<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-08-04T15:33:23+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாடொன்றில் சிறுவர்களுக்கு ஊட்டச்சத்து குறைபாடு தீவிரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/severe-malnutrition-among-children-in-afghanistan-1785856361"></link>
            <id>https://tamilwin.com/article/severe-malnutrition-among-children-in-afghanistan-1785856361</id>
            <summary type="text">ஆப்கானிஸ்தானில் சிறுவர்கள் மத்தியில் ஊட்டச்சத்து குறைபாடு மிக மோசமான நிலையை
எட்டியுள்ளதாக ஐக்கிய நாடுகளின் உலக உணவுத் திட்டம் எச்சரித்துள்ளது.

ஆப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஆப்கானிஸ்தானில் சிறுவர்கள் மத்தியில் ஊட்டச்சத்து குறைபாடு மிக மோசமான நிலையை
எட்டியுள்ளதாக ஐக்கிய நாடுகளின் உலக உணவுத் திட்டம் எச்சரித்துள்ளது.</p><p>

ஆப்கானிஸ்தானின் மூன்றில் ஒரு பங்கு மாகாணங்களில் 'சிறுவர் உடல் மெலிவு'
ஆபத்தான அளவை எட்டியுள்ளது. </p><p>மேலும், மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும்
குழந்தைகளின் எண்ணிக்கையும் அதிவேகமாக உயர்ந்து வருகிறது.</p><p></p><h2>கோரிக்கை</h2><p>

இதில் 80 சதவீதத்திற்கும் அதிகமான பாதிப்புகள் இரண்டு வயதிற்குட்பட்ட
குழந்தைகளுக்கே ஏற்படுவதாகவும், பலர் மிகவும் தாமதமாகவே மருத்துவ மையங்களுக்கு
அழைத்து வரப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
</p><p>
அண்டை நாடுகளிலிருந்து கோடிக்கணக்கான ஆப்கானியர்கள் கட்டாயமாகத் திருப்பி
அனுப்பப்படுவது, அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு மற்றும் சர்வதேச நிதி
உதவியில் ஏற்பட்டுள்ள பெரும் சரிவு ஆகியவையே இந்நிலைக்கு முதன்மை
காரணங்களாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5b21cabc-974f-4a3c-8511-003119541dfc/26-6a7203a61cddc.webp' /></p><p>
</p><p>
நிதியுதவி தட்டுப்பாடு காரணமாக, கடுமையான பஞ்சத்தைத் தடுக்கும் நோக்கில்
செயல்படுத்தப்பட்டு வந்த உணவு விநியோகத் திட்டங்களை நிறுத்த வேண்டிய கட்டாயம்
ஏற்பட்டுள்ளது.</p><p>

இந்த இக்கட்டான சூழ்நிலையைக் கட்டுப்படுத்தவும், இலட்சக்கணக்கான தாய்மார்கள்
மற்றும் சிறுவர்களின் உயிரைப் பாதுகாக்கவும் அடுத்த ஆறு மாதங்களுக்கு சுமார்
500 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி தேவைப்படுவதாக உலக உணவுத் திட்டம் கோரிக்கை
விடுத்துள்ளது.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-04T15:22:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆட்டோ ஓட்டும் சுப்ரமணியபுரம் திரைப்பட நடிகர்.., வைரலாகும் புகைப்படம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/subramaniapuram-actor-marimuthu-life-changed-1785847369"></link>
            <id>https://manithan.com/article/subramaniapuram-actor-marimuthu-life-changed-1785847369</id>
            <summary type="text">கடந்த 2008ஆம் ஆண்டு சசிகுமார் இயக்கத்தில் வெளியான சுப்ரமணியபுரம் திரைப்படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.

இந்தப் படத்தில் டும்கான் என...</summary>
            <content type="html"><![CDATA[<p>கடந்த 2008ஆம் ஆண்டு சசிகுமார் இயக்கத்தில் வெளியான சுப்ரமணியபுரம் திரைப்படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.</p><p>

இந்தப் படத்தில் டும்கான் என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் மாரிமுத்து. படத்தில் மைக் செட் அமைக்கும் தொழிலாளியாக அவர் நடித்திருந்தார்.
</p><p>
மதுரையைச் சேர்ந்த மாரிமுத்து, சிறுவயதிலேயே பெற்றோரை இழந்தார்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dfc4dc84-db41-4614-bb46-79d79338b8b7/26-6a71de4b1e9de.webp' /></p><p>மூன்றாம் வகுப்பு வரை மட்டுமே படித்த அவர், லைட் மற்றும் மைக் செட் அமைக்கும் வேலை செய்து வந்துள்ளார்.
</p><p>
அப்போது அவரை பார்த்த சசிகுமார், சுப்ரமணியபுரம் படத்தில் நடிக்க வாய்ப்பு அளித்ததாக கூறப்படுகிறது.</p><p>

பல கோணங்களில் புகைப்படம் எடுத்த படக்குழு, பின்னர் அவரை தொடர்புகொண்டு படத்தில் நடிக்க அழைத்துள்ளது.</p><p>

மாரிமுத்துவின் கதாபாத்திரம் படத்தின் முக்கிய திருப்பமாக அமைந்தாலும், அதன் பிறகு அவருக்கு எதிர்பார்த்த அளவில் சினிமா வாய்ப்புகள் கிடைக்கவில்லை.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c8196453-07cb-4cc7-a851-ffef78d31a08/26-6a71de4bc1c1a.webp' /></p><p>வாழ்க்கையை நடத்த ரேடியோ கடையில் வேலை பார்த்ததுடன், பின்னர் ஆட்டோ ஓட்டியும் வருமானம் ஈட்டியுள்ளார். </p><p>

ஒரு கட்டத்தில் ஆட்டோ பழுதடைந்ததால் அதை சரிசெய்ய கூட பணம் இல்லாமல் சிரமப்பட்டதாகவும் கூறியுள்ளார்.
</p><p>
தற்போது ஆட்டோவை மீண்டும் சரிசெய்து ஓட்டும் அவரது வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. </p><p>

சமீபத்திய தோற்றத்தில் அவர் அடையாளம் தெரியாத அளவுக்கு மாறியிருப்பதும் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-04T15:18:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாடு திரும்பினார் தங்க மகன் ருமேஷ் தரங்க]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/commonwealth-gold-medalist-rumesh-tharanga-return-1785849070"></link>
            <id>https://jvpnews.com/article/commonwealth-gold-medalist-rumesh-tharanga-return-1785849070</id>
            <summary type="text">&amp;nbsp; 2026 பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் ஆடவர் ஈட்டி எறிதல் பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற ருமேஷ் தரங்க, தாயகம் திரும்பியுள்ளார்.

ஸ்காட்லாந்தி...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; 2026 பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் ஆடவர் ஈட்டி எறிதல் பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற ருமேஷ் தரங்க, தாயகம் திரும்பியுள்ளார்.
</p><p>
ஸ்காட்லாந்தின் ஸ்காட்ஸ்டவுன் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், ஈட்டி எறிதல் பிரிவில் அவரது சாதனை 89.75 மீட்டராக இருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6406ea36-47e9-47e5-964a-a3cb5b21d450/26-6a71e4efc2817.webp' /></p><p>
</p><p> 

23 ஆவது பொதுநலவாய விளையாட்டு போட்டிகளில் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் இறுதிப் போட்டியில், இலங்கையின் வீரர் ருமேஷ் தரங்க ஈட்டி எறிதலில் 89.75 மீற்றர் தூரத்தைப் பதிவு செய்து தங்கப் பதக்கத்தை வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.
</p><p>
ஒலிம்பிக் தங்கப் பதக்கத்தை வென்ற நீரஜ் சோப்ரா உள்ளிட்ட பல முன்னணி வீரர்களைப் பின் தள்ளி அவர் இந்த வெற்றியை ஈட்டியுள்ளார்.

கடந்த 2006ஆம் ஆண்டுக்குப் பிறகு, சரியாக 20 வருடங்களுக்குப் பின்னர் இலங்கைக்குக் கிடைத்த பொதுநலவாயத் தங்கப் பதக்கம் இதுவாகும்.</p><p>

மேலும், பொதுநலவாய விளையாட்டு வரலாற்றில் மெய்வல்லுநர் பிரிவிலிருந்து இலங்கை வென்ற முதல் தங்கப் பதக்கம் என்ற வரலாற்றுச் சாதனையும் இதன் மூலம் பதிவாகியுள்ளது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-04T15:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹோர்முஸ் நீரிணையில் கப்பல் மீது தாக்குதல்: அமெரிக்கா - ஈரான் பேச்சுவார்த்தை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/attack-ship-in-strait-of-hormuz-us-iran-talks-1785853985"></link>
            <id>https://tamilwin.com/article/attack-ship-in-strait-of-hormuz-us-iran-talks-1785853985</id>
            <summary type="text">ஹோர்முஸ் நீரிணைக்கு அருகே சரக்குக் கப்பல் ஒன்று தாக்குதலுக்கு உள்ளானதைத்
தொடர்ந்து, மத்திய கிழக்கில் பதற்றம் மீண்டும் உச்சத்தை எட்டியுள்ளது. இதன்
எத...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹோர்முஸ் நீரிணைக்கு அருகே சரக்குக் கப்பல் ஒன்று தாக்குதலுக்கு உள்ளானதைத்
தொடர்ந்து, மத்திய கிழக்கில் பதற்றம் மீண்டும் உச்சத்தை எட்டியுள்ளது. </p><p>இதன்
எதிரொலியாக சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலையும் மீண்டும் கணிசமாக
உயர்ந்துள்ளது.
</p><p>
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரானுடன் அமைதிப் பேச்சுவார்த்தைகள்
நடைபெற்று வருவதாகவும், ஒப்பந்தம் செய்வதற்கு ஈரானுக்கு இதுவே கடைசி வாய்ப்பு
என்றும் தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>பேச்சுவார்த்தை</h2><p>

