<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-08-08T22:32:15+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிஃபா தலைவரை பதவியிலிருந்து விலகுமாறு நோர்வே கால்பந்து சம்மேளனம் வலியுறுத்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/norwegian-football-fifa-president-resign-1786221041"></link>
            <id>https://tamilwin.com/article/norwegian-football-fifa-president-resign-1786221041</id>
            <summary type="text">நோர்வே கால்பந்து சம்மேளனம், சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் (FIFA) தலைவர் ஜியானி இன்ஃபான்டினோ உடனடியாக பதவி விலக வேண்டும் என உத்தியோகபூர்வமாக கோரியுள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நோர்வே கால்பந்து சம்மேளனம், சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் (FIFA) தலைவர் ஜியானி இன்ஃபான்டினோ உடனடியாக பதவி விலக வேண்டும் என உத்தியோகபூர்வமாக கோரியுள்ளது.</p><p>மேலும், அமெரிக்க வீரர் பலோகனின் போட்டித் தடை நீக்கப்பட்டமை, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு FIFA சமாதானப் பரிசு வழங்கியமை உள்ளிட்ட மூன்று முக்கிய விவகாரங்கள் தொடர்பில் FIFA ஒழுக்கவியல் குழுவிடம் முறைப்பாடு செய்துள்ளது.</p><p></p><h2>நோர்வே கால்பந்து சம்மேளனம்</h2><p>
பிஃபா அமைப்பின் நிர்வாகச் செயல்பாடுகள் மற்றும் அண்மைய தீர்மானங்கள்
தொடர்பில் அதிருப்தி வெளியிட்டுள்ள நோர்வே கால்பந்து சம்மேளனம், அமைப்பின்
வெளிப்படைத்தன்மையையும் நம்பகத்தன்மையையும் உறுதிப்படுத்துவதற்குத் தலைமைத்துவ
மாற்றம் அவசியமானது என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f0a690ac-969a-4a43-b3d5-d30a0821b977/26-6a77ae696916f.webp' /></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-08T22:29:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹோர்முஸ் நீரிணையை திறக்க ஈரான் புதிய நிபந்தனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/iran-sets-new-conditions-for-opening-strait-hormuz-1786226491"></link>
            <id>https://canadamirror.com/article/iran-sets-new-conditions-for-opening-strait-hormuz-1786226491</id>
            <summary type="text">ஹோர்முஸ் நீரிணை வழியாக கப்பல் போக்குவரத்தை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பாக ஓமனுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக ஈ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹோர்முஸ் நீரிணை வழியாக கப்பல் போக்குவரத்தை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பாக ஓமனுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது.
</p><p>
எனினும், ஓமனுடனான ஒப்பந்தம் மாத்திரம் ஹோர்முஸ் நீரிணையை முழுமையாகத் திறப்பதற்குப் போதுமானதாக இருக்காது என ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி தெரிவித்துள்ளார்.
</p><p>
ஹோர்முஸ் நீரிணை வழியாக முன்னர் நடைமுறையில் இருந்த கப்பல் போக்குவரத்து முறை தற்போது ஈரானுக்கு ஏற்புடையதாக இல்லை எனத் தெரிவித்துள்ள அவர், நிரந்தர கப்பல் போக்குவரத்துப் பாதை தொடர்பான தொழில்நுட்ப மற்றும் சட்டரீதியான பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும் வரை, தற்காலிக பாதை ஒன்றை உருவாக்குவது குறித்து ஓமனுடன் ஆலோசித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/04cf5dec-95f4-4cb4-8a68-f0f58d83cd07/26-6a77a73d669f5.webp' /></p><p>புதிய கப்பல் போக்குவரத்துப் பாதை தொடர்பான உடன்பாடு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p>ஹோர்முஸ் நீரிணையை முழுமையாகத் திறப்பது என்பது அமெரிக்கா மேற்கொள்ளும் நடவடிக்கைகளுடன் தொடர்புடையது என ஈரான் தெரிவித்துள்ளது.
</p><p>
ஈரான் மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடைகள் மற்றும் அச்சுறுத்தல்களை அமெரிக்கா முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்றும், துறைமுக முற்றுகைகள் உள்ளிட்ட நடவடிக்கைகளைத் திரும்பப் பெறுவதுடன், ஏற்பட்ட இழப்புகளுக்கான இழப்பீடுகளையும் வழங்க வேண்டும் என்றும் ஈரான் வலியுறுத்தியுள்ளது.
</p><p>
இதனிடையே, ஈரானின் தேசிய பாதுகாப்பு அதிகாரிகளும் அமெரிக்காவின் அச்சுறுத்தல்கள், பொருளாதாரத் தடைகள் மற்றும் துறைமுக முற்றுகைகளை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p><p>இந்நிலையில், ஹோர்முஸ் நீரிணை வழியாகச் சென்ற ஐக்கிய அரபு அமீரகத்துடன் தொடர்புடைய எண்ணெய் கப்பல் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதாக UAE குற்றம்சாட்டியுள்ளது.
</p><p>
இந்தத் தாக்குதலில் கப்பலில் தீ ஏற்பட்ட போதிலும், தீ உடனடியாகக் கட்டுப்படுத்தப்பட்டதாகவும், மாலுமிகள் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> சுற்றுச்சூழல் பாதிப்பும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதல் தொடர்பாக ஈரான் இதுவரை அதிகாரபூர்வமாக கருத்து தெரிவிக்கவில்லை.</p><p>ஹோர்முஸ் நீரிணையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் கப்பல் தாக்குதல்களுக்கு ஓமன் கண்டனம் தெரிவித்துள்ளது.
</p><p>
அதேவேளை, ஈரானுடனான பேச்சுவார்த்தைகள் நேர்மறையான மற்றும் ஆக்கபூர்வமான பாதையில் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் ஓமன் தெரிவித்துள்ளது.</p><p>பாரசீக வளைகுடாவையும் ஓமன் வளைகுடாவையும் இணைக்கும் ஹோர்முஸ் நீரிணை, உலகின் முக்கியமான எரிசக்தி கடல்வழிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bb15836e-a13c-45c0-9498-6f3fbb64de3d/26-6a77a73e1bb6d.webp' /></p><p>

