<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-07-18T17:48:17+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜப்பானின் புதிய அதிநவீன போர் விமானம்., முதல்முறையாக வானில் பறந்த Kawasaki EC-2]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/japans-kawasaki-ec-2-jet-challenges-china-1784396536"></link>
            <id>https://news.lankasri.com/article/japans-kawasaki-ec-2-jet-challenges-china-1784396536</id>
            <summary type="text">ஜப்பான் தனது புதிய அதிநவீன மின்னணு போர்த் தொழில்நுட்ப விமானமான Kawasaki EC-2ஐ கிஃபு விமானத் தளத்தில் முதல் முறையாக பறக்கவிட்டு சோதனை மேற்கொண்டது.

ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜப்பான் தனது புதிய அதிநவீன மின்னணு போர்த் தொழில்நுட்ப விமானமான Kawasaki EC-2ஐ கிஃபு விமானத் தளத்தில் முதல் முறையாக பறக்கவிட்டு சோதனை மேற்கொண்டது.</p><p>

சீனா தைவான் நீரிணை மற்றும் கிழக்கு சீனக் கடலில் தனது வான்வழி பாதுகாப்பு வலையமைப்புகளை விரிவுபடுத்திக் கொண்டிருக்கும் சூழலில், இந்த விமானம் ஜப்பானின் பாதுகாப்புத் திட்டத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2fadfb29-c9a2-42be-a073-d0b481b43154/26-6a5bbc4552394.webp' /></p><p>

EC-2, பழைய EC-1 விமானத்தை விட அதிக திறன் கொண்டதாகும். “பிளாட்டிபஸ்” (Platypus) என அழைக்கப்படும் தனித்துவமான முன்பகுதி, J/ALQ-5 மின்னணு எதிர்ப்பு அமைப்பு மற்றும் தொஷிபா நிறுவனத்தின் ஜாமிங் ஆன்டினாக்களைக் கொண்டுள்ளது.
</p><p>
இது எதிரி ரேடார் மற்றும் தொடர்பு அமைப்புகளை தொலைவிலிருந்தே குழப்பக்கூடிய திறன் பெற்றுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1ce2060e-f8d7-40f4-a215-693b20f9b6b8/26-6a5bbc449db2e.webp' /></p><p>ஜப்பான் 2022 தேசிய பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், மின்னணு போர்த் திறனை மேம்படுத்த 260 மில்லியன் டொலர் மதிப்பிலான திட்டத்தை மேற்கொண்டுள்ளது. </p><p>EC-2 விமானங்கள் 2027-ஆம் ஆண்டுக்குள் முழுமையாக சேவையில் சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/35188121-4768-4146-9bb1-85bbbdac64b7/26-6a5bbc46058b0.webp' /></p><p>இந்த திட்டம், 1986 முதல் செயல்பட்ட EC-1 விமானம் ஓய்வு பெற்ற பிறகு ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்புகிறது. ஜப்பான், Iruma Air Base-இல் அமைந்துள்ள மின்னணு போர்த் பிரிவின் கீழ் நான்கு EC-2 விமானங்களை இயக்கத் திட்டமிட்டுள்ளது.
</p><p>
இதன் மூலம் ஜப்பான், சீனாவின் வலுவான வான்வழி பாதுகாப்பு வலையமைப்புகளுக்கு எதிராக தனது நிலையை வலுப்படுத்துகிறது.&nbsp;&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-18T17:40:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[போர் உச்சம்; அமெரிக்காவுக்கு இறுதி எச்சரிக்கை விடுத்த ஈரான் ! பீதியில் உலக நாடுகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/no-border-will-be-safe-mohsen-rezaee-warning-us-1784380224"></link>
            <id>https://canadamirror.com/article/no-border-will-be-safe-mohsen-rezaee-warning-us-1784380224</id>
            <summary type="text">&amp;nbsp; அமெரிக்கப் படைகள் தங்களின் வான்வழித் தாக்குதல்களை இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குத் தொடர்ந்தால், ஈரான் தற்காப்புப் பாணியை விடுத்து முழ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; அமெரிக்கப் படைகள் தங்களின் வான்வழித் தாக்குதல்களை இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குத் தொடர்ந்தால், ஈரான் தற்காப்புப் பாணியை விடுத்து முழு அளவிலான ஆக்கிரமிப்பு மற்றும் அழிவு என்ற புதிய அதிரடிப் போர்க்கட்டத்திற்குள் நுழையும் என ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா கமேனியின் மூத்த ராணுவ ஆலோசகர் மோஹ்சென் ரெசாய் (mohsen rezaee) மிகக் கடுமையான இறுதி எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளமை உலக நாடுகளில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
</p><p>
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்தின் உத்தரவின் பேரில் ஈரானிய இலக்குகள் மீது தொடர்ந்து ஏழாவது நாளாக அமெரிக்கா குண்டுமழை பொழிந்து வரும் சூழலில், ஈரானின் இந்த பகிரங்க மிரட்டல் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது 

ஈரான் அரசுத் தொலைக்காட்சியில் (IRIB TV) தோன்றிப் பேசிய ராணுவ ஆலோசகர் மோஹ்சென் ரெசாய் (mohsen rezaee) ,</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3d436f26-6966-458c-a337-e2ff360dd586/26-6a5b7b420a6d8.webp' /></p><p> “மத்திய கிழக்கில் தூதரகப் பேச்சுவார்த்தைகளுக்கான காலம் தற்பொழுது முற்றிலும் முடிந்துவிட்டது; அமெரிக்கா போரை நிறுத்தவில்லை என்றால் நாங்கள் தற்காப்புப் பதிலடிகளைத் தாண்டிப் பாய்வோம்” என்று குறிப்பிட்டுள்ளார். </p><p>

 இந்த புதிய தாக்குதல் உத்தியை நாங்கள் செயல்படுத்தத் தொடங்கினால், எந்தவொரு அரசியல் எல்லையையும் நாங்கள் மதிக்க மாட்டோம்; அந்த எல்லைகள் எதுவும் எதிரிகளுக்குப் பாதுகாப்பை வழங்காது” என்று கூறி, அமெரிக்காவின் நட்பு நாடுகளையும் சேர்த்துத் தாக்கத் தயங்க மாட்டோம் என ஆக்ரோஷமாக&nbsp; (mohsen rezaee)&nbsp; எச்சரித்துள்ளார்.</p><p>மறுபுறம், அமெரிக்க மத்திய கட்டளைத் தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிபர் டொனால்ட் டிரம்பின் நேரடி அறிவுறுத்தலின்படி ஈரானின் ராணுவக் கட்டமைப்புகளைச் சிதைப்பதற்காகத் தங்களின் போர் விமானங்கள் மற்றும் போர்க்கப்பல்கள் மூலம் துல்லியமான தாக்குதல்களைத் தொடர்ந்து நடத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ளது.</p><p>

ஹார்முஸ் நீரிணைப் பகுதியில் சர்வதேசக் கப்பல் போக்குவரத்திற்கு ஈரான் அச்சுறுத்தலாக விளங்குவதைத் தடுக்கவே இந்தத் தாக்குதல்கள் நடத்தப்படுவதாக அமெரிக்கா கூறுகிறது. </p><p>ஆனால், அமெரிக்காவின் இந்தத் தாக்குதல்களுக்குப் பதிலடியாகப் பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மீது முன்னெப்போதும் இல்லாத வகையில் ஏவுகணை மற்றும் ட்ரோன் அலைகளை ஏவப் போவதாக ஈரான் பதிலடிப் பிரகடனம் செய்துள்ளது.
</p><p>
இதுவரை பிராந்தியத்தில் ஒரு பெரிய உலகளாவிய பாதுகாப்பு நெருக்கடி வெடிப்பதைத் தவிர்ப்பதற்காகவே தங்களின் ஏவுகணைக் கூட்டுப் படைகளைத் தடுத்து நிறுத்தி, பொறுமை காத்து வந்ததாகக் கூறியுள்ள ஈரான் ராணுவத் தலைமை, இனி தங்களின் இறையாண்மைக்கு ஆபத்து வந்தால் பின்வாங்கப் போவதில்லை எனத் தெளிவுபடுத்தியுள்ளது. </p><p>

 இன்னிலையில் ஈரானின் இந்த “முழு அளவிலான போர்” எச்சரிக்கை ஒட்டுமொத்த மத்திய கிழக்கையும் ஒரு மிகப்பெரிய உலகப்போர்ச் சூழலின் விளிம்பிற்குத் தள்ளியுள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-18T17:32:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[முன்னாள் பொலிஸ்மா அதிபரின் வீட்டில் மர்ம நபர்கள்! சிக்கிய CCTV காட்சிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/igp-wickramaratne-house-cid-cctv-footage-1784392455"></link>
            <id>https://tamilwin.com/article/igp-wickramaratne-house-cid-cctv-footage-1784392455</id>
            <summary type="text">முன்னாள் பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் உயிரிழப்பு தொடர்பில் இன்னும் பல புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.இந்தநிலையிலே, சி.டி. விக்ரமரத்ன உயிரிழப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் உயிரிழப்பு தொடர்பில் இன்னும் பல புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p>இந்தநிலையிலே, சி.டி. விக்ரமரத்ன உயிரிழப்பதற்கு முன்னதாக அவரது இல்லத்திற்கு வருகை தந்த நபர்கள் தொடர்பிலும் சிசிரிவி காணொளிகளை மீட்டு விசாரணைகளை மேற்கொள்வது என்று ஒரு கருத்து கூறப்படுகின்றது.அதில் எந்த அளவிற்கு உண்மை தன்மை இருக்கின்றது என்று தெரியவில்லை.</p><p>ஏனென்றால் அவர் நாளாந்த வாழ்க்கை செயற்பாடுகளை சாதாரணமாகத் தான் ஆரம்பித்து இருக்கின்றார்.ஏன் இந்தத் தவறான முடிவை அவர் எடுப்பதற்கு அவர் முயற்சி செய்தார் என்கின்ற சந்தேகம் எழுகின்றது.</p><p>வீட்டிலுள்ள சிசிரிவி காட்சிகளை மையப்படுத்தி பொலிஸார் விரிவான விசாரணை ஒன்றை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p>மேலும், முன்னாள் பொலிஸ்மா அதிபரின் மரணம் தொடர்பில் அவரது மெய்ப்பாதுகாவலரின் வாக்குமூலத்தில் சந்தேகங்கள் எழுவதாகக் கூறப்படுகின்றது.</p><p>இந்த விடயம் தொடர்பான விரிவான தகவல்களை செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சியில் காணலாம்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/01_b2ALaeiI" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-18T17:22:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ். சிட்டிவேரம் பகுதியில் விபத்தில் சிக்கி இளைஞன் பரிதாப மரணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/jaffna-cityveram-accident-young-man-death-1784393615"></link>
            <id>https://jvpnews.com/article/jaffna-cityveram-accident-young-man-death-1784393615</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் - தென்மராட்சி, கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிட்டிவேரம்
பகுதியில் ஏற்பட்ட விபத்தில் வடமராட்சி பருத்தித்துறை தும்பளை பகுதியைச்
சேர்ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் - தென்மராட்சி, கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிட்டிவேரம்
பகுதியில் ஏற்பட்ட விபத்தில் வடமராட்சி பருத்தித்துறை தும்பளை பகுதியைச்
சேர்ந்த 29 வயதுடைய சின்னராசா துளசிகரன் எனும் இளைஞன் உயிரிழந்துள்ளார்.
</p><p>குறித்த சம்பவம் இன்று (18.07.2026) பிற்பகல் 2.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.</p><p>
</p><p>
இது குறித்து மேலும் தெரியவருகையில்,

