<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-09-14T15:22:38+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[குடும்பத்திற்குள்ளேயே நடந்த சதியால் துரோகத்தில் சிக்கிய கோட்டாபய]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/gotabaya-was-betrayed-by-family-1789384066"></link>
            <id>https://tamilwin.com/article/gotabaya-was-betrayed-by-family-1789384066</id>
            <summary type="text">முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு எதிராக சதித் திட்டம் ஒன்று தீட்டப்பட்டிருந்தமைக்கான வலுவான சாட்சியங்கள் தற்போது வெளிவந்துள்ளதாக தென்னிலங்கை ஊ...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு எதிராக சதித் திட்டம் ஒன்று தீட்டப்பட்டிருந்தமைக்கான வலுவான சாட்சியங்கள் தற்போது வெளிவந்துள்ளதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.</p><p> 

ராஜபக்ச குடும்பத்தின் அரசியல் எதிர்காலத்தை நாமல் ராஜபக்சவிடம் கையளிப்பதற்காக இந்த சதி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
</p><p>
2019 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்ச போட்டியிட, ஷிராந்தி, மகிந்த உள்ளிட்ட ராஜபக்ச குடும்பத்தினர் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.</p><p> </p><h2><b>

 துரோகத்தில் சிக்கிய கோட்டாபய </b></h2><p> அதற்கு எதிராக கடும் நிலைப்பாட்டில் அவர்கள் இருந்ததாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1bd68079-94c4-423f-b672-9bfcb0d30177/26-6aa7e23d370c4.webp' /></p><p>எனினும், வியத்மக அமைப்பை நிறுவி, அரசியல் களத்தை அமைத்துக்கொண்டு முன்னோக்கி வந்த கோட்டாபய ராஜபக்ச, உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலுடன் தனது வேட்புமனுவை வலுவாக உறுதிப்படுத்திக் கொண்டார்.
</p><p>
ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றதன் பின்னர், நாடாளுமன்றத் தேர்தலிலும் வெற்றி பெற்று கோட்டாபய ராஜபகச் அதிகாரத்தை உறுதிப்படுத்திக் கொண்டார்.
</p><p>
இந்த நிலையில் கோட்டாபயவிற்கு எதிராக, நாமல் ராஜபக்சவின் அரசியல் பெரிய அண்ணா என்று வர்ணிக்கப்பட்ட விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோரின் தலைமையில் அரசாங்கத்திற்குள் உட்கட்சி மோதல் ஏற்பட்டது.</p><h3><b>

ராஜபக்சவின் அரசியல்</b></h3><p>இதனால், 2022ஆம் ஆண்டு மார்ச் 03 ஆம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் அமைச்சுப் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டனர். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/431da20b-02c7-4d83-b5dd-592b770adb59/26-6aa7e23ded411.webp' /></p><p>அதனைத் தொடர்ந்து ஊடகங்களிடம் கருத்துத் தெரிவித்த அவர்கள் இருவரும் இனி ஒருபோதும் ராஜபக்சக்களுடன் அரசியல் செய்யப்போவதில்லை எனத் தெரிவித்திருந்தனர்.
</p><p>
ஆனால், தற்போது கோட்டாபய ராஜபக்சவை முற்றிலும் கைவிட்டுவிட்டு, அவர்கள் இருவரும் உள்ளிட்ட தரப்பினர் தற்பொழுது நாமல் ராஜபக்சவுடன் கைகோர்த்து கொண்டதன் ஊடாக இந்த தகவல்கள் உறுதி செய்யப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-14T15:00:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாமலுக்கு சிறை ஒன்றும் புதிதல்ல..! நாட்களை எண்ணிக் காத்திருக்கும் மொட்டுக்கட்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/for-namal-prison-is-not-new-place-1789396666"></link>
            <id>https://tamilwin.com/article/for-namal-prison-is-not-new-place-1789396666</id>
            <summary type="text">நாமல் ராஜபக்சவிற்கு சிறை ஒன்றும் புதிய இடம் கிடையாது என நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுனவர்தன தெரிவித்துள்ளார்.ஊடகவியலாளர்கள் நாமல் தொடர்பில் எழுப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாமல் ராஜபக்சவிற்கு சிறை ஒன்றும் புதிய இடம் கிடையாது என நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுனவர்தன தெரிவித்துள்ளார்.</p><p>ஊடகவியலாளர்கள் நாமல் தொடர்பில் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p>
</p><p>கடந்த 2015 ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கம் ஆட்சி பொறுப்பினை ஏற்றுக் கொண்டதன் பின்னர் நாமல் ராஜபக்ச மூன்று தடவைகள் விளக்கமறையில் அடைக்கப்பட்டிருந்தார் என அவர் தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p>எனவே அரசியல் செய்யும்போது இவ்வாறான நடவடிக்கைகளை எதிர்பார்க்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.</p><h2>நாமல் ராஜபக்சவிற்கு பிணை</h2><p>நாமல் ராஜபக்ச நல்ல தேக ஆரோக்கியத்துடன் நன்றாக இருக்கின்றார் என தெரிவித்துள்ளார்.
நாட்டில் சுயாதீனமான நீதிமன்ற கட்டமைப்பு ஒன்று இயங்கி வருவதாக நம்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3cc3b762-98b0-4c93-a161-d436c9615d80/26-6aa806bc62f27.webp' />&nbsp;&nbsp;</p><p>
எனவே எதிர்வரும் 18 ஆம் திகதி நாமல் ராஜபக்சவிற்கு பிணை கிடைக்கும் என நம்புவதாக அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.</p><p>
நாமலின் சட்டத்தரணிகள் பிணை பெற்றுக் கொள்வது தொடர்பான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-14T14:50:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[அனுரவின் கூட்டங்களில் பங்கேற்பவர்களை அச்சுறுத்தும் சாகர]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sagara-threatens-those-attending-anuras-meetings-1789395464"></link>
            <id>https://ibctamil.com/article/sagara-threatens-those-attending-anuras-meetings-1789395464</id>
            <summary type="text">நாட்டின் பணத்தை வீணடிக்கும் கூட்டங்களில் பங்கேற்பவர்கள் அனைவரும் தங்களது அரசாங்கத்தின் கீழ் நிச்சயமாக விளக்கம் அளிக்க வேண்டியிருக்கும் என்று சிறிலங்கா...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டின் பணத்தை வீணடிக்கும் கூட்டங்களில் பங்கேற்பவர்கள் அனைவரும் தங்களது அரசாங்கத்தின் கீழ் நிச்சயமாக விளக்கம் அளிக்க வேண்டியிருக்கும் என்று சிறிலங்கா பொதுஜன பெரமுன பொதுச் செயலாளர் சட்டத்தரணி சாகர கரியவசம் தெரிவித்தார்.
</p><p>
நாட்டில் எந்தவொரு அபிவிருத்தியும் இல்லாத நிலையில், ஜனாதிபதி நாடு முழுவதும் பயணம் செய்து இதுபோன்ற கூட்டங்களை ஏற்பாடு செய்வது பெரும் பண விரயம் என்று அவர் சுட்டிக்காட்டினார்.</p><h2>பொய் சொல்லி கூட்டத்தை நடத்தும் அரச தலைவர்</h2><p>கொழும்பில் இன்று (14) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு கூறினார்.

சாகர கரியவசம் மேலும் கூறியதாவது:</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c1e171af-a66c-49a4-b182-a13c128c25ee/26-6aa807d8ce3ec.webp' /></p><p>
</p><p>
இலங்கை வரலாற்றில் முதன்முறையாக, எந்தவொரு அபிவிருத்தித் திட்டங்களோ அல்லது அபிவிருத்திகளோ இல்லாமல், தேர்தலுக்கு முன்பு செய்வது போல பொய் சொல்லி, பொய் வாக்குறுதிகளை அளித்து, அரசாங்க அதிகாரத்தைக் கொண்ட ஒரு அரச தலைவர் கூட்டங்களை நடத்துவதை நாம் காண்கிறோம். </p><p>இது நாட்டின் பணத்தை முழுமையாக வீணடிப்பதாகும். இந்தக் கூட்டங்களில் பங்கேற்பவர்கள் அனைவரும் நமது அரசாங்கத்தின் கீழ் நிச்சயமாக விளக்கம் அளிக்க வேண்டியிருக்கும்.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-14T14:42:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[எல் நினோ தாக்கத்தை எதிர்கொள்ள அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்: சஜித் அறைகூவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/el-nino-in-sri-lanka-sajith-1789394114"></link>
            <id>https://tamilwin.com/article/el-nino-in-sri-lanka-sajith-1789394114</id>
            <summary type="text">இலங்கையில் எல் நினோ தாக்கத்தின் சாத்தியக்கூறு 100 வீதமாக மாறியுள்ளதால்,
அரசும் எதிர்க்கட்சியும் மற்றும் 220 இலட்சம் மக்களும் ஒன்றிணைந்து இந்தக்
கோரம...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் எல் நினோ தாக்கத்தின் சாத்தியக்கூறு 100 வீதமாக மாறியுள்ளதால்,
அரசும் எதிர்க்கட்சியும் மற்றும் 220 இலட்சம் மக்களும் ஒன்றிணைந்து இந்தக்
கோரமான சூழ்நிலையை வெற்றிகரமாக எதிர்கொள்ள வேண்டும் என்று எதிர்க்கட்சித்
தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.</p><p>

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ மற்றும் பேராசிரியர் எல்.எம். அபேவிக்ரம
ஆகியோரின் இணைத் தலைமையில் இன்று(14.9.2026) நடைபெற்ற இலங்கைக் காலநிலை பற்றிய நாடாளுமன்ற
ஒன்றியக் கூட்ட அமர்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர்
மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
</p><p>
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

"மனித வளம், விலங்குகள், பல்லுயிர் பெருக்கம் மற்றும் சூழலைப் பாதுகாப்பது மிக
முக்கியமான தேசிய பாதுகாப்பு முன்னுரிமைகளாகும்.</p><h2>அனர்த்த அபாயங்கள்</h2><p> </p><p>பேதங்களின்றி,
வெளிப்படைத்தன்மையுடன் தேசிய உரையாடல் திட்டமொன்றை இலங்கைக் காலநிலை பற்றிய
நாடாளுமன்ற ஒன்றியம் முன்னின்று ஆரம்பிக்கும்.

