<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-09-06T07:57:55+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[மாற்றுத்திறனாளிகளை உள்ளடக்கிய கிரிக்கெட் போட்டிகள்.. பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க கருத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/disable-people-cricket-chathuranga-abeysinga-1788681053"></link>
            <id>https://tamilwin.com/article/disable-people-cricket-chathuranga-abeysinga-1788681053</id>
            <summary type="text">கொழும்பில் இலங்கை பார்வையற்றோர் சபையால் ஏற்பாடு செய்யப்பட்ட “எல்லைகளைக்
கடந்து” அனைவரையும் உள்ளடக்கிய கிரிக்கெட் நிகழ்வில், பிரதி அமைச்சர் சதுரங்க
அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பில் இலங்கை பார்வையற்றோர் சபையால் ஏற்பாடு செய்யப்பட்ட “எல்லைகளைக்
கடந்து” அனைவரையும் உள்ளடக்கிய கிரிக்கெட் நிகழ்வில், பிரதி அமைச்சர் சதுரங்க
அபேசிங்க கலந்துகொண்டு பார்வையற்றோர் கிரிக்கெட்
விளையாடிய அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.</p><p>கிரிக்கெட் இலங்கையின் மிகவும் விரும்பப்படும் விளையாட்டு
என்றும், அதில் மாற்றுத்திறனாளிகள் பின்தங்கிவிடக் கூடாது என்றும்,
இவ்விளையாட்டு தடைகளை உடைத்து அனைவரையும் உள்ளடக்க உதவுகிறது என்றும் பிரதி
அமைச்சர் குறிப்பிட்டார்.</p><h2>பார்வையற்றோரின் திறமை&nbsp;</h2><p>
</p><p>
அத்துடன் பந்து இயக்கத்தைக் கண்காணிக்க உதவும் சத்தத்தை எழுப்பும் கடினமான
பிளாஸ்டிக் பந்துகள் மற்றும் ஒலி எழுப்பும் எஃகு விக்கெட்டுகள் இதில்
பயன்படுத்தப்படுகின்றன.

இதேவேளை பந்துவீச்சு அண்டர்ஆர்ம் (Underarm) முறையில் செய்யப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a26ab51d-ed19-40c6-9653-dabafd3429e8/26-6a9d1cb796a4b.webp' /></p><p>

இதற்கமைய முற்றிலும் பார்வையற்றவர்கள் (இவர்கள் எடுக்கும் ஒட்டங்களுக்கு
கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்படும்).

மிகவும் குறைந்த பார்வை கொண்டவர்கள்.
</p><p>அதிக பார்வை வசதியும் குறைந்த தெளிவும் கொண்டவர்கள் என 11 பேர் கொண்ட அணியில்
3 B1, 4 B2 மற்றும் 4 B3 வீரர்கள் இடம்பெறுவர்.
</p><p>
மேலும் வீரர்களின் தன்னம்பிக்கையும் மகிழ்ச்சியும் வியப்பளிப்பதாகக் கூறிய
பிரதி அமைச்சர், இலங்கையின் முதல் பார்வையற்ற பாராளுமன்ற உறுப்பினரான சுகத்
வசந்தா போன்றவர்கள் கொள்கை மாற்றங்களுக்கும் சமூக உள்ளடக்குதலுக்கும்
ஆற்றிவரும் பங்களிப்பையும் சுட்டிக்காட்டினார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-06T07:56:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நல்லூர் கந்தசுவாமி ஆலய 21ஆம் நாள் திருவிழா நிறைவு - நிர்வாகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/nallur-kandaswamy-temple-21st-day-festival-1788681284"></link>
            <id>https://tamilwin.com/article/nallur-kandaswamy-temple-21st-day-festival-1788681284</id>
            <summary type="text">&amp;nbsp;நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவத்தின் 21ஆம் நாள் திருவிழா இன்று(06.09.2026) சிறப்பாக இடம்பெற்றுள்ளது. 

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கடவுளுக...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவத்தின் 21ஆம் நாள் திருவிழா இன்று(06.09.2026) சிறப்பாக இடம்பெற்றுள்ளது.</p><p> 

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கடவுளுக்கான சிறப்பு பூஜைகள் இடம்பெறும் நிலையில், இன்று(06) கஜவள்ளி மஹாவள்ளி உற்சவம் நடைபெற்றுள்ளது. </p><p>

காலை நடைபெற்ற வசந்தமண்டப பூஜையைத் தொடர்ந்து, அன்னப்பட்சி வாகனத்தில் கஜவல்லி மஹாவள்ளி எழுந்தருளி பக்தர்களுக்கு அருட்காட்சி அளித்தார்.
</p><p>
அதேவேளை, இன்று மாலை தங்க ரத உற்சவமும், நாளைய தினம்
காலை மாம்பழத் திருவிழாவும், மாலை ஒருமுக திருவிழாவும்
இடம்பெறவுள்ளதாக ஆலய நிர்வாகம் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது.&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-06T07:56:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுதாரக்கவின் நெருங்கிய சகா போதைப்பொருளுடன் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sutharak-s-close-associate-arrested-with-drugs-1788681402"></link>
            <id>https://jvpnews.com/article/sutharak-s-close-associate-arrested-with-drugs-1788681402</id>
            <summary type="text">இரத்தமலானை பகுதியில் ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் கூரிய ஆயுதத்துடன் வெளிநாடு சென்று தலைமறைவாகியுள்ள போதைப்பொருள் கடத்தல்காரரான சுதாரக்கவின் நெருங்கிய...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">இரத்தமலானை பகுதியில் ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் கூரிய ஆயுதத்துடன் வெளிநாடு சென்று தலைமறைவாகியுள்ள போதைப்பொருள் கடத்தல்காரரான சுதாரக்கவின் நெருங்கிய ஆதரவாளர் ஒருவர் கல்கிஸை வலய குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p style="text-align: justify; ">
இரத்தமலானை, கொளுமட சந்தை பகுதியில் கல்கிஸை வலய குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனையின்போதே மேற்படி சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/afa297a4-3e26-4e40-9ecd-a6368456adc1/26-6a9d1cbb51ad8.webp' /></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
இதன்போது அவரிடமிருந்து 6,000 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் வாள் ஒன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. </p><p style="text-align: justify; ">


இரத்தமலானை, பங்களாவத்தை, ரஸ்டம் வத்தை பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p style="text-align: justify; ">
கைதான சந்தேகநபர், தற்போது வெளிநாட்டில் தலைமறைவாக உள்ள பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல் மற்றும் திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் ‘படோவிட்ட அஸங்க’ என்பவருக்காக வெளிநாட்டிலிருந்து போதைப்பொருள் கடத்தலை வழிநடத்தி வரும் 'சுதாரக்க' என்பவரின் நெருங்கிய ஆதரவாளர் என்பது ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
</p><p style="text-align: justify; ">
மேலும், சம்பவம் தொடர்பில் கல்கிஸை வலய குற்றப்புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-09-06T07:56:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ashik</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழக கடற்றொழிலாளர்களின் அத்துமீறல் அதிகரிப்பு - 6 இலட்சம் பெறுமதியான வலைகள் இழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/encroachment-by-tamil-nadu-fishermen-1788680808"></link>
            <id>https://tamilwin.com/article/encroachment-by-tamil-nadu-fishermen-1788680808</id>
            <summary type="text">தலைமன்னார் கிராமத்தை அண்மித்த கடல் பகுதியில், இலங்கை கடல் எல்லையில்
இருந்து சுமார் 9 கிலோமீட்டர் தொலைவில் இந்திய விசைப்படகுகள் அத்துமீறி மீன்
பிடிப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>தலைமன்னார் கிராமத்தை அண்மித்த கடல் பகுதியில், இலங்கை கடல் எல்லையில்
இருந்து சுமார் 9 கிலோமீட்டர் தொலைவில் இந்திய விசைப்படகுகள் அத்துமீறி மீன்
பிடிப்பதாக உள்ளூர் கடற்றொழிலாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். </p><p>

இந்த சம்பவம் நேற்றைய தினம்(05.09.2026) இடம்பெற்றுள்ளது. </p><h2>

6 இலட்சம் பெறுமதியான வலை சேதம்</h2><p>
தலைமன்னார் கிராமத்தை அண்மித்த கடல் பகுதியில், இந்திய கடற்றொழிலாளர்கள் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுப்பட்டுள்ளதுடன், இதன் காரணமாக இலங்கை கடற்றொழிலாளர்களின் சுமார் 6 இலட்சம் ரூபாய் பெறுமதியான வலைகள் சேதப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ce143b9e-f045-41dd-b50b-50191dc86bfe/26-6a9d1a9aa1619.webp' /></p><p> </p><p> 

அதே போன்று, வலைகளை இந்திய கடற்றொழிலாளர்கள் திருடிச் சென்றுள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர். </p><p>


