்டு உரையாற்றவுள்ளார்.</p><p></p><p>

"மக்களின் ஆட்சி - ஈராண்டு பலம், அனைவருக்கும் முன்னேற்றம்" என்ற தொனிப்பொருளின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்தப் பேரணி, இன்று மாலை 4 மணிக்குத் ஆரம்பமாகவுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0e3421b8-b7db-4c83-818f-300a5dfa3e89/26-6aa47a3c0ba5c.webp' /></p><p>தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் இரண்டு ஆண்டுகளை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தொடர் பேரணிகளில் இந்தப் பேரணியும் ஒன்றாகும்.
</p><p>
விவசாயிகள் மற்றும் விவசாயத் துறையை மையமாகக் கொண்டு பொலன்னறுவை பேரணி நடத்தப்படவுள்ளதாக இதற்காக வெளியிடப்பட்டுள்ள விளம்பரப்படுத்தல் மூலங்கள் தெரிவிக்கின்றன.
</p><p>
கடந்த இரண்டு ஆண்டுகளில் அரசாங்கம் எட்டிய சாதனைகள் மற்றும் எதிர்வரும் ஆண்டுகளுக்கான திட்டங்கள் குறித்து, ஜனாதிபதி அண்மைய நாட்களில் நடைபெற்ற பேரணிகளில் உரையாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-11T22:01:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிழக்கு ஆளுநர் அநுர அரசின் ஆளுநரா ஹிஸ்புல்லாவின் ஆளுநரா..! எழும் சந்தேகம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/eastern-governor-anura-is-government-s-governor-1789140014"></link>
            <id>https://tamilwin.com/article/eastern-governor-anura-is-government-s-governor-1789140014</id>
            <summary type="text">கிழக்கு மாகாணத்தின் தற்போதைய ஆளுநராக பணியாற்றி வரும் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகர, தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு சார்பாக செயற்படவில்லை என பிரதே...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிழக்கு மாகாணத்தின் தற்போதைய ஆளுநராக பணியாற்றி வரும் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகர, தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு சார்பாக செயற்படவில்லை என பிரதேச சபை உறுப்பினர் கி. வதனகுமார் குற்றம் சாட்டியுள்ளார்.
</p><p>
லங்காசிறி ஊடகம் வழங்கும் “ஊடறுப்பு” நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
அவர் மேலும் தெரிவிக்கையில்,
</p><p>
கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்திப் பணிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக்கொடுப்பதில் ஆளுநர் மற்றும் தவிசாளர்கள் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதில்லை.</p><p>

அவர்களின் செயற்பாடுகளை அவதானிக்கும்போது, அநுர குமார திசாநாயக்கவினால் நியமிக்கப்பட்ட ஆளுநரின் நடவடிக்கைகளைப் போன்று அல்லாமல், வேறு சில தலைவர்களின் வழிநடத்தலின் கீழ் செயற்படுகின்றார்களா என்ற சந்தேகம் எழுகின்றது.
</p><p>
அதேபோன்று, மேலதிக கல்வி நடவடிக்கைகளைக்கூட ஆசிரியர்கள் சுதந்திரமாக முன்னெடுக்க முடியாத நிலை தற்போது கிழக்கு மாகாணத்தில் காணப்படுகின்றது.
</p><p>
இவ்வாறு, கிழக்கு மாகாணத்தில் இடம்பெறும் பல்வேறு பிரச்சினைகள் மற்றும் மோசடிக் குற்றச்சாட்டுகளை உங்கள் பார்வைக்கு கொண்டு வருகின்றது ஊடறுப்பு நிகழ்ச்சி,&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/4eZuwiThywg" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-11T21:59:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[அடுத்த காலாண்டில் மின் கட்டணம் குறித்து வலுசக்தி அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/electricity-tariff-information-energy-minister-1789163581"></link>
            <id>https://jvpnews.com/article/electricity-tariff-information-energy-minister-1789163581</id>
            <summary type="text">எதிர்வரும் காலாண்டில் மின் கட்டணத்தை உயர்த்துவதற்கு எவ்வித கோரிக்கையும் முன்வைக்கப்பட மாட்டாது என வலுசக்தி அமைச்சர் கலாநிதி அநுர கருணாநிலக்க நாடாளுமன்...</summary>
            <content type="html"><![CDATA[<p>எதிர்வரும் காலாண்டில் மின் கட்டணத்தை உயர்த்துவதற்கு எவ்வித கோரிக்கையும் முன்வைக்கப்பட மாட்டாது என வலுசக்தி அமைச்சர் கலாநிதி அநுர கருணாநிலக்க நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.</p><p></p><p>

