<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-09-18T00:26:20+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுவீடன் நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சி வெற்றி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/opposition-wins-swedish-parliamentary-election-1789691010"></link>
            <id>https://canadamirror.com/article/opposition-wins-swedish-parliamentary-election-1789691010</id>
            <summary type="text">சுவீடனில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஆளும் கூட்டணி தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, பிரதமர் உல்ப் கிறிஸ்டர்சன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>சுவீடனில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஆளும் கூட்டணி தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, பிரதமர் உல்ப் கிறிஸ்டர்சன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.</p><p>

சுவீடன் நாடாளுமன்றமான ரிக்ஸ்டாகில் உள்ள 349 இடங்களுக்கான தேர்தல் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.</p><p> வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்த நிலையில், முன்னாள் பிரதமர் மக்டலினா ஆண்டர்சன் தலைமையிலான எதிர்க்கட்சி கூட்டணி 176 இடங்களை கைப்பற்றியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6df895aa-59ea-4f5a-838f-454dfa367763/26-6aac848469c25.webp' /></p><p> </p><p>பிரதமர் உல்ப் கிறிஸ்டர்சனின் கூட்டணிக்கு 173 இடங்கள் கிடைத்துள்ளன. இதன் மூலம் எதிர்க்கட்சி கூட்டணி மூன்று இடங்கள் வித்தியாசத்தில் பெரும்பான்மையைப் பெற்றுள்ளது.
</p><p>
இரு தரப்பினருக்கும் இடையிலான போட்டி மிகவும் நெருக்கமாக இருந்த நிலையில், இறுதி எண்ணிக்கையில் சுமார் 50,359 வாக்குகள் மட்டுமே வித்தியாசமாக இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
தேர்தல் முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து பிரதமர் கிறிஸ்டர்சன் தனது ராஜினாமாவை அறிவித்ததுடன், நாடாளுமன்ற சபாநாயகரிடம் தனது பதவியில் இருந்து விலகுவதற்கான கடிதத்தையும் சமர்ப்பித்துள்ளார்.
</p><p>
புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகளை நாடாளுமன்ற சபாநாயகர் முன்னெடுக்க உள்ளார். அதன்படி, கட்சித் தலைவர்களுடன் ஆலோசனைகள் நடத்தப்பட்டு, புதிய பிரதமரைத் தேர்ந்தெடுக்கும் நடவடிக்கை இடம்பெறவுள்ளது.</p><p>

எனினும், தேர்தலில் எதிர்க்கட்சி கூட்டணி பெரும்பான்மை பெற்றிருந்தாலும், அதில் இடம்பெறும் கட்சிகளுக்கு இடையிலான கொள்கை வேறுபாடுகள் காரணமாக புதிய அரசாங்கத்தை அமைப்பதில் பேச்சுவார்த்தைகள் சவாலாக அமையக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

முன்னாள் பிரதமர் மக்டலினா ஆண்டர்சன் தலைமையிலான சமூக ஜனநாயகக் கட்சி தனிப்பட்ட கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது. புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கான முயற்சிகளை ஆண்டர்சன் முன்னெடுக்க உள்ளார்.
</p><p>
இதனிடையே, புதிய பிரதமர் தொடர்பான நாடாளுமன்ற வாக்கெடுப்பு செப்டெம்பர் 29ஆம் திகதிக்கு முன்னதாக நடைபெற வாய்ப்பில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p> அதுவரை தற்போதைய அமைச்சரவை புதிய அரசாங்கம் பதவியேற்கும் வரை தொடர்ந்தும் பணியாற்றும்.</p>]]></content>
            <updated>2026-09-18T00:25:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[தென்னாப்பிரிக்காவில் தொடரும் கொடூரம் ; நிர்வாண நிலையில் அடுத்தடுத்து 9 பெண்களின் சடலங்கள் மீட்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/bodies-of-9-women-recovered-in-a-naked-state-1789677130"></link>
            <id>https://canadamirror.com/article/bodies-of-9-women-recovered-in-a-naked-state-1789677130</id>
            <summary type="text">தென்னாப்பிரிக்காவின் வணிகத் தலைநகரான ஜோஹன்னஸ்பர்க் புறநகர்ப் பகுதியில், கடந்த இரண்டு மாதங்களில் எட்டு பெண்களின் உடலங்கள் மீட்கப்பட்டமையை தொடர்ந்து, கொ...</summary>
            <content type="html"><![CDATA[<p>தென்னாப்பிரிக்காவின் வணிகத் தலைநகரான ஜோஹன்னஸ்பர்க் புறநகர்ப் பகுதியில், கடந்த இரண்டு மாதங்களில் எட்டு பெண்களின் உடலங்கள் மீட்கப்பட்டமையை தொடர்ந்து, கொலை செய்யப்பட்ட மேலும் ஒரு பெண்ணின் உடலத்தை காவல்துறை மீட்டுள்ளது.</p><p>

நேற்று (17) எகூர்ஹுலேனி (Ekurhuleni) நகராட்சிக்குட்பட்ட கெம்ப்டன் பார்க் (Kempton Park) பகுதியில் ஒன்பதாவது பெண்ணின் உடலம் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து காவல்துறையால் அந்தப்பகுதி முடக்கப்பட்டுள்ளது (lockdown).</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e5b621b8-9541-44ca-b96c-0d7c1abdd0d1/26-6aac4e4c6d983.webp' /></p><p>குறித்தப் பகுதியில் இதுபோன்ற நிர்வாணக் கோலத்திலான மூன்று உடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
</p><p>
இந்தத் தொடர் கொலைகள், இவை ஒரு தொடர் கொலையாளியால் (serial killer) நடத்தப்பட்டிருக்கலாமோ என்ற பொதுமக்களின் பீதியை அதிகரித்துள்ளன.
</p><p>
முதல் எட்டு படுகொலைகளில் சில ஒற்றுமைகள் "மிகவும் கவலை அளிக்கும் வகையில்" இருப்பதாக காவல்துறை முன்னதாக எச்சரித்திருந்தது.
</p><p>
இந்தநிலையில், "பல சந்தேக நபர்கள் அல்லது தனித்தனி குற்றவாளிகள் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் உட்பட அனைத்து கோணங்களிலும் விசாரணையாளர்கள் விசாரித்து வருகின்றனர் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
</p><p>
இதுவரை கண்டெடுக்கப்பட்ட உடலங்கள் அனைத்தும் 20 மற்றும் 30 வயதுக்குட்பட்ட பெண்களுடையவை ஆகும்.

அனைத்து உடல்களும் நிர்வாணமாகவோ அல்லது அரைநிர்வாணமாகவோ கண்டெடுக்கப்பட்டுள்ளன. </p><p>சில உடல்களில் ஒரே மாதிரியான காயங்களும் காணப்படுகின்றன.

முதல் உடல் கடந்த ஜூலை 17 அன்று நிர்வாணமாக கண்டெடுக்கப்பட்டது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e88cc9cd-e29b-4c22-b088-6b720bdc861f/26-6aac4e4d2416a.webp' /></p><p>தென்னாப்பிரிக்காவில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் உச்சத்தில் உள்ளதை இந்தக் கொலைகள் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளன.</p><p>

ஐக்கிய நாடுகள் சபையின் கூற்றுப்படி, உலகில் அதிக பெண் படுகொலை (femicide) விகிதங்களைக் கொண்ட நாடுகளில் தென்னாப்பிரிக்காவும் ஒன்றாக கருதப்படுகிறது.

இதன்படி 2026, ஜனவரி மற்றும் மார்ச் மாதங்களுக்கு இடையில் தென்னாப்பிரிக்க காவல்துறை 9,782 வன்புணர்வு வழக்குகளைப் பதிவு செய்துள்ளது.
</p><p>
கடந்த ஆண்டு நவம்பரில், பாலின அடிப்படையிலான வன்முறை மற்றும் பெண்படுகொலைகளை தென்னாப்பிரிக்காவின் தேசிய பேரிடர் முகாமைத்துவ மையம் தேசிய பேரிடராக அறிவித்தது.
</p><p>
இந்தநிலையில் தற்போதைய தொடர் கொலைக் குற்றவாளிகளைக் கைது செய்ய உதவும் தகவல்களுக்கு 400,000 தென்னாப்பிரிக்க ராண்ட் ($25,000) சன்மானம் வழங்கப்படும் என அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
</p><p>
அத்துடன் குறித்த பிரதேச பெண்கள் தனியாக வெளியே செல்ல வேண்டாம் என்றும் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-09-18T00:13:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[திருமண ஆசைவார்த்தை கூறி மாணவியை கர்ப்பமாக்கிய 27 வயது இளைஞர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/man-impregnates-female-student-promising-marriage-1789676406"></link>
            <id>https://jvpnews.com/article/man-impregnates-female-student-promising-marriage-1789676406</id>
            <summary type="text">இந்தியா திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே, 12ஆம் வகுப்பு படித்து வரும் 17 வயது மாணவியை கர்ப்பமாக்கியதாக 27 வயது இளைஞர் ஒருவரை பொலிஸார் கைது செய்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியா திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே, 12ஆம் வகுப்பு படித்து வரும் 17 வயது மாணவியை கர்ப்பமாக்கியதாக 27 வயது இளைஞர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.</p><p>
</p><p></p><h3>மேலதிக விசாரணைகள்</h3><p>பொலிஸ் விசாரணையின்படி, குறித்த இளைஞர் மாணவியை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி அவருடன் நெருக்கமாக பழகியதாகவும், பின்னர் பலமுறை பாலியல் உறவில் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bd58ccaa-99a2-4fba-a837-0ffa76ea7f91/26-6aac4b78acec6.webp' /></p><p>இதன் காரணமாக மாணவி கர்ப்பமடைந்த நிலையில், திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். </p><p>அங்கு அவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.

