<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-08-22T14:32:56+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆட்சி நடத்த நாங்க வேண்டுமா? அவங்க வேண்டுமா? CPIM சண்முகம் எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/cpim-shanmugam-ask-govt-need-officers-or-communist-1787408645"></link>
            <id>https://ibctamilnadu.com/article/cpim-shanmugam-ask-govt-need-officers-or-communist-1787408645</id>
            <summary type="text">அதிகாரிகளை வைத்து ஆட்சியை நடத்த போகிறீர்களா? இடதுசாரிகளை வைத்துக்கொண்டு ஆட்சியை தொடர போகிறீர்களா? என CPIM சண்முகம் கேள்வி எழுப்பியுள்ளார்.கம்யூனிஸ்ட் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அதிகாரிகளை வைத்து ஆட்சியை நடத்த போகிறீர்களா? இடதுசாரிகளை வைத்துக்கொண்டு ஆட்சியை தொடர போகிறீர்களா? என CPIM சண்முகம் கேள்வி எழுப்பியுள்ளார்.</p><h3>கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆர்ப்பாட்டம் </h3><p>

சமீபத்தில் குஜிலியம்பாறை வட்டாட்சியர் அந்த பகுதியில் உள்ள கம்யூனிஸ்ட் உறுப்பினர்களின் விவரங்களை சேகரிக்க உத்தரவிட்டது சர்ச்சையான பின்னர் அந்த வட்டாட்சியர் இடமாற்றம் செய்யப்பட்டார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/122d9747-4e84-4b39-942b-eab3cc3e9576/26-6a89b1069fc9c.webp' /></p><p>

மாணவர்கள் இடதுசாரி போராட்டங்களில் பங்கேற்பதை தடுக்க வேண்டுமென மற்றொரு சுற்றறிக்கை வெளியாகி கடும் எதிர்ப்பிற்கு பின்னர் திரும்ப பெறப்பட்டது.</p><p> 

குஜிலியம்பாறை வட்டாட்சியர் மீது முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தமிழ்நாடு அரசின் தலைமை செயலாளர் முனைவர் எம்.சாய்குமாரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் எனவும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் சார்பில் இன்று தமிழ்நாடு தழுவிய அளவில் போராட்டம் நடைபெற்றது.</p><h3> 

CPIM சண்முகம் எச்சரிக்கை </h3><p> 


இதில் கலந்து கொண்டு பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம், "இந்த பிரச்சனை வெளிவந்ததற்கு பிறகு ஆணையர் அனுப்பிய சுற்றறிக்கை திரும்பப் பெறப்பட்டிருக்கிறதே தவிர இவர்களை கண்காணிக்க வேண்டும் என மூல உத்தரவு வெளியிட்ட சாய்குமார் மீது எந்த நடவடிக்கையும் இல்லை. 

அந்த சுற்றறிக்கை திரும்ப பெறப்படவில்லை.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4e4a1af1-7abe-47e5-91eb-aa2cfb2d38c9/26-6a89b10756cf8.webp' /></p><p>உயர்கல்வித்துறை செயலாளர் பல்கலைக்கழகங்களுடைய பதிவாளருக்கு அனுப்பிய சுற்றறிக்கை இன்றைய தேதி வரை திரும்ப பெறப்படவில்லை. </p><p> 

தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்ட சாய்குமார் ஐ.ஏ.எஸ்.க்கு எதற்கு பணி நீட்டிப்பு வழங்க வேண்டும்? 

தலைமை செயலாளர் பொறுப்பை நிறைவேற்றுவதற்கு பொருத்தமான தகுதி வாய்ந்த ஐஏஎஸ் அதிகாரிகளே தமிழ்நாட்டில் இல்லையா? </p><p>எங்களுக்கு தெரிந்த நிறைய திறமை வாய்ந்த தலைமை வாய்ந்த பொருத்தமான நிறைய ஐஏஎஸ் அதிகார்கள் தமிழகத்தில் இருக்கிறார்கள். அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும். </p><p>

உயர்க் கல்வி ஆணையருக்கு எப்படி விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டதோ, அதேபோல் சாய்குமார் ஐ.ஏ.எஸ்.க்கும் நோட்டீஸ் அனுப்ப வேண்டும்.</p><p>

அதிகாரிகள் தன்னிச்சையாக செயல்படுகிறார்களா? தமிழ்நாடு அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் அதிகாரிகள் இருக்கிறார்களா? அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் தமிழ்நாடு அரசாங்கம் இருக்கிறதா? இதற்கு பதில் சொல்ல வேண்டிய நம்முடைய முதல்வர். </p><p>

என்னுடைய கட்டுப்பாட்டில் தான் தமிழ்நாடு இருக்கிறது, என்னுடைய கட்டுப்பாட்டில் தான் தமிழ்நாடு அரசு அதிகாரிகள் இருக்கிறார்கள். ஆகவே நாங்கள் இது போன்ற தவறு இனிமேல் நடக்காமல் பார்த்துக் கொள்கிறோம் என்று தன்னிலை விளக்கம் கொடுக்க வேண்டியவர் தமிழ்நாடு முதலமைச்சரை தவிர வேறு யாரும் கிடையாது.
</p><p>
இந்த ஆட்சி அமைவதற்கு ஆட்சியில் தொடர்வதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு கொடுத்திருக்கிறது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு கொடுத்திருக்கிறது. </p><p>

இடதுசாரிகளுடைய ஆதரவோடு தான் இந்த அரசு நீடிக்கிறது என்று தெரிந்ததற்கு பிறகும் இடதுசாரிகள் மீது உள்நோக்கத்தோடு இத்தகைய அறிக்கைகள் எல்லாம் அனுப்பப்படுகிறது என்றால், அவர்களை வைத்துக்கொண்டு நீங்கள் ஆட்சியை நடத்த போகிறீர்களா? இடதுசாரிகளை வைத்துக்கொண்டு ஆட்சியை தொடர போகிறீர்களா? 

இதுதான் அடிப்படையான கேள்வி. ஆகவே இந்த நடவடிக்கைகளை எங்களால் சகித்து கொள்ள முடியாது" என தெரிவித்துள்ளார்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-22T14:24:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வடக்கு கிழக்கில் படையினர் வசமுள்ள காணிகளை விடுவியுங்கள் பிரதமரிடம் யாழில் மகஐர் கையளிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/release-lands-held-by-soldiers-magair-hands-harini-1787407651"></link>
            <id>https://ibctamil.com/article/release-lands-held-by-soldiers-magair-hands-harini-1787407651</id>
            <summary type="text">வடக்கு கிழக்கு தமிழர் பகுதிகளில் பாதுகாப்பு படைகளால் கையகப்படுத்தியுள்ள
பொதுமக்களின் காணிகளை விரைவாக விடுவிக்குமாறு கோரி வடக்கு கிழக்கு காணி இழந்த
ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>வடக்கு கிழக்கு தமிழர் பகுதிகளில் பாதுகாப்பு படைகளால் கையகப்படுத்தியுள்ள
பொதுமக்களின் காணிகளை விரைவாக விடுவிக்குமாறு கோரி வடக்கு கிழக்கு காணி இழந்த
மக்கள் குரல் அமைப்பினர் யாழ் மாவட்ட செயலகத்தில் வைத்து பிரதமர்
கலாநிதி ஹரிணி அமர சூரியவிடம் காணி விடுவிப்பு தொடர்பான மஜகரை இன்று
சனிக்கிழமை கையளித்தனர்.</p><p>அதன்பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த வடக்கு கிழக்கு காணி இழந்த மக்கள்
அமைப்பின் இணை இணைப்பாளர் ஜான்சன் பிரிடாரோ, யாழ் மாவட்ட செயலகத்தில்
இலங்கையின் பிரதமர் தலைமையில் நடைபெற்ற பல்கலைக்கழக மாணவர்களுக்கான
கல்வி நிதியுதவி வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்ட பிரதமரை, நிகழ்வு
நிறைவடைந்த பின்னர் சந்தித்து பேசினோம்.</p><h2>வீதி வீதியாக போராடுகிறார்கள்</h2><p>வடக்கு–கிழக்கு பகுதிகளில் தமது பூர்வீகக் காணிகளை இழந்து, நீண்டகாலமாக
அவற்றை மீட்டெடுப்பதற்காக வீதி வீதியாக போராடுகிறார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1a2c4fe5-a577-4564-9e57-3d0afa02fb87/26-6a89afa26b570.webp' /></p><p>



யாழ்ப்பாணம் வலி வடக்கு பலாலி ,வசாவிளான் , மயிலிட்டி பாதுகாப்பு தரப்பினரின்
கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகள், கிளிநொச்சி, முல்லைத்தீவு கேப்பாப்புலவு ,
மட்டக்களப்பு மாவட்டத்தில் மயிலத்தமடு ,மாதவனை உள்ளிட்ட வடக்கு–கிழக்கு
பகுதிகளில் காணி உரிமைக்காக நீண்டகாலமாகப் போராடிவருகிறார்கள்.
</p><p>

கடந்த அரசாங்கங்களின் காலப்பகுதிகளில் காணி உரிமை தொடர்பான பிரச்சினைகளுக்கு
உரிய தீர்வுகள் வழங்கப்படாமல், மக்கள் தொடர்ச்சியாக காலதாமதத்திற்கும்
புறக்கணிப்பிற்கும் உள்ளாக்கப்பட்டுள்ளனர்.

அதன் தொடர்ச்சியாகவே இன்றும் பல ஆயிரக்கணக்கான மக்கள் தமது பூர்வீக நிலங்களை
மீட்டெடுப்பதற்காக தொடர் போராட்டங்களை மேற்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு
தள்ளப்பட்டுள்ளனர்.</p><p></p><h2>முழுமையானதும் நீதியானதுமான தீர்வு</h2><p>
</p><p>


புதிய அரசாங்கத்தின் மீது நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் கொண்டிருந்த
மக்களுக்கு, ஒன்றரை ஆண்டுகள் கடந்த நிலையிலும் காணி உரிமைப் பிரச்சினைகளுக்கு
முழுமையானதும் நீதியானதுமான தீர்வு கிடைக்காத நிலை ஆழ்ந்த கவலையை
ஏற்படுத்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/348aa7dc-78f3-4a83-83a2-570fd5f188b0/26-6a89afa336573.webp' /></p><p>
</p><p>
அந்த மக்களின் எதிர்பார்ப்புகளையும், அவர்களின் நீண்டகாலப் போராட்டத்தையும்
கருத்திற்கொண்டு, அவர்களுக்கு நியாயமானதும் நிலையானதுமான தீர்வை வழங்க
வேண்டுமென பிரதமரிடம் வலியுறுத்தினோம் என அவர் மேலும் தெரிவித்தார்.
</p><p>
மேலும், காணி இழந்த மக்களின் கோரிக்கைகள் மற்றும் அவர்களின் நீண்டகாலப்
போராட்டத்தை பிரதிபலிக்கும் வகையில் தயாரிக்கப்பட்ட மகஜர் பிரதமரிடம்
கையளிக்கப்பட்டது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-22T14:20:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜேர்மனியில் புதிய கலாச்சார மோதல் களமாக மாறிய ஒரு விடயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/swimming-pool-heatwave-in-germany-1787405829"></link>
            <id>https://news.lankasri.com/article/swimming-pool-heatwave-in-germany-1787405829</id>
            <summary type="text">Swimming pool heatwave in germany: ஜேர்மனியில் நீச்சல் குளங்களை சுற்றியுள்ள அரசியல், ஒரு சூடான தேசிய விவாதமாக மாற வழிவகுத்துள்ளது.

