<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-07-13T02:59:01+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[பைத்தியக்காரர் போல கைதிகள் - நடந்த பேயாட்டம்: சிறை அதிகாரியின் பதைபதைக்கும் வாக்குமூலம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/prison-officer-who-critical-injuries-during-riots-1783909940"></link>
            <id>https://ibctamil.com/article/prison-officer-who-critical-injuries-during-riots-1783909940</id>
            <summary type="text">கைதிகள் இவ்வாறு நடந்துகொள்வதை நான் என் வாழ்நாளில் பார்த்ததே இல்லை என காயமடைந்த சிறைச்சாலை அதிகாரி (ஜெய்லர்) ஒருவர் தெரிவித்துள்ளார்.
தன்னையும் அவருடன...</summary>
            <content type="html"><![CDATA[<p>கைதிகள் இவ்வாறு நடந்துகொள்வதை நான் என் வாழ்நாளில் பார்த்ததே இல்லை என காயமடைந்த சிறைச்சாலை அதிகாரி (ஜெய்லர்) ஒருவர் தெரிவித்துள்ளார்.
</p><p>தன்னையும் அவருடன் சென்ற மற்ற அதிகாரியையும் சுமார் 300 கைதிகள் வரை ஒரே நேரத்தில் சூழ்ந்து தாக்கினர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் ஏற்பட்ட வன்முறையில் சிக்கி காயமடைந்த அதிகாரி ஒருவரே தனது திகில் அனுபவங்களை இவ்வாறு பகிர்ந்துள்ளார்.</p><h2>பயங்கரமான சம்பவம்</h2><p>
அவர் மேலும் தெரிவிக்கையில்,

5ஆம் திகதி நிலைமை அமைதியாக இருந்தது. ஆனால் அதற்கு அடுத்த நாள் காலையில், அதாவது 6ஆம் திகதி திங்கட்கிழமை நீதிமன்ற நடவடிக்கைகள் இருந்த ஒரு நாளாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/91bd30ce-3827-460c-ab62-ba4c9c06aaa3/26-6a5452126afd9.webp' /></p><p>
அதேபோல் அன்று கைதிகளைப் பார்ப்பதற்கு வீடுகளில் இருந்து உறவினர்கள் வரும் நாளாகும். அதற்கு நாம் தயாராகவே இருந்தோம்.
</p><p>
அந்த நேரத்தில் கைதிகள் மருந்தகத்தை உடைத்து, மனநல நோயாளிகளுக்கு வழங்கப்படும் அதிக வீரியம் கொண்ட மாத்திரைகளை உட்கொண்டிருந்தனர். இதுதான் அங்கு நடந்த மிக பயங்கரமான சம்பவமாகும்.</p><h2>டெங்கு காய்ச்சல்</h2><p>இது உணவருந்துவதற்கு முன்பே நடந்தது, எனக்கு நேரம் அவ்வளவாக நினைவில்லை. அன்று எப்படியும் கடமையில் ஈடுபட்டிருந்தது ஒரு சில அதிகாரிகள் மட்டும்தான்.
</p><p>
அந்த நேரத்தில் பல அதிகாரிகளுக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டிருந்தது. டெங்கு மற்றும் ஏனைய வைரஸ் காய்ச்சல் காரணமாக ஒரு நாளைக்கு பத்து பேர் வரை பணிக்கு வரவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8a854ac3-5f1f-4004-a99b-0bf5d0aea655/26-6a5452135464e.webp' /></p><p>
இதன் காரணமாக வெலிக்கடை சிறைச்சாலையிலிருந்தும் சில அதிகாரிகள் நீர்கொழும்புக்கு வரவழைக்கப்பட்டிருந்தனர்.</p><p> கைதிகளிலும் பெரும்பாலானோருக்கு டெங்கு தொற்றியிருந்தது.

டெங்கு அல்லாத உடம்பு வலி போன்ற அறிகுறிகளுடன் கூடிய வைரஸ் காய்ச்சல் நிலைமை&nbsp; போன்ற ஒன்று எல்லோருக்குமே இருந்தது. இதன் காரணமாக நாம் பெனடோல் கூட கொடுத்தோம்.</p><p>கடந்த நாட்களில் டெங்கு காரணமாக மூன்று கைதிகளுக்கும் மேல் உயிரிழந்தும் இருந்தனர்.&nbsp; நிலைமை ஓரளவு கட்டுப்பாட்டில் இருந்ததால், மூன்று நான்கு அதிகாரிகள் காலையில் உணவு கொடுப்பதற்காகச் சென்றிருந்தனர்.</p><h2>பிணைக் கைதி</h2><p>

முதலில் சென்றவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட போது, அவர்களைக் காப்பாற்றுவதற்காக மேலும் சில அதிகாரிகள் சென்றனர். அவர்கள் அனைவரும் பெட்டன் (Baton) தடிகளுடனேயே சென்றனர்.
</p><p>
அங்கு அதிகாரிகளின் பெட்டன் தடிகளைப் பறித்து, அந்த அதிகாரிகளுக்கே அடிக்கும் ஒரு நிலைமைதான் காணப்பட்டது. </p><p>சிறைக் கூடங்களில் மூடியுள்ள இரண்டு பாதுகாப்பு ஜன்னல்கள் (security windows) உள்ளன.

அதில் ஒரு பாதுகாப்பு ஜன்னல் பகுதியில் இருந்த அதிகாரிக்கு அடித்துத்தான், அந்த ஜன்னலில் இருந்த டி-56 (T-56) துப்பாக்கியை பறித்திருக்கிறார்கள்.</p><p>

மூன்றாவது குழுவில்தான் நான் உள்ளே செல்கிறேன். நீர்கொழும்பு சிறைச்சாலையின் பிரதான ஜெய்லர் அவர்களுடன்தான் நான் செல்கிறேன். </p><p>அந்த நேரத்தில் சக அதிகாரிகளைத் தாக்கி, கைதிகள் அவர்களைப் பிணைக் கைதிகளாக வைத்திருந்தனர்.</p><h2>பேய்களைப் போல&nbsp;</h2><p>சிறைச்சாலைக்குள் கைதிகள் இருந்த உடற்பயிற்சிப் பிரிவின் உபகரணங்களில் இருந்த இரும்புத் தடிகளை உடைத்து, அவற்றையும் எடுத்துக் கொண்டு அதிகாரிகளைத் தாக்கியிருந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e169dfe1-7044-4a86-aae2-b03bcc3034af/26-6a54521403a17.webp' /></p><p>

உள்ளே சென்றவுடன் வழக்கத்திற்கு மாறான ஒரு நடத்தை முறையைத்தான் நாம் கண்டோம். கைதிகள் இப்படி நடந்துகொள்வதை நான் கனவிலும் பார்த்ததில்லை. </p><p>அவர்கள் பேய்களைப் போல நடந்து கொண்டார்கள்.

என்னையும் என்னுடன் சென்ற மற்ற அதிகாரியையும் சுமார் 300 கைதிகள் வரை ஒரே நேரத்தில் சூழ்ந்து கொண்டனர். அவர்கள் முதலில் எங்கள் மீது கற்களால் எறிந்தார்கள்.</p><h2>சேர் நீங்கள் வராதீர்கள்</h2><p>முதலில் சென்ற சிலரைக் காப்பாற்றவே இரண்டாவது குழு சென்றது. அந்த இரண்டாவது குழுவைக் காப்பாற்றத்தான் நாம் சென்றோம். சென்ற பிறகுதான் கண்டோம், இது இலகுவாகக் கட்டுப்படுத்தக்கூடிய ஒரு சூழ்நிலை அல்ல என்று அங்கு நின்றவர்கள் தாக்கிய பிறகு நான் கீழே விழுந்தேன்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/feb5d42e-f88c-469d-97ae-bd907d9d6ca7/26-6a545214a8b0b.webp' /></p><p> "சேர் நீங்கள் வராதீர்கள், போய்விடுங்கள்! இவர்கள் பைத்தியக்காரர்களைப் போல இருக்கிறார்கள்" சிறைச்சாலை அதிகாரிகளுடன் மிகவும் நெருக்கமாக இருந்த ஒரு குழுவினர் கத்தினர்.</p><p>
இவர்களைக் கட்டுப்படுத்த முடியாது. நீங்கள் சீக்கிரம் இங்கிருந்து போய்விடுங்கள்" என்ற விடயத்தைத்தான் அவர்கள் கூறியிருக்கிறார்கள்.</p><p>அந்த நேரத்தில் எங்களைச் சூழ்ந்து கொண்டு தாக்கினார்கள். "சேருக்கு அடிக்க வேண்டாம், சேருக்கு அடிக்க வேண்டாம்" என்று கூறி பழைய கைதிகள் நான்கு பேர் என்னைச் சூழ்ந்து கொண்டனர். </p><p>எங்களைப் பாதுகாக்க வந்த கைதிகளையும், ஆக்ரோஷமாக நடந்து கொண்ட கைதிகள் தாக்கினார்கள். அதற்கு இடையில் ஒரு பெட்டன் தடி அடி எனது தலையில் விழுந்தது.</p><h2>கழுத்தில் அமுக்கினர்</h2><p>
அதேநேரம் யாரோ ஒருவர் எனது கழுத்தில் காலையோ அல்லது பெட்டன் தடியையோ வைத்து அமுக்கினர். அப்படியே என்னை தரையோடு இழுத்துச் சென்று எங்கோ வீசினார்கள்.

எனக்கு அவ்வளவுதான் நினைவிருக்கிறது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f7a6b873-08e8-410f-b2e8-0fa383c6787c/26-6a5452155a266.webp' /></p><p>அடுத்ததாக எனது தலை சுவரில் மோதுவது எனக்கு நினைவிருக்கிறது. அதன் பிறகு யாரோ எனது மூக்கின் அருகில் விரலை வைத்து நான் மூச்சுவிடுகிறேனா என்று பார்ப்பது போல எனக்கு உணர்ந்தது.
</p><p>
அங்கிருந்து உயிருடன் வெளியே செல்ல முடியும் என்று எனக்கு அந்த நேரத்தில் தோன்றவில்லை. பழைய கைதிகள் " ஓடுங்கள், ஓடுங்கள் என்று கத்தினார்கள்.</p><p>அவர்கள்தான் இரும்பு நுழைவாயிலை திறந்து வெளியே போக உதவினார்கள். எமது கைகளில் இருந்த தொலைபேசிகளைக் கைதிகள் பறித்துக் கொண்டனர்.
</p><p>
எனது கழுத்தில் இருந்த சங்கிலி கூட மிஞ்சவில்லை. இந்த அதிகாரி இன்னமும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அங்கு உண்மையில் கட்டுப்படுத்த முடியாத ஒரு சூழ்நிலை நிலவியது என்ற கதையைத்தான் அவர் கூறுகிறார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-13T02:45:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[மோசமான பட்டியலில் இடம்பிடித்த இலங்கை! வெளியான காரணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-lanka-third-most-congested-country-world-1783909522"></link>
            <id>https://tamilwin.com/article/sri-lanka-third-most-congested-country-world-1783909522</id>
            <summary type="text">ஆசியாவிலேயே மூன்றாவது மிக மோசமான போக்குவரத்து நெரிசல் மிகுந்த நாடாக இலங்கை பட்டியலிடப்பட்டுள்ளது.உலகின் போக்குவரத்து நெரிசல் குறித்த Numbeoவின் 2026ஆம...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஆசியாவிலேயே மூன்றாவது மிக மோசமான போக்குவரத்து நெரிசல் மிகுந்த நாடாக இலங்கை பட்டியலிடப்பட்டுள்ளது.</p><p>உலகின் போக்குவரத்து நெரிசல் குறித்த Numbeoவின் 2026ஆம் ஆண்டுக்கான இடைக்கால அறிக்கையில் இவ்வாறு பட்டியலிடப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p>
இலங்கை 254.5 என்ற போக்குவரத்து குறியீட்டுடன் மூன்றாம் இடத்தில் உள்ளதுடன், நைஜீரியா 320.3 என்ற குறியீட்டுடன் முதலிடத்திலும், கொஸ்டாரிகா இரண்டாம் இடத்திலும் உள்ளன.</p><p></p><h2>குறைந்த போக்குவரத்து நெரிசல்</h2><p>
</p><p>இதேவேளை, பங்களாதேஷ், கென்யா, எகிப்து, பெரு, ஈரான், இந்தியா மற்றும் கொலம்பியா ஆகிய நாடுகள் முதல் 10 இடங்களுக்குள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e24c3978-8a0f-484a-90e3-413422148338/26-6a5450ea7a9d1.webp' /></p><p>இதற்கிடையில், மலேசியா, தாய்லாந்து, சிங்கப்பூர் மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகள் ஒப்பீட்டளவில் குறைந்த போக்குவரத்து நெரிசல் அளவுகளைப் பதிவு செய்துள்ளன.</p><p>பயனர்களிடமிருந்து பெறப்படும் தரவுகளின் அடிப்படையில் Numbeo நிறுவனம் இந்த குறியீட்டை தயாரித்துள்ளது.</p><h2>போக்குவரத்து நெரிசல் அளவிடல்</h2><p>பயண நேரம், நெரிசலால் வீணாகும் நேரம், எரிபொருள் திறனின்மை மற்றும் பயணத்துடன் தொடர்புடைய மதிப்பிடப்பட்ட CO₂ வெளியேற்றம் போன்ற காரணிகளின் அடிப்படையில் போக்குவரத்து நெரிசல் அளவிடப்படுகின்றது.</p><p>இந்த தரவுகள், இலங்கையில் நிலவும் கடும் போக்குவரத்து நெரிசல் மற்றும் போக்குவரத்து கட்டமைப்பை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தை உணர்த்துவதாகவும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.</p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-13T02:44:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பில் விடுதலைப் புலிகளின் பெயரில் கடத்தல், கப்பம் - அநுர அரசின் விசாரணையில் அம்பலமான உண்மை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/colombo-disappearance-network-is-revealed-1783905257"></link>
            <id>https://tamilwin.com/article/colombo-disappearance-network-is-revealed-1783905257</id>
            <summary type="text">கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் பலர் கடத்தப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் முன்னாள் அரசாங்கத்தின் பாதுகாப்பு தரப்பினர் உள்ளதாக தகவல்கள் அம்பலமாக...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் பலர் கடத்தப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் முன்னாள் அரசாங்கத்தின் பாதுகாப்பு தரப்பினர் உள்ளதாக தகவல்கள் அம்பலமாகியுள்ளன. </p><p>

கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் ரவீந்திரநாத் சிவசுப்பிரமணியம் காணாமல் போன சம்பவம் தொடர்பான குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் இந்த தகவல்கள் வெளியாகி உள்ளன. </p><p> 

கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் பலர் காணாமல் போனமை தொடர்பான தகவல்கள் வெளியாகத் தொடங்கியுள்ளன.</p><p> </p><h2><b>

கடத்தல் மற்றும் காணாமல் போதல் </b></h2><p>விடுதலைப் புலிகள் அமைப்பின் பெயர் பயன்படுத்திய அரசாங்கத்தின் பாதுகாப்புப் பிரிவினரால் கைப்பற்றப்பட்ட வாகனங்களே, இந்தக் கடத்தல் மற்றும் காணாமல் போதல் சம்பவங்களுக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளமை விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2df0baa5-1626-4089-afa0-c5fbf85a63e9/26-6a543fbdd0eaa.webp' /></p><p>அரசினால் கைப்பற்றப்படும் வாகனங்களை அரசுடமையாக்குவதற்கான முறையான நடைமுறை பின்பற்றப்பட வேண்டும். </p><p>எனினும், அவ்வாறு செய்யப்படாத சந்தர்ப்பங்கள் குறித்து ஏற்கனவே தகவல்கள் வெளியாகியிருந்தன.
</p><p>
தற்போதைய விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ள தகவல்களுக்கமைய, இந்த காணாமல் போன விடயங்கள், கப்பம் பெறல் மற்றும் காணி அபகரிப்புகளை நோக்கமாகக் கொண்டே இடம்பெற்றுள்ளன.</p><p> </p><h3><b>

காணிகள் மற்றும் வீடுகள் </b></h3><p>கொழும்பு மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் அதிக வணிக பெறுமதியைக் கொண்ட காணிகள் மற்றும் வீடுகள் பாரிய அளவில் கைப்பற்றப்பட்டுள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f0799868-97b6-436c-9558-3bb9ed0529a2/26-6a543fbe81ee1.webp' /></p><p>அதற்காகவே அவற்றின் உரிமையாளர்கள் அல்லது வாரிசுதாரர்கள் கடத்திச் செல்லப்பட்டுள்ளனர். </p><p>

இந்தக் காணாமல் போனமை தொடர்பாக பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதா.. என்பது குறித்தும், அவ்வாறு முறைப்பாடுகள் செய்யப்பட்டிருந்தால் அவற்றுக்கு என்ன நடந்தது என்பது குறித்தும் தகவல்களைத் திரட்டும் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.</p>]]></content>
            <updated>2026-07-13T02:43:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிறந்த நாளில் மகனால் படுகொலை செய்யப்பட்ட தந்தை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/son-killed-father-on-his-birthday-1783907111"></link>
            <id>https://tamilwin.com/article/son-killed-father-on-his-birthday-1783907111</id>
            <summary type="text">மாத்தறை, அக்குரஸ்ஸ, பரதூவ பிரதேசத்தில் பிறந்த நாளன்று தனது தந்தையை கொலை செய்த மகன் தொடர்பில் செய்தி பதிவாகியுள்ளது. 

அக்குரஸ்ஸ, பரதூவ பிரதேசத்தில் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>மாத்தறை, அக்குரஸ்ஸ, பரதூவ பிரதேசத்தில் பிறந்த நாளன்று தனது தந்தையை கொலை செய்த மகன் தொடர்பில் செய்தி பதிவாகியுள்ளது.</p><p> 

அக்குரஸ்ஸ, பரதூவ பிரதேசத்தில் வசித்து வந்த 81 வயதுடைய முதியவரே இவ்வாறு தனது பிறந்த நாள் தினத்தன்று மகனின் தாக்குதலால் இவ்வாறு உயிரிழந்துள்ளார். </p><p>

மதுப் பழக்கத்திற்கு அடிமையான குறித்த நபர் தனது தந்தையை கொலை செய்துள்ளதாக அக்குரஸ்ஸ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p> </p><h2><b>

பிரேத பரிசோதனை</b></h2><p>வயிற்றுப் பகுதியில் ஏற்பட்ட காயங்களே மரணத்திற்கு காரணம் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cd0eeffa-89ca-4464-ba4f-b8808b6fc4bd/26-6a544f6c0fe15.webp' /></p><p>மாத்தறை பொது வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியினால் மேற்கொள்ளப்பட்ட பிரேதப் பரிசோதனையின் பின்னர், சடலம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. </p><p>

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்குரஸ்ஸ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
</p>]]></content>
            <updated>2026-07-13T02:37:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: அனைத்து சந்தேகநபர்களும் அடையாளம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/negombo-prison-clash-all-suspects-identified-1783908184"></link>
            <id>https://tamilwin.com/article/negombo-prison-clash-all-suspects-identified-1783908184</id>
            <summary type="text">நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற மோதல் மற்றும் சிறைச்சாலை
அதிகாரிகள் மீதான தாக்குதல் சம்பவங்களுடன் தொடர்புடைய அனைத்து சந்தேகநபர்களும்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற மோதல் மற்றும் சிறைச்சாலை
அதிகாரிகள் மீதான தாக்குதல் சம்பவங்களுடன் தொடர்புடைய அனைத்து சந்தேகநபர்களும்
அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இது தொடர்பான விசாரணைகளைத்
தீவிரப்படுத்தியுள்ளதுடன், சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரிடமிருந்தும்
சாட்சியங்களைப் பதிவு செய்து வருகின்றது.</p><p></p><h2>போதைப்பொருள் கடத்தல் விவகாரம்</h2><p>

போதைப்பொருள் கடத்தல் விவகாரம் தொடர்பில் கைதிகளின் இரு குழுக்களிடையே ஏற்பட்ட
இந்த மோதலில், சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட 100 இற்கும் மேற்பட்டோர்
காயமடைந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5314005c-7159-406a-bb4d-ec89b3a94a71/26-6a544be3d8f98.webp' /></p><p> துரதிர்ஷ்டவசமாக, இச்சம்பவத்தில் 29 பேர் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்த சிறைச்சாலை அதிகாரிகளின் தலைகளில் கொடூரமாகத் தாக்கப்பட்டமை
விசாரணைகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
</p><p>
மோதலுக்குப் பின்னர், சிறைச்சாலையில் நிலவும் நெரிசலைக் குறைக்கும் நோக்கில்
கைதிகள் ஏனைய சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டு வருகின்றனர். </p><p>இதுவரை அங்கிருந்து
பெரும்பாலானோர் மாற்றப்பட்டுள்ள நிலையில், எஞ்சியிருக்கும் 600 கைதிகளும்
விரைவில் இடமாற்றம் செய்யப்படவுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.</p><h2>ஆரம்பக்கட்ட நட்டஈடு</h2><p> உயிரிழந்த
கைதிகளின் சடலங்கள் அனைத்தும் அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
</p><p>மேலும், உயிரிழந்த 8 சிறைச்சாலை அதிகாரிகளின் குடும்பங்களுக்கு, ஆரம்பக்கட்ட நட்டஈடாக
தலா 5 இலட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e13cf2a1-d1cb-49e4-b9bc-7b2120a49edf/26-6a544be4879da.webp' />&nbsp;</p><p> மேலதிகமாக, தலா 20 இலட்சம்
ரூபாவுக்கும் அதிகமான நட்டஈடு வழங்குவது குறித்துத் திணைக்களம் கவனம் செலுத்தி
வருகின்றது என்று சிறைச்சாலை ஆணையாளர் ஏ.சி. கஜநாயக்க குறிப்பிட்டார்.
</p><p>இந்த மோதல் சம்பவம் மற்றும் சிறைச்சாலைகளில் நிலவும் கடும் நெரிசல்
காரணமாக ஏற்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து, முன்னாள் மனித உரிமைகள்
ஆணையாளர் பேராசிரியர் பிரதிபா மஹாநாமஹேவ தனது ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளார்.</p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-13T02:22:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Manchu</name>
            </author>
            <title type="text"><![CDATA[குருபகவானின் நட்சத்திர மாற்றம்.... பணவரைவை தக்கவைக்கும் 3 ராசியினர் யார்னு தெரியுமா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/these-zodiac-sign-are-lucky-due-to-jupiter-transit-1783848069"></link>
            <id>https://manithan.com/article/these-zodiac-sign-are-lucky-due-to-jupiter-transit-1783848069</id>
            <summary type="text">குரு பகவானின் நட்சத்திர மாற்றத்தினால் பணவரை தக்கவைத்து, அதிர்ஷ்டத்தினைப் பெறும் ராசியினரைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.குருவின் நட்சத்திர...</summary>
            <content type="html"><![CDATA[<p>குரு பகவானின் நட்சத்திர மாற்றத்தினால் பணவரை தக்கவைத்து, அதிர்ஷ்டத்தினைப் பெறும் ராசியினரைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.</p><h2>குருவின் நட்சத்திர மாற்றம்</h2><p>ஜோதிடத்தில் குருபகவான் சக்திவாய்ந்த கிரகங்களில் ஒன்றாக கருதப்படுகின்றார். குரு என்று எழைக்கப்படும் வியாழன் கிரகம், ஞானம், செல்வம் மற்றும் முன்னேற்றத்தின் அதிபதியாகக் கருதப்படுகின்றார்.</p><p>குருவின் இயக்கத்தில் ஏற்படும் மாற்றங்கள் அனைத்து ராசியினருக்கும் குறிப்பிட்ட தாக்கத்தினை ஏற்படுத்துகின்றது. ஜுலை 19 அன்று குரு பூச நட்சத்திரத்தின் மூன்றாம் பாதத்தில் நுழைகின்றார்.</p><p><br></p><p>ஜோதிடத்தில் இந்த கிரக மாற்றம் மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகின்றது. பூச நட்சத்திரம் பொதுவாக 27 நட்சத்திரங்களின் அரசனாக கருதப்படுகின்றது.</p><p>குருபகவான் இந்த நட்சத்திரத்திற்குள் நுழைவது வளர்ச்சி, செல்வம், அறிவு மற்றும் செழிப்பு ஆகியவற்றுடன் தொடர்புடையதாக இருக்கும் நிலையில், இதனால் நன்மையினைப் பெறும் ராசியினரைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/63243f50-697c-4ccc-91ce-19a6711f9b7b/26-6a535fd9060cb.webp' /><br></p><h2>மேஷம் </h2><p>மேஷ ராசியினருக்கு இந்த நட்சத்திர மாற்றத்தினால் நிதி நிலை மற்றும் குடும்ப வாழ்க்கை இரண்டிலும் நல்ல மாற்றத்தினைக் காணலாம்.</p><p>நீண்ட காலமாக வராமல் இருந்த பணம் தற்போது திரும்ப கிடைக்க வாய்ப்புள்ளது. முதலீடுகள் பெரிய லாபத்தினைக் கொடுக்கும். தொழில் ரீதியாக பொருளாதார நிலை வலுவடையும்.</p><p>வேலையினை மாற்ற நினைப்பவர்களுக்கு இந்த காலக்கட்ட சிறப்பான காலமாகும். குடும்பத்தில் அமைதி மற்றும் நல்லிணக்கம் நிலவுவதுடன், பூர்வீக சொத்து மூலம் ஆதாயம் கிடைக்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/84a091f6-eea0-4fb1-80e9-e4adf4c3eb02/26-6a535fd9ab888.webp' /><br></p><h2>கடகம் </h2><p>குருவின் இந்த நட்சத்திர பெயர்ச்சி கடக ராசியினருக்கு சாதகமான பலனை அளிப்பதுடன், பணியிடத்திலும், சமூகத்திலும் நல்ல பெயரை பெற முடியும்.</p><p>புத்திசாலித்தனத்திற்கும் எடுக்கும் முடிவு சுற்றியுள்ளவர்களின் பாராட்டை பெற்றுத்தரும். வியாபாரத்தில் ஒப்பந்தம் விடயமாக நல்ல முடிவை இந்த காலக்கட்டத்தில் எடுக்கலாம்.&nbsp;</p><p>பொருளாதார நிலை மேம்படுவதுடன், மன அழுத்தம் குறைந்து அதிக ஆற்றலுடன் இருப்பீர்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d0d5ba50-9e2e-45ad-84ef-2dfa9fd867d6/26-6a535fda744ec.webp' />&nbsp;<br></p><p>

