<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-07-26T05:55:14+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தியாவின் புதிய கல்வி அமைச்சராக பிரல்ஹாத் ஜோஷி நியமனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/pralhad-joshi-named-india-s-education-minister-1785041380"></link>
            <id>https://tamilwin.com/article/pralhad-joshi-named-india-s-education-minister-1785041380</id>
            <summary type="text">மத்திய நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகத்துறை அமைச்சராக உள்ள
பிரல்ஹாத் ஜோஷி, இந்தியாவின் புதிய கல்வி அமைச்சராக கூடுதல்
பொறுப்பேற்றுள்ளார்....</summary>
            <content type="html"><![CDATA[<p>மத்திய நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகத்துறை அமைச்சராக உள்ள
பிரல்ஹாத் ஜோஷி, இந்தியாவின் புதிய கல்வி அமைச்சராக கூடுதல்
பொறுப்பேற்றுள்ளார்.
</p><p>இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் பரிந்துரையை ஏற்று, குடியரசு தலைவர் திரௌபதி
முர்மு இதற்கான அதிகாரப்பூர்வ உத்தரவை வெளியிட்டுள்ளார்.</p><p></p><h2>இந்தியாவின் புதிய கல்வி அமைச்சர்</h2><p>

பரீட்சை வினாத்தாள்கள் கசிந்த விவகாரத்தில் நாடு முழுவதும் எழுந்த எதிர்ப்பைத்
தொடர்ந்து, முன்னாள் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியிலிருந்து விலகியிருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ab031950-09fc-4e50-8ef7-56d80b31cc32/26-6a6594ae59295.webp' />&nbsp;&nbsp;</p><p>'காக்ரோச் ஜனதா கட்சி' (CJP) அமைப்பின் தலைமையில் 'ஜென் ஜி' (Gen Z) இளைஞர்கள்
நடத்திய தீவிரமான போராட்டங்களின் அழுத்தத்தாலேயே இந்த திடீர் முடிவு
எட்டப்பட்டுள்ளது.</p><p>
</p><p>இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்கள் வாயிலாக ஒருங்கிணைந்த இளைஞர்களின்
தொடர் எதிர்ப்பால், 36 நாட்களாக நீடித்து வந்த போராட்டம் தற்போது முடிவுக்கு
வந்துள்ளது.</p><p>
கர்நாடக மாநிலத்தை சேர்ந்த மூத்த பாஜக தலைவரான பிரல்ஹாத் ஜோஷி, இதற்கு
முன்னதாக நாடாளுமன்ற விவகாரங்கள், நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை அமைச்சராகப்
பணியாற்றிய அனுபவம் கொண்டவராவார். </p><p>தற்போது உணவு மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறைகளுடன் சேர்த்து கல்வித்
துறையையும் இவர் கவனித்துக் கொள்கிறார்.</p><p>
பரீட்சை முகமைகளின் செயல்பாடுகளைச் சீரமைப்பது, கசிவு விவகாரங்களால்
பாதிக்கப்பட்ட மாணவர்களின் நம்பிக்கையை மீண்டும் பெறுவது மற்றும் வரவிருக்கும்
மாநிலத் தேர்தல்களுக்கு முன் இளைஞர்களின் கொந்தளிப்பைத் தணிப்பது ஆகியவையே
புதிய கல்வி அமைச்சரின் முதன்மைப் பணிகளாக இருக்கும் என
எதிர்பார்க்கப்படுகிறது.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-26T05:55:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை பெற்றோருக்கு அவசர எச்சரிக்கை ; குழந்தைகள் தொடர்பில் அவதானமாயிருங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/urgent-warning-issued-for-sri-lankan-parents-1785045173"></link>
            <id>https://jvpnews.com/article/urgent-warning-issued-for-sri-lankan-parents-1785045173</id>
            <summary type="text">காய்ச்சலால் பாதிக்கப்படும் குழந்தைகளை தாமதமின்றி மருத்துவ சிகிச்சைக்கு அழைத்துச் செல்லுமாறு பெற்றோரிடம் சுகாதாரப் பிரிவினர் வலியுறுத்தியுள்ளனர்.


...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">காய்ச்சலால் பாதிக்கப்படும் குழந்தைகளை தாமதமின்றி மருத்துவ சிகிச்சைக்கு அழைத்துச் செல்லுமாறு பெற்றோரிடம் சுகாதாரப் பிரிவினர் வலியுறுத்தியுள்ளனர்.
</p><p style="text-align: justify;">


கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் தற்போது டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சுமார் 50 குழந்தைகள் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலையின் பணிப்பாளர், விசேட வைத்திய நிபுணர் பிரதீப் ரத்னசேகர தெரிவித்துள்ளார்.</p><p style="text-align: justify;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/664c53cb-a7b9-464c-b89e-935856ce1ae4/26-6a65a0b6bfe63.webp' /></p><h2 style="text-align: justify;">பெற்றோருக்கு அறிவுறுத்தல்&nbsp;</h2><p>
</p><p style="text-align: justify;">


அவர்களில் நான்கில் ஒரு பகுதியினர் தீவிரமான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p style="text-align: justify;">


இந்நிலைமை மேலும் அதிகரிக்கும் பட்சத்தில், வைத்தியசாலையின் கொள்ளளவை விட நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம் காணப்படுவதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.
</p><p style="text-align: justify;">


எனவே, குழந்தைகளுக்கு காய்ச்சல் ஏற்பட்டால், வீடுகளில் வைத்து சுயமாக சிகிச்சையளிப்பதைத் தவிர்த்து, தாமதமின்றி அருகிலுள்ள அரசாங்க வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்று மருத்துவ ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளுமாறு பெற்றோருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;">
</p><p style="text-align: justify;">


வீட்டிலேயே கை வைத்தியம் செய்வதன் மூலம் குழந்தைக்கு உரிய சிகிச்சை வழங்குவதற்கான முக்கியமான நேரம் வீணாகக்கூடும் என சுட்டிக்காட்டியுள்ள விசேட வைத்திய நிபுணர் பிரதீப் ரத்னசேகர, குழந்தைகளின் உயிரை தேவையற்ற ஆபத்தில் ஆழ்த்தாமல் உரிய நேரத்தில் மருத்துவ சிகிச்சையைப் பெற்றுக்கொள்ளுமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.</p><p style="text-align: justify;">



இந்நிலையில் நாட்டின் இந்த ஆண்டில் இதுவரை பதிவாகியுள்ள டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 81,511 ஆக உயர்ந்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
</p><p style="text-align: justify;">


இக்காலப்பகுதியில் டெங்கு நோயினால் 61 மரணங்கள் பதிவாகியுள்ளதாக அத்திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.



அதிக எண்ணிக்கையிலான நோயாளர்கள் இந்த ஜூலை மாதத்திலேயே பதிவாகியுள்ளனர்.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;"> </p><p style="text-align: justify;">அதற்கமைய, இம்மாதத்தின் கடந்த சில நாட்களில் மட்டும் 26,136 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
</p><p style="text-align: justify;">


மேலும், கடந்த ஜூன் மாதத்திலும், ஜூலை மாதத்தின் இதுவரை வரையான காலப்பகுதியிலும் மட்டும் 47,670 நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது



அத்துடன், நாட்டில் தற்போது 175 அதி அபாய வலயங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.&nbsp;&nbsp;</p><p style="text-align: justify;"></p>]]></content>
            <updated>2026-07-26T05:52:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[7.5 பில்லியன் டொலரைக் கடந்த இலங்கைக்கான இந்திய உதவிகள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/india-s-assistance-to-sri-lanka-crosses-7-5-bn-usd-1785040889"></link>
            <id>https://ibctamil.com/article/india-s-assistance-to-sri-lanka-crosses-7-5-bn-usd-1785040889</id>
            <summary type="text">இலங்கைக்கு இந்தியா வழங்கிய உதவிகள் குறித்து&amp;nbsp;இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா கருத்து தெரிவித்துள்ளார்.அதன்படி, இலங்கைக்கான இந்தியாவின்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கைக்கு இந்தியா வழங்கிய உதவிகள் குறித்து&nbsp;இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா கருத்து தெரிவித்துள்ளார்.</p><p>அதன்படி, இலங்கைக்கான இந்தியாவின் உதவிகள் 7.5 பில்லியன் அமெரிக்க டொலர்களைக் கடந்துள்ளதாகவும், இதில் 850 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமான தொகை நன்கொடைகளாக வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.</p><p>“இலங்கையில் பாலி மொழி ஆய்வுகளை வலுப்படுத்துதல்“ என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>டித்வா புயல் மீட்பு நடவடிக்கை</h2><p>அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், இந்தியாவின் உதவிகள் நாட்டின் 25 மாவட்டங்களிலும் உட்கட்டமைப்பு, வீடமைப்பு, சுகாதாரம், வாழ்வாதாரம், புனர்வாழ்வு, கல்வி, விவசாயம், புதுப்பிக்கத்தக்க சக்தி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பயன்படுத்தப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8f5c3d37-7c6e-472b-898b-29a077165374/26-6a659ad51c67b.webp' /></p><p>
</p><p>
இலங்கை, இந்தியாவின் 'அயல்நாடு முதலில்' என்ற கொள்கை மற்றும் 'விஷன் மஹாசாகர்' திட்டத்தின் முக்கிய அங்கமாக இருக்கின்றது. பெரும் நெருக்கடிகளின்போது இலங்கைக்கு முதலில் உதவ முன்வந்த நாடாக இந்தியா செயற்பட்டுள்ளது.
</p><p>
சமீபத்திய 'டித்வா' புயல் மீட்பு நடவடிக்கைகள், பொருளாதார நெருக்கடி மற்றும் கொரோனா தொற்றுக் காலங்களில் இந்தியா வழங்கிய உதவிகள் விரைவானதாகவும் சரியான நேரத்திலும் நிபந்தனையற்றதாகவும் இருந்தது.</p><p> இலங்கையின் நெருங்கிய அயல்நாடாக இந்தியா, வரலாற்று மற்றும் கலாசார உறவுகளைத் தாண்டி வர்த்தகம், முதலீடு மற்றும் அபிவிருத்தி ஒத்துழைப்பிலும் உறவை விரிவுபடுத்தியுள்ளது” என சந்தோஷ் ஜா தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-26T05:45:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[பொதுமக்களை மிரட்டிய காவல்துறை அதிகாரி...! எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sri-lanka-si-suspended-for-misconduct-1785042195"></link>
            <id>https://ibctamil.com/article/sri-lanka-si-suspended-for-misconduct-1785042195</id>
            <summary type="text">கடமைக்கு ஒவ்வாத வகையில் நடந்து கொண்டதுடன் பொதுமக்களிடம் அச்சுறுத்தும் தொனியில் தர்க்கத்தில் ஈடுபட்டமைக்காக உப காவல்துறை பரிசோதகர் ஒருவர் பணி இடைநிறுத்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கடமைக்கு ஒவ்வாத வகையில் நடந்து கொண்டதுடன் பொதுமக்களிடம் அச்சுறுத்தும் தொனியில் தர்க்கத்தில் ஈடுபட்டமைக்காக உப காவல்துறை பரிசோதகர் ஒருவர் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
குறித்த விடயத்தை காவல்துறை தலைமையகம் அறிவித்துள்ளது.
</p><p>
வதுபிட்டிவல முதலீட்டு மண்டல காவல்துறை சாவடியில் கடமையாற்றி வந்த உப காவல்துறை பரிசோதகர் ஒருவரே இவ்வாறு இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார்.</p><p>
</p><p></p><h2>சீர்கேடான நடவடிக்கை&nbsp;</h2><p>இது தொடர்பில் உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் இலங்கை காவல்துறை விளக்கமளித்துள்ளது.
</p><p>
மேலும் தெரிவித்துள்ள காவல்துறை, “கடந்த 2026 ஜூலை 23 ஆம் திகதி காலை 10:45 மணியளவில் வதுபிட்டிவல வைத்தியசாலைக்கு அருகில் உள்ள தனியார் நிறுவனமொன்றிற்கு முன்னால் சீருடையில் நின்றவாறு கடமைக்கு ஒவ்வாத வகையில் நடந்துகொண்டுள்ளார்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ee8ab723-a903-45f5-bf66-9fa7d528384a/26-6a659c3f24474.webp' /></p><p>அத்துடன் பொதுமக்களிடம் அச்சுறுத்தும் வகையிலான வார்த்தைகளைப் பயன்படுத்தித் தர்க்கத்திலும் ஈடுபட்டுள்ளார்.
</p><p>
குறித்த அதிகாரியின் இத்தகைய சீர்கேடான நடவடிக்கை தொடர்பாகக் கவனம் செலுத்தியுள்ள காவல்துறை உயர் அதிகாரிகள், அவருக்கு எதிராக உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் இந்தச் பணி இடைநிறுத்த நடவடிக்கையை எடுத்துள்ளனர்.</p><p>
</p><p></p><h2>&nbsp;தவறான நடவடிக்கை&nbsp;</h2><p>குறித்த அதிகாரியின் இத்தகைய தவறான நடவடிக்கை இலங்கை காவல்துறை சேவைக்கும் முழுமையான அரச சேவைக்கும் பெரும் அவப்பெயரை ஏற்படுத்தியுள்ளது.</p><p> 

