<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-08-12T16:30:43+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ட்ரம்ப்பிற்கு எதிராக நெதன்யாகு எடுத்துள்ள அதிரடி முடிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/netanyahu-s-bold-move-against-trump-for-gaza-1786512036"></link>
            <id>https://canadamirror.com/article/netanyahu-s-bold-move-against-trump-for-gaza-1786512036</id>
            <summary type="text">இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, தனது உள்நாட்டு அரசியல் எதிர்காலத்தைப் பாதுகாத்துக் கொள்வதற்காக டொனால்ட் ட்ரம்ப்பை எதிர்க்கத் தயாராக இருப்பதாக ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, தனது உள்நாட்டு அரசியல் எதிர்காலத்தைப் பாதுகாத்துக் கொள்வதற்காக டொனால்ட் ட்ரம்ப்பை எதிர்க்கத் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளமை உகல நாடுகளில் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><p>இத் தகவலை சவூதி அரேபியாவுக்கான முன்னாள் அமெரிக்கத் தூதரும் இஸ்ரேலுக்கான அமெரிக்கத் தூதரகத்தின் சார்ஜ் டி அஃபேர்ஸாகப் பணியாற்றியவருமான மைக்கேல் ராட்னி தெரிவித்துள்ளார்.</p><p>ட்ரம்ப்பிடமிருந்து எத்தகைய எதிர்வினை வந்தாலும் அதை எதிர்கொள்வதை விட, அத்திட்டத்தைப் பகிரங்கமாக நிராகரிப்பதே தனக்கு நல்லது என்று அவர் கணக்கிடுகிறார் என நான் நினைக்கிறேன் என்று ராட்னி தெரிவித்துள்ளார்.</p><p>இது முதன்மையாக அடுத்த சில மாதங்களில் வரவுள்ள நெதன்யாகுவின் தேர்தல் வாய்ப்புகள் பற்றியது என்று அவர் மேலும் கூறினார்.</p><p>ட்ரம்ப்புடன் அவருக்குள்ள உறவு எப்படியிருந்தது அல்லது இந்தத் திட்டத்தின் சில அம்சங்களை அவர் எந்த அளவுக்கு ஏற்றுக்கொள்வார் என்பதெல்லாம் இரண்டாம் பட்சமான விடயங்கள் என்றும் தனது வாக்காளர்களுக்கு அவர் பொதுவெளியில் என்ன சொல்கிறார் என்பதுதான் அவருக்கு இப்போது முக்கியம் என்றும் ராட்னி தெரிவித்துள்ளார்.</p><p><br></p>]]></content>
            <updated>2026-08-12T16:18:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இம்ரான்கான் உயிருடன் இல்லையா? பாகிஸ்தானில் பரபரப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/is-imran-khan-no-longer-alive-sensation-pakistan-1786539174"></link>
            <id>https://jvpnews.com/article/is-imran-khan-no-longer-alive-sensation-pakistan-1786539174</id>
            <summary type="text">பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் உயிருடன் இல்லை என மூன்று மூத்த இராணுவ அதிகாரிகள் தமக்குத் தெரிவித்ததாக பாகிஸ்தான் பத்திரிகையாளர் வஜாஹத் சயீத் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் உயிருடன் இல்லை என மூன்று மூத்த இராணுவ அதிகாரிகள் தமக்குத் தெரிவித்ததாக பாகிஸ்தான் பத்திரிகையாளர் வஜாஹத் சயீத் கான் கூறியுள்ளமை&nbsp; பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><p>&nbsp;2023ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் இம்ரான் கான் கைது செய்யப்பட்டு, தற்போது அடியாலா சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில், அவரைச் சந்திக்க குடும்பத்தினருக்கும் ஆதரவாளர்களுக்கும் அனுமதி மறுக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.</p><p>இந்த நிலையில், “இம்ரான்கான் நம்முடன் இல்லை; அவர் சிறையில் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை” என மூன்று மூத்த இராணுவ அதிகாரிகள் தம்மிடம் தெரிவித்ததாக வஜாஹத் சயீத் கான் தெரிவித்துள்ளார். எனினும், இது தற்போது உறுதிப்படுத்தப்படாத தகவலாகவே உள்ளது.</p><p>அதேசமயம், பாகிஸ்தான் இராணுவம் இம்ரான்கான் உயிரிழந்ததாக வெளியான தகவல்களை மறுத்து, அவை ஆதாரமற்றவை எனத் தெரிவித்துள்ளது.</p><p>இம்ரான்கானை விடுதலை செய்யக் கோரி அவரது பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் கட்சி ஆதரவாளர்கள் போராட்டங்களை முன்னெடுத்து வரும் நிலையில், இந்த புதிய தகவல்&nbsp; அங்கு மேலும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-12T16:18:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயது ; ஜனாதிபதி அநுரவுடன் சட்டத்தரணிகள் சங்கம் முக்கிய சந்திப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/retirement-age-of-judges-important-meeting-anura-1786551391"></link>
            <id>https://jvpnews.com/article/retirement-age-of-judges-important-meeting-anura-1786551391</id>
            <summary type="text">ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திற்கும் இடையிலான சந்திப்பு இன்று (12) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திற்கும் இடையிலான சந்திப்பு இன்று (12) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. </p><p>

சுமார் ஒரு மணித்தியாலத்திற்கும் மேலாக வெற்றிகரமாக நடைபெற்ற இக்கலந்துரையாடலில், நீதிபதிகளின் ஓய்வூதிய வயதெல்லையை நீடிப்பது தொடர்பான 22 ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டதுடன், அது குறித்து இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் கருத்துகளும் ஆலோசனைகளும் இங்கு முன்வைக்கப்பட்டன.</p><p></p><p> </p><p>

இங்கு முன்வைக்கப்பட்ட அனைத்துக் கருத்துகள் குறித்தும் கவனம் செலுத்திய ஜனாதிபதி, அது தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு மற்றும் நீதிமன்றக் கட்டமைப்பின் மேம்பாட்டிற்காக அரசாங்கம் திட்டமிட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் விளக்கமளித்தார்.</p><p> 

நீதியை நிலைநாட்டும் செயற்பாடானது நீதிமன்றங்களால் மாத்திரம் இடம்பெறுவதில்லை என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அது விசாரணைகள், வழக்குத் தாக்கல், நீதிமன்றம் ஆகிய அனைத்துத் துறைகளையும் உள்ளடக்கிய ஒருங்கிணைந்த செயற்பாடாகும் என்றும், அதன்படி, அந்த செயற்பாடுகளை வலுப்படுத்துவதற்காக சட்டமா அதிபர் திணைக்களம், இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழு, இலங்கை பொலிஸ் மற்றும் அரசாங்க பகுப்பாய்வாளர் திணைக்களம் ஆகிய நிறுவனங்களின் மனிதவளத்தை அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் குறிப்பிட்டார்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/04202580-a9c0-4400-a19a-eabef28ac828/26-6a7c9c619d31f.webp' /></p><p>மேலும், இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழுவின் சேவைகளை மாவட்ட மட்டத்தில் பரவலாக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும்,மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதுடன், பொதுமக்கள் எளிதில் அணுகும் வகையில் மேன்முறையீட்டு நீதிமன்ற நடவடிக்கைகளை மாகாண மட்டத்தில் நடைமுறைப்படுத்துவதற்கான உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.</p><p> 

மேலும், மக்களுக்கு நீதிமன்றச் செயற்பாடுகளை இலகுபடுத்துவதற்காக மேல்நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீதிமன்றங்களுக்குத் தேவையான பௌதிக வசதிகளை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் ஜனாதிபதி இங்கு சுட்டிக்காட்டினார்.</p><p> 

எனவே, நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயது எல்லையை நீடிப்பது தொடர்பான முடிவு எந்தவொரு நபரையும் அல்லது குழுவையும் இலக்காகக் கொண்டதல்ல, மாறாக நாட்டின் பொது நலனுக்காக எடுக்கப்பட்ட ஒரு தீர்மானமாகும் என்பதையும் ஜனாதிபதி வலியுறுத்தினார். </p><p>

இந்த சீர்திருத்தங்கள், முழுமையான கட்டமைப்புசார் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான பரந்த மறுசீரமைப்புகளின் ஒன்று மாத்திரமேயாகும் எனவும், இது தனது தனிப்பட்ட கருத்து அல்லது அரசாங்கத்தின் தனிப்பட்ட கருத்து அல்ல எனவும் ஜனாதிபதி இங்கு மேலும் சுட்டிக்காட்டினார். </p><p>

நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதுடன் நீதிபதிகளின் ஓய்வூதிய வயது எல்லையை நீடித்தல் போன்ற விடயங்கள் தொடர்பில் கொள்கை ரீதியான எதிர்ப்புகள் எதுவும் இல்லை எனத் தெரிவித்த இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் பிரதிநிதிகள், இந்தத் தீர்மானம் தொடர்பில் மேலும் ஆராய்ந்து ஏதேனுமொரு பொதுவான இணக்கப்பாட்டுக்கு வருவது பொருத்தமானது என்றும் பரி