</p><h2>தனுசு </h2><p>தனுசு ராசியினருக்கு இந்த நட்சத்திர பலன் நேர்மறை ஆற்றலை ஏற்படுத்துவதுடன், நிலுவையில் இருந்த பணிகள் வெற்றியாக முடிவடையும்.</p><p>அனைத்து முயற்சிகளிலும் அதிர்ஷ்டம் துணை நிற்பதுடன், வேலையிலும் நல்லதொரு முன்னேற்றத்தினை அடைவீர்கள். காதல் மற்றும் திருமண வாழ்க்கைக்கு பயனுள்ளதாக இருக்கும்.</p><p>குழந்தைகள் படிப்பில் அதிக முன்னேற்றம் அடைவதுடன், புதிய ஒப்பந்தம் மூலம் நல்ல லாபத்தினை பெறுவதற்கு இவை சிறந்த காலக்கட்டமாகும்.</p><p>மொத்தத்தில் இது தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் தொழில் வாழ்க்கை இரண்டிலுமே சிறப்பான பலன்களை அளிக்கும்.&nbsp;&nbsp;<br></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7f5766b1-27b1-4f2f-a561-8ac4d8e024fe/26-6a535fdb3dbe7.webp' /></p><p><b>இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).</b>&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;<br></p><table class="table table-bordered"><tbody><tr><td><i>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் <a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள் <a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"><b>FOLLOW NOW&nbsp; </b></a>&nbsp; &nbsp;&nbsp;</i><br></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-13T02:20:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானிய நகரங்கள் மீது அமெரிக்கா குண்டுவீச்சு - விமான நிலையம் தாக்கப்பட்டதா!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/us-launches-new-wave-of-strikes-against-iran-1783907147"></link>
            <id>https://ibctamil.com/article/us-launches-new-wave-of-strikes-against-iran-1783907147</id>
            <summary type="text">ஹோர்முஸ் நீரிணையில் பதற்றம் தீவிரமடைந்துள்ள நிலையில், அமெரிக்க இராணுவம் தெற்கு ஈரான் மீது புதிய தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது.பந்தர் அப்பாஸ், சிரிக் ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹோர்முஸ் நீரிணையில் பதற்றம் தீவிரமடைந்துள்ள நிலையில், அமெரிக்க இராணுவம் தெற்கு ஈரான் மீது புதிய தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது.</p><p>பந்தர் அப்பாஸ், சிரிக் மற்றும் ஜஸ்க் ஆகிய துறைமுக நகரங்களிலும், கெஷ்ம் தீவிலும் வெடிப்புகள் நிகழ்ந்ததாக ஈரானிய அரசு ஊடகங்கள் தெரிவிக்கின்றன .</p><p>ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் வணிகக் கப்பல்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில், ஈரான் மீது புதிய கட்டத் தாக்குதல்களைத் தொடங்கியுள்ளதாக அமெரிக்க மத்திய கட்டளை மையம் (CENTCOM) அறிவித்துள்ளது.</p><p></p><h2>எட்டு இடங்களில் தாக்குதல்</h2><p>கிழக்கு நேரப்படி மாலை 5 மணி (ET) முதல் இந்தத் தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டதாக கட்டளைப் பிரிவு ஒரு சுருக்கமான அறிக்கையில் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f947dda6-2079-4d4a-8155-d516794b5d79/26-6a5446d35b826.webp' /></p><p>ஈரானிய படைகளை இந்த செயல்களுக்குப் பொறுப்புக்கூறச் செய்ய வேண்டும் என்ற உயர்மட்ட உத்தரவின் பேரில், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இந்தத் தாக்குதல்களுக்கு அனுமதி வழங்கியுள்ளதாக அமெரிக்க மத்திய கட்டளை மையம் மேலும் உறுதிப்படுத்தியுள்ளது.</p><p>இந்நிலையில், கடந்த சில மணிநேரங்களில் அமெரிக்கப் படைகள் குசெஸ்தான் முழுவதும் குறைந்தது எட்டு இடங்களில் தாக்குதல் நடத்தியதாக உள்ளூர் அதிகாரி ஒருவரை மேற்கோள் காட்டி வெளிநாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.</p><p>ஒவ்வொரு பகுதியிலும் ஏற்பட்ட சேதங்களை அதிகாரிகள் இன்னும் மதிப்பீடு செய்து வருவதாகவும், அஹ்வாஸ் விமான நிலையம் தாக்கப்பட்டதை&nbsp;அந்த அதிகாரி மறுத்துள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-13T02:13:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வாழ்க்கையில் நான் கண்ட மெய்சிலிர்க்க வைத்த தாக்குதல்..! காயமடைந்த சிறை அதிகாரி வெளியிட்ட முக்கிய தகவல்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/negombo-prison-cracks-injured-prison-officer-1783905907"></link>
            <id>https://tamilwin.com/article/negombo-prison-cracks-injured-prison-officer-1783905907</id>
            <summary type="text">கைதிகள் இவ்வாறு நடந்துகொள்வதை நான் என் வாழ் நாளில் பார்த்ததே இல்லை என காயமடைந்த சிறைச்சாலை அதிகாரி (ஜெய்லர்) ஒருவர் தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் அவர...</summary>
            <content type="html"><![CDATA[<p>கைதிகள் இவ்வாறு நடந்துகொள்வதை நான் என் வாழ் நாளில் பார்த்ததே இல்லை என காயமடைந்த சிறைச்சாலை அதிகாரி (ஜெய்லர்) ஒருவர் தெரிவித்துள்ளார்.</p><p>இது தொடர்பில் அவர் கூறிய முக்கிய தகவல்கள்,</p><p>5ஆம் திகதி நிலைமை அமைதியாக இருந்தது. ஆனால் அதற்கு அடுத்த நாள் காலையில், அதாவது 6ஆம் திகதி திங்கட்கிழமை நீதிமன்ற நடவடிக்கைகள் இருந்த ஒரு நாளாகும். </p><p>அதேபோல் அன்று கைதிகளைப் பார்ப்பதற்கு வீடுகளில் இருந்து உறவினர்கள் வரும் நாளாகும். அதற்கு நாம் தயாராகவே இருந்தோம். </p><p>அந்த நேரத்தில் கைதிகள் மருந்தகத்தை உடைத்து, மனநல நோயாளிகளுக்கு வழங்கப்படும் அதிக வீரியம் கொண்ட மாத்திரைகளை உட்கொண்டிருந்தனர். இதுதான் அங்கு நடந்த மிக பயங்கரமான சம்பவமாகும். </p><h2>

</h2><p></p><h2>டெங்கு காய்ச்சல் பாதிப்பு</h2><p>இது உணவருந்துவதற்கு முன்பே நடந்தது, எனக்கு நேரம் அவ்வளவாக நினைவில்லை. அன்று எப்படியும் கடமையில் ஈடுபட்டிருந்தது ஒரு சில அதிகாரிகள் மட்டும்தான். </p><p>அந்த நேரத்தில் பல அதிகாரிகளுக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டிருந்தது. டெங்கு மற்றும் ஏனைய வைரஸ் காய்ச்சல் காரணமாக ஒரு நாளைக்கு பத்து பேர் வரை பணிக்கு வரவில்லை. </p><p>இதன் காரணமாக வெலிக்கடை சிறைச்சாலையிலிருந்தும் சில அதிகாரிகள் நீர்கொழும்புக்கு வரவழைக்கப்பட்டிருந்தனர். கைதிகளிலும் பெரும்பாலானோருக்கு டெங்கு தொற்றியிருந்தது. </p><p>டெங்கு அல்லாத உடம்பு வலி போன்ற அறிகுறிகளுடன் கூடிய வைரஸ் காய்ச்சல் நிலைமை போன்ற ஒன்று எல்லோருக்குமே இருந்தது.
இதன் காரணமாக நாம் பெனடோல் கூட கொடுத்தோம்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f38e4c9d-b1e7-43af-ab96-ef80785a0867/26-6a543e75eec5f.webp' /></p><p>கடந்த நாட்களில் டெங்கு காரணமாக மூன்று கைதிகளுக்கும் மேல் உயிரிழந்தும் இருந்தனர். நிலைமை ஓரளவு கட்டுப்பாட்டில் இருந்ததால், மூன்று நான்கு அதிகாரிகள் காலையில் உணவு கொடுப்பதற்காகச் சென்றிருந்தனர். </p><p>முதலில் சென்றவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட போது, அவர்களைக் காப்பாற்றுவதற்காக மேலும் சில அதிகாரிகள் சென்றனர். அவர்கள் அனைவரும் பெட்டன் (Baton) தடிகளுடனேயே சென்றனர். </p><p>அங்கு அதிகாரிகளின் பெட்டன் தடிகளைப் பறித்து, அந்த அதிகாரிகளுக்கே அடிக்கும் ஒரு நிலைமைதான் காணப்பட்டது.
சிறைக் கூடங்களில் மூடியுள்ள இரண்டு பாதுகாப்பு ஜன்னல்கள் (security windows) உள்ளன. </p><p>அதில் ஒரு பாதுகாப்பு ஜன்னல் பகுதியில் இருந்த அதிகாரிக்கு அடித்துத்தான், அந்த ஜன்னலில் இருந்த டி-56 (T-56) துப்பாக்கியை பறித்திருக்கிறார்கள். </p><p>மூன்றாவது குழுவில்தான் நான் உள்ளே செல்கிறேன். நீர்கொழும்பு சிறைச்சாலையின் பிரதான ஜெய்லர் அவர்களுடன்தான் நான் செல்கிறேன். அந்த நேரத்தில் சக அதிகாரிகளைத் தாக்கி, கைதிகள் அவர்களைப் பிணைக் கைதிகளாக வைத்திருந்தனர்.</p><h2>உடற்பயிற்சிப் பிரிவு உடைக்கப்பட்டது</h2><p>சிறைச்சாலைக்குள் கைதிகள் இருந்த உடற்பயிற்சிப் பிரிவின் உபகரணங்களில் இருந்த இரும்புத் தடிகளை உடைத்து, அவற்றையும் எடுத்துக் கொண்டு அதிகாரிகளைத் தாக்கியிருந்தனர். </p><p>உள்ளே சென்றவுடன் வழக்கத்திற்கு மாறான ஒரு நடத்தை முறையைத்தான் நாம் கண்டோம். கைதிகள் இப்படி நடந்துகொள்வதை நான் கனவிலும் பார்த்ததில்லை. அவர்கள் பேய்களைப் போல நடந்து கொண்டார்கள். </p><p>என்னையும் என்னுடன் சென்ற மற்ற அதிகாரியையும் சுமார் 300 கைதிகள் வரை ஒரே நேரத்தில் சூழ்ந்து கொண்டனர். அவர்கள் முதலில் எங்கள் மீது கற்களால் எறிந்தார்கள். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c59a98e2-0bdd-4629-be29-dcf3f1428761/26-6a543e769c726.webp' /></p><p>முதலில் சென்ற சிலரைக் காப்பாற்றவே இரண்டாவது குழு சென்றது. அந்த இரண்டாவது குழுவைக் காப்பாற்றத்தான் நாம் சென்றோம். சென்ற பிறகுதான் கண்டோம், இது இலகுவாகக் கட்டுப்படுத்தக்கூடிய ஒரு சூழ்நிலை அல்ல என்று. </p><p>அங்கு நின்றவர்கள் தாக்கிய பிறகு நான் கீழே விழுந்தேன்.
"சேர் நீங்கள் வராதீர்கள், போய்விடுங்கள்! இவர்கள் பைத்தியக்காரர்களைப் போல இருக்கிறார்கள்" சிறைச்சாலை அதிகாரிகளுடன் மிகவும் நெருக்கமாக இருந்த ஒரு குழுவினர் கத்தினர். </p><p> இவர்களைக் கட்டுப்படுத்த முடியாது. நீங்கள் சீக்கிரம் இங்கிருந்து போய்விடுங்கள்" என்ற விடயத்தைத்தான் அவர்கள் கூறியிருக்கிறார்கள். </p><h2>

