<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-09-11T20:37:45+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜனாதிபதிக்கு எதிர்ப்பு ; தேசியக் கொடியுடன் போராட்டத்தில் குதித்த பொதுஜன பெரமுனவின் முன்னாள் உறுப்பினர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/former-member-joins-the-protest-with-national-flag-1789154193"></link>
            <id>https://jvpnews.com/article/former-member-joins-the-protest-with-national-flag-1789154193</id>
            <summary type="text">ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று(12) பொலன்னறுவையில் நடைபெறவுள்ள விவசாயி மாநாட்டிற்கு எதிர்ப்புத் தெரிவித்து, இலங்கை பொதுஜன பெரமுனவின் மு...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று(12) பொலன்னறுவையில் நடைபெறவுள்ள விவசாயி மாநாட்டிற்கு எதிர்ப்புத் தெரிவித்து, இலங்கை பொதுஜன பெரமுனவின் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர்&nbsp; நேற்று (11) நண்பகல் முதல் ஹிங்குராக்கொட வர்த்தக வளாகத்தின் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.</p><p>
</p><p></p><p>ரஜஎல கம், மின்னேரிய பகுதியைச் சேர்ந்த முன்னாள் பிரதேச சபை உறுப்பினரே இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/60b65962-ad30-40a4-be40-215dc340baf1/26-6aa4539335142.webp' /></p><p>வீட்டுவசதி மேம்பாட்டு பிரதி அமைச்சர் டி.பி. சரத்தின் கட்டளைகள் மற்றும் அறிவுறுத்தல்களுக்கு அமைய, பிராந்தியத்திலுள்ள அரச நிறுவனங்களின் அதிகாரிகளை குறித்த விவசாயி மாநாட்டில் பங்கேற்கச் செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ரவீந்திர லக்மால் பண்டார தெரிவித்துள்ளார்.
</p><p>
இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையிலேயே குறித்த முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் தேசியக் கொடியை ஏந்தியவாறு வர்த்தக வளாகத்தின் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-11T20:26:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[மகளிர் ஆசிய கிண்ணம் ; இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது இலங்கை மகளிர் அணி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/women-s-asia-cup-sri-lanka-women-team-enters-final-1789158362"></link>
            <id>https://jvpnews.com/article/women-s-asia-cup-sri-lanka-women-team-enters-final-1789158362</id>
            <summary type="text">மகளிர் ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் பாகிஸ்தான் மகளிர் அணியை வீழ்த்தி இலங்கை மகளிர் அணி இறுதிப் போட்டிக்கு தகுதிப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>மகளிர் ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் பாகிஸ்தான் மகளிர் அணியை வீழ்த்தி இலங்கை மகளிர் அணி இறுதிப் போட்டிக்கு தகுதிப்பெற்றுள்ளது.</p><p></p><p> 

டுபாயில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இலங்கை மகளிர் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது. </p><p>

இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் மகளிர் அணி 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 130 ஓட்டங்களை பெற்றது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ec02c37c-a894-4c9c-92a5-dd390808a8dd/26-6aa463dc05e60.webp' /></p><p>துடுப்பாட்டத்தில் பாகிஸ்தான் மகளிர் அணி சார்பில் அணியின் தலைவி Fatima Sana ஆட்டமிழக்காமல் அதிகபட்சமாக 47 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். </p><p>

பந்து வீச்சில் இலங்கை மகளிர் அணி சார்பில் Chamari Athapaththu மற்றும் Chamudi Praboda தலா 02 விக்கெட்டுக்களை வீழ்த்தினர். </p><p>

பின்னர் வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை மகளிர் அணி 18.4 ஓவர்கள் நிறைவில் 06 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.</p><p> 

துடுப்பாட்டத்தில் இலங்கை மகளிர் அணி சார்பில் Harshitha Samarawickrama அதிகபட்சமாக 36 ஓட்டங்களையும், Kavisha Dilhari 33 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். </p><p>

பந்து வீச்சில் பாகிஸ்தான் மகளிர் அணி சார்பில் Fatima Sana 04 விக்கெட்டுக்களை வீழ்த்தினார். </p><p>

இதற்கமைய இந்த தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய மகளிர் அணியும், இலங்கை மகளிர் அணியும் மோதவுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-11T20:26:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[இணையத்தில் தீயாய் பரவும் செல்ஃபி ; சிற்றூந்து பந்தயப் பயிற்சி த்ரிஷாவும் வருகிறாரா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/selfie-spreading-wildfire-online-trisha-joining-1789149290"></link>
            <id>https://jvpnews.com/article/selfie-spreading-wildfire-online-trisha-joining-1789149290</id>
            <summary type="text">நடிகர் அஜித்குமாரின் சிற்றூந்து பந்தயப் பயிற்சி இடம்பெறும் சில்வர்ஸ்டோன் பகுதியில் நடிகை ராதிகா இருப்பது போன்ற காணொளி ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி...</summary>
            <content type="html"><![CDATA[<p>நடிகர் அஜித்குமாரின் சிற்றூந்து பந்தயப் பயிற்சி இடம்பெறும் சில்வர்ஸ்டோன் பகுதியில் நடிகை ராதிகா இருப்பது போன்ற காணொளி ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.</p><p></p><p>
</p><p>
இந்தநிலையில், நடிகை ராதிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை த்ரிஷாவுடன் எடுத்துக்கொண்ட செல்ஃபி புகைப்படம் ஒன்றையும் பகிர்ந்துள்ளார்.
</p><p>
இதனால், நாளை சில்வர்ஸ்டோனில் நடைபெறவுள்ள சிற்றூந்து பந்தயத்தை நடிகை த்ரிஷாவும் நேரில் பார்வையிடுவாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/85515a63-849a-4a15-b1e3-6c83503820e3/26-6aa4406c999a5.webp' /></p><p>

லண்டனில் உள்ள சில்வர்ஸ்டோனில் நடைபெறும் Michelin Le Mans Cup சிற்றூந்து பந்தயத்தை தமிழக முதலமைச்சர் விஜய் கொடியசைத்து ஆரம்பித்து வைக்கவுள்ளதாக Le Mans Cup நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
அதேவேளை, முதலமைச்சர் விஜய் மற்றும் நடிகை த்ரிஷா தொடர்பில் அண்மைக்காலமாக சமூக ஊடகங்களில் பல்வேறு கருத்துகளும் தகவல்களும் பரவி வருகின்றன.</p><p>

இந்தநிலையில், த்ரிஷா தொடர்பாக தற்போது வெளியாகியுள்ள இந்த தகவலும் சமூக ஊடகங்களில் பேசுபொருளாகியுள்ளது.
</p><p>
எனினும், நடிகை த்ரிஷா குறித்த சிற்றூந்து பந்தயத்தை நேரில் பார்வையிடவுள்ளதாக இதுவரை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல் எதுவும் வெளியாகவில்லை.</p><p></p>]]></content>
            <updated>2026-09-11T20:19:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[அட்லாண்டிக் பெருங்கடலில் சிறிய ரக விமானம் விழுந்து விபத்து ; ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/small-plane-crashes-sea-four-same-family-killed-1789157779"></link>
            <id>https://canadamirror.com/article/small-plane-crashes-sea-four-same-family-killed-1789157779</id>
            <summary type="text">அட்லாண்டிக் பஹாமாசில் சிறிய ரக தனியார் விமானம் ஒன்று கடலில் விழுந்து விபத்துக்குள்ளானதில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.

...</summary>
            <content type="html"><![CDATA[<p>அட்லாண்டிக் பஹாமாசில் சிறிய ரக தனியார் விமானம் ஒன்று கடலில் விழுந்து விபத்துக்குள்ளானதில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.
</p><p>
அட்லாண்டிக் பெருங்கடலில் அமைந்துள்ள கரீபியன் தீவு நாடான பஹாமாஸ், உலகின் பிரபலமான சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக விளங்குகிறது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/eadff236-6d36-4cd5-ace2-014e1017da0c/26-6aa46195524db.webp' /></p><p>இந்த நிலையில், அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தைச் சேர்ந்த 80 வயதான மரியோ லமர், அவரது 79 வயது மனைவி லில்லி லமர் மற்றும் அவர்களது பேரப்பிள்ளைகளான 28 வயதான சோபி சோசா, 22 வயதான கிறிஸ்டின் சோசா ஆகியோர் சிறிய ரக தனியார் விமானம் மூலம் பஹாமாசுக்கு சுற்றுலா சென்றிருந்தனர்.</p><p>விமானத்தை 40 ஆண்டுகள் விமானி அனுபவம் கொண்ட மரியோ லமர் இயக்கியுள்ளார்.

