<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-09-07T12:09:35+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறைக்குள் இருக்கும் நாமல் அரசாங்கத்திடம் விடுத்த கோரிக்கை: நாளை சபைக்கு வருவாரா..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-requested-to-join-parliament-session-1788781248"></link>
            <id>https://tamilwin.com/article/namal-requested-to-join-parliament-session-1788781248</id>
            <summary type="text">விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இலங்கை பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச, நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்துகொள்ள அனுமதி கோரியுள்ளார்.&amp;nbsp;ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இலங்கை பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச, நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்துகொள்ள அனுமதி கோரியுள்ளார்.&nbsp;</p><h2>நாடாளுமன்ற அமர்வுகள்..&nbsp;</h2><p>
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தின் ஊடாக இலங்கை பொதுஜன பெரமுன விடுத்த இந்த எழுத்துப்பூர்வமான கோரிக்கை, தற்போது சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6864ee0e-bf63-453b-8acc-53fea132c400/26-6a9ea6a95bc25.webp' /></p><p>

நாடாளுமன்றத்தின் நிலையியற் கட்டளைகள் மற்றும் நடைமுறையில் உள்ள மரபுகளுக்கு அமைய சபாநாயகர் இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வார் என சபாநாயகர் அலுவலகப் பேச்சாளர் ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.&nbsp;</p><p>
இதற்கிடையில், நாடாளுமன்றத்தின் தற்போதைய மரபுகளுக்கு அமைய, நாளை (08) நடைபெறவுள்ள நாடாளுமன்ற அமர்வில் நாமல் ராஜபக்ச கலந்துகொள்வதற்கான வாய்ப்பு வழங்கப்படும் என்று தாம் நம்புவதாக எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவான கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-07T12:00:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>T.thibaharan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சட்டி சுட்டுவிட்டதென்று அடுப்பை தகர்க்க முனையும் ஈழத்தமிழர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/eela-tamilar-recent-activity-1788776895"></link>
            <id>https://tamilwin.com/article/eela-tamilar-recent-activity-1788776895</id>
            <summary type="text">இறையாண்மையை மீட்டெடுப்பதற்காக போராடும் ஈழத் தமிழினம் தமது மனவிருப்புக்கு ஏற்றவாறோ, எழுந்த மாத்திரத்திலோ தமக்குரிய கொள்கைகளையும் கோட்பாடுகளையும் வகுக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>இறையாண்மையை மீட்டெடுப்பதற்காக போராடும் ஈழத் தமிழினம் தமது மனவிருப்புக்கு ஏற்றவாறோ, எழுந்த மாத்திரத்திலோ தமக்குரிய கொள்கைகளையும் கோட்பாடுகளையும் வகுக்க முடியாது.</p><p> அதேபோலவே உலகம் தழுவிய அரசியலில் உலகளாவிய ஆதரவைப் பெற பொருத்தமானதும், பிராந்திய சக்திகளினாலும், சர்வதேச வல்லமை வாய்ந்த சக்திகளாலும் விரும்பக்கூடிய ஒரு வெளியுறவுக் கொள்கையை புவிசார் அமைப்பிடம் சார்ந்தும், அண்டை நாடுகள் சார்ந்தும், பிராந்தியம் சார்ந்தும் மிகக்கவனமாக ஆராய்ந்தே வெளியுறவுக் கொள்கையை வகுக்கவேண்டும். </p><p>

அவ்வாறு அனைத்தையும் உள்ளடக்கிய பார்வையில் ஒரு வெளியுறவுக்கொள்கை வகுக்கப்பட்டால் மாத்திரமே ஈழத் தமிழர்களை தேசியஇனம் என் அடையாளப்படுத்த முடியும்.</p><h2>ஈழத் தமிழர்களின் விடுதலை</h2><p> தேசியஇனம் என்பதற்கு அந்த இனம் உலகம் தழுவிய அரசியலில் சர்வதேச நாடுகளுடன் இராஜதந்திர உறவுகளை பேணவும், அதனை வளர்த்துச் செல்லும் அரசியல் இராஜதந்திர முதிர்ச்சியை கொண்டிருக்க வேண்டும் என்ற நிபந்தனை உண்டு. </p><p>சரியான வெளியுறவுக் கொள்கையை வகுக்க தவறின் ஈழத்தமிழர் தேசிய இனம் தகுதியையும் இழந்து விடுவர் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

உதவக்கூடிய உறவுகளை இனம் கண்டு உறவாடுவதுதான் வெளியுறவு கொள்கை. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/af5a2871-3d86-4884-828c-2a685caa8d25/26-6a9e9702e4427.webp' /></p><p>இங்கே சாத்தியங்களின்&nbsp;அடிப்படையில் சாத்தியப்பாடானவற்றை அணுகி சாத்தியப்படுத்தும் வித்தைதான் இராஜதந்திரம். </p><p>ஈழத் தமிழர்களைப் பொறுத்தளவில் அவர்களுடைய வெளியுறவுக் கொள்கையில் புவிசார் அமைப்பிடம் மிக முக்கியத்துவமானது.</p><p> அதனடிப்படையில்தான் வெளியுறவுக் கொள்கை வகுக்கப்பட வேண்டும். ஈழத் தமிழர்களின் தாயகநிலத்தின் அமைவிடத்தை மாற்ற முடியாது. இந்த புவியியல் அமைவிடத்தை வைத்துக்கொண்டு பிராந்தியம், சர்வதேசம் என்ற அடிப்படையில் எவற்றை மேம்படுத்த முடியுமோ அவற்றை மட்டுமே மேம்படுத்த முடியும்.</p><p> அவ்வாறு படிப்படியாக மேம்படுத்தியே மேல்நிலைக்குச் சொல்ல முடியும். அதை விடுத்து மனம் போனபோக்கில், மனவிருப்புகளின் அடிப்படையில், ஏட்டிக்கு போட்டியான வெளியுறவுக் கொள்கையோ, சர்வதேச உறவுகளையோ கட்டு வளர்க்க முடியாது. </p><p>இந்த எதார்த்தத்தை புரிந்து கொண்டுதான் ஈழத் தமிழர்களின் விடுதலைக்காக போராடுகின்ற அமைப்புகளும், தனி நபர்களும், நலன்விரும்பிகளும், அறிஞர்களும் செயற்பட வேண்டும்.</p><p>

 சிங்கமும், புலியும் வாழும் காட்டில்தான் மான்களும், முயல்களும், குரங்குகளும், சிறு விலங்குகளும் வாழ்கின்றன. பாம்புகள் உள்ள பற்றைகளில்தான் தவளைகளும், பூச்சிகளும், புழுக்களும் வாழ்கின்றன. </p><p>ஆயினும் அவையவை தமக்குரிய பாதுகாப்பு எல்லைக்குள் இருந்து கொண்டு தம்மை தற்காத்து வாழ்கின்றன. இந்த அடிப்படை விலங்கியல் அறிவை பார்த்தாவது ஈழத்தமிழர்கள் தமக்குரிய இருப்பை, தமக்குரிய பாதையை, தமக்குரிய பாதுகாப்பை வடிவமைக்க வேண்டும். </p><p>காட்டில் சிங்கம், புலி இருப்பதற்காக மான்களும், முயல்களும் காட்டைவிட்டு வெளியேறுவதில்லை. கடலிலே திமிங்கலம் இருக்கின்றது என்பதற்காக கடல் உள்ள மீன்கள் எல்லாம் தரைக்கு படையெடுப்பதில்லை.</p><h2>பிரித்தானியா உள்ளிட்ட 28 ஐரோப்பிய நாடுகள்</h2><p>அவ்வாறே எதிரிகளும், நண்பர்களும், துரோகிகளும், கயவர்களும் நிறைந்த இந்த சர்வதேசத்தில் அவரவர் தமக்குரிய பாதுகாப்பை அறிவார்ந்து வகுத்துக்கொள்வது வாழ்விற்கு வழிசமைக்கும். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/83d9206d-5567-40b0-9524-649cffccf923/26-6a9e9703a7f24.webp' /></p><p>அரசியலில் நிரந்தர நண்பனும் கிடையாது, நிரந்தர எதிரியும் கிடையாது. ஆயினும் அரசியலுக்கு புவிசார் அமைவிடம் மிக முக்கியமானது. அதனை அடிப்படையாகக் கொண்டுதான் யார் நிரந்தர நண்பன்? யார் எதிரி? யார் பகைவன்? யார் தற்காலிக பகைவன்? யார் அரைவழி நண்பர் என்பதை தீர்மானிக்க வேண்டும். </p><p>அதுவே அரசியல் இராஜதந்திர அறிவின் முதிர்ச்சியை வெளிக்காட்டுவதாக அமையும்.</p><p>

ஆயுதப் போராட்டம் தோல்வியடைந்திருக்கும் நிலையில் தமிழர்களுக்கு இழைக்கப்பபட்ட மிகப்பெரும் மனித பேரவலமும், இனப்படுகொலையும் ஈழத்தமிழர்களுக்கு ஒரு சர்வதேச அரசியல் தளத்தை தந்துள்ளது. அதனை பயன்படுத்தி சர்வதேச ஆதரவை பெறக்கூடிய சாத்தியமான சூழல் உண்டுதான்.</p><p> ஆயினும் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழிழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை மலேசியா, இந்தியா, இலங்கை ஆகிய மூன்று ஆசிய நாடுகள் தடை விதித்திருக்கின்றன. </p><p>அதேநேரம் அமெரிக்கா, கனடா ஆகிய இரண்டு நாடுகளும், பிரித்தானியா உள்ளிட்ட 28 ஐரோப்பிய நாடுகளும் விடுதலைப்புலிகள் இயக்கத்தை பயங்கரவாத பட்டியலில் சேர்த்திருப்பதன் மூலம் இந்த நாடுகளில் அந்த அமைப்பு இயங்குவதற்கு தடை ஏற்பட்டுவிட்டது. </p><p>இந்தத்தடை என்பது தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்துக்கு என்று கூறிக்கொண்டாலும் உண்மையில் இந்த பயங்கரவாத பட்டியல் என்பது தமிழீழ விடுதலைப் போராட்டத்தை நடத்துவதற்கான தமிழீழ மக்களுக்கான தடையாகவே நடைமுறையில் செயற்படுகிறது.&nbsp; </p><h2>சர்வதேச அரசியல் நகர்வுகள்</h2><p>இத்தடை புலம்பெயர்ந்த தேசங்களில் ஒரு ஜனநாயக வழி போராட்டங்களை நடத்துவதற்கும், சர்வதேச அரசியல் நகர்வுகளை முன்னெடுப்பதற்கும் பெரும் இடைஞ்சலாக உள்ளது. </p><p>அவற்றைத் தாண்டியும் புலம்பெயர் தமிழர்கள் சர்வதேச அரசியலில் தமக்கான வகிவாகத்தை வகிக்கிறார்கள்தான். ஆயினும் புலிகளை பயங்கரவாத பட்டியலில் சேர்த்திருக்கும் ஐரோப்பிய அமெரிக்க நாடுகளில் 15 லட்சத்துக்கு மேற்பட்ட ஈழத்தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழ்கிறார்கள். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7340e09d-02e6-4ea3-a005-cde28690bd9d/26-6a9ea105c2e5f.webp' /></p><p>அவர்களால் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்குப் பின்னரும் கடந்த 17 ஆண்டுகளாக ஏதேனும் ஒரு நாட்டில் ஈழத்தமிழருக்கான ஆதரவை பெறமுடியவில்லை. </p><p>அதேநேரம் விடுதலைப் புலிகளுக்கு எதிரான தடையை ஏதாவது ஒரு நாட்டில்கூட நீக்க முடியவில்லை. அத்தோடு ஐ.நா மற்றும் சர்வதேச அரசியலில் நீண்ட காலமாக தமிழர்களுக்கு சார்பான பெரிய மாற்றம் எதனையும் ஏற்படுத்த முடியவில்லை. </p><p>இது ஈழத்தமிழர்களின் புலம்பெயர் கொள்ளளவுக்கு ஏற்றளவு அவர்களுடைய அரசறிவியல் முதிர்ச்சியும், சர்வதேச செல்வாக்கின் அடைவிள் அளவும் பின்தங்கியுள்ளதையே காட்டுகிறது. </p><p>


