<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-09-05T06:53:01+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானுக்கு எதிராக ட்ரம்பின் புதிய அச்சுறுத்தல்: இலக்கு எதுவென பிரகடனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/trump-threatens-pickaxe-mountain-1788591032"></link>
            <id>https://news.lankasri.com/article/trump-threatens-pickaxe-mountain-1788591032</id>
            <summary type="text">Trump threatens to hit Iran’s Pickaxe Mountain: ஈரானின் பிக்காக்ஸ் மலையைத் தாக்கப்போவதாக ட்ரம்ப் அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.
ஈரானின் முக்கிய அணுசக்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>Trump threatens to hit Iran’s Pickaxe Mountain: ஈரானின் பிக்காக்ஸ் மலையைத் தாக்கப்போவதாக ட்ரம்ப் அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.
</p><p>ஈரானின் முக்கிய அணுசக்தி நிலையமான 'பிக்காக்ஸ் மலை' (Pickaxe Mountain) மீது தாக்குதல் நடத்துவதாக அச்சுறுத்தி வந்த நிலையில், மிக விரைவில் அதன் மீது தாக்குதல் நடத்தக்கூடும் என்று ட்ரம்ப் அறிவித்துள்ளார்.</p><h2>பிக்காக்ஸ் மலை</h2><p>
</p><p>ஈரானுடனான தீவிரமடைந்து வரும் போரை, தங்களுக்கு இது ஒரு அற்பமான விடயம் என்றும் அமெரிக்க ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். </p><p>ஈரான் மீதான புதிய தாக்குதல் தொடர்பில் வெள்ளிக்கிழமை அறிவித்த ட்ரம்ப், பிக்காக்ஸில் ஏதாவது நடந்துகொண்டிருந்தால், நாங்கள் மிக விரைவில் பிக்காக்ஸ் மலையைத் தாக்கக்கூடும் என்றார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a307385e-d0df-4198-a2cd-7bda9b636b13/26-6a9bbbbaa5522.webp' /></p><p> </p><p>மேலும், ஈரனுடனானது போர் அல்ல, வெறும் இராணுவ மோதல் மட்டுமே என்றும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். பிக்காக்ஸ் மலை மீதான தாக்குதல்கள் குறித்து ஆலோசித்து வருவதாக ட்ரம்ப் கடந்த ஜூலை மாதம் கூறியிருந்தார். </p><p>தற்போது மீண்டும் அந்த மலை மீதான தாக்குதல் குறித்து ட்ரம்ப் தீவிரம் காட்டுவதன் பின்னணியில் இஸ்ரேல் இருப்பதாகவே வால் ஸ்ட்ரீட் ஜர்னல் செய்தி வெளியிட்டுள்ளது.</p><p></p><p> </p><p>பிக்காக்ஸ் மலையின் ஆழத்தில் உள்ள சுரங்கங்களுக்குள், ஈரான் ஆயிரக்கணக்கான யுரேனியம் செறிவூட்டும் மையவிலக்கிகளை நகர்த்தியுள்ளதாக இஸ்ரேல் நம்புகிறது. </p><p>இந்த நிலையம், நதன்ஸ் அணுசக்தி நிலையத்திற்கு அருகில், கோலாங் மலைக்குக் கீழே 300 அடிக்கும் அதிகமான ஆழத்தில் அமைந்துள்ளது. இது பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கொண்ட ஒரு தளமாகும்; இங்கு ஆழமாக அமைக்கப்பட்ட இரண்டு சுரங்கப்பாதை வளாகங்கள் உள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/073f8727-979b-40cc-a5cd-3f0eb2b0dc1c/26-6a9bbbbb586ba.webp' /></p><p> </p><p>ஜூன் 2025-இல் நடைபெற்ற 12 நாள் போரின்போது, ​​ஈரானின் மூன்று முக்கிய அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களுக்குப் பிறகு, ஈரான் நிர்வாகம் இந்த இடமாற்றத்தைச் செய்ததாகக் கருதப்படுகிறது. </p><p>ஈரானின் மற்ற முக்கிய அணுசக்தி பதுங்குகுழிகள் மீது குண்டுவீசியபோது, ​​டிரம்ப் இதற்கு முன்னர் இந்த இடத்தை சேதப்படுத்தாமல் விட்டுவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-05T06:48:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[18 வயது இளம் பெண் கொடூரமாக கொலை; காதலனும் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/young-woman-brutally-murder-boyfriend-also-dead-1788585831"></link>
            <id>https://jvpnews.com/article/young-woman-brutally-murder-boyfriend-also-dead-1788585831</id>
            <summary type="text">&amp;nbsp; வத்தளை, பள்ளியவத்தை, டேன் லங்கா வீதியிலுள்ள வீடொன்றில் 18 வயதுடைய இளம் பெண் ஒருவர் கழுத்து அறுக்கப்பட்டு, மிகவும் கொடூரமான முறையில் படுகொலை செய...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; வத்தளை, பள்ளியவத்தை, டேன் லங்கா வீதியிலுள்ள வீடொன்றில் 18 வயதுடைய இளம் பெண் ஒருவர் கழுத்து அறுக்கப்பட்டு, மிகவும் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக வத்தளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>

நேற்று முன்தினம் (செப்டம்பர் 03) படுகொலை செய்யப்பட்டு உயிரிழந்த பெண் சந்தேக நபருடன் காதல் தொடர்பு வைத்திருந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/de68cacf-36e6-4dc5-a7ac-e24c12c5f062/26-6a9ba7689d211.webp' /></p><h2>&nbsp;பெண் சந்தேக நபருடன் காதல் தொடர்பு</h2><p>
</p><p>சந்தேக நபர் அப்பெண்ணை தொடர்ந்து சந்தேகப்பட்டு வந்துள்ளதாகவும், அதன்போது ஏற்பட்ட தர்க்கத்தையடுத்து வீட்டிலிருந்த அவரை குளியலறைக்கு அழைத்துச் சென்று கத்தியால் கழுத்தை அறுத்து, கண்களைத் தோண்டி எடுத்து இக்கொலையைச் செய்துள்ளமை தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p></p><p>
இந்த பெண் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடையவர் எனக் கூறப்படும் 25 வயதுடைய நபரின் சடலம் அதுருகிரிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் நேற்று (செப்டம்பர் 04) கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். </p><p>

 கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர் உடுப்புஸ்ஸல்லாவ, சென்ட் தோட்டத்தைச் சேர்ந்த 25 வயதுடைய நபர் என தெரியவந்துள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர்.</p><p></p><p>
</p><p>
 இவர் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

 சந்தேக நபர் 2020 ஆம் ஆண்டில் கேலி செய்தமைக்குப் பழிவாங்கும் முகமாக அவிசாவளைப் பகுதியில் நபரொருவரை கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடையவர் என்றும், அது தொடர்பான வழக்கு விசாரணை தற்போதும் நடைபெற்று வருவதாகவும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>

 சம்பவம் தொடர்பில் வத்தளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-09-05T06:48:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[அஜித்தின் அறிக்கையால் வெடித்த சர்ச்சை – தேசிய அளவில் டிரெண்டாகும் #AjithKumar!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/why-ajith-kumar-is-trending-on-x-platform-fans-1788587173"></link>
            <id>https://manithan.com/article/why-ajith-kumar-is-trending-on-x-platform-fans-1788587173</id>
            <summary type="text">எக்ஸ் தளத்தில் நடிகர் அஜித் குமார் பெயரில் உள்ள #AjithKumar ஹேஷ்டேக் தேசிய அளவில் டிரெண்டாகி வருகிறது. ஆனால், அஜித்தின் ரசிகர்கள் அவரைப் பாராட்டுவதற்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>எக்ஸ் தளத்தில் நடிகர் அஜித் குமார் பெயரில் உள்ள #AjithKumar ஹேஷ்டேக் தேசிய அளவில் டிரெண்டாகி வருகிறது. ஆனால், அஜித்தின் ரசிகர்கள் அவரைப் பாராட்டுவதற்காக அல்லாமல், அவரது சமீபத்திய அறிக்கை தொடர்பான அதிருப்தியை வெளிப்படுத்துவதற்காகவே இந்த ஹேஷ்டேகை பயன்படுத்தி வருகின்றனர்.</p><p>

கார் பந்தயங்களில் ஆர்வம் கொண்ட அஜித் குமார், தனது கனவைத் தொடர்வதற்காக கார் பந்தையங்களில் பங்கேற்று வருகின்றார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/70e56117-d59a-4ff6-8556-a0caaf4246b1/26-6a9bb129e0a83.webp' /></p><h2>எக்ஸ் தளத்தில் டிரெண்டாகும் #AjithKumar</h2><p> இந்நிலையில், தமிழகத்தில் மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம் அமைக்கப்படும் என்றும், அங்கு பல்வேறு ஃபார்முலா பந்தயங்களுக்கான தடங்கள் மற்றும் பயிற்சி மையங்கள் உருவாக்கப்படும் என்றும் சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் அறிவித்தார்.&nbsp;</p><p>
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, அஜித் குமார் முதல்வருக்கு நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டார். மேலும், முதல்வரின் அனைத்து முயற்சிகளும் வெற்றி பெற வாழ்த்துவதாகவும் அவர் தெரிவித்தார்.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="zxx" dir="ltr"><a href="https://t.co/0r57Bxtwxw">pic.twitter.com/0r57Bxtwxw</a></p>&mdash; RED DRAGON (@red_d24813) <a href="https://x.com/red_d24813/status/2095587868030931154?ref_src=twsrc%5Etfw">September 3, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p></p><p>இந்த அறிக்கை அஜித் ரசிகர்கள் சிலரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. “உங்களிடம் இருந்து இதை எதிர்பார்க்கவில்லை”, “ரசிகர்களாக இருந்தது போதும்” உள்ளிட்ட கருத்துகளை அவர்கள் எக்ஸ் தளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/70465a5d-4678-4d0b-b908-9186393f430b/26-6a9bb12a9ac0c.webp' /></p><p></p><p>இதன் காரணமாக #AjithKumar ஹேஷ்டேக் தேசிய அளவில் டிரெண்டாகி வருகிறது.

மறுபுறம், விஜய் ரசிகர்கள் அஜித்தின் அறிக்கையை வரவேற்று, இருவருக்கும் இடையேயான நட்பையும் பரஸ்பர மரியாதையையும் பாராட்டி வருகின்றனர். </p><p>அஜித்தின் ஆதரவு விஜய்க்கு மேலும் உற்சாகத்தை அளிக்கும் என்றும் அவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். குறித்த அறிக்கை சர்ச்சை தற்போது இணையத்தில் இரு தரப்பு வாதமாக ஒருவெடுக்க ஆரம்பித்துள்ளது.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">எல்லா நடிகனும் சுயநலவாதிதான்,<br>அய்யாவும் ஒரு நடிகன்தான்..!! <a href="https://t.co/2NyqEFxXEF">pic.twitter.com/2NyqEFxXEF</a></p>&mdash; Joe...😎😎 (@ItzmeeJoee) <a href="https://x.com/ItzmeeJoee/status/2095704272189169764?ref_src=twsrc%5Etfw">September 4, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Thanks giving message from Ajith Kumar to Tamil Nadu Chief Minister Hon. C.Joseph Vijay. 🇮🇳 <a href="https://x.com/CMOTamilnadu?ref_src=twsrc%5Etfw">@CMOTamilnadu</a> <a href="https://x.com/Akracingoffl?ref_src=twsrc%5Etfw">@Akracingoffl</a> <a href="https://x.com/SureshChandraa?ref_src=twsrc%5Etfw">@SureshChandraa</a> <a href="https://x.com/hashtag/AjithKumar?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#AjithKumar</a> <a href="https://x.com/hashtag/JosephVijay?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#JosephVijay</a> <a href="https://x.com/hashtag/TamilNadu?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#TamilNadu</a> <a href="https://x.com/hashtag/TamilNaduCM?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#TamilNaduCM</a> <a href="https://x.com/hashtag/AKRacing?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#AKRacing</a> <a href="https://x.com/hashtag/AjithKumarRacing?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#AjithKumarRacing</a> <a href="https://t.co/yWTn3F8RtN">pic.twitter.com/yWTn3F8RtN</a></p>&mdash; Suresh Chandra (@SureshChandraa) <a href="https://x.com/SureshChandraa/status/2095541477401354707?ref_src=twsrc%5Etfw">September 3, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"><u>FOLLOW NOW</u>&nbsp;</a></b> &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-05T06:42:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பில் பாதாள உலக குழுவின் வெறியாட்டம் - தவறுதலாக சுட்டுக்கொலை செய்யப்பட்ட தந்தை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/underworld-gangs-killed-a-father-1788589723"></link>
            <id>https://tamilwin.com/article/underworld-gangs-killed-a-father-1788589723</id>
            <summary type="text">கொழும்பின் புறநகர் பகுதியில் பாதாள உலகக் குழுவினரின் பழிவாங்கல் காரணமாக நேற்றிரவு ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பின் புறநகர் பகுதியில் பாதாள உலகக் குழுவினரின் பழிவாங்கல் காரணமாக நேற்றிரவு ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். </p><p>