இதையடுத்து, சம்பவம் தொடர்பாக மாணவியின் பெற்றோர் பொலிஸில் முறைப்பாடு அளித்துள்ளனர்.</p><p>

முறைப்பாட்டின் அடிப்படையில் நிலக்கோட்டை அனைத்து மகளிர் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்ததுடன், சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக குறித்த இளைஞருக்கு எதிராக போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
</p><p>
தொடர்ந்து, குறித்த 27 வயது இளைஞரை பொலிஸார் கைது செய்து விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர்.
</p><p>
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-18T00:12:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[சனி-சூரியன் உருவாக்கிய சமசப்தம யோகம் ; கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sani-suriyan-yogam-kavanama-iruka-vendiya-rasi-1789682286"></link>
            <id>https://jvpnews.com/article/sani-suriyan-yogam-kavanama-iruka-vendiya-rasi-1789682286</id>
            <summary type="text">ஜோதிடத்தில் கிரகங்களின் தலைவனாக கருதப்படுபவர் சூரியன். அதே சமயம் நீதிமான் என்று அழைக்கப்படுபவர் சனி பகவான். இவ்விரு கிரகங்களும் எதிரிகளாக கருதப்பட்டால...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜோதிடத்தில் கிரகங்களின் தலைவனாக கருதப்படுபவர் சூரியன். அதே சமயம் நீதிமான் என்று அழைக்கப்படுபவர் சனி பகவான். இவ்விரு கிரகங்களும் எதிரிகளாக கருதப்பட்டாலும், ஜோதிட நம்பிக்கையின்படி, சூரியனுக்கும் சனிக்கும் தந்தை-மகன் உறவு உள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3baf6350-2c5b-4b22-8497-b5c01aeea356/26-6aac627029a7f.webp' /></p><p>அந்த வகையில் சூரியன் செப்டம்பர் 17 ஆம் திகதி சிம்ம ராசியில் இருந்து கன்னி ராசிக்குள் நுழைகிறார். இந்நிலையில் சனி பகவான் மீன ராசியில் பயணித்து வருகிறார். இதனால் கன்னி ராசிக்கு சூரியன் செல்வதால், சூரியனுக்கும், சனிக்கும் இடையே சமசப்தம யோகம் உருவாகிறது.&nbsp;இப்போது சூரியன் மற்றும் சனியால் உருவாகும் சமசப்தம யோகத்தால் எந்த ராசிக்காரர்கள் அடுத்த 30 நாட்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதைக் காண்போம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bb13eabc-8ea8-4c5c-8373-72a186182322/26-6aac626f74877.webp' />&nbsp;</p><h4>மேஷம்
</h4><p>மேஷ ராசியின் 6 ஆவது வீட்டில் சூரியனும், 12 ஆவது வீட்டில் சனி பகவானும் இருந்து சமசப்தம யோகத்தை உருவாக்கியுள்ளனர். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு பணியிடத்தில் வேலைப்பளு அதிகரிக்கும். உடன் வேலை செய்வோருடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். இதன் மூலம் வேலை பாதிக்கப்படும். கூட்டு தொழில் செய்பவர்கள் பண பரிவர்த்தனைகளை செய்யும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை தலைவலி அல்லது செரிமான பிரச்சனைகளால் சிரமப்படக்கூடும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/de65057e-e05a-49e7-8d2e-8fa1a955145e/26-6aac62718d69c.webp' /></p><h4>துலாம்
</h4><p>துலாம் ராசியின் 12 ஆவது வீட்டில் சூரியனும், 6 ஆவது வீட்டில் சனி பகவானும் இருந்து சமசப்தம யோகத்தை உருவாக்கியுள்ளனர். இதனால் இந்த ராசிக்காரர்களின் கடின உழைப்புக்கான பலன் கிடைக்காமல் ஏமாற்றமடையலாம். இப்படிப்பட்ட சூழ்நிலையில் அவசரப்படுவதைத் தவிர்த்து, பொறுமையாக இருக்க வேண்டும். ஆரோக்கிய விஷயத்தில் அலட்சியமாக இருக்காதீர்கள். இல்லாவிட்டால் எதிர்பாராத அளவில் மருத்துவ செலவை சந்திக்க நேரிடும். பேசும் போது நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். யோசிக்காமல் கண்டபடி பேசினால், உங்களின் நற்பெயர் தான் பாதிக்கப்படும். பண விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2b4ffa4b-a6ac-4cd6-82af-15ec5fc5bbca/26-6aac6270d33a7.webp' /></p><h4>மீனம்
</h4><p>மீன ராசியின் முதல் வீட்டில் சனி பகவானும், 7 ஆவது வீட்டில் சூரியனும் இருந்து சமசப்தம யோகத்தை உருவாக்கியுள்ளனர். இதனால் இந்த ராசிக்காரர்களின் திருமண வாழ்க்கை பதற்றம் நிறைந்ததாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடன் பேசும் போது பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டும். தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்க வேண்டும். முக்கியமாக இக்காலத்தில் எந்த ஒரு நிதி முடிவுகளையும் எடுப்பதைத் தவிர்ப்பது நல்லது. பணியிடத்தில் உங்களின் செயல்பாடுகள் உயர் அதிகாரிகளால் கவனிக்கப்படும். எனவே வேலைகளை கவனமாக செய்ய வேண்டும். அலட்சியம் பெரிய இழப்பை ஏற்படுத்தும். சிலர் மன அழுத்தத்தை உணரலாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/109b8445-04d8-49d4-822c-ea0949a12303/26-6aac6272417de.webp' /></p>]]></content>
            <updated>2026-09-18T00:12:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழ் மொழியில் சிறப்புப் பட்டம் பெற்று நெகிழ வைத்த சீன மாணவி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/chinese-student-who-moved-hearts-by-learning-tamil-1789690337"></link>
            <id>https://jvpnews.com/article/chinese-student-who-moved-hearts-by-learning-tamil-1789690337</id>
            <summary type="text">சீனாவில் மின்சூ பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழியைப் பயின்று சிறப்புப் பட்டம் பெற்றுள்ள சீன மாணவி செஞ்சியா யூ தமிழ் நூல்களை சீன மொழியில் மொழிபெயர்ப்புச் ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>சீனாவில் மின்சூ பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழியைப் பயின்று சிறப்புப் பட்டம் பெற்றுள்ள சீன மாணவி செஞ்சியா யூ தமிழ் நூல்களை சீன மொழியில் மொழிபெயர்ப்புச் செய்யும் பணியில் ஈடுபடப்போவதாக தெரிவித்துள்ளார்.

சூரியன் செய்திப் பிரிவிற்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.</p><p>
</p><p></p><p>சீன மின்சூ பல்கலைக்கழகத்தில் (Minzu University of China) தமிழ் மொழியைக் கற்றுத் தற்போது சிறப்புப் பட்டம் பெற்றுள்ள அவர், தமிழ் ஒரு பழமையான மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க மொழி என்பதால் அதனைக் கற்க ஆர்வம் கொண்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bdb1433a-e607-4732-81ea-8f86f3f5f142/26-6aac81e3477d8.webp' /></p><p>இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்:

"எங்களது பல்கலைக்கழகத்தில் இந்தியா மற்றும் இலங்கையைச் சேர்ந்த சிறந்த பேராசிரியர்கள் எமக்குத் தமிழ் மொழியைக் கற்பித்தனர்.</p><p>

அகத்தியர் முதல் தொல்காப்பியர் போன்ற சான்றோர்களால் வளர்த்தெடுக்கப்பட்ட இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தமிழ் மொழியை நான் கற்றுக்கொண்டதையிட்டுப் பெருமிதம் அடைகின்றேன்.</p><p>

தமிழ் மொழியிலுள்ள முக்கிய நூல்களை, எதிர்காலத்தில் சீன மொழியில் மொழிபெயர்த்துச் சீனாவில் வெளியிடுவதே எனது முதன்மை எதிர்பார்ப்பாகும்."

