<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-08-25T03:33:04+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[விஷால் திரை வாழ்க்கையில் கண்டிராத மிகப்பெரிய தோல்வி.. மகுடம் படத்தின் இறுதி வசூல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/vishal-magudam-movie-final-box-office-1787627134"></link>
            <id>https://viduppu.com/article/vishal-magudam-movie-final-box-office-1787627134</id>
            <summary type="text">நடிகர் விஷால் இயக்கி, ஹீரோவாக நடித்து வெளிவந்த திரைப்படம் மகுடம். முதல் முறையாக அவரே இயக்கியுள்ளதால் இப்படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது. ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நடிகர் விஷால் இயக்கி, ஹீரோவாக நடித்து வெளிவந்த திரைப்படம் மகுடம். முதல் முறையாக அவரே இயக்கியுள்ளதால் இப்படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/24f414d1-3607-4638-bd95-a40797fc8d03/26-6a8d0681c743e.webp' /></p><p>ஆனால், அந்த எதிர்பார்ப்பை இப்படம் பூர்த்தி செய்யவில்லை. கடுமையான விமர்சனங்களை ரசிகர்கள் மத்தியில் சந்தித்தது.
</p><p>
இந்நிலையில், இதுவரை இப்படம் ரூ. 3+ கோடிகள் மட்டும்தான் மொத்தமாக வசூல் செய்துள்ளது. அந்தளவிற்கு இந்த படத்தை ரசிகர்கள் ஒதுக்கிவிட்டார்கள் என தெரிகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b786697b-657a-43ab-94f8-71739afd50eb/26-6a8d068118d50.webp' /></p><p> 

அதோடு விஷால் திரைப்பயணத்திலேயே மிக குறைந்த வசூல் கொடுத்த படம் இந்த மகுடம் தான் என்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-08-25T03:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: உயிரிழந்த கைதிகளுக்கு நஷ்டஈடு வழங்கக் கோரிக்கை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/killed-prisoners-family-will-get-compensation-1787627733"></link>
            <id>https://tamilwin.com/article/killed-prisoners-family-will-get-compensation-1787627733</id>
            <summary type="text">&amp;nbsp;நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறையின் போது உயிரிழந்த கைதிகளின் குடும்பங்களுக்கு நஷ்டஈடு வழங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறு அரசாங்கத...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறையின் போது உயிரிழந்த கைதிகளின் குடும்பங்களுக்கு நஷ்டஈடு வழங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
</p><p>10 சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் 21 கைதிகள் உட்பட 31 பேர் உயிரிழந்ததுடன், பலர் காயமடைந்த இந்த மோதல் சம்பவத்தைத் தொடர்ந்து இக்கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p><p>
உயிரிழந்த கைதிகளுக்கும் நஷ்டஈடு வழங்குமாறு அரசாங்கத்திடம் கோரியுள்ளதாகவும், இது தொடர்பான கோரிக்கை ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்காலத்தில் தேவையான ஏற்பாடுகள் செய்யப்படும் எனவும் சிறைச்சாலைகள் ஆணையாளரும் பேச்சாளருமான சேனக்க பள்ளேதென்ன தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b84f14a6-2838-4fcf-850f-25c001544b21/26-6a8d08db6c920.webp' /></p><p>
இந்த சம்பவம் சிறைச்சாலைக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தியதுடன், நெரிசல், உத்தியோகத்தர்களின் பற்றாக்குறை மற்றும் பாதுகாப்பு குறைபாடுகள் போன்ற சிறைச்சாலை அமைப்பில் நிலவும் நீண்டகாலப் பிரச்சினைகளை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்துள்ளது. </p><p>
இதனைத் தொடர்ந்து மஹர, கொழும்பு நியூ மெகசின், குருவிற்ற மற்றும் பள்ளன்சேனை ஆகிய சிறைச்சாலைகளிலும் அசம்பாவிதங்கள் பதிவாகியிருந்தன.
</p><p>சிறைச்சாலைகளில் உள்ள நெரிசலைக் குறைப்பதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பொலிஸ் திணைக்களத்தின் கருத்துக்கள் மற்றும் யோசனைகளைப் பெறுவதில் ஆளுகை, நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு பற்றிய நாடாளுமன்றத் துறைசார் மேற்பார்வைக் குழு கவனம் செலுத்தியுள்ளது.</p><p>
மேலும், பொலிஸ் உத்தியோகத்தர்களின் நலனை மேம்படுத்துதல், அவர்களின் தொழில்முறை பயிற்சி மற்றும் புலனாய்வுத் திறன்களை அதிகரித்தல் மற்றும் பொலிஸ் செயல்திறனை மதிப்பிடுவதற்கான வழிமுறைகளை வலுப்படுத்துதல் ஆகியன தொடர்பிலும் இக்கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-25T03:15:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் எச்சரிக்கை மட்டத்தில் கடும் வெப்பநிலை! பொதுமக்களுக்கு அவசர அறிவுறுத்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/mber-coloured-heat-weather-warning-for-country-1787627461"></link>
            <id>https://tamilwin.com/article/mber-coloured-heat-weather-warning-for-country-1787627461</id>
            <summary type="text">நாட்டின் சில பகுதிகளில் இன்று வெப்பமான வானிலை அதிகரிக்கக்கூடும் என இயற்கை இடர் முன்னெச்சரிக்கை மையம் எச்சரித்துள்ளது.

இதன்படி இன்றைய தினம் (25) செம...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டின் சில பகுதிகளில் இன்று வெப்பமான வானிலை அதிகரிக்கக்கூடும் என இயற்கை இடர் முன்னெச்சரிக்கை மையம் எச்சரித்துள்ளது.
</p><p>
இதன்படி இன்றைய தினம் (25) செம்மஞ்சள் மட்டத்திலான அம்பர் எச்சரிக்கையை விடுத்துள்ளது.</p><h2>எச்சரிக்கை மட்டத்தில் வெப்பம்</h2><p>இதற்கமைய, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களுக்கும், வவுனியா, முல்லைத்தீவு மற்றும் மொனராகலை மாவட்டங்களுக்கும் பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f0504e2b-8e29-4ab7-aa26-21735394c08b/26-6a8d07c7115f8.webp' /></p><p>இதேவேளை, பகல் வேளையில் மனித உடலால் உணரப்படும் வெப்பத்தின் அளவு சில இடங்களில் எச்சரிக்கை மட்டம் வரை உயரக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

எனவே, அதிக வெப்பம் நிலவும் நேரங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயல்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.</p><p>
</p><p>&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-25T03:11:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை வருகிறார் இந்திய பாதுகாப்பு அமைச்சர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/indias-defence-minister-rajnath-singh-to-visit-sl-1787626385"></link>
            <id>https://ibctamil.com/article/indias-defence-minister-rajnath-singh-to-visit-sl-1787626385</id>
            <summary type="text">இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்த பேச்சுவார்த்தைகளுக்காக, இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் இலங்கை பயணம் தொடர்பில் ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்த பேச்சுவார்த்தைகளுக்காக, இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் இலங்கை பயணம் தொடர்பில் முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது.</p><p>அந்தவகையில் ராஜ்நாத் சிங் செப்டம்பர் 9 மற்றும் 10 ஆகிய திகதிகளில் இலங்கைக்கு பயணம் மேற்கொள்ள உள்ளதாக இந்திய பாதுகாப்பு அமைச்சின் தகவல்களை மேற்கோள்காட்டி இந்திய ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.</p><p>அவரது பயணத்தின் போது இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தின் கடல்சார் பாதுகாப்பு விடயம் முக்கிய இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.&nbsp; &nbsp;</p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">கூட்டு நடவடிக்கைகள்</span></p><p> </p><p>இந்திய பாதுகாப்பு அமைச்சக வட்டாரங்களின்படி, இந்தப் பயணத்தின் போது, ​​ராஜ்நாத் சிங், இலங்கை ஜனாதிபதியும் பாதுகாப்பு அமைச்சருமான அனுர குமார திசாநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற எயார்வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தா ஆகியோரைச் சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7684f03b-25bd-4dcd-865c-dc9c5f79d717/26-6a8d0720604d4.webp' /></p><p>2025 ஏப்ரல் 5 ஆம் திகதி பிரதமர் நரேந்திர மோடி கொழும்புக்கு பயணம் மேற்கொண்டபோது கையெழுத்திடப்பட்ட இந்தியா-இலங்கை பாதுகாப்பு ஒத்துழைப்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை (MoU) முழுமையாகவும் சரியான நேரத்திலும் செயல்படுத்துவது குறித்த ஆய்வும் இந்த கலந்துரையாடல்களில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றும் தெரிவிக்கப்படுகிறது.&nbsp;&nbsp;</p><p>கடல்சார் பாதுகாப்பு மற்றும் இந்தியப் பெருங்கடல் கரையோர நாடுகளுடனான நெருங்கிய பாதுகாப்பு கூட்டாண்மைகளுக்கு இந்தியா முக்கியத்துவம் அளித்து வரும் சூழலில், ராஜ்நாத் சிங்கின் இந்த பயணம் முக்கியத்துவம் பெறுகிறது.
</p><p>