இந்த நீரிணை வழியாக சர்வதேச சந்தைகளுக்கு பெருமளவில் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு கொண்டு செல்லப்படுகின்றன. </p><p>இதனால், நீரிணையில் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்படுவது உலகளாவிய எரிசக்தி சந்தையிலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியதாக உள்ளது.
</p><p>
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் மற்றும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட கடல்வழிப் பாதுகாப்பு நெருக்கடியால் ஹோர்முஸ் நீரிணை வழியாக சர்வதேச கப்பல் போக்குவரத்து பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இந்த நிலையில், ஈரான்–ஓமன் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படுமா என்பதும், அதன் பின்னர் ஹோர்முஸ் நீரிணை வழியாக வர்த்தகக் கப்பல்களின் போக்குவரத்து முழுமையாக மீண்டும் ஆரம்பிக்கப்படுமா என்பதும் சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளன.</p>]]></content>
            <updated>2026-08-08T22:01:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரிட்டிஷ் கொலம்பியாவில் வேகமாக பரவும் காட்டுத்தீ: ஆயிரக்கணக்கானோர் வெளியேற உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/wildfire-crisis-in-british-columbia-mass-evacuatio-1786225687"></link>
            <id>https://news.lankasri.com/article/wildfire-crisis-in-british-columbia-mass-evacuatio-1786225687</id>
            <summary type="text">கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் காட்டுத்தீ வேகமாக பரவியதையடுத்து ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றப்பட்டுள்ளனர். கனடாவில் காட்டுத் தீகனடாவின் மேற்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் காட்டுத்தீ வேகமாக பரவியதையடுத்து ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.</p><h2> கனடாவில் காட்டுத் தீ</h2><p>கனடாவின் மேற்குப் பகுதியில் காட்டுத்தீயானது வேகமாக பரவி வருகிறது. இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் குடியிருப்பு பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.</p><p> பால்ட் ரேஞ்ச்(Bald Range) என்ற இடத்தில் தொடங்கிய இந்த காட்டுத் தீ சம்பவமானது கிட்டத்தட்ட 13,300 கால்பந்து மைதானங்களின் அளவிற்கு சமமான 9,500 ஹெக்டேர் நிலப்பரப்பில் பரவி தொடர்ந்து கட்டுப்பாடின்றி எரிந்து வருகிறது.</p><p></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7a25d6ce-7a93-42b0-8089-d2f96fdaf08b/26-6a77a418e0f7c.webp' /></p><p>பிரிட்டிஷ் கொலம்பியாவின் சம்மர் லேண்ட்(Summerland) மாவட்டத்திற்கு முதல் நிலை அவசர பிரகடனம் அறிவிக்கப்பட்ட நிலையில், பின்னர் அது மாகாணம் முழுவதுமாக விரிவுபடுத்தப்பட்டது.</p><p>நூற்றுக்கணக்கான வீடுகள் மற்றும் சொத்துக்கள் காட்டுத்தீயில் நாசமாகி இருப்பதாக பிரிட்டிஷ் கொலம்பியா மாகாண முதலமைச்சர் டேவிட் எபி தகவல் தெரிவித்துள்ளார்.</p><h2> மீட்பு மற்றும் பாதிப்புகள்</h2><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Thousands of people in Summerland, B.C., are being evacuated as intense wildfires threaten their community.<br><br>To the brave firefighters and first responders working tirelessly to keep people safe: thank you.<br><br>The federal government stands ready to help and support the Government…</p>&mdash; Mark Carney (@MarkJCarney) <a href="https://x.com/MarkJCarney/status/2086162340941287641?ref_src=twsrc%5Etfw">August 8, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>காட்டுத் தீயை அணைக்க மாகாணம் முழுவதும் கிட்டத்தட்ட 1500 தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக போராடி வருகின்றனர்.</p><p>காட்டுத் தீ பரவல் தீவிரமாக உள்ள பகுதிகளில் 39 வெளியேற்ற உத்தரவுகளையும், 49 பாதுகாப்பு எச்சரிக்கைகளையும் அதிகாரிகள் விடுத்துள்ளனர்.</p><p> அத்துடன் சனிக்கிழமை சம்மர்லேண்ட் பகுதியில் மின் தடை ஏற்பட்டுள்ளது. குடிநீரில் சுத்திகரிக்கப்படாத நீர் விநியோக அமைப்பு கலந்ததால் மக்கள் தண்ணீரை காய்ச்சி குடிக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-08T21:48:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[மொஜ்தபா கமேனியின் யூகங்களுக்கு மத்தியில் புதிய காணொளியை பகிர்ந்தது ஈரான்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/new-video-of-iranian-supreme-leader-mojtaba-1786216388"></link>
            <id>https://ibctamil.com/article/new-video-of-iranian-supreme-leader-mojtaba-1786216388</id>
            <summary type="text">ஈரானின் புதிய உச்சத் தலைவர் மொஜ்தபா கமேனி தொடர்பான திகதியிடப்படாத காணொளி ஒன்றை அந்நாட்டு அரசு ஊடகம் வெளியிட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் அவரது தந்தையும...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானின் புதிய உச்சத் தலைவர் மொஜ்தபா கமேனி தொடர்பான திகதியிடப்படாத காணொளி ஒன்றை அந்நாட்டு அரசு ஊடகம் வெளியிட்டுள்ளது.</p><p> கடந்த மார்ச் மாதம் அவரது தந்தையும் முன்னாள் உச்சத் தலைவருமான அலி கமேனி, ஈரான் போரின் தொடக்கத்தில் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து மொஜ்தபா கமேனி உச்சத் தலைவராக நியமிக்கப்பட்டார்.
</p><p>அவர் பதவியேற்ற பின்னர் இதுவரை பொதுமக்கள் முன்னிலையில் தோன்றவில்லை. </p><p></p><h2>மதப் பாடம் நடத்தும்&nbsp;கமேனி </h2><p>அரசு ஊடகங்கள் வாயிலாக வெளியிடப்படும் அறிக்கைகள் மற்றும் செய்திகளின் மூலம் மட்டுமே அவரது கருத்துகள் வெளிவந்துள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ed7b31cb-5561-44f5-9be7-70f8698f6ceb/26-6a777fc6dfb51.webp' /></p><p>
</p><p>
தற்போது வெளியாகியுள்ள காணொளியில், மொஜ்தபா கமேனி ஒரு குழுவினருக்கு மதப் பாடம் நடத்துவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன.</p><p>இந்தக் காணொளி போர் தொடங்குவதற்கு முன்பு பதிவு செய்யப்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது. எனினும், அது எப்போது பதிவு செய்யப்பட்டது என்பது குறித்து அரசு ஊடகம் எந்த தகவலையும் வெளியிடவில்லை.
</p><p>
இந்த காணொளி தற்போது ஏன் வெளியிடப்பட்டது என்பதும் தெளிவாக இல்லை. இதனால் மொஜ்தபா கமேனியின் இருப்பிடம் மற்றும் உடல்நிலை குறித்து புதிய ஊகங்கள் எழும் நிலை ஏற்பட்டுள்ளது.
</p><p>
இந்தக் காணொளியை வெளியிட்ட ஊடகங்களில் ஒன்றான குறித்த செய்தி நிறுவனம், ஈரான் அரசுடன் நெருக்கமானதாகக் கருதப்படும் அரை - அதிகாரப்பூர்வ ஊடகமாகும்.</p><p></p><h2>எலும்பில் முறிவு</h2><p> இருப்பினும், இந்தக் காட்சிகள் இதுவரை ஈரானின் பிற ஊடகங்களில் பரவலாக வெளியாகவில்லை.</p><p>
</p><p>
மொஜ்தபா கமேனி உச்சத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட காலகட்டத்தில் CNN-க்கு தகவல் வழங்கிய வட்டாரங்களின்படி, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மேற்கொண்ட குண்டுவீச்சுத் தாக்குதலின் முதல் நாளில் அவருக்கு கால் எலும்பில் முறிவு ஏற்பட்டதுடன், முகத்தில் சிறிய காயங்களும் ஏற்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டது.
</p><p>
ஆனால் தற்போது வெளியாகியுள்ள காணொளியில் அவரது உடலில், குறிப்பாக முகம் அல்லது காலில், காயம் ஏற்பட்டதற்கான வெளிப்படையான அறிகுறிகள் எதுவும் காணப்படவில்லை.
</p><p>
இதனால், புதிய உச்சத் தலைவரின் உடல்நிலை மற்றும் அவர் தற்போது எங்கு இருக்கிறார் என்பது தொடர்பான கேள்விகள் மீண்டும் எழுந்துள்ளன.</p><p><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr"><a href="https://x.com/hashtag/LATEST?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#LATEST</a> Mojtaba Khamenei, Iran&#39;s supreme leader, appeared in a video recording of a lesson released by Mehr News Agency on August 8. <a href="https://t.co/SjebyaGVm8">pic.twitter.com/SjebyaGVm8</a></p>&mdash; CGTN (@CGTNOfficial) <a href="https://x.com/CGTNOfficial/status/2086082917307199549?ref_src=twsrc%5Etfw">August 8, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-08T21:22:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[உக்ரைன் போரில் 50,000 வடகொரிய வீரர்கள்: ரஷ்யா போடும் திட்டம்: ஜெலென்ஸ்கி எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/north-korea-deploy-50000-troops-to-russia-1786224016"></link>
            <id>https://news.lankasri.com/article/north-korea-deploy-50000-troops-to-russia-1786224016</id>
            <summary type="text">உக்ரைனுக்கு எதிரான போரில் 50000 வடகொரிய வீரர்கள் ரஷ்யாவிற்கு அனுப்பப்படலாம் என்று ஜெலென்ஸ்கி எச்சரிக்கை விடுத்துள்ளார். உக்ரைன் போரில் வட கொரிய வீரர்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>உக்ரைனுக்கு எதிரான போரில் 50000 வடகொரிய வீரர்கள் ரஷ்யாவிற்கு அனுப்பப்படலாம் என்று ஜெலென்ஸ்கி எச்சரிக்கை விடுத்துள்ளார்.</p><h2> உக்ரைன் போரில் வட கொரிய வீரர்கள்</h2><p>உக்ரைன் போரில் களமிறக்கப்படுவதற்காக ரஷ்ய நிலப்பரப்பில் 30,000 முதல் 50,000 வடகொரிய வீரர்கள் நிலை நிறுத்துவது தொடர்பாக அதிகாரப்பூர்வ முடிவு எடுக்கப்பட்டு இருப்பதாக உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி எச்சரித்துள்ளது.</p><p>ஜெலென்ஸ்கி வெளியிட்டுள்ள இந்த தகவல், ரஷ்யா மற்றும் வடகொரியா இடையே அதிகரித்து வரும் ராணுவ உறவுகள் குறித்த கவலையை ஏற்படுத்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0bac35ac-73b1-4797-8708-e351b9f1c466/26-6a779d9203cca.webp' /></p><p>யுனைடெட் நியூஸ் என்ற உக்ரைனிய செய்தி ஊடகத்திற்கு ஜெலென்ஸ்கி வழங்கிய தகவலில், வட கொரிய வீரர்கள் நிலைநிறுத்தப்படும் இந்த திட்டமானது உக்ரைன், ஐரோப்பிய பிராந்தியம் மட்டுமின்றி பரந்த அளவில் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியது என்று எச்சரித்துள்ளார்.</p><p></p><p> நவீன போர் குறித்த ஆழமான அனுபவங்களை வடகொரிய வீரர்களுக்கு இந்த போர் நடவடிக்கை&nbsp; வழங்கும், அத்துடன் ரஷ்யாவிடம் இருந்து நவீன ஆயுதங்களை இதன் மூலம் பெறவும் வட கொரியா திட்டமிட்டுள்ளது என்பது தெளிவாகிறது. இதனை நாங்கள் நன்றாக புரிந்து வைத்துள்ளோம்.</p><p> இது எதிர்காலத்தில் ஆசிய பிராந்தியத்தில் உள்ள மற்ற நாடுகளுக்கும் ஆபத்தாக அமையலாம் என்று ஜெலென்ஸ்கி எச்சரித்துள்ளார்.</p><h2>வட கொரிய வீரர்களின் பங்களிப்பு</h2><p>உக்ரைன் போரில் வட கொரிய வீரர்கள் செயல்படுவது என்பது பல கட்டங்களாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5179bab4-63c5-44d5-adec-d6bab2717045/26-6a779d92ac796.webp' /></p><p> ஆரம்பத்தில் நூற்றுக்கணக்கான வீரர்கள் போரில் களமிறக்கப்பட்டனர். அது பின்னர் ஆயிரங்களாகவும் தற்போது பல்லாயிரக்கணக்காகவும் அதிகரித்து இருப்பதாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.</p><p> அத்துடன் உக்ரைனிய நிலப்பரப்பில் ஏற்கனவே வட கொரிய ஏவுகணைகள் நாங்கள் கண்டுபிடித்து இருப்பதாகவும் ஜெலென்ஸ்கி தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p>&nbsp;<br></p>]]></content>
            <updated>2026-08-08T21:20:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[பூமியை நோக்கி வரும் பிரம்மாண்ட விண்கலம் ; பாபா வங்காவின் 3 அதிர்ச்சி கணிப்புகள் மீண்டும் வைரல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/baba-vanga-s-3-shocking-predictions-go-viral-again-1786223775"></link>
            <id>https://jvpnews.com/article/baba-vanga-s-3-shocking-predictions-go-viral-again-1786223775</id>
            <summary type="text">எதிர்காலத்தில் நடைபெறவுள்ள சம்பவங்களை முன்கூட்டியே கணித்ததாகக் கூறப்படும் பல்கேரியாவைச் சேர்ந்த பாபா வங்காவின் 2026ஆம் ஆண்டுக்கானதாகக் கூறப்படும் சில ...</summary>
            <content type="html"><![CDATA[<p>எதிர்காலத்தில் நடைபெறவுள்ள சம்பவங்களை முன்கூட்டியே கணித்ததாகக் கூறப்படும் பல்கேரியாவைச் சேர்ந்த பாபா வங்காவின் 2026ஆம் ஆண்டுக்கானதாகக் கூறப்படும் சில கணிப்புகள் தற்போது மீண்டும் சமூக வலைத்தளங்களிலும் ஊடகங்களிலும் பேசுபொருளாகியுள்ளன.</p><p>
</p><p></p><p>பாபா வங்கா என அறியப்படும் வங்கேலியா குஷ்டெரோவா, சிறுவயதில் ஏற்பட்ட விபத்தொன்றில் பார்வையை இழந்ததாகவும், அதன் பின்னர் எதிர்கால நிகழ்வுகளை முன்கூட்டியே அறியும் ஆற்றல் அவருக்கு கிடைத்ததாக அவரது ஆதரவாளர்கள் நம்பியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.</p><p>

தனது கணிப்புகளை நேரடியாகவும் தெளிவாகவும் கூறாமல், உருவகங்கள் மற்றும் மறைமுகமான வார்த்தைகள் மூலம் வெளிப்படுத்தியதாகக் கூறப்படும் பாபா வங்கா, தனது 30ஆவது வயதுக்குள் பெரும் புகழைப் பெற்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><h3>

2026ஆம் ஆண்டுக்கானதாகக் கூறப்படும் 3 கணிப்புகள்
</h3><p>
பாபா வங்காவின் பெயரில் தற்போது வெளியாகி வரும் தகவல்களின் அடிப்படையில், 2026ஆம் ஆண்டுக்குள் மூன்று முக்கியமான சம்பவங்கள் நடைபெறலாம் எனக் கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dabadadb-204b-4797-bc56-48b626a8ea27/26-6a779ca184743.webp' /></p><p>

அவற்றில் முதலாவது, பூமிக்கு மிகப்பெரிய விண்கலம் ஒன்று வருகை தரும் என்ற கணிப்பாகும்.
</p><p>
இரண்டாவது, மூன்றாம் உலகப் போர் தொடங்கும் எனக் கூறப்படும் கணிப்பு.