தனது செவ்வியின் நிறைவில் , "வாழ்க தமிழ், வளர்க தமிழ்" எனக்கூறித் தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டார்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-18T00:12:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாகிஸ்தான் மருத்துவமனை 14 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம்: அறிக்கையில் திடுக்கிடும் தகவல்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/incident-where-14-children-died-pakistani-hospital-1789682833"></link>
            <id>https://tamilwin.com/article/incident-where-14-children-died-pakistani-hospital-1789682833</id>
            <summary type="text">பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் உள்ள மருத்துவமனையில் கடந்த ஆகஸ்ட் மாதம் ,
பிறந்த 14 குழந்தைகள் பலியான தீ விபத்து குறித்து நடத்தப்பட்ட அதிகாரப்பூர்வ
விச...</summary>
            <content type="html"><![CDATA[<p>பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் உள்ள மருத்துவமனையில் கடந்த ஆகஸ்ட் மாதம் ,
பிறந்த 14 குழந்தைகள் பலியான தீ விபத்து குறித்து நடத்தப்பட்ட அதிகாரப்பூர்வ
விசாரணையில், தீவிர சிகிச்சை பிரிவில் தீ எச்சரிக்கை அலாரங்களோ அல்லது
தானியங்கி நீர் தெளிப்பான்களோ இல்லை என்பது தெரியவந்துள்ளது.
</p><p>
மேலும், மீட்புப் பணிகளின் போது அவசரகால வெளியேற்ற கதவுகள் பூட்டப்பட்டோ
அல்லது தடுக்கப்பட்டோ இருந்ததாகவும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
</p><h2>மின்சாரக் கசிவு காரணமாக</h2><p>
பாகிஸ்தான் மருத்துவ விஞ்ஞான நிறுவகத்தில் (PIMS) கடந்த ஆகஸ்ட் 26 ஆம் திகதி
ஏற்பட்ட இந்த தீ விபத்து குறித்து ஓய்வுபெற்ற சிரேஷ்ட அரச அதிகாரி தலைமையிலான
குழு விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7811e558-138d-4ad0-acbe-eaea136611fe/26-6aac8010e1ef0.webp' /></p><p>அதில், மின்சாரக் கசிவு காரணமாகத் தொடங்கிய ஒரு சிறு தீப்பொறி மிகப்பெரிய
பேரழிவாக மாறியதற்கு மருத்துவமனை நிர்வாகத்தின் முறையான மற்றும் நிறுவன
ரீதியான தோல்வியே காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
குளிரூட்டல் பிரிவின் மின்சார கேபிள் அதிக வெப்பமடைந்ததால் ஏற்பட்ட மின்சாரக்
கசிவே தீ விபத்துக்கு மிக முக்கியக் காரணம் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.4</p><p> கட்டடத்தில் புகை கண்டறியும் கருவிகள், தீ எச்சரிக்கை அலாரங்கள் அல்லது நீர்
தீயணைப்பு அமைப்புகள் செயல்படவில்லை.</p><h2>அலட்சியத்திற்குப் பொறுப்பான எட்டு அதிகாரிகள்</h2><p>தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த ஊழியர்களுக்கு, பிறந்த குழந்தைகளைப்
பாதுகாப்பாக வெளியேற்றுவது குறித்தோ, அவசரகாலத்தில் ஒட்சிசன் விநியோகத்தை
எவ்வாறு துண்டிப்பது என்பது குறித்தோ எவ்வித பயிற்சியும் வழங்கப்படவில்லை.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3ae99c1e-fe83-4652-afd0-f7e4775938d3/26-6aac801198d5c.webp' /></p><p>
குழந்தைகள் கடத்தப்படுவதைத் தடுக்கவே கதவுகள் பூட்டப்பட்டதாக மருத்துவமனை
நிர்வாகம் நியாயம் கற்பித்தாலும், அவசரகால வழிகளை அடைப்பது ஏற்றுக்கொள்ள
முடியாதது என அறிக்கை கண்டித்துள்ளது.</p><p>

மேலும், தீ விபத்து தொடங்கி சுமார் 20 நிமிடங்களுக்குப் பிறகே அவசர உதவி
எண்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதமே அதே மருத்துவமனையின் தாதியர் விடுதியில் தீ விபத்து ஏற்பட்டு
எச்சரிக்கப்பட்டும், நிர்வாகம் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கத்
தவறிவிட்டது.
</p><p>
இதையடுத்து, இந்த அலட்சியத்திற்குப் பொறுப்பான எட்டு அதிகாரிகளைப் பணிநீக்கம்
செய்து பாகிஸ்தான் பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கைகளைத் தொடங்கவும், அரச மற்றும்
தனியார் கட்டடங்களில் தீ பாதுகாப்பு கணக்காய்வு நடத்தவும்
உத்தரவிடப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-18T00:04:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[மகிந்தவின் துறைமுகத்தால் வீழ்ந்த இலங்கை - சிக்கலில் அநுர..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-lanka-s-economic-crisis-1789653452"></link>
            <id>https://tamilwin.com/article/sri-lanka-s-economic-crisis-1789653452</id>
            <summary type="text">இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு அம்பாந்தோட்டை துறைமுகம் போன்ற முன்னுரிமையற்ற பாரிய திட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட முதலீடுகளும் ஒரு காரணமாக அமைந்ததாக ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு அம்பாந்தோட்டை துறைமுகம் போன்ற முன்னுரிமையற்ற பாரிய திட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட முதலீடுகளும் ஒரு காரணமாக அமைந்ததாக பேராசிரியர் கோ. அமிர்தலிங்கம் தெரிவித்துள்ளார்.</p><p>

லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
</p><p>

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்,
</p><p>
கொழும்பு துறைமுகம் மற்றும் கட்டுநாயக்க விமான நிலையம் போன்ற ஏற்கனவே இருந்த முக்கிய உட்கட்டமைப்புகள் முழுமையான திறனை எட்டுவதற்கு முன்னதாகவே அம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் மத்தள விமான நிலையம் போன்ற பாரிய திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டதாக தெரிவித்தார்.</p><p>

அத்தகைய திட்டங்களுக்காக வர்த்தகக் கடன்களைப் பெற்றுக்கொண்டு முதலீடு செய்தமை நாட்டின் கடன் சுமையை மேலும் அதிகரித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
</p><p>
அம்பாந்தோட்டை துறைமுகம் எதிர்பார்த்த அளவில் வருமானத்தை ஈட்டாத நிலையில், அதனை 99 வருட குத்தகைக்கு வழங்கியமை தொடர்பிலும் அவர் கேள்வி எழுப்பினார்.</p><p>

ஒரு திட்டத்தை அமைப்பதற்காக கடன் பெற்று, பின்னர் அந்தக் கடனை திருப்பிச் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டால், அந்தச் சொத்தையே குத்தகைக்கு வழங்க வேண்டிய சூழல் உருவாகும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
</p><p>
குறிப்பாக, ஊழலை கட்டுப்படுத்துவதுடன் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தும் நிர்வாகக் கட்டமைப்பு உருவாக்கப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
</p><p>
தற்போதைய அரசாங்கம் ஊழலுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன், நீண்டகால பொருளாதாரக் கொள்கைகளை தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார்.
</p><p>
இந்த விடயங்கள் தொடர்பில் அலசி ஆராய்கின்றது ஊடறுப்பு நிகழ்ச்சி...</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/vV22r-uibKE" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-17T23:55:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[சவுதியின் எப்-15 ரக போர் விமானத்தை சுட்டுவீழ்த்திய ஹவுத்திகள் : காணொலியும் வெளியீடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/houthi-rebels-shot-down-a-saudi-arabian-f-15-jet-1789685931"></link>
            <id>https://ibctamil.com/article/houthi-rebels-shot-down-a-saudi-arabian-f-15-jet-1789685931</id>
            <summary type="text">ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி படையினர், சவுதி அரேபியாவின் எப்-15 ரக போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக விமானம் தீப்பற்றி...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி படையினர், சவுதி அரேபியாவின் எப்-15 ரக போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக விமானம் தீப்பற்றி எரியும் காட்சிகள் மற்றும் அதன் சிதைந்த பாகங்களை காட்டும் காணொலியையும் ஹவுதிகள் வெளியிட்டுள்ளனர்.ஏமனின் மரீப் மாகாணத்தின் வான்பரப்பில், சவுதி ஆதரவு படைகளுக்கு ஆதரவாக அந்த போர் விமானம் தாக்குதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது தாக்கப்பட்டதாக ஹவுதி அமைப்பு தெரிவித்துள்ளது. </p><p>உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட வான்-வழி ஏவுகணையை பயன்படுத்தி எப்-15 விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக கூறியுள்ளனர்.</p><h2>வெளியான காணொலி</h2><p>ஹவுதிகள் வெளியிட்டுள்ள சுமார் 4 நிமிட காணொலியில், வானில் விமானத்தை குறிவைத்து தாக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. பின்னர் இரவு நேரத்தில் தரையில் விமானத்தின் சிதைவுகள் தீப்பற்றி எரியும் காட்சிகளும், பாலைவனப் பகுதியில் கிடக்கும் கருகிய பாகங்களும் இடம்பெற்றுள்ளன.</p><p><iframe src="https://www.facebook.com/plugins/video.php?height=476&href=https%3A%2F%2Fwww.facebook.com%2Freel%2F3023283081342255%2F&show_text=false&width=267&t=0" width="267" height="476" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share" allowFullScreen="true"></iframe></p><p> விமானத்தில் சேத பகுதிகளில் சவுதி அரேபிய கொடியின் அடையாளம் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும், காணொலியில் இடம்பெறும் விமானத்தின் வகையை அதன் சேதம் காரணமாக உடனடியாக உறுதிப்படுத்த முடியவில்லை என்றும் ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.</p><p></p><h2>சவுதி உறுதிப்படுத்தவில்லை</h2><p>



