<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-08-26T03:29:18+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரஷ்யாவில் தரையிறங்கிய அமெரிக்க இராணுவ விமானம்: வாய் திறக்காத மாஸ்கோ]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/us-air-force-flight-landed-in-moscow-airport-1787714816"></link>
            <id>https://news.lankasri.com/article/us-air-force-flight-landed-in-moscow-airport-1787714816</id>
            <summary type="text">உக்ரைன் உடனான போர் பதற்றம் நீடித்து வரும் இந்த நேரத்தில் அமெரிக்க விமானம் ஒன்று ரஷ்யாவில் தரையிறங்கி இருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது. உக்ரைன் - ரஷ்யா மோ...</summary>
            <content type="html"><![CDATA[<p>உக்ரைன் உடனான போர் பதற்றம் நீடித்து வரும் இந்த நேரத்தில் அமெரிக்க விமானம் ஒன்று ரஷ்யாவில் தரையிறங்கி இருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது.</p><h2> உக்ரைன் - ரஷ்யா மோதல்</h2><p>
உக்ரைன் - ரஷ்யா இடையிலான போர் தாக்குதல் கடந்த 4 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.</p><p> இந்த போர் நடவடிக்கையில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா செயல்பட்டு வருகிறது.</p><p> அத்துடன் ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்கா பல கட்ட பொருளாதார தடைகள் விதித்து இருப்பதுடன், ரஷ்ய எண்ணெயை மற்ற நாடுகளும் வாங்க கூடாது என்று உலக நாடுகளுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7ab2bdea-c950-45b8-b4a1-1a5363ea1f02/26-6a8e5d017fc02.webp' /></p><p> இருப்பினும் ரஷ்ய ஜனாதிபதி புடின் இந்த அச்சுறுத்தல்களுக்கு கவலை படாமல் தீவிரமாக சண்டை போட்டு வருகிறார்.</p><h2> ரஷ்யாவில் தரையிறங்கிய அமெரிக்க விமானம்</h2><p>இந்நிலையில் அமெரிக்காவின் மிகப்பெரிய டிரான்ஸ்போர்ட் விமானம் ஒன்று ரஷ்யாவில் தரையிறங்கி இருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது.</p><p></p><p> இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், இது தொடர்பாக ரஷ்யா எந்தவொரு தகவலையும் தெரிவிக்கவில்லை.</p><p> தரவுகளின் படி, ரஷ்யாவில் தரையிறங்கிய அமெரிக்க விமானம் C-17A Globemaster III என தெரியவந்துள்ளது.</p><p> மேலும் இந்த விமானம் நேரடியாக அமெரிக்காவில் இருந்து ரஷ்யாவிற்கு வரவில்லை.</p><p> அமெரிக்காவில் உள்ள கேம்ப் ஸ்பிரிங்ஸ் என்ற ஆண்ட்ருவ்ஸ் விமானப்படை தளத்தில் இருந்து புறப்பட்ட&nbsp; C-17A Globemaster III விமானம், முதலில் லிட்வியாவில் உள்ள ரிகா விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது.</p><p> &nbsp;ஆண்ட்ருவ்ஸ் விமானப்படை தளம் அமெரிக்க ஜனாதிபதியின் ஏர் விமானப்படை தளத்தில் முக்கியமானதாகும்.</p><p> நேற்று முன்தினம் லிட்வியாவில் இருந்து புறப்பட்ட C-17A Globemaster III விமானம் ரஷ்யாவில் உள்ள வனுகோவா விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது.</p><p> இந்த C-17A Globemaster III விமானம் அமெரிக்கா விமானப்படையின் ராணுவ தளவாடங்கள், சரக்குகளுடன் நீண்ட தூரம் பறக்க கூடியது என்பது குறிப்பிடத்தக்கது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p>&nbsp;<br></p>]]></content>
            <updated>2026-08-26T03:27:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[தென்னிலங்கை பொலிஸ் நிலையத்தில் பரபரப்பு ; வைரல் காணொளி குறித்து உயர் மட்ட விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/high-level-investigatio-viral-video-police-station-1787714522"></link>
            <id>https://jvpnews.com/article/high-level-investigatio-viral-video-police-station-1787714522</id>
            <summary type="text">காலி அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தினுள் இடம்பெற்ற சம்பவம் தொடர்பாக சமூக ஊடகங்களில் பரவி வரும் காணொளி குறித்து பொலிஸ்மா அதிபரின் பணிப்புரைக்கு அமைய விசா...</summary>
            <content type="html"><![CDATA[<p>காலி அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தினுள் இடம்பெற்ற சம்பவம் தொடர்பாக சமூக ஊடகங்களில் பரவி வரும் காணொளி குறித்து பொலிஸ்மா அதிபரின் பணிப்புரைக்கு அமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.</p><p></p><p> 

இதற்கமைய, காலி திசைக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபரின் கீழ், அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்திற்கு சொந்தமான எல்பிட்டிய பொலிஸ் பிரிவிற்கு வெளியே கடமையாற்றும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவரின் தலைமையில் இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/219e477d-a430-4862-a97f-245977d0a8d0/26-6a8e5bdc6408d.webp' /></p><p>தனது தந்தையை பொலிஸ் அதிகாரிகள் தாக்கியதாகக் கூறி நபர் ஒருவர் குறித்த பொலிஸ் நிலையத்தினுள் அமைதியற்ற முறையில் நடந்துகொள்வதைக் காட்டும் காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் பரவியிருந்தது. </p><p>

குறித்த காணொளியில் தந்தை எனக் குறிப்பிடப்படும் முதியவர், நேற்று (24) இரவு மதுபோதையில் வீதியில் ஒழுங்கற்ற முறையில் நடந்து கொண்டமையினால் அம்பலாங்கொட பொலிஸ் நிலைய அதிகாரிகளால் அந்த நேரத்திலேயே கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையத்தில் ஆஜர்படுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். </p><p>

கைது செய்யப்பட்ட போது இந்த சந்தேகநபர் ஓட முயன்றதாகவும், ஓட முடியாமல் கீழே விழுந்ததால் ஏற்பட்ட இரத்தக் கசிவுக்கான அடையாளங்கள் காணொளியில் காணப்படுவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.</p><p> 

எவ்வாறாயினும், அந்த நபரை அம்பலாங்கொட பொலிஸ் நிலைய அதிகாரிகள் நேற்று (25) பலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதுடன், சட்ட வைத்திய அதிகாரியினால் பரிசோதிக்கப்பட்ட பின்னர் பலப்பிட்டிய மேலதிக நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.</p><p> 

இதன்போது, குறித்த நபரை பிணையில் விடுவிக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.</p>]]></content>
            <updated>2026-08-26T03:22:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கோர விபத்தில் சிறுமி பரிதாபமாக பலி - சாரதி கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/7-year-old-girl-killed-in-road-accident-1787712418"></link>
            <id>https://ibctamil.com/article/7-year-old-girl-killed-in-road-accident-1787712418</id>
            <summary type="text">அடம்பன் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து நேற்று (25) மாலை அடம்பன் காவல்துறை பிரிவிற்குட்பட்ட விடத்தல்தீவு 1...</summary>
            <content type="html"><![CDATA[<p>அடம்பன் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.</p><p>
இந்த விபத்து நேற்று (25) மாலை அடம்பன் காவல்துறை பிரிவிற்குட்பட்ட விடத்தல்தீவு 10 ஆம் பிரிவின் கிளை வீதியில் இடம்பெற்றுள்ளது.</p><p>இவ்வாறு உயிரிழந்தவர் விடத்தல்தீவு பகுதியைச் சேர்ந்த 07 வயதுடைய சிறுமியாவார்.</p><p></p><h2>மேலதிக விசாரணை</h2><p>வீதி ஒன்றில் உழவு இயந்திரம் மோதி பலத்த காயமடைந்த சிறுமி ஒருவர், பள்ளமடு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது உயிரிழந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d41ae466-e83b-4888-83fa-50c454b7b6c1/26-6a8e53a95e58b.webp' /></p><p>32 வயதுடைய உழவு இயந்திரத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p> மேலும் அடம்பன் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-26T03:20:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[கோட்டாபய ராஜபக்சவிடம் பொலிஸார் விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/police-question-gotabaya-over-sugeeswara-1787711434"></link>
            <id>https://tamilwin.com/article/police-question-gotabaya-over-sugeeswara-1787711434</id>
            <summary type="text">முன்னாள் ஜனாதிபதி செயலாளர் சுஜீஸ்வர பண்டார கைது செய்யப்பட்டமை தொடர்பாக, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் பொலிஸார் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி செயலாளர் சுஜீஸ்வர பண்டார கைது செய்யப்பட்டமை தொடர்பாக, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் பொலிஸார் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.
</p><p>
ரணிலின் ஆட்சிக் காலத்தில் ஜனாதிபதி செயலகத்தில் திட்டப் பணிப்பாளராக பணியாற்றிய சுஜீஸ்வர பண்டார ஜனாதிபதியின் செலவினங்களின் கீழ் இரண்டு சம்பளங்களை பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டில், கடந்த ஜூன் 18 ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.</p><p> 

