<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-08-09T13:43:55+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[டச்சு மண்ணை அதிரவைத்த ஈழத்தமிழர்: பாஸ்கரன் கந்தையாவின் 5,445 கோடி ரூபாய் சாம்ராஜ்யம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/bhaskaran-kandiah-sri-lankan-tamil-ealam-1786271325"></link>
            <id>https://tamilwin.com/article/bhaskaran-kandiah-sri-lankan-tamil-ealam-1786271325</id>
            <summary type="text">நெதர்லாந்து நாட்டின் முன்னணி பொருளாதார மற்றும் வணிக இதழான Quote Net, ஐரோப்பாவில் தொழிலதிபராய் பரிணமித்துள்ள ஈழத்தமிழரான பாஸ்கரன் கந்தையாவின் வணிகச் சா...</summary>
            <content type="html"><![CDATA[<p>நெதர்லாந்து நாட்டின் முன்னணி பொருளாதார மற்றும் வணிக இதழான Quote Net, ஐரோப்பாவில் தொழிலதிபராய் பரிணமித்துள்ள ஈழத்தமிழரான பாஸ்கரன் கந்தையாவின் வணிகச் சாம்ராஜ்யத்தையும், தாய்நிலம் மீதான அவரது நன்றியுணர்வையும் பாராட்டி சிறப்புக் கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது.</p><p>நெதர்லாந்தின் முன்னணி பணக்காரர்களை வரிசைப்படுத்தும் Quote 500 பட்டியலில் பாஸ்கரன் கந்தையாவைச் சேர்த்துப் பெருமைப்படுத்தியுள்ள அந்த ஊடகம், அவரது வாழ்க்கைப் பாதையை ஒரு திரைப்படம் போல வர்ணித்துள்ளது. </p><p>டச்சு ஊடகத்தின் நிதி மதிப்பீட்டின்படி, அவரது தற்போதைய நிகர சொத்து மதிப்பு 165 மில்லியன் யூரோக்கள் (சுமார் 5,445 கோடி இலங்கை ரூபாய்) ஆகும். இதன் மூலம் அவர் நெதர்லாந்தின் மிகச் செல்வாக்குமிக்க பணக்காரர்கள் பட்டியலில் 437ஆவது இடத்தில் உள்ளார்.</p><h2>கிடைத்துள்ள அங்கீகாரம்..&nbsp;</h2><p> </p><p> யாழ்ப்பாணத்தின் வடலியடைப்பில் எளிய குடும்ப பின்னணியில் பிறந்து வளர்ந்த பாஸ்கரன், இலங்கையில் நிலவிய போர்ச் சூழல் காரணமாக ஐரோப்பாவிற்கு புலம்பெயர்ந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/43633a6f-b70c-4e51-b02e-6e5c3ef497c5/26-6a785cb3675a1.webp' /></p><p> </p><p>தனது 30ஆவது வயதில் இரண்டு நண்பர்களுடன் இணைந்து லெபாரா மொபைல் (Lebara Mobile) தொலைத்தொடர்பு நிறுவனத்தைத் தொடங்கினார். புலம்பெயர் மக்களை குறைந்த செலவில் தாய்நாட்டோடு இணைத்த இவரது வணிக உத்தி ஐரோப்பா முழுவதும் வரவேற்பைப் பெற்றது.</p><p> 2017இல் இந்நிறுவனத்தை சுவிட்சர்லாந்து முதலீட்டாளர்களுக்கு விற்ற பிறகு, 2014இல் IBC தமிழ் ஊடகக் குழுமத்தைக் கொள்வனவு செய்து, எல்லை கடந்த பேரூடகமாக அதை இயக்கி வருகிறார்.</p><p>தொழிலில் ஈட்டிய பிரமாண்ட வெற்றியின் பின்னரும், போரினால் பாதிக்கப்பட்ட தாய்நிலத்தின் பொருளாதாரத்தை உயர்த்த வேண்டும் என்ற நோக்கில் வட இலங்கையில் ரீக்சா (ReeCha) ஒருங்கிணைந்த பண்ணை சூழலியல் சுற்றுலா மையத்தை உருவாக்கியுள்ளார்.</p><h2>பல்வேறு வணிகங்கள்&nbsp;</h2><p> </p><p>இயற்கை உரம் கொண்ட கரிமப் பண்ணைகள், மிருகங்கள் மற்றும் பறவைகள் பூங்கா, நீர் விளையாட்டு வளாகம், தீம் பார்க், நட்சத்திர விடுதிகள், உணவகங்கள் மற்றும் ஸ்பா உள்ளிட்ட பல அம்சங்கள் அங்கு அமைக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/13146808-1296-46ae-8068-16ffe8c5abf3/26-6a785cb4518a6.webp' /></p><p>"முப்பதாண்டு கால போருக்குப் பிறகு நமது வடபிராந்தியத்தில் பெரிய அளவிலான பொருளாதார முதலீடுகள் நடக்கவில்லை. என் மண்ணுக்கும் மக்களுக்கும் மறுவாழ்வு அளிக்க வேண்டும் என்ற எண்ணமே இத்திட்டத்தின் பின்னணி" என பாஸ்கரன் கந்தையா Quote இதழிடம் குறிப்பிட்டுள்ளார். </p><p> இந்த ரீக்சா மையத்தின் மூலம் சுமார் 400 பேருக்கு நிரந்தர வேலைவாய்ப்பும், 100 பேருக்குப் பகுதி நேர வேலைவாய்ப்பும் கிடைத்துள்ளன. மேலும் 2025ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 3 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் இந்த மையத்தைப் பார்வையிட்டதால், உள்ளூர் சிறு வியாபாரிகள், வாகன ஓட்டுநர்கள் மற்றும் கைவினைஞர்களின் பொருளாதாரமும் கணிசமாக உயர்ந்துள்ளதாக அந்த இதழ் புகழாரம் சூட்டியுள்ளது.</p><p>வடக்கு கிழக்கின் இன்றைய தேவை அதை வளப்படுத்தக்கூடிய பாரம்பரியமான முதலீட்டாளர்களே என்பதை உணர்த்தி, பாஸ்கரன் கந்தையா சமூகத்தின் பொருளாதாரத் தேவையைப் பூர்த்தி செய்யும் ஒரு முன்னுதாரணமாகத் திகழ்கிறார்.</p><p><b>News link..&nbsp;</b></p><p><b><a href="https://www.quotenet.nl/lifestyle/reizen/a73375336/quote-500-lid-baskaran-kandiah-resort-sri-lanka/" target="_blank">https://www.quotenet.nl/lifestyle/reizen/a73375336/quote-500-lid-baskaran-kandiah-resort-sri-lanka/</a></b></p>]]></content>
            <updated>2026-08-09T13:39:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[இஸ்ரேல் படைகள் திரும்பப் பெறாது: ட்ரம்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/netanyahu-rejects-trump-s-peace-plan-of-gaza-1786282839"></link>
            <id>https://news.lankasri.com/article/netanyahu-rejects-trump-s-peace-plan-of-gaza-1786282839</id>
            <summary type="text">ஹமாஸ் ஆயுதங்கள் களையப்படும் வரை தங்கள் படைகளை விலக்கிக்கொள்ள முடியாது என நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஹமாஸ் ஆயு...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹமாஸ் ஆயுதங்கள் களையப்படும் வரை தங்கள் படைகளை விலக்கிக்கொள்ள முடியாது என நெதன்யாகு தெரிவித்துள்ளார்.</p><p>

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஹமாஸ் ஆயுதங்கள் களையப்படும் வரை தங்கள் படைகளை விலக்கிக்கொள்ள முடியாது என டொனால்ட் ட்ரம்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்துள்ளார்.
</p><p>
</p><h2>அமைதித் திட்டம்</h2><p>காஸாவுக்கான அமைதித் திட்டத்தை இஸ்ரேலுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் (Donald Trump) அமைதிக் குழு முன்மொழிந்தது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0d693950-762e-4cac-824b-a21e574da61e/26-6a78835a7fe05.webp' /></p><p></p><p>
ஆனால், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு (Benjamin Netanyahu) ஹமாஸ் ஆயுதங்கள் களையப்படும் வரை தங்கள் படைகளை விலக்கிக்கொள்ள முடியாது எனக் கூறி அதனை நிராகரித்துள்ளார்.</p><p>

இதுகுறித்து தனது அமைச்சரவைக் கூட்டத்தில் பேசிய அவர், "இதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன்: 15 அம்சங்களைக் கொண்ட அந்த ஆவணத்தை இஸ்ரேல் நிராகரிக்கிறது.</p><p><b> நீங்கள் அதை சொல்லவில்லை</b> என்று சிலர் கூறுவதை நான் கேட்டேன். எனவே அதை நான் மீண்டும் இங்கே கூறுகிறேன். 

