<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-07-18T05:37:23+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[கட்டுநாயக்கவில் அதிரடியாக கைது செய்யப்பட்ட வெளிநாட்டு பெண்! கை வசமிருந்த ஆபத்தான பொருள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/angolan-woman-arrested-at-bia-1784351591"></link>
            <id>https://ibctamil.com/article/angolan-woman-arrested-at-bia-1784351591</id>
            <summary type="text">


அங்கோலா நாட்டைச் சேர்ந்த 54 வயதுடைய பெண்ணொருவர் பெருந்தொகை மதிப்புள்ள போதைப்பொருளுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளா...</summary>
            <content type="html"><![CDATA[<p>


அங்கோலா நாட்டைச் சேர்ந்த 54 வயதுடைய பெண்ணொருவர் பெருந்தொகை மதிப்புள்ள போதைப்பொருளுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
சந்தேகநபரான குறித்த பெண்ணை ரூ. 10 மில்லியனுக்கும் அதிக மதிப்புள்ள 237 கிராம் கொக்கைனை வைத்திருந்த குற்றச்சாட்டில் விமான நிலைய சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.</p><p></p><h2>தோஹா வழியாக இலங்கை</h2><p>

அவர் அங்கோலாவிலிருந்து எத்தியோப்பியாவின் அடிஸ் அபாபாவிற்குப் பயணம் செய்து, பின்னர் கத்தாரின் தோஹா வழியாக இலங்கைக்கு வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/44b38076-b905-4618-8241-18f83da055d6/26-6a5b10d0e8684.webp' /></p><p> 

விமானத்திலிருந்து இறங்கிய பிறகு, அவர் சக்கர நாற்காலியில் முனையத்தில் நடமாடியது சுங்க அதிகாரிகளுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><p>
</p><p>
அதனைதொடர்ந்து, சந்தேக நபர் தானாக முன்வந்து கொக்கைன் அடங்கிய 14 உருண்டைகளை அதிகாரிகளிடம் ஒப்படைத்ததுள்ளார்.</p><h2>மேலதிக விசாரணை</h2><p>
</p><p>
இதன்போது, மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளில் மேலும் பல உருண்டைகளை விழுங்கியதையும் அவர் ஒப்புக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8546fa97-ea18-40e7-9f52-6f0f9f8f591e/26-6a5b10d1a2539.webp' /></p><p>
</p><p>
இந்நிலையில், இந்த விடயம் குறித்து சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table><p>

</p>]]></content>
            <updated>2026-07-18T05:36:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[தொடருந்து சேவையை முன்னெடுப்பதில் சிக்கல் : பயணிகளுக்கு வெளியான அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/there-will-be-a-major-crisis-in-sl-train-services-1784349536"></link>
            <id>https://ibctamil.com/article/there-will-be-a-major-crisis-in-sl-train-services-1784349536</id>
            <summary type="text">இலங்கையில் தொடருந்து சேவைகளை முன்னெடுப்பதில் கடுமையான நெருக்கடி ஏற்படக்கூடும் என தொடருந்து நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.தொடருந்து திணைக்களத்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் தொடருந்து சேவைகளை முன்னெடுப்பதில் கடுமையான நெருக்கடி ஏற்படக்கூடும் என தொடருந்து நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.</p><p>தொடருந்து திணைக்களத்தின் வசமுள்ள தொடருந்து இயந்திரங்கள் மற்றும் தொடருந்து இயந்திர வலு தொகுதிகள் குறைவடைந்துள்ளதன் காரணமாக இந்த நிலைமை ஏற்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><p>இந்த நிலையை சீர்செய்து, தற்போதுள்ள தொடருந்து நேர அட்டவணைக்கு அமைவாக சேவைகளை முன்னெடுத்துச் செல்வதற்கு அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த சங்கத்தின் செயலாளர் கசுன் சாமர குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>தொடருந்து இயந்திரங்கள்</h2><p>இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், 2023ஆம் ஆண்டளவில் 106 ஆகக் காணப்பட்ட மொத்த தொடருந்து இயந்திர தொகுதி இருப்பு, 3 வருடங்களின் பின்னர் இன்று 98 ஆகக் குறைவடைந்துள்ளதுடன், 8 இயந்திரங்கள் பயன்பாட்டிலிருந்து நீக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2d41907b-ba29-42ef-bcd2-65a58970890d/26-6a5b0d8e7fe93.webp' /></p><p> 

2023ஆம் ஆண்டு நடைமுறையிலிருந்த தொடருந்து நேர அட்டவணையின்படி, சுமார் 450 தொடருந்து சேவைகள் இயக்கப்பட்டதுடன், அந்த சேவைகளுக்காக தொடருந்து திணைக்களத்திற்கு 74 இயந்திரங்கள் தேவைப்பட்டிருந்தன.</p><p> 

இருப்பினும், அவ்வாறானதொரு எண்ணிக்கையிலான சேவைகளை இயக்குவதற்கு, அந்த காலப்பகுதியில் தொடருந்து திணைக்களத்திடம் இயக்கத்திற்கு உகந்த நிலையில் 68 இயந்திரங்கள் மாத்திரமே இருந்தன. இன்று அந்த இயந்திரங்களின் எண்ணிக்கையும் 49 ஆகக் குறைவடைந்துள்ளது.</p><p>இதேவேளை, 2023ஆம் ஆண்டளவில் தொடருந்து திணைக்களத்திடம் 109 தொடருந்து இயந்திர வலு தொகுதிகள் இருந்த நிலையில், இந்த ஆண்டில் அது 106 ஆகக் குறைவடைந்துள்ளது.</p><p></p><h2>தொடருந்து திணைக்களம்</h2><p>இதன்படி, 3 தொடருந்து இயந்திர வலு தொகுதிகள் பயன்பாட்டிலிருந்து நீக்கப்பட்டுள்ளன. எவ்வாறாயினும், தற்போதைய சேவைகளை வழங்குவதற்கு 88 தொடருந்து இயந்திர வலு தொகுதிகள் அவசியமாகின்றன.</p><p>

2023ஆம் ஆண்டில் தொடருந்து திணைக்களத்திடம் இயங்கு நிலையில் இருந்த தொடருந்து இயந்திர வலு தொகுதிகளின் எண்ணிக்கை 78 ஆகும். அது தற்போது 52 ஆகக் குறைவடைந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/372d6a8f-8057-4d5f-a229-bf449c34078e/26-6a5b0d8f5ea9f.webp' /></p><p> </p><p>இந்த சேவைகளை தடையின்றி வழங்குவதற்கு திணைக்களத்திடம் 26 தொடருந்து இயந்திர வலு தொகுதிகளின் பற்றாக்குறை நிலவுகிறது. </p><p>

இதற்கமைய, ஒட்டுமொத்தமாக 2023ஆம் ஆண்டில் 261 ஆகக் காணப்பட்ட தொடருந்து இயந்திரங்கள் மற்றும் தொடருந்து இயந்திர வலு தொகுதிகளின் மொத்த எண்ணிக்கையிலிருந்து 19 நீக்கப்பட்டு, 2026ஆம் ஆண்டளவில் அதன் மொத்த இருப்பு 242 ஆக வீழ்ச்சியடைந்துள்ளது.</p><p> 

எனவே, நிலவும் இப்பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்“ என தெரிவித்துள்ளார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-18T05:29:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறுபான்மைக் கூட்டணியை நாங்கள் எதிர்க்கவில்லை- சஜித் அணி தெரிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/we-are-not-opposed-to-the-minority-alliance-1784351818"></link>
            <id>https://tamilwin.com/article/we-are-not-opposed-to-the-minority-alliance-1784351818</id>
            <summary type="text">தமிழ் மற்றும் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களை உள்ளடக்கிய சிறுபான்மைக்
கட்சிகள், தமது உரிமைகளுக்காகத் தனியானதொரு புதிய கூட்டணியை உருவாக்குவதில்
எமக...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழ் மற்றும் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களை உள்ளடக்கிய சிறுபான்மைக்
கட்சிகள், தமது உரிமைகளுக்காகத் தனியானதொரு புதிய கூட்டணியை உருவாக்குவதில்
எமக்கு எவ்வித பிரச்சினைகளும் இல்லை என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய
அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.</p><p>