சுஜீஸ்வர பண்டார மேற்கண்ட பதவிகளை வகித்த காலத்தில் அரச வாகனங்கள் துஷ்பிரயோகம் செய்யப்பட்டன மற்றும் ஊழியர்கள் அரசியல் நடவடிக்கைகளுக்காக ஈடுபடுத்தப்பட்டனர் என்ற குற்றச்சாட்டுகள் குறித்து மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணைகளை நடத்தி வருகிறது.</p><p>
</p><h2><b>
பண மோசடி</b></h2><p>சுஜீஸ்வர பண்டார ஜனாதிபதியின் செயலாளராகப் பணியாற்றிய காலத்தில் 1.93 மில்லியன் ரூபாவும், திட்டப் பணிப்பாளராகப் பணியாற்றிய காலத்தில் 4.26 மில்லியன் ரூபாவும் முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வு அதிகாரிகளால் ஏற்கனவே நீதிமன்றத்திற்கு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9ab3969e-ef48-4d3e-96c0-ef2b5d93a7ec/26-6a8e57c3b9862.webp' /></p><p>இதேவேளை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்தின் பணி ஜனாதிபதி செயலக செயலாளராக பணியாற்றிய சுஜீஸ்வர பண்டாரவின் பிணை கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. </p><p>

இது தொடர்பான வழக்கு விசாரணை நேற்று எடுத்துக் கொள்ளப்பட்ட போதே கொழும்பு கோட்டை நீதவான் பாசன் அமரசேனவினால் பிணை நிராகரிக்கப்பட்டது. </p><p>

அத்துடன் அவரை எதிர்வரும் செப்டம்பர் 9 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.&nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-08-26T03:04:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[டாக்சிக் திரைப்படம் எப்படி இருக்கிறது? ரசிகர்களின் விமர்சனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/toxic-movie-review-by-fans-1787712015"></link>
            <id>https://cineulagam.com/article/toxic-movie-review-by-fans-1787712015</id>
            <summary type="text">இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யாஷ் நடிப்பில் உருவாகி இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள டாக்சிக் படத்தின் ரசிகர்களின் விமர்சனம் வெளியாகியுள்ளத...</summary>
            <content type="html"><![CDATA[<p>இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யாஷ் நடிப்பில் உருவாகி இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள டாக்சிக் படத்தின் ரசிகர்களின் விமர்சனம் வெளியாகியுள்ளது.
</p><h2>
டாக்சிக்</h2><p>
2026-ஆம் ஆண்டு பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படங்களில் ஒன்று டாக்சிக். அதுவும் கேஜிஎப் 2 திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்கு பின் யாஷ் நடிப்பில் இந்த படம் வெளியாகிறது என்பதால், இந்திய சினிமாவே இந்த படத்தை எதிர்பார்த்து காத்திருந்தது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dd3e9012-c4d0-4d08-ac66-c10f6880da25/26-6a8e5212a0635.webp' /></p><p>இயக்குநர் கீது மோகன்தாஸ் இப்படத்தை இயக்க, ருக்மிணி வசந்த், கியாரா அத்வானி, நயன்தாரா, ஹுமா குரேஷி மற்றும் தாரா சுதாரியா ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர்.</p><p></p><p> </p><h2>

ரசிகர்கள் விமர்சனம்
</h2><p>
இன்று உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகியுள்ள டாக்சிக் திரைப்படத்தை சிறப்பு காட்சியில் பார்த்த ரசிகர்கள் தங்களது விமர்சனங்களை சமூக வலைத்தளங்களில் தெரிவித்துள்ளனர். அதன்படி, படம் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம் வாங்க.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/311ad116-b112-4600-a719-0655f7d0e7a2/26-6a8e5211e8080.webp' /></p><p>"3 மணி நேர நீளமும், உயிரோட்டமற்ற வன்முறை நிறைந்த ஆக்‌ஷன் படமாகவும் <a href="https://www.youtube.com/watch?v=JsD-LmCkUpY" target="_blank">டாக்சிக் </a>உள்ளது என்றும்; மோசமான கதாபாத்திர வடிவமைப்பு, திணிக்கப்பட்ட 18+ காட்சிகள், தொடர்பற்ற காட்சிகள், பலவீனமான வசனங்கள் மற்றும் எமோஷனல் கனெக்ட் இல்லை" என்றும் விமர்சனத்தில் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fcd44319-5041-4fbd-94ca-4fe123e836a0/26-6a8e521356e69.webp' /></p><p>
</p><p>
மேலும், "இயக்குனர் கீது ஒரு மிகச் சலிப்பூட்டும் படத்தை வழங்கியுள்ளார் என்றும், படத்தில் உள்ள நல்ல விஷயம் ஒளிப்பதிவு மட்டும்தான்" என்றும் கூறியுள்ளார்கள்.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr"><a href="https://x.com/hashtag/Toxic?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#Toxic</a> Very Messy 1st Half!<br><br>Apart from the technical quality, this one is all over the place so far. Heavy KGF hangover with a very clumsy and tiring screenplay. Even the action feels artificial with excessive mocobot usage, while the BGM is also a major letdown. Only the…</p>&mdash; Venky Reviews (@venkyreviews) <a href="https://x.com/venkyreviews/status/2092399133332050425?ref_src=twsrc%5Etfw">August 25, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr"><a href="https://x.com/hashtag/Toxic?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#Toxic</a> A Fairy Tale That Turns Into a Complete Nightmare for Everyone!<br><br>A technically sound film buried under chaotic writing and exhausting execution. There are barely any proper character introductions, the narrative has no clear flow, and the screenplay gets confusing enough…</p>&mdash; Venky Reviews (@venkyreviews) <a href="https://x.com/venkyreviews/status/2092424597694042133?ref_src=twsrc%5Etfw">August 26, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr"><a href="https://x.com/hashtag/Toxic?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#Toxic</a> - Stylish Yash, Circus Stunt, Rich Visuals r only positives in this 3Hrs lengthy Soulless Violent Action Drama. Improper Character Sketch, Forced adult scenes, Random Seq, Poor Dialogues &amp; No Emotional Connect-Nothing works. Dir Geethu delivers a Mega Boring Film. WORST!</p>&mdash; Christopher Kanagaraj (@Chrissuccess) <a href="https://x.com/Chrissuccess/status/2092425082131959875?ref_src=twsrc%5Etfw">August 26, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr"><a href="https://x.com/hashtag/TOXIC?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#TOXIC</a> - TORTURE!<br><br>A Boring, Soulless, Violent Action Drama!</p>&mdash; Christopher Kanagaraj (@Chrissuccess) <a href="https://x.com/Chrissuccess/status/2092421268553216187?ref_src=twsrc%5Etfw">August 26, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr"><a href="https://x.com/hashtag/Toxic?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#Toxic</a> Review <a href="https://x.com/hashtag/Toxic?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#Toxic</a> Is A Dark Period Gangster Action Drama🔥 Set In A Violent World Of Power, Betrayal, Crime And Moral Conflict. The Film Builds An Atmospheric World With Stylish Visuals🎥, Brutal Action💥 And A Larger-Than-Life Presentation. However😕, The Film&#39;s Scale And… <a href="https://t.co/k5NeIVSd95">pic.twitter.com/k5NeIVSd95</a></p>&mdash; Cinemy (@HdUpdatesMovie1) <a href="https://x.com/HdUpdatesMovie1/status/2092431921410388106?ref_src=twsrc%5Etfw">August 26, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p>]]></content>
            <updated>2026-08-26T03:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலக புகழ்பெற்ற இசைக்கலைஞர் டோலி பார்ட்டன் காலமானார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/world-renowned-musician-dolly-parton-passes-away-1787712913"></link>
            <id>https://jvpnews.com/article/world-renowned-musician-dolly-parton-passes-away-1787712913</id>
            <summary type="text">புகழ்பெற்ற சர்வதேச கன்ட்ரி (Country) இசைக்கலைஞரான டோலி பார்ட்டன் (Dolly Parton) தனது 80வது வயதில் காலமானார். 

அவரது குடும்பத்தினர் இதனை டோலி பார்ட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>புகழ்பெற்ற சர்வதேச கன்ட்ரி (Country) இசைக்கலைஞரான டோலி பார்ட்டன் (Dolly Parton) தனது 80வது வயதில் காலமானார். 