இது ஏனைய அதிகாரிகளுக்கும் தவறான முன்னுதாரணமாக அமைவதுடன் அவரை மேலும் சேவையில் வைத்திருப்பது காவல்துறை சேவையின் கீர்த்திநாமத்திற்கும் பெருமைக்கும் களங்கத்தை ஏற்படுத்தும் என்பதால், நிறுவன விதிக் கோவையின் பிரிவுகளுக்கு அமைவாக அவர் உடனடியாகப் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார்.</p><p>
</p><p><iframe src="https://www.facebook.com/plugins/post.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2Fsrilankapoliceofficial%2Fposts%2Fpfbid0RN7YeY99PwQQ1MgyN9riaumoy73Ct54YiF2YoHqbsZMgH5ms74e6S4KAoHsBu5rYl&show_text=true&width=500" width="500" height="770" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share"></iframe></p><p>பொதுமக்களின் நம்பிக்கையையும் மரியாதையையும் பெற்ற ஒழுக்கமான காவல்துறை சேவையைப் பேணுவதே தங்களது முதன்மை நோக்கம்” என தெரிவித்துள்ளது.
</p><p>
மேலும், சட்டம் மற்றும் ஒழுக்கத்தைப் பாதுகாக்க வேண்டிய அதிகாரிகளின் இத்தகைய நாகரிகமற்ற அல்லது பொருத்தமற்ற நடத்தைகளை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் உரிமைகளுக்காக நீதியின் பக்கம் நிற்க இலங்கை காவல்துறை சேவை கடமைப்பட்டுள்ளது எனவும் இலங்கை காவல்துறை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-26T05:45:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[12 ராசிக்காரர்களின் மிகப்பெரிய பலவீனங்கள்! உங்க ராசிக்கு என்ன தெரியுமா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/what-s-t-biggest-weakness-of-each-zodiac-signs-1784991622"></link>
            <id>https://manithan.com/article/what-s-t-biggest-weakness-of-each-zodiac-signs-1784991622</id>
            <summary type="text">ஜோதிட நம்பிக்கைகளின்படி, ஒவ்வொரு ராசிக்கும் தனித்துவமான பலம் மற்றும் பலவீனங்கள் இருப்பதாகக் கருதப்படுகிறது. ஒருவர் பிறந்த ராசியைப் பொறுத்து அவர்களின் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜோதிட நம்பிக்கைகளின்படி, ஒவ்வொரு ராசிக்கும் தனித்துவமான பலம் மற்றும் பலவீனங்கள் இருப்பதாகக் கருதப்படுகிறது. </p><p>ஒருவர் பிறந்த ராசியைப் பொறுத்து அவர்களின் குணநலன்கள், சிந்தனை முறை மற்றும் செயல்பாடுகள் அமையும் என்ற கருத்து தொன்று தொட்டு நம்பட்டு வருகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f7aa45f2-f4b6-49e6-9de2-36c3ee882ecf/26-6a64df9707cc0.webp' /></p><p>அந்தவகையில், சிலர் தன்னம்பிக்கையுடன் இருப்பார்கள்; சிலர் உணர்ச்சிவசப்படுபவர்களாகவும், எளிதில் கோபப்படுபவர்களாகவும் அல்லது முடிவெடுப்பதில் தயக்கம் காட்டுபவர்களாகவும் இருக்கலாம்.</p><p>

ஒருவரின் பலவீனங்களை அறிந்து கொள்வது குறைகளை சுட்டிக்காட்டுவதற்காக அல்ல; மாறாக, தங்களை நன்றாகப் புரிந்து கொண்டு, முன்னேற்றம் தேவைப்படும் பகுதிகளை அறிந்து கொள்வதற்கான வாய்ப்பாகவே எடுத்துக்கொள்ள வேண்டும்.</p><p>அப்படி மேஷம் முதல் மீனம் வரையான 12&nbsp; ராசிக்குரிய மிகப்பெரிய பலவீனம் என்ன என்பதை இந்த பதிவி்ல் விரிவாக பார்க்கலாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4347021d-9895-416e-a454-f732b5141090/26-6a64df97ad489.webp' /></p><h2>12 ராசிகளுக்குமான பலவீனங்கள்</h2><p><b>மேஷம்</b></p><p>
மேஷ ராசியின் அதிபதி செவ்வாய். செவ்வாயின் ஆற்றல் காரணமாக மேஷ ராசிக்காரர்கள் துணிச்சலானவர்களாகவும், வேகமாக செயல்படுபவர்களாகவும் இருப்பார்கள். ஆனால் இவர்களின் மிகப்பெரிய பலவீனம் என்னவென்றால், எந்த ஒரு விஷயத்தையும் முழுமையாக யோசிக்காமல் அவசரமாக முடிவெடுத்து விடுவார்கள். பின்னர் அந்த முடிவு சரியானதா என்று சிந்தித்து வருத்தப்படுவதும் இவர்களின் இயல்பாக இருக்கும்.</p><p><b>
ரிஷபம்</b></p><p>
ரிஷப ராசியின் அதிபதி சுக்கிரன். இந்த ராசிக்காரர்கள் பொறுமை, நிலைத்தன்மை மற்றும் உறுதியான மனப்பான்மை கொண்டவர்கள்.ஆனால் அதுவே சில நேரங்களில் இவர்களின் பலவீனமாக மாறிவிடும். ஒரு விஷயத்தில் தங்கள் நிலைப்பாட்டை எளிதில் மாற்றிக்கொள்ள மாட்டார்கள்.இதனால் சமரசம் செய்வதும், மற்றவர்களின் கருத்தை ஏற்றுக்கொள்வதும் இவர்களுக்கு சற்று கடினமாக இருக்கும்.</p><p><b>
மிதுனம்
</b></p><p>மிதுன ராசியின் அதிபதி புதன்.புதனின் அருளால் மிதுன ராசிக்காரர்கள் புத்திசாலிகளாகவும், வேகமாக சிந்திக்கக்கூடியவர்களாகவும் இருப்பார்கள்.ஆனால் இவர்களின் மிகப்பெரிய பலவீனம் மனம் அடிக்கடி மாறுவதுதான்.</p><p> ஒரே முடிவில் நீண்ட நேரம் உறுதியாக இருக்க முடியாமல், சூழ்நிலைக்கு ஏற்ப தங்கள் எண்ணங்களை மாற்றிக் கொள்வார்கள்.இதனால் முக்கியமான முடிவுகளை எடுப்பதில் குழப்பம் ஏற்படலாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e04be8a0-2c22-42bc-b74e-e996a7d26d36/26-6a64df985d8ae.webp' /></p><p><b>
கடகம்
</b></p><p>கடக ராசியின் அதிபதி சந்திரன். இந்த ராசிக்காரர்கள் மிகவும் உணர்ச்சிவசப்படக்கூடியவர்கள்.இவர்களின் மிகப்பெரிய பலவீனம் என்னவென்றால், சிறிய விஷயங்களைக்கூட மனதில் வைத்துக்கொண்டு நீண்ட நேரம் அதைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருப்பார்கள். இதனால் தேவையற்ற மனஅழுத்தத்தையும் கவலையையும் சந்திக்க நேரிடலாம்.</p><p><b>சிம்மம் </b></p><p>சிம்ம ராசியின் அதிபதி சூரியன். இந்த சூரியனை அதிபதியாக கொண்ட சிம்ம ராசிக்காரர்களிடம் இருக்கும் பலவீனமே அதிக பிடிவாதம், கோபம் மற்றும் ஆதிக்கம் ஆகும். இது தவிர தன்னைப் பற்றி யார் எதைச் சொன்னாலும் இவர்களால் எளிதில் ஏற்றுக்கொள்ள முடியாது. இது இவர்களின் உறவில் பாதிப்பை ஏற்படுத்தலாம்.</p><p><b> கன்னி</b></p><p> கன்னி ராசியின் அதிபதி புதன். இந்த கன்னி ராசியைச் சேர்ந்தவர்களிடம் உள்ள மிகப்பெரிய பலவீனம் எல்லாவற்றையும் சிறப்பாக செய்ய முயற்சிப்பது. ஒருவேளை செய்ய முடியாவிட்டால் மிகுந்த வருத்தப்படுவார்கள். இதனால் வாழ்வில் அதிக பிரச்சினைகளை சந்திப்பார்கள்.</p><p><b>
துலாம்
</b></p><p>துலாம் ராசியின் அதிபதி சுக்கிரன். இந்த ராசிக்காரர்கள் சமநிலையையும் நீதியையும் விரும்புபவர்கள். ஆனால் ஒரு முடிவை எடுப்பதற்கு முன் அனைத்து கோணங்களிலும் அதிகமாக யோசிப்பது இவர்களின் பலவீனமாகும். இதன் காரணமாக சரியான நேரத்தில் முடிவெடுக்க முடியாமல், வாழ்க்கையில் கிடைக்கும் சில நல்ல வாய்ப்புகளை தவறவிடும் சூழல் ஏற்படலாம்.
</p><p><b>
விருச்சிகம்
</b></p><p>விருச்சிக ராசியின் அதிபதி செவ்வாய். இந்த ராசிக்காரர்கள் ஆழமான உணர்வுகளையும், உறுதியான நம்பிக்கையையும் கொண்டவர்கள். ஆனால் ஒருவர்மீது வைத்த நம்பிக்கை உடைந்துவிட்டால், அதை மீண்டும் உருவாக்குவது இவர்களுக்கு மிகவும் கடினம். ஒருமுறை மனதில் ஏற்பட்ட காயத்தை எளிதில் மறக்க மாட்டார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/92a65f68-8c01-4db0-a841-711c838f90a9/26-6a64df990c330.webp' /></p><p>
</p><p><b>
தனுசு</b></p><p>
தனுசு ராசியின் அதிபதி குரு பகவான். இந்த ராசிக்காரர்கள் நேர்மையையும் உண்மையையும் மிகவும் மதிப்பவர்கள். மனதில் இருப்பதை நேரடியாகப் பேசும் பழக்கம் இவர்களிடம் இருக்கும். ஆனால் அந்த வெளிப்படையான பேச்சு சில நேரங்களில் மற்றவர்களின் மனதை புண்படுத்தும். இதுவே இவர்களின் முக்கிய பலவீனமாக கருதப்படுகிறது.</p><p><b>