 குறித்த சம்பவம் தொடர்பில், தலைமன்னார் கடற்படையினர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கடற்றொழிலாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.</p><p> 


இந்திய விசைப்படகுகளின் அத்துமீறலைத் தடுக்கவும், இலங்கை கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும் அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடற்றொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.&nbsp;&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-06T07:47:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[கலிபோர்னியாவில் தரையில் விழுந்து நொறுங்கிய விமானம்: இருவர் பலி, 2 பேர் கவலைக்கிடம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/california-small-plane-crash-two-dead-1788680733"></link>
            <id>https://news.lankasri.com/article/california-small-plane-crash-two-dead-1788680733</id>
            <summary type="text">California small plane crash Two Dead: கலிபோர்னியாவில் நடந்த சிறிய ரக விமான விபத்தில் 2 பேர் வரை உயிரிழந்துள்ளனர். கலிபோர்னியாவில் விமான விபத்து
சனிக...</summary>
            <content type="html"><![CDATA[<p>California small plane crash Two Dead: கலிபோர்னியாவில் நடந்த சிறிய ரக விமான விபத்தில் 2 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.</p><h2> கலிபோர்னியாவில் விமான விபத்து</h2><p>
சனிக்கிழமை பிற்பகலில் கலிபோர்னியாவின் நார்த்வெஸ்ட் ப்ரெஸ்னோ(Northwest Fresno) பகுதியில் நடந்த சிறிய ரக விமான விபத்தில் இரண்டு பேர் வரை உயிரிழந்துள்ளனர்.&nbsp;
மேலும் 2 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">CALIFORNIA | Plane crash reported in Northeast Fresno <a href="https://t.co/9fRf0CZIEo">https://t.co/9fRf0CZIEo</a> <a href="https://t.co/N2vMOER4eK">pic.twitter.com/N2vMOER4eK</a></p>&mdash; Breaking X (@BreakingXAlerts) <a href="https://x.com/BreakingXAlerts/status/2096373297927643540?ref_src=twsrc%5Etfw">September 5, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p> பிளைத் அவென்யூவில் உள்ள சியாரா ஸ்கை பார்க் விமான நிலையத்திற்கு அருகே இந்த சிறிய ரக விமான விபத்தானது ஏற்பட்டுள்ளது.</p><p>விபத்திற்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில், உள்ளூர் மற்றும் மத்திய விமான துறை அதிகாரிகள் தீவிர விசாரணையை நடத்தி வருகின்றனர்.</p><p> விமான விபத்தை தொடர்ந்து அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சிறிது நேரம் மின் தடை ஏற்பட்டது. ஆனால் விரைவாக செயல்பட்ட மின்வாரிய ஊழியர்கள் மின் தடையை உடனடியாக சரி செய்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e70fc691-57e4-4f0b-a214-d89190d2b4d2/26-6a9d1a1ee007a.webp' /></p><p></p><p> இந்நிலையில், இந்த விமான விபத்தானது எதிர்பாராத மற்றும் பேரதிர்ச்சியான துயரம் என்று ப்ரெஸ்னோ நகர மன்ற உறுப்பினர் மைக் கார்பாசி குறிப்பிட்டுள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-06T07:45:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[நடிகை சைத்ரா ஜே அச்சாரின் ரீசெண்ட் போட்டோஷூட்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/chaithra-j-achar-photos-saree-look-1788679967"></link>
            <id>https://viduppu.com/article/chaithra-j-achar-photos-saree-look-1788679967</id>
            <summary type="text">மஹிரா, ஆ த்ருஷ்யா, கில்கி, தோபி, பிளிங்க் போன்ற கன்னட மொழிப்படங்களில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை சைத்ரா ஜே அச்சார். கடந்த ஆண்டு வெளியான 3BHK என்ற ...</summary>
            <content type="html"><![CDATA[<p>மஹிரா, ஆ த்ருஷ்யா, கில்கி, தோபி, பிளிங்க் போன்ற கன்னட மொழிப்படங்களில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை சைத்ரா ஜே அச்சார். கடந்த ஆண்டு வெளியான 3BHK என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி பலரது கவனத்தையும் ஈர்த்தார் சைத்ரா.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cfad3ee9-3501-4fcf-9624-71f38e917a2c/26-6a9d172a58464.webp' />]</p><p>
</p><p>
இதனையடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியான மை லார்ட் படத்தில் சுசிலா என்ற ரோலில் நடித்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றார். நடிப்பை தாண்டி பாடகியாகவும் விளங்கி வரும் சைத்ரா, பல பாடல்களை பாடியிருக்கிறார்.
</p><p>
மீசையமுறுக்கு படத்திலும் நடித்துள்ள சைத்ரா, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிளாமர் லுக் போட்டோஷூட்டை பகிர்வார். தற்போது சேலையணிந்து எடுத்த க்யூட் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-09-06T07:45:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொண்டாட்டத்தில் ரணில் தலைமையிலான குழு - ஒரே இடத்தில் ஒன்றுகூடிய பல அரசியல் முக்கியஸ்தர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ranil-led-group-at-the-celebration-1788678892"></link>
            <id>https://tamilwin.com/article/ranil-led-group-at-the-celebration-1788678892</id>
            <summary type="text">ஐக்கிய தேசியக் கட்சியின் 80வது ஆண்டு விழா, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் இன்று காலை (06) சிறிகொத்த கட்சித் தலைமையகத்தில் நடைபெற்று...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஐக்கிய தேசியக் கட்சியின் 80வது ஆண்டு விழா, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் இன்று காலை (06) சிறிகொத்த கட்சித் தலைமையகத்தில் நடைபெற்றுள்ளது.</p><p>
முன்னாள் பிரதமர் மேதகு டி.எஸ்.சேனநாயக்க மற்றும் பிற தலைவர்களால் 1946 செப்டெம்பர் 6 அன்று நிறுவப்பட்ட ஐக்கிய தேசியக் கட்சி, இன்று தனது 80வது ஆண்டு விழாவைக் கொண்டாடுகிறது.</p><h2>நினைவு விழா</h2><p>
</p><p>இதனை முன்னிட்டு பிட்டகோட்டையில் உள்ள சிறிகொத்த கட்சித் தலைமையகத்தில் இன்று காலை நினைவு விழா நடைபெற்றுள்ளது.</p><p>

இந்த நிலையிலை குறித்த நிகழ்வில் பங்கேற்பதற்காக பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் அழைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-06T07:43:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[Romanchakam (தெலுங்கு): திரை விமர்சனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/romanchakam-telugu-movie-review-1788679966"></link>
            <id>https://cineulagam.com/article/romanchakam-telugu-movie-review-1788679966</id>
            <summary type="text">சந்தீப் ரெட்டி வங்கா, பிரணாய் ரெட்டி வங்காவின் தயாரிப்பில் வேணு கோபால் ரெட்டி இயக்கத்தில் வெளியாகியுள்ள ரோமாஞ்சகம் தெலுங்கு திரைப்படம் எப்படி இருக்கிற...</summary>
            <content type="html"><![CDATA[<p>சந்தீப் ரெட்டி வங்கா, பிரணாய் ரெட்டி வங்காவின் தயாரிப்பில் வேணு கோபால் ரெட்டி இயக்கத்தில் வெளியாகியுள்ள ரோமாஞ்சகம் தெலுங்கு திரைப்படம் எப்படி இருக்கிறது என்று பார்ப்போம் வாங்க.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/90af9b86-ce23-45c2-bbb7-d2906ffdc249/26-6a9d172242b5d.webp' /></p><h2>கதைக்களம்</h2><p>

நண்பர்களுடன் சேர்ந்து ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனத்தை தொடங்க திட்டமிடுகிறார் அன்விஷ் (சுமந்த் பிரபாஸ்).

அவரது அப்பாவின் ஆதரவு இல்லாத நிலையில், டேட்டிங் ஆப் ஒன்றை நிறுவும் அன்விஷ்; அதற்கு ரோமாஞ்சகம் என்று பெயர் வைக்கிறார்.
</p><p>
அந்த ஆப் மூலம் சென்னைச் சேர்ந்த மைதிலியை (அனந்திகா சனில்குமார்) தொடர்பு கொள்கிறார் அன்விஷ்.

மைதிலி மீது ஈர்ப்பு கொள்ளும் அன்விஷ் அவளிடம் நெருங்கி பழகி காதலிக்க ஆரம்பித்தால், ரோமாஞ்சகம் டேட்டிங் ஆப் ஐடியா வெற்றி பெறும் என்று நண்பர்களும் கூறுகிறார்கள்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5954a645-f3c5-46e1-8396-521f099d50a0/26-6a9d179e85681.webp' /></p><p>தெரியாத நபரிடம் எப்படி விவரங்களைக் கூறுவது என்று மைதிலி சில டெஸ்ட்களை அன்விஷிற்கு வைக்க, அவர் அனைத்திலும் பாஸ் செய்து விடுகிறார். 

