<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-07-26T14:45:47+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈழத்தமிழர்களுக்கு ஆபத்தாகும் கொழும்பின் அவசர கூட்டம்! அம்பலமான திட்டம்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/the-rights-of-the-tamil-people-1785074657"></link>
            <id>https://tamilwin.com/article/the-rights-of-the-tamil-people-1785074657</id>
            <summary type="text">சுமந்திரன் மற்றும் தமிழரசு கட்சியின் தற்போதைய நடவடிக்கைகள் தமிழ் மக்களின் உரிமைகளை வெல்வதை விட, சொந்த அதிகாரத்தைத் தக்கவைக்கும் முனைப்பிலேயே இருப்பதாக...</summary>
            <content type="html"><![CDATA[<p>சுமந்திரன் மற்றும் தமிழரசு கட்சியின் தற்போதைய நடவடிக்கைகள் தமிழ் மக்களின் உரிமைகளை வெல்வதை விட, சொந்த அதிகாரத்தைத் தக்கவைக்கும் முனைப்பிலேயே இருப்பதாக சிவில் சமூக செயற்பாட்டாளர் செல்வின், குறிப்பிட்டார்.
</p><p>
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். </p><p>மேலும் தெரிவித்த அவர்,</p><p>

வடக்கு-கிழக்கு சிவில் சமூகங்களையும் பிற தமிழ் தேசியக் கட்சிகளையும் தவிர்த்துவிட்டு, கொழும்பில் மட்டும் அவசரக் கூட்டங்களைக் கூட்டி அரசியல் செய்வது, மக்களின் நலனைப் புறக்கணிக்கும் செயலாகும்.
</p><p>
மாத்தளையில் கண்டெடுக்கப்பட்ட 154 எலும்புக்கூடுகள் தொடர்பான செய்திகள், இனப்பிரச்சனையின் தீவிரத்தை நீர்த்துப்போகச் செய்வதற்கான முயற்சியாக இருக்கலாம்.</p><p>

இலங்கை அரசு முன்வைக்கும் 'அனைவரும் இலங்கையர்கள்' என்ற கோட்பாடு, ஈழத்தமிழர்களின் தேசிய அடையாளங்களை அழித்துவிடும்.
</p><p>
தற்போதைய அரசியல் தலைவர்கள் மக்களின் துயரங்களையும் இலக்குகளையும் உணர்ந்து நேர்மையாகப் பயணிக்க வேண்டும், இல்லையெனில் இது சமூகத்திற்குச் செய்யும் மிகப்பெரிய துரோகமாகவே அமையும் என்று எச்சரித்துள்ளார்.
</p><p>
இந்த விடயங்கள் தொடர்பில் ஆராய்கின்றது ஊடறுப்பு நிகழ்ச்சி...</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/Px5uhLhr89E" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-26T14:37:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[Club Friendlies: சன்தர்லேண்டை சம்பவம் செய்த லிவர்பூல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/liverpool-beat-sunderland-by-4-2-goals-1785076553"></link>
            <id>https://news.lankasri.com/article/liverpool-beat-sunderland-by-4-2-goals-1785076553</id>
            <summary type="text">Club Friendlies கால்பந்து போட்டியில் லிவர்பூல் அணி 4-2 என்ற கோல் கணக்கில் சன்தர்லேண்டை வீழ்த்தியது.&amp;nbsp; கீரன் மொரிஸன்&amp;nbsp;
லிவர்பூல் மற்றும் சன்தர...</summary>
            <content type="html"><![CDATA[<p>Club Friendlies கால்பந்து போட்டியில் லிவர்பூல் அணி 4-2 என்ற கோல் கணக்கில் சன்தர்லேண்டை வீழ்த்தியது.&nbsp; </p><h2>கீரன் மொரிஸன்&nbsp;</h2><p>
லிவர்பூல் மற்றும் சன்தர்லேண்ட் அணிகளுக்கு இடையிலான கால்பந்து போட்டி GEODIS Park-யில் நடந்தது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/98a39b14-86ad-478a-b891-62f15849ec0c/26-6a661b4b5653b.webp' /></p><p></p><p>

ஆட்டத்தின் 13வது நிமிடத்தில் லிவர்பூல் அணியின் கீரன் மொரிஸன் கோல் அடித்தார். 

அதற்கு பதிலடியாக 28வது நிமிடத்தில் சன்தர்லேண்ட் வீரர் என்ஸோ லே ஃபீ கோல் அடித்தார். </p><p>இதன்மூலம் முதல் பாதி 1-1 என சமநிலையில் இருந்தது.

ஆனால், இரண்டாம் பாதியில் லிவர்பூல் அணி மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.&nbsp;&nbsp;</p><h2>அபார வெற்றி&nbsp;</h2><p>49வது நிமிடத்தில் சன்தர்லேண்ட் வீரர் திமுர் கோல் அடித்தார். 

அதனைத் தொடர்ந்து லிவர்பூல் அணியின் டொமினிக் (56), சீசா (72) மற்றும் லீவிஸ் கௌமஸ் (85) ஆகிய மூவரும் கோல்கள் அடித்தனர்.</p><p> 

இதன்மூலம் லிவர்பூல் அணி 4-2 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/93dd8b32-bace-4d4e-9598-c316ddeb6bcf/26-6a661b4c04a07.webp' />&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/16f6d139-3161-4381-8117-f49317905984/26-6a661b4ca64ae.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-26T14:34:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டிலுள்ள பேருந்துகளுக்கு கட்டாயமாக்கப்படும் நடைமுறை ; எடுக்கப்பட்டுள்ள அதிரடி தீர்மானம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/key-decision-announced-regarding-buses-1785073112"></link>
            <id>https://jvpnews.com/article/key-decision-announced-regarding-buses-1785073112</id>
            <summary type="text">நாட்டில் இடம்பெறும் வீதி விபத்துகளைக் குறைக்கும் நோக்கில், அனைத்து பயணிகள் பேருந்துகளும் 5,000 கிலோமீட்டர் தூரம் பயணித்ததன் பின்னர், அவற்றின் தரம் குற...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">நாட்டில் இடம்பெறும் வீதி விபத்துகளைக் குறைக்கும் நோக்கில், அனைத்து பயணிகள் பேருந்துகளும் 5,000 கிலோமீட்டர் தூரம் பயணித்ததன் பின்னர், அவற்றின் தரம் குறித்த பரிசோதனையை மேற்கொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. </p><p style="text-align: justify; ">இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளதாக தேசிய வீதிப் பாதுகாப்பு சபையின் தலைவர் மஞ்சுள குலரத்ன தெரிவித்தார்.

கொழும்பில் சனிக்கிழமை (25) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c241416d-57d1-42bf-a655-1b96ae03a2db/26-6a660dd9e2d57.webp' /></p><h2 style="text-align: justify; ">&nbsp;புதிய தரப் பரிசோதனை</h2><p style="text-align: justify; ">

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

அண்மைய காலங்களில் நாட்டில் இடம்பெற்ற வீதி விபத்துகளுக்கு சாரதிகளின் கவனக்குறைவு மற்றும் வாகனங்களில் காணப்படும் தொழில்நுட்பக் குறைபாடுகளே பிரதான காரணங்களாக அமைந்திருக்கின்றன. </p><p style="text-align: justify; ">இந்த நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்காகவே புதிய தரப் பரிசோதனை முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. </p><p style="text-align: justify; ">இதற்காகத் தகுதியான தரப் பரிசோதகர்களைப் பணியில் அமர்த்துவதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.


முதற்கட்டமாக, குறித்த பரிசோதகர்கள் பணியில் இணைக்கப்பட்டதைத் தொடர்ந்து, செப்டெம்பர் மாத இறுதிக்குள் நடைமுறைப்படுத்தப்படும். </p><p style="text-align: justify; ">இந்த நடைமுறை முதலில் மூன்று மாத காலத்திற்குப் பயணிகள் பேருந்துகளுக்கு மட்டும் முன்னோடித் திட்டமாகச் செயல்படுத்தப்படும். </p><p style="text-align: justify; ">அதன் பின்னர், நாட்டில் உள்ள அனைத்து வகை வாகனங்களுக்கும் இந்தத் தரப் பரிசோதனை முறையைக் கட்டாயமாக்கத் தீர்மானித்துள்ளோம் என்று குறிப்பிட்டார்.</p>]]></content>
            <updated>2026-07-26T14:30:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[தட்டி விடாதீங்க.. ராயன் தேசிய விருது சர்ச்சைக்கு தனுஷ் மேடையில் ஓப்பனாக பதிலடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/dhanush-on-criticism-raayan-national-award-1785075805"></link>
            <id>https://cineulagam.com/article/dhanush-on-criticism-raayan-national-award-1785075805</id>
            <summary type="text">மகாராஜா, மெய்யழகன் போன்ற படங்களுக்கு கொடுக்காமல் ராயன் படத்திற்கு சிறந்த தமிழ் படம் என்ற தேசிய விருது கொடுக்கப்பட்டது சமீபத்தில் இணையத்தில் விமர்சனத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>மகாராஜா, மெய்யழகன் போன்ற படங்களுக்கு கொடுக்காமல் ராயன் படத்திற்கு சிறந்த தமிழ் படம் என்ற தேசிய விருது கொடுக்கப்பட்டது சமீபத்தில் இணையத்தில் விமர்சனத்திற்கு உள்ளானது.</p><p>அது பற்றி தனுஷ் தற்போது பதிலடி கொடுத்து மேடையில் பேசி இருக்கிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e97fc920-1594-4df6-9782-970ac5fcfae4/26-6a6618e47c4a2.webp' /></p><p>
</p><h2>தட்டி விடாதீங்க..
</h2><p>"ராயனுக்கு தேசிய விருது கொடுத்தார்கள். அந்த வருடம் அதை விட தகுதியான பல படங்கள் இருக்கிறது. அந்த படத்தின் ரசிகர்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். அதை நான் முழுதாக மதிக்கிறேன். </p><p>
நான் நடித்த அது ஒரு கனா காலம் படத்திற்கு தேசிய விருது கிடைக்கும் என சொன்னார்கள். நான் சின்ன பையன் என்பதால் ஆசையுடன் காத்திருந்தேன். ஆனால் கிடைக்கவில்லை.
</p><p>புதுப்பேட்டைக்கும் அப்படி சொன்னாங்க. ஆனால் கிடைக்கவில்லை. அதன்பின் 3, மயக்கம் என்ன, மரியான், ராஞ்சனா, வட சென்னை, கர்ணன் என இவ்ளோ லிஸ்ட் இருக்கு. எவ்வளவு தான் முயற்சி பண்ணாலும் அதை சொல்ல முடியாது. தானாக தான் அமைய வேண்டும்.</p><p>இப்போது கேட்பவர்கள் அப்போது ஏன் கேட்கவில்லை. எனக்கு 2 தேசிய விருது கிடைச்சி இருக்கு, தட்டிவிடாதீங்க, தட்டிகொடுங்க."</p><p>இவ்வாறு தனுஷ் பேசி இருக்கிறார்.
&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-26T14:23:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொங்கோவில் எபோலா வைரஸ் தீவிர பரவல்: அதிகரிக்கும் உயிரிழப்புக்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ebola-virus-outbreak-congo-death-toll-reaches-1300-1785074265"></link>
            <id>https://tamilwin.com/article/ebola-virus-outbreak-congo-death-toll-reaches-1300-1785074265</id>
            <summary type="text">கொங்கோ ஜனநாயகக் குடியரசில் பரவி வரும் எபோலா வைரஸ் பாதிப்பால்
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,354-ஐக் கடந்துள்ளதாகவும்,
பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொங்கோ ஜனநாயகக் குடியரசில் பரவி வரும் எபோலா வைரஸ் பாதிப்பால்
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,354-ஐக் கடந்துள்ளதாகவும்,
பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,075 ஆக அதிகரித்துள்ளதாகவும் அந்நாட்டு
அரசு வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
</p><p>
கடந்த ஐந்து நாட்களில் மட்டும் உயிரிழப்புகள் 40 சதவீதத்திற்கும் அதிகமாக
உயர்ந்துள்ளதுடன், இதுவரை பதிவு செய்யப்பட்ட எபோலா பரவல்களிலேயே மிக வேகமான
பரவலாக இது மாறியுள்ளதாக சர்வதேச சுகாதார வல்லுநர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.</p><p>

