<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-09-03T10:26:41+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி பதுவத்த சாமரவின் சொகுசு வீடு மற்றும் கோடிக்கணக்கான சொத்துக்கள் முடக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/batuwatte-chamaras-property-assets-seized-1788429792"></link>
            <id>https://tamilwin.com/article/batuwatte-chamaras-property-assets-seized-1788429792</id>
            <summary type="text">ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர் என கருதப்படும் மனோஜ் சுரங்க லியனகே என்ற பதுவத்த சாமர என்பவரின் சொத்துக்கள் முடக்கப்பட்டு...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர் என கருதப்படும் மனோஜ் சுரங்க லியனகே என்ற பதுவத்த சாமர என்பவரின் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது.</p><p>குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப் பணியகம், கொழும்பு பிரதான நீதிபதி அசங்க எஸ். பொதரகமவிடம் இன்று (3) இதனை தெரிவித்துள்ளது.</p><h2>போதைப்பொருள் கடத்தல்&nbsp;மோசடி</h2><p>இதற்கமைய, 40 மில்லியன் மதிப்புள்ள சொகுசு வாகனம் மற்றும் மூன்று மாடி வீடு உள்ளிட்ட சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/03bf3d00-3cb2-4eaf-8c1a-629498dd1a56/26-6a9949b65d9be.webp' /></p><p>சந்தேகநபர் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் மூலம் பணத்தை மோசடியாக பெற்றுள்ளதாகவும் கூறியுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-03T10:26:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[பேரிச்சம் பழம் சாப்பிடுவதற்கு சரியான நேரம் என்ன தெரியுமா ?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/when-is-the-right-time-to-eat-dates-1788427530"></link>
            <id>https://news.lankasri.com/article/when-is-the-right-time-to-eat-dates-1788427530</id>
            <summary type="text">பேரிச்சம்பழத்தில் வைட்டமின் பி6, இரும்புச்சத்து, பொட்டாசியம், மெக்னீசியம் ஃபைபர், ஆன்ட்டி ஆக்ஸிடென்ட் போன்ற சத்துக்கள் நிறைந்து இருக்கிறது. இருந்தாலும...</summary>
            <content type="html"><![CDATA[<p>பேரிச்சம்பழத்தில் வைட்டமின் பி6, இரும்புச்சத்து, பொட்டாசியம், மெக்னீசியம் ஃபைபர், ஆன்ட்டி ஆக்ஸிடென்ட் போன்ற சத்துக்கள் நிறைந்து இருக்கிறது. </p><p>இருந்தாலும் இந்த பேரிச்சம் பழத்தை நாம் சாதாரணமாக சாப்பிடுவதை விடவும் சரியான நேரத்தில் சாப்பிடுவது தான் நமக்கு உடல் ரீதியாக ஒரு மிகப்பெரிய அளவில் ஆரோக்கியத்தை கொடுக்கும் என்று சொல்கிறார்கள். </p><p>அந்த வகையில், பேரிச்சம் பழத்தை நம் எப்பொழுது சாப்பிட்டால் அதிக அளவில் நமக்கு ஊட்டச்சத்து கிடைக்கும் என்பதை பற்றி பார்ப்போம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/02b5d255-e332-4677-8296-01b8c22f7bdc/26-6a993d0c3bb25.webp' /></p><h3>1.வெறும் வயிற்றில்:</h3><p>

இந்த பேரிச்சம் பழத்தை நாள் துவங்கும் பொழுது அதுவும் வெறும் வயிற்றில் இரண்டு மூன்று பேரிச்சம் பழம் சாப்பிடுவது உடல் ரீதியாக ஒரு மிகப்பெரிய அளவில் சக்தியை கொடுப்பதாக சொல்லப்படுகிறது. </p><p>இதில் இருக்கக்கூடிய பைபர் நம்முடைய செரிமானம் மற்றும் மலச்சிக்கல் போன்ற பாதிப்புகளில் இருந்து நிவாரணம் கொடுக்கிறது. ஆதலால், தினமும் காலையில் பேரிச்சம்பழம் சாப்பிடுவதால் நமக்கு ஹீமோகுளோபின் அளவு, குறிப்பாக இரத்தச்சோகையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நல்ல முன்னேற்றம் கிடைக்கிறது. </p><h3>

2. உடற்பயிற்சிக்கு:</h3><p>தினமும் உடற்பயிற்சி அல்லது யோகா செய்யக்கூடிய நபராக இருந்தால் 30 முதல் 60 நிமிடங்களுக்கு முன்பாக பேரிச்சம்பழம் எடுத்துக் கொள்கின்ற பொழுது அது உங்களுக்கு மிகப்பெரிய அளவில் ஒரு நன்மையை அளிக்கிறது.</p><p> அதில் இருக்கக்கூடிய இயற்கையான சர்க்கரை உடலுக்கு மெதுவாக ஆற்றலை வழங்குவதோடு பயிற்சி மேற்கொள்கின்ற பொழுது சோர்வை குறைக்கவும் உதவுகிறது. இதன் வழியாக உடலுக்கு நல்ல சக்தி கிடைப்பதோடு தசைகளுக்கும் தேவையான ஆற்றல் கிடைக்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ce634781-b317-43da-b7ea-c1d6dc3dcfaf/26-6a993d0ce510c.webp' /></p><p> </p><h3>

3. இரவில் பாலுடன்:
</h3><p>சிலருக்கு இரவு நேரங்களில் பேரிச்ச பணம் எடுத்துக் கொள்வது அவர்களுக்கு பயனுள்ளதாக அமைக்கும். குறிப்பாக, உடல் சோர்வு பலவீனமாக இருப்பவர்கள் படுக்கைக்கு செல்வதற்கு முன்பாக ஒரு இரண்டு பேரிச்சம் பழங்களை வெதுவெதுப்பான பாலில் வேகவைத்து கட்டாயம் எடுத்துக் கொள்ளலாம். </p><p>இது உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குவதோடு நரம்புகளை அமைதிப்படுத்தி தரமான தூக்கத்தை கொடுக்க உதவுகிறது. இருப்பினும் செரிமான பிரச்சனைகள் இருப்பவர்கள் இரவு நேரத்தில் அதிக பேரிச்சம்பழம் எடுப்பதை தவிர்ப்பது நல்லது.</p><h3>பேரீச்சம்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் முக்கிய நன்மைகள்:</h3><p>

1.பேரிச்சம் பழத்தில் குளுக்கோஸ், ஃப்ரக்டோஸ் மற்றும் சுக்ரோஸ் இதுபோன்ற இயற்கையான சர்க்கரைகள் இருக்கிறது. அதனால், சோர்வாகவும் பலவீனமாக உணரும் பொழுது நிச்சயம் இரண்டு மூன்று பேரிச்சம் பழங்களை எடுத்துக் கொள்ளும் பொழுது உடல் விரைவில் ஒரு நல்ல ஆற்றலை பெறும். </p><p>2.மேலும், பேரிச்சம்பழத்தில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் இது குடலின் செயல்பாட்டை சீராக வைத்துக்கொள்ள உதவுகிறது. இதனால் மலச்சிக்கல் நீங்குவதோடு உடலில் வளர்ச்சிதை மாற்றமும் சீராக அமைகிறது. குறிப்பாக தொடர்ந்து ஒருவர் பேரிச்சம் பழம் சாப்பிடுகின்ற பொழுது அவர்களுக்கு வயிறு தொடர்பான பிரச்சனைகள் முற்றிலும் விலகுகிறது. </p><p>3. பேரிச்சம் பழத்தில் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு தேவையான செலினியம், மாங்கனீஸ், தாமிரம் மற்றும் மெக்னீசியம் போன்ற தாதுக்கள் உள்ளன. இவை நம்முடைய எலும்புகளை வலுப்படுத்துவதோடு எலும்பு தொடர்பான பிரச்சனைகளை தவிர்க்கவும் உதவுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a9954da7-16f0-4efa-a6f2-edb2ca29f6ad/26-6a993d0d9f866.webp' /></p><p> </p><p>4. இந்த பேரிச்சம் பழத்தில் பொட்டாசியம் அதிகமாகவும் சோடியம் குறைவாகவும் இருப்பதால் ரத்த அழுத்தத்தை சீராக பராமரிக்க உதவுகிறது. மேலும், கெட்ட கொழுப்பு எனப்படும் LDL கொழுப்பின் அளவைக் குறைக்கவும் இது உதவுகிறது. இதனால் நம்முடைய இதய ஆரோக்கியமும் பாதுகாப்பாக இருக்கும். </p><p>
5. இந்த பேரிச்சம் பழத்தில் இருக்கக்கூடிய வைட்டமின்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் நம்முடைய சருமத்திற்கு ஊட்டச்சத்தை கொடுக்கிறது. இதன் வழியாக சருமம் ஒரு நல்ல பொலிவை பெறுவதோடு சுருக்கங்கள் குறையவும் உதவுகிறது. </p><p>இதில் இருக்கக்கூடிய ஊட்டச்சத்துக்கள் நம்முடைய கூந்தலுக்கும் வலிமையை கொடுக்கிறது. இந்த பேரிச்சம்பழம் பார்ப்பதற்கு சிறிய அளவாக இருந்தாலும் அதில் அதிக அளவில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கிறது. </p><p>இருப்பினும் சரியான நேரத்தில் அளவோடு எடுத்துக் கொள்ளும் பொழுது நம் உடலுக்கு தேவையான ஆரோக்கியமான சத்துக்கள் கிடைக்கிறது. காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவது, உடற்பயிற்சிக்கு முன்பாக சாப்பிடுவது மாலை நேர சிற்றுண்டியாக எடுத்துக் கொள்வது அல்லது இரவு பாலுடன் சாப்பிடுவது என ஒவ்வொரு நேரத்திலும் பேரிச்சம் பழத்தை சாப்பிடுவதற்கான தனி காரணங்கள் இருப்பதால் இன்னும் சரியான நேரத்தில் எடுத்துக் கொள்ளும் பொழுது நிச்சயம் அதற்குரிய ஒரு நல்ல பலன்களை பெறலாம்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-03T10:26:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நான் பதில் சொல்கிறேன் ...ஆனால் யாரும் ஓடக்கூடாது; உதயநிதி காலை வாரிய முதலைச்சர் விஜய்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/i-will-answer-but-no-one-should-run-away-cm-vijay-1788431006"></link>
            <id>https://jvpnews.com/article/i-will-answer-but-no-one-should-run-away-cm-vijay-1788431006</id>
            <summary type="text">தமிழக சட்டசபையில் இடம்பெறும் சம்பவங்கள் மக்கள் நேரடியாக கண்டுகளித்துவரும் நிலையில், அங்க்கு இடம்பெறும் சம்பவங்க்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழக சட்டசபையில் இடம்பெறும் சம்பவங்கள் மக்கள் நேரடியாக கண்டுகளித்துவரும் நிலையில், அங்க்கு இடம்பெறும் சம்பவங்க்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. </p><p> 

அந்தவகையில் இன்று சட்டசபையில் தவெக ஆட்சி குறித்து அடுக்கடுக்காக குற்றங்களை அடுக்கிய எதிர்கட்சி தலைவர் உதயநிதி, முதலைமச்சர் விஜயையும் சீண்டியமைக்கு முதலமைச்சர் விஜய் கூறிய பதில் பலரையும் சிரிக்க வைத்துள்ளது .</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/70154aa3-f7a6-4162-8a08-684daa448886/26-6a994a9f9b348.webp' /></p><h2>பதில் சொல்கிறேன் ...&nbsp; யாரும் ஓடக்கூடாது</h2><p> 


இன்று சட்டசபையில் பேசிய எதிர்கட்சி தலைவர் உதயநிதி, தமிழகத்தில் தற்போது தவெக ஆட்சி அமைந்திருக்கிறது.. அக்கட்சியின் தலைவர் ஜோசப் விஜய் முதலமைச்சராக மாறியிருக்கிறார்.</p><p></p><p>இந்நிலையில் இன்று சட்டசபையில் பேசிய உதயநிதி ஸ்டாலின் ‘தவெக ஆட்சிக்கு வந்து 116 நாட்கள் ஆகிவிட்டது. இவ்வளவு நாட்களில் இவ்வளவு கொலை நடந்திருக்கிறது.</p><p> இவ்வளவு குற்றங்கள் நடந்திருக்கிறது.. திமுக ஆட்சியில் நிறைய கொலைகள் நடந்திருப்பதாக சொல்லி தவெக ஆட்சிக்கு வந்தது. 