இது, இரு நாடுகளுக்கும் இடையிலான இராணுவ ரீதியான ஈடுபாட்டை ஆழப்படுத்தவும், பொதுவான பிராந்திய பாதுகாப்பு கவலைகள் குறித்த ஒருங்கிணைப்பை வலுப்படுத்தவும் ஒரு வாய்ப்பை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்..</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-25T03:08:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[2027 பரீட்சைகளுக்கான திகதிகள் - பரீட்சைகள் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/2027-gce-al-ol-scholarship-exam-dates-announced-1787626777"></link>
            <id>https://ibctamil.com/article/2027-gce-al-ol-scholarship-exam-dates-announced-1787626777</id>
            <summary type="text">2027ஆம் ஆண்டு நடைபெறவுள்ள முக்கிய பாடசாலைப் பரீட்சைகளுக்கான திகதிகளை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்...</summary>
            <content type="html"><![CDATA[<p>2027ஆம் ஆண்டு நடைபெறவுள்ள முக்கிய பாடசாலைப் பரீட்சைகளுக்கான திகதிகளை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.</p><p>
</p><p>
பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.</p><p>இதன்படி, தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை 2027ஆம் ஆண்டு ஆகஸ்ட் 1 ஆம் திகதி நடைபெறவுள்ளது.</p><p></p><h2>பரீட்சைகள்&nbsp;</h2><p>
அதேவேளை, க.பொ.த. உயர்தரப் பரீட்சை (A/L) ஆகஸ்ட் 3ஆம் திகதி முதல் 28ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8037241b-c2c8-4d1e-b72f-4cc5b69d33bd/26-6a8d0647335ae.webp' /></p><p>மேலும், பொதுத் தகவல் தொழில்நுட்பப் பரீட்சை (GIT) ஒக்டோபர் 24ஆம் திகதி நடைபெறவுள்ளது.
</p><p>
இதனிடையே, க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை (O/L) டிசம்பர் 7ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
</p><p>
2026 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 24 ஆம் திகதி பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/FJQcrzobjUcEaJJsEVOWpF" target="_blank">WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-25T03:04:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாக்ஸ் ஆபிஸ்: 11 நாட்களில் விஸ்வநாத் &amp; சன்ஸ் திரைப்படம் செய்துள்ள வசூல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/vishwanath-and-sons-11-days-box-office-1787626683"></link>
            <id>https://cineulagam.com/article/vishwanath-and-sons-11-days-box-office-1787626683</id>
            <summary type="text">சூர்யா நடிப்பில் வெளிவந்த விஸ்வநாத் &amp;amp; சன்ஸ் திரைப்படம் 11 நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

விஸ்வநாத் &amp;amp; சன்...</summary>
            <content type="html"><![CDATA[<p>சூர்யா நடிப்பில் வெளிவந்த விஸ்வநாத் &amp; சன்ஸ் திரைப்படம் 11 நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.</p><p></p><p>
</p><h2>
விஸ்வநாத் &amp; சன்ஸ்
</h2><p>
இயக்குநர் வெங்கி அட்லூரி தென்னிந்திய சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக வலம் வருகிறார். இவர் இயக்கிய லக்கி பாஸ்கர் திரைப்படம் பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்றதை தொடர்ந்து, அடுத்ததாக யாருடன் கைகோர்க்க போகிறார் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தனர்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/648fc485-f599-42a3-8332-eb96efdb315d/26-6a8d04c05a2f4.webp' /></p><p>அதன்படி, நடிகர் சூர்யாவுடன் கைகோர்த்து விஸ்வநாத் &amp; சன்ஸ் திரைப்படத்தை இயக்கினார். இப்படத்தில் மமிதா பைஜூ கதாநாயகியாக நடிக்க, ராதிகா சரத்குமார், ரவீனா டாண்டன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ffd7b12a-84ef-4c48-b236-4978f1927aaf/26-6a8d04beece02.webp' /></p><p> </p><h2>

பாக்ஸ் ஆபிஸ்
</h2><p>
மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கிய <a href="https://www.youtube.com/watch?v=JTHZCJ8Rhxg&amp;t=2s" target="_blank">விஸ்வநாத் &amp; சன்ஸ்</a> திரைப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றாலும், பாக்ஸ் ஆபிஸில் முதல் நாளிலிருந்தே பட்டையை கிளப்பி வருகிறது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3cc8ff33-9247-44a4-aed4-545205c55a40/26-6a8d04bfa34b3.webp' /></p><p>இந்நிலையில், 11 நாட்களை வெற்றிகரமாக கடந்திருக்கும் விஸ்வநாத் &amp; சன்ஸ் திரைப்படம் உலகளவில் இதுவரை செய்துள்ள வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் 11 நாட்களில் உலகளவில் ரூ. 187 கோடி வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் எவ்வளவு வசூல் செய்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.</p>]]></content>
            <updated>2026-08-25T03:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளுக்கு திடீர் நீர்வெட்டு - வெளியான காரணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/water-cut-in-colombo-and-several-areas-today-1787625372"></link>
            <id>https://ibctamil.com/article/water-cut-in-colombo-and-several-areas-today-1787625372</id>
            <summary type="text">முதலாம் இணைப்பு களனி கங்கையிலிருந்து நீரைப் பெற்றுக்கொள்ளும் பகுதியில் நீரின் தரத்தைப் பாதித்த அவசர நிலைமை, முப்படையினரின் ஒத்துழைப்புடன் தற்போது சீர்...</summary>
            <content type="html"><![CDATA[<h2>முதலாம் இணைப்பு </h2><p>களனி கங்கையிலிருந்து நீரைப் பெற்றுக்கொள்ளும் பகுதியில் நீரின் தரத்தைப் பாதித்த அவசர நிலைமை, முப்படையினரின் ஒத்துழைப்புடன் தற்போது சீர்செய்யப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.</p><p>நீரின் தரம் குறித்து ஆய்வகப் பரிசோதனைகள் நடத்தப்பட்டு, அது குறிப்பிட்ட தரநிலைகளுக்கு அமைய உள்ளமை உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே நீர் விநியோகத்தை மீண்டும் வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அந்தச் சபை இன்று காலை 6 மணிக்கு வெளியிட்ட அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p>இருப்பினும், பத்தரமுல்ல, கோட்டே மற்றும் பாமன்கடை ஆகிய பல பகுதிகளில் நீர் விநியோகத்தை மீண்டும் தொடங்குவதில் தாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது.&nbsp;&nbsp;</p><p></p><h2>புதிய இணைப்பு</h2><p>கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களின் பல பிரதேசங்களுக்கான நீர் விநியோகத்தை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9ea8cc46-5553-4e06-8d25-d9e3691a81b5/26-6a8d0127da3c1.webp' /></p><p>கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களின் பல பிரதேசங்களுக்கு நீர் விநியோகிக்கும் அம்பதலை மற்றும் களனி தெற்கு கரை நீர் சுத்திகரிப்பு நிலையங்களின் நீர் விநியோகத்தை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p>குறித்த விடயத்தை தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.</p><p></p><h2>நீர்&nbsp;விநியோகம்&nbsp;தடை</h2><p>களனி கங்கையிலிருந்து நீரைப் பெற்றுக்கொள்ளும் Intake பகுதிக்கு அருகில் நீரின் தரத்தைப் பாதித்த அவசர நிலைமை காரணமாக, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் (DMC) அறிவித்தலுக்கு அமைவாக இவ்வாறு நீர் விநியோகம் இடைநிறுத்தப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/728a3473-9e15-4e39-a12d-bf294cf3c454/26-6a8d0128934c4.webp' /></p><p>

 

நீர் விநியோகத்தைச் சாதாரண நிலைக்குக் கொண்டுவருவது தொடர்பில் எதிர்காலத்தில் அறிவிக்கப்படும் என்றும், தற்போதைய நிலைமையினால் ஏற்படும் அசௌகரியங்களுக்கு நுகர்வோரிடம் வருத்தத்தைத் தெரிவித்துக்கொள்வதாகவும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP </a>CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-25T02:54:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதிகாலை இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட பயங்கர நபர் - விசாரணையை ஆரம்பித்த CID]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/underworld-bus-lalith-brought-back-sl-from-duba-1787622547"></link>
            <id>https://ibctamil.com/article/underworld-bus-lalith-brought-back-sl-from-duba-1787622547</id>
            <summary type="text">டுபாயில் கைது செய்யப்பட்ட திட்டமிடப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் குற்றவாளியும் போதைப்பொருள் கடத்தல்காரருமான லலித் கன்னங்கர என்ற &#039;பஸ் லலித்&#039; இலங்கைக...</summary>
            <content type="html"><![CDATA[<p>டுபாயில் கைது செய்யப்பட்ட திட்டமிடப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் குற்றவாளியும் போதைப்பொருள் கடத்தல்காரருமான லலித் கன்னங்கர என்ற 'பஸ் லலித்' இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
</p><p>
 