சுற்றுலாவை முடித்த பின்னர், கடந்த திங்கட்கிழமை மதியம் அண்ட்ரோஸ் தீவில் உள்ள விமான நிலையத்திலிருந்து நால்வரும் விமானத்தில் புளோரிடாவின் மியாமி நகரை நோக்கிப் புறப்பட்டுள்ளனர்.
</p><p>
விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே, அண்ட்ரோஸ் தீவிலிருந்து சுமார் 13 கிலோமீட்டர் தொலைவில் பறந்து கொண்டிருந்தபோது, திடீரென விமானியின் கட்டுப்பாட்டை இழந்து கடலில் விழுந்து விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
இந்த கோர விபத்தில் மரியோ லமர், அவரது மனைவி லில்லி லமர் மற்றும் அவர்களது பேரப்பிள்ளைகளான சோபி சோசா, கிறிஸ்டின் சோசா ஆகிய நால்வரும் உயிரிழந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/905ba790-23f9-49b0-a899-ceae059baf28/26-6aa46194a08f5.webp' /></p><p>

விபத்து தொடர்பில் தகவல் கிடைத்ததும் மீட்புக் குழுவினர் கடலில் விழுந்த விமானத்தையும் அதில் பயணித்தவர்களையும் தேடும் பணியில் ஈடுபட்டனர். </p><p>எனினும், மோசமான வானிலை காரணமாக மீட்புப் பணிகளில் தாமதம் ஏற்பட்டது.
</p><p>
இதனைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை முன்னெடுக்கப்பட்ட தீவிர தேடுதல் நடவடிக்கையில் நால்வரின் உடல்களும் கண்டுபிடிக்கப்பட்டன.
</p><p>
உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், விமானம் விபத்துக்குள்ளானதற்கான காரணம் தொடர்பில் அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-09-11T20:16:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[வாக்குகளை வாங்கினார்கள்… வாக்குறுதிகளை மறந்தார்கள்! சஜித் சரமாரி கேள்வி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sajith-hparliment-speech-1789156597"></link>
            <id>https://tamilwin.com/article/sajith-hparliment-speech-1789156597</id>
            <summary type="text">தற்போதைய அரசாங்கம் நாட்டின் 9 மாகாணங்களிலும் பொய்ப் பிரசாரப் பயணத்தை முன்னெடுத்து வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ குற்றம்சாட்டியுள்ளார்....</summary>
            <content type="html"><![CDATA[<p>தற்போதைய அரசாங்கம் நாட்டின் 9 மாகாணங்களிலும் பொய்ப் பிரசாரப் பயணத்தை முன்னெடுத்து வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ குற்றம்சாட்டியுள்ளார்.</p><p>

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற சந்திப்புகளின்போது, அப்பகுதி மக்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகள் வெளிச்சத்துக்கு வந்ததாக அவர் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.</p><h2>மக்களின் உரிமைகள்&nbsp;</h2><p>
</p><p>
கடந்த இரண்டு ஆண்டுகளில் அரசாங்கம் நாட்டுக்கு குறிப்பிடத்தக்க எந்தவொரு பணியையும் செய்யவில்லை எனவும், இந்த இரண்டு ஆண்டுகளும் வடக்கு, கிழக்கு உள்ளிட்ட ஒட்டுமொத்த நாட்டு மக்களின் உரிமைகள் பறிக்கப்பட்ட காலமாகவே அமைந்துள்ளதாகவும் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.</p><p>

மருதமடு, நிந்தவூர், கல்முனை, சாய்ந்தமருது, நாவிதன்வெளி மற்றும் சம்மாந்துறை உள்ளிட்ட பகுதிகளில் கல்வித்துறை பாதிக்கப்பட்டுள்ளதுடன், பல பாடசாலைகளில் அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகள்கூட இல்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fa788ad4-58dd-41d6-8d18-6745c74014f3/26-6aa4611e2e629.webp' /></p><p>
</p><p>
ஒலுவில் துறைமுகம், திருக்கோவில் மற்றும் கதிரவெளி பகுதிகளில் கடல் அரிப்பு அதிகரித்து வருவதாகவும், அதற்கான உரிய தீர்வு இதுவரை வழங்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
</p><p>
மயிலத்தமடு – மாதவனை மேய்ச்சல் தரை தொடர்பில் நீண்டகாலமாக கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டும் அரசாங்கம் இதுவரை உரிய பதிலை வழங்கவில்லை எனவும் சஜித் பிரேமதாஸ குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
திருக்கோவில், பனங்காடு மற்றும் நாவிதன்வெளி வைத்தியசாலைகளில் மருத்துவ உபகரணங்கள் மற்றும் மனித வளப் பற்றாக்குறை நிலவுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.</p><h2>சஜித் பிரேமதாஸ</h2><p>

கித்துல்உறுகாமம் நீர்த்தேக்கத் திட்டத்தின் ஊடாக 26 ஆயிரம் ஏக்கர் நிலத்தை விவசாய நிலமாக மாற்ற முடியும் என்ற போதிலும், வெளிநாட்டு உதவிகள் கிடைக்கத் தயாராக இருந்தும் அந்தத் திட்டம் இதுவரை ஆரம்பிக்கப்படவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.</p><p>

வாழைச்சேனை காகித ஆலையில் முன்னர் சுமார் 4 ஆயிரம் பேர் பணியாற்றிய நிலையில், தற்போது 250 பேர் மட்டுமே பணியாற்றுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c2f49772-8a59-4336-8489-bf1916b471ac/26-6aa4611ed8db9.webp' /></p><p>
தேர்தல் காலத்தில் வழங்கப்பட்ட அபிவிருத்தி வாக்குறுதிகளை அரசாங்கம் நிறைவேற்றவில்லை எனவும், மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களின் கடலோரப் பகுதிகளில் சட்டவிரோத கனிம மணல் அகழ்வு இடம்பெறுவதாகவும் சஜித் பிரேமதாஸ குற்றம்சாட்டியுள்ளார்.
</p><p>
மேலும், வடக்கு மற்றும் கிழக்கு மக்களிடம் வழங்கிய வாக்குறுதிகளை அரசாங்கம் உடனடியாக நிறைவேற்ற வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
</p><p>
மல்வத்து ஓயா திட்டத்தின் பயன்கள் உரிய பயனாளிகளுக்கு சென்றடைவதை உறுதி செய்வதுடன், நிலம், இழப்பீடு மற்றும் நிவாரணம் வழங்குவதற்கான முறையான பொறிமுறையையும் அரசாங்கம் உருவாக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
</p><p>
இதனிடையே, பெற்றோலியம், எரிபொருள் மற்றும் நீர் தொடர்பான கைத்தொழில்களை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் ஒழுங்குபடுத்தலின் கீழ் கொண்டுவரும் பிரேரணைக்கு தாம் ஆதரவளிப்பதாகவும் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
</p><p>
மக்களின் நலனை கருத்திற்கொண்டு இனியாவது அரசாங்கம் இவ்வாறான பிரேரணைகளை முன்வைத்து செயற்பட வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-11T20:14:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவில் விரைவில் யு.பி.ஐ. சேவை ; வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் மகிழ்ச்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/upi-service-coming-soon-us-non-resident-indians-1789156836"></link>
            <id>https://canadamirror.com/article/upi-service-coming-soon-us-non-resident-indians-1789156836</id>
            <summary type="text">இந்தியாவை தொடர்ந்து அமெரிக்காவிலும் விரைவில் யு.பி.ஐ. சேவை தொடங்கவுள்ளது. இதனால் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.&amp;nbsp;தேநீர் கடை ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியாவை தொடர்ந்து அமெரிக்காவிலும் விரைவில் யு.பி.ஐ. சேவை தொடங்கவுள்ளது. இதனால் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.&nbsp;</p><p>தேநீர் கடை முதல் பிரமாண்ட வணிக வளாகங்கள் வரை இன்று இந்தியர்களின் பாக்கெட்டு களில் பணத்திற்குப் பதிலாக மொபைல் போன்களே ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. </p><p>இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட ‘யு.பி.ஐ. எனப்படும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை முறை. இன்று கோடிக்கணக்கான மக்களின் அன்றாட வாழ்க்கையை எளிமையாக்கியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/06d3c2a5-974c-43f1-83ad-200a7a87a3f8/26-6aa45de584527.webp' /></p><p>

உலக நாடுகளே இந்தியாவின் இந்த அசுர வேக டிஜிட்டல் வளர்ச்சியை வியப்புடன் உற்று நோக்கி வருகின்றன.</p><p> இந்த நிலையில், இந்தியப் பொருளாதாரத்திற்கும், அமெரிக்காவில் வாழும் இந்தியர்களுக்கும் பெரும் மகிழ்ச்சி அளிக்கும் மாபெரும் அதிரடி அறிவிப்பு வெளியாகியுள்ளது.</p><p>சிங்கப்பூர், பிரான்ஸ் உள்ளிட்ட 11 நாடுகளைத் தொடர்ந்து, தற்போது உலகின் மிகப்பெரிய வல்லரசு நாடான அமெரிக்காவிலும் இந்தியாவின் யு.பி.ஐ. சேவை இந்த ஆண்டின் இறுதிக் குள் அதிகாரப்பூர்வமாக அறிமுகமாகவுள்ளது. </p><p>அமெரிக்காவின் பிரபல 'பேங்க் ஆப் அமெ ரிக்கா', அங்குள்ள முன்னணி பணப்பரிவர்த்தனை செயலியான 'ஸெல்லி' உடன் இந்தியா வின் யு.பி.ஐ. அமைப்பை இணைக்கும் பிரமாண்ட கூட்டுப்பரிசோதனை முயற்சியைத் தொடங்கியுள்ளது.
</p><p>
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க திட்டத்தின் மூலம், அமெரிக்காவில் வாழும் லட்சக்கணக்கான இந்தியர்கள் மற்றும் தகவல் தொழில்நுட்ப வல்லுனர்கள், இனி எவ்வித இடைத்தரகர்களும் இன்றி தங்களது வங்கிக் கணக்கில் இருந்தே நேரடியாக இந்தியாவில் உள்ள தங்களது குடும்பத்தினருக்கு நொடிப் பொழுதில் பணம் அனுப்ப முடியும்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/97e3f50f-5b9d-462c-baa6-0f9a45055731/26-6aa45de638a02.webp' /></p><p>கடந்த நிதியாண்டில் மட்டும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் மூலமாக இந்தியாவுக்கு சுமார் ரூ.13 லட்சம் கோடி (135 பில்லியன் டாலர்) பணம் அனுப்பப்பட்டுள்ளது. </p><p>இதில் அமெரிக்கா வில் இருந்து மட்டுமே சுமார் 3% லட்சம் கோடி (37 பில்லியன் டாலர்) அனுப்பப்பட்டு, இந்தி யாவிற்கு அதிகப் பணம் வரும் நாடாக அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.</p><p>