அவரது குடும்பத்தினர் இதனை டோலி பார்ட்டனின் சமூக வலைத்தளப் பக்கங்கள் மூலம் அறிவித்துள்ளனர்.</p><p> </p><p>அவரது சகோதரியின் மகனான பிரையன் சீவர் (Bryan Seaver) இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 

கிட்டத்தட்ட ஏழு தசாப்தங்களாக இசைத் துறையில் பயணித்த டோலி பார்ட்டன், 10 கிராமி (Grammy) விருதுகளை வென்றுள்ளதுடன், உலகம் முழுவதும் 100 மில்லியனுக்கும் அதிகமான இசைத் தட்டுகளை விற்பனை செய்துள்ளார்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/06507f1c-f734-4406-996b-fd5159d6faf9/26-6a8e55936b6da.webp' /></p><p>அவர் "Jolene", "I Will Always Love You" மற்றும் "9 to 5" போன்ற உலகப் புகழ்பெற்ற பல பாடல்களை உருவாக்கிய பாடலாசிரியரும் ஆவார். </p><p>

டோலி பார்ட்டன் தன்னை முதன்மையாக ஒரு பாடலாசிரியராகவே அடையாளப்படுத்திக் கொண்டதுடன், பாடல் எழுதுவதை தனது எண்ணங்களையும் உணர்வுகளையும் வெளிப்படுத்தும் வழியாகவும், தனக்கான ஒரு "சிகிச்சையாகவும்" கருதியதாகப் பல சந்தர்ப்பங்களில் தெரிவித்துள்ளார். </p><p>

இசைக்கு மேலாக நடிப்பு, வணிகம் மற்றும் சமூக சேவை ஆகிய துறைகளிலும் அவர் ஒரு தனித்துவமான முத்திரையைப் பதித்துள்ளார். </p><p>

அவர் தொடங்கிய Imagination Library என்ற திட்டத்தின் மூலம் உலகம் முழுவதிலும் உள்ள குழந்தைகளுக்கு இலவசமாகப் புத்தகங்களை விநியோகித்தது உட்பட பல சமூக நலப்பணிகளில் அவர் பங்காற்றியுள்ளார்.</p><p> 

டோலி பார்ட்டனின் மறைவுக்கான காரணம் குறித்து அவரது பிரதிநிதிகள் குறிப்பிடுகையில், அவர் குறுகிய காலம் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்ததாகத் தெரிவித்துள்ளனர். </p><p>

உலகளவில் "கன்ட்ரி இசையின் ராணி" என்று அழைக்கப்படும் டோலி பார்ட்டனின் மறைவு இசைத்துறைக்கு ஏற்பட்ட மிகப்பெரிய இழப்பாகக் கருதப்படுகிறது.</p>]]></content>
            <updated>2026-08-26T02:55:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[லண்டன் காட்விக் விமான நிலையத்தில்... உடல் உறைந்து சடலமாக கண்டெடுக்கப்பட்ட நபர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/gatwick-airport-stowaway-found-1787703459"></link>
            <id>https://news.lankasri.com/article/gatwick-airport-stowaway-found-1787703459</id>
            <summary type="text">Stowaway was found frozen to death: விமானத்தின் சக்கரப் பகுதிக்குள் அடையாளம் தெரியாத ஒரு நபர் உடல் உறைந்து இறந்து கிடந்தார். 

காட்விக் விமான நிலையத...</summary>
            <content type="html"><![CDATA[<p>Stowaway was found frozen to death: விமானத்தின் சக்கரப் பகுதிக்குள் அடையாளம் தெரியாத ஒரு நபர் உடல் உறைந்து இறந்து கிடந்தார். </p><p>

காட்விக் விமான நிலையத்தில், விமானத்தின் சக்கரப் பகுதிக்குள் அடையாளம் தெரியாத ஒருவர் பனியில் உறைந்து இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/889ff2f0-ff65-4244-ac0a-eee7c12d2ee1/26-6a8e30a5ac427.webp' /></p><p>
மொராக்கோவிலிருந்து வந்த ஏர் அரேபியா விமானத்தின் 'லேண்டிங் கியர்' பகுதியில், அடையாளம் தெரியாத நபர் ஒருவர் மறைந்திருந்த நிலையில் ஜூன் மாதத்தில் கண்டெடுக்கப்பட்டார். </p><p>பிரேதப் பரிசோதனையில், மாரடைப்பு, அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட ஆக்சிஜன் பற்றாக்குறை மற்றும் உடல் வெப்பநிலை குறைவு ஆகியவையே மரணத்திற்குக் காரணம் எனக் கண்டறியப்பட்டது. </p><p>வெஸ்ட் சசெக்ஸ், பிரைட்டன் மற்றும் ஹோவ் பகுதிக்கான மரண விசாரணை அதிகாரி ஜோசப் டர்னர், சக்கர அறையின் உட்புறச் சூழல் மிகக் கடுமையான குளிருடன் இருந்திருக்கும் என்று குறிப்பிட்டார்.</p><p></p><p> </p><p>இந்த மரணம் இயற்கைக்கு மாறானது என்று நம்புவதற்கான காரணம் இருந்ததன் அடிப்படையில் விசாரணையை முறைப்படி தொடங்கி வைத்த அவர், அங்கு ஆக்சிஜன் பற்றாக்குறை இருந்திருக்கக்கூடும் என்றும் குறிப்பிட்டார். </p><p>சக்கரப் பகுதியிலிருந்து வெளியே தொங்கிக்கொண்டிருந்த பேக்கிங் பட்டையை (packing strap) கவனித்த தரைப்பகுதிப் பொறியாளர் ஒருவர் அந்த நபரைக் கண்டறிந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3871300e-016c-4b42-a173-397aa50736ef/26-6a8e30a65d148.webp' /></p><p> </p><p>குறிப்பிட்ட அந்த ஏர் அரேபியா விமானம் டான்ஜியர்ஸிலிருந்து வந்திருந்தது. சம்பவம் நடந்தபோது, ​​லண்டன் கேட்விக் விமான நிலையத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், </p><p>செவ்வாய்க்கிழமை, ஜூன் 16, 2026 அன்று காலை 11.30 மணிக்கு மேல், ஏர் அரேபியா விமானம் வந்திறங்கியபோது ஒரு சம்பவம் கண்டறியப்பட்டதையடுத்து, லண்டன் கேட்விக் விமான நிலையத்தின் அவசரக்காலப் பிரிவினர் அந்த விமானத்திற்குச் சென்று நடவடிக்கை மேற்கொண்டனர். </p><p>மேலும், சசெக்ஸ் காவல்துறை உறுதிப்படுத்தியபடி, ஒரு சடலம் கண்டெடுக்கப்பட்டது. அதன்பின்னர், எங்கள் குழுக்கள் சசெக்ஸ் காவல்துறைக்கும் மரண விசாரணை அதிகாரிக்கும் உதவியதாக செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். விசாரணை 2027-ஆம் ஆண்டு பிப்ரவரி 24-ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-26T02:25:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் தாயக கடற்பகுதியில் மறைந்து கிடக்கும் பொக்கிஷம் - பணக்கார நாடாக மாறப்போகும் இலங்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/massive-oil-and-gas-discovered-in-mannar-1787709157"></link>
            <id>https://tamilwin.com/article/massive-oil-and-gas-discovered-in-mannar-1787709157</id>
            <summary type="text">மன்னார் படுகையில் 2 பில்லியன் பீப்பாய் பெற்றோலும் 9 டிரில்லியன் கனஅடி இயற்கை எரிவாயுவும் இருப்பதற்கான ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்ற...</summary>
            <content type="html"><![CDATA[<p>மன்னார் படுகையில் 2 பில்லியன் பீப்பாய் பெற்றோலும் 9 டிரில்லியன் கனஅடி இயற்கை எரிவாயுவும் இருப்பதற்கான ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய வளங்கள் மேம்பாட்டு ஆணையகத்தின் பணிப்பாளர் நாயகம் நீல் டி சில்வா தெரிவித்துள்ளார். </p><p>

இதுவரை மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் தரவுகள் மூலம் இந்த இருப்பு உள்ளதென நம்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். </p><p>

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே நீல் டி சில்வா இதனைக் குறிப்பிட்டுள்ளார்.</p><h2><b>எண்ணெய் மற்றும் எரிவாயு</b></h2><p> 

“இந்த எண்ணெய் மற்றும் எரிவாயு அளவுகளின் அடிப்படையில் அதன் வணிக ரீதியான மதிப்பை கணிப்பிட முடியும். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/75fa4a8a-0b7c-4b1a-a5c0-eb18dbb8a172/26-6a8e4cf177029.webp' /></p><p>உண்மையில் இந்த மதிப்பீடு மாறக்கூடியது. அத்துடன் எண்ணெய் மற்றும் எரிவாயுவின் அளவு இதனைக் விடவும் அதிகமாக இருக்கக்கூடும். </p><p>

மன்னார் படுகையில் எண்ணெய் மற்றும் எரிவாயு குறித்து முன்னர் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் போது இயற்கை எரிவாயு மற்றும் திரவங்களை கண்டறிய முடிந்தது. </p><p>

இதன்மூலம் பெட்ரோலிய அமைப்பு காணப்படுவதை உறுதிப்படுத்தியுள்ளது. 