தற்போது கொங்கோவில் பரவி வரும் எபோலா வைரஸ் 'புண்டிபுக்யோ' எனும் அரிதான
வகையைச் சேர்ந்தது.</p><p></p><h2>தடுப்பூசி</h2><p> </p><p>மனிதர்களைப் பாதிக்கும் எபோலா வகைகளில் மிகவும் அரிதான
இந்த வைரஸுக்கு இதுவரை அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகளோ அல்லது நேரடிச்
சிகிச்சைகளோ இல்லை என்பது இதன் தீவிரத்தை அதிகரித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5c4771fd-fe2c-4088-80f3-c8facabdac1a/26-6a66155831839.webp' /></p><p>

தடுப்பூசி இல்லாத காரணத்தினால் இந்த வைரஸ் காட்டுத்தீ போலப் பரவி வருவதாக
ஆப்பிரிக்க நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையத்தின் முன்னாள் ஆலோசகர்
அப்துல்ஸலாமி நசிதி எச்சரித்துள்ளார்.
</p><p>
ஆயுதமேந்திய தீவிரவாதக் குழுக்களின் மோதல்கள் நிலவும் கிழக்குப் பகுதியில்
இந்த நோய் பரவி வருவதால், பாதிக்கப்பட்ட பகுதிகளை மருத்துவக் குழுக்கள்
சென்றடைவதில் கடும் சவால்கள் நிலவுகின்றன.</p><p></p><h2>தாக்குதல்</h2><p>

நோய் பரவலின் மையப்பகுதியான இடூரி மாகாணத்தில் உள்ள பல மருத்துவமனைகளில்,
பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமை மற்றும் பல மாதங்களாக ஊதியம் வழங்கப்படாததைக்
கண்டித்து சுகாதார ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3e7b8406-3cc1-44bd-8b90-ff084eb6f5be/26-6a6615577f36c.webp' /></p><p>
</p><p>
இதுவரை 100-க்கும் மேற்பட்ட சுகாதார ஊழியர்கள் தொற்றால்
பாதிக்கப்பட்டுள்ளதுடன், சுமார் 35க்கும் மேற்பட்ட மருத்துவ ஊழியர்கள்
உயிரிழந்துள்ளனர்.
</p><p>
சில கிராமங்களில் மக்கள் நோய் பரவல் குறித்த விழிப்புணர்வு இன்றி, சிகிச்சை
மையங்கள் மற்றும் சுகாதார ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தி வருவதால் தடுப்புப்
பணிகள் முடங்கியுள்ளன.</p><p></p>]]></content>
            <updated>2026-07-26T14:11:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[முட்டை விலை உயர்வுக்கான காரணம் வெளியானது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/egg-production-decreased-due-to-high-temperatures-1785073908"></link>
            <id>https://ibctamil.com/article/egg-production-decreased-due-to-high-temperatures-1785073908</id>
            <summary type="text">தற்போதைய அதிக வெப்பநிலையான காலநிலை மற்றும் மக்காச்சோளப் பற்றாக்குறையால் முட்டை உற்பத்தி குறைந்ததே முட்டை விலை உயர்வுக்குக் காரணம் என அகில இலங்கை முட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>தற்போதைய அதிக வெப்பநிலையான காலநிலை மற்றும் மக்காச்சோளப் பற்றாக்குறையால் முட்டை உற்பத்தி குறைந்ததே முட்டை விலை உயர்வுக்குக் காரணம் என அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் சரத் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.</p><p>

வாராந்திர முட்டை விலையை நிர்ணயிப்பதற்காக இன்று (26) நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் பங்கேற்றபோது அவர் மேற்கண்டவாறு கூறினார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,</p><h2>அதிக தேவை உள்ள ஒரு பொருளாக மாறியுள்ள&nbsp;முட்டை</h2><p>"முட்டைகள் இன்று அதிக தேவை உள்ள ஒரு பொருளாக மாறியுள்ளன. நாங்கள் ஒரு முட்டையின் விலையை முப்பத்தெட்டு ரூபாய் என நிர்ணயிக்கும்போது, ​​வியாபாரிகள் வந்து நாற்பது ரூபாய்க்கு கூட முட்டைகளைக் கேட்கிறார்கள். அதன்படி, சந்தையில் முட்டைகளுக்கு அதிக தேவை உள்ளது என்று நாங்கள் முடிவு செய்கிறோம். அதே நேரத்தில், இந்த நாட்களில் நிலவும் கடுமையான வெப்பம், முட்டை உற்பத்தி வேகமாக குறைவதற்கு ஒரு காரணமாக அமைகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/94f121e1-5ae8-4497-bf43-38e96ce2b113/26-6a661530cd20e.webp' /></p><p>அதே சமயம், நாங்கள் அரசிடம் பலமுறை கோரிய மக்காச்சோளத்தை இறக்குமதி செய்வதற்கான எங்கள் கோரிக்கையை எந்த அதிகார அமைப்பும் செவிமடுக்கவில்லை என்பது ஆச்சரியமாக இருக்கிறது. ஒரு வளர்ந்த கோழி முட்டையிடுவதற்கு, முட்டைக் குவியல் தேவையான அளவில் இருக்க வேண்டும். துறையின் மருத்துவர்கள் கூட இதை ஒப்புக்கொள்கிறார்கள்.</p><p></p><h2>கோழிக்குத் தேவையான ஊட்டச்சத்து</h2><p> </p><p>ஒரு கோழிக்குத் தேவையான ஊட்டச்சத்து கிடைக்காதபோது, ​​முட்டைக் குவியல் எனப்படும் உறுப்பு மெலிந்து போகத் தொடங்குகிறது. இதுபோன்ற சந்தர்ப்பங்களில், முட்டை உற்பத்தி வேகமாக குறைகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/554cb2b2-b969-4674-aaa2-942ff2e8c8b7/26-6a6615302720a.webp' /></p><p>அந்த நிலையைத் தவிர்க்க மக்காச்சோளம் உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் தேவைப்படுகின்றன.</p><p>அதனால்தான், ஜனாதிபதி, அமைச்சர்கள் மற்றும் வளங்கள் துறைக்காக நியமிக்கப்பட்ட அதிகாரிகளுடன் ஒரு கலந்துரையாடலை நடத்துமாறு நாங்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறோம். இன்றும் கூட, எந்தத் தரப்பிலிருந்தும் எந்தப் பதிலும் வரவில்லை.</p><p></p><h2>முட்டைகளுக்கு மிகப்பெரிய தேவை</h2><p>முட்டைகள் விரைவில் கெட்டுப்போகக்கூடிய ஒரு பண்டம். முட்டைகளின் விலை, அதன் அளிப்பு மற்றும் தேவையால் நிர்ணயிக்கப்படுகிறது. இப்போதெல்லாம், முட்டைகளுக்கு மிகப்பெரிய தேவை உள்ளது. அதனால்தான், நாங்கள் நிர்ணயித்த விலையை விட அதிக விலைக்கு முட்டைகள் விற்கப்படுகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d44b5402-a9cf-4158-b187-6bcf124a7479/26-6a66152f72fe6.webp' /></p><p>&nbsp;எனவே, ஜனாதிபதி அவர்களையும், இப்பொருளுக்குப் பொறுப்பான அமைச்சர் லால் காந்தா அவர்களையும், பிரதி அமைச்சர் அவர்களையும் நாங்கள் மீண்டும் ஒருமுறை கேட்டுக்கொள்கிறோம். "கால்நடை வளர்ப்பு அமைச்சகத்தின் விலங்கு உற்பத்தித் திணைக்களத்தின் அதிகாரிகளுடனும், எங்கள் மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர் கருணாரத்ன அவர்களுடனும் எங்களுக்கு ஒரு நேரடிக் கலந்துரையாடலை அமைச்சர் வழங்க வேண்டும். </p><p>அப்போதுதான் நாங்கள் எங்கள் பிரச்சினைகளை முன்வைத்து, அனைவருக்கும் நியாயமான ஒரு தீர்வைக் காண முடியும். ஏனென்றால், இவை அனைத்திற்கும் மத்தியில், முட்டைகளை உட்கொள்ளும் நுகர்வோரைப் பற்றியும் நாம் சிந்திக்க வேண்டும்," என்று அவர் கூறினார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-26T14:10:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[செம்மணி விவகாரத்தில் தொடரும் மௌனம் ..! தட்டிக் கேட்காத அரசியல் தலைவர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/controversy-over-the-chemmani-burial-ground-1785070639"></link>
            <id>https://tamilwin.com/article/controversy-over-the-chemmani-burial-ground-1785070639</id>
            <summary type="text">செம்மணியில் கண்டெடுக்கப்பட்டுள்ள என்புத் தொகுதிகள் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் மோசமான கருத்துகளுக்கு தமிழ் அரசியல் தலைவர்களும் பொறுப்புக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>செம்மணியில் கண்டெடுக்கப்பட்டுள்ள என்புத் தொகுதிகள் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் மோசமான கருத்துகளுக்கு தமிழ் அரசியல் தலைவர்களும் பொறுப்புக்கூற வேண்டும் என எமது தலைமுறை கட்சியின் தலைவர் சிதம்பரம் கருணாநிதி தெரிவித்துள்ளார்.</p><p>

லங்காசிறி ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p>
</p><p>அவர் மேலும் தெரிவிக்கையில்,</p><p>

செம்மணி மனிதப் புதைக்குழி விவகாரத்தில் தற்போது அதிகாரத்தில் உள்ள தமிழ் அரசியல் தலைவர்கள் அமைதியாக இருப்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும்.