அத்துடன், எல் நினோ காலநிலை தாக்கம் காரணமாக நாட்டின் மின்சார உற்பத்தியில் பாரிய பாதிப்புகள் ஏற்படாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். </p><p>நாடாளுமன்றத்தில் அமைச்சுசார் அறிவித்தல்களின் கீழ் விசேட உரையொன்றை நிகழ்த்திய போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7c33ca61-408a-41ac-a817-b5b0d21cda23/26-6aa4783ebd5ce.webp' /></p><p>அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டின் மக்களுக்கு தடையற்ற மின்சார விநியோகத்தை வழங்குவதற்கு அரசாங்கத்தால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.
</p><p>
2026 ஆம் ஆண்டில் எல் நினோ நிலைமை காரணமாக மின்சார உற்பத்தியில் பாரிய பாதிப்புகள் ஏற்படாது என எதிர்பார்க்கப்படுவதாகவும், எதிர்பார்த்ததை விட அதிகளவு மழைவீழ்ச்சி கிடைத்துள்ளதால் மின்சார உற்பத்திச் செலவை ஒரு குறிப்பிட்ட அளவுக்கு கட்டுப்படுத்த முடிந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
</p><p>
இதன் காரணமாக, எதிர்வரும் காலாண்டில் மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கான எந்தவொரு கோரிக்கையும் விடுக்கப்பட மாட்டாது என அமைச்சர் உறுதியளித்தார்.
</p><p>
மேலும், அடுத்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களுக்குத் தேவையான மின்சார உற்பத்தி மற்றும் விநியோகத்தை தடையின்றி முன்னெடுக்க வலுசக்தி அமைச்சு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
</p><p>
எல் நினோ நிலைமை தற்போது தீவிரமடைந்துள்ளதாகக் குறிப்பிட்ட அமைச்சர், கடந்த ஜூலை மாதம் முதல் இலங்கையில் அதன் தாக்கம் தீவிரமாகக் காணப்படுவதாகவும், இந்த நிலை எதிர்வரும் பெப்ரவரி மாதம் வரை நீடிக்கக்கூடும் எனவும் தெரிவித்தார்.
</p><p>
அதேநேரம், ஒக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் வழக்கத்தை விட அதிக மழைவீழ்ச்சி கிடைக்கக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
</p><p>
ஓகஸ்ட் மாதம் வறட்சியான காலநிலை நிலவும் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும், எதிர்பார்த்ததை விட அதிக மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.</p><p>

தற்போது நாட்டின் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் 58.7 வீதமாக இருப்பதாகவும், இது 2025 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் சிறந்த நிலை எனவும் அவர் தெரிவித்தார்.</p><p>

