<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-09-20T06:17:56+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[நடிகர் சிவாஜி கணேசனின் மூத்த மகள் சாந்தி காலமானார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/sivaji-daughter-shanthi-narayanasamy-passed-away-1789884036"></link>
            <id>https://news.lankasri.com/article/sivaji-daughter-shanthi-narayanasamy-passed-away-1789884036</id>
            <summary type="text">Actor sivaji daughter shanthi narayanasamy passed away-&amp;nbsp;நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மூத்த மகள் சாந்தி நாராயணசாமி உடல்நலக்குறைவால் இன்று சென்னைய...</summary>
            <content type="html"><![CDATA[<p>Actor sivaji daughter shanthi narayanasamy passed away-&nbsp;நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மூத்த மகள் சாந்தி நாராயணசாமி உடல்நலக்குறைவால் இன்று சென்னையில் காலமானார்.</p><h2>உடல்நலக்குறைவால் காலமானார்</h2><p>சிவாஜி கணேசன் - கமலாம்பாள் தம்பதிக்கு ராம்குமார், பிரபு என்ற இரு மகன்களும், சாந்தி, தேன்மொழி என்ற இரு மகள்களும் உள்ளனர். </p><p>

இவர்களில் மூத்தவர் சாந்தி, சிவாஜி கணேசன் தனது மகள் மீது கொண்ட பாசத்தால், சென்னை அண்ணா சாலையில் உள்ள தனது திரையரங்கிற்கு சாந்தி திரையரங்கம் என பெயர் வைத்தார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8f3ddb99-1766-47f6-9226-fcf0fd056288/26-6aaf7686ea851.webp' /></p><p>சாந்தியின் திருமணம் பிரமாண்டமான முறையில் நடைபெற்றது.</p><p> 

இதில் காமராஜர், பெரியார், அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்களும், திரையுலகைச் சேர்ந்த ஏராளமானோரும் கலந்து கொண்டனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5172a7a8-b7e0-46a3-8c08-c48e06c404ca/26-6aaf768640786.webp' /></p><p>இந்நிலையில், கடந்த சில நாட்களாக உடல்நலப் பிரச்சினையால் சிகிச்சை பெற்று வந்த சாந்தி நாராயணசாமி இன்று காலமானார்.</p><p> 

அவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.</p><p> 
</p>]]></content>
            <updated>2026-09-20T06:03:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம்! மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு பொதுமக்களுக்கு சிவப்பு எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/minor-flood-warning-issued-for-low-lying-areas-1789873864"></link>
            <id>https://tamilwin.com/article/minor-flood-warning-issued-for-low-lying-areas-1789873864</id>
            <summary type="text">புதிய இணைப்புமகாவலி ஆற்றின் தாழ்வான பகுதிகளில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடிய சாத்தியக்கூறு குறித்து நீர்ப்பாசனத் திணைக்களம் &#039;சிவப்பு&#039; எச்சரிக்...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>மகாவலி ஆற்றின் தாழ்வான பகுதிகளில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடிய சாத்தியக்கூறு குறித்து நீர்ப்பாசனத் திணைக்களம் 'சிவப்பு' எச்சரிக்கையை விடுத்துள்ளது.&nbsp;&nbsp;</p><p>எனவே மகாவலி ஆற்று பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மிகுந்த விழிப்புடன் இருக்குமாறும், வெள்ளப்பெருக்கு ஏற்படும் பட்சத்தில் தங்கள் பாதுகாப்பை உறுதி செய்ய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.</p><h2>முதலாம் இணைப்பு</h2><p>மகாவலி கங்கையை சுற்றியுள்ள தாழ்நில பகுதிகளுக்கு சிறிய அளவிலான வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் எச்சரித்துள்ளது.</p><p>நீர்ப்பாசன திணைக்களம் அறிக்கையொன்றை வெளியிட்டு இந்த அறிவுறுத்தலை வழங்கியுள்ளது.&nbsp;</p><h2>சாரதிகளுக்கு முக்கிய அறிவுறுத்தல்&nbsp;</h2><p>இதன்படி, மகாவலி கங்கையின் மேல் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில மணித்தியாலங்களில் பலத்த மழை பெய்துள்ள நிலையில், பஸ்பாகே கோரளை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மகாவலி கங்கையை சுற்றியுள்ள தாழ்நிலப்பகுதிகளுக்கு சிறிய வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் காணப்படுவதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ce1ae49f-8eaa-4bde-b72a-cfbc97e155f0/26-6aaf512bc1da2.webp' /></p><p>

 

எனவே, அப்பகுதிகளில் வாழும் மக்கள் மற்றும் அங்குள்ள வீதிகளை பயன்படுத்தும் சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
</p><p>
 

மேலும், மகாவலி கங்கைக்கு அருகில் வசிக்கும் பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறும், தங்களை பாதுகாத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-20T06:02:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[விஜய் சேதுபதி அப்படி பேச வேண்டிய அவசியமே இல்லை!! சீரியல் நடிகை ஐஸ்வர்யா..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/annamalai-serial-aishwarya-about-vijay-sethupathi-1789884204"></link>
            <id>https://viduppu.com/article/annamalai-serial-aishwarya-about-vijay-sethupathi-1789884204</id>
            <summary type="text">ஐஸ்வர்யாசின்னத்திரை சீரியல் மூலம் பிரபலமானவர் தான் நடிகை ஐஸ்வர்யா. 15 வயதில் சீரியலில் நடிக்க ஆரம்பித்தவர், விருப்பட்டு நடிக்க வராததால் அப்போதெல்லாம் ...</summary>
            <content type="html"><![CDATA[<h2>ஐஸ்வர்யா</h2><p>சின்னத்திரை சீரியல் மூலம் பிரபலமானவர் தான் நடிகை ஐஸ்வர்யா. 15 வயதில் சீரியலில் நடிக்க ஆரம்பித்தவர், விருப்பட்டு நடிக்க வராததால் அப்போதெல்லாம் ஷூட்டிங் போகமாட்டேன் என்று அழுதும் இருக்கிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8045f208-aa14-41a1-8dea-dcfbc2d9cc7a/26-6aaf772e9eabd.webp' /></p><p> </p><p>அதன்பின் குடும்ப சூழ்நிலையால் நடிக்க ஆரம்பித்த ஐஸ்வர்யா, அண்ணாமலை சீரியலில் ஜோதி என்ற ரோலில் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். தெலுங்கி சீரியல் ஆஃபருக்காக, வெள்ளித்திரை வாய்ப்பை வேண்டாம் என்று கூறி கொடுத்த அட்வான்ஸ் தொகையை திருப்பி கொடுத்துவிட்டு சீரியல் வாய்ப்பே போதும் என்று இருந்துள்ளார்.</p><h2>விஜய் சேதுபதி</h2><p> விஜய் சேதுபதி நடித்த பெண் சீரியலில் நடித்தும் இருக்கிறார். மகாராஜா படத்தின் பிரமோஷனின் போது ஐஸ்வர்யாவின் தங்கை விஜய் சேதுபதியிடம் அவர் பற்றி பேச, உடனே வீடியோ கால் மூலம் பேசியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d423e5c4-472f-4f76-8190-d16f80f3e0d9/26-6aaf772f5349f.webp' /></p><p> </p><p>இந்நிலையில், சமீபத்தில் ஐஸ்வர்யா அளித்த பேட்டியில், விஜய் சேதுபதி என்னிடம் பேசியது ரொம்ப சந்தோஷம். நான் டைம் லைட்டில் கூட இல்லை, அப்படி இருக்கும்போது அவர் எனக்காக வீடியோ கால் செய்து, பழைய விசயங்களை எல்லாம் பேச வேண்டிய அவசியமே இல்லை, ஆனாலும் அவர் போன் பண்ணுனார். அவர் ரொம்ப எளிமையானவர் என்று பெருமையாக பேசியுள்ளார் ஐஸ்வர்யா.</p>]]></content>
            <updated>2026-09-20T06:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பல பிரதேசங்களுக்கு பலத்த இடி மின்னல் எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/severe-thunderstorm-and-lightning-warning-1789883948"></link>
            <id>https://jvpnews.com/article/severe-thunderstorm-and-lightning-warning-1789883948</id>
            <summary type="text">ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கும் முல்லைத்தீவு, வவுனியா மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களுக்கும் பலத்த இடி மின்னல் தொடர்பான எச்சரிக்கை அறிவித்தலை வளிமண...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கும் முல்லைத்தீவு, வவுனியா மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களுக்கும் பலத்த இடி மின்னல் தொடர்பான எச்சரிக்கை அறிவித்தலை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.</p><p>இந்த அறிவித்தல் இன்று (20) இரவு 11.30 மணி வரை செல்லுபடியாகும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p style="margin-bottom: 0px;">இதற்கமைய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் முல்லைத்தீவு, வவுனியா மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் மாலையில் அல்லது இரவில் ஆங்காங்கே இடியுடன் கூடிய மழை பெய்யும் போது பலத்த இடி மின்னல் ஏற்படுவதற்கான அதிக சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன.</p><p>இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளையில் அப்பகுதிகளில் தற்காலிகமாகப் பலத்த காற்றும் வீசக்கூடும்.</p><p>இடி மின்னலினால் ஏற்படும் அசம்பாவிதங்களைக் குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களிடம் கேட்டுக்கொள்கிறது.</p><p><br></p>]]></content>
            <updated>2026-09-20T05:59:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆடம்பர வீடுகளை கட்டித்தருவதாக பெருந்தொகை பணமோசடி - சிஐடியிடம் சிக்கிய பெண்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/money-laundering-by-promising-to-build-houses-1789870247"></link>
            <id>https://tamilwin.com/article/money-laundering-by-promising-to-build-houses-1789870247</id>
            <summary type="text">இலகுவான கட்டண முறையில் வீடுகளை கட்டித்தருவதாக கூறி ஒரு தனியார் நிறுவனமொன்று பெருந்தொகை பணமோசடியை செய்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