ஆனால், கொலைகளை தடுக்க தவெக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.</p><p>அதோடு நான் கேட்கும் எந்த கேள்விகளுக்கு முதலமைச்சர் பதில் சொல்வதில்லை.. அதேபோல் அமைச்சர்களிலும் சம்பந்தமில்லாத அமைச்சர்கள்தான் பதில் சொல்கிறார்கள்.. நான் கேட்கும் கேள்விகளுக்கு முதலமைச்சர் பதில் சொல்ல வேண்டும்’ எனக்கூறினார்.</p><p></p><p>அதற்கு சபாநாயகர் ‘திங்கட்கிழமை முதலமைச்சர் பதிலுரை இருக்கிறது.அப்போது அவர் பதில் சொல்வார்’ எனக்கூறினார்.

அதன்பின் பேசிய உதயநிதி ஸ்டாலின் ‘3 நாள் டைம் இருக்கு. என்ன பதில் சொல்லனும்னு பிரிப்பேர் பண்ணிட்டு வரட்டும். </p><p>வழக்கம்போல திமுக மீது பழியை போடாமல், டேக் டைவர்சன் செய்யாமல், ஆக்சன் கட், சினிமா வசனம் பேசாமல் நேரடியாக பதில் சொல்ல வேண்டும்’ எனக் கூறினார்.</p><p>

அப்போது எழுந்து பேசிய முதல்வர் விஜய் ‘உறுப்பினர்கள் மற்றும் எதிர்கட்சி தலைவர் எழுப்பிய அனைத்து கேள்விகளுக்கும் திங்கட்கிழமை பதில் விரிவான பதில் அளிக்கிறேன்.</p><p></p><p>ஆனால் அன்று யாரும் ஓடிவிடக்கூடாது’ என்று முதலமைச்சர் விஜய் பதி வழங்க்கியுள்ளார்.

அதேவேளை கடந்த காலங்களில் எதிர்கட்சி தலைவர் உதயநிதி கேள்வி எழுப்புவதும், தவெக அமைச்சர்கள் பதிலடி கொடுப்பதும், அதைகேட்டு பாதியில் சபையை விட்டு உதயநிதி எழுந்து ஊடிய சம்பங்களும் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.&nbsp; &nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-03T10:23:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[வருமானத்தை விட அதிக சொத்து சேர்ப்பு : விமலுக்கு எதிரான வழக்கு தொடர்பில் நீதிமன்றின் உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/wimals-case-postponed-1788430150"></link>
            <id>https://ibctamil.com/article/wimals-case-postponed-1788430150</id>
            <summary type="text">முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிராக இலஞ்ச ஆணைக்குழு தாக்கல் செய்த வழக்கை எதிர்வரும் 22ஆம் திகதியன்று மேலும் விசாரணைக்கு அழைக்குமாறு கொழும்பு ...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிராக இலஞ்ச ஆணைக்குழு தாக்கல் செய்த வழக்கை எதிர்வரும் 22ஆம் திகதியன்று மேலும் விசாரணைக்கு அழைக்குமாறு கொழும்பு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
</p><p>
அமைச்சராகப் பணியாற்றிய காலத்தில் தனது சட்டபூர்வ வருமானத்தை விட அதிகமான சொத்துக்களைக் குவித்தது தொடர்பான இந்த வழக்கு, இன்று (03) கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி முகமது மிஹைல் முன்பாக விசாரணைக்கு அழைக்கப்பட்டது.</p><h2>மீண்டும் விசாரணைக்கு அழைக்குமாறு உத்தரவு</h2><p>&nbsp;சமர்ப்பிக்கப்பட்ட உண்மைகளைக் கருத்தில் கொண்ட நீதிபதி, இந்த வழக்கை 22ஆம் திகதியன்று மீண்டும் விசாரணைக்கு அழைக்குமாறு உத்தரவிட்டார்.

மேலும், அன்றைய தினம் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு சாட்சிகளை வரவழைக்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6401561a-f764-41dc-8ccd-f8673be04c77/26-6a994a4c3788b.webp' /></p><p>
</p><p>
முந்தைய நல்லாட்சி அரசாங்கத்தின் போது, ​​முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச, 2010 முதல் 2014 வரையிலான காலகட்டத்தில் தனது சட்டபூர்வ வருமானத்தை விட ரூ. 75 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள சொத்துக்களை சட்டவிரோதமாகப் பெற்றதன் மூலம் இலஞ்சச் சட்டத்தின் கீழ் குற்றம் இழைத்ததாகக் குற்றம் சாட்டி, இலஞ்ச ஆணைக்குழு இந்த வழக்கை அவருக்கு எதிராக தாக்கல் செய்திருந்தது.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-03T10:22:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[புளியங்கொட்டை சிக்கி 7 வயது சிறுமி பரிதாப உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/girl-dies-after-getting-tamarind-pulp-stuck-throat-1788430437"></link>
            <id>https://jvpnews.com/article/girl-dies-after-getting-tamarind-pulp-stuck-throat-1788430437</id>
            <summary type="text">கண்டி கலகஹா, நில்லம்ப - குருக்கலே பிரதேசத்தில் புளியங்கொட்டை ஒன்று தொண்டையில் சிக்கியதால் சிறுமி ஒருவர் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்துள்ளார்.மேலதிக விசாரண...</summary>
            <content type="html"><![CDATA[<p>கண்டி கலகஹா, நில்லம்ப - குருக்கலே பிரதேசத்தில் புளியங்கொட்டை ஒன்று தொண்டையில் சிக்கியதால் சிறுமி ஒருவர் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்துள்ளார்.</p><p></p><h3>மேலதிக விசாரணை</h3><p> 

இவ்வாறு உயிரிழந்தவர் அப்பிரதேசத்தில் வசித்து வந்த, குடும்பத்தின் இளைய பிள்ளையான சனுதி லக்ஷானி என்ற 07 வயதுடைய சிறுமியாவார்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7dae5bfd-eb63-4e2e-b6c6-044d4674c5f9/26-6a994a0b31f4d.webp' /></p><p>நேற்று (02) பிற்பகல் தனது சகோதரிகளுடன் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த போது, பெற்றோருக்குத் தெரியாமல் சமையலறையில் இருந்த சிறிதளவு புளியம்பழத்தை எடுத்து உண்ண சிறுமி முயற்சித்துள்ளார். </p><p>

இதன்போது புளியங்கொட்டை ஒன்று தொண்டையில் சிக்கியதால் சிறுமி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார். </p><p>

சம்பவம் குறித்து அறிந்ததும், வீட்டில் இருந்த தாய் உட்பட உறவினர்கள் சிறுமியைக் காப்பாற்றும் நோக்கில் லொறி ஒன்றின் மூலம் பேராதனை போதனா வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கு நடவடிக்கை எடுத்த போதிலும், வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே சிறுமி உயிரிழந்துள்ளார். </p><p>

சடலம் தற்போது பேராதனை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கலகஹா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-03T10:21:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[கமல் ஹாசனின் அடுத்த படம்.. வெளிவந்த புகைப்படம்.. இயக்குநர் யார் தெரியுமா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/kamal-haasan-next-movie-with-su-arunkumar-1788429826"></link>
            <id>https://cineulagam.com/article/kamal-haasan-next-movie-with-su-arunkumar-1788429826</id>
            <summary type="text">உலகநாயகன் கமல் ஹாசனின் புதிய திரைப்படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது; அதைப்பற்றி பார்க்கலாம் வாங்க.

கமல் ஹாசன்

உலகநாயகன் கமல் ஹாசன் நடிப்பில்...</summary>
            <content type="html"><![CDATA[<p>உலகநாயகன் கமல் ஹாசனின் புதிய திரைப்படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது; அதைப்பற்றி பார்க்கலாம் வாங்க.</p><p></p><p>
</p><h2>
கமல் ஹாசன்</h2><p>

உலகநாயகன் கமல் <a href="https://www.youtube.com/watch?v=pTCyGzuRG-w&amp;t=4s" target="_blank">ஹாசன் </a>நடிப்பில் கடந்த ஆண்டு தக் லைஃப் திரைப்படம் வெளியானது. மணி ரத்னம் இயக்கத்தில் பல ஆண்டுகளுக்கு பின் கமல் நடித்துள்ளதால் என்பதால் இப்படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/060a54b9-0f4f-4bae-a94c-27ca3546a0f5/26-6a994605cc97f.webp' /></p><p>ஆனால், ரசிகர்களின் எதிர்பார்ப்பை இப்படம் பூர்த்தி செய்யவில்லை. இதனால் படுதோல்வியை சந்தித்தது.

தக் லைஃப் திரைப்படத்தை தொடர்ந்து கல்கி இரண்டாம் பாகத்தில் வில்லனாக கமல் ஹாசன் நடித்து வருகிறார். மேலும், பல ஆண்டுகளாக ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த ரஜினி - கமல் காம்போ இணைந்துள்ளது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/505a0b31-9a5e-4795-9758-18e6bb204647/26-6a99460685761.webp' /></p><p>இதை தவிர்த்து அன்பு அறிவு இயக்கத்தில் கமல் ஹாசன் நடிக்கவுள்ள படத்திற்கான முன் தயாரிப்பு பணிகள் நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது. இதுமட்டுமின்றி சேயோன், தர்மன் போன்ற முன்னணி ஹீரோக்களின் திரைப்படங்களையும் தனது ராஜ்கமல் நிறுவனத்தின் மூலம் தயாரித்துக்கொண்டிருக்கிறார்.</p><p> </p><h2>

SU அருண்குமார் - கமல் ஹாசன்
</h2><p>
இந்நிலையில், பிரபல இயக்குநர் SU அருண்குமார் இயக்கத்தில் புதிய திரைப்படத்தில் கமல் ஹாசன் நடிக்கப்போவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்படத்திற்கான டெஸ்ட் ஷூட் சமீபத்தில் நடந்துள்ளது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/341777be-bf10-43de-8ce5-db95a0ec7fcc/26-6a9946051d2fd.webp' /></p><p>அதனை ராஜ்கமல் நிறுவனம் தங்களது எக்ஸ் தளத்தில் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளனர். 