ஹமாஸ் ஆயுதங்கள் களையப்படும் வரை இஸ்ரேலியப் படைகள் எந்தவொரு படைகளையும் திரும்பப் பெறும் நடவடிக்கையை மேற்கொள்ளாது" என்றார்.&nbsp;&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-09T13:38:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரசித்திபெற்ற முத்துமாரியம்மன் ஆலய வளாகத்தில் புத்தர் சிலையா? கொதிக்கும் அரசியல்வாதி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/a-buddha-statue-walapane-muthumariamman-temple-1786278864"></link>
            <id>https://jvpnews.com/article/a-buddha-statue-walapane-muthumariamman-temple-1786278864</id>
            <summary type="text">நுவரெலியா வலப்பனை மல்லியப்பு தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வளாகத்தில் புத்தர் சிலையொன்றை வைப்பதற்கு முயற்சித்தமையை வன்மையாகக் கண்டிப்பதோடு அரசாங்கம்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நுவரெலியா வலப்பனை மல்லியப்பு தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வளாகத்தில் புத்தர் சிலையொன்றை வைப்பதற்கு முயற்சித்தமையை வன்மையாகக் கண்டிப்பதோடு அரசாங்கம் இத்தகையோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.</p><p>இது சம்பந்தமாக அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், இன முரண்பாடுகள் நாட்டில் அமைதியின்மையையும் பொருளாதார பாதிப்புகளையும் ஏற்படுத்தும் என்பதை கடந்த காலங்களில் எமது நாட்டில் இடம்பெற்ற சம்பவங்கள் எடுத்துக் காட்டியுள்ளன.&nbsp;</p><h2>மலையகத்தில் இனவாதம் தலைதூக்கும்&nbsp;</h2><p>அதேநேரம், மலையகத்தில் இன மோதல்களுக்கு இடம் கொடுக்காமல் மூவின மக்களும் ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றார்கள்.&nbsp;</p><p>இந்த நேரத்தில் ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் நுவரெலியா வலப்பனை மல்லியப்பு தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வளாகத்தில் கடந்த வாரம் சில இனவாதிகள் இரவு நேரத்தில் புத்தரின் சிலை ஒன்றை வைத்து குழப்பத்தை ஏற்படுத்த முயற்சித்துள்ளமை வன்மையாகக் கண்டிக்கத் தக்க விடயமாகும்.</p><p>கடந்த காலங்களில் மலையகக் கட்சிகள் அரசியல் அதிகாரத்தில் இருந்த நேரங்களில் இத்தகைய அசம்பாவிதங்கள் எங்கும் நிகழவில்லை. ஆனால், இன்று தோட்டத் தொழிலாளர்கள் நிர்வாகங்களினால் அடிக்கடி தாக்குதலுக்கு உள்ளாகும் சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன.&nbsp;</p><p>அத்தோடு, தோட்டத்தில் உள்ள இந்து ஆலய வளாகத்தில் புத்தர் சிலை வைக்கவும் முயற்சிகள் இடம்பெற்றுள்ளன. இத்தகைய நிலைமை மேலும் தொடருமானால் மலையகம் கொந்தளிக்கும் நிலை உருவாகும் என்பதை சொல்லத் தேவையில்லை.</p><p>ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க மீது நம்பிக்கை வைத்துதான் மலையக மக்கள் தேர்தலில் அதிகமான வாக்குகளைக் கொடுத்து ஆதரவு தெரிவித்து ஆட்சி பீடம் ஏற்றி வைத்துள்ளர்கள். அந்த மகக்ளுக்கு துன்பங்கள் நேராமல் பார்த்துக் கொள்ள வேண்டிய பொறுப்பும், பாதுகாக்க வேண்டிய கடமையும் ஜனாதிபதிக்கு இருக்கின்றது.&nbsp;</p><p>எனவே, புத்தர் சிலையை வைத்து இன முரண்பாட்டை ஏற்படுத்த காரணமாக இருந்தவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுத்து இத்தகையை சம்பவங்கள் ஏனைய இடங்களுக்கும் பரவாமல் இருக்க அரசாங்கம் உடனடியாக இந்தப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.</p><p>மலையகத்தில் இனவாதம் தலைதூக்கும் போது முளையிலேயே கிள்ளியெறிந்து தமிழ் சிங்கள மக்கள் மத்தியில் நிலவுகின்ற ஒற்றுமையை கட்டிக் காக்க முன்வர வேண்டும்.&nbsp;</p><p>மலையக மக்கள் நாட்டின் பொருளாதார முன்னேற்றத்துக்கு பங்களிப்பு செய்து வருகின்ற நேரத்தில் இனமுறுகல் ஏற்படுமாயின் அது நாட்டின் பொருளாதரத்தை வெகுவாகப் பாதிக்கும் என்பதை உணர்ந்து சம்பந்தப்பட்ட அமைச்சர்களும் அதிகாரிகளும் இந்தப் பிரச்னையை உடனடியாக முடிவுக்குக் கொண்டு வர வேண்டியது அவசியமாகும் என்றும் குறிபிட்டுள்ளார்.</p>]]></content>
            <updated>2026-08-09T13:35:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[சமூக ஊடக நிறுவனங்களுக்கு கட்டுப்பாடுகளை விதிக்க அமெரிக்க மக்களிடையே ஆதரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/support-american-public-social-media-1786279335"></link>
            <id>https://tamilwin.com/article/support-american-public-social-media-1786279335</id>
            <summary type="text">சமூக ஊடக நிறுவனங்களின் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம்
கடுமையான விதிகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என அமெரிக்க மக்களில்
பெரும்பான்மையானோ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சமூக ஊடக நிறுவனங்களின் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம்
கடுமையான விதிகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என அமெரிக்க மக்களில்
பெரும்பான்மையானோர் ஆதரவு தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.</p><p>சிறுவர்களைப் பாதுகாக்கும் வகையில், 16 வயதிற்குட்பட்ட பயனாளர்களுக்கு வயதுப்
பரிசோதனை கருவிகளை கட்டாயமாக்குவது உள்ளிட்ட கட்டுப்பாடுகளுக்கு இரு
கட்சிகளையும் சேர்ந்த மக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>மெட்டா மற்றும் யூடியூப் போன்ற நிறுவனங்கள் சிறுவர்களை அடிமையாக்கும் வகையில்
தமது செயலிகளை வடிவமைத்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டு, சட்ட ரீதியான
அழுத்தங்களை எதிர்கொண்டு வரும் நிலையிலேயே இந்த கருத்துக்கணிப்பு முடிவுகள்
வெளியாகியுள்ளன.</p><p></p><h2>பரிசோதனை முறை</h2><p>
</p><p>
கருத்துக்கணிப்பில் பங்கேற்றவர்களில் 61 சதவீதமானோர் சமூக ஊடகங்களுக்குக்
கடுமையான கண்காணிப்பு தேவை எனத் தெரிவித்துள்ளனர்.
</p><p>
மேலும், 66 சதவீதமானோர் சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடுக்க
வயதுப் பரிசோதனை முறையைக் சட்டப்பூர்வமாக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d1d488f9-e1d2-4dfd-b588-e7a69c5f1479/26-6a7880ba8ac1e.webp' /></p><p> அத்துடன், சமூக ஊடகங்கள் சிறுவர்களுக்கு அடிமைத்தனத்தை ஏற்படுத்துவதுடன்,
அவர்களின் மனநலனுக்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியவை என 85 சதவீதமான
அமெரிக்கர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
</p><p>
எனினும், பெரும்பாலான மக்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவது தமக்கு
மகிழ்ச்சியளிப்பதாகக் கூறியுள்ள போதிலும், நாளாந்தம் அதில் அதிக நேரத்தைச்
செலவிடுவதாகவும் ஒப்புக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-09T13:34:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரச ஊழியர்களுக்கான சம்பளம் வழங்கும் முறையில் மாற்றம்.. நிதி அமைச்சு எடுத்துள்ள புதிய நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/30-year-old-government-payroll-system-modernized-1786263633"></link>
            <id>https://tamilwin.com/article/30-year-old-government-payroll-system-modernized-1786263633</id>
            <summary type="text">30 ஆண்டுகள் பழமையான அரச ஊதிய முறைக்கு (GPS) மாற்றாக, ஒரு நவீன தகவல் தொழில்நுட்ப முறையை உருவாக்குவதற்காக நிதி அமைச்சகம் ஒப்பந்தப்புள்ளிகளை கோரியுள்ளது....</summary>
            <content type="html"><![CDATA[<p>30 ஆண்டுகள் பழமையான அரச ஊதிய முறைக்கு (GPS) மாற்றாக, ஒரு நவீன தகவல் தொழில்நுட்ப முறையை உருவாக்குவதற்காக நிதி அமைச்சகம் ஒப்பந்தப்புள்ளிகளை கோரியுள்ளது.</p><p>நிதி அமைச்சகத்தின் பொதுக் கணக்குகள் திணைக்களம் (DSA), “அரச நிறுவனங்களுக்கான ஊதிய முறையின் வடிவமைப்பு, மேம்பாடு மற்றும் செயலாக்கம்” என்ற தலைப்பில் இந்த ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p>குறித்த திணைக்களம், தற்போதைய முறை தொழில்நுட்ப ரீதியாக காலாவதியானதுடன், நவீன செயல்பாட்டுத் தேவைகளையும் பூர்த்தி செய்யவில்லை அல்லது வளர்ந்து வரும் தகவல் பாதுகாப்புத் தேவைகளுக்கு இணங்கவில்லை என சுட்டிக்காட்டியுள்ளது.&nbsp;</p><h2>ஏற்படும் சிக்கல்கள்..&nbsp;</h2><p>அதன்படி, 1996இல் அறிமுகப்படுத்தப்பட்ட தற்போதைய அரச ஊதிய முறையானது, அரச அமைச்சகங்கள், துறைகள், சிறப்புச் செலவினப் பிரிவுகள், மாகாண சபைகள், உள்ளாட்சி நிறுவனங்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டப்பூர்வ சபைகள் உள்ளிட்ட ஏராளமான அரச நிறுவனங்களால் பயன்படுத்தப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/eebc315e-b934-479f-aaf2-c54cd14b2fdd/26-6a7844940ad54.webp' /></p><p> இருப்பினும், அதன் காலாவதியான தொழில்நுட்பக் கட்டமைப்பு மேலும் மேம்படுத்தல்களைத் தடுத்துள்ளது, மேலும் அதன் பலவீனமான பாதுகாப்பு வழிமுறைகள் மோசடி, ஊழல் மற்றும் தரவு மாற்றம் போன்ற அபாயங்களுக்கு அதை உள்ளாக்கியுள்ளன.</p><p> இது அரச நிதிகளின் நம்பகத்தன்மை மற்றும் செயல்திறனில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

மேலும், தற்போதைய அமைப்பானது ஒரு ஒருங்கிணைந்த மனிதவள மற்றும் ஊதிய மேலாண்மைத் தளமாகச் செயல்படுவதற்குத் தேவையான நெகிழ்வுத்தன்மையையோ அல்லது விரிவாக்கத் திறனையோ கொண்டிருக்காததால், அரசாங்க நிறுவனங்களின் உற்பத்தித்திறனும் செயல்திறனும் பாதிக்கப்படுகின்றன. </p><p>உலகளாவிய சிறந்த நடைமுறைகள் மற்றும் வளர்ந்து வரும் தகவல் தொடர்பு தொழில்நுட்பப் போக்குகளுக்கு ஏற்ப, பாதுகாப்பான மற்றும் தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட ஒருங்கிணைந்த ஊதிய அமைப்புக்கு மாற வேண்டிய அவசரத் தேவை இருப்பதாக பொதுக் கணக்குத் திணைக்களம் சுட்டிக்காட்டுகிறது.</p><p></p><h2>போலி ஊழியர்கள்</h2><p>

ஒப்பந்த விவரக்குறிப்புகளின்படி, புதிய அமைப்பானது ஸ்தாபனங்கள் சட்டம், அரசாங்க நிதி ஒழுங்குமுறைகள், திறைசேரி, பொது நிர்வாகம் மற்றும் வரவு செலவுத் திட்ட சுற்றறிக்கைகள் போன்ற பொதுத்துறை கொள்கைகளை கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d160cc44-60b5-416b-93aa-f41578acd72d/26-6a784494c5cde.webp' /></p><p> </p><p>மேலும், இது சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் தரவுகளை உள்ளீடு செய்யவும், மென்பொருளைப் பயன்படுத்தவும், உத்தியோகபூர்வ பதிவுகளைப் பராமரிக்கவும் கூடிய ஒரு பன்மொழி அமைப்பாக இருக்க வேண்டும். </p><p>உயர் மட்ட நிதிப் பொறுப்புக்கூறலைப் பராமரிக்க, பல காரணி அங்கீகாரத்தைச் செயல்படுத்துவதும், பதிவிறக்கம் செய்யப்பட்ட ஆவணங்களுக்கு மாறும் பாதுகாப்பு நீர்முத்திரைகளைச் சேர்ப்பதும், அனைத்துப் பரிவர்த்தனைகளின் பாதுகாப்பான தணிக்கைப் பதிவுகளைப் பராமரிப்பதும் கட்டாயமாகும். </p><p>கூடுதலாக, இந்த புதிய அமைப்பானது போலி ஊழியர்களைக் கண்டறிய செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தையும் கொண்டிருக்கும்.