இது குறித்து ஊடகங்களிடம் மேலும் கூறுகையில்,

"மனோ கணேசன், ரவூப் ஹக்கீம் உள்ளிட்ட தமிழ், முஸ்லிம் பிரதிநிதிகள் தங்களின்
உரிமைகளுக்காகவும் கோரிக்கைகளுக்காகவும் தனியாக ஒழுங்கமைவதில் தவறில்லை.
</p><p></p><h2>அரசின் நிர்வாகக் குறைபாடுகள்&nbsp;</h2><p>அவர்கள் அனைவரும் தொடர்ந்தும் எமது ஐக்கிய மக்கள் கூட்டணியுடன் இணைந்துதான்
பயணிக்கின்றனர். தற்போதைய மக்கள் விரோத அரசை வீழ்த்த வேண்டும் என்ற ஒற்றை
இலக்குக்காக, எதிர்காலத் தேர்தல்களில் அனைத்து சக்திகளும் ஒன்றிணைந்து
செயற்படும் என்பதில் எமக்கு முழு நம்பிக்கை உள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/96c42a9d-657b-466b-b668-3ca8e06521f3/26-6a5b0f1a8c20a.webp' /></p><p>இதன்போது நாட்டின் தற்போதைய பாதுகாப்பு நிலைமை மற்றும் அரசின் நிர்வாகக்
குறைபாடுகள் குறித்தும் அவர் கடும் விமர்சனங்களை முன்வைத்தார்.
</p><p>
நாட்டில் தொடர்ச்சியாக இடம்பெறும் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் மற்றும்
போதைப்பொருள் கடத்தல்காரர்களின் ஆதிக்கம் தொடர்பில் சுட்டிக்காட்டிய அவர்,
அண்மையில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவம் அரசின்
நிர்வாகச் சீர்குலைவை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது என்று தெரிவித்துள்ளார்.&nbsp;</p><h2>தாமதிக்கப்பட்டு வரும் மாகாண சபைத் தேர்தல்</h2><p>சிறைக்குள் வன்முறை வெடித்தபோது, உரிய நேரத்தில் பொலிஸாரின் உதவியைப் பெறவோ
அல்லது முறையான முடிவுகளை எடுக்கவோ சிறைச்சாலை நிர்வாகத்துக்கு அதிகாரம்
வழங்கப்படவில்லை. </p><p>இக்கட்டான சூழலில் நீதி அமைச்சரைத் தொடர்புகொள்ள அதிகாரிகள்
பல மணிநேரம் காத்திருக்க வேண்டியிருந்தது. இதுவே இந்த அரசின் நிர்வாகக்
கட்டமைப்பு சிதைந்துள்ளதற்கான சான்று என்று அவர் சாடியுள்ளார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2217d8c6-a96d-499d-aa3a-375968e0222e/26-6a5b0f1b3ea95.webp' /></p><p>
அரசின் தற்போதைய நிலைப்பாடு குறித்துப் பேசிய திஸ்ஸ அத்தநாயக்க, ஒன்பது
ஆண்டுகளாகத் தாமதிக்கப்பட்டு வரும் மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துமாறு
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்குச் சவால் விடுத்தார்.
</p><p>முகநூலில் பகிரப்படும் கருத்துக்களைத் தாண்டி, அரசுக்கு உண்மையிலேயே மக்கள்
ஆதரவு உள்ளதா என்பதை நிரூபிக்கும் களமாக மாகாண சபைத் தேர்தல் அமையும்.
</p><p>ஆளுநர்கள் மற்றும் அதிகாரிகள் மூலம் பிராந்தியங்களை நிர்வகிப்பது அரசமைப்பை
மீறும் செயலாகும். ஜனாதிபதிக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு இருக்குமாயின்,
தேர்தலை நடத்தி அதனை நிரூபித்துக் காட்டட்டும் என்றும் அவர் மேலும்
வலியுறுத்தியுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-18T05:29:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மண்மேடு சரிந்து விழுந்ததில் நபர் ஒருவர் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/person-died-in-a-landslide-in-alavathugoda-1784347560"></link>
            <id>https://ibctamil.com/article/person-died-in-a-landslide-in-alavathugoda-1784347560</id>
            <summary type="text">அலவத்துகொடை பகுதியில் மண்மேடு சரிந்து விழுந்ததில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.குறித்த சம்பவம்&amp;nbsp;கண்டி மாவட்டத்தின் அலவத்துகொடை, படுகொட பகுதியில்&amp;n...</summary>
            <content type="html"><![CDATA[<p>அலவத்துகொடை பகுதியில் மண்மேடு சரிந்து விழுந்ததில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.</p><p>குறித்த சம்பவம்&nbsp;கண்டி மாவட்டத்தின் அலவத்துகொடை, படுகொட பகுதியில்&nbsp;இடம்பெற்றுள்ளது</p><p>குறித்த பகுதியைச் சேர்ந்த 49 வயதுடைய நபரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்</p><p></p><h3>மண்மேடு சரிந்ததில் ஒருவர் பலி</h3><p>விபத்து தொடர்பில் தெரியவருகையில், வீடொன்றின் அத்திவாரம் தோண்டும் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த நேரம் இந்த சம்பவம் நடந்துள்ளதாக அலவத்துகொடை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fa2cfc9c-37bd-43f0-9f02-766de9ab0793/26-6a5b0ed613a71.webp' /></p><p>பாதிக்கப்பட்டவர் மீட்கப்பட்டு அக்குரணை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நேரத்தில் அவர் உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் கூறியுள்ளனர்.</p><p>
உயிரிழந்தவரின் சடலம் கண்டி வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், அலவத்துகொடை காவல்துறையினர் இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-18T05:27:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[மகனின் திருமண வாழ்க்கையால் விரக்தி ; மார்பில் சுட்டு உயிர் மாய்த்த முன்னாள் பொலிஸ் மா அதிபர் ; வெளிவந்த பகீர் தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/police-chief-death-shocking-updates-1784343385"></link>
            <id>https://jvpnews.com/article/police-chief-death-shocking-updates-1784343385</id>
            <summary type="text">முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன மாலபேயில் உள்ள அவரது வீட்டில் நேற்று (17) தன்னை தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டார்.

விக்ரமரத்ன தனது தனி...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன மாலபேயில் உள்ள அவரது வீட்டில் நேற்று (17) தன்னை தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டார்.
</p><p style="text-align: justify; ">
விக்ரமரத்ன தனது தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரியின் துப்பாக்கியால் தனது மார்பில் சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/327447eb-c391-442a-a507-45dc97ce98df/26-6a5aeb5b9229e.webp' /></p><h2 style="text-align: justify; ">தனிப்பட்ட காரணம்</h2><p> </p><p style="text-align: justify; ">

தனிப்பட்ட காரணம் நிமித்தம் அவர் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதுடன், இந்த சம்பவம் தொடர்பாக இரண்டு பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன. </p><p style="text-align: justify; ">

மாலபே, தலாஹேன பகுதியில் அமைந்துள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் வீட்டில் நேற்று காலை 6.15 மணியளவில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.</p><p style="text-align: justify; "> 

காலை உடற்பயிற்சிக்காக செல்வதற்கு முன்னர் வீட்டிற்கு வெளியே வந்த விக்ரமரத்ன, அங்கிருந்த நாற்காலி ஒன்றில் அமர்ந்திருந்ததாகக் கூறப்படுகிறது.</p><p style="text-align: justify; "> 

அதன் பின்னர், தனது தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரியை அழைத்து அவரது பிஸ்டல் ரக துப்பாக்கியை விக்ரமரத்ன கேட்டுப் பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.</p><p style="text-align: justify; "> 

அந்த சந்தர்ப்பத்தில் அவர் சம்பந்தப்பட்ட அதிகாரியிடம், "துப்பாக்கியைக் கொண்டு வாருங்கள். அது புதியதா? அல்லது பழையதா? என்று பார்க்க வேண்டும்" எனக் கூறியுள்ளார்.</p><p style="text-align: justify; "> 

அதன் பின்னர், தனக்கு ஒரு தண்ணீர் போத்தலை எடுத்து வருமாறு கூறி, விக்ரமரத்ன தனது தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரியை வீட்டிற்குள் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. </p><p style="text-align: justify; ">

அவர் சென்ற பின்னர், விக்ரமரத்ன அந்த துப்பாக்கியால் தனது மார்பில் சுட்டுக் கொண்டுள்ளதாக தகவல்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர். 

உடனடியாக செயற்பட்ட வீட்டிலிருந்தவர்கள், அவரை விரைவாக கொழும்பு கிழக்கு வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். </p><p style="text-align: justify; ">

வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போதே அவர் உயிரிழந்திருந்ததாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன. </p><p style="text-align: justify; ">விக்ரமரத்னவின் மகனின் மனைவி, பிரிந்து செல்வதற்காக விவாகரத்து வழக்குத் தாக்கல் செய்திருந்ததாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையில், அந்த மகனின் மனைவி தான் குடும்ப வன்முறைக்கு ஆளானதாகக் கூறி சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தில் புகார் அளித்திருந்தார்.</p><p style="text-align: justify; ">

அங்கு சிறுவர் மற்றும் மகளிர் பணியகம் இந்த சம்பவம் தொடர்பாக மேற்கொண்ட விசாரணைகள் குறித்து விக்ரமரத்ன மிகுந்த மனவேதனையில் இருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. </p><p style="text-align: justify; ">

தான் பொலிஸ் மா அதிபர் பதவியை வகித்த பொலிஸ் திணைக்களத்தின் பணியகம், தனது மகனின் பிரச்சினையில் நடந்துகொண்ட விதம் குறித்து, உயிரிழந்த முன்னாள் பொலிஸ்மா அதிபர் தனது நெருங்கிய நண்பர்கள் சிலரிடம் மிகுந்த கவலையுடன் பேசியிருந்ததாகவும் கூறப்படுகிறது. </p><p style="text-align: justify; ">

விக்ரமரத்னவின் வீட்டிற்குச் சென்ற கடுவலை நீதவான் அருண இந்திரஜித் புத்ததாச, சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டார். 