இத்தகைய சூழலில் தற்போது ஹொங்கொங்கில் உள்ள The Chinese University of Hong Kong (CUHK)ன் சட்ட பீட பேராசிரியர் அலெக்ஸ் கிரீன் (Faculty of Law Professor Alex Green) தலைமையில், நாடுகடந்த தமிழீழ அரசுடன்(TGTE) இணைந்து “இலங்கைக்குள் ஒரு சுயாதீன தமிழ் அரசு உருவாக்குவதற்கு எதிர்நோக்கும் சர்வதேச சட்டரீதியான சவால்கள்“ என்ற தலைப்பில் ஒரு முதுகலை ஆராய்ச்சி திட்டத்தை(postdoctoral research project) மேற்கொள்ள விண்ணப்பம் கோரப்பட்டடுள்ளது. </p><p>அதில் ஆய்வாவளர் தகுதிநிலையாக</p><p>
1)History அல்லது Public International Law-ல் PhD பெற்றவராக இருக்க வேண்டும்.</p><p>2)இலங்கை உள்நாட்டுப் போர் தொடர்பான பின்னணி விரும்பத்தக்கது.
</p><p>3)வரலாற்று ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.
</p><p>4)Legal மற்றும் policy briefs எழுதுவதில் பங்கேற்க வேண்டும்.
</p><p>5)சர்வதேச academic publications-க்கு ஆய்வுகளைத் தயாரிக்க வேண்டும்.
</p><p>6)TGTE மற்றும் பிற project stakeholders உடன் பணியாற்ற வேண்டும்.
</p><p>7)ஆரம்ப நியமனம் ஆறு மாதங்கள்; Hong Kongஇல் நேரடியாகப் பணியாற்ற வேண்டும் என தமிழீழ சுயாதீன அரசு தொடர்பான ஆய்வாளர்களுக்கான அடிப்படை தகுதி அம்சங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.
</p><h2>தனியான தமிழரசு உருவாகுவதற்கு</h2><p>
இந்த CUHK ஆய்வு உண்மையில் என்ன? என்பதனை நாம் விளங்கிக்கொள்ள வேண்டியது அவசியமாகிறது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/586ff65f-bb73-4104-a246-f9677e32d0ad/26-6a9ea1069f712.webp' /></p><p>இந்த ஆய்வின் பொருள், இலங்கைக்குள் ஒரு சுயாதீன தமிழ் அரசு(independent Tamil State) உருவாவதைச் சுற்றியுள்ள தற்போதைய அரசியல் மற்றும் சர்வதேச சட்ட விவாதங்கள், புதிய அரசை உருவாக்குவதற்கு எதிர்நிற்கும் சட்டரீதியான சவால்களை குறிக்கோள்சார் கல்வி மதிப்பீடாக(objective academic assessment) ஆராய்வதாகவும், கொங்கொங் பல்கலைக்கழக அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பாகவும் இது உள்ளது.
</p><p>
இந்த ஆய்வின் மையக் கேள்வி ஒரு தனியான தமிழரசு உருவாகுவதற்கான சர்வதேச சட்ட மற்றும் அரசியல் அடித்தளம் என்ன? என்பதாக இருக்கிறது. </p><p>பேராசிரியர் அலெக்ஸ் கிரீன், எழுதிய அரசியல் சமூகமாக அரசுரிமை: சர்வதேசச் சட்டமும் புதிய நாடுகளின் தோற்றமும், என்ற கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகப் பதிப்பகம்,2024.(Statehood as Political Community: International Law and the Emergence of New States,&nbsp;Cambridge University Press, 2024.) நூலில் கிரீன் முன்வைக்கும் முக்கியக் கோட்பாடு, புதிய அரசு உருவாகுவதற்கு வெறும் பிரதேசம்(territory), மக்கள் தொகை,(population), அரசாங்கம்(government) போன்ற பாரம்பரிய அளவுகோல்கள் மட்டும் போதாது.</p><p> அது ஒரு “உண்மையான அரசியல் சமூகம்”(“genuine political community”)ஆக இருக்க வேண்டும் என்றும், அந்த அரசியல் சமூகத்தின் உருவாக்கம் தனிநபர்களின் அரசியல் நடவடிக்கை(political action) அறம் நெறிமுறை சார்ந்த முக்கியத்துவத்துடன் (ethical importance) ஒத்துப்போக வேண்டும் என்றும் வாதிடுகிறது. </p><p>அவர் இதனை அரசு உருவாக்கம் குறித்த குரோஷியனின் கோட்பாடு(Grotian theory of state creation)எனக் குறிப்பிடுகிறார். </p><p>அரசியல் சமூகம், சர்வதேச சட்டம், மற்றும் புதிய அரசுகளின் எழுச்சித் தத்துவார்த்த கட்டமைப்பை உருவாக்கிய அவர் அதனை இலங்கைத்தீவிற்குள் தமிழீழ தனியரசு உருவாக்கத்திற்கு தனது தத்துவத்தை பயன்படுத்தி பரீட்சித்துப்பார்க்க முனைவது நல்ல விடயம்தான்.</p><p>ஆனால் சீனப் பல்கலைக்கழகமும்(CUHK) சட்டப் பேராசிரியர் அலெக்ஸ் கிரீன்(Alex Green), TGTEயும் அணைந்து மேற்கொள்ளப்போவதாக குறிப்பிடப்படும் சுயாதீன தமிழ் அரசு(independent Tamil State) உருவாக்கத்திற்கு தற்போதைய அரசியல் மற்றும் எதிர்நிற்கும் சட்டரீதியான சவால்களை(legal challenges) குறிக்கோள்சார் கல்வி மதிப்பீடாக ஆய்வு செய்வதற்காக இந்த சீனப் பல்கலைக்கழகம்(CUHK) ஏன் தேர்ந்தெடுக்கப்பட்டது? என்ற முக்கிய விழிப்புணர்வுக் கேள்வி எழுகிறது. </p><p>அத்தோடு பிரித்தானியாவில் University College London, University of York, University of Cambridge, London School of Economics and Political Science போன்ற பிரசித்திபெற்ற international-law மற்றும் political-theory academic institutions இருக்கின்றபோதும் இந்த குறிப்பிட்ட ஆய்வு பிரித்தானியாவிலோ அல்லது அமெரிக்காவிலுள்ள, New York University, Harvard University, Yale University, Columbia University&nbsp;போன்றவற்றிலோ, கனடாவில் உள்ள University of Toronto, McGill University, University of British Columbia போன்ற பிரசித்திபெற்ற பல்கலைக்கழகங்களிலோ நடத்தப்படாமல் Hong Kongல் உள்ள CUHK ல் நடத்தப்படுவதற்கான காரணம் என்ன? </p><p>இதற்கான விடையைத் தேடி அறிவுசார்ந்தும், அரசியல்த் தத்துவவியல் சார்ந்தம் சிந்திப்பது அவசியம்.
</p><p>
இத்தகைய ஆய்வென்றை செய்யமுன்வந்ததற்காக CUHK தமிழீழத்தை ஆதரிக்க முடிவு செய்துவிட்டது என்று ஈழத்தமிழர் எண்ணுவது வடிகட்டிய முட்டாள்த்தனமாகும். </p><h2>சீனா அரசுடன் இலங்கை அரசு</h2><p>இங்கே கவனிக்கப்பட வேண்டிய விடயம் என்னவென்றால் அதிகாரப்பூர்வ CUHK அறிவிப்பு இதனை சார்பற்ற கல்விசார் மதிப்பீடு(objective academic assessment ) என்றுதான் வரையறுக்கிறது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b23fa8bc-41b1-4110-8787-8ad38d3a0e00/26-6a9ea2c8b731d.webp' /></p><p>அதே நேரத்தில், “சீனாவின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் பல்கலைக்கழகம் ஒன்று தமிழீழ அரசுரிமை குறித்து TGTE உடன் இணைந்து ஆய்வு செய்கிறது” என்பது முற்றிலும் புவிசார் அரசியல் முரண்பாட்டைக்(geopolitical contradiction) கொண்டுள்ளது என்பதனால் இது குறித்த ஆழமாக சிந்திக்கப்பட வேண்டியது அவசியமானது.</p><p> அதைவிடுத்த இதனை ஆகா ஓகோ எனப் புழகாங்கிதமடைவது ஈழத்தமிழர் தமக்கான பொருத்தமான வெளியுறவுக் கொள்கையை கோட்டை விட்டுவிட்டார்கள் என்பதாகவே அமையும்.
</p><p>
சீனா அரசு இலங்கை அரசுடன் நீண்டகால நெருக்க உறவை கொண்டுள்ளது, சீனா பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மை குறித்து மாறாத பாரம்பரிய நிலைப்பாட்டை கொண்டது. </p><p>அதேசமயம Hong Kong சீனாவின் இறையாண்மைக்குட்பட்டது. ஆனால் இந்த CUHK என்ற பல்கலைக்கழகம் தனித்தமிழ் அரசு குறித்த கல்வி ஆராய்ச்சியை TGTE என்ற சுதந்திர தமிழிழ அரசை ஸ்தாபிக்க முனையும் அமைப்புடன் இணைந்து&nbsp;செயல்படுகிறது என்பது விசித்திரம்தான். </p><p>இவற்றை ஒன்றாக இணைத்து ஆராய்ந்தால் இது ஒரு சாதாரண பல்கலைக்கழக ஆய்வைத் தாண்டி சர்வதேசச் சட்டம் + சுயநிர்ணய உரிமை + அரச அங்கீகாரம் + சீனா-இலங்கை புவிசார் அரசியல் + நாடுகடந்த தமிழரசியல்(international law + self-determination + statehood + China–Sri Lanka geopolitics + transnational Tamil politics) ஆகியவற்றின் தொகுப்பாக மாறுவது ஈழத்தமிழர் அரசியல் தற்கொலைக்கு தாயரிவிட்டார்கள் என்பதையே வெளிக்காட்டும்.
</p><p>
இன்றைய மாறிவரும் உலகச் சூழலில் இந்துசமுத்திரத்தின் அரசியல் பெரும் கொதிநிலையை அடைந்திருக்கிறது. ம</p><p>த்திய கிழக்கு யுத்தமும், இந்து சமுத்திரத்தில் சீனாவின் வளர்ச்சியும், அதற்கு ஈடுசெய்யக்கூடிய வகையில் இந்தியாவின் கடல்சார் விஸ்தரிப்புகளும், அமெரிக்க கடற்படையின் இந்து சமுத்திர மேலாதிக்க நடவடிக்கைகள் என ஒரு புதிய மாற்றத்தை நோக்கி இந்துசமுத்திர அரசியல் நகர்கிறது. </p><p>இந்நிலையில் ஈழவிடுதலைக்காக போராடுகின்ற அமைப்புகள் யாருடன் கூட்டுச் சேர்வது? என்பது மிகமுக்கியமானது. சட்டி சுட்டு விட்டது என்பதற்காக அடுப்பை தகர்க்க முடியாது, தகர்க்கவும் கூடாது.</p><p> கடந்தால கசப்பான அனுபவங்கள் நிகழ்கால கூட்டிணைவிற்கு தடையாக இருக்கக் கூடாது. </p><p>இதனை ஜப்பானின் அமெரிக்க தொடர்பான வெளியுறவுக் கொள்கையிலிருந்து நாம் பாடங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும்.

இலங்கைத்தீவின் இருப்பிடம் இந்தியா உபகண்டத்திற்கு நெருக்கமாக அமைந்திருப்பதனால் அது எப்போதும் இந்திய பாதுகாப்பு வலயத்துக்குள் அகப்பட்ள்ளது என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். </p><p>இந்நிலையில் இருந்து யாரை எதிர்ப்பது? யாரை நண்பனாக்குவது? என்பதில் கவனமாக இருக்க வேண்டும். இன்றைய நிலையில் ஈழத்தமிழர்களைப் பொறுத்தளவில் இந்தியாவை நாம் நண்பனாக்காவிட்டாலும்&nbsp;பரவாயில்லை ஆனால் பகைவனாக்ககூடாது என்பதில் மிகக் கவனமாக இருக்க வேண்டும்.</p><p> இந்தியாவின் புவிசார் அரசியல் நலனுக்கும், அதனுடைய பிராந்திய பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தலை ஏற்படக்கூடிய எந்த ஒரு காரியத்திலும் ஈழத்தமிழர்கள் ஈடுபடக்கூடாது.</p><h2>17 ஆண்டுகளில் சீனாவின் வெளிநாட்டு தூதரகங்கள்</h2><p>
</p><p>
சீனாவைப் பொறுத்தளவில் அது இலங்கையுடன் நெருக்கமான உறவைக் கொண்ட நாடு என்ற அடிப்படையிலும், அது அம்பாந்தோட்டை துறைமுகத்தையும், கொழும்பு கடல் நகரத்தையும் பெற்றிருக்கிறது என்ற அடிப்படையிலும் இன்னும் 100 ஆண்டுகளுக்கு இலங்கைக்கும் சீனாவுக்குமான உறவில் எந்த விரிசலும் ஏற்படப்போவதில்லை. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d558befb-2cfa-45c5-ab84-0189d90c1162/26-6a9ea3f61c9f9.webp' /></p><p>இந்நிலையில் ஈழத் தமிழர்கள் சீனாவை நண்பனாக்க முடியும் என்றால் அதற்கான மூலோபாயம் என்ன? இலங்கை அரசு சீனாவுக்கு கொடுக்கின்ற நலன்களை விட ஈழத்தமிழர்களால் ஏதேனும் பெரிய நலன்களை இன்றைய நிலையில் சீனாவுக்கு கொடுக்க முடியுமா? என்றால் இல்லவே இல்லை. </p><p>

அதேபோல போராட்ட காலத்தில் விடுதலைப் போராட்டம் சீனாவுடன் கொண்டிருந்த இரகசிய பின்கதவு உறவே இந்து சமுத்திரத்தில் ஈழத்தமிழர் விடுதலைப் போராட்டத்தை நசுக்கி புதைத்து விட்டது என்ற உண்மையை நாம் தெரிந்து அதனை உணர்ந்து கொள்ள வேண்டும். </p><p>அதேபோன்ற ஒரு தவறை இனியும் செய்யக்கூடாது என்பதில் உறுதியாக இருக்க வேண்டும். ஆகவே ஈழத் தமிழர்கள் சீனாவுடன் உறவை வளர்ப்பது என்பது அரிதிலும் அரிது என்பது மட்டுமல்ல ஆபத்தானதும்கூட. ஆகவே சீனாவை எதிர்ப்பதை விட சீனாவை ஈழத்தமிழர்கள் தவிர்ப்பதே அவர்களுடைய எதிர்கால நலனுக்கு உகந்தது.</p><p>ஈழத்தமிழர்கள் மீதான இனப்படுகொலைக்கான ஐ.நா மனித உரிமை அவையிலன் தீர்மானங்களை சீனா தொடர்ந்து எதிர்த்து வந்துள்ளது. </p><p>அத்தோடு ஈழத்தமிழர் பிரச்சினை என்பதை அது உள்நாட்டு பிரச்சினை என்றும், அது இலங்கையின் இறையாண்மைக்குள் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினை என்றும் சீனா சொல்கிறது.</p><p> கடந்த 17 ஆண்டுகளில் சீனாவின் வெளிநாட்டு தூதரகங்களுக்குள் எந்த ஒரு தமிழர்களையும் ஈழத்தமிழர் பிரச்சினை சார்ந்து பேசுவதற்கு உள்ளே அனுமதிக்கவில்லை என்ற கசப்பான உண்மையை இங்கு பதிவு செய்வது அவசியமானது.</p><p>

