<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-08-30T08:23:44+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானியாவின் ஆயுத நிறுவனங்களுக்கு ரஷ்ய உளவு அமைப்புகளால் அச்சுறுத்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/defence-firms-russian-spy-threat-1788065608"></link>
            <id>https://news.lankasri.com/article/defence-firms-russian-spy-threat-1788065608</id>
            <summary type="text">Britain&#039;s defence firms are warned of Russian spy threat: பிரித்தானியாவின் ஆயுத நிறுவனங்களுக்கு ரஷ்ய உளவு அமைப்புகளால் அச்சுறுத்தல்.
உக்ரைனுக்கு ஆயுத...</summary>
            <content type="html"><![CDATA[<p>Britain's defence firms are warned of Russian spy threat: பிரித்தானியாவின் ஆயுத நிறுவனங்களுக்கு ரஷ்ய உளவு அமைப்புகளால் அச்சுறுத்தல்.
</p><p>உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்கும் பிரித்தானியாவின் ஆயுத நிறுவனங்களின் தலைவர்கள், ரஷ்ய உளவாளிகளின் இலக்காக மாறும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளனர்.</p><h2>உக்ரைனுக்காக ட்ரோன்</h2><p>
</p><p>கோடையின் தொடக்கத்தில் மூத்த அரசு அதிகாரிகளுக்கும் தலைமைச் செயல் அதிகாரிகளுக்கும் இடையே நடைபெற்ற வட்டமேசை சந்திப்பின்போது, ​​ரஷ்யாவிடமிருந்து தாங்களும் தங்கள் ஊழியர்களும் எதிர்கொள்ளும் அதிகரித்த அச்சுறுத்தல்கள் குறித்து நிறுவனங்களின் தலைவர்களுக்கு அறிவிக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/54cb2d10-669a-45d9-9ad6-dfbc3428915d/26-6a93b74a8dbe3.webp' /></p><p> </p><p>குறிப்பிட்ட எந்தெந்த நிறுவனத் தலைவர்கள் அங்கு இருந்தனர் என்பது உறுதிப்படுத்தப்படவில்லை; இருப்பினும், உக்ரைனுக்கு ஆயுதங்கள் மற்றும் ட்ரோன்களை வழங்கும் நிறுவனங்களின் தலைவர்களே அவர்கள் என்று கருதப்படுகிறது. </p><p>பல ஆயுத நிறுவனங்கள் தங்களின் ஆயுத விற்பனையின் காரணமாக ஏற்கனவே முக்கியத்துவம் பெற்றுள்ளன. மேற்கு சஃபோக்கில் உள்ள RAF மில்டன்ஹாலுக்கு அருகில் அமைந்துள்ள, உக்ரைனுக்காக ட்ரோன்களைத் தயாரிக்கும் உக்ர்ஸ்பெக் சிஸ்டம்ஸ் நிறுவனமும், </p><p>ரஷ்யாவின் உட்பகுதியில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களைத் தாக்க சமீபத்தில் பயன்படுத்தப்பட்ட ட்ரோன்களை வழங்கிய BAE சிஸ்டம்ஸின் துணை நிறுவனமான காலன்-லென்ஸும் அவற்றில் அடங்கும்.</p><p></p><p> மட்டுமின்றி, ரஷ்யாவைத் தாக்க
 உக்ரைன் பயன்படுத்தும் ஸ்டார்ம் ஷேடோ ஏவுகணைகளைத் தயாரிக்கும் MBDA நிறுவனமும் முக்கியத்துவம் வாய்ந்தது.</p><p> இதனிடையே, இரண்டு ஜேர்மானிய ஆயுதத் தயாரிப்பு நிறுவனங்களின் தலைவர்களைக் கொல்ல ரஷ்யா தீட்டிய சதித்திட்டங்கள் முறியடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, 'ஃபாரின், காமன்வெல்த் அண்ட் டெவலப்மென்ட் ஆபீஸ்' (Foreign, Commonwealth &amp; Development Office) கூட்டம் நடைபெற்றது.
</p><p>அவர்களில் ஒருவர், உக்ரேனியப் படைகளுக்கு பீரங்கி குண்டுகளை வழங்குவதற்கான 4.2 பில்லியன் பவுண்டு மதிப்புள்ள ஒப்பந்தத்தைக் கொண்டிருந்த பாதுகாப்புத் துறை நிறுவனமான 'ரைன்மெட்டல்' (Rheinmetall)-இன் தலைமை நிர்வாக அதிகாரி ஆர்மின் பாப்பர்கர் ஆவார். </p><p>இந்த நிலையில், பிரித்தானியா மற்றும் ஐரோப்பாவில் உள்ள பாதுகாப்புத் துறை நிறுவனங்களின் தலைவர்கள், தங்கள் சொந்தப் பாதுகாப்பு மற்றும் தங்கள் நிறுவனங்களின் கட்டமைப்புகளின் பாதுகாப்பு குறித்துச் சிந்திக்கத் தொடங்கியுள்ளனர் என்றே தகவல் கசிந்துள்ளது. </p><p>மேலும், பாதுகாப்புத் துறையில் ஈடுபட்டுள்ள அனைவரும் தற்போது ரஷ்யர்களின் முறையான இலக்காகக் கருதப்படுகிறார்கள் என்பதை ரஷ்யா உணர்த்துகிறது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-30T08:20:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Tony</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறுத்தை சிவாவின் அடுத்த படம், ஹீரோ அஜித் இல்லை, இவர்தான் சிறுத்தை சிவா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/siruthai-siva-movie-next-movie-hero-1788073764"></link>
            <id>https://cineulagam.com/article/siruthai-siva-movie-next-movie-hero-1788073764</id>
            <summary type="text">சிறுத்தை சிவா தமிழ் சினிமாவில் மாஸ் கமர்ஷியல் படங்களை கொடுப்பவர். இவர் சமீப காலமாக மிகப்பெரிய பின்னடைவில் சந்தித்து வருகிறார். 

இந்நிலையில் அஜித்தை...</summary>
            <content type="html"><![CDATA[<h2>சிறுத்தை சிவா </h2><p>தமிழ் சினிமாவில் மாஸ் கமர்ஷியல் படங்களை கொடுப்பவர். இவர் சமீப காலமாக மிகப்பெரிய பின்னடைவில் சந்தித்து வருகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/70b465c2-b45f-4a01-8dfc-224c726779b2/26-6a93d72915729.webp' /></p><p> 

இந்நிலையில் <a href="https://www.youtube.com/watch?v=IcDF0wBmpPY" target="_blank">அஜித்</a>தை வைத்து இவர் மீண்டும் கம்பேக் கொடுப்பார் என்றே எல்லோராலும் எதிர்பார்க்கப்பட்டது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dc2ee779-10c0-4294-b7f3-fcdaa1c6b6a2/26-6a93d7285d2e8.webp' /></p><p></p><h2>அடுத்த படம்
</h2><p>
ஆனால் அஜித் அடுத்தடுத்து வேறு வேறு படங்களில் பிஸியாக இருக்க, தற்போது சிவா 'சரி இனி சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது' என நடிகர் தனுஷை சந்தித்து ஒரு கதையை கூறியுள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/eee299c7-5e9a-411a-9a2c-e58fc40e1c3b/26-6a93d727a96d5.webp' /></p><p>அந்த கதை தனுஷுக்கு பிடித்து போக, அதை 3 தயாரிப்பாளரிடம் அனுப்பியுள்ளார்; இந்த கதையை லலித் ஓகே செய்ய, இப்படத்தின் படப்பிடிப்பு டிசம்பரில் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.</p>]]></content>
            <updated>2026-08-30T08:20:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kiyas Shafe</name>
            </author>
            <title type="text"><![CDATA[பொருளாதார வீழ்ச்சிக்கு இனவாத அரசியலா காரணம்..! அருண் ஹேமச்சந்திரா விளக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/economic-devastation-caused-politics-of-racism-1788077357"></link>
            <id>https://tamilwin.com/article/economic-devastation-caused-politics-of-racism-1788077357</id>
            <summary type="text">கடந்த காலங்களில் இன, மத உணர்வுகளை அரசியல் இலாபங்களுக்காகப் பயன்படுத்தியதன்
விளைவாக நாடு பாரிய சமூக மற்றும் பொருளாதார பாதிப்புகளை எதிர்கொண்டதாகவும்,
...</summary>
            <content type="html"><![CDATA[<p>கடந்த காலங்களில் இன, மத உணர்வுகளை அரசியல் இலாபங்களுக்காகப் பயன்படுத்தியதன்
விளைவாக நாடு பாரிய சமூக மற்றும் பொருளாதார பாதிப்புகளை எதிர்கொண்டதாகவும்,
அவ்வாறான அரசியல் மீண்டும் தலைதூக்குவதற்கு தற்போதைய அரசாங்கம் ஒருபோதும்
இடமளிக்காது எனவும் வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் பிரதி
அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தெரிவித்துள்ளார். </p><p>

நாட்டில் ஏற்பட்ட இன முரண்பாடுகள் மற்றும் அவற்றை மையப்படுத்திய அரசியல்
செயற்பாடுகள் நாட்டின் பொருளாதார முன்னேற்றத்தை பல தசாப்தங்களாக பின்னடையச்
செய்துள்ளதாக சுட்டிக்காட்டிய அவர், மீண்டும் அவ்வாறானதொரு நிலைமை ஏற்படாத
வகையில் அரசாங்கம் மிகவும் அவதானத்துடன் செயற்பட்டு வருவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p> 

டித்வா புயல் காரணமாக மூதூரில் வீடுகளை முழுமையாக இழந்த பயனாளிகளுக்கு, புதிய
வீடுகளை அமைப்பதற்கான நிதி உதவி வழங்கும் நிகழ்வு கடந்த 27ஆம் திகதி 
இடம்பெற்றுள்ளது. </p><p>

இந்த நிகழ்வில் முதன்மை அதிதியாக கலந்து கொண்டு, காசோலைகளை வழங்கி
வைத்த பின்னர், உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். </p><h2>

பொருளாதார ரீதியில் முடங்கிய இலங்கை</h2><p>
அவர் மேலும் தெரிவிக்கையில்,
</p><p>
நாடு தற்போது எதிர்கொண்டுள்ள பொருளாதார சவால்களில் இருந்து மீண்டு, ஸ்திரமான
பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் நோக்கில் அரசாங்கம் பல்வேறு வேலைத்திட்டங்களை
முன்னெடுத்து வருகின்றது. 

