<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-08-05T11:53:47+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹட்டன் கல்வி வலயத்தின் அனைத்து பாடசாலைகளையும் மீள் திறக்க நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/bad-weather-hatton-zonal-school-reopen-1785929813"></link>
            <id>https://tamilwin.com/article/bad-weather-hatton-zonal-school-reopen-1785929813</id>
            <summary type="text">மோசமான வானிலை காரணமாக மூடப்பட்டிருந்த ஹட்டன் கல்வி வலயத்திலுள்ள அனைத்துப் பாடசாலைகளும் நாளை (06) முதல் வழக்கம் போல் செயல்படும் என ஹட்டன் கல்விப்பணிமனை...</summary>
            <content type="html"><![CDATA[<p>மோசமான வானிலை காரணமாக மூடப்பட்டிருந்த ஹட்டன் கல்வி வலயத்திலுள்ள அனைத்துப் பாடசாலைகளும் நாளை (06) முதல் வழக்கம் போல் செயல்படும் என ஹட்டன் கல்விப்பணிமனை தெரிவித்துள்ளது.&nbsp;</p><p>

தற்போது நிலவும் மோசமான வானிலை காரணமாக, மத்திய மாகாண கல்வி பணிப்பாளரின் ஆலோசனையின் பேரில் ஹட்டன் கல்வி வலயத்திலுள்ள அனைத்துப் பாடசாலைகளும் மூடப்பட்டன.&nbsp;</p><p><span style="font-size: 14px;">இது தொடர்பில் நேற்று ஹட்டன் வலயக் கல்விப்பணிமனை உத்தியோக பூர்வ அறிவிப்பு வெளியிட்டது.&nbsp;</span></p><p><span style="font-size: 14px;">இந்நிலையில், குறித்த பாடசாலைகள்&nbsp;</span>நாளை முதல் மீண்டும் திறக்கப்படவுள்ளன.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a03d83bc-1991-4181-b289-2e109190fbe3/26-6a73223dded0c.webp' /></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-05T11:47:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ்ப்பாணம் நல்லூர் கந்தன் மகோற்சவப் பெருவிழா; ஆயத்தங்கள் மும்மரம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/nallur-kandaswamy-temple-festival-2026-1785930401"></link>
            <id>https://jvpnews.com/article/nallur-kandaswamy-temple-festival-2026-1785930401</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp;வரலாற்று பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோவில் மகோற்சவப் பெருவிழா 17ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில், ஆலய வளாகம் ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp; &nbsp;வரலாற்று பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோவில் மகோற்சவப் பெருவிழா 17ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில், ஆலய வளாகம் மட்டுமல்லாது யாழ்ப்பாண நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.
</p><p>
ஆலய வளாகத்தில் ஆயத்தப்பணிகள் மும்மரமாக இடம்பெற்று வருகின்றது.

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி கோவிலின் வருடாந்த மகோற்சவப் பெருவிழா ஈழத்துத் தமிழ் மக்களின் மிக முக்கிய ஆன்மீக மற்றும் பண்பாட்டு நிகழ்வாகும். </p><p>

 நல்லூர் கந்தசுவாமி கோவில் மகோற்சவப் பெருவிழா ஆண்டுதோறும் தொடர்ந்து 25 நாட்கள் மிக விமரிசையாக நடைபெறும்.</p><p> 

நல்லூர் கந்தன் பெரும் திருவிழாவை முன்னிட்டு புலம்பெயர் தேசங்களில் இருந்தும் பெருமளவான மக்கள் நாட்டுக்கு வருகை தருவார்கள். அதுமட்டுமல்லாது இந்திய பக்தர்களும் அண்மைய காலமாக நல்லூர் கந்தனை காண வருகை தருவது அதிகரித்துள்ளது.&nbsp; &nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-05T11:44:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[உடனடியாக நடைமுறைக்கு வரும் தடை உத்தரவு ..! புலமைப்பரிசில் பரீட்சை - உயர்தர பரீட்சை தொடர்பில் வெளியான அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/strict-tuition-ban-during-a-l-scholarship-exams-1785929017"></link>
            <id>https://tamilwin.com/article/strict-tuition-ban-during-a-l-scholarship-exams-1785929017</id>
            <summary type="text">2026ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தர பரீட்சை மற்றும் புலமைப்பரிசில் பரீட்சை இன்னும் சில நாட்களில் நடக்கவிருக்கும் நிலையில், மேலதிக வகுப்பு மற்றும் கல்வி ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தர பரீட்சை மற்றும் புலமைப்பரிசில் பரீட்சை இன்னும் சில நாட்களில் நடக்கவிருக்கும் நிலையில், மேலதிக வகுப்பு மற்றும் கல்வி செயற்பாடுகளுக்கு எதிராக பரீட்சை ஆணையம் கடுமையான தடைகளை விதித்துள்ளது.</p><p> 

இதற்கமைய, எதிர்வரும் ஆகஸ்ட் 10 முதல் செப்டம்பர் 5 வரை 2,532 மையங்களில் நடைபெறவுள்ள க.பொ.த உயர்தர பரீட்சைக்கான அனைத்து பயிற்சி வகுப்புகள், பாடம் தொடர்பான விரிவுரைகள், கருத்தரங்குகள் மற்றும் மாதிரி வினாத்தாள்களை அச்சிடுவது அல்லது விநியோகிப்பது ஆகியவை நேற்று(04.08.2026) நள்ளிரவு முதல் தேர்வு முடியும் வரை தடை செய்யப்பட்டுள்ளன. </p><p>

அதே போன்று, பரீட்சை மாதிரியான கேள்விகளை வழங்குவதாகக் கூறும் சுவரொட்டிகள், பதாகைகள், துண்டுப்பிரசுரங்கள் உள்ளிட்டவைகளை ஊடகங்களை வெளியிடுவதும் அல்லது வைத்திருப்பதும் தடை செய்யப்பட்டுள்ளது.</p><p></p><h2> 

கல்வி செயற்பாடுகளுக்கு விதிக்கப்பட்ட தடை</h2><p>

இந்த நிலையில், எதிர்வரும் ஆகஸ்ட் 9 அன்று 2,723 மையங்களில் நடைபெறவுள்ள 5 ஆம் வகுப்பு புலமைப்பரிசில் பரீட்சைக்கான கல்வி செயற்பாடுகளுக்கு இன்று(05.08.2026) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d13bb7c2-2ad3-4220-891f-18787c1291a2/26-6a7321e28ac3b.webp' /></p><p> 

 

இந்த உத்தரவுகளை மீறும் எந்தவொரு தனிநபர், நிறுவனம் அல்லது தரப்பினரும் 1968 ஆம் ஆண்டின் பொதுத் தேர்வுகள் சட்டம் எண் 25இன் கீழ் குற்றவாளியாக பார்க்கப்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p> 

மேலும், மீறல்கள் தொடர்பான முறைப்பாடுகளை அருகிலுள்ள பொலிஸ் நிலையம், பொலிஸ் தலைமையகம் அல்லது பரீட்சை ஆணையகத்திற்கு தெரியப்படுத்தலாம்.</p><p> 

இதன்படி, முறைப்பாடுகளை பொலிஸ் தலைமையகம்: 011‑2421111 பொலிஸ் அவசர எண்: 119 பரீட்சை ஆணையம் அவசர உதவி எண்: 1911 பள்ளித் தேர்வுகள் அமைப்பு மற்றும் முடிவுகள் பிரிவு: 011‑2784208 / 011‑2784537 ஆகிய எண்களுக்கு அழைப்பை மேற்கொண்டு பதிவு செய்துக் கொள்ளலாம்.</p><p></p><p></p><p><br></p><p> 

 </p>]]></content>
            <updated>2026-08-05T11:43:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[வங்கி ஊழியராக பணியாற்றும் இஷான் கிஷன்: வைரலாகும் புகைப்படங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/ishan-kishan-working-in-rbi-viral-photos-1785930133"></link>
            <id>https://news.lankasri.com/article/ishan-kishan-working-in-rbi-viral-photos-1785930133</id>
            <summary type="text">இந்திய கிரிக்கெட் அணி வீரரான இஷான் கிஷன் RBI வங்கி ஊழியராக பணியாற்றும் புகைப்படங்கள் வைரலாகின்றன.

இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரர...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்திய கிரிக்கெட் அணி வீரரான இஷான் கிஷன் RBI வங்கி ஊழியராக பணியாற்றும் புகைப்படங்கள் வைரலாகின்றன.
</p><p>
இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரரான இஷான் கிஷன், இந்திய ரிசர்வ் வங்கியில் உதவி மேலாளராகவும் பணியாற்றி வருகிறார்.&nbsp;</p><h2>இஷான் கிஷன்&nbsp;</h2><p>
அதிரடி துடுப்பாட்ட வீரரான இஷான் கிஷனுக்கு (Ishan Kishan) விளையாட்டுப் பிரிவின் கீழ் இந்திய ரிசர்வ் வங்கியில் (RBI) உதவி மேலாளரர் பணி கிடைத்தது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e91d5522-b545-418c-b424-a1d9e6203e11/26-6a732199476b1.webp' />&nbsp;</p><p></p><p>

என்றாலும் அணியில் இருந்து விலகியிருந்த இஷான், உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். </p><p>

இதன்மூலம் அவருக்கு இந்திய அணியில் மீண்டும் இடம் கிடைக்க, தனது சிறப்பான ஆட்டத்தின் மூலம் தனக்கான இடத்தை உறுதிப்படுத்திக்கொண்டார்.&nbsp;</p><h2>புகைப்படம்&nbsp;</h2><p>
 இந்த நிலையில், சமீபத்தில் RBI வங்கிக்கு சென்ற இஷான் கிஷன் அங்குள்ள ஊழியர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.</p><p> 

இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இடம்பெறாத இஷான் கிஷன், உள்நாட்டு தொடரான துலீப் கிண்ணத்தில் ஈஸ்ட் ஸோன் அணியை இஷான் கிஷன் வழிநடத்துவார் என்று தெரிய வந்துள்ளது.</p><p>

இந்தத் தொடர், ஆகஸ்ட் 23-ஆம் திகதி தொடங்க உள்ளதால் இடைப்பட்ட காலத்தில், இஷான் ஜார்கண்டில் உள்ள RBI-யின் கிளையில் தனது உதவி மேலாளர் பணிகளை மேற்கொள்வதற்காக சென்றுள்ளார். </p><p>

அப்போது வங்கியில் சக ஊழியர்களுடன் எடுக்கப்பட்ட புகைப்படங்கள்தான் இணையத்தில் தற்போது வைரலாகியுள்ளன.&nbsp; &nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ec5e2c05-ffe6-41eb-b3cf-e9f3a38d69f9/26-6a7321989549b.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-05T11:40:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கேப்டன் விஜய்காந் திரைப்பட சம்பவம்; உயிரிழந்த நபருக்கு உணவு கட்டணம்: மருத்துவமனைக்கு ரூ.65.62 லட்சம் அபராதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/food-charges-deceased-person-hospital-fined-1785925596"></link>
            <id>https://jvpnews.com/article/food-charges-deceased-person-hospital-fined-1785925596</id>
            <summary type="text">&amp;nbsp;உயிரிழந்த நபருக்கு உணவு கட்​ட​ணம் வசூலித்​த​ மருத்துவமனைக்கு ரூ.65.62 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;உயிரிழந்த நபருக்கு உணவு கட்​ட​ணம் வசூலித்​த​ மருத்துவமனைக்கு ரூ.65.62 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.</p><p>

மறைந்த கேப்டன் விஜயகாந் நடித்த திரைப்படம் ஒன்றில் உயிரிழந்தவருக்கு மருத்துவம் பார்த்து மருத்துவமனை பெரும் தொகை பணத்தை கோரிய காட்சி ஒன்று இருக்கும். அதேபோல உயிரிழந்த நபருக்கு உணவு கட்​ட​ணம் வசூலித்​த சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0f0d9753-3d16-4fc6-b55e-716bfe7e77f2/26-6a730fddbbc17.webp' /></p><p></p><h2>கோமா நிலை​யில் சிகிச்சை&nbsp;கோமா நிலை​யில் சிகிச்சை </h2><p> </p><p>

கோமா நிலை​யில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி உயி​ரிழந்த பிறகும், அவருக்கு உணவு மற்​றும் பராமரிப்பு வழங்​கிய​தாகக் கூறி கூடு​தல் கட்​ட​ணம் வசூலித்​த​தாக தொடரப்​பட்ட வழக்​கில், சென்னை வடபழனி​யில் செயல்​படும் தனியார் மருத்​து​வ​மனைக்கு ரூ.65 லட்​சத்து 62 ஆயிரத்து 500 அபராதம் விதித்து செங்​கல்​பட்டு மாவட்ட நுகர்​வோர் குறைதீர் ஆணை​யம் தீர்ப்​பளித்​தது.</p><p></p><p>
</p><p> 

சென்னை மாடம்​பாக்​கத்​தைச் சேர்ந்த கோபால​கிருஷ்ணன், தனது தாய் சுசிலாவை 2003-ம் ஆண்டு பிப்​ர​வரி 5-ம் தேதி சிகிச்​சைக்​காக மருத்​து​வ​மனை​யில் சேர்த்​திருந்​தார்.

சிகிச்சை பலனின்றி பிப். 9-ம் தேதி அதி​காலை 2.30 மணி​யள​வில் சுசிலா உயி​ரிழந்​தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/91992eb7-bd58-4d22-9878-093eb5414b9c/26-6a731074b379b.webp' /></p><p> ஆனால் காலை 10.30 மணிவரை உடலை ஒப்​படைக்​காத மருத்​து​வ​மனை நிர்​வாகம், அந்த இடைப்​பட்ட நேரத்​தில் உணவு மற்​றும் பராமரிப்பு வழங்​கிய​தாகக் கூறி கூடு​தலாக வசூலித்​த​தாக புகார் எழுந்​தது.</p><p></p><p>
</p><p>
இது தொடர்​பாக கோபால கிருஷ்ணன் தொடர்ந்த வழக்​கில், ‘ரூ.61,644 கூடு​தலாக வசூலித்​திருப்​ப​தாக மருத்​து​வ​மனை தரப்பே நீதி​மன்​றத்​தில் ஒப்​புக்​கொண்​டு, அந்​தத் தொகையை திருப்​பிச் செலுத்​து​வ​தாக தெரி​வித்​தும் இது​வரை வழங்​க​வில்​லை’ எனக் கூறப்​பட்​டது.</p><p>

வழக்கை விசா​ரித்த செங்​கல்​பட்டு மாவட்ட நுகர்​வோர் குறைதீர் ஆணை​யத் தலை​வர் காசி பாண்​டியன், மருத்​து​வ​மனைக்கு ரூ.65.62 லட்​சம் அபராதம் விதித்​ததுடன், கூடு​தலாக வசூலித்த ரூ.61,644-ஐ மனு​தா​ரருக்கு வழங்​கவும் உத்தரவிட்டார்.</p>]]></content>
            <updated>2026-08-05T11:36:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீயணைப்பு செயற்பாட்டில் டிரான் அலஸ் செய்த பாரியளவிலான மோசடி அம்பலம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/express-pearl-ship-case-tiran-alas-1785920800"></link>
            <id>https://tamilwin.com/article/express-pearl-ship-case-tiran-alas-1785920800</id>
            <summary type="text">&amp;nbsp;எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் ஏற்பட்ட தீயை அணைப்பதற்கு இலங்கையில் பிரதான மட்டத்தில் நிறுவப்பட்டிருந்த ஒரு நிறுவனமே ஈடுபட்டிருந்தது. அந்த நிறுவனத்தி...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் ஏற்பட்ட தீயை அணைப்பதற்கு இலங்கையில் பிரதான மட்டத்தில் நிறுவப்பட்டிருந்த ஒரு நிறுவனமே ஈடுபட்டிருந்தது. அந்த நிறுவனத்திலுள்ள தீயணைப்பாளர்கள் சாதாரண பயிற்சி பெற்றவர்கள்.அத்தோடு தீயணைப்புக்கு தேவையான உபகரணங்கள் போதியளவு இருக்கவில்லை.
</p><p>குறித்த நிறுவனம் தீயை அணைப்பதற்கு பயன்படுத்திய இரசாயனங்கள் அனைத்தும் காலாவதியானதால் தீ பாரிய அளவில் பரவுவதற்கும் காரணமாக இருந்துள்ளது.அத்தோடு தீயணைப்பு நடவடிக்கைக்காக குறித்த நிறுவனம் பல மில்லியன் ரூபாக்களையும் பெற்றுக் கொண்டுள்ளது.</p><p>என்குஸ் பயர் நிறுவனமே குறித்த தீயணைப்பு செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளது.
</p><h2>
</h2><p></p><h2>டிரான் அலசின் கம்பனி செய்த மோசடி</h2><p>இந்த நிறுவனம் முன்னாள் அமைச்சர் டிரான் கிறிஸ்டோபர் பிரசன்ன அலசுக்கு சொந்தமானதாகும்.அவரின் நிறுவனமே காலாவதியான தீயணைப்பு பொருட்களை பாவித்து தீயை மேலும் பரவலடைய செய்ததோடு மோசடியாக பல மில்லியன் ரூபா தொகையை பெற்றுள்ளதாக இலங்கை பொலிஸாரை அரசியல் அழுத்தங்களில் இருந்து பாதுகாக்கும் சர்வதேச அமைப்பின் தலைவர் அஜித் தர்மபால தெரிவித்துள்ளார்.</p><p>
டிரான் அலஸ் எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீ விபத்தில் மேற்கொண்ட மோசடி தொடர்பில் அவருக்கு கிடைத்த தகவல்கள் மற்றும் ஆதரங்களை கொண்டே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
</p><p>அவர் மேலும் தெரிவித்த கருத்து
இந்த தீவிபத்தால் கிட்டத்தட்ட ஒரு பில்லியன் அல்லது அதற்கும் அதிகமான சுற்றுச்சூழல் சேதம் ஏற்பட்டது. 
எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் நைட்ரிக் அமிலம் உட்பட பல இரசாயனங்கள் இருந்ததால் தீயணைப்பு செயற்பாட்டுக்கு பயன்படுத்த பாவிக்கப்பட்ட கலாவதியான இரசாயனங்கள் பாரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. </p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/501aa33c-4f2d-4915-a206-ae937269fe03/26-6a72fd23726f1.webp' /></p><p>இந்தத் தீயை அணைக்கும் செயற்பாட்டுக்கு பெறப்பட்ட பல மில்லியன் கணக்கான டொலர்கள் எங்கே? அரசாங்கமும் இததற்குப் பணம் செலுத்தியதா? பணம் செலுத்தியிருந்தால் எவ்வளவு தொகை செலுத்தப்பட்டது என்பது குறித்தும் தெரியவரவில்லை.
</p><p>தீ மேலும் பரவுவதற்கு இதில் பயன்படுத்தப்பட்ட அனைத்து திரவங்களும் காலாவதியாகி குவித்து வைக்கப்பட்டிருந்தவையாகும். அவை அனைத்தும் பயன்படுத்தப்பட்டுள்ளன.</p><p>இன்று என்குஸ் பயர் என்ற நிறுவனம் மூடப்பட்டுள்ளது.எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் தீ பாரிய அளவில் பரவுவதற்கும் பாரிய சேதத்துக்கு காரணமான டிரான் அலசின் கம்பனிக்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.</p><p>இச்சம்பவம் தொடர்பில் எவ்வித விசாரணையும் நடைபெற்றவில்லை.இன்றும் எவ்வித பிரச்சினையும் இல்லாமல் டிரான் அலஸ் இருக்கிறார்.இது தொடர்பில் முறையாக விசாரணைகளை ஆரம்பிக்குமாறு தான் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபாலவிடம் கேட்டு கொள்வதாக தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p>&nbsp; </p><p>&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-05T11:36:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜனாதிபதி அநுரவை சந்தித்த இந்திய அரசின் முக்கிய பிரதிநிதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/meeting-indian-foreign-secretary-president-anura-1785929082"></link>
            <id>https://tamilwin.com/article/meeting-indian-foreign-secretary-president-anura-1785929082</id>
            <summary type="text">இந்திய வெளியுறவுச் செயலாளர் ஸ்ரீ விக்ரம் மிஸ்ரி, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை சந்தித்துள்ளார்.&amp;nbsp;

