<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-08-31T19:51:49+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[காசாவில் கொல்லப்பட்ட ஹமாஸ் ஆயுதக் தளபதி: இஸ்ரேலிய ராணுவம் அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/idf-killed-hamas-weapons-commander-in-gaza-1788205318"></link>
            <id>https://news.lankasri.com/article/idf-killed-hamas-weapons-commander-in-gaza-1788205318</id>
            <summary type="text">IDF Killed Hamas Weapons commander in Gaza : காசா நகரில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஹமாஸின் ஆயுதத் தளபதி கொல்லப்பட்டதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. கொல்லப்பட...</summary>
            <content type="html"><![CDATA[<p>IDF Killed Hamas Weapons commander in Gaza : காசா நகரில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஹமாஸின் ஆயுதத் தளபதி கொல்லப்பட்டதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.</p><h2> கொல்லப்பட்ட ஹமாஸின் ராணுவ தளபதி</h2><p>
காசாவில் இஸ்ரேலிய ராணுவம் நடத்திய தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் ஆயுத விநியோகத் தளபதி அம்ர் முகமது ருஷ்டி சராக்(Amr Muhammad Rushdi Sarrag) கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய பாதுகாப்பு படை(IDF) திங்கட்கிழமை அறிவித்துள்ளது.</p><p> காசாவின் சப்ரா(Sabra) நகரில் திங்கட்கிழமை இஸ்ரேலிய படைகள் நடத்திய துல்லியமான தாக்குதலில் ஆயுத விநியோகத் தளபதி அம்ர் முகமது ருஷ்டி சராக் கொல்லப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b65d02e0-da21-4cd7-8e1c-36476fdd3262/26-6a95d90884859.webp' /></p><p> இந்த தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் ராணுவப் பிரிவை சேர்ந்த மற்றொரு பயங்கரவாதியும் தாக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2> இஸ்ரேலிய ராணுவம் விளக்கம்</h2><p>இது தொடர்பாக இஸ்ரேலிய பாதுகாப்பு படை வெளியிட்ட அறிவிப்பில், கொல்லப்பட்ட இந்த பயங்கரவாதிகள் இஸ்ரேலிய நாட்டு மக்கள் மீதும், இஸ்ரேலிய பாதுகாப்பு படையினர் மீதும் தாக்குதல் நடத்த சதி திட்டங்களை செய்து வந்ததாக தெரிவித்துள்ளனர்.</p><p> அத்துடன் போர் நிறுத்த விதிமுறைகளை மீறி ஹமாஸ் அமைப்பின் பலத்தை மீட்டெடுக்க தீவிரமாக முயற்சி செய்து வந்ததாக குற்றஞ்சாட்டியுள்ளனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்<br></td></tr></tbody></table><p>&nbsp;<br></p>]]></content>
            <updated>2026-08-31T19:42:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் தற்காலிக குடியேறிகளுக்கு அதிகரிக்கும் நெருக்கடி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/immigration-board-asks-feds-to-better-track-1788190776"></link>
            <id>https://canadamirror.com/article/immigration-board-asks-feds-to-better-track-1788190776</id>
            <summary type="text">கனடாவில் தற்காலிகமாகத் தங்கியுள்ள சர்வதேச மாணவர்கள் மற்றும் வெளிநாட்டுப் பணியாளர்களின் எண்ணிக்கையைக் குறைக்க அரசாங்கம் தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாக...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவில் தற்காலிகமாகத் தங்கியுள்ள சர்வதேச மாணவர்கள் மற்றும் வெளிநாட்டுப் பணியாளர்களின் எண்ணிக்கையைக் குறைக்க அரசாங்கம் தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
</p><p>இதனால், அங்குள்ள தற்காலிக குடியேறிகள் கடுமையான சவால்களையும் நிச்சயமற்ற எதிர்காலத்தையும் எதிர்நோக்கி வருகின்றனர்.</p><p>
வீட்டு வசதிப் பற்றாக்குறை மற்றும் பொதுச் சேவை நெருக்கடிகளைக் கட்டுப்படுத்த கனடா அரசு குடியேற்ற அளவைக் குறைத்து வருகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9b440253-d245-42f4-9324-42fffb3f0b5d/26-6a95a03996b84.webp' /></p><p>
</p><p>சீ.டி. ஹவ் இன்ஸ்டிடியூட் நிபுணர் குழு, தற்காலிக குடியேறிகளின் எண்ணிக்கையை மேலும் குறைக்க வேண்டும் எனவும், அவர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதைத் துல்லியமாகக் கண்காணிக்க வேண்டும் எனவும் பரிந்துரைத்துள்ளது.</p><p>
அரசாங்கத்தின் கடுமையான கட்டுப்பாடுகள் காரணமாக, கனடாவிற்கு வரும் புதிய மாணவர்கள் மற்றும் பணியாளர்களின் எண்ணிக்கை வரலாறு காணாத வகையில் சரிந்துள்ளது.
</p><p>2024ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் 1,24,930 புதிய சர்வதேச மாணவர்கள் கனடாவிற்கு வந்த நிலையில், 2026ஆம் ஆண்டின் அதே காலகட்டத்தில் அந்த எண்ணிக்கை 22,410 ஆகக் கடுமையாகக் குறைந்துள்ளது.
</p><p>2024 முதல் பாதியில் 2,44,985 ஆக இருந்த புதிய தற்காலிகப் பணியாளர்களின் சேர்க்கை, 2026 முதல் பாதியில் 98,130 ஆகச் சரிந்துள்ளது.
</p><p>2024 அக்டோபரில் நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 7 சதவீதத்திற்கும் அதிகமாக இருந்த தற்காலிக குடியேறிகளின் எண்ணிக்கையை, 2027ஆம் ஆண்டின் இறுதிக்குள் 5 சதவீதத்திற்குக் கீழ் குறைக்க அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.</p><p>
ஆனால், நிபுணர் பரிசா மஹ்பூபி இந்த 5 சதவீதத்தை அதிகபட்ச வரம்பாகவே கொள்ள வேண்டும் எனவும், வரலாற்றுச் சராசரியான 3 முதல் 4 சதவீதத்திற்கு இலக்கைக் குறைக்க வேண்டும் எனவும் கூறுகிறார்.
</p><p>கனடாவில் தற்காலிகமாக வாழும் 25 லட்சம் தற்காலிக குடிமக்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.</p><p>
ஒட்டுமொத்தமாக, கனடாவின் மாறிவரும் குடியேற்றக் கொள்கைகள், வேலைவாய்ப்புச் சந்தையில் நிலவும் மந்தநிலை மற்றும் கடுமையான விசா கட்டுப்பாடுகள் ஆகியவை கனடாவில் உள்ள தற்காலிக குடியேறிகளின் வாழ்க்கையை பெரும் சவாலுக்கு உள்ளாக்கியுள்ளன.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-31T19:30:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாளத்தை கதிகலங்க வைத்த அனர்த்தம் ; 8 மணி நேர போராட்டத்திற்கு பின் மீட்கப்பட்ட 50 கோடி தங்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/50-crore-gold-recovered-in-nepal-1788202579"></link>
            <id>https://jvpnews.com/article/50-crore-gold-recovered-in-nepal-1788202579</id>
            <summary type="text">சமீபத்தில் நேபாளத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அந்த நாடு பெரும் சேதத்தை சந்தித்தது. வீடுகளும், கட்டிடங்களும், கார் மற்றும் கனகர வாகனங்களும் நீரில் அட...</summary>
            <content type="html"><![CDATA[<p>சமீபத்தில் நேபாளத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அந்த நாடு பெரும் சேதத்தை சந்தித்தது. வீடுகளும், கட்டிடங்களும், கார் மற்றும் கனகர வாகனங்களும் நீரில் அடித்து செல்லப்பட்டன.</p><p> 500க்கும் மேற்பட்டோர் இறந்துவிட்ட நிலையில், 1500க்கும் மேற்பட்டோரை காணவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/069131b7-9910-4fbf-83ee-a04dfc7c8160/26-6a95ce54c5547.webp' /></p><h2>ஆவணங்கள் மீட்பு</h2><p>இந்நிலையில்தான் வெள்ளத்தில் சிக்கிய ஒரு வங்கியின் லாக்கரை மீட்பு படையினர் மீட்டுள்ளனர்.</p><p> நேபாளத்தில் நுவா கோட் மாவட்டத்திலுள்ள திரிசூலி துங்கே பகுதியில் உள்ள ஒரு வங்கி வெள்ளம் அதிகளவு சென்றதால் முழுமையாக தண்ணீரில் மூழ்கியது.
</p><p>
தற்போது வெள்ளம் சற்று தணிந்த நிலையில் 8 மணி நேர போராட்டத்திற்கு பின் வங்கியில் இருந்த லாக்கரை மீட்பு படையினர் மீட்டுள்ளனர்.</p><p></p><p> </p><p>அந்த லாக்கரில் பாதுகாப்பாக இருந்த 50 கோடி நேபாள ரூபாய் மதிப்பிலான தங்கம் மற்றும் சேர் படிந்த நிலையில் இருந்த 1.5 கோடி பணம், வெள்ளி மற்றும் முக்கிய ஆவணங்கள் மீட்கப்பட்டிருக்கிறது. </p><p>தற்போது அந்த லாக்கரில் இருந்த அனைத்தையும் பத்திரமாக வேறொரு பாதுகாப்பான் இடத்திற்கு வங்கி அதிகாரிகள் மாற்றியுள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-31T19:30:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[முன்னாள் இராணுவ அதிகாரி தாக்குதல்! வெளிநாட்டுத் தூதரக அதிகாரிக்கு எதிராக முறைப்பாடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/attack-on-former-military-officer-complaint-lodged-1788203082"></link>
            <id>https://ibctamil.com/article/attack-on-former-military-officer-complaint-lodged-1788203082</id>
            <summary type="text">




