<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-08-12T09:22:15+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[CIDயிலிருந்து வெளியேறினார் யோஷித ராஜபக்ச]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/yoshitha-rajapaksa-left-the-cid-1786526223"></link>
            <id>https://jvpnews.com/article/yoshitha-rajapaksa-left-the-cid-1786526223</id>
            <summary type="text">முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்ச, சுமார் இரண்டு மணி நேர விசாரணைக்குப் பின்னர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திலிருந்து வெளியேறி...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்ச, சுமார் இரண்டு மணி நேர விசாரணைக்குப் பின்னர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திலிருந்து வெளியேறினார்.</p><p>இன்று (12) முற்பகல் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்குச் சென்ற அவர், முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணையொன்றுடன் தொடர்பாக வாக்குமூலம் வழங்கியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>வாக்குமூலம் வழங்கிய பின்னர் சுமார் இரண்டு மணி நேரம் கழித்து அவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திலிருந்து வெளியேறினார்.</p>]]></content>
            <updated>2026-08-12T09:17:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆர்க்டிக் கடல் பாதையில் சரக்கு கப்பல் சேவையை தொடங்க சீனா திட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/china-eyes-arctic-route-amid-middle-east-war-1786526126"></link>
            <id>https://news.lankasri.com/article/china-eyes-arctic-route-amid-middle-east-war-1786526126</id>
            <summary type="text">China Eyes Arctic Route: சீனா ஆர்க்டிக் கடல் பாதையில் சரக்குக்கப்பல் சேவையை தொடங்க திட்டமிட்டுள்ளது.&amp;nbsp;மத்திய கிழக்கு பகுதியில் நடைபெறும் போர் காரண...</summary>
            <content type="html"><![CDATA[<p><b>China Eyes Arctic Route: சீனா ஆர்க்டிக் கடல் பாதையில் சரக்குக்கப்பல் சேவையை தொடங்க திட்டமிட்டுள்ளது.&nbsp;</b></p><p>மத்திய கிழக்கு பகுதியில் நடைபெறும் போர் காரணமாக, சீனா தனது ஐரோப்பாவிற்கான சரக்கு கப்பல் போக்குவரத்துக்கு புதிய மாற்று வழியைத் தேடுகிறது.</p><h2>

ஆர்க்டிக் பாதையில் சரக்கு கப்பல் சேவை</h2><p>இதன் விளைவாக, சீனாவின் Sea Legend எனும் கப்பல் போக்குவரத்து நிறுவனம், “Ice Silk Road” எனப்படும் ஆர்க்டிக் பாதையில் வாரந்தோறும் சரக்கு கப்பல் சேவையை தொடங்கியுள்ளது.</p><p>இந்த பாதை, சீனாவின் நிங்போ துறைமுகத்திலிருந்து இங்கிலாந்தின் ஃபெலிக்ஸ்டோவ் துறைமுகம் வரை செல்லும் நேரத்தை பாதியாகக் குறைக்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ea38515c-a57c-4aac-8860-3fd1c4e61aba/26-6a7c39b045796.webp' /></p><p>ஆர்க்டிக் பகுதியில் பனிப்பாறைகள் உருகுவதால், கோடைக்காலங்களில் கப்பல்கள் ice-breaker கப்பல்களின் உதவியின்றி பயணிக்க முடிகிறது. இதனால் செலவுகள் குறைந்து, போக்குவரத்து எளிதாகிறது.
</p><p>
ஆனால், மேற்கத்திய கப்பல் நிறுவனங்கள் (Maersk, Hapag Lloyd, MSC) இந்த பாதையைப் பயன்படுத்த மறுத்துள்ளன.
</p><h2>
காரணங்கள்:
</h2><ul><li>
ரஷ்யாவின் கட்டுப்பாடு (Northern Sea Route-க்கு அனுமதி Rosatom மூலம் வழங்கப்படுகிறது)
</li><li>
சூழல் அபாயங்கள் - பனிப்பாறைகள், எண்ணெய் கசிவு, உயிரியல் பாதிப்பு
</li><li>
செயல்பாட்டு சவால்கள் - இயந்திரக் கோளாறுகள், மீட்பு நடவடிக்கைகளில் சிரமம்</li></ul><p></p><p>Allianz நிறுவனம் வெளியிட்ட தகவலின்படி, 2013 முதல் 2023 வரை ஆர்க்டிக் கடலில் 531 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதில் பாதி சம்பவங்கள் இயந்திரக் கோளாறுகளால் ஏற்பட்டவை.
</p><p>
சீனாவிற்கு ரஷ்யாவுடன் உள்ள நெருக்கமான உறவு காரணமாக, இந்த பாதையை பயன்படுத்துவதில் அதிக நன்மை கிடைக்கிறது. </p><p>மத்திய கிழக்கு பகுதியில் ஹவுதிக்கள் சீனாவுடன் தொடர்புடைய சரக்குகளை தாக்காமல் இருந்தாலும், தவறான கணக்கீடுகள் அபாயத்தை ஏற்படுத்தக்கூடும்.
</p><p>
மேற்கத்திய நிறுவனங்கள், ஆர்க்டிக் பாதையை விட Cape of Good Hope வழியாக நீண்ட பயணத்தைத் தேர்வு செய்கின்றன. ஆனால் சீனாவின் “Ice Silk Road” திட்டம், ஆசியா-யூரோப் வர்த்தகத்தில் புதிய மாற்றத்தை உருவாக்கும் வாய்ப்பு உள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-12T09:13:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[இன்று வானில் நிகழப் போகும் அதிசயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/meteor-shower-from-midnight-tomorrow-morning-1786523729"></link>
            <id>https://canadamirror.com/article/meteor-shower-from-midnight-tomorrow-morning-1786523729</id>
            <summary type="text">இன்று (12.08.2026) இரவு சுமார் 133 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் அரிய விண்கல் மழை எனக் கூறப்படும் ‘பெர்சீட்’ (Perseid) விண்கல் மழை, வானில் உச்சத்தை அடை...</summary>
            <content type="html"><![CDATA[<p>இன்று (12.08.2026) இரவு சுமார் 133 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் அரிய விண்கல் மழை எனக் கூறப்படும் ‘பெர்சீட்’ (Perseid) விண்கல் மழை, வானில் உச்சத்தை அடையவுள்ளதாக விண்வெளி ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.</p><p>
பெர்சீட் விண்கல் மழையானது, 109P/Swift-Tuttle என்ற வால்நட்சத்திரம் விட்டுச் சென்ற தூசித் துகள்கள் வழியாக பூமி பயணிக்கும் போது உருவாகிறது.</p><h2>ஒளி மாசு குறைந்த பகுதிகளில்</h2><p>

இந்தச் சிறிய விண்கற்கள் பூமியின் வளிமண்டலத்துக்குள் மிக வேகமாக நுழையும்போது, வளிமண்டலத்துடனான உராய்வினால் வெப்பமடைந்து ஒளிர்கின்றன.</p><p></p><p>இரவு வானில் காணப்படும் இந்த ஒளிரும் தடங்களே பொதுவாக ‘விண்கல் மழை’ என அழைக்கப்படுகின்றன.
</p><p>
இன்றைய பெர்சீட் விண்கல் மழையின் போது, வானிலை மற்றும் வானத்தை மறைக்கும் நிலைமைகள் சாதகமாக இருந்தால், ஒரு மணி நேரத்தில் 50 முதல் 100 வரையிலான விண்கற்களைக் காணக்கூடிய வாய்ப்பு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

விண்வெளி ஆர்வலர்கள் மற்றும் வானியல் பிரியர்களுக்கு இது வானில் காணக்கூடிய குறிப்பிடத்தக்க இயற்கைக் காட்சியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>

ஒளி மாசு குறைந்த பகுதிகளிலிருந்து, நகர்ப்புற விளக்குகளிலிருந்து விலகி, திறந்த வானத்தை நோக்கிப் பார்ப்பதன் மூலம் இந்த விண்கல் மழையை அவதானிக்க முடியும்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-12T09:12:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கற்பிட்டியில் வள்ளம் கவிழ்ந்து சகோதரர்களான இரு சிறுவர்கள் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/two-brothers-die-bridge-collapses-in-kalpitiya-1786525949"></link>
            <id>https://jvpnews.com/article/two-brothers-die-bridge-collapses-in-kalpitiya-1786525949</id>
            <summary type="text">கற்பிட்டி, குரக்கன் ஹேன பகுதியில் உள்ள ஏரியில் வள்ளம் ஒன்று கவிழ்ந்ததில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு பிள்ளைகள் உயிரிழந்துள்ளனர்.உயிரிழந்தவர்கள் 7 வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கற்பிட்டி, குரக்கன் ஹேன பகுதியில் உள்ள ஏரியில் வள்ளம் ஒன்று கவிழ்ந்ததில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு பிள்ளைகள் உயிரிழந்துள்ளனர்.</p><p>உயிரிழந்தவர்கள் 7 வயது சிறுவனும் 13 வயது சிறுமியும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p>குறித்த குடும்பத்தினர் நேற்று (11) பிற்பகல் கடற்றொழிலுக்கு பயன்படுத்தப்படும் வலைகளை எடுத்துவருவதற்காக வள்ளத்தில் பயணித்துள்ளனர்.</p><p>இதன்போது வள்ளம் கவிழ்ந்ததில், தாய், தந்தை மற்றும் இரு பிள்ளைகளும் நீரில் மூழ்கிய&nbsp; நிலையில்&nbsp; கற்பிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், பிள்ளைகள் இருவரும் உயிரிழந்தனர்.</p><p>உயிரிழந்த பிள்ளைகளின் தாய் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாகவும், தந்தை மேலதிக சிகிச்சைக்காக புத்தளம் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கற்பிட்டி காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-08-12T09:12:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்திய அணிக்கு எதிரான இலங்கை டெஸ்ட் குழாம் அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/announced-srilanka-test-squad-against-india-1786525290"></link>
            <id>https://ibctamil.com/article/announced-srilanka-test-squad-against-india-1786525290</id>
            <summary type="text">இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டிக்கான தனது அணியை இலங்கை அறிவித்துள்ளது....</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டிக்கான தனது அணியை இலங்கை அறிவித்துள்ளது.</p><p>

தனஞ்சய டி சில்வா தலைமையிலான இந்த அணியின் துணை தலைவராக கமிந்து மெண்டிஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
</p><p>
காயம் காரணமாக குசல் மெண்டிஸ் இந்த அணியில் இடம்பெறவில்லை, இதன் விளைவாக, முதல் போட்டிக்கான துணை தலைவராக கமிந்து மெண்டிஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
</p><p></p><h2>நிரோஷன் திக்வெல்ல அணியில்</h2><p>
இதற்கிடையில், குசல் மெண்டிஸுக்குப் பதிலாக விக்கெட் காப்பாளரான நிரோஷன் திக்வெல்ல அணியில் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார்.

2023 மார்ச் மாதம் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டிக்குப் பிறகு அவர் இலங்கை டெஸ்ட் அணியில் இடம்பெறவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/706b1e68-db15-4aff-b97b-62f124f344a0/26-6a7c38c5bee85.webp' /></p><p>
</p><p>
இதன் மூலம் 3 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் டெஸ்ட் அணியில் திக்வெல்ல இடம்பிடித்துள்ளார்.