இயக்குநர் SU அருண்குமார் இதற்கு முன் சேதுபதி, சித்தா, வீர தீர சூரன் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">தோ வாரேன் 🔥<a href="https://x.com/ikamalhaasan?ref_src=twsrc%5Etfw">@ikamalhaasan</a> <a href="https://x.com/hashtag/SUArunkumar?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#SUArunkumar</a><a href="https://x.com/hashtag/KamalHaasan?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#KamalHaasan</a> <a href="https://x.com/hashtag/Mahendran?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#Mahendran</a><a href="https://x.com/RKFI?ref_src=twsrc%5Etfw">@RKFI</a> <a href="https://x.com/turmericmediaTM?ref_src=twsrc%5Etfw">@turmericmediaTM</a> <a href="https://x.com/magizhmandram?ref_src=twsrc%5Etfw">@magizhmandram</a> <a href="https://t.co/1GMUOdcSH6">pic.twitter.com/1GMUOdcSH6</a></p>&mdash; Raaj Kamal Films International (@RKFI) <a href="https://x.com/RKFI/status/2095414910130008323?ref_src=twsrc%5Etfw">September 3, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p>]]></content>
            <updated>2026-09-03T10:20:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[மத்திய குற்றப்புலனாய்வு பணியகத்திலிருந்து வெளியேறிய அருந்திக பெர்னாண்டோ]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ccib-investigation-arundika-fernando-1788412093"></link>
            <id>https://tamilwin.com/article/ccib-investigation-arundika-fernando-1788412093</id>
            <summary type="text">புதிய இணைப்புமுன்னாள் இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோவிடம் மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்திலிருந்து (CCIB) வெளியேறியுள்ளார்.போதைப்பொருள் கடத...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>முன்னாள் இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோவிடம் மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்திலிருந்து (CCIB) வெளியேறியுள்ளார்.</p><p>போதைப்பொருள் கடத்தல்காரர் என்று கூறப்படும் ஷிரான் பாசிக் தொடர்பான விசாரணையில் வாக்குமூலம் அளிப்பதற்காக இன்று காலை வருகை தந்த நிலையில், பல மணிநேரம் வாக்குமூலம் வழங்கிய பின்னர் வெளியேறியுள்ளார்.</p><h2>முதலாம் இணைப்பு</h2><p>&nbsp;முன்னாள் இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோவிடம் மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் (CCIB)தற்போது முன்னிலையாகியுள்ளது.
</p><p>
டுபாயிலிருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட பிரபல போதைப்பொருள் கடத்தல்காரர் ஷிரான் பாசிக் தொடர்பில் இடம்பெற்று வரும் விசாரணையின் பகுதியாகவே அவர் இன்று (03) அழைக்கப்பட்டுள்ளார்.</p><h2>&nbsp;சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் தொடர்பிலும் வாக்குமூலம்&nbsp;</h2><p>

இதற்கமைய, மத்திய குற்றப் புலனாய்வுப் பணியக அதிகாரிகள் தற்போது வாக்குமூலங்களை பதிவுசெய்து வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ec17e08f-363d-46ab-ae0b-2eadd881e1f6/26-6a99037734045.webp' /></p><p>
</p><p>
இந்த விசாரணையின் ஒரு பகுதியாக அவரது சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் தொடர்பிலும் வாக்குமூலம் பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-09-03T10:16:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[புளியங்கொட்டை தொண்டையில் சிக்கி 7 வயது சிறுமி உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/girl-dies-after-tamarind-seed-gets-stuck-throat-1788425221"></link>
            <id>https://ibctamil.com/article/girl-dies-after-tamarind-seed-gets-stuck-throat-1788425221</id>
            <summary type="text">கண்டி, கலஹா, நில்லம்ப குருகலே பகுதியில்&amp;nbsp; புளியங்கொட்டை தொண்டையில் சிக்கியதில் 7 வயது சிறுமி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் அப...</summary>
            <content type="html"><![CDATA[<p>கண்டி, கலஹா, நில்லம்ப குருகலே பகுதியில்&nbsp; புளியங்கொட்டை தொண்டையில் சிக்கியதில் 7 வயது சிறுமி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
</p><p>
உயிரிழந்தவர் அப்பகுதியைச் சேர்ந்த சனுதி லக்ஷானி என்ற சிறுமி எனவும், குடும்பத்தின் இளைய பிள்ளை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
நேற்று (02.09.2026) பிற்பகல் தனது சகோதரிகளுடன் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி, பெற்றோருக்குத் தெரியாமல் சமையலறையில் இருந்த புளியை எடுத்து சாப்பிட முயன்றுள்ளார்.</p><p></p><h2>சிறுமி ஒருவர் பலி</h2><p>
</p><p>
இதன்போது புளியங்கொட்டை ஒன்று அவரது தொண்டையில் சிக்கியதால், சிறுமி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e9c168bd-9083-43a9-a640-3f2b62779024/26-6a9948e531816.webp' /></p><p>
</p><p>
சம்பவம் தொடர்பில் அறிந்த தாயார் உள்ளிட்ட உறவினர்கள், சிறுமியை காப்பாற்றுவதற்காக லொறி ஒன்றில் பேராதனை போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். </p><p>எனினும், வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே சிறுமி உயிரிழந்துள்ளார்.
</p><p>
சிறுமியின் சடலம் தற்போது பேராதனை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கலஹா காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-03T10:16:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[பணக்காரராவது எப்படி என புத்தகம் எழுதியவருக்கு ரூ 11,000 கோடி கடன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/author-kiyosaki-billion-in-debt-1788427527"></link>
            <id>https://news.lankasri.com/article/author-kiyosaki-billion-in-debt-1788427527</id>
            <summary type="text">Robert Kiyosaki Says He is $1.2 Billion in Debt: தனக்கு 1.2 பில்லியன் டொலர் கடன் இருப்பதாக ராபர்ட் கியோசாகி கூறுகிறார்.
உலகப் புகழ்பெற்ற &quot;Rich Dad Po...</summary>
            <content type="html"><![CDATA[<p>Robert Kiyosaki Says He is $1.2 Billion in Debt: தனக்கு 1.2 பில்லியன் டொலர் கடன் இருப்பதாக ராபர்ட் கியோசாகி கூறுகிறார்.
</p><p>உலகப் புகழ்பெற்ற "Rich Dad Poor Dad" நூலின் ஆசிரியரான ராபர்ட் கியோசாகி, சுமார் 1.2 பில்லியன் டொலர், அதாவது சுமார் ரூ.11,000 கோடி கடனில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5d8ffd90-681a-4b52-adbd-a79299a570c7/26-6a993d094c4c7.webp' /></p><p>
</p><p>பணக்காரனாவது எப்படி என்பதை விளக்கும் நூலை எழுதி, அதில் பல கோடி சம்பாதித்த நபரே ரூ.11,000 கோடி கடனில் இருப்பது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
</p><p>வேனிட்டி ஃபேர் பத்திரிகை ஆகஸ்ட் 26ஆம் திகதி வெளியிட்டுள்ள செய்தியில், 79 வயதான கியோசாகி தற்போது 1.2 பில்லியன் டொலர் கடனில் (இந்திய மதிப்பில் ரூ 1,13,30 கோடி) இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளது. </p><p>அவருடைய புத்தகத்தின் தலைப்பைப் படித்த ஒருவருக்கு இது அதிர்ச்சியாக இருக்கலாம், ஆனால் கடனில் இருப்பது உண்மையில் அந்தப் புத்தகத்தில் உள்ள தனது கருத்துக்களுடன் ஒத்துப்போவதாக அவர் கூறுகிறார். </p><p>1997ஆம் ஆண்டு வெளியான இவரது "Rich Dad Poor Dad" நூலானது இதுவரை 4.4 கோடிக்கும் அதிகமான பிரதிகள் விற்பனையாகியுள்ளது. கியோசாகி முதன்முதலில் 2025-ல் தனக்கு 1.2 பில்லியன் டொலர் கடன் இருப்பதாகக் கூறத் தொடங்கினார்.</p><p></p><p> </p><p>இருப்பினும், செப்டம்பர் 2025-ல் வெளியான 'தி ஹன்னா ஹாமண்ட் ஷோ' நிகழ்ச்சியின் ஒரு அத்தியாயத்தில், அந்தக் கடன் ஒரு தந்திரோபாயமானது என்று அவர் விளக்கினார். </p><p>அத்துடன், வருமானம் ஈட்டக்கூடிய சொத்துகளை வாங்குவதற்கு கடன் பெறுவதுதான் பணக்காரர்கள் பயன்படுத்தும் உத்தி என தெரிவித்துள்ளார். மேலும், சோம்பேறிகள் மட்டுமே தங்கள் சொந்தப் பணத்தை முதலீடுக்குப் பயன்படுத்துவார்கள். </p><p>கடன் வாங்குவதுதான் உங்கள் வேலை என்றார். மட்டுமின்றி, இந்த வழியில் கடனைப் பயன்படுத்துவது, அதிக ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்ய தனக்கு உதவியதாக அவர் கூறினார். </p><p>இந்த நிலையில், கியோசாகியின் வணிகத்தில் தொடர்ந்து பங்குதாரராக இருக்கும் அவரது முன்னாள் மனைவி கிம், வேனிட்டி ஃபேர் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், 1.2 பில்லியன் டொலர் கடன் இருந்தாலும், அது கியோசாகி தனிப்பட்ட முறையில் சேர்த்த தொகை அல்ல என்றும், மாறாக, அது அவரின் ரியல் எஸ்டேட் முதலீட்டாளர்கள் குழுவிடம் உள்ள மொத்தக் கடன் என்றும் கூறினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bc745d12-fa46-4151-ac3c-c6f81740c5d6/26-6a993d0a01c79.webp' /></p><p> </p><p>மேலும்,
எங்கள் பங்குதாரர்களுடன் எங்களுக்கு நிறைய அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன, அவற்றின் எண்ணிக்கை சுமார் 1,500 என்று குறிப்பிட்டார்.</p><p> இதனால், தொழில்நுட்ப ரீதியாக, எங்களுக்கு இந்தக் கடன் எல்லாம் இருக்கிறது, ஆனால் அது உண்மையான சொத்துக்களுடன் இணைக்கப்பட்டிருக்கிறது என்றார். </p><p>மட்டுமின்றி, கடனில் கியோசாகியின் தனிப்பட்ட பங்கும் குறைவாகவே உள்ளது.
கியோசாகியின் சொத்துகளின் மதிப்பு அதிகரிக்கும்போது அதை அடைமானமாக வைத்து மீண்டும் கடன் பெறுவதே கியோசியின் முக்கியமான முதலீட்டு அணுகுமுறையாகும். </p><p>சொத்தை விற்பதற்கு பதிலாக, அதன் மீது கடன் பெற்று கிடைக்கும் தொகையை வேறு பிஸ்னஸுக்கு பயன்படுத்துவதாக அவர் கூறியுள்ளார். </p><p>மேலும், ஒவ்வொரு முதலீட்டையும் தனித்தனி நிறுவனங்களின் கீழ் வைத்திருப்பதாகவும், இதன் மூலம் ஒரு முதலீடு தோல்வியடைந்தாலும் அதன் தாக்கம் மற்ற முதலீடுகளை பாதிக்காமல் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2855e36c-a4fc-4ffc-96f9-8fc222c40b33/26-6a993d0ac0463.webp' /></p><p>
</p><p>'Rich Dad Poor Dad' புத்தகம் 44 மில்லியனுக்கும் அதிகமான பிரதிகள் விற்பனையாகி, குறைந்தது 43 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. அவர் இந்தப் புத்தகத்தை ஷரோன் லெக்டருடன் இணைந்து எழுதினார். </p><p>புத்தகத்தின் முதல் பதிப்பு சுயமாக வெளியிடப்பட்டது, பின்னர் அது ஆம்வே என்ற பன்முனை சந்தைப்படுத்தல் நிறுவனத்தால் வெளியிடப்பட்டு, நியூயார்க் டைம்ஸின் அதிகம் விற்பனையாகும் புத்தகங்கள் பட்டியலில் இடம்பெற உதவியது. </p><p>வார்னர் புக்ஸ் அந்தப் புத்தகத்தை மீண்டும் வெளியிட்டது, மேலும் 2000-ஆம் ஆண்டில், கியோசாகி ஓப்ரா வின்ஃப்ரே நிகழ்ச்சியில் கலந்துகொண்டது, அந்தப் புத்தகத்தை ஒரு மாபெரும் வெற்றிப் படைப்பாக நிலைநிறுத்த உதவியது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-03T10:15:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்திய கப்பல் ஏற்றுமதிக்கு பிரதான இலக்காகும் இலங்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-lanka-major-destination-indian-ship-exports-1788427768"></link>
            <id>https://tamilwin.com/article/sri-lanka-major-destination-indian-ship-exports-1788427768</id>
            <summary type="text">இந்தியாவின் வளர்ந்து வரும் கப்பல் ஏற்றுமதிக்கு இலங்கை ஒரு முக்கிய இலக்காக உருவெடுத்து வரும் நிலையில், இது இரு அண்டை நாடுகளுக்கும் இடையிலான கடல்சார் மற...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியாவின் வளர்ந்து வரும் கப்பல் ஏற்றுமதிக்கு இலங்கை ஒரு முக்கிய இலக்காக உருவெடுத்து வரும் நிலையில், இது இரு அண்டை நாடுகளுக்கும் இடையிலான கடல்சார் மற்றும் தொழில்துறை தொடர்புகள் பலப்படுவதைச் சுட்டிக்காட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>

இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சு வெளியிட்டுள்ள தரவுகளின் அடிப்படையில், 2026-27 நிதியாண்டின் முதல் காலாண்டில் இந்தியாவின் கப்பல் ஏற்றுமதி சுமார் 1.36 பில்லியன் அமெரிக்க டொலர்களாக 6 மடங்குக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.</p><h2>இந்தியக் கப்பல் கட்டும் தளங்கள்</h2><p> 

ஆசியா, ஆபிரிக்கா மற்றும் இந்தியப் பெருங்கடல் பிராந்தியம் முழுவதும் உள்ள சந்தைகளுக்கு இந்தியக் கப்பல் கட்டும் தளங்கள் அதிக மதிப்புள்ள கடல்சார் சொத்துக்களின் விநியோகத்தை விரிவுபடுத்தியதே இதற்குக் காரணமாகும். </p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">India’s tanker exports are reaching a wider set of markets across Asia, Africa and the Indian Ocean region.<br><br>The emergence of new destinations, along with higher shipments to Sri Lanka, reflects the growing acceptance of Indian-built tankers across diverse maritime markets.… <a href="https://t.co/vLHLhyNz36">pic.twitter.com/vLHLhyNz36</a></p>&mdash; Dept of Commerce, GoI (@DoC_GoI) <a href="https://x.com/DoC_GoI/status/2095400539756638518?ref_src=twsrc%5Etfw">September 3, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>

இந்தியாவின் வழக்கமான ஏற்றுமதி இலக்குகளில் இலங்கை மிகக் கூர்மையான உயர்வைப் பதிவு செய்துள்ளது. </p><p>

இதன்படி, இலங்கைகான கப்பல் ஏற்றுமதி முந்தைய ஆண்டின் இதே காலப்பகுதியில் 7.9 மில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்த நிலையில், தற்போது 56.5 மில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்ந்துள்ளது.&nbsp;</p><p>எகிப்து, தென்னாப்பிரிக்கா, வியட்நாம், இந்தோனேசியா மற்றும் மொசாம்பிக் மற்றும் மாலைதீவு உள்ளிட்ட நாடுகளில் புதிய கப்பல் ஏற்றுமதி இலக்குகள் உருவாகி வருவதால், இந்தியாவில் தயாரிக்கப்படும் கப்பல்கள் பரந்த சர்வதேச சந்தையைப் பெற்று வருகின்றன. </p><h2>இந்தியப் பெருங்கடலின் முக்கிய கப்பல் பாதை</h2><p>

இந்த மாற்றம் இந்தியக் கப்பல் கட்டும் தளங்கள் பிராந்திய வர்த்தகக் கப்பல் போக்குவரத்தில் விரிவான இருப்பை நிறுவத் தொடங்கியுள்ளதைக் காட்டுகிறது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5a4568d6-0c89-48d5-b70e-658776a49139/26-6a9946f91e284.webp' /></p><p>

இந்தியப் பெருங்கடலின் முக்கிய கப்பல் பாதைகளில் இலங்கையின் அமைவிடம் மற்றும் இந்தியாவுடனான அதன் நீண்டகால கடல்சார் தொடர்புகள் ஆகியவற்றைக் கருத்திற் கொள்ளும்போது, இலங்கைக்கு இந்தப் போக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைகிறது.&nbsp;</p><p>இரு நாடுகளுக்கும் இடையிலான பரந்த வர்த்தக உறவுகளின் பலப்படுத்தலுக்கு மத்தியிலேயே இந்த வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. </p><p>

இருதரப்பு சுதந்திர வர்த்தக கட்டமைப்பின் கீழ் விரிவடையும் வர்த்தகத்தைப் பிரதிபலிக்கும் வகையில், இலங்கைக்கான இந்தியாவின் ஏற்றுமதியும் அதிகரித்து வருவதாக அந்தத் துறை சுட்டிக்காட்டியுள்ளது. </p><p>இலங்கையைப் பொறுத்தவரை, இந்தியக் கப்பல் கட்டுபவர்களுடனான வலுவான தொடர்புகள் புதிய முதலீடுகள், தொழில்நுட்பம் மற்றும் அதன் கப்பல் பழுதுபார்ப்பு மற்றும் கப்பல் கட்டும் துறைக்கான வாய்ப்புகளைக் கொண்டுவரக்கூடும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-03T10:09:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[கெஹெல்பத்தர பத்மேவிற்கு தொடரும் விளக்கமறியல் : நீதிமன்றம் உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/kehelbaddara-padme-s-remand-extended-1788427627"></link>
            <id>https://ibctamil.com/article/kehelbaddara-padme-s-remand-extended-1788427627</id>
            <summary type="text">பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தால் தடுத்து வைத்து விசாரிக்கப்பட்டு வந்த கெஹெல்பத்தர பத்மேவை தொடர்ந்தும் விளக்கமறியலில...</summary>
            <content type="html"><![CDATA[<p>பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தால் தடுத்து வைத்து விசாரிக்கப்பட்டு வந்த கெஹெல்பத்தர பத்மேவை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p>அதன்படி, கெஹெல்பத்தர பத்மேவை எதிர்வரும் 17 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.</p><p>

பூஸ்ஸ சிறைச்சாலையிலிருந்து Zoom தொழிநுட்பத்தின் ஊடாக சந்தேகநபர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.</p><p></p><h2>&nbsp;குற்றப்புலனாய்வுத் திணைக்களம் கோரிக்கை</h2><p>இந்தநிலையில், விசாரணைகள் தொடர்வதால் விளக்கமறியலை நீடிக்குமாறு குற்றப்புலனாய்வுத் திணைக்களம் கோரிக்கை விடுத்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d757fd38-d25d-4621-a833-1b17dc8f3773/26-6a9944608ecff.webp' /></p><p>
</p><p>
இதனை ஏற்றுக் கொண்ட நீதவான், பயங்கரவாதத் தடைச் சட்ட வழக்கு மற்றும் 'கணேமுல்ல சஞ்சீவ' தொடர்பான வழக்கை மாத்திரம் இந்த நீதிமன்றத்தில் தொடருமாறு உத்தரவிட்டார்.</p><p>அத்துடன் சந்தேகநபர் மீதான ஏனைய வழக்குகளை உரிய நீதிமன்றங்களுக்கு அனுப்புமாறு நீதவான் உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-03T10:05:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[1.7 பில்லியன் டாலர் கடனில் ரிச் டாட் புவர் டாட்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/rich-dad-poor-dad-in-1-7-billion-doller-debt-1788429472"></link>
            <id>https://ibctamil.com/article/rich-dad-poor-dad-in-1-7-billion-doller-debt-1788429472</id>
            <summary type="text">
உலகப் புகழ்பெற்ற ‘Rich Dad Poor Dad’ நூலின் ஆசிரியரும் நிதி ஆலோசகருமான ராபர்ட் கியோசாகி, தனது ரியல் எஸ்டேட் முதலீடுகளுடன் தொடர்புடைய சுமார் 1.2 பில்...</summary>
            <content type="html"><![CDATA[<p>
உலகப் புகழ்பெற்ற ‘Rich Dad Poor Dad’ நூலின் ஆசிரியரும் நிதி ஆலோசகருமான ராபர்ட் கியோசாகி, தனது ரியல் எஸ்டேட் முதலீடுகளுடன் தொடர்புடைய சுமார் 1.2 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் இருப்பதாக தெரிவித்துள்ளார். </p><p>

செல்வந்தர்கள் வருமானம் ஈட்டக்கூடிய சொத்துகளை வாங்குவதற்கு கடனைப் பயன்படுத்துவதாக நீண்டகாலமாக வலியுறுத்தி கியோசாகி வலியுறுத்தி வருகின்றார்.
</p><p>
இந்நிலையில் கடனை சரியான முறையில் பயன்படுத்துவதற்கு நிதி அறிவு அவசியம் என்றும் தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>1.2 பில்லியன் டொலர்&nbsp;கடன் </h2><p> </p><p>

எனினும், 1.2 பில்லியன் டொலர் முழுவதும் கியோசாகியின் தனிப்பட்ட கடன் அல்ல என அவரது முன்னாள் மனைவியும் வர்த்தகப் பங்காளியுமான கிம் கியோசாகி தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/632ecccf-4c4a-4989-aa24-e0071e2cfe78/26-6a99465243d6e.webp' /></p><p> </p><p>

தாங்கள் பங்காளிகளுடன் இணைந்து சுமார் 1,500 அடுக்குமாடி குடியிருப்பு அலகுகளை வைத்திருப்பதாகவும், அவற்றுடன் தொடர்புடைய கடனே பெரும்பகுதி எனவும் அவர் விளக்கியுள்ளார். </p><p>

கியோசாகியின் முதலீட்டு உத்தியின்படி, சொத்துகளின் மதிப்பு உயரும்போது அவற்றின் அதிகரித்த மதிப்பை அடிப்படையாகக் கொண்டு மீண்டும் கடன் பெறுகிறார். </p><p>

அந்தப் பணத்தை புதிய முதலீடுகளுக்குப் பயன்படுத்துகிறார். மேலும், ஒவ்வொரு முதலீட்டையும் தனித்தனி நிறுவனங்களின் கீழ் வைத்திருப்பதன் மூலம் ஒரு முதலீட்டில் ஏற்படும் பிரச்சினை மற்ற சொத்துகளை பாதிக்காத வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>

இதனிடையே, கியோசாகியின் தனிப்பட்ட பங்கு கடன் சுமார் 30 முதல் 60 மில்லியன் டொலர் வரை இருக்கலாம் என Vanity Fair மதிப்பிட்டுள்ளது.</p><p>

 ரியல் எஸ்டேட் சொத்துகளை அடிப்படையாகக் கொண்டு கடன் பெறுவது பொதுவான முதலீட்டு நடைமுறை என சில நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். 

இருப்பினும், அதிகளவிலான கடன் சொத்து மதிப்பு அல்லது வருமானம் குறையும் சூழ்நிலையில் மிகப்பெரிய நிதிச் சுமையாக மாறக்கூடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. </p><p>

1997ஆம் ஆண்டு வெளியான ‘Rich Dad Poor Dad’ நூல் உலகளவில் 44 மில்லியனுக்கும் அதிகமான பிரதிகள் விற்பனையாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>

இந்த நூலின் மூலம் கியோசாகி, ரியல் எஸ்டேட் மற்றும் பிற வருமானம் ஈட்டும் சொத்துகளில் முதலீடு செய்வதைப் பிரபலப்படுத்தியுள்ளார்.