அன்விஷின் பேச்சும், அணுகுமுறையும் மைதிலியை ஈர்க்க இருவரும் காதலிக்க தொடங்குகிறார்கள். ஒருநாள் சர்ப்ரைஸாக மைதிலியை பார்க்க அன்விஷ் சென்னை சென்றுவிடுகிறார்.

அங்கு ஹோட்டல் ஒன்றுக்கு மைதிலியை வரச்சொல்லி அன்விஷ் காத்திருக்கிறார். </p><p>ஆனால், பல மணிநேரமாகியும் வராதா மைதிலி வாட்ஸ்அப் முதல் Gpay வரை அனைத்திலும் அன்விஷை பிளாக் செய்துவிடுகிறார்.

எதனால் மைதிலி இப்படி செய்தார் என்ற குழப்பத்துடனே ஊர் திரும்பும் அன்விஷ், தனது வேலையை பார்க்க முடியாமல் தடுமாறுகிறார். 

மைதிலி ஏன் அப்படி செய்தார்? அவரும் அன்விஷும் இணைந்தார்களா? என்பதே காமெடி கலந்த மீதிக்கதை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aa16ced5-42cd-4aef-bedc-81ac661d5cca/26-6a9d179f6ae0c.webp' /></p><h2>படம் பற்றிய அலசல்</h2><p> 

அறிமுக இயக்குநர் வேணு கோபால் ரெட்டி இயக்கியிருக்கும் இப்படத்தை சந்தீப் ரெட்டி வங்கா, பிரணாய் ரெட்டி வங்கா தயாரித்துள்ளனர். 

காமெடி டிராமா படத்தை ஆரம்பம் முதல் இறுதிவரை சலிப்பு ஏற்படா வண்ணம் நேர்த்தியாக கொண்டு சென்றுள்ளார் இயக்குநர். </p><p>

சிம்பிளாக ஹீரோவை அறிமுகம் செய்துவிட்டு, ஹீரோயினை பாடலுடன் அறிமுகப்படுத்தி ஜென் சி கிட்ஸை ஈர்த்துள்ளார் வேணு கோபால் ரெட்டி.

ஹீரோவும், அவரது நண்பர்களும் சகஜமாக பேசிக்கொள்வது அவ்வளவு எதார்த்தமாகவும், ரசிக்கும் வகையிலும் உள்ளன.

தமிழில் ஹிட்டான கப்பல், மலையாளத்தில் சக்கைபோடுபோட்ட பிரேமலு படங்களின் பாணியில் படம் முழுக்க ஜாலி ரைட்தான்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5e5a8385-d6ef-4b90-bb45-0c38a7bf0fcd/26-6a9d17a023ecd.webp' /></p><p>என்றாலும் ஒரு சில இடங்களில் ட்விஸ்ட் வைத்து கொஞ்சம் மிஸ்டரி திரில்லர் பாணியிலும் திரைக்கதையை நகர்த்தியது புத்திசாலித்தனம்.

மேம் பேமஸ் என்ற படத்தை எழுதி, இயக்கி, ஹீரோவாக நடித்திருந்த சுமந்த் பிரபாஸ் தான் ரோமாஞ்சகம் படத்தின் கதாநாயகன்.

படம் முழுக்க துறுதுறுவென ஆக்டிவாக எதையாவது செய்து கவனம் ஈர்க்கிறார். </p><p>அவரது வசன உச்சரிப்பு, உடல்மொழி என அனைத்திலும் காமெடியை வெளிப்படுத்துகிறார். 

ஹீரோயின் அனந்திகா பார்ப்பதற்கு வெகுளியாகவும், சில வேலைகளை செய்யும்போது என்னப்பா இந்த பொண்ணு இப்படி பண்ணுது என்பது போலவும் எதார்த்தமாக நடித்துள்ளார்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/56ac965d-0fb8-44b0-97b9-3f6b21b29872/26-6a9d17a0d57fa.webp' /></p><p>ஹீரோவின் நண்பர்களில் ஒருவராக வரும் நாகேந்திர ரவி படம் முழுக்க ஒன் லைன் காமெடியால் திரையரங்கை அலறவிடுகிறார். 

மேலும் பங்கிற்கு உபேந்திரா லிமாயி போலீஸாக வந்து ஸ்கோர் செய்கிறார். அவர் கொடுக்கும் ரியாக்ஸனிலேயே நமக்கு சிரிப்பு வந்துவிடுகிறது.

படத்திற்கு மற்றொரு பக்கபலமாக இருப்பது வாசுகி வைபவின் இசைதான்.</p><p> பாடல்கள், பின்னணி இசை என இரண்டிலும் அசத்தியுள்ளார்.

பவன் குமார் பாப்புலாவின் ஒளிப்பதிவு நேர்த்தி; இயக்குநரான வேணு கோபால் ரெட்டியே படத்தொகுப்பை சிறப்பாக செய்துள்ளார்.&nbsp;&nbsp;</p><p><b><u>க்ளாப்ஸ் </u></b></p><p>

நடிகர்கள் </p><p>

காமெடி காட்சிகள் </p><p>

திரைக்கதை </p><p>

பாடல்கள் மற்றும் பின்னணி இசை </p><p><b><u>

பல்ப்ஸ் </u></b></p><p>

பெரிதாக ஒன்றுமில்லை</p><h4><b> 

மொத்தத்தில் இந்த ரோமாஞ்சகம் இளைஞர்களை ஈர்க்கும். ஜாலியாக பார்க்கக் கூடிய படம்.</b></h4><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/50da9708-4d95-4a02-824a-a2b5628746e8/26-6a9d172318dee.webp' /></p>]]></content>
            <updated>2026-09-06T07:40:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தோல்வியில் முடிந்த துப்பாக்கிச்சூடு ; அதிகாலையில் அரங்கேறிய சம்பவம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/failed-shooting-attempt-1788669664"></link>
            <id>https://jvpnews.com/article/failed-shooting-attempt-1788669664</id>
            <summary type="text">கொஸ்கொட பகுதியில் இன்று (06) அதிகாலை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. 

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்குழுவைச் சேர்ந்த &#039;கொஸ்கொட தாரக்க&#039;...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">கொஸ்கொட பகுதியில் இன்று (06) அதிகாலை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.</p><p style="text-align: justify; "> 

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்குழுவைச் சேர்ந்த 'கொஸ்கொட தாரக்க' என்பவரின் உறவினர் ஒருவரைக் இலக்கு வைத்தே இந்தத் துப்பாக்கிச் சூட்டை நடத்த முயற்சி செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b0bfad66-3a7a-452d-8317-e2777a6276ff/26-6a9ceee1f1959.webp' /></p><p style="text-align: justify; "> 

9 மில்லிமீட்டர் ரக துப்பாக்கியைப் பயன்படுத்தி இருமுறை சுடுவதற்கு முயற்சி செய்யப்பட்டுள்ள போதிலும், அந்த இரண்டு சந்தர்ப்பங்களிலும் துப்பாக்கி இயங்கவில்லை எனக் குறிப்பிடப்படுகிறது. </p><p style="text-align: justify; ">

இச்சம்பவம் தொடர்பில் கொஸ்கொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-09-06T07:36:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>H. A. Roshan</name>
            </author>
            <title type="text"><![CDATA[இரத்தினபுரியில் இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி மாயம்.. தொடரும் தேடுதல் பணி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/young-man-missing-drowning-in-ratnapura-1788678516"></link>
            <id>https://tamilwin.com/article/young-man-missing-drowning-in-ratnapura-1788678516</id>
            <summary type="text">இரத்தினபுரி - எலபாத்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களுகங்கையில் நீராடச் சென்ற
இளைஞர் ஒருவர் நேற்று பிற்பகல் முதல் காணாமல் போயுள்ளார் என்று
பொலிஸார் தெரிவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இரத்தினபுரி - எலபாத்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களுகங்கையில் நீராடச் சென்ற
இளைஞர் ஒருவர் நேற்று பிற்பகல் முதல் காணாமல் போயுள்ளார் என்று
பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>தம்புளுவன, மாரலிய பகுதியைச் சேர்ந்த, கடந்த ஆறு மாதங்களுக்கு
முன்னர் திருமணம் முடித்த 32 வயதுடைய பிரசாத் சம்பத் விஜேரத்ன என்பவரே இவ்வாறு
காணாமல் போயுள்ளார்.</p><h2>தேடுதல் பணி..&nbsp;</h2><p>