ஆனால், அமெரிக்காவுடன் எந்தவித நேரடி பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என
ஈரான் அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது.</p><p>

ஓமன் நாட்டினருடன் மட்டுமே கப்பல் போக்குவரத்து தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு
வருவதாக ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் தரப்பில் விளக்கம்
அளிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7d755d6f-e9a0-4240-a404-a2aa90eba391/26-6a71fbf56f8b5.webp' /></p><p>
</p><p>
இதற்கிடையே, ஓமன் கடற்பகுதியில் சென்று கொண்டிருந்த உலர் சரக்குக் கப்பல் மீது
அடையாளம் தெரியாத பொருள் தாக்கியதில், கப்பலிலிருந்த ஊழியர்கள்
வெளியேற்றப்பட்டனர்.இந்தத் தாக்குதலில் மாலுமி ஒருவர் மாயமாகியுள்ளார்.</p><p></p><h2>பொருளாதார நெருக்கடி</h2><p>

உலகளவில் மசகு எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு போக்குவரத்தில் சுமார் 20
சதவீதத்தைக் கையாளும் ஹோர்முஸ் நீரிணை பகுதியில் தற்போது கப்பல் போக்குவரத்து
பெருமளவில் முடங்கியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/39288cd7-4c03-477c-8d79-ed42a662a352/26-6a71fbf6201a6.webp' /></p><p>
</p><p>
அமெரிக்காவின் இராணுவ அச்சுறுத்தல்களுக்குப் பணியாமல், சர்வதேச சந்தையில்
பொருளாதார நெருக்கடியை உருவாக்கிப் போரைத் தொடரவே ஈரான் முயன்று வருவதாக
அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர்.
</p><p>
அதேவேளையில், இரு தரப்பிற்கும் இடையே அமைதியை ஏற்படுத்த பாகிஸ்தான் உள்ளிட்ட
நாடுகள் பின்னணியில் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றன.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-04T14:56:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டில் திடீர் பேரிடரால் பலியானோர் எண்ணிக்கை அதிகரிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/bad-weather-death-toll-increased-1785853618"></link>
            <id>https://tamilwin.com/article/bad-weather-death-toll-increased-1785853618</id>
            <summary type="text">கடந்த சில நாட்களில் ஏற்பட்ட திடீர் பேரிடர் சூழ்நிலை காரணமாக 8 பேர் உயிரிழந்துள்ளதாக பேரிடர் மேலாண்மை மையம் தெரிவித்துள்ளது.

இன்று பிற்பகல் (04) வெள...</summary>
            <content type="html"><![CDATA[<p>கடந்த சில நாட்களில் ஏற்பட்ட திடீர் பேரிடர் சூழ்நிலை காரணமாக 8 பேர் உயிரிழந்துள்ளதாக பேரிடர் மேலாண்மை மையம் தெரிவித்துள்ளது.
</p><p>
இன்று பிற்பகல் (04) வெளியிட்ட அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>கடுமையான சேதம்..&nbsp;</h2><p>

மேலும், 9 மாவட்டங்களில் உள்ள 56 பிரதேச செயலகப் பிரிவுகள் பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3ff70592-ac5a-4027-9cdd-71c64200c849/26-6a71f8a3d43e6.webp' /></p><p>
</p><p>அதேநேரம், 3,014 குடும்பங்களைச் சேர்ந்த 11,832 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்&nbsp;தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p>
பேரிடரில் 3 பேர் காயமடைந்துள்ளதாகவும், ஒரு வீடு முழுமையாகவும், 290 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாகவும் பேரிடர் மேலாண்மை மையம் தெரிவித்துள்ளது.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-04T14:45:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிக்பாஸ் சீசன் 10!! வெளியான போட்டியாளர்களின் லிஸ்ட்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/bigg-boss-tamil-season-10-contestants-list-1785846508"></link>
            <id>https://viduppu.com/article/bigg-boss-tamil-season-10-contestants-list-1785846508</id>
            <summary type="text">பிக்பாஸ் சீசன் 10சின்னத்திரை ரசிகர்களின் ஆல் -டைம் ஃபேவரேட் ரியாலிட்டி ஷோக்களில் ஒன்றாக திகழ்ந்து வரும் நிகழ்ச்சி தான் பிக்பாஸ். விரைவில் பிக்பாஸ் சீச...</summary>
            <content type="html"><![CDATA[<h3>பிக்பாஸ் சீசன் 10</h3><p>சின்னத்திரை ரசிகர்களின் ஆல் -டைம் ஃபேவரேட் ரியாலிட்டி ஷோக்களில் ஒன்றாக திகழ்ந்து வரும் நிகழ்ச்சி தான் பிக்பாஸ். விரைவில் பிக்பாஸ் சீசன் 10வது நிகழ்ச்சி தொடங்கவுள்ளது. கடந்த 8 மற்றும் 9 சீசன்களை தொகுத்து வழங்கிய விஜய் சேதுபதி தான் 10வது சீசனையும் தொகுத்து வழங்கவுள்ளதாக தகவல் வெளியானது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/39cf183e-5539-4986-b407-b3d234de8909/26-6a71daee2c9f9.webp' /></p><p> </p><p>இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 10ல் போட்டியாளர்களாக யார் யார் கலந்து கொள்ளவுள்ளார்கள் என்ற தகவல் கசிந்துள்ளது. இத்தனை ஆண்டுகளாக இந்நிகழ்ச்சியில் இல்லாத வகையில் சாமானிய மக்களும் கலந்துகொள்ளும் வகையில் காமன் மேன் வாய்ப்பை அறிமுகம் செய்திருந்தது. </p><p>இதற்கான பிரமோ வீடியோவும் வெளியானது. அதில் பிக்பாஸ் முன்னாள் போட்டியாளர்கள் நடித்துள்ள வீடியோ இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e73f6478-b70d-4832-a532-e5c6242ca236/26-6a71daeee0002.webp' /></p><p>இந்நிலையில், சீரியல் நடிகை ஜனனி அசோக் குமார், குக் வித் கோமாளி பிரபலமான டாலி, கேபிஒய் சரத், விஜய் டிவி ராமர் போன்றவர்களும் கலந்து கொள்கிறார்களாம். மேலும் பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை பரீனா அசாத் இந்த முறை பிக்பாஸ் வீட்டிற்குள் போகவுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-04T14:45:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹோர்முஸ் நீரிணை திறப்பு : ஈரான், ஓமான் விரைவில் ஒப்பந்தம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/iran-oman-near-deal-to-reopen-strait-of-hormuz-1785853504"></link>
            <id>https://ibctamil.com/article/iran-oman-near-deal-to-reopen-strait-of-hormuz-1785853504</id>
            <summary type="text">ஹோர்முஸ் நீரிணை வழியாக வணிகக் கடல்வழிப் போக்குவரத்தை மீண்டும் தொடங்குவதற்கான ஒப்பந்தத்தை எட்டுவதற்கு ஈரானும் ஓமானும் நெருங்கிவிட்டதாக, ஈரான் மற்றும் அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹோர்முஸ் நீரிணை வழியாக வணிகக் கடல்வழிப் போக்குவரத்தை மீண்டும் தொடங்குவதற்கான ஒப்பந்தத்தை எட்டுவதற்கு ஈரானும் ஓமானும் நெருங்கிவிட்டதாக, ஈரான் மற்றும் அமெரிக்க அதிகாரிகளை மேற்கோள் காட்டி 'தி நியூயோர்க் டைம்ஸ்' திங்களன்று செய்தி வெளியிட்டது.</p><p>சாத்தியமான ஒப்பந்தத்தின்படி, வளைகுடாவிற்குள் நுழையும் கப்பல்கள் ஈரானின் கட்டுப்பாட்டில் உள்ள மற்றும் அதன் கடற்கரைக்கு அருகிலுள்ள ஒரு கப்பல் வழித்தடத்தின் வழியாகப் பயணிக்கும், அதே நேரத்தில் வெளியே செல்லும் கப்பல்கள் ஓமானுக்கு அருகிலுள்ள ஒரு வழித்தடத்தைப் பயன்படுத்தும் என அந்த அந்த ஊடகம் தெரிவித்தது.</p><h2>&nbsp;"சேவைக் கட்டணம்"&nbsp;</h2><p>எந்தவொரு சுங்கக் கட்டணமும் வசூலிக்கப்படாது என்று ஈரான் அதிகாரிகள் 'தி நியூயோர்க் டைம்ஸிடம்' தெரிவித்தனர், ஆனால் சுற்றுச்சூழல் பாதிப்புகள், சரக்குக் கப்பல்கள் மற்றும் டேங்கர்களுக்கான பாதுகாப்பு, மற்றும் பணியாளர் செலவுகளை ஈடுகட்டுவதற்கான ஒரு "சேவைக் கட்டணம்" இந்த ஒப்பந்தத்தில் அடங்கும் என்றும் கூறினர். இந்த வருவாய் ஈரான் மற்றும் ஓமான் ஆகிய இரு நாடுகளுக்கும் இடையில் சமமாகப் பகிர்ந்து கொள்ளப்படும் என்றும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ba7387dd-f0f1-4313-a3dc-ace3fed51ced/26-6a71faafc32d3.webp' /></p><p>ஈரானின் கூற்று "துல்லியமானது அல்ல" என்று ஒரு அமெரிக்க அதிகாரி கூறினார். மேலும், அந்த நீர்வழிப்பாதை வழியாக அமைக்கப்படும் எந்தவொரு "தற்காலிக" கப்பல் வழித்தடங்களுக்கும் ஈரானின் ஒப்புதல் தேவையில்லை என்றும், சுங்கக் கட்டணங்கள் விதிக்கப்படாது என்றும் அவர் தெரிவித்தார்.</p><p></p><h2>ஐயத்துடன்&nbsp;பென்டகன் அதிகாரிகள்</h2><p>முன்மொழியப்பட்ட இந்த ஏற்பாடு ஈரானுக்குச் செய்யப்படும் ஒரு சலுகையாக அமைந்துவிடுமோ என்ற கவலையை வெளிப்படுத்திய சில மூத்த பென்டகன் அதிகாரிகள், இது குறித்து ஐயத்துடன் உள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0bde3bba-c265-4ecf-8c2e-7996d639061e/26-6a71fab096c29.webp' /></p><p>