ந்துரைத்தனர். </p><p>நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நானாயக்கார, ஜனாதிபதியின் சட்ட ஆலோசகர் சட்டத்தரணி ஜே.எம். விஜேபண்டார மற்றும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சட்டத்தரணி ரஜீவ் அமரசூரிய உட்பட அதன் சிரேஷ்ட பிரதிநிதிகள் பலர் இக்கலந்துரையாடலில் பங்கேற்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-12T16:16:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேட்டோ உச்சிமாநாட்டில் ட்ரம்ப் தங்கியிருந்த அறை வரை தகவல் திரட்டியிருந்த ஈரான்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/trump-during-nato-summit-1786551367"></link>
            <id>https://news.lankasri.com/article/trump-during-nato-summit-1786551367</id>
            <summary type="text">Iran Knew Where Trump Was Staying: துருக்கியில் நேட்டோ உச்சிமாநாட்டின்போது ட்ரம்ப் தங்கியிருந்த அறையின் தகவல் வரை ஈரான் தெரிந்து வைத்திருந்தது.
கடந்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>Iran Knew Where Trump Was Staying: துருக்கியில் நேட்டோ உச்சிமாநாட்டின்போது ட்ரம்ப் தங்கியிருந்த அறையின் தகவல் வரை ஈரான் தெரிந்து வைத்திருந்தது.
</p><p>கடந்த மாதம் துருக்கியில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ரகசியமாக விமானத்தை மாற்றிய அந்த அசாதாரண நடவடிக்கைக்கு, ஒரு தீவிரமான பாதுகாப்பு எச்சரிக்கையே காரணமாகக் கூறப்படுகிறது.</p><h2>ஏவுகணைத் தாக்குதல்</h2><p> நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தி ஒன்றில், ட்ரம்ப் பயணப்படும் விமானத்தின் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தக்கூடும் என்பது குறித்த தகவலை அமெரிக்க உளவுத்துறை அறிந்திருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/245fda99-8185-4395-992b-dd3e07703503/26-6a7c9c4a2556c.webp' /></p><p> </p><p>நேட்டோ உச்சிமாநாட்டின் இறுதி நாளான ஜூலை 8 அன்று, ட்ரம்ப் அங்காராவிலிருந்து புறப்படத் தயாராகிக்கொண்டிருந்தபோது இந்த அச்சுறுத்தல் எழுந்தது.</p><p>
அமெரிக்க ஜனாதிபதியின் உத்தியோகப்பூர்வ விமானமான 'ஏர் ஃபோர்ஸ் ஒன்' விமானத்தை இலக்கு வைக்கும் தரை-வான் ஏவுகணை தொடர்பான ஒரு குறிப்பிட்ட அச்சுறுத்தல் குறித்த பல்வேறு தகவல்களை அமெரிக்க உளவு அமைப்புகள் பெற்றிருந்ததாகவே, இந்த விவகாரம் தொடர்பில் தகவல் தெரிந்த இரு அமெரிக்க அதிகாரிகள் நியூயார்க் டைம்ஸ் நாளேடிடம் தெரிவித்துள்ளனர். </p><p>இது மட்டுமின்றி, நேட்டோ உச்சிமாநாடு நடைபெற்ற இடத்திற்கு அருகில், தோளில் வைத்து ஏவக்கூடிய ஏவுகணை ஒன்றை ஒருவர் எடுத்துச் சென்றதாகக் காணப்பட்டார் என்பது மற்றொரு கவலைக்குரிய தகவலாக இருந்தது.</p><p></p><p> </p><p>மேலும், அங்காராவில் ட்ரம்ப் எங்கு தங்கியிருந்தார் என்பது குறித்தும், அவர் தங்கியிருந்த கட்டிடத்தின் எந்தத் தளத்தில் இருந்தார் என்பது குறித்தும் ஈரானிய உளவு அமைப்புகளுக்குத் துல்லியமாகத் தெரிந்திருந்ததாக அமெரிக்க உளவுத்துறையும் நம்பியது. </p><p>இதனையடுத்து, துருக்கியிலிருந்து ஜனாதிபதியை வெளியேற்றுவதற்காக ஒரு அசாதாரணமான நடவடிக்கையை முன்னெடுக்கும் அளவுக்கு அந்தத் தகவல்கள் நம்பகமானதாகக் கருதப்பட்டது.</p><h2>ஈரானை நம்பவைக்க</h2><p> </p><p>இந்த நிலையிலேயே, ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்திலேயே தாம் புறப்பட இருப்பதாக ட்ரம்ப் வெளிப்படையாக அறிவித்ததும், ஊடகங்களின் முன்னிலையில் அவர் அந்த விமானத்தில் ஏறுவதும் ஊடகங்கள் பதிவு செய்தன. </p><p>ஆனால் உண்மையில் அது ஈரானை நம்பவைக்கும் ஒரு திட்டம். அந்த விமானமானது வெள்ளை மாளிகை அதிகாரிகள், பாதுகாப்புப் பணியாளர்கள், துணைப் பணியாளர்கள் மற்றும் பயணத்தை மேற்கொள்ளும் செய்தியாளர்கள் குழுவினர் ஆகியோருடன் குறித்த நேரத்தில் புறப்பட்டு சென்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/31fd73fe-e9fb-457b-bacd-c24c71a45101/26-6a7c9c496ea83.webp' /></p><p>
</p><p>ட்ரம்பை, விமான நிலைய உணவு வழங்கும் கொள்கலனுக்குள் வைத்து விமான நிலையத்தில் இருந்து ரகசியமாக வெளியேற்றி, பின்னர் ஒரு சிறிய இராணுவ விமானத்திற்கு மாற்றப்பட்டு, துருக்கியிலிருந்து வெளியேற்றப்பட்டார். </p><p>இந்த விவகாரம் தொடர்பில் ட்ரம்ப் ஊடகங்களிடம் இதுவரை விளக்கமளிக்கவில்லை என்பதுடன், அதிகாரிகள் ஆலோசனைகளுக்கு தாம் கட்டுப்பட்டதாக மட்டுமே பதிலளித்துள்ளார். </p><p>ஆனால், பத்திரிகையாளர்களில் சிலர், தாங்கள் பகடைக்காய்களாகப் பயன்படுத்தப்பட்டதற்கு தங்கள் கோபத்தை வெளிப்படுத்தியதோடு, பாதுகாப்பு அச்சுறுத்தல் குறித்துத் தங்களுக்குத் தெரிவிக்கத் தவறியதற்காக வெள்ளை மாளிகை அதிகாரிகளையும் விமர்சித்துள்ளனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-12T16:13:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் வழக்கின் இறுதிக்கட்டம்: நடுக்கத்தில் பிள்ளையான்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/easter-attacks-suresh-sale-pillayan-law-and-order-1786547574"></link>
            <id>https://tamilwin.com/article/easter-attacks-suresh-sale-pillayan-law-and-order-1786547574</id>
            <summary type="text">உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் வழக்கின் மிக முக்கியமான பிரதான விசாரணை நிறைவடைந்துள்ளது.நவுஃபர் மௌலவி உட்பட 24 எதிரிகளுக்கு எதிராகக் கொழும்பு மூ...</summary>
            <content type="html"><![CDATA[<p>உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் வழக்கின் மிக முக்கியமான பிரதான விசாரணை நிறைவடைந்துள்ளது.</p><p>நவுஃபர் மௌலவி உட்பட 24 எதிரிகளுக்கு எதிராகக் கொழும்பு மூவரடங்கிய மேல் நீதிமன்றத்தில் நடைபெற்ற அரசுத் தரப்பு சாட்சிய விசாரணை நிறைவு பெற்றதை அடுத்து, வரலாற்றுச் சிறப்புமிக்க இறுதித் தீர்ப்பு வெளியாகவுள்ளது.</p><p>உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு உடந்தையான இருந்தார்கள் என்கின்ற அடிப்படையில் பிள்ளையான், சுரேஸ் சலே போன்றோர் விசாரிக்கப்படுகின்றனர்.அத்தோடு, இந்த சம்பவத்துடன் தொடர்புடைய பல்வேறு நபர்கள் தப்பித்துக் கொ்ணடு இருப்பதாக கூறப்படுகின்றது.</p><p>மேலும்,&nbsp;உயிர்த்த ஞாயிறு தாக்குதலை நடைமுறைப்படுத்திய ஒரு இராணுவ அதிகாரி இன்னும் தப்பித்துக் கொண்டு இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>
</p><p>
சுமார் 5 ஆண்டுகள் நடைபெற்ற இந்த வழக்கு விசாரணையின் பின்னணி, குற்றம் சாட்டப்பட்டவர்கள் மற்றும் அடுத்தகட்ட நகர்வுகள் பற்றிய முழுமையான தகவல்களை செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சியில் காணலாம்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/F4tJB1jZvCA" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-12T16:06:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான பெக்கோ சமனின் தாயார் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/mother-of-peko-saman-who-was-shot-dead-dies-1786550327"></link>
            <id>https://jvpnews.com/article/mother-of-peko-saman-who-was-shot-dead-dies-1786550327</id>
            <summary type="text">ஹம்பாந்தோட்டை மித்தெனிய, உல்ஹிட்டியாவ பகுதியில் இன்று (15) மாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களுடன் தொட...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹம்பாந்தோட்டை மித்தெனிய, உல்ஹிட்டியாவ பகுதியில் இன்று (15) மாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடையவராகக் குறிப்பிடப்படும் ‘பெக்கோ சமன்’ என்பவரின் தாயார் உயிரிழந்துள்ளார்.</p><p>
</p><p></p><p>துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த குறித்த பெண் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/33d20612-1d7f-40ac-bbcb-24ce66c9cc47/26-6a7c9839025e4.webp' /></p><p>சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. </p><p>துப்பாக்கிச் சூடு எதற்காக மேற்கொள்ளப்பட்டது, சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யார் என்பது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>

இந்நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதுடன், துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் மற்றும் சந்தேகநபர்கள் தொடர்பான தகவல்கள் விசாரணைகளின் பின்னர் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-12T15:58:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[துப்பாக்கிசூட்டிற்கு இலக்கான பெக்கோ சமனின் தாயார் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/backo-saman-s-mother-shot-1786540458"></link>
            <id>https://ibctamil.com/article/backo-saman-s-mother-shot-1786540458</id>
            <summary type="text">&amp;nbsp; புதிய இணைப்புமித்தெனிய, உல்ஹிட்டியாவ பகுதியில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான பெக்கோ சமனின் தாயார் உயிரிழந்தார்...</summary>
            <content type="html"><![CDATA[<h3>&nbsp; புதிய இணைப்பு</h3><p>மித்தெனிய, உல்ஹிட்டியாவ பகுதியில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான பெக்கோ சமனின் தாயார் உயிரிழந்தார். </p><p>

