<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-09-17T02:27:29+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையிலிருந்து நள்ளிரவில் அவசரமாக வெளியேறிய ஷிரந்தி ராஜபக்ச! மகிந்த தரப்பு வெளியிட்ட முக்கிய தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/shiranthi-rajapaksha-singapore-visit-reson-1789609659"></link>
            <id>https://tamilwin.com/article/shiranthi-rajapaksha-singapore-visit-reson-1789609659</id>
            <summary type="text">முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ச&amp;nbsp;நாட்டை விட்டு தப்பிச்செல்லவில்லை என்றும், அவசர சிகிச்சைக்காகவே சிங்கப்பூர் நாட்டுக்கு ...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ச&nbsp;நாட்டை விட்டு தப்பிச்செல்லவில்லை என்றும், அவசர சிகிச்சைக்காகவே சிங்கப்பூர் நாட்டுக்கு சென்றுள்ளதாக மகிந்த தரப்பு விளக்கமளித்துள்ளது.</p><p>எதிர்வரும் 24 ஆம் திகதி நிதி குற்றப்புலனாய்வு பிரிவில் முன்னிலையாகுவார் என்றும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌சவின் ஊடக பேச்சாளர் மனோஜ் கமகே தெரிவித்துள்ளார்.&nbsp;&nbsp;</p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">நாட்டை விட்டு தப்பிச்சென்றுள்ளதாக வெளியாகும் செய்தி</span></p><p>ஷிரந்தி ராஜபக்‌ச நாட்டை விட்டுச் தப்பிச்சென்றுள்ளதாக வெளியாகியுள்ள செய்தி தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2bc9e132-5f5c-4988-bd12-28d16a0a22d1/26-6aab4cc92ee89.webp' /></p><p>


முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பாரியாரான ஷிரந்தி ராஜபக்‌ச கடந்த வாரம் தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தார்.

மேலதிக சிகிச்சைக்காகவே அவர் சிங்கப்பூர் நாட்டுக்கு சென்றுள்ளார்.</p><p> அரசாங்கத்துக்கு சார்பாக செயற்படும் ஒருசில ஊடகங்கள் இதனை திரிபுப்படுத்தி தவறாக செய்தி வெளியிட்டுள்ளன.
</p><p>
நாட்டை விட்டு தப்பிச் செல்வதற்கான அவசியம் ஷிரந்தி ராஜபக்‌சவுக்கு கிடையாது. நிதி குற்றப்புலனாய்வு பிரிவுக்கு அவர் எதிர்வரும் 24 ஆம் திகதி முன்னிலையாகுவார்.</p><h2>அதிகாரம் நிலையற்றது</h2><p>
</p><p>
அதிகாரம் நிலையற்றது என்பதை ஜனாதிபதி நினைவில் கொள்ள வேண்டும். எதிர்காலத்தில் எதுவும் நடக்கலாம். ஆகவே போலியான கருத்துக்களை சமூகமயப்படுத்தி உண்மையை மறைக்க முடியாது. சகல சவால்களையும் நீதித்துறை ஊடாக எதிர்கொள்வோம் என்றும் விளக்கமளித்துள்ளார்.</p><p>சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் SQ-469 என்ற விமானத்தில், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து நேற்று (16) அதிகாலை சுமார் 1:10 மணியளவில் அவர் புறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/19b3d41f-c471-4145-8115-83cc2d8c69d4/26-6aab4cc9d9a2d.webp' /></p><p>
</p><p>
அவருடன் ரோஹித ராஜபக்சவின் மாமியாரான ஏன் டி லிவேராவும் புறப்பட்டுச் சென்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.</p><p>இதேவேளை, ஷிரந்தி தனியார் வைத்தியசாலையிலிருந்து நேரடியாக விமான நிலையத்திற்கு வந்ததாகவும், நேற்று (16) அதிகாலை 12.50 மணிக்கு விமானம் புறப்படவிருந்த நேரத்தில், விமான நிலைய நுழைவாயிலுக்கு அருகே விமான நிலைய அதிகாரி ஒருவர் FCID இன் கடிதத்தை திடீரென வழங்கியதாகவும் குடும்ப உறுப்பினர் விளக்கமளித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p>&nbsp;&nbsp;</p><p><br></p>]]></content>
            <updated>2026-09-17T02:13:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[சர்வதேச உதவியுடன் கண்டுபிடிக்கப்பட்டன நாமலின் இரகசிய மின்னஞ்சல்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/namal-secret-emails-discover-international-support-1789609810"></link>
            <id>https://ibctamil.com/article/namal-secret-emails-discover-international-support-1789609810</id>
            <summary type="text">ஏர்பஸ் விமான கொள்வனவு ஒப்பந்தத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் லஞ்சப் பரிமாற்றத்தில், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு 8 இலட்சம் அமெரிக்க டொ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஏர்பஸ் விமான கொள்வனவு ஒப்பந்தத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் லஞ்சப் பரிமாற்றத்தில், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு 8 இலட்சம் அமெரிக்க டொலர் வழங்கப்பட்டதாக வர்த்தகர் நிமல் பெரேரா பிரமாணப் பத்திரம் மூலம் தெரிவித்துள்ளதாக பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டார நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
</p><p>
இந்த விவகாரம் தொடர்பாக சந்தேகநபர்களுக்கு எதிராக தாமதமின்றி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டார இந்த விடயங்களைத் தெரிவித்தார்.</p><p></p><h2>1.454 மில்லியன் யூரோ இலஞ்சம்</h2><p>

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஏர்பஸ் நிறுவனம் மற்றும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்துக்கு இடையில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், அகலமான உடற்பகுதியைக் கொண்ட 16 விமானங்களை இலங்கைக்கு பெற்றுக்கொள்ளும் செயற்பாட்டின்போது இடம்பெற்றதாகக் கூறப்படும் இலஞ்சப் பரிமாற்றம் தொடர்பிலேயே விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக அவர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2621e3c5-04d0-4cfd-9d55-a1f27844750b/26-6aab499b07b8d.webp' /></p><p>
</p><p>
இந்த சம்பவம் தொடர்பாக சட்டத்தின் கீழும் தனியான விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், சந்தேகநபர் ஒருவர் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவின்படி எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
</p><p>
இதேவேளை, தற்போதைய ஊழல் எதிர்ப்பு சட்டத்தின் கீழ் இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான விசாரணைகளை முன்னெடுப்பதற்கான அதிகாரம் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவுக்கும் வழங்கப்பட்டுள்ளதாகவும், குற்றப் புலனாய்வுத் திணைக்களமும் ஆணைக்குழுவும் இணைந்து விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.</p><p>ஏர்பஸ் நிறுவனத்திடமிருந்து 1.454 மில்லியன் யூரோ இலஞ்சமாக வழங்கப்பட்டதாகவும், அப்போதைய ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனவின் மனைவி பிரியங்கா நியோமாலி விஜேநாயக்கவுக்குச் சொந்தமான சிங்கப்பூர் வங்கிக் கணக்கில் அந்தப் பணம் முதலில் வைப்பிலிடப்பட்டதாகவும் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
</p><p>
அந்தக் கணக்கிலிருந்து, வர்த்தகர் நிமல் பெரேரா தலைவராக இருந்த சேபர் விஷன் ஹோல்டிங்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் சிங்கப்பூர் OCBC வங்கிக் கணக்கிற்கு பணம் மாற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.</p><p></p><h2>நிமல் பெரேராவுக்கு உயிர் அச்சுறுத்தல்</h2><p>
</p><p>
நிமல் பெரேரா தமக்கு உயிர் அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி இலங்கைக்கு வர மறுத்துள்ளதாகவும், எனினும் அவர் வழங்கிய சத்தியப்பிரமாணப் பத்திரத்தில், பிரியங்கா நியோமாலி விஜேநாயக்கவின் கணக்கிலிருந்து தமக்குச் சொந்தமான நிறுவனத்தின் கணக்கிற்கு 8 இலட்சம் அமெரிக்க டொலர் வந்ததாகக் குறிப்பிட்டுள்ளதாகவும் நீதிமன்றத்தில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/13289df2-3145-4d0b-8b29-14e55749a634/26-6aab499bac66d.webp' /></p><p>
</p><p>
இந்தத் தொகை நாமல் ராஜபக்சவுக்கு வழங்கப்பட்டதாக நிமல் பெரேரா தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாகவும், அதன் இலங்கைப் பெறுமதி சுமார் 100 மில்லியன் ரூபாய் எனவும் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் தெரிவித்தார்.
</p><p>
மேலும், பிரியங்கா நியோமாலி விஜேநாயக்கவுடன் தொடர்புடைய சிங்கப்பூர் நிறுவனத்திலிருந்து, அப்போதைய அமைச்சர் சமல் ராஜபக்சவின் மகன் ஷமீந்திர ராஜபக்சவின் கணக்கிற்கும் 160,400 யூரோ மாற்றப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.</p><p>சர்வதேச ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்பட்ட தடயவியல் விசாரணைகளின்போது, நாமல் ராஜபக்சவுக்கும் ஏர்பஸ் நிறுவனத்துக்கும் இடையில் இடம்பெற்ற மின்னஞ்சல் பரிமாற்றங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் தெரிவித்தார்.
</p><p>
ஏர்பஸ் நிறுவன அதிகாரிகள் இலங்கைக்கு வந்து பல சந்தர்ப்பங்களில் வாக்குமூலங்களை வழங்கியுள்ளதாகவும், விசாரணைகளின்போது கிடைத்த மின்னஞ்சல்கள் மூலம் சந்தேகநபர் செயற்பட்ட விதம் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.</p><p></p><h2>உயிரிழந்த&nbsp; முதலாவது சந்தேகநபர்</h2><p>
</p><p>
இந்த வழக்கின் முதலாவது சந்தேகநபர் உயிரிழந்துள்ள நிலையில், அவரது மரணம் தற்கொலையா அல்லது இயற்கை மரணமா என்பது தொடர்பான விசாரணைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3f32e528-da87-4950-b414-59b94bc70e0b/26-6aab499c69672.webp' /></p><p>இரண்டாவது சந்தேகநபரான பிரியங்கா நியோமாலி அவுஸ்திரேலியாவில் இருப்பதாகவும், அவரை இலங்கைக்கு அழைத்து வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.</p><p>