பொரலஸ்கமுவ, மாலனி புலத்சிங்கல மாவத்தையிலுள்ள வீடொன்றினுள் நேற்றிரவு மர்ம கும்பல் ஒன்றினால் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. </p><p>

இதில் பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்டிருந்த 74 வயதான சுனில் பெர்னாண்டோ சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.</p><h2><b>&nbsp;துப்பாக்கிச் சூடு</b></h2><p> 

கொஸ் மல்லி எனப்படும் பாதாள உலகக் குழு உறுப்பினரின் காசாளரையே இலக்கு வைத்து துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது. எனினும் தவறுதலாக அவரின் தந்தை சிக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e0c12ae7-c8cf-4c54-af4d-921edf3500a1/26-6a9bb9089fb9b.webp' /></p><p>மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இரு தாக்குதல்தாரிகள், கைப்பாப்பாக்கியால் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். </p><p> 

துப்பாக்கிச் சூட்டுடன் தொடர்புடைய சந்தேகநபர்களை இனங்கண்டு கைது செய்வதற்காக பொரலஸ்கமுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-09-05T06:42:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தாங்க முடியாத பணிச்சுமை; வேலையைவிட்ட OIC!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/dehiwala-traffic-oic-leaves-post-over-work-1788588534"></link>
            <id>https://jvpnews.com/article/dehiwala-traffic-oic-leaves-post-over-work-1788588534</id>
            <summary type="text">&amp;nbsp; கொழும்பு தெஹிவளை காவல் நிலையத்தின் போக்குவரத்துப் பிரிவு பொறுப்பதிகாரி (OIC), பணி தொடர்பான தாங்க முடியாத அழுத்தத்தைக் காரணம் காட்டி, தனது பதவிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; கொழும்பு தெஹிவளை காவல் நிலையத்தின் போக்குவரத்துப் பிரிவு பொறுப்பதிகாரி (OIC), பணி தொடர்பான தாங்க முடியாத அழுத்தத்தைக் காரணம் காட்டி, தனது பதவியை விட்டுவிட்டு வீடு திரும்பியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
கிடைத்த தகவல்களின்படி, அப்பிரிவு ஆய்வாளர் அங்கிருந்து வெளியேறுவதற்கு முன் காவல் நிலையத் தகவல் பதிவேட்டில் ஒரு குறிப்பை எழுதியுள்ளார்,</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1c68eee5-05e9-4ad0-b0ba-3abc08d359b4/26-6a9bb1f7f2ce3.webp' /></p><h2>&nbsp; இனிமேலும் சமாளிக்க முடியாது</h2><p>

 அதில், தனது கடமைகளுடன் தொடர்புடைய அதிக பணிச்சுமை மற்றும் அழுத்தத்தை இனிமேலும் சமாளிக்க முடியாது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>

இச்சம்பவத்தைத் தொடர்ந்து, மவுண்ட் லாவினியா பிரிவின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் (SSP) அசோக குணசேகர, இது குறித்து விசாரணை நடத்துமாறு மவுண்ட் லாவினியா குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு உத்தரவிட்டுள்ளார்.</p><p></p><p>.

இச்சம்பவம் ஏனைய பொலிஸ் அதிகாரிகளிடையே ஒரு தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தக்கூடும் என்று சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கவலை தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.</p><p></p><p>
</p><p>
பொலிஸ் சட்டப் பிரிவின் ஆலோசனையைப் பெற்றதைத் தொடர்ந்து, தெஹிவளை போக்குவரத்துப் பிரிவு பொறுப்பதிகாரி மற்றும் அப்பிரிவைக் கண்காணிக்கும் பொலிஸ் அத்தியட்சகர் (ASP) ஆகியோரிடமிருந்து வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.</p>]]></content>
            <updated>2026-09-05T06:37:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமைதிப் பேச்சுக்கு மத்தியில் ரஷ்யா தீவிர தாக்குதல்; உலக நாடுகள் கவலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/russia-launches-intense-attacks-ukraine-1788590431"></link>
            <id>https://canadamirror.com/article/russia-launches-intense-attacks-ukraine-1788590431</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;ரஷ்யா - உக்ரைன் போரை நுறுத்துவது தொடர்பில் அமைதிப் பேச்சுவார்த்தைக்கான முயற்சிகள் மீண்டும் வேகமெடுத்துள்ள நிலையில், உக்ரைன் மீது ரஷ்யா தொ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;ரஷ்யா - உக்ரைன் போரை நுறுத்துவது தொடர்பில் அமைதிப் பேச்சுவார்த்தைக்கான முயற்சிகள் மீண்டும் வேகமெடுத்துள்ள நிலையில், உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து தீவிர தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது.
</p><p>


ஒடேஸா மற்றும் டினிப்ரோ பகுதிகளில் வியாழக்கிழமை நள்ளிரவு நடத்தப்பட்ட தாக்குதல்களில் 3 பேர் உயிரிழந்ததுடன், பலர் காயமடைந்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/adbb28bb-ff84-49cb-8b5d-25e7ddf71fca/26-6a9bb960c5de4.webp' /></p><h2>&nbsp;ரஷ்யா வான்வழித் தாக்குதல்</h2><p>



அதேவேளை, உக்ரைன் தலைநகர் கீவ் மீது தொடர்ந்து 10ஆவது நாளாக ரஷ்யா வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது.</p><p> வெள்ளிக்கிழமை நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில், கீவ் நகர மையத்தில் உள்ள உக்ரைனின் பாதுகாப்பு மற்றும் உளவுப் பிரிவு தலைமையகத்தில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது.



இந்தத் தாக்குதலில் 7 பேர் காயமடைந்துள்ளனர். </p><p>தாக்குதலுக்கு தக்க பதிலடி வழங்கப்படும் என உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி எச்சரித்துள்ளார்.
</p><p>


இதனிடையே, உக்ரைன்–ரஷ்யா அமைதிப் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கும் வகையில் அமெரிக்க பிரதிநிதிகள் ஸ்டீவ் விட்காஃப் மற்றும் ஜாரெட் குஷ்னர் முறையே மாஸ்கோ மற்றும் கீவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>


 இந்த நிலையில் உக்ரைன் மீது ரஷ்யாவின் தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ளமை சர்வதேச அளவில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-05T06:37:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[அப்பத்தாவின் சுயரூபத்தை அறியும் லோகு.. தேனை தேடி வந்த மனோ - வாகை சூடவா இன்றைய எபிசோட் அப்டேட்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/zee-tamizhvaagai-sooda-vaa-serial-latest-episode-1788590011"></link>
            <id>https://cineulagam.com/article/zee-tamizhvaagai-sooda-vaa-serial-latest-episode-1788590011</id>
            <summary type="text">வாகை சூடவாதமிழ் சின்னத்திரையில் Zee தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் வாகை சூடவா. இன்ற...</summary>
            <content type="html"><![CDATA[<h2>வாகை சூடவா</h2><p>தமிழ் சின்னத்திரையில் Zee தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் வாகை சூடவா. </p><p>இன்றைய எபிசோடில் லோகு அப்பத்தாவின் உண்மையான முகத்தை புரிந்து கொள்ளும் நிலையில், தேன்மொழியை வீட்டிற்கு அழைத்து வர மனோ எடுத்த முயற்சி பரபரப்பை ஏற்படுத்துகிறது.
</p><p>
சுமதி ஜீவாவை அக்கறையுடன் கவனித்துக் கொள்ள, அதை ரசிக்கும் ஜீவாவை பார்த்து மீனாட்சி கடுப்படைகிறாள். "உன்னை இந்த வீட்டுக்கு விருந்து வைக்க அழைக்கலை, போனா போகட்டும்னுதான் உள்ளே விட்டேன்" என்று கூற, ஜீவாவும் "இது என் மாமியார் வீடு தானே" என்று பதிலடி கொடுக்கிறான்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9ce0a1e2-acd9-4eb8-9b67-944ea94fc61e/26-6a9bb7bd92283.webp' /></p><p>
</p><p>
ஆனால் ஒரு கட்டத்தில் அதிகமாக பேசினால் மீனாட்சி தன்னை வெளியே அனுப்பிவிடக்கூடும் என்பதை புரிந்து கொண்ட ஜீவா, அமைதியாக இருக்க முடிவு செய்கிறான்.

மறுபக்கம் உடல்நலக்குறைவால் அவதிப்படும் சக்தியை லோகு கவனித்துக் கொள்கிறார். </p><p>அவளுக்கு மாத்திரை வாங்கி வந்து கொடுத்து, "நீ ரெஸ்ட் எடு, நான் பார்த்துக்கொள்கிறேன்" என்று ஆறுதல் கூறுகிறார்.

பின்னர் தூங்கி எழுந்த அப்பத்தா, "உன் பொண்டாட்டி இன்னும் சமைக்கலையா?" என்று லோகுவிடம் கேட்கிறார். சக்திக்கு உடல்நிலை சரியில்லை என்று லோகு கூறியதும், "உடம்பு முடியலன்னா மாத்திரை போட்டுட்டு வேலை செய்ய வேண்டியது தானே" என்று ஈவு இரக்கமின்றி பேசுகிறார். </p><p>இதைக் கேட்டு அப்பத்தா சக்தியை குடும்ப உறுப்பினராக அல்லாமல் ஒரு வேலையாளாகவே பார்க்கிறார் என்பதை லோகு புரிந்து கொள்கிறார்.

வீட்டில் வேலை செய்ய யாரும் இல்லாததால், அப்பத்தா மனோவை அழைத்து தேன்மொழியை கூட்டி வர அனுப்புகிறார். மனோ சுமதி வீட்டிற்கு சென்று கதவை தட்ட, தேன்மொழி கதவை திறக்கிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fccb41c1-8d6d-4eb8-8136-e86a6513779e/26-6a9bb7bcdc41a.webp' /></p><p> </p><p>இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளும் அந்த தருணம் உணர்ச்சிகரமாக அமைகிறது.