மேலும், கடந்த மேற்கிந்தியத் தீவுகள் தொடரில் விளையாடாத பல வீரர்களும், இரண்டு புதிய வீரர்களும் இந்த அணியில் உள்வாங்கப்பட்டுள்ளனர். </p><p>

அதன்படி, இதுவரை எந்தவொரு சர்வதேச கிரிக்கெட் போட்டியிலும் விளையாடாத துடுப்பாட்ட வீரரான பசிந்து சூரியபண்டா மற்றும் 
சகலதுறை வீரரான கேசர நுவந்த ஆகிய இரண்டு வீரர்களும் இலங்கை அணியில் அழைக்கப்பட்டுள்ளனர்.
</p><p>
இலங்கை மற்றும் இந்தியா அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி, ஒகஸ்ட் 15 ஆம் திகதி காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமாக உள்ளது.</p><p></p><p>
</p><p><b>
இலங்கை டெஸ்ட் அணி</b></p><p>
தனஞ்சய டி சில்வா c</p><p> 
லஹிரு உதர நிஷான்</p><p>
மதுஷ்க
</p><p>கமிந்து மெண்டிஸ் vc </p><p>
தினேஷ் சந்திமால்
</p><p>பசிந்து சூரியபண்டார
</p><p>சோனால் தினுஷ
</p><p>நிரோஷன் டிக்வெல்ல – wc </p><p>
ரமேஷ் மெண்டிஸ்</p><p>
பிரபாத் ஜெயசூரிய
</p><p>கேஷார நுவந்த</p><p>
மிலன் ரத்நாயக்க&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-12T09:12:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[முட்டை மஞ்சள் கரு சாப்பிடலாமா? கூடாதா? அவசியம் தெரிந்து கொள்ளவேண்டியவை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/what-is-the-benefits-of-eating-egg-yellow-yolks-1786525232"></link>
            <id>https://news.lankasri.com/article/what-is-the-benefits-of-eating-egg-yellow-yolks-1786525232</id>
            <summary type="text">Egg yolk is good or bad: பொதுவாக, பலருக்கும் முட்டையில் இருக்கக்கூடிய மஞ்சள் கரு பிடிப்பதில்லை. அதில் கொழுப்பு சத்து அதிகம் இருக்கும் என்று அதை தவிர்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>Egg yolk is good or bad: பொதுவாக, பலருக்கும் முட்டையில் இருக்கக்கூடிய மஞ்சள் கரு பிடிப்பதில்லை. அதில் கொழுப்பு சத்து அதிகம் இருக்கும் என்று அதை தவிர்க்கின்றனர். ஆனால் உண்மையில் முட்டை மஞ்சள் கொழுப்பு சத்து அதிகம் இருக்கிறதா? என்பதை பற்றி பார்ப்போம்.
</p><p> கடந்து சில தினங்களாக மக்கள் மத்தியில் ஆரோக்கியம் தொடர்பான ஒரு நல்ல விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது. அந்த வகையில், முட்டை சாப்பிடும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதாவது காலை உணவு புரதம் இருக்க வேண்டியதன் அவசியம் அதிகரித்து வருகிறது. இருந்தாலும் கூட பலரும் முட்டையின் மஞ்சள் கருவை சாப்பிட மறுக்கின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fa9efee7-7a16-4b7f-bfeb-9f18e2db3f95/26-6a7c3631ea3a9.webp' /></p><p></p><p> </p><p>காரணம் முட்டையின் மஞ்சள் கரு என்பது கொழுப்பு சத்து அதிகம் நிறைந்த பகுதி என்ற காரணமாகவே அவர்கள் தவிர்க்கின்றனர். ஆனால், அது எந்த அளவிற்கு உண்மை என்று பலருக்கும் தெரிவதில்லை. உண்மையில் முட்டையின் மஞ்சள் கருவில் பல அத்தியாவசிய வைட்டமின்கள் தாதுக்கள் மற்றும் கோலின் ஆகியவை உள்ளதாக சொல்லப்படுகிறது.
</p><p> ஆதலால், எல்லோரும் முட்டையின் மஞ்சள் கருவை தூக்கி எறிய வேண்டும் என்பதில்லை. மேலும், நாம் சாப்பிட வேண்டிய முழு முட்டை அல்லது வெள்ளை கருக்கலின் எண்ணிக்கை இவையெல்லாம் நம்முடைய ஒட்டுமொத்த உணவு முறை கலோரி தேவைகள் மற்றும் தனிப்பட்ட உடல் நிலையாகிவை பொறுத்து அமையக்கூடியது.</p><p></p><p>
</p><p> உங்களுடைய மருத்துவர் உடல் நல காரணத்திற்காக குறிப்பிட்ட சில உணவு முறையை உங்களுக்கு பரிந்துரைத்தால் அதற்கு ஏற்ப முட்டைகளும் மஞ்சள் கருவையும் எடுத்துக் கொள்வது சிறந்தது. மேலும், நல்ல ஆரோக்கியமான ஒரு நபர் ஒரு நாளைக்கு ஒன்று முதல் இரண்டு முட்டை மஞ்சள் கருவுகளை கட்டாயமாக பயமின்றி எடுத்துக் கொள்ளலாம்.</p><p>மஞ்சள் கருவில் கொலஸ்ட்ரால் அதிகமாக இருந்தாலும் அது ஆரோக்கியமான மனிதர்களின் ரத்த கொலஸ்ட்ரால் அளவை நேரடியாக பாதிப்பு இல்லை என்று மருத்துவ ஆய்வுகள் நமக்கு தெரிவிக்கிறார்கள். </p><p>அதோடு, நம்முடைய உடலுக்கு தேவையான வைட்டமின் டி ,பி 12, ஏ இரும்புச்சத்து மற்றும் மூளை வளர்ச்சிக்கு உகந்த கோலின் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் இந்த மஞ்சள் கருவில் அதிகம் இருப்பதாக சொல்லப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8ab93b10-3568-4fec-9e80-d593bfb4fddf/26-6a7c3632a3559.webp' /></p><p></p><p>மேலும், ஒரு சிலர் இப்பொழுது உடற்பயிற்சிக்காக ஜிம் செல்லக்கூடியவராக இருந்தால் அவர்கள் ஒரு நாளைக்கு ஒன்று முதல் மூன்று முழு முட்டைகள் வரை மஞ்சள் கருடன் சேர்த்து சாப்பிடலாம். </p><p>நீங்கள் இன்னும் கூடுதலாக முட்டை சாப்பிட வேண்டும் என்று நினைத்தால் வெள்ளை கருவை மட்டும் சாப்பிட்டு மஞ்சள் கருவின் எண்ணிக்கையை ஒன்று அல்லது இரண்டாக கட்டுப்படுத்திக் கொள்வது நல்லது என்றும் சொல்லப்படுகிறது. </p><p>ஆகையால், புரத தேவைக்காக ஒன்று அல்லது மூன்று முட்டை சாப்பிடுபவர்கள் எனில் மஞ்சள் கருவை தவிர்க்க வேண்டிய எந்த ஒரு அவசியமும் இல்லை, அச்சம் இல்லாமல் கட்டாயமாக சாப்பிடலாம் உங்களுக்கு ஏதேனும் குழப்பம் பயம் இருந்தால் மருத்துவரை ஆலோசித்து பிறகு அவர்களுடைய அறிவுரையின்படி எடுத்துக் கொள்ளலாம்.</p>]]></content>
            <updated>2026-08-12T09:08:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[குறைந்துவரும் நதிநீர் மட்டம்: ஜேர்மன் அமைச்சர்கள் சந்திப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/german-transport-ministers-discuss-rhine-river-1786525649"></link>
            <id>https://news.lankasri.com/article/german-transport-ministers-discuss-rhine-river-1786525649</id>
            <summary type="text">ரைன் நதியின் நீர் மட்டம் குறைந்துவருவதால் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ள விடயம் தொடர்பில் அமைச்சர்கள் விவாதிக்க உள்ளார்கள்.


ரைன் நதியில் ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>ரைன் நதியின் நீர் மட்டம் குறைந்துவருவதால் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ள விடயம் தொடர்பில் அமைச்சர்கள் விவாதிக்க உள்ளார்கள்.
</p><p>

ரைன் நதியில் நீர் மட்டம் குறைந்துவருவதால், ஜேர்மனியில் சரக்குக் கப்பல் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
</p><h3>
குறைந்துவரும் நதிநீர் மட்டம்
</h3><p>
சுவிஸ் ஆல்ப்ஸ் மலையில் பிறக்கும் ரைன் நதி, Liechtenstein, ஆஸ்திரியா, ஜேர்மனி, பிரான்ஸ் மற்றும் நெதர்லாந்து வழியாக வட கடலைச் சென்றடைகிறது.</p><p>