ஜேர்மனியில் நீச்...</summary>
            <content type="html"><![CDATA[<p>Swimming pool heatwave in germany: ஜேர்மனியில் நீச்சல் குளங்களை சுற்றியுள்ள அரசியல், ஒரு சூடான தேசிய விவாதமாக மாற வழிவகுத்துள்ளது.
</p><p>
ஜேர்மனியில் நீச்சல் குளங்களை சுற்றியுள்ள பரபரப்பான சூழல், பாலினத்தை விட இனம் அல்லது அடையாளம் பற்றிய சூடான விவாதத்தை கிளப்பியுள்ளது.&nbsp;&nbsp;</p><h2>நீச்சல் குளங்கள்</h2><p>
லண்டனின் ஹாம்ப்ஸ்டெட் ஹீத்தில் உள்ள பெண்களுக்கான பிரத்யேக குளத்தை பயன்படுத்துவது தொடர்பாக, நீச்சல் குளங்கள் குறித்த கலாச்சாரப் போர் திருநங்கை சமூகத்திற்கும், பாலினத்தை விமர்சிக்கும் பெண்களுக்கும் இடையே மோதலாக இருந்தது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e06ea903-d3b0-48e1-becf-c3042152f847/26-6a89a6b14813c.webp' />&nbsp;</p><p></p><p>

அந்த வகையில் தற்போது ஜேர்மனியிலும் நீச்சல் குளங்கள் சார்ந்த சூடான விவாதம் ஒன்று ஏற்பட்டுள்ளது. ஆனால், இங்கு பாலினத்தை விட இனம் அல்லது அடையாளம் பற்றியதாக இருக்கிறது.</p><p>2026-ஆம் ஆண்டின் கடும் வெப்பம் நிறைந்த கோடைக்காலத்தில், வெப்பத்தில் இருந்து தப்பிக்க திறந்தவெளி நீச்சல் குளங்களை நோக்கி ஜேர்மனி மக்கள் பெருமளவில் படையெடுத்தனர். </p><p>

வெப்பநிலை உயர்ந்த அதே வேளையில், பதற்றமும் உச்சத்தை எட்டியது. அதற்கு காரணம் கறுப்பின சமூகத்தினர் தொடர்பிலான அறிவிப்புதான்.&nbsp;</p><h2>தற்காலிக திறந்தவெளி</h2><p> 

பெர்லினின் புகழ்பெற்ற வோல்க்ஸ்புனே திரையரங்கின் அருகே அமைக்கப்பட்ட தற்காலிக திறந்தவெளி நீச்சல் குளம், கோடை காலம் முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது. </p><p>

ஆனால், கடந்த வாரம் ஒருநாள் மட்டும் 'கறுப்பின சமூகத்தினருக்கு மட்டுமே பிரத்யேகமாக திறந்திருக்கும்' என்று அறிவித்து, சிறுபான்மை இனத்தவரின் பங்கேற்பை அதிகரிக்க அதன் நிர்வாகிகள் முடிவு செய்தபோது, அதன் விளைவுகள் பெரும் வெடிப்பை ஏற்படுத்தின. </p><p>

இது ஒரு சூடான தேசிய விவாதமாக வெடிக்க வழிவகுக்க இடதுசாரிகளும், வலதுசாரிகளும் கட்டுப்பாட்டிற்காக ஒரு கடுமையான போரில் ஈடுபட்டுள்ளனர்.&nbsp; &nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/59e2695a-fd52-40a4-98e6-f1586abf904d/26-6a89a6b20dcd7.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-22T14:19:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வியட்நாமில் 2.8 மில்லியன் டொலர் ஜாக்பாட் வென்ற நபர்., இது 1103-வது வெற்றி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/vietnam-man-wins-2-8-mn-dollar-vietlott-jackpot-1787408044"></link>
            <id>https://news.lankasri.com/article/vietnam-man-wins-2-8-mn-dollar-vietlott-jackpot-1787408044</id>
            <summary type="text">Vietnam man wins 2.8 million dollar lottery: வியட்நாமில் ஒரு அதிர்ஷடசாலி நபர் 2.8 மில்லியன் டொலர் ஜாக்பாட் வென்றுள்ளார்.

Vietlott லொட்டரிவியட்நாமின...</summary>
            <content type="html"><![CDATA[<p>Vietnam man wins 2.8 million dollar lottery: வியட்நாமில் ஒரு அதிர்ஷடசாலி நபர் 2.8 மில்லியன் டொலர் ஜாக்பாட் வென்றுள்ளார்.
</p><h2>
Vietlott லொட்டரி</h2><p>வியட்நாமின் Quang Tri மாகாணத்தைச் சேர்ந்த ஒருவர், கடந்த 10 ஆண்டுகளாக Vietlott லொட்டரி சீட்டுகளை வாங்கி வந்துள்ளார்.
</p><p>
சமீபத்தில் அவர் Power 6/55 Jackpot 1 லொட்டரியில் வெற்றி பெற்று, 71.8 பில்லியன் வியட்நாம் டாங் (சுமார் $2.8 மில்லியன்) பரிசை பெற்றார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c0b6658d-b608-4bce-bbae-914e11b7cf61/26-6a89b039e5a8b.webp' /></p><h2>1103-வது வெற்றி</h2><p>இந்த வெற்றி அவரது 1,103-வது பரிசு ஆகும். இதற்கு முன்பு அவர் பல சிறிய பரிசுகளை வென்றிருந்தார். அதில் மிகப்பெரிய வெற்றிகள் என்றால் 40 மில்லியன் டாங் ($1,536) மற்றும் 10 மில்லியன் டாங் ($384) ஆகும்.
</p><p>
வெற்றியாளர் H. என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் தற்போது Dong Nai நகரில் உள்ள தொழிற்சாலை பகுதியில் வேலை செய்து வருகிறார்.</p><p> லொட்டரி சீட்டுகளை அவர் தினமும் 4 முதல் 5 வாங்குவதாகவும், பெரும்பாலும் SMS மூலம் சிஸ்டம் தானாக தேர்ந்தெடுத்த எண்களை பயன்படுத்துவதாகவும் கூறினார்.

இந்த முறை வெற்றி பெற்ற எண்களும் சிஸ்டம் தானாக உருவாக்கியவை.</p><p>ஆரம்பத்தில் அவர் வெற்றி செய்தியை கவனிக்கவில்லை. அடுத்த நாள் Vietlott நிறுவனத்திலிருந்து அழைப்பு வந்தபோது தான் அவர் ஜாக்பாட் வென்றதை அறிந்தார்.</p><p></p><p>

விதிமுறைகளின்படி, அவர் 7.1 பில்லியன் டாங் ($272,488) வரி செலுத்த வேண்டும். வரி கழித்த பின், அவர் 64.7 பில்லியன் டாங் ($2.5 மில்லியன்) பெறுகிறார்.

வெற்றி செய்தியை அறிந்ததும், அவர் உடனே தனது மனைவியிடம் தெரிவித்தார்.</p><p> முதலில் நம்ப முடியாமல் இருந்தாலும், அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்தபின் தான் குடும்பம் மகிழ்ச்சியடைந்தது.
</p><p>
“நான் என் வாழ்க்கையை வழக்கம்போலவே தொடர விரும்புகிறேன். பணத்தை எவ்வாறு பயன்படுத்துவது குறித்து என் மனைவியுடன் ஆலோசித்து முடிவு செய்வேன்.” என அந்த நபர் தெரிவித்துள்ளார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-22T14:18:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[என்னை தேடாதீர்கள் என அம்மாவிடம் கூறிவிட்டு கேரளா சென்ற ஜேசன் சஞ்சய் - 100 மீட்டரில் சிறுத்தை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/vijay-son-jason-sanjay-has-spoken-about-mom-dad-1787405983"></link>
            <id>https://manithan.com/article/vijay-son-jason-sanjay-has-spoken-about-mom-dad-1787405983</id>
            <summary type="text">jason sanjay : முதலமைச்சர் விஜயின் மகனான ஜேசன் சஞ்சய் சமீபத்தில் அளித்த பேட்டியில்,&amp;nbsp; தான் மேற்கொண்ட ஒரு ஆபத்தான பயணம் குறித்த தகவலை மிகவும் சாதார...</summary>
            <content type="html"><![CDATA[<p>jason sanjay : முதலமைச்சர் விஜயின் மகனான ஜேசன் சஞ்சய் சமீபத்தில் அளித்த பேட்டியில்,&nbsp; தான் மேற்கொண்ட ஒரு ஆபத்தான பயணம் குறித்த தகவலை மிகவும் சாதாரணமாக பகிர்ந்துள்ளார். ஆனால், அவர் கூறிய அந்த அனுபவம் தற்போது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.</p><h2>ஜேசன் சஞ்சய் பேட்டி</h2><p>விஜய்யின் மகனான ஜேசன் சஞ்சய், இயக்குநராக அறிமுகமாகும் திரைப்படம் ‘சிக்மா’. சந்தீப் கிஷன் நடிப்பில் உருவாகியுள்ள இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் தயாராகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/459743f3-c09d-4164-9f50-b67db0542cfe/26-6a89adc91ee3a.webp' /></p><p> </p><p>ஆக்ஷன் அட்வெஞ்சர் பாணியில் உருவாகியுள்ள இப்படம், வரும் அக்டோபர் 2ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

படத்தின் வெளியீட்டை முன்னிட்டு புரமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதற்காக பல்வேறு ஊடகங்களுக்கு ஜேசன் சஞ்சய் பேட்டி அளித்து வருகிறார். </p><p>அந்த வகையில், சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் தனது தனிப்பட்ட அனுபவங்கள் குறித்து சுவாரஸ்யமான பல தகவல்களை பகிர்ந்துள்ளார்.</p><p><b>

“என்னை தேடாதீர்கள்” என அம்மாவிடம் கூறிவிட்டு...</b></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/33604b56-967d-4dd6-98da-a7f0d5ea1b24/26-6a89adca75bc4.webp' /><b></b></p><p>
தனது நண்பர்களுடன் இணைந்து மேற்கொண்ட ஒரு பயணம் குறித்து பேசிய ஜேசன் சஞ்சய், “வெளிநாட்டில் இருந்து நண்பன் ஒருவன் வந்திருந்தான். நாங்கள் நண்பர்கள் அனைவரும் அவனது வீட்டில் தங்கப்போகிறோம் என்று திட்டமிட்டிருந்தோம். சென்னையில்தான் இருப்பேன், ஆனால் என்னைத் தேடாதீர்கள் என்று எனது அம்மாவிடம் கூறிவிட்டு, கேரளா எல்லையில் உள்ள ஒரு ஊருக்கு சென்றுவிட்டோம்” என தெரிவித்துள்ளார்.
</p><p>
அவர்கள் தங்கியிருந்த தனியார் இடத்திற்கு மிக அருகிலேயே புலிகள் சரணாலயம் ஒன்று இருந்ததாகவும் சஞ்சய் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a167921a-fbcf-4c51-9aa2-f8b4510c657d/26-6a89adcb26e07.webp' /></p><p></p><p>
</p><p>
இந்த பயணத்தின் போதுதான் எதிர்பாராத விதமாக அவரது அம்மாவிடம் இருந்து செல்போன் அழைப்பு வந்துள்ளது.ஆனால், அந்த அழைப்பை சஞ்சய் எடுக்கவில்லை.</p><p>இதனால் அவருக்கு மலையாளத்தில் பிசி டோன் கேட்டுள்ளது.

அதன்பிறகுதான், தான் கேரளாவுக்குச் சென்றிருப்பது தனது அம்மாவுக்கு தெரிந்துவிட்டதாக சஞ்சய் கூறியுள்ளார்.

இதனால் பயந்துபோன அவர், சென்னை திரும்பும் வரை செல்போனை தொடவே இல்லை என தெரிவித்துள்ளார்.</p><h2><b>

100 மீட்டர் தூரத்தில் சிறுத்தை!
</b></h2><p>இந்த பயணத்தின்போது தங்களுக்கு ஏற்பட்ட மற்றொரு அதிர்ச்சியான சம்பவத்தையும் ஜேசன் சஞ்சய் பகிர்ந்துள்ளார்.

