<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-07-21T08:09:48+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[நடிகை ரம்யா பாண்டியனின் சிகப்புநிற சேலை போட்டோஷூட்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/ramya-pandian-red-saree-photoshoot-post-1784620399"></link>
            <id>https://viduppu.com/article/ramya-pandian-red-saree-photoshoot-post-1784620399</id>
            <summary type="text">ரம்யா பாண்டியன்சோசியல் மீடியாவில் கிளாமர் புகைப்படங்கள், வீடியோக்களை பகிர்ந்து பிரபலமான நடிகை ரம்யா பாண்டியன், டம்மி பட்டாசு, ஜோக்கர், ஆண் தேவதை உள்ளி...</summary>
            <content type="html"><![CDATA[<h2>ரம்யா பாண்டியன்</h2><p>சோசியல் மீடியாவில் கிளாமர் புகைப்படங்கள், வீடியோக்களை பகிர்ந்து பிரபலமான நடிகை ரம்யா பாண்டியன், டம்மி பட்டாசு, ஜோக்கர், ஆண் தேவதை உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார். </p><p>குக் வித் கோமாளி சீசன் 1ல் கலந்து கொண்டு 2வது ரன்னர் அப் இடத்தை பிடித்தார்.

அதன்பின் கலக்கப்போவது யாரு சீசன் 9 நிகழ்ச்சியில் நடுவராக பணியாற்றினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4f7850ac-5047-41d8-afe9-19a6f628f089/26-6a5f257d761e7.webp' /></p><p> </p><p>அதன்பின் பிக்பாஸ் சீசன் 4ல் கலந்து கொண்டு 3வது ரன்னர் அப்பும், பிக்பாஸ் அல்டிமேட் 1ல் கலந்து கொண்டு 2வது ரன்னர் அப் இடத்தையும் பிடித்தார்.

கடந்த 2024ல் யோகா பயிற்சியாளர் லோவல் தவான் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.</p><p> யூடியூப் ஆரம்பித்து பல விஷயங்களை பகிர்ந்து வரும் ரம்யா பாண்டியன், நடிப்பில் அருள்வான் படம் ரிலீஸாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இன்ஸ்டாகிராமில் தற்போது சிகப்புநிற சேலையணிந்து எடுத்த க்யூட் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-07-21T08:05:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[கட்டுவான தலைக்கவச தொழிற்சாலையில் திடீர் தீ விபத்தில் ஐவர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/five-killed-in-sudden-fire-at-helmet-factory-1784620918"></link>
            <id>https://jvpnews.com/article/five-killed-in-sudden-fire-at-helmet-factory-1784620918</id>
            <summary type="text">ஹோமாகம, கட்டுவான கைத்தொழில் வலயத்தில் உள்ள தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளதாக ஹோமாகம பொலிஸார் தெரிவித்துள்ளனர். தற்போது தீ கட...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹோமாகம, கட்டுவான கைத்தொழில் வலயத்தில் உள்ள தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளதாக ஹோமாகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p> </p><p></p><p>தற்போது தீ கட்டுப்படுத்தப்பட்டு வரும் அதேவேளையில், தீயில் சிக்கியுள்ளவர்களைக் கண்டறிவதற்கான தேடுதல் நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/af92694d-a8af-4997-a8d3-ed149253be82/26-6a5f2777b0554.webp' /></p><p> 

இன்று (21) காலை இத்தீ விபத்து ஏற்பட்டுள்ளதுடன், அந்நேரத்தில் 80க்கும் மேற்பட்ட ஊழியர்கள் அங்கு இருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. </p><p>

இந்நிலையில் எவரேனும் உள்ளே சிக்கியுள்ளனரா? என்பதைக் கண்டறிவதற்காக தொடர்ந்து மீட்புப் பணிகள் இடம்பெற்று வருகின்றன. </p><p>

தலைக்கவசம் தயாரிக்கும் தொழிற்சாலையிலேயே இந்தத் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக ஹோமாகம தலைமையகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-21T08:01:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கயானாவில் கவிழ்ந்த பயணிகள் படகு: 27 பேர் பலி - 83 பேர் மாயம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/27-people-died-passenger-boat-capsized-in-guyana-1784618126"></link>
            <id>https://ibctamil.com/article/27-people-died-passenger-boat-capsized-in-guyana-1784618126</id>
            <summary type="text">தென் அமெரிக்கவில் கயானாவின் கடற்கரைக்கு அப்பால் பயணிகள் படகு ஒன்று கவிழ்ந்ததில் எயிரிழந்த 27 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் 83 பேர் காணாமல் போய...</summary>
            <content type="html"><![CDATA[<p>தென் அமெரிக்கவில் கயானாவின் கடற்கரைக்கு அப்பால் பயணிகள் படகு ஒன்று கவிழ்ந்ததில் எயிரிழந்த 27 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் 83 பேர் காணாமல் போயுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.&nbsp;</p><p> </p><p>'எம்வி பரிமா' என்ற படகில் பயணம் செய்த பயணிகளே இவ்வாறு விபத்துக்குள்ளாகியதாக அந்நாட்டு&nbsp; பிரதமர் மார்க் பிலிப்ஸ் வெளியிட்ட அறிக்கையை மேற்கோள்காட்டி இந்த செய்தி வெளியாகி உள்ளது.&nbsp;</p><p>கடந்த சனிக்கிழமை இரவு நடந்த விபத்தைத் தொடர்ந்து, 15 சிறு குழந்தைகள் உட்பட 69 பேர் இதுவரை மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>படகின் கேப்டன் கைது</h2><p> </p><p>விபத்துக்குள்ளாகிய படகில் 179 பேர் இருந்தனர் என்று மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/303d46ae-6e96-4581-81ab-ce6d3041789c/26-6a5f23a06899d.webp' /></p><p>பெரிய அலை ஒன்று தாக்கியதால் படகு திடீரென ஒருபுறம் சாய்ந்து, சில நொடிகளில் நீரால் நிரம்பியதாக உயிர் தப்பிய ஒருவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.&nbsp;</p><p>
இதுகுறித்த மேலதிக விசாரணைகளில் படகின் மாலுமியும் மற்றொரு குழு உறுப்பினர்களும் போதைப்பொருள் பயன்படுத்தி வந்ததை மருத்துவப் பரிசோதனைகள் உறுதி செய்துள்ளதாகக் தெரிவிக்கபட்டுள்ளது.&nbsp;</p><p>அவர்கள் அந்நாட்டு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன்&nbsp; பொறுப்பற்ற முறையில் செயல்பட்டவர்கள் சட்டப்படி கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என்று கயானா அரசு தெரிவித்துள்ளது.
</p><p>மேலும் காணாமல் போனவர்களைத் தேடும் பணியில், பிரான்ஸ் இராணுவத்தைச் சேர்ந்த மூழ்காளர்கள் மற்றும் மருத்துவர்கள் குழுவும் உதவி வருவதாகத்&nbsp; சர்வதேச ஊடக செய்திகள் தெரிவிக்கின்றது.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-21T08:01:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தங்கம் வாங்கவுள்ளோருக்கு முக்கிய அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/today-july-21st-gold-and-silver-price-rate-update-1784620471"></link>
            <id>https://ibctamil.com/article/today-july-21st-gold-and-silver-price-rate-update-1784620471</id>
            <summary type="text">சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை மாற்றங்களுக்கு ஏற்ப, உள்நாட்டு தங்க விலைகளிலும் தொடர்ந்து ஏற்ற, இறக்கங்கள் பதிவாகி வருவதாக நகை வியாபாரிகள் தெரிவிக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை மாற்றங்களுக்கு ஏற்ப, உள்நாட்டு தங்க விலைகளிலும் தொடர்ந்து ஏற்ற, இறக்கங்கள் பதிவாகி வருவதாக நகை வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.</p><p>அந்தவகையில், இலங்கையில் தங்கத்தின் விலை இன்று (21) மீண்டும் 1000 ரூபாயால் அதிகரித்துள்ளது.</p><p>அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் குறித்த விடயத்தினை தெரிவித்துள்ளது.&nbsp;&nbsp;</p><p></p><h2>தங்கத்தின் விலை&nbsp;</h2><p>
</p><p>
நேற்று (20) 24 கரட் தங்கம் ஒரு பவுண் ரூ.376,000 ஆக விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று அதன் விலை ரூ.1,000 அதிகரித்து ரூ.377,000 ஆக பதிவாகியுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b4e5d49c-a08f-4ee8-a303-656bf6ca3415/26-6a5f27006b091.webp' /></p><p>தற்போதைய விலை நிலவரப்படி, 22 கரட் தங்கம் ஒரு பவுண் ரூ.346,800 ஆக விற்பனை செய்யப்படுகிறது.</p><p>