ஹவுதி கிளர்ச்சியாளர்கள் போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக கூறினாலும், சவுதி அரேபியா இதுவரை அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தவில்லை. எனவே, சவுதி எப்-15 விமானம் உண்மையில் சுட்டு வீழ்த்தப்பட்டதா என்பது உறுதி செய்யப்படவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f9da49b7-1b89-4551-999e-1424e20cdf05/26-6aac7b65da6aa.webp' /></p><p>இதற்கிடையே, சவுதி தலைமையிலான கூட்டுப்படைகள் ஏமனில் ஹவுதி இலக்குகள் மீது வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருவதாகவும், ஹவுதிகள் சவுதி பகுதிகளை நோக்கி ஆளில்லா விமானங்கள் மற்றும் ஏவுகணைகளை ஏவி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.&nbsp;</p><p></p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-17T23:44:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[வங்காள விரிகுடாவில் தாழமுக்கம் ; இலங்கைக்கு கனமழை எச்சரிக்கை ; நாகமுத்து பிரதீபராஜா தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/low-pressure-area-in-the-bay-of-bengal-heavy-rain-1789675460"></link>
            <id>https://jvpnews.com/article/low-pressure-area-in-the-bay-of-bengal-heavy-rain-1789675460</id>
            <summary type="text">மத்திய வங்காள விரிகுடாவில், அந்தமான் தீவுகளுக்கு வடக்காக புதிய தாழமுக்கம் ஒன்று உருவாகியுள்ளதாக பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா அவரது முகநூல் பக்கத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>மத்திய வங்காள விரிகுடாவில், அந்தமான் தீவுகளுக்கு வடக்காக புதிய தாழமுக்கம் ஒன்று உருவாகியுள்ளதாக பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா அவரது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.</p><p></p><p>குறித்த தாழமுக்கம் வடக்கு–வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் வலுப்பெறுவதற்கான வாய்ப்புகள் காணப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
தாழமுக்கம் வலுப்பெற்று புயலாக மாறும் பட்சத்தில், பங்களாதேஷ் வழங்கியுள்ள ‘அர்னாப்’ (Arnap) என்ற பெயர் சூட்டப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h3>&nbsp;தாழமுக்கம்</h3><p> எனினும், சில சந்தர்ப்பங்களில் இது ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவே கரையைக் கடக்கக்கூடும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1809b230-a8e5-4b5a-bd68-99dd0e2400ad/26-6aac47c674979.webp' /></p><p>இந்தத் தாழமுக்கம் இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் உள்ள கஞ்சாம் மாவட்டத்தின் பிரம்மபூர் பகுதிக்கு அருகில் கரையைக் கடக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. </p><p>இதனால் இலங்கைக்கு நேரடியான புயல் தாக்கம் ஏற்படாது எனக் கூறப்பட்டாலும், அதன் மறைமுக தாக்கமாக நாட்டின் பல பகுதிகளில் மழை அதிகரிக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
குறிப்பாக, அரபிக்கடலில் இருந்து ஈரப்பதன் நிறைந்த காற்று இலங்கையின் மேற்குப் பகுதியூடாக வங்காள விரிகுடாவை நோக்கி ஈர்க்கப்படுவதற்கான வாய்ப்பு உள்ளதாகவும், இதன் காரணமாக செப்டெம்பர் 19 முதல் 23ஆம் திகதி வரை மேற்கு, தெற்கு, சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களின் பல பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் எனவும் பேராசிரியர் பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.
</p><p>
அதேவேளை, தற்போது வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களின் சில பகுதிகளில் காணப்படும் வெப்பச்சலன மழை, எதிர்வரும் 19ஆம் திகதி முதல் நாட்டின் ஏனைய பகுதிகளுக்கும் பரவக்கூடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
மேலும், செப்டெம்பர் 20 முதல் 23ஆம் திகதி வரை வடக்கு மற்றும் கிழக்கு கடற்பகுதிகள் கொந்தளிப்புடன் காணப்படக்கூடும் என்பதால், கடற்றொழிலாளர்கள் கடலுக்குச் செல்லும்போது வானிலை நிலைமைகள் தொடர்பில் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4dfc74e4-1721-4cb0-af60-38efde4c1812/26-6aac47c729878.webp' /></p><p>இதனிடையே, எல் நினோ மற்றும் இந்து சமுத்திர இருமுனை (IOD) ஆகியவற்றின் தாக்கத்தால் வங்காள விரிகுடாவில் தாழமுக்கங்கள் உருவாகுவதற்கு சாதகமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
வங்காள விரிகுடாவின் கடல் மேற்பரப்பு வெப்பநிலை அதிகரித்து வருவதால், எதிர்வரும் டிசம்பர் மாதம் வரை சுமார் 7 தாழமுக்க நிகழ்வுகள் உருவாகக்கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் பேராசிரியர் பிரதீபராஜா குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
அத்துடன், எதிர்வரும் ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் பெருமழை மற்றும் வெள்ள அனர்த்தங்களுக்கான வாய்ப்புகள் இருப்பதை பல்வேறு வானிலை மாதிரிகள் சுட்டிக்காட்டுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
</p><p>
இதனால் பொதுமக்கள் எதிர்வரும் நாட்களில் வானிலை மாற்றங்கள் குறித்து தொடர்ந்து அவதானத்துடன் இருப்பதுடன், கடற்றொழிலாளர்கள் கடல் நிலைமை தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவுறுத்தல்களைப் பின்பற்றுவது அவசியம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-17T23:26:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரஷிய எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு 100% வரி? டிரம்ப் மசோதாவால் வெடித்த புதிய பரபரப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/russian-oil-new-stir-sparked-by-trump-s-bill-1789687420"></link>
            <id>https://canadamirror.com/article/russian-oil-new-stir-sparked-by-trump-s-bill-1789687420</id>
            <summary type="text">ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் மற்றும் எரிசக்திப் பொருட்களை கொள்முதல் செய்யும் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு 100 சதவீதம் வரை கூடுதல் வரி விதிக்க அமெர...</summary>
            <content type="html"><![CDATA[<p>ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் மற்றும் எரிசக்திப் பொருட்களை கொள்முதல் செய்யும் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு 100 சதவீதம் வரை கூடுதல் வரி விதிக்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கு அதிகாரம் வழங்கும் மசோதா அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
</p><p>
இந்த மசோதா அமலுக்கு வந்தால், ரஷ்யா மீதான பொருளாதார அழுத்தம் மேலும் அதிகரிக்கும். இதனால் உக்ரைன் போருக்கான அமைதிப் பேச்சுவார்த்தைகள் பாதிக்கப்படக்கூடும் என ரஷ்யா எச்சரித்துள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1d3b9a6a-0d07-4cd9-a597-bed428fe25fb/26-6aac767ddf95b.webp' /></p><p>கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ், ரஷியா மீது கூடுதல் தடைகள் விதிப்பது அமைதிப் பேச்சுவார்த்தைகளை மேலும் கடினமாக்கும் என தெரிவித்துள்ளார்.</p><p>

இதேவேளை, அமெரிக்காவின் நடவடிக்கைக்கு சீனாவும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. </p><p>ரஷ்யாவுடனான வர்த்தகத்தில் மூன்றாம் தரப்பான அமெரிக்கா தலையிடுவதையும், பிற நாடுகளின் மீது தனது அதிகார வரம்பை விரிவுபடுத்துவதையும் ஏற்க முடியாது என சீன வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
</p><p>
இதனிடையே, குறித்த மசோதாவுக்கு டிரம்ப் இறுதி ஒப்புதல் அளிப்பாரா என்பதும், ஒப்புதல் கிடைத்தால் எந்த நாடுகளுக்கு எதிராக இந்த வரி அதிகாரம் பயன்படுத்தப்படும் என்பதும் அடுத்தகட்ட முக்கிய விடயமாகியுள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-17T23:23:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[நடுவானில் இருந்து விழுந்த F-16 ரக போர் விமானம்: உயிர் தப்பினாரா விமானி?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/f-16-fighter-jet-crashes-in-northern-michigan-1789686033"></link>
            <id>https://news.lankasri.com/article/f-16-fighter-jet-crashes-in-northern-michigan-1789686033</id>
            <summary type="text">F-16 Fighter jet Crashes in Northern michigan: வடக்கு மிச்சிகனில் F-16 ரக போர் விமானம் விபத்துக்குள்ளானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விபத்துக்குள்ளான...</summary>
            <content type="html"><![CDATA[<p>F-16 Fighter jet Crashes in Northern michigan: வடக்கு மிச்சிகனில் F-16 ரக போர் விமானம் விபத்துக்குள்ளானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><h2> விபத்துக்குள்ளான F-16 ரக போர் விமானம்</h2><p>அமெரிக்காவின் வடக்கு மிச்சிகன் மாகாணத்தில் ராணுவத்திற்கு சொந்தமான F-16 ரக போர் விமானம் ஒன்று ட்ராவர்ஸ் சிட்டி(Traverse City) அருகே வியாழக்கிழமை விபத்துக்குள்ளானது.</p><p>விமானம் தரையில் விழுந்து நெருங்குவதற்கு முன்னதாக&nbsp; F-16 ரக போர் விமானத்தின் பைலட் பத்திரமாக அதிலிருந்து வெளியேறியதாக ராணுவ அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b115839f-7139-4f93-a674-91d38be8cb1e/26-6aac711327965.webp' /></p><p> மேலும் அவர் தற்போது பாதுகாப்பான உடல் நிலையுடன் இருப்பதாகவும் உள்ளூர் அதிகாரிகள் மற்றும் தேசிய பாதுகாப்பு படையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.</p><p> விபத்துக்குள்ளான&nbsp; F-16 ரக போர் விமானம். டெக்சாஸ் தேசிய பாதுகாப்பு படையின் 149 வது பிரிவை சேர்ந்தது என்று அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ளனர்.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">F-16 crashes near Green Lake Township, Michigan. Pilot has reportedly safely ejected. <a href="https://t.co/5uVx7pHgIu">pic.twitter.com/5uVx7pHgIu</a></p>&mdash; Breaking Aviation News &amp; Videos (@aviationbrk) <a href="https://x.com/aviationbrk/status/2100663154409709984?ref_src=twsrc%5Etfw">September 17, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p> விபத்தை தொடர்ந்து ஜெபர்சன் பிளேஸ் முதல் பிளேர் டவுன்ஷிப் சாலை வரை கவுண்டி சாலை 633-ல்&nbsp; வசிக்கும் மக்கள் அடுத்த அறிவிப்பு வரும் வரை வீடுகளுக்குள்ளேயே பாதுகாப்பாக இருக்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.</p><p>&nbsp;<br></p>]]></content>
            <updated>2026-09-17T23:00:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆஸ்திரேலியாவில் குடியேற்றம் கட்டுப்படுத்த அதிரடி நடவடிக்கை ; சர்வதேச மாணவர்களுக்கு கடும் விதிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/drastic-measures-to-curb-immigration-in-australia-1789685494"></link>
            <id>https://canadamirror.com/article/drastic-measures-to-curb-immigration-in-australia-1789685494</id>
            <summary type="text">அமெரிக்காவை போலவே, ஆஸ்திரேலியாவிலும் அதிகரித்து வரும் குடியேற்றத்தை கட்டுப்படுத்த, சர்வதேச மாணவர்களுக்கு கடுமையான விதிகளை அந்நாடு அறிவித்து உள்ளது.ஆஸ்...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவை போலவே, ஆஸ்திரேலியாவிலும் அதிகரித்து வரும் குடியேற்றத்தை கட்டுப்படுத்த, சர்வதேச மாணவர்களுக்கு கடுமையான விதிகளை அந்நாடு அறிவித்து உள்ளது.</p><p>ஆஸ்திரேலியாவில் மக்கள் தொகை திடீரென அதிகரித்துள்ளதால் அங்கு வீடுகள் பற்றாக்குறை, தினசரி செலவு அதிகரிப்பு, கல்வி, சுகாதாரம் மற்றும் பொது போக்கு வரத்து போன்ற அத்தியாவசிய சேவைகள் மீது கூடுதல் அழுத்தம் ஏற்பட்டுள்ளது.
</p><p>

