<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-08-17T04:31:37+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Tony</name>
            </author>
            <title type="text"><![CDATA[3 நாளில் வெளிநாடுகளில் லாபத்தை தொட்ட விஸ்வநாத் அண்ட் சன்ஸ்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/viswanathan-and-son-overseas-box-office-1786938984"></link>
            <id>https://cineulagam.com/article/viswanathan-and-son-overseas-box-office-1786938984</id>
            <summary type="text">விஸ்வநாத் அண்ட் சன்ஸ்சூர்யா தமிழ் சினிமாவின் அடுத்த உச்ச நட்சத்திரமாக வளர்ந்து வருகிறார். இவர் நடிப்பில் இந்த வருடம் வெளியான கருப்பு ஏற்கனவே ரூ 340 கோ...</summary>
            <content type="html"><![CDATA[<h2>விஸ்வநாத் அண்ட் சன்ஸ்</h2><p>சூர்யா தமிழ் சினிமாவின் அடுத்த உச்ச நட்சத்திரமாக வளர்ந்து வருகிறார்.</p><p> இவர் நடிப்பில் இந்த வருடம் வெளியான கருப்பு ஏற்கனவே ரூ 340 கோடிகள் வரை வசூல் செய்து பிரமாண்ட சாதனையை நிகழ்த்தியது. இந்நிலையில் தற்போது வெளியான விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படமும் மிகப்பெரிய வசூல் சாதனை நடத்தி வருகிறது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cea63647-166b-42aa-8977-b303d2ea8f14/26-6a82866adf860.webp' /></p><p>அதிலும் வெளிநாடுகளில் இந்த படம் 4.5 மில்லியன் டாலர் பெற்றால் லாபம் இருந்த நிலையில், தற்போது இப்படம் 4+ மில்லியன் டாலர் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இதனால் இப்படம் இன்றே லாபத்திற்குள் வந்துவிடும் என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்களில் கூறப்படுகிறது. கண்டிப்பாக சூர்யாவிற்கு இந்த வருடம் செம அதிர்ஷ்டமான வருடம் என்றே ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-08-17T04:30:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Fathima</name>
            </author>
            <title type="text"><![CDATA[தைரியமாக இருங்க! த்ரிஷாவுக்கு ஆறுதல் கூறும் ரசிகர்கள்- ஏன்?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/trisha-attend-cm-event-in-independence-day-1786940838"></link>
            <id>https://manithan.com/article/trisha-attend-cm-event-in-independence-day-1786940838</id>
            <summary type="text">முதலமைச்சர் விஜய் பங்கேற்று கொடியேற்றிய சுதந்திர தினவிழாவில் பங்கேற்றார் நடிகை த்ரிஷா கிருஷ்ணன்.

முதல் வரிசையில் அவர் அமர்ந்திருக்க விஜய் சல்யூட் அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>முதலமைச்சர் விஜய் பங்கேற்று கொடியேற்றிய சுதந்திர தினவிழாவில் பங்கேற்றார் நடிகை த்ரிஷா கிருஷ்ணன்.
</p><p>
முதல் வரிசையில் அவர் அமர்ந்திருக்க விஜய் சல்யூட் அடிக்க பதிலுக்கு த்ரிஷாவும் சல்யூட் அடித்தார், இந்த வீடியோ காட்சிகள் வைரலாகின.
</p><p>
அத்துடன் த்ரிஷா அன்றைய தினம் எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட கமெண்டுகள் குவிந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ab0c2089-9d02-4323-b31f-7541aa2efd11/26-6a828e5eeedc5.webp' /><br></p><p>
</p><p>
உங்களை யார் முதல் வரிசையில் அமரவைத்தது? நீங்கள் ஏன் வந்தீர்கள்? எங்க அண்ணாவை விட்டுவிடுங்கள் என பலதரப்பட்ட எதிர்மறையான கமெண்டுகள் குவிந்தது.
</p><p>
இந்நிலையில் இவருக்கு ஆதரவாகவும் கமெண்டுகள் பதிவாகிறது, முதலமைச்சர் நிகழ்ச்சிக்கு அவ்வளவு எளிதில் அழைப்பு இல்லாமல் யாரும் வரமுடியாது, முறையான அழைப்பு இருந்ததால் மட்டுமே அவர் வந்துள்ளார், த்ரிஷாவை குறை கூறுவதை நிறுத்துங்கள் என கூறுகின்றனர்.
</p><p>
அத்துடன் தைரியமாக இருங்கள், குறை சொல்வதை கண்டுகொள்ளாதீர்கள் எனவும் ஹார்ட்டுகளை பறக்கவிட்டுள்ளனர்,&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b63c1abb-d5d9-42de-8b36-321147ad7a01/26-6a828e5fa0352.webp' /><br></p>]]></content>
            <updated>2026-08-17T04:30:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பில் சிறுவனுக்கு நேர்ந்த துயரம் ; பெற்றோர் அதிர்ச்சி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/boy-died-falling-apartment-building-in-colombo-1786941067"></link>
            <id>https://jvpnews.com/article/boy-died-falling-apartment-building-in-colombo-1786941067</id>
            <summary type="text">&amp;nbsp; கொழும்பு 09 பகுதியிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பொன்றில் இருந்து சிறுவன் ஒருவன் கீழே விழுந்து உயிரிழந்தார். 

 உயிரிழந்தவர் கொழும்பு 09 பகுதிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; கொழும்பு 09 பகுதியிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பொன்றில் இருந்து சிறுவன் ஒருவன் கீழே விழுந்து உயிரிழந்தார். 

 உயிரிழந்தவர் கொழும்பு 09 பகுதியைச் சேர்ந்த 12 வயதுடையவர் என தெரியவந்துள்ளது. </p><p>

குறித்த சிறுவன் 14 மாடிகளைக் கொண்ட அந்த குடியிருப்பின் மேல் மாடியில் அமைந்துள்ள நீச்சல் தடாகத்திற்கு அருகில், மேலும் சில சிறுவர்களுடன் இணைந்து சுற்றியுள்ள காட்சிகளைப் பார்த்துக் கொண்டிருந்த போதே கீழே விழுந்துள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/62a74b07-81d8-440f-b42a-b1d00d2698d7/26-6a828e8ceebc3.webp' /></p><p> </p><p>

இந்தச் சம்பவம் தொடர்பில் மருதானை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-08-17T04:28:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் எரிபொருள் விலையை மீளாய்வு செய்ய வேண்டிய கட்டாயம் - விலையில் ஏற்படவுள்ள மாற்றம்..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/fuel-price-in-sri-lanka-1786938878"></link>
            <id>https://tamilwin.com/article/fuel-price-in-sri-lanka-1786938878</id>
            <summary type="text">இலங்கையில் எரிபொருள் விலையை மீளாய்வு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் அநுர கருணாதிலக தெரிவித்துள்ளார். 

சர்வதேச சந்தையில் எர...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் எரிபொருள் விலையை மீளாய்வு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் அநுர கருணாதிலக தெரிவித்துள்ளார்.</p><p> 

சர்வதேச சந்தையில் எரிபொருள் விலை உயர்வு, காப்புறுதி, போக்குவரத்து செலவுகள் அதிகரித்துள்ளதன் காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். </p><p>

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், </p><p>எரிபொருள் இறக்குமதிக்காக செலவிடப்படும் தற்போதைய செலவுகளை ஆய்வு செய்த பின், அரசாங்கத்திடம் புதிய மானியத்தை கோருவதற்கோ அல்லது எரிபொருள் விலையை திருத்துவது உள்ளிட்ட மாற்று நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கோ எரிசக்தி அமைச்சு தீர்மானித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/41a682ff-9014-4020-b33f-ae94e7969e0e/26-6a828b3b84ee1.webp' /></p><h2>முழுமையான மீளாய்வு</h2><p> </p><p>

இது தொடர்பான முழுமையான மீளாய்வு அடுத்த இரண்டு வாரங்களுக்குள் முன்னெடுக்கப்படவுள்ளது. முன்னர் அரசாங்கத்தால் வழங்கப்பட்டு பின்னர் இடைநிறுத்தப்பட்ட 15 பில்லியன் ரூபா மானியத்தை மீண்டும் பெற்றுக் கொள்வது அல்லது நஷ்டத்தை ஈடுசெய்ய விலையை திருத்துவது குறித்து இதன்போது பரிசீலிக்கப்படவுள்ளது. </p><p>

