<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-09-06T10:58:15+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[மகிந்த பெயரை கூறுமாறு கபில சந்திரசேனவிற்கு அழுத்தம்! மரணத்திற்கு முன் பிரமாணப் பத்திரத்தில் அம்பலம் - சாகரவின் தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sagara-kariyawasam-statement-about-namal-1788689626"></link>
            <id>https://tamilwin.com/article/sagara-kariyawasam-statement-about-namal-1788689626</id>
            <summary type="text">இலங்கையை விட்டுத் தப்பி சென்று 13 ஆண்டுகளாக அவுஸ்திரேலியாவில் வசித்து வரும் தொழிலதிபர் நிமல் பெரேரா அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் மட்டுமே, நாமல்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையை விட்டுத் தப்பி சென்று 13 ஆண்டுகளாக அவுஸ்திரேலியாவில் வசித்து வரும் தொழிலதிபர் நிமல் பெரேரா அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் மட்டுமே, நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டார் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளரும், சட்டத்தரணியுமான சாகர கரியவசம் தெரிவித்துள்ளார். </p><p>

2013ஆம் ஆண்டில் நடைபெற்றதாகக் கூறப்படும் ஏர்பஸ் பரிவர்த்தனை தொடர்பாக இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
ஊடக சந்திப்பில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.</p><h2>உடன்படிக்கை இரத்தானதால் இழப்பு</h2><p>

அவர் மேலும் தெரிவிக்கையில், 2013ஆம் ஆண்டில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தை மேம்படுத்துவதற்காக 08 ஏர்பஸ் விமானங்களை வாங்குவதற்கு மகிந்த ராஜபக்ச அரசாங்கம் ஒரு உடன்படிக்கை செய்து கொண்டதாகவும், 2015ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்த நல்லாட்சி அரசாங்கம் அந்த உடன்படிக்கையை இரத்து செய்தபோது, ​​அரசாங்கத்திற்கு 116 மில்லியன் டொலர்கள் (37 பில்லியன் ரூபாய்க்கும் மேல்) இழப்பு ஏற்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
</p><p>
இந்தப் பரிவர்த்தனையில் குற்றம் சாட்டப்பட்ட நிமல் பெரேரா, சம்பந்தப்பட்ட கணக்குகளுடன் தனக்கு எந்தத் தொடர்பும் இல்லை என முன்னர் பொலிஸாரிடம் தெரிவித்திருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ce8acfe1-745e-4e53-bf62-e3aab9eb6502/26-6a9d43bfb33e6.webp' /></p><p> </p><p>இருப்பினும், தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பிறகு, 13 ஆண்டுகள் கழித்து அவுஸ்திரேலியாவிலிருந்து நிமல் பெரேரா அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் மட்டுமே நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டது ஒரு கடுமையான பிரச்சினை என்று செயலாளர் குறிப்பிட்டார்.</p><h2>மகிந்தவின் பெயரை கூறுமாறு அழுத்தம்</h2><p> </p><p>

மேலும், இந்த சம்பவம் தொடர்பாக முன்னர் கைது செய்யப்பட்ட ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரியான கபில சந்திரசேன, இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் தனக்கு மரண அச்சுறுத்தல் விடுத்ததாகவும், மகிந்த ராஜபக்சவின் பெயரை கூறுமாறு அழுத்தம் கொடுத்ததாகவும், தனது மரணத்திற்கு முன்பு ஒரு பிரமாணப் பத்திரம் மூலம் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார் என சாகர கரியவசம் வெளிப்படுத்தினார்.</p><p> 

எந்தவொரு அறிவியல் சான்றுகளோ அல்லது வங்கிப் பதிவுகளோ இன்றி, தற்போதைய அரசாங்கம் அரசியல் பழிவாங்கும் நோக்கத்துடன் மட்டுமே இந்தச் செயல்முறையை நடத்துகிறது என்றும், இது ஜனநாயகத்திற்கு ஒரு மரண அடி என்றும் அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-06T10:55:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[அநுரவுக்கு ஐ.நா எச்சரிக்கை! ஜெனீவாவில் வெடிக்கும் இலங்கை விவகாரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/un-warns-anura-sri-lanka-issue-erupts-in-geneva-1788689306"></link>
            <id>https://ibctamil.com/article/un-warns-anura-sri-lanka-issue-erupts-in-geneva-1788689306</id>
            <summary type="text">ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர் ஆரம்பமாகவுள்ள நிலையில், இலங்கை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இணைந்து கொள்ள வேண்டும் என்ற அடிப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர் ஆரம்பமாகவுள்ள நிலையில், இலங்கை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இணைந்து கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் 
மனித உரிமைகள் அலுவலகம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.</p><p>

2024 ஆம் ஆண்டு இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள போதிலும் 2026 செப்டெம்பர் மாதம் ஜெனீவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகராலயம் வெளியிட்டுள்ள 16 பக்கங்களைக் கொண்ட அறிக்கை ஒரு கசப்பான நியத்தை உலகிற்கு எடுத்துச்சொல்கின்றது.</p><p>இந்தநிலையில், பயங்கரவாத தடைச்சட்டம் என்ற பெயரில் மனித உரிமை மீறல்களும் காணாமலாக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு நீதி மறுக்கப்படுவதும் தொடர்கின்றது.</p><p>
 
இது தொடர்பான மேலும் பல விடயங்களை ஐபிசி தமிழின் பார்வைகள் நிகழ்ச்சியில் காண்க....</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/3sJQMbscMNY" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-06T10:54:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[அநுர ஆட்சியின் இரண்டாவது வருடம்.. ஜனாதிபதி பங்கேற்கும் பிரம்மாண்ட பேரணி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/npp-government-2nd-year-anniversary-anura-speech-1788691268"></link>
            <id>https://tamilwin.com/article/npp-government-2nd-year-anniversary-anura-speech-1788691268</id>
            <summary type="text">தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கம் ஆட்சிக்கு வந்து இரண்டு வருடங்கள் நிறைவு பெற்றுள்ளன.இந்நிலையில், &quot;எங்கள் அரசாங்கம் - இரண்டு ஆண்டுகள், நாட்டிற்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கம் ஆட்சிக்கு வந்து இரண்டு வருடங்கள் நிறைவு பெற்றுள்ளன.</p><p>இந்நிலையில், "எங்கள் அரசாங்கம் - இரண்டு ஆண்டுகள், நாட்டிற்கு நன்மை” என்ற கருப்பொருளின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சித் தொடரின் ஆரம்ப நிகழ்வு, ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் தலைமையில் இன்று (06) புலத்சிங்களவில் ஆரம்பமாகியுள்ளது.
</p><p>
இந்நிகழ்வில் பெருமளவிலான அமைச்சர்கள், அரசியல் பிரதிநிதிகள் மற்றும் பிற முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டுள்ளனர். </p><p>இதேபோல், எதிர்காலத்தில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பல நிகழ்ச்சிகளைச் செயல்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/A6qZIoUMNZw" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-06T10:53:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் கரடி தாக்குதல்: ஒரு கரடியைக் சுட்டுக் கொன்ற அதிகாரிகள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/bear-killed-after-woman-attacked-near-whistler-1788690239"></link>
            <id>https://canadamirror.com/article/bear-killed-after-woman-attacked-near-whistler-1788690239</id>
            <summary type="text">கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள விஸ்லர் பகுதிக்கு அருகே, வெள்ளிக்கிழமை அன்று மலையேறிக் கொண்டிருந்த குழுவினர் மீது கரடி தாக்குதல் நடத்தி...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள விஸ்லர் பகுதிக்கு அருகே, வெள்ளிக்கிழமை அன்று மலையேறிக் கொண்டிருந்த குழுவினர் மீது கரடி தாக்குதல் நடத்தியதில், பெண் ஒருவர் காயமடைந்தார். அவர் ஹெலிகாப்டர் மூலம் அவசரமாக மீட்புக் குழுவினரால் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
</p><p>பிரிட்டிஷ் கொலம்பியா வனவிலங்கு பாதுகாப்பு சேவை அமைப்பு வெளியிட்டுள்ள தகவலின்படி, விஸ்லருக்கு மேற்கே உள்ள காலைஹான் பள்ளத்தாக்கின் 'கான்ப்ளிக்ட் ஏரி' பகுதியில் ஒரு குழுவினர் நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்தபோது இரண்டு கரடிகளை எதிர்கொண்டனர்.</p><p> 
அதில் ஒரு கரடி திடீரென அந்தப் பெண்ணைத் தாக்கியுள்ளது. தாக்குதலுக்குப் பிறகு அக்கரடி அங்கிருந்து விலகிச் சென்றது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b37cc959-5269-4667-b638-aff1c08072d9/26-6a9d3f416886e.webp' /></p><p>தகவலறிந்து சம்பவ இடத்திற்குப் பொலிஸார், மீட்புக் குழுவினர் மற்றும் வனப்பாதுகாப்பு அதிகாரிகள் ஹெலிகாப்டர் மூலம் விரைந்தனர்.</p><p> காயமடைந்த பெண்ணுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, உடனடியாக ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவரது காயங்கள் உயிருக்கு ஆபத்தானவை அல்ல எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக, அப்பகுதியில் காணப்பட்ட ஒரு வளர்ந்த ஆண் கருங்கரடியை வனப்பாதுகாப்பு அதிகாரிகள் சுட்டுக் கொன்றனர். </p><p>
எனினும், அந்தப் பெண்ணைத் தாக்கியது கருங்கரடியா அல்லது 'கிரிஸ்லி' வகைக் கரடியா என்பதை அதிகாரிகளால் இன்னும் உறுதிப்படுத்த முடியவில்லை.
</p><p>இது தொடர்பாக வனத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கான்ப்ளிக்ட் ஏரிப் பகுதி மலையேறும் பாதையை அதிகாரிகள் மூடியுள்ளதுடன், பொதுமக்கள் யாரும் அப்பகுதிக்குச் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-06T10:41:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[எல்ல நில்திய பொக்குன பிரதேசத்தை சுற்றுலா வலயமாக அறிவிக்க அரசாங்கம் தீர்மானம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/declare-ella-nil-diya-pokuna-a-tourist-zone-1788691243"></link>
            <id>https://jvpnews.com/article/declare-ella-nil-diya-pokuna-a-tourist-zone-1788691243</id>
            <summary type="text">எல்ல நில்திய பொக்குன பிரதேசத்தை சுற்றுலா வலயமாக அறிவித்து அதனை வன விலங்கு பாதுகாப்பு திணைக்களத்தின் கீழ் நிர்வகிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது....</summary>
            <content type="html"><![CDATA[<p>எல்ல நில்திய பொக்குன பிரதேசத்தை சுற்றுலா வலயமாக அறிவித்து அதனை வன விலங்கு பாதுகாப்பு திணைக்களத்தின் கீழ் நிர்வகிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.</p><p>

இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலில் திங்கட்கிழமை (07) சுற்றாடல் அமைச்சர் வைத்தியர் தம்மிக்க படபெந்தியால் கைச்சாத்திடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f1c3d5b8-2121-43ed-8a47-e8cb32d13866/26-6a9d432d44a7b.webp' /></p><p>

இந்த அறிவித்தல் தொடர்பான சட்டங்கள் மற்றும் ஒழுங்குவிதிகளை வர்த்தமானியில் வெளியிடுவதற்கு அண்மையில் அமைச்சரவை அனுமதி வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-09-06T10:40:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[சீனாவிடம் விளக்கம் கோரும் திபெத்தில் காணாமல் போன யாத்ரீகர்களின் குடும்பத்தினர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/missing-pilgrims-in-tibet-1788690937"></link>
            <id>https://news.lankasri.com/article/missing-pilgrims-in-tibet-1788690937</id>
            <summary type="text">Families of missing pilgrims in Tibet demand answers from China: திபெத்தில் காணாமல் போன யாத்ரீகர்களின் குடும்பத்தினர் சீனாவிடம் விளக்கம் கோருகின்றனர்....</summary>
            <content type="html"><![CDATA[<p>Families of missing pilgrims in Tibet demand answers from China: திபெத்தில் காணாமல் போன யாத்ரீகர்களின் குடும்பத்தினர் சீனாவிடம் விளக்கம் கோருகின்றனர்.
</p><p>பேரழிவு ஏற்பட்டு 10 நாட்களுக்குப் பிறகும் இந்தியாவில் பிறந்த பின்லாந்து குடிமகள் உட்பட, திபெத்தில் 261 வெளிநாட்டினர் இன்னும் காணாமல் போயுள்ளனர்.</p><h2>மொத்தம் 531 பேர்</h2><p> </p><p>
இந்த விவகாரத்தில் சீன ஆரசாங்கத்தின் பதில்கள் கடும் விரக்தியை ஏற்படுத்துவதாகவே உறவினர்கள் பலர் தெரிவிக்கின்றனர். காணாமல் போயுள்ள உறவினர்கள் விவகாரத்தில், சீனாவுக்கு சென்று முறையிட முடியாத நிலை இருப்பதாகவும் குறிப்பிடுகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d0595951-fc0e-4a87-ae35-1239c276b374/26-6a9d41fb817b9.webp' /></p><p> </p><p>பாதிப்புக்குள்ளானப் பகுதியில் என்ன நடக்கிறது அல்லது அங்குள்ள சூழல் என்ன என்பது குறித்து சீனாவிலிருந்து எந்தத் தகவலும் இல்லை என்றே கூறுகின்றனர். </p><p>கடந்த வாரம் திபெத்-நேபாள எல்லையில் ஏற்பட்ட பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவு 1,300-க்கும் மேற்பட்டோரின் உயிரைப் பறித்ததுடன், எல்லைப் பகுதியின் இருபுறமும் 5,600-க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை. </p><p>திபெத்தில் குறைந்தது 31 பேர் மரணமடைந்தது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும், மொத்தம் 531 பேர் காணாமல் போயுள்ளதாகவும் அரசு செய்தி நிறுவனமான சின்ஹுவா வெள்ளிக்கிழமை தெரிவித்தது.</p><p></p><p> </p><p>ஆனால், காணாமல் போனவர்களின் பல குடும்பங்கள் சீனாவில் இருந்து வெளியாகும் தகவல் மறைக்கப்படுவதாகக் குற்றம் சாட்டுகின்றன; இது அவர்களின் துயரத்தை மேலும் தீவிரமாக்குகிறது. </p><p>இதனிடையே, 
சீன அதிகாரிகளிடம் சமர்ப்பிப்பதற்காக, திபெத்தில் மாயமாகியுள்ள பிரியங்கா சௌத்ரி என்பவரின் மகளிடமிருந்து டிஎன்ஏ (DNA) மாதிரியைப் பெறுவதற்கு, சில நாட்களுக்கு முன்பு இங்கிலாந்து காவல்துறையினர் அவரது வீட்டிற்குச் சென்றுள்ளனர். </p><p>இந்த நிலையில், குற்றச்சாட்டுகள், பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காண்பதற்கான காலக்கெடு, அல்லது திபெத்திய தரப்பில் பயன்படுத்தப்படும் டிஎன்ஏ சேகரிப்பு நெறிமுறைகள் ஆகியவை குறித்து கருத்து தெரிவிக்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு சீனாவின் வெளிவிவகார அமைச்சகம் உடனடியாகப் பதிலளிக்கவில்லை. </p><p>ஆனால், 23 நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தூதரகங்களுக்குத் தாங்கள் விளக்கங்களை அளித்து வருவதாகவும்; அத்துடன், வெள்ளம் குறித்த தகவல்களை வெளியிட்ட விதம் வெளிப்படையானதாகவும் உரிய நேரத்தில் அமைந்ததாகவும் திங்களன்று சீனாவின் வெளிவிவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது.</p><h2>டிஎன்ஏ (DNA) பரிசோதனை</h2><p> </p><p>மேலும், உயிரிழந்தவர்களை அடையாளம் காண்பதற்காக மற்ற நாடுகள் மற்றும் அமைப்புகளுடன் இணைந்து பணியாற்றத் தயாராக இருப்பதாகவும் சீனா தெரிவித்துள்ளது. </p><p>பேரழிவின் பெரும் பாதிப்புக்குள்ளான நேபாளத்திற்கு, டிஎன்ஏ (DNA) மூலம் அடையாளம் காணும் நிபுணர்கள் அடங்கிய குழு ஒன்றையும் அனுப்பியுள்ளது.</p><p> நேபாளத்தில், காணாமல் போனவர்கள் மற்றும் உயிரிழந்தவர்கள் குறித்த தகவல்களைக் காவல்துறை உள்ளிட்ட அதிகாரிகள் சமூக ஊடகங்களில் தொடர்ந்து பகிர்ந்து வருகின்றனர்; அதேவேளையில், தேடுதல் பணிகளுடன் இணைந்து தீவிர டிஎன்ஏ (DNA) பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.</p><p> நேபாளத்தில் காணாமல் போனதாகத் தெரிவிக்கப்பட்டுள்ள குடிமக்களைக் கொண்ட நாடுகளின் தூதரக அதிகாரிகளை, கடந்த வாரம் பெய்ஜிங்கில் நடைபெற்ற விளக்கக் கூட்டத்திற்கு சீனா அழைத்திருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b8de2d30-4912-47e7-9737-445bf3425e0f/26-6a9d41fc3373e.webp' /></p><p> </p><p>இதில் கலந்துகொண்ட தூதரக அதிகாரிகள், பாதிக்கப்பட்டவர்களை டிஎன்ஏ (DNA) மூலம் அடையாளம் காணும் பணியை எவ்வாறு மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளது என்பது குறித்த எந்த விவரங்களையும் பெய்ஜிங் பகிர்ந்துகொள்ளவில்லை என்று தெரிவித்தனர். </p><p>மேலும், உயிரிழந்தவர்களை அடையாளம் காணவோ அல்லது அவர்களது குடும்பத்தினருடன் பகிர்ந்துகொள்ளவோ ​​உதவக்கூடிய, முகத்தை அடையாளம் காணும் படங்கள் உள்ளிட்ட காணொளிகளை, நில எல்லைப் பகுதியின் தங்கள் தரப்பிலிருந்து வழங்க சீனா முன்வரவில்லை என்று அந்நாட்டின் வெளிவிவகார அமைச்சகத்துடன் தொடர்பில் உள்ள தூதர்கள் தெரிவித்துள்ளனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-06T10:32:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[22ஆவது திருத்தத்தால் நீதிபதிகளுக்கு எழுந்துள்ள சவால் - கேள்விகளை முடக்க அரசு திட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/challenge-posed-to-judges-by-the-22nd-amendment-1788690450"></link>
            <id>https://tamilwin.com/article/challenge-posed-to-judges-by-the-22nd-amendment-1788690450</id>
            <summary type="text">22 ஆவது திருத்தம் நீதித்துறையின் சுயாதீனத்தை கேள்விக்கு உள்ளாக்குவதோடு அதன் நோக்கத்தில் உண்மைத் தன்மை உள்ளதா என்பது தொடர்பிலும் ஐயப்பாடுகள் உள்ளதாக சி...</summary>
            <content type="html"><![CDATA[<p>22 ஆவது திருத்தம் நீதித்துறையின் சுயாதீனத்தை கேள்விக்கு உள்ளாக்குவதோடு அதன் நோக்கத்தில் உண்மைத் தன்மை உள்ளதா என்பது தொடர்பிலும் ஐயப்பாடுகள் உள்ளதாக சிரேஷ்ட சட்டத்தரணி குமாரவடிவேல் குருபரன் தெரிவித்துள்ளார். </p><p>

இந்த விடயம் தொடர்பில் அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,</p><p> 

22 வது திருத்தம் தொடர்பான விவாதம் நீதித்துறையின் சுயாதீனமான முடிவா என கேள்வியெழுப்பப்படுகின்றது, மாறாக, அறிமுகக் கருத்துக்களில் நான் மூன்று விடயங்களை சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.
</p><h2>

அரசாங்கத்தின் நோக்கம்</h2><p>
முதலாவது, 22-வது திருத்தத்தின் கூறப்பட்ட நோக்கம் உண்மையில் அதன் உண்மை நிலைக்கு ஏற்ப உள்ளதா என கேள்வியெழுப்பப்பட்டுள்ளது.</p><p> 

“ அரசாங்கத்திலிருந்தும், அரசுடன் தொடர்புடையவர்களிடமிருந்தும் கூறப்பட்ட கருத்து என்னவென்றால் நீதித் தாமதங்களை, சட்டத் தாமதங்களைக் குறைப்போம் என்பதுதான்.

