<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-07-24T04:31:59+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[படகில் இந்தியா நுழைய முயன்ற இரு இலங்கையர்கள் கைது ; தமிழக பொலிஸார் தீவிர விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/tamil-nadu-police-are-actively-investigating-1784867024"></link>
            <id>https://jvpnews.com/article/tamil-nadu-police-are-actively-investigating-1784867024</id>
            <summary type="text">கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்த இருவர், இன்று காலை கடல் வழியாக படகில் இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்றபோது தமிழக பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளன...</summary>
            <content type="html"><![CDATA[<p>கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்த இருவர், இன்று காலை கடல் வழியாக படகில் இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்றபோது தமிழக பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p></p><h3>ஆரம்பகட்ட விசாரணை</h3><p>



கைது செய்யப்பட்ட இருவரும் தமிழகத்தின் இராமேஸ்வரம் கடற்கரையில் கரையிறங்கி அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றபோதே பொலிஸாரால் மடக்கிப் பிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>
</p><p></p><p>கைது செய்யப்பட்டவர்கள் கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்த விக்னேஸ்வரன் மற்றும் விஸ்வநாத் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
</p><p>


இவர்கள் தமிழகத்திற்குள் போதைப்பொருள் கடத்தல் நோக்கில் ஊடுருவியவர்களா அல்லது மோசடிக் கும்பலுடன் தொடர்புடையவர்களா என்பது குறித்து தமிழக பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p>



மேலும், கைது செய்யப்பட்ட இருவரும் தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் சரளமாக உரையாடக்கூடியவர்கள் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-24T04:23:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாடாளுமன்ற அமர்வு : நீதியமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை விவாதம் இன்று]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/debate-no-confidence-motion-against-justice-minist-1784866162"></link>
            <id>https://ibctamil.com/article/debate-no-confidence-motion-against-justice-minist-1784866162</id>
            <summary type="text">இன்றைய&amp;nbsp;(24.07.2026)&amp;nbsp;நாளுக்கான நாடாளுமன்ற நடவடிக்கைகள் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன (Jagath Wickramaratne) தலைமையில்&amp;nbsp;சற்று முன்னர் ஆரம்பமாக...</summary>
            <content type="html"><![CDATA[<p></p><p>இன்றைய<span style="font-size: 14px; color: inherit;">&nbsp;</span>(24.07.2026)<span style="font-size: 14px; color: inherit;">&nbsp;</span><span style="color: inherit;">நாளுக்கான நாடாளுமன்ற நடவடிக்கைகள் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன (</span>Jagath Wickramaratne<span style="color: inherit;">) தலைமையில்&nbsp;</span><span style="color: inherit;">சற்று முன்னர் ஆரம்பமாகியுள்ளன.</span></p><p>காலை 09.30க்கு ஆரம்பமான நாடாளுமன்ற அமர்வுகள் மாலை 05.00 வரை நடைபெறவுள்ளது.</p><p>அதன்படி, காலை 9.30 மணி முதல் 10.00 மணி வரை நிலையியற் கட்டளை 22 இல் குறிப்பிடப்பட்டுள்ள 1 முதல் 6 வரையான நாடாளுமன்ற அலுவல்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. </p><p>காலை 10.00 மணி முதல் 11.00 வரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காகவும், காலை 11.00 மணி முதல் 11.30 மணி வரை நிலையியற் கட்டளை 27 (2)ன் கீழான கேள்விக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.</p><p>அதனைத் தொடர்ந்து காலை 11.30 மணி முதல் மாலை 5.30 மணி வரையிலான காலப்பகுதிக்குள் நீதியமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நானயக்காரவிற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு வாக்கெடுப்பை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p><p></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/UwWx0zQcLtw" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;</td></tr></tbody></table><p></p>]]></content>
            <updated>2026-07-24T04:21:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ashik</name>
            </author>
            <title type="text"><![CDATA[மன்னாரில் சோசலிச இளைஞர் சங்கம் சார்பில் கருப்பு ஜூலை நினைவூட்டல் துண்டுபிரசுரம் விநியோகம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/black-july-reminder-leaflet-distribution-1784865970"></link>
            <id>https://tamilwin.com/article/black-july-reminder-leaflet-distribution-1784865970</id>
            <summary type="text">30 ஆண்டு கால போருக்கு வழி வகுத்த &#039;கருப்பு ஜூலை&#039; இனக்கலவரம் இடம்பெற்று
43 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், கடந்த கால வடுக்களில் இருந்து மீண்டு
நாட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>30 ஆண்டு கால போருக்கு வழி வகுத்த 'கருப்பு ஜூலை' இனக்கலவரம் இடம்பெற்று
43 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், கடந்த கால வடுக்களில் இருந்து மீண்டு
நாட்டில் இன நல்லிணக்கத்தை பலப்படுத்தும் நோக்கில் சோசலிச இளைஞர் சங்கத்தின்
மன்னார் கிளையின் ஏற்பாட்டில் நேற்று (23.07.2026) மாலை
மன்னார் பேருந்து நிலையப் பகுதியில் விசேட துண்டு பிரசுரம் விநியோகம்
முன்னெடுக்கப்பட்டது.
</p><p>
1983ஆம் ஆண்டு ஜூலை மாதம் இலங்கையில் கட்டவிழ்த்து விடப்பட்ட கறுப்பு ஜூலை இன
கலவரமானது, நாட்டின் வரலாற்றில் அழியாத வடுக்களையும், எண்ணற்ற
உயிரழிவுகளையும், சொத்து நாசங்களையும் ஏற்படுத்தியதுடன், நீண்ட கால
உள்நாட்டுப் போருக்கும் அடித்தளம் அமைத்தது.</p><p></p><h2>மக்கள் ஒற்றுமையாக வாழ முன்வர வேண்டும்</h2><p>
</p><p>
இத்தகைய துயரமான சம்பவங்கள் மீண்டும் இப்பகுதியில் எக்காலத்திலும் தலை தூக்கக்கூடாது என்பதை வலியுறுத்தும் வகையில் இந்த நிகழ்வு ஏற்பாடு
செய்யப்பட்டுள்ளது.</p><p></p><p>

இதன்போது, கடந்த காலத்தில் ஏற்பட்ட இன ரீதியான முரண்பாடுகள் மற்றும்
பிளவுகளை களைந்து, அனைத்து மக்களும் சகோதரத்துவத்துடனும் சமத்துவத்துடனும்
ஒற்றுமையாக வாழ வேண்டியதன் அவசியத்தை உணர்த்தும் துண்டுப்பிரசுரங்கள்
பொது மக்களுக்கும் பேருந்து நிலைய பகுதிக்கு வருகை தந்தவர்களுக்கு வழங்கி
வைக்கப்பட்டன.
</p><p>
இனிவரும் காலங்களில் நாட்டில் மக்களுக்கிடையிலும் இனரீதியான மோதல்களோ அல்லது
கலவரங்களோ ஒருபோதும் உருவாகக் கூடாது என்ற வலுவான செய்தியை துண்டுப்பிரசுரம்
ஊடாக
சோசலிச இளைஞர் சங்கம் பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-24T04:15:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[டெல்லி மாணவர் போராட்டம் ; சச்சின், ஆலியா பட் ஆகியோர் கண்டனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/delhi-student-protest-sachin-alia-bhatt-condemn-1784866396"></link>
            <id>https://jvpnews.com/article/delhi-student-protest-sachin-alia-bhatt-condemn-1784866396</id>
            <summary type="text">இந்தியாவின், டெல்லி - ஜந்தர் மந்தரில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி மாணவர் அமைப்பினர் நடத்திய போராட்டத்தின் போது காவல்துறை நடத்திய தாக்குதலுக்கு முன்னாள் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியாவின், டெல்லி - ஜந்தர் மந்தரில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி மாணவர் அமைப்பினர் நடத்திய போராட்டத்தின் போது காவல்துறை நடத்திய தாக்குதலுக்கு முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் மற்றும் இந்திய நடிகை ஆலியா பட் ஆகியோர் கண்டனம் தெரிவித்து மாணவர்களுக்கு தங்களது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனர்.</p><p></p><p>


இதுகுறித்து சச்சின் டெண்டுல்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மாணவர்களின் கடின உழைப்பு அங்கீகரிக்கப்படாத போது அவர்கள் ஏமாற்றமடைவது இயல்பானதே. </p><p>இத்தகைய நிலை மீண்டும் அவர்களுக்கு ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்ய நாம் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/26ad740d-cd39-4e6b-9c28-6a2f6ca35136/26-6a62e65ddff04.webp' /></p><p>மேலும், தனது தந்தை ஒரு பேராசிரியர் எனக் குறிப்பிட்ட அவர், "தோல்வி அடைவது தவறில்லை, ஆனால் ஏமாற்றுவது தவறு. குறுக்கு வழிகளை எப்போதும் தேர்ந்தெடுக்கக் கூடாது என்பதை தனது சிறு வயதிலேயே தந்தை எனக்குக் கற்றுக்கொடுத்தார்" என்றும் நினைவு கூர்ந்துள்ளார்.
</p><p>
இதேவேளை மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து நடிகை ஆலியா பட் , "தங்களது உரிமைகளுக்காகப் போராடும் ஒவ்வொரு மாணவருக்குப் பின்னாலும் ஒரு கனவு, குடும்பத்தின் நம்பிக்கை மற்றும் மிகப்பெரிய தியாகத்தின் பயணம் உள்ளது. </p><p>அவர்கள் தங்களை மட்டும் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை, மாறாக அவர்களுக்கு ஆதரவாக நின்ற அனைவரையும், அடுத்த தலைமுறைக்கு சிறந்த பாதையை அமைத்துக் கொடுப்பவர்களையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள்" என்று கூறியுள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-24T04:13:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டிலிருந்து மாயமான பில்லியன் கணக்கான டொலர்! மோசடி குறித்து விசாரணை நடத்துமாறு வலியுறுத்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/special-investigation-into-billion-dollar-fraud-1784864807"></link>
            <id>https://tamilwin.com/article/special-investigation-into-billion-dollar-fraud-1784864807</id>
            <summary type="text">மோசடியான முறையில் நாட்டை விட்டு வெளியில் கொண்டு
செல்லப்பட்ட பெருமளவிலான பில்லியன் டொலர் குறித்து விசேட விசாரணைகளை
முன்னெடுக்க வேண்டும் என அரசாங்க நி...</summary>
            <content type="html"><![CDATA[<p>மோசடியான முறையில் நாட்டை விட்டு வெளியில் கொண்டு
செல்லப்பட்ட பெருமளவிலான பில்லியன் டொலர் குறித்து விசேட விசாரணைகளை
முன்னெடுக்க வேண்டும் என அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவரும், நாடாளுமன்ற
உறுப்பினருமான ஹர்ஷ டி சில்வா வலியுறுத்தியுள்ளார்.</p><p>சுங்கத்திணைக்களம், வங்கி மற்றும் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி கட்டுப்பாட்டு அதிகாரசபை ஒன்றிணைந்து செயற்படாத காரணத்தால் திருடர்கள் தைரியமாக செயற்படுவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.</p><p>

நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற இறக்குமதி மற்றும் ஏற்றுமதி
(கட்டுப்பாட்டுச்) சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில்
உரையாற்றுகையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும்
உரையாற்றுகையில்,</p><p>&nbsp;</p><h2>மோசடியான இறக்குமதி பரிவர்த்தனைகள் </h2><p>