மக்கள் மாத்திரமன்றி, வாக்களிக்கும் உரிமை இல்லாத விலங்குகளையும், வன
வளங்களையும் பாதுகாப்பது தற்போதைய மற்றும் எதிர்கால சந்ததியினருக்கு
இன்றியமையாதது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/046c97e6-5bab-488f-a3f2-c9ff53beba0c/26-6aa80566571b6.webp' /></p><p>

அனர்த்தங்கள் ஏற்படும்போது நாட்டின் முகாமைத்துவப் பொறிமுறை சிறப்பான
சேவையாற்றும் போதிலும், உலகளாவிய அனர்த்த அபாயங்கள் கிடைத்தவுடன் முன்கூட்டியே
பதிலளிக்கும் முறையும், துரிதமான வெளியேற்றத் திட்டமும் அவசியமாகும்.</p><p>

அனர்த்தங்கள் ஏற்பட்ட பின்னர் நிவாரணம் வழங்கும் வழமை மாறி, மனிதர்கள்,
காடுகள், குடிதண்ணீர், நீர்ப்பாசனம், உணவு மற்றும் வலுச்சக்திப்
பாதுகாப்புக்கு ஏற்படும் பாதிப்புகளை முற்கூட்டியே எதிர்கொள்ளும் முறையான
எதிர்வினைத் திட்டம் நாட்டில் உருவாக்கப்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-14T14:36:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஏழாக குறைக்கப்படும் சாதாரண தரப் பரீட்சை பாடங்கள்! வெளியாகியுள்ள தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/govt-to-reduce-subjects-in-ordinary-level-exam-1789395822"></link>
            <id>https://ibctamil.com/article/govt-to-reduce-subjects-in-ordinary-level-exam-1789395822</id>
            <summary type="text">

வரலாறு மற்றும் அழகியல் ஆகிய பாடங்களை உள்பட க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் பாடங்களின் எண்ணிக்கையை ஏழாகக் குறைப்பதற்குத் திட்டமிட்டுள்ளதாக கல்விச் ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>

வரலாறு மற்றும் அழகியல் ஆகிய பாடங்களை உள்பட க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் பாடங்களின் எண்ணிக்கையை ஏழாகக் குறைப்பதற்குத் திட்டமிட்டுள்ளதாக கல்விச் சீர்திருத்தங்கள் தொடர்பான உபகுழுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
பிரதமரும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய தலைமையில் அண்மையில் நடைபெற்ற கூட்டத்தின் போதே இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.</p><p>

அத்தோடு, 12 மற்றும் 13 ஆம் வகுப்புகளில், சமூக ஒத்திசைவு, சட்டம் மற்றும் அறநெறி தொடர்பான புதிய பாடத் தொகுதிகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாகவும் இதில் கலந்துரையாடப்பட்டுள்ளது.</p><p></p><h2>2027 கல்விச் சீர்திருத்தங்கள்</h2><p>
</p><p>
2027 ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்பட திட்டமிடப்பட்டுள்ள பொதுக் கல்விச் சீர்திருத்தங்கள் மற்றும் முன்பள்ளிக் கல்விச் சீர்திருத்தங்களின் முன்னேற்றம் குறித்தும் இக்கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0b3ab9b8-c533-481f-a1db-2257486808fc/26-6aa80610b04d3.webp' /></p><p>
ஆரம்பக் கட்டமாக, 2 மற்றும் 6 ஆம் தரங்களுக்கான செயல்முறைப் புத்தகங்கள், ஆசிரியர் வழிகாட்டிகள் மற்றும் பாடத் தொகுதிகள் ஏற்கனவே தயாரிக்கப்பட்டுள்ளதுடன், ஆசிரியர்களுக்கான பயிற்சிகளும் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.</p><h2>ஆரம்பகால சிறுவர் கல்வி</h2><p>

இந்த புதிய சீர்திருத்தங்கள் குறித்த விழிப்புணர்வு வேலைத்திட்டங்களின் தொடர் ஒன்றும் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f6fdff91-d1d9-4c7a-bb27-d8aab9231c70/26-6aa8061166216.webp' /></p><p>
</p><p>
இது தவிர, ஆரம்பகால சிறுவர் கல்வியை முறைப்படுத்துவதற்காக தேசிய முன்பள்ளிக் கொள்கை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாகவும் இக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

முன்பள்ளிப் பதிவு, பாடத்திட்டம் தயாரித்தல், ஆசிரியர் வழிகாட்டிகள் மற்றும் பயிற்சித் திட்டங்கள் ஆகிய அனைத்தும் இதில் அடங்குவதுடன், இவற்றுக்கான நடவடிக்கைகள் தற்போது தீவிரமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-14T14:35:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நபர்: பொதுமக்களின் உதவியை நாடும் காவல்துறை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/nb-rcmp-search-for-man-wanted-on-arrest-warrant-1789387787"></link>
            <id>https://canadamirror.com/article/nb-rcmp-search-for-man-wanted-on-arrest-warrant-1789387787</id>
            <summary type="text">&amp;nbsp;கனடாவின் நியூ பிரன்சுவிக் மாகாணத்தில், நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 44 வயது நபரைத் தேடி வரும் ரிச்சிபுக்டோ கனடிய காவல் துறை, அவரைக் கண்டுப...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கனடாவின் நியூ பிரன்சுவிக் மாகாணத்தில், நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 44 வயது நபரைத் தேடி வரும் ரிச்சிபுக்டோ கனடிய காவல் துறை, அவரைக் கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவியைக் கோரியுள்ளது.</p><p> 
சென் மார்கிரட்ஸ் பகுதியைச் சேர்ந்த ஜஸ்டின் சிட்னி கேபிள் என்பவர், கடந்த ஜூலை 27 அன்று நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியதால் அவர் மீது பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.</p><p> 
நீதிமன்ற உத்தரவை மீறியது தவிர, துப்பாக்கி தொடர்பான பின்வரும் குற்றச்சாட்டுகளுக்காகவும் அவர் தேடப்பட்டு வருகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/419f1a5a-6f4f-4781-a18b-bd2ad841e0e9/26-6aa7e40cacfae.webp' /></p><p>
வாகனத்தில் சட்டவிரோதமாகத் துப்பாக்கி வைத்திருந்தது, உரிய அனுமதியின்றி துப்பாக்கியை வைத்திருந்தது, துப்பாக்கியைப் பாதுகாப்பற்ற முறையில் சேமித்து வைத்திருந்தது.
</p><p>ஜஸ்டின் சிட்னி கேபிளை எங்காவது கண்டால் பொதுமக்கள் யாரும் அவரை நேரடியாக அணுகக் கூடாது என்றும், உடனடியாக 911 என்ற அவசர எண்ணிற்கு அழைக்க வேண்டும் என்றும் காவல்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.</p><p> 
இவர் இருக்குமிடம் குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தால், ரிச்சிபுக்டோ காவல் துறையை 506-523-4611 என்ற எண்ணிலோ அல்லது குற்றத் தடுப்புப் பிரிவை 1-800-222-8477 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-14T14:30:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[வீட்டின் கூரையில் ஏறிய பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/woman-climbing-roof-faces-shocking-surprise-1789393216"></link>
            <id>https://jvpnews.com/article/woman-climbing-roof-faces-shocking-surprise-1789393216</id>
            <summary type="text">&amp;nbsp;அளுத்கம, சீனவத்தை பகுதியில் தனியாக வசித்து வரும் பெண் ஒருவரின் வீட்டின் கூரையின் கீழ் (சீலிங்) இருந்து உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டு ஒன்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;அளுத்கம, சீனவத்தை பகுதியில் தனியாக வசித்து வரும் பெண் ஒருவரின் வீட்டின் கூரையின் கீழ் (சீலிங்) இருந்து உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டு ஒன்று இன்று (14) கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அளுத்கம காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
</p><p>
கடந்த சில நாட்களாகப் பெய்த மழை காரணமாக வீட்டின் வரவேற்பறைக் கூரையிலிருந்து மழைநீர் கசிந்துள்ளது.