கொடிகாமம் பகுதியிலிருந்து பருத்தித்துறை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று
கொண்டிருக்கும் போது மின் கம்பத்துடன் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0f03d06c-993c-43cc-8e0f-b1e6dd9f7d27/26-6a5bb23d37e50.webp' /></p><p>
</p><p>
இதன்போது அவரை உடனடியாக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு
கொண்டு செல்லப்பட்டு அங்கு அதி தீவிர சீக்கிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு
சிகிக்சை வழங்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி பருத்தித்துறை ஆதார
வைத்தியாசலையில் உயிரிழந்துள்ளார்.
</p><p>
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-18T17:14:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[வைத்தியசாலையில் சிக்கிசை பெற்று வந்த முன்னணி ஆடை வர்த்தக நிலைய உயிமையாளருக்கு விளக்கமறியல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/house-of-fashions-owner-remanded-1784394629"></link>
            <id>https://ibctamil.com/article/house-of-fashions-owner-remanded-1784394629</id>
            <summary type="text">இலங்கையில் உள்ள முன்னணி ஆடை விற்பணை நிலைய வர்த்தகர் ஒருவரான பிரீத்தி ஜயவர்தன விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இலங்கை சுங...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் உள்ள முன்னணி ஆடை விற்பணை நிலைய வர்த்தகர் ஒருவரான பிரீத்தி ஜயவர்தன விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p> 

இலங்கை சுங்கத் திணைக்களத்தின் விசாரணையின் போது அவருக்கு இதயம் தொடர்பான மருத்துவக் குறைபாடு ஏற்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.</p><p> இதை அடுத்து, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சையின் போதே விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><h2>சுங்க வரி மதிப்பீட்டுப் பிரச்சினை&nbsp;</h2><p>

சுங்க அதிகாரிகளுடன் இருந்தபோது ஜயவர்தனவுக்கு இதயம் தொடர்பான மருத்துவக் குறைபாடு ஏற்பட்டதாகவும், அதன் பின்னர் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் இலங்கை சுங்கத் திணைக்களத்தின் பேச்சாளர் சந்தன புஞ்சிஹேவா உறுதிப்படுத்தியதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9a8e899d-4ae2-4aae-ae27-7fcdddc4de2d/26-6a5bb38762819.webp' /></p><p> 

இந்நிலையில், கொழும்பு பிரதம நீதவான் வைத்தியசாலைக்குச் சென்று, சந்தேக நபரை பார்வையிட்ட பின்னர் அவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>

சுங்க வரி மதிப்பீட்டுப் பிரச்சினை ஒன்றின் அடிப்படையிலேயே இந்த விசாரணை முன்னெடுக்கப்பட்டு வந்ததாகவும் கூறப்படுகின்றது.&nbsp;&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-18T17:10:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[இயக்குனராக எனக்கு முதல் தேசிய விருது.. தனுஷ் உருக்கமான நன்றி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/dhanush-thanks-statement-winning-2-national-awards-1784393521"></link>
            <id>https://cineulagam.com/article/dhanush-thanks-statement-winning-2-national-awards-1784393521</id>
            <summary type="text">இன்று 2024ம் ஆண்டுக்கான தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டது. அதில் நடிகர் தனுஷ் கேப்டன் மில்லர் படத்திற்கு சிறந்த நடிகர் ( ஸ்பெஷல் mention) விருது பெறுவத...</summary>
            <content type="html"><![CDATA[<p>இன்று 2024ம் ஆண்டுக்கான தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டது. அதில் நடிகர் தனுஷ் கேப்டன் மில்லர் படத்திற்கு சிறந்த நடிகர் ( ஸ்பெஷல் mention) விருது பெறுவதாக அறிவிக்கப்பட்டது.</p><p>மேலும் ராயன் படம் சிறந்த தமிழ் படமாக தேர்வு செய்யப்பட்டது. இரண்டு தேசிய விருதுகளை வென்றது பற்றி தனுஷ் உருக்கமாக அறிக்கை வெளியிட்டு நன்றி கூறி உள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9de9dfd3-27c2-4c85-8c92-802b6fa50891/26-6a5baf34cde91.webp' /></p><p>
</p><h2>இயக்குனராக முதல் விருது
</h2><p>இயக்குனராக இது எனது முதல் தேசிய விருது, நடிகராக மூன்றாவது விருது. என் ரசிகர்கள் இல்லாமல் இது சாத்தியம் இல்லை. </p><p>
கேப்டன் மில்லரில் எனது நடிப்பு இதுவரை எனது சிறந்த ஒன்றாக கருதுகிறேன். அதற்கு தேசிய விருது கிடைத்தது அதை கௌரவப்படுத்துகிறது.
</p><p>நான் எப்போதும் சொல்வது போல, "எண்ணம் போல் வாழ்க்கை".
</p><p>
இவ்வாறு தனுஷ் கூறி இருக்கிறார்.

&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-18T16:52:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் காணாமல் போன தாய் மற்றும் குழந்தை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/bc-rcmp-seek-help-finding-missing-mother-1784393280"></link>
            <id>https://canadamirror.com/article/bc-rcmp-seek-help-finding-missing-mother-1784393280</id>
            <summary type="text">கனடாவின் வடக்கு பிரிட்டிஷ் கொலம்பியாவில் கடந்த வாரம் முதல் காணாமல் போன தாய் மற்றும் அவரது ஒரு மாதக் குழந்தையைக் கண்டறிய காவல்துறை பொதுமக்களின் உதவியை ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் வடக்கு பிரிட்டிஷ் கொலம்பியாவில் கடந்த வாரம் முதல் காணாமல் போன தாய் மற்றும் அவரது ஒரு மாதக் குழந்தையைக் கண்டறிய காவல்துறை பொதுமக்களின் உதவியை நாடியுள்ளது.
</p><p>ஃபோர்ட் செயின்ட் ஜான் ஆர்.சி.எம்.பி காவல்துறை தரப்பில், 31 வயதான நிகோல் ஆண்ட்ரஸ் மற்றும் அவரது ஒரு மாதமே ஆன மகன் க்ரூ கோர்டன் ஆகிய இருவரும் ஜூலை 9 முதல் நேரில் எவராலும் பார்க்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> 
அவர்கள் காணாமல் போனது குறித்து கடந்த வியாழக்கிழமை புகார் அளிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0ac53bc6-c204-4d11-8892-a67a65923023/26-6a5bae42623e0.webp' /></p><p>
"நிகோல் தனது குடும்பத்தினருடன் தொடர்பில்லாமல் இருப்பது வழப்பத்திற்கு மாறானது என்பதால், காவல்துறையினரும் அவரது குடும்பத்தினரும் அவர்களின் பாதுகாப்பு குறித்து மிகுந்த கவலை அடைந்துள்ளனர்" என்று வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட காவல்துறை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
</p><p>காணாமல் போன நிகோல் மற்றும் அவரது குழந்தை இருவரும், RK360C என்ற பிரிட்டிஷ் கொலம்பியா உரிமத் தகடு கொண்ட பச்சை நிற 2003 ஃபோர்ட் எக்ஸ்பெடிஷன் வாகனத்தில் பயணித்திருக்கலாம் என்று காவல்துறையினர் கருதுகின்றனர்.
</p><p>நிகோல் ஆண்ட்ரஸ்: வெள்ளை இனப் பெண், 5 அடி 7 அங்குலம் உயரம், சுமார் 61 கிலோ எடை, பழுப்பு நிற முடி மற்றும் ஹேசல் நிற கண்கள் கொண்டவர்.
</p><p>இந்தத் தாய், குழந்தை அல்லது அவர்கள் பயணித்த வாகனத்தை யாராவது பார்த்தால், உடனடியாக காவல்துறையை 250-787-8140 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். </p><p>
தகவல்களை ரகசியமாக வழங்க விரும்புவோர் 'க்ரைம் ஸ்டாப்பர்ஸ்' அமைப்பை 1-800-222-8477 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-18T16:51:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dias</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடா ஆசையில் 8 மில்லியனை இழந்த தமிழர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/foreign-job-scam-suspect-arrested-1784393482"></link>
            <id>https://jvpnews.com/article/foreign-job-scam-suspect-arrested-1784393482</id>
            <summary type="text">கனடா - லக்சம்பர்க் நாடுகளில் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை பெற்றுத் தருவதாக கூறி, யாழ்ப்பாணம், மல்லாகம் பகுதியை சேர்ந்த ஐவரிடம் சுமார் 8 மில்லியன் ரூபாய்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடா - லக்சம்பர்க் நாடுகளில் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை பெற்றுத் தருவதாக கூறி, யாழ்ப்பாணம், மல்லாகம் பகுதியை சேர்ந்த ஐவரிடம் சுமார் 8 மில்லியன் ரூபாய் பணம் மோசடி செய்யப்பட்டுள்ளது. </p><p>

பணத்தை மோசடி செய்த சந்தேகநபர் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p> 

