<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-08-10T16:55:53+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[IRGC மற்றும் முப்படைகளுக்குப் புதிய தலைமைகள்! பிறப்பிக்கப்பட்ட உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/iran-supreme-leader-appoints-6-top-commanders-1786378325"></link>
            <id>https://ibctamil.com/article/iran-supreme-leader-appoints-6-top-commanders-1786378325</id>
            <summary type="text">ஈரானின் முப்படைகளின் தலைமை அலுவலகம், இஸ்லாமிய புரட்சிகர காவல் படை (IRGC) மற்றும் பசீஜ் (Basij) அமைப்புகளுக்கு ஆறு மூத்த இராணுவத் தளபதிகள் நியமிக்கப்பட...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானின் முப்படைகளின் தலைமை அலுவலகம், இஸ்லாமிய புரட்சிகர காவல் படை (IRGC) மற்றும் பசீஜ் (Basij) அமைப்புகளுக்கு ஆறு மூத்த <a href="https://ibctamil.com/article/mq-9a-reaper-goes-down-near-chabelley-air-base-1786370094" target="_blank">இராணுவத் தளபதிகள்</a> நியமிக்கப்பட்டுள்ளனர்.
</p><p>
ஈரானின் உச்சத் தலைவரும், ஆயுதப் படைகளின் தலைமைத் தளபதியுமான மொஜ்தாபா ஹொசைனி காமேனி இந்த நியமன உத்தரவை பிறப்பித்துள்ளார்.
</p><p>
இதன்படி, நாட்டின் <a href="https://ibctamil.com/article/ukraine-drone-strikes-in-russia-1786365929" target="_blank">ஆயுதப் படைகளின்</a> தலைமைத் தளபதியாக மேஜர் ஜெனரல் அலி அப்தொல்லாஹியும், அவரது துணைத் தளபதியாக பிரிகேடியர் ஜெனரல் கியூமர்ஸ் ஹைதரியும் நியமிக்கப்பட்டுள்ளனர்.</p><p> </p><p></p><h2>புரட்சிகர காவல் படை</h2><p>அதேபோல, மேஜர் ஜெனரலாகப் பதவி உயர்வு பெற்றுள்ள அஹ்மத் வாஹிதி இஸ்லாமிய புரட்சிகர காவல் படையின் (IRGC) தலைமைத் தளபதியாகவும், மொஸ்டாஃபா இசாதி அதன் துணைத் தளபதியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/449b005d-601f-424f-9ffe-731bb0fee888/26-6a79fc7aa6c39.webp' /></p><p>மேலும், ஐ.ஆர்.ஜி.சி கடற்படைத் தளபதியாக ரியர் அட்மிரல் அலி ஒஸ்மையும், பசீஜ் அமைப்பின் தலைவராக ஹொசைன் தாயெப்பும் பொறுப்பேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-10T16:55:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொலம்பியாவில் 7.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்: இடிந்து விழுந்த பல கட்டிடங்கள்: 50 பேர் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/colombia-hit-by-7-4-magnitude-earthquake-1786380284"></link>
            <id>https://news.lankasri.com/article/colombia-hit-by-7-4-magnitude-earthquake-1786380284</id>
            <summary type="text">கொலம்பியாவில் ரிக்டர் அளவுகோலில் 7.4 அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு இருப்பது அந்நாட்டு மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது. கொலம்பியாவில் நிலநட...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொலம்பியாவில் ரிக்டர் அளவுகோலில் 7.4 அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு இருப்பது அந்நாட்டு மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது.</p><h2> கொலம்பியாவில் நிலநடுக்கம்</h2><p>மேற்கு கொலம்பியாவில் உள்ளூர் நேரப்படி காலை 7.34 மணிக்கு ரிக்டர் அளவுகோலில் 7.4 அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் பதிவாகி இருப்பதாக அமெரிக்கா புவியியல் ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.</p><p> பசிபிக் கடலோர பகுதியான சோகோ மாகாணத்தில் இந்த 7.4 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9af16efe-d49b-4650-bbe0-9dd0661f2591/26-6a7a018f068a2.webp' /></p><p> சான் ஜோஸ் டெல் பால்மார் என்ற கிராமத்திற்கு அருகில் கிட்டத்தட்ட 107 கிலோமீட்டர் மையத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக கொலம்பியா புவியியல் ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.</p><p></p><p>சக்தி வாய்ந்த இந்த நிலநடுக்கம் காரணமாக சோகோ மாகாணத்தின் தலைநகர் கிப்டோ மற்றும் பிற பகுதிகளில் உள்ள பல கட்டிடங்கள் பலத்த சேதமடைந்துள்ளன.</p><p> மேலும் இந்த நிலநடுக்கத்தில் &nbsp;இதுவரை 50 பேர் வரை உயிரிழந்து இருப்பதாகவும் பலர் காயமடைந்து இருப்பதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/99255d79-69f0-4197-bc26-c5375023e655/26-6a7a018fd3648.webp' /></p><h2>மீட்பு பணிகள் தீவிரம்</h2><p>சாண்டியாகோ நகரில் குறைந்து 20 கட்டிடங்கள் இடிந்து விழுந்து இருப்பதாகவும், இந்த இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் மீட்பு பணியினர் தீவிரமாக செயல்பட்டு வருவதாக அந்நகர மேயர் தகவல் தெரிவித்துள்ளார்.</p><p> கொலம்பியாவில் முக்கியமாக உணரப்பட்ட இந்த நிலநடுக்கம், அண்டை நாடுகளான ஈக்வடார் மற்றும் வெனிசுலா ஆகிய நாடுகள் வரை உணரப்பட்டுள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-10T16:51:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் 3 வயது சிறுமியைத் தாக்கிய கரடி: அதிர்ச்சி சம்பவம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/shock-bc-mom-describes-bear-attack-on-toddler-1786348616"></link>
            <id>https://canadamirror.com/article/shock-bc-mom-describes-bear-attack-on-toddler-1786348616</id>
            <summary type="text">&amp;nbsp;கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணம், மேப்பிள் ரிட்ஜ் பகுதியில் உள்ள வீட்டின் பின்புறக் கொல்லைப்புறத்தில் விளையாடிக் கொண்டிருந்த 3 வயது சிறுமிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணம், மேப்பிள் ரிட்ஜ் பகுதியில் உள்ள வீட்டின் பின்புறக் கொல்லைப்புறத்தில் விளையாடிக் கொண்டிருந்த 3 வயது சிறுமியைப் பாக்கரடி ஒன்று கொடூரமாகத் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><p> 
சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த பெற்றோர், கரடி சிறுமியின் கழுத்தைக் கவ்வ முயன்றதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். </p><p>உடனடியாகச் செயல்பட்ட தந்தை, வில் மற்றும் அம்பைப் பயன்படுத்தி கரடியின் தலையில் எய்து அதைத் தாக்கி விரட்டினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b6b22b8e-f638-400e-a747-29b174259aa2/26-6a79844a6c312.webp' /></p><p> </p><p>
கரடி கடித்ததில் சிறுமியின் கழுத்து, தலை மற்றும் முதுகுப் பகுதியில் ஆழமான காயங்களும் வெட்டுக் காயங்களும் ஏற்பட்டுள்ளன.</p><p> உடனடியாக ஹெலிகாப்டர் மூலம் வான்கூவரில் உள்ள சிறுவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அச்சிறுமி, தற்போது தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். அவர் உயிராபத்திலிருந்து தப்பியுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. </p><p>
சம்பவ இடத்திற்குப் பொலிஸார் வந்தபோதும், அந்த இடத்தில் மிகுந்த ஆர்வம் காட்டிய கரடி மீண்டும் மீண்டும் அவ்வீட்டுப் பகுதிக்கு வந்துள்ளது. </p><p>பொதுமக்களின் பாதுகாப்பைக் கருதி அதிகாரிகள் கரடியை நோக்கித் துப்பாக்கிச் சூடு நடத்தினர். </p><p>
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த கரடி அருகில் உள்ள காட்டுப் பகுதிக்குள் தப்பி ஓடியது. வனவிலங்கு பாதுகாப்பு அதிகாரிகள் அப்பகுதியில் தேடுதல் வேட்டையைத் தீவிரப்படுத்தியுள்ளதுடன், அதைக் கண்டுபிடித்தவுடன் அழிக்க முடிவு செய்துள்ளனர்.</p><p> 
அப்பகுதி மக்கள் வீடுகளுக்குள் பாதுகாப்பாக இருக்குமாறும், வனவிலங்குகள் நடமாட்டம் தென்பட்டால் உடனடியாகத் தகவல் தெரிவிக்குமாறும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-10T16:26:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[எனது தாயார் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்; இயக்குனர் ஜேசன் சஞ்சய் நெகிழ்ச்சி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/cm-vijay-jason-sanjay-talk-sangeetha-roots-jaffna-1786345121"></link>
            <id>https://jvpnews.com/article/cm-vijay-jason-sanjay-talk-sangeetha-roots-jaffna-1786345121</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;நடிகரும் தமிழ் நாட்டின் முதலமைச்சருமான விஜய்யின் மகன்&amp;nbsp;இயக்குனர் ஜேசன் சஞ்சய், தனது இலங்கை பூர்வீகம் மற்றும் யாழ்ப்பாணத்துடனான தொடர்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;நடிகரும் தமிழ் நாட்டின் <a href="https://jvpnews.com/article/jason-sanjay-emotional-about-his-father-cm-vijay-1785559667" target="_blank">முதலமைச்சருமான விஜய்யின் மகன்&nbsp;இயக்குனர் ஜேசன் சஞ்சய்</a>, தனது இலங்கை பூர்வீகம் மற்றும் யாழ்ப்பாணத்துடனான தொடர்பு குறித்தும் நேர்காணலில் நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார்.
</p><p>
நேர்காணல் ஒன்றில் பேசிய இயக்குனர் ஜேசன், தனது தாயார் இலங்கையின் வடக்கே உள்ள யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர் என்றும், குடும்பத்தினர் வெளிநாட்டில் குடியேறும் முன்பு அவர் அங்கேயே வளர்ந்தவர் என்றும் கூறினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/711527ed-dbcf-45f5-82d0-a319af02cb49/26-6a7976a2d23c8.webp' /></p><p></p><h2>&nbsp;எதிர்காலத்தில் இலங்கையில் படப்பிடிப்பு</h2><p>
</p><p>
"என் அம்மா யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர், அதாவது இலங்கையின் வடக்குப் பகுதியைச் சேர்ந்தவர். அவர் அங்கு பிறந்து வளர்ந்தார்; பின்னர் அவர்கள் வெளிநாட்டில் குடியேறினர்," என்று அவர் குறிப்பிட்டார்.</p><p></p><p>
</p><p>
இலங்கைக்குச் செல்லும்போது, ​​தனது தாத்தாவின் சொத்துக்களில் ஒன்று தனது குடும்பத்தின் கடந்த காலத்துடனான ஒரு முக்கியத் தொடர்பை நினைவூட்டும் இடமாகத் திகழ்வதாக இயக்குனர் ஜேசன் சஞ்சய்&nbsp; கூறினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/63aa0c9d-07e7-4cc8-94c1-36c8858cb4f7/26-6a7976a38731f.webp' /></p><p>
</p><p>
மேலும், தனது 'சிக்மா' (Sigma) திரைப்படத் திட்டத்திற்காக இலங்கையை ஒரு படப்பிடிப்புத் தளமாகக் கருதியதாகவும், அதற்கான இடங்களைப் பார்வையிட படக்குழுவினர் அங்கு சென்றிருந்ததாகவும் இயக்குனர் ஜேசன் சஞ்சய்&nbsp; தெரிவித்தார்.</p><p></p><p> </p><p>இருப்பினும், அந்தத் திட்டம் கைகூடவில்லை.