கொழும்பு அல்தாயர் அடுக்குமாடி குடியிருப்பில் இலங்கை முன்னாள் இராணுவ அதிகாரி ஒருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>




</p><p>கொழும்பு அல்தாயர் அடுக்குமாடி குடியிருப்பில் இலங்கை முன்னாள் இராணுவ அதிகாரி ஒருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக வெளிநாட்டுத் தூதரக அதிகாரி ஒருவர் மீது காவல் நிலையத்தில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இந்தச் சம்பவத்தின் சிசிரிவி காட்சிகளில், வரவேற்பறையில் அமர்ந்திருந்த முன்னாள் இராணுவ அதிகாரியிடம் தூதரக அதிகாரி வந்து வாக்குவாதத்தில் ஈடுபடுவது பதிவாகியுள்ளது.</p><p></p><h2>ராஜதந்திரப் பாதுகாப்பு&nbsp;</h2><p>
</p><p>
அதன்போது, சம்பந்தப்பட்ட தூதரக அதிகாரி முன்னாள் இராணுவ அதிகாரியை எச்சில் உமிழ்ந்து, உடல்ரீதியாகத் தாக்கியதும் அக்காணொளியில் தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bf491d7e-72f7-4423-9051-12dd3c54e670/26-6a95d513a910f.webp' /></p><p>

இவ்வாறானதொரு பின்னணியில், சம்பந்தப்பட்ட தூதரக அதிகாரிக்கு ராஜதந்திரப் பாதுகாப்பு இருப்பதாக கூறப்படுவதால் குறித்த முறைப்பாட்டை அதிகாரிகள் எவ்வாறு கையாள்வார்கள் என்ற கேள்விகள் எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<b> WHATSAPP CHANNEL</b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-31T19:25:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kowshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மூன்று முறை சீ.வி.கேவின் வீடு தேடி சென்ற தாய் வெளியிட்ட பகீர் தகவல்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/tamil-party-ignores-tamils-pain-public-slams-1788203330"></link>
            <id>https://tamilwin.com/article/tamil-party-ignores-tamils-pain-public-slams-1788203330</id>
            <summary type="text">இலங்கையின் படை தரப்பினரால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவகளுக்காக நீதி கோரி போராட்டமும் மகாநாடும் கடந்த ஆவணி மாதம் 30ஆம் திகதி தமிழர் பகுதிகளில் உணர்ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் படை தரப்பினரால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவகளுக்காக நீதி கோரி போராட்டமும் மகாநாடும் கடந்த ஆவணி மாதம் 30ஆம் திகதி தமிழர் பகுதிகளில் உணர்ச்சிபூர்வமாக முன்னெடுக்கப்பட்டிருந்தன.
</p><p>
இந்த நியாயவழி போராட்டத்திற்கு தங்களுக்கு அழைப்பு விடுக்கவில்லை என்று சிறுபிள்ளைதனமான காரணத்தை கூறி இலங்கை தமிழரசுக் கட்சி போராட்டம் மற்றும் மகா நாட்டை புறக்கணித்துள்ளது.</p><p>இது தொடர்பில் கட்சியின் பதில் தலைவர் சி. வி. கே. சிவஞானமும் பதில் செயலாளர் எம். ஏ. சுமந்திரனும் இணைந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.</p><p>
ஒட்டுமொத்த தமிழினத்தின் நீதிக்கான குரலை மழுங்கடிக்கும் வகையில் அமைந்திருந்த இந்த அறிக்கை மக்கள் மத்தியில் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><p>

கடந்த காலங்களில் காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் தொடர்பான போராட்டங்களுக்கு அரசு தரப்பில் பல தடைகள் விதிக்கப்பட்டன. </p><p>ஆனால் தற்பொழுது தமிழ் கட்சிகள் தரப்பே இவ்வாறான காரணங்களை கூறி தமிழர்களின் உணர்வுபூர்மான போராட்டங்களை புறக்கணிக்கின்றன.</p><p>இவ்வாறிருக்கையில், வடக்கு கிழக்கு காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் உபதலைவி அமலநாயகி, சி. வி. கே. சிவஞானத்தை சந்திக்க பலமுறை முயற்சித்தமை தொடர்பில் தகவல்களை வெளியிட்டுள்ளார்.&nbsp;</p><p> </p><p>

இது தொடர்பில் இன்னும் பல விடயங்களை செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சியின் ஊடாக விரிவாகப் பார்க்கலாம்..&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/adOL5hITeAk" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-31T19:25:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[செப்டெம்பர் 22இல் இறுதித் தீர்ப்பு..! வியப்பில் ஆழ்த்திய மைத்திரிக்கு வழங்கப்பட்ட அங்கீகாரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/maithri-pala-sirisena-crown-president-of-happy-era-1788203211"></link>
            <id>https://tamilwin.com/article/maithri-pala-sirisena-crown-president-of-happy-era-1788203211</id>
            <summary type="text">முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு “மகிழ்ச்சியான யுகத்தின் ஜனாதிபதி” என்ற கௌரவப் பட்டம் வழங்கப்பட்ட விடயம் அரசியல் பரபரப்பில் பேசுபொருளாகியுள...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு “மகிழ்ச்சியான யுகத்தின் ஜனாதிபதி” என்ற கௌரவப் பட்டம் வழங்கப்பட்ட விடயம் அரசியல் பரபரப்பில் பேசுபொருளாகியுள்ளது.&nbsp;</p><p>
கொழும்பிலுள்ள அலரி மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றிலேயே முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இந்த கௌரவம் அளிக்கப்பட்டுள்ளது.
</p><p>மகிழ்ச்சியான யுகத்தின் ஜனாதிபதி என அவர் கௌரவிக்கப்பட்டுள்ள நிலையில், அவரின் ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற பல கொடூர சம்பவங்கள் மற்றும் குற்றச் செயல்க்ள தொடர்பில் அரசியல் ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.&nbsp;</p><p>குறிப்பாக, பல உயிர்களை பறித்த உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்&nbsp;மைத்திரிபாலவின் ஆட்சிக்காலத்திலேயே நடந்தேறியது.&nbsp;</p><p>இது தொடர்பில் அவர் மீது பல குற்றச்சாட்டுக்களும் உள்ள நிலையில், இந்த தாக்குதல்கள் தொர்பிலான வழக்கு விசாரணையின் தீர்ப்பு எதிர்வரும் 22ஆம் திகதி வழங்கப்பட உள்ளது.</p><p>&nbsp;இவ்வாறிருக்கையில், அவருக்கு வழங்கப்பட்டுள்ள இந்த அங்கீகாரம் பல கேள்விகளை எழுப்புகின்றது எனலாம்.&nbsp;</p><p>நாட்டில் இடம்பெற்ற பல முக்கிய அரசியல் நகர்வுகள் குறித்து விரிவாக ஆராய்கின்றது நாட்டு நடப்பு நிகழ்ச்சி,&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/sgq8jMiHzoc" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-31T19:18:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பகுதியில் நாயிறைச்சி விற்பனை? பொதுமக்களுக்கு வெளியான அறிவித்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/dog-meat-sold-in-tamil-area-public-notice-issued-1788196771"></link>
            <id>https://jvpnews.com/article/dog-meat-sold-in-tamil-area-public-notice-issued-1788196771</id>
            <summary type="text">சாய்ந்தமருது பிரதேசத்தில் ‘நாயிறைச்சி விற்பனை செய்யப்பட்டதாக’ சமூக ஊடகங்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பரப்பப்பட்டு வரும் தகவல்களில் எவ்வித உண்மைத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">சாய்ந்தமருது பிரதேசத்தில் ‘நாயிறைச்சி விற்பனை செய்யப்பட்டதாக’ சமூக ஊடகங்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பரப்பப்பட்டு வரும் தகவல்களில் எவ்வித உண்மைத்தன்மையும் இல்லை எனச் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் தெளிவுபடுத்தியுள்ளது.
</p><p style="text-align: justify; ">
கடந்த 29ஆம் திகதி சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தின் கீழ் உள்ள பிரதான வீதிப் பகுதியில், சுகாதார வைத்திய அதிகாரியும் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களும் இணைந்து வழக்கமான உணவுப் பாதுகாப்புப் பரிசோதனைகளை மேற்கொண்டனர்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c5fe5334-0328-487f-a701-424611da2bdf/26-6a95b7a4cf9ac.webp' /></p><h2 style="text-align: justify; ">பரிசோதனை</h2><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
இதன்போது, அப்பகுதியிலுள்ள ஆட்டிறைச்சிக் கடையொன்றில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த ஆட்டிறைச்சி பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. </p><p style="text-align: justify; ">குறித்த இறைச்சியானது உரிய சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாமலும், அங்கீகரிக்கப்பட்ட கால்நடை வைத்தியரின் பரிசோதனைச் சான்றிதழைப் பெறாமலும் விற்பனை செய்யப்பட்டுள்ளது கண்டறியப்பட்டது.</p><p style="text-align: justify; ">