ஒப்பீட்டளவில் பெரிய பரப்பளவை உள்ளடக்கும் வகையில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படாததால், நவீன புவிசார் ஆய்வுத் தொழில்நுட்ப முறைகள் மூலம் தரவுகளை சேகரிக்கவும், தரவுகளை விளக்குவதற்கும் சர்வதேச நிறுவனங்களுக்கு இதுவொரு நல்ல வாய்ப்பாகும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.</p><p> 

இதேவேளை, இந்த ஆய்வின் மூலம் பெறப்படும் பெட்ரோலியம், இலங்கை முகங்கொடுத்துள்ள எரிபொருள் இறக்குமதி என்ற பிரச்சினைக்கு நல்ல தீர்வாக அமையும் என எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக தெரிவித்துள்ளார்.</p><p> 

மேலதிக எரிபொருளை அயல் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வெளிநாட்டுச் செலாவணியை ஈட்டிக்கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார். </p><h3><b>

சட்டரீதியான சிக்கல்கள் </b></h3><p>இந்த முதலீட்டு அழைப்புக்காக மன்னார் படுகையில் ஒதுக்கப்பட்டுள்ள 34,000 சதுர கிலோமீற்றர் பரப்பளவைக் கொண்ட 4 கடல்சார் கட்டங்கள் இதில் அடங்குவதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/19087cbc-54b6-4b79-8079-fe6b033b1d97/26-6a8e4d84261f6.webp' /></p><p>இதற்கு முன்னர் நிறுவனங்களுக்கு வழங்குவதில் சட்டரீதியான சிக்கல்கள் ஏற்பட்ட பகுதிகள் இந்த 34,000 சதுர கிலோமீற்றர் பகுதிக்குள் அடங்காது என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். </p><p>
அதற்கமைய, இந்த ஆண்டு தோராயமாக 33,964 சதுர கிலோமீற்றர் பரப்பளவைக் கொண்ட பகுதி 4 பகுதிகளாகப் பிரித்து அனுமதிப்பத்திரம் வழங்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார். </p>]]></content>
            <updated>2026-08-26T02:18:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கைக்கு படையெடுக்கும் பெருந்தொகை சுற்றுலாப் பயணிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/tourist-arrivals-surpass-1-5-mn-in-2026-1787710231"></link>
            <id>https://ibctamil.com/article/tourist-arrivals-surpass-1-5-mn-in-2026-1787710231</id>
            <summary type="text">ஆகஸ்ட் மாதத்தின் முதல் 23 நாட்களில் இலங்கைக்கு 155,331 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையைப் பதிவு செய்துள்ளது.இந்த ஆண்டில் இதுவரை இலங்கைக்கு அதிக...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஆகஸ்ட் மாதத்தின் முதல் 23 நாட்களில் இலங்கைக்கு 155,331 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையைப் பதிவு செய்துள்ளது.</p><p>இந்த ஆண்டில் இதுவரை இலங்கைக்கு அதிக சுற்றுலாப் பயணிகளை அனுப்பிய நாடாக இந்தியா தொடர்ந்து முன்னணியில் உள்ளது.</p><p>இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் (SLTDA) சமீபத்திய தகவல்களில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p></p><h2>சுற்றுலாப் பயணிகள்</h2><p>அதற்கமைய 2026 ஆம் ஆண்டில் இதுவரை வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் மொத்த எண்ணிக்கை சுமார் 1.5 மில்லியனாக உயர்ந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aae0a9f6-8792-4a39-a3cc-b9cd44c69115/26-6a8e4c1c7fc7b.webp' /></p><p>2026 ஜனவரி 1 ஆம் திகதிக்கும் ஆகஸ்ட் 23 ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலத்தில் மொத்தம் 1,498,749 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.</p><p>

ஆகஸ்ட் மாதத்தின் முதல் 23 நாட்களில் 36,590 இந்திய சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ள நிலையில், இலங்கையின் மிகப்பெரிய சுற்றுலாச் சந்தையாக இந்தியா தொடர்ந்து நீடிக்கிறது. </p><p>இக்காலப்பகுதியில் பதிவான மொத்த வருகையில் இவர்கள் சுமார் 24% பங்கைக் கொண்டுள்ளனர்.</p><p></p><p> </p><h2>முதன்மைச் சந்தை</h2><p>

16,688 வருகைகளுடன் பிரித்தானியா இரண்டாம் இடத்தில் உள்ளதுடன், சீனா 10,294 சுற்றுலாப் பயணிகளின் வருகையைப் பதிவு செய்துள்ளது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0b0afad0-9fa9-4d03-a804-3666c73e60d3/26-6a8e4c1bc5cf8.webp' /></p><p>

ஜனவரி 1 முதல் ஆகஸ்ட் 23 வரையான காலப்பகுதியில் 374,820 வருகைகள் பதிவாகியுள்ள நிலையில், இந்த முழு ஆண்டுக்கான முதன்மைச் சந்தையாகவும் இந்தியா தனது இடத்தைத் தக்கவைத்துள்ளது. </p><p>

அதே காலப்பகுதியில், 147,089 வருகைகளுடன் பிரித்தானியா அடுத்த இடத்திலும், 98,801 சுற்றுலாப் பயணிகளுடன் சீனா அடுத்த இடத்திலும் உள்ளன.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/FJQcrzobjUcEaJJsEVOWpF" target="_blank">WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-26T02:14:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ். சிறைச்சாலைக்கு சென்ற நீதி அமைச்சர் - பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/justice-minister-visits-jaffna-prison-1787708505"></link>
            <id>https://ibctamil.com/article/justice-minister-visits-jaffna-prison-1787708505</id>
            <summary type="text">யாழ்ப்பாணத்திற்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்ட
நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, யாழ்ப்பாணம்
சிறைச்சாலையின் செயற்பாடுகள...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணத்திற்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்ட
நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, யாழ்ப்பாணம்
சிறைச்சாலையின் செயற்பாடுகள் மற்றும் நிலைமைகளை நேரில் கண்காணிப்பதற்காக கள
விஜயமொன்றை மேற்கொண்டார்.
</p><p>
இதன்போது சிறைச்சாலை அதிகாரிகளுடன் கலந்துரையாடிய அமைச்சர், கடந்த காலங்களில்
சிறைச்சாலைகளில் ஏற்பட்ட பல்வேறு பிரச்சினைகளை கருத்திற்கொண்டு, மாவட்ட
அரசாங்க அதிபர் தலைமையில் சம்பந்தப்பட்ட படை மற்றும் காவல்துறை அதிகாரிகள்,
துறைசார் திணைக்கள அதிகாரிகள் உள்ளிட்ட அனைவரையும் ஒன்றிணைத்து, குறைந்தது
இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை கலந்துரையாடல்களை நடத்தி, அவசர நிலைமைகளுக்கு
ஒருங்கிணைந்து முகங்கொடுக்கும் வகையில் செயற்பட வேண்டும் எனக்
கேட்டுக்கொண்டார்.
</p><p>
அத்துடன், சிறைச்சாலைகளுக்குத் தேவையான அனைத்து வசதிகளும்
ஏற்படுத்திக்கொடுக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் அமைச்சர் வலியுறுத்தினார்.</p><p></p><h2>கைதிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள்</h2><p>