அதிகாரத்தைப் பெற்ற பின்னரும், சிங்கள அரசியல் தலைமையின் பிடியிலிருந்து விடுபடாமல், ஆட்சியை தக்கவைத்துக் கொள்வதற்காகவே சில தமிழ் தலைவர்கள் கூட்டணி அமைத்து செயற்பட்டு வருகின்றனர்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/JvYOkpTQT1w" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p>

இவ்வாறு செயற்படுபவர்கள் உண்மையான அரசியல்வாதிகள் அல்ல, மாறாக “அரசியல் தரகர்கள்” என்றே கூற வேண்டும்.
</p><p>
செம்மணி விவகாரம் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் அவதூறான அல்லது மோசமான கருத்துகளை வெளியிட வேண்டாம் என நாடாளுமன்றத்தில் அறிவுறுத்தும் அதிகாரம் அமைச்சர்களுக்கும், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் உள்ளது.

மக்கள் மீது உண்மையான அக்கறை இருந்தால், நாடாளுமன்றத்தில் இதுகுறித்து தெளிவான அறிவிப்பை வெளியிட்டு, இவ்வாறான செயற்பாடுகளை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க முடியும் என்றார்.&nbsp;</p><p>&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-26T14:05:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தேவேந்திரமுனை பெரஹரவில் காவடி நடனத்தை நீக்க பரிந்துரை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/kavadi-dance-removal-proposed-at-perahera-1785072663"></link>
            <id>https://jvpnews.com/article/kavadi-dance-removal-proposed-at-perahera-1785072663</id>
            <summary type="text">தேவேந்திரமுனை ஸ்ரீ உத்பலவர்ண மகா தேவாலயத்தில் எதிர்வரும் 28ஆம் திகதி நடைபெறவிருந்த பெரஹரவில் ஊர்வலத்தில் காவடி நடனத்தை நீக்குவதற்கு பொலிஸார் பரிந்துரை...</summary>
            <content type="html"><![CDATA[<p>தேவேந்திரமுனை ஸ்ரீ உத்பலவர்ண மகா தேவாலயத்தில் எதிர்வரும் 28ஆம் திகதி நடைபெறவிருந்த பெரஹரவில் ஊர்வலத்தில் காவடி நடனத்தை நீக்குவதற்கு பொலிஸார் பரிந்துரைத்துள்ளனர்.</p><p> 

பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவினால் செய்யப்பட்டுள்ள குறித்த பரிந்துரையை மாத்தறை மாவட்ட செயலாளர் சந்தன திலகரத்ன, உத்பலவர்ண தேவாலய பஸ்நாயக்க நிலமேவுக்கு இன்று (26) அறிவித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f7389b93-5e2f-438a-bf51-2704083bba92/26-6a660c1907f30.webp' /></p><h2>&nbsp;காவடி நடனம்&nbsp;&nbsp;</h2><p> </p><p>

தேவேந்திர முனை தேவாலயத்தின் பெரஹர ஊர்வலம் இநாட்களில் நடைபெற்று வரும் நிலையில், காவடி நடன அங்கம் அடங்கிய பெரஹர எதிர்வரும் 28 ஆம் திகதி நடைபெறவிருந்தது. </p><p>

குறித்த பெரஹர தொடர்பில் பாதுகாப்பு அமைச்சின் தேசிய புலனாய்வு தலைவர், தேசிய புலனாய்வு சேவை மற்றும் பொலிஸ் விசேட பணியகம் ஆகியவற்றினால் மேற்கொள்ளப்பட்ட புலனாய்வு மதிப்பீட்டு அறிக்கைகளின்படி, ஒருங்கிணைப்பாளர்களுக்கும் நடனக் கலைஞர்களுக்கும் இடையே முரண்பாடான சூழ்நிலை ஏற்படக்கூடும் எனத் தகவல்கள் கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><p> </p><p>

அதற்கமைய, குறித்த தினத்தில் நடைபெறவிருந்த காவடி நடன அங்கத்தை நீக்குமாறு பொலிஸ் மா அதிபர், மாத்தறை மாவட்ட செயலாளருக்கு எழுத்து மூலம் கடுமையாகப் பரிந்துரைத்துள்ளார்.</p><p> 

அந்த எழுத்துப்பூர்வ அறிவித்தலுக்கு அமைய, மாத்தறை மாவட்ட செயலாளர் சந்தன திலகரத்ன இன்று அது தொடர்பில் குறித்த தேவாலயத்தின் பஸ்நாயக்க நிலமேவுக்கு அறிவித்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-26T14:00:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[தென்சீனக் கடலில் கப்பல் விபத்து: 45 பேரை மீட்க உதவிய சீனாவுக்கு வியட்நாம் நன்றி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ship-accident-in-south-china-sea-vietnam-thanks-1785074035"></link>
            <id>https://tamilwin.com/article/ship-accident-in-south-china-sea-vietnam-thanks-1785074035</id>
            <summary type="text">தென்சீனக் கடலில் வியட்நாமைச் சேர்ந்த &#039;கோய் நுயென் 18&#039; என்ற சரக்குக் கப்பல்
மோசமான வானிலை காரணமாக நன்ஷா தீவுகள் அருகே உள்ள யோங்ஷு பாறைப் பகுதியில்
மூ...</summary>
            <content type="html"><![CDATA[<p>தென்சீனக் கடலில் வியட்நாமைச் சேர்ந்த 'கோய் நுயென் 18' என்ற சரக்குக் கப்பல்
மோசமான வானிலை காரணமாக நன்ஷா தீவுகள் அருகே உள்ள யோங்ஷு பாறைப் பகுதியில்
மூழ்கி விபத்துக்குள்ளானது.
</p><p>
இந்தக் கப்பலில் பயணம் செய்த 62 பேரில் 45 பேர் இதுவரை உயிருடன்
மீட்கப்பட்டுள்ளனர்.
</p><p>
எஞ்சியவர்களைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், மீட்புப்
பணிகளில் உடனடியாக உதவி வழங்கி 45 பேரைக் காப்பாற்ற உதவிய சீன அரசு மற்றும்
அதன் மீட்புக் குழுவினருக்கு வியட்நாம் வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர்
பாம் து ஹாங் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>தேடும் பணி</h2><p>
</p><p>
சீனா மற்றும் வியட்நாம் ஆகிய இரு நாடுகளின் தேடுதல் மற்றும் மீட்புக்
குழுக்கள் இணைந்து ஹெலிகொப்டர்கள் மற்றும் பல ரோந்துக் கப்பல்கள் மூலம்
எஞ்சியவர்களைத் தேடும் பணியை மேற்கொண்டு வருகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/947c53f3-3b01-4f31-b31c-13720547b62e/26-6a6611758ba0d.webp' /></p><p>
</p><p>
தொடர்ந்து காணாமல் போன மற்றவர்களையும் மீட்பதற்கு இரு நாடுகளும் இணைந்து
திறம்படச் செயல்படும் என்றும் நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-26T13:54:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[சல்மான் கான் வாட்ச் விலை இத்தனை லட்சமா.. வீடியோ பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/salman-khan-watch-worth-41-lakh-inr-fans-in-shock-1785073876"></link>
            <id>https://cineulagam.com/article/salman-khan-watch-worth-41-lakh-inr-fans-in-shock-1785073876</id>
            <summary type="text">நடிகர் சல்மான் கான் ஹிந்தி சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக இருக்கிறார். அவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமும் இருக்கிறது.சல்மான் கான் படங்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>நடிகர் சல்மான் கான் ஹிந்தி சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக இருக்கிறார். அவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமும் இருக்கிறது.</p><p>சல்மான் கான் படங்களில் நடிப்பது மட்டுமின்றி மற்ற பல வழிகளிலும் பணம் ஈட்டி வருகிறார். அவர் பல பிராண்ட்களையும் தொழில்களையும் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0c52b734-8e5e-4280-8791-baf5c2036bf4/26-6a6610d5694b5.webp' /></p><h2>41 லட்சத்திற்கு வாட்ச்
</h2><p>இந்நிலையில் தற்போது அவர் பிரபல நிறுவனத்தின் வாட்ச் ஒன்றை தனது பெயரில் வெளியிட்டு இருக்கிறார் சல்மான் கான். அந்த வாட்சின் விலை தான் பலருக்கும் ஷாக் கொடுத்து இருக்கிறது.
</p><p>அதன் விலை 41 லட்சம் ரூபாய் ஆகும். அந்த வாட்சில் Dual time zone உள்ளிட்ட பல வசதிகள் இருக்கிறதாம்.
&nbsp;</p><p><blockquote class="instagram-media" data-instgrm-permalink="https://www.instagram.com/reel/DbLGRklDu5U/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/reel/DbLGRklDu5U/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/reel/DbLGRklDu5U/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by JACOB &amp; CO. (@jacobandco)</a></p></div></blockquote> <script async src="//www.instagram.com/embed.js"></script></p>]]></content>
            <updated>2026-07-26T13:51:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[தென்சீனக் கடலில் சீனா திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கை: ஃபிலிப்பைன்ஸ் மீது குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/china-s-sudden-encirclement-operation-south-sea-1785071451"></link>
            <id>https://tamilwin.com/article/china-s-sudden-encirclement-operation-south-sea-1785071451</id>
            <summary type="text">தென்சீனக் கடலில் தனது கடற்படை மற்றும் விமானப் படைகளை உள்ளடக்கிய வழக்கமான
சுற்றிவளைப்பு நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதாக சீனா அறிவித்துள்ளது.