இந்த புதிய 'ஸெல்லி-யு.பி.ஐ.' இணைப்பு மூலம், வெளிநாட்டுப் பணப்பரிவர்த்தனை மிகவும் பாதுகாப்பானதாகவும், அசுர வேகத்திலும் மாறும் என்பதால் அமெரிக்க வாழ் இந்தியர்கள் சமூக வலைத்தளங்களில் தங்களது மகிழ்ச்சியைக் கொண்டாடி வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-09-11T20:00:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[சென்னை அணி பங்குகளை வாங்க தோனி முயற்சிக்கவில்லை: CSK நிர்வாகம் மறுப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/csk-team-deny-dhoni-bid-to-buy-a-stake-1789155643"></link>
            <id>https://news.lankasri.com/article/csk-team-deny-dhoni-bid-to-buy-a-stake-1789155643</id>
            <summary type="text">Csk Deny Dhoni Bid to Buy a Stake: CSK அணியின் பங்குகளை வாங்க தோனி முயற்சிக்கவில்லை என்று சென்னை நிர்வாகத்தின் மூத்த அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.சென்ன...</summary>
            <content type="html"><![CDATA[<p>Csk Deny Dhoni Bid to Buy a Stake: CSK அணியின் பங்குகளை வாங்க தோனி முயற்சிக்கவில்லை என்று சென்னை நிர்வாகத்தின் மூத்த அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.</p><h2>சென்னை அணி பங்குகளை வாங்க முயற்சித்த தோனி</h2><p>ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 முறை சாம்பியன் பட்டம் வென்று வெற்றிகரமான அணிகளில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது.</p><p> 2008ம் ஆண்டு முதல் சென்னை அணிக்காக தோனி விளையாடி வருகிறார். எம்.எஸ்.தோனிக்காக மட்டுமே கோடிக்கணக்கான ரசிகர்கள் CSK அணிக்கு ஆதரவளித்து வருகின்றனர்.</p><p> இந்நிலையில், சிஎஸ்கே அணியில் தோனி பங்குகளை வாங்க முயற்சித்ததாகவும், இந்த விவகாரத்தில் அணி நிர்வாகத்துடனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளர் என்.சீனிவாசன் அவர்களுடனும் மனக்கசப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/595970c8-c090-4396-a607-f8c56fbe6e15/26-6aa4593d576f5.webp' /></p><p>தோனி முதலில் 25% பங்குகளை வாங்க விரும்பியதாகவும். ஆனால் சிஎஸ்கே உரிமையாளர்கள் அவருக்கு 3% பங்குகளை வழங்க முன் வந்ததாகவும். அதன் பின்னர் தோனி 18% பங்குகளை கேட்ட நிலையில், அதிகபட்சமாக 5% வரை வழங்க முடியும் என்று உரிமையாளர் கூறி விட்டதாக தகவல் வெளியானது.</p><p> இதன் காரணமாக தோனி மற்றும் அணி உரிமையாளர்களிடையே மனக்கசப்பு ஏற்பட்டுள்ளதால், அடுத்த ஐபிஎல் தொடரில் தோனி அணியில் தொடர்வாரா&nbsp; என்றும் கேள்வி எழுப்பப்பட்டது.</p><h2> சென்னை அணி பங்குகளை வாங்க தோனி முயற்சிக்கவில்லை</h2><p>இந்நிலையில் தோனி சிஎஸ்கே அணியின் பங்குகளை வாங்க முயன்றதாக கூறப்படும் தகவலை அணி நிர்வாகம் மறுத்துள்ளது.</p><p>இது தொடர்பாக தோனியுடன் எந்தவொரு பேச்சுவார்த்தையும் நடத்தப்படவில்லை என்றும், தோனியும் இது குறித்து எங்களிடம் எதுவும் கேட்கவில்லை என்று CSK-வின உயர் அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f35781ad-46e0-4cb2-bfef-9d44cce557c7/26-6aa4593e0b8b3.webp' /></p><p> மேலும் என்.சீனிவாசனிடம் தோனி இது தொடர்பாக பேசியது குறித்த எந்த தகவலும் எங்களிடம் இல்லை என்றும் அவர் மறுத்துள்ளார்.</p><p>ஏற்கனவே சென்னையின் பங்குகளில் தோனி சிறிய அளவு தன் வசம் வைத்து இருப்பது குறிப்பிடத்தக்கது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள். &nbsp;&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-11T19:49:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்கா - இஸ்ரேலுக்கு அடிபணிய மாட்டோம்! – ஈரான் ஜனாதிபதி அதிரடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/us-israel-want-to-bully-us-but-we-won-t-kneel-1789155591"></link>
            <id>https://tamilwin.com/article/us-israel-want-to-bully-us-but-we-won-t-kneel-1789155591</id>
            <summary type="text">பிரதமர் நரேந்திர மோடியுடனான பேச்சுவார்த்தைகள், இந்தியா மற்றும் ஈரான் இடையேயான உறவை மேலும் வலுப்படுத்துவதற்கான புதிய வாய்ப்புகளை உருவாக்கும் என ஈரான் ஜ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரதமர் நரேந்திர மோடியுடனான பேச்சுவார்த்தைகள், இந்தியா மற்றும் ஈரான் இடையேயான உறவை மேலும் வலுப்படுத்துவதற்கான புதிய வாய்ப்புகளை உருவாக்கும் என ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் தெரிவித்துள்ளார்.</p><p>

BRICS உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தியா வந்துள்ள பெசெஷ்கியான், இந்திய மதத் தலைவர்கள், அறிவுஜீவிகள் மற்றும் தொழிலதிபர்களை சந்தித்துப் பேசினார்.</p><h2>&nbsp;புதிய வாய்ப்புகள்</h2><p> </p><p>அப்போது, இரு நாடுகளுக்கும் இடையே கலாசாரம், தொழில்நுட்பம், வர்த்தகம், அறிவியல் மற்றும் பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/33a73c92-0a3a-46c9-b9c8-bc3c59e9b2cc/26-6aa45af422a59.webp' /></p><p>
</p><p>
இந்திய அரசும் பிரதமர் நரேந்திர மோடியும் வழங்கிய சிறப்பான வரவேற்புக்கு நன்றி தெரிவித்த அவர், இந்தியாவுடனான உறவை மேலும் விரிவுபடுத்துவதற்கு ஈரான் தயாராக இருப்பதாகக் கூறினார்.
</p><p>
இதனிடையே, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்த பெசெஷ்கியான், ஈரானை அச்சுறுத்தும் முயற்சிகளுக்கு ஒருபோதும் அடிபணிய மாட்டோம் என தெரிவித்தார். 

பொதுமக்கள், பள்ளிகள் மற்றும் வைத்தியசாலைகள் மீது நடத்தப்படும் தாக்குதல்களையும் அவர் கண்டித்தார்.</p><h2>இருமுறை சந்திப்பு</h2><p>
</p><p>
மேலும், ஈரான் மக்கள் ஒருபோதும் சரணடைய மாட்டார்கள் என்றும், அனைத்து மனிதர்களுக்கும் சம உரிமைகள் கிடைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.</p><p>

இதற்கிடையில், பிரதமர் மோடியும் மேற்கு ஆசியாவில் நிலவும் பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தை மற்றும் தூதரக நடவடிக்கைகள் மூலமாக தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ce462c98-d719-4c36-ac62-92efe8dc95cd/26-6aa45af4cf0a5.webp' /></p><p>

பிராந்தியத்தில் நீடித்த அமைதி மற்றும் நிலைத்தன்மையை ஏற்படுத்த தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தையும் அவர் எடுத்துரைத்தார்.
</p><p>
மேலும், கடல் வழிச் சுதந்திரம், வர்த்தகம் மற்றும் கடற்படையினரின் பாதுகாப்பை உறுதி செய்வதன் முக்கியத்துவம் குறித்தும் இரு தலைவர்களும் ஆலோசித்தனர்.