கடைசியாக ஜூன் மாதத்தில் எரிபொருள் விலை திருத்தம் செய்யப்பட்டு ஜூலையில் நடைமுறைப்படுத்தப்பட்ட நிலையில், இந்த மாதம் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0b2faee7-0a9e-403d-8db1-05c4525f1b3c/26-6a828b3c7a51c.webp' /></p><h2>எரிபொருள் விலைகள் அதிகரிப்பு</h2><p> </p><p>

இதேவேளை, மேற்கு ஆசியப் போர் தொடங்கிய பெப்ரவரி மாதத்துடன் ஒப்பிடுகையில், எரிபொருள் விலைகள் தற்போது 48 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஜனக ராஜகருண தெரிவித்துள்ளார். </p><p>

இந்தியா, சிங்கப்பூர் மற்றும் தென்கொரியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து எரிபொருள் இறக்குமதி செய்யப்பட்டாலும், சர்வதேச சந்தையில் நிலவும் விலை உயர்வு மற்றும் அதிகரித்துள்ள காப்புறுதி மற்றும் போக்குவரத்து கட்டணங்கள் பாரிய சவாலாக மாறியுள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-17T04:25:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[வாகனங்களின் விலைகளில் ஏற்படவுள்ள பாரிய மாற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/changes-in-prices-of-vehicles-1786937857"></link>
            <id>https://tamilwin.com/article/changes-in-prices-of-vehicles-1786937857</id>
            <summary type="text">வாகன இறக்குமதி வரிகள் மீதான 50 சதவீத கூடுதல் கட்டணம் நீடிக்கப்பட்டுள்ளமையினால் மே 15 ஆம் திகதிக்கு பின்னர் கடன் கடிதங்கள் மூலம் இறக்குமதி செய்யப்படும்...</summary>
            <content type="html"><![CDATA[<p>வாகன இறக்குமதி வரிகள் மீதான 50 சதவீத கூடுதல் கட்டணம் நீடிக்கப்பட்டுள்ளமையினால் மே 15 ஆம் திகதிக்கு பின்னர் கடன் கடிதங்கள் மூலம் இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் விலை அதிகரிக்கும் என இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் பிரசாத் மனேஜ தெரிவித்துள்ளார்.
</p><p>
இதன்படி, வாகனங்களின் விலை ரூ. 1.5 முதல் 5 மில்லியன் வரை அதிகரிக்கும் என்று வாகன இறக்குமதியாளர்கள் கூறுகின்றனர்.
</p><p>
வாகன இறக்குமதி வரிகள் மீது அரசாங்கத்தால் விதிக்கப்பட்ட 50 சதவீத கூடுதல் கட்டணம் டிசம்பர் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.</p><p>&nbsp;</p><h2>வாகனங்களின் விலை அதிகரிக்கும் அபாயம்</h2><p>
</p><p>
1988 ஆம் ஆண்டின் 83 ஆம் இலக்கச் சட்டத்தினால் திருத்தப்பட்ட (235 ஆம் அத்தியாயம்) சுங்கக் கட்டளைச் சட்டத்தின் 10அ பிரிவின் கீழ் ஜனாதிபதிக்களிக்கப்பட்ட அதிகாரங்களுக்கு அமைவாக இந்த நீடிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p><p>வாகனங்கள் மீதான கூடுதல் கட்டணத்தை நீட்டிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்காது என்று வாகன இறக்குமதியாளர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், டிசம்பர் 31 வரையிலான நீட்டிப்பு வாகனங்களின் விலையை அதிகரிக்கும் என்று கூறுகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/15dfbb5a-6345-4b47-8c63-c642ee7cc855/26-6a828c2fa90de.webp' />&nbsp; &nbsp;</p><p>
அதன்படி, மே 15 ஆம் திகதிக்குப் பிறகு இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் விலைகள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் பிரசாத் மனேஜ தெரிவித்தார்.
</p><p>
வாகன இறக்குமதிக்காக மே 15 ஆம் திகதிக்கு முன்னர் வழங்கப்பட்ட கடன் கடிதங்களில் மேலிருப்பு (overdraft) வசதி சேர்க்கப்படவில்லை என்றும், பல வாகன விற்பனை நிலையங்கள் தற்போது மேற்கூறிய திகதிக்கு முன்னர் வழங்கப்பட்ட கடன் கடிதங்களின் கீழ் இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களை விற்பனை செய்து வருவதாகவும் வாகன இறக்குமதியாளர்கள் கூறுகின்றனர்.</p><p>இதற்கமைய, மே 15 ஆம் திகதிக்கு பின்னர் வழங்கப்பட்ட கடன் கடிதங்களின் கீழ் இறக்குமதி செய்யப்படும் ஒரு வெகன் ஆர் (Wagon R) வகை காரின் விலை 5 இலட்சமும், ஒரு டொயோட்டா ரெய்ஸ் (Toyota RAIZE) காரின் விலை 10 இலட்சத்திலும், வெசல் (Vessel) வகை காரின் விலை 15 முதல் 20 இலட்சம் வரையிலும், ஒரு பிராடோ (Prado) ஜீப்பின் விலை 30 இலட்சத்திலும்,ஒரு லேண்ட் குரூசரின் (Land Cruiser) விலை சுமார் 50 இலட்சத்திலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது என வாகன இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.</p><p>

அதன்படி, ஒரு யாரிஸ் எக்ஸ் கிரேடு (YARIs X GRADE) காரின் விலை எதிர்காலத்தில் ரூ. 10.5 மில்லியனாகவும், ஒரு டொயோட்டா ரெய்ஸ் ஹைப்ரிட் (Toyota RAIZE hybrid) காரின் விலை ரூ. 15.5 மில்லியனாகவும் அதிகரிக்கும் என வாகன இறக்குமதியாளர்கள் கூறுகின்றனர்.&nbsp;&nbsp;</p><p>வாகன விலைகளை அடிக்கடி மாற்றாமல், பல்வேறு வழிமுறைகளைக் கையாண்டால், வாகன விலை ஏற்ற இறக்கங்களை தடுக்க வாய்ப்புள்ளது என்றும் கூறுகின்றனர்.</p><p>&nbsp;</p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-17T04:21:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தோனேசியாவில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/5-9-magnitude-quake-hits-flores-region-indonesia-1786938859"></link>
            <id>https://ibctamil.com/article/5-9-magnitude-quake-hits-flores-region-indonesia-1786938859</id>
            <summary type="text">இந்தோனேசியாவின் புளோரஸ் பகுதியில் மீண்டும் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இன்று (17) அதிகாலை 12:46 அளவில் 5....</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தோனேசியாவின் புளோரஸ் பகுதியில் மீண்டும் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p>இன்று (17) அதிகாலை 12:46 அளவில் 5.9 மெக்னிடியூட் அளவில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக ஜேர்மன் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.</p><p>

நிலப்பரப்பில் இருந்து 10 கிலோமீற்றர் ஆழத்தில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கம், ஆரம்பத்தில் தெற்கு அட்சரேகை 8.57 மற்றும் கிழக்கு தீர்க்கரேகை 121.55 ஆகிய ஆள்கூறுகளில் அடையாளம் காணப்பட்டது.</p><p></p><h2>சேத விபரங்கள்</h2><p>எனினும் இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேத விபரங்கள் தொடர்பில் இதுவரை எவ்வித தகவல்களும் வெளியாகவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p>இதேவேளை இந்தோனேசியாவில் கடந்த 15ஆம் திகதி ரிக்டர் அளவுகோலில் 7.7 ஆக பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதுடன், அதனைத் தொடர்ந்து பல பின்னதிர்வுகளும் ஏற்பட்டன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9feca331-6f12-4e5f-ac2b-0570f25664d7/26-6a828a6900672.webp' /></p><p> </p><p>

இதனால் 53 பேர் உயிரிழந்ததுடன், காயமடைந்த பலர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் பாதிக்கப்பட்டவர்களுக்காக அமைக்கப்பட்ட பாதுகாப்பு மையங்களில் 9,200 இற்கும் மேற்பட்டோர் தங்கியுள்ளனர்.&nbsp;</p><p>நிலநடுக்கத்தின் பின்னர் அந்நாட்டின் சுற்றுலாப் பகுதிகள் தொடர்பில் கட்டுப்பாடுகளை விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்ததுடன், இந்தோனேசிய துறைமுக அதிகாரசபையினால் கடல்வழிப் போக்குவரத்துச் சேவைகளை இடைநிறுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. </p><p>

இதற்கிடையில், நிலநடுக்கம் காரணமாக குறித்த மாகாணங்களில் மின்தடை ஏற்பட்டிருந்த போதிலும், தற்போது அதனை வழமைக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-17T04:18:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[கோர விபத்தில் தந்தையும் மகனும் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/father-and-son-dies-in-an-accident-1786938871"></link>
            <id>https://tamilwin.com/article/father-and-son-dies-in-an-accident-1786938871</id>
            <summary type="text">புத்தளம், கற்பிட்டி பிரதேசத்தில் மோட்டார் சைக்கிள் ஒன்று மின் கம்பத்தில் மோதியதில் ஏற்பட்ட விபத்தில் தந்தை மற்றும் மகன் உயிரிழந்துள்ளனர்.