மூன்றாவது, ரஷ்யாவின் அரசியல் தலைமையில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்படும் என்ற கணிப்பு.
</p><p>
இந்த மூன்று சம்பவங்களும் 2026ஆம் ஆண்டுக்குள் நடைபெறும் என பாபா வங்கா கணித்ததாக பல்வேறு இணையதளங்களிலும் சமூக வலைத்தளப் பதிவுகளிலும் தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p>
உலகளவில் ஏற்பட்ட சில முக்கிய சம்பவங்களை பாபா வங்கா முன்கூட்டியே கணித்ததாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.
</p><p>
அமெரிக்காவின் இரட்டைக் கோபுர தாக்குதல், இளவரசி டயானாவின் மரணம், 2004ஆம் ஆண்டு இந்தியப் பெருங்கடல் சுனாமி மற்றும் கொரோனா தொற்று உள்ளிட்ட பல்வேறு சம்பவங்கள் அவரது கணிப்புகளுடன் தொடர்புபடுத்தப்பட்டு வருகின்றன.
</p><p>
எனினும், இந்தக் கணிப்புகள் அனைத்தும் சம்பவங்கள் நடைபெறுவதற்கு முன்பே தெளிவாகப் பதிவு செய்யப்பட்டவை என்பதற்கான உறுதியான ஆதாரங்கள் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.</p><p>
பாபா வங்கா 1996ஆம் ஆண்டு உயிரிழந்த நிலையில், அவர் தனது எதிர்காலக் கணிப்புகளை முறையாக எழுத்துப்பூர்வமாகப் பதிவு செய்து வைத்துச் சென்றதாக உறுதியான தகவல்கள் இல்லை.</p><p>

அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் மற்றும் அவரைச் சந்தித்தவர்களிடம் அவர் கூறியதாகத் தெரிவிக்கப்படும் தகவல்களே பின்னர் தொகுக்கப்பட்டு பல்வேறு வடிவங்களில் வெளியாகி வருவதாகக் கூறப்படுகிறது.
</p><p>
இதன் காரணமாக, காலப்போக்கில் அவரது பெயரில் பல்வேறு கணிப்புகள் சேர்க்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகங்களும் எழுப்பப்பட்டுள்ளன.
</p><p>
மேலும், சில கணிப்புகள் நிறைவேறாதபோது, பாபா வங்காவின் கூற்றுகளைத் தவறாகப் புரிந்துகொண்டதாக அவரது ஆதரவாளர்கள் விளக்கம் அளிப்பதும் வழக்கமாக இருந்து வருகிறது.
</p><h3>
இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் பரபரப்பு
</h3><p>
2026ஆம் ஆண்டுக்கானதாகக் கூறப்படும் இந்த கணிப்புகள் தொடர்பில் தற்போது மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில், குறிப்பாக மூன்றாம் உலகப் போர் மற்றும் விண்கலம் தொடர்பான தகவல்கள் சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.</p><p>எவ்வாறாயினும், பாபா வங்காவின் பெயரில் வெளியாகும் இந்தக் கணிப்புகள் உறுதிப்படுத்தப்பட்ட அறிவியல் முன்னறிவிப்புகள் அல்ல என்பதுடன், அவை பெரும்பாலும் அவரது ஆதரவாளர்கள் மற்றும் பல்வேறு ஊடகங்களில் வெளியாகிய தகவல்களை அடிப்படையாகக் கொண்டவையாகும்.
</p><p>
எனவே, 2026ஆம் ஆண்டுக்குள் குறித்த சம்பவங்கள் இடம்பெறும் என்ற தகவல்களை உறுதியான செய்தியாகக் கருதாமல், சரிபார்க்கப்படாத கணிப்புகளாகவே அணுக வேண்டியது அவசியமாகும்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-08T21:16:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரஷ்ய ஆதரவு நாட்டுடன் புதிய உக்ரைன் ஆயுதப் பேச்சுவார்த்தை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/new-ukraine-arms-talks-with-russian-backed-country-1786223490"></link>
            <id>https://ibctamil.com/article/new-ukraine-arms-talks-with-russian-backed-country-1786223490</id>
            <summary type="text">உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி முதல் முறையாக செர்பியாவிற்கு அதிகாரப்பூர்வ அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ளார். அவரை வரவேற்ற செர்பிய ஜனாதிபதி அலெ...</summary>
            <content type="html"><![CDATA[<p>உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி முதல் முறையாக செர்பியாவிற்கு அதிகாரப்பூர்வ அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ளார். </p><p>அவரை வரவேற்ற செர்பிய ஜனாதிபதி அலெக்சாண்டர் வுசிச், ஐரோப்பிய ஒன்றியத்தின் நன்மதிப்பைப் பெற விரும்பும் நிலையில், ரஷ்யாவுடன் நட்புறவைப் பேணி வரும் செர்பியாவிடமிருந்து ஜெலென்ஸ்கி மேலும் ஆயுத உதவிகளைக் கோரியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கியும், செர்பிய ஜனாதிபதி அலெக்சாண்டர் வுசிச்சும் கடந்த காலங்களில் பலமுறை சந்தித்துள்ளனர்.</p><p></p><h2>ரஷ்யா தொடர்ந்து போர்&nbsp;</h2><p> </p><p>பெரும்பாலும் பலதரப்பு மாநாடுகளின் இடையே இந்தச் சந்திப்புகள் இடம்பெற்றுள்ளன. மிக அண்மையில், ஜூலை 15ஆம் தேதி உக்ரைன் தலைநகர் கீவ்வில் இருவரும் சந்தித்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d97cc2a6-3f10-4d52-ba56-110d4e25a074/26-6a779b845dcca.webp' /></p><p>

இந்நிலையில், நேற்று ஜெலென்ஸ்கி தனது முதல் அதிகாரப்பூர்வ அரசுமுறைப் பயணமாக செர்பியாவை வந்தடைந்தார்.</p><p>உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா தொடர்ந்து போர் நடத்தி வரும் நிலையில், ஐரோப்பாவில் ரஷ்யாவுக்கு மிகவும் நெருக்கமான நாடுகளில் ஒன்றாக செர்பியா கருதப்படுகிறது.</p><p>

கடந்த 14 ஆண்டுகளாக செர்பியாவை ஆட்சி செய்து வரும் வுசிச்சைப் பொறுத்தவரை, வரவிருக்கும் முக்கிய நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக இந்தப் பயணம் ஒரு அரசியல் சமநிலைப்படுத்தும் முயற்சியாகப் பார்க்கப்படுகிறது.</p><p></p><h2>வலுவான அரசியல் சவால்</h2><p>
</p><p>மாணவர்கள் தலைமையிலான போராட்ட இயக்கம், தனக்கென ஒரு தேர்தல் பட்டியலை வெளியிடத் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம், முதல்முறையாக வுசிச்சிற்கு வலுவான அரசியல் சவாலை முன்வைப்பதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது.</p><p>
</p><p>
அதேவேளை, வுசிச் மீது ஊழல் குற்றச்சாட்டுகளும், ஊடகங்கள் மற்றும் நீதித்துறை மீது ஆதிக்கம் செலுத்துவதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.</p><p>

கருத்துக்கணிப்புகளின்படி, வுசிச்சின் தீவிர ஆதரவாளர்களில் பெரும்பான்மையானோர் ரஷ்யாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டைக் கொண்டிருப்பதுடன், செர்பியா ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதையும் எதிர்க்கின்றனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-08T21:11:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறை மோதல்களின் பின்னணியில் நிச்சயம் நான்தான்..! ஜனாதிபதியின் செய்தியை முன்கூட்டியே அறிவித்த நாமல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/prison-clash-sri-lanka-1786222067"></link>
            <id>https://tamilwin.com/article/prison-clash-sri-lanka-1786222067</id>
            <summary type="text">
சிறைச்சாலையில் இடம்பெற்ற அசம்பாவிதங்களின் பின்னணியில் நிச்சயமாக நான் தான் இருப்பேன் என்ற உறுதியான மன நிலையில் இந்த அரசாங்கம் இருக்கின்றது என பொதுஜன ...</summary>
            <content type="html"><![CDATA[<p>
சிறைச்சாலையில் இடம்பெற்ற அசம்பாவிதங்களின் பின்னணியில் நிச்சயமாக நான் தான் இருப்பேன் என்ற உறுதியான மன நிலையில் இந்த அரசாங்கம் இருக்கின்றது என பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். </p><p>

பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.</p><p> 

தொடர்ந்தும் தெரிவிக்கையில், 

தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் ஏதேனும் குற்றச் செயல்கள் ஏற்பட்டால் ஆட்சியில் இருக்கும் அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்து குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வந்தனர்.</p><h2>சிறைக் கலவரங்கள்&nbsp;</h2><p>

எனினும், தற்போது அவர்களுடைய அரசாங்கத்தில் பல துரதிஷ்ட சம்பவங்கள் நிகழும் போது அதனை தடுக்க முடியாமல் எதிர்க்கட்சிகள் மீது இந்த அரசாங்கம் பழி சுமத்தி வருகின்றது. </p><p> 

சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதல்களுக்கு யார் பொறுப்புக் கூறுவது. 11 ஆயிரம் பேரைத் தடுத்து வைக்க வேண்டிய சிறைச்சாலையில் 45ஆயிரம் பேரைத் தடுத்து வைத்திருப்பதே மிகப் பெரிய பிரச்சினையாகும்.
</p><p>
இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது முதல், இப்போது வரை சிறைச்சாலைகளில் உள்ள மலசல கூடங்களையாவது சீரமைத்திருக்கின்றதா.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0945a5bf-7902-4934-8c09-6e382ad1fb7c/26-6a7798081ccc7.webp' /></p><p>

ஆனால், பிரச்சினைகளுக்கு எதிர்க்கட்சிகள் மீதும் பழி சுமத்தி வருவதுடன், எதிர்க்கட்சிகளை நோக்கி விரல் நீட்டுவதும், ராஜபக்சர்கள் மீது குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருவதுமே இவர்களுடைய வேலையாக இருக்கின்றது. </p><p>

தற்போது சிறையில் ஏற்பட்டுள்ள மோதல்களுக்கும், எதிர்க்கட்சிகள் குறிப்பாக நாமல் ராஜபக்சதான் காரணமாக இருக்கும் என மக்களுக்கு இந்த அரசாங்கம் அறிவிக்கும்.</p><p> சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தின் பின்னணியில் நாமல் ராஜபக்சதான் உள்ளார் என இந்த அரசாங்கம் நம்பிக் கொண்டிருக்கும். இதனைத் தான் ஜனாதிபதி அநுரவும் மக்களுக்கு அறிவிப்பார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-08T20:57:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[தாய்லாந்து பாடசாலையில் துப்பாக்கிச்சூடு ; பலி எண்ணிக்கை 8 ஆக உயர்வு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/death-toll-rises-to-8-in-thailand-school-shooting-1786221706"></link>
            <id>https://canadamirror.com/article/death-toll-rises-to-8-in-thailand-school-shooting-1786221706</id>
            <summary type="text">தாய்லாந்தில் உள்ள பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.

தாய்லாந்து தலைநகர் பாங்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>தாய்லாந்தில் உள்ள பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.
</p><p>
தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து வடமேற்கே அமைந்துள்ள நொந்தபுரி மாகாணத்தில் உள்ள அரச உயர்நிலைப் பாடசாலை ஒன்றிலேயே இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b64fd4b9-9f66-4bdc-ba12-7572b77bba78/26-6a77948c79fb5.webp' /></p><p>பாடசாலையில் வழக்கம்போல் வகுப்புகள் இடம்பெற்றுக்கொண்டிருந்த நிலையில், அங்கு கல்வி பயிலும் 14 வயதான மாணவர் ஒருவர் திடீரென தன்னிடமிருந்த துப்பாக்கியைப் பயன்படுத்தி பாடசாலையில் இருந்தவர்களை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><p>

துப்பாக்கிச் சத்தம் கேட்டதும் அச்சமடைந்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ளும் நோக்கில் வகுப்பறைகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களை நோக்கி ஓடியுள்ளனர்.</p><p>இந்த சம்பவத்தில் ஆரம்பத்தில் பாடசாலை ஊழியர்கள் உள்ளிட்ட 6 பேர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
</p><p>
எனினும், துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த 12 வயது சிறுமி ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததைத் தொடர்ந்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.</p><p>

உயிரிழந்தவர்களில் பாடசாலையில் இருந்த 5 பேர், துப்பாக்கிச்சூடு நடத்தியதாகக் கூறப்படும் மாணவரின் தாத்தா மற்றும் பாட்டி ஆகியோருடன், துப்பாக்கிச்சூடு நடத்திய 14 வயது மாணவரும் அடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
உயிரிழந்த அனைவரும் தலை மற்றும் மார்பு உள்ளிட்ட முக்கிய உடல் பாகங்களில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் மேலும் 14 பேர் காயமடைந்த நிலையில் மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e138ff75-272a-4d71-bc9b-de5502d09351/26-6a77948bc0df7.webp' /></p><p>அவர்களில் 7 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><p>

சம்பவத்தைத் தொடர்ந்து பாடசாலை வளாகத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p><p>இந்நிலையில், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு எதிர்வரும் 10ஆம் திகதி முதல் 14ஆம் திகதி வரை 5 நாட்களுக்கு குறித்த பாடசாலைக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
துப்பாக்கிச்சூட்டுக்கான காரணம் மற்றும் 14 வயது மாணவரிடம் துப்பாக்கி எவ்வாறு கிடைத்தது என்பது உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-08-08T20:41:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[H-1B திட்டத்தில் வழங்கப்பட்ட 60 நாள் அவகாசம் ரத்து: அமெரிக்கா பரிசீலனை: இந்தியர்கள் பாதிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/us-plan-to-eliminate-60-days-grace-period-in-h-1b-1786210120"></link>
            <id>https://news.lankasri.com/article/us-plan-to-eliminate-60-days-grace-period-in-h-1b-1786210120</id>
            <summary type="text">H-1B வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கான 60 நாட்கள் வேலை தேடும் அவகாசத்தை அமெரிக்க அரசு ரத்து செய்ய திட்டமிட்டு வருகிறது. H-1B வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு ...</summary>
            <content type="html"><![CDATA[<p>H-1B வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கான 60 நாட்கள் வேலை தேடும் அவகாசத்தை அமெரிக்க அரசு ரத்து செய்ய திட்டமிட்டு வருகிறது.</p><h2> H-1B வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்</h2><p>வேலையில் இருந்து நீக்கப்பட்ட H-1B வெளிநாட்டு தொழிலாளர்களும் அவரது குடும்பத்தினரும் அடுத்த வேலையை தேடிக் கொள்ள கொடுக்கப்பட்டுள்ள 60 நாட்கள் கால அவகாசத்தை ரத்து செய்வது குறித்து அமெரிக்க அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது.</p><p>அமெரிக்க அரசின் பரிசீலனையில் உள்ள இந்த முன்மொழிவு இன்னும் அதிகாரப்பூர்வமாக எப்போது சட்டமாக்கப்படும் அல்லது இதன் முழுமையான விவரங்கள் குறித்து இன்னும் தெளிவாக வெளியிடப்படவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c2c7dc41-5776-42b4-929a-85187154b5f6/26-6a776749782ee.webp' /></p><p> இந்த நடைமுறை உறுதி செய்யப்பட்டால், அங்கீகரிக்கப்பட்ட காலம் முடிவதற்கும் வேலை இழந்தவர்கள் உடனடியாக அமெரிக்காவை விட்டு வெளியேற வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.</p><p></p><h2> இந்திய வம்சாவளியினருக்கு மிகப்பெரிய பாதிப்பு</h2><p>அமெரிக்காவின் H-1B திறமை வாய்ந்த தொழிலாளர் திட்டத்தில் இந்த மாற்றம் இறுதி செய்யப்பட்டால் அமெரிக்காவில் பணிபுரியும் பல இந்தியர்கள் பாதிக்கப்படக்கூடும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e4604610-290f-4357-bf3e-1cb9bb1c0ef8/26-6a77674a2f9b6.webp' /></p><p> அமெரிக்க குடியுரிமை மற்றும் புலம்பெயர்வு சேவைகளின்(USCIS) சமீபத்திய தரவுகள் படி, கிட்டத்தட்ட 71% அங்கீகரிக்கப்பட்ட H-1B திட்டங்கள் இந்தியர்களுக்கே கடந்த 2024ம் நிதியண்டில் வழங்கப்பட்டுள்ளது.</p><p> சமீபத்திய அமெரிக்க மக்கள் தொகை கணக்கெடுப்பு தரவுகள் படி, அமெரிக்க மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 52 லட்சத்திற்கும் அதிகமான இந்திய வம்சாவளியினர் அமெரிக்காவில் வசித்து வருவது குறிப்பிடத்தக்கது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-08T20:40:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[மத்திய கிழக்கில் மாறும் களம்! ஈரான் போரால் ஆட்டம் காணும் ட்ரம்ப்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/trump-is-shaken-by-the-iran-war-1786220521"></link>
            <id>https://ibctamil.com/article/trump-is-shaken-by-the-iran-war-1786220521</id>
            <summary type="text">கடந்த ஒரு வாரமாக மத்திய கிழக்கில் நிலவி வரும் அரசியல் போக்குகள், சர்வதேச பொருளாதாரத்தை கடலோர அலையில் தரித்து நிற்கும் படகு போன்ற நிலையற்ற சூழலுக்குள் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கடந்த ஒரு வாரமாக மத்திய கிழக்கில் நிலவி வரும் அரசியல் போக்குகள், சர்வதேச பொருளாதாரத்தை கடலோர அலையில் தரித்து நிற்கும் படகு போன்ற நிலையற்ற சூழலுக்குள் தள்ளியுள்ளன.
</p><p>
குறிப்பாக, அமெரிக்கா மேற்கொள்ளும் ஒவ்வொரு யுத்தத் திட்டமும் சர்வதேச அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தும் என்பதை வரலாற்றில் நாம் பார்த்துள்ளோம்.
</p><p>
ஒரு யுத்தத்தின் உளவியல் தாக்கத்தில் தொடங்கி, ஏற்பட்ட இழப்புகளை மறைத்து, அமெரிக்கப் படைகள் வெற்றி பெற்றுவிட்டதாக ஒரு மாயையை உருவாக்கும் காய் நகர்த்தலில் அமெரிக்க ஊடகங்களும் அதனுடன் இணைந்து கைகோர்ப்பதை நாம் அவதானித்துள்ளோம்.
</p><p>
ஆனால், இன்றோ ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் யுத்தத்தில், ஈரானிய ஊடகங்களை விட அமெரிக்க ஊடகங்களே ட்ரம்பின் நிலையை மேலும் கீழ்நோக்கித் தள்ளியுள்ளன எனலாம்.
</p><p>
வழமைக்கு மாறாக, ட்ரம்புக்கு எதிரான உளவியல் யுத்தத்தை முன்னெடுத்து வரும் அமெரிக்க ஊடகங்களின் திட்டங்கள் என்ன?

அத்துடன், ஈரானை மையப்படுத்தி ட்ரம்ப் அடுத்து என்ன செய்யப் போகிறார்? மத்திய கிழக்கின் தற்போதைய அரசியல் சூழல் எந்தத் திசையில் நகர்கிறது?