மூன்றாவது சந்தேகநபரான ஷமீந்திர ராஜபக்ச அமெரிக்காவில் இருப்பதாகவும், அவருக்கு எதிராக சிவப்பு எச்சரிக்கை பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.</p><p>இது தொடர்பாக அவர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனுவொன்றையும் தாக்கல் செய்துள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.</p><p>இந்த வழக்கின் சாட்சிகளுக்கு உயிர் அச்சுறுத்தல் இருப்பதாக அவர்கள் அச்சம் வெளியிட்டுள்ளதால், நாமல் ராஜபக்சவுக்கு பிணை வழங்குவதற்கு அரச தரப்பு எதிர்ப்பு தெரிவிக்கின்றது என&nbsp; பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சுட்டிக்காட்டப்பட்டது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-17T02:00:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[நள்ளிரவில் முற்றிய வாக்குவாதம்! விடுதியொன்றின் மேல் தளத்திலிருந்து தள்ளப்பட்ட நபர் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/hotel-employee-thrown-from-upper-floor-to-death-1789608641"></link>
            <id>https://tamilwin.com/article/hotel-employee-thrown-from-upper-floor-to-death-1789608641</id>
            <summary type="text">கம்பஹா&amp;nbsp; - சீதுவ நகருக்கு அருகிலுள்ள ஒரு விடுதியின் மேல் தளத்திலிருந்து ஒருவர் கீழே விழுந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.குறித்த வி...</summary>
            <content type="html"><![CDATA[<p>கம்பஹா&nbsp; - சீதுவ நகருக்கு அருகிலுள்ள ஒரு விடுதியின் மேல் தளத்திலிருந்து ஒருவர் கீழே விழுந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>குறித்த விடுதியின் மேல் தளத்தில் தங்கியிருந்த 49 வயதுடைய ஊழியரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.&nbsp;&nbsp;</p><h2>பொலிஸார்&nbsp;விசாரணை</h2><p>அவர் இரவு மது அருந்திக்கொண்டிருந்தபோது, ​​மற்றொரு ஊழியருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தை தொடர்ந்து மேல் தளத்திலிருந்து தள்ளிவிடப்பட்டிருக்கலாம் என்று இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c8e50fb6-d291-4a7f-a543-eb898765451f/26-6aab496950366.webp' /></p><p>சம்பவம் தொடர்பில் 41 வயதுடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>சம்பவம் குறித்து சீதுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-17T01:59:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[இரத்தக்களரியான மிக் ஒப்பந்தத்தில் பட்டப்பகலில் நடந்த கொள்ளை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/daylight-robbery-in-the-bloody-mig-deal-1789608596"></link>
            <id>https://ibctamil.com/article/daylight-robbery-in-the-bloody-mig-deal-1789608596</id>
            <summary type="text">2006ஆம் ஆண்டு இலங்கை விமானப்படைக்காக MiG-27 போர் விமானங்களை கொள்வனவு செய்ததில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி முறைகேடுகள் தொடர்பான விசாரணைகள் மீண்டும்...</summary>
            <content type="html"><![CDATA[<p>2006ஆம் ஆண்டு இலங்கை விமானப்படைக்காக MiG-27 போர் விமானங்களை கொள்வனவு செய்ததில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி முறைகேடுகள் தொடர்பான விசாரணைகள் மீண்டும் தீவிரமடைந்துள்ளன.
</p><p>
நான்கு MiG-27 விமானங்களை கொள்வனவு செய்வதுடன், ஏற்கனவே இருந்த விமானங்களைப் புனரமைப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட இந்த ஒப்பந்தம், உக்ரைனின் அரச நிறுவனமான Ukrinmash உடனான அரசாங்கங்களுக்கு இடையிலான ஒப்பந்தமாக முன்வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
எனினும், பின்னர் இடம்பெற்ற விசாரணைகளில், இலங்கை அரசாங்கத்தால் செலுத்தப்பட்ட சுமார் 14.66 மில்லியன் அமெரிக்க டொலர் தொகையில் ஒரு பகுதி, British Virgin Islands-இல் பதிவு செய்யப்பட்டதாகக் கூறப்படும் Bellimissa Holdings என்ற இடைத்தரகர் நிறுவனத்தின் ஊடாக சென்றதாக விசாரணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.</p><p></p><h2>7 மில்லியன் டொலர் முறைகேடு</h2><p> </p><p>Ukrinmash-க்கு முழுத் தொகையும் சென்றிருக்கவில்லை என்றும், சுமார் 7 மில்லியன் அமெரிக்க டொலர் முறைகேடாக பயன்படுத்தப்பட்டதாக FCID நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2785a8ac-e4d5-46ac-9a96-8653a59feba6/26-6aab42973a0d8.webp' /></p><p>இந்த விவகாரம் தொடர்பாக முன்னாள் விமானப்படைத் தளபதி ரொஷான் குணதிலக செப்டம்பர் 10ஆம் திகதி FCID-யில் ஐந்து மணி நேரத்திற்கும் மேலாக வாக்குமூலம் அளித்தார். </p><p>தொடர்ந்து முன்னாள் ஜனாதிபதியும் அப்போதைய பாதுகாப்புச் செயலாளருமான கோட்டாபய ராஜபக்ச, செப்டம்பர் 11ஆம் திகதி FCID-க்கு அழைக்கப்பட்டு வாக்குமூலம் அளித்தார். </p><p>முன்னாள் விமானப்படைத் தளபதி டொனால்ட் பெரேராவும் செப்டம்பர் 15ஆம் திகதி விசாரணையாளர்களிடம் வாக்குமூலம் வழங்கினார்.</p><p>இந்த ‘பெலிமிஸ்ஸா’ எனப்படும் நிறுவனத்தின் பின்னணியில் சிங்கப்பூரைச் சேர்ந்த ஆயுத வர்த்தகர் டி.எஸ். லீ, அவரது மனைவி எங் லீ கிம் மற்றும் அவரது சகோதரர் லீ தியன் போக் ஆகியோர் இருந்ததாகக் கூறப்படுகிறது.</p><p></p><h2>கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்ட&nbsp;நிறுவனம்</h2><p> </p><p>2000ஆம் ஆண்டு இலங்கை விமானப்படைக்கு வழங்கப்பட்ட MiG விமானங்களில் ஏற்பட்ட குறைபாடுகள் மற்றும் விபத்துகள் காரணமாக சிங்கப்பூரின் ‘டி.எஸ். அலையன்ஸ்’ நிறுவனம் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டிருந்ததாகவும், அதன் பின்னணியை மறைப்பதற்காக ‘பெலிமிஸ்ஸா’ என்ற நிறுவனத்தை உருவாக்கியதாகவும் விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/30ef9590-2a56-4beb-ac1a-158e16c4daf1/26-6aab429681579.webp' /></p><p> இந்த சர்வதேச ஆயுதப் பரிவர்த்தனைக்கு அப்போது ரஷ்யாவுக்கான இலங்கைத் தூதுவராக இருந்த உதயங்க வீரதுங்க இராஜதந்திர ரீதியான ஆதரவை வழங்கியதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. </p><p>தரகு பணம் உதயங்க வீரதுங்கவின் உறவினரான லெலும் மனம்பெருமவின் இலங்கை வங்கிக் கணக்குகளுக்கும், டுபாயில் உள்ள ‘ஸ்டார் ஜி.எல்.ஜி.ஏ.’ நிறுவனத்தின் கணக்கிற்கும் சென்றதாக விசாரணையாளர்கள் தெரிவித்துள்ளனர். </p><p>இந்தப் பணம் சிங்கப்பூர் மற்றும் அவுஸ்திரேலியாவில் சொத்துக்களில் முதலீடு செய்யப்பட்ட விதம் தொடர்பான தகவல்களையும் விசாரணையாளர்கள் கண்டறிந்துள்ளதாகக் கூறப்படுகிறது. </p><p>இதற்கிடையில், Ukrinmash நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர் டிமிட்ரி பெரெகுடோவ் பாரிஸில் இன்டர்போல் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p>இந்த நிலையிலேயே இந்த விசாரணையில் இடம்பெறும் நிதி பரிமாற்றங்கள், கொள்வனவு நடைமுறைகள் மற்றும் ஒப்பந்தத்தில் தொடர்புடைய தரப்புகள் குறித்து அதிகாரிகள் மேலதிக தகவல்களை சேகரித்து வருகின்றனர்.&nbsp;</p><p>குறிப்பாக MiG ஒப்பந்தத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி முறைகேடுகள் பத்திரிகையாளர் லசந்த விக்கிரமதுங்கவால் வெளிப்படுத்தப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a5c15aa2-11c6-4040-99e3-21be733f4392/26-6aab4295cbe4b.webp' /></p><p>
அவர் 2009 ஜனவரி 8 அன்று கொலை செய்யப்பட்டார். அந்தக் கொலையை MiG ஒப்பந்தத்தை மூடிமறைக்கும் முயற்சியுடன் தொடர்புபடுத்துவதாக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்ககு.</p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-17T01:31:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[சூரிய பெயர்ச்சியால் ஜாக்கிரதையா இருக்க வேண்டிய ராசிக்காரர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/zodiac-signs-that-need-cautious-due-sun-transit-1789603429"></link>
            <id>https://jvpnews.com/article/zodiac-signs-that-need-cautious-due-sun-transit-1789603429</id>
            <summary type="text">வேத ஜோதிடத்தில் கிரகங்களின் தலைவனாக கருதப்படுபவர் சூரியன். சிம்ம ராசியின் அதிபதியான சூரியன் மாதம் ஒருமுறை ராசியை மாற்றுவார். இப்படி சூரியன் ராசியை மாற...</summary>
            <content type="html"><![CDATA[<p>வேத ஜோதிடத்தில் கிரகங்களின் தலைவனாக கருதப்படுபவர் சூரியன். சிம்ம ராசியின் அதிபதியான சூரியன் மாதம் ஒருமுறை ராசியை மாற்றுவார். இப்படி சூரியன் ராசியை மாற்றும் போதெல்லாம் அதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும்.&nbsp; அதில் சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமாக இருந்தாலும், 3 ராசிக்காரர்கள் ஏராளமான பிரச்சனைகளை நேரிடும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d411d3db-eab1-491c-9230-307035f1a00b/26-6aab2e69377a6.webp' /></p><p> </p><p>குறிப்பாக இந்த ராசிக்காரர்கள் தொழில், நிதி நிலை மற்றும் ஆரோக்கிய விஷயத்தில் சவால்களை எதிர்கொள்ள நேரிடும். இப்போது செப்டம்பர் 17 ஆம் திகதி நடக்கும் சூரிய பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்பதைக் காண்போம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/61a287e1-fa6d-4887-8094-66d4bf50ca29/26-6aab2e6880701.webp' /><br><h3>சிம்மம்
</h3></p><p>சிம்ம ராசியின் 2 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களின் பேசும் விதம் சற்று கடுமையானதாகவோ அல்லது முரட்டுத்தனமாகவோ இருக்கலாம். இது உறவுகளில் பிரச்சனைகளை அதிகரிக்கும். பணம் கொடுக்கல் வாங்கலில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பண விஷயத்தில் எந்த ரிஸ்க்கையும் எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். பணிபுரிபவர்களுக்கு அலுவலகத்தில் உடன் வேலை செய்வோருடன் பிரச்சனைகள் எழலாம். உணவு விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, கண், தொண்டை பிரச்சனைகள் தொந்தரவு செய்யலாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7c1bd01a-75ff-47e5-98ef-9c38bfe8d22c/26-6aab2e69e19ad.webp' /></p><h3>கும்பம்
</h3><p>கும்ப ராசியின் 8 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் ஆரோக்கியத்தில் நிறைய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இதன் விளைவாக நிறைய மருத்துவ செலவுகளை சந்திக்க நேரிடும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் மறைமுக எதிரிகளால் நிறைய பிரச்சனைகளை சந்திக்கும் வாய்ப்புள்ளது. எனவே இக்காலத்தில் யாரையும் கண்மூடித்தனமாக நம்புவதைத் தவிர்க்க வேண்டும். விபத்து ஏற்படும் வாய்ப்புள்ளதால், வாகனம் ஓட்டும் போது கவனமாக இருக்க வேண்டும். நீதிமன்ற விஷயங்களில் பல தடைகளை சந்திக்க நேரிடும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/407e1da4-dedc-4ba8-8526-45e2751afada/26-6aab2e6a9fd83.webp' /></p><h3>மீனம்
</h3><p>மீன ராசியின் 7 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களின் திருமண வாழ்க்கை பதற்றம் நிறைந்ததாக இருக்கும். வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியம் குறித்த கவலை அதிகரிக்கும். கூட்டு தொழில் செய்து வந்தால், கூட்டாளருடன் கருத்து வேறுபாடுகளை சந்திக்க நேரிடும். வணிகர்கள் எந்த ஒரு புதிய ஒப்பந்தங்களையும் ஏற்றுக்கொள்ளும் முன் கவனமாக சரிபார்க்க வேண்டும். பண விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். யாருக்கும் கடன் கொடுக்காதீர்கள்</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/82fda47f-e9df-4c81-8020-5f3cc0d264f0/26-6aab2e6b53b6f.webp' /></p>]]></content>
            <updated>2026-09-17T01:03:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பு மட்டக்குளி விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 ஆக உயர்வு ; 8 பேர் மருத்துவமனையில்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/death-toll-rises-3-in-colombo-mattakuli-accident-1789605688"></link>
            <id>https://jvpnews.com/article/death-toll-rises-3-in-colombo-mattakuli-accident-1789605688</id>
            <summary type="text">மட்டக்குளி பகுதியில் காரொன்று வீதியில் பயணித்த பல வாகனங்களுடன் மோதி நேற்று (16) இரவு இடம்பெற்ற கோர விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3ஆக உயர்ந்துள்ளத...</summary>
            <content type="html"><![CDATA[<p>மட்டக்குளி பகுதியில் காரொன்று வீதியில் பயணித்த பல வாகனங்களுடன் மோதி நேற்று (16) இரவு இடம்பெற்ற கோர விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3ஆக உயர்ந்துள்ளது.</p><p> </p><p></p><p>விபத்தில் உயிரிழந்தவர்கள் 64 வயதுடைய இருவர் மற்றும் 44 வயதுடைய ஒருவர் என்பதுடன் அவர்கள் கிரான்ட்பாஸ், கொழும்பு 15 மற்றும் வத்தளை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6bde9773-b5cf-4b4d-8232-039f59438daf/26-6aab373a339bc.webp' /></p><p>வேகமாக பயணித்த கார் ஒன்று வீதியில் இருந்த 3 முச்சக்கரவண்டிகள் மற்றும் 4 மோட்டார் சைக்கிள்களுடன் மோதி விபத்துக்குள்ளானது. </p><p>