“அந்த பயணத்தின்போது ஒருநாள் நாங்கள் சிறுத்தையை பார்த்தோம். எங்களிடமிருந்து சுமார் 100 மீட்டர் தூரத்தில் தான் அந்த சிறுத்தை இருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2de0cb94-d987-4779-8c08-8187b06d65e6/26-6a89adcbcaf02.webp' /></p><p> </p><p>அதன்பிறகு அங்கிருந்து தப்பித்து ஓடிவிட்டோம்” என சஞ்சய் தெரிவித்துள்ளார்.

தான் இதுபோன்று ஆபத்தான பயணங்களை மேற்கொள்வது தனது அம்மாவுக்கும் அப்பாவுக்கும் பெரும் கவலையை ஏற்படுத்தியதாகவும் அவர் கூறியுள்ளார்.
</p><p>
இருப்பினும், “அப்படி யோசித்துக்கொண்டே இருந்தால் இயற்கையின் அழகை ரசிக்கவே முடியாது. எனவே, நான் செய்ததில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை” என தனது நிலைப்பாட்டையும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p>இதனிடையே, ஜேசன் சஞ்சயிடம் அவரது முதல் சம்பளம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதிலும் தற்போது கவனம் பெற்றுள்ளது.

வெளிநாட்டில் படித்துக்கொண்டிருந்தபோது கால்டன் சினிமாஸ் என்ற திரையரங்கில் கேசியராக பணியாற்றியதாக சஞ்சய் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e70c9f92-1b63-4586-8b3b-efd6557f3950/26-6a89adcc7b5db.webp' /></p><p></p><p>
</p><p>
அந்த திரையரங்கில் மிகவும் பழைய திரைப்படங்கள் மட்டுமே திரையிடப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார். சில நேரங்களில் திரைப்படத்தை பார்ப்பதற்காக யாருமே திரையரங்கிற்கு வரமாட்டார்கள் என்றும், அப்போது தான் மட்டும் அங்கு அமர்ந்து அந்த திரைப்படத்தை பார்க்கத் தொடங்கிவிடுவேன் என்றும் சஞ்சய் தெரிவித்துள்ளார்.</p><p>

மேலும், அந்த திரையரங்கில் பணியாற்றியது தனது வாழ்க்கையில் கிடைத்த மிகச்சிறந்த அனுபவங்களில் ஒன்று என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>&nbsp;‘சிக்மா’ படத்தின் மூலம் இயக்குநராக தனது புதிய பயணத்தை தொடங்க உள்ள ஜேசன் சஞ்சயின் இந்த அனுபவங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW&nbsp;</a></u></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-22T14:17:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம்: சிறிதரன் எம்.பி வலியுறுத்திய விடயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/semmani-mass-grave-issue-excavations-carried-1787407180"></link>
            <id>https://tamilwin.com/article/semmani-mass-grave-issue-excavations-carried-1787407180</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்தில் அரசு இதயச்சுத்தியுடன்
வெளிப்படையாகச் செயற்பட வேண்டும் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின்
நாடாளுமன...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்தில் அரசு இதயச்சுத்தியுடன்
வெளிப்படையாகச் செயற்பட வேண்டும் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின்
நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் வலியுறுத்தினார்.
</p><p>
நாடாளுமன்றத்தில் நேற்று(21.8.2026) உரையாற்றும்போதே அவர் இதனைக்
குறிப்பிட்டார்.
</p><p>
அவர் மேலும் உரையாற்றுகையில்,

"செம்மணி மனிதப் புதைகுழியின் மதிலைத் தாண்டிய பகுதிகளிலும் மனித
எலும்புக்கூடுகள் இருப்பதற்கான சாத்தியங்கள் காணப்படுவதால், நீதிமன்ற
உத்தரவுடன் சோமரத்ன ராஜபக்சவைச் செம்மணிக்கு அழைத்துச் சென்று அவர்
காண்பிக்கும் இடங்களில் அகழ்வுப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.</p><h2>அகழ்வுப் பணிகள்</h2><p>
</p><p>
செம்மணி மனிதப் புதைகுழியில் முதற்கட்டமாக 9 நாள்களும், இரண்டாம் கட்டமாக 45
நாள்களும், மூன்றாம் கட்டமாக 56 நாள்களும் என மொத்தம் 110 நாள்களாக அகழ்வுப்
பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9f868676-38a1-483b-990a-2ad977c5730d/26-6a89ae628def5.webp' /></p><p> </p><p>இதற்கமைய 584 மனித எலும்புக்கூடுகளும், 170
பிற சான்றுப்பொருள்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

செம்மணிப் பகுதிக்குப் பார்வையிட ஐரோப்பிய ஒன்றியத் தூதுக்குழுவுக்கு அரசு
அனுமதியளித்த போதிலும், கனடா உயர்ஸ்தானிகருக்கும் அவரது குழுவினருக்கும்,
ஆஸ்திரேலியா நாட்டுக்கும் அனுமதி மறுக்கப்பட்டமை பாரிய சந்தேகத்தை
ஏற்படுத்தியுள்ளது.
</p><p>
அகழ்வுப் பணிகளைத் தொடர்ந்து முன்னெடுக்க அரசிடம் நிதி இல்லையாயின், இந்தியா,
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுடன் கலந்துரையாடி நிதி கோருவதோடு,
தென்னாபிரிக்கா மற்றும் ஜப்பான் நாடுகளின் ஒத்துழைப்பைப் பெற்று உண்மையை
வெளிக்கொண்டுவர வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-22T14:13:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[43 வயதில் செம கிளாமர் போட்டோ ஷுட் நடத்தி ரசிகர்களை கவரும் நடிகை விஜயலட்சுமி... வீடியோவுடன் இதோ]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/actress-vijayalakshmi-onam-special-photoshoot-1787405565"></link>
            <id>https://cineulagam.com/article/actress-vijayalakshmi-onam-special-photoshoot-1787405565</id>
            <summary type="text">ஓணம்தமிழ் சினிமாவில் என்ன விசேஷம் வந்தாலும் அதற்கு ஏற்றார் போல் புகைப்படங்கள் எடுத்து பிரபலங்கள் வெளியிடுவது வழக்கமாகிவிட்டது. அப்படி அண்மையில் கேரள ம...</summary>
            <content type="html"><![CDATA[<h2>ஓணம்</h2><p>தமிழ் சினிமாவில் என்ன விசேஷம் வந்தாலும் அதற்கு ஏற்றார் போல் புகைப்படங்கள் எடுத்து பிரபலங்கள் வெளியிடுவது வழக்கமாகிவிட்டது. </p><p>அப்படி அண்மையில் கேரள மக்களால் கொண்டாடப்படும் ஓணம் பண்டிகை வந்தது, அதற்கு வெள்ளித்திரை முதல் சின்னத்திரை வரை அனைத்து பிரபலங்களும் வாழ்த்து கூறினார்கள். </p><p>நடிகைகள் பலரும் ஓணம் ஸ்பெஷல் புடவை அணிந்து போட்டோ ஷுட் நடத்தி புகைப்படங்கள் வெளியிட்டுள்ளனர்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/30aa3716-ebc1-4f59-918b-8fae139f6764/26-6a89a6e981011.webp' /></p><h2>வீடியோ
</h2><p>அப்படி தற்போது ஒரு நடிகையின் ஓணம் ஸ்பெஷல் போட்டோ ஷுட் ரசிகர்களிடம் செம வைரலாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/76c589c0-291d-4f39-868c-4146e4ef48e1/26-6a89a6e875e1f.webp' /></p><p> </p><p>சென்னை 28 படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமான விஜயலட்சுமி போட்டோ ஷுட் தான் ரசிகர்களிடம் லைக்ஸ் குவித்து வருகிறது. 
43 வயதாகும் விஜயலட்சுமி சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கும் போதே இயக்குனர் பெரோஸ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார், இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.
</p><p>தற்போது நடிப்பதை நிறுத்திய விஜயலட்சுமி இன்ஸ்டாவில் சமையல் வீடியோ, பிட்னஸ் வீடியோ என அவரது குரலில் சில கருத்துடன் வீடியோ வெளியிட அது ரசிகர்களிடம் வரவேற்பு பெற்று வந்தது.
</p><p>ஓணம் ஸ்பெஷலாக விஜயலட்சுமி குறையாக அழகோடு கொஞ்சம் கிளாமராக ஒரு போட்டோ ஷுட் நடத்தியுள்ளார், இதோ அதன் வீடியோ,</p><p><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/reel/DcVkVpBOJf0/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/reel/DcVkVpBOJf0/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/reel/DcVkVpBOJf0/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by Vijayalakshmi Ahathian (@itsvg)</a></p></div></blockquote> <script async src="//www.instagram.com/embed.js"></script></p>]]></content>
            <updated>2026-08-22T14:10:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>H. A. Roshan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மக்களின் இறைமை அபகரிக்கப்பட்டுள்ளது! வடக்கு - கிழக்கு ஒருங்கிணைப்பு குழு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/meeting-in-trincomalee-urging-a-federal-solution-1787405837"></link>
            <id>https://tamilwin.com/article/meeting-in-trincomalee-urging-a-federal-solution-1787405837</id>
            <summary type="text">இலங்கையில் இதுவரையில் ஆட்சிக்கு வந்த பெரும்பான்மை அரசாங்கங்கள், வடக்கு - கிழக்கு மக்களின் இறைமையை அபகரித்துள்ளதாக வடக்கு - கிழக்கு ஒருங்கிணைப்பு குழு ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் இதுவரையில் ஆட்சிக்கு வந்த பெரும்பான்மை அரசாங்கங்கள், வடக்கு - கிழக்கு மக்களின் இறைமையை அபகரித்துள்ளதாக வடக்கு - கிழக்கு ஒருங்கிணைப்பு குழு தெரிவித்துள்ளது.</p><p> 

சமஷ்டி தீர்வு வேண்டும் என வலியுறுத்தி திருகோணமலையில் இன்றைய தினம் (22.08.2026) ஊடக சந்திப்பொன்று இடம்பெற்றிருந்தது.
</p><p>
இதன்போது கருத்து தெரிவிக்கும் போதே குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> 

இதன்போது மேலும், நிலையான அரசியல் தீர்வுக்கான 100 நாட்கள் செயல்முறையின் நான்காவது வருட அணிதிரளல் இலங்கையின் இணைந்த வடக்கு - கிழக்கு மாகாணத்துக்கு மீள்பெற முடியாத சமஷ்டி முறையிலான அரசியல் தீர்வு வடக்கு - கிழக்கு தமிழ் மக்கள் தமக்கான அரசியல் தீர்வாக சமஷ்டிக் கோரிக்கையை முன்மொழிந்து இவ்வருடத்துடன் 75 வருடங்கள் ஆகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/265aff9a-c13d-4780-9ee2-6c453c454852/26-6a89ace1b5119.webp' /></p><h2>வடக்கு - கிழக்கு தமிழ் மக்களின் அரசியல் நலன்</h2><p> 

1900களின் ஆரம்ப முதலே சிங்கள பொதுத்த அரசியல் தலைவர்களின் தமிழ் எதிர்ப்பு பரப்புரைகளும் எழுச்சிகளும், தமிழ் அரசியலில், சமூக நலனுக்காக காப்பாற்றும் தனித்துவமான அரசியல் அமைப்பொன்றின் அவசியத்தை தமிழ் அரசியல் தலைமைகளுக்கு உணர்த்தியது. 

1921ம் ஆண்டு வடக்கு - கிழக்கு தமிழ் மக்களின் அரசியல் நலன்களை முன்னெடுப்பதற்காக சேர்.பொன்.அருணாசலம் தலைமையில் “தமிழர் மகாஜன சபை” உருவாக்கப்பட்டது. </p><p>சுதந்திரத்தின் பின் ஆட்சி பொறுப்பேற்ற சிங்கள தலைமைகள் மேற்கொண்ட திட்டமிட்ட அரசியல் ஓரங்கட்டல்கள், நில அபகரிப்புகள், வடக்கு கிழக்கில் அமைவிடத்தி எமது பெருமளவிலான குடியேற்றங்கள் ஆகியன தமிழ் மக்களின் இறைமையை அபகரித்தன. 