''மோசடியான இறக்குமதி பரிவர்த்தனைகள் ஊடாக கடந்த நான்கு ஆண்டு காலப்பகுதிக்குள்
நாட்டில் இருந்து 715 மில்லின் டொலர் வெளியில் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக
அரசாங்க நிதி பற்றிய குழுவில் குற்றப்புலனாய்வுத் திணைக்களம்
குறிப்பிட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/436e08f8-e7c3-4170-a6ba-08b0c256fe09/26-6a62e5e821346.webp' /></p><p>

முறையற்ற தந்தி பரிவர்த்தனைகள் மற்றும் கொடுக்கல் வாங்கல்கள் ஊடாக தற்போது
இவ்வாறான மோசடிகள் இடம்பெறுவது பரவலாக காணப்படுவதை அவதானிக்க முடிகிறது.</p><p>
திறைசேரியால் செலுத்தப்பட்ட 2.5 மில்லியன் டொலர் மோசடி செய்யப்பட்டமையும்
இவ்வாறான தன்மையில் காணப்படுகிறது.</p><h2>சட்டங்கள் மீது குற்றச்சாட்டுக்கள்&nbsp;</h2><p>

இலங்கை சுங்கத் திணைக்களம், வங்கிகள் மற்றும் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி
அதிகாரசபை ஒன்றிணைந்து செயற்படுவதில்லை. இந்த மூன்று பிரதான தரப்பிடம் முறையான
தொடர்பாடல் இல்லாத காரணத்தால் திருடர்கள் தைரியமாக செயற்படுகிறார்கள்.</p><p>

நிறுவன கட்டமைப்புக்கள் சிறந்த முறையில் செயற்படாத பின்னணியில் சட்டங்கள்
மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுவதை அவதானிக்க முடிகிறது.</p><p> புதிய
சட்டங்களை இயற்றும் போது வரி செலுத்தி சட்டத்தின் பிரகாரம் செயற்படும்
இறக்குமதியாளர்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-24T04:13:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிறந்தநாள் விழாவில் துப்பாக்கி முழக்கம் ; பொலிஸாரின் விசாரணையில் வெளியான பல தகவல்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/gunshots-fired-birthday-party-police-release-infor-1784865723"></link>
            <id>https://jvpnews.com/article/gunshots-fired-birthday-party-police-release-infor-1784865723</id>
            <summary type="text">கொழும்பு வத்தளை காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட பள்ளியாவத்த பகுதியில் அமைந்துள்ள திருமண மண்டபமொன்றில் நேற்று (23) மாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு வத்தளை காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட பள்ளியாவத்த பகுதியில் அமைந்துள்ள திருமண மண்டபமொன்றில் நேற்று (23) மாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p><p>

காவல்துறையின் ஆரம்பக்கட்ட விசாரணைகளின்படி, குறித்த திருமண மண்டபத்தில் பிறந்தநாள் விழா ஒன்று நடைபெற்றுக்கொண்டிருந்த வேளையிலேயே இந்த துப்பாக்கித் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fa688a30-b8ce-463e-a237-853115b63c24/26-6a62e3bd398a9.webp' /></p><p>

பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டிருந்த ஒருவரை இலக்காகக் கொண்டு, உந்துருளியில் வந்த அடையாளம் தெரியாத நபர் துப்பாக்கியால் சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
</p><p>
துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த நபர் உடனடியாக கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டபோதிலும், சிகிச்சை பலனின்றி பின்னர் உயிரிழந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.</p><p>

சம்பவத்திற்கான காரணம் இதுவரை உறுதிப்படுத்தப்படாத நிலையில், தாக்குதலை நடத்திய சந்தேகநபரை அடையாளம் கண்டு கைது செய்வதற்காக காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-24T04:02:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[விஷ்ணு விஷால் நடித்துள்ள கட்டா குஸ்தி 2 படத்தின் Final Collection... எத்தனை கோடி தெரியுமா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/gatta-kusthi-2-movie-final-collection-details-1784865262"></link>
            <id>https://cineulagam.com/article/gatta-kusthi-2-movie-final-collection-details-1784865262</id>
            <summary type="text">கட்டா குஸ்தி 2விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லட்சுமி நடிக்க சில வருடங்களுக்கு முன்பு வெளியாகி இருந்த திரைப்படம் கட்டா குஸ்தி. இப்படம் செம வெற்றிப் பெற்றது, இ...</summary>
            <content type="html"><![CDATA[<h2>கட்டா குஸ்தி 2</h2><p>விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லட்சுமி நடிக்க சில வருடங்களுக்கு முன்பு வெளியாகி இருந்த திரைப்படம் கட்டா குஸ்தி. </p><p>இப்படம் செம வெற்றிப் பெற்றது, இதனால் இப்படத்தின் இரண்டாம் பாகம் இதே ஜோடி நடிக்க கடந்த ஜுலை 3ம் தேதி வெளியானது. செல்லா அய்யாவு இயக்கிய இப்படத்தை வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷ்னல் நிறுவனம் தயாரித்திருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2bac4499-0d26-4bd8-9a5a-4613590dbc23/26-6a62e7749d37c.webp' /></p><p>
</p><p>நாயகன், நாயகி தாண்டி கருணாஸ், காளி வெங்கட், மோக்ஷா என பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். படம் மெகா ஹிட் அடிக்க தயாரிப்பாளர் நாயகன் விஷ்ணு விஷாலுக்கு BMW கார் வாங்கி தர, நாயகன் விஷ்ணு இயக்குனர் செல்லா அய்யாவிற்கு ஒரு கார் பரிசளித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5dfddfb3-1ecc-411b-88c7-be530669b001/26-6a62e773c867c.webp' /></p><h2>
பாக்ஸ் ஆபிஸ்
</h2><p>மெகா ஃபேமிலி பிளாக்பஸ்டர் படமாக கட்டா குஸ்தி 2 இந்த வருடத்தில் ஹிட் படமாகியுள்ளது.
</p><p>நாளுக்கு நாள் நல்ல வசூல் வேட்டை நடத்திவந்த கட்டா குஸ்தி 2 படத்தின் Final Collection ரூ. 56 கோடி வரை வசூலித்ததாக தகவல்கள் வந்துள்ளது.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/d7uD4PolciU?start=1" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-07-24T04:00:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக குடும்ப உறுப்பினர் ஒருவரின் வாக்குமூலம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/gotabaya-rajapaksa-sugeeshwara-bandara-1784865380"></link>
            <id>https://tamilwin.com/article/gotabaya-rajapaksa-sugeeshwara-bandara-1784865380</id>
            <summary type="text">முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் சகோதரியின் மகன், கோட்டாபயவுக்கு எதிராக கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவில் வாக்குமூலம் அளித்துள்ளார். ...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் சகோதரியின் மகன், கோட்டாபயவுக்கு எதிராக கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவில் வாக்குமூலம் அளித்துள்ளார். </p><p>
இந்த வாக்குமூலத்தில் அடங்கியுள்ள தகவல்களின் படி கோட்டாபய ராஜபக்சவுக்கு பாரிய சிக்கல் ஏற்படுவதோடு சட்டத்தில் இருந்து தப்பிக்க முடியாத நிலைமை ஏற்படும் என தெரியவந்துள்ளது.
</p><p>கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினால் கோட்டாபய ராஜபக்ச மற்றும் சுகீஸ்வர பண்டார ஆகியோருக்கு எதிராக பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. </p><p>
கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்தபோது, சுகீஸ்வர பண்டார அவருடைய தனிப்பட்ட செயலாளராகப் பணியாற்றினார். அதற்காக அவர் சம்பளம் பெற்றார். </p><p>அதுமட்டுமன்றி, ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியான பின்னரும் விசேட ஜனாதிபதித் திட்டத்தை உருவாக்கி அதிலிருந்தும் அவருக்குச் சம்பளம் வழங்கப்பட்டுள்ளது.
</p><h2>

</h2><p></p><h2>கோட்டாபயவின் இரு வாக்குமூலங்கள்</h2><p>இந்தச் சம்பவம் தொடர்பிலும் கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவு கோட்டாபய ராஜபக்சவிடமும் வாக்குமூலம் பெற்றிருந்தது. </p><p>தற்போது சுகீஸ்வர பண்டார கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 
இது தொடர்பில் கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவு கோட்டாபய ராஜபக்சவிடம் இரண்டு வாக்குமூலங்களைப் பெற்றுள்ளது. </p><p>முதல் வாக்குமூலத்தில், சுகீஸ்வர பண்டாரவிற்குத் தனிப்பட்ட செயலாளர் என்ற முறையில் இந்தச் சம்பளம் வழங்கப்பட்டது என்று அவர் கூறியுள்ளார். </p><p>ஆனால், இரண்டாவது வாக்குமூலத்தில், அந்தச் சம்பளம் சுகீஸ்வரவிற்கு வழங்கப்படவில்லை என்றும், தவறுதலாக வேறு ஒரு செயலாளருக்கு வழங்கப்பட்டது என்றும் கூறியுள்ளார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/df624e24-2ddf-4df3-9a16-2bd553354c65/26-6a62e26654f56.webp' /></p><p>அவர் குறிப்பிட்ட அந்த செயலாளர் நந்தசேன மற்றும் மஹிந்த ஆகியோரின் இளைய சகோதரியான பிரீதி ராஜபக்சவின் மூத்த மகன், முன்னாள் கடற்படை அதிகாரியான மாலக சந்திரதாச. அவருடைய தந்தை வைத்தியர் லலித் பிரியலால் சந்திரதாச.</p><p> மாலக சந்திரதாச, கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்தபோது செயலாளராகப் பணியாற்றியதாகவும், அந்தச் சம்பளம் அவருக்குத்தான் கொடுக்கப்பட்டது என்றும் இரண்டாவது வாக்குமூலத்தில் கோட்டாபய தெரிவித்துள்ளார்.
</p><p>முதலில் சுகீஸ்வர பண்டாரவிற்கு சம்பளம் கொடுத்ததாகச் சொல்கிறார், இரண்டாவது வாக்குமூலத்தில் "இல்லை, அவருக்குக் கொடுக்கவில்லை, தவறுதலாக எனது செயலாளராக இருந்த மாலக சந்திரதாசவிற்குத்தான் கொடுத்தேன்" என்கிறார்.
</p><h2>மாலக சந்திரதாச வழங்கிய வாக்குமூலம்</h2><p>இதனைத் தொடர்ந்து, கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவு மாலக சந்திரதாசவை அழைத்து விசாரணை நடத்தியுள்ளது. கடந்த ஜூலை மாதம் 16 ஆம் திகதி அவர் விசாரணைக்கு அழைக்கப்பட்டதாக தெரியவருகிறது. </p><p>ஆனால் மாலக சந்திரதாச வாக்குமூலத்தில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
"நான் ஒரு சதம் கூட வாங்கவில்லை. கோட்டாபய ராஜபக்ச மாமா சொல்வது அப்பட்டமான பொய்!" என்று தெளிவாகக் கூறியுள்ளார்.
</p><p>"நான் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கோட்டாபய ராஜபக்சவின் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை. வேறு எந்தவொரு பதவியிலோ பணியாற்றவில்லை. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9a7f3e78-60ea-45e3-b5a6-3c55e9c862e3/26-6a62e26704bfc.webp' /></p><p>எந்தவொரு சம்பளமோ, பணமோ, கொடுப்பனவோ, வாகனமோ அல்லது வேறு எதுவும் நான் பெறவில்லை. அப்படி ஏதேனும் சொல்லியிருந்தால், கோட்டாபய ராஜபக்ச மாமா சொல்வது அப்பட்டமான பொய்" என்று தெளிவாகத் தெரிவித்துள்ளார்.</p><p>அதனால் இது குறித்துத் தொடர்ந்தும் விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
எனவே, 1982 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் தான் இந்த விசாரணைகள் நடைபெறுகின்றன. </p><p>இதன் அடிப்படையில், சுகீஸ்வர பண்டார கைது செய்யப்பட்டது போலவே கோட்டாபய ராஜபக்சவையும் கைது செய்ய வாய்ப்புள்ளது.</p><p></p><p></p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-24T03:58:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[15 வயதுக்கு உட்பட்டோரின் சமூக வலைதளக் கணக்குகள் முடக்கம்... பிரான்ஸின் புதிய சட்டம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/france-social-media-ban-under-15-kids-1784821883"></link>
            <id>https://manithan.com/article/france-social-media-ban-under-15-kids-1784821883</id>
            <summary type="text">15 வயதுக்கு உட்பட்ட சிறார்கள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்த தடை விதிக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க மசோதாவுக்கு பிரான்ஸ் நாடாளுமன்றம் ஒருமனதாக ஒப்புதல் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>15 வயதுக்கு உட்பட்ட சிறார்கள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்த தடை விதிக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க மசோதாவுக்கு பிரான்ஸ் நாடாளுமன்றம் ஒருமனதாக ஒப்புதல் அளித்துள்ளது.</p><p>