ஆக, ஐரோப்பாவில், நீர் வழிப் போக்குவரத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது ரைன் நதி.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/531d5fa0-ab2a-456f-af2e-adbc2a02cd4f/26-6a7c37d364e8e.webp' /></p><p>
விடயம் என்னவென்றால், இந்த நாடுகள் சரக்குப் போக்குவரத்துக்கு ரைன் நதியை நம்பியுள்ளன.
</p><p>
ஆனால், வெயில் மற்றும் மழையின்மை காரணமாக ரைன் நதியில் நீர் மட்டம் குறைந்துவருகிறது.&nbsp;</p><p></p><p>
இதனால், ஏற்கனவே ரைன் நதியில் நீர் மட்டம் குறைந்துள்ளதால் சுவிட்சர்லாந்தில் சரக்குக் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது ஜேர்மனியிலும் சரக்குக் கப்பல் போக்குவரத்து பாதிப்புக்குள்ளாகியுள்ளது.
</p><p>
இந்நிலையில், சரக்குக் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதால் ஏற்பட்டுள்ள பொருட்கள் தட்டுப்பாட்டை சமாளிப்பது தொடர்பில் விவாதிப்பதற்காக, ஜேர்மன் அமைச்சர்கள் கூட்டம் ஒன்றில் பங்கேற்க உள்ளார்கள்.
</p><p>
அதன்படி, இன்று, ஜேர்மன் ஃபெடரல் போக்குவரத்துத்துறை அமைச்சரும், ஜேர்மன் மாகாண போக்குவரத்துத்துறை அமைச்சர்களும், வீடியோ கான்ஃபரன்சிங் முறையில் கூட்டம் ஒன்றில் பங்கேற்று அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பில் விவாதிக்க உள்ளார்கள்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-12T09:08:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[தங்க விலையில் பதிவாகியுள்ள நிலவரம்! நகை வாங்க காத்திருப்போருக்கான செய்தி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/gold-price-today-in-sri-lanka-1786523657"></link>
            <id>https://tamilwin.com/article/gold-price-today-in-sri-lanka-1786523657</id>
            <summary type="text">இலங்கையில் இன்றைய தினம் (12.08.2026) தங்கத்தின் விலையில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை என அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
நேற்றை...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் இன்றைய தினம் (12.08.2026) தங்கத்தின் விலையில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை என அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
</p><p>நேற்றைய தினம் (11.08.2026) விற்பனை செய்யப்பட்ட அதே விலையிலேயே இன்று தங்கம் விற்பனை செய்யப்படுகிறது.</p><h2>தங்க விலை நிலவரம்</h2><p>
</p><p>
தற்போதைய விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் ஒரு பவுண் 380,000 ரூபாய்க்கும், 22 கரட் தங்கம் ஒரு பவுண் 349,600 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e9d383c8-e77b-480f-8490-215c37622bae/26-6a7c36c5ba976.webp' /></p><p>
</p><p>
மேலும், 24 கரட் தங்கம் ஒரு கிராம் 47,500 ரூபாயாகவும், 22 கரட் தங்கம் ஒரு கிராம் 43,700 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது. தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-12T09:03:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Tony</name>
            </author>
            <title type="text"><![CDATA[அஜித் படத்தில் செகண்ட் ஹீரோவாக நடிக்க ஆசைபட்ட விஜய்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/vijay-want-to-work-with-ajith-movie-1786511744"></link>
            <id>https://cineulagam.com/article/vijay-want-to-work-with-ajith-movie-1786511744</id>
            <summary type="text">&amp;nbsp;தலதளபதிஅஜித், விஜய் இன்று அவர்களுக்கு பிடித்த துறையில் மிகச்சிறந்து விளங்கி வருகின்றனர். அந்த வகையில் விஜய் தமிழகத்தின் முதலமைச்சர் ஆக, அஜித் கா...</summary>
            <content type="html"><![CDATA[<h2>&nbsp;தலதளபதி</h2><p>அஜித், விஜய் இன்று அவர்களுக்கு பிடித்த துறையில் மிகச்சிறந்து விளங்கி வருகின்றனர். அந்த வகையில் விஜய் தமிழகத்தின் முதலமைச்சர் ஆக, அஜித் கார் ரேஸில் முத்திரை பதித்து வருகிறார்.</p><p> அஜித், விஜய் மங்காத்தா, வேலாயுதம் படப்பிடிப்பு போது ஒருவரை ஒருவர் நேரில் சந்தித்ததனர், பிறகு அஜித் பிரியாணி செய்து போட்டார், விஜய் ஒரு வாட்ச் கிப்ட் செய்தார், இப்படி இருவரும் இன்று வரை நல்ல நண்பர்களாக இருந்து வருகின்றனர்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/638eef0b-3efa-4f7b-bfb3-5a7f71236ae2/26-6a7c01830e0b2.webp' /></p><p>இந்நிலையில் மங்காத்தா படத்தின் வெற்றிக்கு விஜய் வெங்கட் பிரபு டீமிற்கு ஒரு பார்ட்டி வைத்துள்ளார், அப்போது பேசும் போது விஜய் வெங்கட் பிரபுவிடம், அர்ஜுன் சார் கேரக்டர் என்னிடம் கேட்டுருக்கலாமே, நான் நடித்திருப்பேனே நம்ம அஜித் சார் 50வது படத்திற்காக என கூற, வெங்கட் பிரபுவின் உண்மையாகவா அண்ணா என கேட்க, உண்மையாக தான் நானே நடித்திருப்பேனே என விஜய் சொன்னாராம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/14982a29-73c4-438a-aa61-ab7759059fb9/26-6a7c0183b4b2a.webp' /></p>]]></content>
            <updated>2026-08-12T08:58:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்க உளவுத்துறையின் அவசர எச்சரிக்கை.. இரகசிய விமானத்தில் தப்பிச் சென்ற ட்ரம்ப்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/trump-confirms-switched-planes-nato-summit-1786523584"></link>
            <id>https://tamilwin.com/article/trump-confirms-switched-planes-nato-summit-1786523584</id>
            <summary type="text">ஈரானின் அச்சுறுத்தல் காரணமாகவே துருக்கியில் நடைபெற்ற நேட்டோ (NATO) உச்சிமாநாட்டின் பின்னர், தாம் இரகசியமாக விமானத்தை மாற்றியதாக அமெரிக்க ஜனாதிபதி டொனா...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானின் அச்சுறுத்தல் காரணமாகவே துருக்கியில் நடைபெற்ற நேட்டோ (NATO) உச்சிமாநாட்டின் பின்னர், தாம் இரகசியமாக விமானத்தை மாற்றியதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளார். </p><p>"இரகசிய பிரிவு மற்றும் இராணுவத்தினரின் வழிகாட்டலின்படியே நான் செயற்படுகிறேன், அவர்கள் என்னை வேறு விமானத்தில் பயணிக்குமாறு கேட்டுக்கொண்டனர்" எனத் தெரிவித்துள்ள ட்ரம்ப், தமது உயிருக்கு வெளியுலகிற்குத் தெரியாத பல அச்சுறுத்தல்கள் நிலவுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
கடந்த ஜூலை 8ஆம் திகதி அன்சாரா விமான நிலையத்தில் ஊடகக் கெமராக்களுக்கு முன்னால் ஏர் போர்ஸ் ஒன் (Air Force One) விமானத்தில் ட்ரம்ப் ஏறியுள்ளார்.&nbsp;</p><h2>ஈரானின் அச்சுறுத்தல்..&nbsp;</h2><p>இருப்பினும், பின்னர் யாருக்கும் தெரியாமல் விமானத்தின் மறுபக்கத்திலிருந்து உணவு விநியோக வாகனத்தின் (Catering Truck) மூலம் இரகசியமாக C-32A என்ற இராணுவ விமானத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c7901093-9563-4287-b97a-7adb885e7681/26-6a7c327cdd12b.webp' /></p><p> அதேநேரம், பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்சேத் (Pete Hegseth) சாதாரண பயணி போல வெளிப் படிக்கட்டுகள் வழியாக அந்த இராணுவ விமானத்தில் ஏறியுள்ளார்.</p><p>ஆனால், ஊடகவியலாளர்களும் சில வெள்ளை மாளிகை ஊழியர்களும் ட்ரம்ப், ஏர் போர்ஸ் ஒன் விமானத்திலேயே இருப்பதாக நம்ப வைக்கப்பட்டுள்ளனர். அத்துடன் அவர்களின் விமானத்தின் ஜன்னல் திரைச்சீலைகளை மூடுமாறும் அறிவுறுத்தப்பட்டிருந்தனர்.</p><p></p><h2>தீவிர பாதுகாப்பு&nbsp;</h2><p> புகைப்படக் கலைஞர் ஒருவர் ஜன்னல் திரையைத் திறக்க முயன்றபோது அது உடனடியாகத் தடுக்கப்பட்டதாக வெள்ளை மாளிகை செய்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6beb1907-fa73-41fc-ab80-f7c40f353bde/26-6a7c347315db9.webp' /></p><p>
</p><p>
நேட்டோ உச்சிமாநாட்டின் போது ட்ரம்பை இலக்கு வைத்து தோளில் வைத்து இயக்கும் ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்படலாம் என அமெரிக்க உளவுத்துறை எச்சரித்திருந்த பின்னணியிலேயே இந்த இரகசிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p> மேலும், இந்த ஏமாற்று நடவடிக்கையைத் தொடர்வதற்காக, ஊடகவியலாளர்கள் பயணித்த விமானத்திற்குத் தொடர்ந்து "AF1" என்ற அழைப்புக் குறியீடு (Call sign) பயன்படுத்தப்பட்டதுடன், ட்ரம்ப் பயணித்த C-32A விமானத்திற்கு "Reach 18" என்ற வேறு அழைப்புக் குறியீடு பயன்படுத்தப்பட்டுப் பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-12T08:54:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரான்சில் ஜெல்லி மீன்களால் மின் உற்பத்தி பாதிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/jelly-fish-hit-nuclear-plant-affect-electricity-1786524823"></link>
            <id>https://news.lankasri.com/article/jelly-fish-hit-nuclear-plant-affect-electricity-1786524823</id>
            <summary type="text">பிரான்சிலுள்ள அணு மின் நிலையங்களை குளிர்விக்க பயன்படும் தண்ணீரில் ஜெல்லி மீன்கள் இருந்ததால், மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.


பிரான்சிலுள்ள அணு...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரான்சிலுள்ள அணு மின் நிலையங்களை குளிர்விக்க பயன்படும் தண்ணீரில் ஜெல்லி மீன்கள் இருந்ததால், மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.
</p><p>

பிரான்சிலுள்ள அணு மின் நிலையம் ஒன்றில் உள்ள அணுக்கரு உலைகள் மூன்றின் இயக்கம் நிறுத்தப்பட்டுள்ளதாக மின் வழங்கல் அமைப்பான EDF (Électricité de France) தெரிவித்துள்ளது.</p><h3>

ஜெல்லி மீன்களால் நிறுத்தப்பட்ட மின் உற்பத்தி
</h3><p>
பிரான்சிலுள்ள Dunkirk என்னுமிடத்திற்கு அருகில், மேற்கு ஐரோப்பாவிலேயே பெரிய அணு மின் நிலையமான Gravelines அணு மின் நிலையம் அமைந்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/81a35ced-1920-4dec-a66d-0126ea560513/26-6a7c349930c4a.webp' /></p><p>
இந்த மின் நிலையங்களிலுள்ள அணுக்கரு உலைகளை குளிர்விப்பதற்காக குழாய்கள் அமைக்கப்பட்டிருக்கும். </p><p>அந்த குழாய்கள் வழியாக கடல் நீர் செலுத்தப்படும்.