மோடி மற்றும் பெசெஷ்கியான் இரண்டு வாரங்களுக்குள் இரண்டாவது முறையாக சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-11T19:48:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[உக்ரைன் போரில் உயிரிழந்த ரஷ்ய வீரர்களின் எண்ணிக்கை: பிரித்தானிய உளவுத்துறை தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/half-million-russian-soldiers-killed-in-ukraine-1789149788"></link>
            <id>https://news.lankasri.com/article/half-million-russian-soldiers-killed-in-ukraine-1789149788</id>
            <summary type="text">Half Million Russian Soldiers Killed in Ukraine War: உக்ரைன் ரஷ்யா போரில் இதுவரை அரை மில்லியனுக்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டு இருப்பதாக பிரித்தானிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>Half Million Russian Soldiers Killed in Ukraine War: உக்ரைன் ரஷ்யா போரில் இதுவரை அரை மில்லியனுக்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டு இருப்பதாக பிரித்தானிய உளவுத்துறை தகவல் தெரிவித்துள்ளது.</p><h2> அரை மில்லியன் ரஷ்ய வீரர்கள் உயிரிழப்பு</h2><p>
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினால் உக்ரைனுக்கு எதிராக தொடங்கப்பட்ட போரில் இதுவரை அரை மில்லியன்(5 லட்சம்) ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டு இருப்பதாக பிரித்தானிய உளவுத்துறை தகவல் தெரிவித்துள்ளது.</p><p> ரஷ்ய வீரர்களின் உயிரிழப்பும், போரினால் ரஷ்ய பொருளாதாரத்தில் அதிகரித்து வரும் அழுத்தமும் உக்ரைனை ரஷ்யாவின் கட்டுப்பாட்டிற்கு கீழ் கொண்டு வரும் ரஷ்ய அதிபர் புடினின் திட்டத்தில் எந்தவொரு மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/62e416d0-e912-4833-bf79-344e4a907ba5/26-6aa4425dcf2d9.webp' /></p><p> பிரித்தானிய ஆயுதப் படைகளின் தலைவர் ஏர் சீப் மார்ஷல் சர் ரிச்சர்ட் நைட்டன் வழங்கிய தகவலில், கடந்த 2022ம் ஆண்டு பிப்ரவரியில் தொடங்கிய போரில் காயமடைந்தவர்கள் உட்பட கிட்டத்தட்ட 1.5 மில்லியன் ரஷ்ய வீரர்கள் பாதிப்படைந்து இருப்பதாக தெரிவித்துள்ளார்.</p><p> இதில் மிகப்பெரிய இழப்பு 2023ம் ஆண்டு ஜனவரியில் ஏற்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார். அத்துடன் இந்த போர் நடவடிக்கையில், உக்ரைனின் 2% நிலப்பரப்பை மட்டுமே ரஷ்யா கைப்பற்றி இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2> நீண்ட கால போராக தொடரும் உக்ரைன் போர்</h2><p>ரஷ்ய வீரர்கள் கிட்டத்தட்ட 1660 நாட்களாக உக்ரைனுடன் சண்டையிட்டு வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a4f10c8b-3b2d-47bb-a2fc-67d1bf63bf12/26-6aa4425e828ed.webp' /></p><p> இதனால் முதல் மற்றும் இரண்டாம் உலக போரில் ரஷ்ய வீரர்கள் சண்டையிட்ட நாட்களை விட உக்ரைன் போரில் ரஷ்ய வீரர்கள் அதிக நாட்கள் சண்டையிட்டு வருகின்றனர் என்பது உறுதியாகியுள்ளது.</p><p> இந்த போரினால் ரஷ்யாவின் பணவீக்கம் புதிய உச்சத்தை தொட்டுள்ளது. உள்நாட்டு நுகர்வோரின் தேவை பலவீனமாகியுள்ளது.</p><p> நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் படுவேகமாக சரிந்துள்ளது. இந்த போர் நடவடிக்கை தொடர்ந்தால் அது நாட்டு மக்களின் எதிர்காலத்திற்கு பெரும் சுமையாக மாறிவிடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-11T19:35:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் குடும்பங்களின் கடன் விகிதத்தில் ஏற்பட்ட மாற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/statcan-says-debt-to-income-ratio-declined-1789143307"></link>
            <id>https://canadamirror.com/article/statcan-says-debt-to-income-ratio-declined-1789143307</id>
            <summary type="text">கனடாவில் குடும்ப வருமானத்தின் வளர்ச்சி கடனின் வளர்ச்சியை விட அதிகமாக இருந்ததால், இரண்டாவது காலாண்டில் கடன் மற்றும் வருமானத்திற்கு இடையிலான விகிதம் குற...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவில் குடும்ப வருமானத்தின் வளர்ச்சி கடனின் வளர்ச்சியை விட அதிகமாக இருந்ததால், இரண்டாவது காலாண்டில் கடன் மற்றும் வருமானத்திற்கு இடையிலான விகிதம் குறைந்துள்ளதாக கனடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
</p><p>செலவிடக்கூடிய வருமானத்துடன் ஒப்பிடுகையில், குடும்பக் கடன் சந்தைக் கடன் பருவகால சீரமைப்பின்படி முதல் காலாண்டில் 178.6 சதவீதமாக இருந்தது, இது இரண்டாவது காலாண்டில் 176.4 சதவீதமாகக் குறைந்துள்ளது. </p><p>
கனடிய குடும்பங்கள் செலவிடக்கூடிய ஒவ்வொரு 1 டொலர் வருமானத்திற்கும் சராசரியாக 1.76 டொலர் கடன் வைத்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2c3d84b5-32d7-4b27-8c21-90bc5542e5ae/26-6aa4290cedfec.webp' /></p><p> 
வருமானத்தில் அசல் மற்றும் வட்டி திருப்பிச் செலுத்துவதற்கான வீதம் 14.68 சதவீதத்திலிருந்து 14.52 சதவீதமாகச் சரிந்துள்ளது. </p><p>
நுகர்வோர் கடன், வீட்டு அடமானக் கடன் மற்றும் அடமானம் அல்லாத கடன்கள் அடங்கிய மொத்த குடும்பக் கடன் வாங்கும் அளவு, முதல் காலாண்டில் 34.4 பில்லியன் டொலராக இருந்த நிலையில், இரண்டாவது காலாண்டில் 29.4 பில்லியன் டொலராகக் குறைந்துள்ளது. </p><p>
அடமானக் கடன் வாங்கும் வீதம் 19.4 பில்லியன் டொலராக சரிந்துள்ளது. இது 2024-ஆம் ஆண்டின் முதல் காலாண்டின் பின்னர் பதிவான மிகக் குறைந்த அளவாகும். 
நுகர்வோர் கடன் உட்பட அடமானம் அல்லாத கடன்கள் வாங்கும் அளவு 10.0 பில்லியன் டொலராக குறைந்துள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-11T19:26:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவின் புதிய சாதனை ; நயகரா ஆற்றில் உருவாக்கப்பட்ட இயற்கை வாழ்விடங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/natural-habitats-along-canada-s-niagara-river-1789152185"></link>
            <id>https://canadamirror.com/article/natural-habitats-along-canada-s-niagara-river-1789152185</id>
            <summary type="text">கனடாவில் நயகரா ஆற்றின் கரையோர ஈரநிலங்களில் 75 சதவீதத்திற்கும் அதிகமானவை அழிவடைந்ததைத் தொடர்ந்து, மீள்சுழற்சி செய்யப்பட்ட கிறிஸ்துமஸ் மரங்கள் மற்றும் ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவில் நயகரா ஆற்றின் கரையோர ஈரநிலங்களில் 75 சதவீதத்திற்கும் அதிகமானவை அழிவடைந்ததைத் தொடர்ந்து, மீள்சுழற்சி செய்யப்பட்ட கிறிஸ்துமஸ் மரங்கள் மற்றும் மரக் கழிவுகளை ஆற்றுப் படுகையில் நிலைநிறுத்தி சுற்றுச்சூழல் அமைப்பை மீட்டெடுக்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.</p><p>

இந்தத் திட்டத்தின் மூலம், நயகரா பூங்காக்கள் நிறுவனம் மற்றும் சுற்றுச்சூழல் துறைகள் இணைந்து இதுவரை 1.64 கிலோமீற்றர் பரப்பளவில் நீர்வாழ் உயிரினங்களுக்கான இயற்கை வாழ்விடங்களை வெற்றிகரமாக உருவாக்கியுள்ளன.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c0d2c242-4191-4e7d-a71b-88963ae7e6ab/26-6aa44bbb1b5b5.webp' /></p><p>மேலும், 2025 கோடை காலத்தில் பிளாக் கிரீக் மற்றும் பொயர்ஸ் கிரீக் நதி முகத்துவாரப் பகுதிகளில் மரக் கட்டமைப்புகள் மற்றும் பாறைகளைப் பயன்படுத்தி மேலதிகமாக 240 மீற்றர் ஈரநிலப் பகுதி புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது.
</p><p>
இந்த ஆக்கபூர்வமான நடவடிக்கையினால் அந்த பகுதிகளில் மீன்கள் மற்றும் கரையோரப் பறவைகளின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளதுடன், நீரின் தரமும் மேம்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p>]]></content>
            <updated>2026-09-11T18:43:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் குடும்பங்களின் கடன் விகிதத்தில் மாற்றம்: வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/canada-household-debt-to-income-ratio-drops-1789150588"></link>
            <id>https://ibctamil.com/article/canada-household-debt-to-income-ratio-drops-1789150588</id>
            <summary type="text">கனடாவில் குடும்ப வருமானத்தின் வளர்ச்சி, கடனின் வளர்ச்சியை விட அதிகமாக இருந்ததால் இரண்டாவது காலாண்டில் கடன் மற்றும் வருமானத்திற்கு இடையிலான விகிதம் குற...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவில் குடும்ப வருமானத்தின் வளர்ச்சி, கடனின் வளர்ச்சியை விட அதிகமாக இருந்ததால் இரண்டாவது காலாண்டில் கடன் மற்றும் வருமானத்திற்கு இடையிலான விகிதம் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>கனடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.
</p><p>இந்தநிலையில் செலவிடக்கூடிய வருமானத்துடன் ஒப்பிடுகையில், குடும்பக் கடன் சந்தைக் கடன் பருவகால சீரமைப்பின்படி முதல் காலாண்டில் 178.6 சதவீதமாக இருந்தது இது இரண்டாவது காலாண்டில் 176.4 சதவீதமாகக் குறைந்துள்ளது.</p><p>
</p><p></p><h2>கனடிய குடும்பங்கள்</h2><p>கனடிய குடும்பங்கள் செலவிடக்கூடிய ஒவ்வொரு 1 டொலர் வருமானத்திற்கும் சராசரியாக 1.76 டொலர் கடன் வைத்துள்ளனர்.</p><p>இந்தநிலையில் வருமானத்தில் அசல் மற்றும் வட்டி திருப்பிச் செலுத்துவதற்கான வீதம் 14.68 சதவீதத்திலிருந்து 14.52 சதவீதமாகச் சரிந்துள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/997510cf-4a50-4272-94d4-303b04589711/26-6aa44b0178e83.webp' /></p><p>நுகர்வோர் கடன், வீட்டு அடமானக் கடன் மற்றும் அடமானம் அல்லாத கடன்கள் அடங்கிய மொத்த குடும்பக் கடன் வாங்கும் அளவு, முதல் காலாண்டில் 34.4 பில்லியன் டொலராக இருந்த நிலையில், இரண்டாவது காலாண்டில் 29.4 பில்லியன் டொலராகக் குறைந்துள்ளது.
</p><p>
அடமானக் கடன் வாங்கும் வீதம் 19.4 பில்லியன் டொலராக சரிந்துள்ளது, இது 2024-ஆம் ஆண்டின் முதல் காலாண்டின் பின்னர் பதிவான மிகக் குறைந்த அளவாகும். </p><p>மேலும் நுகர்வோர் கடன் உட்பட அடமானம் அல்லாத கடன்கள் வாங்கும் அளவு 10.0 பில்லியன் டொலராக குறைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-11T18:40:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[விரைவில் மகிந்த - கோட்டாபய வைத்தியசாலையில்! சுரேஸ் சலே உடைத்த பரம இரகசியம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/suresh-sallay-s-shocking-secret-1789151378"></link>
            <id>https://tamilwin.com/article/suresh-sallay-s-shocking-secret-1789151378</id>
            <summary type="text">2006ஆம் ஆண்டு மிக்-27 போர் விமானங்களை கொள்முதல் செய்ததில் சுமார் 7 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி மோசடி இடம்பெற்றதாகக் கூறப்படும் விவகாரம் தொடர்பில் தற...</summary>
            <content type="html"><![CDATA[<p>2006ஆம் ஆண்டு மிக்-27 போர் விமானங்களை கொள்முதல் செய்ததில் சுமார் 7 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி மோசடி இடம்பெற்றதாகக் கூறப்படும் விவகாரம் தொடர்பில் தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p><p>