இவர் இரத்தினபுரி நகரில் உள்ள பிரபல தனியார் வங்கி ஒன்றில் ஊழியராகக்
கடமையாற்றி வந்தவர் ஆவார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/45477dd8-2e0d-4f5e-8a07-3d8aa35d1749/26-6a9d14db545dd.webp' /></p><p>
நேற்று அந்தப் பகுதியில் நண்பர்கள் சிலர் மாணிக்கக் கற்கள் தோண்டிக்
கொண்டிருந்த வேளையில், அங்கு நீராடச் சென்ற மேற்படி இளைஞர் ஆழமான குழியில்
சிக்கி நீரில் மூழ்கிக் காணாமல் போயுள்ளார்.
</p><p>
இளைஞர் திடீரெனக் காணாமல் போனதைத் தொடர்ந்து, மாணிக்கக் கல் தோண்டும் பணியில்
ஈடுபட்டிருந்தவர்களும் பிரதேச மக்களும் இணைந்து நேற்று இரவு 8 மணி வரை
தேடியும் அவர் கிடைக்கவில்லை.
</p><p>
இது குறித்து எலபாத்த பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டதை அடுத்து, பொலிஸார்
படகுகள் மூலம் தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்த போதிலும் இதுவரை அவரைக்
கண்டுபிடிக்க முடியவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-06T07:35:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இன்று இலங்கை வரும் அமெரிக்க உயர் மட்டக் குழு : இடம்பெறவுள்ள முக்கிய சந்திப்புகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/us-federal-maritime-commission-chiefs-to-arrive-sl-1788677758"></link>
            <id>https://ibctamil.com/article/us-federal-maritime-commission-chiefs-to-arrive-sl-1788677758</id>
            <summary type="text">அமெரிக்க கடல்சார் ஆணைக்குழுவின் தலைவர் லாரா டிபெல்லா மற்றும் ஆணையாளர் ராபர்ட் ஜே. ஹார்வி ஆகியோர் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்வதாக தகவல் வெ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்க கடல்சார் ஆணைக்குழுவின் தலைவர் லாரா டிபெல்லா மற்றும் ஆணையாளர் ராபர்ட் ஜே. ஹார்வி ஆகியோர் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்வதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p>இந்தோ - பசுபிக் பிராந்தியத்தில் கடல்சார் வர்த்தகம், முதலீடு மற்றும் கப்பல் போக்குவரத்து இணைப்புகளை வலுப்படுத்தும் நோக்கில் இன்று (06) வருகை தரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>

இந்த விஜயத்தின் போது, இரு தலைவர்களும் அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரிகளையும் கடல்சார் துறை தலைவர்களையும் சந்தித்து இருதரப்பு கலந்துரையாடல்களில் ஈடுப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p></p><h2>&nbsp;எரிக் மேயர் தெரிவிப்பு&nbsp;</h2><p> மேலும், கொழும்பில் நடைபெறவுள்ள 8வது சர்வதேச கடல்சார் மற்றும் மூலோபாய மாநாட்டில் அமெரிக்க கடல்சார் ஆணைக்குழுவின் தலைவர் டிபெல்லா சிறப்புரையாற்றவுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/45686d60-39d2-48ae-be0d-c9d81a6f805a/26-6a9d164257a37.webp' /></p><p>
</p><p>
 கொழும்பு துறைமுகம் வழியாகச் செல்லும் கொள்கலன்களில் 80 சதவீதத்திற்கும் அதிகமானவை உலகின் பல்வேறு பகுதிகளுக்குத் தொடர்ந்து பயணிக்கின்றன என்றும், இது இந்தியப் பெருங்கடல் கப்பல் போக்குவரத்தில் இலங்கையின் முக்கிய பங்கை மிகத் தெளிவாகக் காட்டுகிறது என்றும் அமெரிக்க தூதுவர் எரிக் மேயர் தெரிவித்துள்ளார்.
</p><p>

பாதுகாப்பான மற்றும் திறமையான கப்பல் போக்குவரத்து அமெரிக்க வணிகங்களுக்குப் புதிய வாய்ப்புகளை உருவாக்குவதோடு, பிராந்திய மையமாக இலங்கையின் நிலையை வலுப்படுத்தி, இரு நாடுகளின் பொருளாதார வளர்ச்சிக்கும் வழிவகுக்கும் என்றும் இவ்விஜயத்தை சுட்டிக்காட்டி அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>&nbsp;அமெரிக்க கடல்சார் ஆணைக்குழு</h2><p>1961-இல் நிறுவப்பட்ட அமெரிக்க கடல்சார் ஆணைக்குழு, அமெரிக்காவின் சர்வதேச கடல்சார் போக்குவரத்து அமைப்பைக் கண்காணித்து ஒழுங்குபடுத்தும் ஒரு சுதந்திரமான அமைப்பாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/15b9b6f1-70de-4e62-a418-c6436b34e8c6/26-6a9d164339501.webp' /></p><p> </p><p>ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பினால் பரிந்துரைக்கப்பட்டு, செனட் சபையின் ஒப்புதலுடன் கடந்த ஜனவரி மாதத்தில் தலைவராகப் பொறுப்பேற்ற லாரா டிபெல்லா, முன்னர் புளோரிடா மாநிலத்தின் முதல் பெண் வர்த்தகச் செயலாளராகவும் பெர்னாண்டினா துறைமுக இயக்குநராகவும் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.
</p><p>
அவருடன் வருகை தரும் ஆணையாளர் ராபர்ட் ஜே. ஹார்வி, அமெரிக்க கடற்படையின் முன்னாள் சட்ட ஆலோசகராகவும், சர்வதேச கடல்சார் சட்டம் மற்றும் கடல்சார் தொழில்நுட்பங்களில் நிபுணத்துவம் பெற்றவராகவும் திகழ்கிறார்.</p><p>

அமெரிக்க ஏற்றுமதியாளர்கள் மற்றும் இறக்குமதியாளர்களின் நலன்களைப் பாதுகாக்கவும், சர்வதேச கடல்சார் வர்த்தகத்தில் நியாயமற்ற நடைமுறைகளைத் தடுக்கவும் இந்த விஜயம் முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-06T07:33:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[பொலிஸ் அதிகாரியின் உயிரை பறித்த விபத்து ; விசாரணைகள் ஆரம்பம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/accident-claims-police-officer-s-life-1788679890"></link>
            <id>https://jvpnews.com/article/accident-claims-police-officer-s-life-1788679890</id>
            <summary type="text">நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வீதி விபத்துகளில் பொலிஸ் அதிகாரியொருவர் உட்பட மூவர் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



தனமல்வ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வீதி விபத்துகளில் பொலிஸ் அதிகாரியொருவர் உட்பட மூவர் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p style="text-align: justify; ">


தனமல்வில, கடவத்த மற்றும் மொணராகலை பகுதிகளில் இந்த விபத்துகள் இடம்பெற்றுள்ளன.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d56831e6-d053-4446-86f5-d33aeb2f6486/26-6a9d16d386d68.webp' /></p><p style="text-align: justify; ">



தனமல்வில – அம்பேகமுவ வீதியின் அரம்பேகெம பகுதியில் மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில், அம்பேகமுவ பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய 43 வயதுடைய பொலிஸ் அதிகாரியொருவர் உயிரிழந்துள்ளார்.</p><p style="text-align: justify; ">



கடவத்த நகர வெளிவட்ட வீதியில் வேன் ஒன்றும் முச்சக்கரவண்டியும் நேருக்கு நேர் மோதியதில், முச்சக்கரவண்டி சாரதி உயிரிழந்துள்ளார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">58 வயதுடைய குறித்த நபர் ராகம வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். வேன் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p style="text-align: justify; ">


மொனராகலை - பதுளை வீதியின் தொலொபோவத்தை பகுதியில் முச்சக்கரவண்டியும் இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்தும் மோதியதில், முச்சக்கரவண்டியில் பயணித்த 50 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். பேருந்து சாரதியும் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-06T07:32:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thevanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிளிநொச்சியில் திடீரென ஏற்பட்ட தீ விபத்து - பல இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்கள் சேதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sudden-fire-accident-in-kilinochchi-1788679943"></link>
            <id>https://tamilwin.com/article/sudden-fire-accident-in-kilinochchi-1788679943</id>
            <summary type="text">கிளிநொச்சி - கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட முருகானந்தா கல்லூரிக்கு முன்பாக இயங்கி வந்த பதிப்பகமொன்றில் தீ விபத்து எற்பட்டுள்ளது.