 சம்பவம் தொடர்பில...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலகுவான கட்டண முறையில் வீடுகளை கட்டித்தருவதாக கூறி ஒரு தனியார் நிறுவனமொன்று பெருந்தொகை பணமோசடியை செய்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
</p><p>
 சம்பவம் தொடர்பில் மிரிஹான சிறப்பு குற்றப்புலனாய்வு பிரிவினரால் இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>

பணம் பெற்ற பின்னரும் வீடுகளை கட்டித்தராதது குறித்து அப்பிரிவினருக்கு வந்த 245 முறைப்பாடுகள் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையின் போது, ​​சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனத்தின் பணிப்பாளர் ஒருவரும் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.</p><h2>நிதி மோசடிக்கு உடந்தை</h2><p>

இச்சம்பவம் தொடர்பாக நடத்தப்பட்ட மேலதிக விசாரணையில், நிதி மோசடிக்கு உடந்தையாக இருந்ததாக குற்றம்சாட்டப்பட்டு, அந்நிறுவனத்தின் பிரதம சந்தைப்படுத்தல் மேலாளர் மற்றும் செயல்பாட்டு அதிகாரியாக பணியாற்றிய இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2929dfa1-6389-437a-bc5f-563a7f89984f/26-6aaf75f99ffc2.webp' /></p><p>

இதன்போது சந்தேகநபர்களிடம் இருந்த 4 கார்களும் பொலிஸ் காவலில் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
30 மற்றும் 31 வயதுடைய இரண்டு பெண்களும் முறையே கஹவத்த மற்றும் கடுவெல பகுதியை சேர்ந்தவர்களாவர்.
</p><p>
இதற்கமைய, சந்தேகநபர்கள் நேற்று (19) நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட்ட நிலையில் 29ஆம் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.&nbsp;&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-20T05:58:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[இழப்பீடு வேண்டும்... பிரித்தானியா மீது வழக்குத் தொடர கரீபியன் நாடுகள் திட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/caribbean-nations-plan-to-sue-1789884030"></link>
            <id>https://news.lankasri.com/article/caribbean-nations-plan-to-sue-1789884030</id>
            <summary type="text">Caribbean nations plan to sue UK for slavery reparations: அடிமைத்தனத்திற்கான இழப்பீடு கோரி பிரித்தானியா மீது வழக்குத் தொடர கரீபியன் நாடுகள் திட்டமிட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>Caribbean nations plan to sue UK for slavery reparations: அடிமைத்தனத்திற்கான இழப்பீடு கோரி பிரித்தானியா மீது வழக்குத் தொடர கரீபியன் நாடுகள் திட்டமிட்டுள்ளன.
</p><p>கரீபியன் நாடுகளிடமிருந்து அடிமைத்தன இழப்பீடு தொடர்பான ஒரு சாத்தியமான வழக்கை பிரித்தானியா எதிர்கொள்ள இருக்கிறது.</p><h2>இழப்பீடு கோரும்</h2><p>
</p><p>நவம்பரில் ஆன்டிகுவாவில் நடைபெறவுள்ள காமன்வெல்த் உச்சிமாநாட்டில் இந்த விவகாரம் எழுப்பப்படவுள்ளது; இதில் மன்னர் பங்கேற்க உள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9daece14-bfbb-42ac-8e21-17a8a71e5db1/26-6aaf76806fc33.webp' /></p><p> வரவிருக்கும் 28-வது காமன்வெல்த் அரசுத் தலைவர்கள் கூட்டத்தின் நிகழ்ச்சி நிரலில், இழப்பீடு கோரும் விவகாரத்தை முன்னெடுக்கத் தயாராகி வருவதாக கரீபியன் சமூகக் குழு கடந்த வாரம் உறுதிப்படுத்தியது. </p><p>இந்த ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையால் மனிதகுலத்திற்கு எதிரான மிகக் கொடூரமான குற்றமாகக் குறிப்பிடப்பட்ட அடிமை வணிகத்திற்காக, உறுப்பு நாடுகள் நீண்ட காலமாக டிரில்லியன் கணக்கான இழப்பீட்டைக் கோரி வருகின்றன. </p><p>அமெரிக்கா அடிமை முறையை ஒழிப்பதற்குப் பல தசாப்தங்களுக்கு முன்பே, 1834-இல் பிரித்தானியா தனது பேரரசின் பெரும்பகுதிகளில் அம்முறையை ஒழித்தது. இருப்பினும், பிரித்தானியா நீண்ட காலமாக இழப்பீட்டுக் கோரிக்கைகளை நிராகரித்து வருகிறது.</p><p></p><p> </p><p>இதுகுறித்து பிரதமர் அலுவலகம் தெரிவிக்கையில், அட்லாண்டிக் கடந்த அடிமை வர்த்தகம் வெறுக்கத்தக்கது. மக்களின் உணர்வுகளின் வலிமையை நாங்கள் முழுமையாக உணர்கிறோம் என்று கூறியுள்ளது. </p><p>மேலும், இங்கிலாந்தின் நிலைப்பாடு தெளிவானது, நாங்கள் இழப்பீடு வழங்குவதில்லை, இனிமேலும் வழங்கப்போவதில்லை. மட்டுமின்றி, கடந்த காலத்தின் மரபுகள் குறித்து நமது அனைத்துக் கூட்டாளிகளுடனும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்துவதில் பிரித்தானியா உறுதியுடன் உள்ளது எனவும் தெரிவித்துள்ளனர். </p><p>ஆனால், பார்படாஸ் பிரதமர் மியா மோட்லி, இழப்பீடு பெறுவது குறித்து விவாதிக்க இந்த வாரம் ஒரு மாநாட்டை நடத்துகிறார்; மேலும், சர்வதேச நீதிமன்றங்கள் வாயிலாகச் சட்ட நடவடிக்கை எடுப்பதை ஒரு வழியாகவும் அவர் முன்மொழிந்துள்ளார்.</p><h2>நீதி கிடைக்க வேண்டும்</h2><p> பல தலைமுறைகளாக அடிமை உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்காகப் பிரித்தானிய அரசாங்கம் எவ்வாறு கடன் சுமையை ஏற்றுக் கொண்டதோ, அதேபோல இந்த இழப்பீட்டுத் தொகையையும் பல தலைமுறைகளாகச் செலுத்த முடியும் என்று அவர் கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e0e7eeca-8428-4046-813d-681856b1db62/26-6aaf768122ddd.webp' /></p><p> </p><p>யாரையும் திவாலாக்கும் நோக்கம் எங்களுக்கு இல்லை, ஆனால் நீதி கிடைக்க வேண்டும் என்பதே எங்கள் விருப்பம் என்றார். அனைத்து வகையான இனப் பாகுபாட்டையும் ஒழிப்பதற்கான ஐக்கிய நாடுகள் சபையின் உடன்படிக்கையில் பிரித்தானியா ஒரு தரப்பினராக உள்ளது. மேலும், இனப் பாகுபாட்டின் எந்தவொரு நிகழ்வுக்கும் இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்று அந்த ஒப்பந்தம் கூறுகிறது.</p>]]></content>
            <updated>2026-09-20T05:57:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜனாதிபதி அநுரவுக்கு சிறீதரன் எம்பி அனுப்பியுள்ள அவசர கடிதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sivarasa-anojan-sritharan-mp-president-anura-1789883113"></link>
            <id>https://tamilwin.com/article/sivarasa-anojan-sritharan-mp-president-anura-1789883113</id>
            <summary type="text">சவூதி அரேபியாவில் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கைப் பிரஜையான சிவராசா
அனோஜன் விவகாரத்தில், இஸ்லாமியப் போதனைகளின் அறவிழுமியங்கள் மற்றும் அவரது
குடு...</summary>
            <content type="html"><![CDATA[<p>சவூதி அரேபியாவில் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கைப் பிரஜையான சிவராசா
அனோஜன் விவகாரத்தில், இஸ்லாமியப் போதனைகளின் அறவிழுமியங்கள் மற்றும் அவரது
குடும்பப் பின்னணியைக் கருத்திற்கொண்டு சாதகமான தீர்வொன்றைப் பெற்றுக்கொடுக்க
இராஜதந்திர அழுத்தங்களை வழங்குமாறு நாடாளுமன்ற
உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், ஜனாதிபதியிடம் கடிதம்
மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
</p><p>
மத நிந்தனைக் குற்றச்சாட்டில் சவூதி நீதிமன்றத்தால் முன்னர் தண்டிக்கப்பட்ட
அனோஜனின் மேன்முறையீட்டை அடுத்து, தற்போது அவருக்கு மரணதண்டனை
விதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், அவர் ஜனாதிபதிக்கு இந்த கடிதத்தை அனுப்பிவைத்துள்ளார்.&nbsp;</p><p> அந்தக் கடிதத்தில், "சிவராசா அனோஜன் குற்ற நோக்கத்துடன் சவூதிக்குச் செல்லவில்லை. பெற்றோர்
சிவராசா மற்றும் யோகேஸ்வரி அடங்கிய குடும்பத்தின் பொருளாதாரச் சுமையைப்
பகிர்ந்து, வாழ்வாதாரத்தை முன்னேற்றும் நோக்கத்துடனேயே அவர் அங்கு புலம்பெயர்
தொழிலாளராகப் பணியாற்றினார்.</p><h2>அனோஜன் விவகாரம்..&nbsp;</h2><p>
</p><p>
பல தசாப்தங்களாக நீடித்த கொடூரமான போரினால் சமூக, பொருளாதார மற்றும் உளவியல்
ரீதியாகப் பெரிதும் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களில் இந்தக் குடும்பமும்
ஒன்றாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/126b8a6c-f2ea-4403-922c-da3f056de2c0/26-6aaf73e01fc02.webp' /></p><p>