இன்று (15) மாலை இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றிருந்தது.
</p><p>
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><h2>முதலாம் இணைப்பு</h2><p>இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டு தடுப்புகாவலில் வைக்கப்பட்டுள்ள பாதாள உலக குற்றவாளி பெக்கோ சமனின் தாய் மீது துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
</p><p>
மித்தெனிய - உல்ஹிடியாவ பிரதேசத்தில் இன்று துப்பாக்கிச் சூடு பதிவாகியுள்ளது.</p><p></p><h2>காவல்துறையினர் விசாரணை</h2><p>
</p><p>
இதன்போது, காயமடைந்த பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bb841c5b-7491-4bd3-93c3-185d574457f9/26-6a7c744e4265e.webp' /></p><p>
</p><p>அத்தோடு, இந்த சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp; &nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-12T15:57:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சர்வதேச கராத்தே போட்டியில் அவுஸ்திரேலிய அணிக்காக களமிறங்கும் யாழ் வீரர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/jaffna-youth-in-international-karate-competition-1786548437"></link>
            <id>https://ibctamil.com/article/jaffna-youth-in-international-karate-competition-1786548437</id>
            <summary type="text">&amp;nbsp;யாழ்ப்பாணத்தைப் பூர்வீகமாகக் கொண்ட கராத்தே வீரரும், அவுஸ்திரேலியாவில்
பொறியியலாளராகப் பணியாற்றி வருபவருமான ரத்னம் ரோஸி ஹரிந்த் அவுஸ்திரேலிய தேச...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;யாழ்ப்பாணத்தைப் பூர்வீகமாகக் கொண்ட கராத்தே வீரரும், அவுஸ்திரேலியாவில்
பொறியியலாளராகப் பணியாற்றி வருபவருமான ரத்னம் ரோஸி ஹரிந்த் அவுஸ்திரேலிய தேசிய கராத்தே அணிக்கு தெரிவாகி, இன்று புதன்கிழமை
தாய்லாந்தில் ஆரம்பமாகவுள்ள நான்கு நாள் சர்வதேச கராத்தே போட்டியில் தேசிய
அணியின் சார்பில் பங்கேற்கவுள்ளார்.</p><p>சென்.ஜோன்ஸ் கல்லூரியில் ஆரம்பக் கல்வியையும், யாழ்ப்பாணம் இந்துக்
கல்லூரியில் உயர்கல்வியையும் தொடர்ந்த இவர், மொறட்டுவை பல்கலைக்கழகத்தில்
பொறியியல் பட்டப்படிப்பை நிறைவு செய்தவராவார்.</p><h2>ஆஸியில் புவித்தொழில்நுட்பப் பொறியியலாளராக கடமை</h2><p>

தொடர்ந்து அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து கிறிபித் பல்கலைக்கழகத்தில்
பொறியியல் முதுகலைப் பட்டப்படிப்பை நிறைவு செய்ததுடன், தற்போது
அவுஸ்திரேலியாவில் புவித்தொழில்நுட்பப் பொறியியலாளராகப் பணியாற்றி
வருகின்றார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f410ac6b-c52a-4a52-80b6-479e6c8f4a9c/26-6a7c948cb4137.webp' /></p><p>
</p><p>
கராத்தே துறையில் 6ஆம் டான் தரத்தைப் பெற்றுள்ள இவர், இலங்கையின் பல்வேறு பகுதிகளில் இயங்கிவரும் கராத்தே பாடசாலைகளின் ஊடாக, ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கராத்தே பயிற்சி வழங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-12T15:48:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[AI உருவாக்கிய கோப்புகளை கண்களுக்கு தெரியாத Watermarks - Anthropic புதிய முயற்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/anthropic-adds-invisible-ai-watermarks-1786548780"></link>
            <id>https://news.lankasri.com/article/anthropic-adds-invisible-ai-watermarks-1786548780</id>
            <summary type="text">Anthropic Adds Invisible AI Watermarks: AI உள்ளடக்கத்தை கண்டுபிடிக்க கண்களுக்கு தெரியாத குறியீடே Anthropic அறிமுகம் செய்கிறது.

அமெரிக்க AI நிறுவனம்...</summary>
            <content type="html"><![CDATA[<p><b>Anthropic Adds Invisible AI Watermarks: AI உள்ளடக்கத்தை கண்டுபிடிக்க கண்களுக்கு தெரியாத குறியீடே Anthropic அறிமுகம் செய்கிறது.</b></p><p>

அமெரிக்க AI நிறுவனம் Anthropic, தனது Claude AI மாடல்களில் Invisible Watermark தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.</p><p>

இதன் மூலம் AI உருவாக்கிய உரைகள் மற்றும் கோப்புகளை எளிதில் அடையாளம் காண முடியும்.

இந்த Watermarks, சாதாரணமாக மனிதர்களால் காண முடியாத, ஆனால் இயந்திரம் வாசிக்கக்கூடிய குறியீடாக இருக்கும். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e04a035f-449f-4c25-a36b-d67c19e50fbd/26-6a7c922dd9888.webp' /></p><p>Claude AI உருவாக்கும் உரைகளில், இந்த மறை குறியீடு தானாகவே சேர்க்கப்படும். உரையை copy-paste செய்தாலும், சில திருத்தங்கள் செய்தாலும் கூட, அந்த Watermark நீங்காமல் இருக்கும்.</p><p></p><p>
</p><h2>
EU AI Act</h2><p>இது ஐரோப்பிய ஒன்றியத்தின் EU AI Act-இன் வெளிப்படைத்தன்மை விதிகளின் ஒரு பகுதியாகும். ஆகஸ்ட் 2, 2026 முதல் ஐரோப்பிய ஒன்றியத்தில் வெளியிடப்படும் Claude மாடல்கள் அனைத்தும் இந்த Watermark வசதியுடன் இருக்கும். </p><p>உலகளாவிய அளவிலும் இதை விரிவாக்க Anthropic திட்டமிட்டுள்ளது.

உரை மட்டுமல்லாமல், PNG, JPG, SVG போன்ற கோப்புகளிலும் Claude, C2PA standard அடிப்படையில் டிஜிட்டல் கையொப்ப metadata-ஐ சேர்க்கும். இதன் மூலம் கோப்புகள் AI மூலம் உருவாக்கப்பட்டதா என்பதை கண்டறிய முடியும்.</p><p></p><h2>

எச்சரிக்கை</h2><p>ஆனால் Anthropic, “Watermark இருப்பது AI உருவாக்கியது என்பதை 100 சதவீதம் உறுதிப்படுத்தாது” என எச்சரிக்கிறது. </p><p>ஏனெனில், ஒருவரின் சொந்த எழுத்தை Claude proofread, translate அல்லது summarize செய்தாலும், அந்த உரையில் Watermark தோன்றலாம்.

அதேபோல், பழைய மாடல்கள் அல்லது மிகச் சிறிய உரைகள் Watermark இல்லாமல் இருக்கலாம்.</p><p>

இந்த முயற்சி, AI உருவாக்கிய உள்ளடக்கங்களை பொறுப்புடன் பயன்படுத்த மற்றும் தவறான தகவல்களைத் தடுக்கும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்டுள்ளது. Anthropic, விரைவில் Watermark-யை கண்டறியும் கருவிகளை வெளியிடவுள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-12T15:30:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிசு கிசு பேசுவதில் கில்லாடிகளாக திகழும் டாப் 3 ராசிகள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/which-zodiac-signs-are-gossip-the-most-1786545224"></link>
            <id>https://manithan.com/article/which-zodiac-signs-are-gossip-the-most-1786545224</id>
            <summary type="text">ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில், ஒருவரின் பிறப்பு ராசி மற்றும் நட்சத்திரம் அவர்களின் ஆளுமை, சிந்தனை முறை, பழக்கவழக்கங்கள் மற்றும் குணநலன்களுடன் நெருங...</summary>
            <content type="html"><![CDATA[<p></p><p>ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில், ஒருவரின் பிறப்பு ராசி மற்றும் நட்சத்திரம் அவர்களின் ஆளுமை, சிந்தனை முறை, பழக்கவழக்கங்கள் மற்றும் குணநலன்களுடன் நெருங்கிய தொடர்புடையவை என்று நம்பப்படுகிறது.</p><p>ஒவ்வொரு ராசிக்கும் தனித்துவமான பலங்களும், சில சவாலான குணங்களும் இருப்பதாக ஜோதிடத்தில் கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ba3159d1-79ff-4d34-a015-0bc2aad9c7f5/26-6a7c88ed6b55e.webp' /></p><p>
</p><p>
அந்த வகையில், சில ராசிக்காரர்கள் தங்களுக்குத் தெரிந்த விஷயங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதிலும், குறிப்பாக பிறரைப் பற்றிய சுவாரஸ்யமான விஷயங்களைப் பேசுவதிலும் அதிக ஆர்வம் கொண்டவர்களாக இருப்பார்களாம்.</p><p>அப்படி, பிறரைப் பற்றிய விஷயங்களைப் பேசுவதிலும், கிசுகிசு செய்வதிலும் அதிக ஆர்வம் கொண்டவர்களாகக் கருதப்படும் அந்த டாப் 3 ராசிகள் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.</p><h2>மிதுனம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/04476ee1-abdd-4b63-abfc-2e434f2a0a96/26-6a7c88ee1b729.webp' /></p><p></p><p>
இரட்டை இயல்புக்கு பெயர் பெற்ற மிதுன ராசியினர் எப்போதும் சுறுசுறுப்பாகவும், பேச்சுத்திறன் மிக்கவர்களாகவும் இருப்பார்கள். </p><p>குறிப்பாக, மற்றவர்களின் வாழ்க்கையில் என்ன நடக்கிறது என்பதை தெரிந்துகொள்வதிலும், அதை பற்றி பேசுவதிலும் இவர்களுக்கு தனி ஆர்வம் இருக்கும்.