இந்த ஒப்பந்தம் திட்டமிட்டபடி செயல்படுமா மற்றும் அமெரிக்காவின் மற்றொரு சுற்றுத் தாக்குதல்களைத் தடுக்குமா என்று சில ஈரானிய அதிகாரிகள் கேள்வி எழுப்பியதாக நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-04T14:44:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடா அனுப்புவதாக யாழ், வவுனியா , கிளிநொச்சி நபர்கள் விற்பனை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sri-lankan-tamils-sold-ethiopia-sent-to-canada-1785848560"></link>
            <id>https://jvpnews.com/article/sri-lankan-tamils-sold-ethiopia-sent-to-canada-1785848560</id>
            <summary type="text">&amp;nbsp; கனடாவிற்கு அனுப்புவதாகக் யாழ்ப்பாணம் , கிளிநொச்சியை சேர்ந்த எத்தியோப்பியாவில் உள்ள பாதாள உலகக் கும்பல்களுக்கு விற்ற, பின்னர் அங்குள்ள ஒழுங்கமைக...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; கனடாவிற்கு அனுப்புவதாகக் யாழ்ப்பாணம் , கிளிநொச்சியை சேர்ந்த எத்தியோப்பியாவில் உள்ள பாதாள உலகக் கும்பல்களுக்கு விற்ற, பின்னர் அங்குள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளால் பிடிக்கப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய சந்தேக நபரை குற்றப் புலனாய்வுத் துறை கைது செய்துள்ளது.
</p><p>
கடந்த 27.05.2026 அன்று பாதுகாப்பு அமைச்சகத்தால் பொலிஸ் மா அதிபருக்கு அனுப்பப்பட்ட தகவலின் அடிப்படையில், குற்றப் புலனாய்வுத் துறையின் ஆட்கடத்தல் புலனாய்வு மற்றும் கடல்சார் குற்றப் புலனாய்வுப் பிரிவு இந்த விவகாரம் குறித்து விசாரணையைத் தொடங்கியது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a2c0a40b-a3c9-4958-924f-80d13246c6b0/26-6a71e2f155abd.webp' /></p><h2>​​யாழ்ப்பாணம், வவுனியா மற்றும் கிளிநொச்சி&nbsp;நபர்கள்</h2><p>
</p><p>
இதற்காக, எத்தியோப்பிய தூதரகம் மற்றும் எத்தியோப்பிய பொலிஸ் பிரிவிடமிருந்து தேவையான ஒத்துழைப்பை வெளிநாட்டு விவகாரங்கள் அமைச்சகம் பெற்றுள்ளது.

விசாரணையின் போது, ​​யாழ்ப்பாணம், வவுனியா மற்றும் கிளிநொச்சியில் வசிக்கும் 25, 26 மற்றும் 27 வயதுடைய மூன்று நபர்கள், கிளிநொச்சி பகுதியைச் சேர்ந்த ஒரு நபர் மூலம் இந்த மோசடியில் சிக்கியது தெரியவந்துள்ளது.</p><p></p><p>
</p><p>
விமான டிக்கெட்டுகள் மற்றும் விசாக்களைப் பெறுவதற்காக சந்தேக நபர் அவர்களிடம் இருந்து 6.4 மில்லியன் ரூபாயைப் பெற்றதும் தெரியவந்துள்ளது.

 அவர்களை கனடாவிற்கு அனுப்பிய பின்னர், அவர்களில் ஒவ்வொருவரிடமிருந்தும் ரூ. 10 லட்சம் பெறும் அடிப்படையில், துபாய் வழியாக அவர்களை எத்தியோப்பியாவிற்கு அனுப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
</p><p>
துபாய் வழியாக வெளிநாடு சென்ற பின்னர், எத்தியோப்பியாவில் செயல்படும் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலால், இந்த மோசடியில் சிக்கிய மூன்று நபர்களும் கடத்தப்பட்டனர்.

பின்னர், அவர்களை விடுவிப்பதற்காக அவர்களில் ஒவ்வொருவரிடமிருந்தும் 30,000 அமெரிக்க டொலர் பிணைப்பணம் கோரப்பட்டது.</p><p></p><p>
</p><p>
அதன்படி, பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களும் சம்பந்தப்பட்ட கடத்தல்காரர்களுக்கு சுமார் ரூ. 20 லட்சம் தொகையை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளனர் என்பதும் தெரியவந்துள்ளது .</p><p>மேற்கொண்டு நடத்தப்பட்ட விசாரணையில், கண்டறியப்பட்ட தகவல்களின் அடிப்படையில், கிளிநொச்சி பகுதியைச் சேர்ந்த, மேற்கூறிய கடத்தலில் ஈடுபட்ட நபரைக் கைது செய்ய ஆட்கடத்தல் மற்றும் கடல்சார் குற்றப் புலனாய்வுப் பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது.
</p><p>
கிடைத்த தகவலின் அடிப்படையில், கடத்தப்பட்ட மூன்று இலங்கையர்களை மீட்க எத்தியோப்பிய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

எத்தியோப்பியாவில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் மேற்பார்வையின் கீழ், மீட்கப்பட்ட மூன்று இலங்கையர்களையும் இலங்கைக்குத் திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
</p><p>
 இந்தக் கடத்தல் நடவடிக்கையில் ஈடுபட்ட நான்கு பாகிஸ்தான் நாட்டினரும், ஒரு எத்தியோப்பிய நாட்டினரும் அந்நாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p>
கைது செய்யப்பட்ட, கிளிநொச்சி பகுதியைச் சேர்ந்த சந்தேக நபருக்கும், எத்தியோப்பியாவில் செயல்படும் குற்றக் கும்பல்களின் உறுப்பினர்களுக்கும் இடையிலான தொடர்பைக் கண்டறிய, குற்றப் புலனாய்வுத் துறையின் கடத்தல் புலனாய்வு மற்றும் கடல்சார் குற்றப் புலனாய்வுப் பிரிவுகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகின்றது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-04T14:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாயுடன் தீயில் கருதி உயிரிழந்த பிரித்தானிய முதியவர்: துயர சம்பவம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/88-year-old-british-man-died-with-dog-in-car-fire-1785853867"></link>
            <id>https://news.lankasri.com/article/88-year-old-british-man-died-with-dog-in-car-fire-1785853867</id>
            <summary type="text">சைப்ரஸில் உள்ள விலங்குகள் காப்பகத்திற்கு சென்றுகொண்டிருந்த பிரித்தானிய முதியவர், காரில் ஏற்பட்ட தீ விபத்தில் உடல் கருகி உயிரிழந்தார். 

பிரித்தானிய ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சைப்ரஸில் உள்ள விலங்குகள் காப்பகத்திற்கு சென்றுகொண்டிருந்த பிரித்தானிய முதியவர், காரில் ஏற்பட்ட தீ விபத்தில் உடல் கருகி உயிரிழந்தார். </p><h2>

பிரித்தானிய முதியவர் </h2><p>88 வயதான பிரித்தானிய முதியவர் ஒருவர், சைப்ரஸின் தெற்குக் கடற்கரைக்கு அருகில் உள்ள பச்னாவில் உள்ள தனது வீட்டில் இருந்து, ஃபமகுஸ்டா மாவட்டத்தில் உள்ள ஒரு நாய் காப்பகத்தை பார்வையிட சென்றுள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7932fb5d-412b-46e1-ae4a-6e0b92b1f918/26-6a71f7ad8c438.webp' /></p><p></p><p>
தனது நாயுடன் அவர் 138 கிலோ மீற்றர் தூரம் காரில் பயணம் செய்துள்ளார். அவர் சென்ற கார் வழி தவறியதால் சேற்றில் சிக்கிக்கொண்டதாக நம்பப்படுகிறது.
</p><p>
அப்போது காரில் இருந்து சிதறிய தீப்பொறிகள், அருகிலிருந்த காய்ந்த நாணல்களைப் பற்றவைத்து காரை தீ முழுவதுமாக சூழ்ந்துள்ளது.

இதில் காரில் தனது நாயுடன் சிக்கிக்கொண்ட முதியவர் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். </p><h2>உதவி தேடுமாறு</h2><p>அவர் வாகனத்தில் இருந்து பலமுறை தப்பிக்க முயன்றதாகக் கூறப்படுகிறது. 