 கியோசாகியின் கூற்றுப்படி, முதலீட்டுக்காக பயன்படுத்தப்படும் “நல்ல கடன்” மற்றும் அன்றாட செலவுகளுக்காக பயன்படுத்தப்படும் கடன் ஆகியவற்றை முதலீட்டாளர்கள் வேறுபடுத்திப் புரிந்துகொள்ள வேண்டும்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...! </td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-03T10:05:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[A66 சாலை விபத்து: பிரித்தானியாவில் மூடப்படும் பல பள்ளிகள்: இளைஞரின் இறுதி ஊர்வலம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/a66-crash-middlesbrough-schools-close-early-1788429588"></link>
            <id>https://news.lankasri.com/article/a66-crash-middlesbrough-schools-close-early-1788429588</id>
            <summary type="text">A66 crash Middlesbrough schools close early: A66 சாலை விபத்தில் உயிரிழந்த யாக்கூப் மத்துசியாக் என்ற நபரின் இறுதி ஊர்வலம் நடைபெற உள்ள நிலையில் மிடில்ஸ்...</summary>
            <content type="html"><![CDATA[<p>A66 crash Middlesbrough schools close early: A66 சாலை விபத்தில் உயிரிழந்த யாக்கூப் மத்துசியாக் என்ற நபரின் இறுதி ஊர்வலம் நடைபெற உள்ள நிலையில் மிடில்ஸ்பரோ(Middlesbrough) பகுதியில் உள்ள பள்ளிகள் முன்கூட்டியே மூடப்பட உள்ளன.</p><h2>A66 சாலை விபத்து</h2><p>கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரித்தானியாவின் மிட்ல்ஸ்பரோ (Middlesbrough) அருகே உள்ள A66 சாலையில் நடந்த துரத்தல் நடவடிக்கையின் போது வோக்ஸ்வேகன் பாசாட் காரும், காவல்துறையினரின் காரும் மோதிக் கொண்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b5d49317-f52b-473a-bb24-187707e9fbd8/26-6a9945160ff04.webp' /></p><p> இந்த சம்பவத்தில் யாக்கூப் மத்துசியாக், கோல் வொர்த்தி, தியோ ரே, மகாய் சாடிங்டன் மற்றும் மைக்கேல் காஹில் ஆகிய 5 இளைஞர் மற்றும் 37 வயதான மேத்யூ பிளேட்ஸ் மற்றும் 38 வயதான டாம் க்ளஃப் ஆகிய 2 காவலர்கள் உட்பட 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.</p><h3> பள்ளிகள் மூடல்</h3><p>
உயிரிழந்த இளைஞர்களில் ஒருவரான யாக்கூப் மத்துசியாக் என்பவரின் இறுதி ஊர்வலம் மிடில்ஸ்பரோ பகுதியில் வெள்ளிக்கிழமையன்று நடைபெற உள்ளது.</p><p> &nbsp;சவுத் பேங்கில் உள்ள செயிண்ட் ஜான் தேவாலயத்தில் நடைபெறும் இந்த இறுதிச் சடங்கு நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான மக்கள் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும், மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் மிடில்ஸ்பரோ பகுதியில் உள்ள பல பள்ளிகள் முன்கூட்டியே மூடப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a50982c4-b567-4185-bb51-93c90ba85a40/26-6a9945155ac57.webp' /></p><p> சவுத் பேங்க் தொடக்கப் பள்ளி, அவுட்வுட் அகாடமி, செயின்ட் பீட்டர்ஸ் கத்தோலிக்க கல்லூரி மற்றும் செயின்ட் மார்கரெட் கிளிதோரோ கத்தோலிக்க தொடக்கப்பள்ளி ஆகிய நான்கு பள்ளிகள் மதிய வேளையில் மூடப்படுவதாக அறிவித்துள்ளன.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-03T10:00:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[எல்லா கேள்விக்கு சொல்றேன்..யாரும் ஓடிட கூடாது!! சம்பவம் செய்த முதலமைச்சர் விஜய்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/cm-vijay-asks-dmk-not-to-leave-before-his-reply-1788430517"></link>
            <id>https://viduppu.com/article/cm-vijay-asks-dmk-not-to-leave-before-his-reply-1788430517</id>
            <summary type="text">மானியக் கோரிக்கைதமிழக சட்டசபையில் செப்டம்பர் 3 ஆம் தேதி இன்று காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைகளின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் ந...</summary>
            <content type="html"><![CDATA[<h2>மானியக் கோரிக்கை</h2><p>தமிழக சட்டசபையில் செப்டம்பர் 3 ஆம் தேதி இன்று காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைகளின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. </p><p>அப்போது பேசிய எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், சட்ட ஒழுங்கு பிரச்சனை பற்றி பேசுவதற்கு எனக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. மக்கள் பிரச்சனை குறித்து எழுப்பும் கேள்விகளுக்கு திசைத் திருப்பாமல் முதல்வர் பதிலளிப்பார் என்று நம்புகிறேன் என்று பேசினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5bcc19e5-fe4b-4abf-b4ca-dfdaef08b93d/26-6a9948b6dd935.webp' /></p><p> இதுகுறித்து பல விவாதங்கள் நடந்த நிலையில், முதலமைச்சர் விஜய் எழுந்து நின்று பேச தயாரானார். </p><h2>யாரும் ஓடிட கூடாது</h2><p>அப்போது, அனைத்து எம் எல் ஏக்கள் கேட்கும் கேள்விகளுக்கும் திங்கள் கிழமை நான் பதிலளிப்பேன். நான் அவையில் இல்லாவிட்டாலும் எல்லா கேள்விகளும் எனக்கு வந்துவிடும், ஆனால் நான் பதிலளிக்கும்போது யாரும் எந்திரிச்சு ஓடக்கூடாது என்பதை பிராமிஸ் செய்ய வேண்டும் என்று சபாநாயகரிடம் கேட்டுக் கொண்டார். </p><p>இதனையடுத்து, உதயநிதி, சொல்லிட்டு ஓடிட்டாரா? என்று கேள்வி எழுப்பிய விஷயம் தற்போது வைரலாகி வருகிறது.</p><p><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="in" dir="ltr">ore dialogue la mudichu vitaru 😭😭😭 <a href="https://t.co/jxXIhL8Uat">pic.twitter.com/jxXIhL8Uat</a></p>&mdash; Fayas.naxiim🐿️ (@_faaaz) <a href="https://x.com/_faaaz/status/2095418652178956752?ref_src=twsrc%5Etfw">September 3, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p>]]></content>
            <updated>2026-09-03T10:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[வாகனங்களின் இறக்குமதியினால் கிடைத்துள்ள பெருந்தொகை பணம்! வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/vehicles-are-imported-srilanka-1788420611"></link>
            <id>https://tamilwin.com/article/vehicles-are-imported-srilanka-1788420611</id>
            <summary type="text">2026 ஜூன் 30 ஆம் திகதி வரையில் 316, 000 வாகனங்கள் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக&amp;nbsp;அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இதன் மூலம் 512,547 மில்லியன...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026 ஜூன் 30 ஆம் திகதி வரையில் 316, 000 வாகனங்கள் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக&nbsp;அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p>இதன் மூலம் 512,547 மில்லியன் ரூபாய் வரி வருவாய் கிடைத்துள்ளதாகவும் 2026ஆம் ஆண்டுக்கான வாகன இறக்குமதி தொடர்பான விடயங்களை முன்வைத்த அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.</p><h2>அதிகூடிய வரி வருவாய்</h2><p>நாடாளுமன்றத்தின் வழிவகைகள் பற்றிய குழு இலங்கை சுங்கத் திணைக்களத்தின் வருவாய் உள்ளிட்ட செயற்பாடுகளை அண்மையில் மீளாய்வு செய்த பின்னர் அதிகாரிகள் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7ec27606-1f5e-4831-8a0d-23159a80c92a/26-6a9944d9afe44.webp' /></p><p>இந்த தகவல்களின்படி, அதிகூடிய வரி வருவாயான 386,726 மில்லியன் ரூபாய் மோட்டார் வாகனங்களை இறக்குமதி செய்ததன் மூலம் கிடைத்துள்ளது.</p><p>அத்துடன்,அதிகளவான சுங்க வருவாயை ஈட்டித்தந்த பொருட்களின் பட்டியலில் முதலிடத்தை' 1,000சிசி 'இற்கும் குறைவான இயந்திரக் கொள்ளளவைக் கொண்ட பெற்றோல் மோட்டார் வாகனங்கள் பெற்றுள்ளது.</p><p>அவற்றின் மூலம் கிடைத்த வருவாய் 137.4 பில்லியன் ரூபாயாகும். இது மொத்த வருவாயில் 9.96 சதவீதம் ஆகவும் பதிவாகியுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-03T09:58:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை நோக்கி இந்திய கப்பல் ஏற்றுமதி அதிரடி வளர்ச்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sri-lanka-major-destination-indian-ship-exports-1788429430"></link>
            <id>https://jvpnews.com/article/sri-lanka-major-destination-indian-ship-exports-1788429430</id>
            <summary type="text">இந்தியாவின் வளர்ந்து வரும் கப்பல் ஏற்றுமதிக்கு இலங்கை ஒரு முக்கிய இலக்காக உருவெடுத்து வரும் நிலையில், இது இரு அண்டை நாடுகளுக்கும் இடையிலான கடல்சார் மற...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியாவின் வளர்ந்து வரும் கப்பல் ஏற்றுமதிக்கு இலங்கை ஒரு முக்கிய இலக்காக உருவெடுத்து வரும் நிலையில், இது இரு அண்டை நாடுகளுக்கும் இடையிலான கடல்சார் மற்றும் தொழில்துறை தொடர்புகள் பலப்படுவதைச் சுட்டிக்காட்டுகிறது.</p><p></p><p> 

இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சு வெளியிட்டுள்ள தரவுகளின் அடிப்படையில், 2026-27 நிதியாண்டின் முதல் காலாண்டில் இந்தியாவின் கப்பல் ஏற்றுமதி சுமார் 1.36 பில்லியன் அமெரிக்க டொலர்களாக 6 மடங்குக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. </p><p>

ஆசியா, ஆபிரிக்கா மற்றும் இந்தியப் பெருங்கடல் பிராந்தியம் முழுவதும் உள்ள சந்தைகளுக்கு இந்தியக் கப்பல் கட்டும் தளங்கள் அதிக மதிப்புள்ள கடல்சார் சொத்துக்களின் விநியோகத்தை விரிவுபடுத்தியதே இதற்குக் காரணமாகும்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bee95c17-8be1-46ac-94c0-c02f2a375e9f/26-6a994477de313.webp' /></p><p>இந்தியாவின் வழக்கமான ஏற்றுமதி இலக்குகளில் இலங்கை மிகக் கூர்மையான உயர்வைப் பதிவு செய்துள்ளது. </p><p>

இதன்படி, இலங்கைகான கப்பல் ஏற்றுமதி முந்தைய ஆண்டின் இதே காலப்பகுதியில் 7.9 மில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்த நிலையில், தற்போது 56.5 மில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்ந்துள்ளது. </p><p>

எகிப்து, தென்னாப்பிரிக்கா, வியட்நாம், இந்தோனேசியா மற்றும் மொசாம்பிக் மற்றும் மாலைத்தீவு உள்ளிட்ட நாடுகளில் புதிய கப்பல் ஏற்றுமதி இலக்குகள் உருவாகி வருவதால், இந்தியாவில் தயாரிக்கப்படும் கப்பல்கள் பரந்த சர்வதேச சந்தையைப் பெற்று வருகின்றன. </p><p>

இந்த மாற்றம் இந்தியக் கப்பல் கட்டும் தளங்கள் பிராந்திய வர்த்தகக் கப்பல் போக்குவரத்தில் விரிவான இருப்பை நிறுவத் தொடங்கியுள்ளதைக் காட்டுகிறது.</p><p>இந்தியப் பெருங்கடலின் முக்கிய கப்பல் பாதைகளில் இலங்கையின் அமைவிடம் மற்றும் இந்தியாவுடனான அதன் நீண்டகால கடல்சார் தொடர்புகள் ஆகியவற்றைக் கருத்திற் கொள்ளும்போது, இலங்கைக்கு இந்தப் போக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைகிறது.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">India’s tanker exports are reaching a wider set of markets across Asia, Africa and the Indian Ocean region.<br><br>The emergence of new destinations, along with higher shipments to Sri Lanka, reflects the growing acceptance of Indian-built tankers across diverse maritime markets.… <a href="https://t.co/vLHLhyNz36">pic.twitter.com/vLHLhyNz36</a></p>&mdash; Dept of Commerce, GoI (@DoC_GoI) <a href="https://x.com/DoC_GoI/status/2095400539756638518?ref_src=twsrc%5Etfw">September 3, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p> 

இரு நாடுகளுக்கும் இடையிலான பரந்த வர்த்தக உறவுகளின் பலப்படுத்தலுக்கு மத்தியிலேயே இந்த வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. 

