<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-09-06T22:07:33+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹோர்முஸ் நீரிணையில் அமெரிக்க கப்பல் மீது ஈரான் அதிரடி தாக்குதல்! முற்றிலும் பொய்யானது என மறுத்த அமெரிக்கா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/total-lie-us-military-after-iran-claims-attack-1788721312"></link>
            <id>https://tamilwin.com/article/total-lie-us-military-after-iran-claims-attack-1788721312</id>
            <summary type="text">ஹோர்முஸ் நீரிணைக்குள் நுழைய முயன்ற அமெரிக்காவின் ஆளில்லா கடற்படைக் கப்பல் மீது தாக்குதல் நடத்தியதாக ஈரான் தெரிவித்துள்ளது. எனினும், இந்தக் கூற்றை அமெர...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹோர்முஸ் நீரிணைக்குள் நுழைய முயன்ற அமெரிக்காவின் ஆளில்லா கடற்படைக் கப்பல் மீது தாக்குதல் நடத்தியதாக ஈரான் தெரிவித்துள்ளது.</p><p> எனினும், இந்தக் கூற்றை அமெரிக்க இராணுவம் “முற்றிலும் பொய்யானது” என மறுத்துள்ளது.</p><h2>மோதல் தீவிரம்</h2><p>
</p><p>
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே மீண்டும் மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், அமெரிக்க இராணுவக் கப்பல்கள் மீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலுக்கு பதிலடியாக மூன்று ஈரானிய எண்ணெய்க் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.</p><p>

கடந்த பெப்ரவரி 28ஆம் திகதி அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஈரான் மீது தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து போர் ஆரம்பமானது. ஜூன் மாதம் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட போதிலும், இரு தரப்புக்கும் இடையே அவ்வப்போது மோதல்கள் தொடர்ந்தன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3d32cdfc-2a94-496a-a402-dd6ed709c0eb/26-6a9dbace501f2.webp' /></p><p> </p><p>ஒரு மாத கால இடைவெளிக்குப் பின்னர் கடந்த வாரம் மீண்டும் தாக்குதல்கள் ஆரம்பித்துள்ளன.

இதனால், உலகளாவிய எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு விநியோகத்திற்கு முக்கியமான ஹோர்முஸ் நீரிணை மீண்டும் மோதலின் முக்கிய மையமாகியுள்ளது. </p><p>தெற்கு ஈரான் மீது அமெரிக்கா நடத்திய குண்டுவீச்சில் இந்த வார ஆரம்பத்தில் குறைந்தது ஐந்து பேர் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>ஹோர்முஸ் நீரிணை&nbsp;</h2><p>

இதனிடையே, அமெரிக்கா ஹோர்முஸ் நீரிணை மீதான தாக்குதல்களுக்கு இராணுவ ரீதியாக பதிலளிப்பதுடன், ஈரானின் நிதிப் பரிவர்த்தனைகளைக் கையாளும் வெளிநாட்டு நிதி நிறுவனங்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
பல தசாப்தங்களாக பொருளாதாரத் தடைகளை எதிர்கொண்டுள்ள ஈரான், தனது எண்ணெயை சர்வதேச சந்தையில் விற்பனை செய்வதற்காக ‘நிழல் கப்பற்படை’ உள்ளிட்ட வழிகளைப் பயன்படுத்தி வருவதாக கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c382e105-b6ac-4d9a-95a3-b8931bc095ba/26-6a9dbacf0bef9.webp' /></p><p>
</p><p>
மேலும், போருக்கு முக்கிய காரணமான ஈரானின் அணுசக்தித் திட்டம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் ஜூன் மாதத்தில் அமெரிக்கா–ஈரான் புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்குப் பின்னர் முறிவடைந்தன.
</p><p>
ஈரான் அணு ஆயுதப் பரவல் தடுப்பு கடமைகளை நிறைவேற்றவில்லை எனக் கூறி, அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி ஈரானை ஐ.நா. பாதுகாப்புச் சபைக்கு பரிந்துரைக்க முயற்சித்து வருவதாக இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
</p><p>
இந்த நிலையில், ஹோர்முஸ் நீரிணையின் முக்கியத்துவத்தை பயன்படுத்தி அமெரிக்கா மற்றும் மேற்குலக நாடுகளுக்கு அழுத்தம் கொடுப்பதை ஈரான் தனது முக்கிய உத்தியாக முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-06T22:02:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[லெபனான் மீது இஸ்ரேல் சரமாரி தாக்குதல் ; பெண்கள் உட்பட 4 பேர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/israel-launches-barrage-attacks-lebanon-4-killed-1788731536"></link>
            <id>https://canadamirror.com/article/israel-launches-barrage-attacks-lebanon-4-killed-1788731536</id>
            <summary type="text">தெற்கு லெபனானின் நபதியே மாவட்டத்தில் இஸ்ரேல் இன்று (06) காலை முதல் நடத்திய வான்வழி மற்றும் பீரங்கித் தாக்குதல்களில் குறைந்தது நான்கு பேர் உயிரிழந்துள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>தெற்கு லெபனானின் நபதியே மாவட்டத்தில் இஸ்ரேல் இன்று (06) காலை முதல் நடத்திய வான்வழி மற்றும் பீரங்கித் தாக்குதல்களில் குறைந்தது நான்கு பேர் உயிரிழந்துள்ளதுடன், பலர் காயமடைந்துள்ளதாக லெபனான் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
</p><p>
நபதியே அல் பெவ்கா பகுதியில் இருவரும், அரப் சலீம் நகரில் இரு பெண்களும் உயிரிழந்துள்ளனர். </p><p>அரப் சலீம் பகுதியில் இரு சிறுமிகள் உட்பட ஆறு பேரும், நபதியே அல் ரஹ்பத் பகுதியில் எட்டு பேரும், கபார் ரம்மான் பகுதியில் நான்கு பெண்களும் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fde70c49-85d9-4b69-8358-c2a1429c1bfa/26-6a9de0917e48d.webp' /></p><p>இஸ்ரேலின் தாக்குதல்களால் தொன்மையான கட்டிடங்கள், முன்னாள் மேயரின் இல்லம் மற்றும் பூங்கா உள்ளிட்ட பல இடங்கள் கடுமையாக சேதமடைந்துள்ளன. </p><p>பயன்பாட்டில் இல்லாமல் இருந்த மருத்துவமனை கட்டிடமொன்றும் தாக்குதலில் முற்றாக அழிக்கப்பட்டதாக லெபனான் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.</p><p>மருத்துவமனை மீது நடத்தப்பட்ட தாக்குதல் சர்வதேச மனிதநேயச் சட்டங்களை மீறும் செயல் எனக் குறிப்பிட்டுள்ள லெபனான் சுகாதார அமைச்சகம், அதற்கு கடும் கண்டனத்தையும் வெளியிட்டுள்ளது. </p><p>இதேவேளை, நபதியேவில் அமைந்துள்ள லெபனான் நிதி அமைச்சகத்தின் பிராந்திய அலுவலகக் கட்டிடமும் பீரங்கித் தாக்குதலில் பலத்த சேதமடைந்துள்ளது.
</p><p>
கடந்த ஜூன் மாதம் அமெரிக்காவின் மத்தியஸ்தத்தில் ஏற்படுத்தப்பட்ட பாதுகாப்பு மற்றும் போர்நிறுத்த ஏற்பாடுகளுக்கு மத்தியில் இந்தத் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளதாக லெபனான் தரப்பு தெரிவித்துள்ளது.
</p><p>
எனினும், தெற்கு லெபனானில் தமது பாதுகாப்பு மண்டலத்தை இலக்கு வைத்து ஹிஸ்புல்லா அமைப்பு வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட இரண்டு டிரோன்களை ஏவியதாக இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e34a2c53-31d3-4344-be40-1cac21048fe3/26-6a9de0922fb9c.webp' /></p><p>இது போர்நிறுத்த ஒப்பந்தத்தின் மீறல் எனக் குறிப்பிட்டுள்ள இஸ்ரேல் இராணுவம், அதற்குப் பதிலடியாகவே தெற்கு லெபனானில் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக தெரிவித்துள்ளது.</p><p>

இந்நிலையில், தாக்குதல்கள் குறித்து கருத்து வெளியிட்ட லெபனான் ஜனாதிபதி ஜோசப் அவுன், அரசு நிறுவனங்கள் மற்றும் மருத்துவமனைகளை இலக்குவைத்து இஸ்ரேல் மேற்கொள்ளும் தாக்குதல்கள் ஆபத்தான போக்கை வெளிப்படுத்துவதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.</p><p>

மேலும், அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச சமூகம் உடனடியாக தலையிட்டு இஸ்ரேலின் தாக்குதல்களைத் தடுத்து, லெபனானில் நிலவும் பாதுகாப்பு நிலைமை மேலும் மோசமடைவதைத் தடுக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி ஜோசப் அவுன் கோரிக்கை விடுத்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-09-06T21:52:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[தாக்கினால் பேரழிவு : ஈரானுக்கு அமெரிக்கா விடுத்துள்ள கடும் எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/iranian-attack-on-us-warships-us-warns-1788726126"></link>
            <id>https://ibctamil.com/article/iranian-attack-on-us-warships-us-warns-1788726126</id>
            <summary type="text">அமெரிக்க கடற்படை கப்பல்கள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது.


இதற்கு பதிலடியாக ஈரானின் 3 எண்ணெய் கப்பல்களை அமெரிக்க இராணுவம் தாக்கி தகர்த்து ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்க கடற்படை கப்பல்கள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது.


இதற்கு பதிலடியாக ஈரானின் 3 எண்ணெய் கப்பல்களை அமெரிக்க இராணுவம் தாக்கி தகர்த்து உள்ளது. </p><p>இந்த தாக்குதல்கள் தொடர்பான காணொளியை அமெரிக்க இராணுவம் வெளியிட்டு உள்ளது.