இந்த இறைமை மீடலை நிறைவேற்றுவதற்காக அன்றைய தமிழ் தலைமைகள் சமஷ்டிக் கொள்கையை 1951ம் ஆண்டு முன்வைத்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d8e36000-5443-4fab-ba8e-f800f77f9ee5/26-6a89ace2cdf41.webp' /></p><p> </p><p>ஒரு மக்கள் சமூகம் தனது வாழ்விடப் பிரதேசத்தில் தமக்கான அரசியல் வாழ்வை தாமே தீர்மானித்து, தம்மைத் தாமே நிர்வகித்து, கொள்கைமையாகவும் உரிமைகளுடனும் வாழ்வதற்கு இறைமை அவசியமாகும். 

ஒன்றாக ஆட்சி முறையில் இறைமை பகிர்ந்துகொள்ளப்படல் நடைபெறவில்லை. அதிகாரம் மத்திய அரசிடம் இருக்கும். மத்திய அரசு எப்பொழுது வேண்டுமானாலும் மாநிலத்துக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தை திரும்பப்பெற முடியும்.</p><h2>13வது திருத்தத்தின் மூலம் ஏமாற்றம்</h2><p> 13வது திருத்தச்சட்டம் இத்தகையாதாகும். இதன் மூலம் வடக்கு கிழக்குக்கு இறைமை பகிரப்படவில்லை. 

அன்று தொட்டு இன்றுவரையிலும் வடக்கு - கிழக்கில் ஆட்சிப்பொறுப்பேற்ற சிங்கள அரசியல் தலைமைகள் இறைமையைப் பகிர்ந்து கொள்ள முன்வரவில்லை. காலம் நீடிப்பதால் 13வது திருத்தத்தின் மூலம் நாங்கள் ஏமாற்றப்பட்டுள்ளோம்.</p><p> ஒரு நாட்டின் இறைமை என்பது அந்த நாட்டு மக்களுக்குள்ள உரிமைகள், மக்கள் தமக்கான அரசியல் பிரதிநிதிகளை தெரிவுசெய்து அவர்களைக் கொண்டு தமக்கேற்ற அரசியல் சமூக பொருளாதார கொள்கைகளையும் சட்டங்களையும் உருவாக்கி… தமக்கான முன்னேற்றத்தை எட்டுவதற்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/523d2ed3-6f71-47c4-9460-4105079c18b4/26-6a89ace39d55d.webp' /></p><p> 

சுருங்கக் கூறின் தமது அரசியல் தலைவிதியை தாமே தீர்மானிப்பதற்கு மக்களுக்குள்ள அதிகாரமாகும். இலங்கையின் சிங்கள அரசியல் தலைவர்களும் ஆட்சியாளர்களும் இறைமையை வெறுமனே நிலைத்துடன் குறுக்கிக்கொண்டுள்ளனர். இலங்கையின் நிலைத்தொடர்ச்சியை பாதுகாப்பது தான் நாட்டின் இறைமையை பாதுகாப்பது எனும் தோற்றப்பாட்டை உருவாக்கியுள்ளனர். </p><p>

இறைமை என்பது மக்கள் சம்பந்தப்பட்ட ஒன்றாகும். தமது நாட்டிலோ மாநிலத்திலோ தமக்கான அரசாங்கத்தை தெரிவுசெய்யவும், தமக்கான வாழ்வியலை தீர்மானிக்கவும், உரிமைகளை பிரயோகிக்கவும் மக்கள் கொண்டுள்ள அதிகார பலமே இறைமையாகும். மக்களைத் தவிர்த்துவிட்டு நிலத்தை மாத்திரம் பார்க்க முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dd464216-cdf0-4005-b596-5a1ac4531cbc/26-6a89ace46b56f.webp' /></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-22T14:06:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹெரொயின் வைத்திருந்த இளைஞனுக்கு ஆயுள் தண்டனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/life-imprisonment-for-youth-found-of-heroin-1787402836"></link>
            <id>https://jvpnews.com/article/life-imprisonment-for-youth-found-of-heroin-1787402836</id>
            <summary type="text">&amp;nbsp; 2 கிராமிற்கும் அதிகமான ஹெரோயினை உடைமையில் வைத்திருந்தமை, வியாபாரம் செய்தமை ஆகிய இரண்டு குற்றச்சாட்டுகளுக்கு குற்றவாளியாகக் காணப்பட்ட இளைஞனுக்கு...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; 2 கிராமிற்கும் அதிகமான ஹெரோயினை உடைமையில் வைத்திருந்தமை, வியாபாரம் செய்தமை ஆகிய இரண்டு குற்றச்சாட்டுகளுக்கு குற்றவாளியாகக் காணப்பட்ட இளைஞனுக்கு ஆயுள் தண்டனை விதித்து வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ. ஆனந்தராஜா நேற்று தீர்ப்பளித்துள்ளார்.
</p><p>
கடந்த 2020 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம், வவுனியா, மெனிக்பாம் பிரதேசத்தில் இக்குற்றச்செயல் இடம்பெற்றுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a8b38418-00d4-40ef-bb25-8ec4b6d33e1d/26-6a899a55c24c0.webp' /></p><p>
</p><h2>ஆயுள் தண்டனை</h2><p>
இது தொடர்பான வழக்கின் குற்றச்சாட்டுப் பத்திரம் 2021 ஆம் ஆண்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு விசாரணை இடம்பெற்று வந்தது.</p><p>

 எதிரி மீதான குற்றச்சாட்டுகள் நியாயமான சந்தேகத்திற்கு அப்பால் நிரூபிக்கப்பட்டதால், எதிரி குற்றவாளியாகக் காணப்பட்டு ஆயுள்தண்டனை தீர்ப்பு நேற்றைய தினம் வழங்கப்பட்டுள்ளது.</p><p></p><p>

இலங்கை முழுதும் பெருகி வரும் போதைப்பொருள் பழக்கத்தினை கட்டுப்படுத்தும் நோக்கில் குறித்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது. </p><p>

போதைப்பொருள் சார் குற்றச்செயல்களுக்கு நீதிமன்றங்கள் கடுமையான தண்டனையை வழங்கும் என்ற எண்ணப்பாட்டை குறித்த தீர்ப்பும் தண்டனையும் மக்கள் மத்தியில் உருவாக்கியுள்ளது. </p><p>இலங்கைசுற்றுலா

குறித்த வழக்கின் சாட்சிகள் அரச சட்டவாதி சிவஸ்கந்தஸ்ரீயால் நெறிப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-22T14:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் விசேட தேவையுடைய பல்கலை மாணவர்களுக்கு நிதியுதவி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/financial-assistance-uni-students-special-needs-1787405436"></link>
            <id>https://ibctamil.com/article/financial-assistance-uni-students-special-needs-1787405436</id>
            <summary type="text">ஜனாதிபதி நிதியத்திலிருந்து தெரிவுசெய்யப்பட்ட விசேட தேவையுடைய பல்கலைக்கழக
மாணவர்களுக்கான காசோலை வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.

யாழ்ப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜனாதிபதி நிதியத்திலிருந்து தெரிவுசெய்யப்பட்ட விசேட தேவையுடைய பல்கலைக்கழக
மாணவர்களுக்கான காசோலை வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.
</p><p>
யாழ்ப்பாண மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் இன்றைய தினம் சனிக்கிழமை
நடைபெற்ற நிகழ்வில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மாணவர்களுக்கு காசோலைகளை
வழங்கி வைத்தார்.</p><h2>76 விசேட தேவையுடைய மாணவர்களுக்கு&nbsp;&nbsp;நிதியுதவி</h2><p>இதன்போது, யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம், வவுனியா பல்கலைக்கழகம் மற்றும்
பெரதெனியாபல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்கலைக்கழகங்களில் கல்வி கற்கும் 76 விசேட
தேவையுடைய மாணவர்களுக்கு தலா ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான காசோலைகள் வழங்கி
வைக்கப்பட்டன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/becb8184-1c16-4415-9797-426d2196ba91/26-6a89aae42f123.webp' /></p><p>
</p><p>
நிகழ்வில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, தெரிவுசெய்யப்பட்ட மாணவர்களுக்கு
காசோலைகளை வழங்கியதுடன், அவர்களின் கல்வி மற்றும் எதிர்கால
முன்னேற்றத்திற்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.&nbsp; &nbsp;</p><p>&nbsp; </p><p> </p><h2>நிகழ்வில் கலந்துகொண்டோர்</h2><p>இந்நிகழ்வில் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் பாராளுமன்ற சபாநாயகர்
வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன, கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள்
அமைச்சரும் யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான இராமலிங்கம்
சந்திரசேகர், வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், நாடாளுமன்ற உறுப்பினர்களான
க.இளங்குமரன், ஜெ.ரஜீவன் மற்றும் இலங்கையின் வரலாற்றில் முதன்முறையாகப்
நாடாளுமன்றத்திற்குத் தெரிவுசெய்யப்பட்ட மாற்றுத்திறனாளி நாடாளுமன்ற
உறுப்பினர் சுகத் வசந்த டி சில்வா ஆகியோர் சிறப்பு அதிதிகளாகக்
கலந்துகொண்டிருந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7de3869f-cf1c-4dc1-9d53-97b98aae457b/26-6a89aae50448b.webp' /></p><p>
</p><p>
அத்துடன் வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர், யாழ்ப்பாணம், வவுனியா
மற்றும் பேராதனைப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள், வடக்கு மாகாண மாவட்டச்
செயலாளர்கள், மேலதிக அரசாங்க அதிபர்கள், ஜனாதிபதி நிதியத்தின் பதவிநிலை
உத்தியோகத்தர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் எனப் பலரும்
பங்கேற்றிருந்தனர்.&nbsp; &nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-22T13:58:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[மகளுக்கு தந்தையால் நேர்ந்த கதி: நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/father-gets-15-year-jail-term-for-abusing-daughter-1787404390"></link>
            <id>https://tamilwin.com/article/father-gets-15-year-jail-term-for-abusing-daughter-1787404390</id>
            <summary type="text">தனது சொந்த மகளை பாலியல் துர்நடத்தைக்குட்படுத்திய குற்றச்சாட்டில் தந்தையொருவருக்கு 15 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து வவுனியா மேல் நீதிமன்றம் தீர்ப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>தனது சொந்த மகளை பாலியல் துர்நடத்தைக்குட்படுத்திய குற்றச்சாட்டில் தந்தையொருவருக்கு 15 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து வவுனியா மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.</p><p>

வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ. ஆனந்தராஜா நேற்று (21) இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளார்.