இருதரப்பு சுதந்திர வர்த்தக கட்டமைப்பின் கீழ் விரிவடையும் வர்த்தகத்தைப் பிரதிபலிக்கும் வகையில், இலங்கைகான இந்தியாவின் ஏற்றுமதியும் அதிகரித்து வருவதாக அந்தத் துறை சுட்டிக்காட்டியுள்ளது.</p><p> 

இந்தியாவைப் பொறுத்தவரை, இலங்கை ஒரு அருகிலுள்ள ஏற்றுமதி சந்தையாகவும் மூலோபாய கடல்சார் அமைவிடமாகவும் திகழ்கிறது. </p><p>

அதேவேளை இலங்கையைப் பொறுத்தவரை, இந்தியக் கப்பல் கட்டுபவர்களுடனான வலுவான தொடர்புகள் புதிய முதலீடுகள், தொழில்நுட்பம் மற்றும் அதன் கப்பல் பழுதுபார்ப்பு மற்றும் கப்பல் கட்டும் துறைக்கான வாய்ப்புகளைக் கொண்டுவரக்கூடும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-03T09:57:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகை த்ரிஷா... திடீர் லண்டன் விசிட்டுக்கு இது தான் காரணம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/trisha-puts-an-end-to-the-entire-controversy-1788426445"></link>
            <id>https://manithan.com/article/trisha-puts-an-end-to-the-entire-controversy-1788426445</id>
            <summary type="text">சினிமாவை விட்டு த்ரிஷா விலகப் போகிறாரா என்ற பேச்சு சமீபகாலமாக கோலிவுட்டில் பரபரப்பாக ஓடிக்கொண்டிருந்தது. இதனால் அவரது ரசிகர்களும் கவலையில் இருந்தனர். ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சினிமாவை விட்டு த்ரிஷா விலகப் போகிறாரா என்ற பேச்சு சமீபகாலமாக கோலிவுட்டில் பரபரப்பாக ஓடிக்கொண்டிருந்தது. இதனால் அவரது ரசிகர்களும் கவலையில் இருந்தனர். இந்நிலையில், அந்த வதந்திகளுக்கு த்ரிஷா தற்போது முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
</p><p>சமூக வலைதளங்களில் எப்போதும் டிரெண்டிங்கில் இருக்கும் த்ரிஷா, தனது ரசிகர்களுக்கு பெரிய சர்ப்ரைஸ் கொடுத்து புதிய இன்னிங்ஸை தொடங்கியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/52f024e3-e8e0-41e7-ba40-68d877dcef76/26-6a9943be97c40.webp' /></p><p></p><p>
</p><p>
சினிமாவை விட்டு த்ரிஷா விலகப் போகிறாரா? ஏன் தொடர்ந்து புதிய படங்களை ஒப்புக்கொள்ளவில்லை? என எழுந்த பல்வேறு கேள்விகளுக்கும் வதந்திகளுக்கும், தனது புதிய பட அறிவிப்பின் மூலம் த்ரிஷா முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.</p><h2>

சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த த்ரிஷா
</h2><p>இது வெறும் பட அறிவிப்பு மட்டுமல்ல. ரசிகர்களை இருக்கையின் நுனியில் அமர வைக்கும் சைக்கலாஜிக்கல் த்ரில்லர் என்பதுதான் இந்தப் படத்தின் சிறப்பு.</p><p> </p><p>பாலிவுட்டின் பிரபல தயாரிப்பு நிறுவனமான 'பனோரமா ஸ்டுடியோஸ்' ('த்ரிஷ்யம்' பட நிறுவனம்) இந்தப் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கால் பதிக்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f4f3340d-7bd1-497b-8ae9-ecd048062f10/26-6a9943bf59bb4.webp' /></p><p>
</p><p>
இந்தப் படத்தில் த்ரிஷாவுடன் சீனியர் நடிகை ராதிகா சரத்குமார் மற்றும் திறமையான நடிகை அபர்ணா பாலமுரளி ஆகியோரும் இணைந்துள்ளனர். </p><p>மூன்று திறமையான நடிகைகள் ஒரே படத்தில் இணைந்திருப்பது, படத்தில் தரமான கன்டென்ட் இருக்கும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
</p><h2>
லண்டன் சென்றது ஏன்?</h2><p>
அக்‌ஷய் குமார் நடித்த 'ஏர்லிஃப்ட்', சைஃப் அலி கான் நடித்த 'செஃப்' உள்ளிட்ட படங்களை இயக்கிய ராஜா கிருஷ்ண மேனன், இந்தப் படத்திற்கும் ஆக்‌ஷன்-கட் சொல்லவுள்ளார். இது அவரது முதல் தமிழ் திரைப்படம் மட்டுமின்றி, முதல் சைக்கலாஜிக்கல் ஹாரர் படமாகவும் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/76583d25-bf3a-4cd8-8a3f-b1b7b03a57b4/26-6a9943c01521d.webp' /></p><p>
</p><p>
தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு லண்டன் நகரில் அமைதியாக நடைபெற்று வருகிறது. இதற்காகத்தான் த்ரிஷா லண்டனில்&nbsp; தங்கியுள்ளார். </p><p>மர்மம், திகில் மற்றும் சஸ்பென்ஸ் நிறைந்த காட்சிகளுடன் உருவாகும் இப்படம் ரசிகர்களை நிச்சயம் கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்தில் த்ரிஷா நடித்த 'கருப்பு' திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.300 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்ததாக கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3a12ae9b-e237-48f5-843d-b23be8e373b1/26-6a9943c0bfdea.webp' /></p><p>அதன் தொடர்ச்சியாக தற்போது இந்த புதிய ப்ராஜெக்ட்டையும் அறிவித்துள்ளனர்.

ஒருபுறம் மெகாஸ்டார் சிரஞ்சீவியுடன் த்ரிஷா நடித்துள்ள 'விஸ்வம்பரா' திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.இப்படம் வரும் அக்டோபர் மாதம் திரைக்கு வர உள்ளதாக கூறப்படுகிறது.</p><p>மறுபுறம், லண்டனில் தனது புதிய ஹாரர் த்ரில்லர் படத்தின் படப்பிடிப்பிலும் த்ரிஷா பிஸியாக நடித்து வருகிறார்.

'த்ரிஷ்யம்' போன்ற வெற்றிகரமான படங்களை வழங்கிய தயாரிப்பு நிறுவனம் இப்படத்தை தயாரிப்பதால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு ஏற்கனவே அதிகரித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/21e26e56-9a0d-497c-84ef-28c4a4c16455/26-6a9943c178481.webp' /></p><p></p><p> </p><p>இதன் மூலம் த்ரிஷா சினிமாவை விட்டு விலகப் போகிறார் என்ற வதந்திக்கும் தற்போது முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.</p><p>மேலும் லண்டனில் விஜய்யின் மனைவி சங்கீதாவை சந்திக்கவே த்ரிஷா சென்றதாக எழுந்த வதந்திகளுக்கு, தனது புதிய பட அறிவிப்பின் மூலம் அவர் பதிலளித்துள்ளதாக தெரிகிறது.</p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-03T09:57:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[&quot;ட்ரம்ப் நீரிணை&quot; என மாறப்போகும் ஹோர்முஸ் நீரிணையின் பெயர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/strait-of-hormuz-is-to-become-trump-strait-1788428668"></link>
            <id>https://ibctamil.com/article/strait-of-hormuz-is-to-become-trump-strait-1788428668</id>
            <summary type="text">உலகின் மிக முக்கியமான மற்றும் மூலோபாய கச்சா எண்ணெய் போக்குவரத்து கடல் வழித்தடமான ஹோர்முஸ் நீரிணையை &quot;ட்ரம்ப் நீரிணை&quot; என மறுபெயரிட அமெரிக்க ஜனாதிபதி டொன...</summary>
            <content type="html"><![CDATA[<p>உலகின் மிக முக்கியமான மற்றும் மூலோபாய கச்சா எண்ணெய் போக்குவரத்து கடல் வழித்தடமான ஹோர்முஸ் நீரிணையை "ட்ரம்ப் நீரிணை" என மறுபெயரிட அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தேசித்துள்ளதாக அறிவித்துள்ளார். </p><p>Truth Social சமூக ஊடக வலையமைப்பில் ஒரு பதிவை வெளியிட்ட அவர், இந்த கடல் பகுதி தற்போது அமெரிக்க கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளதால், அதன் பெயரை இவ்வாறு மாற்றுவது பொருத்தமானது என்று குறிப்பிட்டார்.</p><h2>ட்ரம்ப் நீரிணை</h2><p>பின்னர் வெள்ளை மாளிகையின் ஓவல் அறையில் நடந்த சந்திப்பில், பத்திரிகையாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த அவர், அது வெறும் ஒரு யோசனை மட்டுமே என்று குறிப்பிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e39a736e-903b-4fc3-8f10-13f31a4d3656/26-6a99440cad9f7.webp' /></p><p> </p><p>இதற்கிடையில், வெள்ளை மாளிகையின் அதிகாரபூர்வ X கணக்கு இந்த நீரிணையை "ட்ரம்ப் நீரிணை" என்று குறிக்கும் ஒரு புதிய வரைபடத்தையும் வெளியிட்டிருந்தது.&nbsp;</p><p>புவியியல் இடங்களுக்கு மறுபெயரிடுவது ஜனாதிபதி ட்ரம்பின் இரண்டாவது பதவிக்காலத்தில் ஒரு அரசியல் சமிக்ஞையாக அடிக்கடி காணப்பட்ட ஒரு போக்காகும்.</p><p></p><h2>முன்னரான ட்ரம்பின் பெயர் மாற்றங்கள்</h2><p> </p><p>இதற்கு முன், மெக்சிகோ வளைகுடாவை "அமெரிக்க வளைகுடா" என்றும், கனடாவுடனான வர்த்தக தகராறின் போது ஒன்டாரியோ ஏரியை "அமெரிக்க ஏரி" என்றும் அவர் மறுபெயரிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6d6d959d-c889-45d5-8539-2ae78b94dff8/26-6a99440d72257.webp' /></p><p> </p><p>இருப்பினும், ஒரு அமெரிக்க ஜனாதிபதிக்கு தனது நாட்டின் அதிகாரபூர்வ வரைபடங்களில் பெயர்களை மாற்ற அதிகாரம் இருந்தாலும், சர்வதேச சட்டத்தின் கீழ் அல்லது பிற நாடுகளுக்கு அந்த பெயர்கள் சட்டபூர்வமாகப் பொருந்தாது.</p><p> ஈரான் மற்றும் ஓமான் அதன் கடற்கரை நாடுகளாக உள்ளன, மேலும் இந்த கடல் பகுதி எப்போதும் ஈரானுக்கு சொந்தமானது என்று ஈரான் வலியுறுத்துகிறது.</p><p>



 இந்த பெயர் மாற்றும் முன்மொழிவு சர்வதேச வரைபடங்களில் சேர்க்கப்பட வாய்ப்பில்லை, மேலும் இது ஒரு போர் வெற்றியை அடையாளப்படுத்த முயற்சிக்கும் ஒரு அரசியல் பிரசாரமாக விமர்சகர்களால் குறிப்பிடப்படுகிறது.&nbsp; &nbsp; &nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p> &nbsp; &nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-09-03T09:55:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[கெஹெல்பத்தர பத்மேவிற்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/kehelpatara-padme-s-remand-extended-1788427904"></link>
            <id>https://tamilwin.com/article/kehelpatara-padme-s-remand-extended-1788427904</id>
            <summary type="text">பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தால் தடுத்து வைத்து விசாரிக்கப்பட்டு வந்த கெஹெல்பத்தர பத்மேவை விளக்கமறியலில் வைக்குமாறு...</summary>
            <content type="html"><![CDATA[<p>பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தால் தடுத்து வைத்து விசாரிக்கப்பட்டு வந்த கெஹெல்பத்தர பத்மேவை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.&nbsp;</p><p>அதன்படி அவரை எதிர்வரும் 17 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் உத்தரவிட்டுள்ளார்.</p><h2>விளக்கமறியலை நீடிக்குமாறு கோரிக்கை</h2><p>
</p><p>
பூசா சிறைச்சாலையிலிருந்து காணொளி ஊடாக சந்தேகநபர் நீதவான் முன் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், விசாரணைகள் தொடர்வதால் விளக்கமறியலை நீடிக்குமாறு குற்றப்புலனாய்வுத் திணைக்களம் கோரிக்கை விடுத்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/08e240ef-dd89-4a89-a398-1a60a66d2642/26-6a994333a7bd2.webp' /></p><p>
</p><p>
இதனை ஏற்றுக் கொண்ட நீதவான், பயங்கரவாதத் தடைச் சட்ட வழக்கு மற்றும் கனேமுல்ல சஞ்சீவ தொடர்பான வழக்கை மாத்திரம் இந்த நீதிமன்றத்தில் தொடருமாறு உத்தரவிட்டார்.</p><p>
அத்தோடு, சந்தேகநபர் மீதான ஏனைய வழக்குகளை உரிய நீதிமன்றங்களுக்கு அனுப்புமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-03T09:52:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[அடுத்தடுத்து மர்மமான முறையில் உயிரிழக்கும் மகிந்தவின் நெருங்கிய சகாக்கள் - மறைக்கப்படும் இரகசியங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/mysterious-deaths-continues-in-sri-lanka-1788408410"></link>
            <id>https://tamilwin.com/article/mysterious-deaths-continues-in-sri-lanka-1788408410</id>
            <summary type="text">ராஜபக்சர்களின் மிகவும் நெருக்கமான அரசியல்வாதி ஒருவர் நேற்றைய தினம் மர்மமான முறையில் உயிரிழந்தமை தொடர்பில் தென்னிலங்கை அரசியல் மட்டத்தில் அதிகம் பேசப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>ராஜபக்சர்களின் மிகவும் நெருக்கமான அரசியல்வாதி ஒருவர் நேற்றைய தினம் மர்மமான முறையில் உயிரிழந்தமை தொடர்பில் தென்னிலங்கை அரசியல் மட்டத்தில் அதிகம் பேசப்பட்டு வருகின்றது. </p><p>