கடந்த 14 ஆம் திகதி கைது செய்யப்பட்ட சந்தேகநபர், கொலன்னாவ, வெல்லம்பிட்டி பகுதியைச் சேர்ந்த பாயிஸ் மொஹமட் நப்டிகா என்பவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.</p><p>
</p><h2><b>
 பொலிஸ் விசாரணை&nbsp;</b></h2><p>வெல்லம்பிட்டி பகுதியில் மறைந்திருந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>இந்த நிலையில், நேற்று அவர் மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார். </p><p>சந்தேகநபரை தலா 5 லட்சம் ரூபா வீதம் இரண்டு சரீரப் பிணைகளில் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
</p><p>
சந்தேக நபருக்கு எதிராக மல்லாகம் பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாகவும் பொலிஸ் விசாரணைப் பிரிவினர் தெரிவித்தனர். </p>]]></content>
            <updated>2026-07-18T16:51:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[விசாரணையின் போது ஏற்பட்ட திடீர் சுகயீனம்.. சிகிச்சையின் போதே விளக்கமறியலில் வைக்கப்பட்ட முன்னணி வர்த்தகர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/clothing-retailer-owner-remanded-customs-probe-1784390769"></link>
            <id>https://tamilwin.com/article/clothing-retailer-owner-remanded-customs-probe-1784390769</id>
            <summary type="text">இலங்கையில் உள்ள முன்னணி ஆடைகள் வர்த்தக நிலைய வர்த்தகர் ஒருவரான பிரீத்தி ஜயவர்தன விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.&amp;nbsp;இலங்கை...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் உள்ள முன்னணி ஆடைகள் வர்த்தக நிலைய வர்த்தகர் ஒருவரான பிரீத்தி ஜயவர்தன விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.&nbsp;</p><p>இலங்கை சுங்கத் திணைக்களத்தின் விசாரணையின் போது இதயம் தொடர்பான மருத்துவக் குறைபாடு ஏற்பட்டுள்ளது.&nbsp;</p><p>இதை அடுத்து, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த போதே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.&nbsp;</p><p></p><h2>வைத்தியசாலையில் அனுமதி&nbsp;</h2><p>
சுங்க அதிகாரிகளுடன் இருந்தபோது ஜயவர்தனவுக்கு இந்த மருத்துவ நிலை ஏற்பட்டதாகவும், அதன் பின்னர் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் இலங்கை சுங்கத் திணைக்களத்தின் பேச்சாளர் சந்தன புஞ்சிஹேவா உறுதிப்படுத்தியதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/da25e7b8-008a-4760-b325-5f965946b6c1/26-6a5baa402d849.webp' /></p><p>
இந்நிலையில், கொழும்பு பிரதம நீதவான் வைத்தியசாலைக்குச் சென்று, சந்தேக நபரை பார்வையிட்ட பின்னர் அவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.&nbsp;</p><p>
சுங்க வரி மதிப்பீட்டுப் பிரச்சினை ஒன்றின் அடிப்படையிலேயே இந்த விசாரணை முன்னெடுக்கப்பட்டு வந்ததாகவும் கூறப்படுகின்றது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-18T16:49:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதிகாலைவேளை ஈரான் நடத்திய தாக்குதல் : குவைத் முக்கிய எண்ணெய் ஆலைக்கு பெருஞ்சேதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/kuwait-says-iranian-strikes-hit-key-oil-facility-1784391760"></link>
            <id>https://ibctamil.com/article/kuwait-says-iranian-strikes-hit-key-oil-facility-1784391760</id>
            <summary type="text">குவைத் பெட்ரோலிய கூட்டுத்தாபனம் சனிக்கிழமையன்று வெளியிட்ட அறிக்கையில், அதன் முக்கிய எண்ணெய் ஆலைகளில் ஒன்று ஈரானின் தொடர் தாக்குதல்களால் தாக்கப்பட்டதாக...</summary>
            <content type="html"><![CDATA[<p>குவைத் பெட்ரோலிய கூட்டுத்தாபனம் சனிக்கிழமையன்று வெளியிட்ட அறிக்கையில், அதன் முக்கிய எண்ணெய் ஆலைகளில் ஒன்று ஈரானின் தொடர் தாக்குதல்களால் தாக்கப்பட்டதாகவும், இதனால் "கணிசமான பொருள் சேதமும் சில காயங்களும்" ஏற்பட்டதாகவும் கூறியுள்ளது.
</p><p>
"காயமடைந்தவர்களுக்கு மருத்துவ உதவி வழங்கப்பட்டு, அந்த இடம் காலி செய்யப்பட்டது. அதே நேரத்தில், இந்தத் தாக்குதலுக்கான நடவடிக்கைகள் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து கையாளப்பட்டு வருகின்றன,"&nbsp; என்று அரசு நடத்தும் செய்தி நிறுவனமான KUNA வெளியிட்ட அறிக்கையில் அக்கழகம் கூறியுள்ளது.</p><h2>முக்கிய எண்ணெய் ஆலையில் தீ விபத்து</h2><p>இன்று சனிக்கிழமை அதிகாலையில் ஈரான் நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து, மின் உற்பத்தி மற்றும் கடல்நீர் சுத்திகரிப்பு ஆலையின் ஒரு பகுதியில் தீ விபத்து ஏற்பட்டதாக, அன்றைய தினம் முன்னதாக குவைத்தின் மின்சாரம், நீர் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் தெரிவித்திருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c0100ddb-10be-4314-8add-21e62ac3f84a/26-6a5ba85153cf1.webp' /></p><p>
</p><p>
மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் இந்த நிகழ்வுகள் நடந்துள்ளன.</p><p></p><h2>அமெரிக்காவிற்கு ஈரானின் பதிலடி</h2><p> </p><p>அங்கு அமெரிக்கா ஈரான் மீது தாக்குதல்களைத் தொடுத்தது, அதற்குப் பதிலடியாக தெஹ்ரான், அமெரிக்காவின் சொத்துக்கள் அமைந்துள்ள குவைத் உள்ளிட்ட பிராந்திய நாடுகள் மீது தாக்குதல்களை நடத்தியது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1bbc3fa8-7731-460b-90e7-bd74fde4a446/26-6a5ba85202b0b.webp' /></p><p>

போரை முடிவுக்குக் கொண்டுவரவும், ஒரு நீடித்த அமைதி ஒப்பந்தத்தை எட்டவும் பாகிஸ்தானின் மத்தியஸ்தத்தில் ஜூன் மாதம் கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் இருந்தபோதிலும், வோஷிங்டனுக்கும் தெஹ்ரானுக்கும் இடையே இந்த மோதல் நடைபெற்று வருகிறது.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-18T16:22:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[வியட்நாமில் கடும் வெள்ளப்பெருக்கு: 4 பேர் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/severe-flooding-in-vietnam-4-dead-1784391377"></link>
            <id>https://tamilwin.com/article/severe-flooding-in-vietnam-4-dead-1784391377</id>
            <summary type="text">ஹனோய் – வியட்நாமின் வடக்கு மாகாணமான லாய் சௌவில் ஏற்பட்ட திடீர்
வெள்ளப்பெருக்கில் சிக்கி குறைந்தது நான்கு பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும்
நான்கு பேர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹனோய் – வியட்நாமின் வடக்கு மாகாணமான லாய் சௌவில் ஏற்பட்ட திடீர்
வெள்ளப்பெருக்கில் சிக்கி குறைந்தது நான்கு பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும்
நான்கு பேர் காணாமல் போயுள்ளதாக அந்நாட்டு அரச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p>வடக்கு வியட்நாமின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் கடும்
மழையினால், வெள்ளிக்கிழமை அதிகாலை முவோங் தான் கிராமத்தில் இந்த வெள்ள
அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
</p><p>
இந்த அனர்த்தத்தில் மேலும் ஏழு பேர் காயமடைந்துள்ளதாகவும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>மண்சரிவுகள்&nbsp;</h2><p>
</p><p>
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட குறித்த கிராமத்தில் செம்மண் மற்றும் வெள்ள நீர்
புகுந்துள்ளதையும், சேதமடைந்த வீதிகள் மற்றும் வீடுகளின் ஒரு மூலையில் கற்கள்
மற்றும் மரத்தடிகள் குவிந்துள்ளதையும் ஊடகங்கள் வெளியிட்டுள்ள புகைப்படங்கள்
காட்டுகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b621fd85-ccc7-4385-88c8-1388fc68e147/26-6a5ba6d31df8f.webp' /></p><p>
</p><p>
கடந்த புதன்கிழமை முதல் பெய்து வரும் கடும் மழையினால் ஏற்பட்ட மண்சரிவுகள்
மற்றும் திடீர் வெள்ளத்தினால், அப்பகுதியில் வீதிகள், மின்சாரக் கட்டமைப்புகள்
மற்றும் நூற்றுக்கணக்கான வீடுகள் சேதமடைந்துள்ளன.
</p><p>
அத்துடன், சுமார் 238 ஹெக்டேயர் பயிர்நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளதாக
அரசாங்கத்தின் பேரிடர் முகாமைத்துவ ண நிலையம் தெரிவித்துள்ளது.</p><p></p><h2>எச்சரிக்கை&nbsp;</h2><p>
</p><p>
வடக்கு வியட்நாமின் பல பகுதிகளில் சனிக்கிழமை 250 மில்லிமீற்றர் வரை கடும் மழை
பெய்யக்கூடும் என்று எதிர்வுகூறப்பட்டுள்ளதால், மேலதிக வெள்ளப்பெருக்கு
மற்றும் மண்சரிவுகள் ஏற்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6a86bdfe-c7d0-487e-a096-7c28cae19215/26-6a5ba6d3c474b.webp' /></p><p>

ஜூலை முதல் செப்டெம்பர் வரையிலான காலப்பகுதியிலேயே வியட்நாமில் மழையுடன் கூடிய
காலநிலை உச்சத்தை அடைவதுடன், இக்காலகட்டத்தில் சூறாவளி மற்றும் வெள்ள
அனர்த்தங்கள் ஏற்படுவது வழமையான ஒன்றாகும்.
</p><p>
கடந்த ஆண்டு இயற்கை அனர்த்தங்கள், முக்கியமாக வெள்ளப்பெருக்கினால் வியட்நாமில்
489 பேர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-18T16:16:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[சொதப்பிய ஏஞ்சலோ மேத்யூஸ்: கண்டி ஃபால்கன்ஸ் தோல்வி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/dambulla-sixers-beat-kandy-falcons-by-18-runs-1784390939"></link>
            <id>https://news.lankasri.com/article/dambulla-sixers-beat-kandy-falcons-by-18-runs-1784390939</id>
            <summary type="text">லங்கா பிரீமியர் லீக் போட்டியில் தம்புள்ளை சிக்ஸர்ஸ் 18 ஓட்டங்கள் வித்தியாசத்தில் கண்டி ஃபால்கன்ஸை வீழ்த்தியது. தம்புள்ளை சிக்ஸர்ஸ் 205 ஓட்டங்கள் 

க...</summary>
            <content type="html"><![CDATA[<p>லங்கா பிரீமியர் லீக் போட்டியில் தம்புள்ளை சிக்ஸர்ஸ் 18 ஓட்டங்கள் வித்தியாசத்தில் கண்டி ஃபால்கன்ஸை வீழ்த்தியது. </p><h2>தம்புள்ளை சிக்ஸர்ஸ் 205 ஓட்டங்கள் </h2><p>

கொழும்பில் நடந்த LPL டி20 போட்டியில் கண்டி ஃபால்கன்ஸ் மற்றும் தம்புள்ளை சிக்ஸர்ஸ் அணிகள் மோதின.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6ddc7b9d-46ef-44f9-81c1-afda7c24e531/26-6a5ba6a9eac08.webp' />&nbsp;</p><p></p><p>

முதலில் ஆடிய தம்புள்ளை சிக்ஸர்ஸ் 205 ஓட்டங்கள் குவித்தது. ரீஸா ஹென்ரிக்ஸ் 50 பந்துகளில் 87 ஓட்டங்கள் விளாசினார்.</p><p>

பின்னர் ஆடிய கண்டி ஃபால்கன்ஸ் 20 ஓவர்களில் 187 ஓட்டங்கள் எடுத்ததால், 18 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தம்புள்ளை சிக்ஸர்ஸ் வெற்றி பெற்றது.
</p><p>
டேல் பிலிப்ஸ் 52 ஓட்டங்களும், லஹிரு உதாரா 44 ஓட்டங்களும், விஜய் ஷங்கர் 41 ஓட்டங்களும் எடுத்தனர். அணித்தலைவர் ஏஞ்சலோ மேத்யூஸ் 8 ஓட்டங்களில் அவுட் ஆகி சொதப்பினார்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/52639a78-7bff-45e5-8acf-b3ab37ec5278/26-6a5ba6ab61856.webp' />&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6a52659e-0a68-4e60-b3df-6c3ad5b18920/26-6a5ba6aab1ce2.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-18T16:14:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[மக்கள் தொகை கணக்கெடுப்பு.., இணையத்தில் சுயமாக பதிவு செய்வது எப்படி?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/census-procedures-for-self-registering-online-1784377713"></link>
            <id>https://manithan.com/article/census-procedures-for-self-registering-online-1784377713</id>
            <summary type="text">தமிழகத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியின் முதல் கட்டம் நேற்று தொடங்கியது. 