இச்சம்பவத்தையடுத்து உடனடியாகச் செயற்பட்ட பிரதேச மக்கள் காயமடைந்தவர்களை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுத்தனர்.</p><p> 

இந்நிலையில் தற்போது 8 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். </p><p>

விபத்தை ஏற்படுத்திய காரின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் மட்டக்குளி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-17T01:03:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[பல மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/will-rain-intermittently-after-1-pm-1789605985"></link>
            <id>https://tamilwin.com/article/will-rain-intermittently-after-1-pm-1789605985</id>
            <summary type="text">மேற்கு, சபரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தி...</summary>
            <content type="html"><![CDATA[<p>மேற்கு, சபரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. </p><p>காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் சில இடங்களில் 50 மி.மீ.க்கு மேல் மிதமான முதல் கனமழை பெய்யக்கூடும்.</p><h2>இடியுடன் கூடிய மழை</h2><p>

வடமேற்கு மாகாணம் மற்றும் கண்டி, நுவரெலியா மாவட்டங்களில் பல சுற்று மழை பெய்யக்கூடும் என திணைக்களம் அறிவித்துள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/eb0be33a-ce79-42a8-b0cd-1ea38cab2bbc/26-6aab3bd0d8500.webp' /></p><p>
ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், முல்லைத்தீவு மற்றும் பொலன்னறுவ மாவட்டங்களிலும் பிற்பகல் 1 மணிக்கு மேல் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.</p><p>

இடியுடன் கூடிய மழையுடன் ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னலால் ஏற்படும் சேதங்களைக் குறைக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-17T01:02:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[48 மணி நேர வேலைநிறுத்தத்தில் குதித்த தொடருந்து தொழிற்சங்கங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/railway-unions-continue-48-hour-strike-1789606879"></link>
            <id>https://ibctamil.com/article/railway-unions-continue-48-hour-strike-1789606879</id>
            <summary type="text">தற்போதைய தொடருந்து பொது மேலாளரை நீக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தொடருந்து தொழிற்சங்கங்கள் நேற்று (16) நள்ளிரவு முதல் 4...</summary>
            <content type="html"><![CDATA[<p>தற்போதைய தொடருந்து பொது மேலாளரை நீக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தொடருந்து தொழிற்சங்கங்கள் நேற்று (16) நள்ளிரவு முதல் 48 மணி நேர வேலைநிறுத்தத்தைத் தொடங்கியுள்ளன.</p><p>இதன்படி நடைபெற்று வரும் தொழிற்சங்கப் போராட்டம் குறித்துக் கருத்து தெரிவித்த தொடருந்து நிலைய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன, வேலைநிறுத்தம் தொடங்குவதற்கு முன்பே நேற்று பல தொடருந்துகள் இரத்து செய்யப்பட்டதால் பயணிகளுக்கு சிரமம் ஏற்பட்டதாகத் தெரிவித்தார்.</p><p>

 

தற்போதைய தொடருந்து பொது மேலாளரை நீக்க வேண்டும் என்ற தொழிற்சங்கங்களின் கோரிக்கைக்கு இதுபோன்ற பிரச்சினைகளும் காரணங்களில் அடங்கும் என்று அவர் கூறியுள்ளார்.</p><p></p><h2>தொடருந்துகளை இயக்க முயற்சி</h2><p>
 

தொடருந்து வருவாயை அதிகரிப்பதற்கோ அல்லது பயணிகளுக்குத் தேவையான வசதிகளை வழங்குவதற்கோ முறையான திட்டம் எதுவும் தயாரிக்கப்படாத நிலையில், பொது மேலாளரும் நிர்வாக அதிகாரிகளும் தற்போது தொடருந்துகளை இயக்க முயற்சி செய்து வருவதாக சோமரத்னா மேலும் குற்றம் சாட்டியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ee6d3bcf-9ef3-446d-a316-094355610c1f/26-6aab3be1b51da.webp' /></p><p>

 

பெரும்பாலான தொடருந்து நிலைய அதிகாரிகள் வேலைநிறுத்தத்தில் இணைந்துள்ளதாகவும், அதே சமயம் அரசாங்கத்தை ஆதரிக்கும் பல நிலைய அதிகாரிகள் வேலைநிறுத்தத்தைக் கலைக்கவும், தற்போதைய பொது மேலாளரைப் பதவியில் தக்கவைக்கவும் முயற்சி செய்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.</p><p>

 

தொழிற்சங்கத்தின் இந்த நடவடிக்கை அரசியல் உள்நோக்கம் கொண்டதல்ல என்றும், தொடருந்து துறையை மீட்டெடுப்பதை நோக்கமாகக் கொண்டது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-17T01:01:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் பல மாகாணங்களில் 50 மி.மீ இற்கும் அதிகமான மழை ; பொதுமக்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/rainfall-50-mm-several-provinces-sri-lanka-1789606708"></link>
            <id>https://jvpnews.com/article/rainfall-50-mm-several-provinces-sri-lanka-1789606708</id>
            <summary type="text">இலங்கையின் மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
காலி, மாத்தறை, களுத...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.</p><p>
</p><p></p><p>காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் சில பகுதிகளில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் என திணைக்களம் வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/42eed6d3-fc9c-4374-8a27-25bf11c887df/26-6aab3b370d52f.webp' /></p><p>

மேலும், வடமேல் மாகாணத்திலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களின் சில பகுதிகளிலும் மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
</p><p>
ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், முல்லைத்தீவு மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் பிற்பகல் 1 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசுவதுடன், மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.
</p><p>
எனவே, இவ்வாறான சந்தர்ப்பங்களில் மின்னல் மற்றும் பலத்த காற்றினால் ஏற்படக்கூடிய விபத்துகளைத் தவிர்ப்பதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-17T00:58:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[முத்துவுக்கு எதிராக திரும்பிய மாமியார்.. மீனா செய்த விஷயம்! சிறகடிக்க ஆசை அப்டேட்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/siragadikka-aasai-update-meena-vs-mother-1789606416"></link>
            <id>https://cineulagam.com/article/siragadikka-aasai-update-meena-vs-mother-1789606416</id>
            <summary type="text">சத்யாவின் திருமணத்தில் நடந்த சம்பவத்திற்கு பிறகு முத்து மற்றும் மாமியார் குடும்பத்திற்கு இடையே விரிசல் ஏற்பட தொடங்கி இருக்கிறது.தற்போது வெளியாகி இருக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>சத்யாவின் திருமணத்தில் நடந்த சம்பவத்திற்கு பிறகு முத்து மற்றும் மாமியார் குடும்பத்திற்கு இடையே விரிசல் ஏற்பட தொடங்கி இருக்கிறது.</p><p>தற்போது வெளியாகி இருக்கும் புது ப்ரோமோ வீடியோவில் முத்து மற்றும் மீனாவை விட்டு விலகி இருக்க போவதாக சத்யா அம்மாவிடம் கூறுகிறார்.
</p><p>மாப்பிள்ளை செய்தது தான் தவறு என மீனாவிடம் அவர் அதன் பின் கோபமாக பேசுகிறார்.
</p><p>
அதனால் கோபமாகும் மீனா சண்டை போட்டுவிட்டு அம்மா வீட்டை விட்டு போகிறார். ப்ரோமோவை பாருங்க.&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/JpAJlRTBb2o" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-09-17T00:53:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பு - மட்டக்குளி பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தின் பலி எண்ணிக்கை அதிகரிப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/horrific-accident-in-the-colombo-mattakkuliya-area-1789576738"></link>
            <id>https://ibctamil.com/article/horrific-accident-in-the-colombo-mattakkuliya-area-1789576738</id>
            <summary type="text">புதிய இணைப்பு&amp;nbsp;மட்டக்குளிய பகுதியில் நேற்று (16) பல வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆக அதிகரி...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு&nbsp;</h2><p>மட்டக்குளிய பகுதியில் நேற்று (16) பல வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>இந்த விபத்தில் 8 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>இதன்போது விபத்தில் காயங்களுக்கு உள்ளானவர்கள் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p></p><h2>மேலதிக விசாரணை</h2><p>உயிரிழந்தவர்களில் 64 வயதுடைய இருவர் மற்றும் 44 வயதுடைய ஆண் ஒருவரும் அடங்குவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/be6001e3-60d7-4b42-9643-37fd7fc11732/26-6aab37855736d.webp' /></p><p> அவர்கள் கிராண்ட்பாஸ், கொழும்பு 15 மற்றும் வத்தளை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
</p><p>
விபத்தை ஏற்படுத்திய கார், வீதியில் பயணித்துக் கொண்டிருந்த 3 முச்சக்கர வண்டிகள் மற்றும் 4 மோட்டார் சைக்கிள்களுடன் அடுத்தடுத்து மோதியுள்ளது.