இந்த விவகாரம் தொடர்பில் முன்னாள் விமானப்படை தளபதி ரொஷான் குணதிலக மற்றும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஆகியோரிடமும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>

இதேவேளை, மகரகம அபேக்ஷா வைத்தியசாலைக்கு PET ஸ்கேனர் கருவியை வழங்குவதாகக் கூறி, ‘சிரிலிய சவிய’ அமைப்பின் ஊடாக நிதி திரட்டப்பட்டதில் முறைகேடுகள் இடம்பெற்றதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.</p><p>

இந்த நிலையில், சிரந்தி ராஜபக்ச தற்போது கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது. </p><p>
அவரது உடல்நிலை காரணமாக விசாரணைகளில் இருந்து விலகி இருக்கிறாரா அல்லது உண்மையான உடல்நலப் பிரச்சினை காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளாரா என்ற கேள்விகளும் எழுந்துள்ளன.</p><p>

இந்நிலையில், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உள்ளிட்ட முன்னாள் ஆட்சியாளர்கள் தொடர்பிலும் அடுத்த கட்டமாக விசாரணைகள் தீவிரமடையுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
</p><p>
எனவே அவர்களும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகின்றது.
</p><p>
இதேவேளை, உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலின் பின்னணியில் இருந்ததாகக் கூறப்படும் உண்மையான காரணங்கள் மற்றும் அதற்குப் பின்னால் செயற்பட்ட சக்திகள் தொடர்பிலும் சுரேஸ் சலே வெளிப்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
</p><p>


இது தொடர்பான விரிவான தகவல்களை ஆராய்கிறது ‘செய்திகளுக்கு அப்பால்’ நிகழ்ச்சி..</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/CP_Y7qU4Swk" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-11T18:36:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரொபோக்களின் விநோத போராட்டம் ; மனிதர்களுக்குப் பதிலாக களமிறங்கி கோரிக்கை விடுத்த இயந்திர மனிதர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/androids-step-in-for-humans-to-voice-demands-1789151412"></link>
            <id>https://canadamirror.com/article/androids-step-in-for-humans-to-voice-demands-1789151412</id>
            <summary type="text">செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் ரோபோ தொழில்நுட்பம் வேகமாக வளர்ச்சியடைந்து வரும் நிலையில், வேலை வாய்ப்புப் பாதுகாப்புக்காக கடுமையான சட்டங்களை இயற்றுமாறு...</summary>
            <content type="html"><![CDATA[<p>செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் ரோபோ தொழில்நுட்பம் வேகமாக வளர்ச்சியடைந்து வரும் நிலையில், வேலை வாய்ப்புப் பாதுகாப்புக்காக கடுமையான சட்டங்களை இயற்றுமாறு கோரி போலந்தின் வார்சோ நகரில் விநோதமான போராடமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><p>போலந்தின் டிஜிட்டல் விவகார அமைச்சுக்கு அருகில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் பல்வேறு வகையான 30-க்கும் மேற்பட்ட ரோபோக்கள் கலந்துகொண்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/eafeaaed-d12d-42d5-a3a1-4add7299a0f2/26-6aa448b56241f.webp' /></p><p>மனித வடிவிலான (Humanoid) ரோபோக்கள் மற்றும் நான்கு கால் விலங்குகளைப் போன்ற (Quadrupeds) ரோபோக்களை உள்ளடக்கிய இந்தக் குழுவினர், கொடிகளை ஏந்தி, கோஷங்களை எழுப்பி, வட்டமாகச் சென்று அடையாளப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
</p><p>
ஒலிபெருக்கிகள் ஊடாக “வேலைத் தளங்களைப் பாதுகாத்திடுங்கள்”, “சட்டங்களை இயற்றுவதற்கான நேரம் இது” மற்றும் “தாமதிக்காமல் முறைப்படுத்துங்கள்” போன்ற கோஷங்களை வெளிப்படுத்தியுள்ளனர்.
</p><p>
இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்ட Agibot A3 என்ற மனித வடிவிலான ரோபோ ஒன்று AFP செய்தி நிறுவனத்திடம் தெரிவிக்கையில், இந்தத் தொழில்நுட்பம் தற்போது ஒரு நடைமுறை யதார்த்தம் என்பதைச் சுட்டிக்காட்டுவதற்காகவே தாங்கள் இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டதாகக் குறிப்பிட்டுள்ளது.
</p><p>
செயற்கை நுண்ணறிவு மற்றும் ரோபோ தொழில்நுட்பம் காரணமாக வேலைவாய்ப்புச் சந்தையில் ஏற்படும் தாக்கம் குறித்துப் பொதுமக்களிடையே விவாதத்தை உருவாக்கும் நோக்கில் 'Democratism' அமைப்பினால் இந்தப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-11T18:30:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[சவுதி அரேபியாவின் எண்ணெய் குழாய்கள் மீது ஏவுகணை தாக்குதல்: சேதத்தை விவரித்த செயற்கைக்கோள் படங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/saudi-arabia-s-east-west-pipeline-attacked-1789150984"></link>
            <id>https://news.lankasri.com/article/saudi-arabia-s-east-west-pipeline-attacked-1789150984</id>
            <summary type="text">சவுதி அரேபியாவின் எண்ணெய் குழாய்கள் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. எண்ணெய் குழாய்கள் மீது தாக்குதல்கடந்த வியாழக்கிழமை சவுதி அரேபியாவின் முக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>சவுதி அரேபியாவின் எண்ணெய் குழாய்கள் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.</p><h2> எண்ணெய் குழாய்கள் மீது தாக்குதல்</h2><p>கடந்த வியாழக்கிழமை சவுதி அரேபியாவின் முக்கியமான கிழக்கு-மேற்கு எண்ணெய் குழாய்கள் மீது ஏவுகணை தாக்குதல்கள் நடத்தப்பட்டு இருப்பதாக அமெரிக்க ஊடகமான CNN வெளியிட்ட தகவலின் மூலம் தெரியவந்துள்ளது.</p><p>இந்த அத்துமீறிய ஏவுகணை தாக்குதலை அமெரிக்க அதிகாரிகள் இரண்டு பேர் உறுதிப்படுத்தியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fdc0fc37-26ef-467f-9bff-6f1da9fe3e73/26-6aa44709d2632.webp' /></p><p> மேலும் இந்த ஏவுகணை தாக்குதலானது எண்ணெய் குழாய் கட்டமைப்பின் பம்பிங் நிலையங்களை குறிவைத்து நடத்தப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது.</p><p></p><p> தாக்குதல் தொடர்பாக வெளிவந்துள்ள செயற்கைக்கோள் புகைப்படங்களில், ஒரு பம்பிங் நிலையத்தில்&nbsp; தீவிரமான தீ சேதமும், மற்றொரு பம்பிங் நிலையத்தில் சிறிய தீ சேதமும் ஏற்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது.</p><h2> தாக்குதலுக்கு யார் பொறுப்பு?</h2><p>
ஏமனில் ஈரான் ஆதரவு ஹவுதி கிளர்ச்சியாளர்கள் படைகளுக்கு எதிராக சவுதி அரேபியாவின் ஆதரவு பெற்ற அரசு படைகள் சண்டையிட்டு வரும் நிலையில் இந்த எண்ணெய் குழாய் தாக்குதலானது நடைபெற்றுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/574b070e-efdc-45dc-9c8f-038a8fffeeb2/26-6aa4470a88e86.webp' /></p><p> ஆனால் இந்த எண்ணெய் குழாய் தாக்குதலுக்கு யாரும் பொறுப்பேற்றதாக தெரியவரவில்லை.</p><p> மேலும் தாக்குதலால் ஏற்பட்டுள்ள சேதங்களை சீரமைக்க எவ்வளவு காலம் தேவைப்படும் என்பதற்கான மதிப்பீடுகளும் இன்னும் வெளிவரவில்லை.</p><p>இந்நிலையில், எண்ணெய் குழாய்கள் மீது தாக்குதல் நடத்த பயன்படுத்தப்பட்ட ஏவுகணைகள் ஈராக்கில் இருந்து ஏவப்பட்டிருக்கலாம் என்று அமெரிக்க அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-11T18:23:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிம் அட்டைப் பதிவு விதிகளில் புதிய திருத்தங்களைக் கொண்டுவரத் திட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/new-amendments-to-sim-card-registration-rules-1789150504"></link>
            <id>https://jvpnews.com/article/new-amendments-to-sim-card-registration-rules-1789150504</id>
            <summary type="text">சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு சிம் அட்டைகள் பயன்படுத்தப்படுவது அதிகரித்து வருவதையடுத்து, சிம் அட்டைப் பதிவு விதிகளில் புதிய திருத்தங்களை கொண்டுவர இலங்கை ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு சிம் அட்டைகள் பயன்படுத்தப்படுவது அதிகரித்து வருவதையடுத்து, சிம் அட்டைப் பதிவு விதிகளில் புதிய திருத்தங்களை கொண்டுவர இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு திட்டமிட்டுள்ளது.</p><p>
</p><p></p><p>புதிய விதிகள் இந்த ஆண்டு இறுதிக்குள் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
</p><p>
இதன்படி, புதிதாக சிம் அட்டைகளை கொள்வனவு செய்யும் நபர்கள், மேம்படுத்தப்பட்ட அடையாளச் சரிபார்ப்பு நடைமுறைகளுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் பந்துல ஹேரத் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8ca83f45-4e3c-47da-88f4-f0c2f7273f73/26-6aa4452a166dc.webp' /></p><p>