இன்ற...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிளிநொச்சி - கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட முருகானந்தா கல்லூரிக்கு முன்பாக இயங்கி வந்த பதிப்பகமொன்றில் தீ விபத்து எற்பட்டுள்ளது.</p><p>

இன்று அதிகாலை (6) 2.30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.</p><h2>பொலிஸார்&nbsp;விசாரணை</h2><p>
</p><p>
இதன் காரணமாக கடையில் இருந்த பல இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்கள் முற்றுமுழுதாக எரிந்து நாசமாகியுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/61a8c701-0bbf-4fd4-9cf6-6f88f3f0d0de/26-6a9d170be6137.webp' />&nbsp;</p><p>

இந்த விபத்து தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு
வருகின்றனர்.</p><p></p><p>&nbsp;</p><p><br></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-06T07:32:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[டெங்கு உயிரிழப்புக்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ;அவதானம் மக்களே]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/increase-in-dengue-related-deaths-1788679162"></link>
            <id>https://jvpnews.com/article/increase-in-dengue-related-deaths-1788679162</id>
            <summary type="text">நடப்பாண்டில் இதுவரை டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 73 ஆக அதிகரித்துள்ளதுடன் 96,228 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதாக டெங்கு கட்டுப்பாட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நடப்பாண்டில் இதுவரை டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 73 ஆக அதிகரித்துள்ளதுடன் 96,228 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதாக டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
</p><p>


செப்டெம்பர் மாதத்தின் முதல் நான்கு நாட்களில் மட்டும் 737 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c346e116-2441-4f9d-8ba2-e5e852f07387/26-6a9d13fbacd94.webp' /></p><h2>டெங்கு நோயாளிகள்</h2><p> ஜூலை மாதத்தில் அதிகபட்சமாக 29,964 நோயாளிகள் பதிவாகியுள்ளனர்.
</p><p>


இதனையடுத்து ஜூன் மாதத்தில் 21,533 பேரும், ஓகஸ்ட் மாதத்தில் 10,155 பேரும், மே மாதத்தில் 8,590 பேரும், ஜனவரி மாதத்தில் 7,866 பேரும் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.</p><p></p><p>
</p><p>


மாகாண ரீதியில் மேற்கு மாகாணமே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு 50,851 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதுடன், இது மொத்த நோயாளிகளில் 52.84 சதவீதமாகும்.
</p><p>


மேலும், தென் மாகாணத்தில் 13,950 பேரும், மத்திய மாகாணத்தில் 8,818 பேரும், சபரகமுவ மாகாணத்தில் 7,925 பேரும் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-09-06T07:19:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Fathima</name>
            </author>
            <title type="text"><![CDATA[தவெக பிரமுகர் ஓட ஓட வெட்டிக்கொலை! உதயநிதி ஸ்டாலின் கண்டன பதிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/tvk-murder-udhayanidhi-stalin-criticism-1788679010"></link>
            <id>https://ibctamilnadu.com/article/tvk-murder-udhayanidhi-stalin-criticism-1788679010</id>
            <summary type="text">சென்னை அடையாற்றில் தவெக பிரமுகர் கண்ணன் வெட்டிக்கொலை செய்யப்பட்ட பயங்கர சம்பவம் நடந்துள்ளது.

இதுகுறித்து எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் வெளிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>சென்னை அடையாற்றில் தவெக பிரமுகர் கண்ணன் வெட்டிக்கொலை செய்யப்பட்ட பயங்கர சம்பவம் நடந்துள்ளது.</p><p>

இதுகுறித்து எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூகவலைத்தளபதிவில்,</p><p> நாளை முதலமைச்சர் காவல்துறை மானியக் கோரிக்கை விவாதம் மீது பதிலுரை அளிப்பதற்கு முன்பாக அவரது கட்சிப் பிரமுகர் ஒருவரே தலைநகரில் கொலைக்கு ஆளாகியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d09b352a-e500-447a-9010-54261c5052b5/26-6a9d13a3e0467.webp' /><br></p><p>
</p><p>
அதுவும், தனது உயிருக்குப் பாதுகாப்பு வேண்டி ஆளும் த.வெ.க.வில் இணைந்த சரித்திரப் பதிவேடு குற்றவாளி சாலையில் ஓட ஓட விரட்டிக் கொல்லப்பட்டுள்ளார். </p><p>இதுதான் தமிழ்நாட்டின் ‘வெற்றி சட்டம்-ஒழுங்கு’ நிலை!

தலைநகரிலேயே சாலையில், இப்படி ஒரு கொலை நடக்கும் அளவு சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுப் போயிருப்பதை நினைத்து வருந்துவதா?</p><p>



இல்லை, சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் எல்லாம் தஞ்சமாகும் குப்பைத் தொட்டியாகத் த.வெ.க. இருப்பதை நினைத்து வருந்துவதா?
</p><p>


இதற்கும் தி.மு.க.வை எப்படி குற்றம் சொல்லலாம் என யோசிப்பதை நிறுத்திவிட்டு, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிசெய்வதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.<br></p>]]></content>
            <updated>2026-09-06T07:18:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Malaivanjan</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதிகாலையில் நடந்த விசேட சுற்றிவளைப்பு - சட்டவிரோத செயலில் ஈடுபட்டவர் அதிரடி கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/man-arrested-for-illegal-gem-mining-1788678719"></link>
            <id>https://tamilwin.com/article/man-arrested-for-illegal-gem-mining-1788678719</id>
            <summary type="text">நுவரெலியா - வட்டவளை குயில்வத்தை பகுதியில் சட்டவிரோதமாக மாணிக்கல் அகழ்வில் ஈடுபட்டதாகக் கூறப்படும் ஒருவர், நல்லதண்ணீர் அதிரடிப்படையினரால் கைது செய்யப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>நுவரெலியா - வட்டவளை குயில்வத்தை பகுதியில் சட்டவிரோதமாக மாணிக்கல் அகழ்வில் ஈடுபட்டதாகக் கூறப்படும் ஒருவர், நல்லதண்ணீர் அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
இந்த கைது நடவடிக்கை இன்று(06.09.2026) வட்டவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குயில்வத்தை பகுதியில், அதிகாலை சுமார் 3 மணியளவில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. </p><h2>


விசேட சுற்றிவளைப்பு</h2><p>
நல்லதண்ணீர் அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில்,
குறித்த பகுதியில் விசேட சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதாக பாதுகாப்பு
தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
</p><p>
இதன்போது, சட்டவிரோதமாக மாணிக்கல் அகழ்வில் ஈடுபட்டிருந்ததாகக் கூறப்படும் ஒருவர் அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/87bfe113-3822-4187-bf17-1db47a908e7a/26-6a9d12a1d6b8f.webp' /></p><p>
</p><p>
சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போது, அங்கிருந்த ஏனைய சந்தேகநபர்கள் தப்பிச்
சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><h2>
உபகரணங்களுடன் ஒருவர் கைது</h2><p>
மேலும், சட்டவிரோத மாணிக்கல் அகழ்வுக்கு பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும்
உபகரணங்களும் அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.</p><p>

கைது செய்யப்பட்ட சந்தேகநபரும், கைப்பற்றப்பட்ட உபகரணங்களும் மேலதிக சட்ட
நடவடிக்கைகளுக்காக வட்டவளை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக நல்லதண்ணீர்
அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.
</p><p>
சம்பவம் தொடர்பில் வட்டவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து
வருகின்றனர்.</p><p>

சட்டவிரோத மாணிக்கல் அகழ்வை தடுக்கும் வகையில், எதிர்காலத்திலும் தொடர்ச்சியான
சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என பாதுகாப்புத் தரப்பினர்
தெரிவித்துள்ளனர்.&nbsp; &nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-06T07:13:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையின் பகல் நேர வெப்பநிலை! சுமார் ஒரு வாரத்திற்கு பதிவாகப்போகும் நிலைமை - வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/weather-alert-in-sri-lanka-1788677249"></link>
            <id>https://tamilwin.com/article/weather-alert-in-sri-lanka-1788677249</id>
            <summary type="text">இலங்கையின் பல பகுதிகளில் தற்போது நிலவி வரும் பகல் நேர வெப்பநிலை தொடரலாம் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணியில் உள்ள வானிலை ஆய்வாளர் மலித் பெர்னாண்டோ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் பல பகுதிகளில் தற்போது நிலவி வரும் பகல் நேர வெப்பநிலை தொடரலாம் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணியில் உள்ள வானிலை ஆய்வாளர் மலித் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
</p><p>
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். </p><p>

அவர் மேலும் தெரிவிக்கையில், பல பகுதிகளில் மாலை நேரங்களில் மழை பெய்யும் நிலை காணப்படுகிறது.இருந்த போதிலும், தற்போது நிலவும் வெப்பமான வானிலை தொடரும்.</p><h2>பகல் நேர வெப்பநிலை</h2><p>
</p><p>
இந்த நிலைமை சுமார் ஒரு வாரத்திற்கு நீடிக்கும் சாத்தியம் காணப்படுகிறது. இதேவேளை இரவு நேர வெப்பநிலை குறையும் என எதிர்பார்க்கப்பட்டாலும், பகல் நேர வெப்பநிலை தொடரலாம் என சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aa2f7d49-ce1f-41f3-9a1b-f459e46bf4c6/26-6a9d117d46712.webp' /></p><p> 

இதேவேளை, தற்போது நிலவும் வறண்ட வானிலையால் பாதிக்கப்பட்ட 7 மாவட்டங்களில் உள்ள 35 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருவதாகப் பேரிடர் மேலாண்மை மையம் தெரிவித்துள்ளது.</p><h2>வறண்ட வானிலை</h2><p> </p><p>

அத்துடன் மொனராகலை, அம்பாறை, அநுராதபுரம், பதுளை, மட்டக்களப்பு, பொலன்னறுவை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்கள் வறண்ட வானிலையால் பாதிக்கப்பட்டுள்ளன.</p><p>

மேலும் இவ்விரு மாவட்டங்களில் மொனராகலை மாவட்டம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. 