2027ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெற உள்ளது. ...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழகத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியின் முதல் கட்டம் நேற்று தொடங்கியது. </p><p>

2027ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெற உள்ளது. </p><p>

இதற்கு முன்னதாக வீடுகள் மற்றும் வீட்டு வசதிகள் குறித்த கணக்கெடுப்பு ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் நடைபெறுகிறது.
</p><p>
இந்த கணக்கெடுப்பில் பொதுமக்கள் நேரடியாகவும், இணையதளம் மூலம் சுயமாகவும் தங்களது விவரங்களை பதிவு செய்யலாம்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0fc06912-9ed7-4a24-94f1-d234088014de/26-6a5b7174c12dd.webp' /></p><h2>சுய கணக்கெடுப்பு செய்வது எப்படி?
</h2><p>
முதலில் <a href="https://se.census.gov.in/" target="_blank"><b>se.census.gov.in </b></a>என்ற இணையதளத்திற்கு சென்று, உங்கள் மாநிலத்தை தேர்ந்தெடுத்து கேப்சாவை உள்ளிட வேண்டும்.</p><p>

அதன்பிறகு குடும்பத்தலைவரின் பெயர், 10 இலக்க மொபைல் எண் மற்றும் விருப்பம் இருந்தால் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்ய வேண்டும்.&nbsp;</p><p>ஒரு குடும்பத்திற்கு ஒரு மொபைல் எண் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
</p><p>
பின்னர் விருப்பமான மொழியைத் தேர்ந்தெடுத்து, மொபைல் எண்ணுக்கு வரும் ஓடிபியை உள்ளிட வேண்டும்.</p><p> 

அதன்பிறகு மாவட்டம், அஞ்சல் குறியீடு, கிராமம் அல்லது நகரம் மற்றும் பகுதி ஆகிய விவரங்களை பதிவு செய்ய வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/58af468a-04b1-4ca2-90a6-8f6a1145e37e/26-6a5b71741b9eb.webp' /></p><p>தொடர்ந்து வரைபடத்தில் உங்கள் குடியிருப்பை சரியாகக் கண்டறிந்து, சிவப்பு குறியீட்டை சரியான இடத்தில் வைத்து இருப்பிடத்தை உறுதிப்படுத்த வேண்டும்.</p><p>

அதன்பிறகு வீடு மற்றும் வீட்டு வசதிகள் தொடர்பான கேள்வித்தாளை பூர்த்தி செய்ய வேண்டும். பின் இவற்றை சரிபார்த்து, தேவையான மாற்றங்களைச் செய்யலாம்.</p><p>பின்னர் தகவல்களை வரைவு நிலையில் சேமிக்கலாம் அல்லது இறுதியாக சமர்ப்பிக்கலாம். சமர்ப்பித்த பிறகு, மொபைல் எண்ணுக்கு எஸ்.இ. ஐ.டி. குறுஞ்செய்தியாக அனுப்பப்படும்.</p><p>

கணக்கெடுப்பாளர் வீட்டிற்கு வரும்போது, அந்த எஸ்.இ. ஐ.டியை அவரிடம் தெரிவிக்க வேண்டும்.</p><p> அவர் பதிவு செய்த தகவல்களை சரிபார்த்து, தேவைப்பட்டால் திருத்தங்களை மேற்கொள்வார்.&nbsp;</p><p>இந்த வழிமுறைகளைப் பின்பற்றி பொதுமக்கள் இணையதளம் மூலம் தங்களது சுய கணக்கெடுப்பை பதிவு செய்யலாம்.</p><p><br></p>]]></content>
            <updated>2026-07-18T16:00:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[உயிரிழந்த முன்னாள் காவல்துறை மா அதிபருக்கு இறுதிச்சடங்கில் காவல்துறை மரியாதை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/police-pay-tribute-at-funeral-former-police-chief-1784389128"></link>
            <id>https://ibctamil.com/article/police-pay-tribute-at-funeral-former-police-chief-1784389128</id>
            <summary type="text">தன்னைத்தானே சுட்டு தற்கொலை செயது கொண்டதாக கூறப்படும் முன்னாள் காவல்துறை மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் இறுதிச் சடங்குகளை முழுமையான காவல்துறை மரியாதைக...</summary>
            <content type="html"><![CDATA[<p>தன்னைத்தானே சுட்டு தற்கொலை செயது கொண்டதாக கூறப்படும் முன்னாள் காவல்துறை மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் இறுதிச் சடங்குகளை முழுமையான காவல்துறை மரியாதைகளுடன் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
</p><p>
ஓய்வுபெற்ற காவல்துறை மா அதிபர்களுக்குரிய காவல்துறை மரியாதைகளை முன்னாள் காவல்துறை மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவிற்கும் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் ஏ.எஸ்.பி. எஃப்.யு. வூட்லர் தெரிவித்தார்.</p><h2>முழுமையான காவல்துறை மரியாதைகளுடன்&nbsp;இறுதிச் சடங்கு</h2><p>அதன்படி, முன்னாள் காவல்துறை மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் இறுதிச் சடங்குகள் 20ஆம் திகதி முழுமையான காவல்துறை மரியாதைகளுடன் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/41416faf-8498-4c21-b5ea-8e35f3af8d04/26-6a5ba2a9e8fc4.webp' /></p><p>
</p><p>
முன்னாள் காவல்துறை மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் உடல் தற்போது கொழும்பில் உள்ள ஒரு தனியார் மலர்ச்சாலையில் வைக்கப்பட்டுள்ளது. அவருக்கு இறுதி மரியாதை செலுத்துவதற்கான வாய்ப்பு நாளை (19) முதல் வழங்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>முடுக்கிவிடப்பட்ட விசாரணை</h2><p>

சி.டி.விக்ரமரத்ன, நாட்டின் 35வது காவல்துறை மா அதிபராக பணியாற்றியுள்ளார். இவர் நேற்று (17) காலை தனது இல்லத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

அவரது மரணம் தற்கொலையாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. மேலும், அவர் தனது பாதுகாப்பு அதிகாரியின் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக் கொண்டிருக்கலாம் என காவல்துறை சந்தேகிக்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/41dc0c94-7d0c-46fe-b85f-3d083402b192/26-6a5ba2aa98d54.webp' /></p><p>


இதற்கிடையில், மேற்கு மாகாண தெற்கு மாவட்ட குற்றப்பிரிவும், மலாபே காவல்துறையும் இச்சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றன. மேலும், முன்னாள் காவல்துறை மா அதிபர் தன்னைத்தானே சுட்டுக் கொள்ளப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் துப்பாக்கியை அரசாங்கப் பகுப்பாய்வாளருக்கு அனுப்பியுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
</p><p>
இச்சம்பவம் தொடர்பாக நடத்தப்படும் விசாரணைகள் தொடர்பாக அவரது மனைவி மற்றும் மூன்று பாதுகாப்பு அதிகாரிகளிடமிருந்து வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மேற்கு மாகாண தெற்கு மாவட்ட குற்றப்பிரிவு தெரிவித்துள்ளது.&nbsp; &nbsp; &nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-18T15:59:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடற்றொழிலாளர்களின் அடையாளத்தை அழிக்க பார்க்கும் அமைச்சர் சந்திரசேகரன்: அன்னராசா குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/chandresekaran-try-destroy-ident-fishing-community-1784388863"></link>
            <id>https://tamilwin.com/article/chandresekaran-try-destroy-ident-fishing-community-1784388863</id>
            <summary type="text">கடற்றொழில் அமைச்சர் சந்திரசேகரன் யாழ்.மாவட்டத்தில் முறையற்ற சூழலுக்கு ஒவ்வாத கடல்
அட்டைப் பண்ணைகளை பிரதேச செயலக அதிகாரிகளுடன் இணைந்து ஊக்குவித்து கடற...</summary>
            <content type="html"><![CDATA[<p>கடற்றொழில் அமைச்சர் சந்திரசேகரன் யாழ்.மாவட்டத்தில் முறையற்ற சூழலுக்கு ஒவ்வாத கடல்
அட்டைப் பண்ணைகளை பிரதேச செயலக அதிகாரிகளுடன் இணைந்து ஊக்குவித்து கடற்றொழிலாளர்களின் அடையாளங்களை அழிக்க முற்படுவதாக முன்னாள் கடற்தொழில் சமாசத்தின்
தலைவர் அன்னலிங்கம் அன்னராசா குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.</p><p>யாழில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில்&nbsp; இன்று(18) சனிக்கிழமை வடக்கு
 கடற்றொழிலாளர்கள் எதிர் நோக்கும் பிரச்சினை தொடர்பில் தெற்கைச் சேர்ந்த மக்கள்
போராட்ட முன்னணியுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின் ஊடகங்களுக்கு கருத்து
தெரிவிக்கும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.</p><p></p><h2>கடற்றொழிலாளர்களின் அடையாளம்</h2><p>
</p><p>
அவர் மேலும் தெரிவிக்கையில், </p><p>வடக்கு மாகாணத்துக்கு ஒவ்வாத சீனக் கடல் அட்டை
பண்ணைகளை அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் ஊக்குவிப்பது எமது கடற்தொழில்
மக்களை கருவறுக்கும் செயற்பாடாக பார்க்கிறோம்.
</p><p>
இந்த செயற்பாட்டுக்கு பிரதேச செயலகங்களில் உள்ள உயர் அதிகாரிகளும் உடந்தையாக
இருப்பது கவலையை உண்டு பண்ணுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c15935a4-c93b-48a0-b200-f072cedfd2aa/26-6a5ba07eea295.webp' /></p><p> ஒரு பிரதேசத்தின் அரச காணிகளுக்கு அந்தப் பிரதேசத்தின் உடைய பிரதேச செயலாளர்
பொறுப்பாக இருக்கின்ற நிலையில் எமது கடலையும் அரச காணி போல் கையாள
நினைக்கிறார்கள்.

எமது கடல் எமக்குச் சொந்தம் கடலை யாரும் பிரித்துக் கொடுக்க முடியாது.
</p><p>அவ்வாறாயின் கடலை பகிர்ந்து வழங்குவதற்கான அதிகாரத்தை யாரிடம் பெற்றார்கள் என
கேட்க விரும்புகிறோம்.</p><p>

ஒட்டுமொத்த கடற்றொழில் சமூகத்தின் பாரம்பரிய கடற்தொழிலை இல்லாமல் ஒழிப்பதற்கு
அமைச்சர் தலைமையில் மீளவும் அட்டை பண்ணை ஆரம்பிக்கப்பட்டிருப்பது எமக்கு
அதிர்ச்சியை ஏற்படுத்துவதோடு பல சந்தேகங்களையும் ஏற்படுத்துகிறது.</p><p></p><h2>கடற்றொழிலாளர் பிரச்சினை&nbsp;</h2><p>