வவுனியாவில் கடந்த 2013ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இந்தக் குற்றச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.</p><h2>&nbsp;அதிரடி தீர்ப்பு</h2><p> 

சம்பவம் இடம்பெற்றபோது பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 14 வயது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறுமியின் தாயும் தந்தையும் பிரிந்திருந்த நிலையில், சிறுமி தனது தந்தையின் பாதுகாப்பில் வசித்து வந்துள்ளார்.
</p><p>
 சம்பவத்தன்று தந்தை மதுபோதையில் வீட்டில் வைத்து சிறுமியை பாலியல் துர்நடத்தைக்குட்படுத்தியதாக நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d7889fb5-efe0-465a-82ef-5525396cbfbd/26-6a89aafc1f17d.webp' /></p><p>
</p><p>
இந்த வழக்குக்கான குற்றப்பத்திரிகை கடந்த 2021ஆம் ஆண்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு, விசாரணைகள் இடம்பெற்று வந்தன.</p><p>

வழக்கின் விசாரணைகளின் அடிப்படையில், எதிரிக்கு எதிரான குற்றச்சாட்டு நியாயமான சந்தேகத்திற்கு அப்பால் நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
</p><p>
தண்டனை வழங்கும்போது, பாதிக்கப்பட்ட சிறுமியின் வயது, குற்றம் அவரது சொந்த தந்தையினால் மேற்கொள்ளப்பட்டமை, சிறுமிக்கு ஏற்பட்ட உளவியல் பாதிப்புகள் மற்றும் எதிர்காலத்தில் இவ்வாறான குற்றங்களைத் தடுக்கும் அவசியம் உள்ளிட்ட விடயங்களை நீதிமன்றம் கருத்தில் கொண்டுள்ளது.</p><h2>அபராதத் தொகை</h2><p>

இதன்படி, குற்றவாளிக்கு 15 வருட கடூழிய சிறைத்தண்டனை மற்றும் 50,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அபராதத் தொகையை செலுத்தத் தவறினால் மேலதிகமாக ஒரு வருட சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.
</p><p>
மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 10 இலட்சம் ரூபாய் நட்டஈடு வழங்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/36033d7a-0572-417f-9aad-b136ba31c89c/26-6a89aafcc5553.webp' /></p><p> </p><p>

அந்த நட்டஈட்டை செலுத்தத் தவறினால் மேலதிகமாக இரண்டு வருட சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
</p><p>
சிறுமியின் நலனைப் பாதுகாப்பதுடன், சமூகத்தில் இவ்வாறான பாரதூரமான குற்றச்செயல்களில் ஈடுபடுவோருக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் என்ற எச்சரிக்கையை ஏற்படுத்தும் வகையிலும் இந்தத் தீர்ப்பு அமைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-22T13:58:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thileepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதிகமான போதைப்பொருளை உடைமையில் வைத்திருந்த இளைஞனுக்கு ஆயுள் தண்டனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/life-imprisonment-for-youth-found-in-heroin-1787403574"></link>
            <id>https://tamilwin.com/article/life-imprisonment-for-youth-found-in-heroin-1787403574</id>
            <summary type="text">அதிகமான ஹெரோயினை உடைமையில் வைத்திருந்தமை, வியாபாரம் செய்தமை
ஆகிய இரண்டு குற்றச்சாட்டுகளுக்கு குற்றவாளியாகக் காணப்பட்ட இளைஞனுக்கு ஆயுள்
தண்டனை விதித்...</summary>
            <content type="html"><![CDATA[<p>அதிகமான ஹெரோயினை உடைமையில் வைத்திருந்தமை, வியாபாரம் செய்தமை
ஆகிய இரண்டு குற்றச்சாட்டுகளுக்கு குற்றவாளியாகக் காணப்பட்ட இளைஞனுக்கு ஆயுள்
தண்டனை விதித்து வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ.ஆனந்தராஜா
தீர்ப்பளித்துள்ளார்.
</p><p>
கடந்த 2020 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம், வவுனியா, செட்டிகுளம், மெனிக்பாம்
பிரதேசத்தில் குறித்த இளைஞன் 2கிராமிற்கும் அதிகமான போதைப்பொருளை உடைமையில் வைத்திருந்துள்ளார்.</p><p>

இது தொடர்பான வழக்கின் குற்றப்பகிர்வு பத்திரம் 2021 ஆம் ஆண்டு வவுனியா மேல்
நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வந்தது.</p><h2>ஆயுள் தண்டனை</h2><p>
</p><p>
எதிரி மீதான குற்றச்சாட்டுகள் நியாயமான சந்தேகத்திற்கு அப்பால்
நிரூபிக்கப்பட்டதால், எதிரி குற்றவாளியாகக் காணப்பட்டு ஆயுள்தண்டனை தீர்ப்பு
வழங்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a53a8f9d-2879-4ea0-85b5-741decbc6b75/26-6a89a9735a352.webp' /></p><p>
</p><p>
இலங்கை முழுதும் பெருகி வரும் போதைப்பொருள் பழக்கத்தினை கட்டுப்படுத்தும்
நோக்கில் குறித்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
</p><p>
போதைப்பொருள் சார் குற்றச்செயல்களுக்கு நீதிமன்றங்கள் கடுமையான தண்டனையை
வழங்கும் என்ற எண்ணப்பாட்டை குறித்த தீர்ப்பும் தண்டனையும் மக்கள் மத்தியில்
உருவாக்கியுள்ளது.
</p><p>
குறித்த வழக்கின் சாட்சிகள் அரச சட்டவாதி ஸ்ரீசிவஸ்கந்த ஸ்ரீயால்
நெறிப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-22T13:51:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[தனுஷை தப்பா நினைச்சுட்டேன்..எனக்கும் வந்த பிரச்சனை!! பிரியா பவானி சங்கர் ஓபன் டாக்...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/priya-bhavani-opens-thinks-dhanush-is-so-rude-1787404479"></link>
            <id>https://viduppu.com/article/priya-bhavani-opens-thinks-dhanush-is-so-rude-1787404479</id>
            <summary type="text">பிரியா பவானி சங்கர்&amp;nbsp;செய்தி வாசிப்பாளராக இருந்து பின் சின்னத்திரை நடிகையாக திகழ்ந்து தற்போது தென்னிந்திய சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக திகழ்ந...</summary>
            <content type="html"><![CDATA[<h2>பிரியா பவானி சங்கர்&nbsp;</h2><p>செய்தி வாசிப்பாளராக இருந்து பின் சின்னத்திரை நடிகையாக திகழ்ந்து தற்போது தென்னிந்திய சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக திகழ்ந்து வருபவர் தான் நடிகை பிரியா பவானி சங்கர். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6b92eeda-329e-4fcf-8aad-42b6d8ec3353/26-6a89a0c150579.webp' /></p><p>தற்போது ரவி தேஜா நடிப்பில் வெளியான இருமுடி படத்தில் படத்தில் முக்கிய ரோலில் நடித்துள்ளார். படத்தின் பிரமோஷனுக்காக அளித்த பேட்டியொன்றில் தனுஷுடன் நடித்த அனுபவம் குறித்து பகிர்ந்துள்ளார்.</p><p> அப்போது, நான் தொலைக்காட்சியில் பணியாற்றியபோது ஒருமுறை தனுஷ் சாரை பேட்டி எடுத்தேன். அவர் ரொம்பவே ரூடாக நடந்து கொண்டார். அப்போது, என்ன இவ்ளோ பெரிய ஸ்டார் இப்படி ரூடா இருக்காரேன்னு நினைத்தேன்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1aeaf0db-30b9-4433-9450-505b997f482e/26-6a89a0c2023f2.webp' /></p><p>ஆனால் நடிகையாக மாறியப்பின், பேட்டிகளிலும், பிரமோஷன் நிகழ்ச்சிகளிலும் எனக்கு ஏற்படும் மனநிலையை பார்த்து அச்சச்சோ தனுஷ் சாரை தப்பா நினைத்துவிட்டோமே என்று நினைத்ததாக பிரியா பவானி சங்கர் தெரிவித்திருக்கிறார்.</p>]]></content>
            <updated>2026-08-22T13:45:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[குழந்தைகள் தனியுரிமை விவகாரம் - ரூ.3,828 கோடி செலுத்த ஒப்புக்கொண்ட டிக்டாக்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/tiktok-to-pay-3828-cr-settlement-resolve-case-us-1787405951"></link>
            <id>https://news.lankasri.com/article/tiktok-to-pay-3828-cr-settlement-resolve-case-us-1787405951</id>
            <summary type="text">குழந்தைகள் தனியுரிமை விவகாரத்தில், டிக்டாக் அமெரிக்க நீதித்துறைக்கு ரூ.3,828 கோடி செலுத்த ஒப்புக்கொண்டுள்ளது. 

ரூ.3,828 கோடி செலுத்த உள்ள டிக்டாக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>குழந்தைகள் தனியுரிமை விவகாரத்தில், டிக்டாக் அமெரிக்க நீதித்துறைக்கு ரூ.3,828 கோடி செலுத்த ஒப்புக்கொண்டுள்ளது. </p><h3>

ரூ.3,828 கோடி செலுத்த உள்ள டிக்டாக்</h3><p>

குழந்தைகளின் தனியுரிமை மற்றும் சமூக வலைதள பாதுகாப்பு தொடர்பாக சமூகவலைதள நிறுவனங்கள் பல்வேறு நாடுகளில் வழக்குகளை எதிர்கொண்டு வருகிறது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/88168949-2fa5-4c34-b079-542457119607/26-6a89a6812b441.webp' /></p><p>

இதே போல், 2024 ஆம் ஆண்டில் டிக்டாக்கின் தாய் நிறுவனமாக பைட் டான்ஸ், குழந்தைகளின் இணையதள தனியுரிமைப் பாதுகாப்புச் சட்டத்தை (COPPA) மீறியதாக அமெரிக்க நீதித்துறை அதன் மீது வழக்கு தொடர்ந்தது. </p><p>

அந்த வழக்கில் 13 வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகளின் தனிபட்ட தகவல்களை பெற்றோர் அனுமதியின்றி சேகரித்ததாகவும், குழந்தைகளின்கணக்குகளை நீக்குமாறு பெற்றோர் கோரிக்கை விடுத்தும் நீக்கப்படவில்லை என குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>

தற்போது இந்த வழக்கை முடிவுக்கு கொண்டு வரும் வகையில், டிக்டாக் செயலி அமெரிக்க நீதித்துறைக்கு 400 மில்லியன் டொலர் (இந்திய மதிப்பில் ரூ.3,828 கோடி) செலுத்த ஒப்புக்கொண்டுள்ளது.&nbsp;</p><p></p><p>

இதில், ரூ2,871 கோடியை உடனடியாகவும், ரூ957 கோடியை மியூசிக்கலி செயலி மீதான முந்தைய உத்தரவை ரத்து செய்த பின்னரும் செலுத்துவதாக தெரிவித்துள்ளது. </p><p>
 