தொடர்ந்து சிறைச்சாலையின் பல்வேறு பகுதிகளுக்கும் நேரில் சென்று அங்குள்ள
நிலைமைகளைப் பார்வையிட்ட அமைச்சர், கைதிகளுடனும் கலந்துரையாடினார்.&nbsp;இதன்போது சிறைச்சாலையின் வளங்கள், கைதிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் சவால்கள் குறித்தும் விரிவாகக் கேட்டறிந்தார்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7a51c9d3-072f-43ef-a1c6-9a7bb51f7bb3/26-6a8e4696ec2d8.webp' /></p><p>இந்தக் கண்காணிப்பு விஜயத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான கருணாநாதன் இளங்குமரன் மற்றும் வைத்தியர் எஸ். ஸ்ரீ பவானந்தராஜா, யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன், சிறைச்சாலை ஆணையாளர், யாழ்ப்பாண பிரதேச செயலாளர், பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர், இராணுவ மற்றும் காவல்துறை அதிகாரிகள், சிறைச்சாலை அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.</p><p>
அண்மையில் நாட்டின் பல சிறைச்சாலைகளில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களைத்
தொடர்ந்து, சகல சிறைச்சாலைகளினதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில்,
நீதி அமைச்சர் யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு நேரில் சென்று நிலைமைகளைப்
பார்வையிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-26T01:51:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையின் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் குறித்து எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/flood-warning-for-sri-lanka-1787707770"></link>
            <id>https://tamilwin.com/article/flood-warning-for-sri-lanka-1787707770</id>
            <summary type="text">இலங்கையில் நிலவி வரும் எல் நினோ காலநிலை மாற்றம் காரணமாக, எதிர்வரும் ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் வெள்ளப்பெருக்கு நிலைமை ஏற்படக்கூமென வளிமண்டலவி...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் நிலவி வரும் எல் நினோ காலநிலை மாற்றம் காரணமாக, எதிர்வரும் ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் வெள்ளப்பெருக்கு நிலைமை ஏற்படக்கூமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. </p><p>அந்த காலப்பகுதியில் வழமையான மழைவீழ்ச்சியை விட தீவிரமான மழை பெய்யக்கூடும் என திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அஜித் விஜேமான்ன குறிப்பிட்டுள்ளார். </p><p>“எதிர்வரும் 6 மாத காலநிலை தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட தரவுப் பகுப்பாய்வின் போதே இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது.</p><h2><b> எல் நினோ நிலைமை</b></h2><p>அத்துடன், எதிர்வரும் டிசம்பர், ஜனவரி மற்றும் பெப்ரவரி ஆகிய காலப்பகுதியில் எல் நினோ நிலைமை கடுமையாக பாதிக்கக்கூடும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/142e27d1-b085-45af-b59a-486717276a12/26-6a8e42ffca537.webp' /></p><p>இதேவேளை, மேற்கு, சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களுக்கும் மற்றும் காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா ஆகிய மாவட்டங்களுக்கும் எதிர்வரும் நாட்களில் மழை பெய்யக்கூடும்.</p><p> நாட்டின் சில பிரதேசங்களுக்கு 75 மில்லிமீட்டர் அளவிலான மழை எதிர்பார்க்கப்படுகின்றது. </p><p>இது தவிர, ஏனைய மாகாணங்களில் எதிர்வரும் சில நாட்களிலும் வெப்பமாக காலநிலை தொடரும்"&nbsp; என அவர் மேலும் தெரிவித்துள்ளார். </p>]]></content>
            <updated>2026-08-26T01:36:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[75 mm இலும் கூடிய பலத்த மழை! இன்றைய வானிலை முன்னறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/moderate-to-heavy-rain-exceeding-75-mm-1787707046"></link>
            <id>https://ibctamil.com/article/moderate-to-heavy-rain-exceeding-75-mm-1787707046</id>
            <summary type="text">சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும் எனவும் சில இடங...</summary>
            <content type="html"><![CDATA[<p>சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும் எனவும் சில இடங்களில் 75 mm இலும் கூடிய ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.</p><p>அனுராதபுரம், மாத்தளை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் சிறிதளவு மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.</p><p>அத்தோடு, அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் மொனராகலை மாவட்டங்களின் சில இடங்களில் பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுவதாகவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p></p><h2>பலத்த காற்று</h2><p>நாட்டின் ஏனைய பிராந்தியங்களில் வறட்சியான வானிலை நிலவக்கூடும்.</p><p>இதன்படி, கிழக்கு மாகாணத்திலும் அத்துடன் பொலனறுவை, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் பகல் வேளையில் அதிகரித்த வெப்பநிலையை மனித உடலினால் உணரக்கூடியதாக இருக்கும் என கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aba8c5f9-a388-489b-8f07-e299a3e8e850/26-6a8e4149b5d5e.webp' /></p><p>

மத்திய மலைப் பிராந்தியத்தின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் திருகோணமலை, மொனராகலை, ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் மணித்தியாலத்திற்கு சுமார் 40 - 50 km வேகத்தில் அடிக்கடி பலத்த காற்று வீசக் ஓரளவு கூடும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.</p><p>இந்நிலையில், பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-26T01:28:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[விடுதிக்குள் வீசிய துர்நாற்றம் ; அழுகிய நிலையில் மீட்கப்பட்ட சடலம் ; மர்ம மரணத்தால் பரபரப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/foul-odor-leads-to-decomposed-body-in-hotel-1787705936"></link>
            <id>https://jvpnews.com/article/foul-odor-leads-to-decomposed-body-in-hotel-1787705936</id>
            <summary type="text">அம்பலாங்கொட நகரின் நடுப்பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் மர்மமான முறையில் இறந்து கிடந்த ஆண் ஒருவரின் சடலம் நேற்று (25) நண்பகல் மீட்கப்பட்டுள்ளதாக அம்பலாங...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">அம்பலாங்கொட நகரின் நடுப்பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் மர்மமான முறையில் இறந்து கிடந்த ஆண் ஒருவரின் சடலம் நேற்று (25) நண்பகல் மீட்கப்பட்டுள்ளதாக அம்பலாங்கொட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p style="text-align: justify; ">

இவ்வாறு கண்டெடுக்கப்பட்டவர் அம்பலாங்கொட மகா பன்சல வீதியில் உள்ள விடுதியில் தனியாக தங்கியிருந்த 67 வயதுடையவர் என கண்டறியப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3f94e9eb-0967-42d0-b612-3922256f150b/26-6a8e3a585735f.webp' /></p><h2 style="text-align: justify; ">தீவிரமாகும் விசாரணை</h2><p style="text-align: justify; ">
இவர் பெந்தோட்டை சுற்றுலா விடுதி ஒன்றில் சிற்றுண்டி தயாரிப்பாளர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p style="text-align: justify; ">
இந்த நபரின் உடலம் கண்டெடுக்கப்பட்டபோது, ​​அது மிகவும் அழுகி, வீங்கி, துர்நாற்றம் வீசியதாகத் தெரிவித்த காவல்துறை, இவர் சுமார் ஐந்து நாட்களுக்கு முன்பு இறந்திருக்கலாம் எனச் சந்தேகிக்கிறது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">

குறித்த நபர் தங்கியிருந்த அறையில் இருந்து அதிக துர்நாற்றம் வீசியது தொடர்பாக அயலவர் ஒருவர் மேற்கொண்ட சோதனையின்போதே இந்தச் சடலம் கண்டெடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-26T01:25:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[செவ்வாய் பெயர்ச்சி; இந்த ராசிக்காரர்களுக்கு இனி பொற்காலம் தான்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/mars-transit-jackpot-luck-awaits-these-zodiac-1787707062"></link>
            <id>https://jvpnews.com/article/mars-transit-jackpot-luck-awaits-these-zodiac-1787707062</id>
            <summary type="text">&amp;nbsp;நவகிரகங்களின் தளபதியாக கருதப்படுபவர் செவ்வாய். செவ்வாய் ஒரு ராசியில் 45 நாட்கள் வரை இருப்பார் மற்றும் அவ்வப்போது நட்சத்திரத்தையும் மாற்றுவார். அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;நவகிரகங்களின் தளபதியாக கருதப்படுபவர் செவ்வாய். செவ்வாய் ஒரு ராசியில் 45 நாட்கள் வரை இருப்பார் மற்றும் அவ்வப்போது நட்சத்திரத்தையும் மாற்றுவார். அந்த வகையில் செவ்வாய் செப்டம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் நட்சத்திரத்தை மாற்றவுள்ளார்.

</p><p>அதுவும் செப்டம்பர் 02&nbsp; செவ்வாய் புனர்பூசம் நட்சத்திரத்திற்குள் நுழையவுள்ளார். இந்த நட்சத்திரத்தின் அதிபதி குரு பகவான்.&nbsp; செவ்வாயின் இந்த நட்சத்திர பெயர்ச்சியின் விளைவு 3 ராசிக்காரர்களுக்கு&nbsp; மங்களகரமானதாக இருக்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/efdf4d0a-9fc8-42b8-a05c-bf5e02388326/26-6a8e3eb830509.webp' /></p><h2>அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள்</h2><p>

</p><p><b>
மேஷம் : </b>நீண்ட காலமாக முடிக்க முடியாமல் இருந்த வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். வணிகர்கள் நல்ல லாபத்தைத் தரக்கூடிய புதிய மற்றும் பெரிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். ஏற்கனவே செய்த முதலீடுகளில் இருந்து நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும். மேலும் இக்காலத்தில் எந்த வேலையை செய்தாலும், அதில் நல்ல வெற்றியைப் பெறக்கூடும்.</p><p></p><p><b>
தனுசு :&nbsp;</b>மன தைரியம் அதிகரிக்கும். பணிபுரிபவர்களுக்கு சிறப்பான செயல்திறன் காரணமாக பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. மேலும் வருமானத்தில் உயர்வு ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. அதோடு எடுத்த வேலை ஒவ்வொன்றிலும் நல்ல வெற்றி கிடைக்கும்.</p><p></p><p><b>மிதுனம் : </b>குறிப்பாக வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும். பல வழிகளில் இருந்து நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும். வேலைகள் ஒவ்வொன்றையும் சிறப்பாகவும், வெற்றிகரகமாகவும் செய்து முடிப்பீர்கள். மொத்தத்தில் செவ்வாயின் அருளால் நிதி நிலைமை வலுவடையும்.</p>]]></content>
            <updated>2026-08-26T01:24:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[கெஹெல்பத்தரவின் தொலைபேசியில் நடிகைகளின் தகவல்கள் ; புகைப்படத்துடன் சிக்கிய அரசியல் தலைகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/actresses-data-found-on-kehelpathara-s-phone-1787704121"></link>
            <id>https://jvpnews.com/article/actresses-data-found-on-kehelpathara-s-phone-1787704121</id>
            <summary type="text">இந்தோனேசியாவில் இருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்டதன் பின்னர் இதுவரை தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் தலைவரான மந...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">இந்தோனேசியாவில் இருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்டதன் பின்னர் இதுவரை தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் தலைவரான மந்தினு பத்மசிறி பெரேரா எனப்படும் 'கெஹெல்பத்தர பத்மே' மற்றும் 'கூடு நிலங்க' ஆகிய சந்தேகநபர்கள் முதன்முறையாக&nbsp; நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.</p><p style="text-align: justify; "> 