வரும் கல்வியாண்டு முதல் 15 வயதுக்கு உட்பட்டவர்கள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்த அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் ஏற்கெனவே அறிவித்திருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ae1f8adf-b7eb-434d-a41f-ce383423dc55/26-6a623b32294b1.webp' /></p><p></p><h2>நாடாளுமன்றம் ஒருமனதாக ஒப்புதல்</h2><p> அப்போது, "எங்கள் நாட்டுக் குழந்தைகளின் மூளை விற்பனைக்கான பொருள் அல்ல.அமெரிக்கா அல்லது சீனாவில் உருவாக்கப்படும் செயலிகள், பிரான்ஸ் குழந்தைகளின் சிந்தனைகளையும் உணர்வுகளையும் கட்டுப்படுத்த அனுமதிக்க முடியாது" என்று அவர் கடுமையாக விமர்சித்திருந்தார்.</p><p>

இந்தச் சூழலில், 15 வயதுக்கு உட்பட்ட சிறார்கள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்த தடை விதிக்கும் மசோதா, பிரான்ஸ் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் வாக்கெடுப்புக்கு வந்தது. இதில் அனைத்து உறுப்பினர்களின் ஏகோபித்த ஆதரவுடன் மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f00e5c35-4168-4ff5-ae35-e31ff64ff6b9/26-6a623b32ce5d1.webp' /></p><p>
</p><p>
இதையடுத்து, வரும் செப்டம்பர் 1 முதல் பிரான்ஸில் 15 வயதுக்கு உட்பட்ட சிறார்கள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவதற்கு சட்டப்பூர்வமாகத் தடை அமலுக்கு வருகிறது.
</p><p>
இந்தச் சட்டத்தின் மூலம், சிறார்களின் சமூக வலைதளப் பயன்பாட்டிற்கு இவ்வகையான முழுமையான கட்டுப்பாட்டை அமல்படுத்திய ஐரோப்பிய ஒன்றியத்தின் முதல் நாடு என்ற பெருமையை பிரான்ஸ் பெற்றுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d7a2142a-2cdd-4477-a7bb-bbe9f3dc6108/26-6a623b337f619.webp' /></p><p></p><p>

ஏற்கெனவே 15 வயதுக்கு உட்பட்டோரின் பெயரில் தொடங்கப்பட்டுள்ள சமூக வலைதளக் கணக்குகளை முடக்குவதற்கு சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு நான்கு மாதங்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
</p><p>
மேலும், புதிய விதிமுறைகளை சமூக வலைதள நிறுவனங்கள் முறையாகப் பின்பற்றுகிறதா என்பதை பிரான்ஸ் தகவல் தொழில்நுட்ப ஒழுங்குமுறை அமைப்பான ஆர்காம் (ARCOM) தொடர்ந்து கண்காணிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-24T03:57:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[சித்துப்பாத்தி மயானத்தில் சட்டரீதியாக சடலங்கள் புதைக்கப்பட்டமைக்கான ஆவணங்கள் இல்லை : சட்டத்தரணி விளக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/bodies-were-not-buried-legally-at-siththupaththi-1784863705"></link>
            <id>https://ibctamil.com/article/bodies-were-not-buried-legally-at-siththupaththi-1784863705</id>
            <summary type="text">யாழ்ப்பாணம், செம்மணி - சித்துப்பாத்தி இந்து மயானத்தில்&amp;nbsp;வைத்தியசாலைகளில் இறந்தவர்களை புதைப்பதில்லை என வைத்தியசாலை தரப்பினர் கூறியுள்ளதாகவும் இந்த ...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம், செம்மணி - சித்துப்பாத்தி இந்து மயானத்தில்&nbsp;வைத்தியசாலைகளில் இறந்தவர்களை புதைப்பதில்லை என வைத்தியசாலை தரப்பினர் கூறியுள்ளதாகவும் இந்த மயானத்தில் சடலங்கள் புதைக்கப்பட்டதற்கு இந்த மயான சபையினரிடம் பதிவுகள் இல்லை எனவும் என சட்டத்தரணி வி.எஸ் நிரஞ்சன் தெரிவித்துள்ளார்.</p><p>செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 41 ஆவது நாளான நேற்று (23) முன்னெடுக்கப்பட்ட அகழ்வு நடவடிக்கைகளின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.</p><p>அவர் மேலும் தெரிவிக்கையில், 

இது ஒரு இந்து மயானம். இதில் சட்டரீதியான புதைத்தலும் நடைபெறலாம். சிறுவர்கள் என்றால், அனுமதி எடுத்து அடக்கம் செய்யப்படும்.</p><p></p><h2>சவப்பெட்டிகளோடு காணப்பட்டது</h2><p>

ஆனால் இங்கு அதிகமான என்புக்கூடுகளை பார்க்கும்போது இது ஒரு குற்றம் நடந்தது, அவசரமாக புதைக்கப்பட்டது என எங்கள் சாதாரண கண்களுக்குத் தெரிகின்றது. 

இது சம்பந்தமாக அறிக்கைகள் வந்த பிற்பாடுதான். அது தொடர்பில் மேலதிகமாக சொல்லக்கூடியதாக இருக்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/02c4080a-9409-4ad0-b70e-9ad7af3a145d/26-6a62e09eddfea.webp' /></p><p>இங்கு மீட்கப்பட்ட சில மனித என்புகள் சட்டரீதியாக புதைக்கப்பட்டதற்கான ஆடைகளோடு, சவப்பெட்டிகளோடு காணப்பட்டது. சில இடங்களில் உடற்கூற்று பரிசோதனை சான்றுகளும் காணப்பட்டன. </p><p>ஆனால் அவைகள் இங்கு புதைக்கப்பட்டதற்கு இந்த இந்து மயான சபையினரிடம் பதிவுகள் இல்லை.

அதேநேரம் வைத்தியசாலையை அணுகிய போது, அவர்களும் இந்த இந்து மயானத்தில் சடலங்களை புதைக்கவில்லை என்றும், தாங்கள் கோம்பயன்மணல் மயானத்தையே பயன்படுத்துவதாகவும் கூறியுள்ளார்கள்.</p><p> 

எனவே செம்மணி புதைகுழி தொடர்பில் முழுமையான அறிக்கைகள் வந்த பின்னரே தெளிவாக கூற முடியும் என“ தெரிவித்தார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-24T03:55:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீதித்துறையில் அநுர அரசின் தலையீட்டைத் தோற்கடிப்போம் - எதிர்க்கட்சிகள் சூளுரை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/we-defeat-anura-government-interference-judiciary-1784864385"></link>
            <id>https://tamilwin.com/article/we-defeat-anura-government-interference-judiciary-1784864385</id>
            <summary type="text">ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம்,
நீதித்துறையில் தலையீடு செய்வதற்கு மேற்கொள்ளும் முயற்சிகளை இணைந்து
தோற்கடிப்போ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம்,
நீதித்துறையில் தலையீடு செய்வதற்கு மேற்கொள்ளும் முயற்சிகளை இணைந்து
தோற்கடிப்போம் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சூளுரைத்துள்ளார்.</p><p>

ஜனநாயகம், சட்டத்தின் ஆட்சி மற்றும் நீதித்துறையின் சுயாதீனத்தைப்
பாதுகாப்பதற்காகப் பிரதான எதிர்க்கட்சிகள் கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித்
தலைவர் அலுவலகத்தில் நேற்று(23.07.2026) விசேட கூட்டம் ஒன்றை நடத்தின.</p><p>
இதன்போதே சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு கூறியுள்ளார்.</p><p></p><h2>நீதித்துறையின் சுயாதீனம்</h2><p>“ஜனநாயகம் மற்றும் நீதித்துறையின் சுயாதீனத்தைப் பாதுகாப்பதற்காகவே எதிரணிகள்
அனைத்தும் இன்று ஒன்றுபட்டுள்ளன. இதுவே எமது பிரதான பொது நோக்கமாகும். </p><p>இந்த
அடிப்படை விடயங்களுக்காக நாம் அனைவரும் இணைந்து பயணிப்போம்” என்றும் தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/69bab7af-e578-4d32-ae76-22d2e5698503/26-6a62e0814adc0.webp' /></p><p>எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில்,
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் முன்னாள் பிரதமர் தினேஷ்
குணவர்தன ஆகியோர் கலந்துகொண்டனர்.
</p><p>
மேலும், தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், தமிழ்த் தேசிய
மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், இலங்கைத் தொழிலாளர்
காங்கிரஸின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின்
தலைவர் ரவூப் ஹக்கீம், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல்
ராஜபக்ச உட்பட எதிரணியைச் சேர்ந்த பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும்
இதில் பங்கேற்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-24T03:53:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[விகாரைக்குச் சொந்தமான நிலத்தை விகாரைக்கு கொடுப்போம் - யாழில் புத்தசாசன அமைச்சர் அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/building-viharas-in-the-north-east-area-1784860400"></link>
            <id>https://ibctamil.com/article/building-viharas-in-the-north-east-area-1784860400</id>
            <summary type="text">மக்களுக்குச் சொந்தமான நிலத்தை மக்களுக்கும், விகாரைக்குச் சொந்தமான நிலத்தை
விகாரைக்கும் பிரித்துக் கொடுப்பதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும்
எட...</summary>
            <content type="html"><![CDATA[<p>மக்களுக்குச் சொந்தமான நிலத்தை மக்களுக்கும், விகாரைக்குச் சொந்தமான நிலத்தை
விகாரைக்கும் பிரித்துக் கொடுப்பதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும்
எடுத்து வருகிறோம்&nbsp;என புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஹினிதும சுனில் செனவி தெரிவித்தார்.</p><p>மிக விரைவில் எமது அதிகாரிகளுடன் மீண்டும் அப்பகுதிக்குச்
செல்வோம் என புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் குறிப்பிட்டார்.</p><p>

மேலும் தெரிவிக்கையில், வலிகாமம் வடக்கு பிரதேசத்தில் அமைந்துள்ள தையிட்டி
திஸ்ஸ விகாரை தொடர்பான காணி விவகாரத்தில், அரசாங்கம் தற்போது விரிவான
பேச்சுவார்த்தைகளை நடத்தி பெரிய அளவிலான பணிகளை மேற்கொண்டுள்ளது.&nbsp;அனைத்துத் தரப்பினரையும் அழைத்து நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம்.</p><p></p><h2>பேச்சுவார்த்தை&nbsp;</h2><p> </p><p>குறிப்பாக, நீதி அமைச்சர், வட மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் எமது
கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன், நான், ஆளுநர், மாவட்டச்
செயலாளர், பிரதேச செயலாளர் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரையும்
பாராளுமன்றத்திற்கும் எமது அமைச்சுக்கும் பலமுறை அழைத்து இந்தப்
பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளோம்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/07b99688-308e-4913-8ece-058d1301a90e/26-6a62d9c5b0a45.webp' /></p><p>அத்துடன் அப்பகுதியின் காணி உரிமையாளர்களான
மக்களையும் நாங்கள் நேரில் சந்தித்துப் பேசினோம்.</p><p>

இந்தப் பேச்சுவார்த்தைகளின் விளைவாக, கடந்த சில நாட்களுக்கு முன்பு காணி
அளவீட்டுப் பணிகளை மேற்கொள்வதற்காக அனைத்து அதிகாரிகளும் வலிகாமம் தையிட்டி
பகுதிக்குச் சென்றனர். </p><p>ஆனால் அங்கு ஏற்பட்ட சிறிய சிக்கல் காரணமாக அதை
முழுமையாகச் செய்ய முடியாமல் போனது.