இன, மத அல்லது பிரதேச பேதங்களுக்கு அப்பால் அனைத்து
மக்களையும் ஒன்றிணைத்தே இந்தப் பயணம் முன்னெடுக்கப்படுகிறது.

கடந்த காலங்களில் அரசியல் அதிகாரத்தைப் பெற்றுக்கொள்வதற்காக இன மற்றும் மத
உணர்வுகள் தூண்டிவிடப்பட்டன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/660e7c3c-49a4-49bc-a749-8443310d4a50/26-6a93e75592be6.webp' /></p><p> இதன் விளைவாக சமூகங்களுக்கிடையில் சந்தேகமும்
முரண்பாடுகளும் தோற்றுவிக்கப்பட்டதுடன், அதன் தாக்கம் நாட்டின்
பொருளாதாரத்திலும் நேரடியாகப் பிரதிபலித்தது.</p><p>

நீண்டகாலமாக இடம்பெற்ற மோதல்கள் காரணமாக நாட்டின் மனித வளமும் பொருளாதார
வளமும் பெருமளவில் பாதிக்கப்பட்டன. </p><p>முதலீடுகள் மற்றும் வர்த்தக நடவடிக்கைகள்
பாதிக்கப்பட்டதுடன், சுற்றுலாத்துறை உள்ளிட்ட பல முக்கிய பொருளாதாரத்
துறைகளும் பின்னடைவைச் சந்தித்தன.
</p><h2>

அரசாங்கத்தை குழப்பும் எதிர்க்கட்சிகள்</h2><p>
அதுமட்டுமன்றி, நாட்டின் அபிவிருத்திக்காக பயன்படுத்தப்பட வேண்டிய பெருமளவான
வளங்கள் மோதல்களை சமாளிப்பதற்காக செலவிடப்பட்டன. இதன் ஒட்டுமொத்த விளைவாக
பொருளாதார வளர்ச்சிக்கான வாய்ப்புகள் பல சந்தர்ப்பங்களில் தடைப்பட்டன.

இவ்வாறான வரலாற்றுத் தவறுகளை மீண்டும் செய்வதற்கு எவரும் இடமளிக்கக்கூடாது.</p><p>
குறிப்பாக, தற்போதைய பொருளாதார மீட்சிப் பயணத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டிய
முக்கியமான காலகட்டத்தில், இனவாதம் மற்றும் மதவாதத்தை தூண்டும் எந்தவொரு
அரசியல் நடவடிக்கையும் நாட்டின் எதிர்காலத்திற்கு பாரிய அச்சுறுத்தலாக அமையும்.

அரசாங்கம் தற்போது எந்தவொரு இடைத்தரகரின் ஊடாகவும் அல்லாமல், நேரடியாக
மக்களுடன் தொடர்பு கொண்டு அபிவிருத்திப் பணிகளை முன்னெடுத்து வருகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5aea01f4-6c16-43c0-a739-89e1dd37369d/26-6a93e7564e340.webp' /></p><p>
</p><p>மக்களின் தேவைகளை அடையாளம் கண்டு, அவற்றுக்கு முன்னுரிமை அளித்து
அபிவிருத்தித் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதே அரசாங்கத்தின் நோக்கமாகும்.
</p><p>
எனினும், நாட்டின் முன்னோக்கிய அபிவிருத்திப் பயணத்தை குழப்பும் நோக்கில் சில
தீய சக்திகள் செயற்பட்டு வருவதை அவதானிக்க முடிகின்றது. மக்களிடையே தேவையற்ற
முரண்பாடுகளை உருவாக்கி, அதன் ஊடாக அரசாங்கத்தின் மீது நம்பிக்கையின்மையை
ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
</p><h2>

இனவாதத்தை தூண்டும் செயற்பாடுகள்</h2><p>
குறிப்பாக, சிறுபான்மை சமூகங்களுக்கிடையில் முரண்பாடுகளை உருவாக்கி, அதனை
அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்தும் முயற்சிகள் இடம்பெறுகின்றனவா என்பது
தொடர்பில் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.
</p><p>
இனவாதம், மதவாதம் மற்றும் பிரதேசவாதம் போன்ற பிரிவினை அரசியலிலிருந்து நாடு
படிப்படியாக விடுபட்டு வருகின்றது. </p><p>இந்த மாற்றத்தை மீண்டும் பின்னோக்கி கொண்டு
செல்லும் எந்தவொரு முயற்சிக்கும் அரசாங்கம் இடமளிக்காது.

கடந்த காலங்களில் இன முரண்பாடுகளால் ஏற்பட்ட பாதிப்புகளிலிருந்து இன்னும்
முழுமையாக மீண்டிராத நிலையில், மீண்டும் அதே பாதையில் செல்வது நாட்டின்
பொருளாதாரத்தையும் சமூக ஸ்திரத்தன்மையையும் கடுமையாக பாதிக்கும்.

பொருளாதார நெருக்கடி என்பது ஒரு குறிப்பிட்ட இனத்தையோ, மதத்தையோ அல்லது
பிரதேசத்தையோ மட்டும் பாதிப்பதில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d3760618-b0cb-4b74-a1a1-b0d45429bdb1/26-6a93e75702ab1.webp' /></p><p> நாட்டில் ஏற்பட்ட பொருளாதார
நெருக்கடியின் சுமையை அனைத்து சமூகங்களையும் சேர்ந்த மக்களே எதிர்கொண்டனர்.

எரிபொருள், எரிவாயு, உணவு, மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்காக
மக்கள் நீண்ட வரிசைகளில் காத்திருந்த காலத்தை நாம் மறந்துவிட முடியாது. </p><p>அந்த
நிலைமை மீண்டும் ஏற்படாத வகையில் நாட்டின் பொருளாதாரத்தை பாதுகாப்பது
அனைவரினதும் பொறுப்பாகும்.
</p><p>
எனவே, பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டிய இந்தச் சந்தர்ப்பத்தில்,
மக்களிடையே இன, மத மற்றும் பிரதேச அடிப்படையிலான பிரிவினைகளை ஏற்படுத்தும்
அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும்.

அரசாங்கம் என்ற வகையில் எத்தகைய தடைகள் அல்லது சவால்கள் ஏற்பட்டாலும்
அபிவிருத்திப் பணிகளை கைவிடப் போவதில்லை.</p><p> அதேபோன்று இனவாதமும் மதவாதமும்
மீண்டும் நாட்டில் துளிர்விடுவதற்கும் அனுமதிக்கப் போவதில்லை.

அனைத்து சமூகங்களுக்கும் சம உரிமையும் சம வாய்ப்பும் கிடைக்கக்கூடிய சூழலை
உருவாக்கி, நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள்
தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும்.
</p><h2>


அரசியல் சிக்கல்கள்</h2><p>அரசியல் கருத்து வேறுபாடுகள் இருப்பது ஜனநாயகத்தில் இயல்பான விடயமாகும். ஆனால்
அரசியல் இலாபங்களுக்காக இனங்களுக்கிடையிலும் மதங்களுக்கிடையிலும் குரோதத்தை
உருவாக்கும் செயற்பாடுகள் நாட்டின் நலனுக்கு எதிரானவை.
</p><p>
கடந்த கால அனுபவங்களிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு, புதிய அரசியல் கலாசாரத்தை
உருவாக்க வேண்டிய காலகட்டம் இதுவாகும்.</p><p> நாட்டின் பொருளாதாரத்தையும் சமூக
ஒற்றுமையையும் பாதுகாப்பதற்கு அனைத்து தரப்பினரும் பொறுப்புடன் செயற்பட
வேண்டும்.

எத்தகைய சதிகளும் சவால்களும் எதிர்கொண்டாலும், ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க
தலைமையிலான அரசாங்கம் தனது அபிவிருத்திப் பயணத்தை கைவிடாது.</p><p>
</p><p>
நாட்டை வளமான நாடாகவும், அனைத்து மக்களுக்கும் கண்ணியமானதும் சிறந்ததுமான
வாழ்க்கையை உறுதிப்படுத்தக்கூடிய நாடாகவும் கட்டியெழுப்புவதே அரசாங்கத்தின்
இலக்காகும். அந்த இலக்கை அடையும் வரை எந்தவொரு தடையும் அரசாங்கத்தின் பயணத்தை
தடுத்து நிறுத்த முடியாது என்றார்.&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-30T08:18:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் பிரதேச சபை அனுமதியின்றி பௌத்த மத்திய நிலைய கட்டுமானம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/unauthorized-buddhist-center-construction-1788077322"></link>
            <id>https://jvpnews.com/article/unauthorized-buddhist-center-construction-1788077322</id>
            <summary type="text">யாழ்ப்பாணம், வலி தெற்கு சுன்னாகம் பிரதேச சபையின் உரிய அனுமதியின்றி, கந்தரோடை விகாரைக் காணிக்குள் பௌத்த மத்திய நிலையம் அமைக்கப்பட்டு வருவதாக குற்றச்சாட...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம், வலி தெற்கு சுன்னாகம் பிரதேச சபையின் உரிய அனுமதியின்றி, கந்தரோடை விகாரைக் காணிக்குள் பௌத்த மத்திய நிலையம் அமைக்கப்பட்டு வருவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.</p><p>

சுமார் 4 பரப்பு விஸ்தீரணமுடைய கந்தரோடை விகாரைக் காணியில், குறித்த பௌத்த மத்திய நிலையத்தை அமைப்பதற்கான ஏற்பாடுகள் சுமார் இரண்டு வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c8305df0-4017-4877-961e-b49edc444420/26-6a93e5c95ff6c.webp' /></p><h2>&nbsp;கட்டுமானப் பணி</h2><p>

அப்போது, பிரதேச சபையின் அனுமதியின்றி கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தி, கட்டுமானத்தை நிறுத்துமாறு அறிவித்தல் ஒட்டப்பட்டிருந்ததாகவும், அதனைத் தொடர்ந்து பணிகள் நிறுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
</p><p>
இந்நிலையில், தற்போது மீண்டும் குறித்த கட்டுமானப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

வெளியிலிருந்து கட்டுமானப் பணிகள் தென்படாத வகையில் உயரமான மறைப்புகள் அமைக்கப்பட்டு பணிகள் முன்னெடுக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.</p><p>

சாதாரண பொதுமக்களின் கட்டுமானங்கள் உரிய அனுமதியின்றி மேற்கொள்ளப்படும்போது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் நிலையில், இந்தக் கட்டுமானம் தொடர்பில் பிரதேச சபை நடவடிக்கை எடுக்காமல் இருப்பதாக கேள்விகளும் எழுப்பப்பட்டுள்ளன.</p><p></p><p>

இது தொடர்பில் வடமாகாண ஆளுநர் கவனம் செலுத்த வேண்டும் எனவும் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
</p><p>
இதனிடையே, குறித்த விடயம் தொடர்பில் பிரதேச சபை உறுப்பினர் ஒருவரிடம் வினவியபோது, கட்டுமானத்தை நிறுத்துமாறு ஏற்கனவே சபையினால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருந்ததாக தெரிவித்தார்.
</p><p>
எனினும், தற்போது மீண்டும் கட்டுமானப் பணிகள் இடம்பெற்று வருவதால், இது தொடர்பில் சபையில் கலந்துரையாடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்</p><p></p><p>.