எனினும் எதிர்காலத்தில் இலங்கையில் படப்பிடிப்பு நடத்தி, அந்நாட்டின் அழகை வெளிப்படுத்த விரும்புவதாகவும் இயக்குனர் ஜேசன் சஞ்சய்&nbsp; கூறியுள்ளார்.</p><p>முதலமைச்சர்&nbsp; விஜயின் மனைவி&nbsp; சங்கீதா,&nbsp; &nbsp;யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக&nbsp; கொண்ட லண்டன் வாழ்&nbsp; புலம்பெயர் தமிழர் என்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-08-10T16:25:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[போதைப்பொருள் குற்றங்களுக்கு மரண தண்டனை? தேசிய செயல்பாட்டு சபையில் தீவிர ஆலோசனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/death-penalty-for-drug-crimes-1786378697"></link>
            <id>https://jvpnews.com/article/death-penalty-for-drug-crimes-1786378697</id>
            <summary type="text">போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்கு மரண தண்டனை வழங்குவது குறித்து &quot;முழு நாடுமே ஒன்றாக&quot; தேசிய செயல்பாட்டு சபையில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

 

இ...</summary>
            <content type="html"><![CDATA[<p>போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்கு மரண தண்டனை வழங்குவது குறித்து "முழு நாடுமே ஒன்றாக" தேசிய செயல்பாட்டு சபையில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.</p><p></p><p>

 

இன்று (10) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இச்செயல்பாட்டு சபை கூடியபோதே இது தொடர்பில் ஆராயப்பட்டது.</p><p>

 

நச்சு போதைப்பொருள் அச்சுறுத்தல் தற்போது தனிப்பட்ட தொடர்புகளையும் தாண்டி, ஒட்டுமொத்த பொருளாதார மற்றும் சமூகக் கட்டமைப்பிற்கே பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளமையையும், அது தொடர்ந்து அதிகரித்து வருவதையும் கருத்திற் கொண்டே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b94c8e03-7068-4b72-bdc9-553deab92650/26-6a79f9cc302d2.webp' /></p><p>போதைப்பொருள் கடத்தல் மூலம் சட்டவிரோதமாக ஈட்டப்படும் வரம்பற்ற செல்வத்தைச் சுற்றி உருவெடுத்துள்ள குற்றவியல் சூழல், தற்போது தேசிய பொருளாதாரம், சுற்றுலாத்துறை மற்றும் சமூக ஒழுக்க நெறிமுறைகளுக்குப் பெரும் அச்சுறுத்தலாக விளங்குகின்றது.
</p><p>
 

போதைப்பொருள் கடத்தல் மற்றும் குற்றச்செயல்கள் குறித்து அச்சப்படும் ஒரு சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்காகக் கடுமையான சட்டதிட்டங்களை அமல்படுத்துவதன் அவசியம் குறித்து "நாடு ஒன்றாக" தேசிய செயல்பாட்டு சபையில் விவாதிக்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்தது.</p><p>

 

ஒட்டுமொத்த சமூகக் கட்டமைப்பையும் சீர்குலைத்து, நாட்டின் எதிர்கால சந்ததியை இரையாக்கிக் கொண்டிருக்கும் நச்சு போதைப்பொருள் பேரழிவை வேரோடு பிடுங்கியெறிய நாட்டில் நடைமுறைச் செயல்பாடுகளையும், விரைவான கருத்தியல் மாற்றத்தையும் ஏற்படுத்த வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி இங்கு சுட்டிக்காட்டினார். </p><p>

 

இதற்காக மதத் தலைவர்கள், பெற்றோர்கள் மற்றும் சமூக அமைப்புகளின் தீவிர பங்களிப்பை அரசாங்கம் எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டார்.
</p><p>
 

இந்த தேசிய பேரழிவின் தீவிரத்தைப் புரிந்து கொண்டு, நிறுவன அமைப்பிற்குள் மேற்கொள்ளப்பட வேண்டிய மாற்றங்கள் குறித்தும் இங்கு விரிவாகக் கலந்தாலோசிக்கப்பட்டது.
</p><p>
 

போதைப்பொருள் கட்டுப்பாடு மற்றும் பிணை வழங்குதல் தொடர்பான சட்டத் திருத்தங்கள் ஏற்கனவே தயாரிக்கப்பட்டு இறுதிப் கட்டத்தில் உள்ளன என்றும், அவை விரைவில் வர்த்தமானியில் வெளியிடப்பட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a1ef1123-a886-4cb6-b94b-3795bc46e116/26-6a79f9cb7df19.webp' /></p><p>போதைப்பொருள் வழக்குகள் தாமதமாவதற்கு முக்கிய காரணமாக இருந்த அரசாங்க இரசாயன பகுப்பாய்வாளர் அறிக்கைகளை வெளியிடும் செயல்முறை கணிசமாக துரிதப்படுத்தப்பட்டுள்ளதாகவும், கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் 6,414 அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டது.</p><p>இரசாயன பகுப்பாய்வாளர் அறிக்கை தாமதத்தால் சிறையிலுள்ளவர்களின் சட்ட நடவடிக்கைகளை விரைவுபடுத்துவதற்காக, கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் அளவுக்கு ஏற்ப (5 கிராமிற்கும் குறைவாக, 10 கிராமிற்கும் குறைவாக என) துல்லியமான தரவு வகைப்பாட்டைச் சமர்ப்பிக்குமாறும் இரசாயன பகுப்பாய்வாளர் திணைக்களம், பொலிஸ் மற்றும் சிறைச்சாலைகளுக்கு இடையே சிறந்த ஒருங்கிணைப்பை ஏற்படுத்தி, அறிக்கைகள் கிடைத்தவுடன் சந்தேக நபர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான முறையான வேலைத்திட்டத்தைத் தயாரிக்குமாறும் ஜனாதிபதி அறிவுறுத்தினார்.
</p><p>
 

அரசாங்க இரசாயன பகுப்பாய்வாளர் திணைக்களத்தின் கொள்ளளவை அதிகரிப்பது மற்றும் வசதிகளை விரிவுபடுத்துவது குறித்து எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பிலும் கேட்டறிந்த ஜனாதிபதி, இரசாயன பகுப்பாய்வு அறிக்கைகளைப் பெறுவதற்கு கடற்படையின் உதவியைப் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
</p><p>
 

பாதுகாப்பு கெமரா அமைப்புகளை (CCTV) பொருத்துவதற்குத் தேவையான நிதி ஒதுக்கீட்டை மேற்கொள்வதற்கும் ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்ட அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-10T16:18:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[செம்மணி புதைகுழி: சர்வதேச நியதிகளுடன் விசாரணை நடத்த சுரேஷ் பிரேமச்சந்திரன் கோரிக்கை..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/begin-the-chemmani-inquiries-1786377814"></link>
            <id>https://tamilwin.com/article/begin-the-chemmani-inquiries-1786377814</id>
            <summary type="text">செம்மணி புதைகுழியில் மீட்கப்பட்ட என்புகூடுகள் தொடர்பிலான விசாரணைகளை
சர்வதே நியதிகளுடன் , சர்வதேச அமைப்புக்களின் உதவிகளுடன் உடனடியாக ஆரம்பிக்க
வேண்டு...</summary>
            <content type="html"><![CDATA[<p>செம்மணி புதைகுழியில் மீட்கப்பட்ட என்புகூடுகள் தொடர்பிலான விசாரணைகளை
சர்வதே நியதிகளுடன் , சர்வதேச அமைப்புக்களின் உதவிகளுடன் உடனடியாக ஆரம்பிக்க
வேண்டும் என ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் ஊடகப்பேச்சாளர் சுரேஷ்
பிரேமச்சந்திரன் கோரியுள்ளார்.
</p><p>
யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்

மேலும் தெரிவிக்கையில்,</p><h2>செம்மணி மனித புதைகுழி</h2><p>
</p><p>
செம்மணி மனித புதைகுழியில் இருந்து 500க்கும் மேற்பட்ட
என்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது.100 நாட்களைத் தாண்டி அகழ்வு
பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ள போதிலும், இவை தொடர்பான அடுத்த கட்ட
நடவடிக்கைகளை நோக்கி அரசாங்கம் ஏதாவது ஏற்பாடு செய்திருக்கிறதா என்றால்
இதுவரை இல்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/48ecb540-d2f2-4691-8a56-487dc7e083bd/26-6a79f93917361.webp' /></p><p>
</p><p>
முக்கியமாக, இந்த என்புக்கூடுகளுடைய டி.என்.ஏ (DNA) பரிசோதனைகள்
மேற்கொள்ளப்படவில்லை. காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்களின்
டி.என்.ஏ பரிசோதனைகளை மேற்கொண்டு, காணாமல்
ஆக்கப்பட்டவர்களுடைய என்புக்கூடுகளாக என்பதனை கண்டறிய முயற்சிகளை மேற்கொள்ள
முடியும்.

அவற்றை முழுமையாக செய்வதற்கான தொழில்நுட்ப வசதிகள் இலங்கையில் இல்லை
என்பதும்; அதனை செய்வதற்கான ஆளணி பற்றாக்குறைகள் இருக்கிறது என்பதும்
உண்மையானது. </p><p>அதனால் இதில் பாண்டித்தியம் பெற்ற சர்வதேச அமைப்புகளிடம் இது
கையளிக்கப்பட வேண்டும்.