அதே சமயம் அவருடன் பயணித்த பெண் பராமரிப்பாளர் தப்பித்து, அவரை வாகனத்தை விட்டு வெளியேறுமாறு வற்புறுத்தியதாக காவல்துறையிடம் கூறியிருக்கிறார்.</p><p> 


அதற்கு பதிலாக, குறித்த முதியவர் தன்னை விட்டுவிட்டு உதவி தேடுமாறு அவரிடம் கூறியதாக, அவர் காவல்துறையிடம் அளித்த வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். </p><p>

தீ கட்டுப்படுத்தப்பட்ட பிறகு, அவசரகால சேவையினர் அந்த நபரின் உடலை காருக்கு அருகில் கண்டெடுத்தனர். அவரது நாயும் இந்தத் தீ விபத்தில் உயிரிழந்திருந்தது.&nbsp;&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-04T14:29:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[மலேசியாவில் டாப் வசூல் செய்த இந்திய படங்களின் லிஸ்ட்... தமிழ் படங்கள் எத்தனை?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/top-indian-box-office-movies-in-malaysia-1785841709"></link>
            <id>https://cineulagam.com/article/top-indian-box-office-movies-in-malaysia-1785841709</id>
            <summary type="text">இந்திய படங்கள்சினிமா என்றாலே முதலில் ஹாலிவுட் சினிமா தான் நியாபகம் வரும். இப்போது இந்திய சினிமாவும் ஹாலிவுட் சினிமாவை விட கதை, தரம் என எல்லாவற்றிலும் ...</summary>
            <content type="html"><![CDATA[<h2>இந்திய படங்கள்</h2><p>சினிமா என்றாலே முதலில் ஹாலிவுட் சினிமா தான் நியாபகம் வரும். </p><p>இப்போது இந்திய சினிமாவும் ஹாலிவுட் சினிமாவை விட கதை, தரம் என எல்லாவற்றிலும் உயர்ந்து வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/508fd82d-0bce-4b7d-99c5-ac8ff4eaa1b4/26-6a71f512c3c6d.webp' /></p><p>இந்திய சினிமாவில் முக்கிய பங்கு வகிக்கும் மொழிகளில் ஒன்று தமிழ். சினிமா ரசிகர்கள் வியந்து பார்க்கும் வண்ணம் தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட படங்கள் வந்துள்ளன.</p><p> தற்போது நாம் மலேசியாவில் கலக்கிய அதாவது வசூலில் கலக்கிய டாப் 10 இந்திய படங்களின் விவரத்தை காண்போம்.
</p><h2>டாப் 10</h2><ol><li>
Dilwale: RM15.68M
</li><li>TheGOAT: RM15.15M </li><li>
Jailer: RM14.18M </li><li>
Leo: RM13.20M
</li><li>Kabali: RM12.68M
</li><li>Bigil: RM12.67M</li><li>
Coolie: RM12.46M</li><li>Amaran: RM12.27M</li><li>
Mersal: RM11.83M
</li><li>Varisu: RM11.60M&nbsp;</li></ol>]]></content>
            <updated>2026-08-04T14:28:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Bavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறைக்குள் உணவு உண்ண முடியவில்லை - தாயுடன் பேச வேண்டும்! பிள்ளையானின் உருக்கமான கோரிக்கைகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/pillaiyaan-remand-continues-till-augest-18-1785838026"></link>
            <id>https://tamilwin.com/article/pillaiyaan-remand-continues-till-augest-18-1785838026</id>
            <summary type="text">பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட பிள்ளையான் என்றழைக்கப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தனை, ஒகஸ்ட் 12ஆம் த...</summary>
            <content type="html"><![CDATA[<p>பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட பிள்ளையான் என்றழைக்கப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தனை, ஒகஸ்ட் 12ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p>மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ. தர்ஷினி முன்னிலையில் இன்று (04)&nbsp;காணொளி&nbsp;மூலம் விசாரணை நடைபெற்றது.</p><p></p><h2>ஐந்து கொலைகள்</h2><p>இதன்போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4f32ac1b-e2cc-430b-b0f2-4b2d22e2b8c5/26-6a71bd24dce80.webp' /></p><p>2008ஆம் ஆண்டு மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நிகழ்ந்த 5 கொலைகள் தொடர்பாக, முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் மற்றும் பிற சந்தேக நபர்கள் மீது குற்றப் புலனாய்வுத் திணைக்களம் வழக்குப் பதிவு செய்திருந்தது.
</p><p>


இந்த வழக்கில் மூன்றாவது சந்தேக நபராகப் பெயரிடப்பட்டுள்ள அவர் மீது, கல்லடி பகுதியில் நடந்த ஐந்து கொலைகள் மற்றும் நிலத்தகராறு தொடர்பான மூன்று குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.</p><p>2008ஆம் ஆண்டு கல்லடியில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உட்பட இருவர் சுட்டுக்
கொலை செய்யப்பட்ட சம்பவம், ரி.எம்.வி.பி கட்சி உறுப்பினர் உட்பட இருவர் காத்தான்குடியில் வைத்து
சுட்டுக் கொலைசெய்யப்பட்ட சம்பவம், வவுணதீவு பகுதியைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவரை
கடத்தி கொடூரமாகக் கொலை செய்தமை உள்ளிட்ட சம்பவங்கள் தொடர்பில் இவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டது. </p><p>2025ஆம் ஏப்ரல், பயங்கரவாத
தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட பிள்ளையான் என அழைக்கப்படும் முன்னாள்
இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனையும் 2025 நவம்பர் மாதம், காத்தான்குடியை சேர்ந்த
இராணுவ புலனாய்வு பிரிவின் தகவலாளிகளான முகமட் சிபான், முகமட் சகீத், ஆகியோரையும் சிஜடியினர் கைது செய்தனர்.</p><h2>அதிகாரிகளின் சோதனை</h2><p>

இந்த 5 முக்கிய மனிதக் கொலைகளில் தொடர்பு இருப்பதாக, பிள்ளையான் மற்றும் இராணுவ புலனாய்வு
பிரிவின் தகவலாளிகளான இலண்டனில் உள்ள காத்தான்குடியைச் சேர்ந்த பொலிஸ் அதிகாரி முகம் பாய்ஸ்,
உட்பட 4 பேருக்கு எதிராக மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் கடந்த 2026 ஜீன் 17ஆம் திகதி சிஜடியினர் வழக்கு தாக்கல் செய்தனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/09de7a47-ed1d-4e97-973c-0834e9ed14da/26-6a71c926b9c9b.webp' /></p><p>இந்நிலையில் குறித்த வழக்கு இன்று&nbsp; (04) மட்டக்களப்பு
நீதவான் நீதிமன்றில் வழக்கு விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்ட போது சந்தேக
நபர்களான பிள்ளையான், இராணுவ புலனாய்வு பிரிவின் தகவலாளிகளான முகமட் சிபான்,
முகமட் சகீத், ஆகிய 3 பேரையும் சிறைச்சாலைகளில் இணையவழி காணொளி ஊடாக (Zoom)
முன்னிலைபடுத்தப்பட்டனர்.</p><p>

இதன்போது பிள்ளையான் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி சௌந்தரராஜா முன்னிலையாகி பிள்ளையான்
தற்போது வெலிசறை கடற்படை முகாம் சிறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவருக்கு
சிறைச்சாலையில் இருந்து செல்லும் உணவை அந்த முகாமில் இருக்கும் இராணுவம்
மற்றும் கடற்படையினர் பரிசோதனை செய்து அனுப்பபடுவதால் அது சிதைவடைந்து
செல்வதால் அதனை சாப்பிட முடியாமல் இருப்பதாகவும் குறிப்பிட்டார்.&nbsp;</p><p>எனவே, உணவை அவ்வாறு
பரிசோதனை செய்யாது தருமாறும்
73 வயதான அவரது தாயார் சுகயீனமடைந்துள்ளதாகவும் அவருடன் கையடக்க
தொலைபேசி ஊடாக 2 இல்லது 3 நிமிடம் கதைப்பதற்கு அனுமதி தருமாறும் கோரினார்.&nbsp;</p><p>இதன்போது, நீதவான், சிறைச்சாலை அதிகாரிகளுக்கு அங்கு எவ்வாறான
நடமுறை உள்ளதோ அதை சரியாக பின்பற்றுமாறு வலியுறுத்தினார்.&nbsp;</p><p></p><p></p><p>

</p>]]></content>
            <updated>2026-08-04T14:21:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[செங்கிப்பட்டியில் உதயநிதி ஸ்டாலினிடம் விசாரணை - காவல்நிலையம் முன்பு குவிந்த தொண்டர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/udhayanidhi-stalin-enquired-at-sengipatti-station-1785853148"></link>
            <id>https://news.lankasri.com/article/udhayanidhi-stalin-enquired-at-sengipatti-station-1785853148</id>
            <summary type="text">செங்கிப்பட்டி காவல்நிலையத்தில் வைத்து உதயநிதி ஸ்டாலினிடம் காவல்துறையினர் விசாரித்து வரும் நிலையில், ஏராளமான திமுக தொண்டர்கள் குவிந்துள்ளனர். 