அதிகாரிகளை பாதுகாத்த கைதிகள்</h2><p>அந்த நேரத்தில் எங்களைச் சூழ்ந்து கொண்டு தாக்கினார்கள். "சேருக்கு அடிக்க வேண்டாம், சேருக்கு அடிக்க வேண்டாம்" என்று கூறி பழைய கைதிகள் நான்கு பேர் என்னைச் சூழ்ந்து கொண்டனர். </p><p> எங்களைப் பாதுகாக்க வந்த கைதிகளையும், ஆக்ரோஷமாக நடந்து கொண்ட கைதிகள் தாக்கினார்கள். அதற்கு இடையில் ஒரு பெட்டன் தடி அடி எனது தலையில் விழுந்தது. </p><p>அதேநேரம் யாரோ ஒருவர் எனது கழுத்தில் காலையோ அல்லது பெட்டன் தடியையோ வைத்து அமுக்கினர். அப்படியே என்னை தரையோடு இழுத்துச் சென்று எங்கோ வீசினார்கள். </p><p>எனக்கு அவ்வளவுதான் நினைவிருக்கிறது. அடுத்ததாக எனது தலை சுவரில் மோதுவது எனக்கு நினைவிருக்கிறது. அதன் பிறகு யாரோ எனது மூக்கின் அருகில் விரலை வைத்து நான் மூச்சுவிடுகிறேனா என்று பார்ப்பது போல எனக்கு உணர்ந்தது. </p><p>அங்கிருந்து உயிருடன் வெளியே செல்ல முடியும் என்று எனக்கு அந்த நேரத்தில் தோன்றவில்லை. பழைய கைதிகள் " ஓடுங்கள், ஓடுங்கள் என்று கத்தினார்கள். </p><p></p><p>அவர்கள்தான் இரும்பு நுழைவாயிலை திறந்து வெளியே போக உதவினார்கள். எமது கைகளில் இருந்த தொலைபேசிகளைக் கைதிகள் பறித்துக் கொண்டனர். </p><p>எனது கழுத்தில் இருந்த சங்கிலி கூட மிஞ்சவில்லை.
இந்த அதிகாரி இன்னமும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அங்கு உண்மையில் கட்டுப்படுத்த முடியாத ஒரு சூழ்நிலை நிலவியது என்ற கதையைத்தான் அவர் கூறுகிறார்.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-13T02:10:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ்ப்பாணத்தை சேர்ந்த தம்பதியினர் சென்னையில் அதிரடியாக கைது - சிக்கிய போலி ஆவணங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/jaffna-couple-arrested-for-tamil-nadu-1783906757"></link>
            <id>https://tamilwin.com/article/jaffna-couple-arrested-for-tamil-nadu-1783906757</id>
            <summary type="text">சென்னையில் முறையான குடியுரிமை ஆவணங்கள் இன்றி, போலி ஆவணங்களை பயன்படுத்தி தமிழக சட்டசபை தேர்தலில் வாக்களித்த இலங்கை தம்பதியினர்&amp;nbsp; கைது செய்யப்பட்டுள...</summary>
            <content type="html"><![CDATA[<p>சென்னையில் முறையான குடியுரிமை ஆவணங்கள் இன்றி, போலி ஆவணங்களை பயன்படுத்தி தமிழக சட்டசபை தேர்தலில் வாக்களித்த இலங்கை தம்பதியினர்&nbsp; கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>நேற்று முன்தினம் இவர்கள் இருவரும் இலங்கை செல்வதற்காக, சென்னை விமான நிலையம் சென்றபோது போலி ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.</p><p>&nbsp; &nbsp;</p><h2>போலியான முகவரி ஆதாரங்கள்</h2><p>இது தொடர்பாக அதிகாரிகள் நடத்திய விசாரணையில், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஆண் ஒருவரும் (69) அவரது மனைவியும், கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக சென்னை, தியாகராயநகர் பகுதியில் வசித்து வந்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/57904980-7bff-41c6-9f7b-a2209cae76d7/26-6a5446acaee4a.webp' /></p><p>இவர்கள் தியாகராயநகர் பகுதியில் சிறிய நகைக்கடையில் பணியாற்றுவதாகவும் தெரிவித்துள்ளனர்.</p><p>

இவர்கள் இருவரும் இந்தியக் குடியுரிமைச் சான்றிதழ்கள் இன்றி, போலியான முகவரி ஆதாரங்களைக் காட்டி வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர்களைச் சேர்த்துக் கொண்டதாக கூறப்படுகிறது.
</p><p>
இந்த நிலையில், அண்மையில் நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலின் போது இவர்கள் வாக்களித்ததைக் கண்டுபிடித்த அதிகாரிகள், இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர்.</p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">4 பிரிவுகளில் வழக்குப்பதிவு&nbsp;</span></p><p>
</p><p>
விசாரணையின் முடிவில், இவர்கள் முறையான ஆவணங்கள் இன்றி வாக்காளர் அடையாள அட்டையைப் பெற்று, தேர்தலிலும் வாக்களித்தமை உறுதியாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ffca6b3c-7d3f-43fc-8243-d0c4313830c7/26-6a5446ad5ed0e.webp' />&nbsp;</p><p>
</p><p>
இந்த நிலையில், இருவர் மீதும் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.&nbsp;</p><p>தமிழக சட்டமன்றத் தேர்தலில் இலங்கையை சேர்ந்த பலர் முறைகேடாக வாக்களித்த பல சம்பவங்கள் பதிவாகியுள்ளதுடன், நேற்றும் இருவர் கைது செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-13T02:00:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[அநுர அரசுக்கு எதிராக நாமலின் புதிய வியூகம் - சூடு பிடிக்கும் தென்னிலங்கை அரசியல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-s-new-opposition-to-be-started-1783905716"></link>
            <id>https://tamilwin.com/article/namal-s-new-opposition-to-be-started-1783905716</id>
            <summary type="text">புதிய அரசியல் நடவடிக்கையொன்றை ஆரம்பிப்பதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியா...</summary>
            <content type="html"><![CDATA[<p>புதிய அரசியல் நடவடிக்கையொன்றை ஆரம்பிப்பதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
</p><p>
எதிர்க்கட்சி அரசியல் கட்சிகளுடன் இணைந்து புதிய பயணத்தை மேற்கொள்ளும் நோக்கில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p>