பரஸ்பர நலன் சார்ந்த விடயங்கள் மற்றும் இலங்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்திய வெளியுறவுச் செயலாளர் ஸ்ரீ விக்ரம் மிஸ்ரி, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை சந்தித்துள்ளார்.&nbsp;</p><p>

பரஸ்பர நலன் சார்ந்த விடயங்கள் மற்றும் இலங்கையில் இந்தியா உதவியுடன் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தித் திட்டங்கள் உள்ளிட்ட முக்கிய இருதரப்புத் திட்டங்களை மீளாய்வு செய்வதில் இந்த சந்திப்பின் போது&nbsp;கவனம் செலுத்தப்பட்டுள்ளது.</p><h2> 450 மில்லியன் டொலர் &nbsp;</h2><p>டித்வா புயலைத் தொடர்ந்து இலங்கைக்கு வழங்கப்பட்ட 450 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான புனரமைப்புத் தொகுப்பின் ஒரு பகுதியாக, இக்கூட்டத்தின் போது 350 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான கடன் தள்ளுபடி ஒப்பந்தங்கள் பரிமாறப்பட்டுள்ளன.</p><p>மேலும், புயலுக்குப் பிறகு ஏற்பட்ட புனரமைப்பு, உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் கொள்முதல் தேவைகளுக்கு ஆதரவளித்து வருவதாக இந்திய உயர் ஆணையம் மேலும் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4d8eaf7c-6761-4464-930d-09fea841aecb/26-6a731eea92e1b.webp' /></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-05T11:34:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தியாவிடம் இருந்து இலங்கைக்கு 350 மில்லியன் டொலர் கடனுதவி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/350-million-doller-loan-assistance-ind-to-srilanka-1785928839"></link>
            <id>https://ibctamil.com/article/350-million-doller-loan-assistance-ind-to-srilanka-1785928839</id>
            <summary type="text">இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி, இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை இன்று கொழும்பில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.இச்சந்திப...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி, இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை இன்று கொழும்பில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.</p><p>இச்சந்திப்பின் போது இரு நாடுகளுக்கும் இடையிலான பரஸ்பர நலன் சார்ந்த விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டதுடன், இந்திய அரசின் உதவியுடன் இலங்கையில் முன்னெடுக்கப்படும் முக்கிய இருதரப்பு அபிவிருத்தி திட்டங்களின் முன்னேற்றம் குறித்தும் விரிவாக மீளாய்வு செய்யப்பட்டது.</p><p>சந்திப்பின் முடிவில்,&nbsp;350 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான இந்திய ரூபாய் அடிப்படையிலான கடன் வசதிகளுக்கான (INR-denominated Lines of Credit) ஒப்பந்தங்கள் இரு தரப்பினருக்கும் இடையில் பரிமாறிக்கொள்ளப்பட்டன.</p><p>

</p><p></p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Foreign Secretary Shri. Vikram Misri called on President of Sri Lanka H.E <a href="https://x.com/anuradisanayake?ref_src=twsrc%5Etfw">@anuradisanayake</a> in Colombo. Discussions focused on issues of mutual interest and review of key bilateral projects, including 🇮🇳 assisted development projects in 🇱🇰.<br><br>Following the meeting, both sides… <a href="https://t.co/YmlMdTr6df">pic.twitter.com/YmlMdTr6df</a></p>&mdash; India in Sri Lanka (@IndiainSL) <a href="https://x.com/IndiainSL/status/2084943541063823781?ref_src=twsrc%5Etfw">August 5, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><h2>புனரமைப்பு உதவி தொகை</h2><p>சூறாவளி டிட்வா அனர்த்தத்தை அடுத்து இந்தியா அறிவித்த 450 மில்லியன் அமெரிக்க டொலர் புனரமைப்பு உதவித் தொகுப்பின் ஒரு பகுதியாக,&nbsp; இந்த தொகை வழங்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/813917b1-7a03-4982-bc05-83099c6e6619/26-6a731efa4ac96.webp' /></p><p>டிட்வாவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்படவுள்ள பின்வரும் பணிகளுக்கு இந்த நிதி பயன்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>மேலும், அவசர புனரமைப்பு பணிகள்சேதமடைந்த உட்கட்டமைப்புகளை மீளக் கட்டியெழுப்புதல் அனர்த்தத்தின் பின்னரான அவசர கொள்முதல் தேவைகள்இந்தியாவின் அண்டை நாடு முதன்மை கொள்கை மற்றும் மகாசாகர் தொலைநோக்கின் கீழ், இயற்கை அனர்த்தங்களின் போது இலங்கைக்கு உடனடி உதவிகளை வழங்குவதில் இந்தியா முன்னுரிமை அளித்து வருவதாக கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/228ac9e0-ab01-4fbd-8f41-f500f80eb8d9/26-6a731efb062e9.webp' /></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-05T11:32:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA['சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்'.. எச்சரித்த நடிகை மிருணாள் தாகூர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/mrunal-thakur-condemned-on-deepfake-photos-1785926219"></link>
            <id>https://cineulagam.com/article/mrunal-thakur-condemned-on-deepfake-photos-1785926219</id>
            <summary type="text">டீப் ஃபேக்
கடந்த சில ஆண்டுகளாக AI தொழில்நுட்பத்தின் வளர்ச்சியின் காரணமாக, திரையுலக பிரபலங்களின் உருவங்களை பயன்படுத்தி போலி டீப் ஃபேக் புகைப்படங்கள் ம...</summary>
            <content type="html"><![CDATA[<h2><span style="color: inherit; font-size: 1.75rem;">டீப் ஃபேக்</span></h2><p>
கடந்த சில ஆண்டுகளாக AI தொழில்நுட்பத்தின் வளர்ச்சியின் காரணமாக, திரையுலக பிரபலங்களின் உருவங்களை பயன்படுத்தி போலி டீப் ஃபேக் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் உருவாக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fc518451-f82b-47aa-b0ad-a2573ae0f56a/26-6a7312502f0bc.webp' /></p><p>நடிகைகள் ராஷ்மிகா மந்தனா, தீபிகா படுகோன், கத்ரினா கைஃப், ஆலியா பட் உள்ளிட்ட பல நடிகைகள் இதனை கண்டித்து எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/510f68fe-0f15-45b8-8cbc-2a6b4a5d88a3/26-6a73124f74487.webp' /></p><p> </p><p>இந்த நிலையில், தனது புகைப்படங்களை வைத்து AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்படும் டீப் ஃபேக் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுக்கு எதிராக எச்சரிக்கை விடுத்துள்ளார் நடிகை மிருணாள் தாகூர்.</p><p></p><h2>மிருணாள் தாகூரின் எச்சரிக்கை
</h2><p>
இதுகுறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்ட நடிகை மிருணாள் தாகூர், தனது உருவம் அல்லது அடையாளத்தை பயன்படுத்தி டீப் ஃபேக் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உருவாக்குவதும், பகிர்வதும் சட்டவிரோதமானது என்று கூறியுள்ளார்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4f3b5034-8fa0-4d36-b23f-ebeaad034ef7/26-6a73124ebdf7f.webp' /></p><p>மேலும், தனது பெயர், புகைப்படம் அல்லது உருவத்தை தவறாக பயன்படுத்தும் எந்தவொரு செயலையும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், இதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1c3a5345-9ee3-49d7-b795-cab52ebbb166/26-6a73124e0e32c.webp' /></p><p>எனது அடையாளத்தை தொடர்ந்து தவறாக பயன்படுத்தினால், சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என மிருணாள் தாகூர் தனது பதிவில் எச்சரித்துள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-05T11:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Erimalai</name>
            </author>
            <title type="text"><![CDATA[குட்டிமணி - தங்கத்துரைக்கு சிலை அமைப்பதற்கான தடை நீக்கம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/ban-on-erecting-statues-of-kuttimani-thangathurai-1785928397"></link>
            <id>https://ibctamil.com/article/ban-on-erecting-statues-of-kuttimani-thangathurai-1785928397</id>
            <summary type="text">வெலிக்கடை சிறையில் படுகொலை செய்யப்பட்ட குட்டிமணி மற்றும் தங்கத்துரை ஆகியோருக்கு வல்வெட்டித்துறையில் சிலை அமைப்பதற்கு
பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்...</summary>
            <content type="html"><![CDATA[<p>வெலிக்கடை சிறையில் படுகொலை செய்யப்பட்ட குட்டிமணி மற்றும் தங்கத்துரை ஆகியோருக்கு வல்வெட்டித்துறையில் சிலை அமைப்பதற்கு
பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ளது.</p><p>குட்டிமணி
தங்கத்துரை ஆகியோருக்கு சிலை அமைப்பதற்கு எதிராக வல்வெட்டித்துறை காவல்துறையினரால்
அதன் ஏற்பாட்டாளரும், முன்னாள் வல்வெட்டித்துறை நகர சபை உப தவிசாளருமான
கந்தசாமி சதீஷ் என்பவருக்கு எதிராக தொடுக்கப்பட்டிருந்தது.</p><p>குறித்த வழக்கில் இன்று (05) வரை
வழங்கப்பட்டிருந்த சிலை அமைப்பதற்கான தற்காலிக தடை உத்தரவு
இல்லாமல் ஆக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>பருத்தித்துறை நீதவான் நீதிமன்றம்</h2><p>
</p><p>
கடந்த 22/7/2026 அன்று வல்வெட்டித்துறை காவல்துறையினரால் பருத்தித்துறை நீதவான்
நீதிமன்றில் தொடுக்கப்பட்ட வழக்கானது விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு
நேற்றும் வாத பிரதிவாதங்கள் இடம்பெற்றிருந்த நிலையில் குறித்த வழக்கின் மேலும்
ஆதாரங்களை சமர்ப்பிக்க 14 நாட்கள் காலம் கோரப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f3afeff4-bc5a-416d-b3cd-cb156cf95b86/26-6a731e17ee8a4.webp' /></p><p> எனினும் 106 சட்ட
பிரிவின்கீழ் 14 நாட்களுக்கு மேல் தடை உத்தரவு வழங்க முடியாது என்ற
அடிப்படையில் இன்றைய தினம் வரை காவல்துறையினருக்கு உரிய எதிராளிக்கு எதிரான உரிய
ஆவணங்களை சமர்ப்பிப்பதற்காக கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.</p><p>இந்த நிலையில் எந்த
விதமான போதுமான ஆதாரங்களோ ஆவணங்களோ சமர்ப்பிக்கப்படாத நிலையில் இன்றைய தினம்
பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்டிருந்த தற்காலிக தடை
உத்தரவு இல்லாமலாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-05T11:26:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[செங்கடலில் சவுதி எண்ணெய் கப்பல் மீது துல்லிய ஏவுகணை தாக்குதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/houthis-ballistic-missile-strike-saudi-oil-tanker-1785928121"></link>
            <id>https://ibctamil.com/article/houthis-ballistic-missile-strike-saudi-oil-tanker-1785928121</id>
            <summary type="text">யான்பு கடற்கரைக்கு அப்பால் வடக்கு செங்கடலில் சவுதியின் வபா என்ற எண்ணெய் கப்பலை பல பாலிஸ்டிக் ஏவுகணைகளால் தாக்கியதாக யேமனின் ஹவுதி குழு, இன்று(05)புதன்...</summary>
            <content type="html"><![CDATA[<p>யான்பு கடற்கரைக்கு அப்பால் வடக்கு செங்கடலில் சவுதியின் வபா என்ற எண்ணெய் கப்பலை பல பாலிஸ்டிக் ஏவுகணைகளால் தாக்கியதாக யேமனின் ஹவுதி குழு, இன்று(05)புதன்கிழமை தெரிவித்துள்ளது.