அதேபோல், பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவும் விக்ரமரத்னவின் வீட்டிற்குச் சென்று நிலைமைகளை பார்வையிட்டார்.</p>]]></content>
            <updated>2026-07-18T05:25:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[புதன்-செவ்வாய் உருவாக்கும் தசாங்க யோகம்: இந்த ராசிகளுக்கு பணமழை உறுதி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/mercury-mars-forms-dashanka-yoga-who-get-wealth-1784350702"></link>
            <id>https://manithan.com/article/mercury-mars-forms-dashanka-yoga-who-get-wealth-1784350702</id>
            <summary type="text">நவகிரகங்களில் புதன் கிரகம் அறிவு, தகவல் தொடர்பு, வணிகம், பகுப்பாய்வுத் திறன் மற்றும் புத்திக்கூர்மைக்கு அதிபதியாகக் கருதப்படுகிறது. அதேபோல், செவ்வாய் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நவகிரகங்களில் புதன் கிரகம் அறிவு, தகவல் தொடர்பு, வணிகம், பகுப்பாய்வுத் திறன் மற்றும் புத்திக்கூர்மைக்கு அதிபதியாகக் கருதப்படுகிறது. அதேபோல், செவ்வாய் கிரகம் ஆற்றல், தைரியம், செயல்திறன் மற்றும் மன உறுதியின் அடையாளமாக அறியப்படுகிறது.
</p><p>
இந்த இரண்டு முக்கிய கிரகங்களும் ஜூலை 16ஆம் தேதி இணைந்து தசாங்க யோகத்தை உருவாக்கியுள்ளன. ஜோதிட நம்பிக்கையின்படி, இந்த சக்திவாய்ந்த கிரகச் சேர்க்கை படைப்பாற்றலை அதிகரிப்பதுடன், புதுமையான சிந்தனைகளையும் புதிய வாய்ப்புகளையும் உருவாக்கும் ஆற்றலைக் கொண்டதாகக் கருதப்படுகிறது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3a0821dc-6b9b-40df-b0df-4a4e2956f3e8/26-6a5b0e0f3f071.webp' /></p><p>
தற்போது, புதன் கிரகம் மிதுன ராசியில் வக்ர நிலையில் பயணித்து வருகிறது. அதே நேரத்தில், செவ்வாய் கிரகம் ரிஷப ராசியில் சஞ்சரித்து வருகிறது. </p><p>இந்த இரு கிரகங்களின் நிலை மற்றும் சேர்க்கை சில ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமான பலன்களை அளிக்கும் என்று ஜோதிடர்கள் கணித்துள்ளனர். அப்படி இந்த அரிய சேர்க்யைால் பலனடையும் ராசிகள் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.</p><p></p><h2>ரிஷபம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3cc73281-9aa7-439d-bc6c-93e4ff7cd11a/26-6a5b0e0fe3c0a.webp' /></p><p>
ரிஷப ராசியில் செவ்வாய் இருப்பதால் தன்னம்பிக்கையும் முடிவெடுக்கும் திறனும் அதிகரிக்கும். பணப் பிரச்சினைகள் குறைந்து, நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும்.</p><p> வீட்டிற்கு புதிய பொருட்கள் வாங்கும் யோகம் உண்டாகும். வாழ்க்கையில் மகிழ்ச்சியும் செழிப்பும் அதிகரிக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் அமையலாம்.</p><p> கடின உழைப்புக்கு உரிய பலன் கிடைக்கும். விரும்பிய வாகனம் வாங்கும் வாய்ப்பும், மாணவர்களுக்கு தேர்வில் நல்ல முடிவுகளும் கிடைக்கலாம்.
</p><h2>
சிம்மம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/433c1585-3c7f-4697-92fa-e37fffc49847/26-6a5b0e1094be0.webp' /></p><p>
இந்த யோகம் சிம்ம ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களைத் தரும். வணிகத்தில் லாபம் அதிகரிக்கும், புதிய ஒப்பந்தங்கள் மற்றும் வேலை வாய்ப்புகள் கிடைக்கலாம். </p><p>குடும்பத்தில் அமைதியும் ஒற்றுமையும் நிலவும். நிதிநிலை சீராக இருக்கும். துணையுடன் நல்ல நேரம் செலவிட்டு, பழைய கருத்து வேறுபாடுகளை சரிசெய்யும் வாய்ப்பு கிடைக்கும்.</p><p>குறிப்பாக நிதி நிலையில் இதுவரை இருந்து வந்த சிக்கல்கள் நீங்கி பல வழிகளிலும் வருமானம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும்.&nbsp;</p><h2>

மகரம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/89996e46-30a5-47f5-b99a-6583a7549561/26-6a5b0e11444bb.webp' /></p><p></p><p>
மகர ராசிக்காரர்களுக்கு இந்த யோகம் எதிர்பாராத நன்மைகளை வழங்கும். மேற்கொள்ளும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். </p><p>வருமானம் அதிகரிக்க புதிய வாய்ப்புகள் உருவாகும். நீண்ட நாட்களாக தடைபட்டிருந்த காரியங்கள் நிறைவேறும்.குடும்பத்தவரின் மத்தியில் ஒற்றுமை அதிகரிக்கும்.</p><p> சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் உயரும். பணியிடத்தில் மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறலாம். புதிய வாகனம் வாங்கும் வாய்ப்பும் அமையும்.</p><p><b>இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).&nbsp; &nbsp; &nbsp; &nbsp;&nbsp;</b></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b>&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-18T05:24:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தனது வருங்கால கணவர் எப்படி இருக்க வேண்டும்... ஓபனாக கூறிய ப்ரீத்தி முகுந்தன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/actress-preity-mukhundhan-about-her-future-husband-1784350320"></link>
            <id>https://cineulagam.com/article/actress-preity-mukhundhan-about-her-future-husband-1784350320</id>
            <summary type="text">ப்ரீத்தி முகுந்தன்ஸ்டார் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் தான் நடிகை ப்ரீத்தி முகுந்தன். முதல் படத்திலேயே நல்ல வரவேற்பை...</summary>
            <content type="html"><![CDATA[<h2>ப்ரீத்தி முகுந்தன்</h2><p>ஸ்டார் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் தான் நடிகை ப்ரீத்தி முகுந்தன்.</p><p> முதல் படத்திலேயே நல்ல வரவேற்பைப் பெற்றவர் நாக்ஜில்லா, கண்ணப்பா உள்ளிட்ட படங்களில் நடித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e2de5dca-be45-4d71-b035-a8fa91a0d653/26-6a5b0d94f107d.webp' /></p><p>
</p><p>சில மாதங்களுக்கு முன்பு ப்ரீத்தி முகுந்தன் நடித்த பிளாஸ்ட் திரைப்படம் வெளியாகி இருந்தது. ஆக்ஷன் கதைக்களத்தில் உருவான இப்படத்தில் ப்ரீத்தி முகுந்தனும் சண்டைக் காட்சிகளில் அருமையாக நடித்திருந்தார். </p><p>கடைசியாக அதர்வா நடிப்பில் வெளியான இதயம் முரளி படத்திலும் ப்ரீத்தி முகுந்தன் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார், படமும் செம ஹிட்டாகியுள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c03a9d61-ec7f-41d8-809f-c978843f7bb8/26-6a5b0d95c2ba0.webp' /></p><h2>வருங்கால கணவர்</h2><p>
சமீபத்தில் நடிகை ப்ரீத்தி முகுந்தன் ஒரு பேட்டியில் தனது வருங்கால கணவர் எப்படி இருக்க வேண்டும் என கூறியுள்ளார். </p><p>அதில் அவர் எனது வருங்கால துணையிடம் அதிகம் எதிர்ப்பார்ப்பது அக்கறைதான். என்னுடைய உணர்வுகளையும் எண்ணங்களையும் புரிந்துகொள்ளக்கூடிய நபரே எனது வாழ்க்கைத் துணையாக வர வேண்டும் என்கிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4e1616c8-0b3d-4c64-a6ac-dfff80d01eb6/26-6a5b0d941f29a.webp' /></p>]]></content>
            <updated>2026-07-18T05:23:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலகக் கோப்பை இறுதிப் போட்டி: 19 ஆண்டுகளுக்கு முந்தைய புகைப்படம்: மெஸ்ஸி கொடுத்த ரியாக்‌ஷன்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/messi-reacts-on-viral-photo-with-lamine-yamal-1784351861"></link>
            <id>https://news.lankasri.com/article/messi-reacts-on-viral-photo-with-lamine-yamal-1784351861</id>
            <summary type="text">19 ஆண்டுகளுக்கு முன்பு மெஸ்ஸியும், லாமின் யமாலும் இணைந்து இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், அது குறித்து மெஸ்ஸி தன்னுடைய கருத்தை...</summary>
            <content type="html"><![CDATA[<p>19 ஆண்டுகளுக்கு முன்பு மெஸ்ஸியும், லாமின் யமாலும் இணைந்து இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், அது குறித்து மெஸ்ஸி தன்னுடைய கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.</p><h2> சமூக வலைதளத்தில் வைரலாகும் மெஸ்ஸி - லாமின் யாமல் புகைப்படம்</h2><p>
உலகம் எதிர்பார்த்து காத்திருக்கும் உலக கோப்பை கால்பந்து போட்டியின் இறுதிப் போட்டியில் அர்ஜென்டினா அணியும் ஸ்பெயின் அணியும் மோதவுள்ளன.
இந்த வேளையில், 19 ஆண்டுகளுக்கு முன்பு மெஸ்ஸியும், லாமின் யமாலும் இணைந்து இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d01d783b-11d4-4626-b764-df298aa51ac2/26-6a5b0c77065df.webp' /></p><p> கடந்த 2007ம் ஆண்டு 20 வயது இளம் வீரராக பார்சிலோனா அணிக்காக விளையாடி வந்த லியோனல் மெஸ்ஸி, Diario Sport என்ற பத்திரிக்கைகாக UNICEF தொண்டு நிறுவனத்தின் புகைப்பட நிகழ்ச்சியில் கலந்து கொண்டு குழந்தையாக இருந்த லாமின் யாமலை குளிப்பாட்டும் புகைப்படம் தான் அது.</p><p> இந்நிலையில், உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் அர்ஜென்டினா அணியின் நம்பிக்கை நட்சத்திரமான லியோனல் மெஸ்ஸிக்கும்(Lionel Messi), ஸ்பெயின் அணியின் இளம் நட்சத்திரமான லாமின் யமாலுக்கும்(Lamine Yamal) இடையிலான விளையாட்டை காண ஒட்டு மொத்த கால்பந்து ரசிகர்களும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cbfb664b-e362-4084-9026-c7149a5fb57d/26-6a5b0c77ad71e.webp' /></p><p></p><h2>மெஸ்ஸியின் நெகிழ்ச்சி</h2><p>உலகக் கோப்பை கால்பந்து இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், நியூயார்க் நகரில் நடைபெற்ற பிஃபா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அர்ஜென்டினா அணியின் கால்பந்து வீரர் மெஸ்ஸி, அந்த புகைப்படம் நம்பமுடியததாக உள்ளது என்று தன்னுடைய வியப்பை வெளிப்படுத்தியுள்ளார்.</p><p>அவர் குழந்தையாக இருக்கும் போது அவருடன் நான் புகைப்படம் எடுத்துக் கொண்டேன். இன்று அவருக்கு எதிராக கால்பந்து உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் விளையாட உள்ளேன் என்பது விசித்திரமாக (Crazy) உள்ளது என்று தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/24718bd7-4c2a-4fcd-91d4-5623c102d275/26-6a5b0c785d681.webp' /></p><p> மேலும் 19 வயது லாமின் யமாலை உலகத் தரம் வாய்ந்த மிகச் சிறந்த வீரர் என்று குறிப்பிட்ட மெஸ்ஸி அவருக்கு தன்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.</p><p> அதே சமயம் இறுதிப் போட்டியில் அவரை சிறப்பாக விளையாட விடாமல் தடுப்பதே எங்கள் நோக்கம் என்றும், ஸ்பெயின் அணியில் பல சிறந்த வீரர்கள் உள்ளார்கள். இருப்பினும் அவர்களை தடுக்க எங்களிடம் பல ஆயுதங்கள் இருப்பதாகவும் மெஸ்ஸி குறிப்பிட்டுள்ளார்.</p><p> அத்துடன் யாமலின் எதிர்காலம் சிறப்பானதாக அமையட்டும் என்று வாழ்த்திய மெஸ்ஸி, இந்த முறை அவருக்கு கோப்பை கிடைக்காமல் இருக்க எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம் என்றும் மெஸ்ஸி தெரிவித்துள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-18T05:17:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பெண் பொலிஸ் அதிகாரியிடம் தவறாக நடந்துக் கொண்ட உத்தியோகத்தர் பணியிடை நீக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/police-officer-dismissed-1784351734"></link>
            <id>https://tamilwin.com/article/police-officer-dismissed-1784351734</id>
            <summary type="text">பெண் பொலிஸ் அதிகாரி ஒருவரிடம் தவறான முறையில், நடந்துக் கொண்ட பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் திணைக்களம் அறிவித்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>பெண் பொலிஸ் அதிகாரி ஒருவரிடம் தவறான முறையில், நடந்துக் கொண்ட பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது.</p><p> 