இந்த விசாரணைகள் அல்லது இந்த சோதனைகள் என்பது ஒரு சர்வதேச நியதிகளுக்கு
உட்பட்ட வகையில், அந்த முறையில் இது கொண்டுசெல்லப்பட வேண்டும் என்று நாங்கள்
எதிர்பார்க்கின்றோம்.</p><h2>விசாரணை</h2><p>
</p><p>
ஆகவே, இலங்கையில் இருக்கக்கூடிய சிவில் அமைப்புகளாக இருக்கலாம், மனித உரிமை
அமைப்புகளாக இருக்கலாம், ஜனநாயக விடயங்களுக்காக போராடக்கூடிய அமைப்புகளாக
இருக்கலாம், சர்வதேச மனித உரிமைகள் அமைப்பாக இருக்கலாம் இவர்கள் எல்லோரும்
நிச்சயமாக இலங்கையில் இவற்றை செய்து முடிப்பதற்கான சாத்தியப்பாடுகள் மிக மிகக்
குறைவு என்ற அடிப்படையில், ஒரு சர்வதேச விசாரணை ஒன்றுக்கான ஏற்பாடுகளை செய்ய
வேண்டியது எல்லோரது கடமை என்று நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9da005d3-b8f5-4062-bfe7-4f70743ba501/26-6a79f939bd775.webp' /></p><p>
</p><p>
ஆகவே, அந்த வகையில் மிகுதி எலும்புக்கூடுகளை தேடியெடுத்த பிற்பாடுதான் அடுத்த
கட்டத்தை நோக்கி நகர்த்துவோம் என்பதை விடுத்து, இது வரையில் எடுக்கப்பட்ட
என்பு கூடுகள் தொடர்பிலான விசாரணைகளை அரசாங்கம் ஆரம்பிக்க வேண்டும் என
தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-10T16:15:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பைடனின் புற்றுநோய் தீவிரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/former-us-president-joe-bidens-cancer-worsens-1786376124"></link>
            <id>https://ibctamil.com/article/former-us-president-joe-bidens-cancer-worsens-1786376124</id>
            <summary type="text">&amp;nbsp;முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு (83) பரவி வரும் புரோஸ்டேட் புற்றுநோய் மேலும் தீவிரமடைந்து, அவரது எலும்புகள் மற்றும் உடலின் பிற பாகங்களுக...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு (83) பரவி வரும் புரோஸ்டேட் புற்றுநோய் மேலும் தீவிரமடைந்து, அவரது எலும்புகள் மற்றும் உடலின் பிற பாகங்களுக்கும் பரவியுள்ளதாக அவரது மகன் ஹண்டர் பைடன் தெரிவித்துள்ளார்.



2025 மே மாதம் ஜோ பைடனுக்கு கடுமையான புரோஸ்டேட் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. </p><p>தற்போது இந்நோய் எலும்புகளுக்குப் பரவியுள்ளதால், அவர் கடுமையான வலியினாலும் உடல்நலக் குறைவாலும் அவதிப்பட்டு வருவதாக ஹண்டர் பைடன் கூறியுள்ளார்.</p><h2> கடுமையான வலியால் அவதி</h2><p>&nbsp;பைடனின் புற்றுநோய் திசு பரிசோதனையில் கிளீசன் ஸ்கோர் 9 எனப் பதிவாகியுள்ளது. இது புற்றுநோயின் மிகத் தீவிரமான நிலையைக் (Grade Group 5) குறிக்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/75a4ac83-7c38-400a-a0eb-f3954095e1bb/26-6a79f8e1ab44b.webp' /></p><p>


கதிர்வீச்சு மற்றும் ஹார்மோன் சிகிச்சைகள் வழங்கப்பட்ட போதிலும், புற்றுநோய் செல்கள் எலும்புகளுக்கு அப்பாலும் பரவி, அவரது உடலை மிகவும் பலவீனப்படுத்தியுள்ளன.</p><p> </p><p>இதுகுறித்து அவரது மகன் ஹண்டர் பைடன் கூறுகையில், "என் தந்தை கடுமையான வலியால் அவதிப்படுவதைப் பார்ப்பது மிகவும் வேதனையாக உள்ளது. இருப்பினும், அவர் தனது மன உறுதியுடன் தொடர்ந்து பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்" என்று குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-10T16:14:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாரிசில் மின்சார ஸ்கூட்டர் பயணிகளுக்கு புதிய பாதுகாப்பு விதிகள் அமுல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/paris-helmet-law-for-e-scooter-riders-1786365190"></link>
            <id>https://news.lankasri.com/article/paris-helmet-law-for-e-scooter-riders-1786365190</id>
            <summary type="text">Paris orders e-scooter riders wear helmets: பாரிசில் மின்சார ஸ்கூட்டர் பயணிகளுக்கான புதிய பாதுகாப்பு விதிகள் அமுல்படுத்தப்பட்டுள்ளன. 

பிரான்ஸ் தலைந...</summary>
            <content type="html"><![CDATA[<p>Paris orders e-scooter riders wear helmets: பாரிசில் மின்சார ஸ்கூட்டர் பயணிகளுக்கான புதிய பாதுகாப்பு விதிகள் அமுல்படுத்தப்பட்டுள்ளன.</p><p> 

பிரான்ஸ் தலைநகரான பாரிசில், இனி, மின்சார ஸ்கூட்டர், செக்வே, ஹோவர்போர்டு போன்ற மின்சார இயக்கக் கருவிகளை பயன்படுத்தும் அனைவரும் ஹெல்மெட் மற்றும் பிரதிபலிப்பு உடை அணிய வேண்டும்.
</p><p>
விதிகளை மீறுவோருக்கு அபராதம் விதிக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/56909f22-b7c4-4775-bcf5-048b68000611/26-6a79c72472369.webp' /></p><p>கடந்த சில ஆண்டுகளில் அதிகரித்த விபத்துகள் மற்றும் உயிரிழப்புகளுக்குப் பிறகு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
</p><p>
2025-ஆம் ஆண்டில் மட்டும், 79 பேர் உயிரிழந்துள்ளனர். இது 2024-இல் ஏற்பட்ட 45 உயிரிழப்புகளை விட அதிகம். மேலும், 1,100-க்கும் மேற்பட்ட பயணிகள் கடுமையான காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். பெரும்பாலான விபத்துகளில் தலையில் காயங்கள் ஏற்பட்டதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.</p><p></p><p>
</p><h2>
விதிகளை மீறுவோருக்கு அபராதம்</h2><p>

ஹெல்மெட் அணியாமல் சென்றால் 135 யூரோ அபராதம் விதிக்கப்படும். பிரதிபலிப்பு உடை அல்லது ஹை-விசிபிலிட்டி ஜாக்கெட் அணியாமல் சென்றால் 35 யூரோ அபராதம் விதிக்கப்படும். </p><p>இந்த விதிகள், பாரிசிலும் அதன் புறநகரங்களிலும் பொதுச் சாலைகளில் எப்போதும் அமுலில் இருக்கும்.
</p><p>
2023-ஆம் ஆண்டில், பாதுகாப்பு சிக்கல்களால் வாடகை e-scooter-கள் பாரிசில் தடைசெய்யப்பட்டன. ஆனால், தனிப்பட்ட முறையில் வைத்திருக்கும் e-scooter-கள் இன்னும் பரவலாக பயன்படுத்தப்படுகின்றன. இதனால், விபத்துகள் அதிகரித்துள்ளன.

மற்ற ஐரோப்பிய நகரங்களும் இதேபோன்ற நடவடிக்கைகளை எடுத்துள்ளன. </p><p></p><p>2024-இல் மாட்ரிட் நகரம் வாடகை e-scooter-களை தடை செய்தது. 2026-இல் பிரஸ்ஸல்ஸ் நகரமும் இதேபோன்ற அறிவிப்பை வெளியிட்டது.</p><p>

இந்த புதிய விதிகள், பாரிசில் சாலை பாதுகாப்பை மேம்படுத்துவதில் முக்கியமான முயற்சியாகக் கருதப்படுகின்றன.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-10T16:05:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் அநீதி ; பெற்றோர் பொலிஸில் முறைப்பாடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/injustic-5th-year-scholarship-exam-complain-police-1786377683"></link>
            <id>https://jvpnews.com/article/injustic-5th-year-scholarship-exam-complain-police-1786377683</id>
            <summary type="text">நேற்று நடைபெற்ற 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையின் போது தமது பிள்ளைகளுக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் குற்றஞ்சாட்டி, பெற்றோர்கள் குழுவொன்று கிரிந்திவெ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நேற்று நடைபெற்ற 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையின் போது தமது பிள்ளைகளுக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் குற்றஞ்சாட்டி, பெற்றோர்கள் குழுவொன்று கிரிந்திவெல பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளது.</p><p>
</p><p></p><p>கிரிந்திவெல, போகஹவத்த ஜினானந்த ஆரம்பப் பாடசாலையில் கல்வி பயிலும் மாணவ, மாணவிகள் சிலர், கிரிந்திவெல மத்திய மகா வித்தியாலயத்தில் அமைக்கப்பட்டிருந்த பரீட்சை மத்திய நிலையத்தில் 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றியபோதே இந்தச் சம்பவம் இடம்பெற்றதாக பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.</p><p>

பெற்றோர்களின் குற்றச்சாட்டின்படி, முற்பகல் 11.15 மணிக்கு மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய வினாத்தாள், குறித்த பரீட்சை மத்திய நிலையத்தில் மாணவர்களுக்கு முற்பகல் 11.30 மணியளவிலேயே வழங்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f5935918-92a6-4023-bfb2-399790f69c96/26-6a79f5d4b18cb.webp' /></p><p>மேலும், அந்த வினாத்தாள் பிற்பகல் 12.15 மணியளவில் மீண்டும் மாணவர்களிடமிருந்து சேகரிக்கப்பட்டதாகவும் பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.
</p><p>
இதன் காரணமாக, தமது பிள்ளைகளுக்கு வழங்கப்பட்டிருக்க வேண்டிய பரீட்சை நேரத்தில் சுமார் அரை மணி நேரம் வரை குறைந்துள்ளதாகவும், இதனால் ஏனைய மாணவர்களுடன் ஒப்பிடுகையில் தமது பிள்ளைகள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாகவும் பெற்றோர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
</p><p>
5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை மாணவர்களின் கல்வி எதிர்காலத்தில் முக்கியமான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய பரீட்சையாகும்.</p><p> இந்நிலையில், பரீட்சைக்கான நேரம் குறைக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தமது பிள்ளைகளின் பெறுபேறுகளில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என பெற்றோர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
</p><p>
சம்பவம் தொடர்பில் தகவல் அறிந்த கம்பஹா வலயக் கல்வி அலுவலக அதிகாரி ஒருவர் சம்பவ இடத்திற்கு வருகை தந்து பெற்றோருடன் கலந்துரையாடியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.</p><p>எனினும், குறித்த கலந்துரையாடலின் மூலம் தங்களுக்கு ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வு எதுவும் கிடைக்கவில்லை எனத் தெரிவித்த பெற்றோர்கள், பின்னர் கிரிந்திவெல பொலிஸ் நிலையத்திற்குச் சென்று முறைப்பாடு செய்துள்ளனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1a9fb858-655f-4dbc-b1e2-9059e56660c6/26-6a79f5d56ca44.webp' /></p><p>தமது பிள்ளைகளுக்கு ஏற்பட்டதாகக் கூறப்படும் இந்த அநீதிக்கு உரிய தீர்வை வழங்குவதுடன், சம்பவம் தொடர்பில் முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
</p><p>
மேலும், பரீட்சை நேரம் குறைக்கப்பட்டதாகக் கூறப்படும் விடயம் தொடர்பில் சம்பந்தப்பட்ட கல்வி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து, பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு நியாயமான தீர்வொன்றை பெற்றுத் தர வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
</p><p>
இதேவேளை, சம்பவம் தொடர்பில் கல்வி அதிகாரிகள் மற்றும் பரீட்சை நிர்வாகத்தினரின் உத்தியோகபூர்வ விளக்கம் இதுவரை வெளியாகவில்லை.</p><p></p>]]></content>
            <updated>2026-08-10T16:01:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[சாகர காரியவசத்திற்கு பிணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sagara-kariyawasam-released-on-bail-1786376865"></link>
            <id>https://tamilwin.com/article/sagara-kariyawasam-released-on-bail-1786376865</id>
            <summary type="text">ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசதிக்கு நீதிமன்றம் பிணையில் செல்ல அனுமதி வழங்கியுள்ளது.
தலா இரண்டு மில்லியன் ரூபாய் பெறுமதியா...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசதிக்கு நீதிமன்றம் பிணையில் செல்ல அனுமதி வழங்கியுள்ளது.
</p><p>தலா இரண்டு மில்லியன் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீர பிணையின் அடிப்படையில் நீதிமன்றம் பிணையில் செல்ல அனுமதி வழங்கியுள்ளது.
</p><p>சாகர, மத்திய குற்றவியல் விசாரணை பிரிவினால் கைது செய்யப்பட்டிருந்தார்.
கடுவெல நீதிமன்றம் அவருக்கு பிணை வழங்கியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/175d1307-bb04-4125-993f-e9924cce9f09/26-6a79f2a3376ed.webp' /></p><p><br></p><p>
இதேவேளை, சாகர காரியவசம் வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ளத் தடை விதிக்கப்பட்டுள்ளது.</p><p>
கடுவல நீதவான் அருண இந்திரஜித் இந்த தடை உத்தரவை பிறப்பித்துள்ளார்.</p><p>
பொலிஸ் மா அதிபர் தொடர்பில் சாகர காரியவசம் வெளியிட்ட கருத்தின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-10T15:47:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொலம்பியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/powerful-earthquake-hits-colombia-1786376506"></link>
            <id>https://canadamirror.com/article/powerful-earthquake-hits-colombia-1786376506</id>
            <summary type="text">மேற்கு கொலம்பியாவில் இன்று (10) 7.4 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவானதாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது. 