அதேவேளை...</summary>
            <content type="html"><![CDATA[<p>தென்சீனக் கடலில் தனது கடற்படை மற்றும் விமானப் படைகளை உள்ளடக்கிய வழக்கமான
சுற்றிவளைப்பு நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதாக சீனா அறிவித்துள்ளது.
</p><p>
அதேவேளை, வெளிநாடுகளுடன் இணைந்து கூட்டு சுற்றிவளைப்பு நடவடிக்கைகளை
மேற்கொள்வதன் மூலம் அப்பகுதியின் அமைதியை ஃபிலிப்பைன்ஸ் சீர்குலைப்பதாக சீனா
குற்றம் சாட்டியுள்ளது.
</p><p>
சீன மக்கள் விடுதலை இராணுவத்தின் தெற்குப் பிராந்தியக் கட்டளைப் பீடத்தின்
ஊடகப் பேச்சாளர் கேர்ணல் சாய் ஷிச்சென் இது குறித்துத் தெரிவிக்கையில்,
வெளிநாடுகளுடன் இணைந்து ஃபிலிப்பைன்ஸ் நடத்தும் கூட்டு சுற்றிவளைப்பு
நடவடிக்கைகள் தென்சீனக் கடல் பிராந்தியத்தின் அமைதியையும் ஸ்திரத்தன்மையையும்
பாதிப்பதாகக் குறிப்பிட்டார்.</p><p></p><h2>சீனப் படைகள்&nbsp;</h2><p>
</p><p>
நாட்டின் எல்லை இறையாண்மையையும் கடல்சார் உரிமைகளையும் சீனப் படைகள்
உறுதியாகப் பாதுகாக்கும் என்றும், பிராந்திய அமைதியை நிலைநிறுத்தும் என்றும்
அவர் மேலும் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/34ca4700-8ab6-4196-8e52-58d98fbc69d7/26-6a660e2e5bfa0.webp' /></p><p>

தென்சீனக் கடலின் பெரும்பகுதிக்கு சீனா உரிமை கோரி வருகிறது. இருப்பினும்,
தென்கிழக்கு ஆசிய நாடுகள் பலவும் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வரும்
நிலையில், 2016-ஆம் ஆண்டு சர்வதேச தீர்ப்பாயம் சீனாவின் இந்த உரிமைகோரலை
நிராகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-26T13:40:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் இந்தியர்கள் செய்த மோசமான செயல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/indians-in-canada-face-serious-allegation-1785070155"></link>
            <id>https://canadamirror.com/article/indians-in-canada-face-serious-allegation-1785070155</id>
            <summary type="text">கனடாவில் 1.7 டன் போதை மருந்து கடத்தியது தொடர்பாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த லொறி சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.எல்லை வழியாக போதை மருந்து கடத்தல் த...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவில் 1.7 டன் போதை மருந்து கடத்தியது தொடர்பாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த லொறி சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>எல்லை வழியாக போதை மருந்து கடத்தல் தொடர்பாக கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் கனடா பொலிசார் ' புராஜக்ட் பே' என்ற பெயரில் கண்காணித்து வந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d0e224a4-95b4-48bd-a54c-1abb5c7b68f6/26-6a66024ca2f19.webp' /></p><p> </p><p>அதில், அமெரிக்கா மற்றும் கனடா இடையில் செல்லும் லாரிகளில் கொக்கைன், மெத்தம்பெட்டமைன் மற்றும் ஓப்பியம் போன்ற போதை மருந்துகளை கடத்தப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p>&nbsp;விண்ட்சர், லசலே, கொரூனா, பிராம்ப்டன், மார்ஹம் மற்றும் கலேடன் உள்ளிட்ட பகுதிகளிலும் நடந்த இந்த சோதனையில் 1.7 டன் போதை மருந்து பறிமுதல் செய்யப்பட்டது. 19 பேர் கைது செய்யப்பட்டனர்.
</p><p>

இது தொடர்பாக ககன்தீப் திண்டல், சிம்ரன்ஜித் சிங், கன்வர்பால் குலார், ஜதிந்தர்பால் சிங், ஜஸ்விந்தர் சோஹி, தேஜ்விந்தர் சந்து, ஹர்ஜ்விந்தர் சந்து, தர்மிந்தர் சிங், கன்தீப் தரிவால், மஹப்ரீத் சிங் மற்றும் கரன்தீப் சிங் உள்ளிட்ட இந்திய வம்சாவளியினரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-26T13:39:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[17 வயது சிறுவனுடன் தகாத உறவு ; கர்ப்பமான 19 வயது இளம்பெண் அதிரடி கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/pregnant-19-year-old-woman-arrested-suddenly-1785071450"></link>
            <id>https://jvpnews.com/article/pregnant-19-year-old-woman-arrested-suddenly-1785071450</id>
            <summary type="text">&amp;nbsp;குமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே உள்ள ஆற்றூர் பகுதியை சேர்ந்த 19 வயதுடைய இளம்பெண் ஒருவர் உடல்நல குறைவு காரணமாக சிகிச்சைக்காக&amp;nbsp; மருத்துவமனை...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;குமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே உள்ள ஆற்றூர் பகுதியை சேர்ந்த 19 வயதுடைய இளம்பெண் ஒருவர் உடல்நல குறைவு காரணமாக சிகிச்சைக்காக&nbsp; மருத்துவமனைக்கு சென்றார்.
</p><p>
அங்கு&nbsp; அவரை பரிசோதனை செய்தபோது இளம்பெண் 8 மாத கர்ப்பிணியாக இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து டாக்டர்கள் இளம்பெண்ணிடம் கணவர் குறித்த விவரத்தை கேட்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9c276a61-cd6c-41e8-b227-54e6bc53be02/26-6a66075c93e8b.webp' /></p><h2>விசாரணை</h2><p> </p><p>அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினார்.
</p><p>
இதனால் சந்தேகம் அடைந்த வைத்தியர்கள் பொலிசாருக்கு தகவல் கொடுத்தனர். அதை தொடர்ந்து மகளிர் பொலிசார் மருத்துவமனைக்கு வந்து இளம்பெண்ணிடம் விசாரணை நடத்தினர்.</p><p>அப்போது இளம்பெண்ணின் கர்ப்பம் குறித்து பல தகவல்கள் தெரியவந்தது.

அதாவது அந்த இளம்பெண் விமான பணியாளர்கள் தொடர்பான ஒரு ஆண்டு பட்டய படிப்புக்காக குழித்துறையில் உள்ள ஒரு கல்வி நிறுவனத்தில் சேர்ந்துள்ளார்.</p><p></p><p> </p><p>அதே பாடப்பிரிவில் களியக்காவிளை பகுதியை சேர்ந்த 17 வயதுடைய ஒரு சிறுவனும் சேர்ந்துள்ளார். 

இதனால் இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு நெருக்கம் அதிகரித்து இருவரும் இளம் பெண்ணின் வற்புறுதலின் பேரில் தகாத உறவிலிருந்துள்ளனர்.</p><p>

இதன் காரணமாக இளம்பெண் கர்ப்பமானார். 

அந்த புகாரின் பேரில் இளம்பெண் மீது பொலிசார் போக்சோ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். </p><p>தற்போது இளம்பெண் 8 மாத கர்ப்பிணியாக இருப்பதால் அவர் மருத்துவக் கண்காணிப்பில் உள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-26T13:38:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ட்ரம்ப்புக்கு எதிராகவும் பேச தயார்..! பிரித்தானியா பிரதமர் ஆண்டி பர்ன்ஹாம் அதிரடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/britain-s-new-prime-minister-criticizes-trump-1785068478"></link>
            <id>https://tamilwin.com/article/britain-s-new-prime-minister-criticizes-trump-1785068478</id>
            <summary type="text">பிரித்தானியாவின் தேசியப் பாதுகாப்பையும், உரிமைகளையும் பாதுகாக்க தேவைப்பட்டால் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புக்கு எதிராகவும் பேச தயாராக இருப்பதாக...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரித்தானியாவின் தேசியப் பாதுகாப்பையும், உரிமைகளையும் பாதுகாக்க தேவைப்பட்டால் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புக்கு எதிராகவும் பேச தயாராக இருப்பதாக 
பிரித்தானிய புதிய பிரதமர் ஆண்டி பர்ன்ஹாம் தெரிவித்துள்ளார். </p><p>


பதவியேற்ற பின்னர், சர்வதேச ஊடகமொன்று வழங்கிய நேர்காணல் ஒன்றில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p> </p><h2>


எதிராகவும் பேச தயார்..
</h2><p>
அவர் மேலும் தெரிவிக்கையில்,
</p><p>
டொனால்ட் ட்ரம்புடன் தனது முதல் தொலைபேசி உரையாடல் மிகவும் சுமுகமாக இருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c3503eda-5f0a-4f08-8551-d8bba1e4d878/26-6a660d6490d2d.webp' /></p><p> </p><p>

உலகம் வேகமாக மாறிக்கொண்டிருக்கும் நிலையில், சூழ்நிலைகளுக்கு ஏற்ப நாம் முடிவுகளை எடுக்க வேண்டும்.</p><p>

 பிரித்தானியாவுக்கு எது சரி என்று நான் உணரும் போதெல்லாம், ட்ரம்பின் கருத்திலிருந்து மாறுபட்ட நிலைப்பாட்டைக் கொண்டிருக்கவும், அதனை வெளிப்படுத்தவும் தயங்க மாட்டேன்.</p><p> 

எந்தவொரு தலைவரும் முதலில் தங்களது நாட்டின் தேசிய நலன்களைப் பாதுகாக்க வேண்டும். அந்தப் பொறுப்பை முறையாக நிறைவேற்றுவதற்கு அதுவே அவசியம். 