இந்நிலையில் தமிழீழ தனியரசு அமைப்பதில் உள்ள சர்வதேச சட்ட முறைமைகள் பற்றி ஆய்வு ஒன்றைச் செய்ய சீன பல்கலைக்கழகம் முன்வந்தால் அந்த ஆய்வுக்கு தமிழீழ விடுதலைக்காக போராடும் ஈழத்தமிழர் அமைப்புக்கள் இணைத்து செய்யப்படக்கூடாது.</p><p> இதனை சுயாதீனமானவர்கள் மேற்கொள்ள வேண்டுமே தவிர் அமைப்புக்கள் சீனப் பல்கலைக்கழகங்களுன் இணைந்து செயல்படுவது மிகமிக ஆபத்தமான நிலைக்கே ஈழத்தமிழர்களை கொண்டு செல்லும். </p><p>அமைப்புகள் இணைகின்றபோது ஈழ விடுதலை அமைப்புகள் சீனாவுடன் கூட்டிச்சேர்கின்றன என்ற சர்வதேச பார்வை ஒன்று தோன்றும். அது ஈழத்தமிழர்களுக்கு எதிராக மேற்குலகத்தையும், இந்தியாவையும் ஓரணியில் நிற்க வைக்கும்.</p><h2>தொடர் தோல்விகளை சந்தித்துவரும் ஈழத்தமிழினம்</h2><p> </p><p>வெறும் ஒரு பல்கலைக்கழக ஆய்வுக்கு அனுசரணையாக நிற்பதன் மூலம் மேற்குலக சீற்றத்தையும் அழுத்தத்தையும் தமிழர்களுக்கு எதிராக திருப்பிவிடும் சூழலையே அது தோற்றுவிக்கும். </p><p>இதனை தமிழர் அமைப்புக்கள் கவனத்தில் கொள்ளவேண்டும்.

அதுமட்டுமல்ல ஈழத் தமிழருடைய வேணாவாவாக தமிழ் ஈழத் தனியரசை அமைப்பதாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aabdb241-ec4f-445d-8b04-59b0e2f7c76d/26-6a9ea686989c8.webp' /></p><p> </p><p>இத்தகைய இலட்சியத்தை கொண்டிருக்கிறபோது சீனப் பல்கலைக்கழகம் ஒன்று&nbsp;“இலங்கைக்குள் ஒரு சுயாதீன தமிழ் அரசு உருவாக்குவதற்கு எதிர்நோக்கும் சர்வதேச சட்டரீதியான சவால்கள்“ என்ற தலைப்பில் ஒரு முதுகலை ஆராய்ச்சி திட்டத்தை அறிவிப்பு செய்கின்றபோது அதனை நோக்கி ஏராளமான தமிழிழ விரும்பிகளும், தேச நிர்மாணிகளும், கல்விமான்களும் செல்லவர்.</p><p> அவர்களை இலங்கை அரசு இனங்காண்பது இலகுவாகிவிடும். அத்தோடு இந்த ஆய்வு எந்தப் பலனையும் இறுதியில் தராத பட்சத்தில் மேற்குறிப்பிட்ட அனைவரும் விரக்தி அடைந்து தமிழீழ விடுதலை என்ற அந்த இலட்சிய பாதையில் இருந்து விலகிச் செல்வதற்கும் அது வழிவகுக்கும். </p><p>

நான்கு நுாற்றாண்டுகளாக தொடர் தோல்விகளை சந்தித்துவரும் ஈழத்தமிழினம் இனியும் அடிக்கடி தோல்விகளை சந்திக்கக் கூடாது. </p><p>நாம் தோல்விகளில் இருந்து பாடங்களை கற்றுக் கொள்ளவில்லை என்றால் நாம் மீண்டும் மீண்டும் தோல்வியை நோக்கியே பயணப்படுகிறோம் என்பதே அர்த்தமாகும். </p><p>ஆகவே முரண்பட்ட சர்வதேச விவகாரங்களில் மிக நிதானமாகவும், பொருத்தமானதாகவும் ஈழத் தமிழர்கள் தமது தெரிவுகளை மேற்கொள்ள வேண்டும். "தீதும் நன்றும் பிறர் தர வாரா".</p><p>
</p><p>
</p><p>
</p><p> 
</p>]]></content>
            <updated>2026-09-07T11:56:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பு மயானத்தில் ஒன்றில் புதைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள்! தீவிரமாகும் விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/weapons-cache-discovered-in-colombo-cemetery-1788782054"></link>
            <id>https://ibctamil.com/article/weapons-cache-discovered-in-colombo-cemetery-1788782054</id>
            <summary type="text">கொழும்பு - ஹங்வெல்ல பகுதியில் உள்ள மயானம் ஒன்றில் நிலத்தடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதங்களை மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் மீட்டுள்ளது.இதில...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு - ஹங்வெல்ல பகுதியில் உள்ள மயானம் ஒன்றில் நிலத்தடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதங்களை மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் மீட்டுள்ளது.</p><p>இதில் T-56 ரக துப்பாக்கி, ரிப்பீட்டர் துப்பாக்கி மற்றும் கைத்துப்பாக்கி ஆகியவை மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>துபாயிலிருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டதாகக் கூறப்படும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுவைச் சேர்ந்த பஸ் லலித்திடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>மீட்கப்பட்ட துப்பாக்கிகள்</h2><p>மீட்கப்பட்ட துப்பாக்கிகள் மறைத்து வைக்கப்பட்டிருந்த விதம் மற்றும் அவை ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புபட்டுள்ளதா என்பது குறித்து மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a69fa1dc-a4cc-482f-8d73-31114306e124/26-6a9ea5e7b558e.webp' /></p><p>கடந்த 25 ஆம் திகதி குறித்த சந்தேகநபர் டுபாயில் இருந்து கைது செய்யப்பட்டு நாட்டுக்கு அழைத்துவரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-07T11:54:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[படு பிரம்மாண்டமான பிக்பாஸ் 10வது சீசனை தொகுத்து வழங்க விஜய் சேதுபதி வாங்கும் சம்பளம்... எத்தனை கோடி?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/vijay-sethupathi-bigg-boss-10-salary-details-1788778155"></link>
            <id>https://cineulagam.com/article/vijay-sethupathi-bigg-boss-10-salary-details-1788778155</id>
            <summary type="text">பிக்பாஸ் 10இந்தியாவில் ரசிகர்களால் கொண்டாடப்படும் நம்பர் 1 ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று தான் பிக்பாஸ். ஆங்கிலத்தில் இருந்து முதலில் ஹிந்தி வர அங்கிருந்த...</summary>
            <content type="html"><![CDATA[<h2>பிக்பாஸ் 10</h2><p>இந்தியாவில் ரசிகர்களால் கொண்டாடப்படும் நம்பர் 1 ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று தான் பிக்பாஸ். </p><p>ஆங்கிலத்தில் இருந்து முதலில் ஹிந்தி வர அங்கிருந்து தென்னிந்தியா பக்கம் வந்து மிகப்பெரிய வெற்றியை சந்தித்துள்ளது. தென்னிந்தியாவில் அண்மையில் எல்லா மொழிகளிலும் புதிய பிக்பாஸ் சீசன் துவங்கப்பட்டுள்ளது. </p><p>தமிழில் விஜய் டிவியில் விஜய் சேதுபதி தொகுத்து வழங்க 10வது சீசன் நேற்று செப்டம்பர் 6, பிரம்மாண்டமாக துவங்கியுள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/00dfd8ca-ac30-4631-9aeb-d4df672e5083/26-6a9e9ef19c515.webp' /></p><h2>சம்பளம்</h2><p>
பெரிய எதிர்ப்பார்ப்புகளுக்கு இடையில் நேற்று நிகழ்ச்சி துவங்கப்பட இதற்கு முன் சமூக வலைதளங்களில் போட்டியாளர்கள் விவரங்களில் சிலரும், நாம் எதிர்ப்பார்க்காத போட்டியாளர்களும் இடம்பெற்றுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4c83fbd6-4e8b-4d24-9d38-6e90ae80e6fa/26-6a9e9ef0b9e8c.webp' /></p><p> </p><p>நிகழ்ச்சி துவங்கிவிட்டது இனி 100 நாட்களுக்கு செம என்டர்டெயின்மென்ட் தான் என எல்லோரும் நிகழ்ச்சியை ஆவலாக பார்க்க ஆரம்பித்துவிட்டனர்.
8வது சீசன் முதல் தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்கி வருகிறார். </p><p>இந்த 10வது சீசனிற்காக அவருக்கு கொடுக்கப்பட்ட சம்பளம் என்று ஒரு விவரம் வலம் வருகிறது. விஜய் சேதுபதிக்கு 10வது சீசன் தொகுத்து வழங்க ரூ. 75 கோடி முதல் ரூ. 80 கோடி வரை சம்பளம் கொடுக்கப்படுவதாக கூறப்படுகிறது.</p>]]></content>
            <updated>2026-09-07T11:50:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[போதைப்பொருள் கடத்தல்காரர்கள் இருவரின் 7 கோடி சொத்துக்கள் முடக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/assets-7-crore-freeze-illegal-assets-1788781914"></link>
            <id>https://jvpnews.com/article/assets-7-crore-freeze-illegal-assets-1788781914</id>
            <summary type="text">&amp;nbsp; போதைப்பொருள் கடத்தல்காரர்கள் இருவருக்குச் சொந்தமானது எனக் கூறப்படும் சொத்துக்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்வதற்குச் சட்டவிரோத சொத்துக்கள் புலன...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; போதைப்பொருள் கடத்தல்காரர்கள் இருவருக்குச் சொந்தமானது எனக் கூறப்படும் சொத்துக்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்வதற்குச் சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப் பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது.
</p><p>
சந்தேகநபர்கள் இந்த சொத்துக்களைத் தங்களது நெருங்கிய உறவினர்களின் பெயர்களில் கொள்வனவு செய்துள்ளதாகப் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/832e4fc1-f516-40b0-8905-89c91b9e3149/26-6a9ea55c2c357.webp' /></p><p>
</p><p>
எம்பிலிபிட்டிய, காந்திஸ்ஸபுர பகுதியில் அமைந்துள்ள சுமார் ஒரு ஏக்கர் காணியும், அதன் பகுதியிலுள்ள மூன்று மாடி வீடும் முடக்கப்பட்டுள்ளன. இதன் பெறுமதி சுமார் 7 கோடி ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.
</p><p>
எம்பிலிபிட்டிய புதுநகர் பகுதியில் அமைந்துள்ள 23.7 பேர்ச்சஸ் காணியும், அதிலுள்ள மூன்று மாடி வீடும் பயன்படுத்துவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.</p><p>

மேலும், இந்த சம்பவம் தொடர்பில் சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-09-07T11:48:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரான்சில் கோவிட் தொற்றுக்கு ஆளாவோர் எண்ணிக்கை அதிகரிப்பு: அடுத்த அலையா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/covid-19-cases-rises-in-france-1788779884"></link>
            <id>https://news.lankasri.com/article/covid-19-cases-rises-in-france-1788779884</id>
            <summary type="text">A rise in Covid-19 cases is being recorded in France: பிரான்சில் கோவிட் தொற்றுக்கு ஆளாவோர் எண்ணிக்கை அதிகரித்தவண்ணம் உள்ளது.