 இது நீதித்துறை சுயாதீனத்திற்கு இழுக்கு என்று வாதிடுபவர்களில் சிலர் கூட, இது சட்டத் தாமதங்களுக்குச் சற்றேனும் உதவும் என்று ஒப்புக்கொண்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b7db3546-f40c-4f8c-b0d5-bd952f103998/26-6a9d409ac620f.webp' /></p><p>
</p><p>
 ஆனால் நான் அப்படி நினைக்கவில்லை. மேம்பட்ட நீதிமன்ற நீதிபதிகளின் வயது வரம்பையும், இப்போது கீழ்நிலை நீதித்துறை உறுப்பினர்களின் வயது வரம்பையும் உயர்த்துவது சட்டத் தாமதப் பிரச்சினையைச் சமாளிக்க உதவுமா என்பதில் எனக்கு அடிப்படை ஐயம் உள்ளது.</p><p> 

அதற்கான காரணத்தை விளக்குகிறேன், வயது வரம்பை உயர்த்துவது இந்த நீதிமன்றங்களில் பணியாற்றும் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கப் போவதில்லை, அதே எண்ணிக்கையிலான நீதிபதிகள் தான் பணியாற்றுவார்கள்.
</p><p>
 சமீபத்திய காலத்தில் உச்ச நீதிமன்றம் மற்றும் மேல் நீதிமன்றத்தில் பணியாற்றும் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரித்த அரசியலமைப்புத் திருத்தம் ஏற்கனவே கொண்டு வரப்பட்டது என்பதை நாம் அறிவோம்.</p><p>

 அதேபோன்று, கீழ்நிலை நீதித்துறை உயர் நீதிமன்றம், மாவட்ட நீதிமன்றம், மாஜிஸ்திரேட் நீதிமன்றம் ஆகியவற்றின் வயதை உயர்த்துவதால் நீதிமன்ற வளாகங்களின் எண்ணிக்கையோ, நீதிபதிகளின் எண்ணிக்கையோ அதிகரிக்காது. 

வழக்குகளை விசாரிக்க அதிக நீதிபதிகள் கிடைப்பதில்லை என்றால், தாமதங்களும் குறையாது” </p><h2>

தீர்ப்பின் தாமதம்</h2><p>
ஆகவே, அதே நீதிபதிகள் மேலும் இரண்டு ஆண்டுகள் பணியாற்றப் போகிறார்கள் என்றால், தாமதத்தைக் குறைக்க அது எப்படி உதவும் என கேள்வியெழுப்பப்படுகின்றது. </p><p>

“ தீர்ப்பு வழங்கும் தரத்தை இது உயர்த்தும் என்று வாதிடப்பட்டால், அது தற்போதைய நீதித்துறை உறுப்பினர்கள் ஒரு குறிப்பிட்ட தரத்தில் நீதி வழங்குகிறார்கள், புதிதாக நீதித்துறையில் நுழைபவர்கள் அந்தத் தரத்தைத் தக்கவைக்க முடியாது என்று முன்னரே கருதுவதாகும். 

அந்த வாதம் எங்கிருந்து வருகின்றது என்று எனக்குத் தெரியவில்லை. </p><p>நீதித்துறையில் நுழைபவர்களின் தரம் மிகச் சிறந்ததாக இல்லை என்று வாதிடப்பட்டால், நீதித்துறைக்கான நுழைவுத் தேவைகள் குறிப்பாக மேம்பட்ட நீதிமன்றங்களுக்கானவை மாற்றப்பட வேண்டும் என்பதே அதன் பொருள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/04527ee3-4184-44d7-8198-9eec68f995c1/26-6a9d409b974ed.webp' /></p><p>
</p><p>
மேம்பட்ட நீதிமன்றங்களைப் பொறுத்தவரை, நான் நீண்ட காலமாகச் சொல்லி வருவது என்னவென்றால், மேம்பட்ட நீதிமன்றங்கள் பெரும்பாலும் சட்டமா அதிபர் திணைக்களத்திலிருந்தே நீதிபதிகளைப் பெறுகின்றன.

 ஜனாதிபதி சட்டத்தரணிகளை சாடியவர்கள், இந்த விடயத்திற்கு மன்னிப்பார்கள் என்று நம்புகிறேன்.</p><p> கடந்த இருபது முப்பது ஆண்டுகளில் மிக அதிக எண்ணிக்கையிலான நீதிமன்ற நீதிபதிகளை வழங்கிய ஒரே அரசு நிறுவனம் அதுவே.

 தனியார் பார் உறுப்பினர்களை மேம்பட்ட நீதிமன்றங்களில் பணியமர்த்த அழைப்பது மிகக் குறைந்த அளவிலேயே இருந்து வருகின்றது. </p><p> 

உதாரணமாக, இந்தியாவில் தனியார் பார் உறுப்பினர்களை மேம்பட்ட நீதிமன்றங்களில் அமர்த்துவதில் இன்னும் திறந்த அணுகுமுறை உள்ளது. </p><p>

ஆகவே, மேம்பட்ட நீதிமன்ற நீதிபதிகள், சட்டமா அதிபர் திணைக்களத்திலிருந்தோ அல்லது கீழ் நீதிமன்றங்களிலிருந்தோ மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.

 இந்தத் தேர்வு முறை மாறாவிட்டால், பிரச்சினை தரம் பற்றியதாக இருந்தால், அதைச் சமாளிக்க முடியாது”.
</p><h2>
22ஆவது திருத்தம்</h2><p>
தற்போதைய நீதிபதிகளை மேலும் இரண்டு ஆண்டுகள் பணியாற்ற அனுமதிப்பது திறமையான, அனுபவமிக்க நீதிபதிகளைத் தக்கவைக்கும் என்று சொல்பவர்களிடம் என் கேள்வி,

 மேம்பட்ட நீதிமன்ற நியமனப் பிரச்சினையை இந்தத் திருத்தம் கையாளாதபோது, தீர்ப்புத் தரத்தை அது எப்படி மேம்படுத்தும்?
</p><p>
எனவே, 22-வது திருத்தம் சட்டத் தாமதங்களைக் குறைப்பது பற்றியதல்ல என்று நான் நினைக்கிறேன். தகுதியான, திறமையான நீதிபதிகளைத் தக்கவைப்பது பற்றியதும் அல்ல 

 அது மிகவும் ஆபத்தான வாதம். </p><p>எனவே இரு விஷயங்களிலும் 22-வது திருத்தம் அதன் கூறப்பட்ட நோக்கத்தில் தோல்வியடைகின்றது என்று நான் கருதுகிறேன்.
</p><h2>

ஜனாதிபதியின் முடிவில் சிக்கல்</h2><p>
பின்னர் இந்தத் திருத்தம் எதைப் பற்றியது? ஜனாதிபதி இது ஒரு பெரிய கட்டமைப்புச் சீர்திருத்தத்தின் பகுதி என்று நம்பச் செய்ய விரும்புகிறார் என்று நினைக்கிறேன்.
</p><p>
 சட்டத்தரணிகள் சங்கத்துடனான சந்திப்பில் சட்டத் தாமதங்களைக் குறைக்க அவர் மேற்கொள்ளும் பிற சீர்திருத்த முயற்சிகளைப் பற்றிக் குறிப்பிட்டதாக ஊடகங்களில் கண்டேன்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6a7a540d-d80c-47a8-9f75-fee1b00f4197/26-6a9d409c48bb6.webp' /></p><p> </p><p>

அந்தச் சீர்திருத்த முயற்சிகள் எவ்வாறு தாமதங்களைக் குறைக்கும் என்பது எனக்குத் தெளிவாகத் தெரியாவிட்டாலும், அந்தப் பட்டியலில் இந்தத் திருத்தம் எவ்வாறு பங்களிக்கிறது என்பதை நான் காணவில்லை.</p><p> 

இது விதிவிலக்கான ஒன்று. தாமதங்களைக் குறைக்க இது பங்களிக்கிறது என்ற எந்த நியாயமான காரணத்தையும் நான் இதுவரை கேள்விப்படவில்லை. இது நம்மை பதவிக் காலப் பாதுகாப்பு என்ற கேள்விக்கு அழைத்துச் செல்கின்றது. 

சாலிய பீரிஸ், ஊடக நேர்காணல்களில் இதைச் சிறப்பாக விளக்கியுள்ளார்.</p><p>நீதித்துறை சுயாதீனம் பதவிக் காலப் பாதுகாப்புடன் தொடர்புடையது.