மகரம்
</b></p><p>மகர ராசியின் அதிபதி சனி பகவான். இந்த ராசிக்காரர்கள் கடின உழைப்பாளிகள். தங்கள் இலக்கை அடைவதற்காக முழுமையாக வேலையில் கவனம் செலுத்துவார்கள். ஆனால் இதன் காரணமாக குடும்பத்தினரையும், நண்பர்களையும், உறவுகளையும் கவனிக்க தவறிவிடுவார்கள். இதனால் உறவுகளில் இடைவெளி அல்லது கருத்து வேறுபாடுகள் உருவாக வாய்ப்பு உள்ளது.
</p><p><b>
கும்பம்
</b></p><p>கும்ப ராசியின் அதிபதி சனி பகவான். இந்த ராசிக்காரர்கள் ஆழமாக சிந்திப்பவர்கள். ஆனால் தங்கள் மனதில் இருக்கும் உணர்வுகளையும் கவலைகளையும் வெளிப்படையாக பகிர்ந்து கொள்ள மாட்டார்கள். எல்லாவற்றையும் மனதிற்குள்ளேயே வைத்துக்கொள்வதால், இவர்களை மற்றவர்கள் முழுமையாக புரிந்துகொள்வது சற்று சிரமமாக இருக்கும்.
</p><p><b>
மீனம்
</b></p><p>மீன ராசியின் அதிபதி குரு பகவான். இந்த ராசிக்காரர்கள் கற்பனைத் திறன் அதிகம் கொண்டவர்களாகவும், மிகவும் கருணை உள்ளவர்களாகவும் இருப்பார்கள். ஆனால் சில நேரங்களில் யதார்த்தத்தை எதிர்கொள்வதை விட கற்பனை உலகில் அதிகமாக வாழ விரும்புவார்கள். அதோடு, சிறிய விஷயங்களுக்குக்கூட எளிதில் உணர்ச்சிவசப்படுவதால் மனஅழுத்தத்தையும் ஏமாற்றத்தையும் சந்திக்க நேரிடலாம்.</p><p><b>இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;&nbsp;</b></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-26T05:43:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[தர்மேந்திர பிரதான் ராஜினாமா: கல்வி அமைச்சகத்தின் கூடுதல் பொறுப்பு பிரகலாத் ஜோஷிக்கு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/prahlad-joshi-appointed-education-minister-1785043138"></link>
            <id>https://ibctamilnadu.com/article/prahlad-joshi-appointed-education-minister-1785043138</id>
            <summary type="text">நீட் போராட்டம் எதிரொலி: தர்மேந்திர பிரதான் ராஜினாமா; 3 கோரிக்கைகளும் நிறைவேறியதால் போராட்டம் வாபஸ்

நீட் இளநிலைத் தேர்வு வினாத்தாள் கசிவைக் கண்டித்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீட் போராட்டம் எதிரொலி: தர்மேந்திர பிரதான் ராஜினாமா; 3 கோரிக்கைகளும் நிறைவேறியதால் போராட்டம் வாபஸ்

நீட் இளநிலைத் தேர்வு வினாத்தாள் கசிவைக் கண்டித்து இளைஞர்கள் முன்னெடுத்த தொடர் போராட்டத்தின் எதிரொலியாக, மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்தார்.</p><p> இதையடுத்து, தங்களின் மூன்று முக்கிய கோரிக்கைகளையும் அரசு ஏற்றுக்கொண்டதால், கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தனது போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0413b87c-1934-4c44-b787-dd99497fa915/26-6a659cf48751b.webp' /></p><p>

நீட் தேர்வு முறைகேட்டுக்கு தார்மீகப் பொறுப்பேற்று தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையுடன், கடந்த மாதம் 6ஆம் தேதி முதல் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் டெல்லி ஜந்தர் மந்தரில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். </p><p>நாடு முழுவதும் இளைஞர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் ஆதரவு அதிகரித்த நிலையில், நாட்டின் நலனையும் மாணவர்களின் எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டு தனது பதவியை ராஜினாமா செய்வதாக தர்மேந்திர பிரதான் அறிவித்தார்.
</p><p>
இதையடுத்து, போராட்டத்தின் முதல் கோரிக்கை நிறைவேறியதால் டெல்லி ஜந்தர் மந்தரில் இளைஞர்கள் வெற்றியைக் கொண்டாடினர். அப்போது பேசிய கரப்பான் பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிஜித் தீப்கே, "இளைஞர்களுடன் மோதாதீர்கள்; இதுதான் ஜனநாயகம்" என்று தெரிவித்தார்.</p><p>

இதற்கிடையில், எஞ்சிய இரண்டு கோரிக்கைகள் தொடர்பாக மத்திய அமைச்சர்கள் ஜெ.பி. நட்டா மற்றும் ஜிதேந்திர சிங்குடன் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி பிரதிநிதிகள் மூன்றாவது கட்ட பேச்சுவார்த்தை நடத்தினர். </p><p>பேச்சுவார்த்தைக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த ஜெ.பி. நட்டா, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகள் திரும்பப் பெறப்படும் என்றும், நீட் தேர்வு தொடர்பாக உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அதிகபட்ச இழப்பீடு வழங்குவது குறித்து அரசு பரிசீலிக்கும் என்றும் உறுதியளித்தார்.
</p><p>
அரசு மூன்று கோரிக்கைகளுக்கும் இணக்கம் தெரிவித்ததைத் தொடர்ந்து, தங்களது போராட்டத்தை முடித்துக்கொள்வதாக கரப்பான் பூச்சி ஜனதா கட்சி அறிவித்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7f967351-02d4-48d8-a877-5a09ba8564b5/26-6a659de33f7fc.webp' /></p><h2>அமைச்சர் பிரகலாத் ஜோஷிக்கு கல்வித்துறை&nbsp;</h2><p>
</p><p>
இதனிடையே, தர்மேந்திர பிரதானின் ராஜினாமாவை குடியரசுத் தலைவர் ஏற்றுக்கொண்ட நிலையில், மத்திய உணவு வழங்கல் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷிக்கு கல்வித்துறை கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது.</p><p>

கர்நாடகாவின் தார்வாட் மக்களவைத் தொகுதியிலிருந்து தொடர்ந்து ஐந்து முறை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பிரகலாத் ஜோஷி, முன்னதாக நாடாளுமன்ற விவகாரங்கள், நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை அமைச்சராகப் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4bd687d1-44e2-429d-8899-7fc6c67c0553/26-6a659de3f0daa.webp' /></p><p> </p><p>நிர்வாகத் திறன், பிரச்சினைகளை அமைதியாகக் கையாளும் திறன் மற்றும் எதிர்க்கட்சிகளுடன் ஒருங்கிணைந்து செயல்படும் அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் அவருக்கு கல்வித்துறை பொறுப்பு வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.</p><p>