அந்தக் குழுவின் இராணுவ செய்தித் தொடர்பாளர் யஹ்யா சரீ, X-இல் வெளியிட்ட ஓர் அறிக்கையில், ஏவுகணைகள் அந்தக் கப்பலை "துல்லியமாகத் தாக்கின" என்று கூறினார்.</p><p>சவுதி அரேபியா மீதான தங்களின் கடல்வழி முற்றுகை மற்றும் "முற்றுகைக்கு முற்றுகை" என்ற உத்தியின் ஒரு பகுதியே இந்தத் தாக்குதல் என்று சரீ தெரிவித்தார்.</p><h2>&nbsp;எட்டு கப்பல்கள் மீது தாக்குதல்</h2><p>

ஜூலை 22 அன்று முற்றுகை தொடங்கியதிலிருந்து, தம்மால் குறிவைக்கப்பட்ட சவுதி எண்ணெய் கப்பல்களின் எண்ணிக்கை இந்தத் தாக்குதலுடன் எட்டாக உயர்ந்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d6cda92c-6c9e-4532-ac0a-8a8af0610b7c/26-6a731dc9eec92.webp' /></p><p>
மேலும், 29 சவுதி எண்ணெய் கப்பல்கள் செங்கடல் மற்றும் அரபிக்கடலைக் கடந்து செல்லவிடாமல் தடுக்கப்பட்டன அல்லது திரும்பிச் செல்லும்படி கட்டாயப்படுத்தப்பட்டன என்றும் சரீ கூறினார்.
</p><p>
பாப் அல்-மண்டாப் நீரிணையிலிருந்து தாங்கள் முற்றுகையிட்டதாகக் கூறியதை வெற்றிகரமாக நிறைவேற்றியபிறகு, சவுதி அரேபியா தனது எண்ணெய் கப்பல்களை வடக்கு செங்கடலுக்குத் திருப்பிவிட்டதாக அவர் தெரிவித்தார்.</p><p></p><h2>தாக்குதல்கள் தீவிரப்படுத்தப்படும்</h2><p>
</p><p>
"விளைவுகளைப் பொருட்படுத்தாமல்", கடல்வழி அணுகல் பாதைகளைத் தடுக்கவும், அவை கடந்து செல்வதைத் தடுக்கவும், வடக்கு செங்கடலில் உள்ள சவுதி எண்ணெய் கப்பல்கள் மீதான தாக்குதல்களைத் தங்கள் குழு தொடர்ந்தும் தீவிரப்படுத்தி நடத்தும் என்று சரீ சபதம் செய்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e391146f-41ff-43e1-adbb-c04f2ff1a26e/26-6a731dcaae8a9.webp' /></p><p>

இந்த சம்மபவங்கள் தொடர்பாக சவுதி அதிகாரிகளிடமிருந்து உடனடியாக எந்தக் கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.&nbsp; &nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-05T11:26:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஏடிஎம் கொள்ளைகள்: பொலிசார் ஒருவர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/delhi-police-arrested-in-faridabad-atm-robbery-1785928708"></link>
            <id>https://news.lankasri.com/article/delhi-police-arrested-in-faridabad-atm-robbery-1785928708</id>
            <summary type="text">ஃபரிதாபாத் நகரில் நிகழ்ந்த ஏடிஎம் கொள்ளைகள் தொடர்பில் பொலிசார் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


இந்தியாவின் ஹரியானா மாநிலத்திலுள்ள ஃபரிதாபாத் என்ன...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஃபரிதாபாத் நகரில் நிகழ்ந்த ஏடிஎம் கொள்ளைகள் தொடர்பில் பொலிசார் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>

இந்தியாவின் ஹரியானா மாநிலத்திலுள்ள ஃபரிதாபாத் என்னுமிடத்தில், சமீபத்தில், இரண்டு ஏடிஎம் இயந்திரங்களிருந்து 12 லட்ச ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டது.
</p><p>
இந்நிலையில், அந்த சம்பவத்தில் மூளையாக செயல்பட்ட டெல்லி பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><h3>
12 லட்ச ரூபாய் கொள்ளை
</h3><p>
ஜூலை மாதம் 3ஆம் திகதி, ஏடிஎம் இயந்திரம் ஒன்றை மின் கருவி ஒன்றின் உதவியுடன் வெட்டி அதிலிருந்த 6.53 லட்ச ரூபாயை கொள்ளையர்கள் கொள்ளையடித்துச் சென்றுவிட்டதாக பொலிசில் புகாரளிக்கப்பட்டுள்ளது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/310b7b8a-b681-44aa-aedb-9cb0c3e11e68/26-6a731c0568374.webp' /></p><p>

பின்னர், ஜூலை மாதம் 26ஆம் திகதி, அதே பகுதியிலுள்ள மற்றொரு ஏடிஎம்மிலிருந்து 5.71 லட்ச ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
</p><p>
சுமார் 1,000 சிசிடிவி கமெராக்களை ஆய்வு செய்த பொலிசார், நேற்றும், நேற்று முன்தினமும் ஹுக்கம் சந்த் (34), அவரது உறவினரான அர்விந்த் (26), விகாஸ் குமார் (24), அபிஷேக் (19) மற்றும் விஷால் குமார் (19) ஆகியோரைக் கைது செய்துள்ளனர்.</p><p>

இந்த கொள்ளைச் சம்பவங்களில் மூளையாக செயல்பட்ட ஹுக்கம் சந்த், 2016ஆம் ஆண்டு முதல் டெல்லி பொலிஸ் கான்ஸ்டபிளாக பணிபுரிந்துவருகிறார்.</p><p>