தேன்மொழியை வீட்டிற்கு வருமாறு மனோ அழைக்க, மீனாட்சி அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார். "அவளுக்காக நீங்க என்ன பண்ணீங்க? உங்க வாரிசை அழிக்க பார்த்தப்போ கூட அமைதியா நின்னீங்க. உங்களை நம்பி எப்படி அவளை அனுப்ப முடியும்?" என்று சரமாரியாக கேள்வி எழுப்புகிறார்.
</p><p>
இதையடுத்து மனோ ஜீவாவையும் வீட்டிற்கு வர அழைக்க, "என் பொண்டாட்டி இருக்கிற இடத்துலதான் நான் இருப்பேன். வர முடியாதுன்னு போய் அப்பத்தாகிட்ட சொல்லு" என்று ஜீவா உறுதியாக பதிலளிக்கிறார்.
</p><p>
இப்படியான சூழலில் அடுத்ததாக என்ன நடக்கப் போகிறது என்பதை அறிய, வாகை சூடவா சீரியலை Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத் தவறாதீர்கள்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-05T06:33:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுரேஷ் சலே -ரணில் விக்ரமசிங்க வழக்குகளிலிருந்து திலீப பீரிஸ் நீக்கம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/deputy-solicitor-general-dileepa-peiris-1788589851"></link>
            <id>https://tamilwin.com/article/deputy-solicitor-general-dileepa-peiris-1788589851</id>
            <summary type="text">மேலதிக செலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸுக்கு (Dileepa Peiris) துபாயில் உள்ள பாதாள உலகக் குழுவினரிடமிருந்து உயிரச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி அவரது பாதுகா...</summary>
            <content type="html"><![CDATA[<p>மேலதிக செலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸுக்கு (Dileepa Peiris) துபாயில் உள்ள பாதாள உலகக் குழுவினரிடமிருந்து உயிரச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி அவரது பாதுகாப்பை அதிகரிக்குமாறு அண்மையில் உத்தரவிடப்பட்டிருந்தது. </p><p>இவ்வாறான பின்னணியில், சுரேஷ் சலே மற்றும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான வழக்கு உள்ளிட்ட சில முக்கிய வழக்குகளிலிருந்து திலீப பீரிஸ் நீக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p>கடந்த 2ஆம் திகதி நடைபெற்ற சுரேஷ் சலேவின் வழக்கு விசாரணையின் போது சட்டமா அதிபர் திணைக்களம் சார்பில் ஓஸ்வால் பெரேரா என்ற அரச சட்டத்தரணியே ஆஜரானார்.
</p><h2>
</h2><p></p><h2>சட்டமா அதிபரின் அறிவுறுத்தல்</h2><p>அவரை இவ்வழக்குகளில் ஆஜராக வேண்டாம் என உயர் மட்டத்திலிருந்து (சட்டமா அதிபர் பாலிந்த ரணசிங்கவினால்) அறிவுறுத்தப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது. </p><p>சட்டமா அதிபருக்குத் தனது அதிகாரிகளை நியமிக்கும் அல்லது மாற்றும் தன்னிச்சையான அதிகாரம் (Discretionary Power) இருந்தாலும், மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இவ்வழக்கிலிருந்து அவர் திடீரென நீக்கப்பட்டமை பாதிக்கப்பட்ட தரப்பினர், புலனாய்வாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மத்தியில் சந்தேகத்தையும் உரையாடலையும் உருவாக்கியுள்ளது.
</p><p>ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை நேற்றை தினம் இச்சம்பவம் குறித்து ஒரு குழுவினர் சந்தித்து தெரியப்படுத்தியுள்ளனர். அதன் பின்னரே ஜனாதிபதியும் இத்தகவலை அறிந்து கொண்டுள்ளார்.
</p><p>கடந்த 2 ஆம் திகதி சுரேஷ் சலேவின் வழக்கு விசாரணையின் போது கருணா அம்மான் அளித்த சிறப்பு வாக்குமூலம் மற்றும் ஏனைய முக்கிய சாட்சிகளின் வாக்குமூலங்கள் நீதிமன்றத்தில் விரிவாக முன்வைக்கப்படுவதைத் தடுப்பதற்காக திலீப பீரிஸ் நீக்கப்பட்டாரா? </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/361c2256-0921-47eb-bc4f-f58f915d6fd3/26-6a9bb71dbf64a.webp' /></p><p>அல்லது ஓய்வுபெற்ற வான்படை அதிகாரியான சாந்த குமார ஜயதிலக்கவின் முறைப்பாட்டின் அடிப்படையில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டதா? என்பதற்கான நியாயமான காரணத்தை அறிந்துகொள்ளும் உரிமை மக்களுக்கு உள்ளது. </p><p>
சட்டமா அதிபர் பாலிந்த ரணசிங்கவை இந்த பதவியில் நியமித்தது ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக இருந்த காலப்பகுதியிலாகும். அந்த நியமனத்தின் போது, சட்டமா அதிபர் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரிகளான அனிஷா ஜினசேன உட்பட இருவரை விடவும், பாலிந்த ரணசிங்க பெயரே பரிந்துரைக்கப்பட்டு அரசியலமைப்புச் சபையினால் அங்கீகரிக்கப்பட்டது.
</p><p>எனவே, அதற்கு நன்றிக்கடனாக ரணில் விக்ரமசிங்கவின் வழக்கில் அவர் பக்கம் சார்ந்து செயற்படுகிறாரா என்ற சந்தேகம் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளது.
</p><p>இது ஒரு பாரிய விடயமாகும். ஏனெனில், குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இது தொடர்பில் மூன்று சந்தர்ப்பங்களில் நீதிமன்றத்தில் கருத்துக்களை முன்வைத்து, அறிக்கைகளையும் சமர்ப்பித்துள்ளதாக அறியமுடிகிறது.</p><p>&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-09-05T06:32:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[வேக வைத்த முட்டையை எவ்வளவு மணி நேரத்திற்குள் சாப்பிட்ட வேண்டும்?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/reason-why-should-eat-boiled-egg-before-this-time-1788588749"></link>
            <id>https://news.lankasri.com/article/reason-why-should-eat-boiled-egg-before-this-time-1788588749</id>
            <summary type="text">பொதுவாக, ஒவ்வொரு உணவையும் சாப்பிடுவதற்கு என்று உரிய கால நேரம் இருக்கிறது. அந்த நேரத்திற்கு நாம் சாப்பிட்டு முடிக்க வேண்டும். அப்படியாக, வேக வைத்த முட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொதுவாக, ஒவ்வொரு உணவையும் சாப்பிடுவதற்கு என்று உரிய கால நேரம் இருக்கிறது. அந்த நேரத்திற்கு நாம் சாப்பிட்டு முடிக்க வேண்டும். அப்படியாக, வேக வைத்த முட்டையை நாம் எவ்வளவு நேரத்திற்குள் சாப்பிட வேண்டும்? என்பதை பார்ப்போம்.
</p><p>

 சமீப காலமாக மக்களிடையே ஊட்டச்சத்து குறித்து விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது. இது ஒரு நல்ல ஆரோக்கியமான அணுகுமுறை. அதிலும் புரதச்சத்து நிறைந்த உணவுகளை தேர்வு செய்கின்ற பொழுது பலருக்கும் எளிதான மற்றும் குறைந்த செலவிலான தீர்வாக இருப்பது முட்டைதான்.</p><p>

 இவை குறைந்த விலையில் கிடைப்பதோடு சமைப்பதும் மிக மிக எளிது. முட்டையை வேக வைப்பதற்கு அதிக நேரமும் எடுப்பது இல்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/80614388-bf9e-4aeb-9dc0-6468c362239b/26-6a9bb2cf56fa3.webp' /></p><p> சில நிமிடங்களில் நாம் வேகவைத்து சத்தான மூட்டையை சாப்பிட்டு விடலாம். முட்டையை அவரவர் வசதிக்கேற்ப சமைத்துக் கொள்வது உண்டு. இருப்பினும் வேகவைத்த முட்டையை சாப்பிடுவதின் வழியாக நம்முடைய உடலுக்கு பல்வேறு ஊட்டச்சத்துக்களும் நன்மைகளும் கிடைப்பதாக சொல்லப்படுகிறது. </p><p>ஆனால், வேகவைத்த முட்டையை குறிப்பிட்ட நேரத்திற்குள் சாப்பிட வேண்டும் என்று சொல்கிறார்கள். அதை பற்றி பார்ப்போம்.
</p><p>
 பொதுவாக, வேக வைத்த முட்டை அரை வெப்ப நிலையில் வைத்திருந்தால் இரண்டு மணி நேரத்திற்குள்ளேயே நாம் சாப்பிட்டு முடித்தாக வேண்டும். ஒரு வேலை வெயில் காலத்தில் சுற்றி உள்ள வெப்பநிலை 32°C (90°F)மிக அதிகமாக இருந்தால் ஒரு மணி நேரத்திற்குள் நாம் சாப்பிடுவது அவசியம் ஆகும். </p><p>இதற்கு பின்னால் சில காரணங்கள் சொல்லப்படுகிறது. அதையும் தெரிந்து கொள்வோம்.

 முட்டையின் ஓட்டின் மீது இயற்கையாகவே 'கியூட்டிக்கிள்' என்ற என்ற மெல்லிய பாதுகாப்பு படலம் உண்டு. இது பாக்டீரியாக்கள் முட்டைகுள் செல்வதை தடுக்கிறது. ஆனால், முட்டையை நீரில் போட்டு வேக வைக்கின்ற பொழுது இந்த அடுக்கு முற்றிலும் அழிந்து விடுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3795dbc8-8495-42b0-9dfc-8e22fcaafdff/26-6a9bb2d00c2b9.webp' /></p><p> </p><p>இதனால் காற்றில் இருக்கக்கூடிய கிருமிகள் மிக எளிதாக ஓட்டில் உள்ள நுண் துளைகள் வழியாக நுழைய கூடும். மேலும், சமைத்த உணவுகளை 4°C முதல் 60°C வரையிலான வெப்பநிலையில் நீண்ட நேரமாக வைக்கின்ற பொழுது அவை பாக்டீரியாக்கள் வேகமாக வருவதற்கான அபாயம் உள்ளது.</p><p> குறிப்பாக, சால்மோனெல்லா&nbsp;ஆபத்தான பாக்டீரியாக்கள் வேகவைத்த முட்டைகள் மிக வேகமாக பரவிகிறது. வெப்ப நிலையில் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக வைக்கப்பட்ட முட்டையை நாம் சாப்பிடுகின்ற பொழுது வாந்தி வயிற்றுப்போக்கு காய்ச்சல் போன்ற உணவு நச்சுத்தன்மை பாதிப்புகள் வரலாம். </p><p>ஒருவேளை இரண்டு மணி நேரத்திற்குள் சாப்பிட முடியவில்லை என்றால் அந்த முட்டையை பாதுகாப்பாக பயன்படுத்தக்கூடிய சில குறிப்புகளையும் தெரிந்து கொள்வோம். 


