<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-08-08T00:55:13+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[20 Years of Venkat Prabhu: ஒருபோதும் செய்ததையே மீண்டும் செய்யக் கூடாது.. வெங்கட் பிரபு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/venkat-prabhu-statement-on-20-years-in-cinema-1786150132"></link>
            <id>https://cineulagam.com/article/venkat-prabhu-statement-on-20-years-in-cinema-1786150132</id>
            <summary type="text">தற்போது முன்னணி இயக்குனராக இருக்கும் வெங்கட் பிரபு சினிமாவில் நுழைந்து 20 வருடங்கள் நிறைவு செய்து இருப்பதை பற்றி உருக்கமாக பேசி இருக்கிறார். அவர் கூறி...</summary>
            <content type="html"><![CDATA[<p>தற்போது முன்னணி இயக்குனராக இருக்கும் வெங்கட் பிரபு சினிமாவில் நுழைந்து 20 வருடங்கள் நிறைவு செய்து இருப்பதை பற்றி உருக்கமாக பேசி இருக்கிறார். அவர் கூறி இருப்பதாவது..</p><p>"இருபது ஆண்டுகளுக்கு முன்பு, இதே நாளில், ‘சென்னை 600028’ இல் ஒரு இயக்குநராக என் பயணம் தொடங்கியது. </p><p>
அன்புக்கும் மதிப்பிற்கும் உரிய எஸ்பிபி சார் அவர்களின் ஆசிகளாலும், சகோதரர் சரண் என் மீது வைத்த அசைக்க முடியாத நம்பிக்கையாலும் மட்டுமே இது சாத்தியம் ஆனது.
</p><p>அந்த ஒரு வாய்ப்பு என் வாழ்க்கையை மாற்றி அமைத்தது. இன்று, என் திரைப்பயணத்தின் 20வது ஆண்டில் நுழையும் இந்த வேளையில், மறக்கமுடியாத நினைவுகளாலும் எதிர்காலம் குறித்த பேரார்வத்தாலும் என் மனம் நிரம்பி இருக்கிறது.
</p><p>இந்தப் பயணத்தில், ஒருபோதும் செய்ததையே மீண்டும் செய்யக் கூடாது என்பதை நான் நோக்கமாகவே வைத்திருக்கிறேன். ஒவ்வொரு சினிமாவும் ஒரு புதிய வகை (GENRE). சில படங்கள் காலப்போக்கில் ரசிக்கப்பட்டன. சில படங்கள் எனக்குப் பாடங்களைக் கற்றுக்கொடுத்தன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/31868ccf-9643-4790-8b8d-f55baedb883b/26-6a767cf707c4d.webp' /></p><p>
</p><p>தொடர்ந்து புதிய முயற்சிகளைச் செய்வதற்கான தைரியம் எனக்குக் கிடைத்திருக்கிறது என்றால், அதற்கு இத்தனை ஆண்டுகளாக நீங்கள் என் மீது காட்டி வரும் அளவற்ற அன்பும் நம்பிக்கையும்தான் காரணம். என் வெற்றிகளைக் கொண்டாடி இருக்கிறீர்கள்; கடினமான கட்டங்களில் என் பக்கபலமாக நின்று இருக்கிறீர்கள். ஒவ்வொரு முறையும் ஒரு புதிய படத்தோடு நான் வரும்போது அதே அன்போடு என்னை வரவேற்றிருக்கிறீர்கள்.
</p><p>உங்களுடைய இந்த நம்பிக்கைதான் எனக்கு தொடர்ந்து புதிய முயற்சிகளை எடுக்கும் துணிச்சலைக் கொடுக்கிறது. அதற்கு நான் எத்தனை முறை நன்றி சொன்னாலும் ஈடாகாது.
</p><p>பின்னோக்கிப் பார்க்கையில் என் மனதிற்குள் நன்றியுணர்வு மட்டுமே நிரம்பி இருக்கிறது! என்னை நம்பிய ஒவ்வொரு தயாரிப்பாளருக்கும், நடிகர்களுக்கும், தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும், ஊடக நண்பர்களுக்கும் என் நண்பர்களுக்கும், இந்த பயணத்தின் அங்கமாக இருந்த ஒவ்வொருவருக்கும், அனைத்திற்கும் மேலாக சினிமாவைக் கொண்டாடும் ரசிகர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
</p><p>இருபது ஆண்டுகளுக்கு பிறகும், இன்னும் நான் சினிமாவின் தீவிர ரசிகனாகவே உணர்கிறேன். ஒவ்வொரு சினிமாவும் எனக்குப் புதிதாக ஏதேனும் ஒன்றைக் கற்றுக்கொடுத்துக்கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு படத்தின் முதல் நாள் படப்பிடிப்புக்கு முன்பும் எனக்குள் இருக்கும் அந்தப் படபடப்பும் எதிர்பார்ப்பும் இன்னும் மாறவில்லை. மக்களை மகிழ்விக்கும், வியப்பில் ஆழ்த்தும், மற்றும் அவர்களோடு ஒன்றிப்போகும் கதைகளைச் சொல்ல வேண்டும் என்ற என் கனவு மேலும் வலுவடைந்து மட்டுமே இருக்கிறது.
</p><p>இருபது ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய அதே தீவிரமான ஆர்வத்தோடு உங்களுக்கு நல்ல கதைகளை வழங்குவேன் என்று உறுதியளிக்கிறேன்.
</p><p>இன்னும் பல ஆண்டுகள், ஒன்றாக பயணிப்போம்!
</p><p>அன்புடனும் நன்றியுடனும்,
</p><p>வெங்கட் பிரபு&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-08T00:48:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[சவுதி அரேபியா மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/houthi-rebels-attack-saudi-arabia-1786150118"></link>
            <id>https://canadamirror.com/article/houthi-rebels-attack-saudi-arabia-1786150118</id>
            <summary type="text">ஈரான், சவுதி அரேபியா இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வருகிறது. ஏமனில் இரு நாடுகளும் மறைமுக மோதலில் ஈடுபட்டு வருகின்றன.

அதன்படி, ஏமனில் அரசுப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரான், சவுதி அரேபியா இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வருகிறது. </p><p>ஏமனில் இரு நாடுகளும் மறைமுக மோதலில் ஈடுபட்டு வருகின்றன.

அதன்படி, ஏமனில் அரசுப்படையினருக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே உள்நாட்டு போர் நடைபெற்று வருகிறது. </p><p>இந்த உள்நாட்டுப்போரில் அரசுப்படையினருக்கு சவுதி அரேபியாவும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு ஈரானும் ஆதரவு அளித்து வருகின்றன.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f5e8ded3-5168-4193-89fe-20a475560db1/26-6a767ce865138.webp' /></p><p>ஏமனின் சில பகுதிகளை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு ஈரான் ஆயுதம் உள்பட பல்வேறு உதவிகளை வழங்கி வருகிறது.
</p><p>
11 பேர் காயம்
அதேவேளை, ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் சவுதி அரேபியா மீது அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர். </p><p>இந்த தாக்குதலுக்கு சவுதி பதிலடி கொடுத்து வருகிறது.