மோட்டார் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>புத்தளம், கற்பிட்டி பிரதேசத்தில் மோட்டார் சைக்கிள் ஒன்று மின் கம்பத்தில் மோதியதில் ஏற்பட்ட விபத்தில் தந்தை மற்றும் மகன் உயிரிழந்துள்ளனர்.
</p><p>
மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த தந்தை மற்றும் மகன் இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக கற்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.
</p><p>
தனது மகனுடன் வீட்டிற்குத் தேவையான பொருட்களைக் கொள்வனவு செய்வதற்காக சந்தைக்கு சென்று கொண்டிருந்த போதே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. </p><h2><b>

மரணத்திற்கான காரணம்</b></h2><p>மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த தந்தை மற்றும் மகன் இருவரும் தலைக்கவசம் அணியாமல் பயணித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8c56e340-2bc1-4093-8fb7-50499f65ea28/26-6a82874b3e827.webp' /></p><p>இதனால் தலையில் ஏற்பட்ட பலத்த காயங்களே மரணத்திற்கான காரணம் என வைத்தியசாலை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>உயிரிழந்தவர்கள் துஸ்மந்த ரோஹண என்ற மீனவரும், அவரது மகனான ரவீன் கனிஷ்க என்ற 6 வயது பாடசாலை மாணவனும் என தெரியவந்துள்ளது.
</p><p>
குறித்த சிறுவன் கந்தக்குளிய குடாவ புனித செபஸ்தியார் பாடசாலையில் இரண்டாம் ஆண்டில் கல்வி கற்று வந்துள்ளார்.

விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p><p> </p>]]></content>
            <updated>2026-08-17T04:00:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞர் கைது!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/youth-arrested-with-ice-drug-1786935190"></link>
            <id>https://ibctamil.com/article/youth-arrested-with-ice-drug-1786935190</id>
            <summary type="text">அஹுங்கல்ல, கல்பொக்க பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் 19 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த இளைஞரிடமிருந்து கைப்பற்றப்பட்ட போதைப்பொருள்&amp;nb...</summary>
            <content type="html"><![CDATA[<p>அஹுங்கல்ல, கல்பொக்க பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் 19 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>குறித்த இளைஞரிடமிருந்து கைப்பற்றப்பட்ட போதைப்பொருள்&nbsp; 204 கிராம் 660 மில்லிகிராம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p>
</p><p>
அஹுங்கல்ல காவல் நிலைய அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்ப்பின்போதே இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p><p></p><h2>19 வயது இளைஞர்</h2><p>
</p><p>இரகசிய தகவலுக்கு அமைய காவல்துறை சுற்றிவளைப்பில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a11011b3-3b12-42d4-a93e-05a585285884/26-6a827e555234b.webp' /></p><p>

சந்தேகநபர் கொஸ்கொட பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞர் என காவல்துறை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p>
குறித்த போதைப்பொருள் எங்கிருந்து பெறப்பட்டது, யாரிடம் ஒப்படைப்பதற்காக எடுத்துச் செல்லப்பட்டது மற்றும் சந்தேகநபருக்கு பின்னால் உள்ள போதைப்பொருள் வலையமைப்பு தொடர்பான தகவல்களை கண்டறியும் நோக்கில் அஹுங்கல்ல காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-17T03:53:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரபல நடிகை சோபிதா துலிபாலா புடவையில் எடுத்த லேட்டஸ்ட் போட்டோ ஷுட்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/sobhita-dhulipala-latest-saree-attire-photoshoot-1786937222"></link>
            <id>https://cineulagam.com/article/sobhita-dhulipala-latest-saree-attire-photoshoot-1786937222</id>
            <summary type="text">சோபிதா துலிபாலாதமிழ் சினிமாவில் பிரம்மாண்டத்தின் உச்சமாக தயாரான படம் பொன்னியின் செல்வன். இந்த படத்தில் வானதி கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள...</summary>
            <content type="html"><![CDATA[<h2>சோபிதா துலிபாலா</h2><p>தமிழ் சினிமாவில் பிரம்மாண்டத்தின் உச்சமாக தயாரான படம் பொன்னியின் செல்வன். </p><p>இந்த படத்தில் வானதி கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர் தான் சோபிதா துலிபாலா. தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள படங்களில் தொடர்ந்து பிஸியாக நடித்து வருகிறார். </p><p>ஹாலிவுட்டில் கூட மங்கிமேன் திரைப்படத்தில் நடித்திருந்தார். சில வருடங்களுக்கு முன்பு தெலுங்கு சினிமாவின் டாப் நாயகன் நாக சைத்தன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். </p><p>அண்மையில் இவர் ஆரஞ்சு நிற புடவையில் அழகிய போட்டோ ஷுட் நடத்தியுள்ளார். இதோ அந்த போட்டோஸ்,&nbsp;</p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-17T03:50:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு : இன்று முதல் சாட்சியங்களை சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/easter-attack-case-court-order-to-submit-evidences-1786936843"></link>
            <id>https://ibctamil.com/article/easter-attack-case-court-order-to-submit-evidences-1786936843</id>
            <summary type="text">உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பில் 24 பிரதிவாதிகளுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை விசாரிக்கும் நிரந்தர நீதாய மேல் நீதிமன்...</summary>
            <content type="html"><![CDATA[<p>உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பில் 24 பிரதிவாதிகளுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை விசாரிக்கும் நிரந்தர நீதாய மேல் நீதிமன்றம் உத்தரவொன்றைப் பிறப்பித்துள்ளது.</p><p>அதன்படி, இன்று (17) முதல் பிரதிவாதிகள் தரப்பு சாட்சியங்களை அழைக்க உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>அரச தரப்பு சாட்சியங்கள் நிறைவடைந்ததை அடுத்து, 24 பிரதிவாதிகளுக்கும் எதிராகச் சாட்சியங்களை அழைக்கப் போதுமான காரணங்கள் உள்ளதாக நீதிபதிகள் குழாம் தீர்மானித்ததை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>224 பேர் கொல்லப்பட்டனர்&nbsp;</h2><p>
தலைமை நீதிபதி நவரத்ன மாரசிங்க, சுஜீவ நிஸ்ஸங்க மற்றும் ராமநாதன் கண்ணன் ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் குழாம், பிரதிவாதிகள் தரப்பு சாட்சியமளிக்க அழைப்பு விடுத்ததுடன், ஒவ்வொரு பிரதிவாதிக்கும் உரிய உரிமைகள் குறித்தும் விளக்கமளித்தது.
</p><p>
அத்துடன், அனைத்துப் பிரதிவாதிகளையும் தமது நிலைப்பாட்டை அறிவிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/207de084-919f-4068-8f9f-ea995d0f3eaf/26-6a82835494e39.webp' /></p><p>
</p><p>
இதன்போது, 6 ஆவது பிரதிாவதியான மொஹமட் ரிஸ்வான், தான் சாட்சியமளிக்கப் போவதில்லை எனவும் மௌனம் காக்கப் போவதாகவும் நீதிமன்றத்திற்குத் தெரிவித்தார்.</p><p>