குறிப்பாக, புதிய சிம் அட்டை பெறுபவர்களின் நேரலை புகைப்படம் உள்ளிட்ட மேலதிக அடையாளத் தகவல்கள் பதிவு செய்யப்பட்டு, அவர்களின் அடையாளம் உறுதிப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
சட்டவிரோத நடவடிக்கைகளுக்காக போலியான அல்லது பிற நபர்களின் பெயர்களில் பதிவு செய்யப்பட்ட சிம் அட்டைகள் பயன்படுத்தப்படுவதை கட்டுப்படுத்துவதே இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
மேலும், 2027ஆம் ஆண்டுக்குள் நாட்டிலுள்ள கையடக்கத் தொலைபேசி மற்றும் சிம் அட்டை பயனாளர்கள் அனைவருக்கும் நூறு சதவீத அடையாளச் சரிபார்ப்பை உறுதி செய்வதை இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு இலக்காகக் கொண்டுள்ளதாக பந்துல ஹேரத் தெரிவித்துள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-11T18:15:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் விரிவுரையாளரின் அநாகரிக பேச்சால் தவறான முடிவெடுக்க முயற்சி செய்த மாணவி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/trainee-teacher-attempts-wrong-lecturer-s-remarks-1789143031"></link>
            <id>https://tamilwin.com/article/trainee-teacher-attempts-wrong-lecturer-s-remarks-1789143031</id>
            <summary type="text">யாழ்.கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரியில் கல்வி பயிலும் மாணவி ஒருவர் அங்கு கடமையாற்றும் பெண் விரிவுரையாளர் ஒருவரின் அநாகரிகமான பேச்சினால் தவறான முடிவெட...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்.கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரியில் கல்வி பயிலும் மாணவி ஒருவர் அங்கு கடமையாற்றும் பெண் விரிவுரையாளர் ஒருவரின் அநாகரிகமான பேச்சினால் தவறான முடிவெடுக்க முயன்ற நிலையில் யாழ்ப்பாண வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p><p>சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,</p><p>
</p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">நிர்வாகம் நடவடிக்கை</span></p><p>குறித்த மாணவி கல்லூரி கழகம் ஒன்றின் செயற்பாட்டிற்காக சென்றிருந்த நிலையில் அந்த விடுதிக்கு பொறுப்பான பெண் விரிவுரையாளர் எங்கு சென்று வருகிறாய்? என மாணவியை கேட்டுள்ளார்.
</p><p>
 அதற்கு தனது கழக செயற்பாட்டுக்கு கழகத் தலைவர் அழைத்ததன் காரணமாக சென்று வருகிறேன் என தெரிவித்திருக்கிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/07f295d0-63d1-4df4-acb5-a06409b3e3bc/26-6aa42c836e316.webp' /></p><p> </p><p>


உடனே குறித்த விரிவுரையாளர் அநாகரிகமான முறையில் திட்டியுள்ளார்.

அதனைதொடர்ந்து மாணவி எழுத்து மூலம் கல்லூரி நிர்வாகத்திற்கு தெரியப்படுத்தியருக்கிறார். </p><p>

ஆனால் நிர்வாகம் நடவடிக்கை எடுக்காமை காரணமாக மனவிரக்தி அடைந்து தவறான முடிவெடுக்க முயன்ற நிலையில் சக மாணவிகளால் காப்பாற்றப்பட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-11T17:29:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[மகிந்த தலைமையில் அரசாங்கத்திற்கு எதிராக அனுராதபுரத்தில் களமிறங்கும் மொட்டுக்கட்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/anuradhapura-rally-led-by-mahinda-rajapaksa-1789146588"></link>
            <id>https://tamilwin.com/article/anuradhapura-rally-led-by-mahinda-rajapaksa-1789146588</id>
            <summary type="text">இலங்கை பொதுஜன பெரமுன (SLPP) கட்சி, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையில் நாளை (12) அனுராதபுரத்தில் “ஜனசதன” மக்கள் பேரணியை நடத்தவுள்ளதாக, SLPP தேச...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை பொதுஜன பெரமுன (SLPP) கட்சி, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையில் நாளை (12) அனுராதபுரத்தில் “ஜனசதன” மக்கள் பேரணியை நடத்தவுள்ளதாக, SLPP தேசிய அமைப்பாளர் டி.வி. சாணக்க தெரிவித்துள்ளார்.
</p><p>
விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்தப் பேரணி நடத்தப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.</p><h2>&nbsp;மகிந்த ராஜபக்ச</h2><p>
</p><p>
மேலும், அரசாங்கம் வழங்கியுள்ள வாக்குறுதிகளை நிறைவேற்ற அழுத்தம் கொடுப்பதும் இந்தப் பேரணியின் நோக்கம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
இந்தப் பேரணி சனிக்கிழமை (12) அனுராதபுரத்தில் நடைபெறவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-11T17:25:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[நார்வே இளவரசி ஆஸ்ட்ரிட் காலமானார்: சோகத்தில் ஆழ்ந்த அரச குடும்பம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/norway-princess-astrid-passed-away-at-94-1789147232"></link>
            <id>https://news.lankasri.com/article/norway-princess-astrid-passed-away-at-94-1789147232</id>
            <summary type="text">நார்வே நாட்டின் இளவரசி ஆஸ்ட்ரிட் தன்னுடைய 94வது வயதில் வெள்ளிக்கிழமை காலமானார். இளவரசி ஆஸ்ட்ரிட் காலமானார்வெள்ளிக்கிழமை நார்வே நாட்டின் இளவரசி ஆஸ்ட்ரி...</summary>
            <content type="html"><![CDATA[<p>நார்வே நாட்டின் இளவரசி ஆஸ்ட்ரிட் தன்னுடைய 94வது வயதில் வெள்ளிக்கிழமை காலமானார்.</p><h2> இளவரசி ஆஸ்ட்ரிட் காலமானார்</h2><p>வெள்ளிக்கிழமை நார்வே நாட்டின் இளவரசி ஆஸ்ட்ரிட்(Princess Astrid&nbsp;) தனது 94வது வயதில் காலமானார். இதனால் நார்வே அரச குடும்பத்தினர் பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.</p><p> மறைந்த மன்னர் ஹரால்டின் சகோதரியான ஆஸ்ட்ரிட் தன்னுடைய சகோதரர் உயிரிழந்த சில வாரங்களில் உயிரிழந்துள்ளார்.</p><p> கிட்டத்தட்ட 35 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சியில் புரிந்து பிறகு கடந்த மாதம் மன்னர் ஹரால்டு(89) உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a13a5a9f-e531-49f0-8866-8e578146b4b3/26-6aa43861e3c0b.webp' /></p><p>மன்னர் ஹரால்டின் இறுதிச் சடங்கு கடந்த புதன்கிழமை ஓஸ்லோ பேராலயத்தில் நடைபெற்ற நிலையில், அதில் இளவரசி ஆஸ்ட்ரிட் தன்னுடைய கடைசி பொது நிகழ்வாக கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.</p><p></p><p> இளவரசியின் மறைவு தொடர்பாக அரண்மனை வெளியிட்ட குறிப்பில், தன்னுடைய வாழ்நாள் முழுவதும் இளவரசி ஆஸ்ட்ரிட் தன்னுடைய அரச குடும்பத்தை அன்பாகவும் பொறுப்புடனும் கவனித்து கொண்டதாக தெரிவித்துள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-11T17:24:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[செங்கடலின் முழுப் பகுதியையும் கைப்பற்றிய ஹூதி கிளர்ச்சியாளர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/houthi-rebels-seized-control-entire-red-sea-region-1789147457"></link>
            <id>https://canadamirror.com/article/houthi-rebels-seized-control-entire-red-sea-region-1789147457</id>
            <summary type="text">யேமனின் முக்கிய நகரமான மோகாவைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து, உலகின் முக்கிய வர்த்தகக் கடல்வழிகளில் ஒன்றான பாப் அல்-மன்தெப் நீரிணைப் பகுதியில் தங்களது அதி...</summary>
            <content type="html"><![CDATA[<p>யேமனின் முக்கிய நகரமான மோகாவைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து, உலகின் முக்கிய வர்த்தகக் கடல்வழிகளில் ஒன்றான பாப் அல்-மன்தெப் நீரிணைப் பகுதியில் தங்களது அதிகாரத்தை ஹூதி கிளர்ச்சியாளர்கள் மேலும் விரிவுபடுத்தியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d30a2cc7-16fb-498d-9226-8c09147bfd26/26-6aa4394387a38.webp' /></p><p>இதன் மூலம் யேமனின் ஒட்டுமொத்த செங்கடல் கடலோரப் பகுதியின் கட்டுப்பாட்டையும் ஹூதி கிளர்ச்சியாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p>