ஏனெனில் ஆட்சி அதிகாரம் இல்லாத காலத்தில் கடல் அட்ட பண்ணைக்கு எதிராக எம்மோடு
குரல் கொடுத்த தற்போதைய கடற்றொழில் அமைச்சர் சந்திரசேகரன் தற்போது அட்டை
பண்ணைகளை வாரி வழங்க முற்படுவது ஏன்.
</p><p>
கடற்றொழில் சமூகத்தின் மீது கட்டமைத்து விடப்பட்டிருக்கிற பல பிரச்சனைகள் தொடர்பில்
நாம் தெற்கை சேர்ந்த மக்கள் போராட்ட முன்னணியுடன் கலந்துரையாடி அவர்களும்
எமக்காக குரல் கொடுப்பதற்கு தயாராக இருக்கிறார்கள்.
</p><p>
குறிப்பாக அரசாங்கத்தினால் கொண்டுவரப்பட்டிருக்கின்ற மீன்பிடி திருத்தச்
சட்டம் முற்றாக நீக்கப்படுவதோடு இந்தியா இழுவை மாடி கடற்றொழிலாளர்களின்
அட்டகாசங்களுக்கு இராஜதந்திர ரீதியில் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/93f8ff88-4f1d-4b84-9d5b-bf712a8735d6/26-6a5ba0800749d.webp' /></p><p>
</p><p>
மேலும் கடற்றொழிலாளர்கள் வாழ்வாதார ரீதியில் பின்னோக்கி காணப்படுகின்ற நிலையில்
அரசாங்கத்தினால் வழங்கப்படுகின்ற மானிய மண்ணெண்ணெய் விநியோகத்தை நிறுத்தி விலை
குறைப்பு செய்யப்பட்ட மண்ணெண்ணெய் வழங்கப்பட வேண்டும் போன்ற கோரிக்கைகளை
முன்வைத்து எமது கலந்துரையாடலை மேற்கொண்டோம்.</p><p>

மாறி மாறி வந்த அரசாங்கங்கள் கடற்றொழிலாளர் பிரச்சினை தொடர்பில் தேர்தல் காலங்களில்
சாதகமான கருத்துக்களை கூறி வந்தாலும் ஆட்சி அதிகாரங்களுக்கு வந்த பின்னர் அது
தொடர்பில் கவனம் செலுத்தாமை தொடர்பில் கடற்றொழில் சமூகம் போராட்டத்தின் மூலம்
அவர்களின் கவனத்தை செலுத்துவது தொடர்பில் கலந்துரையாடினோம்.</p><p>

ஆகவே எமது கடற்றொழில் சமூகத்தின் வாழ்வாதாரத்தையும் அடையாளத்தை அழிப்பதற்கு
கடற்தொழில் அமைச்சர் முனைவாராயின் அதற்கு எதிராக மக்களை திரட்டி போராடுவோம்
என அவர் மேலும் தெரிவித்தார்.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-18T15:57:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழ்த் தேசியத்தைத் தாங்கும் வலிமையான பண்பாட்டு வேர்களில் ஒன்றே ஆடிப்பிறப்பு..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/aadi-tradition-cultural-roots-tamil-nationalism-1784389870"></link>
            <id>https://tamilwin.com/article/aadi-tradition-cultural-roots-tamil-nationalism-1784389870</id>
            <summary type="text">ஈழத்தமிழர்களின் வாழ்வியல் முறைமையில் தொன்றுதொட்டு இடம்பிடித்து வரும்
பண்டிகைகளில் ஆடிப்பிறப்பும் ஒன்று. இது வெறுமனே கூழும் கொழுக்கட்டையும்
ஆக்கிப் ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈழத்தமிழர்களின் வாழ்வியல் முறைமையில் தொன்றுதொட்டு இடம்பிடித்து வரும்
பண்டிகைகளில் ஆடிப்பிறப்பும் ஒன்று. இது வெறுமனே கூழும் கொழுக்கட்டையும்
ஆக்கிப் பரிமாறும் பருவகாலச் சடங்கு அல்ல. இது தமிழ்த் தேசியத்தைத் தாங்கி
நிற்கின்ற வலிமையான பண்பாட்டு வேர்களில் ஒன்று என்று தமிழ்த் தேசியப் பசுமை
இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p>
தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் ஆடிப்பிறப்பு விழா நேற்று (17.07.2026) தாவடியில் நடைபெற்றது.</p><p> இவ்விழாவுக்குத் தலைமை வகித்து
உரையாற்றியபோதே பொ. ஐங்கரநேசன் இவ்வாறு சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

தேசியம் என்பது ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பில் வாழுகின்ற மக்கள் தங்களின்
தனித்துவமான மொழி, பண்பாடு, வாழ்வியல் விழுமியங்களைப் பகிர்ந்துகொண்டு தங்களை
ஒரு தனிப்பெரும் சமூகமாக உணரும் கூட்டு ஆன்மா ஆகும். </p><p>இந்தக் கூட்டு அடையாளமே
அந்தச் சமூகத்துக்குத் தங்களது அரசியல், பொருளாதார, சமூக எதிர்காலத்தைத்
தீர்மானிக்கும் சுயநிர்ணய உரிமையை வழங்குகின்றது. </p><p>ஆனால், எமது அரசியல்வாதிகள்
பலரும் தேசியம் என்பதன் முழுமையான பரிமாணங்களைப் புரிந்து கொள்ளாமல் அதனை
வெறும் அரசியல் கோசமாக மேடைகளில் முழங்கி வருகின்றார்கள்.&nbsp;</p><p>தமிழ்த் தேசியம் பேசுகின்ற அரசியல்வாதிகள் பலரும் மொழி உரிமைக்கும் நில
மீட்புக்கும் கொடுக்கும் முதன்மைத்துவத்தைப் பண்பாட்டுப் பாதுகாப்புக்கு
வழங்குவதில்லை. ஒரு சமூகத்துக்குத் தேசிய இனம் என்ற தகுதியை வழங்குவதற்கு அது
பூர்வீகமாக வாழந்து வருகின்ற நிலமும், அது பேசுகின்ற மொழியும் எந்த அளவுக்கு
முக்கியத்துவம் பெறுகின்றதோ அந்த அளவுக்கு அதன் பண்பாடும் முக்கியத்துவம்
வாய்ந்ததாகும். </p><p>நிலமும், மொழியும் ஒரு உடலின் உறுப்புகளுக்கு ஒப்பானது என்றால்
பண்பாடு என்பது அந்த உடலைக் கண்ணுக்குத் தெரியாமல் இயக்கிக் கொண்டிருக்கின்ற
உயிருக்கு ஒப்பானது.

உயிர் பிரிந்த உடல் எவ்வாறு சிதைந்து போகுமோ அது போன்றே ஒரு தேசிய இனம் தன்
பண்பாட்டு வேர்களை இழந்து விட்டால் தன் அரசியல் உரிமைகளுக்காகப் போராடும்
வீரியத்தை இழந்துவிடும். </p><p>அதன் நிலமும், மொழியும் காலப்போக்கில் அந்நிய
ஆக்கிரமிப்புகளுக்கு ஆளாகி அழிந்து போய்விடும். உலக மயமாக்கலும், தென்
இலங்கையின் பண்பாட்டுத் திணிப்புகளும் வேகமாக நடக்கும் இக்காலத்தில்
ஆடிப்பிறப்புப் போன்ற பண்பாட்டு விழுமியங்களைக் கொண்டாடுவதும், அதன்

முக்கியத்துவங்களை இளைய தலைமுறையினருக்குச் சேர்ப்பிப்பதும் ஓர் அரசியல்
போராட்டம்தான் என்றும் தெரிவித்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-07-18T15:52:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[மணப்பெண்களை விலைக்கு வாங்க வேண்டாம்: மரண தண்டனை..எச்சரிக்கை விடுத்த நாடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/chinese-embassy-warns-dont-buy-brides-1784389087"></link>
            <id>https://news.lankasri.com/article/chinese-embassy-warns-dont-buy-brides-1784389087</id>
            <summary type="text">சர்வதேச திருமண மோசடிகள் அதிகரித்துள்ளதால் சீன குடிமக்களுக்கு தூதரக அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சட்டவிரோதமாக திருமணத் தரகு சேவை 

சீனாவில் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சர்வதேச திருமண மோசடிகள் அதிகரித்துள்ளதால் சீன குடிமக்களுக்கு தூதரக அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். </p><h2>சட்டவிரோதமாக திருமணத் தரகு சேவை </h2><p>

சீனாவில் மணப்பெண்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதால், ஆண்கள் பலரும் சட்டவிரோதமாக திருமணத் தரகு சேவைகளை பயன்படுத்துவது தெரிய வந்தது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/556cb0e7-74c2-4af7-b625-692f37effb39/26-6a5b9f5dc98e4.webp' />&nbsp;</p><p></p><p>
குறிப்பாக, வங்காளதேசத்தில் இருந்து முகவர்கள் மூலம் பெண்களை சீனர்கள் தேடி வந்தனர். பெண்களை விலைக்கும் வாங்கும் செயல்களும் அரங்கேறியுள்ளன. </p><p>

சீனாவில் நிலவும் கடுமையான பாலின விகிதாச்சார ஏற்றத்தாழ்வு காரணமாகவே இத்தகைய சட்டவிரோத சந்தை பெருமளவில் வளர்ந்துள்ளது; 2020ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, அந்நாட்டில் திருமண வயதில் உள்ள பெண்களின் எண்ணிக்கையை விட ஆண்களின் எண்ணிக்கை சுமார் 1.75 கோடி அதிகமாக உள்ளது.
</p><h2>
 சீன அரசு கவலை</h2><p>இந்த நிலையில்தான், சர்வதேச திருமண தரகு சந்தை சீனாவில் சட்டவிரோதமானதாக அறிவித்து சீன அரசு கவலையை வெளிப்படுத்தி வருகிறது.
</p><p>
மேலும், மணப்பெண்களைத் தேட சட்டவிரோதத் திருமணத் தரகு சேவைகளைப் பயன்படுத்துவது குறித்து சீன தூதரகங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன. </p><p>

தரகர்கள் அல்லது முகமைகளைப் பயன்படுத்தி மனைவியைத் தேடி, வங்காளதேச நாட்டிற்கு செல்லும் எவரும், மனிதக் கடத்தல் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்படலாம் என்று சமூக ஊடகப் பதிவு ஒன்றில் சீன தூதரகம் தெரிவித்துள்ளது.
</p><p>
வங்காளதேச சட்டத்தின்படி, மனிதக் கடத்தல் குற்றத்தில் தண்டனை பெற்றால் குறைந்தபட்சம் ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனையும், குறைந்தது 5,00,000 டாக்காவிற்கு குறையாத அபராதமும் விதிக்கப்படும். </p><p>

மேலும், இந்த குற்றத்திற்கு ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனை போன்ற கடுமையான தண்டனைகளும் விதிக்கப்பட வாய்ப்புள்ளது.
</p><p>
சீனக் குடிமக்கள் சம்பந்தப்பட்ட எல்லை தாண்டிய திருமண மோசடிகள் அதிகரித்துள்ளதாக தூதரகம் தெரிவித்துள்ளது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f74cf557-5dfd-4d93-a9f2-de5bb06a34e2/26-6a5b9f5eaa324.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><i> <b>WHATSAPP CHANNEL</b></i></a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-18T15:42:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவின் காட்டுத் தீ புகையால் திணறும் அமெரிக்கா: ஒன்ராறியோ மக்களை வெளியேற்ற இராணுவம் தயார்நிலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/us-struggles-with-smoke-from-canadian-wildfires-1784388367"></link>
            <id>https://tamilwin.com/article/us-struggles-with-smoke-from-canadian-wildfires-1784388367</id>
            <summary type="text">கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்தில் தீவிரமடைந்து வரும் காட்டுத் தீ காரணமாக,
அங்கிருந்து வெளியேறும் கரும்புகை அண்டை நாடான அமெரிக்காவின் பெரும்
பகுதிகளைச் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்தில் தீவிரமடைந்து வரும் காட்டுத் தீ காரணமாக,
அங்கிருந்து வெளியேறும் கரும்புகை அண்டை நாடான அமெரிக்காவின் பெரும்
பகுதிகளைச் சூழ்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கையைப் பாதித்துள்ளது.
</p><p>
இந்நிலையில், காட்டுத் தீ அச்சுறுத்தல் உள்ள ஒன்ராறியோவின் தொலைதூரக் கிராமப்
பகுதியான போர்ட் ஹோப்பில் இருந்து சுமார் 600 மக்களை வான்வழியாக
வெளியேற்றுவதற்குக் கனடா இராணுவம் இன்று(18)&nbsp;ஆயத்தமாகி வருவதாக ரொய்ட்டர்ஸ்
செய்திச் சேவை தெரிவித்துள்ளது.
</p><p>
ஒன்ராறியோவின் வடமேற்குப் பகுதியில் பாதைகள் குறைவாகக் காணப்படும் நிலையில்,
விமானப் போக்குவரத்து மூலமாகவே மக்கள் தெற்குப் பகுதிகளுக்குப் பாதுகாப்பாக
அழைத்துச் செல்லப்படுகின்றனர்.</p><p></p><h2>தீ விபத்து</h2><p>