இதனைப் பரிசோதிப்பதற்காக குறித்த நடுத்தர வயது பெண் ஏணியைப் பயன்படுத்தி கூரைப் பகுதியைச் சென்று பார்த்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c1b94a5f-4798-4f10-b75a-e931626f6f15/26-6aa7f942963c5.webp' /></p><p>
</p><p>
இதன்போது, கூரையில் சேதமடைந்திருந்த பகுதிக்கு அருகே விளாம்பழம் போன்ற வடிவில் சந்தேகத்திற்கிடமான பொருள் ஒன்று இருப்பதை அவர் அவதானித்துள்ளார். உடனடியாக இது குறித்துத் தனது உறவினருக்கு அவர் தகவல் தெரிவித்துள்ளார்.
</p><p>
இதனையடுத்து, அவர் அளுத்கம காவல்துறையினருக்கு அளித்த தகவலின் பேரில், சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறை குழுவினர் சோதனையிட்டதில் அது உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டு என்பது உறுதி செய்யப்பட்டது.
</p><p>
இந்தச் சம்பவம் தொடர்பில் குறித்த பெண்ணிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாகவும், நீதிமன்ற உத்தரவைப் பெற்று விசேட அதிரடிப்படையின் குண்டு செயலிழக்கச் செய்யும் பிரிவினரைக் கொண்டு கைக்குண்டை செயலிழக்கச் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அளுத்கம காவல்நிலையப் பொறுப்பதிகாரி சம்பத் சஞ்சீவ தெரிவித்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-09-14T14:30:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[உக்ரைன் போரில் மரணம் அடைந்த கனடிய முன்னாள் படைவீரர்: உருக்கமான பின்னணி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/canadian-man-who-travelled-ukraine-killed-1789387313"></link>
            <id>https://canadamirror.com/article/canadian-man-who-travelled-ukraine-killed-1789387313</id>
            <summary type="text">&amp;nbsp;உக்ரைன் மீது ரஷ்யா மேற்கொண்ட படையெடுப்பை எதிர்த்து, உக்ரைனியப் படைகளுடன் இணைந்து களமிறங்கிய கனடிய முன்னாள் ராணுவ வீரர் டேண்டே ஜான்சன்-வெல்ஸ் போர...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;உக்ரைன் மீது ரஷ்யா மேற்கொண்ட படையெடுப்பை எதிர்த்து, உக்ரைனியப் படைகளுடன் இணைந்து களமிறங்கிய கனடிய முன்னாள் ராணுவ வீரர் டேண்டே ஜான்சன்-வெல்ஸ் போர்க்களத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><p>
26 வயதான டெண்டே ஜான்சன் வெல்ஸ் மார்க்கம் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
தனது 12-வது வயதிலேயே போர்ட் பெர்ரி ராணுவ கெடட் அமைப்பில் இணைந்த டேண்டே, செனெகா கல்லூரியில் தீயணைப்புப் படிப்பை முடித்த பின் கனடிய ஆயுதப்படையில் 7 ஆண்டுகள் பணியாற்றினார்.
</p><p>நேட்டோ பயிற்சிகளின் போது உக்ரைனிய சூழலை நேரடியாக அறிந்த அவர், "அங்குள்ள மக்கள் தங்களின் உயிர்வாழ்விற்காகப் போராடுகிறார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/64775190-7310-4ba6-915f-de73ff03407d/26-6aa7e232d7065.webp' /></p><p> </p><p>
கனடாவில் இருந்து உதவுவதை விட நேரடியாகக் களத்தில் நின்று உதவுவதே சரி" என்று கருதி, 2025 டிசம்பர் மாதப் பணிக்கு பின் கனடிய ராணுவப் பணியிலிருந்து விலகினார்.</p><p>
 2026 பிப்ரவரியில் உக்ரைன் சென்று அந்நாட்டு ராணுவத்தின் வெளிநாட்டுப் படையில் கள மருத்துவ உதவியாளராகச் சேர்ந்தார்.</p><p>
ஜூன் தொடக்கத்தில் முன்னணிப் போர்க்களத்தில் பணியில் இருந்தபோது டேண்டே துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்கானார்.
</p><p>துப்பாக்கிச் சூட்டிற்குப் பின், மருத்துவ உதவிக்காக அவரது சக வீரர்கள் அவரை 5 கிலோமீட்டருக்கும் அதிகமான தூரம் சுமந்து சென்றுள்ளனர்.
 சிகிச்சை பலனின்றி 36 மணி நேரத்திற்குப் பிறகு ஜூன் 13 அன்று அவர் உயிரிழந்தார்.
</p><p>ஜூன் 24 அன்று உக்ரைனில் உள்ள ஒரு சக வீரரிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்த பிறகே அவரது தாயார் கேத்தரின் பாரூசிஸுக்கு இந்தத் தகவல் தெரியவந்தது.
</p><p>கனடாவின் வெளியுறவுத் துறை , உக்ரைனில் கனடியப் பிரஜை ஒருவர் உயிரிழந்ததை உறுதிசெய்து, அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளது.
</p><p>தற்போதைய சூழலில் உக்ரைனுக்கான பயணங்களைத் தவிர்க்குமாறு கனடிய அரசு தனது குடிமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-14T14:30:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[45 வயதில் பாடகர் நரேஷ் ஐயர் திருமணம்.. வைரலாகும் புகைப்படங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/singer-naresh-iyer-marriage-at-age-45-1789395144"></link>
            <id>https://cineulagam.com/article/singer-naresh-iyer-marriage-at-age-45-1789395144</id>
            <summary type="text">பிரபல பின்னணி பாடகர் நரேஷ் ஐயர் பல ஹிட் பாடல்களை பாடி இருப்பவர். அவருக்கு அதிகம் ரசிகர்களும் இருக்கிறார்கள்.&#039;முன்பே வா என் அன்பே வா&#039; பாடல் தொடங்கி, மெ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரபல பின்னணி பாடகர் நரேஷ் ஐயர் பல ஹிட் பாடல்களை பாடி இருப்பவர். அவருக்கு அதிகம் ரசிகர்களும் இருக்கிறார்கள்.</p><p>'முன்பே வா என் அன்பே வா' பாடல் தொடங்கி, மெர்சல் படத்தில் வரும் 'மெர்சல் அரசன்' பாடல் வரை அவரது குரலுக்கு தமிழ் ரசிகர்கள் அதிகம் பேர் உள்ளனர்.
</p><h2>திருமணம்</h2><p>தற்போது 45 வயதாகும் நரேஷ் ஐயர் திருமணம் செய்து கொண்டிருக்கிறார். மகாராஷ்டிராவில் இருக்கும் ஐயப்பா விஷ்ணு கோவிலில் அவரது திருமணம் நடந்து முடிந்திருக்கிறது.
</p><p>அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி இருக்கும் நிலையில் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-14T14:14:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[இணையத்தை கலக்கும் ‘80s Photo Trend’... வைரலாக இது தான் காரணம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/why-ai-80s-photo-trend-goes-viral-1789392373"></link>
            <id>https://manithan.com/article/why-ai-80s-photo-trend-goes-viral-1789392373</id>
            <summary type="text">சமூக வலைதளங்களில் அவ்வப்போது புதிய AI போட்டோ ட்ரெண்டுகள் வைரலாகி வருவது வழக்கம். அந்த வரிசையில், தற்போது 1980களின் சினிமா மற்றும் ஃபேஷன் உலகத்தை மீண்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>சமூக வலைதளங்களில் அவ்வப்போது புதிய AI போட்டோ ட்ரெண்டுகள் வைரலாகி வருவது வழக்கம். அந்த வரிசையில், தற்போது 1980களின் சினிமா மற்றும் ஃபேஷன் உலகத்தை மீண்டும் உருவாக்கும் ‘80s Photo Trend’ இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. </p><p>குறிப்பாக, சாததாரண மக்கள் மாத்திரமற்றி திரைப்பிரபலங்களே இந்த ட்ரெண்டில் இணைந்து தங்களது ரெட்ரோ தோற்றத்திலான AI புகைப்படங்களைப் பகிர்ந்து வருவது ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4182d6f6-dfe3-4b16-8ffd-8abdbc04fe3b/26-6aa7fd7367960.webp' /></p><p></p><h2>படுவைரலாகும்&nbsp; ‘80s Photo Trend’</h2><p>

அந்த வகையில், சீரியல் நடிகைகள் மற்றும் சினிமா பிரபலங்கள் உள்ளிட்டோர் 80களின் திரைப்படக் கதாபாத்திரங்களை நினைவுபடுத்தும் வகையில் உருவாக்கப்பட்ட AI புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர்.</p><p> அதேபோல், நடிகை ஸ்ருதி ஹாசன், உள்ளிட்ட பிரபலங்களும் 80களின் கிளாமரான ரெட்ரோ தோற்றத்தை பிரதிபலிக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர். தொடர்ந்து சந்தீப் கிஷன், சினேகா, மீனா, பாவனா உள்ளிட்ட பல பிரபலங்களும் தங்களது புகைப்படங்களை 80களின் பாணியில் மாற்றி சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0224f861-4323-4b2b-8c4b-0498c0b31fd6/26-6aa7fd741a5af.webp' /></p><p>
</p><p>
இந்த புகைப்படங்கள் ரசிகர்களிடையே தனி வரவேற்பை ஏற்படுத்தியுள்ளன. பலரும் தங்களுக்குப் பிடித்த பழைய திரைப்படங்களின் காட்சிகள், கதாபாத்திரங்கள் மற்றும் அந்த காலத்து நடிகர்-நடிகைகளின் தோற்றங்களுடன் இந்த AI புகைப்படங்களை ஒப்பிட்டு ரசித்து வருகின்றனர். </p><p>இதனால் ‘80s Photo Trend’ சாதாரண புகைப்பட ட்ரெண்டாக மட்டுமின்றி, ஒரு வகையான ரெட்ரோ நினைவுகளை மீட்டெடுக்கும் அனுபவமாகவும் மாறியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/38ec3de1-7a44-4d22-b552-1ae64121c5e8/26-6aa7fd74c290d.webp' /></p><p>
</p><h2>
ஏன் 80களின் பாணி இவ்வளவு பிரபலமாகிறது?</h2><p>
1980கள் இந்திய சினிமாவின் முக்கியமான காலகட்டங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. அந்த காலத்தில் திரைப்படங்களில் இடம்பெற்ற ஹீரோக்களின் தனித்துவமான ஹேர் ஸ்டைல், ஹீரோயின்களின் ஃபேஷன், வண்ணமயமான உடைகள், ஸ்டுடியோ போட்டோஷூட்கள், போஸ்கள் மற்றும் ஃபிலிம் கேமராவின் தனிச்சிறப்பான நிறத்தன்மை என அனைத்துமே தனித்துவமான அழகியலை கொண்டிருந்தன.
</p><p>
இன்றைய நவீன டிஜிட்டல் புகைப்படங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட அந்த தோற்றத்தை AI தொழில்நுட்பம் மீண்டும் உருவாக்குவதுதான் இந்த ட்ரெண்டின் முக்கிய ஈர்ப்பாக பார்க்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f869b2f2-04df-4a75-a165-dcbd6ed33038/26-6aa7fdd8ad47b.webp' /></p><p></p><p> </p><p>இதன் மூலம், தற்போதைய தலைமுறையினர் “நாம் 1980களில் வாழ்ந்திருந்தால் அல்லது பிறந்திருந்தால் எப்படி தோன்றியிருப்போம்?” என்ற கற்பனைக்கு ஒரு காட்சிப்பூர்வமான பதிலைப் பார்க்க முடிகிறது.
</p><p>
அதே நேரத்தில், 80களின் திரைப்படங்களைப் பார்த்து வளர்ந்தவர்களுக்கு இந்த ட்ரெண்ட் பழைய நினைவுகளை மீண்டும் கொண்டு வருகிறது. அந்த காலத்து சினிமா, ஃபேஷன் மற்றும் புகைப்படங்களின் தனித்துவமான தோற்றத்தை AI மூலம் மீண்டும் பார்க்கும் வாய்ப்பு கிடைப்பதால், இளம் தலைமுறையினருக்கும் பழைய தலைமுறையினருக்கும் இந்த ட்ரெண்ட் ஒரே நேரத்தில் கவர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
</p><p>
இதன் காரணமாகவே AI தொழில்நுட்பத்தின் நவீனத்தையும் 80களின் ரெட்ரோ அழகியலையும் இணைக்கும் புதிய டிஜிட்டல் அனுபவமாக ‘80s Photo Trend’ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.&nbsp;</p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-14T14:03:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[செப்டம்பர் 17 முதல் தொழிலில் அசுர வளர்ச்சி காணப்போகும் ராசிகள்! உங்க ராசியும் இதுல இருக்கா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/sun-transit-in-virgo-who-get-carrier-growth-1789374853"></link>
            <id>https://manithan.com/article/sun-transit-in-virgo-who-get-carrier-growth-1789374853</id>
            <summary type="text">ஜோதிடத்தில் கிரகங்களின் ராஜாவாகக் கருதப்படும் சூரியன், தலைமைத்துவம், தன்னம்பிக்கை, அந்தஸ்து ஆகியவற்றின் காரணியாக விளங்குகிறார். சிம்ம ராசியின் அதிபதிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜோதிடத்தில் கிரகங்களின் ராஜாவாகக் கருதப்படும் சூரியன், தலைமைத்துவம், தன்னம்பிக்கை, அந்தஸ்து ஆகியவற்றின் காரணியாக விளங்குகிறார். சிம்ம ராசியின் அதிபதியான சூரியன் மாதம் ஒருமுறை ராசியை மாற்றுகிறார். </p><p>அவரது நிலை மாறும்போதெல்லாம் அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும்.