இதற்கிடையில், யேமனின் மோகா விமான நிலையத்தை இலக்காகக் கொண்டு சவூதி படைகள் இரண்டு வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக ஹூதிகளுடன் தொடர்புடைய அல்-மஸீரா (Al-Masirah) தொலைக்காட்சி அலைவரிசை செய்தி வெளியிட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.</p>]]></content>
            <updated>2026-09-11T17:24:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[மொட்டுத் தரப்பினரின் போராட்டம் பயனளிக்காது! அமைச்சர் பிமல் ரத்நாயக்க திட்டவட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/protests-will-not-yield-results-bimal-rathnayake-1789146853"></link>
            <id>https://tamilwin.com/article/protests-will-not-yield-results-bimal-rathnayake-1789146853</id>
            <summary type="text">தற்போதைய அரசியல் சூழலில் எந்தவொரு அரசியல் கட்சியும் இந்த ஸ்திரமான அரசைக்
கவிழ்க்கவோ அல்லது வீழ்த்தவோ முடியாது என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க
தெரிவித...</summary>
            <content type="html"><![CDATA[<p>தற்போதைய அரசியல் சூழலில் எந்தவொரு அரசியல் கட்சியும் இந்த ஸ்திரமான அரசைக்
கவிழ்க்கவோ அல்லது வீழ்த்தவோ முடியாது என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க
தெரிவித்தார்.
</p><p>
அனுராதபுரத்தில் இன்று(11.9.2026) அநுர அரசுக்கு எதிராக ஸ்ரீலங்கா பொதுஜன
பெரமுன கட்சியின் தலைமையில் முன்னெடுக்கப்படவுள்ள போராட்டம் தொடர்பில்
ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.</p><p>

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

"நாட்டின் மூன்றில் இரண்டு பெரும்பான்மை மக்களின் அசைக்க முடியாத ஆதரவு எமது
அரசுக்கு உள்ளது. மக்களின் உண்மையான ஆணை அரசின் பக்கமே முழுமையாகச்
சாய்ந்துள்ளது.</p><h2>போராட்டங்கள்</h2><p>
</p><p>
மொட்டுக் கட்சியினர் அல்லது எதிர்க்கட்சிகள் மக்களை வலுக்கட்டாயமாகத் திரட்டி
முன்னெடுக்கும் அரசுக்கு எதிரான போராட்டங்கள் எவ்விதப் பலனையும் தராது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/80506689-03c6-456d-b966-6cc5cbcba32e/26-6aa436e83461f.webp' /></p><p>
</p><p>
மக்களின் கவனத்தை திசைதிருப்பும் இத்தகைய வெற்று முயற்சிகள் யாவும்
தோல்வியிலேயே முடியும்.</p><p>

தற்போதைய அரசியல் சூழலில் எந்தவொரு அரசியல் கட்சியும் இந்த ஸ்திரமான அரசைக்
கவிழ்க்கவோ அல்லது வீழ்த்தவோ முடியாது.

மக்களின் பேராதரவுடன் ஆட்சியமைத்துள்ள இந்த அரசை எந்தச் சக்தியாலும் அசைக்க
முடியாது.</p><h2>முழுமையான ஒத்துழைப்பு</h2><p>
</p><p>
இத்தகைய போராட்டங்கள் யாவும் நாட்டு நலனுக்காக அல்லாமல், அரசியல்
காழ்ப்புணர்ச்சிகளையும் சுயநல அஜண்டாக்களையும் மட்டுமே அடிப்படையாகக் கொண்டவை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8a1f7e81-29f3-43e9-abdc-740f3cb41f35/26-6aa436e8dcfd9.webp' /></p><p>

மக்களின் நல்வாழ்வை உறுதி செய்யும் அரசாட்சியைக் குலைக்க எதிர்க்கட்சிகள்
மேற்கொள்ளும் தந்திரோபாயங்களை மக்கள் நன்றாகவே புரிந்து கொண்டுள்ளனர்.
</p><p>
நாட்டு மக்கள் அனைவரும் எதிர்கொண்டுள்ள சவால்களைத் தீர்த்து, நாட்டைப்
பொருளாதார ரீதியாகக் கட்டியெழுப்பும் அரசின் முறையான வேலைத்திட்டங்களுக்குப்
பொதுமக்கள் தொடர்ந்தும் முழுமையான ஒத்துழைப்பு வழங்குவர் எனக் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-11T17:20:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[ட்ரம்பின் அயர்லாந்து விஜயம்...! மக்களிடையே எழுந்துள்ள பலத்த எதிர்ப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/69-in-ireland-oppose-trump-visit-amid-protests-1789142023"></link>
            <id>https://ibctamil.com/article/69-in-ireland-oppose-trump-visit-amid-protests-1789142023</id>
            <summary type="text">அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அயர்லாந்திற்கு விஜயம் செய்யவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இந்தநிலையில், அவரது வருகைக்கு அயர்லாந்து...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அயர்லாந்திற்கு விஜயம் செய்யவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p>இந்தநிலையில், அவரது வருகைக்கு அயர்லாந்து மக்களிடையே பலத்த எதிர்ப்பும் அதிருப்தியும் கிளம்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>இந்தநிலையில் சண்டே இண்டிபெண்டன்ட் (Sunday Independent) மற்றும் அயர்லாந்து திங்க்ஸ் (Ireland Thinks) அமைப்புகள் இணைந்து இது தொடர்பில் கருத்து கணிப்பொன்றை நடத்தியுள்ளது.</p><p></p><h2>இனப்படுகொலைக்கு வசதி&nbsp;</h2><p> நடத்திய கருத்துக்கணிப்பில், அயர்லாந்து மக்களில் 69 சதவீதத்தினர் ட்ரம்பின் இந்த வருகைக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது.</p><p>டப்ளின் டிரினிட்டி கல்லூரியின் (Trinity College Dublin) பொருளாதாரத் துறை மாணவரும், அயர்லாந்தின் BDS (பாய்காட், டைவெஸ்ட்மென்ட், சாங்க்ஷன்ஸ்) இயக்கத்தின் தலைவருமான ஷான் ராட்க்ளிஃப் (Sean Radcliffe) இது குறித்து ஊடகங்களிற்கு கருத்துத் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ef2c3963-0091-402e-89a5-ff9b8c05fcbb/26-6aa433bac6cb1.webp' /></p><p>இந்தநிலையில் இனப்படுகொலைக்கு உடந்தையாக இருக்கும் ஒருவரை சாதாரணமாக ஏற்றுக்கொள்ள முடியாது என்பதால் பல்லாயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்துவார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>அயர்லாந்து பிரதமர் (Taoiseach) மைக்கேல் மார்ட்டின் (Micheal Martin), அமெரிக்கா இனப்படுகொலைக்கு வசதி செய்து கொடுத்து உதவி வருகிறது என்பதை பகிரங்கமாகவும் உறுதியாகவும் வெளிப்படையாகக் கூற வேண்டும் என்றும் மாணவர் தலைவர் வலியுறுத்தியுள்ளார்.
</p><p>மத்திய கிழக்கு மோதல்கள் மற்றும் ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகள் தொடர்பில் அமெரிக்காவின் அணுகுமுறை காரணமாகவே அயர்லாந்து மக்களிடையே ட்ரம்பின் இந்த வருகைக்கு எதிரான அதிருப்தி வலுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-11T17:18:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதிக வெப்பம் குறித்து இயற்கை அனர்த்த முன்னெச்சரிக்கை மையம் விடுத்துள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/early-warning-regarding-extreme-heat-1789146011"></link>
            <id>https://jvpnews.com/article/early-warning-regarding-extreme-heat-1789146011</id>
            <summary type="text">நாளை (12) செல்லுபடியாகும் வகையில் வெப்பமான வானிலை தொடர்பான எச்சரிக்கை அறிவித்தலை வளிமண்டலவியல் திணைக்களத்தின் இயற்கை அனர்த்த முன்னெச்சரிக்கை மையம் வெள...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாளை (12) செல்லுபடியாகும் வகையில் வெப்பமான வானிலை தொடர்பான எச்சரிக்கை அறிவித்தலை வளிமண்டலவியல் திணைக்களத்தின் இயற்கை அனர்த்த முன்னெச்சரிக்கை மையம் வெளியிட்டுள்ளது.</p><p>
</p><p></p><p>வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, குருணாகல், மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களின் சில பகுதிகளிலும் பகல் வேளையில் மனித உடலால் உணரப்படும் வெப்பத்தின் அளவான வெப்பச் சுட்டெண் (Heat Index), “அவதானம் செலுத்தப்பட வேண்டிய” மட்டத்தில் காணப்படக்கூடும் என அந்த அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/edd9925d-2c6c-4f66-bb1a-8075a7562840/26-6aa4339cd8483.webp' /></p><p>எனவே, குறித்த பகுதிகளில் வசிப்பவர்கள் பகல் வேளையில் அதிக வெப்பத்துக்கு நீண்ட நேரம் வெளிப்படுவதைத் தவிர்த்து, போதியளவு நீர் அருந்தி, வெப்பத்தின் தாக்கத்திலிருந்து தம்மைப் பாதுகாத்துக்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-11T17:00:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜனாதிபதியால் நீதிமன்றத்துக்கு மறைமுக அழுத்தம்: ஐக்கிய மக்கள் சக்தி குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/president-pressure-on-the-judiciary-sjb-1789145384"></link>
            <id>https://tamilwin.com/article/president-pressure-on-the-judiciary-sjb-1789145384</id>
            <summary type="text">அரசமைப்பு திருத்தம் தொடர்பான உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு இன்னும் வெளிவராத
நிலையில், அதனை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவோம் எனக் கூறி ஜனாதிபதி அநுரகுமார...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரசமைப்பு திருத்தம் தொடர்பான உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு இன்னும் வெளிவராத
நிலையில், அதனை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவோம் எனக் கூறி ஜனாதிபதி அநுரகுமார
திஸாநாயக்க நீதிமன்றத்துக்கு மறைமுக அழுத்தம் கொடுத்து வருகின்றார் என்று
ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதிச் சட்ட செயலாளர் ரஜித லக்மால் குற்றம் சுமத்தியுள்ளார்.</p><p>