எங்களின் நோக்கம் என்னவென்றால், இந்தச் சிக்கல்கள் அனைத்தையும் தீர்த்து, காணி
உரிமையாளர்களான எமது அன்பிற்குரிய மக்களுக்குச் சொந்தமான காணிகளை அவர்களிடம்
ஒப்படைக்க வேண்டும் என்பதே.</p><p>

அதேநேரம், 1972-ஆம் ஆண்டின் காணி அளவீட்டு ஆவணங்களிலேயே இந்த விகாரை பற்றி
குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p></p><h2>மக்களுக்குச் சொந்தமான காணி</h2><p> </p><p>விகாரையின் ஜின்தோட்ட நந்தாராம நாயக்க தேரர் மிகவும்
தெளிவான புரிதலோடு இருக்கிறார். அப்பகுதி மக்களோடு இணைந்து, மிகவும்
நல்லிணக்கத்தோடு பணியாற்றக்கூடிய ஒரு மதக் குருவாக அவர் உள்ளார்.</p><p>

நாங்கள் யாருக்கும் பாதிப்பை ஏற்படுத்த விரும்பவில்லை. மக்களுக்குச் சொந்தமான
நிலத்தை மக்களுக்கும், விகாரைக்குச் சொந்தமான நிலத்தை விகாரைக்கும் பிரித்துக்
கொடுப்பதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம். </p><p>மிக
விரைவில் எமது அதிகாரிகளுடன் மீண்டும் அப்பகுதிக்குச் செல்வோம். இன்று
காலையும் இது குறித்து எமது அமைச்சின் செயலாளருடன் விவாதித்தேன்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/225b3e65-7ff8-45ea-8220-2a7abed25cea/26-6a62d9c6820a3.webp' /></p><p>

எனவே, மக்களுக்குச் சொந்தமான காணி மக்களுக்குக் கிடைக்க வேண்டும்,
விகாரைக்குரிய காணி விகாரைக்குக் கிடைக்க வேண்டும். இரு தரப்பினரிடையேயும்
உண்மையான நல்லிணக்கம் ஏற்கனவே நிலவுகிறது.</p><p>அரசியல் காரணங்களுக்காகவும் சுயநல
அரசியல் தேவைகளுக்காகவுமே அங்கு நல்லிணக்கம் இல்லை என்பது போன்ற தோற்றம்
சித்தரிக்கப்படுகிறது.
</p><p>
அந்த அரசியல் சுயநலன்களுக்குப் பலியாகாமல், எமது மக்களுக்குரிய காணிகளையும்
விகாரைக்குரிய காணிகளையும் சரியாக அளவீடு செய்து, உரிய ஆவணங்களை மக்களிடம்
ஒப்படைப்பதே எமது திட்டமாகும் - என்றார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-24T03:51:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[போராட்டத்தால் திணறும் டெல்லி - நள்ளிரவில் மோடி வெளியிட்ட செல்ஃபி வீடியோ]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/pm-narendra-modi-has-released-a-selfie-video-1784864129"></link>
            <id>https://ibctamil.com/article/pm-narendra-modi-has-released-a-selfie-video-1784864129</id>
            <summary type="text">பிரதமர் மோடி தனது சமூக வலைதளப் பக்கத்தில் நேற்று நள்ளிரவு வெளியிட்ட மூன்று நிமிட காணொளி தற்போது பேசுபொருளாகி உள்ளது.நீட் வினாத்தாள் கசிவு சம்பவங்களைத்...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரதமர் மோடி தனது சமூக வலைதளப் பக்கத்தில் நேற்று நள்ளிரவு வெளியிட்ட மூன்று நிமிட காணொளி தற்போது பேசுபொருளாகி உள்ளது.</p><p>நீட் வினாத்தாள் கசிவு சம்பவங்களைத் தடுக்க, கடுமையான தண்டனைகளை உறுதி செய்யும் புதிய வரைவுச் சட்டம் குறித்து இன்று (24) நடைபெறும் மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.</p><p>குறித்த காணொளியில் பிரதமர் மேலும் தெரிவிக்கையில், வினாத்தாள் கசிவு என்பது ஒரு சிறிய விஷயம் அல்ல. </p><h2>பெற்றோர்களுக்கும் மிகுந்த வேதனை</h2><p>இது லட்சக்கணக்கான மாணவர்களுக்கும் அவர்களின் பெற்றோர்களுக்கும் மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது.</p><p> </p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">More strict actions against paper leaks to come in tomorrow’s Cabinet! <a href="https://t.co/NRysBukk5U">pic.twitter.com/NRysBukk5U</a></p>&mdash; Narendra Modi (@narendramodi) <a href="https://x.com/narendramodi/status/2080357811662492096?ref_src=twsrc%5Etfw">July 23, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>நமது முதன்மைப் பொறுப்பு மாணவர்கள் ஒரு கல்வி ஆண்டை வீணடிக்கக் கூடாது என்பதே ஆகும். அதனால்தான் 22 லட்சம் மாணவர்களுக்கான மறுதேர்வை மிகக் குறைந்த காலத்தில் நடத்தி, கடந்த ஜூலை 19 அன்று முடிவுகளையும் வெளியிட்டோம்.</p><p> இத்தவறில் ஈடுபட்டவர்கள் பலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தாலும், நாம் இத்துடன் திருப்தியடைந்து விடக்கூடாது.</p><h2>கடுமையான தண்டனை</h2><p> எனவே தான் விரைவு நீதிமன்றங்கள் மற்றும் கடுமையான தண்டனைகளுக்கான விதிகளை உள்ளடக்கிய வரைவுச் சட்டத்தைத் தயாரிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டேன்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d00bc1f2-4dd2-49aa-9325-70dc452f935f/26-6a62e11cd7147.webp' /></p><p> 

இந்த வரைவுச் சட்டம் இன்று அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டு இறுதி வடிவம் பெறவுள்ளது.</p><p> வரும் திங்கள்கிழமை தொடங்கும் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரின் இரண்டாவது வாரத்தில் இந்த மசோதாவை இரு அவைகளிலும் விரைவாக நிறைவேற்ற அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும்" என பிரதமர் தெரிவித்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-07-24T03:51:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[உச்ச அளவை எட்டிய வெப்பநிலை... பிரான்ஸ், ஸ்பெயினில் ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/temperatures-reach-extreme-levels-1784864955"></link>
            <id>https://news.lankasri.com/article/temperatures-reach-extreme-levels-1784864955</id>
            <summary type="text">தெற்கு ஐரோப்பாவை வாட்டி வதைக்கும் கடும் வெப்பம் காரணமாக பிரான்ஸ் மற்றும் ஸ்பெயினில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயிலிருந்து தப்பிக்க சுமார் 30,000 பேர் வெளிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>தெற்கு ஐரோப்பாவை வாட்டி வதைக்கும் கடும் வெப்பம் காரணமாக பிரான்ஸ் மற்றும் ஸ்பெயினில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயிலிருந்து தப்பிக்க சுமார் 30,000 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.</p><h2>தேசிய அவசரநிலை</h2><p>
</p><p>தகிக்கும் வெப்பம் மற்றும் கடல்சார் வெப்ப அலை மத்தியதரைக் கடலைச் சுட்டெரிக்கும் வேளையில், 
பெருந்தீயின் தீவிரம் மோசமடைவதால், டான்டேவின் காவியம் போன்ற சூழ்நிலைகளை நிராகரிக்க முடியாது என ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0a52457a-4496-4cfc-b6c1-9bf6b1b7fc47/26-6a62e1d22a600.webp' /></p><p> </p><p>இதனிடையே, பிரான்ஸின் தென்மேற்கு அட்லாண்டிக் கடற்கரைப் பகுதியில் ஏற்பட்ட மிகத் தீவிரமான காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்கள் போராடி வரும் நிலையில், </p><p>முகாம்கள் மற்றும் விடுமுறைக்கால இல்லங்களில் தங்கியிருந்த ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் உட்பட 18,800-க்கும் மேற்பட்டோர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். </p><p>இந்த நிலையில், கட்டுக்கடங்காமல் பரவி வரும் பல காட்டுத்தீயினைக் கருத்தில் கொண்டு, ஸ்பெயின் வியாழக்கிழமை இரவு மாட்ரிட் பிராந்தியத்திலும் தலைநகருக்கு அருகிலுள்ள அவிலா மாகாணத்திலும் தேசிய அவசரநிலையை அறிவித்துள்ளது.</p><p></p><p> </p><p>மாட்ரிட் பிராந்தியத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஏற்பட்ட காட்டுத்தீ காரணமாக 10,000 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்; இதனால், இக்கட்டான சூழலைச் சமாளிக்கும் பொறுப்பு ராணுவத்தின் அவசரக்காலப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. </p><p>ஐரோப்பிய வனத்தீ தகவல் அமைப்பின் (European Forest Fire Information System) தரவுகளின்படி, கடந்த ஆண்டு முழுவதும் 3,93,000 ஹெக்டேர் நிலம் காட்டுத்தீயால் எரிந்துபோன நிலையில், இந்த ஆண்டில் இதுவரை ஸ்பெயினில் ஏறக்குறைய 1,25,000 ஹெக்டேர் நிலம் எரிந்துபோயுள்ளது. </p><p>ஸ்பெயின் வானிலை ஆய்வு நிறுவனமான ஏமெட்டின் தகவல்படி, ஸ்பெயினின் முர்சியா மாகாணத்தில் உள்ள சீசா நகரில் வியாழக்கிழமையன்று 44.7 டிகிரி செல்சியஸ் என்ற உச்சபட்ச வெப்பநிலை பதிவாகியுள்ளது. </p><p>முந்தைய நாள், ஸ்பெயினின் அல்பாசெட், அவிலா மற்றும் டெருவல் ஆகிய நகரங்களில் வெப்பநிலை 42 டிகிரி செல்சியஸை எட்டியதன் மூலம், ஜூலை மாதத்திற்கான வெப்பநிலை சாதனைகள் முறியடிக்கப்பட்டன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/879e2dc6-1f96-4a3f-a65e-ad892cdbf7bc/26-6a62e1d315b6f.webp' /></p><p> </p><p>இதனிடையே, மத்திய தரைக்கடல் கண்காணிப்பு அமைப்பின் (Mediterranean Monitoring System) தகவலின் அடிப்படையில், மத்திய தரைக்கடலின் மேற்பரப்புப் பரப்பில் 80 சதவீதப் பகுதியை கடல்சார் வெப்ப அலை (marine heatwave) பாதித்து வருகிறது. </p><p>செவ்வாய்க்கிழமையன்று பல பகுதிகளில் பகல்நேர வெப்பநிலை உச்சத்தை எட்டியது; சில இடங்களில் 1991 முதல் 2020 வரையிலான சராசரி அளவை விட 5 டிகிரி செல்சியஸ் கூடுதல் வெப்பம் பதிவானது.</p><h2>கட்டுக்குள் வரவில்லை</h2><p> </p><p>தீயினால் எரிந்த பரப்பளவைப் பொறுத்தவரை பிரான்ஸ் மிக மோசமாகவே பாதித்துள்ளது; தீ விபத்துகளின் எண்ணிக்கையைப் பொறுத்தவரை பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகள் சாதனைகளை முறியடித்துள்ளன. </p><p>பிரான்சில் ஏற்பட்ட தீ விபத்து, போர்டோ (Bordeaux) நகருக்கு மேற்கே சுமார் 40 கி.மீ தொலைவிலும், பிரபலமான சுற்றுலாத் தலமான ஆர்காச்சோன் (Arcachon) வளைகுடாவிற்கு வடக்கேயும் அமைந்துள்ள சாமோஸ் (Saumos) கிராமத்திற்கு அருகிலுள்ள அடர்ந்த பைன் மரக் காட்டில் தொடங்கியது. </p><p>24 மணி நேரத்திற்கும் சற்று அதிகமான காலத்தில் 3,700 ஹெக்டேருக்கும் அதிகமான நிலப்பரப்பு எரிந்துவிட்டதாகத் தீயணைப்பு வீரர்கள் வியாழக்கிழமை தெரிவித்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b39ec38e-3f88-4231-8327-b0dfdad00241/26-6a62e1d3b8b3e.webp' /></p><p> </p><p>தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர 800 தீயணைப்பு வீரர்களும் நான்கு நீர் வீசும் விமானங்களும் போராடி வரும் நிலையில், நிலைமை இன்னும் சாதகமற்ற நிலையிலேயே இருப்பதாகவும், தீயின் பரவல் இன்னும் கட்டுக்குள் வரவில்லை என்றும் அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது.</p><p> காலநிலைச் சீர்குலைவு காரணமாக அடிக்கடி நிகழும் தீவிர வானிலை நிகழ்வுகள் ஆயிரக்கணக்கானோரின் கூடுதல் உயிரிழப்புகளுக்கும், மண் மற்றும் நீர்நிலைகள் வறண்டு போவதற்கும், காட்டுத்தீ பரவுவதற்கும் வழிவகுத்துள்ள நிலையில், மே மாதம் முதல் பிரான்ஸ் ஒன்றன் பின் ஒன்றாக கிட்டத்தட்ட மூன்று வெப்ப அலைகளை எதிர்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-24T03:47:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை அணியை வீழ்த்திய பாகிஸ்தான்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/pakistan-women-beat-sri-lanka-by-5-wickets-1st-odi-1784864703"></link>
            <id>https://news.lankasri.com/article/pakistan-women-beat-sri-lanka-by-5-wickets-1st-odi-1784864703</id>
            <summary type="text">பாகிஸ்தான் மகளிர் அணி முதல் ஒருநாள் போட்டியில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது.சமரி அதப்பத்து 