ஏனைய பிரதிவாதிகள் கூண்டிலிருந்து சாட்சியமளிப்பது, கூண்டிலிருந்து அறிக்கை சமர்ப்பிப்பது அல்லது வெளியிலிருந்து சாட்சியங்களைச் சமர்ப்பிப்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளனர்.</p><p>2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தினத்தன்று தேவாலயங்கள் மற்றும் உல்லாச விடுதிகள் மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களில் சுமார் 224 பேர் கொல்லப்பட்டதுடன் 584 பேர் காயமடைந்தனர்.</p><p>இந்த தாக்குதல்களை நடத்திய சஹ்ரான் ஹாஷிம் மற்றும் அவரது பயங்கரவாதக் குழுவினரின் செயற்பாடுகள் தொடர்பில் 24 பிரதிவாதிகளுக்கு எதிராக 23,270 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.</p><p>&nbsp;</p><h2>நீதிமன்றப் பொருட்கள்&nbsp;</h2><p>
இதுவரை இடம்பெற்றுள்ள விசாரணைகளில் சுமார் 1,500 சாட்சிகள் சாட்சியமளித்துள்ளதுடன், ஆவணங்கள், குண்டு தயாரிக்கும் பொருட்கள் உள்ளிட்ட 2,076 நீதிமன்றப் பொருட்கள் அரச தரப்பினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
</p><p>
மேலும், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் நீதவான் முன்னிலையில் வழங்கப்பட்ட 10 ஒப்புதல் வாக்குமூலங்களும் விசாரணையின் போது சமர்ப்பிக்கப்பட்டன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2abdbbfa-4125-4394-bc61-e22d32af7866/26-6a8282d218793.webp' /></p><p>இதில் பிரதிவாதி மொஹமட் பிர்தௌஸ் வழங்கிய ஒப்புதல் வாக்குமூலம் சுயவிருப்பின் அடிப்படையில் வழங்கப்படவில்லை எனக் கூறி அதனை நீதிமன்றம் நிராகரித்தது.</p><p>
எனினும், ஏனைய ஒப்புதல் வாக்குமூலங்கள் சுயவிருப்பின் பேரிலேயே வழங்கப்பட்டதாகத் தீர்ப்பளித்த நீதிமன்றம், அவற்றைச் சான்றுகளாக ஏற்க அனுமதித்தது. ஐந்தாண்டு காலப்பகுதியில் 547 நாட்களுக்கு அரச தரப்பு சாட்சியங்கள் விசாரிக்கப்பட்டன.</p><p>

இந்த நிலையில் வழக்கில் அரச தரப்பு சார்பில் சிரேஷ்ட மேலதிக மன்றாடியார் நாயகம் ஹரிப்பிரியா ஜயசுந்தர, மேலதிக மன்றாடியார் நாயகம் சுதர்ஷன டி சில்வா ஆகியோருடன் அரச சட்டவாதிகளும் முன்னிலையாகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p>&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-17T03:49:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தோனேசியாவில் மீண்டும் நிலநடுக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/earthquake-in-indoneshia-1786937882"></link>
            <id>https://tamilwin.com/article/earthquake-in-indoneshia-1786937882</id>
            <summary type="text">இந்தோனேசியாவின் புளோரஸ் பகுதியில் 5.9 மெக்னிடியூட் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

குறித்த நிலநடுக்கம் இன்று (17.08.2026) அதிகாலை 12:46 அளவில் ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தோனேசியாவின் புளோரஸ் பகுதியில் 5.9 மெக்னிடியூட் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
</p><p>
குறித்த நிலநடுக்கம் இன்று (17.08.2026) அதிகாலை 12:46 அளவில் பதிவாகியுள்ளதாக ஜெர்மன் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.</p><p> </p><p>

நிலப்பரப்பில் இருந்து 10 கிலோமீற்றர் ஆழத்தில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கம், ஆரம்பத்தில் தெற்கு அட்சரேகை 8.57 மற்றும் கிழக்கு தீர்க்கரேகை 121.55 ஆகிய ஆள்கூறுகளில் அடையாளம் காணப்பட்டது.</p><h2>சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவு</h2><p> 

இதேவேளை கடந்த 15ஆம் திகதி இந்தோனேசியாவில் 7.7 மெக்னிடியூட் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2f09fbe8-1243-46fc-afab-ea46e679a3f9/26-6a828447a87a9.webp' /></p><p> </p><p>

