<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-09-04T19:51:01+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[முன்னாள் ராஜாங்க அமைச்சர் பிரேமலால் ஜயசேகர உள்ளிட்ட மூவருக்கு வெளிநாட்டுப் பயணத்தடை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/travel-ban-imposed-on-three-individuals-1788547606"></link>
            <id>https://tamilwin.com/article/travel-ban-imposed-on-three-individuals-1788547606</id>
            <summary type="text">மொட்டுக்கட்சியின் முக்கியஸ்தர்களில் ஒருவரும், முன்னாள் ராஜாங்க அமைச்சருமான பிரேமலால் ஜயசேகர உள்ளிட்ட மூவருக்கு வெளிநாட்டுப் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p>மொட்டுக்கட்சியின் முக்கியஸ்தர்களில் ஒருவரும், முன்னாள் ராஜாங்க அமைச்சருமான பிரேமலால் ஜயசேகர உள்ளிட்ட மூவருக்கு வெளிநாட்டுப் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது.</p><p>

கடந்த 2015ம் ஆண்டின் ஜனாதிபதித் தேர்தலின் போது இரத்தினபுரியில் ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி படுகொலை செய்த குற்றச்சாட்டில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரேமலால் ஜயசேகரவுக்கு எதிரான வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.</p><h2>வெளிநாட்டுப் பயணத்தடை</h2><p>

முன்னதாக, இரத்தினபுரி மேல் நீதிமன்றம் பிரேமலால் ஜயசேகர உள்ளிட்டோருக்கு மரண தண்டனை விதித்திருந்தது. பின்னர், அவர்கள் தாக்கல் செய்த மேல்முறையீட்டை விசாரித்த மேன்முறையீட்டு நீதிமன்றம் அவர்களை விடுதலை செய்திருந்தது.</p><p>

தற்போது, அந்த விடுதலைத் தீர்ப்புக்கு எதிரான மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/13f8c2ba-9eca-4bf2-ab7e-7cfc957cd7b6/26-6a9b13f38cb3e.webp' /></p><p>
அதன் பிரகாரம் எதிர்வரும் ஒக்டோபர் 21ஆம் திகதி உச்ச நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு பிரேமலால் ஜயசேகர உள்ளிட்ட மூவருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.</p><p> அத்துடன், அவர்களுக்கு வெளிநாடு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
</p><p>
பிரேமலால் ஜயசேகர உள்ளிட்ட மூவரை விடுதலை செய்து மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை சவால் செய்து தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனு மீதான விசாரணையின்போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-04T19:34:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானுக்கு எதிராக முக்கிய தீர்மானம்! ஒன்றிணைந்துள்ள பிரபல நாடுகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/called-for-iaea-resolution-against-iran-1788549168"></link>
            <id>https://ibctamil.com/article/called-for-iaea-resolution-against-iran-1788549168</id>
            <summary type="text">அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள், அடுத்த வாரம் ஈரானுக்கு எதிராக ஒரு தீர்மானத்தை நிறைவேற்றுமாறு சர்வதேச அணுசக்தி முகவர் நிறு...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள், அடுத்த வாரம் ஈரானுக்கு எதிராக ஒரு தீர்மானத்தை நிறைவேற்றுமாறு சர்வதேச அணுசக்தி முகவர் நிறுவனத்தின் (IAEA) உறுப்பு நாடுகளிடம் வலியுறுத்தி வருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.</p><p>

இந்தத் தீர்மானம், ஈரான் தனது அணுசக்தி தொடர்பான கடமைகளை மீறியதற்காக அதை ஐ.நா. பாதுகாப்பு சபையிடம் சுட்டிக்காட்டும் வகையில் அமையும் என தெரிவிக்கப்படுகிறது.</p><p>

கடந்த ஆண்டு ஜூன் மாதம் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் போது, அறிவிக்கப்படாத இடங்களில் கண்டறியப்பட்ட யுரேனியம் தடயங்கள் குறித்த விசாரணைகளுக்கு முழுமையாக ஒத்துழைக்காததன் மூலம் ஈரான் தனது கடமைகளை மீறிவிட்டதாக அறிவிக்கப்பட்டது.</p><p></p><h2>அணு ஆயுத உற்பத்தி</h2><p> 

எவ்வாறாயினும், அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தில் (NPT) ஒரு தரப்பாக இருப்பதால், ஈரான் அணு ஆயுதங்களை உருவாக்க முடியாது; மேலும் தாங்கள் அவ்வாறு செய்யவில்லை என்று பலமுறை கூறியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/adfb2465-ab9f-4a08-965d-794c48569a28/26-6a9b183265200.webp' /></p><p><i>Image Credit:&nbsp;Reuters</i></p><p> 

இருப்பினும், பெப்ரவரியில் போர் தொடங்கியதிலிருந்து அமெரிக்கா மற்றும் இஸ்ரேலால் குண்டுவீசப்பட்ட யுரேனியம் வசதிகளை ஆய்வு செய்ய IAEA ஊழியர்களை ஈரான் அனுமதிக்கவில்லை என்று சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.&nbsp;&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-04T19:30:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஓமானில் உயிரிழந்த இலங்கையர்களின் குடும்பங்களுக்கு 28 மில்லியன் அதிகமான இழப்பீடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/rs-28m-compensation-for-oman-victims-families-1788549403"></link>
            <id>https://jvpnews.com/article/rs-28m-compensation-for-oman-victims-families-1788549403</id>
            <summary type="text">கடந்த 12 மாத காலத்தில் ஓமானில் உயிரிழந்த இலங்கையர்களின் குடும்பங்களுக்கு 28 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான இழப்பீட்டுத் தொகையை பெற்றுக்கொடுப்பதற்கு ஓம...</summary>
            <content type="html"><![CDATA[<p>கடந்த 12 மாத காலத்தில் ஓமானில் உயிரிழந்த இலங்கையர்களின் குடும்பங்களுக்கு 28 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான இழப்பீட்டுத் தொகையை பெற்றுக்கொடுப்பதற்கு ஓமானிலுள்ள இலங்கைத் தூதரகம் நடவடிக்கை எடுத்துள்ளது. </p><p>

கடந்த ஆண்டின் ஓகஸ்ட் மாதம் முதல் இந்த ஆண்டின் ஓகஸ்ட் மாதம் வரையிலான காலப்பகுதியில் இந்த இழப்பீட்டுத் தொகை அறவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4346721b-c382-4e80-b073-d128382e56fd/26-6a9b191d45d67.webp' /></p><p> </p><p>மேலும், அத்தொகை கொழும்பிலுள்ள வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சின் தூதரகப் பிரிவு ஊடாக உயிரிழந்தவர்களின் நெருங்கிய உறவினர்களக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.</p><p>
 
ஓமானிலுள்ள சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், கம்பனிகள் மற்றும் அதிகாரிகளுடன் இலங்கைத் தூதரகம் நடத்திய தொடர்ச்சியான கலந்துரையாடல்கள் மற்றும் ஒருங்கிணைப்புகள் காரணமாகவே இந்த இழப்பீட்டுத் தொகையைப் பெற்றுக்கொள்ள முடிந்துள்ளது.
</p><p> 
ஓமானில் பணியாற்றியபோது உயிரிழந்த ஏனைய இலங்கையர்களுக்காகக் கிடைக்கவேண்டிய நிலுவை இழப்பீட்டுத் தொகைகளை அறவிடும் நடவடிக்கைகளுக்காகவும் தூதரகம் தொடர்ந்து தீவிரமாகத் தலையிடும் என்றும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-04T19:30:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நன்றி, டியர் மோடி - இந்தியா-இத்தாலி உறவை வலுப்படுத்தும் மெலோனி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/meloni-thanks-modi-india-italy-ties-stronger-1788550134"></link>
            <id>https://news.lankasri.com/article/meloni-thanks-modi-india-italy-ties-stronger-1788550134</id>
            <summary type="text">Meloni thanks Modi, India-Italy ties stronger: இந்திய பிரதமர் நரேந்திர மோடி கூறிய வாழ்த்துக்கு மெலோனி நன்றி தெரிவித்துள்ளார்.

நன்றி, டியர் மோடிஇத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>Meloni thanks Modi, India-Italy ties stronger: இந்திய பிரதமர் நரேந்திர மோடி கூறிய வாழ்த்துக்கு மெலோனி நன்றி தெரிவித்துள்ளார்.
</p><h2>
நன்றி, டியர் மோடி</h2><p>இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி, இரண்டாம் உலகப்போருக்குப் பின் நீண்ட காலம் தொடர்ந்து பதவி வகித்த பிரதமராக சாதனை படைத்துள்ளார்.