அதேவேளை, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராம் ரூ.47,125 ஆகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராம் ரூ.43,350 ஆகவும் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-21T08:00:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானிய மக்களுக்கு மகிழ்வான செய்தி... புதிய பிரதமரின் அதிரடி அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/burnham-scraps-vat-1784618511"></link>
            <id>https://news.lankasri.com/article/burnham-scraps-vat-1784618511</id>
            <summary type="text">வாழ்க்கைச் செலவு நெருக்கடியைச் சமாளிக்கக் குடும்பங்களுக்கு உதவும் வகையில், அக்டோபர் முதல் மின்சாரக் கட்டணங்களுக்கான வரிகளை ஆன்டி பர்னாம் பெருமளவு குறை...</summary>
            <content type="html"><![CDATA[<p>வாழ்க்கைச் செலவு நெருக்கடியைச் சமாளிக்கக் குடும்பங்களுக்கு உதவும் வகையில், அக்டோபர் முதல் மின்சாரக் கட்டணங்களுக்கான வரிகளை ஆன்டி பர்னாம் பெருமளவு குறைக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><h2>மதிப்புக்கூட்டு வரி</h2><p>
</p><p>மின்சாரக் கட்டணங்களிலிருந்து மதிப்புக்கூட்டு வரியை (VAT) நீக்குவதாக அவர் உறுதியளித்துள்ளார், இதன்மூலம் இலையுதிர் காலம் முதல் ஆண்டுக்கான உச்சவரம்பு விலையிலிருந்து 45 பவுண்டுகள் குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/78dce1c6-382c-4a68-8066-9fedec3c8dce/26-6a5f1f9377496.webp' /></p><p> </p><p>மத்திய கிழக்கு மோதலின் விளைவாக, இந்த ஆண்டின் பிற்பகுதியில் எரிசக்தி கட்டணங்கள் மீண்டும் அதிகரிக்கக்கூடும். இந்த நிலையில், மின்சாரக் கட்டணங்கள் மீதான மதிப்புக்கூட்டு வரி (VAT) 5 சதவீதத்திலிருந்து 0 சதவீதமாகக் குறைக்கப்படும். </p><p>மட்டுமின்றி, அதிகரித்து வரும் கட்டணச் சுமையுடன் போராடும் மக்களுக்குச் சற்று நிம்மதி அளிப்பதாகவும், பணவீக்கத்தைக் குறைக்க உதவுவதாகவும் புதிய பிரதமர் உறுதியளித்துள்ளார்.</p><p></p><p> </p><p>மேலும், கடந்த பட்ஜெட்டில் கொண்டுவரப்பட்ட 150 பவுண்டுகள் குறைப்புக்கு மேலதிகமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இத்திட்டத்திற்கு 2026-27 ஆம் ஆண்டில் 850 மில்லியன் பவுண்டுகள் செலவாகும்; 1.8 பில்லியன் பவுண்டுகள் செலவாகவிருந்த 'டிஜிட்டல் அடையாள அட்டை' (Digital ID card) திட்டத்தை ரத்து செய்வதன் மூலம் இதற்கான நிதி திரட்டப்படும். </p><p>வாழ்க்கைச் செலவு உயர்வால் குடும்பங்கள் திண்டாடி வரும் நிலையில், அரசாங்கம் நீண்ட காலமாகவே மக்களுக்கான பலனளிக்கும் வகையில் செயல்படவில்லை.</p><h2>பேருந்து கட்டணங்கள்</h2><p> </p><p>அந்த நிலைமை மாற வேண்டும். மக்களுக்குச் சற்று நிம்மதிப் பெருமூச்சு விடக்கூடிய சூழலை உருவாக்க விரும்புவதாக நான் கூறியிருந்தேன்; அதையே பிரதமராகப் பொறுப்பேற்ற இரண்டாம் நாளான இன்று நான் அறிவிக்கிறேன் என ஆன்டி பர்னாம் தெரிவித்துள்ளார்.</p><p> இதனிடையே, பேருந்து கட்டணங்களைக் குறைத்தல் மற்றும் வாடகைக் கட்டுப்பாடு உள்ளிட்ட பிற கொள்கைகளும் பரிசீலனையில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7bd34483-f1db-43ce-a179-fe832ad5b56a/26-6a5f1f92af49b.webp' /></p><p> </p><p>நீண்ட கால நடவடிக்கையாக, கடந்த ஐந்து ஆண்டுகளாக 12,570 பவுண்டுகள் என்ற அளவில் மாற்றமின்றி இருக்கும் தனிநபர் வருமான வரி விலக்கு வரம்பை உயர்த்துவது குறித்தும் ஆலோசிக்கப்படலாம் என தெரிய வந்துள்ளது. </p><p>எரிசக்தி நிறுவனங்கள் மதிப்புக்கூட்டு வரி (VAT) குறைப்பின் பலனை நுகர்வோருக்குக் கொண்டுசேர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. </p><p>வீட்டு உபயோக எரிசக்திக்குத் தகுதிபெறும் சிறு வணிகங்களுக்கும் இந்தக் குறைப்பு நீட்டிக்கப்படும். அத்துடன், தகுதிவாய்ந்த தொண்டு நிறுவனங்கள் மற்றும் முதியோர் இல்லங்களுக்கும் இந்த நீட்டிப்பு பொருந்தும்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-21T07:50:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை அணிக்கு எதிராக சதம் விளாசிய இருவர்: இந்தியா முன்னிலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/kushagra-and-manal-ton-vs-sri-lanka-u19-test-1784619568"></link>
            <id>https://news.lankasri.com/article/kushagra-and-manal-ton-vs-sri-lanka-u19-test-1784619568</id>
            <summary type="text">இலங்கைக்கு எதிரான U19 டெஸ்டில் இந்தியா அணி 355 ஓட்டங்கள் குவித்துள்ளது.&amp;nbsp;யஷ்பர்த்தன்&amp;nbsp;அதிரடி
இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதும் U19 டெஸ்ட் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கைக்கு எதிரான U19 டெஸ்டில் இந்தியா அணி 355 ஓட்டங்கள் குவித்துள்ளது.&nbsp;</p><h2>யஷ்பர்த்தன்&nbsp;அதிரடி</h2><p>
இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதும் U19 டெஸ்ட் போட்டி கொழும்பில் நடந்து வருகிறது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/68d183ec-f9e0-440c-9eff-be25eaa56c6f/26-6a5f23f2b53e4.webp' />&nbsp;</p><p></p><p>

துடுப்பாட்டத்தை தொடங்கிய இந்திய அணியில் தொடக்க வீரர்களான லக்ஷ்யா, சாகர் டக்அவுட் ஆகினர்.
</p><p>
அடுத்து வந்த யஷ்பர்த்தன் சௌஹான் அதிரடியாக 78 (89) ஓட்டங்கள் விளாசி வெளியேற, குஷாக்ரா ஓஜ்ஹா மற்றும் மானல் சௌஹான் வலுவான கூட்டணி அமைத்தனர்.</p><p> 

இவர்களது பார்ட்னர்ஷிப் 155 ஓட்டங்கள் சேர்க்க, சதம் விளாசிய குஷாக்ரா ஓஜ்ஹா 111 ஓட்டங்களில் ரன்அவுட் ஆனார்.</p><p> 

மறுமுனையில் மானல் சௌஹான் 122 ஓட்டங்களுடன் களத்தில் நிற்க, இந்திய அணி தற்போது வரை 355 ஓட்டங்கள் குவித்துள்ளது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f7433a0b-756b-492b-a788-1b6730ffbf3c/26-6a5f23f3643c4.webp' />&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1967f9e4-3bbf-4458-9729-1291ac3a1952/26-6a5f23f211020.webp' />&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e09793d9-3a82-491c-b35d-8ed322b654a6/26-6a5f24738c6e6.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-21T07:45:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை சபாநாயகரிடம் கையளிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/minister-of-justice-submitted-to-the-speaker-1784619531"></link>
            <id>https://jvpnews.com/article/minister-of-justice-submitted-to-the-speaker-1784619531</id>
            <summary type="text">நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவுக்கு எதிராக எதிர்க்கட்சியால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவுக்கு எதிராக எதிர்க்கட்சியால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p></p><p>நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலில் கைதிகள் மற்றும் அதிகாரிகள் உட்பட மொத்தமாக 31 பேர் உயிரிழந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8262393a-29f9-4d1f-ad15-6e4597c12113/26-6a5f220cd81aa.webp' /></p><p>

இந்த சம்பவங்களுக்கு தாம் பொறுப்பேற்பதாக நீதியமைச்சர் ஹர்சன நாணயக்கார பகிரங்கமாக அறிவித்திருந்தார்.
</p><p>
இந்தநிலையில் குறித்த சம்பவத்துக்கு பொறுப்பேற்று அமைச்சு பொறுப்பிலிருந்து ஹர்சன நாணயக்கார விலக வேண்டும் என எதிர்கட்சிகள் வலியுறுத்தி வந்த பின்னணியில் இந்த நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-21T07:42:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[கட்டா குஸ்தி 2 வசூல்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. மாபெரும் சாதனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/gatta-kusthi-2-movie-grossed-55-crore-box-office-1784612864"></link>
            <id>https://cineulagam.com/article/gatta-kusthi-2-movie-grossed-55-crore-box-office-1784612864</id>
            <summary type="text">கட்டா குஸ்தி 2விஷ்ணு விஷால் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாது முன்னணி ஹீரோக்களில் ஒருவர். வித்தியாசமான கதைக்களத்தை தேர்ந்தெடுத்து அதில் பலமுறை மாபெரு...</summary>
            <content type="html"><![CDATA[<h2>கட்டா குஸ்தி 2</h2><p>விஷ்ணு விஷால் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாது முன்னணி ஹீரோக்களில் ஒருவர். வித்தியாசமான கதைக்களத்தை தேர்ந்தெடுத்து அதில் பலமுறை மாபெரும் அளவில் வெற்றி கண்டுள்ளார்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2755a877-8c83-4874-b6de-a68061d737ae/26-6a5f080325547.webp' /></p><p>இவர் நடிப்பில் இந்த ஆண்டு பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளியான திரைப்படம் கட்டா குஸ்தி 2. வேல்ஸ் நிறுவனம் தயாரிக்க, இயக்குநர் செல்லா அய்யாவு இயக்கத்தில் உருவான இப்படம் கடந்த ஜூலை 3-ஆம் தேதி வெளியானது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f21c1a75-6db2-4df4-87d5-c4af88ee68cc/26-6a5f080487fdc.webp' /></p><p></p><p>

இப்படத்தில் விஷ்ணு விஷாலுடன் இணைந்து <a href="https://www.youtube.com/watch?v=cH4Gxh4eO4E" target="_blank">ஐஸ்வர்யா லட்சுமி</a> நடித்திருந்தார். மேலும், கருணாஸ், காளி வெங்கட், முனீஸ்காந்த், லிஸ்ஸி ஆண்டனி, கருணாகரன் ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஷான் ரோல்டன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.</p><h2>மாபெரும் சாதனை</h2><p>