கடன் தொல்லையால் அவதியுற்றுவந்த ஹுக்கம், தன் உறவினரான அர்விந்த் உதவியுடன் ஏடிஎம்களில் கொள்ளையடிக்க திட்டமிட்டுள்ளார்.
</p><p>
எந்த ஏடிஎம்களில் இரவு நேரத்தில் பாதுகாவலர்கள் இருக்கமாட்டார்கள், எங்கு கொள்ளையடிப்பது எளிது என திட்டமிட்ட ஹுக்கம், வெல்டிங் வேலை செய்யும் தன் உறவினர்கள் உதவியுடன் ஏடிஎம் இயந்திரங்களை வெட்டி 12 லட்ச ரூபாயைக் கொள்ளையடித்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
</p><p>
குற்றவாளிகளை கைது செய்துள்ள அதிகாரிகள், அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-05T11:20:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[பொதுநலவாயப் போட்டிகளில் தங்க பதக்கம் வென்ற தரங்கவுக்கு பதவி உயர்வு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/tharanga-wins-gold-medal-at-commonwealth-games-1785928220"></link>
            <id>https://tamilwin.com/article/tharanga-wins-gold-medal-at-commonwealth-games-1785928220</id>
            <summary type="text">அண்மையில் நிறைவடைந்த பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளின்
ஈட்டி எறிதல் போட்டியில், உலக சாம்பியன்களைத் தோற்கடித்து சாதனை படைத்த இலங்கை விமானப்படையைச் சே...</summary>
            <content type="html"><![CDATA[<p>அண்மையில் நிறைவடைந்த பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளின்
ஈட்டி எறிதல் போட்டியில், உலக சாம்பியன்களைத் தோற்கடித்து சாதனை படைத்த இலங்கை விமானப்படையைச் சேர்ந்த கோப்ரல் ரொமேஷ் தரங்கவுக்குப் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
</p><p>
இந்த சாதனையால் அவருக்கு தங்க பதக்கம் கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.</p><p> 

இந்த நிகழ்வு, இன்று(05.08.2026) விமானப்படைத் தலைமையகத்தில் இடம்பெற்றுள்ளது. </p><h3>



தாய்நாட்டுக்கு பெருமை சேர்த்த அதிகாரி</h3><p>

தாய்நாட்டுக்குப் பெருமையைக் கொண்டுவந்த அவரது இணையற்ற திறமையையும் முந்தைய
சாதனைகளையும் அங்கீகரிக்கும் விதமாக, விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் பந்து
எதிரிசிங்கவினால், அவர் கோப்ரல் பதவி நிலையிலிருந்து சார்ஜன்ட் பதவி நிலைக்கு
உயர்த்தப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cd7612da-53ce-4ffe-9364-180da5c7d8d2/26-6a731ab25a3f5.webp' /></p><p>
</p><p>
 அத்துடன், விமானப்படைத் தளபதியால் ரொமேஷ் தரங்கவுக்குச்
விசேட நிதி உதவியும் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

இந்தச் சாதனைக்குப் பின்னால் உறுதுணையாக இருந்த அவரது பயிற்சியாளர் டோனி
பிரசன்னா மற்றும் உடற்பயிற்சி உதவியாளர் கோப்ரல் சந்திம குருசிங்க ஆகியோரின்
சேவைகளைப் பாராட்டும் விதமாக அவர்களுக்கும் பணப் பரிசுகள் வழங்கப்பட்டுள்ளன.&nbsp;&nbsp;</p><p></p><p></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d2ba3cb8-dd68-44bd-9fa6-dae24e057aac/26-6a731ab31b1ca.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/498ccd39-3fee-4726-b597-5d91570009eb/26-6a731ab3e7964.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f5e6236f-ded6-4af8-a877-b7068cfab3da/26-6a731ab4bdf2f.webp' /></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-05T11:12:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[Chaitra Reddy : சீரியல் நடிகை சைத்ரா ரெட்டி விவாகரத்தா? திருமண புகைப்படங்களை நீக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/is-kayal-serial-chaitra-reddy-getting-divorce-1785921606"></link>
            <id>https://manithan.com/article/is-kayal-serial-chaitra-reddy-getting-divorce-1785921606</id>
            <summary type="text">Chaitra Reddy Divorce Rumors :&amp;nbsp; &#039;கயல்&#039; சீரியல்&amp;nbsp; நடிகை சைத்ரா ரெட்டி, தனது கணவரும் தயாரிப்பாளருமான ராகேஷ் சமலாவை விவாகரத்து செய்யவிருப்பதாக த...</summary>
            <content type="html"><![CDATA[<p>Chaitra Reddy Divorce Rumors :&nbsp; 'கயல்' சீரியல்&nbsp; நடிகை சைத்ரா ரெட்டி, தனது கணவரும் தயாரிப்பாளருமான ராகேஷ் சமலாவை விவாகரத்து செய்யவிருப்பதாக தகவல்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றது.</p><h2>
சைத்ரா ரெட்டி</h2><p>சன் தொலைக்காட்சியில் கடந்த சில ஆண்டுகளாக ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்புடன் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான தொடராக “கயல்” சீரியல் இருந்து வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/267aaaf6-2c08-4194-872f-0036eb6bebfa/26-6a73067222b52.webp' /></p><p>இந்த தொடரில் கதையின் நாயகியான கயல் என்ற கதாபாத்திரத்தில் நடித்து, தமிழக மக்களின் மனதில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்தவர் தான் நடிகை சைத்ரா ரெட்டி.</p><p>தன்னுடைய இயல்பான நடிப்பு, துணிச்சலான கதாபாத்திர வெளிப்பாடு மற்றும் உணர்ச்சிப்பூர்வமான நடிப்பின் மூலம் சைத்ரா ரெட்டி ஏராளமான ரசிகர்களை கவர்ந்துள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6adf4189-7a21-4e5a-a9f5-e3001c4f2866/26-6a730672cab94.webp' /></p><p></p><h2> </h2><p>“கயல்” தொடருக்கு முன்பு ஜீ தமிழில் ஒளிபரப்பான “யாரடி நீ மோகினி” தொடரில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார். எதிர்மறை கதாபாத்திரமாக இருந்தாலும், தனது நடிப்புத் திறமையால் அந்த கதாபாத்திரத்திற்கும் தனி அடையாளத்தை உருவாக்கிக் கொண்டவர்.&nbsp;</p><h2><span style="color: inherit; font-size: 1.75rem;">திருமண புகைப்படங்கள் நீக்கம்</span></h2><p>சமீப காலமாக திரையுலகில் பிரபலங்களின் தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பான செய்திகள் அதிகம் பேசப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில் தற்போது சீரியல் நடிகை சைத்ரா ரெட்டி குறித்தும் சில தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/96f8716f-7565-4790-b17f-974ffd5dd8fe/26-6a73067382552.webp' /></p><p>
சைத்ரா ரெட்டி, தயாரிப்பாளரும் ஒளிப்பதிவாளருமான ராகேஷ் சமலா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவரும் தங்களது திருமண வாழ்க்கை தொடர்பான புகைப்படங்கள் மற்றும் தருணங்களை அவ்வப்போது சமூக வலைதளங்களில் பகிர்ந்து வந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6ba6688a-9cb6-432d-9b0c-8f9758c75b50/26-6a73067433ba5.webp' /></p><p>
இந்நிலையில், சைத்ரா ரெட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்த&nbsp; திருமண புகைப்படங்களை நீக்கியிருப்பது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/38eacce3-984e-43d6-9378-0620ba54b43f/26-6a730674d9956.webp' /></p><p></p><p>இதனை தொடர்ந்து, “சைத்ரா ரெட்டிக்கும் அவரது கணவர் ராகேஷ் சமலாவுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளதா?”, “இருவரும் விவாகரத்து செய்ய உள்ளார்களா?” என்ற கேள்விகள் சமூக வலைதளங்களில் எழுந்துள்ளன.
</p><p>
எனினும், இதுகுறித்து சைத்ரா ரெட்டி அல்லது அவரது கணவர் ராகேஷ் சமலா தரப்பில் இதுவரை எந்தவிதமான அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்<b><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"> FOLLOW NOW</a></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-05T11:12:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[மகாசாகர் தொலைநோக்கில் இலங்கை மையப்புள்ளி: கொழும்பில் இந்தியா அழுத்தம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/srilanka-is-the-focal-point-mahasagar-vision-india-1785926792"></link>
            <id>https://ibctamil.com/article/srilanka-is-the-focal-point-mahasagar-vision-india-1785926792</id>
            <summary type="text">இலங்கைக்கு ஒரு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி, இந்தியாவின் அண்டை நாடு முதன்மை (Neighbourhood First...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கைக்கு ஒரு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி, இந்தியாவின் அண்டை நாடு முதன்மை (Neighbourhood First Policy) கொள்கையிலும், மகாசாகர்" (Mahasagar) தொலைநோக்கிலும் இலங்கைக்கு மையமான பங்கு இருப்பதாக மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.</p><p>கொழும்பில் இன்று&nbsp; வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் வெளியுறவு அமைச்சின் செயலாளர் அருணி ரணராஜா ஆகியோருடன் தனித்தனியே நடத்திய பேச்சுவார்த்தைகளின் போது, இந்திய வெளியுறவுச் செயலாளர் இந்த நிலைப்பாட்டை தெளிவுபடுத்தினார்.</p><p></p><h2>இந்தியாவின் முக்கிய கவனக்குவிப்பு</h2><p>இந்த சந்திப்பில் இரு நாடுகளுக்கும் இடையிலான நடப்பு ஒத்துழைப்புகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. முக்கிய முன்னுரிமைத் துறைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் மற்றும் பரஸ்பர நலன் சார்ந்த விடயங்கள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9d203bbd-e073-4434-8ba9-45e2c8a288be/26-6a73195843a1f.webp' /></p><p>பரஸ்பர நலன் கொண்ட பிராந்திய மற்றும் உலகளாவிய வளர்ச்சிகள் குறித்து இரு தரப்பும் கருத்துக்களை பரிமாறிக்கொண்டன. </p><p>இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வழிகள் ஆராயப்பட்டன.</p><p>மேலும் இந்தியாவின் கடல்சார் தொலைநோக்கான மகாசாகர் திட்டத்தை முன்னெடுப்பதில் இலங்கையின் பங்கு முக்கியமானது என விக்ரம் மிஸ்ரி இதன்போது அடிக்கோடிட்டார்.</p><p> இந்து சமுத்திர பிராந்தியத்தில் ஸ்திரத்தன்மை மற்றும் வளர்ச்சிக்கு இரு நாடுகளுக்கும் இடையிலான தொடர்ச்சியான ஒத்துழைப்பு அவசியம் என இந்தியா கருதுகிறது என்பதையும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.</p><p></p><h2>தற்போதைய உயர்மட்ட சந்திப்பு</h2><p>இன்று காலை நாட்டை வந்தடைந்த வெளியுறவுச் செயலாளர் மிஸ்ரியை, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா வரவேற்றார்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e2d37d76-bc00-44d4-9b11-02a76c3140d3/26-6a731958f27c7.webp' /></p><p>இந்த விஜயத்தின் போது அவர் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய உள்ளிட்ட அதிகாரிகளையும் சந்திக்கவுள்ளார்.</p><p>தற்போதைய உயர்மட்ட சந்திப்புகளின் அடிப்படையில், இரு நாடுகளுக்கும் இடையிலான நெருக்கமான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதும், முக்கிய ஒத்துழைப்புத் துறைகளை முன்னெடுத்துச் செல்வதுமே இந்த விஜயத்தின் பிரதான நோக்கம் என இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. </p><p>இந்தியா தனது வெளியுறவுக் கொள்கையில் இலங்கைக்கு வழங்கும் முதன்மையான முக்கியத்துவத்தையே இந்த சந்திப்புகள் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-05T11:09:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கைக்கான வாகன இறக்குமதி குறித்து வெளியான தகவல்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/vehicle-imports-to-sri-lanka-1785925318"></link>
            <id>https://ibctamil.com/article/vehicle-imports-to-sri-lanka-1785925318</id>
            <summary type="text">இலங்கைக்கு மோட்டார் வாகன இறக்குமதி மூலம் சுங்க வரிகளாக 896.4 பில்லியன் வருமானம் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.ஆறு ஆண்டுகளுக்கு பிறகு இலங்கை வர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கைக்கு மோட்டார் வாகன இறக்குமதி மூலம் சுங்க வரிகளாக 896.4 பில்லியன் வருமானம் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p>ஆறு ஆண்டுகளுக்கு பிறகு இலங்கை வர்த்தக சம்மேளனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> வாகன இறக்குமதிகள் மீண்டும் தொடங்கியுள்ள நிலையில், இலங்கையின் வாகனத் துறை ஒரு புதிய கட்டத்திற்குள் பிரவேசிப்பதை இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகின்றது.</p><p></p><h2>மின்சார வாகனம்</h2><p>மேலும் அந்த அறிக்கையில், 15க்கும் மேற்பட்ட உள்நாட்டு வாகன இணைப்பு தொழிற்சாலைகள் இயங்கி வருவதோடு, குறைந்தபட்சம் 20 சதவீதம் உள்ளூர் மூலப்பொருட்களைப் பயன்படுத்தும் கொள்கை காரணமாக வேலைவாய்ப்புகளும் உள்நாட்டு மதிப்புக் கூட்டலும் அதிகரித்துள்ளன.</p><p>
2026 ஆம் ஆண்டின் முதல் 06 மாதங்களில் மாத்திரம் 3,27,000க்கும் அதிகமான புதிய வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1da568f1-c028-4dee-b949-6b3dfacca302/26-6a73162bb2d41.webp' /></p><p>
</p><p>
உலகளவில் விற்பனையாகும் புதிய சிற்றூந்துகளில் நான்கில் ஒன்று மின்சார வாகனமாகும்.