 
...</summary>
            <content type="html"><![CDATA[<p>மேற்கு கொலம்பியாவில் இன்று (10) 7.4 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவானதாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது. </p><p>

 

நாட்டின் பல நகரங்களில் இதன் அதிர்வுகள் உணரப்பட்டன.
</p><p>
 

இந்த நிலநடுக்கத்தின் மையம் சாஃகோ திணைக்களத்தில் உள்ள சான் ஜோஸ் டெல் பால்மரில், போகொடாவுக்கு மேற்கே சுமார் 280 கிலோமீட்டர் தொலைவில், 107 கிலோமீற்றர் ஆழத்தில் உள்ளூர் நேரப்படி காலை 7:34 மணிக்கு பதிவானது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5b9a70e3-e9fb-4027-a173-7dd8b68631d6/26-6a79f13c53941.webp' /></p><p>

 

சாஃகோ பிராந்தியத்தின் ஆளுநர் நுபியா கரோலினா கோர்டோபா கூரி, பிராந்தியத் தலைநகரான கிப்டோவில் "காயங்கள் மற்றும் கட்டிடங்களுக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது" என்பதை உறுதிப்படுத்தினார்.
</p><p>
 

மேலும் நிலநடுக்கத்திற்குப் பிந்தைய தொடர் அதிர்வுகள் குறித்து கவலை தெரிவித்தார்.
</p><p>
 

நாட்டின் தலைநகரான போகொடாவில், அதிர்வு பலமாக உணரப்பட்டது. </p><p>

 

எச்சரிக்கை மணிகள் ஒலிக்கப்பட்டதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் பலர் கட்டிடங்களை விட்டு வீதிகளுக்கு வெளியேறினர்.</p><p> 

 

"தற்போது வரை காயங்களோ அல்லது பெரிய அளவிலான கட்டமைப்புச் சேதங்களோ பதிவாகவில்லை, சில கட்டிடங்களில் சிறிய விரிசல்கள் மட்டுமே ஏற்பட்டுள்ளன" என்று போகொடா மேயர் கார்ட்லோஸ் கெலன் தெரிவித்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-08-10T15:42:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[2026 சுக்கிரன் பெயர்ச்சி: அடுத்த 64 நாட்கள் 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் காலம் தான்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/2026-sept-02-sukiran-peyarchi-astrology-prediction-1786354626"></link>
            <id>https://manithan.com/article/2026-sept-02-sukiran-peyarchi-astrology-prediction-1786354626</id>
            <summary type="text">ஜோதிட ரீதியாக சுக்கிர பகவான் மிகவும் முக்கியமான கிரகமாக இருக்கிறார். இவர் தான் ஒரு மனிதனுக்கு மகிழ்ச்சி, ஆனந்தம் வழங்கக்கூடியவர். இவர் 30 நாட்களுக்கு ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜோதிட ரீதியாக சுக்கிர பகவான் மிகவும் முக்கியமான கிரகமாக இருக்கிறார். இவர் தான் ஒரு மனிதனுக்கு மகிழ்ச்சி, ஆனந்தம் வழங்கக்கூடியவர். இவர் 30 நாட்களுக்கு ஒரு முறை அவருடைய ராசியை மாற்றுகிறார். கட்டாயமாக இந்த மாற்றங்கள் 12 ராசிகளுக்கு ஒரு மிகப்பெரிய தாக்கத்தை கொடுக்கும். </p><p>அந்த வகையில், செப்டம்பர் இரண்டாம் தேதி துலாம் ராசியில் பெயர்ச்சி அடைய உள்ளார். சுக்கிர பகவானுடைய சொந்த ராசியின் பெயர்ச்சி மிக பெரிய அளவில் 12 ராசிகளுக்கும் ஒரு தாக்கத்தை கொடுக்கும். பொதுவாக, சுக்கிரன் 28 நாட்கள் ஒரு ராசிகள் இருப்பார். இந்த முறை 64 நாட்கள் இருக்க போகிறார். </p><p>அக்டோபர் மூன்றாம் தேதி சுக்கிரன் துலாம் ராசி, வக்கிரமடைகிறார். இதனால் 4 ராசிகளுக்கு மிகப்பெரிய அதிர்ஷ்டம் காத்திருக்கிறது. அவர்கள் யார் என்று பார்ப்போம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/666f17ad-d9db-4f45-bcb2-baf84b1f9200/26-6a799bc4271e2.webp' /></p><p></p><p>
</p><h3> மேஷம்:
</h3><p>
 இவர்களுக்கு இந்த காலகட்டம் நீண்ட நாட்கள் நிலுவையில் இருந்த பணம் கைகளுக்கு வந்து சேர போகிறது. அதிர்ஷ்டம் மற்றும் செல்வாக்கு உயரும். கடன் தொல்லையில் இருந்து விடுபடுவீர்கள். இழந்த சொத்துக்களை எல்லாம் மீட்டெடுப்பீர்கள். வேலையில் நிம்மதி உண்டாகும்.
</p><h3> மிதுனம்:
</h3><p> இவர்களுக்கு இந்த காலகட்டம் வீடுகளில் சுபகாரிய நிகழ்ச்சிகள் நடக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றமும் லாபமும் கிடைக்கும். சவாலான விஷயங்களையும் நீங்கள் எளிதாக செய்து வெற்றி பெறுவீர்கள். கௌரவ பதவிகள் உங்களைத் தேடி வரும்.</p><p></p><p>
</p><h3> தனுசு:
</h3><p> இவர்களுக்கு இந்த காலகட்டம் வீடுகளில் நற்செய்தி வந்து சேரும். ஒரு சிலருக்கு பொன் பொருள் நகை ஆடம்பரமான வாழ்க்கை அமையும். பத்திரம் தொடர்பான விஷயங்களில் மட்டும் கவனத்தோடு இருந்துவிட்டால் இவர்களுக்கு சிறப்பான காலமாக இருக்கும்.
</p><h3> கும்பம்:
</h3><p> இவர்களுக்கு இந்த காலகட்டம் மனதில் புதுவிதமான சிந்தனைகள் தோன்றும். இருப்பினும் இவர்கள் பெயருக்கு சில கெடுதல் வர நேரலாம் என்பதால் முடிந்தவரை நட்பு வட்டாரங்களிலும் புதிய நட்புகளிலும் கவனமாக இருங்கள். பூர்வீக சொத்துக்கள் உங்கள் கைகளுக்கு வந்து சேரும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-10T15:36:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[விஜய் ரூட்டை அப்படியே பின்பற்றும் தனுஷ்.. அரசியல் என்ட்ரிக்கு எடுத்த முதல் படி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/dhanush-follows-vijay-route-to-enter-politics-1786375712"></link>
            <id>https://cineulagam.com/article/dhanush-follows-vijay-route-to-enter-politics-1786375712</id>
            <summary type="text">நடிகர் விஜய் அரசியலில் நுழைந்து, சந்தித்த முதல் தேர்தலிலேயே மிகப்பெரிய வெற்றியை பெற்று தற்போது முதலமைச்சராக பதவி வகித்து வருகிறார். அவர் அரசியலில் ஜெய...</summary>
            <content type="html"><![CDATA[<p>நடிகர் விஜய் அரசியலில் நுழைந்து, சந்தித்த முதல் தேர்தலிலேயே மிகப்பெரிய வெற்றியை பெற்று தற்போது முதலமைச்சராக பதவி வகித்து வருகிறார். </p><p>அவர் அரசியலில் ஜெயித்த பிறகு மற்ற பல நடிகர்களும் அரசியல் கனவு காண தொடங்கியிருக்கின்றனர். ராகவா லாரன்ஸ், விஷால், தனுஷ் என லிஸ்ட் நீண்டு கொண்டே போகிறது. எனக்கு விஜய் பார்த்து பொறாமை இல்லை, நான் வந்திருந்தால் நிச்சயம் முதலமைச்சர் ஆகி இருப்பேன் என ரஜினியும் பேட்டி கொடுத்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/69e8a0bf-f0ae-404c-8a01-a3f0a8007940/26-6a79ee22751dd.webp' /></p><h2>விஜய் ரூட்டில் தனுஷ் </h2><p>
விஜய் எப்படி தனது ரசிகர் மன்றத்தை முதலில் பலப்படுத்தி அதற்குப் பிறகு அரசியல் கட்சியாக மாற்றினாரோ அதே ரூட்டை தற்போது தனுஷ் பின்பற்ற தொடங்கி இருக்கிறார்.
</p><p>தன்னுடைய ரசிகர் மன்றத்தை பலப்படுத்தும் விதமாக அதில் உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்தும் படி நிர்வாகிகளுக்கு தெரிவித்திருக்கிறாராம் அவர். தமிழ் நாடு முழுவதும் 40 மாவட்டங்களாக பிரித்து ரசிகர் மன்றங்களில் தலைவர்களையும் இதற்காக நியமித்திருக்கிறார் தனுஷ்.
</p><p>அரசியலில் நுழைய இப்போதே தனுஷ் பணிகளை தொடங்கி விட்டதால், 2031 தேர்தலில் அவர் போட்டியிடுவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-10T15:28:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பில் இன்று நடத்தப்பட்ட துப்பாக்கிசூடு : பிரான்ஸில் உள்ள “குடு அஞ்சு”வின் கை வரிசை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/more-details-of-maligawatta-shooting-emerge-1786373154"></link>
            <id>https://ibctamil.com/article/more-details-of-maligawatta-shooting-emerge-1786373154</id>
            <summary type="text">கொழும்பு கொட்டஹேன காவல் பிரிவுக்குட்பட்ட மாளிகாவத்தை, ஸ்ரீ சங்கராஜ மாவத்தையில் இன்று பிற்பகல் (10) நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டை, தற்போது பிரான்சில் உள...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு கொட்டஹேன காவல் பிரிவுக்குட்பட்ட மாளிகாவத்தை, ஸ்ரீ சங்கராஜ மாவத்தையில் இன்று பிற்பகல் (10) நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டை, தற்போது பிரான்சில் உள்ள “குடு அஞ்சு” என்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினர் நடத்தியதாக காவல்துறை சந்தேகம் வெளியிட்டுள்ளது.
</p><p>
இந்த துப்பாக்கிச் சூட்டில் முகமது அஸ்மின் மொஹிதீன் என்ற 54 வயது நபர் கொல்லப்பட்டார்.</p><h2>மோட்டார் சைக்கிளில் வந்த நபர்கள் துப்பாக்கிச் சூடு&nbsp;</h2><p>கொழும்பு 10, ஸ்ரீ சங்கராஜ மாவத்தையில் அமைந்துள்ள ஒரு கட்டிடப் பொருட்கள் கடையின் உரிமையாளரை குறிவைத்து இன்று பிற்பகல் சுமார் 1.20 மணியளவில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/45972238-9608-472d-bf20-e95c8af4a6ab/26-6a79ea768f57a.webp' /></p><p>
</p><p>
மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றதாக காவல்துறை தெரிவித்துள்ளது.</p><p></p><p>
</p><p>
</p><h2>“கஞ்சிபானி இம்ரான்”&nbsp;நெருங்கிய உறவினர்</h2><p>துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், அங்கு அவர் பின்னர் உயிரிழந்தார்.