கனேடிய இயற்கை வள அமைச்சின் தகவல்களின்படி, ஒரே இரவில் மேலும் 69 புதிய
காட்டுத் தீ சம்பவங்கள் பதிவாகியுள்ளதை அடுத்து, தற்போது எரியும் மொத்த
காட்டுத் தீயின் எண்ணிக்கை 955 ஆக அதிகரித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2c320195-e6a3-4afc-9c78-9a83e1583f96/26-6a5b9b11b9155.webp' /></p><p>
</p><p>
காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் வறண்ட வானிலையே இந்தத் தொடர் தீ
விபத்துகளுக்குக் காரணம் என நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.</p><p></p><h2>எச்சரிக்கைகள்</h2><p>
</p><p>
இந்தக் காட்டுத் தீயின் புகை காற்றின் காரணமாக அமெரிக்க எல்லைக்குள்
பரவியுள்ளதால், அமெரிக்காவின் பென்சில்வேனியா, நியூ ஜெர்சி, வெர்ஜீனியா,
மேரிலாண்ட் மற்றும் வொஷிங்டன் டி.சி. உள்ளிட்ட பல பகுதிகளில் வசிக்கும்
மக்களுக்குக் காற்றுத் தர எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8a214652-db9a-4980-bbab-1b8bba095ef8/26-6a5b9b1269c93.webp' /></p><p>
</p><p>
குறிப்பாகப் பென்சில்வேனியாவின் பிட்ஸ்பர்க் போன்ற பகுதிகளில் காற்றின் தரம்
மிக மோசமான நிலையை அடைந்துள்ளது.</p><p>

எவ்வாறாயினும், நியூயோர்க் நியூ ஜெர்சி மைதானத்தில் நாளை(19.7.2026) நடைபெறவுள்ள உலகக் கிண்ணக் கால்பந்து இறுதிப் போட்டிக்கு இந்தப் புகையினால்
பெரிய அளவில் பாதிப்பு இருக்காது என வானிலை கணிப்புகள் தெரிவிக்கின்றன.</p><p></p>]]></content>
            <updated>2026-07-18T15:26:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தியாவின் முதலாவது தனியார் சுற்றுப்பாதை ரொக்கெட் 'விக்ரம்-1' வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/india-s-first-private-orbital-rocket-vikram-1784387540"></link>
            <id>https://tamilwin.com/article/india-s-first-private-orbital-rocket-vikram-1784387540</id>
            <summary type="text">&amp;nbsp;பெங்களூரு – இந்தியாவின் விண்வெளித் துறை ஸ்டார்ட்அப் நிறுவனமான &#039;ஸ்கைரூட்
ஏரோஸ்பேஸ்&#039;, நாட்டின் முதலாவது தனியார் சுற்றுப்பாதை ரொக்கெட்டான &#039;விக்ரம்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;பெங்களூரு – இந்தியாவின் விண்வெளித் துறை ஸ்டார்ட்அப் நிறுவனமான 'ஸ்கைரூட்
ஏரோஸ்பேஸ்', நாட்டின் முதலாவது தனியார் சுற்றுப்பாதை ரொக்கெட்டான 'விக்ரம்-1'
ஐ சனிக்கிழமை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.
</p><p>
இதன் மூலம் உலகளாவிய வணிக ரீதியிலான விண்வெளிச் சந்தையில் இந்தியா தனது
பங்களிப்பை வலுப்படுத்தியுள்ளது.</p><p></p><h2>விக்ரம்-1</h2><p>

ஆந்திரப் பிரதேசத்தின் ஸ்ரீஹரிகோட்டாவில் அமைந்துள்ள சதீஷ் தவான் விண்வெளி
மையத்திலிருந்து "மிஷன் ஆகமன்" என்ற திட்டப் பெயரில் இந்த ரொக்கெட் விண்ணில்
ஏவப்பட்டது.
</p><p>
திட்டமிட்டபடி 15 நிமிடங்களில், புவிக்கு அருகேயுள்ள 450 கிலோமீற்றர்
சுற்றுப்பாதையில் வாடிக்கையாளர்களின் செயற்கைக்கோள்களை இந்த ரொக்கெட்
வெற்றிகரமாக நிலைநிறுத்தியுள்ளது.</p><p><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr">🇮🇳 India successfully launches first private orbital rocket Vikram-1 by Skyroot Aerospace, delivering payload to 450 km orbit. Major step for private space industry, competing with SpaceX. <a href="https://t.co/GvUZ3DFRpF">pic.twitter.com/GvUZ3DFRpF</a></p>&mdash; X News (@XNewsGlobalEn) <a href="https://x.com/XNewsGlobalEn/status/2078438540229394850?ref_src=twsrc%5Etfw">July 18, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>

இதன் மூலம், தனியார் விண்வெளித் துறை மூலமாகச் சுற்றுப்பாதை ஏவுதல் திறனைப்
பெற்ற உலகின் மூன்றாவது நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது.</p><p>

விமானப் பயணத்தின் போது ரொக்கெட்டின் உந்துவிசை, வழிகாட்டுதல் மற்றும்
கட்டுப்பாட்டு அமைப்புகளைச் சோதிப்பதற்காக இந்தச் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டதாக
ஸ்கைரூட் நிறுவனம் தெரிவித்துள்ளது.</p><p></p><h2>விண்வெளித் துறை</h2><p>
</p><p>
22 மீற்றர் உயரமுள்ள 'விக்ரம்-1' ரொக்கெட், 350 கிலோ வரையான எடையைச் சுமந்து
செல்லும் திறன் கொண்டது.

3டி பிரிண்டிங் தொழில்நுட்ப எஞ்சின் உட்பட உள்நாட்டுத் தொழில்நுட்பங்கள் இதில்
பயன்படுத்தப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2d455045-74ce-43bd-a237-3e863a02f1e1/26-6a5b9a8900b32.webp' /></p><p>
</p><p>
விண்வெளித் துறையை 2020ஆம் ஆண்டு தனியார் முதலீட்டிற்கு இந்திய அரசு
திறந்துவிட்டதைத் தொடர்ந்து, இந்த ஆண்டின் தொடக்கத்தில் 1 பில்லியன் டொலர்
மதிப்பீட்டை எட்டிய முதல் இந்திய விண்வெளி ஸ்டார்ட்அப் நிறுவனமாக ஸ்கைரூட்
மாறியுள்ளது.</p><p>

தற்போது 8 பில்லியன் டொலராக இருக்கும் இந்தியாவின் விண்வெளிப் பொருளாதாரத்தை,
தனியார் நிறுவனங்களின் பங்களிப்போடு 2033ஆம் ஆண்டளவில் 44 பில்லியன் டொலராக
உயர்த்த இந்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-18T15:24:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[தவெக ஆட்சியை கவிழ்க்க சதியா? திமுகவிற்கு வைகோ சவால்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/vaiko-challenge-for-topple-tvk-government-1784388239"></link>
            <id>https://ibctamilnadu.com/article/vaiko-challenge-for-topple-tvk-government-1784388239</id>
            <summary type="text">தவெக ஆட்சியை கவிழ்த்து பாருங்கள் என வைகோ சவால் விடுத்துள்ளார்.

தவெக ஆட்சியை கவிழ்க்க சதி?

2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில், முதல்வர் விஜய் தலைம...</summary>
            <content type="html"><![CDATA[<p>தவெக ஆட்சியை கவிழ்த்து பாருங்கள் என வைகோ சவால் விடுத்துள்ளார்.</p><h3>

தவெக ஆட்சியை கவிழ்க்க சதி?
</h3><p>
2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில், முதல்வர் விஜய் தலைமையிலான தவெக 108 இடங்களில் வெற்றி பெற்று, பிற கட்சிகளுடன் ஆதரவுடன் ஆட்சியைமைத்துள்ளது.</p><p> 

இந்த ஆட்சி இன்னும் 6 மாதங்களில் கவிழ்ந்து விடும் என திமுக முன்னாள் அமைச்சர்கள் சிலர் பேசி வருகின்றனர்.</p><p> 

மேலும், தவெக ஆட்சியை கவிழ்க்க தவெக எம்.எல்.ஏ.க்களிடம் பேரம் பேசியதாக 12 பேர் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.&nbsp;</p><h3>வைகோ சவால்</h3><p>

சென்னை எழும்பூரில் நடைபெற்ற மதிமுக ஏடான சங்கொலி 30 ம் ஆண்டு நிறைவு விழாவில் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, ஆட்சியை கவிழ்க்க முடியாது என சவால் விட்டுள்ளார். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2de861cc-660b-4665-89db-5ae665fdf673/26-6a5b9a910f73f.webp' /></p><p>

இந்த நிகழ்வில் பேசிய அவர், "திமுகவும் அதிமுகவும் இரு மாபெரும் கட்சிகள். இவர்களை யாராலும் அசைக்க முடியாது என்பதை கற்பனை செய்ய முடியாத அளவுக்கு தகர்த்துத் தரைமட்டமாக்கி, தூள்தூளாக்கிவிட்டு முதல்வராகி இருக்கிறார் ஜோசப் விஜய்.</p><p> 

 கடந்த 15, 20 நாட்களாக முதலமைச்சர்கள் விஜய் மீதும் அவருடைய அரசு மீதும் நாள்தோறும் விஷக்கனைகள் எதிரிகள் வட்டாரம் மட்டுமல்ல கூட்டணி கட்சிகள் வட்டாரத்திலிருந்தும் விமர்சிக்கிறார்கள். </p><p> 

திமுக கூட்டணியில் இருந்த போது இது போன்ற கண்டன குரல்கள் எழுப்பியது உண்டா ? கண்டன குரல் ஏன் அன்று எழவில்லை. இப்போது நாள்தோறும் அறிக்கை செய்தியாளர்களை சந்திக்க வேண்டிய அவசியம் என்ன?
</p><p>
எங்கே இருக்கிறேனோ அங்கே விசுவாசமாக இருப்பவன்தான் நான். கூட்டணி இருக்குமிடத்தில் விசுவாசமாக இருப்பவன் நான்.
</p><p>
இப்போது தீர்க்கமான முடிவெடுத்து, தவெகவுடன் கரம் கோர்த்திருக்கிறோம். ஆட்சியைக் கவிழ்த்து விடுவோம் என்று மிரட்டிப் பார்க்காதீர்கள். பாஜகவுடன் உடன்பாடு வைக்கப் போகிறீர்களா?</p><p>