பிரான்சில், கோவிட் த...</summary>
            <content type="html"><![CDATA[<p>A rise in Covid-19 cases is being recorded in France: பிரான்சில் கோவிட் தொற்றுக்கு ஆளாவோர் எண்ணிக்கை அதிகரித்தவண்ணம் உள்ளது.
</p><p>

பிரான்சில், கோவிட் தொற்றுக்கு ஆளாவோர் எண்ணிக்கை, செப்டம்பர் மாத துவக்கம் முதல் அதிகரித்தவண்ணம் உள்ளது. அத்துடன், அது மேலும் அதிகரிக்கக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
</p><h3>
கோவிட் தொற்றுக்கு ஆளாவோர் எண்ணிக்கை
</h3><p>
இந்த விடயம், அதாவது, கோவிட் தொற்றுக்கு ஆளாவோர் எண்ணிக்கை, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7cae78d5-8351-4af0-857a-3f9dd2c450b5/26-6a9e9d6dec3f4.webp' /></p><p>
விடயம் என்னவென்றால், இது புதிய கோவிட் அலை அல்ல, அது குறித்து மக்கள் அச்சப்படவேண்டாம் என்கிறார்கள் அதிகாரிகள்.</p><p>

ஏனென்றால், கோவிட் பெருந்தொற்று முடிவுக்கு வந்ததிலிருந்தே, கோவிடும் ப்ளூ தொற்று போல மாறிவிட்டது.
</p><p>
அதாவது, அதன் வீரியம் குறைந்துவிட்டது. ஒரே ஒரு வித்தியாசம் என்னவென்றால், ப்ளூ குளிர்காலத்தில் மட்டும் தாக்கும், இந்த கோவிட் வெயில் காலத்திலும் தாக்கக்கூடும், அவ்வளவுதான்!&nbsp;</p><p></p><p>
ஆரோக்கியமான இளம் மற்றும் நடுத்தர வயதினர் இந்த கோவிட் குறித்து கவலைப்படவேண்டியதில்லை. எளிதில் பாதிப்புக்குள்ளாகும் அபாயத்திலுள்ளவர்கள் மற்றும் முதியவர்களும் ஏற்கனவே தடுப்பூசி போட்டுள்ளதால் அவர்களுக்கும் பாதுகாப்பு இருக்கும்.
</p><p>
ஆக, எளிதில் பாதிப்புக்குள்ளாகும் அபாயத்திலுள்ளவர்கள் கூட்டம் அதிகமிருக்கும் இடங்களுக்கு செல்லும்போது கையுறை, முகக்கவசம் போன்றவற்றை அணிந்துகொள்ளுதல் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்கொள்வது நல்லது என்கிறார்கள் அதிகாரிகள்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-07T11:43:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[குமார ஜயகொடிக்கு எதிரான வழக்கின் சாட்சியங்கள்! நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/evidence-in-the-case-against-kumara-jayakody-1788780623"></link>
            <id>https://ibctamil.com/article/evidence-in-the-case-against-kumara-jayakody-1788780623</id>
            <summary type="text">முன்னாள் எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிராக இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் (CIABOC) தாக்கல் செய்யப்பட்டு...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிராக இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் (CIABOC) தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் மேலதிக சாட்சியங்களை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு மேல் நீதிமன்றம் திகதி நிர்ணயித்துள்ளது.</p><p>இதன்படி எதிர்வரும், ஒக்டோபர் 5ஆம் திகதியில் சாட்சியங்களை அழைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.</p><p>கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரஷாந்த கோடவெல முன்னிலையில் இந்த வழக்கு இன்று (07) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.</p><p></p><h2>ஊழல் விசாரணை ஆணைக்குழு</h2><p>
</p><p>
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் மேலதிக பணிப்பாளர் நாயகம் அசித்த அன்டனி முன்னிலையில் சாட்சியமளித்த இலங்கை உர நிறுவனத்தின் முன்னாள் தலைவர் புத்திக ருவன் மடிஹஹேவா, ஹுனுபிட்டிய களஞ்சிய வளாகத்தில் உள்ள வீதிகளுக்கு தார் இடும் பணிக்கான ஒப்பந்ததாரரை தெரிவு செய்வதற்காக 2014ஆம் ஆண்டு கொள்வனவு நடவடிக்கை ஒன்று ஆரம்பிக்கப்பட்டதாக நீதிமன்றத்தில் கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f2ef9992-820b-47a3-9296-eeb32f9c4e5a/26-6a9ea050ca23e.webp' /></p><p>
</p><p>
அந்த காலப்பகுதியில் குற்றம் சாட்டப்பட்டுள்ள குமார ஜயகொடி, நிறுவனத்தின் கொள்வனவு முகாமையாளராக பணியாற்றியதாகவும் சாட்சி தெரிவித்துள்ளார்.</p><p>
அதன்படி, உரிய கொள்வனவு நடைமுறையின் ஊடாக வீதி தார் இடும் பணியை மேற்கொள்வதற்காக தனியார் நிறுவனம் ஒன்று தெரிவு செய்யப்பட்டதாகவும், அந்த நிறுவனத்துக்கு முற்பண உத்தரவாதத்தின் அடிப்படையில் ரூ.8,859,708 முற்பணம் செலுத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>மீளப் பெறப்பட்ட தொகை</h2><p>
</p><p>
கொள்வனவு மற்றும் நிதிப் பிரிவுகளினால் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களை பரிசோதித்த பின்னர், உரிய கொள்வனவு நடைமுறை முறையாகப் பின்பற்றப்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டதால் அந்தப் பணம் செலுத்துவதற்கு தாம் அனுமதி வழங்கியதாகவும் சாட்சி குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p>
எனினும், குறித்த நிறுவனம் வீதிகளுக்கு தார் இடும் பணியை மேற்கொள்ளத் தவறியதாக அவர் தெரிவித்துள்ளார்.</p><p>

திட்டத்துக்காக கொண்டுவரப்பட்ட கற்கள் உள்ளிட்ட மூலப்பொருட்கள் நிறுவன வளாகத்திலேயே கைவிடப்பட்டிருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
</p><p>
மேலும், குறித்த நிறுவனத்தினால் வழங்கப்பட்டிருந்த முற்பண உத்தரவாதத்தின் கீழ் பின்னர் ரூ.2,214,921 மாத்திரமே மீளப் பெறப்பட்டதாகவும் சாட்சி தெரிவித்துள்ளார்.</p><p>

இதனையடுத்து, தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் சட்ட அதிகாரி ஒருவரும் நீதிமன்றத்தில் சாட்சியமளித்துள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP</a> CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-07T11:30:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[2029 தேர்தலில் மூன்று வேட்பாளர்கள்.. நாமலை சந்தித்த பின் கம்மன்பில சர்ச்சை கருத்து!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-rajapaksa-prison-udhaya-gammanpila-1788778486"></link>
            <id>https://tamilwin.com/article/namal-rajapaksa-prison-udhaya-gammanpila-1788778486</id>
            <summary type="text">சிறையில் அடைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை நலன் விசாரிப்பதற்காக, இன்றையதினம், பிவித்துறு ஹெல உறுமய கட்சியின்&amp;nbsp; தலைவர் உதய கம்...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிறையில் அடைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை நலன் விசாரிப்பதற்காக, இன்றையதினம், பிவித்துறு ஹெல உறுமய கட்சியின்&nbsp; தலைவர் உதய கம்மன்பில சென்றுள்ளார்.&nbsp;</p><p>இதன்போது அவர், ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில் தற்போதைய அரசாங்கம் எதிர்க்கட்சிகளை கடுமையாக ஒடுக்கி வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார். </p><p>மேலும்,

"அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் முன்னிலை சோசலிசக் கட்சியின் குமார குணரத்ன, அநுர குமார திசாநாயக்க மற்றும் பத்தரமுல்ல சீலரத்தன தேரர் ஆகியோர் மட்டுமே வேட்பாளர்களாக எஞ்சியிருப்பார்கள் என்று அவர்கள் ஏற்கனவே கூறியுள்ளனர்.</p><h2>2029 ஜனாதிபதித் தேர்தல்..&nbsp;</h2><p> </p><p>எதிர்கட்சியினரைக் கைது செய்து, அனைவரையும் சிறையிலடைத்து, 2029 ஜனாதிபதித் தேர்தலை ஒருவரே போட்டியிடும் பந்தயமாக மாற்றுவதற்கு அரசாங்கம் ஒரு கொடூரமான முயற்சியை மேற்கொண்டு வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bdfb3330-391a-4b7b-9f03-05ae6a8e7320/26-6a9e9f58d1e7b.webp' /></p><p> கட்சி வேறுபாடின்றி வரும் 12ஆம் திகதி அனுராதபுரத்திற்கு மக்கள் திரள்வதைப் பார்த்தாலே இந்த நாட்டின் மக்கள் தங்களுக்கு எந்தளவுக்கு எதிராக இருக்கிறார்கள் என்பதை அரசாங்கம் புரிந்து கொள்ள முடியும். </p><p>இப்போது நாம் இந்த முறைமையிலேயே சென்றால், தேர்தல் மிகவும் ஜனநாயகப்பூர்வமானதாகி விடும். சிலர் சொல்வது போல் நாங்கள் சர்வஜன வாக்கெடுப்பு பற்றிப் பேசவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/34517835-2c7c-4468-bf52-9666b4fa214f/26-6a9ea0086f950.webp' /></p><p> </p><p>தங்களுக்கு அச்சுறுத்தலாக இல்லாத வேட்பாளர்களுக்கு மட்டும் வாய்ப்பளித்துவிட்டு, தங்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் அனைவரையும் ஏதேனும் ஒரு குற்றச்சாட்டில் கைது செய்து 2029 ஜனாதிபதித் தேர்தலை ஒருவர் மாத்திரம் போட்டியிடும் பந்தயமாக மாற்றவே இவர்கள் முயல்கிறார்கள் என்பதை நாங்கள் எப்போதும் கூறி வருகிறோம்.</p><p>எதிர்க்கட்சியில் உள்ள சிலர், 'அவர்களைச் சிறையில் அடைத்தாலும் நம்மை விட்டுவிட்டார்கள், அவர்களைப் பற்றி நாம் பேசுவது தவறு' என்று நினைக்கிறார்கள்” என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-07T11:29:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thileepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழ் மக்களுக்கான ஜனநாயகம் - புதிய ஆரம்பத்திற்கு அழைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/new-democratic-political-journey-1788780103"></link>
            <id>https://tamilwin.com/article/new-democratic-political-journey-1788780103</id>
            <summary type="text">முன்னாள் போராளிகளின் புதிய ஜனநாயக அரசியல் பயணம் “தாயக அரசியல் துறை”
ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் போராளி செ. ஆனந்தவர்மன்(அரவிந்தன்)
தெரிவித்துள்ளா...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் போராளிகளின் புதிய ஜனநாயக அரசியல் பயணம் “தாயக அரசியல் துறை”
ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் போராளி செ. ஆனந்தவர்மன்(அரவிந்தன்)
தெரிவித்துள்ளார்.</p><p>

அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><h2>

வடக்கு - கிழக்கு மக்களின் அரசியல் உரிமைகள்</h2><p>
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,</p><p>

வடக்கு - கிழக்கு தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள் மற்றும் எதிர்கால அரசியல்
இலக்குகளை ஜனநாயக வழிமுறைகளின் ஊடாக முன்னெடுப்பதற்காக “தாயக அரசியல் துறை” என்ற புதிய ஜனநாயக மக்கள் அரசியல் இயக்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. </p><p>

கடந்த காலத்தில் ஆயுதப் போராட்டத்தின் வழியில் தமிழ் மக்களின் விடுதலைக்காகப்
போராடிய முன்னாள் போராளிகள், தமது வரலாற்று அனுபவங்களையும் அரசியல்
உணர்வுகளையும் அடிப்படையாகக் கொண்டு, இனிவரும் காலத்தில் ஜனநாயக அரசியலை தமது
அரசியல் கருவியாகக் கொண்டு மக்களுடன் இணைந்து செயலாற்றுவதற்கு
தீர்மானித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ebe0d58c-65fb-4182-8eae-e180fbb44b61/26-6a9e9fb23d0b4.webp' /></p><p>
</p><p>
இது கடந்த காலத்தை மறுப்பதற்கான முயற்சி அல்ல. மாறாக, கடந்த கால
அனுபவங்களிலிருந்து கற்றுக் கொண்டு, தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளை ஜனநாயக
வழியில் முன்னெடுக்கும் புதிய அரசியல் பாதையின் தொடக்கமாகும்.</p><p>

மக்கள் மயமான அரசியல் இயக்கம்
தாயக அரசியல் துறை முன்னாள் போராளிகளை மட்டும் பிரதிநிதித்துவப்படுத்தும்
அமைப்பாக இல்லாமல், தமிழ் மக்களின் அனைத்து ஜனநாயக சக்திகளையும் ஒன்றிணைக்கும்
மக்கள் மயமான அரசியல் இயக்கமாக வளர்த்தெடுக்கப்படும்.
</p><h2>
தமிழர்களின் பலத்தை நிலை நாட்டும் அமைப்பு</h2><p>
இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள், தொழிலாளர்கள், தொழில் முனைவோர்,
கல்வியாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் முன்னாள் போராளிகள் உள்ளிட்ட
அனைத்து தரப்பினரின் பங்களிப்பையும் ஒன்றிணைத்து, மக்களின் அரசியல் பங்கேற்பை
வலுப்படுத்துவதே எமது நோக்கமாகும்.
</p><p>
எமது அரசியல் அடித்தளம் தாயகம் – தன்னாட்சி – சுயநிர்ணயம் – தமிழ் தேசியம் ஆகும்.
</p><p>
தமிழ் மக்களின் அரசியல், சமூக, பொருளாதார மற்றும் பண்பாட்டு உரிமைகளை
பாதுகாப்பதுடன், வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் அரசியல் எதிர்காலம் தொடர்பான
தீர்வுகளை ஜனநாயக ரீதியில் முன்னெடுப்பதற்கு தாயக அரசியல் துறை செயற்படும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bd81c98f-9396-4b9d-a3d6-a7ad6ebb3983/26-6a9e9fb2e4ab7.webp' /></p><p>
</p><p>
மக்களின் வாக்குரிமை மற்றும் ஜனநாயக பங்கேற்பை மாற்றத்திற்கான முக்கிய
கருவியாகக் கொண்டு, எதிர்காலத்தில் தேர்தல் அரசியலிலும் பங்கேற்று,
மக்களிடமிருந்து நேரடியான அரசியல் ஆணையைப் பெறுவதற்கான நடவடிக்கைகள்
முன்னெடுக்கப்படும்.</p><p>

புதிய தலைமுறைக்கான புதிய அரசியல் பாதை “ஆயுதப் போராட்டத்தின் வழியில் நின்ற
நாம், இனி ஜனநாயக அரசியலை ஆயுதமாகக் கொண்டு மக்களுடன் இணைந்து பயணிப்போம்.”
எமது அரசியல் பயணம் எந்தவொரு தனிநபரின் அதிகாரத்திற்காகவும் அல்ல. </p><p>அது தமிழ்
மக்களின் உரிமைகள், கண்ணியம், அரசியல் பங்கேற்பு மற்றும் எதிர்கால
தலைமுறைகளின் நல்வாழ்வை மையமாகக் கொண்டதாக இருக்கும்.
</p><p>
தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகள் மற்றும் அரசியல் எதிர்காலத்திற்காக
அர்ப்பணிப்புடன் செயலாற்ற விரும்பும் அனைவரையும் இந்தப் புதிய அரசியல்
பயணத்தில் இணைந்து கொள்ளுமாறு அழைக்கின்றோம்.