முன்னதாக COPPA விதிமீறலுக்காக 2019 ஆம் ஆண்டில் கூகிளின் யூடியுப் 170 மில்லியன் டொலர் செலுத்தியுள்ளது.&nbsp; &nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-22T13:39:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் நடிகையின் வாழ்க்கையில் இவ்வளவு சோகமா?... அவரே பகிர்ந்த தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/actress-sathyapriya-about-her-past-life-1787399777"></link>
            <id>https://cineulagam.com/article/actress-sathyapriya-about-her-past-life-1787399777</id>
            <summary type="text">எதிர்நீச்சல் தொடர்கிறதுஎப்படியோ ஜனனி, ராவணன் பற்றிய உண்மையை தெரிந்துகொண்டார். தனக்கு எதுவும் தெரியாதவர் போல் வீட்டிற்கு வந்தவர் குணசேகரன் மற்றும் குடு...</summary>
            <content type="html"><![CDATA[<h2>எதிர்நீச்சல் தொடர்கிறது</h2><p>எப்படியோ ஜனனி, ராவணன் பற்றிய உண்மையை தெரிந்துகொண்டார். </p><p>தனக்கு எதுவும் தெரியாதவர் போல் வீட்டிற்கு வந்தவர் குணசேகரன் மற்றும் குடும்பத்தினரிடம் சாமி கும்பிட போகிறீர்கள் சரி தான், ஆனால் அதைவிட ஒரு பிரச்சனை வரப்போகிறது என்று கூறுகிறார்.</p><p> அவர் சொன்னதை கேட்டு வீட்டுப் பெண்கள் செம ஷாக் ஆகிறார்கள்.
இன்னொரு பக்கம் Vkவை பிடிக்க சக்தியை தேடிவந்த ராவணன் இன்னொரு நேரடியாக மோத களமிறங்கிவிட்டார். இன்றைய எபிசோட் காட்சியில், ராவணன்-சக்தி நேரடியாக சக்திக்கும் காட்சிகள் இடம்பெறுகின்றன.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/85602969-2d51-41f0-9077-8e73f86abb3e/26-6a899a0de5bad.webp' /></p><h2>சோக கதை
</h2><p>எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் விசாலாட்சி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் சத்யப்ரியா. இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் தனது சினிமா பயணத்தின் ஆரம்ப காலகட்டத்தில் சந்தித்த கஷ்டங்கள் குறித்து பேசியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0f348367-867e-4ed0-91e8-cd31a5768f45/26-6a899a0ed3889.webp' /></p><p> </p><p>அதில் அவர், நான் சினிமாவில் உச்சத்தில் இருந்தபோதே திருமணம் செய்து செட்டில் ஆனேன். கணவர் தயாரித்த திரைப்படம் மாபெரும் தோல்வியடைய எல்லாம் இழந்துவிட்டேன், திடீரென கணவருக்கும் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. </p><p>குடும்பத்தைக் காப்பாற்ற சென்னை அப்போலோ மருத்துவமனையில் 5 மாதங்கள் 'வார்டு செக்ரட்டரியாக' வேலை பார்த்தேன், ஆனால் தொடர முடியவில்லை.
எப்படியாவது குழந்தைகளை காப்பாற்ற வேண்டும் என மீண்டும் சினிமாவில் வாய்ப்பு தேடினேன். </p><p>அப்போது கமல்ஹாசனிடம் வாய்ப்பு கேட்டேன், அவர் அட்வான்ஸ் பணம் கொடுத்தார், ஆனால் வாய்ப்பு கிடைக்கவில்லை. கடைசியாக புதிய பாதை படத்தில் வில்லி வேடம் கிடைத்தது, அதன்பிறகு படிப்படியாக பட வாய்ப்புகள் கிடைத்து நடிக்க ஆரம்பித்தேன் என்றார்.</p>]]></content>
            <updated>2026-08-22T13:30:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[கருப்பு தான் எனக்கு பிடித்த கலரு என கலக்கும் டிடியின் போட்டோ ஷுட்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/anchor-dd-black-saree-attire-photoshoot-1787403671"></link>
            <id>https://cineulagam.com/article/anchor-dd-black-saree-attire-photoshoot-1787403671</id>
            <summary type="text">தொகுப்பாளினி டிடிதமிழ் சின்னத்திரையில் மிகவும் பிரபலமாக வலம் வரும் தொகுப்பாளினிகளில் ஒருவர் தான் டிடி.20 வருடங்களுக்கு மேலாக நிகழ்ச்சிகள் தொகுத்து வழங...</summary>
            <content type="html"><![CDATA[<h2>தொகுப்பாளினி டிடி</h2><p>தமிழ் சின்னத்திரையில் மிகவும் பிரபலமாக வலம் வரும் தொகுப்பாளினிகளில் ஒருவர் தான் டிடி.</p><p>20 வருடங்களுக்கு மேலாக நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்கி வருகிறார், இப்போதும் அவரது பேட்டிகளுக்கு என்றே தனி ரசிகர்கள் வட்டாரம் உள்ளது. கடைசியாக விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய்யை பேட்டி எடுத்திருந்தார்.</p><p>போட்டோ ஷுட்களிலும் பிஸியாக இருக்கும் டிடி கருப்பு நிற புடவையில் எடுத்த லேட்டஸ்ட் போட்டோ ஷுட்டை வெளியிட்டுள்ளார்.</p><p>இதோ போட்டோஸ்,</p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-22T13:29:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சென்னையை உலுக்கிய பயங்கரம் ; பெண்ணை துண்டாக்கி பிரியாணி சமைத்த கொடுமை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/young-couple-chennai-woman-brutal-murder-cooked-1787381322"></link>
            <id>https://jvpnews.com/article/young-couple-chennai-woman-brutal-murder-cooked-1787381322</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;சென்னையில் பெண்ணை துண்டாக்கி பிரியாணி சமைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் கொடூர கொலைகார ஜோடியை போலீசார் தேடி வருவத...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;சென்னையில் பெண்ணை துண்டாக்கி பிரியாணி சமைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் கொடூர கொலைகார ஜோடியை போலீசார் தேடி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

சம்பவம் தொடர்பில் இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளதாவது, 

கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி சென்னையில் இருந்து ஆந்திராவுக்கு சென்ற ரயிலில் ரத்தக்கரையுடன் இருந்த ஒரு சிவப்பு நிற சூட்கேஸ் கண்டெடுக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2a8e23e5-05b9-41c3-8c16-33af23cf7690/26-6a89464b9aec3.webp' /></p><h2> சிவப்பு நிற சூட்கேஸ் - பெண்ணின்&nbsp; &nbsp;உடல் பாகங்கள்</h2><p> </p><p>அதனுள் ஒரு பெண்ணின் தலை மற்றும் கை கால்கள் மற்றும் உடல் பாகங்கள் கிடந்தன.

 
இதையடுத்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தபோது கண்ணாடி அணிந்த ஒரு இளம் பெண்ணும், குறுந்தாடி வைத்திருந்த ஒரு வாலிபரும் அந்த சிவப்பு நிற சூட்கேசை எடுத்து வந்தது பதிவாகியிருந்தது.</p><p></p><p> </p><p>

அந்த ஜோடி சென்ட்ரல் ஸ்டேசனுக்கு வந்து ஆக்ராவுக்கு செல்லும் ரயில் ஏறி அந்த பெட்டியை வைத்துவிட்டு உடனே இறங்கிவிட்டனர்.</p><p> அதன்பின் கூடுவாஞ்சேரி நோக்கி சென்ற மின்சார ரயில் பயணித்ததும் கண்டுபிடிக்கப்பட்டது

300க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களை போலீசார் ஆய்வு செய்ததில் அவர்கள் இருவரும் ஆட்டோவில் கூடுவாஞ்சேரி மசூதி பகுதிக்கு சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. ஒருவழியாக
அவர்களின் வீட்டை போலீசார் கண்டறிந்து சென்று பார்த்தபோது வெளியே பூட்டப்பட்டிருந்தது</p><p></p><p>.

பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்த போதுதான் போலீசாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அங்கு ஒரு பெண் கொலை செய்யப்பட்டு உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்டு தடங்களை மறைப்பதற்காக பிரியாணி செய்யும் பெரிய பாத்திரத்தில் போட்டு மைதா மாவு, காய்கறிளை சேர்த்து சமைக்கவும் முயற்சி செய்திருக்கிறார்கள். </p><p>

எஞ்சிய உடல் பாகத்தைத்தான் அவர்கள் சூட்கேசில் வைத்து ரயிலில் வைத்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதோடு அந்த பெண்ணின் தலை இதுவரை கிடைக்கவில்லை.

போலீசாரின் விசாரனையில், கண்ணாடி அணிந்த அந்த பெண்ணின் பெயர் பகவதி பாஜி எனவும், அந்த இளைஞரின் பெயர் மாணிக் லஸ்கர் என்பது தெரியவந்தது.</p><p></p><p> அதோடு, கடந்த 10 நாட்களாக அவர்களுடன் அதே வீட்டில் ஹைதுல் நிஷா என்கிற பெண்ணும் தங்கியிருந்தது தெரிய வந்தது. அவருடன் சண்டை வந்ததால் பகவதி பாஜி மற்றும் மாணிக் லஷ்கர் இருவரும் சேர்ந்து ஹைதுல் நிஷாவை கொலை செய்திருக்கலாம் என கருதப்படுகிறது.
 

இந்த அளவுக்கு கொடூரமாக கண்டதுண்டமாக வெட்டி பிரியாணி சமைத்த இருவரையும் போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகிறார்கள். </p><p>தற்போது அவர்கள் ஒடிசாவில் இருப்பதாக தகவல் கிடைத்தநிலையில் இருவரையும் தேடி தனிப்படை போலீசார் ஒடிசா சென்றுள்ளதாக கூறப்படும் நிலையில் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-22T13:25:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவின் தடைகள் ; பேரழிவுகரமாக இருக்கும் ; ஈரான் எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/us-sanctions-would-be-catastrophic-iran-warns-1787379771"></link>
            <id>https://canadamirror.com/article/us-sanctions-would-be-catastrophic-iran-warns-1787379771</id>
            <summary type="text">&amp;nbsp; ஈரான் மீது வரலாற்றில் மிகக் கடுமையான நிதித் தடைகளை விதிக்கப்போவதாக வொஷிங்டன் உறுதியளித்துள்ள நிலையில், புதிய அமெரிக்க அச்சுறுத்தல்களுக்கு அளிக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; ஈரான் மீது வரலாற்றில் மிகக் கடுமையான நிதித் தடைகளை விதிக்கப்போவதாக வொஷிங்டன் உறுதியளித்துள்ள நிலையில், புதிய அமெரிக்க அச்சுறுத்தல்களுக்கு அளிக்கப்படும் பதில் "பேரழிவுகரமாக" இருக்கும் என்று ஈரான் எச்சரித்துள்ளது.</p><p>&nbsp; ஈரானுக்கு "எந்தவிதமான உயிர்நாடியையும்" வழங்கும் எந்தவொரு நாடும் பொருளாதார விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என டொனால்ட் டிரம்ப் எச்சரித்ததைத் தொடர்ந்து, திங்கட்கிழமை திட்டமிடப்பட்ட தடைகள் குறித்த விபரங்களை வெளியிடவுள்ளதாக அமெரிக்க திறைசேரி செயலாளர் ஸ்காட் பெசென்ட் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4f5a771a-35c8-42f7-a8a1-fef3bd9249a1/26-6a89403cf062f.webp' /></p><h2>ஆயுதப் படைகள்&nbsp;பேரழிவுகரமான பதில்களை வழங்கும்</h2><p> 

ஈரானின் ஆயுதப் படைகளின் தலைமைத் தளபதி மேஜர் ஜெனரல் அலி அப்தொல்லாஹி, இஸ்லாமியக் குடியரசின் எதிர்வினை விரிவானதாகவும் தீர்க்கமானதாகவும் இருக்கும் என்று கூறினார். </p><p>

"நிலம், கடல், வான், வான் பாதுகாப்பு மற்றும் இணையவெளி முழுவதும் தயார் நிலையில் உள்ள ஈரானின் ஆயுதப் படைகள், எதிரியின் புதிய அச்சுறுத்தல்களுக்கு நசுக்கும், தண்டிக்கும் மற்றும் பேரழிவுகரமான பதில்களை வழங்கும்" என்று அப்தொல்லாஹியை மேற்கோள் காட்டி ஈரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. </p><p>

அமெரிக்காவும் இஸ்ரேலும் கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்கு முன்பு தொடங்கிய போரில் இரு தரப்பினரும் இன்னும் வெற்றிபெறவில்லை என்றாலும், ஈரானியத் தலைவர்களும் டிரம்பும் வெற்றிகரமான மற்றும் அச்சுறுத்தலான அறிக்கைகளை வெளியிட்டுள்ளனர். </p><p>

இந்தப் போர் ஆயிரக்கணக்கான மக்களைக் கொன்றதுடன், பிற வளைகுடா நாடுகளையும் ஈர்த்து உலகளாவிய எரிபொருள் விலையை உயர்த்தி வருகிறது.</p><p> 

அமெரிக்கத் தாக்குதல்கள் ஈரானின் பொருளாதாரத்தையும் அதன் வழக்கமான படைகளையும் கடுமையாகக் குறைத்துள்ளன, ஆயினும் ஹோர்முஸ் நீரிணையில் எண்ணெய் தாங்கி கப்பல் போக்குவரத்தைத் தடையின்றித் தடுக்கவும் பிராந்திய எதிரிகளைத் தாக்க ஏவுகணை மற்றும் ஆளில்லா விமானத் திறன்களைத் தெஹ்ரான் தொடர்ந்து தக்கவைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-08-22T13:24:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலகிலேயே முதல்முறை...மலைப்பாம்பிற்கு புற்றுநோய் சிகிச்சை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/a-world-first-cancer-treatment-save-for-a-python-1787402012"></link>
            <id>https://canadamirror.com/article/a-world-first-cancer-treatment-save-for-a-python-1787402012</id>
            <summary type="text">&amp;nbsp; உலகிலேயே முதன்முறையாக ஒரு மலைப்பாம்பு புற்றுநோயிலிருந்து முழுமையாகக் குணமடைந்துள்ளது.