இணைய இணைப்புத் தடங்கல்கள் ஏற்படும் சமயங்களிலும் அரச ஊழியர்களுக்கு உரிய நேரத்தில் சம்பளம் வழங்கப்படுவதை உறுதிசெய்ய, ஒஃப்லைனில் இயக்கக்கூடிய ஒரு கூடுதல் கருவியையும் இது கொண்டிருக்க வேண்டும்.</p><p> இது, மண்டல சம்பள அலுவலகங்கள் ஒரு எளிய எக்செல் தாள் மூலம் அடிப்படை சம்பளத் தகவல்களைப் புதுப்பிக்கவும், செல்லுபடியாகும் வங்கிப் பரிமாற்றக் கோப்பைத் தயாரிக்கவும் உதவும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-09T13:30:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதிக விலைக்கு அரிசி விற்பனை ;300,000 ரூபா அபராதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/rice-sold-at-an-excessive-price-rs-300-000-fine-1786276104"></link>
            <id>https://jvpnews.com/article/rice-sold-at-an-excessive-price-rs-300-000-fine-1786276104</id>
            <summary type="text">நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விடக் கூடுதல் விலைக்கு அரிசியை விற்பனை செய்த குற்றச்சாட்டில் இரு வர்த்தகர்களுக்கு மொத்தம் 300,000 ரூபா அபராதம...</summary>
            <content type="html"><![CDATA[<p>நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விடக் கூடுதல் விலைக்கு அரிசியை விற்பனை செய்த குற்றச்சாட்டில் இரு வர்த்தகர்களுக்கு மொத்தம் 300,000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.</p><p>வெல்லவாய நீதவான் நீதிமன்றத்தால் வெல்லவாயவைச் சேர்ந்த இரு வர்த்தகர்களுக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.</p><p>கட்டுப்பாட்டு விலை ஒரு கிலோகிராம் 260 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டிருந்த போதிலும், உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட ஐந்து கிலோகிராம் கீரி சம்பா அரிசிப் பொதி ஒன்றை ஒரு கிலோகிராம் 350 ரூபாவிற்கு விற்ற வர்த்தகர் ஒருவருக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது.</p><p>குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டதை அடுத்து, நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்டவருக்கு 150,000 ரூபா அபராதம் விதித்தது.</p><p>மற்றொரு வழக்கில், இறக்குமதி செய்யப்பட்ட பொன்னி சம்பா ஜி.ஆர்11 அரிசியை, நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையான ஒரு கிலோகிராம் 240 ரூபாவுக்கும் அதிகமாக, ஒரு கிலோகிராம் 260 ரூபாவிற்கு விற்ற வெல்லவாயவைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவருக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது.</p><p>குற்றச்சாட்டை ஒப்புக்கொண்ட அந்த வர்த்தகருக்கும் வெல்லவாய நீதவான் நீதிமன்றத்தால் 150,000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-09T13:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[நடிகை அபர்ணதி வெளியிட்ட கிளாமர் போட்டோஷூட் புகைப்படங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/actress-abarnathi-latest-photoshoot-1786272420"></link>
            <id>https://viduppu.com/article/actress-abarnathi-latest-photoshoot-1786272420</id>
            <summary type="text">இறுகப்பற்று, தேன், ஜெயில், காளிதாஸ் 2 ஆகிய திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் அபர்ணதி.

இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் பிரபலங்களில் இவரும் ஒருவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இறுகப்பற்று, தேன், ஜெயில், காளிதாஸ் 2 ஆகிய திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் அபர்ணதி.</p><p>

இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் பிரபலங்களில் இவரும் ஒருவர். அதில் இவர் வெளியிடும் புகைப்படங்கள் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்க்கும். </p><p>

இந்நிலையில் தற்போது சிவப்பு நிற ஆடை கிளாமர் போட்டோஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். </p><p>

இந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றன. இதோ அந்த புகைப்படங்கள்:</p>]]></content>
            <updated>2026-08-09T13:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[உடல் ஆரோக்கியத்திற்கு சத்தான கருப்பு எள்ளு லட்டு.., எப்படி செய்வது?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/healthy-laddu-recipe-in-tamil-1786279491"></link>
            <id>https://news.lankasri.com/article/healthy-laddu-recipe-in-tamil-1786279491</id>
            <summary type="text">Black Sesame Laddu
recipe- கருப்பு எள்ளில் கால்சியம், இரும்புச்சத்து மற்றும் ஆன்டிஆக்சிடென்ட்கள் நிறைந்துள்ளது.

இது எலும்பு மற்றும் நரம்பு மண்டலத்...</summary>
            <content type="html"><![CDATA[<p>Black Sesame Laddu
recipe- கருப்பு எள்ளில் கால்சியம், இரும்புச்சத்து மற்றும் ஆன்டிஆக்சிடென்ட்கள் நிறைந்துள்ளது.
</p><p>
இது எலும்பு மற்றும் நரம்பு மண்டலத்தை பலப்படுத்துகிறது, முடி வளர்ச்சியை மேம்படுத்துகிறது மற்றும் இதய நலனைப் பாதுகாக்க உதவுகிறது.
</p><p>
அந்தவகையில், உடல் ஆரோக்கியத்திற்கு சத்தான கருப்பு எள்ளு லட்டு எப்படி செய்வது என்று பார்க்கலாம்.</p><p></p><p>
</p><h2>
தேவையான பொருட்கள்</h2><ul><li>

கருப்பு எள்ளு- 1 கப்</li><li>
ஆளிவிதை- 1கப்
</li><li>பூசணி விதை- ¼ கப்
</li><li>கசகசா- ¼ கப்</li><li>
வெல்லம்- ½ கப்
</li><li>ஏலக்காய் தூள்- 1 ஸ்பூன்</li><li>
நெய்- 3 ஸ்பூன்
</li></ul><h2>
செய்முறை</h2><p>

முதலில் ஒரு கடாயில் கருப்பு எள்ளை நன்கு கழுவி வறுத்து பொரிந்தவுடன் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.</p><p>
அடுத்து அதே கடாயில் ஆளிவிதையை வறுத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
</p><p>
பின் பூசணி விதையை மற்றும் கசகசாவையும் தனித்தனியாக பொன்னிறமாக வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bcd228fd-f3e2-4bcc-a199-5882b42597bf/26-6a7876452ddec.webp' /></p><p>இதனை தொடர்ந்து ஒரு மிக்ஸியில் வறுத்து ஆறவைத்த எள்ளு, ஆளிவிதை, பூசணி விதை மற்றும் கசகசாவை சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.
</p><p>
பின் அதில் வெல்லம் மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து நன்கு அரைத்துக்கொள்ளவும்.
</p><p>
இறுதியாக இதனை ஒரு பாத்திரத்தில் மாற்றி நெய் சேர்த்து லட்டுவாக பிடித்தால் சத்தான கருப்பு எள் லட்டு தயார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-09T13:25:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரசியலில் இருந்து விடைபெற்றார் முன்னாள் அமைச்சர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/mahinda-samarasinghe-bids-farewell-to-politics-1786279565"></link>
            <id>https://ibctamil.com/article/mahinda-samarasinghe-bids-farewell-to-politics-1786279565</id>
            <summary type="text">அமெரிக்காவிற்கான முன்னாள் இலங்கைத் தூதர் மஹிந்த சமரசிங்க, தீவிர அரசியலில் மீண்டும் நுழையும் எண்ணம் தனக்கு இல்லை என்று தெரிவித்துள்ளார்.