இன்று (25) அதிகாலை குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளின் குழுவொன்றினால் அவர் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>குறித்த விடயத்தை காவல்துறை ஊடகப் பேச்சாளர் உதவி காவல்துறை அத்தியட்சகர் எஃப்.யு. வூட்லர் தெரிவித்துள்ளார்.</p><p></p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">மேலதிக விசாரணை</span></p><p>
</p><p>
 

களுத்துறை தெற்கு பிரதேசத்தைச் சேர்ந்த 36 வயதான இந்த சந்தேகநபருக்கு எதிராக இன்டர்போல் சர்வதேச சிவப்பு எச்சரிக்கையும் (Red Notice) விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8e3ccd3d-0f19-4c70-9170-fef762d59fe1/26-6a8cf9f0cd1a1.webp' /></p><p>
'பஸ் லலித்' என அறியப்படும் சந்தேக நபர் சமீபத்தில் டுபாய் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டிருந்தார். பஸ் லலித்' மீது மனிதக்கொலை, குற்றச்செயல்கள் மற்றும் கப்பம் கோருதல் போன்ற பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.</p><p>நாட்டிற்கு அழைத்து வரப்பட்ட சந்தேகநபர் குறித்து குற்றப்புலனாய்வுத் திணைக்களம் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.</p><p>

 

அவிசாவளை நீதவான் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு தொடர்பில் மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவினால் சிவப்பு எச்சரிக்கை பெறப்பட்டுள்ளதுடன், கொலைக் குற்றத்திற்காக நீதிமன்றத்தில் முன்னிலையாகாத குற்றத்திற்காக கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் இவருக்கு எதிராகத் திறந்த பிடியாணையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/FJQcrzobjUcEaJJsEVOWpF" target="_blank">WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-25T02:43:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[டுபாயிலிருந்து பலத்த பாதுகாப்பில் இலங்கைக்கு அழைத்துவரப்பட்ட ஆபத்தான நபர்..! தீவிரமடையும் விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/bus-lalith-arrested-dubai-back-to-sri-lanka-1787621689"></link>
            <id>https://tamilwin.com/article/bus-lalith-arrested-dubai-back-to-sri-lanka-1787621689</id>
            <summary type="text">டுபாயில் கைது செய்யப்பட்டதாக கூறப்படும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்குழுவைச் சேர்ந்த ‘பஸ் லலித்’ என அழைக்கப்படும் லலித் கன்னங்கர இலங்கைக்கு அழைத்து வரப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>டுபாயில் கைது செய்யப்பட்டதாக கூறப்படும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்குழுவைச் சேர்ந்த ‘பஸ் லலித்’ என அழைக்கப்படும் லலித் கன்னங்கர இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.</p><p>இன்று (25) அதிகாலை குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளின் குழுவொன்றினால் அவர் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு. வூட்லர் தெரிவித்துள்ளார்.</p><p>இதற்கமைய, இன்று காலை சுமார் 5:20 மணியளவில் டுபாயிலிருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் UL 226 மூலம் அவர் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.</p><h2>சர்வதேச சிவப்பு எச்சரிக்கை</h2><p>
 

கடந்த நாட்களில் டுபாய் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்ட 'பஸ் லலித்'&nbsp; சர்வதேச சிவப்பு எச்சரிக்கையின்&nbsp; (Red Notice)&nbsp;கீழ் அழைத்துவரப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b2d9aad6-3b14-4d61-9e24-fc79b8557ae1/26-6a8cf56936664.webp' /></p><p>தற்போது, ​​கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் அவரது வாக்குமூலங்களைப் பதிவு செய்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.</p><p>இதன்பின்னர் அவர் மேலதிக விசாரணைகளுக்காக கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவுக்குக் கொண்டு செல்லப்பட உள்ளார்.</p><p>களுத்துறை தெற்கு பிரதேசத்தைச் சேர்ந்த 36 வயதான இந்த சந்தேகநபருக்கு எதிராக மனிதக்கொலை, குற்றச்செயல்கள் மற்றும் கப்பம் கோருதல் போன்ற பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.</p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">பிடியாணை உத்தரவு</span></p><p>
</p><p>
 

 சர்வதேச சிவப்பு எச்சரிக்கையும் (Red Notice) கீழ் நாட்டிற்கு அழைத்து வரப்பட்ட சந்தேகநபரிடம் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b0721702-a7f6-4ea4-a304-7d6a2f978ef7/26-6a8cfd7e8f94c.webp' /></p><p>
</p><p>
 

அவிசாவளை நீதவான் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு தொடர்பில் மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவினால் சிவப்பு எச்சரிக்கையும் பெறப்பட்டுள்ளது.</p><p>அத்துடன், கொலைக் குற்றத்திற்காக நீதிமன்றத்தில் முன்னிலையாகாத குற்றத்திற்காக கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் இவருக்கு எதிராகத் திறந்த பிடியாணையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-25T02:20:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் திடீரென நீர் விநியோகம் துண்டிப்பு - வெளியான அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/water-cut-in-colombo-and-gampaha-districts-1787622955"></link>
            <id>https://tamilwin.com/article/water-cut-in-colombo-and-gampaha-districts-1787622955</id>
            <summary type="text">கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களின் பல பிரதேசங்களுக்கு நீர் விநியோகம்&amp;nbsp;தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.களனி கங்கையிலிரு...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களின் பல பிரதேசங்களுக்கு நீர் விநியோகம்&nbsp;தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>களனி கங்கையிலிருந்து நீரைப் பெற்றுக்கொள்ளும் Intake பகுதிக்கு அருகில் நீரின் தரத்தைப் பாதித்த அவசர நிலைமை காரணமாக, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் (DMC) அறிவித்தலுக்கு அமைவாக இவ்வாறு நீர் விநியோகம் இடைநிறுத்தப்பட்டுள்ளது.</p><h2>அறிவிப்பு</h2><p>பாதுகாப்பு காரணங்களுக்க, அம்பத்தலை மற்றும் களனி தென்கரை நீர் சுத்திகரிப்பு நிலையங்களுக்கான நீர் விநியோகம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4c465e5a-0d4d-4a34-bae6-fe050f22c0f4/26-6a8cfa74ba897.webp' /></p><p>
 