இந்தநிலையில் ஈரானுக்கு அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் பீட் ஹெக்செத் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.</p><p>அவர் தனது எச்சரிக்கையில் தெரிவித்துள்ளதாவது,</p><h2>அமெரிக்கா அழித்து மூழ்கடிக்கும்</h2><p>
</p><p>
அமெரிக்க கடற்படைக் கப்பல்களை ஈரான் தாக்கினால் அந்நாட்டின் எண்ணெய் கப்பல்களை அமெரிக்கா அழித்து மூழ்கடிக்கும். அவர்கள் செய்ய வேண்டியதெல்லாம் அமெரிக்க கடற்படையை நோக்கிச் சுடாமல் இருப்பது தான் அவர்களுக்கு நல்லது என்றார்.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">“Let the message to the IRGC be clear: If you shoot at two of our ships, we will impose an even higher economic cost —taking out three of yours. We will not hesitate to defend American forces, and if necessary, destroy Iran’s limited and exposed oil fleet.” — Adm. Brad Cooper,… <a href="https://t.co/UGGcSGsUtd">pic.twitter.com/UGGcSGsUtd</a></p>&mdash; U.S. Central Command (@CENTCOM) <a href="https://x.com/CENTCOM/status/2096247889366290840?ref_src=twsrc%5Etfw">September 5, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>
</p><p>


அதேபோல் அமெரிக்கக் கப்பல்களைத் தாக்கினால் ஈரான் அதிக பொருளாதார இழப்பைச் சந்திக்கும் என்று அமெரிக்க மத்திய கட்டளைத் தளபதி அட்மிரல் பிராட் கூப்பர் தெரிவித்து உள்ளார்.&nbsp; &nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p> &nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-09-06T21:50:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரணிலின் பொறிக்குள் சிக்காமல் லாவகமாக தப்பிய சஜித்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sajith-narrowly-escaped-ranils-trap-1788727391"></link>
            <id>https://ibctamil.com/article/sajith-narrowly-escaped-ranils-trap-1788727391</id>
            <summary type="text">&amp;nbsp;கடந்த வாரம், ஐக்கிய தேசியக் கட்சி (UNP), தனது 80வது ஆண்டுவிழாவை முன்னிட்டு சிறிகொத்தா கட்சித் தலைமையகத்தில் தொடர்ச்சியான சமய நிகழ்ச்சிகளை ஏற்பாட...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கடந்த வாரம், ஐக்கிய தேசியக் கட்சி (UNP), தனது 80வது ஆண்டுவிழாவை முன்னிட்டு சிறிகொத்தா கட்சித் தலைமையகத்தில் தொடர்ச்சியான சமய நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து, ஒரு வித்தியாசமான அரசியல் வியூகத்தில் ஈடுபட்டது.</p><p>

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் நாமல் ராஜபக்ச ஆகியோரை இந்த நிகழ்விற்கு வரவழைத்து, இதை நாட்டின் முன் ஒரு பெரிய அரசியல் ஒற்றுமையின் தொடக்கமாக சித்தரிப்பதே ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர்களின் முதன்மை நோக்கமாக இருந்தது. குறிப்பாக, சஜித் பிரேமதாசவை எப்படியாவது இந்த நிகழ்வில் பங்கேற்க வைப்பதே அவர்களின் முக்கிய குறிக்கோளாக இருந்தது.</p><h2>ஹரினிடம் ஒப்படைக்கப்பட்ட பொறுப்பு </h2><p>

ரணில் விக்ரமசிங்க இந்த அமைப்புப் பணியை ஹரின் பெர்னாண்டோவிடம் ஒப்படைத்தார்,</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bb228dbd-7663-4222-add4-b9f18f69959c/26-6a9ddf75b6e2c.webp' /></p><p> </p><p>அவர் நிகழ்வின் அமைப்புப் பணிகளைப் பொறுப்பேற்றார்.

 பொதுவாக எந்தவொரு அமைப்புச் செயல்பாட்டிற்கும் பகிரங்கமாக முன்வரும் ஹரின், இவ்விதமும் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆண்டுவிழா நடவடிக்கைகளைத் திரைமறைவிலிருந்து ஏற்பாடு செய்வதை உறுதிசெய்தார். தற்போதைய அரசியல் சூழலில் சில கட்சிகளால் குறிவைக்கப்படுவோம் என்ற அச்சத்தின் காரணமாக, அவர் இவ்வாறு பகிரங்கப்படுத்தலைத் தவிர்த்தார்.</p><p></p><h2>சஜித் பிரேமதாசவின் பதில்</h2><p>

 நிகழ்ச்சிக்கு சஜித்தை அழைத்து ஹரின் பெர்னாண்டோ அனுப்பிய பல செய்திகளுக்கு சஜித் பதிலளிக்கவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/88473460-336e-487a-97c8-6876aeeca032/26-6a9ddf76894d6.webp' /></p><p>
</p><p>
 பின்னர், ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளர் சாகல ரத்நாயக்க சஜித்தை அழைத்தார். அதற்குப் பதிலளித்த சஜித், கொழும்புக்கு வெளியே பல முக்கியப் பணிகளில் ஈடுபட்டிருந்ததால் தன்னால் கலந்துகொள்ள இயலாது என்று கூறினார். அதற்குப் பதிலாக, கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார பங்கேற்க ஏற்பாடு செய்வதாக அவர் கூறினார்.</p><h2>ரணில் விக்ரமசிங்கவின் அழைப்பு</h2><p> பின்னர், ரணில் விக்ரமசிங்கவும் சஜித்தை தனிப்பட்ட முறையில் தொலைபேசியில் அழைத்து மாநாட்டில் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுத்தார். ஆனால், சஜித் அந்த அழைப்பை மறுத்து, சகாலாவுக்கு அளித்த அதே பதிலை ரணிலுக்கும் அளித்தார்.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-06T21:47:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[பங்களாதேஷில் வாழ்க்கைச் செலவு உயர்வுக்கு எதிராகப் பிரமாண்ட போராட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/massive-protest-in-bangladesh-1788728109"></link>
            <id>https://tamilwin.com/article/massive-protest-in-bangladesh-1788728109</id>
            <summary type="text">பங்களாதேஷில் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவினங்கள் மற்றும் அத்தியாவசியப்
பொருட்களின் தட்டுப்பாட்டிற்குத் தீர்வு காணக் கோரி, அந்நாட்டின் தலைநகர்
டா...</summary>
            <content type="html"><![CDATA[<p>பங்களாதேஷில் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவினங்கள் மற்றும் அத்தியாவசியப்
பொருட்களின் தட்டுப்பாட்டிற்குத் தீர்வு காணக் கோரி, அந்நாட்டின் தலைநகர்
டாக்காவில் ஆயிரக்கணக்கான மக்கள் வீதிகளிலிறங்கிப் பிரம்மாண்ட போராட்டமொன்றை
முன்னெடுத்துள்ளனர்.</p><p>

பங்களாதேஷில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களைத் தொடர்ந்து இடைக்கால நிர்வாகத்தை
வழிநடத்தி வரும் பிரதமர் தாரிக் ரஹ்மான் தலைமையிலான புதிய அரசாங்கம்
எதிர்கொள்ளும் முதலாவது மிகப்பெரிய மக்கள் போராட்டம் இதுவெனச்
சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><h2>அரசுக்கு நெருக்கடி</h2><p>
தலைநகர் டாக்காவில் திரண்ட போராட்டக்காரர்கள், நாட்டில் நிலவும் சமையல்
எரிவாயு, மின்சாரம் மற்றும் விவசாயத்திற்கான உரத் தட்டுப்பாடுகளை உடனடியாகத்
தீர்க்குமாறு அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்து முழக்கங்களை எழுப்பினர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8b1e58eb-7008-418b-befe-002e63a2202a/26-6a9dd7c479789.webp' /></p><p>
</p><p>
கடந்த சில மாதங்களாக அதிகரித்து வரும் பணவீக்கம் மற்றும் பொருளாதார
நெருக்கடிகள் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள
நிலையிலேயே இப் போராட்டம் வெடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
</p><p>
நிலைமையைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரவும், அத்தியாவசியப் பொருட்களின்
விநியோகத்தைச் சீரமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அரசாங்கத்
தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.</p>]]></content>
            <updated>2026-09-06T21:34:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானில் போர் கொடூரத்தின் சாட்சியாக மாறிய மினாப் பாடசாலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/iranian-school-100-students-died-beco-war-memorial-1788729524"></link>
            <id>https://canadamirror.com/article/iranian-school-100-students-died-beco-war-memorial-1788729524</id>
            <summary type="text">ஈரானில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்கள் ஆரம்பமான பெப்ரவரி 28ஆம் திகதி, தெற்கு ஈரானின் மினாப் நகரில் உள்ள ஷஜரேஹ் தய்யிபெஹ் (Shajareh Tay...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்கள் ஆரம்பமான பெப்ரவரி 28ஆம் திகதி, தெற்கு ஈரானின் மினாப் நகரில் உள்ள ஷஜரேஹ் தய்யிபெஹ் (Shajareh Tayyebeh) பாடசாலை மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் உயிரிழந்ததாக ஈரானிய அதிகாரிகள் தெரிவித்துள்ள நிலையில் தாக்குதலுக்குப் பின்னர் மூடப்பட்டிருந்த அந்தப் பாடசாலை தற்போது மாணவர்களின் நினைவுகளைப் பாதுகாக்கும் போர் நினைவிடமாக உருவெடுத்துள்ளது.