“<b>புதிய அலை</b>” என்ற பெயரில் இந்த நடவடிக்கையை நாடு முழுவதும் செயற்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.</p><p>
</p><h2><b>
தென்னிலங்கை அரசியல்</b></h2><p>அத்துடன், டி.வி. சானக்க, சானக்க மாதுகொட, அனுராத ஜயரத்ன மற்றும் ரோகித அபேகுணவர்தன உள்ளிட்ட நாமல் ராஜபக்சவின் நெருங்கிய நண்பர்கள் இதில் முன்னிலை வகிப்பதாக தெரியவந்துள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a18a9b91-4bdb-42a0-bf87-509971d73cc7/26-6a54413ac9a45.webp' /></p><p>எதிர்க்கட்சியின் ஏனைய குழுக்களை ஒன்றிணைத்து பரந்ததொரு முன்னணியை உருவாக்குவதே இந்த திட்டத்தின் பிரதான நோக்கமாகும்.
</p><p>
அதற்கமைய, பிரதேச மட்டத்தில் உள்ள துடிப்பான இளம் தலைவர்களை முன்னிலைக்குக் கொண்டுவருவதுமே இதன் நோக்கமாகும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.</p><p>
</p><h3><b>
கூட்டு எதிர்க்கட்சி</b></h3><p>கூட்டு எதிர்க்கட்சியின் கூட்டங்களில் முன்னிலை வகித்த பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், அனுராத ஜயரத்ன உள்ளிட்ட சிலர் அதன் செயற்பாடுகளிலிருந்து விலகவுள்ளனர்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b6d4ebb5-41a6-4ded-9f2f-ea2ddaac490c/26-6a54413b7c3d7.webp' /></p><p>அதில் இருந்து விலகி, இந்தப் புதிய குழுவுடன் இணையவுள்ளதாகவும், திலும் அமுனுகம உள்ளிட்ட சிலரும் எதிர்காலத்தில் இக்குழுவுடன் இணையவுள்ளதாகவும் ஏற்பாட்டாளர்கள் மேலும் குறிப்பிடுகின்றனர்</p>]]></content>
            <updated>2026-07-13T01:37:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரசாங்கம் நீதிமன்ற விவகாரங்களில் தலையிடுகிறதா!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/npp-govt-trying-to-middle-in-justice-system-1783905200"></link>
            <id>https://tamilwin.com/article/npp-govt-trying-to-middle-in-justice-system-1783905200</id>
            <summary type="text">தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நீதிமன்ற விவகாரங்களில் தலையிடுகின்றதா என முன்னாள் ஆளுனரும் ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணரத்ன கேள்வி எழுப்பியுள்ளார். ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நீதிமன்ற விவகாரங்களில் தலையிடுகின்றதா என முன்னாள் ஆளுனரும் ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணரத்ன கேள்வி எழுப்பியுள்ளார். </p><p>முன்னாள் ஜனாதிபதிகள் மீது நீதிமன்ற நடவடிக்கைகளில் தலையிட்டதாக குற்றச்சாட்டுகள் சுமத்தப்படடி்ருந்த போதிலும் அவர்கள் எவரும் தற்போதைய ஜனாதிபதியைப் போல் நீதியரசர் பதவி வெற்றிடங்களை பேணவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p>
தற்போது உச்ச நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றம் ஆகியவற்றில் தலா 4 நீதியரசர் பதவிகள் வீதம் பற்றாக்குறை நிலவுகிறது. என தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0dbc3da0-9353-4762-a09d-bd1fdf6d6af8/26-6a543bb22f77f.webp' /></p><p>
இதனால் கீழ் நீதிமன்றங்களின் நீதிபதிகள் தங்களுக்குரிய பதவி உயர்வுகளைப் பெற்றுச் செல்வதற்காகக் காத்திருக்கின்றனர் என தெரிவித்துள்ளார்.
</p><p>இந்த நாட்களில் இன்னார்தான் சிறைக்குச் செல்வார், பால்சோறு சாப்பிடுவதற்குத் தயாராகுங்கள் என்று ஜனாதிபதி பகிரங்க மேடைகளில் கூறி வருவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
</p><p>கீழ் நீதிமன்ற நீதிபதிகள் வழங்கும் தீர்ப்புகளுக்கு ஏற்ப, அவர்களுக்கு லஞ்சமாக வழங்குவதற்காகவே இந்த உயர் பதவிகள் காலியாக வைக்கப்பட்டுள்ளனவா என்ற பலத்த சந்தேகம் தற்போது மக்கள் மத்தியில் எழுந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>நாட்டின் இத்தகைய நிலைமையைக் காணும்போது தனக்கு கடுமையான அருவருப்பு ஏற்படுவதாகவும் ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-13T01:13:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டில் கொட்டி தீர்க்கப்போகும் கனமழை...! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/heavy-rain-with-lightning-thunder-weather-report-1783905102"></link>
            <id>https://ibctamil.com/article/heavy-rain-with-lightning-thunder-weather-report-1783905102</id>
            <summary type="text">சப்ரகமுவ மாகாணத்திலும் அத்துடன் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்.வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (13-07-2026) விடு...</summary>
            <content type="html"><![CDATA[<p>சப்ரகமுவ மாகாணத்திலும் அத்துடன் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்.</p><p>வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (13-07-2026) விடுத்துள்ள அறிக்கையில் மேற்படி விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p>இதனடிப்படையில் ஊவா மாகாணத்தின் சில இடங்களிலும் அத்துடன் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் சில இடங்களிலும் பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது.
</p><p></p><h2>பனிமூட்டமான நிலை</h2><p>வெப்பச் சுட்டெண் காரணமாக அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மொனராகலை போன்ற மாவட்டங்களில் இன்று பகல் வேளையில் மனித உடலினால் அதிகரித்த வெப்பநிலை உணரப்படும்.&nbsp;</p><p>நாட்டின் ஏனைய பிராந்தியங்களில் வறட்சியான வானிலை காணப்படும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/46e35a67-c256-4505-a2d2-ec610a029e1a/26-6a543b50130d1.webp' />&nbsp;&nbsp;</p><p>மத்திய மலைப் பிராந்தியத்தின் மேற்கு சரிவுகளிலும், வடமத்திய மாகாணத்திலும் அத்துடன் புத்தளம், மொனராகலை, ஹம்பாந்தோட்டை, திருகோணமலை மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் மணித்தியாலத்திற்கு சுமார் 40 - 50 km வேகத்தில் அடிக்கடி பலத்த காற்று வீசக் கூடும்.</p><p>இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-13T01:12:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீர்கொழும்பு சிறையில் பயங்கரம் ; பிரான்சிற்கு தப்பியோடிய முக்கிய குற்றவாளி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/terror-in-negombo-prison-main-convict-escap-france-1783891412"></link>
            <id>https://jvpnews.com/article/terror-in-negombo-prison-main-convict-escap-france-1783891412</id>
            <summary type="text">நீர்கொழும்பு சிறைச்சாலை விவகாரத்தைத் தொடர்ந்து, அதனுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் பல்வேறு தகவல்கள் சமூக ஊடகங்களிலும் சில இணைய தளங்களிலும் பரவி வருகின...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீர்கொழும்பு சிறைச்சாலை விவகாரத்தைத் தொடர்ந்து, அதனுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் பல்வேறு தகவல்கள் சமூக ஊடகங்களிலும் சில இணைய தளங்களிலும் பரவி வருகின்றன.</p><p>
</p><p></p><p>அவற்றில், "குடு சலிது" என அழைக்கப்படும் சலிது குணவர்தன என்ற நபர் தற்போது பிரான்ஸில் பதுங்கியிருப்பதாகவும், அவர் போலி கடவுச்சீட்டைப் பயன்படுத்தி இலங்கையிலிருந்து வெளியேறியதாகவும் கூறப்படும் தகவல்கள் இடம்பெற்றுள்ளன.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/68bd9857-b3d9-4dcb-8330-93c49658568c/26-6a5405d64efaf.webp' /></p><p>மேலும், அவர் நாட்டை விட்டு வெளியேறுவதற்காக காவல்துறையினருக்கு பல மில்லியன் பணம் வழங்கியதாகவும், முன்னாள் ஜனாதிபதியின்&nbsp; மகன் இவரை காப்பாற்றுவதற்கு உதவியாக இருந்ததாகவும் சமூக ஊடகங்களில் பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.</p><p>குறித்த நபரை பிரான்ஸில் கண்டால் பிரான்ஸ் தூதரகத்திலோ அல்லது பிரான்ஸ் குடிவரவு குடியகல்வு நிறுவனத்திலோ தெரியப்படுத்துமாறு வேண்டுகோள் இடப்பட்டுள்ளது.</p><p>இந்த தகவல்களை உள்ளடக்கிய முழுமையான காணொளியை இங்கு காணலாம்.....</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/jXqZlkbBg-8" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-07-13T01:11:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[அவுஸ்திரேலிய கடற்கரையில் கண்டெடுக்கப்பட்ட மர்மப் பொருட்கள் ; பொதுமக்களுக்கு அதிகாரிகள் எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/mysterious-objects-found-on-australian-beach-1783878049"></link>
            <id>https://canadamirror.com/article/mysterious-objects-found-on-australian-beach-1783878049</id>
            <summary type="text">அவுஸ்திரேலியாவின் வடக்கு குயின்ஸ்லாந்து கடற்கரையில் கரை ஒதுங்கிய மர்மமான உலோகப் பொருட்கள், விண்வெளி ஏவுகனைகளில் பயன்படுத்தப்படும் அழுத்தக் கலன்களாக (P...</summary>
            <content type="html"><![CDATA[<p>அவுஸ்திரேலியாவின் வடக்கு குயின்ஸ்லாந்து கடற்கரையில் கரை ஒதுங்கிய மர்மமான உலோகப் பொருட்கள், விண்வெளி ஏவுகனைகளில் பயன்படுத்தப்படும் அழுத்தக் கலன்களாக (Pressure vessels) இருக்கலாம் என்று அவுஸ்திரேலிய விண்வெளி நிறுவனம் (ASA) தெரிவித்துள்ளது.
</p><p>
சுமார் ஒரு கூடைப்பந்தின் அளவை விட இரு மடங்கு பெரியதாக உள்ள இந்தக் கோளங்களை, பொதுமக்களும் சுற்றுலாப் பயணிகளும் தொடவோ அல்லது நகர்த்தவோ வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/02b351d8-b60c-44c4-9d88-95f75e45669c/26-6a53d1a3086cc.webp' /></p><p>இவை எந்த விண்கலத்திலிருந்து விழுந்தன என்பது குறித்து சர்வதேச அதிகாரிகளுடன் இணைந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
</p><p>
விண்வெளிக் குப்பைகள் பூமியில் விழுவது அரிதான நிகழ்வு என்றாலும், விண்வெளி ஆய்வுகள் அதிகரித்து வரும் சூழலில், இத்தகைய அவசிதங்களால் ஏற்படக்கூடிய அபாயங்களைக் குறைக்க விண்வெளி நிறுவனங்கள் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.</p><p>

இதற்கிடையில், மீட்கப்பட்ட கோளங்கள் தற்போது பாதுகாப்பானவை என அவசரகால மீட்புப் பணியாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-07-13T01:10:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[போதை பொருளுடன் பல்கலைக்கழக மாணவன் கைது!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/uni-student-arrested-with-heroin-in-gampaha-1783904868"></link>
            <id>https://ibctamil.com/article/uni-student-arrested-with-heroin-in-gampaha-1783904868</id>
            <summary type="text">கம்பஹாவில் பல்கலைக்கழக மாணவன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 கந்தானை பிரதேசத்தில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் கீழ் குறித்த இளைஞர் கை...</summary>
            <content type="html"><![CDATA[<p>கம்பஹாவில் பல்கலைக்கழக மாணவன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
 கந்தானை பிரதேசத்தில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் கீழ் குறித்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>

மேற்படி கைது நடவடிக்கை நேற்று (13-07-2026) மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p><p>
</p><p></p><h2>மேலதிக விசாரணை</h2><p>கைது செய்யப்பட்டவர் மொனராகலை, மதுள்ளை பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய நபர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், 


கந்தானை பகுதியில் உள்ள வாடகை வீடு ஒன்றில் தங்கியிருந்த வேளையே மேற்படி மாணவன் காவல்துறையினரால் சுற்றிவளைத்துக் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ed02a88b-7fd9-45f2-8e58-822054ca4408/26-6a543a6584ae3.webp' /></p><p>அவரிடமிருந்து 25 கிராம் ஹெரோயின் போதைப்பொருளைப் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
</p><p>

இவர் பல்கலைக்கழகம் ஒன்றில் கலைப்பிரிவில் கல்வி பயிலும் மாணவன் என்பது முதற்கட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
</p><p>
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-13T01:08:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Manchu</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிக்கன் எடுத்தால் ஒருமுறை இப்படி கோலா உருண்டை செய்து சாப்பிடுங்க... அட்டகாசமான ரெசிபி இதோ]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/how-to-prepare-all-favourite-chicken-kola-urundai-1783850910"></link>
            <id>https://manithan.com/article/how-to-prepare-all-favourite-chicken-kola-urundai-1783850910</id>
            <summary type="text">குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் சிக்கன் கோலா உருண்டை எவ்வாறு தயாரிக்கலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.பொதுவாக சிக்கன் என்றா...</summary>
            <content type="html"><![CDATA[<p>குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் சிக்கன் கோலா உருண்டை எவ்வாறு தயாரிக்கலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.</p><p>பொதுவாக சிக்கன் என்றால் அனைவருக்குமே மிகவும் பிடிக்கும்.. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் சிக்கனை சற்று வித்தியாசமாக சாப்பிடக் கொடுத்தால் இன்னும் அதிக மகிழ்ச்சியுடன் சாப்பிடுவார்கள்.</p><p>அந்த வகையில் சிக்கனில் கோலா உருண்டை எவ்வாறு செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/35988cbb-4abe-4fd3-80f4-0a89ba922fe6/26-6a5369d6d6bc8.webp' /><br></p><h2>தேவையான பொருட்கள்</h2><p>எலும்பில்லாத சிக்கன் - 1/2 கிலோ<br>&nbsp;முந்திரி - 20<br>பெரிய வெங்காயம் - 1
<br>பச்சை மிளகாய் - 5
<br>பூண்டு - 15 பல்
<br>இஞ்சி துண்டு - 1
<br>வரமிளகாய் - 3
<br>கொத்தமல்லி விதை - 3 டேபிள் ஸ்பூன்
<br>சீரகம் - 1 டேபிள் ஸ்பூன்
<br>பட்டை - 2<br>&nbsp;கிராம்பு - 6
<br>ஏலக்காய் - 3
<br>கொத்தமல்லி இலை - சிறிதளவு
<br>எண்ணெய் - தேவையான அளவு
<br>உப்பு - சுவைக்கேற்ப&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0d0d50db-81af-44c4-9f96-a6632a5c0fef/26-6a5369d78bf91.webp' /></p><h2>செய்முறை</h2><p>கடாய் ஒன்றினை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் சேர்த்து கொத்தமல்லி விதை, வரமிளகாய், சீரகம், பட்டை, கிராம்பு, ஏலக்காய் மற்றும் முந்திரி ஆகியவற்றை வறுத்து ஆற வைக்கவும்.</p><p>மிக்ஸி ஜாரில் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் மற்றுமு் வறுத்த வைத்த பொருட்களை சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.&nbsp;</p><p>பின்பு வெங்காயம், மல்லி இலை, சிக்கன் துண்டுகள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக அரைத்து பாத்திரத்தில் தனியாக வைத்துக் கொள்ளவும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/60bdfe88-df22-4f76-9e32-3ad75c9db26f/26-6a5369d852977.webp' /><br></p><p>இந்த கலவையில் ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் சேர்த்து நன்றாக பிரட்டி, சிறு சிறு உருண்டைகளாக தனியே தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.</p><p>வாணலியில் கோலா உருண்டை பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் சேர்த்து உருண்டையை பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். சுவையான சிக்கன் கோலா உருண்டை தயார்.</p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td><i>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் <a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள் <a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"><b>FOLLOW NOW&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;&nbsp;</b></a></i><br></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-13T01:00:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாடசாலை மாணவர்களுக்கு கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள விசேட அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/important-notice-for-all-students-1783901845"></link>
            <id>https://tamilwin.com/article/important-notice-for-all-students-1783901845</id>
            <summary type="text">டெங்கு பரவலை தடுக்கும் நோக்கில் பாடசாலை மாணவர்களுக்கு அரசாங்கம் விசேட அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.
கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சினால்...</summary>
            <content type="html"><![CDATA[<p>டெங்கு பரவலை தடுக்கும் நோக்கில் பாடசாலை மாணவர்களுக்கு அரசாங்கம் விசேட அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.
</p><p>கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சினால் இந்த முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.</p><p></p><h2>பொருத்தமான ஆடைகள்&nbsp;</h2><p>
</p><p>அதன்படி, பாடசாலை மாணவர்கள் டெங்கு நுளம்புக்கடியிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் வகையில், கைகள் மற்றும் கால்களை முழுமையாக மூடக்கூடிய பொருத்தமான ஆடைகளை அணிவதற்கு பாடசாலைகள் அனுமதி வழங்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4277108f-ef16-4ede-b830-77edadfd33b2/26-6a542e9748d4f.webp' /></p><p>
வழக்கமான பாடசாலை சீருடையுடன் சேர்த்து, நுளம்புக்கடியிலிருந்து சிறந்த பாதுகாப்பை வழங்கும் வகையில் கைகள் மற்றும் கால்களை முழுமையாக மறைக்கும் ஆடைகளை அணிய மாணவர்களை அனுமதிக்குமாறு பள்ளி அதிபர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><p>தர நிர்ணயங்களுக்குட்பட்ட நுளம்பு விரட்டிகளை பயன்படுத்துவது குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துமாறும் அதிபர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
</p><p>பாடசாலை மாணவர்களை டெங்கு நுளம்புக்கடியிலிருந்து பாதுகாப்பதே இந்த அவசர நடவடிக்கைகளின் முக்கிய நோக்கமாகும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.&nbsp; &nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-13T00:51:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[சென்னை விமான நிலையத்தில் அதிரடியாக கைது செய்யப்பட்ட யாழ் தம்பதியினர்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sri-lankan-couple-arrested-at-chennai-airport-1783901949"></link>
            <id>https://ibctamil.com/article/sri-lankan-couple-arrested-at-chennai-airport-1783901949</id>
            <summary type="text">இந்தியாவில் இலங்கைத் தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னையில் முறையான குடியுரிமை ஆவணங்கள் இன்றி போலி ஆவணங்களைப் பயன்படுத்தி வாக்காளர் அடையாள...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியாவில் இலங்கைத் தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p>
சென்னையில் முறையான குடியுரிமை ஆவணங்கள் இன்றி போலி ஆவணங்களைப் பயன்படுத்தி வாக்காளர் அடையாள அட்டையைப் பெற்றுக் கொண்டமைக்காக இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
</p><p>
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த குணேஸ்வரன் (69) மற்றும் அவரது மனைவி ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p></p><h2>அடையாள அட்டை</h2><p>