இவ்வாறான கடுமையான தண்டனை, ஏற்கனவே இன்னல்களை எதிர்கொண்டுள்ள ஒரு
குடும்பத்தின் எதிர்கால வாழ்வை முற்றாகச் சீர்குலைத்து மேலும் கீழ்நிலைக்குத்
தள்ளும் விளைவை ஏற்படுத்தும்.

சவூதி அரேபியாவின் மதப் பாரம்பரியம், இஸ்லாமிய விழுமியங்கள் மற்றும் சட்ட
ஆட்சியை முழுமையான மரியாதையுடன் ஏற்றுக்கொள்கின்றேன்.
</p><p>
இஸ்லாமியப் போதனைகள் கருணை, மன்னிப்பு, நீதி மற்றும் மனிதாபிமானம் ஆகிய உயரிய
விழுமியங்களை உலகுக்கு எடுத்துக்காட்டுகின்றன. அந்த அறவிழுமியங்களின்
அடிப்படையில் அனோஜனின் வயது, குடும்பப் பின்னணி மற்றும் சமூக-பொருளாதாரச்
சூழலைக் கருத்திற்கொள்ள வேண்டும்.</p><p>

எனவே, தர்மம் மற்றும் அறத்தின் அடிப்படையில் இவற்றுக்குச் சாதகமான தீர்வொன்றை
வழங்குவதற்காகச் சவூதி அரேபிய அரசுடன் இணைந்து அவசியமான இராஜதந்திர
நடவடிக்கைகளையும் அழுத்தங்களையும் வழங்குமாறு உங்களைத் தயவுடன்
கேட்டுக்கொள்கின்றேன்." என்றுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-20T05:49:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தாயைக் கொலை செய்துவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட மகன்: பலப்படுத்திய காவல்துறை விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/son-commits-suicide-after-killing-his-mother-1789880770"></link>
            <id>https://ibctamil.com/article/son-commits-suicide-after-killing-his-mother-1789880770</id>
            <summary type="text">வவுனியா, தோணிக்கல் பகுதியில் கூர்மையான ஆயுதத்தால் தாக்கி தாயைக் கொலை செய்துவிட்டு, அவரது மகன் உயிரைமாய்த்துக்கொண்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
காவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>வவுனியா, தோணிக்கல் பகுதியில் கூர்மையான ஆயுதத்தால் தாக்கி தாயைக் கொலை செய்துவிட்டு, அவரது மகன் உயிரைமாய்த்துக்கொண்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
</p><p>காவல்துறையின் விசாரணைப்படி வாக்குவாதம் முற்றியதன் காரணமாக மகன் தனது தாயை கூர்மையான ஆயுதத்தால் தாக்கிக் கொலை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.
</p><p>குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருகையில் தாயைக் கொலை செய்த பின்னர், மகன் அதே வீட்டில் அருகிலுள்ள அறையில் தூக்கிட்டு உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p></p><h2>வவுனியா காவல்துறை</h2><p>
</p><p>சம்பவம் தொடர்பில் வவுனியா காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ab25345b-e0a2-41ac-894b-2cc7bcf5cb02/26-6aaf73adccba1.webp' /></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-20T05:48:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பிரதேசத்தில் பயங்கரம்; தாயைக் கொலை செய்து மகன் தற்கொலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/son-kills-mother-and-commits-suicide-in-vavuniya-1789879019"></link>
            <id>https://jvpnews.com/article/son-kills-mother-and-commits-suicide-in-vavuniya-1789879019</id>
            <summary type="text">வவுனியா, தோணிக்கல் பகுதியில் கூர்மையான ஆயுதத்தால் தாக்கித் தாயைக் கொலை செய்துவிட்டு, மகனும் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.வாக்குவாதம் முற்றியதன் காரணமாகவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>வவுனியா, தோணிக்கல் பகுதியில் கூர்மையான ஆயுதத்தால் தாக்கித் தாயைக் கொலை செய்துவிட்டு, மகனும் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.</p><p>வாக்குவாதம் முற்றியதன் காரணமாகவே குறித்த மகன் தனது தாயைக் கொலை செய்துள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p>கொலையைச் செய்த பின்னர், மகன் அதே வீட்டில் உள்ள அருகில் இருந்த அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.</p><p>சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-09-20T05:40:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[கவரிங் நகை வாங்கி கொடுத்து அவமானப்பட்ட சோழன்.. அதிர்ச்சியில் நிலா!! அய்யனார் துணை சீரியல் ப்ரொமோ]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/chozhan-faced-humiliation-in-ayyanar-thunai-serial-1789881812"></link>
            <id>https://cineulagam.com/article/chozhan-faced-humiliation-in-ayyanar-thunai-serial-1789881812</id>
            <summary type="text">Chozhan faced humiliation in ayyanar thunai serial: அய்யனார் துணை சீரியலில் வரும் வாரத்திற்கான ப்ரொமோ வெளியாகியுள்ளது. இதில் நிலாவிற்கு தங்க நகைக்கு ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>Chozhan faced humiliation in ayyanar thunai serial: அய்யனார் துணை சீரியலில் வரும் வாரத்திற்கான ப்ரொமோ வெளியாகியுள்ளது. இதில் நிலாவிற்கு தங்க நகைக்கு பதிலாக, கவரிங் நகை வாங்கி கொடுத்து, நிலாவின் அம்மாவிடம் அவமானப்படுகிறார் சோழன்.</p><p></p><p>
</p><h2>
அய்யனார் துணை</h2><p>

விஜய் டிவியின் நம்பர் 1 சீரியல் என கொண்டாடப்பட்டு வருகிறது அய்யனார் துணை. இதில் இந்த வாரம் சந்தா - சேரன் திருமணம் முடிந்து, அவர்களை வீட்டிற்கு அழைத்து வந்தனர். அங்கு சந்தாவின் குடும்பத்திற்கும் நிலாவின் அம்மாவிற்கும் கடும் சண்டை ஏற்பட்டது. இந்த சண்டையை தீர்த்து வைக்கவே சோழன், பாண்டியன், சேரன் மிகவும் கஷ்டப்பட்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/627580bb-2d3a-4cfa-b984-4baebad3ceb3/26-6aaf6dd77093a.webp' /></p><p></p><p> </p><h3>

நிலா கொடுத்த நகை</h3><p>

இதில், வீட்டிற்கு வந்த மருமகளுக்கு மாமியார் தங்க நகை போடவேண்டும் என சந்தாவின் அம்மா கூற, அந்த ஸ்தானத்தில் இருந்து, தனது கையில் இருந்த தங்க நகையை சந்தாவிற்கு போட்டுவிட்டார் நிலா. இது நிலாவின் அம்மாவிற்கு கொஞ்சம் கூட பிடிக்கவில்லை. இதை சோழனிடம் அவர் சொல்லிக்கொண்டே இருக்க, நான் நிலாவிற்கு புதிய நகை வாங்கி தருகிறேன் என சோழன் சொன்னார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2c3aebae-92f2-4b71-9cbb-5043cdc1bbe9/26-6aaf6dd8dbdde.webp' /></p><p></p><p> </p><h2>

அவமானப்பட்ட சோழன்
</h2><p>
நிலாவிற்கு தங்க நகை வாங்கவேண்டும் என பாண்டியனுடன் கடைக்கு செல்லும் சோழன், தங்கம் வாங்கும் அளவிற்கு பணம் இல்லை என்பதால், கவரிங் நகை வாங்கி தரலாம்; இதை யாரும் கண்டுபிடிக்க போவதில்லை என நினைத்து, கவரிங் வளையல் வாங்கி தருகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3c2d4081-35a0-436b-8c9d-776af7edca7c/26-6aaf6dd82b9ba.webp' /></p><p></p><p> 