 அதனால்தான் அரசியலமைப்பின் 175-வது பிரிவு உச்ச நீதிமன்றம் மற்றும் மேல் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு வயதைக் கையாள்கின்றது என்றார்.&nbsp; &nbsp; &nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-06T10:30:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் பெண் ஒருவரின் வீட்டுக்குச் சென்ற விசித்திர விருந்தினர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/calgary-homeowner-gets-surprise-visit-1788689808"></link>
            <id>https://canadamirror.com/article/calgary-homeowner-gets-surprise-visit-1788689808</id>
            <summary type="text">கனடாவின் கல்காரி நகரைச் சேர்ந்த ஜானிஸ் ஆண்டர்சன் என்பவரது வீட்டின் தோட்டத்தில், ஆகஸ்ட் 27 அன்று தாய் காட்டுப்பூனை ஒன்று தனது ஐந்து குட்டிகளுடன் நுழைந்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் கல்காரி நகரைச் சேர்ந்த ஜானிஸ் ஆண்டர்சன் என்பவரது வீட்டின் தோட்டத்தில், ஆகஸ்ட் 27 அன்று தாய் காட்டுப்பூனை ஒன்று தனது ஐந்து குட்டிகளுடன் நுழைந்தது.
</p><p>அண்டை வீட்டார் கொடுத்த தகவலையடுத்து, தனது வளர்ப்பு நாயை வீட்டிற்குள் பூட்டிவிட்டு ஆண்டர்சன் உடனடியாகத் தனது கேமரா மற்றும் கைப்பேசியுடன் தோட்டத்திற்கு விரைந்தார்.</p><p>
அங்கு காட்டுப்பூனைகள் மிகவும் அமைதியாகத் தோட்டத்திலும், வீட்டின் முன்பக்கப் புல்வெளியிலும் அமர்ந்து ஓய்வெடுத்தன. தாய் காட்டுப்பூனை புல்வெளியில் சாவகாசமாகப் படுத்துக் கொண்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9925d006-fa51-490c-ad56-bcd6bfbb5989/26-6a9d3d91ec311.webp' /></p><p> </p><p>சில நிமிடங்களிலேயே அவை அங்கிருந்து புறப்பட்டுச் சென்றாலும், ஆண்டர்சன் அவற்றின் அழகிய தருணங்களைத் தனது கேமராவில் துல்லியமாகப் படம்பிடித்தார்.
</p><p>சில ஆண்டுகளுக்கு முன்புதான் வனவிலங்கு புகைப்படக் கலையை ஒரு பொழுதுபோக்காகத் தொடங்கிய ஆண்டர்சன், காட்டுப்பூனை குடும்பம் நேரடியாகத் தனது வீட்டிற்கே வந்து புகைப்படங்களுக்குப் பொஸ் கொடுத்ததை வாழ்நாளின் மறக்க முடியாத அரிய வாய்ப்பாகவும் கௌரவமாகவும் கருதுவதாகத் தெரிவித்துள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-06T10:28:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்க தூதர்களுடன் புடின் 3 மணிநேரத்திற்கும் மேலாக பேச்சுவார்த்தை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/putin-talks-with-us-envoys-morethan-3-hours-1788690617"></link>
            <id>https://news.lankasri.com/article/putin-talks-with-us-envoys-morethan-3-hours-1788690617</id>
            <summary type="text">Vladimir putin talks with us envoys: ரஷ்யாவிற்கு வருகை தந்த அமெரிக்க தூதர்களுடன் ஜனாதிபதி புடின் 3 மணிநேரத்திற்கும் மேலாக பேச்சுவார்த்தை நடத்தினார்.
...</summary>
            <content type="html"><![CDATA[<p>Vladimir putin talks with us envoys: ரஷ்யாவிற்கு வருகை தந்த அமெரிக்க தூதர்களுடன் ஜனாதிபதி புடின் 3 மணிநேரத்திற்கும் மேலாக பேச்சுவார்த்தை நடத்தினார்.</p><p>

அமெரிக்க தூதர்களான ஸ்டீவ் விட்கோஃப் மற்றும் ஜாரெட் குஷ்னர் ஆகியோருடன், ரஷ்யா ஜனாதிபதி விளாடிமிர் புடின் 3 மணிநேரத்திற்கும் மேலாக பேச்சுவார்த்தை நடத்தியதாக கிரெம்ளின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.&nbsp;</p><h2>அமெரிக்க தூதர்கள்&nbsp;</h2><p> 

ரஷ்யா மற்றும் உக்ரைன் சமீப வாரங்களில் இரு தரப்பில் இருந்தும் தொலைதூர வான்வழித் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளன.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e2e04913-595c-44fc-9942-55bbee569168/26-6a9d42d1465ca.webp' /></p><p></p><p>

இந்த சூழலில், உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கான ஒப்பந்தத்தை மேற்கொள்ள அமெரிக்க பிரதிநிதிகளான ஸ்டீவ் விட்கோஃப் மற்றும் ஜாரெட் குஷ்னர் ஆகிய தூதர்கள் ரஷ்யாவிற்கு பயணித்துள்ளனர்.
</p><p>
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சார்பாக, ஜனவரிக்குப் பிறகு முதல் முறையாக ரஷ்யாவிற்கு இவர்கள் வருகை புரிந்துள்ளனர். </p><p>

அவர்கள் இருவரும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அது 3 மணிநேரத்திற்கு மேலாக நடந்ததாகவும், மிகவும் பயனுள்ள பேச்சுவார்த்தைகள் என்றும் கிரெம்ளின் அதிகாரி யூரி உஷாகோவ் தெரிவித்தார். </p><p>

அதே சமயம் இதில் எந்தவொரு முக்கிய முன்னேற்றமும் ஏற்பட்டதற்கான அறிகுறி எதுவும் இல்லை என்று அவர் குறிப்பிட்டார்.</p><h2>

உக்ரைன் நெருக்கடியைத் தீர்ப்பது</h2><p>பிரச்சனைக்குத் தீர்வு காண்பதற்கான சாத்தியமான வழிகள் குறித்த பல கருத்துகளை விட்கோஃப், குஷ்னர் முன்வைத்தனர் என்று தெரிவித்தார். ஆனால், அந்த கருத்துக்கள் என்ன என்பது குறித்து அவர் எதுவும் குறிப்பிடவில்லை.</p><p> 

மேலும் அவர் கூறுகையில், "போர்க்களத்தில் ரஷ்யா உண்மையான முன்னேற்றத்தை அடைந்து வருவதாகவும், தனது இலக்குகளை அடைவதில் உறுதியாக இருப்பதாகவும் புடின் அந்த இருவரிடமும் கூறினார்.

உக்ரைன் நெருக்கடியைத் தீர்ப்பது குறித்த வெறும் கருத்துப் பரிமாற்றத்தைத் தாண்டி இந்தப் பேச்சுவார்த்தைகள் சென்றன.
</p><p>
பொருளாதாரப் பிரச்சனைகள் மற்றும் சாத்தியமான பெரிய, பரஸ்பர நன்மை பயக்கும் ரஷ்ய-அமெரிக்கத் திட்டங்கள் குறித்து ஓரளவு விரிவாக விவாதிக்கப்பட்டது.

மொத்தத்தில், இந்தப் பேச்சுவார்த்தைகள் சரியான நேரத்தில் நடந்ததாகவும், இரு தரப்பினருக்கும் மிகவும் பயனுள்ளதாகவும் இருந்தன என்று கூறலாம்" என்றார். </p><p> 