மக்களே எமது பலம், ஜனநாயகமே எமது வழி, அரசியலே எமது ஆயுதம், என குறிப்பிடப்பட்டுள்ளது.&nbsp; &nbsp;&nbsp;</p><p></p><p></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-07T11:27:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Tony</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிக் பாஸுக்கு சென்ற சன் டிவி சீரியல் நடிகை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/sun-tv-serial-actress-debjani-in-bigg-boss-telugu-1788778655"></link>
            <id>https://cineulagam.com/article/sun-tv-serial-actress-debjani-in-bigg-boss-telugu-1788778655</id>
            <summary type="text">பிக் பாஸ்&amp;nbsp;பிக் பாஸ் நிகழ்ச்சி இந்தியா முழுவதும் பல மொழிகளில் நடந்து வருவது. தமிழில் ஆரம்பத்திலிருந்து கமல்ஹாசன் அவர்கள் இந்த நிகழ்ச்சியை தொகுத்து...</summary>
            <content type="html"><![CDATA[<h2>பிக் பாஸ்&nbsp;</h2><p>பிக் பாஸ் நிகழ்ச்சி இந்தியா முழுவதும் பல மொழிகளில் நடந்து வருவது. தமிழில் ஆரம்பத்திலிருந்து கமல்ஹாசன் அவர்கள் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d7aabc46-b90b-430c-89c8-0a9f8763726f/26-6a9e98a2d5018.webp' /></p><p> 

தற்போது விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிலையில் பிக் பாஸ் தமிழ் 10 கடந்த வாரம் தொடங்கியது.&nbsp;</p><p></p><h2>சன் டிவி சீரியல் நடிகை&nbsp;</h2><p>

சன் டிவி சீரியல் நடிகை


இதில் <a href="https://www.instagram.com/p/Dc8sm1vvlMe/" target="_blank">விஜய் டிவி</a>யை சார்ந்த பல பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர். மேலும், தமிழ் போலவே தெலுங்கில் பிக் பாஸை நாகர்ஜுனா தொகுத்து வழங்குகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0b927bcb-860b-454f-a451-36416ba93798/26-6a9e98a392eec.webp' /></p><p>

இந்த தெலுங்கு பிக் பாஸில் சன் டிவியின் சூப்பர் ஹிட் சீரியல் பராசக்தி நாயகி தெப்ஜெனி இந்த பிக் பாஸ் தெலுங்கில் கலந்துகொண்டுள்ளார். இவருக்கு பெரிய ரசிகர்கள் வட்டம் இருப்பது குறிப்பிடத்தக்கது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/825652d0-f8ba-4e53-ad0a-c7dc929b0bd0/26-6a9e98a44e072.webp' /></p>]]></content>
            <updated>2026-09-07T11:20:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[சொதப்பிய அசலங்கா..முஜீப்பின் சுழல், டி காக்கின் அதிரடியில் பார்படோஸ் அபார வெற்றி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/de-kock-blast-47-runs-bbt-won-by-8-wickets-1788779788"></link>
            <id>https://news.lankasri.com/article/de-kock-blast-47-runs-bbt-won-by-8-wickets-1788779788</id>
            <summary type="text">Barbados tridents beat saint lucia kings by 8 wickets: பார்படோஸ் ட்ரைடென்ட்ஸ் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் செயின்ட் லூசியா கிங்ஸை வீழ்த்தியது.&amp;...</summary>
            <content type="html"><![CDATA[<p>Barbados tridents beat saint lucia kings by 8 wickets: பார்படோஸ் ட்ரைடென்ட்ஸ் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் செயின்ட் லூசியா கிங்ஸை வீழ்த்தியது.&nbsp;</p><p>


CPL டி20 போட்டியில் பார்படோஸ் ட்ரைடென்ட்ஸ் அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் செயின்ட் லூசியா கிங்ஸை வீழ்த்தியது. </p><h2>கமில் பூரன் 37&nbsp;ஓட்டங்கள் </h2><p> 

செயின்ட் லூசியா கிங்ஸ் மற்றும் பார்படோஸ் ட்ரைடென்ட்ஸ் அணிகளுக்கு இடையிலான CPL டி20 போட்டி பிரிட்ஜ்டவுனில் நடந்தது.&nbsp;</p><p><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr">🚨 WHAT A SIX BY KAMIL POORAN! 🤯<br><br>A stunning 91-metre straight six against the spinner!<br><br>Pooran sent the ball flying onto the roof! <a href="https://t.co/QNPDb36N3e">pic.twitter.com/QNPDb36N3e</a></p>&mdash; Pazi. (@CallMePazi1_) <a href="https://x.com/CallMePazi1_/status/2096775289875443763?ref_src=twsrc%5Etfw">September 7, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>
முதலில் துடுப்பாடிய செயின்ட் லூசியா அணியில் கமில் பூரன் 37 (24) ஓட்டங்களும், ரோஸ்டோன் சேஸ் 34 (28) ஓட்டங்களும் விளாசினர். 

ஆனால் பின்னர் வந்த சரித் அசலங்கா 18 பந்துகளில் 12 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து சொதப்பினார்.&nbsp;</p><p></p><p>

முஜீப் உர் ரஹ்மானின் மிரட்டலான சுழற்பந்து வீச்சில் தடுமாறிய செயின்ட் லூசியா கிங்ஸ் 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 138 ஓட்டங்களே எடுத்தது.&nbsp;</p><h2>குயிண்டன் டி காக்&nbsp;அதிரடி </h2><p>
பின்னர் துடுப்பாடிய பார்படோஸ் ட்ரைடென்ட்ஸ் அணியில் பிரண்டன் கிங் (22), ஸகாரி கார்டர் (32) நல்ல தொடக்கம் அமைத்தனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/be943bed-66a9-4742-bada-fa8329dfd53d/26-6a9e9e8b1f12f.webp' /></p><p>

அடுத்து கைகோர்த்த ரிவால்டோ கிளார்க், குயிண்டன் டி காக் 17.5 ஓவர்களிலேயே அணியை வெற்றி பெற வைத்தனர். </p><p>

குயிண்டன் டி காக் (Quinton de Kock) 31 பந்துகளில் 2 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 47 ஓட்டங்களும், கிளார்க் ஒரு சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 36 ஓட்டங்களும் விளாசினர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9d5c5b1e-86df-4ac9-b75f-b81802ff047a/26-6a9e9e8a4e5ee.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-07T11:19:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[போருக்கு பணப் பற்றாக்குறை ; ஆபாசத் துறையை சட்டப்பூர்வமாக்கும் உக்ரைன்?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/funds-war-is-ukraine-legalizing-adult-industry-1788779170"></link>
            <id>https://canadamirror.com/article/funds-war-is-ukraine-legalizing-adult-industry-1788779170</id>
            <summary type="text">&amp;nbsp;உக்ரைன் நாட்டில்&amp;nbsp; &amp;nbsp;தற்போது சட்டவிரோதமாகக் கருதப்படும் ஆபாச உள்ளடக்கத் தயாரிப்பு மற்றும் விநியோகத்தை சட்டப்பூர்வமாக்கி, அதற்கு வரி விதி...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;உக்ரைன் நாட்டில்&nbsp; &nbsp;தற்போது சட்டவிரோதமாகக் கருதப்படும் ஆபாச உள்ளடக்கத் தயாரிப்பு மற்றும் விநியோகத்தை சட்டப்பூர்வமாக்கி, அதற்கு வரி விதிப்பதன் மூலம் கிடைக்கும் வருவாயை போருக்குப் பயன்படுத்தும் திட்டம் குறித்து உக்ரைன் பரிசீலனை செய்து வருகிறது.</p><p>&nbsp;ரஷ்யாவுக்கு எதிரான போர் தொடர்ந்து நீடித்துவரும் நிலையில், கூடுதல் வருவாயை திரட்ட உக்ரைன் அரசு மேற்கொள்ளும் இந்த வித்தியாசமான முயற்சி சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4161efd1-876e-47e4-ad14-24952e66248e/26-6a9e9aa4395d4.webp' /></p><h2>இதன்மூலம் அரசுக்கு கணிசமான வரி வருவாய்&nbsp;</h2><p> 

உக்ரைனில் ஆபாசப் படங்களைத் தயாரித்தல் மற்றும் விநியோகித்தல் உள்ளிட்டவை தற்போது குற்றமாகக் கருதப்படுகின்றன. 

இதற்கு அதிகபட்சமாக 7 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படுகிறது. </p><p>ஆனால், ஆன்லைன் தளங்களின் வளர்ச்சியால் இந்தத் தொழில் ரகசியமாக தொடர்ந்து இயங்கி வருவதாக கூறப்படுகிறது. </p><p>

குறிப்பாக, OnlyFans தளத்தைச் சேர்ந்த தரவுகளின்படி, 2023 ஆம் ஆண்டில் சுமார் 7,900 உக்ரேனியர்கள் 131 மில்லியன் டொலருக்கும் அதிகமான வருவாயை ஈட்டியதாக தகவல் வெளியாகியுள்ளது.
</p><p>
 இதன்மூலம் அரசுக்கு கணிசமான வரி வருவாய் கிடைக்கக்கூடும் என கருதப்படுகிறது. 

ஆகையால், இந்தத் துறையைச் சட்டப்பூர்வமாக்கும் மசோதாவை எதிர்க்கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் யாரோஸ்லாவ் ஜெலெஸ்னியாக் உள்ளிட்டோர் முன்னெடுத்து வருகின்றனர். </p><p>
இதன்மூலம் ஆண்டுக்கு 25 மில்லியன் டொலர் வரை வரி வருவாய் கிடைக்கலாம் என அவர் மதிப்பிட்டுள்ளார். இந்தத் தொகை சுமார் 30,000 இராணுவ ட்ரோன்களை வாங்குவதற்குப் போதுமானதாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். </p><p>
 ஆபாசத் துறையை சட்டப்பூர்வமாக்குவது தொடர்பான விவாதம் நேரடியாக உக்ரைனின் போர் நிதி மற்றும் ட்ரோன் தேவையுடன் இணைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான மசோதா ஏற்கெனவே பாராளுமன்றத்தின் முதல்கட்ட வாக்கெடுப்பில் நிறைவேறி, அடுத்தகட்ட பரிசீலனைக்காக காத்திருக்கிறது. </p><p>

மேலும், இந்தத் துறையைச் சட்டவிரோதமாக வைத்திருப்பது ஊழலுக்கும் வழிவகுப்பதாக சட்டமன்ற உறுப்பினர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.</p><p> 

எனினும், 30,000 ட்ரோன்களுக்கான நிதி என்பது அரசின் மொத்த பாதுகாப்புச் செலவுடன் ஒப்பிடும்போது சிறிய தொகையே. இருந்த போதிலும், போர்க்காலத்தில் உக்ரைன் தனது உள்நாட்டு வருவாய் ஆதாரங்களை அதிகரிக்க முயல்வதன் வெளிப்பாடாக இந்தத் திட்டம் பார்க்கப்படுகிறது.</p><p> 

எனினும் அந்த மசோதா இன்னும் சட்டமாகவில்லை என்பதால், உக்ரைனில் ஆபாசத் துறையை சட்டப்பூர்வமாக்கும் முடிவு இறுதி செய்யப்படுமா என்பது குறித்து இன்னும் விவாதத்திலேயே உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-07T11:10:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிக் பாஸ் சீசன் 10 ; சட்டசபையான வீடு! வெளிநடப்பு செய்த முனியம்மாள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/bigg-boss-tamil-season-10-house-assembly-vijay-tv-1788779575"></link>
            <id>https://jvpnews.com/article/bigg-boss-tamil-season-10-house-assembly-vijay-tv-1788779575</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp;இரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பிக் பாஸ் 10 நிகழ்ச்சி நேற்று (06) மாலை தொடங்கியது. இதில் 19 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp; &nbsp;இரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பிக் பாஸ் 10 நிகழ்ச்சி நேற்று (06) மாலை தொடங்கியது. இதில் 19 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். 

