<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-09-12T21:30:59+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாகிஸ்தானில் தொடரும் அவலம் ; 10 நாட்களில் 6 ஹிந்து சிறுமிகள் கடத்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/6-hindu-girls-abducted-in-pakistan-in-10-days-1789248163"></link>
            <id>https://canadamirror.com/article/6-hindu-girls-abducted-in-pakistan-in-10-days-1789248163</id>
            <summary type="text">பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில், ஹிந்து சிறுமியர் கடத்தப்பட்டு, கட்டாயமாக மதம் மாற்றப்பட்டு திருமணம் செய்யப்படும் அவலம் தொடர்கிறது.&amp;nbsp;பாகிஸ்தானின் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில், ஹிந்து சிறுமியர் கடத்தப்பட்டு, கட்டாயமாக மதம் மாற்றப்பட்டு திருமணம் செய்யப்படும் அவலம் தொடர்கிறது.&nbsp;</p><p>பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் ஹிந்து பெண்கள், குறிப்பாக கோலி, பீல், மேக்வார் போன்ற ஏழை சமூகத்தைச் சேர்ந்த சிறுமியர் அடிக்கடி காணாமல் போகின்றனர். </p><p>இவர்கள் கடத்தப்பட்டு, கட்டாய மத மாற்றம் செய்யப்பட்டு, பின் திருமணம் செய்து வைக்கப்படுவதாக புகார்கள் வருகின்றன.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c0371871-3fda-4777-8c76-8589fbd2fec6/26-6aa5c2a4af4cd.webp' /></p><p>இந்தத் திருமணங்கள் சட்டவிரோதமானவை என சிறுபான்மையினர் நல அமைப்புகள் குரல் கொடுத்தும், இதுபோன்ற அவலங்கள் தொடர்கின்றன.</p><p>


அந்த வகையில், சிந்து மாகாணத்தில் உள்ள டாண்டோ அல்லாயார் மாவட்டத்தில், 13 மற்றும் 14 வயதுடைய இரண்டு ஹிந்து சகோதரிகள் கடத்தப்பட்டனர். </p><p>சீதா, ரூபி என்ற இந்த இரு சிறுமியரையும் கடத்தி மதம் மாற்றி திருமணம் செய்துவைக்கப்பட்டதாக குடும்பத்தினர் குற்றஞ்சாட்டினர்.
</p><p>

இரு சிறுமியரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது, இருவரும் அழுதுகொண்டே, 'நாங்கள் வீட்டுக்குச் செல்ல வேண்டும்' என, கெஞ்சி யும், நீதிமன்றம் அவர்களை பெற்றோரிடம் ஒப்படைக்காமல், பாதுகாப்பு இல்லத்திற்கு அனுப்ப உத்தரவிட்டது.


இந்தக் காட்சி சமீபத்தில் வெளியாகி, பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. </p><p>இதற்கு அடுத்த நாளே 14 வயதான, பன்சி கோலி என்ற மற்றொரு ஹிந்து சிறுமி கடத்தப்பட்டுள்ளார்.
</p><p>செப்டம்பர் மாதம் தொடங்கி 10 நாட்களில் ஆறு ஹிந்து சிறுமியர் கடத்தப்பட்டு மதமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-09-12T21:22:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் இந்த ஆண்டு இறுதிக்குள் வரவுள்ள புதிய நடைமுறை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/big-change-coming-for-sim-card-users-in-sri-lanka-1789244833"></link>
            <id>https://tamilwin.com/article/big-change-coming-for-sim-card-users-in-sri-lanka-1789244833</id>
            <summary type="text">இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு சிம் அட்டை
விநியோகத்தில் புதிய கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்தவுள்ளது.

புதிய சிம் அட்டை பெறும்போத...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு சிம் அட்டை
விநியோகத்தில் புதிய கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்தவுள்ளது.
</p><p>
புதிய சிம் அட்டை பெறும்போது விண்ணப்பதாரரின் நேரலை (Live) புகைப்படம் எடுத்து
பதிவு செய்யும் நடைமுறை இந்த ஆண்டின் இறுதிக்குள் நடைமுறைக்கு வரவுள்ளதாக
ஆணைக்குழு தெரிவித்துள்ளது.</p><h2>சிம் அட்டை விநியோகம்</h2><p>
</p><p>
இதன்படி, போலி அடையாளங்களைப் பயன்படுத்தி குற்றங்கள் மற்றும் சட்டவிரோதச்
செயல்களில் ஈடுபடுவதைத் தடுப்பதே இதன் முக்கிய நோக்கம்.</p><p>

ஒரு தேசிய அடையாள அட்டையைக் கொண்டு ஒரு தொலைபேசி நிறுவனத்தில் 5 சிம்கள் வரை
(மொத்தம் 3 நிறுவனங்களில் 15 சிம்கள் வரை) பெற முடியும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9cd05c5e-1caa-4394-81de-a6f7ec9fa621/26-6aa5b7da12cae.webp' /></p><p>
</p><p>
அத்துடன் தொலைபேசி இலக்கத்தை மாற்றாமல் வேறு சேவைக்கு மாறும் வசதியை
அறிமுகப்படுத்துவதற்கான பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
</p><p>
2027-ஆம் ஆண்டிற்குள் நாட்டில் உள்ள அனைத்து சிம் பயனாளர்களின்
அடையாளத்தையும் 100% உறுதிப்படுத்த TRCSL திட்டமிட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-12T21:06:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[முதலமைச்சர் விஜய் கார் ரேஸை பார்த்து ரசித்து கொண்டிருந்த போது, திடீரென என்ட்ரி கொடுத்த திரிஷா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/trisha-enjoyed-ajith-s-car-race-alongside-vijay-1789238738"></link>
            <id>https://jvpnews.com/article/trisha-enjoyed-ajith-s-car-race-alongside-vijay-1789238738</id>
            <summary type="text">இங்கிலாந்தின் சில்வர்ஸ்டோன் மோட்டார் பந்தயக் களத்தில் நடிகர் அஜித்குமார் பங்கேற்ற ‘லீ மான்ஸ் கப்’ கார் பந்தயத்தை காண்பதற்காக நடிகை திரிஷா நேரில் சென்ற...</summary>
            <content type="html"><![CDATA[<p>இங்கிலாந்தின் சில்வர்ஸ்டோன் மோட்டார் பந்தயக் களத்தில் நடிகர் அஜித்குமார் பங்கேற்ற ‘லீ மான்ஸ் கப்’ கார் பந்தயத்தை காண்பதற்காக நடிகை திரிஷா நேரில் சென்றுள்ளார்.</p><p></p><p>

தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக தமிழக முதலமைச்சர் விஜய் பிரிட்டனுக்கு பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், நடிகரும் சர்வதேச கார் பந்தய வீரருமான அஜித்குமார் பங்கேற்கும் சில்வர்ஸ்டோன் கார் பந்தயத்தை அவர் இன்று பச்சைக்கொடியசைத்து தொடங்கி வைத்தார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5925547d-9bdb-42e0-9590-056855760a79/26-6aa59dd45056b.webp' /></p><p>அஜித்குமாரின் அழைப்பின் பேரில் முதலமைச்சர் விஜய் பந்தயத் தளத்துக்கு சென்றதாகத் தெரிவிக்கப்படுகிறது. </p><p>அங்கு அஜித்குமாரை சந்தித்த விஜய், அவரை ஆரத்தழுவி வாழ்த்து தெரிவித்தார். இருவரும் இணைந்து புகைப்படங்களும் எடுத்துக்கொண்டனர்.</p><p>

அப்போது அஜித்குமாரின் பந்தயக் காரின் மீது அமர்ந்தும் விஜய் புகைப்படம் எடுத்துக்கொண்டதுடன், பின்னர் அஜித்குமாருக்கு கைகொடுத்து தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.</p><p> இந்தக் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

இந்த நிலையில், கார் பந்தயம் நடைபெறும் தளத்திற்கு நடிகை திரிஷாவும் நேரில் வருகை தந்துள்ளார். </p><p>நடிகை ராதிகாவுடன் பிரிட்டனில் திரிஷா எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் நேற்று வெளியாகியிருந்த நிலையில், இன்று அவர் சில்வர்ஸ்டோன் பந்தயத் தளத்தில் தோன்றியுள்ளார்.

அஜித்குமாரின் அழைப்பின் பேரிலேயே திரிஷா பந்தயத்தை காண வந்ததாக கூறப்படுகிறது.
</p><p>
முதலமைச்சர் விஜய் கார் பந்தயத்தை நேரில் பார்த்து ரசித்துக்கொண்டிருந்த நிலையில், அங்கு வந்த திரிஷாவும் அவருடன் இணைந்து பந்தயத்தை கண்டு ரசித்தார்.
</p><p>
விஜய்யும் திரிஷாவும் இணைந்து சில்வர்ஸ்டோன் கார் பந்தயத்தை பார்வையிடும் காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் கவனம் பெற்றுள்ளன.</p><p></p>]]></content>
            <updated>2026-09-12T20:51:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[லண்டனில் அஜித் பங்கேற்கும் சிற்றூந்து பந்தயத்தை தொடங்கி வைத்தார் தமிழக முதலமைச்சர் விஜய்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/chief-minister-vijay-flagged-off-mini-vehicle-race-1789233383"></link>
            <id>https://canadamirror.com/article/chief-minister-vijay-flagged-off-mini-vehicle-race-1789233383</id>
            <summary type="text">இங்கிலாந்தின் லண்டன் சில்வர்ஸ்டோன் மோட்டார் பந்தயக் களத்தில் நடிகர் அஜித்குமார் பங்கேற்ற ‘லீ மான்ஸ் கப்’ கார் பந்தயத்தை தமிழக முதலமைச்சர் விஜய் பச்சைக...</summary>
            <content type="html"><![CDATA[<p>இங்கிலாந்தின் லண்டன் சில்வர்ஸ்டோன் மோட்டார் பந்தயக் களத்தில் நடிகர் அஜித்குமார் பங்கேற்ற ‘லீ மான்ஸ் கப்’ கார் பந்தயத்தை தமிழக முதலமைச்சர் விஜய் பச்சைக்கொடியசைத்து தொடங்கி வைத்துள்ளார்.</p><p>
</p><p></p><p>தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக தமிழக முதலமைச்சர் விஜய் பிரிட்டனுக்கு பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், சில்வர்ஸ்டோனில் நடைபெற்ற சர்வதேச கார் பந்தயத்தில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.
</p><p>
நடிகர் அஜித்குமார் பங்கேற்கும் ‘லீ மான்ஸ் கப்’ தொடரின் சில்வர்ஸ்டோன் சுற்றுப் போட்டியையே முதலமைச்சர் விஜய் இன்று பச்சைக்கொடியசைத்து ஆரம்பித்து வைத்தார். இலங்கை நேரப்படி இரவு 9.45 மணிக்கு தொடங்கிய இந்தப் போட்டி இரவு 11.45 மணிக்கு நிறைவடைய உள்ளது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/028e2d7b-185a-47e1-8112-68d69405e5d3/26-6aa588e96a348.webp' /></p><p>பந்தயத்திற்கு முன்னதாக முதலமைச்சர் விஜய் மற்றும் நடிகர் அஜித்குமார் இருவரும் சந்தித்து புகைப்படங்கள் எடுத்துக்கொண்டனர். அப்போது அஜித்குமாரின் பந்தயக் காரின் மீது அமர்ந்தும் விஜய் புகைப்படம் எடுத்துக்கொண்டார். </p><p>பின்னர் அஜித்குமாருக்கு கைகொடுத்து தனது வாழ்த்துகளையும் தெரிவித்தார்.