இதன்போது குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் தெரிவிக்கையில், கெஹெல்பத்தர பத்மே 13 சிறைச்சாலை அதிகாரிகளுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணிவந்துள்ளதாக தொலைபேசி அறிக்கைகள் மூலம் தெரியவந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f88d20c8-af3d-4ee1-970c-52c426442dad/26-6a8e333b8eb58.webp' /></p><h2 style="text-align: justify; ">மனிதக் கொலைகள்</h2><p style="text-align: justify; "> 9 அரசியல்வாதிகள் தொடர்பான புகைப்படங்கள் மற்றும் உரையாடல்கள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் வெளிப்படுத்தினர்.7 நடிகைகள் மற்றும் மாடல்கள் பற்றிய தகவல்களும் வெளிவந்துள்ளன. </p><p style="text-align: justify; "> 

கணேமுல்ல சஞ்சீவ கொலை உட்பட பல மனிதக் கொலைகள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்களுடன் தொடர்புடைய ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் தலைவர்களான கெஹெல்பத்தர பத்மே, கொமண்டோ சலிந்த உட்பட 5 பேர் இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, கடந்த ஆண்டின் ஒகஸ்ட் 30 ஆம் திகதி நாட்டிற்கு அழைத்து வரப்பட்டனர்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> 

அதனைத் தொடர்ந்து, தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் வைக்கப்பட்டிருந்த கெஹெல்பத்தர பத்மே மற்றும் கூடு நிலங்க ஆகிய சந்தேகநபர்கள், கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்துவதற்கு முன்னர் சட்ட மருத்துவ அதிகாரியிடம் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.</p><p style="text-align: justify; "> 

பின்னர், கெஹெல்பத்தர பத்மே மற்றும் கூடு நிலங்க ஆகியோர் கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றத்தில் இன்று பிற்பகல் ஆஜர்படுத்தப்பட்டனர். </p><p style="text-align: justify; ">

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் அழைத்து வரப்பட்ட சந்தேகநபர், கொழும்பு பிரதான நீதிவான் அஸங்க எஸ். போதரம முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.&nbsp;</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-26T01:23:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தேங்காயை சாப்பிடுவதால் என்னென்ன மருத்துவ பயன்கள் உள்ளது தெரியுமா...?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/health-benefits-of-eating-coconut-1787701821"></link>
            <id>https://jvpnews.com/article/health-benefits-of-eating-coconut-1787701821</id>
            <summary type="text">தேங்காய் இல்லாத சமையல் அறையை யாரேனும் பார்க்க முடியுமா? தேங்காய் துருவியவுடன் அதன் சுவைக்காக எடுத்து சாப்பிடுவது வழக்கம். ஆனால், அதில் உள்ள ஆரோக்கிய ந...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">தேங்காய் இல்லாத சமையல் அறையை யாரேனும் பார்க்க முடியுமா? தேங்காய் துருவியவுடன் அதன் சுவைக்காக எடுத்து சாப்பிடுவது வழக்கம்.</p><p style="text-align: justify; "> ஆனால், அதில் உள்ள ஆரோக்கிய நன்மைகள் குறித்து என்றாவது சிந்தித்திருப்போமா?



தேங்காயை தினமும் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் பலவித ஆரோக்கிய நன்மைகள் இருப்பதாக கூறப்படுகிறது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/12e70f55-4270-457e-970f-9219a6cb111f/26-6a8e2b4f0dac9.webp' /></p><h2 style="text-align: justify; ">மருத்துவ பயன்கள்</h2><p>
</p><p style="text-align: justify; ">


வெறும் வயிற்றில் தேங்காய் சாப்பிடுவது இதயம், சருமம், தலைமுடி, வயிறு என அனைத்துக்கும் நல்லது.</p><p style="text-align: justify; ">



உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரோலை குறைத்து சமிபாட்டுப் பிரச்சினைகளை சரி செய்கிறது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8cfcb548-0359-42ec-adfe-a6022fcd2d6a/26-6a8e2b5025163.webp' /></p><p style="text-align: justify;">



தேங்காயில் அதிகப்படியான நார்ச்சத்து மற்றும் அமினோ அமிலங்கள் உள்ளன. இது உடலின் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துகிறது.
</p><p style="text-align: justify; ">


வாழைப்பழம், அப்பிள் பழங்களில் உள்ள சத்துக்களை விடவும் தேங்காயில் அதிகப்படியான புரதம் உள்ளது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify;"> 



இது சிறுநீரகம், கல்லீரல், இதயம் போன்றவற்றில் ஏற்படும் அனைத்து குறைபாடுகளையும் சரி செய்யும். </p><p style="text-align: justify;">



எனவே காலையில் வெறும் வயிற்றில் தேங்காய் சாப்பிடுவது வயிற்றில் ஏற்படும் உபாதைகளைக் குறைக்க உதவும்.&nbsp; &nbsp; &nbsp; &nbsp;</p><p style="text-align: justify;"></p>]]></content>
            <updated>2026-08-26T01:23:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[மோட்டார் வாகனப் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நியமனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/new-motor-traffic-commissioner-general-appointed-1787691140"></link>
            <id>https://jvpnews.com/article/new-motor-traffic-commissioner-general-appointed-1787691140</id>
            <summary type="text">தற்போது வெற்றிடமாக உள்ள மோட்டார் வாகனப் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் பதவிக்கு ஓய்வுபெற்ற எயார்வைஸ் மார்ஷல் துசார இந்துனில் பெர்னாண்டோவை உடனடியாக அமுலு...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">தற்போது வெற்றிடமாக உள்ள மோட்டார் வாகனப் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் பதவிக்கு ஓய்வுபெற்ற எயார்வைஸ் மார்ஷல் துசார இந்துனில் பெர்னாண்டோவை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நியமிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
</p><p style="text-align: justify; ">
குறித்த பதவிக்கு ஓய்வுநிலை எயார்வைஸ் மார்ஷல் துசார இந்துனில் பெர்னாண்டோவை ஒப்பந்த அடிப்படையில் நியமிப்பது தொடர்பில் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சரினால் யோசனை சமர்ப்பிக்கப்பட்டது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a76cef57-75b6-48f8-9676-2bbae4aeb2e1/26-6a8e00865bc4a.webp' /></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட இந்த யோசனைக்கு அமைச்சரவை தனது முழுமையான அங்கீகாரத்தை வழங்கியுள்ளது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-26T01:23:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/rainfall-may-increase-in-sri-lanka-1787706480"></link>
            <id>https://tamilwin.com/article/rainfall-may-increase-in-sri-lanka-1787706480</id>
            <summary type="text">நாட்டின் பல பகுதிகளில் இன்று(26.8.2026) 75 மி.மீ.க்கு மேல் கனமழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.அதன்படி, மேற்கு, சபரகமுவ மற...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டின் பல பகுதிகளில் இன்று(26.8.2026) 75 மி.மீ.க்கு மேல் கனமழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p>அதன்படி, மேற்கு, சபரகமுவ மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும். </p><p>அனுராதபுரம்

, மாத்தளை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.</p><h2>பலத்த காற்று</h2><p> அம்பாறை, 

மொனராகலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் பிற்பகல் 2 மணிக்கு மேல் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.தீவின் மற்ற பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/446c3464-bb01-48d2-87a7-fd00314f542d/26-6a8e3c72e50b9.webp' /></p><p>
</p><p>மத்திய மலைகளின் மேற்குச் சரிவுகள், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்கள் மற்றும் திருகோணமலை, மொனராகலை, ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை மாவட்டங்களில் அவ்வப்போது மணிக்கு சுமார் 40-50 கி.மீ. வேகத்தில் மிதமான பலத்த காற்று வீசக்கூடும்.</p><p>

