<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-08-25T18:38:55+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[கற்பிட்டியில் கடலில் மூழ்கி மீனவர் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/fisherman-drowns-to-death-at-sea-in-kalpitiya-1787681593"></link>
            <id>https://jvpnews.com/article/fisherman-drowns-to-death-at-sea-in-kalpitiya-1787681593</id>
            <summary type="text">கற்பிட்டி ஜனசவிபுர கடற்கரை பகுதியில் மீன்பிடி நடவடிக்கைகளுக்காக கடலுக்குச் சென்ற மீனவர் ஒருவர், கடலில் வலையை வீசிக்கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக நீ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">கற்பிட்டி ஜனசவிபுர கடற்கரை பகுதியில் மீன்பிடி நடவடிக்கைகளுக்காக கடலுக்குச் சென்ற மீனவர் ஒருவர், கடலில் வலையை வீசிக்கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.</p><p style="text-align: justify; ">ஜனசவிபுர கடற்கரை பகுதியிலிருந்து திங்கட்கிழமை (24) காலை குறித்த மீனவர் மேலும் சில மீனவர்களுடன் இணைந்து, மீன்பிடி படகு ஒன்றில் மீன்பிடி நடவடிக்கைகளுக்காக கடலுக்குச் சென்றுள்ளனர்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5d93d8f4-a96b-4945-912d-c978d58331d1/26-6a8ddcd2bfcd7.webp' /></p><h2 style="text-align: justify; ">ஆரம்பக்கட்ட விசாரணைகள்</h2><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify;">
இதன்போது அம்மீனவர் மீன்களைப் பிடிப்பதற்கு வலை வீசிக்கொண்டிருந்தபோதே நீரில் மூழ்கியுள்ளார்.</p><p style="text-align: justify;"> இதன்போது விரைந்து செயற்பட்ட சக மீனவர்கள் அவரை மீட்டு புத்தளம் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;">
</p><p style="text-align: justify;">
எனினும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்து அவர் உயிரிழந்ததாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p style="text-align: justify;">

விபத்தில் உயிரிழந்த மீனவர் 56 வயதுடைய கற்பிட்டி பகுதியைச் சேர்ந்த நபர் என தெரியவந்துள்ளது.</p><p style="text-align: justify;"></p>]]></content>
            <updated>2026-08-25T18:30:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தொலைபேசி தரவுகளால் சிக்கப்போகும் முக்கிய தலைகள்..! கெஹெல்பத்தர பத்மே விவகாரத்தில் அநுர அதிரடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/anura-takes-action-in-the-kehelbaddara-padme-case-1787682160"></link>
            <id>https://tamilwin.com/article/anura-takes-action-in-the-kehelbaddara-padme-case-1787682160</id>
            <summary type="text">கெஹெல்பத்தர பத்மே கைது செய்யப்பட்ட பின்னர் மீட்கப்பட்ட அவரது தொலைபேசியில் இருந்து ஏராளமான தரவுகள் அழிக்கப்பட்டிருந்த நிலையில், சிஐடியினர் அவற்றைப் பாத...</summary>
            <content type="html"><![CDATA[<p>கெஹெல்பத்தர பத்மே கைது செய்யப்பட்ட பின்னர் மீட்கப்பட்ட அவரது தொலைபேசியில் இருந்து ஏராளமான தரவுகள் அழிக்கப்பட்டிருந்த நிலையில், சிஐடியினர் அவற்றைப் பாதுகாப்பாக மீட்டுள்ளதாகவும், அதில் முக்கிய அரசியல் தலைவர்களுடன் தொடர்புடைய தரவுகள் சிக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
அத்துடன், நாட்டை உலுக்கிய உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு உதவியதாகக் கூறப்படும் சுரேஷ் சலே மீண்டும் 90 நாட்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ள நிலையில், அவரது மனைவி மற்றும் சில முக்கிய தலைவர்கள் கோயில்கள் மற்றும் பௌத்த நிகழ்வுகளில் அதிகளவில் கலந்துகொள்வதை அவதானிக்க முடிகிறது.</p><p>