செய்து பாருங்கள் நான் சவால் விடுகிறேன். மீண்டும் தேர்தல் வரட்டும் 108 இல்லை 180 இடங்களில் தமிழக வெற்றிக் கழக கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும்" என பேசியுள்ளார்.&nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-07-18T15:24:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் பாடசாலை நிகழ்வில் சுமந்திரன் பிரதம விருந்தினராக கலந்துகொள்ளவதற்கு எதிராக வெடித்தது போராட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/protest-against-sumanthiran-school-function-1784375230"></link>
            <id>https://ibctamil.com/article/protest-against-sumanthiran-school-function-1784375230</id>
            <summary type="text">&amp;nbsp;புதிய இணைப்பு 



சுழிபுரம் விக்டோரியா கல்லூரியில் நடைபெறும் நடைபவனியில் எம்.ஏ.சுமந்திரன்
விருந்தினராக கலந்துகொள்ள மாட்டார் என பாடசாலை அதிப...</summary>
            <content type="html"><![CDATA[<h2>&nbsp;புதிய இணைப்பு </h2><p>



சுழிபுரம் விக்டோரியா கல்லூரியில் நடைபெறும் நடைபவனியில் எம்.ஏ.சுமந்திரன்
விருந்தினராக கலந்துகொள்ள மாட்டார் என பாடசாலை அதிபர் சுலபாமதி
தெரிவித்துள்ளார்.
</p><p>
இன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டம் குறித்து வெளியிட்ட அறிக்கையிலேயே அவர் இதனை
தெரிவித்துள்ளார். அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,</p><p>

பாடசாலையின் நடைபவனி நிகழ்வுக்கு விருந்தினராக முன்னாள் நாடாளுமன்ற
உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான சுமந்திரனை அழைத்திருந்தோம். ஆனால் அவர்
தான் இந்தியா செல்ல உள்ளதாக தெரிவித்து இந்த நிகழ்வில் கலந்து கொள்ள முடியாது
என்பதை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார் என தெரிவித்தார்.</p><h2>முதலாம் இணைப்பு</h2><p>யாழ்ப்பாணம் சுழிபுரம் விக்டோரியா கல்லூரியின் 150வது ஆண்டு விழாவினை பெருமெடுப்பில்
நடாத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்தவகையில் நாளையதினம் நடைபவனி
ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த நடைபவனிக்கு பிரதம அதிதியாக ஜனாதிபதி
சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் பிரதம அதிதியாக அழைக்கப்பட்டுள்ளார்.
</p><p>
இந்நிலையில் அந்த நடைபவனிக்கு சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் பிரதம விருந்தினராக
கலந்து கொள்ளக் கூடாது என்றும், விக்டோரியன்ஸ் ஒருவரே அதிதியாக கலந்துகொள்ள
வேண்டும் என தெரிவித்து பழைய மாணவர்கள் இன்றையதினம் பாடசாலைக்கு முன்பாக
போராட்டத்தில் ஈடுபட்டனர்.</p><h2>&nbsp; பாடசாலை நிர்வாகமே தன்னிச்சையான முடிவுகளை எடுக்காதே</h2><p>போராட்டத்தில் ஈடுபட்ட பழைய மாணவர்கள் "எங்கே எங்கே விழாக்குழு எங்கே, பாடசாலை
நிர்வாகமே தன்னிச்சையான முடிவுகளை எடுக்காதே, விக்டோரியன்ஸே அதிதியாக
வரவேண்டும்" என தெரிவித்து பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/377a32d1-210e-4321-8188-f7ba4f556f2c/26-6a5b6b1244272.webp' /></p><p>இதன்போது போராட்டத்தில் ஈடுபட்ட பழைய மாணவர்கள் கருத்து தெரிவிக்கையில்,

150வது ஆண்டு விழா என்பது ஒருமுறையே வரும். அது தொடர்பான நிகழ்வுகளுக்கு எமது
பழைய மாணவர்கள் யாரையாவது விருந்தினராக அழைக்கப்பட வேண்டும். பாடசாலைக்கு
தொடர்பில்லாத ஒருவர் விருந்தினராக வருவதை ஏற்றுகொள்ள முடியாது.</p><p></p><h2>சுமந்திரன் விருந்தினராக அழைக்கப்பட்ட விடயம்&nbsp;</h2><p>சுமந்திரன் விருந்தினராக அழைக்கப்பட்ட விடயம் நேற்றையதினமே எங்களுக்கு
தெரியும். இந்நிலையில் இந்த பிரச்சினை தொடர்பாக பாடசாலை அதிபர் மற்றும்
பாடசாலை நிர்வாகத்தினர் ஆகியோருடன் சுமுகமாக பேசி முடிப்பதற்கு நாங்கள்
முயற்சித்தோம். ஆனால் அது பலனளிக்கவில்லை. ஒரு கட்டத்துக்கு மேல் "பழைய
மாணவர்கள் எவரும் கலந்துகொள்ள வேண்டாம், நாங்கள் பாடசாலை சமுகத்துடனேயே
நிகழ்வுகளை நடாத்துகிறோம்" என்று அதிபர் கூறினார். அதன்பின்னரே நாங்கள்
போராட்டத்தில் ஈடுபட வேண்டி ஏற்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c9a5f7ec-85cb-40ff-ba9f-a8241a8060bc/26-6a5b6b12ec009.webp' /></p><p>இந்த 150வது ஆண்டு விழாவுக்கு என ஒரு விழா ஒழுங்கமைப்பு குழுவானது தெரிவு
செய்யப்பட்டது. அது தொடர்பான செய்திகள் பத்திரிகைகளிலும் பிரசுரமானது. ஆனால்
அந்த விழா குழுவினரை உள்வாங்கி இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்படவில்லை. அந்த
ஏற்பாட்டு குழுவினரின் கருத்துக்கள் கேட்கப்படவில்லை. பழைய மாணவர்
சங்கத்தினரின் கருத்துக்கள் கேட்கப்படவில்லை.</p><p></p><h2>தனிப்பட்ட முறையில் யாரையும் எதிர்க்கவில்லை</h2><p>நாங்கள் தனிப்பட்ட முறையில் யாரையும் எதிர்க்கவில்லை. எமது பழைய மாணவர்களுக்கு
முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும் என்பதே எமது கருத்தாக காணப்படுகிறது.
போராட்டம் சட்டத்திற்கு உட்பட்ட வகையில் ஜனநாயக ரீதியாகவே
முன்னெடுக்கப்படுகிறது. எமது போராட்டத்தால் யாருக்காவது மனஉளைச்சல்
ஏற்பட்டால் நாங்கள் அதற்கு பொறுப்பல்ல. எமது கருத்தினை கேட்காமல் இந்த
விருந்தினர் தெரிவு இடம்பெற்றதே காரணம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c172ca90-5ec1-4671-9ddb-7d4933a77254/26-6a5b6b139c3f6.webp' /></p><p>எனவே எங்களது கோரிக்கைகளுக்கு செவிசாய்க்க வேண்டும். பழைய மாணவர்கள் என்ற
வகையில் எமக்கு முக்கியத்துவம் வழங்தப்பட வேண்டும் என்றனர்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-18T15:19:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[உச்சக்கட்ட கிளாமரில் ஃபேஷன் ஷோவில் நடிகை அனன்யா பாண்டே..புகைப்படங்கள்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/actress-ananya-pandey-recent-fation-show-photos-1784361169"></link>
            <id>https://viduppu.com/article/actress-ananya-pandey-recent-fation-show-photos-1784361169</id>
            <summary type="text">2019ல் வெளியான Student of the Year 2 படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றவர் தான் நடிகை அனன்யா பாண்டே.

இப்படத்தை தொடர்ந்து இந்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>2019ல் வெளியான Student of the Year 2 படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றவர் தான் நடிகை அனன்யா பாண்டே.

இப்படத்தை தொடர்ந்து இந்தி, தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/70652a2f-0cd0-49f6-b30e-7339251a3132/26-6a5b30d3e2142.webp' /></p><p> </p><p>சமீபத்தில் தான் நடித்து வரும் Call Me Bae Season 2 என்ற அமேசான் பிரைம் வெப் தொடர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