பிக் பாஸ் வீட்டில் முதல் நாளான இன்று (07), கேப்டன் தேர்வு நடைபெற்ற Promo வீடியோ வெளியானது.</p><p> அதை தொடர்ந்து தற்போது வெளியாகியுள்ள இரண்டாவது மற்றும் மூன்றாவது Promo வீடியோவில் ஜனநாயகத்தின் பிரதிபலிப்பாக 'Democracy room' என்பதை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4bead895-79ed-4879-b687-52ca6e1afec6/26-6a9e9c3936227.webp' /></p><h2>ஆளும் அணி - எதிர் அணி என இரு தரப்பு</h2><p> </p><p>

இதில் ஆளும் கட்சி - எதிர்கட்சி என சட்டமன்றத்தில் உள்ளது போலவே, ஆளும் அணி - எதிர் அணி என இரு தரப்பு உள்ளது. இதற்கு தலைவராக ஷதிகா உள்ளார்.</p><p></p><p> </p><p>

இந்நிலையில், தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் ஷதிகா முறைத்துக்கொண்டு, Rough-ஆக Democracy room-ஐ வழிநடத்த வேண்டாம் என முனியம்மாள் கூற, உங்கள மாறி ஒரு ஆள உக்கார வெச்சிருந்தா அது மாறத்தான் செய்யும்' என ஷதிகா கூறுகிறார்.</p><p> 

இதனால் Democracy room-லிருந்து முனியம்மாள் உடனடியாக தான் வெளிநடப்பு செய்கிறேன் என கூறிவிட்டு வெளியேறுகிறார்.&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/Mqxr4p5HMKw" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-09-07T11:09:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரஷ்யாவில் மலையேறுபவர்கள் பலர் பனிச்சரிவில் சிக்கி அடித்துச் செல்லப்பட்டு மரணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/russia-horror-avalanche-11-climbers-1788779479"></link>
            <id>https://news.lankasri.com/article/russia-horror-avalanche-11-climbers-1788779479</id>
            <summary type="text">Climbers are swept away to their death in avalanche: மலை ஏறுபவர்கள் பனிச்சரிவில் அடித்துச் செல்லப்பட்டு மரணமடைந்துள்ளனர்.  
ரஷ்யாவின் வடக்கு காகசஸ் ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>Climbers are swept away to their death in avalanche: மலை ஏறுபவர்கள் பனிச்சரிவில் அடித்துச் செல்லப்பட்டு மரணமடைந்துள்ளனர். </p><p> 
ரஷ்யாவின் வடக்கு காகசஸ் பிராந்தியத்தில் உள்ள கபர்தினோ-பால்காரியா பகுதியில், பனிச்சரிவு ஏற்பட்டதில் மலையேற்றக் குழுவினர் குறைந்தது 11 பேர் மரணமடைந்துள்ளனர்.</p><h2>ஆறு பேரின் நிலை</h2><p>
</p><p>ஞாயிற்றுக்கிழமை உள்ளூர் நேரப்படி மாலை 5 மணியளவில், ரஷ்யாவின் வடக்கு காகசஸ் பகுதியின் மிக உயர்ந்த சிகரங்களில் ஒன்றான மிசிர்கி மலையில் பனிச்சரிவு ஏற்பட்டதில், மலையேற்ற வீரர்கள் 33 பேர் கொண்ட குழு அதில் சிக்கியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/91ef9cdf-6744-4203-a707-5949fb76cc1f/26-6a9e9bd93860a.webp' /></p><p> </p><p>திங்கட்கிழமை உள்ளூர் நேரப்படி காலை 9 மணி நிலவரப்படி, 10 மலையேறுபவர்கள் தாங்களாகவே மலையிலிருந்து கீழே இறங்கியிருந்தனர்; அதேவேளை 6 பேர்கள் காயங்களுடன் மீட்கப்பட்ட நிலையில், மற்ற ஆறு பேரின் நிலை என்னவென்று தெரியவில்லை என்று அவசரச் சேவைக் குழுவினர் தெரிவித்துள்ளனர். </p><p>தேடல் மற்றும் மீட்புப் பணியில் 50-க்கும் மேற்பட்ட அவசரக்காலப் பணியாளர்கள் ஈடுபட்டிருந்தனர்; இருப்பினும், கடினமான நிலப்பரப்பு மற்றும் மேலும் பனிச்சரிவுகள் ஏற்படும் அபாயம் ஆகியவை இப்பணிகளுக்குத் தடையாக இருந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.</p><p></p><p> </p><p>காணாமல் போன ஆறு மலையேற்ற வீரர்களுக்காக Mi-8 ரக ஹெலிகொப்டர்களைப் பயன்படுத்திப் பெரிய அளவிலான மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. </p><p>காயமடைந்த ஆறு மலையேற்ற வீரர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ரஷ்யா-ஜார்ஜியா எல்லையில் சுமார் ஒன்பது மைல் நீளத்திற்குப் பரந்து விரிந்துள்ள, பனிப்பாறைகள் அடர்ந்த ஒரு பிரம்மாண்டமான மலைத் தடுப்பான பெசெங்கி பள்ளத்தாக்கில், அந்த மாபெரும் பனிச்சரிவு மலையேறுபவர்களை மொத்தமாக மூடியுள்ளது. </p><p>இரட்டைச் சிகரங்களைக் கொண்ட மிசிர்கி மலை மீது அதிகாரப்பூர்வமாகப் பதிவு செய்யப்பட்ட முதல் ஏறுதல் பயணம், 1889-ஆம் ஆண்டில் பிரித்தானிய மலையேற்ற வீரரான ஹெர்மன் வூலியால் மேற்கொள்ளப்பட்டது. </p><p>இந்த ஆண்டின் தொடக்கத்தில், ஐரோப்பாவின் மிக உயரமான மலையில் உள்ள ஒரு பனிச்சறுக்கு விடுதியை மிகப்பெரிய பனிச்சரிவு ஒன்று சூழ்ந்துகொண்டது; இதனால் சுற்றுலாப் பயணிகள் தங்கள் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள ஓடினர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f0b6153d-bf7c-4eb3-9c62-602a644b1ed4/26-6a9e9bd9e83d8.webp' /></p><p> </p><p>தெற்கு ரஷ்யாவில் உள்ள எல்ப்ரஸ் மலையில் வியாழக்கிழமையன்று, பனிப்பெருக்கெடுப்பு ஒன்று மலைச்சரிவில் அதிவேகமாகக் கீழே பாய்ந்து வருவதைக் காணொளி ஒன்றில் பதிவு செய்யப்பட்டுள்ளது. </p><p>5,642 மீற்றர் உயரமுள்ள மவுண்ட் எல்ப்ரஸ் ஐரோப்பாவின் மிக உயர்ந்த சிகரமாகும்; இது சவாலானதாக இருப்பினும், மலையேற்றத்திற்குப் பிரபலமான ஒரு இடமாகும். </p><p>இம்மலையில் ஆண்டுதோறும் சுமார் 15 முதல் 30 பேர் மரணமடைகின்றனர்; இவர்களில் பலர், திடீர் வானிலை மாற்றங்களால் சிக்கிக்கொள்ளும், போதிய முன்னேற்பாடுகள் இல்லாத மலையேறுபவர்கள் ஆவர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-07T11:08:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[அநுராதபுர பேரணியில் கலந்துகொள்ளவுள்ள மகிந்த : மொட்டுக்கட்சி அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/mahinda-to-participate-in-slpp-anuradhapura-rally-1788777922"></link>
            <id>https://ibctamil.com/article/mahinda-to-participate-in-slpp-anuradhapura-rally-1788777922</id>
            <summary type="text">சிறிலங்கா பொதுஜன பெரமுனவினால் எதிர்வரும் 12ஆம் திகதி அநுராதபுர நகரில் நடத்தப்படவுள்ள மக்கள் பேரணி எக்காரணத்தைக் கொண்டும் நடத்தப்படும் என்று&amp;nbsp;முன்ன...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிறிலங்கா பொதுஜன பெரமுனவினால் எதிர்வரும் 12ஆம் திகதி அநுராதபுர நகரில் நடத்தப்படவுள்ள மக்கள் பேரணி எக்காரணத்தைக் கொண்டும் நடத்தப்படும் என்று&nbsp;முன்னாள் அமைச்சரும் கட்சியின் செயற்பாட்டுத் தலைவருமான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.</p><p>அத்துடன் பொதுஜன பெரமுனவின் மக்கள் பேரணி மேடைக்கு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ச வருகை தரவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.</p><p>
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ச மக்கள் பேரணியில் கலந்து கொண்டாலும், அவர் பொது மேடையில் ஏறி மக்களிடையே உரையாற்றுவதைத் தவிர்த்துவிட்டு ,மேடைக்கு முன்னால் உள்ள மக்கள் மத்தியில் அல்லது வேறு அமர்வில் இருந்து கொண்டு பேரணியில் கலந்து கொள்ளத் தீர்மானித்துள்ளார்.</p><p></p><h2>இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் கைது</h2><p>கடந்த வெள்ளிக்கிழமையன்று (04) இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட நாமல் ராஜபக்‌ நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து, எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bf28d3b8-dc5f-4cf7-bb59-5104d49b3eca/26-6a9e9879d042d.webp' /></p><p>இந்த சூழ்நிலையில் சிறிலங்கா பொதுஜன பெரமுன இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளது” என ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மேலும் தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-07T11:07:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆல்பர்ட்டா மாகாணம் தனி நாடாகும் விவகாரம்: அடுத்த மாதம் வாக்கெடுப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/poll-on-alberta-separation-to-be-on-october-19-1788779227"></link>
            <id>https://canadamirror.com/article/poll-on-alberta-separation-to-be-on-october-19-1788779227</id>
            <summary type="text">Albertans go to the polls on October 19 to vote on whether Alberta should stay with Canada or leave: ஆல்பர்ட்டா மாகாண மக்கள், கனடாவுடன் இருப்பதா அல்லத...</summary>
            <content type="html"><![CDATA[<p>Albertans go to the polls on October 19 to vote on whether Alberta should stay with Canada or leave: ஆல்பர்ட்டா மாகாண மக்கள், கனடாவுடன் இருப்பதா அல்லது பிரிவதா என்பது தொடர்பில் அடுத்த மாதம் சில முடிவுகள் எடுக்க இருக்கிறார்கள்.
</p><p>

ஆல்பர்ட்டா மாகாணத்தை கனடாவிலிருந்து பிரித்து தனி நாடாக்குவதில் ஆல்பர்ட்டா மாகாண மக்களில் ஒரு பிரிவினர் உறுதியாக உள்ளார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/12064187-7d0f-4d9d-ad64-604504f7d879/26-6a9e9adc783d8.webp' /></p><p>
</p><p>
இந்நிலையில், கனடா மாகாணம் பிரிவது தொடர்பில் அக்டோபர் மாதம் 19ஆம் திகதி வாக்கெடுப்பு ஒன்று நடத்த திட்டமிடப்பட்டுவருகிறது.
</p><p>
விடயம் என்னவென்றால், அந்த வாக்கெடுப்பில், ஆல்பர்ட்டா மாகாணம் கனடாவுடன் தொடர்ந்து இணைந்தே இருப்பதா அல்லது பிரிவதா என்னும் கேள்விகள் நேரடியாக கேட்கப்படப்போவது இல்லை.
</p><p>
மாறாக, ஆல்பர்ட்டா மாகாணம் கனடாவுடன் தொடர்ந்து இணைந்தே இருப்பதா அல்லது பிரிவது தொடர்பில் ஒரு பொது வாக்கெடுப்பு நடத்தவேண்டுமா என்னும் கேள்விகள்தான் கேட்கப்பட உள்ளன.
</p><p>
இந்நிலையில், ஆல்பர்ட்டா பிரிவதற்கு ஆதரவளிக்கும் அமைப்பொன்று, வாக்கெடுப்பில் கனடாவிலிருந்து பிரிவது என ஆல்பர்ட்டா மக்கள் முடிவெடுக்கும் பட்சத்தில், ஆல்பர்ட்டாவில் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பது தொடர்பான விடயங்களைக் கூறும் 214 பக்கங்கள் கொண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
</p><p>
ஏற்கனவே ஆல்பர்ட்டா மாகாணம் இயங்கிக்கொண்டுதான் இருக்கிறது, அப்படியிருக்கும் பட்சத்தில், அது பிரிவதால் எதுவும் நின்றுவிடப்போவதில்லை என்கிறார்கள் ஆதரவாளர்கள்.
</p><p>
ஆனாலும், ராணுவம், ஆல்பர்ட்டாவிலிருந்து கனடாவின் பிற பகுதிகளுக்கு போக்குவரத்து, கடன், மின்சாரம், எரிபொருள் போன்ற விடயங்கள், ஓய்வூதியம், எல்லைகள், சொத்துக்கள் போன்ற விடயங்கள் குறித்து கனடாவுடனும், பூர்வக்குடியினர் உள்ளிட்ட மற்றவர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தவேண்டியிருக்கும் என்கிறார்கள் பிரிவதை ஆதரிப்பவர்கள்.</p><p>

எதிர்ப்பவர்களோ, பிரிந்தால் பிரிந்ததுதான், அதற்குப் பிறகு பேச்சுவார்த்தையெல்லாம் எடுபடாது என்கிறார்கள்.

ஆக, என்ன நடக்கப்போகிறது என்பது இன்னும் ஒரு மாதத்தில் தெரியலாம்!&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-07T11:07:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[குடும்பத்துடன் சென்று புதிய சொகுசு கார் வாங்கிய அபர்ணா தாஸ் – வைரலாகும் வீடியோ!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/actress-aparna-das-buys-new-car-video-viral-1788777883"></link>
            <id>https://manithan.com/article/actress-aparna-das-buys-new-car-video-viral-1788777883</id>
            <summary type="text">நடிகை அபர்ணா தாஸ் தனது குடும்பத்துடன் புதிய வெள்ளை நிற சொகுசு காரை வாங்கியுள்ளார். அந்த மகிழ்ச்சியான தருணத்தின் வீடியோவை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து...</summary>
            <content type="html"><![CDATA[<p>நடிகை அபர்ணா தாஸ் தனது குடும்பத்துடன் புதிய வெள்ளை நிற சொகுசு காரை வாங்கியுள்ளார். அந்த மகிழ்ச்சியான தருணத்தின் வீடியோவை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ள நிலையில், ரசிகர்கள் வாழ்த்துக்களையும் குவித்து வருகின்றனர்.</p><h2>அபர்ணா தாஸ் </h2><p>
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் படத்தில் ஒரு சின்ன ரோலில் நடித்து தமிழக மக்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகை அபர்ணா தாஸ்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/58a45613-267c-4be9-95d4-c576a532ef6e/26-6a9e994887b2e.webp' /></p><p></p><p>
</p><p>
பீஸ்ட் படத்தை தொடர்ந்து இவர் கடந்தாண்டு வெளியான டாடா படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார்.