இதற்கிடையில், விட்காஃப் மற்றும் குஷ்னர் இருவரும் மாஸ்கோவில் இருந்து புறப்பட்டு, ஞாயிற்றுக்கிழமை கீவ்வில் உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியை சந்திக்க உள்ளனர்.&nbsp; &nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d8fe707f-7112-46af-a26a-f4144c955db2/26-6a9d42d2193ba.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-06T10:27:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறையில் இருந்து செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றம் வரப்போகும் நாமல்! வெளியிடவுள்ள முக்கிய அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-rajapaksa-arrested-1788687758"></link>
            <id>https://tamilwin.com/article/namal-rajapaksa-arrested-1788687758</id>
            <summary type="text">சிறையில் அடைக்கப்பட்டுள்ள நாமல் ராஜபக்ச எதிர்வரும் செவ்வாய்க்கிழமை இடம்பெறவுள்ள நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொள்வார். அதன்போது, அநுதாரபுரத்தில் நாட்டு ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிறையில் அடைக்கப்பட்டுள்ள நாமல் ராஜபக்ச எதிர்வரும் செவ்வாய்க்கிழமை இடம்பெறவுள்ள நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொள்வார். அதன்போது, அநுதாரபுரத்தில் நாட்டு மக்களுக்கு அவர் கூறவிருந்த சக்திவாய்ந்த செய்தியை சபையில் பகிரங்கமாக அறிவிப்பார் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p>நாமல் ராஜபக்சவின் கைது குறித்து ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.&nbsp;</p><p>தொடர்ந்தும் தெரிவிக்கையில்,</p><p>ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்சவின் கைது ஒரு தெளிவான அரசியல் பழிவாங்கல்.&nbsp;</p><h2>அரசியல் பழிவாங்கல் பொருத்தமானதல்ல</h2><p>12ஆம் திகதி அநுராதபுரத்தில்&nbsp; மாபெரும் கூட்டம் ஒன்றை பொதுஜன பெரமுன நடத்தவிருந்த நிலையில், தற்போது நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டிருப்பது ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல.&nbsp;</p><p>12ஆம் திகதி அநுராதபுரத்தில் அவர் ஆற்றவிருந்த சக்திவாய்ந்த உரையை, எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு பகிரங்கமாக சபையில் வைத்து நாமல் ஆற்றுவார்.&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/CWIGW7iZQtY" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p>தான் அமைச்சராக இருந்த கடந்த அரசாங்கத்தின் போது, இது போன்ற நிகழ்வு நடந்திருந்தாலும் நான் அதனையும் அனுமதித்திருக்க மாட்டேன். ஒரு ஜனநாயக நாட்டிற்கு அரசியல் பழிவாங்கல் பொருத்தமானதல்ல.&nbsp;</p><p>எதிர்வரும் 12ஆம் திகதி இடம்பெறவுள்ள கூட்டத்தில் நாடாளுமன்ற அமர்வில் நாமல் ராஜபக்சவின் மனைவி லிமினி ராஜபக்ச உரையாற்றவுள்ளதாக சமூக வலைத்தளங்களில் பரவும் வதந்தி முற்றிலும் பொய்யானது. அவை ஆதாரமற்றவை.</p><p>செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் நாமல் ராஜபக்ச ஆற்றவுள்ள உரையை சரியாக செவிமடுக்குமாறு அரசாங்கத்திடம் நான் கோரிக்கை விடுக்கின்றேன் என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ec306d82-3523-4653-b84c-36dcef26b87b/26-6a9d3f5975255.webp' />&nbsp;&nbsp;</p><p></p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-06T10:24:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடந்த 24 மணி நேரத்தில்.,உக்ரைனிய சூறையாடிய ரஷ்யா: 8 பேர் பலி, 69 பேர் காயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/russia-s-overnight-attacks-on-ukraine-8-dead-1788690051"></link>
            <id>https://news.lankasri.com/article/russia-s-overnight-attacks-on-ukraine-8-dead-1788690051</id>
            <summary type="text">Russia’s Overnight Attacks on Ukraine 8 Dead: கடந்த 24 மணி நேரத்தில் உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய தாக்குதலில் 8 பேர் வரை உயிரிழந்துள்ளனர். ரஷ்யாவின் தொட...</summary>
            <content type="html"><![CDATA[<p>Russia’s Overnight Attacks on Ukraine 8 Dead: கடந்த 24 மணி நேரத்தில் உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய தாக்குதலில் 8 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.</p><h2> ரஷ்யாவின் தொடர் தாக்குதல்</h2><p>உக்ரைனிய நகரங்களை குறிவைத்து கடந்த 24 மணி நேரத்தில் ரஷ்யா நடத்திய தொடர் தாக்குதலில் 8 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர். கிட்டத்தட்ட 69 பேர் காயமடைந்துள்ளனர் என உக்ரைனிய அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தகவல் தெரிவித்துள்ளனர்.</p><p>இந்த தாக்குதலில் கார்கிவ் மாகாணத்தில் 4 பேர், கெர்சன் மாகாணத்தில் 2 பேர், ஜபோரிஜியா மாகாணம் மற்றும் மைக்கோலைவ் மாகாணத்தில் தலா ஒருவர் கொல்லப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1ccaf274-8ea4-44f4-baa7-86e32bc72984/26-6a9d3e84be09d.webp' /></p><p></p><h2>உக்ரைனை நோக்கி ஏவப்பட்ட ட்ரோன்கள்</h2><p>
இந்த தாக்குதலில் கிட்டத்தட்ட 108 ட்ரோன்களை ரஷ்யா பயன்படுத்தி இருப்பதுடன், பல S8000 Banderol ஏவுகணைகளையும் தாக்குதலுக்கு ஏவியுள்ளது.</p><p>ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் சேர்த்து கிட்டத்தட்ட 88 வான்வழி தாக்குதல் ஆயுதங்களை உக்ரைனிய விமானப்படை வெற்றிகரமாக இடைமறித்து அழித்து விட்டதாக தெரிவித்துள்ளது.</p><p> இருப்பினும் 11 வெவ்வேறு இடங்களில் ரஷ்ய ஆயுதங்கள் தங்களது இலக்குகளை அடைந்து தாக்குதல்களை நிறைவேற்றியுள்ளன.</p><p> அத்துடன் சுட்டு வீழ்த்தப்பட்ட ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களின் உதிரி பாகங்களும் 7 இடங்களில் விழுந்துள்ளன.</p><p>அமெரிக்காவின் சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்காஃப் மற்றும் ஜாரெட் குஷ்னர் இருவரும் உக்ரைனிய தலைநகர் கீவ்விற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்த நிலையில் அதற்கு சற்று முன்னதாக இந்த கொடூர தாக்குதல் அரங்கேறியுள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p>&nbsp;<br></p>]]></content>
            <updated>2026-09-06T10:21:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Bavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாமலின் கைது ஜனநாயகத்துக்கு எதிரானது.. மொட்டுக் கட்சியின் மட்டு. மாவட்ட அமைப்பாளர் கண்டனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-arrest-batti-district-organizer-condemns-1788688834"></link>
            <id>https://tamilwin.com/article/namal-arrest-batti-district-organizer-condemns-1788688834</id>
            <summary type="text">நாடாளுமன்ற உறுப்பினரான நாமல் ராஜபக்சவை கைது செய்தமை ஜனநாயகத்துக்கு எதிரானது என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் தெய்வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடாளுமன்ற உறுப்பினரான நாமல் ராஜபக்சவை கைது செய்தமை ஜனநாயகத்துக்கு எதிரானது என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் தெய்வேந்திரராசா புலேந்திரன் கடும் கண்டனம்
தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p>
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி மட்டு. மாவட்ட அமைப்பாளர், நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டதை கண்டித்து இன்று (06) ஊடக அறிக்கை ஒன்றை
வெளியிட்டுள்ளார்.&nbsp;</p><h2>மகிந்தவால் சுதந்திரம்..&nbsp;</h2><p>அதில், "குறித்த கைது, இந்த நாடு ஆங்கிலேயரிடம் இருந்து நாம் சுதந்திரம் பெற்றாலும் நாம் இன்று
சர்வாதிகாரத்துக்கு அடிமையாகவே இருந்து வந்தோம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9b203309-6190-47cc-a106-5c805d05a1e5/26-6a9d3e4c98944.webp' /></p><p>இந்த நிலையில் நாடு அழிவு
பாதையில் செல்லும் போது முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவினால் நாட்டிற்கு
உண்மையான சுதந்திரம் 2009ஆம் ஆண்டு கிடைத்தது.
</p><p>
அவர் வீதிகள், பாலங்கள், பாடசாலைகள் என பல அபிவிருத்திகளை செய்து நாட்டை
அபிவிருத்தி பாதைக்கு கொண்டு சென்றவர் அவ்வாறான அவரது மகன் நாமல் ராஜபக்ச எதுவித உண்மை காரணங்களும் இல்லாமல் இன்று கைது செய்யப்பட்டு சிறையில்
அடைக்கப்பட்டுள்ளார்.
</p><p>
இது ஜனநாயகத்துக்கு எதிரானது எமது இளைய சமுதாயத்தை வரவிடாமல் தடுப்பதே
தற்போதைய அரசாங்கத்தின் நோக்கமாக உள்ளது.

நாமல் குற்றம் செய்திருந்தால் நீதிமன்றம் தண்டனை வழங்கட்டும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.&nbsp;</p><p>&nbsp;</p><p></p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-06T10:20:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[கண்களை கவரும் நடிகை பூஜா ஹெக்டேவின் லேட்டஸ்ட் போட்டோஷூட்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/actress-pooja-hegde-tangerine-dress-photoshoot-1788689956"></link>
            <id>https://cineulagam.com/article/actress-pooja-hegde-tangerine-dress-photoshoot-1788689956</id>
            <summary type="text">நடிகை பூஜா ஹெக்டே இன்று பான்-இந்தியன் ஸ்டாராக கொண்டாடப்படுகிறார். இவர் நடிப்பில் தமிழில் சமீபத்தில் ஜனநாயகன் திரைப்படம் வெளியானது. இதை தொடர்ந்து காஞ்ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>நடிகை பூஜா ஹெக்டே இன்று பான்-இந்தியன் ஸ்டாராக கொண்டாடப்படுகிறார். இவர் நடிப்பில் தமிழில் சமீபத்தில் ஜனநாயகன் திரைப்படம் வெளியானது. இதை தொடர்ந்து காஞ்சனா 4 பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. </p><p>இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது நடிகை பூஜா ஹெக்டே புகைப்படங்களை பதிவு செய்வார். அந்த வகையில் தற்போது, ரசிகர்களை ஆரஞ்சு நிற உடையில் எடுத்துக்கொண்ட போட்டோஷூட் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. </p><p>இதோ அந்த புகைப்படங்கள்:</p>]]></content>
            <updated>2026-09-06T10:20:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[மீண்டும் திரைமறைவில் களமிறங்கும் மகிந்த! தென்னிலங்கை அரசியலில் ஏற்படவுள்ள புதிய திருப்பம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/mahinda-takes-to-the-stage-in-anuradhapura-1788677676"></link>
            <id>https://tamilwin.com/article/mahinda-takes-to-the-stage-in-anuradhapura-1788677676</id>
            <summary type="text">&amp;nbsp;அநுராதபுரத்தில் இடம்பெறவுள்ள பொதுஜன பெரமுனவின் பேரணியில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கலந்துகொள்ள உள்ளார் என முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;அநுராதபுரத்தில் இடம்பெறவுள்ள பொதுஜன பெரமுனவின் பேரணியில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கலந்துகொள்ள உள்ளார் என முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
</p><p>
சர்ச்சைக்குரிய எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளுக்கு அமைய&nbsp; இலஞ்ச அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் நாமல் ராஜபக்ச&nbsp; (04) திகதி கைது செய்யப்பட்டார்.
</p><h2>12 ஆம் திகதி பேரணி நிச்சயமாக நடைபெறும்&nbsp;</h2><p>
இதனையடுத்து எதிர்வரும் செப்டம்பர் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dc229498-1916-4a01-ba11-2a8a88d7e348/26-6a9d3b149f880.webp' /></p><p>
</p><p>
இந்த பின்னணியில் ஏற்கனவே ஏற்பாடு செய்யப்பட்ட அநுராதபுரத்தில் இடம்பெறவுள்ள பொதுஜன பெரமுனவின் மாபெரும் பேரணியில் நாமல் ராஜபக்சவின் வெற்றிடத்தை ஈடுசெய்ய மகிந்த ராஜபக்ச அநுராதபுரத்திற்கு வருகை தருவார் என்று ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கூறியுள்ளார்.
</p><p>
இந்நிலையில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் ஏற்பாடு செய்யப்பட்ட பேரணி 12 ஆம் திகதி நிச்சயமாக நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளார்.</p><p>

பிரதான மேடைக்கு சென்று மக்களிடையே உரையாற்றுவதற்கு பதிலாக, மேடைக்கு முன்பாகவோ அல்லது மற்றொரு தளத்திலோ இருந்து பேரணியில் கலந்துகொள்ள முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச முடிவு செய்துள்ளதாக ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கூறியுள்ளார்.</p><p></p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-06T10:06:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Bavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வீதியில் சென்ற பெண்களை அச்சுறுத்திய இளைஞர்கள் - தங்கச் சங்கிலியால் ஏற்பட்ட ஆபத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/robbery-incident-in-batticaloa-1788688973"></link>
            <id>https://tamilwin.com/article/robbery-incident-in-batticaloa-1788688973</id>
            <summary type="text">மட்டக்களப்பு - ஆனைப்பந்தி பிள்ளையார் ஆலயத்திற்கு முன்னால் உள்ள ஆலய வீதி வழியாக நடந்து சென்ற பெண்களின் தங்க சங்கிலியை அறுத்தச்செல்ல முற்பட்டதாக தெரிவிக...</summary>
            <content type="html"><![CDATA[<p>மட்டக்களப்பு - ஆனைப்பந்தி பிள்ளையார் ஆலயத்திற்கு முன்னால் உள்ள ஆலய வீதி வழியாக நடந்து சென்ற பெண்களின் தங்க சங்கிலியை அறுத்தச்செல்ல முற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>