ட்ரம்ப் ஈரானுடன் உருவாக்கியுள்ள மோதல் சூழ்நிலை கவலையளிக்கின்றது என்றார்.</p><p></p><p></p><p> 
</p>]]></content>
            <updated>2026-07-26T13:36:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுட்டுக்கொல்லப்பட்ட உணவக உரிமையாளர் ; அம்பலமான திடுக்கிடும் பின்னணி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/restaurant-owner-shot-dead-in-attack-1785071959"></link>
            <id>https://jvpnews.com/article/restaurant-owner-shot-dead-in-attack-1785071959</id>
            <summary type="text">பெல்லன்வில உணவக உரிமையாளரைச் சுட்டுக்கொன்ற துப்பாக்கிச்சூடு நடத்தியவர் இராணுவத்திலிருந்து தப்பிச் சென்ற ஒருவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர் மி...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">பெல்லன்வில உணவக உரிமையாளரைச் சுட்டுக்கொன்ற துப்பாக்கிச்சூடு நடத்தியவர் இராணுவத்திலிருந்து தப்பிச் சென்ற ஒருவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர் மின்னேரியா இராணுவ முகாமிலிருந்து துப்பாக்கிகளைக் கடத்திய சம்பவத்தின் சந்தேகநபர் எனத் தெரியவந்துள்ளது.
</p><p style="text-align: justify; ">
 

பெல்லன்வில பகுதியில் உணவக உரிமையாளர் ஒருவரை நேற்று (25) இரவில் சுட்டுக்கொன்ற சம்பவத்துடன் தொடர்புடைய இரு சந்தேகநபர்களை நவகமுவ பொது மயானத்திற்கு அருகில் வைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3b5fbb4a-24bf-4d7e-99ee-c800c0072e09/26-6a660958bd2f6.webp' /></p><h2 style="text-align: justify; ">&nbsp;துப்பாக்கிச் சூடு</h2><p>
</p><p style="text-align: justify; ">
 

தெஹிவளை - பொரலஸ்கமுவ வீதியில் பெல்லன்வில நடைபாதை நுழைவாயிலுக்கு எதிரில் உள்ள உணவகத்திற்கு அருகில் நேற்று இரவு 7.45 மணியளவில் இந்தத் துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது.</p><p style="text-align: justify; ">

 

ஸ்கூட்டர் ரக மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், குறித்த உணவக உரிமையாளரை இலக்கு வைத்துத் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.
</p><p style="text-align: justify; ">
 

துப்பாக்கிச் சூடு நடந்த வேளையில், உணவக உரிமையாளர் உணவகத்திற்கு வெளியே சிகரெட் புகைத்துக் கொண்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
</p><p style="text-align: justify; ">
 

இதன்போது அவரது வயிற்றுப் பகுதியில் காயமேற்பட்டதையடுத்து, அவர் உணவகத்திற்குள் ஓடிச் சென்றுள்ளார்.

 

பின்னர் அவர் களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், காயங்களின் தீவிரத்தன்மை காரணமாக உயிரிழந்தார்.
</p><p style="text-align: justify; ">
 

இவ்வாறு உயிரிழந்தவர் உணவகத்தின் உரிமையாளரான மல்லவ ஆரச்சிகே நெல்சன் சுதத் அமரசிங்க எனப்படும் 55 வயதுடைய நபராவார்.

 

நேற்று இரவே சம்பவ இடத்திற்கு வந்த பொரலஸ்கமுவ பொலிஸார், கல்கிஸ்ஸ குற்றப் புலனாய்வுப் பிரிவு உள்ளிட்ட பல குழுக்கள் விசாரணைகளைத் தொடங்கின.</p><p style="text-align: justify; ">

 

முதற்கட்ட விசாரணைகளில், உயிரிழந்த உணவக உரிமையாளர் 'கொஸ் மல்லி' எனப்படும் திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் நபரின் உறவினர் எனத் தெரியவந்துள்ளது.

 

அதற்கமைய, கொஸ் மல்லியின் எதிர்த்தரப்பான 'சண்டோ' அல்லது 'அசங்க' என்பவர்களே இத்துப்பாக்கிச் சூட்டை வழிநடத்தியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.</p><p style="text-align: justify; ">

 

விசாரணைகளைத் தொடங்கிய பொலிஸார், துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டுத் தப்பிச் சென்ற ஸ்கூட்டர் ரக மோட்டார் சைக்கிள் குறித்த தகவல்களை ஏனைய பகுதி பொலிஸ் சோதனைக் சாவடிகளில் கடமையிலிருந்த பொலிஸ் அதிகாரிகளுக்கு அறிவித்தனர்.
</p><p style="text-align: justify; ">
 

அதற்கமைய, குறித்த தகவல்களுக்குப் பொருத்தமான மோட்டார் சைக்கிளும் இரு நபர்களும் நவகமுவ பகுதியில் நடமாடுவதைக் கண்ட பொலிஸ் அதிகாரிகள் அவர்களைப் பின்தொடர்ந்துள்ளனர்.
</p><p style="text-align: justify; ">
 

அப்போது, குறித்த இருவரும் தங்கள் மோட்டார் சைக்கிளை நவகமுவ, நிஸ்சரண சித்பிம பொது மயானத்திற்கு அருகில் நிறுத்திவிட்டு, முகமூடிகள் மற்றும் கையுறைகளைக் கழற்றிவிட்டு அவ்விடத்திலிருந்து புறப்படத் தயாராக இருந்ததைக் கண்டறிந்துள்ளனர்.</p><p style="text-align: justify; ">

 

இரு சந்தேகநபர்களையும் கைது செய்த பொலிஸார் சோதனையிட்டபோது அவர்களிடமிருந்து 'ஐஸ்' போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதுடன், அவர்களின் கைபேசிகளைப் பரிசோதித்தபோது பெல்லன்வில கொலை தொடர்பான குரல் பதிவுகளும் கண்டுபிடிக்கப்பட்டன.
</p><p style="text-align: justify; ">
 

அதனைத் தொடர்ந்து கொலைச் சம்பவம் தொடர்பில் அவ்விருவரும் உடனடியாகக் கைது செய்யப்பட்டனர்.

 

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரையும் இன்று கடுவலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, மேலும் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்ய அனுமதி பெறப்படவுள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-26T13:30:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[3 நாட்களில் உலகளவில் ஜனநாயகன் திரைப்படம் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/3-days-box-office-of-jananayagan-movie-1785061243"></link>
            <id>https://viduppu.com/article/3-days-box-office-of-jananayagan-movie-1785061243</id>
            <summary type="text">பிரம்மாண்ட பொருட்செலவில் இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வெளிவந்துள்ள திரைப்படம் ஜனநாயகன்.

பல தடைகளை தாண்டி வெளிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரம்மாண்ட பொருட்செலவில் இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வெளிவந்துள்ள திரைப்படம் ஜனநாயகன்.
</p><p>
பல தடைகளை தாண்டி வெளியாகியுள்ள இப்படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். அதே போல், கலவையான விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டு வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c4e23262-b931-40f5-b786-276a6d4523f7/26-6a65df7e63cdb.webp' /></p><p>

இந்த நிலையில், 3 நாட்களில் ஜனநாயகன் திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.</p><p> 

அதன்படி, 3 நாட்களில் உலகளவில் இப்படம் ரூ. 165 கோடி வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் எவ்வளவு வசூல் செய்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-26T13:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலகக் கிண்ண விதிவிலக்கினால் தண்டனையிலிருந்து தப்பிய லியோனல் மெஸ்ஸி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/messi-escaped-suspension-world-cup-rule-exception-1785071462"></link>
            <id>https://tamilwin.com/article/messi-escaped-suspension-world-cup-rule-exception-1785071462</id>
            <summary type="text">அர்ஜென்டினா (Argentina) கால்பந்து அணியின் நட்சத்திர வீரரான லியோனல் மெஸ்ஸி, வரவிருக்கும்
மேஜர் லீக் சாக்கர் (MLS) ஆல்-ஸ்டார் போட்டியில் பங்கேற்காத போத...</summary>
            <content type="html"><![CDATA[<p>அர்ஜென்டினா (Argentina) கால்பந்து அணியின் நட்சத்திர வீரரான லியோனல் மெஸ்ஸி, வரவிருக்கும்
மேஜர் லீக் சாக்கர் (MLS) ஆல்-ஸ்டார் போட்டியில் பங்கேற்காத போதிலும், எந்தவித
இடைநீக்கம் அல்லது ஒழுங்கு நடவடிக்கையும் இன்றி தப்பியுள்ளார்.
</p><p>
வழக்கமாக எம்.எல்.எஸ் ஆல்-ஸ்டார் போட்டியில் பங்கேற்கத் தவறினால் ஒரு
போட்டியில் விளையாடத் தடை விதிக்கப்படும் என்ற விதிமுறை நடைமுறையில் உள்ளது.</p><p></p><h2>உலகக் கிண்ண விதி</h2><p>

ஆனால், 2026-ஆம் ஆண்டு சீசனுக்கு முன்பாகவே எம்.எல்.எஸ் நிர்வாகம் மற்றும்
வீரர்கள் சங்கம் (MLSPA) இடையே எட்டப்பட்ட சிறப்பு ஒப்பந்தத்தின்படி, உலகக்
கிண்ணத் தொடரின் இறுதிச் சுற்றுகள் வரை விளையாடிய வீரர்களுக்குப் போதிய ஓய்வு
மற்றும் பயிற்சியில் மீண்டும் இணைவதற்கான அவகாசம் வழங்குவது குறித்து
அணிகளுடன் பேசி முடிவெடுக்க அனுமதி அளிக்கப்பட்டது.