எல் நினோ தாக்கத்தால் மின்சார உற்பத்தியில் பாரிய பாதிப்புகள் ஏற்படாது என்றும், எதிர்மறையான தாக்கங்களை விட நேர்மறையான விளைவுகளே அதிகமாக இருக்கும் என எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
</p><p>
எனினும், 2027 ஆம் ஆண்டு ஜனவரி, பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் சில தாக்கங்கள் ஏற்படக்கூடும் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-11T21:53:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[சாலையில் எதிர் எதிரே மோதிக்கொண்ட 3 வாகனங்கள்: ரஷ்யாவில் 12 பேர் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/russia-s-arkhangelsk-multi-vehicle-crash-12-dead-1789159928"></link>
            <id>https://news.lankasri.com/article/russia-s-arkhangelsk-multi-vehicle-crash-12-dead-1789159928</id>
            <summary type="text">Russia’s Arkhangelsk Multi Vehicle Crash 12 Dead: ரஷ்யாவில் நடந்த கோர சாலை விபத்தில் 12 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர்.மோதிக்கொண்ட 3 வாகனங்கள்ரஷ்யாவின் வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Russia’s Arkhangelsk Multi Vehicle Crash 12 Dead: ரஷ்யாவில் நடந்த கோர சாலை விபத்தில் 12 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர்.</p><h2>மோதிக்கொண்ட 3 வாகனங்கள்</h2><p>ரஷ்யாவின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள ஆர்காங்கெல்ஸ்க்(Arkhangelsk) மாகாணத்தில் நடந்த கோரமான சாலை விபத்தில் குறைந்தது 12 பேர் உயிரிழந்துள்ளனர்.</p><p>வெள்ளிக்கிழமை நடந்த இந்த சாலை விபத்தில் மேலும் 8 பேர் படுகாயமடைந்துள்ளனர்.</p><p>ரஷ்ய உள்துறை அமைச்சகத்தின் தகவலை மேற்கோள் காட்டி RIA வெளியிட்ட செய்தியில், மினி பேருந்து ஒன்று மற்றொரு வாகனத்தை முந்திச் செல்ல முயன்ற போது இந்த விபத்து ஏற்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2bef4708-1c61-4435-808c-0b921d8dd80a/26-6aa469fa1fbd6.webp' /></p><p> இந்த விபத்தின் போது முந்திச் செல்ல முயன்ற மினி பேருந்தானது, எதிரே மரக்கட்டை ஏற்றி வந்த லொறி மற்றும் காரை ஒன்றின் மீது மோதியது.</p><p> விபத்து குறித்து தகவலறிந்த அவசர கால மீட்பு குழுவினர், விரைந்து சென்று மீட்புப் பணிகளை துரிதப்படுத்தினர்.</p><p></p><p> காயமடைந்தவர்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p><p> இந்நிலையில் இந்த விபத்துக்கான பின்னணி காரணங்களை முழுமையாக கண்டறிய பொலிஸார் தீவிர விசாரணையை நடத்தி வருகின்றனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள். &nbsp;&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-11T21:30:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[சவுதி அரேபியாவின் எண்ணெய் குழாய்கள் மீது ஏவுகணை தாக்குதல்: சேதத்தை விவரித்த செயற்கைக்கோள் படங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/saudi-arabia-s-east-west-pipeline-attacked-1789150984"></link>
            <id>https://news.lankasri.com/article/saudi-arabia-s-east-west-pipeline-attacked-1789150984</id>
            <summary type="text">சவுதி அரேபியாவின் எண்ணெய் குழாய்கள் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. எண்ணெய் குழாய்கள் மீது தாக்குதல்கடந்த வியாழக்கிழமை சவுதி அரேபியாவின் முக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>சவுதி அரேபியாவின் எண்ணெய் குழாய்கள் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.</p><h2> எண்ணெய் குழாய்கள் மீது தாக்குதல்</h2><p>கடந்த வியாழக்கிழமை சவுதி அரேபியாவின் முக்கியமான கிழக்கு-மேற்கு எண்ணெய் குழாய்கள் மீது ஏவுகணை தாக்குதல்கள் நடத்தப்பட்டு இருப்பதாக அமெரிக்க ஊடகமான CNN வெளியிட்ட தகவலின் மூலம் தெரியவந்துள்ளது.</p><p>இந்த அத்துமீறிய ஏவுகணை தாக்குதலை அமெரிக்க அதிகாரிகள் இரண்டு பேர் உறுதிப்படுத்தியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fdc0fc37-26ef-467f-9bff-6f1da9fe3e73/26-6aa44709d2632.webp' /></p><p> மேலும் இந்த ஏவுகணை தாக்குதலானது எண்ணெய் குழாய் கட்டமைப்பின் பம்பிங் நிலையங்களை குறிவைத்து நடத்தப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது.</p><p></p><p> தாக்குதல் தொடர்பாக வெளிவந்துள்ள செயற்கைக்கோள் புகைப்படங்களில், ஒரு பம்பிங் நிலையத்தில்&nbsp; தீவிரமான தீ சேதமும், மற்றொரு பம்பிங் நிலையத்தில் சிறிய தீ சேதமும் ஏற்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது.</p><h2> தாக்குதலுக்கு யார் பொறுப்பு?</h2><p>