இப்படத்தில் நடிகர் கவினுக்கு ஜோடியாக நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். </p><p>இந்த படம் பெரிய அளவில் வெற்றியடைய அடுத்தடுத்து இவர் தொடர்ந்தும் சினிமாவில் ஈடுபாடு காட்டுவார் என ரசிகர்களால் எதிர்ப்பார்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/009f0977-f9b8-4d32-89d3-87221e369e11/26-6a9e99494b3e7.webp' /></p><p></p><p>
</p><p>ஆனால் அபர்ணா தாஸ் மலையாள நடிகர் தீபக் பரம்போல் என்பவரை காதலித்து வந்த நிலையில் கடந்த 2024ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆனார்.அதன்பிறகும் சில படங்கள் கமிட்டாகி நடித்து வருகிறார்.</p><p>

அபர்ணா தாஸின் கணவர் தீபக் பரம்போல்,மலையாளத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆன மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><h2>புதிய சொகுசு கார்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/062bb0ec-9254-4b5f-a271-7f7077602a4d/26-6a9e9947cefeb.webp' /></p><p>
</p><p>சினிமா போட்டோ ஷுட், குடும்பம் என பிஸியாக இருக்கும் நடிகை அபர்ணா தாஸ் தற்போது புதியதாக சொகுசு கார் ஒன்று வாங்கியுள்ளார்.
வெள்ளை நிற Luxe Moto காரை வாங்கியுள்ளார், புதிய காரை தனது குடும்பத்துடன் சென்று வாங்கிய அழகிய தருணத்தின் காணொளியை ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார். </p><p>

குறித்த காணொளி தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளதுடன் ரசிகர்களின் வாழ்த்துக்களையும், லைக்குகளையும் குவித்து வருகின்றது.&nbsp; &nbsp;&nbsp;</p><p><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/reel/Dc6TJ4WT3QY/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/reel/Dc6TJ4WT3QY/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/reel/Dc6TJ4WT3QY/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by Aparna Das💃🏻 (@aparna.das1)</a></p></div></blockquote> <script async src="//www.instagram.com/embed.js"></script></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-07T11:04:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆல்பர்ட்டா மாகாணம் கனடாவிலிருந்து பிரியும் விவகாரம்: வாக்கெடுப்பு குறித்த தகவல்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/albertans-go-to-vote-on-october-19-for-seperation-1788778873"></link>
            <id>https://news.lankasri.com/article/albertans-go-to-vote-on-october-19-for-seperation-1788778873</id>
            <summary type="text">Albertans go to the polls on October 19 to vote on whether Alberta should stay with Canada or leave: ஆல்பர்ட்டா மாகாண மக்கள், கனடாவுடன் இருப்பதா அல்லத...</summary>
            <content type="html"><![CDATA[<p>Albertans go to the polls on October 19 to vote on whether Alberta should stay with Canada or leave: ஆல்பர்ட்டா மாகாண மக்கள், கனடாவுடன் இருப்பதா அல்லது பிரிவதா என்பது தொடர்பில் அடுத்த மாதம் சில முடிவுகள் எடுக்க இருக்கிறார்கள்.
</p><p>

ஆல்பர்ட்டா மாகாணத்தை கனடாவிலிருந்து பிரித்து தனி நாடாக்குவதில் ஆல்பர்ட்டா மாகாண மக்களில் ஒரு பிரிவினர் உறுதியாக உள்ளார்கள்.
</p><h3>
அடுத்த மாதம் சில முடிவுகள்
</h3><p>
இந்நிலையில், கனடா மாகாணம் பிரிவது தொடர்பில் அக்டோபர் மாதம் 19ஆம் திகதி வாக்கெடுப்பு ஒன்று நடத்த திட்டமிடப்பட்டுவருகிறது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6703a8d0-90f1-48cb-8558-ec9657a6d37b/26-6a9e997b2eea2.webp' /></p><p>
விடயம் என்னவென்றால், அந்த வாக்கெடுப்பில், ஆல்பர்ட்டா மாகாணம் கனடாவுடன் தொடர்ந்து இணைந்தே இருப்பதா அல்லது பிரிவதா என்னும் கேள்விகள் நேரடியாக கேட்கப்படப்போவது இல்லை.
</p><p>
மாறாக, ஆல்பர்ட்டா மாகாணம் கனடாவுடன் தொடர்ந்து இணைந்தே இருப்பதா அல்லது பிரிவது தொடர்பில் ஒரு பொது வாக்கெடுப்பு நடத்தவேண்டுமா என்னும் கேள்விகள்தான் கேட்கப்பட உள்ளன.&nbsp;</p><p></p><p>
இந்நிலையில், ஆல்பர்ட்டா பிரிவதற்கு ஆதரவளிக்கும் அமைப்பொன்று, வாக்கெடுப்பில் கனடாவிலிருந்து பிரிவது என ஆல்பர்ட்டா மக்கள் முடிவெடுக்கும் பட்சத்தில், ஆல்பர்ட்டாவில் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பது தொடர்பான விடயங்களைக் கூறும் 214 பக்கங்கள் கொண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7cce7904-0608-4463-8dc6-7ccb28b429df/26-6a9e997bd85df.webp' /></p><p>
ஏற்கனவே ஆல்பர்ட்டா மாகாணம் இயங்கிக்கொண்டுதான் இருக்கிறது, அப்படியிருக்கும் பட்சத்தில், அது பிரிவதால் எதுவும் நின்றுவிடப்போவதில்லை என்கிறார்கள் ஆதரவாளர்கள்.
</p><p>
ஆனாலும், ராணுவம், ஆல்பர்ட்டாவிலிருந்து கனடாவின் பிற பகுதிகளுக்கு போக்குவரத்து, கடன், மின்சாரம், எரிபொருள் போன்ற விடயங்கள், ஓய்வூதியம், எல்லைகள், சொத்துக்கள் போன்ற விடயங்கள் குறித்து கனடாவுடனும், பூர்வக்குடியினர் உள்ளிட்ட மற்றவர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தவேண்டியிருக்கும் என்கிறார்கள் பிரிவதை ஆதரிப்பவர்கள்.</p><p>

எதிர்ப்பவர்களோ, பிரிந்தால் பிரிந்ததுதான், அதற்குப் பிறகு பேச்சுவார்த்தையெல்லாம் எடுபடாது என்கிறார்கள்.

ஆக, என்ன நடக்கப்போகிறது என்பது இன்னும் ஒரு மாதத்தில் தெரியலாம்!&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-07T11:01:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[குறைந்த வருமானம் உள்ள குடும்பங்களுக்கு வீடுகளை பரிசளித்த அரசாங்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/government-provides-houses-to-low-income-families-1788775296"></link>
            <id>https://ibctamil.com/article/government-provides-houses-to-low-income-families-1788775296</id>
            <summary type="text">ரண்விமன வீடமைப்புத் திட்டத்தின் கீழ் குறைந்த வருமானம் பெறும் 6 குடும்பங்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட புதிய வீடுகள் கையளிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ரண்விமன வீடமைப்புத் திட்டத்தின் கீழ் குறைந்த வருமானம் பெறும் 6 குடும்பங்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட புதிய வீடுகள் கையளிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.</p><p>
சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களத்தினால் இந்த வீடமைப்புத் திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>இதன்படி பிரதி அமைச்சர் வசந்த பியதிஸ்ஸ தலைமையில் பாணம, லாஹுகல மற்றும் பொத்துவில் ஆகிய பகுதிகளில் குறைந்த வருமானம் பெறும் 6 குடும்பங்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட வீடுகள் அண்மையில் கையளிக்கப்பட்டன.</p><p></p><h2>மொத்த பெறுமதி 20 இலட்சம் ரூபாய்</h2><p>
</p><p>
ஒவ்வொரு வீட்டின் நிர்மாணத்திற்காகவும் சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களத்தினால் 10 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c5bc3b97-9cea-4cd2-8e56-f3fd3ece023d/26-6a9e973200b3f.webp' /></p><p>கையளிக்கபட்ட வீடுகளின் பயனாளர்களின் தொழிலாளர் பங்களிப்பு உள்ளிட்டவற்றுடன் ஒவ்வொரு வீட்டினதும் மொத்த பெறுமதி 20 இலட்சம் ரூபாய்க்கும் அதிகமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

மேலும், வீடுகளைப் பெற்றுக்கொண்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அடங்கிய பொதியொன்றும் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-07T10:57:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[அம்பிட்டிய சுமணரத்ன தேரர் வழக்கில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ampitiye-sumanarathana-thero-arrested-1788764910"></link>
            <id>https://tamilwin.com/article/ampitiye-sumanarathana-thero-arrested-1788764910</id>
            <summary type="text">புதிய இணைப்புமட்டக்களப்பு&amp;nbsp;பொலிஸாரால் கைது செய்யப்பட்ட ஸ்ரீ மங்களாராம விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரர் நாளை(08.09.2026) வரை விளக்க...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>மட்டக்களப்பு&nbsp;பொலிஸாரால் கைது செய்யப்பட்ட ஸ்ரீ மங்களாராம விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரர் நாளை(08.09.2026) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.&nbsp;</p><p>மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய போதே இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><h2>முதலாம் இணைப்பு</h2><p>மட்டக்களப்பு மங்களராம விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரர் மட்டக்களப்பு பொலிஸாரால் இன்று (07) கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>மட்டக்களப்பில் உள்ள புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்க பணியகத்தின் அலுவலகத்திற்கு சென்று கடந்த 31 ஆம் திகதி அங்குள்ள அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p><span style="font-size: 14px;">கைது செய்யப்பட்ட அம்பிட்டிய சுமனரத்ன தேரர் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட உள்ளார்.</span></p><p>&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/G6qSX55IYH8" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><h2>02.09.2026 ஆம் திகதி ஏற்பட்ட சர்ச்சை..&nbsp;&nbsp;</h2><p>அம்பிட்டிய சுமனரத்ன தேரர், புவிச்சரிதவியல் அளவைகள் மற்றும் சுரங்கங்கள் பணியகத்தின் (GSMB) மட்டக்களப்பு அலுவலகத்திற்குச் சென்று, அங்கே பணியாற்றும் தமிழ் அதிகாரி ஒருவரை மிரட்டியுள்ளார் என்ற செய்தி (02.09.2026) <a href="https://tamilwin.com/article/ampitiya-sumanaratana-thero-viral-video-1788293216" target="_blank"><b>எமது தளத்தில்</b></a> செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சியை அடிப்படையாக கொண்டு வெளியிடப்பட்டிருந்தது.</p><p>குறித்த திகதியில்&nbsp;மட்டக்களப்பு பொலிஸார் முறைப்பாடு பதிவு செய்யவும், கைது செய்யவும் தயக்கம் காட்டிய நிலையில் எமது தளத்தில் செய்தி வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.</p><p>இந்த சூழலில் எமது தளத்தில் வெளியான குறித்த&nbsp;காணொளியை அடிப்படையாக வைத்து இக்கைது இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p><br></p><p>&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/_taHX-CZ18s" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-07T10:52:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அம்பிட்டிய சுமண ரத்ன தேரருக்கு விளக்கமறியல்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/remand-for-ampitiya-sumanarathana-thero-1788778462"></link>
            <id>https://jvpnews.com/article/remand-for-ampitiya-sumanarathana-thero-1788778462</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;மட்டக்களப்பில் கைதான மங்களாராம விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமண ரத்ன தேரரை நாளை (8) வரையில் விளக்கமறியலில் வைக்க மட்டக்களப்பு நீதவா...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;மட்டக்களப்பில் கைதான மங்களாராம விகாரையின்<a href="https://jvpnews.com/article/ampitiye-sumanarathana-thero-arrested-1788767996" target="_blank"> விகாராதிபதி அம்பிட்டிய சுமண ரத்ன தேரரை</a> நாளை (8) வரையில் விளக்கமறியலில் வைக்க மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. </p><p>

கடந்த 31 ஆம் திகதி, மட்டக்களப்பில் உள்ள புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்க பணியகத்தின் அலுவலகத்திற்கு சென்று, அங்குள்ள அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் மட்டக்களப்பு தலைமையக பொலிஸாரினால் அவர் இன்று முற்பகல் கைது செய்யப்பட்டிருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/63433c20-a93d-4f12-80c3-37cf0ce802cc/26-6a9e97df862a1.webp' /></p><h2>தேரருக்கு இரண்டு வழக்குகளின் கீழ் பிடியாணை</h2><p> 

 சந்தேகநபர் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், அவரை நாளை வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.</p><p></p><p> 

அதேநேரம் தேரருக்கு எதிராக வேறு இரண்டு வழக்குகளின் கீழ் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது. 