தற்போது சூரியன் தனது சொந்த ராசியான சிம்மத்தில், ஏற்கனவே அங்கு இருக்கும் கேதுவுடன் இணைந்து பயணித்து வருகிறார்.இதனால் சில ராசிக்காரர்கள் பணியில் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்திருக்கலாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/27c1f94e-f239-48ff-bfd4-e2ccf8df7241/26-6aa7be70826cf.webp' /></p><p></p><p>இந்நிலையில், செப்டம்பர் 17ஆம் தேதி சூரியன் புதனின் ஆளுகைக்குட்பட்ட கன்னி ராசிக்குள் நுழையவுள்ளார்.இதன் மூலம் சூரியன் கேதுவின் தாக்கத்தில் இருந்து விடுபட்டு, தொழிலில் சந்தித்து வந்த சிக்கல்களில் இருந்து சில ராசிக்காரர்கள் மீளப்போகின்றது.</p><p>சூரியனின் இந்த ராசி மாற்றத்தால் தொழில் ரீதியாக அதிர்ஷ்டம் பெறப்போகும் ராசிக்காரர்கள் யார் என்பதைப் பார்ப்போம்.</p><h2>விருச்சிகம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d72bce64-3579-4de4-b907-ea97d7a6dd56/26-6aa7be7136079.webp' /></p><p>
விருச்சிக ராசியின் 11-ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இது வருமானம், லாபம் மற்றும் ஆசைகள் நிறைவேறுவதற்கு வழிவகுக்கும்.</p><p>எனவே, தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. புதிய வணிகத் தொடர்புகள் மூலம் நிதி ஆதாயங்களும் கிடைக்கலாம்.

நீண்ட காலமாக புதிய தொழில் தொடங்க திட்டமிட்டிருந்தால், இக்காலம் அதற்கு ஏற்றதாக இருக்கும். </p><p>பணிபுரிபவர்கள் அலுவலகப் பிரச்சனைகளில் இருந்து விடுபட்டு, வருமான உயர்வைப் பெறலாம். இதனால் பணப் பிரச்சனைகள் குறையும். நீண்ட காலமாக வேலை தேடுபவர்களுக்கு நல்ல சம்பளத்துடன் வேலை தானாக அமையும்.</p><h2>
தனுசு</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/425a325b-e868-4b82-a27a-b4e02e097839/26-6aa7be71e86f2.webp' /></p><p></p><p>
தனுசு ராசியின் 10-ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இது வேலை, தொழில், நற்பெயர் மற்றும் பணியிடத்தைக் குறிக்கும் வீடாகும். </p><p>இதனால் தொழில் வாழ்க்கையில் சாதகமான மாற்றங்கள் ஏற்படலாம். நீண்ட கால கடின உழைப்புக்குப் பலன் கிடைப்பதுடன், பதவி உயர்வுக்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும்.</p><p>
போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகுபவர்களுக்கு இக்காலம் சிறப்பாக அமையும். வேலை மாற்றத்தை எதிர்பார்ப்பவர்கள் நல்ல வாய்ப்புகளைப் பெறலாம். அரசு வேலைக்கு முயற்சிப்பவர்களுக்கும் சாதகமான செய்திகள் கிடைக்கும்.</p><p><b>இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;&nbsp;</b></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b></td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-14T14:03:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[மாகாண சபைத் தேர்தல் அறிவிக்கப்பட்டால் எம்.பி பதவியைத் துறந்து போட்டியிடத் தயார்..! நளின் பண்டார அதிரடி அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/nalin-bandara-on-the-provincial-council-election-1789394352"></link>
            <id>https://tamilwin.com/article/nalin-bandara-on-the-provincial-council-election-1789394352</id>
            <summary type="text">நாடாளுமன்ற உறுப்பினராகத் தொடர்ந்து 13 முதல் 14 ஆண்டுகள் மக்கள் பணியாற்றிய
அனுபவம் தனக்கு இருப்பினும், எதிரணியில் இருந்து கொண்டு மக்களுக்குத் தேவையான...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடாளுமன்ற உறுப்பினராகத் தொடர்ந்து 13 முதல் 14 ஆண்டுகள் மக்கள் பணியாற்றிய
அனுபவம் தனக்கு இருப்பினும், எதிரணியில் இருந்து கொண்டு மக்களுக்குத் தேவையான
பணிகளைத் திறம்படச் செய்ய முடியாது என்றும், அதற்கு ஆட்சி அதிகாரமே அவசியம்
என்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.
</p><p>
இது தொடர்பாக ஊடங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
</p><h2>
முதலமைச்சர் பதவி</h2><p>
நாட்டின் மிகப்பெரிய முதலீட்டு மண்டலமான பிங்கிரிய பகுதியில் 1,000 ஏக்கரில்
மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தித் திட்டங்களில் பிரதி அமைச்சராகத் தான் ஆற்றிய
பங்களிப்பை அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1af333b0-1463-4648-bf39-c651bc635e09/26-6aa7fe000c73d.webp' /></p><p>
</p><p>
தம்மிடம் வேலை செய்யக்கூடிய உண்மையான திறன் இருந்தபோதிலும், எதிர்க்கட்சியில்
இருக்கும்போது அதிகார வரம்புகள் மிகப்பெரிய தடைக்கல்லாக இருக்கின்றன என்று
குறிப்பிட்ட அவர், அரசில் அதிகாரம் இருந்தால் மட்டுமே மக்களுக்கு முழுமையாகப்
பணியாற்ற முடியும் என்றார்.</p><p>

இதன் காரணமாக, மாகாண சபைத் தேர்தல் அறிவிக்கப்பட்டால், தனது நாடாளுமன்ற
உறுப்பினர் பதவியிலிருந்து விலகி மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடத் தயாராக
இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
</p><p>
மேலும், வெறும் மாகாண சபை உறுப்பினராக இல்லாமல், முழுமையான அதிகாரமிக்க மாகாண
முதலமைச்சர் பதவியைக் கைப்பற்றி மக்களுக்குச் சேவையாற்றுவதே தனது பிரதான
இலக்கு என்றும் அவர் இதன்போது உறுதியளித்தார்.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-14T14:00:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலக சிரேஷ்ட மொடல் அழகன் போட்டியில் இலங்கையர் மகுடம் சூடினார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sri-lankan-wins-world-senior-model-title-1789392782"></link>
            <id>https://jvpnews.com/article/sri-lankan-wins-world-senior-model-title-1789392782</id>
            <summary type="text">சிங்கப்பூரில் நடைபெற்ற 2026 ஆண்டுக்கான உலக சிரேஷ்ட மொடல் அழகன் போட்டியில் &#039;எலைட்&#039; பிரிவில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றிய கலாநிதி துமிந...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிங்கப்பூரில் நடைபெற்ற 2026 ஆண்டுக்கான உலக சிரேஷ்ட மொடல் அழகன் போட்டியில் 'எலைட்' பிரிவில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றிய கலாநிதி துமிந்த சில்வா, உலக அழகன் பட்டத்தை வென்ற முதல் இலங்கை மொடல் என்ற வரலாற்றுச் சாதனையை நிகழ்த்தி தாய்நாடு திரும்பியுள்ளார்.</p><p> சிங்கப்பூரில் செப்டெம்பர் 06 ஆம் திகதி முதல் 10 அம் திகதி வரை நடைபெற்ற இந்தப் போட்டியில் உலகின் 22 நாடுகளைச் சேர்ந்த போட்டியாளர்கள் பங்கேற்றிருந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2e17d0a6-499e-484c-b326-8a1f65d37ec8/26-6aa7f78fade1f.webp' /></p><h2>மிஸ்டர் ஸ்ரீலங்கா</h2><p>
</p><p>
முக்கிய உலகச் சாம்பியன் பட்டத்தை வென்றது மட்டுமன்றி, போட்டியில் மேலும் சிறந்த ஆளுமை, சிறந்த முன்மாதிரி மொடல், சிறந்த நீச்சல் உடை அழகன் மற்றும் மிகவும் பிரபலமான போட்டியாளர் ஆகிய 04 முக்கிய உப பிரிவுகளிலும் துமிந்த சில்வா வெற்றி வாகை சூடியுள்ளார்.
</p><p>

முன்னதாக 'மிஸ்டர் ஸ்ரீலங்கா' பட்டத்தை வென்ற இவர், கலாநிதி பட்டம் பெற்ற உயர்கல்வியாளராகவும், ஒரு சட்டத்தரணியாகவும் பணியாற்றி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
சிங்கப்பூரிலிருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் UL-309 விமானம் மூலம் நேற்று இரவு 9:35 மணியளவில் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த அவருக்கு, அவரது நண்பர்கள், ஆதரவாளர்கள் மற்றும் நலன்புரி விரும்பிகள் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-09-14T14:00:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[எரிபொருள் விநியோக நெருக்கடி : ஜனாதிபதியை தலையிட கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/president-urged-to-intervene-in-fuel-crisis-1789392619"></link>
            <id>https://ibctamil.com/article/president-urged-to-intervene-in-fuel-crisis-1789392619</id>
            <summary type="text">&amp;nbsp;&quot;நாட்டில் எரிபொருள் விநியோகம் தொடர்பாக நிலவும் சிக்கலான சூழ்நிலையில் ஜனாதிபதி தலையிட்டு, இப்பிரச்சினையை கூடிய விரைவில் தீர்க்க வேண்டும்&quot; என எரிப...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;"நாட்டில் எரிபொருள் விநியோகம் தொடர்பாக நிலவும் சிக்கலான சூழ்நிலையில் ஜனாதிபதி தலையிட்டு, இப்பிரச்சினையை கூடிய விரைவில் தீர்க்க வேண்டும்" என எரிபொருள் நிலைய உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் குமார ராஜபக்ச இன்று (14) தெரிவித்தார். இப்பிரச்சினையைத் தீர்ப்பதற்காக அதிகார மட்டத்தில் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்ட போதிலும், எந்தத் தீர்வும் காணப்படவில்லை என்றும் அவர் கூறினார்.</p><p>&nbsp;கொழும்பில் இன்று (14) நடைபெற்ற ஒரு சிறப்பு ஊடக மாநாட்டில் குமார ராஜபக்ச இவ்வாறு தெரிவித்தார்.</p><p>