அந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து பல அதிர்வுகள் பதிவாகியதுடன், இதில் 47 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-17T03:47:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Fathima</name>
            </author>
            <title type="text"><![CDATA[சமையல் எரிவாயு சிலிண்டருக்கான eKyc அவகாசம் நீட்டிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/deadline-extended-for-lpg-cylinder-ekyc-aug-23-1786937272"></link>
            <id>https://ibctamilnadu.com/article/deadline-extended-for-lpg-cylinder-ekyc-aug-23-1786937272</id>
            <summary type="text">சமையல் எரிவாயு சிலிண்டருக்கான eKyc அவகாசம் 23ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் பயன்படுத்தம் நுகர்வோர் eKyc மேற்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>சமையல் எரிவாயு சிலிண்டருக்கான eKyc அவகாசம் 23ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.<br></p><p>வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் பயன்படுத்தம் நுகர்வோர் eKyc மேற்கொள்ள வேண்டும் என்ற நடைமுறை கட்டாயமாக்கப்பட்டது.
</p><p>
இதற்காக நேற்று வரை காலக்கெடு வழங்கப்பட்ட நிலையில், 23ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
</p><p>
வீட்டில் இருந்தபடியே மொபைல் ஆப் மூலமாகவும், கேஸ் ஏஜென்ஸிக்கு நேரில் சென்றோ இதனை செய்ய முடியும்.
</p><p>
போலி எரிவாயு இணைப்புகளை கண்டறியவும், தகுதியான நபர்களுக்கு மானியம் வழங்குவதை உறுதி செய்யவும் இந்த பணிகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
ஆகஸ்ட் 23ம் தேதிக்குள் இதனை செய்யாவிட்டால் சிலிண்டர் கிடைப்பதில் சிக்கல் வரலாம் என்பது கூடுதல் தகவல்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3f2efe86-ceca-4dc1-9d68-54997aa9c8ae/26-6a8280cd79391.webp' /><br></p>]]></content>
            <updated>2026-08-17T03:32:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Manchu</name>
            </author>
            <title type="text"><![CDATA[மணமகனின் வலது பக்கம் மணமகள் அமர்வது ஏன்? பலரும் அறியாத ஜோதிட காரணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/do-you-know-bride-sitting-right-side-of-groom-1765959976"></link>
            <id>https://manithan.com/article/do-you-know-bride-sitting-right-side-of-groom-1765959976</id>
            <summary type="text">திருமணத்தின் போது மணமகனின் வலதுபக்கத்தில் மணமகளை ஏன் அமர வைக்கின்றனர் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.வலது பக்கத்தில் மணமகள்இந்து மதத்தின் படி த...</summary>
            <content type="html"><![CDATA[<p>திருமணத்தின் போது மணமகனின் வலதுபக்கத்தில் மணமகளை ஏன் அமர வைக்கின்றனர் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.</p><h2>வலது பக்கத்தில் மணமகள்</h2><p>இந்து மதத்தின் படி திருமணத்தில் பல சடங்குகள் பின்பற்றப்படுகின்றது. பெரும்பாலும் மணமக்கள் வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்பதற்காகவே இவ்வாறு செய்யப்படுகின்றது.</p><p>மேலும் இந்து மதத்தில் உள்ள மரபுகள், திருமணத்தில் செய்யப்படும் ஒவ்வொரு சடங்கும் அதிர்ஷ்டத்தையும், செழிப்பையும் அளிப்பதாக நம்பப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b5d1cac5-4c77-4cbc-98fa-f7b9947faa0f/25-6942c743dc2e0.webp' /></p><p>இந்து வேதத்தில் மனைவி வாமாங்கினி என்று அழைக்கப்படுகின்றது. மேலும் கணவரின் வலது பக்கத்தில், மணமகளின் இடது பக்கம் என்பதால் இதயத்திற்கு அருகே இருப்பதாக ஒரு உணர்வு காணப்படும் நிலையில், இதனால் தான் மணமகனின் வலதுபுறத்தில் அமர வைக்கின்றனர்.<br></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1c117fc5-1252-4f41-9c5b-d4a2154087fa/25-6942c74479296.webp' /></p><p>மணமகளின் இதயத்திற்கு அருகில் மணமகன் இருப்பதால் அதிக நெருக்கமாகவும், எப்பொழுதும் அன்பில் நிலைத்திருப்பார்கள் என்பதையும் குறிக்கின்றது.</p><p>ஆனால் சாஸ்திரங்களின் படி லட்சுமி தேவி விஷ்ணுவின் வலது பக்கத்தில் அமர்ந்திருப்பதை நாம் பார்த்திருப்போம். இதுவும் ஒரு காரணமாக இருக்கின்றது.<br></p><p>அதுமட்டுமல்லாமல் அர்த்தநாரீஸ்வரரிலும் இந்த வடிவத்தை நாம் காணமுடிவதுடன், சிவனும், பார்வதியும் ஒரே உடலில் இரண்டு பகுதிகளாகத் தோன்றுவதையும் குறிக்கின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d1086898-33d8-4768-b673-d5e2510fde67/25-6942c745166fc.webp' /></p><p>பண்டிதர்களின் கூற்றின்படி, கணவரின் வீட்டிற்குள் நுழைந்த மணமகள் அவரது வலது பக்கத்தில் அமர்ந்திருப்பது நல்ல அதிர்ஷ்டமாகவும், நிதி ஆதாயத்திற்கான நிகழ்வாகவும் பார்க்கப்படுகின்றது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><i>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன்<a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்<a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"><b> FOLLOW NOW</b></a>&nbsp; &nbsp; &nbsp; &nbsp;<br></i></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-17T03:30:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[மெஸ்ஸியை அடுத்து... ஓய்வு குறித்து சூசகமாகத் தெரிவித்த ரொனால்டோ]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/ronaldo-hints-at-retirement-1786905157"></link>
            <id>https://news.lankasri.com/article/ronaldo-hints-at-retirement-1786905157</id>
            <summary type="text">Ronaldo hints at retirement: விளையாட்டு வாழ்க்கையில் இந்த சீசனே தனது கடைசி சீசனாக இருக்கக்கூடும் என்று கிறிஸ்டியானோ ரொனால்டோ.
மிகவும் சிறப்பான விளையா...</summary>
            <content type="html"><![CDATA[<p>Ronaldo hints at retirement: விளையாட்டு வாழ்க்கையில் இந்த சீசனே தனது கடைசி சீசனாக இருக்கக்கூடும் என்று கிறிஸ்டியானோ ரொனால்டோ.
</p><p>மிகவும் சிறப்பான விளையாட்டு வாழ்க்கையில், இந்த சீசன் ஒரு வீரராகத் தனது கடைசி சீசனாக இருக்கக்கூடும் என்று கிறிஸ்டியானோ ரொனால்டோ குறிப்பிட்டுள்ளார்.</p><h2>கடைசி ஆண்டாக</h2><p>
</p><p>41 வயதான ரொனால்டோ, செவ்வாய்க்கிழமையன்று தனது இணையான ஜார்ஜினா ரோட்ரிக்ஸை மணந்துகொண்டார். மேலும், தனது குடும்பத்தை மையமாகக் கொண்ட எதிர்காலத்தைப் பற்றி அவர் திட்டமிட்டு வருவதாகவே தகவல் வெளியாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5d39bd43-a438-4299-a8ec-277f79d2deba/26-6a8202482a7f6.webp' /></p><p>
</p><p>ஐந்து முறை Ballon d'Or விருதும், ஐந்து முறை சாம்பியன்ஸ் லீக் பட்டங்களையும் வென்றுள்ள ரொனால்டோ, இங்கிலாந்து, ஸ்பெயின், இத்தாலி மற்றும் சவுதி அரேபியா ஆகிய நாடுகளில் லீக் தொடர்களின் கிண்ணங்களையும் வென்றுள்ளார்; மேலும், ஆண்கள் சர்வதேச கால்பந்து வரலாற்றிலேயே அதிக கோல்களை அடித்தவரும் இவரே. </p><p>போர்த்துகல் தேசிய அணியின் கேப்டனான ரொனால்டோ, சவுதி ப்ரோ லீக் சாம்பியனான அல்-நஸ்ர் அணியில் ஏறக்குறைய நான்கு ஆண்டுகளாக விளையாடி வருகிறார்; அங்கு அவரது ஒப்பந்தத்தில் இன்னும் ஓராண்டு காலம் எஞ்சியுள்ளது.</p><p></p><p> </p><p>இந்த நிலையிலேயே, இது அனேகமாக தனது கால்பந்து வாழ்க்கையின் கடைசி ஆண்டாக இருக்கலாம்; ஒரு சிறப்பான முத்திரையைப் பதித்துவிட்டுச் செல்ல விரும்புவதாகவும், தனது திருமணம் குறித்த 'வோக்' (Vogue) இதழுடனான நேர்காணலில் ரொனால்டோ கூறியுள்ளார்.</p><h2>லியோனல் மெஸ்ஸி</h2><p> </p><p>மேலும், தனது எதிர்காலத்திற்கான திட்டங்கள் அனைத்தும் வகுக்கப்பட்டுவிட்டதாகவும், தன்னை எப்போதும் மும்முரமாக ஈடுபடுத்திக்கொள்ளப் பல விடயங்கள் இருப்பதால், அவற்றில் ஒன்றை மட்டும் குறிப்பிடுவது கடினம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். </p><p>கால்பந்து விளையாட்டு ஒரு பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்தக்கூடும்; எனவே, ஒரே ஒரு வழியில் மட்டுமல்லாமல், பல்வேறு வழிகளில் நேரத்தை நிரப்ப வேண்டியிருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0020c9a5-7c4b-42c4-9eb8-d6b271c3a485/26-6a820248d262c.webp' /></p><p> </p><p>இதுவரை எட்டு முறை Ballon d'Or விருதை வென்றுள்ள அவரது நீண்டகாலப் போட்டியாளரான லியோனல் மெஸ்ஸி, தான் இன்னும் எவ்வளவு காலத்திற்கு கால்பந்து விளையாடப் போகிறேன் என்பது குறித்து உறுதியாகத் தெரியவில்லை என்று சமீபத்தில் கூறியிருந்தார்.</p><p> சமீபத்திய உலகக் கிண்ணம் தொடரில் மெஸ்ஸி எட்டு கோல்கள் அடித்து அர்ஜென்டினாவை இறுதிப் போட்டி வரை வழிநடத்த, ரொனால்டோவின் போர்த்துகல் அணி காலிறுதிக்கு முந்தைய சுற்றிலேயே வெளியேறும் நிலை ஏற்பட்டதுகுறிப்பிடத்தக்கது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-17T03:15:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[3 நாள் முடிவில் சூர்யாவின் விஸ்வநாத் &amp; சன்ஸ் படம் செய்துள்ள மொத்த வசூல்... எவ்வளவு தெரியுமா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/vishwanath-and-sons-3-days-bo-details-1786935182"></link>
            <id>https://cineulagam.com/article/vishwanath-and-sons-3-days-bo-details-1786935182</id>
            <summary type="text">விஸ்வநாத் &amp;amp; சன்ஸ்வாத்தி, லக்கி பாஸ்கர் போன்ற வெற்றிப் படங்களை கொடுத்த வெங்கட் அட்லூரி இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் அண்மையில் வெளியான படம் வ...</summary>
            <content type="html"><![CDATA[<h2>விஸ்வநாத் &amp; சன்ஸ்</h2><p>வாத்தி, லக்கி பாஸ்கர் போன்ற வெற்றிப் படங்களை கொடுத்த வெங்கட் அட்லூரி இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் அண்மையில் வெளியான படம் விஸ்வநாத் அண்ட் சன்ஸ்.</p><p> கடந்த ஆகஸ்ட் 14ம் தேதி வெளியான இப்படத்தில் மமிதா பைஜு, ராதிகா சரத்குமார், ரவீனா டாண்டன், ராஜீவ் மேனன், பவானி ஸ்ரீ, ஜார்ஜ் மரியம், நாசர், சுனில் என பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். </p><p>கருப்பு படத்தில் மாஸ் வேடத்தில் நடித்துள்ள சூர்யா விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்தில் ஜாலியான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.</p><p> குடும்பங்கள் கொண்டாடும் படமாக இப்படம் அமைந்துள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6c32b3ee-e5d6-4fd6-be52-8f6014f6363e/26-6a827c69c704d.webp' /></p><h2>பாக்ஸ் ஆபிஸ்</h2><p>
தற்போது சூர்யா அண்ட் சன்ஸ் 3 நாள் முடிவில் மொத்தமாக ரூ. 120 கோடி வரை வசூல் வேட்டை நடத்தியுள்ளதாம். வரும் நாட்களிலும் இப்படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/9X-u8W2teXo" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-08-17T03:14:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[வாகனங்கள் மீது விதிக்கப்பட்டுள்ள தற்காலிக வரிக் கட்டுப்பாடுகள்: அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sri-lanka-vehicle-import-lc-rates-drop-1786926363"></link>
            <id>https://ibctamil.com/article/sri-lanka-vehicle-import-lc-rates-drop-1786926363</id>
            <summary type="text">ஒவ்வொரு குடிமகனும் வாகனம் பயன்படுத்தக்கூடிய ஒரு சூழலை உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கம் என்று அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். 