​</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/09981427-2699-475a-87d1-6b186264bc34/26-6a660b5c12559.webp' /></p><p>இதன் காரணமாக, சமீபத்தில் முடிவடைந்த உலகக் கிண்ணத் தொடரின் இறுதிப்போட்டி
வரை அர்ஜென்டினா (Argentina) அணிக்காக விளையாடிய லியோனல் மெஸ்ஸி மற்றும் அவரது சக வீரர்
ரோட்ரிகோ டி போல் ஆகிய இருவருக்கும் சார்லட்டில் நடைபெறவுள்ள 30ஆவது
ஆல்-ஸ்டார் போட்டியில் இருந்து உத்தியோகபூர்வமாக விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
</p><p>
கடந்த 2025-ஆம் ஆண்டு போதிய மருத்துவக் காரணங்களின்றி கடைசி நேரத்தில்
போட்டியில் இருந்து விலகியதற்காக மெஸ்ஸிக்கு ஒரு போட்டித் தடை
விதிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த முறை முன்கூட்டியே முறைப்படி பெறப்பட்ட
விலக்கு காரணமாக ஒழுங்கு நடவடிக்கை ஏதும் இன்றி அவர் தப்பியுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-26T13:28:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹோரர்முஸ் நீரிணையில் கண்ணிவெடியில் சிக்கி சிதறியது எண்ணெய் கப்பல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/oil-tanker-explodes-in-strait-of-hormuz-1785071107"></link>
            <id>https://ibctamil.com/article/oil-tanker-explodes-in-strait-of-hormuz-1785071107</id>
            <summary type="text">ஈரான் நிர்ணயித்த வழித்தடத்திலிருந்து விலகிச் சென்றபோது, ஹோரர்முஸ் நீரிணையில் விதைக்கப்பட்டிருந்த கடற்படை கண்ணிவெடியில் மோதியதால் எண்ணெய் கப்பல் ஒன்று ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரான் நிர்ணயித்த வழித்தடத்திலிருந்து விலகிச் சென்றபோது, ஹோரர்முஸ் நீரிணையில் விதைக்கப்பட்டிருந்த கடற்படை கண்ணிவெடியில் மோதியதால் எண்ணெய் கப்பல் ஒன்று வெடித்ததாக ஈரானிய ஊடகங்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை செய்தி வெளியிட்டன.</p><p>அரசு சாரா மெஹர் செய்தி நிறுவனத்தின்படி, அந்த முக்கியத்துவம் வாய்ந்த நீர்வழியில் கண்ணிவெடியில் மோதுவதற்கு முன்பு, ஈரான் நிர்ணயித்த வழித்தடத்திலிருந்து அந்த எண்ணெய் கப்பல் விலகிச் சென்றதாக, நம்பகமான ஒரு வட்டாரம் டெஃபாபிரஸ் செய்தி இணையதளத்திடம் தெரிவித்துள்ளது.</p><h2>தெஹ்ரான் நிர்ணயித்த வழித்தடங்கள் மூலம் மட்டுமே அனுமதி</h2><p>

உயிரிழப்புகள், கப்பலின் அடையாளம் அல்லது சேதத்தின் அளவு குறித்த எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/899d3033-07df-4baf-9006-68644ae9277c/26-6a660af68f609.webp' /></p><p>
</p><p>
ஜூன் 26 அன்று, ஹோரர்முஸ் நீரிணை வழியாகச் செல்வது தெஹ்ரான் நிர்ணயித்த வழித்தடங்கள் மூலம் மட்டுமே அனுமதிக்கப்படும் என்று ஈரான் எச்சரித்தது.
</p><p>

வோஷிங்டன், ஹோர்முஸ் நீரிணை வழியாகத் தடையற்ற போக்குவரத்திற்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில், தெஹ்ரான் தனது கடற்கரைக்கு அருகிலுள்ள ஒரு கால்வாய் வழியாக, ஈரானால் நிர்வகிக்கப்படும் வழிசெலுத்தல் பொறிமுறையின் கீழ் கப்பல்கள் பயணிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது.&nbsp;&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-26T13:26:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[முடி உதிர்வை தடுக்க உதவும் சூறை மீன்.., கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/health-benefits-of-eating-soorai-fish-in-tamil-1785049453"></link>
            <id>https://manithan.com/article/health-benefits-of-eating-soorai-fish-in-tamil-1785049453</id>
            <summary type="text">மீன் சாப்பிடுவது உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் மிகவும் நல்லது.

மீன்களில் உயர்தர புரதம், ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், வைட்டமின் டி மற்றும் பி1...</summary>
            <content type="html"><![CDATA[<p>மீன் சாப்பிடுவது உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் மிகவும் நல்லது.
</p><p>
மீன்களில் உயர்தர புரதம், ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், வைட்டமின் டி மற்றும் பி12 போன்ற அத்தியாவசிய சத்துக்கள் நிறைந்துள்ளன.
</p><p>
அந்தவகையில், குறைந்த விலையில் கிடைக்கும் சூரை மீன் ஊட்டச்சத்து நிறைந்த உணவாக கருதப்படுகிறது.
</p><p>
இந்தியப் பெருங்கடல் மற்றும் மேற்கு பசிபிக் பெருங்கடல் பகுதிகளில் சூரை மீன்கள் அதிகமாகக் காணப்படுகின்றன.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/65a2b2dc-97e7-4ec3-9063-619f6736dfdc/26-6a65b2049a45f.webp' /></p><p>சூரை மீனில் அதிகளவு புரதம், வைட்டமின் டி, வைட்டமின் பி12, நியாசின், செலினியம், வைட்டமின் பி6 மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன.&nbsp;</p><p>அதாவது, 85 கிராம் சூரை மீனில் சுமார் 21 கிராம் புரதம் இருப்பதாக கூறப்படுகிறது.
</p><p>
சூரை மீனில் உள்ள கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு உதவுகின்றன. </p><p>

மேலும், நியாசின் மற்றும் செலினியம் போன்ற சத்துக்கள் முடி வளர்ச்சிக்கும் பயனுள்ளதாக இருக்கும்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f8bc7b22-ea65-4b34-8758-7cad7b01cc6f/26-6a65b2058300f.webp' /></p><p>இது உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் குறைக்கவும், ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தவும் உதவக்கூடும் என்பதால் இதய ஆரோக்கியத்திற்கும் நன்மை தரும்.</p><p>இதில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் கண் ஆரோக்கியத்திற்கும், மன அழுத்தத்தை குறைக்கவும் உதவக்கூடும் என கூறப்படுகிறது.
</p><p>
வஞ்சிரம் போன்ற விலை உயர்ந்த மீன்களுடன் ஒப்பிடும்போது, சூரை மீன் குறைந்த விலையில் கிடைக்கிறது.</p>]]></content>
            <updated>2026-07-26T13:23:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இத்தாலியிலிருந்து சூட்சுமமாக கொண்டுவரப்பட்ட உலோகக் கூடுகள் - இலங்கை சகோதரர்களுக்கு நேர்ந்த கதி..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/64-pigeons-rescued-from-katunayake-flight-1785071688"></link>
            <id>https://tamilwin.com/article/64-pigeons-rescued-from-katunayake-flight-1785071688</id>
            <summary type="text">கட்டுநாயக்க - பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 64 புறாக்களை சட்டவிரோதமாக கொண்டு வர முயன்ற சகோதரர்கள் இருவருக்கு சுங்க பிரிவினரால் 5 இலட்சம் ரூபா...</summary>
            <content type="html"><![CDATA[<p>கட்டுநாயக்க - பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 64 புறாக்களை சட்டவிரோதமாக கொண்டு வர முயன்ற சகோதரர்கள் இருவருக்கு சுங்க பிரிவினரால் 5 இலட்சம் ரூபாய் தண்டப்பணம் அறிவிடப்பட்டுள்ளது.</p><p> 


சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,</p><p>கட்டுநாயக்க&nbsp; விமான நிலையத்தில் 64 புறாக்களை சட்டவிரோதமாக கொண்டு வர இரண்டு சகோதரர்கள் முற்பட்டுள்ளனர்.</p><p></p><p> 

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் வென்னப்புவ பகுதியைச் சேர்ந்த 38 மற்றும் 42 வயதுடையவர்கள் என விசாரணையில் தெரியவந்துள்ளது.</p><p> 

இவர்கள் இத்தாலியிலிருந்து எமிரேட்ஸ் நிறுவனத்தின் EK652 விமானம் மூலம் நேற்று( 25.07.2026) சனிக்கிழமை இரவு 7:15 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தைச் வந்தடைந்துள்ளனர்.
</p><h2>
திருப்பி அனுப்பப்பட்ட புறாக்கள்</h2><p>
இதன்போது, கிரீன் சேனல் வழியூடாக வெளியேற முயன்ற நிலையில், அவர்களின் 8 பயணப் பெட்டிகளைச் சுங்க அதிகாரிகள் சோதனையிட்டுள்ளனர். அதற்குள் 12 உலோகக் கூண்டுகளில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 64 புறாக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2c8c4457-5a83-425c-ba88-654d69eeb290/26-6a66099091664.webp' /></p><p>
</p><p>
இவ்வாறு கைப்பற்றப்பட்ட புறாக்களின் பெறுமதி சுமார் 3,431,400 ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.
</p><p>
போதிய காற்றோட்டம் மற்றும் முறையான பராமரிப்பு இல்லாததால், கடத்தி வரப்பட்ட புறாக்களில் 8 புறாக்கள் கூண்டுகளுக்குள்ளேயே உயிரிழந்திருந்துள்ளன.</p><p>

சுங்கப் விசாரணைகளின் முடிவில், குற்றவாளியாகக் காணப்பட்ட ஒரு சகோதரருக்கு 4,00,000 ரூபாய், மற்றையவருக்கு 100,000 ரூபாய் என மொத்தம் ரூ. 5,00,000 தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.