விடயம் என்னவென்றால், பருவநிலை மாற்றம், அதிக அளவில் மீன்களைப் பிடித்தல், வெப்பமாகும் கடல், பிளாஸ்டிக் மாசு ஆகிய காரணங்களால் கடலில் ஜெல்லி மீன்கள் அதிக அளவில் பெருகுகின்றன.&nbsp;</p><p></p><p>

மின் நிலையங்களிலுள்ள அணுக்கரு உலைகளை குளிர்விப்பதற்காக இந்த கடல் நீர்தான் பயன்படுத்தப்படுகிறது.
</p><p>
இந்நிலையில், Gravelines அணு மின் நிலையத்தில் அணுக்கரு உலைகளை குளிர்விப்பதற்காக பயன்படுத்தப்படும் கடல் நீரில் ஏராளமான ஜெல்லி மீன்கள் இருந்ததால், குழாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/46e7dca1-976a-4ecc-ac26-78311160d8f5/26-6a7c34986f35f.webp' /></p><p>
ஆகவே, அணு மின் நிலையத்திலுள்ள மூன்று அணுக்கரு உலைகளின் இயக்கம் நிறுத்தப்பட்டுள்ளதாக மின் வழங்கல் அமைப்பான EDF தெரிவித்துள்ளது.</p><p>

ஏற்கனவே, அதீத வெப்பம் காரணமாக பிரான்சில் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது அணுக்கரு உலைகளின் இயக்கம் நிறுத்தப்பட்டுள்ளதால், மின் உற்பத்தி மேலும் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-12T08:54:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ட்ரம்ப்பிற்கு எதிராக நெதன்யாகு எடுத்துள்ள அதிரடி முடிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/netanyahu-s-bold-move-against-trump-for-gaza-1786512036"></link>
            <id>https://canadamirror.com/article/netanyahu-s-bold-move-against-trump-for-gaza-1786512036</id>
            <summary type="text">இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, தனது உள்நாட்டு அரசியல் எதிர்காலத்தைப் பாதுகாத்துக் கொள்வதற்காக டொனால்ட் ட்ரம்ப்பை எதிர்க்கத் தயாராக இருப்பதாக ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, தனது உள்நாட்டு அரசியல் எதிர்காலத்தைப் பாதுகாத்துக் கொள்வதற்காக டொனால்ட் ட்ரம்ப்பை எதிர்க்கத் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளமை உகல நாடுகளில் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><p>இத் தகவலை சவூதி அரேபியாவுக்கான முன்னாள் அமெரிக்கத் தூதரும் இஸ்ரேலுக்கான அமெரிக்கத் தூதரகத்தின் சார்ஜ் டி அஃபேர்ஸாகப் பணியாற்றியவருமான மைக்கேல் ராட்னி தெரிவித்துள்ளார்.</p><p>ட்ரம்ப்பிடமிருந்து எத்தகைய எதிர்வினை வந்தாலும் அதை எதிர்கொள்வதை விட, அத்திட்டத்தைப் பகிரங்கமாக நிராகரிப்பதே தனக்கு நல்லது என்று அவர் கணக்கிடுகிறார் என நான் நினைக்கிறேன் என்று ராட்னி தெரிவித்துள்ளார்.</p><p>இது முதன்மையாக அடுத்த சில மாதங்களில் வரவுள்ள நெதன்யாகுவின் தேர்தல் வாய்ப்புகள் பற்றியது என்று அவர் மேலும் கூறினார்.</p><p>ட்ரம்ப்புடன் அவருக்குள்ள உறவு எப்படியிருந்தது அல்லது இந்தத் திட்டத்தின் சில அம்சங்களை அவர் எந்த அளவுக்கு ஏற்றுக்கொள்வார் என்பதெல்லாம் இரண்டாம் பட்சமான விடயங்கள் என்றும் தனது வாக்காளர்களுக்கு அவர் பொதுவெளியில் என்ன சொல்கிறார் என்பதுதான் அவருக்கு இப்போது முக்கியம் என்றும் ராட்னி தெரிவித்துள்ளார்.</p><p><br></p>]]></content>
            <updated>2026-08-12T08:49:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ட்ரம்பிற்கு பின்னால் வயிற்றை தடவிக்கொண்டிருந்த இளம்பெண்- சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/pregnant-woman-goes-viral-at-trump-vaccine-event-1786521571"></link>
            <id>https://news.lankasri.com/article/pregnant-woman-goes-viral-at-trump-vaccine-event-1786521571</id>
            <summary type="text">Pregnant Woman Goes Viral at Trump Event: ட்ரம்பிற்கு பின்னால் வயிற்றில் கையை வைத்துக்கொண்டு நின்ற இளம்பெண் இணையத்தில் பேசுபொருளாக மாறியுள்ளார்.

ட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>Pregnant Woman Goes Viral at Trump Event: ட்ரம்பிற்கு பின்னால் வயிற்றில் கையை வைத்துக்கொண்டு நின்ற இளம்பெண் இணையத்தில் பேசுபொருளாக மாறியுள்ளார்.
</p><h2>
ட்ரம்ப்&nbsp;தடுப்பூசி&nbsp;கையெழுத்து&nbsp;நிகழ்ச்சி</h2><p>அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப், குழந்தைகளுக்கான தடுப்பூசி பரிந்துரைகளை மாற்றும் புதிய நிர்வாக உத்தரவை அவரது அலுவலகத்தில் கையெழுத்திட்டார். அந்த காணொளி இணையத்தில் வெளியானது. </p><p>

அதில், அவருக்கு பின்னால் நின்ற இளம் பெண் ஒருவர் சமூக வலைதளங்களில் பெரும் கவனம் பெற்றார்.</p><p> </p><p><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr">Claims she has a button fitted on her belly, and when she gets the nod that he’s asleep she moves her hand and presses a button that wakes him. They’re calling her The Zapper. No idea if it’s true but it *appears* to line up. <a href="https://t.co/hgx4x6iQp6">pic.twitter.com/hgx4x6iQp6</a></p>&mdash; Tim Brannigan (@tim_brannigan) <a href="https://x.com/tim_brannigan/status/2087083698193682450?ref_src=twsrc%5Etfw">August 11, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>அந்த பெண்ணின் பெயர் ஜெய்மி லீக் பிராங்க்ளின் (Jayme Leagh Franklin).

அவர் “The Conservateur” என்ற கன்சர்வேட்டிவ் மீடியா மற்றும் லைஃப்ஸ்டைல் பிராண்டின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ஆவார்.
</p><h2>
வயிற்றின் மீது கை வைத்துக் கொண்டிருந்த&nbsp;பிராங்க்ளின்</h2><p>நிகழ்ச்சியில் ட்ரம்ப் மற்றும் சுகாதார செயலாளர் ராபர்ட் எப். கென்னடி ஜூனியர் அருகில் நின்றிருந்த பிராங்க்ளின், தனது வயிற்றின் மீது கை வைத்துக் கொண்டிருந்த காட்சி வைரலானது. </p><p>சிலர், அவர் ட்ரம்புக்கு மின்சார ஷாக் கொடுத்ததாகவும், ரகசியமாக தனது வயிற்றில் ஒரு பொத்தானை அழுத்தியதாகவும் வதந்திகளை பரப்பினர்.
</p><p></p><p>இதற்கு பதிலளித்த பிராங்க்ளின், சமூக வலைதளமான X-இல், “I’m just pregnant you weirdos” என்று பதிவிட்டு, அவர் கர்ப்பமாக இருந்ததால் தான் வயிற்றில் கையை வைத்து பார்த்துக்கொண்டு இருந்ததாக வெளிப்படையாக தெரிவித்தார்.
</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">I’m just pregnant you weirdos 😂😭 <a href="https://t.co/NG3tYyJmXy">https://t.co/NG3tYyJmXy</a></p>&mdash; Jayme Leagh Franklin (@jaymefranklin16) <a href="https://x.com/jaymefranklin16/status/2087396416670912601?ref_src=twsrc%5Etfw">August 12, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/56ae0120-954e-4f53-bb0e-1d911ca8dd6d/26-6a7c27e587f0b.webp' /></p><h2>ஜெய்மி லீக் பிராங்க்ளின்</h2><p>பிராங்க்ளின், 2020-இல் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர். அவர் 2019-இல் அமெரிக்க செனட்டில் சட்டமன்ற இன்டர்னாக பணியாற்றினார். பின்னர் ட்ரம்ப் 2020 தேர்தல் பிரசாரத்தில் coalitions coordinator ஆகவும், வெள்ளை மாளிகையில் correspondence director-ஆகவும் பணியாற்றியுள்ளார்.
</p><p>
அவரது நிறுவனம் “The Conservateur”, அரசியல், கலாசாரம், மதம், அழகு, பெண்மை போன்ற துறைகளில் கன்சர்வேட்டிவ் கிறிஸ்தவ இளைஞர்களுக்கான செய்தி மற்றும் கருத்துரைகளை வழங்குகிறது.</p><p>
</p><p>
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றது தனக்கு பெருமை என பிராங்க்ளின் தனது X பக்கத்தில் தெரிவித்துள்ளார்.&nbsp; &nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-12T08:40:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[திடீரென கீழே இறங்கிய விமானம் ;ஏர் இந்தியா விமானி போதைப்பொருள் பயன்படுத்தியமை உறுதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/air-india-pilot-confirmed-to-have-used-drugs-1786512733"></link>
            <id>https://jvpnews.com/article/air-india-pilot-confirmed-to-have-used-drugs-1786512733</id>
            <summary type="text">புக்கெட்டிலிருந்து (Phuket) டெல்லி நோக்கி பயணித்த ஏர் இந்தியா விமானத்தை இயக்கிய முதன்மை விமானியிடம் நடத்தப்பட்ட இரண்டாம் கட்ட போதைப்பொருள் உறுதிப்படுத...</summary>
            <content type="html"><![CDATA[<p>புக்கெட்டிலிருந்து (Phuket) டெல்லி நோக்கி பயணித்த ஏர் இந்தியா விமானத்தை இயக்கிய முதன்மை விமானியிடம் நடத்தப்பட்ட இரண்டாம் கட்ட போதைப்பொருள் உறுதிப்படுத்தல் பரிசோதனையிலும் அவர் போதைப்பொருள் பயன்படுத்தியமை உறுதியாகியுள்ளது.</p><p>கடந்த 4 ஆம் திகதி குறித்த வானூர்தி நடுவானில் பயணித்த போது, திடீரென சுமார் 300 அடிகள் வரை கீழே இறங்கி பலத்த குலுக்கலுக்கு உள்ளானது.</p><p>இதனால் விமானத்திலிருந்த பயணிகள் மற்றும் பணியாளர்கள் உட்பட 24 பேர் காயமடைந்தனர்.</p><p>இதனைத் தொடர்ந்து, டெல்லி விமான நிலையத்தை வந்தடைந்ததும் விமானிகளுக்கு முன்னெடுக்கப்பட்ட முதற்கட்ட போதைப்பொருள் பரிசோதனையில் குறித்த முதன்மை விமானியின் மாதிரி சந்தேகத்திற்குரியதாக அமைந்திருந்தது.</p><p>ஆய்வகத்தில் நடத்தப்பட்ட இரண்டாவது கட்ட உறுதிப்படுத்தல் பரிசோதனையில், விமானி கஞ்சா போதைப்பொருளை பயன்படுத்தியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.</p><p>இதனையடுத்து வானூர்தி போக்குவரத்து பணிப்பாய்வுச் செயலகத்தின் விதிமுறைகளின்படி, குறித்த விமானி உடனடியாகப் பணிப் பொறுப்புகளிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.</p>]]></content>
            <updated>2026-08-12T08:39:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ் சொகுசுப் பேருந்துகளுக்கு எதிராக விரைவில் அதிரடிச் சட்டம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/strict-measures-against-jaffna-luxury-buses-soon-1786509171"></link>
            <id>https://jvpnews.com/article/strict-measures-against-jaffna-luxury-buses-soon-1786509171</id>
            <summary type="text">தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் செல்லுபடியாகும் வழித்தட அனுமதிப்பத்திரமின்றி யாழ்ப்பாணத்திலிருந்து ஏனைய மாகாணங்களுக்கு, குறிப்பாக கொழும்பு உள்ளிட்ட ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் செல்லுபடியாகும் வழித்தட அனுமதிப்பத்திரமின்றி யாழ்ப்பாணத்திலிருந்து ஏனைய மாகாணங்களுக்கு, குறிப்பாக கொழும்பு உள்ளிட்ட பகுதிகளுக்கு சொகுசுப் பேருந்துச் சேவைகளை இயக்கிவரும் பேருந்துகளுக்கு எதிராக விசேட சட்ட அமுலாக்க நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாக&nbsp; தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இதனை வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் பொறியியலாளர் சூ.விமலேஸ்வரன் தெரிவித்தார்.</p><p>அத்துடன், வடக்கு மாகாணத்தினுள் உரிய பதிவுகள் மற்றும் அனுமதிகளின்றி பணியாளர்களைப் போக்குவரத்து செய்யும் தனியார் பேருந்துச் சேவைகளுக்கு எதிராகவும் இவ்வாறு சட்ட அமுலாக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.</p><p>வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையும் பொலிஸாரும் இணைந்து விரைவில் இந்த விசேட சட்ட அமுலாக்க நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளனர்.</p><p>இது தொடர்பாக வடக்கு மாகாண சிரேஷ;ட பிரதி பொலிஸ் மா அதிபருக்கு உத்தியோகபூர்வமாக கடிதம் அனுப்பி, பொலிஸாரின் ஒத்துழைப்புடன் ஒருங்கிணைந்த சுற்றிவளைப்பு மற்றும் பரிசோதனை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.</p><p>யாழ்ப்பாணத்திலிருந்து ஏனைய மாகாணங்களுக்கு சேவையில் ஈடுபட்டு வரும் மொத்தம் பத்து பேருந்துகள், தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் செல்லுபடியாகும் வழித்தட அனுமதிப்பத்திரமின்றி சேவையில் ஈடுபட்டு வருவதாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், இவ்வாறான சட்டவிரோத சேவைகள் ஒழுங்குபடுத்தப்பட்ட பயணிகள் போக்குவரத்து முறைமையை பாதிப்பதுடன், சட்டபூர்வமாக சேவையாற்றும் பேருந்து இயக்குநர்களுக்கும் அநீதி விளைவிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.</p><p>மேலும், வடக்கு மாகாணத்தினுள் அரச திணைக்களங்கள், தொழிற்சாலைகள், நிறுவனங்கள் மற்றும் ஏனைய பணியிடங்களுக்கு பணியாளர்களை ஏற்றிச் செல்லும் பேருந்துகளை பதிவு செய்து சட்டபூர்வமாக இயங்குவதற்காக போதுமான கால அவகாசம் ஏற்கனவே வழங்கப்பட்டிருந்ததாகவும், அந்த அவகாசம் நிறைவடைந்துள்ள நிலையிலும் இதுவரை பதிவு செய்யப்படாமல் சேவையில் ஈடுபட்டு வரும் பேருந்துகளுக்கு எதிராக இனி சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும்&nbsp; கூறினார்.</p><p>இந்த விசேட நடவடிக்கையின் போது, வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் பறக்கும் படை அதிகாரிகளும், தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அதிகாரிகளும், பொலிஸாரும் இணைந்து சம்பந்தப்பட்ட பேருந்துகளை பரிசோதித்து, வழித்தட அனுமதிப்பத்திரங்கள் மற்றும் ஏனைய சட்டபூர்வ ஆவணங்களை ஆய்வு செய்வதுடன், அனுமதியின்றி சேவையில் ஈடுபடுவது உறுதிப்படுத்தப்படும் பேருந்துகளுக்கு எதிராக சட்டத்தின் பிரகாரம் நடவடிக்கை எடுக்கப்படும்.&nbsp;</p><p>அனுமதியற்ற பேருந்துகள் சேவையை ஆரம்பிப்பதைத் தடுப்பதற்கும், அங்கீகரிக்கப்பட்ட வழித்தடங்கள் மற்றும் கால அட்டவணைகளுக்கு அமைவாகவே சேவைகள் இடம்பெறுவதை உறுதிப்படுத்துவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.</p><p>பயணிகள் போக்குவரத்து சேவைகளில் ஒழுங்கு, பாதுகாப்பு மற்றும் சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்துவதற்காக இந்நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாகவும், அனுமதியின்றி சேவையில் ஈடுபடும் எந்தவொரு பேருந்திற்கும் இனி சலுகை வழங்கப்படமாட்டாது என்றும்&nbsp; &nbsp;சூ.விமலேஸ்வரன் மேலும் தெரிவித்தார்.</p><p><br></p>]]></content>
            <updated>2026-08-12T08:38:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக வேண்டும் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேச்சு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/aadhav-arjuna-says-need-pm-from-tamilnadu-1786523839"></link>
            <id>https://news.lankasri.com/article/aadhav-arjuna-says-need-pm-from-tamilnadu-1786523839</id>
            <summary type="text">aadhav arjuna needs pm from tamil nadu : தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக வேண்டும் என சட்டமன்றத்தில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசியுள்ளார். 