சம்பவத்தைத் தொடர்ந்து உடனடியாகச் செயற்பட்ட பிரதேசவாசிகள், காயமடைந்தவர்களை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.
</p><p>
தற்போது 8 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
</p><p>
விபத்தை ஏற்படுத்திய காரின் சாரதி காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பாக மட்டக்குளிய காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><h2>முதலாம் இணைப்பு&nbsp;</h2><p><i><b><u>கொழும்பு - மட்டக்குளி பகுதியில் கோர விபத்து! இருவர் பலி நால்வர் படுகாயம்</u></b></i></p><p>கொழும்பு - மட்டக்குளிய பகுதியில் ஏற்பட்ட கோர விபத்தில் இருவர் சம்வப இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் 4 பேர் காயமடைந்துளனர்.</p><p>

இந்த சம்பவம் இன்று (16.09.2026) மட்டக்குளிய அலுத்மாவத்த பகுதியில் இடம்பெற்றுள்ளது.</p><p>வீதியில் சென்று கொண்டிருந்த பல வாகனங்கள் மீது ஒரு கார் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டது.</p><p><iframe src="https://www.facebook.com/plugins/video.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2FLankasriTv%2Fvideos%2F1071684679163794%2F&show_text=0&width=560" width="560" height="315" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share" allowFullScreen="true"></iframe></p><p></p><p>விபத்து நடந்த நேரத்தில், சம்பந்தப்பட்ட கார் மூன்று மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் நான்கு மோட்டார் சைக்கிள்கள் மீது மோதியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>விபத்தில் காயமடைந்த ஆறு பேர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களில் இருவர் உயிரிழந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.</p><p>விபத்தை ஏற்படுத்திய காரின் ஓட்டுநர் தற்போது காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், மட்டக்குளிய காவல்துறையினர் இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p><br></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-17T00:48:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவுக்கு பதிலடி ; ஐரோப்பிய ஒன்றியத்தின் 'இணை உறுப்பினராகிறதா' கனடா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/a-new-chapter-between-canada-and-european-union-1789601000"></link>
            <id>https://canadamirror.com/article/a-new-chapter-between-canada-and-european-union-1789601000</id>
            <summary type="text">ஐரோப்பிய ஒன்றியத்தின் (EU) &quot;இணை உறுப்பினராக கனடாவை இணைப்பதற்கான முன்மொழிவுக்கு ஒன்றியத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன், ஆதரவு தெரிவித்துள்ளார்.
...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஐரோப்பிய ஒன்றியத்தின் (EU) "இணை உறுப்பினராக கனடாவை இணைப்பதற்கான முன்மொழிவுக்கு ஒன்றியத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன், ஆதரவு தெரிவித்துள்ளார்.
</p><p>
நேற்று ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் உரையாற்றிய வான் டெர் லேயன், கனடாவிற்கான கதவுகளைத் திறக்க விரும்புவதாகவும், இது இரு தரப்பிற்கும் இடையிலான முக்கியத் துறைகளில் நெருங்கிய பிணைப்பை உருவாக்கும் என்றும் தெரிவித்தார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f8a31a79-0222-4c90-afe5-2fc60b0832ec/26-6aab24ea99335.webp' /></p><p>ஏற்கனவே ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஒரு "தனித்துவமான கூட்டணியை" விரும்புவதாக கனடா பிரதமர் மார்க் கர்னி தெரிவித்திருந்தார்.</p><p>

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் வர்த்தகக் கொள்கைகள் மற்றும் கனடாவை "51 ஆவது மாநிலமாக" மாற்றுவது தொடர்பான அவரது கருத்துகளால் அமெரிக்கா - கனடா இடையிலான வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் முறிவடைந்து, பதற்றம் அதிகரித்துள்ளது.
</p><p>
இந்தநிலையில், ஐரோப்பிய ஒன்றியமும், கனடாவும், தயாரிப்புத் துறை, தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு, பாதுகாப்பு, எரிசக்தி, அத்தியாவசிய தாதுக்கள் மற்றும் பொருளாதார பாதுகாப்பு ஆகிய துறைகளில் இணைந்து செயல்படத் திட்டமிடப்பட்டுள்ளன.
</p><p>
இதற்கிடையில், தற்போது "இணை உறுப்பினர்" என்ற தகுதி ஐரோப்பிய ஒன்றியத்தில் அதிகாரப்பூர்வமாக இல்லாத நிலையில், கனடாவை இணை உறுப்பினராக்குவது என்ற நடைமுறை அமுலுக்கு வர சில ஆண்டுகள் ஆகலாம் நம்பப்படுகிறது.</p>]]></content>
            <updated>2026-09-17T00:42:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் 2 குழந்தைகளைக் கைவிட்டுவிட்ட கள்ளக் காதலனுடன் சென்ற பெண் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/woman-arrested-lover-abandonin-two-children-jaffna-1789599429"></link>
            <id>https://jvpnews.com/article/woman-arrested-lover-abandonin-two-children-jaffna-1789599429</id>
            <summary type="text">யாழ்ப்பாணம், அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நவக்கிரி மூலிகைத் தோட்டம் பகுதியில் தனது இரு குழந்தைகளையும் தாயாரிடம் விட்டுவிட்டு வேறொரு நபருடன் சென்ற...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம், அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நவக்கிரி மூலிகைத் தோட்டம் பகுதியில் தனது இரு குழந்தைகளையும் தாயாரிடம் விட்டுவிட்டு வேறொரு நபருடன் சென்றதாகக் கூறப்படும் பெண் ஒருவர், அச்சுவேலி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>
</p><p></p><p>குறித்த பெண்ணின் தாயார் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில், கடந்த சில மாதங்களாக பொலிஸார் அவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்துள்ளனர். எனினும், அவர் தலைமறைவாக இருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>
</p><h3>
மேலதிக விசாரணை</h3><p>இந்த நிலையில், குறித்த பெண் நேற்று சாவகச்சேரி பகுதியில் வைத்து அச்சுவேலி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4e6c4ad8-27a0-43b0-b7bf-d6fdcb7498b9/26-6aab1ec71e5a1.webp' /></p><p>

குறித்த பெண்ணுக்கு திருமணமாகி ஆறு வயதுடைய பெண் குழந்தை உள்ளிட்ட இரு குழந்தைகள் உள்ளதாகவும், கணவரைப் பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் வேறொரு நபருடன் தொடர்பு ஏற்பட்டு, இரு குழந்தைகளையும் தனது தாயாரிடம் விட்டுவிட்டு சென்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
இதனையடுத்து, குழந்தைகளின் பாதுகாப்பை கருத்திற்கொண்டு அச்சுவேலி பொலிஸ் நிலைய சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவினரால் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
</p><p>
அதன்படி, ஆறு வயதுடைய பெண் குழந்தை கோப்பாய் பகுதியில் உள்ள சிறுவர் காப்பகம் ஒன்றில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டு கல்வி கற்று வருவதாகவும், ஆண் குழந்தை தாயாரின் பராமரிப்பில் வளர்ந்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
கைது செய்யப்பட்ட பெண் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். இதன்போது பொலிஸாரினால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு, அவருக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
வழக்கை விசாரித்த நீதிமன்றம் குறித்த பெண்ணை எச்சரித்ததுடன், பிணையில் எடுப்பதற்கு எவரும் முன்வராத நிலையில் அவருக்கு பிணை வழங்க மறுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அச்சுவேலி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-17T00:42:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[2027 IPL ஏலம் மீண்டும் இந்தியாவில்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/2027-ipl-auction-to-be-held-in-india-again-1789603986"></link>
            <id>https://tamilwin.com/article/2027-ipl-auction-to-be-held-in-india-again-1789603986</id>
            <summary type="text">2027ஆம் ஆண்டு நடைபெற உள்ள இந்தியன் பிரீமியர் லீக் தொடருக்கான வீரர்கள் ஏலம் இந்தியாவிலேயே நடைபெறும் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை முடிவு செய்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>2027ஆம் ஆண்டு நடைபெற உள்ள இந்தியன் பிரீமியர் லீக் தொடருக்கான வீரர்கள் ஏலம் இந்தியாவிலேயே நடைபெறும் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை முடிவு செய்துள்ளது.</p><p> 

கடந்த 3 ஆண்டுகளாக வெளிநாடுகளில் நடைபெற்ற ஐபிஎல் ஏலம் மீண்டும் இந்தியாவுக்கு திரும்புகிறது. </p><h2>வீரர்கள் மாற்றம் இருக்காது</h2><p>

2023ஆம் ஆண்டு ஐபிஎல் வீரர்கள் ஏலம் கொச்சியில் நடைபெற்றது. அதன்பிறகு தொடர்ந்து 3 ஆண்டுகள் வெளிநாடுகளில் ஏலம் நடத்தப்பட்டது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ced56da0-af9c-459e-a5c8-909117f2e68a/26-6aab355542ac3.webp' /></p><p>

2024ஆம் ஆண்டு டுபாயிலும், 2025ஆம் ஆண்டு மெகா ஏலம் ஜெட்டாவிலும், 2026ஆம் ஆண்டு ஏலம் அபுதாபியிலும் நடைபெற்றது. 

தற்போது 2027ஆம் ஆண்டு ஏலத்தை மீண்டும் இந்தியாவில் நடத்த பிசிசிஐ முடிவு செய்துள்ளது.&nbsp;</p><p>ஐபிஎல் 2027 ஏலம் மினி ஏலமாக நடைபெற உள்ளது. இதனால் மெகா ஏலத்தைப் போன்று அணிகளில் மிகப்பெரிய அளவில் வீரர்கள் மாற்றம் இருக்காது என .தெரிவிக்கப்பட்டுளளது.</p><p><br></p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-17T00:37:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[சவூதி F-15 போர் விமானத்தை சுட்டுவீழ்த்தினோம் ; ஹூதிகள் அதிரடி உரிமைகோரல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/shot-down-saudi-15-fighter-jet-houthis-make-claim-1789605311"></link>
            <id>https://canadamirror.com/article/shot-down-saudi-15-fighter-jet-houthis-make-claim-1789605311</id>
            <summary type="text">யேமனின் மஃரிப் பகுதிக்கு மேல் சவூதி அரேபியாவின் F-15 போர் வானூர்தி ஒன்றை, தரைவழி-வான் ஏவுகணை மூலம் சுட்டு வீழ்த்தியதாக ஹூதி அமைப்பினர் உரிமை கோரியுள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p>யேமனின் மஃரிப் பகுதிக்கு மேல் சவூதி அரேபியாவின் F-15 போர் வானூர்தி ஒன்றை, தரைவழி-வான் ஏவுகணை மூலம் சுட்டு வீழ்த்தியதாக ஹூதி அமைப்பினர் உரிமை கோரியுள்ளனர்.</p><p>

இந்த நிலைமையில், பாப் அல்-மந்தேப் (Bab al-Mandeb) கடல் வழிப்பாதைக்கு அருகில் மோதல்கள் தீவிரமடைந்துள்ளன.
</p><p>
மஃரிப் வான்வெளியில் தாக்குதல் நடத்திய சவூதி கு-15 போர் வானூர்தியை உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட தங்களின் ஏவுகணை மூலம் சுட்டு வீழ்த்தியதாக ஹூதி இராணுவப் பேச்சாளர் யஹ்யா சரியா (Yahya Saree) தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/92616b9d-6e45-4a5f-9e03-2f47f0d8dc6b/26-6aab35c0a9954.webp' /></p><p>இருப்பினும், சவூதி தரப்பில் இருந்து இந்தக்கூற்று இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
</p><p>
இதுவரைக் காலமும், சவூதி அரேபியா மற்றும் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட யேமன் அரசு ஆகியவற்றின் மிகப்பெரிய பலமாக வான்வழித் தாக்குதல்கள் மட்டுமே இருந்தன.
</p><p>
எனினும் ஹூதிகளால் வான்வழித் தாக்குதல்களைத் தடுக்க முடிந்தால், அது போரின் சக்தி சமநிலையை அவர்களுக்குச் சாதகமாக மாற்றும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