தற்போது, நீட் தேர்வு சர்ச்சையால் மாணவர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள நம்பிக்கையின்மையைப் போக்கி, தேசிய அளவிலான தேர்வுகளில் வெளிப்படைத்தன்மை மற்றும் நம்பகத்தன்மையை உறுதி செய்வதே பிரகலாத் ஜோஷி எதிர்கொள்ளும் முக்கிய சவாலாக இருக்கும்.</p>]]></content>
            <updated>2026-07-26T05:41:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[நடிகர் பாலகிருஷ்ணாவிற்கு 3 மணி நேரமாக நடந்த அறுவை சிகிச்சை.. இப்போது எப்படி இருக்கிறார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/balakrishna-three-hour-knee-surgery-successfull-1785039856"></link>
            <id>https://cineulagam.com/article/balakrishna-three-hour-knee-surgery-successfull-1785039856</id>
            <summary type="text">பாலகிருஷ்ணா&amp;nbsp;தெலுங்கில் முன்னணி நடிகரான பாலகிருஷ்ணா தற்போது தனது 111-வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை இயக்குநர் கோபிசந்த் மலினேனி இ...</summary>
            <content type="html"><![CDATA[<h2>பாலகிருஷ்ணா&nbsp;</h2><p>தெலுங்கில் முன்னணி நடிகரான பாலகிருஷ்ணா தற்போது தனது 111-வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை இயக்குநர் கோபிசந்த் மலினேனி இயக்கி வருகிறார். இப்படத்தில் நடிகை காஜல் அகர்வால் கதாநாயகியாக நடித்துள்ளார்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2aad2941-60fd-469f-9288-a213849a98f0/26-6a658bf301597.webp' /></p><p>இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், சண்டை காட்சி ஒன்று சமீபத்தில் படமாக்கப்பட்டது. இந்த காட்சியில் டூப் பயன்படுத்தாமல் நடிகர் பாலகிருஷ்ணா நடித்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக அவர் கீழே விழுந்துள்ளார். இதில் அவரது இடது முழங்காலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.</p><h2>அறுவை சிகிச்சை</h2><p>
</p><p>
விபத்துக்கு பிறகு உடனடியாக <a href="https://www.youtube.com/watch?v=YuzCuhTQEmc" target="_blank">பாலகிருஷ்ணா </a>தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின் மேல் சிகிச்சைக்காக ஐதராபாத்துக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு இடது முழங்காலில் ஏற்பட்ட தசை கிழிவுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/674323dc-60ef-4d52-bad2-d11e507b1f6b/26-6a658bf3b0214.webp' /></p><p></p><p>சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நிறைவடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

அறுவை சிகிச்சை முடிந்த நிலையில், தற்போது மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ள பாலகிருஷ்ணா, முழுமையாக குணமடைந்த பிறகு மீண்டும் தனது 111-வது படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என படக்குழு தெரிவித்துள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-26T05:40:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[மூத்த மகனின் தோஷத்தை போக்க நினைத்த தாய்க்கு மகன்களின் கண்முன்னே நடந்தேறிய சம்பவம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/mother-killed-after-being-trapped-under-lorry-1785044161"></link>
            <id>https://jvpnews.com/article/mother-killed-after-being-trapped-under-lorry-1785044161</id>
            <summary type="text">சிறிய திப்பார் (டிப்பர்) லொறிக்குக் கீழே சிக்கி, தாயும் இரு புதல்வர்களும் விபத்துக்குள்ளானதில் தாய் உயிரிழந்ததுடன், இரு புதல்வர்களும் காயமடைந்து தம்பு...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">சிறிய திப்பார் (டிப்பர்) லொறிக்குக் கீழே சிக்கி, தாயும் இரு புதல்வர்களும் விபத்துக்குள்ளானதில் தாய் உயிரிழந்ததுடன், இரு புதல்வர்களும் காயமடைந்து தம்புள்ளை அடிப்படை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தம்புள்ளை காவல்துறை தெரிவிக்கிறது.
</p><p style="text-align: justify;">
தம்புள்ளை - மாத்தளை பிரதான வீதியின் கபுவத்தை பகுதியில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/619c1541-bff0-40ab-bc03-54b25a26187b/26-6a659cc3773b0.webp' /></p><h2 style="text-align: justify; ">தீவிர சிகிச்சை</h2><p>
</p><p style="text-align: justify; ">
விபத்தில் உயிரிழந்தவர், தம்புள்ளை கபுவத்தை பகுதியைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தாயான 46 வயதுடையவராவார்.
</p><p style="text-align: justify; ">
அவரது 19 மற்றும் 14 வயதுடைய இரு புதல்வர்களும் இவ்விபத்தில் காயமடைந்துள்ளனர். இதில் மூத்த மகன் தம்புள்ளை மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
உயிரிழந்த நான்கு பிள்ளைகளின் தாய் குவைத் நாட்டில் வீட்டுப் பணிப்பெண்ணாக வேலை செய்துவிட்டு, கடந்த 8ஆம் திகதி இலங்கைக்கு வந்துள்ளதாக உறவினர்கள் கூறுகின்றனர்.
</p><p style="text-align: justify;">
மூத்த மகனின் தோசத்துக்குச் செய்யவேண்டிய நேர்த்தியை நிறைவேற்றுவதற்குத் தேவையான துணிமணிகள் மற்றும் பிற பொருட்களைப் பெற்றுக்கொள்வதற்காக நகருக்குச் செல்வதற்காக வீதியோரமாக நின்றுகொண்டிருந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை மீறி வந்த டிப்பர் லொறி மோதியதாக வசிப்பவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.</p><p style="text-align: justify;"></p>]]></content>
            <updated>2026-07-26T05:36:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[சீனாவில் நூற்றுக்கணக்கான விமான சேவைகள் ரத்து... லட்சக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/typhoon-noul-china-hong-kong-1785044255"></link>
            <id>https://news.lankasri.com/article/typhoon-noul-china-hong-kong-1785044255</id>
            <summary type="text">நௌல் புயல் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் கரையைக் கடந்த நிலையில், ஹொங்ஹொங் உள்ளிட்ட தெற்கு சீனாவில் பலத்த காற்றும் கனமழையும் இயல்பு வாழ்க்கையை மொத்தமாகப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நௌல் புயல் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் கரையைக் கடந்த நிலையில், ஹொங்ஹொங் உள்ளிட்ட தெற்கு சீனாவில் பலத்த காற்றும் கனமழையும் இயல்பு வாழ்க்கையை மொத்தமாகப் புரட்டிப்போட்டுள்ளது.</p><h2>உயர் எச்சரிக்கை</h2><p>
</p><p>நௌல் புயல் காரணமாக குவாங்டாங் மாகாணத்தில் லட்சக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டனர்; அப்பகுதி உயர் எச்சரிக்கை நிலையில் வைக்கப்பட்டதோடு, நூற்றுக்கணக்கான விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3e32cfa0-1848-49b5-a5d3-fb2e1d020da5/26-6a659e6fe1f2f.webp' /></p><p> </p><p>தெற்கு குவாங்டாங் மாகாணத்தில் ஹுய்ஜோ நகரின் ஹுய்டோங் மாவட்டக் கடற்பகுதியில், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சுமார் 3:50 மணியளவில் நௌல் புயல் கரையைக் கடந்ததாக சீனாவின் தேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. </p><p>இதனிடையே, இந்த ஆண்டில் இதுவரை சீனாவில் கரையைக் கடந்த புயல்களிலேயே நௌல் மிகவும் சக்திவாய்ந்ததாக இருந்தது என்று சீனாவின் உத்தியோகப்பூர்வ செய்தி நிறுவனமான சின்ஹுவா தெரிவித்துள்ளது.</p><p></p><p> </p><p>மணிக்கு 110 கி.மீ வேகத்தில் அதிகபட்ச தொடர் காற்றுடன் வீசிய நௌல் புயல், ஞாயிற்றுக்கிழமையன்று குவாங்டாங்கின் உள்பகுதிக்குள் நகர்ந்து படிப்படியாக வலுவிழந்துள்ளதாகவும், இதனால் அப்பகுதியின் சில பகுதிகளில் பலத்த காற்று மற்றும் கனமழை பெய்து வருவதாகவும் ஹொங்ஹொங் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. </p><p>அரசு வானொலி வெளியிட்டுள்ள தகவலில்
குவாங்டாங் மாகாணத்தில் பாதுகாப்பு கருதி 715,000-க்கும் மேற்பட்ட மக்கள் குடியிருப்புகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9b0ad86f-1893-4982-84f4-4956e1d723ef/26-6a659e6e838eb.webp' /></p><h2>பலத்த காற்றும் மழையும்</h2><p> </p><p>அப்பகுதியில் ஞாயிற்றுக்கிழமைக்கான ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டன. குவாங்டாங் மாகாணத்தின் கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ள ஹுய்லாய் (Huilai) மாவட்டத்தில் பல மரங்கள் வேரோடு சாய்ந்து கிடந்ததாக அரசு செய்தி நிறுவனமான சிசிடிவி (CCTV) செய்தி வெளியிட்டுள்ளது.</p><p> ஞாயிற்றுக்கிழமையன்று சுமார் 350 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாக ஹொங்ஹொங் விமான நிலைய நிர்வாகம் தெரிவித்துள்ளது. சூறாவளி வீசிய காலத்தில் நகரம் முழுவதும் குறைந்தது ஒன்பது பேர் காயமடைந்ததாக ஹொங்ஹொங் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1ffd18e7-e2fe-457d-b5f7-4171cc154bc5/26-6a659e6f3f65d.webp' /></p><p>
</p><p>
இந்த மாதத் தொடக்கத்தில், Bavi சூறாவளி பலத்த காற்று மற்றும் மழையுடன் கிழக்கு சீனாவைப் புரட்டிப்போட்டதால், 20 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வெளியேற்றப்பட்டனர். </p><p>இது ஜூலை 11 அன்று கரையை அடைந்தது. மற்றொரு சூறாவளியான 'மேசக்' (Maysak), ஜூலை 3 அன்று தென் சீனாவில் கரையை அடைந்தது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-26T05:35:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜனாதிபதி செயலகத்திற்கு சொந்தமான 26 வாகனங்கள் தொடர்பில் வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/information-26-vehicles-presidential-secretariat-1785033750"></link>
            <id>https://tamilwin.com/article/information-26-vehicles-presidential-secretariat-1785033750</id>
            <summary type="text">ஜனாதிபதி செயலகத்தின் பெயரில் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்ட 26 வாகனங்கள் தொடர்பான உண்மையான தகவல்கள் இதுவரை சரிபார்க்கவில்லை என...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜனாதிபதி செயலகத்தின் பெயரில் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்ட 26 வாகனங்கள் தொடர்பான உண்மையான தகவல்கள் இதுவரை சரிபார்க்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.</p><p> தேசிய தணிக்கை அலுவலகம் இதனை தெரிவித்துள்ளது.</p><p>&nbsp;</p><h2>வாகனங்களின் உண்மை விபரம்</h2><p>
</p><p>
இந்த வாகனங்கள் காணாமல்போயுள்ளதா அல்லது ஏதேனும் நிறுவனம் அல்லது தனிநபரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதா என்பதற்கு எந்த எழுத்துப்பூர்வ ஆதாரமும் சமர்ப்பிக்கப்படவில்லை என கூறப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/049b1db3-8e2d-4b45-b79b-ff946ad2ed4d/26-6a659b6df1a3a.webp' /></p><p>