செங்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>செங்கிப்பட்டி காவல்நிலையத்தில் வைத்து உதயநிதி ஸ்டாலினிடம் காவல்துறையினர் விசாரித்து வரும் நிலையில், ஏராளமான திமுக தொண்டர்கள் குவிந்துள்ளனர். </p><h3>

செங்கிப்பட்டியில் உதயநிதி ஸ்டாலினிடம் விசாரணை</h3><p> 

தஞ்சாவூரில் திமுக சார்பில் நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், நடிகை திரிஷா குறித்து இரட்டை அர்த்தத்தில் பேசியதாக உதயநிதி ஸ்டாலின் மீது 9 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர், இன்று சென்னையில் உள்ள அவரது வீட்டில் வைத்து அவரை கைது செய்துள்ளனர். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e56c7761-71e8-45fe-a3c3-cabae53c8be6/26-6a71f4dda2826.webp' /></p><p>

உதயநிதி ஸ்டாலினை விசாரணைக்குப் பின் இன்றே விடுவிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. </p><p>

விசாரணைக்காக உதயநிதி ஸ்டாலினை காவல்துறையினர் தஞ்சாவூர் அழைத்து சென்ற நிலையில், இந்த கைதை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். </p><p></p><p>

உதயநிதி ஸ்டாலின் அழைத்து வரப்படுவதாக இருந்த தஞ்சாவூர் தெற்கு காவல்நிலையத்தை சுற்றி 1000க்கும் மேற்பட்ட திமுகவினர் குவிந்தததால், 5 மாவட்ட எஸ்.பிக்கள் வரவழைக்கப்பட்டடு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
</p><p>
ஆனால், அங்கு கொண்ட செல்லப்படுவதற்கு பதிலாக உதயநிதி ஸ்டாலினை செங்கிப்பட்டி காவல்நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.</p><p> 

இதனால் சுமார் 20 நிமிடங்களுக்கு காவல் வாகனத்தில் இருந்து இறங்க மறுத்த உதயநிதி ஸ்டாலின், பின்னர் வாகனத்திலிருந்து இறங்கி அங்குள்ள தொண்டர்களை நோக்கி கையசைத்து, காவல்நிலையத்தின் உள்ளே சென்றார். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5199602d-ecf4-4ddd-8b92-79ecc2bd78a4/26-6a71f4de56160.webp' /></p><p>
தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் செங்கிப்பட்டி காவல் நிலையத்தில் வைத்து உதயநிதி ஸ்டாலினிடம் விசாரணை நடத்தி வருகிறார்.</p><p> 

இதனையடுத்து செங்கிப்பட்டி காவல்நிலையம் முன்பும் ஏராளமான திமுக தொண்டர்கள் குவிந்துள்ள நிலையில், தொண்டர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-04T14:19:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[இனி சும்மா இருக்க மாட்டேன்.. மிருனாள் தாகூர் கோபத்துடன் கடும் எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/mrunal-thakur-warns-about-fake-ai-images-1785852869"></link>
            <id>https://cineulagam.com/article/mrunal-thakur-warns-about-fake-ai-images-1785852869</id>
            <summary type="text">நடிகை மிருனாள் தாகூர் ஆரம்பத்தில் படங்களில் ஹோம்லியாக மட்டும் நடித்து வந்தாலும் தற்போது தாராள கவர்ச்சியாகவும் நடித்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.மேல...</summary>
            <content type="html"><![CDATA[<p>நடிகை மிருனாள் தாகூர் ஆரம்பத்தில் படங்களில் ஹோம்லியாக மட்டும் நடித்து வந்தாலும் தற்போது தாராள கவர்ச்சியாகவும் நடித்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.</p><p>மேலும் அவர் நிகழ்ச்சிகளுக்கு வரும்போது தாராள கவர்ச்சி உடையில் வந்து எல்லோரையும் ஈர்க்கிறார். </p><p>
அவரது கவர்ச்சி புகைப்படங்கள் அடிக்கடி இணையத்தில் வைரல் ஆகிறது. அவரது நிஜமான புகைப்படங்கள் ஒரு பக்கம் என்றால், AI மூலம் உருவாக்கப்பட்ட சில மோசமான கவர்ச்சி புகைப்படங்களும் இணையத்தில் வைரல் ஆவதை பார்க்க முடிகிறது.
</p><p>அது பற்றி கடும் கோபத்துடன் தற்போது மிருனாள் தாகூர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இருக்கிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/326f9a19-0ba4-425b-8ab3-e20c83886e31/26-6a71f3c86622a.webp' /></p><p>
</p><h2>எச்சரிக்கை</h2><p>என் தோற்றத்தில் போலியான புகைப்படங்களை உருவாக்குவது அல்லது பகிர்வது சட்டவிரோதம் மற்றும் அதை ஏற்றுக் கொள்ள முடியாது. அதை உடனே நிறுத்துங்கள். இதுதான் கடைசி எச்சரிக்கை.
</p><p>என்னுடைய தோற்றத்தை தவறாக காட்டி போலியான புகைப்படங்கள் வெளியிட்டால் இனிமேல் சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என மிருனாள் தாகூர் கூறி இருக்கிறார்.
</p><p>மேலும் இப்படி இணையத்தில் தவறான புகைப்படங்களை வெளியிடுபவர்களை டேக் செய்யுங்கள் என ட்விட்டரில் ஒரு பதிவை போட்டு இருக்கிறார் அவர். அப்படி செய்தால் அந்த மாதிரி கணக்குகளை எல்லாம் ஒரே இடத்தில் அடையாளம் காண முடியும் என்பதற்காக இப்படி செய்து இருக்கிறார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-04T14:15:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[சர்ச்சையை ஏற்படுத்திய சிறைச்சாலைகள் ஆணையாளர் பதவி.. அரசாங்கம் வெளியிட்டுள்ள தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/nalinda-explains-prison-commissioner-appointed-1785842284"></link>
            <id>https://tamilwin.com/article/nalinda-explains-prison-commissioner-appointed-1785842284</id>
            <summary type="text">முன்னாள் சிறைச்சாலை ஆணையாளர் தொடர்பாக தற்போது விசாரணை நடைபெற்று வருவதே அப்பதவிக்கு யாரையும் நியமிக்காததற்குக் காரணம் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் சிறைச்சாலை ஆணையாளர் தொடர்பாக தற்போது விசாரணை நடைபெற்று வருவதே அப்பதவிக்கு யாரையும் நியமிக்காததற்குக் காரணம் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்தார்.</p><p>

இன்று (04) அமைச்சரவை முடிவுகளை அறிவிப்பதற்காக நடைபெற்ற ஊடக சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த பேது அமைச்சர், இதனை குறிப்பிட்டார்.&nbsp;</p><p>முன்னாள் சிறைச்சாலை ஆணையர் தொடர்பான விசாரணைகள் முடிவடையும் வரை சிறைச்சாலைகள் திணைக்களத்திற்கு ஒரு நிரந்தர ஆணையரை நியமிப்பது சாத்தியமில்லை என்று கூறினார்.</p><p></p><h2>முன்னெடுக்கப்படும் விசாரணைகள்..&nbsp;</h2><p>

மாறாக, அந்தப் பணியைக் கவனித்துக்கொள்ள ஒருவரை நியமிக்கலாம் என்றும், அதன்படி அந்த நோக்கத்திற்காக ஒரு அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9f156908-a4cc-4965-8f1c-27fd67b88aae/26-6a71d59666cad.webp' /></p><p>
</p><p>
முன்னாள் ஆணையாளர் தொடர்பான விசாரணைகள் முடிந்த பிறகு எடுக்கப்படும் முடிவின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.</p><p>

அதன்படி, முன்னாள் ஆணையாளர் குற்றவாளி எனக் கண்டறியப்பட்டால், ஒரு புதிய ஆணையாளiu நியமிக்கலாம் என்றும், சம்பந்தப்பட்ட விசாரணைகளில் அவர் எப்படியாவது விடுவிக்கப்பட்டால், அவரை மீண்டும் பணியில் அமர்த்த வாய்ப்புள்ளது என்றும் அமைச்சர் கூறினார்.</p><p></p><p></p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-04T14:06:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiva</name>
            </author>
            <title type="text"><![CDATA[நுவரெலியா கிரகரி வாவியின் வான்கதவு திறப்பு.. பெருமளவு நீர் வெளியேற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sluice-gate-nuwara-eliya-gregory-reservoir-opened-1785846409"></link>
            <id>https://tamilwin.com/article/sluice-gate-nuwara-eliya-gregory-reservoir-opened-1785846409</id>
            <summary type="text">நுவரெலியா - கிரகரி வாவியின் அணைகளின் நீர்மட்டம் அதிகமானதால் கடந்த
ஞாயிற்றுக்கிழமை (02) நள்ளிரவு முதல் வெள்ளம் ஏற்படும் அபாயம் காரணமாக
பாதுகாப்பு கரு...</summary>
            <content type="html"><![CDATA[<p>நுவரெலியா - கிரகரி வாவியின் அணைகளின் நீர்மட்டம் அதிகமானதால் கடந்த
ஞாயிற்றுக்கிழமை (02) நள்ளிரவு முதல் வெள்ளம் ஏற்படும் அபாயம் காரணமாக
பாதுகாப்பு கருதி அதன் வான்கதவு திறக்கப்பட்டு பெருமளவு நீர்
தொடர்ச்சியாக வெளியேற்றப்படுகிறது.
</p><p>
நுவரெலியா மாவட்டத்தில் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர்ச்சியாக
பெய்துவரும் தொடர் மழையினால் நுவரெலியா கிரகரி வாவியின் அணைக்கு நீர்வரத்து
திடீரென அதிகரித்தமை காரணமாக வெள்ளம் ஏற்படாமல் தடுக்கவும்,
அணையின் பாதுகாப்பைக் கருதி, நிர்ணயிக்கப்பட்ட கொள்ளளவுக்கு மேல் நீர்
நிரம்பியதால் குறித்த வான் கதவு திறக்கப்பட்டு தொடர்ச்சியாக நீர்
வெளியேற்றப்படுகிறது.</p><p></p><h2>உரிய நடவடிக்கைகள்..&nbsp;</h2><p><span style="font-size: 14px;">ஞாயிற்றுக்கிழமை இரவு&nbsp;</span>(02)&nbsp;<span style="font-size: 14px;">நுவரெலியா சென்/அன்றுஸ் மற்றும்
ரேஸ்கோர்ஸ் கிராமத்தில் சிறு வெள்ளம் ஏற்பட்டு பல குடும்பங்களைச் சேர்ந்த பொதுமக்கள் இரண்டு தற்காலிக இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கிரகரி வாவியில் படகு சவாரிக்கு அனுமதி இரத்து செய்யப்பட்டது.</span></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5149069e-0b45-460b-9afb-22575c529c56/26-6a71ed766f17c.webp' /></p><p>
நுவரெலியாவில் தற்போதும் நிலவும் சிறிய மழை, காற்று மற்றும் அடர்ந்த பனி
மூட்டம் காரணமாக நுவரெலியா கிரகரி வாவியில் படகு சவாரிக்கு அனுமதி
நிறுத்தப்பட்டுள்ளது.</p><p>எவ்வாறாயினும் நுவரெலியாவில் மழை குறைந்த பின் படகுகளில்
செல்ல வழக்கம்போல சுற்றுலா பயணிகள் அனுமதிக்கபடுவார்கள் என பொறுப்பான
அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மழை காரணமாக நுவரெலியாவில்
சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை குறைந்த அளவிலேயே காணப்படுகின்றமை
குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f14c0811-281e-483f-a7c1-13ce787bd197/26-6a71ed7775961.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c0f4d7bf-cb21-4de7-b582-8d9803e4149d/26-6a71ed784a46e.webp' /></p>]]></content>
            <updated>2026-08-04T14:04:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[செங்கிப்பட்டி காவல்நிலையத்தில் உதயநிதி ஸ்டாலினிடம் விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/police-enquiry-udhayanidhi-at-sengipatti-station-1785852098"></link>
            <id>https://ibctamilnadu.com/article/police-enquiry-udhayanidhi-at-sengipatti-station-1785852098</id>
            <summary type="text">செங்கிப்பட்டி காவல்நிலையத்தில் வைத்து உதயநிதி ஸ்டாலினிடம் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