அங்கு, 12 மாதங்களில் மட்டும் மக்கள் தொகை 1.4 சதவீதம் உயர்ந்து, 2.79 கோடியை எட்டியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9daca9f2-cb78-4e18-b2a6-accc0f5dd19f/26-6aac6ef828556.webp' /></p><p> இதில், வெளிநாட்டில் இருந்து குடியேறியோர் மட்டும் 2.92 லட்சம்.


நாட்டில் அதிகரித்து வரும் மக்கள்தொகை மற்றும் குடியேற்றத்தை கட்டுப்படுத்தி, 2028ம் ஆண்டுக்குள் நிகர வெளிநாட்டு குடியேற்றத்தை, 2.25 லட்சமாக குறைக்க அந்நாட்டு அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.
</p><p>

அதன் காரணமாக, 'சர்வதேச மாணவர்கள் இனி தங்கள் குடும்பத்தினரை ஆஸ்திரேலியாவுக்கு அழைத்து வர அனுமதி இல்லை' என அறிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>

இதேபோன்று படிப்பை முடித்த பின், அங்கேயே தொடர்ந்து தங்குவதற்காக, அதே தரத்தில் அல்லது தரம் குறைந்த மற்றொரு பாடப்பிரிவில் சேர்க்கை பெறும், 'விசா ஹாப்பிங்' முறைக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
</p><p>

அதேசமயம் பட்டப்படிப்பை முடித்த பிறகு முதுகலை படிப்பு போன்ற உயர் தகுதிக்குச் செல்ல விரும்புவோருக்கு விசா நீட்டிப்புக்கு அனுமதி உண்டு.</p>]]></content>
            <updated>2026-09-17T22:51:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[லண்டன் - யாழ்ப்பாணம் இடையே நேரடி விமானசேவை : இங்கிலாந்து எம்.பி கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/uk-mp-direct-flights-between-london-jaffna-1789682989"></link>
            <id>https://ibctamil.com/article/uk-mp-direct-flights-between-london-jaffna-1789682989</id>
            <summary type="text">வடக்கு இலங்கையுடன் குடும்ப மற்றும் கலாச்சாரத் தொடர்புகளைக் கொண்ட பிரிட்டிஷ் தமிழர்களின் பயண இணைப்புகளை மேம்படுத்தும் பொருட்டு, லண்டன் மற்றும் யாழ்ப்பா...</summary>
            <content type="html"><![CDATA[<p>வடக்கு இலங்கையுடன் குடும்ப மற்றும் கலாச்சாரத் தொடர்புகளைக் கொண்ட பிரிட்டிஷ் தமிழர்களின் பயண இணைப்புகளை மேம்படுத்தும் பொருட்டு, லண்டன் மற்றும் யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்திற்கு இடையே நேரடி விமான சேவைகளைக் கோரி பிரிட்டிஷ் தொழிலாளர் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் காரெத் தோமஸ் ஒரு மனுவைத் தொடங்கியுள்ளார்.</p><p>&nbsp;"யாழ்ப்பாணத்திற்கு நேரடி விமான சேவைகளைக் கொண்டு வாருங்கள்" என்ற தலைப்பிலான இந்த மனு, திருமணங்கள், இறுதிச் சடங்குகள், சமய விழாக்கள் மற்றும் குடும்ப சந்திப்புகளுக்காக யாழ்ப்பாணத்திற்குப் பயணம் செய்யும் பிரிட்டிஷ் தமிழ் குடும்பங்கள் எதிர்கொள்ளும் சிரமங்களை எடுத்துக்காட்டுகிறது.</p><h2>400 கிலோமீட்டர் தூரம் பயணிக்க வேண்டிய கட்டாயம்</h2><p>
</p><p>
ஹாரோ மேற்கு தொகுதியின் பிரதிநிதியான தோமஸ், தற்போது லண்டனுக்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையே நேரடி விமான சேவைகள் எதுவும் இல்லை என்றும், இதனால் பயணிகள் கொழும்பு வழியாகப் பயணித்து, கூடுதலாக சுமார் 400 கிலோமீட்டர் தூரம் பயணிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் என்றும் கூறினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/df4cb5bb-4d97-47bd-9b28-ce601f68a772/26-6aac6ef49116a.webp' /></p><p>மனுவின்படி, கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்குச் சாலை அல்லது ரயில் வழியாகச் செல்வதற்கு சுமார் ஆறு முதல் ஏழு மணி நேரம் ஆகிறது. இது வயதான பயணிகள், சிறு குழந்தைகளுடன் வரும் குடும்பங்கள் மற்றும் முக்கிய குடும்ப நிகழ்வுகளுக்காகப் பயணம் செய்பவர்களுக்குக் குறிப்பிட்ட சிரமங்களை ஏற்படுத்துகிறது.
</p><p>
முன்மொழியப்பட்ட இந்த நேரடிச் சேவையானது, பயண நேரத்தைக் குறைக்கவும், அணுகலை மேம்படுத்தவும், இங்கிலாந்துக்கும் வடக்கு இலங்கைக்கும் இடையே குடும்ப, கலாச்சார மற்றும் சமூகத் தொடர்புகளை வலுப்படுத்தவும் நோக்கமாகக் கொண்டுள்ளது.</p><p></p><p>
</p><p>
</p><h2>வணிக ரீதியாக சாத்தியமான நேரடி விமான சேவை</h2><p>இந்த மனு, வட மாகாணத்தில் சுற்றுலா, முதலீடு மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்கான சாத்தியமான நன்மைகளையும் எடுத்துக்காட்டுகிறது.