உள்ளூர் ஆட்சி சட்டங்களுக்கு அமைவாக உரிய நடைமுறைகளைப் பின்பற்றி கட்டுமானத்துக்கான அனுமதியைப் பெறாமல் பணிகள் தொடருமானால், நீதிமன்றத்தை நாடுவதற்கு சபை தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-30T08:11:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாதாள உலகக் குழு உறுப்பினருக்கு சொந்தமான துப்பாக்கி ஒன்று மீட்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/recovery-of-a-gun-to-an-underworld-gang-member-1788073293"></link>
            <id>https://ibctamil.com/article/recovery-of-a-gun-to-an-underworld-gang-member-1788073293</id>
            <summary type="text">துபாயில் தலைமறைவாகியிருந்ததாகக் கூறப்படும் பாதாள உலகக் குழு உறுப்பினரான “சாண்டோ” என்றழைக்கப்படும் நபருக்கு சொந்தமானதாகக் கூறப்படும் துப்பாக்கியொன்று ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>துபாயில் தலைமறைவாகியிருந்ததாகக் கூறப்படும் பாதாள உலகக் குழு உறுப்பினரான “சாண்டோ” என்றழைக்கப்படும் நபருக்கு சொந்தமானதாகக் கூறப்படும் துப்பாக்கியொன்று மீட்கப்பட்டுள்ளது.
</p><p>
ராகம, படுவத்த - வல்பொல வீதியின் வீரரத்ன மாவத்தையில் மரமொன்றின் அடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த துப்பாக்கி மீட்கப்பட்டுள்ளதாக கொழும்பு பயங்கரவாத விசாரணைப் பிரிவு தெரிவித்துள்ளது.</p><p>குறித்த துப்பாக்கி, T-56 ரக தானியங்கி துப்பாக்கிகளுக்குப் பயன்படுத்தப்படும் தோட்டாக்களை செலுத்தக்கூடிய வகையில் இலங்கையிலேயே தயாரிக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p></p><h2>கொழும்பு பயங்கரவாத விசாரணைப் பிரிவு</h2><p>

</p><p>விசாரணைகளில் மேலும் தெரியவருகையில், பாதாள உலகக் குழு உறுப்பினரின் உத்தரவின் பேரில் ஒருவரை கொலை செய்வதற்காக அவரது தரப்பைச் சேர்ந்த துப்பாக்கிதாரி ஒருவர் வருகை தரும் வரை, குறித்த துப்பாக்கி மரத்தின் அடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3e08f564-22e3-4013-b837-81296cc68594/26-6a93dbaf0736a.webp' /></p><p>மேலும் துப்பாக்கிதாரி வருகை தந்து ஆயுதத்தை எடுத்துச் செல்லவிருந்ததாக விசாரணைகளில் தகவல்கள் வெளியாகியுள்ளதாக உயர் காவல் அதிகாரி தெரிவித்துள்ளார்.</p><p>
கொழும்பு பயங்கரவாத விசாரணைப் பிரிவின் (TID) புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில்&nbsp; மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின்போதே, மிகவும் சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த இந்தத் துப்பாக்கி மீட்கப்பட்டுள்ளது.
</p><p>இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-30T08:07:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[22ஆவது திருத்தச் சட்டமூலம்: உயர்நீதிமன்றமே தீர்மானத்தை அறிவிக்க வேண்டும்! நீதி அமைச்சர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/harshana-nanayakkara-statement-1788074203"></link>
            <id>https://tamilwin.com/article/harshana-nanayakkara-statement-1788074203</id>
            <summary type="text">அரசமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்ற சர்வஜன
வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டுமா, இல்லையா என்பதை அரசியல்வாதிகளால்
குறிப்பிட முடியாது என&amp;n...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரசமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்ற சர்வஜன
வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டுமா, இல்லையா என்பதை அரசியல்வாதிகளால்
குறிப்பிட முடியாது என&nbsp;நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.</p><p>அத்துடன், உயர்நீதிமன்றமே அந்தத் தீர்மானத்தை அறிவிக்க
வேண்டும் எனவும் தெரிவித்தார்.
</p><p>
கொழும்பில் நேற்று (29.08.2026) நடைபெற்ற நிகழ்வொன்றின் பின் ஊடகங்களுக்குக்
கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.</p><h2>எதிர்க்கட்சியின் நிலைப்பாடு</h2><p>
அவர் மேலும் கூறுகையில், அரசாங்கத்தின் சகல தீர்மானங்களையும் செயற்பாடுகளையும் எதிர்க்கும் நிலைப்பாட்டிலேயே
எதிர்க்கட்சியினர் உள்ளனர். சகலதையும் எதிர்க்கும் அவர்களின் நோக்கத்துக்கு
ஏற்ப அரசால் செயற்பட முடியாது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c87fd032-3b4d-4223-b0ce-18cefd8feef0/26-6a93e4198a44c.webp' /></p><p>
</p><p>
அரசமைப்பின் 22ஆவது திருத்தமானது மக்களின் நலனுக்காகவும் நீதிமன்றக்
கட்டமைப்பு மறுசீரமைப்புக்காகவுமே கொண்டுவரப்பட்டது என்பதால், இதனால்
நீதிமன்றத்தின் சுயாதீனத்துக்கும் பாதுகாப்புக்கும் எவ்வித பாதிப்பும்
ஏற்படாது.</p><h2>சர்வஜன வாக்கெடுப்பு</h2><p>
</p><p>
பிரதம நீதியரசர் மீது எதிர்க்கட்சியினர் கொண்டுள்ள வெறுப்பு காரணமாகவே இதற்கு
எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர்.

22ஆவது திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்ற சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல
வேண்டுமா, இல்லையா என்பதை உயர்நீதிமன்றமே தீர்மானிக்க வேண்டும் என்பதால், இது
தொடர்பில் அரசால் எதனையும் தீர்மானிக்க முடியாது.
</p><p>
நாடாளுமன்றப் பெரும்பான்மையுடன் மக்கள் வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டும்
என்று உயர்நீதிமன்றம் அறிவித்தால் அதற்குச் செல்ல நாம் தயார். நீதிமன்றத்
தீர்ப்புக்கு அப்பால் எம்மால் செயற்பட முடியாது என்றார்.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-30T08:04:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெள்ளப்பெருக்கில் அதிகரிக்கும் உயிரிழப்புகளால் முடிவை மாற்றிய நேபாள அரசு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/rising-death-nepal-government-reverses-decision-1788075803"></link>
            <id>https://ibctamil.com/article/rising-death-nepal-government-reverses-decision-1788075803</id>
            <summary type="text">சர்வதேச நிதி உதவிகளை தவிர வெளிநாட்டு மீட்பு குழுக்களை நிராகரித்திருந்த நேபாள அரசு தற்போது அனர்த்ததினால் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சர்வதேச நிதி உதவிகளை தவிர வெளிநாட்டு மீட்பு குழுக்களை நிராகரித்திருந்த நேபாள அரசு தற்போது அனர்த்ததினால் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால் முடிவை மாற்றி உள்ளது.&nbsp;</p><p>நேபாளத்தில் கடந்த புதன்கிழமை (26.08.2026) ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 600 கடந்துள்ளதுடன், சுமார் 1,500 பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>லடாக் பகுதியில் இமயமலைத் தொடரில் பனிப்பாறை ஒன்று சரிந்து நதியின் பாதையை அடைத்ததன் பின்னர், நீர்த்தேக்கம் உடைந்து பெருமளவான நீர் வேகமாக கீழ்நோக்கி பாய்ந்து நேபாளத்துக்குள் நுழைந்தமையே இந்த வெள்ளப்பெருக்குக்கு காரணமென தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>முடிவை மாற்றிய நேபாள அரசு</h2><p>
ரசுவா மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்கள் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7b939300-8a8d-4e6a-8560-c10c236a3255/26-6a93e37eb7ff6.webp' /></p><p> </p><p>பெருமளவான வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதுடன், மக்களின் இயல்பு வாழ்க்கையும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.</p><p>இதனிடையே, ஆரம்பத்தில் சர்வதேச மீட்புக் குழுக்களின் உதவியை நிராகரித்த நேபாள அரசு, தற்போது தனது முடிவை மாற்றியுள்ளது.</p><p> இதன்படி, இந்தியா, சீனா, அவுஸ்திரேலியா மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த வரையறுக்கப்பட்ட எண்ணிக்கையிலான நிபுணர்கள் மற்றும் மீட்புக் குழுக்களுக்கு தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளில் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p>நேபாளத்திற்கு உதவும் வகையில் இந்தியா ஏற்கனவே பெருமளவான நிவாரணப் பொருட்களை அனுப்பியுள்ளது. </p><p>மேலும், தேசிய பேரிடர் மீட்புப் படையான NDRF-இன் பயிற்சி பெற்ற குழுக்களையும் தேவையான உபகரணங்களுடன் நேபாளத்திற்கு அனுப்ப இந்தியா முன்வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-30T08:03:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kowshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் 113ஆவது ஜனன தினம் அனுஷ்டிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/113-birth-anniversary-late-soumyamurthy-thondaman-1788075022"></link>
            <id>https://tamilwin.com/article/113-birth-anniversary-late-soumyamurthy-thondaman-1788075022</id>
            <summary type="text">அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் 113ஆவது ஜனன தினம் இன்று (30) கொழும்பிலும், மலையகத்தின் பல பகுதிகளிலும் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.&amp;nbsp;