இதேவேளை, அமெரிக்கா மீது தங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றும், நம்பிக்கையைப் பெற நடைமுறைச் சாத்தியமான நடவடிக்கைகளை அமெரிக்கா எடுக்க வேண்டும் என்றும் ஈரானின் தேசிய பாதுகாப்புத் தலைவர் மொஹ்சென் ரெசாய் (Mohsen Rezaei) தெரிவித்துள்ளார்.
</p><p>
ஈரானின் நிபந்தனைகள் ஏற்கும் வரை அமெரிக்காவுடான பேச்சுவார்த்தையில் பங்கேற்கப்போவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content>
            <updated>2026-09-17T00:35:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈஸ்டர் தாக்குதல் விசாரணையில் திருப்பத்தை ஏற்படுத்திய சஜித்தின் நாடாளுமன்றக் குற்றச்சாட்டுகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sajith-turning-point-easter-attack-investigation-1789603865"></link>
            <id>https://ibctamil.com/article/sajith-turning-point-easter-attack-investigation-1789603865</id>
            <summary type="text">ஈஸ்டர் தாக்குதலுக்குப் பின்னர் இடம்பெற்றதாகக் கூறப்படும் விடயங்களை நேற்று முன்தினம் நீதிமன்றில் சட்டமா அதிபர் திணைக்களம் முன்வைத்த நிலையில் அதில் பல அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈஸ்டர் தாக்குதலுக்குப் பின்னர் இடம்பெற்றதாகக் கூறப்படும் விடயங்களை நேற்று முன்தினம் நீதிமன்றில் சட்டமா அதிபர் திணைக்களம் முன்வைத்த நிலையில் அதில் பல அரசியல் பிரமுகர்களின் பெயர்களும் அதனுடன் வெளிப்பட்டிருந்தது.
</p><p>
சுரேஷ் சாலேவை மையப்படுத்தி முன்வைக்கப்பட்ட இந்த சமர்பணங்களில் கோட்டாபய ராஜபக்ச, ரிஷாட் பதியுதீன் உள்ளிட்ட அரசியல் தலைமைகளின் பெயர்கள் இடம்பெற்றிருந்தன.
</p><p>
இந்நிலையில் இதனை கடந்து விசாரணைக்காக எதிர்கட்சி தலைவரும் உள்வாங்கப்பட்டவுள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்த கருத்துக்கள் கவனம் பெற்றுள்ளது.</p><p></p><h2>பிரதான சதித்திட்டக்காரர்</h2><p>
</p><p>
இதன்போது எதிர்கட்சி தலைவரின் பெயரை உள்வாங்க சட்டமா அதிபர் பின்வரும் வாதங்களை முன்வைத்திருந்தார், </p><p>

“தாக்குதலுடன் தொடர்புடைய நடவடிக்கைகள் மற்றும் தொடர்புகளை மறைப்பதற்காக சுரேஷ் சாலே அரச புலனாய்வு சேவையின் பணிப்பாளராக நியமிக்கப்பட்டார். </p><p>

சுரேஷ் சாலே உள்ளிட்ட சிலர் பிரதான சதித்திட்டக்காரர்களை மறைத்ததாக தாங்கள் மாத்திரம் கூறவில்லை. 
எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதுகுறித்து முன்னதாகவே நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். </p><p>

அவர்களிடமிருந்தும் எதிர்காலத்தில் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்படவுள்ளது.” என நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p> </p><h2>

சஜித் அன்று கூறிய கருத்து,</h2><p>
1. புலனாய்வுப் பிரிவினரின் தொடர்புகள் மற்றும் "சோனிக் சோனிக்" விவகாரம்</p><p>

தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான சஹ்ரான் ஹாஷிமின் பயங்கரவாதக் குழுவோடு நெருங்கிய தொடர்பிலிருந்ததாகக் கூறப்படும், "சோனிக் சோனிக்" (Sonic Sonic) என்ற குறியீட்டுப் பெயரைக் கொண்ட சந்தேக நபர் பயன்படுத்திய இணைய நெறிமுறை முகவரி (IP Address) குறித்த தரவுகள் சஜித் பிரேமதாசவால் வெளிப்படுத்தப்பட்டது.
</p><p>
குறித்த IP முகவரியானது இலங்கையின் அரச புலனாய்வுச் சேவையின் (SIS) உத்தியோகபூர்வ வலையமைப்போடு தொடர்பைக் கொண்டுள்ளமைக்கான பலத்த தொழில்நுட்பச் சந்தேகங்களை சஜித் பிரேமதாச நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டினார்.
</p><p>
இது தாக்குதலுக்கு முந்தைய உளவுத்துறைத் தொடர்புகளை மூடிமறைப்பதற்கான சான்றாக அமையலாம் என்பதால், எவ்வித அரசியல் தலையீடுமற்ற வெளிப்படையான கணினிசார் தடயவியல் விசாரணை (Digital Forensic Investigation) நடத்தப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.</p><p></p><h2>அரசியல் அழுத்தம்</h2><p>
</p><p>
2. உள்நாட்டு விசாரணைகளின் மீதான அரசியல் அழுத்தம் மற்றும் சர்வதேச தலையீட்டின் அவசியம்</p><p>உள்நாட்டுப் புலனாய்வு மற்றும் குற்றப் புலனாய்வுப் பிரிவுகள் (CID) மீதான தொடர்ச்சியான அரசியல் செல்வாக்குகள், அதிகார அழுத்தங்கள் மற்றும் இடமாற்றங்கள் குறித்து சஜித் கேள்வி எழுப்பினார்.
</p><p>
இலங்கையின் தற்போதைய கட்டமைப்பு ரீதியான மற்றும் அரசியல் ரீதியான எல்லைகளுக்குள் இந்தத் தாக்குதலின் உண்மையான குற்றவாளிகளைக் கண்டறிவது சாத்தியமற்றது என அவர் வாதிட்டார்.</p><p> 

எனவே, உலகளாவிய நம்பகத்தன்மையைப் பெறுவதற்கும் நடுநிலையான நீதியை நிலைநாட்டுவதற்கும், சர்வதேச பாதுகாப்பு நிறுவனங்கள் மற்றும் சர்வதேச புலனாய்வு அமைப்புகளின் நேரடி கூட்டு ஒத்துழைப்புடன் கூடிய ஒரு சுயாதீன விசாரணை கட்டாயமாக்கப்பட வேண்டும் என அவர் கோரினார்.</p><p>

3. ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அறிக்கைகள் முடக்கப்படுதல் </p><p>

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுக்களின் (PCoI) இறுதி அறிக்கைகள் மற்றும் அவற்றின் பரிந்துரைகள் குறித்து சஜித் கேள்வி எழுப்பியிருந்தார்.
</p><p>
பாதிக்கப்பட்ட கத்தோலிக்க சமூகத்திற்கு நீதியை வழங்குவதைக் காட்டிலும், முந்தைய அரசாங்கங்கள் இந்த உத்தியோகபூர்வ அறிக்கைகளைத் தங்களின் அரசியல் பிரச்சாரங்களுக்கும், பழிவாங்கல்களுக்கும் சாதகமாகப் பயன்படுத்தி, முக்கிய பரிந்துரைகளை ஆவணக் காப்பகங்களுக்குள் (Archives) திட்டமிட்டு முடக்கி வைத்துள்ளதாக அவர் சாடினார்.</p><p> 

இந்த மறைக்கப்பட்ட ஆவணங்கள் அனைத்தும் எவ்விதத் தணிக்கையுமின்றி முழுமையாகப் பொதுவெளியில் பகிரங்கப்படுத்தப்பட வேண்டும் என்பது அவரது பிரதான கோரிக்கையாகும் என்றார்.</p><h2>சோனிக் சோனிக்</h2><p>
</p><p>
 4. 2021 மே மாதமளவில் நாடாளுமன்றக் குழுமங்களில் கவனம் செலுத்தத் தொடங்கினார்.</p><p> 