இந்த நடவடிக்கை நேற்று(17.06.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2> 



தவறான முறையில் நடந்துக் கொண்ட அதிகாரி</h2><p>
கலேவெல அருகே, மகுலுகஸ்வெவ பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரே இவ்வாறு பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.</p><p>

கடந்த 15ஆம் திகதி தம்புள்ள கம்உதாவ மைதானத்தில் இடம்பெற்ற இன்னிசை நிகழ்வொன்றுக்கு கடமைக்கு சென்ற நிலையில், பொலிஸ் உத்தியோகத்தர் மகுலுகஸ்வெவ பொலிஸ் நிலையத்திற்கு பணிக்கு திரும்பியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7fea65db-61a6-4706-a187-5d9b76d7b079/26-6a5b0c3c173d9.webp' /></p><p>
</p><p>
இதன்போது, அங்கு பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் நாற்காலியில் அமர்ந்திருப்பதைக் கண்டதும், குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் பெண் உத்தியோகத்தரிடம் தவறான முறையில் நடந்துக் கொண்டுள்ளார்.
</p><h2>

பணியிடை நீக்கம்</h2><p>
இதனையடுத்து, பெண் பொலிஸ் உத்தியோகத்தர், தனது பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மூலம் அப்பகுதிக்கு பொறுப்பான உதவி பொலிஸ் அத்தியட்சகரிடம் முறைப்பாடு அளித்துள்ளார்.</p><p> 

இந்த சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில், சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் உத்தியோகத்தர் அந்த நேரத்தில் மதுபோதையில் இருந்ததாக தெரியவந்துள்ளது.
</p><p>
ஒரு பெண் உத்தியோகத்தரை பாலியல் ரீதியாக துன்புறுத்த முயன்றது மற்றும் பணியில் இருந்தபோது மதுபோதையில் இருந்தது ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் உத்தியோகத்தரின் சேவையை பணியிடை நீக்கம் செய்ய அப்பகுதிக்குப் பொறுப்பான உதவி பொலிஸ் அத்தியட்சகர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-18T05:16:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானியாவின் புதிய பிரதமராகும் ஆன்டி பர்னாம்: அவரது குடும்பம் குறித்து சில தகவல்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/uk-new-pm-andy-burnham-family-background-1784351696"></link>
            <id>https://news.lankasri.com/article/uk-new-pm-andy-burnham-family-background-1784351696</id>
            <summary type="text">லேபர் கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஆன்டி பர்னாம், திங்கட்கிழமை, அதாவது, ஜூலை மாதம் 20ஆம் திகதி முறைப்படி பிரித்தானியாவின் பிரதமராக பதவி...</summary>
            <content type="html"><![CDATA[<p>லேபர் கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஆன்டி பர்னாம், திங்கட்கிழமை, அதாவது, ஜூலை மாதம் 20ஆம் திகதி முறைப்படி பிரித்தானியாவின் பிரதமராக பதவியேற்க உள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0c796693-e983-4c08-9e2d-939ff75ca472/26-6a5b0bd1e4fe4.webp' /></p><p>இந்நிலையில், அவரது குடும்பம் குறித்த சில தகவல்களைத் தெரிந்துகொள்ளலாம்.
</p><h3>
ஆன்டி பர்னாமின் குடும்பம்</h3><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8d108444-feba-4a68-8eed-575e63f905ce/26-6a5b0bd294294.webp' /></p><p>ஆன்டி பர்னாமின் மனைவியின் பெயர், மேரி ஃப்ரான்ஸ் வான் ஹீல் (Marie-France van Heel, 56). அவர் ‘Frankie’ என அழைக்கப்படுகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fbfa6442-8a6e-4142-b587-d13a9b4ac1e7/26-6a5b0bd348ab6.webp' /></p><p>நெதர்லாந்தில் பிறந்தவரான ஃப்ராங்கி, கேம்ப்ரிட்ஜ் பல்கலையில் பயில்வதற்காக பிரித்தானியா வந்தார்.
</p><p>
1989ஆம் ஆண்டு, அதே பல்கலையில் இரண்டாம் ஆண்டில் படித்துக்கொண்டிருந்த ஆன்டி பர்னாமை சந்தித்தார் அவர்.&nbsp;</p><p></p><p>
காதலித்து இணைந்துவாழத் துவங்கிய ஆன்டி பர்னாம், ஃப்ராங்கி தம்பதியர் 2000ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்கள்.
</p><p>
 ஃப்ராங்கி, Iduna என்னும் நிறுவனத்தில் chief marketing officer என்னும் பொறுப்பு வகித்துவருகிறார்.
</p><p>
ஆன்டி பர்னாம், ஃப்ராங்கி தம்பதியருக்கு மூன்று பிள்ளைகள். மூத்த மகன் ஜிம்மி பர்னாம், வரலாற்றில் பட்டம் பெற்றவர், Royal College of Nursingஇல் International Policy Officer என்னும் பொறுப்பு வகிக்கிறார்.</p><p>