நீர் விநியோகத்தை சாதாரண நிலைக்குக் கொண்டுவருவது தொடர்பில் எதிர்காலத்தில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>தற்போதைய நிலைமையினால் ஏற்படும் அசௌகரியங்களுக்கு நுகர்வோரிடம் வருத்தத்தைத் தெரிவித்துக்கொள்வதாகவும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச்சபை அறிவித்துள்ளது.&nbsp;&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-25T02:14:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்திய பாதுகாப்பு அமைச்சர் இலங்கை விஜயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/indian-defence-minister-visits-lanka-1787622490"></link>
            <id>https://tamilwin.com/article/indian-defence-minister-visits-lanka-1787622490</id>
            <summary type="text">இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ள உள்ளார்.
இந்த விஜயம் தொடர்பான அதிகாரபூர்வ திகதிகள் அறிவிக்கப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ள உள்ளார்.
இந்த விஜயம் தொடர்பான அதிகாரபூர்வ திகதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
</p><p>இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் தகவல்களை மேற்கோள்காட்டி இந்திய ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்திகளின்படி, எதிர்வரும் செப்டம்பர் 09 மற்றும் 10 ஆகிய திகதிகளில் இந்த விஜயம் அமையவுள்ளது.
</p><p>இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதையே இந்த விஜயத்தின் முதன்மை நோக்கமாகக் கொண்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/238864c0-40d5-4035-a0ac-bf13e45f30ae/26-6a8cf46361e55.webp' /></p><p>
இந்த விஜயத்தின் போது, இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் சம்பத் துய்யகொந்தா ஆகியோரை நேரில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.</p><p>
கடந்த ஆண்டு இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்தின் போது கையெழுத்தான இந்தியா - இலங்கை பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தின் தற்போதைய செயல்பாடுகள் மற்றும் முன்னேற்றங்கள் குறித்து இந்த விஜயத்தின் போது விரிவாக ஆய்வுக் செய்யப்படும் என இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.&nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-08-25T01:48:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதிகரிக்கும் மழையுடனான வானிலை! மக்களுக்கு வெளியான முன்னெச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/heavy-rain-with-amounts-exceeding-75-mm-1787619687"></link>
            <id>https://ibctamil.com/article/heavy-rain-with-amounts-exceeding-75-mm-1787619687</id>
            <summary type="text">சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.</p><p>அதன்போது, சில இடங்களில் 75 mm இலும் கூடிய ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இதேவேளை, அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் மொனராகலை மாவட்டங்களின் சில இடங்களில் பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புகள் காணப்படுவதாகவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p></p><h2>பலத்த காற்று&nbsp;</h2><p>
</p><p>
நாட்டின் ஏனைய பிராந்தியங்களில் வறட்சியான வானிலை நிலவக்கூடும் எனவும் கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b426c4e0-0067-40f3-a40b-513b856690c4/26-6a8cf0ae63e64.webp' /></p><p>மத்திய மலைப் பிராந்தியத்தின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் திருகோணமலை, மொனராகலை, ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் மணித்தியாலத்திற்கு சுமார் 40 - 50 km வேகத்தில் அடிக்கடி பலத்த காற்று வீசக் ஓரளவு கூடும்.</p><p>இந்நிலையில், பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-25T01:32:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானின் எச்சரிக்கைகளால் அதிரும் மத்திய கிழக்கு ; ட்ரம்பின் திட்டத்தால் காத்திருக்கும் ஆபத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/middle-east-shaken-by-iran-s-warnings-1787613090"></link>
            <id>https://canadamirror.com/article/middle-east-shaken-by-iran-s-warnings-1787613090</id>
            <summary type="text">அமெரிக்காவின் பொருளாதார தடை முடிவை ஆதரித்தால் ஒரு சொட்டு கச்சா எண்ணெய்கூட ஏற்றுமதி செய்ய முடியாதபடி கடும் பதிலடி தரப்படும் என்று வளைகுடா நாடுகளுக்கு ஈ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவின் பொருளாதார தடை முடிவை ஆதரித்தால் ஒரு சொட்டு கச்சா எண்ணெய்கூட ஏற்றுமதி செய்ய முடியாதபடி கடும் பதிலடி தரப்படும் என்று வளைகுடா நாடுகளுக்கு ஈரான் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது.</p><p>

அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் பிப்ரவரி மாதம் தொடங்கிய மோதல் தற்காலிகமாக முடிவுக்கு வந்தாலும் அவ்வப்போது மீண்டும் மோதல் ஏற்படுகிறது. இடையிடையே அமைதிப் பேச்சுவாா்த்தை நடைபெற்றாலும் அதில் இருதரப்புக்கும் சுமுக முடிவு எட்டப்படவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e2fd2f4e-ef1b-4ad5-bdec-394f32692288/26-6a8cd0f662898.webp' /></p><p>இதனால் ஈரானுக்கு எதிராக கடுமையான பொருளாதார ரீதியிலான நடவடிக்கைகளை மேற்கொள்ள அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் திட்டமிட்டுள்ளாா். </p><p>ஈரான் மீதும், ஈரானை ஆதரிக்கும் நாடுகள் மீதும் கடுமையான பொருளாதார தடைகளை விதிக்கப் போவதாக ட்ரம்ப் அண்மையில் அறிவித்தாா்.
</p><p>இந்த நிலையில், அமெரிக்காவின் பொருளாதார தடைகள் தொடா்பான புதிய நடவடிக்கைகளை வளைகுடா நாடுகள் ஆதரிக்கக் கூடாது என்றும், அப்படி ஆதரித்தால் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்றும் ஈரான் தொடா்ந்து எச்சரித்து வருகிறது.
</p><p>
இந்நிலையில், டெஹ்ரானில் செய்தியாளா்களிடம் பேசிய ஈரான் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் இஸ்மாயில் பகேயி, அமெரிக்காவின் பொருளாதார தடைகளால் இந்த பிராந்தியத்தில் அமைதி ஏற்படாது என்றும், அந்தத் தடைகளுக்கு ஈரான் கடுமையான பதிலடி தரும் என்றும் எச்சரித்தாா்.</p>]]></content>
            <updated>2026-08-25T01:32:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[உறவினர்களுடன் சென்ற தமிழர் பகுதி சிறுமிக்கு நொடிப்பொழுதில் நடந்தேறிய துயரம்; கதறும் பெற்றோர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/girl-faces-tragedy-while-travelling-with-relatives-1787619170"></link>
            <id>https://jvpnews.com/article/girl-faces-tragedy-while-travelling-with-relatives-1787619170</id>
            <summary type="text">வவுனியா செட்டிகுளம் பகுதியைச் சேர்ந்த&amp;nbsp;மூன்று வயது சிறுமி ஒருவர்&amp;nbsp;இரசாயன திரவமொன்றை குடித்த நிலையில் உயிரிழந்துள்ளாதாக தெரிவிக்கப்படுகின்றது.க...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">வவுனியா செட்டிகுளம் பகுதியைச் சேர்ந்த&nbsp;மூன்று வயது சிறுமி ஒருவர்&nbsp;இரசாயன திரவமொன்றை குடித்த நிலையில் உயிரிழந்துள்ளாதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p style="text-align: justify; ">கம்பளை, புப்புரஸ்ஸ&nbsp; பகுதியில் வவுனியாவிலிருந்து உறவினர்களுடன் வந்திருந்த மூன்று வயது சிறுமி ஒருவர் தண்ணீர் என நினைத்து இரசாயன திரவமொன்றை குடித்த நிலையில் உயிரிழந்துள்ளாதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5cf80ea4-844d-489f-855d-3802f0108554/26-6a8ce7640f684.webp' /></p><h2 style="text-align: justify; ">மேலதிக விசாரணை</h2><p style="text-align: justify; ">

குடும்பத்தினர் அனைவரும்&nbsp; வீட்டிற்கு வெளியே இருந்த சமயத்தில், அச்சிறுமி வீட்டிற்குள் சென்று&nbsp; &nbsp;வைக்கப்பட்டிருந்த திரவத்தைத் தண்ணீர் என குடித்துள்ளார்.</p><p style="text-align: justify; ">


இதனை தொடர்ந்து குறித்த சிறுமிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு, கம்பளை வைத்தியசாலையில்&nbsp; அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">

</p><p style="text-align: justify; ">எனினும் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக&nbsp; தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p style="text-align: justify; "> பசுவின் பாலைப் பதப்படுத்தப் பயன்படுத்தப்படும் ரசாயனத்தைக் குடித்ததால் சிறுமி உயிரிழந்துள்ளதாக பிரேதப் பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

</p><p style="text-align: justify; ">சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;&nbsp;</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-25T01:31:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவில் ஆயிரக்கணக்கானோா் வெளியேற்றம் ; வேகமாகப் பரவும் காட்டுத் தீ]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/thousands-deported-from-the-united-states-1787621446"></link>
            <id>https://canadamirror.com/article/thousands-deported-from-the-united-states-1787621446</id>
            <summary type="text">அமெரிக்காவில் வேகமாக காட்டுத் தீ பரவி வருவதையடுத்து, ஆயிரக்கணக்கானோா் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனா்.

அமெரிக்காவின் வடமேற்குப் பகுத...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவில் வேகமாக காட்டுத் தீ பரவி வருவதையடுத்து, ஆயிரக்கணக்கானோா் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனா்.
</p><p>
அமெரிக்காவின் வடமேற்குப் பகுதிகளான ரெனோ, நெவாடா ஆகிய பகுதிகளில் காட்டுத் தீ பற்றி எரிந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f2e5c1f4-27b3-40d7-82d4-b19ed920d39b/26-6a8cf04854eb5.webp' /></p><p>இந்த காட்டுத் தீக்கு இதுவரை 3 தீயணைப்புப் படையினா் உள்ளிட்ட 6 போ் காயமடைந்துள்ளனா்.</p><p>
நெவாடா பல்கலைக்கழகம் இருக்கும் பகுதிக்கு காட்டுத் தீ பரவியதும், அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் சுமாா் 42,000 பேரை பாதுகாப்பான இடங்களுக்கு அதிகாரிகள் வெளியேற்றியுள்ளனர்.</p><p>இதுதவிா்த்து மேலும் 45,000 பேரை பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லும்படி அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனா்.