இவர்களை ஒரு “நடமாடும் செய்தி தளம்” என்று சொன்னாலும் மிகையாகாது.</p><p> தெரிந்த தகவல்கள் மட்டுமல்லாமல், சில சமயங்களில் கேள்விப்பட்ட செய்திகள், வதந்திகள் போன்றவையும் இவர்களிடம் இருந்து அதிகமாக பரப்படுகின்றது.&nbsp;</p><h2>சிம்மம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2be332e5-2dd3-47dc-ab28-70076adf3a6a/26-6a7c88eec39f9.webp' /></p><p>
சூரியனின் ஆதிக்கத்தில் பிறந்த சிம்ம ராசியினர் தன்னம்பிக்கையும், தனித்துவமான ஆளுமையும் கொண்டவர்களாக இருப்பார்கள். </p><p>மற்றவர்களின் கவனம் தங்களின் மீது இருக்க வேண்டும் என்பதில் இவர்களுக்கு எப்போதும் ஒரு தனி விருப்பம் இருக்கும்.

இவர்களின் கிசுகிசு பேசும் விதமும் சற்று வித்தியாசமானதாக இருக்கும். </p><p>சாதாரணமாக வம்பு பேசுவதைப் போல இல்லாமல், நான் சொல்வது அவருடைய நன்மைக்காகத்தான் என்ற தோற்றத்துடன் மிகவும் நியாயமான விஷயம் ஒன்றை விளக்குவது போல கிசுகிசு பேசுவார்கள். </p><h2>விருச்சிகம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2441138e-0fb5-4231-847d-a576a8760ff7/26-6a7c88ef774c4.webp' /></p><p></p><p>விருச்சிக ராசியினர் பொதுவாக மர்மமான குணம், ஆழமான சிந்தனை மற்றும் ரகசியங்களை பாதுகாக்கும் தன்மை கொண்டவர்களாக கருதப்படுவார்கள்.</p><p>தங்களுடைய தனிப்பட்ட விஷயங்களை மற்றவர்களிடம் எளிதில் பகிர்ந்து கொள்ளாத இவர்கள், பிறர் தங்களிடம் கூறும் ரகசியங்களையும் பெரும்பாலும் பாதுகாப்பாக வைத்திருப்பார்கள்.</p><p>

ஆனால் இதில் ஒரு முக்கியமான விதிவிலக்கு இருக்கலாம். தங்களுக்கு பிடிக்காத ஒருவரைப் பற்றிய ரகசியம் அல்லது அவர்களை பாதிக்கக்கூடிய தகவல் ஒன்று இவர்களிடம் சிக்கினால், அதை அப்படியே மனதில் வைத்துக் கொள்வது இவர்களுக்கு சற்று கடினமாகிவிடும்.
</p><p><b style="color: inherit;">இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).&nbsp;&nbsp;</b></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b>&nbsp;</td></tr></tbody></table><p><br></p><p><br></p><p><br></p><p> 
 </p><p><br></p><p></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-12T15:28:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்க போர்க்கப்பலில் உணவு தட்டுப்பாடு - கடலில் குதிக்க முயன்ற கடற்படையினர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/us-sailors-jump-ship-amid-iran-war-crisis-1786547558"></link>
            <id>https://news.lankasri.com/article/us-sailors-jump-ship-amid-iran-war-crisis-1786547558</id>
            <summary type="text">USS Abraham Lincoln sailors jump into the sea: அமெரிக்க போர்க்கப்பலில் கடற்படையினர் கடலில் குதிக்க முயன்றதாக கூறப்படுகிறது.

அமெரிக்காவின் USS Abrah...</summary>
            <content type="html"><![CDATA[<p><b>USS Abraham Lincoln sailors jump into the sea: அமெரிக்க போர்க்கப்பலில் கடற்படையினர் கடலில் குதிக்க முயன்றதாக கூறப்படுகிறது.
</b></p><p>
அமெரிக்காவின் USS Abraham Lincoln என்ற விமானக் கப்பல், கடந்த 210 நாட்களாக மத்திய கிழக்கில் பணியில் உள்ளது.
</p><h2>
மன அழுத்தத்தில்&nbsp;கடற்படையினர் </h2><p>நீண்டகால பணி, கப்பல் நிலைநிறுத்தம் மற்றும் கடினமான சூழ்நிலைகள் காரணமாக, கப்பலில் பணியாற்றும் கடற்படையினர் கடுமையான மன அழுத்தத்தில் உள்ளனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bc95d18f-063f-4a06-8115-920340b5d924/26-6a7c8d68cee11.webp' /></p><p>கப்பலில் உணவு தட்டுப்பாடு, உடைந்த கழிப்பறைகள் போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதால், சிலர் மன உறுதியை இழந்து கடலில் குதிக்க முயன்றதாக அவர்களின் குடும்பத்தினர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளனர்.</p><h2>

USS Abraham Lincoln போர்க்கப்பல்</h2><p>இந்த கப்பல், அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் தலைமையிலான ஈரான் போரில் முக்கிய பங்கு வகிக்கிறது. </p><p>ஜூன் மாதத்தில் கையெழுத்திடப்பட்ட அமைதி ஒப்பந்தம் முறியடைந்த பிறகு, அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே மீண்டும் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

முக்கியமாக, ஹார்மசு நீரிணை மீது கட்டுப்பாடு பெறுவதற்கான போராட்டமே இப்போரின் மையமாக உள்ளது. </p><p></p><p>அமெரிக்கா, ஈரான் துறைமுகங்களை முற்றுகையிட்டு, சுமார் 20 போர்க்கப்பல்களை மத்திய கிழக்கில் நிறுத்தியுள்ளது.
</p><p>
இந்த சூழ்நிலையில், USS Abraham Lincoln கப்பலில் பணிபுரியும் வீரர்கள், நீண்டகால பணி, உணவு மற்றும் அடிப்படை வசதிகள் இல்லாமை காரணமாக மன அழுத்தத்தில் சிக்கியுள்ளனர். </p><p>இது அமெரிக்க கடற்படையின் மனநிலை மற்றும் போர்திறனை பாதிக்கக்கூடும் என ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-12T15:10:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[வவுனியாவில் இன்றுமாலை விபத்து : ஒருவர் பலி : மூவர் படுகாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/vavuniya-tipper-and-three-wheeler-collision-1786545405"></link>
            <id>https://ibctamil.com/article/vavuniya-tipper-and-three-wheeler-collision-1786545405</id>
            <summary type="text">வவுனியா சூடுவெந்தபிலவிற்கு அண்மித்த பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற
விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

வவுனியாவில் இருந்து சென்றுக...</summary>
            <content type="html"><![CDATA[<p>வவுனியா சூடுவெந்தபிலவிற்கு அண்மித்த பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற
விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
</p><p>
வவுனியாவில் இருந்து சென்றுகொண்டிருந்த டிப்பர் வாகனம் சூடுவெந்தபிலவு
பகுதியில் சென்றுகொண்டிருந்த போது எதிரே வந்துகொண்டிருந்த முச்சக்கர
வண்டியுடன் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றது.</p><h2>டிப்பர் -முச்சக்கரவண்டி மோதி விபத்து</h2><p>விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த ஒருவர் படுகாயமடைந்தநிலையில் சம்பவ
இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.மேலும் காயமடைந்த மூவர் வவுனியா வைத்தியசாலையில்
சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2344b2d6-f466-4f61-ae6d-1dacd206cf9f/26-6a7c8b48b0873.webp' /></p><p>

விபத்து தொடர்பாக உலுக்குளம் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து
வருகின்றனர்.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-12T15:05:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Malaivanjan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மஸ்கெலிய ஓல்டன் தோட்டத்தில் சிறுத்தையின் சடலம் கண்டெடுப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/leopard-carcass-recovered-at-maskeliya-1786544986"></link>
            <id>https://tamilwin.com/article/leopard-carcass-recovered-at-maskeliya-1786544986</id>
            <summary type="text">மஸ்கெலிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமிமலை பகுதியில் உள்ள ஓல்டன் தோட்டத்தின்
கிங்கோரா பிரிவில், சிறுத்தையொன்றின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இன்று(12...</summary>
            <content type="html"><![CDATA[<p>மஸ்கெலிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமிமலை பகுதியில் உள்ள ஓல்டன் தோட்டத்தின்
கிங்கோரா பிரிவில், சிறுத்தையொன்றின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
</p><p>இன்று(12) பிற்பகல் சுமார் 2 மணியளவில் தோட்டத்தில் பணியில் ஈடுபட்டிருந்த
தொழிலாளர்கள் குழுவினர், வனப்பகுதியில் சிறுத்தை ஒன்று இறந்த நிலையில்
கிடப்பதை அவதானித்துள்ளனர்.
</p><p>
இதனையடுத்து, தொழிலாளர்கள் உடனடியாக தோட்ட நிர்வாகத்திற்கு தகவல் வழங்கியுள்ளனர்.