</p><p>இந்தத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தொடர்பாக பின்னர் வேறுபட்ட எண்ணிக்கைகள் வெளியாகியுள்ளன.</p><p> தாக்குதலுக்குப் பின்னர் மூடப்பட்டிருந்த அந்தப் பாடசாலை தற்போது மாணவர்களின் நினைவுகளைப் பாதுகாக்கும் போர் நினைவிடமாக உருவெடுத்துள்ளது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e4683858-2d7b-477c-b323-92b7594ec860/26-6a9dd8b641db9.webp' /></p><p>கடுமையாக சேதமடைந்த பாடசாலைக் கட்டிடத்தின் வகுப்பறைகள் இடிபாடுகளுடன் காணப்படும் நிலையில், உயிரிழந்த மாணவர்களின் புகைப்படங்கள் அங்கு வைக்கப்பட்டுள்ளன. </p><p>செப்டெம்பர் 5ஆம் திகதி அங்கு சென்றிருந்த பத்திரிகையாளர்கள், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் உள்ளிட்டோர் அமைதியாக அஞ்சலி செலுத்தியதைப் பதிவு செய்துள்ளனர். </p><p>பாடசாலையின் இடிபாடுகள் தற்போது அந்தத் தாக்குதலில் உயிரிழந்த சிறுவர்களின் நினைவுச் சின்னமாக மாறியுள்ளன. </p><p>“இந்தப் பாடசாலை இனி இயங்காது” எனத் தெரிவித்த ஹோர்மோஸ்கான் மாகாண ஆளுநர் முகமது அஷூரி தாசியானி, கட்டிடத்தை போர் அருங்காட்சியகம் மற்றும் நினைவிடமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். </p><p>இந்தச் சம்பவம் தொடர்பில் அமெரிக்கா அதிகாரப்பூர்வமாகத் தாக்குதலுக்கான பொறுப்பை ஏற்றுக்கொள்ளவில்லை. எனினும், அசோசியேட்டட் பிரஸ் மேற்கொண்ட ஆய்வில் குறைந்தது ஒரு அமெரிக்க ஏவுகணை பாடசாலையைத் தாக்கியதற்கான ஆதாரங்கள் கிடைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>இதனிடையே, பாடசாலைக்கு அருகில் உயிரிழந்தவர்களுக்காக தனியான கல்லறைப் பகுதியும் அமைக்கப்பட்டுள்ளதுடன், குடும்பத்தினர் அங்கு தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-09-06T21:19:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ashik</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை – இந்திய உறவில் முக்கிய நகர்வு! இலங்கை வருகிறார் இந்திய பாதுகாப்பு அமைச்சர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/indian-defence-minister-is-set-to-visit-sri-lanka-1788726207"></link>
            <id>https://tamilwin.com/article/indian-defence-minister-is-set-to-visit-sri-lanka-1788726207</id>
            <summary type="text">இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் செப்டம்பர் 08 முதல் 10ஆம் திகதி
வரை மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கைக்கு வருகை
தரவுள்ளா...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் செப்டம்பர் 08 முதல் 10ஆம் திகதி
வரை மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கைக்கு வருகை
தரவுள்ளார்.
</p><p>
இந்த விஜயத்தின் போது, இலங்கையின் தலைவர்களுடன் பல்வேறு முக்கிய விடயங்கள்
தொடர்பில் இந்திய பாதுகாப்பு அமைச்சர் கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளார்.</p><h2>&nbsp;பொருளாதார நெருக்கடி</h2><p>
</p><p>அத்துடன், கொழும்பில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர் மற்றும் இந்திய
புலம்பெயர் சமூகத்தினரையும் அவர் சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.
</p><p>
இந்த விஜயத்தில் பாதுகாப்பு அமைச்சு மற்றும் வெளிவிவகார அமைச்சின் சிரேஷ்ட
அதிகாரிகளை உள்ளடக்கிய உயர்மட்டக் குழுவொன்றுக்கும் ராஜ்நாத் சிங் தலைமை
தாங்கவுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/057f46ce-7f8f-431a-a679-fc887cd4d680/26-6a9dd08db90d1.webp' /></p><p>
</p><p>
இந்தியாவும் இலங்கையும் ஆழமான நாகரிக மற்றும் வரலாற்றுத் தொடர்புகளைக்
கொண்டுள்ளதுடன், பிராந்திய பாதுகாப்பு, பாதுகாப்புத்துறை, பொருளாதாரம்,
வர்த்தகம் மற்றும் மக்கள் உறவுகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பல்துறை
ஒத்துழைப்பைக் கொண்டுள்ளன.
</p><p>
இலங்கை பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்ட காலகட்டத்தில் இந்தியா வழங்கிய
உதவிகளும், 2025ஆம் ஆண்டு இலங்கையை தாக்கிய டிட்வா சூறாவளியின் பின்னர்
முதலாவது உதவிகளை வழங்கிய நாடுகளில் ஒன்றாக இந்தியா செயற்பட்டமையும் இரு
நாடுகளுக்கிடையிலான உறவுகளுக்கு மேலும் வலுசேர்த்தன.</p><h2>&nbsp;இலங்கை விஜயம்</h2><p>
</p><p>
இது இந்தியாவின் அண்டை நாடுகளுக்கு முதலிடம்’ (Neighbourhood First) என்ற
கொள்கை மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் ‘மஹாசாகர்’ (MAHASAGAR) தொலைநோக்குப் பார்வை — பிராந்தியங்களுக்கிடையிலான பாதுகாப்பு மற்றும்
வளர்ச்சிக்கான பரஸ்பர மற்றும் முழுமையான முன்னேற்றம் — ஆகியவற்றின் மீதான
இந்தியாவின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பை எடுத்துக்காட்டுவதாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b5e27bac-fd7b-42a6-80e9-8254fcc0c16d/26-6a9dd08ecab96.webp' /></p><p>

இந்திய பாதுகாப்பு அமைச்சரின் இலங்கை விஜயம், இரு நாடுகளுக்கிடையிலான
பாரம்பரியமான நட்புறவை மேலும் வலுப்படுத்துவதுடன், பரஸ்பர நன்மை பயக்கும்
பல்வேறு துறைகளில், குறிப்பாக கடல்சார் மற்றும் பாதுகாப்புத்துறை ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-06T20:47:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[வளைகுடா பகுதியில் எண்ணெய் கப்பல்கள் மீது தாக்குதல் ; அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/attack-gulf-oil-tankers-iran-issues-stern-warning-1788727231"></link>
            <id>https://canadamirror.com/article/attack-gulf-oil-tankers-iran-issues-stern-warning-1788727231</id>
            <summary type="text">மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான இராணுவ மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், ஈரானுடன் தொடர்புடைய மூன்று எண்ணெய் கப்பல்கள் மீது அமெரிக்கப் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான இராணுவ மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், ஈரானுடன் தொடர்புடைய மூன்று எண்ணெய் கப்பல்கள் மீது அமெரிக்கப் படைகள் தாக்குதல் நடத்தியுள்ளதாக அமெரிக்க மத்திய கட்டளை (CENTCOM) தெரிவித்துள்ளது.
</p><p>
கடந்த பெப்ரவரி 28ஆம் திகதி அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஈரான் மீது தாக்குதல்களை ஆரம்பித்ததைத் தொடர்ந்து, பிராந்தியத்தில் தொடர்ச்சியாக பதற்றம் நீடித்து வருகிறது. இடைக்கால அமைதி முயற்சிகள் இடம்பெற்ற போதிலும், அண்மைய நாட்களில் இருதரப்புக்கும் இடையே மீண்டும் தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e3c86cd2-48c1-4c9c-abec-2f0e3776eaa2/26-6a9dcfc21c117.webp' /></p><p> 
A
Anadolu Agency
+1

அமெரிக்க இராணுவத்தின் தகவலின்படி, ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) பிராந்திய கடற்பரப்பில் ரோந்தில் ஈடுபட்டிருந்த அமெரிக்க விமானந்தாங்கி போர்க்கப்பல் மற்றும் வழிகாட்டப்பட்ட ஏவுகணை நாசகாரி கப்பல் மீது பல ஏவுகணைகளை ஏவியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> அமெரிக்கக் கப்பல்கள் அந்தத் தாக்குதல்களைத் தவிர்த்ததுடன், அமெரிக்கப் படையினருக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை என CENTCOM கூறியுள்ளது.</p><p> 
U
U.S. Central Command

இதனைத் தொடர்ந்து, அமெரிக்கப் படைகள் ஈரானுடன் தொடர்புடைய மூன்று கச்சா எண்ணெய் கப்பல்களை இலக்காகக் கொண்டு தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
ஈரானின் முக்கிய எண்ணெய் ஏற்றுமதி மையமான கார்க் தீவுக்கு அப்பால் M/T Downy என்ற எண்ணெய் கப்பலும், ஜாஸ்க் அருகே M/T Stark 1 என்ற கப்பலும் தாக்கப்பட்டு செயலிழக்கச் செய்யப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. </p><p>அதேவேளை, ஓமன் வளைகுடாவில் பயணித்துக் கொண்டிருந்த M/T Kylo (Noxen) என்ற எண்ணெய் கப்பல் முற்றாக அழிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
U
U.S. Central Command
+1

மூன்றாவது கப்பல் அந்த நேரத்தில் எண்ணெய் ஏற்றாமல் வெறுமையாகப் பயணித்ததாகவும், தாக்குதலுக்கு முன்னர் அதன் பணியாளர்கள் கப்பலை விட்டு வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டதாகவும் அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது. </p><p>கார்க் தீவு அருகே தாக்கப்பட்ட கப்பலின் பணியாளர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக ஈரான் தரப்பிலான தகவல்களும் தெரிவிக்கின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f5c123df-2601-4c5c-a07e-6b9c2b3f4f65/26-6a9dcfc16a5c9.webp' /></p><p> 
T
The Washington Post

இந்த மூன்று கப்பல்களும் ஈரானின் சக்திவாய்ந்த புரட்சிகர காவல்படைக்கும் அதன் பிராந்திய கூட்டாளிகளுக்கும் நிதியளிக்கும் பல பில்லியன் டொலர் மதிப்பிலான ‘நிழல் வலையமைப்பின்’ ஒரு பகுதியாக இருந்ததாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.</p><p> 
U
U.S. Central Command

அமெரிக்க மத்திய கட்டளைத் தளபதி அட்மிரல் பிராட் கூப்பர், அமெரிக்கப் படைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் ஈரானின் எண்ணெய் கப்பல் படைக்கு எதிராக மேலும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார். 
U
U.S. Central Command

இந்நிலையில், அமெரிக்காவின் தாக்குதல்களை ஈரான் கடுமையாகக் கண்டித்துள்ளது.</p><p> ஈரானிய இராணுவம் வெளியிட்ட அறிக்கையில், தமது பாதுகாப்பு மற்றும் கப்பல்கள் மீதான தாக்குதல்கள் தொடர்ந்தால், அமெரிக்க இராணுவ இலக்குகளுக்கு எதிரான பதிலடி முன்னெப்போதையும் விட கடுமையாகவும் பரந்த அளவிலும் அமையும் என எச்சரித்துள்ளது.</p><p> 
T
The Washington Post

ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாபும், எதிர்காலத் தாக்குதல்களுக்கு ஈரான் வழங்கும் பதிலடி தொடர்பான விதிகள் மாறிவிட்டதாகத் தெரிவித்துள்ளார். </p><p>ஈரானின் நலன்களுக்கு எதிராக அமெரிக்கா தொடர்ந்து தாக்குதல் நடத்தினால், அதற்கு முன்னையதைவிட வேகமாகவும் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் வகையிலும் பதிலடி வழங்கப்படும் என அவர் எச்சரித்துள்ளார்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/73e3d483-4de3-422a-8164-f130c852a656/26-6a9dcfc0b4600.webp' /></p><p>R
Reuters

இதனிடையே, அமெரிக்கா – ஈரான் மோதல் தீவிரமடைந்துள்ளதால் உலகின் மிக முக்கியமான எண்ணெய் மற்றும் எரிவாயு போக்குவரத்து வழித்தடங்களில் ஒன்றான ஹோர்முஸ் நீரிணை தொடர்பான பதற்றமும் அதிகரித்துள்ளது.
</p><p>
உலகின் கணிசமான அளவு எண்ணெய் மற்றும் எரிவாயு இந்த நீரிணை ஊடாகவே கடத்தப்படுவதால், அங்கு கப்பல் போக்குவரத்து பாதிக்கப்படுவது உலகளாவிய எரிசக்தி விநியோகத்திலும் எரிபொருள் விலையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற அச்சம் அதிகரித்துள்ளது.</p><p> அண்மைய மோதல்களால் ஏற்கனவே எண்ணெய் சந்தையில் விலை உயர்வுக்கான அழுத்தம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன. </p><p>
R
Reuters
+1