விஷ்ணு விஷாலின் திரை வாழ்க்கையில் அதிக வசூல் செய்த திரைப்படமாக கட்டா குஸ்தி 2 மாறியுள்ளது. இப்படத்தின் வசூல் விவரத்தை விஷ்ணு விஷால் தொடர்ந்து அதிகாரப்பூர்வமாகவே அறிவித்து வருகிறார்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4cd4b424-78c1-4818-a7fd-90fc7ab59b76/26-6a5f0803d215f.webp' /></p><p>இந்த நிலையில், தற்போது கட்டா குஸ்தி 2 திரைப்படம் ரூ. 55 கோடி வசூல் செய்துள்ளது என்பதை அறிவித்திருக்கிறார். இந்த பதிவில், "My first ₹50 crore grosser… and a moment I'll never forget..." என மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.</p><p><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/p/DbCxdlwTYY3/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/p/DbCxdlwTYY3/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/p/DbCxdlwTYY3/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by Vishnu Vishal (@thevishnuvishal)</a></p></div></blockquote> <script async src="//www.instagram.com/embed.js"></script></p><p> </p>]]></content>
            <updated>2026-07-21T07:40:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[அடுத்த சர்ச்சைக்கு தயாராகும் புலம்பெயர்தல் எதிர்ப்பு சுவிஸ் கட்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/swiss-people-party-anti-campaign-on-eu-treaty-1784619467"></link>
            <id>https://news.lankasri.com/article/swiss-people-party-anti-campaign-on-eu-treaty-1784619467</id>
            <summary type="text">புலம்பெயர்தலுக்கு எதிராக குரல் கொடுத்துவரும் சுவிஸ் மக்கள் கட்சி என்னும் கட்சி, சுவிட்சர்லாந்தின் மக்கள்தொகையை 10 மில்லியனுக்கு மேல் அதிகரிக்கக்கூடாது...</summary>
            <content type="html"><![CDATA[<p>புலம்பெயர்தலுக்கு எதிராக குரல் கொடுத்துவரும் சுவிஸ் மக்கள் கட்சி என்னும் கட்சி, சுவிட்சர்லாந்தின் மக்கள்தொகையை 10 மில்லியனுக்கு மேல் அதிகரிக்கக்கூடாது என்னும் பிரேரணையை முன்வைத்து தோல்வியடைந்தது நினைவிருக்கலாம்.
</p><p>
இந்நிலையில், சுவிட்சர்லாந்து ஐரோப்பிய ஒன்றியத்துடனான சில ஒப்பந்தங்கள் தொடர்பில் வாக்கெடுப்புக்குத் தயாராகிவருகிறது.
</p><h3>
அடுத்த வாக்கெடுப்புக்கு தயார்
</h3><p>
சுவிஸ் மக்கள் கட்சி இம்முறை குறிவைத்துள்ளது, ஐரோப்பிய ஒன்றியத்துடனான அந்த ஒப்பந்தங்களைத்தான்.
</p><p>
சுவிட்சர்லாந்தும் ஐரோப்பிய ஒன்றியமும், Bilaterals III என அழைக்கப்படும் சில ஒப்பந்தங்களைச் செய்துகொள்வது தொடர்பில் 2024ஆம் ஆண்டு பேச்சுவார்த்தைகளைத் துவக்கின.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a581e758-73d7-4cdb-8588-b7c76e9a3bb9/26-6a5f21cd21e57.webp' /></p><p>
இந்த ஆண்டு, அதாவது, 2026ஆம் ஆண்டு, மார்ச் மாதம் அந்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.&nbsp;</p><p></p><p>
ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒற்றைச் சந்தை முறை, மின்சாரம், உணவுப்பாதுகாப்பு, விண்வெளி ஆராய்ச்சி, ஐரோப்பிய ஒன்றியத்துக்கு நிதி வழங்கல், இருதரப்பு பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்ள நடுவர் மன்றம் போன்ற பல்வேறு விடயங்கள் அந்த ஒப்பந்தத்தில் இடம்பெற்றுள்ளன.
</p><p>
அந்த ஒப்பந்தங்கள், நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்காகவும், மக்கள் வாக்களிப்பதற்காகவும் காத்திருக்கின்றன.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b1b35278-e5b4-4953-8571-d1abb256a145/26-6a5f21cdc5bd1.webp' /></p><p>
இந்நிலையில், புலம்பெயர்தல் எதிர்ப்புக் கட்சியான சுவிஸ் மக்கள் கட்சி, அந்த ஒப்பந்தங்களுக்கு எதிராக பிரச்சாரத்தைத் துவக்கியுள்ளது.
</p><p>
ஐரோப்பிய ஒன்றியத்துடனான ஒப்பந்தங்கள், குற்றவாளிகள் தடையின்றி சுவிட்சர்லாந்துக்குள் நுழைய வழிவகுக்கும் என்று கூறியுள்ளார் அக்கட்சியின் தலைவரான ரோமன் பர்கி.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/29d101b7-2cde-4cb2-bab7-affcaab4662a/26-6a5f21cc72ed3.webp' /></p><p>
சமீப காலமாக பிரான்ஸ் நாட்டு வாகனப் பதிவு எண்களுடன் சுவிட்சர்லாந்துக்கு வந்து ஆயுதம் ஏந்திக் கொள்ளையடித்துவிட்டு சில மணி நேரத்துக்குள் தப்பிச் செல்லும் விடயங்கள் அதிகரித்துள்ளதை அதற்கு ஆதாரமாக முன்வைத்துள்ளார் அவர்.
</p><p>
சுவிஸ் மக்கள் கட்சி குறிவைத்துள்ள, ஐரோப்பிய ஒன்றியத்துடனான ஒப்பந்தங்கள் குறித்த அந்த வாக்கெடுப்பு, அடுத்த ஆண்டு துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-21T07:38:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[கட்டுவான தீ விபத்தில் 5 பேர் பலி..! காணாமல்போயுள்ள பலர் - பல மணி நேரமாக தீயை கட்டுப்படுத்த கடும் பிரயத்தனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/fire-breaks-out-factory-in-katuwana-1784611083"></link>
            <id>https://tamilwin.com/article/fire-breaks-out-factory-in-katuwana-1784611083</id>
            <summary type="text">புதிய இணைப்புஹோமாகம, கட்டுவான கைத்தொழில் வலயத்தில் அமைந்துள்ள தலைக்கவசம் தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாக ஹ...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>ஹோமாகம, கட்டுவான கைத்தொழில் வலயத்தில் அமைந்துள்ள தலைக்கவசம் தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாக ஹோமாகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>தீயை அணைப்பதற்காக, கோட்டே மற்றும் தெஹிவளை மாநகர சபைகளிலிருந்து ஆறு தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு அனுப்பப்பட்டிருந்தன.</p><p>

</p><p>இந்த நிலையில், தொழிற்சாலையிலிருந்து 5 பேரின் உடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், உயிரிழந்தவர்களில் இளம் பெண் ஒருவரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

 </p><p>இன்று (21) காலை தீ விபத்து ஏற்பட்டுள்ளதுடன், அந்நேரத்தில் 80க்கும் மேற்பட்ட ஊழியர்கள் அங்கு இருந்துள்ளதாகவும், ஏனையவர்களை தேடும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

</p><p>இந்த தீ விபத்திற்கான காரணம் இன்னும் கண்டறியப்படாத நிலையில், தற்போது தீப்பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">இரண்டாம் இணைப்பு</span></p><p>ஹோமாகம, கட்டுவான கைத்தொழில் வலயத்தில் அமைந்துள்ள தலைக்கவசம் தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீயை கட்டுப்படுத்த தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.</p><p> </p><p>இந்நிலையில் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 80 இற்கும் மேற்பட்டோர் சிக்கியிருக்கலாம் என்றும் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p>தீ பரவிய நேரத்தில் ஒரு குழுவினர் காப்பாற்றப்பட்ட நிலையில், மேலும் சிலர் பின்புற வாயில் வழியாக வெளியேறியிருக்கக்கூடும் என சந்தேகிக்கப்படுகின்றது.</p><p>தீ விபத்தில் காயமடைந்த பெண் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p><p>இந்நிலையில், தீயை கட்டுப்படுத்த பல மணி நேரமாக தீயணைப்பு பிரிவினர் கடும் பிரயத்தனங்களை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ffe9e3a9-a01e-4441-ac2c-36a5e8873d81/26-6a5f1c6e26e5c.webp' /></p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">முதலாம் இணைப்பு</span></p><p>ஹோமாகம கட்டுவான கைத்தொழில் வலயத்தில் அமைந்துள்ள தொழிற்சாலை ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.</p><p> 

தலைக்கவச உற்பத்தி தொழிற்சாலை ஒன்றிலேயே இன்று (21) காலை இந்த தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><h2>தீயணைப்பு பிரிவினர் அழைப்பு</h2><p>இந்த தீயினால் அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f0193f6a-d83e-44f0-b29f-e75eaf0aead2/26-6a5f02b47a61c.webp' /></p><p>தீ தொடர்ந்து பரவி வருவதாகவும், தீயை அணைக்க கோட்டை மாநகர சபை தீயணைப்பு பிரிவினர் அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-21T07:36:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[இனிமேல் மகளிர் உரிமைத் தொகை ரூ.2500.., ஆகஸ்ட் பட்ஜெட்டில் வெளியாகும் முக்கிய அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/magalir-urimai-thogai-2500-rs-start-from-august-1784618929"></link>
            <id>https://ibctamilnadu.com/article/magalir-urimai-thogai-2500-rs-start-from-august-1784618929</id>
            <summary type="text">ஆகஸ்ட் மாதம் பட்ஜெட்டில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு தனியாக நிதி ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மகளிர் உரிமைத் தொகை 

கடந்த திமு...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஆகஸ்ட் மாதம் பட்ஜெட்டில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு தனியாக நிதி ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. </p><h2>

மகளிர் உரிமைத் தொகை</h2><p> 

கடந்த திமுக ஆட்சியில் தகுதியுள்ள குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடங்கப்பட்டது. </p><p>

கடந்த 2023ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார்.</p><p>
</p><p>அதன்படி, ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதி தகுதியுள்ள குடும்பத் தலைவிகளின் வங்கிக் கணக்கில் ரூ.1000 நேரடியாக வரவு வைக்கப்பட்டு வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b44c491b-b9e4-4e1f-82c6-fda8d6e1d317/26-6a5f1fb89fdf9.webp' />&nbsp;&nbsp;</p><p> 