கடந்த ஆட்சிக்காலத்தில் ராஜபக்சர்களுக்காக பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டார் என்ற சர்ச்சைக்குரிய, ஹம்பாந்தோட்டை நகர சபையின் முன்னாள் மேயர் எராஜ் ரவீந்திர பெர்னாண்டோ மர்மான முறையில் உயிரிழந்துள்ளார்.</p><p> 

57 வயதான எராஜ், கொழும்பு ஹவலொக் சிட்டி சொகுசு அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள அவரது தனிப்பட்ட வீட்டில் உயிரை மாய்த்துக் கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><h2><b>மறைக்கப்பட்ட இரகசியங்களும் தீர்க்கப்படாத அரசியல் சிக்கல்களும்</b></h2><p> 

மர்மமான முறையில் உயிரை மாய்த்துக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டாலும், இதன் பின்னணியில் பல மறைக்கப்பட்ட இரகசியங்களும் தீர்க்கப்படாத அரசியல் சிக்கல்களும் இருக்கலாம் என அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5f1f9ca5-509d-492d-9d38-762e04ad18f4/26-6a98fbef6971b.webp' /></p><p>9 அடி உயரமுள்ள கதவு சட்டகத்தில் பட்டியை போன்ற ஒரு பொருளை பயன்படுத்தி தூக்கில் தொங்கிய நிலையில் அவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.
</p><p>
சமீபத்தில் கொள்ளுப்பிட்டியில் உயிரிழந்த கபில சந்திரசேனவின் மரணத்திலும் இதேபோன்று கதவு சட்டகத்தில் பட்டி மூலம் தூக்கிடப்பட்டிருந்தது. </p><p>

இவ்விரு சம்பவங்களுக்கும் இடையிலான தீவிரமான ஒற்றுமைகள் குறித்து பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். </p><p> 

2014 இல் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் ஹம்பாந்தோட்டை எராஜ் ரவீந்திர மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். </p><p>

அதன் பின்னர் 2018 இல் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் மீண்டும் அப்பதவிக்கு மீண்டும் தெரிவானார். 2022 பெப்ரவரி 10ஆம் திகதி தனிப்பட்ட காரணங்கள் காரணமாக மேயர் பதவியில் இருந்து விலகியிருந்தார்.</p><p>
இவ்வாறான நிலையில் 2014 ஆம் ஆண்டு எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை பார்வையிட சென்ற போது துப்பாக்கியை கையில் ஏந்தியவாறு துரத்திச்சென்றமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.</p><p> </p><h3><b>துப்பாக்கி மேயர்</b></h3><p>இதன் காரணமாக இவர் <b>துப்பாக்கி மேயர்</b> என்று பரவலாக அறியப்பட்டார். அச்சுறுத்தும் வகையிலான இந்த செயற்பாட்டுக்கு 2019 இல் இவருக்கு 5 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c0bb3326-940b-42c0-a779-0cc0ace4da03/26-6a98fbf0376a2.webp' /></p><p>சதோச நிறுவனத்தின் தலைவராக இருந்த காலத்தில், ஊழியர்களை அரசியல் பணிகளுக்கு பயன்படுத்தி அரசுக்கு 60 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான இழப்பை ஏற்படுத்தியதாக எராஜ் மீது இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் 5 வழக்குகள் தொடரப்பட்டிருந்தன.
</p><p>
மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் இவ்வழக்குகள் மீண்டும் விசாரணைக்கு வரவிருந்த நிலையிலேயே மர்மான முறையில் உயிரிழந்துள்ளார்.
</p><p>
பிரேத பரிசோதனை அறிக்கைகள், இரசாயன பகுப்பாய்வு முடிவுகள் மற்றும் ஹவ்லாக் சிட்டியின் CCTV காட்சிகளின் அடிப்படையில் குற்றப்புலனாய்வுத்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p>
</p><h3><b>
ராஜபக்ச குடும்பத்திற்காக&nbsp; மோசடிகள் </b></h3><p>எராஜ் மற்றும் கபில ஆகியோர் ராஜபக்ச குடும்பத்திற்காக பல்வேறு மோசடிகள் மற்றும் குற்றச்செயல்களில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது. </p><p>இது தொடர்பான விசாரணைகளை தீவிரப்படுத்தப்படும் போது இவ்வாறான மரணங்கள் ஏற்படுகின்றமை பெரும் சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளன. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/00ac5c6f-3223-4ada-9adb-f7db68a79841/26-6a98fbf0ee1c3.webp' /></p><p>அண்மையில் மகிந்த ஆட்சியில் பொலிஸ் மா அதிபராக செயற்பட்ட சி.டி.விக்ரமரட்ன துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டு உயிரை மாய்த்திருந்தார். </p><p>குறித்த நபர் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய விசாரணைக்காக அழைக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p> </p>]]></content>
            <updated>2026-09-03T09:41:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[பர்பாமென்ஸை போட்ட அப்பத்தா.. மனம் மாறிய குடும்பம் - வாகை சூடவா இன்றைய எபிசோட் அப்டேட்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/vaagai-sooda-vaa-today-episode-196-1788425373"></link>
            <id>https://cineulagam.com/article/vaagai-sooda-vaa-today-episode-196-1788425373</id>
            <summary type="text">தமிழ் சின்னத்திரையில் Zee தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் வாகை சூடவா. நேற்றைய எபிசோட...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழ் சின்னத்திரையில் Zee தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் வாகை சூடவா. நேற்றைய எபிசோடில் மீனாட்சி தென் மொழியை அழைத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறிய நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.</p><p>அதாவது, இங்கே அப்பத்தா வீட்டில் சக்தியும் லோகுவும் தேன்மொழி வயிற்றில் வளருவது நம்ம விட்டு வாரிசு.. இப்படி வீட்டை விட்டு போயிட்டாளே என வருத்தப்படுகிறார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/383f50fd-a3a4-44cf-9bb4-1efdb0a8533e/26-6a9934a165bdb.webp' /></p><p>மறுபக்கம் மீனாட்சி தேன்மொழி சாப்பிடாமல் இருக்க சுமதி சின்ன வயசுல இங்க ரெண்டு பேரு சாப்பிடாம இருந்தால் உங்களை இப்படித்தான் சாப்பிட வைப்பேன் என்று சாப்பாட்டை ஊட்டி விட மூவரும் எமோஷனலாகின்றனர். </p><p>
மறுபுறம் மனோ, சக்தி மற்றும் லோகு ஆகியோர் சாப்பிடாமல் உட்கார்ந்து இருக்க அப்பத்தா அங்கு வந்து என்ன சாப்பாடு அப்படியே இருக்கு என்று கேட்க தேவி யாரும் சாப்பிட வரல என்று சொல்கிறாள். </p><p>
அதைத் தொடர்ந்து அப்பத்தா டேய் மனோ சாப்பிட வாடா.. சக்தி, லோகு சாப்பிட வந்த என்று அழைக்க எல்லோரும் அப்பத்தா கூப்பிட்டதால் மறுக்காமல் சாப்பிட வருகின்றனர்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/df7064ef-c7ea-48d4-a053-b3428ce90228/26-6a9934a0b2ecf.webp' /></p><p>இதையடுத்து அப்பத்தா நான் என்ன தேன்மொழியை குழந்தை பெத்துக்க கூடாதுன்னா சொன்ன? இவ யாரு இந்த வீட்டு பொண்ணு.. இதை குழந்தை இல்லாம போனதுக்கு யார் காரணம்? அதை யார் சரி பண்ணனும்? </p><p>
ஒரு ஆம்பளை இல்லாமல் சின்ன குழந்தையா இருந்த லோகு கைய புடிச்சுகிட்டு தன்னந்தனியே வந்து உழைச்சி முன்னேறி இருக்கேன். ஆம்பள துணை இல்லாமல் குடும்பத்தை நடத்துவது எவ்வளவு கஷ்டம் தெரியுமா? ஆனா இன்னைக்கு இந்த அப்பத்தா சொல்றது தப்பா தெரியுது அளவுக்கு வளர்ந்துட்டீங்க என்று கண்கலங்கி அழுது டிராமா போட தேவி நான் குழந்தை பெத்துகிட்டு பிறகு தேன்மொழி குழந்தை பெத்துக்கட்டா என்ன? </p><p>
எனக்கு இந்த வீட்ல இடம் இருக்கு ஆனா கருவை கலைச்சிட்டு வரட்டும்.. அப்படி இல்லனா அப்படியே போகட்டும் என்று சொல்கிறாள்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9d1c63cc-1a9c-4b06-95fe-d3bf40966445/26-6a9934a21e64b.webp' /></p><p>இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய வாகை சூடவா சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-03T09:40:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[டெங்கு நோய் அபாயம் குறையவில்லை : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/dengue-risk-persists-despite-low-number-of-cases-1788419013"></link>
            <id>https://ibctamil.com/article/dengue-risk-persists-despite-low-number-of-cases-1788419013</id>
            <summary type="text">இலங்கையில், தற்போது டெங்கு நோயாளர்களின் பதிவு குறைந்த மட்டத்தில் காணப்படுகின்ற போதிலும், அதற்கான அபாயம் இன்னும் நீங்கவில்லை என தேசிய டெங்கு கட்டுப்பாட...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில், தற்போது டெங்கு நோயாளர்களின் பதிவு குறைந்த மட்டத்தில் காணப்படுகின்ற போதிலும், அதற்கான அபாயம் இன்னும் நீங்கவில்லை என தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.</p><p> 

இதன் காரணமாக, தமது சுற்றாடலில் டெங்கு நுளம்புகள் பெருகக்கூடிய இடங்கள் தொடர்பில் அதிக அவதானமாகச் செயற்படுமாறு சமூக வைத்திய விசேட நிபுணர் வைத்தியர் பிரஷிலா சமரவீர பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். </p><p>

சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.</p><p>&nbsp;</p><h2>நுளம்புகளின் பெருக்கம்&nbsp;</h2><p>அத்துடன் சில மாவட்டங்களில் ஆரம்பத்தில் நுளம்புகளின் பெருக்கத்தை அவதானிக்க முடிவதுடன், அதன்பின்னரே நோயாளர்களின் அதிகரிப்பை அவதானிக்க முடிவதாகவும் எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/47f4795b-c60e-4bc2-9598-c196b6ab2e74/26-6a993fb9a03bc.webp' /></p><p> </p><p>