ஆனால், இந்த நகையை பார்த்தவுடன் இது கவரிங் நகை என்று சொல்லிவிடுகிறார் <a href="https://www.youtube.com/watch?v=oB43XSokor0" target="_blank">நிலா</a>வின் அம்மா. இதனால் வீட்டில் அனைவரின் முன்னும் அவமானப்பட்டு நிற்கிறார் சோழன். அதிர்ச்சியில் நிலா சங்கப்பட்டு நிற்கிறார். இனி அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/oB43XSokor0" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-09-20T05:40:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் வீட்டில் பெரும் துயர சம்பவம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/actor-sivaji-ganesan-daughter-passed-away-1789881445"></link>
            <id>https://jvpnews.com/article/actor-sivaji-ganesan-daughter-passed-away-1789881445</id>
            <summary type="text">மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மகளும், நடிகர்கள் பிரபு மற்றும் ராம்குமாரின் சகோதரியுமான சாந்தி இன்று அதிகாலை உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானா...</summary>
            <content type="html"><![CDATA[<p>மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மகளும், நடிகர்கள் பிரபு மற்றும் ராம்குமாரின் சகோதரியுமான சாந்தி இன்று அதிகாலை உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார்.</p><p>அவரது மறைவு குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><p>கடந்த சில தினங்களாக உடல்நலப் பிரச்னையால் பாதிக்கப்பட்டு வந்த சாந்தி இன்று காலமாகி இருக்கிறார்,</p><p>சாந்தி மறைவுக்கு திரையுல பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-09-20T05:39:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சவுதியில் அனோஜனின் மரண தண்டனை; ஹட்டனில் போராட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/anojan-death-sentence-in-saudi-protest-srilanka-1789882739"></link>
            <id>https://jvpnews.com/article/anojan-death-sentence-in-saudi-protest-srilanka-1789882739</id>
            <summary type="text">சவூதி அரேபியாவில் இலங்கை இளைஞரான சிவராசா அனோஜனுக்கு மேன்முறையீட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.சவூதி அரேபியாவில் இலங்கை இளைஞரான சிவராசா அனோஜனுக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>சவூதி அரேபியாவில் இலங்கை இளைஞரான சிவராசா அனோஜனுக்கு மேன்முறையீட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.</p><p>சவூதி அரேபியாவில் இலங்கை இளைஞரான சிவராசா அனோஜனுக்கு மேன்முறையீட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. </p><p>இந்நிலையில், அனோஜனை உடனடியாக விடுதலை செய்யக் கோரியும், மரண தண்டனையைக் குறைத்துக் கருணை வழங்குமாறு கோரியும், "மனிதாபிமான வேண்டுகோள்" எனும் தலைப்பில் அட்டன் மல்லியப்பு சந்தியில் இந்து அமைப்புகளின் ஒன்றியம் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தது.</p><p>கொட்டும் மழைக்கு மத்தியில் இப்போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள், சிவராசா அனோஜனின் புகைப்படம் தாங்கிய பதாகைகளையும், கோரிக்கை வாசகங்கள் அடங்கிய அட்டைகளையும் ஏந்தியவாறு தமது கோரிக்கைகளை வெளிப்படுத்திப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-09-20T05:39:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[தீவிரமடையும் காலநிலை - இந்த அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக வெளியேறுமாறு அவசர எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/notification-disaster-management-rain-situation-1789877761"></link>
            <id>https://tamilwin.com/article/notification-disaster-management-rain-situation-1789877761</id>
            <summary type="text">


நாட்டில் தற்போது நிலவும் மழையுடனான காலநிலை குறித்து அனர்த்த முகாமைத்துவ நிலையங்கள் பொதுமக்களுக்கு சிறப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளது.

அதன்படி...</summary>
            <content type="html"><![CDATA[<p>


நாட்டில் தற்போது நிலவும் மழையுடனான காலநிலை குறித்து அனர்த்த முகாமைத்துவ நிலையங்கள் பொதுமக்களுக்கு சிறப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளது.</p><p>

அதன்படி, நாட்டின் பல பகுதிகளில் தற்போது கனமழை பெய்து வருவதாகவும், 100 மி.மீ க்கு மேல் மழை பெய்யக்கூடும் என வானிலை நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளரும், ஊடகப்பேச்சாளருமான பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.</p><h2>பல மாவட்டங்களுக்கு நிலச்சரிவு எச்சரிக்கை</h2><p> </p><p>

எனவே தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனமும் பல மாவட்டங்களுக்கு நிலச்சரிவு எச்சரிக்கை விடுத்துள்ளதால், இது தொடர்பாக பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.</p><p> 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/83dbbbd2-25ff-47db-8f2c-369fac76a611/26-6aaf65e59c197.webp' /></p><p>

"நிலச்சரிவுக்கான அறிகுறிகளை சிறப்பு கவனத்துடன் கவனியுங்கள். உங்கள் பகுதியில் உள்ள மரங்கள் மற்றும் மின் கம்பங்கள் சாய்ந்திருந்தாலோ, தரையில் விரிசல்கள் இருந்தாலோ, பதிய மண் ஊற்றுகள் உருவானாலோ, அல்லது ஏற்கனவே உள்ள ஊற்றுகள் வற்றிப்போதல் போன்ற அறிகுறிகள் தென்பட்டவுடன் அந்த பகுதிகளை விட்டு தற்காலிகமாக வெளியேறுவது மிக அவசியம்." என்றும் தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p><p> 




 </p>]]></content>
            <updated>2026-09-20T05:35:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[படைகளை குறைக்க அமெரிக்கா திட்டம்; நேட்டோ நாடுகள் அதிர்ச்சி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/reduce-troops-in-europe-us-decision-1789881922"></link>
            <id>https://canadamirror.com/article/reduce-troops-in-europe-us-decision-1789881922</id>
            <summary type="text">ஈரான் மீதான போருக்குத் தங்கள் நாட்டு வானுர்தித் தளங்களைப் பயன்படுத்த அமெரிக்காவிற்கு அனுமதி மறுத்ததைத் தொடர்ந்து, ஐரோப்பாவிலுள்ள தனது படைகளைக் கணிசமாக...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரான் மீதான போருக்குத் தங்கள் நாட்டு வானுர்தித் தளங்களைப் பயன்படுத்த அமெரிக்காவிற்கு அனுமதி மறுத்ததைத் தொடர்ந்து, ஐரோப்பாவிலுள்ள தனது படைகளைக் கணிசமாகக் குறைக்க அமெரிக்கா பரிசீலித்து வருகிறது.</p><p>ஐரோப்பிய நேட்டோ (NATO) நாடுகள் அமெரிக்காவிற்குத் தளங்களைப் பயன்படுத்த அனுமதி மறுத்தது "வெட்கக்கேடானது" என அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்சேத் சாடியுள்ளார்.</p><p>ஐரோப்பாவிலுள்ள 68,000 அமெரிக்க வீரர்களில் மூன்றில் ஒரு பங்கினரை (முக்கியமாக ஜெர்மனி, இத்தாலி, ஸ்பெயின்) திரும்பப் பெறுவது, அல்லது 40,000 வீரர்கள் மற்றும் ஆயுதங்களை வெளியேற்றுவது குறித்து பென்டகன் ஆலோசித்து வருகிறது.</p><p>இந்த நடவடிக்கை ஐரோப்பாவின் பாதுகாப்பைப் பாதிப்பதுடன், ரஷ்யாவிற்குச் சாதகமான சமிக்ஞையை அனுப்பக்கூடும் என வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.</p><p>வர்த்தக வரிகள், கிரீன்லாந்து விவகாரம் மற்றும் நேட்டோ நிதியுதவி போன்ற காரணங்களால் அமெரிக்கா-ஐரோப்பா உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.</p><p>இதேபோல தாய்வான் மற்றும் வளைகுடா நாடுகளுக்கான அமெரிக்காவின் பாதுகாப்பு ஆதரவும் தளர்ந்து வருவதாகக் வெளிநாட்டு ஊடகங்கள் கூறுகின்றன.</p>]]></content>
            <updated>2026-09-20T05:25:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் மூன்று பெண்கள் அதிரடியாக கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/three-thai-women-arrested-in-katunayake-1789873416"></link>
            <id>https://tamilwin.com/article/three-thai-women-arrested-in-katunayake-1789873416</id>
            <summary type="text">சட்டவிரோதமாக பாங்கொக்கிலிருந்து நாட்டிற்குள் கடத்திவரப்பட்ட போதைப்பொருள் தொகையுடன் பெண்கள் மூவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய...</summary>
            <content type="html"><![CDATA[<p>சட்டவிரோதமாக பாங்கொக்கிலிருந்து நாட்டிற்குள் கடத்திவரப்பட்ட போதைப்பொருள் தொகையுடன் பெண்கள் மூவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p>
இவர்களிடமிருந்து 5 கிலோகிராமிற்கும் அதிகமான 'குஷ்' மற்றும் 2.4 கிலோகிராம் 'ஹஷீஷ்' போதைப்பொருள் தொகை மீட்கப்பட்டுள்ளன.</p><h2>போதைப்பொருள்&nbsp;&nbsp;ஒழிப்புப்பிரிவினர்&nbsp;விசாரணை</h2><p>பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப்பிரிவினரால் (PNB) மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே இவர்கள் அத்துமீறி போதைப்பொருட்களை கடத்த முற்பட்ட வேளையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dbc75cc1-3d15-459c-b211-204967abfb79/26-6aaf6baa0a44b.webp' /></p><p>
இவ்வாறு கைது செய்யப்பட்ட பெண்கள் தாய்லாந்து நாட்டை சேர்ந்தவர்கள் என்றும், 31, 36 மற்றும் 38 ஆகிய வயதுடையவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப்பிரிவினர் 
முன்னெடுத்து வருகின்றனர்.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-20T05:14:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கி்ளிநொச்சி பொலிசாருக்கு இலஞ்சம்; 5 பேர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/bribe-offered-to-kilinochchi-police-5-arrested-1789880840"></link>
            <id>https://jvpnews.com/article/bribe-offered-to-kilinochchi-police-5-arrested-1789880840</id>
            <summary type="text">கிளிநொச்சி, பரந்தன் வீதித் தடையில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற ஐந்து சந்தேகநபர்களை பொலிஸார் கைது செய்துள...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிளிநொச்சி, பரந்தன் வீதித் தடையில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற ஐந்து சந்தேகநபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.</p><p>வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனங்களின் உரிமங்களைப் பரிசோதித்த போது, புவியியல் மதிப்பீடு மற்றும் சுரங்கப் பணியகத்தினால் வழக்கப்பட்ட மணல் போக்குவரத்து உரிமத்தில் உத்தியோகத்தர்கள் கையொப்பமிடுவதைத் தடுப்பதற்காகவே இவ்வாறு இலஞ்சம் கொடுக்க முயன்றுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p>கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 28, 29, 40 மற்றும் 49 வயதுடைய வவுனியா, இராமநாதபுரம், தர்மபுரம், ஆனந்தபுரம் மற்றும் புலோலி ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் ஆவர்.</p><p>அவர்கள் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.</p><p>சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்</p>]]></content>
            <updated>2026-09-20T05:07:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஒரே வாரத்தில் முகப்பொலிவை அதிகரிக்க அரிசி மாவு.., எப்படி பயன்படுத்துவது?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/rice-flour-to-get-glowing-and-flawless-skin-1789880223"></link>
            <id>https://news.lankasri.com/article/rice-flour-to-get-glowing-and-flawless-skin-1789880223</id>
            <summary type="text">பொதுவாக பெண்கள் அனைவரும் தங்களின் முகத்தை பொலிவாக வைத்துக்கொள்ளத்தான் விரும்புவார்கள்.