செங்கிப்பட்டியில் உதயநிதி ஸ்டாலினிடம் விசாரணை 

...</summary>
            <content type="html"><![CDATA[<p>செங்கிப்பட்டி காவல்நிலையத்தில் வைத்து உதயநிதி ஸ்டாலினிடம் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.</p><h3>

செங்கிப்பட்டியில் உதயநிதி ஸ்டாலினிடம் விசாரணை</h3><p> 

தஞ்சாவூரில் நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், நடிகை திரிஷா குறித்து இரட்டை அர்த்தத்தில் பேசியதாக உதயநிதி ஸ்டாலின் மீது 9 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் கைது செய்துள்ளனர். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6af02c82-fb74-403f-b2b2-e7d6df6de910/26-6a71f0c4d08e6.webp' /></p><p> 

முன்ஜாமீன் வழக்கில், உதயநிதி ஸ்டாலினை விசாரணைக்குப் பின் இன்றே விடுவிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.</p><p> 

விசாரணைக்காக உதயநிதி ஸ்டாலினை காவல்துறையினர் தஞ்சாவூர் அழைத்து சென்றனர். இந்த கைதை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.</p><p>
குறிப்பாக உதயநிதி ஸ்டாலின் அழைத்து வரப்படுவதாக இருந்த தஞ்சாவூர் தெற்கு காவல்நிலையத்தை சுற்றி 1000க்கும் மேற்பட்ட திமுகவினர் குவிந்த வண்ணம் இருந்தனர். ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டு 5 மாவட்ட எஸ்.பிக்கள் வரவழைக்கப்பட்டனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8266fd2e-c875-49b5-81de-fab3c7679bc7/26-6a71f0c377fa4.webp' /></p><p> 

ஆனால், அங்கு கொண்ட செல்லப்படுவதற்கு பதிலாக செங்கிப்பட்டி காவல்நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டதால் சுமார் 20 நிமிடங்களுக்கு காவல் வாகனத்தில் இருந்து இறங்க மறுத்தார் உதயநிதி ஸ்டாலின்.&nbsp;</p><p></p><p>

இதனையடுத்து செங்கிப்பட்டி காவல்நிலையம் முன்பும் ஏராளமான திமுக தொண்டர்கள் குவிந்துள்ள நிலையில், வாகனத்தில் இருந்து இறங்கிய உதயநிதி ஸ்டாலின் காவல்நிலையத்தின் உள்ளே சென்றுள்ளார். </p><p>

தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் தலைமையில் செங்கிப்பட்டி காவல் நிலையத்தில் வைத்து உதயநிதி ஸ்டாலினிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.&nbsp; &nbsp; &nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-08-04T14:04:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[உதயநிதி கைது ; வைரலாகும் நடிகை நிவேதா பெத்துராஜ் பதிவு !]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/udhayanidhi-arrest-nivetha-pethuraj-post-viral-1785849686"></link>
            <id>https://jvpnews.com/article/udhayanidhi-arrest-nivetha-pethuraj-post-viral-1785849686</id>
            <summary type="text">&amp;nbsp; முதல்வர் விஜயை மிகவும் ஆபாசமாகவும், அவதூறாகவும் பேசிய வழக்கில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினை போலீஸார் கைது செய்தனர்.

இந்நிலையில் நி...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; முதல்வர் விஜயை மிகவும் ஆபாசமாகவும், அவதூறாகவும் பேசிய வழக்கில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினை போலீஸார் கைது செய்தனர்.
</p><p>
இந்நிலையில் நிவேதா பெத்துராஜ் தனது எக்ஸ் தளத்தில் ‘புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் சாதல் அறங்கூறும் ஆக்கம் தரும்’ என்கி|ற திருக்குறளை பதிவிட்டிருக்கிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/322c44ba-e102-4d05-88ac-b896a52e72ce/26-6a71e757b5ec1.webp' /></p><p>

இதற்கு அர்த்தம் ‘ஒருவரை நேரில் பார்க்கும் போது புகழ்ந்து பேசி விட்டு, அவர் இல்லாத சமயத்தில் அவதூறாக பேசுவது என்பது மிகவும் இழிவானது. அதற்கு உடனடியாக இறந்து போவதே மேல்’ என்பதே அர்த்தம்.</p><p></p><p> </p><p>எனவே, நிவேதா பெத்துராஜ் யாரை விமர்சித்திருக்கிறார் என்பது தெரியவில்லை.