இவ்வாறு அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான தாக்குதல்கள் கடல் வழித்தடங்களுக்கும் எண்ணெய் வர்த்தகத்திற்கும் விரிவடைந்து வருவதால், மத்திய கிழக்கில் மட்டுமன்றி உலகளாவிய பொருளாதாரத்திலும் இதன் தாக்கம் மேலும் அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p>]]></content>
            <updated>2026-09-06T20:40:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் இருந்து கப்பலில் இந்தியா சென்றவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/those-who-went-to-india-by-ship-were-sent-back-1788715051"></link>
            <id>https://ibctamil.com/article/those-who-went-to-india-by-ship-were-sent-back-1788715051</id>
            <summary type="text">காங்கேசன்துறை துறைமுகம் ஊடாக கப்பல் மூலம் இந்தியா சென்ற 13 பேர் மீண்டும்
காங்கேசன்துறை துறைமுகத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

காங்கேசன்துறை...</summary>
            <content type="html"><![CDATA[<p>காங்கேசன்துறை துறைமுகம் ஊடாக கப்பல் மூலம் இந்தியா சென்ற 13 பேர் மீண்டும்
காங்கேசன்துறை துறைமுகத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.</p><p>

காங்கேசன்துறை துறைமுகத்தில் இருந்து நாகபட்டினம் துறைமுகத்திற்கு கப்பல்
மூலம் சென்றவர்களில் குறித்த 13 பேர் மீது சந்தேகம் கொண்ட அதிகாரிகள்,
அவர்களிடம் நடத்திய விசாரணையின் போது முன்னுக்கு பின் முரணான தகவல்களை
வழங்கியமையால், அவர்களை மீண்டும் காங்கேசன்துறைக்கு திருப்பி அனுப்பியுள்ளனர்.</p><h2>குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால் கைது&nbsp;</h2><p>&nbsp;காங்கேசன்துறைக்கு திரும்பி வந்தவர்களை குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகள்
கைது செய்து மேலதிக சட்ட நடவடிக்கைக்காக காங்கேசதுறை காவல்துறையிடம்
ஒப்படைத்துள்ளனர்</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/da989345-4575-4733-b2f2-412d89b56560/26-6a9da218dcaaf.webp' /></p><p>
</p><p>
காங்கேசன்துறை காவல்துறையினர், 13 பேரையும் காவல் நிலையத்தில் தடுத்து வைத்து
மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-06T20:37:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[10 கைதிகளுடன் நாமல்! மோசமடையும் சூழல் - அநுரவின் அதிரடி பாய்ச்சல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-arrest-case-updates-1788724787"></link>
            <id>https://tamilwin.com/article/namal-arrest-case-updates-1788724787</id>
            <summary type="text">ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தொடர்பான லஞ்ச ஊழல் குற்றச்சாட்டின் கீழ் செப்டம்பர் 4 அன்று நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தொடர்பான லஞ்ச ஊழல் குற்றச்சாட்டின் கீழ் செப்டம்பர் 4 அன்று நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
</p><p>
 இந்த கைது நடவடிக்கை மட்டுமல்லாது, 2016-ல் தாக்கல் செய்யப்பட்ட கிரிஷ் குரூப் (Krrish Group) தொடர்பான 70 மில்லியன் ரூபா வழக்கு மற்றும் அம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பான வழக்குகள் உள்ளிட்ட நான்குக்கும் மேற்பட்ட வழக்குகள் அவர் மீது நிலுவையில் உள்ளன.
</p><p>
இந்த வழக்குகள் அனைத்தும் நல்லாட்சி காலத்தில் தாக்கல் செய்யப்பட்டவை என்றும், சட்டமா அதிபர் திணைக்களம் தற்போதும் அதன் பணிகளைத் தொடர்கிறது.

தற்போதைய சூழலில், நாமல் ராஜபக்சவுக்கு உடனடியாக பிணை கிடைப்பது கடினம் போன்று காணப்படுகின்றது.
</p><p>
இந்தநிலையில், நாமல் ராஜபக்ச சிறைச்சாலையில் 10 கைதிகளுடன் தங்கியிருக்கிறார்.அவருக்கு சிறைச்சாலைக்குள் எந்தவிதமான சிறப்புச் சலுகைகளும் வழங்கப்படவில்லை.</p><p>

மேலும், அவர் எந்தவிதமான நோய் பாதிப்புகளும் இன்றி நலமாக இருப்பதாக சிறைச்சாலை தரப்புகள் தெரிவிக்கின்றன. </p><p>

 இந்த விடயங்கள் தொடர்பில் எடுத்து வருகின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி...</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/tgSkYHLgmMQ" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-06T20:15:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[சைவசமயிகளின் தலைவராக தென்கயிலை ஆதீனம் தவத்திரு அகத்தியர் அடிகளார் தேர்வு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/meeting-of-heads-of-saiva-organizations-1788722533"></link>
            <id>https://ibctamil.com/article/meeting-of-heads-of-saiva-organizations-1788722533</id>
            <summary type="text">&amp;nbsp;வவுனியா அகிலாண்டேசுவரர் திருக்கோவிலில் இன்றைய தினம்(06) நடைபெற்ற வடக்கு கிழக்கு சைவ அமைப்புக்களின் தலைமைப் பிரதானிகளின் கூட்டம் தென்கயிலை ஆதீனம்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;வவுனியா அகிலாண்டேசுவரர் திருக்கோவிலில் இன்றைய தினம்(06) நடைபெற்ற வடக்கு கிழக்கு சைவ அமைப்புக்களின் தலைமைப் பிரதானிகளின் கூட்டம் தென்கயிலை ஆதீனம் தவத்திரு அகத்தியர் அடிகளாரை ஏகமனதாக சைவசமயிகளின் தலைவராக முன்மொழிந்து ஏற்றுக்கொண்டதுடன் அதனை சைவசமயிகளிடமும் இந்து கலாசார திணைக்களம் உட்பட அரச திணைக்களங்கள் அரச உயர் மட்டத்திற்கும் எடுத்து செல்வதெனத் தீர்மானிக்கப்பட்டது</p><p>இன்றைய கூட்டம் தென் கயிலை ஆதீனம் தவத்திரு அகத்தியர் அடிகளார் அருளாட்சி வகிக்க அகிலாணடேசுவரர் தலைமை அறங்காவலர் சிவத்திரு நவரட்ணராசா திருக்கோணேசுவர தலைமை அறங்காவலர் சட்டத்தரணி துசியந்தன் நயினை நாகபூசணி தலைமை அறங்காவலர் சிவத்திரு சரவணபவன் சைவ சமயப் பேரவை தலைவர் அகோரசிவம் உமையரசு சிவாச்சாரியார் கிழக்கு இந்து ஒன்றியத் தலைவர் முன்னாள் நடாளுமன்ற உறுப்பினர் சிவத்திரு யோகேசுவரன்
இலண்டன் கனகதுர்க்கை அறங்காவலர் மருத்துவர் பரமநாதன்
அகில இலங்கை சைவ மகா சபை பொதுச்செயலாளர் மருத்துவர் பரா. நந்தகுமார் அகில இலங்கைச் சிவமங்கையர் தலைவி சிவசகோதரி சோதிநாயகி அம்மையார் கிளிநொச்சி திருநெறிக்கழக தலைவர் சிவத்திரு சிவஞானசுந்தரம்
வவுனியா மாவட்ட சுத்தானந்த இந்து இளைஞர் கழக தலைவர் சிவத்திரு அமலன் சிவ சகோதரர்கள் சிவதொண்டர் சிவமங்கயர் மாவட்ப இணைப்பாளர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.</p><p>


</p><h2>தவத்திரு அகத்தியர் அடிகளார்&nbsp;</h2><p>யாழ்ப்பாணத்தை தலைமையாக் கொண்ட சிவகுரு ஆதீனம் , சைவ பரிபாலன சபை, சைவப்புலவர் சங்கம் மலையகத்தை தலைமையாக கொண்ட சிவசகோதரர் அமைப்பு கொழும்பை தலைமையமாக்
கொண்ட இலங்கை சைவநெறிக் கழகம் போன்ற நாடாளாவிய அமைப்புக்களும் பிராந்திய மற்றும் நாடாளாவிய சைவ சமய குருமார் ஒன்றியங்களும் 
அம்பாறை சைவநெறிக்கூடம் மட்டக்களப்பு சிவதொண்டர் கூட்டம் கல்முனை சைவ அறப்பணி நிலையம் ஆகிய மாவட்டநிலை சைவ அமைப்புக்களும் ஏற்கனவே தவத்திரு அகத்தியர் அடிகளாரை இலங்கை சைவசமயிகளின் தலைமையாக ஏற்க தங்கள் உறுதிப்பாட்டை வெளியிட்டு இருந்தன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ab6a8c73-467d-466b-ae0f-4f70e0677e24/26-6a9dc892e8977.webp' /></p><p>
</p><p>
அதே நேரம் கடந்த மாத இறுதியில் கொழும்பைத் தலைமையமாக் கொண்ட அகில இலங்கை இந்து மாமன்றம் தவத்திரு அகத்தியர் அடிகளாரை தலைவராக ஏற்கும் தம் நிலைப்பாட்டை வெளிப்படுத்தி இருந்தது

அதே போல வெற்றிடமாகவுள்ள நல்லை குருமகா சந்நிதான அருளாட்சியை ஏற்று வீற்றிருக்க தவத்திரு அக்த்தியர் அடிகளாருக்கு அனேக சைவ சமய அமைப்புக்களும் நல்லை ஆதீன நம்பிக்கை பொறுப்புச்சபையும் விடுத்த விண்ணப்த்தை தவத்திரு அகத்தியர் அடிகளார் ஏற்றுக் கொண்டிருப்பதால் அதனை நல்ல ஆதீன நம்பிக்கை பொறுப்புச்சபை விரைந்து அதனை செயற்படுத்த வேண்டும் என இணைய அமைப்புக்கள் வலியுறுத்தின.
</p><p>
திருக்கோவில்களில் ஆபாச ஆடல் பாடல் நிகழ்ச்சிகளும் பக்தர்களிற்கும் அயற் பிரதேச குடிகளிற்கும் பாதிப்பை ஏற்படுத்தும் அதீத ஒலி ஒளி நிகழ்வு செயற்பாடுகளும் முற்றாக தவிர்க்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது</p><h2>அனைத்து ஆலயங்களும் அறப்பணி</h2><p>
</p><p>
அனைத்து ஆலயங்களும் அறப்பணிக்களை சைவ சமயக் குடிகளிற்கு ஆற்ற நயினை நாகபூசணி வவுனியா சிவன் இலண்டன் கனதுர்க்கை தெல்லிப்பளை துர்க்கை அம்மன் ஆலயங்களை மேற்கோள் காட்டி வலியுறுத்தப்பட்டது</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7caf0ff4-d083-4697-96e9-707663279f7d/26-6a9dc8939e421.webp' /></p><p>