இலங்கை மற்றும் பாகிஸ்தான் மகளிர...</summary>
            <content type="html"><![CDATA[<p>பாகிஸ்தான் மகளிர் அணி முதல் ஒருநாள் போட்டியில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது.</p><h2>சமரி அதப்பத்து 
</h2><p>
இலங்கை மற்றும் பாகிஸ்தான் மகளிர் அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி ஹம்பந்தோதாவில் நடந்தது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b8ca1263-ee41-4231-a97b-d39bf957c4f6/26-6a62e2487b943.webp' />&nbsp;</p><p></p><p>
முதலில் ஆடிய இலங்கை அணி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 210 ஓட்டங்கள் எடுத்தது. </p><p>அணித்தலைவர் சமரி அதப்பத்து (Chamari Athapaththu) 46 ஓட்டங்களும், நிலக்ஷிகா 46 ஓட்டங்களும் எடுத்தனர். </p><h2>

பாகிஸ்தான் வெற்றி </h2><p>நஷ்ரா சந்து 3 விக்கெட்டுகளும், தஸ்மியா ருபாப் 2 விக்கெட்டுகளும், ஃபாத்திமா சனா, உம்-இ-ஹனி மற்றும் சயீதா அரூப் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ae346180-ccf2-40c9-aaa7-321411862ac6/26-6a62e247c93dd.webp' /></p><p>

பின்னர் ஆடிய பாகிஸ்தான் அணி 43 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 211 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது. </p><p>

குல் ஃபெரோஸா 78 (77) ஓட்டங்களும், சிட்ரா அமின் 57 ஓட்டங்களும் விளாசினர். கவிஷா தில்ஹாரி 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/18793008-8538-4788-bec7-dd6cd97079ac/26-6a62e24719748.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-24T03:43:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பில் பிறந்தநாள் விழாவில் பரபரப்பை ஏற்படுத்திய துப்பாக்கிச்சூடு - பொலிஸார் வெளியிட்ட தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/gun-shoot-in-mattakkuliya-birthday-party-1784861727"></link>
            <id>https://tamilwin.com/article/gun-shoot-in-mattakkuliya-birthday-party-1784861727</id>
            <summary type="text">வத்தளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பள்ளியாவத்தை, மட்டக்குளி பாலத்திற்கு அருகில் நேற்றிரவு (23) இடம்பெற்ற துப்பாக்கிச்சூடு&amp;nbsp;சம்பவம் தொடர்பாக பொலிஸார்...</summary>
            <content type="html"><![CDATA[<p>வத்தளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பள்ளியாவத்தை, மட்டக்குளி பாலத்திற்கு அருகில் நேற்றிரவு (23) இடம்பெற்ற துப்பாக்கிச்சூடு&nbsp;சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலும் பல தகவல்களை வெளியிட்டுள்ளனர். </p><p>குழந்தையொன்றின் பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்டிருந்த ஒருவரை குறிவைத்து இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>இந்த சம்பவத்தில் ஒருவர் காயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்திருந்தார்.</p><p></p><h2>விசாரணையில் வெளியான தகவல்</h2><p>இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட விசாரணையில், கொலைக்குற்றச்சாட்டுக்கு உள்ளான 'மட்டக்குளிய குடு ரொஷன்' என்ற போதைப்பொருள் கடத்தல்காரரை குறிவைத்து இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8e836449-438e-4cdb-9f75-1fce1e8c67c6/26-6a62d844db0e8.webp' /></p><p>

ரொஷனின் சகோதரர்களில் ஒருவரின் குழந்தையின் பிறந்த நாள் விழாவின்போதே ​​நேற்று இரவு சுமார் 9.40 மணியளவில் தலையில் முக்காடு அணிந்த ஒருவர் காரில் வந்து மண்டபத்திற்குள் புகுந்து துப்பாக்கிச்சூடு மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகின்றது.</p><p>இருப்பினும், குறி தவறியதால் ரொஷனுக்கு அருகில் இருந்த ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><h2>போதைப்பொருள் கடத்தல்</h2><p>இதன்போது துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த பொரள்ளையை சேர்ந்த 39 வயதுடைய நபர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/58ff3d35-e313-4f6c-85f3-a9e154de2e22/26-6a62d9a86af72.webp' /></p><p>கைத்துப்பாக்கி ரக துப்பாக்கியை கொண்டு இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>இரண்டு போதைப்பொருள் கடத்தல் குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறின் விளைவாக இந்த கொலை நடந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.</p><p>
</p><p>இச்சம்பவம் குறித்து வத்தளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-24T03:43:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பு போர்ட் சிட்டியில் கடத்தப்பட்ட சீன நாட்டவரின் உடல் கண்டெடுப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/body-chinese-national-kidnapped-colombo-port-city-1784864553"></link>
            <id>https://jvpnews.com/article/body-chinese-national-kidnapped-colombo-port-city-1784864553</id>
            <summary type="text">கொழும்பு போர்ட் சிட்டி (துறைமுக நகர) வளாகத்தில் இரண்டு சீனக் குழுக்களுக்கு இடையே ஏற்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் மோதல், கடத்தல் மற்றும் சீன நாட்டவர் ஒர...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு போர்ட் சிட்டி (துறைமுக நகர) வளாகத்தில் இரண்டு சீனக் குழுக்களுக்கு இடையே ஏற்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் மோதல், கடத்தல் மற்றும் சீன நாட்டவர் ஒருவரின் உடலம் கண்டெடுக்கப்பட்டமை தொடர்பில் காவல்துறையினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p>
</p><p></p><p>இந்தச் சம்பவம் தொடர்பில் இரண்டு சீன நாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.
</p><p>
முன்னதாக, கொழும்பு போர்ட் சிட்டி வளாகத்தில் கடந்த புதன்கிழமை (22) இரவு இடம்பெற்ற கடத்தல் சம்பவத்தைத் தொடர்ந்து, கடத்தப்பட்ட சீன நாட்டவர் ஒருவரின் உடலம் எஹெலியகொட - கரந்தன பகுதியின் வனப்பகுதியிலிருந்து கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. </p><p>இலங்கையில் இயங்கும் சீனக் குழுக்களுக்கு இடையிலான மோதலே இந்தச் சம்பவத்திற்குக் காரணம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.
</p><p>
காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணைகளின்படி, கடந்த புதன்கிழமை (22) இரவு 11:00 மணியளவில் மூன்று சீன நாட்டவர்கள் வாடகைக்கு அமர்த்தப்பட்ட சிற்றுந்தில் கொழும்பு போர்ட் சிட்டிக்கு வருகை தந்துள்ளனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/56fa28df-071d-4961-be29-b0abac1aca26/26-6a62df2a84422.webp' /></p><p>அவர்கள் அங்கிருந்த தொங்கு பாலத்தில் மீன்பிடித்துக் கொண்டிருந்த வேளையில், நேற்று வியாழக்கிழமை (23) அதிகாலை 2:00 மணி முதல் 3:00 மணிக்கு இடைப்பட்ட காலத்தில் கறுப்பு நிற வேனில் வந்த சுமார் 20 பேர் அடங்கிய சீனக் குழுவினர் அவர்களைச் சூழ்ந்து கொண்டனர்.
</p><p>
குறித்த மூவரையும் துப்பாக்கிகளைக் காட்டி அச்சுறுத்திய அந்தக் குழுவினர், அவர்களின் கை, கால்களைக் கட்டி, முகங்களை மூடி கொடூரமாகத் தாக்கியுள்ளனர். தாக்குதலுக்குப் பிறகு, இருவரைப் பலவந்தமாகக் கறுப்பு நிற வேனிலும், 'ஹாவோ சோங்' என அடையாளம் காணப்பட்ட மூன்றாவது நபரை வேறொரு வாகனத்திலும் கடத்திச் சென்றுள்ளனர்.</p><p>

கடத்தப்பட்ட இரண்டு சீன நாட்டவர்களும் போர்ட் சிட்டி வளாகத்திலுள்ள வாகனத் தரிப்பிடப் பகுதியில் வாகனத்துடனேயே கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் கடத்தல்காரர்களால் கைவிட்டுச் செல்லப்பட்டனர். </p><p>அவர்கள் தங்களைச் சுயமாக விடுவித்துக்கொண்டு, தங்களது நண்பர்கள் மூலம் கொழும்பு துறைமுகக் காவல்துறையை அணுகி அதிகாலை 5:00 மணியளவில் முறைப்பாடு அளித்துள்ளனர்.</p><p>

இதன் பின்னர், நேற்று பிற்பகல் எஹெலியகொட - கரந்தன வனப்பகுதியில் கை, கால்கள் கட்டப்பட்டு, கண்கள் மூடப்பட்ட நிலையில் படுகாயங்களுடன் ஒருவரின் உடலம் மீட்கப்பட்டது. </p><p>அத்துடன் இந்த உடலத்தை மறைப்பதற்காக அதன் மீது கற்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.