ஆனால் அதிகப்படியான சூரிய கதிர்வீச்சால் பிக்மண்டேஷன், கரும்பு...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொதுவாக பெண்கள் அனைவரும் தங்களின் முகத்தை பொலிவாக வைத்துக்கொள்ளத்தான் விரும்புவார்கள்.
</p><p>
ஆனால் அதிகப்படியான சூரிய கதிர்வீச்சால் பிக்மண்டேஷன், கரும்புள்ளிகள் போன்ற பாதிப்புகளால் உடல் கருப்பாக மாறிவிடுகின்றன.
</p><p>
அந்தவகையில், இயற்கையான முறையில் முகத்தை பொலிவாக்க அரிசி மாவை எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fbd24121-308c-4561-b716-aedaabfccad6/26-6aaf68c2229f0.webp' /></p><h3>1. தேவையான பொருட்கள்</h3><ul><li> 

அரிசி மாவு- 1 ஸ்பூன்</li><li> 
 ஓட்ஸ் பொடி- 1 ஸ்பூன் </li><li>
பால்- 1 ஸ்பூன்</li><li> 
தேன்- 1 ஸ்பூன் </li></ul><h3>

எப்படி பயன்படுத்துவது?
</h3><p>
ஒரு கிண்ணத்தில் அரிசி மாவு, ஓட்ஸ் பொடி, பால் மற்றும் தேன் சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.</p><p> </p><p></p><p>இந்த கலவையை முகத்தில் தடவி 8-10 நிமிடங்கள் வைத்திருக்க வேண்டும்.</p><p> 

பின்னர் குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவ வேண்டும். இதை வாரத்திற்கு 2 முறை பயன்படுத்தலாம்.
</p><h3>
2. தேவையான பொருட்கள் </h3><ul><li>

அரிசி மாவு- 1 ஸ்பூன் </li><li>
சாக்லேட் பவுடர்- 1 ஸ்பூன்</li><li> 
பால்- 2 ஸ்பூன் </li></ul><h3>

எப்படி பயன்படுத்துவது?
</h3><p>
ஒரு கிண்ணத்தில் அரிசி மாவு, சாக்லேட் பவுடர் மற்றும் குளிர்ச்சியான பால் சேர்த்து பேஸ்ட் தயாரிக்க வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0454f6d1-fa1d-425a-a18b-093a1768f797/26-6aaf6859f0ee8.webp' /></p><p> 

இதை முகத்தில் தடவி 15 நிமிடங்கள் வைத்திருந்து, வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.</p><p> 

இந்த பேஸ்பேக்கை தினமும் பயன்படுத்தலாம்.
</p><h3>
3. தேவையான பொருட்கள்</h3><ul><li> 

அரிசி மாவு- 1 ஸ்பூன் </li><li>
ரோஸ் வாட்டர்- 2 ஸ்பூன் </li></ul><h3>

எப்படி பயன்படுத்துவது?</h3><p>

ஒரு கிண்ணத்தில் அரிசி மாவு மற்றும் ரோஸ் வாட்டர் சேர்த்து பேஸ்ட் தயாரிக்க வேண்டும்.</p><p> </p><p></p><p>இதை முகம் மற்றும் கழுத்தில் தடவி 10-15 நிமிடங்கள் வைத்திருக்க வேண்டும்.</p><p> 

பின்னர் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதை வாரத்திற்கு 2-3 முறை பயன்படுத்தலாம்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-20T05:02:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[நடிகர் திலகம் சிவாஜியின் மூத்த மகள் சாந்தி இன்று காலமானார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/sivaji-ganesan-elder-daughter-shanthi-passed-away-1789879990"></link>
            <id>https://cineulagam.com/article/sivaji-ganesan-elder-daughter-shanthi-passed-away-1789879990</id>
            <summary type="text">Sivaji Ganesan daughter Shanthi passed away: நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மூத்த மகளும், பிரபல தயாரிப்பாளருமான சாந்தி நாராயணசாமி இன்று காலை காலமானார்....</summary>
            <content type="html"><![CDATA[<p>Sivaji Ganesan daughter Shanthi passed away: நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மூத்த மகளும், பிரபல தயாரிப்பாளருமான சாந்தி நாராயணசாமி இன்று காலை காலமானார்.</p><p></p><p> </p><h2>

சிவாஜி கணேசன்
</h2><p>
திரையுலகில் நடிப்பிற்கு இலக்கணமாக இருப்பவர் மறைந்த நடிகர் திலகம் <a href="https://www.hindutamil.in/news/cinema/tamil-cinema/ilaiyaraaja-remembering-working-with-sivaji-ganesan" target="_blank">சிவாஜி கணேசன்</a>. நடிப்பு என்ற சொல்லுக்கு மறுபெயர் சிவாஜி கணேசன் என்றுதான் தமிழ் சினிமாவில் அவரை அடையாளப்படுத்துவார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ad7b42e7-8159-4d66-af83-d0e32bf9627e/26-6aaf66ba94186.webp' /></p><p></p><p> </p><h2>

மூத்த மகள் சாந்தி</h2><p>

சிவாஜி கணேசன் - கமலா கணேசன் தம்பதியினருக்கு ராம் குமார், பிரபு ஆகிய இரு மகன்களும், சாந்தி, ராஜ்வி ஆகிய இரு மகள்களும் உள்ளனர். தனது மூத்த மகள் சாந்தியின் பெயரில் சென்னை அண்ணாசாலையில் ஒரு திரையரங்கை கட்டினார் சிவாஜி.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f8478217-7102-4972-959d-2cf64f03534f/26-6aaf66b92b764.webp' /></p><p></p><p> 