த...</summary>
            <content type="html"><![CDATA[<p>aadhav arjuna needs pm from tamil nadu : தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக வேண்டும் என சட்டமன்றத்தில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசியுள்ளார். </p><h3>

தொகுதி மறுவரையறை தனித்தீர்மானம்</h3><p> 

மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு, தொகுதி மறுவரையறைச் சட்டத் திருத்தத்தை கொண்டு வரும் முயற்சியில் உள்ளதாக கூறப்படுகிறது. </p><p>

இந்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு முதல்வர் விஜய், இன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் தனித்தீர்மானம் கொண்டு வந்தார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/48b8fdea-6942-46a5-bb2a-83b781e3f6de/26-6a7c30c0d5283.webp' /></p><p> 

இந்த தீர்மானத்திற்கு அதிமுக, பாமக, தேமுதிக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தாலும், தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.&nbsp;</p><p></p><h3> 

தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர்
</h3><p>
இந்த தீர்மானத்தை ஆதரித்து பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, "தென் மாநிலங்களுக்கு தொகுதிகளை 50 சதவிகிதம் உயர்த்தினாலும் பாதிப்பு ஏற்படக்கூடும்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/17f06545-1a41-4ef3-9ad1-11eb678dfbd0/26-6a7c30c23a011.webp' /></p><p>

தமிழ்நாடு வளர்ச்சியடைந்த மாநிலமாக உள்ளது. ஆனால், அது அரசியலில் பிரதிபலிக்கவில்லை. தற்போது 5 முதல் 6 வட இந்திய மாநிலங்கள் சேர்ந்தாலே பிரதமரை உருவாக்க முடியும் என்ற நிலை தற்போது வரை உள்ளது. அது மாற்றப்பட வேண்டும். </p><p>

தென் இந்தியாவிலிருந்து ஏன் தமிழ்நாட்டிலிருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும். அதிகாரம் உத்தரப்பிரதேசத்திற்கோ, பீகாருக்கோ, குஜராத்திற்கோ மட்டும் அல்ல. நம்முடைய குரல் சட்டமன்றத்தில் ஒலித்தது போல், பாராளுமன்றத்தில் ஒரு பிரதமராக ஒலிக்கப்பட வேண்டும்" என பேசியுள்ளார்.</p><h3> 

ஆர்.பி.உதயகுமார்
</h3><p>
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் இது குறித்து பேசிய அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், முதல்வர் விஜய் தமிழ்நாட்டில் செய்யாததை எல்லாம் செய்ததாக கூறி இன்ஃப்ளூயன்சர்களை வைத்துக்கொண்டு, பிற மொழிகளில் போலி செய்திகள் மூலம் மாயபிம்பம் உருவாக்கப்படுகிறது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d520d469-13d7-47c9-91e6-e39d183d4d61/26-6a7c30c187cd0.webp' /></p><p>
இந்த மாயபிம்பத்தை வைத்து, 2029 நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் வேட்பாளராக நம்ம முதல்வர் விஜய்யை முன்னிருந்த தவெக கட்சி முன்னெடுப்பு எடுத்து வருகிறது" என பேசியிருந்தார்.</p><p>&nbsp;&nbsp;<iframe frameborder="0" src="//www.youtube.com/embed/wN25U-NxuJM" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-12T08:37:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஐஃபோன் பயனர்களுக்கு வாட்ஸ்அப் கணக்கினால் ஆபத்து: விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/cert-warns-zero-click-attack-iphone-users-1786521502"></link>
            <id>https://tamilwin.com/article/cert-warns-zero-click-attack-iphone-users-1786521502</id>
            <summary type="text">ஐபோன் பயனர்களின் வாட்ஸ்அப் கணக்குகளைக் குறிவைத்து நடத்தப்படும் ஒரு புதிய இணையவழித் தாக்குதல் குறித்து&amp;nbsp;இலங்கை கணினி அவசர உதவிப் பிரிவு (Sri Lanka ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஐபோன் பயனர்களின் வாட்ஸ்அப் கணக்குகளைக் குறிவைத்து நடத்தப்படும் ஒரு புதிய இணையவழித் தாக்குதல் குறித்து&nbsp;இலங்கை கணினி அவசர உதவிப் பிரிவு (Sri Lanka CERT) அதிகாரப்பூர்வ எச்சரிக்கை விடுத்துள்ளது.</p><p>இந்த எச்சரிக்கை படி, 'ஜீரோ-கிளிக்' என்று அழைக்கப்படும் இந்த தாக்குதல், iOS 16 மொபைல் இயங்குதளத்தில் இயங்கும் ஐபோன்களில் உள்ள பாதுகாப்பு குறைபாடுகளைப் பயன்படுத்தி&nbsp;இணையவழித் தாக்குதலை மேற்கொள்கின்றது.</p><h2>ஜீரோ-கிளிக்</h2><p>இந்த தாக்குதல் தொடர்பில் பல பயனர்கள் முறைப்பாடுகளை பதிவு செய்துள்ளதாகவும், 'ஜீரோ-கிளிக்' வாட்ஸ்அப் பாதுகாப்பு மீறல் தற்போது இலங்கையில் உள்ள பயனர்களிடையே பரவி வருவதாகவும் SLCERT வலியுறுத்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1e9561bb-3050-42fe-9d65-8a6f940e3b1f/26-6a7c2f0c3fd0e.webp' />&nbsp;</p><p>'ஜீரோ-கிளிக்' தாக்குதலானது, ஒருமுறை கடவுச்சொல் (OTP) அல்லது பாதுகாப்பு இணைப்பு போன்ற பாதுகாப்பு சரிபார்ப்பு நடவடிக்கைகள் தேவையின்றி, பயனர்களை நேரடியாகக் குறிவைக்க முடியும் என கூறப்படுகிறது.</p><p>