 இந்த 26 வாகனங்களை சரிபார்க்க குற்றப்புலனாய்வு பிரிவு விசாரணைகளை நடத்தி வருவதாக, ஜனாதிபதி செயலகம் 2025, மே 28 அன்று தணிக்கைக்கு தெரிவித்திருந்ததாகவும் அறிக்கைகள் குறிப்பிடுகின்றன.
</p><p>
இருப்பினும், இந்த ஆண்டு மார்ச் 19 ஆம் திகதி நிலவரப்படி, குறிப்பிட்ட வாகனங்கள் உண்மையில் இருக்கின்றனவா என்பதை சரிபார்க்க முடியவில்லை என்று கூறப்படுகின்றது.</p><p></p><p></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-26T05:30:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதிகாலையில் நடுவீதியில் பறிபோன 4 வயதுச் சிறுவனின் உயிர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/4-year-old-boy-dies-in-early-morning-1785043137"></link>
            <id>https://jvpnews.com/article/4-year-old-boy-dies-in-early-morning-1785043137</id>
            <summary type="text">நேற்று அதிகாலை வேளையில் வெலிகட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அம்பகஹ சந்தி மற்றும் ராஜகிரிய இடைப்பட்ட வீதியில், ராஜகிரிய நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிளொன்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நேற்று அதிகாலை வேளையில் வெலிகட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அம்பகஹ சந்தி மற்றும் ராஜகிரிய இடைப்பட்ட வீதியில், ராஜகிரிய நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிளொன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
</p><p>
 

 இதன்போது மோட்டார் சைக்கிளில் பயணித்த சிறுவன் ஒருவன் எதிர் திசையில் வந்த கார் ஒன்றில் மோதியதில் படுகாயமடைந்து IDH வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/20595f9a-50d0-42a0-8f1e-aef7ca6ae065/26-6a6598c32d3da.webp' /></p><p> 

 

இவ்வாறு உயிரிழந்தவர் மீகொட பகுதியைச் சேர்ந்த 4 வயதுச் சிறுவன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p> </p><p>விபத்தையடுத்து காரின் சாரதியை பொலிஸார் கைது செய்துள்ளதுடன் வெலிகட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-26T05:19:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரான் மீதான தாக்குதல்கள் தற்காலிகமாக நிறுத்தம்...! ட்ரம்பின் அதிரடி அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/trump-pauses-us-strikes-on-iran-temporarily-1785039367"></link>
            <id>https://ibctamil.com/article/trump-pauses-us-strikes-on-iran-temporarily-1785039367</id>
            <summary type="text">ஈரான் மீதான அடுத்தகட்டத் தாக்குதல்களை நடத்தும் திட்டங்களைத் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தற்காலிகமாக ஒத்திவைக்க தீர்மானித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரான் மீதான அடுத்தகட்டத் தாக்குதல்களை நடத்தும் திட்டங்களைத் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தற்காலிகமாக ஒத்திவைக்க தீர்மானித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
</p><p>
போரை மேலும் தீவிரப்படுத்துவது மத்திய கிழக்கில் அமைந்துள்ள பென்டகனின் பேட்ரியாட் ஏவுகணை எதிர்ப்புத் தடுப்பான்கள் மற்றும் பிற வான் பாதுகாப்பு வெடிமருந்துகளின் இருப்பை ஆபத்தான நிலைக்குக் குறைத்துவிடும்.
</p><p>
இதனாலேயே இந்த முடிவை ட்ரம்ப் எடுத்ததாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p></p><h2>மூத்த ஆலோசகர்கள்</h2><p>

ட்ரம்ப் மற்றும் அவரது மூத்த ஆலோசகர்கள் அத்தோடு அமைச்சரவை உறுப்பினர்களுக்கு இடையே நடைபெற்ற உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>

தாக்குதல்களை நிறுத்துமாறு ட்ரம்ப் பிறப்பித்த உத்தரவு ஒரு தற்காலிகமானதா அல்லது இந்த அமைதியான சூழல் நீடிக்குமா என்பது தெளிவாகத் தெரியவில்லை என ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ee0ab35c-2c0d-4a72-a6f3-86aec93d3e98/26-6a6592ce293bc.webp' /></p><p>இருப்பினும், இராஜதந்திர பேச்சுவார்த்தைகளுக்குக் கூடுதல் வாய்ப்பளிக்கும் ட்ரம்பின் விருப்பத்தையும் மற்றும் தற்போதைய அளவிலான தாக்குதல்கள் அதன் செயல்திறனின் எல்லையை எட்டிவிட்டன என்பதையுமே இத்தீர்மானம் பிரதிபலிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
</p><p>
இருப்பினும், இராஜதந்திர முயற்சிகள் தோல்வியடைந்தால் மீண்டும் மிகப்பெரிய அளவிலான இராணுவத் தாக்குதல்களைத் தொடங்குவதற்கான சாத்தியமான திட்டங்களை அமெரிக்க இராணுவம் ஏற்கனவே தயார் செய்து வருவதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-26T05:17:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Malaivanjan</name>
            </author>
            <title type="text"><![CDATA[தோட்டத் தொழிலாளர்களுக்கு புற்றுநோய் பரிசோதனை - அறிகுறிகளுடன் 18 பேர் அடையாளம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/cancer-screening-for-plantation-workers-1785039842"></link>
            <id>https://tamilwin.com/article/cancer-screening-for-plantation-workers-1785039842</id>
            <summary type="text">ஹட்டன் பிளான்டேசனுக்கு சொந்தமான 8 தோட்டங்களை சேர்ந்த சுமார் 850
தோட்டத்தொழிலாளர்களுக்கு வாய்ப்புற்று நோய் மற்றும் மார்பகப்புற்றுநோய் பரிசோதனைகள் நடத்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹட்டன் பிளான்டேசனுக்கு சொந்தமான 8 தோட்டங்களை சேர்ந்த சுமார் 850
தோட்டத்தொழிலாளர்களுக்கு வாய்ப்புற்று நோய் மற்றும் மார்பகப்புற்றுநோய் பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.</p><p>குறித்த பரிசோதனைகள் நேற்றைய தினம் (25.07.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>புற்றுநோய் பரிசோதனை&nbsp;</h2><p>
தோட்டத்தொழிலாளர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கில், ஹட்டன்
பிளான்டேசன் நிறுவனமும் இலங்கை புற்றுநோய் சங்கமும் இணைந்து இந்த விசேட
வைத்திய முகாமை ஹட்டன் டி.கே.டப்ளியு கலாசார மண்டபத்தில் ஏற்பாடு செய்திருந்தன.</p><p>இதன்போது புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வும் வழங்கப்பட்டுள்ளதுடன் இந்த முகாமில் கலந்து கொண்ட 850 பேரில், சுமார் 400 பேருக்கு மார்பகப்
புற்றுநோய் பரிசோதனைகள் மேற்கொண்ட போது, மார்பகப் புற்றுநோய்க்கான ஆரம்ப
அறிகுறிகளுடன் 8 பேரும், வாய்ப்புற்றுநோய்க்கான அறிகுறிகளுடன் 10 பேரும்
அடையாளம் காணப்பட்டதாக ஹட்டன் பிளான்டேசன் மனிதவள முகாமையாளர் டிலான் பத்மசிறி
தெரிவித்துள்ளார்.</p><p></p><p>
</p><p>அடையாளம் காணப்பட்ட அனைவரையும் மேலதிக பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகளுக்காக
அருகிலுள்ள வைத்தியசாலைகளுக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகள்
முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
</p><p>மேலும், வைத்திய முகாமில் பங்கேற்ற தொழிலாளர்களின் வசதிக்காக இலவச
போக்குவரத்து, தேநீர் மற்றும் உணவு வசதிகளும் ஹட்டன் பிளான்டேசன் நிறுவனத்தால்
ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
</p><p>இந்த வைத்திய முகாம், தோட்டத் தொழிலாளர்களிடையே புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே
கண்டறிந்து, துரிதமான சிகிச்சைகளை வழங்க வழிவகுக்கும் முக்கியமான சுகாதார
முயற்சியாகக் கருதப்படுகிறது.</p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-26T05:14:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கட்டுநாயக்கவில் போதைப்பொருளுடன் கனடா நாட்டவர் கைது!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/canadian-national-arrested-with-over-20kg-drugs-1785039573"></link>
            <id>https://ibctamil.com/article/canadian-national-arrested-with-over-20kg-drugs-1785039573</id>
            <summary type="text">இலங்கைக்குள்&amp;nbsp;போதைப்பொருளை&amp;nbsp;கடத்த முயன்ற கனடா நாட்டவர் ஒருவர்&amp;nbsp;கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது&amp;nbsp;செய்யப்பட்டுள்ளார். குறித்த ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கைக்குள்&nbsp;போதைப்பொருளை&nbsp;கடத்த முயன்ற கனடா நாட்டவர் ஒருவர்&nbsp;கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது&nbsp;செய்யப்பட்டுள்ளார். </p><p>குறித்த நபர் 20 கிலோகிராம் 'ஹஷிஷ்' என்ற போதைப்பொருளை நாட்டிற்குள் கடத்த முயன்ற போதே இன்று (26.07.2026) இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக&nbsp;இலங்கை சுங்கம் தெரிவித்துள்ளது.</p><p>சந்தேக நபரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட ஹஷிஷ் என்ற போதைப்பொருளின் மதிப்பு 201.89 மில்லியன் ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><h2>கனடா நாட்டவர் கைது</h2><p>கைது செய்யப்பட்ட குறித்த நபர் ஓவியராகப் பணிபுரியும் 27 வயதுடையவர் என்று காவல்துறை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/257937e3-d1dc-482f-8e9c-d4f54df86732/26-6a65945d8f150.webp' /></p><p>இவர் கனடாவின் டொராண்டோவில் போதைப்பொருட்களை வாங்கியதாகவும், பின்னர் கத்தாரின் தோஹாவிற்குப் பயணம் செய்து, அதிகாலை 2:30 மணியளவில் கத்தார் ஏர்வேஸ் விமானம் QR-662 மூலம் இலங்கைக்கு வந்தடைந்ததாகவும் மேலதிக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.&nbsp;</p><p>இந்த நிலையில் இலங்கை சுங்க அதிகரிகள் அவரது பயணப் பைகளைச் சோதனையிட்டபோது, ​ 80 கட்டிகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 20 கிலோகிராம் மற்றும் 117 கிராம் பழுப்பு நிற ஹஷிஷைக் கண்டுபிடித்துள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.&nbsp;</p><p>
 