இந்நிலையில், சவுதி அரேபியா மீது இன்று ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணை, டிரோன் தாக்குதல் நடத்தினர். </p><p>சவுதி அரேபியாவின் நிஜ்ரன் நகரை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் பொதுமக்கள் 11 பேர் காயமடைந்துள்ளனர். </p><p>அந்த தாக்குதலை தொடர்ந்து ஹவுதி தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கப்படும் என்று சவுதி எச்சரிக்கை விடுத்துள்ளது. </p><p>இந்த தாக்குதலால் மத்திய கிழக்கில் மீண்டும் அதிகரித்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-08T00:48:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜப்பானை நோக்கி நகரும் ‘டால்பின்’ சூறாவளி ; விமான சேவைகள் ரத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/typhoon-dolphin-head-toward-japan-flights-cancel-1786149588"></link>
            <id>https://canadamirror.com/article/typhoon-dolphin-head-toward-japan-flights-cancel-1786149588</id>
            <summary type="text">ஜப்பானின் தென்பகுதியில் உள்ள தீவுகளை நோக்கி ‘டால்பின்’ சூறாவளி நகர்ந்து வருவதால், ஒகினாவா தீவில் உள்ள நாஹா விமான நிலையம் மூடப்பட்டதுடன், அனைத்து உள்நா...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜப்பானின் தென்பகுதியில் உள்ள தீவுகளை நோக்கி ‘டால்பின்’ சூறாவளி நகர்ந்து வருவதால், ஒகினாவா தீவில் உள்ள நாஹா விமான நிலையம் மூடப்பட்டதுடன், அனைத்து உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
</p><p>
சூறாவளி மணிக்கு 144 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வருவதாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/03da9da3-b0d7-4a96-a48b-08968b8b0504/26-6a767ad67941c.webp' /></p><p> பலத்த காற்று காரணமாக 70 வயதுடைய மூவர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
சூறாவளியின் தாக்கத்தை எதிர்கொள்ளும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. </p><p>இதன்படி, ஒகினாவாவில் 240 பேர் பாதுகாப்பான முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
</p><p>
மேலும், நாளை (ஞாயிற்றுக்கிழமை) வரை பலத்த காற்றுடன் கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. </p><p>இதனால் பொதுமக்கள் தேவையற்ற பயணங்களைத் தவிர்த்து, வீடுகளுக்குள் பாதுகாப்பாக இருக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
</p><p>
இந்நிலையில், ‘டால்பின்’ சூறாவளி நாளை மறுதினம் காலை சீனாவின் கிழக்குக் கடற்கரையைச் சென்றடையும் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-08T00:40:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[பல்லேகலை – தும்பர போகம்பர சிறைச்சாலை பகுதியில் பலத்த பாதுகாப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/heavy-security-pallekara-thumbara-bogambara-prison-1786149195"></link>
            <id>https://jvpnews.com/article/heavy-security-pallekara-thumbara-bogambara-prison-1786149195</id>
            <summary type="text">கண்டி, பல்லேகலை பகுதியில் அமைந்துள்ள தும்பர போகம்பர சிறைச்சாலை மற்றும் அதனுடன் தொடர்புடைய பகுதிகளில் இன்று (07) காலை முதல் உடனடியாக அமுலுக்கு வரும் வக...</summary>
            <content type="html"><![CDATA[<p>கண்டி, பல்லேகலை பகுதியில் அமைந்துள்ள தும்பர போகம்பர சிறைச்சாலை மற்றும் அதனுடன் தொடர்புடைய பகுதிகளில் இன்று (07) காலை முதல் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.</p><p>
</p><p></p><p>நாட்டின் தற்போதைய நிலைமையை கருத்தில் கொண்டு மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த விசேட பாதுகாப்பு நடவடிக்கையில், இலங்கை காவல்துறை, இலங்கை இராணுவம் மற்றும் காவல்துறை விசேட அதிரடிப்படை (STF) ஆகியன இணைந்து ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2a75cd8d-9b4a-472b-8add-1f848626a199/26-6a76794d52675.webp' /></p><p>இதன் ஒரு பகுதியாக, தும்பர போகம்பர சிறைச்சாலைக்கு செல்லும் பிரதான மற்றும் உப வீதிகளில் விசேட காவல்துறை வீதித் தடைகள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பில் அதிகாரிகள் தொடர்ச்சியான கண்காணிப்புகளை மேற்கொண்டு வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-08T00:33:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறைச்சாலைகளில் அடுத்தடுத்து வெடிக்கும் பதற்றம்! கலவரங்களின் மூலம் அரசை வீழ்த்த செய்யும் சதி..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/srilanka-prision-attacks-tamil-videos-1786148605"></link>
            <id>https://tamilwin.com/article/srilanka-prision-attacks-tamil-videos-1786148605</id>
            <summary type="text">இலங்கையின் பல்வேறு சிறைச்சாலைகளில் ஏற்பட்டுள்ள தொடர் கலவரங்கள் மற்றும் பதற்றமான சூழல் நாட்டில் அமைதியின்மையை ஏற்படுத்தியுள்ளது.

நீர்கொழும்பு, மெகசி...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் பல்வேறு சிறைச்சாலைகளில் ஏற்பட்டுள்ள தொடர் கலவரங்கள் மற்றும் பதற்றமான சூழல் நாட்டில் அமைதியின்மையை ஏற்படுத்தியுள்ளது.

நீர்கொழும்பு, மெகசின், குருவிட்ட மற்றும் பல்லஞ்சேனை போன்ற பல சிறைச்சாலைகளில் கைதிகள் கூரையின் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டு வன்முறையில் ஈடுபட்டுள்ளனர்.
</p><p>
கைதிகளின் முக்கிய கோரிக்கையாக இருப்பது, தங்களின் வழக்கு விசாரணைகளுக்கான அரச பகுப்பாய்வு அறிக்கைகளை விரைவாக தயாரித்து வழங்குவதாகும்.</p><p>இதில் உள்ள தாமதமே இந்த கலவரங்களுக்கு ஒரு முக்கிய காரணமாக சுட்டிக்காட்டப்படுகிறது.</p><p>

 இது திட்டமிட்ட சூழ்ச்சியாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. 

கைதிகள் அமைதியாக இருக்குமாறும், அறிக்கைகளை விரைவுபடுத்த தேவையான பணியாளர்கள் மற்றும் புதிய இயந்திரங்கள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் நீதி அமைச்சர் அரசன் நாணயக்கார உறுதியளித்துள்ளார்.</p><p>

 சிறைச்சாலைகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, முப்படையினரின் கண்காணிப்பில் சூழல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>


இந்தக் கலவரங்களுக்குப் பின்னால் அரசியல் சூழ்ச்சி இருக்கலாம் என்ற சந்தேகம் வலுவாக எழுப்பப்பட்டுள்ளது. 

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, 'ஆட்சியை கவிழ்த்து மீண்டும் ஆட்சியைப் பிடிப்பதற்கான திட்டங்கள் எங்களிடம் உள்ளன' என்று குறிப்பிட்டதையே தற்போதைய குழப்பங்களுக்குத் தொடக்கமாகப் பலர் கருதுகின்றனர். </p><p>

மேலும், அரசாங்கத்தின் மீதான சட்ட ஒழுங்கு குறித்து சர்வதேச மட்டத்தில் அவப்பெயரை ஏற்படுத்தவும், தற்போதைய அரசை வீழ்த்தவும் இத்தகைய கலவரங்கள் திட்டமிட்டு முன்னெடுக்கப்படுவதாகக் கருதப்படுகிறது. </p><p>

இந்த விடயங்கள் தொடர்பில் பேசுகின்றது NewsInsightTamil நிகழ்ச்சி...&nbsp;&nbsp;</p><p><br></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/Tk5kWeUYsfw" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-08T00:33:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தியா - இலங்கை அணிகளுக்கிடையிலான டெஸ்ட் போட்டிகளுக்கு இலவச அனுமதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/free-viewing-for-india-tour-matches-1786148450"></link>
            <id>https://ibctamil.com/article/free-viewing-for-india-tour-matches-1786148450</id>
            <summary type="text">சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான டெஸ்ட் போட்டிகளைக் காண ரசிகர்களுக்கு இலவச அனுமதி வழங்க இலங்கை கிரிக்கெட் சபை தீ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான டெஸ்ட் போட்டிகளைக் காண ரசிகர்களுக்கு இலவச அனுமதி வழங்க இலங்கை கிரிக்கெட் சபை தீர்மானித்துள்ளது.</p><p>