இந்த சம்பவம் நேற்று (05.09.2026) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><h2>


தங்க சங்கிலியை பறிக்க முயற்சி</h2><p>
ஆனைப்பந்தி பிள்ளையார் ஆலயத்திற்கு முன்னால் உள்ள ஆலய வீதி வழியாக இரண்டு பெண்கள் நடந்து செல்லும் பொழுது அவர்களின் கழுத்தில் கிடந்த தங்க சங்கிலியை மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் அறுத்துச்செல்ல முற்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8d8c48f8-dfe1-4100-899c-bc015e8d8d5c/26-6a9d3ac701001.webp' /></p><p> </p><p>

இதனைத் தொடர்ந்து, மோட்டார் சைக்கிளில் வந்தவர்களை பிடித்து செல்ல முயற்சி செய்த பொழுது அவர்கள் தப்பியோடியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>

இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.&nbsp; &nbsp;&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-06T10:05:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாமல் ராஜபக்ச கைதால் கொந்தளிப்பு! உடனடியாக விடுதலை செய்ய கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/slpp-condemns-namal-rajapaksas-arrest-1788685689"></link>
            <id>https://ibctamil.com/article/slpp-condemns-namal-rajapaksas-arrest-1788685689</id>
            <summary type="text">நாடாளுமன்ற உறுப்பினரான நாமல் ராஜபக்சவை கைது செய்தது
ஜனநாயகத்துக்கு எதிரான செயல் என்பதுடன் இளைய சமுதாயத்தை அரசியலில் வரவிடாமல்
தடுப்பதே தற்போதைய அரசா...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடாளுமன்ற உறுப்பினரான நாமல் ராஜபக்சவை கைது செய்தது
ஜனநாயகத்துக்கு எதிரான செயல் என்பதுடன் இளைய சமுதாயத்தை அரசியலில் வரவிடாமல்
தடுப்பதே தற்போதைய அரசாங்கத்தின் நோக்கமாக உள்ளது என&nbsp; குற்றச்சாட்டப்பட்டுள்ளது.</p><p>சிறிலங்கா பொதுஜன பெரமுன
மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் தெய்வேந்திரராசா புலேந்திரன் இதனை தெரிவித்துள்ளார்.</p><p>சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சி மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர், நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டதை கண்டித்து இன்று (06-09-2026) ஊடக அறிக்கை ஒன்றை
வெளியிட்டுள்ளார்.</p><p></p><h2>இளைய சமுதாயம்</h2><p>
</p><p>குறித்த அறிக்கையில், “இந்த நாடு ஆங்கிலேயரிடம் இருந்து நாம் சுதந்திரம் பெற்றாலும் நாம் இன்று
சர்வாதிகாரத்துக்கு அடிமையாகவே இருந்து வந்தோம்.</p><p> இந்த நிலையில் நாடு அழிவு
பாதையில் செல்லும் போது முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவினால் நாட்டிற்கு
உண்மையான சுதந்திரம் 2009 ஆம் ஆண்டு கிடைத்தது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8d7efa20-e2b8-4ba1-8b82-32797727750c/26-6a9d39d793eaa.webp' /></p><p>அவர் வீதிகள், பாலங்கள், பாடசாலைகள் என பல அபிவிருத்திகளை செய்து நாட்டை
அபிவிருத்தி பாதைக்கு கொண்டு சென்றவர்.</p><p> அவ்வாறான அவரது மகன் நாமல் ராஜபக்ச எதுவித உண்மை காரணங்களும் இல்லாமல் இன்று கைது செய்யப்பட்டு சிறையில்
அடைக்கப்பட்டுள்ளார்.</p><p>
</p><p>இது ஜனநாயகத்துக்கு எதிரானது எமது இளைய சமுதாயத்தை வரவிடாமல் தடுப்பதே
தற்போதைய அரசாங்கத்தின் நோக்கமாக உள்ளது.</p><p></p><h2>பொருட்களின் விலை</h2><p>
நாமல் குற்றம் செய்திருந்தால் நீதிமன்றம் தண்டனை வழங்கட்டும். மக்களின்
மனங்களை அறியாத அரசாங்கம் இன்று தான்தோன்றித்தனமாக நடந்து கொள்கின்றது.
</p><p>
அன்று பொருட்களின் விலை குறைப்பதாக கூறிக் கொண்டு ஆட்சிக்கு வந்த அரசாங்கம்
முந்தைய ஆட்சி காலங்களை விட பொருட்களின் விலைகளை அதிகரித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/069edf12-8288-408a-be9e-6c553923b886/26-6a9d39d849a8f.webp' /></p><p> இதனால்
மக்கள் வைத்தியசாலைகளிலும் சிறைச்சாலைகளிலும் நிறைந்து வழிகின்றனர். இன்று நாடே போர்களமாக மாறியுள்ளதுடன் இந்த அரசாங்கத்துக்கு வாக்களித்த மக்களே
வீதியில் இறங்கி போராட்டங்களை நடத்துகின்றனர். </p><p>எனவே இந்த தவறான செயலை
மட்டக்களப்பு மாவட்ட மக்கள் வன்மையாக கண்டிக்கின்றனர்.
</p><p>
எமது இளைய தளபதி நாமல் ராஜபக்சவை உடனடியாக விடுதலை செய்யும்படி மாவட்ட
மக்களின் பிரதிநிதியாக அரசிடம் கேட்டுக் கொள்கிறோம்” என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-06T10:00:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொடியை கொடுங்க, கோட்டையை பிடிப்போம்-னு சொன்ன ரசிகர்!! ரவி மோகன் கொடுத்த ரியாக்ஷன்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/ravimohan-immediately-react-to-politics-1788689627"></link>
            <id>https://viduppu.com/article/ravimohan-immediately-react-to-politics-1788689627</id>
            <summary type="text">ரவி மோகன்நடிகர் ரவி மோகன், வரும் செப்டம்பர் 10 ஆம் தேதி தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடவுள்ளார். அதற்காக சமீபத்தில் தன்னுடைய ரசிகர்களை சந்திக்க ஏற்பாடு செ...</summary>
            <content type="html"><![CDATA[<h2>ரவி மோகன்</h2><p>நடிகர் ரவி மோகன், வரும் செப்டம்பர் 10 ஆம் தேதி தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடவுள்ளார். அதற்காக சமீபத்தில் தன்னுடைய ரசிகர்களை சந்திக்க ஏற்பாடு செய்தார். சில நாட்களுக்கு முன் அதற்காக ரசிகர்களை அழைத்து நிகழ்ச்சியையும் வைத்திருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9433a2a7-29a0-44cf-bfaf-f8ee418a468e/26-6a9d3cdd75de4.webp' /></p><p> அப்போது பேசிய ரவி மோகனின் ரசிகர் ஒருவர், அண்ணா அழைப்புதழ் கொடுங்கள், தமிழகத்தில் இருந்து அலையாய் வருவோம், கொடியை கொடுங்கள், உங்கள் ரசிகர்கள் கோட்டையை பிடிப்போம் என்று கூறியிருக்கிறார். </p><p>அவர் பேசி முடித்தவுடன் ரவி மோகன், எழுந்து உடனடியாக சென்று அவரை கட்டிப்பிடித்து பேசியுள்ளார்.</p><p> இந்த வீடியோ இணையத்தில் பகிரப்பட்டு வந்தநிலையில், தனுஷை தொடர்ந்து ரவி மோகனும் அரசியலுக்கு வருவார் என்ற கருத்துகளையும் பகிர்ந்து வருகிறார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2136ff48-44f0-4eb9-9ac7-5e2d97e39ceb/26-6a9d3cde27d8e.webp' /></p><p> </p><h2>பதவி, புகழ் தேவையில்லை</h2><p>அதற்கு ரவி மோகன், எல்லாரும் கேள்வி கேட்பதுதான், அது தனிப்பட்ட முடிவுதான், இப்போது சினிமாவில் நான் இருக்கிறேன், சினிமாவில் இருக்கும் வரை எந்த சார்பாகவும் பேசமுடியாது. சினிமா மட்டும் தான் சாதி, மத, பேத இல்லாதல் துறை என்று பார்க்கிறேன். நல்லது செய்ய பதவி, புகழ் தேவையில்லை, எதுவுமே தேவையில்லை, எப்போதுமே செய்யலாம் என்று ஓபனாக பேசியுள்ளார்.</p><p><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr">“Anna, give us your support… Give us the flag! We’ll come as a wave from Tamil Nadu and capture the fans’ fortress!” 🔥<br><br>After the fan club administrator’s words, <a href="https://x.com/hashtag/RaviMohan?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#RaviMohan</a> immediately met him and sought his advice! ❤️‍🔥 <a href="https://t.co/BUm05GsNoG">pic.twitter.com/BUm05GsNoG</a></p>&mdash; CineBuzzMedia (@CineBuzzMedia) <a href="https://x.com/CineBuzzMedia/status/2096502524660580573?ref_src=twsrc%5Etfw">September 6, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p>]]></content>
            <updated>2026-09-06T10:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வலி. வடக்கு காணி விடுவிப்பு கோரி பலாலியில் 12ஆவது வாரமாக போராட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/protest-in-palali-demand-vali-north-land-release-1788685759"></link>
            <id>https://ibctamil.com/article/protest-in-palali-demand-vali-north-land-release-1788685759</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் - வலி. வடக்கு பகுதியில் இராணுவத்தின் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி மக்கள் போராட்டமொன்றை முன்னெடுத்தனர். 36 வருடங்களாக காணிகளை இ...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் - வலி. வடக்கு பகுதியில் இராணுவத்தின் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி மக்கள் போராட்டமொன்றை முன்னெடுத்தனர்.</p><p> 36 வருடங்களாக காணிகளை இழந்த மக்கள் பலாலி சந்தியில் இன்றைய
தினம் (06) 12ஆவது வாரமாகவும் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்தனர்.</p><p>தமது காணிகளில் இராணுவம் விவசாய நடவடிக்கைகள் மற்றும் வர்த்தக நிலையங்களை
அமைத்து தமது சொந்த தேவைகளுக்கு பயன்படுத்தி வருவதாக போராட்டக்காரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.</p><p></p><h2>காணிகளை விடுவிக்க வேண்டும்</h2><p>இந்தநிலையில் தாம் நீண்ட காலமாக
நிலங்கள், வீடுகள் அற்று வாழ்ந்து வரும் நிலையில் தமது வீடுகள் காணிகளை
விடுவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/13b9d434-06a6-44b1-a4b4-a246c511f72e/26-6a9d3737496a8.webp' /></p><p>
</p><p>இதேவேளை யாழில் அண்மையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் அமைச்சர்களான பிமல் ரத்னாயக்க மற்றும் இராமலிங்கம் சந்திரசேகர் ஆகியோர் பலாலி கிழக்கு உள்ளிட்ட பகுதிகளை செப்டெம்பர் மாதமளவில் விடுவிக்க நடவடிக்கை
எடுத்துள்ளதாக கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-06T09:54:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[மின்னல் தாக்கம் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தின் எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/meteorology-department-warns-of-lightning-strikes-1788688368"></link>
            <id>https://jvpnews.com/article/meteorology-department-warns-of-lightning-strikes-1788688368</id>
            <summary type="text">கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களுக்கும் பொலன்னறுவை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுக்கும் பலத்த மின்னல் தாக்கம் குறித்தான எச்சரிக்கை அறிவிப்பையொன்றை வளிம...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களுக்கும் பொலன்னறுவை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுக்கும் பலத்த மின்னல் தாக்கம் குறித்தான எச்சரிக்கை அறிவிப்பையொன்றை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது. </p><p style="text-align: justify; ">