22வது அரசியலமைப்பு உட்பட எதிர்வரும் அரசியல் அமைப்பு யாப்பு சீரதிருத்தங்களில் சைவசமயிகளின் அபிலாசைகளை சரிவர சட்ட ரீதியாக சைவசமய தலைமைப்பீடத்தினால் அரசிற்கு வெளிப்படுத்தும் வகையில் திருக்கோணேசுவர ஆலய தலைவர் சட்டத்தரணி துசியந்தன் அவர்களை இணைப்பாளராகக்கொண்டு ஒன்பது பேர் கொண்ட நிபுணர் குழு அமைப்பது என தீர்மானிக்கப்பட்டது
</p><p>இதில் ஏற்கனவே மூத்த சட்டதரணிகளான இரட்ணவேல் ஜெயரூபன் தயாபரன் ஆகியோரும் முன்னாள் தமிழ் கூட்டமைப்பு சைவ சமய விவாகாரங்களிற்கான நாடாளுமன்ற உறுப்பினர் யோகேசுவரன் அவர்களும் அங்கம் வகிக்க விருப்பம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
</p><p>
மாவட்ட, பிரதேச செயலக ரீதியாக சிவ சகோதரர்களை ஆதீனத்தின் அருளாணையுடன் நியமிக்கவும் முடிவெடுக்கப்பட்டது

வவுனியா சிவன் கோவிலின் மாகேசுவர பூசையுடன் பயனுறுதி வாய்ந்த கலந்துரையாகல்கள் ஏகமனதாக தீர்மானத்துடனும் கொள்கை பிரகடனத்துடனும் கூட்டம் இனிதே நிறைவுற்றது&nbsp; &nbsp; &nbsp;</p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-06T20:10:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[இஸ்ரேல் மீது பலமுனை தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/iran-plans-multi-front-attack-on-israel-reported-1788717919"></link>
            <id>https://news.lankasri.com/article/iran-plans-multi-front-attack-on-israel-reported-1788717919</id>
            <summary type="text">Iran plans multi-front attack on Israel: இஸ்ரேலை குறிவைத்து பல திசைகளில் தாக்குதல் நடத்த ஈரான் திட்டமிட்டுள்ளது.

ஈரான் ஆதரவு படைகள் இணைந்து பலமுனை ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Iran plans multi-front attack on Israel: இஸ்ரேலை குறிவைத்து பல திசைகளில் தாக்குதல் நடத்த ஈரான் திட்டமிட்டுள்ளது.</p><p>
</p><h2>
ஈரான் ஆதரவு படைகள் இணைந்து பலமுனை தாக்குதல்</h2><p>இஸ்ரேலை எதிர்த்து ஈரான், ஹிஸ்புல்லா, ஹமாஸ், ஹவுதிகள் மற்றும் ஈராக் நாட்டில் உள்ள ஈரான் ஆதரவு படைகள் இணைந்து ஒருங்கிணைந்த தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9c7a55c5-71ad-472a-aea1-323a15350347/26-6a9dac02da52b.webp' /></p><p>இந்தத் திட்டம், 2023 அக்டோபர் 7 அன்று ஹமாஸ் நடத்திய தாக்குதலை ஒத்ததாக இருக்கும் என ஜெருசலேம் போஸ்ட் பத்திரிகை தெரிவித்துள்ளது.
</p><p>
அந்த தாக்குதலில் 1,200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஹமாஸ் மற்றும் பல பாலஸ்தீனக் குழுக்கள் நிலம், வானம், கடல் வழியாக இஸ்ரேல் எல்லையை உடைத்து, இராணுவத் தளங்கள், நகரங்கள் மற்றும் இசை விழாவை தாக்கியிருந்தனர்.</p><p>
</p><p></p><p>தற்போது, ஈரான் “Axis of Resistance” எனப்படும் கூட்டணியை மீண்டும் உயிர்ப்பிக்க முயற்சி செய்து வருகிறது. இது இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் பிற பிராந்திய எதிரிகளை எதிர்க்கும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட கூட்டணி ஆகும்.</p><p> ஹமாஸ் புதிய தலைவர் கலீல் அல்-ஹையா, ஈரானுடன் நெருங்கிய உறவை கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லா சமீப வாரங்களில் ஈரான் உதவியுடன் தங்களது நடவடிக்கைகளை அதிகரித்துள்ளன. இதனால், பல திசைகளில் ஒரே நேரத்தில் தாக்குதல் நடத்தும் வாய்ப்பு அதிகரித்துள்ளதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
</p><p></p><p>இஸ்ரேல்-ஹமாஸ் இடையே 2025 அக்டோபரில் நிறுத்தப்பட்ட போர்நிறுத்தம் பலமுறை மீறப்பட்டு வருகிறது. இஸ்ரேல் இன்னும் காசா பகுதியின் பெரும்பகுதியை கைப்பற்றியுள்ள நிலையில், புதிய தாக்குதல் திட்டம் பிராந்தியத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-06T20:08:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜேர்மனி மீண்டும் போரை விரும்புகிறது - ரஷ்யா குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/russia-says-germany-wants-war-again-1788725483"></link>
            <id>https://news.lankasri.com/article/russia-says-germany-wants-war-again-1788725483</id>
            <summary type="text">Russia says Germany wants war again: ஜேர்மனி மீண்டும் போரை விரும்புகிறது என ரஷ்யா குற்றம்சாட்டியுள்ளது.

ஜேர்மனி மீது&amp;nbsp;ரஷ்யா குற்றச்சாட்டுஜேர்மன...</summary>
            <content type="html"><![CDATA[<p>Russia says Germany wants war again: ஜேர்மனி மீண்டும் போரை விரும்புகிறது என ரஷ்யா குற்றம்சாட்டியுள்ளது.</p><h2>

ஜேர்மனி மீது&nbsp;ரஷ்யா குற்றச்சாட்டு</h2><p>ஜேர்மனி மீது ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் செர்கெய் லாவ்ரோவ் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.</p><p>

லீப்சிக் விமான நிலையத்தில் நடந்த ட்ரோன் தாக்குதலுக்கு ரஷ்யா காரணம் என ஜேர்மனி கூறியதை அவர் முற்றிலும் நிராகரித்தார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/edba20a5-6c87-45e3-9002-2a25acfb0144/26-6a9dc8ed4fad7.webp' /></p><p>ஜேர்மனி, ரஷ்யா கீழ்மட்ட முகவர்கள் மூலம் வெடிகுண்டுகள் பொருத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலை நடத்தியதாக குற்றம் சாட்டியது. </p><p>இதனை “ஹைப்ரிட் தாக்குதல்” எனக் கூறி, பெர்லின் ரஷ்ய கலாச்சார மையத்தை மூடியது. அதேபோல், ரஷ்யாவும் ஜேர்மனியின் கலாச்சார மையங்களை மூடியது.</p><p>

“இது உண்மையான போரின் தொடக்கம். இரண்டாம் உலகப்போருக்கு முந்தைய நிலைமை போல, ஜேர்மனி மீண்டும் போரை விரும்புகிறது” என லாவ்ரோவ் கூறியுள்ளார். மேலும், ஜேர்மனியை “நாசிசம்” என குற்றம் சாட்டி, “ரஷ்யா தேவையான முடிவுகளை எடுக்கும்” என எச்சரித்த்துள்ளார்.</p><p></p><p>ஜேர்மனி தற்போது உக்ரைனின் முக்கிய கூட்டாளியாக இருப்பதால், இந்த குற்றச்சாட்டுகள் ஐரோப்பிய நாடுகளில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யா-ஜேர்மனி உறவு மோசமடைந்துள்ள நிலையில், ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் ரஷ்ய தூதர்களை அழைத்து விளக்கம் கேட்டுள்ளன.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-06T20:08:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தோனேசிய எரிமலை வெடிப்பு ; ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானங்களுக்கு பாதை மாற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/rerouting-of-srilankan-airlines-flights-1788724941"></link>
            <id>https://jvpnews.com/article/rerouting-of-srilankan-airlines-flights-1788724941</id>
            <summary type="text">இந்தோனேசியாவில் ஏற்பட்டுள்ள அனக் க்ரக்கடோவா (Anak Krakatau) எரிமலை வெடிப்பு மற்றும் சாம்பல் வெளியேற்றம் காரணமாக, அவுஸ்திரேலியாவின் சிட்னி மற்றும் மெல்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தோனேசியாவில் ஏற்பட்டுள்ள அனக் க்ரக்கடோவா (Anak Krakatau) எரிமலை வெடிப்பு மற்றும் சாம்பல் வெளியேற்றம் காரணமாக, அவுஸ்திரேலியாவின் சிட்னி மற்றும் மெல்பர்ன் நகரங்களில் இருந்து இன்று இரவு இலங்கை நோக்கிப் புறப்படவிருந்த இரண்டு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் வானூர்திகள் மாற்றுப் பாதைகளில் திருப்பிவிடப்பட்டுள்ளன.</p><p></p><h3>எரிமலை வெடிப்பு</h3><p>