சந்தேக நபரும், கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களும் மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள காவல்துறை போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-26T05:01:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்திய நாடாளுமன்ற உறுப்பினரை சந்தித்த திலித் ஜயவீர]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/dilith-jayaweera-meets-indian-parliamentarian-1785039411"></link>
            <id>https://tamilwin.com/article/dilith-jayaweera-meets-indian-parliamentarian-1785039411</id>
            <summary type="text">இந்திய நாடாளுமன்ற உறுப்பினரும் பிரபல எழுத்தாளருமான சசி தரூருக்கும், சர்வஜன
அதிகாரம் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திலித் ஜயவீரவுக்கும்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்திய நாடாளுமன்ற உறுப்பினரும் பிரபல எழுத்தாளருமான சசி தரூருக்கும், சர்வஜன
அதிகாரம் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திலித் ஜயவீரவுக்கும்
இடையே விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.</p><p>இந்த சந்திப்பானது நேற்று முன்தினம் (24.07.2026) இடம்பெற்றுள்ளது.</p><p></p><h2>விசேட சந்திப்பு</h2><p>
</p><p>
கொழும்பில் அமைந்துள்ள சர்வஜன அதிகாரம் கட்சியின் அலுவலகத்தில்&nbsp; இந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவரும் சந்தித்துக்
கலந்துரையாடியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ac59598b-01e7-49f1-89b3-bf1a7fb4fcca/26-6a658b026909c.webp' /></p><p></p><p></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-26T05:01:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[முடியின் ஆரோக்கியத்தை அதிகரிக்க உதவும் 5 உணவுகள்.., என்னென்ன தெரியுமா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/5-foods-that-prevent-hair-fall-in-tamil-1785041716"></link>
            <id>https://news.lankasri.com/article/5-foods-that-prevent-hair-fall-in-tamil-1785041716</id>
            <summary type="text">பொதுவாக அனைவருக்கும் இருக்கும் பெரும்பாலும் பிரச்சனைகளில் முடி பிரச்சனைகளும் ஒன்று.

முடி உதிர்தல், பொடுகு தொல்லை, வழுக்கை, வலுவிழந்த முடி மற்றும் ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொதுவாக அனைவருக்கும் இருக்கும் பெரும்பாலும் பிரச்சனைகளில் முடி பிரச்சனைகளும் ஒன்று.
</p><p>
முடி உதிர்தல், பொடுகு தொல்லை, வழுக்கை, வலுவிழந்த முடி மற்றும் நரைமுடி என பல்வேறு முடி பிரச்சனைகளை சந்தித்து வருகின்றோம்.
</p><p>
இரும்புச்சத்து, புரதம், வைட்டமின்கள் இல்லாதது, அதிகப்படியான கவலை, மன அழுத்தம், ஹார்மோன் மாற்றம், உடல்நலப் பிரச்சனைகள் மற்றும் ஹார்மோன் வேறுபாடுகள் இதற்கு முக்கிய காரணங்களாகும்.
</p><p>
அந்தவகையில், முடியின் ஆரோக்கியத்தை அதிகரிக்க உதவும் 5 உணவுகள் குறித்து பார்க்கலாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cbaa48a6-5843-408d-8c5c-6e44432f979a/26-6a65944f7a847.webp' /></p><h2>என்னென்ன உணவுகள்?
</h2><p><b>
முட்டை- </b>இதில் நிறைந்துள்ள புரதம், பயோட்டின், வைட்டமின்கள் முடியின் வேர்களை வலுப்படுத்தி, முடி உதிர்வை குறைத்து, அடர்த்தியாக வளர உதவுகிறது.
</p><p><b>
பசலைக் கீரை- </b>இதில் உள்ள வைட்டமின் A, C, ஃபோலேட், இரும்புச் சத்து முடி உதிர்வைத் தடுத்து, உச்சந்தலையின் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது.</p><p></p><p><b>

சர்க்கரை வள்ளிக்கிழங்கு- </b>பீட்டா-கரோட்டின் மற்றும் வைட்டமின் C நிறைந்த இது உச்சந்தலையின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, முடியை வலுப்படுத்துகிறது.
</p><p><b>
தயிர்- </b>தயிரை உணவில் சேர்த்தால் முடி வேர்களை வலுப்படுத்தி, பொடுகை குறைத்து, முடியை மென்மையாக்குகிறது.</p><p><b>

நெல்லிக்காய்- </b>வைட்டமின் C மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த நெல்லிக்காய் முடி உதிர்வை குறைத்து, முடி உடைவதைத் தடுக்கும்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-26T05:00:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[அருணை அடித்த முத்து.. காரணம் என்ன? சிறகடிக்க ஆசை சீரியல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/muthu-gets-angry-on-arun-in-siragadikka-aasai-1785037672"></link>
            <id>https://cineulagam.com/article/muthu-gets-angry-on-arun-in-siragadikka-aasai-1785037672</id>
            <summary type="text">சிறகடிக்க ஆசைசின்னத்திரையில் மிகவும் விறுவிறுப்பான கதைக்களத்தில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் சிறகடிக்க ஆசை. மனோஜ் - ரோகிணி விவாகரத்து விஷயம் பரபரப்பாக ச...</summary>
            <content type="html"><![CDATA[<h2>சிறகடிக்க ஆசை</h2><p>சின்னத்திரையில் மிகவும் விறுவிறுப்பான கதைக்களத்தில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் சிறகடிக்க ஆசை. மனோஜ் - ரோகிணி விவாகரத்து விஷயம் பரபரப்பாக சென்று கொண்டிருந்தது. ரோகிணி ஒரு கட்டத்தில் மனோஜுக்கு விவாகரத்து தந்துவிடலாம் என்கிற நிலைக்கு வந்துவிட்டார்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5576a78a-8fed-425d-bf48-9910bc238ae9/26-6a65836b3128a.webp' /></p><p></p><p>ஆனால், திடீரென அவர் மயங்கி விழ, ரோகிணி கர்ப்பமாக இருக்கிறார் என தெரியவந்தது. 

இதனால், விவாகரத்து தரமாட்டேன் என்கிற முடிவுக்கு வந்துவிட்டார். ரோகிணி விவாகரத்து தந்துவிடுவார் என நம்பி, இரண்டாம் திருமணம் செய்துகொண்டார் மனோஜ். ஆனால், விவாகரத்து கிடைக்கவில்லை; இதனால் ஆற்றில் ஒரு கால், சேற்றில் ஒரு கால் என மாட்டிக்கொண்டுள்ளார். </p><h2>

சீதாவை அடித்து துன்புறுத்தும் அருண்
</h2><p>
முத்துவின் மீதுள்ள கோபத்தால், தனது மனைவி சீதாவை அடித்து துன்புறுத்தி வருகிறார் அருண். நாளுக்கு நாள் இப்படியே செல்ல, தற்போது இந்த விஷயம் முத்துவிற்கு தெரியவருகிறது. இதனால், அருண் வீட்டிலுள்ள சீதாவை, மீனா வீட்டிற்கு அழைத்து செல்கிறார் முத்து. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a9d87a7e-0872-42e0-8e2e-9442b6166606/26-6a65836bdab66.webp' /></p><p>

பின், அருண் வீட்டிற்கு வரும் முத்து, 'இனி சீதா இங்கு வரமாட்டாள்' என கூற, 'என்ன நியாயம் கேட்க வந்திருக்கியா. அவ என் பொண்டாட்டி, நான் அடிப்பேன், என்ன வேணுமானாலும் செய்வேன், அதை கேட்க நீ யாருடா?' என கூற, அருணை அடிக்கிறார் முத்து. இதன்பின், சிறகடிக்க ஆசை சீரியலில் என்னென்ன நடக்கப்போகிறது என்பதை வரும் வாரம் பார்ப்போம்.</p>]]></content>
            <updated>2026-07-26T05:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பிய தாய் கோர விபத்தில் பலி - ஆபத்தான நிலையில் குழந்தைகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/dampulla-accident-mother-death-children-injury-1785040049"></link>
            <id>https://tamilwin.com/article/dampulla-accident-mother-death-children-injury-1785040049</id>
            <summary type="text">தம்புள்ளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தம்புள்ளை - கண்டி பிரதான வீதியின் கபுவத்த சந்திக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற...</summary>
            <content type="html"><![CDATA[<p>தம்புள்ளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தம்புள்ளை - கண்டி பிரதான வீதியின் கபுவத்த சந்திக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
</p><p>
நேற்று (25) காலை இடம்பெற்ற விபத்தில் பெண்ணின் இரு குழந்தைகளும் காயமடைந்த நிலையில் தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p></p><h2>பாதசாரி மீது மோதி விபத்து</h2><p>
</p><p>
தம்புள்ளை நோக்கிப்பயணித்த டிப்பர் ரக லொறியொன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகிச்சென்று பாதசாரியான பெண் மற்றும் இரு குழந்தைகள் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c0a321cc-ef63-4f9f-91d0-df32451f1b8d/26-6a65936d01ede.webp' /></p><p>நேர்த்திக்கடனை நிறைவேற்றுவதற்காக கதிர்காமம் செல்ல தயாராக ஆடைகள் மற்றும் பொருட்களை வாங்குவதற்காக தம்புள்ளை நகருக்கு சென்றபோது விபத்திற்குள்ளாகியுள்ளனர்.&nbsp;</p><p> 

இதன்போது மூவரும் காயமடைந்த நிலையில் தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் பெண் உயிரிழந்துள்ளார்.</p><p> 

இவ்வாறு உயிரிழந்தவர் கபுவத்த பகுதியைச் சேர்ந்த 44 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தாயான டி.எம். திலானி அரோஷா என்றும் தெரிவிக்கப்படுகின்றது.</p><h2>வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பிய தாய்</h2><p>