இடியுடன் கூடிய மழையின் போது ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் அபாயங்களைக் குறைக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வானிலை ஆய்வு மையம் பொதுமக்களை வலியுறுத்துகிறது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-26T01:23:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[உயிரை புசித்த விருந்துபசாரம் ; அயல் வீட்டார் அரங்கேற்றிய கொடூரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/deadly-feast-neighbors-brutal-act-1787684024"></link>
            <id>https://jvpnews.com/article/deadly-feast-neighbors-brutal-act-1787684024</id>
            <summary type="text">அநுராதபுரம் கெக்கிராவ, கொட்டல்பத்த பகுதியில் வீடொன்றில் இரு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கெக்கிராவ பொலிஸார் தெரிவித்த...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">அநுராதபுரம் கெக்கிராவ, கொட்டல்பத்த பகுதியில் வீடொன்றில் இரு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கெக்கிராவ பொலிஸார் தெரிவித்தனர்.
</p><p style="text-align: justify; ">
இந்த சம்பவம் கெக்கிராவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டல்பத்த பகுதியில் திங்கட்கிழமை (25) அதிகாலை இடம்பெற்றுள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/10094622-59eb-49e2-a8e8-f9e519d0aafe/26-6a8de4ba19300.webp' /></p><h2 style="text-align: justify; ">வாக்குவாதம்</h2><p>
</p><p style="text-align: justify; ">
இச்சம்பவத்தில் அதே பகுதியைச் சேர்ந்த 56 வயதுடைய நபரொருவரே உயிரிழந்துள்ளார் என ஆரம்பகட்ட பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
</p><p style="text-align: justify; ">
உயிரிழந்தவரின் வீட்டில் நடைபெற்ற விருந்துபசாரத்தின்போது, குறித்த நபருக்கும் பக்கத்து வீட்டைச் சேர்ந்த ஒருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதைத் தொடர்ந்து இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.</p><p style="text-align: justify; "></p><p>
</p><p style="text-align: justify; ">

இதன்போது, சந்தேக நபர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கியதில் குறித்த நபர் படுகாயமடைந்து உயிரிழந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
</p><p style="text-align: justify; ">
அதைத் தொடர்ந்து சந்தேக நபர் அப்பகுதியிலிருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும், அவரைக் கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் கெக்கிராவ பொலிஸார் தெரிவித்தனர்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-26T01:22:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தகாத உறவிலிருந்தவருடன் சேர்ந்து மனைவி செய்த சம்பவம்; மதுபோதையில் அரங்கேறிய கொடூரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/wife-s-act-with-her-illicit-partner-1787679910"></link>
            <id>https://jvpnews.com/article/wife-s-act-with-her-illicit-partner-1787679910</id>
            <summary type="text">கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொலை செய்து, அவரது உடலை வீட்டின் அருகே புதைத்ததாக மனைவி உள்பட 2 பேரை 24 மணி நேரத்திற்குள் குற்றப்பிரிவு பொலிசார் கைது ச...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொலை செய்து, அவரது உடலை வீட்டின் அருகே புதைத்ததாக மனைவி உள்பட 2 பேரை 24 மணி நேரத்திற்குள் குற்றப்பிரிவு பொலிசார் கைது செய்துள்ளனர்.


</p><p style="text-align: justify; ">
கணவருடன் அடிக்கடி தகராறு
அரியானா மாநிலம் பரீதாபாத்தில் வசித்து வந்தவர் 42 வயதுடையவரின் மனைவிக்கும் காமத் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c386935b-3d63-4da2-9587-9980be1e8f06/26-6a8dd4ae35751.webp' /></p><h2 style="text-align: justify; ">கொலை செய்ய திட்டம்</h2><p style="text-align: justify; ">

இந்த விவகாரம் கணவருக்கு தெரியவந்தநிலையில், இருவருக்கும்&nbsp; இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது.
</p><p style="text-align: justify; ">&nbsp;இதையடுத்து, மனைவியும் கள்ளக்காதலனும் சேர்ந்து கணவரை கொலை செய்ய திட்டமிட்டதாக கூறப்படுகிறது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">அதன்படி,&nbsp; கணவருக்கு அதிக அளவில் மது குடிக்க வைத்துள்ளார்.&nbsp; கணவர் மதுபோதையில் இருந்தபோது, அவரது தலையில் ‘இன்டர்லாக்’ கல்லால் தாக்கி காமத் கொலை செய்ததாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.</p><p style="text-align: justify; ">பின்னர், கொலையை மறைக்க சியாம்வீரின் உடலை வீட்டின் அருகே இருவரும் சேர்ந்து புதைத்துள்ளனர்.இதையடுத்து இருவரையும் 24 மணி நேரத்திற்குள் கைது செய்தனர்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-26T01:21:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவிற்கு கனடா வழங்கிய பதிலடி ; விரைவில் அமுலாகும் வரிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/canada-strikes-back-at-the-united-states-1787700288"></link>
            <id>https://canadamirror.com/article/canada-strikes-back-at-the-united-states-1787700288</id>
            <summary type="text">அமெரிக்கப் பொருட்களுக்கு எதிராக 19.94 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான பதில் தீர்வை வரிகளை கனடா நேற்று (25) அறிவித்துள்ளது. 

இது அமெரிக்காவினால்...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்கப் பொருட்களுக்கு எதிராக 19.94 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான பதில் தீர்வை வரிகளை கனடா நேற்று (25) அறிவித்துள்ளது. </p><p>

இது அமெரிக்காவினால் விதிக்கப்பட்ட புதிய தீர்வை வரிகளுக்கு நிகரான டொலர் மதிப்பைக் கொண்டுள்ளதுடன், தீவிரமடைந்து வரும் வர்த்தகப் போரில் பாதிக்கப்பட்டுள்ள கனடிய வணிகங்கள் மற்றும் தொழிலாளர்களுக்கான நிதியுதவித் திட்டத்தையும் கனடா வெளியிட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/811a45eb-5c80-43df-b51b-baef3cf4e40e/26-6a8e2442761e6.webp' /></p><h2>பேச்சுவார்த்தைகள்</h2><p> </p><p>

அமெரிக்கப் பொருட்களுக்கான இந்த பதில் வரிகள் செப்டம்பர் 8 முதல் அமுலுக்கு வரும் என்றும், அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் 700 பொருட்களுக்கு 15%, 25% மற்றும் 50% வரிகள் விதிக்கப்படும் என்றும் அரசாங்க அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.</p><p> 

பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் மற்றும் தொழில்துறைகளுக்கான நிதி ஆதரவைப் பொறுத்தவரை, சிறு மற்றும் நடுத்தர வணிகங்களுக்கான ஆதரவு, நிறுவனங்களின் பணப்புழக்கத்திற்கு நிதியளிக்கும் வழிமுறை மற்றும் புதிய வரிகளால் ஆபத்தில் இருக்கக்கூடிய தொழிலாளர்களுக்கான ஆதரவு உள்ளிட்ட புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட நடவடிக்கைகளுக்காக 7.5 பில்லியன் கனடிய டொலர் மதிப்பிலான உதவித் திட்டத்தை கனடா அறிவித்துள்ளது. </p><p>

வரிகளைத் தவிர்ப்பதற்காக இரு நாடுகளுக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, 20 பில்லியன் டொலர் மதிப்பிலான கனடிய இறக்குமதிகள் மீது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் புதிய 50% வரிகள் சனிக்கிழமை முதல் அமுலுக்கு வந்தன. </p><p>

இந்த பரஸ்பர பழிவாங்கும் வரிகள் கனடா-அமெரிக்க உறவில் ஒரு புதிய பின்னடைவைக் எடுத்துக்காட்டுகின்றன. </p><p>

எங்களது டொலருக்கு டொலர், வீதத்திற்கு வீதம் என்ற அடிப்படையிலான பதில் வரிகளும், பல பில்லியன் டொலர் உதவித் திட்டமும் தொழிலாளர்கள், விவசாயிகள், குடும்பங்கள் மற்றும் வணிகங்களைப் பாதுகாக்கும் என்று கனடாவின் நிதி அமைச்சர் பிரான்சுவா-பிலிப் ஷாம்பெயின் தெரிவித்தார். </p><p><br></p>]]></content>
            <updated>2026-08-26T01:20:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[விடுதியொன்றில் மர்மான உயிரிழந்த நபர் - 5 நாட்களின் பின்னர் கண்டுபிடிக்கப்பட்ட சடலம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/body-of-person-who-died-in-hotel-recovered-1787666199"></link>
            <id>https://tamilwin.com/article/body-of-person-who-died-in-hotel-recovered-1787666199</id>
            <summary type="text">அம்பலங்கொட பகுதியிலுள்ள விடுதியில் மர்மமான முறையில் உயிரிழந்த நபரின் சடலம் நேற்று(25.08.2026) மீட்கப்பட்டுள்ளது.