இரண்டாவது மகளான ரோஸி பர்னாம், குற்றவியலில் பட்டம் பெற்றவர், Jägermeister UK என்னும் அமைப்பில் Customer Development Executive என்னும் பொறுப்பு வகிக்கிறார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2dbb447d-8068-4ac7-837e-fe3c8a9be939/26-6a5b0bd3efa79.webp' /></p><p>தம்பதியரின் மூன்றாவது மகளான ஆன் மேரி பர்னாம், ஆங்கிலத்தில் பட்டம் பெற்றவர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f746e944-6a34-42ba-b920-79faf5529537/26-6a5b0bd4cd58a.webp' /></p><p>சில அரசியல் தலைவர்களின் மனைவிகளைப் போல, ஆன்டி பர்னாமின் மனைவியான ஃப்ராங்கி பொதுவாக பொது இடங்களில் அதிகம் தலைகாட்டுவதில்லை.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-18T05:15:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சாவகச்சேரி நகரசபை புதிய உப தவிசாளர் தெரிவு நிறுத்தம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/jaffna-chavakachcheri-urban-council-halted-1784351561"></link>
            <id>https://jvpnews.com/article/jaffna-chavakachcheri-urban-council-halted-1784351561</id>
            <summary type="text">&amp;nbsp; யாழ்ப்பாணம் சாவகச்சேரி நகரசபையின் புதிய உப தவிசாளர் தெரிவை எதிர்வரும் 21ம் திகதி அன்று நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த நிலையில் நீதிமன்றத்தில் எழு...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; யாழ்ப்பாணம் சாவகச்சேரி நகரசபையின் புதிய உப தவிசாளர் தெரிவை எதிர்வரும் 21ம் திகதி அன்று நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த நிலையில் நீதிமன்றத்தில் எழுப்பபட்ட ஆட்சேபனையை தொடர்ந்து அதனை நிறுத்த உள்ளூராட்சி ஆணையாளர் தீர்மானித்துள்ளார்.
</p><p>
சாவகச்சேரி நகராட்சி மன்றத்தின் உப தவிசாளர் ஞா.கிஷோர் சபையில் தான் ஆற்றிய உரைக்காகப் பதவி நீக்கம் செய்யப்பட்டமைக்கு எதிராகத் தாக்கல் செய்த எழுத்தாணை மனு, மூன்றாவது தடவையாக வடக்கு மாகாண மேல் நீதிமன்றத்தின் யாழ்ப்பாண அமர்வில் நேற்று (17) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/46af7016-6c01-46a5-a48b-603065691afb/26-6a5b0b4b4948e.webp' /></p><p> </p><p>

கடந்த 13.07.2026 அன்று நடைபெற்ற முந்தைய தவணை விசாரணையின் போது, எதிர்மனுதாரர்களான வட மாகாண ஆளுநர், உள்ளூராட்சி ஆணையாளர் மற்றும் தனிநபர் விசாரணை அதிகாரி ஆகியோருக்கு கடந்த வெள்ளிக்கிழமைக்குள் ஆட்சேபனைகளைச் சமர்ப்பிக்குமாறு நீதிபதி கெடு விதித்திருந்தார்.

 எனினும், குறித்த தினத்தில் ஆளுநர் உள்ளிட்ட எதிர்மனுதாரர்கள் தரப்பால் ஆட்சேபனைகள் தாக்கல் செய்யப்படவில்லை.</p><p></p><p>

 எதிர்வரும் செவ்வாய்க்கிழமை புதிய உப தவிசாளரைத் தேர்வு செய்வதற்கான அவசரக் கூட்டத்திற்கு இரண்டாம் எதிர்மனுதாரரான வட மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் அழைப்பு விடுத்துள்ளமையை, முறையீட்டாளரின் சட்டத்தரணி கலாநிதி கு.குருபரன் நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டு வந்தார்.</p><p>

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற விசாரணையின் போது, நீதிமன்றத்தின் அறிவுறுத்தலுக்கு இணங்க, இரண்டாம் எதிர்மனுதாரரான உள்ளூராட்சி ஆணையாளருடன் அரச சட்டத்தரணி கலந்தாலோசித்தார். </p><p>

அதன் பின்னர், இவ்வழக்கின் விவாதம் நடைபெறும் நாள் வரை புதிய உப தவிசாளர் தெரிவிற்கான கூட்டத்தை ஒத்திவைப்பதாக உள்ளூராட்சி ஆணையாளர் தரப்பு நீதிமன்றத்தில் தெரிவித்தது.</p><p></p><p> </p><p>

இதன்படி, எதிர்வரும் 21ம் திகதி அன்று நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த புதிய உப தவிசாளர் தெரிவுக் கூட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
</p><p>
இதனை அடுத்து, எதிர்மனுதாரர்களின் ஆட்சேபனைகளைத் தாக்கல் செய்வதற்காக வரும் 23ம் திகதிக்கு வழக்கை திகதியிட்ட மேல் நீதிமன்ற நீதிபதி, வழக்கின் இறுதி விவாதத்தை அடுத்த நாளான 24 அன்று நடத்துவதற்குத் திகதியிட்டுக் கட்டளையாக்கினார்.&nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-07-18T05:11:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[கட்டுநாயக்க விமான நிலையத்தில் நாடகமாடிய பெண் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/women-arrested-in-katunayake-airport-1784350098"></link>
            <id>https://tamilwin.com/article/women-arrested-in-katunayake-airport-1784350098</id>
            <summary type="text">அங்கோலா நாட்டை சேர்ந்த பெண் ஒருவர், கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்கப் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். 
...</summary>
            <content type="html"><![CDATA[<p>அங்கோலா நாட்டை சேர்ந்த பெண் ஒருவர், கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்கப் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். </p><p>

10 மில்லியன் ரூபாய்க்கும் அதிக பெறுமதியான 237 கிராம் கொக்கைன் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். </p><p>

கைது செய்யப்பட்டவர் 54 வயதுடைய பெண் என தெரியவந்துள்ளது.</p><p> </p><h2><b>சந்தேகத்திற்கிடமான நடத்தை</b></h2><p>அங்கோலாவிலிருந்து எத்தியோப்பியாவின் அடிஸ் அபாபா நகருக்கு சென்று, அங்கிருந்து கட்டார் நாட்டின் டோஹா வழியாக இலங்கை வந்திருந்தது விசாரணைகளில் தெரியவந்துள்ளது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/65ba1024-e1a8-4a00-b770-2e1ea472417e/26-6a5b0a77f19e6.webp' /></p><p>விமானத்திலிருந்து இறங்கிய பின்னர், அவர் சக்கர நாற்காலியின் உதவியுடன் பயணித்துள்ளார். </p><p>

அவரது சந்தேகத்திற்கிடமான நடத்தை குறித்து சுங்க அதிகாரிகளின் கவனம் திரும்பியது. </p><p>அதிகாரிகள் அவரிடம் மேற்கொண்ட விசாரணைகளின் போது, தம்மிடம் இருந்த 14 கொக்கெய்ன் போதைப்பொருள் உருண்டைகளை அவரே முன்வந்து சுங்க அதிகாரிகளிடம் கையளித்துள்ளார். </p><p>

மேலும், தான் இன்னும் சில போதைப்பொருள் உருண்டைகள் விழுங்கியிருப்பதாக அந்தப் பெண் சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவினரிடம் ஒப்புக்கொண்டுள்ளார். </p><p>

இந்தச் சம்பவம் குறித்து சுங்கப் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-07-18T05:09:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[கதிர்காமம் புனித தலம் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள முக்கிய தீர்மானம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/key-decision-on-kataragama-sacred-site-1784350928"></link>
            <id>https://jvpnews.com/article/key-decision-on-kataragama-sacred-site-1784350928</id>
            <summary type="text">கதிர்காமம் புனித தலம் மற்றும் மாணிக்க கங்கையை 2030 ஆம் ஆண்டிற்குள் பிளாஸ்டிக் அற்ற வலயங்களாக மாற்றுவதற்கான ஐந்தாண்டுத் திட்டத்தை மத்திய சுற்றாடல் அதிக...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify;">கதிர்காமம் புனித தலம் மற்றும் மாணிக்க கங்கையை 2030 ஆம் ஆண்டிற்குள் பிளாஸ்டிக் அற்ற வலயங்களாக மாற்றுவதற்கான ஐந்தாண்டுத் திட்டத்தை மத்திய சுற்றாடல் அதிகார சபை (CEA) ஆரம்பித்துள்ளது.</p><p style="text-align: justify;">

2026 ஆம் ஆண்டுக்கான காதிர்காமம் ஆடிவேல் உற்சவத்திற்கு இணையாக 'பொலித்தீன் அற்ற புனித வலயங்கள் - 2030' எனும் இந்த திட்டம் அதிகாரபூர்வமாகத் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a29bc72b-59a7-466a-bdac-e6ce70917e9f/26-6a5b08d742729.webp' /></p><h2 style="text-align: justify; ">பிளாஸ்டிக் மாசுபாடு</h2><p>
</p><p style="text-align: justify;">
வருடம் முழுவதும் வருகை தரும் யாத்திரிகர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளால் ஏற்படும் பிளாஸ்டிக் மாசுபாட்டைக் குறைப்பதே இந்த திட்டத்தின் பிரதான நோக்கமாகும்.</p><p style="text-align: justify;">

வருடாந்தம் இலட்சக்கணக்கான பக்தர்கள் கதிர்காமத்திற்கு வருகை தருவதுடன், ஆடிவேல் உற்சவ காலப்பகுதியில் மக்கள் கூட்டம் பெருமளவில் கூடுகின்றது.
</p><p style="text-align: justify;">
இதனைக் கருத்திற்கொண்டு, பிளாஸ்டிக் பாவனையைக் குறைப்பது குறித்து பக்தர்கள், குடியிருப்பாளர்கள் மற்றும் வர்த்தகர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும், தடை செய்யப்பட்ட பொலித்தீன் தயாரிப்புகளுக்கு எதிரான சோதனைகளை பலப்படுத்தவும் இந்த திட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;">