பின்னர், தோட்ட முகாமையாளர் சம்பவம் தொடர்பில் மஸ்கெலிய பொலிஸ் நிலைய
பொறுப்பதிகாரி எஸ். எஸ். புஷ்பகுமாரவிற்கு அறிவித்துள்ளார்.</p><p></p><h2>சடலம் கண்டெடுப்பு</h2><p>
</p><p>
தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, சம்பவ இடத்துக்கு பொலிஸார் மற்றும் வனவிலங்கு
அதிகாரிகள் தொடர்பு கொண்டு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ed1ae3d3-7804-49d8-938b-7f2ec8c31cb6/26-6a7c88b2ed527.webp' /></p><p>

நல்லத்தண்ணியா வனவிலங்கு அலுவலக அதிகாரிகளின் தலையீட்டுடன், இறந்த நிலையில்
காணப்பட்ட சிறுத்தையின் சடலம் தற்போது மீட்கப்பட்டு பாதுகாப்பாக எடுத்துச்
செல்லப்பட்டுள்ளது.
</p><p>எவ்வாறாயினும், சிறுத்தை உயிரிழந்ததற்கான காரணம் இதுவரை
உறுதிப்படுத்தப்படவில்லை.</p><p></p>]]></content>
            <updated>2026-08-12T15:02:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பல மாவட்டங்களுக்கு வெப்ப வானிலை எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/heatwave-warning-for-several-districts-1786540931"></link>
            <id>https://jvpnews.com/article/heatwave-warning-for-several-districts-1786540931</id>
            <summary type="text">நாட்டின் பல மாவட்டங்களுக்கு வெப்பமான வானிலை தொடர்பான எச்சரிக்கை அறிவித்தல் ஒன்றை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.&amp;nbsp;இதற்கமைய, வவுனியா, முல...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டின் பல மாவட்டங்களுக்கு வெப்பமான வானிலை தொடர்பான எச்சரிக்கை அறிவித்தல் ஒன்றை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.&nbsp;</p><p>இதற்கமைய, வவுனியா, முல்லைத்தீவு, திருகோணமலை, பொலன்னறுவை, மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கு இந்த அறிவித்தல் செல்லுபடியாகும்.&nbsp;</p><p>குறித்த மாவட்டங்களின் சில பகுதிகளில் பகல் வேளையில் வெப்பச் சுட்டெண், அதாவது மனித உடலால் உணரப்படும் வெப்பமானது அவதானம் செலுத்த வேண்டிய மட்டத்தில் காணப்படக்கூடும் என அந்த அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-12T15:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மகளை மேலதிக வகுப்பில் விட்டுவிட்டு காணாமல் போன பெண்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/woman-goes-missing-after-dropping-daughter-1786540291"></link>
            <id>https://jvpnews.com/article/woman-goes-missing-after-dropping-daughter-1786540291</id>
            <summary type="text">மாத்தறை - அக்குரெஸ்ஸ, திகனஹேன பகுதியைச் சேர்ந்த 52 வயதான பெண் ஒருவர் கடந்த மூன்று நாட்களாகக் காணாமல் போயிருந்த நிலையில், நில்வள கங்கையில் தீவிர தேடுதல...</summary>
            <content type="html"><![CDATA[<p>மாத்தறை - அக்குரெஸ்ஸ, திகனஹேன பகுதியைச் சேர்ந்த 52 வயதான பெண் ஒருவர் கடந்த மூன்று நாட்களாகக் காணாமல் போயிருந்த நிலையில், நில்வள கங்கையில் தீவிர தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.</p><p>கடந்த 9ஆம் திகதி தனது மகளை மேலதிக வகுப்பில் விட்டுவிட்டு வீடு திரும்பாத நிலையில், குறித்த பெண் காணாமல் போயுள்ளார்.</p><p>இந்த விடயம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டையடுத்து, அக்குரெஸ்ஸ பகுதியில் உள்ள கடையொன்றில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி (CCTV) காணொளிகளை ஆய்வு செய்து காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.</p><p>விசாரணைகளின் அடிப்படையில், நில்வள கங்கையில் இருந்து பை மற்றும் காலணி என்பன கண்டெடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p>இதனைத் தொடர்ந்து, மாத்தறை மாவட்ட இடர் முகாமைத்துவப் பிரிவு அதிகாரிகள் மற்றும் கடற்படையினர் இணைந்து நில்வள கங்கையில் தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-08-12T14:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[செம்மணியில் இதுவரை 530 என்புக்கூடுகள் மீட்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/chemmani-mass-graves-jaffna-1786543354"></link>
            <id>https://ibctamil.com/article/chemmani-mass-graves-jaffna-1786543354</id>
            <summary type="text">செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 50 ஆம் நாள் அகழ்வு பணிகள் இன்றைய தினம்(12) நடைபெற்றது. 

இதன்போது 05 மனித எலும்புக்கூடுகள் இன்று அடை...</summary>
            <content type="html"><![CDATA[<p>செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 50 ஆம் நாள் அகழ்வு பணிகள் இன்றைய தினம்(12) நடைபெற்றது.</p><p> 

இதன்போது 05 மனித எலும்புக்கூடுகள் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளன. </p><p>அதேவேளை அடையாளம் காணப்பட்டதில் 06 மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.</p><h2>530 என்பு கூடுகள் முற்றாக அகழ்ந்து எடுப்பு</h2><p> </p><p>

அதன் அடிப்படையில் செம்மணி புதைகுழியில் முதலாம் இரண்டாம் மற்றும் மூன்றாம்
கட்டம் என இதுவரையில் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் , 544 என்பு
கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் 530 என்பு கூடுகள் முற்றாக அகழ்ந்து
எடுக்கப்பட்டுள்ளன.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/adbf6f9c-b345-4f34-b68f-91465474a7eb/26-6a7c82dd61f57.webp' /></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-12T14:27:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்த வயதிலும் நாடகமாடுவது வெட்க கேடு : த்ரிஷா போட்ட பதிவால் கிளம்பிய புதிய சர்ச்சை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/drama-at-this-age-trisha-insta-post-goes-viral-1786531950"></link>
            <id>https://manithan.com/article/drama-at-this-age-trisha-insta-post-goes-viral-1786531950</id>
            <summary type="text">Trisha new post viral:நடிகை த்ரிஷா சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஒரு பதிவு, தற்போது சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது.“இந்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>Trisha new post viral:நடிகை த்ரிஷா சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஒரு பதிவு, தற்போது சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது.</p><p>“இந்த வயதில் நாடகம் போடுவது சங்கடமாக இருக்கிறது.. போய் கொஞ்சம் பணம் சம்பாதித்து நிம்மதியாக இருங்கள்” என அவர் பதிவிட்டிருப்பது, அது யாரை நோக்கி கூறப்பட்டது என்ற விவாதத்தை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/133ee0f8-5dc2-441f-8e04-c5d4adae5ad1/26-6a7c570ccc0ab.webp' /></p><p></p><p>
</p><h2>நடிகை த்ரிஷா </h2><p>த்ரிஷா அவ்வப்போது தனது சமூக வலைதளப் பக்கங்களில் நேரடியாக யாருடைய பெயரையும் குறிப்பிடாமல், கருத்தை மட்டும் வெளிப்படுத்தும் வகையிலான பதிவுகளை வெளியிடுவது வழக்கம்.</p><p>நடிகரும் முதலமைச்சருமான விஜய்யுடனான த்ரிஷாவின் நட்பு குறித்த சர்ச்சைகள் இணையத்தில் பேசுபொருளாக இருக்கும் நிலையி்ல், விஜயின் மனைவி சங்கீதா சமீபத்தில் விவாகரத்து வழக்கை வாபஸ் பெறுவதாக அறிவித்து இருந்தார். இதை தொடர்ந்து த்ரிஷா வெளியிடும் பதிவுகள் நெட்டிசன்கள் மத்தியில் அதிகம் கவனம் பெற்று வருகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f3b8649a-2ff8-4236-bae3-fb58f8092b09/26-6a7c570d87204.webp' /></p><p>சமீபத்தில் நடிகை குட்டி பத்மினி, நடிகர் விஜய் மற்றும் த்ரிஷா குறித்து பேசியிருந்தார். குறிப்பாக, விஜய்–த்ரிஷா இடையேயான உறவு குறித்து அவர் தெரிவித்ததாக கூறப்பட்ட கருத்துகள் சமூக வலைதளங்களில் பரவலாகப் பேசப்பட்டன.

இதன் பின்னணியில் த்ரிஷா தற்போது வெளியிட்டுள்ள “இந்த வயதில்...” என்ற பதிவையும் சிலர் இணைத்துப் பார்க்கத் தொடங்கியுள்ளனர்.</p><p>குறிப்பாக, பதிவில் பயன்படுத்தப்பட்டுள்ள வார்த்தைகளை வைத்து, அவர் வயதான ஒருவரை விமர்சித்திருக்கலாம் என்றும் சில நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அதனால், இந்தப் பதிவு குட்டி பத்மினியின் சமீபத்திய பேச்சுக்கு த்ரிஷா அளித்த மறைமுக பதிலாக இருக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/568207d1-6949-493f-94ae-220b30fcb758/26-6a7c570e37e15.webp' /></p><p></p><p>இதற்கிடையில், அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் சமீபத்தில் த்ரிஷா குறித்து பேசியிருந்ததும் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது. அவரது பேச்சும் பல்வேறு தரப்பினரால் விவாதிக்கப்பட்ட நிலையில், த்ரிஷாவின் புதிய பதிவு அதற்கு பதிலாக இருக்குமா என்ற யூகமும் உருவாகியுள்ளது.</p><p>

குறிப்பாக, த்ரிஷா தனது பதிவில் குறிப்பிட்டுள்ள “இந்த வயதில்” என்ற வார்த்தையை வைத்து, சமீபத்தில் தன்னைப் பற்றி கருத்து தெரிவித்த வயதில் மூத்தவர்களில் யாரையாவது அவர் மறைமுகமாகக் குறிப்பிட்டிருக்கலாம் என சிலர் கூறுகின்றனர். த்ரிஷாவின் இந்த&nbsp; பதிவு யாரை நோக்கி வெளியிடப்பட்டது என்பது குறித்து நெட்டிசன்கள் பல கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர்.</p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்<u> <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW&nbsp;</a></b></u></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-12T14:24:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[உக்ரைன் ட்ரோன் தாக்குதலால் ரஷ்யாவின் பணக்கார பெண்ணுக்கு ஏற்பட்ட பெரும் இழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/ukraine-drone-strike-hits-russias-richest-woman-1786544680"></link>
            <id>https://news.lankasri.com/article/ukraine-drone-strike-hits-russias-richest-woman-1786544680</id>
            <summary type="text">Ukraine Drone Strike Hits Russias Richest Woman: உக்ரைன் ட்ரோன் தாக்குதலால் ரஷ்யாவின் பணக்கார பெண்ணுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது.