இதற்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தார். </p><p>அதற்கு பதிலளித்த மெலோனி, “நன்றி, அன்புள்ள பிரதமர் நரேந்திர மோடி. இன்று இந்தியா-இத்தாலி உறவு இதுவரை இல்லாத அளவுக்கு வலுவாக உள்ளது” என்று சமூக வலைதளத்தில் பதிவு செய்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/390916ed-7afc-47b4-a09b-a7fbcc76b683/26-6a9b1bf819333.webp' /></p><p>மெலோனி, 2022 அக்டோபர் 22 முதல் பிரதமராக உள்ளார். 1,413 நாட்கள் தொடர்ந்து பதவி வகித்ததால், முன்னாள் பிரதமர் சில்வியோ பெர்லஸ்கோனியின் சாதனையை முறியடித்துள்ளார்.
</p><p>
மெலோனி தனது பதிவில், “நாம் தொடங்கிய சிறப்பு மூலோபாய கூட்டாண்மை (Special Strategic Partnership), இரு நாடுகளின் திறமைகளை இணைத்து புதிய வளர்ச்சி வாய்ப்புகளை உருவாக்கும். இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பா பொருளாதார வழித்தடத்தையும் (Economic Corridor) இணைந்து வலுப்படுத்துவோம்” என்று குறிப்பிட்டார்.
</p><p></p><p>மோடி தனது வாழ்த்துச் செய்தியில், “இத்தாலி மக்களின் நம்பிக்கையும் நெருக்கமும் மெலோனியின் தலைமையில் பிரதிபலிக்கிறது. இந்தியா-இத்தாலி உறவை வலுப்படுத்தியதில் அவரது நட்பு முக்கிய பங்கு வகித்துள்ளது” என்று தெரிவித்தார்.
</p><h2>
மெலோனி+மோடி=மெலோடி</h2><p>இரு தலைவர்களின் நட்பு சமூக வலைதளங்களில் “Melodi” என்ற பெயரில் பிரபலமாகியுள்ளது.</p><p>2023-இல் COP28 மாநாட்டில் மெலோனி, மோடியுடன் எடுத்த செல்ஃபியை “Good friends at COP28 #Melodi” எனப் பகிர்ந்தபோது, இந்த ஹாஷ்டேக் வைரலானது. பின்னர் G7 மாநாட்டிலும், ரோமில் நடந்த சந்திப்பிலும் இந்த “Melodi” மீம் மீண்டும் பேசுபொருளானது.</p><p>
இந்தியாவும், இத்தாலியும், மூலோபாய கூட்டாண்மையை வலுப்படுத்தி, கண்டங்கள் இடையேயான உறவை மேம்படுத்தும் முயற்சியில் முன்னேறி வருகின்றன.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-04T19:25:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[12ஆம் திகதி இது தான் நடக்கும் ; கைதாவதற்கு முன்னர் நாமல் கூறிய விடயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/namal-said-important-news-before-his-arrest-1788543026"></link>
            <id>https://jvpnews.com/article/namal-said-important-news-before-his-arrest-1788543026</id>
            <summary type="text">என்னை கைது செய்தாலும், நான் பங்கேற்காவிட்டாலும் எதிர்வரும் 12ஆம் திகதி நடைபெறும் கூட்டத்தில் மக்கள் படை அணிதிரளும்” என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேச...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">என்னை கைது செய்தாலும், நான் பங்கேற்காவிட்டாலும் எதிர்வரும் 12ஆம் திகதி நடைபெறும் கூட்டத்தில் மக்கள் படை அணிதிரளும்” என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்திருந்தார்.&nbsp;</p><p style="text-align: justify;">


இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாவதற்கு முன்னர் இன்று (04) காலை ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்திருந்தார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f791100b-34d4-4701-badf-ade18b5fe72f/26-6a9b00343421e.webp' /></p><h2 style="text-align: justify; ">விளக்கமறியல்</h2><p> </p><p style="text-align: justify;">



தாம் எந்தவொரு குற்றத்தையும் இழைக்கவில்லை எனக் குறிப்பிட்ட நாமல் ராஜபக்ஷ, குற்றம் இழைக்காத காரணத்தினாலேயே விசாரணைகளுக்கு தொடர்ந்து முன்னிலையாகி வருவதாகவும் தெரிவித்திருந்தார்.</p><p style="text-align: justify; ">இந்நிலையில்&nbsp;இலஞ்சக் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கைவிலங்குடன் வெலிக்கடை சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify;">
இலஞ்ச அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, அவரை வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் இன்று (04) உத்தரவிட்டார்.</p><p style="text-align: justify;"></p><p> </p>]]></content>
            <updated>2026-09-04T18:52:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொலை குற்றச்சாட்டு! முன்னாள் அமைச்சர் உள்ளிட்ட மூவருக்கு வெளிநாட்டு பயணத் தடை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/foreign-travel-ban-imposed-on-ex-minister-1788547063"></link>
            <id>https://ibctamil.com/article/foreign-travel-ban-imposed-on-ex-minister-1788547063</id>
            <summary type="text">கொலைக்குற்றம் சாட்டப்பட்டு, மரண தண்டனை விதிக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் பிரேமலால் ஜெயசேகர மற்றும் மேலும் மூன்று பிரதிவாதிகள் வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொலைக்குற்றம் சாட்டப்பட்டு, மரண தண்டனை விதிக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் பிரேமலால் ஜெயசேகர மற்றும் மேலும் மூன்று பிரதிவாதிகள் வெளிநாடு செல்வதற்குத் தடை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.</p><p>

பிரதம நீதிபதி பிரீத்தி பத்மன் சுரசேன, அச்சலா வெங்கப்புலி மற்றும் கிஹான் குலதுங்க ஆகியோர் அடங்கிய மூன்று நீதிபதிகள் கொண்ட உயர் நீதிமன்ற அமர்வு இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளதுடன், இந்த பயணத் தடை குறித்து குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்குத் தெரிவிக்கப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.</p><p>

இதேவேளை, பிரேமலால் ஜெயசேகர உள்ளிட்ட மூன்று பிரதிவாதிகளுக்கும் ஒக்டோபர் 21 ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அறிவிப்புகள் அனுப்பப்பட வேண்டும் என்றும் அந்த அமர்வு உத்தரவிட்டுள்ளது.</p><p></p><h2>மரண தண்டனை&nbsp;</h2><p>

2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் போது, ​​அப்போதைய ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் அரசியல் பேரணியில் துப்பாக்கிச் சூடு நடத்தி ஒருவரைக் கொலை செய்ததற்காக, பிரேமலால் ஜெயசேகரவுக்கு இரத்தினபுரி மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bf4a9c33-5803-4a93-8013-63069c3ba810/26-6a9b11ccbb126.webp' /></p><p>
அதனைதொடர்ந்து, மரண தண்டனைக்கு எதிராக பிரேமலால் ஜெயசேகர மற்றும் பிரதிவாதிகள் தாக்கல் செய்த மேல்முறையீட்டை விசாரித்த மேல்முறையீட்டு நீதிமன்றம், அவர்களை விடுவித்து விடுதலை செய்ய உத்தரவிட்டிருந்தது.</p><h2>நீதிமன்ற உத்தரவு</h2><p>
</p><p>
இந்நிலையில், மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பு சட்டத்திற்கு முரணானது என்றும், அதை ரத்து செய்து தண்டனை விதிக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் கோரி, பாதிக்கப்பட்ட தரப்பினர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/904a200d-0c9a-408a-abba-33e0d35f2caa/26-6a9b11cd7046a.webp' /></p><p>
</p><p>
அதன்படி, தலைமை நீதிபதி தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட உயர் நீதிமன்ற அமர்வு முன்னிலையில், இந்த மனு இன்று (04) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.</p><p>