இந்தக் கேள்விகளுக்கான எதிர்வுகூறல்களையும், தற்போதைய நிலைமையின் பின்னணியையும் விரிவாக ஆராய்கிறது ஐ.பி.சி தமிழின் “உண்மையின் தரிசனம்” நிகழ்ச்சி...</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/tMSf6adhW-4" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-08T20:22:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[தெற்கு சூடான் - மியான்மர் பிரஜைகளை நாடு கடத்துவதற்கு அமெரிக்க நீதிமன்றங்கள் நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/us-court-extradite-south-sudanese-1786210439"></link>
            <id>https://tamilwin.com/article/us-court-extradite-south-sudanese-1786210439</id>
            <summary type="text">தெற்கு சூடான் மற்றும் மியான்மர் பிரஜைகளுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக பாதுகாப்பு அந்தஸ்தை இரத்து செய்ய ட்ரம்ப் நிர்வாகத்திற்கு இரு கூட்டாட்சி நீதிமன...</summary>
            <content type="html"><![CDATA[<p>தெற்கு சூடான் மற்றும் மியான்மர் பிரஜைகளுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக பாதுகாப்பு அந்தஸ்தை இரத்து செய்ய ட்ரம்ப் நிர்வாகத்திற்கு இரு கூட்டாட்சி நீதிமன்றங்கள் அனுமதி வழங்கியுள்ளன. </p><p>
அமெரிக்காவில் தற்காலிகமாக வசிக்கும் வெளிநாட்டினரின் பாதுகாப்பு அந்தஸ்தை நீட்டிக்கக் கோரி குடியேற்றவாசிகளின் உரிமை அமைப்புகள் தாக்கல் செய்த மனுக்களை போஸ்டன் மற்றும் சிகாகோ நீதிமன்றங்கள் தள்ளுபடி செய்துள்ளன.</p><p></p><h2>நீதிமன்ற அனுமதி&nbsp;</h2><p>
உள்நாட்டுப் போர், இயற்கை அனர்த்தங்கள் மற்றும் அரசியல் கொந்தளிப்பு நிலவும்
நாடுகளைச் சேர்ந்த பிரஜைகள் நாடு கடத்தப்படுவதிலிருந்து தப்பிப்பதற்கும்,
அமெரிக்காவில் தங்கி பணியாற்றுவதற்கும் இந்தத் தற்காலிக பாதுகாப்பு அந்தஸ்து
வழங்கப்பட்டு வந்தது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/96ceb4a6-3db7-4041-bf39-26bde340095c/26-6a776cf953d4e.webp' /></p><p>இந்நிலையிலேயே, உச்ச நீதிமன்றத்தின் முந்தைய தீர்ப்பை சுட்டிக்காட்டி
நீதிமன்றங்கள் இந்த புதிய முடிவை அறிவித்துள்ளன.</p><p>

நீதிமன்றங்களின் இந்தத் தீர்ப்பின் காரணமாக தெற்கு சூடானைச் சேர்ந்த சுமார்
232 பிரஜைகளும், மியான்மரைச் சேர்ந்த சுமார் 4,000 பிரஜைகளும் தங்களது சொந்த
நாடுகளுக்கு நாடு கடத்தப்படும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளதாகக்
குறிப்பிடப்படுகின்றது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-08T20:16:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க வேண்டுமா? அமெரிக்கா இதனை மாற்ற கொள்ள வேண்டும்: ஈரான் திட்டவட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/strait-of-hormuz-iran-demanding-to-us-1786220051"></link>
            <id>https://news.lankasri.com/article/strait-of-hormuz-iran-demanding-to-us-1786220051</id>
            <summary type="text">அமெரிக்கா தன்னுடைய கொள்கையை மாற்றினால் மட்டுமே ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பது சாத்தியம் என ஈரான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பத...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்கா தன்னுடைய கொள்கையை மாற்றினால் மட்டுமே ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பது சாத்தியம் என ஈரான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.</p><h2> ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பது எப்போது?</h2><p>உலக பொருளாதாரத்திற்கு மிக முக்கியமான ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பது குறித்து ஈரான் தன்னுடைய நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளது.</p><p> அதில், அமெரிக்காவும், அதன் கூட்டணி நாடுகளும் ஈரான் மீதான அதன் இராஜதந்திர நிலைப்பாட்டையும் ராணுவ நிலைப்பாட்டையும் மாற்றிக் கொள்ளாத வரை ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டு தான் இருக்கும் என்று ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்பு பேரவை அறிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/333b383f-5c05-4aad-b3cc-33443370b92b/26-6a778e14cf4c4.webp' /></p><p> ஹார்முஸ் வழித்தடத்தை மீண்டும் தடையின்றி இயக்க அமெரிக்கா நிபந்தனையின்றி நிறைவேற்ற வேண்டிய நிபந்தனைகளை பேரவையின் செயலாளர் மொஹம்மது பாகர் சோல்கத்ர் சனிக்கிழமையன்று விளக்கினார்.</p><h2> ஈரானின் கோரிக்கைகள்</h2><p>அதில், ஈரான் மற்றும் அதன் தலைவர்களுக்கு எதிராக அமெரிக்கா விடுக்கும் எச்சரிக்கைகள் மற்றும் அவதூறு பேச்சுக்கள் நிறுத்தப்பட வேண்டும்.</p><p> ஈரானின் நட்பு நாடுகளான லெபனான், யேமன், ஈராக் மற்றும் பாலஸ்தீனம் மீதான ராணுவ நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.</p><p> கடற்படை முற்றுகையை நீக்க வேண்டும், மேலும் வெளிநாடுகளில் உள்ள ஈரானின் சொத்துக்களை விடுவிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-08T20:14:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kowshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ட்ரம்ப் எடுத்த விபரீத முடிவு! ஜெயிக்கப்போவது யார்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/trump-s-bizarre-decision-who-will-win-1786214251"></link>
            <id>https://tamilwin.com/article/trump-s-bizarre-decision-who-will-win-1786214251</id>
            <summary type="text">ஹோர்மூஸ் நீரினையை மீண்டும் திறப்பதற்கான பேச்சுவார்த்தைகளில் ஓமானும் ஈரானும் மட்டுமே பேசிக்கொண்டிருக்கின்றன. எனினும்,&amp;nbsp; அமெரிக்கா அதனை ஓரமாக நின்று...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹோர்மூஸ் நீரினையை மீண்டும் திறப்பதற்கான பேச்சுவார்த்தைகளில் ஓமானும் ஈரானும் மட்டுமே பேசிக்கொண்டிருக்கின்றன. எனினும்,&nbsp; அமெரிக்கா அதனை ஓரமாக நின்று வேடிக்கைதான் பார்த்துக்கொண்டிருக்கிறது.
</p><p>

செங்கடல் மற்றும் ஈடன் வளைகுடா போன்ற இடங்களில் ஈரான் மற்றும் ஹவுதிகளின் அச்சுறுத்தலை சமாளிப்பதற்காக சவுதி அரேபியாவினால் உருவாக்கப்பட்ட 14 நாடுகள் கொண்ட அணியிலும் அமெரிக்கா இல்லை.</p><p>

அந்தப் பகுதிகளில் ஏற்படுத்தப்படுகின்ற அச்சுறுத்தலை சமாளிப்பதற்காக சவுதி அரேபியாவும் துருக்கியும் பாகிஸ்தானும் இணைந்து அமெரிக்கா இல்லாத ஒரு இராணுவ உடன்படிக்கையை ஏற்படுத்திக்கொண்டுள்ளன.
</p><p>
இதுவரை காலமும் அமெரிக்காவுடன் இணைந்து செயற்பட்டு வந்த நேட்டோ, ஈரான் மீதான அமெரிக்காவின் தற்போதைய யுத்தத்தை தள்ளி நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது.
</p><p>
வளைகுடா களமுனையில் அமெரிக்கா ஏன் தனித்து நிற்கிறது? என்ன நடந்தது அமெரிக்காவிற்கு? இது தொடர்பில் உண்மையின் தரிசனம் நிகழ்ச்சியின் ஊடாக விரிவாகப் பார்ப்போம்..&nbsp;&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/tMSf6adhW-4" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-08T20:14:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[விமான இறக்கை மீது நின்றபடி 97 வயது பாட்டி கின்னஸ் சாதனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/97-year-grandmother-guinness-world-record-plane-1786220033"></link>
            <id>https://canadamirror.com/article/97-year-grandmother-guinness-world-record-plane-1786220033</id>
            <summary type="text">பிரிட்டனைச் சேர்ந்த 97 வயதான மூதாட்டி ஒருவர், நடுவானில் பறக்கும் விமானத்தின் இறக்கையில் நின்றபடி ஆபத்தான வான் சாகசத்தில் ஈடுபட்டு, புதிய கின்னஸ் உலக ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரிட்டனைச் சேர்ந்த 97 வயதான மூதாட்டி ஒருவர், நடுவானில் பறக்கும் விமானத்தின் இறக்கையில் நின்றபடி ஆபத்தான வான் சாகசத்தில் ஈடுபட்டு, புதிய கின்னஸ் உலக சாதனையைப் படைத்துள்ளார்.
</p><p>
பிரிட்டனின் செல்டன்ஹாம் பகுதியைச் சேர்ந்த பெட்டி ப்ரோமேஜ் என்ற 97 வயதான மூதாட்டியே இந்த சாதனையைப் படைத்துள்ளார்.
</p><p>
விமான சாகசங்களில் ஆர்வம் கொண்ட இவர், நடுவானில் பறக்கும் விமானத்தின் இறக்கையில் பொருத்தப்பட்டுள்ள பிரத்யேக ஆசனத்தில் பாதுகாப்பாக தன்னை இணைத்துக்கொண்டு வான் சாகசங்களை மேற்கொண்டு வருகிறார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dc256c0c-4b8a-48cb-aa2d-04c40849e0c5/26-6a778e037e267.webp' /></p><p>கடந்த சில தினங்களுக்கு முன்னர், சினாரெஸ்டர் பகுதியில் உள்ள விமான ஓடுதளத்தில் இருந்து ஏரோ-சூப்பர்பேடிக்ஸ் இருதள விமானம் ஒன்று புறப்பட்டது.</p><p>

அந்த விமானத்தின் இறக்கையில் நின்றபடி பெட்டி ப்ரோமேஜ் வான் சாகசத்தில் ஈடுபட்டார்.