இதன் விற்பனை முதன்முறையாக 20 மில்லியனைக் கடந்துள்ளது.
</p><p>
வாகனப் பாதுகாப்பு மற்றும் சோதனை நடவடிக்கைகளில் AI பயன்பாடு, தயாரிப்புக்கான நேரத்தை 50 சதவீதம் வரை குறைத்துள்ளது.“ என குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p>இதேவேளை இலங்கைப் பொருளாதாரத்தில் வாகனத் துறையின் பங்கு, இறக்குமதி மற்றும் பதிவு தரவுகள், எரிபொருள் வகை சார்ந்த சந்தைப் போக்குகள் மற்றும் இத்துறையின் எதிர்கால வாய்ப்புகள் குறித்த விரிவான தகவல்களை இந்த அறிக்கை உள்ளடக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-05T11:06:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[4 மாகாணங்களில் எலிக் காய்ச்சல், தொற்று நோய்கள் பரவும் அபாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/rat-fever-infectious-diseases-flood-srilanka-1785928070"></link>
            <id>https://jvpnews.com/article/rat-fever-infectious-diseases-flood-srilanka-1785928070</id>
            <summary type="text">&amp;nbsp;சீரற்ற காலனிலையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு அபாயத்தை தொடர்ந்து மேல், தென், மத்திய, மற்றும் சப்ரகமுவ ஆகிய 4 மாகாணங்களில் வயிற்றுப்போக்கு மற்றும் எ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;சீரற்ற காலனிலையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு அபாயத்தை தொடர்ந்து மேல், தென், மத்திய, மற்றும் சப்ரகமுவ ஆகிய 4 மாகாணங்களில் வயிற்றுப்போக்கு மற்றும் எலிக் காய்ச்சல் உள்ளிட்ட தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளதாக இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. </p><p>

இது குறித்து அச்சங்கத்தின் பிரதான செயலாளர் சமில் முத்துகுட புதன்கிழமை (05) ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில்,

அசுத்தமான நீரின் ஊடாக எலி காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளதால் அதனை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை சிகிச்சைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9f75cf11-ce7f-40fd-b0a5-051e2e8bcf21/26-6a73198831c55.webp' /></p><h2>வயிற்றுப்போக்கு மஞ்சள் காமாலை தோல் நோய்கள் டெங்கு&nbsp;</h2><p>
</p><p>
அருகில் உள்ள சுகாதார பரிசோதகர் அல்லது சுகாதார .வைத்திய அதிகாரி காரியாலயத்தின் ஊடாக இலவசமாக மருந்துகள் வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.</p><p>

மேலும், வயிற்றுப்போக்கு, மஞ்சள் காமாலை, தோல் நோய்கள், டெங்கு உள்ளிட்ட தொற்று நோய்களுக்கான அறிகுறிகள் தென்பட்டால்&nbsp; &nbsp;உடனடியாக அருகில் உள்ள அரச வைத்தியசாலை அல்லது அங்கீகரிக்கப்பட்ட வைத்தியரிடமிருந்து சிகிச்சைகளையும் மருத்துவ ஆலோசனைகளையும் பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.</p><p></p><p>
</p><p>
மேலும், அசுத்தமான நீரில் குழந்தைகளை விளையாடச் செய்வது, நீராடுவது போன்ற செயற்பாடுகளில் ஈடுபடுத்துவதைத் தவிர்க்குமாறும் குறிப்பிட்டார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-05T11:05:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் கைது : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/ex-education-min-akila-viraj-appears-before-ciaboc-1785912413"></link>
            <id>https://ibctamil.com/article/ex-education-min-akila-viraj-appears-before-ciaboc-1785912413</id>
            <summary type="text">புதிய இணைப்புஇலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் எதிர்வரும்18 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் எதிர்வரும்18 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.</p><p>கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.</p><p> 

வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் இன்று (05) முற்பகல் முன்னிலையானன நிலையில் அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.</p><p><br></p><h2>இரண்டாம் இணைப்பு</h2><p>முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
 

வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் இன்று (05) காலை முன்னிலையான நிலையில் அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.&nbsp; &nbsp;</p><p>கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.</p><h2>அரசாங்கத்திற்கு நிதி இழப்பு&nbsp;</h2><p>ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் அலுவலகத்தில் பணியமர்த்தப்பட்ட நான்கு ஊழியர்களை அகில விராஜ் கரியவசம் தனது தனிப்பட்ட பணிகளுக்காகப் பயன்படுத்தப்படுத்தியதாக&nbsp;இலஞ்ச ஊழல் ஆணைக்குழு குற்றஞ்சாட்டியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3a724148-9c10-4ac7-b319-333c730daacd/26-6a7310ec6366a.webp' /></p><p>அவர்களில் மூவர் முன்னாள் அமைச்சருக்குச் சொந்தமான எரிபொருள் நிலையத்தில் பணிபுரிய நியமிக்கப்பட்டதாகவும், மற்றொரு ஊழியர் தனக்கு ஒதுக்கப்பட்ட அலுவலகத்தில் பணிகளில் ஈடுபடவில்லை என்றும் கூறப்படுகிறது.</p><p>அதன்படி, ஊழியர்கள் தங்களது அலுவலக பணிகளுக்குத் தொடர்பில்லாத பணிகளில் ஈடுபட்டிருந்தபோதிலும், அவர்களுக்குச் சம்பளம் மற்றும் படிகளை வழங்கியதன் மூலம் அரசுக்கு 2,768,836.14 ரூபாய் நிதி இழப்பை ஏற்படுத்திய ஊழல் குற்றச்சாட்டின் பேரில் அவர் கைது செய்யப்பட்டார்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/iZ0jBSKPo40" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><h2>முதலாம் இணைப்பு</h2><p>முன்னாள் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p>நடைபெற்று வரும் விசாரணை ஒன்றுக்கு வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று (05) அந்த ஆணைக்குழுவிற்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>ஜனாதிபதி செயலகத்திற்கு ஊழியர்களை நியமித்தமை மற்றும் அவர்களை அரசியல் நோக்கங்களுக்காகப் பயன்படுத்தியமை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரிப்பதற்காகவே அகில விராஜ் காரியவசம் அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-05T11:03:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[படு கிளாமரான உடையில் பிக்பாஸ் புகழ் கெமி வெளியிட்ட போட்டோஸ்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/bigg-boss-fame-kemy-latest-glamour-photos-1785923668"></link>
            <id>https://cineulagam.com/article/bigg-boss-fame-kemy-latest-glamour-photos-1785923668</id>
            <summary type="text">பிக்பாஸ் கெமிசினிமா நடிகைகள் இப்போதெல்லாம் படங்கள் நடிப்பதை தாண்டி வித்தியாசமான போட்டோ ஷுட்கள் நடத்துவதில் பிஸியாகி விட்டனர். கடந்த சில நாட்களாக பிக்ப...</summary>
            <content type="html"><![CDATA[<h2>பிக்பாஸ் கெமி</h2><p>சினிமா நடிகைகள் இப்போதெல்லாம் படங்கள் நடிப்பதை தாண்டி வித்தியாசமான போட்டோ ஷுட்கள் நடத்துவதில் பிஸியாகி விட்டனர். </p><p>கடந்த சில நாட்களாக பிக்பாஸ் புகழ் கெமி கொஞ்சம் கிளாமரான உடைகளில் போட்டோ ஷுட் நடத்தி ரசிகர்களை மயக்கி வருகிறார். சமீபத்தில் வெள்ளை உடையில் அலைகளின் மத்தியில் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டார்.</p><p> இப்போது தாமரையை கையில் வைத்துக் கொண்டு வித விதமாக அப்சரஸ் போல போஸ் கொடுத்து போட்டோஷூட் நடத்தியுள்ளார்.&nbsp; &nbsp;</p><p><br></p>]]></content>
            <updated>2026-08-05T11:00:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[பணத்துக்காக, தான் ஆபாச படங்களில் நடித்தபோது அப்பா!! நடிகை சன்னி லியோன் ஓபன்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/sunny-leone-opens-up-about-her-past-decisions-1785923155"></link>
            <id>https://viduppu.com/article/sunny-leone-opens-up-about-her-past-decisions-1785923155</id>
            <summary type="text">சன்னி லியோன்ஆபாச படங்கள் மூலம் பிரபலமான நடிகை சன்னி லியோன், அதிலிருந்து வெளியேறி இந்தியாவில் குடியேறினார். திருமணமாகி 4 குழந்தைகளை பெற்றும், தத்தெடுத்...</summary>
            <content type="html"><![CDATA[<h2>சன்னி லியோன்</h2><p>ஆபாச படங்கள் மூலம் பிரபலமான நடிகை சன்னி லியோன், அதிலிருந்து வெளியேறி இந்தியாவில் குடியேறினார். திருமணமாகி 4 குழந்தைகளை பெற்றும், தத்தெடுத்தும் வளர்த்து வரும் சன்னி லியோ, பணத்தேவைக்காக ஆபாச படங்களில் நடித்தது குறித்து பகிர்ந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b30e0f75-a9f0-4900-8103-5f61828c19ba/26-6a73065655f2e.webp' /></p><p> </p><p>Karenjit Kaur: The Untold Story of Sunny Leone என்ற தன்னுடைய சுயசரிதை வலைத்தொடரில் பல விஷயங்களை பகிர்ந்துள்ளார். </p><p>அதில், தான் பென்ட்ஹவுஸ் பெட் ஆஃப் தி இயர் விருது பெற்றதையும், அதன்மூலம் 1 லட்சம் டாலர் பரிசுத் தொகை பெற்றதையும் கூறி பெற்றோரை அமைதிப்படுத்த முயன்றதாக கூறியிருக்கிறார். ஆனால் அதைக்கேட்ட அவரது தாய், நீ ஆடையின்றி நின்றாயா என்று கேட்டு கண்ணீர்விட்டு அழுதார் என்று சன்னி லியோன் தெரிவித்துள்ளார். </p><p>மேலும், தன் சகோதரனின் பெயரையே இதற்கு பயன்படுத்தியதற்கு அம்மா எதிர்ப்பு தெரிவித்தார் என்று அப்பா இந்த முடிவை கேட்டு மிகுந்த வேதனையடைந்தார். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/20d88a0a-e710-4465-82c6-d58ed4f804e2/26-6a7306570336f.webp' /></p><p>தங்களின் ஆலோசனையின்றில் இவ்வளவு பெரிய முடிவை எடுத்ததால், ஒரு பெற்றோராக இதை நான் ஏற்றுக் கொள்ள முடியாது, ஆனால் நீ இந்த வழியை தேர்தெடுத்துவிட்டதால், இதில் உறுதியாக நின்று வெற்றிப்பெற்று காட்டு என்று தன்னிடம் கூறியதாக சன்னி லியோ அந்த சுயரிதையில் பதிவிட்டுள்ளார்.</p>]]></content>
            <updated>2026-08-05T11:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசத்திற்கு விளக்கமறியல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/akila-viraj-in-the-bribery-corruption-commission-1785908875"></link>
            <id>https://tamilwin.com/article/akila-viraj-in-the-bribery-corruption-commission-1785908875</id>
            <summary type="text">புதிய இணைப்புமுன்னாள் அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம், எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>முன்னாள் அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம், எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.</p><p>இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு, ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகராக (நிர்வாக சீர்திருத்தங்கள்) பணியாற்றிய காலத்தில் செய்த ஊழல் குற்றச்சாட்டுகளின் பேரில் அவர் கைது செய்யப்பட்டதாகத் தெரிவித்துள்ளது.</p><p>

ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகராகப் பணியாற்றியபோது, ​​அவர் தனது உத்தியோகப்பூர்வ பணியாளர்கள் என்று கூறி நான்கு ஊழியர்களைப் பணியமர்த்தினார் என இலஞ்ச ஆணைக்குழு ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. </p><p>

ஒருவர் தனது சொந்த எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் பணிக்கு அனுப்பப்பட்டிருந்த வேளையில், மற்றொருவர் அலுவலகம் சாராத பணிகளில் ஈடுபட்டிருந்தார். </p><p>

அலுவல் ரீதியான பொறுப்புகள் வழங்கப்படாத போதிலும், அரச நிதியிலிருந்து மொத்தம் 2,768,836.14 ரூபாய் மதிப்பிலான சம்பளம் வழங்க அவரால் ஏற்பாடு செய்யப்பட்டதால், அரசிற்கு நிதி இழப்பு ஏற்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.&nbsp;</p><h2>இரண்டாம் இணைப்பு&nbsp;</h2><p>முன்னாள் அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.&nbsp;</p><p>இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.&nbsp;</p><h2>முதலாம் இணைப்பு</h2><p>முன்னாள் அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இன்று (05) காலை முன்னிலையாகியுள்ளார்.</p><p>இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைள் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்கானவே அகிலவிராஜ் காரியவசம் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>ஜனாதிபதி செயலகத்திற்கு ஊழியர்களை நியமித்தமை மற்றும் அவர்களை அரசியல் நோக்கங்களுக்காகப் பயன்படுத்தியமை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரிப்பதற்காகவே அகிலவிராஜ் காரியவசம் அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>&nbsp;</p><p>&nbsp;</p><p><b><i>you may like this video</i></b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/1QGQREGh-68" width="640" height="360" class="note-video-clip"></iframe>&nbsp; &nbsp;</p><p>

</p>]]></content>
            <updated>2026-08-05T10:57:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yoosuf</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை போக்குவரத்து சபை பெயர் பலகையை பயன்படுத்தி நடக்கும் மோசடி - பயணிகள் குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/scam-using-sri-lanka-transport-board-nameplates-1785927228"></link>
            <id>https://tamilwin.com/article/scam-using-sri-lanka-transport-board-nameplates-1785927228</id>
            <summary type="text">இலங்கை போக்குவரத்து சபையின்(SLTB) பெயர் பலகையைப் பயன்படுத்தி உணவகங்கள்
பலவற்றில் பல்வேறு முறைகேடுகள் இடம்பெற்று வருவதாகப் பயணிகள் கவலை
தெரிவித்துள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை போக்குவரத்து சபையின்(SLTB) பெயர் பலகையைப் பயன்படுத்தி உணவகங்கள்
பலவற்றில் பல்வேறு முறைகேடுகள் இடம்பெற்று வருவதாகப் பயணிகள் கவலை
தெரிவித்துள்ளனர்.
</p><p>
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,</p><p> 

அனுராதபுரம், கோமரங்கடவள பகுதியில் அமைந்துள்ள உணவகம் ஒன்றில் இலங்கை
போக்குவரத்து சபையின் உத்தியோகபூர்வ பெயர் பலகை காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
</p><p>
இதனை நம்பி உணவகத்திற்கு வரும் பயணிகளிடம், அத்தியாவசிய உணவுப் பொருட்கள்
மற்றும் பானங்கள் உள்ளிட்ட பொருட்களுக்கு வழக்கமான விலையை விட ரூ. 30 முதல்
ரூ. 40 வரை கூடுதலாக அறவிட்டு மோசடியில் ஈடுபட்டு வருவதாகப் பயணிகள்
குற்றம் சாட்டுகின்றனர்.
</p><h2>
பயணிகள் விசனம்</h2><p>
மேலும், குறித்த உணவகத்தில் அடிப்படை வசதியான கழிப்பறை வசதிகள் சுத்தமாகப்
பராமரிக்கப்படுவதில்லை என்றும், சுகாதாரமற்ற முறையில் காணப்படுகின்றது என்றும் பயணிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/039c51eb-1dba-4943-bd32-65682541c916/26-6a7316d6b1ee5.webp' /></p><p>
</p><p>
இந்த உணவகத்திற்கு அனுராதபுரம், அக்கரைப்பற்று, கொழும்பு, கண்டி, குருநாகல்
உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து இயக்கப்படும் நீண்ட தூரப் பேருந்துகளில்
பயணிக்கும் பொதுமக்கள் அதிகளவில் வந்து செல்கின்றனர். </p><p>