இருவரின் சந்திப்பு மற்றும் பந்தயத்தை விஜய் தொடங்கி வைத்த காட்சிகள் தொடர்பான காணொலிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. </p><p>இதனால் இருவரது ரசிகர்களும் பெரும் உற்சாகமடைந்துள்ளனர்.
</p><p>
இதனிடையே, முதலமைச்சர் விஜய்யின் வருகை குறித்து நடிகர் அஜித்குமார் கூறுகையில், தனது பிஸியான பணிகளுக்கு மத்தியிலும் நேரம் ஒதுக்கி லண்டனுக்கு வந்தமை மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்தார்.
</p><p>
மேலும், தானும் விஜய்யும் ஒரே துறையில் 34 ஆண்டுகளாக பணியாற்றி வருவதாகவும், விஜய் தமிழக முதலமைச்சராக பதவியேற்றதில் தமக்கு மிகுந்த மகிழ்ச்சி இருப்பதாகவும் அஜித்குமார் குறிப்பிட்டார்.
</p><p>
விளையாட்டுத் துறையை மேம்படுத்துவதற்காக விஜய் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும், தனது அழைப்பை ஏற்று லண்டனுக்கு வந்து பந்தயத்தை தொடங்கி வைத்தமை மகிழ்ச்சியளிப்பதாகவும் அஜித்குமார் தெரிவித்துள்ளார்.
</p><p>
சர்வதேச மோட்டார் பந்தயக் களத்தில் நடைபெற்ற இந்த விஜய்–அஜித் சந்திப்பு தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-12T20:51:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[6 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/worker-sexually-harassed-a-young-girl-1789245933"></link>
            <id>https://jvpnews.com/article/worker-sexually-harassed-a-young-girl-1789245933</id>
            <summary type="text">இந்தியா விழுப்புரம் மாவட்டத்தில் 6 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்ட 65 வயதான கூலித்தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டன...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியா விழுப்புரம் மாவட்டத்தில் 6 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்ட 65 வயதான கூலித்தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து விழுப்புரம் போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.</p><p>
</p><p></p><h4>&nbsp;20 ஆண்டுகள் சிறை</h4><p>விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா அச்சரம்பட்டு மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த செல்வம் (65) என்பவர் கூலித்தொழிலாளியாக பணியாற்றி வந்துள்ளார்.
</p><p>
கடந்த 2020ஆம் ஆண்டு நவம்பர் 7ஆம் திகதி, அச்சரம்பட்டு பகுதியில் முதலாம் வகுப்பு படித்து வந்த 6 வயது சிறுமி விளையாடிக் கொண்டிருந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/53df1f0f-3dee-41cb-aa86-fc33e2f1d43a/26-6aa5b9ef47a22.webp' /></p><p>

அப்போது அங்கு சென்ற செல்வம், சிறுமியிடம் சாக்லேட் வாங்கித் தருவதாகக் கூறி அருகிலுள்ள அங்கன்வாடி மையத்தின் பின்புறம் அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது.</p><p>

சம்பவத்துக்குப் பின்னர் சிறுமி அழுதுகொண்டே வீட்டுக்குச் சென்று பெற்றோரிடம் நடந்தவற்றைத் தெரிவித்துள்ளார். </p><p>இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், வானூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகாரின் அடிப்படையில் பொலிஸார் செல்வத்துக்கு எதிராக போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
</p><p>
இந்த வழக்கு விழுப்புரம் போக்சோ வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. </p><p>வழக்கில் அரசு தரப்பு சாட்சிகளின் விசாரணை உள்ளிட்ட சட்ட நடவடிக்கைகள் நிறைவடைந்த நிலையில், நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
</p><p>
வழக்கை விசாரித்த நீதிபதி வினோதா, குற்றம் சாட்டப்பட்ட செல்வத்துக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் ரூ.5,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
</p><p>
அபராதத் தொகையை செலுத்தத் தவறினால் மேலும் 4 மாதங்கள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.
</p><p>
மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு சார்பில் ரூ.4 இலட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-12T20:45:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாடொன்றில் ஈழத்தமிழ் பெண்ணொருவருக்கு முதல் முறையாக கிடைத்துள்ள முக்கிய பதவி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/kamzy-gunaratnam-named-norway-s-transport-minister-1789242707"></link>
            <id>https://tamilwin.com/article/kamzy-gunaratnam-named-norway-s-transport-minister-1789242707</id>
            <summary type="text">இலங்கை உள்நாட்டுப் போரின்போது தனது மூன்று வயதில் அகதியாக நோர்வே சென்ற கம்சி குணரத்னம், அந்நாட்டின் புதிய போக்குவரத்து அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்....</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை உள்நாட்டுப் போரின்போது தனது மூன்று வயதில் அகதியாக நோர்வே சென்ற கம்சி குணரத்னம், அந்நாட்டின் புதிய போக்குவரத்து அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.</p><p>

38 வயதான கம்சி குணரத்னம், நோர்வே தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினராவார். </p><p>ஒஸ்லோவை பிரதிநிதித்துவப்படுத்தும் இவர், கடந்த செப்டெம்பர் 11ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் போக்குவரத்து அமைச்சராக நியமிக்கப்பட்டதுடன், அன்றைய தினமே பதவியை பொறுப்பேற்றுள்ளார்.</p><h2>போக்குவரத்து அமைச்சர்</h2><p>

இதற்கு முன்னர் 2021ஆம் ஆண்டு ஒக்டோபர் முதல்&nbsp; போக்குவரத்து அமைச்சராக பதவி வகித்த ஜோன்-இவர் நிகார்டை பதிலாக கம்சி குணரத்னம் நியமிக்கப்பட்டுள்ளார். </p><p>நோர்வே பிரதமர் ஜோனாஸ் கார் ஸ்டோரின் அமைச்சரவை மறுசீரமைப்பின் ஒரு பகுதியாக இந்த நியமனம் இடம்பெற்றுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4d2287bd-4a69-4543-b69d-d6a46729340d/26-6aa5b13b3df2d.webp' /></p><p>
கம்சி குணரத்னத்தின் பொறுப்பின் கீழ் நோர்வேயின் வீதிகள், தொடருந்து, பொது போக்குவரத்து, விமானப் போக்குவரத்து மற்றும் கடல் போக்குவரத்து உள்ளிட்ட முக்கிய துறைகள் வருகின்றன.

அவரது நியமனம் தொடர்பில் சில விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டுள்ளன. </p><p>கம்சி குணரத்னத்திடம் சாரதி அனுமதிப்பத்திரம் இல்லை என்பதுடன், அவர் பொது போக்குவரத்தையே பயன்படுத்தி வருகிறார். </p><p>கடந்த சில தசாப்தங்களில் சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாமல் நோர்வேயின் போக்குவரத்து அமைச்சராக பதவியேற்கும் இரண்டாவது நபர் இவர் என தெரிவிக்கப்படுகிறது.</p><p>மேலும், நாடாளுமன்றத்தின் போக்குவரத்துக் குழுவில் 11 மாதங்கள் பணியாற்றிய அனுபவத்தைத் தவிர, போக்குவரத்துத் துறையில் அவருக்கு விரிவான அனுபவம் இல்லை என்றும் விமர்சகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.</p><h2>ஈழத்தமிழர்</h2><p>
இலங்கையில் இருந்து நோர்வேக்கு

கம்சி குணரத்னம் 1988ஆம் ஆண்டு மார்ச் மாதம் யாழ்ப்பாணத்தில் பிறந்தார். இலங்கையின் உள்நாட்டுப் போரிலிருந்து தப்பிய அவரது குடும்பம், 1991ஆம் ஆண்டு நோர்வேக்கு சென்றது.
</p><p>
அவர்கள் ஆரம்பத்தில் நோர்வேயின் வடக்குப் பகுதியில் உள்ள ஹம்மர்ஃபெஸ்ட் நகரில் குடியேறிய பின்னர், ஒஸ்லோவுக்கு இடம்பெயர்ந்தனர். அங்கு கிரோருட்டலன் பகுதியில் கம்சி குணரத்னம் வளர்ந்தார்.
</p><p>
அவர் ஒஸ்லோ நகர சபையில் 14 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். அதில் 2015 முதல் 2021ஆம் ஆண்டு வரை ஆறு ஆண்டுகள் பிரதி மேயராகவும் பதவி வகித்துள்ளார்.</p><p>

2021ஆம் ஆண்டு முதல் நோர்வே நாடாளுமன்ற உறுப்பினராக செயற்பட்டு வரும் அவர், 2025ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலிலும் மீண்டும் தெரிவு செய்யப்பட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e9be9014-1359-458e-80fe-806f09fedac4/26-6aa5b13be7e01.webp' /></p><p>
</p><p>
கடந்த ஆண்டு ஒக்டோபர் முதல் நாடாளுமன்றத்தின் போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்புகளுக்கான நிலைக்குழுவின் முதலாவது பிரதி தலைவராகவும் அவர் செயற்பட்டிருந்தார்.