ரஷ்யாவின் மிக...</summary>
            <content type="html"><![CDATA[<p><b>Ukraine Drone Strike Hits Russias Richest Woman: உக்ரைன் ட்ரோன் தாக்குதலால் ரஷ்யாவின் பணக்கார பெண்ணுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது.</b></p><p>

ரஷ்யாவின் மிகப்பெரிய ஓன்லைன் வணிக நிறுவனமான Wildberries மீது உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதல்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><h2>

ரஷ்யாவின் அமேசான்</h2><p>இந்த நிறுவனம் 2004-ஆம் ஆண்டு தத்யானா கிம் (Tatyana Kim) என்பவரால் தொடங்கப்பட்டது.</p><p> தற்போது ரஷ்யாவின் “அமேசான்” என அழைக்கப்படும் Wildberries, நாட்டின் ஓன்லைன் சந்தையில் முக்கிய பங்கு வகிக்கிறது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f5fc08c1-963d-4038-aeca-30279d93d522/26-6a7c822a4fcfe.webp' /></p><p>சமீபத்தில் நடந்த தாக்குதல்களில் பல கிடங்குகள் சேதமடைந்துள்ளன. இதனால் ஆயிரக்கணக்கான விற்பனையாளர்கள் தங்கள் பொருட்களை இழந்துள்ளனர். வாடிக்கையாளர்களுக்கு பொருட்கள் கிடைக்க தாமதம் ஏற்பட்டுள்ளது.</p><p>

சிறு வியாபாரிகள் தங்கள் பங்குகளை இழந்ததால், எதிர்கால விற்பனை மற்றும் இழப்பீடு குறித்து பெரும் குழப்பம் நிலவுகிறது.
</p><p></p><h2>உக்ரைன்&nbsp;குற்றச்சாட்டு</h2><p>உக்ரைன், இந்த கிடங்குகள் ரஷ்யாவின் போர் முயற்சிக்கு உதவுகின்றன என்று கூறுகிறது. ஆனால் ரஷ்ய அதிகாரிகள், இவை சாதாரண குடிமக்கள் பயன்பாட்டிற்கான வசதிகள் என தெரிவித்துள்ளது.
</p><p>
தத்யானா கிம், தாக்குதல்களை கண்டித்து, பாதிக்கப்பட்ட விற்பனையாளர்களுக்கு உதவ நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக தெரிவித்துள்ளார். </p><p>இருப்பினும், விற்பனை குறைந்து, பல விற்பனையாளர்கள் மாற்று தளங்களை தேடத் தொடங்கியுள்ளனர்.
</p><p></p><h2>புதிய யுத்தி</h2><p>ஆய்வாளர்கள், உக்ரைன் இத்தகைய தாக்குதல்களை ரஷ்யாவின் பொருளாதாரத்தை பலவீனப்படுத்தும் புதிய யுத்தத் திட்டமாக பார்க்கின்றனர். இது ரஷ்யாவின் அன்றாட வாழ்க்கையையும் பாதிக்கிறது.
</p><p>
தத்யானா கிம், ரஷ்யாவின் தொழில் வெற்றியின் மிகப்பெரிய அடையாளமாக இருந்தாலும், தற்போது தனது நிறுவனத்தை மீண்டும் எழுப்பி, வாடிக்கையாளர்கள் மற்றும் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை காப்பாற்றுவது மிகப்பெரிய சவாலாக உள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-12T14:22:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[கயல் சீரியல் ரசிகர்களுக்கு ஷாக்... ஹீரோ சஞ்சீவ் விலகியதாக தகவல்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/kayal-serial-lead-role-actor-sanjeev-relieve-1786543149"></link>
            <id>https://manithan.com/article/kayal-serial-lead-role-actor-sanjeev-relieve-1786543149</id>
            <summary type="text">kayal serial : சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான கயல் சீரியலில் இருந்து அதன் நாயகன் சஞ்சீவ் விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>kayal serial : சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான கயல் சீரியலில் இருந்து அதன் நாயகன் சஞ்சீவ் விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p> சமீபத்திய எபிசோடுகளில் சஞ்சீவ் கோமா நிலையில் இருப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்று வந்த நிலையில், அதன் பின்னணி காரணம் குறித்த தகவல் தற்போது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6ba5c380-fab3-48f5-b468-547518e23b77/26-6a7c812481370.webp' /></p><h2>கயல் சீரியல்&nbsp;</h2><p>

சன் டிவியின் பிரைம் டைம் தொடராக ஒளிபரப்பாகி வரும் கயல், கடந்த 2021ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கப்பட்டது. சஞ்சீவ் ஹீரோவாகவும், சைத்ரா ரெட்டி கதாநாயகியாகவும் நடித்து வரும் இந்தத் தொடருக்கு ஆரம்பம் முதலே தனி ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது.
</p><p>
1000 எபிசோடுகளை கடந்து வெற்றிகரமாக பயணித்து வரும் கயல், தொடர்ந்து டிஆர்பியிலும் முக்கிய இடங்களை பிடித்து வருகிறது. தற்போது திங்கள் முதல் சனிக்கிழமை வரை தினமும் ஒரு மணி நேரம் ஒளிபரப்பாகி வரும் இந்தத் தொடரின் கதைக்களமும் விறுவிறுப்பாக நகர்ந்து கொண்டிருக்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5392b3f3-71e3-4799-abbc-e4f90050a71a/26-6a7c812536e32.webp' /></p><p>
</p><p>
இந்நிலையில், கடந்த சில எபிசோடுகளாக சஞ்சீவ் கோமா நிலையில் இருப்பது போன்ற காட்சிகள் காட்டப்பட்டு வருகின்றன. இதனை வெறும் கதையின் திருப்பம் என்றே ரசிகர்கள் நினைத்திருந்த நிலையில், தற்போது வெளியாகியுள்ள தகவல் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><h2>

சஞ்சீவ் இனி கயலில் நடிக்கமாட்டாரா?
</h2><p>
கயல் சீரியலில் இருந்து சஞ்சீவ் விலகியுள்ளதாக தகவல் கசிந்துள்ளது. சமீபத்தில் ஷூட்டிங் ஸ்பாட்டில் ஏற்பட்டதாக கூறப்படும் ஒரு பிரச்சனைக்குப் பிறகு, சஞ்சீவ் படப்பிடிப்பில் கலந்து கொள்ளவில்லை என சீரியலில் பணியாற்றும் சிலர் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.</p><p></p><p>ஆனால், உண்மையில் என்ன பிரச்சனை ஏற்பட்டது என்பது குறித்து இதுவரை தெளிவான தகவல் வெளியாகவில்லை. அதேநேரத்தில், சஞ்சீவ் இனி தொடரில் தோன்ற மாட்டார் என்ற தகவல் மட்டும் கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளதாக கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/45842cac-bf30-48b3-b94c-fa23fbae0217/26-6a7c8125e024d.webp' /></p><p>இதன் காரணமாகவே கதையில் அவரது கதாபாத்திரத்தை கோமா நிலையில் வைத்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p>இதேபோன்ற சூழல் ஏற்கனவே சன் டிவியின் எதிர்நீச்சல் தொடரிலும் ஏற்பட்டது. அந்தத் தொடரில் நாயகியாக நடித்த கனிகா விலகிய பிறகும், அவரது கதாபாத்திரம் கோமாவில் இருப்பதாகக் கூறி பல மாதங்கள் கதைக்களம் நகர்த்தப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8c8b80ba-84b3-40c2-b3de-c3cb2aa02519/26-6a7c812690d94.webp' /></p><p></p><p>
</p><p>
தற்போது அதே பாணியை கயல் சீரியலிலும் பின்பற்றுகிறார்களா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இனி சஞ்சீவின் கதாபாத்திரத்தை கோமா நிலையிலேயே வைத்துக் கதையை நகர்த்தப் போகிறார்களா? அல்லது அவருக்கு பதிலாக புதிய ஹீரோவை களமிறக்கப் போகிறார்களா? இல்லை, சஞ்சீவின் விலகலால் கயல் சீரியலையே முடிவுக்கு கொண்டு வரப் போகிறார்களா? என்ற கேள்விகள் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.</p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW&nbsp;</a></u></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-12T14:20:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[தாயகத்தின் மண்வாசனையை உலகுக்கு எடுத்துச் சென்ற IBC தமிழின் அம்மான் காலமானார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/ibc-tamil-amman-s-golden-iswaran-passed-away-1786544171"></link>
            <id>https://ibctamil.com/article/ibc-tamil-amman-s-golden-iswaran-passed-away-1786544171</id>
            <summary type="text">IBC தமிழின் ‘Tea கடை’ நிகழ்ச்சியின் மறக்க முடியாத கலைஞருக்கு தமிழர் மத்தியில் அஞ்சலி...

தாயகத்தின் குச்சுக்கிராமங்களுக்குள் சென்று அங்குள்ள மக்களின...</summary>
            <content type="html"><![CDATA[<p>IBC தமிழின் ‘Tea கடை’ நிகழ்ச்சியின் மறக்க முடியாத கலைஞருக்கு தமிழர் மத்தியில் அஞ்சலி...
</p><p>
தாயகத்தின் குச்சுக்கிராமங்களுக்குள் சென்று அங்குள்ள மக்களின் வாழ்வியலையும், கிராமிய மொழிநடையையும், மண்ணின் மண்வாசனையையும் உலகத் தமிழர்களிடம் கொண்டு சேர்த்த IBC தமிழின் ‘Tea கடை’ நிகழ்ச்சியின் முக்கியமான ஆளுமைகளில் ஒருவரான ‘அம்மான்’ பொன். ஈஸ்வரன் காலமானார்.</p><p>

‘அம்மான்’ என்பது அவருக்கு வழங்கப்பட்ட ஒரு சாதாரண அழைப்புப் பெயர் அல்ல. 