மேலும், வழிபாட்டுத் தலங்களில் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களைக் குறைத்தல், சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்றீடுகளை ஊக்குவித்தல் மற்றும் மேம்படுத்தப்பட்ட கழிவு முகாமைத்துவ முறைகளை அறிமுகப்படுத்துதல் என்பனவற்றுக்கும் முன்னுரிமை அளிக்கப்படவுள்ளது.
</p><p style="text-align: justify;">
இந்த திட்டத்தை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்த பல்வேறு அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் ஒத்துழைப்பைப் பெற்றுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபை தெரிவித்துள்ளது.</p><p style="text-align: justify;"></p>]]></content>
            <updated>2026-07-18T05:04:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ் செம்மணி புதைகுழிக்குள் மோதிரத்துடன் மீட்கப்பட்ட விரல்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/finger-with-a-ring-recovered-chemmani-mass-grave-1784351083"></link>
            <id>https://jvpnews.com/article/finger-with-a-ring-recovered-chemmani-mass-grave-1784351083</id>
            <summary type="text">&amp;nbsp; யாழ் செம்மணி புதைகுழிக்குள் மோதிரத்துடன் விரல் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; யாழ் செம்மணி புதைகுழிக்குள் மோதிரத்துடன் விரல் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 35ஆம் நாள் அகழ்வு பணிகள் நேற்றைய தினம் நடைபெற்றது.
</p><p>
செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை 56 நாட்கள் முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில் 35ஆவது நாளான இன்றைய தினம் புதிதாக 11 என்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ca197dde-5dce-4380-94e4-af907b2400ca/26-6a5b096d17ef8.webp' /></p><p>
அதேவேளை ஏற்கனவே அடையாளம் காணப்பட்டதில் 07 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் சேதமடைந்த மோதிரம் ஒன்றும் விரல் எலும்புடனான செப்பிலான மோதிரம் ஒன்றும் குவியலாக இரண்டு தொகுதி என்புகூடுகளும் அடையாளம் காணப்பட்டுள்ளது.
</p><p>
அதன் அடிப்படையில் செம்மணி புதைகுழியில் முதலாம் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டம் என இதுவரையில் 89 நாட்கள் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் , 431 என்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் 423 என்பு கூடுகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.&nbsp; &nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-18T05:03:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஐபிஎல், உலகக் கோப்பை முதல் துரந்தர் வரை!! அதிகம் பார்த்த 10 ஓடிடி ரிலீஸ்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/cinema-ott-watchlist-2026-t20-world-cup-tops-1784350960"></link>
            <id>https://viduppu.com/article/cinema-ott-watchlist-2026-t20-world-cup-tops-1784350960</id>
            <summary type="text">2026-ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில், இந்தியர்கள் அதிகம் பார்த்த 10 ஓடிடி ரிலீஸ் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது.10 ஓடிடி ரிலீஸ்அந்தவகையில் கடந்த 6 மாத...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026-ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில், இந்தியர்கள் அதிகம் பார்த்த 10 ஓடிடி ரிலீஸ் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f1a335f5-e542-48e0-8896-5dd748c862f4/26-6a5b08f20f99d.webp' /></p><h2>10 ஓடிடி ரிலீஸ்</h2><p>அந்தவகையில் கடந்த 6 மாதங்களில் இந்திய ரசிகர்கள் ஆதரவோடு சுமார் 24 மில்லியன் வியூஸ்களை பெற்று ஐசிசி அண்கள் டி20 உலகக்கோப்பை 2026ஐ ஓடிடி தரவரிசையில் முதலிடத்தை பிடித்து அசத்தியுள்ளது.
</p><p>
இதனை தொடர்ந்து இந்திய கிரிக்கெட்டில் மிகப்பெரிய விழாவாக கொண்டாடப்படும் இந்தியன் ப்ரீமியர் லீக் 2026 தொடர் 228.4 மில்லியன் வியூஸ்களுடன் 2வது இடத்தினை பிடித்துள்ளது.
</p><p>
படங்களை தாண்டி ஒரு ரியாலிட்டி ஷோ 3வது இடத்தினை பிடித்துள்ளது. பிரபல நகைச்சுவை கலைஞர் சமய ரெய்னாவின் 'இந்தியாஸ் காட் லேட்டண்ட்' (India's Got Latent) என்கிற காமெடி நிகழ்ச்சியை யூடியூப், நெட்ஃபிளிக்ஸ் ஆகிய தங்களில் 38.5 மில்லியன் வியூஸ்களை பெற்றுள்ளது.
</p><p>
பாலிவுட் சினிமாவில் பிரமாண்ட படமான ரூ. 1300 கோடிக்கும் மேல் வசூல் சாதனை படைத்த துரந்தர் படம் ஓடிடியில் 35.3 மில்லியன் வியூஸ்களை பெற்று 4வது இடத்தினை பிடித்துள்ளது.
</p><p>
இந்தியா - நியூசிலாந்து அணிகள் போதிய கிரிக்கெட் தொடரை 30.5 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது.

6வது இடத்தில் துரந்தர் 2 படம் 27.8 மில்லியன் வியூஸ்களை பெற்றுள்ளது.
</p><p>
மேட் இன் இந்தியா: ஏ டைட்டன் ஸ்டோரி' என்ற தொடர் அமேசான் எம் எக்ஸ் பிளேயரில் வெளியாகி 17.8 மில்லியன் வியூஸ் பெற்று 7 வது இடத்திலும், ஜீ5 ஒடிடி தளத்தில் ஒளிப்பரப்பான ஃபிபா உலகக்கோப்பை 2026 தொடர் 17.6 மில்லியன் வியூஸ் பெற்று 8வது இடத்தை பிடித்துள்ளது.
</p><p>
9வது இடத்தில் 17.5 மில்லியன் வியூஸ் பெற்று தி ராஜா சாப் படம் பெற்றுள்ளது.

திவ்யா தத்தா நடிப்பில் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியான சிரையா தொடர் 16.3 மில்லியன் வியூஸ் பெற்று 10வது இடத்தினை பிடித்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-18T05:02:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ் உள்ளிட்ட பகுதி மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/heat-weather-advisory-issued-for-several-districts-1784346696"></link>
            <id>https://ibctamil.com/article/heat-weather-advisory-issued-for-several-districts-1784346696</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் உள்ளிட்ட சில மாவட்டங்களிலும் வசிக்கும் மக்கள் அதிக வெப்பநிலை குறித்து அவதானமாக செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. வளிமண...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் உள்ளிட்ட சில மாவட்டங்களிலும் வசிக்கும் மக்கள் அதிக வெப்பநிலை குறித்து அவதானமாக செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.</p><p> வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (12.07.2026) வெளியிட்ட வானிலை முன்னறிப்பில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p>அந்தவகையில், கிழக்கு மாகாணத்திலும், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மொனராகலை ஆகிய மாவட்டங்களிலும் வசிக்கும் மக்கள் அவதானமாக செயற்படுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது.</p><h2>எச்சரிக்கை நிலை</h2><p>

குறித்த பிரதேசங்களில் இன்று பகல் மனித உடலால் உணரக்கூடிய வெப்பத்தின் அளவானது 'எச்சரிக்கை நிலைக்கு' உயர்வடையக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
</p><p>
இந்தநிலையில் அதிக வெப்பமான சூழலில் நீண்ட நேரம் வெயிலில் இருப்பது மற்றும் வெளிப்புற நடவடிக்கைகளில் ஈடுபடுவது சோர்வை உண்டாக்கும்.

தொடர்ந்து அதிக வேலைகளில் ஈடுபடுபவர்களுக்குத் தசைப்பிடிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
</p><p>
எனவே போதிய அளவு நீர் மற்றும் திரவ உணவுகளை உட்கொண்டு உடலை நீர்ச்சத்துடன் வைத்துக்கொள்ளவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><h2>வெயிலின் தாக்கம்</h2><p>

அதீத உடல் உழைப்பு தேவைப்படும் வெளிப்புற நடவடிக்கைகளைக் குறைத்துக்கொள்ளுமாறும் பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
</p><p>
குறிப்பாக, மதியம் மற்றும் மாலை நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதால், மக்கள் தங்கள் உடல்நலனில் அதிக கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.</p>]]></content>
            <updated>2026-07-18T05:02:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கைக்கு தபாலில் வரும் போதைப்பொருள்; சுங்கத்துறை எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/narcotics-arriving-in-sri-lanka-via-post-customs-1784350180"></link>
            <id>https://canadamirror.com/article/narcotics-arriving-in-sri-lanka-via-post-customs-1784350180</id>
            <summary type="text">சர்வதேச தபால் உறைகள் ஊடாக நாட்டுக்குள் போதைப்பொருள் கடத்தப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக இலங்கை சுங்கத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.