வேகவைத்த முட்டையை ஓடு உரிக்காமல் அவ்வாறே குளிர்சாதன பெட்டியில் வைத்தால் ஏழு நாட்கள் வரை பாதுகாப்பாக வைத்து சாப்பிடலாம் என்று சொல்கிறார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8452320d-6ffe-41ef-9a9c-075692548636/26-6a9bb2d0b7355.webp' /></p><p> நாம் ஓட்டை உரிக்காமல் அப்படியே பிரிட்ஜில் வைப்பது நல்லது. அதை போல், முட்டையை குளிர்சாதனர்பட்டியின் கதவு பகுதிகளில் வைக்க கூடாது. காரணம் அடிக்கடி பிரிட்ஜ் கதவுகளை திறந்து மூடுவதால் அங்கு வெப்பநிலை மாறிக்கொண்டே இருக்கும். உள் பகுதியில் உள்ள அடுக்கு பகுதிகளில் வைப்பது பாதுகாப்பு என்று சொல்கிறார்கள். </p><p>இது மட்டும் இல்லாமல் வேகவைத்த முட்டையை உடைக்கும் போது கசப்பு அல்லது அழுகிய வாசனை வந்தால் அல்லது வழுவழுப்பு தன்மை இருந்தாலும் எந்த காரணத்தை கொண்டும் சாப்பிடாதீர்கள்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-05T06:32:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[புதிய உலக வரைபடத்தை ஏற்றுக் கொண்ட ஐ.நா: பெரிதான ஆப்பிரிக்கா: அமெரிக்கா எதிர்ப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/un-accepts-equal-earth-map-164-votes-in-favour-1788589352"></link>
            <id>https://news.lankasri.com/article/un-accepts-equal-earth-map-164-votes-in-favour-1788589352</id>
            <summary type="text">c: ஆப்பிரிக்க கண்டம் பெரிதாக சித்தரிக்கப்பட்ட புதிய வரைபடத்தை ஐ.நா ஒப்புக் கொண்டுள்ளது. புதிய உலக வரைபடம்
பாரம்பரிய உலக வரைபடத்திற்கு மாற்றாக புதிய ஈ...</summary>
            <content type="html"><![CDATA[<p>c: ஆப்பிரிக்க கண்டம் பெரிதாக சித்தரிக்கப்பட்ட புதிய வரைபடத்தை ஐ.நா ஒப்புக் கொண்டுள்ளது.</p><h2> புதிய உலக வரைபடம்</h2><p>
பாரம்பரிய உலக வரைபடத்திற்கு மாற்றாக புதிய ஈக்வல் எர்த்(Equal Earth) என்ற புதிய வரைபட முறையை ஐக்கிய நாடுகள் சபை ஏற்றுக் கொண்டுள்ளது.</p><p> உலக வரைபடத்தில் கண்டங்களின் பரப்பளவை சமச்சீராக காட்டுவது மற்றும் வரலாற்று ரீதியான தவறுகளை திருத்திக் கொள்வதை புதிய வரைபடம் நோக்கமாக கொண்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/923a1c5b-cb10-4369-9e8d-fbd3e172e927/26-6a9bb529ce036.webp' /></p><p> இதில், ஆப்பிரிக்க கண்டம் பெரிதாகவும், வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய கண்டம் சற்று சிறியதாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p>1569 ம் ஆண்டு கடல்வழிப் பயணத்திற்காக பிளெமிஷ் நிலவரைபட வல்லுநர் ஜெரார்டஸ் மெர்கேட்டர் உருவாக்கிய வரைபட முறைக்கு மாற்றாக இந்த புதிய வரைபட முறை கொண்டு வரப்பட்டுள்ளது.</p><h2> 164 நாடுகளின் ஆதரவும், அமெரிக்காவின் எதிர்ப்பும்</h2><p>இந்த புதிய வரைபடம் தொடர்பான வாக்கெடுப்பு ஐக்கிய நாடுகள் சபையில் கொண்டு வரப்பட்ட நிலையில், இதற்கு ஆதரவாக 164 நாடுகள் வாக்களித்தன. அமெரிக்கா இதற்கு எதிர்ப்பு தெரிவித்தது(1), மற்றும் 6 நாடுகள் இந்த வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">🎉Congratulations to the delegation of Togo 🇹🇬 on the adoption this morning by the <a href="https://x.com/hashtag/UNGA?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#UNGA</a> of resolution A/80/L.104, “Correct the Map”, an <a href="https://x.com/_AfricanUnion?ref_src=twsrc%5Etfw">@_AfricanUnion</a> initiative promoting more accurate and equitable global cartographic representation, particularly of <a href="https://x.com/hashtag/Africa?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#Africa</a>.<br><br>A significant… <a href="https://t.co/oxZCbeMUTt">pic.twitter.com/oxZCbeMUTt</a></p>&mdash; African Union Mission to the UN (@AfricanUnionUN) <a href="https://x.com/AfricanUnionUN/status/2095902709933121824?ref_src=twsrc%5Etfw">September 4, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p> தீவிரமான சர்வதேச பிரச்சினைகளை விட்டுவிட்டு 16ம் நூற்றாண்டு வரைபடங்கள் குறித்து விவாதிப்பது ஐ.நா மீதான நம்பகத்தன்மையை சீர்குலைப்பதாக உள்ளது என்று அமெரிக்க பிரதிநிதி யாரினா பெரென்செவிச் வாக்கெடுப்புக்கு முன்பு விமர்சித்து இருந்தார்.</p><p> அதே நேரம், வரைபடம் கல்வி மற்றும் கலாச்சார ரீதியாக பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவதாக ஆதரவாளர்கள் வாதிடுகின்றனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-05T06:22:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[8 சிக்ஸர்களுடன் 53 பந்தில் 101 விளாசிய இளம் வீரர்: நமீபியாவிடம் போராடி தென் ஆப்பிரிக்கா வெற்றி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/lhuan-dre-pretorius-101-runs-in-53-balls-namibia-1788589443"></link>
            <id>https://news.lankasri.com/article/lhuan-dre-pretorius-101-runs-in-53-balls-namibia-1788589443</id>
            <summary type="text">South africa beat namibia by 11 runs: நமீபியா அணிக்கு எதிரான டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்கா 11 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

முத்தரப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>South africa beat namibia by 11 runs: நமீபியா அணிக்கு எதிரான டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்கா 11 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
</p><p>
முத்தரப்பு டி20 தொடரின் 6வது போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 11 ஓட்டங்கள் வித்தியாசத்தில் நமீபியாவை வீழ்த்தியது.</p><h2>தொடக்க வீரர்கள் ருத்ரதாண்டவம் </h2><p>

தென் ஆப்பிரிக்கா மற்றும் நமீபியா அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு டி20 போட்டி Windhoek-யில் நடந்தது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/983987a1-96e4-48c2-9761-a2d16869a77e/26-6a9bb586c3453.webp' /></p><p></p><p>

முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்க அணியில் தொடக்க வீரர்கள் ருத்ரதாண்டவம் ஆடினர்.

கோன்னோர் எஸ்தர்ஹுய்ஸன் (Connor Esterhuizen) 40 பந்துகளில் 8 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 88 ஓட்டங்கள் விளாசி ஆட்டமிழந்தார். </p><p>

கடைசி ஓவர் வரை களத்தில் நின்ற லுவான்-ட்ரே பிரிட்டோரியஸ், 53 பந்துகளில் 8 சிக்ஸர் மற்றும் 5 பவுண்டரிகளுடன் 101 ஓட்டங்கள் விளாசினார்.&nbsp;</p><h2>தென் ஆப்பிரிக்கா வெற்றி</h2><p>
இதன்மூலம் தென் ஆப்பிரிக்க அணி 228 ஓட்டங்கள் குவித்தது. ஜென் பால்ட் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

பின்னர் ஆடிய நமீபிய அணியில் ஸ்டீன்கேம்ப், ஃப்ரைலிங்க் ஆகியோர் தென் ஆப்பிரிக்க அணிக்கு கடுமையான நெருக்கடி கொடுத்தனர்.</p><p> 

எனினும் கடைசி ஓவரை மோகோயெனா (Mokoena) சிறப்பாக வீச, நமீபியா 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 217 ஓட்டங்கள் எடுக்க தென் ஆப்பிரிக்க அணி 11 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
</p><p>
ஜென் ஃப்ரைலிங்க் (Jan Frylinck) 36 பந்துகளில் 5 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 72 ஓட்டங்களும், லௌரன் ஸ்டீன்கேம்ப் (Louren Steenkamp) 44 பந்துகளில் 61 ஓட்டங்களும் (3 சிக்ஸர், 5 பவுண்டரிகள்) விளாசினர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-05T06:21:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மிஹிந்தலையில் கைவிடப்பட்ட பொதியிலிருந்து துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் மீட்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/weapons-including-t-56-rifle-recovered-mihintale-1788586907"></link>
            <id>https://ibctamil.com/article/weapons-including-t-56-rifle-recovered-mihintale-1788586907</id>
            <summary type="text">அநுராதபுரம் மிஹிந்தலை, மஹகனதராவ குளக்கட்டில் கைவிடப்பட்டிருந்த பொதியொன்றிலிருந்து T56 ரக துப்பாக்கி ஒன்று, 04 மெகசீன்கள் மற்றும் 25 தோட்டாக்களை காவல்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>அநுராதபுரம் மிஹிந்தலை, மஹகனதராவ குளக்கட்டில் கைவிடப்பட்டிருந்த பொதியொன்றிலிருந்து T56 ரக துப்பாக்கி ஒன்று, 04 மெகசீன்கள் மற்றும் 25 தோட்டாக்களை காவல்துறையினர் கண்டெடுத்துள்ளனர்.&nbsp;</p><p>குறித்த பகுதியில் சந்தேகத்திற்கிடமான பொதியொன்று காணப்படுவதாக நேற்று வெள்ளிக்கிழமை (04.09.2026) காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.</p><p>இதை தொடர்ந்து மிஹிந்தலை காவல் நிலைய உத்தியோகத்தர் குழுவொன்று மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போதே இத் துப்பாக்கி மற்றும் வெடிமருந்துகள் இருந்த பொதி கைப்பற்றப்பட்டுள்ளது.</p><p></p><h2>கைவிடப்பட்ட பொதி</h2><p>
</p><p>கண்டெடுக்கப்பட்ட பொதியிலிருந்து, T56 ரக துப்பாக்கி, அதற்குப் பயன்படுத்தப்படும் 04 மெகசீன்கள் மற்றும் 25 தோட்டாக்கள் என்பன மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/825deb9a-7009-4da1-a29f-5c2c2c65f958/26-6a9bb1da2088f.webp' /></p><p>
</p><p>இத் துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை அப் பகுதிக்குக் கொண்டு வந்து போட்ட நபர்கள் யார் என்பது இதுவரை கண்டறியப்படவில்லை.</p><p>
மேலும், சம்பவம் தொடர்பில் மிஹிந்தலை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-05T06:18:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தேநீர் பிரியர்களுக்கு மகிழ்ச்சித் தகவல்; விலை குறைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/reduction-in-the-price-of-tea-and-milk-tea-1788589214"></link>
            <id>https://jvpnews.com/article/reduction-in-the-price-of-tea-and-milk-tea-1788589214</id>
            <summary type="text">&amp;nbsp; நாட்டில் சமையல் எரிவாயு விலை குறைக்கப்பட்டுள்ள நிலையில், இன்று (05) நள்ளிரவு முதல் தேநீர் மற்றும் பால் தேநீரின் விலை 5 ரூபாவால் குறைக்கப்படவுள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; நாட்டில் சமையல் எரிவாயு விலை குறைக்கப்பட்டுள்ள நிலையில், இன்று (05) நள்ளிரவு முதல் தேநீர் மற்றும் பால் தேநீரின் விலை 5 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதாக உணவகங்கள் மற்றும் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
</p><p>


எனினும், சிற்றுண்டி உணவுப் பொருட்களின் விலைகளில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படாது எனவும் உணவகங்கள் மற்றும் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a07493e6-738b-491d-b633-4e557bdf1940/26-6a9bb4a0075d2.webp' /></p><p></p>]]></content>
            <updated>2026-09-05T06:17:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[துப்பாக்கி முனையில் ரேவதி.. குடும்பத்தினருக்கு ஷாக்! கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/karthigai-deepam-september-5-episode-update-news-1788589078"></link>
            <id>https://viduppu.com/article/karthigai-deepam-september-5-episode-update-news-1788589078</id>
            <summary type="text">கார்த்திகை தீபம்தமிழ் சின்னத்திரையில் Zee தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9:00 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ‘கார்த்திக...</summary>
            <content type="html"><![CDATA[<h2>கார்த்திகை தீபம்</h2><p>தமிழ் சின்னத்திரையில் Zee தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9:00 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ‘கார்த்திகை தீபம்’. இந்த தொடரில் இன்று பரபரப்பும், அதிர்ச்சியும் நிறைந்த பல திருப்பங்கள் ரசிகர்களை காத்திருக்கின்றன.

கோவிலில் நடந்த சம்பவங்கள் குறித்து கார்த்திக் மற்றும் ரேவதி, பரமேஸ்வரி பாட்டியிடம் விளக்குகின்றனர். அதை கேட்ட பாட்டி மகிழ்ச்சியடைந்து, கும்பாபிஷேகம் எந்த தடையும் இன்றி சிறப்பாக நடைபெற வாழ்த்துகிறார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/11989167-d742-425c-a947-c2ff8e9dd6bc/26-6a9bb418a98c6.webp' /></p><p>
இதையடுத்து வீட்டில் அனைவரும் இருக்கும் நேரத்தில், முகமூடி அணிந்த மர்ம நபர் ஒருவர் திடீரென உள்ளே நுழைகிறார். அவர் யார் என்று தெரியாமல் ரேவதி அருகில் செல்ல, அந்த நபர் துப்பாக்கியைக் காட்டி ரேவதியை பணயக் கைதியாக பிடித்துக் கொண்டு, “யாராவது அருகில் வந்தால் சுட்டுவிடுவேன்” என்று மிரட்டுகிறார். இதனால் குடும்பத்தினர் அனைவரும் கடும் அதிர்ச்சியடைகின்றனர்.

அந்த சமயத்தில் கார்த்திக் சாமர்த்தியமாக செயல்பட்டு, மர்ம நபரின் கையிலிருந்து துப்பாக்கியை தட்டிவிடுகிறார். அப்போது அது ஆண் அல்ல, பெண் என்பது தெரியவருகிறது. </p><p>மேலும், அவர் ரேவதியின் நெருங்கிய தோழி என்பதும் வெளிச்சத்துக்கு வருகிறது.