இதனையொட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் 113ஆவது ஜனன தினம் இன்று (30) கொழும்பிலும், மலையகத்தின் பல பகுதிகளிலும் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.&nbsp;</p><p>
</p><p>
இதனையொட்டி, கொழும்பு ஜனாதிபதி செயலகத்தில் அமைந்துள்ள அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் உருவச் சிலைக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதிநிதிகள் மலர்மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தியுள்ளனர்.</p><h2>சௌமியமூர்த்தி தொண்டமானின்&nbsp;ஜனன தினம்</h2><p>
</p><p>
இந்த நிகழ்வில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான், பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான், தவிசாளர் மருதபாண்டி ராமேஷ்வரன் உள்ளிட்ட கட்சியின் முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டு, மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தியுள்ளனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7526b371-5c40-4abf-b06f-0e2f3c65810b/26-6a93de7d28f92.webp' /></p><p>இதனைத் தொடர்ந்து, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைமையகமான சௌமியபவனில் விசேட பூஜை வழிபாடுகளும் இடம்பெற்றுள்ளன.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-30T08:01:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜிம்பாப்வேவில் பேருந்து மீது லாரி மோதி கோர விபத்து ; 27 பேர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/zimbabwe-bus-truck-crash-kills-27-1788076471"></link>
            <id>https://canadamirror.com/article/zimbabwe-bus-truck-crash-kills-27-1788076471</id>
            <summary type="text">தென்கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு ஜிம்பாப்வே. இந்நாட்டின் கிழக்கு மாஷோனாலெண்ட் மாகாணம் டிமா பகுதியில் இருந்து மிட்லேண்ட்ஸ் மாகாணம் மவுமா நகர...</summary>
            <content type="html"><![CDATA[<p>தென்கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு ஜிம்பாப்வே. இந்நாட்டின் கிழக்கு மாஷோனாலெண்ட் மாகாணம் டிமா பகுதியில் இருந்து மிட்லேண்ட்ஸ் மாகாணம் மவுமா நகருக்கு பஸ் சென்றுகொண்டிருந்தது.</p><p> அதில் 35 பேர் பயணித்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cabb8ad3-a392-4be1-80cf-4c07ddd20835/26-6a93e1b8559a7.webp' /></p><p> </p><p>இவர்கள் அனைவரும் கிறிஸ்தவ மத நிகழ்ச்சியில் பங்கேற்க மவுமா நகருக்கு சென்றுள்ளனர்.
</p><p>
விபத்து - 27 பேர் பலி
இந்நிலையில், ஹராரே - மஸ்விங்கோ தேசிய நெடுஞ்சாலையில் நேற்று இரவு சென்றபோது எதிரே வந்த லாரி பஸ் மீது வேகமாக மோதியது.</p><p> இந்த கோர விபத்தில் பஸ் தீப்பற்றி எரிந்தது. இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த 27 பேர் உயிரிழந்தனர். மேலும், 8 பேர் படுகாயமடைந்தனர்.
</p><p>
தகவலறிந்து விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். </p><p>மேலும், இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-08-30T07:54:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பில் பரபரப்பை ஏற்படுத்திய துண்டிக்கப்பட்ட மனிதத்தலை..! பொலிஸார் வெளியிட்ட தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/human-head-has-been-found-1788074504"></link>
            <id>https://tamilwin.com/article/human-head-has-been-found-1788074504</id>
            <summary type="text">கொழும்பு - மொரட்டுமுல்ல, இஹல இண்டிபெத்த பகுதியில் உடலிலிருந்து அகற்றப்பட்ட மனித தலையொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

மொரட்டுமுல்ல பொலிஸாருக்கு 119 என்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு - மொரட்டுமுல்ல, இஹல இண்டிபெத்த பகுதியில் உடலிலிருந்து அகற்றப்பட்ட மனித தலையொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.</p><p>

மொரட்டுமுல்ல பொலிஸாருக்கு 119 என்ற அவசர எண்ணுக்கு இன்று (30) காலை சுமார் 8 மணியளவில் வந்த அழைப்பினையடுத்து சம்பந்தப்பட்ட தலை, உடலிலிருந்து துண்டிக்கப்பட்ட நிலையில் கொட்டகையொன்றிற்கு பின்னால் கண்டெடுக்கப்பட்டுள்ளது.</p><h2>சிதைந்த நிலையில் காணப்பட்ட மனித தலை</h2><p>
</p><p>
குறித்த கொட்டகையின் உரிமையாளரே இது தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்ததாகவும் கூறப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a10ddd30-0eb2-434f-9431-d3bc280c8091/26-6a93e6273362d.webp' /></p><p>
</p><p>
இதனையடுத்து,&nbsp; மொரட்டுமுல்ல பொலிஸார், பொலிஸ் சிறப்பு அதிரடிப்படை மற்றும் குற்றப்பிரிவு அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டதுடன், மொரட்டுவ நீதவான் நீதிமன்றத்தின் பதில் நீதவான் ஆய்வு நடத்தியுள்ளார்.</p><p>

இவ்வாறு கண்டெடுக்கப்பட்ட மனிதத்தலை, விலங்குகளால் உண்ணப்பட்டு மிகவும் சிதைந்த நிலையில் காணப்பட்டுள்ளது.
</p><p>
இது குறித்து மொரட்டுமுல்ல பொலிஸார் மேலும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p>&nbsp;</p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-30T07:42:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[பெத்லகேம் குடும்ப யூனிட் திரைப்படம் இதுவரை உலகளவில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/bethlehem-kudumba-unit-movie-worldwide-box-office-1788071296"></link>
            <id>https://cineulagam.com/article/bethlehem-kudumba-unit-movie-worldwide-box-office-1788071296</id>
            <summary type="text">சமீபத்தில் வெளிவந்த பெத்லகேம் குடும்ப யூனிட் திரைப்படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் குறித்த விவரங்களை இந்த பதிவில் பார்க்கலாம் வாங்க.
பெத்லகேம் குடும்ப யூ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சமீபத்தில் வெளிவந்த பெத்லகேம் குடும்ப யூனிட் திரைப்படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் குறித்த விவரங்களை இந்த பதிவில் பார்க்கலாம் வாங்க.</p><p>
</p><p></p><h2>பெத்லகேம் குடும்ப யூனிட்</h2><p>

மலையாள திரையுலகில் முன்னணி ஹீரோவாக இருக்கும் <a href="https://www.youtube.com/watch?v=b2JV-e5liJs" target="_blank">நிவின் </a>பாலி நடிப்பில் உருவாகி, கடந்த வாரம் திரைக்கு வந்து ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது பெத்லகேம் குடும்ப யூனிட். இப்படத்தை கிரிஷ் ஏ.டி இயக்கியுள்ளார்.

இப்படத்தில் கதாநாயகியாக மமிதா பைஜூ நடித்துள்ளார்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2d3521ce-38cb-444f-9566-7f082a50d74a/26-6a93cd83deb25.webp' /></p><p>இவர் நடிப்பில் இந்த ஆண்டு வெளியான ஜனநாயகன், விஸ்வநாத் &amp; சன்ஸ் திரைப்படங்களின் வெற்றியை தொடர்ந்து பெத்லகேம் குடும்ப யூனிட் திரைப்படமும் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.
</p><h2>
பாக்ஸ் ஆபிஸ்</h2><p>

மலையாளத்தில் இப்படம் வெற்றியடைந்துள்ளதை தொடர்ந்து, வருகிற செப்டம்பர் 4-ஆம் தேதி பெத்லகேம் குடும்ப யூனிட் தமிழிலும் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/32f5e92b-4011-44b5-b8bc-060f11c79647/26-6a93cd8333af9.webp' /></p><p>இந்நிலையில், ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றுள்ள பெத்லகேம் குடும்ப யூனிட் திரைப்படம் இதுவரை உலகளவில் செய்துள்ள வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, உலகளவில் இப்படம் இதுவரை ரூ. 173 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-30T07:40:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[முன்னணி ஊடகவியலாளருக்கு சிறைச்சாலையில் கடுமையான தாக்குதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/kalutara-prison-dispute-inmate-s-ear-cut-off-1788066604"></link>
            <id>https://tamilwin.com/article/kalutara-prison-dispute-inmate-s-ear-cut-off-1788066604</id>
            <summary type="text">இலங்கையின் முன்னணி தனியார் வானொலிச் சேவையொன்றின் ஊடகவியலாளர் ஒருவருக்கு சிறைச்சாலைக்குள் வைத்து கடுமையான தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் முன்னணி தனியார் வானொலிச் சேவையொன்றின் ஊடகவியலாளர் ஒருவருக்கு சிறைச்சாலைக்குள் வைத்து கடுமையான தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p>தற்பொழுது அவருக்கு அவசர அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நாகொட வைத்தியசாலையின் செய்தித் தொடர்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.</p><h2>தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி</h2><p>இலங்கையின் முன்னணி தனியார் வானொலி அலைவரிசையொன்றில் ஒளிபரப்பாகும் பிரபலமான புலனாய்வு நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய ஊடகவியலாளர் ஒருவர், போதைப்பொருள் சம்பவம் தொடர்பாக, கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.</p><p>
</p><p>
தனக்கு எதிரான வழக்கு விசாரணைகளை எதிர்கொள்ள சமீபத்தில் டுபாயிலிருந்து திரும்பியபோது கட்டுநாயக்கவில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் குறித்த ஊடகவியலாளர் கைது செய்யப்பட்டிருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/98bfa513-ff75-4566-b2f7-735f1fa3b9f1/26-6a93bf0e7e79f.webp' /></p><p>
</p><p>
அதன் பின்னர் பதுளை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அவர், திடீரென களுத்துறை சிறைச்சாலைக்கு அழைத்து வரப்பட்டிருந்த நிலையில் அவர் மீது கடுமையான தாக்குதல் மேற்கொள்ள்ப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.</p><p>களுத்துறை சிறைக்கு அவர் கொண்டுவரப்பட்ட பின்னர், அங்கு அவருக்கு எதிரான நிலைப்பாட்டில் இருந்த மற்றொரு கைதி, கூர்மையான ஆயுதத்தால் ஊடகவியலாளரது காதையும் வாயையும் வெட்டிதுண்டித்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p>