இங்கிலாந்திலுள்ள செஸ்டர் உயிரியல் பூங்காவில் வாழும், &#039;...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; உலகிலேயே முதன்முறையாக ஒரு மலைப்பாம்பு புற்றுநோயிலிருந்து முழுமையாகக் குணமடைந்துள்ளது.
</p><p>
இங்கிலாந்திலுள்ள செஸ்டர் உயிரியல் பூங்காவில் வாழும், 'ஜோடி ஃபோஸ்டர்' எனப் பெயரிடப்பட்ட 15 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று உணவருந்த முடியாமல் சிரமப்பட்டு வந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1f19b7c8-053f-481d-9cce-732bdb6b7bf6/26-6a89971e8b7ac.webp' /></p><p>மருத்துவப் பரிசோதனையில், அதன் தாடை எலும்பில் 'ஃபைப்ரோசார்கோமா'என்ற புற்றுநோய்க் கட்டி இருந்தது கண்டறியப்பட்டது. 

ஆரம்பத்தில் அறுவை சிகிச்சை மூலம் அது அகற்றப்பட்டாலும், மீண்டும் அப்புற்றுநோய் தோன்றி தாடை எலும்பைச் சேதப்படுத்தத் தொடங்கியது.</p><p>
இதனால் பாம்பைக் காப்பாற்ற, செஸ்டர் உயிரியல் பூங்கா மருத்துவர்கள் மற்றும் லிவர்பூல் பல்கலைக்கழக புற்றுநோய் நிபுணர்கள் இணைந்து மனிதர்களுக்குப் பயன்படுத்தப்படும் 'எலக்ட்ரோகீமோதெரபி' சிகிச்சையை அந்தப் பாம்பிற்கு ஏற்றவாறு மாற்றியமைத்து வழங்கினர்.</p><p>

பாம்பின் அளவிற்கு ஏற்ற அறுவை சிகிச்சை மேஜை இல்லாததால், இரண்டு மேஜைகளை ஒன்றாக இணைத்து, வெப்பப் போர்வைகள் மூலம் பாம்பின் உடல் வெப்பநிலையைச் சீராகப் பராமரித்து 90 நிமிடங்கள் இந்தச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
</p><p>
அறுவை சிகிச்சைக்குப் பின் மீதமிருந்த புற்றுநோய் செல்களை அழிக்க எலக்ட்ரோகீமோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், அந்த மலைப்பாம்பு மிக விரைவாகக் குணமடைந்து தற்போது நலமாக உள்ளது.

உலகிலேயே ஒரு பாம்பிற்கு இந்த முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-08-22T13:24:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வருங்கால மனைவி தொடர்பில் இயக்குநர் ஜேசன் சஞ்சயின் எதிர்பார்ப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/director-jason-sanjay-expectations-future-wife-1787401213"></link>
            <id>https://jvpnews.com/article/director-jason-sanjay-expectations-future-wife-1787401213</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யின் மகனும் , திரைப்பட இயக்குநருமான ஜேசன் சஞ்சய், தனது வருங்க்கால மனைவி தொடர்பான எதிர்பார்ப்புகள் குறித்து நேர...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யின் மகனும் , திரைப்பட இயக்குநருமான ஜேசன் சஞ்சய், தனது வருங்க்கால மனைவி தொடர்பான எதிர்பார்ப்புகள் குறித்து நேர்காணல் ஒன்றில் மனம் திறந்து பேசியுள்ளார்.</p><p>

 இது தொடர்பாகப் பேசிய அவர், தனக்கு இதுவரை காதலி இருந்ததில்லை என்றும், சாகசங்களில் ஆர்வம் கொண்டவராகவும், புதிய இடங்களுக்குச் செல்ல விரும்புபவராகவும் இருக்கும் பெண்களையே தனக்குப் பிடிக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6b1c30c1-ef03-45ab-b4ea-67a1dc5754f4/26-6a8993ffae922.webp' /></p><h2>பொருளாதார ரீதியாகச் சுயமாகச் செயல்படும் பெண்</h2><p>
</p><p>
மேலும், பொருளாதார ரீதியாகச் சுயமாகச் செயல்படும் பெண்ணாக இருக்க வேண்டியது மிகவும் முக்கியம் எனக் குறிப்பிட்ட அவர், எந்தவொரு சூழ்நிலையிலும் பிறரைச் சார்ந்து இருக்கக் கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.</p><p></p><p>

தொடர்ந்து பேசிய அவர், தனது மனைவி தமிழ் சினிமா மற்றும் தமிழ்ப் பாடல்களை ரசிப்பவராக இருக்க வேண்டும் என்றும், அதன் மூலம் நமது மண் சார்ந்த அடையாளத்துடன் இணைந்திருக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-22T13:21:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மீனுவாங்கொடை கொலையாளிக்கு உதவிய நபர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/person-who-aided-the-minuwangoda-crime-1787404960"></link>
            <id>https://jvpnews.com/article/person-who-aided-the-minuwangoda-crime-1787404960</id>
            <summary type="text">&amp;nbsp; மீனுவாங்கொடை துப்பாக்கிச் சூடு நடத்தி நபரொருவரைக் கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் ஒருவரை, ஐஸ் போதைப்பொருளுடன் மீனுவாங்கொடை...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; மீனுவாங்கொடை துப்பாக்கிச் சூடு நடத்தி நபரொருவரைக் கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் ஒருவரை, ஐஸ் போதைப்பொருளுடன் மீனுவாங்கொடை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
</p><p>
 

குறித்த கொலைச் சம்பவத்திற்காக துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் வந்த மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/479b33db-2977-40ba-bb39-031202207905/26-6a89a2a191751.webp' /></p><p>
</p><p>
 

கைது செய்யப்பட்ட போது அவரிடமிருந்து 11 கிராம் 150 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.</p><p>

 

கடந்த ஆண்டு ஓகஸ்ட் 13ஆம் திகதி மீனுவாங்கொடை பகுதியில் 36 வயதுடைய முச்சக்கர வண்டி ஓட்டுநர் ஒருவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சம்பவத்துடன் தொடர்புடையதாகவே இந்தச் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p>]]></content>
            <updated>2026-08-22T13:20:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாடளாவிய ரீதியில் கடுமையான வறட்சி! நீர்ப்பாசனத் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/irrigation-department-amid-drought-1787401265"></link>
            <id>https://tamilwin.com/article/irrigation-department-amid-drought-1787401265</id>
            <summary type="text">நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பிரதான நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் 35.9 சதவீதமாகக் குறைந்துள்ளதாக நீர்ப்பாசன திணைக்களத்தின் நீர் மு...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பிரதான நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் 35.9 சதவீதமாகக் குறைந்துள்ளதாக நீர்ப்பாசன திணைக்களத்தின் நீர் முகாமைத்துவ பணிப்பாளர் எச்.எம்.பி.எஸ்.டி.ஹேரத் தெரிவித்துள்ளார்.</p><p>நாடளாவிய ரீதியில் நிலவும் கடுமையான வறட்சியான காலநிலை காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளாக அவர் குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><h2>நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம்</h2><p>அவர் மேலும் தெரிவிக்கையில், குறிப்பாக அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் மொணராகலை ஆகிய மாவட்டங்களில் உள்ள நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் மிகவும் குறைந்தளவை எட்டியுள்ளது.</p><p>
 

தற்போது சிறுபோக பயிர்ச்செய்கை நடவடிக்கைகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதால், நிலவும் நீரின் அளவு அந்த பயிர்ச்செய்கைகளுக்கு போதுமானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e0bbcbcd-9565-46f2-acaf-fd1f1876252b/26-6a89a0b18bef7.webp' /></p><h2>காலநிலை</h2><p>இருப்பினும், அதிக வெப்பநிலை மற்றும் காற்றுடன் கூடிய காலநிலை காரணமாக, நீர்த்தேக்கங்களில் இருந்து நீர் ஆவியாதல் எதிர்பார்க்கப்பட்டதை விட அதிகமாக உள்ளது என குறிப்பிட்டுள்ளார். </p><p>எனவே, அன்றாடத் தேவைகளுக்கும் விவசாய நடவடிக்கைகளுக்கும் நீரை மிகவும் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு நீர் முகாமைத்துவ பணிப்பாளர் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-22T13:15:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[டிரம்பின் 75 நாடுகளுக்கான விசா தடை நீதிமன்றத்தில் ரத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/us-judge-strikes-down-trumps-visa-ban-1787404361"></link>
            <id>https://news.lankasri.com/article/us-judge-strikes-down-trumps-visa-ban-1787404361</id>
            <summary type="text">US judge strikes down Trump’s visa ban: டிரம்பின் 75 நாடுகளுக்கான விசா தடை நீதிமன்றத்தில் ரத்து செய்யப்பட்டது.

அமெரிக்காவின் Federal District Court...</summary>
            <content type="html"><![CDATA[<p>US judge strikes down Trump’s visa ban: டிரம்பின் 75 நாடுகளுக்கான விசா தடை நீதிமன்றத்தில் ரத்து செய்யப்பட்டது.
</p><p>
அமெரிக்காவின் Federal District Court, Manhattan நீதிபதி Jeannette Vargas, டிரம்ப் நிர்வாகம் விதித்த 75 நாடுகளுக்கான புலம்பெயர்ந்தோர் விசா தடை, சட்டத்திற்கு முரணானது என தீர்ப்பளித்துள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6532f77a-f41a-4c44-920b-32c1ad16de8a/26-6a89a04be7da5.webp' /></p><p>இந்த தடை, 2026 ஜனவரியில் அமுல்படுத்தப்பட்டது. உலகின் சுமார் 40 சதவீத நாடுகளிலிருந்து புலம்பெயர்ந்தோருக்கான விசாக்கள் வழங்கப்படாமல் நிறுத்தப்பட்டன.</p><p>இதில் பிரேசில், கொலம்பியா, எகிப்து, ஹைட்டி, சோமாலியா, ரஷ்யா போன்ற நாடுகள் அடங்கும்.</p><p>அந்த நாடுகளிலிருந்து வரும் புலம்பெயர் மக்கள் அரசு நலத்திட்டங்களை அதிகம் பயன்படுத்துவார்கள் என காரணம் கூறப்பட்டது.
</p><p></p><p>ஆனால், சட்டப்படி, ஒருவரை “Public Charge” (அரசு உதவியை சார்ந்தவர்) என நிராகரிக்க, அவரின் நிதிநிலை, வயது, உடல்நலம், திறமைகள், குடும்ப சூழல் ஆகியவற்றை தனிப்பட்ட முறையில் மதிப்பீடு செய்ய வேண்டும். நாட்டின் அடிப்படையில் பொதுவாக நிராகரிப்பது சட்டத்திற்கு முரணானது என நீதிபதி தெரிவித்தார்.
</p><p>
நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களின்படி, அமெரிக்க தூதரக அதிகாரிகள் விண்ணப்பதாரர்கள் தங்கள் நிதி நிலையை நிரூபித்தாலும், “விசா மறுக்கப்பட வேண்டும்” என உத்தரவிடப்பட்டிருந்தது. இதனால், குடும்ப இணைப்பு மற்றும் வேலை வாய்ப்பு அடிப்படையிலான நிரந்தர குடியேற்ற விசாக்கள் பாதிக்கப்பட்டன.</p><p>இந்த தடை, 1965-ஆம் ஆண்டு அமுல்படுத்தப்பட்ட தேசிய அடிப்படையிலான பாகுபாட்டைத் தடைசெய்யும் சட்டத்திற்கும் முரணானது என நீதிபதி கூறினார்.</p><p></p><p>வழக்கு தொடர்ந்தவர்கள், அமெரிக்க குடிமக்கள். இவர்களின் கானா, ஜமைக்கா, குவாத்தமாலா, எத்தியோப்பியா போன்ற நாடுகளில் உள்ள உறவுகள் விசா மறுக்கப்பட்டதாக தெரிவித்தனர். மேலும், கொலம்பியாவிலிருந்து வேலை அடிப்படையிலான விண்ணப்பதாரர்களும் பாதிக்கப்பட்டனர்.</p><p>