 உதயநிதியையும், நிவேதா பெத்துராஜையும் இணைத்து சில கிசுகிசுக்கள் வெளியானது.</p><p> நிவேதாவுக்கு துபாயில் உதயநிதி வீடு வாங்கி கொடுத்துள்ளார் என பிரபல பத்திரிக்கையாளர் சவுக்கு சங்கர் கூறியிருந்தார். ஆனால், இந்த செய்தியை நிவேதா பெத்துராஜ் மறுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.&nbsp; &nbsp; &nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-04T14:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பலாலி விமான நிலையத்திற்கு காணி சுவீகரிப்பு : கலந்துரையாடலில் குழப்பம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/land-acquisition-for-palali-airport-confusion-1785849387"></link>
            <id>https://ibctamil.com/article/land-acquisition-for-palali-airport-confusion-1785849387</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் பலாலி விமான நிலைய விஸ்தரிப்பு அபிவிருத்தித் திட்டத்திற்காக
சுவீகரிக்கப்பட்ட காணி உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பான
கலந்துரைய...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் பலாலி விமான நிலைய விஸ்தரிப்பு அபிவிருத்தித் திட்டத்திற்காக
சுவீகரிக்கப்பட்ட காணி உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பான
கலந்துரையாடல் இன்று வலிகாமம் வடக்கு தெல்லிப்பழை பிரதேச செயலகத்தில்
நடைபெற்றது.
</p><p>தெல்லிப்பழை பிரதேச செயலாளர் சிவகெங்கா சுதீஸ்னர் தலைமையில் நடைபெற்ற
கூட்டத்தில் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் உள்ளிட்ட
அதிகாரிகள் கலந்துகொண்டனர்.</p><h2>கலந்துரையாடலுக்கு அழைக்கப்பட்ட&nbsp;காணி உரிமையாளர்கள்</h2><p>வலிகாமம் வடக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பலாலி மேற்கு, மயிலிட்டி
வடக்கு, தென்மயிலை மற்றும் குரும்பசிட்டி ஆகிய நான்கு கிராம சேவகர்
பிரிவுகளில், 1986ஆம் ஆண்டு பலாலி விமான நிலைய விரிவாக்கத்திற்காக வர்த்தமானி
அறிவித்தல் மூலம் சுவீகரிக்கப்பட்ட 267 ஏக்கர் காணிகளின் 436 காணி
உரிமையாளர்கள் கலந்துரையாடலுக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ee7fc676-03dd-40cb-92f9-a0c8265c134a/26-6a71efae7f40a.webp' /></p><p>இதன்போது, வலி வடக்கில் இன்னும் காணிகளை மீளப் பெறாத காணி உரிமையாளர்களும்
பிரதேச செயலகத்திற்கு வந்திருந்தனர். அவர்கள் கூட்ட மண்டபத்திற்குள்
அனுமதிக்கப்படாத நிலையில், மாவட்ட அரசாங்க அதிபருடன் பேச்சுவார்த்தை
நடத்தியதையடுத்து கூட்டம் முடிந்ததும் உங்களோடு கலந்துரையாடுவதாக அரசாங்க அதிபர்
தெரிவித்திருந்தார் ஆனால் அந்த சந்திப்பு இடம் பெறவில்லை மக்கள் ஏமாற்றத்துடன்
திரும்பினார்கள்.</p><p>1986ஆம் ஆண்டு சுவீகரிக்கப்பட்ட காணிகளுக்கு 2022ஆம் ஆண்டின் மதிப்பீட்டின்
அடிப்படையில் இழப்பீடு வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். தொடர்ந்து,
இழப்பீடு வழங்குவதற்கான சத்தியக்கடதாசியில் கையொப்பமிடுமாறு காணி
உரிமையாளர்களிடம் கோரப்பட்டது.</p><p></p><h2>சத்தியக்கடதாசியால் வந்த குழப்பம்</h2><p>எனினும், ஒவ்வொரு காணிக்கும் நிர்ணயிக்கப்பட்ட மதிப்பீட்டு விபரங்கள்
வழங்கப்படாத நிலையில் சத்தியக்கடதாசியில் கையொப்பமிட முடியாது என காணி
உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், சத்தியக்கடதாசியின் உள்ளடக்கம்
தெளிவற்றதாக இருப்பதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியதால் கூட்டத்தில்
பரபரப்பும் குழப்பநிலையும் ஏற்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3cec38c2-d04c-423e-8c4e-c8a2c992ce3a/26-6a71efadb4a37.webp' /></p><p>குழப்பநிலை தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, கூட்ட மண்டபத்திற்குள் காவல்துறையினர்
வரவழைக்கப்பட்டனர்.</p><p>பின்னர் அதிகாரிகள் மற்றும் மக்களுக்கிடையே இடம்பெற்ற
கலந்துரையாடலின் பின்னர் , காணி உரிமையாளர்கள் தரப்பில் ஏழு பேர் கொண்ட
குழுவொன்று அமைக்கப்பட்டு, அவர்களின் ஆலோசனைக்கு அமைவாக சத்தியக்கடதாசியில்
திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, அவை காணி மதிப்பீட்டுத் திணைக்களத்திற்கு
அனுப்பப்பட்ட பின்னர் மீண்டும் காணி உரிமையாளர்களை அழைப்பது என
தீர்மானிக்கப்பட்டது.</p><p></p><p>
</p><h2>கூட்டத்திலிருந்து வெளியேறிய காணி உரிமையாளர்கள்</h2><p>எனினும், சில காணி உரிமையாளர்கள் இழப்பீடு பெறுவதில் இணக்கம் தெரிவிக்காமல்
கூட்டத்திலிருந்து வெளியேறினர். அவர்கள், தங்களுக்கு இழப்பீடு மட்டும்
வழங்காமல், காணிகளை மீள வழங்கி மீளக் குடியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்
என்றும், அதன் பின்னரே விமான நிலையத் தேவைக்காக காணிகளை வழங்குவது குறித்து
பரிசீலிக்க முடியும் என்றும் வலியுறுத்தினர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/19192166-b4fd-4b40-88b5-c7675300b928/26-6a71efacc2b57.webp' /></p><p>
</p><p>மேலும், சத்தியக்கடதாசியில் தெளிவின்மை காணப்பட்டதே மக்களிடையே
நம்பிக்கையின்மையையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியதாக காணி உரிமையாளர்கள்
தெரிவித்தனர்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-04T13:57:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[பயிற்சியாளர் குழுவை வலுப்படுத்த புதிய நபர் நியமனம்: பாகிஸ்தான் வாரியத்தின் திட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/michael-smith-appointed-batting-coach-for-pakistan-1785851571"></link>
            <id>https://news.lankasri.com/article/michael-smith-appointed-batting-coach-for-pakistan-1785851571</id>
            <summary type="text">பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் புதிய துடுப்பாட்ட பயிற்சியாளராக மைக்கேல் ஸ்மித் நியமிக்கப்பட்டுள்ளார்.மைக்கேல் ஸ்மித்&amp;nbsp;
தென் ஆப்பிரிக்க முதல் தர கி...</summary>
            <content type="html"><![CDATA[<p>பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் புதிய துடுப்பாட்ட பயிற்சியாளராக மைக்கேல் ஸ்மித் நியமிக்கப்பட்டுள்ளார்.</p><h2>மைக்கேல் ஸ்மித்&nbsp;</h2><p>
தென் ஆப்பிரிக்க முதல் தர கிரிக்கெட் வீரரான மைக்கேல் ஸ்மித் (Michael Smith) பாகிஸ்தான் அணியின் துடுப்பாட்ட பயிற்சியாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a21c08c1-d7db-4caf-bb81-f400ea8e09ed/26-6a71eeb66977f.webp' />&nbsp;</p><p></p><p>

46 வயதாகும் மைக்கேல் ஸ்மித் டெஸ்ட் மற்றும் பிற குறைந்த ஓவர் போட்டிகள் அணிகளுக்கும் பயிற்சியாளராக செயல்பட உள்ளார். </p><p>

 ஆகஸ்ட் 19ஆம் திகதி தொடங்க உள்ள இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மைக்கேல் ஸ்மித் தனது பணியைத் தொடங்க உள்ளார்.</p><h2>

 திட்டங்களின் ஒரு பகுதி</h2><p>லெவல் 4 தகுதிபெற்ற பயிற்சியாளரான இவர், இதற்கு முன்பு HBL பாகிஸ்தான் சூப்பர் லீக் அணிகளுக்கு பயிற்சியாளராக பணியாற்றியுள்ளார். </p><p>

மேலும், ஹோபார்ட் ஹரிகேன்ஸ் மற்றும் கிரிக்கெட் டாஸ்மேனியா அணிகளுக்கு துடுப்பாட்ட பயிற்சியாளராகவும் பணியாற்றியுள்ளார். </p><p>

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், "நெருக்கடியான சர்வதேசப் போட்டி அட்டவணைக்கு முன்னதாக, தேசிய அணியின் பயிற்சி ஊழியர்களை வலுப்படுத்தும் திட்டங்களின் ஒரு பகுதியாக இந்த நியமனம் அமைந்துள்ளது" என்று தெரிவித்துள்ளது.&nbsp;&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-04T13:51:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டை உலுக்கிய சோகம்; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் உயிரிழப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/4-members-same-family-death-landslide-ginigathena-1785847511"></link>
            <id>https://jvpnews.com/article/4-members-same-family-death-landslide-ginigathena-1785847511</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையால் மண்மேடு சரிந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;நாட்டில் நிலவும் <a href="https://jvpnews.com/article/death-toll-from-disasters-rises-to-7-1785819725" target="_blank">சீரற்ற வானிலையால் மண்மேடு சரிந்து</a> விழுந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
</p><p>

நேற்று நுவரெலியா கினிகத்தென பொல்பிட்டியாவில் நடந்த துரதிர்ஷ்டவசமான சம்பவத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர்.


வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து விழுந்த நிலையிலே குறித்த நான்கு பேரும் மண்ணில் புதையுண்டு உயிரிழந்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d02d4423-7327-479f-b699-f6a4319d119f/26-6a71ded8c8c12.webp' /></p><p>
சம்பவத்தில், குசும் ரத்நாயக்க (தாய்) ஷ்யாமா குமுதுனி ரத்நாயக்க, (மூத்த சகோதரி)மனேல் குமுதுனி ரத்நாயக்க (இளைய சகோதரி) மஹின்ச தினேத் ரத்நாயக்க (மகன்). ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.</p><p></p><p>&nbsp; நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை மற்றும் அனர்த்தங்கள் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளதுடன், ஒருவர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-04T13:31:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஏர் இந்தியா விமானம் குலுங்கியதில் 12 பயணிகள் காயம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/12-passengers-injured-air-india-flight-turbulence-1785839287"></link>
            <id>https://canadamirror.com/article/12-passengers-injured-air-india-flight-turbulence-1785839287</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;தாய்லாந்தின் பூக்கெட்டிலிருந்து புது டெல்லிக்கு சென்ற ஏர் இந்தியா விமானம் ஒன்று, இன்றைய (04) பயணத்தின்போது பலத்த காற்றினால் குலுங்கியது. ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;தாய்லாந்தின் பூக்கெட்டிலிருந்து புது டெல்லிக்கு சென்ற ஏர் இந்தியா விமானம் ஒன்று, இன்றைய (04) பயணத்தின்போது பலத்த காற்றினால் குலுங்கியது. 

இதனால் விமானம் சிறிது நேரம் கீழே இறங்கியதுடன், இதன்போது குறைந்தது 12 பயணிகள் இலகுவான காயங்களுக்கு ஆளாகினர். </p><p>

பல்வேறு தகவல்களின்படி, இந்த சம்பவத்தின் போது விமானம் சுமார் 300 அடி உயரம் வரை கீழே இறங்கியதாக கூறப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0e32943e-2fac-41db-ba16-6714207c783e/26-6a71beb96dbcf.webp' /></p><p>
</p><p>
தேசியத் தலைநகரில் தரையிறங்கிய AI2379 விமானத்திலிருந்து அனைத்துப் பயணிகளும் விமானக் குழுவினரும் கீழே இறங்கியதாகவும், காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக விமான நிலையத்திலுள்ள மருத்துவ மையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் ஏர் இந்தியா நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
</p><p>
விமானத்தின் உள்ளே எடுக்கப்பட்ட காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.