போரின் நினைவுகளை பகிர்ந்த கம்சி

இலங்கையின் உள்நாட்டுப் போரிலிருந்து தப்பிச் சென்ற தனது அனுபவங்களை கம்சி குணரத்னம் பல சந்தர்ப்பங்களில் பகிரங்கமாகப் பேசியுள்ளார்.
</p><p>
கடந்த பெப்ரவரி மாதம் நோர்வே நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், போரால் பாதிக்கப்பட்ட நாட்டில் தான் பிறந்ததாகவும், வான்வழித் தாக்குதல் எச்சரிக்கை ஒலி எழுப்பப்பட்டபோது கர்ப்பிணியாக இருந்த தனது தாய் பாதுகாப்புக்காக பதுங்கியதாகவும் நினைவுகூர்ந்திருந்தார்.
</p><p>
அத்துடன், யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் கண்டெடுக்கப்பட்ட மனித எச்சங்கள் மற்றும் போரின்போது காணாமல் போனவர்கள் தொடர்பான தீர்க்கப்படாத பிரச்சினைகள் குறித்தும் அவர் தனது உரையில் குறிப்பிட்டிருந்தார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-12T20:10:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் சட்ட நடவடிக்கை ; ஜனாதிபதி அநுர எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/legal-action-against-anyone-who-commits-wrongdoing-1789243685"></link>
            <id>https://jvpnews.com/article/legal-action-against-anyone-who-commits-wrongdoing-1789243685</id>
            <summary type="text">தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும், குடும்பப் பின்னணியைப் பாராது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க எச்சரித்துள்ளார்.

ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும், குடும்பப் பின்னணியைப் பாராது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க எச்சரித்துள்ளார்.</p><p></p><p>

பொலன்னறுவையில் இன்று (12) நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் (NPP) விவசாயிகளின் பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3fab08fb-7c5b-4fb4-8f98-fec9be305f23/26-6aa5b127258dd.webp' /></p><p>

ராஜபக்ஷ குடும்பத்தினர் மற்றும் அவர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணைகள் பற்றிப் பேசிய ஜனாதிபதி, "இப்போது வந்து அழுவதை விட்டுவிட்டு, திருட வேண்டாம் என்று அன்றே தந்தை, மகனுக்கு சொல்லியிருக்க வேண்டும்.</p><p>

தாயாக இருந்தாலும் சரி, பாட்டியாக இருந்தாலும் சரி, சட்டம் அனைவருக்கும் சமமாகவே பிரயோகிக்கப்படும்.
</p><p>

பொதுப் பணத்தைக் கொள்ளையடித்த எவர் மீதும் எமக்கு எந்த இரக்கமும் இல்லை" எனக் காரசாரமாகத் தெரிவித்தார்.</p><p>

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் அனுராதபுரத்தில் நடத்தப்பட்ட பேரணியை விமர்சித்த ஜனாதிபதி, "ஊழல் குற்றச்சாட்டுகளுக்காகத் தேடப்பட்டு வரும் பலரை அந்தப் பேரணியில் ஒரே இடத்தில் காண முடியும். குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் அங்கு சென்றால் அனைவரையும் ஒரே இடத்தில் கைது செய்ய முடியும்" எனக் குறிப்பிட்டார்.</p><p>

அனுராதபுரப் பேரணியானது மக்கள் நலனுக்காக நடத்தப்படவில்லை என்றும், குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள நபர்கள் சட்டத்திலிருந்து தங்களைத் தற்காத்துக் கொள்வதற்காகவே அதனை நடத்துவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-12T20:08:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[2029இல் நாமல் ஜனாதிபதியாவது உறுதி ; அர்ச்சுனா திட்டவட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/it-certain-namal-will-become-president-2029-arjuna-1789242340"></link>
            <id>https://jvpnews.com/article/it-certain-namal-will-become-president-2029-arjuna-1789242340</id>
            <summary type="text">2029ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் நாமல் ராஜபக்ஷ வெற்றிபெற்று நாட்டின் ஜனாதிபதியாவார் என நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.
...</summary>
            <content type="html"><![CDATA[<p>2029ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் நாமல் ராஜபக்ஷ வெற்றிபெற்று நாட்டின் ஜனாதிபதியாவார் என நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.</p><p></p><p>

அனுராதபுரத்தில் இன்று நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மக்கள் பேரணியில் கலந்துகொண்டு அவர் இதனை குறிப்பிட்டார்.

தனக்கு "கருநாக்கு" (சொல் பலிக்கும் வாக்கு) இருப்பதாகக் குறிப்பிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா, தான் முன்னர் கூறிய பல அரசியல் கணிப்புகள் உண்மையாகியுள்ளதாகச் சுட்டிக்காட்டினார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b67acaa8-ff6d-43a2-b482-dec43c22d348/26-6aa5abe67b542.webp' /></p><p>அந்தவகையில், எதிர்காலத்தில் சிறையில் அடைக்கப்பட்டாலும் அல்லது என்ன தடைகள் ஏற்படுத்தப்பட்டாலும் 2029 ஆம் ஆண்டில் நாமல் ராஜபக்ஷ ஜனாதிபதியாவதைத் தடுக்க முடியாது எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
</p><p>
இந்த நாட்டிற்கு ஒரே ஒரு ஜனாதிபதியை மட்டும் பெயரிட முடியும் என்றால், அது இன்றோ, நாளையோ, என்றைக்கோ அது நமது மஹிந்த ராஜபக்ஷ மட்டுமே என்றும் அவர் குறிப்பிட்டார்.
</p><p>
நாட்டின் தற்போதைய அரசியல் சூழல் மற்றும் ஆட்சியாளர்களின் நடவடிக்கைகள் தொடர்பாகப் பேசிய அவர், மக்கள் மத்தியில் நிலவும் அதிருப்தியானது மீண்டும் ராஜபக்ஷ குடும்பத்தினரை ஆட்சியில் அமர்த்துவதற்கான களத்தையே தயார் செய்து வருவதாகக் குறிப்பிட்டார்.
</p><p>
தமிழ் மற்றும் சிங்கள மக்களுக்கு இடையிலான நீண்டகாலப் பிரச்சினைகளுக்கு உரிய அரசியல் தீர்வு காண்பதற்கு, வடக்கையும் தெற்கையும் இணைக்கும் தலைவராக நாமல் ராஜபக்ஷவே திகழ்வார் என்றும், அவருக்குத் தேவையான ஆதரவை வழங்கத் தான் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
</p><p>
அத்துடன், தான் உயிருடன் இருக்கும் வரை தனி ஈழக் கோரிக்கையை முன்வைக்கப்போவதில்லை என்றும் அவர் இதன்போது உறுதியளித்தார்.
</p><p>
மேலும், தற்போதைய அரசாங்கம் தனது அரசியல் பயணத்தைத் தடுப்பதற்காக தன் மீது 29 வழக்குகளைப் பதிவு செய்துள்ளதாகக் குற்றம்சாட்டிய அவர், தற்போதைய ஆட்சிமுறைகள் மற்றும் எதிர்க்கட்சிகளின் அணுகுமுறைகள் குறித்தும் கடுமையாக விமர்சித்தார்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-12T19:45:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவை அதிர வைத்த 9/11 - 25 ஆண்டுகளுக்குப் பின் வெளிவந்த இரகசியங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/us-intelligence-know-before-the-9-11-attacks-1789231346"></link>
            <id>https://tamilwin.com/article/us-intelligence-know-before-the-9-11-attacks-1789231346</id>
            <summary type="text">அமெரிக்காவில் இடம்பெற்ற செப்டெம்பர் 11 தாக்குதல்களின் 25 வது ஆண்டு நினைவை
முன்னிட்டு, ஒசாமா பின்லேடன் மற்றும் அல்-கொய்தா அமைப்பு குறித்து
சேகரிக்கப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவில் இடம்பெற்ற செப்டெம்பர் 11 தாக்குதல்களின் 25 வது ஆண்டு நினைவை
முன்னிட்டு, ஒசாமா பின்லேடன் மற்றும் அல்-கொய்தா அமைப்பு குறித்து
சேகரிக்கப்பட்ட பல டஜன் இரகசிய உளவுத்துறை ஆவணங்களை அமெரிக்க மத்திய புலனாய்வு
முகவரகமான சிஐஏ (CIA) பகிரங்கப்படுத்தியுள்ளது.
</p><p>
3,000 க்கும் மேற்பட்ட உயிரிழப்புகளுக்குக் காரணமான 9/11 தாக்குதலுக்கு
முன்னர், அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பில் கிளிண்டன் உள்ளிட்ட நாட்டின்
உயர் தலைவர்களுக்கு வழங்கப்பட்ட தினசரி இரகசிய உளவு அறிக்கைகளே இவ்வாறு
வெளியிடப்பட்டுள்ளன.</p><h2>இரகசிய ஆவணங்கள்</h2><p>
</p><p>
சிஐஏ இயக்குநர் ஜான் ரட்க்ளிஃப் இதனைத் தனது அமைப்பின் வெளிப்படைத்தன்மைக்கான
முக்கிய நகர்வாகக் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b9a9df96-2d08-4884-a335-46a1170d0dcb/26-6aa588348cec8.webp' /></p><p>
</p><p>
வெளியிடப்பட்டுள்ள ஆவணங்களில் 1998 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட அறிக்கையொன்றில்,
பின்லேடனின் முக்கிய இலக்கு அமெரிக்க மண்ணில் உள்ள வொஷிங்டன் நகரைத் தாக்குவதே
என்றும், வெடிமருந்துகள் நிரப்பப்பட்ட விமானமொன்றை அமெரிக்க நகரம் மீது மோதித்
தாக்குதல் நடத்தப்படலாம் என்றும் எச்சரிக்கப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது.</p><p>