மத்திய கிழக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஒவ்வொரு குடிமகனும் வாகனம் பயன்படுத்தக்கூடிய ஒரு சூழலை உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கம் என்று அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். </p><p>

மத்திய கிழக்கில் போர்ச் சூழல் முடிவுக்கு வந்தவுடன், வாகனங்கள் மீது விதிக்கப்பட்டுள்ள தற்காலிக வரிக் கட்டுப்பாடுகள் நீக்கப்படும் என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட வாகனக் கண்காட்சி மற்றும் அணிவகுப்பில் பிரதம விருந்தினராகப் பங்கேற்றபோது அமைச்சர் இந்தக் கருத்துக்களை முன்வைத்துள்ளார்.</p><p> </p><p></p><h2>அணிவகுப்பும் ஏற்பாடு&nbsp;</h2><p>சிறிய கார்கள் முதல் சூப்பர்கார்கள் வரையிலான பல்வேறு வகையான வாகனங்கள் இந்த அணிவகுப்பில் இடம்பெற்றிருந்தன.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7aa62be2-7f63-4f0a-81af-c24a21c6c30a/26-6a82551d218a8.webp' /></p><p>இது துறைமுக நகர வளாகத்திலிருந்து வாட்டர்ஸ் எட்ஜ் வரை சென்றது.
</p><p>
சமூகத்தில் பொறுப்பான வாகனப் பயணக் கலாசாரத்தையும், சுய ஒழுக்கத்துடன் கூடிய ஓட்டுதலையும் உருவாக்கும் நோக்கத்தில் இந்த வாகனக் கண்காட்சியும் அணிவகுப்பும் ஏற்பாடு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.</p><p>[TP2IRXB
]</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-17T03:13:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கைக்கு இழுத்துவரப்பட்ட ஷிரான் பாஸிக் தொடர்பில் திடுக்கிடும் தகவல் : பொலிஸார் விடுத்துள்ள தகவல்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/kanjipani-imran-will-soon-be-brought-to-sri-lanka-1786929568"></link>
            <id>https://tamilwin.com/article/kanjipani-imran-will-soon-be-brought-to-sri-lanka-1786929568</id>
            <summary type="text">வெளிநாட்டில் கைது செய்யப்பட்ட போதைப்பொருள் கடத்தல்காரரான ஷிரான் பாஸிக்கிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, சந்தேகநபருக்கு சொந்தமான சொத்துக்கள் உட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>வெளிநாட்டில் கைது செய்யப்பட்ட போதைப்பொருள் கடத்தல்காரரான ஷிரான் பாஸிக்கிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, சந்தேகநபருக்கு சொந்தமான சொத்துக்கள் உட்பட பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. </p><p>

கொழும்பு செட்டியார் தெருவில் உள்ள ஐந்து விடுதிகள் தனக்குச் சொந்தமானவை என அவர் விசாரணையின் போது தெரிவித்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். </p><p>

ஷிரானுக்கு சொந்தமான சொத்துக்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் விசாரணைக்குழுவினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p><p> </p><h2><b>

புலனாய்வுப் பிரிவினர் விசாரணை</b></h2><p>ஷிரானை 72 மணி நேரம் தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0ea9c9ab-ed66-4790-868a-38c18d6686e1/26-6a826d701300b.webp' /></p><p>சந்தேக நபர் குறித்து கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை நடத்தி வருகின்றனர். </p><p>

நாட்டை விட்டுத் தப்பியோடி டுபாயில் தலைமறைவாகியிருந்த ஷிரான் பாஸிக், அங்கு கைது செய்யப்பட்டு நேற்று முன்தினம் இலங்கைக்கு இழுத்து வரப்பட்டுள்ளார். 

48 வயதான ஷிரான் பாஸிக் தெஹிவளையைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. </p><p>கடந்த நாட்களில் நாட்டின் சிறைச்சாலைகளில் ஏற்பட்ட மோதல்களுடன் ஷிரானுக்கு தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். </p><p>