ஜாவா மற்றும் சுமாத்திரா தீவுகளுக்கு இடையே அமைந்துள்ள அனக் கரக்கடோவா எரிமலை இன்று தீவிரமாகச் சீற்றமடையத் தொடங்கியுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ebe65d5d-073b-43a3-aeaf-9bbe258adbe4/26-6a9dc6cedcd37.webp' /></p><p>இதன் காரணமாகத் தலைநகர் ஜகார்தாவின் சுகர்ணோ-ஹாட்டா சர்வதேச வானூர்தி நிலையம் உட்படப் பல வானூர்தி நிலையங்களின் சேவைகளை இந்தோனேசிய அதிகாரிகள் தற்காலிகமாகப் நிறுத்தி வைத்துள்ளனர்.
</p><p>
எரிமலையிலிருந்து வளிமண்டலத்தின் உயர் அடுக்குகளுக்குப் பரவியுள்ள சிலிக்கா துகள்கள் அடங்கிய சாம்பல் மற்றும் பாறைத் துகள்கள், வானூர்திகளின் இயந்திரங்கள் மற்றும் கட்டுப்பாட்டு அமைப்புகளுக்குப் பலத்த சேதத்தை ஏற்படுத்தக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இதனையடுத்து, எரிமலைக்கு மேற்கே உள்ள வான்பரப்பு மற்றும் இலங்கைக்குத் தெற்கே உள்ள வான்வெளி உள்ளிட்ட விரிவான பகுதிகளினூடான விமானப் பயணங்களுக்கு இந்தோனேசிய வான் போக்குவரத்து அதிகாரிகள் கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.
</p><p>
இந்தக் கட்டுப்பாடுகள் காரணமாக, அவுஸ்திரேலியா, இந்தோனேசியா மற்றும் இலங்கைக்கு இடையே சேவைகளை முன்னெடுக்கும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளின் வானூர்தி நிறுவனங்கள், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் தங்களின் பயணப் பாதைகளில் மாற்றங்களை மேற்கொண்டுள்ளன.</p><p></p>]]></content>
            <updated>2026-09-06T20:02:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாடொன்றில் பிரபல டிவி தொகுப்பாளினி உட்பட 12 பேருக்குத் தூக்கு தண்டனை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/tv-presenter-among-12-sentenced-to-death-1788703248"></link>
            <id>https://canadamirror.com/article/tv-presenter-among-12-sentenced-to-death-1788703248</id>
            <summary type="text">எகிப்தில் சட்டவிரோதமாகப் போதைப்பொருட்களைத் தயாரித்து கடத்திய வழக்கில், அந்நாட்டின் பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினியான சாரா கலீஃபா உட்பட 12 பேருக்குத் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>எகிப்தில் சட்டவிரோதமாகப் போதைப்பொருட்களைத் தயாரித்து கடத்திய வழக்கில், அந்நாட்டின் பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினியான சாரா கலீஃபா உட்பட 12 பேருக்குத் தூக்கிலிட்டு மரண தண்டனை நிறைவேற்றக் கெய்ரோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. </p><p>
39 வயதான சாரா கலீஃபா, எகிப்தில் குற்றவியல் தொடர்பான 'மிஷன் இம்பாசிபிள்' என்ற புகழ்பெற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியின் தொகுப்பாளினியாவார். </p><p>
போதைப்பொருள் தயாரிப்பதற்கான மூலப்பொருட்களை இறக்குமதி செய்து, செயற்கைப் போதைப்பொருட்களை உற்பத்தி செய்து விற்பனை செய்த குற்றவியல் கும்பலுடன் இணைந்து செயல்பட்டதாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2fa5d369-5466-46ea-9047-3bb4ae5316da/26-6a9d7215b0903.webp' /></p><p> </p><p>
மேலும், உரிமம் பெறாத சட்டவிரோத ஆயுதங்கள் மற்றும் தோட்டாக்களை வைத்திருந்த குற்றச்சாட்டுகளும் இவர்கள் மீது நிரூபிக்கப்பட்டுள்ளன. 
இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் 9 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதுடன், 7 பேர் விடுவிக்கப்பட்டனர்.
</p><p>கடந்த மாதம் முதற்கட்டத் தீர்ப்பு அறிவிக்கப்பட்ட போதிலும், எகிப்திய சட்டப்படி மரண தண்டனை விவகாரங்களில் எகிப்தின் தலைமை மதத் தலைவரான 'கிராண்ட் முஃப்தி'யின் மத ரீதியான ஆலோசனையைப் பெற்ற பிறகே இத்தீர்ப்பு தற்போது முறைப்படி உறுதி செய்யப்பட்டுள்ளது. </p><p>
விசாரணையின் போது, 750 கிலோவிற்கும் அதிகமான போதைப்பொருட்களும், அவற்றைச் செய்வதற்குப் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன. </p><p>
20 சாட்சிகளின் வாக்குமூலங்கள் மற்றும் ஆடியோ/வீடியோ உரையாடல்கள் அடங்கிய மின்னணு ஆதாரங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன. </p><p>
எனினும் தன் மீதான குற்றச்சாட்டுகளை சாரா கலீஃபா முற்றிலுமாக மறுத்துள்ளார். போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அலுவலகத்தில் வைத்துப் புகைப்படம் எடுக்கப்படும் வரை தான் போதைப்பொருட்களைப் பார்த்ததே இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார். </p><p>
இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யவுள்ளதாகச் சாரா கலீஃபாவின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.</p><p>
இதேவேளை, சர்வதேச மன்னிப்புச் சபை வெளியிட்ட 2025 ஆம் ஆண்டின் அறிக்கையின்படி, எகிப்தில் அந்த ஆண்டில் மட்டும் 492 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு, அதில் 23 தண்டனைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.</p><p> 
சர்வதேச சட்ட விதிகளின்படி "திட்டமிட்ட கொலை" குற்றங்களுக்கு மட்டுமே மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்ற போதிலும், போதைப்பொருள் கடத்தல் மற்றும் பாலியல் வன்கொடுமை போன்ற குற்றங்களுக்கும் எகிப்தில் மரண தண்டனை வழங்கப்படுவதாக அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.&nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-09-06T19:48:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் துர்நாற்றம் வீசிய வீட்டில் சடலம் மீட்பு ; மர்ம மரணம் குறித்து பொலிஸார் தீவிர விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/body-recovered-from-foul-smelling-house-in-jaffna-1788711532"></link>
            <id>https://jvpnews.com/article/body-recovered-from-foul-smelling-house-in-jaffna-1788711532</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் – கோண்டாவில் பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
குறித்த வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியதைத் தொடர்ந்து, அயலவர...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் – கோண்டாவில் பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p></p><p>குறித்த வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியதைத் தொடர்ந்து, அயலவர்கள் கோப்பாய் காவல்துறையினருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
</p><p>
தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்துக்குச் சென்ற காவல்துறையினர் வீட்டிலிருந்து சடலத்தை மீட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான விசாரணைகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/921a7b06-aff3-41c3-a391-993285bab7ba/26-6a9d926dd1418.webp' /></p><p>சடலமாக மீட்கப்பட்டவர் ஓரிரு தினங்களுக்கு முன்னர் உயிரிழந்திருக்கலாம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
</p><p>
எனினும், உயிரிழப்புக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.</p><p> மேலதிக விசாரணைகள் மற்றும் சட்ட வைத்திய பரிசோதனைகளின் பின்னரே உயிரிழப்புக்கான காரணம் தொடர்பில் உறுதியாகத் தெரிவிக்க முடியும் என காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-06T19:48:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[10 கைதிகளுடன் நாமல்; மோசமடையும் சூழல்; அநுரவின் அதிரடி பாய்ச்சல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/namal-with-10-prisoners-anura-s-aggressive-move-1788723922"></link>
            <id>https://jvpnews.com/article/namal-with-10-prisoners-anura-s-aggressive-move-1788723922</id>
            <summary type="text">ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ, இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டு ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ, இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டு எதிர்வரும் செப்டெம்பர் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு சிறைச்சாலையில் எந்தவிதமான உடல் பாதிப்புகளும் இல்லை என சிறைச்சாலைத் தரப்புகள் தெரிவித்துள்ளன.</p><p>
</p><p></p><p>ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானக் கொள்வனவு தொடர்பான விசாரணையின் அடிப்படையில் கடந்த 4ஆம் திகதி நாமல் ராஜபக்ஷ கைது செய்யப்பட்டார். </p><p>சுமார் ஐந்து மணிநேர விசாரணையின் பின்னர் கைது செய்யப்பட்ட அவர், கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து செப்டெம்பர் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.&nbsp;</p><p>சிறைச்சாலைத் தரப்பின் தகவலின்படி, அவருக்கு விசேட சலுகைகள் எதுவும் வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>மேலும், ஏனைய கைதிகளுடன் வழமையான சிறைச்சாலை நடைமுறைகளுக்கு அமையவே அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p>

இதேவேளை, நாமல் ராஜபக்ஷவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானக் கொள்வனவு விவகாரத்துடன் தொடர்புடையதாகும்.</p><p> 2012–2013 காலப்பகுதியில் இடம்பெற்ற விமானக் கொள்வனவு ஒப்பந்தங்களில் இலஞ்சப் பணம் பெற்றதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அவரது கைது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வருகிறது. </p><p>விசாரணைகளில் வெளிநாடுகளின் ஒத்துழைப்பும் பெறப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் மற்றும் ‘கிறிஸ்’ (Krrish) விவகாரங்களுடன் தொடர்புபடுத்தப்படும் பணப் பரிமாற்றங்கள் நன்கொடைகள் எனவும், அவற்றை இலஞ்சமாகக் கருத முடியாது எனவும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.</p><p>இந்த விடயம் தொடர்பான மேலும் பல தகவல்களை கீழே காணப்படும் காணொளியில் முழுமையாகப் பார்வையிடலாம்.......</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/tgSkYHLgmMQ" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-09-06T19:46:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[இஸ்ரேல் மீது பல்முனைத் தாக்குதல்! ஈரானின் புதிய திட்டம் அம்பலம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/iran-planning-bigger-october-7-style-attack-1788718280"></link>
            <id>https://tamilwin.com/article/iran-planning-bigger-october-7-style-attack-1788718280</id>
            <summary type="text">இஸ்ரேலிய உளவுத்துறை மதிப்பீடுகளின்படி, ஈரான் தனது பிராந்திய ஆதரவு அமைப்புகளுடன் இணைந்து ஒக்டோபர் 7 தாக்குதலைப் போன்ற ஒருங்கிணைந்த பல்முனைத் தாக்குதலொன...</summary>
            <content type="html"><![CDATA[<p>இஸ்ரேலிய உளவுத்துறை மதிப்பீடுகளின்படி, ஈரான் தனது பிராந்திய ஆதரவு அமைப்புகளுடன் இணைந்து ஒக்டோபர் 7 தாக்குதலைப் போன்ற ஒருங்கிணைந்த பல்முனைத் தாக்குதலொன்றை இஸ்ரேல் மீது நடத்துவதற்கான திட்டத்தை வகுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

இதற்காக லெபனானின் ஹிஸ்புல்லா, யேமனின் ஹூதிகள், ஹமாஸ் மற்றும் ஈராக், சிரியாவில் உள்ள ஈரான் ஆதரவு ஆயுதக் குழுக்களை ஒரே நேரத்தில் களமிறக்க ஈரான் திட்டமிட்டு வருவதாக Jerusalem Post செய்தி வெளியிட்டுள்ளது.</p><h2>பல்முனைத் தாக்குதல்</h2><p>
</p><p>
ஒக்டோபர் 7 தாக்குதலுக்கு முன்னர் ஈரானுக்கும் ஹிஸ்புல்லாவுக்கும் தாக்குதல் குறித்த முழுமையான தகவல்கள் அல்லது அதன் திகதி தெரிவிக்கப்படாததால், அன்றைய தாக்குதல் பல்முனைத் தாக்குதலாக மாறவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b00623ec-ce3c-4001-8d8f-f07e0eaee744/26-6a9db24f23881.webp' /></p><p> </p><p>ஹமாஸ் தலைவர் யஹ்யா சின்வார், ஹமாஸின் ஆரம்பகட்ட வெற்றி ஈரான் மற்றும் ஹிஸ்புல்லாவை முழுமையான பிராந்தியப் போரில் இணைக்கும் என எதிர்பார்த்திருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இந்த நிலையில், அப்போது ஏற்பட்ட ஒருங்கிணைப்புக் குறைபாடுகளை சரிசெய்து, ஹிஸ்புல்லா, ஹூதிகள் மற்றும் ஈரான் ஆதரவு ஆயுதக் குழுக்கள் முதல் நாளிலேயே ஒரே நேரத்தில் தாக்குதல்களை ஆரம்பிக்கும் வகையிலான திட்டத்தை ஈரான் உருவாக்கி வருவதாக இஸ்ரேலிய உளவுத்துறை தெரிவித்துள்ளது.</p><h2>&nbsp;இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள்&nbsp;</h2><p>