அத்துடன், ஆப்கானிஸ்தானில் தங்கியிருந்த பின்லேடனை ஒப்படைக்க தலிபான்கள்
மறுத்தமை, நியூயோர்க் விமான நிலையத்தில் சந்தேகநபர்கள் மேற்கொண்ட பாதுகாப்புப்
சோதனை ஒத்திகைகள் மற்றும் கதிரியக்கப் பொருட்களைப் பயன்படுத்தி குண்டுகளைத்
தயாரிக்கும் முயற்சிகள் குறித்த முக்கிய தகவல்களும் இந்த ஆவணங்கள் மூலம்
வெளிச்சத்திற்கு வந்துள்ளன.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-12T19:35:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[தவழ்ந்து வந்த மகிந்த - தலைமறைவான கருணா! அநுரவிற்கு பகிரங்க எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/slpp-holds-rally-in-anuradhapura-1789240676"></link>
            <id>https://tamilwin.com/article/slpp-holds-rally-in-anuradhapura-1789240676</id>
            <summary type="text">அனுராதபுரத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஏற்பாட்டில் பிரமாண்ட மக்கள் கூட்டமொன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த கூட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ர...</summary>
            <content type="html"><![CDATA[<p>அனுராதபுரத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஏற்பாட்டில் பிரமாண்ட மக்கள் கூட்டமொன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த கூட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும் பங்கேற்றிருந்தார். </p><p>உடல்நலக் குறைவு காரணமாக அவர் சிரமங்களை எதிர்கொண்டு வரும் நிலையில், உதவியாளர்களின் உதவியுடன் கூட்டத்தில் கலந்துகொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இதன்போது, அவரது மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்சவின் அரசியல் எதிர்காலத்தை முன்னிறுத்தியே மகிந்த ராஜபக்ச கூட்டத்தில் பங்கேற்றதாக அரசியல் வட்டாரங்களில் கருத்துகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
</p><p>
இதேவேளை, கடந்த காலங்களில் மகிந்த ராஜபக்சவுடன் நெருக்கமாக செயற்பட்ட கருணா, பிள்ளையான் மற்றும் டக்ளஸ் தேவானந்தா உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் இந்தக் கூட்ட மேடையில் காணப்படவில்லை.</p><p>அதற்கு பதிலாக யாழ்ப்பாணத்தை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் அந்த மேடையை அலங்கரித்தார்</p><p>
</p><p>
மேலும், ராஜபக்ச ஆட்சிக்காலம் தொடர்பான விமர்சனங்கள் மற்றும் கடந்தகால யுத்தம் தொடர்பான அரசியல் விவகாரங்கள், அந்தக் குடும்பத்தின் தற்போதைய அரசியல் செல்வாக்கில் தாக்கத்தை ஏற்படுத்தி வருவதாகவும் அரசியல் அவதானிப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.</p><p><br></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/ymh_aupQIR4" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-12T19:24:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[போலந்தில் அவசர எச்சரிக்கை! ஐரோப்பா முழுவதும் விரைந்த நேட்டோ இராணுவ விமானங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/nato-military-aircraft-scrambled-across-europe-1789239900"></link>
            <id>https://ibctamil.com/article/nato-military-aircraft-scrambled-across-europe-1789239900</id>
            <summary type="text">உக்ரைனின் மேற்கு பகுதியில் உள்ள இலக்குகள் மீது ரஷ்ய ஆளில்லா விமானங்கள் தாக்குதல் நடத்திய நிலையில், போலந்து குடியரசின் வான்பாதுகாப்பு அமைப்பின் தேர்ந்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>உக்ரைனின் மேற்கு பகுதியில் உள்ள இலக்குகள் மீது ரஷ்ய ஆளில்லா விமானங்கள் தாக்குதல் நடத்திய நிலையில், போலந்து குடியரசின் வான்பாதுகாப்பு அமைப்பின் தேர்ந்தெடுக்கப்பட்ட படையணிகள் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளதாக ஐரோப்பிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p>போலந்தின் ஆயுதப்படைகளின் செயல்பாட்டுக் கட்டளை இதனைத் தெரிவித்துள்ளதுடன், நிலைமையை கண்காணித்து போலந்து வான்பரப்பின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இராணுவ ஹெலிகொப்டர் ஒன்று வானில் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் ஐரோப்பிய தரப்புகள் தெரிவித்துள்ளன.</p><p>

இந்த நடவடிக்கைகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக மேற்கொள்ளப்படுவதாகவும், குறிப்பாக ரஷ்ய தாக்குதல்களுக்கு உள்ளாகும் பகுதிகளுக்கு அருகிலுள்ள போலந்து வான்பரப்பின் பாதுகாப்பை உறுதி செய்வதே இதன் நோக்கம் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p></p><h2>அவசர எச்சரிக்கை</h2><p>
</p><p>
இதனிடையே, கிழக்கு போலந்தின் லுப்லின் மற்றும் போட்கார்பாக்கி மாகாண மக்களுக்கு அரசாங்க பாதுகாப்பு மையம் அவசர எச்சரிக்கையை விடுத்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/67f07e43-c650-4b0e-ae82-7486c537ebde/26-6aa5a25e86497.webp' /></p><p>

“உக்ரைனில் ரஷ்யாவின் வான்வழித் தாக்குதல் இடம்பெற்று வருகிறது. நிலைமை கண்காணிக்கப்பட்டு வருகிறது. போலந்து வான்பரப்பில் வான்படை நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன. தொடர்ந்து வெளியாகும் அறிவிப்புகளைப் பின்பற்றுங்கள்” என அந்த எச்சரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

ரஷ்ய ட்ரோன் தாக்குதல்களின் தீவிரம் காரணமாக, கடந்த செப்டெம்பர் 10ஆம் திகதியும் போலந்து தனது போர் விமானங்களை வானில் களமிறக்கியிருந்தது.</p><p>மேலும், கடந்த மூன்று நாட்களுக்குள் இரண்டாவது முறையாக அந்நாடு இவ்வாறான வான்பாதுகாப்பு நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள I<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">BC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-12T19:05:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பகுதியில் திமிங்கில வாந்தியுடன் இருவர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/two-arrested-with-whale-vomit-in-tamil-area-1789239661"></link>
            <id>https://jvpnews.com/article/two-arrested-with-whale-vomit-in-tamil-area-1789239661</id>
            <summary type="text">மன்னார் சௌத் பார் கடற்கரைப் பகுதியில் கடற்படையினர் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, தடை செய்யப்பட்ட ஆம்பர் கிரீஸ் (Ambergris) தொகையுடன் இரு...</summary>
            <content type="html"><![CDATA[<p>மன்னார் சௌத் பார் கடற்கரைப் பகுதியில் கடற்படையினர் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, தடை செய்யப்பட்ட ஆம்பர் கிரீஸ் (Ambergris) தொகையுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>
</p><p></p><p>தாவர மற்றும் விலங்கின பாதுகாப்புச் சட்டத்தின் பிரகாரம் வர்த்தக ரீதியான பயன்பாட்டுக்காகக் கொண்டு வரப்பட்ட, பல இலட்சம் ரூபாய் பெறுமதியான 67 கிலோ எடையுடைய திமிங்கலத்தின் எச்சமான ஆம்பர் கிரீஸ் கைப்பற்றப்பட்ட நிலையிலேயே இவ்விருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0d42cdcb-7e51-4900-8e2a-d44d366d3dde/26-6aa5a16f5fc53.webp' /></p><p>
</p><p>
 

வடமத்திய கடற்படை கட்டளையின் 'இலங்கை கடற்படை கப்பல் கஜபா' பிரிவினரால் மன்னார் சௌத் பார் கடற்கரைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாகச் சேகரிக்கப்பட்டுக் கடத்தப்படவிருந்த 67 கிலோகிராமுக்கும் அதிகமான திமிங்கலத்தின் ஆம்பர் கிரீஸ் தொகையுடன் இரு சந்தேக நபர்கள் கடற்படையினரால் இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.
</p><p>
 

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 25 மற்றும் 36 வயதுடைய மன்னார் பகுதியைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். </p><p>

 

சந்தேக நபர்களும் கைப்பற்றப்பட்ட ஆம்பர் கிரீஸ் தொகையும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் வனஜீவராசிகள் திணைக்கள அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-12T19:01:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/north-korea-conducts-another-missile-test-1789239260"></link>
            <id>https://canadamirror.com/article/north-korea-conducts-another-missile-test-1789239260</id>
            <summary type="text">வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தியதால் கொரிய தீபகற்பத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.&amp;nbsp;அணு ஆயுதங்களுடன் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை சோதன...</summary>
            <content type="html"><![CDATA[<p>வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தியதால் கொரிய தீபகற்பத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.&nbsp;</p><p>அணு ஆயுதங்களுடன் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை சோதனை செய்து உலக நாடுகளுக்கு அவ்வப்போது அதிர்ச்சி கொடுத்து வரும் நாடு வடகொரியா.</p><p>