விமானம் மணிக்கு சுமார் 150 மைல் வேகத்தில் வானில் வளைந்து நெளிந்து பறந்த நிலையில், ஐந்து நிமிடங்களுக்கும் மேலாக அவர் ஆபத்தான முறையில் விமானத்தின் இறக்கையில் பயணித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
இந்தச் சாகசத்தின் மூலம் ‘உலகின் மிக வயதான பெண் விமான இறக்கை சாகச வீராங்கனை’ என்ற கின்னஸ் உலக சாதனையை அவர் தன்வசப்படுத்தியுள்ளார்.&nbsp;</p><p>பெட்டி ப்ரோமேஜ் இதற்கு முன்னரும் இதே போன்ற வான் சாகசத்தை மேற்கொண்டு கின்னஸ் உலக சாதனை படைத்திருந்தார்.

கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்னர், தனது 93ஆவது வயதில் விமான இறக்கையில் நின்றபடி சாகசம் செய்து, உலகின் வயதான விமான இறக்கை சாகச வீராங்கனை என்ற சாதனையை அவர் படைத்திருந்தார்.</p><p>

இந்நிலையில், தற்போது தனது 97ஆவது வயதில் மீண்டும் வானில் பறந்து, தனது சொந்த சாதனையையே அவரே முறியடித்துள்ளார்.&nbsp;பெட்டி ப்ரோமேஜுக்கு கடந்த 2025ஆம் ஆண்டு திடீரென பக்கவாதம் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதன் காரணமாக அவரது பேச்சுத்திறன் மற்றும் உடல் இயக்கம் ஓரளவு பாதிக்கப்பட்டிருந்தது. </p><p>எனினும், தீவிர சிகிச்சைக்குப் பின்னர் அவர் குணமடைந்ததாகக் கூறப்படுகிறது.

உடல்நலப் பாதிப்புகளைக் கடந்து, தனது வயதையும் பொருட்படுத்தாமல் மீண்டும் வான் சாகசத்தில் ஈடுபட்டு கின்னஸ் சாதனையைப் படைத்துள்ளார்.&nbsp;</p><p>தனது சாதனை குறித்து பெட்டி ப்ரோமேஜ் கூறுகையில், வயதாகிவிட்டதால் அமைதியாக வீட்டில் இருப்பது தனக்குப் பிடிக்காது எனத் தெரிவித்துள்ளார்.
</p><p>
தற்போது தன்னால் கார் ஓட்ட முடியவில்லை என்றும், பார்வையும் மங்கலாகியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ள அவர், தன்னால் முடிந்தவற்றைச் செய்ய விரும்புவதாக தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6ad17899-5a6b-4218-b464-b006c45851c7/26-6a778e02cb27d.webp' /></p><p>

மேலும், இன்னும் இரண்டு ஆண்டுகள் உயிருடன் இருந்தால், மீண்டும் ஒருமுறை வானில் பறக்க விரும்புவதாகவும் அவர் உற்சாகத்துடன் தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p>பெட்டி ப்ரோமேஜ் தனது 87ஆவது வயதில் முதன்முறையாக விமான இறக்கை வான் சாகசத்தில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அதன் பின்னர் இதுவரை 6 முறை விமான இறக்கையில் பயணித்து வான் சாகசங்களை மேற்கொண்டுள்ளார்.
</p><p>
இந்தச் சாகசப் பயணத்தின் மற்றொரு முக்கிய நோக்கம், தனக்கு சிகிச்சையளித்து உயிரைக் காப்பாற்றிய செல்டன்ஹாம் பொது மருத்துவமனையின் பக்கவாதப் பிரிவுக்கு நிதியுதவி திரட்டுவதாகும்.
</p><p>
தனது உடல்நலப் போராட்டத்துக்குப் பின்னரும் தன்னம்பிக்கையை இழக்காமல், மருத்துவமனைக்கு நிதி திரட்டும் நோக்கத்துடன் 97 வயதில் ஆபத்தான வான் சாகசத்தில் ஈடுபட்டு, தனது சொந்த உலக சாதனையையே முறியடித்த பெட்டி ப்ரோமேஜின் முயற்சி பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-08T20:14:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[திருக்கோவில் சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தில் கடல் அலையை தாண்டி ஒலித்த மாணவர்களின் கால் சலங்கை ஓசை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/grand-bharata-natyam-event-at-the-temple-1786217570"></link>
            <id>https://ibctamil.com/article/grand-bharata-natyam-event-at-the-temple-1786217570</id>
            <summary type="text">வரலாற்றுச் சிறப்புமிக்க அம்பாறை திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தின் வருடாந்த ஆடி அமாவாசை உற்சவத்தின் 14 ஆம் நாளான&amp;nbsp; திருவிழா இன்று (...</summary>
            <content type="html"><![CDATA[<p>வரலாற்றுச் சிறப்புமிக்க அம்பாறை திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தின் வருடாந்த ஆடி அமாவாசை உற்சவத்தின் 14 ஆம் நாளான&nbsp; திருவிழா இன்று (08) சனிக்கிழமை மிகச் சிறப்பாகவும் கோலாகலமாகவும் நடைபெற்றது.

​</p><p>இத்திருவிழாவைச் சிறப்பிக்கும் ஆயிரம் மாணவர்கள் பங்கேற்ற பிரம்மாண்ட பரதநாட்டிய நிகழ்வு ஆலயத்தின் வெளிவீதி முன்றலில் நடைபெற்றது.</p><p>இன்று மாலை 4.30 மணியளவில் திருக்கோவில் வலயக் கல்வி அலுவலகத்தில் இருந்து கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது முருகன் வடிவில் மாணவர்களின் நடனம் மற்றும் மயிலாட்டம் உள்ளிட்ட பல பண்பாட்டு நிகழ்வுகளுடன் அரச உத்தியோகத்தர்கள் மற்றும் மாணவர்களின் கலாசார ஊர்வலம் ஆரம்பமானது.</p><p></p><h2>மாணவர்களின் கால் சலங்கை ஓசை&nbsp;</h2><p> </p><p>இவ்வூர்வலம் மணிக்கூட்டுக் கோபுரச் சந்தி வழியாக பிரதான வீதியினூடாக ஆலயத்தைச் சென்றடைந்தது.

​</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/161bbe9b-6243-492b-8dcd-2d82a32b4d29/26-6a77847012820.webp' /></p><p>ஊர்வலத்தைத் தொடர்ந்து நடைபெற்ற பரதநாட்டிய நிகழ்வில், கடல் அலைகளின் ஓசையை விடவும் மாணவர்களின் கால் சலங்கை ஓசை ஓங்கி ஒலித்து, அப்பகுதியையே தமிழ் கலாசாரப் பெருமிதத்தின் அடையாளமாக மாற்றியதை அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் உணர்வுபூர்வமாகக் கண்டுகளித்தனர்.

​</p><p>கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பின் தென்கிழக்குத் திசையில் அமைந்துள்ள பழம்பெருமை மிக்க இவ்வாலயத்தின் வருடாந்த ஆடி அமாவாசைத் திருவிழா கடந்த ஜூலை 26 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.</p><p>
​18 நாட்கள் தொடர்ச்சியாக சிறப்பு யாகங்கள், கிரியைகள் மற்றும் கொடித்தம்ப பூஜைகளுடன் நடைபெறும் இவ்வுற்சவம், எதிர்வரும் 12 ஆம் திகதி புதன்கிழமை காலை வங்கக் கடலில் இடம்பெறும் தீர்த்தோற்சவத்துடனும், மறுநாள் (13) நடைபெறும் பூங்காவனத் திருவிழா மற்றும் வைரவர் பூஜையுடனும் நிறைவுபெறவுள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-08T19:33:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொண்டைக்கடலையில் இருந்து வெளியேறிய நச்சு வாயு ; பரிதாபமாக உயிரிழந்த இரு சிறுமிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/toxic-gas-released-chickp-two-girls-tragically-die-1786214252"></link>
            <id>https://jvpnews.com/article/toxic-gas-released-chickp-two-girls-tragically-die-1786214252</id>
            <summary type="text">இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலத்தில், பூச்சி கொல்லி தெளிக்கப்பட்ட கொண்டைக்கடலையில் இருந்து வெளியேறிய நச்சு வாயுவைச் சுவாசித்த இரு சிறுமிகள் உயிரிழந்த சம...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலத்தில், பூச்சி கொல்லி தெளிக்கப்பட்ட கொண்டைக்கடலையில் இருந்து வெளியேறிய நச்சு வாயுவைச் சுவாசித்த இரு சிறுமிகள் உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.</p><p>
</p><p></p><p>விவசாயியான மல்லேஷ், அறுவடை செய்து வீட்டிற்குள் வைத்திருந்த கொண்டைக்கடலையில் பூச்சிகள் வராமல் இருப்பதற்காகப் பகல் நேரத்தில் பூச்சி கொல்லி தெளித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0ebc66cc-e921-4cd4-a5b7-f1375a0b11a8/26-6a777be6ad408.webp' /></p><p>