அத்துடன் களுத்துறை சிறைச்சாலைக் கைதிகள் குழுவொன்றினால் தாக்கப்பட்டதில் பலத்த காயமடைந்த நிலையில், குறித்த ஊடகவியலாளர் நாகொட போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p><p>
</p><p>
</p><h2><br></h2>]]></content>
            <updated>2026-08-30T07:35:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Erimalai</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் அரச உத்தியோகஸ்தர் வீடொன்றின் மீது தாக்குதல் - தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/attack-on-a-house-in-jaffna-npp-member-arrested-1788073450"></link>
            <id>https://tamilwin.com/article/attack-on-a-house-in-jaffna-npp-member-arrested-1788073450</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் நெல்லியடியில் உள்ள வீடொன்றின் மீது தாக்குதல் மேற்கொண்டு குற்றச்சாட்டில் தேசிய மக்கள் சக்தியின் உள்ளூராட்சி உறுப்பினர் உள்ளிட்ட கும்பல் ஒன்...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் நெல்லியடியில் உள்ள வீடொன்றின் மீது தாக்குதல் மேற்கொண்டு குற்றச்சாட்டில் தேசிய மக்கள் சக்தியின் உள்ளூராட்சி உறுப்பினர் உள்ளிட்ட கும்பல் ஒன்றை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
</p><p>
மேலும் அவர்கள் அங்கிருந்த கண்காணிப்பு கெமராக்களை சேதமாக்கியுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
</p><h2>அரசியல் அழுத்தம்</h2><p>
நெல்லியடி பகுதியில் உள்ள ஓய்வுபெற்ற அரச உத்தியோகஸ்தர் ஒருவரின் வீட்டின் மீது கல்லெறிந்து தாக்குதல் , நடாத்தி , வீட்டு வளாகத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கெமராக்களையும் குறித்த உள்ளூராட்சி உறுப்பினர் தலைமையிலான கும்பல் சேதப்படுத்தி உள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/22597cfb-300f-4a87-87bc-48f35b357d70/26-6a93dc6f7941a.webp' /></p><p>
</p><p>
இது தொடர்பில் வீட்டார் நெல்லியடி பொலிஸ் நிலையத்திற்கு தொலைபேசி ஊடாக அறிவித்ததை அடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் கும்பலை மடக்கி பிடித்து கைது செய்து பொலிஸ் நிலையம் கொண்டு சென்று விசாரணைகளின் பின்னர் பொலிஸ் பிணையில் செல்ல அனுமதித்துள்ளனர்.</p><p>

பொலிஸார் பொலிஸ் பிணையில் விடுவிக்க அரசியல் அழுத்தங்களும், பொலிஸ் உயர் அதிகாரிகளின் அழுத்தங்களும் தான் காரணம் என தெரிவிக்கப்படுகிறது.</p><p>எதிர்வரும் 01/09/2026 அன்று நீதிமன்றத்திற்கு சமூகமளிக்குமாறே பிணையில்
விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் வீடு புகுந்து அச்சுறுத்தி பொருட்களுக்கு சேதம்
விழைவித்த ஒருவருக்கு பொலிஸாரால் பிணை வழங்க முடியாது என்றும் பொலிஸ் பிணை
வழங்கியது அரசியல் அழுத்தம் என்றும் பெயர் குறிப்பிட விரும்பாத பொலிஸ் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-08-30T07:32:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் சிறிய ரக தனிநபர் விமானம் விபத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/aircraft-crash-sends-one-to-hospital-1788068793"></link>
            <id>https://canadamirror.com/article/aircraft-crash-sends-one-to-hospital-1788068793</id>
            <summary type="text">கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்தில் உள்ள &#039;கிளியர்வியூ&#039; பகுதியில் சனிக்கிழமை சிறிய ரக தனிநபர் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில், அதன் விமானி லேசான காயங்களு...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்தில் உள்ள 'கிளியர்வியூ' பகுதியில் சனிக்கிழமை சிறிய ரக தனிநபர் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில், அதன் விமானி லேசான காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார்.
</p><p>கிளியர்வியூ நகரியத்தில் உள்ள கிரீமோர் பகுதிக்கு அருகில் 'கவுண்டி வீதி 9' பாதைக்கு அருகே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.</p><p>
இரண்டு இருக்கைகளைக் கொண்ட இந்த சிறிய ரக விமானத்தில் விபத்து நடந்த போது விமானி மட்டுமே பயணித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9953a337-32f0-4d55-a91a-74d2e3f18e92/26-6a93c3ba80a1b.webp' /></p><p> </p><p>விபத்து நிகழ்ந்த உடனே அவர் தானாகவே விமானத்திலிருந்து வெளியேறியுள்ளார்.</p><p>
விபத்தில் லேசான காயங்களுக்குள்ளான விமானி, உடனடியாக 'கொலிங்வுட் ஜெனரல் அண்ட் மரைன்' மருத்துவமனைக்கு சிகிச்சைக்காகக் கொண்டு செல்லப்பட்டார்.
</p><p>இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்த கிளியர்வியூ தீயணைப்புப் படையினர், அவசர மருத்துவ உதவியாளர்கள் மற்றும் ஒன்ராறியோ மாநிலப் பொலிஸார் ஆகியோர் விரைந்து சென்று மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-30T07:30:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஒன்ஸ் மோர் படத்துக்கு யார் டைட்டில் வெச்சது!! கலாய்த்த ப்ளூ சட்டை மாறன்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/blue-sattai-maran-roasts-once-more-review-1788015723"></link>
            <id>https://viduppu.com/article/blue-sattai-maran-roasts-once-more-review-1788015723</id>
            <summary type="text">ஒன்ஸ் மோர்சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன், ஆகஸ்ட் 28 ஆம் தேதி வெளியான ஒன்ஸ் மோர் படத்தின் விமர்சனத்தை தற்போது பகிர்ந்துள்ளார்.அர்ஜுன் தாஸ், அதிதி சங...</summary>
            <content type="html"><![CDATA[<h2>ஒன்ஸ் மோர்</h2><p>சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன், ஆகஸ்ட் 28 ஆம் தேதி வெளியான ஒன்ஸ் மோர் படத்தின் விமர்சனத்தை தற்போது பகிர்ந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/47f470cd-f967-4d43-8da1-3e384b654ccb/26-6a92f46d366c1.webp' /></p><p>அர்ஜுன் தாஸ், அதிதி சங்கர் நடிப்பில் வெளியான இப்படத்திற்கு ஒன்ஸ் மோர் என டைட்டில் வைத்த நிபுணர் குழுவுக்கு ரொம்பவே தைரியம் தான். படத்தை ஒரு முறையே பார்க்க முடியவில்லை, இதில் ஒன்ஸ் மோர் என்று டைட்டில் வேறு. </p><p>ஆரம்பத்தில் இருந்தே அர்ஜுன் தாஸ் இறுக்கமான முகத்துடன் சீரியஸாக இருக்க, இது ஸ்லோ பர்னர் படம்ன்னு பொறுமையாக காத்துக் கொண்டிருந்தேன். இடைவேளைக்குப்பின் தான் தெரிந்தது இது சோம்பேறித் தனமான படம் என்று ஒரே போடாக போட்டு படத்தின் சோலியையும் இந்த வாரம் முடித்துவிட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d3fedbfd-2741-4748-9ffb-a4c1bd925447/26-6a92f46de2410.webp' /></p><p> </p><p>வில்லனாக கலக்கிக் கொண்டிருந்த அர்ஜுன் தாஸ், நீங்க ரொமாண்டிக் ஹீரோ சார் என்று உசுப்பிவிட்டு வரிசையாக காதல் படங்களில் அவரை நடிக்க வைத்து கஷ்டப்படுத்தி வருகிறார்கள். கைதி, குட் பேட் அக்லி போல் களத்தில் இறங்கி நெகட்டிவிட்டியில் மிரடி வெற்றிகள் குடியும் என்றும் ப்ளூ சட்டை மாறன் பங்கம் செய்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-08-30T07:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[மாணவனுக்கு அதிகாலையில் அரங்கேறிய கொடூரம் ; இளம் பெண்களுடன் பேசியதால் வந்த வினை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/horrific-incident-involving-student-at-dawn-1788074967"></link>
            <id>https://jvpnews.com/article/horrific-incident-involving-student-at-dawn-1788074967</id>
            <summary type="text">எஹலியகொட பகுதியில் ஞாயிறுக்கிழமை (30) அதிகாலை இடம்பெற்ற கூரிய ஆயுதத் தாக்குதலில் 17 வயது மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

மு...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">எஹலியகொட பகுதியில் ஞாயிறுக்கிழமை (30) அதிகாலை இடம்பெற்ற கூரிய ஆயுதத் தாக்குதலில் 17 வயது மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.</p><p style="text-align: justify; ">