அவரது ஐக்கிய மக்கள் சக்தி (SJB) நாடாளுமன்ற உறுப்பினர்கள் (ஹரின் பெர்னாண்டோ உள்ளிட்டோர்) "சோனிக் சோனிக்" மற்றும் சுரேஷ் சாலேவின் உளவுத்துறைத் தொடர்புகள் குறித்த அதிர்ச்சியூட்டும் உண்மைகளை நாடாளுமன்றத்தில் வெளிப்படுத்திய போது அவர் இதற்கு அரசியல் ரீதியான ஆதரவை வழங்கினார்.
</p><p>
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலின் பின்னணியில் இருந்த உண்மையான குற்றவாளிகள் மற்றும் சதிகாரர்களைப் பாதுகாப்பதற்காகவே சுரேஷ் சாலே திட்டமிட்டுப் பயன்படுத்தப்பட்டார் என சஜித் பிரேமதாச குற்றம் சாட்டினார். </p><p>குறிப்பாக, தாக்குதலுடன் தொடர்புடைய முக்கிய அரசியல் மற்றும் உளவுத்துறைத் தொடர்புகள் பொதுவெளியில் வெளிவராமல் தடுப்பதற்கான ஒரு "மூடிமறைப்புச் கருவியாக" அவர் செயற்பட்டுள்ளார் என நாடாளுமன்றத்தில் சாடினார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-17T00:31:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கோட்டாபய ராஜபக்சவின் 'மிக்' விமான கமிஷன் பணத்திற்கு நடந்தது என்ன! அதிர்ச்சிக்குள்ளாக்கும் தகவல்...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/gotabaya-rajapaksa-udayanga-weeratunga-mig-1789559561"></link>
            <id>https://tamilwin.com/article/gotabaya-rajapaksa-udayanga-weeratunga-mig-1789559561</id>
            <summary type="text">&amp;nbsp;&#039;மிக்&#039; விமானக் கொடுக்கல் வாங்கலில் நடந்த ஊழல் மோசடி தொடர்பில் தற்போது விசாரணைகள் நடைபெற்றும் வரும் நிலையில் கோட்டாபய ராஜபக்ச நிதிக் குற்றப் புலன...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;'மிக்' விமானக் கொடுக்கல் வாங்கலில் நடந்த ஊழல் மோசடி தொடர்பில் தற்போது விசாரணைகள் நடைபெற்றும் வரும் நிலையில் கோட்டாபய ராஜபக்ச நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் பல மணிநேர வாக்குமூலம் ஒன்றை அளித்துள்ளார்.</p><p>இந்தக் கொடுக்கல் வாங்கலின் பின்னணியில் மறைந்துள்ள கமிஷன் பணம் யாருடைய கணக்குகளில் வைப்பிலிடப்பட்டது? எங்கே சென்றது?
'டி.எஸ். அலையன்ஸ்' (DS Alliance) நிறுவனம் ஒரு போலி நிறுவனமாக உருவாக்கப்பட்டு அதன் கீழ் இயங்கிய 'பெலிமிசா' (Bellimissa) நிறுவனத்திற்கு இலங்கையின் விமானப்படை 15.66 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியை அனுப்பியுள்ளது.
</p><h2>
</h2><p></p><h2>கொடுக்கல் வாங்கல் எப்படி நடந்தது</h2><p>அதில் குறிப்பிட்ட கொடுக்கல் வாங்கலுக்காக உண்மையாகவே செலவிடப்பட்டுள்ளது 7.83 மில்லியன் டொலர்கள் மட்டுமே.
அப்படியானால் எஞ்சிய பணம் எங்கே சென்றது? யாருடைய கணக்கில் வைப்பிலிடப்பட்டது?
மேலும் இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்ட விதம் விசாரணைகள் நிறுத்தப்பட்ட விதம் என அனைத்தும் இதில் அடங்கியுள்ளன.
</p><p>இந்தக் கொள்முதல் கொடுக்கல் வாங்கலானது குளிர் அறைகளில் இருந்த சில நபர்களின் பாக்கெட்டுகளை நிரப்பி அவர்களின் சுகபோகத்திற்காகவே தீர்மானிக்கப்பட்ட ஒரு கொடுக்கல் வாங்கலா? </p><p>
இந்தக் கொடுக்கல் வாங்கலானது உண்மையிலேயே இலங்கை விமானப்படையின் தாக்குதல் படைப்பிரிவை வலுப்படுத்தும் நோக்கத்திலா செய்யப்பட்டது? அல்லது ஒரு குறிப்பிட்ட குழுவினரின் பைகளை நிரப்பும் நோக்கத்திலா செய்யப்பட்டது? எனும் கேள்வி எழுகிறது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6d646032-44b9-4263-bd4a-e36548308477/26-6aaa830b491f4.webp' /></p><p>2019 ஆம் ஆண்டு ஜனாதிபதியாகப் பதவியேற்ற கோட்டாபய ராஜபக்ச இந்த மிக் விமானக் கொடுக்கல் வாங்கல் விசாரணையை நிறுத்தினார். அவ்வாறு நிறுத்துவதற்கு முன்னர் இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய புலனாய்வாளர்களுக்கு இந்தக் கொடுக்கல் வாங்கல் பற்றிய சில முக்கிய தடயங்களைக் கண்டுபிடிக்க முடிந்துள்ளது.
</p><p>இந்த 'டி.எஸ். அலையன்ஸ்' எனும் நிறுவனத்தின் உரிமையாளரான லீ குடும்பத்தினரால் சிங்கப்பூரில் பராமரிக்கப்பட்டு வந்த ஒரு வங்கிப் கணக்கிலிருந்து குறைந்தபட்சம் 4,39,000 டொலர்கள் பணம் இலங்கையின் கொமர்ஷல் வங்கியின் கம்பஹா கிளையில் வைப்பிலிடப்பட்டுள்ளது.
</p><p>கம்பஹா கிளையில் லெலும் துமிந்த மான்னப்பெரும எனும் கழிவுநீர் பொறியியலாளர் ஒருவரின் கணக்கில் வைப்பிலிடப்பட்டுள்ளது. கழிவுநீர் பொறியியலாளர் ஒருவரின் கணக்கில் இவ்வளவு பாரிய தொகையா யார் இந்த லெலும் துமிந்த?.
</p><p> சிங்கப்பூர் 'டி.எஸ். அலையன்ஸ்' நிறுவனம் தங்களது கணக்கொன்றின் மூலமாகவே இலங்கையின் கம்பஹா கொமர்ஷல் வங்கி கிளைக்கு இந்தப் பணத்தை அனுப்புகிறது.&nbsp;</p><h2>டுபாயில் வாங்கப்பட்ட சொத்து</h2><p>இந்த லெலும் துமிந்த மான்னப்பெரும என்பவர் உதயங்க வீரதுங்கவின் சகோதரியை திருமணம் செய்துள்ளார். உறவுமுறையின் படிஇ இந்தப் பணம் வைப்பிலிடப்பட்ட நபர் உதயங்க வீரதுங்கவின் மைத்துனர் ஆவார்.
</p><p>இந்த மான்னப்பெரும என்பவரின் வங்கிப் கணக்கில் வீழ்ந்த பணத்திற்கும் மிக் கொடுக்கல் வாங்கலுக்கும் நேரடித் தொடர்பு இருக்கிறதா இல்லையா என்பதைக் கண்டறிய புலனாய்வாளர்களால் முடியாமல் போகிறது.
</p><p>ஆனால் மிக் கொடுக்கல் வாங்கலுடன் தொடர்புடைய 'டி.எஸ். அலையன்ஸ்' நிறுவனத்தின் கணக்கிலிருந்தே பணம் வந்துள்ளது என்பது உறுதியாகிறது. இந்த மான்னப்பெரும என்பவர் இந்தப் பணத்திலிருந்து 324,971.6 டொலர்களை
ஐக்கிய அரபு இராஜியத்தின் டுபாய் நகரில் சொத்து விற்பனை செய்யும் 'டார்கெட் எஸ்டாப்ளிஷ்மென்ட்' (Target Establishment) எனும் நிறுவனத்திற்குச் செலுத்தியுள்ளார். </p><p>
ஐக்கிய அரபு இராஜியத்தின அஜ்மான் நகரில் உள்ள 'கோல்ட் கிரஸ்ட் வியூஸ் 2' (Goldcrest Views 2) எனும் சொகுசு வீட்டுத் தொகுதியின் 'பென்ட் ஹவுஸ்' (Penthouse) அடுக்குமாடி குடியிருப்பு இலக்கம் 3403 ஐக் கொள்முதல் செய்வதற்காகவே இந்தப் பணம் செலுத்தப்பட்டுள்ளது என்பது தெரியவருகிறது. </p><p>2018 ஆம் ஆண்டு இந்த வீட்டிலிருந்து டுபாய் பொலிஸாரால் உக்ரைனுக்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க கைது செய்யப்படுகிறார்.இந்த பிரம்மாண்டமான கமிஷன் தொகையில் மிகச்சிறிய ஒரு பகுதிக்கு என்ன நடந்தது என்பது பற்றிய தகவல்களாகவே இவை கிடைத்துள்ளதாக நம்புகின்றனர். </p><p>
இந்த கமிஷன் தொகையில் கணிசமான ஒரு பகுதி லத்வியாவில் (Latvia) உள்ள வங்கிக் கணக்கொன்றில் வைப்பு செய்யப்பட்டுள்ளது என்ற விடயமும், அதற்கு மேலதிகமாக நியூசிலாந்து, பனாமா, உக்ரைன், ஹொங்கொங், சிங்கப்பூர் மற்றும் பிரிட்டிஷ் வெர்ஜின் தீவுகள் (British Virgin Islands) ஆகிய நாடுகளிலுள்ள பல வங்கிக் கணக்குகளிலும் வைப்பு செய்யப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
</p><p></p><p></p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-17T00:26:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[உணவு உண்ட பின் மறந்தும் செய்யக்கூடாத முக்கிய தவறுகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/major-mistakes-you-should-never-make-after-eating-1789604145"></link>
            <id>https://jvpnews.com/article/major-mistakes-you-should-never-make-after-eating-1789604145</id>
            <summary type="text">உணவு தான் நமது உடலுக்கு ஆற்றலை அளிக்கிறது. எனவே ஒரு நாளைக்கு உடலுக்கு வேண்டிய ஆற்றலைப் பெற உட்கொள்ளும் 3 வேளை உணவுகளும், ஆரோக்கியமானதாகவும், சமச்சீரான...</summary>
            <content type="html"><![CDATA[<p>உணவு தான் நமது உடலுக்கு ஆற்றலை அளிக்கிறது. எனவே ஒரு நாளைக்கு உடலுக்கு வேண்டிய ஆற்றலைப் பெற உட்கொள்ளும் 3 வேளை உணவுகளும், ஆரோக்கியமானதாகவும், சமச்சீரானதாகவும் இருக்க வேண்டியது அவசியம்.&nbsp;அதுவும் உணவு உண்ட பின் ஒருசில செயல்களை மேற்கொண்டால், அது பலவிதமான ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/81f9e257-a6c4-4bb9-8b65-bb6a00b692eb/26-6aab31342d4df.webp' /></p><p>சொல்லப்போனால் இப்படியான பழக்கங்கள் செரிமானத்தை சீராக்குவதற்கு பதிலாக, ஆரோக்கியத்தை தான் சீர்குலைக்கும். இப்போது உணவு உண்ட உடனே செய்யக்கூடாத 5 விஷயங்கள் குறித்து காண்போம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1c5a4ad4-886d-4f87-bf4b-97440fe32f5a/26-6aab313378210.webp' /></p><h4>உணவு உண்டதும் காபி/டீ குடிப்பது</h4><p>
நிறைய பேர் உணவு உண்ட பின் காபி அல்லது டீ குடிக்கும் பழக்கத்தை கொண்டுள்ளனர். ஆனால் சாப்பிட்டதும் காபி/டீயைக் குடித்தால், அது செரிமானத்தை பாதிக்க வாய்ப்புள்ளது. ஏனெனில் இவற்றில் உள்ள டானின்கள் இரும்புச்சத்து உறிஞ்சுவதைக் குறைக்கின்றன. அதுமட்டுமின்றி, இப்படி காபி/டீயை குடிக்கும் போது, அது அமிலத்தன்மையை அதிகரிக்கும். இதன் விளைவாக வயிற்று உப்புசத்தை உண்டாக்குவதோடு, செரிமான செயல்பாட்டைக் குறைக்கலாம். எனவே உணவுக்கு பின் காபி/டீ குடிக்க நினைத்தால், குறைந்தது 1 மணிநேரம் கழித்து அருந்துங்கள்.</p><h4>சாப்பிட்டதும் பழங்களை உண்பது
</h4><p>உணவு உண்ட பின் சிலருக்கு பழங்களை சாப்பிடும் பழக்கம் இருக்கும். என்ன தான் பழங்கள் வைட்டமின்கள், நார்ச்சத்துக்கள், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்திருந்தாலும், அவற்றை உணவு உண்ட பின் சாப்பிடுவது நல்லதல்ல. இல்லாவிட்டால் அது நொதித்தலை ஏற்படுத்தி, வயிற்று உப்புசம், வாய்வு தொல்லை போன்றவற்றிற்கு வழிவகுக்கும். உங்களுக்கு பழங்கள் சாப்பிட வேண்டுமென்று தோன்றினால், உணவுக்குக் குறைந்தது அரை மணி நேரத்திற்கு முன்போ அல்லது இரண்டு மணி நேரத்திற்குப் பிறகோ, வெறும் வயிற்றில் பழங்களைச் சாப்பிடுவதே சிறந்தது.</p><h4>சாப்பிட்ட உடனே தூங்குவது</h4><p> அல்லது படுப்பது
உணவு உண்ட உடனேயே படுத்தால், வயிற்றில் சுரக்கும் அமிலங்கள் உணவுக்குழாய் வழியாக மேலே ஏறக்கூடும். இதன் விளைவாக நெஞ்செரிச்சல், அஜீரண கோளாறு போன்றவற்றால் சிரமப்படுவற்கான வாய்ப்புள்ளது. எப்போதும் தூங்குவதாக இருந்தால், உணவு உண்ட பின் 2 மணிநேரம் கழித்து தூங்க வேண்டும்.&nbsp;</p><h4>அதிகளவு நீரை அருந்துவது
</h4><p>தண்ணீர் அதிகம் குடிப்பது நல்லது தான். ஆனால் அந்த நீரை எப்போதெல்லாம் குடிக்கிறோம் என்பதும் மிகவும் முக்கியம். உணவு உண்டதுமே அதிகளவு நீரை குடித்தால், அது வயிற்று அமிலங்களையும் செரிமான நொதிகளையும் நீர்த்துப் போக செய்து, உணவை செரிக்கும் செயல்முறையை மெதுவாக்கும். இதன் விளைவாக வயிறு கனமாகவும், செரிமான பிரச்சனைகளையும் சந்திக்க நேரிடும். ஒருவேளை நீங்கள் தண்ணீர் குடிக்க நினைத்தால், 30 நிமிடம் கழித்து குடிப்பது நல்லது.</p><h4>உணவு உண்டதும் உடற்பயிற்சி செய்வது
</h4><p>உடற்பயிற்சி செய்வது நல்லது என்றாலும், அந்த உடற்பயிற்சியை செய்வதற்கும் நேரம் காலம் உண்டு. முக்கியமாக உடற்பயிற்சியை உணவு உண்ட பின் செய்வதைத் தவிர்க்க வேண்டும். குறிப்பாக தீவிரமான உடற்பயிற்சிகளை உணவுக்கு பின் செய்தால், அது செரிமான மண்டலத்தில் சிரமத்தை ஏற்படுத்தும். மேலும் இது வளர்சிதை மாற்றத்தை மெதுவாக்கி, தசைப்பிடிப்பு அல்லது குமட்டலுக்கு வழிவகுக்கும். வேண்டுமானால் உணவு உண்ட பின் மெதுவாக நடக்கலாமே தவிர, தீவிரமான உடற்பயிற்சிகளை செய்வதாக இருந்தால், குறைந்து 1 மணிநேரம் கழித்து செய்யலாம்.</p>]]></content>
            <updated>2026-09-17T00:16:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[அநுராதபுரம் வைத்தியசாலையில் நவீன இருதய சிகிச்சைத் தொகுதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/modern-cardiac-treatment-anuradhapura-hospital-1789600917"></link>
            <id>https://tamilwin.com/article/modern-cardiac-treatment-anuradhapura-hospital-1789600917</id>
            <summary type="text">நாட்டின் அனைத்துப் பிரஜைகளுக்கும் ஆரோக்கியமான வாழ்க்கையை வழங்கும் நோக்கில்,
இலவச சுகாதாரச் சேவையை மக்களுக்கு நெருக்கமாக்குதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டின் அனைத்துப் பிரஜைகளுக்கும் ஆரோக்கியமான வாழ்க்கையை வழங்கும் நோக்கில்,
இலவச சுகாதாரச் சேவையை மக்களுக்கு நெருக்கமாக்குதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் சுகாதாரத் துறை
வலுப்படுத்தப்பட்டு வருகின்றது என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க
தெரிவித்தார்.</p><p>அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் புதிய இருதய நோய் மற்றும் இருதய மார்பு
அறுவை சிகிச்சை பிரிவுக் கட்டடத்தின் நிர்மாணப் பணிகளை ஆரம்பித்து வைக்கும்
நிகழ்வு நேற்று(6.09.2026) பிற்பகல் ஜனாதிபதி தலைமையில் நடை பெற்றபோதே இவ்வாறு குறிப்பட்டுள்ளார்.</p><h2>அவசர நிலைகளை எதிர்கொள்ள</h2><p>
மேலும் உரையாற்றுகையில்,