இந்த திட்டத்தின் மூலம் சுமார் 1.31 கோடி பெண்கள் பயனடைந்து வருகின்றனர்.
</p><h2>
முக்கிய அறிவிப்பு </h2><p>

தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தலில் தவெக ஆட்சிக்கு வந்தால், அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் மாதம் ரூ.2500 மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என விஜய் வாக்குறுதி அளித்திருந்தார்.
</p><p>
தற்போது தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைத்துள்ள நிலையில், தேர்தல் வாக்குறுதியின்படி ரூ.2500 மகளிர் உரிமைத் தொகை எப்போது வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு குடும்பத் தலைவிகளிடையே எழுந்துள்ளது.
</p><p>
இந்நிலையில், பட்ஜெட் தாக்கல் தொடர்பாக தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மரிய வில்சன், தவெக அரசின் முதல் பட்ஜெட் ஆகஸ்ட் முதல் வாரத்தில் தாக்கல் செய்யப்படும் என்று தெரிவித்தார்.
</p><p>
இதனால், வரும் பட்ஜெட்டில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு தனியாக நிதி ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-21T07:35:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[யஷுடன் சிகரெட் பிடிக்கும் நயன்தாரா!! பாத்டப்பில் நடிகையுடன் குளியல்...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/nayanthara-smoking-with-yash-tara-sutaria-bath-tub-1784619205"></link>
            <id>https://viduppu.com/article/nayanthara-smoking-with-yash-tara-sutaria-bath-tub-1784619205</id>
            <summary type="text">டாக்ஸிக் படம்இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யஷ், நயன் தாரா, கியாரா அத்வானி, ஹூமா குரேஷி, தாரா சுதாரியா, ருக்மிணி வசந்த் உளிட்ட பல பிரபலங்கள் நடி...</summary>
            <content type="html"><![CDATA[<h2>டாக்ஸிக் படம்</h2><p>இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யஷ், நயன் தாரா, கியாரா அத்வானி, ஹூமா குரேஷி, தாரா சுதாரியா, ருக்மிணி வசந்த் உளிட்ட பல பிரபலங்கள் நடிப்பில் உருவாகியுள்ளது டாக்ஸிக் படம். பிரமாண்டமான பட்ஜெட்டில் உருவாகியுள்ள டாக்ஸிக் படத்தின் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை கொடுத்து வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7c40f4b2-1f34-4117-80c4-bef9293ac91f/26-6a5f20c888419.webp' /></p><p> அதற்கு காரணம் பாடல்களின் படுக்கையறை காட்சிகள் நெருக்கமான காட்சிகள் தான். இது ஒரு பக்கம் இருக்க, படத்தில் நடித்துள்ள நயன் தாரா முதன்முறையாக சிகரெட் பிடித்துள்ளார். இன்று தடுமாறுதே என்ற பாடல் வெளியாகியுள்ளது. </p><p>பாடலில் நயன் தாரா யஷ் மீது சாய்ந்து சிகரெட் பிடிக்கும் காட்சி இடம்பெற்றுள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள் என்ன நயன் தாரா இதெல்லாம் என்று கூறி தங்களின் ரியாக்ஷனை கொடுத்து வருகிறார்கள்.</p><p><br></p>]]></content>
            <updated>2026-07-21T07:33:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[16 வயதில் உலகை வியக்க வைத்த இளம் நட்சத்திரம் லாமின் யமால்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/lamin-yamal-who-amazed-the-world-at-the-age-of-16-1784618753"></link>
            <id>https://jvpnews.com/article/lamin-yamal-who-amazed-the-world-at-the-age-of-16-1784618753</id>
            <summary type="text">உலகக் கால்பந்து அரங்கில் மிகக் குறைந்த வயதிலேயே தனது திறமையால் தனி முத்திரை பதித்துள்ள வீரராக லாமின் யமால் தற்போது உலக ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளா...</summary>
            <content type="html"><![CDATA[<p>உலகக் கால்பந்து அரங்கில் மிகக் குறைந்த வயதிலேயே தனது திறமையால் தனி முத்திரை பதித்துள்ள வீரராக லாமின் யமால் தற்போது உலக ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.</p><p></p><p>

15 அல்லது 16 வயதில் பலர் கல்வி, நண்பர்கள் மற்றும் சாதாரண இளமை வாழ்க்கையில் கவனம் செலுத்திக் கொண்டிருந்த காலகட்டத்தில், லாமின் யமால் கால்பந்து வரலாற்றில் புதிய சாதனைகளைப் படைக்கத் தொடங்கினார்.</p><p>

இன்று உலகின் முன்னணி கால்பந்து வீரர்களில் ஒருவராக பேசப்படும் யமால், தனது கோல் கொண்டாட்டத்தின் போது காட்டும் "304" என்ற குறியீட்டின் மூலம் தனது வேர்களையும் சொந்த ஊரையும் நினைவுகூர்ந்து வருகிறார்.</p><p>லாமின் யமால் 2007 ஆம் ஆண்டு ஜூலை 13 ஆம் திகதி ஸ்பெயினின் பார்சிலோனா அருகே உள்ள எஸ்புலுகஸ் டி லியோப்ரெகாட் நகரில் பிறந்தார்.

அவரது தந்தை முனீர் நஸ்ராவி மொராக்கோ நாட்டைச் சேர்ந்தவர். அவரது தாயார் ஷீலா எபானா ஈக்குவட்டோரியல் கினியாவைச் சேர்ந்தவர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4391c058-228d-44c2-a73d-ed2b8352970d/26-6a5f1f0319edc.webp' /></p><p>

புலம்பெயர் குடும்பத்தில் பிறந்த யமால், எளிமையான சூழலில் வளர்ந்தார். அவர் வளர்ந்த ரோகாபோண்டா பகுதி, பல்வேறு கலாச்சார மக்கள் வாழும் பகுதியாகும். </p><p>அந்தப் பகுதியின் தபால் குறியீட்டின் இறுதி இலக்கங்களான "304" என்பதையே அவர் தனது வெற்றிக் கொண்டாட்டங்களில் பயன்படுத்தி வருகிறார்.</p><p>சிறுவயதிலிருந்தே கால்பந்தில் அதிக ஆர்வம் கொண்டிருந்த யமால், தெருக்கள் மற்றும் உள்ளூர் மைதானங்களில் தனது திறமையை வளர்த்துக் கொண்டார்.

நான்கு வயதில் CF La Torreta என்ற உள்ளூர் கால்பந்து கிளப்பில் இணைந்த அவர், தனது அபாரமான திறமையால் கவனம் பெற்றார்.
</p><p>
2014 ஆம் ஆண்டு, ஏழு வயதில், உலகப் புகழ்பெற்ற பார்சிலோனா கால்பந்து அகாடமியான லா மாசியாவில் இணைந்தார். அங்கு தனது திறமையை மேலும் மேம்படுத்திய அவர், தன்னை விட வயதில் மூத்த வீரர்களுடனும் விளையாடி முன்னேற்றம் கண்டார்.</p><p>2023 ஆம் ஆண்டு ஏப்ரல் 29 ஆம் திகதி, லாமின் யமால் பார்சிலோனா முதல் அணிக்காக அறிமுகமானார்.

அப்போது அவருக்கு 15 வயது, 9 மாதங்கள், 16 நாட்கள் மட்டுமே. இதன் மூலம் பார்சிலோனா அணியின் வரலாற்றில் மிக இளம் வயதில் களமிறங்கிய வீரர்களில் ஒருவராக அவர் சாதனை படைத்தார்.
</p><p>
அதன் பின்னர் லா லிகா தொடரில் இளம் வயது கோல் அடித்த வீரர் மற்றும் உதவி வழங்கிய வீரர் உள்ளிட்ட பல சாதனைகளை அவர் படைத்தார்.</p><p>

தனது வேகம், பந்தைக் கட்டுப்படுத்தும் திறன், துல்லியமான பாஸ்கள் மற்றும் கோல் உருவாக்கும் திறன் ஆகியவற்றின் மூலம் உலகின் சிறந்த இளம் வீரர்களில் ஒருவராக உருவெடுத்தார்.</p><p>ஸ்பெயின் தேசிய அணிக்காக விளையாடத் தீர்மானித்த லாமின் யமால், 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற யூரோ கிண்ணத் தொடரில் தனது திறமையை உலகிற்கு நிரூபித்தார்.
</p><p>
16 வயதில் களமிறங்கிய அவர், யூரோ வரலாற்றில் கோல் அடித்த மிக இளம் வீரர் என்ற சாதனையைப் படைத்தார்.