இதேவேளை, பல்வேறு விடயங்களை அநுர அரசாங்கம் அம்பலப்படுத்தி வருவதுடன், ஊழல்வாதிகளுக்கு எதிராக நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வரும் நிலையில், ஹேமரத்ன தேரரின் அறையில் இருந்து பெண்ணொருவரின் தலைமுடி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்று வரும் நிலையில், நாட்டை வங்குரோத்து நிலைக்கு கொண்டு சென்றவர்கள் தொடர்பிலும், போதைப்பொருள் வர்த்தகம் உள்ளிட்ட பாரிய குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் தொடர்பிலும் அநுர அரசாங்கம் தீவிரமாக விசாரணைகளை முன்னெடுத்து வருகிறது.</p><p>

இவ்வாறான பல பரபரப்பான விடயங்களை தொடர்ந்து காணொளியில் காணலாம்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/_9MgXOwQM-Q" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-25T18:24:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரான் தொடர்பில் உலக நாடுகளுக்கு அமெரிக்காவின் அச்சுறுத்தால்: மொத்தமாக புறந்தள்ளிய சீனா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/china-denounces-sanction-threat-1787681568"></link>
            <id>https://news.lankasri.com/article/china-denounces-sanction-threat-1787681568</id>
            <summary type="text">China denounces US threat: ஈரானுடனான வர்த்தகம் தொடர்பாக அமெரிக்கா விடுத்துள்ள மிரட்டலைக் கண்டித்த சீனா.
ஈரானுடனான தங்களது வர்த்தகத்திற்கு அமெரிக்கா வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>China denounces US threat: ஈரானுடனான வர்த்தகம் தொடர்பாக அமெரிக்கா விடுத்துள்ள மிரட்டலைக் கண்டித்த சீனா.
</p><p>ஈரானுடனான தங்களது வர்த்தகத்திற்கு அமெரிக்கா விதிக்கும் தடைகள் குறித்த அச்சுறுத்தலை சீனா கண்டித்துள்ளதுடன், அத்தகைய நடவடிக்கைகள் சட்டவிரோதமானவை என்றும் கூறியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7475529e-89bc-4623-b5d6-4857087f0343/26-6a8ddb22790f6.webp' /></p><p>
</p><p>மேலும், தங்களது தேசிய நலன்களைப் பாதுகாக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதாகவும் சீனா எச்சரித்துள்ளது. </p><p>ஈரானுடன் தொடர்ந்து வர்த்தகம் மேற்கொள்ளும் எந்தவொரு நாடும் அல்லது அமைப்பும் அமெரிக்காவின் இரண்டாம் நிலைத் தடைகளுக்கு (secondary sanctions) ஆளாக நேரிடும் என்ற அச்சுறுத்தலை சீனா நிராகரிக்கும் என்பது முன்னரே கணிக்கப்பட்டிருந்தது. </p><p>ஈரானின் எண்ணெய் ஏற்றுமதியில் சுமார் 80 சதவீதத்தை சீனா வாங்குகிறது. மட்டுமின்றி ஈரானின் வருவாயைக் கட்டுப்படுத்த அமெரிக்கா மேற்கொண்ட முந்தைய முயற்சிகளையும் சீனா மீறியுள்ளது. </p><p>மேலும், ஈரானைத் தனிமைப்படுத்தும் முயற்சியில், சீனாவையும் அதன் நிதி அமைப்பையும் எதிர்கொள்வதில் ட்ரம்ப் நிர்வாகம் எந்த எல்லை வரை செல்லத் தயாராக இருக்கும் என்ற கேள்வியை அதன் எதிர்ப்பு அறிக்கை எழுப்பியுள்ளது.</p><p></p><p>