இவ்வாறானதொரு பின்னணியில், சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டார விடுத்த கோரிக்கையைப் பரிசீலித்த பின்னர், மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு மேற்படி வெளிநாடு செல்வதற்குத் தடை விதித்து உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-04T18:45:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் வாகனம் மோதி எலக்ட்ரிக் பைக் ஓட்டுநர் பரிதாப பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/crash-involving-motorcycle-passenger-vehicle-1788542553"></link>
            <id>https://canadamirror.com/article/crash-involving-motorcycle-passenger-vehicle-1788542553</id>
            <summary type="text">கனடாவின் ஒன்டாரியோவில் எல்மர் பகுதிக்குத் தெற்கே வெள்ளிக்கிழமை காலை எஸ்.யு.வீ வாகனம் மோதியதில் எலக்ட்ரிக் பைக் ஓட்டிச் சென்றவர் உயிரிழந்தார். 
மலாஹைட...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் ஒன்டாரியோவில் எல்மர் பகுதிக்குத் தெற்கே வெள்ளிக்கிழமை காலை எஸ்.யு.வீ வாகனம் மோதியதில் எலக்ட்ரிக் பைக் ஓட்டிச் சென்றவர் உயிரிழந்தார்.</p><p> 
மலாஹைட் பகுதியில் உள்ள ஜான் வைஸ் லைன் மற்றும் இம்பீரியல் ரோடு சந்திப்பில் வெள்ளிக்கிழமை காலை சுமார் 6:30 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. </p><p>
ஆபத்தான காயங்களுடன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட பைக் ஓட்டுநர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/22b17343-544d-42f7-8730-ed07c23b9adb/26-6a9afe5b0809a.webp' /></p><p> </p><p>எஸ்.யு.வீ வாகனத்தில் ஆறு பேர் பயணித்ததாகவும், அதிர்ஷ்டவசமாக அவர்களுக்கு எந்தக் காயமும் ஏற்படவில்லை என குறிப்பிட்டனர்.</p><p>எனினும், அந்த காரின் பயணிகள் பக்கக் கதவு பலத்த சேதமடைந்துள்ளது. 
விபத்துக்கான காரணம் மற்றும் யார் மீது தவறு என்பதைத் துல்லியமாகக் கண்டறிய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-04T18:31:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பொரலஸ்கமுவ துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி - சந்தேகநபர் தப்பியோட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/shooting-in-the-boralesgamuwa-area-1788545855"></link>
            <id>https://tamilwin.com/article/shooting-in-the-boralesgamuwa-area-1788545855</id>
            <summary type="text">பொரலஸ்கமுவ,மாலனி புலத்சிங்கள மாவத்தை பகுதியில் இன்று (04) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொரலஸ்கமுவ,மாலனி புலத்சிங்கள மாவத்தை பகுதியில் இன்று (04) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>

 

குறிப்பிட்ட நபர் தனது வீட்டில் இருந்தபோது, மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளந்தெரியாத இருவர் கைத்துப்பாக்கியால் சுட்டுள்ளதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.</p><h2>துப்பாக்கிச் சூடு</h2><p>

 

கொலை செய்யப்பட்டவர் பொரலஸ்கமுவ பகுதியைச் சேர்ந்த 74 வயதுடையவர் என தெரியவந்துள்ளது. மேலும்&nbsp;இறந்தவர், 'கோஸ் மல்லி' என்ற போதைப்பொருள் கடத்தல்காரரின் காசாளர் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/81f3e8ed-7a76-48ed-95c1-02fd021bb8fd/26-6a9b0c9285a29.webp' /></p><p>
 

துப்பாக்கிச் சூட்டின் பின்னர் துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் தப்பிச் சென்றுள்ளதுடன், சந்தேகநபர்களைக் கைது செய்வதற்காக பொரலஸ்கமுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-04T18:23:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதிரடியாக கைது செய்யப்பட்ட நாமல் - கலக்கத்தில் தமிழ் அரசியல்வாதிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/tamil-politicians-linked-to-namal-1788545000"></link>
            <id>https://tamilwin.com/article/tamil-politicians-linked-to-namal-1788545000</id>
            <summary type="text">நாமல் ராஜபக்ச மற்றும் ராஜபக்ச குடும்பத்தினருடன் தொடர்புடைய வடக்கு- கிழக்கை சேர்ந்த அரசியல்வாதிகளும் கைது செய்ப்பட்டு தண்டிக்கபட வேண்டும் என்று ஈழவர் ஜ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாமல் ராஜபக்ச மற்றும் ராஜபக்ச குடும்பத்தினருடன் தொடர்புடைய வடக்கு- கிழக்கை சேர்ந்த அரசியல்வாதிகளும் கைது செய்ப்பட்டு தண்டிக்கபட வேண்டும் என்று ஈழவர் ஜனநாயக முன்னணியின் (Eros) செயலாளர் நாயகம் ராஜநாதன் பிரபாகரன் தெரிவித்தார்.</p><p>

லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தார்.</p><p>

மேலும் தெரிவித்த அவர்,</p><p>


நாமல் ராஜபக்சவின் கைது வரவேற்கத்தக்கது, இது நீண்ட காலத்திற்கு முன்பே நடந்திருக்க வேண்டிய ஒன்றாகும்.

சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை இந்த அரசு நிரூபிப்பித்துள்ளது.
</p><p>
ராஜபக்‌ச குடும்பத்தினர் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய அரசியல்வாதிகள் மீது பல ஊழல் முறைப்பாடுகள் உள்ளன.</p><p> 

ராஜபக்‌ச குடும்பத்தினர் மற்றும் அவர்களுடன் தொடர்புடையவர்கள் செய்த ஊழல், கொள்ளை மற்றும் அதிகார துஷ்பிரயோகம் ஆகியவை சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ள முடியாதவை.
</p><p>
தற்போதைய அரசு இத்தகைய ஊழல்களை விசாரிப்பதன் மூலம் மக்களின் நம்பிக்கையைப் பெற்றுள்ளது என குறிப்பிட்டார்.</p><p>

இந்த விடயங்களை ஆராய்கின்றது லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சி..&nbsp;&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/D9IttxaXdMQ" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-04T18:10:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆபிரிக்காவில் திருடபட்டு காணாமல் போகும் பிறப்புறுப்பு ; சமூக ஊடகத்தில் பரவும் தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/information-released-on-social-media-theft-1788545400"></link>
            <id>https://jvpnews.com/article/information-released-on-social-media-theft-1788545400</id>
            <summary type="text">ஆப்பிரிக்காவில் கடந்த ஓராண்டாக ஆண்களின் பிறப்புறுப்பு திருடப்பட்டு காணாமல் போவதாக டிக்டாக் மற்றும் ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் தகவல் பரவியதை தொ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">ஆப்பிரிக்காவில் கடந்த ஓராண்டாக ஆண்களின் பிறப்புறுப்பு திருடப்பட்டு காணாமல் போவதாக டிக்டாக் மற்றும் ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் தகவல் பரவியதை தொடர்ந்து, வன்முறை பரவி சுமார் 80 இற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.</p><p style="text-align: justify; "> 

ஆப்பிரிக்காவில் கடந்த ஏப்ரல் 1 ஆம் திகதி மகாலா என்பவர் அவரது நண்பருடன் கார் விற்பனை தொடர்பாக ஒரு வாடிக்கையாளரை சந்திப்பதற்காக, துண்டுமா என்ற நகரத்திற்கு பயணம் செய்தார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d4ca4b79-5aa1-46eb-986f-2e3cf11bd60e/26-6a9b097a2f23b.webp' /></p><h2 style="text-align: justify; ">பலர் பலி</h2><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

அப்போது அவர்கள் ஒரு மதிய உணவிற்காக ஒரு உணவகத்தில் நின்று கொண்டிருந்தபோது, அங்கு இருந்த ஒருவரின் பிறப்புறுப்புகளை இவர்கள் திருடிவிட்டதாக, உணவகத்தில் இருந்த நபர்கள் கூச்சலிட தொடங்கினர்.</p><p style="text-align: justify; "> 

இதையடுத்து அங்கு திரளான கூட்டம் கூடியதால், அவர்களால் அங்கிருந்து தப்பிச் செல்வது கடினமாக இருந்ததாகவும், பின்னர் அங்கிருந்து தப்பித்து வந்ததாகவும் உயிர்பிழைத்த நபர்கள் தெரிவித்தனர்.</p><p style="text-align: justify; "> 

இந்த வகையிலான வதந்திகள் சமூக ஊடகங்கள் மூலமாக பரப்பப்பட்டு, பொதுமக்களிடம் பீதியை ஏற்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். </p><p style="text-align: justify; ">

இந்த தகவல் ஜாம்பியா, தான்சானியா, மொசாம்பிக், அங்கோலா, மலாவி, புருண்டி, கென்யா உள்ளிட்ட பிற நாடுகளுக்கும் பரவின. </p><p style="text-align: justify; ">

இதன் காரணமாக கடந்த ஆறு வாரங்களில் சுமார் 55 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். மேலும் இந்த தாக்குதலில் ஒரு பொலிஸ் அதிகாரி, அரசு ஊழியர்கள், சுகாதார பணியாளர்கள் உள்ளிட்டவர்களும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். </p><p style="text-align: justify; ">இது போன்ற வதந்திகள் கடந்த 2008 ஆம் ஆண்டும் பரவியதாக பொலிஸார் தெரிவித்தனர். </p><p style="text-align: justify; ">

சமூக ஊடகங்களில் அதிகப்படியான பின்தொடர்பவர்களை வைத்திருப்பவர்கள், மக்களின் கவனத்தையும் அதிகப்படியான பார்வைகளையும் ஈர்ப்பதற்காக இந்த வகையான வதந்திகள் மூலமாக நாட்டில் வன்முறைகளை தூண்டுவதாக கொம்பாசா மாவட்ட ஆணையர் முகமது நூர் கூறியுள்ளார். </p><p style="text-align: justify; ">