இலங்கை போக்குவரத்து
சபையின் பெயர் பலகையை பார்த்து பயணிகள் பலர், இவ்வாறான விலை
ஏற்றத்தாலும் சுகாதாரமற்ற சூழலாலும் பெரும் அசெளகரியங்களுக்கும் நிதிச்
சுரண்டலுக்கும் உள்ளாகி வருகின்றனர்.</p><p>

எனவே, இந்த விடயம் தொடர்பில், உடனடியாகத் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்குமாறு
சம்பந்தப்பட்ட இலங்கை போக்குவரத்து சபை அதிகாரிகளுக்கும், நுகர்வோர் விவகார
அதிகாரசபை மற்றும் சுகாதார அதிகாரிகளுக்கும் பொதுமக்கள் கோரிக்கை
விடுத்துள்ளனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/132a98a3-ac03-4c34-9b76-37aa8b262299/26-6a7316d79a22a.webp' /></p><p></p><p></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-05T10:56:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[மோட்டார் வாகன இறக்குமதியால் அரசாங்கத்திற்கு கிடைத்துள்ள பெருமளவு பணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/vehicle-imports-sri-lanka-1785924658"></link>
            <id>https://tamilwin.com/article/vehicle-imports-sri-lanka-1785924658</id>
            <summary type="text">மோட்டார் வாகன இறக்குமதி மூலம் சுங்க வரிகளாக ரூ. 896.4 பில்லியன் வருவாய் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.6 ஆண்டுகளுக்குப் பிறகு இலங்கை வர்த்தக சம்...</summary>
            <content type="html"><![CDATA[<p>மோட்டார் வாகன இறக்குமதி மூலம் சுங்க வரிகளாக ரூ. 896.4 பில்லியன் வருவாய் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>6 ஆண்டுகளுக்குப் பிறகு இலங்கை வர்த்தக சம்மேளனம் தனது முக்கிய வெளியீடான 'மோட்டார் வாகனத் துறை அறிக்கை 2025/26'ஐ வெளியிட்டுள்ளது.</p><p>இலங்கையின் வாகனத் துறை ஒரு புதிய கட்டத்திற்குள் பிரவேசிப்பதை இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகின்றது.</p><h2>முதல் 06 மாதங்களில்</h2><p>
15இற்கும் மேற்பட்ட உள்நாட்டு வாகன இணைப்பு தொழிற்சாலைகள் இயங்கி வருவதோடு, குறைந்தபட்சம் 20வீத உள்ளூர் மூலப்பொருட்களைப் பயன்படுத்தும் கொள்கை காரணமாக வேலைவாய்ப்புகளும் உள்நாட்டு மதிப்பும் அதிகரித்துள்ளன.</p><p>2026 ஆம் ஆண்டின் முதல் 06 மாதங்களில் மாத்திரம் 3,27,000க்கும் அதிகமான புதிய வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8b407cb2-e8de-43cd-94a2-af819a143c5a/26-6a7316932b325.webp' /></p><p>
உலகளவில் விற்பனையாகும் புதிய சிற்றூந்துகளில் நான்கில் ஒன்று மின்சார வாகனமாகும்.

இதன் விற்பனை முதன்முறையாக 20 மில்லியனைக் கடந்துள்ளது.
</p><p>இலங்கைப் பொருளாதாரத்தில் வாகனத் துறையின் பங்கு, இறக்குமதி மற்றும் பதிவு தரவுகள், எரிபொருள் வகை சார்ந்த சந்தைப் போக்குகள் மற்றும் இத்துறையின் எதிர்கால வாய்ப்புகள் குறித்த விரிவான தகவல்களை இந்த அறிக்கை உள்ளடக்கியுள்ளது.</p><p></p><p></p><p><b>YOU MAY LIKE THIS VIDEO</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/MMIpc2_uSoE" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p>]]></content>
            <updated>2026-08-05T10:56:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yoosuf</name>
            </author>
            <title type="text"><![CDATA[கந்தளாயில் பேருந்து - மோட்டார் சைக்கிள் மோதி விபத்து: இளைஞர் படுகாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/accident-at-kanthalay-1785921626"></link>
            <id>https://tamilwin.com/article/accident-at-kanthalay-1785921626</id>
            <summary type="text">கந்தளாய் - வென்றாசன்புர பகுதியில் பேருந்தும், மோட்டார்சைக்கிளும் இன்று (05.08.2026) காலை மோதி விபத்திற்கு இலக்காகியுள்ளன.&amp;nbsp;இந்த விபத்தில் ஒருவர் ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>கந்தளாய் - வென்றாசன்புர பகுதியில் பேருந்தும், மோட்டார்சைக்கிளும் இன்று (05.08.2026) காலை மோதி விபத்திற்கு இலக்காகியுள்ளன.&nbsp;</p><p>இந்த விபத்தில் ஒருவர் பலத்த காயமடைந்து கந்தளாய் தள
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.&nbsp;</p><h2>ஒருவர் காயம்</h2><p>யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த உள்ளூர் சுற்றுலாப் பயணிகள் குழுவொன்று
சீகிரியாவுக்குச் சென்றுவிட்டு,&nbsp; திருகோணமலை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த பேருந்து, கந்தளாய் பிரதான வீதியின் 91ஆம் கட்டைப்
பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, வீதியைக் குறுக்கறுத்த மோட்டார்
சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8360e92e-212b-49f2-a730-98d4fb0780d4/26-6a73158b4ca98.webp' /></p><p>
</p><p>
இவ்விபத்தில் காயமடைந்தவர் வென்றாசன்புர பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய பொலிஸ்
உத்தியோகத்தர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
</p><p>
இச்சம்பவம் தொடர்பில் கந்தளாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு
வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/073d5ab1-3d34-4648-a5e1-7ba51016e0ea/26-6a73158c0cd50.webp' /></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-05T10:53:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[அகில விராஜ் காரியவசம் கைதுக்கான காரணம் வெளியானது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/why-was-akila-kariyawasam-arrested-1785925887"></link>
            <id>https://ibctamil.com/article/why-was-akila-kariyawasam-arrested-1785925887</id>
            <summary type="text">ஜனாதிபதியின் நிர்வாக விவகாரங்களுக்கான சிரேஷ்ட ஆலோசகராகப் பணியாற்றியபோது, ​​அரசால் நிதியளிக்கப்பட்ட ஊழியர்களைத் தனது தனிப்பட்ட தேவைகளுக்காகத் தவறாகப் ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜனாதிபதியின் நிர்வாக விவகாரங்களுக்கான சிரேஷ்ட ஆலோசகராகப் பணியாற்றியபோது, ​​அரசால் நிதியளிக்கப்பட்ட ஊழியர்களைத் தனது தனிப்பட்ட தேவைகளுக்காகத் தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளின் பேரில், முன்னாள் அமைச்சர் அகில விராஜ் கரியவசம், இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் (CIABOC) அதிகாரிகளால் இன்று கைது செய்யப்பட்டார்.
</p><p>
கரியவசம், 2022 ஜூலை 29 அன்று அப்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவால் அப்பதவிக்கு நியமிக்கப்பட்டார்.</p><h2>காரிய வசத்தின் எரிபொருள் நிலையத்தில் பணிபுரிந்த மூவர்</h2><p>CIABOC-இன் தகவலின்படி, கரியவசம் ஜனாதிபதி செயலகத்துடன் இணைக்கப்பட்ட தனது உத்தியோகபூர்வ தனிப்பட்ட ஊழியர்களாக நான்கு நபர்களை நியமித்ததாகக் கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d9c6889b-f39b-4299-ad78-469ecfc4fa86/26-6a73151ea596a.webp' /></p><p> </p><p>அவர்களில் மூவர் அவருக்குச் சொந்தமான ஒரு தனியார் எரிபொருள் நிலையத்தில் பணிபுரிய நியமிக்கப்பட்டதாகவும், நான்காவது ஊழியருக்கு எந்த உத்தியோகபூர்வப் பணிகளும் ஒதுக்கப்படாத போதிலும் சம்பளமும் படிகளும் வழங்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.</p><p></p><p>
</p><p>
</p><h2>இலஞ்ச ஆணைக்குழுவின் குற்றச்சாட்டு</h2><p>இந்த நான்கு ஊழியர்களுக்கும் வழங்கப்பட்ட சம்பளம் மற்றும் படிகளின் மொத்தத் தொகை ரூ. 2,768,836.14 என்றும், இது அரசுக்கு நிதி இழப்பை ஏற்படுத்தி, ஒரு ஊழல் செயலாக அமைகிறது என்றும் ஆணைக்குழு குற்றம் சாட்டியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/abedbe10-7b02-4db7-846b-776c7b9a0865/26-6a73151f5672e.webp' /></p><p>
</p><p>
கரியவசம் பிற்பகல் சுமார் 1:45 மணியளவில் கைது செய்யப்பட்டார். அவர் கொழும்பு பிரதான நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-05T10:49:15+00:00</updated>
        </entry>
    </feed>