கடத...</summary>
            <content type="html"><![CDATA[<p>சர்வதேச தபால் உறைகள் ஊடாக நாட்டுக்குள் போதைப்பொருள் கடத்தப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக இலங்கை சுங்கத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.</p><p>



கடத்தல்காரர்கள் பிடிபடாமல் இருப்பதற்காக, அதிக எண்ணிக்கையிலான சிறிய தபால் உறைகளைப் பயன்படுத்தி போதைப்பொருட்களை நாட்டுக்குள் அனுப்பும் முறையை கையாளுவதாக சுங்கத்துறை தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e9d13bfe-2e33-4a42-866d-eb9aede0e97a/26-6a5b05e600b9c.webp' /></p><h2>&nbsp;83.2 கிலோகிராம் போதைப்பொருட்கள் பறிமுதல்</h2><p>
</p><p>


கடந்த ஜூன் மாதம் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட நான்கு விசேட நடவடிக்கைகள் மற்றும் ஒன்பது தபால் உறைகள் மீதான சோதனைகளின் மூலம், மொத்தம் 83.2 கிலோகிராம் போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
</p><p>


தினசரி அதிகளவிலான சர்வதேச தபால் பொதிகள் நாட்டிற்கு வருவதால் அனைத்தையும் முழுமையாக பரிசோதிக்க இயலாத சூழல் காணப்படுவதாகவும், எனவே சந்தேகத்திற்கிடமான பொதிகளை அடையாளம் காண நவீன ஆய்வுக் கருவி தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுவதாகவும் சுங்கத்துறை குறிப்பிட்டுள்ளது.</p><p></p><p>



குறிப்பாக தாய்லாந்திலிருந்து ‘குஷ்’ வகை போதைப்பொருள் அடங்கிய தபால் உறைகள் அதிகளவில் வருவதை அதிகாரிகள் அவதானித்துள்ளனர்.
</p><p>


தனித்தனி உறைகளில் அனுப்பப்படும் போதைப்பொருளின் அளவு குறைவாக இருந்தாலும், அவை இறுதியில் பயனாளிகளை சென்றடைந்து சமூகத்தில் பாரிய பாதிப்பை ஏற்படுத்துவதாக சுங்கத்துறை பேச்சாளர் சந்தன புஞ்சிஹேவா எச்சரித்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-07-18T04:57:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பகுதியில் பொலிஸ் உயரதிகாரி உயிரை பறித்த சம்பவம் ; இரவில் நடந்த அசம்பாவிதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/senior-police-officer-killed-in-tamil-area-1784350023"></link>
            <id>https://jvpnews.com/article/senior-police-officer-killed-in-tamil-area-1784350023</id>
            <summary type="text">வவுனியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இரட்டப்பெரியகுளம் - வவுனியா வீதியில் நேற்று (17) இரவு இடம்பெற்ற வீதி விபத்தில் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் பரிதாபமாக உயிரி...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">வவுனியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இரட்டப்பெரியகுளம் - வவுனியா வீதியில் நேற்று (17) இரவு இடம்பெற்ற வீதி விபத்தில் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.</p><p style="text-align: justify; ">

வவுனியா வீதியில் 16 ஆம் ஒழுங்கைக்கு அருகில், இரட்டை பெரியகுளம் நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று, வீதியின் இடதுபுறமாக நிறுத்தப்பட்டிருந்த டிப்பர் ரக லொறியொன்றுடன் பலமாக மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b55c34d2-95da-49c9-910d-080bcea81e24/26-6a5b05496e98c.webp' /></p><h2 style="text-align: justify; ">மேலதிக விசாரணை</h2><p style="text-align: justify; ">

இவ்விபத்தில் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றவர் பலத்த காயங்களுக்குள்ளான நிலையில், உடனடியாக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.</p><p style="text-align: justify; "> எனினும், அவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படும் வழியிலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
இவ்வாறு விபத்தில் உயிரிழந்தவர் மாத்தளை பகுதியைச் சேர்ந்த 45 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர் வவுனியா பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த பொலிஸ் சார்ஜன்ட் என்பதும் தெரியவந்துள்ளது.
</p><p style="text-align: justify; ">

மேலும், இவ்விபத்துத் தொடர்பாக வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-07-18T04:47:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[செம்மணி மனிதப் புதைகுழியைப் பார்வையிட வரவுள்ள ஐரோப்பியத் தூதுவர் குழு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/european-delegation-to-visit-chemmani-mass-grave-1784349818"></link>
            <id>https://tamilwin.com/article/european-delegation-to-visit-chemmani-mass-grave-1784349818</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் - செம்மணிப் பகுதியில் உள்ள மனிதப் புதைகுழியைப் பார்வையிட நான்கு
ஐரோப்பிய நாடுகளினதும் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தினதும் தூதுவர்கள் குழு இல...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் - செம்மணிப் பகுதியில் உள்ள மனிதப் புதைகுழியைப் பார்வையிட நான்கு
ஐரோப்பிய நாடுகளினதும் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தினதும் தூதுவர்கள் குழு இலங்கை
வருகை தரவுள்ளது.
</p><p>
இதற்கமைய, எதிர்வரும் 22 ஆம் திகதி புதன்கிழமை பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, நெதர்லாந்து
மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றின் தூதுவர்களே செம்மணி மனிதப்
புதைகுழியைப் பார்வையிடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2> 

விசேட கலந்துரையாடல்</h2><p>
யாழ்ப்பாணத்துக்கு எதிர்வரும் 21 ஆம் திகதி வருகை தரும் மேற்படி குழுவினர், 22
ஆம் திகதி செம்மணி மனிதப் புதைகுழியைப் பார்வையிடுவதற்கு யாழ்ப்பாணம் நீதிவான்
நீதிமன்றத்தின் அனுமதி கோரி விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c3c6cbb1-6309-4d17-9e54-b788e0ef95af/26-6a5b047c0e01b.webp' /></p><p>
</p><p>
இதேவேளை, மேற்படி குழுவினர் யாழ்ப்பாணத்தில் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள்
மற்றும் சிவில் செயற்பாட்டாளர்களையும் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp; &nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-18T04:44:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[முதல் நாளிலேயே தெறிக்கும் வசூல் வேட்டை நடத்திய The Odyssey படம்... அடேங்கப்பா செம வசூல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/the-odyssey-movie-box-office-details-1784347235"></link>
            <id>https://cineulagam.com/article/the-odyssey-movie-box-office-details-1784347235</id>
            <summary type="text">The Odysseyஹாலிவுட் படங்களுக்கு என்று தமிழகத்தில் தனி ரசிகர் கூட்டம் உள்ளது. அதிலும் கிறிஸ்டோபர் நோலன் என்ற இயக்குனர் பெயரை கேட்டாலே மக்கள் எந்த ஒரு ய...</summary>
            <content type="html"><![CDATA[<h2>The Odyssey</h2><p>ஹாலிவுட் படங்களுக்கு என்று தமிழகத்தில் தனி ரசிகர் கூட்டம் உள்ளது. </p><p>அதிலும் கிறிஸ்டோபர் நோலன் என்ற இயக்குனர் பெயரை கேட்டாலே மக்கள் எந்த ஒரு யோசனையும் இல்லாமல் அவரது படத்தை பார்ப்பார்கள். அவரது இயக்கத்தில் மேட் டாமன், டாம் ஹாலண்ட், அன்ன ஹதாவே என பலர் நடிக்க தி ஒடிசி என்ற படம் தயாராகியுள்ளது. </p><p>அமெரிக்கா மற்றும் உலக நாடுகளில் வெளியாகியுள்ள இப்படம் இந்தியாவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகியுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fd71cf21-3a41-4fd3-9b4e-deae7496772d/26-6a5afe57a297b.webp' /></p><h2>பாக்ஸ் ஆபிஸ்</h2><p>இந்திய படங்களுக்கு இணையாக ஹாலிவுட் படங்களுக்கு வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் நேற்று (ஜுலை 17) வெளியான தி ஒடிவி படத்திற்கு உலகம் முழுவதும் அமோக வரவேற்பு கிடைத்திருக்கிறது.</p><p>இப்படம் முதல் நாளில் மட்டுமே உலகம் முழுவதும் ரூ. 800 கோடிக்கு மேல் வசூல் வேட்டை செய்துள்ளதாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f89b46a6-7754-4b87-8e1c-df048141198e/26-6a5afe5682eb1.webp' /></p>]]></content>
            <updated>2026-07-18T04:40:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நோர்வேயில் பயங்கர தீ விபத்து; 100-க்கும் மேற்பட்ட வீடுகள் தீக்கிரை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/massive-fire-in-norway-over-100-homes-destroyed-1784349720"></link>
            <id>https://canadamirror.com/article/massive-fire-in-norway-over-100-homes-destroyed-1784349720</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;தெற்கு நோர்வேயின் டிராஃமென் (Drammen) நகருக்கு அருகில் நேற்று (17) ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் தீக்கிரையாகியு...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;தெற்கு நோர்வேயின் டிராஃமென் (Drammen) நகருக்கு அருகில் நேற்று (17) ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் தீக்கிரையாகியுள்ளதாக மீட்புப் படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். </p><p>

பலத்த காற்றுக்கு மத்தியில் தீயைக் கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்கள் கடுமையாகப் போராடி வருகின்றனர். 

ஒஸ்லோவிற்கு (Oslo) மேற்கே சுமார் 50 கி.மீ தொலைவில் அமைந்துள்ள இந்த குடியிருப்புகள் உள்ள பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தினால் அப்பகுதி முழுவதும் அடர்ந்த கரும்புகை சூழ்ந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8b727bce-65fb-4447-9f5a-8d3c4381a2aa/26-6a5b041a6edb6.webp' /></p><p> 

எனினும், இந்த விபத்தில் எவரும் காயமடைந்ததாகவோ அல்லது காணாமல் போனதாகவோ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. </p><p>

தீயை அணைக்கும் பணியில் 60-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளதுடன், தீயைக் கட்டுப்படுத்துவதற்காக ஹெலிகொப்டர்கள் மூலம் தண்ணீரும் ஊற்றப்பட்டு வருகின்றது.</p><p> 

தீ தொடர்ந்து எரிந்து வருவதுடன், அது அருகிலுள்ள காட்டுப் பகுதிக்கும் பரவியதால், நூற்றுக்கணக்கான மக்களை பொலிஸார் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றியுள்ளனர். 