திருமணத்திற்கு வர முடியாததால் தற்போது ரேவதியை சந்திக்க வந்ததாகவும், இந்த சந்திப்பு மறக்க முடியாத அனுபவமாக இருக்க வேண்டும் என்பதற்காகவே இப்படி நாடகம் ஆடியதாகவும் அவர் கூறுகிறார். தனது தோழியை குடும்பத்தினருக்கு அறிமுகப்படுத்தும் ரேவதி, “இவர் நன்றாக நடிப்பார்” என்று பெருமையாகச் சொல்கிறாள். அதன்பிறகு சந்திரமுகி பாணியில் நடித்து காட்டிய அவரை அனைவரும் ரசித்து பாராட்டுகின்றனர்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/57d09000-8696-4bfa-a62e-01b5e209a9a5/26-6a9bb4195ad80.webp' /></p><p>
பின்னர் அனைவரும் ஒன்றாக அமர்ந்து உணவருந்தும் போது, ரேவதியின் தோழியின் முகத்தில் ஏதோ சோகத்தை கவனிக்கிறார் கார்த்திக். வீட்டை விட்டு கிளம்பும் நேரத்தில் தனியாக பேசும் அவர், “உங்களுக்கு ஏதோ பிரச்சினை இருப்பது போல தெரிகிறது. என்ன விஷயம்?” என்று கேட்கிறார்.

அப்போது தனது பெயர் காவியா என்றும், தான் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவிக்கிறார். இந்த தகவலைக் கேட்டு கார்த்திக் அதிர்ச்சியடைகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2b73bfea-6eeb-42b8-afcf-4a2e82808afc/26-6a9bb41a0b252.webp' /></p><p>மேலும் இந்த விஷயம் ரேவதிக்குத் தெரியக்கூடாது என காவியா கேட்டுக்கொள்ள, அவருக்கு ஆறுதல் கூறி கார்த்திக் அனுப்பி வைக்கிறார். பின்னர் ரேவதி கேள்வி எழுப்பும்போதும், உண்மையை மறைத்து சமாளிக்கிறார்.

மறுபுறம், சந்திரகலா அனுப்பிய மூன்று பேர் சாமுண்டீஸ்வரியின் வீட்டுக்கு வந்து, ராஜராஜன் கோவிலில் கருப்பு வேஷம் அணிந்து சிறப்பாக ஆடியதாகவும், அதற்காக நன்றி தெரிவிக்க வந்துள்ளதாகவும் கூறுகின்றனர். </p><p>இதைக் கேட்டு சாமுண்டீஸ்வரி பெரும் அதிர்ச்சியில் ஆழ்கிறார்.

இந்நிலையில் அடுத்ததாக என்ன நடக்கப் போகிறது? காவியாவின் உடல்நிலை குறித்த உண்மை ரேவதிக்கு தெரியவருமா? சாமுண்டீஸ்வரி எப்படிப் பதிலடி கொடுக்கப் போகிறார்? என்ற பரபரப்பான கேள்விகளுக்கு விடை காண, ‘கார்த்திகை தீபம்’ தொடரின் அடுத்த எபிசோடை தவறாமல் காணுங்கள்.</p>]]></content>
            <updated>2026-09-05T06:15:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[22 வயது இளைஞரைக் காதலிக்கும் பிரிஜிட் மேக்ரானின் 42 வயது மகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/brigitte-macron-daughter-dating-1788588805"></link>
            <id>https://news.lankasri.com/article/brigitte-macron-daughter-dating-1788588805</id>
            <summary type="text">22-year-old dating the 42-year-old daughter of Brigitte Macron: பிரிஜிட் மேக்ரானின் 42 வயது மகளுடன் டேட்டிங் செய்யும் 22 வயது சர்ஃபிங் பயிற்சியாளர்.
...</summary>
            <content type="html"><![CDATA[<p>22-year-old dating the 42-year-old daughter of Brigitte Macron: பிரிஜிட் மேக்ரானின் 42 வயது மகளுடன் டேட்டிங் செய்யும் 22 வயது சர்ஃபிங் பயிற்சியாளர்.</p><p>
பிரான்ஸின் முதல் பெண்மணியான பிரிஜிட் மேக்ரானின் 42 வயது மகள் தற்போது 22 வயதேயான சர்ஃபிங் பயிற்சியாளரை காதலிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/25cf853e-d082-4ab0-9480-57b5eb102ef6/26-6a9bb3072b070.webp' /></p><p> </p><p>
பிரிஜிட் மேக்ரானின் மகள் Tiphaine Auzière என்பவர் பிரபலமான சட்டத்தரணி என்பதுடன், தனது தாயார் மற்றும் வளர்ப்பு தந்தை ஆகியோரின் மிகப் பெரிய ஆதரவாளருமாவார். </p><p>Tiphaine Auzière-விட இமானுவல் மேக்ரானுக்கு வெறும் 6 வயது தான் அதிகம். உடல் தோற்றத்திலும் தாயும் மகளும் ஒரே மாதிரியான பொன்னிற முடி, இளமையான முகம் மற்றும் மெலிந்த உடல்வாகு ஆகியவற்றைக் கொண்டுள்ளனர்; அதோடு, அந்தத் தனித்துவமான, வசீகரமான புன்னகையையும் அவர்கள் பெற்றுள்ளனர். </p><p>பிரிஜிட் தன்னைவிட 24 வயது இளையவரான இமானுவல் மேக்ரானைக் காதலித்து திருமணம் செய்துகொண்டுள்ள நிலையில், திஃபைன், தன்னைவிட 20 வயது இளையவரான ஒரு சர்ஃபிங் பயிற்சியாளருடன் தீவிரமான காதல் உறவில் ஆழ்ந்துள்ளார்.</p><p></p><p>
</p><p>இருபதுகளின் பிற்பகுதியில் இருக்கும் அன்டோயின் லெகோம்ட் (Antoine Lecomte), கைட்சர்ஃபிங் (kitesurfing) உலகில் ஒரு சிறந்த சாதனையாளராகத் திகழ்வதுடன், ஒரு உயர்தர வணிகப் பள்ளியிலும் பயின்றவர்; </p><p>இவர் சமீபத்தில், பிரான்சின் புகழ்பெற்ற கடற்கரை நகரமான 'லெ டூக்கெட்'டில் (Le Touquet) இருந்து, சர்ஃபர்களுக்கான உயர்தர கைட்களைத் (kites) தயாரிக்கும் தனது சொந்த நிறுவனத்தைத் தொடங்கியுள்ளார். </p><p>இந்த நிலையில், நாளேடு ஒன்று அன்டோயினைத் தொடர்புகொண்டதை அடுத்து, மக்கள் ஏன் இந்த விவகாரத்தில் ஆர்வம் காட்டுகிறார்கள் என்பதை தன்னால் புரிந்துகொள்ள முடிகிறது என குறிப்பிட்டதுடன், எங்கள் உறவும் அவருடைய தாயார் பிரிஜிட் மற்றும் ஜனாதிபதி மேக்ரான் ஆகியோரின் உறவைப் போன்றதுதான் என்று அந்த 22 வயது இளைஞர் புன்னகைத்தபடியே ஒப்புக்கொண்டுள்ளார். </p><p>மேலும், இது வெறும் கோடைக்காலப் பொழுதுபோக்கல்ல. இது உண்மையான காதல், தீவிரமானது. எதிர்காலத்திற்காக எங்களிடம் திட்டங்கள் உள்ளது என்றும் அவர் பதிலளித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6a9d7859-2597-4a23-9c51-956b8bb0caee/26-6a9bb307d0dda.webp' /></p><p> இந்த வாரத் தொடக்கத்தில் இன்ஸ்டாகிராமில் தங்களது மலரும் காதலைப் பகிரங்கப்படுத்த அந்த ஜோடி எடுத்த முடிவில், நிச்சயமாக ஒரு தனித்துவமான வாழ்க்கைப் பேரானந்தம் காணப்பட்டது என்றே கூறுகின்றனர்.
</p><p>வயது வித்தியாசம் யாருக்காவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருந்தால், அது இரண்டு பிள்ளைகளின் தாயான திஃபைனையோ, அல்லது தனக்கு இதற்கு முன்பு இரண்டு உறவுகள் இருந்ததாக டெய்லி மெயிலிடம் கூறும் அன்டோயினையோ சற்றும் பாதிக்கவில்லை. </p><p>கோடையின் தொடக்கத்தில் Tiphaine தன்னிடம் ஈஃபாயில் சர்ஃபிங் பயிற்சிக்காக வந்தபோது, ​​அவர் யார் என்றே தனக்கு உண்மையில் தெரியாது என்று அந்த வசீகரமான இளம் தொழிலதிபர் ஒப்புக்கொள்கிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a7bbd464-d26c-4816-9fe1-28087ccf39d2/26-6a9bb308845ff.webp' /></p><p> </p><p>ஆனால், அவர் பிரிஜிட் மேக்ரானின் மகள் என்பது எனக்குப் பின்னர்தான் தெரியவந்தது; அது எனக்கு ஒரு பொருட்டல்ல, நாங்கள் மிகவும் நன்றாகப் பழகுகிறோம், அதுதான் மிக முக்கியமான விடயம், நாங்கள் ஒருவரையொருவர் மகிழ்ச்சியாக வைத்திருக்கிறோம் என்றார். </p><p>மேலும், Tiphaine ஒரு சட்டத்தரணி; இலங்கையில் எனது தொழிற்சாலையை நான் விரிவுபடுத்த வேண்டியிருப்பதால் அவர் எனக்கு உதவுவார், நாங்கள் இருவரும் சேர்ந்து அங்கு செல்வோம். இந்தத் தொழில் மேலும் வலுவடையும் என்று நான் நம்புகிறேன் என Antoine Lecomte குறிப்பிட்டுள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-05T06:11:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kiyas Shafe</name>
            </author>
            <title type="text"><![CDATA[அநுராதபுரத்தில் வாழ்வாதாரத்திற்காக பயிர்ச்செய்கையில் ஈடுபட்டிருந்த இருவருக்கு நேர்ந்த பரிதாபம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/two-killed-in-elephant-attack-1788586983"></link>
            <id>https://tamilwin.com/article/two-killed-in-elephant-attack-1788586983</id>
            <summary type="text">அநுராதபுரம் - கெப்பித்திகொல்லாவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகலஉஸ்கொள்ளாவ பகுதியில் யானை தாக்கியதில் இருவர் உயிரிழந்துள்ளதாக கெப்பித்திகொல்லாவ பொலிஸார் தெ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அநுராதபுரம் - கெப்பித்திகொல்லாவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகலஉஸ்கொள்ளாவ பகுதியில் யானை தாக்கியதில் இருவர் உயிரிழந்துள்ளதாக கெப்பித்திகொல்லாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். </p><p>

குறித்த சம்பவம் நேற்று (04.09.2026) மாலை இடம்பெற்றுள்ளது. </p><p>

கெப்பித்திகொல்லாவ - பகலஉஸ்கொள்ளாவ பகுதியைச் சேர்ந்த செனவிரத்னகே ஸ்ரீ பால (70) மற்றும் சமரக்கோன் அப்புஹாமிலாகே சுகத் சுமனரத்ன (51) ஆகிய இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.</p><h2>பயிர்ச்செய்கை முன்னெடுப்பு</h2><p> </p><p>

உயிரிழந்த இருவரும் தமது வாழ்வாதாரத்திற்காக சேனைப் பயிர்ச்செய்கையில் ஈடுபட்டு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p> 

இந்த நிலையில், சிறிய காட்டுப் பகுதியொன்றை துப்புரவு செய்து கொண்டிருந்தபோது, அங்கு அருகில் வந்த யானையொன்று இருவரையும் தாக்கியுள்ளதாக ஆரம்பகட்ட பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7c8cb0cd-3931-47bc-8c5e-c3ef2ddc9640/26-6a9bb0016857a.webp' /></p><p> 

யானையின் தாக்குதலில் படுகாயமடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.</p><h2>விசாரணை</h2><p> </p><p>

சம்பவம் தொடர்பில் தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்த கெப்பித்திகொல்லாவ திடீர் மரண விசாரணை அதிகாரி ஏ.எல். காதர், இரு சடலங்களையும் பார்வையிட்டதுடன், பிரேத பரிசோதனைக்காக அநுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டார். </p><p>