ஏறக்குறைய ஐ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவிற்கான முன்னாள் இலங்கைத் தூதர் மஹிந்த சமரசிங்க, தீவிர அரசியலில் மீண்டும் நுழையும் எண்ணம் தனக்கு இல்லை என்று தெரிவித்துள்ளார்.</p><p>

ஏறக்குறைய ஐந்து ஆண்டுகள் பணியாற்றிய பின்னர், தனிப்பட்ட காரணங்களுக்காக தூதர் பதவியிலிருந்து விலகியதாகவும், பதவி விலகுமாறு அரசாங்கத்திடமிருந்து எந்த அழுத்தமும் வரவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.&nbsp;</p><h2>&nbsp;தூதராக இருந்த காலத்தில் நாட்டுக்கு ஆற்றிய சேவை&nbsp;</h2><p>சமீபத்தில் அமெரிக்காவிற்கான இலங்கைத் தூதர் பதவியிலிருந்து விலகிய மஹிந்த சமரசிங்க, இன்று (09) அஸ்கிரி பீடத்தின் மகாநாயக்கரான வணக்கத்திற்குரிய வரக்ககொட ஸ்ரீ ஞானரத்ன மகா தேரர் மற்றும் மல்வத்து பீடத்தின் மகாநாயக்கரான வணக்கத்திற்குரிய திப்பட்டவாவவே ஸ்ரீ சுமங்கல மகா தேரர் ஆகியோரைச் சந்தித்து ஆசி பெற்றபோது இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3e05ee13-d8a4-45de-962e-14d25abf6915/26-6a787a3396102.webp' /></p><p>&nbsp;தூதராக இருந்த காலத்தில், இலங்கை-அமெரிக்க உறவுகளை வலுப்படுத்தவும், சர்வதேச நாணய நிதிய (IMF) ஒப்பந்தங்களுக்கு அமெரிக்காவின் ஆதரவைப் பெறவும், அமெரிக்கா விதித்த 10% வரியைத் தக்கவைக்கவும், மேலும் அந்நாட்டிலிருந்து ஒரு கடற்படைக் கப்பலையும் பல உலங்கு வானூர்திகளையும் பெறவும் பாடுபட்டதாக சமரசிங்க நினைவு கூர்ந்தார்.</p><p></p><h2>&nbsp;இனி அரசியலில் ஈடுபட வேண்டாம்</h2><p>27 ஆண்டுகள் நாடாளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றிய போதிலும், இனி அரசியலில் ஈடுபட வேண்டாம் எனத் தான் முடிவு செய்துள்ளதாக அவர் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c4a60b64-a6f9-4c35-bf60-e94c9b4a08fa/26-6a787a3447c30.webp' /></p><p>
</p><p>
இருப்பினும், சர்வதேச விவகாரங்கள் தொடர்பாக அரசாங்கம் கோரினால், ஆதரவளிக்கத் தான் இன்னும் தயாராக இருப்பதாக அவர் கூறினார்.
</p><p>
மேலும், தீவிர அரசியலில் இருந்து விலகிவிட்டதால், தற்போதைய அரசியல் சூழல் குறித்துக் கருத்துத் தெரிவிக்கத் தயாராக இல்லை என்றும் முன்னாள் தூதர் தெரிவித்தார்.
</p><p>
மஹிந்த சமரசிங்க தூதரக சேவையில் ஆற்றிய சிறந்த சேவையானது, மல்வத்தை மற்றும் அஸ்கிரி பிரிவுகளின் மகாநாயக்கக்களால் பெரிதும் பாராட்டப்பட்டது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-09T13:03:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[அடுத்தடுத்து பரபரப்பை ஏற்படுத்திய சிறைச்சாலைகள் விவகாரம்.. முக்கிய பொறுப்பேற்கும் அதிகாரி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/senaka-pallethenna-new-prison-media-spokesperson-1786279108"></link>
            <id>https://tamilwin.com/article/senaka-pallethenna-new-prison-media-spokesperson-1786279108</id>
            <summary type="text">சிறைச்சாலைகள் ஆணையாளர் செனக பல்லெதென்ன, சிறைச்சாலைத் திணைக்களத்தின் புதிய ஊடகப் பேச்சாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நியமனம் இன்று (09) முதல் நடை...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிறைச்சாலைகள் ஆணையாளர் செனக பல்லெதென்ன, சிறைச்சாலைத் திணைக்களத்தின் புதிய ஊடகப் பேச்சாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
</p><p>
இந்த நியமனம் இன்று (09) முதல் நடைமுறைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p>
இவர் இதற்கு முன்னர் மஹர சிறைச்சாலைகளின் கண்காணிப்பாளராகவும் பயிற்சி பணிப்பாளராகவும் பணியாற்றியுள்ளார்.</p><h2>கல்வித் தகைமை&nbsp;</h2><p>

செனக பல்லெதென்ன, காலி ரிச்மண்ட் கல்லூரியின் முன்னாள் மாணவர் ஆவார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ffdd2cb7-b6bf-4ede-be36-bb74e39558b0/26-6a7878ad195fd.webp' /></p><p> </p><p>கொழும்புப் பல்கலைக்கழகத்தில் போதைப்பொருள் துஷ்பிரயோகம் குறித்த பட்டயப் படிப்பையும் அவர் நிறைவு செய்துள்ளார்.</p><p>

அவர் இந்தியாவின் கேரளாவில் சீர்திருத்தம் மற்றும் சீர்திருத்த மேலாண்மை குறித்த பட்டயப் படிப்பையும், இந்தியா, தாய்லாந்து, மலேசியா, மாலத்தீவுகள் மற்றும் துருக்கி போன்ற நாடுகளில் போதைப்பொருள் துஷ்பிரயோகம் குறித்த பல பட்டயப் படிப்புகளையும் நிறைவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-09T13:01:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[12 ராசிக்கு பலம் சேர்க்கும் எண்கள் என்ன தெரியுமா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/lucky-numbers-for-each-rasi-in-tamil-1786278383"></link>
            <id>https://news.lankasri.com/article/lucky-numbers-for-each-rasi-in-tamil-1786278383</id>
            <summary type="text">&amp;nbsp;Lucky Numbers for Each Rasi-&amp;nbsp;எண் கணிதம் என்பது எண்களின் மூலம் ஒருவருடைய எதிர்காலத்தை கணிக்கும் ஒரு முறை ஆகும்.
ஜோதிட மற்றும் எண் கணிதத்தின...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;Lucky Numbers for Each Rasi-&nbsp;எண் கணிதம் என்பது எண்களின் மூலம் ஒருவருடைய எதிர்காலத்தை கணிக்கும் ஒரு முறை ஆகும்.
</p><p>ஜோதிட மற்றும் எண் கணிதத்தின்படி, ஒவ்வொரு ராசிக்கும் அதன் அதிபதி கிரகத்தின் அடிப்படையில் ஒரு குறிப்பிட்ட பலமும் அதிர்ஷ்டமும் தரும் எண்கள் உள்ளன. </p><p>

இந்த எண்கள் ஒருவரின் வாழ்க்கையில் நேர்மறையான ஆற்றலை அதிகரிக்கவும், வெற்றிக்கு உதவவும் வழிவகுக்கும்.</p><p> 

பிறந்த தேதி, பெயரை கொண்டு ஒருவருடைய அதிர்ஷ்ட எண்களை கண்டறிந்து, அதன் மூலம் அவர்களின் குணாதிசயங்கள் போன்றவற்றை பற்றி தெரிந்து கொள்வது எண் கணிதம் ஆகும்.
</p><p>
எண் கணிதத்தில், ஒன்று முதல் ஒன்பது வரையிலான எண்கள் முக்கியமாகக் கருதப்படுகின்றன. ஏனெனில் மற்ற எண்கள் அவற்றின் கூட்டுத்தொகையாகக் குறைக்கப்படுகின்றன.</p><p>

அந்தவகையில், 12 ராசிக்கு பலம் சேர்க்கும் எண்கள் என்ன என்பது குறித்து டாக்டர் மஹா தன் சேகர் ராஜா
 இக்காணொளியில் பகிர்ந்துள்ளார்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/1M9Febmp4Bk" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p>
&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-09T13:00:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறைச்சாலை திணைக்களத்திற்கு புதிய ஊடகப் பேச்சாளர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/new-media-spokesperson-department-of-prisons-1786279125"></link>
            <id>https://jvpnews.com/article/new-media-spokesperson-department-of-prisons-1786279125</id>
            <summary type="text">சிறைச்சாலை திணைக்களத்தின் புதிய ஊடகப் பேச்சாளராக சேனக பல்லேதென்ன (Senaka Palletenna) நியமிக்கப்பட்டுள்ளார்.இன்றைய தினம் (09) முதல் நடைமுறைக்கு வரும் வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிறைச்சாலை திணைக்களத்தின் புதிய ஊடகப் பேச்சாளராக சேனக பல்லேதென்ன (Senaka Palletenna) நியமிக்கப்பட்டுள்ளார்.</p><p>இன்றைய தினம் (09) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அவருக்கு ஊடகப் பேச்சாளராக நியமனம் வழங்கப்பட்டுள்ளது.</p><p>பல்லேதென்ன இதற்கு முன்னர் மஹர சிறைச்சாலையின் கண்காணிப்பாளராகவும், சிறைச்சாலை திணைக்களத்தின் பயிற்சி பணிப்பாளராகவும் சேவையாற்றியுள்ளார்.</p><p>காலி ரிச்மண்ட் கல்லூரியின் பழைய மாணவரான இவர், கொழும்பு பல்கலைக்கழகத்தில் போதைப்பொருள் துஷ்பிரயோகம் குறித்தடிப்ளோமாவை பூர்த்தி செய்துள்ளார்.</p><p>மேலும், இந்தியாவின் கேரளாவில் திருத்தம் மற்றும் புனர்வாழ்வு மேலாண்மை குறித்த டிப்ளோமாவையும் முடித்துள்ளார். இந்தியா, தாய்லாந்து, மலேசியா, மாலைதீவு மற்றும் துருக்கி உள்ளிட்ட பல நாடுகளில் போதைப்பொருள் துஷ்பிரயோகம் தொடர்பான பல டிப்ளோமாக்களையும் அவர் மேற்கொண்டுள்ளார்.</p><p>அவரது கல்வி மற்றும் தொழில்சார் அனுபவமானது, போதைப்பொருள் துஷ்பிரயோகத்தைத் தடுத்தல், புனர்வாழ்வு மற்றும் திருத்த மேலாண்மை தொடர்பான பரந்த பயிற்சியைக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-09T13:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானியாவில் சில இடங்களில் Meta ஸ்மார்ட் கண்ணாடிகளுக்கு தடை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/uk-bans-meta-smart-glasses-over-privacy-1786279652"></link>
            <id>https://news.lankasri.com/article/uk-bans-meta-smart-glasses-over-privacy-1786279652</id>
            <summary type="text">UK Bans Meta Smart Glasses: பிரித்தானியாவில் சில பொது இடங்களில் Meta ஸ்மார்ட் கண்ணாடிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஸ்மார்ட் கண்ணாடிகளுக்கு தடைபிரி...</summary>
            <content type="html"><![CDATA[<p>UK Bans Meta Smart Glasses: பிரித்தானியாவில் சில பொது இடங்களில் Meta ஸ்மார்ட் கண்ணாடிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
</p><h2>ஸ்மார்ட் கண்ணாடிகளுக்கு தடை</h2><p>பிரித்தானியாவின் பல்வேறு உயர்தர உணவகங்கள், பிரபல பப்கள் மற்றும் முக்கிய திரையரங்குகள், Meta நிறுவனத்தின் ஸ்மார்ட் கண்ணாடிகளை தடை செய்துள்ளன.</p><p>