இந்த தீ விபத்து எங்கு, எப்படித் தொடங்கியது என்பது குறித்த காரணங்கள் உடனடியாகத் தெரியவரவில்லை.</p>]]></content>
            <updated>2026-07-18T04:40:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[வறண்ட முகத்தை ஈரப்பதத்துடன் மாற்ற உதவும் பேஸ்பேக்.., எப்படி தயாரிப்பது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/homemade-face-packs-for-dry-skin-in-tamil-1784349413"></link>
            <id>https://news.lankasri.com/article/homemade-face-packs-for-dry-skin-in-tamil-1784349413</id>
            <summary type="text">வெயில் காலத்தில் சருமத்தில் பல பிரச்சனைகள் வந்தடைகின்றன.

அதிகப்படியான சூரிய கதிர்வீச்சால் பிக்மண்டேஷன், கரும்புள்ளிகள், வறண்ட சருமம் போன்ற பாதிப்பு...</summary>
            <content type="html"><![CDATA[<p>வெயில் காலத்தில் சருமத்தில் பல பிரச்சனைகள் வந்தடைகின்றன.
</p><p>
அதிகப்படியான சூரிய கதிர்வீச்சால் பிக்மண்டேஷன், கரும்புள்ளிகள், வறண்ட சருமம் போன்ற பாதிப்புகளால் நமது உடல் கருப்பாக மாறிவிடுகின்றன. </p><p>அதேபோல், முகத்தில் ஏற்படும் வறண்ட சருமம் என்பது சருமத்தில் ஈரப்பதம் அல்லது எண்ணெய் பசை குறையும் போது உண்டாகிறது.</p><p> </p><p></p><p>இது தோல் இறுக்கம், செதில்களாக உரிதல் மற்றும் அரிப்பு போன்றவற்றை ஏற்படுத்தும்.&nbsp;</p><p>அந்தவகையில், முகம் எப்போதும் ஈரப்பதத்துடன் இருக்க உதவும் பேஸ்பேக்கை எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம்.&nbsp;</p><h2>1. தேவையான பொருட்கள்
</h2><ul><li>வாழைப்பழம்- 1</li><li>
தேன்- 1 ஸ்பூன்</li></ul><h2>எப்படி பயன்படுத்துவது?
</h2><p>முதலில் ஒரு கிண்ணத்தில் பழுத்த வாழைப்பழம் சேர்த்து நன்கு மசித்துக்கொள்ளவும்.
</p><p>
பின் இதில் தேன் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f09714e5-a147-43ad-9dd3-5c66de009f57/26-6a5b0396458b2.webp' /></p><p>பின்பு இதனை முகத்தில் தடவி, 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
</p><p>
இதற்கடுத்து குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
</p><h2>
2. தேவையான பொருட்கள்
</h2><ul><li>பால்- 3 ஸ்பூன்
</li><li>தேன்- 1 ஸ்பூன்
</li></ul><h2>
எப்படி பயன்படுத்துவது?</h2><p>
முதலில் ஒரு கிண்ணத்தில் பால் மற்றும் தேன் சேர்த்து நன்கு கலந்துகொள்ளவேண்டும்.</p><p></p><p>

பின் அதை முகத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து, 10-15 நிமிடம் ஊற வைத்து பின்பு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.</p><p>

இதனை வாரத்திற்கு ஒரு முறை என தொடர்ந்து பயன்படுத்தி வர வறண்டு சருமம் ஈரப்பதத்துடன் இருக்கும்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"> WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-18T04:40:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[போதைப்பொருள் மாத்திரைகளை விழுங்கிய 54 வயது வெளிநாட்டு பெண் - கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/54-year-old-foreign-woman-who-swallowed-drug-pills-1784349167"></link>
            <id>https://tamilwin.com/article/54-year-old-foreign-woman-who-swallowed-drug-pills-1784349167</id>
            <summary type="text">கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில், 10 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள 237 கிராம் கொக்கைன் போதைப்பொருள் வைத்திருந்த பெண்ணொருவர் சுங்க போத...</summary>
            <content type="html"><![CDATA[<p>கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில், 10 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள 237 கிராம் கொக்கைன் போதைப்பொருள் வைத்திருந்த பெண்ணொருவர் சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப்பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p> 


அங்கோலாவை சேர்ந்த 54 வயது பெண்ணொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
அத்துடன் சந்தேக நபர், அங்கோலாவிலிருந்து எத்தியோப்பியாவின் அடிஸ் அபாபாவிற்கு வந்து, அங்கிருந்து கத்தார் நாட்டின் தோஹா வழியாக இலங்கைக்கு வந்துள்ளார் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.</p><p></p><h2>

14 கொக்கைன் மாத்திரைகள் மீட்பு</h2><p>
விமானத்திலிருந்து இறங்கிய பின்னர், அவர் சக்கர நாற்காலியில் விமான நிலைய முனையத்திற்குச் சென்றுள்ளார். அப்போது குறித்த பெண்ணின் நடத்தையில் சந்தேகித்த சுங்க அதிகாரிகள் சோதனை நடவடிக்கையில் ஈடுப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2559b9db-a9a7-4e2c-8f5e-f750544f8e51/26-6a5b02453137f.webp' /></p><p> 

இதன்போது, 14 கொக்கைன் போதைப்பொருள் மாத்திரைகள் மீட்கப்பட்டுள்ளன.
</p><p>
மேலும், பல போதைப்பொருள் மாத்திரைகளை விழுங்கியதாகவும் அந்தபெண் சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு அதிகாரிகளிடம் ஒப்புக்கொண்டுள்ளார்.
</p><p>
இந்தச் சம்பவம் தொடர்பில் சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-18T04:34:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை : எடுக்கப்படவுள்ள நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/no-confidence-motion-against-the-justice-minister-1784346792"></link>
            <id>https://ibctamil.com/article/no-confidence-motion-against-the-justice-minister-1784346792</id>
            <summary type="text">நீர்கொழும்பு சிறைச்சாலை விவகாரம் குறித்து நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவிற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை அடுத்த வாரம் சபாநாயகரிடம் ஒப்படைக்க ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீர்கொழும்பு சிறைச்சாலை விவகாரம் குறித்து நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவிற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை அடுத்த வாரம் சபாநாயகரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா தெரிவித்துள்ளார். </p><p>கடந்த சில தினங்களுக்கு முன்னர் நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்ற நிலைமையின் காரணமாக உயிரிழந்த சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் கைதிகளின் பாதுகாப்பு குறித்த தனது பொறுப்பையும் கடமையையும் நிறைவேற்றத் தவறியதன் காரணமாக, அமைச்சருக்கு எதிராக இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையை சமர்ப்பிக்க எதிர்க்கட்சி தீர்மானித்துள்ளது. </p><p>

இதற்கமைய, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கடந்த 10ஆம் திகதி நாடாளுமன்றத்தில் கையெழுத்திட்டனர்.</p><p></p><h2>ஹரிணி அமரசூரியவிற்கு எதிரான பிரேரணை</h2><p>இதேவேளை, தரமற்ற நிலக்கரி சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு, வலுசக்தி அமைச்சராக செயற்பட்ட குமார ஜயகொடிக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்றைக் கொண்டு வரவும் எதிர்க்கட்சிகள் அண்மையில் நடவடிக்கை எடுத்திருந்தன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/051d4527-ab0f-4de3-ac3e-0b2b92c72079/26-6a5b00fc5a988.webp' /></p><p>

ஏப்ரல் 10ஆம் திகதி அது தொடர்பான விவாதம் நாடாளுமன்றத்தில் நடைபெற்றதுடன், அதற்கமைய அமைச்சருக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை 104 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டது.</p><p> 

அங்கு குறித்த பிரேரணைக்கு எதிராக 153 வாக்குகளும், ஆதரவாக 49 வாக்குகளும் கிடைத்தன. 

மேலும், கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூரியவிற்கு எதிராகவும் கடந்த ஜனவரி மாதம் நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்றைக் கொண்டு வருவதற்கு எதிர்க்கட்சிகள் தயாராகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-18T04:34:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[அய்யனார் துணை நிலாவின் அழகிய சேலை புகைப்படங்கள்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/ayyanar-thunai-nila-madhumitha-recent-photos-1784349185"></link>
            <id>https://viduppu.com/article/ayyanar-thunai-nila-madhumitha-recent-photos-1784349185</id>
            <summary type="text">அய்யனார் துணைவிஜய் தொலைக்காட்சியில் மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்து வரும் சீரியல்களில் ஒன்று தான் அய்யனார் துணை. இந்த சீரியலில் வரும் அனைத்து கத...</summary>
            <content type="html"><![CDATA[<h2>அய்யனார் துணை</h2><p>விஜய் தொலைக்காட்சியில் மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்து வரும் சீரியல்களில் ஒன்று தான் அய்யனார் துணை. இந்த சீரியலில் வரும் அனைத்து கதாபாத்திரங்களுக்கும் தனி ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/395ec6b3-a317-4c96-8511-c26f1543c873/26-6a5b0206f3970.webp' /></p><p> அதிலும் ஹீரோயினாக நடிக்க்கு நிலா ரோலில் மதுமிதாவிற்கு எக்கச்சக்க வரவேற்பு தான். எதிர்நீச்சல் சீரியலில் நடிக்கும்போது அவருக்கான ரசிகர்கள் கொண்டாடிய நிலையில், அய்யனார் துணை சீரியலிலும் மதுமிதாவை கொண்டாடி வருகிறார்கள். </p><p>இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் மதுமிதா, சேலையில் எடுத்த க்யூட் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.</p>]]></content>
            <updated>2026-07-18T04:33:37+00:00</updated>
        </entry>
    </feed>