கண்டெடுக்கப்பட்ட சடலம் அம்பலங்கொட ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அம்பலங்கொட பகுதியிலுள்ள விடுதியில் மர்மமான முறையில் உயிரிழந்த நபரின் சடலம் நேற்று(25.08.2026) மீட்கப்பட்டுள்ளது.</p><p>

கண்டெடுக்கப்பட்ட சடலம் அம்பலங்கொட விகாரையில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் தனியாகத் தங்கியிருந்த 67 வயதான ரோகன் அரியதிலகே என்பவருடையது எனத் தெரியவந்துள்ளது.
</p><p>
உயிரிழந்தவர் பெந்தோட்ட பகுதியில் உள்ள சுற்றுலா விடுதியில் சிற்றுண்டி தயாரிப்பாளராக பணிபுரிந்து வந்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.</p><p> </p><h2><b>

 சடலம் கண்டுபிடிப்பு</b></h2><p>இந்த நபரின் சடலம் கண்டெடுக்கப்பட்ட போது, ​​அது மிகவும் சிதைந்து, வீங்கி, துர்நாற்றம் வீசியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9e8e5257-b5b8-4ad2-b3dd-528328c76f1d/26-6a8da71160db6.webp' /></p><p>சுமார் 5 நாட்களுக்கு முன்பு இறந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக பொலிஸார் கூறியுள்ளனர். </p><p>

கடுமையான துர்நாற்றம் வீசியதை அடுத்து, உயிரிழந்த நபரின் அறைக்கு அடுத்த அறையில் தங்கியிருந்த ஒருவர் சென்று பார்த்தபோது, ​​சடலம் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். </p>]]></content>
            <updated>2026-08-26T01:20:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வலிந்து காணாமலாக்கப்பட்டமையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான சர்வதேச தினம் அனுஷ்டிப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/international-day-of-the-victims-missing-persons-1787704404"></link>
            <id>https://tamilwin.com/article/international-day-of-the-victims-missing-persons-1787704404</id>
            <summary type="text">வலிந்து காணாமலாக்கப்பட்டமையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான சர்வதேச தினம் காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் ஏற்பாட்டில் நீதி மற்றும் தேசிய
ஒருமைப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>வலிந்து காணாமலாக்கப்பட்டமையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான சர்வதேச தினம் காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் ஏற்பாட்டில் நீதி மற்றும் தேசிய
ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவின் பங்கேற்புடன்&nbsp; நடைபெற்றது.&nbsp;</p><p>குறித்த நிகழ்வானது நேற்றையதினம் (25.08.2026) பிற்பகல் 2.00 மணிக்கு யாழ்ப்பாணம் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.</p><p>நிகழ்வில், வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களை நினைவுகூரும் வகையில் மௌன அஞ்சலி
செலுத்தப்பட்டது.</p><h2>உரிய ஏற்பாடு</h2><p>இதன் போது உரையாற்றிய அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் யாழ்.மாவட்டத்தில் சுமார் 2,300 பேர் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களாகப்
பதிவுசெய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களில் 1,940 பேருக்கான விசாரணைகள்
நிறைவடைந்துள்ளன. </p><p>ஒவ்வொரு காணாமலாக்கப்பட்டவரின் பின்னாலும் ஒரு மனித உயிரும்,
ஒரு குடும்பத்தின் சமூக, பொருளாதார மற்றும் உணர்வுபூர்வமான வாழ்வும்
உள்ளடங்கியுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fb1b26d5-faee-48dc-b915-d24063a62b9b/26-6a8e380cc7af7.webp' /></p><p>வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் நீண்டகாலமாக சொல்லொணாத்
துயரங்களையும், மனவேதனைகளையும் அனுபவித்து வருகின்றனர்.</p><p>எனவே,
அவர்களின் உரிமைகளையும் உணர்வுகளையும் மதித்து, சட்டத்துறை, நீதித்துறை
மற்றும் நிர்வாகத்துறை உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து அவர்களுக்கான
உரிய ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் எனக் குறிப்பிட்டார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-26T00:53:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[தந்தையை அழைத்து சென்று தாக்கிய காவல்துறை! காவல்நிலையத்திற்கு சென்று மகன் செய்த செயல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/son-alleges-ambalangoda-police-assaulted-father-1787703204"></link>
            <id>https://ibctamil.com/article/son-alleges-ambalangoda-police-assaulted-father-1787703204</id>
            <summary type="text">சமூக ஊடகங்களில் காணொளி ஒன்று பரவியதைத் தொடர்ந்து, அம்பலங்கொட காவல் நிலையத்தில் காவலில் வைக்கப்பட்ட நபர் ஒருவர் காவல்துறை அதிகாரிகளால் தாக்கப்பட்டதாகக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>சமூக ஊடகங்களில் காணொளி ஒன்று பரவியதைத் தொடர்ந்து, அம்பலங்கொட காவல் நிலையத்தில் காவலில் வைக்கப்பட்ட நபர் ஒருவர் காவல்துறை அதிகாரிகளால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன.
</p><p>
ஓகஸ்ட் 24 ஆம் திகதி இரவு வீடொன்றிற்கு அருகில் வைத்து தனது தந்தையிடம் தேசிய அடையாள அட்டையைக் கேட்டபோது, அதனை உடனடியாகக் காண்பிக்க முடியாததால் அவர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதாக அந்த நபரின் மகன் குற்றம் சாட்டியுள்ளார். </p><p>

அடையாள அட்டையை எடுத்துக் காட்டுவதற்காக அருகிலுள்ள வீட்டிற்கு அதிகாரிகளை அழைத்துச் செல்லத் தனது தந்தை முன்வந்த போதிலும், அவரை ஆபாச வார்த்தைகளால் திட்டித் தாக்கியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>காவல்துறையினர் விளக்கம்</h2><p> </p><p>

மேலும், காவல் நிலையத்திலும் தனது தந்தை தாக்கப்பட்டதாகவும், துப்பாக்கியைக் காட்டி மிரட்டப்பட்டு, உடனடியாக மருத்துவ சிகிச்சை பெற அனுமதிக்கப்படவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5da4a5cc-e77e-4a17-a74b-2ee70536cd44/26-6a8e36479a12c.webp' /></p><p>எனினும், காவல்துறை இச்சம்பவம் குறித்து வேறுவிதமான விளக்கத்தை அளித்துள்ளது.</p><p>

அதன்போது, குறிப்பிட்ட நபர் மதுபோதையில் வீதியில் முறையற்ற விதத்தில் செயற்பட்ட குற்றச்சாட்டிலேயே கைது செய்யப்பட்டதாகத் தெரிவித்துள்ள காவல்துறை, கைது செய்ய முயன்றபோது தப்பி ஓட முயன்றதால் கீழே விழுந்து காயமடைந்ததாகக் கூறியுள்ளது.</p><h2>தனி விசாரணை</h2><p>
</p><p>
இந்நிலையில், பாதிக்கப்பட்ட நபர் நேற்றைதியனம்(25) ஓகஸ்ட் அன்று பலபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, நீதிமன்ற மருத்துவ அதிகாரியால் பரிசோதிக்கப்பட்ட பின்னர் பலபிட்டிய மேலதிக நீதவானால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.</p><p></p><p>
 
இதன்படி, சம்பவம் தொடர்பாக காவல்துறைத் தலைமை ஆய்வாளரின் (IGP) உத்தரவின் பேரில், காலி மாவட்டத்திற்குப் பொறுப்பான பிரதி காவல்துறை மா அதிபரின் (DIG) மேற்பார்வையில் தனி விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தெரியவருகிறது.</p><p>இதேவேளை, குறித்த விடயம் தொடர்பில் சமூக ஊடகங்களில் காவல்துறையினருக்கு எதிராக கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-26T00:49:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[ட்ரம்பின் அழுத்தங்களுக்கு மத்தியில் ஓமானுடன் முக்கிய பேச்சுவார்த்தையில் ஈரான்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/iran-in-key-talks-with-oman-amid-trump-pressure-1787705108"></link>
            <id>https://canadamirror.com/article/iran-in-key-talks-with-oman-amid-trump-pressure-1787705108</id>
            <summary type="text">அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் பொருளாதார அழுத்தங்களை எதிர்கொண்டுள்ள ஈரான், ஹோர்முஸ் நீரிணைப் போக்குவரத்தை நிர்வகிப்பது தொடர்பாக அண்டை நாடான ஓமான...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் பொருளாதார அழுத்தங்களை எதிர்கொண்டுள்ள ஈரான், ஹோர்முஸ் நீரிணைப் போக்குவரத்தை நிர்வகிப்பது தொடர்பாக அண்டை நாடான ஓமானுடன் மீண்டும் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளது.
</p><p>
ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் கப்பல்களுக்கு பாதுகாப்பான "கூட்டு தற்காலிக வழித்தடத்தை" (Joint Temporary Navigational Corridor) உருவாக்குவது குறித்தும், அந்தப் பகுதியில் உள்ள கண்ணிவெடிகளை அகற்றுவது குறித்தும் ஈரானும் ஓமானும் விவாதித்துள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3e0683be-5fc9-4ff1-bb10-bcef529ef119/26-6a8e3716a62b9.webp' /></p><p>
</p><p>
ஈரானின் பொருளாதாரத்தை முடக்கும் வகையில் அமெரிக்கா கடுமையான நடவடிக்கைகளை எடுத்துவரும் நிலையில், சர்வதேச சந்தையில் எண்ணெய் விலைகளில் சரிவு ஏற்பட்டுள்ளது.</p><p>

இதற்கிடையே, அமெரிக்கா தனது மத்திய கிழக்கு நாடுகளுக்கான தூதரகங்களுக்கு மீண்டும் பணியாளர்களை அனுப்பத் தொடங்கியுள்ளது.</p><p><br></p>]]></content>
            <updated>2026-08-26T00:45:18+00:00</updated>
        </entry>
    </feed>