</p><p>காட்டுத் தீயால் பாதிக்கப்பட்டுள்ள நெவாடா மாகாணத்தில் அவசரநிலையை அந்த மாகாண ஆளுநா் ஜோ லம்பாா்டோ பிரகடனம் செய்துள்ளாா். </p><p>வாஷோ கவுன்டி பகுதியில் 2 நாள்களாக மின்சார சேவை பாதிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-25T01:31:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இறுதிச்சடங்கிற்கு தயாரான குடும்பம்... உயிருடன் வந்த கைதி ; இலங்கையில் பரபரப்பு சம்பவம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/family-prepared-funeral-prisoner-returned-alive-1787620929"></link>
            <id>https://jvpnews.com/article/family-prepared-funeral-prisoner-returned-alive-1787620929</id>
            <summary type="text">நபர் ஒருவர் இறந்துவிட்டதாகப் பொலிஸாரால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டு, அவரது இறுதிச்சடங்குகளுக்காக அனைத்து ஏற்பாடுகளும் செய்யப் பட்டுக்கொண்டிருந்த ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நபர் ஒருவர் இறந்துவிட்டதாகப் பொலிஸாரால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டு, அவரது இறுதிச்சடங்குகளுக்காக அனைத்து ஏற்பாடுகளும் செய்யப் பட்டுக்கொண்டிருந்த வேளையில், இறந்துவிட்டதாகக் கூறப்பட்டவர் தயாராகிவந்த தனது இறுதிச்சடங்கு வீட்டிற்கே உயிருடன் நடந்து வந்த விசித்திரமான சம்பவமொன்று கல்கமுவ, கொஹொபன்குளம் கிராமத்திலிருந்து இடம்பெற்றுள்ளது.
</p><p>
 

இவ்வாறு திடீரெனத் தனது வீட்டிற்கு வந்துள்ளவர் கல்கமுவ, கொஹொபன்குளம் பிரதேசத்தைச் சேர்ந்த டி. எம். கீர்த்திசேன என்பவராவார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d3e95865-0b44-48a8-9de2-56979289a40c/26-6a8cee43b2109.webp' /></p><h2>இறுதிச்சடங்கு</h2><p>

 

வாரியப்பொல சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த திரு. கீர்த்திசேன சிறைச்சாலையினுள் இறந்துவிட்டதாக நான்னேரிய பொலிஸாரால் அவரது உறவினர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
 

இந்தச் செய்தியினால் கடும் அதிர்ச்சியடைந்த உறவினர்களும் கிராம மக்களும் ஒன்றிணைந்து இறுதிச்சடங்கு நடவடிக்கைகளைச் மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுத்திருந்தனர்.
</p><p>
 

கிராமம் முழுவதும் துயரப் பதாகைகள் காட்சிப்படுத்தப்பட்டு, இறுதிச்சடங்கு வீட்டிற்குத் தேவையான பந்தல்கள் அமைத்தல் மற்றும் தகனக் கிரியைகளுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் செய்யப்பட்டுக்கொண்டிருந்த தருணத்தில், அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி கீர்த்திசேன உயிருடன் வீடு திரும்பியுள்ளார்.
</p><p>
 

தனக்காக ஆயத்தமாகிவந்த இறுதிச்சடங்கு வீட்டிற்கே கீர்த்திசேன வந்து சேர்ந்ததைத் தொடர்ந்து, முழு கிராமமும் கடும் பரபரப்பிலும் ஆச்சரியத்திலும் மூழ்கியுள்ளதாக அததெரண செய்தியாளர் தெரிவிக்கின்றார்.</p>]]></content>
            <updated>2026-08-25T01:22:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[அடுத்த தசாப்தத்திற்குள் 300 பில்லியன் டொலர் பொருளாதார இலக்கு!- பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க தெரிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-lanka-economic-crisis-2026-1787619475"></link>
            <id>https://tamilwin.com/article/sri-lanka-economic-crisis-2026-1787619475</id>
            <summary type="text">அடுத்த தசாப்தத்திற்குள் இலங்கையை 300 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான
பொருளாதாரமாக உயர்த்தும் லட்சிய இலக்குடன் அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது
என...</summary>
            <content type="html"><![CDATA[<p>அடுத்த தசாப்தத்திற்குள் இலங்கையை 300 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான
பொருளாதாரமாக உயர்த்தும் லட்சிய இலக்குடன் அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது
எனக் கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்திப் பிரதி அமைச்சர் சதுரங்க
அபேசிங்க தெரிவித்தார்.
</p><p>
கொழும்பில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத்
தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.</p><p>

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,&nbsp;</p><p> "பாரம்பரிய கல்வி முறைமைகள் மனிதர்களின் கற்பனைத்திறனையும் சுய சிந்தனையையும்
முடக்கியுள்ள நிலையில், தற்போதைய நவீன உலகம் சிக்கல்களுக்குத் தீர்வு காணும்
புதிய கல்வி மறுசீரமைப்பை எதிர்நோக்கியுள்ளது.</p><h2>பொருளாதார மறுமலர்ச்சி&nbsp;</h2><p>
</p><p>
முறையான கல்வி இல்லாத கால கட்டங்களிலேயே அறிவியல் மற்றும் தொழில்நுட்ப
மாபெரும் கண்டுபிடிப்புகள் உருவாக்கப்பட்டன.

எனவே, தற்போதைய கல்வி முறைமையானது குழந்தைகள் புதிய விஷயங்களை ஆராயவும், இரக்க
உணர்வுடன் சிக்கல்களுக்குத் தீர்வுகாணவும் வழிவகுக்கும் வகையில்
மாற்றியமைக்கப்பட்டு வருகின்றது" என குறிப்பிட்டார்.&nbsp;</p><p>

மேலும், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மனிதர்களின் பணிச்சுமையைக்
குறைக்கும் வகையில் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்திய அவர், 19ஆம்
நூற்றாண்டில் போராடிப் பெற்ற 8 மணிநேர வேலைத் திட்டம், இத்தனை தொழில்நுட்ப
வளர்ச்சிக்குப் பிறகும் தொடர்வது நியாயமற்றது என தெரிவித்தார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/574089a4-085b-4ef4-a200-746630a2bd65/26-6a8ceb969c961.webp' /></p><p>

செயற்கை நுண்ணறிவின் உதவியுடன் உற்பத்தித்திறனை அதிகரித்து வேலை நேரத்தைக்
குறைப்பதன் மூலம் மனிதர்கள் தங்கள் குடும்பத்தினருடன் அதிக நேரத்தைச் செலவிட
முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
</p><p>
இலங்கையின் பொருளாதார மறுமலர்ச்சி குறித்துக் குறிப்பிட்ட அவர், இலங்கை
இனிவரும் காலங்களில் பிராந்தியத்தின் மாபெரும் உருமாற்றக் கதையாக
உருவெடுக்கும் என்ற நம்பிக்கையை வெளியிட்டார்.</p><p>

உள்நாட்டுத் தொழில்முனைவோர்கள் உள்ளூர் சந்தையை மட்டும் இலக்காகக் கொள்ளாமல்,
சர்வதேச முதலீடுகளை ஈர்க்கும் வகையில் உலகளாவிய சிக்கல்களுக்குத் தீர்வு தரும்
வணிக உத்திகளை உருவாக்க வேண்டும் எனவும், இலங்கை இளைஞர்களுக்குத் தேவையான
அனைத்து ஆதரவுகளையும் அரசாங்கம் தொடர்ந்து வழங்கும் எனவும் பிரதி அமைச்சர்
சதுரங்க அபேசிங்க மேலும் உறுதியளித்தார்.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-25T01:10:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[H-1B விசா விண்ணப்ப கட்டணங்களில் ஏற்பட்டுள்ள மாற்றம் ; ட்ரம்ப் அதிரடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/h-1b-visa-application-fees-revised-1787620184"></link>
            <id>https://canadamirror.com/article/h-1b-visa-application-fees-revised-1787620184</id>
            <summary type="text">அமெரிக்காவில் H-1B விசா ஒதுக்கீட்டு வரம்பிற்கு உட்பட்ட அனைத்து விண்ணப்பங்களுக்கும் கூடுதலாக 1,03,265 டாலர் கட்டணம் விதிக்க அமெரிக்கா முன்மொழிந்தது. அம...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவில் H-1B விசா ஒதுக்கீட்டு வரம்பிற்கு உட்பட்ட அனைத்து விண்ணப்பங்களுக்கும் கூடுதலாக 1,03,265 டாலர் கட்டணம் விதிக்க அமெரிக்கா முன்மொழிந்தது. </p><p>அமெரிக்க நாடாளுமன்றம் தற்போது H-1B விசா திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 65,000 விசாக்கள் மட்டுமே வழங்கப்பட வேண்டும் என்ற வழக்கமான வரம்பை நிர்ணயித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c6d234c5-ec93-45c7-a75e-b8efeba348b5/26-6a8ceb5a22704.webp' /></p><p>