"கடந்த காலத்தில் பொருளாதார வீழ்ச்சியால் ஏற்பட்ட தடைகளைத் தாண்டி, தற்போது
நாடு ஸ்திரமான பொருளாதார நிலையை எட்டியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/00c173da-2509-4d89-b67c-06cf8b593c47/26-6aab2b5f7700a.webp' /></p><p> சுகாதாரத் துறையின் மனித வளத்தை
மேம்படுத்தும் முகமாக, வரலாற்றில் முதன்முறையாக குறுகிய காலத்தில்
ஆயிரக்கணக்கான வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் சுகாதார ஊழியர்கள்
இணைக்கப்பட்டுள்ளனர்" என்று குறிப்பிட்டார்.&nbsp;</p><p>சுகாதார அமைச்சின் செயலாளர் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க
உரையாற்றும்போது, நாட்டின் மொத்த மரணங்களில் 80 சதவீதமானவை தொற்றா நோய்களால்
ஏற்படுகின்றன என்றும், குறிப்பாக உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு
நோய்களால் ஏற்படும் மாரடைப்பு போன்ற அவசர நிலைகளை எதிர்கொள்ள இத்தகைய நவீன
சிகிச்சைத் தொகுதிகள் மிக அவசியமானவை என்றும் தெரிவித்தார்.&nbsp;</p><h2>உட்கட்டமைப்பு வசதிகளை வழங்க</h2><p>இலங்கைக்கான ஜப்பானியத் தூதுவர் உரையாற்றும்போது, இலங்கையின் நீண்டகால மற்றும்
நம்பிக்கைக்குரிய பங்காளியாகத் திகழ்வதில் ஜப்பான் பெருமை கொள்கின்றது
என்றும், இருதய நோய்களால் ஏற்படும் இறப்புக்களைக் கட்டுப்படுத்துவதற்காக
ஜப்பானின் அனுபவத்தையும் பௌதிக உட்கட்டமைப்பு வசதிகளையும் வழங்குவதில்
மகிழ்ச்சியடைகின்றோம் என்றும் தெரிவித்தார்.
</p><p>[DE8NZU</p><p>
இந்த நிகழ்வில் சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த
ஜயதிஸ்ஸ, வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி
அமைச்சர் வசந்த சமரசிங்க, வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் நீர்வழங்கல்
அமைச்சர் வைத்தியர் சுசில் ரணசிங்க, வட மத்திய மாகாண ஆளுநர் வசந்த குமார
விமலசிறி, நாடாளுமன்ற உறுப்பினர்கள், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர்
ஓய்வுபெற்ற எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தா, ஜப்பான் சர்வதேச
ஒத்துழைப்பு முகாமைத்துவ நிறுவனத்தின் இலங்கை அலுவலகப் பிரதிநிதி மற்றும்
வைத்தியசாலைப் பணிக்குழுவினர் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.</p><p><br></p>]]></content>
            <updated>2026-09-16T23:51:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுட்டு வீழ்த்தப்பட்ட சவுதியின் F-15 ரக போர் விமானம்: வீடியோ வெளியிட்ட ஹவுதிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/houthis-shot-down-saudi-f-15-air-craft-1789597774"></link>
            <id>https://news.lankasri.com/article/houthis-shot-down-saudi-f-15-air-craft-1789597774</id>
            <summary type="text">Houthis Shot Down Saudi F-15 Air Craft: சவுதி அரேபியாவின் போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது தொடர்பான வீடியோ ஆதாரங்களை ஹவுதி படையினர் வெளியிட்டுள்ளனர்....</summary>
            <content type="html"><![CDATA[<p>Houthis Shot Down Saudi F-15 Air Craft: சவுதி அரேபியாவின் போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது தொடர்பான வீடியோ ஆதாரங்களை ஹவுதி படையினர் வெளியிட்டுள்ளனர்.</p><h2> தீவிரமடையும் சவுதி-ஹவுதிகள் மோதல்</h2><p>
ஏமனில் போர் நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ள நிலையில், சவுதி அரேபியாவின் கூட்டுப் படையில் உள்ள போர் விமானம் ஒன்றை மாரிப் மாகாணத்தின் வான்வெளியில் வெற்றிகரமாக சுட்டு வீழ்த்தி இருப்பதாக ஹவுதிகள் அறிவித்துள்ளனர்.</p><p> இது தொடர்பாக ஹவுதி ராணுவ செய்தி தொடர்பாளர் யஹ்யா சரீ தெரிவித்த தகவலில், ஹவுதி படையினருக்கு எதிரான தாக்குதலில் ஈடுபட்ட சவுதி அரேபியாவின் F-15 ரக போர் விமானம் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஏவுகணை மூலம் வெற்றிகரமாக சுட்டு வீழ்த்தப்பட்டதாக தெரிவித்துள்ளார்.</p><p><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="ar" dir="rtl">مشاهد نوعية لإسقاط طائرة مقاتلة سعودية من نوع F15 وحطامها في محافظة مأرب - 16 سبتمبر 2026م <a href="https://t.co/rk0suliePT">pic.twitter.com/rk0suliePT</a></p>&mdash; الإعلام الحربي اليمني (@MMY1444) <a href="https://x.com/MMY1444/status/2100227434750628161?ref_src=twsrc%5Etfw">September 16, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p> மேலும் இந்த சம்பவம் தொடர்பாக 4 நிமிட காட்சிகளையும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் அமைப்பு வெளியிட்டுள்ளது.</p><p> இரவு நேரத்தில் எடுக்கப்பட்ட அந்த வீடியோவில், ஹவுதிகள் இலக்கை நிர்ணயம் செய்தது முதல் போர் விமானம் சிதைந்து புகைமூட்டத்துடன் எரியும் சிதைவுகள் வரை பார்க்க முடிகிறது.</p><p> பகல் நேரத்தில் வெளியான வீடியோவில், பாறைகள் நிறைந்த பாலைவனப் பகுதியில் போர் விமானம் ஒன்றின் சிதைந்த உதிரி பாகங்கள் மற்றும் சவுதியின் சின்னங்கள் பொறிக்கப்பட்ட சிதைந்த பெரிய வால் பகுதி ஆகியவை கிடப்பது பதிவாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a856506a-3858-4f6a-8c59-00c70b537985/26-6aab1850161c0.webp' /></p><h3> மக்கா மீது தாக்குதல் நடத்த சதி</h3><p>இந்த சண்டைக்கு மத்தியில், இஸ்லாமியர்களின் புனித நகரமான மக்கா மீது ஹவுதிகள் ட்ரோன் தாக்குதல் நடத்தி இருப்பதாக சவுதி கூட்டணி அமைப்புகள் குற்றஞ்சாட்டியுள்ளது.</p><p>சவுதியின் இந்த குற்றச்சாட்டுகள் புனையப்பட்டது என்று ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தீவிரமாக மறுப்பு தெரிவித்துள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-09-16T23:50:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[சூடானில் இடிந்து விழுந்த தங்கச் சுரங்கம்: 60 தொழிலாளர்கள் சடலமாக மீட்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/sudan-gold-mine-collapse-60-miners-killed-1789602588"></link>
            <id>https://news.lankasri.com/article/sudan-gold-mine-collapse-60-miners-killed-1789602588</id>
            <summary type="text">Sudan Gold Mine Collapse 60 Miners Killed: தெற்கு சூடானில் தங்க சுரங்க விபத்தில் குறைந்தது 60 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். இடிந்து விழுந்த தங்கச் சு...</summary>
            <content type="html"><![CDATA[<p>Sudan Gold Mine Collapse 60 Miners Killed: தெற்கு சூடானில் தங்க சுரங்க விபத்தில் குறைந்தது 60 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.</p><h2> இடிந்து விழுந்த தங்கச் சுரங்கம்</h2><p>
தெற்கு சூடானில் வெஸ்ட் கார்டோஃபான் என்ற பகுதியில் எல்-நஹுத் நகரில் அமைந்துள்ள அல்-சாராAl-Zaraa) என்ற தங்க சுரங்கம் யாரும் எதிர்பாராத நேரத்தில் இடிந்து விழுந்தது.</p><p> சுரங்கத்தின் கட்டமைப்பு பாதை ஒன்றுடன் ஒன்று மிக நெருக்கமாக அமைந்து இருப்பதால், முதல் சுரங்கம் இடிந்ததும் அடுத்தடுத்து மற்ற சுரங்கங்களும் இடிந்து விழுந்தது.</p><p>மீட்பு பணிகள் மிகவும் மெதுவாக மற்றும் ஆபத்தான முறையில் அங்குள்ள சுரங்க தொழிலாளர்களே மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/95bd7079-b756-4399-9777-5ced3d93bbec/26-6aab2b1e37c3c.webp' /></p><p> புதன்கிழமை காலைக்குள் கிட்டத்தட்ட 60 தொழிலாளர்களின் உடல்களை மீட்டுள்ளனர்.</p><p> இருப்பினும் பாறைகள் மற்றும் குவிந்து கிடக்கும் மண்ணை அகற்றி மீதமுள்ளவர்களின் உடல்களையும் மீட்க கனரக இயந்திரங்கள் உடனடியாக தேவைப்படுவதாக தெரிவித்துள்ளனர்.</p><p> மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், இடிபாடுகளில் சிக்கியுள்ள தொழிலாளர்கள் உயிருடன் மீட்கப்படுவார்கள் என்ற நம்பிக்கை குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது.</p><p><br></p>]]></content>
            <updated>2026-09-16T23:50:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Erimalai</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் இறந்த நிலையில் கரை ஒதுங்கும் நன்னீர் மீன்கள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/freshwater-fish-washing-ashore-dead-in-jaffna-1789601481"></link>
            <id>https://ibctamil.com/article/freshwater-fish-washing-ashore-dead-in-jaffna-1789601481</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு - மருதங்கேணி பிரதான பாலம் அருகே ஆற்றங்கரையின் இருபுறங்களிலும் கடந்த சில நாட்களாக பெருமளவான நன்னீர் மீன்கள் இறந்த நிலையில...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு - மருதங்கேணி பிரதான பாலம் அருகே ஆற்றங்கரையின் இருபுறங்களிலும் கடந்த சில நாட்களாக பெருமளவான நன்னீர் மீன்கள் இறந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ளன.
</p><p>பல தொன் எடையிலான மீன்கள் இறந்த நிலையில் காணப்படுவதால், அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>அவ்வழியாக பயணிக்கும் மக்களும் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
</p><p>தற்போது நிலவும் அதீத வெப்பநிலை காரணமாக மீன்கள் இறந்திருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ள நிலையில், சம்பவத்திற்கான உண்மையான காரணம் தொடர்பில் உரிய ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-16T23:31:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் இடம்பெறும் அநீதியின் உண்மையை அம்பலப்படுத்தியுள்ளோம்: காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/injustice-in-sri-lanka-1789600980"></link>
            <id>https://ibctamil.com/article/injustice-in-sri-lanka-1789600980</id>
            <summary type="text">காணாமல் ஆக்கப்பட்டோரின் சர்வதேச மாநாட்டின் மூலம் இலங்கையில் தமிழ் மக்களுக்கு இழைக்கப்படும் அநீதியின் உண்மை நிலையை சர்வதேச சமூகத்தின் கவனத்திற்கு கொண்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>காணாமல் ஆக்கப்பட்டோரின் சர்வதேச மாநாட்டின் மூலம் இலங்கையில் தமிழ் மக்களுக்கு இழைக்கப்படும் அநீதியின் உண்மை நிலையை சர்வதேச சமூகத்தின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளதாக, வடக்கு - கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.</p><p>