அவரது 19 மற்றும் 14 வயதுடைய இரண்டு மகன்களும் இந்த விபத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8266f406-ffcf-47d1-a937-56a5f3a6ad49/26-6a65936da806d.webp' /></p><p>இதேவேளை, 19 வயதான மூத்த மகன் தம்புள்ள வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.</p><p>இவர் பிரபல கல்லூரியில் பயிலும் ஒரு திறமையான தடகள வீரர் என்றும், இந்த ஆண்டு நடைபெறும் உயர்தர பரீட்சைக்கு தயாராகி வருவதாகவும்&nbsp;பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>
</p><p>
குறித்த பெண் குவைத்தில் வீட்டுப்பணிப்பெண்ணாக பணியாற்றிய பின்னர், எட்டு நாட்களுக்கு முன்பு இலங்கை திரும்பியதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.&nbsp;</p><p>இந்த விபத்து தொடர்பாக டிப்பர் லொரியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், தம்புள்ளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p> </p><p></p><p></p><p>&nbsp; &nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-26T04:56:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[பெர்லின் தன்பாலின விழா கூட்டத்தின் மீது பாய்ந்த வாகனம்: ஜேர்மன் சேன்சலர் எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/berlin-pride-van-crashes-into-1785041807"></link>
            <id>https://news.lankasri.com/article/berlin-pride-van-crashes-into-1785041807</id>
            <summary type="text">பெர்லினின் புறநகர்ப் பகுதியில் நடந்த தன்பாலின ஈர்ப்பாளர்களின் விழாவின் போது கார் ஒன்று அந்த மக்கள் மீது மோதியதில் குறைந்தது ஒருவர் மரணமடைந்ததுடன் 16 ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>பெர்லினின் புறநகர்ப் பகுதியில் நடந்த தன்பாலின ஈர்ப்பாளர்களின் விழாவின் போது கார் ஒன்று அந்த மக்கள் மீது மோதியதில் குறைந்தது ஒருவர் மரணமடைந்ததுடன் 16 பேர்கள் காயங்களுடன் தப்பியுள்ளனர்.</p><h2>கைது செய்யப்படவில்லை</h2><p>
</p><p>இச்சம்பவத்திற்கு காரணமானவர்கள் கட்டாயம் தண்டிக்கப்படுவார்கள் என ஜேர்மன் சேன்சலர் ஃப்ரெட்ரிக் மெர்ஸ் உறுதி அளித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d3bb71a9-137c-4e19-949d-870e185d36ed/26-6a6595166dd60.webp' /></p><p> </p><p>இந்த நிலையில், சனிக்கிழமை இரவு நடைபெற்றத் தாக்குதலில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் நபர், நகரின் இஸ்லாமியக் குழுக்களுடன் தொடர்புடையவர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், ஆனால் அவர் இதுவரை கைது செய்யப்படவில்லை என்றும் பெர்லின் காவல்துறை செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். </p><p>ஐரோப்பாவின் மிகப்பெரிய தன்பாலின ஈர்ப்பாளர்கள் நிகழ்வுகளில் ஒன்றை ஏற்பாட்டாளர்கள் பாதியிலேயே நிறுத்தும்படி இந்தத் தாக்குதல் சம்பவம் கட்டாயப்படுத்தியுள்ளது.</p><p></p><p> </p><p>
சமீபத்திய ஆண்டுகளில் தொடர்ச்சியாக நடந்த கொடூரமான வாகன மோதல் மற்றும் கத்தியால் தாக்குதல் சம்பவங்களால் ஜேர்மனி மக்கள் பதற்றத்தில் இருக்கும் வேளையில் இச்சம்பவம் நடந்துள்ளது.
</p><p>வெளிப்படையாகவே தாக்குதல் நடந்த நிலையில், பல மணி நேரங்களுக்குப் பிறகும் இதன் பின்னணி வெலியாகவில்லை, ஆனால் பிராண்டன்பர்க் கேட் அருகே உள்ள நகரின் மையப் பகுதியான டியர்கார்டன் பூங்காவிற்குள் வேகமாகப் புகுந்த அந்த வாகனம் பல பேர் மீது மோதியதாக காவல்துறை தெரிவித்துள்ளது. </p><p>அத்துடன், காயமடைந்தவர்கள் பலர் உயிருக்கு அச்சுறுத்தலான நிலையில் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். அன்று முன்னதாக நடைபெற்ற தன்பாலின மக்களின் அணிவகுப்புப் பாதைக்கு அருகில் உள்ள டியர்கார்டன் பூங்காவிற்குள், இரவு 10 மணிக்குச் சற்று முன்பு ஒரு வெள்ளை நிற வகானம் சென்று, நடைபாதையில் இருந்தவர்கள் மீது மோதியதுடன் ஒரு மரத்தின் மீதும் மோதி விபத்துக்குள்ளானதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ba1d4100-f8b0-4600-b80e-28e370285622/26-6a6595150f9a1.webp' /></p><p> ஆனால் அதன் பின்னர் அந்த வாகனத்தின் சாரதி மாயமாகியுள்ளதாகவும், அந்த சாரதி அல்லது தாக்குதலில் ஈடுபட்டவரை தீவிரமாகத் தேடி வருவதாகவும் பொலிசார் தெரிவித்தனர். </p><p>இதனிடையே, தாக்குதல் சம்பவத்தை அடுத்து ஒரு நபர் வாகனத்திலிருந்து வெளியேறி நடந்தே தப்பிச் சென்றதாக ஒருவர் கூறியதை Bild நாளேடு மேற்கோள் காட்டியுள்ளது.</p><h2>கிறிஸ்டோபர் ஸ்ட்ரீட் டே&nbsp;</h2><p> </p><p>ஞாயிற்றுக்கிழமையன்றும் ஜேர்மனியின் பல்வேறு மாகாணங்களைச் சேர்ந்த அதிகாரிகள் மற்றும் ஹெலிகொப்டர்களை உள்ளடக்கிய தேடுதல் நடவடிக்கை தலைநகர் முழுவதும் நடைபெற்றது. </p><p>இந்த நிலையில், இந்தக் கொடூரமான செயல் குறித்து முழுமையாக விசாரணை நடத்தப்படுவதையும், குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதையும் உறுதிசெய்யத் தானும் உள்விவகார அமைச்சர் அலெக்சாண்டர் டோப்ரிண்ட்-உம் வலியுறுத்துவோம் என்று சேன்சலர் மெர்ஸ் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.</p><p> ஜேர்மனியில் தீவிர வெப்ப அலை தணிந்து, இதமானக் கோடை வெயிலில் தன்பாலின ஈர்ப்பாளர்கள் தங்களின் 
அணிவகுப்பைக் கொண்டாடுவதற்காக, தலைநகரில் லட்சக்கணக்கான எண்ணிக்கையில் திரண்டிருந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bdb1b986-bc6f-46ac-85e5-adddfc5d9cd6/26-6a659515bdd2f.webp' /></p><p> </p><p>இதனிடையே, இந்தக் கொடூரமான தாக்குதலை நமது சுதந்திரமான மற்றும் பன்னாட்டு சமூகத்தின் மீதான தாக்குதல் என்று பெர்லின் மேயர் கை வெக்னர் குறிப்பிட்டுள்ளார். </p><p>ஜேர்மனியில் இந்த விழாவினை கிறிஸ்டோபர் ஸ்ட்ரீட் டே என்றே கொண்டாடுகின்றனர். அதன் வரலாற்றிலேயே முதல் முறையாக, இந்த ஆண்டு கிறிஸ்டோபர் ஸ்ட்ரீட் டே நிகழ்வுகள் வெள்ளிக்கிழமை இரவு ஒரு ஜனநாயக ஆதரவு அரசியல் பேரணியுடன் தொடங்கின. </p><p>அந்நிகழ்ச்சிக்கு எதிராக நடைபெற்ற தீவிர வலதுசாரிப் பிரிவினரின் எதிர்-போராட்டத்தின்போது, ​​காவல்துறையின் உத்தரவுகளை மீறியதற்காக ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-26T04:55:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை விமான நிலையத்தை பரபரப்பாக்கிய கனேடியர் ; சோதனையில் காத்திருந்த ஷாக்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/canadian-arriving-in-sri-lanka-arrested-1785041463"></link>
            <id>https://canadamirror.com/article/canadian-arriving-in-sri-lanka-arrested-1785041463</id>
            <summary type="text">கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக சுமார் 20 கிலோகிராம் &#039;ஹசீஸ்&#039; போதைப்பொருளை இலங்கைக்குள் கடத்த முயன்ற கனடா நாட்டவர் ஒருவர் கைது...</summary>
            <content type="html"><![CDATA[<p>கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக சுமார் 20 கிலோகிராம் 'ஹசீஸ்' போதைப்பொருளை இலங்கைக்குள் கடத்த முயன்ற கனடா நாட்டவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை சுங்கம் தெரிவித்துள்ளது.
</p><p>
 

கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் சந்தைப் பெறுமதி 200 மில்லியன் ரூபாய்க்கும் (ரூ. 20 கோடி) அதிகம் என மதிப்பிடப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e3e57b9d-ab9f-43bd-8b5a-24abf45c730a/26-6a659238a321c.webp' /></p><p>
</p><p>
 

விமான நிலைய சுங்க அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின்போதே சந்தேகநபர் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.&nbsp; &nbsp; &nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-07-26T04:51:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கைக்கு வந்த கனேடியர் அதிரடி கைது ; சோதனையில் சிக்கிய பொருட்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/canadian-arriving-in-sri-lanka-arrested-1785041197"></link>
            <id>https://jvpnews.com/article/canadian-arriving-in-sri-lanka-arrested-1785041197</id>
            <summary type="text">கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக சுமார் 20 கிலோகிராம் &#039;ஹசீஸ்&#039; போதைப்பொருளை இலங்கைக்குள் கடத்த முயன்ற கனடா நாட்டவர் ஒருவர் கைது...</summary>
            <content type="html"><![CDATA[<p>கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக சுமார் 20 கிலோகிராம் 'ஹசீஸ்' போதைப்பொருளை இலங்கைக்குள் கடத்த முயன்ற கனடா நாட்டவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை சுங்கம் தெரிவித்துள்ளது.
</p><p>
 

கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் சந்தைப் பெறுமதி 200 மில்லியன் ரூபாய்க்கும் (ரூ. 20 கோடி) அதிகம் என மதிப்பிடப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e655fca1-45c3-4b18-94e8-fc4844a8688f/26-6a65912ef0b2e.webp' /></p><p>
</p><p>
 