இதற்கமைய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் ஆங்காங்கே இடியுடன் கூடிய மழையுடன் பலத்த மின்னல் ஏற்படுவதற்கான அதிக சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d2ee68f5-9df7-4d67-a21e-e3c55f6f8e59/26-6a9d37f1d6d8b.webp' /></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

இடியுடன் கூடிய மழை பெய்யும் போது அப்பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். </p><p style="text-align: justify; ">

மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் ஆபத்துகளைக் குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது. </p><p style="text-align: justify; ">

இன்று (06) முற்பகல் 11.30 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை அறிவித்தல் நாளை (07) முற்பகல் 11.30 மணி வரை செல்லுபடியாகும்.</p>]]></content>
            <updated>2026-09-06T09:53:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[EV வாகனங்களின் பச்சை நிற தகட்டை ஆராய்ந்த பொலிஸார் - அரசாங்கத்தால் சாரதிகளுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/police-examine-green-license-plates-of-ev-vehicles-1788688130"></link>
            <id>https://tamilwin.com/article/police-examine-green-license-plates-of-ev-vehicles-1788688130</id>
            <summary type="text">இலங்கையில் மின்சார EV வாகனங்களுக்கு வழங்கப்படும் புதிய பச்சை நிறப்
பதிவுத் தகடுகள் தொடர்பில் சில பொலிஸ் அதிகாரிகளிடையே போதிய
விழிப்புணர்வு இல்லை என ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் மின்சார EV வாகனங்களுக்கு வழங்கப்படும் புதிய பச்சை நிறப்
பதிவுத் தகடுகள் தொடர்பில் சில பொலிஸ் அதிகாரிகளிடையே போதிய
விழிப்புணர்வு இல்லை என வாகன சாரதி ஒருவர் விசனம் தெரிவித்துள்ளார்.</p><p> 

இது தொடர்பில் அவர் சமூக ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
அவர் மேலும் தெரிவிக்கையில், </p><p> 

வெலிவெரியா பகுதியில் பயணத் தடுப்பில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகள், தமது
மின்சார வாகனத்தை மறித்து, அதில் பொருத்தப்பட்டிருந்த பச்சை நிறப் பதிவுத் தகடு தொடர்பில் விசாரணை நடத்தினார்கள். </p><p>

மேலும் மின்சார வாகனங்களுக்குப் பச்சை நிறத் தகடுகள் வழங்கப்படுவது தொடர்பில் 
ஆரம்பத்தில் அதிகாரிகளுக்குத் தெரியவில்லை.</p><h2>போலி வாகன தகடு</h2><p>
அந்தப் பதிவுத் தகடு போலி அல்லது சட்டவிரோதமானதா என்று அவர்கள் சந்தேகக் கேள்விகளை எழுப்புகிறார்கள்.</p><p> 

அத்துடன் அந்தப் பதிவுத் தகடு அதிகாரப்பூர்வமாகமோட்டார் போக்குவரத்துத்
திணைக்களத்தால் வழங்கப்பட்டது என்பதை நிரூபிக்க, தகட்டைப்
பெற்றுக்கொள்வதற்காகத் தனக்கு வந்த அதிகாரப்பூர்வ குறுஞ்செய்தியை (SMS) பொலிஸாரிடம் காட்டி நிலைமை விளக்கமாக எடுத்து கூறினேன்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/83181136-5668-4663-a868-729367ed0230/26-6a9d373f68a4a.webp' /></p><p> </p><p>



இந்தச் சம்பவத்திற்காக தான் பொலிஸ் அதிகாரிகளைக் குறை கூறவில்லை, மாறாக வாகன சாரதிகள் மோட்டார் வாகனப் பதிவு மற்றும் பதிவுத் தகடுகளில்
செய்யப்படும் மாற்றங்கள் தொடர்பில் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் உடனுக்குடன் அதிகாரப்பூர்வமாகத் தெரியப்படுத்த வேண்டும்.
</p><p>

 இத்தகைய விழிப்புணர்வு நடவடிக்கைகள் மூலமே, எதிர்காலத்தில் பிற மின்சார வாகன
உரிமையாளர்கள் தேவையில்லாத அலைச்சல்களையும் சிரமங்களையும் சந்திப்பதைத் தவிர்க்க முடியும் என்றார்.&nbsp;&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-06T09:49:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[டெல்லியில் திடீரென இடிந்து விழுந்த மாணவர் விடுதி: 50 க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளில் சிக்கி தவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/student-hostel-collapse-in-delhi-1788688107"></link>
            <id>https://news.lankasri.com/article/student-hostel-collapse-in-delhi-1788688107</id>
            <summary type="text">Student Hostel Collapse in Delhi : டெல்லியில் மாணவர் விடுதி திடீரென இடிந்து விழுந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இடிந்து விழுந்த மாணவர் விடுதி...</summary>
            <content type="html"><![CDATA[<p>Student Hostel Collapse in Delhi : டெல்லியில் மாணவர் விடுதி திடீரென இடிந்து விழுந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><h2> இடிந்து விழுந்த மாணவர் விடுதி</h2><p>
புது டெல்லியின் சத்யா நிகேதன் பகுதியில் மாணவர் விடுதியாக செயல்பட்டு வந்த அடுக்குமாடி கட்டிடம் ஞாயிற்றுக்கிழமை திடீரென இடிந்து விழுந்தது.</p><p> இந்த திடீர் விபத்து காரணமாக கட்டிடத்தில் இருந்த 50 க்கும் மேற்பட்ட மாணவர்கள் இடிபாடுகளில் சிக்கி உள்ளனர்.</p><p><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr"><a href="https://x.com/hashtag/WATCH?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#WATCH</a> | Delhi: A building has collapsed near Satya Niketan in South-West Delhi. The fire department received an alert around 1:30 PM. The rescue operation is underway. More details are awaited as the situation becomes clearer: Delhi police<br><br>(Source: NSUI) <a href="https://t.co/txNWIYZzTu">https://t.co/txNWIYZzTu</a> <a href="https://t.co/8ExL24roVn">pic.twitter.com/8ExL24roVn</a></p>&mdash; ANI (@ANI) <a href="https://x.com/ANI/status/2096518444275712323?ref_src=twsrc%5Etfw">September 6, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>&nbsp;<br></p><p> விபத்து தொடர்பாக தகவல் கிடைத்ததும் டெல்லி தீயணைப்பு துறையினர் மற்றும் மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.</p><p></p><p>மீட்பு பணிகள் தொடர்ந்து வேகமாக நடைபெற்று வருவதால், சூழ்நிலையை முழுமையாக ஆராயப்பட்டு பின்னர் கூடுதல் விவரங்கள் வெளியிடப்படும் என்று அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"> WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-06T09:48:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[லதா ராவின் வீடியோ எதிரொலி: சென்னை விமான நிலையத்தில் 36 நாப்கின் வெண்டிங் மெஷின்கள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/actress-video-sanitary-napkin-facility-at-airport-1788686814"></link>
            <id>https://manithan.com/article/actress-video-sanitary-napkin-facility-at-airport-1788686814</id>
            <summary type="text">சென்னை விமான நிலையத்தில் அனைத்து பெண்கள் ஓய்வறைகளிலும் புதிதாக 36 சானிட்டரி நாப்கின் வெண்டிங் மெஷின்கள் பொருத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.&amp;nbs...</summary>
            <content type="html"><![CDATA[<p>சென்னை விமான நிலையத்தில் அனைத்து பெண்கள் ஓய்வறைகளிலும் புதிதாக 36 சானிட்டரி நாப்கின் வெண்டிங் மெஷின்கள் பொருத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.&nbsp;</p><h2>நடிகை லதா ராவ் வீடியோ</h2><p>