பிரான்ஸ் அணிக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் அவர் அடித்த அற்புதமான கோல் உலக ரசிகர்களின் பாராட்டைப் பெற்றது.
</p><p>
ஸ்பெயின் அணி யூரோ கிண்ணத்தை வெல்லும் பயணத்தில் முக்கிய பங்காற்றிய யமால், தொடரின் சிறந்த இளம் வீரர் விருதையும் பெற்றார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1d2c6777-95e7-45b6-ac24-b810438dce1f/26-6a5f1f026999a.webp' /></p><p>லாமின் யமாலின் வாழ்க்கையில் அதிகம் பேசப்பட்ட மற்றொரு சம்பவம், கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸியுடன் தொடர்புடைய பழைய புகைப்படமாகும்.</p><p>
2007 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு தொண்டு நிறுவனத்தின் புகைப்பட நிகழ்வில், சில மாத குழந்தையாக இருந்த யமாலுடன் மெஸ்ஸி இடம்பெற்றிருந்தார். பல ஆண்டுகளுக்குப் பின்னர் அந்தப் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி, ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.&nbsp;</p><p>எளிய குடும்ப பின்னணியில் இருந்து கடின உழைப்பின் மூலம் உலக கால்பந்தின் உச்சத்தை நோக்கி பயணித்து வரும் லாமின் யமால், இளம் தலைமுறை வீரர்களுக்கு ஒரு முன்னுதாரணமாக மாறியுள்ளார்.
</p><p>
வயது குறைந்தாலும் சாதனைகள் மிகப்பெரியது என்பதை நிரூபித்துள்ள அவர், எதிர்காலத்தில் உலகக் கால்பந்தின் மிகப் பெரிய நட்சத்திரங்களில் ஒருவராக உருவெடுப்பார் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-21T07:26:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[உயிர்த்த ஞாயிறு தாக்குதலை தவிர்த்து முக்கிய சாட்சியாளராக மாறிய சந்தன விக்ரமரத்ன! வாக்குமூலத்தில் வெளியான தகவல்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/c-d-wickramaratne-deshabandu-1784594978"></link>
            <id>https://tamilwin.com/article/c-d-wickramaratne-deshabandu-1784594978</id>
            <summary type="text">முன்னாள் பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்ன உயிரத்த ஞாயிறு தாக்குதலை விட பாரிய அரசியல் சம்பவத்திற்கு முக்கிய சாட்சியாளராக வாக்குமூலம் அளித்துள்ளார்.அத்...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்ன உயிரத்த ஞாயிறு தாக்குதலை விட பாரிய அரசியல் சம்பவத்திற்கு முக்கிய சாட்சியாளராக வாக்குமூலம் அளித்துள்ளார்.</p><p>அத்தோடு சானி அபேசேகர மற்றும் ரவி செனவிரத்ன ஆகியோருக்கு சார்பாகவும் செயற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பல முக்கிய சம்பவங்களுக்கு முக்கிய சாட்சியாளர் என்பதால் அவர் படுகொலை செய்யப்பட்டிருக்கலாம். </p><p>ஆனால், அவர் பிரதான சாட்சியாளராக இருப்பது மே 9 ஆம் திகதி கோட்டா கோ கம மீது கட்டவிழ்த்து விடப்பட்ட காட்டுமிராண்டித்தனமான தாக்குதலின் பலமான சாட்சியாளராக சந்தன விக்ரமரத்ன விளங்குகின்றார்.
</p><h2>

</h2><p></p><h2>தேசபந்துவுக்கு எதிரான சாட்சி</h2><p>தேசபந்து தென்னகோன் இதில் சம்பந்தப்பட்டுள்ளார் என்று கூறுவதற்கான பலமான சாட்சியத்தை சந்தன விக்ரமரத்னவே குறிப்பிடுகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e0cd9bae-aad4-46d7-b4bd-70a0a433edc4/26-6a5ec225a6ba2.webp' />&nbsp;&nbsp;</p><p>அவர் தேசபந்து தென்னகோனுக்கு எதிராக வாக்குமூலங்களை அளித்துள்ளார்.

அதேபோன்று ஷானி அபேசேகர ஆட்சி மாறிய உடனேயே, 2019 நவம்பர் 20 ஆம் திகதி, பதிவிலிருந்து நீக்கப்பட வேண்டும் என்று கோரியவர் சந்தன விக்ரமரத்னவே. </p><p>அவர் அவ்வாறு நீக்குமாறு கோரும் அளவுக்கு, அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது. அவர் யாரின் பேச்சைக் கேட்டு இவ்வாறு மாற்றினார் என்பதும் அனைவருக்கும் தெரியும்.

அவ்வாறான சந்தர்ப்பங்களில் அவர் சரியான தீர்மானத்தை எடுக்கவில்லை. </p><p>அவர் தனது அதிகாரிகளின் பக்கம் நிற்கவில்லை. 
ஷானி போன்றவர்களை மாற்றினாலும், இறுதியில் ஷானிக்கு எதிரான குற்றச்சாட்டுகளை நீக்குவதற்கு முக்கிய பங்காற்றினார்.</p><p>
இறுதியில் ஷானியின் பதவி உயர்வுக்கு பரிந்துரைத்தவர்களில் சந்தன விக்ரமரத்னவும் ஒருவர். ஆனால் இன்னமும் ஷானிக்குப் பதவியுயர்வு கிடைக்கவில்லை.
</p><p>
அதேபோன்று, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக இருந்து ஓய்வுபெற்ற ரவி செனவிரத்ன கைது செய்யப்பட்ட சம்பவம். அச்சம்பவம் நடந்த போது சந்தன விக்ரமரத்னவே பொலிஸ் மா அதிபராக இருந்தார். </p><p>ரவி செனவிரத்னவை பொலிஸார் கைது செய்துவிட்டனர் என்பதை அறிந்து, அது தொடர்பாக அவர் பொலிஸாரிடம் விசாரணை நடத்துகின்றார். </p><p>ஒரு வாகனம் மற்றொரு வாகனத்துடன் மோதியதாலேயே அவர் கைது செய்யப்பட்டதாகவும், வேறு எந்தக் குற்றச்சாட்டுகளும் இல்லை எனவும், பொதுமக்கள் யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என்றும் பொலிஸார் கூறுகின்றனர்.
</p><h2>
சானி- ரவிக்கு செய்த உதவி</h2><p>இதன்பின்னர் பொலிஸ் மா அதிபர் சட்டப் பிரிவின் ஆலோசனையைப் பெறுகின்றார். இது பிணையில் செல்லக்கூடிய குற்றம் என்று சட்டப் பிரிவு கூறுகிறது. </p><p>அதற்கமைய, இது பிணையில் செல்லக்கூடிய குற்றமாக இருந்தபோதிலும், தேஷபந்து உள்ளிட்ட குழுவினர் வேறு ஒரு சக்தியினால் அவரைச் சிறையிலடைக்கவே முயற்சிக்கின்றனர் என்பதைப் பொலிஸ் மா அதிபர் சந்தன புரிந்துகொள்கிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/02b8ed6e-17cd-4346-8fe7-9d456c4e0d94/26-6a5ec22502c6e.webp' />&nbsp;&nbsp;</p><p>
</p><p>
பொலிஸ் பிணையில் விடுவிக்குமாறு உடனடியாக அறிவுறுத்துகின்றார். ஆனால், பொலிஸ் மா அதிபர் கூறியதைக் கூட கேட்காமல், பொலிஸ் பிணை வழங்காமல், அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையாக ரவி செனவிரத்னவை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி விளக்கமறியலில் வைத்தனர்.
</p><p>
</p><p>இது தொடர்பாகப் பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்ன குறிப்புகளைக் கூட எழுதியிருந்தார். இவ்வாறாக அவர் பல்வேறு விடயங்களில் பல வழிகளில் தலையிட்டிருந்தார்.</p><p>அது நன்மை தீமை இரு பக்கங்களையும் கொண்டுள்ளது. 
அவர் மரணமடைந்த சந்தர்ப்பத்தில், அவருடைய அனைத்துத் தவறுகளையும் பேசுவதை விட, அவர் பொலிஸில் ஆற்றிய பங்களிப்பைப் பேசுவது மிகவும் முக்கியமானதாகும்.
</p><p>
எனவே, உயிர்த்த ஞாயிறு தாக்குதலை விடவும் தேஷபந்துவின் சம்பவத்தில் அவர் ஒரு பலமான சாட்சியாளராக இருக்கின்றார். இவ்வாறானதொரு பலமான சாட்சியாளரே இவ்வாறு மரணமடைந்துள்ளார். </p><p>அவருடைய மரணம் தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் எவ்வாறு முன்னெடுக்கப்படுகின்றன என்பதை நாம் பொறுத்திருந்து பார்ப்போம்.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-21T07:24:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiva</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹட்டன் பொலிஸ் பிரிவில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/orders-issued-officers-in-charge-hatton-police-1784617951"></link>
            <id>https://tamilwin.com/article/orders-issued-officers-in-charge-hatton-police-1784617951</id>
            <summary type="text">ஹட்டன் பொலிஸ் பிரிவின் கீழ் உள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களின் பொலிஸ் நிலையப்
பொறுப்பாளர்களுக்கும், பொலிஸ் நிலையங்களையும் அதன் வளாகங்களையும் டெங்கு
கா...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹட்டன் பொலிஸ் பிரிவின் கீழ் உள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களின் பொலிஸ் நிலையப்
பொறுப்பாளர்களுக்கும், பொலிஸ் நிலையங்களையும் அதன் வளாகங்களையும் டெங்கு
காய்ச்சலைக் கட்டுப்படுத்த ஏடிஎஸ் (Aedes) வகை நுளம்புகள் பெருகுவதைத்
தடுத்து, அவை கடிப்பதில் இருந்து பாதுகாத்து கொசுக்கள் அற்ற முறையில்
பராமரிக்குமாறு ஹட்டன் பிரதேச சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரதீப் வீரசேகர
அறிவுறுத்தியுள்ளார்.
</p><p>
மேலும் பொலிஸ் நிலையங்களைச் சுற்றியுள்ள தேவையற்ற பொருட்கள், உடைந்த
பாத்திரங்கள், சிரட்டைகள் மற்றும் பழைய டயர்களில் மழைநீர் தேங்காமல்
பார்த்துக் கொள்ளவும் , டெங்கு பரவலைக் தடுக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் குறிப்பிட்டுள்ளார்.</p><h2>பொறுப்பாளர்களுக்கு உத்தரவு</h2><p>
</p><p>
இன்று செவ்வாய்க்கிழமை (21) ஹட்டன் பொலிஸ் நிலையப் பொறுப்பாளர் சார்பாக
நோட்டன் பிரிட்ஜ் பொலிஸ் நிலையத்தில் நடைபெற்ற அரையாண்டு பொலிஸ் பரிசோதனையின்
போது பொலிஸ் நிலையத்தை முழுமையாக ஹட்டன் பிரதேச சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்
ஆய்வு செய்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b517c588-2af9-4bf9-9f0e-0fcab5064d86/26-6a5f1e4194a88.webp' /></p><p> அத்துடன் டெங்கு நுளம்புகள் பெருகக்கூடிய இடங்களை முறையான
சுற்றுச்சூழல் பரிசோதனைகள் மேற்கொண்டு அதனைத் தொடர்ந்து அவ்விடங்களை
சுத்தப்படுத்துதல் மற்றும் அழிக்கும் பணிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கவும்
நோட்டன் பிரிட்ஜ் பொலிஸ் நிலையத்தின் பொறுப்பாளரான பிரதம ஆய்வாளர் கபில
விஜேரத்னவுக்கு உத்தரவிடப்பட்டது.
</p><p>
இந்த அரையாண்டு ஆய்வின்போது நோட்டன் பிரிட்ஜ் பொலிஸ் நிலைய அதிகாரிகள், ஹட்டன்
சிரேஷ்ட பொலிஸ் கண்காணிப்பாளருக்கு மரியாதை செலுத்தினர்.மேலும் சிரேஷ்ட பொலிஸ்
அத்தியட்சகர் பொலிஸ் அதிகாரிகளை பரிசோதனை நடத்தினார்.</p><p>