மேலும், சிவாஜி நடிப்பில் 1974-ஆம் ஆண்டு வெளியான தங்கப்பதக்கம் திரைப்படத்தை சாந்தி தயாரித்துள்ளார். சாந்தியின் கணவர் நாராயணசாமி; இவர்களுக்கு சத்யலட்சுமி என்கிற மகள் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/231a7734-efe7-4c29-9164-bdc5acf5d66b/26-6aaf66b9db0bb.webp' /></p><p></p><p>
</p><h3>
மரணம்
</h3><p>
இந்த நிலையில், சிவாஜி கணேசனின் மூத்த மகளும், நடிகர்கள் பிரபு மற்றும் ராம்குமாரின் சகோதரியுமான சாந்தி நாராயணசாமி இன்று அதிகாலை காலமானார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/894556a9-d453-4e86-a582-23c321e6ea7c/26-6aaf67a251dad.webp' /></p>]]></content>
            <updated>2026-09-20T05:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[செப்டம்பர் 20 முதல் 26 வரை: இந்த வாரம் 12 ராசிகளுக்கும் என்ன பலன் காத்திருக்குது?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/weekly-horoscope-for-20-september-2026-to-26-1789878699"></link>
            <id>https://manithan.com/article/weekly-horoscope-for-20-september-2026-to-26-1789878699</id>
            <summary type="text">பொதுவாகவே நம் வாழ்வில் ஏற்படும் நன்மைகள்&amp;nbsp; மற்றும் தீமைகள் நமது ஜாதகத்தில் உள்ள கிரக நிலைகளின் அடிப்படையிலேயே அமைகின்றன என்று ஜோதிடத்தில் நம்பப்பட...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொதுவாகவே நம் வாழ்வில் ஏற்படும் நன்மைகள்&nbsp; மற்றும் தீமைகள் நமது ஜாதகத்தில் உள்ள கிரக நிலைகளின் அடிப்படையிலேயே அமைகின்றன என்று ஜோதிடத்தில் நம்பப்படுகிறது. </p><p>குறிப்பாக, கிரகங்களின் சஞ்சாரம் மற்றும் அவற்றின் நிலைப்பாடுகள் ஒருவரின் வாழ்க்கையில் பல்வேறு மாற்றங்களையும், எதிர்பாராத திருப்பங்களையும் ஏற்படுத்தக்கூடும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9b03f3e2-2254-462c-8ede-09e3b57f09d2/26-6aaf67b14bd76.webp' /></p><p>
</p><p>
</p><p>அந்தவகையில், செப்டம்பர் 20 முதல் 2026 செப்டம்பர் 26 வரையிலான காலகட்டத்தில்,கிரக நிலைகளின் அடிப்படையில் 12 ராசிக்காரர்களுக்கும் எவ்வாறு பலன்கள் அமையப் போகின்றன?</p><p>எந்த ராசிக்காரர்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கலாம்? யாருக்கு சில சவால்கள் அல்லது எதிர்பாராத மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது? என்பது குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f6090815-2802-4534-8e16-7b3150d1cc75/26-6aaf67b20f8ab.webp' /></p><h2>12 ராசிகளுக்குமான பலன்கள்</h2><p><b>மேஷம் -</b>
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சிறப்பாக இருக்கும். வேலை தொடர்பாகப் பல பயணங்களை மேற்கொள்வீர்கள். நிதி நிலை நன்றாக இருக்கும். பணிபுரிபவர்களுக்கு சாதகமான வாய்ப்புகளும், சிலருக்கு புதிய வேலை அல்லது சம்பள உயர்வும் கிடைக்கலாம். தொழிலதிபர்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் அமைய வாய்ப்புள்ளது.</p><p><b>

ரிஷபம் -</b>
ரிஷப ராசிக்காரர்கள் இந்த வாரம் சற்று எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். தேவையற்ற வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கலாம். நிதி நிலை சிறப்பாக இருக்கும்; பல வழிகளில் பணவரவு கிடைக்கலாம். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் அமையலாம். புதிய தொழில் தொடங்கவும் இந்த வாரம் சாதகமாக இருக்கும்.</p><p>
</p><p><b>
மிதுனம் - </b>மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் நல்ல பலன்கள் கிடைக்கும். புதிய வீடு அல்லது வாகனம் வாங்கும் வாய்ப்பு ஏற்படலாம். பணிபுரிபவர்களுக்கு சம்பள உயர்வு, பதவி உயர்வு கிடைக்கலாம். வேலை மாற்ற நினைப்பவர்களுக்கும் சாதகமான காலம். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கலாம். தேவையற்ற கவலைகளைத் தவிர்ப்பது நல்லது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9c847378-f388-42a9-a184-26834efd048b/26-6aaf67b2bb7e7.webp' /></p><p><b>

கடகம் - </b>கடக ராசிக்காரர்கள் இந்த வாரம் பல பயணங்களை மேற்கொள்வார்கள். குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். ஆன்மீக நாட்டம் அதிகரித்து, புனித யாத்திரை செல்லலாம். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. ஆடம்பரப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். குடும்பப் பிரச்சனைகள் முடிவுக்கு வரலாம்.</p><p><b>

சிம்மம் - </b>சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் முன்னேற்றமும் நல்ல நிதி ஆதாயமும் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. புதிய தொழில் தொடங்கினால் நல்ல லாபம் கிடைக்கலாம். நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடுவீர்கள். நிதி நிலையும் மேம்படும்.
</p><p><b>
கன்னி - </b>கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் நன்மை தரும். குடும்பத்தினரின் முழு ஆதரவும், நிதி நிலைமையில் முன்னேற்றமும் கிடைக்கும். பயணங்கள் மூலம் நிதி ஆதாயம் ஏற்படலாம். பெரிய முடிவுகளை எடுப்பதற்கு முன் குடும்பத்தினர் அல்லது நண்பர்களின் ஆலோசனையைப் பெறுவது நல்லது.</p><p>
</p><p><b>
துலாம் -</b> துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும். வேலை மற்றும் தொழிலில் நல்ல பலன்களைப் பெறுவீர்கள். உங்கள் திட்டங்களை ரகசியமாக வைத்துச் செயல்பட்டால் வெற்றி கிடைக்கலாம். இருப்பினும், ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மன அழுத்தம் மற்றும் எதிர்மறை எண்ணங்களைத் தவிர்க்க முயற்சி செய்யுங்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8ef3a390-1324-4dce-a0d9-6cc4ee9db718/26-6aaf67b37441f.webp' /></p><p>
</p><p><b>
விருச்சிகம் - </b>விருச்சிக ராசிக்காரர்களின் மதிப்பும் மரியாதையும் இந்த வாரம் அதிகரிக்கும். வேலைகளில் நல்ல வெற்றி கிடைக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பணிகள் முடிவுக்கு வரும். பணிபுரிபவர்களுக்கு முன்னேற்றம் கிடைக்கலாம். நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் வாக்குவாதங்கள் ஏற்படலாம் என்பதால் பொறுமையுடன் செயல்படுவது நல்லது.</p><p><b>