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கெப்பித்திகொல்லாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-05T06:01:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[கச்சத்தீவு இலங்கைக்கே உரித்தானது : அமைச்சர் சந்திரசேகர் அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/katchatheevu-belongs-to-sri-lanka-min-chandrasekar-1788585209"></link>
            <id>https://ibctamil.com/article/katchatheevu-belongs-to-sri-lanka-min-chandrasekar-1788585209</id>
            <summary type="text">கச்சத்தீவு இலங்கைக்கே உரித்தானது என்பதில் எவ்வித ஐயமும் இல்லை என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>கச்சத்தீவு இலங்கைக்கே உரித்தானது என்பதில் எவ்வித ஐயமும் இல்லை என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.</p><p>தமிழக அரசியல்வாதிகள் தங்களின் அரசியல் இருப்பைத் தக்கவைத்துக்கொள்வதற்காகவும் மக்களைத் திசைதிருப்புவதற்காகவுமே கச்சத்தீவை மீளப் பெற வேண்டும் என்ற கோரிக்கையைத் தொடர்ந்து முன்வைத்து வருவதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.&nbsp;</p><p>கிளிநொச்சியில் அண்மையில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.</p><p>&nbsp;</p><h2>தமிழக அரசியல்வாதிகள்&nbsp;</h2><p>இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், கச்சத்தீவு இலங்கையின் ஆட்சிப்பகுதிக்கு உட்பட்டது என்பதில் எந்தவிதமான குழப்பத்திற்கும் இடமில்லை.</p><p>சர்வதேச சட்டங்கள், இரு நாடுகளுக்கிடையிலான ஒப்பந்தங்கள் மற்றும் கடல் எல்லை நிர்ணயம் தொடர்பான அதிகாரப்பூர்வ ஆவணங்கள் மற்றும் தரவுகளின் அடிப்படையில் கச்சத்தீவு இலங்கையின் இறையாண்மைக்கு உட்பட்டதாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c7dd900f-ad25-45f0-a01a-ce9efb7bc265/26-6a9badbf4db42.webp' />&nbsp;</p><p>தமிழக அரசியல்வாதிகள் தங்கள்மீது எழுந்துள்ள அரசியல் குற்றச்சாட்டுகளில் இருந்து மக்களின் கவனத்தைத் திசைதிருப்புவதற்கும், தங்களது வாக்கு வங்கியைப் பாதுகாப்பதற்கும் கச்சத்தீவு விவகாரத்தை மீண்டும் மீண்டும் அரசியல் பிரசாரத்திற்குப் பயன்படுத்தி வரு இக்கோரிக்கைகளுக்கு பின்னால் எந்தவிதமான புதிய இராஜதந்திர அல்லது சட்டபூர்வ உண்மையும் இல்லை.</p><p>
எதிர்வரும் 25ஆம் திகதி இலங்கை அதிகாரிகள் இந்தியாவிற்கு பயணம் மேற்கொள்ளவுள்ளனர். இந்தப் பயணம் கச்சத்தீவு தொடர்பில் விவாதிப்பதற்கானதல்ல.</p><p></p><h2>கடற்றொழிலாளர் பிரச்சினைகள்</h2><p> </p><p>மாறாக, இரு நாடுகளுக்கும் இடையில் நீண்டகாலமாக நிலவி வரும் கடற்றொழிலாளர் பிரச்சினைகள் உள்ளிட்ட நடைமுறைச் சிக்கல்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காகவே இந்தப் பயணம் இடம்பெறவுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/553e1068-a816-4a39-919a-31b0c8b1def3/26-6a9badbe55dad.webp' /></p><p>குறிப்பாக, இந்தியாவிலிருந்து இலங்கை கடற்பரப்பிற்குள் எல்லைதாண்டி வரும் இழுவைப்படகுகளினால் வடக்கு கடற்பரப்பின் கடல்வளம் பாரியளவில் பாதிக்கப்படுவதுடன், வடபகுதி கடற்றொழிலாளர்களின் தொழிலும் வாழ்வாதாரமும் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகின்றன. </p><p>சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளைத் தடுப்பது, கடல்வளத்தைப் பாதுகாப்பது மற்றும் இலங்கையின் கடல் எல்லையை உறுதியாகப் பாதுகாப்பது தொடர்பான விடயங்களுக்கே இருதரப்பு கலந்துரையாடல்களில் முன்னுரிமை வழங்கப்படும்.” என தெரிவித்தார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-05T05:59:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈஸ்டர் குண்டு தாக்குதல்கள்: விடுதலைப் புலிகள் வழங்கிய துல்லியமான தகவல்கள்! அதிர்ச்சியளிக்கும் வாக்குமூலம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/easter-attack-in-sri-lanka-army-intelligence-unit-1788480966"></link>
            <id>https://tamilwin.com/article/easter-attack-in-sri-lanka-army-intelligence-unit-1788480966</id>
            <summary type="text">உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலின் பின்னணியில் இருந்த சதித்திட்டம் குறித்த வழக்கு விசாரணைகள் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் நடைபெற்றும் வரும...</summary>
            <content type="html"><![CDATA[<p>உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலின் பின்னணியில் இருந்த சதித்திட்டம் குறித்த வழக்கு விசாரணைகள் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் நடைபெற்றும் வரும் நிலையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகள் இரகசியத் தகவல்கள் வழங்கியதாக எங்கும் வெளிவராத மயிர்க் கூச்செறியும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
</p><p>இந்தச் சம்பவத் தொடர்பில் இராணுவ புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் வழங்கிய விசேட வாக்குமூலத்தில் இதுவரை கேட்டிராத புலனாய்வுத் தகவல் பரிமாற்றங்கள் குறித்த விபரங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
</p><p>வழக்கு விசாரணைகள் நடைபெற்று வருவதால் அவர்களின் உண்மையான பெயர்களை வெளிப்படுத்தாமல் புனைப்பெயர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது ஒரு விசாரணையின்போது சாட்சிகளிடமிருந்து பெறப்பட்டு நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட தகவல்கள் மட்டுமே.</p><h2>
</h2><p></p><h2>தகவல் சேகரிக்கும் புலனாய்வு அதிகாரி</h2><p>இராணுவ புலனாய்வுப் பிரிவின் 1வது படைப்பிரிவைச் சேர்ந்த கோப்ரல் தர அதிகாரி ஒருவர் இந்த வாக்குமூலத்தை வழங்கியுள்ளார். </p><p>இந்தியாவின் சிறப்புப் பொலிஸ் பிரிவு அதிகாரி ஒருவர், இராணுவத் தகவல் வழங்கி (informer) ஒருவர் ஊடாக, தாக்குதலுக்கு முன்னர் சஹ்ரான் பற்றிய தகவல்களை எவ்வாறு வழங்கினார் என்பது பற்றிய புதிய தகவல்கள் இதில் அடங்கியுள்ளன.
</p><p>இந்தக் கோப்ரல் அதிகாரியை நாம் "பிரதீப்" எனக் குறிப்பிடுவோம். பிரதீப்பின் கடமை, தகவல் வழங்குபவர்களை இயக்கி புலனாய்வுத் தகவல்களைச் சேகரிப்பதாகும். </p><p>இதற்காக அவர் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தகவல் தொடர்பாளர்கள் அடங்கிய வலையமைப்பு ஒன்றை வைத்திருந்தார். 
2016 ஆம் ஆண்டு, இந்தியாவில் இருந்து இலங்கை வந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற்புலிகளின் முன்னாள் போராளி ஒருவரை பிரதீப் சந்திக்கிறார். </p><p>அவரை நாம் "சார்லஸ்" எனக் குறிப்பிடுவோம். சார்ல்ஸை பிரதீப் தனது தகவல் வழங்குபவராக மாற்றிக்கொண்டு, அவருக்கென தனி கோப்பு ஒன்றை பராமரிக்கத் தொடங்குகிறார்.
</p><p>சார்ல்ஸுக்கு இந்தியாவில் விரிவான தகவல் வலையமைப்பு இருந்தது. தமிழக பொலிஸின் சிறப்புப் பிரிவான 'Q' பிரிவின் பிரதானியான ஈஸ்வரமூர்த்தி என்பவருடன் சார்லஸுக்கு நெருங்கிய தொடர்பு இருந்தது. </p><p>
சார்ல்ஸ் மூலமாக, பிரதீப் இந்திய 'Q' பிரிவு பிரதானி ஈஸ்வரமூர்த்தியுடன் தொலைபேசியில் உரையாடும் வாய்ப்பைப் பெறுகிறார். இதன் மூலம் சட்டவிரோதமாக இந்தியாவிற்குத் தப்பிச் செல்லும் நபர்கள், முகாம்களில் உள்ள அகதிகள் மற்றும் இந்தியாவில் ஒளிந்துள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் பற்றிய தகவல்கள் பிரதீப்பிற்குப் கிடைக்கத் தொடங்குகின்றன.
</p><h2>இந்தியாவில் இருந்து வந்து முதல் தகவல்</h2><p>2018 ஆம் ஆண்டின் பிற்பகுதியில், 'Q' பிரிவு பிரதானி ஈஸ்வரமூர்த்தி, சார்லஸ் ஊடாக ஒரு முக்கிய எச்சரிக்கையை விடுக்கிறார்:
மட்டக்களப்பில் சஹ்ரான் மௌலவி என்பவர் தீவிரவாதக் கருத்துக்களைப் பரப்பி வருவதாகவும், அவரது காணொளிகள் வலையொளி தளத்தில் (YouTube) உள்ளதாகவும் கூறி அதற்கான இணைப்பை (link) வழங்குகிறார்.
</p><p>சஹ்ரான் மிகவும் ஆபத்தான தீவிரவாதி என்றும், எதிர்காலத்தில் அவராலும் அவரது குழுவினராலும் பெரும் அச்சுறுத்தல் ஏற்படலாம் என்றும் எச்சரிக்கிறார்.
ஐ.எஸ். (ISIS) அமைப்பின் பயிற்சி கையேடுகள், </p><p>குண்டு தயாரிக்கும் முறைகள் மற்றும் தற்கொலைத் தாக்குதல் பற்றிய தகவல்கள் அடங்கிய அரபு மொழிப் புத்தகம் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வாட்ஸ்அப் (WhatsApp) மூலம் பகிரப்பட்டு வருவதாகவும் தகவல் அளிக்கிறார்.
</p><p>இந்த எச்சரிக்கையைத் தொடர்ந்து, பிரதீப் தனது கட்டளை அதிகாரிக்கு விபரங்களை தெரிவிக்கிறார். பின்னர், சார்லஸின் தொலைபேசி ஊடாக பிரதீப்பின் கட்டளை அதிகாரியும், இந்திய 'Q' பிரிவு அதிகாரி ஈஸ்வரமூர்த்தியும் ஆங்கிலத்தில் நேரடியாகப் பேசுகின்றனர்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/15b2b0ab-d818-42dc-a5e5-70a05eb47d73/26-6a9a0dc927dbc.webp' /></p><p>இதன் தீவிரத்தை உணர்ந்த கட்டளை அதிகாரி, சஹ்ரான் குறித்து உடனடியாக ஒரு முழுமையான அறிக்கையைத் தயாரித்து இராணுவ புலனாய்வு இயக்குனருக்கு (Director of Military Intelligence) அனுப்புமாறு பிரதீப்பிற்கு உத்தரவிடுகிறார். </p><p>அதன்படி அறிக்கை தயாரிக்கப்பட்டு, அதிகாரியின் கையொப்பத்துடன் அனுப்பி வைக்கப்படுகிறது. 
அதேவேளை, தனது ஏனைய தகவல் தொடர்பாளர்கள் ஊடாகவும் இந்தச் சஹ்ரான் என்ற தீவிரவாதி குறித்துத் தேடிப் பார்த்தபோது, </p><p>மன்னாரில் உள்ள தனது மற்றொரு தகவல் தொடர்பாளர் மூலம் பிரதீப்பிற்கு ஒரு புலனாய்வுத் தகவல் கிடைக்கிறது. சஹ்ரான் கடல் வழியே இந்தியாவிற்குத் தப்பிச் சென்று மீண்டும் இலங்கைக்கு வந்துள்ளதாகவும், </p><p>அவர் இலங்கையிலிருந்து தப்பிச் செல்ல முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் என்ற அரசியல்வாதியின் உதவி கிடைத்துள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டது.
</p><p>இது குறித்து இராணுவ புலனாய்வு பிரிவுக்கு (DMI) அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டபோது, ரிஷாத் பதியுதீனின் பெயரை நேரடியாகக் குறிப்பிடாமல் "பலமிக்க அரசியல்வாதி ஒருவர்" என்றே குறிப்பிடப்பட்டிருந்தது. (இது நல்லாட்சி அரசாங்கத்தின் காலப்பகுதியில் நடந்ததாகக் கருதப்படுகிறது).
</p><h2>வவுணதீவு சம்பவத்தின் உண்மைத் தன்மை</h2><p>2018 நவம்பர் 30ஆம் திகதி மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் சோதனைச்சாவடியில் கடமையிலிருந்த இரண்டு பொலிஸார் படுகொலை செய்யப்பட்டு, அவர்களின் துப்பாக்கிகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
</p><p>இச்சம்பவம் நடந்த அன்றைய தினம் காலையிலேயே, தகவல் தொடர்பாளரான சார்லஸ் இராணுவ புலனாய்வு அதிகாரி பிரதீப்பைத் தொடர்புகொள்கிறார். </p><p>"நேற்று மட்டக்களப்பில் நடந்த சம்பவம் பற்றிக் கேள்விப்பட்டீர்களா?" என வினவுகிறார். அதற்கு, "தமிழக 'Q' பிரிவு பிரதானி ஈஸ்வரமூர்த்தி என்னிடம் இவ்வாறு கூறினார்; </p><p>இத்தாக்குதலை நாம் ஏற்கனவே பேசிவந்த சஹ்ரானின் குழுவினரே நடத்தியுள்ளனர்" எனச் சார்லஸ் தெரிவிக்கிறார்.
உடனடியாக, இராணுவ புலனாய்வு கோப்ரல் பிரதீப், சஹ்ரான் குறித்து ஏற்கனவே தயாரித்த அறிக்கையை எடுத்துக்கொண்டு முகாமின் சி.ஓ. (CO - Commanding Officer) இடம் சென்று காண்பிக்கிறார்.</p><p>அதற்கு சி.ஓ., "இது குறித்து மேலும் ஆராயுங்கள்" எனக் கூறிய போதிலும், மேலதிக விரிவான வழிகாட்டல்கள் எதையும் வழங்கவில்லை.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/29894d6f-036d-4834-9f36-2639d5a65830/26-6a9a0dc9e0815.webp' /></p><p>இதனைத் தொடர்ந்து, இராணுவ புலனாய்வு பிரிவின் மாதாந்த மறுஆய்வுக் கூட்டத்தில் 
வவுணதீவு சம்பவத்தை தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினர்களே செய்திருப்பார்கள் என இராணுவ புலனாய்வு பிரிவு சந்தேகித்ததால், பிரதீப்பின் கட்டளை அதிகாரி, </p><p>"இச்சம்பவம் சஹ்ரான் தரப்பால் அல்ல, தமிழீழ விடுதலைப்புலிகள் தரப்பாலேயே செய்யப்பட்டது என சந்தேகிக்கப்படுகிறது. 
இதை பிரதீப் தனது தகவல் வழங்கி சார்லஸிடம் கூறியபோது, சார்லஸ் அதனை மறுக்கிறார். </p><p>கடற்புலிகளின் முன்னாள் உறுப்பினரான சார்லஸ், "இதில் தேடுவதற்கு எதுவுமில்லை. தமிழீழ விடுதலைப் புலிகள் ஒருபோதும் பொலிஸாரை இப்படிக் கொடூரமான முறையில் கொல்ல மாட்டார்கள். </p><p>இவ்வாறான கொடூரமான படுகொலைகளை முஸ்லிம் தீவிரவாதிகளே செய்வார்கள்" எனத் தெரிவிக்கிறார். இந்தத் தகவலும் பிரதீப்பினால் தனது கட்டளை அதிகாரிக்குத் தெரிவிக்கப்பட்டது.
</p><p>தற்போது வெளிவந்துள்ள இந்த வாக்குமூலத்தின் மூலம், சஹ்ரான் குழுவே இத்தாக்குதலை நடத்தியது என்ற தகவல் இராணுவ புலனாய்வுப் பிரிவிற்கு முன்கூட்டியே கிடைத்திருந்த போதிலும், இராணுவ புலனாய்வுப் பிரிவு தகுந்த நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு மற்றொரு கோணத்தில் இங்கு உறுதிப்படுத்தப்படுகிறது.
</p><h2>குண்டு வெடிப்பின் பின்னர்</h2><p>குண்டு வெடித்த பின்னர் கோப்ரல் தனது முகாமில் உள்ள அதிகாரிகளுக்குத் தெரிவித்த கருத்து. அதாவது, சார்ல்ஸ் என்பவர் "உங்களுக்குத் தகவல் கூறியும் நீங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை, இப்போது குண்டுகள் வெடித்துள்ளன, சஹ்ரான் ஷாங்க்ரி-லா ஹோட்டலில் இறந்துவிட்டான், மற்றவர்களும் இறந்துவிட்டார்கள்" எனக் கூறியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
</p><p>அதன் பிறகு,இந்த அணியைச் சேர்ந்த மேலும் 10 பேர் மட்டக்களப்பு, சாய்ந்தமருதுப் பகுதியில் இருக்கிறார்கள். அவர்கள் இந்தியாவுக்குத் தப்பிச் செல்லத் தயாராக இருக்கிறார்கள் இந்த அனைத்துத் தகவல்களும் இந்தியாவின் தமிழ்நாடு காவல்துறையின் 'Q' பிரிவின் பிரதானியான ஈஸ்வரமூர்த்தி என்பவரிடமிருந்தே வந்ததாகப் பதிவாகியுள்ளது. </p><p>ஈஸ்வரமூர்த்தி தனக்குக் கூறியதாகவே சார்லஸ் இந்தத் தகவல்களைத் தெரிவிக்கிறார்.
இவ்வாறு இந்தியாவிலிருந்து ஈஸ்வரமூர்த்தி என்ற அதிகாரி, தனது தகவல் வழங்குநரான சார்லஸ் மூலமாக வழங்கிய தகவல்கள் 100% சரியானது என்பதை இந்த இராணுவக் கோப்ரல் இப்போது உறுதிப்படுத்தியுள்ளார். </p><p>"இவ்வளவு தகவல்கள் கிடைத்திருந்தும் அதைப் பயன்படுத்தத் தவறியதால் இந்தச் தொடர் சம்பவங்களைத் தடுத்துநிறுத்த முடியாமல் போனது குறித்து மிகுந்த வருத்தமடைகிறேன்" என்றும் அவர் கூறுகிறார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-05T05:53:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Tony</name>
            </author>
            <title type="text"><![CDATA[அஜித் ட்ரைலருக்கே இப்படி ஒரு வரவேற்பா?... அடித்து நொறுக்கும் முன்பதிவு விவரம் இதோ..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/actor-ajith-car-race-documentary-details-1788586935"></link>
            <id>https://cineulagam.com/article/actor-ajith-car-race-documentary-details-1788586935</id>
            <summary type="text">நடிகர் அஜித்அஜிய் தமிழ் சினிமா கொண்டாடும் உச்ச நடிகர். இவர் சமீப காலமாக தன் படங்களில் பெரிதும் கவனமின்றி கார் ரேஸ்-ல் தான் முழுகவனமும் செலுத்தி வருகிற...</summary>
            <content type="html"><![CDATA[<h2>நடிகர் அஜித்</h2><p>அஜிய் தமிழ் சினிமா கொண்டாடும் உச்ச நடிகர். இவர் சமீப காலமாக தன் படங்களில் பெரிதும் கவனமின்றி கார் ரேஸ்-ல் தான் முழுகவனமும் செலுத்தி வருகிறார். </p><p>அந்த வகையில் தான் பங்கேற்ற கார் பந்தய வீடியோக்களை தொகுத்து ஒரு டாக்குமெண்ட்ரி ஆக கிளாடியேட்டர் என்ற பெயரில் உருவாக்கியுள்ளார். அதை மிக விரைவில் திரைக்கு கொண்டு வர உள்ளாராம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/03ba817d-e1f2-49d9-a88f-4699d413ee9a/26-6a9babb8e3af4.webp' /></p><p> </p><p>அந்த ட்ரைலர் ஞாயிறு அன்று தமிழ்நாடு முழுவதும் பல திரையரங்குகளில் வெளிவரவுள்ளது. </p><p>அந்த ட்ரைலர் முன் பதிவு நேற்று தொடங்க அனைத்து இடங்களிலும் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்துவிட்டது.</p><p>இதனால் படக்குழு செம சந்தோஷத்தில் இருக்க, கண்டிப்பாக ஞாயிறு அன்று தமிழகத்தில் பல திரையரங்குகளில் திருவிழா போல் இருக்கும் என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை.&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/Mdu8qFNh3XM" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-09-05T05:50:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[விமானிகள் அறையில் போதைப்பொருள்; ஏர் இந்தியா பைலட் பணிநீக்கம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/drugs-in-cockpit-air-india-pilot-dismissed-1788587249"></link>
            <id>https://jvpnews.com/article/drugs-in-cockpit-air-india-pilot-dismissed-1788587249</id>
            <summary type="text">&amp;nbsp; ஏர் இந்தியா விமானத்தின் தலைமைப் பைலட் போதைப்பொருள் பரிசோதனையில் தோற்றதைத் தொடர்ந்து, அவரை ஏர் இந்தியா நிறுவனம் உடனடியாகப் பணியிலிருந்து நீக்கி ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; ஏர் இந்தியா விமானத்தின் தலைமைப் பைலட் போதைப்பொருள் பரிசோதனையில் தோற்றதைத் தொடர்ந்து, அவரை ஏர் இந்தியா நிறுவனம் உடனடியாகப் பணியிலிருந்து நீக்கி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.</p><p>