உயிருடன் மீட்டெடுக்கப்பட்ட எஞ்சிய புறாக்களை உடனடியாக மீண்டும் இத்தாலிக்கே திருப்பி அனுப்புமாறு இலங்கை சுங்கப் பிரிவினர் உத்தரவிட்டுள்ளனர்.&nbsp;&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-26T13:21:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[பூமிக்கு திரும்பிய Soyuz MS -28 விண்கலம்: 241 நாட்கள் வெற்றிகரமாக முடிந்த விண்வெளி பயணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/soyuz-ms-28-crew-return-back-on-earth-1785071873"></link>
            <id>https://news.lankasri.com/article/soyuz-ms-28-crew-return-back-on-earth-1785071873</id>
            <summary type="text">241 நாட்கள் விண்வெளி பயணத்தை முடித்துவிட்டு சோயுஸ் எம்.எஸ் 28 விண்கலம் வெற்றிகரமாக பூமிக்கு திரும்பியுள்ளது. பூமிக்கு திரும்பிய Soyuz MS -28
ரஷ்யாவின...</summary>
            <content type="html"><![CDATA[<p>241 நாட்கள் விண்வெளி பயணத்தை முடித்துவிட்டு சோயுஸ் எம்.எஸ் 28 விண்கலம் வெற்றிகரமாக பூமிக்கு திரும்பியுள்ளது.</p><h2> பூமிக்கு திரும்பிய Soyuz MS -28</h2><p>
ரஷ்யாவின் சோயுஸ் எம்.எஸ் 28(Soyuz MS -28) ரக விண்கலம் கஜகஸ்தானில் பாதுகாப்பாக தரையிறங்கியுள்ளது.</p><p> இந்த விண்கலத்தில் பயணம் செய்து 3 விண்வெளி வீரர்களும் பத்திரமாக பூமிக்கு திரும்பியுள்ளதாக ஞாயிற்றுக்கிழமை நாசா அறிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f414c54d-2cc2-4979-9d90-484d76431f41/26-6a66090361249.webp' /></p><p>கடந்த 2025ம் ஆண்டு நவம்பர் 27ம் திகதி நாசா விண்வெளி வீரர் கிரிஸ் வில்லியம்ஸ் மற்றும் ரஷ்யாவின் ரோஸ்காஸ்மாஸ் விண்வெளி வீரர் செர்கெய் குட் ஸ்வெர்ச்ச்கோவ், செர்கெய் மிகாயேவ் ஆகியோர் சோயுஸ் எம்.எஸ் 28 விண்கலத்தில் தங்களது விண்வெளி பயணத்தை தொடங்கினர்.</p><p></p><p> கிட்டத்தட்ட 241 நாட்களுக்கு பிறகு இவர்களின் விண்வெளிப் பயணம் வெற்றிகரமாக தற்போது நிறைவுக்கு வந்துள்ளது.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Soyuz MS-28 lands in Kazakhstan, ending its 8 month long mission <a href="https://t.co/LvQfl9JZzq">https://t.co/LvQfl9JZzq</a> <a href="https://t.co/dA38TSgCuo">pic.twitter.com/dA38TSgCuo</a></p>&mdash; afec7032 🇷🇺 (@afec7032) <a href="https://x.com/afec7032/status/2081325865179214191?ref_src=twsrc%5Etfw">July 26, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><h2> படைத்துள்ள சாதனை</h2><p>விண்வெளி வீரர் குழுவினர் தங்களது 241 நாள் விண்வெளி பயணத்தில் 3,856 முறை பூமியின் சுற்றுவட்டப் பாதையை சுற்றி வந்துள்ளனர்.</p><p> குழுவினர் கிட்டத்தட்ட 102 மில்லியன் மைல்களுக்கு மேல் கடந்து பயணம் செய்துள்ளனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p>&nbsp;<br></p>]]></content>
            <updated>2026-07-26T13:18:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[சகித்துக்கொள்ள முடியாதவை: சுட்டு வீழ்த்திய விமானி - கொந்தளித்த ஜனாதிபதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/romania-shoot-down-russia-drone-president-angry-1785071003"></link>
            <id>https://news.lankasri.com/article/romania-shoot-down-russia-drone-president-angry-1785071003</id>
            <summary type="text">ரஷ்யாவின் மூன்றாவது ட்ரோன் விமானத்தை ரோமேனியா சுட்டு வீழ்த்தியது.டானூப் நதிக்கு அப்பால்&amp;nbsp;

ரோமேனியா, உக்ரைனுடன் 650 கிலோமீற்றர் நில எல்லையைப் பக...</summary>
            <content type="html"><![CDATA[<p>ரஷ்யாவின் மூன்றாவது ட்ரோன் விமானத்தை ரோமேனியா சுட்டு வீழ்த்தியது.</p><h2>டானூப் நதிக்கு அப்பால்&nbsp;</h2><p>

ரோமேனியா, உக்ரைனுடன் 650 கிலோமீற்றர் நில எல்லையைப் பகிர்ந்து கொள்கின்றன.</p><p> 

 </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/10a4f4b7-e04a-4b02-9469-74afde9d5b78/26-6a66093806be4.webp' />&nbsp;</p><p></p><p>நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக ரஷ்யாவின் தாக்குதல் நடப்பதில், அதன் விமானங்கள் வான்வெளியை மீண்டும் மீண்டும் மீறி வந்துள்ளன.</p><p>இந்த நிலையில், டானூப் நதிக்கு அப்பால் உள்ள உக்ரேனிய துறைமுகங்கள் மீதான தாக்குதல்களை ரஷ்யா தீவிரப்படுத்தி வரும்போது, கருங்கடலுக்கு மேலே பறந்த ட்ரோன் விமானத்தை ரோமேனிய இராணுவம் சுட்டு வீழ்த்தியது.
</p><h2>
ஜனாதிபதி நிகுசர் டான்</h2><p>வெள்ளிக்கிழமை வரை ரோமேனியா எந்த ட்ரோன் விமானத்தையும் அழிக்காத நிலையில், ரோமேனிய விமானி ஒருவர் மக்கள் வசிக்காத பகுதியில் ஒன்றை பாதுகாப்பாக வீழ்த்தினார். </p><p>

இதன்மூலம் மொத்தமாக மூன்று நாட்களில் 3 ட்ரோன் விமானங்களை ரோமேனியா வீழ்த்தியுள்ளது.
</p><p>
ரோமேனிய ஜனாதிபதி நிகுசர் டான், "நேட்டோ உறுப்பு நாட்டின் வான்வெளியை தொடர்ச்சியாக மீறி வரும் செயல்களில் இதுவும் ஒன்றாகும். இந்த மீறல்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை மற்றும் சகித்துக்கொள்ள முடியாதவை" என தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cde982a7-4d71-4209-99d2-e6bd9ba75de5/26-6a660938d279a.webp' />&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/40472bc7-e266-4597-a26e-19ed27c07f6b/26-6a660b4a275bd.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-26T13:17:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[தித்திக்கும் சுவையில் தேங்காய் போளி.., எப்படி செய்வது?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/coconut-poli-recipe-in-tamil-1785070934"></link>
            <id>https://news.lankasri.com/article/coconut-poli-recipe-in-tamil-1785070934</id>
            <summary type="text">போளி தென்னிந்தியாவில் மிகவும் பிரபலமான மாலை நேர சிற்றுண்டி.
அந்தவகையில், தித்திக்கும் சுவையில் தேங்காய் போளி இலகுவாக எப்படி செய்வது என்று பார்க்கலாம்...</summary>
            <content type="html"><![CDATA[<p>போளி தென்னிந்தியாவில் மிகவும் பிரபலமான மாலை நேர சிற்றுண்டி.
</p><p>அந்தவகையில், தித்திக்கும் சுவையில் தேங்காய் போளி இலகுவாக எப்படி செய்வது என்று பார்க்கலாம்.</p><p></p><h2>



தேவையான பொருட்கள்</h2><ul><li>
மைதா- 250g
</li><li>உப்பு- 1 சிட்டிகை</li><li>
மஞ்சள் தூள்- 1 சிட்டிகை</li><li>
நல்லெண்ணெய்- 100ml
</li><li>வெல்லம்- 75g
</li><li>தேங்காய்- 1
</li><li>ஏலக்காய் தூள்- 1 சிட்டிகை
</li><li>சுக்கு தூள்- 1 சிட்டிகை</li><li>
நெய்- 1 ஸ்பூன்</li></ul><h2>செய்முறை
</h2><p>முதலில் ஒரு பாத்திரத்தில் மைதா, உப்பு, மஞ்சள் தூள், நல்லெண்ணெய் மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து பிணைந்துகொள்ளவும்.
</p><p>
பின் ஒரு வாணலில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கொதித்ததும் அதில் வெல்லம் சேர்த்து பாகு காய்ச்சவும்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b5b88e78-6bbf-4ae8-bedb-2fda5bd744fa/26-6a660558ade00.webp' /></p><p>அடுத்து இதில் தேங்காய் துருவல், ஏலக்காய் தூள், சுக்கு தூள், உப்பு சேர்த்து வதக்கி கெட்டியாகி வந்ததும் இதனை ஆறவைக்கவும்.</p><p>

இதனைதொடர்ந்து பிணைந்து வைத்து மாவை உருண்டையாக உருட்டி அதனுள் வெல்லப்பாகில் வதக்கிய தேங்காயை வைத்து வட்டமாக தேய்க்கவும்.
</p><p>
பின்னர் இதை தவாவில் மிதமான தீயில் நெய் விட்டு சுட்டு எடுத்தால் சுவையான தேங்காய் போளி தயார்.&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-26T13:02:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[விவசாயிகளை இழிவுபடுத்தும் அரசாங்கம் ஒருநாள் வீட்டுக்கு அனுப்பப்படும் - சஜித் முழக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/opposition-leader-sajith-in-anuradhapura-1785070078"></link>
            <id>https://tamilwin.com/article/opposition-leader-sajith-in-anuradhapura-1785070078</id>
            <summary type="text">விவசாயிகளை இழிவுபடுத்தும் தற்போதைய அரசாங்கத்தை ஒருநாள் வீட்டுக்கு அனுப்பப்போவதும்
இந்த விவசாயிகள்தான் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரி...</summary>
            <content type="html"><![CDATA[<p>விவசாயிகளை இழிவுபடுத்தும் தற்போதைய அரசாங்கத்தை ஒருநாள் வீட்டுக்கு அனுப்பப்போவதும்
இந்த விவசாயிகள்தான் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
</p><p>
அநுராதபுரம் மாவட்டம், மிஹிந்தலை தேர்தல் தொகுதி, நாச்சியாதீவு பிரதேசத்தில்
நேற்று நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர்
மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
</p><p>
அவர் மேலும் தெரிவிக்கையில், இன்று நெற்செய்கை உள்ளிட்ட விவசாயத் துறையில் ஈடுபட்டுள்ள மக்கள் பெரும்
அதிர்ச்சிக்குள்ளாகி பல்வேறு அநீதிகளை எதிர்கொண்டு வருகின்றனர். பல சவால்கள்
மற்றும் துயரங்களுக்கு மத்தியில் வாழ்ந்துவரும் இவர்கள், பிள்ளைகளின்
கல்விக்குக் கூட வலுவூட்ட முடியாதவாறு தற்போதைய அரசு விவசாயத்தை அழிக்கும்
கொள்கையில் ஈடுபட்டுள்ளது.</p><p></p><h2>தரமற்ற உரம்</h2><p>

நகைநட்டுக்களை அடகு வைத்து, வட்டிக்குப் பணம் பெற்று விவசாயத்தைத்
தொடங்கினாலும், இன்று விவசாயத்துக்குத் தேவையான தரமான விதைநெல் இல்லை. உரிய
நேரத்தில் உர மானியமும் கிடைப்பதில்லை. கிடைக்கும் உரமும் தரமற்றதாகக்
காணப்படுகின்றது. விவசாய இரசாயனங்கள், உரம் மற்றும் விவசாய உபகரணங்களின்
விலைகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.
</p><p>
விவசாயியை இவர்கள் கடவுள் என்று கூறினாலும், விவசாய உபகரணங்களுக்கு அரசாங்கம்
வட் வரியை விதித்து வருகின்றது.