இதன்படி, தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டி வரும் 15 ஆம் திகதி முதல் 19 ஆம் திகதி வரை காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.</p><p></p><h2>முதலாவது போட்டி</h2><p>
</p><p>
இரண்டாவது டெஸ்ட் போட்டி வரும் 23 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை கொழும்பு எஸ்.எஸ்.சி (SSC) கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cb3550d9-4e04-4347-9d00-5fa5fc49d60a/26-6a7678c46e63b.webp' /></p><p>
</p><p>
இதற்கமைய, ரசிகர்கள் முதலாவது போட்டிக்காக காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தின் 4 ஆம் இலக்க வாயில் வழியேயும், இரண்டாவது போட்டிக்காக எஸ்.எஸ்.சி மைதானத்தின் 03, 04, 05 மற்றும் 07 ஆம் இலக்க வாயில்கள் வழியேயும் இலவசமாக மைதானத்திற்குள் நுழைய முடியும் என இலங்கை கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-08T00:31:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரஷ்யா மீது புதிய பொருளாதார தடைகள்: அமெரிக்க செனட் சபையில் கிடைத்த ஒப்புதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/new-sanctions-against-russia-us-senate-approves-1786131424"></link>
            <id>https://news.lankasri.com/article/new-sanctions-against-russia-us-senate-approves-1786131424</id>
            <summary type="text">ரஷ்யா மீதான புதிய பொருளாதார தடைகளுக்கு அமெரிக்காவின் செனட் சபை ஒப்புதல் அளித்துள்ளது. ரஷ்யா மீது புதிய பொருளாதார தடைஅமெரிக்க செனட் சபையில் கொண்டு வரப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ரஷ்யா மீதான புதிய பொருளாதார தடைகளுக்கு அமெரிக்காவின் செனட் சபை ஒப்புதல் அளித்துள்ளது.</p><h2> ரஷ்யா மீது புதிய பொருளாதார தடை</h2><p>அமெரிக்க செனட் சபையில் கொண்டு வரப்பட்ட ரஷ்யாவிற்கு எதிராக புதிய மற்றும் கடுமையான பொருளாதார தடைக்கு எதிரான வாக்கெடுப்பு பெரும் ஆதரவுடன் வெற்றி பெற்றுள்ளது.</p><p> ரஷ்யாவிற்கு எதிராக புதிய பொருளாதார தடைகளுக்கு ஆதரவு அளித்து 86 வாக்குகளும், எதிராக 11 வாக்குகளும் பதிவாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f27629dc-14d4-4ac3-ae8c-ce98e1fda19a/26-6a7633e2aa8e1.webp' /></p><p> ரஷ்யாவுக்கு எதிராக இந்த முன்னெடுப்பை மறைந்த செனட்டர் லிண்ட்சே கிரஹாம்(Lindsey Graham) தீவிரமாக முன்னெடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.</p><p> கட்சிகளின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்ட இந்த தீர்மானம் குறித்து பேசிய ஜனநாயக கட்சி செனட்டர் ரிச்சர்ட் ப்ளூமென்டால்(Richard Blumenthal) முக்கியமான கருத்துக்களை முன்வைத்துள்ளார்.</p><p> அதில், உக்ரைனிய மக்களுக்கு நாம் இன்று சொல்வது இதுதான், “நீங்கள் தனியாக இல்லை”. அத்துடன் ரஷ்யாவிற்கு நாம் இன்று சொல்வது இதுதான், “உங்களால் உக்ரைனை வெல்ல முடியாது” என குறிப்பிட்டார்.</p><h2> விதிக்கப்படும் புதிய தடைகள்</h2><p>
ரஷ்யாவின் பெட்ரோலியம், இயற்கை எரிவாயு மற்றும் ரஷ்யாவிற்கு வருவாய் பெற்று தரும் பொருட்களை இறக்குமதி செய்யும் அனைத்து நாடுகளையும் இந்த புதிய பொருளாதார தடை நடவடிக்கை தண்டிக்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2dfc8fb2-e50d-4b42-b06c-8543856ac1af/26-6a7633e35c66a.webp' /></p><p>செனட் சபையில் இந்த மசோதா வெற்றிகரமாக நிறைவேறியுள்ள நிலையில், செப்டம்பர் மாதம் இந்த மசோதா பிரதிநிதிகள் சபையின் பரிசீலனைக்கு அனுப்பப்படும்.</p><p> புதிய சட்டம் பிரதிநிதிகள் சபையிலும் வெற்றி பெற்று என்னுடைய மேஜைக்கு வந்தால் கண்டிப்பாக நானும் அதனை ஏற்று கையெழுத்திட தயாராக இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-08T00:28:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[டொராண்டோ மேயர் தேர்தல் கருத்துக் கணிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/olivia-chow-leads-toronto-mayoral-race-1786113237"></link>
            <id>https://canadamirror.com/article/olivia-chow-leads-toronto-mayoral-race-1786113237</id>
            <summary type="text">கனடாவின் டொராண்டோ மேயர் தேர்தலுக்கான ரேஸில் தற்போதைய மேயர் ஒலிவியா சௌ தொடர்ந்து முன்னிலையில் உள்ளார்.
 புதிதாகக் களமிறங்கியுள்ள முன்னாள் மத்திய அமைச்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் டொராண்டோ மேயர் தேர்தலுக்கான ரேஸில் தற்போதைய மேயர் ஒலிவியா சௌ தொடர்ந்து முன்னிலையில் உள்ளார்.
</p><p> புதிதாகக் களமிறங்கியுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் கிறிஸ் அலெக்ஸாண்டர் 10 சதவீத ஆதரவுடன் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளதாக புதிய கருத்துக்கணிப்பு ஒன்று தெரிவிக்கிறது.</p><p> 
லியாசன் ஸ்ட்ராடஜீஸ் நிறுவனம் ஆகஸ்ட் 4 மற்றும் 5-ஆம் திகதிகளுக்கு இடையில் 1,000 டொராண்டோவாசிகளிடம் நடத்திய ஆய்வின் அடிப்படையில் இந்த முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/56d96f90-6f08-46fa-9f71-e417102f0cd8/26-6a75ecd789724.webp' /></p><p>
</p><p>ஒலிவியா சௌ: 47% , பிராட் பிராட்போர்ட்: 40% , கிறிஸ் அலெக்ஸாண்டர்: 10% மற்றும் மற்ற வேட்பாளர்கள்: 3% வாக்குகள் பெற்றுக்கொள்வார்கள் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
</p><p>கிறிஸ் அலெக்ஸாண்டர் தேர்தலில் போட்டியிடுவதற்கு முன் நடத்தப்பட்ட முந்தைய ஆய்வில், 'மற்ற வேட்பாளர்களுக்கு' 10% ஆதரவு இருந்தது. </p><p>தற்போது அந்த ஆதரவு அலெக்ஸாண்டரை நோக்கி நகர்ந்துள்ளதாக லியாசன் ஸ்ட்ராடஜீஸ் தலைவர் டேவிட் வலன்டின் தெரிவித்துள்ளார். </p><p>
முடிவெடுக்காத வாக்காளர்கள் உட்பட அனைத்து மக்களிடமும் நடத்தப்பட்ட கணிப்பில், ஒலிவியா சௌ 38%, பிராட்போர்ட் 32%, அலெக்ஸாண்டர் 8% ஆதரவைப் பெற்றுள்ளனர்.
</p><p> இன்னும் 20 சதவீத வாக்காளர்கள் யாருக்கு வாக்களிப்பது என்று முடிவெடுக்காமல் உள்ளனர். தேர்தல் முடிவை தீர்மானிப்பதில் இந்த 20% வாக்காளர்கள் முக்கிய பங்கு வகிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-08T00:27:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஒரே சேலையில் தூக்கில் தொங்கிய இரு நேபாள இளம்பெண்கள் ; தற்கொலையா? கொலையா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/two-young-nepali-women-hanged-themselves-saree-1786148797"></link>
            <id>https://jvpnews.com/article/two-young-nepali-women-hanged-themselves-saree-1786148797</id>
            <summary type="text">இந்தியா பெங்களூரு ஜக்கூர் பகுதியில் மரம் ஒன்றில் ஒரே சேலையில் தூக்கில் தொங்கிய நிலையில் நேபாளத்தைச் சேர்ந்த இளம்பெண்கள் இருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியா பெங்களூரு ஜக்கூர் பகுதியில் மரம் ஒன்றில் ஒரே சேலையில் தூக்கில் தொங்கிய நிலையில் நேபாளத்தைச் சேர்ந்த இளம்பெண்கள் இருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில், இது தற்கொலையா அல்லது கொலையா என்பது குறித்து பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p>
</p><p></p><h3>முதற்கட்ட விசாரணை</h3><p>பெங்களூரு எலகங்கா பொலிஸ் நிலைய எல்லைக்குட்பட்ட ஜக்கூர் பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றுக்கு அருகிலுள்ள காலி நிலப்பகுதியில் இருந்த மரத்திலேயே நேற்று காலை இரு பெண்கள் தூக்கில் தொங்கிய நிலையில் உயிரிழந்திருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.
</p><p>
சம்பவம் தொடர்பில் தகவல் கிடைத்ததும் அங்கு விரைந்த பொலிஸார், இரு பெண்களின் சடலங்களையும் மீட்டு விசாரணைகளை ஆரம்பித்தனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3653d3eb-a012-4e08-8e6b-c603a17ee95c/26-6a7677be72979.webp' /></p><p>முதற்கட்ட விசாரணைகளில், உயிரிழந்தவர்கள் நேபாளத்தைச் சேர்ந்த 22 வயதுடைய சைஜனா மற்றும் 23 வயதுடைய ரீட்டா என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
</p><p>
சைஜனா அம்ருதஹள்ளி பகுதியிலும், ரீட்டா பிரேசர் டவுன் பகுதியிலும் வசித்து வந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>இருவரும் சுமார் 15 நாட்களுக்கு முன்னரே நேபாளத்தில் இருந்து பெங்களூருவுக்கு வந்திருந்ததுடன், அங்கு வீட்டு வேலைகளில் ஈடுபட்டு வந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
இந்நிலையில், இருவரும் ஒரே சேலையைப் பயன்படுத்தி மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளமை பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.</p><p>

இருவரும் தற்கொலை செய்துகொண்டார்களா அல்லது வேறு நபர்கள் அவர்களை கொலை செய்து பின்னர் மரத்தில் தூக்கில் தொங்கவிட்டார்களா என்பது இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.</p><p>

சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்த பின்னரே மரணத்திற்கான காரணம் தொடர்பில் தெளிவான தகவல்களைப் பெற முடியும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p><p></p>]]></content>
            <updated>2026-08-08T00:26:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thileepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வவுனியா மாநகர முதல்வரை பதவி நீக்கிய ஆளுநரின் தீர்மானத்திற்கான இடைகாலத் தடை நீடிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/stay-extended-on-vavuniya-mayor-s-removal-1786145253"></link>
            <id>https://tamilwin.com/article/stay-extended-on-vavuniya-mayor-s-removal-1786145253</id>
            <summary type="text">வவுனியா மாநகர முதல்வரை பதவி நீக்கிய ஆளுநரின் தீர்மானத்தின் மீதான இடைகால
தடைக்கட்டளை எதிர்வரும் செப்ரெம்பர் 9 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதுடன்
வி...</summary>
            <content type="html"><![CDATA[<p>வவுனியா மாநகர முதல்வரை பதவி நீக்கிய ஆளுநரின் தீர்மானத்தின் மீதான இடைகால
தடைக்கட்டளை எதிர்வரும் செப்ரெம்பர் 9 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதுடன்
விவாதங்களை எழுத்து மூல சமர்பணமாக வழங்குமாறும் வவுனியா மேல் நீதிமன்றம்&nbsp; உத்தரவிட்டுள்ளது.</p><p>இந்த உத்தரவானது நேற்று(07.08.2026) பிறப்பிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>வவுனியா மாநகர முதல்வர் பதவி நீக்கம்</h2><p>
</p><p>
வவுனியா மாநகர முதல்வரை பதவி நீக்கியதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட
எழுத்தாணை விண்ணப்பம் மீண்டும் ஒரு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.</p><p> இது
தொடர்பாக வழக்கு தொடுநர் சார்பாக முன்னிலையாகிய ஜனாதிபதி சட்டத்தரணி
எம்.ஏ.சுமந்திரன் கருத்து தெரிவிக்கையில்,</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/afdf27c9-d529-416b-a25a-bcc029575db0/26-6a766d52d05c7.webp' /></p><p>