</p><p>H-1B விசா விண்ணப்பங்களுக்கு 1,00,000 அமெரிக்க டாலர் கட்டணம் விதிக்கும் டிரம்ப் நிர்வாகத்தின் திட்டத்தை ரத்து செய்து மாவட்ட நீதிபதியின் உத்தரவிட்டிருந்தார்.</p><p> இந்த உத்தரவை நிறுத்தி வைக்க கோரிய மனுவை மேல்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்த ஒரு மாதத்திற்குப் பிறகு, உள்நாட்டு பாதுகாப்பு துறையின் இந்த புது முன்மொழிவு வந்துள்ளது.</p><p>தற்போதுள்ள H-1B விண்ணப்ப கட்டணத்துடன் இணைப்பதற்கு பதிலாக, 1,03,265 அமெரிக்க டாலர் தொகையை ஒரு தனிப்பட்ட, கூடுதல் H-1B கட்டணமாக செயல்படுத்த உள்நாட்டு பாதுகாப்பு துறை முன்மொழிகிறது என்று 'ஃபெடரல் ரெஜிஸ்டர்' இதழில் வெளியிடப்பட்ட அறிவிப்பு தெரிவிக்கிறது.
</p><p>அடுத்த 30 நாட்களுக்குள் இந்த முன்மொழிவு குறித்து பொதுமக்களின் கருத்துக்களை தெரிவிக்குமாறு இத்துறை அழைப்பு விடுத்துள்ளது. </p><p>கருத்துக்கள் பரிசீலிக்கப்பட்ட பிறகு இறுதி விதிமுறை வெளியிடப்படும்.

இந்தக் கட்டணம் H-1B ஒதுக்கீட்டு வரம்பிற்கு உட்பட்ட மனுக்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும், வரம்பில் இருந்து விலக்கு அளிக்கப்பட்ட மனுக்களுக்குப் பொருந்தாது என்றும்&nbsp; கூறப்பட்டுள்ளது.</p><p>
முன்மொழியப்பட்ட விதியின் கீழ், குறிப்பிட்ட லாப நோக்கற்ற ஆராய்ச்சி நிறுவனங்கள், அரசு ஆராய்ச்சி அமைப்புகள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்கள் தாக்கல் செய்யும் மனுக்கள் போன்ற ஒதுக்கீட்டு வரம்பிற்கு உட்படாத H-1B மனுக்களுக்கு இந்தக் கூடுதல் கட்டணம் பொருந்தாது என்று உள்நாட்டு பாதுகாப்பு துறை தெரிவித்துள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-25T01:09:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்கப் படைகளில் பற்றாக்குறை! ரத்து செய்யப்பட்டுள்ள இராணுவ பயிற்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/us-cancels-military-exercises-with-south-korea-1787611767"></link>
            <id>https://ibctamil.com/article/us-cancels-military-exercises-with-south-korea-1787611767</id>
            <summary type="text">அடுத்த மாதம் தென் கொரியாவுடன் இணைந்து நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த “சாங்யோங்” கூட்டு நீர்நிலத் தரையிறக்கப் பயிற்சியை அமெரிக்கா ரத்து செய்துள்ளதாக தென்...</summary>
            <content type="html"><![CDATA[<p>அடுத்த மாதம் தென் கொரியாவுடன் இணைந்து நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த “சாங்யோங்” கூட்டு நீர்நிலத் தரையிறக்கப் பயிற்சியை அமெரிக்கா ரத்து செய்துள்ளதாக தென் கொரியக் கடற்படை தெரிவித்துள்ளது.
</p><p>
ஈரானில் நடைபெற்று வரும் போர் காரணமாக அமெரிக்கப் படைகளில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதன் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>

அமெரிக்கக் கடற்படை, படைப்பிரிவு அளவிலான இந்த கூட்டுப் பயிற்சிக்குத் தங்களின் படைகள் பங்கு கொள்வதில் சிக்கல் நிலவுவதாக ஜூன் மாதமே தென் கொரியக் கடற்படைக்கு முறைப்படித் தெரிவித்துவிட்டதாக சர்வதேச வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.</p><p></p><h2>ட்ரம்ப்பின் உத்தரவு&nbsp;</h2><p>
</p><p>
எவ்வாறாயினும், பயிற்சி மீண்டும் தொடங்கப்படுவது குறித்து இரு நாட்டுப் படைகளும் நெருங்கிய ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a11d3017-c397-414d-bccb-83e2d2bef28d/26-6a8ce90a50619.webp' /><br></p><p><i>Image Credit: Mlitarytimes</i></p><p>
</p><p>
இதேவேளை, அண்மையில் முடிந்த மற்றொரு வருடாந்திர கூட்டு இராணுவப் பயிற்சியையும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் திடீரெனக் குறைக்குமாறு உத்தரவிட்டிருந்தாக தெரியவருகிறது.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-25T00:59:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[எல் நினோ தாக்கத்தால் இலங்கையைச் சூழவுள்ள கடல் வெப்பநிலை உயர்வு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/el-ni-o-raises-sea-temperatures-around-sri-lanka-1787617806"></link>
            <id>https://jvpnews.com/article/el-ni-o-raises-sea-temperatures-around-sri-lanka-1787617806</id>
            <summary type="text">எல் நினோ தாக்கத்தின் காரணமாக இலங்கையைச் சுற்றியுள்ள கடற்பரப்பின் வெப்பநிலை 1°C உயர்ந்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பசுபிக் பெர...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">எல் நினோ தாக்கத்தின் காரணமாக இலங்கையைச் சுற்றியுள்ள கடற்பரப்பின் வெப்பநிலை 1°C உயர்ந்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
</p><p style="text-align: justify; ">
பசுபிக் பெருங்கடலில் நிலவும் 3°C வெப்பநிலை உயர்வின் பின்னணியிலேயே இந்த மாற்றம் அவதானிக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5050b30d-4772-4669-8646-c31f08a4cf5c/26-6a8ce210b997e.webp' /></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
இந்தநிலையில், எதிர்வரும் 8 மாதங்கள் இலங்கைக்குக் மிக முக்கியமான காலகட்டமாக அமையும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
</p><p style="text-align: justify; ">
நாட்டின் சில பகுதிகளில் செப்டம்பர் இறுதி வரை மழை பெய்ய வாய்ப்பில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; ">

தற்போதைய நிலையில், நாட்டின் பகல் மற்றும் இரவு நேர வெப்பநிலைகள் கணிசமாக அதிகரித்துள்ளன.</p><p style="text-align: justify; ">

7 மாவட்டங்களில் உள்ள 22 பிரதேச செயலகப் பிரிவுகளில் 81,605 பேர் வறட்சியான வானிலையால் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மையம் தெரிவித்துள்ளது.</p><p style="text-align: justify; ">

இதன் காரணமாக, நீர்த்தேக்கங்களிலிருந்து குடிநீர் விநியோகம் தடையின்றி வழங்கப்படும் அதேவேளை, விவசாய நடவடிக்கைகளுக்கான நீர் விநியோகத்தைக் கட்டுப்படுத்த வேண்டிய நிலை ஏற்படலாம் என நீர்ப்பாசனத் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.</p><p style="text-align: justify; ">