மொசாம்பிக் நாட்டு ஜனாதிபதி டேனியல் சாப்போ, வதந்திகள் பரப்பப்படுவதையும் அதன் விளைவாக ஏற்படும் மரணங்களையும் பகிரங்கமாக கண்டித்தார்.</p><p style="text-align: justify; ">

மேலும் உண்மையில் எந்த நபரும் தங்கள் உடல் உறுப்புகளை இழந்துள்ளதாக எந்த வைத்திய ஆதாரமும் கிடைக்கவில்லை என்றும் அவர் கூறினார்</p>]]></content>
            <updated>2026-09-04T18:10:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பில் துப்பாக்கிச் சூடு! 74 வயது முதியவர் படுகொலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/one-killed-in-boralesgamuwa-shooting-1788544462"></link>
            <id>https://ibctamil.com/article/one-killed-in-boralesgamuwa-shooting-1788544462</id>
            <summary type="text">கொழும்பு - பொரலஸ்கமுவவின் புலத்சிங்கல மாவத்த பகுதியில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சம்பந்தப்பட்ட நபர் தனது ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு - பொரலஸ்கமுவவின் புலத்சிங்கல மாவத்த பகுதியில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
</p><p>
சம்பந்தப்பட்ட நபர் தனது வீட்டில் இருந்தபோது, இன்று இரவு (04) ​மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரியவருகிறது.</p><p>

இதன்போது, கொல்லப்பட்ட நபர் பொரலஸ்கமுவவைச் சேர்ந்த 74 வயது முதியவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.</p><p></p><h2>மேலதிக விசாரணை</h2><p>
இதேவேளை, கொலை செய்யப்பட்டவர், “கொஸ் மல்லி” என்ற போதைப்பொருள் கடத்தல்காரரின் காசாளர் செயற்பட்டுள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6dedd896-1f33-46a5-96ea-b04ff9882a85/26-6a9b07fbedd77.webp' /></p><p>

இந்நிலையில், துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் தப்பிச் சென்றுள்ள நிலையில், சந்தேகநபர்களை கைது செய்ய பொரலஸ்கமுவ மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</h5></td></tr></tbody></table><p>
</p>]]></content>
            <updated>2026-09-04T18:03:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[தலைமன்னார் - கட்டுக்காரண் குடியிருப்பு பனந்தோப்பில் தீப்பரவல்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/fire-breaks-out-thalaimannar-police-division-1788543695"></link>
            <id>https://ibctamil.com/article/fire-breaks-out-thalaimannar-police-division-1788543695</id>
            <summary type="text">தலைமன்னார் காவல்துறை பிரிவுக்குட்பட்ட கட்டுக்காரண் குடியிருப்பு பகுதியில் காணப்படும் பனந்தோப்பில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.இன்று வெள்ளிக்கிழமை (4) மாலை...</summary>
            <content type="html"><![CDATA[<p>தலைமன்னார் காவல்துறை பிரிவுக்குட்பட்ட கட்டுக்காரண் குடியிருப்பு பகுதியில் காணப்படும் பனந்தோப்பில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.</p><p>இன்று வெள்ளிக்கிழமை (4) மாலை திடீரென இந்த தீப்பரவல் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><h2>உடனடி நடவடிக்கை</h2><p>இதன்போது, குறித்த தீயை கட்டுப்படுத்த காவல்துறையினர் மற்றும் கடற்படையினர் இணைந்து உடனடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e06223e9-57de-4195-b314-e6f4e0b5f382/26-6a9b052464c38.webp' /></p><p>அருகில் மக்களின் குடியிருப்புகள் காணப்படுகின்றமையினால் மக்களின்
குடியிருப்புகளுக்கு தீ பரவாத வகையில் அதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-04T18:00:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரேமலால் ஜயசேகர உள்ளிட்ட மூவருக்கு வெளிநாட்டு பயணத் தடை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/travel-ban-for-premalal-and-two-others-1788543882"></link>
            <id>https://jvpnews.com/article/travel-ban-for-premalal-and-two-others-1788543882</id>
            <summary type="text">கொலை குற்றச்சாட்டு தொடர்பில் குற்றவாளியாகக் காணப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் பிரேமலால் ஜயசேகர உள்ளிட்ட மூன்று பி...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">கொலை குற்றச்சாட்டு தொடர்பில் குற்றவாளியாகக் காணப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் பிரேமலால் ஜயசேகர உள்ளிட்ட மூன்று பிரதிவாதிகள் வெளிநாடு செல்வதைத் தடுத்து உயர்நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
</p><p style="text-align: justify; "> 
இந்த வெளிநாட்டுப் பயணத் தடையை குடிவரவு குடியகல்வுக் கட்டுப்பாட்டாளருக்கு அறிவிக்குமாறும் பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன, அச்சல வேங்கப்புலி மற்றும் கிஹான் குலதுங்க ஆகிய மூவரடங்கிய உயர்நீதிமன்ற நீதிபதிகள் குழாம் உத்தரவிட்டது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2ff6b9e4-bef9-4159-977f-06cb10dc09b7/26-6a9b04647beee.webp' /></p><h2 style="text-align: justify; ">&nbsp;மனு தாக்கல்</h2><p>
</p><p style="text-align: justify;"> 

இதற்கு மேலதிகமாக, பிரேமலால் ஜயசேகர உள்ளிட்ட மூன்று பிரதிவாதிகளையும் ஒக்டோபர் மாதம் 21 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அறிவித்தல் பிறப்பிக்குமாறும் நீதியரசர்கள் குழாம் உத்தரவிட்டது.
</p><p style="text-align: justify;"> 
2015 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் அப்போதைய ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் அரசியல் கூட்டத்தின் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு நபரைக் கொலை செய்த குற்றச்சாட்டிற்கு குற்றவாளியாகக் காணப்பட்ட பிரேமலால் ஜயசேகரவுக்கு இரத்தினபுரி மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது.</p><p style="text-align: justify;">
 
அந்த மரண தண்டனைக்கு எதிராக பிரேமலால் ஜயசேகர உள்ளிட்ட பிரதிவாதிகள் தாக்கல் செய்த மேல்முறையீட்டை விசாரித்த மேல்முறையீட்டு நீதிமன்றம் அவர்களை குற்றமற்றவர்கள் என விடுவித்து உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;">
</p><p style="text-align: justify;">
 

மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் அந்தத் தீர்மானம் சட்டத்திற்குப் புறம்பானது என்றும், அதற்கமைய அதனை செல்லுபடியற்றதாக்கி தண்டனை வழங்கி உத்தரவிடுமாறு கோரியும் இச்சம்பவத்தால் பாதிக்கப்பட்ட தரப்பினரால் உயர்நீதிமன்றத்தில் இந்த மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
</p><p style="text-align: justify;">
 

அம்மனு இன்று பிரதம நீதியரசர் தலைமையிலான மூவர் கொண்ட உயர்நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதுடன், மனு விசாரணையும் நிறைவடைந்தது.

 

இதன்போது சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டார செய்த கோரிக்கையைக் கருத்திற்கொண்டே மூவர் கொண்ட நீதியரசர்கள் குழாம் இந்த உத்தரவைப் பிறப்பித்தது.&nbsp;</p><p style="text-align: justify;"></p>]]></content>
            <updated>2026-09-04T17:44:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Bavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மட்டக்களப்பில் 6 வயதுடைய சிறுவனுக்கு நேர்ந்த பரிதாபம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/a-6-year-old-boy-died-after-falling-into-a-pit-1788542708"></link>
            <id>https://ibctamil.com/article/a-6-year-old-boy-died-after-falling-into-a-pit-1788542708</id>
            <summary type="text">




மட்டக்களப்பு நெடியமடு பகுதியில் நீர்ப்பாசன திணைக்களம் ஆற்றின் குறுக்கே பாலம் அமைப்பதற்கு நீர் எடுப்பதற்காக வெட்டிய பாதுகாப்பற்ற குழியில் 6 வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>




மட்டக்களப்பு நெடியமடு பகுதியில் நீர்ப்பாசன திணைக்களம் ஆற்றின் குறுக்கே பாலம் அமைப்பதற்கு நீர் எடுப்பதற்காக வெட்டிய பாதுகாப்பற்ற குழியில் 6 வயதுடைய சிறுவன் ஒருவர் தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.
</p><p>
குறித்த சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை (4) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக ஆயித்தியமலை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். </p><p> 