ஆரம்ப கட்டத்தில் நாங்கள் எடுத்திருந்த இடைக்கால தடையினை நீக்குமாறு
பிரதிவாதிகள் சார்பில் ஆட்சேபனை அணைக்கப்பட்டிருந்தது. </p><p>அந்த ஆட்சேபனைக்கு
நாங்கள் மறு ஆட்சேபனையினை&nbsp; ஓகஸ்ட் 6ஆம் திகதி அணைத்திருந்தோம். அந்த விடயம்
தொடர்பாக மன்றில் விசாரணை நடைபெற்றது.</p><p></p><h2>இடைக்காலத் தடை</h2><p>
</p><p>
இடைக்காலத் தடையை நீடிப்பதா அல்லது அதனை விலக்குவதா என்பது சம்பந்தமாக மட்டுமே
விவாதம் இடம்பெற்றிருக்கிறது. நாள் முழுவதும் இந்த விவாதம் இடம்பெற்று,
இறுதியில் எங்களுடைய விவாதங்களினை எழுத்து மூல சமர்ப்பணமாக, மன்றுக்கு
வழங்குமாறு மன்று பணித்திருக்கிறது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4dfd1b1e-07af-455f-8192-0b4c4e9a2532/26-6a766d5382798.webp' /></p><p>அதனை இந்த மாதம் 28 ஆம் திகதி அன்று அல்லது அதற்கு முன்னதாக நாங்கள்
அலுவலகத்திலே தாக்கல் செய்ய வேண்டும். அதற்குப் பிறகு செப்டம்பர் மாதம் 9 ஆம்
திகதி இடைக்கால தடை தொடர்பான உத்தரவை நீதிமன்றம் வழங்கும். </p><p>அதன் பின்னர் தான்
பிரதான வழக்கு இடம்பெறும். அத்துடன் செப்டம்பர் 9 ஆம் திகதி வரைக்கும் ஏற்கனவே
வழங்கப்பட்டிருக்கின்ற இடைக்காலத் தடைக்கட்டளை மன்றால்
நீடிக்கப்பட்டிருக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-08T00:17:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிளாஸ்டிக் உணவுப் பொதிகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த புதுக்குடியிருப்பு பிரதேச சபை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/pudukudiyirupu-end-plastic-food-package-1786142071"></link>
            <id>https://tamilwin.com/article/pudukudiyirupu-end-plastic-food-package-1786142071</id>
            <summary type="text">புதுக்குடியிருப்பில் அனைத்து உணவகங்களிலும் லஞ்சீட் மற்றும் பிளாஸ்டிக் உணவுப் பொதிகளின் பயன்பாட்டை முற்றாகத் தவிர்த்து, இயற்கையான பொருட்களின் பாவணையை அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>புதுக்குடியிருப்பில் அனைத்து உணவகங்களிலும் லஞ்சீட் மற்றும் பிளாஸ்டிக் உணவுப் பொதிகளின் பயன்பாட்டை முற்றாகத் தவிர்த்து, இயற்கையான பொருட்களின் பாவணையை அறிமுகப்படுத்துவதற்கான விசேட கலந்துரையாடலொன்று நடைபெற்றுள்ளது.</p><p>

இந்தக் கலந்துரையாடலானது நேற்றைய தினம்(07.08.2026) இடம்பெற்றுள்ளது.</p><p></p><h2>இயற்கையான பொருட்களின் பாவணை</h2><p> </p><p>

புதுக்குடியிருப்பு பிரதேச சபை தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில், சுற்றுச்சூழலுக்கு உகந்த உணவுப் பரிமாறல் முறைகளின் அவசியம் குறித்து உணவக உரிமையாளர்களுக்கு விரிவான விளக்கங்கள் வழங்கப்பட்டுள்ளன.
</p><p>
இதன்போது, அடுத்த ஒரு மாத காலத்திற்குள் லஞ்சீட் மற்றும் பிளாஸ்டிக் உணவுப் பொதிகளின் பயன்பாட்டை முற்றாக நிறுத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/57dd30af-940a-4b0a-a927-a13437cc6776/26-6a76635ab2a7f.webp' /></p><p> </p><p>இந்த முயற்சிக்கு உணவக உரிமையாளர்களும் தங்களது முழுமையான ஒத்துழைப்பை வழங்க இணக்கம் தெரிவித்துள்ளனர்.</p><p> 

பசுமையான புதுக்குடியிருப்பை உருவாக்கும் நோக்கிலும், சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் குறைத்து இயற்கை நட்பு நடைமுறைகளை ஊக்குவிக்கும் நோக்கிலும் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>

புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் தவிசாளர் வேலாயுதம் கரிகாலன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில், பிரதேச சபையின் செயலாளர், பிரதேச சபையின் உத்தியோகத்தர்கள், வருமானப் பரிசோதகர்கள், பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள், உணவக உரிமையாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b076cd01-339d-49ef-9e9c-032661a9cc3c/26-6a76635b7e284.webp' /></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-08T00:17:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[குரு பகவானால் இந்த ராசிக்காரர்களுக்கு பண மழை கொட்டப்போகுது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/jupiter-will-shower-money-on-these-zodiac-signs-1786148086"></link>
            <id>https://jvpnews.com/article/jupiter-will-shower-money-on-these-zodiac-signs-1786148086</id>
            <summary type="text">குரு பகவான் தற்போது தனது உச்ச ராசியான கடக ராசியில் பயணித்து வருகிறார். அதுவும் அஸ்தமன நிலையில் பலவீனமாக பயணித்து வருகிறார்.&amp;nbsp;இந்நிலையில் குரு பகவா...</summary>
            <content type="html"><![CDATA[<p>குரு பகவான் தற்போது தனது உச்ச ராசியான கடக ராசியில் பயணித்து வருகிறார். அதுவும் அஸ்தமன நிலையில் பலவீனமாக பயணித்து வருகிறார்.&nbsp;இந்நிலையில் குரு பகவான் ஆகஸ்ட் 10 ஆம் திகதி கடக ராசியில் உதயமாகவுள்ளார். கடக ராசியில் குரு பகவான் இருப்பதால், ஹன்ஸ் மகாபுருஷ ராஜயோகம் உருவாகியுள்ளது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1f2e84b6-50fa-4d51-b351-1a725cbf535c/26-6a7674f7b8e61.webp' /></p><p>குரு பகவான் கடக ராசியில் உதயமாவதால் வலுவடைந்து சில ராசிக்காரர்களுக்கு இருமடங்கு நன்மைகளை வழங்கவுள்ளார். இப்போது குரு பகவான் கடக ராசியில் உதயமாவதால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதை நாம் இங்கு பார்ப்போம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/17ef4ab3-e983-4359-a2af-3429114d2c8f/26-6a7674f86f9ab.webp' /></p><h3>கடகம்
</h3><p>கடக ராசியின் முதல் வீட்டில் குரு பகவான் உதயமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை கிடைக்கும் வாய்ப்புள்ளது. புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும் வாய்ப்புள்ளது. குடும்பத்தில் மகிழ்ச்சியும், அமைதியும் அதிகரிக்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/910f4950-59bd-42d2-a555-40c63a8c7d5e/26-6a7674f92139d.webp' /></p><h3>கன்னி
</h3><p>கன்னி ராசியின் 11 ஆவது வீட்டில் குரு பகவான் உதயமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு ஆகஸ்ட் 10 முதல் ஒரு வரப்பிரசாதமாக இருக்கும். வருமானத்தில் உயர்வு ஏற்படும். தொழிலதிபர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. முதலீடுகளில் இருந்து எதிர்பாராத அளவில் லாபம் கிடைக்கும். சமூகத்தில் செல்வாக்குமிக்கவர்களின் நட்பு கிடைக்கும். நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும். குடும்ப சூழல் இனிமையாக இருக்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cd409751-a341-4a3d-9fbe-3c04da4d479c/26-6a7674f9d24d8.webp' /></p><h3>துலாம்
</h3><p>துலாம் ராசியின் 10 ஆவது வீட்டில் குரு பகவான் உதயமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். பணியிடத்தில் நீண்ட கால கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல சம்பளத்துடன் வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளது. வியாபாரிகளுக்கு எதிர்பாராத அளவில் லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். குரு பகவானின் அருளால் நிதி நிலைமை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9224fb69-6dac-4bfb-9725-febc0a37d906/26-6a7674fa836ba.webp' /></p><h3>தனுசு
</h3><p>தனுசு ராசியின் 8 ஆவது வீட்டில் குரு பகவான் உதயமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு திடீர் நிதி ஆதாயங்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. பரம்பரை சொத்துக்களில் இருந்து நல்ல பலன்கள் கிடைக்கும். வேலை மற்றும் தொழிலில் நல்ல நேர்மறையான பலன்களைப் பெறுவீர்கள். நிதி நிலைமை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் தீர்ந்து, மகிழ்ச்சி அதிகரிக்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f12493fc-80d4-437f-a74a-05b6c16826fa/26-6a7674fb32ef5.webp' /></p>]]></content>
            <updated>2026-08-08T00:14:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[பெங்களூருவில் வீடு ஒன்றில் பெண்ணின் எலும்புக்கூடு கண்டுபிடிப்பு: யாருமின்றி உயிரிழந்த மூதாட்டி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/woman-skeletal-found-in-duplex-home-in-bengaluru-1786145078"></link>
            <id>https://news.lankasri.com/article/woman-skeletal-found-in-duplex-home-in-bengaluru-1786145078</id>
            <summary type="text">பெங்களூருவில் வீடு ஒன்றில் பெண் ஒருவரின் எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.52 வயது வயது பெண்ணின் எலும்புக்கூடு
பெங்களூரு...</summary>
            <content type="html"><![CDATA[<p>பெங்களூருவில் வீடு ஒன்றில் பெண் ஒருவரின் எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><h2>52 வயது வயது பெண்ணின் எலும்புக்கூடு</h2><p>
பெங்களூருவின் பகலகும்டே(Bagalagunte) பகுதியில் ஹவானூர் லேஅவுட் என்ற இடத்தில் அமைந்துள்ள வீடு ஒன்றில் 52 வயது வயது பெண்ணின் எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டுள்ளது.</p><p> தாக்‌ஷாயிணி என்று அடையாளம் காணப்பட்டுள்ள இந்த பெண், உயிரிழந்து கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகியிருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> தாக்‌ஷாயிணி உடல் நீண்ட நாட்களாக யாருக்கும் தெரியாமல் வீட்டிற்குள்ளேயே கிடந்து இருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e136acec-c6ff-40e6-af72-6613bcec2501/26-6a7669380937f.webp' /></p><p></p><h2>குடும்ப பின்னணி</h2><p>மகன் மற்றும் கணவன் உயிரிழந்த பிறகு தாக்‌ஷாயிணி தனியாக வாழ்ந்து வந்துள்ளார்.</p><p> மகன் மற்றும் கணவனின் மறைவுக்கு பிறகு தாக்‌ஷாயிணி மிகுந்த மன அழுத்தத்தில் அவதியடைந்து வந்தாக இருந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.</p><p> தாக்‌ஷாயிணியின் கணவர் 10 வருடங்களுக்கு முன்பு உயிரிழந்துள்ளார், அவரது மகனும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.</p><p>தாக்‌ஷாயிணியின் மகளும், மருமகனும் இந்த காலக்கட்டத்தில் இங்கு வந்து செல்லவில்லை என்று கூறப்படுகிறது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-08T00:00:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டின் சிறைகளையே நிர்வகிக்க முடியாத அரசால் ஒட்டுமொத்த நாட்டை எவ்வாறு நிர்வகிக்க முடியும் - சுஜீவ சேனசிங்க எம்.பி. கேள்வி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/how-can-a-government-manage-the-country-prisons-1786145568"></link>
            <id>https://tamilwin.com/article/how-can-a-government-manage-the-country-prisons-1786145568</id>
            <summary type="text">தற்போதைய அரசு முழு நாட்டை நிர்வகிப்பதற்கு முன்னர், குறைந்தது நாட்டின்
சிறைச்சாலைகளையாவது சரியாக நிர்வகிக்கும் பொறுப்பை ஏற்றிருக்க வேண்டும் என்று
ஐக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>தற்போதைய அரசு முழு நாட்டை நிர்வகிப்பதற்கு முன்னர், குறைந்தது நாட்டின்
சிறைச்சாலைகளையாவது சரியாக நிர்வகிக்கும் பொறுப்பை ஏற்றிருக்க வேண்டும் என்று
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார்.
</p><p>
கொழும்பில் நேற்று(7) வெள்ளிக்கிழமை ஐக்கிய மக்கள் சக்தி தலைமைச் செயலகத்தில்
நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே
அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.</p><p></p><h2>அரசின் மறைமுகச் சதித்திட்டம்</h2><p>
</p><p>
அவர் மேலும் தெரிவிக்கையில்,
</p><p>
"சிறைக்குள் இருக்கும் கைதிகளையோ அல்லது சிறைச்சாலை அமைப்பைக் கூட முறையாக
நிர்வாகிக்க முடியாத தற்போதைய அரசால், ஒட்டுமொத்த நாட்டையும் அதன் மக்களையும்
எவ்வாறு பாதுகாத்துச் சிறப்பாக ஆட்சி செய்ய முடியும் என்பதை மக்கள் இப்போதாவது
புரிந்துகொள்ள வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f4d8c19c-9ce8-4f43-a53f-36a93847c5ed/26-6a766e24098d5.webp' /></p><p>

சிறைச்சாலைகளில் தொடர்ச்சியாக இத்தகைய வன்முறைகளும் மோதல்களும் இடம்பெறுவது
வெறும் நிர்வாகத் திறமையின்மையா அல்லது இதன் பின்னணியில் அரசின் மறைமுகச்
சதித்திட்டம் எதுவும் இருக்கின்றதா என்ற சந்தேகம் எழுகின்றது.
</p><p>
நாட்டில் நிலையற்ற சூழலை உருவாக்கி, அதைக் காரணம் காட்டி அவசரகாலச் சட்டத்தை
நீட்டிப்பதற்கும், பொதுமக்கள் மத்தியில் பயத்தைத் தூண்டுவதற்கும் அரசே
இவ்வாறான சூழல்களைப் பயன்படுத்துகின்றதா என்ற கோணத்திலும் கேள்விகள்
எழுகின்றன.</p><p></p><h2>சட்ட ஒழுங்கு மீறல்கள்</h2><p>
</p><p>
சிறைச்சாலைகளில் இத்தனை சட்ட ஒழுங்கு மீறல்களும் அசம்பாவிதங்களும் நடந்தேறிய
பின்னரும், அதற்குப் பொறுப்பான துறைசார் அமைச்சர் தனது பதவியை&nbsp; விலகல் செய்யாமல் தொடர்ந்து நீடிப்பது பெரும் கேள்வியை எழுப்புகின்றது.
</p><p>
அமைச்சர் பதவி விலகாமல் இருப்பதன் மூலம், சிறைச்சாலைக்குள் நடக்கும் இத்தகைய
மோதல்கள் அவருடைய முழு அறிவோடும் விருப்பத்தோடும் தான் நடக்கின்றனவோ என்ற
எண்ணம் தோன்றுவதைத் தவிர்க்க முடியவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/99b8e956-66bf-4dcd-8c34-d14b6789f12e/26-6a766e24ae659.webp' /></p><p>
</p><p>
நீதிமன்றத்தால் தண்டனை பெற்றவர்களோ அல்லது வழக்கு விசாரணை முடிவடையாமல் பிணை
மறுக்கப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களோ, சிறை வளாகத்துக்குள்ளேயே
மரணமடையும் அல்லது கொல்லப்படும் ஆபத்தான சூழல் நிலவுவது நாட்டின் சட்டத்தின்
ஆட்சிக்கும் நீதித்துறைக்கும் விழுந்த பேரிடியாகும்.
</p><p>
தவறு செய்தவர்களுக்குச் சட்டப்படி நீதிமன்றமே தண்டனை வழங்க வேண்டுமே தவிர,
சிறைச்சாலைகளுக்குள்ளேயே அவர்களுக்கு மறைமுக மரண தண்டனை கிடைக்கும் நிலைமை
உருவாகக் கூடாது. இந்த விவகாரத்தில் அரசு தனது உண்மையான நிலையை நாட்டுக்குத்
தெளிவுபடுத்த வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-07T23:45:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[MNP சேவை தொடர்பில் வெளியான செய்திகளுக்கு அரசாங்கம் விளக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/government-clarifies-news-regarding-mnp-service-1786146159"></link>
            <id>https://jvpnews.com/article/government-clarifies-news-regarding-mnp-service-1786146159</id>
            <summary type="text">தொலைபேசி எண் பெயர்வுத்திறன் (MNP) சேவை வரும் செப்டம்பர் மாதத்தில் ஆரம்பிக்கப்படாது என அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ளது.
நாடாளுமன்றத்தில் டிஜிட்டல் பொரு...</summary>
            <content type="html"><![CDATA[<p>தொலைபேசி எண் பெயர்வுத்திறன் (MNP) சேவை வரும் செப்டம்பர் மாதத்தில் ஆரம்பிக்கப்படாது என அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ளது.</p><p>
</p><p></p><p>நாடாளுமன்றத்தில் டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன தெரிவித்த கருத்துக்கள் தொடர்பாக வெளியாகிய ஊடக அறிக்கைகளைத் திருத்தியமைக்கும் வகையிலேயே அரசாங்கம் இந்த விளக்கத்தை அளித்துள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/72a40cbc-9562-43bb-917f-f4eb1a87d198/26-6a76718054997.webp' /></p><p>தற்போது காணப்படும் சிக்கல்களுக்குத் தீர்வு கண்டு, இச்சேவையைத் திறம்படச் செயல்படுத்துவதற்காக இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு (TRCSL), அமைச்சு மற்றும் தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்களுக்கு இடையே கலந்துரையாடல்கள் நடைபெற்று வருவதாக மட்டுமே பிரதி அமைச்சர் குறிப்பிட்டதாக அரசாங்கம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
தொலைத்தொடர்புத் துறையின் பங்குதாரர்கள் செப்டம்பர் மாத இறுதிக்குள் ஒரு இறுதி உடன்பாட்டிற்கு வரத் தவறினால், இலங்கை தொலைத்தொடர்புச் சட்டம் மற்றும் தொடர்புடைய உரிம நிபந்தனைகளின் கீழ் ஒழுங்குமுறை உத்தரவொன்றைப் பிறப்பிக்க TRCSL நடவடிக்கை எடுக்கும் என்றே பிரதி அமைச்சர் சுட்டிக்காட்டியிருந்தார்.</p><p>