பயனர்கள் தங்கள் சாதனங்களையும் மென்பொருள்களையும் சமீபத்திய பாதுகாப்புப் புதுப்பிப்புகளுடன் புதுப்பித்துக்கொள்ளவும், தங்கள் வாட்ஸ்அப் கணக்குகளில் இரு-படி சரிபார்ப்பு இயக்கப்பட்டிருப்பதை உறுதிசெய்யுமாறும் வலியுறுத்தியுள்ளனர்.</p><p>&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-12T08:30:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[மலேசியாவின் அடுக்குமாடி நீச்சல்குளத்தில் ஜாலி பண்ணும் நடிகை ரச்சிதா மகாலட்சுமி..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/rachitha-mahalakshmi-malasia-photos-post-1786524761"></link>
            <id>https://viduppu.com/article/rachitha-mahalakshmi-malasia-photos-post-1786524761</id>
            <summary type="text">ரச்சிதா மகாலட்சுமிசின்னத்திரை சீரியல்களில் நடித்து பிரபலமானவர்கள் ஒருவர் தான் நடிகை ரச்சிதா மகாலட்சுமி. சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் செம பேமஸ் ஆனவர் ...</summary>
            <content type="html"><![CDATA[<h2>ரச்சிதா மகாலட்சுமி</h2><p>சின்னத்திரை சீரியல்களில் நடித்து பிரபலமானவர்கள் ஒருவர் தான் நடிகை ரச்சிதா மகாலட்சுமி. சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் செம பேமஸ் ஆனவர் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்துக்கொண்டார். பிறகு Fire என்ற படத்தின் மூலம் பெரும் சர்ச்சையையும் சந்தித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b602c2c9-03ac-4198-b679-9a9a66427ece/26-6a7c3462cc2ef.webp' /></p><p>

சமீபத்தில் தன்னுடைய ஓம் டூர் பேட்டியொன்றில் தன் வீட்டில் இருந்த மினி பார் குறித்து பகிர்ந்து கொண்டார். இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் ரச்சிதா, lollipop sports academy என்ற படத்தில் கமிட்டாகி அப்படத்தின் பூஜை நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
</p><p>
சமீபத்தில், மலேசியாவுக்கு சென்று அங்குள்ள அடுக்குமாடி மொட்டை மாடியில் இருக்கும் நீச்சல் குளத்தில் குளித்தும் பின் புகைப்படங்களை எடுத்து ஜாலி செய்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-08-12T08:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[மின் கட்டணம் உயர்வு சர்ச்சை: நடிகை வைஷாலி குற்றச்சாட்டுக்கு TANGEDCO விளக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/tn-eb-hike-vaishali-s-video-viraltangedco-reply-1786522235"></link>
            <id>https://manithan.com/article/tn-eb-hike-vaishali-s-video-viraltangedco-reply-1786522235</id>
            <summary type="text">கடந்த இரண்டு, மூன்று மாதங்களாக தமிழ்நாட்டில் மின் கட்டணம் தொடர்பாக பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியும், குழப்பமும் அதிகரித்து வருகிறது.வழக்கமாக செலுத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>கடந்த இரண்டு, மூன்று மாதங்களாக தமிழ்நாட்டில் மின் கட்டணம் தொடர்பாக பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியும், குழப்பமும் அதிகரித்து வருகிறது.</p><p>வழக்கமாக செலுத்தி வந்த தொகையைவிட, தற்போது பல மடங்கு அதிகமாக மின் கட்டணம் வருவதாக பல்வேறு தரப்பினரும் சமூக வலைதளங்களில் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/95fb2cc6-e5d3-4396-9fba-d7fa8e1d251f/26-6a7c2ec1b9f84.webp' /></p><p> </p><p>குறிப்பாக, சில வீடுகளில் வழக்கத்தைவிட நான்கு மடங்கு வரை மின் கட்டணம் அதிகரித்துள்ளதாக கூறப்படும் புகார்கள் பரவலாக பேசப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், நடிகை வைஷாலி வெளியிட்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் கவனம் பெற்றது.</p><h2>நடிகை வைஷாலி வைரல் வீடியோ</h2><p>அந்த வீடியோவில், மின் கட்டணம் தொடர்பாக தான் முன்பு வெளியிட்ட கருத்துக்கு பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்டதுடன், தற்போதைய மின் கட்டண உயர்வு குறித்து தனது ஆதங்கத்தையும் அவர் வெளிப்படுத்தினார்.</p><p>

நடிகை வைஷாலி தனது வீடியோவில், 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியானபோது தான் மிகவும் மகிழ்ச்சியடைந்ததாகவும், இதுகுறித்து முன்பு வீடியோ வெளியிட்டதாகவும் குறிப்பிட்டார்.</p><p></p><p>ஆனால், கடந்த இரண்டு மாதங்களாக சாதாரண மக்களுக்கு வழக்கத்தைவிட அதிகமான மின் கட்டணங்கள் வருவதாகவும், இதனால் குடும்பங்களின் அன்றாட வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.</p><p>

மேலும், 200 யூனிட் இலவச மின்சாரத் திட்டத்தை செயல்படுத்துவதற்குப் பதிலாக, முந்தைய முறையைப் போலவே நியாயமான கட்டணத்தை வசூலித்தால்கூட பொதுமக்கள் மகிழ்ச்சியடைவார்கள் என்றும் அவர் தனது கருத்தை தெரிவித்தார். தற்போதைய நிலை தொடர்ந்தால், அரசின் மீதான பொதுமக்களின் நம்பிக்கை பாதிக்கப்படலாம் என்றும் அவர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
</p><p>
நடிகையின் இந்த வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவிய நிலையில், மின் கட்டணம் தொடர்பான குற்றச்சாட்டுக்கு தமிழ்நாடு மின்சார வாரியம் (TANGEDCO) விளக்கம் கொடுத்துள்ளது.&nbsp;</p><p><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/reel/Db5oSt3ygdF/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/reel/Db5oSt3ygdF/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/reel/Db5oSt3ygdF/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by Vaishali Thaniga (@_vaishalithaniga)</a></p></div></blockquote> <script async src="//www.instagram.com/embed.js"></script></p><h2>மின்சார வாரியம் விளக்கம்&nbsp;</h2><p>

மின் கட்டணத்தில் மாற்றம் இல்லை
மின்சார வாரியத்தின் விளக்கத்தின்படி, நடப்பாண்டில் வீடுகளுக்கான மின் கட்டணத்தில் எந்தவிதமான கட்டண உயர்வும் செய்யப்படவில்லை. அதாவது, மின் கட்டண விகிதங்களில் மாற்றம் செய்யப்பட்டதால்தான் தற்போது பொதுமக்களுக்கு அதிக கட்டணம் வந்துள்ளது என்ற குற்றச்சாட்டை வாரியம் மறுத்துள்ளது.
</p><p>
கோடை காலத்தில் அதிகரித்த மின் பயன்பாடு
மின் கட்டணம் அதிகமாக வருவதற்கான முக்கிய காரணமாக, கோடை காலத்தில் ஏற்பட்ட அதிகப்படியான மின் பயன்பாட்டை மின்சார வாரியம் சுட்டிக்காட்டியுள்ளது.

கோடை வெயில் நீண்ட நாட்கள் நீடித்ததன் காரணமாக, வீடுகளில் மின்விசிறி, ஏர் கண்டிஷனர், குளிர்சாதனப் பெட்டி உள்ளிட்ட மின்சாதனங்களின் பயன்பாடு அதிகரித்திருக்கலாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3f87e081-8e18-43b7-8fcf-6a9200c7bf05/26-6a7c2ec269aa1.webp' /></p><p></p><p>இதன் காரணமாக மொத்த மின் நுகர்வு அதிகரித்து, அதற்கேற்ப சில நுகர்வோரின் கட்டணத் தொகையும் உயர்ந்திருக்கலாம் என மின்சார வாரியம் விளக்கம் அளித்துள்ளது.

எனவே, மின் கட்டண விகிதம் உயர்த்தப்படவில்லை; மாறாக, பயன்படுத்தப்பட்ட மின்சாரத்தின் அளவு அதிகரித்ததே சில நுகர்வோருக்கு அதிக கட்டணம் வருவதற்கான காரணம் என வாரியம் தெரிவித்துள்ளது.</p><p>இதற்கிடையில், மின் கட்டணம் தொடர்பாக எழுந்த புகார்களைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் மின் இணைப்புகளில் சிறப்பு ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டதாக மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.</p><p>

மொத்தம் 3.43 லட்சம் மின் இணைப்புகள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட சிறப்பு ஆய்வில், வெறும் 0.75 சதவீத இணைப்புகளில் மட்டுமே வேறுபாடுகள் கண்டறியப்பட்டதாக வாரியம் கூறியுள்ளது.
</p><p>
இதன் மூலம், மாநிலம் முழுவதும் மின் கட்டணக் கணக்கீட்டில் மிகப்பெரிய அளவில் தவறு நடைபெற்றுள்ளதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.</p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW&nbsp;</a></u></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-12T08:29:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீதியரசர்களின் ஓய்வு வயது குறித்த அரசாங்கத்தின் தீர்மானம்.. ஜனாதிபதியுடன் முக்கிய கலந்துரையாடல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/bar-association-hold-discussions-with-president-1786522411"></link>
            <id>https://tamilwin.com/article/bar-association-hold-discussions-with-president-1786522411</id>
            <summary type="text">நீதியரசர்களின் ஓய்வு பெறும் வயதை நீட்டிப்பது தொடர்பான முன்மொழிவு குறித்து விவாதிப்பதற்காக, இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் பிரதிநிதிகள் ஜனாதிபதி செயலக...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீதியரசர்களின் ஓய்வு பெறும் வயதை நீட்டிப்பது தொடர்பான முன்மொழிவு குறித்து விவாதிப்பதற்காக, இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் பிரதிநிதிகள் ஜனாதிபதி செயலகத்திற்கு சென்றுள்ளனர்.</p><p>இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், பல எதிர்க்கட்சி அரசியல் கட்சிகள், சிவில் சமூக அமைப்புகள் மற்றும் சர்வதேச சட்ட அமைப்புகளின் எதிர்ப்புகளுக்கு மத்தியில், உயர் நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வு பெறும் வயதை நீட்டிப்பதற்கான அரசியலமைப்புத் திருத்தத்திற்கு அமைச்சரவை சமீபத்தில் ஒப்புதல் அளித்தது.</p><h2>வெளியான வர்த்தமானி&nbsp;</h2><p>

அதன்படி, தொடர்புடைய இருபத்தி இரண்டாவது அரசியலமைப்புத் சட்டமூல திருத்தம் கடந்த வெள்ளிக்கிழமை வர்த்தமானியில் வெளியிடப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/51fb910b-50fc-4720-a7bb-7db97e6dfbb5/26-6a7c2e817fb87.webp' /></p><p>
</p><p>
இவ்வாறான பின்னணியில், நீதியரசர்களின் ஓய்வு பெறும் வயதை நீட்டிப்பது தொடர்பான முன்மொழிவு குறித்த தனது நிலைப்பாட்டைத் தெரிவித்து, இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அண்மையில் ஜனாதிபதியிடம் எழுத்துப்பூர்வமான அறிக்கை ஒன்றைச் சமர்ப்பித்தது.
</p><p>
மேலும், நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்காரவுடன் இவ்விடயம் குறித்து விவாதிக்க ஒரு வாய்ப்பை வழங்குமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்தது.
</p><p>
அதன்படி, இது தொடர்பான முன்மொழிவை விவாதிப்பதற்கு, இலங்கை சட்டத்தரிகள் சங்கத்திற்கு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க வாய்ப்பளித்துள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-12T08:29:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[பசிபிக் பெருங்கடலில் அணு ஆயுத சோதனை: சீனாவுக்கு கடும் எச்சரிக்கை விடுத்த அவுஸ்திரேலியா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/australia-warning-to-china-after-missile-test-1786523191"></link>
            <id>https://news.lankasri.com/article/australia-warning-to-china-after-missile-test-1786523191</id>
            <summary type="text">Australia warns china after missile launch: சீனாவின் அணு ஆயுத ஏவுகணை சோதனையைத் தொடர்ந்து அவுஸ்திரேலியா கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது.