ஏமனில் ஈரான் ஆதரவு ஹவுதி கிளர்ச்சியாளர்கள் படைகளுக்கு எதிராக சவுதி அரேபியாவின் ஆதரவு பெற்ற அரசு படைகள் சண்டையிட்டு வரும் நிலையில் இந்த எண்ணெய் குழாய் தாக்குதலானது நடைபெற்றுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/574b070e-efdc-45dc-9c8f-038a8fffeeb2/26-6aa4470a88e86.webp' /></p><p> ஆனால் இந்த எண்ணெய் குழாய் தாக்குதலுக்கு யாரும் பொறுப்பேற்றதாக தெரியவரவில்லை.</p><p> மேலும் தாக்குதலால் ஏற்பட்டுள்ள சேதங்களை சீரமைக்க எவ்வளவு காலம் தேவைப்படும் என்பதற்கான மதிப்பீடுகளும் இன்னும் வெளிவரவில்லை.</p><p>இந்நிலையில், எண்ணெய் குழாய்கள் மீது தாக்குதல் நடத்த பயன்படுத்தப்பட்ட ஏவுகணைகள் ஈராக்கில் இருந்து ஏவப்பட்டிருக்கலாம் என்று அமெரிக்க அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-11T21:21:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ். வலி வடக்கு காணி பிரச்சினை ; மக்கள் பிரதிநிதிகள் புறக்கணிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/jaffna-valikamam-north-land-issue-allegatio-public-1789160437"></link>
            <id>https://jvpnews.com/article/jaffna-valikamam-north-land-issue-allegatio-public-1789160437</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் வலி வடக்கு காணி விடுவிப்புக்காக போராடும் மயிலிட்டி மக்களின் பிரதிநிதிகள் அண்மையில் இடம்பெற்ற இரண்டு பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் வலி வடக்கு காணி விடுவிப்புக்காக போராடும் மயிலிட்டி மக்களின் பிரதிநிதிகள் அண்மையில் இடம்பெற்ற இரண்டு பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களுக்கு அழைக்கப்படவில்லை எனக் குற்றஞ்சாட்டி, தெல்லிப்பழை பிரதேச செயலரிடம் மகஜர் ஒன்றை கையளித்துள்ளனர்.</p><p>
</p><p></p><p>மயிலிட்டியில் காணி விடுவிப்புக்காக தொடர்ச்சியாக போராடிவரும் ஒரு பகுதி மக்கள் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை ஒன்று திரண்டு தெல்லிப்பழை பிரதேச செயலகத்திற்கு சென்று குறித்த மகஜரை கையளித்தனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c89ec384-7ac2-45d2-8be5-eaf45a6663f6/26-6aa46bf6bed1a.webp' /></p><p>இதன்போது, பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் தமது பிரதிநிதிகளையும் வழமையாக அழைத்து, காணி விடுவிப்பு உள்ளிட்ட தமது பிரச்சினைகள் தொடர்பில் கருத்துக்களை முன்வைக்க சந்தர்ப்பம் வழங்கப்பட்டு வந்த நிலையில், அண்மையில் இடம்பெற்ற இரண்டு கூட்டங்களுக்கு தமது அமைப்பின் பிரதிநிதிகள் அழைக்கப்படவில்லை என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.</p><p>இதனால், காணிகளை இழந்த மக்களின் நியாயமான கோரிக்கைகள் உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படுவதற்கான வாய்ப்பு மறுக்கப்பட்டு, தமது தரப்பு தொடர்ந்தும் புறக்கணிக்கப்படுவதாக தெரிவித்துள்ளனர்.
</p><p>
எனவே, எதிர்வரும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களுக்கு தமது பிரதிநிதிகளுக்கும் மீண்டும் உரிய முறையில் அழைப்பு விடுக்கப்பட வேண்டும் என மகஜர் மூலம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-11T21:00:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[மகிந்த தலைமையில் அரசாங்கத்திற்கு எதிராக அனுராதபுரத்தில் களமிறங்கும் மொட்டுக்கட்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/anuradhapura-rally-led-by-mahinda-rajapaksa-1789146588"></link>
            <id>https://tamilwin.com/article/anuradhapura-rally-led-by-mahinda-rajapaksa-1789146588</id>
            <summary type="text">இலங்கை பொதுஜன பெரமுன (SLPP) கட்சி, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையில் நாளை (12) அனுராதபுரத்தில் “ஜனசதன” மக்கள் பேரணியை நடத்தவுள்ளதாக, SLPP தேச...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை பொதுஜன பெரமுன (SLPP) கட்சி, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையில் நாளை (12) அனுராதபுரத்தில் “ஜனசதன” மக்கள் பேரணியை நடத்தவுள்ளதாக, SLPP தேசிய அமைப்பாளர் டி.வி. சாணக்க தெரிவித்துள்ளார்.
</p><p>
விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்தப் பேரணி நடத்தப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.</p><h2>&nbsp;மகிந்த ராஜபக்ச</h2><p>
</p><p>
மேலும், அரசாங்கம் வழங்கியுள்ள வாக்குறுதிகளை நிறைவேற்ற அழுத்தம் கொடுப்பதும் இந்தப் பேரணியின் நோக்கம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
இந்தப் பேரணி சனிக்கிழமை (12) அனுராதபுரத்தில் நடைபெறவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-11T21:00:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாமலின் கைதின் பின் அரசுக்கு அழுத்தமா - நெருக்கடியா.. பாய்ச்சலுக்கு தயாராகும் அநுர]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-arrest-sri-lanka-government-trouble-1789159322"></link>
            <id>https://tamilwin.com/article/namal-arrest-sri-lanka-government-trouble-1789159322</id>
            <summary type="text">நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டு, செப்டம்பர் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்த கைது மற்றும் அதனுடன் தொடர...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டு, செப்டம்பர் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
</p><p>
இந்த கைது மற்றும் அதனுடன் தொடர்புடைய விசாரணைகள், ராஜபக்ச குடும்பத்தைச் சுற்றியுள்ள அரசியல் சூழலில் மேலும் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.</p><p>

ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம், ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் சட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது.

குறிப்பாக, ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த பல்வேறு உறுப்பினர்கள் தொடர்பில் வெவ்வேறு சட்டரீதியான விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.</p><p>

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, மிக்-27 போர் விமான கொள்வனவு தொடர்பான விசாரணைக்காக நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையானதும் இதன் ஒரு முக்கிய நடவடிக்கையாக பார்க்கப்படுகின்றது.</p><p>

இந்தநிலையில், நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை, ஊழல் மற்றும் நிதி முறைகேடுகள் தொடர்பான விசாரணைகளில் அரசாங்கம் சட்ட நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளதை வெளிப்படுத்துவதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த பல்வேறு உறுப்பினர்கள் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து தீவிரமடைந்து வரும் நிலையில், இந்த விவகாரம் நாட்டின் அரசியல் வட்டாரத்தில் முக்கிய கவனம் பெற்றுள்ளது.</p><p>இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடுகின்றது நாட்டு நடப்பு நிகழ்ச்சி...</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/dsr0jV9T7Cw" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-11T20:56:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[விரைவில் மகிந்த - கோட்டாபய வைத்தியசாலையில்! சுரேஸ் சலே உடைத்த பரம இரகசியம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/suresh-sallay-s-shocking-secret-1789151378"></link>
            <id>https://tamilwin.com/article/suresh-sallay-s-shocking-secret-1789151378</id>
            <summary type="text">2006ஆம் ஆண்டு மிக்-27 போர் விமானங்களை கொள்முதல் செய்ததில் சுமார் 7 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி மோசடி இடம்பெற்றதாகக் கூறப்படும் விவகாரம் தொடர்பில் தற...</summary>
            <content type="html"><![CDATA[<p>2006ஆம் ஆண்டு மிக்-27 போர் விமானங்களை கொள்முதல் செய்ததில் சுமார் 7 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி மோசடி இடம்பெற்றதாகக் கூறப்படும் விவகாரம் தொடர்பில் தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p><p>

இந்த விவகாரம் தொடர்பில் முன்னாள் விமானப்படை தளபதி ரொஷான் குணதிலக மற்றும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஆகியோரிடமும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>

இதேவேளை, மகரகம அபேக்ஷா வைத்தியசாலைக்கு PET ஸ்கேனர் கருவியை வழங்குவதாகக் கூறி, ‘சிரிலிய சவிய’ அமைப்பின் ஊடாக நிதி திரட்டப்பட்டதில் முறைகேடுகள் இடம்பெற்றதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.</p><p>

இந்த நிலையில், சிரந்தி ராஜபக்ச தற்போது கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது. </p><p>
அவரது உடல்நிலை காரணமாக விசாரணைகளில் இருந்து விலகி இருக்கிறாரா அல்லது உண்மையான உடல்நலப் பிரச்சினை காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளாரா என்ற கேள்விகளும் எழுந்துள்ளன.</p><p>