தாக்குதலில் தப்பிய இரண்டு சீன நாட்டவர்களும் சம்பவ இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு உடலத்தைப் பார்வையிட்டதில், அது கடத்தப்பட்ட 'ஹாவோ சோங்' என்பவரின் உடலம்தான் என்பதை உறுதிப்படுத்தியுள்ளனர்.</p><p>

உடலம் கண்டெடுக்கப்பட்ட பகுதிக்கு அருகில், ஹாவோ சோங்கைக் கடத்தப் பயன்படுத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் வாகனம் ஒன்றைக் காவல்துறையினர் மீட்டுள்ளனர்.</p><p>

இதற்கிடையில், இரண்டு சீன நாட்டவர்கள் கடத்திச் செல்லப்பட்டுக் கைவிடப்பட்ட கறுப்பு நிற சிற்றுந்தைச் சோதனையிட்டதில், குண்டுகள் நிரப்பப்பட்ட Glock 44 ரக அரை-தானியங்கி துப்பாக்கி (Semi-automatic pistol) மற்றும் வோக்கி-டோக்கி (Walkie-talkie) சாதனம் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
</p><p>
குறித்த வேன் ஹம்பாந்தோட்டையைச் சேர்ந்த ஒருவரது பெயரிலும், பாதிக்கப்பட்டவர்கள் பயணித்த சிற்றுந்து கொழும்பு 05-இல் உள்ள நிறுவனமொன்றின் பெயரிலும் பதிவு செய்யப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
</p><p>
காயமடைந்த இரு சீன நாட்டவர்களும் கொழும்பிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் இலங்கையிலுள்ள சீனத் தூதரகம் தீவிரக் கவனம் செலுத்தி வருகிறது. </p><p>உண்மைகளை விரைவாகக் கண்டறிந்து, சீன நாட்டவர்களின் பாதுகாப்பு மற்றும் சட்டப்பூர்வ உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் முறையான விசாரணைகளை முன்னெடுக்குமாறு இலங்கை காவல்துறையைக் கேட்டுக்கொண்டுள்ளது.
</p><p>
அத்துடன், இலங்கையிலுள்ள சீன நாட்டவர்கள் பாதுகாப்பு விழிப்புடன் இருக்குமாறும் தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-24T03:42:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ். செம்மணி புதைகுழியில் மழை அங்கியுடன் சிறுவனின் எலும்புக்கூடு கண்டுபிடிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/boy-discovered-in-chemmani-burial-ground-jaffna-1784863672"></link>
            <id>https://jvpnews.com/article/boy-discovered-in-chemmani-burial-ground-jaffna-1784863672</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழியில் முன்னெடுக்கப்பட்டு வரும் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் போது, மழை அங்கியை (Raincoat) ஒத்த ஆடையுடன் காணப்பட்ட ...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழியில் முன்னெடுக்கப்பட்டு வரும் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் போது, மழை அங்கியை (Raincoat) ஒத்த ஆடையுடன் காணப்பட்ட சிறுவன் ஒருவரின் எலும்புக்கூடு அடையாளம் காணப்பட்டுள்ளதாக சட்டத்தரணி வி.எஸ். நிரஞ்சன் தெரிவித்துள்ளார்.</p><p>செம்மணி மனிதப் புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளை 56 நாட்களுக்கு முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது.</p><p> அதன் அடிப்படையில், அகழ்வுப் பணிகளின் 41ஆவது நாளான நேற்று (23) மேலும் 7 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டன.
</p><p>
இதனுடன், ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட எலும்புக்கூடுகளில் 9 எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bf9a3079-d019-4ca4-8dbf-9d3fd86de6a9/26-6a62dbb9e1bb4.webp' /></p><p> மேலும், நேற்று இடம்பெற்ற அகழ்வின் போது மூன்று எலும்புக் குவியல்கள், சில ஆணிகள் மற்றும் சிமெந்து துண்டு ஒன்றும் கண்டெடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
</p><p>
இதுவரை செம்மணி மனிதப் புதைகுழியில் முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டங்கள் என மொத்தம் 95 நாட்கள் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. </p><p>இதன் போது மொத்தம் 478 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவற்றில் 464 எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
</p><p>
இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சட்டத்தரணி வி.எஸ். நிரஞ்சன், 467ஆவது எலும்புக்கூடு இதுவரை கண்டறியப்பட்டவற்றிலிருந்து முற்றிலும் மாறுபட்ட அம்சங்களைக் கொண்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
</p><p>
அவரின் கூற்றுப்படி, குறித்த எலும்புக்கூடு சவப்பெட்டியின் அடையாளங்களுடன் காணப்படுவதோடு, மழைக்காலத்தில் பயன்படுத்தப்படும் மழை அங்கியை ஒத்த ஆடையும், கால்பகுதியில் காலுறைகளும் (Socks) இருப்பது அவதானிக்கப்பட்டுள்ளது.</p><p>

இதன் காரணமாக, அந்த உடல் சட்டரீதியாக அடக்கம் செய்யப்பட்டதா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகவும், இது தொடர்பாக நீதிமன்றம் மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளும் என்றும் அவர் தெரிவித்தார்.</p><p>

மேலும், இந்தக் கண்டுபிடிப்பு தொடர்பான விரிவான தகவல்களை இன்று (24) நீதிமன்ற நடவடிக்கைகளுக்குப் பின்னர் தெளிவாக வெளியிட முடியும் என்றும் சட்டத்தரணி வி.எஸ். நிரஞ்சன் குறிப்பிட்டார்.</p>]]></content>
            <updated>2026-07-24T03:28:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறைச்சாலை அதிகாரிகள் தொடர்பில் அதிர்ச்சித் தகவல்கள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/medical-reports-shows-prison-officers-ill-1784863282"></link>
            <id>https://tamilwin.com/article/medical-reports-shows-prison-officers-ill-1784863282</id>
            <summary type="text">சிறைச்சாலைகளில் பணியாற்றி வரும் ஆண், பெண் அதிகாரிகள் பலருக்கு உடல்நலக் குறைபாடுகள் காணப்படுவதாக அதிர்ச்சித் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
சிறைச்சாலை திண...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிறைச்சாலைகளில் பணியாற்றி வரும் ஆண், பெண் அதிகாரிகள் பலருக்கு உடல்நலக் குறைபாடுகள் காணப்படுவதாக அதிர்ச்சித் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
</p><p>சிறைச்சாலை திணைக்களத்தின் ஆண் அதிகாரிகளில் 77 வீதமானோருக்கும், பெண் அதிகாரிகளில் 56 வீதமானோருக்கும் உடலியல் பலவீனங்கள் மற்றும் உடல்நலக் குறைபாடுகள் காணப்படுவதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>2025 ஆம் ஆண்டிற்கான&nbsp;அறிக்கை</h2><p>
</p><p>சிறைச்சாலை திணைக்களத்தின் 2025 ஆம் ஆண்டிற்கான செயல்திறன் குறித்த அறிக்கையில் இந்த அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p>
</p><p>தொற்றா நோய்கள் பரவல் குறித்து நடத்தப்பட்ட மருத்துவ முகாமில் கண்டறியப்பட்ட இந்த நிலைமை, ஒரு தீர்மானமிக்க அபாயகரமான சூழல் என தணிக்கை அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dcd7817f-f223-412d-a94d-f05a799046d3/26-6a62da33d395e.webp' /></p><p>
</p><p>ஆண் சிறைச்சாலை அதிகாரிகளில் சுமார் 29% பேர் புகைபிடிக்கும் பழக்கம் கொண்டவர்களாகவும், 26% பேர் வெற்றிலை/பாக்கு உபயோகிப்பவர்களாகவும் உள்ளனர். பெண் அதிகாரிகளில் 5% பேர் பாக்கு உபயோகிக்கின்றனர்.</p><p>
ஆண் அதிகாரிகளிடையே மது அருந்தும் பழக்கம் மிக அதிகளவில் காணப்படுகிறது.</p><p></p><h2>தொற்றா நோய்கள் பரவல்&nbsp;</h2><p> இத்தகைய பழக்கவழக்கங்கள் காரணமாக இதய நோய்கள், வளர்சிதை மாற்றக் கோளாறுகள் மற்றும் வாய் புற்றுநோய் போன்ற நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது.</p><p>
ஆண் அதிகாரிகளில் 28% பேருக்கும், பெண் அதிகாரிகளில் 16% பேருக்கும் உயர் இரத்த அழுத்தம் உள்ளது.
</p><p>ஆண் மற்றும் பெண் அதிகாரிகளில் தலா 14% பேர் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
</p><p>ஆண் அதிகாரிகளில் 13% பேருக்கு கொலஸ்ட்ரால் பாதிப்பு இருப்பதுடன், சிலருக்கு சிறுநீரகச் செயலிழப்பு நிலைகளும் கண்டறியப்பட்டுள்ளன.</p><p>
சிறைச்சாலை திணைக்கள அதிகாரிகளின் சுகாதார நிலையை மேம்படுத்தும் நோக்கில், கடந்த ஆண்டின் (2024) ஆகஸ்ட் மாதம் 12 மற்றும் 13 ஆம் திகதிகளில் தொற்றா நோய்கள் தொடர்பான இந்தச் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-24T03:21:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[ட்ரம்பின் புதிய வரி கொள்கை அமுல் ; இலங்கை உள்ளிட்ட நாடுகளின் 10% வரி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/trump-new-tax-policy-come-effect-10-tax-sri-lankan-1784862532"></link>
            <id>https://canadamirror.com/article/trump-new-tax-policy-come-effect-10-tax-sri-lankan-1784862532</id>
            <summary type="text">அமெரிக்காவின் தற்காலிக 10% உலகளாவிய இறக்குமதி வரி நடைமுறை காலாவதியாகும் நிலையில், இலங்கை உள்ளிட்ட 60-க்கும் மேற்பட்ட வர்த்தக கூட்டாளி நாடுகளிலிருந்து ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவின் தற்காலிக 10% உலகளாவிய இறக்குமதி வரி நடைமுறை காலாவதியாகும் நிலையில், இலங்கை உள்ளிட்ட 60-க்கும் மேற்பட்ட வர்த்தக கூட்டாளி நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு புதிய இறக்குமதி வரிகளை விதிக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான நிர்வாகம் அறிவித்துள்ளது.
</p><p>
கட்டாய உழைப்புத் தடைச் சட்டங்கள் (Forced Labor Laws) போதுமான அளவில் அமுல்படுத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டுகள் மற்றும் அமெரிக்காவின் வர்த்தக நலன்களைப் பாதுகாக்க வேண்டிய அவசியம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்த புதிய வரி நடைமுறை அறிமுகப்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c13edde8-309c-44c4-bc0e-ce7c561b6d94/26-6a62d7461d1c2.webp' /></p><p>புதிய அறிவிப்பின்படி, இலங்கையிலிருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் அனைத்து பொருட்களுக்கும் 10% இறக்குமதி வரி விதிக்கப்படவுள்ளது. </p><p>இதேபோன்று ஆர்ஜென்டினா, பங்களாதேஷ், பிரித்தானியா, கம்போடியா, கனடா, ஈக்வடோர், குவாத்தமாலா, ஒண்டுராஸ், இந்தியா, இந்தோனேசியா, ஜோர்தான், மலேசியா, மெக்சிகோ, பாகிஸ்தான், டிரினிடாட் மற்றும் டொபாகோ உள்ளிட்ட பல நாடுகளின் பொருட்களுக்கும் 10% வரி விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
மேலும், சீனா உள்ளிட்ட 38 நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 12.5% இறக்குமதி வரி விதிக்க அமெரிக்க நிர்வாகம் தீர்மானித்துள்ளது. அதேவேளை, ஐரோப்பிய ஒன்றியம் உட்பட மொத்தம் 60 வர்த்தக பங்காளி நாடுகளின் பொருட்களுக்கும் இந்த புதிய வரி நடைமுறை அமுல்படுத்தப்படவுள்ளது.
</p><p>
அமெரிக்காவின் வர்த்தகப் பற்றாக்குறையை குறைக்கும் நோக்கில் கடந்த ஆண்டு தேசிய அவசரகாலச் சட்டத்தின் கீழ் 10% முதல் 50% வரையிலான "பரஸ்பர இறக்குமதி வரிகள்" (Reciprocal Tariffs) அறிமுகப்படுத்தப்பட்டிருந்தன. </p><p>எனினும், அந்த வரி நடைமுறையை அமெரிக்க உயர்நீதிமன்றம் கடந்த பெப்ரவரி மாதம் செல்லுபடியாகாது எனத் தீர்ப்பளித்து ரத்து செய்தது.