தாயகத்தின் கிராமிய சமூகத்தில், பெரும் விவசாயிகளாகவும், வயது முதிர்ந்த பின்னரும் சமூகத்தில் ஆளுமையுடன் மதிப்புடன் திகழ்ந்தவர்களையும் அன்புடனும் மரியாதையுடனும் அழைத்த பாரம்பரியப் பெயராக ‘அம்மான்’ விளங்கியது.</p><p></p><h2>தனித்த அடையாளம்</h2><p>
அந்தப் பெயருக்கே ஐரோப்பியத் தமிழர் மத்தியில் தனித்த அடையாளத்தை ஏற்படுத்தியவர் பொன். ஈஸ்வரன்.

கலையோடு பிறந்த அற்புதமான கலைஞராகத் திகழ்ந்த அம்மான், தனது இளமைக்காலங்களில் பெண்வேடம் ஏற்று மேடைகளில் சிறப்பாக நடித்ததுடன், வில்லிசை, குறும்படங்கள், மேடை நாடகங்கள் என பல்வேறு கலைத் தளங்களிலும் தனது திறமையை வெளிப்படுத்தியிருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/96f1105e-8a0d-4839-989f-71d802f4ad9b/26-6a7c802f269af.webp' /></p><p>
</p><p>
தாயகத்தின் மீதும், தாயக மக்களின் மீதும், தலைவன் மீதும் ஆழ்ந்த பற்றும் பக்தியும் கொண்டிருந்த அவர், தனது கலைப் படைப்புகளிலும் பேச்சிலும் அந்த உணர்வுகளை வெளிப்படுத்தி வந்தார்.
</p><p>
குறிப்பாக IBC தமிழின் ‘Tea கடை’ நிகழ்ச்சியில் அவரது இயல்பான நடைமுறைப் பேச்சும், கிராமிய நகைச்சுவையும், தாயகத்து மக்களின் வாழ்வியலை பிரதிபலித்த உரையாடல்களும் பார்வையாளர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றன.</p><p>

அவரது பேச்சு நடையை ரசித்த இளைய தலைமுறையினர், வீட்டில் தமது பெற்றோருடன்கூட அம்மானின் பாணியில் பேசும் அளவுக்கு அவரது பாத்திரமும் பேச்சுவழக்கும் மக்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது.

காலப்போக்கில் மறைந்து வரும் பழம்பெரும் கிராமியச் சொற்களைத் தேடிப்பிடித்து, அவற்றை தனது நிகழ்ச்சிகளில் இயல்பாகப் பயன்படுத்தியதில் அம்மான் பொன். ஈஸ்வரன் தனித்துவமானவர்.</p><p></p><p> </p><h2>‘அம்மான்’ பொன். ஈஸ்வரன்</h2><p>

தாயகத்தின் குச்சுக்கிராமங்களின் பேச்சுமொழி, மக்களின் இயல்பு வாழ்க்கை மற்றும் மண்ணின் மண்வாசனையை உலகத் தமிழர்களிடம் கொண்டு சென்ற அவரது பங்களிப்பு குறிப்பிடத்தக்கது.
</p><p>
வில்லிசை முதல் மேடை நாடகங்கள் வரை நீண்ட அவரது கலைப்பயணம், இறுதியில் IBC தமிழின் ‘Tea கடை’ நிகழ்ச்சியின் ஊடாக புதிய தலைமுறையினரிடமும் சென்றடைந்தது.</p><p>

IBC தமிழை இறுதிவரை ஆத்மார்த்தமாக நேசித்த அம்மான் பொன். ஈஸ்வரனின் மறைவு, தாயகக் கலைத்துறைக்கும், கிராமியக் கலை மரபுக்கும், அவரை நேசித்த தமிழர்களுக்கும் பேரிழப்பாக அமைந்துள்ளது.
</p><p>
தனது பேச்சால் சிரிக்க வைத்தும், தனது கலை மூலம் தாயகத்தை நினைவூட்டியும், மறைந்து வரும் கிராமியச் சொற்களையும் வாழ்வியலையும் தனது குரலால் பதிவு செய்தும் சென்ற ‘அம்மான்’ பொன். ஈஸ்வரன், இனி நினைவுகளில் மட்டுமே வாழும் ஒரு அழியாத கலைக் குரலாக இருப்பார்.
</p><p>
அவரது மறைவுக்கு IBC தமிழ் குடும்பமும், உலகத் தமிழர்களும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கின்றனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-12T14:16:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாதாள உலகக் குழு கும்பலுடன் தொடர்புடைய நபரின் தாயார் துப்பாக்கிச் சூட்டில் பலி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/gun-shooting-at-peko-saman-s-mother-mitheniya-1786542777"></link>
            <id>https://tamilwin.com/article/gun-shooting-at-peko-saman-s-mother-mitheniya-1786542777</id>
            <summary type="text">ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான &#039;பெக்கோ சமன்&#039; என்பவரின் தாயார் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார்.

மித்தெனிய, உல்ஹிட்டியாவ பகுதியில் இன்று (12.8...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான 'பெக்கோ சமன்' என்பவரின் தாயார் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார்.</p><p>

மித்தெனிய, உல்ஹிட்டியாவ பகுதியில் இன்று (12.8.2026) மாலை இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.</p><p>துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><h2>துப்பாக்கிச் சூடு&nbsp;</h2><p>மேலும், இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8e4cd45d-559a-4438-89d9-b556e587d15c/26-6a7c7fed2b8bb.webp' /></p><p>கேஹெல்பத்தர பத்மே உள்ளிட்ட குழுவினர் இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்ட சந்தர்ப்பத்தில், பெக்கோ சமன் என்ற நெதுன்கொட நிர்மல பிரசன்ன என்பவரும் அக்குழுவில் இருந்தார்.</p><p>பாதாள உலக குற்றவாளி பெக்கோ சமன் இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டு தடுப்புகாவலில் வைக்கப்பட்டுள்ளார்.</p><p>இதேவேளை, பெக்கோ சமனின் மனைவி ஷாதிகா லக்சானியும் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-12T14:07:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழகத்தின் எதிர்காலத்திற்கு ஆரோக்கியமானதல்ல - தீர்மானத்திற்கு பாஜக எதிர்ப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/bjp-condemns-opposing-delimitation-not-good-for-tn-1786543381"></link>
            <id>https://ibctamilnadu.com/article/bjp-condemns-opposing-delimitation-not-good-for-tn-1786543381</id>
            <summary type="text">nainar nagendran condemns resolution against delimitation : தொகுதி மறுவரையறைக்கு எதிரான தவெக அரசின் தீர்மானம் தமிழக நலனுக்கு எதிரானது என தமிழ்நாடு பாஜ...</summary>
            <content type="html"><![CDATA[<p>nainar nagendran condemns resolution against delimitation : தொகுதி மறுவரையறைக்கு எதிரான தவெக அரசின் தீர்மானம் தமிழக நலனுக்கு எதிரானது என தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். </p><h3> 

தொகுதி மறுவரையறைக்கு எதிரான தீர்மானம் </h3><p>

மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு, தொகுதி மறுவரையறைச் சட்டத் திருத்தத்தை கொண்டு வரும் முயற்சியில் உள்ளதாக கூறப்படுகிறது.
</p><p>
இந்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு முதல்வர் விஜய், இன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் தனித்தீர்மானம் கொண்டு வந்தார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a85b47ae-3424-4ed8-99d7-96efd3dc4f80/26-6a7c7d170d0a7.webp' /></p><p>
இந்த தீர்மானத்திற்கு அதிமுக, பாமக, தேமுதிக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தாலும், தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. </p><h3>

தமிழகத்தின் எதிர்காலத்திற்கு ஆரோக்கியமானதல்ல</h3><p>இந்நிலையில் தொகுதி மறுவரையறைக்கு எதிரான தவெக அரசின் தீர்மானம் தமிழக நலனுக்கு எதிரானது என தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b4a0941b-b4cb-469d-9fb3-cabe6e9f8426/26-6a7c7d17b4574.webp' /></p><p>
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், "தமிழக சட்டமன்றத்தில் இன்று தொகுதி மறுவரையறைக்கு (Delimitation) எதிராகத் தீர்மானம் கொண்டு வந்துள்ள அரசின் செயல், ஜனநாயகத்தின் மாண்பினைச் சிதைக்கும் முயற்சியாகும்.&nbsp;</p><p>
"ஒரு ஓட்டுக்கு ஒரு மதிப்பு" என்பதுதான் ஜனநாயகத்தின் அடிப்படை.மக்கள்தொகை அதிகரிப்பிற்கு ஏற்ப தொகுதிகள் பிரிக்கப்படும்போது தான், ஒவ்வொரு குடிமகனின் குரலும் நாடாளுமன்றத்தில் சமமான வலிமையுடன் ஒலிக்கும்.</p><p> 

இது வெறும் எல்லைகளைப் பிரிப்பது அல்ல; மக்களின் சரியான பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்தும் நடவடிக்கையாகும்.&nbsp;</p><p><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">தொகுதி மறுவரையறைக்கு எதிரான தவெக அரசின் தீர்மானம் – தமிழக நலனுக்கு எதிரானது!<br><br>தமிழக சட்டமன்றத்தில் இன்று தொகுதி மறுவரையறைக்கு (Delimitation) எதிராகத் தீர்மானம் கொண்டு வந்துள்ள <a href="https://x.com/TVKPartyHQ?ref_src=twsrc%5Etfw">@TVKPartyHQ</a> அரசின் செயல், ஜனநாயகத்தின் மாண்பினைச் சிதைக்கும் முயற்சியாகும். &quot;ஒரு ஓட்டுக்கு ஒரு மதிப்பு&quot;…</p>&mdash; Nainar Nagenthran (@NainarBJP) <a href="https://x.com/NainarBJP/status/2087477690853122412?ref_src=twsrc%5Etfw">August 12, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>