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக சென்னை, தியாகராயநகர் பகுதியில் இவர்கள் வசித்து வருகின்றனர்.</p><p>

இந்தநிலையில் குறித்த இருவரும் இந்தியக் குடியுரிமைச் சான்றிதழ்கள் இன்றி போலியான முகவரி ஆதாரங்களைக் காட்டி வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர்களைச் சேர்த்துக் கொண்டதாகக் தெரிவிக்கப்படுகின்றது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/af81fc56-d642-49b1-b404-e5ddf2d4478c/26-6a54358594e3c.webp' /></p><p>தொடர்ச்சியாக அண்மையில் நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலின் போது இவர்கள் வாக்களித்ததைக் கண்டுபிடித்த அதிகாரிகள், இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
</p><p>
விசாரணையின் முடிவில் குறித்த இருவரும் முறையான ஆவணங்கள் இன்றி வாக்காளர் அடையாள அட்டையைப் பெற்று தேர்தலிலும் வாக்களித்தமை உறுதியாகியுள்ளது.
</p><p>
இந்தநிலையில், குறித்த இருவரும் இலங்கை செல்வதற்காக சென்னை விமான நிலையம் சென்ற நிலையில் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-13T00:47:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[விசாரணை அதிகாரிகளை கதிகலங்க வைத்திருக்கும் சிறையில் கண்டுபிடிக்கப்பட்ட பை! ஊடகங்களில் பொய்யான செய்திகள் பரவல்...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/negombo-prison-bloodshed-exposes-the-cracks-inside-1783902703"></link>
            <id>https://tamilwin.com/article/negombo-prison-bloodshed-exposes-the-cracks-inside-1783902703</id>
            <summary type="text">&amp;nbsp;நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவத்தை விசாரணை செய்யும் அதிகாரிகளுக்கு சோதனையின் போது கிடைத்த ஒரு பை (Bag) பல மர்மமான சம்பவங்களின் உள்ளார்ந்த கடும் க...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவத்தை விசாரணை செய்யும் அதிகாரிகளுக்கு சோதனையின் போது கிடைத்த ஒரு பை (Bag) பல மர்மமான சம்பவங்களின் உள்ளார்ந்த கடும் கொடூரமான தகவல்கள் வெளிவரக் கூடும் என நம்பப்படுகிறது.
</p><p>இந்த பையை சோதனையிட்டுப் பார்க்கும் போதுதான், கடந்த சில நாட்களாக காண்பிக்கப்பட்ட, கத்திகள் மற்றும் இரும்பு ஆயுதங்கள் அடங்கிய ஒரு பையே கிடைத்துள்ளது. </p><p>இந்தப் பை எவ்வாறு இந்த இடத்திற்கு வந்தது என்பது குற்றப் புலனாய்வுத் திணைக்கள (CID) அதிகாரிகளுக்கு ஒரு பெரிய பிரச்சினையாக மாறியுள்ளது. </p><h2>

</h2><p></p><h2>ஆயுதங்கள் எப்படி சிறைக்குள் வந்தது</h2><p>இப்போது இவை அனைத்தும் நீதிமன்ற வழக்குப் பொருட்களாக மாற்றப்பட்டுள்ளன. இந்தக் கத்திகள், இரும்பு ஆயுதங்கள் மற்றும் மன்னா கத்திகள் எவ்வாறு இங்கு வந்தன என்பது ஒரு பெரிய கேள்வியாகும். </p><p>இந்த பை எவ்வாறு சிறைச்சாலைக்குள் வைக்கப்பட்டது? முதலில் நினைத்தது இவை வெவ்வேறு இடங்களில் இருந்து கண்டெடுக்கப்பட்டவை என்றுதான். </p><p>இல்லை, இவை அனைத்தும் ஒரே பையில்தான் இருந்துள்ளன. அப்படியென்றால் இதன் நோக்கம் என்ன? சிறை பொலிஸ் அதிகாரிகள் மிகக் கொடூரமாக, மனிதாபிமானமற்ற முறையில் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு, வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்கள். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/88d52b62-7551-45b1-a812-a0bba03a9ef0/26-6a5431f143d96.webp' /></p><p>அவர்களின் ரகசிய உறுப்புகள் சிதைக்கப்பட்டு, வெட்டப்பட்டுள்ளன. எனவே, இந்த கலவரம் ம திட்டமிடப்பட்டிருந்தது என்பது இப்போது தெளிவாகத் தெரிகிறது. </p><p>இது மிகவும் ஒழுங்கமைக்கப்பட்ட முறையில்தான் செய்யப்பட்டுள்ளது.
இதிலிருந்து இப்போது தெளிவாகத் தெரியும் ஒரு விடயம் என்னவென்றால், சிறைச்சாலையில் இருந்த ஜெயிலர்களுக்கோ அல்லது காவலர்களுக்கோ எந்தவொரு காயமோ அல்லது தாக்குதலோ நடத்தப்படவில்லை. </p><p>அங்கு இருந்தது ஒரு சிலர்தான். இதில் பெரும்பான்மையாகப் பாதிக்கப்பட்டது சிறை பொலிஸாராகும். அவர்களை மிகக் கொடூரமாகவும் அநாகரிகமாகவும் அடித்துக் கொலை செய்ய இந்த சிறைக்கைதிகளுக்கு மாத்திரம் தான் தேவை இருந்ததா என்றொரு கேள்வி எழுகிறது. </p><p>ஏனெனில், இவ்வாறானதொரு ஆயுதப் பை எவ்வாறு அங்கு இருந்தது? சிறைச்சாலை நிர்வாக அதிகாரிகளின் அனுமதியின்றி இது எவ்வாறு சாத்தியமாகும்? இது பின்னர் கொண்டுவரப்பட்ட ஒன்றா? அல்லது முன்பே தயார் செய்து வைக்கப்பட்டிருந்த ஒன்றா?
</p><h2>சிசிடிவி காணொளிகளுக்கு என்ன நடந்தது</h2><p>கட்டுவெல்லேகம சுரேஷின் குழுவில் சுமார் 15 பேர் வரை இருக்கிறார்கள். அந்த குழுவினர் இதைத் தயார் செய்து வைத்திருந்தார்களா? ஏனெனில் இவை சாதாரண சிறிய கத்திகள் அல்ல, பெரிய மீன் வெட்டும் கத்திகள், அதாவது 'நீர்கொழும்பு டைப்' கத்திகள். </p><p>
தற்போது வரை எந்தவொரு சிசிடிவி (CCTV) காட்சிகளையும் பரிசோதிக்க குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு சாத்தியமில்லாமல் போயுள்ளது. எந்தவொரு தகவலையும் பெற வழியில்லை. அனைத்தும் அழிக்கப்பட்டுவிட்டன, அடித்து நொறுக்கப்பட்டுள்ளன.</p><p>இதன் காரணமாக, இனிவரும் நாட்களில் நீதிமன்ற உத்தரவின் பேரில், கொழும்பு கணினிப் பிரிவுக்கோ அல்லது கொழும்பு பல்கலைக்கழக கணினிப் பிரிவுக்கோ (UCSC) அல்லது வேறு இடங்களுக்கோ அனுப்பி இதனைத் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/33b916de-a64b-4d04-a529-6067702c5b51/26-6a5431f1ec597.webp' /></p><p>ஏனெனில், இந்த சம்பவத்தின் புகைப்படங்களையோ அல்லது தகவல்களையோ பெற வேறு வழியில்லை. தற்போது இருப்பது இந்த சிறைச்சாலை அதிகாரிகளின் வாக்குமூலம் மட்டும்தான். </p><p>அதையும் 100 வீதம் ஏற்றுக்கொள்ளக்கூடிய வாக்குமூலமாக எடுக்க முடியாது. ஏனெனில் அவர்கள் இந்த நிர்வாகக் கட்டுப்பாட்டிற்குள் இருந்தவர்கள். இந்த சம்பவத்தின் பின்னணியில் சிறைச்சாலை அதிகாரிகள் சிலரும் இருக்கிறார்கள்.</p><h2>