இதன்போது, நெடியமடு பகுதியைச் சேர்ந்த 6 வயதுடைய நாகராசா நவதீப் என்ற சிறுவனே இவ்வாறு பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.</p><h2>உயிரிழப்பு</h2><p>
</p><p>
ஆயித்தியமலை காவல்துறை பிரிவிலுள்ள 6ம் கட்டை என அழைக்கப்படும் நெடியமடு பாடசாலைக்கு எதிர்பக்கம் உன்னிச்சைக் குளத்தில் இருந்து வயலுக்கு செல்லும் ஆற்றின் குறுக்கே பாலம் அமைப்பதற்கு நீர்ப்பாசன திணைக்களம் தண்ணீர் எடுப்பதற்காக குறித்த சிறுவனின் வீட்டு வேலிக்கு அருகில் பாரிய குழி ஒன்றை தோண்டியுள்ளதுடன் அதற்கு பாதுகாப்பு நடவடிக்கை எதையும் மேற்கொள்ளவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/123bf0b7-15e0-4cf7-8ed1-6b088a63ffe7/26-6a9b02534dc26.webp' /></p><p>

இந்நிலையில், சம்பவ தினமான இன்று குறித்த சிறுவன் வீட்டின் வேலிக்கு அருகாமையில் நடந்து சென்ற போது வேலிக்கு அருகில் வெட்டிய குழியில் வீழ்ந்துள்ளார்.</p><p>அதனைதொடர்ந்து, சிறுவன் மீட்கப்பட்டு கரடியனாறு வைத்தியசாலைக்கு கொண்டு சென்று அனுமதிக்கப்பட்ட நிலையில் ஏற்கனவே அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>மேலதிக விசாரணை</h2><p>
இதன்படி, பாலம் நிர்மாணம் பணியின் போது அங்கு பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளாததால் இந்த துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக காவல்துறை ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fe2a831b-15e9-410d-aea7-8eaa7d9957fc/26-6a9b025405625.webp' />&nbsp;</p><p>
</p><p>
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு மரண விசாரணை அதிகாரி சென்று விசாரணைகளை மேற்கொண்டு உயிரிழந்த சிறுவனின் உடல் பார்வையிட்டு நீதிமன்ற நீதவானுக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளது டன் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். </p><p>

இது தொடர்பாக ஆயித்தியமலை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
</p>]]></content>
            <updated>2026-09-04T17:39:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் தன்னை கருணைக்கொலை செய்யுமாறு கோரிய நகைச்சுவை நடிகை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/ontario-court-denies-toronto-womans-motion-1788537333"></link>
            <id>https://canadamirror.com/article/ontario-court-denies-toronto-womans-motion-1788537333</id>
            <summary type="text">&amp;nbsp;மனநல பாதிப்பை மட்டுமே காரணமாகக் கொண்டு மருத்துவ உதவியுடனான மரணத்தை நாட அனுமதி கோரிய பிரபல நகைச்சுவை நடிகையின் அவசர மனுவை ஒன்டாரியோ உயர் நீதிமன்ற...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;மனநல பாதிப்பை மட்டுமே காரணமாகக் கொண்டு மருத்துவ உதவியுடனான மரணத்தை நாட அனுமதி கோரிய பிரபல நகைச்சுவை நடிகையின் அவசர மனுவை ஒன்டாரியோ உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
</p><p>எனினும், இது தொடர்பாக அவர் தாக்கல் செய்துள்ள அரசியலமைப்புச் சட்டப் போராட்டத்திற்குப் பதிலளிக்குமாறு கனடா அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
</p><p>டொராண்டோவைச் சேர்ந்த முன்னாள் நடிகையும் நகைச்சுவைக் கலைஞருமான கிளாரி புரோஸோ , சிறுவயது முதலே கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக தீவிர மனநலப் பிரச்சினைகளால் அவதிப்பட்டு வருகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/17fafbec-6a8d-4ac7-aaaf-337e6e70589b/26-6a9ae9f6e5020.webp' /></p><p>
</p><p>பல கட்ட சிகிச்சைகளுக்குப் பிறகும் தனக்குக் தீராத மன உளைச்சல் நீடிப்பதால், சட்டம் வழங்கும் கருணைக்கொலைக்குத் தனக்கு அனுமதி அளிக்க வேண்டும் என மே 2026-இல் அவசர மனுத் தாக்கல் செய்திருந்தார்.
</p><p>நீதிபதி கரிசிமா மாதன், புரோஸோவின் வேதனைகள் உண்மையானவை என்பதில் மாற்றுக் கருத்து இல்லை என்றபோதிலும், சட்ட விலக்கு அளிப்பது சமூகத்திலும் அரசின் கொள்கை முடிவுகளிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் எனக் கூறி மனுவை நிராகரித்தார்.
</p><p>அதேசமயம், 2024-ஆம் ஆண்டு புரோஸோ தாக்கல் செய்த அரசியலமைப்புச் சட்டப் போராட்டத்திற்கு பதிலளிக்கும் அடுத்தகட்ட நடவடிக்கைகளை 14 நாட்களுக்குள் தொடங்குமாறு கனடா தலைமை வழக்கறிஞருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
</p><p>கனடாவில் 2021-ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட திருத்தங்களின்படி, தீர்க்க முடியாத நோய் மற்றும் உடல் ஊனம் உள்ளவர்கள் கருணைக்கொலை கோர முடியும்.</p><p> ஆனால், மனநலப் பிரச்சினையை மட்டுமே காரணமாகக் கொண்டு கருணைக்கொலை கோருவதற்கு அரசு தற்காலிகத் தடை விதித்துள்ளது. </p><p>இத்தடையை நீட்டிக்க நாடாளுமன்றக் குழு பரிந்துரை செய்துள்ளது.
நீதிமன்றத் தீர்ப்பு குறித்துப் பேசிய புரோஸோ, "மனநலப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மற்றவர்களைப் போன்ற சம உரிமையோ, உடல் சார்ந்த சுய உரிமையோ இல்லை என்பதை அரசாங்கம் மீண்டும் நிரூபித்துள்ளது. </p><p>நான் தொடர்ந்து வேதனையை அனுபவிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளேன்" என வேதனையுடன் தெரிவித்தார்.
</p><p>அரசியலமைப்புச் உரிமைகளின்படி மனநலப் பாதிப்பு உள்ளவர்களுக்கும் கருணைக்கொலை உரிமை கிடைக்க வேண்டும் என்பதற்கான முதன்மை வழக்கைத் தொடர்ந்து நடத்தப்போவதாக புரோஸோவின் சட்டக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-04T17:32:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஒன்டாரியோவில் பலத்த புயல்: சீரமைக்கப்படும் மின்சார விநியோகம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/cleanup-continues-after-destructive-ontario-1788539021"></link>
            <id>https://canadamirror.com/article/cleanup-continues-after-destructive-ontario-1788539021</id>
            <summary type="text">தெற்கு ஒன்டாரியோவில் இந்த வாரம் வீசிய கடும் இடிமின்னலுடன் கூடிய புயலைத் தொடர்ந்து, மின்தடை ஏற்பட்ட வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு மின்சாரத்தை மீ...</summary>
            <content type="html"><![CDATA[<p>தெற்கு ஒன்டாரியோவில் இந்த வாரம் வீசிய கடும் இடிமின்னலுடன் கூடிய புயலைத் தொடர்ந்து, மின்தடை ஏற்பட்ட வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு மின்சாரத்தை மீண்டும் வழங்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.</p><p> 
இதனால் மின்சாரமின்றி இருளில் மூழ்கியிருந்த கட்டிடங்களின் எண்ணிக்கை தற்போது கணிசமாகக் குறைந்துள்ளது.</p><p> 
புதன்கிழமை சில பகுதிகளில் 100 மில்லிமீட்டருக்கும் அதிகமான மழை பெய்தது. அபாயகரமான சூறாவளிக் காற்றினால் மரங்கள் வேரோடு சாய்ந்தன, மின்கம்பிகள் அறுந்து விழுந்தன, மேலும் முக்கிய நகரச் சாலைகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/486d2baa-ca51-4f11-bb06-e68fe96e6109/26-6a9af08f02165.webp' /></p><p> </p><p>
டொராண்டோ தீயணைப்புத் துறைக்கு 24 மணி நேரத்திற்குள் சுமார் 1,500 அவசர அழைப்புகள் வந்தன. 2013 பனிப்புயலுக்குப் பிறகு ஒரே நாளில் பதிவான இரண்டாவது அதிகபட்ச அவசர அழைப்பு அளவு இதுவாகும்.</p><p>
டொராண்டோ மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இந்தப் புயல் பரவலான பேரழிவை ஏற்படுத்தியுள்ளதாக நகர மேலாளர் பால் ஜான்சன் தெரிவித்துள்ளார்.
</p><p>மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட இடங்களுள் டொராண்டோவின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள 50,000 பார்வையாளர்கள் அமரக்கூடிய ரொஜர்ஸ் மைதானமும் ஒன்றாகும்.</p><p> அங்கு வீசிய அதிவேகக் காற்றினால் பார்வையாளர் இருக்கைகள் பிடுங்கி எறியப்பட்டு, அரங்கின் சில பகுதிகள் நிலைகுலைந்து சரிந்து விழுந்துள்ளன. </p><p>
டொராண்டோவில் ஏற்பட்ட இந்தச் சேதங்கள் 'டவுன்பர்ஸ்ட்' காரணமாகவே நிகழ்ந்துள்ளதாக 'நார்தர்ன் டொர்னாடோஸ் புராஜெக்ட்' ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-04T17:30:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[286 நாட்கள் கடலில் - துருப்பிடித்த நிலையில் தாய்லாந்து வந்த USS Abraham Lincoln]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/uss-abraham-lincoln-rusted-after-286-days-at-sea-1788542801"></link>
            <id>https://news.lankasri.com/article/uss-abraham-lincoln-rusted-after-286-days-at-sea-1788542801</id>
            <summary type="text">USS Abraham Lincoln rusted after 286 days at sea: அமெரிக்காவின் USS Abraham Lincoln கப்பல் துருப்பிடித்த நிலையில் தாய்லாந்து வந்தது.