இதனையடுத்து, பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களால் குறித்த ஆட்டிறைச்சி உடனடியாகக் கையகப்படுத்தப்பட்டு, கடை உரிமையாளரின் அனுமதியுடன் அழிக்கப்பட்டதுடன், சுகாதார நடைமுறையைப் பின்பற்றாத கடை உரிமையாளருக்கு எதிராக நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
எனினும், இச்சம்பவத்தைத் தவறாகச் சித்தரித்து, சாய்ந்தமருது பகுதியில் நாயிறைச்சி விற்பனை செய்யப்பட்டதாகவும், அதனைப் பரிசோதகர்கள் பறிமுதல் செய்ததாகவும் சிலர் உள்நோக்கத்துடன் சமூக ஊடகங்களில் பொய்ப் பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p style="text-align: justify; ">

இது குறித்துச் சுட்டிக்காட்டியுள்ள சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம், பொதுமக்கள் மத்தியில் தேவையற்ற அச்சத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தும் நோக்கிலேயே இத்தகைய வதந்திகள் பரப்பப்படுவதாகத் தெரிவித்துள்ளது.
</p><p style="text-align: justify; ">
எனவே, பொதுமக்கள் இந்த உண்மைக்குப் புறம்பான தகவல்களை நம்பவோ அல்லது சமூக வலைத்தளங்களில் பகிரவோ வேண்டாம் என்றும், இது தொடர்பில் எவ்வித அச்சமும் கொள்ளத் தேவையில்லை என்றும் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் கேட்டுக்கொண்டுள்ளது</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">

 </p>]]></content>
            <updated>2026-08-31T19:09:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்க பயணங்களை கணிசமாகக் குறைத்த கனடியர்கள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/canadians-are-keeping-travel-money-home-1788185258"></link>
            <id>https://canadamirror.com/article/canadians-are-keeping-travel-money-home-1788185258</id>
            <summary type="text">2026ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் கனடா பயணிகள் அமெரிக்காவிற்கான தங்கள் பயணங்களையும் செலவுகளையும் கணிசமாகக் குறைத்துள்ளதாக கனடிய புள்ளிவிபரவியல் திணைக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் கனடா பயணிகள் அமெரிக்காவிற்கான தங்கள் பயணங்களையும் செலவுகளையும் கணிசமாகக் குறைத்துள்ளதாக கனடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் வெளியிட்ட தேசிய சுற்றுலா சர்வே தரவுகள் தெரிவிக்கின்றன.
</p><p>2025ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களுடன் ஒப்பிடுகையில், 2026 ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலத்தில் கனடாவாசிகள் அமெரிக்காவிற்கு மேற்கொண்ட பயணங்களின் எண்ணிக்கை சுமார் 5 லட்சம் குறைந்துள்ளது.
</p><p>பயணங்களின் எண்ணிக்கை குறைந்ததால், அமெரிக்காவில் கனடாவாசிகள் செய்த செலவு சுமார் 800 மில்லியன் டொலர் வரை சரிவடைந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/00773107-b6ec-4d0c-9c05-274134e87139/26-6a958aabc6735.webp' /></p><p> </p><p>இதில் விமானக் கட்டணம் மற்றும் கனடாவில் பயணத்திற்காகச் செய்யப்பட்ட ஆரம்பச் செலவுகளும் அடங்கும்.</p><p>
அமெரிக்க பயணங்களைத் தவிர்த்து கனடாவாசிகள் தங்கள் சொந்த நாட்டின் சுற்றுலாத் துறையை ஆதரிக்கத் தொடங்கியுள்ளனர்.
</p><p>2025 முதல் காலாண்டில் 13.8 பில்லியன் டொலராக இருந்த கனடாவின் உள்நாட்டுச் சுற்றுலாச் செலவு, 2026 முதல் காலாண்டில் 14.5 பில்லியன் டொலராக அதிகரித்துள்ளது.
</p><p>இதேவேளை, கனடாவாசிகள் அமெரிக்கப் பயணத்தைக் குறைத்துக் கொண்டபோதிலும், அமெரிக்கர்களிடையே கனடாவிற்குச் செல்லும் ஆர்வம் குறையவில்லை.
</p><p>2026 ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலத்தில் அமெரிக்க சுற்றுலாப் பயணிகள் கனடாவில் சுமார் 3 பில்லியன் டொலர் செலவிட்டுள்ளனர்.
</p><p>இது முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தை விட சுமார் 500 மில்லியன் டொலர் அதிகமாகும்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-31T19:08:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[போரை தொடரவே விரும்புகிறார் புடின்: ஜெலென்ஸ்கி முன்வைத்த குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/putin-not-ready-for-peace-zelenskyy-stated-1788202914"></link>
            <id>https://news.lankasri.com/article/putin-not-ready-for-peace-zelenskyy-stated-1788202914</id>
            <summary type="text">Putin not ready for peace. Zelenskyy stated: ரஷ்ய ஜனாதிபதி புடின் போரை தொடரவே விரும்புகிறார் என்று உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி குற்றஞ்சாட்டியுள்ளார்....</summary>
            <content type="html"><![CDATA[<p>Putin not ready for peace. Zelenskyy stated: ரஷ்ய ஜனாதிபதி புடின் போரை தொடரவே விரும்புகிறார் என்று உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி குற்றஞ்சாட்டியுள்ளார்.</p><h2> போரை தொடர விரும்பும் புடின்</h2><p>உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி திங்கட்கிழமை தெரிவித்த கருத்தில், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தனிப்பட்ட முறையில் போரை தொடரவே விரும்புகிறார் என தெரிவித்துள்ளார்.</p><p>உக்ரைன் மற்றும் சர்வதேச கூட்டாளி நாடுகளின் உளவுத்துறை அறிக்கைகளும் இந்த தகவலை தான் உறுதிப்படுத்தியுள்ளது என்று தெரிவித்துள்ளார்.</p><p>இது தொடர்பாக உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி X தளத்தில் வெளியிட்ட பதிவில், ரஷ்ய தலைவர்களுக்கும்,, ரஷ்யாவில் வாழும் பொதுமக்களுக்கும் இடையே மிகப்பெரிய கருத்து வித்தியாசம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4aa30e6c-d80a-4a0d-8d49-3a2f702a5f7c/26-6a95cfa479b65.webp' /></p><p> ரஷ்ய பொதுமக்கள் பெரும்பாலானோர் போரை முடிவுக்கு கொண்டு வரவே விரும்புகின்றனர் என்று தெரிவித்துள்ளார்.</p><p> எனவே மாஸ்கோ தலைமையும், புடினின் மனநிலையும் போரை கைவிட்டு விட்டு அமைதியை நோக்கி திரும்ப வேண்டும் என்று ஜெலென்ஸ்கி வலியுறுத்தியுள்ளார்.</p><p> அமெரிக்கா அதிபரின் பிரதிநிதிகள் குறித்து நம்பிக்கை தெரிவித்த ஜெலென்ஸ்கி, செப்டம்பரில் அதற்கான குறிப்பிடத்தக்க ராஜதந்திர மாற்றங்கள் இருக்க கூடும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-31T19:02:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[களு கங்கையில் நீராடச் சென்ற 19 வயது இளைஞன் மாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/19-year-old-youth-missing-1788200748"></link>
            <id>https://jvpnews.com/article/19-year-old-youth-missing-1788200748</id>
            <summary type="text">ஹொரணை, நாரகல பாலத்திற்கு அருகில் களு கங்கையில் நீராடச் சென்ற மூன்று இளைஞர்களில் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.