இறந்தவர் “கஞ்சிபானி இம்ரான்” என்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினரின் நெருங்கிய உறவினர் என்று காவல்துறை தெரிவித்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4e1106d3-3244-42b0-848c-6857bc6e18b3/26-6a79ea75da415.webp' /></p><p>
</p><p>
இரத்மலானை பகுதியில் “குடு அஞ்சு” என்பவரின் நெருங்கிய கூட்டாளி ஒருவர் சமீபத்தில் கொல்லப்பட்டதற்குப் பழிவாங்கும் விதமாக இந்தக் கொலை இடம்பெற்றிருக்கலாம் என்று காவல்துறை சந்தேகிக்கிறது.
</p><p>
அருகிலுள்ள ஒரு கட்டிடத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கமராவிலும் இந்தத் துப்பாக்கிச் சூடு பதிவாகியுள்ளது.
</p><p>
கொழும்பு மாவட்டப் பொறுப்புடைய பிரதி காவல்துறை மா அதிபர் நிஷாந்த சொய்சாவின் தலைமையிலும், கொழும்பு மத்திய பிரிவு பொறுப்புடைய காவல்துறை சிரேஷ்ட கண்காணிப்பாளரான மகேஷ் குமாரசிங்கவின் மேற்பார்வையிலும் மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-10T15:13:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[புலம்பெயர்ந்தோரால் நிகழ்ந்த சாதனை: ஒரே படகில் ஆங்கிலக் கால்வாயை கடந்த 230 பேர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/230-migrants-cross-channel-in-one-boat-1786374294"></link>
            <id>https://news.lankasri.com/article/230-migrants-cross-channel-in-one-boat-1786374294</id>
            <summary type="text">Record 230 migrants cross channel in single Boat: 230 பேர் ஒற்றை படகில் ஆங்கிலக் கால்வாயை கடந்து பிரித்தானியாவை அடைந்துள்ளனர்.

பிரித்தானியாவில் புல...</summary>
            <content type="html"><![CDATA[<p><b>Record 230 migrants cross channel in single Boat: 230 பேர் ஒற்றை படகில் ஆங்கிலக் கால்வாயை கடந்து பிரித்தானியாவை அடைந்துள்ளனர்.</b></p><p>

பிரித்தானியாவில் புலம்பெயர்ந்தோர் தொடர்பான புதிய சாதனை நிகழ்ந்துள்ளது.
</p><h2>
சாதனை </h2><p>பிரான்சிலிருந்து புறப்பட்ட ஒரு பெரிய படகில் 230 பேர் ஒரே நேரத்தில் ஆங்கிலக் கால்வாயை கடந்துள்ளனர். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/19c2ea82-f062-4b73-9b88-6222d7601eb2/26-6a79e8988bc73.webp' /></p><p>திங்கள்கிழமை அதிகாலை, பிரிட்டிஷ் அதிகாரிகள் அந்த படகை தடுத்து கரைக்கு அழைத்துச் சென்றனர்.

இது கடந்த மாதம் 165 பேர் கடந்த சாதனையை முறியடித்துள்ளது.</p><p>
</p><h2>
அதிகாரிகள் தெரிவித்ததாவது,
</h2><p>
மனிதக் கடத்தல் கும்பல்கள் “பாதுகாப்பற்ற படகுகளில் அதிகமானவர்களை நிரப்பி அனுப்புவதால்” உயிர்களுக்கு பெரும் ஆபத்து ஏற்படுகிறது. சமீபத்தில் 173 பேரை ஏற்றிச் சென்ற ஒரு படகு இயந்திரம் தீப்பற்றியதால் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.</p><p>
</p><p></p><p>பிரித்தானிய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், “இந்த சம்பவம், குற்றவியல் கும்பல்கள் பயன்படுத்தும் ஆபத்தான முறைகளை வெளிப்படுத்துகிறது. அவர்கள் உயிர்களை ஆபத்துக்குள் தள்ளுகின்றனர். ஆனால், சிறிய படகுகள் மூலம் வரும் புலம்பெயர்ந்தோர் இந்த ஆண்டில் குறைந்துள்ளனர். ஜூலை மாதத்தில் 2020-க்கு பிறகு மிகக் குறைந்த எண்ணிக்கை பதிவாகியுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p>பிரித்தானிய அரசு, பிரான்ஸ் கடற்கரையில் 40 சதவீதம் கூடுதல் பாதுகாப்பு பணியாளர்களை நியமிக்க ஒப்பந்தம் செய்துள்ளது. </p><p>இதுவரை 2026-ஆம் ஆண்டில் 14,819 பேர் பிரான்சிலிருந்து ஆங்கிலக் கால்வாயை கடந்துள்ளனர். இது கடந்த ஆண்டின் அதே காலத்துடன் ஒப்பிடும்போது 43 சதவீதம் குறைவாகும்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-10T15:04:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிக்பாஸ் சீசன் 10 ; புதிய புரோமோ! ஆர்வத்தில் ரசிகர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/bigg-boss-season-10-tamil-new-promo-1786365428"></link>
            <id>https://jvpnews.com/article/bigg-boss-season-10-tamil-new-promo-1786365428</id>
            <summary type="text">&amp;nbsp; பிக்பாஸ் தமிழ் 10 ஆண்டுகள் நிறைவை கொண்டாடும் மைல்கல் சீசனான பிக்பாஸ் தமிழ் சீசன் 10 புதிய லாஞ்ச் புரோமோவை வெளியிட்டுள்ளது. 

விஜய் தொலைக்காட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; பிக்பாஸ் தமிழ் 10 ஆண்டுகள் நிறைவை கொண்டாடும் மைல்கல் சீசனான பிக்பாஸ் தமிழ் சீசன் 10 புதிய லாஞ்ச் புரோமோவை வெளியிட்டுள்ளது. 

விஜய் தொலைக்காட்சியில்&nbsp; &nbsp;ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்த புதிய தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.</p><p>

பிக்பாஸ் தமிழ் சீசன் 10 ‘கார்னிவிழா’, பிக்பாஸ் ரசிகர்கள் விரும்பும் அனைத்து அம்சங்களையும் ஒருங்கிணைக்கும் விதமாக அமைந்துள்ளது. 

இந்த 'பிக் பாஸ் - காமன் மேன்' நிகழ்ச்சி வரும் ஆகஸ்ட் 16ஆம் தேதி முதல் ஒளிபரப்பாக உள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e9e8f732-982b-4665-a258-5234deb84fec/26-6a79c5f652900.webp' /></p><h2>&nbsp;நடுவர்களாக முன்னாள் போட்டியாளர்கள்&nbsp;</h2><p> திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 10 மணிக்கும், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 5.30 மணிக்கும் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், இந்த நிகழ்ச்சியை முன்னாள் போட்டியாளர் மாயா கிருஷ்ணன் தொகுத்து வழங்குகிறார்.</p><p></p><p> </p><p>
 
அதோடு, ஓவியா, ராஜு, ஆரி போன்ற முன்னாள் போட்டியாளர்கள் நடுவர்களாகப் பங்கேற்கின்றனர்.

இந்த லாஞ்ச் புரோமோ மூலம் ரசிகர்களை விஜய் சேதுபதி வரவேற்கிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6e1e34e0-e4d8-4f71-b574-160ac7880d9f/26-6a79c5f70a6a5.webp' /></p><p> </p><p>பிக் பாஸ் Common Man, 100 நாட்கள் இடைவிடாத பொழுதுபோக்குடன், பிக்பாஸ் தமிழ் சீசன் 10 இதுவரை இல்லாத அளவிற்கு பிரம்மாண்டமான சீசனாக அமையவுள்ளது. </p><p>

இந்த பிரம்மாண்ட கொண்டாட்டம் விரைவில், ஸ்டார் விஜய் மற்றும் ஜியோஹாட்ஸ்டாரில் பிரத்யேகமாக தொடங்கவுள்ளது.

 பிக்பாஸ் தமிழ் இதுவரை 9 சீசன்கள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ள நிலையில், பிக் பாஸ் 10-வது சீசன் வரும் செப்டம்பர் 6ஆம் தேதி தொடங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.</p>]]></content>
            <updated>2026-08-10T15:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹீரோ மோட்டோகார்ப் 2027-ல் அறிமுகம் செய்யும் 2 மின்சார பைக்குகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/hero-launch-ubex-vxz-ev-bikes-in-2027-1786373301"></link>
            <id>https://news.lankasri.com/article/hero-launch-ubex-vxz-ev-bikes-in-2027-1786373301</id>
            <summary type="text">Hero launch two new EV Bikes in 2027: ஹீரோ மோட்டோகார்ப் புதிதாக இரண்டு மின்சார மோட்டார்சைக்கிள்களை அறிமுகப்படுத்தவுள்ளது.