அமெரிக்காவின் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>USS Abraham Lincoln rusted after 286 days at sea: அமெரிக்காவின் USS Abraham Lincoln கப்பல் துருப்பிடித்த நிலையில் தாய்லாந்து வந்தது.</p><p>

அமெரிக்காவின் பிரபலமான விமானம் தாங்கிக் கப்பலான USS Abraham Lincoln, 286 நாட்கள் கடலில் பணியாற்றிய பின், தாய்லாந்தின் Laem Chabang துறைமுகத்தில் நங்கூரமிட்டது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0a67e453-f41c-423e-aeeb-49c5c2b86337/26-6a9aff9f8675c.webp' /></p><p>சான் டியாகோவில் இருந்து கடந்த நவம்பரில் புறப்பட்ட இந்த கப்பல், ஈரானுக்கு எதிராக நடத்திய போராட்டம் மற்றும் முற்றுகை நடவடிக்கைகளில் பல மாதங்கள் ஈடுபட்டது.

கப்பலின் 1,100 அடி நீளமான உடல் முழுவதும் துருப்பிடித்திருந்தது. </p><p>இதனால் துறைமுகத்தில் கப்பலை கண்டவர்கள் ஆச்சரியப்பட்டனர். ஆனால் கடற்படை நிபுணர்கள், நீண்ட காலம் கடலில் செயல்படும் கப்பல்களுக்கு இது சாதாரணம் என தெரிவித்தனர்.</p><p>
</p><p></p><h3>முன்னாள் அமெரிக்க கடற்படை கேப்டன் Carl Schuster கூறியதாவது: </h3><p>“ஒரு கப்பல் 60 நாட்களுக்கு மேல் தொடர்ந்து கடலில் இருந்தால், நீர்மட்டத்தில் துருபிடித்தல் இயல்பானது. அதை அகற்ற, கப்பலை துறைமுகத்தில் நிறுத்தி, சுமார் 30 நாட்கள் வேலை செய்ய வேண்டும். இதில் சுத்தம் செய்தல், இரண்டு அடுக்கு ‘primer’ பூசுதல், பின்னர் இரண்டு அடுக்கு ‘naval grey paint’ பூசுதல் ஆகியவை அடங்கும்.”</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f3cb829c-d52c-4711-a87d-02c9253cddb0/26-6a9affa0525c8.webp' /></p><p>தாய்லாந்தில் கப்பல் சில நாட்கள் தங்கும் போது, மிக அவசரமான பகுதிகளில் மட்டுமே சீரமைப்பு செய்யப்படும். குறிப்பாக முன்புறம் (Bow) மற்றும் Forward Hull பகுதிகள் அதிகமாக உப்பு நீர் தாக்கம் பெறுவதால் முதலில் சுத்தம் செய்யப்படும்.</p><p></p><h2>ஓய்வு&nbsp;</h2><p>இந்த நீண்ட பயணத்தின் போது, வளங்கள் குறைவாக இருந்ததால் படையினரின் மன உறுதி பாதிக்கப்பட்டது. மேலும், ஒரு படைவீரர் கடலில் குதித்த சம்பவமும் பதிவாகியுள்ளது.
</p><p>
இப்போது, தாய்லாந்தில் சில நாட்கள் ஓய்வு எடுத்து, கப்பல் குழுவினர் மீண்டும் பணிக்குத் தயாராக உள்ளனர்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-04T17:25:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடும் கண்டனத்துடன் ஜென் Z தலைமுறையினர்! நாமலின் கைது குறித்து ஐ.தே.க அறிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/gen-z-generation-strongly-condemns-namal-s-arrest-1788535200"></link>
            <id>https://ibctamil.com/article/gen-z-generation-strongly-condemns-namal-s-arrest-1788535200</id>
            <summary type="text">பொதுஜன பெரமுனவின் (SLPP) தேசிய அமைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்சவை, இலஞ்சம் - ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை ஆணைக்குழு (CIAB...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொதுஜன பெரமுனவின் (SLPP) தேசிய அமைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்சவை, இலஞ்சம் - ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை ஆணைக்குழு (CIABOC) கைது செய்ததை ஐக்கிய தேசியக் கட்சி (UNP) வன்மையாகக் கண்டித்துள்ளது.
</p><p>
 நாமல் ராஜபக்சவின் தலைமையில் செப்டம்பர் 12 ஆம் திகதி அனுராதபுரத்தில் நடைபெறவுள்ள மக்கள் பேரணியைச் சீர்குலைக்கும் நோக்கிலேயே இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக சுட்டிக்காட்டி என ஐக்கிய தேசியக் கட்சி ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளது.
</p><p>
 பொதுஜனப் கட்சியின் தேசிய அமைப்பாளர் என்ற முறையில், தேசிய மக்கள் சக்தி (NPP) தலைவர் அனுர குமார திசாநாயக்கவைப் போலவே நாமல் ராஜபக்சவிற்கும் நாடு முழுவதும் பயணம் செய்து பொதுக் கூட்டங்களை நடத்துவதற்கு அதே ஜனநாயக உரிமை உண்டு என்பதை அங்கீகரிக்க வேண்டும் என்றும் அறிக்கையில் கூறியுள்ளது.</p><p></p><h2>அதிகரித்து வரும் பலவீனம்</h2><p>
</p><p>
 எந்தவொரு நவீன, நாகரிக சமூகமும் ஒரு தனிநபரின் அத்தகைய ஜனநாயக உரிமைகளைப் பறிப்பதை அங்கீகரிக்காது என்றும், குறிப்பாக ஜென் Z தலைமுறையினர் இத்தகைய செயல்களைக் கடும் கண்டனத்துடன் பார்க்கிறார்கள் என்றும் ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6036b640-22a7-48ee-b955-ffd5dc679813/26-6a9ae1a3bbb62.webp' /></p><p>
</p><p>
 மக்கள் ஆதரவு குறைந்து வரும் நிலையில், NPP அரசாங்கத்தின் இத்தகைய நடவடிக்கைகள் அதன் அதிகரித்து வரும் பலவீனத்தை வெளிப்படுத்துவதாக அறிக்கையில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.</p><p></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/XyyVZRZXn0w" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-04T17:23:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தென்னிலங்கையில் சற்று முன்னர் துப்பாக்கிச்சூடு ; ஒருவர் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/shooting-in-southern-sri-lanka-one-killed-1788541172"></link>
            <id>https://jvpnews.com/article/shooting-in-southern-sri-lanka-one-killed-1788541172</id>
            <summary type="text">பொரலஸ்கமுவ, மாலினி புளத்சிங்ஹல மாவத்தையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



மோட்டார் சைக்கிளி...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">பொரலஸ்கமுவ, மாலினி புளத்சிங்ஹல மாவத்தையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p style="text-align: justify; ">



மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், குறித்த நபரை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/385edead-55a1-4acc-85f3-28830ae5ae94/26-6a9af8f5d94eb.webp' /></p><p style="text-align: justify; ">



துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த நபர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.</p><p style="text-align: justify; ">உயிரிழந்தவர் பொரலெஸ்கமுவ பகுதியைச் சேர்ந்த 74 வயது முதியவர் ஆவார்.</p>]]></content>
            <updated>2026-09-04T17:15:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாமலின் கைதில் பொலிஸாரிடம் குழப்பம் விளைவித்த ஆதரவாளர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/supporters-create-chaos-police-namal-s-arrest-1788541284"></link>
            <id>https://tamilwin.com/article/supporters-create-chaos-police-namal-s-arrest-1788541284</id>
            <summary type="text">நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவருக்கு ஆதரவாக திரண்டிருந்த ஆதரவாளர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையே குழப்பமான சூழ்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவருக்கு ஆதரவாக திரண்டிருந்த ஆதரவாளர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையே குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
</p><p>
நாமல் நாமல் ராஜபக்சவை கைது செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது ஆதரவாளர்கள் அங்கு திரண்டிருந்த நிலையில், அவர்களை கட்டுப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.</p><p>