கொரிய தீபகற்பத்தில் வடகொரியா, தென்கொரியா இடையே பல ஆண்டுகளாக மோதல் நீடித்து வருகிறது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/12a60d84-102e-412e-bd00-31330abb4b39/26-6aa59fddc1f72.webp' /></p><p>தன் எதிரி நாடுகளாக கருதும் தென் கொரியா, ஜப்பான், அமெரிக்காவை சீண்டும் வகையில் வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. </p><p>மேலும், தங்கள் நாட்டின் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் வந்தால் தாக்குதல் நடத்துவோம் என வடகொரியா எச்சரித்து வருகிறது.</p><p> நடப்பு ஆண்டில் வடகொரியா பல முறை ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது.&nbsp;</p><p>இந்நிலையில், வடகொரியா இன்று மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது. </p><p>வடகொரியாவின் வன்சன் பகுதியில் இருந்து ஜப்பான் கடல் பகுதி நோக்கி இந்த பல ஏவுகணைகள் ஏவப்பட்டுள்ளன. இன்று அதிகாலை 5.20 மணிக்கு இந்த ஏவுகணைகள் ஏவப்பட்டுள்ளன.
</p><p>
அமெரிக்கா, ஜப்பான், தென் கொரியா இணைந்து கடந்த 5 நாட்களாக கூட்டு ராணுவ பயற்சி நடத்தியது.</p><p> இந்த கூட்டு ராணுவ பயிற்சி நேற்று நிறைவடைந்த நிலையில் வடகொரியா இன்று அதிகாலை ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது. </p><p>கூட்டு ராணுவ பயிற்சிக்கு பதிலடியாக இந்த ஏவுகணை சோதனை நடத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-12T18:54:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[2 நாட்களாக கடலில் தத்தளித்த 15 வயது சிறுவன்: அமெரிக்க படையின் நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/15-year-old-boy-adrift-at-sea-for-two-days-1789238967"></link>
            <id>https://ibctamil.com/article/15-year-old-boy-adrift-at-sea-for-two-days-1789238967</id>
            <summary type="text">அமெரிக்காவின் அலாஸ்கா அருகில் உள்ள பெரிங் கடலில் படகு ஒன்று கவிழ்ந்த நிலையில், 2 நாட்களாக கடலில் தத்தளித்த 15வயது சிறுவன் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார்...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவின் அலாஸ்கா அருகில் உள்ள பெரிங் கடலில் படகு ஒன்று கவிழ்ந்த நிலையில், 2 நாட்களாக கடலில் தத்தளித்த 15வயது சிறுவன் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார்.
</p><p>
 செயிண்ட லாரன்ஸ் தீவில் உள்ள சவோங்கா கிராமத்தை சேர்ந்த டெரெக் பார்க்கர் அக்னாங்கா என்ற 15 வயது சிறுவன் படகில் உறவினர்களுடன் மீன்பிடிக்க சென்ற போது அவரது படகு எதிர்பாராத விதமாக கடலில் கவிழ்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>
கடலில் நீரின் வெப்பநிலையானது வெறும் 10 செல்சியஸ் மட்டுமே இருந்த நிலையில், கவிழ்ந்த படகை இறுக்கமாக பிடித்துக் கொண்டு இரவு பகலாக உயிருக்கு போராடியுள்ளார் என அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.</p><p></p><h2>3 பேர் மாயம்</h2><p>கடலுக்கு சென்ற 3 பேரை காணவில்லை என உள்ளூர் மக்கள் தகவல் தெரிவித்ததும், அமெரிக்க கடலோரக் காவல்படை தீவிர தேடுதல் மற்றும் மீட்பு பணிகளை துரிதப்படுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ff4c920e-86f2-46ed-9a69-95398ae42259/26-6aa59eb8f0b4f.webp' /></p><p>
இதில் சிறுவனுடன் சென்ற மற்ற இரண்டு பேர் உயிரிழந்து விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இந்நிலையில் கடலில் உயிருக்காக 2 நாட்களாக போராடிய சிறுவன் சுமார் 2 நாட்களுக்கு பிறகு செயிண்ட் லாரன்ஸ் தீவுக்கு அருகே மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-12T18:50:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஏமனில் தீவிரமடைந்துள்ள மோதல்! 76,000-ஐத் தாண்டிய இடம்பெயர்வு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/displacement-in-yemen-exceeds-76-000-1789237707"></link>
            <id>https://ibctamil.com/article/displacement-in-yemen-exceeds-76-000-1789237707</id>
            <summary type="text">ஏமனில் மோதலானது தீவிரமடைந்துள்ள நிலையில், இடம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை 76,000-ஐத் தாண்டியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.யேமனின் நிலை ஒவ்வொர...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஏமனில் மோதலானது தீவிரமடைந்துள்ள நிலையில், இடம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை 76,000-ஐத் தாண்டியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.</p><p>யேமனின் நிலை ஒவ்வொரு மணி நேரமும் மிக வேகமாக மோசமடைந்து வருவதாகவும், இடம்பெயர்வு நெருக்கடி அதிகமாகுவதாகவும் ஐ.நா.வின் சர்வதேச இடம்பெயர்வு அமைப்பு (IOM) எச்சரித்துள்ளது.
</p><p>
ஜூலை மாதம் முதல் குறைந்தது 76,000 பேர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர் என்றும், இந்த எண்ணிக்கை ஒரே இரவில் கிட்டத்தட்ட இரட்டிப்பாகியுள்ளது என்றும் சர்வதேச இடம்பெயர்வு அமைப்பு (IOM) தெரிவித்துள்ளது.</p><p></p><h2>கடுமையான பாதிப்பு</h2><p> </p><p>“சில நாட்களுக்கு முன்பு இந்த மொத்த எண்ணிக்கை 46,000 ஆக இருந்தது.

முழு குடும்பங்களும், பெரும்பாலும் இரவில், இடம்பெயர்ந்து கொண்டிருக்கின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/514d69f9-108e-4842-b3fa-9004ac780faa/26-6aa59b2d80b4d.webp' /></p><p>அவர்களுக்குச் செல்வதற்குப் பாதுகாப்பான இடம் எதுவும் இல்லை என்றும், ஏமனின் தென்மேற்கில் உள்ள தைஸ் பகுதி மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது எனவும் கூறப்படுகிறது.</p><p>அங்கு கிட்டத்தட்ட 50,000 மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர் என்றும், தெற்கில் உள்ள லஹ்ஜ் நகரில் கிட்டத்தட்ட 17,000 பேர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p>தகவல் தொடர்புகள் பாதிக்கப்பட்டுள்ளன, மேலும் சண்டைகள் காரணமாக சாலைகள் பயணிக்க முடியாதவையாக மாறி வருகின்றன.
</p><p>12 ஆண்டுகால மோதலின்போது, ​​இந்தக் குடும்பங்களில் பல இதற்கு முன்பும், சில குடும்பங்கள் பலமுறை இடம்பெயர்ந்துள்ளன,.</p><p>நிலைமை நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது. மற்றும் நிலையற்றதாகவும் கணிக்க முடியாததாகவும். நீடிக்கிறது” என&nbsp;IOM அறிக்கையில் கூறியுள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> IBC தமிழ் WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-12T18:36:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[எரிபொருள் விலை உயருமா? பெற்றோலியக் கூட்டுத்தாபனம் வெளியிட்ட தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/information-released-by-the-petroleum-corporation-1789237561"></link>
            <id>https://jvpnews.com/article/information-released-by-the-petroleum-corporation-1789237561</id>
            <summary type="text">சர்வதேச சந்தையில் மசகு எண்ணெயின் விலை அதிகரித்துள்ள போதிலும், இலங்கையில் உள்நாட்டு எரிபொருள் விலையை உடனடியாக அதிகரிக்கப் போவதில்லை என இலங்கை பெற்றோலிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>சர்வதேச சந்தையில் மசகு எண்ணெயின் விலை அதிகரித்துள்ள போதிலும், இலங்கையில் உள்நாட்டு எரிபொருள் விலையை உடனடியாக அதிகரிக்கப் போவதில்லை என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.</p><p>
</p><p></p><h3>பெற்றோலியக் கூட்டுத்தாபனம்&nbsp;</h3><p>எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பில் அரசாங்கத்துடன் கலந்துரையாடிய பின்னர், விலை அதிகரிக்கப்படுமா என்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே. ராஜகருணா தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f65608f5-6ec1-4bb9-ba7d-38410e35b5b2/26-6aa5993b027a2.webp' /></p><p>மத்திய கிழக்கில் அதிகரித்துள்ள பதற்ற நிலை மற்றும் செங்கடல், பாப் அல்-மந்தப் நீரிணை தொடர்பான சமீபத்திய நிலவரங்கள் காரணமாக உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை பீப்பாய் ஒன்றுக்கு 100 அமெரிக்க டொலருக்கும் அதிகமாக அதிகரித்துள்ளது.</p><p>

இதன்படி, பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 104.06 அமெரிக்க டொலராகவும், WTI ரக மசகு எண்ணெய் சுமார் 100 அமெரிக்க டொலராகவும் விற்பனையாகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இலங்கையில் எரிபொருள் விலைகள் இந்த மாத இறுதியில் மீண்டும் திருத்தப்பட உள்ளன.
</p><p>
இதேவேளை, சில தனியார் எரிபொருள் விநியோகஸ்தர்கள் டீசல் விற்பனையை மட்டுப்படுத்துவதாக தகவல்கள் வெளியாகியுள்ள போதிலும், பெற்றோலிய கூட்டுதாபனத்தின் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் போதுமான எரிபொருள் கையிருப்பில் உள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ராஜகருணா தெரிவித்துள்ளார்.</p><p>[M1TSWYM
]</p>]]></content>
            <updated>2026-09-12T18:26:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thileepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெடுக்குநாறிமலையில் மீண்டும் புத்தர் சிலை! சந்தபோதி தேரரின் அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/vedukkunari-hill-temple-1789236169"></link>
            <id>https://tamilwin.com/article/vedukkunari-hill-temple-1789236169</id>
            <summary type="text">வெடுக்குநாறிமலை பௌத்த வழிபாட்டுத் தலம் எனவும், அங்கு முன்னர் 11 அடி உயரமான புத்தர் சிலை ஒன்று இருந்ததாகவும் சந்தபோதி தேரர் தெரிவித்துள்ளார்.

வவுனிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>வெடுக்குநாறிமலை பௌத்த வழிபாட்டுத் தலம் எனவும், அங்கு முன்னர் 11 அடி உயரமான புத்தர் சிலை ஒன்று இருந்ததாகவும் சந்தபோதி தேரர் தெரிவித்துள்ளார்.
</p><p>
வவுனியா வடக்கு, வெடுக்குநாறிமலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ள பகுதிக்கு, பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப் படையினரின் பாதுகாப்புக்கு மத்தியில், சுமார் 25 சிங்கள மக்களுடன் சந்தபோதி தேரர் தலைமையிலான குழுவினர் இன்று (12) காலை சென்றிருந்தனர்.</p><h2>&nbsp;பௌத்த வழிபாட்டுத் தலம்</h2><p>

அங்கு சென்ற குழுவினர், சூலம் அமைந்திருந்த பகுதியில் சுமார் ஒன்றரை மணி நேரம் பிரித் ஓதி பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டனர்.</p><p>

இதன்போது, சைவ மக்கள் மலை உச்சிக்கு செல்ல வேண்டாம் என பொலிஸார் அறிவுறுத்தியிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c71c921f-339d-43a4-82d2-1d53af89a763/26-6aa595c40fb51.webp' /></p><p>
</p><p>
இதனைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சந்தபோதி தேரர், 2012ஆம் ஆண்டுக்கு முன்னர் வெடுக்குநாறிமலையில் 11 அடி உயரமான புத்தர் சிலை ஒன்று இருந்ததாகவும், அந்த சிலை தற்போது தங்களிடம் இருப்பதாகவும் தெரிவித்தார்.
</p><p>
மேலும், அந்த புத்தர் சிலையை மீண்டும் வெடுக்குநாறிமலையில் நிறுவவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
</p><p>
அத்துடன், வெடுக்குநாறிமலையில் சைவ வழிபாடு 2013ஆம் ஆண்டுக்குப் பின்னரே ஆரம்பிக்கப்பட்டதாகவும், தமிழர்கள் போலியான நம்பிக்கையின் அடிப்படையில் வழிபாடுகளில் ஈடுபடுவதாகவும் சந்தபோதி தேரர் தெரிவித்தார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-12T18:24:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[காதலியின் நடத்தையில் சந்தேகம் ; கழுத்தை நெரித்து கொலை செய்த கள்ளக்காதலன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/doubt-illicit-lover-strangles-partner-to-death-1789236955"></link>
            <id>https://jvpnews.com/article/doubt-illicit-lover-strangles-partner-to-death-1789236955</id>
            <summary type="text">இந்தியாவில் திருப்பூரில், செல்போனில் வேறு ஒருவருடன் பேசியதாக சந்தேகமடைந்து பெண்ணை கழுத்தை நெரித்து கொலை செய்ததாகக் கூறப்படும் அவரது காதலனை பொலிஸார் கை...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியாவில் திருப்பூரில், செல்போனில் வேறு ஒருவருடன் பேசியதாக சந்தேகமடைந்து பெண்ணை கழுத்தை நெரித்து கொலை செய்ததாகக் கூறப்படும் அவரது காதலனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.</p><p>
</p><p></p><p>அரியலூர் மாவட்டம் சாத்தம்பாடியைச் சேர்ந்த ராதிகா (36) என்பவர், கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை விட்டு பிரிந்து, கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருப்பூருக்கு வந்துள்ளார். அவரது மகன் மற்றும் மகள் தாயாரின் பராமரிப்பில் இருந்து வருகின்றனர்.</p><p>
திருப்பூர் பெரிச்சிப்பாளையம் மாரியம்மன் கோவில் பின்புறம் வாடகை வீட்டில் தனியாக வசித்து வந்த ராதிகா, அப்பகுதியில் உள்ள பனியன் நிறுவனமொன்றில் தையல் தொழிலாளியாக பணியாற்றி வந்துள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3ec36bfb-75a3-4fc5-abd5-f4cee8948e07/26-6aa596dd263a7.webp' /></p><p>அதே நிறுவனத்தில் பணியாற்றிய திருப்பூர் வெள்ளியங்காட்டைச் சேர்ந்த அருண்குமார் (36) என்பவருக்கும் ராதிகாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் அந்தப் பழக்கம் காதலாக மாறியதுடன், இருவரும் கடந்த இரண்டு ஆண்டுகளாக நெருக்கமாக பழகி வந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
இந்த நிலையில், கடந்த சில நாட்களாக ராதிகா செல்போனில் வேறு ஒருவருடன் அடிக்கடி பேசி வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் சந்தேகமடைந்த அருண்குமாருக்கும் ராதிகாவுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
</p><p>
சம்பவத்தன்று இரவு இருவரும் செல்போனில் பேசிக்கொண்டிருந்தபோது மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து நள்ளிரவில் ராதிகாவின் வீட்டுக்குச் சென்ற அருண்குமார், அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த அருண்குமார் ராதிகாவின் கழுத்தை நெரித்து கீழே தள்ளியதாகவும், அப்போது கட்டிலில் தலை மோதியதில் அவர் மயங்கி விழுந்ததாகவும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையடுத்து அருண்குமார் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். </p><p>வீட்டிலிருந்து சத்தம் கேட்டதைத் தொடர்ந்து அக்கம்பக்கத்தினர் அங்கு சென்று பார்த்தபோது, வீட்டின் கதவு திறந்த நிலையில் ராதிகா உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளார்.</p><p>

இதுகுறித்து திருப்பூர் தெற்கு பொலிஸ் நிலையத்துக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து, பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணைகளை மேற்கொண்டனர்.</p><p>

ராதிகாவின் உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
</p><p>
பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில், ராதிகாவின் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகம் காரணமாக அருண்குமார் அவரைத் தாக்கியதில் அவர் உயிரிழந்ததாகத் தெரியவந்துள்ளது.
</p><p>
இதையடுத்து தலைமறைவாக இருந்த அருண்குமாரை பொலிஸார் கைது செய்துள்ளனர். </p><p>சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.</p><p></p>]]></content>
            <updated>2026-09-12T18:16:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[மொட்டுவின் அனுராதபுர கூட்டத்தில் தேடப்படும் பல நபர்கள் : ஜனாதிபதி அனுர பரபரப்பு தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/no-sympathy-for-anyone-must-face-the-law-anura-1789229684"></link>
            <id>https://ibctamil.com/article/no-sympathy-for-anyone-must-face-the-law-anura-1789229684</id>
            <summary type="text">&amp;nbsp;அனுராதபுரத்தில் நடைபெற்ற SLPP தலைமையிலான பேரணியில் ஊழல் குற்றச்சாட்டுகளுக்காகத் தேடப்படும் பல நபர்கள் காணப்படலாம் என்றும் &quot;குற்றப் புலனாய்வுத் த...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;அனுராதபுரத்தில் நடைபெற்ற SLPP தலைமையிலான பேரணியில் ஊழல் குற்றச்சாட்டுகளுக்காகத் தேடப்படும் பல நபர்கள் காணப்படலாம் என்றும் "குற்றப் புலனாய்வுத் துறை (CID) அங்கு சென்றால், அவர்கள் அனைவரையும் ஒரே இடத்தில் பிடித்துவிடலாம்," என்று ஜனாதிபதி அனுர குமார திஸநாயக்க தெரிவித்துள்ளார்.</p><p>சனிக்கிழமையன்று (12) பொலனறுவையில் நடைபெற்ற NPP விவசாயிகளின் பேரணியில் உரையாற்றிய ஜனாதிபதி, ராஜபக்ச குடும்பத்தினர் மற்றும் அவர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பான நடவடிக்கைகள் குறித்துப் பேசுகையில் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.</p><p>&nbsp;குடும்ப உறவுகளைப் பொருட்படுத்தாமல் சட்டம் அனைவருக்கும் சமமாகப் பொருந்தும் என்று கூறினார்.</p><h2>திருடக்கூடாது என பிள்ளைகளுக்கு சொல்லி கொடுக்கவேண்டும்</h2><p>"இப்போது அழுது புலம்புவதற்குப் பதிலாக, திருடக்கூடாது என்று தந்தை அவர்களுக்கு முன்பே சொல்லியிருக்க வேண்டும். தாயாக இருந்தாலும் சரி, பாட்டியாக இருந்தாலும் சரி, சட்டம் அனைவருக்கும் பொருந்தும். பொதுப் பணத்தைத் திருடிய எவர் மீதும் எங்களுக்கு எந்த அனுதாபமும் இல்லை," என்று ஜனாதிபதி திஸாநாயக்க தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1946d6e5-7938-45e8-8f84-106c251e7575/26-6aa581ab5d4c2.webp' /></p><p>அனுராதபுரப் பேரணியானது பொது நலனுக்காக நடத்தப்படவில்லை என்றும், மாறாக ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்பவர்கள் சட்டத்திலிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ள மேற்கொள்ளும் முயற்சி என்றும் ஜனாதிபதி திஸாநாயக்க குற்றம் சாட்டினார்.</p><p></p><h2>நாமல் ராஜபக்ச விளக்கமறியலில்</h2><p>&nbsp;முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் கட்சியின் பல முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்ட SLPP-யின் பிரமாண்டமான அரசியல் பேரணி அனுராதபுரத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில் அவரது இந்தக் கருத்துக்கள் வெளியாகின.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f70aef5a-baf6-4a96-aaf7-39bf48e4efb3/26-6aa581ac13b46.webp' /></p><p>&nbsp; 'ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்' (SriLankan Airlines) நிறுவனத்திற்கான பெரிய ரக விமானங்களை கொள்முதல் செய்தது தொடர்பான விசாரணையில், இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையத்தால் (CIABOC) கைது செய்யப்பட்ட SLPP-யின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் இந்தப் பேரணி நடைபெறுகிறது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-12T18:06:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[75 ஆண்டுகளில் இல்லாத மாற்றம் ; எல் நினோ பாதிப்பு குறித்து புதிய எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/new-warning-regarding-el-ni-o-impact-1789235497"></link>
            <id>https://jvpnews.com/article/new-warning-regarding-el-ni-o-impact-1789235497</id>
            <summary type="text">கடந்த 75 ஆண்டுகளில் இல்லாதவாறு, எதிர்வரும் ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் &#039;எல் நினோ&#039; (El Niño) காலநிலையில் மாற்றம் ஏற்படும் சாத்தியக்கூறு 98 வீதம...</summary>
            <content type="html"><![CDATA[<p>கடந்த 75 ஆண்டுகளில் இல்லாதவாறு, எதிர்வரும் ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் 'எல் நினோ' (El Niño) காலநிலையில் மாற்றம் ஏற்படும் சாத்தியக்கூறு 98 வீதமாக அதிகரித்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அஜித் விஜயமான தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p></p><p>முன்னதாக 95 வீதமாக இருந்த இந்த முன்னறிவிப்பு தற்போது 98 வீதமாக அதிகரித்துள்ளதாக பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/39776b45-7bf4-4620-940d-79e859a9787e/26-6aa5912a8f78b.webp' /></p><p>