யானை - மனித மோதல் உள்ளிட்ட பல சிக்கல்களுக்கு மத்தியில் அறுவடை செய்தாலும்,
அவ்வாறு பெறப்படும் அறுவடைக்கு நியாயமான நிலையான குறிப்பிட்ட விலை
கிடைப்பதில்லை. இன்று ஒரு கிலோகிராம் நெல் உற்பத்தி செய்வதற்கு 137 ரூபா செலவாவதாக
விவசாய அமைச்சரே கூறிவிட்டு, நிலையான விலையை 120 ரூபாவாக ஆக்கியுள்ளார். </p><p>இந்த
அரசின் அமைச்சர்களுக்குத் தேர்தல் காலத்தில் விவசாயி ராஜாவாகத் தெரிந்தாலும்,
தேர்தலின் பின்னர் விவசாயிகள் நட்டமடைய வேண்டும் என்றே எதிர்பார்க்கின்றனர்.

அன்று 5000 ரூபா உரம் வேண்டாம் என்று கூறி அநுரகுமார திஸாநாயக்கவை
ஜனாதிபதியாக்கி இறுதியில் விவசாயிகள் துயரப்படுகின்றனர். அரசின் திறைசேரியில்
பணம் நிரம்பியிருந்தும் உரிய நிவாரணங்களை விவசாயிகளுக்குப் பெற்றுக்கொடுக்க
நடவடிக்கை எடுக்கவில்லை.</p><p></p><h2>இறக்குமதி செய்யப்பட்ட அரிசி</h2><p> </p><p>விவசாயியை கடவுள் என்று கூறி அதிகாரத்தைக்
கைப்பற்றிவிட்டு, இன்று விவசாயியைக் 'கசிப்புக்காரன்' என அரசு கூறி வருகின்றது.

இந்திய உச்சநீதிமன்ற நீதிபதி அங்கு வேலையின்றி அவதியுறும் இளைஞர்களைக்
'கரையான்கள்' என அழைத்தமையால், இளைஞர்கள் ஒன்றிணைந்து கரப்பான் பூச்சி மக்கள்
கட்சியை ஆரம்பித்து மேற்கொண்ட புரட்சி புதுடில்லி வரை வந்த காரணத்தால்
இந்தியக் கல்வி அமைச்சர் வேலையை விட்டு சென்றுள்ளதை போல், நமது நாட்டு
விவசாயிகளை 'கசிப்புக்காரன்' என அழைக்கும், செயற்கை விவசாயிகள் என அவமதிக்கும்
இந்த அரசாங்கத்தின் முடிவை இந்த விவசாய சமூகமே ஒருநாள் தீர்மானிக்கும்.
</p><p>
இன்று நெற்களஞ்சியங்கள் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட அரிசியால்
நிறைந்துபோயுள்ளன. நிலையான விலையைப் பேணிப் பாதுகாப்பதற்கு நுண், சிறிய
மற்றும் நடுத்தர அரிசி ஆலை உரிமையாளர்களைப் பாதுகாக்க வேண்டும். இன்று அவர்கள்
கடன் செலுத்தாதோர் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதால், இந்தச் சிறிய
அளவிலான அரிசி ஆலை உரிமையாளர்களைப் பாதுகாக்க வேண்டியது அரசின் பொறுப்பாகும்.</p><p>
உள்நாட்டு விவசாயிகளைப் பாதுகாப்பதாகக் கூறிய இந்த அரசு வெளிநாடுகளிலிருந்து
அரிசியை இறக்குமதி செய்து இங்குள்ள களஞ்சியங்களை நிரப்பியுள்ளது.

பெலவத்த கட்சி அலுவலகமே இன்று அரசின் சகல பதவிகளையும் தீர்மானித்து
வருகின்றது. இன்று விவசாய அமைச்சரால் விவசாயிகளைச் சந்திக்க முடியாத நிலை
ஏற்பட்டுள்ளது. இவர்கள் ஆரம்பம் முதலே விவசாய சங்கங்கள், இளைஞர் கழகங்கள்,
சிவில் பாதுகாப்புக் குழுக்களுக்கான உறுப்புரிமைகள் மற்றும் பதவிகள் என
சகலதையும் பெலவத்த கட்சி அலுவலகத்திலிருந்தே தீர்மானித்து வந்தனர்.</p><p></p><h2>நியாயமான விலையில் மூலதனம்</h2><p>
</p><p>எல்லாவற்றையும் பெலவத்த அரசியலுக்கு உட்படுத்தவே இந்த அரசாங்கம் முற்பட்டு
வருகின்றது.

ஐக்கிய மக்கள் சக்தி அரசின் கீழ் விவசாயிகளை நவீன தொழில்நுட்பத்தால்
வலுப்படுத்தி, சிறிய பரப்பளவிலான காணியிலிருந்து அதிக அறுவடையைப் பெறத்
தேவையான வசதிகளை ஏற்படுத்தித் தருவதுடன், நியாயமான விலையில் மூலதனத்தையும்
பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்போம்.
</p><p>
அன்று ஜே.ஆர். ஜயவர்தனவின் காலத்தில் விவசாயக் கடன் வழங்கப்பட்ட போதிலும்,
இப்போது அந்தக்கடன் வசதிகள் வழங்கப்படுவதில்லை. கிராமத்திலுள்ள வட்டி
வியாபாரிகளே இன்று விவசாயக் கடன்களை வழங்கி வருகின்றனர். ஆகவே, சொந்த காலில்
நின்று விவசாயத்தை மேற்கொள்ள மூலதனத்தையும் நிதிசார் பக்கபலத்தையும்
பெற்றுக்கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இன்றும் கூட விவசாயிக்காக ஐக்கிய மக்கள் சக்தியே தொடர்ச்சியாகக் குரல்
கொடுத்து வருகின்றது.
</p><p>
கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் விவசாயிகளுக்காகவும், விவசாயிகளின் உரிமைகள்
மற்றும் நிலையான விலைக்காகவும் ஐக்கிய மக்கள் சக்தியே குரல் கொடுத்தது.
அதனால்தான் இன்றும் மக்கள் தமது பிரச்சினைகளை எதிர்க்கட்சித் தலைவரிடம்
முன்வைத்து வருகின்றனர். அதிகாரம் இல்லாவிட்டாலும் இன்றும் எதிர்க்கட்சியில்
இருந்துகொண்டு மக்களுக்குச் சேவை செய்வது ஐக்கிய மக்கள் சக்தியே என்றார்.</p>]]></content>
            <updated>2026-07-26T13:01:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பில் மட்டும் 258 தீ விபத்து சம்பவங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/colombo-records-258-fire-incidents-alone-1785070639"></link>
            <id>https://jvpnews.com/article/colombo-records-258-fire-incidents-alone-1785070639</id>
            <summary type="text">ஜனவரி முதல் இதுவரையான காலப்பகுதியில் கொழும்பு உட்பட புறநகர் பகுதிகளில் மட்டும் 258 தீ விபத்து சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தீயணைப்புத் திணைக்களம் தெரிவி...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜனவரி முதல் இதுவரையான காலப்பகுதியில் கொழும்பு உட்பட புறநகர் பகுதிகளில் மட்டும் 258 தீ விபத்து சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தீயணைப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது. </p><p>

அந்தத் தீ விபத்து சம்பவங்களில் மொத்த மீட்பு நடவடிக்கைகளின் எண்ணிக்கை 17 ஆகப் பதிவாகியுள்ளதாகவும் அத்திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a8316148-8ddb-4314-884c-9379fe25fcee/26-6a660431060a9.webp' />&nbsp;</p><h2>&nbsp;தீ விபத்து சம்பவங்கள்&nbsp;</h2><p> </p><p>

கடந்த ஆண்டில் மட்டும் கொழும்பு மாவட்டத்தில் 382 தீ விபத்து சம்பவங்கள் பதிவாகியுள்ளதுடன், அவற்றில் 46 மீட்புச் சம்பவங்களும் பதிவாகியுள்ளன. </p><p>

எவ்வாறாயினும், இந்த ஆண்டின் ஜனவரி முதல் இதுவரையான காலப்பகுதியில் மட்டும் கொழும்பு மாவட்டத்தில் 258 தீ விபத்துச் சம்பவங்கள் பதிவாகியுள்ளமை கவனம் செலுத்தப்பட வேண்டிய ஒரு விடயமாகும் என்றும் அத்திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.</p><p></p><p> </p><p>

மேலும், இந்த ஆண்டில் இதுவரை தீயணைப்பு சேவைத் திணைக்களத்திற்கு 13 அவசர அழைப்புகள் கிடைத்துள்ளதுடன், அந்த அழைப்புகளில் பாதை தடைகள், மரங்கள் முறிந்து விழுதல், வீதி விபத்துக்கள் காரணமாக இடம்பெறும் மீட்பு நடவடிக்கைகளும் அடங்குகின்றன. </p><p>

இந்தத் தீ விபத்துகளுக்கான முக்கிய காரணங்களாகப் பல்வேறு பணி இடங்களில் தீ பாதுகாப்பு நடவடிக்கைகள் இல்லாதிருத்தல், அவசரப் பதிலளிப்பு நடவடிக்கைகளுடன் இணையாதிருத்தல், வீடுகள் மற்றும் பணி இடங்களில் பாதுகாப்பற்ற மின்சாரப் பயன்பாடுகள் மற்றும் வறண்ட வானிலை நிலைமைகள் என்பன செல்வாக்கு செலுத்தியுள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-26T12:57:28+00:00</updated>
        </entry>
    </feed>