தனுசு -&nbsp;</b>தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் கலவையான பலன்கள் கிடைக்கும். சிறிய வேலைகளுக்குக்கூட அதிக முயற்சி தேவைப்படலாம். பொறுமையுடன் செயல்பட்டால் வெற்றி கிடைக்கும். நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரின் முழு ஆதரவும் கிடைக்கும்.
</p><p><b>
மகரம் - </b>மகர ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சற்று மன அழுத்தமும் பதற்றமும் இருக்கலாம். வேலையில் கவனமாக இருக்க வேண்டும்; அலட்சியம் பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். இருப்பினும், நிதி, குடும்பம் மற்றும் ஆரோக்கியம் தொடர்பான விஷயங்கள் சாதகமாக இருக்கும்.
</p><p><b>
கும்பம் - </b>கும்ப ராசிக்காரர்கள் இந்த வாரம் தேவையற்ற செலவுகளால் சிரமப்படலாம். எனவே செலவுகளை கட்டுப்படுத்துவது நல்லது. ஆரோக்கியத்திலும் கவனம் தேவை. செய்யும் வேலையில் முழு கவனத்துடன் செயல்பட்டால் நல்ல பலன்களையும், பணியிடத்தில் முன்னேற்றத்தையும் பெறலாம்.
</p><p><b>
மீனம் - </b>மீன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சிறப்பாக இருக்கும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறலாம். பணியிடத்தில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் கிடைக்கலாம். வேலை மாற்றம் குறித்து யோசிப்பவர்களுக்கு இந்த வாரம் சாதகமாக இருக்கும். மொத்தத்தில் வேலை, தொழில் மற்றும் நிதி நிலை என அனைத்திலும் நல்ல பலன்கள் கிடைக்கும்.</p><p><b>இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).&nbsp; &nbsp; &nbsp;</b> &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்<a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"> </a><b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">&nbsp;</a></td></tr></tbody></table><p><br></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-20T04:58:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கட்டுநாயக்கவில் சட்டவிரோத போதைப்பொருட்களுடன் 3 வெளிநாட்டு பெண்கள் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/3-foreign-women-arrested-with-drugs-katunayake-1789879369"></link>
            <id>https://ibctamil.com/article/3-foreign-women-arrested-with-drugs-katunayake-1789879369</id>
            <summary type="text">தாய்லாந்தின் பாங்கொக் நகரிலிருந்து இலங்கை வந்த மூன்று தாய்லாந்து பெண்கள் குஷ் மற்றும் ஹசீஸ் போதைப்பொருட்களுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்...</summary>
            <content type="html"><![CDATA[<p>தாய்லாந்தின் பாங்கொக் நகரிலிருந்து இலங்கை வந்த மூன்று தாய்லாந்து பெண்கள் குஷ் மற்றும் ஹசீஸ் போதைப்பொருட்களுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p>
இன்று (20.09.2026) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலைய வருகை முனையத்தில் போதைப்பொருள் பணியக அதிகாரிகள் மேற்கொண்ட இரு வேறு சோதனை நடவடிக்கைகளின்போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p>
முதலாவது சோதனையின்போது 3 கிலோ 220 கிராம் குஷ் மற்றும் 1 கிலோ 852 கிராம் ஹசீஸ் போதைப்பொருளை வைத்திருந்த 38 வயதுடைய தாய்லாந்து பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p></p><h2>மேலதிக விசாரணை</h2><p>
</p><p>
இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட இரண்டாவது சோதனையில், 1 கிலோ 994 கிராம் குஷ் மற்றும் 620 கிராம் ஹசீஸ் போதைப்பொருளுடன் 31 வயதுடைய தாய்லாந்து பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dc28847b-04d1-432f-ae24-95f994ffe23b/26-6aaf66a2dce61.webp' /></p><p>
</p><p>
அவருக்கு உடந்தையாக இருந்ததாகக் கூறப்படும் அதே விமானத்தில் பயணித்த 36 வயதுடைய மற்றொரு தாய்லாந்து பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
சம்பவம் தொடர்பில்&nbsp; போதைப்பொருள் பணியகத்தினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-20T04:54:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தாழ்நிலப் பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/flood-warning-for-mahaweli-river-basin-1789879694"></link>
            <id>https://jvpnews.com/article/flood-warning-for-mahaweli-river-basin-1789879694</id>
            <summary type="text">கண்டியில் மகாவலி கங்கையை அண்மித்த தாழ்நிலப் பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுகண்டி - பஸ்பாக கோரளை பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>கண்டியில் மகாவலி கங்கையை அண்மித்த தாழ்நிலப் பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது</p><p>கண்டி - பஸ்பாக கோரளை பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட மகாவலி கங்கையை அண்மித்த தாழ்வான பகுதிகளில் குறிப்பிடத்தக்க வெள்ள அபாயம் நிலவுவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.</p><p>இதன் காரணமாக, கண்டி மாவட்டத்தில் மகாவலி கங்கையை அண்மித்த தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-20T04:48:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிக்பாஸ் 10 ஆரம்பித்து 13 நாள்!! இந்த வாரம் வீட்டைவிட்டு வெளியேறிய நபர்...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/manivannan-had-been-evicted-in-biggbosstamil10-1789880367"></link>
            <id>https://viduppu.com/article/manivannan-had-been-evicted-in-biggbosstamil10-1789880367</id>
            <summary type="text">பிக்பாஸ் சீசன் 10பிக்பாஸ் சீசன் 10 கடந்த செப்டம்பர் 6 ஆம் தேதி தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. ஆரம்பித்த 3 நாட்களிலேயே பிளாக்...</summary>
            <content type="html"><![CDATA[<h2>பிக்பாஸ் சீசன் 10</h2><p>பிக்பாஸ் சீசன் 10 கடந்த செப்டம்பர் 6 ஆம் தேதி தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. ஆரம்பித்த 3 நாட்களிலேயே பிளாக் பாண்டி உடல்நலக்குறைவால் பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறிய நிலையில் முதல் வார எவிக்‌ஷனின் சவின்யா வெளியேறினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/88f98253-5abb-4c5f-83e0-5cb82cab318f/26-6aaf68329476b.webp' /></p><p> </p><p>இதனையடுத்து பிக்பாஸ் வீட்டில் பல சண்டைகள் வாக்குவாதங்கள் நடந்து வந்தது. இந்நிலையில் இந்த வாரம் விக்‌ஷனின் யார் வெளியேறியுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.</p><p> பிளாக் பாண்டிக்கு பதில் உள்ளே வந்த மணிவண்ணன் தான் இந்த வீட்டைவிட்டு இந்த வாரம் எவிக்டாகி வெளியேறியிருக்கிறார். அவரின் எவிக்ட்டை பார்த்த பலரும், எதிர்ப்பார்த்த நபர் தான் என்று கருத்துக்களை கூறி வருகிறார்கள்.</p>]]></content>
            <updated>2026-09-20T04:45:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை வந்த மூன்று தாய்லாந்து பெண்கள் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/three-thai-women-arrested-upon-arrival-sri-lanka-1789879255"></link>
            <id>https://jvpnews.com/article/three-thai-women-arrested-upon-arrival-sri-lanka-1789879255</id>
            <summary type="text">தாய்லாந்தின் பேங்கொக்கிலிருந்து இலங்கை வந்த மூன்று தாய்லாந்து பெண்கள், 5 கிலோவுக்கும் அதிகமான ‘குஷ்’ ரக போதைப்பொருள் மற்றும் 2.4 கிலோ ஹஷிஷ் போதைப்பொரு...</summary>
            <content type="html"><![CDATA[<p>தாய்லாந்தின் பேங்கொக்கிலிருந்து இலங்கை வந்த மூன்று தாய்லாந்து பெண்கள், 5 கிலோவுக்கும் அதிகமான ‘குஷ்’ ரக போதைப்பொருள் மற்றும் 2.4 கிலோ ஹஷிஷ் போதைப்பொருளுடன் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>காவல்துறை ஊடகப் பிரிவு இந்த தகவலைத் தெரிவித்துள்ளது.</p><p>கைது செய்யப்பட்டவர்கள் 38, 36 மற்றும் 31 வயதுடைய தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த பெண்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>பேங்கொக்கிலிருந்து வானூர்தி மூலம் இலங்கை வந்த அவர்கள், சுங்க அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-09-20T04:41:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[தேர்தலில் வாக்களிக்க விரும்பும் வெளிநாட்டு வாழ் இஸ்ரேலியர்கள்... தடுத்து நிறுத்த போராடும் நெதன்யாகு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/netanyahu-trying-to-stop-them-1789879308"></link>
            <id>https://news.lankasri.com/article/netanyahu-trying-to-stop-them-1789879308</id>
            <summary type="text">Netanyahu is trying to stop them: நெதன்யாகு அவர்களைத் தடுக்க முயற்சிக்கிறார்.
இஸ்ரேல் தேர்தலைச் சந்திக்க இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், வெளிநாட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>Netanyahu is trying to stop them: நெதன்யாகு அவர்களைத் தடுக்க முயற்சிக்கிறார்.
</p><p>இஸ்ரேல் தேர்தலைச் சந்திக்க இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், வெளிநாட்டு வாழ் இஸ்ரேலியர்கள் வாக்களிக்க முடியாத சூழல் உருவாகியுள்ளது.</p><h2>நேர்மைத்தன்மை</h2><p>
வெளிநாடுகளில் வசிக்கும் பல்லாயிரக்கணக்கான இஸ்ரேலியர்கள் வாக்களிப்பதற்காகத் தாயகம் திரும்பத் தயாராகி வரும் நிலையில், அவர்கள் வாக்களிக்க முடியாத வகையில் முடக்க பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் லிகுட் கட்சி முயற்சி செய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0e5db0fc-298e-4883-b12e-0eedc98c66e8/26-6aaf640e11055.webp' /></p><p>
</p><p>வெளிநாட்டில் வசிக்கும் இஸ்ரேலியர்கள் தேர்தல் நாளன்று தாயகம் திரும்ப உதவும் ஒரு மக்கள் இயக்கமான Fly &amp; Vote திட்டத்தை முடக்குமாறு இஸ்ரேலின் மத்திய தேர்தல் குழுவிடம் லிகுட் கட்சி புதன்கிழமை அன்று மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது. </p><p>இது சட்டவிரோதமான மற்றும் வெளிநாட்டு நிதியுதவி பெறும் ஒரு நடவடிக்கை என்றும், இது தேர்தலின் நேர்மைத்தன்மைக்குக் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்றும் லிகுட் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. </p><p>மிகக் குறைந்த வாக்கு வித்தியாசங்களே பெரும்பாலும் தேர்தல் முடிவுகளைத் தீர்மானிக்கும் ஒரு நாட்டில், நாட்டின் அடுத்த தலைவரைத் தீர்மானிப்பதில் இந்த வாக்குகள் முக்கியப் பங்காற்றக்கூடும்.</p><p></p><p>
</p><p>வெளிநாடுகளில் உள்ள குடிமக்கள் தபால் மூலம் வாக்களிக்கக்கூடிய பெரும்பாலான மேற்கத்திய ஜனநாயக நாடுகளைப் போலல்லாமல், இஸ்ரேல் தபால் வாக்குப்பதிவை அனுமதிப்பதில்லை; தூதர்கள் மற்றும் அதிகாரப்பூர்வ பிரதிநிதிகள் மட்டுமே நாட்டிற்கு வெளியே இருந்து வாக்களிக்க முடியும்.</p><p> வெளிநாடுகளில் உள்ள சாதாரண குடிமக்கள் தேர்தலில் வாக்களிக்க தாயகம் திரும்ப வேண்டும் அல்லது தங்கள் வாக்களிக்கும் உரிமையை இழக்க நேரிடும்.</p><p> அக்டோபர் 27 அன்று நடைபெறவுள்ள வாக்கெடுப்பானது, நெதன்யாகுவின் வலதுசாரி மற்றும் தீவிர மதப்பற்றுள்ள (ultra-Orthodox) கூட்டணி ஆட்சியின் கீழ் அமைதியற்ற சூழலில் கழிந்த நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் முதல் தேசியத் தேர்தலாக அமையும்; </p><p>இக்காலகட்டத்தில், நீதித்துறை சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு எதிராக தாராளவாதக் கொள்கை கொண்ட இஸ்ரேலியர்கள் நடத்திய பெரும் போராட்டங்களும், 2023 அக்டோபர் 7 அன்று நடத்தப்பட்ட தாக்குதலும், அதைத் தொடர்ந்து மூன்று ஆண்டுகளாகப் பல்வேறு முனைகளில் நடைபெற்ற போரும் இடம்பெற்றன.</p><h2>எதிர்க்கட்சிகளுக்கு உதவக்கூடும்</h2><p> சமீபத்திய கருத்துக் கணிப்புகளின்படி, நெதன்யாகுவின் கூட்டணி மற்றும் அவரது ஆழமாகப் பிளவுபட்ட எதிர்ப்பு ஆகிய இரண்டும் அரசாங்கத்தை அமைப்பதற்குத் தேவையான 61-ஆசனங்களில் பெரும்பான்மையை இழக்கின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f8c0b511-038b-458c-b405-f1277e5e05e4/26-6aaf640ebccca.webp' /></p><p> </p><p>இந்த நிலையில், நெருக்கமான போட்டியில், இஸ்ரேலிய வெளிநாட்டவர்களின் வருகை எதிர்க்கட்சிகளுக்கு உதவக்கூடும் என்று நெதன்யாகுவின் லிகுட் கட்சி அஞ்சுகிறது. </p><p>Fly &amp; Vote திட்டத்தை முன்னெடுத்துள்ள அமைப்பு தெரிவிக்கையில், 35,000-க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் பதிவு செய்துள்ளதாகவும்; மேலும், 50,000-க்கும் மேற்பட்டோர் வாக்களிப்பதற்காகத் திரும்பத் திட்டமிட்டுள்ளதாக உள்நாட்டு ஆய்வுகள் தெரிவிக்கின்றன. </p><p>ஆனால், அந்தக் குழு எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியுடன் தொடர்புடையது என்று லிகுட் கட்சி கூறுகிறது; அக்குழுவும் அக்கட்சியும் அத்தகைய தொடர்பு எதையும் மறுத்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9975172a-e024-449c-8996-9b3a2dabb3b4/26-6aaf640f6df28.webp' /></p><p>
</p><p>வெளிநாட்டு வாழ் இஸ்ரேலியர்கள் தங்கள் பயணச்சீட்டுகளுக்குத் தாங்களே பணம் செலுத்தினாலும், முன்னுரிமை விமானப் பயண அணுகல் மற்றும் குழு தள்ளுபடி விகிதங்கள் ஆகியவை இஸ்ரேலிய சட்டத்தின் கீழ் தேர்தல் இலஞ்சத்திற்கு ஒப்பான, தடைசெய்யப்பட்ட சலுகைகள் என லிகுட் கட்சி வாதிடுகிறது.</p><p> இதனிடையே, லிகுட் கட்சியின் எதிர்ப்பை அடுத்து, தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என்ற வெளிநாட்டு வாழ் இஸ்ரேலியர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. </p><p>ஆனால், தேர்தல் நாட்களில் விமானப் போக்குவரத்தை முடக்கும் திட்டத்தையும் நெதன்யாகு முன்னெடுக்கலாம் என்ற அச்சமும் எழுந்துள்ளது.
</p><p>இருப்பினும், தீவிர பழமைவாத யூத வாக்காளர்கள் பாரம்பரியமாக இதுபோன்ற எதிர்ப்புகள் இன்றி, பெரும்பாலும் நியூயார்க்கிலிருந்து பெருந்திரளாகத் தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பி வாக்களித்து வந்துள்ளனர்; மேலும், வெளிநாடுகளிலிருந்து வாக்களிப்பதை சாத்தியமாக்கும் சட்டத்தை லிகுட் கட்சி முன்னரே முன்மொழிந்துள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-20T04:38:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rusath</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை மக்கள் எதிர்பார்த்து நிற்கும் அனோஜனின் விடுதலை.. தமிரசுக் கட்சி முன்வைத்துள்ள கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/srineshan-mp-anojan-sivarasa-death-sentence-saudi-1789875338"></link>
            <id>https://tamilwin.com/article/srineshan-mp-anojan-sivarasa-death-sentence-saudi-1789875338</id>
            <summary type="text">அனோஜனின் விடுதலை அல்லது அவர்கள் தண்டனை குறைப்பு தொடர்பில் இஸ்லாமியமாக சகோதரர்கள்,
அரசியல்வாதிகள் இந்த விடயத்தை சாதகமான முறையில் பரிசோதனை செய்து அவருட...</summary>
            <content type="html"><![CDATA[<p>அனோஜனின் விடுதலை அல்லது அவர்கள் தண்டனை குறைப்பு தொடர்பில் இஸ்லாமியமாக சகோதரர்கள்,
அரசியல்வாதிகள் இந்த விடயத்தை சாதகமான முறையில் பரிசோதனை செய்து அவருடைய
விடுதலைக்கு அவருடைய தண்டனை குறைப்புக்கான வழிவகைகளை செய்ய வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்
ஞானமுத்து சிறீநேசன் தெரிவித்துள்ளார்.</p><p>இன்று (19.09.2026)
மட்டக்களப்பு செட்டிபாளையத்திலுள்ள அவரது இல்லத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர்
சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். </p><p>இதன்போது அவர் மேலும்
தெரிவிக்கையில், "இலங்கையிலிருந்து சவூதி அரேபியாவில் தொழில் நிமித்தமாக சென்று பணியாற்றிய
அம்பாறை மாவட்டம் நற்பட்டிமுளை கிராமத்தைச் சேர்ந்த சிவராஜா அனோஜனது நிலைமை
தொடர்பாக அண்மையில் வேதனையான தண்டனை தொடர்பான விடயம் பரவலாகியுள்ளது.</p><h2>முன்வைக்கப்படும் கோரிக்கை..&nbsp;</h2><p>
</p><p>