வளிமண்டலவியல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
</p><p>
இருப்பினும், எதிர்வரும் ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் பலத்த மழை பெய்யக்கூடும் என்றும் அவர் தெரிவித்தார்.
</p><p>
அத்துடன், பெப்ரவரி, மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் சில பகுதிகளில் கடுமையான வறட்சி நிலவக்கூடும் என்றும் பணிப்பாளர் நாயகம் மேலும் கூறினார்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-12T17:51:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறையிலிருந்து நாமல் ஆதரவாளர்களுக்கு விடுத்துள்ள செய்தி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-turns-to-mandela-s-words-in-message-1789233170"></link>
            <id>https://tamilwin.com/article/namal-turns-to-mandela-s-words-in-message-1789233170</id>
            <summary type="text">சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச ஆதரவாளர்களுக்கு விசேட செய்தி ஒன்றை அனுப்பி வைத்துள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச ஆதரவாளர்களுக்கு விசேட செய்தி ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.
</p><p>அநுராதபுரத்தில் நடைபெற்ற கட்சியின் "ஜன சதன" பேரணியில் கலந்துகொண்டுள்ள ஆதரவாளர்களுக்கு அவர் இவ்வாறு செய்தி அனுப்பி வைத்துள்ளார்.</p><h2>அரசியல் அழுத்தங்கள்</h2><p>
</p><p>அரசாங்கத்தின் அரசியல் அழுத்தங்களுக்குத் தாம் ஒருபோதும் பணியப்போவதில்லை என்று அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bbb62c33-f760-40b2-8dcc-59333f3268df/26-6aa58813dae07.webp' /></p><p>
கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையிலிருந்து அனுப்பப்பட்டுள்ள இந்தச் செய்தியில், தமது ஆதரவாளர்களின் ஒற்றுமை மற்றும் ஆதரவுக்கு நாமல் ராஜபக்ச நன்றி தெரிவித்துள்ளார். </p><p>
அத்துடன் அநுராதபுர பேரணியானது ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் அரசியல் பயணத்தில் ஒரு "தீர்மானமிக்க புதிய தொடக்கம்" என்றும் அவர் வர்ணித்துள்ளார்.</p><p> 
"கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையின் இரும்புக் கம்பிகளுக்குப் பின்னால் இருந்து நான் உங்களைப் பார்க்கிறேன். இங்கிருந்து, நீங்கள் எனக்குக் காட்டும் சகோதரத்துவத்தின் கதகதப்பை என்னால் உணர முடிகிறது" என்று நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.</p><h2>கடுமையான விமர்சனம்</h2><p>
</p><p>தென்னாப்பிரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலாவின், "கடினமான சூழ்நிலைகள் சில மனிதர்களை உடைத்தெறிகின்றன; ஆனால் சிலரை உருவாக்குகின்றன" என்ற வார்த்தைகளை நாமல் மேற்கோள் காட்டியுள்ளார்.
</p><p>சவால்கள் தமது அரசியல் இயக்கத்தைப் பலப்படுத்தியுள்ளதாகவும், துன்பங்களை எதிர்கொள்ளும்போது மேலும் பலமடைவதற்குக் கற்றுக்கொடுத்தவர் தனது தந்தை என குறிப்பிட்டுள்ளார். </p><p>
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்த அவர், அரசாங்கம் தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிவிட்டதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c5f7f6f3-4040-4a75-a9e2-3b5722cc9e4e/26-6aa59511e7403.webp' /></p><p>
</p><p>மேலும், வாழ்க்கைச் செலவு மற்றும் வரிச் சுமையினால் சிறு மற்றும் நடுத்தர வணிகங்கள், விவசாயிகள்,&nbsp; கடற்றொழிலாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் உட்பட பொதுமக்கள் பெரும் அழுத்தங்களுக்கு உள்ளாகியிருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>அரசாங்கம் அரச விசாரணை நிறுவனங்களை அரசியல்மயமாக்குவதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
 அரசாங்கத்துடன் தொடர்புடைய நபர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நியாயமாக விசாரிக்கப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.</p><h2>ஆதரவாளர்களுக்கு கோரிக்கை</h2><p> </p><p>அரசியலமைப்பு சீர்திருத்தங்கள், மாகாண சபை தேர்தல்கள் தாமதமடைவது மற்றும் வேலைவாய்ப்புச் சந்தையில் நுழையும் இளைஞர்களுக்கான வாய்ப்புகள் இல்லாமை குறித்தும் அவர் அரசாங்கத்தைக் கடுமையாக விமர்சித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/da2e53cb-87ba-4388-abfd-f0ab9182ac2f/26-6aa5951104d5c.webp' /></p><p>
</p><p>தமது செய்தியின் நிறைவில், அரசாங்கத்தின் "அரசியல் அதிகாரத்திற்கு" தாம் சரணடையப் போவதில்லை என்றும், தாம் அஞ்சப்போவதில்லை என்றும் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
</p><p>"எமது மன உறுதியை சிறைவைக்க முடியாது" எனக் குறிப்பிட்ட அவர், சட்டத்திற்கு மதிப்பளித்து, அமைதியாகவும் ஒழுக்கத்துடனும் செயற்படுமாறு ஆதரவாளர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
</p><p>தற்போது இடம்பெற்று வரும் விசாரணை ஒன்று தொடர்பில் கைது செய்யப்பட்ட நாமல் ராஜபக்ச கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையில் வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-12T17:45:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கம்பஹாவில் வான் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு: சாரதி படுகாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/police-open-fire-on-van-in-gampaha-1789233560"></link>
            <id>https://tamilwin.com/article/police-open-fire-on-van-in-gampaha-1789233560</id>
            <summary type="text">கம்பஹா, அஸ்கிரிய பகுதியில் வான் மீது பொலிஸாரால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

 

இந்த சம்பவத்தில் காயமடைந்த சாரதி கைது செய்யப்பட்டு வைத்தி...</summary>
            <content type="html"><![CDATA[<p>கம்பஹா, அஸ்கிரிய பகுதியில் வான் மீது பொலிஸாரால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
</p><p>
 

இந்த சம்பவத்தில் காயமடைந்த சாரதி கைது செய்யப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><h2>துப்பாக்கிச் சூடு</h2><p>பொலிஸாரின் கட்டளையை மீறிச் சென்ற வாகனத்தின் மீதே&nbsp; துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e8b7e7c3-261d-498d-8600-c56223755ece/26-6aa58bf89fef8.webp' /></p><p>மேலும், இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-12T17:29:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடலில் 2 நாட்களாக தத்தளித்த 15 வயது சிறுவன்: கவிழ்ந்த படகை பிடித்துக் கொண்டு உயிர் பிழைத்த சம்பவம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/15-year-old-boy-survives-two-days-in-bering-sea-1789234034"></link>
            <id>https://news.lankasri.com/article/15-year-old-boy-survives-two-days-in-bering-sea-1789234034</id>
            <summary type="text">15-year-old-boy-survives-two-days-in-bering-sea: 2 நாட்களாக கடலில் தத்தளித்த 15 வயது சிறுவன் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளான்.கடலில் உயிருக்கு போராடிய 15 ...</summary>
            <content type="html"><![CDATA[<p>15-year-old-boy-survives-two-days-in-bering-sea: 2 நாட்களாக கடலில் தத்தளித்த 15 வயது சிறுவன் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளான்.</p><h2>கடலில் உயிருக்கு போராடிய 15 வயது சிறுவன்</h2><p>

அமெரிக்காவின் அலாஸ்கா அருகில் உள்ள பெரிங் கடலில் படகு ஒன்று கவிழ்ந்த நிலையில், 2 நாட்களாக கடலில் தத்தளித்த 15வயது சிறுவன் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார்.</p><p> &nbsp;செயிண்ட லாரன்ஸ் தீவில் உள்ள சவோங்கா கிராமத்தை சேர்ந்த டெரெக் பார்க்கர் அக்னாங்கா என்ற 15 வயது சிறுவன் படகில் உறவினர்களுடன் மீன்பிடிக்க சென்ற போது அவரது படகு எதிர்பாராத விதமாக கடலில் கவிழ்ந்தது.</p><p>கடலில் நீரின் வெப்பநிலையானது வெறும் 10 டிகிரி செல்சியஸ் மட்டுமே இருந்த நிலையில், கவிழ்ந்த படகை இறுக்கமாக பிடித்துக் கொண்டு இரவு பகலாக உயிருக்கு போராடியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/594c2f50-a0e6-43f1-b91f-0cecd20798d9/26-6aa58b7424b8c.webp' /></p><p></p><h2> மீட்பு மற்றும் தேடுதல் பணி</h2><p>