அன்று இரவு, வீட்டின் அறைக்குள் காற்று புக முடியாத சூழலில் குடும்பத்தினர் தூங்கிக் கொண்டிருந்தபோது, கொண்டைக்கடலையில் தெளிக்கப்பட்ட பூச்சி கொல்லியிலிருந்து நச்சு வாயு மெதுவாக வெளியேறியுள்ளது.
</p><p>
அறையிலிருந்த நச்சு வாயுவை அறியாமல் சுவாசித்தவிவசாயிகளின் மகள்கள் தூக்கத்திலேயே மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்தனர்.
</p><p>
அறுவடை செய்த தானியங்களைப் பாதுகாப்பதாக நினைத்துச் செய்த செயல், பிள்ளைகளின் உயிரை பறித்த இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-08T19:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[30 ஆண்டுகளாக எவரெஸ்டில் உறைந்த ‘கிரீன் பூட்ஸ்’ வீரரின் உடலை மீட்க தீவிர முயற்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/recover-body-green-boots-climber-everest-30-years-1786217314"></link>
            <id>https://canadamirror.com/article/recover-body-green-boots-climber-everest-30-years-1786217314</id>
            <summary type="text">எவரெஸ்ட் சிகரத்தின் உச்சிக்கு அருகில், பனியில் கடந்த 30 ஆண்டுகளாக உறைந்த நிலையில் உள்ளதாக கூறப்படும்&quot;கிரீன் பூட்ஸ்&quot; என்று அறியப்படும் இந்திய மலையேறு வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>எவரெஸ்ட் சிகரத்தின் உச்சிக்கு அருகில், பனியில் கடந்த 30 ஆண்டுகளாக உறைந்த நிலையில் உள்ளதாக கூறப்படும்"கிரீன் பூட்ஸ்" என்று அறியப்படும் இந்திய மலையேறு வீரர் டோர்ஜே மோருப்பின் உடலை மீட்க இந்தியா தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது.</p><p>1996 ஆம் ஆண்டில் எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை அடைந்துவிட்டு இறங்கும் போது ஏற்பட்ட பனிப்புயலில் சிக்கி உயிரிழந்த இந்திய வீரர் டோர்ஜே மோருப்பின் பிரகாசமான பச்சை நிற மலையேற்ற பாதணிகளே பல ஆண்டுகளாக அந்தப் பாதையில் செல்பவர்களுக்கு ஒரு சோகமான அடையாளச் சின்னமாக இருந்து வந்துள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6293751d-d473-47ca-80ae-86a195d05c13/26-6a77836486dfd.webp' /></p><p>நீண்ட காலமாக இந்த பாதணி மற்றொரு வீரரான த்சேவாங் பால்ஜோருக்கு சொந்தமானது என்று கருதப்பட்டது.</p><p>இருப்பினும், 1996ஆம் ஆண்டு குறித்த சம்பவத்தில் தப்பியவர்களின் சாட்சியங்கள் மற்றும் ஆடை அமைப்புகளின் அடிப்படையில் இது மோருப்பினுடையது என்று தற்போது அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
</p><p>
இந்த நிலையில் எவரெஸ்ட் சிகரத்தின் 8,500 மீட்டர் உயரத்தில், ஒக்ஸிஜன் பற்றாக்குறை மற்றும் -40 டிகிரி குளிர் நிலவும் "இறப்பு மண்டலத்தில்" இந்த மீட்புப் பணி நடைபெறவுள்ளது.
</p><p>
திபெத் (சீனா) பகுதியில் இந்த உடல் புதையுண்டுள்ளமையால், உலங்கு வானூர்திகள் மூலம் எளிதில் மீட்கும் வசதிகள் அங்கே இல்லை.
</p><p>
இதன் காரணமாக, பனியில் உறைந்து கடினமான நிலையில் இருக்கும் உடலைச் சுமந்து இறங்குவதற்கு 10 முதல் 12 திறமையான மலையேறுபவர்கள் தேவைப்படுவார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/de52c666-0e48-4ffd-85ad-941de78b22d4/26-6a778363d22a1.webp' /></p><p>

இந்த மீட்புப் பணிக்கு 40,000 முதல் 80,000 டொலர்கள் வரை செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
</p><p>
இந்த நிலையில், மரபணு பரிசோதனை மூலம் உறுதிப்படுத்தப்பட்ட பிறகு, உடலை லடாக் பகுதிக்கு கொண்டுவந்து லே நகரில் உள்ள தியாகிகள் பூங்கா அருகில் இறுதிச் சடங்குகளை நடத்த குடும்பத்தினர் திட்டமிட்டுள்ளனர்.
</p><p>
அத்துடன் அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க "கிரீன் பூட்ஸ்" பாதணிகளை தங்கள் குடும்ப நினைவாகப் பாதுகாக்கப் போவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-08-08T19:28:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கெலனிகம பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/heavy-traffic-kelaniya-area-southern-expressway-1786216094"></link>
            <id>https://jvpnews.com/article/heavy-traffic-kelaniya-area-southern-expressway-1786216094</id>
            <summary type="text">தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கெலனிகம பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.
குறித்த பகுதியில...</summary>
            <content type="html"><![CDATA[<p>தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கெலனிகம பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.</p><p>
</p><p></p><p>குறித்த பகுதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் பராமரிப்புப் பணிகள் காரணமாக ஒரு வழியில் (Lane) மட்டுமே வாகனங்கள் பயணிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6091aafd-8258-4ce8-a034-1ddb0989c355/26-6a777ea074154.webp' /></p><p>
இந்தநிலையில், குறித்த வழியில் வாகனமொன்று இயந்திரக் கோளாறுக்கு உள்ளானமையினாலும் இந்த நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-08T19:08:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவுக்கு உரத்த குரலில் ஈரான் வழங்கிய செய்தி! இதுவே ஹோர்முஸ் திறப்புக்கான நிபந்தனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/loud-message-from-iran-to-america-1786213973"></link>
            <id>https://ibctamil.com/article/loud-message-from-iran-to-america-1786213973</id>
            <summary type="text">ஹோர்முஸ் நீரிணையை ஈரான் மீண்டும் திறப்பதற்கு முன்பு, அமெரிக்கா நிறைவேற்ற வேண்டிய கோரிக்கைகள் அடங்கிய பட்டியலை ஈரானின் தேசிய பாதுகாப்பு செயலாளர் முகமது...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹோர்முஸ் நீரிணையை ஈரான் மீண்டும் திறப்பதற்கு முன்பு, அமெரிக்கா நிறைவேற்ற வேண்டிய கோரிக்கைகள் அடங்கிய பட்டியலை ஈரானின் தேசிய பாதுகாப்பு செயலாளர் முகமது பாகர் சுல்காதர் வெளியிட்டுள்ளார்.
</p><p>
அமெரிக்க கடற்படை முற்றுகையை நீக்குதல், இராணுவப் படைகளைத் திரும்பப் பெறுதல் மற்றும் போரை நிரந்தரமாக முடிவுக்குக் கொண்டுவருதல் போன்ற நடவடிக்கைகள் அந்தப் பட்டியலில் அடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>

மோதலால் ஏற்பட்ட சேதங்களுக்கு ஈரானுக்கு அமெரிக்கா இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், முடக்கப்பட்ட ஈரானிய சொத்துக்களை விடுவிக்க வேண்டும் என்றும் அவர் மேலும் கோரிக்கை விடுத்துள்ளார்.</p><p></p><h2>ஈரானிய மக்கள் உரக்கப் பிரகடனகம்</h2><p>

இதன்படி "களத்திலும் வீதிகளிலும் 160 நாட்கள் உறுதியாகப் போராடி, ஈரானிய மக்கள் உரக்கப் பிரகடனப்படுத்திய கோரிக்கைகள் இவை," என்று அவர் கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aef44b78-c4b4-43ad-960e-432e9aad2466/26-6a7777488dc94.webp' /></p><p>
</p><p>
அமெரிக்கா தனது நடத்தையைத் திருத்திக்கொள்ளும் வரை, ஹோர்முஸ் ஜலசந்தி மீண்டும் திறக்கப்படாது," எனவும் அவரது அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-08T18:52:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[எல்லைமீறிய கூட்டம்.. ஹிப் ஹாப் ஆதி நிகழ்ச்சி ரத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/hiphop-tamizha-meesaya-murukku-2-event-cancelled-1786213801"></link>
            <id>https://cineulagam.com/article/hiphop-tamizha-meesaya-murukku-2-event-cancelled-1786213801</id>
            <summary type="text">இசையமைப்பாளராக இருந்து நடிகரானவர் ஹிப்ஹாப் ஆதி. அவர் தற்போது ஹீரோ ஆக படங்களில் நடித்து வருகிறார். அவரது படங்களுக்கு அவரே இசையமைப்பதால் பாடல்களும் ஹிட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இசையமைப்பாளராக இருந்து நடிகரானவர் ஹிப்ஹாப் ஆதி. அவர் தற்போது ஹீரோ ஆக படங்களில் நடித்து வருகிறார். அவரது படங்களுக்கு அவரே இசையமைப்பதால் பாடல்களும் ஹிட் ஆகின்றன.</p><p>அவர் தற்போது மீசைய முறுக்கு 2 படத்தில் நடித்திருக்கும் நிலையில், அது விரைவில் ரிலீஸ் ஆக இருக்கிறது. அதன் ப்ரோமோஷனுக்காக சென்னை பீனிக்ஸ் மார்க்கெட் சிட்டியில் ஒரு நிகழ்ச்சி இன்று நடைபெற இருந்தது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c52410fb-61c1-4c44-aaee-30dbadd5ccb6/26-6a7775aaecb3c.webp' /></p><h2>நிகழ்ச்சி ரத்து </h2><p>
ஹிப் ஹாப் ஆதி ரசிகர்கள் அதிகம் பேர் மால் உள்ளே கூடியதால் கூட்டம் கட்டுக்கடங்காமல் சென்று விட்டது.</p><p>

அதனால் போலீசார் நிகழ்ச்சியை ரத்து செய்யும்படி கூறிய நிலையில், படகுழு நிகழ்ச்சியை ரத்து செய்து இருக்கிறார்கள். அதனால் ரசிகர்களை ஏமாற்றம் அடைந்திருக்கின்றனர்.</p><p>"உங்களுடைய பாதுகாப்பு கருதியும், காவல் துறையின் அறிவுறுத்தலின் படியும் என்னால் மேடை ஏற முடியவில்லை. உங்கள் கட்டுக்கடங்காத அன்பு ஒரு புறம் மகிழ்ச்சி தந்தாலும், உங்களோடு #meesayamurukku2 வை இன்று கொண்டாட முடியவில்லை என்பதில் மிகுந்த வருத்தம்" என ஆதி பதிவிட்டுள்ளார்.</p><p><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/reel/Dbx9D-Ck3Ig/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/reel/Dbx9D-Ck3Ig/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/reel/Dbx9D-Ck3Ig/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by Hiphop Tamizha (@hiphoptamizha)</a></p></div></blockquote> <script async src="//www.instagram.com/embed.js"></script></p><p><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr">Today’s <a href="https://x.com/hashtag/MeesayaMurukku2?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#MeesayaMurukku2</a> Celebration event with <a href="https://x.com/hashtag/HiphopTamizha?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#HiphopTamizha</a> at Phoenix Market City, Chennai had to be called off this afternoon. Huge Crowd showed up &amp; went beyond what the venue could safely handle, so police stepped in and asked to call of the Event. <a href="https://t.co/FfAdtmpcLp">pic.twitter.com/FfAdtmpcLp</a></p>&mdash; Viral Cinema (@Viral_Cinema) <a href="https://x.com/Viral_Cinema/status/2086127295937552578?ref_src=twsrc%5Etfw">August 8, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p>]]></content>
            <updated>2026-08-08T18:30:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் டெங்கு பாதிப்பு அதிகரிப்பு ; 89,000-ஐ கடந்த நோயாளர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/dengue-increase-sri-lanka-patients-exceed-89-000-1786213641"></link>
            <id>https://jvpnews.com/article/dengue-increase-sri-lanka-patients-exceed-89-000-1786213641</id>
            <summary type="text">இலங்கையில் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் சுமார் 89,033 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் சுமார் 89,033 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.</p><p></p><p>