பசிபிக் ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>Australia warns china after missile launch: சீனாவின் அணு ஆயுத ஏவுகணை சோதனையைத் தொடர்ந்து அவுஸ்திரேலியா கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது.</p><p>

பசிபிக் பெருங்கடல் பகுதியில் அணு ஆயுத ஏவுகணை சோதனைக்குப் பிறகு, சீனாவிற்கு அவுஸ்திரேலியா கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது.&nbsp;</p><h2>அணு ஆயுத ஏவுகணை சோதனை</h2><p>கடந்த ஜூலை மாதம் அவுஸ்திரேலியா ஃபிஜியுடன் பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e82009b0-e054-4ff2-bf86-7f91c4812693/26-6a7c2e39cb709.webp' />&nbsp;</p><p></p><p>

அதனைத் தொடர்ந்து, சில மணி நேரங்களில் நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து அப்பகுதிக்குள் அணு ஆயுத ஏவுகணை ஏவப்பட்டதை சீனா உறுதி செய்தது. குறித்த ஏவுகணை துவாலு அருகே தரையிறங்கியதாக நம்பப்படுகிறது.
</p><p>
இந்த ஏவுகணை சோதனை தொடர்பாக சர்வதேச அளவில் சீனா கடுமையாக விமர்சிக்கப்பட்டது.
</p><p>
மேலும், அமெரிக்க வெளியுறவுத் துறையால் வெளியிடப்பட்ட ஒரு கூட்டு அறிக்கையில், கண்டம் விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து ஏவப்படும் பாலிஸ்டிக் ஏவுகணைகள் குறித்து பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு குறைந்தது 24 மணி நேரமாவது முன்னறிவிப்பு வழங்க 'சம்பந்தப்பட்ட அனைத்து நாடுகளும்' உறுதியளிக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.</p><h2>40-க்கும் மேற்பட்ட நாடுகளுடன் இணைந்த அவுஸ்திரேலியா</h2><p>இந்த நிலையில், தென் பசிபிக் பகுதியில் சீனா நடத்திய சோதனை ஏவுதலைத் தொடர்ந்து, ஏவுகணை ஏவுதல்கள் குறித்து முன்கூட்டியே அறிவிப்பு வழங்க வேண்டும் என்ற அமெரிக்காவின் அழைப்பில் 40-க்கும் மேற்பட்ட நாடுகளுடன் அவுஸ்திரேலியாவும் இணைந்துள்ளது.
</p><p>
சீனாவுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையிலான அறிக்கையில், 'பசிபிக் பகுதியில் சமீபத்தில் நடந்த ஏவுகணை சோதனை நடவடிக்கைகள், ஏவுகணை ஏவுதல்கள் குறித்து அறிவிப்பதற்கும் மோதல் தவிர்ப்பதற்கும் பெரும்பாலான நாடுகள் பின்பற்றும் வழக்கமான நடைமுறைகளைப் பின்பற்றவில்லை.
</p><p>
போதுமான முன் அறிவிப்பு மற்றும் விவரங்கள் இல்லாமல் அணு ஆயுதத் திறன் கொண்ட பாலிஸ்டிக் ஏவுகணை சோதனைகளை நடத்துவது ஆபத்தானது மற்றும் இந்த சோதனைகளுக்கு அருகிலுள்ள தொடர்புடைய நாடுகளின் அமைதி மற்றும் பாதுகாப்பைக் குலைக்கிறது' என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/88c9330b-e2b0-441b-8d19-a75f99e5917b/26-6a7c2e3a80bfe.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-12T08:24:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வடக்கு மாகாணத்தில் 80 உத்தியோகத்தர்களை பணிநீக்கம் செய்யச் சதி - உயர் அதிகாரிகள் மீது கடும் விமர்சனம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/conspiracy-to-dismiss-80-officials-in-the-north-1786522445"></link>
            <id>https://ibctamil.com/article/conspiracy-to-dismiss-80-officials-in-the-north-1786522445</id>
            <summary type="text">வடக்கு மாகாண சபை இயங்காமல் இருக்கும் தற்போதையை நிலையைப் பயன்படுத்தி, எண்பதுக்கும்
மேற்பட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் பதவிகளை முழுமையாக இல்லாமல் செய்வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>வடக்கு மாகாண சபை இயங்காமல் இருக்கும் தற்போதையை நிலையைப் பயன்படுத்தி, எண்பதுக்கும்
மேற்பட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் பதவிகளை முழுமையாக இல்லாமல் செய்வதற்கு
மாகாண நிர்வாக உயர் அதிகாரிகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர் என
சர்ச்சை எழுந்துள்ளது.
</p><p>
வடமாகாண சபைக்கு உட்பட்ட திணைக்களங்களால் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தித்
திட்டங்களை நேரடியாகக் கண்காணிப்பதற்காக கடந்த 2006ஆம் ஆண்டு 82 அபிவிருத்தி
உத்தியோகத்தர் பணியிடங்கள் புதிதாக உருவாக்கப்பட்டன.
</p><p>
கடந்த 2013 ஆம் ஆண்டு வடமாகாணசபை இயங்க ஆரம்பித்த நிலையில், 2017ஆம் ஆண்டு
அப்போதைய பிரதம செயலாளர் நா.பத்திநாதனால் 82 பேருக்கு இந்த நியமனங்கள்
வழங்கப்பட்டன.
</p><p>
போரால் பாதிக்கப்பட்ட வடக்கு மாகாணத்தில் இந்த அபிவிருத்தி உத்தியோகத்தர்களின்
செயற்பாடு தவிர்க்க முடியாததாக அமைந்தது. எனினும், அதன் பின்னர் இந்த ஆளணியின்
எண்ணிக்கை 20ஆகக் குறைக்கப்பட்டதுடன், அவர்கள் எந்த நோக்கத்துக்காக நியமனம்
பெற்றனரோ அதற்கு முற்றிலும் பொருத்தமற்ற மத்திய நிர்வாக அலகுகளுடன்
இணைக்கப்பட்டனர்.
</p><p>
இந்த இணைப்புக்குப் பின்னர் மத்திய அரசாங்கத்தின் நிர்வாக அதிகாரிகள் சிலர்
குறித்த அபிவிருத்தி உத்தியோகத்தர்களைத் மிகவும் தரக்குறைவாக விமர்சிப்பதுடன்,
பொருத்தமற்ற துறைகளுக்கும், திணைக்களங்களுக் கும் இடமாற்றம் வழங்கி
வருகின்றனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.
</p><p>
போதிய ஆளணி உள்ள திணைக்களங்களுக்கு இடமாற்றம் செய்யப்படுவதால் அந்தத்
திணைக்களங்கள் அவர்களை ஏற்காத நிலையும் உள்ளதாகக் கூறப்படுகின்றது. </p><p>இதனால்
மிகக் குறுகிய காலத்திலேயே அவர்கள் இரண்டுக்கும் மேற்பட்ட இடமாற்றங்களைச்
சந்திக்க நேர்ந்துள்ளது.
</p><p>
வடக்கின் அபிவிருத்தித் திட்டங்களில் மிக வினைத்திறனாக செயற்பட்ட அபிவிருத்தி
உத்தியோகத்தர்களை தற்போதைய உயர் அதிகாரிகள் இவ்வாறு அலைக்கழிக்க வைப்பதும்,
அவர்களை மனஉழைச்சலுக்கு உள்ளாக்குவதும் பல்வேறு தரப்பினர்களிடத்தில் கடும்
அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp; &nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-12T08:23:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[கால்டன் இல்லத்தை நாமலின் பெயருக்கு மாற்றிய மகிந்த]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/mahinda-transfers-the-colton-house-to-namal-s-name-1786521209"></link>
            <id>https://ibctamil.com/article/mahinda-transfers-the-colton-house-to-namal-s-name-1786521209</id>
            <summary type="text">முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு சொந்தமான கால்டன் இல்லம் தனது பெயருக்கு மாற்றப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்....</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு சொந்தமான கால்டன் இல்லம் தனது பெயருக்கு மாற்றப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
</p><p>
சிலர் 'ராஜபக்சக்கள் காணிகள் எதுவும் இல்லாத ஏழைகள்' என்கின்றனர் எனவும் கருத்தொன்றை முன்வைத்துள்ளார்.
</p><p>
வலைதள ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய சிறப்பு நேர்காணலில் அவர் இதனை கூறியுள்ளார்.</p><p></p><h2>நேர்த்தியான சொத்து விபரங்கள்</h2><p>
</p><p>
மேலும் கருத்து வெளியிட்ட அவர், ''நான் நாடாளுமன்றுக்கு வருகை தந்த காலத்தில் இருந்து இன்று வரை நேர்த்தியாக சொத்து விபரங்களை சமர்ப்பித்துள்ளேன்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/03796f5a-f8ec-4a7e-a49b-aafcbc860243/26-6a7c2cd2571bc.webp' /></p><p>

அதாவது புதிய சட்டங்கள் வருவதற்கு முன்பே இவற்றை சமர்ப்பித்துள்ளேன்.

எனக்கு சொந்தமான பெரும்பான்மையான காணிகள் பெற்றோர் மற்றும் குடும்பத்தாரிடமிருந்து கிடைத்தவை.
</p><p>
நாங்கள் ஒரு அரசியல் குடும்பத்திலிருந்து வந்த பரம்பரை. எனவே பெற்றோரிடமிருந்து கிடைத்த சில சொத்துக்கள் உள்ளன.

அதேபோல் நான் ஒரு காலத்தில் ஒரு ஆலோசனைக் நிறுவனம் ஒன்றை (Consultancy firm) நடத்தினேன். </p><p>

அதைத் தொடங்கிய விதம் மற்றும் அதற்கு வருமானம் ஈட்டிய விதம்- வரிக் கணக்குகள் (Tax reports) உட்பட அனைத்தையும் நான் ஒவ்வொரு வருடமும் சொத்து விபரப் பிரகடனத்தில் குறிப்பிட்டுள்ளேன்.
</p><p>
மேலும் அது குறித்து இப்போது இரண்டு அரசாங்கங்களால் சுமார் 7 முதல் 10 வருடங்களாக அதாவது நல்லாட்சி அரசாங்கம் மற்றும் தற்போதைய அரசாங்கம் என 2015 முதல் 2020 வரை.</p><p></p><h2>தங்காலை வீடு</h2><p> </p><p>

மீண்டும் 2025 முதல் இன்று வரையிலும் விசாரணைகள் நடத்தப்படுகின்றன.