</p><p>திங்களன்று பொருளாதாரத் தடைகள் குறித்த எச்சரிக்கையை விடுத்தபோது, ​​ஈரானுடனான வர்த்தகத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 60 தனிநபர்கள், நிறுவனங்கள் மற்றும் கப்பல்கள் மீது அமெரிக்க நிதியமைச்சர் ஸ்காட் பெசென்ட் ஆரம்பக்கட்டத் தடைகளை அறிவித்தார். </p><p>ஈரானிய எண்ணெய் வர்த்தகத்திற்கு நிதியளிப்பதில் ஈடுபட்டிருந்த போதிலும், அந்தப் பட்டியலில் சீன நிதி நிறுவனங்கள் எதுவும் இடம்பெறவில்லை. </p><p>இந்த நிலையில், சீனா தொடர்பில் எந்த அறிவிப்பும் இடம்பெறாததன் காரணம் தொடர்பில் கேள்வி எழுப்பிய ஊடகத்தினருக்கு பதிலளித்த ஸ்காட் பெசென்ட், நான் ஏன் உலகளாவிய நிதி அமைப்பைச் சீர்குலைக்க விரும்ப வேண்டும் என்றார். </p><p>ஆனால், அடுத்த மாதம் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ஜி ஜின்பிங் இடையே நடைபெறவுள்ள உச்சிமாநாட்டிற்கு முன்னதாக, சீனா பதிலடி கொடுப்பதற்கான அபாயம் குறித்து ட்ரம்ப் நிர்வாகம் நன்கு அறிந்திருப்பதாக நிதி மற்றும் வர்த்தகத் துறை நிபுணர்கள் கூறுகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d23884e2-4ef5-4b52-a581-88f1b0eb271a/26-6a8ddb232a7b4.webp' /></p><p> </p><p>ஈரான் விவகாரத்தில் சீனாவை சீண்டினால், நிதிச் சந்தைகள் மூலமாகவோ அல்லது தனது முக்கிய கனிமங்களின் ஏற்றுமதிக்கு வரம்புகள் விதிப்பதன் மூலமாகவோ பதிலடி கொடுக்கக்கூடும். </p><p>சீனாவின் வெளிவிவகார அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் லின் ஜியான், செவ்வாயன்று செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், சீனாவுக்கும் ஈரானுக்கும் இடையிலான ஒத்துழைப்பு எப்போதுமே சர்வதேச சட்டத்தின் வரம்புகளுக்கு உட்பட்டே நடத்தப்பட்டு வருகிறது, அதில் தலையிடவோ அல்லது இடையூறு செய்யவோ அனுமதிக்க முடியாது என்றார். </p><p>மட்டுமின்றி, சட்டவிரோதமான மற்றும் ஒருதலைப்பட்சமான தடைகளைத் தாங்கள் உறுதியாக எதிர்ப்பதாகச் சீனா ஏற்கனவே பலமுறை தெரிவித்துள்ளது.</p><p> தங்களது உரிமைகளையும் நலன்களையும் உறுதியாகப் பாதுகாப்பதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் சீனா மேற்கொள்ளும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>போரினாலும் அதனுடன் இணைந்த அமெரிக்க முற்றுகையினாலும் ஈரான் பொருளாதார ரீதியாகப் பேரழிவுக்கு உள்ளானதாக மேற்கத்திய ஊடகங்கள் தொடர்ந்து கூறி வந்தாலும், முழுமையாகத் தனிமைப்படுத்தப்படும் என்ற பெசென்ட்டின் அச்சுறுத்தல்களுக்குப் பதிலளிக்கும் விதமாக ஈரான் தனது எதிர்ப்பைத் தொடர்ந்து வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9979fad1-611c-4f4f-968d-c39d4211b389/26-6a8ddd20b2e9f.webp' /></p><p> </p><p>பொருளாதாரத் துறை அமைச்சர் அலி மதானிசாதே அரசுத் தொலைக்காட்சியில் தெரிவிக்கையில், எங்கள் பாதுகாப்பு என்பது இனி வெறும் தற்காப்பு சார்ந்ததாக மட்டும் இருக்காது; எதிரிகள் தாக்குதலை எதிர்கொள்ளத் தயாராக வேண்டும் என்றார். </p><p>தற்போது 'பொருளாதாரப் புறக்கணிப்பு நடவடிக்கை' என்று பெசென்ட் பிரகடனப்படுத்தியுள்ளது, ஈரானுடனான மோதலுக்கு ஒரு தீர்வு காண்பதற்கான வாய்ப்புகள் இன்னும் குறைவாகவே உள்ளன என்பதை உணர்த்துகிறது. </p><p>மேலும், ஈரானை பணிய வைக்கும் நோக்கம் நிறைவேறாத ஆறு மாத காலப் போருக்குப் பிறகு, இராணுவ நடவடிக்கையைக் கைவிட்டுப் பொருளாதார நடவடிக்கைகளை நோக்கிச் சாயும் போக்கையும் இது உணர்த்துகிறது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-25T18:18:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[முக்கிய நாடொன்றில் இருந்து புதிய குறைந்த கட்டண விமான சேவை ஆரம்பம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/australian-low-cost-airline-launched-service-to-sl-1787678614"></link>
            <id>https://ibctamil.com/article/australian-low-cost-airline-launched-service-to-sl-1787678614</id>
            <summary type="text">அவுஸ்திரேலியாவின் குறைந்த கட்டண விமான சேவை நிறுவனமான ஜெட்ஸ்டார், அவுஸ்திரேலியாவிற்கும் இலங்கைக்கும் இடையே தனது புதிய விமான சேவையைத் தொடங்கியுள்ளது. 