EICMA கண்காட்சியில் அறிமு...</summary>
            <content type="html"><![CDATA[<p>Hero launch two new EV Bikes in 2027: ஹீரோ மோட்டோகார்ப் புதிதாக இரண்டு மின்சார மோட்டார்சைக்கிள்களை அறிமுகப்படுத்தவுள்ளது.</p><p>

EICMA கண்காட்சியில் அறிமுகப்படுத்தப்பட்ட UBEX மற்றும் VXZ என்ற இரண்டு புதிய கான்செப்ட் பைக்குகள், இந்திய சூழ்நிலைக்கேற்ப வடிவமைக்கப்பட்ட தனித்துவமான பிளாட்ஃபார்ம்களில் உருவாக்கப்பட்டுள்ளன.
</p><p>
இவை 2027-ஆம் ஆண்டில் சந்தையில் அறிமுகமாக உள்ளன.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c21ca074-cefa-4341-9735-057a89a92ac9/26-6a79e4b758f4c.webp' /></p><h2>UBEX Concept:
</h2><ul><li>
ஸ்போர்ட்டி ஸ்ட்ரீட் பைக் வடிவமைப்பு
</li><li>
Projector ஹெட்லைட் மற்றும் LED DRL</li><li>

Telescopic fork, alloy wheels</li><li>

Petal disc brakes
</li><li>
Single-piece seat மற்றும் exposed frame</li></ul><p></p><p>
</p><h2>
VXZ Concept:</h2><ul><li>

அமெரிக்காவின் Zero Motorcycles-உடன் இணைந்து உருவாக்கப்பட்டது
</li><li>
Aggressive LED headlight, USD fork, monoshock
</li><li>
Belt drive system (குறைந்த பராமரிப்பு)
</li><li>
Semi-faired split seats</li><li>

TFT டிஜிட்டல் கிளஸ்டர், turn-by-turn navigation வசதி</li></ul><p></p><p>

Vida ஸ்கூட்டர் தற்போது Hero-வின் நான்காவது அதிகம் விற்பனையான தயாரிப்பாக உள்ளது. UBEX மற்றும் VXZ அறிமுகம் Hero-வின் மின்சார வாகன சந்தை பங்கினை மேலும் உயர்த்தும்.</p><h2>

உற்பத்தி திட்டம்: </h2><p> 
Hero, 2026-இல் மாதத்திற்கு 15,000 யூனிட்கள் உற்பத்தி திறனை, 2027-இல் 45,000 யூனிட்களாக மூன்று மடங்கு அதிகரிக்க திட்டமிட்டுள்ளது.
</p><h2>
இன்னும் அறிவிக்கப்படாத விவரங்கள்:</h2><ul><li>
இறுதி தயாரிப்பு பெயர்கள்
</li><li>
மோட்டார் பவர், பேட்டரி திறன், ரேஞ்ச்
</li><li>
விலை மற்றும் சார்ஜிங் வசதிகள்
</li></ul><p>
இந்த UBEX மற்றும் VXZ பைக்குகள், இந்திய மின்சார வாகன சந்தையில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-10T14:46:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[மகளுக்கு முட்டுக்கட்டையா இருக்காதீங்க..கனகா அம்மாவிடம் ரஜினி சொன்ன அட்வைஸ்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/kanaka-devika-rajinikanth-you-re-not-letting-her-1786367838"></link>
            <id>https://viduppu.com/article/kanaka-devika-rajinikanth-you-re-not-letting-her-1786367838</id>
            <summary type="text">கனகாதமிழ் சினிமாவில் 60, 70 களில் கொடிக்கட்டி பறந்த நடிகை தேவிகாவின் மகளாக 80களில் அறிமுகமானவர் தான் நடிகை கனகா. கங்கை அமரன் இயக்கத்தில் கரக்காட்டக்கா...</summary>
            <content type="html"><![CDATA[<h2>கனகா</h2><p>தமிழ் சினிமாவில் 60, 70 களில் கொடிக்கட்டி பறந்த நடிகை தேவிகாவின் மகளாக 80களில் அறிமுகமானவர் தான் நடிகை கனகா. கங்கை அமரன் இயக்கத்தில் கரக்காட்டக்காரன் படத்தின் மூலம் அறிமுகமாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்று அடுத்தடுத்த படங்களில் நடித்து டாப் நடிகையானார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a8b16342-c8f3-4eb0-a916-c25776251fde/26-6a79cf606149a.webp' /></p><p> </p><p>அம்மா தேவிகாவின் மரணத்திற்குப்பின் வீட்டிலேயே முடங்கிய கனகா, சமீபத்தில் தான் வெளியில் தலைக்காட்டினார். சமீபத்தில் கனகாவை சந்தித்த நடிகை குட்டி பத்மினி, அவர் குறித்த சில விஷயங்களை பகிர்ந்துள்ளார்.</p><p>அதில், கனகா படத்தில் ஹீரோயினாக நடிக்கும்போது அவரின் அம்மா தேவிகா நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு வசனங்களில் எல்லாம் தலையிடுவார். இதெல்லாம் சரியா வரும், சரியா வராது என்று சொல்வார். கனகா மீது முழு கவனத்தையும் வைத்து அனைத்திலும் தலையிடுவார் தேவிகா.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c4a673e5-01d7-457c-a6f5-b0a364a1e6af/26-6a79cf6111852.webp' /></p><p> </p><h2>ரஜினி சொன்ன அட்வைஸ்</h2><p>அப்படித்தான் ரஜினிக்கு ஜோடியாக கனகா நடித்த அதிசய பிறவி படத்திலும் நடந்து கொண்டார். இதை கவனித்த ரஜினிகாந்த், தேவிகாவிடம் சென்று அமர்ந்து, அம்மா நீங்களும் ஒருகாலத்தில் பெரிய நடிகையாக இருந்தவர்தான். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/80c0f4f3-3534-48bb-9cc2-17af21bfaee5/26-6a79cf61ba002.webp' /></p><p>உங்களுக்கே தெரியும், நீங்கள் இப்படி அமர்ந்து கொண்டு எல்லாத்திலும் தலையிட்டுக் கொண்டிருந்தால் உங்கள் மாள் எப்படி பெரிய ஹீரோயினாக மாறுவார். நீங்கள் இங்கேதான் இருக்கிறீர்கள், பின் எப்படி உங்களை மீறி தவறாக எடுத்துவிட முடியும் என்று கேட்டார். அந்தளவுக்கு தேவிகாவுக்கு கனகா மீது பொசசிவ்னெஸ் என்று குட்டி பத்மினி தெரிவித்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-08-10T14:45:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பை உலுக்கிய படுகொலை - பிரான்ஸில் இருந்து தீட்டப்பட்ட திட்டம் - பொலிஸார் வெளியிட்டுள்ள தகவல்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/colombo-gun-fire-police-revealed-details-1786372036"></link>
            <id>https://tamilwin.com/article/colombo-gun-fire-police-revealed-details-1786372036</id>
            <summary type="text">கொழும்பு, கொட்டாஞ்சேனையில் இன்று மதியம் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பான தகவல்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.  

இந்த துப்பாக்கிச்சூட...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு, கொட்டாஞ்சேனையில் இன்று மதியம் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பான தகவல்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர். </p><p> 

இந்த துப்பாக்கிச்சூடு தற்போது பிரான்ஸில் பதுங்கியுள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினரான குடு அஞ்சு என்பவரால் திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
</p><p>
அண்மையில் குடு அஞ்சுவின் நெருங்கிய நபர் ஒருவர் இரத்மலானை பகுதியில் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு பழிவாங்கும் நோக்கில் இந்தத் கொலை நடத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். </p><h2><b>

துப்பாக்கி சூடு</b></h2><p>இன்று நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் முகமது அஸ்மின் மொஹிதீன் என்ற 54 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/17b6613f-9ec6-4ce8-b1f0-a5db6fe45ba7/26-6a79e3a216e66.webp' /></p><p>கொழும்பு 10, ஸ்ரீ சங்கராஜ மாவத்தையில் அமைந்துள்ள கட்டடப் பொருட்கள் விற்பனை நிலையம் ஒன்றின் உரிமையாளரை குறிவைத்து பிற்பகல் 1.30 மணியளில் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. </p><p>

மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூட்டை நடத்தி விட்டுத் தப்பியோடியுள்ளனர். </p><p> 

துப்பாக்கிப் பிரயோகத்தில் காயமடைந்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.</p><p>

உயிரிழந்தவர் பாரிய குற்றச்செயல்களுடன் தொடர்புடைய போதைப்பொருள் மன்னன் கஞ்சிபானி இம்ரானின் நெருங்கிய உறவினர் என பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
</p><p>
துப்பாக்கிச் சூடு நடத்தப்படும் விதம் அருகிலுள்ள கட்டடமொன்றின் சிசிடிவி கமராவிலும் பதிவாகியுள்ளது. </p>]]></content>
            <updated>2026-08-10T14:43:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சாகர காரியவசத்திற்கு பிணை : வெளிநாட்டு பயணத்தடை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/slpp-general-secretary-sagara-arrives-at-ccib-1786339930"></link>
            <id>https://ibctamil.com/article/slpp-general-secretary-sagara-arrives-at-ccib-1786339930</id>
            <summary type="text">புதிய இணைப்பு&amp;nbsp;குற்றப் புலனாய்வுத் துறையால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட சிறிலங்கா பொதுஜன பெரமுன பொதுச் செயலாளர் மற்றும் சட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>&nbsp;குற்றப் புலனாய்வுத் துறையால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட சிறிலங்கா பொதுஜன பெரமுன பொதுச் செயலாளர் மற்றும் சட்டத்தரணி சாகர கரியவசத்தை பிணையில் விடுவிக்க கடுவெல நீதவான் அருண இந்திரஜித் புத்ததாச உத்தரவிட்டார்.
</p><p>
இதன்போது, தலா 20 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளிலும், வெளிநாட்டுப் பயணத் தடையுடனும் சாகர காரியவசத்தைப் பிணையில் செல்ல நீதவான் உத்தரவிட்டார்.&nbsp;</p><h2>மூன்றாம் இணைப்பு</h2><p>ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளரும் சட்டத்தரணியுமான சாகர கரியவசம், இன்று (10) காலை மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தால் (CCIB) கைது செய்யப்பட்டு, தற்போது கடுவெல நீதவான் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்படுகிறார்.</p><h2>இரண்டாம் இணைப்பு&nbsp;</h2><p>ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பொதுச் செயலாளர் மற்றும் சட்டத்தரணி சாகர கரியவசம் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>

காவல்துறை மா அதிபர் (IGP) குறித்து அவர் அளித்த அறிக்கை தொடர்பாக வாக்குமூலம் அளிப்பதற்காக இன்று (10) மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்திற்கு அவர் வந்தபோது கைது இடம்பெற்றுள்ளது.</p><h2>முதலாம் இணைப்பு</h2><p>ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தில் முன்னிலையாகியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/70dc303d-03b7-41c5-bbaf-94ae5b1e9343/26-6a7964f4be23e.webp' /></p><p>காவல்துறை மா அதிபர் தொடர்பில் வெளியிடப்பட்ட கருத்துகள் குறித்து இடம்பெற்று வரும் விசாரணைக்கு அமைய வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு வருகை தந்துள்ளார்.</p><p>

வழங்கப்பட்டுள்ள அறிவித்தலுக்கு அமைய, இன்று காலை 10.30 மணிக்கு குறித்த பணியகத்தில் முன்னிலையாகவுள்ளதாக முன்னதாக அவர் தெரிவித்திருந்தார்.</p><p>
இதேவேளை, காவல்துறை மா அதிபர் தொடர்பாக தாம் வெளியிட்ட கருத்து தவறாக வியாக்கியானம் செய்யப்பட்டுள்ளதாக சாகர காரியவசம் மேலும் குறிப்பிட்டார்.</p><p></p><p></p><p></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/nzjuK0EpImM" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-10T14:32:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மனைவிக்கு தெரியாது மண்ணில் புதைத்த பெரும் தொகை பணம்; கரையான் அரித்த சோகம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/money-burial-ground-termite-damage-india-1786366262"></link>
            <id>https://jvpnews.com/article/money-burial-ground-termite-damage-india-1786366262</id>
            <summary type="text">&amp;nbsp;இந்தியா இராஜஸ்தானில் மனைவிக்கு தெரியாமல் நிலத்தில் புதைத்து வைத்த 5 லட்சம் ரூபா பணத்தையும் கரையான் அரித்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. 