காரணம், இந்த கண்ணாடிகளில் உள்ள கமெரா (Camera) மற்றும் மைக் (Microphone) மூலம், வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்களை அவர்களுக்குத் தெரியாமல் பதிவு செய்யும் அபாயம் உள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a3ef0a88-2567-4498-b387-59c29ecdeb0f/26-6a7879779767e.webp' /></p><p>இந்த AI தொழில்நுட்ப கண்ணாடிகள் சாதாரண கண்ணாடிகளைப் போல தோன்றினாலும், அவற்றில் மறைமுகமாக வீடியோ பதிவு செய்யும் வசதி உள்ளது.</p><p> பிரபலங்கள், குறிப்பாக கைலி ஜென்னர் (Kylie Jenner) போன்றவர்கள் இதை விளம்பரப்படுத்தியதால், இளம் தலைமுறையில் அதிக வரவேற்பு பெற்றது.</p><p></p><p>ஆனால், லண்டனின் பிரபல உணவக உரிமையாளர் ஜெரமி கிங், “விருந்தினர்களின் தனியுரிமையை கண்ணாடி மூலம் மீற அனுமதிக்க முடியாது” என்று தெரிவித்துள்ளார்.
</p><p>
Soho House தனது “படம்பிடிக்கக் கூடாது” என்ற கடுமையான விதியை ஸ்மார்ட் கண்ணாடிகளுக்கும் பொருந்தும் என அறிவித்துள்ளது.
</p><p>
Wetherspoons பப்பின் தலைமை நிர்வாகி டிம் மார்டின், “வாடிக்கையாளர்களை அனுமதி இல்லாமல் படம் பிடிப்பது எங்கள் விதிமுறைக்கு எதிரானது. கண்ணாடிகள் கமெரா வசதியால் பொதுவான தனியுரிமையை மீறுகின்றன” என்று கூறியுள்ளார்.
</p><p></p><p>மேலும், ATG Theatres (லண்டன், எடின்பர்க், பிரிஸ்டல்), நேரடி நிகழ்ச்சிகளின் போது ஸ்மார்ட் கண்ணாடிகளை அணிந்திருந்தால், பார்வையாளர்கள் அவற்றை அகற்ற வேண்டும் என அறிவித்துள்ளது.
</p><p>
இந்த நடவடிக்கைகள், தனியுரிமை பாதுகாப்பு மற்றும் வாடிக்கையாளர்களின் நம்பிக்கை காக்கும் நோக்கில் எடுக்கப்பட்டவை.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-09T12:56:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[Skincare Tips : முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை குறைக்க எளிய இயற்கை வழிகள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/best-home-remedy-for-black-heads-from-your-face-1786278229"></link>
            <id>https://manithan.com/article/best-home-remedy-for-black-heads-from-your-face-1786278229</id>
            <summary type="text">Simple Skincare Tips : பொதுவாகவே ஆண்களாக இருந்தாலும் சரி, பெண்களாக இருந்தாலும் சரி, அனைவருக்கும் தங்களை அழகாகவும், புத்துணர்ச்சியுடனும் வைத்துக்கொள்ள ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Simple Skincare Tips : பொதுவாகவே ஆண்களாக இருந்தாலும் சரி, பெண்களாக இருந்தாலும் சரி, அனைவருக்கும் தங்களை அழகாகவும், புத்துணர்ச்சியுடனும் வைத்துக்கொள்ள வேண்டும் என்ற விருப்பம் இயல்பானதே. குறிப்பாக, பெண்கள் தங்களது சருமப் பராமரிப்பிலும் அழகை மேம்படுத்துவதிலும் அதிக அக்கறை செலுத்துகின்றனர்.
</p><p>
ஆனால் இன்றைய பரபரப்பான வாழ்க்கை முறை, அதிகரித்து வரும் சுற்றுச்சூழல் மாசுபாடு, தூசி மற்றும் அழுக்கு, போதிய தூக்கமின்மை, மன அழுத்தம், சீரற்ற உணவுப் பழக்கம் போன்ற பல காரணிகளால் சருமம் தனது இயற்கையான பொலிவை இழக்கக்கூடும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/af894a19-c08e-473e-8724-273852d8dc18/26-6a787510a6050.webp' /></p><h2>இயற்கை முறையில் சரும பொலிவு&nbsp;</h2><p> </p><p>அதுமட்டுமின்றி, சிலருக்கு சருமத்திற்கு பொருந்தாத அழகுசாதனப் பொருட்களைப் பயன்படுத்துவதாலும் பல்வேறு சருமப் பிரச்சினைகள் ஏற்படலாம்.

அவ்வாறான பிரச்சினைகளில் முகம் மற்றும் குறிப்பாக மூக்கு, கன்னம் போன்ற பகுதிகளில் காணப்படும் கரும்புள்ளிகள் (Blackheads) முக்கியமான ஒன்றாகும்.</p><p> இவை முகத்தின் தோற்றத்தை பாதிப்பதுடன், சருமம் சீரற்றதாகவும் அழுக்காகவும் தோன்றச் செய்யலாம்.