</p><h2>எரிபொருள் விநியோகத்தில் கடும் கட்டுப்பாடு</h2><p>தற்போதைய எரிபொருள் விலையில் விற்பனை செய்தால் தங்களுக்கு நஷ்டம் ஏற்படும் என்று கூறி, ஆர்.எம். பார்க், சினோபெக் மற்றும் எல்.ஐ.ஓ.சி ஆகிய நிறுவனங்கள் எரிபொருள் விநியோகத்தைக் கடுமையாகக் கட்டுப்படுத்தியுள்ளன என்றும், நஷ்டங்களைக் குறைக்கும் ஒரு நடவடிக்கையாகவே இந்த நிறுவனங்கள் எரிபொருள் விநியோகத்தைக் கட்டுப்படுத்தியுள்ளன என்றும் அவர் கூறினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/146c6212-dd62-4cf1-8108-0e67cdf19ec1/26-6aa7fc5b9ea3d.webp' /></p><p>தனியார் நிறுவனங்கள் விநியோகத்தைக் கட்டுப்படுத்தியுள்ள நிலையில், இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் கட்டுப்பாடின்றி தொடர்ச்சியாக எரிபொருள் விநியோகம் செய்வதால் பொதுமக்களுக்கு ஓரளவு நிவாரணம் கிடைத்து வருவதாகவும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உள்ளிட்ட சில பகுதிகளில் வெளிநாட்டுக்குச் சொந்தமான எரிபொருள் நிலையங்கள் மட்டுமே இருப்பது பொதுமக்களைப் பாதித்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.</p><p></p><h2>&nbsp;நாட்டில் காலடி வைத்த சக்திவாய்ந்த எரிபொருள் நிறுவனங்கள்</h2><p>&nbsp;முந்தைய அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் ஏற்பட்ட எரிபொருள் பற்றாக்குறைக்குப் பிறகு, உலகின் மிகவும் சக்திவாய்ந்த எரிபொருள் நிறுவனங்கள் தொடர்ச்சியான எரிபொருள் விநியோகம் செய்வதாக உறுதியளித்து இந்த நாட்டிற்கு வந்தன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9b7432e0-31c3-4774-9d8d-686cba0e7303/26-6aa7fc5c53b33.webp' /></p><p> </p><p>மேலும், அந்த நிறுவனங்கள் போட்டி விலையில் எரிபொருளை விற்க அரசாங்கம் அனுமதிக்கும் என்றும் கூறியது. ஆனால், அந்த நிறுவனங்கள் இந்த நாட்டில் தங்கள் வணிகத்தைத் தொடங்கிய பிறகு, அவை அரசாங்கத்தின் விலையில் எரிபொருளை விற்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகியுள்ளன.</p><p>&nbsp; மேலும், தங்கள் எரிபொருள் விலையை விடக் குறைந்த விலையில் எரிபொருளை விற்க நேர்ந்தால், அந்த நஷ்டத்தை அரசாங்கமே ஏற்கும் என்று அந்த நிறுவனங்கள் கூறி வருவதாகவும், இந்த நிலைமை பொதுமக்களை மட்டுமல்லாமல் எரிபொருள் நிலைய உரிமையாளர்களையும் பாதித்துள்ளதாகவும் ராஜபக்ச மேலும் தெரிவித்தார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-14T13:53:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதிரடியாக 300 ஓட்டங்கள் விளாசி மிரள வைத்த பாகிஸ்தான் வீரர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/salman-ali-agha-300-not-out-for-kingsmen-1789393832"></link>
            <id>https://news.lankasri.com/article/salman-ali-agha-300-not-out-for-kingsmen-1789393832</id>
            <summary type="text">Salman Ali Agha scored 300 in 336 balls:&amp;nbsp; ஐதராபாத் கிங்ஸ்மென் அகாடமி அணிக்காக சல்மான் அலி அகா 300 ஓட்டங்கள் விளாசினார்.

பாகிஸ்தானின் சல்மான் அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Salman Ali Agha scored 300 in 336 balls:&nbsp; ஐதராபாத் கிங்ஸ்மென் அகாடமி அணிக்காக சல்மான் அலி அகா 300 ஓட்டங்கள் விளாசினார்.</p><p>

பாகிஸ்தானின் சல்மான் அலி அகா மார்க்ஹோர் அணிக்கு எதிராக 336 பந்துகளில் 300 ஓட்டங்கள் விளாசினார். </p><h2>சல்மான் அலி அகா&nbsp;</h2><p>

பிரசிடெண்ட் டிராபி கிரேட் டெஸ்ட் போட்டியில் மார்க்ஹோர் ஐடி சொலியூஷன் மற்றும் ஐதராபாத் கிங்ஸ்மென் அகாடமி அணிகள் விளையாடி வருகின்றன.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b9ea4b34-4a5b-4073-b08d-01d2372a951f/26-6aa7fc8857115.webp' />&nbsp;</p><p></p><p>
ஐதராபாத் கிங்ஸ்மென் அகாடமி அணி முதல் இன்னிங்ஸில் 565 ஓட்டங்கள் குவித்து டிக்ளேர் செய்ய, மார்க்ஹோர் அணி 330 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது.
</p><p>
பின்னர் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய மார்க்ஹோர் அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 203 ஓட்டங்கள் எடுத்துள்ளது.&nbsp; &nbsp;</p><p>கிங்ஸ்மென் அணியின் இன்னிங்ஸில், பாகிஸ்தான் டி20 அணித்தலைவரான சல்மான் அலி அகா (Salman Ali Agha) 336 பந்துகளில் 300 ஓட்டங்கள் விளாசி களத்தில் நின்றார். 
&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e796e7cc-85e2-4441-bdde-d3707baeb632/26-6aa7fc87a17c8.webp' /></p>]]></content>
            <updated>2026-09-14T13:51:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு முதல்முறையாக இந்தியா வரும் பாகிஸ்தான் ஹாக்கி அணி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/punjab-cm-confirms-pakistan-hockey-team-play-india-1789393577"></link>
            <id>https://news.lankasri.com/article/punjab-cm-confirms-pakistan-hockey-team-play-india-1789393577</id>
            <summary type="text">punjab cm confirms pakistan hockey team to play in india: இந்தியாவில் நடைபெற உள்ள ஆடவர் ஹாக்கி ஆசிய சாம்பியன்ஸ் கிண்ணத்தில் பாகிஸ்தான் கலந்து கொள்ளும்...</summary>
            <content type="html"><![CDATA[<p>punjab cm confirms pakistan hockey team to play in india: இந்தியாவில் நடைபெற உள்ள ஆடவர் ஹாக்கி ஆசிய சாம்பியன்ஸ் கிண்ணத்தில் பாகிஸ்தான் கலந்து கொள்ளும் என பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் உறுதிப்படுத்தியுள்ளார். </p><h3>

இந்தியா வரும் பாகிஸ்தான் ஹாக்கி அணி </h3><p>

2026 ஆம் ஆண்டுக்கான ஆடவர் ஹாக்கி ஆசிய சாம்பியன்ஸ் டிராபி, அக்டோபர் 27 முதல் நவம்பர் 5 வரை இந்தியாவின் பஞ்சாபில் நடைபெற உள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4b0878b9-de60-43f3-a787-46e7d9427408/26-6aa7faaad2e73.webp' /></p><p>

இதில் நடப்பு சாம்பியானான இந்தியா, பாகிஸ்தான், சீனா, ஜப்பான், மலேசியா மற்றும் தென் கொரியா ஆகிய 6 நாடுகள் பங்கேற்கின்றன. </p><p>

லீக் சுற்றுப் போட்டிகள் ஜலந்தரிலும், அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகள் மொஹாலி மைதானத்திலும் நடைபெற உள்ளன.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1cbccd80-2e38-4aa1-bc59-b92559e496b5/26-6aa7faab8700c.webp' /></p><p>

பங்கேற்கும் அணிகளில் ஏதேனும் ஒன்று விலகினால், மாற்று அணிகளாக ஓமன் மற்றும் வங்கதேசம் பங்கேற்க உள்ளது.&nbsp;</p><p></p><p>

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே இருதரப்பு போட்டிகள் விளையாட கட்டுப்பாடு உள்ள நிலையில், பன்னாட்டுப் போட்டிகளில் பங்கேற்க எந்தப் பிரச்சினையும் இல்லை என இந்தியாவின் கொள்கையை சுட்டிக்காட்டிய பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான், பாகிஸ்தான் பங்கேற்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2dcdd52a-6560-4059-b17b-b3fae89429cf/26-6aa7faac3976d.webp' /></p><p> 

ஒலிம்பிக் சாசனத்திற்கு இணங்க, பலதரப்புப் போட்டிகளில் இந்தியாவும் பாகிஸ்தானும் ஒன்றோடு ஒன்று போட்டியிடலாம் என்றும், இந்தியாவில் நடைபெறும் அத்தகைய போட்டிகளில் எல்லை தாண்டிய விளையாட்டு வீரர்கள் பங்கேற்பதற்குத் தடை விதிக்கப்பட மாட்டாது எனவும் விளையாட்டு அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது.&nbsp;</p><p>
முன்னதாக ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையேயான பதற்றம், ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரில் இந்திய வீரர்கள் கை குலுக்க மறுத்தது, ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவரிடமிருந்து கோப்பையை பெற மறுத்தது ஆகியவற்றை காரணம் காட்டி, தமிழ்நாட்டில் நடைபெறவிருந்த 2025 இளையோர் உலகக் கிண்ண போட்டியில் இருந்து பாகிஸ்தான் விலகியது.</p><p>