சம்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;இந்தியா இராஜஸ்தானில் மனைவிக்கு தெரியாமல் நிலத்தில் புதைத்து வைத்த 5 லட்சம் ரூபா பணத்தையும் கரையான் அரித்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. 

சம்பவம் தொடர்பில் இந்திய ஊடகங்க்கள் குறிப்பிடுள்ளதாவது, </p><p>

இராஜஸ்தான் மாநிலம் பலோத்ரா மாவட்டத்தில் உள்ள பச்பத்ரா பகுதியைச் சேர்ந்த விவசாயியான மங்கிலால் மேக்வால், கடந்தாண்டு ரூபா 5 லட்சத்திற்கு தனது நிலத்தை விற்றுள்ளார். 

அந்தப் பணத்தை வைத்து விவசாயி நிலத்தில் ஒரு அறை கட்டுவதற்கு திட்டமிட்ட அவர், மனைவிக்கு தெரியாமல், பணத்தை பாலிதின் கவரில் போட்டு குழி தோண்டி மண்ணில் புதைத்து வைத்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/798547f0-dfbf-4462-b36e-9a79041e7ed1/26-6a79c937ca440.webp' /></p><h2>&nbsp;புதைத்து வைத்த இடத்தை அவர் மறந்து விட்டார்...</h2><p> </p><p>

மங்கிலாலுக்கு குடிப்பழக்கம் இருந்ததால், பணத்தை புதைத்து வைத்த இடத்தை அவர் மறந்து விட்டார் என்று தெரிவிக்கப்படுகிறது. 

திடீரென அறை கட்டுவதற்கு பணம் தேவைப்பட்ட நிலையில், மண்ணில் புதைத்து வைத்த பணத்தை தனது விவசாய நிலத்தில் நீண்ட நாட்களாக தேடிப் பார்த்து வந்துள்ளார். </p><p>அப்படி அவர் சுமார் 6 ஏக்கர் நிலத்தை தோண்டி பார்த்தும் பணம் கிடைக்கவில்லை. 

நாளடைவில் இந்த விஷயத்தை தனது மனைவி மற்றும் மகனிடம் அவர் தெரிவித்துள்ளார்.</p><p></p><p> ஆரம்பத்தில் இதனை நம்பாத அவர்கள், பிறகு மங்கிலாலுடன் சேர்ந்து பணத்தை தேடும் பணியில் ஈடுபட்டனர். இப்படியே ஓராண்டை கடந்து விட்ட நிலையில், மழை பெய்ததால் நிலத்தை விவசாயத்திற்கு ஆயத்தப்படுத்தும் விதமாக, டிராக்டரை வைத்து உழுதுள்ளனர். </p><p>

அப்போது, புதைத்து வைத்திருந்த ரூபாய் நோட்டுகள் அவர்களின் கண்களில் பட்டுள்ளது. அதில் இருந்த 5 லட்சம் மதிப்பிலான 500 ரூபாய் நோட்டுகளை கறையான் அரித்த நிலையில் இருப்பதைக் கண்டு குடும்பமே அதிர்ந்துள்ளனர்.</p><p></p><p>இதையடுத்து, கறையான் அரித்த ரூபாய் நோட்டுகளை பச்பத்ராவில் உள்ள வங்கியில் மாற்றுவதற்காக எடுத்துச் சென்றுள்ளனர். 

ஆனால், அந்த ரூபாய் நோட்டுகளை மாற்றித்தர மறுத்த வங்கி நிர்வாகம், ஜெய்ப்பூரில் இருக்கும் தலைமை அலுவலகத்திற்கு செல்லுமாறு அறிவுறுத்தினர்.</p><p> 

இதனிடையே, கறையான் அரித்த ரூபாய் நோட்டுகளை பார்த்து மங்கிலால் கண்ணீர்விட்டு அழும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி, பார்ப்போரின் நெஞ்சை உலுக்குகிறது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-10T14:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவிற்கு பேரிழப்பு : அதிநவீன ட்ரோனை இழந்தது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/mq-9a-reaper-goes-down-near-chabelley-air-base-1786370094"></link>
            <id>https://ibctamil.com/article/mq-9a-reaper-goes-down-near-chabelley-air-base-1786370094</id>
            <summary type="text">&amp;nbsp;அமெரிக்க விமானப் படையின் அதிநவீன ட்ரோன் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.



விபத்துக்குள்ளான ஆளில்லா விமானம் அமெர...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;அமெரிக்க விமானப் படையின் அதிநவீன ட்ரோன் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.



விபத்துக்குள்ளான ஆளில்லா விமானம் அமெரிக்க விமானப் படையின் 'MQ-9A ரீப்பர்' ட்ரோன் என்பது தெரியவந்துள்ளது.
</p><p>
கிழக்கு ஆபிரிக்க நாடான ஜிபூட்டியில் உள்ள சாபெல்லி விமான தளத்தில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே இந்த ட்ரோன் கீழே விழுந்து நொருங்கியதாக நம்பப்படுகிறது.</p><h2>&nbsp;விபத்துக்கான காரணம் வெளிவரவில்லை</h2><p>ரீப்பர் ட்ரோன் எதிரிகளால் சுட்டு வீழ்த்தப்பட்டதா அல்லது தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தானாகவே விபத்துக்குள்ளானதா என்ற தகவல் வெளியாகவில்லை.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="fr" dir="ltr">Un drone américain s&#39;écrase près du cimetière de Chebelley<a href="https://x.com/hashtag/adi?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#adi</a> <a href="https://t.co/SJJjVFxiyK">pic.twitter.com/SJJjVFxiyK</a></p>&mdash; Agence Djiboutienne d&#39;Information (ADI) (@AgenceAdi) <a href="https://x.com/AgenceAdi/status/2086439726999818476?ref_src=twsrc%5Etfw">August 9, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>



ஜிபூட்டி நகருக்கு தென்மேற்கே அமைந்துள்ள சாபெல்லி விமான ஏர் பேஸ், ஆபிரிக்க கண்டத்தில் அமெரிக்க இராணுவத்தின் மிக முக்கியமான மையமாகச் செயல்பட்டு வருகிறது.</p><p></p><h2>கண்காணிப்பு நடவடிக்கை</h2><p>
</p><p>
தெற்கு செங்கடல் பகுதி உட்படப் பிராந்தியம் முழுவதும் உளவு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்கும் அமெரிக்கா இந்த 'MQ-9 ரீப்பர்' ட்ரோன்களை சாபெல்லி தளத்தில் இருந்தே இயக்கி வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/03efd6f3-4bcf-4b97-9e17-444c986dd2ae/26-6a79de9d91297.webp' /></p><p>
</p><p>
 அமெரிக்காவின் மிகவும் சக்தி வாய்ந்த ரூ.415 கோடி மதிப்பு கொண்டது இந்த 'MQ-9 ரீப்பர்' ட்ரோன் ஆகும்&nbsp;&nbsp;</p><p></p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-10T14:22:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[உயிர்த்த ஞாயிறு தாக்குதல் ; மரண தண்டனையை ஏற்றுக்கொள்ள முடியாது!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/easter-attacks-death-penalty-cannot-be-accepted-1786367572"></link>
            <id>https://jvpnews.com/article/easter-attacks-death-penalty-cannot-be-accepted-1786367572</id>
            <summary type="text">&amp;nbsp; கத்தோலிக்க திருச்சபையின் மறைக்கல்வித் தொகுப்பின் 2267வது பத்தியின் படி, மரண தண்டனையை ஏற்றுக்கொள்ள முடியாது என கொழும்பு பேராயர் மேல்கம் கார்டினல...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; கத்தோலிக்க திருச்சபையின் மறைக்கல்வித் தொகுப்பின் 2267வது பத்தியின் படி, மரண தண்டனையை ஏற்றுக்கொள்ள முடியாது என கொழும்பு பேராயர் மேல்கம் கார்டினல் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
</p><p>
 

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான கடமைகளைத் தவறவிட்ட குற்றச்சாட்டில், முன்னாள் பொலிஸ் மா அதிபர் மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை குறித்த தமது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தும்போதே பேராயர் இதனைத் குறிப்பிட்டார்.