இந்நிலையில், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உள்ளிட்ட முன்னாள் ஆட்சியாளர்கள் தொடர்பிலும் அடுத்த கட்டமாக விசாரணைகள் தீவிரமடையுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
</p><p>
எனவே அவர்களும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகின்றது.
</p><p>
இதேவேளை, உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலின் பின்னணியில் இருந்ததாகக் கூறப்படும் உண்மையான காரணங்கள் மற்றும் அதற்குப் பின்னால் செயற்பட்ட சக்திகள் தொடர்பிலும் சுரேஸ் சலே வெளிப்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
</p><p>


இது தொடர்பான விரிவான தகவல்களை ஆராய்கிறது ‘செய்திகளுக்கு அப்பால்’ நிகழ்ச்சி..</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/CP_Y7qU4Swk" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-11T20:44:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[மகளிர் ஆசிய கோப்பை: அரையிறுதியில் பாகிஸ்தானை வீழ்த்தி இலங்கை அபார வெற்றி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/women-s-asia-cup-semi-final-2-slw-beats-pakw-1789158670"></link>
            <id>https://news.lankasri.com/article/women-s-asia-cup-semi-final-2-slw-beats-pakw-1789158670</id>
            <summary type="text"> Women&#039;s Asia Cup Semi Final 2 SLW Beats PAKW: மகளிர் ஆசிய கோப்பை அரையிறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இலங்கை அணி இறுதிப் போட்டிக்கு முன்ன...</summary>
            <content type="html"><![CDATA[<p> Women's Asia Cup Semi Final 2 SLW Beats PAKW: மகளிர் ஆசிய கோப்பை அரையிறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இலங்கை அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.</p><h2> ஆசியக் கோப்பை அரையிறுதிப் போட்டி</h2><p>வெள்ளிக்கிழமை துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் வைத்து நடைபெற்ற மகளிர் ஆசிய கோப்பை அரையிறுதிப் போட்டியில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை செய்தனர்.</p><p> நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 130 ஓட்டங்கள் குவித்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c4aab182-c743-40cf-b689-0a8a2575705b/26-6aa466ae0c86d.webp' /></p><p>பாகிஸ்தான் அணியில் அதிகபட்சமாக ஷவால் சுல்பிகர்(Shawaal Zulfiqar) 24 ஓட்டங்களையும், கேப்டன் பாத்திமா சனா(Fatima Sana) 47 ஓட்டங்களையும் குவித்து அசத்தினர்.
இதையடுத்து இரண்டாவது இன்னிங்ஸில் களமிறங்கிய இலங்கை அணி தொடக்கத்தில் 6.2 ஓவர்கள் முடிவிலேயே வெறும் 33 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.</p><p> பின்னர் 5 வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஹர்ஷிதா சமரவிக்ரமா 36 ஓட்டங்களையும், கவிஷா தில்ஹாரி 33 ஓட்டங்களையும் குவித்து அணிக்காக இணைந்து 71 ஓட்டங்களை குவித்தனர்.</p><p></p><p>ஆட்டத்தின் முக்கிய கட்டத்தில் பாகிஸ்தான் கேப்டன் பாத்திமா சனா முக்கியமான 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி திருப்புமுனை ஏற்படுத்தினார்.</p><p>இதனால் கடைசி 3 ஓவர்களுக்கு 22 ஓட்டங்கள் தேவைப்பட்ட இக்கட்டான நிலை ஏற்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/601f091b-4e86-4794-ba3d-fdaee6b53615/26-6aa4650feebaa.webp' /></p><p> அப்போது பொறுப்புடன் விளையாடிய நிலக்ஷிகா சில்வா 13 ஓட்டங்களையும், கௌஷினி நுத்யங்கனா 14 ஓட்டங்களையும் குவித்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர்.</p><p>இறுதியில் இலங்கை 18.4 ஓவர்கள் முடிவிலேயே 6 விக்கெட் இழப்புக்கு 134 ஓட்டங்கள் குவித்து 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.</p><h2> இறுதிப் போட்டியில் இலங்கை</h2><p>அரையிறுதியில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தியதை அடுத்து இறுதிப் போட்டியில்&nbsp; இலங்கை மகளிர் அணி இந்திய மகளிர் அணியை எதிர்கொள்ள உள்ளது.</p><p>ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியனான இலங்கை அணியை வீழ்த்தி தங்களது 8 வது ஆசிய கோப்பை கனவை அடைய இந்தியா முனைப்புடன் காத்திருக்கிறது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள். &nbsp;&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-11T20:38:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜனாதிபதிக்கு எதிர்ப்பு ; தேசியக் கொடியுடன் போராட்டத்தில் குதித்த பொதுஜன பெரமுனவின் முன்னாள் உறுப்பினர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/former-member-joins-the-protest-with-national-flag-1789154193"></link>
            <id>https://jvpnews.com/article/former-member-joins-the-protest-with-national-flag-1789154193</id>
            <summary type="text">ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று(12) பொலன்னறுவையில் நடைபெறவுள்ள விவசாயி மாநாட்டிற்கு எதிர்ப்புத் தெரிவித்து, இலங்கை பொதுஜன பெரமுனவின் மு...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று(12) பொலன்னறுவையில் நடைபெறவுள்ள விவசாயி மாநாட்டிற்கு எதிர்ப்புத் தெரிவித்து, இலங்கை பொதுஜன பெரமுனவின் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர்&nbsp; நேற்று (11) நண்பகல் முதல் ஹிங்குராக்கொட வர்த்தக வளாகத்தின் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.</p><p>
</p><p></p><p>ரஜஎல கம், மின்னேரிய பகுதியைச் சேர்ந்த முன்னாள் பிரதேச சபை உறுப்பினரே இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/60b65962-ad30-40a4-be40-215dc340baf1/26-6aa4539335142.webp' /></p><p>வீட்டுவசதி மேம்பாட்டு பிரதி அமைச்சர் டி.பி. சரத்தின் கட்டளைகள் மற்றும் அறிவுறுத்தல்களுக்கு அமைய, பிராந்தியத்திலுள்ள அரச நிறுவனங்களின் அதிகாரிகளை குறித்த விவசாயி மாநாட்டில் பங்கேற்கச் செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ரவீந்திர லக்மால் பண்டார தெரிவித்துள்ளார்.
</p><p>
இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையிலேயே குறித்த முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் தேசியக் கொடியை ஏந்தியவாறு வர்த்தக வளாகத்தின் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-11T20:26:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[மகளிர் ஆசிய கிண்ணம் ; இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது இலங்கை மகளிர் அணி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/women-s-asia-cup-sri-lanka-women-team-enters-final-1789158362"></link>
            <id>https://jvpnews.com/article/women-s-asia-cup-sri-lanka-women-team-enters-final-1789158362</id>
            <summary type="text">மகளிர் ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் பாகிஸ்தான் மகளிர் அணியை வீழ்த்தி இலங்கை மகளிர் அணி இறுதிப் போட்டிக்கு தகுதிப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>மகளிர் ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் பாகிஸ்தான் மகளிர் அணியை வீழ்த்தி இலங்கை மகளிர் அணி இறுதிப் போட்டிக்கு தகுதிப்பெற்றுள்ளது.</p><p></p><p> 