முதற்கட்ட விசாரணைகளின்படி, சனிக்கிமை (29) மாலை ஆரப்பொலை பாடசாலைச் சந்திக்கு அருகில் இளைஞர் ஒருவர் இரு இளம் பெண்களுடன் பேசிக்கொண்டிருந்தபோது, மற்றொரு நபர் அதனை வீடியோ பதிவு செய்துள்ளார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/14d38016-6840-480b-9105-9057112434ea/26-6a93dbd911e1f.webp' /></p><h2 style="text-align: justify; ">சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு</h2><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">இதனால் ஏற்பட்ட தகராறே இச்சம்பவத்திற்கு முக்கியக் காரணமாகும் எனத் தெரியவந்துள்ளது.</p><p style="text-align: justify; ">

சந்தேக நபர் ஞாயிற்றுக்கிழமை (30) அன்று அதிகாலை மாணவனின் வீட்டிற்குச் சென்று, அவரைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிவிட்டுத் தப்பியோடியுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
படுகாயமடைந்த மாணவன் எஹலியகொட ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
</p><p style="text-align: justify; ">
தலைமறைவாகியுள்ள சந்தேக நபரைக் கைது செய்வதற்காக எஹலியகொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp; &nbsp;</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-30T07:29:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sudaron</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பகுதியில் தீச்சட்டி ஏந்தி போராட்டத்தில் குதித்த மக்கள் - அரசாங்கத்திடம் விடுத்துள்ள முக்கிய கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/protest-in-kilinochchi-1788073852"></link>
            <id>https://tamilwin.com/article/protest-in-kilinochchi-1788073852</id>
            <summary type="text">சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான இன்று(30) வடக்கு - கிழக்கு வலிந்து காணாமல்
ஆக்கப்பட்டோர் சங்கத்தின் ஏற்பாட்டில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான இன்று(30) வடக்கு - கிழக்கு வலிந்து காணாமல்
ஆக்கப்பட்டோர் சங்கத்தின் ஏற்பாட்டில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. </p><p>

இந்த போராட்டத்தை தொடர்ந்து, ஆவண நூல் வெளியீடும் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> 

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான அனுஷ்டிக்கப்படும் இன்றைய நாளில் கிளிநொச்சி 
155ஆம் கட்டை காளி கோயில் முன்பாக குறித்த போராட்டம் ஆரம்பமாகியுள்ளது. </p><h2>

 தீச்சட்டியை ஏந்தியவாறு போராட்டம்</h2><p>இதன்போது, இதுவரை காலமும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளால் கையளிக்கப்பட்ட மனுக்கள் 
உள்ளடங்கிய ஆவண நூல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6b89685e-1e53-4298-be87-1a88b7418a21/26-6a93d7ed77f88.webp' /></p><p> 

இதனைத் தொடர்ந்து, தீச்சட்டிகளை ஏந்தியவாறு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

போராட்டக்களத்தில், ஓ எம் பி அலுவலகம் வேண்டாம், இழப்பீடும் வேண்டாம் காணாமல்
ஆக்கப்பட்டோருக்கு நீதி வேண்டும், சர்வதேசமே நீதியை பெற்றுத்தா உள்ளிட்ட பல்வேறு கோஷங்கள் போராட்டக்காரர்களால் எழுப்பப்பட்டிருந்தன.</p><p>

இந்த நிலையில், போராட்டத்தில் சர்வதேச மன்னிப்பு சபையின் பிரதிநிதி,
நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின்
உறவினர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/29e4faf7-1a7c-4127-8270-3136f9720ee6/26-6a93d7ee4f516.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e7032f05-4814-4444-9775-9cb8c0f50c68/26-6a93d7ef27c24.webp' /></p><p></p><p></p><p><b>YOU MAY LIKE THIS VIDEO..</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/UU565u-hlBQ" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-30T07:13:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[புதன் பெயர்ச்சியால் பொற்காலம் தொடங்கும் 3 ராசிகள்: பணவரவும் வெற்றியும் அதிகரிக்கும்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/mercury-transit-in-virgo-who-get-huge-luck-1788070073"></link>
            <id>https://manithan.com/article/mercury-transit-in-virgo-who-get-huge-luck-1788070073</id>
            <summary type="text">வேத ஜோதிடத்தில் கிரகங்களின் இளவரசனாகக் கருதப்படுபவர் புதன். இவர் புத்திசாலித்தனம், பேச்சு, கல்வி, வியாபாரம் ஆகியவற்றின் காரணியாவார். மிதுனம் மற்றும் க...</summary>
            <content type="html"><![CDATA[<p>வேத ஜோதிடத்தில் கிரகங்களின் இளவரசனாகக் கருதப்படுபவர் புதன். இவர் புத்திசாலித்தனம், பேச்சு, கல்வி, வியாபாரம் ஆகியவற்றின் காரணியாவார். மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியான புதன், குறுகிய காலத்திலேயே தனது நிலையை மாற்றக்கூடியவர். </p><p>தற்போது புதன் சிம்ம ராசியில் பயணித்து வருகிறார்.

இந்நிலையில், செப்டம்பர் 07 ஆம் தேதி புதன் தனது சொந்த ராசியான கன்னிக்குள் நுழைகிறார். சுமார் 1 ஆண்டுக்குப் பிறகு புதன் தனது சொந்த ராசிக்கு திரும்புவதால், பத்ர ராஜயோகம் உருவாகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8dd2c9cd-e133-4907-b05e-aac6a7e9a48f/26-6a93d788a947d.webp' /></p><p> பஞ்ச மகாபுருஷ யோகங்களில் ஒன்றான இந்த யோகம், அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.எனினும், சில ராசிக்காரர்கள் இந்த யோகத்தின் மூலம் நல்ல வெற்றி, புகழ், பணம் உள்ளிட்ட பல்வேறு நன்மைகளைப் பெறவுள்ளனர். </p><p>அப்படி செப்டம்பர் 07 ஆம் தேதி புதன் பெயர்ச்சியால் உருவாகும் பத்ர மகாபுருஷ ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.</p><h2>மேஷம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c11c4239-ec82-49b6-959e-83f54ac94eb5/26-6a93d7895d38f.webp' /></p><p></p><p>
மேஷ ராசியின் 6-வது வீட்டிற்கு புதன் சென்று பத்ர ராஜயோகத்தை உருவாக்கியுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் செல்வாக்கு அதிகரிக்கும். </p><p>பணியில் எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளது. </p><p>மேற்கொள்ளும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி கிடைக்கும். ஏற்கனவே செய்த முதலீடுகளிலிருந்து நல்ல லாபம் கிடைக்கும். வணிகர்களுக்கு எதிர்பாராத அளவில் லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது. மேலும், குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடும் வாய்ப்பும் கிடைக்கும்.
</p><h2>
சிம்மம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7dce3e29-905c-44cf-9ac7-17238435e8dc/26-6a93d78a0e33f.webp' /></p><p>
சிம்ம ராசியின் 2-வது வீட்டிற்கு புதன் சென்று பத்ர ராஜயோகத்தை உருவாக்கியுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் வாழ்க்கையில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். </p><p>வேலை தொடர்பான முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். புதிய வீடு அல்லது வாகனம் வாங்கும் வாய்ப்புகள் உருவாகும்.</p><p> குறிப்பாக, புதனின் அருளால் புதிய தொழிலைத் தொடங்கும் முடிவையும் எடுக்கக்கூடும். பணிபுரிபவர்களுக்கு அலுவலகத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
</p><h2>தனுசு&nbsp;</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8ffd4fea-bf66-4060-afe6-a7c7a30f4c06/26-6a93d78ab45a1.webp' /></p><p></p><p>தனுசு ராசியின் 10-வது வீட்டிற்கு புதன் சென்று பத்ர ராஜயோகத்தை உருவாக்கியுள்ளார். இதனால் நீண்ட காலமாக மேற்கொண்ட கடின உழைப்பிற்கான பலன் கிடைக்கும்.</p><p>அதேசமயம், நல்ல நிதி ஆதாயங்களும் கிடைக்க வாய்ப்புள்ளது. ஏற்கனவே செய்த முதலீடுகளிலிருந்து லாபம் கிடைக்கும்.</p><p> புதிய முதலீடுகளை மேற்கொண்டாலும் நல்ல வருமானம் கிடைக்கக்கூடும். நீண்ட நாட்களாக முடிக்க முடியாமல் இருந்த பணிகள் மீண்டும் தொடங்கி வெற்றிகரமாக நிறைவடையும். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும்.</p><p><b>இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;&nbsp;</b></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b>&nbsp;.</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-30T07:11:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாளத்தை உலுக்கிய அனர்த்தம் ; 700ஐ கடந்த பலி எண்ணிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/nepal-disaster-death-toll-surpasses-700-1788073800"></link>
            <id>https://jvpnews.com/article/nepal-disaster-death-toll-surpasses-700-1788073800</id>
            <summary type="text">நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளப் பேரிடரில் தற்போது 734 பேர் உயிரிழந்துள்ளனர். 

மேலும் சுமார் 3,000 பேரின் நிலை என்னவென்று தெரியவில்லை என அந்த நாட்டு தகவ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளப் பேரிடரில் தற்போது 734 பேர் உயிரிழந்துள்ளனர். </p><p style="text-align: justify; ">

மேலும் சுமார் 3,000 பேரின் நிலை என்னவென்று தெரியவில்லை என அந்த நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p style="text-align: justify;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cbdd3df4-d62e-425f-939b-da0bc59ca77d/26-6a93d74a609cc.webp' /></p><h2 style="text-align: justify;">&nbsp;நிரம்பி வழியும்&nbsp;பிரேத அறைகள்</h2><p> </p><p style="text-align: justify;">

நேபாளம் - திபெத் எல்லை அருகே கடந்த 26 திகதி ஏற்பட்ட பனிச்சரிவு போடேகோஷி நதியில் மிகப்பெரிய வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தியது. </p><p style="text-align: justify;">

மத்திய நேபாளத்தை புரட்டிப்போட்ட வரலாறு காணாத இந்த பேரழிவு நூற்றுக்கணக்கானோரின் உயிர்களை காவு வாங்கி விட்டது. நேற்று வரை 600-க்கும் அதிகமான உடல்கள் மீட்கப்பட்டன.</p><p style="text-align: justify;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7f1fd3d9-8b67-4b90-abb3-32b33e77517c/26-6a93d74b1df78.webp' /></p><p> </p><p style="text-align: justify;">&nbsp;பலரது உடல்கள் மீட்கப்பட்டதால், உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 734 ஆக அதிகரித்துள்ளது. 