இதில் அணிநடை வகுப்பு மரியாதை,, அணிநடை கண்காட்சி மற்றும் பரிசோதனைகள் என்பன
இடம்பெற்றன.</p>]]></content>
            <updated>2026-07-21T07:24:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[மனித உடலைக் குளிர்விக்கும் குளிர்சாதனப் பெட்டி - விலை என்ன தெரியுமா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/japan-human-refrigerator-cools-body-in-5-minutes-1784618105"></link>
            <id>https://news.lankasri.com/article/japan-human-refrigerator-cools-body-in-5-minutes-1784618105</id>
            <summary type="text">ஜப்பானில் மனித உடலைக் குளிர்விக்கும் குளிர்சாதனப்பெட்டி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

மனித உடலைக் குளிர்விக்கும் குளிர்சாதனப் பெட்டி

பருவநிலை மாற...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜப்பானில் மனித உடலைக் குளிர்விக்கும் குளிர்சாதனப்பெட்டி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.</p><h3> 

மனித உடலைக் குளிர்விக்கும் குளிர்சாதனப் பெட்டி</h3><p>

பருவநிலை மாற்றம் காரணமாக உலகளவில் வெப்பநிலை அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டு ஐரோப்பிய நாடுகளில் வெப்ப அலை காரணமாக நூற்றுக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.</p><p> 

அலுவலங்களில் பணிபுரிபவர்கள் அங்குள்ள குளிர்சாதன அமைப்புகளின் மூலம், வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து தங்களை தற்காத்துக்கொள்கின்றனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2a6dcdf1-95f0-4c2c-b7ba-fa52b81a67b1/26-6a5f1c7bb5e43.webp' /></p><p> 

ஆனால், தொழிற்சாலைகள் மற்றும் திறந்த வெளிகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் வெப்ப அலையால் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். </p><p>

இந்நிலையில், ஜப்பானில் மனித குளிர்சாதனப்பெட்டி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><p> 

ஜப்பானை சேர்ந்த ட்ரஸ்கோ நகாயாமா கார்ப்பரேஷன் என்ற நிறுவனம் உருவாக்கிய இந்த சாதனத்திற்கு டோ ரெய்மோன் பெட்டி(Do Reimon Box) என பெயரிட்டுள்ளது.&nbsp;</p><p>

இது ஒரு நேரத்தில் ஒருவர் மட்டும் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்ட, சிறிய குளிரூட்டும் அறையாகும்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f83bf35f-b8b0-4050-acc1-35b00f9ffd23/26-6a5f1c7b12e8e.webp' /></p><p>

பயனர்கள் உள்ளே நுழைந்து, அங்குள்ள நாற்காலியில் அமர்ந்து கதவை மூடினால் போதும். </p><p>உள்ளே வெப்பநிலை சுமார் 15°C ஆகப் பராமரிக்கப்படுகிறது. 

கிட்டத்தட்ட 5°C வரை குளிர்விக்கப்பட்ட காற்று கழுத்து, தலை மற்றும் முதுகுப் பகுதிகளை நோக்கிச் செலுத்தப்படுகிறது. </p><p>

உடல் வெப்பநிலையைச் சீராக்குவதில் உடலின் இந்தப் பகுதிகள் முக்கியப் பங்கு வகிப்பதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.</p><p> 

இந்த அறைக்குள் 5 முதல் 10 நிமிடங்கள் செலவிடுவதன் மூலம், வெப்பத்திலிருந்து குறிப்பிடத்தக்க நிவாரணத்தைப் பெற போதுமானது என கூறப்படுகிறது.</p><p> 

அதிகமாக குளிர்வடைவதை தடுக்க ஒவ்வொரு குளிர்விக்கும் அமர்விலும் 20 நிமிடங்களுக்கு பிறகு தானாகவே அணைந்து விடும். </p><p>

இது வழக்கமான குளிரூட்டப்பட்ட அறைகளை விட வேகமாக உடலை குளிர்விப்பதோடு, வழக்கமான ஏசியை விட பாதியளவே மின்சாரம் தேவைப்படுகிறது.</p><p> 

கட்டுமானத் தளங்கள் அல்லது திறந்த தொழிற்சாலைப் பகுதிகளில் வழக்கமான குளிர்சாதன வசதி சாத்தியமில்லாத இடங்களில் இதனை பயன்படுத்திக்கொள்ளலாம்.
</p><p>
இதனை எளிதாக நகர்த்தும் வகையில் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளதால், எங்கு வேண்டுமோ அங்கு வைத்து பயன்படுத்திக்கொள்ளலாம். </p><p>

இருப்பினும், இது நீரேற்றம், ஓய்வு அல்லது மருத்துவ சிகிச்சைக்கு மாற்றாகப் பயன்படுத்தப்படாது என்று நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4d3ed153-de49-48e9-907b-cc3b589de7ec/26-6a5f1c7a5d659.webp' /></p><p>

ஆனால், பணியிடத்தில் ஏற்படும் வெப்ப வெளிப்பாட்டை நிர்வகிப்பதற்கும், அதீத வெப்பநிலையுடன் தொடர்புடைய அபாயங்களைக் குறைப்பதற்கும் உதவுகிறது.</p><p> 

இது கடந்த ஏப்ரல் மாதத்தில் விற்பனைக்கு வந்த நிலையில், குன்மா மாகாணத்தில் உள்ள மேபாஷி நகர மன்றத்தில், பார்வையாளர்கள் இதை இலவசமாகப் பயன்படுத்தும் வகையில் வைக்கப்பட்டுள்ளது. </p><p>

 இதன் சாதாரண மாடலின் விலை 1.5 மில்லியன் யென் (இந்திய மதிப்பில் ரூ. 9 லட்சம்) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-21T07:20:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[நரம்பு மண்டலத்தின் ஆரோக்கியத்தை காக்கும் காளான் பட்டாணி மசாலா ! எப்படி செய்வது?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/tasty-and-healthy-mushroom-pattani-masala-recipe-1784615662"></link>
            <id>https://manithan.com/article/tasty-and-healthy-mushroom-pattani-masala-recipe-1784615662</id>
            <summary type="text">அசைவ உணவுகளை விரும்பி சாப்பிடுபவர்களும் ரசிக்கும் சைவ உணவுகளில் காளான் தனக்கென ஒரு முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளது. இறைச்சியைப் போன்ற தனித்துவமான சு...</summary>
            <content type="html"><![CDATA[<p>அசைவ உணவுகளை விரும்பி சாப்பிடுபவர்களும் ரசிக்கும் சைவ உணவுகளில் காளான் தனக்கென ஒரு முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளது. இறைச்சியைப் போன்ற தனித்துவமான சுவை மற்றும் மென்மையான அமைப்பைக் கொண்ட காளான், பலரின் விருப்பமான உணவுப் பொருளாக காணப்படுகின்றது..
</p><p>
சுவை மட்டுமல்லாமல், காளானில் உடலுக்கு தேவையான பல்வேறு ஊட்டச்சத்துக்களும் நிறைந்துள்ளன. குறிப்பாக ரிபோஃப்ளேவின் (Vitamin B2), நியாசின் (Vitamin B3), பாந்தோத்தேனிக் அமிலம் (Vitamin B5), பயோட்டின் (Vitamin B7) போன்ற முக்கியமான பி-வகை வைட்டமின்கள் இதில் காணப்படுகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2d3cc99c-97d1-4759-b556-6f7fef4d4843/26-6a5f1d4acb1fd.webp' /></p><p>இந்த வைட்டமின்கள் உடலில் ஆற்றல் உற்பத்தி மற்றும் வளர்சிதை மாற்ற செயல்பாடுகளுக்கு உதவுவதுடன், நரம்பு மண்டலத்தின் சீரான செயல்பாடு மற்றும் சருமத்தின் ஆரோக்கியத்திலும் முக்கிய பங்கு வகிக்கின்றன.</p><p>
இத்தனை ஆரோக்கிய நன்மைகள் கொண்ட காளானுடன், புரதச்சத்து நிறைந்த பட்டாணியையும் சேர்த்து சுவையும் சத்தும் நிறைந்த அற்புதமான காளான் பட்டாணி மசாலா எவ்வாறு செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.அதனை சாதம், ரொட்டி, சப்பாத்தி, நாண் என இந்த உணவுடன் சேர்த்து சாப்பிட்டாலும் சுவை பக்காவாக இருக்கும்.</p><p></p><h2>தேவையான பொருட்கள்</h2><p>½ கப் வேகவைத்த பச்சை பட்டாணி</p><p>

200 கிராம் காளான்</p><p> 2 ஸ்பூன் நெய்</p><p>
½ ஸ்பூன் சீரகம்</p><p>
1 கப் பொடியாக நறுக்கிய வெங்காயம்</p><p>
1 பச்சை மிளகாய் (கீறியது)
</p><p>1 ஸ்பூன் இஞ்சி-பூண்டு விழுது</p><p>
½ கப் அரைத்த தக்காளி
</p><p>தேவையான அளவு உப்பு</p><p>1 ஸ்பூன் கரம் மசாலா</p><p>
¼ ஸ்பூன் மஞ்சள் தூள்</p><p>
1 ஸ்பூன் மல்லித் தூள்</p><p>
1 ஸ்பூன் மிளகாய் தூள்</p><p>
2 ஸ்பூன் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dacc5f07-021e-4892-af08-f468b9d3cfe4/26-6a5f1d4b7b141.webp' /></p><p>
</p><h2>செய்முறை</h2><p> முதலில் வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை நன்றாகக் கழுவி நறுக்கி வைத்துக்கொள்ளவும். தக்காளியை அரைத்து விழுதாக தயார் செய்து கொள்ள வேண்டும்.</p><p>
காளான்களையும் சுத்தம் செய்து தனியாக வைத்துக்கொள்ளவும். மசாலாவில் சேர்க்கும் போது அவற்றை தேவையான அளவில் நறுக்கிக் கொள்ளலாம்.</p><p>

ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து சூடாக்கி, அதில் சீரகம் சேர்த்து பொரிய விடவும். பின்னர் நறுக்கிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை சேர்த்து, வெங்காயம் பொன்னிறமாகும் வரை நன்றாக வதக்கவும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b4138167-5046-442b-af97-cd4233c908d3/26-6a5f1d4c2c7f9.webp' /></p><p></p><p>

அடுத்து இஞ்சி-பூண்டு விழுதை சேர்த்து, அதன் பச்சை வாசனை நீங்கும் வரை வதக்கவும். பின்னர் அரைத்த தக்காளி மற்றும் உப்பு சேர்த்து, தக்காளி நன்கு வதங்கி எண்ணெய் பிரியும் வரை சமைக்கவும்.</p><p>இப்போது கரம் மசாலா, மல்லித் தூள், மஞ்சள் தூள் மற்றும் மிளகாய் தூள் சேர்த்து, மசாலாவின் பச்சை வாசனை நீங்கி நல்ல மணம் வரும் வரை வதக்கவும்.</p><p>

அதன்பின் வேகவைத்த பட்டாணி மற்றும் நறுக்கிய காளானை சேர்த்து, மிதமான தீயில் 4 முதல் 5 நிமிடங்கள் வதக்கவும். மூடி வைத்து, காளான் மென்மையாகும் வரை குறைந்த தீயில் வேகவிடவும்.</p><p> இடையிடையே கிளறி விடவும்.

காளான் வேகும்போது அதிலிருந்து தண்ணீர் வெளியேறும் என்பதால் அதிகமாக தண்ணீர் சேர்க்க வேண்டிய அவசியமில்லை. </p><p>காளான் நன்றாக வெந்ததும் மூடியைத் திறந்து, அதிக தீயில் ஒரு நிமிடம் கிளறி வதக்கவும்.

கிரேவி தேவையான அளவு கெட்டியானதும் நறுக்கிய கொத்தமல்லி இலை தூவி கிளறிவிட்டு இறக்கினால், அவ்வளவு தான் சுவையான காளான் பட்டாணி மசாலா தயார்.</p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW&nbsp;</a></u></b> &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p> </p><p><br></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-21T07:18:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[டெல்லியில் அரசுக்கு அழுத்தம் அதிகரிப்பு ; போராட்டம் இரண்டாவது நாளாக தொடர்கிறது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/pressure-on-government-increases-in-delhi-1784618021"></link>
            <id>https://jvpnews.com/article/pressure-on-government-increases-in-delhi-1784618021</id>
            <summary type="text">டெல்லி ஜந்தர் மந்தரில் &quot;கரப்பான் பூச்சி ஜனதா கட்சி&quot; முன்னெடுத்து வரும் போராட்டம் இரண்டாவது நாளாக இன்றும் தொடர்கிறது.

நாடாளுமன்றம் நோக்கிய பேரணியின்...</summary>
            <content type="html"><![CDATA[<p>டெல்லி ஜந்தர் மந்தரில் "கரப்பான் பூச்சி ஜனதா கட்சி" முன்னெடுத்து வரும் போராட்டம் இரண்டாவது நாளாக இன்றும் தொடர்கிறது.</p><p></p><p>

நாடாளுமன்றம் நோக்கிய பேரணியின் போது ஏற்பட்ட வன்முறை மற்றும் தடியடிக்குப் பின்னர், அங்கு காவல்துறையினர் மற்றும் அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9fdc489e-21b9-44aa-bb09-2d4c6b2ace6c/26-6a5f1c2673dfc.webp' /></p><p>சோனம் வாங்சுக்கின் விடுதலை, கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் பதவி விலகல் மற்றும் நீட் வினாத்தாள் கசிவை அடுத்து உயிரிழந்த மாணவர்களின் குடும்பங்களுக்கு தலா 1 கோடி ரூபாய் நஷ்டஈடு வழங்குதல் ஆகிய கோரிக்கைகளை முன்னிட்டு இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
</p><p>
போராட்டக் குழுவினர் மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டாவைச் சந்தித்து மனு அளித்த நிலையில் கோரிக்கைகள் குறித்து உரிய மட்டத்தில் விவாதிப்பதாக அமைச்சர் உறுதியளித்துள்ளார்.
</p><p>
இளைஞர் தலைவர்களை நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்திக்கும் வரை அல்லது மருத்துவமனைக்கு வந்து தன்னைச் சந்திக்கும் வரை தனது உணவு தவிர்ப்பு போராட்டம் தொடரும் என சோனம் வாங்சு அறிவித்துள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-21T07:13:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[323 கொள்கலன்கள் விடுவிக்கப்பட்ட விவகாரம் : அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/323-containers-being-released-from-customs-issue-1784615852"></link>
            <id>https://ibctamil.com/article/323-containers-being-released-from-customs-issue-1784615852</id>
            <summary type="text">பரிசோதனைகளின்றி சுங்கத்தில் இருந்து 323 கொள்கலன்கள் விடுவிக்கப்பட்ட விவகாரம் தொடர்பில் அமைச்சரும் சபை முதல்வருமான பிமல் ரத்நாயக்க கருத்து வெளியிட்டுள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>பரிசோதனைகளின்றி சுங்கத்தில் இருந்து 323 கொள்கலன்கள் விடுவிக்கப்பட்ட விவகாரம் தொடர்பில் அமைச்சரும் சபை முதல்வருமான பிமல் ரத்நாயக்க கருத்து வெளியிட்டுள்ளார்.</p><p>குறித்த விடயம் தொடர்பில் ஆராய்ந்து யோசனை மற்றும் விதப்புரைகளை முன்வைப்பதற்காக நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற விசேட செயற்குழுவின் செயலாற்றுகைக் காலம் நீடிக்கப்பட்டுள்ளதாக&nbsp;தெரிவித்துள்ளார்.</p><p> 


இன்று (21) நாடாளுமன்றத்தில் உரையாற்றியபோதே பிமல் ரத்நாயக்க இந்த விடயத்தினைக் குறிப்பிட்டார்.</p><p></p><h2>நீடிக்கப்பட்டுள்ள காலம்&nbsp;</h2><p>அந்தவகையில், இந்த நாடாளுமன்ற விசேட செயற்குழுவின் செயலாற்றுகைக் காலம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 21ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c1a6681b-0187-481c-8acb-1d13a544908a/26-6a5f197851c58.webp' /></p><p>இதேவேளை சுங்க தரப்பினரின் சோதனை இன்றி விடுவிக்கப்பட்ட சர்ச்சைக்குரிய 323 கொள்கலன்களில் தொழில்துறை சார் பொருட்கள் மற்றும் மூலப்பொருட்கள் மாத்திரமே அடங்கியிருந்ததாக இலங்கை சுங்கம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-21T07:06:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழ்நாட்டில் முதல் நாள் அதிக வசூல் செய்த திரைப்படங்கள்.. டாப் 10 லிஸ்ட்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/highest-first-day-collection-movies-in-tamilnadu-1784608542"></link>
            <id>https://cineulagam.com/article/highest-first-day-collection-movies-in-tamilnadu-1784608542</id>
            <summary type="text">வசூல்&amp;nbsp;ஒரு திரைப்படத்தின் வசூல் என்பது எவ்வளவு முக்கியமோ அதேபோல் அந்த திரைப்படம் முதல் நாளன்று எவ்வளவு வசூல் செய்கிறது என்பதும் திரையுலகில் மிகவும...</summary>
            <content type="html"><![CDATA[<h2>வசூல்&nbsp;</h2><p>ஒரு திரைப்படத்தின் வசூல் என்பது எவ்வளவு முக்கியமோ அதேபோல் அந்த திரைப்படம் முதல் நாளன்று எவ்வளவு வசூல் செய்கிறது என்பதும் திரையுலகில் மிகவும் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/30d5f7a5-2614-403b-99f2-ad0ad451d867/26-6a5ef721acc7b.webp' /></p><p>அதுவும் உச்ச நட்சத்திரங்களின் திரைப்படங்கள் என்றால், முதல் நாளன்று உலகளவில் எவ்வளவு வசூல் வந்தது? வெளிநாட்டில் எவ்வளவு வசூல் வந்தது? தமிழ்நாட்டில் எவ்வளவு வசூல் வந்தது என்பது முக்கியமான ஒன்று.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a9fd93bd-8ef5-4d6c-ada4-45bd0197db45/26-6a5ef7225feb1.webp' /></p><p></p><p>குறிப்பாக தமிழ்நாட்டில் முதல் நாள் <a href="https://www.youtube.com/watch?v=ZiZUmeZ51R4" target="_blank">வசூல் </a>எவ்வளவு என்பதை தெரிந்துகொள்ள ரசிகர்களும் மிகவும் ஆர்வத்துடன் இருப்பார்கள். சமீபகாலமாக தயாரிப்பு நிறுவனங்களும் அதை அதிகாரப்பூர்வமாக அறிவித்து வருகின்றனர்.</p><h2>டாப் 10 லிஸ்ட்</h2><p>இந்த நிலையில், இதுவரை தமிழ் திரையுலகில் வெளிவந்த திரைப்படங்களில், தமிழ்நாட்டில் முதல் நாள் அதிக வசூல் செய்த திரைப்படங்கள் என்னென்ன, அதில் டாப் 10-ல் எந்தெந்த படங்கள் எல்லாம் இடம்பிடித்துள்ளன என்பதை இந்த பட்டியலில் பார்க்கலாம் வாங்க.</p><p>
பீஸ்ட் - ரூ. 35 கோடி
</p><p>லியோ - ரூ. 34 கோடி
</p><p>குட் பேட் அக்லி - ரூ. 31 கோடி
</p><p>கோட் - ரூ. 30.8 கோடி</p><p>
கூலி - ரூ. 30 கோடி</p><p>
சர்க்கார் - ரூ. 29 கோடி
</p><p>வலிமை - ரூ. 28 கோடி
</p><p>விடாமுயற்சி - ரூ. 27 கோடி
</p><p>ஜெயிலர் - ரூ. 27 கோடி
</p><p>மாஸ்டர் - ரூ. 26 கோடி</p>]]></content>
            <updated>2026-07-21T07:04:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[வானிலையில் மாற்றம் ; நாட்டின் பல மாகாணங்களில் மழை பெய்யும் சாத்தியம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/rain-likely-in-several-provinces-of-the-country-1784617434"></link>
            <id>https://jvpnews.com/article/rain-likely-in-several-provinces-of-the-country-1784617434</id>
            <summary type="text">நாட்டின் சில பகுதிகளில் இன்று (21) மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது

அதன்படி, மேல், சபரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலு...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டின் சில பகுதிகளில் இன்று (21) மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது</p><p></p><p>

அதன்படி, மேல், சபரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8e3280f4-a56e-467a-8ed5-2781a71736e7/26-6a5f19db904e4.webp' /></p><p>மேலும், மொனராகலை, அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் சில பகுதிகளில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இதேவேளை, நாட்டின் ஏனைய பகுதிகளில் பெரும்பாலும் வறட்சியான வானிலை நிலவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும், வடக்கு, வடமத்திய மற்றும் மத்திய மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 40 முதல் 50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
</p><p>
இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களால் ஏற்படும் ஆபத்துகளைத் தவிர்க்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-21T07:03:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் சபாநாயகரிடம் கையளிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/no-confidence-motion-against-justice-minister-1784615645"></link>
            <id>https://tamilwin.com/article/no-confidence-motion-against-justice-minister-1784615645</id>
            <summary type="text">நீதி அமைச்சர் ஹர்ஷனா நனயக்காரவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

பிரதான எதிர்க்கட்சி அம...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீதி அமைச்சர் ஹர்ஷனா நனயக்காரவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
</p><p>
பிரதான எதிர்க்கட்சி அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கயந்த கருணாதிலக இதை உறுதிப்படுத்தினார்.&nbsp; &nbsp;</p><p></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/577914a3-2cad-4891-bb94-e826bbaf4fbb/26-6a5f193d42d26.webp' /></p><p></p><p></p><p><b>YOU MAY LIKE THIS VIDEO</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/717X4VtpPYg" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p>]]></content>
            <updated>2026-07-21T07:01:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[வாடகை வீட்டில் சிக்கிய இளைஞர்கள் - நிலத்தில் புதைத்துவைத்து மீட்கப்பட்ட ஆபத்தான பொருட்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/three-suspects-arrested-with-firearms-and-drugs-1784614940"></link>
            <id>https://tamilwin.com/article/three-suspects-arrested-with-firearms-and-drugs-1784614940</id>
            <summary type="text">காலி - கொஸ்கொட, கணேகொடெல்ல பகுதியில் துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள், போதைப்பொருளுடன் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று மாலை ( 20...</summary>
            <content type="html"><![CDATA[<p>காலி - கொஸ்கொட, கணேகொடெல்ல பகுதியில் துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள், போதைப்பொருளுடன் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p>
நேற்று மாலை ( 20) இவர்கள் கைது செய்யப்பட்டதாக காலி மாவட்ட பொலிஸ் அலுவலகம் தெரிவித்துள்ளது.</p><p></p><h2>வாடகை வீடொன்றில் சிக்கிய இளைஞர்கள்&nbsp;&nbsp;</h2><p><span style="font-size: 14px;">இதன்போது சந்தேகநபர்களிடமிருந்து, டி.56 ரக துப்பாக்கியொன்றும், 8 தோட்டாக்கள், ஒரு 12 போர் ரக தோட்டா, ஒரு கையெறி குண்டு, 20 கிராம் ஐஸ் போதைப்பொருள், 320 மில்லிகிராம் போதைப்பொருள், போதைப்பொருளை அளவிடும் மின்னணு தராசு மற்றும் ரூ. 8,19,000 பணம் ஆகியன மீட்கப்பட்டுள்ளன.</span></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d4ee63b1-388b-43d2-8a44-d2a5b6f79147/26-6a5f18e0ee27e.webp' /><span style="font-size: 14px;"></span></p><p><span style="font-size: 14px;">இதேவேளை, துப்பாக்கிகளுடன் கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேகநபர்களும் சகோதரர்கள் என்றும், அவர்கள் கொஸ்கொட, நேப்பே பகுதியை சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது.</span></p><p>

கடந்த ஏழு மாதங்களாக கணேகொடெல்ல பகுதியில் வீடொன்றில் வாடகை அடிப்படையில் வசித்து வந்துள்ளனர் என்றும் தெரியவந்துள்ளது.
</p><p>
குறித்த வீட்டில் நிலத்தில் புதைக்கப்பட்ட நிலையில் துப்பாக்கிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.</p><p>

இதேவேளை, மற்றொரு சந்தேகநபரின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையின்போது, ​​போதைப்பொருளும் பணமும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-21T07:00:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறகடிக்க ஆசை சீரியலில் ரேகாவாக நடிக்கும் நடிகை ப்ரீத்தியா இது! ட்ரான்ஸ்பேரண்ட் சேலையில் கிளாமர் போட்டோஷூட்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/siragadikka-aasai-actress-preethi-photoshoot-1784610913"></link>
            <id>https://cineulagam.com/article/siragadikka-aasai-actress-preethi-photoshoot-1784610913</id>
            <summary type="text">சின்னத்திரையில் அதிக ரசிகர்களை கொண்ட சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் நடித்த ஹீரோ, ஹீரோயின் உள்ளிட்ட பலரும் இன்று ரசிகர்கள் மத்தியில் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சின்னத்திரையில் அதிக ரசிகர்களை கொண்ட சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் நடித்த ஹீரோ, ஹீரோயின் உள்ளிட்ட பலரும் இன்று ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நட்சத்திரங்களாக வலம் வருகின்றனர்.</p><p> அந்த வரிசையில் சிறகடிக்க ஆசை சீரியலில் ரேகா என்கிற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமாகியுள்ளார் நடிகை ப்ரீத்தி ஸ்பந்தனா. இவர் இன்ஸ்டாகிராமில் தன்னுடைய புகைப்படங்களை அவ்வப்போது பதிவு செய்வார்.</p><p> அந்த வகையில் தற்போது ட்ரான்ஸ்பேரண்ட் சேலையில் எடுத்துக்கொண்ட கிளாமர் போட்டோஷூட் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இதோ அந்த போட்டோஷூட் புகைப்படங்கள்:</p>]]></content>
            <updated>2026-07-21T07:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[கோடிக்கணக்கில் தடுத்து வைப்புக் கட்டணம்! துறைமுகத்தில் கைவிடப்பட்ட சொகுசு வாகனங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/vehicles-worth-crores-abandoned-at-the-port-1784613792"></link>
            <id>https://ibctamil.com/article/vehicles-worth-crores-abandoned-at-the-port-1784613792</id>
            <summary type="text">ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்கள் மீது அதிக அளவிலான தடுத்துவைப்புக் கட்டணம் விதிக்கப்படுவதன் காரணமாக, சுமார் ஆயிரம் இறக்குமதி செ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்கள் மீது அதிக அளவிலான தடுத்துவைப்புக் கட்டணம் விதிக்கப்படுவதன் காரணமாக, சுமார் ஆயிரம் இறக்குமதி செய்யப்பட்ட சொகுசு கார்கள் இறக்குமதியாளர்களால் கைவிடப்பட்டுள்ளதாக இலங்கை சுங்கத் திணைக்கள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
</p><p>
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் சுமார் 40,000 இறக்குமதி செய்யப்பட்ட கார்கள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், மறு ஏற்றுமதி மற்றும் போர் காரணமாக துபாய் போன்ற நாடுகளுக்குக் கொண்டு செல்ல முடியாததால் இந்த வாகனங்களில் பெரும்பாலானவை இறக்கப்பட்டுள்ளதாகவும் 
தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>

மேலும் மறு ஏற்றுமதிக்காக ஹம்பாந்தோட்டாவிற்கு வரும் வாகனங்கள், தடுத்து வைப்புக் கட்டணம் என்ற சிக்கலையும் எதிர்கொள்கின்றன என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.</p><p></p><h2>7 கோடி&nbsp;கட்டணம்</h2><p>

சுமார் 6 ஆண்டுகளுக்கு முன்பு இறக்குமதி செய்யப்பட்டு ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த, ஏறத்தாழ 2 கோடி ரூபாய் மதிப்புள்ள சொகுசு காரை சமீபத்தில் விடுவிக்கச் சென்றபோது, ​​இலங்கையைச் சேர்ந்த இறக்குமதியாளர் ஒருவர் கிட்டத்தட்ட 5 கோடி ரூபாய் தடுப்புக் கட்டணம் செலுத்த நிர்பந்திக்கப்பட்டுள்ளார் என சுங்கத் திணைக்களத்தின் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2a268f00-271e-43cf-ab23-b2f6190e9e78/26-6a5f108176f0d.webp' /></p><p>

வாகனத்தை நிறுத்தி வைத்தல் கட்டணத்துடன் வாகனத்தின் விலை 7 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளதாகவும், அதன்படி வாகனத்தின் விலை அதன் உண்மையான விலையை விட கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகரித்துள்ளதாகவும் சுங்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்</p><p>
இந்த வரி குறித்து அறிந்த இறக்குமதியாளர் ஆச்சரியமடைந்ததாகவும், அதைத் தொடர்ந்து அவர் இந்த விடயம் குறித்து சுங்கத்துறைக்குத் தெரிவித்ததாகவும் அவர் கூறியுள்ளார்.</p><p>

அதிகப்படியான வரி காரணமாக வாகனத்தை விடுவிக்கும் முயற்சியை இறக்குமதியாளர் கைவிட்டதாகவும், ஹம்பாந்தோட்டா துறைமுகத்தின் நிர்வாகம் ஒரு சீன நிறுவனத்திற்கு மாற்றப்பட்ட பின்னரே இந்த நிலைமை ஏற்பட்டதாகவும் சுங்க அதிகாரி தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-21T06:56:26+00:00</updated>
        </entry>
    </feed>