மேலும், ஈரானின் உதவியுடன் ஹமாஸ்–ஹிஸ்புல்லா ஒருங்கிணைப்பு மீண்டும் அதிகரித்துள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் தெரிவித்துள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/47bea477-53a6-4b39-9c32-cfbed4c310b9/26-6a9db24fc9d1e.webp' /></p><p>

ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படையின் (IRGC) குத்ஸ் படை அதிகாரிகள், ஹிஸ்புல்லா, ஹூதிகள் மற்றும் ஈராக் ஆயுதக் குழுக்களின் தளபதிகளுடன் காணொளி மாநாடுகள் மற்றும் நேரடி சந்திப்புகள் மூலம் கலந்துரையாடி வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
</p><p>
அத்துடன், முந்தைய மோதல்களில் சேதமடைந்த இராணுவ திறன்களை மீளக் கட்டியெழுப்ப ஈரான் முயற்சித்து வருவதுடன், கூட்டு பயிற்சிகள் மற்றும் செயற்பாட்டு ரீதியான தொடர்புகளும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இதனால், ‘எதிர்ப்பின் அச்சு’ என அழைக்கப்படும் ஈரான் ஆதரவு குழுக்களுக்கு இடையிலான ஒட்டுமொத்த இராணுவ ஒருங்கிணைப்பு மேலும் வலுப்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-06T19:11:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ். மறைமாவட்ட குரு அருட்தந்தை அன்ரனி பெர்னாண்டோ பெனற் காலமானார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/jaffna-s-rev-fr-a-f-bennett-has-passed-away-1788721467"></link>
            <id>https://jvpnews.com/article/jaffna-s-rev-fr-a-f-bennett-has-passed-away-1788721467</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் மறைமாவட்டத்தைச் சேர்ந்த குரு அருட்தந்தை அன்ரனி பெர்னாண்டோ பெனற் அவர்கள் இன்று (06) ஞாயிற்றுக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
1989ஆம் ஆண்டு குரு...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் மறைமாவட்டத்தைச் சேர்ந்த குரு அருட்தந்தை அன்ரனி பெர்னாண்டோ பெனற் அவர்கள் இன்று (06) ஞாயிற்றுக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.</p><p>
</p><p></p><p>1989ஆம் ஆண்டு குருவாக திருநிலைப்படுத்தப்பட்ட அருட்தந்தை அன்ரனி பெர்னாண்டோ பெனற், தனது பணிவாழ்வில் பல்வேறு பங்குகளிலும் மறைமாவட்டப் பொறுப்புகளிலும் அர்ப்பணிப்புடன் பணியாற்றியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f712731e-7fd1-4cc8-99de-ba61078d9848/26-6a9db93cec7fe.webp' /></p><p>

அவர் மயிலிட்டி, இளவாலை மற்றும் பரந்தன் பங்குகளின் உதவி பங்குத்தந்தையாகவும், சண்டிலிப்பாய் பங்கின் பதில் பங்குத்தந்தையாகவும் பணியாற்றியுள்ளார்.
</p><p>
மேலும், கரவெட்டி, மானிப்பாய், கிளிநொச்சி, பருத்தித்துறை மற்றும் பரந்தன் ஆகிய பங்குகளின் பங்குத்தந்தையாகவும், ஜேர்மன் தமிழ் கத்தோலிக்க ஆன்மீக பணியகத்தின் இயக்குநராகவும், மறைமாவட்ட மறைக்கல்வி நிலையத்தின் இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார்.
</p><p>
அத்துடன், கிளிநொச்சி மற்றும் பருத்தித்துறை மறைக்கோட்டங்களின் முதல்வராகவும், வவுனியா செட்டிக்குளம் இடம்பெயர்ந்தோர் முகாமிலும் அவர் தனது ஆன்மீகப் பணிகளை முன்னெடுத்துள்ளார்.
</p><p>
நீண்டகாலமாக கத்தோலிக்க திருச்சபைக்கும் மக்களுக்கும் அர்ப்பணிப்புடன் பணியாற்றிய அருட்தந்தையின் பணிவாழ்விற்காக நன்றிகூறி, அவரது ஆன்மா இறைவனில் இளைப்பாற அனைவரும் மன்றாடுவோம்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-06T19:04:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[மருத்துவ சேவையில் புதிய மாற்றம் ; குடும்ப வைத்தியரின் பரிந்துரை அவசியம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/new-change-in-medical-services-family-doctor-s-1788720839"></link>
            <id>https://jvpnews.com/article/new-change-in-medical-services-family-doctor-s-1788720839</id>
            <summary type="text">அடுத்த வருடம் முதல் நாடளாவிய ரீதியில் 1,000 ‘ஆரோக்யா’ (Arogya) மையங்கள் மூலம் குடும்பங்களுக்கு முதன்மைப் பராமரிப்பு வைத்தியரை அணுகும் வசதி ஏற்படுத்தப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>அடுத்த வருடம் முதல் நாடளாவிய ரீதியில் 1,000 ‘ஆரோக்யா’ (Arogya) மையங்கள் மூலம் குடும்பங்களுக்கு முதன்மைப் பராமரிப்பு வைத்தியரை அணுகும் வசதி ஏற்படுத்தப்படும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p></p><p>பேருவளையில் இன்று (06) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0ac223ce-8849-4777-b94b-1b6b5050fe15/26-6a9db6c8a57dc.webp' /></p><p>நோயாளர்கள் தாங்கள் விரும்பிய வைத்தியசாலைக்குச் சென்று சிகிச்சை பெறும் முறைக்குப் பதிலாக, தங்களது குடும்ப வைத்தியரின் பரிந்துரையின் அடிப்படையில் மேலதிக சிகிச்சைக்காக வைத்தியசாலைக்குச் செல்லும் முறைமை உருவாக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
</p><p>
அரச மற்றும் தனியார் வைத்தியசாலைகளின் வெளிநோயாளர் பிரிவுகளில் வருடாந்தம் சுமார் 80 மில்லியன் பேர் மருந்துகளைப் பெற்றுக்கொள்வதாகவும், நாட்டின் மொத்த சனத்தொகை சுமார் 22 மில்லியனாக இருக்கும் நிலையில், ஒருவர் சராசரியாக நான்கு தடவைகள் வைத்தியசாலைகளுக்குச் செல்வதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p>

நோயாளர்களே எந்த வைத்தியரைச் சந்திப்பது, எந்த வைத்தியசாலைக்குச் செல்வது என்பதைத் தீர்மானிக்கும் தற்போதைய நடைமுறையில் மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
</p><p>
முதன்மை மருத்துவரின் பரிந்துரையின் அடிப்படையில் நோயாளர்கள் பிரதான வைத்தியசாலைகளுக்குச் செல்லும் வகையில் புதிய சுகாதார முறைமை அறிமுகப்படுத்தப்படும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
மேலும், தேவையற்ற வகையில் மருந்துகளைப் பயன்படுத்துவதையும் தவிர்க்க வேண்டும் என வலியுறுத்திய ஜனாதிபதி, வைத்தியர்களால் பரிந்துரைக்கப்படும் மருந்துகளை முழுமையாக உட்கொள்ளாமல் இடைநடுவில் நிறுத்துவது மருந்து விரயத்துக்கு வழிவகுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-06T18:54:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Bavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[காவல்துறை உத்தியோகத்தரின் அநாகரிக செயற்பாடு : எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/police-sub-inspector-dismissed-sexual-bribe-1788719225"></link>
            <id>https://ibctamil.com/article/police-sub-inspector-dismissed-sexual-bribe-1788719225</id>
            <summary type="text">திருகோணமலையில் கைது செய்யப்பட்ட போதைப்பொருள் வியாபாரி ஒருவரை விடுதலை
செய்வதற்கு இலஞ்சமாக பணமும் மற்றும் வியாபாரியின் மனைவியை பாலியல் இலஞ்சாமக
கோரிய ...</summary>
            <content type="html"><![CDATA[<p>திருகோணமலையில் கைது செய்யப்பட்ட போதைப்பொருள் வியாபாரி ஒருவரை விடுதலை
செய்வதற்கு இலஞ்சமாக பணமும் மற்றும் வியாபாரியின் மனைவியை பாலியல் இலஞ்சாமக
கோரிய சம்பவம் தொடர்பாக மட்டக்களப்பு கல்குடா காவல் நிலையத்தில்
கடமையயாற்றிவரும் ஓட்டமாவடியைச் சோந்த காவல்துறை உப பரிசோதகர் ஒருவரை
நேற்று சனிக்கிழமை (5) பணியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை
உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.</p><p>குறித்த காவல்துறை உத்தியோகத்தர் கடந்த 2021ம் ஆண்டு திருகோணமலை காவல்
நிலையத்தில் கடமையாற்றிய போது ஹெரோயின் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்ட போதை
பொருள் வியாபாரியை விடுவிப்பதற்கு ஒரு தொகை பணம் மற்றும் அந்த வியாபரியின்
மனைவியை பாலியல் இலஞ்சமாக கோரியுள்ளார்.</p><h2>காவல்துறை உத்தியோகத்தருக்கு எதிராக&nbsp;&nbsp;முறைப்பாடு</h2><p>
</p><p>
இதனை தொடர்ந்து குறித்த வியாபாரி இது தொடர்பாக காவல்துறை உத்தியோகத்தருக்கு
எதிராக திருகோணமலை மாவட்ட காவல்துறை அத்தியட்சகர் காரியாலயத்தில் முறைப்பாடு
செய்ததையடுத்து விசாரணைகள் இடம்பெற்று வந்தது</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/99c13a08-e132-482b-abfb-ebbe78f437ce/26-6a9db33ac3b60.webp' /></p><p>
</p><p>
இந்த நிலையில் காவல்துறை உத்தியோகத்தர் அங்கிருந்து வாழைச்சேனை மற்றும்
கந்தளாய் காவல்துறை பிரிவிலுள்ள காவல் நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டு
அங்கிருந்து கடந்த சில வாரங்களுக்கு முன்னர் கல்குடா காவல் நிலையத்திற்கு
இடமாற்றப்பட்டு கடமையாற்றி வருகின்ற&nbsp;நிலையில் அவரை உடனடியாக பணி இடைநீக்கம்
செய்வதாக காவல்துறை தலைமையகம் அவருக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக அவர்
தெரிவித்தார்.&nbsp; </p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p>&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-06T18:40:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[புதிய அரசியல் கலாசாரத்திற்கு அரசாங்கம் முன்மாதிரி ; டில்வின் சில்வா வலியுறுத்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/government-role-model-new-political-culture-tilvin-1788719651"></link>
            <id>https://jvpnews.com/article/government-role-model-new-political-culture-tilvin-1788719651</id>
            <summary type="text">அரசாங்கத்தால் மட்டும் தனியாக நாட்டை கட்டியெழுப்ப முடியாது என்றும், அதற்கு மக்களும் தங்களது பங்களிப்பை வழங்க வேண்டும் என்றும் மக்கள் விடுதலை முன்னணியின...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரசாங்கத்தால் மட்டும் தனியாக நாட்டை கட்டியெழுப்ப முடியாது என்றும், அதற்கு மக்களும் தங்களது பங்களிப்பை வழங்க வேண்டும் என்றும் மக்கள் விடுதலை முன்னணியின் (JVP) பொதுச் செயலாளர் டில்வின் சில்வா கோரிக்கை விடுத்துள்ளார்.</p><p>
</p><p></p><p>களுத்துறை - புலத்சிங்கள பகுதியில் இடம்பெற்ற மக்கள் பேரணியில் உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
</p><p>
"வாக்களித்து அரசாங்கத்தை அமைத்ததோடு மக்களின் கடமை முடிந்துவிடவில்லை. இது மக்களின் அரசாங்கமாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3ad19af4-a8b5-444a-a047-1a6b9ddf7e97/26-6a9db224a00a9.webp' /></p><p> எனவே, அரசாங்கத்துடன் இணைந்து நாட்டை கட்டியெழுப்பும் பொறுப்பு ஒவ்வொரு குடிமகனுக்கும் உண்டு.</p><p>