எனவே, 'செப்டம்பர் மாத இறுதி' என்பது தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ஒரு உடன்பாட்டிற்கு வருவதற்கு வழங்கப்பட்ட காலக்கெடுவே தவிர, அது MNP சேவையின் அதிகாரப்பூர்வ தொடக்கத் திகதி அல்ல என அந்த அறிக்கை வலியுறுத்தியுள்ளது.
</p><p>
நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாக்கும் அதேவேளையில், இந்தச் சேவையை கூடிய விரைவில் அறிமுகப்படுத்துவதில் அரசாங்கம் உறுதியாக இருப்பதாகவும், இதன் அதிகாரப்பூர்வ தொடக்கத் திகதி உரிய நேரத்தில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-07T23:42:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட 19 வயது இளைஞன் ; பொலிஸார் தீவிர விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/19-year-old-youth-found-dead-in-jaffna-home-1786121241"></link>
            <id>https://jvpnews.com/article/19-year-old-youth-found-dead-in-jaffna-home-1786121241</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் நாரந்தனை பகுதியில் இளைஞர் ஒருவர் வீட்டினுள் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் நாரந்தனை பகுதியில் இளைஞர் ஒருவர் வீட்டினுள் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><p>
</p><p></p><p>உயிரிழந்த இளைஞனின் தாயாரும் சகோதரியும் தற்போது யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் வசித்து வருகின்றனர். </p><p>அதேவேளை, நாரந்தனையில் அமைந்துள்ள குடும்ப வீட்டில் அவரது தந்தை மட்டுமே தனியாக வசித்து வந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
சம்பவம் இடம்பெற்ற நாளில், தந்தை வேலை நிமித்தமாக வீட்டை விட்டு வெளியே சென்றிருந்ததாகவும், வேறொரு இடத்தில் வசித்து வந்த இளைஞன் அவ்வப்போது வந்து செல்லும் அந்த வீட்டிற்கு வந்திருந்ததாகவும் ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f1b234ed-fdad-40ce-8da1-01ce7e5e7c62/26-6a760c1b52cf9.webp' /></p><p>இந்நிலையில், இன்று காலை அப்பகுதி வழியாக ஆடுகளை மேய்ப்பதற்காகச் சென்ற நபர் ஒருவர் வீட்டிற்குள் இளைஞன் தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். </p><p>இதையடுத்து அவர் உடனடியாக ஊர்காவற்துறை பொலிஸாருக்கு தகவல் வழங்கினார்.
</p><p>
தகவலையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் முதற்கட்ட விசாரணைகளை மேற்கொண்டனர். </p><p>மேலும், மரணத்திற்கான காரணத்தை உறுதிப்படுத்தும் நோக்கில் உடற்கூற்றுப் பரிசோதனை மேற்கொள்ள இளைஞனின் சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.</p><p>

இந்த மரணம் தொடர்பான சூழ்நிலைகள் குறித்து ஊர்காவற்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர். </p><p>உடற்கூற்றுப் பரிசோதனை அறிக்கையும் விசாரணை முடிவுகளும் வெளியாகிய பின்னரே மரணத்திற்கான துல்லியமான காரணம் உறுதிப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-07T23:36:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - அரசை கடுமையாக சாடிய எதிர்கட்சித் தலைவர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/threat-national-security-sajith-criticize-1786143879"></link>
            <id>https://tamilwin.com/article/threat-national-security-sajith-criticize-1786143879</id>
            <summary type="text">நாட்டின் பல்வேறு சிறைச்சாலைகளில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் பாதுகாப்பற்ற
சூழ்நிலைகள் மற்றும் கலவரங்கள் நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு
விடுக்கப்பட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டின் பல்வேறு சிறைச்சாலைகளில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் பாதுகாப்பற்ற
சூழ்நிலைகள் மற்றும் கலவரங்கள் நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு
விடுக்கப்பட்டுள்ள நேரடி அச்சுறுத்தலாகும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித்
பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.</p><p>

நாடாளுமன்றத்தில் நேற்று(07.08.2026) நடைபெற்ற விசேட கூற்றொன்றை முன்வைத்து
உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>தேசிய பாதுகாப்புக்கு&nbsp;அச்சுறுத்தல்</h2><p>
</p><p>
அவர் மேலும் தெரிவிக்கயைில், "யார் எவ்வாறான கருத்துகளைத் தெரிவித்தாலும், தற்போதைய சிறைச்சாலை மோதல்களும்
அசம்பாவிதங்களும் தேசிய பாதுகாப்புக்குப் பாரிய அச்சுறுத்தலாகும்.</p><p>

சிறைச்சாலைகளில் இடம்பெறும் தொடர் அசம்பாவிதங்களைக் அடிப்படையாகக் கொண்டே நீதி
மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷ நாணயக்காரவுக்கு எதிராக நாங்கள்
நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டுவந்தோம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7672ad0e-ca8d-42bf-aeb4-c9acd8fdbd39/26-6a7667c857c1f.webp' /></p><p> </p><p>எனினும், அந்த வாக்கெடுப்பில்
அமைச்சருக்கு ஆதரவாக 152 வாக்குகளும், எதிராக 36 வாக்குகளும் அளிக்கப்பட்டு
அரசு தன் வெற்றியைத் துள்ளிக் குதித்துக் கொண்டாடியது.
</p><p>
ஆனால், அந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை தோற்கடிக்கப்பட்ட பின்னர் மஹர
சிறைச்சாலையிலும், தொடர்ந்து கொழும்பு மகசின் சிறைச்சாலையிலும், தற்போது
குருவிட்ட மற்றும் பல்லன்சேன சிறைச்சாலைகளிலும் அடுத்தடுத்துப் பிரச்சினைகள்
வெடித்துள்ளன.
</p><p>
எனவே, இந்த விவகாரத்தில் அரசு எவ்வித அலட்சியமுமின்றி உடனடியாகக் கடுமையான
நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்" என தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-07T23:33:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை சிறை தகர்பின் பின்னணியில் பிரான்சில் தீட்டப்பட்ட சதி! திடுக்கிடும் இரகசியம் அம்பலம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-lanka-prisoners-riot-prison-attack-sri-lanka-1786127991"></link>
            <id>https://tamilwin.com/article/sri-lanka-prisoners-riot-prison-attack-sri-lanka-1786127991</id>
            <summary type="text">அண்மைக் காலங்களில் இலங்கையின் பல்வேறு சிறைச்சாலைகளில் (நீர்கொழும்பு, மகர, மேகசின், குருவிட்ட மற்றும் பல்லன்சேனை) இடம்பெற்று வரும் தொடர்ச்சியான கலவரங்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>அண்மைக் காலங்களில் இலங்கையின் பல்வேறு சிறைச்சாலைகளில் (நீர்கொழும்பு, மகர, மேகசின், குருவிட்ட மற்றும் பல்லன்சேனை) இடம்பெற்று வரும் தொடர்ச்சியான கலவரங்கள் மற்றும் சிறை உடைப்பு முயற்சிகள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.
</p><p>
சிறைச்சாலைகளில் நடக்கும் இந்தக் கலவரங்கள் தற்செயலானவை அல்ல; இவை வெளிநாட்டிலிருந்து, குறிப்பாக பிரான்சில் மறைந்திருக்கும் குடு சலிது (Kudu Salidu) என்பவரால் முன்னாள் ஜனாதிபதி ஒருவரின் உறவினருடன் இணைந்து திட்டமிடப்படுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p>

இலங்கையிலிருந்து தப்பியோடிய இவர், பிரான்சில் இருந்தபடியே இக்கலவரங்களை இயக்கி வருவதாகவும், சிறைச்சாலைகளில் உள்ளவர்களுக்குத் தேவையான நிதி உதவிகளை அவரது குடும்பத்தினருக்கு வழங்குவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
</p><p>
முன்னாள் ஜனாதிபதி மற்றும் பிற அரசியல் பிரமுகர்கள் மீது நிலுவையில் உள்ள வழக்குகளில் இருந்து கவனத்தைத் திசைதிருப்புவதே இந்தச் சூழ்ச்சிகளின் முக்கிய நோக்கமாகக் கருதப்படுகிறது.
</p><p>
 சிறைச்சாலைக்குள் அடைக்கப்பட்டுள்ள போதைப்பொருள் வர்த்தகர்கள் மற்றும் பாதாள உலகக் குழுவினர், அரசியல்வாதிகளின் தூண்டுதலின் பேரில் இந்தக் குழப்பங்களை ஏற்படுத்துகின்றனர்.
</p><p>
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால, இந்தச் சூழலைச் சீர்குலைவு முயற்சிகளாகக் குறிப்பிடுகிறார். </p><p>

 இந்தச் சூழலைக் கட்டுப்படுத்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் விசேட கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்படுகின்றன. 