ஜம்மு-காஷ்மீர் தலைநகரை நெருங்கும்போது, ​​டெல்லி-ஸ்ரீநகர் இண்டிகோ விமானம் ஒன்று கடுமையான ஆலங்கட்டி மழையால் ஏற்பட்ட கொந்தளிப்பில் சிக்கி, தரையிறங்க முயன்ற போது விமானத்தின் முன்பகுதி சேதமடைந்த ஒரு வருடத்திற்கும் மேலான காலத்திற்குப் பின்னர் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-04T13:30:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[செம்மணியில் இன்று 04 என்பு கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/04-new-nests-identified-in-semmani-1785848940"></link>
            <id>https://tamilwin.com/article/04-new-nests-identified-in-semmani-1785848940</id>
            <summary type="text">செம்மணியில் இன்றையதினம்(04.08.2026) 43ஆம் நாள் அகழ்வு பணியின் போது, 04 என்பு கூடுகள்
புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன.இந்நிலையில் ஏற்கனவே அடையாளம் காண...</summary>
            <content type="html"><![CDATA[<p>செம்மணியில் இன்றையதினம்(04.08.2026) 43ஆம் நாள் அகழ்வு பணியின் போது, 04 என்பு கூடுகள்
புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன.</p><p>இந்நிலையில் ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட 2
என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.</p><p>அத்துடன் ஒரு மனித என்புக்கூட்டு
தொகுதி அடையாளம் காணப்பட்டுள்ளது.</p><p></p><h2>இதுவரையில் 97 நாட்கள் அகழ்வு பணிகள்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/80a578f1-db59-4860-89ca-feeed94553df/26-6a71e89a836a0.webp' /></p><p>

செம்மணி புதைகுழியில் முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டம் என
இதுவரையில் 97 நாட்கள் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில், 483 என்பு
கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு, 481 என்பு கூடுகள் முற்றாக அகழ்ந்து
எடுக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c06c5ee5-e60e-4276-8f86-d4ba9512dbf6/26-6a71e89b62965.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8feb38e1-47d6-4022-bae3-f706b46529e9/26-6a71e89c39fb3.webp' /></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-04T13:30:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[சந்தானம் பட நடிகை ஆஞ்சல் சிங்கின் ஹனிமூன் புகைப்படங்கள்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/aanchal-singh-wedding-and-honeymoon-pics-1785845288"></link>
            <id>https://viduppu.com/article/aanchal-singh-wedding-and-honeymoon-pics-1785845288</id>
            <summary type="text">ஆஞ்சல் சிங்2013ல் இலங்கையில் ஹீரோயினாக அறிமுகமாகி சினிமாவில் எண்ட்ரி கொடுத்து பிரபலமானவர் தான் நடிகை ஆஞ்சல் சிங். பாலிவுட் படங்களில் நடித்த ஆஞ்சல், சி...</summary>
            <content type="html"><![CDATA[<h2>ஆஞ்சல் சிங்</h2><p>2013ல் இலங்கையில் ஹீரோயினாக அறிமுகமாகி சினிமாவில் எண்ட்ரி கொடுத்து பிரபலமானவர் தான் நடிகை ஆஞ்சல் சிங். பாலிவுட் படங்களில் நடித்த ஆஞ்சல், சிபிராஜின் ஜாக்சன் துறை படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து தமிழில் எண்ட்ரி கொடுத்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b6c6294c-1227-4cfb-a299-d7a6d74cb169/26-6a71d62f8992b.webp' /></p><p> </p><p>அதன்பின் சந்தானம் நடித்த தில்லுக்கு துட்டு படத்தில் நாயகியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். பஞ்சாபி மொழிக்கு தாவிய ஆஞ்சல், 3 படங்களில் நடித்தப்பின் ஆளே காணாமல் போனார்.</p><p> இந்நிலையில் ஆஞ்சல் சிங் தன்னுடைய திருமண புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டார். ஒரு வாரத்திற்கு முன் அவருக்கு பிரமாண்டமான முறையில் திருமணம் நடந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dba5a64a-5d1d-4613-be2b-f6fef57b5df3/26-6a71d630395ae.webp' /></p><p> </p><p>தற்போது திருமணம் முடிந்தநிலையில் தன்னுடைய கணவருடன் ஃபிரான்ஸ், கிரீஸ் நாடுகளுக்கு ஹனிமூன் சென்றுள்ளார். அங்கு எடுத்த ஹனிமூன் புகைப்படங்களையும் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு பலரது வாழ்த்துக்களையும் பெற்று வருகிறார்.</p><p><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/reel/Dbkk9mzDZSq/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/reel/Dbkk9mzDZSq/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/reel/Dbkk9mzDZSq/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by Aanchal GS Singh (@anchalsinghofficial)</a></p></div></blockquote> <script async src="//www.instagram.com/embed.js"></script></p>]]></content>
            <updated>2026-08-04T13:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[குழந்தைகளின் மனநலத்திற்கு தீங்கு; மூன்று வழக்குகளைத் தீர்க்க டிக்டாக் ஒப்புதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/harm-children-mental-health-tiktok-agrees-3cases-1785850258"></link>
            <id>https://canadamirror.com/article/harm-children-mental-health-tiktok-agrees-3cases-1785850258</id>
            <summary type="text">&amp;nbsp; டிக்டாக் சமூக ஊடகத் தளத்தில் போதையூட்டும் உள்ளடக்கங்களை உருவாக்கி, இளைஞர்களின் மனநலத்திற்குத் தீங்கு விளைவித்ததாகக் குற்றம் சாட்டித் தொடரப்பட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; டிக்டாக் சமூக ஊடகத் தளத்தில் போதையூட்டும் உள்ளடக்கங்களை உருவாக்கி, இளைஞர்களின் மனநலத்திற்குத் தீங்கு விளைவித்ததாகக் குற்றம் சாட்டித் தொடரப்பட்ட மூன்று வழக்குகளைத் தீர்த்துக்கொள்ள டிக்டாக் ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது.
</p><p>
கலிபோர்னியா மாநில நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட சுமார் 3,300 ஒத்த வழக்குகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சோதனை வழக்குகளாக இந்த மூன்று வழக்குகளும் கருதப்படுகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e7f18e3a-3736-4b0a-af78-59a75bc8d553/26-6a71e99454194.webp' /></p><p>
</p><p>
இருப்பினும், மெட்டா பிளாட்ஃபார்ம்ஸ், கூகுளுக்கு சொந்தமான யூடியூப் மற்றும் ஸ்னாப் இன்க். ஆகியவற்றுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் இன்னும் நிலுவையில் உள்ளன, </p><p>மேலும் அவை ஒக்டோபரில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளன.

இந்த வழக்குகளை 15 முதல் 18 வயதுக்குட்பட்ட மூன்று இளைஞர்கள் தாக்கல் செய்துள்ளனர்.
</p><p>
சமூக ஊடகத் தளங்களை அதிகமாகப் பயன்படுத்துவதால் பதட்டம், மனச்சோர்வு, தன்னைத்தானே காயப்படுத்திக்கொள்ளுதல் மற்றும் உண்ணுதல் கோளாறுகள் போன்ற மனநலப் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாக அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.</p><p>

சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் அனைத்தும் இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளன, மேலும் இளம் பயனர்களைப் பாதுகாக்க விரிவான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகக் கூறியுள்ளன.</p>]]></content>
            <updated>2026-08-04T13:29:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரான் மீது டொனால்ட் ட்ரம்ப் பாய்ச்சல்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/donald-trump-lashes-out-at-iran-1785849953"></link>
            <id>https://canadamirror.com/article/donald-trump-lashes-out-at-iran-1785849953</id>
            <summary type="text">ஈரான் மீது டொனால்ட் ட்ரம்ப் பாய்ச்சல்!

அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையிலான மோதல்கள் தொடர்பில் ஈரான் இரட்டை வேடம் போடுவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரான் மீது டொனால்ட் ட்ரம்ப் பாய்ச்சல்!

அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையிலான மோதல்கள் தொடர்பில் ஈரான் இரட்டை வேடம் போடுவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குற்றாஞ்சாட்டியுள்ளார்.</p><p>



இது தொடர்பில், தனது ட்ரூத் சமூக வலைதளப் பக்கத்தில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.



அந்த பதிவில்,ஈரானின் தலைவர்கள், அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று தனிப்பட்ட முறையில் கெஞ்சிக் கேட்கின்றனர். ஆனால் பொதுவெளியில் தாங்கள் அமெரிக்காவுடன் எந்தப் பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை என்று கூறுகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3c4020c7-2f03-4811-b389-62a0840b1c4d/26-6a71e86807c7d.webp' /></p><p>
</p><p>


அதுமட்டுமன்றி ஓமன் நாட்டுடன் மட்டுமே பேசி வருகிறோம் என்று கூறி ஈரான் தலைவர்கள் இரட்டை வேடம் போடுகின்றனர் என்று ட்ரம்ப் குற்றாஞ்சாட்டியுள்ளார்.</p><p>



ஹார்முஸ் ஜலசந்தி, முழுமையாக அமெரிக்கக் கடற்படையின் கட்டுப்பாட்டிலும், அமெரிக்காவின் 'எஃகு சுவர்' போன்ற கடற்படை முற்றுகையிலும் தான் இயங்குகிறது.அமெரிக்கா அனுமதித்தால் மட்டுமே அங்கு எதுவும் நடக்கும்.
</p><p>


ஹார்முஸ் ஜலசந்தி தொடர்பாக ஈரான் அளிக்கும் விளக்கங்கள் வெற்றுப் பேச்சுக்கள் என்று அவர் தெரிவித்துள்ளார்.</p><p>



ஈரான் எக்காலத்திலும் அணு ஆயுதங்களைப் பெற அனுமதிக்கப்பட மாட்டாது என்றும், ஓர் ஒப்பந்தம் ஏற்படும் வரை அல்லது அவர்கள் முற்றிலுமாகச் சரணடையும் வரை இந்த ராணுவ மற்றும் பொருளாதார முடக்கம் தொடரும் என்றும் ட்ரம்ப் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-08-04T13:23:51+00:00</updated>
        </entry>
    </feed>