யாழ்ப்பாண ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர்கள், தமது பிள்ளைகளைத் தேடி பல ஆண்டுகளாகப் போராடி வரும் தமிழ் தாய்மார்களின் குரலை சர்வதேச அளவில் பதிவு செய்துள்ளதாகக் கூறியுள்ளனர்.</p><p>
தொடர்ந்து கருத்து தெரிவித்த பிரதிநிதிகள்,</p><p></p><h2>துணை ஆயுதக் குழு</h2><p> </p><p>இறுதிப் போரின்போதும், அதற்கு முன்னரும் பின்னரும் தமது பிள்ளைகள் இராணுவத்திடம் கையளிக்கப்பட்ட நிலையிலும், இராணுவத்தால் கைது செய்யப்பட்ட நிலையிலும், இராணுவத்தினராலும் அவர்களுடன் இணைந்து செயற்பட்ட துணை ஆயுதக் குழுக்களாலும் கடத்திச் செல்லப்பட்ட நிலையிலும் காணாமல் ஆக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்..</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b5ce1e0e-4087-4e02-80d4-36d2346b5e8d/26-6aab24d6c7894.webp' /></p><p>

தமது உறவுகள் காணாமல் ஆக்கப்பட்ட நாள் முதல் அவர்களைத் தேடி வீதிகளில் போராடிய தமிழ் தாய்மார்கள், தந்தையர்கள் மற்றும் உறவினர்கள் இணைந்து வடக்கு - கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தை உருவாக்கியதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
</p><p>
2017ஆம் ஆண்டு முதல் வடக்கு - கிழக்கின் ஒவ்வொரு மாவட்டத்திலும் தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுத்து வருவதாகவும் பிரதிநிதிகள் குறிப்பிட்டனர்.</p><p></p><h2>எங்கே தமது பிள்ளைகள்</h2><p>
</p><p>
இந்தப் போராட்டங்களின் மூலம், இராணுவத்திடம் கையளிக்கப்பட்ட தமது பிள்ளைகள் எங்கே உள்ளனர்? கடத்திச் செல்லப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது? போன்ற கேள்விகளுக்கு பதில் வழங்கப்பட வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருவதாக அவர்கள் தெரிவித்தனர்.</p><p></p><p>
மேலும், இலங்கையின் நீதித்துறை மீதான நம்பிக்கை தமக்கு இல்லை என்றும், சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.</p><p> எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் இடம்பெறாத வகையில் உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும், பொறுப்புக்கூறலை உறுதி செய்வதற்காக சர்வதேச நாடுகள் இலங்கை மீது அழுத்தம் பிரயோகிக்க வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.</p><p><b>you may like this</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/Z8NywXpZrYo" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-16T23:23:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[முல்லைத்தீவு இனி பின்தங்கிய மாவட்டம் என்ற பெயரால் அறியப்படவே கூடாது! வடக்கு ஆளுநர் வேதநாயகன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/development-work-begins-in-mullaitivu-1789599091"></link>
            <id>https://tamilwin.com/article/development-work-begins-in-mullaitivu-1789599091</id>
            <summary type="text">முல்லைத்தீவு இனி பின்தங்கிய மாவட்டம் என்ற பெயரால் மாத்திரம் அறியப்படக்
கூடாது, முன்னேற்றத்தின் புதிய அத்தியாயத்தை எழுதும் மாவட்டமாக அறியப்பட
வேண்டும...</summary>
            <content type="html"><![CDATA[<p>முல்லைத்தீவு இனி பின்தங்கிய மாவட்டம் என்ற பெயரால் மாத்திரம் அறியப்படக்
கூடாது, முன்னேற்றத்தின் புதிய அத்தியாயத்தை எழுதும் மாவட்டமாக அறியப்பட
வேண்டும். </p><p>

அத்துடன், மக்கள் சிகிச்சைக்காக வேறு மாவட்டங்களை நோக்கி நீண்ட தூரம் செல்ல
வேண்டாத வகையில், தமது மாவட்டத்திலேயே தரமான சுகாதார சேவைகளைப்
பெற்றுக்கொள்ளக்கூடிய நிலையை உருவாக்குவதே எமது நோக்கம் என வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்துள்ளார். </p><p>

இந்திய அரசின் 600 மில்லியன் ரூபா நிதியுதவியுடன் முல்லைத்தீவு மாவட்ட பொது
மருத்துவமனையில் நிர்மாணிக்கப்படவுள்ள நான்கு மாடிகளைக் கொண்ட புதிய மருத்துவ
விடுதிக்கான அடிக்கல் நடும் நிகழ்வு நேற்று(16.09.2026) இடம்பெற்றுள்ளது.</p><p> 

இந்த நிகழ்வில், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ மற்றும்
இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா ஆகியோர் கலந்துக் கொண்டனர். </p><p>

இதேவேளை, வட மாகாண ஆளுநர் கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். </p><h2>


அபிவிருத்தி பணிகள் ஆரம்பம்</h2><p>
போரினால் மிகவும் கடுமையாகப் பாதிக்கப்பட்டு, நீண்ட காலமாக அபிவிருத்தியில்
பின்தங்கியிருந்த முல்லைத்தீவு மாவட்ட மக்களின் எதிர்பார்ப்பு வெறுமனே
அபிவிருத்திக்கான எதிர்பார்ப்பு அல்ல, நாட்டின் ஏனைய மக்களைப் போலவே சமமான
வாய்ப்புகளுடன் வாழ வேண்டும் என்பதற்கான எதிர்பார்ப்பு என்று இந்த நிகழ்வில்
உரையாற்றும்போது குறிப்பிட்ட ஆளுநர், அந்த எதிர்பார்ப்புக்கு படிப்படியாகப்
பதில் கிடைத்து வருகின்றது என்றார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c7dc5332-6311-4a04-9d6a-1ebb0751f3d0/26-6aab1da97204f.webp' /></p><p> </p><p>

முல்லைத்தீவு மாவட்டத்தின் உட்கட்டமைப்பு மற்றும் சுகாதாரத் துறையில் தற்போது
மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்றங்களைச் சுட்டிக்காட்டிய அவர், கடந்த ஆண்டு
வட்டுவாகல் பாலத்துக்கான அடிக்கல் நடுகை செய்யப்பட்டதுடன், அதன் பணிகள்
தற்போது வேகமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றும், அந்தப் பாலம்
போக்குவரத்து, வர்த்தகம் மற்றும் அன்றாட மக்களின் வாழ்க்கையை இலகுபடுத்தும்
முக்கிய உட்கட்டமைப்பாக அமையும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். </p><p>

இந்நிலையில், இந்திய மக்களின் நிதியுதவியுடன் தற்போது மற்றுமொரு முக்கியமான
சுகாதார உட்கட்டமைப்புத் திட்டம் முல்லைத்தீவு மாவட்டத்துக்குக் கிடைத்துள்ளது
என்று குறிப்பிட்ட ஆளுநர், மருத்துவமனைக்கு கட்டடம் மட்டுமன்றி,
மருத்துவர்களுக்கான வசதிகள், நோயாளிகளுக்கான தரமான சிகிச்சை மற்றும் தேவையான
மருத்துவ மனிதவளம் ஆகிய அனைத்தும் ஒருங்கிணைந்தால்தான் வலுவான சுகாதாரக்
கட்டமைப்பை உருவாக்க முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.&nbsp; &nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-16T22:53:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[மெட்ரோ பேருந்து சேவை குறித்து வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/metro-bus-services-set-for-expansion-1789596562"></link>
            <id>https://tamilwin.com/article/metro-bus-services-set-for-expansion-1789596562</id>
            <summary type="text">கொழும்பு மெட்ரோ பேருந்து சேவை செப்டம்பர் மாத இறுதியில் விரிவாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதோடு, கொழும்பு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் திட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு மெட்ரோ பேருந்து சேவை செப்டம்பர் மாத இறுதியில் விரிவாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதோடு, கொழும்பு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் திட்டமிடப்பட்ட பேருந்து வலையமைப்பை விவரிக்கும் வரைபடங்களை போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க பகிர்ந்துள்ளார்.
</p><p>
சமூக ஊடகப் பதிவு ஒன்றில், இந்தச் சேவை பயணிகளுக்குப் பாதுகாப்பான மற்றும் வசதியான பயண அனுபவத்தை வழங்கும் என்றும், செப்டெம்பர் மாத இறுதியில் கூடுதல் செயல்பாடுகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அமைச்சர் அறிவித்துள்ளார்.
</p><h2>சேவைகள் விரிவுபடுத்தப்படும்</h2><p>
லங்கா மெட்ரோ டிரான்சிட் என்ற பெயரில் வெளியிடப்பட்ட வழித்தட வரைபடங்கள், கொழும்பை பல முக்கிய புறநகர்ப் பகுதிகளுடனும் போக்குவரத்து மையங்களுடனும் இணைக்கும் ஏழு சேவைகளை விவரிக்கின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f8a3fdcc-e4c0-46c2-90b1-11e0b117359e/26-6aab1a0f68c3d.webp' /></p><p>

இந்த வலையமைப்பு மஹரகம, நுகேகொட, பத்தரமுல்ல, மாலபே, தெஹிவளை, மொரட்டுவ மற்றும் ஜா-எல உட்பட பல முக்கிய பிரதேசங்களை உள்ளடக்கியுள்ளது.</p><p>செப்டெம்பர் மாத இறுதியில் இருந்து சேவைகள் விரிவுபடுத்தப்படும் என அமைச்சர் குறிப்பிட்டிருந்தாலும், ஒவ்வொரு வழித்தடத்திற்குமான சரியான தொடக்கத் திகதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.
</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-16T22:50:50+00:00</updated>
        </entry>
    </feed>