கரும்புள்ளிகள் ஏற்படுவதற்கு சருமத்தில் அதிகப்படியான எண்ணெய் சுரப்பு, இறந்த சரும செல்கள் தேங்குதல் மற்றும் சருமத் துளைகள் அடைபடுதல் போன்ற காரணிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2892b70e-1e5a-4272-bd34-477fd8a7072e/26-6a78751168cdd.webp' /></p><p>எனவே, அவற்றை அகற்றுவதற்காக கடுமையான முறைகளைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, சருமத்திற்கு ஏற்ற மென்மையான பராமரிப்பு முறைகளைப் பின்பற்றுவது முக்கியம்.
</p><p>
வீட்டிலேயே எளிதாகக் கிடைக்கக்கூடிய சில இயற்கைப் பொருட்களைப் பயன்படுத்தி சருமத்தை எவ்வாறு பராமரிக்கலாம்? கரும்புள்ளிகள் அதிகரிக்காமல் இருக்க என்னென்ன பழக்கங்களைத் தவிர்க்க வேண்டும்? மேலும், முகத்தை சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்கக் கடைப்பிடிக்க வேண்டிய எளிய வழிமுறைகள் என்ன? என்பது குறித்து இந்த காணொளியில் விரிவாக பார்க்கலாம்.</p><p><iframe width="315" height="576" src="https://www.youtube.com/embed/xALB9yyvCzM" title="முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை போக்க எளிய வழி! 💫 Simple Skincare Tips" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share" referrerpolicy="strict-origin-when-cross-origin" allowfullscreen></iframe></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-09T12:40:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[எதிர்வரும் 15ஆம் திகதிக்குப் பிறகு இலங்கையின் வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/weather-alert-in-sri-lanka-1786277635"></link>
            <id>https://tamilwin.com/article/weather-alert-in-sri-lanka-1786277635</id>
            <summary type="text">இலங்கையின் தென்மேற்குப் பகுதிகளில் நிலவும் மழையுடனான காலநிலை அடுத்த சில நாட்களுக்குத் தொடர வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வுத்துறையின் வானிலை ஆய்வாளர் ஸ்ர...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் தென்மேற்குப் பகுதிகளில் நிலவும் மழையுடனான காலநிலை அடுத்த சில நாட்களுக்குத் தொடர வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வுத்துறையின் வானிலை ஆய்வாளர் ஸ்ரீமல் ஹெரத் தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p>எதிர்வரும் 15ஆம் திகதிக்குப் பிறகு மழை படிப்படியாகக் குறையும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p> அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையைப் பாதித்துள்ள எல்நினோ நிலை அடுத்த ஆண்டு வடகிழக்குப் பருவமழை வரை தொடரலாம். இதனால், தற்போது வறண்ட வானிலையை அனுபவிக்கும் பகுதிகள் மேலும் பாதிக்கப்படும்.</p><h2>உடல் வெப்பநிலை அதிகரிக்கும் வாய்ப்பு</h2><p> </p><p>தொடர்ந்து நிலவும் வறண்ட நிலை காரணமாக, எதிர்காலத்தில் காற்றின் வேகம் குறையக்கூடும். இதனால் ஈரப்பதத்துடன் உடல் வெப்பநிலையும் மீண்டும் அதிகரிக்க அதிக வாய்ப்புள்ளது என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/246fa09b-8843-4b02-afa8-406fcb729524/26-6a7874423e8ff.webp' /></p><p>இதேவேளை தற்போது நுவரெலியா, கண்டி உள்ளிட்ட சில மாவட்டங்களில் தொடர்ச்சியாக&nbsp; மழை வீழ்ச்சி பதிவாகி வருகின்றதுடன்,&nbsp;அனுராதபுரம் மற்றும் பொலன்னறுவை உள்ளிட்ட மாவட்டங்களில் வறட்சியான காலநிலை நிலவி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-09T12:36:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் வீடு சுத்தம் செய்தவருக்கு அதிர்ச்சி ; இராணுவ அங்கியும் வெடிபொருளும்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/army-uniform-and-explosives-found-house-in-jaffna-1786268673"></link>
            <id>https://jvpnews.com/article/army-uniform-and-explosives-found-house-in-jaffna-1786268673</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் வீட்டை சுத்தம் செய்துகொண்டிருந்தபோது இராணுவத்தினர் பயன்படுத்தும் அங்கி ஒன்று கண்டெடுக்கப்பட்டுள...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் வீட்டை சுத்தம் செய்துகொண்டிருந்தபோது இராணுவத்தினர் பயன்படுத்தும் அங்கி ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.</p><p>இதையடுத்து, வீட்டின் உரிமையாளர் சம்பவம் தொடர்பில் மருதங்கேணி பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்கியுள்ளார்.</p><p>தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற மருதங்கேணி பொலிஸார் மேற்கொண்ட சோதனையில், குறித்த அங்கி இராணுவத்தினர் வெடிபொருட்களை எடுத்துச் செல்வதற்குப் பயன்படுத்தும் அங்கி எனத் தெரியவந்துள்ளது.</p><p>அந்த அங்கியில் நீண்ட காலமாக காணப்பட்ட வெடிக்கக்கூடிய பொருட்கள் இருந்தமையும் பொலிஸாரின் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.</p><p>தொடர்ந்து, நீதிமன்றத்தின் உரிய அனுமதியைப் பெற்று குறித்த வெடிபொருட்களை பாதுகாப்பாக அழிப்பதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-08-09T12:35:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது; ஈரான் விடாப்பிடி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/iran-remands-strait-of-hormuz-not-fully-reopen-1786254202"></link>
            <id>https://canadamirror.com/article/iran-remands-strait-of-hormuz-not-fully-reopen-1786254202</id>
            <summary type="text">ஹோர்முஸ் நீரிணையின் கட்டுப்பாடு தொடர்பாக ஓமானுடன் ஒப்பந்தம் எட்டப்படும் நிலையை நெருங்கியுள்ள போதிலும், அந்த நீர்வழியை மீண்டும் திறப்பதற்கு அது மட்டுமே...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹோர்முஸ் நீரிணையின் கட்டுப்பாடு தொடர்பாக ஓமானுடன் ஒப்பந்தம் எட்டப்படும் நிலையை நெருங்கியுள்ள போதிலும், அந்த நீர்வழியை மீண்டும் திறப்பதற்கு அது மட்டுமே போதுமானதாக இருக்காது என்று ஈரான் தெளிவுபடுத்தியுள்ளது.</p><p>இதற்கிடையே, அப் பகுதியில் ஈரான் மற்றொரு கப்பல் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளதாக ஐக்கிய அரபு இராஜ்ஜியம் குற்றம் சாட்டியுள்ளது.</p><p>ஹோர்முஸ் நீரிணையின் இருபுறமும் அமைந்துள்ள ஈரானும் ஓமானும் புதிய கப்பல் போக்குவரத்து பாதை குறித்த ஒப்பந்தத்தை நெருங்கியுள்ளதாக ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராச்சி தெரிவித்துள்ளார்.</p><p> இருப்பினும், நீரிணையை மீண்டும் திறப்பது அமெரிக்கா ஈரானுக்கு வழங்கும் நஷ்டஈடு உள்ளிட்ட பிற நிபந்தனைகளிலேயே தங்கியுள்ளது என்றும் அவர் வலியுறுத்தினார்.</p><p>மேலும், பழைய கப்பல் போக்குவரத்துத் திட்டம் இனி ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று எனக் குறிப்பிட்ட அவர், நிரந்தரப் பாதை குறித்த சட்ட மற்றும் தொழில்நுட்பப் பிரச்சினைகள் தீர்க்கப்படும் வரை தற்காலிகப் பாதை குறித்து ஓமானுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகக் கூறினார்.</p><p>நீரிணையின் கட்டுப்பாடு குறித்து எட்டப்படும் ஒப்பந்தம் மூலம் வழமையான எண்ணெய் போக்குவரத்து மீண்டும் தொடங்கும் என்றும், இது பெப்ரவரி 28 அன்று ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களால் தொடங்கிய மோதலை முடிவுக்குக் கொண்டுவர உதவும் என்றும் அமெரிக்க அதிகாரி ஒருவர் நம்பிக்கை தெரிவித்திருந்தார்.</p><p>உலகளாவிய எண்ணெய் மற்றும் எரிவாயு ஏற்றுமதியில் ஐந்தில் ஒரு பங்கைக் கொண்டு சென்ற இந்த முக்கிய நீர்வழியில் செல்லும் கப்பல்கள் மீதும், வளைகுடா பகுதியிலுள்ள அமெரிக்கத் தளங்கள் மீதும் ஈரான் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது. </p><p>இந்நிலையில், ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து சென்ற தனது அரசுக்குச் சொந்தமான எண்ணெய் நிறுவன தொடர்புடைய சரக்குக் கப்பல் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளதாக ஐக்கிய அரபு இராஜ்ஜியம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-08-09T12:25:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யேமனில் மூலிகை மருந்துகளால் உயிருக்கு ஆபத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/herbal-medicines-health-crisis-in-yemen-1786277745"></link>
            <id>https://canadamirror.com/article/herbal-medicines-health-crisis-in-yemen-1786277745</id>
            <summary type="text">யேமனில் நிலவும் மோதல்கள் மற்றும் சுகாதார அமைப்பின் வீழ்ச்சி காரணமாக, போதிய மருத்துவ வசதிகளின்றி இலட்சக்கணக்கான மக்கள் மாற்று மூலிகை மருத்துவங்களை நாடி...</summary>
            <content type="html"><![CDATA[<p>யேமனில் நிலவும் மோதல்கள் மற்றும் சுகாதார அமைப்பின் வீழ்ச்சி காரணமாக, போதிய மருத்துவ வசதிகளின்றி இலட்சக்கணக்கான மக்கள் மாற்று மூலிகை மருத்துவங்களை நாடிச் செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.</p><p>தாஸ் பகுதியைச் சேர்ந்த ஜலீலா என்ற பெண், தனக்கு ஏற்பட்ட கல்லீரல் புற்றுநோய்க்கு முறையான சிகிச்சை பெற முடியாமல், மூலிகை மருத்துவத்தை நாடி நோய் முற்றிய நிலையில் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p><p>யேமனில் 50 சதவீதத்திற்கும் அதிகமான மருத்துவமனைகள் இயங்காத நிலையில், போலி மூலிகை மருத்துவர்கள் மற்றும் தேன் விற்பனையாளர்கள் மக்களின் அறியாமையைப் பயன்படுத்தி வியாபாரம் செய்து வருவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.</p><p>அறிவியல் பூர்வமற்ற இத்தகைய மூலிகை சிகிச்சைகளால் நோயாளிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படுவதாக சுட்டிக்காட்டும் மருத்துவ நிபுணர்கள், அரசாங்கம் இவ்வாறான மூலிகை மையங்கள் மீது உடனடி கண்காணிப்புகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-08-09T12:25:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனவுத்திட்டங்களை கல்லால் அடிப்பது BK போன்ற எதிர்கால கனவாளர்களையும் அடிக்கும்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/reeshas-food-festival-issue-1786277201"></link>
            <id>https://ibctamil.com/article/reeshas-food-festival-issue-1786277201</id>
            <summary type="text">ஹெய்னாஸ் எனப்படும் கழுதைப்புலிகளின் மோசமான சந்தர்ப்பவாத வேட்டையாடித்தனத்தில் அல்லது திரைத்துறையில் ரஜினி நடித்த சிவாஜி என்ற படத்தில் நீ அமெரிக்காவுக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹெய்னாஸ் எனப்படும் கழுதைப்புலிகளின் மோசமான சந்தர்ப்பவாத வேட்டையாடித்தனத்தில் அல்லது திரைத்துறையில் ரஜினி நடித்த சிவாஜி என்ற படத்தில் நீ அமெரிக்காவுக்குப் போய்விடு சிவாஜி என்ற கருத்தில் எல்லாம் பலருக்கு பெரிதும் நம்பிக்கை இருப்பதில்லை. </p><p>

எனினும் அவ்வாறான நம்பிக்கையில்லாதவர்களைக் கூட சலிப்படையவும் விரக்தியையும் கொள்ள வைக்கும் வகையில் சமூக வலைத்தள வேட்டையாடிகளின் ஹெய்னாஸ் ரக வடக்கின் ஒரு நிகழ்வை மையப்படுத்திய பதிவுகளாக வருகின்றன.</p><p> அதிலும் விமர்சனங்கள் என்ற பெயரில் கிட்டியதே வாய்ப்பு என திட்டமிட்ட அவதூறுகள் வருகின்றன
</p><p>
போரால் பாதிக்கப்பட்ட வடபுலத்தில் தனது மக்களுக்காக ஒரு மனிதன் களத்தில் இறங்கி சில திட்டங்களை வகுத்து தனது நேரத்தையும் உழைப்பையும் செலவிடும் போது சமூக ஊடகத்தின் சில பக்கங்கள் அந்த மனிதரை ஹெய்னாஸ்கள் போலத் தாக்கி பிரபலமடைகின்றன
</p><p>
ஒருவருக்கு அவரது திறமைக்கும் உழைப்புக்கும் அவரது சொந்த மண்ணில் மதிப்பு கிடைப்பதற்கு ஒரு சமூகமும் அமைப்பும் வேண்டும். </p><p>ஒருகாலத்தில் அங்கு அந்த சமுகஅமைப்பு சரியாக இருந்தாலும் இப்போது அதற்குள் வேட்டையாடிகள் புகுந்து சிந்தனையோட்ட வறுமையை வெளிப்படுத்தி ....யாரிவர்? இவரால் என்ன செய்ய முடியும்….என ஒரு மனிதரை குறிவைக்கும் வெளிப்படுத்தல்களை செய்கின்றார்கள். </p><p>


இவ்வாறான சமுகத்தள வேட்டையாடிகள் சொற்ப நாட்களில் துண்டைக்காணோம் துணியை காணோம் என அகன்றுவிடக்கூடும். ஆனால் மாற்றங்களை உருவாக்கத்தலைப்படுவர்களில் பலர் கரவொலிகளை எதிர்பார்க்காமல் எதிர்ப்புகளைக் கடந்து முன்னேறும் முகங்களாக தொடரககூடும். </p><p>இந்த முகங்களில் றீச்சா BK யும் ஒருவராக இருக்கவேண்டும்.