இதன்போது ஆதரவாளர்கள் பொலிஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலையும் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>

இலஞ்சம் அல்லது ஊழல் தொடர்பான குற்றச்சாட்டு தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணையின் பின்னர் நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டு, செப்டெம்பர் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/xHhKh4l_Rqw" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-04T17:07:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வீடியோ காலில் கனடா பெண்ணுக்கு நிர்வாண பூஜை ; காத்திருந்த ஷாக்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/nude-ritual-canadian-woman-astrologer-chennai-1788512948"></link>
            <id>https://jvpnews.com/article/nude-ritual-canadian-woman-astrologer-chennai-1788512948</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;ஜோதிடத்தில் அதிக நாட்டம் கொண்ட கனடாவைச் சேர்ந்த 37 வயது பெண் ஒருவர் தமிழகம் வந்துள்ளார். அவர் தொலைக்காட்சிகளிலும் அது தொடர்பாக பேசுபவர் எ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;ஜோதிடத்தில் அதிக நாட்டம் கொண்ட கனடாவைச் சேர்ந்த 37 வயது பெண் ஒருவர் தமிழகம் வந்துள்ளார். அவர் தொலைக்காட்சிகளிலும் அது தொடர்பாக பேசுபவர் என்று தெரிவிக்கப்படுகிறது
 

அந்தப் பெண் பெசன்ட் நகர் கடற்கரைக்கு சென்றுள்ளார். </p><p>அங்கு கிளி ஜோதிடம் பார்த்துக் கொண்டிருந்த ஜோதிடர் ஒருவரிடம் சென்று தனக்கு ஜோதிடம் பார்க்குமாறு கூறியுள்ளார். 

அப்போது கிளி ஜோதிடர் நான் உங்களை தொலைக்காட்சிகளில் பார்த்து உள்ளேன்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3d071744-92d2-4d57-b139-e5807a34b58b/26-6a9a8ab5d6ce2.webp' /></p><h2>கூடுதலாக பணம்&nbsp; கேட்டு&nbsp; மிரட்டல்</h2><p> </p><p>நீங்கள் நன்றாக ஜோதிடம் பற்றி பேசுகிறீர்கள். 

நான் சொல்வதைக் கேட்டால் நீங்கள் இன்னும் உயரத்துக்கு சென்று விடலாம் என்று கூறியதுடன் அந்தப் பெண்ணின் வாழ்வில் நடந்த ஒரு விஷயத்தையும் துல்லியமாக குறிப்பிட்டு பல கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார். </p><p>

 இதனால் கனடா பெண் கிளி ஜோதிடரை முழுமையாக நம்பத் தொடங்கியுள்ளார்.</p><p></p><p> நீங்கள் ஒரு நிர்வாண பூஜை செய்தால் போதும். வீடியோ கால் மூலமாகவே இந்த பூஜையை செய்து விடலாம் என கூறியிருக்கிறார். 

இதனை உண்மை என்று நம்பிய கனடா பெண்ணும் கிளி ஜோதிடர் கூறியபடி நிர்வாண பூஜைக்கு தயாராகி உள்ளார்.</p><p> 

ஜோதிடர் சொன்னபடி பொருட்களை எல்லாம் வாங்கி வீட்டில் வைத்து தனது ஆடைகளை எல்லாம் கலைந்து நிர்வாணமாக வீடியோ காலில் கிளி ஜோதிடருக்கு காட்சி தந்துள்ளார். கிளி ஜோதிடரும் தான் இருந்த இடத்தில் இருந்து பெண்ணை ரசித்த படி நிர்வாண பூஜைகளை செய்துள்ளார்.</p><p> 

இந்த நிர்வாண பூஜைக்கு கிளி ஜோதிடர் 20,000 ரூபா பணம் வாங்கி உள்ளார்.</p><p></p><p> </p><p>இதன் பின்னர் கனடா பெண்ணிடம் தொலைபேசியில் பேசிய ஜோதிடர் உங்களது நிர்வாண வீடியோவை நான் தொலைபேசியில் பதிவு செய்து வைத்துள்ளேன். </p><p>

அதனை வெளியிடாமல் இருக்க வேண்டும் என்றால் எனக்கு கூடுதலாக பணம் தர வேண்டும் எனக் கூறி மிரட்டல் விடுத்துள்ளார். ஜோதிடர் சொன்னதைக் கேட்டு கனடா பெண் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளார். 

இது பற்றி மாம்பலம் பொலிஸில் புகார் அளித்தார்.</p><p></p><p> </p><p>பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். பெண்ணை ஏமாற்றி நிர்வாண பூஜை செய்த கிளி ஜோதிடர் யார்? என்பது பற்றி தொலைபேசி நம்பர் மூலமாக விசாரணை நடத்தினார்கள்.</p><p> இதில் கிளி ஜோதிடர் குற்றாலம் பகுதியை சேர்ந்த இசக்கி முத்து என்பது தெரிய வந்தது. 

இதைத்தொடர்ந்து பொலிஸார் அவரை கைது செய்த விசாரணை நடைபெற்று வருகிறது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-04T17:02:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[உள்நாட்டு டின் மீன்களுக்கான புதிய விலைகள் ; நாளை முதல் அமுல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/new-prices-for-locally-produced-canned-fish-1788540483"></link>
            <id>https://jvpnews.com/article/new-prices-for-locally-produced-canned-fish-1788540483</id>
            <summary type="text">நாளை (05) முதல் உள்நாட்டு டின் மீன் வகைகளுக்காக புதிய அதிகூடிய சில்லறை விலைகள் நிர்ணயிக்கப்பட்டு வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">நாளை (05) முதல் உள்நாட்டு டின் மீன் வகைகளுக்காக புதிய அதிகூடிய சில்லறை விலைகள் நிர்ணயிக்கப்பட்டு வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
</p><p style="text-align: justify; ">
அதன்படி, சூரை மீன், கானாங்கெளுத்தி உள்ளிட்ட டின் மீன்களுக்கான அதிகபட்ச சில்லறை விலைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/37a3aaa3-dfb7-4f10-913a-5b521786372b/26-6a9af644c9b72.webp' /></p><h2 style="text-align: justify; ">சில்லறை விலைகள்</h2><p>
</p><p style="text-align: justify; ">
155 கிராம் நிகர எடை மற்றும் 105 கிராம் அல்லது அதற்கு மேற்பட்ட திரவமற்ற எடை கொண்ட பதப்படுத்தப்பட்ட ஒரு டின் சூரை மீனின் அதிகபட்ச சில்லறை விலை ரூ. 220 ஆகவும், அதே சமயம் 425 கிராம் எடை மற்றும் 280 கிராம் அல்லது அதற்கு மேற்பட்ட திரவமற்ற எடை கொண்ட பதப்படுத்தப்பட்ட டின் மீனின் விலை ரூ. 510 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; ">