 இது தொடர்பில் கார்டினல் ரஞ்சித் ஆண்டகை கூறுகையில்,</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1ea3d9d6-a5e5-4221-8f50-faace8487a96/26-6a79ce55e76d5.webp' /></p><h2>மரண தண்டனை&nbsp; மனித கண்ணியத்தை மீறுவது</h2><p> 

மரண தண்டனையானது மனித கண்ணியத்தை மீறுவதாகவும், திருச்சபையின் போதனைகளின்படி எந்தவொரு மரண தண்டனையையும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் கார்டினல் ஆண்டகை சுட்டிக்காட்டினார்.
</p><p>
 

இருப்பினும், இலங்கை நீதிமன்றத்தின் சுயாதீனத் தன்மை மீது தாம் முழு நம்பிக்கை வைத்துள்ளதாகவும், அதன் தீர்மானங்களிலோ அல்லது விவாதங்களிலோ எந்த வகையிலும் தலையிட உத்தேசிக்கவில்லை என்றும் கொழும்பு பேராயர் இல்லம் தெரிவித்துள்ளது.</p><p>

 

2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்புச் சம்பவம் தொடர்பாக அண்மைக் காலமாக இடம்பெற்று வரும் விவாதச் சூழலில், கொழும்பு பேராயர் இல்லம் இத்தாக்குதல்களில் பாதிக்கப்பட்டவர்களுடன் முழுமையான ஒத்துழைப்புடன் செயற்பட்டு வருகிறது.
</p><p>
 

இந்தத் தாக்குதல்களின் பின்னணியில் உள்ள முக்கிய சூத்திரதாரி அல்லது சூத்திரதாரிகள் மற்றும் அனைத்துத் தரப்பினரையும் வெளிக்கொணர்வதும், நாட்டின் சட்டத்திற்கு அமைவாக பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை நிலைநாட்டுவதும் கொழும்பு பேராயர் இல்லத்தின் தீவிர எதிர்பார்ப்பாகும் என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-10T14:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாமல் ராஜபக்ச -சரித் அபேசிங்க ஆகியொருக்கிடைலான நட்பு! அம்பலமாகியுள்ள பல இரகசிய தகவல்கள்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-rajapaksa-charith-abeysinghe-1786368679"></link>
            <id>https://tamilwin.com/article/namal-rajapaksa-charith-abeysinghe-1786368679</id>
            <summary type="text">&amp;nbsp;போதைப்பொருள் கடத்தல்காரர் எனக் கூறப்படும் &#039;ஹரக் கட்டா&#039; என்பவரின் மனைவியிடம் இருந்து 12 கோடி ரூபா இலஞ்சம் பெற்ற சம்பவம் தொடர்பில் சிறையில் இருந்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;போதைப்பொருள் கடத்தல்காரர் எனக் கூறப்படும் 'ஹரக் கட்டா' என்பவரின் மனைவியிடம் இருந்து 12 கோடி ரூபா இலஞ்சம் பெற்ற சம்பவம் தொடர்பில் சிறையில் இருந்து பிணையில் வந்துள்ள சரித் அபேசிங்க முதன் முறையாக வலையொளி தளமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் தனக்கும் ராஜபக்ச குடும்பத்திற்கும் குறிப்பாக நாமல் ராஜபக்சவுடன் இருந்த நெருங்கிய தொடர்பு மற்றும் அவரிடம் இணைந்து பணியாற்றிமை தொடர்பில் முதல் முதலாக பல திடுக்கிடும் தகவல்களை தெரிவித்துள்ளார்.
</p><p> 2005-இல் தான் எனக்கு அரசியலில் முதல் நண்பர்கள் கிடைக்கிறார்கள். லண்டனில் நாமல் ராஜபக்ச. அவர் 2005-இல் இலங்கையிலிருந்து லண்டனுக்கு வருகிறார். அதற்குப் பிறகு 2006 முதல் 2008 வரையான காலப்பகுதியை நான் அவர்களோடுதான் கழித்தேன்.
</p><h2>
</h2><p></p><h2>லண்டனில் நெருக்கமான நாமலின் உறவு</h2><p>அதன் பின்னர் 2009 ஆம் ஆண்டு வரும்போது நான் திரைப்படம் தயாரிப்பில் ஈடுபட்டிருந்தேன். அந்தத் திரைப்படத்தின் பிரீமியர்&nbsp; காட்சிப் புகைப்படங்கள் வலையொளி தளத்தில்&nbsp; இருக்கின்றன. </p><p>அந்த பிரீமியர் காட்சியில் நாமல் உட்பட்ட அன்றைய அரசியல்வாதிகள் பலர் கலந்து கொண்டிருந்தனர்.
அந்த நேரத்தில் நான் இலங்கையின் கலாசாரக் குழுவில் இருந்தேன். மகிந்த யாப்பா அபேவர்தன என்னுடன் லண்டன் வந்தார். </p><p>அந்தச் சமயத்தில் ரன்மிதன்ன திரைப்பட கிராமம் தொடங்கப்பட்டிருந்தது. அதன் முதல் தலைவராக நான் இருந்தேன். ஆனால் இரண்டு மூன்று மாதங்களில் அவர்கள் என்னை அதிலிருந்து நீக்கினார்கள். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/439c6cae-2804-485a-a932-5363c9d24a0a/26-6a79d2a977344.webp' /></p><p>இளம் வயதான எனக்கு குறித்த பதவி பொறுத்தமில்லை என்ற வாதம் வலுப்பட்டது.
அப்போது மகிந்த ராஜபக்ச என்னை அழைத்து "சரித்இ நீங்கள் குடும்பத்திற்குத் தெரிந்த ஒருவர். </p><p>நீங்கள் என்னோடு கோபித்துக் கொண்டால் என்னால் அரசியல் செய்ய முடியும். ஆனால் எனது பங்குதாரர்கள் கோபித்துக் கொண்டால் என்னால் இந்த நேரத்தில் அரசியல் செய்ய முடியாது. </p><p>அதனால் நீங்கள் இதிலிருந்து விலகிக் கொள்ளுங்கள்" என்று கூறினார். நான் சரி என்று சொன்னேன்.
நாமல் ராஜபக்ச இன்னும் உயிரோடுதான் இருக்கிறார் அவரிடம் கேட்கலாம். </p><p>எனக்கும் நாமலுக்கிடையே மிக நெருக்கமான ஒரு நட்பு ரீதியான தொடர்பு மட்டுமே இருந்தது. எனக்கு அரசியல் செய்ய வேண்டும் என்ற நோக்கம் இருந்திருந்தால் அன்றே அவர்களிடம் சொல்லியிருக்கலாம் "மச்சான் எனக்கு அரசியல் செய்ய வேண்டும்" என்று. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/477d1bdc-e96c-493c-8ea5-b798600afc49/26-6a79d2aa28255.webp' /></p><p>2010ல் நாமல் முதல் முதலில் தேர்தலில் போட்டியிடும் போது முழுநேரப் பிரசாரத்தில் ஈடுபட்டேன்.பிரசாரத்தை முடித்துவிட்டே சென்றேன்.</p><p>நான் சமீபத்தில் தேர்தலில் போட்டியிடுகிறேன் என்று சொன்னவுடனேயே நாமலிடமிருந்து வந்த முதல் அழைப்பு "அடேய் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று இவ்வளவு நாளாக என்னிடம் சொல்லவே இல்லையே?" என்பதுதான். </p><p>நான் சொன்னேன் "உண்மையிலேயே எனக்கு அப்படி ஒரு எண்ணம் அப்போது இருக்கவில்லை" என்று குறிப்பிட்டிருந்தார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-10T13:57:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[முன்னாள் அமைச்சரின் பேச்சுக்கு குலுங்கி குலுங்கி சிரித்த முதல்வர் விஜய்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/cm-vijay-laugh-in-assembly-for-ex-minister-speech-1786369549"></link>
            <id>https://ibctamilnadu.com/article/cm-vijay-laugh-in-assembly-for-ex-minister-speech-1786369549</id>
            <summary type="text">திமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் சட்டசபையில் பேசியபோது அதனை கேட்டு முதல்வர் விஜய் குலுங்கி குலுங்கி சிரித்தார். 

குலுங்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>திமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் சட்டசபையில் பேசியபோது அதனை கேட்டு முதல்வர் விஜய் குலுங்கி குலுங்கி சிரித்தார்.</p><h3> 

குலுங்கி குலுங்கி சிரித்த முதல்வர் விஜய்</h3><p> 

தமிழக சட்டமன்றத்தில் பட்ஜெட் கூட்ட தொடரின் 5வது நாளான இன்று நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண் மீதான விவாதம் நடைபெற்றது.
</p><p>
இதில் பேசிய திமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், "நீங்கள் எல்லாம் பேப்பரை படிக்கவில்லையா? என்று அன்றைக்கு முதல்வர் சொன்னது எங்களுக்கு வருத்தம்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a318ad98-914b-4160-a387-d6fd1ba88338/26-6a79d60e81917.webp' /></p><p>

நாங்கள் திராவிட இயக்கம், பேசி பேசி ஆட்சியை பிடித்த இயக்கம். கலைஞர் காலத்திலும் சரி, மு.க.ஸ்டாலின் காலத்திலும் சரி அமைச்சர்களுக்கெல்லாம் ஒரு பதபதப்பு இருக்கும். 

ஏனென்றால் காலையிலேயே பேப்பரை படித்து எங்களுடைய தலைவர்கள் அந்த துறையினுடைய அதிகாரிகளுக்கும் அமைச்சர்களுக்கு நேரடியாக பேசுவார்கள். </p><p>அந்த துறை அமைச்சர்களை தொடர்பு கொண்டு பிரச்சனைகளை சரி செய்ய சொல்வார்கள். 

எனவே ஒரு டென்ஷனிலேயே 5 ஆண்டு காலம் ஆட்சி செய்தோம். ஆனால் நீங்கள் ரொம்ப ரிலாக்‌ஷாக இருக்கிறீர்கள், அது தான் ஆச்சரியமாக இருக்கிறது” என்று கூறினார். </p><p>

இதற்கு பதிலளித்த நீர்வளத்துறை அமைச்சர் என்.ஆனந்த், "எங்களுடைய முதல்வர் சின்ன வாய்க்கால் பிரச்சனைக்கு கூட போன் அடித்து அதை உடனே சரி செய்துவீட்டீர்களா என்று கேட்கிறார். நீங்களாவது 5 வருடம் தான் டென்ஷனாக இருக்கிறீர்கள், நாங்கள் தினந்தோறும் டென்ஷனில் இருக்கிறோம்” என்று கூறினார்.</p><p>
இதன் பின்னர் பேசிய எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் எங்கள் ஆட்சியில் விவசாயிகள் போராட்டம் நடைபெற்றதில்லை என பேசினார். </p><p>

இதற்கு பதிலளித்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், "கடந்த ஆட்சியில் நெல் சேமிப்பு கிடங்கு ஏன் அமைக்கவில்லையென்று தொடர்ந்து விவசாயிகள் கேட்டு போராடிக்கொண்டிருந்தார்கள்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/54f8a86f-8c6c-437f-839a-467c0eb6d205/26-6a79d60f33e84.webp' /></p><p>

குறிப்பாக, விவசாயிகளை பட்டியலைப் போட்டவர். ஒரு முக்கியமான விவசாயியை மறந்துவிட்டார். கரும்புத் தோட்டத்தில் கான்கீரிட் போட்டு நடந்த விவசாயி பற்றி அவர் சொல்ல மறந்துவிட்டார் என முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்து மறைமுகமாக விமர்சித்தார்.</p><p> 

இதற்கு பதிலளித்த எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், "இப்பதான் தெரியுது. நீங்க எப்படியெல்லாம் பிரச்சாரம் பண்ணிருக்கீங்கன்னு, மாண்புமிகு சாமி அமைச்சர், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்" என்று கூறினார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/65767026-a77a-4c9c-87f6-fa25ebb02790/26-6a79d60fd8763.webp' /></p><p>

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் எனக்கூறுவதற்கு பதிலாக சாமி அமைச்சர் எனகுறிப்பிட்டதும் அவையில் சிரிப்பலை எழுந்தது. முதல்வர் விஜய்யும் அதனை கேட்டு குலுங்கி குலுங்கி சிரித்தார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-10T13:46:24+00:00</updated>
        </entry>
    </feed>