 

இன்று (31) பிற்பகல் இ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹொரணை, நாரகல பாலத்திற்கு அருகில் களு கங்கையில் நீராடச் சென்ற மூன்று இளைஞர்களில் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.
</p><p>
 

இன்று (31) பிற்பகல் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதுடன், இவ்வாறு காணாமல் போனவர் 19 வயதுடைய இளைஞராவார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/890ee987-a263-4cd3-b0b4-fb5325ef34f2/26-6a95c72e2e464.webp' /></p><p>
</p><p>
 

காணாமல் போன இளைஞனைத் தேடும் விசேட தேடுதல் நடவடிக்கை தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.</p><p></p><p>

 

சம்பவம் தொடர்பில் ஹொரணை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-31T19:00:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[களுத்துறை துப்பாக்கிச் சூடு! பானந்துர நிலந்தவின் மைத்துனர் படுகொலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/shooting-in-payagala-1788196621"></link>
            <id>https://ibctamil.com/article/shooting-in-payagala-1788196621</id>
            <summary type="text">புதிய இணைப்புபாயாகலவில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.இந்த நிலையில், குறித்த நபர் தற்ப...</summary>
            <content type="html"><![CDATA[<h3>புதிய இணைப்பு</h3><p>பாயாகலவில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.</p><p>இந்த நிலையில், குறித்த நபர் தற்போது தடுப்பு காவலில் விசாரிக்கப்பட்டு வரும் பிரபல பாதாள உலக குற்றவாளி பானந்துர நிலந்தவின்&nbsp;மைத்துனரான டிலா என்பர் என தெரியவந்தள்ளது.</p><p>அத்தோடு, குறித்த துப்பாக்கிச் சூட்டை குடு சலிந்து என்ற பிரபல பாதாள உலக தலைவனின் குழுவினரே நடத்தியுள்ளதாகவும் இதன்போது “3எய்ட்“ ரக துப்பாக்கி பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.</p><h3>முதலாம் இணைப்பு</h3><p>களுத்துறை மாவட்டம் - பாயாகலவின்&nbsp;நைமுல்ல பம்பய பகுதியில் உள்ள ஒரு வீட்டின் முன்பாக துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.</p><p>குறித்த துப்பாக்கிச் சூட்டில்&nbsp;படுகாயமடைந்த ஒருவர் நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.</p><p>சற்று நேரத்திற்கு முன்பு இந்தத் துப்பாக்கிச் சூடு நடந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.</p><p></p><h2>மேலதிக விசாரணை</h2><p>துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் தெரியவராத நிலையில், சந்தேகநபர்களை கைது செய்ய்ய காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/14a64e12-08fc-4587-a8be-a516bcd11aa7/26-6a95b8d9346fa.webp' /></p><p></p><p>&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-31T18:57:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Erimalai</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்திய நிறுவனத்திற்கு காணி வழங்குவதற்கு வடமராட்சி கிழக்கு மக்கள் கடும் எதிர்ப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/oppose-land-allocation-to-indian-company-people-1788201645"></link>
            <id>https://ibctamil.com/article/oppose-land-allocation-to-indian-company-people-1788201645</id>
            <summary type="text">

யாழ் வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி, ஆழியவளை உட்பட்ட 20 ஏக்கர் அரச காணியை
மசாஜ் நிலையம் அமைப்பதற்காக இந்தியாவின் தனியார் நிறுவனத்திற்கு கொடுப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>

யாழ் வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி, ஆழியவளை உட்பட்ட 20 ஏக்கர் அரச காணியை
மசாஜ் நிலையம் அமைப்பதற்காக இந்தியாவின் தனியார் நிறுவனத்திற்கு கொடுப்பதற்கு
மக்கள் கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.
</p><p>கடந்த 28 ஆம் திகதி வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்தில் நாடாளுமன்ற
உறுப்பினர் ரஜீவன் எம்பி தலைமையில் இடம் பெற்ற கலந்துரையாடலில் மசாஜ்
நிலையம்,தியான மண்டபம் அமைப்பதற்காக இந்திய தனியார் நிறுவனம் ஒன்றிற்கு
வெற்றிலைக்கேணி, ஆழியவளை பகுதியை உள்ளடக்கிய 20 ஏக்கர் நிலப்பரப்பை குத்தகை
அடிப்படையில் கொடுப்பதற்கு தீர்மானம் முன் வைக்கப்பட்டது.
</p><p>
தங்களுடைய மண் பல வரலாற்றை கொண்டது, பல தியாகங்களைச் செய்த மண், ஆகவே
வடமராட்சி கிழக்கு பகுதிக்கு மசாஜ் நிலையம் தேவை இல்லை என்று மக்கள் குறித்த
திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர்.</p><p></p><h2>சீரழிக்கப்படும் இளைய தலைமுறையினர்</h2><p>
</p><p>
வடமராட்சி கிழக்கில் தற்போதும் பல நூறு குடும்பங்கள் நிரந்தர காணியில்லாமல்
தவிக்கின்ற போதும் மக்களுக்கு கொடுக்க வேண்டிய அரச காணியை தனியார்
நிறுவனத்திற்கு கொடுப்பதற்கு ஏன் ஆர்வம் காட்டுகிறார்கள் என்று மக்கள் கேள்வி
எழுப்பி உள்ளனர்.</p><p><br></p><p>
</p><p>
வடமராட்சி கிழக்கு பகுதியில் சட்டவிரோத செயற்பாடுகள் இடம்பெறுகின்ற போதும்
அதனை தடுத்து நிறுத்தாமல் இளைய தலைமுறையை சீரழிக்கும் கழியாட்ட விடுதிகளை
அமைப்பதற்கு முயற்சிப்பது ஏற்கத்தக்கதல்ல என்றும் மக்கள் தெரிவித்துள்ளனர்.</p><p>

மக்களுக்கு நன்மையற்ற அபிவிருத்தி திட்டங்களை முன்மொழிவதை உரியவர்கள் நிறுத்த
வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டுள்ளனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-31T18:51:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹிட்லராக மாறும் ஜனாதிபதி அநுர குமார..! அச்சத்தில் அரசியல்வாதிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/anura-kumara-becomes-like-hitler-sl-politicians-1788201236"></link>
            <id>https://tamilwin.com/article/anura-kumara-becomes-like-hitler-sl-politicians-1788201236</id>
            <summary type="text">தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பல அதிரடி நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது.இந்நிலையில், ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, சர்வாதிகாரி ஹிட்லரை போல செயற்...</summary>
            <content type="html"><![CDATA[<p>தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பல அதிரடி நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது.</p><p>இந்நிலையில், ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, சர்வாதிகாரி ஹிட்லரை போல செயற்பட்டு வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தி வருகின்றனர்.&nbsp;</p><p>அண்மையில் அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட 22ஆவது அரசியலமைப்பின் திருத்தச் சட்டம் குறித்து எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட பல தரப்பினரால் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகின்றது.</p><p>குறித்த சட்டமூல திருத்தத்திற்கு எதிராக பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.&nbsp;</p><p>குறிப்பாக, இந்த மனுக்களை தாக்கல் செய்தவர்கள் ராஜபக்சக்களின் ஆதரவாளர்களாகவும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆதரவாளர்களாகவும் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.&nbsp;</p><p>இது உள்ளிட்ட பல முக்கிய விடயங்கள் குறித்து ஆராய்கின்றது நியூஸ் இன்சைட் நிகழ்ச்சி,&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/MJfnii76r0Y" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-31T18:51:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜனநாயகத்தைக் கொலை செய்யும் அநுர அரசு - சஜித் குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/22nd-amendment-is-killing-democracy-sajith-alleges-1788191597"></link>
            <id>https://tamilwin.com/article/22nd-amendment-is-killing-democracy-sajith-alleges-1788191597</id>
            <summary type="text">இலங்கையில் முறைமையில் மாற்றத்தைக் கொண்டுவருவோம் என பெருமை பேசி ஆட்சிக்கு
வந்த தற்போதைய அரசு, 22ஆவது திருத்தத்தை கொண்டுவந்து ஜனநாயகத்தை தலைகீழாக
மாற்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் முறைமையில் மாற்றத்தைக் கொண்டுவருவோம் என பெருமை பேசி ஆட்சிக்கு
வந்த தற்போதைய அரசு, 22ஆவது திருத்தத்தை கொண்டுவந்து ஜனநாயகத்தை தலைகீழாக
மாற்றி வருகின்றது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
</p><p>
மகாமான்ய டி.எஸ். சேனநாயக்க அரசியல் பீடத்தின் டிப்ளோமாதாரிகளுக்கான
பட்டமளிப்பு விழாவில் நேற்று கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக்
குறிப்பிட்டுள்ளார்.</p><h2>சோசலிச முறை</h2><p>
</p><p>
அவர் மேலும் உரையாற்றுகையில், நிறைவேற்றுத்துறைக்கும் சட்டவாக்கத்துறைக்கும் இடையிலான அதிகாரப் பகிர்வை சீர்குலைக்கும் வகையில் 22ஆவது திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. </p><p>இதன் மூலம்
நீதிமன்றத்தையும் நீதிபதிகளையும் அவமதித்து, நீதி வழங்கும் செயற்பாட்டைப்
படுகொலை செய்து சட்டத்தின் ஆட்சியை அரசு மீறி வருகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/58af608b-611e-44f3-a940-aad670ade7f5/26-6a95b3b2cb3f6.webp' /></p><p>