லண்டனுக்கும் யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்திற்கும் இடையில் வணிக ரீதியாக சாத்தியமான நேரடி விமான சேவையை ஆராய்ந்து ஆதரிப்பதற்காக, ஐக்கிய ராச்சிய அரசாங்கம், இலங்கை அதிகாரிகள், விமான நிறுவனங்கள் மற்றும் லண்டன் விமான நிலையங்கள் ஒன்றிணைந்துசெயல்படுமாறு தோமஸ் அழைப்பு விடுக்கிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c4f73ef6-1913-4a17-a979-9db00c279028/26-6aac6ef547557.webp' /></p><p>
</p><p>
முன்மொழியப்பட்ட விமான இணைப்பை நிறுவுவதற்கான முயற்சிகளுக்கு ஆதரவாக, இந்த மனுவில் கையொப்பமிடுமாறு இந்தப் பிரசாரம் பொதுமக்களை அழைக்கிறது.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-17T22:51:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஐரோப்பிய ஒன்றியத்துடன் கூட்டுறவு உறுப்பினராகும் கனடா: டிரம்ப் விடுத்த கடும் எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/canada-carry-eu-associate-member-status-1789684880"></link>
            <id>https://news.lankasri.com/article/canada-carry-eu-associate-member-status-1789684880</id>
            <summary type="text">கூட்டுறவு உறுப்பினர் என்ற அந்தஸ்தை கனடாவிற்கு ஐரோப்பிய யூனியன் பரிந்துரைத்துள்ளது.கூட்டுறவு உறுப்பினராகும் கனடாகனடாவை தங்களை முதல் “கூட்டுறவு உறுப்பின...</summary>
            <content type="html"><![CDATA[<p>கூட்டுறவு உறுப்பினர் என்ற அந்தஸ்தை கனடாவிற்கு ஐரோப்பிய யூனியன் பரிந்துரைத்துள்ளது.</p><h2>கூட்டுறவு உறுப்பினராகும் கனடா</h2><p>கனடாவை தங்களை முதல் “கூட்டுறவு உறுப்பினராக” மாற்றுவதற்காக ஐரோப்பிய ஒன்றியம் முன்வைத்த பரிந்துரைக்கு கனேடிய பிரதமர் மார்க் கார்னி வரவேற்றுள்ளார்.</p><p>\ஸ்ட்ராஸ்பேர்க்கில் உள்ள ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் மார்க் கார்னி, வேகமாக மாறி வரும் புவிசார் மாற்றங்களுக்கு மத்தியில் ஐரோப்பாவும், கனடாவும் ஒன்றாக சேருவது கூடுதல் பலம் என்று தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a0bbe323-7923-4538-8bd0-909fb44913bb/26-6aac6c91ec578.webp' /></p><p> குறிப்பாக பாதுகாப்பு, எரிசக்தி பாதுகாப்பு மற்றும் அத்தியாவசிய கனிமங்கள் ஆகிய துறைகளில் கூட்டறவு என்பது கூடுதல் பலம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.</p><p> கனடாவிற்கான இந்த புதிய கூட்டுறவு உறுப்பினர் அந்தஸ்தை ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் முன்வைத்தார்.
</p><h2>
அமெரிக்கா எதிர்ப்பு</h2><p>
ஐரோப்பிய ஒன்றியத்தின் இந்த முடிவுக்கு&nbsp; அமெரிக்கா கடுமையான எதிர்ப்புகளை தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/79abcfb6-c768-4e3a-929d-9cd0c8b18321/26-6aac6c92a572d.webp' /></p><p>ஐரோப்பிய ஒன்றியத்தின் இந்த நகர்வு அமெரிக்காவிற்கு எதிரானது மற்றும் இ	தற்கு பதிலடியாக&nbsp; கடுமையான வரிவிதிப்புகளை சந்திக்க நேரிடும் என்றும் டிரம்ப் எச்சரித்துள்ளார்.</p><p> மேலும் இந்த நகர்வை நகைப்புக்குரியது என்றும் வர்ணித்து நிராகரித்துள்ளார்.</p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-17T22:41:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[100 கோடி ரூபாய் பெறுமதியான ஹெரோயின் கடத்தல் ; வர்த்தகருக்கு மரண தண்டனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/smuggling-of-heroin-worth-100-crore-death-penalty-1789684376"></link>
            <id>https://jvpnews.com/article/smuggling-of-heroin-worth-100-crore-death-penalty-1789684376</id>
            <summary type="text">சுமார் 100 கோடி ரூபாய் பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருளைக் கடத்தியமை மற்றும் வைத்திருந்தமை ஆகிய குற்றச்சாட்டுகளுக்காகக் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்ட நப...</summary>
            <content type="html"><![CDATA[<p>சுமார் 100 கோடி ரூபாய் பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருளைக் கடத்தியமை மற்றும் வைத்திருந்தமை ஆகிய குற்றச்சாட்டுகளுக்காகக் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்ட நபர் ஒருவருக்கு சிலாபம் மேல் நீதிமன்றம் இன்று (17) மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.</p><p>
</p><p></p><p>தெஹிவளை பகுதியைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவருக்கே இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8ee680f8-3b71-4d65-b378-df543833f495/26-6aac6a99e20bb.webp' /></p><p>கடந்த 2017 மே 17 ஆம் திகதி சிலாபம், ஆனவிலுந்தாவ பகுதியில் வைத்து இவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
</p><p>
சுமார் 100 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருளைக் கடத்தியமை மற்றும் வைத்திருந்தமையே இவர் மீதான குற்றச்சாட்டாகும்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-17T22:35:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பு மாலபே பகுதியில் துப்பாக்கி ரவைகள், கைவிலங்கு மீட்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/bullets-and-handcuffs-recovered-in-the-malabe-area-1789683362"></link>
            <id>https://jvpnews.com/article/bullets-and-handcuffs-recovered-in-the-malabe-area-1789683362</id>
            <summary type="text">கொழும்பு மாலபே காவல்துறை பிரிவுக்குட்பட்ட துணதஹென பகுதியில், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் மேற்கொண்ட நடவடிக்கையின்போது 145 T-56 துப்பாக்கி ரவைகள...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு மாலபே காவல்துறை பிரிவுக்குட்பட்ட துணதஹென பகுதியில், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் மேற்கொண்ட நடவடிக்கையின்போது 145 T-56 துப்பாக்கி ரவைகள் மற்றும் ஒரு ஜோடி கைவிலங்கு என்பன மீட்கப்பட்டுள்ளன.</p><p>
</p><p></p><h3>மேலதிக விசாரணை</h3><p>குறித்த பொருட்கள், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர் எனக் கூறப்படும் “பத்தரமுல்ல பன்டி” என்பவருடன் தொடர்புடையவை என சந்தேகிக்கப்படுவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9c6d094b-49b2-46e7-a77e-c0669c102215/26-6aac66a47cb54.webp' /></p><p>சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-17T22:16:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மாற்றுத்திறனாளி குழந்தையின் புகைப்படத்தை காட்டி பணம் வசூலித்த இளைஞர் கைது..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/youth-arrested-for-fraud-in-mahiyangana-1789682540"></link>
            <id>https://tamilwin.com/article/youth-arrested-for-fraud-in-mahiyangana-1789682540</id>
            <summary type="text">மாற்றுத்திறனாளி குழந்தையின் புகைப்படத்தை காட்டி, பொய்யாகப் பணம் வசூலித்த 23 வயது இளைஞர் ஒருவர் மஹியங்கனை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

சம்பவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>மாற்றுத்திறனாளி குழந்தையின் புகைப்படத்தை காட்டி, பொய்யாகப் பணம் வசூலித்த 23 வயது இளைஞர் ஒருவர் மஹியங்கனை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். </p><p>

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், </p><p>

மஹியங்கனை பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த பேருந்துகளில் ஏறி, சம்பந்தப்பட்ட குழந்தையின் புகைப்படத்தைக் காட்டிப் போலி டிக்கெட்டுகளை விற்று, சந்தேக நபர் பணம் வசூலித்து வந்ததாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. </p><p>

இதன் அடிப்படையில் குறித்த சந்தேக நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
இதன்போது, 2300 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளது.</p><h2> 

மாற்றுத்திறனாளி குழந்தையின் புகைப்படம்</h2><p>
இவ்வாறு பணத்தை வசூலிப்பதற்காக, கண்டி - திகனாவைச் சேர்ந்த ஒரு குழந்தையின் புகைப்படத்தை அவர் பயன்படுத்தியுள்ளார் என்றும் பொலிஸாரின் விசாரணையின் தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c9681936-42fc-4e08-bf5e-d08dcca15e67/26-6aac636e6f9f6.webp' /></p><p> 

மேலும், அந்த மாற்றுத்திறனாளி குழந்தை தற்போது குணமடைந்து வருவதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. 

அத்துடன், குறித்த குழந்தையின் உறவினர்கள் மஹியங்கனைக்கு வந்த பொழுது அவர்களுக்கு உதவுவதாக கூறி, உறுதியளித்து குழந்தையின் புகைப்படத்தையும் டிக்கெட்டுகளையும் பெற்றிருப்பதாகவும் சந்தேக நபர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார். </p><p>

இவ்வாறு கைது செய்யப்பட்ட 23 வயது இளைஞர் தொட்டவத்தை பகுதியை சேர்ந்தவர் என்றும், அவருக்கு எதிராக நீதிமன்றங்களால் 10 பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மஹியங்கனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp; &nbsp;&nbsp;</p><p></p><p></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-17T22:04:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[ட்ரம்பிற்கு பலத்த அடி : ஐரோப்பிய ஒன்றியத்தில் இணையவுள்ள கனடா..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/canada-to-join-the-european-union-1789672949"></link>
            <id>https://ibctamil.com/article/canada-to-join-the-european-union-1789672949</id>
            <summary type="text">கனடா வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அமெரிக்காவைச் சார்ந்திருந்த நிலையில் இருதரப்புக்கும் இடையேயான உறவுகளில் கடந்த சில காலமாக விரிசல் ஏற்பட்டுள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடா வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அமெரிக்காவைச் சார்ந்திருந்த நிலையில் இருதரப்புக்கும் இடையேயான உறவுகளில் கடந்த சில காலமாக விரிசல் ஏற்பட்டுள்ளது.
</p><p>
இந்த நிலையில் ஐரோப்பிய ஒன்றியத்தின் முதல் இணை உறுப்பினராக இணைய கனடாவுக்கு விடுக்கப்பட்ட அழைப்புக்கு அந்நாட்டு பிரதமர் மார்க் கார்னி வரவேற்பு தெரிவித்துள்ளார்.</p><h2>&nbsp;ஐரோப்பிய ஒன்றியத்தின் முதல்&nbsp;அழைப்பு</h2><p>&nbsp;ஐரோப்பிய ஒன்றியத்தின் முதல் இணை உறுப்பினராக இணைவதற்கு கனடாவுக்கு நேற்று (செப். 17) அந்த அமைப்பின் தலைவர் உருசுலா வொன் டெர் லெயன் அழைப்பு விடுத்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2d54be23-a81f-4599-8854-569d50776b56/26-6aac48396dd81.webp' /></p><p>