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

"22ஆவது அரசமைப்பு திருத்தம் தொடர்பான உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு இன்னும்
சபாநாயகருக்கு அனுப்பி வைக்கப்படாத நிலையில் உள்ளது.</p><p>நாட்டினுடைய பிரதான நிறைவேற்று
அதிகாரியான ஜனாதிபதி மேடைகளில் ஏறி 'தீர்ப்பு வந்தவுடன் அதனை மூன்றில் இரண்டு
பெரும்பான்மையுடன் நிறைவேற்றுவோம்' எனக் கூறுவது நீதிமன்றத்தின் மீது
விடுக்கப்படும் நேரடி அழுத்தமாகும்.</p><h2>அத்தியாவசிய மருந்துகள்&nbsp;</h2><p>

எழுதப்படாத ஒரு தீர்ப்பு குறித்து நாட்டின் ஜனாதிபதி பகிரங்கமாகப் பேசுவது
ஜனநாயகத்துக்கு ஆபத்தானது. இன்று நாட்டில் உள்ள பிரதான மருத்துவமனைகளில்
நோயாளிகளுக்குத் தேவையான அத்தியாவசிய மருந்துகள் எதுவும் இல்லை. ஆனால்,
ஜனாதிபதியோ மக்கள் வினோதத்துக்காக மருத்துவமனைக்குச் செல்கின்றார்.</p><p>வீடுகளிலேயே கொத்தமல்லி குடித்துவிட்டு இருக்குமாறும் கூறுகின்றார்.

மருத்துவமனைகளில் மருந்துகள் இல்லை என்பதை மறைக்கவே ஜனாதிபதி இவ்வாறு
கூறுகின்றாரா. இதன் காரணமாகவே மக்கள் அவரை இன்று 'கொத்தமல்லி ஜனாதிபதி' என
விமர்சிக்கத் தொடங்கியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d9694d6c-bf9f-454d-b095-5a40ec5c6d3b/26-6aa432ca14b01.webp' /></p><p>
</p><p>
ஊழலை ஒழிப்பதாகக் கூறி ஆட்சிக்கு வந்தவர்கள், 2025 ஜனவரி மாதம் இடம்பெற்ற
கொள்கலன் விவகாரம் தொடர்பான விசாரணை அறிக்கையைத் தம் வசமிருந்தும் அதனை
வெளிப்படுத்தாமல் பூட்டி வைத்துள்ளனர்.
</p><p>
போலி கலாநிதி பட்டம் தொடர்பான குற்றச்சாட்டுக்கு உள்ளான முன்னாள் சபாநாயகர்
மீதோ அல்லது நிலக்கரி கொள்முதல் ஊழல்கள் மீதோ இதுவரை எவ்வித முறையான
விசாரணைகளும் நடத்தப்படவில்லை.</p><h2>அரச போலிப் பேரணி</h2><p>ஜெனிவா மனித உரிமைகள் பேரவையின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த அரசு
தவறியுள்ளது. ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை
இரத்துச் செய்வதாக வாக்குறுதியளித்தவர்கள், இன்று அப்பாவி மக்களுக்கு எதிராக
அதே சட்டத்தைப் பயன்படுத்தி வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ffb89da7-330f-4f52-9bf1-a343971e57e7/26-6aa432cabd10d.webp' /></p><p>
</p><p>
மக்களின் அதிருப்தியையும் சரிந்துவரும் செல்வாக்கையும் மறைக்கவே பஸ்கள் மூலம்
ஆட்களைத் திரட்டி அரசு போலிப் பேரணிகளை நடத்தி வருகின்றது.</p><p>

இந்த அரசுக்கு இன்னும் 3 ஆண்டுகள் மட்டுமே அவகாசம் உள்ளது. அதற்குப் பிறகு
மக்களால் இவர்கள் முற்றாக நிராகரிக்கப்படுவார்கள். எதிர்க்கட்சியாக நின்று
மக்களுக்கான ஜனநாயகப் போராட்டத்தை ஐக்கிய மக்கள் சக்தி தொடர்ந்து
முன்னெடுக்கும் எனத் தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-11T16:56:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[போர்ட்ஸ்மத் அகதிகள் எதிர்ப்பு போராட்டம்: முதல் நபரை கைது செய்த பொலிஸார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/portsmouth-anti-migration-protests-1-man-arrested-1789145354"></link>
            <id>https://news.lankasri.com/article/portsmouth-anti-migration-protests-1-man-arrested-1789145354</id>
            <summary type="text">Portsmouth Anti-Migration Protests 1st man arrested: போர்ட்ஸ்மத் அகதிகள் எதிர்ப்பு போராட்டம் தொடர்பில் முதல் நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Portsmouth Anti-Migration Protests 1st man arrested: போர்ட்ஸ்மத் அகதிகள் எதிர்ப்பு போராட்டம் தொடர்பில் முதல் நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><h2> முதல் நபர் கைது</h2><p>பிரித்தானியாவில் கடந்த வாரம் நடந்த அகதிகள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் வன்முறையில் ஈடுபட்டது மற்றும் காவல்துறை அதிகாரிகளை தாக்கியது ஆகிய குற்றச்சாட்டின் கீழ் பால்ஸ்ரோவ்(Paulsgrove) பகுதியை சேர்ந்த 42 வயது நபரை வெள்ளிக்கிழமை ஹாம்ப்ஷயர்(Hampshire) காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.</p><p>100க்கும் மேற்பட்ட அகதிகளுடன் RNLI படகுகள் துறைமுகத்திற்கு வந்த நிலையில், அதனை எதிர்த்து கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டக்காரர்கள் பல மணி நேரம் துறைமுக பாதையை முடக்கினர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/058321a8-975d-49af-a29e-e9c3a2e37ba4/26-6aa4310c5d69c.webp' /></p><p>மேலும் அப்போது ஏற்பட்ட மோதலின் போது சில காவலர்கள் காயமடைந்தனர். இறுதியில் திங்கட்கிழமை காலை கூட்டம் கலைக்கப்பட்டது.</p><p>இந்த வார சனிக்கிழமை போர்ட்ஸ்மவுத் நகர மையத்தில் சவுத் கோஸ்ட் பேட்ரியாட்ஸ் அமைப்பினர் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.</p><p></p><h2>முகமூடி அணிந்தவர்கள் மீது கடும் நடவடிக்கை</h2><p>
இந்நிலையில் போராட்டக்காரர்கள் யாரும் முகமூடி அணிந்து கொண்டு ஆர்ப்பாட்ட பகுதிக்குள் வரக்கூடாது என்று பொலிஸார் எச்சரித்துள்ளனர்.</p><p> உத்தரவை மீறி முகமூடி அணியும் எவரும் குற்றவாளியாக கருதப்பட்டு உடனடியாக கைது செய்யப்படுவார்கள் என எச்சரிக்கப்பட்டுள்ளது.</p><p> முகமூடி அணிந்த நபர்களால் பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள அச்சத்தை போக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக காவல்துறை அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p>&nbsp;<br></p>]]></content>
            <updated>2026-09-11T16:49:24+00:00</updated>
        </entry>
    </feed>