நீடிக்கும் வறட்சி மற்றும் அதிக வெப்பம் காரணமாக 7 மாவட்டங்களில் நீரை ஆதாரமாகக் கொண்ட வாழ்வாதாரங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-25T00:30:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[இரண்டு ஆண்டுத் திட்டம் தயார்... ட்ரம்பின் திட்டம் தோல்வி: ஈரான் வெளிப்படை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/to-counter-us-sanctions-1787608940"></link>
            <id>https://news.lankasri.com/article/to-counter-us-sanctions-1787608940</id>
            <summary type="text">Two-Year Plan To Counter US Sanctions: அமெரிக்கத் தடைகளை எதிர்கொள்ள இரண்டு ஆண்டுத் திட்டம் உள்ளது என ஈரான்.
அமெரிக்கா மற்றொரு தோல்வியை எதிர்பார்க்கலா...</summary>
            <content type="html"><![CDATA[<p>Two-Year Plan To Counter US Sanctions: அமெரிக்கத் தடைகளை எதிர்கொள்ள இரண்டு ஆண்டுத் திட்டம் உள்ளது என ஈரான்.
</p><p>அமெரிக்கா மற்றொரு தோல்வியை எதிர்பார்க்கலாம் என ஈரான் பொருளாதார அமைச்சர் அலி மதனிசாதே திங்களன்று கணித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/266d5c24-45a7-4b19-9440-d60a75613c96/26-6a8cbf6e405eb.webp' /></p><p>
</p><p>அமெரிக்காவின் புதிய தடைகளை எதிர்கொள்வதற்கு ஈரான் நிர்வாகம் ஒரு ஈராண்டுத் திட்டத்தை வைத்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். </p><p>ஈரானிய மக்கள் மற்றும் அதிகாரிகளின் உறுதியைச் சோதிக்க அவர்களால் முடிந்த அனைத்தையும் செய்தார்கள், ஆனால் ஒவ்வொரு முறையும் அவர்கள் தோல்வியுற்றார்கள். </p><p>அவர்கள் மற்றுமொரு தோல்வியைச் சந்திக்க விரும்பியது போல் தெரிகிறது என்று மதனிசாதே அரசு தொலைக்காட்சியிடம் கூறினார். </p><p>மேலும், நாங்கள் இந்தத் தடைகள் தொடர்பில் நீண்ட காலமாக காத்திருந்தோம், மட்டுமின்றி இந்த நெருக்கடிகளை எதிர்கொள்வதற்கு அரசாங்கம் தயாராக இருந்ததுடன், ஒரு இரண்டாண்டுத் திட்டத்தையும் கொண்டுள்ளது என்று அவர் கூறினார்.</p><p></p><p> </p><p>எண்ணெய் ஏற்றுமதி மீதான அமெரிக்காவின் தடையால் ஏற்பட்ட மிகையான பணவீக்கம் மற்றும் அந்நியச் செலாவணி வருவாய் பற்றாக்குறை ஆகியவற்றின் விளைவாக, ஈரானின் பொருளாதாரம் மீண்டும் ஒருமுறை சரிவின் விளிம்பில் இருப்பதாக வெள்ளை மாளிகை கருதுகிறது. </p><p>கடந்த வாரம் அமெரிக்க ஜனாதிபதி ஈரானுக்கு எதிராகக் கடுமையான பொருளாதார நடவடிக்கையை அறிவித்ததிலிருந்து 4.5 சதவீதம் சரிவைச் சந்தித்துள்ள ரியால் நாணயம், திங்களன்று கட்டுப்பாடற்ற சந்தையில் ஒரு டொலருக்கு 1.992 மில்லியன் என்ற விகிதத்தில் வர்த்தகமானது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/52b866fd-5dfd-48fb-9de4-cc0d3cf04e79/26-6a8cbf6ee5d27.webp' /></p><p> </p><p>இதனிடையே, ஈரான் முற்றிலுமாகச் சரிந்து கொண்டிருக்கிறது என ட்ரம்ப் தனது ட்ரூத் சமூக வலைதளத்தில் பதிவிட்டார். ஆனால், ஈரான் 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஏதோ ஒரு வகையான அமெரிக்காவின் உச்சபட்ச பொருளாதார அழுத்தத்தின் கீழ் இருந்து வந்துள்ளதுடன், இதுவரை அந்த நாடு தப்பிப் பிழைத்துள்ளது. </p><p>இந்த நிலையில், அமெரிக்கா இந்த நடவடிக்கைகளைத் தொடர்ந்தால், பூகம்பம் போன்ற பதிலடியுடன் ஈரான் பதிலளிக்கும் என்று அந்நாட்டின் பாதுகாப்புத் தலைவர் மொஹ்சென் ரெஸாயி கூறியுள்ளார். </p><p>அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகள் நடவடிக்கையில் சேர வேண்டாம் என ஈரானின் வளைகுடா அண்டை நாடுகளுக்கும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-25T00:14:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரெஞ்சு கிராமத்தைத் தாக்கிய சூறாவளி... பலர் காயம், நூற்றுக்கணக்கான வீடுகள் சேதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/tornado-tears-french-village-1787616967"></link>
            <id>https://news.lankasri.com/article/tornado-tears-french-village-1787616967</id>
            <summary type="text">Tornado tears through French village: பிரெஞ்சு கிராமம் ஒன்றை மொத்தமாகப் புரட்டிய சூறாவளி.
பிரெஞ்சு கிராமம் ஒன்றை சூறாவளி தாக்கியதில், டசின் கணக்கானோர...</summary>
            <content type="html"><![CDATA[<p>Tornado tears through French village: பிரெஞ்சு கிராமம் ஒன்றை மொத்தமாகப் புரட்டிய சூறாவளி.
</p><p>பிரெஞ்சு கிராமம் ஒன்றை சூறாவளி தாக்கியதில், டசின் கணக்கானோர் காயமடைந்ததுடன் நூற்றுக்கணக்கான வீடுகளும் சேதமடைந்துள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3aeffe07-6ee6-4a5c-9b04-1820f7116215/26-6a8cdec955dea.webp' /></p><p>
</p><p>தென்மேற்கு பிரான்சில் உள்ள ஒரு கிராமத்தை சூறாவளி தாக்கியதில் சுமார் 41 பேர் காயமடைந்தனர். பிரெஞ்சு அதிகாரிகள் நாட்டின் தென்மேற்குப் பகுதியின் பெரும் பாகங்களுக்கு புயல் அபாய ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்திருந்ததால், பல பகுதிகளில் மின்வெட்டும் போக்குவரத்து குழப்பமும் ஏற்பட்டன.</p><p> போமாஸ் கிராமமே மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டது, அங்கு சுமார் 300 வீடுகள் சேதமடைந்தன. சுமார் 1,000 மக்கள்தொகை கொண்ட அந்த கிராமத்தில் சூறாவளியால் சில வீடுகளின் கூரைகள் பெயர்த்துப் போயின. </p><p>வீட்டின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் காயமடைந்தவர்களில் கர்ப்பிணிப் பெண்ணும் ஒருவர். காயமடைந்தவர்களில் பதினைந்து பேர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். </p><p>ஆட் பிராந்தியத்தில் உள்ள ஒரு பிரெஞ்சு நகரில், சூறாவளி பெரிதாக வளர்ந்து மண்ணைக் கிளப்புவதை திகைக்க வைக்கும் காணொளிக் காட்சிகள் காட்டுகின்றன.</p><p></p><p> </p><p>120க்கும் மேற்பட்ட அவசரக்காலப் பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர். இரவு முழுவதும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் காவலர்கள் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். </p><p>அதேவேளையில், தங்கள் வீடுகளில் தங்க முடியாத குடியிருப்பாளர்களுக்காக போமாஸ் மற்றும் லிமூக்ஸ் ஆகிய இடங்களில் தலா ஒரு தங்குமிடமும், மற்ற இரண்டு தங்குமிடங்களும் திறக்கப்பட்டன. </p><p>மரங்கள் மற்றும் கார்கள் வீதிகளில் சிதறிக் கிடந்ததால் பல சாலைகள் மூடப்பட்டன. இதனிடையே ஆட் பிராந்தியத்தில் ஆலங்கட்டி மழையும் பெய்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/55b81907-bb45-4c3a-b7df-5a12d8ebae8c/26-6a8cdeca0b2ad.webp' /></p><p> அருகிலுள்ள பகுதிகளில் 3 முதல் 5 செ.மீ வரை அளவுள்ள ஆலங்கட்டிகள் விழுந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அருகிலுள்ள Arquettes-en-Val கிராமத்தில் காற்றின் வேகம் மணிக்கு 73 மைல்கள் வரை எட்டியதாக தேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.</p><p> தெற்கு பிரான்ஸ் முழுவதும் வீசிய புயல்கள் போக்குவரத்து கட்டமைப்பைச் சீர்குலைத்தன; இதனால் ரயில்கள் தாமதமடைந்தன, சாலைகள் மூடப்பட்டன, மேலும் போர்டோ, மார்சேய், நீஸ், டுலூஸ் மற்றும் வடக்கே உள்ள பாரிஸ் ஆகிய நகரங்களின் விமான நிலையங்களிலும் விமானச் சேவைகளில் தாமதங்களும் ரத்துகளும் ஏற்பட்டன என்று போக்குவரத்து அமைச்சர் பிலிப் டபரோட் தெரிவித்தார். </p><p>புயல் காரணமாக பத்து கிராமங்களில் சுமார் 2,800 வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-25T00:13:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[உக்ரைனை தாக்கிய 376 ட்ரோன்கள் ; பல்லாயிரம் கோடி நிதியுதவி வழங்கிய ஐரோப்பிய ஒன்றியம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/ukraine-hit-by-376-drones-eu-pledges-billions-1787616507"></link>
            <id>https://canadamirror.com/article/ukraine-hit-by-376-drones-eu-pledges-billions-1787616507</id>
            <summary type="text">ரஷ்யாவின் தாக்குதல்கள் காரணமாக உக்ரைன் பாதிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, அதன் வான்வழி பாதுகாப்பை வலுப்படுத்த இந்திய மதிப்பில் ரூ. 68,000 கோடி நிதியுதவி...</summary>
            <content type="html"><![CDATA[<p>ரஷ்யாவின் தாக்குதல்கள் காரணமாக உக்ரைன் பாதிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, அதன் வான்வழி பாதுகாப்பை வலுப்படுத்த இந்திய மதிப்பில் ரூ. 68,000 கோடி நிதியுதவியை ஐரோப்பிய ஒன்றியம் வழங்கியுள்ளது.
</p><p>
உக்ரைன் மற்றும் அதன் நட்பு நாடுகளுக்கு இடையே இராணுவ ஆதரவை அதிகரிப்பது தொடர்பாக இன்று பேச்சுவார்த்தை நடைபெறும் நிலையில், அதற்கு முன்னதாக ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b52fcac1-32ff-46b2-834d-a312b9dc69c1/26-6a8cdcfe20d31.webp' /></p><p>