இந்த கதையின் பின்னணி</h2><p>எனவே, ஒட்டுமொத்தமாக இந்த கதையின் பின்னணியில் உள்ள விடயங்களை ஆராய்ந்து பார்க்கும்போது.இது மிக மோசமான முறையில் ஒழுங்கமைக்கப்பட்ட தன்மை தெளிவாகத் தெரிகிறது. </p><p>இப்போது ஊடகங்களில் 200 அல்லது 300 பேருக்குக் கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்படவுள்ளதாக செய்திகள் வருகின்றன. இவை அப்பட்டமான பொய்கள். </p><p>எந்தவொரு கொலைக் குற்றச்சாட்டையும் சுமத்துமளவிற்கு எவ்வித சாட்சியங்களையும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் இன்னும் கண்டறிய முடியாமல் போயுள்ளது.
</p><p></p><p>அதனால், சிறைக் கைதிகளிடம் இருந்து ஒரு வாக்குமூலத்தைப் பெறுவதற்குக் கூட இன்னும் ஆயத்தங்கள் இல்லை. ஏனெனில், நினைத்த மாத்திரத்தில் அதனைச் செய்ய முடியாது. </p><p>அதற்கு நீதிமன்ற உத்தரவொன்றின் மூலமே நடவடிக்கை எடுக்க வேண்டும். எனவே, இந்த 200 பேருக்குக் குற்றச்சாட்டு சுமத்தப்படவுள்ளது என்பது அப்பட்டமான பொய்யான கதையாகும்.</p><p> இது ஊடகங்களால் உருவாக்கப்படும் ஒரு செய்தியே தவிர, அப்படியான எந்தவொரு தயார்படுத்தலும் இன்னும் இல்லை என்ற விடயத்தை புரிந்துகொள்ள வேண்டும்.&nbsp;</p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-13T00:34:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரான்சில் அதி தீவிர எச்சரிக்கையின் கீழ் 22 மில்லியன் மக்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/22-million-people-maximum-alert-1783902230"></link>
            <id>https://news.lankasri.com/article/22-million-people-maximum-alert-1783902230</id>
            <summary type="text">பிரான்சில் மே மாதத்திற்குப் பிறகு நாட்டைத் தாக்கிய மூன்றாவது வெப்ப அலையின் பிடியில் நாட்டின் கால் பகுதி மக்கள் தவிக்கும் நிலையில், முக்கிய அறிவிப்புகள...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரான்சில் மே மாதத்திற்குப் பிறகு நாட்டைத் தாக்கிய மூன்றாவது வெப்ப அலையின் பிடியில் நாட்டின் கால் பகுதி மக்கள் தவிக்கும் நிலையில், முக்கிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.</p><h2>24 நிர்வாகப் பிரிவுகள்</h2><p>
</p><p>இந்த வார இறுதியில் பிரான்சில், ஈபிள் கோபுரம் மற்றும் பாரிஸின் பிற முக்கிய இடங்கள் முன்கூட்டியே மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ab491805-63da-4d12-ba8a-7c733c5b2ae6/26-6a54323c7d701.webp' /></p><p> வெளியாகியுள்ள தகவலின் அடிப்படையில், 22.2 மில்லியன் மக்கள் வசிக்கும் நாட்டின் இருபத்து நான்கு நிர்வாகப் பிரிவுகள், ஞாயிற்றுக்கிழமையன்று தேசிய வானிலை ஆய்வு மையத்தால் விடுக்கப்பட்ட உச்சகட்ட எச்சரிக்கை நிலைக்கு உட்படுத்தப்பட்டன. </p><p>அதிக வெப்பநிலை நிலவும் என்று கணிக்கப்பட்டுள்ளதால், சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஈபிள் கோபுரம் பிற்பகல் 4 மணிக்கே மூடப்படும் என்று அதன் நிர்வாகம் தெரிவித்துள்ளது. </p><p>ஆண்டுதோறும் 70 லட்சம் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் 1,083 அடி உயரமுள்ள ஈபிள் கோபுரம், சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும் பருவக்காலங்களில் வழக்கமாக நள்ளிரவு வரையிலும் திறந்திருக்கும்.</p><p></p><p> </p><p>பிரெஞ்சுத் தலைநகரின் மிகவும் பிரபலமான அருங்காட்சியகங்களில் இரண்டான லூவ்ர் (Louvre) மற்றும் மியூஸே டி ஓர்சே (Musée d’Orsay) ஆகியவை இதே போன்ற நடவடிக்கைகளை எடுத்துள்ளன. </p><p>உலகில் அதிகம் பார்வையிடப்படும் அருங்காட்சியகமான லூவர், வெள்ளிக்கிழமை மாலை 4 மணி முதல் திங்கட்கிழமை வரை மூடப்படும் என்று வியாழக்கிழமை அறிவித்தது. </p><p>இதனிடையே, கடுமையான வெப்பம் காரணமாக, சனிக்கிழமை மாலை 5 மணி முதல் புதன்கிழமை வரை மியூஸே டி'ஓர்சே (Musée d’Orsay) அருங்காட்சியகம் முன்னதாகவே மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fcb32d05-e515-44a6-b15b-f1d2a0d75ebb/26-6a54323df075c.webp' /></p><p> </p><p>தீவிர வெப்பம் காரணமாக, 'டூர் டி பிரான்ஸ்' (Tour de France) மிதிவண்டிப் பந்தயத்தின் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள 185.5 கி.மீ தூரப் பிரிவில், மலைப்பாங்கான ஒரு பகுதிப் பாதையை நீக்கி 30 கி.மீ தூரம் குறைக்கப்படுவதாகப் பந்தய ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்; இப்போட்டியின் வரலாற்றிலேயே இத்தகைய முடிவு எடுக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.</p><h2>மனித நடவடிக்கைகளால்</h2><p> </p><p>பிரான்ஸ் முழுவதும் உள்ள பல நகரங்கள், வறண்ட வானிலையால் தீ விபத்து ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளதால், ஜூலை 14 அன்று கொண்டாடப்படும் தேசிய விடுமுறை நாளான 'பாஸ்டில் தின' (Bastille Day) வாணவேடிக்கை நிகழ்ச்சிகளை ரத்து செய்துள்ளன. </p><p>இதனிடையே, பத்து காட்டுத்தீச் சம்பவங்களில் ஒன்பது மனித நடவடிக்கைகளால் ஏற்படுபவை என்று எச்சரித்த பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மேக்ரான், விழிப்புடன் இருக்குமாறு மக்களைக் கேட்டுக்கொண்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fa39635b-ca28-4d27-942c-9c888a03f09f/26-6a54323d4b374.webp' /></p><p> </p><p>ஒரு நொடி கவனக்குறைவு கூட குடும்பங்களை ஆபத்தில் ஆழ்த்தலாம், நம்மைப் பாதுகாப்பவர்களை ஆபத்துக்குள்ளாக்கலாம் மற்றும் நமது கிராமப்புறச் சூழலை அழிக்கலாம் என அவர் சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார். </p><p>அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களின்படி, ஜூன் மாதத்தில் நிலவிய வெப்ப அலையின்போது 2,000-க்கும் மேற்பட்ட கூடுதல் மரணங்களும், மே மாத இறுதியில் நிலவிய அதிக வெப்பத்தின்போது 300 மரணங்களும் பிரான்ஸில் பதிவாகியுள்ளன.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-13T00:22:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீர்கொழும்பு சிறைச்சாலைக்குள் கண்டெடுக்கப்பட்ட ஆபத்தான ஆயுதங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/brutal-weapons-discovered-inside-negombo-prison-1783897803"></link>
            <id>https://tamilwin.com/article/brutal-weapons-discovered-inside-negombo-prison-1783897803</id>
            <summary type="text">நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் இடையே இடம்பெற்ற
பயங்கர மோதலைத் தொடர்ந்து, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் மேற்கொண்ட
வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் இடையே இடம்பெற்ற
பயங்கர மோதலைத் தொடர்ந்து, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் மேற்கொண்ட
விசேட தேடுதல் நடவடிக்கையில் பெருமளவிலான கூர்மையான ஆயுதங்கள் மற்றும்
இரும்புக் கம்பிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
</p><p>
இந்தத் தேடுதல் நடவடிக்கையின் போது, கூர்மையான ஆயுதங்கள் மற்றும் இரும்புக்
கம்பிகள் தவிர, ஆயிரத்துக்கும் மேற்பட்ட தடிகளும் கம்புகளும் பொலிஸாரால்
மீட்கப்பட்டுள்ளன என தெரிவிக்கப்படுகின்றது.</p><p></p><h2>கொடூர மோதல் சம்பவம்</h2><p>
</p><p>
முதற்கட்ட விசாரணைகளில், கலவரத்தின் போது கைதிகள் சிறைச்சாலையின்
சமையலறைக்குள் அத்துமீறி நுழைந்து அங்குள்ள கூர்மையான ஆயுதங்களைக்
கையாண்டுள்ளமை தெரியவந்துள்ளது.
</p><p>
அத்துடன், சமையலறையிலிருந்த தேங்காய்களை அதிகாரிகள் மீது வீசித் தாக்குதல்
நடத்தியுள்ளமையும் விசாரணைகள் மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4270b717-3d49-4516-bccc-c214c3cb3d7c/26-6a542099cef38.webp' /></p><p>
</p><p>
இந்தக் கொடூர மோதல் சம்பவத்தில் 8 சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் 21 கைதிகள்
என மொத்தம் 29 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
</p><p>
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, நீர்கொழும்பு சிறைச்சாலையிலிருந்த கைதிகள்
பாதுகாப்புக் காரணங்களுக்காக நாட்டின் ஏனைய சிறைச்சாலைகளுக்குத் தொடர்ச்சியாக
மாற்றப்பட்டு வருகின்றனர்.
</p><p>
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர்
மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-13T00:11:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[குரு அஸ்தமனமாவதால் பண மழை பொழியும் ராசிக்காரர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/jupiter-s-setting-sign-brings-rain-of-money-1783897833"></link>
            <id>https://jvpnews.com/article/jupiter-s-setting-sign-brings-rain-of-money-1783897833</id>
            <summary type="text">ஜோதிடத்தில் தேவர்களின் குருவாக கருதப்படுபவர் குரு பகவான். இந்த குரு பகவான் மிகவும் மங்களகரமான கிரகமாக கருதப்படுகிறார்.&amp;nbsp;இந்நிலையில் ஜூலை 15 ஆம் தி...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜோதிடத்தில் தேவர்களின் குருவாக கருதப்படுபவர் குரு பகவான். இந்த குரு பகவான் மிகவும் மங்களகரமான கிரகமாக கருதப்படுகிறார்.&nbsp;இந்நிலையில் ஜூலை 15 ஆம் திகதி குரு பகவான் அஸ்தமனமாகவுள்ளார்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/eacef134-df9c-4792-a1f8-80fea7d926ca/26-6a541eeb321bb.webp' /></p><p>அதாவது சூரியனுக்கு மிக அருகில் பயணிக்கவுள்ளார். சூரியனுக்கு அருகில் கிரகங்கள் பயணிக்கும் போது, அந்த கிரகங்கள் வலுவிழந்து இருக்கும்.&nbsp;இப்போது குரு அஸ்தமனமாவதால் எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமாக இருக்கும் என்பதை நாம் இங்கு பார்ப்போம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e0fe9914-5bd0-4115-8dc7-068c8a3db572/26-6a541eebd6b77.webp' /></p><h4>ரிஷபம்
</h4><p>ரிஷப ராசியின் 3 ஆவது வீட்டில் குரு பகவான் அஸ்தமனமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் நிலுவையில் உள்ள முக்கியமான வேலைகள் மீண்டும் வெற்றிகரமாக தொடங்கப்பட்டு முடிவடையும். தொழில் வாழ்க்கையில் சில நல்ல மாற்றங்களையும், முன்னேற்றங்களையும் காணக்கூடும். ஊடகம், கல்வி, மார்கெட்டிங் துறையில் இருப்பவர்களுக்கு இக்காலம் சிறப்பாக இருக்கும். பேச்சில் தாக்கம் அதிகரிக்கும். கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். புதிய வேலை வாய்ப்புகள் தேடி வரும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1c5d25a1-b910-4070-9e7a-86dcc6560a68/26-6a541eec858c3.webp' /></p><h4>கன்னி</h4><p>
கன்னி ராசியின் 11 ஆவது வீட்டில் குரு பகவான் அஸ்தமனமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும். திட்டமிட்ட வேலைகள் வெற்றிகரமாக நடக்கும். நிதி ரீதியாக நல்ல உயர்வு ஏற்படும். செல்வாக்குமிக்கவர்களின் நட்பும், ஆதரவும் கிடைக்கும். சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும். பண பிரச்சனைகள் முடிவுக்கு வரும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bd8df9e7-d6dc-4b67-b066-eacf0a5cb29a/26-6a541eed334a4.webp' /></p><h4>விருச்சிகம்
</h4><p>விருச்சிக ராசியின் 9 ஆவது வீட்டில் குரு பகவான் அஸ்தமனமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் ஒரு பெரிய முடிவை எடுப்பார்கள். இது வாழ்க்கையில் ஒரு பெரிய நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் இருக்கும். மாணவர்கள் வெளிநாட்டில் படிக்க விரும்பினால், இக்காலத்தில் அதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும் வாய்ப்புள்ளது. வெளிநாட்டில் வேலை செய்யும் கனவு இருந்தால், குருவின் அருளால் அதற்கான வாய்ப்புக்கள் தேடி வரும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9d1e078b-654e-4ca9-af65-bca456a896f5/26-6a541eee846a9.webp' /></p><h4>துலாம்
</h4><p>துலாம் ராசியின் 10 ஆவது வீட்டில் குரு பகவான் அஸ்தமனமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் சற்று மெதுவாக முன்னேற்றத்தைக் காண்பார்கள். ஆனால் கடின உழைப்பு பணியிடத்தில் பாராட்டப்படும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். சொந்தமாக தொழிலை தொடங்குவதற்கு இக்காலம் சிறப்பாக இருக்கும். பணிபுரிபவர்களுக்கும் இக்காலம் பொற்காலமாக இருக்கும். முன்னேற்றத்திற்கான புதிய பாதைகள் திறக்கும். பண வரவு அதிகரிக்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7a84f0d4-dd15-4d80-9078-0530449e03d5/26-6a541eef330fb.webp' /></p><h4>மீனம்
</h4><p>மீன ராசியின் 5 ஆவது வீட்டில் குரு பகவான அஸ்தமனமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் வாழ்வில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பணியிடத்தில் செயல்திறன் சிறப்பாக இருக்கும். புதுமண தம்பதிகள் நல்ல செய்திகளைப் பெறக்கூடும். குரு அருளால் எதிலும் சரியான முடிவுகளை எடுக்க முடியும். மாணவர்கள் படிப்பில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். பிள்ளைகளால் வீட்டில் மகிழ்ச்சியான சூழல் உருவாகும். புதிய வருமான வழிகள் உருவாகும் வாய்ப்புள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0f500b4c-e317-41ae-adf5-3dbacb8a2415/26-6a541eefd8b4c.webp' /></p>]]></content>
            <updated>2026-07-13T00:10:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீர்கொழும்பு சிறை கூரையில் கதறிய இளம் பெண்ணின் அதிர்ச்சியூட்டும் மறுபக்கம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/viral-woman-in-negombo-prison-roof-protest-1783900921"></link>
            <id>https://ibctamil.com/article/viral-woman-in-negombo-prison-roof-protest-1783900921</id>
            <summary type="text">நீர்கொழும்பு சிறைச்சாலையின் கூரை மீது கைதிகள் அண்மையில் நடத்திய போராட்டத்தின் போது இளம் பெண்ணொருவர் தொடர்பில் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வந்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீர்கொழும்பு சிறைச்சாலையின் கூரை மீது கைதிகள் அண்மையில் நடத்திய போராட்டத்தின் போது இளம் பெண்ணொருவர் தொடர்பில் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வந்தது.
</p><p>
இந்தநிலையில் குறித்த இளம் பெண், பதுளை மாவட்டத்தில் பிறந்து வளர்ந்தவர் என தெரிவிக்கப்படுகின்றது. </p><p>