இந்த விடயங்கள் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி...</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/YuCqi6-ulDM" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-07T23:05:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[கால்பந்து போட்டிக்கு சில மணி நேரங்களுக்கு முன்பு.,மைதானத்தை தாக்கிய ரஷ்ய ஏவுகணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/russian-missile-hits-odesa-stadium-before-match-1786143689"></link>
            <id>https://news.lankasri.com/article/russian-missile-hits-odesa-stadium-before-match-1786143689</id>
            <summary type="text">ஓடேசா கால்பந்து மைதானம் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. கால்பந்து மைதானம் மீது ரஷ்யா தாக்குதல்உக்ரைனின் ஓடேசா(Odesa) நகரில் அமைந்துள்ள செர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஓடேசா கால்பந்து மைதானம் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது.</p><h2> கால்பந்து மைதானம் மீது ரஷ்யா தாக்குதல்</h2><p>உக்ரைனின் ஓடேசா(Odesa) நகரில் அமைந்துள்ள செர்னோமோரெட்ஸ் மைதானம்(Chornomorets Stadium) மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது.</p><p> மைதானத்தில் உக்ரைன் பிரீமியர் லீக் கால்பந்து போட்டிகள் தொடங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு ரஷ்யா இந்த ஏவுகணை தாக்குதலை நடத்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5f36b0d4-9094-49ca-bdfb-790376fcef23/26-6a7663cb0afda.webp' /></p><p>இதில் குறைந்தது ஒருவர் காயமடைந்து இருப்பதுடன், மைதானம் பலத்த சேதம் அடைந்துள்ளது.</p><h2> மைதானத்தில் ஏற்பட்டுள்ள சேதம்</h2><p>34,000 பேர் அமர்ந்து பார்க்கக்கூடிய செர்னோமோரெட்ஸ் மைதானத்தின் கூரை பெருமளவு சேதமடைந்துள்ளது.</p><p></p><p> மைதானத்தில் உள்ள கண்ணாடிகள் மற்றும் பார்வையாளர்கள் மாடங்கள் பலத்த சேதமடைந்து இருப்பதாக அவசரகால சேவைப் பிரிவு தகவல் தெரிவித்துள்ளது.</p><p>இந்த சம்பவத்தில் சிதறிய வெடிகுண்டு சில்லுகளால் 29 வயதுடைய பெண் ஒருவர் காயமடைந்து இருப்பதை ஓடேசா ஆளுநர் ஒலெக் கிப்பர் உறுதிப்படுத்தியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5865d822-21ca-4731-866b-f6a68e586d7d/26-6a7663cbb4d97.webp' /></p><p>சேதத்தின் அளவை மதிப்பிடுவதற்காக உள்ளூர் அதிகாரிகளும், அவசர கால மீட்பு படையினரும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.</p><h2>போட்டிகள் ஒத்திவைக்கப்படுமா?</h2><p>செர்னோமோரெட்ஸ் மைதானத்தில் நாளை உக்ரைன் பிரீமியர் லீக்கின் இரண்டாவது சுற்று ஆட்டம் நடைபெற இருந்தது.</p><p> நாளை மதியம் 1 மணிக்கு இந்த மைதானத்தில் செர்னோமோரெட்ஸ் மற்றும் கோலோஸ் அணிகள் மோத இருந்தன.</p><p> இந்த தாக்குதலை அடுத்து இந்த போட்டி ஒத்திவைக்கப்படுமா? அல்லது வேறு இடத்திற்கு மாற்றப்படுமா? அல்லது ரத்து செய்யப்படுமா? என்று இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் இல்லை.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-07T23:01:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரஷ்யா மீது புதிய பொருளாதாரத் தடை! அமெரிக்க செனட் சபை ஒப்புதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/us-senate-passes-russia-sanctions-bill-1786141844"></link>
            <id>https://ibctamil.com/article/us-senate-passes-russia-sanctions-bill-1786141844</id>
            <summary type="text">
ரஷ்யா மீது புதிய பொருளாதாரத் தடைகளை விதிக்கும் சட்டமூலத்திற்கு அமெரிக்க செனட் சபை ஒப்புதல் அளித்து, அதனைப் பிரதிநிதிகள் சபையின் பரிசீலனைக்கு அனுப்பி...</summary>
            <content type="html"><![CDATA[<p>
ரஷ்யா மீது புதிய பொருளாதாரத் தடைகளை விதிக்கும் சட்டமூலத்திற்கு அமெரிக்க செனட் சபை ஒப்புதல் அளித்து, அதனைப் பிரதிநிதிகள் சபையின் பரிசீலனைக்கு அனுப்பி வைத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
</p><p>
மறைந்த செனட்டர் லிண்ட்சே ஓ. கிரஹாமின் பெயரிலான ரஷ்யா மீது தடை விதிக்கும் சட்டமூலம் 2026 (H.R. 5334), செனட் சபையில் 86-11 என்ற பெரும்பான்மை வாக்குகள் வித்தியாசத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
இதற்கு எதிராக 10 ஜனநாயகக் கட்சி செனட்டர்களும், குடியரசுக் கட்சியைச் சேர்ந்த ராண்ட் போல் என மொத்தம் 11 செனட்டர்கள் வாக்களித்துள்ளதுடன், மூன்று குடியரசுக் கட்சி செனட்டர்கள் இந்த வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை என்றும் தெரியவருகிறது.</p><p></p><h2>கிரஹாமின் சட்டமூலம் </h2><p>
</p><p>
கடந்த மாதம் காலமான செனட்டர் கிரஹாமின் முதன்மையான சட்ட ஆக்க முன்னுரிமைகளில் ஒன்றாக இந்த சட்டமூலம் இருந்ததாக கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ae76184c-3f40-4555-86ac-bfefdf994dc7/26-6a76633514a19.webp' /></p><p>
அவரது இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக அமெரிக்கா சென்றிருந்த உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, பல அமெரிக்க செனட்டர்களையும் சந்தித்துப் பேசியிருந்தார்.
</p><p>
இந்தச் சட்டமூலம் முழுமையாகச் சட்டமாக்கப்படும் பட்சத்தில், ரஷ்யா மற்றும் உக்ரைன் போருக்கு ஆதரவளிக்கும் நபர்கள் மீது முதன்மை மற்றும் இரண்டாம் நிலைத் தடைகள் விதிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.</p><h2>ரஷ்யாவுக்கு எதிராக வரி</h2><p>
</p><p>
இந்தத் தடைகள் ரஷ்ய அதிகாரிகள், தொழிலதிபர்கள், அவர்களது குடும்ப உறுப்பினர்கள், வெளிநாட்டவர்கள், மற்றும் ரஷ்ய வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களைக் இலக்கு வைக்கும் எனவும் குறிப்பிடப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d3be2a64-ae50-4a8a-9819-03d49ba1746b/26-6a766335c5a77.webp' /></p><p>மேலும், ரஷ்யாவிடமிருந்து அதிகளவில் கச்சா எண்ணெய் அல்லது எரிவாயுவைக் கொள்முதல் செய்யும் நாடுகளின் இறக்குமதிப் பொருட்கள் மீது இலக்கு வைக்கப்பட்ட வரிகளை விதிக்க இச்சட்டம் அமெரிக்க ஜனாதிபதிக்கான அதிகாரத்தை வழங்கும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-07T22:59:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[இத்தாலி - ஸ்பெயின் உறவில் விரிசல்: இத்தாலிய குடிமக்களுக்கு புதிய எல்லை கட்டுப்பாடுகள் அமுல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/spain-implement-new-border-controls-for-italy-1786142244"></link>
            <id>https://news.lankasri.com/article/spain-implement-new-border-controls-for-italy-1786142244</id>
            <summary type="text">இத்தாலி மக்களுக்கு தற்காலிக எல்லை கட்டுப்பாடுகளை ஸ்பெயின் அரசு&amp;nbsp; அறிவித்துள்ளது. இத்தாலி - ஸ்பெயின் உறவில் விரிசல்சியூட்டா விவகாரம் இத்தாலி - ஸ்பெ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இத்தாலி மக்களுக்கு தற்காலிக எல்லை கட்டுப்பாடுகளை ஸ்பெயின் அரசு&nbsp; அறிவித்துள்ளது.</p><h2> இத்தாலி - ஸ்பெயின் உறவில் விரிசல்</h2><p>சியூட்டா விவகாரம் இத்தாலி - ஸ்பெயின் இடையே இராஜதந்திர விரிசலை ஏற்படுத்திய நிலையில், இத்தாலிய மக்களுக்கு தற்காலிக எல்லை கட்டுப்பாடுகளை ஸ்பெயின் அரசு விதித்துள்ளது.</p><p> இந்த எல்லை கட்டுப்பாடானது ஆகஸ்ட் 8ம் திகதி நள்ளிரவு முதல் செப்டம்பர் 7ம் திகதி நள்ளிரவு வரை அமுலில் இருக்கும் என்று அந்நாட்டு உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0ad578da-f970-4828-bb4d-2be698cbe987/26-6a765e262d631.webp' /></p><p> &nbsp;ஸ்பெயினின் 2 நாட்கள் கெடுவை இத்தாலி திட்டவட்டமாக மறுத்ததை அடுத்து ஸ்பெயினின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.</p><p> மேலும் இது இரு நாடுகளுக்கும் இடையே இராஜதந்திர அளவில் பதற்றம் ஏற்பட்டுள்ளதை உறுதிப்படுத்தியுள்ளது.</p><p></p><h2> ஸ்பெயின் விடுத்த எச்சரிக்கை</h2><p>
&nbsp;கடந்த வாரம் ஸ்பெயின் எல்லை மாகாணமான சியூட்டாவிற்குள் மொராக்கோவில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் அத்துமீறி நுழைந்ததை அடுத்து ஸ்பெயினில் இருந்து வரும் பயணிகளுக்கு எல்லை சோதனைகளை அமல்படுத்தி இத்தாலிய பிரதமர் ஜார்ஜியா மெலோனி உத்தரவிட்டு இருந்தார்.</p><p> இந்த நடவடிக்கை ஸ்பெயின் மக்களுக்கு எதிரானது என்று ஸ்பெயின் அரசு கண்டித்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/95a338b9-e9e1-4e74-8024-e7e6c895ba07/26-6a765e26de7b9.webp' /></p><p> அத்துடன் இத்தாலி தன்னுடைய புதிய எல்லை கட்டுப்பாடுகளை உடனடியாக நீக்காவிட்டால், இத்தாலிய பயணிகளுக்கு எதிராக அதே போன்ற சோதனை கட்டுப்பாடுகளை ஸ்பெயின் விதிக்கும் என்று அந்நாட்டு அரசு கடுமையாக எச்சரித்துள்ளது.
</p><p>
மேலும் அத்துடன் ஆகஸ்ட் 9ம் திகதிக்குள் இத்தாலிய அரசு இந்த நடவடிக்கையை கைவிட வேண்டும் என்றும் ஸ்பெயின் கெடு விதித்து இருந்தது ஆனால் அதனை இத்தாலி திட்டவட்டமாக மறுத்துவிட்டது.</p><p> இதனை தொடர்ந்தே ஸ்பெயின் நாட்டின் புதிய&nbsp; தற்காலிக எல்லைக் கட்டுப்பாட்டு அறிவிப்பு வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-07T22:55:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[குறையாத மவுசு.. நஸ்ரியாவின் கியூட் புகைப்படங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/nazriya-cute-photos-with-camera-1786142879"></link>
            <id>https://viduppu.com/article/nazriya-cute-photos-with-camera-1786142879</id>
            <summary type="text">நடிகை நஸ்ரியாவுக்கு தற்போது 31 வயது ஆகிறது. கெரியரில் முக்கிய நேரத்தில் அவர் நடிகர் பஹத் பாசிலை திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்டார். 