கடலுக்கு சென்ற 3 பேரை காணவில்லை என உள்ளூர் மக்கள் தகவல் தெரிவித்ததும். அமெரிக்க கடலோரக் காவல்படை தீவிர தேடுதல் மற்றும் மீட்பு பணிகளை துரிதப்படுத்தினர்.</p><p> இதில் சிறுவனுடன் சென்ற மற்ற இரண்டு பேர் உயிரிழந்து விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p> கடலில் உயிருக்காக 2 நாட்களாக போராடிய சிறுவன் சுமார் 2 நாட்களுக்கு பிறகு செயிண்ட் லாரன்ஸ் தீவுக்கு அருகே மீட்கப்பட்டார்.</p><p> மீட்கப்பட்ட சிறுவன் உடனடியாக கரைக்கு அழைத்து வரப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டனர்.</p><p> 15 வயது சிறுவன் 2 நாட்களாக கடலில் மிதந்த படி உயிருடன் இருந்தது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-12T17:27:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாமலின் காருக்கு அர்ச்சுனாதான் சாரதி...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/archchuna-changes-course-on-mahinda-s-stage-1789232715"></link>
            <id>https://ibctamil.com/article/archchuna-changes-course-on-mahinda-s-stage-1789232715</id>
            <summary type="text">முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆளுமைமிக்க தலைமையின் கீழ் மட்டுமே தமிழ் - சிங்கள சமூகங்களையும் உண்மையாக ஒன்றிணைக்க முடியும் என&amp;nbsp;யாழ். மாவட்ட ...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆளுமைமிக்க தலைமையின் கீழ் மட்டுமே தமிழ் - சிங்கள சமூகங்களையும் உண்மையாக ஒன்றிணைக்க முடியும் என&nbsp;யாழ். மாவட்ட சுயேச்சை குழு நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.</p><p> அநுராதபுரம் மாநகர சபை மைதானத்தில் மகிந்த ராஜபக்ச தலைமையில் நடைபெற்ற சிறிலங்கா பொதுஜன பெரமுன (SLPP) கட்சியின் மகா ஜன பேரணியில்&nbsp; (Janasatana Rally) அவர் இந்த கருத்துக்களை முன்வைத்துள்ளார்.</p><p>
அங்கு திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான சிங்கள மக்கள் மத்தியில், முற்றிலும் சிங்கள மொழியிலேயே தனது உரையை நிகழ்த்திய அர்ச்சுனா, டயஸ்போரா நிதி விவகாரம், இன நல்லிணக்கம் மற்றும் நாட்டின் தற்போதைய அரசியல் சூழல் குறித்துப் பல கதைகளை பகிர்ந்து கொண்டார்.</p><p></p><h2>வடக்கின் அரசியல்</h2><p>மேடையில் உரையைத் தொடங்கிய அர்ச்சுனா, வடக்கு மாகாணத்தில் தேர்தல்களின் போது பின்னணியில் நிதிப் பரிமாற்றங்கள் இடம்பெறுகிறது என சுட்டிக்காட்டிய அவர் தொடர்ந்தும் கருத்து வெளியிடுகையில்</p><p> "யாழ்ப்பாணத்திலும் வடக்கிலும் அரசியல் செய்யும் பலருக்கு எங்கிருந்து பணம் வருகிறது? வெளிநாடுகளில் வாழும் புலம்பெயர் தமிழ் அமைப்புகளும் (Tamil Diaspora), தமிழ் சமூகத்தினரும்தான் தேர்தல்களை இலக்கு வைத்து கோடிக்கணக்கான நிதியை அங்குள்ள அரசியல்வாதிகளுக்கு அனுப்புகிறார்கள்.</p><p>தமிழ் புலம்பெயர் சமூகத்தினர் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை தலைவராக உருவாக்குவதற்காக பல பில்லியன் ரூபா பணத்தை வழங்கியுள்ளனர்.</p><p>

ஆனால் தற்போது தமிழ் மக்களே தங்களது முடிவு குறித்து வருந்துகின்றனர். நான் எனது தமிழ் மக்களினதும் தமிழ் புலம்பெயர் சமூகத்தினதும் செய்தியை எடுத்துக்கொண்டு இங்கு வந்துள்ளேன்.</p><p>சிங்கள மக்களுடன் தாங்கள் எப்போதும் ஒற்றுமையாக வாழ்வோம் என்றும், அநுர குமார திசாநாயக்கவினால் தாங்கள் தவறாக வழிநடத்தப்பட்டதாகவும், இதனை அனைத்து சிங்கள மக்களிடமும் தெரிவிக்குமாறு அவர்கள் என்னிடம் கூறியுள்ளனர்.</p><p>தெற்கில் உள்ள சிங்கள மக்களுக்கும் வடக்கில் உள்ள தமிழ் மக்களுக்கும் இடையில் உண்மையான நல்லிணக்கம் ஏற்பட வேண்டும்.</p><p>“காட்டில் சிங்கத்திற்கும் எல்லை உண்டு, புலிக்கும் எல்லை உண்டு. தேசியக் கொடியில் சிங்கம் இருக்கிறது, வடக்கில் புலியை அடையாளமாகக் காட்டினார்கள். ஆனால், காடு என்று வரும்போது இரண்டும் ஒரே காட்டிற்குள்தான் வாழ வேண்டும்.</p><p></p><h2>நாமல் ராஜபக்சவிற்கு நன்றி</h2><p> </p><p>அதேபோல, இந்த இலங்கை என்கிற தேசத்திற்குள் சிங்கங்களாகிய சிங்கள மக்களும் புலிகளாகிய தமிழ் மக்களும் பிரிந்து மோதாமல், ஒன்றிணைந்து வாழ பழகிக்கொள்ள வேண்டும்.</p><p>கடந்த கால கசப்பான சம்பவங்களை மறந்து இரு சமூகங்களும் கைகோர்க்க வேண்டும்.</p><p>முன்னாள் ஜனாதிபதி மகிந்தவின் ஆளுமைமிக்க தலைமையின் கீழ் மட்டுமே இந்த இரு சமூகங்களையும் உண்மையாக ஒன்றிணைக்க முடியும்.</p><p>ஒருபோதும் எனக்கு தமிழீழம் தேவையில்லை. எனக்கு வேண்டியது சிங்கள மக்களே. நான் மரணிக்கும் வரைக்கும் தமிழீழத்தை கோரப்போவதில்லை.</p><p>மேடையில் தன்னை வடக்கின் எதிர்காலத் தலைவர் என அறிமுகப்படுத்தியமைக்காக நாமல் ராஜபக்சவிற்கு நன்றி. நாமலிடம் நான் ஒரு வாக்குறுதியை வழங்கியுள்ளேன்.நாமல் ஜனாதிபயானால் அவரின் வாகனத்துக்கு சாரதிகாக வருவதாக கூறியுள்ளேன்.</p><p>அண்மைக் காலமாக நாடாளுமன்றத்தில் தமக்கு எதிராக அச்சுறுத்தல்கள் விடுக்கப்படுகிறது. வைத்தியராக இருந்த காலத்தில் எனக்கு எதிராக எந்த வழக்குகளும் இல்லை.</p><p>ஆனால் இந்த கொத்தமல்லி ஜனாதிபதி ஆட்சிக்கு வந்தவுடன் தனக்கு எதிராக அதிக வழக்குகள் தாக்கல் செய்துள்ளார். 29 வழக்குகளை தாக்கல் செய்துள்ளார்.</p><p>சட்டம் என்பது ஏழைக்கும் அரசியல்வாதிக்கும் பொதுவாக இருக்க வேண்டும்.</p><p></p><h2>அநுரவுக்கு பில்லியன் டொலர் உதவி</h2><p>நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபாநாயகரின் அறைக்குள் செல்வதற்கு அஞ்சுகின்றனர். அங்கு தாங்கள் என்ன பார்க்க நேரிடும் என்ற அச்சம் அவர்களிடத்தில் இருக்கிறது.</p><p>சில நேரங்களில் ஒரு பொது சுகாதார பரிசோதகர் (PHI) சபாநாயகருக்கு உணவு ஊட்டுகிறார். அல்லது அதற்கு நேர்மாறாக நடக்கிறது. </p><p>அவரது அறைக்குள் சென்றால் நாம் என்ன பார்க்க நேரிடும் என்ற அச்சம் எங்களுக்கு உள்ளது.</p><p>அநுர குமார திசாநாயக்கவை ஜனாதிபதியாகத் தெரிவுசெய்துள்ளீர்கள். ஆனால் அவர் ஒரு தந்திரமான நரி. ” என்றார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-12T17:19:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[அஜித்தை ஆரத்தழுவி முத்தமிட்ட தமிழக முதலமைச்சர் விஜய் ; இணையத்தில் வைரலாகும் நெகிழ்ச்சிக் காட்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/vijay-warmly-embraced-and-kissed-ajith-goes-viral-1789232768"></link>
            <id>https://jvpnews.com/article/vijay-warmly-embraced-and-kissed-ajith-goes-viral-1789232768</id>
            <summary type="text">இங்கிலாந்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார் பந்தயக் களத்தில், தமிழக முதலமைச்சர் விஜய்யும் பிரபல நடிகர் அஜித்குமாரும் நேரில் சந்தித்து அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இங்கிலாந்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார் பந்தயக் களத்தில், தமிழக முதலமைச்சர் விஜய்யும் பிரபல நடிகர் அஜித்குமாரும் நேரில் சந்தித்து அன்பைப் பரிமாறிக்கொண்ட சம்பவம் ரசிகர்களிடையே பெரும் நெகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.</p><p>
</p><p></p><p>2026ஆம் ஆண்டுக்கான 'மிச்செலின் லீ மான்ஸ் கிண்ண' பந்தயத் தொடரின் 5 ஆவது சுற்று லண்டன் சில்வர்ஸ்டோன் மைதானத்தில் நடைபெறுகிறது.
</p><p>
44 பந்தய சிற்றூந்துகள் பங்கேற்கும் இந்த பிரம்மாண்டப் போட்டியை, ஆசியப் பிரதிநிதியாகவும் சிறப்பழைப்பாளராகவும் பங்கேற்றுள்ள தமிழக முதலமைச்சர் விஜய் பச்சைக் கொடி அசைத்து தொடங்கி வைக்கிறார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3cda3dff-25ba-4a41-a9bd-fd9f19d002cb/26-6aa5868242ffa.webp' /></p><p>சர்வதேசப் பந்தய வீரராக இந்தப் போட்டியில் களமிறங்கும் நடிகர் அஜித் குமார், LMP3 Pro/Am பிரிவில் 'Ajith RedAnt by Virage' அணியின் சார்பில் 16 ஆம் எண் கொண்ட 'Ligier' பந்தய சிற்றூந்தை இயக்கவுள்ளார்.
</p><p>
இந்தநிலையில், பந்தய மைதானத்துக்கு வருகை தந்த நடிகர் அஜித்தைக் கண்டதும், முதலமைச்சர் விஜய் விரைந்து சென்று அவரை நெகிழ்ச்சியுடன் ஆரத்தழுவி, அன்பு முத்தமிட்டுத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.
</p><p>
தமிழ் திரையுலகில் 34 ஆண்டுகளுக்கும் மேலாக இரு துருவங்களாகக் கருதப்பட்ட இரு பெரும் நட்சத்திரங்கள், சர்வதேச விளையாட்டுக் களம் ஒன்றில் இணைந்து நின்று அன்பைப் பரிமாறிக்கொண்ட காட்சி உலகெங்கிலும் உள்ள தமிழர்களையும் ரசிகர்களையும் பேரானந்தத்தில் ஆழ்த்தியுள்ளது.</p><p></p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">CM Vijay X Racer Ajith! https://t.co/kYlJBpF7C2</p>&mdash; AndhraBoxOffice.Com (@AndhraBoxOffice) <a href="https://x.com/AndhraBoxOffice/status/2098788805801320925?ref_src=twsrc%5Etfw">September 12, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p>]]></content>
            <updated>2026-09-12T17:06:17+00:00</updated>
        </entry>
    </feed>