குறித்த வழக்குகளில் அவருக்கு தலா ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-07T10:51:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[விஜய் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது.. 'மண்டாடி' ப்ரோமோஷனில் பேசிய நடிகர் சூரி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/actor-soori-about-cm-vijay-place-in-cinema-1788777905"></link>
            <id>https://cineulagam.com/article/actor-soori-about-cm-vijay-place-in-cinema-1788777905</id>
            <summary type="text">விஜய் இடத்தை சினிமாவில் வேறு யாராலும் நிரப்ப முடியாது என சமீபத்தில் நடிகர் சூரி பேசியது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.சூரி -&amp;nbsp;மண்டாடி
விடுத...</summary>
            <content type="html"><![CDATA[<p>விஜய் இடத்தை சினிமாவில் வேறு யாராலும் நிரப்ப முடியாது என சமீபத்தில் நடிகர் சூரி பேசியது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.</p><p></p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">சூரி -&nbsp;மண்டாடி</span></p><p>
விடுதலை திரைப்படத்திற்கு பின் ஆக்ஷன் ஹீரோவாக மாறிய சூரி, கொட்டுக்காளி, கருடன், மாமன், தொடர்ந்து ஹிட் திரைப்படங்களில் நடித்து தனி இடத்தை பிடித்துள்ளார். இவர் நடிப்பில் அடுத்ததாக உருவாகியுள்ள மாஸ் ஆக்ஷன் திரைப்படம் மண்டாடி.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b3ce6bef-a2fe-4ab5-aa65-523d5c9fd1ce/26-6a9e95b3f1d0c.webp' /></p><p>
</p><p>இப்படத்தை அறிமுக இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கியுள்ளார். இப்படத்தில் தெலுங்கு நடிகர் சுஹாஸ் தமிழில் அறிமுகமாகிறார். மேலும் மஹிமா நம்பியார், சத்யராஜ் ஆகியோர் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் குமார் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். செப்டம்பர் 10-ஆம் தேதி இப்படம் வெளியாகிறது.</p><h2>
சூரியின் பேச்சு
</h2><p>
இந்நிலையில், மண்டாடி படத்தின் ப்ரோமோஷன் வேலைகளில் இருக்கும் நடிகர் சூரி, சமீபத்தில் முதலமைச்சர் விஜய் குறித்து தெரிவித்த கருத்து இணையத்தில் வைரலாகி வருகிறது.</p><p>

அவர் பேசியது, "நான் நடித்த மண்டாடி திரைப்படம் தொடர்பான நிகழ்ச்சி கோவையில் 2 நாட்கள் நடக்கிறது. இப்படம் மீனவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் இருக்கும் என நம்புகிறேன்" என்றார்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/921e5337-1394-4e0f-b15e-b6aa47a2f9dd/26-6a9e95b4ae123.webp' /></p><p>பின் முதலமைச்சர் விஜய் குறித்து பேசும்போது, "தமிழக முதலமைச்சர் விஜய் பொறுப்பேற்ற பின், சட்டசபை நிகழ்வுகளை பொதுமக்கள் பார்க்க தொடங்கிவிட்டனர். இது ஒரு ஆரோக்கியமான விஷயம்தான். சினிமா துறையில் நடிகராக விஜய் இல்லாதது ஏமாற்றம்தான். அந்த இடத்தை யாராலும் நிரப்ப முடியாது" என கூறினார்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-07T10:45:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[10 மில்லியன் மதிப்புள்ள பறவைகள் கடத்தல்: 4 பேர் கைது - படகும் வானும் பறிமுதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/smuggling-birds-10-million-4-arrested-seized-1788776859"></link>
            <id>https://tamilwin.com/article/smuggling-birds-10-million-4-arrested-seized-1788776859</id>
            <summary type="text">கல்பிட்டிய கோட்டைக்கு அருகிலுள்ள துறைமுகப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட
சிறப்பு பொலிஸ் சோதனையின் போது, கடல் வழியாகச் சட்டவிரோதமாகக் கடத்தி
வரப்பட்டதாகச...</summary>
            <content type="html"><![CDATA[<p>கல்பிட்டிய கோட்டைக்கு அருகிலுள்ள துறைமுகப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட
சிறப்பு பொலிஸ் சோதனையின் போது, கடல் வழியாகச் சட்டவிரோதமாகக் கடத்தி
வரப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் சுமார் 200 புறாக்கள் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
</p><p>அத்துடன் இச்சம்பவம் தொடர்பாக நான்கு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>

புத்தளம் பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் கண்காணிப்பாளரின் நேரடி
வழிகாட்டலின் கீழ், சிறப்பு பொலிஸ் படையொன்றினால் இந்த நடவடிக்கை
முன்னெடுக்கப்பட்டது.</p><h3>சட்ட நடவடிக்கை&nbsp;</h3><p>

அத்துடன் பணப் பந்தயம் வைக்கும் புறாப் பந்தயங்களில் பயன்படுத்துவதற்காகவே
இந்தப் புறாக்கள் சட்டவிரோதமாக இலங்கைக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகப்
பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/15659dfd-0314-49ac-8c0a-ab8497172b6d/26-6a9e93085cd80.webp' /></p><p>

இந்த நிலையில் புறாக்களுடன் சேர்த்து, கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்டதாக
நம்பப்படும் ஒரு படகு, அதன் இயந்திரம் மற்றும் ஒரு வேன் ஆகியவையும்
பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.</p><p>

மேலும் கைப்பற்றப்பட்ட ஒரு புறாவின் மதிப்பு சுமார் ரூ. 50,000 என
மதிப்பிடப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், பறிமுதல் செய்யப்பட்ட அனைத்து புறாக்களின் மொத்த மதிப்பு
ஏறத்தாழ ரூ. 10 மில்லியன் (1 கோடி) ஆகும்.
</p><p>
இதேவேளை கைது செய்யப்பட்ட நான்கு சந்தேக நபர்களில் ஒருவர் மாவனெல்ல பகுதியைச்
சேர்ந்தவர் என்றும், ஏனைய மூவரும் கல்பிட்டிய பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும்
தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் அனைவரும் விரைவில் நீதிமன்றத்தில் முன்னிலைப்
படுத்தப்படவுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-07T10:43:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[அவுஸ்திரேலியாவில் நிமல் பெரேராவை சந்திக்க முயற்சித்த நாமலின் சட்டத்தரணி! மெல்பேர்னில் நடந்த அதிர்ச்சியளிக்கும் சம்பவங்கள்...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-rajapaksa-arrested-nimal-perera-businessman-1788742407"></link>
            <id>https://tamilwin.com/article/namal-rajapaksa-arrested-nimal-perera-businessman-1788742407</id>
            <summary type="text">நாமல் ராஜபக்சவின் நெருங்கிய நண்பராக இருந்த தொழிலதிபர் நிமல் பெரேரா, இரு சந்தர்ப்பங்களில் சாட்சியமளிக்க உள்ளதாக விசாரணை அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாமல் ராஜபக்சவின் நெருங்கிய நண்பராக இருந்த தொழிலதிபர் நிமல் பெரேரா, இரு சந்தர்ப்பங்களில் சாட்சியமளிக்க உள்ளதாக விசாரணை அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். </p><p>மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலம் முதல் ராஜபக்ச குடும்பத்தின் நெருங்கிய நண்பராக இருந்த இவர், தற்போது அவுஸ்திரேலியாவில் வசித்து வருகிறார்.</p><p>நாமல் ராஜபக்ச தொடர்பில் தொழிலதிபர் நிமல் பெரேரா சாட்சியமளிப்பதை தடுக்கும் வகையிலான பாரிய முயற்சியொன்று அவுஸ்திரேலியாவில் வைத்தும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>&nbsp;</p><h2>நிமல் பெரேராவை சந்திக்க முயற்சித்தவர்</h2><p>

நாமல் ராஜபக்சவின் சகாக்களில் ஒருவரான இந்திக கருணாஜீவ, மெல்பேர்ன், விக்டோரியாவில் வசித்து வரும் வழக்கறிஞராவார். </p><p>ராஜபக்சவின் நீண்டகால நண்பரான இவர், அவுஸ்திரேலியாவில் உள்ள நிமல் பெரேராவைத் தொடர்புகொண்டு நாமல் ராஜபக்சவிற்கு எதிராக எந்தவொரு வாக்குமூலத்தையும் வழங்க வேண்டாம் என கோருவதற்கு தீவிர முயற்சி செய்ததாக தெரியவந்துள்ளது. </p><p>கருணாஜீவ, Narre Warren, VIC 3805, 66 Victor Crescent, Level 2, Suite 319 இல் அமைந்துள்ள ISK Law இன் முதன்மை வழக்கறிஞராவார்.
</p><p>
ஆனால் கருணாஜீவவால் நிமல் பெரேராவைத் தொடர்புகொள்ள முடியவில்லை. நிமல் பெரேரா அவரது அழைப்புகளுக்கு பதிலளிக்கவில்லை என்றும் குறுஞ்செய்திகளுக்கு பதிலளிப்பதைத் தவிர்த்துவிட்டார் என்றும் கூறப்படுகிறது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c3e69677-6fbf-4574-a2f3-3c5249c9250c/26-6a9e0b09be350.webp' /></p><p>இதன் காரணமாக கருணாஜீவவின் முயற்சி தோல்வியடைந்ததாகவும், இச்சம்பவம் நாமல் ராஜபக்சவை முற்றிலும் விரக்தியடையச் செய்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
</p><p>
அவுஸ்திரேலியா சென்ற CID மற்றும் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகளுக்கு இது தெரியவந்ததையடுத்து, குற்றப் புலனாய்வுத் துறை (CID) மற்றும் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகள் நிமல் பெரேராவிடமிருந்து சத்தியக்கடதாசி (Affidavit) பெறுவதற்காக அவுஸ்திரேலியா சென்றுள்ளனர். </p><p>அங்கு நிமல் பெரேரா, நாமல் ராஜபக்சவிற்கு பல்வேறு சந்தர்ப்பங்களில் 100 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான பணத்தை எவ்வாறு வழங்கினார் என்பதைக் குறிப்பிட்டு சத்தியக்கடதாசியை அதிகாரிகளிடம் வழங்கியுள்ளார்.
</p><h2>
அவுஸ்திரேலிய அரசு வழங்கிய வாக்குறுதி</h2><p>நிமல் பெரேராவிற்கு பாதுகாப்பை வழங்க அவுஸ்திரேலிய அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளதாகவும், அவர் அவுஸ்திரேலியாவிலிருந்து 'Zoom' வழியாக சாட்சியமளிக்கவுள்ளதாகவும் சட்டமா அதிபர் திணைக்களத்தின் சிரேஷ்ட வழக்கறிஞர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
</p><p>
இந்த விசாரணைக்கு அவுஸ்திரேலியா, சிங்கப்பூர், பிரான்ஸ் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் பரஸ்பர சட்ட உதவியை வழங்கியுள்ளதோடு, தற்போது விசாரணை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/56632e9d-bf35-47e9-8230-97aaa301f9f6/26-6a9e748514acb.webp' /></p><p>எயார்பஸ் (Airbus) நிறுவனத்திடமிருந்து ஆவணங்களைப் பெறுவது தொடர்பான உடன்பாடே இந்த வழக்கின் முக்கிய விடயமாகும். வழக்கு மிகவும் வலுவாக உள்ளதாகவும், நாமல் ராஜபக்சவிற்கு எதிராக மேலும் சான்றுகள் வெளிவரும் என்றும் சட்டமா அதிபர் திணைக்கள வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.</p><p>
இந்த வழக்கை விசாரிக்க மூன்று நீதிபதிகள் கொண்ட மேல் நீதிமன்ற தீர்ப்பாயத்தை நியமிக்குமாறு சட்டமா அதிபர் பிரதம நீதியரசரிடம் கோரிக்கை விடுப்பாரா என்பது இன்னும் வெளியாகவில்லை.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-07T10:42:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வியாபாரியிடம் மனைவியை இலஞ்சமாக கேட்ட பொலிஸ்! தமிழர் பகுதியில் சம்பவம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/police-demands-money-and-businessman-wife-bribe-1788777548"></link>
            <id>https://jvpnews.com/article/police-demands-money-and-businessman-wife-bribe-1788777548</id>
            <summary type="text">&amp;nbsp;திருகோணமலையில் கைது செய்யப்பட்ட போதைப்பொருள் வியாபாரி ஒருவரை விடுதலை செய்வதற்கு இலஞ்சமாக பணமும் மற்றும் வியாபாரியின் மனைவியை பாலியல் இலஞ்சாமக கோ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;திருகோணமலையில் கைது செய்யப்பட்ட போதைப்பொருள் வியாபாரி ஒருவரை விடுதலை செய்வதற்கு இலஞ்சமாக பணமும் மற்றும் வியாபாரியின் மனைவியை பாலியல் இலஞ்சாமக கோரிய சம்பவம் தொடர்பாக பொலிஸ் உப பரிசோதகர் பணி நீக்கப்பம் செய்யப்பட்டுள்ளார்.</p><p>

 மட்டக்களப்பு கல்குடா பொலிஸ் நிலையத்தில் கடமையயாற்றிவரும் ஓட்டுமாவடியைச் சோந்த பொலிஸ் உப பரிசோதகர் (எஸ்.ஜ) ஒருவரை&nbsp; &nbsp;சனிக்கிழமை (5) பணியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f2ed3c44-4b02-4828-96b6-8b4d24803032/26-6a9e944e7e258.webp' /></p><h2>&nbsp;வியாபாரியை விடுவிப்பதற்கு&nbsp; &nbsp; பாலியல்&nbsp;இலஞ்சம்</h2><p>
</p><p>
குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் கடந்த 2021ம் ஆண்டு திருகோணமலை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய போது ஹெரோயின் போதை பொருளுடன் கைது செய்யப்பட்ட போதை பொருள் வியாபாரியை விடுவிப்பதற்கு ஒரு தொகை பணம் மற்றும் வியாபரியின் மனைவியை பாலியல் இலஞ்சமாக கோரியுள்ளார்.</p><p>.</p><p>
 வியாபாரி இது தொடர்பாக பொலிஸ் உத்தியோகத்தருக்கு எதிராக திருகோணமலை மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து விசாரணைகள் இடம்பெற்று வந்தது.</p><p>&nbsp; இந்த நிலையில் பொலிஸ் உத்தியோகத்தர் அங்கிருந்து வாழைச்சேனை மற்றும் கந்தளாய் பொலிஸ் பிரிவிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டு அங்கிருந்து கடந்த சில வாரங்களுக்கு முன்னர் கல்குடா பொலிஸ் நிலையத்திற்கு இடமாற்றப்பட்டு கடமையாற்றி வருகின்றதாக கூறப்படுகின்றது.</p><p></p><p>
</p><p>&nbsp;இதனையடுத்து&nbsp; பொலிஸ் உப பரிசோதகரை உடனடியாக பணி இடைநீக்கம் செய்துள்ளது பொலிஸ் தலைமையகம் அறிவித்து கடிதம் அனுப்பியுள்ளதாக அவர் தெரிவித்தார்.</p>]]></content>
            <updated>2026-09-07T10:39:41+00:00</updated>
        </entry>
    </feed>