கடந்த அரசு உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பின் மூலம் ஊழியர் சேமலாப நிதிக்குச்
கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி நாட்டை ஸ்திரமடைந்ததாகக் கூறியது போல், தற்போதைய
அரசும் விவசாயிகளை மிதித்து நெல் ஒரு கிலோவுக்கு 17 ரூபா நட்டத்தை
ஏற்படுத்துகின்றது.</p><p> ஜனநாயக வரலாற்றில் மிகவும் தோல்வியடைந்த அரசாங்கம் இதுவே.

தீவிர சோசலிச முறை மூலம் செல்வத்தை உருவாக்க முடியாது.</p><h2>அரசியல் உரிமைகள்</h2><p> </p><p>முதலாளித்துவத்தினாலேயே
செல்வத்தை உற்பத்தி செய்ய முடியும் என்றாலும், அது சமூகத்தில் பிளவுகளை
ஏற்படுத்துவதால் மனிதாபிமான முதலாளித்துவமும் சமூகச் சந்தைப்
பொருளாதாரமும் அவசியம்.
</p><p>
ஜே.ஆர். ஜயவர்தன மற்றும் ஆர். பிரேமதாஸ பின்பற்றிய நடுநிலைப் பாதையைப் போன்று,
இடதுசாரி மற்றும் வலதுசாரி கொள்கைகளின் சிறந்த குணாம்சங்களை ஒன்றிணைக்க
வேண்டும்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/97fc0a1b-a651-4671-a049-53b2337ed9ed/26-6a95b3b38413e.webp' /></p><p>நாட்டின் 1978ஆம் ஆண்டு அரசமைப்பில் குடியியல் மற்றும் அரசியல் உரிமைகள்
மட்டுமே நீதிமன்றத்தில் சவால் விடுக்கக் கூடியவையாக உள்ளன.</p><p>பொருளாதார,
சமூக, கலாச்சார, கல்வி மற்றும் சுகாதார உரிமைகளும் நீதிமன்றத்தில் சவால்
விடுக்கக்கூடிய அடிப்படை உரிமைகளாக மாற்றப்பட வேண்டும்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-31T18:50:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[கன்னியா பிள்ளையார் கோயில் விவகாரம் - நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/kaniya-pillayar-temple-issue-court-order-1788195993"></link>
            <id>https://tamilwin.com/article/kaniya-pillayar-temple-issue-court-order-1788195993</id>
            <summary type="text">கன்னியா வெந்நீரூற்றுப் பகுதியில் பிள்ளையார் ஆலயம் அமைந்திருந்த
இடத்தில் தொல்பொருள் திணைக்களத்தால் மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டட நிர்மாண
வேலைகளுக்குத்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கன்னியா வெந்நீரூற்றுப் பகுதியில் பிள்ளையார் ஆலயம் அமைந்திருந்த
இடத்தில் தொல்பொருள் திணைக்களத்தால் மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டட நிர்மாண
வேலைகளுக்குத் திருகோணமலை மேல் நீதிமன்றம்&nbsp; இடைக்காலத் தடை உத்தரவு
பிறப்பித்துள்ளது.</p><p>இந்த உத்தரவானது இன்று(31.08.2026) வழங்கப்பட்டுள்ளது.</p><h2>மேல் நீதிமன்றம் உத்தரவு</h2><p>
</p><p>
கன்னியா பகுதியில் தொல்பொருள் திணைக்களத்தால் கடந்த ஜூலை 22ஆம் திகதி முதல்
முன்னெடுக்கப்பட்டு வரும் கட்டட நிர்மாண வேலைகளை, உள்ள நிலையிலேயே அப்படியே
இடைநிறுத்துமாறும், மேற்கொண்டு எந்தவிதமான பணிகளையும் முன்னெடுக்க வேண்டாம்
என்றும் மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
</p><p>
குறித்த இடத்தில் முன்னர் பிள்ளையார் கோயில் இருந்த நிலையில், அங்கு பௌத்த
தூபி இருப்பதாகக் கூறி தொல்பொருள் திணைக்களம் தடைவிதித்துள்ளது. இது தொடர்பான
வழக்கில் 2019ஆம் ஆண்டில் எட்டப்பட்ட இணக்கப்பாட்டின்படி, கோயில் வேறொரு
இடத்திற்கு மாற்றப்படவுள்ளதாகவும், பழைய இடத்தில் உள்ள தூபியை 'பேணிப்
பாதுகாக்க மட்டுமே' தொல்பொருள் திணைக்களத்திற்கு உரிமையுண்டு எனவும்
ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e3d511e9-f46b-4325-86f1-70ccfbab7bec/26-6a95b79664df7.webp' /></p><p>ஆனால், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நீதிமன்ற இணக்கப்பாட்டிற்கு முரணாகத்
தொல்பொருள் திணைக்களம் அங்கு புதிய கட்டுமானப் பணிகளை ஆரம்பித்ததை அடுத்து,
காணியின் உரிமையாளர் தரப்பில் நீதிமன்றத்தில் நகர்த்தல் பத்திரம் தாக்கல்
செய்யப்பட்டு விவாதம் நடத்தப்பட்டுள்ளது.
</p><p>
வழக்குத் தரப்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், தொல்லியல்
சட்டத்தின் 20ஆவது பிரிவின் கீழும், நீதிமன்றத்தில் எட்டப்பட்ட
இணக்கத்தின்படியும் அந்த இடத்தில் 'பாதுகாத்தல்' மட்டுமே செய்யப்படலாமே தவிர,
புனர்நிர்மாணம் அல்லது புதிய கட்டுமானங்கள் எதையும் செய்ய முடியாது என வாதாடியுள்ளார்.
</p><p>
தொல்பொருள் திணைக்களம் அங்கு என்ன வகையான நிர்மாணங்களை மேற்கொள்கின்றது என்பது
குறித்த எழுத்துமூல அறிக்கையைச் சமர்ப்பிக்க அரச தரப்பு சட்டத்தரணி அவகாசம்
கோரியதை ஏற்று, வழக்கு எதிர்வரும் செப்டெம்பர் 22ஆம் திகதிக்கு
ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அத்துடன், அன்றைய தினம் வரை தற்போதைய நிலையே தொடர
வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-31T18:50:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[இஸ்ரேல் - கிரீஸ் இடையே பாதுகாப்பு ஒப்பந்தம்: €3 பில்லியனுக்கு ராணுவ தளவாடங்கள் கொள்முதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/israel-and-greece-3-billion-defense-deal-1788201809"></link>
            <id>https://news.lankasri.com/article/israel-and-greece-3-billion-defense-deal-1788201809</id>
            <summary type="text"> Israel and Greece €3 Billion Defense Partnership deal: இஸ்ரேல் - கிரீஸ் இடையே €3 பில்லியன் மதிப்புள்ள பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.இஸ்ரேல...</summary>
            <content type="html"><![CDATA[<p> Israel and Greece €3 Billion Defense Partnership deal: இஸ்ரேல் - கிரீஸ் இடையே €3 பில்லியன் மதிப்புள்ள பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.</p><h2>இஸ்ரேல் - கிரீஸ் இடையே பாதுகாப்பு ஒப்பந்தம்</h2><p>இஸ்ரேல் மற்றும் கிரீஸ் நாடுகளுக்கு இடையே வரலாற்று சிறப்புமிக்க பாதுகாப்பு ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தாகியுள்ளது.</p><p>இதில் கிட்டத்தட்ட €3 பில்லியன் (சுமார் $3.48 பில்லியன்) மதிப்பான இராணுவ தளவாட கொள்முதல் ஒப்பந்தத்தை இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சகம் இறுதி செய்துள்ளது.</p><p></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/44745c48-e670-4758-8210-8a311c5ec8a8/26-6a95cb5358031.webp' /></p><p> இந்த ஒப்பந்தத்தின் கீழ், இஸ்ரேலில் முழுக்க முழுக்க தயாரிக்கப்பட்ட அதிநவீன மற்றும் பல அடுக்கு வான் பாதுகாப்பு வலையமைப்பை கிரீஸ் நாட்டிற்கு அமைத்துக் கொடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.</p><p> சமீபத்தில் ஈரானுடன் ஏற்பட்ட மோதலின் போது கிடைத்த ஆழ்ந்த செயல்பாட்டு அனுபவங்களும், நுண்ணறிவும் இந்த பாதுகாப்பு அமைப்புகளில் பயன்படுத்தப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்<br></td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-31T18:43:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஓய்வை அறிவித்தார் அர்ஜென்டினாவின் கால்பந்தாட்ட நாயகன் லியோனல் மெஸ்ஸி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/argentina-lionel-messi-announces-retirement-1788201673"></link>
            <id>https://canadamirror.com/article/argentina-lionel-messi-announces-retirement-1788201673</id>
            <summary type="text">அர்ஜென்டினாவின் நட்சத்திரக் கால்பந்தாட்ட வீரர் லியோனல் மெஸ்ஸி, சர்வதேச கால்பந்தாட்டத்தில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 