155 கிராம் நிகர எடை மற்றும் 105 கிராம் அல்லது அதற்கு மேற்பட்ட திரவமற்ற எடை கொண்ட ஒரு டின் ஜாக் மெக்கரல் மீனின் அதிகபட்ச சில்லறை விலை ரூ. 260 ஆகவும், 425 கிராம் டின்னின் விலை ரூ. 600 ஆகவும் உள்ளது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
சம்பந்தப்பட்ட டின் மீன் வகைகளை இந்த விலைகளை விட அதிக விலையில் விற்கவோ, விற்பனைக்கு வழங்கவோ அல்லது காட்சிப்படுத்தவோ கூடாது என்று நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-04T17:00:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரோகரா கோஷம் முழங்க தங்கமயில் வாகனத்தில் அருள்பாலித்த நல்லூர் கந்தன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/nalloor-kovil-fesrtival-2026-1788539815"></link>
            <id>https://tamilwin.com/article/nalloor-kovil-fesrtival-2026-1788539815</id>
            <summary type="text">யாழ்ப்பாணத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின்
மகோற்சவப் பெருவிழாவின் 19ஆம் திருவிழா இன்று (04) வெகு விமரிசையாக
இடம்பெற்றது.
...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின்
மகோற்சவப் பெருவிழாவின் 19ஆம் திருவிழா இன்று (04) வெகு விமரிசையாக
இடம்பெற்றது.</p><p>
இன்றைய திருவிழாவில் முருகப்பெருமான் தங்கமயில் சக தங்க அண்ண வாகனத்தில்
எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.</p><h2>&nbsp;திருவிழா</h2><p>
</p><p>ஆலயச் சூழல் முழுவதும் பக்தர்களால் நிரம்பியிருந்த நிலையில், பக்தர்கள்
“அரோகரா” கோஷம் முழங்க முருகப்பெருமானை வழிபட்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/10f9afe1-abf5-443b-a72f-e661678cdb54/26-6a9af52ce40c7.webp' /></p><p> </p><p>வாகனத்தில் எழுந்தருளிய
கந்தனை தரிசிக்க நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் பெருந்திரளான பக்தர்கள்
நல்லூரை நோக்கி வருகை தந்திருந்தனர்.
</p><p>மங்கள வாத்தியங்கள் முழங்க, மேளதாளங்கள் அதிர, அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில்
எழுந்தருளிய நல்லூர் கந்தனின் திருக்காட்சி பக்தர்களை பரவசத்தில் ஆழ்த்தியது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-04T16:47:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[கைதுக்குப் பின்னர் நாமலின் முகநூலில் சற்றுமுன்னர் வெளியான முக்கிய பதிவு..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-arrest-after-fb-post-1788538032"></link>
            <id>https://tamilwin.com/article/namal-arrest-after-fb-post-1788538032</id>
            <summary type="text"> இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணையில் கைது செய்யப்பட்டு, செப்டெம்பர் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உற...</summary>
            <content type="html"><![CDATA[<p> இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணையில் கைது செய்யப்பட்டு, செப்டெம்பர் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் முகநூல் பக்கத்தில் அவர் சார்பில் பதிவொன்று பதிவிடப்பட்டுள்ளது.
</p><p>
குறித்த பதிவில்,</p><h2>அரசியல் பழிவாங்கல்கள்</h2><p>

கடந்த இரண்டு ஆண்டுகளாக, எங்களுக்கு எதிராக தங்களிடம் ஆதாரங்கள் இருப்பதாக அவர்கள் கூறி வந்தனர். திருடப்பட்ட பணத்தை மீளப் பெற்றுக்கொண்டு, உண்மையை வெளிக்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.</p><p>

என்னைத் தொடர்புபடுத்தி ஏதேனும் ஆதாரங்கள் இருந்தால், நியாயமானதும் பாரபட்சமற்றதுமான விசாரணையை எதிர்கொள்ள நான் தயாராக இருக்கிறேன். ஏதேனும் தவறு செய்திருந்தால், அதற்குரிய சட்ட நடைமுறைகளுக்கு அமைய நடவடிக்கைகளை எதிர்கொள்ளவும் நான் தயாராக இருக்கிறேன்.</p><p><iframe src="https://www.facebook.com/plugins/post.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2FNamalSL%2Fposts%2Fpfbid02TcCpAA2u9fPZLmmc47wNT1aFyxcJEh147PMkVazPVK7ft2rZa2GqrW49bfA9ed2Gl&show_text=true&width=500" width="500" height="310" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share"></iframe></p><p>

சட்டத்தின் போர்வையைப் பயன்படுத்தி, வெறுப்பு மற்றும் அரசியல் பழிவாங்கல்கள் முன்னெடுக்கப்படக் கூடாது என்பதை நான் வலியுறுத்துகிறேன்.
</p><p>
இன்று, செப்டெம்பர் 18ஆம் திகதி வரை என்னை விளக்கமறியலில் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p>

நாளை அரசாங்கம் ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் நிறைவடையும் நிலையில், மக்கள் சந்திப்புகள் நடைபெறவுள்ளன. 

அங்கு ஜனாதிபதி மக்களுக்கு உரையாற்றவுள்ளார். </p><p>இரண்டு வருட ஆட்சிக்குப் பின்னர் உண்மையில் மக்களுக்காக என்ன செய்திருக்கிறார்கள் என்ற பல தீவிரமான கேள்விகள் எழுந்துள்ள நிலையில், இன்று இடம்பெற்ற இந்தச் சம்பவத்தைப் புறக்கணிப்பது கடினமாக உள்ளது.</p><h2>&nbsp;மாபெரும் மக்கள் பேரணி</h2><p>
</p><p>
அதேவேளை, செப்டெம்பர் 12ஆம் திகதி அனுராதபுரத்தில் நடைபெறவுள்ள எமது மாபெரும் மக்கள் பேரணியில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.
</p><p>
நான் பயப்படுவதற்கு எதுவுமில்லை.மறைத்து வைப்பதற்கும் எதுவுமில்லை. நான் ஒவ்வொரு தருணத்திலும் நம்பிய சரியான விடயங்களுக்காகவும், நான் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களுக்காகவும் தொடர்ந்து குரல் கொடுக்கும் உறுதியுடன், இந்த அனைத்து சவால்களையும் எதிர்கொள்கிறேன்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fc59b3ac-aea8-4446-8b4a-d959be46307a/26-6a9aeeb8ed3d3.webp' /></p><p>

எனது சுதந்திரத்தை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே பறிக்க முடியும். ஆனால் எனது குரலையோ, எனது நம்பிக்கைகளையோ அல்லது எனது அன்புக்குரிய தாய்நாட்டு மக்களுக்காக நான் செய்யும் அர்ப்பணிப்பையோ பறித்துக்கொள்ள முடியாது.

அரசியல் அதிகாரம் தற்காலிகமானது.</p><p>

உண்மை என்றென்றும் நிலைத்திருக்கும்.

இந்த அனைத்து சம்பவங்களும் எதற்காக, எப்போது, யாரால் மேற்கொள்ளப்பட்டன என்பதற்கு வரலாறு சாட்சியாக இருக்கும்.
</p><p>
இவை அனைத்தையும் நான் அச்சமின்றி எதிர்கொள்வேன் என குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p></p><p></p><p><b><i>You may Like This video..</i></b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/gYu0CmEyp28" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><i><br></i></b></p><p><br></p><p><b><i><br></i></b></p>]]></content>
            <updated>2026-09-04T16:38:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[அஜித் போனில் சொன்ன விஷயம்.. எனக்கு தூக்கமே வரவில்லை: ஜீ.வி.பிரகாஷ்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/ajith-phone-call-to-gv-prakash-1788539517"></link>
            <id>https://cineulagam.com/article/ajith-phone-call-to-gv-prakash-1788539517</id>
            <summary type="text">நடிகர் ஜீ.வி.பிரகாஷ் நடிப்பில் இன்று Immortal என்ற படம் திரைக்கு வந்திருக்கிறது. அதில் கயாடு லோஹர் ஹீரோயினாக நடித்துள்ளார்.இந்த படத்திற்கு தற்போது&amp;nbs...</summary>
            <content type="html"><![CDATA[<p>நடிகர் ஜீ.வி.பிரகாஷ் நடிப்பில் இன்று Immortal என்ற படம் திரைக்கு வந்திருக்கிறது. அதில் கயாடு லோஹர் ஹீரோயினாக நடித்துள்ளார்.</p><p>இந்த படத்திற்கு தற்போது&nbsp;கலவையான விமர்சனங்கள் வந்துகொண்டிருக்கிறது.. இருப்பினும் ஜீ.வி விடாமுயற்சியுடன் ப்ரோமோஷன் பணிகளை செய்து வருகிறார்.
</p><p>இன்று தஞ்சாவூரில் ஒரு தியேட்டரில் மக்களுடன் அவர் படம் பார்த்தார். அதன் பின் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7806f1a4-1c45-4f83-90e7-2fff3c959b49/26-6a9af27f888ad.webp' /></p><p>
</p><h2>அஜித் போன் கால்
</h2><p>இந்நிலையில் அஜித் செய்த போன் கால் பற்றி பேசிய ஜீ.வி.பிரகாஷ், "அவரது documentary படம் அவர்க்கு ரொம்ப பர்சனல். அவரது வாழ்க்கையை வைத்து எடுத்து இருக்கிறார்கள். அதன் ட்ரெய்லர் மற்றும் முழு படத்திற்கும் போட்ட இசை அவருக்கு மிகவும் பிடித்துவிட்டது."
</p><p>"இரவில் திடீரென போன் செய்து என்னிடம் பேசி நன்றி கூறினார். அது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது."
</p><p>"நன்றாக இருந்தது. அது உங்களை நிச்சயம் proud ஆக்கும். படத்தை சர்வதேச அளவில் கொண்டு போக போகிறேன் என கூறினார்."
</p><p>"அன்று இரவு எனக்கு தூக்கமே வரவில்லை" என ஜீ.வி பிரகாஷ் கூறி இருக்கிறார்.
&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1cc26b92-9e1d-453c-8bf0-5d15f7bd0212/26-6a9af28075fbe.webp' /></p>]]></content>
            <updated>2026-09-04T16:32:16+00:00</updated>
        </entry>
    </feed>