</p><h2>மார்க் கார்னியின் பதில்</h2><p>இந்த நிலையில், ஐரோப்பிய நாடுகளுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டு வரும் கனடா பிரதமர் மார்க் கார்னி இன்று ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் உரையாற்றினார்.அப்போது, முதல் இணை உறுப்பினராக இணையுமாறு ஐரோப்பிய ஒன்றியம் விடுத்த அழைப்பை வரவேற்றுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d2b36139-b9b9-447c-8e0d-bd5e924065dd/26-6aac483a22ad2.webp' /></p><p>
</p><p>
இதுபற்றி, அவர் பேசுகையில்,

“ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் கனடா இணைந்து பொருளாதாரம் மற்றும் புவிசார் அரசியலால் ஏற்படும் அழுத்தங்களால் இருதரப்புக்கும் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்கும் வகையில், வர்த்தகம், செய்யறிவு, விண்வெளி ஆராய்ச்சி ஆகிய துறைகளில் ஒருங்கிணைப்பை வலுப்படுத்த வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-17T22:00:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[எதிர்காலத்தில் அனுரவை பாதுகாக்கவேண்டிய நிலை நாமலுக்கு ஏற்படலாமாம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/namal-might-protect-anura-in-the-future-1789677457"></link>
            <id>https://ibctamil.com/article/namal-might-protect-anura-in-the-future-1789677457</id>
            <summary type="text">எதிர்காலத்தில் ஜனாதிபதியை காப்பாற்ற வேண்டிய நிலை நாமலுக்கு ஏற்படக்கூடும். அரசியல் நிலைமைகள் மாற்றமடையும் பட்சத்தில் இந்த நிலைமை ஏற்படலாம். நான் இன்று ...</summary>
            <content type="html"><![CDATA[<p>எதிர்காலத்தில் ஜனாதிபதியை காப்பாற்ற வேண்டிய நிலை நாமலுக்கு ஏற்படக்கூடும். அரசியல் நிலைமைகள் மாற்றமடையும் பட்சத்தில் இந்த நிலைமை ஏற்படலாம். நான் இன்று நாமல் ராஜபக்‌ஷவிடம் நலன் விசாரிப்பதற்காக வெலிக்கடை சிறைச்சாலைக்கு வந்தேன். இந்த சந்தர்ப்பத்தில் அனைவரும் சட்டத்துக்கு மதிப்பளிக்க வேண்டும் என ஜனசெத பெரமுன கட்சியின் தலைவர் பத்தரமுல்ல சீலரத்ன தேரர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.</p><p>&nbsp;வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமலை பார்வையிட இன்றைய தினம் (17) சென்று அவரை சந்தித்த பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.</p><h2>சட்டத்துக்கு நாம் அனைவரும் தலைவணங்க வேண்டும்</h2><p>சட்டத்துக்கு நாம் அனைவரும் தலைவணங்க வேண்டும். சட்டம் வலுவிழக்கச் செய்யப்பட்டுள்ள நாட்டில் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும்போது அனைவருக்கும் சமமாக நடத்தப்பட வேண்டும் என்பது அனைவரும் அறிந்த விடயமாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cf96d0b6-4779-4f5c-99ba-ce3a71f3f875/26-6aac617c58457.webp' /></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p>&nbsp;</p><p><br></p>]]></content>
            <updated>2026-09-17T21:54:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[22ஆம் திருத்தத்துக்கு எதிராக எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டறிக்கையில் கைச்சாத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/opposition-leaders-sign-22nd-amendment-1789679459"></link>
            <id>https://tamilwin.com/article/opposition-leaders-sign-22nd-amendment-1789679459</id>
            <summary type="text">அரசாங்கம் மேற்கொள்ளவுள்ள 22ஆம் அரசியலமைப்புத் திருத்தத்துக்கு எதிராக எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டறிக்கையொன்றில் கைச்சாத்திட்டுள்ளனர்.
நீதிபதிகளின் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரசாங்கம் மேற்கொள்ளவுள்ள 22ஆம் அரசியலமைப்புத் திருத்தத்துக்கு எதிராக எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டறிக்கையொன்றில் கைச்சாத்திட்டுள்ளனர்.</p><p>
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை அதிகரிக்கும் நோக்கில் அரசியலமைப்பின் முன்மொழியப்பட்ட 22ஆவது திருத்தத்திற்கு எதிராக எதிர்க்கட்சி அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புகளின் தலைவர்கள் ஆகியோர் நேற்று குறித்த கூட்டறிக்கையில் கையெழுத்திட்டுள்ளனர்.
</p><h2>ஏறக்குறைய 80 ஆண்டுகளாக</h2><p>
இது நாட்டின் ஜனநாயகக் கட்டமைப்பு, நீதித்துறையின் சுதந்திரம் மற்றும் குடிமக்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் செய்யப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cb91e738-6d77-4622-bd57-7ea00f115685/26-6aac6170e6d4e.webp' /></p><p>

தற்போதைய அரசாங்கத்தால் முன்மொழியப்பட்ட அரசியலமைப்பின் 22வது திருத்தம், நாட்டின் அரசியலமைப்பால் உத்தரவாதம் அளிக்கப்பட்ட நீதித்துறையின் சுதந்திரத்திற்கு ஒரு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது.</p><p>ஏறக்குறைய 80 ஆண்டுகளாகப் பாதுகாக்கப்பட்டு வரும் பிரதிநிதித்துவ ஜனநாயகத்தை ஒழிக்கும் அபாயத்திற்கு வழிவகுக்கும் ஒரு தெளிவான வெளியை இது உருவாக்கும் என்று தாங்கள் உறுதியாக நம்புவதாக அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
</p><p>
எனவே, அரசியலமைப்பின் முன்மொழியப்பட்ட 22வது திருத்தத்தைத் தோற்கடிக்கவும் ஜனநாயகத்தைப் பாதுகாக்கவும் ஒருமித்த குழுவாக இந்த அறிக்கையில் கையெழுத்திடுவதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
</p><p>
சட்த்தரணி சாகர கரியவசம், துமிந்த திசநாயக்க, சஞ்சீவ எதிரிமான்னே, டிலான் பெரேரா, ரவி கருணநாயக்க, முஜிபுர் ரஹுமான், அஜித் பி பெரேரா, தயாசிரி ஜெயசேகர, எம்.ஏ. சுமந்திரன், ஜி.எல். பீரிஸ், ராஜித சேனரத்ன, நிமல் சிறிபால டி சில்வா, சமன் ரத்னப்பிரிய, மைத்ரி குணரத்ன, வஜிர அபேவர்தன மற்றும் ரவி குமுதேஷ் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-17T21:54:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[லண்டனிலிருந்து புறப்பட்ட விமானத்தில் மோதல் - நடுவானில் ஏற்பட்ட பரபரப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/altercation-on-a-flight-departing-from-london-1789681399"></link>
            <id>https://tamilwin.com/article/altercation-on-a-flight-departing-from-london-1789681399</id>
            <summary type="text">லண்டனிலிருந்து பங்களாதேஷ் நோக்கிச் சென்ற “பிமான் வங்காளதேச ஏர்லைன்ஸ்” விமானத்தில் நடுவானில் பயணிகளிடையே மோதல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
...</summary>
            <content type="html"><![CDATA[<p>லண்டனிலிருந்து பங்களாதேஷ் நோக்கிச் சென்ற “பிமான் வங்காளதேச ஏர்லைன்ஸ்” விமானத்தில் நடுவானில் பயணிகளிடையே மோதல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> 

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், </p><p>


லண்டனிலிருந்து பங்களாதேஷ் நோக்கி பயணித்த பிமான் வங்காளதேச ஏர்லைன்ஸ் விமானத்தில், நடுவானில் பயணிகளிடையே மோதல் ஏற்பட்டுள்ளது.</p><h2>நடுவானில் ஏற்பட்ட பதற்றம்</h2><p> </p><p>

இதன்போது, இரண்டு ஆண் பயணிகளுக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றிய நிலையில், மோதலாக உருவெடுத்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8c3d50b4-ed44-422f-ab56-5e54714e85eb/26-6aac5fcb6bc7f.webp' /></p><p> 

அதில் ஒருவொரு பயணியொருவரின் சட்டையும் கிழிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> 


உடனே விமானப் பணிப்பெண்களும்(Cabin crew) மற்ற பயணிகளும் சேர்ந்து அந்த இருவரையும் விலக்கிச் சமாதானம் செய்துள்ளனர். </p><p>