 

இது &quot;வேதனைய...</summary>
            <content type="html"><![CDATA[<p>அர்ஜென்டினாவின் நட்சத்திரக் கால்பந்தாட்ட வீரர் லியோனல் மெஸ்ஸி, சர்வதேச கால்பந்தாட்டத்தில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். </p><p>

 

இது "வேதனையான" ஒரு முடிவு என்றாலும், "அதற்கான நேரம் வந்துவிட்டது" என்பதைத் தான் புரிந்து கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார்.</p><p>[ASVUG</p><p>

 

2022 ஆம் ஆண்டு கட்டாரில் நடைபெற்ற உலகக் கோப்பையில் அர்ஜென்டினா அணிக்குத் தலைமை தாங்கி சாம்பியன் பட்டம் வென்று கொடுத்த 39 வயதான மெஸ்ஸி, தனது நாட்டுக்காக 207 போட்டிகளில் விளையாடி 125 கோல்களை அடித்துள்ளார். </p><p>

 

இதன் மூலம் அர்ஜென்டினா அணியின் அதிக கோல்களை அடித்த வீரர் மற்றும் அதிக போட்டிகளில் விளையாடிய வீரர் என்ற பெருமையைப் பெறுகிறார்.
</p><p>
 

இன்ஸ்டாகிராமில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேசிய அணிக்காகத் தனது முழு உழைப்பையும் வழங்கிவிட்டதாகவும், இனி "வழங்குவதற்கு எதுவும் இல்லை" என்றும் குறிப்பிட்டுள்ளார்.</p><p><br></p>]]></content>
            <updated>2026-08-31T18:41:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் குதிரைகளுக்கு வைரஸ் பாதிப்பு அபாயம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/new-brunswick-is-warning-horse-owners-1788186472"></link>
            <id>https://canadamirror.com/article/new-brunswick-is-warning-horse-owners-1788186472</id>
            <summary type="text">&amp;nbsp;கனடாவின் நியூ பிரன்சுவிக் மாகாணத்தில் உள்ள சசெக்ஸ் பகுதியில் நடைபெற்ற குதிரைக் கண்காட்சியில் வைரஸ் தொற்று பரவியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கனடாவின் நியூ பிரன்சுவிக் மாகாணத்தில் உள்ள சசெக்ஸ் பகுதியில் நடைபெற்ற குதிரைக் கண்காட்சியில் வைரஸ் தொற்று பரவியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், குதிரை உரிமையாளர்கள், வளர்ப்பாளர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்குச் சுகாதார எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p><p>
கிங்ஸ் கவுண்டி ஃபேர் நிகழ்வில் நடைபெற்ற '4-H ரவுண்ட் அப்' குதிரைக் கண்காட்சியில் கலந்துகொண்ட ஒரு குதிரை மூலம் வைரஸ் பரவியிருக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.</p><p>
கண்காட்சியில் பங்கேற்ற அந்தப் குறிப்பிட்ட குதிரை, சமீபத்தில் ஈக்வைன் ஹெர்பெஸ்வைரஸ் வகை 1 (EHV-1) தொற்றால் பாதிக்கப்பட்ட மற்றொரு குதிரையுடன் ஒரே பராமரிப்பு மையத்தில் தங்கியிருந்தது தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2f3333d6-4762-4a9b-8a05-c97e93e050a5/26-6a958f6a3db04.webp' /></p><p>
</p><p>தொற்று உறுதிசெய்யப்பட்ட குதிரை நேரடியாகக் கண்காட்சியில் பங்கேற்கவில்லை என்றாலும், அதனுடன் தொடர்பில் இருந்த வேறு குதிரை பங்கேற்றதால் தொற்று பரவும் அபாயம் இருப்பதாக மாகாணத் தலைமை கால்நடை மருத்துவ அதிகாரி நிக்கோல் வானமேக்கர் தெரிவித்துள்ளார்.
ஈக்வைன் ஹெர்பெஸ்வைரஸ் (EHV-1) என்பது குதிரைகளிடையே மிக வேகமாகப் பரவக்கூடிய ஒரு தீவிர தொற்றாகும்.</p><p>
இது குதிரைகளுக்குச் சுவாசக் கோளாறுகள், நரம்பியல் நோய்கள் மற்றும் சினைப் பருவத்தில் இருக்கும் குதிரைகளுக்குக் கருச்சிதைவு போன்ற கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியது.</p><p>
கண்காட்சியில் பங்கேற்ற குதிரைகளை, மற்ற குதிரைகளிடமிருந்து 14 முதல் 21 நாட்கள் வரை தனியாகப் பிரித்து பராமரிக்க வேண்டும்.
</p><p>குதிரைகளுக்குக் காய்ச்சல், தீவிர சோர்வு அல்லது பசியின்மை போன்ற அறிகுறிகள் உள்ளனவா என்பதைத் தொடர்ச்சியாகக் கண்காணிக்க வேண்டும்.</p><p>
குதிரைகளுக்கு 38.9 பாகை செல்சியஸ் அளவை விடக் கூடுதல் காய்ச்சல் அல்லது பிற நோய் அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாகக் கால்நடை மருத்துவரைத் தொடர்புகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-31T18:31:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[மதுபோதையில் வீடு புகுந்து தாக்கிய பிரதேச சபை உறுப்பினர்கள்.. எழுந்துள்ள கடும் கண்டனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/pradeshiya-sabha-member-drunken-assault-condemned-1788190106"></link>
            <id>https://tamilwin.com/article/pradeshiya-sabha-member-drunken-assault-condemned-1788190106</id>
            <summary type="text">தேசிய மக்கள் சக்தி கட்சியின் பிரதேச சபை உறுப்பினர்களின் தலைமையிலான
குழு மதுபோதையில் வீடு புகுந்து மேற்கொண்ட தாக்குதலை மிகவும் வன்மையாகக்
கண்டிக்கின்...</summary>
            <content type="html"><![CDATA[<p>தேசிய மக்கள் சக்தி கட்சியின் பிரதேச சபை உறுப்பினர்களின் தலைமையிலான
குழு மதுபோதையில் வீடு புகுந்து மேற்கொண்ட தாக்குதலை மிகவும் வன்மையாகக்
கண்டிக்கின்றேன் என முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் ச.சுகிர்தன்
தெரிவித்துள்ளார்.
</p><p>
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.</p><h2>நீதியை பெற்றுக்கொடுத்தல்</h2><p>அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, நெல்லியடியில் வயதான ஓய்வுநிலை அரச உத்தியோகத்தரின் வீட்டின்
மீது தேசிய மக்கள் சக்தியின் வடமராட்சி தெற்கு மேற்கு மற்றும் நல்லூர் பிரதேச
சபை உறுப்பினர்களின் தலைமையிலான குழு மதுபோதையில் மேற்கொண்ட அடாவடித்தனமான
தாக்குதல் சமூகத்தில் மிகுந்த அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.</p><p>நள்ளிரவில்
மேற்கொள்ளப்பட்ட இத்தகைய தாக்குதலை ஏற்றுக்கொள்ள முடியாது.

இந்தச் சம்பவம் கடந்த கால ஆட்சியாளர்களின் மோசமான நடவடிக்கைகளை மீண்டும்
நினைவூட்டுகின்றன.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/46a2cc14-2df8-4460-8d9c-64cc17fa0b95/26-6a95a2bea041d.webp' /></p><p>தற்போதைய ஆட்சியிலும் நாட்டின் பல இடங்களில் இதுபோன்ற
சம்பவங்கள் தொடர்கின்றன.