 கடந்த ஆகஸ்ட் 4-ஆம் தேதி தாய்லாந்தின் ஃபூகெட்டிலிருந்து டெல்லி நோக்கி 137 பயணிகள் மற்றும் 8 ஊழியர்களுடன் பயணித்த ஏ-320 ரக விமானம் நடுவானில் திடீரெனக் கட்டுப்பாட்டை இழந்து 300 அடி கீழே சரிந்து விபத்துக்குள்ளான சம்பவத்தின் முதற்கட்ட விசாரணை அறிக்கை வெளியான நிலையிலேயே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/744a4ada-98ef-4e84-b8f7-d4e535d202aa/26-6a9bacf37add5.webp' /></p><h2>விமான விபத்து புலனாய்வுப் பணியகம்&nbsp; அறிக்கை</h2><p>
</p><p>
விமான விபத்து புலனாய்வுப் பணியகம் (AAIB) வெளியிட்டுள்ள பூர்வாங்க அறிக்கையின்படி, ஆகஸ்ட் 4 அன்று ஒடிசா வான்வெளியில் 36,000 அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்த போது, விமானத்தின் மூன்று ஹைட்ராலிக் அமைப்புகளும் (Green, Blue, Yellow Systems) அடுத்தடுத்துச் செயலிழந்தன.</p><p></p><p>
</p><p>
இதனால் தானியங்கி இயக்கம் (Autopilot) துண்டிக்கப்பட்டு, விமானம் சில வினாடிகளில் 372 அடி உயர்ந்து பின்னர் 292 அடி தடாலடியாகக் கீழே சரிந்தது. இதில் இருக்கைப் பட்டை அணியாதிருந்த 20 பயணிகள் மற்றும் 4 விமானப் பணிப்பெண்கள் உட்பட 24 பேர் படுகாயமடைந்தனர்.</p><p>

டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் விமானம் பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டதைத் தொடர்ந்து, இரு பைலட்களுக்கும் நடத்தப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் மது அருந்தியதற்கான சான்றுகள் இல்லை.</p><p></p><p> </p><p>இருப்பினும், இரத்த மாதிரி பரிசோதனையில் 34 வயதான முதன்மைப் பைலட்டின் மாதிரியில் கஞ்சா (Marijuana) உள்ளிட்ட தடை செய்யப்பட்ட போதைப்பொருளின் பயன்பாடு உறுதி செய்யப்பட்டது.</p><p> இதைத் தீவிரப் பாதுகாப்புக் குறைபாடாகச் சுட்டிக்காட்டிய AAIB, விமானப் போக்குவரத்து தலைமை இயக்ககமான DGCA-வுக்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு பரிந்துரைத்தது.</p><p></p><p>
</p><p>
 பரிந்துரையைத் தொடர்ந்து அறிக்கை வெளியான சில மணி நேரங்களிலேயே, “பயணிகளின் பாதுகாப்பில் எவ்வித சமரசமும் செய்துகொள்ள முடியாது எனக் கூறிப் பைலட்டின் சேவையை ஏர் இந்தியா உடனடியாக முடிவுக்குக் கொண்டுவந்துள்ளது. </p><p>