டுபாயில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இலங்கை மகளிர் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது. </p><p>

இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் மகளிர் அணி 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 130 ஓட்டங்களை பெற்றது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ec02c37c-a894-4c9c-92a5-dd390808a8dd/26-6aa463dc05e60.webp' /></p><p>துடுப்பாட்டத்தில் பாகிஸ்தான் மகளிர் அணி சார்பில் அணியின் தலைவி Fatima Sana ஆட்டமிழக்காமல் அதிகபட்சமாக 47 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். </p><p>

பந்து வீச்சில் இலங்கை மகளிர் அணி சார்பில் Chamari Athapaththu மற்றும் Chamudi Praboda தலா 02 விக்கெட்டுக்களை வீழ்த்தினர். </p><p>

பின்னர் வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை மகளிர் அணி 18.4 ஓவர்கள் நிறைவில் 06 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.</p><p> 

துடுப்பாட்டத்தில் இலங்கை மகளிர் அணி சார்பில் Harshitha Samarawickrama அதிகபட்சமாக 36 ஓட்டங்களையும், Kavisha Dilhari 33 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். </p><p>

பந்து வீச்சில் பாகிஸ்தான் மகளிர் அணி சார்பில் Fatima Sana 04 விக்கெட்டுக்களை வீழ்த்தினார். </p><p>

இதற்கமைய இந்த தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய மகளிர் அணியும், இலங்கை மகளிர் அணியும் மோதவுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-11T20:26:14+00:00</updated>
        </entry>
    </feed>