சட்டம், ஒழுங்கை நிலைநாட்டும் பொலிஸார் எத்தகைய அரசியல் அழுத்தங்களுக்கும்
அடிபணியாமல், பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு உரிய நீதியைப் பெற்றுக்கொடுக்க
வேண்டும்.</p><p>

நாட்டின் ஜனாதிபதி இந்தச் சம்பவம் தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்க
வேண்டும். தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் வெளிநாட்டுப் பணத்தைப் பெற்றுக்கொண்டு
வடக்கில் கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபடுவதை உடனடியாக நிறுத்த வேண்டும்.</p><p>
பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு நீதி கிடைக்கும் வரை இலங்கைத் தமிழரசுக் கட்சி
தொடர்ந்து குரல் கொடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-31T18:24:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுவிஸில் இரவு பார்ட்டியில் நடந்த துப்பாக்கிச் சூடு: சந்தேக நபர் கைது செய்த பொலிஸார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/swiss-police-arrest-suspect-of-rave-shooting-1788200120"></link>
            <id>https://news.lankasri.com/article/swiss-police-arrest-suspect-of-rave-shooting-1788200120</id>
            <summary type="text">சுவிட்சர்லாந்தின் ஆராவ் நகரில் நகரில்&amp;nbsp; நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் தொடர்புடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சுவிஸ் நகரில் துப்பாக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>சுவிட்சர்லாந்தின் ஆராவ் நகரில் நகரில்&nbsp; நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் தொடர்புடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><h2> சுவிஸ் நகரில் துப்பாக்கிச்சூடு</h2><p>
வடக்கு சுவிட்சர்லாந்தில் சூரிச்சின் மேற்கே உள்ள ஆராவ் நகரில் இரவு நேர இசை மற்றும் நடன விருந்து ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டார். அத்துடன் 5 பேர் வரை காயமடைந்தனர்.</p><p>அதிகாலை 3 மணிக்கு முன்னதாக 'ஆராவர் ரேவ்' (Aarauer Rave) நிகழ்வின் ஒரு பகுதியாக நடந்த இந்த நிகழ்ச்சியின்போது துப்பாக்கிச் சூடு நடைபெற்றுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7e975aaa-5dc3-453d-9a0e-91053e4b3d0a/26-6a95c4ba1d333.webp' /></p><p> இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர் இத்தாலியை சேர்ந்த 22 வயது பெண் என்று தெரியவந்துள்ளது.</p><h2>சந்தேக நபர் கைது</h2><p>நிகழ்ச்சி அதிகாரப்பூர்வமாக நிறைவடைந்த பிறகும் சம்பவ இடத்தில் 100க்கும் மேற்பட்டோர் கூடியிருந்த போதே இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.</p><p> இந்நிலையில் ஜேர்மன் நாட்டு காவல்துறையின் உதவியுடன்&nbsp; நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில் சுவிட்சர்லாந்தை சேர்ந்த சந்தேக நபரை பொலிஸார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/46430c0f-6047-4f67-88a4-a497155602f7/26-6a95c4bac6476.webp' /></p><p> இந்த தாக்குதலை கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தனி ஆளாக நடத்தியதாக அதிகாரிகள் நம்புகின்றனர்.</p><p> எனினும் இந்த தாக்குதலுக்கான உண்மையான காரணம் குறித்து பொலிஸார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.</p><p> சம்பவம் நடைபெற்ற இடத்தில் அதிகாரிகள் இரண்டு வகையான குண்டுகளை கைப்பற்றியுள்ள நிலையில், தாக்குதல்தாரி கைத்துப்பாக்கி மற்றும் தாக்குதலுக்கு உரிய பெரிய ரக துப்பாக்கியை பயன்படுத்தி இருக்கலாம் என்று தடயவியல் அதிகாரிகள் கருதுகின்றனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-31T18:15:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சற்றுமுன்னர் பானதுர நிலங்கவின் உறவினர் சுட்டுப் படுகொலை.. குடு சலிந்து குழுவினர் தாக்குதல் நடத்தியதாக தகவல்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/shooting-incident-near-kalutara-one-person-injured-1788198799"></link>
            <id>https://tamilwin.com/article/shooting-incident-near-kalutara-one-person-injured-1788198799</id>
            <summary type="text">புதிய&amp;nbsp;இணைப்புபயகல, நைமுல்ல, பம்பய பகுதியில் உள்ள ஒரு வீட்டின் முன்பு நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் பாதாள உலக...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய&nbsp;இணைப்பு</h2><p>பயகல, நைமுல்ல, பம்பய பகுதியில் உள்ள ஒரு வீட்டின் முன்பு நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் பாதாள உலகக் குழுக்களுடன் தொடர்புடையதாகக் குற்றம் சாட்டப்பட்ட ஒரு முக்கிய சந்தேக நபரான&nbsp;பானதுர நிலங்கவின்&nbsp;மைத்துனர்&nbsp;திலா என அடையாளம் காணப்பட்டுள்ளார்.&nbsp;</p><p>குறித்த நபர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர் உயிரிழந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.&nbsp;</p><p>ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியும், பெரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரருமான சலிந்து மல்ஷிதா என்ற "குடு சலிந்து" என்பவரின் குழுவினரால் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.&nbsp;</p><h2> </h2><h2>முதலாம் இணைப்பு&nbsp;</h2><p>களுத்துறை அருகே சற்றுமுன்னர் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.</p><h2>வைத்தியசாலை அனுமதி</h2><p>

களுத்துறை மாவட்டத்தின் பயாகல அருகே கொஸ்ஹேன பிரதேசத்தில் குறித்த சம்பவம் இன்றிரவு பத்து மணியளவில் நடைபெற்றுள்ளது.</p><p>
</p><p>
இதன்போது துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி ஒருவர் காயமடைந்துள்ள நிலையில், நாகொட மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p><p>

சம்பவம் தொடர்பான விசாரணைகளை களுத்துறை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-31T18:13:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிக்கன் துண்டிற்க்காக உற்ற நண்பனுக்கு நடத்தப்பட்ட சம்பவம் ; இரத்த வெள்ளத்தில் மிதந்த சடலம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/incident-close-friend-over-a-piece-of-chicken-1788199863"></link>
            <id>https://jvpnews.com/article/incident-close-friend-over-a-piece-of-chicken-1788199863</id>
            <summary type="text">இந்தியாவின் கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டத்தில், சிக்கன் துண்டுகளை சாப்பிடுவதில் ஏற்பட்ட தகராறில், வடமாநில வாலிபர் ஒருவர் அவரது நண்பரை கத்தியால் குத்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியாவின் கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டத்தில், சிக்கன் துண்டுகளை சாப்பிடுவதில் ஏற்பட்ட தகராறில், வடமாநில வாலிபர் ஒருவர் அவரது நண்பரை கத்தியால் குத்திக் கொலை செய்தார். கொலையை மறைக்க முயன்ற வாலிபரை பொலிஸார் அதிரடியாக கைது செய்தனர்.</p><p>

உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த நண்பர்கள் 2 பேரும் கர்நாடக மாநிலம், பெலகாவி மாவட்டம் முடலகி தாலுகாவில் உள்ள ஒரு இரும்பு தொழிற்சாலையில் தங்கியிருந்து வேலை செய்து வந்தனர்</p><p>[ 
</p><h2>வாக்குவாதம்</h2><p>வாராந்திர விடுமுறை நாளான நேற்று (30), அவர்கள் தங்கியிருந்த அறையில் நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்திவிட்டு, சிக்கன் சமைத்து சாப்பிட்டுள்ளனர்.</p><p> 

அப்போது, சீதாராம் தன்னை விட அதிக சிக்கன் துண்டுகளைச் சாப்பிட்டதால் அருண்குமார் கோபமடைந்தார்.</p><p> மது போதையில் இருந்த 2 பேருக்கும் இடையே "யார் அதிக சிக்கன் பீஸ் சாப்பிடுவது" என்பதில் வாக்குவாதம் முற்றி, அது கைகலப்பாக மாறியது.</p><p></p><p> 

ஆத்திரமடைந்த அருண்குமார், சமையல் அறையில் இருந்த கத்தியை எடுத்து சீதாராமின் நெஞ்சில் குத்தினார். இதில் இரத்த வெள்ளத்தில் சரிந்த சீதாராம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். </p><p>இதையடுத்து, கொலையை விபத்தாக மறைக்க திட்டமிட்ட அருண்குமார், சீதாராமின் உடலை அரசு வைத்தியசாலைக்கு கொண்டு சென்றார். </p><p>அங்கு, சீதாராம் "வெல்டிங் வேலை செய்யும்போது கட்டிடத்திலிருந்து கீழே விழுந்து இறந்துவிட்டார்" என்று வைத்தியர்களிடம் பொய் கூறி நாடகமாடினார்.</p><p></p><p>சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிஸார் அருண்குமாரிடம் தீவிர விசாரணை நடத்தினர். 

பொலிஸாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில், சிக்கன் பீஸ் சண்டைக்காக தன் நண்பரைக் கத்தியால் குத்திக் கொன்றதை அருண்குமார் ஒப்புக்கொண்டார்.</p><p>இதையடுத்து, பொலிஸார், அருண்குமாரைக் கைது செய்து, கொலைக்கு பயன்படுத்திய கத்தியையும் பறிமுதல் செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-31T18:11:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொள்கலன் ஐஸ் : பாகிஸ்தான் நாட்டவர்கள் உட்பட மேலும் மூவர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/businessman-caught-with-drugs-from-pakistan-1788180779"></link>
            <id>https://ibctamil.com/article/businessman-caught-with-drugs-from-pakistan-1788180779</id>
            <summary type="text">புதிய இணைப்பு&amp;nbsp;கொள்கலன் ஒன்றில் மறைத்து வைத்து நாட்டிற்குள் ஐஸ் போதைப்பொருள் கடத்திய சம்பவம் தொடர்பாக மேலும் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>&nbsp;கொள்கலன் ஒன்றில் மறைத்து வைத்து நாட்டிற்குள் ஐஸ் போதைப்பொருள் கடத்திய சம்பவம் தொடர்பாக மேலும் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>

அவர்களில் இருவர் பாகிஸ்தான் நாட்டவர்கள் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
</p><p>
மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவு இந்தக் கைது நடவடிக்கைகளை மேற்கொண்டது.

சந்தேகத்திற்கிடமான கொள்கலனை ஆய்வு செய்ததில், 463 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருள் கண்டெடுக்கப்பட்டது.&nbsp; &nbsp;</p><h2>முதலாம் இணைப்பு</h2><p>கொள்கலனில் மறைத்து வைத்து பாகிஸ்தானில் இருந்து பாரியளவு போதைப்பொருளை கொண்டுவந்த பிரபல தொழிலதிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>

தெமட்டகொட பிரதேசத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரே கைது செய்யப்பட்டவராவார்.</p><p>&nbsp;கைப்பற்றப்பட்ட ‘ஐஸ்’ (ICE) வகை போதைப்பொருளின் அளவு 420 கிலோகிராம் எனப் காவல்துறையினர் தெரிவித்தனர்.</p><h2>&nbsp;குற்றப் புலனாய்வுப் பணியகத்தினால் சோதனை</h2><p>கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய நீதிமன்ற உத்தரவைப் பெற்று மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தினால் இந்தச் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/edd6eebb-5267-4c3a-8b2d-c4d53b8639fa/26-6a957d43bbad2.webp' /></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-31T18:03:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஓய்வை அறிவித்தார் கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/messi-retires-from-international-football-1788197526"></link>
            <id>https://ibctamil.com/article/messi-retires-from-international-football-1788197526</id>
            <summary type="text">
அர்ஜென்டினா கால்பந்து அணியின் கேப்டன் லியோனல் மெஸ்ஸி சர்வதேச போட்டிகளிலிருந்து தனது ஓய்வை அறிவித்துள்ளார். 

இந்த அறிவிப்பின் மூலமாக தேசிய அணியுடன...</summary>
            <content type="html"><![CDATA[<p>
அர்ஜென்டினா கால்பந்து அணியின் கேப்டன் லியோனல் மெஸ்ஸி சர்வதேச போட்டிகளிலிருந்து தனது ஓய்வை அறிவித்துள்ளார். </p><p>

இந்த அறிவிப்பின் மூலமாக தேசிய அணியுடனான தனது 21 ஆண்டுகால சர்வதேச விளையாட்டு வாழ்க்கைக்கு அவர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
</p><p>
39 வயதான மெஸ்ஸி, திங்களன்று சமூக ஊடகங்களில் வெளியிட்ட அறிக்கையில், விலகுவதற்கான நேரம் வந்துவிட்டதை உணர்ந்து, வேதனையுடன் இந்த முடிவை எடுத்ததாக கூறியுள்ளார்.</p><p></p><h2>2022 ஃபிஃபா&nbsp;உலகக் கோப்பை</h2><p>
</p><p>
2005-ல் அறிமுகமான மெஸ்ஸி, 207 சர்வதேசப் போட்டிகளில் விளையாடி 125 கோல்களை அடித்து, அர்ஜென்டினா அணிக்காக அதிக போட்டிகளில் பங்கேற்ற மற்றும் அதிக கோல் அடித்த வீரர் என்ற சாதனையுடன் விடைபெறுகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3a30a725-dbb2-4cc0-a2e7-ba7c231f61e2/26-6a95bd70763f1.webp' /></p><p>
</p><p>
2022-ல் கத்தாரில் நடைபெற்ற ஃபிஃபா உலகக் கோப்பையை வென்று தந்ததே அவரது மிகப்பெரிய சாதனையாகும். மேலும், 2021 மற்றும் 2024-ஆம் ஆண்டுகளில் கோபா அமெரிக்கா பட்டங்களையும் அர்ஜென்டினாவுக்கு அவர் பெற்றுத் தந்துள்ளார்.</p><h2>கடைசி சர்வதேசப் போட்டி</h2><p>
</p><p>
2026 ஃபிஃபா உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஸ்பெயினிடம் அர்ஜென்டினா 1-0 எனத் தோல்வியடைந்த போட்டியே இவரது கடைசி சர்வதேசப் போட்டியாக அமைந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b5eedf3f-7b42-4e05-b79c-8b99575785be/26-6a95bd712e961.webp' /></p><p> 

நாட்டின் புதிய தலைமுறை வீரர்களின் வருகை மற்றும் இதுவரை சாதித்த பெருமிதத்துடன் ஓய்வு பெறுவதாகக் கூறியுள்ள எட்டு முறை பலோன் டி'ஓர் விருதை வென்ற மெஸ்ஸி, அமெரிக்காவின் இன்டர் மியாமி கிளப் அணிக்காகத் தொடர்ந்து விளையாடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-31T18:00:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாதுகாப்பு அமைச்சின் அறிவிப்பு ; நாளை முதல் ஆரம்பமாகும் நடவடிக்கைகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/defence-ministry-notice-operations-begin-tomorrow-1788197960"></link>
            <id>https://jvpnews.com/article/defence-ministry-notice-operations-begin-tomorrow-1788197960</id>
            <summary type="text">2027 ஆம் ஆண்டிற்கான துப்பாக்கி உரிமங்களை புதுப்பிக்கும் நடவடிக்கைகள் நாளை (01) முதல் ஆரம்பமாகும் என பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.



துப்பாக்...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">2027 ஆம் ஆண்டிற்கான துப்பாக்கி உரிமங்களை புதுப்பிக்கும் நடவடிக்கைகள் நாளை (01) முதல் ஆரம்பமாகும் என பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.</p><p style="text-align: justify; ">



துப்பாக்கி உரிமங்களைக் கொண்டுள்ள அனைத்து தனிநபர்களும் நிறுவனங்களும் 2026 டிசம்பர் 31 ஆம் திகதிக்கு முன்னர் தங்களது உரிமங்களைப் புதுப்பிப்பது கட்டாயமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/678bdb2e-1440-44e8-a07a-7fc55b528871/26-6a95bc49eacc5.webp' /></p><h2 style="text-align: justify; ">சட்ட நடவடிக்கை</h2><p style="text-align: justify; ">



செல்லுபடியாகும் உரிமம் இன்றி துப்பாக்கியை வைத்திருப்பது, துப்பாக்கிகள் கட்டளைச் சட்டத்தின் 22வது பிரிவின் விதிகளுக்கு அமைய குற்றமாகும் என அமைச்சு எச்சரித்துள்ளது.</p><p style="text-align: justify; "> 



எனவே, நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் உரிமங்களைப் புதுப்பிக்கத் தவறும் துப்பாக்கி உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">


இதனிடையே, 2026.09.01 முதல் 2026.12.31 வரை இடைப்பட்ட காலப்பகுதியில் பதிவுகளைப் புதுப்பிக்கத் தவறுகின்ற தனியார் பாதுகாப்பு முகவர் நிலையங்களுக்குத் தாமதக் கட்டணம் விதிக்கப்படும் அல்லது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p style="text-align: justify; ">


ஏற்படக்கூடிய அசௌகரியங்களைத் தவிர்ப்பதற்காகக் குறிப்பிட்ட காலக்கெடுவுக்கு முன்னர் உரிய புதுப்பித்தல்களை மேற்கொள்ளுமாறு பொதுமக்களிடமும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடமும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-31T18:00:25+00:00</updated>
        </entry>
    </feed>