தொழில்நுட்பக் கோளாறால் இந்த அசம்பாவிதம் நேரிட்டதா அல்லது போதையில் இருந்த பைலட்டின் தவறான வழிகாட்டலா என்பது குறித்துத் விரிவான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் வேளையில், இச்சம்பவம் இந்திய விமானப் போக்குவரத்துத் துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.&nbsp; &nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-05T05:44:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறையில் அடைக்கப்பட்டுள்ள நாமலின் தற்போதைய நிலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-rajapaksa-in-saftey-place-1788573307"></link>
            <id>https://tamilwin.com/article/namal-rajapaksa-in-saftey-place-1788573307</id>
            <summary type="text">
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச எதிர்வரும் 18ஆம் திகதி வரை கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையில...</summary>
            <content type="html"><![CDATA[<p>
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச எதிர்வரும் 18ஆம் திகதி வரை கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.</p><p>

குறித்த சிறைச்சாலையின் பாதுகாப்புமிக்க விசேட அறையில் அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.
</p><p>
நாமலின் பாதுகாப்பு தொடர்பில் கவனம் செலுத்தி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.</p><p>
</p><h2><b>
சிறைச்சாலை வட்டாரங்கள் </b></h2><p>நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுடன் மேலும் 10 கைதிகள் வரை குறித்த அறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6e9f94f8-dc29-46ac-a8de-7b29aedbb92a/26-6a9b7927e0c9f.webp' /></p><p>இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினரால் நேற்று கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
</p><p>
கொழும்பு நீதவான் நீதிமன்றில் அவர் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து வழங்கப்பட்ட உத்தரவின் பேரிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><h3><b>

நாமல் ராஜபக்ச கைது</b></h3><p>இலஞ்ச ஊழல் ஆணைக்குழு சார்பில் முன்னிலையான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டார மற்றும் சந்தேகநபரின் சட்டத்தரணிகள் சமர்ப்பித்த வாதங்களை பரிசீலித்த கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ் போதரகம இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9161d163-10dc-43ec-a023-590092d8f633/26-6a9b792895028.webp' /></p><p>பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய எயார்பஸ் விமானக் கொள்வனவின் போது 8 லட்சம் அமெரிக்க டொலர் இலஞ்சம் பெற்றதாக கூறப்படும் குற்றச்சாட்டில் நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. </p>]]></content>
            <updated>2026-09-05T05:40:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரான்ஸை உலுக்கிய வெப்ப அலை ; 7,000 பேர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/heatwave-rocks-france-7-000-dead-until-july-1788586851"></link>
            <id>https://canadamirror.com/article/heatwave-rocks-france-7-000-dead-until-july-1788586851</id>
            <summary type="text">&amp;nbsp; பிரான்ஸ் நாட்டில் இந்த கோடைகாலத்தில் கொடூர வெப்ப அலை காரணமாக, ஜூலை மாத இறுதி வரை மட்டும் சுமார் 7,000 பேர் உயிரிழந்துள்ளதாக பிரான்ஸ் சுகாதாரத் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; பிரான்ஸ் நாட்டில் இந்த கோடைகாலத்தில் கொடூர வெப்ப அலை காரணமாக, ஜூலை மாத இறுதி வரை மட்டும் சுமார் 7,000 பேர் உயிரிழந்துள்ளதாக பிரான்ஸ் சுகாதாரத் துறை அமைச்சர் ஸ்டெபானி ரிஸ்ட் (Stéphanie Rist) அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார்.
</p><p>
 1900-ஆம் ஆண்டிற்குப் பிறகு பிரான்ஸ் கண்ட மிக மோசமான கோடைக்காலமாக இது பதிவாகியுள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை எதிர்பார்க்கப்பட்டதை விட மிக அதிகமாக உள்ளதாக அவர் கவலை தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f5a21d8f-887d-4fe9-9c78-c999ab174d23/26-6a9bab6546909.webp' /></p><h2>இரு வார காலப்பகுதியில் வீசிய தீவிர வெப்ப அலை</h2><p>
</p><p>
பிரெஞ்சு பொது சுகாதார அமைப்பின் (Santé publique France) பூர்வாங்க தரவுகளின்படி, ஜூன் 17 முதல் ஜூலை 2 வரையிலான இரு வார காலப்பகுதியில் வீசிய தீவிர வெப்ப அலையின் போது மட்டும் சுமார் 5,764 பேர் உயிரிழந்துள்ளனர்.</p><p> 

இது வழக்கமான மரணங்களின் விகிதத்தை விட 36 சதவீதத்திற்கும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. ஜூலை மாத தொடக்கத்தில் இருந்து வீசிய இரண்டாவது கட்ட வெப்ப அலையில் மேலும் 1,200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், மொத்த பலி எண்ணிக்கை 7,000-ஐ கடந்துள்ளது.</p><p>

இதுகுறித்துத் ஊடகங்களுக்குப் பேட்டியளித்த சுகாதார அமைச்சர் ஸ்டெபானி ரிஸ்ட், “தொடர்ச்சியாக மூன்று மாதங்களாக வீசி வரும் கடுமையான வெப்ப அலையால் நமது நாட்டின் சுகாதாரக் கட்டமைப்பு பெரும் சவாலைச் சந்தித்துள்ளது. பெருநகரங்களில் தனியாக வாழ்ந்த முதியோர்கள் மற்றும் நோயாளிகளே இதில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்” எனக் கூறினார். </p><p>

மேலும், முழுமையான மற்றும் இறுதியான மரணப் புள்ளிவிவரங்கள் வரும் வாரங்களில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என்றும் சுகாதாரத் துறை அமைச்சர் ஸ்டெபானி ரிஸ்ட் (Stéphanie Rist) சுட்டிக்காட்டினார்.
</p><p>
காலநிலை மாற்றத்தின் தீவிர விளைவாக ஐரோப்பிய கண்டம் முழுவதிலும் வெயில் கொளுத்தி வரும் சூழலில், பிரான்சில் ஏற்பட்ட இந்த உயிரிழப்புகள் 2003-ஆம் ஆண்டு 15,000 பேர் பலியான கொடூர நிகழ்வுக்குப் பிறகு பதிவான மிக அதிகபட்ச மரண விகிதமாகப் பார்க்கப்படுகிறது

.</p><p> காட்டுத்தீ மற்றும் முன்னெப்போதும் இல்லாத வெப்பத்தால் நிலைகுலைந்துள்ள பிரான்ஸ் அரசு, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை அவசரநிலையைச் சமாளிக்கப் புதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-09-05T05:37:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[தேநீர் பிரியர்களுக்கு வெளியான மகிழ்ச்சி செய்தி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/plain-tea-milk-tea-price-sri-lanka-1788585700"></link>
            <id>https://tamilwin.com/article/plain-tea-milk-tea-price-sri-lanka-1788585700</id>
            <summary type="text">பால் தேநீர் மற்றும் சாதாரண தேநீரின் விலை இன்று நள்ளிரவு முதல் குறைக்கப்படவுள்ளது.&amp;nbsp;&amp;nbsp;

எரிவாயு விலை குறைப்பு காரணமாக, ஒரு கோப்பை பால் தேநீர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>பால் தேநீர் மற்றும் சாதாரண தேநீரின் விலை இன்று நள்ளிரவு முதல் குறைக்கப்படவுள்ளது.&nbsp;&nbsp;</p><p>

எரிவாயு விலை குறைப்பு காரணமாக, ஒரு கோப்பை பால் தேநீர் மற்றும் ஒரு கோப்பை சாதாரண தேநீரின் விலையை, 5 ரூபாயால் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><h2>சிற்றுண்டிகளின் விலை</h2><p>அகில இலங்கை உணவக மற்றும் மதுபான விடுதி உரிமையாளர்கள் சங்கம் வெளியிட்ட தகவலின்படி,&nbsp;இன்று நள்ளிரவு முதல் இந்த விலைக்குறைப்பு நடைமுறைக்கு வரும்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cca2a153-fe0b-4538-ae68-304d41fb4de6/26-6a9ba87e3c3c6.webp' /></p><p>இருப்பினும், சிற்றுண்டிகளின் விலையில் எந்த மாற்றமும் இருக்காது என்றும் அச்சங்கம் மேலும் குறிப்பிட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-05T05:35:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[QR குறியீட்டு முறையின் கீழ் எரிபொருள் விநியோகம் : வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/fuel-distribution-continue-under-qr-code-system-1788584141"></link>
            <id>https://ibctamil.com/article/fuel-distribution-continue-under-qr-code-system-1788584141</id>
            <summary type="text">QR குறியீட்டு முறையின் கீழ் எரிபொருள் விநியோகிக்கும் நடைமுறை தொடர்ந்து தடையின்றி முன்னெடுக்கப்படும் என இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p>QR குறியீட்டு முறையின் கீழ் எரிபொருள் விநியோகிக்கும் நடைமுறை தொடர்ந்து தடையின்றி முன்னெடுக்கப்படும் என இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
</p><p>
மத்திய கிழக்கில் நிலவும் நிச்சயமற்ற சூழ்நிலை காரணமாக இந்த நடைமுறை தொடர்வதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் மயூர நெத்திகுமார தெரிவித்துள்ளார்.</p><p>

QR முறையின் கீழ் எரிபொருள் விநியோகத்தை இடைநிறுத்தவோ அல்லது அதில் மாற்றங்களை மேற்கொள்ளவோ அரசாங்கம் இதுவரை எந்தவொரு தீர்மானத்தையும் எடுக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>QR குறியீட்டு முறை</h2><p>
</p><p>
எனவே, தற்போது நடைமுறையில் உள்ள எரிபொருள் விநியோக முறைமையை எவ்வித தடையுமின்றி தொடர்ந்து முன்னெடுக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/58be8a58-3c28-48d8-8e1c-84d8a4c256c3/26-6a9ba637efd4f.webp' /></p><p>
</p><p>
QR முறையில் மாற்றம் செய்யப்படவுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் தொடர்பில் பொதுமக்கள் மத்தியில் காணப்படும் சில கவலைகளுக்கு எந்தவித அடிப்படையும் இல்லை எனவும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
</p><p>
நாட்டின் ஒட்டுமொத்த எரிபொருள் நுகர்வை மிகவும் முறையானதும் திறமையானதுமான முறையில் நிர்வகிப்பதே QR எரிபொருள் விநியோகத் திட்டத்தின் பிரதான நோக்கம் எனவும் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.</p><p>

மேலும், பொதுமக்கள் எவ்வித சிரமமுமின்றி எரிபொருளைப் பெற்றுக்கொள்ளும் வகையில், தற்போது பயன்படுத்தப்படும் தொழில்நுட்ப முறைமையில் எந்தவொரு மாற்றமும் செய்யப்படாது எனவும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் உறுதிப்படுத்தியுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-05T05:35:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இன்று முதல் லிட்ரோ சமையல் எரிவாயு புதிய விலை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/litro-gas-prices-slashed-srilanka-1788583397"></link>
            <id>https://jvpnews.com/article/litro-gas-prices-slashed-srilanka-1788583397</id>
            <summary type="text">&amp;nbsp; இன்று (05) முதல் அமலுக்கு வரும் வகையில் லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகளைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் அற...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; இன்று (05) முதல் அமலுக்கு வரும் வகையில் லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகளைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
</p><h2>


புதிய விலை விபரம்,</h2><p>&nbsp;இதன்படி, பொதுமக்களால் அதிகம் பயன்படுத்தப்படும் 12.5 கிலோகிராம் எடையுடைய வீட்டுப் பயன்பாட்டு சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 100 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4781c911-20a8-4dae-bc31-0fc0c06978a5/26-6a9b9de6890a5.webp' /></p><p> </p><p>இந்த விலை திருத்தத்தைத் தொடர்ந்து, 12.5 கிலோகிராம் சமையல் எரிவாயு சிலிண்டரின் புதிய விற்பனை விலை 4,365 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 

மேலும், 5 கிலோகிராம் எடையுடைய சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 42 ரூபாவினால் குறைக்கப்பட்டு, அதன் புதிய விலை 1,750 ரூபாவாக மாற்றமடைந்துள்ளது.</p><p></p><p>



அதேபோன்று, 2.3 கிலோகிராம் எடையுடைய சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 20 ரூபாவினால் குறைக்கப்பட்டு, புதிய விலையாக 815 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-05T05:34:25+00:00</updated>
        </entry>
    </feed>