2012 ஆம் ஆண்டு வெலிக்கடை சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலுடனும் ஷிரானுக்கு தொடர்பு உள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-17T03:09:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[துப்பாக்கிகளை கையாளத் தெரியாத ஆயிரக்கணக்கான சிறை அதிகாரிகள்! வெளிவரும் தகவல்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/prison-officers-who-don-t-know-how-to-handle-guns-1786935679"></link>
            <id>https://tamilwin.com/article/prison-officers-who-don-t-know-how-to-handle-guns-1786935679</id>
            <summary type="text">இலங்கை சிறைச்சாலைகளில் பணியாற்றும் சுமார் 3069 சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் துப்பாக்கியை ஒருபோதும் தொட்டது கூட இல்லை என்ற அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகி...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை சிறைச்சாலைகளில் பணியாற்றும் சுமார் 3069 சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் துப்பாக்கியை ஒருபோதும் தொட்டது கூட இல்லை என்ற அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது.</p><h2>துப்பாக்கிப் பயிற்சி</h2><p>
</p><p>
தேசிய கணக்காய்வாளர் நாயகம் அலுவலகத்தால் வெளியிடப்பட்ட சிறைச்சாலைகள் திணைக்களத்தின் 2025 ஆண்டுக்கான கணக்காய்வு அறிக்கையின்படி, கைதிகளுடன் தொடர்பில் இருக்கும் 3,069 சிறைச்சாலை உத்தியோகத்தர்களுக்கு இதுவரை எதுவிதமான துப்பாக்கிப் பயிற்சியும் அளிக்கப்படவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3443fe11-d062-414b-b7dd-707d6ac3dd02/26-6a827b45c958d.webp' /></p><p>
</p><p>
கைதிகளை நிர்வகிப்பதற்கும் மற்ற முக்கிய நோக்கங்களை அடைவதற்கும் சிறைச்சாலை உத்தியோத்தர்களுக்குத் துப்பாக்கிப் பயிற்சி அளிப்பது அவசியம் என்று தேசிய கணக்காய்வாளர் நாயகம் அலுவலகம் கூறுகிறது.
</p><p>
2018 முதல் 2025 வரை, கைதிகளுடன் தொடர்பில் இருக்கும் 2389 அதிகாரிகளுக்குத் துப்பாக்கிப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கை காட்டுகிறது.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-17T03:09:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[தென்கொரியாவுடனான கூட்டு இராணுவ பயிற்சி குறித்து ட்ரம்பின் அதிரடி உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/trump-instructs-pentagon-reduce-military-exercises-1786934718"></link>
            <id>https://tamilwin.com/article/trump-instructs-pentagon-reduce-military-exercises-1786934718</id>
            <summary type="text">அமெரிக்கா மற்றும் தென்கொரியாவுக்கு இடையே நடைபெறவிருந்த 10 நாட்கள் கூட்டு இராணுவப் பயிற்சியைக் &quot;குறிப்பிடத்தக்க அளவில் குறைக்குமாறு&quot; அமெரிக்க ஜனாதிபதி ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்கா மற்றும் தென்கொரியாவுக்கு இடையே நடைபெறவிருந்த 10 நாட்கள் கூட்டு இராணுவப் பயிற்சியைக் "குறிப்பிடத்தக்க அளவில் குறைக்குமாறு" அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், பென்டகனுக்கு உத்தரவிட்டுள்ளார்.
</p><p>இப்பயிற்சிக்கான அதிகச் செலவு மற்றும் ஈரானுக்கு எதிரான நடவடிக்கைகளில் பங்கேற்க தென்கொரியா மறுத்தமை ஆகியவற்றைக் சுட்டிக்காட்டி அவர் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
</p><p>கூட்டுப் பயிற்சிகள் தொடங்குவதற்குச் சில மணி நேரங்களுக்கு முன்பு, 'ட்ரூத் சோஷியல்' தளத்தில் பதிவிட்ட ட்ரம்ப், இந்தப் பயிற்சிகளை முழுமையாக ரத்து செய்ய முடியாத நிலை உள்ளபோதிலும், இதில் அமெரிக்கா பங்கேற்பது குறித்துத் தாம் மகிழ்ச்சியடையவில்லை எனத் தெரிவித்துள்ளார்.</p><h2>சர்வதேச அளவில் கவனம்&nbsp;</h2><p>மேலும், வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன்னுடன் தனக்கு உள்ள "மிகச் சிறந்த உறவை" அவர் சுட்டிக்காட்டியதுடன், இந்தப் பயிற்சிகள் வடகொரியாவிற்குத் தேவையற்ற அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாகக் குறிப்பிட்டுள்ளார்.</p><p>ஆகஸ்ட் 17 முதல் 27 வரை நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ள இந்த 'உல்ச்சி ஃப்ரீடம் ஷீல்ட்' பயிற்சியில் சுமார் 18,000 தென்கொரிய இராணுவ வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.
</p><p>வடகொரியாவின் இணையத் தாக்குதல்கள், ட்ரோன்கள் மற்றும் ஜிபிஎஸ் சிக்னல் தடைகளை எதிர்கொள்ளும் வகையில் கணினி அடிப்படையிலான உருவகப்படுத்துதல் மூலம் இப்பயிற்சி முன்னெடுக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7a0f2cc6-8549-4200-9445-e6420f786ac4/26-6a8275c06eea1.webp' />&nbsp;&nbsp;</p><p>
</p><p>பயிற்சிகள் திட்டமிட்டபடி திங்கள்கிழமை தொடங்கப்பட்டதாக தென்கொரியாவின் கூட்டுப் படைகளின் தலைமை அதிகாரி தெரிவித்துள்ளார். </p><p>
எனினும், ட்ரம்ப்பின் கருத்துக்கள் குறித்து உடனடி விளக்கங்கள் எதுவும் அளிக்கப்படவில்லை.
தென்கொரியாவுடனான இராணுவப் பயிற்சிக் குறைப்பிற்கு வடகொரியாவுடனான ராஜதந்திர உறவு மட்டுமல்லாது, ஈரானின் அணுஆயுதக் குறைப்பு நடவடிக்கைகளில் அமெரிக்காவுடன் இணைய தென்கொரியா மறுத்ததும் ஒரு காரணம் என ட்ரம்ப் சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>வடகொரியா தொடர்ந்து பாலிஸ்டிக் ஏவுகணைகளைச் சோதித்து வரும் வேளையிலும், ரஷ்யா-உக்ரைன் போரில் ரஷ்யாவிற்கு ஆதரவாக வடகொரிய ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டு வரும் சூழலிலும் அமெரிக்க ஜனாதிபதியின் இந்த உத்தரவு சர்வதேச அளவில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-17T02:45:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அடுக்குமாடி குடியிருப்பொன்றில் இருந்து தவறி விழுந்து 12 வயது சிறுவன் பலி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/boy-dies-after-falling-from-an-apartment-complex-1786932568"></link>
            <id>https://ibctamil.com/article/boy-dies-after-falling-from-an-apartment-complex-1786932568</id>
            <summary type="text">கொழும்பு 09 பகுதியில் அமைந்துள்ள 14 மாடிகளைக் கொண்ட அடுக்குமாடிக் கட்டிடம் ஒன்றிலிருந்து 12 வயது சிறுவன் ஒருவர்&amp;nbsp;தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.
...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு 09 பகுதியில் அமைந்துள்ள 14 மாடிகளைக் கொண்ட அடுக்குமாடிக் கட்டிடம் ஒன்றிலிருந்து 12 வயது சிறுவன் ஒருவர்&nbsp;தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.</p><p>

உயிரிழந்த சிறுவன் கொழும்பு 09 பகுதியைச் சேர்ந்தவர் என காவல்துறையினர் அடையாளம் கண்டுள்ளனர்.</p><p>