இந்த தீர்ப்பு, டிரம்ப் நிர்வாகத்தின் குடியேற்றக் கொள்கைக்கு பெரிய பின்னடைவு என கருதப்படுகிறது. நிர்வாகம் இதற்கு மேல்முறையீடு செய்ய வாய்ப்பு உள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-22T13:10:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[அர்ஜென்டீனா கால்பந்து சம்மேளனத்திற்கு பல லட்சம் அபராதம் வித்தது FIFA]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/fifa-fines-argentine-football-association-1787402907"></link>
            <id>https://ibctamil.com/article/fifa-fines-argentine-football-association-1787402907</id>
            <summary type="text">2026 ஆம் ஆண்டு உலக் கிண்ண கால்பந்து இறுதிப் போட்டியின் பின்னர் ஏற்பட்ட கலவரம் தொடர்பில் சர்வதேச கால்பந்து சம்மேளனமான FIFA அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளத...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026 ஆம் ஆண்டு உலக் கிண்ண கால்பந்து இறுதிப் போட்டியின் பின்னர் ஏற்பட்ட கலவரம் தொடர்பில் சர்வதேச கால்பந்து சம்மேளனமான FIFA அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. அர்ஜென்டீனா அணியின் முக்கிய வீர்கள் மற்றும் அந்நாட்டு கால்பந்து சம்மேளனத்திற்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்பட்டுள்ளன.
</p><p>
ஸ்பெயினுக்கு எதிரான இறுதிப் போட்டிக்குப் பின்னர் ஏற்பட்ட மோதலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட அர்ஜென்டீனாவின் மத்தியகள வீரர் லியான்ட்ரோ பரேடஸ் 10 சர்வதேச போட்டிகளில் விளையாட தடை செய்யப்பட்டுள்ளார். அத்துடன் 90,000 அமெரிக்க டொலர் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.</p><h2>ஸ்பெயின் வீரருக்கும் போட்டித்தடையும் அபராதமும்</h2><p>இதே சம்பவத்தில் சிக்கிய ஸ்பெயின் வீரர் கவி 1 போட்டி தடையும், 30,000 டொலர் அபராதமும் பெற்றார்.

AFA மீது பல குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால் மொத்தம் 321,000 அமெரிக்க டொலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9fc8c36d-83fc-4326-b04d-ae47c59d385d/26-6a899f297febc.webp' /></p><p>
</p><p>
FIFA சுட்டிக்காட்டிய குற்றங்கள்
</p><p>அரசியல் பதாகை: அரையிறுதிக்குப் பின்னர் 'மால்வினாஸ் தீவுகள் அர்ஜென்டீனாவுக்கே' என்ற பதாகையை காட்சிப்படுத்தியது.</p><p>இனவெறி நடத்தை: அர்ஜென்டீனா ஆதரவாளர்களின் இனவெறி கோஷங்கள் மற்றும் அவமதிப்பு.</p><p>ஒழுங்கீனம்: அணியினரின் ஒழுக்க மீறல் மற்றும் பாதுகாப்பு விதிமீறல்கள்.</p><p></p><h2>அர்ஜென்டீனா அணிக்கான தண்டனை</h2><p>
</p><p>
தண்டனையாக அர்ஜென்டீனா தனது அடுத்த 2 சொந்த மண் போட்டிகளை 50% பார்வையாளர்களுடன் மட்டுமே நடத்த வேண்டும் எனவும் FIFA உத்தரவிட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/44cfd3d0-b9db-4b9b-a6cd-88252349926d/26-6a899f2a31d61.webp' /></p><p>
</p><p>
மேலும் தண்டனை பெற்றவர்கள்
</p><p>
நஹுவேல் மோலினா 	அணி வீர்ர்7 போட்டிகள் தடை, $90,000 அபராதம்
</p><p>
ரோபர்ட்டோ அயாலா உதவி பயிற்றுநர்	3 போட்டிகள் தடை, $30,000 அபராதம்
</p><p>
தியாகோ அல்மாடா வீரர்	1 போட்டி தடை, $30,000 அபராதம்</p><p>

உலக் கிண்ண இறுதியில் ஸ்பெயினிடம் 1-0 என அர்ஜென்டீனா தோல்வியடைந்ததைத் தொடர்ந்தே இந்த மோதல் வெடித்தது குறிப்பிடத்தக்கது.
</p><p>
FIFA ஒழுக்கக்கட்டுப்பாட்டுக்குழு விளையாட்டின் கண்ணியத்தை காக்கவே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-22T13:07:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கெஸ்பேவ பொலிஸாரால் சித்திரவதை செய்யப்பட்ட இளம் தம்பதியினர்! பெண்ணில் உடலில் போடப்பட்ட கரப்பான் பூச்சி..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/man-lodges-complaint-with-hrcsl-against-police-1787385468"></link>
            <id>https://tamilwin.com/article/man-lodges-complaint-with-hrcsl-against-police-1787385468</id>
            <summary type="text">கெஸ்பேவ பொலிஸாரால் இளம் தம்பதியினருக்கு செய்த சித்திரவதை மற்றும் கொடுமைகள் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு 46 பக்கங்களை கொண்ட தீர்ப்பை வழங்கி...</summary>
            <content type="html"><![CDATA[<p>கெஸ்பேவ பொலிஸாரால் இளம் தம்பதியினருக்கு செய்த சித்திரவதை மற்றும் கொடுமைகள் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு 46 பக்கங்களை கொண்ட தீர்ப்பை வழங்கியுள்ளது.
</p><p>இவர்களை சட்டவிரோதமாகக் கைது செய்து சித்திரவதைக்கு உள்ளாக்கிய சம்பவம். 2023 ஆம் ஆண்டிலேயே நடந்துள்ளது.
சட்டத்தரணி தருஷ திஷாரா பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார்.</p><p>தற்போது மனித உரிமைகள் ஆணைக்குழு அந்த முறைப்பாடு குறித்து விசாரணை நடத்தி தீர்ப்பை வழங்கியுள்ளது. அது 46 பக்கங்களைக் கொண்ட தீர்ப்பாகும்.</p><p>குறித்த சம்பவத்தின் பின்னணி...</p><p></p><h2>கடைக்கு சென்ற போது நடந்த சம்பவம்</h2><p>களுபோவிலையில் வசிக்கும் குறித்த தம்பதியினர் கெஸ்பேவையில் உள்ள நண்பர்கள் வீட்டுக்கு சென்றிருந்த சமயத்தில் அதிகாலை வேளையில் இவர்களுக்குப் பசி ஏற்பட்டதால், இரவு கடைக்கு உணவு வாங்குவதற்காக இளைஞர் மட்டும் ஒரு சிறிய ஸ்கூட்டி மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார்.</p><p>செல்லும்போது ஒரு பொலிஸ் ஜீப் வண்டி நிறுத்தப்பட்டிருப்பதைப் பார்க்கின்றார். அந்த உணவகத்திற்கு அருகில் ஜீப்பில் இருந்தவர்கள் இவரை நிறுத்துகின்றனர். </p><p> "எங்கே செல்கிறீர்கள், எதற்காகச் செல்கிறீர்கள்?" என்று கேட்கின்றனர்.முதலில் அடையாள அட்டையைக் கேட்கின்றனர், இவர் அடையாள அட்டையைக் காட்டுகிறார். </p><p>அடையாள அட்டையில் தெஹிவளை முகவரி உள்ளது.
"இங்கு என்ன செய்கிறாய்?" எனக் கேட்க, இவர் விவரங்களைக் கூறுகிறார். </p><p>கூறிய பிறகு ஜீப்பில் ஏறுமாறு கூறி இவரை இழுக்க முயற்சித்த போது உணவகத்தில் சிசிடிவி (CCTV) கேமராக்கள் இருப்பதால் இவர் கடைக்குள் செல்கிறார். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0a479cf1-9130-437c-ad25-cfd5da35cbe9/26-6a89567e89bfe.webp' /></p><p>அதற்குப் பிறகு பொலிஸார் இவரைத் தாக்குகின்றனர்.
கழுத்தைப் பிடித்துத் தள்ளுகின்றனர்,பின்னர் வழுகட்டாயமாக கைவிலங்கிடுகின்றனர். </p><p>மேலும் ஜீப் வண்டியில் வைத்தும் இவரைத் தாக்குகின்றனர். தாக்கிவிட்டு ஒரு விளையாட்டு மைதானத்திற்கு அழைத்துச் செல்கின்றனர்.
மைதானத்திற்கு அழைத்துச் சென்று அங்கும் தாக்குகின்றனர். </p><p>முகத்தில் அடிக்கின்றனர், மண்டியிட வைக்கின்றனர். மிகக் கொடூரமாக சித்திரவதை செய்கின்றனர். "நீ 'ஐஸ்' போதைப்பொருள் பயன்படுத்துகிறாய் அல்லவா?" எனக் கூறிப் பல்வேறு குற்றச்சாட்டுகளைக் சுமத்துகின்றனர்.
</p><h2>சுமத்தப்பட்ட பொய்க் குற்றச்சாட்டு</h2><p>அதன் பிறகு இவரை வீட்டிற்கு அழைத்துச் செல்கின்றனர்.வீட்டிற்கு அழைத்துச் சென்று வீட்டில் உள்ளவர்களையும் மிரட்டி, சுற்றிலும் கிடந்த டொபி தாள்கள் மற்றும் அங்கிருந்த அட்டைப் பெட்டித் துண்டுகளைச் சேகரித்து, அவற்றை புகைப்படங்கள் எடுத்து, போதைப்பொருள் இருந்தது எனப் பொய் வழக்குப் போட்டு இவர்களைப் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்கின்றனர்.
</p><p>பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று சிறையில் அடைக்கின்றனர். பெண்ணை சிறையில் போடவில்லை.
பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற பிறகு, இந்த இளைஞரின் சட்டையைக் கழற்றச் சொல்லித் தாக்கினர். </p><p>தாக்கிவிட்டு பொலிஸ் சிறையில் அடைத்தனர்.
மற்றவர்களை வெளியே உட்கார வைத்திருந்தனர். சிறிது நேரத்தின் பிறகு மனைவியின் மீது பொலிஸார் வழக்கு பதிவு செய்தனர்.அதன் பிறகு இரு அதிகாரிகள் இருந்த அறைக்கு அந்தப் பெண்ணை தனியாக வருமாறு கூறினர்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2bccc87c-9ed7-4d36-82ca-b2b2ccda1fd4/26-6a89567f3b080.webp' /></p><p>சிறிது நேரத்தில் அறையிலிருந்து அலறல் சத்தம் கேட்டது. அதைக் கேட்ட இளைஞர் கூண்டிற்குள்ளிருந்து, "பெண் பொலிஸ் அதிகாரிகள் யாரும் இல்லாமல், பொலிஸ் நிலையத்திற்குள் பெண்களை தனியறைக்கு அழைத்துச் சென்று என்ன செய்கிறீர்கள்?" என்று கத்திக் கேட்டுள்ளார். </p><p>ஏனெனில் அந்த நேரத்தில் பொலிஸ் நிலையத்தில் பெண் அதிகாரிகள் எவரும் இருக்கவில்லை.பின்னர் மனைவி அறையிலிருந்து வெளியே வந்ததும் "என்ன நடந்தது?" என்று கேட்டபோது, பொலிஸார் தன் உடலில் கரப்பான் பூச்சிகளை (Cockroach) போட்டதாக கூறினார்.</p><p>காலை வரை வைத்திருக்கிறார்கள், பிறகு 'ஐஸ்' போதைப்பொருள் வைத்திருந்ததாக நீதிமன்றத்தில் முன்னிலைப்டுத்தி பிணை செல்ல அனுமதித்துள்ளனர்.</p><p>அதன் பின்னரே இவர்கள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளனர்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-22T13:07:53+00:00</updated>
        </entry>
    </feed>