இடிபாடுகள் மற்றும் சேற்றுக்குவியலில் இருந்து மீட்கப்பட்ட உடல்கள் வைத்தியசாலைகளின் பிரேத அறைகளில் குவிந்துள்ளன. </p><p style="text-align: justify;">இதனால் புதிதாக வரும் உடல்களை வைக்க இடம் இல்லாமல் வைத்தியசாலை நிர்வாகங்கள் தவித்து வருகின்றன. 

எனவே தற்காலிக பிணக்கிடங்குகள் உருவாக்கப்பட்டு உடல்களை சேமிக்கும் பரிதாப நிலை ஏற்பட்டு உள்ளது. </p><p style="text-align: justify;">

அதேநேரம் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட இன்னும் 3 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பற்றிய தகவல் இல்லை. இதனால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;"> </p><p style="text-align: justify;">இதற்கிடையே வெள்ளம் பாதித்த பகுதிகளில் 5-வது நாளாக இன்றும் முழு வீச்சில் மீட்புப்பணிகள் நடந்து வருகிறது. </p><p style="text-align: justify;">

இரவு-பகலாக நடந்து வரும் இந்த மீட்புப்பணிகளில் நேபாள ராணுவத்தினர் 5 ஆயிரம் பேர் உள்பட 11 ஆயிரத்துக்கும் அதிகமான வீரர்கள் ஈடுபட்டுள்ளனர் நேபாளத்திற்கு உலகளாவிய உதவிகள் குவிந்து வருகின்றன.</p><p style="text-align: justify;">அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, ஐ.நா., ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் சர்வதேச வனத்துறை ஆகியவை மனிதாபிமான உதவிகளுக்காக மில்லியன் கணக்கில் வழங்குவதாக உறுதியளித்துள்ளன. அதே நேரத்தில் சீனாவும் உதவி வழங்க முன்வந்துள்ளது.</p><p style="text-align: justify;"></p>]]></content>
            <updated>2026-08-30T07:10:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thileepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வவுனியா - பாவற்குளம் காட்டுப் பகுதியில் திடீர் தீப்பரவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sudden-fire-in-vavuniya-pavakulam-forest-area-1788070245"></link>
            <id>https://tamilwin.com/article/sudden-fire-in-vavuniya-pavakulam-forest-area-1788070245</id>
            <summary type="text">வவுனியா - பாவற்குளம் காட்டுப் பகுதியில் இன்று (29.08.2026) திடீரென தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.பொதுமக்களால் வழங்கப்பட்ட தகவலையடுத்து விரைந்து செயற்பட்ட பூ...</summary>
            <content type="html"><![CDATA[<p>வவுனியா - பாவற்குளம் காட்டுப் பகுதியில் இன்று (29.08.2026) திடீரென தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; ">பொதுமக்களால் வழங்கப்பட்ட தகவலையடுத்து விரைந்து செயற்பட்ட பூவரசங்குளம் பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று பொது மக்களின் உதவியுடன் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.</p><h2 style="text-align: justify; ">திடீர் தீப்பரவல்</h2><p>இதனையடுத்து தீயை கட்டுப்படுத்துவதற்காக வவுனியா மாநகரசபை தீயணைப்பு பிரிவினர்
மற்றும் இராணுவத்தினர் அங்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். </p><p>இதன்மூலம் மக்கள் குடிமனைகளுக்குள் தீ பரவாது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு
வரப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2ac101b4-1112-4eaa-a72b-91c72718df48/26-6a93cf585df6f.webp' /></p><p> வவுனியாவில் கடந்த சில நாட்களாக வெப்பநிலை அதிகரித்து காணப்படும்
நிலையில் பல்வேறு காட்டுப் பகுதிகளிலும் தீப்பரவல் ஏற்பட்டு வருகின்றமை
குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-30T07:08:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் குற்றவாளிகளுக்கு ரகசியத் தகவல் வழங்கிய முன்னாள் பொலிஸ் அதிகாரிக்கு சிறைத்தண்டனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/former-surrey-rcmp-officer-sentenced-to-18-months-1788067532"></link>
            <id>https://canadamirror.com/article/former-surrey-rcmp-officer-sentenced-to-18-months-1788067532</id>
            <summary type="text">கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில், பொலிஸ் ரகசியத் தரவுத்தளங்களைப் பயன்படுத்தி குற்றவாளிகளுக்குத் தகவல்களைப் பகிர்ந்து நம்பிக்கை மோசடியில் ஈடுப...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில், பொலிஸ் ரகசியத் தரவுத்தளங்களைப் பயன்படுத்தி குற்றவாளிகளுக்குத் தகவல்களைப் பகிர்ந்து நம்பிக்கை மோசடியில் ஈடுபட்ட முன்னாள் சர்ரே பொலிஸ் அதிகாரி தாவூட் அலாஎல்டின் சுகாரிக்கு 18 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. </p><p>
பிரிட்டிஷ் கொலம்பிய உயர் நீதிமன்ற நீதிபதி முர்ரே பி. பிளாக், அரசுத் தரப்பு மற்றும் பிரதிவாதித் தரப்பு வழக்கறிஞர்கள் இணைந்து முன்வைத்த பரிந்துரையை ஏற்று இத்தீர்ப்பை வழங்கினார்.</p><p> 
2020 ஆம் ஆண்டில் சுர்ரி பொலிஸ் பிரிவில் பயிற்சி அதிகாரியாகப் பணியாற்றிய சுகாரி, குற்றவாளிகளுக்காக போதைப்பொருள் வாங்குவதில் ஈடுபட்டதாக பொலிஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/01981800-41b8-4926-8056-45836b636c7d/26-6a93becda65bc.webp' /></p><p> 
மேலும், கண்காணிப்பின்றி பணியாற்றத் தொடங்கும் போது பொலிஸ் தரவுத்தளங்களை குற்றவாளிகளுக்குப் பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரியவந்தது. </p><p>
இதனையடுத்து, அவரைப் பொறிவைத்துச் பிடிக்க பொலிஸ் சிறப்பு ரகசிய நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டது. போலி போதைப்பொருள் வியாபாரி மற்றும் ஊழல் நிறைந்த பொலிஸ் அதிகாரி போன்று நடித்த மற்றொரு அதிகாரி ஆகியோரைக் கொண்டு 59 போலி சூழ்நிலைகள் உருவாக்கப்பட்டன. </p><p>
போலி போதைப்பொருள் வாங்குவதற்காக வழங்கப்பட்ட 72,000 டொலர்களில், சுகாரி பேரம் பேசி 63,000 டொலருக்குப் பொருட்களை வாங்கிவிட்டு, எஞ்சிய பணத்தில் 8,000 டொலர்களைத் தனது சொந்தப் பயன்பாட்டிற்காக எடுத்துக்கொண்ட போது கைது செய்யப்பட்டார்.
</p><p>சுகாரியின் கைப்பேசியைச் சோதனையிட்டதில், பொலிஸ் தரவுத்தளத்தில் இருந்த ரகசியத் தகவல்கள் மற்றும் ஆவணங்களைப் புகைப்படமெடுத்து குற்றவாளிகளுக்கு அவர் குறுஞ்செய்தி மூலம் அனுப்பிவைத்தது உறுதி செய்யப்பட்டது.</p><p> 
குற்றத்தை ஒப்புக்கொண்டமை, வாலிப வயது மற்றும் முன்னர் குற்றப் பின்னணி இல்லாதமை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு அவருக்கு 18 மாத சிறைத்தண்டனை, மரபணு மாதிரி வழங்குதல் மற்றும் 200 டொலர் அபராதம் விதிக்கப்பட்டது. அவர் மீதான ஏனைய 12 குற்றச்சாட்டுகளும் அரசுத் தரப்பினால் கைவிடப்பட்டன.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-30T07:00:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[சீரியல் நடிகை வினுஷா தேவிக்கு திருமணம் முடிந்தது.. கல்யாண வீடியோ வெளியிட்ட நடிகை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/serial-actress-vinusha-devi-marriage-1788072491"></link>
            <id>https://cineulagam.com/article/serial-actress-vinusha-devi-marriage-1788072491</id>
            <summary type="text">ரசிகர்களின் மனம் கவர்ந்த பிரபல சீரியல் நடிகை வினுஷா தேவிக்கு இன்று திருமணம் நடைபெற்றது. வினுஷா தேவி

விஜய் தொலைக்காட்சியில் மாபெரும் அளவில் வெற்றி ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>ரசிகர்களின் மனம் கவர்ந்த பிரபல சீரியல் நடிகை <a href="https://www.instagram.com/p/DcpsfdEJwYN/" target="_blank">வினுஷா </a>தேவிக்கு இன்று திருமணம் நடைபெற்றது.</p><p> </p><p></p><h2>வினுஷா தேவி</h2><p>

விஜய் தொலைக்காட்சியில் மாபெரும் அளவில் வெற்றி பெற்ற சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் கதாநாயகியாக நடித்து ரசிகர்களிடையே பிரபலமானவர் நடிகை வினுஷா தேவி.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ff2d8d6c-5066-445e-8dd1-60c7b4018edd/26-6a93d22e4652c.webp' /></p><p>பாரதி கண்ணம்மா சீரியலை தொடர்ந்து தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சுட்டும் விழி சுடரே சீரியலில் நடித்து வருகிறார். இந்த ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கப்பட்ட இந்த சீரியலுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து ஒளிபரப்பாகி வருகிறது.</p><h2>