அதனைத் தொடர்ந்து, இடைக்கால நடவடிக்கையாக 150 நாட்கள் காலத்திற்கு அனைத்து நாடுகளுக்கும் பொதுவாக 10% தற்காலிக இறக்குமதி வரியை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்திருந்தார். </p><p>அந்த தற்காலிக வரி நடைமுறை இன்று நிறைவடையும் நிலையில், அதற்குப் பதிலாக நாடுவாரியாக புதிய வரி அமைப்பை அமெரிக்க நிர்வாகம் அமுல்படுத்தியுள்ளது.</p><p>

இந்த புதிய நடவடிக்கை, அமெரிக்க உற்பத்தித் துறையை வலுப்படுத்துதல், வர்த்தகப் பற்றாக்குறையை கட்டுப்படுத்துதல் மற்றும் "உலகளாவிய வரி" தொடர்பான தனது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்தின் முக்கிய பொருளாதாரக் கொள்கை முயற்சிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
</p><p>
இதனிடையே, புதிய இறக்குமதி வரிகள் அமுலுக்கு வந்ததன் பின்னர் இலங்கை உள்ளிட்ட பல ஏற்றுமதி நாடுகளின் ஆடை, விவசாயம் மற்றும் உற்பத்திப் பொருட்கள் அமெரிக்க சந்தையில் எந்தளவு பாதிப்பை எதிர்கொள்ளும் என்பது குறித்து சர்வதேச வர்த்தக வட்டாரங்களில் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.</p>]]></content>
            <updated>2026-07-24T03:19:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழகத்தில் முதல் நாளில் மாஸ் வசூல் வேட்டை செய்துள்ள விஜய்யின் ஜனநாயகன்... எத்தனை கோடி தெரியுமா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/vijay-jananayagan-first-day-tamilnadu-bo-1784863101"></link>
            <id>https://cineulagam.com/article/vijay-jananayagan-first-day-tamilnadu-bo-1784863101</id>
            <summary type="text">ஜனநாயகன்படம் வந்தால் போதும், கடைசியாக எங்கள் நாயகனை திரையில் பார்த்தாலே போதும் என்ற எண்ணத்தில் இருந்த ரசிகர்களுக்கு நேற்றிலிருந்து கொண்டாட்டம் தான்.ஜு...</summary>
            <content type="html"><![CDATA[<h2>ஜனநாயகன்</h2><p>படம் வந்தால் போதும், கடைசியாக எங்கள் நாயகனை திரையில் பார்த்தாலே போதும் என்ற எண்ணத்தில் இருந்த ரசிகர்களுக்கு நேற்றிலிருந்து கொண்டாட்டம் தான்.</p><p>ஜுலை 23, தமிழகமே கொண்டாட்டத்தின் உச்சமாக இருந்தது. எச்.வினோத் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜு, பிரகாஷ் ராஜ், நரேன், பிரியாமணி, கௌதம் வாசுதேவ் மேனன் என பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8c2e55d8-8102-4710-9f6a-1d3c45c5ddd8/26-6a62d97e99f66.webp' /></p><p>அனிருத் இசையில் படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் செம தாறுமாறு வரவேற்பை பெற்றது.</p><p>முதல் நாளில் அனிருத், மமிதா பைஜு, ஜனநாயகன் பட தயாரிப்பாளர், கீர்த்தி சுரேஷ், அர்ஜுன் தாஸ், ஜீவா, த்ரிஷா என பல பிரபலங்கள் முதல் நாளே ரசிகர்களுடன் இணைந்து படம் பார்த்தார்கள்.</p><h2>பாக்ஸ் ஆபிஸ்</h2><p>சென்னையில் மட்டும் முதல் நாளில் ரூ. 6 கோடிக்கு மேலான வசூல் வேட்டை செய்துள்ளது ஜனநாயகன் திரைப்படம்.</p><p>தமிழகத்தில் முதல் நாள் செய்த கலெக்ஷன் குறித்த தகவல் வந்துள்ளது. முதல் நாளில் இப்படம் ரூ. 29 முதல் ரூ. 30 கோடி வரையிலான வசூல் வேட்டை செய்துள்ளது ஜனநாயகன்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/NXSeAKdyEA8" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-07-24T03:18:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை மக்களுக்கு மத்திய வங்கி எச்சரிக்கை! உடனடியாக பணத்தை மீளப் பெறுமாறு அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/central-bank-warns-sri-lankans-1784862090"></link>
            <id>https://tamilwin.com/article/central-bank-warns-sri-lankans-1784862090</id>
            <summary type="text">இலங்கையில் பல்வேறு பயிர்ச்செய்கை முறைகளுக்காக முதலீடு செய்வதாக கூறி மக்களிடமிருந்து வைப்புக்களை பெற்றுக்கொள்வது சட்டவிரோதமான செயலாகும் என மத்திய வங்கி...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் பல்வேறு பயிர்ச்செய்கை முறைகளுக்காக முதலீடு செய்வதாக கூறி மக்களிடமிருந்து வைப்புக்களை பெற்றுக்கொள்வது சட்டவிரோதமான செயலாகும் என மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
</p><p>
அத்தகைய நபர்களிடம் ஏமாற வேண்டாம் என மக்களிடம் கேட்டுக்கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
இலங்கை மத்திய வங்கியில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனை குறிப்பிட்டார்.</p><p></p><h2><b>பணம் வைப்புச் செய்யும் நடவடிக்கை</b></h2><p>பயிர்ச்செய்கை நிறுவனங்களின் பெயரில் மக்களிடமிருந்து பணம் வைப்புச் செய்யும் நடவடிக்கைகள் கடந்த காலங்களில் அதிகரித்து வருகிறது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5010ad4f-dffd-4ee7-afe7-750ac7250019/26-6a62d83959517.webp' /></p><p>வங்கி அல்லாத நிதி நிறுவன மேற்பார்வை பிரிவினால் சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. </p><p>யாராவது ஒருவர் மக்களிடம் பணம் கேட்டு, ஏதாவது பயிர்ச்செய்கைத் திட்டத்தை மேற்கொண்டு மாதாந்தம் ஒரு தொகையையோ அல்லது இறுதியில் ஒரு பெரிய தொகையையோ தருவதாகக் கூறினால், அது வெளிப்படையாக மக்களின் வைப்புக்களைப் பெற்றுக்கொள்வதாகும். 

அது சட்டவிரோதமானது. </p><p>அது தொடர்பில் எங்களுக்குத் தகவல்கள் கிடைத்ததும், நாங்கள் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளைத் தீர்மானித்து, அதற்கேற்ற செயற்பாடுகளை முன்னெடுத்து வருகிறோம்.
</p><p>
பயிர்ச்செய்கைத் திட்டங்களைச் செய்வது நல்லது. அது எவருடைய சொந்தப் பணத்தில் செய்யப்பட்டு வளர்ச்சியடைகிறது என்றால் அதில் யாருக்கும் எந்தப் பிரச்சினையும் இல்லை.</p><p></p><p> </p><h3><b>சுப்பர் மார்க்கெட்கள்</b></h3><p>அந்தத் திட்டங்கள் மூலம் பணம் ஈட்டி, மேலும் பல திட்டங்களை, சுப்பர் மார்க்கெட்கள் போன்றவற்றை ஆரம்பித்தாலும் பரவாயில்லை. 

ஆனால், அவர்கள் மக்களிடம் சென்று இவற்றில் முதலீடு செய்யுங்கள், நாங்கள் மாதாந்தம் பணம் தருகிறோம், இறுதியில் பெரிய பணம் தருகிறோம் கூறினால் அதில் சிக்கல் உள்ளது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2133e6c8-4353-4598-9eba-fc3cc6eb1f78/26-6a62d8f08f568.webp' /></p><p>எனவே, இவ்வாறானவர்கள் மக்களிடம் பணம் கேட்டால், அது ஒருவித அதிகாரப்பூர்வமற்ற முறையில் வைப்புப் பணத்தைப் பெற்றுக்கொள்ளும் முயற்சி என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். </p><p>