தற்போது, ஃபேஷன் ஷோவுக்கு வெள்ளைநிற கிளாமர் ஆடையணிந்து சென்றுள்ளார். </p><p>அந்நிகழ்ச்சிக்கு பின் அந்த ஆடையில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.</p><p><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/p/Da7RBWLCEGF/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/p/Da7RBWLCEGF/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/p/Da7RBWLCEGF/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by Ananya 🌙 (@ananyapanday)</a></p></div></blockquote> <script async src="//www.instagram.com/embed.js"></script></p>]]></content>
            <updated>2026-07-18T15:15:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[திங்கட்கிழமை மின்தடை ஏற்படும் பகுதிகள் வெளியீடு - பொதுமக்களுக்கு மின்வாரியம் அறிவுறுத்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/monday-20-07-2026-power-cut-in-chennai-1784386905"></link>
            <id>https://ibctamilnadu.com/article/monday-20-07-2026-power-cut-in-chennai-1784386905</id>
            <summary type="text">சென்னையில் மின்வாரிய பராமரிப்பு பணிகள் காரணமாக வரும் திங்கட்கிழமை (20.07.2026) பல்வேறு பகுதிகளில் மின் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படும் என தமிழ்நா...</summary>
            <content type="html"><![CDATA[<p>சென்னையில் மின்வாரிய பராமரிப்பு பணிகள் காரணமாக வரும் திங்கட்கிழமை (20.07.2026) பல்வேறு பகுதிகளில் மின் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படும் என தமிழ்நாடு மின்வாரியம் அறிவித்துள்ளது.
</p><p>
அதன்படி, காலை 9.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை குறிப்பிட்ட பகுதிகளில் மின்தடை அமலில் இருக்கும். பராமரிப்பு பணிகள் முடிவடைந்தவுடன், மதியம் 2.00 மணிக்குள் மீண்டும் மின் விநியோகம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dc9d5fea-6a50-4198-acbb-5546106811fc/26-6a5b97bd1e697.webp' /></p><p>பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு, மின்வாரிய ஊழியர்களுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.</p><h2>
மின்தடை ஏற்படும் முக்கிய பகுதிகள்</h2><p>ஆவடி: வைஷ்ணவி நகர் (1 முதல் 10வது தெருக்கள்), சாந்திபுரம், ஸ்ரீதேவி வைஷ்ணவி நகர், இந்திரா காந்தி நகர், பழைய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, டி.ஆர்.ஆர். தெரு, நேதாஜி நகர் உள்ளிட்ட பகுதிகள்.
</p><p>
தாம்பரம்: கிருஷ்ணா நகர், வெற்றி நகர், சுபாஷ் நகர், ரமணி நகர், மல்லிகா நகர், குமரன் நகர், சரஸ்வதி நகர், பார்வதி நகர், ஸ்ரீராம் நகர் (வடக்கு மற்றும் தெற்கு), பாலகிருஷ்ணன் நகர், முடிச்சூர் சாலை, பழைய பெருங்களத்தூர் உள்ளிட்ட பகுதிகள்.
</p><p>
பெரும்பாக்கம்: பெருமாள் கோவில் தெரு மற்றும் சுற்றுப்பகுதிகள், அப்பர் தெரு, பிள்ளையார் கோவில் தெரு, பொன்னியம்மன் கோவில் தெரு, சாய் ஆயுஷா மற்றும் ராக அமிர்தா அடுக்குமாடி குடியிருப்புகள், சூரியா நகர், ஜெயா நகர், சத்ய சாய் நகர் உள்ளிட்ட பகுதிகள்.
</p><p>
பல்லாவரம் மற்றும் அனகாபுத்தூர்: சாரா நகர், யூனியன் கார்பைடு காலனி, பார்த்தசாரதி தெரு, சாஸ்தா நகர், திருவேங்கடமுடையான் தெரு, ரங்கசாமி தெரு, அண்ணா சாலை, திருநீர்மலை பிரதான சாலை, அப்துல்கலாம் சாலை, ஸ்ரீபுரம், சரஸ்வதிபுரம், ஈஸ்வரி நகர் உள்ளிட்ட பகுதிகள்.
</p><p>
மாத்தூர் மற்றும் சுற்றுப்பகுதிகள்: மாத்தூர் எம்எம்டிஏ, பெரிய மாத்தூர், சின்ன மாத்தூர், ஆவின் குவார்ட்டர்ஸ், சிபிசிஎல் நகர், எம்சிஜி அவென்யூ, காமராஜர் சாலை, மஞ்சம்பாக்கம், அசிஸ் நகர், அகர்சன் கல்லூரி சாலை, கொசப்பூர், தீயப்பாக்கம், சென்ட்ரபாக்கம், கண்ணம்பாளையம், வடபெரும்பாக்கம் தொழில் பூங்கா, பார்வதிபுரம், ஸ்ரீனிவாசா மாடர்ன் டவுன், கன்னி அம்மன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை ஏற்படும்.</p><p>
மின்தடை நேரத்தில் பொதுமக்கள் தேவையான மின் சாதனங்களை பாதுகாப்பாக பயன்படுத்தவும், அத்தியாவசிய தேவைகளுக்கான ஏற்பாடுகளை முன்கூட்டியே செய்து கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-18T15:12:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீர்கொழும்பு சிறையில் உயிரிழந்த சிறை அதிகாரிகளுக்கு கிடைக்கப்போகும் இழப்பீடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/relief-package-for-the-deceased-prison-officers-1784386490"></link>
            <id>https://ibctamil.com/article/relief-package-for-the-deceased-prison-officers-1784386490</id>
            <summary type="text">நீர்கொழும்பு சிறையில் ஏற்பட்ட மோதலில் உயிரிழந்த பத்து சிறை அதிகாரிகளுக்கும் தலா ரூ. 10 மில்லியன் இழப்பீடு வழங்க நீதி மற்றும் சிறைத்துறை அமைச்சு முடிவு...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீர்கொழும்பு சிறையில் ஏற்பட்ட மோதலில் உயிரிழந்த பத்து சிறை அதிகாரிகளுக்கும் தலா ரூ. 10 மில்லியன் இழப்பீடு வழங்க நீதி மற்றும் சிறைத்துறை அமைச்சு முடிவு செய்துள்ளது.
</p><p>
மேலும், இது தொடர்பான அமைச்சரவைக் குறிப்பையும் அமைச்சு தயாரித்துள்ளது. இது வரவிருக்கும் அமைச்சரவைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளது.</p><h2>&nbsp;சம்பளமும் ஓய்வூதியமும் வழங்க நடவடிக்கை</h2><p>அதன்படி, உயிரிழந்த அதிகாரிகளுக்கு 55 வயது வரை மாதச் சம்பளமும், 55 வயதுக்கு மேல் ஓய்வூதியமும் வழங்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6de1252b-4e03-4a12-a5bc-1d076a4011e7/26-6a5b974d204f2.webp' /></p><p> </p><p>இது தொடர்பாக, சிறைத்துறைத் தலைவர்கள், நீதித்துறை அமைச்சர் மற்றும் அமைச்சக அதிகாரிகளுடன் ஜனாதிபதி செயலகத்தில் வெள்ளிக்கிழமை (17ஆம் திகதி) ஒரு சிறப்பு கலந்துரையாடல் நடைபெற்றது.</p><p></p><h2>&nbsp;நீர்கொழும்பு மருத்துவமனையின் தீவிர சிகிச்சை</h2><p>
</p><p>
5ஆம் மற்றும் 6ஆம் திகதிகளில் நீர்கொழும்பு சிறையில் ஏற்பட்ட மோதலில் பத்து சிறை அதிகாரிகளும், இருபத்தொரு கைதிகளும் உயிரிழந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6e29334b-c071-44c8-878d-1eb1a30ae627/26-6a5b974c6fc32.webp' /></p><p> நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

காயமடைந்தவர்களில் 21 சிறை அதிகாரிகளும் அடங்குவர். அவர்களில் மூவர், கொழும்பு தேசிய மருத்துவமனை மற்றும் நீர்கொழும்பு மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-18T15:10:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[விக்டோரியா கல்லூரிக்கு முன் வெடித்த போராட்டம்..! பாடசாலையின் அதிபர் வெளியிட்ட அறிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/not-let-sumanthiran-attend-as-chief-guest-protest-1784369207"></link>
            <id>https://tamilwin.com/article/not-let-sumanthiran-attend-as-chief-guest-protest-1784369207</id>
            <summary type="text">புதிய இணைப்புசுழிபுரம் விக்டோரியா கல்லூரியில் நடைபெறும் நடைபவனியில் எம்.ஏ.சுமந்திரன்
விருந்தினராக கலந்துகொள்ள மாட்டார் என பாடசாலையின் அதிபர் சுலபாமதி...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>சுழிபுரம் விக்டோரியா கல்லூரியில் நடைபெறும் நடைபவனியில் எம்.ஏ.சுமந்திரன்
விருந்தினராக கலந்துகொள்ள மாட்டார் என பாடசாலையின் அதிபர் சுலபாமதி
தெரிவித்துள்ளார்.</p><p>

இன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டம் குறித்து வெளியிட்ட அறிக்கையிலேயே அவர் இதனை
தெரிவித்துள்ளார்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/8WGFn2hKDgI" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p> </p><p>அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

பாடசாலையின் நடைபவனி நிகழ்வுக்கு விருந்தினராக முன்னாள் நாடாளுமன்ற
உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணிமான சுமந்திரனை அழைத்திருந்தோம்.</p><p> ஆனால் அவர்
தான் இந்தியா செல்ல உள்ளவதாக தெரிவித்து இந்த நிகழ்வில் கலந்து கொள்ள முடியாது
என்பதை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார் என தெரிவித்தார்.</p><h2>முதலாம் இணைப்பு</h2><p><b>சுமந்திரன் பிரதம விருந்தினராக கலந்துகொள்ள வேண்டாம்! விக்டோரியா கல்லூரிக்கு முன் வெடித்த போராட்டம்</b></p><p>சுழிபுரம் விக்டோரியா கல்லூரியின் 150வது ஆண்டு விழாவினை முன்னிட்டு நாளைய தினம் நடைபெறவுள்ள நடைபவனிக்கு சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் பிரதம விருந்தினராக கலந்து கொள்ள கூடாது என்றும், விக்டோரியன்ஸ் ஒருவரே அதிதியாக கலந்துகொள்ள வேண்டும் எனவும் தெரிவித்து பழைய மாணவர்கள் 
போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.
</p><p>
இந்தப் போராட்டமானது இன்றையதினம்(18.07.2026) சுழிபுரம் விக்டோரியா கல்லூரிக்கு முன்பாக இடம்பெற்றுள்ளது.</p><p></p><h2><span style="color: inherit; font-size: 1.75rem;">150வது ஆண்டு விழா&nbsp;</span></h2><p> 

போராட்டத்தில் ஈடுபட்ட பழைய மாணவர்கள் "எங்கே எங்கே விழாக்குழு எங்கே, பாடசாலை நிர்வாகமே தன்னிச்சையான முடிவுகளை எடுக்காதே, விக்டோரியன்ஸே அதிதியாக வரவேண்டும்" என தெரிவித்து பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். </p><p>

இதன்போது போராட்டத்தில் ஈடுபட்ட பழைய மாணவர்கள் கருத்து தெரிவிக்கையில்,</p><p> 

150வது ஆண்டு விழா என்பது ஒருமுறையே வரும். அது தொடர்பான நிகழ்வுகளுக்கு எமது பழைய மாணவர்கள் யாராவதே விருந்தினராக அழைக்கப்பட வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/acdeb79a-2218-4135-9034-8ce8836c2efb/26-6a5b5c67b61b9.webp' /></p><p> </p><p>

பாடசாலைக்கு தொடர்பில்லாத ஒருவர் விருந்தினராக வருவதை ஏற்றுகொள்ள முடியாது. 

சுமந்திரன் விருந்தினராக அழைக்கப்பட்ட விடயம் நேற்றையதினமே எங்களுக்கு தெரியும். </p><p>

இந்நிலையில் இந்த பிரச்சினை தொடர்பாக பாடசாலை அதிபர் மற்றும் பாடசாலை நிர்வாகத்தினர் ஆகியோருடன் சுமூகமாக பேசி முடிப்பதற்கு நாங்கள் முயற்சித்தோம். </p><p>ஆனால் அது பலனளிக்கவில்லை. 

ஒரு கட்டத்துக்கு மேல் "பழைய மாணவர்கள் எவரும் கலந்துகொள்ள வேண்டாம், நாங்கள் பாடசாலை சமூகத்துடனேயே நிகழ்வுகளை நடாத்துகிறோம்" என்று அதிபர் கூறினார். அதன் பின்னரே நாங்கள் போராட்டத்தில் ஈடுபட வேண்டி ஏற்பட்டது.</p><p></p><h2>ஜனநாயக ரீதியிலான&nbsp;போராட்டம்</h2><p> </p><p>

இந்த 150வது ஆண்டு விழாவுக்கு என ஒரு விழா ஒழுங்கமைப்பு குழு தெரிவு செய்யப்பட்டது. அது தொடர்பான செய்திகள் பத்திரிகைகளிலும் பிரசுரமானது. 

ஆனால் அந்த விழா குழுவினரை உள்வாங்கி இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்படவில்லை. </p><p>அந்த ஏற்பாட்டுக் குழுவினரின் கருத்துக்கள் கேட்கப்படவில்லை. 

பழைய மாணவர் சங்கத்தினரின் கருத்துக்கள் கேட்கப்படவில்லை. நாங்கள் தனிப்பட்ட முறையில் யாரையும் எதிர்க்கவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c526742c-6166-4cdf-a498-383801931680/26-6a5b5c68c45f6.webp' /></p><p> </p><p>

எமது பழைய மாணவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும் என்பதே எமது கருத்தாக காணப்படுகிறது. 

போராட்டம் சட்டத்திற்கு உட்பட்ட வகையில் ஜனநாயக ரீதியாகவே முன்னெடுக்கப்படுகிறது.</p><p> எமது போராட்டத்தால் யாருக்காவது மனவுளைச்சல் ஏற்பட்டால் நாங்கள் அதற்கு பொறுப்பல்ல. 

எமது கருத்தினை கேட்காமல் இந்த விருந்தினர் தெரிவு இடம்பெற்றதே காரணம். </p><p>எனவே எங்களது கோரிக்கைகளுக்கு செவிசாய்க்க வேண்டும். 

பழைய மாணவர்கள் என்ற வகையில் எமக்கு முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-18T14:56:44+00:00</updated>
        </entry>
    </feed>