டெங்கு நுளம்பு பெருக்கம் தொடர்பில் கவனயீனமாக செயற்பட்டால் அது பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் எனவே பொதுமக்கள் தமது சுற்றுபுறச் சூழலை மிகவும் தூய்மையாக பேணுமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-03T09:39:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாட்டில் வேலை செய்ய விரும்புவோருக்கு வெளியான அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/announcement-issued-those-wishing-work-abroad-1788427383"></link>
            <id>https://tamilwin.com/article/announcement-issued-those-wishing-work-abroad-1788427383</id>
            <summary type="text">இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகமையானது, தென் கொரியா மற்றும் இஸ்ரேலில் ஏற்கனவே உள்ள வேலைவாய்ப்புகளுக்குக் கூடுதலாக, ஜப்பான் மற்றும் மத்திய கிழக்கு ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகமையானது, தென் கொரியா மற்றும் இஸ்ரேலில் ஏற்கனவே உள்ள வேலைவாய்ப்புகளுக்குக் கூடுதலாக, ஜப்பான் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் சலுகைத் திட்டத்தின் கீழ் தொடர்ச்சியான வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை அறிவித்துள்ளது.
</p><p>
துபாயில் உள்ள விமான நிலைய கட்டுமானத் திட்டங்களில் தற்போது 2,000 வேலைவாய்ப்புகள் உள்ளதாகவும், விண்ணப்பதாரர்கள் அதிகபட்சமாக ரூபா1,50,000 செலவில் விரைவாக வேலைவாய்ப்பைப் பெறலாம் என்றும் முகமையின் தலைவர் ஆனந்தலால் ஹெட்டியாராச்சி ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p>

மேலும், 800 மேற்பார்வைப் பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும், அதற்கான செலவினங்கள் ரூபா 1,80,000ஆக உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், இந்தத் தொகைகள் அனைத்தும் உள்ளடக்கியவை என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.&nbsp;</p><p>

மேலும், இலங்கை பட்டதாரிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள ஒரு நலவாழ்வு மையத்தில் கட்டணமில்லா வேலைக்கு விண்ணப்பிக்கலாம், அதற்கான அனைத்து செலவுகளையும் அந்த நிறுவனமே ஏற்கும்.</p><p>

ஜப்பானில் உள்ள மூன்று நிறுவனங்களுடன் தங்கள் முகமை இணைந்து செயல்படுவதாக ஹெட்டியாராச்சி குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><h2>புரிந்துணர்வு ஒப்பந்தம்..&nbsp;</h2><p> </p><p>ஒரு ஜப்பானிய கட்டுமான நிறுவனத்துடன் செய்துகொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம், ஒரு முன்னோடித் திட்டத்தின் கீழ் 23 மாணவர்கள் சபுகஸ்கந்தா மொழியில் பயிற்சியைத் தொடங்கியுள்ளனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5034d161-4bd2-47b0-ac18-290a1b76ba50/26-6a993df869737.webp' /></p><p> </p><p>அந்நிறுவனம், தொழில்நுட்பத் திறன்கள் மற்றும் ஜப்பானிய மொழி ஆகிய இரண்டிற்குமான பயிற்சிக்கு நிதியுதவி அளிப்பதுடன், வேலை வாய்ப்புகளை மேலும் விரிவுபடுத்தவும் திட்டமிட்டுள்ளது.
</p><p>
அந்த முகமை, ஜப்பானிய நிறுவனமான மெட்டா டெக்னோவுடன் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இதன் மூலம், அடிப்படை ஜப்பானிய மொழிப் புலமை கொண்ட தகவல் தொழில்நுட்பப் பட்டதாரிகளுக்கு வாய்ப்புகள் திறக்கப்பட்டுள்ளன. </p><p>

இதற்கிடையில், மற்றொரு ஜப்பானிய நிறுவனம், பள்ளிப்படிப்பை முடித்தவர்களுக்கு லாரி ஓட்டுநர்களாக 1,000 வேலைவாய்ப்புகளை வழங்கியுள்ளது. இதற்கு விண்ணப்பிப்பவர்கள் இலகுரக வாகன உரிமம் மற்றும் ஜப்பானிய மொழித் திறனைக் கொண்டிருக்க வேண்டும். </p><p>தேவைப்பட்டால், இந்தத் தகுதிகளைப் பெற விண்ணப்பதாரர்களுக்கு நிறுவனம் உதவும் என்று கூறியுள்ளது.

இந்த வாய்ப்புகள் குறித்த விவரங்கள் முகமையின் அதிகாரப்பூர்வ இணையதளத்திலும் முகநூல் பக்கத்திலும் கிடைக்கின்றன.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-03T09:34:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[பூமியின் வெப்பநிலை அதிகரிப்பு ; பேரழிவுகள் குறித்து விஞ்ஞானிகள் எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/earth-s-temperature-is-rising-scientists-warn-1788428041"></link>
            <id>https://canadamirror.com/article/earth-s-temperature-is-rising-scientists-warn-1788428041</id>
            <summary type="text">புவியின் சராசரி வெப்பநிலை தொழிற்புரட்சிக்கு முந்தைய காலத்தைவிட 1.5 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும் முக்கியமான வரம்பை நெருங்கி வருவதால், காலநிலை மாற்றத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>புவியின் சராசரி வெப்பநிலை தொழிற்புரட்சிக்கு முந்தைய காலத்தைவிட 1.5 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும் முக்கியமான வரம்பை நெருங்கி வருவதால், காலநிலை மாற்றத்தின் தாக்கங்கள் மேலும் தீவிரமடையக்கூடும் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
</p><p>
காலநிலை மாற்றத்தின் மிக மோசமான விளைவுகளைத் தடுப்பதற்காக சர்வதேச அளவில் நிர்ணயிக்கப்பட்ட முக்கியமான இலக்குகளில் ஒன்றாக 1.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை வரம்பு கருதப்படுகிறது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b7b0a6e7-fe94-4f54-9b11-93152babd03a/26-6a993f0b55737.webp' /></p><p>இது 1850 முதல் 1900ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தை அடிப்படை காலமாகக் கொண்டு கணக்கிடப்படும் நீண்டகால உலகளாவிய சராசரி வெப்பநிலை அதிகரிப்பைக் குறிக்கிறது.</p><p>

ஒரு குறிப்பிட்ட நாள், மாதம் அல்லது ஆண்டில் பதிவாகும் அதிக வெப்பநிலையையும், இந்த 1.5 டிகிரி செல்சியஸ் வரம்பையும் ஒன்றாகக் கருத முடியாது. நீண்டகால உலகளாவிய வெப்பநிலை மாற்றமே இதற்கான முக்கிய அளவுகோலாகும்.
</p><p>
2015ஆம் ஆண்டு பாரிஸ் காலநிலை ஒப்பந்தத்தின் மூலம், உலக சராசரி வெப்பநிலை அதிகரிப்பை 2 டிகிரி செல்சியஸுக்குக் குறைவாக வைத்திருப்பதுடன், முடிந்தவரை 1.5 டிகிரி செல்சியஸுக்குள் கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள உலக நாடுகள் உறுதியளித்திருந்தன.
</p><p>
எனினும், வளிமண்டலத்தில் அதிகரித்து வரும் பசுமைக்குடில் வாயுக்கள் காரணமாக உலக வெப்பமயமாதலை கட்டுப்படுத்துவது மேலும் சவாலாகி வருவதாக காலநிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.</p><p>உலக சராசரி வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்தால், வெப்ப அலைகள், கடுமையான வறட்சி, அதிதீவிர மழை, வெள்ளம், புயல்கள் மற்றும் காட்டுத்தீ போன்ற தீவிர காலநிலை நிகழ்வுகள் அதிகரிக்கக்கூடும் என விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.
</p><p>
மேலும், துருவப் பகுதிகள் மற்றும் மலைப்பகுதிகளில் உள்ள பனிப்பாறைகள் உருகுவதன் மூலம் கடல் மட்டம் உயரக்கூடும். இதனால் கடலோரப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு எதிர்காலத்தில் அதிக ஆபத்து ஏற்படக்கூடும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/057f402c-fcbb-4de2-945b-483f237bbf6b/26-6a993f0aa2829.webp' /></p><p>

காலநிலை மாற்றத்தின் தாக்கங்கள் இயற்கைச் சூழலுக்கு மட்டுமின்றி, விவசாயம், குடிநீர் வளம், உணவுப் பாதுகாப்பு, மனித ஆரோக்கியம் மற்றும் பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும்.
</p><p>
உலக வெப்பநிலை 1.5 டிகிரி செல்சியஸ் வரம்பை எட்டுவது உடனடியாக மனிதகுலத்தின் முடிவைக் குறிக்காது என்றாலும், ஒவ்வொரு கூடுதல் வெப்பநிலை அதிகரிப்பும் காலநிலை சார்ந்த அபாயங்களை மேலும் அதிகரிக்கும் என விஞ்ஞானிகள் வலியுறுத்துகின்றனர்.
</p><p>
இதனால், பசுமைக்குடில் வாயு வெளியேற்றத்தைக் குறைத்தல், புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை அதிகரித்தல் மற்றும் காலநிலை மாற்றத்துக்கு ஏற்ப நாடுகள் தங்களைத் தயார்படுத்திக் கொள்ளுதல் ஆகியவை அவசரமாக முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளாகக் கருதப்படுகின்றன.</p>]]></content>
            <updated>2026-09-03T09:34:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாட்டு பெண்ணை தகாத உறவுக்கு அழைத்து கடிதம் அனுப்பிய மூன்று இலங்கையர்கள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/letter-inviting-foreign-woman-illicit-relationship-1788426945"></link>
            <id>https://jvpnews.com/article/letter-inviting-foreign-woman-illicit-relationship-1788426945</id>
            <summary type="text">&amp;nbsp;63 வயது மதிக்கத்தக்க ஆஸ்திரேலியப் பெண் சுற்றுலாப் பயணி ஒருவரின் அறைக்கதவின் கீழ் பாலியல் நடவடிக்கைக்கு அழைப்பு விடுத்து ஆங்கிலத்தில் எழுதப்பட்ட ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;63 வயது மதிக்கத்தக்க ஆஸ்திரேலியப் பெண் சுற்றுலாப் பயணி ஒருவரின் அறைக்கதவின் கீழ் பாலியல் நடவடிக்கைக்கு அழைப்பு விடுத்து ஆங்கிலத்தில் எழுதப்பட்ட துண்டுப்பிரசுரங்களைத் திணித்த குற்றச்சாட்டின் பேரில், மூன்று இலங்கை நபர்கள் உனவட்டுன சுற்றுலாப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p>
இலங்கைக்கு வருகை தந்த குறித்த பெண், உனவட்டுனவில் உள்ள பிரதான ஹோட்டல் ஒன்றில் ஒரு வாரத்திற்கும் மேலாகத் தங்கியிருந்ததாகப் பொலிஸார் தெரிவித்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/937d4b6a-2662-4668-946a-4ff5f3754254/26-6a993ac2c32f6.webp' /></p><h2>&nbsp;தகாத உறவுக்கு அழைத்து கடிதம்</h2><p>
</p><p>
தெஹிவலை மற்றும் பாணந்துறைப் பகுதிகளைச் சேர்ந்த குறித்த மூன்று சந்தேகநபர்களும், ஆஸ்திரேலியப் சுற்றுலாப் பயணி தங்கியிருந்த அறைக்கு அருகிலுள்ள அறையிலேயே தங்கியிருந்ததாகப் பொலிஸார் விசாரணைகளில் கண்டறிந்துள்ளனர்.</p><p>

சந்தேகநபர்கள் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட பாலியல் அழைப்புக் குறிப்புகளைப் பெண்ணின் அறைக்கதவின் கீழ் திணித்துள்ளனர்.</p><p></p><p>

பெண் அளித்த புகாரைத் தொடர்ந்து, உனவட்டுன சுற்றுலாப் பொலிஸ் நிலைய அதிகாரிகள் மூன்று சந்தேகநபர்களையும் கைது செய்து மேலதிக விசாரணைகளுக்காக ஹபராதுவப் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
</p><p>
மேலும் கைதான சந்தேகநபர்கள் மூவரும் காலி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவிருந்ததுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-03T09:29:17+00:00</updated>
        </entry>
    </feed>