இதற்கிடையில், வறண்ட வானிலை காரணமாக பிரதேச செயலகப் பிரிவுகளில் 1,13,354 மக்களுக்கு குடிநீர் விநியோகிக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-06T07:12:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜேர்மனியில் முதல் முறையாக ஆட்சி அதிகாரத்திற்கு வரும் ஒரு தீவிர வலதுசாரிக் கட்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/afd-bids-first-taste-of-power-1788678540"></link>
            <id>https://news.lankasri.com/article/afd-bids-first-taste-of-power-1788678540</id>
            <summary type="text">AfD bids for first taste of power: தீவிர வலதுசாரிக் கட்சியான AfD முதல் முறையாக ஆட்சி அதிகாரத்திற்கு வருகிறது.
ஜேர்மனியின் கிழக்குப் பகுதியில் இந்த வா...</summary>
            <content type="html"><![CDATA[<p>AfD bids for first taste of power: தீவிர வலதுசாரிக் கட்சியான AfD முதல் முறையாக ஆட்சி அதிகாரத்திற்கு வருகிறது.
</p><p>ஜேர்மனியின் கிழக்குப் பகுதியில் இந்த வார இறுதியில் ஒரு பெரும் பரபரப்பை ஏற்படுத்தக்கூடிய தேர்தல் நடைபெறவிருப்பதால், ஜேர்மானிய மக்கள் மூச்சைப் பிடித்துக் காத்திருக்கின்றனர்.</p><h2>அதிகாரத்தைக் கைப்பற்றும்</h2><p>
</p><p>தீவிர வலதுசாரிக் கட்சியான Alternative for Germany (AfD) கட்சி, Saxony-Anhalt மாகாண நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையைப் பெற இலக்கு வைத்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d844e108-7e56-4084-a548-00f8c7c12647/26-6a9d118e567f3.webp' /></p><p> </p><p>பெரும்பான்மையுடன் வெற்றி கிடைத்தால், போருக்குப் பிந்தைய காலத்தில் ஜேர்மனியில் மாகாண அளவிலான அதிகாரத்தை ஒரு தீவிர வலதுசாரிக் கட்சி கைப்பற்றுவது இதுவே முதல் முறையாக அமையும். </p><p>AfD-யின் எதிர்ப்பாளர்களைப் பொறுத்தவரை, இது தீவிர ஆபத்து நிறைந்த ஒரு விடயமாகும். ஆனால், AfD-ஐ பொறுத்தவரை நாடு தழுவிய அளவில் அதிகாரத்தைக் கைப்பற்றும் தனது கனவை நோக்கிய ஒரு படிக்கல்லாகவே அக்கட்சி இதைப் பார்க்கிறது. </p><p>இது ஜேர்மனியின் வரலாற்றையே மாற்றக்கூடிய ஒரு தேர்தல் என்றே கூறுகின்றனர். மட்டுமின்றி, தனது பதவிக்காலத்தை முழுமையாக நிறைவு செய்வாரா என்பது குறித்த வதந்திகள் நீடிப்பதால், நெருக்கடியில் சிக்கியுள்ள கன்சர்வேடிவ் (சிடியு) கட்சியின் சேன்ஸலரான பிரெட்ரிக் மெர்ஸுக்கு இந்த முடிவு புதிய சிக்கலை ஏற்படுத்தக்கூடும்.</p><p></p><p> </p><p>சமீபத்திய பொதுக் கூட்டங்களின்போது கூச்சலிட்டு வரவேற்கப்பட்டதால், மெர்ஸ் ஒரு தேர்தல் பலமாகப் பார்க்கப்படவில்லை. தீவிர வலதுசாரிகளின் எழுச்சியைத் தடுப்பதாக அளித்த வாக்குறுதிக்கு நேர்மாறான நிலை ஏற்பட்டுள்ளதால், அனேகமாக மெர்ஸ் தற்போது வருத்தப்படலாம் என்றே கூறுகின்றனர்.</p><p> ஆனால் இதற்கு மாறாக AfD-யின் வேட்பாளர் Ulrich Siegmund விவாதத்திலும் ஊடகச் செய்திகளிலும் ஆதிக்கம் செலுத்தியதாகத் தெரிகிறது. 35 வயதேயான அவர் சமூக ஊடகங்களில் கவனம் ஈர்த்து வருகிறார். </p><p>புலம்பெயர்ந்தோர், பொதுப் பாதுகாப்பு, ஜேர்மனியின் தள்ளாடும் பொருளாதாரம், அதிக எரிசக்தி செலவுகள் மற்றும் உக்ரைன் போன்ற நாடுகளுக்கு அனுப்பப்படும் உதவிகள் ஆகியவை குறித்து வாக்காளர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.</p><h2>சர்ச்சைக்குரியவையாக</h2><p> </p><p>மக்களும் Ulrich Siegmund மீது நம்பிக்கை வைத்துள்ளதாகவே தகவல் வெளியாகியுள்ளது. மற்ற ஆதரவாளர்கள் அவ்வளவு உறுதியாக இல்லை, ஆனால் பல தசாப்தங்களாக அரசியலில் ஆதிக்கம் செலுத்தி வந்த பிரதான கட்சிகள் மீது தங்களுக்கு நம்பிக்கை போய்விட்டதாகக் கூறுகிறார்கள். </p><p>இருப்பினும் Saxony-Anhalt மாகாணத்தில் AfD அளித்துள்ள வாக்குறுதிகள் ஜேர்மனிக்குள் மிகுந்த சர்ச்சைக்குரியவையாக உள்ளன. இயல்பான குடும்பக் கட்டமைப்புகளை விட, பாலியல் பிறழ்வுகள் மற்றும் இனப்பெருக்க நோக்கமற்ற வாழ்க்கை முறைகள் தீவிரமாக ஊக்குவிக்கப்படுவதாக அதன் தேர்தல் அறிக்கையில் கூறுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e192ecdd-6193-4449-b8a7-7cf661ec1236/26-6a9d118f0aa23.webp' /></p><p> </p><p> பாடசாலைகளில் LGBT வானவில் கொடிகள் பறக்கவிடப்படுவதற்குத் தடை விதிக்கப்பட வேண்டும் என்றும், குழந்தைகளுக்கு நாஜிக்களைப் பற்றி குறைவாகவும், ஜேர்மானிய வரலாற்றின் நேர்மறையான அம்சங்களைப் பற்றி அதிகமாகவும் கற்பிக்கப்பட வேண்டும் என்றும் அந்தக் கட்சி வாதிடுகிறது.</p><p> குடியேற்றம் தொடர்பான விவகாரத்தில், மாகாணத்தில் வதிவிட உரிமையை இனி கொண்டிராத குடியேறிகளை கைது செய்து வெளியேற்றும் திட்டங்களின் ஒரு பகுதியாக, ஒரு சிறப்புப் பணிக்குழு அமைக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-06T07:07:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரஷ்யா சென்ற ட்ரம்பின் மருமகன் ; தற்காலிகமாக நிறுத்தப்பட்ட உக்ரைன் தாக்குதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/russia-ukraine-attacks-temporarily-halted-1788678249"></link>
            <id>https://canadamirror.com/article/russia-ukraine-attacks-temporarily-halted-1788678249</id>
            <summary type="text">அமெரிக்க அமைதிக் குழுவின் வருகையை முன்னிட்டு, ரஷ்யாவும் உக்ரைனும் பரஸ்பரம் நடத்தும் தாக்குதல்களை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளன.