கடந்த காலங்களில் அரசியல் பேரணிகள் நடத்தும் போது காணப்பட்ட தேவையற்ற அதிகாரப் போட்டிகளோ, பாதுகாப்பு பதற்றங்களோ இன்றி புதிய அரசியல் கலாசாரத்துக்கு அரசாங்கம் முன்மாதிரியாகத் திகழ்கிறது.
</p><p>
நாட்டில் நிலவும் சிறிய அளவிலான பிரச்சினைகளைத் தீர்த்து, பொருளாதார ரீதியாகவும் அரசியல் கலாசார ரீதியாகவும் நாட்டை வலுப்படுத்தும் திட்டமிட்ட வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
</p><p>
உதாரணமாக, 'Clean Sri Lanka' திட்டத்தை அரசாங்கத்தினால் மட்டும் தனித்து நடைமுறைப்படுத்த முடியாது. அதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பும் பங்களிப்பும் மிகவும் அவசியமாகும்.</p><p>

எனவே, அரசாங்கத்தைக் கைப்பற்ற எவ்வாறு அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட்டார்களோ, அதேபோன்று நாட்டை கட்டியெழுப்பவும் அனைவரும் கைகோர்க்க வேண்டும் என டில்வின் சில்வா கேட்டுக்கொண்டார்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-06T18:34:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளாகி ஒருவர் பலி:]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/1-dead-in-kananaskis-country-plane-crash-1788702594"></link>
            <id>https://canadamirror.com/article/1-dead-in-kananaskis-country-plane-crash-1788702594</id>
            <summary type="text">கனடாவின் அல்பெர்ட்டா மாகாணத்தில் உள்ள கனனாஸ்கிஸ் பகுதியில் சனிக்கிழமை காலை நிகழ்ந்த விமான விபத்தில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். 
சனிக்கிழமை கா...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் அல்பெர்ட்டா மாகாணத்தில் உள்ள கனனாஸ்கிஸ் பகுதியில் சனிக்கிழமை காலை நிகழ்ந்த விமான விபத்தில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.</p><p> 
சனிக்கிழமை காலை சுமார் 9:20 மணியளவில், அப்பகுதியில் கோல்ஃப் விளையாடிக் கொண்டிருந்த விளையாட்டு வீரர்கள் வானில் பறந்துகொண்டிருந்த விமானம் ஒன்று ஆபத்தில் இருப்பதை கவனித்து, உடனடியாக அவசர உதவிக்கு அழைப்பு விடுத்தனர்.</p><p> 
இருப்பினும், அந்த விமானம் கனனாஸ்கிஸ் பகுதியிலுள்ள மவுண்ட் மெக்டூகல் மலைப் பகுதியில் விபத்துக்குள்ளானது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/130508eb-5dd1-42e6-9a8a-8e798c3b017c/26-6a9d6f8421738.webp' /></p><p> 
இந்த விபத்து குறித்து கனடிய காவல் துறையினர் உடனடியாக மேலதிக விவரங்களை வெளியிட முடியாது எனக் கூறியுள்ளனர். </p><p>
இந்த விபத்து தொடர்பான விசாரணையை 'கனடா போக்குவரத்து பாதுகாப்பு வாரியம்' மேற்கொள்ளும் என அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p> 
விபத்து குறித்து தங்களுக்குத் தகவல் கிடைத்துள்ளதாகவும், தற்போது அது தொடர்பான விவரங்களைச் சேகரித்து வருவதாகவும், தகவல்கள் கிடைத்தவுடன் கூடுதல் விவரங்கள் வெளியிடப்படும் என்றும் பாதுகாப்பு வாரியம் மின்னஞ்சல் மூலம் தெரிவித்துள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-06T18:30:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[கூகுள் மொழிபெயர்ப்பின் 'லைவ் ட்ரான்ஸ்லேட்' வசதியில் இரு புதிய அம்சங்கள் அறிமுகம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/features-google-translate-live-translate-facility-1788718281"></link>
            <id>https://jvpnews.com/article/features-google-translate-live-translate-facility-1788718281</id>
            <summary type="text">கூகுள் ட்ரான்ஸ்லேட் (Google Translate) செயலியில் நேரடியாக ஒலி வடிவில் மொழிபெயர்க்கும் &#039;லைவ் ட்ரான்ஸ்லேட்&#039; (Live Translate) அம்சத்தில் இரு புதிய இற்றைப...</summary>
            <content type="html"><![CDATA[<p>கூகுள் ட்ரான்ஸ்லேட் (Google Translate) செயலியில் நேரடியாக ஒலி வடிவில் மொழிபெயர்க்கும் 'லைவ் ட்ரான்ஸ்லேட்' (Live Translate) அம்சத்தில் இரு புதிய இற்றைப்படுத்தல்களை கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.</p><p>
</p><p></p><p>தற்போது 70க்கும் மேற்பட்ட மொழிகளில் இயங்கும் இந்த நேரலை மொழிபெயர்ப்பு வசதியைப் பயன்படுத்தும் பயனர்களில் மூன்றில் ஒரு பங்கினர், 5 நிமிடங்களுக்கும் மேலாக தொடர்ச்சியாக இதனைப் பயன்படுத்துகின்றனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/35a3a44d-95a3-4bc8-a331-01a2cb95a035/26-6a9daccab5195.webp' /></p><p>இதனைக் கருத்திற் கொண்டு, எண்ட்ரோய்ட் பயனர்கள் இனி நேரலை மொழிபெயர்ப்பு இயங்கிக் கொண்டிருக்கும் போதே பிற செயலிகளைப் பயன்படுத்தவும், தொலைபேசித் திரையைப் பூட்டி வைக்கவும் (Screen Lock) முடியும் வகையில் பின்புலத்தில் இயங்கும் வசதி சேர்க்கப்பட்டுள்ளது.
</p><p>
ஐஓஎஸ் பயனர்களுக்கு இந்த வசதி விரைவில் வழங்கப்படவுள்ளது.
</p><p>
அதேபோல், iOS பயனர்கள் இனி ஹேண்ட்போன் இல்லாத சூழலிலும் தொலைபேசியைக் காதில் வைத்து அழைப்புகளைப் பேசுவது போல் நேரடியாக மொழிபெயர்ப்பைக் கேட்கும் வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
</p><p>
இரைச்சல் மிகுந்த வானூர்தி நிலையங்கள் மற்றும் சுற்றுலாத் தலங்களில் அறிவிப்புகளைத் தெளிவாகக் கேட்க இது பயனுள்ளதாக அமையும். </p><p>இந்த வசதி ஏற்கனவே எண்ட்ரோய்ட் பயனர்களுக்குக் கிடைக்கப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-06T18:11:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[அனுராதபுர பேரணி உரையை நாடாளுமன்றில் ஆற்றவுள்ள நாமல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/namal-deliver-anuradhapura-rally-speech-in-parli-1788716695"></link>
            <id>https://ibctamil.com/article/namal-deliver-anuradhapura-rally-speech-in-parli-1788716695</id>
            <summary type="text">சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்சவின் கைது ஒரு தெளிவான அரசியல் வேட்டையாகும் என்றும், 12ஆம் திகதி அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்சவின் கைது ஒரு தெளிவான அரசியல் வேட்டையாகும் என்றும், 12ஆம் திகதி அனுராதபுரத்தில் நடைபெறவுள்ள மாபெரும் பேரணியில் அவர் ஆற்றவிருந்த சிறப்புரை அடுத்த செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் ஆற்றப்படும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.
</p><p>
ஊடகங்களிடம் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர், இந்தக் கைது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்று வலியுறுத்தினார்.</p><h2>அரசியல் பழிவாங்கல் பொருத்தமானதல்ல</h2><p>கடந்த காலங்களில் தனது அரசாங்கத்தின் கீழ்கூட இதுபோன்ற செயல்கள் நடந்திருந்தால், தான் அவற்றை அனுமதித்திருக்க மாட்டேன் என்றும், ஒரு ஜனநாயக நாட்டிற்கு அரசியல் பழிவாங்கல் பொருத்தமானதல்ல என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c52b9072-4e0a-4520-99c6-6fe054af54d9/26-6a9dab9ad9d37.webp' /></p><p>
</p><p>
அனுராதபுர பொதுக்கூட்டத்தில் நாமல் ராஜபக்சவின் மனைவி உரையாற்றுவார் என்று சமூக ஊடகங்களிலும் பல்வேறு தரப்பினரிடமும் பரவிவரும் வதந்திகள் குறித்து பத்திரிகையாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த நாடாளுமன்ற உறுப்பினர், அவை ஆதாரமற்ற வதந்திகள் என்று கூறினார்.</p><p></p><p>

</p><h2>நாமல் ராஜபக்ச நாடாளுமன்றில் விசேட உரை</h2><p>"நாமல் ராஜபக்ச அடுத்த செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்திற்கு வருவார். அன்று, அனுராதபுர மக்களுக்கு அவர் ஆற்றவிருந்த சக்திவாய்ந்த உரையை நாடாளுமன்றத்தில் நாட்டு மக்களுக்கு வழங்குவார். அதைக் கவனிக்குமாறு அரசாங்கத்திற்கு நான் சவால் விடுகிறேன்," என்று ரோஹித அபேகுணவர்தன மேலும் தெரிவித்தார்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2d7f0b34-cb45-4f70-a8a8-ef36e9707008/26-6a9dab9a273db.webp' /></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-06T18:06:34+00:00</updated>
        </entry>
    </feed>