இந்தச் சண்டை தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவதுடன், இது குறித்து விமான நிறுவன அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Another &quot;Unruly Passenger&quot; 👊 This time on a Biman Bangladesh Boeing 777 flight!🤦‍♂️ https://t.co/vnpfe0t2pz</p>&mdash; BiTANKO BiSWAS (@Bitanko_Biswas) <a href="https://x.com/Bitanko_Biswas/status/1611670993222897666?ref_src=twsrc%5Etfw">January 7, 2023</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-17T21:46:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் மோசமாக நடந்து கொண்ட கனேடிய பெண் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/canadian-women-arrested-in-sri-lanka-1789617504"></link>
            <id>https://tamilwin.com/article/canadian-women-arrested-in-sri-lanka-1789617504</id>
            <summary type="text">கொழும்பின் புறநகர் பகுதியான கல்கிஸ்ஸ பகுதியில் உள்ள ஒரு மருத்துவ ஆய்வகத்திற்கு சென்று தங்குவதற்கு இடம் கேட்ட கனேடிய பெண் ஒருவர், அங்கு மோசமாக நடந்து க...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பின் புறநகர் பகுதியான கல்கிஸ்ஸ பகுதியில் உள்ள ஒரு மருத்துவ ஆய்வகத்திற்கு சென்று தங்குவதற்கு இடம் கேட்ட கனேடிய பெண் ஒருவர், அங்கு மோசமாக நடந்து கொண்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
பயணப் பையுடன் மருத்துவ மையத்திற்கு வந்த வெளிநாட்டுப் பெண் தங்குவதற்கு இடம் கேட்டுள்ளார். </p><p>அவர் அங்கிருந்து வெளியேற மறுப்பதாகவும், அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டதும் ஊழியர்களிடம் ஆக்ரோஷமாக நடந்து கொண்டதாகவும் அவசர உதவி எண் ஊடாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. </p><h2><b>பெண்ணிடம் மேற்கொண்ட விசாரணை</b></h2><p>இந்த முறைப்பாட்டிற்கமைய, சுற்றுலாப் பிரிவுப் பொறுப்பதிகாரி மிலன் ராஜபதிரன தலைமையிலான குழுவினர் அந்த மருத்துவ ஆய்வகத்திற்கு சென்றனர். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/99912ebe-e67a-47aa-a7d4-a88ed96e73f7/26-6aac11a3a15df.webp' /></p><p>கனேடிய பெண்ணிடம் மேற்கொண்ட விசாரணையில் அவரிடம் செல்லுபடியாகும் விசா அல்லது கடவுச்சீட்டு இல்லை என்பது தெரியவந்துள்ளது. </p><p>சந்தேக நபர் பல ஆண்டுகளுக்கு முன்பு அஹங்கம பகுதியில் வசித்தவர் என்பது விசாரணையில் தெரியவந்தது. </p><p>

இந்நிலையில் கைது செய்யப்பட்ட கனேடிய பெண், நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார். இதன்போது எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது. </p><p>இந்தக் காலப்பகுதியில் அவரை வெலிசர பகுதியில் உள்ள வெளிநாட்டினருக்கான தடுப்பு முகாமிற்கு மாற்றவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.</p><p></p><p></p><p> </p>]]></content>
            <updated>2026-09-17T21:42:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாதாம், முந்திரி மட்டுமல்ல… பிஸ்தாவிலும் இத்தனை ஆரோக்கிய நன்மைகளா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/do-pistachios-offer-so-many-health-benefits-1789680389"></link>
            <id>https://jvpnews.com/article/do-pistachios-offer-so-many-health-benefits-1789680389</id>
            <summary type="text">ஆரோக்கியத்தை பராமரிக்க மக்கள் தங்கள் உணவில் பலவகையான உலர்ந்த பழங்கள், முதன்மையாக முந்திரி, பாதாம் மற்றும் பிஸ்தா ஆகியவற்றை சேர்த்துக் கொள்கிறார்கள். ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஆரோக்கியத்தை பராமரிக்க மக்கள் தங்கள் உணவில் பலவகையான உலர்ந்த பழங்கள், முதன்மையாக முந்திரி, பாதாம் மற்றும் பிஸ்தா ஆகியவற்றை சேர்த்துக் கொள்கிறார்கள். பிஸ்தா ஒரு முக்கியமான உணவாக கருதப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2a7ab99e-994d-4dbb-8f92-c30dc931fc72/26-6aac5b07aaa0e.webp' /></p><p>இது சிற்றுண்டியாக உட்கொள்ளப்படுவதுடன், பல இனிப்புகள் மற்றும் பேஸ்ட்ரிகளிலும் பயன்படுத்தப்படுகிறது. எனவே, மற்ற உலர்ந்த பழங்களை விட இது விலை அதிகம். இருப்பினும், இதிலுள்ள ஊட்டச்சத்துக்கள் எண்ணற்ற உடல்நல நன்மைகளை வழங்குகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a6be3644-dcfc-4372-b5c4-5511a0bc9a56/26-6aac5b085e354.webp' /></p><p>அவற்றில் வைட்டமின் பி6, புரதம், தாதுக்கள், நார்ச்சத்து மற்றும் நமது நோய் எதிர்ப்பு அமைப்பை வலுப்படுத்தும் ஆன்டிஆக்ஸிடன்ட் பண்புகள் நிறைந்துள்ளன.</p><p>இதில் லுடீன் மற்றும் ஸீக்ஸாந்தின் போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட் பண்புகள் உள்ளன, இவை கண்களுக்கு மிகவும் நன்மை பயக்கும்.</p><p>பிஸ்தாக்களை உட்கொள்வது தூக்கமின்மை, பசியின்மை, உடல் பருமன் மற்றும் வாத நோய்களில் இருந்து நிவாரணம் அளிக்கிறது.</p><p>மேலும், இவை இதயம் மற்றும் தோல் நோய்களுக்கும் நன்மை பயக்கும் என்று கருதப்படுகின்றன.</p><p>மற்ற உலர்ந்த பழங்களை விட பிஸ்தா நமது ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும், ஏனெனில் இது நமது உடலுக்கு ஏராளமான ஊட்டச்சத்துக்களை வழங்கும் பல கூறுகளைக் கொண்டுள்ளது. இது குறிப்பாக சிறிய குழந்தைகள் மற்றும் வயதானவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது.</p><p>பிஸ்தாக்களை உட்கொள்வதற்கு முன் தண்ணீரில் ஊறவைக்க வேண்டும். அவற்றுக்கு உடல் வெப்பம் தரும் தன்மை இருப்பதால், அவற்றை அளவோடு உட்கொள்ளுங்கள் அல்லது இனிப்புகள் மற்றும் பிற உணவுகளில் பயன்படுத்துங்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c148ce5e-5d97-4124-a144-13a92245307c/26-6aac5b0912e4c.webp' /></p>]]></content>
            <updated>2026-09-17T21:26:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் கோர விபத்து - ஆசிரியர் உட்பட இருவர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/accident-in-jaffna-1789680322"></link>
            <id>https://tamilwin.com/article/accident-in-jaffna-1789680322</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் - கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இடம்பெற்ற இருவேறு விபத்துக்களில் ஓய்வுபெற்ற ஆசிரியர் உள்ளிட்ட இருவர் உயிரிழந்துள்ளனர்.

சம...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் - கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இடம்பெற்ற இருவேறு விபத்துக்களில் ஓய்வுபெற்ற ஆசிரியர் உள்ளிட்ட இருவர் உயிரிழந்துள்ளனர்.
</p><p>
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
</p><p>
கெற்பேலி பகுதியில் மகேந்திரா ரக வாகனமும் டிஸ்கவர் ரக மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளானதில், மோட்டார் சைக்கிளை செலுத்திய ஓய்வுபெற்ற ஆசிரியர் உயிரிழந்துள்ளார்.</p><h2>இருவர் பலி</h2><p>

வரணி பகுதியில் இடம்பெற்ற மற்றுமொரு விபத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/311c4dc8-0aae-4cfc-b851-fd997c4be977/26-6aac5aee9cc59.webp' /></p><p>
</p><p>
வேகன் ஆர் காரும், துவிச்சக்கர வண்டியும் மோதி விபத்துக்குள்ளானதில், துவிச்சக்கர வண்டியில் பயணித்த முதியவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
</p><p>
இந்த சம்பவங்கள் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-17T21:26:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>H. A. Roshan</name>
            </author>
            <title type="text"><![CDATA[திருகோணமலையில் தியாக தீபம் திலீபனின் 39ஆவது நினைவேந்தல் நிகழ்வு அனுஷ்டிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/observance-of-thileepan-s-39th-commemoration-event-1789677769"></link>
            <id>https://tamilwin.com/article/observance-of-thileepan-s-39th-commemoration-event-1789677769</id>
            <summary type="text">திருகோணமலையில் தியாக தீபம் திலீபனின் 39ஆவது நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

நேற்று (17.09.2026) சிவன் கோயில் மூன்றலில் மாலை 5 மணியளவில் இந்த ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>திருகோணமலையில் தியாக தீபம் திலீபனின் 39ஆவது நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
</p><p>
நேற்று (17.09.2026) சிவன் கோயில் மூன்றலில் மாலை 5 மணியளவில் இந்த நினைவேந்தல் நிகழ்வு அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.</p><p>

இந்த நிகழ்வில் திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள் மற்றும் அகரம் மக்கள் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.</p><p>

இதன்போது, ஈகைச்சுடர் ஏற்றப்பட்டதுடன், பொதுச்சுடரும் ஏற்றிவைக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ab888768-e940-4a39-b3b1-176c7c4738bf/26-6aac511bd621b.webp' /></p><p>

இதனைத் தொடர்ந்து மலரஞ்சலி செலுத்தி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
</p><p>
தொடர்ச்சியாக ஒவ்வொரு நாளும் நினைவஞ்சலி நிகழ்வுகளை மேற்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8adf4255-8f6e-4bd7-8b9a-450f354ac7bf/26-6aac511ccff37.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a13cf49f-63c3-4670-a6cc-ff24f6b04eb1/26-6aac511da6205.webp' /></p><p></p><p></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-17T20:44:17+00:00</updated>
        </entry>
    </feed>