விமான நிலைய சுங்க அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின்போதே சந்தேகநபர் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.&nbsp; &nbsp; &nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-07-26T04:46:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[தாய்லாந்தில் கணவருடன் 36வது பிறந்தநாளை கொண்டாடிய நடிகை சாக்ஷி அகர்வால்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/sakshi-agarwal-celeb-36th-birthday-in-thailand-1785041644"></link>
            <id>https://viduppu.com/article/sakshi-agarwal-celeb-36th-birthday-in-thailand-1785041644</id>
            <summary type="text">சாக்ஷி அகர்வால்தமிழ் சினிமாவில் ராஜா ராணி என்ற படத்தின் மூலம் துணை நாயகியாக அறிமுகமானவர் நடிகை சாக்ஷி அகர்வால். அதன்பின் கன்னடம், மலையாளம் போன்ற மொழிக...</summary>
            <content type="html"><![CDATA[<h2>சாக்ஷி அகர்வால்</h2><p>தமிழ் சினிமாவில் ராஜா ராணி என்ற படத்தின் மூலம் துணை நாயகியாக அறிமுகமானவர் நடிகை சாக்ஷி அகர்வால். அதன்பின் கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளிலும் நடித்து வந்தவர் மிகவும் பிரபலமான, விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தான்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8cd373f6-1f2b-4aed-95f6-2a20602d6616/26-6a6592f8e6648.webp' /></p><p>
</p><p>
அதன்பின் சரியான சினிமா பக்கம் வரவில்லை, மாறாக போட்டோ ஷுட்களில் பிஸியானார். கடந்த ஆண்டு தன்னுடைய நீண்டநாள் காதலரை திருமணம் செய்து சர்ப்ரைஸ் கொடுத்தார். </p><p>இதனையடுத்து ஜூலை 20 ஆம் தேதி தன்னுடைய 36வது பிறந்தநாளை கொண்டாடிய சாக்ஷி, தற்போது தன் கணவருடன் தாய்லாந்து சென்று பர்த்டே பார்ட்டியை கொண்டாடியிருக்கிறார். கேக் வெட்டி கிளாமர் ஆடையில் எடுத்த புகைப்படங்களை தற்போது பகிர்ந்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-07-26T04:45:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தியாவில் 40,000 கிலோ நெய்யால் கட்டப்பட்ட அதிசயக் கோவில்! எங்குள்ளது தெரியுமா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/whtch-indian-temple-built-with-40-000-kg-of-ghee-1785039530"></link>
            <id>https://manithan.com/article/whtch-indian-temple-built-with-40-000-kg-of-ghee-1785039530</id>
            <summary type="text">பொதுவாகவே மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில், இந்தியா என்பது அதிசயங்களும் மர்மங்களும் நிறைந்த ஒரு தனித்துவமான நாடு. இங்கு இலட்சக்கணக்கான கோவில்கள் உள்ளன. அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொதுவாகவே மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில், இந்தியா என்பது அதிசயங்களும் மர்மங்களும் நிறைந்த ஒரு தனித்துவமான நாடு.</p><p> இங்கு இலட்சக்கணக்கான கோவில்கள் உள்ளன. அவற்றில் ஆயிரக்கணக்கான கோவில்கள் தங்களின் கட்டிடக்கலை, வரலாறு, மர்மங்கள் மற்றும் நம்ப முடியாத சிறப்புகளுக்கு பெயர்பெற்றவை என்றால் மிகையாகாது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3376286b-e2b3-4fe5-84a4-67da367c0658/26-6a658f3c22600.webp' /></p><p></p><p>அவற்றில் சில கோவில்கள் பல நூற்றாண்டுகளாக எண்ணற்ற கதைகளையும் அதிசயங்களையும் தன்னுள் சுமந்தபடி கம்பீரமாக நிற்கின்றன.

அப்படிப்பட்ட ஒரு கோவில் ராஜஸ்தானின் பாலைவன நகரமான பிகானேரில் அமைந்துள்ளது.</p><h2>நெய்யால்&nbsp; கட்டப்பட்டதா?&nbsp;</h2><p> தண்ணீர் பற்றாக்குறை நிலவிய காலத்தில், ஒரு துளி தண்ணீர்கூட பயன்படுத்தாமல், சுமார் 40,000 கிலோ தூய நெய்யைக் கொண்டு கட்டப்பட்ட 550 ஆண்டுகள் பழமையான கோவில் என்று சொன்னால் நம்புவீர்களா? </p><p>அதுவே 15-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த புகழ்பெற்ற பண்டசார் சமணக் கோவில். இந்தியாவின் சிறந்த கட்டிடக்கலை அதிசயங்களில் ஒன்றாக இது கருதப்படுகிறது.

இந்தக் கோவில் ராஜஸ்தானின் பிகானேரில் அமைந்துள்ள பண்டசார் சமணக் கோவில் ஆகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c0648c16-f80e-45b1-9a8c-1da82a0815f7/26-6a658f3cc6470.webp' /></p><p> </p><p>கோவிலைக் கட்டுவதற்கான சுண்ணாம்பு கலவையைத் தயாரிக்கும்போது தண்ணீருக்குப் பதிலாக சுமார் 40,000 கிலோ தூய நெய் பயன்படுத்தப்பட்டதாகப் பல தலைமுறைகளாகக் கூறப்பட்டு வருகிறது. இதுவே இந்தக் கோவிலின் மிகப் பெரிய சிறப்பாகக் கருதப்படுகிறது.</p><p>ஆனால் இதைவிட வியப்பூட்டும் மற்றொரு நம்பிக்கையும் உள்ளது. கோடைக்காலத்தில் வெப்பநிலை மிகவும் அதிகரிக்கும் நாட்களில், இந்தக் கோவிலின் பழமையான கல் தரைப்பகுதிகளில் இருந்து நெய் போன்ற பசை வெளியேறுவதாக அப்பகுதி மக்கள் குறிப்பிடுகின்றார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2fefb14e-1722-4212-bcbe-ff7e4a789239/26-6a658f3d741dd.webp' /></p><p></p><p>இதற்கான உறுதியான அறிவியல் ஆதாரம் இதுவரை இல்லை என்றாலும், இந்த நம்பிக்கை இன்று வரை பலரின் ஆச்சரியத்தைத் தூண்டி வருகிறது.

வரலாறு, பொறியியல், நாட்டுப்புறக் கதைகள் என எந்தக் கோணத்தில் பார்த்தாலும், இந்தக் கோவில் ராஜஸ்தானின் முக்கியமான கலாச்சார மற்றும் பாரம்பரியச் சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகத் திகழ்கிறமை குறிப்பிடத்தக்கது.</p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்<b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"> FOLLOW NOW</a></u></b></td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-26T04:39:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பகுதியில் இயங்கிய விபச்சார விடுதி ; பெண்ணுடன் பிடிபட்ட முகாமையாளர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/brothel-busted-in-tamil-area-residence-1785040603"></link>
            <id>https://jvpnews.com/article/brothel-busted-in-tamil-area-residence-1785040603</id>
            <summary type="text">அம்பாறை நகரில் விடுதி ஒன்றின் மறைவில் ரகசியமாக இயங்கிவந்த விபச்சார விடுதியொன்றைக் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மற்றும் பொலிஸார் இணைந்து சுற்றிவளைத்து...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">அம்பாறை நகரில் விடுதி ஒன்றின் மறைவில் ரகசியமாக இயங்கிவந்த விபச்சார விடுதியொன்றைக் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மற்றும் பொலிஸார் இணைந்து சுற்றிவளைத்துள்ளனர். </p><p style="text-align: justify;">இதன்போது, அங்கு முகாமையாளராகப் பணியாற்றிய நபர் உட்பட பெண் ஒருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.</p><p style="text-align: justify;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f5a2eb7e-724a-4799-ae82-c86ba2021711/26-6a658edcde6d2.webp' /></p><h2 style="text-align: justify;">&nbsp;சட்ட நடவடிக்கை</h2><p>
</p><p style="text-align: justify;">
 

அம்பாறை தலைமையகப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, உளவாளி ஒருவரைப் பயன்படுத்திப் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட திட்டமிட்ட நடவடிக்கையின்போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p style="text-align: justify;">
 

கைது செய்யப்பட்ட விடுதி முகாமையாளர் அக்கரைப்பற்றுப் பகுதியைச் சேர்ந்தவர் என்றும், அவருடன் கைது செய்யப்பட்ட பெண் கண்டி மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.</p><p style="text-align: justify;">

 

சந்தேகநபர்கள் இருவரையும் அம்பாறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான முதற்கட்ட சட்ட நடவடிக்கைகளை அம்பாறை தலைமையகப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-26T04:36:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ashik</name>
            </author>
            <title type="text"><![CDATA[மன்னார் வாழ்க்கை பெற்றான் கண்டல் புனித நீக்கிலார் ஆலய நுழைவாயில் - அலங்கார வளைவு - புதிய மணிக்கோபுரம் திறந்து வைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/mannar-life-pathar-kandal-holy-neekilaar-temple-1785039116"></link>
            <id>https://tamilwin.com/article/mannar-life-pathar-kandal-holy-neekilaar-temple-1785039116</id>
            <summary type="text">மன்னார் மறைமாவட்டம் அளவக்கை பங்கின் வாழ்க்கை பெற்றான் கண்டல் புனித
நீக்கிலார் ஆலய நுழைவாயில் அலங்கார வளைவு மற்றும் புதிய மணிக்கோபுரம் ஆகியவை
நேற்றும...</summary>
            <content type="html"><![CDATA[<p>மன்னார் மறைமாவட்டம் அளவக்கை பங்கின் வாழ்க்கை பெற்றான் கண்டல் புனித
நீக்கிலார் ஆலய நுழைவாயில் அலங்கார வளைவு மற்றும் புதிய மணிக்கோபுரம் ஆகியவை
நேற்றுமுன் தினம் (24.07.2026) திறந்து வைக்கப்பட்டன.
</p><p>புதிதாக அமைக்கப்பட்ட ஆலய நுழைவாயில் அலங்கார வளைவு மற்றும் புதிய
மணிக்கோபுரம் ஆகியவை மன்னார் மறை மாவட்ட
ஆயர் மேதகு அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகையால் ஆசீர்வதிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.</p><p></p><h2>திருப்பலி ஒப்புக்கொடுப்பு</h2><p>
</p><p>
அதனைத் தொடர்ந்து ஆயரின் தலைமையில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.</p><p>

இந்நிகழ்வில் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்பணி. கிறிஸ்து நேச ரட்னம் அடிகளார்
இ ஆயரின் செயலர் அருட்தந்தை அன்ரனி அடிகளாரும் கலந்து கொண்டிருந்தனர்.
</p><p>
அளவக்கை பங்குத்தந்தை அருட்பணி. யேசுபரநாதன் (டிக்சன்) அடிகளார் மற்றும் ஆலய
பங்கு மக்களின் பூரண ஒத்துழைப்பாலும் குறித்த நிகழ்வுகள் சிறப்பாக ஒழுங்கு
செய்யப்பட்டு இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-26T04:33:35+00:00</updated>
        </entry>
    </feed>