எனவே அந்த அனைத்து விடயங்கள் குறித்தும் நான் குறிப்பிட்டுள்ளேன். மேலும் அந்த வருமானம் கிடைத்த விதம் குறித்தும் சுட்டிக்காட்டியுள்ளேன்.</p><p> 

அத்தோடு நான் பெரும் வர்த்தக குடும்பத்திலே திருமணம் செய்து கொண்டேன்.

மனைவியின் சொத்துக்கள் நான் சம்பாதித்தவை அல்ல. மனைவியின் குடும்பத்திலிருந்து அவருக்குக் கிடைத்தவை. </p><p>மேலும் அவர்கள் இலங்கையில் சுற்றுலாத் துறையில் இன்றும் முதல் ஐந்து இடங்களுக்குள் இருக்கிறார்கள்.

இப்போது அடுத்த சொத்து விபரங்கள் அறிக்கையில் நிச்சயமாகத் தங்காலை வீடும் அதில் சேர்க்கப்படும்.
</p><p>
ஏனென்றால் அப்பா அதை எனக்குக் கொடுத்து விட்டார் கடந்த வாரமே எழுதப்பட்டது.

அரசியல் இல்லம் என்பதால் அதை எனக்கு முன்பே தர முயன்றபோது நான் வேண்டாம் அப்பாவிடமே இருக்கட்டும் என்று கூறினேன். </p><p>ஏனென்றால் ஆயுட்கால உரிமையை வைத்துக்கொண்டு பிள்ளைகளுக்குச் சொத்துக்களை எழுத வேண்டும் என்று நம்பும் ஒருவன் நான்" என கூறியுள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-12T08:21:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Bavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டின் பல பகுதிகளிலும் ஆடி அமாவாசை தினத்தை முன்னிட்டு விசேட நிகழ்வுகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/aadi-amavasya-theerthotsavam-at-mamangeswarar-1786521072"></link>
            <id>https://tamilwin.com/article/aadi-amavasya-theerthotsavam-at-mamangeswarar-1786521072</id>
            <summary type="text">வரலாற்றுச் சிறப்புமிக்க மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர்
ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் சிகர நிகழ்வான ஆடி அமாவாசை தீர்த்தோற்சவம்
இன்று (...</summary>
            <content type="html"><![CDATA[<p>வரலாற்றுச் சிறப்புமிக்க மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர்
ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் சிகர நிகழ்வான ஆடி அமாவாசை தீர்த்தோற்சவம்
இன்று (12.08.2026) மதியம் 12 மணிக்கு ஆலயத் தீர்த்தக் கேணியில்
பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ வெகு விமர்சையாக நடைபெற்றது.
</p><p>
கடந்த 03ஆம் திகதி திருக்கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய இப்பெருவிழாவின் 10ஆம்
நாளான இன்று, ஆடி அமாவாசை தினத்தில் தீர்த்தோற்சவம் இனிதே இடம்பெற்றது.</p><h2>மாமாங்கேஸ்வரர் தீர்த்தக் கேணியில் தீர்த்தோற்சவம்</h2><p>
</p><p>ஆலயத்தில் இடம்பெற்ற விசேட அபிஷேக, பூசை வழிபாடுகளைத் தொடர்ந்து, வசந்த
மண்டப பூஜை நடைபெற்று, சுவாமி வெளிவீதி உலா வந்து வேத பாராயணங்கள் முழங்க,
பக்தர்களின் 'அரோகரா' கோஷத்திற்கு மத்தியில் மாமாங்கேஸ்வரர் தீர்த்தக்
கேணியில் தீர்த்தோற்சவம் நடைபெற்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/53dd21bf-e710-4035-8f04-6d7cf96ba96f/26-6a7c2a0d71690.webp' /></p><p>

தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனிதத் தீர்த்தத்தில் நீராடி இறைவழிபாடு
செய்தனர்.</p><h2>ஆத்ம சாந்தி பிரார்த்தனை</h2><p>
</p><p>
மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றும் ஒருங்கே அமையப்பெற்று, ஸ்ரீ இராம
பிரானால் வழிபடப்பட்டதாக வரலாற்றுத் தொன்மையும் புகழும் மிக்க இப் புண்ணிய
தலத்தில், ஆடி அமாவாசை தினத்தில் தந்தையை இழந்தவர்கள் பிதிர்கடன் செலுத்தி
ஆத்ம சாந்தி பிரார்த்தனைகளில் ஈடுபடுவதும் இவ்வாலயத்தின் தனிச்சிறப்பாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/609ea8f0-9beb-4f5c-a7d2-2baab9d75b91/26-6a7c2a0e575af.webp' /></p><p>
</p><p>
இத்தீர்த்தோற்சவ நிகழ்வில் நாட்டின் பல்வேறு பாகங்களிலிருந்தும் வருகை தந்த
பல்லாயிரக்கணக்கான ஆன்மீக அன்பர்களும் பக்தர்களும் கலந்து கொண்டு
மாமாங்கேஸ்வரரின் அருளைப் பெற்றுச் சென்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cccdf5a9-dc60-467a-89f4-3c3f8f7e6d31/26-6a7c2a0f3ee36.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/46ca2bcf-8c98-4714-98aa-9045d34330b3/26-6a7c2a101002a.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f835bf74-2fb7-4aee-9110-e0d9fb283679/26-6a7c2a10dd3ef.webp' />
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8b23219f-b8e5-455c-87f8-942bed8b4b17/26-6a7c2a11b41b4.webp' /></p><p>
<img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ef9e0921-e1ce-4ee6-88bc-f373eb69e59e/26-6a7c2a1286e26.webp' /></p><p></p><p></p><p><b><i>மேலதிக தகவல் - ஆஷிக்</i></b></p><p>மன்னார் - திருக்கேதீஸ்வர ஆலயத்தில் இன்றைய தினம்(12) காலை ஆடி
அமாவாசை விசேட பூஜை வழிபாடுகள் திருக்கேதீஸ்வர ஆலய பிரதம குரு கருணாநந்த
குருக்கள் தலைமையில் இடம்பெற்றுள்ளது.</p><p>

மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தில் இன்று புதன்கிழமை காலை வசந்த மண்டபத்தில்
கௌரியுடை திருக்கேதீஸ்வர நாதருக்கு விசேட வசந்த மண்டப பூஜை இடம்பெற்றுள்ளது.</p><h2>ஆடி அமாவாசை விசேட பூஜை</h2><p>
</p><p>
அதனை தொடர்ந்து சுவாமி உள் வீதி எழுந்தருளி பாலவி தீர்த்தக்கரைக்கு தீர்த்தமாட
சென்றார். பாலாவி தீர்த்தம் இடம் பெற்றதை தொடர்ந்து சுவாமி வெளிவீதி உலா
வந்தார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cb240145-3e32-4dea-b87c-70cfa28ca581/26-6a7c33aac2338.webp' /></p><p>அதனை தொடர்ந்து பாலாவி தீர்த்த கரையில் இறந்த முன்னோரை நினைவு கூர்ந்து
எள்ளும், தண்ணீரும் தர்ப்பணம் செய்யப்பட்டது.</p><p>

அதனை தொடர்ந்து திருக்கேதீஸ்வர ஆலயத்தில் மோட்ச அர்ச்சனை,மோச்ச விளக்கு
ஏற்றப்பட்டு,பக்த அடியார்கள் இறந்த தமது முன்னோர்களை நினைவு கூறி வழிபட்டுள்ளனர்.</p><p></p><p><b><i>மேலதிக தகவல் -&nbsp; தீபன்</i></b></p><p>ஆடி அமாவாசை பிதிர்க்கடன் நிறைவேற்றும் பூசை வழிபாடுகள் கீரிமலை கண்டகி
தீர்த்த கரையில் இன்றைய தினம்(12) புதன்கிழமை நடைபெற்றது.</p><h2>ஆடி அமாவாசை&nbsp;பூசை</h2><p>
</p><p>
தந்தையை இழந்தவர்கள் பிதிர்க்கடன் செலுத்தும் விரதாமான ஆடி அமாவாசை விரதத்தினை
முன்னிட்டு, தமது பிதிர்க்கடன்களை செலுத்தி கடலில் நீராடினார்கள்.
</p><p>
அதேவேளை மாவிட்டபுர கந்தனின் தீர்த்தோற்சவமும் கண்டகி தீர்த்த கரையில்
இடம்பெற்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6ce40386-839b-42f7-94a6-2d078e4b58b5/26-6a7c38099d635.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/997759e1-f42c-499f-9a03-b5955659bd3a/26-6a7c380b6767a.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bfb9d259-bac3-40e1-a88d-65087360ce3e/26-6a7c380a88fac.webp' /></p><p><b><i></i></b></p>]]></content>
            <updated>2026-08-12T08:12:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[22வது அரசியலமைப்பு திருத்தம் வேண்டாம் : மகாநாயக்கர்களை வைத்து சுஜீவ பகிரங்கப்படுத்திய அறிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sujeewa-makes-public-chief-prelates-letter-1786519409"></link>
            <id>https://ibctamil.com/article/sujeewa-makes-public-chief-prelates-letter-1786519409</id>
            <summary type="text">மூன்று பௌத்த பீடங்களினதும் மகாநாயக்க தேரர்கள் 22 ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் தமது நிலைப்பாட்டைத் தெரிவித்து ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதத்தை ஐ...</summary>
            <content type="html"><![CDATA[<p>மூன்று பௌத்த பீடங்களினதும் மகாநாயக்க தேரர்கள் 22 ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் தமது நிலைப்பாட்டைத் தெரிவித்து ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதத்தை ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற&nbsp; உறுப்பினர் சுஜீவ சேனசிங்க வெளியிட்டுள்ளார். </p><p>இன்று (12.08.2026) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போதே அவர் இதனை ஊடகங்கள் முன் பகிரங்கப்படுத்தியிருந்தார்.&nbsp;</p><p>

இந்தக் கடிதத்தின் மூலம் குறித்த அரசியலமைப்பு திருத்தத்தை மேற்கொள்ள வேண்டாம் என மூன்று பௌத்த பீடங்களினதும் மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதியிடம் கோரியுள்ளதாக அவர் கூறி இருந்தார்.</p><p></p><h2>ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதம்</h2><p>இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர் “இந்தக் கடிதத்தைக் தேடிக் கண்டுபிடிக்கக் கூட முடியாமல் இருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a8d48389-5584-4e5b-bae1-bf1936434084/26-6a7c285f8549f.webp' /></p><p> 

எப்படியோ இந்தக் கடிதம் எனக்குக் கிடைத்தது. </p><p>நாடு எங்கு செல்கிறது என்பதை மகாநாயக்க தேரர்களே புரிந்து கொண்டுள்ளார்கள். </p><p>

தற்போதைய நிலையில், அரசியலமைப்பின் ஏற்பாடுகளுக்கு அமைய மேன்முறையீட்டு நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயது முறையே 63 மற்றும் 65 ஆகக் குறிப்பிடப்பட்டுள்ளது. </p><p>

அந்த வயது எல்லையை அதிகரிப்பதற்கு அரசாங்கம் இவ்வாறு செயற்படுவது பொருத்தமானதல்ல என்பதே எமது நிலைப்பாடாகும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-12T08:06:54+00:00</updated>
        </entry>
    </feed>