நடிகை லதா ராவ் சமீபத்தில் வெளியிட்ட வீடியோவில், சென்னையில் இருந்து ஐதராபாத் செல்ல விமான நிலையம் சென்றபோது திடீரென மாதவிடாய் ஏற்பட்டதாகவும், சானிட்டரி நாப்கின் வாங்குவதற்கு விமான நிலையத்தில் போதிய வசதி இல்லாததால் அவதிப்பட்டதாகவும் தெரிவித்திருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/57298ca6-4b19-42e1-920a-ef2d7b586d11/26-6a9d36387d005.webp' /></p><p>

அவரது வீடியோ சமூக வலைதளங்களில் பரவலான கவனத்தைப் பெற்றதுடன், விமான நிலையத்தில் சானிட்டரி நாப்கின் வசதி இல்லாதது குறித்து பலரும் விமர்சனம் தெரிவித்தனர்.
</p><p>
இதையடுத்து, சென்னை விமான நிலைய அதிகாரிகள் அனைத்து பெண்கள் ஓய்வறைகளிலும் 36 சானிட்டரி நாப்கின் வெண்டிங் மெஷின்கள் அமைக்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b63e3418-929c-4669-87eb-071799ee37a9/26-6a9d36393637a.webp' /></p><p></p><p> ஏற்கனவே இந்த வசதி இருந்ததாகவும், தவறாகப் பயன்படுத்தப்பட்டதாக வந்த புகார்களால் அது தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.&nbsp;</p><p>
தற்போது அவசர தேவைக்காக பெண்கள் ஓய்வறைகளில் தொடர்பு கொள்ள தொலைபேசி எண் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த எண்ணில் தொடர்பு கொண்டால், இரண்டு நிமிடங்களுக்குள் பெண் விமான நிலைய ஊழியர் சானிட்டரி நாப்கின் வழங்கும் தற்காலிக ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d8ccd0a0-b1f4-41f5-8d90-c8b6d95cff09/26-6a9d3639def6f.webp' /></p><p></p><p>
</p><p>
லதா ராவின் வீடியோவைத் தொடர்ந்து ஏற்பட்ட இந்த மாற்றத்திற்கு பல்வேறு தரப்பினரும் அவருக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கதுஃ</p><p><br></p>]]></content>
            <updated>2026-09-06T09:47:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் விஸ்வநாத் &amp; சன்ஸ் படத்தின் வசூல் விவரம்.. 23 நாட்கள் பாக்ஸ் ஆபிஸ்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/vishwanath-and-sons-23-days-box-office-1788687342"></link>
            <id>https://cineulagam.com/article/vishwanath-and-sons-23-days-box-office-1788687342</id>
            <summary type="text">சூர்யா நடிப்பில் கடந்த வாரம் வெளியான விஸ்வநாத் &amp;amp; சன்ஸ் திரைப்படத்தின் 23 நாட்கள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

விஸ்வநாத் &amp;amp; சன்ஸ் 
...</summary>
            <content type="html"><![CDATA[<p>சூர்யா நடிப்பில் கடந்த வாரம் வெளியான விஸ்வநாத் &amp; சன்ஸ் திரைப்படத்தின் 23 நாட்கள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.</p><p></p><h2>

விஸ்வநாத் &amp; சன்ஸ் </h2><p>

2026-ஆம் ஆண்டு கருப்பு படத்தின் மூலம் பிளாக்பஸ்டர் வெற்றியை தந்தார் <a href="https://www.youtube.com/watch?v=JTHZCJ8Rhxg&amp;t=2s" target="_blank">சூர்யா</a>. இதை தொடர்ந்து சில மாதங்களிலேயே அவர் நடிப்பில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளியான திரைப்படம் விஸ்வநாத் &amp; சன்ஸ்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cdb08153-4efe-4a88-bb63-c0166582b03b/26-6a9d33f11c09b.webp' /></p><p>இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவான இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து முதல் முறையாக மமிதா பைஜூ நடித்துள்ளார். மேலும், ராதிகா சரத்குமார், ரவீனா டாண்டன், சுனில் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். </p><h2>

வசூல்
</h2><p>
விஸ்வநாத் &amp; சன்ஸ் திரைப்படத்தின் வசூல் குறித்து முதல் நாளிலிருந்தே பார்த்து வரும் நிலையில், 23 நாட்களில் உலகளவில் இப்படம் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் உலகளவில் 23 நாட்களில் ரூ. 217.5 கோடி வசூலித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f7d3df59-e42f-4ba7-ab07-8af6f1eed6b6/26-6a9d33f1d17c8.webp' /></p>]]></content>
            <updated>2026-09-06T09:40:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[NPP அரசாங்கம் ஜனநாயக முறைமையை அடக்க முயற்சி ; முன்னாள் ஜனாதிபதி ரணில்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/npp-government-trying-to-suppress-democracy-ranil-1788686756"></link>
            <id>https://jvpnews.com/article/npp-government-trying-to-suppress-democracy-ranil-1788686756</id>
            <summary type="text">தற்போதைய அரசாங்கமானது நாட்டின் ஜனநாயக முறைமையையும் எதிர்க்கட்சியையும் அடக்கும் செயற்திட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க த...</summary>
            <content type="html"><![CDATA[<p>தற்போதைய அரசாங்கமானது நாட்டின் ஜனநாயக முறைமையையும் எதிர்க்கட்சியையும் அடக்கும் செயற்திட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். </p><p>

ஐக்கிய தேசியக் கட்சியின் 80வது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு இன்று (06) கருத்துத் தெரிவிக்கும்போதே முன்னாள் ஜனாதிபதி இவ்விடயங்களைக் குறிப்பிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dc04be1f-2808-4b0a-92f4-6f1c051b7d35/26-6a9d31a643bc1.webp' /></p><p>சட்டத்தரணிகள் சங்கம், வைத்தியர்கள் மற்றும் பௌத்த பிக்குகளுக்கு எதிராகவும் அரசாங்கம் தற்போது செயற்படத் தொடங்கியுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டினார்.</p><p></p><p>

அத்துடன், தற்போதைய சூழலில் அரசியல் கட்சிகளுக்குக் கட்டுப்பாடுகளையும் இடையூறுகளையும் விதிப்பதுடன், எவ்வித காரணமும் இன்றி அரசியல்வாதிகளைக் கைது செய்து ஜனநாயகம், எதிர்க்கட்சி மற்றும் சுயாதீன தொழிற்சங்கங்களை அடக்கும் பிரசாரத்தில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாகவும் முன்னாள் ஜனாதிபதி குற்றம் சாட்டினார்.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-09-06T09:26:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[செம்மணி மனிதப்புதைகுழி : சுயாதீன சர்வதேச விசாரணை கோரும் பிரித்தானிய எம்.பி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/international-investigation-about-chemmani-uk-mp-1788674300"></link>
            <id>https://ibctamil.com/article/international-investigation-about-chemmani-uk-mp-1788674300</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பில் சர்வதேச நிதியுதவியுடன் கூடிய முழுமையானதும் சுயாதீனமானதுமான சர்வதேச விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும் என...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பில் சர்வதேச நிதியுதவியுடன் கூடிய முழுமையானதும் சுயாதீனமானதுமான சர்வதேச விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும் என பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் பொப் பிளக்மன் வலியுறுத்தியுள்ளார்.
</p><p>பாடசாலை மாணவி கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலை செய்யப்பட்டு நாளையுடன் (07) 30 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில், செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பில் கருத்து வெளியிட்ட போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.</p><p>அவர் மேலும் தெரிவிக்கையில், 30 ஆண்டுகளுக்கு முன்னர் இடம்பெற்ற கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலை தொடர்பான வழக்கில் வெளிப்பட்ட தகவல்களே செம்மணி பகுதியில் மனிதப் புதைகுழிகள் இருப்பது தொடர்பான விசாரணைகளுக்கு முக்கிய காரணமாக அமைந்தன.</p><p></p><h2>&nbsp;583 மனித எச்சங்கள் மீட்பு&nbsp;</h2><p>இந்தநிலையில், செம்மணி மனிதப் புதைகுழியில் முன்னெடுக்கப்பட்டுவரும் அகழ்வுப் பணிகளில் இதுவரை 583 மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்டு அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் செம்மணி, இலங்கையில் இதுவரை கண்டறியப்பட்ட மிகப்பெரிய மனிதப் புதைகுழியாக மாறியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e07d077f-45c1-44a3-b0fa-9698dc5c207c/26-6a9d09f5a5506.webp' /></p><p> கிருஷாந்தி குமாரசுவாமியின் படுகொலையும் அதனைத் தொடர்ந்து வெளிப்பட்ட செம்மணி மனிதப் புதைகுழி விவகாரமும், இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் மற்றும் போர்க்காலத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் கொலைகள் தொடர்பான உண்மை மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பில் நீண்டகாலமாக பதிலளிக்கப்படாத கேள்விகளை மீண்டும் எழுப்பியுள்ளன.
</p><p>செம்மணி விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கும் காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கும் உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறல் உறுதி செய்யப்பட வேண்டும்.</p><p></p><h2>டி.என்.ஏ பரிசோதனை</h2><p>
</p><p>
மனிதப் புதைகுழியில் இருந்து மீட்கப்படும் எச்சங்கள் தொடர்பான தடயவியல் மற்றும் டி.என்.ஏ பரிசோதனைகளுக்கு சர்வதேச நிபுணத்துவம் தேவைப்படுவதாகவும், இந்த விவகாரத்தில் சர்வதேச பங்களிப்பு அவசியம் எனவும் மனித உரிமை அமைப்புகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f6b0ae09-f56f-47cb-9c50-d274a9d14281/26-6a9d09f660ea7.webp' /></p><p>எனவே, செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் தொடர்பில் வெளிப்படையான, சுயாதீனமான மற்றும் சர்வதேச தரத்திலான விசாரணை முன்னெடுக்கப்படுவதுடன், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நீண்டகாலமாக மறுக்கப்பட்டு வரும் உண்மையும் நீதியும் உறுதி செய்யப்பட வேண்டும்“ என&nbsp; தெரிவித்துள்ளார்.</p><p>&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-06T09:25:32+00:00</updated>
        </entry>
    </feed>