நேற்று 2026 மகளிர் ஆசிய கிண்ண T20 தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றதும், பிசிசிஐயின் உத்தரவிற்கு ஏற்ப ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவரும், பாகிஸ்தான் உள்துறை அமைச்சருமான மொஹ்சின் நக்வியிடம் இருந்து இந்திய மகளிர் அணி தங்களது வெற்றிக் கிண்ணத்தை வாங்க மறுத்தது.</p>]]></content>
            <updated>2026-09-14T13:46:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[22 ஆண்டுகள் உறைந்திருந்த கரு மூலம் குழந்தை பிரசவித்த 54 வயது பெண்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/54-year-old-woman-gives-birth-frozen-embryo-1789380066"></link>
            <id>https://canadamirror.com/article/54-year-old-woman-gives-birth-frozen-embryo-1789380066</id>
            <summary type="text">கிரேக்கத்தில் 22 ஆண்டுகளுக்கும் மேலாக உறைநிலையில் (Frozen Embryo) வைக்கப்பட்டிருந்த கரு மூலம் 54 வயது பெண் ஒருவர் பெண் குழந்தையொன்றை பிரசவித்துள்ளார்....</summary>
            <content type="html"><![CDATA[<p>கிரேக்கத்தில் 22 ஆண்டுகளுக்கும் மேலாக உறைநிலையில் (Frozen Embryo) வைக்கப்பட்டிருந்த கரு மூலம் 54 வயது பெண் ஒருவர் பெண் குழந்தையொன்றை பிரசவித்துள்ளார்.</p><p>

கிரேக்கத்தைச் சேர்ந்த கிறிஸ்டினா ரப்தி-ட்செலேபி (54) - கொன்ஸ்டான்டினோஸ் ரப்திஸ் (60) தம்பதியின் 21 வயது மகன் ஜியோர்ஜோஸ், கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் நடந்த வீதி விபத்தொன்றில் உயிரிழந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dd7fd9e9-8b11-4c54-83d0-e44bebe738e6/26-6aa7c5e3cfb16.webp' /></p><p>

மகனின் பிரிவால் துயருற்ற தம்பதியினர், மீண்டும் ஒரு குழந்தையைப் பெற்றெடுக்க தீர்மானித்தனர்.

இதற்காக, 22 ஆண்டுகளுக்கு முன்பு தாங்கள் செயற்கை கருத்தரித்தல் (IVF) சிகிச்சைக்காக சேமித்து வைத்திருந்த கருவை பயன்படுத்த முடிவு செய்தனர்.</p><p>

இருப்பினும், கிரேக்கத்தில் 54 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு செயற்கை கருத்தரித்தல் சிகிச்சை அளிக்க சட்டப்படி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.</p><p>

வயது வரம்பை எட்டிய நிலையில் இருந்ததால், அந்த நாட்டின் தேசிய இனப்பெருக்க மருத்துவ அதிகார சபையிடம் விசேட அனுமதி பெற்று, ஏதென்ஸில் உள்ள மருத்துவமனையில் கிறிஸ்டினா 3.49 கிலோகிராம் எடையில் பெண் குழந்தையைப் பிரசவித்துள்ளார்.
</p><p>
உயிரிழந்த தங்கள் மகனின் நினைவாக இந்தக் குழந்தைக்கு 'ஜோர்ஜியா' என அவர்கள் பெயரிட்டுள்ளனர்.
</p><p>
22 ஆண்டுகள் பழமையான கரு மூலம் குழந்தை பிறந்தமை மருத்துவ உலகில் அரிதான நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது.
</p><p>
இந்தநிலையில், இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, கிரேக்கத்தில் நிலவும் பிறப்பு விகிதக் குறைவைக் கருத்திற்கொண்டு, IVF சிகிச்சைக்கான 54 வயது வரம்புச் சட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என அந்த நாட்டு மருத்துவ நிபுணர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-09-14T13:42:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் வீடொன்றுக்குள் அரங்கேறிய தகாத செயல் ; வசமாக பிடிபட்ட இளைஞன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/improper-act-reported-inside-jaffna-house-1789386349"></link>
            <id>https://jvpnews.com/article/improper-act-reported-inside-jaffna-house-1789386349</id>
            <summary type="text">யாழ்ப்பாணத்தில் வீடொன்றினுள் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டு வந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவரிடமிருந்து 210 லீட்டர் கசிப்பும் மீட்கப்பட்டு...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">யாழ்ப்பாணத்தில் வீடொன்றினுள் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டு வந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவரிடமிருந்து 210 லீட்டர் கசிப்பும் மீட்கப்பட்டுள்ளது</p><p style="text-align: justify; "> 

அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அச்செழு பகுதியில் வீடொன்றினுள் கசிப்பு உற்பத்தி நடைபெறுவதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த வீட்டினை பொலிசார் சுற்றி வளைத்தனர்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4a940893-40b6-4c7f-a421-fcebf77d1249/26-6aa7de6f5cb47.webp' /></p><h2 style="text-align: justify; ">கசிப்பு உற்பத்தி</h2><p style="text-align: justify; "> 

வீட்டினுள் பொலிஸார் சென்ற வேளையில் பெரிய பரலில் எரிவாய்வை பயன்படுத்தி கசிப்பு காய்ச்சிக்கொண்டிருந்த 34 வயதுடைய நபரை பொலிஸார் கைது செய்தனர்.</p><p style="text-align: justify; ">அதனை அடுத்து வீட்டில் ஏற்கனவே காய்ச்சி , விற்பனைக்காக வைத்திருந்த 210 லீட்டர் கசிப்பு , 160 லீட்டர் கோடா , ஒரு போத்தல் சாராயம் , எரிவாயு சிலிண்டர் பரல்கள் உள்ளட்டவற்றையும் சான்று பொருளாக பொலிஸார் மீட்டுள்ளனர்</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

கைது செய்யப்பட்ட நபரை அச்சுவேலி போலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-14T13:41:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[எயார்பஸ் நிறுவன மின்னஞ்சலால் ஆபத்தில் நாமல் ராஜபக்ச! முக்கிய பல தகவல்கள் கசிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/airbus-namal-rajapaksa-email-1789391769"></link>
            <id>https://tamilwin.com/article/airbus-namal-rajapaksa-email-1789391769</id>
            <summary type="text">எயார்பஸ் ரக வானூர்தி கொடுக்கல் வாங்கலில் 100 மில்லியன் டொலர் கையூட்டல் பெற்ற குற்றச்சாட்டில் சிறையில் இருக்கும் மொட்டுக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நா...</summary>
            <content type="html"><![CDATA[<p>எயார்பஸ் ரக வானூர்தி கொடுக்கல் வாங்கலில் 100 மில்லியன் டொலர் கையூட்டல் பெற்ற குற்றச்சாட்டில் சிறையில் இருக்கும் மொட்டுக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் 
ராஜபக்ச இது ஒரு அரசியல் பழிவாங்கல் என்றும் கூற முனைந்தாலும்
சம்பவம் தொடர்பான விசாரணைகளில் வெளிவந்த தகவல்களின் அடிப்படையில் 
2013 மார்ச் 23 ஆம் திகதியிட்ட மின்னஞ்சல் (Email) ஒன்றின் மூலம் பல கதைகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.</p><p>அன்றைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் புதல்வரான நாமல் ராஜபக்ச விமானங்களை கொள்வனவு செய்யும் யோசனையை ஜனாதிபதி மூலமாக அமைச்சரவைக்கு சமர்ப்பித்து விடயத்தை முடித்து தருவதாக மின்னஞ்சல் மூலம் அறிவித்துள்ளதாக தெரியவந்துள்ளது. </p><p>
அது தொடர்பில் எயார்பஸ் (Airbus) நிறுவனம் அனைத்து மின்னஞ்சல்களையும் வழங்கியுள்ளது. எயார்பஸ் கொள்வனவு தொடர்பான வேலையை நான் தந்தைக்குச் சொல்லி செய்து தருகிறேன் தந்தை மூலமாக அல்லது ஜனாதிபதி மூலமாக இதற்குத் தேவையான அமைச்சரவை அனுதியை பெற்று தருவதாக கூறியுள்ளார்.
</p><h2>நாமலின் பங்களிப்பு</h2><p>இதற்கு இணையாக 2013 மார்ச் 27 ஆம் திகதி அன்றைய சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிரியங்கர ஜயரத்ன இக்கொள்வனவுக்கான அனுமதியைக் கோரி அமைச்சரவை பத்திரம் ஒன்றை சமர்ப்பpத்துள்ளார். </p><p>அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்ட போதிலும் ஏப்ரல் 13 ஆம் திகதி அன்றைய நிதியமைச்சராக இருந்த மஹிந்த ராஜபக்ச அமைச்சரவைக்கு அறிவித்துள்ளது. என்னவென்றால் நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட சுயாதீன பணிப்பாளர் சபையைக் கொண்ட ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் செயற்பாடுகளுக்கு அமைச்சரவை அனுமதி தேவையில்லை என்று கூறியுள்ளார்.</p><p>அதேபோல் இலங்கைக்கு வந்த எயார்பஸ் நிறுவனத்தின் பிரதிநிதிகளை நாமல் ராஜபக்ச சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
மேலும் இந்த பாரிய அளவிலான விமானக் கொள்வனவின் போது விமான ஓட்டும் பயிற்சி மையம் (Pilot Training Centre) ஒன்றும் பெருந்தொகை செலவில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><h2>
ஹம்பாந்தோட்டையில் விமான ஓட்டும் பயிற்சி</h2><p>அந்தப் பயிற்சி மையத்தை தனது சொந்த தேர்தல் தொகுதியான ஹம்பாந்தோட்டையில் நிறுவுமாறு எயார்பஸ் நிறுவன பிரதிநிதிகளிடம் நாமல் ராஜபக்ச கோரியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. </p><p>மின்னஞ்சல் சான்றுகள் மூலம் இத்தகவல்கள் வெளிவந்துள்ளதாகவே லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தற்போது நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளது.
நிமல் பெரேரா அளித்துள்ள வாக்குமூலம் தனக்கு எயார்பஸ் நிறுவனத்துடனோ அல்லது ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துடனோ எந்தவொரு தொடர்பும் இருக்கவில்லை. </p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/26f8eb70-d0ad-4b6a-a54c-4d4f3d98ea46/26-6aa7f39bafd6d.webp' /></p><p>ஆனாலும் நாமல் ராஜபக்ச வெளிநாட்டு ஆலோசனைச் சேவை ஒன்றின் மூலம் பணம் கிடைக்கவுள்ளதாகவும் அப்பணத்தை வைப்பு செய்வதற்கு வெளிநாட்டு கணக்கு ஒன்றைத் தருமாறும் கோரியுள்ளார்.</p><p>தனக்கு வெளிநாட்டு ஆலோசனை சேவை மூலம் பணம் வரவுள்ளதாகவும் கூறியுள்ளார். இந்த சந்தர்ப்பத்திலேயே நிமல் பெரேரா தனக்குச் சொந்தமான 'SABREVISION' என்ற நிறுவனத்தின் கணக்கு இலக்கத்தை வழங்கியதாக குறிப்பிட்டுள்ளார். </p><p>
இந்தக் கணக்கிற்கு 'Biz Solutions' எனும் நிறுவனம் மூலம் அதாவது அப்போதைய கபில சந்திரசேனவின் மனைவி பிரியங்கா நியோமாலி விஜயநாயக்க பணிப்பாளராக இருந்த புரூணையில் பதிவு செய்யப்பட்ட நிறுவனத்தில் இருந்து 2014 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் 8 இலட்சம் அமெரிக்க டொலர் பணம் நிமல் பெரேராவின் வெளிநாட்டு கணக்கிற்கு வைப்பு செய்யப்பட்டுள்ளது. </p><p>பின்னர் அந்த பணத்தை இலங்கையில் 100 மில்லியன் ரூபாவை (10 கோடி) நாமல் ராஜபக்சவிடம் ஒப்படைத்ததாகவும் தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p>&nbsp;</p><p>&nbsp;&nbsp;</p><p><b>YOU MAY LIKE THIS VIDEO..</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/jpF2dBCZozI" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p>]]></content>
            <updated>2026-09-14T13:41:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[செம்மணி மனிதப் புதை குழி விவகாரத்தில் ஐநாவின் தலையீடு! வலியுறுத்தும் கஜேந்திரகுமார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/un-intervention-deliver-justice-gajendrakumar-1789391795"></link>
            <id>https://ibctamil.com/article/un-intervention-deliver-justice-gajendrakumar-1789391795</id>
            <summary type="text">