ர...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்க அமைதிக் குழுவின் வருகையை முன்னிட்டு, ரஷ்யாவும் உக்ரைனும் பரஸ்பரம் நடத்தும் தாக்குதல்களை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளன.
</p><p>


ரஷ்ய தலைநகர் மாஸ்கோவுக்கு அமெரிக்க சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காஃப், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் மருமகன் ஜாரெட் குஷ்னர் உள்ளிட்ட அமைதிக் குழுவினர் சென்றுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/14338dff-444b-4480-a79a-e0bc265e586e/26-6a9d106aa0598.webp' /></p><p>
</p><p>


இதனை முன்னிட்டு, உக்ரைன் மீதான தாக்குதல்களை மூன்று நாட்களுக்கு நிறுத்தி வைக்க ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் உத்தரவிட்டுள்ளார்.
</p><p>


அதேபோன்று, ரஷ்யா மீதான தாக்குதல்களையும் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அறிவித்துள்ளார்.
</p><p>


இதனிடையே, இரு நாடுகளுக்கும் இடையிலான தாக்குதல்களில் பொதுமக்கள் உயிரிழப்புகளும், கட்டடங்கள் மற்றும் உள்கட்டமைப்புகளுக்கான சேதங்களும் தொடர்ந்து பதிவாகி வருகின்றன.</p>]]></content>
            <updated>2026-09-06T07:04:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[குருவால் உருவாகும் விபரீத ராஜயோகம்: இந்த ராசிகளுக்கு பணமும் பதவியும் தேடி வரும்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/jupiter-in-cancer-forms-rajyog-who-get-luck-1788677075"></link>
            <id>https://manithan.com/article/jupiter-in-cancer-forms-rajyog-who-get-luck-1788677075</id>
            <summary type="text">ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் தேவர்களின் குருவாக கருதப்படும் குரு பகவான், செல்வம், அறிவு, மகிழ்ச்சி, நல்ல அதிர்ஷ்டம் ஆகியவற்றின் காரணியாக விளங்குகிறார்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் தேவர்களின் குருவாக கருதப்படும் குரு பகவான், செல்வம், அறிவு, மகிழ்ச்சி, நல்ல அதிர்ஷ்டம் ஆகியவற்றின் காரணியாக விளங்குகிறார். </p><p>நவகிரகங்களில் குரு பகவான் ஒரு ராசியில் சுமார் 1 ஆண்டு காலம் பயணிப்பதால், அவரது நிலை மாற்றங்கள் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b4842c1d-a936-4751-b34d-68da5bdebd05/26-6a9d0fdb6e4aa.webp' /></p><p></p><p>அந்தவகையில், குரு பகவான் ஜூன் 02 ஆம் தேதி கடக ராசிக்குள் நுழைந்தார். குருவின் உச்ச ராசியான கடகத்தில் அக்டோபர் 31 ஆம் தேதி வரை அவர் பயணிக்கிறார். இதனால் 6, 8, 12 ஆம் வீடுகளில் விபரீத ராஜயோகம் உருவாகியுள்ளது.</p><p>

இந்த ராஜயோகம் குறுகிய காலத்தில் நல்ல வளர்ச்சியையும், நிதி நிலையில் முன்னேற்றத்தையும் ஏற்படுத்தக்கூடிய சக்தி வாய்ந்ததாக கருதப்படுகிறது. </p><p>குரு பகவானால் உருவாகியுள்ள இந்த விபரீத ராஜயோகத்தால் நல்ல வளர்ச்சியைக் காணப்போகும் ராசிக்காரர்கள் யார் யார் என இந்த பதிவி்ல் விரிவாக பார்க்கலாம்.</p><h2>சிம்மம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bcc91be5-812b-4c0f-9369-4db5fa14556c/26-6a9d0fdc22f56.webp' /></p><p>
சிம்ம ராசியின் 12-ஆம் வீட்டில் குரு பகவான் இருப்பதால் உருவாகும் விபரீத ராஜயோகம், வெளிநாடு தொடர்பான தொழில் அல்லது வேலை செய்பவர்களுக்கு சிறப்பான பலன்களைத் தரும். </p><p>வெளிநாடு செல்லும் கனவு இருந்தால் அதற்கான வாய்ப்புகள் கிடைக்கலாம். நீண்ட காலமாக இழுத்தடித்த அரசு வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும்.</p><p>தொழிலிலும் நல்ல வளர்ச்சி ஏற்படும்.

குரு 4-ஆம் வீட்டைப் பார்ப்பதால் வீட்டு பிரச்சனைகள் தீர்ந்து, குடும்பச் சூழல் மேம்படும். தாயாரின் ஆதரவு கிடைக்கும். புதிய வீடு அல்லது வாகனம் வாங்கும் வாய்ப்பும் அமையும்.</p><h2>
தனுசு</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0bda3d7f-c875-4d1e-b556-6a936ad9f61c/26-6a9d0fdccb4b6.webp' /></p><h2>
</h2><p>தனுசு ராசியின் 8-ஆம் வீட்டில் குரு பகவான் இருப்பதால் உருவாகும் விபரீத ராஜயோகம், நீண்ட கால பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் அளிக்கும்.</p><p> திடீர் நிதி ஆதாயங்கள் கிடைக்கலாம். நீண்ட காலமாக சிக்கியிருந்த பணம் கைக்கு வந்து சேரும்.

ஏற்கனவே செய்த முதலீடுகளில் நல்ல லாபம் கிடைக்கும்.</p><p> தொழிலதிபர்களுக்கு எதிர்காலத்தில் நல்ல பலன் தரக்கூடிய புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். தேவையற்ற செலவுகள் குறையும். நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். புதிய சொத்துகளை வாங்கும் வாய்ப்பும் கிடைக்கும். குடும்பப் பிரச்சனைகள் படிப்படியாக குறையும்.
</p><h2>
கும்பம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/deed72f7-be94-4c87-bb9c-8a9cfceb77ee/26-6a9d0fdd7fd49.webp' /></p><p></p><h2>
</h2><p>கும்ப ராசியின் 6-ஆம் வீட்டில் குரு பகவான் இருப்பதால் உருவாகும் விபரீத ராஜயோகம், நிதி நிலையை வலுப்படுத்தி, கடன் தொல்லைகளில் இருந்து நிவாரணம் அளிக்கும். </p><p>பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது.

வணிகர்களுக்கு தொழிலை விரிவுபடுத்தும் வாய்ப்புகள் கிடைத்து, நல்ல லாபம் பெறலாம். </p><p>நீதிமன்ற வழக்குகள் இருந்தால், தீர்ப்பு சாதகமாக அமையும். இதுவரை இருந்த ஆரோக்கியப் பிரச்சனைகள் படிப்படியாக குறைந்து, உடல்நலத்தில் முன்னேற்றம் ஏற்படும்.</p><p><b>இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).&nbsp;&nbsp;</b></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-06T07:02:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[அயலி சீரியல் நடிகை வித்யா மோகனின் கிளாமர் போட்டோஷூட்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/ayali-serial-actress-vidhya-latest-photoshoot-1788676957"></link>
            <id>https://cineulagam.com/article/ayali-serial-actress-vidhya-latest-photoshoot-1788676957</id>
            <summary type="text">ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் அயலி சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் நடிகை வித்யா மோகன். இவர் இன்ஸ்டாகிராமில் மிகவும்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் அயலி சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் நடிகை வித்யா மோகன். இவர் இன்ஸ்டாகிராமில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் பிரபலம் ஆவார். இவர் வெளியிடும் புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும். அந்த வகையில், கருப்பு நிற உடையில் எடுத்துக்கொண்ட சமீபத்திய கிளாமர் போட்டோஷூட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். </p><p>இதோ அந்த புகைப்படங்கள்:</p>]]></content>
            <updated>2026-09-06T07:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yoosuf</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிராமத்திற்குள் புகுந்த காட்டு யானைகள்! களமிறங்கிய வனவிலங்கு அதிகாரிகள் - பல மணிநேர தீவிர போராட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/elephant-attack-in-sri-lanka-1788676174"></link>
            <id>https://tamilwin.com/article/elephant-attack-in-sri-lanka-1788676174</id>
            <summary type="text">கந்தளாய் - பேராறு பகுதியில் நேற்று முன் தினம் (04.09.2026) கிராமத்திற்குள் புகுந்த காட்டு
யானைகள் வனவிலங்கு அதிகாரிகளின் பல மணி நேர தீவிர போராட்டத்தி...</summary>
            <content type="html"><![CDATA[<p>கந்தளாய் - பேராறு பகுதியில் நேற்று முன் தினம் (04.09.2026) கிராமத்திற்குள் புகுந்த காட்டு
யானைகள் வனவிலங்கு அதிகாரிகளின் பல மணி நேர தீவிர போராட்டத்திற்குப்
பிறகு நேற்று மாலை (05) பாதுகாப்பாக வனப்பகுதியை நோக்கி விரட்டப்பட்டது.
</p><p>
பேராறு கிராமத்திற்குள் நுழைந்த இந்த காட்டு யானை, குடியிருப்புகள் நிறைந்த
பகுதிக்குள் உலா வந்ததால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்திற்கும் பீதிக்கும்
உள்ளாகினர். </p><p>இது குறித்து கந்தளாய் வனவிலங்கு காரியாலய அதிகாரிகளுக்கு
உடனடியாக தகவளிக்கப்பட்டது.</p><h2>யானைகளை வெளியேற்றும் பணி</h2><p>
</p><p>
இதனைத் தொடர்ந்து, நேற்று அதிகாலை முதல் வனவிலங்கு அதிகாரிகளும் பொலிஸ்
மற்றும் கிராம மக்கள் இணைந்து யானையை கிராமத்தை விட்டு வெளியேற்றும் பணியில்
ஈடுபட்டனர். </p><p>நாள் முழுவதும் மேற்கொள்ளப்பட்ட தொடர் முயற்சிகளின் பலனாக, நேற்று
மாலையளவில் யானை வெற்றிகரமாக வனப்பகுதிக்குள் விரட்டி அடிக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fa94463f-ef82-4207-abc7-3bede2ea1532/26-6a9d0db1d397f.webp' /></p><h2>பிரதேச மக்கள் வேதனை</h2><p>