மாண்புமிகு பாரதப் பிரதமர் மோடி அவர்களின் தலைமையிலான மத்திய அரசு, எந்த மாநிலத்திற்கும், குறிப்பாகத் தென் மாநிலங்களுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையிலேயே அனைத்து முடிவுகளும் எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ள நிலையில், தவெக அரசின் இந்த எதிர்ப்பு தமிழகத்தின் எதிர்காலத்திற்கு ஆரோக்கியமானதல்ல.
</p><p>
 கண்மூடித்தனமாக இத்தகைய சீர்திருத்தங்களை எதிர்ப்பதைத் தவிர்த்து, முதல்வர் திரு. விஜய் அவர்களின் அரசு தனது முடிவினை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்" என தெரிவித்துள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-12T14:05:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[4 ஆவது குழந்தைக்கு மகப்பேறு விடுப்பு இல்லை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/no-maternity-leave-for-fourth-child-child-india-1786541498"></link>
            <id>https://jvpnews.com/article/no-maternity-leave-for-fourth-child-child-india-1786541498</id>
            <summary type="text">இந்தியாவில், 4 ஆவது குழந்தை பிறக்கவுள்ள நிலையில், சட்ட விதிகளின்படி தனக்கு மகப்பேறு விடுப்பு வழங்குமாறு கோரி இந்திய அரச பெண் ஊழியர் ஒருவர் தாக்கல் செய...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியாவில், 4 ஆவது குழந்தை பிறக்கவுள்ள நிலையில், சட்ட விதிகளின்படி தனக்கு மகப்பேறு விடுப்பு வழங்குமாறு கோரி இந்திய அரச பெண் ஊழியர் ஒருவர் தாக்கல் செய்த மனுவை&nbsp; நீதிமன்றம் நிராகரித்துள்ளது.&nbsp;</p><p>சசி குமாரி என்பவரால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை பரிசீலித்த&nbsp; உத்தரப் பிரதேசத்தின் அலகாபாத் மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சு ராணி சவுகான் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.&nbsp;</p><p>தனது 4 ஆவது குழந்தைக்கான மகப்பேறு விடுப்பு கோரிக்கையை நிராகரித்து, சம்பல் பிராந்தியக் கல்வி அதிகாரி பிறப்பித்த உத்தரவுக்கு எதிராகவே குறித்த பெண் மேல் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.&nbsp;</p><p>சட்டப்படி தனக்கு 6 மாத மகப்பேறு விடுப்பை வழங்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடுமாறு அவர் கோரியிருந்தார்.&nbsp;</p><p>விசாரணையின் போது, நடைமுறையிலுள்ள விதிகளின்படி மனுதாரருக்கு 4 ஆவது குழந்தைக்கு மகப்பேறு விடுப்பு பெற உரிமை இல்லை என்பதால், மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என அரசாங்கத் தரப்பு சட்டத்தரணி வாதிட்டார்.&nbsp;</p><p>எனினும், தனது முந்தைய 3 குழந்தைகள் பிறப்பின் போதும் தான் எந்தவொரு மகப்பேறு விடுப்பையும் பெறவில்லை என்றும், தற்போதே முதன்முறையாக விடுப்பு கோருவதாகவும் மனுதாரர் தரப்பு சட்டத்தரணி சுட்டிக்காட்டினார்.&nbsp;</p><p>இரு தரப்பு வாதங்களையும் பதிசெய்து கொண்ட நீதிபதி, மனுதாரர் ஏற்கனவே மகப்பேறு விடுப்பு பெற்றுள்ளமை தொடர்பான சான்றுகளை அரசாங்கத் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளதால், இந்த விடயத்தில் நீதிமன்றம் தலையிட வேண்டிய அவசியமில்லை எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.</p>]]></content>
            <updated>2026-08-12T14:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[விமானம் மாற்றப்பட்ட விவகாரம் : ட்ரம்ப் வெளியிட்ட புதிய தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/trump-says-planes-were-switched-1786542046"></link>
            <id>https://ibctamil.com/article/trump-says-planes-were-switched-1786542046</id>
            <summary type="text">அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், கடந்த மாதம் துருக்கியில் நடந்த நேட்டோ உச்சிமாநாட்டிலிருந்து வெளியேறியபோது, ​​இரகசியமாக விமானம் மாற்றப்பட்டதை உறுதி...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், கடந்த மாதம் துருக்கியில் நடந்த நேட்டோ உச்சிமாநாட்டிலிருந்து வெளியேறியபோது, ​​இரகசியமாக விமானம் மாற்றப்பட்டதை உறுதிப்படுத்தியுள்ளார். அச்சுறுத்தல்கள் காரணமாக அவ்வாறு செய்ய வேண்டியிருந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.</p><p>

"நான் இரகசிய சேவை மற்றும் இராணுவத்தின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றினேன்.
 அவர்கள் என்னை வேறு விமானத்தில் பயணிக்க வைக்க விரும்பினர்,""அவர்கள் சொல்வதை நான் செய்ய வேண்டும்." என்று ட்ரம்ப் செய்தியாளர்களிடம் கூறினார்.</p><p>"உண்மையில் நான் பயணித்த விமானம் அதிக ஆபத்தில் இருந்தது என்று நான் நினைக்கிறேன்," என்று அவர் கூறினார். "அது அதிக ஆபத்தில் இருந்தது, ஏனென்றால் அவர்கள் குறிவைக்க அதிக வாய்ப்புள்ள விமானம் அதுவாகத்தான் இருக்கும் என்று நான் நினைக்கிறேன்."

 "எனக்கு நிறைய அச்சுறுத்தல்கள் வருகின்றன." எனவும் ட்ரம்ப் தெரிவித்தார்.</p><h2>விமானம் மாற்றப்பட்ட தகவல்</h2><p>&nbsp;ஜூலை 8 அன்று, தொலைக்காட்சி கமராக்களைப் பார்த்தபடி ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் டிரம்ப் ஏறியதாகவும், பின்னர் ஒரு இராணுவ விமானத்தில் ஏறுவதற்காக உணவு வண்டியில் ஒளிந்துகொண்டதாகவும் செய்திகள் வெளியானதைத் தொடர்ந்து இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/df74dffb-14c5-4c9b-aff4-3a38bb0439dd/26-6a7c7b8fd41ec.webp' /></p><p>

விமானத்தின் மீது ஏவுகணை வீசப்போவதாக ஈரான் விடுத்த நம்பகமான அச்சுறுத்தலை அமெரிக்கா கண்டறிந்ததாக அதிகாரிகள் பிபிசியின் அமெரிக்க கூட்டாளியான சிபிஎஸ் நியூஸிடம் தெரிவித்தனர்.
</p><p>
ஈரானிய அச்சுறுத்தலுக்குப் பதிலளிக்கும் ஒரு விரிவான தந்திரத்தின் ஒரு பகுதியாக அமெரிக்க ஜனாதிபதி இரகசியமாக வெளியேற்றப்பட்டார் என்பது, விமானத்தில் இருந்த பத்திரிகையாளர்களுக்கும் சில வெள்ளை மாளிகை ஊழியர்களுக்கும் தெரியாமல் இருந்தது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p><p> </p>]]></content>
            <updated>2026-08-12T13:56:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[நூற்றாண்டுகளுக்கு பிறகு கண்டுபிடிக்கப்பட்ட பிரித்தானிய போர்க்கப்பலின் சிதைவுகள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/wreckage-of-a-british-warship-discovered-1786541666"></link>
            <id>https://tamilwin.com/article/wreckage-of-a-british-warship-discovered-1786541666</id>
            <summary type="text">கடந்த 1908-ஆம் ஆண்டு ஆங்கிலக் கால்வாயில் மூழ்கிய அரச கடற்படைக்குச் சொந்தமான
&#039;ஹெச்.எம்.எஸ் டைகர்&#039; என்ற போர்க்கப்பலின் சிதைந்த பகுதிகளை சுழியோடிகள் குழ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கடந்த 1908-ஆம் ஆண்டு ஆங்கிலக் கால்வாயில் மூழ்கிய அரச கடற்படைக்குச் சொந்தமான
'ஹெச்.எம்.எஸ் டைகர்' என்ற போர்க்கப்பலின் சிதைந்த பகுதிகளை சுழியோடிகள் குழு
கண்டுபிடித்துள்ளது.
</p><p>
1908-ஆம் ஆண்டு கடற்படைப் பயிற்சியின் போது, மற்றொரு போர்க்கப்பல் மீது
தற்செயலாக மோதியதில் 'ஹெச்.எம்.எஸ் டைகர்' இரண்டாகப் பிளந்து கடலில்
மூழ்கியது.

இதில் 57 பணியாளர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.</p><p></p><h2>சிதைவுகள்&nbsp;</h2><p>

'புரோஜெக்ட் எக்ஸ்ப்ளோர்' என்ற ஆய்வுக் குழுவைச் சேர்ந்த லியோ ஃபீல்டிங்
மற்றும் டான் மெக்முலன் ஆகியோர் ஐந்து ஆண்டுகள் வரலாற்று ஆவணங்களை ஆய்வு
செய்து, வைட் தீவுக்கு அருகே கடலுக்கு அடியில் இந்த போர்க்கப்பலின்
எச்சங்களைக் கண்டுபிடித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/701ffd79-4e0d-4689-88d6-bb364ba6064d/26-6a7c7968ca0e1.webp' /></p><p>

தற்போது இங்கிலாந்து பாராளுமன்றத்தில் பரிசீலனையில் உள்ள 'ஆயுதப் படைகள்
சட்டத்தின்' கீழ், இத்தகைய வரலாற்று சிறப்புமிக்க போர்க்கப்பல் சிதைவுகள்
சேதப்படுத்தப்படாமல் 'பாதுகாக்கப்பட்ட பகுதியாக' அறிவிக்கப்பட்டு
பராமரிக்கப்படவுள்ளன.</p><p></p>]]></content>
            <updated>2026-08-12T13:47:32+00:00</updated>
        </entry>
    </feed>