செம்மணியில் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட கிருசாந்தி வழக்கில் குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்ட இராணுவ கோப்ரல் சிறிலங்கா அரசை நம்பாத காரணத்தினால் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>

செம்மணியில் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட கிருசாந்தி வழக்கில் குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்ட இராணுவ கோப்ரல் சிறிலங்கா அரசை நம்பாத காரணத்தினால் 600 வரையானவர்கள் புதைக்கப்பட்டதாக சாட்சியம் வழங்கினார் என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.</p><p>

நேற்று ஞாயிற்றுக்கிழமை உள்ளக விசாரணையை எதிர்க்கிறோம் செம்மணி புதைகுழி விவகாரத்தை ஐநா பொறுப்பேற்க வேண்டும் என தெரிவித்து இடம்பெற்ற மாபெரும் மக்கள் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.</p><p>
அவர் மேலும் தெரிவிக்கையில், “1999 ஆம் ஆண்டு பாடசாலை மாணவியான கிருசாந்தி கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட வழக்கில் செம்மணி பகுதியில் கடமையில் இருந்த இராணுவ கோப்ரல் ஒருவர் கொலை குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்டார்.</p><p></p><h2>இராணுவ கோப்ரலின் சாட்சியம்</h2><p>

அந்த இராணுவ கோப்ரல் இலங்கை அரசை நம்பாததன் காரணமாக இந்தப் பின்னணியில் இருந்தவர்களை வெளிப்படுத்துவதற்காக குறித்த பகுதியில் 600 வரையான உடல்கள் புதைக்கப்பட்டதாக சாட்சியம் வழங்கியிருக்கிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c5dd1ffc-761d-4be6-a1d4-7c5d80146fa9/26-6aa7f6ba4d128.webp' /></p><p>

அவர் இந்த உண்மையை கூறாமல் விட்டிருக்கலாம் இருந்தும் செம்மணியில் பாரிய மனித படுகொலைகளின் பின்னால் இராணுவ உயர் அதிகாரிகள் இருந்ததன் காரணமாகவும் தன்னை காப்பாற்ற மாட்டார்கள் எனத் தெரிந்ததால் உண்மையை உலறிவிட்டார்.</p><p> 
அவர் அன்று கூறிய விடையங்கள் தற்போது உண்மையாகி சுமார் 600 வகையான எலும்புக்கூடுகள் அப்பகுதிகளில் கண்டெடுக்கப்பட்ட வருகின்றது./
</p><p>
தற்போது அகழ்வு பணிகள் இடம் பெற்று வரும் செம்மணி பகுதியில் மயான கட்டுமானம் இடம்பெற்று வந்த நிலையில் அதனை மயானத்தில் எலும்பு கூடுகள் இருப்பது வழமையான விடயம் என சிலர் திசை திருப்ப பார்த்தார்கள்.</p><p>

இருந்தாலும் நமது கட்சியை சேர்ந்த கிருபாகரன் என்னிடம் இந்தப் பகுதியில் மனித எலும்புக்கூடுகள் புதைக்கப்பட்டதற்கான சாட்சியங்கள் இருக்கின்றன இதனை நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என கோரிக்கை முன்வைத்தார்.</p><p>
யாழ்ப்பாண காவல்துறையினர் முறைப்பாட்டை ஏற்க மறுத்த நிலையில் சட்டத்தரணிகளான காண்டீபன் மற்றும் சுகாசின் ஒத்துழைப்புடன் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அகழ்வு பணிக்கான அனுமதி கிடைக்கப்பெற்றது.</p><p>

செம்மணி மனித புதைதைக்குழி 600 ஐ நெருங்குகின்ற நிலையில் தமிழ் மக்கள் மீது சிறிலங்கா அரசினால் மேற்கொள்ளப்பட்ட திட்டமிட்ட இன அழிப்பின் சாட்சியாக செம்மணி இடம் பிடித்துள்ளது.</p><h2>சர்வதேச விசாரணையின் அவசியம்</h2><p>

ஐநா மனித உரிமைகள் பேரவை தமிழ் மக்கள் மீது சிறிலங்கா அரசினால் மேற்கொள்ளப்பட்ட இன அழிப்பு, மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் மற்றும் போர் குற்றங்கள் தொடர்பில் சாட்சியங்கள் ஆதாரங்கள் வழங்கியும் சிறிலங்கா அரசு மீது நடவடிக்கை எடுக்க தயங்கி வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c4b54bc9-1506-44fe-ada5-3ee0b064ea45/26-6aa7f6bb1fd15.webp' /></p><p>
அந்த ஒரு சூழலில் தற்போது செம்மணி விவகாரம் என்பது பேசு பொருளாகவும் சர்வதேசத்தின் பார்வையை ஈர்த்துள்ள விடயமாகவும் பார்க்கக் கடியதாக உள்ளது.</p><p>
2009 யுத்தம் மௌனிக்கப்பட்ட பின்னர் தமிழ் மக்கள் தமக்கு விளக்கப்பட்ட மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் போர் குற்றங்கள் மற்றும் இன அழிப்புக்கு எதிராக உள்ளக விசாரணைகளை புறந்தள்ளி சர்வதேசத்திடம் நீதிக்காக போராட ஆரம்பித்தார்கள்.</p><p>
இந்தப் போராட்டம் யுத்தம் நிறைவடைந்து 17 வருடங்கள் கடந்தும் ஐநா மனித உரிமைகள் பேரவை சிறீலங்கா அரசு மீது தமிழ் மக்கள் சுமத்திய ஆதாரங்கள் சாட்சியங்கள் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்வதற்கு தயக்கம் காட்டுகிறது.</p><p>

பிரித்தானியா மற்றும் கனடா போன்ற நாடுகள் ஐநா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் காத்திரமான கருத்துக்களை கூறி வந்தாலும் ஏனைய நாடுகள் இலங்கை அரசுடன் இணைந்து போவதையே காண முடிகிறது.</p><p>
முன்னாள் ஐநா மனித உரிமைகள் ஆணையாளராக இருந்த இளவரசர் செயித் அல்ஹசன் தனது அறிக்கையில் தெளிவாகவும் இறுக்கமாகவும் ஒரு கருத்தை பதிவிட்டு இருந்தார்.</p><p>

குற்றம் சாட்டப்பட்ட இலங்கை அரசு குற்றச்சாட்டுக்களை விசாரிப்பது என்பது உண்மையான நீதியை தராது என தனது அறிக்கையிலே தெளிவாக குறிப்பிட்டார்.</p><p>