ஒரு தலைமுறையின் வாழ்க்கையையே மாற்றிவிடும் சில திட்டங்கள் காயப்படக்கூடாதென்பதால் இயக்கச்சியில் இருப்பதற்கு பதிலாக நெதர்லாந்துக்கு சென்று உங்கள் திறமையைப் பயன்படுத்திக்கொளளுங்கள்; என சிவாஜி பட விவேக் பாணியில் விரக்தி ஆலோசனைக்கு இங்கு பரிந்துரைகள் கூடாது.
</p><p>
பல வருடங்களுக்கு முன்னர் இலங்கையை மாற்ற முடியவில்லை என்பதால் அந்த நாட்டை விட்டு வெளியேறிய ஏதிலிகளின் அடுத்தகட்டம் இப்போது அதே நாட்டுக்கு திரும்பி அங்கு ஒரு மாற்றத்துக்கு முயற்சி செய்யும் போது அவ்வாறான முயற்சிகளை நோக்கமும் தரமும் அறமும் அற்ற கீழ்நிலையில் விமர்சனங்களால் அடிப்பது அபத்தம் </p><p>

உணவுத்திருவிழாவில் நடந்த சம்பவங்கள் போல இனிமேல் இடம்பெறக்கூடாதென கரிசனை கொள்வது இயல்பானது. திடீர் நெருக்கடிகள் தான் புதிய பாடங்களை தருவது.</p><p> ஆனால் இந்த நெருக்கடிகளுக்குரிய பொறுப்புக்கூறல் மேற்கொள்ளப்பட்ட பின்னர் அவற்றை கேலி செய்வது அவதூறு செய்வது தனிப்பட்ட தாக்குதலை நடத்தும் கலவைகள் தான் இங்கு நாசகாரம்.</p><p> 

ஒரு திட்டத்தை விமர்சிப்பதற்கு உரிமை உள்ளதுபோலவே ஒரு திட்டத்தை உருவாக்கியவருக்கும் அதுகுறித்த சில கனவுகளை கண்டு அதனை நடைமுறைப்படுத்துவது குறித்த காணும் உரிமையும் இருக்கிறது. </p><p>ஆனால் கனவுத்திட்டங்களை கொண்டிருப்பவர்களை ஒவ்வொரு முறையும் கல்லால் அடித்துக்கொண்டிருந்தால் நாளை றீச்சா போல கனவு காண முன்வருபவர்கள் குறைந்து விடுவார்கள். </p><p>இது நல்ல முயற்சிகளையும் நிராகரித்து ஒரு சமூகத்தின் வளர்ச்சிக்கு ஆபத்தான குழியையும் பறித்துவிடும். </p><p>

BK இன் உணவுத்திருவிழாவை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. ஆனால் அதற்காக அவர் எடுத்த முயற்சியை நேர்மையாக மதிப்பிடாமல் கொச்சைப்படுத்த முடியாது. அதற்கான பொறுப்பு சமூகவலைத்தள வேட்டையாடிகளுக்கும் உள்ளது&nbsp; &nbsp;</p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p> &nbsp;</p>]]></content>
            <updated>2026-08-09T12:24:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[மூன்றாவது முறையாக நேரடியாக..உலகக்கிண்ண வாய்ப்பை இழந்த மேற்கிந்திய தீவுகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/west-indies-not-direct-qualify-for-world-cup-2027-1786278239"></link>
            <id>https://news.lankasri.com/article/west-indies-not-direct-qualify-for-world-cup-2027-1786278239</id>
            <summary type="text">2027 ஒருநாள் உலகக்கிண்ண தொடரில் பங்கேற்கும் நேரடி வாய்ப்பை மேற்கிந்திய தீவுகள் இழந்தது.

மேற்கிந்திய தீவுகள் அணி 2027 உலகக்கிண்ண தொடரில் நேரடியாக தக...</summary>
            <content type="html"><![CDATA[<p>2027 ஒருநாள் உலகக்கிண்ண தொடரில் பங்கேற்கும் நேரடி வாய்ப்பை மேற்கிந்திய தீவுகள் இழந்தது.
</p><p>
மேற்கிந்திய தீவுகள் அணி 2027 உலகக்கிண்ண தொடரில் நேரடியாக தகுதிபெறும் வாய்ப்பை மூன்றாவது முறையாக இழந்துள்ளது.&nbsp;</p><h2>மேற்கிந்திய தீவுகள்&nbsp;</h2><p>
ஒருநாள் உலகக்கிண்ணக் கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே மற்றும் நமீபியாவில் நடைபெற உள்ளது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2eb4ec60-ba82-4958-8c82-8b305226d766/26-6a787162d5ace.webp' /></p><p></p><p>
இந்த தொடரில் நேரடியாக தகுதி பெறும் வாய்ப்பினை மேற்கிந்திய தீவுகள் அணி இழந்துள்ளது.
</p><p>
ஆப்கானிஸ்தான் அணி புள்ளிகள் அடிப்படையில் நேரடியாக தகுதி பெறுவதற்கு கடைசியாக இருந்த இடத்தைப் பிடித்தது. </p><h2>

மூன்றாவது முறையாக </h2><p>மேற்கிந்திய தீவுகள் அணி 2019, 2023 தொடர்களில் நேரடியாக தகுதி பெறும் வாய்ப்பை இழந்திருந்தது.
</p><p>
இதனால் தொடர்ந்து மூன்றாவது முறையாக குவாலிஃபயர் சுற்று விளையாட வேண்டிய நிலைக்கு மேற்கிந்திய தீவுகள் தள்ளப்பட்டுள்ளது.
</p><p>
1975 மற்றும் 1979-ஆம் ஆண்டுகளில் ஒருநாள் உலகக்கிண்ணத்தை வென்ற முன்னாள் சாம்பியனான மேற்கிந்திய தீவுகள், மூன்றாவது முறையாக நேரடியாக தகுதி பெறும் வாய்ப்பை இழந்தது ரசிகர்களுக்கு கவலையளித்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a7dbe3d5-2294-4bd5-a72e-dc47b5616ad9/26-6a7871622f71b.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-09T12:21:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[சீனாவை அச்சுறுத்தும் டொல்பின் சூறாவளி: ஆயிரத்திற்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/typhoon-dolphin-threatens-china-flights-cancelled-1786275548"></link>
            <id>https://tamilwin.com/article/typhoon-dolphin-threatens-china-flights-cancelled-1786275548</id>
            <summary type="text">சீனாவின் கிழக்குக் கரையை &#039;டொல்பின்&#039; சூறாவளி தாக்கவுள்ள நிலையில், அங்கு
1,600க்கும் மேற்பட்ட விமானச் சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதுடன், சுமார்
ஐந்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>சீனாவின் கிழக்குக் கரையை 'டொல்பின்' சூறாவளி தாக்கவுள்ள நிலையில், அங்கு
1,600க்கும் மேற்பட்ட விமானச் சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதுடன், சுமார்
ஐந்து இலட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
</p><p>
சூறாவளியின் தாக்கம் தீவிரமடைந்துள்ளதைத் தொடர்ந்து, நாட்டின் தேசிய வானிலை
மையம் ஞாயிற்றுக்கிழமை காலையில் மிகக் கடுமையான 'சிவப்பு எச்சரிக்கை'
அறிவிப்பை விடுத்துள்ளது.
</p><p>
அதிக மக்கள் தொகை கொண்ட கிழக்குக் கடலோரப் பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய
கனமழை பெய்யக்கூடும் என்பதால் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவுகள்
ஏற்படக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>விமானச் சேவை இரத்து</h2><p>
</p><p>
சீனாவின் ஷங்காய் நகரின் முக்கிய விமான நிலையங்களில் 1,400க்கும் மேற்பட்ட
விமானச் சேவைகளும், ஹொங்சோ விமான நிலையத்தில் 270க்கும் மேற்பட்ட விமானச்
சேவைகளும் இரத்து செய்யப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b9b7431d-bbea-4bfc-bfb1-5d0776167c48/26-6a786ec4d930f.webp' /></p><p> </p><p>அத்துடன், ஜெஜியாங் மற்றும் ஃபூஜியான்
மாகாணங்களில் 200க்கும் மேற்பட்ட படகுச் சேவைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளன.</p><p>

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜெஜியாங் மாகாணத்தின் தாய்சோ நகரில் இருந்து
சுமார் 3,90000 மக்களும், ஷங்காய் மற்றும் ஃபூஜியான் மாகாணங்களின் ஆபத்தான
பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மக்களும் பாதுகாப்பாக
வெளியேற்றப்பட்டுள்ளனர்.</p><p>

சூறாவளி ஞாயிற்றுக்கிழமை இரவு அல்லது திங்கட்கிழமையளவில் மணிக்கு 162
கிலோமீற்றர் வேகத்தில் வீசும் பலத்த காற்றுடன் சீனக் கரையை அடையும் என
எதிர்பார்க்கப்படுகின்றது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-09T12:13:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலகை வியக்க வைத்த நைஜீரியா ;1,500 தம்பதிகளுக்குத் திருமணம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/nigeria-amazes-world-1-500-couples-married-1786277373"></link>
            <id>https://canadamirror.com/article/nigeria-amazes-world-1-500-couples-married-1786277373</id>
            <summary type="text">வடக்கு நைஜீரியாவின் கனோ மாநில ஆளுநர் அப்பா கபீர் யூசுப் ஏற்பாடு செய்திருந்த கூட்டுத் திருமண விழாவில் சுமார் 1,500 தம்பதிகள் திருமணம் செய்துகொண்டனர் .க...</summary>
            <content type="html"><![CDATA[<p>வடக்கு நைஜீரியாவின் கனோ மாநில ஆளுநர் அப்பா கபீர் யூசுப் ஏற்பாடு செய்திருந்த கூட்டுத் திருமண விழாவில் சுமார் 1,500 தம்பதிகள் திருமணம் செய்துகொண்டனர் .</p><p>குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு ஆதரவளிப்பதற்கும் சமூக நிலைத்தன்மையை மேம்படுத்துவதற்கும் இந்த இரண்டு நாள் நிகழ்வு ஒரு வழி என பிராந்திய அரசாங்கம் விவரித்தது.</p><p>பொருளாதார ரீதியாக நிலையற்ற நிலையில் உள்ள எங்கள் குடும்பங்களுக்கும், கணவன்மார்களாகிய எங்களுக்கும் திருமணம் செய்துகொள்ள உதவுவதே இந்தத் திருமணத்தின் முழு நோக்கமாகும். அதனால்தான் அரசாங்கம் எங்களுக்குத் திருமணம் செய்து வைக்க உதவுகிறது என்று மணமகன் அபுபக்கர் அலியு மூசா அசோசியேட்டட் பிரஸ்ஸிடம் தெரிவித்தார்.</p><p>யூசுப் நிர்வாகம் கூட்டுத் திருமணத்தை ஏற்பாடு செய்வது இது இரண்டாவது முறையாகும்.கானோவின் பிராந்திய அரசாங்கத்தின்படி, ஒவ்வொரு மணமகளுக்கும் 200,000 நைரா (147 டாலர், 127 யூரோ) வரதட்சணையாகவும், ஒரு சிறு தொழிலைத் தொடங்குவதற்கான ஆதரவும் வழங்கப்பட்டது.</p><p>தம்பதியினருக்கு படுக்கைகள், மெத்தைகள் மற்றும் போர்வைகள் உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருட்களும் வழங்கப்பட்டன. திருமணத்திற்கு முன்பு தம்பதியினர் பரிசோதனை மற்றும் ஆலோசனைக்கு உட்படுத்தப்பட்டனர்.</p><p>கானோவில் நம்பிக்கையை மீட்டெடுப்பதையும், கண்ணியமான குடும்ப வாழ்க்கையை ஆதரிப்பதையும் நோக்கமாகக் கொண்ட ஒரு துணிச்சலான சமூகத் தலையீடு" என இந்தத் திட்டத்தை ஆளுநர் யூசுப் விவரித்தார்.</p><p>திருமணச் செலவைச் சமாளிக்க சிரமப்படும் பெண்களுக்கு உதவுவதற்காக மட்டுமல்லாமல், குடும்பங்களை வலுப்படுத்தவும், மாநிலத்தில் சமூக நிலைத்தன்மையை மேம்படுத்தவும் இந்தத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.</p>]]></content>
            <updated>2026-08-09T12:09:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாட்டு ஊழியர்களிடமிருந்து பெறப்பட்ட மொத்தப் பணப்பரிமாற்றத்தில் ஏற்பட்ட மாற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/remittances-from-foreign-workers-exceed-5-billion-1786275675"></link>
            <id>https://tamilwin.com/article/remittances-from-foreign-workers-exceed-5-billion-1786275675</id>
            <summary type="text">2026ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஜூலை வரையிலான காலப்பகுதியில் வெளிநாட்டு ஊழியர்களிடமிருந்து பெறப்பட்ட மொத்தப் பணப்பரிமாற்றம் 5000 மில்லியன் அமெரிக்க டொலர்களை...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஜூலை வரையிலான காலப்பகுதியில் வெளிநாட்டு ஊழியர்களிடமிருந்து பெறப்பட்ட மொத்தப் பணப்பரிமாற்றம் 5000 மில்லியன் அமெரிக்க டொலர்களைக் கடந்துள்ளது.</p><p>இலங்கை மத்திய வங்கியின் அறிக்கை மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது.</p><h2>மொத்த வெளிநாட்டுப் பணப்பரிமாற்றம்</h2><p>அந்த வகையில் ஆண்டின் குறித்த காலப்பகுதியில் பதிவாகியுள்ள மொத்த வெளிநாட்டுப் பணப்பரிமாற்றம் 5,382.4 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/65e341d8-0fb9-437a-be0e-9187bdeccc5f/26-6a786acf7b050.webp' /></p><p> </p><p>