இதன்படி ஆகஸ்ட் மாதத்தின் முதல் 07 நாட்களில் மாத்திரம் 3,686 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/32065a2c-4a51-46a5-811e-338a9af58c93/26-6a77750b86760.webp' /></p><p>கடந்த ஜூலை மாதத்தில் 29,973 நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், இதுவே இந்த ஆண்டில் ஒரே மாதத்தில் பதிவான அதிகளவிலான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையாகும்.
</p><p>
அதேவேளை, இந்த ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டு 64 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-08T18:27:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவின் புதிய சட்டமா அதிபர் நியமனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/new-us-attorney-general-appointed-1786209416"></link>
            <id>https://tamilwin.com/article/new-us-attorney-general-appointed-1786209416</id>
            <summary type="text">அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் முன்னாள் தனிப்பட்ட சட்டத்தரணியான டாட்
பிளான்ச், நாட்டின் புதிய சட்டமா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அமெரிக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் முன்னாள் தனிப்பட்ட சட்டத்தரணியான டாட்
பிளான்ச், நாட்டின் புதிய சட்டமா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.
</p><p>
அமெரிக்க செனட் சபையில் இடம்பெற்ற கடும் விவாதங்களுக்கு மத்தியில், இன்று(08.08.2026) அதிகாலை இடம்பெற்ற வாக்கெடுப்பில் 50க்கு 49 என்ற குறுகிய வாக்குகள்
வித்தியாசத்தில் இவரது நியமனத்திற்கு செனட் சபை ஒப்புதல் அளித்துள்ளது.</p><p></p><h2>புதிய சட்டமா அதிபர் நியமனம்</h2><p>
</p><p>
முன்னாள் சட்டமா அதிபர் பாம் பாண்டி கடந்த ஏப்ரல் மாதம் பதவியிலிருந்து
நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, டொட் பிளான்ச் இடைக்காலச் சட்டமா அதிபராகப்
பணியாற்றி வந்துள்ளார்.</p><p>

தற்போது செனட் சபையின் ஒப்புதல் கிடைத்துள்ள நிலையில், அவர் அமெரிக்க நீதித்
திணைக்களத்தின் நிரந்தரத் தலைவராகப் பதவியேற்கவுள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3f82b80b-03ff-4ed0-90fe-211baac54d11/26-6a77680c7b53f.webp' /></p><p>நீதித் திணைக்களம் வெள்ளை மாளிகையின் அரசியல் அழுத்தங்களின்றி சுயாதீனமாக
இயங்க வேண்டும் என்ற வரலாற்று ரீதியான வழக்கத்தை மீறி, ஜனாதிபதி ட்ரம்பிற்கு
மிகவும் நெருக்கமான ஒருவரை இந்தப் பதவியில் அமர்த்துவது குறித்து இரு
கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்களும் கவலை வெளியிட்டிருந்தனர்.
</p><p>
ஜெப்ரி எப்ஸ்டீன் தொடர்பான ஆவணங்களை வெளியிட்டமை மற்றும் ஜனாதிபதி டொனால்ட்
ட்ரம்பிற்கான வரி விலக்கு ஒப்பந்தங்கள் உள்ளிட்ட சில சர்ச்சைக்குரிய
விவகாரங்கள் தொடர்பில் ஆளும் குடியரசுக் கட்சி உறுப்பினர்கள் மத்தியிலேயே
அதிருப்தி நிலவியது.
</p><p>
இருப்பினும், எழுத்துப்பூர்வமான சில உடன்பாடுகளின் பின்னர் குடியரசுக் கட்சி
செனட்டர்களின் ஆதரவுடன் இந்த நியமனம் உறுதி செய்யப்பட்டுள்ளமை
குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-08T18:19:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜப்பானைத் தாக்கியது டொல்பின் புயல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/typhoon-dolphin-hits-japan-1786212355"></link>
            <id>https://ibctamil.com/article/typhoon-dolphin-hits-japan-1786212355</id>
            <summary type="text">மேற்கு பசிபிக் பெருங்கடலின் திறந்த கடற்பகுதியில் உருவான டொல்பின் புயல், தற்போது தென்மேற்கு ஜப்பானில் உள்ள ஒகினாவா மாகாணத்தைத் தாக்கியுள்ளது.

வகை 1 ...</summary>
            <content type="html"><![CDATA[<p>மேற்கு பசிபிக் பெருங்கடலின் திறந்த கடற்பகுதியில் உருவான டொல்பின் புயல், தற்போது தென்மேற்கு ஜப்பானில் உள்ள ஒகினாவா மாகாணத்தைத் தாக்கியுள்ளது.
</p><p>
வகை 1 புயலாகக் கருதப்படும் டொல்பின், மணிக்கு 198 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசியதாக வெளிநாட்டு ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><h2>இலட்சக்கணக்கில் மக்கள் வெளியேற்றம்</h2><p>

கோஷிமா மற்றும் ஒகினாவா மாகாணங்களில் வசிக்கும் சுமார் 260,000 மக்களை வெளியேறுமாறு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aad0f64a-1574-434b-b888-2b84e68c7059/26-6a77727e8349f.webp' /></p><p>இதன் விளைவாக 500-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.</p><h2>அடுத்த இலக்கு சீனா</h2><p>

அடுத்த சில நாட்களில் இந்தப் புயல் சீனாவின் கிழக்குக் கடற்கரையை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/96fc254a-0af5-4909-ac86-b87893b42071/26-6a77727f7e934.webp' /></p><p>
</p><p>
இதன் விளைவாக, ஷாங்காய், ஜெஜியாங் மற்றும் புஜியான் ஆகிய பகுதிகளுக்கும் கனமழை மற்றும் வெள்ள அபாய எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடக தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-08T18:16:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[கட்டுக்கடங்காத சனக்கூட்டம்: இடைநிறுத்தப்பட்டது றீச்ஷாவின் உணவுத்திருவிழா!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/reecha-s-food-festival-has-been-suspended-1786207824"></link>
            <id>https://ibctamil.com/article/reecha-s-food-festival-has-been-suspended-1786207824</id>
            <summary type="text">தமிழர்களின் தொன்மைமிக்க உணவு மரபை உலகறியச் செய்யும் நோக்குடன், கிளிநொச்சி இயக்கச்சியில் அமைந்துள்ள றீச்ஷா (Reecha) வளாகத்தில் மிகப்பிரமாண்டமாக ஏற்பாடு...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழர்களின் தொன்மைமிக்க உணவு மரபை உலகறியச் செய்யும் நோக்குடன், கிளிநொச்சி இயக்கச்சியில் அமைந்துள்ள றீச்ஷா (Reecha) வளாகத்தில் மிகப்பிரமாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ‘அட்சய பாத்திரம் உணவுத் திருவிழா’ இடைநிறுத்தப்பட்டுள்ளது.&nbsp;</p><p>பிரமாண்டமானமுறையில் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்த உணவுத் திருவிழா இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும், நாளையும், நாளை மறுதினமும் நடைபெற இருந்த நிகழ்வுகளும் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாகவும் றீச்ஷா நிர்வாகம் அறிவித்துள்ளது.</p><p>

"உணவே மருந்து – மருந்தே உணவு" என்ற ஆரோக்கிய தத்துவத்தின்படி, 100க்கும் மேற்பட்ட பாரம்பரிய உணவு வகைகளுடன் இந்த மாபெரும் திருவிழா அண்மையில் கோலாகலமாகத் தொடங்கியது.</p><h2>ஒரே நேரத்தில் திரண்ட மக்கள் </h2><p> </p><p>

வடக்கு-கிழக்கின் பாரம்பரிய சுவைகளான ஒடியல் கூழ், பிட்டு, பனங்காய் பணியாரம், நண்டுப் பிரட்டல் போன்ற உணவுகளைச் சுவைப்பதற்காக இலங்கை வாழ் மக்கள் மட்டுமன்றி, கனடா, லண்டன், ஜேர்மனி, சுவிஸ், பிரான்ஸ் மற்றும் அவுஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து பெருமளவிலான புலம்பெயர் தமிழ் உறவுகளும் திரண்டிருந்தனர்.</p><p><iframe width="463" height="823" src="https://www.youtube.com/embed/EGcV0Fr2rf8" title="கட்டுக்கடங்காத சனக்கூட்டம்: இடைநிறுத்தப்பட்டது றீச்ஷாவின் உணவுத்திருவிழா!" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share" referrerpolicy="strict-origin-when-cross-origin" allowfullscreen></iframe></p><p>
</p><p>
சர்வதேச மற்றும் உள்நாட்டு சமையல் வல்லுநர்களின் நேரடி சமையல் விளக்கங்கள், பனை-தென்னை சார்ந்த தனி அரங்கு, கலை நிகழ்ச்சிகள் எனப் பல சிறப்பம்சங்களுடன், Qick Food, IBC தமிழ் மற்றும் LANKASRI நிறுவனங்களின் அனுசரணையுடன் இந்நிகழ்வு வெற்றிகரமாக ஆரம்பமாகியது.
</p><p>
இந்நிலையில், விழா வளாகத்தில் எதிர்பாராத வகையில் கட்டுக்கடங்காத அளவுக்குப் பெருமளவிலான மக்கள் ஒரே நேரத்தில் திரண்டதால் கடுமையான சன நெரிசல் ஏற்பட்டது. </p><p>

இதனால் பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு, உணவுத் திருவிழா இன்று இடைநடுவே நிறுத்தப்படுவதாக றீச்ஷா நிர்வாகம் அதிரடியாக அறிவித்துள்ளது.
</p><p>
அத்துடன், நாளையும் (ஞாயிற்றுக்கிழமை) அதற்கு அடுத்த நாளும் (திங்கட்கிழமை) நடைபெறவிருந்த எஞ்சிய அனைத்து நிகழ்வுகளும் முற்றாக இரத்துச் செய்யப்பட்டுள்ளன.
</p><h2>
பணம் திருப்பி வழங்கப்படும்
</h2><p>
நாளை மற்றும் திங்கட்கிழமை நிகழ்வுகளுக்காக ஏற்கனவே நுழைவுச்சீட்டுக்களை முன்பதிவு (Booking) செய்திருந்த பொதுமக்களுக்கு, அவர்கள் செலுத்திய பணம் அனைத்தும் வங்கிக் கணக்குகள் (Banks) ஊடாக முறையாகத் திருப்பி வழங்கப்படும் என்றும் றீச்ஷா நிர்வாகம் மேலும் தெரிவித்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-08T18:10:39+00:00</updated>
        </entry>
    </feed>