</p><p>அவர் பேசுகையில், “உக்ரைனின் சுதந்திர நாளான இன்று அவர்களுக்கு முக்கியத் தேவையாக உள்ள வான் பாதுகாப்பு அமைப்புகள், ஏவுகணைகள், வெடிமருந்துகள் மற்றும் ரேடார்களுக்காக ரூ. 68,000 கோடி நிதியுதவியை வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது” என அவர் தெரிவித்தார்.</p><p>இந்த நிதி அவர்களுக்கான 90 பில்லியன் யூரோ கடனின் ஒரு பகுதியாகும். இதில், ராணுவ உதவிக்கான 60 பில்லியன் யூரோவும் அடங்கும். </p><p>இது முழுவதும் உக்ரைனுக்கு வழங்கப்படும் என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. இதில், ஏற்கனவே 16 பில்லியன் யூரோக்கள் ஒதுக்கப்பட்டு அதில் 8.5 பில்லியன் உக்ரைனுக்கு முன்பே அனுப்பட்டுள்ளது.</p><p>
</p><p>
ஐரோப்பிய ஒன்றிய ஆணையம் வெளியிட்ட அறிக்கையில், "ஜூலை மாதத்தில் மட்டும் உக்ரைன் மீது 376 ஏவுகணைத் தாக்குதல்களை ரஷ்யா நடத்தியுள்ள நிலையில், உக்ரைனின் பாதுகாப்பை வலுப்படுத்துவது முக்கியத் தேவையாக உள்ளது” என்று தெரிவித்துள்ளது.</p><p>உக்ரைன் தனது நகரங்களின் மீதான ரஷ்யாவின் தாக்குதல்களை முறியடிக்க, குறிப்பாக பேட்ரியாட் ரக வான் பாதுகாப்பு அமைப்புகள் போன்ற ஏவுகணைகளை இடைமறித்துத் தாக்கும் ஆயுதங்களை அதிகளவில் வாங்கவுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-25T00:08:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்திய விமான நிலையங்கள் ஊடாக வெளிநாடுகளுக்கு பயணிக்கும் தமிழர்களுக்கு முக்கிய அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/e-boarding-pass-introduce-in-indian-airports-1787581732"></link>
            <id>https://tamilwin.com/article/e-boarding-pass-introduce-in-indian-airports-1787581732</id>
            <summary type="text">இந்தியாவின் விமான நிலையங்களில் அடுத்த மாதம் முதலாம் திகதி (01.09.2026) முதல் &#039;ஈ-போர்டிங் பாஸ் நடைமுறை அறிமுகம் செய்யப்படவுள்ளது. 

இதற்கமைய வெளிநாட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியாவின் விமான நிலையங்களில் அடுத்த மாதம் முதலாம் திகதி (01.09.2026) முதல் 'ஈ-போர்டிங் பாஸ் நடைமுறை அறிமுகம் செய்யப்படவுள்ளது.</p><p> 

இதற்கமைய வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ளும் விமான பயணிகள் குடிவரவு கவுன்ட்டர்களில் அச்சிடப்பட்ட போர்டிங் பாஸ்&nbsp; (Boarding Pass) வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. </p><p>

இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பை மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் குடிவரவு பணியகம் விடுத்துள்ளது.</p><h2><b> 

ஈ-போர்டிங் பாஸ்</b></h2><p>புதிய நடைமுறையின் கீழ் அச்சிடப்பட்ட போர்டிங் பாஸ்களுக்கு பதிலாக, கையடக்க தொலைபேசி அல்லது மின்னணு சாதனங்களில் உள்ள ஈ-போர்டிங் பாஸ்களையும் குடிவரவு கவுண்டர்களில் பயணிகள் பயன்படுத்தலாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9be7ecb5-9405-4414-b968-f5def711eae7/26-6a8c5d9f0d848.webp' /></p><p>அச்சிடப்பட்ட போர்டிங் பாஸ் மூலம் முத்திரை குத்தப்படுவதால் விமான பயணிகளுக்கு நேர விரயம் ஏற்படுவதுடன் தாமதங்களும் ஏற்படுகிறன. </p><p>

இந்நிலையில் ஈ-போர்டிங் பாஸ் நடைமுறையால் அந்த குறைபாடு தீர்த்து வைக்கப்படும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.</p><h3><b> 

குடியேற்ற முத்திரை</b></h3><p>அதேவேளை பயணிகள் விரும்பினால் அச்சிடப்பட்ட போர்டிங் பாஸ்களை தொடர்ந்து பயன்படுத்தலாம். ஆனால், செப்டம்பர் 1ஆம் திகதி முதல் அவற்றில் குடியேற்ற முத்திரை குத்தப்பட மாட்டாது.
</p><p>
இலங்கை உட்பட பல நாடுகளை சேர்ந்தவர்கள் இந்திய விமான நிலையங்கள் ஊடாக வெளிநாடுகளுக்கான பயணங்களை மேற்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p> 
</p>]]></content>
            <updated>2026-08-24T23:55:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[முகப்பரு முதல் நீரிழிவு வரை... மருத்துவ குணங்கள் நிறைந்த மணத்தக்காளி கீரை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/health-benefits-of-manathakkali-greens-1787615501"></link>
            <id>https://jvpnews.com/article/health-benefits-of-manathakkali-greens-1787615501</id>
            <summary type="text">&amp;nbsp;சத்து மிகுந்த கீரை வகைகளில் மணத்தக்காளி கீரை முக்கிய இடத்தை பிடிக்கின்றது. இக்கீரையை அவ்வப்போது உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டியது அவசியம் ஆகும். ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">&nbsp;சத்து மிகுந்த கீரை வகைகளில் மணத்தக்காளி கீரை முக்கிய இடத்தை பிடிக்கின்றது. இக்கீரையை அவ்வப்போது உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டியது அவசியம் ஆகும். </p><p style="text-align: justify; ">பாரம்பரிய காட்டு கீரையான இது சித்த மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றது.குறிப்பாக செரிமான பிரச்சனைகளுக்கு தீர்வு தருகின்றது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c85f5da5-3c97-492e-a95b-bf2a88b0a8d9/26-6a8cd91760c0f.webp' /></p><h2 style="text-align: justify; ">மருத்துவ குணங்கள்</h2><p style="text-align: justify; ">


சிறிய கருப்பு பழங்களும், பச்சை இலைகளும் கொண்ட தொடர்ந்து உணவாக உட்கொள்ளும்போது வயிற்று புண்கள், அஜீரணம், மலச்சிக்கலை குணப்படுத்தும். </p><p style="text-align: justify; ">தோல் நோய்கள், முகப்பரு, தோல் அரிப்பை நீக்கும். நீரிழிவு நோயை கட்டுப்படுத்துவதுடன், ரத்த அழுத்தம், கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
</p><p style="text-align: justify; ">


சளி, இருமல், கண் புரை பாதிப்புகளை தவிர்க்க உதவும். பொதுவாக, இதனை பயத்தம்பருப்புடன் வேகவைத்து மசித்து உண்ணலாம்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">இந்த கீரையில், ஆன்டி ஆக்சிடன்ட்கள், வைட்டமின்கள் ஏ, சி, இ, இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன.



மணத்தக்காளி கீரையின் தனித்துவம், அது பெண்களின் கருப்பையை வலுப்படுத்துகின்றது. </p><p style="text-align: justify; ">100 கிராம் மணத்தக்காளி கீரையில், நீர்ச்சத்து 82 சதவீதம், புரதம் 5.9 கிராம், கொழுப்பு, ரிபோப்ளாவின் 59 மி.கி. நியாசின் 0.9 மி.கி. நிறைந்துள்ளன.</p><p style="text-align: justify; "> 



நாட்டுக்கீரைகள் மிகப்பெரிய அளவில் மனிதனுக்கு ஏற்படும் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் பற்றாக்குறையை போக்கி நோய்களையும் வரவிடாமல் தடுக்கின்றன.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-24T23:52:01+00:00</updated>
        </entry>
    </feed>