இது கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் வளர்ச்சியைக் காட்டுகின்றது. கடந்த ஆண்டின் ஜனவரி முதல் ஜூலை வரையிலான காலப்பகுதியில் 4,435.2 மில்லியன் அமெரிக்க டொலர்களே பதிவாகியிருந்தன. </p><p>

இதன்படி, கடந்த ஆண்டின் முதல் 7 மாதங்களுடன் ஒப்பிடுகையில் இவ்வருடத்தின் அதே காலப்பகுதியில் பெறப்பட்ட வெளிநாட்டுப் பணப்பரிமாற்றம் 947.2 மில்லியன் அமெரிக்க டொலர்களால் அதிகரித்துள்ளது.</p><h2>வளர்ச்சி போக்கு</h2><p> </p><p>

இதேவேளை, ஜூலை மாதத்தில் மட்டும் நாட்டிற்குப் பெறப்பட்ட மொத்த வெளிநாட்டுப் பணப்பரிமாற்றம் 777.6 மில்லியன் அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9ca5b2a2-6636-4fa7-b4b6-373d64bedf37/26-6a786ad0437fe.webp' /></p><p> </p><p>

இது கடந்த ஜூன் மாதம் பெறப்பட்ட வெளிநாட்டுப் பணப்பரிமாற்றத்துடன் ஒப்பிடுகையில் ஒரு சிறிய வளர்ச்சியைக் காட்டுகிறது. ஜூன் மாதத்தில் நாட்டிற்குப் பெறப்பட்ட வெளிநாட்டுப் பணப்பரிமாற்றம் 697.3 மில்லியன் அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியிருந்தது. </p><p>

இதற்கமைய, ஜூன் மாதத்துடன் ஒப்பிடுகையில் ஜூலை மாதத்தில் 80.3 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வளர்ச்சியைக் காட்டி, ஜூலை மாதத்தில் 777.6 மில்லியன் டொலர்கள் பதிவாகியுள்ளன.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-09T11:56:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[போதைப்பொருள் விற்பனை; அரசியல்வாதியும் மனைவியும் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/drug-trafficking-politician-and-wife-arrested-1786272438"></link>
            <id>https://jvpnews.com/article/drug-trafficking-politician-and-wife-arrested-1786272438</id>
            <summary type="text">ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொலன்னறுவை, மெதிரிகிரிய தேர்தல் தொகுதியின் தலைவரும் அவரது மனைவியும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.ஐஸ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொலன்னறுவை, மெதிரிகிரிய தேர்தல் தொகுதியின் தலைவரும் அவரது மனைவியும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருளை கடத்திய குற்றச்சாட்டில் இவர்கள் இருவரும் ஹிங்குரகொட பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>கைது செய்யப்பட்டபோது, ​​சந்தேகநபர்களிடமிருந்து 15 கிராம் ஐஸ் மற்றும் 12 மில்லிகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.</p><p>இரு சந்தேகநபர்களும் ஹிங்குராங்கொட நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட்ட பின்னர், சந்தேகநபரின் மனைவி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.</p><p>மேலும், சந்தேகநபர்களிடம் விரிவாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.&nbsp;</p><div><br></div>]]></content>
            <updated>2026-08-09T11:49:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[நூலிழையில் உயிர்தப்பிய பயணிகள்.. நேருக்கு நேர் சென்ற இரு பாரிய விமானங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/jetstar-qatar-airways-planes-sydney-airport-1786258329"></link>
            <id>https://tamilwin.com/article/jetstar-qatar-airways-planes-sydney-airport-1786258329</id>
            <summary type="text">சிட்னி விமான நிலையத்தில் இன்று காலை ஜெட்ஸ்டார் பயணிகள் விமானமும் கட்டார் ஏர்வேஸ் விமானமும் மோதிக்கொள்ளும் அபாயத்திலிருந்து நூலிழையில் தப்பியுள்ளன. இச்...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிட்னி விமான நிலையத்தில் இன்று காலை ஜெட்ஸ்டார் பயணிகள் விமானமும் கட்டார் ஏர்வேஸ் விமானமும் மோதிக்கொள்ளும் அபாயத்திலிருந்து நூலிழையில் தப்பியுள்ளன. </p><p>இச்சம்பவம் குறித்து அவுஸ்திரேலிய விமானப் போக்குவரத்து பாதுகாப்பு அதிகாரசபை விசாரணைகளைத் தொடங்கியுள்ளது.
</p><p>
காலை 7 மணியளவில் கோல்ட் கோஸ்ட் நோக்கிய திட்டமிடப்பட்ட விமானப் பயணத்திற்காக ஜெட்ஸ்டார் ஏர்பஸ் ஏ320 ரக விமானம் ஓடுபாதையில் சென்று கொண்டிருந்தபோது, இழுவை ஊர்தியால் இழுத்துச் செல்லப்பட்ட கட்டார் ஏர்வேஸ் போயிங் 777 விமானத்தை நேராக சந்தித்துள்ளது.</p><h2>உடனடி நிறுத்தம்..&nbsp;</h2><p>

அவுஸ்திரேலிய போக்குவரத்து பாதுகாப்புப் பணியகத்தின் (ATSB) தகவலின்படி, இரண்டு விமானங்களும் உடனடியாக அவசரமாக நிறுத்தப்பட்டன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1b120a35-b986-4f4f-8069-fb1ab0dfa88e/26-6a7867b1a9543.webp' /></p><p>
</p><p>
இந்தச் சம்பவத்தின் போது ஜெட்ஸ்டார் விமானத்தின் பணிப்பெண் ஒருவர் காயமடைந்துள்ளதுடன், பயணிகள் எவருக்கும் காயம் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr">A Jetstar Airbus A320 and a Qatar Airways Boeing 777 narrowly avoided a collision during ground operations at Sydney Airport at around 07:00 local time this morning.<br><br>The Jetstar A320, operating flight JQ402 to the Gold Coast, was taxiing under its own power toward the runway for… <a href="https://t.co/JwGURCZGIO">pic.twitter.com/JwGURCZGIO</a></p>&mdash; Turbine Traveller (@Turbinetraveler) <a href="https://x.com/Turbinetraveler/status/2086351156075208794?ref_src=twsrc%5Etfw">August 9, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p> </p><p>மேலும் கட்டார் ஏர்வேஸ் விமானத்தின் முன்பக்க சக்கரத்திற்கும், அதை இழுத்துச் சென்ற ஊர்திக்கும் இடையிலான இணைப்பிலும் சேதம் ஏற்பட்டுள்ளது.</p><p>

விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டுப் பிரிவின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றியே தமது விமானம் பயணித்ததாகவும், மற்றொரு விமானம் மிக அருகில் வந்ததால் விமானிகள் அவசரமாக பிரேக் பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் ஜெட்ஸ்டார் நிறுவனம் தெரிவித்துள்ளது.</p><p></p><h2>தடுக்கப்பட்ட விபத்து&nbsp;</h2><p>
</p><p>
இதனைத் தொடர்ந்து குறித்த ஜெட்ஸ்டார் விமானப் பயணம் இரத்து செய்யப்பட்டு, பயணிகள் பிந்தைய விமானச் சேவைகளுக்கு மாற்றப்பட்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5bf33c43-ad5c-4ffc-815d-adc0ea52292d/26-6a7867b25ff85.webp' /></p><p>
</p><p>
அவுஸ்திரேலிய போக்குவரத்து பாதுகாப்புப் பணியகம் (ATSB) இது தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன், விமானப் ஊழியர்கள், இழுவை ஊர்தி ஓட்டுநர்கள், விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள் மற்றும் இதர சாட்சிகளிடம் விசாரணைகளை நடத்தவுள்ளதோடல்லாமல் காட்சிகளையும் ஆய்வு செய்யவுள்ளது.
</p><p>
சிட்னி விமான நிலையத்தில் சமீப நாட்களாக நிலவிவரும் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு ஊழியர்களின் பற்றாக்குறையினால் கடுமையான தாமதங்கள் ஏற்பட்டு வரும் பின்னணியிலேயே இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. </p><p>மேலும், கடந்த ஜூலை 27 ஆம் திகதியும் இதே விமான நிலையத்தில் குவாண்டாஸ் நிறுவனத்தின் இரண்டு விமானங்கள் மோதும் அபாயத்திலிருந்து தப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-09T11:46:39+00:00</updated>
        </entry>
    </feed>