எனவே, குறிப்பாக இவ்வாறான விடயங்களில் சிக்கிக்கொள்ள வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்.
</p><p>
ஏற்கனவே பணம் வழங்கியவர்கள் இருந்தால், அவர்களுக்கு ஏதேனும் பிரச்சினை இருப்பின், முதலீடு செய்த பணத்தை உடனடியாக மீளக் கோருவதே சிறந்த வழியாகும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-24T03:16:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானியா, கனடா உட்பட 80 நாடுகளின் மீது இடியை இறக்கிய டொனால்ட் ட்ரம்ப்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/trump-tariffs-80-countries-1784862715"></link>
            <id>https://news.lankasri.com/article/trump-tariffs-80-countries-1784862715</id>
            <summary type="text">வெள்ளிக்கிழமை அதிகாலையுடன் காலாவதியாகவிருந்த 10 சதவீத உலகளாவிய சுங்கவரிக்கு மாற்றாக, அமெரிக்காவின் டசின் கணக்கான வர்த்தக நட்பு நாடுகள் மீது பரவலான புத...</summary>
            <content type="html"><![CDATA[<p>வெள்ளிக்கிழமை அதிகாலையுடன் காலாவதியாகவிருந்த 10 சதவீத உலகளாவிய சுங்கவரிக்கு மாற்றாக, அமெரிக்காவின் டசின் கணக்கான வர்த்தக நட்பு நாடுகள் மீது பரவலான புதிய சுங்கவரிகளை விதிக்க டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.</p><h2>80-க்கும் மேற்பட்ட</h2><p>
</p><p>அமெரிக்காவின் உச்ச நீதிமன்றத்தின் சவால்களுக்கு மத்தியிலும், தீவிரமான வர்த்தகக் கொள்கைகளை அமுல்படுத்துவதற்கான ட்ரம்பின் மிகச் சமீபத்திய முயற்சி இதுவென்றே கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c3db8020-e887-4178-85f6-1bbdd967e3f5/26-6a62d9cc9a44d.webp' /></p><p> </p><p>வெள்ளிக்கிழமை நள்ளிரவு 12:01 மணி முதல், பிரித்தானியா, மெக்சிகோ, கனடா, அவுஸ்திரேலியா, இந்தியா, இஸ்ரேல், சீனா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள 27 நாடுகள் உள்ளிட்ட 80-க்கும் மேற்பட்ட நாடுகளின் மீது அமெரிக்கா 10 சதவீதம் முதல் 12.5 சதவீதம் ​​சுங்க வரியை விதிக்கவுள்ளது.</p><p> ட்ரம்ப் விதித்த முந்தைய பல வரிகள் சட்டவிரோதமானவை என்று அமெரிக்க உச்ச நீதிமன்றம் அறிவித்ததை அடுத்து, பிப்ரவரியில் அவர் விதித்த 10 சதவீதப் பொதுவான வரியை தற்போதைய இந்த வரி விதிப்பு மாற்றி அமைக்கின்றது.</p><p></p><p> </p><p>மேலும், வியாழக்கிழமை பிற்பகல் அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி ஜேமிசன் கிரீரால் அறிவிக்கப்பட்ட இந்தப் புதிய வரிகள், கட்டாய உழைப்பில் ஈடுபடும் நாடுகளுக்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள 1974-ஆம் ஆண்டு வர்த்தகச் சட்டத்தின் 301-வது பிரிவின் கீழ் வரும் என்றே கூறுகின்றனர். </p><p>பிப்ரவரி மாத உச்ச நீதிமன்றத் தீர்ப்பு அறிவிக்கப்பட்ட உடனேயே, நியாயமற்ற வர்த்தக நடைமுறைகள் மீது நிரந்தர வரிகளை விதிப்பதற்காகத் தனது நிர்வாகம் அது குறித்து விசாரணை நடத்தும் என்று ட்ரம்ப் கூறியிருந்தார்.</p><h2>நியாயமற்ற நடைமுறை</h2><p> </p><p>இதனிடையே, அமெரிக்காவின் மிகப்பெரிய வர்த்தகப் பங்காளிகளில் ஒன்றான கனடா, கட்டாய உழைப்பைக் கொண்டு உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை இறக்குமதி செய்வதற்கு எதிரான நடவடிக்கைகளில் முன்னணியில் இருப்பதாகக் குறிப்பிட்டு, தங்களை இதில் குறிவைக்கக் கூடாது என்று உடனடியாகப் பதிலளித்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0343e1c7-a3c9-469e-a610-e13e2a004019/26-6a62d9cbdce8c.webp' /></p><p>
</p><p>அமெரிக்க வேலைவாய்ப்புகளையும் உற்பத்தியையும் பாதுகாக்கவும், வர்த்தப் பற்றாக்குறையைக் குறைக்கவும், அமெரிக்க வர்த்தப் பங்காளிகள் பின்பற்றுவதாக அவர் கருதும் நியாயமற்ற நடைமுறைகளைத் தடுக்கவும், இறக்குமதிகள் மீது விதிக்கப்படும் எல்லை வரிகளான சுங்க வரிகளை ஒரு முக்கியக் கருவியாக ட்ரம்ப் நீண்ட காலமாகவே கருதி வந்துள்ளார். </p><p>உண்மையில், அரசியலமைப்பின் கீழ் வரிகளை விதிக்கும் அதிகாரம் அமெரிக்க நாடாளுமன்றத்திற்கு மட்டுமே உள்ளது. மார்ச் மாதத்தில் ப்ரூக்கிங்ஸ் (Brookings) அமைப்பு மேற்கொண்ட சட்டப் பகுப்பாய்வின்படி, சமீபத்திய சுங்கவரி விதிப்புகள் 'பிரிவு 301'-ஐ அடிப்படையாகக் கொண்டுள்ளன; நீண்ட காலமாகவே சர்ச்சைக்குரியதாகக் கருதப்படும் இப்பிரிவு, இதுவரை மிகக் குறைவாகவே பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-24T03:10:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கைக்கு அமெரிக்கா வைத்த செக் - அதிர்ச்சியில் அநுர அரசு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/trump-to-impose-new-global-tariffs-including-sl-1784856673"></link>
            <id>https://ibctamil.com/article/trump-to-impose-new-global-tariffs-including-sl-1784856673</id>
            <summary type="text">அமெரிக்கா, இலங்கை உட்பட 60 நாடுகளின் பொருட்கள் மீது 10% மற்றும் 12.5% புதிய வரிகளை விதிக்கவுள்ளதாக ட்ரம்ப் நிர்வாகம் அறிவித்துள்ளது. இலங்கையிலிருந்து ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்கா, இலங்கை உட்பட 60 நாடுகளின் பொருட்கள் மீது 10% மற்றும் 12.5% புதிய வரிகளை விதிக்கவுள்ளதாக ட்ரம்ப் நிர்வாகம் அறிவித்துள்ளது. </p><p>இலங்கையிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 10% வரி விதிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது</p><p>ஆர்ஜென்டினா, பங்களாதேஷ், பிரித்தானியா, கம்போடியா, கனடா, ஈக்வடோர், குவாத்தமாலா, ஒண்டுராஸ், இந்தியா, இந்தோனேசியா, ஜோர்தான், மலேசியா, மெக்சிகோ, பாகிஸ்தான், இலங்கை, டிரினிடாட் மற்றும் டொபாகோ ஆகிய நாடுகளின் பொருட்களின் மீது அமெரிக்கா 10% வரியை விதிக்கவுள்ளது.</p><p></p><p> </p><h2>ட்ரம்பின் தேர்தல் வாக்குறுதி</h2><p>

இதுதவிர சீனா உள்ளிட்ட 38 நாடுகளுக்கு 12.5% வரியை விதிப்பதற்கு ட்ரம்ப் நிர்வாகம் தீர்மானித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/befe03c3-1c45-45d6-a724-f9b2e80c59f9/26-6a62d3fe20a36.webp' /></p><p> 

அத்துடன் ஐரோப்பிய ஒன்றியம் உட்பட 60 வர்த்தக பங்காளி நாடுகளின் பொருட்கள் மீது அமெரிக்கா இந்த புதியை வரியை அறிமுகப்படுத்துகின்றது. </p><p>

அமெரிக்க வர்த்தகப் பற்றாக்குறையைக் குறைக்கும் நோக்கில் கடந்த ஆண்டு தேசிய அவசரகாலச் சட்டத்தின் கீழ் விதிக்கப்பட்ட 10% முதல் 50% வரையிலான "பரஸ்பர" வரிகளை கடந்த பெப்ரவரி மாதம் அமெரிக்க உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. </p><p>

இதனை தொடர்ந்து, ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் உலகளாவிய வரி என்ற தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வெள்ளை மாளிகையின் புதிய முயற்சியாக இது அமைகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-24T03:03:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Manchu</name>
            </author>
            <title type="text"><![CDATA[சூட்டிங் ஸ்பாட்டில் விஜய் - திரிஷா என்ன பேசுவார்கள்? பிக்பாஸ் ஜனனி சொன்ன சீக்ரெட்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/janani-reveals-vijay-trisha-shooting-spot-talk-1784803354"></link>
            <id>https://manithan.com/article/janani-reveals-vijay-trisha-shooting-spot-talk-1784803354</id>
            <summary type="text">நடிகை த்ரிஷா மற்றும் விஜய் இருவரும் லியோ சூட்டிங் ஸ்பாட்டில் என்ன பேசுவார்கள் என்ற சீக்ரெட்டை பிக் பாஸ் ஜனனி கூறியுள்ளார்.முதலமைச்சர் விஜய், த்ரிஷாமுத...</summary>
            <content type="html"><![CDATA[<p>நடிகை த்ரிஷா மற்றும் விஜய் இருவரும் லியோ சூட்டிங் ஸ்பாட்டில் என்ன பேசுவார்கள் என்ற சீக்ரெட்டை பிக் பாஸ் ஜனனி கூறியுள்ளார்.</p><h2>முதலமைச்சர் விஜய், த்ரிஷா</h2><p>முதலமைச்சர் விஜய் நடித்த கடைசி படமான ஜனநாயகன் நேற்று வெளியாகி ஒட்டுமொத்த மக்களையும் குஷியிலும், சோகத்திலும் ஆழ்த்தியது.</p><p>இந்நிலையில் பிக் பாஸ் ஜனனி அளித்துள்ள பேட்டி ஒன்றில், லியோ படத்தில் நடிக்கும் போது தன்னுடைய அனுபவத்தை குறித்து பேசியுள்ளார். அதுமட்டுமின்றி விஜய், த்ரிஷா என்ன பேசுவார்கள் என்பதையும் கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ef10b630-845d-40f8-89ad-2c79b53e6f3d/26-6a621c717aece.webp' />&nbsp;&nbsp;</p><p>
</p><p>ஜனனி கூறுகையில், ஆஹா... இரண்டு பேருமே ஜாலியாக பேசுவாங்க... பெரும்பாலான நேரங்கள் எனக்கு வரும் சீன்களுக்கெல்லாம் நான் நோட் பண்ணி இருக்கிறதுனால, நான் ஏதாவது சொன்னால் சாருக்கு புரியும்.</p><p>ஆனால் த்ரிஷா மேம்க்கு கொஞ்சம் கம்மியா புரியும். அப்போ அவங்க என்ன சொன்னாங்க? என்று விஜய் சாரிடம் கேட்பார்கள். சார் சொல்வாங்க... படப்பிடிப்பு தளத்தில் அவங்க கொடுக்கிற ரியாக்ஷன் எல்லாம் அழகா இருக்கும்.</p><p><br></p><p>விஜய் சார், திரிஷா மேம் ரெண்டு பேரும் எப்போ செட்டுக்கு வந்தாலும் அந்த இடமே ஒரு வேற மாதிரியான எனர்ஜியா மாறிரும். அவங்க ஹாய் அப்படின்னு சொல்லி பேசினாலே நமக்கும் அந்த எனர்ஜி வந்துரும்.</p><p>
</p><p>இருவரும் தனியா பேசி பார்த்தது இல்லை... எல்லாரும் ஒன்றாக இருக்கும் போது தான் பேசுவாங்க... தனியாக பேசுறதே குறைவு தான்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c00508c2-12b5-4608-b619-31c9d341b6f9/26-6a621c70be18a.webp' /><br></p><p>ஆனால் ஏதாவது சார் சொன்னா எங்ககிட்ட கேட்பாங்க... இப்ப சார் என்கூட இருந்து பேசி ஏதாவது ஜாலியா பேசிட்டு இருந்தா, "என்ன சார் சொல்றாரு?" அந்த மாதிரி ஜாலியா கேப்பாங்க. </p><p>அவங்களோட சீன் வரும்போது நடிச்சு, அந்த சீன் ரிலேட்டிவா ஏதாவது பேசுவாங்க. கேம் ஏதாவது இருந்ததா என்ற கேள்விக்கு, அதுக்கெல்லாம் டைம் கிடைக்கவில்லை என்று சிரித்துக் கொண்டு ஜனனி பதில் அளித்துள்ளார். ஏன்னா எல்லா சீனும் த்ரில் த்ரிலாதான் போயிட்டு இருந்தது என்று தெரிவித்துள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td><i>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் <a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள் <a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"><b>FOLLOW NOW</b></a>&nbsp; &nbsp;&nbsp;<br></i></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-24T02:58:48+00:00</updated>
        </entry>
    </feed>