முதற்கட்ட விசாரணைகளின்படி, குறித்த சிறுவன் மேலும் சில சிறுவர்களுடன் அந்த அடுக்குமாடிக் கட்டிடத்தின் மொட்டை மாடியில் அமைந்துள்ள நீச்சல் குளப் பகுதியில் இருந்துள்ளார்.</p><p></p><h2>12 வயது சிறுவன் பலி</h2><p>
</p><p>
இதன்போது, எதிர்பாராத விதமாக சிறுவன் கட்டிடத்தின் மேல்பகுதியிலிருந்து கீழே விழுந்ததாக காவல்துறையின் ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/95da3308-ebec-41c5-b905-d51c2919761e/26-6a827406336be.webp' /></p><p>
</p><p>
சம்பவம் தொடர்பில் தகவல் கிடைத்ததும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். </p><p>சிறுவன் கீழே விழுந்தமைக்கான காரணம் மற்றும் சம்பவத்துக்கு முன்னர் அங்கு இடம்பெற்ற விடயங்கள் தொடர்பில் மேலதிக தகவல்களைத் திரட்டும் நடவடிக்கைகளும் தற்போது&nbsp; முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
</p><p>
இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மருதானை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-17T02:43:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[பேருந்து சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/10-percent-of-the-drivers-drug-addicted-1786934065"></link>
            <id>https://tamilwin.com/article/10-percent-of-the-drivers-drug-addicted-1786934065</id>
            <summary type="text">&amp;nbsp;இந்த ஆண்டில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில், பேருந்து சாரதிகள் மற்றும் நடத்துநர்களில் சுமார் 10 சதவீதமானோர் போதைப்பொருள் பயன்படுத்தியிருப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;இந்த ஆண்டில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில், பேருந்து சாரதிகள் மற்றும் நடத்துநர்களில் சுமார் 10 சதவீதமானோர் போதைப்பொருள் பயன்படுத்தியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
மேல், தென், வடமேல் மற்றும் சபரகமுவ ஆகிய மாகாணங்களை உள்ளடக்கிய வகையில் இந்தச் சோதனைகள் நடத்தப்பட்டதாக தேசிய போக்குவரத்து நிறுவனத்தின் தலைவர் பேராசிரியர் கிளிஃபோர்ட் பெரேரா தெரிவித்தார்.</p><h2>போதைப்பொருள் தொடர்பான சோதனை&nbsp;</h2><p>
பேருந்து சாரதிகள் மற்றும் நடத்துநர்களை இலக்காகக் கொண்டு இதுவரை 7,602 பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.</p><p>இவ்வாறு நடத்தப்பட்ட சோதனைகளில் 5 முதல் 10 சதவீதமானோர் போதைப்பொருள் பயன்படுத்தியிருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகத் தலைவர் குறிப்பிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f0daf40b-0c6e-49d7-991d-724755945235/26-6a82733293d48.webp' />&nbsp; &nbsp;</p><p>நான்கு வகையான போதைப்பொருட்கள் தொடர்பாக இந்தச் சோதனைகள் நடத்தப்பட்டதாகவும், இதில் பரிசோதிக்கப்பட்ட நபர் ஒருவர் இந்த போதைப்பொருட்களில் ஒன்றையோ அல்லது பலவற்றையோ பயன்படுத்தியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-17T02:40:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[12 லட்சம் ரூபாவிற்கு கார் எங்கே: சஜித் அரசாங்கத்திடம் கேள்வி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sajith-qustions-about-vits-car-1786933554"></link>
            <id>https://tamilwin.com/article/sajith-qustions-about-vits-car-1786933554</id>
            <summary type="text">தேர்தல் காலத்தில் 12 இலட்சம் ரூபாவிற்கு &#039;விட்ஸ்&#039; ரக மோட்டார் வாகனங்களை வழங்குவதாக வாக்குறுதியளித்த அரசாங்கம், இன்று வாகன இறக்குமதி மீது 50% கூடுதல் வர...</summary>
            <content type="html"><![CDATA[<p>தேர்தல் காலத்தில் 12 இலட்சம் ரூபாவிற்கு 'விட்ஸ்' ரக மோட்டார் வாகனங்களை வழங்குவதாக வாக்குறுதியளித்த அரசாங்கம், இன்று வாகன இறக்குமதி மீது 50% கூடுதல் வரியை விதித்து நுகர்வோர் உரிமைகளை முற்றாக அழித்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.</p><p>
தற்போது விவசாயிகள், மீனவர்கள், தொழிலாளர்கள் மற்றும் தொழில்முனைவோர் உள்ளிட்ட நுண், சிறு மற்றும் நடுத்தர தொழில் துறைகளில் ஈடுபட்டுள்ளவர்கள் கடும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.</p><h2>அக்கறை இல்லை..</h2><p>
அவர்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகள் குறித்து அரசாங்கத்திற்கு எந்தவொரு அக்கறையும் இல்லை என எதிர்க்கட்சித் தலைவர் வலியுறுத்தியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/64a200f2-3f25-4058-8e7a-f802810a6471/26-6a82713430edc.webp' /></p><p>
2024 ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் 'வளமான நாட்டையும் அழகான வாழ்க்கையையும் உருவாக்குவதாக மக்களுக்கு உறுதியளித்த போதிலும், அந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற அரசாங்கம் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p>
குறிப்பாக மின் கட்டணத்தை 33 வீதத்தினால் குறைத்தல், துறைமுகத்தில் இறக்கப்படும் விலையிலேயே எரிபொருளை வழங்குதல் மற்றும் இளைஞர் சமுதாயத்திற்கு சலுகை விலையில் வாகனங்களை வழங்குதல் போன்ற பிரதான தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற அரசாங்கம் தவறிவிட்டதாக சஜித் பிரேமதாச மேலும் குற்றம் சாட்டியுள்ளார்.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-17T02:26:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டில் சர்வாதிகார ஆட்சியின் பண்புகள் வெளிப்படுவதாக குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/govt-trying-suppress-the-law-1786930754"></link>
            <id>https://tamilwin.com/article/govt-trying-suppress-the-law-1786930754</id>
            <summary type="text">&amp;nbsp;நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அல்லது பணிக்காலத்தை நீட்டிக்க முயற்சிப்பது சர்வாதிகார ஆட்சியின் அறிகுறியாகும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும்,...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அல்லது பணிக்காலத்தை நீட்டிக்க முயற்சிப்பது சர்வாதிகார ஆட்சியின் அறிகுறியாகும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான கலாநிதி ஜெயம்பதி விக்கிரமரத்ன தெரிவித்துள்ளார்.</p><p> 
என்.எம். பெரேரா நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.</p><p>
1978ஆம் ஆண்டு அரசியலமைப்பின் மூலம் அன்றைய நீதிபதிகளை நீக்கி, தனக்கு வேண்டியவர்களை நியமிக்க ஜே.ஆர். ஜயவர்தன நடவடிக்கை எடுத்த முறையை நினைவுகூர்ந்த அவர், தற்போதும் நீதிபதிகளின் பணிக்காலத்தை நீடிக்க முயற்சி மேற்கொள்ளப்படுவது கவலைக்குரிய நிலைமையாகும் எனச் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9eae6be0-8ad9-46d2-949a-6b568c437ec4/26-6a8266445b744.webp' /></p><p>
சாதாரண மரபுகளின்படி நீதிபதிகள் உரிய வயதில் ஓய்வுபெற வேண்டும் எனவும், அவர்களின் பணிக்காலத்தை நீடிக்கும் இத்தகைய முன்னுதாரணங்களை உலகின் பிற ஜனநாயக நாடுகளில் காண முடியாது எனவும் அவர் வலியுறுத்தினார்.
</p><p>இதுபோன்ற நடவடிக்கைகள் ஜிம்பாப்வே போன்ற சர்வாதிகார நாடுகளிலேயே காணப்படக்கூடிய அம்சங்கள் என ஜனாதிபதி சட்டத்தரணி ஜயம்பதி விக்ரமரத்ன மேலும் குறிப்பிட்டார்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-17T01:39:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பில் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து விழுந்து சிறுவன் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/children-die-after-falling-from-apartment-building-1786930063"></link>
            <id>https://tamilwin.com/article/children-die-after-falling-from-apartment-building-1786930063</id>
            <summary type="text">கொழும்பு, தெமட்டகொட பகுதியில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் இருந்த சிறுவன் கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.இவ்வாறு உயிரிழந்தவர் தெமட்டகொட...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு, தெமட்டகொட பகுதியில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் இருந்த சிறுவன் கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.</p><p>இவ்வாறு உயிரிழந்தவர் தெமட்டகொட பகுதியை சேர்ந்த 12 வயதுடைய சிறுவன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். </p><p>குறித்த சிறுவன் 14 மாடிகளைக் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பின் மேல் மாடியில் அமைந்துள்ள நீச்சல் தடாகத்திற்கு அருகில், வேறு சில சிறுவர்களுடன் சேர்ந்து சுற்றுப்புறத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த போது இவ்வாறு கீழே விழுந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p> </p><h2><b>மேலதிக விசாரணை</b></h2><p>இந்த சம்பவம் தொடர்பில் மருதானை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5ae5adbd-201e-4ab8-872e-ee4b060c40a9/26-6a8265635082a.webp' /></p>]]></content>
            <updated>2026-08-17T01:35:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[22ஆவது அரசியலமைப்புத் திருத்தம்: பிரதமரின் மௌனம் ஏற்படுத்தியுள்ள சந்தேகம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/harini-amarasuriya-22nd-constitutional-amendment-1786929523"></link>
            <id>https://tamilwin.com/article/harini-amarasuriya-22nd-constitutional-amendment-1786929523</id>
            <summary type="text">பிரதமர் ஹரிணி அமரசூரிய 22வது அரசியலமைப்புத் திருத்தம் குறித்து எவ்விதக் கருத்தும் தெரிவிக்காதது அரசியல் களத்தில் பாரிய சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளதாக ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரதமர் ஹரிணி அமரசூரிய 22வது அரசியலமைப்புத் திருத்தம் குறித்து எவ்விதக் கருத்தும் தெரிவிக்காதது அரசியல் களத்தில் பாரிய சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளதாக எதிரணி அரசியல் அவதானிகள் சுட்டுக்காட்டியுள்ளனர்.</p><p>இவ்விடயம் தொடர்பில் அவர்கள் தெரிவித்துள்ள கருத்துக்கள்: ஆனால் அதற்கு எதிராகக் கருத்துத் தெரிவிக்கும் சிரேஷ்ட சட்டத்தரணி லால் விஜேநாயக்கவை அதற்குத் தூண்டியவர் அவரா என்ற சந்தேகம் பெலவத்தை தலைவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. </p><p>இது தொடர்பில் பெலவத்தையின் தலைவர்கள் பெரும் கவலையடைந்துள்ளதாக குறித்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
</p><p></p><h2>ஜனாதிபதிக்கு கிடைத்த புலனாய்வுத் தகவல்</h2><p>தேசிய மக்கள் சக்தியிலிருந்து மாத்தறை மாவட்டத்திற்காகக் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டவரும், ஜனாதிபதியின் நெருங்கிய சட்டத்தரணிகள் வட்டத்தில் உள்ளவருமான சட்டத்தரணி உபுல் குமாரப்பெரும 22க்கு ஆதரவாகப் பேசாமல் இருப்பது மேலும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
</p><p>ஜனாதிபதிக்கு, தினசரி புலனாய்வு அறிக்கைகள் மூலம் இது தொடர்பான சில தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6e9c20a0-bd86-4775-bb53-3aabccc7e2dd/26-6a826175c377b.webp' /></p><p>எவ்வித அழுத்தத்தைப் பிரயோகித்தாவது எதிர்வரும் நாடாளுமன்ற வாரத்திற்குள் பிரதமரைக் கொண்டு 22வது திருத்தத்திற்கு ஆதரவாக ஒரு அறிக்கையை வெளியிடச் செய்வதே இதற்குச் சிறந்த தீர்வாகும் என பெலவத்தை தீர்மானித்துள்ளது. </p><p>அதற்கமைய, எதிர்வரும் நாடாளுமன்ற வாரத்திற்குள் பிரதமரைக் கொண்டு குறித்த அறிக்கையை வெளியிடும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-17T01:20:33+00:00</updated>
        </entry>
    </feed>