யானை ஊருக்குள் புகுந்திருந்த அப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார்
சைக்கிள் ஒன்றை சேதப்படுத்தியுள்ளதுடன், பல வீடுகளின் பாதுகாப்பு வேலிகளையும்
உடைத்து நாசம் செய்துள்ளதாக பிரதேச மக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
</p><p>
அடிக்கடி கிராமங்களுக்குள் புகுந்து சேதம் விளைவிக்கும் காட்டு யானைகளிடம்
இருந்து பேராறு கிராம மக்களையும் அவர்களின் சொத்துக்களையும் பாதுகாக்க நிரந்தர
தீர்வு காணப்பட வேண்டும் என அப்பகுதி மக்கள் அதிகாரிகளிடம் கோரிக்கை
விடுத்துள்ளனர்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-06T06:52:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் அடுத்தடுத்து கரையொதுங்கும் இந்திய படகுகள்! கடற்படையினர் விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/indian-boats-continue-to-run-aground-in-sri-lanka-1788676440"></link>
            <id>https://tamilwin.com/article/indian-boats-continue-to-run-aground-in-sri-lanka-1788676440</id>
            <summary type="text">இந்திய கடற்றொழிலாளர்களுக்கு சொந்தமான படகொன்று புத்தளம், கற்பிட்டி பிரதேசத்தில்&amp;nbsp;கரை ஒதுங்கியுள்ளது. இந்திய கடற்றொழிலாளர்களின் பயன்பாட்டில் உள்ள வக...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்திய கடற்றொழிலாளர்களுக்கு சொந்தமான படகொன்று புத்தளம், கற்பிட்டி பிரதேசத்தில்&nbsp;கரை ஒதுங்கியுள்ளது. </p><p>இந்திய கடற்றொழிலாளர்களின் பயன்பாட்டில் உள்ள வகையை சேர்ந்த படகு ஒன்றே
இயந்திரமின்றி நேற்று இவ்வாறு கரை ஒதுங்கியுள்ளது.</p><h2>கடற்படையினர் விசாரணை</h2><p>இந்த படகு இந்தியாவின் காரைக்கால் பகுதியை சேர்ந்த மீனவர்களின் படகாக இருக்கலாம்
என கருதப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/eb9acf00-a271-4624-b2b7-46ec36924db2/26-6a9d0c308311d.webp' /></p><p>
</p><p>இதேவேளை, கரையொதுங்கிய படகு தொடர்பில் கடற்படையினர் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு
வருகின்றனர்.</p><p>

இதேநேரம், இவ்வகையான இந்திய படகு ஒன்று கடந்த மாதமும் இதே பகுதியில் கரை
ஒதுங்கியமையும் குறிப்பிடத்தக்கது.</p><p></p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-06T06:46:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிக்பாஸ் சீசன் 10ல் களமிறங்கப்போகும் பிரபலங்கள்!! லிஸ்ட் இதோ..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/biggbosstamil10-contestants-photos-details-list-1788677894"></link>
            <id>https://viduppu.com/article/biggbosstamil10-contestants-photos-details-list-1788677894</id>
            <summary type="text">பிக்பாஸ் தமிழ் சீசன் 10பிக்பாஸ் தமிழ் சீசன் 10 எப்போது தொடங்கும் என்று பலரும் எதிர்ப்பார்த்திருந்த நிலையில் இன்று செப்டம்பர் 6 ஞாயிற்றுக்கிழமை முதல் வ...</summary>
            <content type="html"><![CDATA[<h2>பிக்பாஸ் தமிழ் சீசன் 10</h2><p>பிக்பாஸ் தமிழ் சீசன் 10 எப்போது தொடங்கும் என்று பலரும் எதிர்ப்பார்த்திருந்த நிலையில் இன்று செப்டம்பர் 6 ஞாயிற்றுக்கிழமை முதல் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி தொடங்கி வைக்கவுள்ளார். இந்நிலையில், போட்டியாளர்கள் யார் யார் கலந்து கொள்ளவுள்ளார் என்ற தகவல் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dc23d5b2-8bff-4218-8ba5-a99ba9c3e875/26-6a9d0f095d1a6.webp' /></p><p> ஏற்கனவே, குழந்தை பிறந்த சில மாதம் தான் ஆனதால் பிக்பாஸில் நான் கலந்து கொள்ளவில்லை என்று மாதம்பட்டி ரங்கராஜனின் 2வது மனைவி ஜாய் கிரிஸில்டா தெரிவித்தார்.</p><p> அந்தவகையில் மகாநதி சீரியல் மூலம் பிரபலமான நடிகை லட்சுமி பிரியா, நடிகர் குமரன் தங்கராஜன், ரிசார்ட் வெப் தொடரில் நடித்து பிரபலமான தன்யா பல்லத், கனா காணும் காலங்கள் பிரபலம் பிளாக் பாண்டி, ஷதிகா, பிரித்வினாத், ஜவித், அஸ்மிதா நீலமேகம், அவினாஷ், ஷமா, ஜேசன், முனியம்மாள், வினோத் பாபு, சாந்தினி தமிழரசன், முத்தலகி, ராகவ், அன்சர், முகேஷ் எம் கே, சரண் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-09-06T06:45:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[செம்மணி மனிதப்புதைகுழி : சுயாதீன சர்வதேச விசாரணை கோரும் பிரித்தானிய எம்.பி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/international-investigation-about-chemmani-uk-mp-1788674300"></link>
            <id>https://ibctamil.com/article/international-investigation-about-chemmani-uk-mp-1788674300</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பில் சர்வதேச நிதியுதவியுடன் கூடிய முழுமையானதும் சுயாதீனமானதுமான சர்வதேச விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும் என...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பில் சர்வதேச நிதியுதவியுடன் கூடிய முழுமையானதும் சுயாதீனமானதுமான சர்வதேச விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும் என பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் பொப் பிளக்மன் வலியுறுத்தியுள்ளார்.
</p><p>பாடசாலை மாணவி கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலை செய்யப்பட்டு நாளையுடன் (07) 30 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில், செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பில் கருத்து வெளியிட்ட போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.</p><p>அவர் மேலும் தெரிவிக்கையில், 30 ஆண்டுகளுக்கு முன்னர் இடம்பெற்ற கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலை தொடர்பான வழக்கில் வெளிப்பட்ட தகவல்களே செம்மணி பகுதியில் மனிதப் புதைகுழிகள் இருப்பது தொடர்பான விசாரணைகளுக்கு முக்கிய காரணமாக அமைந்தன.</p><p></p><h2>&nbsp;583 மனித எச்சங்கள் மீட்பு&nbsp;</h2><p>இந்தநிலையில், செம்மணி மனிதப் புதைகுழியில் முன்னெடுக்கப்பட்டுவரும் அகழ்வுப் பணிகளில் இதுவரை 583 மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்டு அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் செம்மணி, இலங்கையில் இதுவரை கண்டறியப்பட்ட மிகப்பெரிய மனிதப் புதைகுழியாக மாறியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e07d077f-45c1-44a3-b0fa-9698dc5c207c/26-6a9d09f5a5506.webp' /></p><p> கிருஷாந்தி குமாரசுவாமியின் படுகொலையும் அதனைத் தொடர்ந்து வெளிப்பட்ட செம்மணி மனிதப் புதைகுழி விவகாரமும், இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் மற்றும் போர்க்காலத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் கொலைகள் தொடர்பான உண்மை மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பில் நீண்டகாலமாக பதிலளிக்கப்படாத கேள்விகளை மீண்டும் எழுப்பியுள்ளன.
</p><p>செம்மணி விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கும் காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கும் உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறல் உறுதி செய்யப்பட வேண்டும்.</p><p></p><h2>டி.என்.ஏ பரிசோதனை</h2><p>
</p><p>
மனிதப் புதைகுழியில் இருந்து மீட்கப்படும் எச்சங்கள் தொடர்பான தடயவியல் மற்றும் டி.என்.ஏ பரிசோதனைகளுக்கு சர்வதேச நிபுணத்துவம் தேவைப்படுவதாகவும், இந்த விவகாரத்தில் சர்வதேச பங்களிப்பு அவசியம் எனவும் மனித உரிமை அமைப்புகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f6b0ae09-f56f-47cb-9c50-d274a9d14281/26-6a9d09f660ea7.webp' /></p><p>எனவே, செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் தொடர்பில் வெளிப்படையான, சுயாதீனமான மற்றும் சர்வதேச தரத்திலான விசாரணை முன்னெடுக்கப்படுவதுடன், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நீண்டகாலமாக மறுக்கப்பட்டு வரும் உண்மையும் நீதியும் உறுதி செய்யப்பட வேண்டும்“ என&nbsp; தெரிவித்துள்ளார்.</p><p>&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-06T06:42:40+00:00</updated>
        </entry>
    </feed>