பல வரு...</summary>
            <content type="html"><![CDATA[<p>நடிகை நஸ்ரியாவுக்கு தற்போது 31 வயது ஆகிறது. கெரியரில் முக்கிய நேரத்தில் அவர் நடிகர் பஹத் பாசிலை திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்டார். </p><p>

பல வருட இடைவெளிக்கு பிறகு தற்போது அவர் மீண்டும் படங்கள் நடித்து வருகிறார்.
</p><p>
நஸ்ரியா தற்போது படங்கள் நடிப்பது குறைவு என்றாலும் அவரது பாப்புலாரிட்டி குறையவே இல்லை. அவர் இன்ஸ்டாவில் வெளியிடும் போட்டோக்களுக்கு லட்சக்கணக்கில் லைக்குகள் குவிகிறது.
</p><p>
அவருக்கு இன்ஸ்டாவில் 8.4 மில்லியன் ரசிகர்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.&nbsp;அவரது லேட்டஸ்ட் புகைப்படங்களை பாருங்க.

</p>]]></content>
            <updated>2026-08-07T22:48:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[நஸ்ரியாவின் கியூட் புகைப்படங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/nazriya-cute-latest-photos-1786142788"></link>
            <id>https://cineulagam.com/article/nazriya-cute-latest-photos-1786142788</id>
            <summary type="text">நடிகை நஸ்ரியா தற்போது படங்கள் நடிப்பது குறைவு தான் என்றாலும் அவருக்கு இருக்கும் ரசிகர்கள் கூட்டம் அப்படியே தான் இருக்கிறது. இன்ஸ்டாவில் மட்டும் அவருக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நடிகை நஸ்ரியா தற்போது படங்கள் நடிப்பது குறைவு தான் என்றாலும் அவருக்கு இருக்கும் ரசிகர்கள் கூட்டம் அப்படியே தான் இருக்கிறது. இன்ஸ்டாவில் மட்டும் அவருக்கு 84 லட்சம் ரசிகர்கள் இருக்கிறார்கள்.</p><p>தற்போது கையில் கேமரா உடன் நஸ்ரியா கியூட் ஆக போஸ் கொடுத்த லேட்டஸ்ட் ஸ்டில்களை வெளியிட்டு இருக்கிறார்.</p>]]></content>
            <updated>2026-08-07T22:46:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாட்டில் பூஜா ஹெக்டே.. அழகிய புகைப்படங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/pooja-hegde-in-budapest-see-photos-1786142611"></link>
            <id>https://cineulagam.com/article/pooja-hegde-in-budapest-see-photos-1786142611</id>
            <summary type="text">நடிகை பூஜா ஹெக்டே அவரது ஹேர் ஸ்டைலை மாற்றி புது லுக்கிற்கு மாறி இருக்கிறார். அவர் ஷார்ட் ஹேர் லுக்கிற்கு மாறியது ஏன் என ரசிகர்கள் தொடர்ந்து கேள்விகளும...</summary>
            <content type="html"><![CDATA[<p>நடிகை பூஜா ஹெக்டே அவரது ஹேர் ஸ்டைலை மாற்றி புது லுக்கிற்கு மாறி இருக்கிறார். அவர் ஷார்ட் ஹேர் லுக்கிற்கு மாறியது ஏன் என ரசிகர்கள் தொடர்ந்து கேள்விகளும் கேட்டு வருகின்றனர்.
</p><p>
தற்போது ஹங்கேரி நாட்டின் Budapest நகரத்துக்கு பூஜா சென்று இருக்கிறார்.

அங்கே அவர் அழகாக போஸ் கொடுத்த லேட்டஸ்ட் புகைப்படங்களை பாருங்க.</p>]]></content>
            <updated>2026-08-07T22:43:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[வேற லெவல் கவர்ச்சி உடையில் நடிகை ராகுல் ப்ரீத்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/rakul-preet-sizzling-glam-photos-1786142481"></link>
            <id>https://cineulagam.com/article/rakul-preet-sizzling-glam-photos-1786142481</id>
            <summary type="text">நடிகை ராகுல் ப்ரீத் தமிழ், தெலுங்கு சினிமாவை தாண்டி ஹிந்தியிலும் நடித்து வருகிறார். தற்போது அவருக்கு 35 வயதாகிறது.ராகுல் எந்த நிகழ்ச்சிக்கு வந்தாலும் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நடிகை ராகுல் ப்ரீத் தமிழ், தெலுங்கு சினிமாவை தாண்டி ஹிந்தியிலும் நடித்து வருகிறார். தற்போது அவருக்கு 35 வயதாகிறது.</p><p>ராகுல் எந்த நிகழ்ச்சிக்கு வந்தாலும் தாராள கவர்ச்சியாக தான் வருகிறார். அந்த போட்டோக்களும் அடிக்கடி வைரல் ஆகின்றன.</p><p>தற்போது உச்சகட்ட கவர்ச்சி உடையில் ராகுல் வந்து இருக்கும் லேட்டஸ்ட் ஸ்டில்களை பாருங்க.
&nbsp;</p><p>
</p>]]></content>
            <updated>2026-08-07T22:41:26+00:00</updated>
        </entry>
    </feed>