இந்த விடயத்தில் இலங்கை அரசு தனது முழுமையான கவனத்தை செலுத்த வேண்டும் என்பது
எனது வேண்டுகோளாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b595717e-8158-4d05-af65-51f6cabe0af2/26-6aaf56122d66e.webp' /></p><p> </p><p>அனோஜனின் பெற்றோர் ஜனாதிபதியை நேரில் சந்தித்து
உரையாடுவதற்கும், தனது மகனுக்கு நேர்ந்துள்ள விடயத்தில் இருந்து தண்டனையை
குறைப்பதற்கு அல்லது விடுவிப்பதற்கு உரிய இராஜதந்திர நடவடிக்கையை மனிதாபிமான
அடிப்படையில் செய்யுமாறு கோரி இந்த ஏற்கனவே ஜனாதிபதிக்கு நாம் 8 நாடாளுமன்ற உறுப்பினர்களும் கையெப்பமிட்டு எங்களது வேண்டுகோளை விடுத்து இருக்கின்றோம்.
அதற்குரிய பதில் இன்னும் எமக்கு கிடைக்கவில்லை. </p><p>இருந்தபோதிலும் அனோஜனின் தண்டனை
தொடர்பில் வெளிய விவகார அமைச்சு மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த
தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபுவிடத்திலும் இந்த விடயம் தொடர்பில் நாங்கள் தெரிவித்து இருக்கின்றோம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9c530dc3-9c25-468b-9f4a-0ab2ef2c2968/26-6aaf61b049733.webp' /></p><p> </p><p>அவர்களும் இந்த
விடயத்தில் தீவிரமான நடவடிக்கைகளை எடுக்கப்போவதாக அவர்கள்
கூறியிருக்கின்றார்கள் அதனை விரைவாக எடுக்க வேண்டும் என நாம் கேட்கின்றோம்" என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p>அதேநேரம்,&nbsp;சவூதி அரேபியாவில் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படும் சிவராசா
அனோஜன் விவகாரம் குறித்து, வெளிவிவகார அமைச்சு உடனடியாக உத்தியோகபூர்வமாக
உறுதிப்படுத்த வேண்டும் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர்
எம்.ஏ.சுமந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
</p><p>
அனோஜனின் விடுதலைக்காகத் தமிழ்பேசும் மக்களின் அரசியல் பேரவை சார்பில் சவூதி
அரேபிய தூதரக உயர்மட்ட அதிகாரிகளைச் சந்திப்பதற்கு நேரம் கோரவுள்ளதாகவும் அவர்
தெரிவித்துள்ளார்.</p><h6><b>மேலதிக தகவல் - ராகேஷ்&nbsp;</b></h6><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-20T04:34:04+00:00</updated>
        </entry>
    </feed>