அவரது கருத்தை சர்வதேச சமூகம் உன்னிப்பாக நோக்க வேண்டும் ஏனெனில் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ள செம்மணி மனிதப் புதைகுழியின் ஆதாரங்கள் குற்றம் சாட்டப்பட்ட இலங்கை அரசிடம் இருப்பது ஆதாரங்களை அழிப்பதற்கு ஏதுவாக அமையும்.</p><p>அதன் காரணமாகவே தமிழ் மக்கள் உள்ளக விசாரணை நீதியை தராது செம்மணி மனிதப் புதை குழி விவகாரத்தை ஐநா பொறுப்பேற்க வேண்டும் கோரிக்கை முன்வைத்துள்ளார்கள்.”என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-14T13:34:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[லிமினியின் அரசியல் பிரவேசம் : கலக்கத்தில் நாமல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/namal-concerned-over-limini-s-entry-into-politics-1789381685"></link>
            <id>https://ibctamil.com/article/namal-concerned-over-limini-s-entry-into-politics-1789381685</id>
            <summary type="text">&amp;nbsp;லிமினி ராஜபக்ச அரசியல் களத்தில் நுழையத் தயாராகி வருகிறார் என்ற செய்தியால் நாமல் ராஜபக்ச மிகவும் கலக்கமடைந்துள்ளார் என கொழும்புத் தகவல்கள் தெரிவி...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;லிமினி ராஜபக்ச அரசியல் களத்தில் நுழையத் தயாராகி வருகிறார் என்ற செய்தியால் நாமல் ராஜபக்ச மிகவும் கலக்கமடைந்துள்ளார் என கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
</p><p>
 வெலிக்கடை சிறைக்குச் சென்றபோது லிமினி ராஜபக்ச இந்தச் செய்தியை நாமல் ராஜபக்சவிடம் தெரிவித்தார்.</p><h2>அதிகாரபூர்வமாக மறுக்க நடவடிக்கை&nbsp;</h2><p>&nbsp;இதனால் மிகவும் கலக்கமடைந்த நாமல் ராஜபக்ச, இந்தப் பிரசாரத்தை உடனடியாக அதிகாரபூர்வமாக மறுக்க நடவடிக்கை எடுக்குமாறு அவருக்கு அறிவுறுத்தியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3ea62220-2c83-4214-932a-82d510523570/26-6aa7ce908e530.webp' /></p><p>&nbsp;அநுராதபுரத்தில் நடைபெற்ற பொதுஜன பெரமுனவின் பேரணியில் லிமினி ராஜபக்ச கலந்து கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியானபோதிலும் பின்னர் அவரது தந்தையால் அது மறுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-14T13:32:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் முதலீடுகளைக் குவிக்க பிரதமர் கார்னி திட்டம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/carney-teases-economic-activity-already-spurring-1789386773"></link>
            <id>https://canadamirror.com/article/carney-teases-economic-activity-already-spurring-1789386773</id>
            <summary type="text">டொராண்டோவில் நடைபெற்று வரும் உயர்மட்ட முதலீட்டாளர்கள் மாநாட்டில், கனடாவின் பொருளாதாரத்தைப் பெருமளவில் கட்டியெழுப்புவதற்கான அபார வாய்ப்பு ஏற்பட்டுள்ளதா...</summary>
            <content type="html"><![CDATA[<p>டொராண்டோவில் நடைபெற்று வரும் உயர்மட்ட முதலீட்டாளர்கள் மாநாட்டில், கனடாவின் பொருளாதாரத்தைப் பெருமளவில் கட்டியெழுப்புவதற்கான அபார வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாகக் கனடா பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார். </p><p>
மேலும், பல முக்கிய ஒப்பந்தங்கள் ஏற்கனவே கையெழுத்தாகியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். </p><p>
கனடாவின் வரலாற்றிலேயே முதன்முறையாக நடத்தப்படும் இந்த முதலீட்டு மாநாட்டில் பங்கேற்பதற்காக, உலகின் முன்னணி நிறுவன தலைவர்களும் உயர் அதிகாரிகளும்டொராண்டோவிற்கு வருகை தந்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b9ce3c1c-0b71-4c80-93c5-fd1fe3c7ea4a/26-6aa7e01693b7f.webp' /></p><p> </p><p>
ராயல் ஒன்டாரியோ அருங்காட்சியகத்தில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் பிரதமர் மார்க் கார்னி உரையாற்றியுள்ளார்.
</p><p>உலகம் விரும்பும் எல்லாமே நம்மிடம் உள்ளன: ஆற்றல், வளங்கள், திறமை, தொழில்நுட்பம் மற்றும் மூலதனம் என்று குறிப்பிட்டார்.</p><p>
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பைக் மறைமுகமாகக் குறிப்பிடும் வகையில், "எந்தவொரு பேலன்ஸ் ஷீட்டிலும் காண முடியாத ஒன்றுதான் நமது மிகப்பெரிய பலம்; அதுதான் 'நம்பிக்கை'" என்றார்.
</p><p>இகாலுயிட் முதல் விக்டோரியா, கியூபெக் நகரம் மற்றும் செயிண்ட் ஜான்ஸ் வரை ஒரு புதிய ஒருமித்த கருத்து உருவெடுத்துள்ளது: கனடா தனது எதிர்காலத்தைத் தன் கையிலெடுத்துள்ளது என்று கூறினார்.</p><p>
அடுத்த 5 ஆண்டுகளில் கனடாவில் 1 டிரில்லியன் டொலர் முதலீட்டை ஈர்ப்பதற்கான திட்டத்தின் முக்கிய அங்கமாக இந்த மாநாடு பார்க்கப்படுகிறது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-14T13:30:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[மண்டேலாவுடன் ஒப்பிடப்பட்ட நாமல் ராஜபக்ஷ ; வலுக்கும் விமர்சனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/namal-rajapaksa-compared-to-nelson-mandela-1789391685"></link>
            <id>https://jvpnews.com/article/namal-rajapaksa-compared-to-nelson-mandela-1789391685</id>
            <summary type="text">தென்னாபிரிக்க முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலாவின் சிறை வாழ்க்கைக்கும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் சிறை வாசத...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">தென்னாபிரிக்க முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலாவின் சிறை வாழ்க்கைக்கும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் சிறை வாசத்திற்கும் இடையே எந்தவொரு ஒப்பீடும் செய்ய முடியாது என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நஜித் இந்திக தெரிவித்துள்ளார்.</p><p style="text-align: justify; ">

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாமல் ராஜபக்ச, அநுராதபுரத்தில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மக்கள் பேரணியை குறிப்பிட்டு நெல்சன் மண்டேலாவின் கூற்றை மேற்கோள் காட்டியிருந்தார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bed5a898-7bdf-4b5e-af9b-14e7d22fb4cc/26-6aa7f3471970a.webp' /></p><p style="text-align: justify; ">"சிலரை கஷ்டங்கள் உடைத்துவிடும், ஆனால் சிலரை அது வலிமையாக்கும்" என்ற மண்டேலாவின் வார்த்தைகளை அவர் குறிப்பிட்டிருந்தார்.</p><p style="text-align: justify; ">
இதற்கு பதிலளிக்கும் வகையில் கருத்து தெரிவித்துள்ள நஜித் இந்திக, தென்னாபிரிக்காவின் இனவெறி ஆட்சிக்கு எதிராக போராடி 27 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த ஒருவருடன் நாமல் ராஜபக்ச தன்னை ஒப்பிட்டுக்கொள்வது பொருத்தமானதா எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
நெல்சன் மண்டேலா அடக்குமுறைக்கும் இனவெறி முறைமைக்கும் எதிராக போராடியதற்காகவே சிறையில் அடைக்கப்பட்டார் என்றும், பின்னர் தென்னாபிரிக்காவின் ஜனாதிபதியாகி நாட்டின் மாற்றத்திற்கு தலைமை தாங்கினார் என்றும் சுட்டிக்காட்டிய நஜித் இந்திக, ராஜபக்ச குடும்பத்தின் ஆட்சிப் பதிவுகளையும் கடுமையாக விமர்சித்துள்ளார்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-14T13:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள 'மூக்குத்தி அம்மன் 2' டீசர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/mookuthi-amman-2-teaser-1789379221"></link>
            <id>https://viduppu.com/article/mookuthi-amman-2-teaser-1789379221</id>
            <summary type="text">நடிகை நயன்தாரா மற்றும் இயக்குநர் சுந்தர் சி கூட்டணியில் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் திரைப்படம் மூக்குத்தி அம்மன் 2. 

முதல் பாகத்தின் வெற்றியை த...</summary>
            <content type="html"><![CDATA[<p>நடிகை நயன்தாரா மற்றும் இயக்குநர் சுந்தர் சி கூட்டணியில் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் திரைப்படம் மூக்குத்தி அம்மன் 2. 

முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இப்படம் உருவாகி இருப்பதால் இப்படத்தின் மீது அதீத எதிர்பார்ப்பு உள்ளது. </p><p>இப்படத்தில் ரெஜினா, சினேகா, குஷ்பூ, ஊர்வசி, யோகி பாபு, துனியா விஜய், மைனா நந்தினி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கிறார்கள். மேலும், ஹிப் ஹாப் ஆதி இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
</p><p>
இந்த நிலையில், இன்று விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷலாக மூக்குத்தி அம்மன் 2 திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இந்த டீசரில் இப்படம் வருகிற நவம்பர் 6-ஆம் தேதி தீபாவளிக்கு வெளியாகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/UUfAemccAJ0" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-09-14T13:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[பதவி விலகலை அறிவித்த சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எம்.பி அப்துல் வாஸித்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/m-s-abdul-wahid-resigns-mp-seat-vacant-1789391035"></link>
            <id>https://tamilwin.com/article/m-s-abdul-wahid-resigns-mp-seat-vacant-1789391035</id>
            <summary type="text">ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை பிரதிநிதித்துவப்படுத்தும் தேசிய
பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். அப்துல் வாஹித், இன்று (14) முதல் நடைமுறைக்கு வரு...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை பிரதிநிதித்துவப்படுத்தும் தேசிய
பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். அப்துல் வாஹித், இன்று (14) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகியுள்ளார்.</p><p>
அவர் தனது பதவி விலகல் கடிதத்தை நாடாளுமன்ற பதில் செயலாளர் நாயகம் ஹன்ச
அபேரத்னவிடம் முறைப்படி கையளித்துள்ளார்.</p><p>

அப்துல் வாஹித் செப்டம்பர் 14 ஆம் திகதி முதல் எம்.பி பதவியிலிருந்து
விலகியுள்ளதாக பதில் செயலாளர் நாயகம் ஹன்ச அபேரத்ன, தேர்தல் ஆணைக்குழுவின்
தவிசாளருக்கு கடிதம் மூலம் உறுதிப்படுத்தியுள்ளார்.</p><h2>நாடாளுமன்றத் தேர்தல்கள்&nbsp;</h2><p>
</p><p>
இதனைத் தொடர்ந்து, பத்தாவது நாடாளுமன்றத்தில் வெற்றிடம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக
பதில் செயலாளர் நாயகம் தேர்தல் ஆணைக்குழுவுக்கு உத்தியோகபூர்வமாக
அறிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ffaafed3-4fc7-4427-90b2-552c3b22e2a1/26-6aa7f3da1b01a.webp' /></p><p>
</p><p>
1981 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க நாடாளுமன்றத் தேர்தல்கள் சட்டத்தின் 64(5) ஆம்
பிரிவின் விதிகளுக்கமைய இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
</p><p>
வெற்றிடமாகவுள்ள தேசிய பட்டியல் அமைச்சர் இடத்தை நிரப்ப தேர்தல் ஆணைக்குழு
சட்ட விதிகளின்படி தேவையான அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுக்கும் என
தெரிவித்துள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-14T13:26:50+00:00</updated>
        </entry>
    </feed>