சிறுவயதிலிருந்தே கல்வியில் சிறந்து விளங்கிய அவர், ஐந்தாம் வகுப்பு புலமைப்பரிசில் பரீட்சையில் சிறந்த சித்தியைப் பெற்று கொழும்பிலுள்ள பிரபல பெண்கள் பாடசாலையில் இணைந்துள்ளார். </p><p>

இந்தநிலையில் தற்போது அவர் சிறைக்கு சென்றதற்கான காரணம் தொடர்பில் பலர் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.
</p><p>
இவ்விடயங்கள் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது ஐபிசி தமிழின் செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி...</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/_F3wv6u1dlQ?start=1" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-13T00:08:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டில் தாண்டவமாடும் டெங்கு - 175 ஆக உயர்ந்த அபாய வலயங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/dengue-outbreak-in-the-country-175-high-risk-zones-1783897259"></link>
            <id>https://tamilwin.com/article/dengue-outbreak-in-the-country-175-high-risk-zones-1783897259</id>
            <summary type="text">இலங்கையில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மற்றும் உயிரிழப்புகள் வேகமாக
அதிகரித்து வருவதால் இன்று(13.07.2026) முதல் 11 மாவட்டங்களில் உள்ள 60 அதி
அபாய ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மற்றும் உயிரிழப்புகள் வேகமாக
அதிகரித்து வருவதால் இன்று(13.07.2026) முதல் 11 மாவட்டங்களில் உள்ள 60 அதி
அபாய வலயங்களை மையப்படுத்தி விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கை
முன்னெடுக்கப்படவுள்ளது என தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு அறிவித்துள்ளது.</p><p>

'க்ளீன் ஸ்ரீலங்கா' வேலைத்திட்டத்துடன் இணைந்து இந்த விசேட நடவடிக்கைகள்
முன்னெடுக்கப்படவுள்ளன.</p><p></p><h2>அதி அபாய வலயங்கள்</h2><p>

நாடு முழுவதும் அடையாளம் காணப்பட்ட அதி அபாய வலயங்களின் எண்ணிக்கை தற்போது 175
ஆக உயர்ந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5ed18e92-7de4-4a02-8b80-cd3b57e68162/26-6a541dd8746d8.webp' /></p><p>

2026 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 67 ஆயிரத்துக்கும் அதிகமான டெங்கு
நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். தற்போது தினசரி பதிவாகும் நோயாளர்களின் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.
</p><p>
ஜூலை மாதத்தின் முதல் 10 நாள்களில் மட்டும் 11 ஆயிரத்து 764 நோயாளர்கள்
பதிவாகியுள்ளனர். (கடந்த ஜூன் மாதம் முழுவதிலும் 21 ஆயிரத்து 538 பேர்
பதிவாகியிருந்தனர்).</p><p></p><h2>47 உயிரிழப்புகள் பதிவு</h2><p>
இந்த வருடத்தில் இதுவரை 47 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.

2017 ஆம் ஆண்டில் நாட்டில் ஆகக்கூடிய டெங்கு நோயாளர்கள் (ஒரு இலட்சத்து 86
ஆயிரத்து 101 பேர்) பதிவாகியிருந்தனர்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8efd86b8-f1c7-4f50-becb-7bbcd54ae06e/26-6a541dd7af668.webp' /></p><p>தற்போது நிலவும் பாதிப்பு விகிதம்,
மீண்டும் அந்த ஆபத்தான கட்டத்தை நோக்கி நகர்கின்றது என்று சுகாதாரப் பிரிவினர்
தீவிர எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
</p><p>
பொதுமக்கள் தங்களது சுற்றுப்புறங்களைத் தூய்மையாக வைத்திருப்பதன் மூலமும்,
நுளம்பு பெருக்கத்தை ஒழிப்பதன் மூலமும் இந்தத் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த
ஒத்துழைக்குமாறு சுகாதாரப் பிரிவினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-13T00:07:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[மீரிகமவில் புதிதாக சிறுநீரக கல் அகற்றும் சிகிச்சை மையம் திறப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/new-kidney-stone-removal-treatment-center-mirigama-1783900799"></link>
            <id>https://jvpnews.com/article/new-kidney-stone-removal-treatment-center-mirigama-1783900799</id>
            <summary type="text">சிறந்த நிர்வாக திறனுடன் நாட்டின் சுகாதார சேவையில் உள்ள கட்டிடங்கள், உபகரணங்கள் மற்றும் மனித வளங்களை அவற்றின் முழுத் திறனுக்கும் பயன்படுத்தி சேவைகளை வழ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிறந்த நிர்வாக திறனுடன் நாட்டின் சுகாதார சேவையில் உள்ள கட்டிடங்கள், உபகரணங்கள் மற்றும் மனித வளங்களை அவற்றின் முழுத் திறனுக்கும் பயன்படுத்தி சேவைகளை வழங்க முடியும் என்று சுகாதார மற்றும் மக்கள் ஊடகத்துறை அமைச்சர் தெரிவித்தார்.</p><p> </p><p></p><p>நாட்டில் சிறுநீரகக் கல் நோயால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான நோயாளிகளுக்கு சிகிச்சை மையமாகவும், சிறுநீரகக் கல் அகற்றும் அறுவை சிகிச்சைக்காகக் காத்திருக்கும் 5,000-க்கும் மேற்பட்டோரின் தற்போதைய காத்திருப்புப் பட்டியலைக் குறைப்பதற்கான ஒரு தீர்வாகவும், நாடு முழுவதற்கும் சேவைகளை வழங்கும் வகையில் செயல்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ள மிரிகம சிறுநீரகக் கல் அகற்றும் சிகிச்சை மையம், சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜெயதிஸ்ஸவின் தலைமையில் இன்று (12) திறந்து வைக்கப்பட்டது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1f7004ff-a1ea-4732-aae4-8c187731bec7/26-6a542a830406f.webp' /></p><p>சிறுநீரக கல் நோய் இலங்கையில் மிகவும் பொதுவான நோய்களில் ஒன்றாகும். நாடு முழுவதும் 30 க்கும் மேற்பட்ட விசேட சிறுநீரக அறுவை சிகிச்சை பிரிவுகள் விசேட சிறுநீரக அறுவை சிகிச்சை நிபுணர்களால் பணியாற்றினாலும், சிகிச்சைக்கான தேவை மிக அதிகமாக உள்ளது. 

குறிப்பாக, உள்கட்டமைப்பின் குறைவான வளங்கள், குறைவான அறுவை சிகிச்சை அறைகள் மற்றும் நவீன எண்டோரோலாஜிக்கல் தொழில்நுட்பத்திற்கான குறைவான வளங்கள் ஆகியவை இதற்கு முக்கிய காரணங்களாக உள்ளன. </p><p>

இலங்கையில் சிறுநீரக கற்களை அகற்றும் சத்திரசிகிச்சைக்காக காத்திருப்போர் பட்டியலில் தற்போது 5,000க்கும் மேற்பட்ட நோயாளிகள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. </p><p>

இங்கு நடைபெற்ற விழாவில் உரையாற்றிய சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ, மிரிகம சிறுநீரகக் கல் அகற்றும் சிகிச்சை மையம் இந்த நாட்டின் சுகாதார சேவையில் ஒரு தீர்க்கமான மற்றும் மாபெரும் முன்னேற்றமாகும் என்றும், சுகாதாரத் துறை மட்டுமின்றி பல தரப்பினரையும் உள்ளடக்கி ஒரு முடிவு எடுக்கப்பட்டால் என்ன சாதிக்க முடியும் என்பதற்கு இந்த வெற்றியே சிறந்த எடுத்துக்காட்டு என்றும் கூறினார்.</p><p> 

நாட்டில் சிறுநீரகக் கற்களால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர் என்பதைச் சுட்டிக்காட்டிய அமைச்சர், இந்த மையம் நாட்டு மக்களுக்கும், நோயாளிகளுக்கான சிகிச்சை சேவைகள் மற்றும் நோய்க் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கான சுகாதார சேவைக்கும் பெரும் நிவாரணமாக அமையும் என்றும் தெரிவித்தார். </p><p>

இந்த நாட்டின் சுகாதார சேவையில் பல சமயங்களில் காத்திருப்போர் பட்டியல்கள் உள்ளன என்றும், மிகக் குறைந்த எண்ணிக்கையிலான மக்களே அந்தக் காத்திருப்போர் பட்டியல்களைத் தாண்டி சிகிச்சை சேவைகளைப் பெறும் நிலை உருவாகியுள்ளது என்றும் அமைச்சர் கூறினார்.</p><p></p><p> 

மாறாக, முழு மக்களும் ஆரோக்கியமாக இருக்க சுகாதார சேவைகளைப் பெறுவதை உறுதிசெய்ய ஒரு திட்டம் வகுக்கப்பட வேண்டும் என்றும், சட்டங்கள் மற்றும் விதிமுறைகளின் போர்வையில் சேவைகள் பராமரிக்கப்பட்டாலும், அதனால் மக்களுக்குப் பலன் கிடைக்காது என்றும் அவர் குறிப்பிட்டார். </p><p>

முறையான திட்டமிடல் திட்டத்தைப் பின்பற்றாமல் கட்டப்பட்ட பல கட்டிடங்கள் நாட்டின் சுகாதார சேவையில் முழுமையாகப் பயன்படுத்தப்படாமல் உள்ளன என்றும், உபகரணங்களை வாங்குவதில் ஆர்வம் இருந்தாலும், அந்த உபகரணங்கள் மூலம் சேவைகள் முழுத் திறனில் வழங்கப்படவில்லை என்றும் அமைச்சர் கூறினார். </p><p>

சுகாதார சேவையில் உள்ள கட்டிடங்கள், உபகரணங்கள் மற்றும் மனித வளங்கள் முழுமையாகப் பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் அமைச்சர் மேலும் வலியுறுத்தினார்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-13T00:00:13+00:00</updated>
        </entry>
    </feed>