திருமணம்
</h2><p>
இந்நிலையில், சின்னத்திரையில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக வலம் வரும் வினுஷா தேவிக்கு லிங்கா என்பவருடன் இன்று திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c1991f0e-2d79-48cd-91d5-fe2d2edee3a7/26-6a93d22ef0d4f.webp' /></p><p>வினுஷா தேவி - லிங்கா திருமணத்தில் சின்னத்திரை பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டு வாழ்த்தியுள்ளனர். திருமணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளன, இதோ பாருங்க.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ac3535f1-6a4d-4442-9a8f-1e94d9429b7e/26-6a93d22fb9d71.webp' /></p><p><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/reel/DcpsfdEJwYN/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/reel/DcpsfdEJwYN/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/reel/DcpsfdEJwYN/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by Vinusha Devi (@vinusha_devi)</a></p></div></blockquote> <script async src="//www.instagram.com/embed.js"></script></p>]]></content>
            <updated>2026-08-30T07:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாள வெள்ளப்பெருக்கு... பிரான்ஸ் நாட்டவர்கள் நால்வர் காணாமல் போயுள்ளதாக தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/france-says-four-nationals-missing-1788073253"></link>
            <id>https://news.lankasri.com/article/france-says-four-nationals-missing-1788073253</id>
            <summary type="text">France says four missing after Nepal flood: நேபாள வெள்ளப்பெருக்கில் பிரான்ஸ் நாட்டவர்கள் நால்வர் காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வாரத் தொட...</summary>
            <content type="html"><![CDATA[<p>France says four missing after Nepal flood: நேபாள வெள்ளப்பெருக்கில் பிரான்ஸ் நாட்டவர்கள் நால்வர் காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>இந்த வாரத் தொடக்கத்தில் நேபாள-திபெத் எல்லையருகே பேரழிவுகரமான திடீர் வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து, நான்கு பிரெஞ்சு நாட்டினர் காணாமல் போயுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aef0e0c3-bcd3-48d8-89ac-8a5d271964b3/26-6a93d528bbc38.webp' /></p><p>
</p><p>வெளிநாடுகளில் உள்ள பிரெஞ்சு நாட்டினருக்கான பிரெஞ்சு அமைச்சர் பிரதிநிதி எலியனோர் கரோயிட் குறித்த தகவலை வெளியிட்டுள்ளார். </p><p>பேரிடர் ஏற்பட்டபோது அப்பகுதியில் 80 பிரெஞ்சுக்காரர்கள் இருந்ததாகவும், அவர்களில் 76 பேர் உயிர் தப்பியுள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சகம் அடையாளம் கண்டுள்ளதாக பிரதிநிதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.</p><p></p><p> </p><p>இதனிடையே, சனிக்கிழமை காலை நிலவரப்படி, நேபாளம் மற்றும் திபெத் ஆகிய இரு பகுதிகளிலும் காணாமல் போனவர்களின் எண்ணிக்கை ஏறக்குறைய 3,000-ஆக உயர்ந்திருந்தது. </p><p>இதுவரை நேபாளத்தில் 675 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன; எனினும், உயிர் பிழைத்தவர்களைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ள ராணுவ ஹெலிகொப்டர்கள் மட்டுமே பல தொலைதூரப் பகுதிகளைச் சென்றடைந்துள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/30dd37f2-1ea4-4733-95ed-69a09d516ad0/26-6a93d5280f159.webp' /></p><p> </p><p>சேற்றுக்கு அடியில் இன்னும் எத்தனை பேர் புதையுண்டிருக்கக்கூடும் என்பதை மதிப்பிடுவது மிகவும் கடினம் என்று மீட்புக் குழுவினர் தெரிவித்தனர். </p><p>இன்னும் காணாமல் போனவர்களில் குறைந்தது 900 பேர், இமயமலையின் உயரமான பகுதிகளில் உள்ள திரிசூலி ஆற்றுப் படுகையில் அமைந்திருந்த பிரம்மாண்டமான நீர்மின் திட்டங்களில் பணிபுரிந்து வந்தனர்; அந்தத் திட்டங்கள் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் முற்றிலுமாக அழிந்துவிட்டன. </p><p>இங்குள்ள தொழிலாளர்களில் பலர் குறைந்த ஊதியம் பெறும் தொழிலாளர்கள்; இவர்களில் குறைந்தது 63 பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-30T06:58:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மருத்துவக் குழுக்களிடையே மோதலைத் தூண்ட முயற்சி: அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/medical-groups-government-complain-1788071166"></link>
            <id>https://ibctamil.com/article/medical-groups-government-complain-1788071166</id>
            <summary type="text">மருத்துவர்களின் வெவ்வேறு பிரிவுகளுக்கு இடையே முரண்பாடுகளை ஏற்படுத்தி, மருத்துவ சேவையையும் இலவச சுகாதாரக் கட்டமைப்பையும் நெருக்கடிக்குள் தள்ளும் முயற்ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>மருத்துவர்களின் வெவ்வேறு பிரிவுகளுக்கு இடையே முரண்பாடுகளை ஏற்படுத்தி, மருத்துவ சேவையையும் இலவச சுகாதாரக் கட்டமைப்பையும் நெருக்கடிக்குள் தள்ளும் முயற்சி இடம்பெற்று வருவதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
</p><p>
விசேட வைத்திய நிபுணர்கள் மற்றும் ஏனைய மருத்துவப் பிரிவுகளுக்கு இடையே பிளவை ஏற்படுத்தும் அரசியல் நடவடிக்கை தற்போது முன்னெடுக்கப்படுவதாக அந்தச் சங்கம் தெரிவித்துள்ளது.
</p><p>இது குறித்து மேலும் தெரிவிக்கையில், 'நாட்டில் ஏற்பட்ட பொருளாதார, சமூக மற்றும் அரசியல் நெருக்கடிகளால் விசேட வைத்தியர்கள் உள்ளிட்ட மருத்துவர்களை நாட்டில் தக்கவைத்துக் கொள்வது சவாலாக இருந்த நிலையில், அதற்குத் தீர்வு காண சுகாதார அமைச்சு மற்றும் மருத்துவ தொழிற்சங்கங்கள் உள்ளிட்ட தரப்புகளை உள்ளடக்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டது.</p><p></p><h2>அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம்</h2><p>
</p><p>மேலும் அனைத்து மருத்துவர்களையும் நாட்டில் தக்கவைத்துக் கொள்வதற்காக “இலங்கை மருத்துவ சேவை” என்ற புதிய சேவைப் பிரிவையும் சம்பளக் கட்டமைப்பையும் உருவாக்குவதற்கு அப்போது இணக்கம் எட்டப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4f7d70b1-ee4d-436e-b0ae-2fab5dcf39e1/26-6a93d14d6e76d.webp' /></p><p>
</p><p>
இதற்கமைய, 2026ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பின்போது விசேட வைத்தியர்கள் உள்ளிட்ட அனைத்து மருத்துவர்களுக்குமான தனியான சேவைப் பிரிவு உருவாக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டிருந்தது.</p><p>

எனினும், விசேட வைத்தியர்களுக்கு மாத்திரம் தனியான சேவைப் பிரிவை உருவாக்கும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் மருத்துவர்களிடையே பிளவு ஏற்படும் அபாயம் இருக்கிறது.
</p><p>
ஒரு பிரிவுக்கு மாத்திரம் தனியான சேவைப் பிரிவை உருவாக்குவது இலவச சுகாதார சேவைக்கும் நோயாளர்களுக்கான மருத்துவ சேவைக்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்பதால், அந்த யோசனைக்கு தமது சங்கம் இணங்கவில்லை.
</p><p>
இந்நிலையில், எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் தீர்மானிப்பதற்காக சங்கத்தின் மாகாண மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களின் அவசரக் கூட்டம் கடந்த 28ஆம் திகதி நடைபெற்றுள்ளது.</p><p> மேலும், விசேட வைத்தியர்களின் உபகுழுவின் அவசரக் கூட்டம் நாளை (31) நடைபெறவுள்ளது.</p><p>

இந்தக் கூட்டத்தில் மருத்துவர்களின் உரிமைகள் மற்றும் சலுகைகளைப் பாதுகாத்து, அனைவரும் ஒற்றுமையுடன் பணியாற்றக்கூடிய “இலங்கை மருத்துவ சேவையை” உருவாக்குவதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்படும்' என அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b> WHATSAPP</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-30T06:52:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரசமைப்பின் 22ஆவது திருத்தத்துக்கு சர்வஜன வாக்கெடுப்பு தேவையில்லை! சட்டமா அதிபர் திணைக்களம் அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/referendum-on-the-22nd-amendment-to-constitution-1788068782"></link>
            <id>https://tamilwin.com/article/referendum-on-the-22nd-amendment-to-constitution-1788068782</id>
            <summary type="text">அரசமைப்பின் 22 ஆவது திருத்த சட்டமூலம் தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்த
வேண்டிய சூழ்நிலை ஏற்படாது என சட்டமா அதிபர் திணைக்களம் அரசுக்கு தெரியப்படுத்...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரசமைப்பின் 22 ஆவது திருத்த சட்டமூலம் தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்த
வேண்டிய சூழ்நிலை ஏற்படாது என சட்டமா அதிபர் திணைக்களம் அரசுக்கு தெரியப்படுத்தியுள்ளது.
</p><p>
இது குறித்து பொதுமக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சரும் சட்டத்தரணியுமான
சுனில் வட்டகல ஊடகங்களுக்குத் தகவல் வெளியிட்டுள்ளார்.</p><h2>சர்வஜன வாக்கெடுப்பு</h2><p>
"22ஆவது திருத்த சட்டமூலம் சர்வஜன வாக்கெடுப்புக்கு வழிவகுக்காது என்றே அரசு
உறுதியாக நம்புகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7751f446-8cff-4e9f-add2-a8ff260b5152/26-6a93d2f3279ad.webp' /></p><p> சர்வஜன வாக்கெடுப்பு அவசியமில்லை என்ற சட்ட
விளக்கத்தையே சட்டமா அதிபர் திணைக்களம் எமக்கு வழங்கியுள்ளது என்றும் அவர்
மேலும் தெரிவித்துள்ளார்.</p><p>

22ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பை நடத்துமாறு
உயர்நீதிமன்றம் உத்தரவிடும் பட்சத்தில் அரசு என்ன செய்யும் என எழுப்பப்பட்ட
கேள்விக்குப் பதிலளித்த அவர், உயர் நீதிமன்றத்தின் வழிகாட்டலுக்கு அமையவே
அரசின் இறுதி முடிவுகள் அமையும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.</p><p>&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-30T06:51:58+00:00</updated>
        </entry>
    </feed>