...</summary>
            <content type="html"><![CDATA[<p>அவுஸ்திரேலியாவின் குறைந்த கட்டண விமான சேவை நிறுவனமான ஜெட்ஸ்டார், அவுஸ்திரேலியாவிற்கும் இலங்கைக்கும் இடையே தனது புதிய விமான சேவையைத் தொடங்கியுள்ளது. </p><p>

அதன் முதலாவது விமானம் மெல்போர்னிலிருந்து புறப்பட்டு, இன்று (25) மாலை 6:24 மணிக்கு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
இதன்போது, 271 பயணிகள் மற்றும் 13 விமானப் பணியாளர்களுடன் வந்திறங்கிய JQ005 என்ற இந்த போயிங் 787 டிரீம்லைனர் விமானத்திற்கு விமான நிலையத்தில் பாரம்பரிய நீர் வணக்கம் செலுத்தி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>இயக்கப்படும் நாட்கள்</h2><p>
</p><p>
இந்த புதிய விமான சேவையானது மெல்போர்ன் மற்றும் கட்டுநாயக்க இடையே வாரத்தில் செவ்வாய், வியாழன் மற்றும் சனிக்கிழமை ஆகிய மூன்று நாட்கள் இயக்கப்படும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/27320184-684a-49ca-8b10-2fa7dc307c6b/26-6a8dd1546d4c8.webp' /></p><p>

சுமார் 10 மணி நேரப் பயணக் காலத்தைக் கொண்ட இந்த சேவையின் தொடக்கத்தைக் குறிக்கும் வகையில், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சிறப்பு நிகழ்வு ஒன்றும் நடைபெற்றதாக தெரியவருகிறது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-25T18:17:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kumar</name>
            </author>
            <title type="text"><![CDATA[மட்டக்களப்பில் வீட்டு முற்றத்தில் சக்தி வாய்ந்த மோட்டார் குண்டு மீட்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/powerful-mortar-shell-recovered-batti-1787679017"></link>
            <id>https://tamilwin.com/article/powerful-mortar-shell-recovered-batti-1787679017</id>
            <summary type="text">மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தாழங்குடா பிரதேசத்தில் சக்தி வாய்ந்த குண்டு ஒன்று பொலிசாரினால் மீட்கப்பட்டுள்ளது.தாழங்குடா வேடர் குட...</summary>
            <content type="html"><![CDATA[<p>மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தாழங்குடா பிரதேசத்தில் சக்தி வாய்ந்த குண்டு ஒன்று பொலிசாரினால் மீட்கப்பட்டுள்ளது.</p><p>தாழங்குடா வேடர் குடியிருப்பு சமுர்த்தி வீதியில் வீடொன்றின் முறாற்தில்
இன்று மதியம்(25) வீட்டு உரிமையாளர் பயிர்ச் செய்கைக்காக நிலத்தை தோண்டிக் கொண்டிருந்த போது
சக்தி வாய்ந்த 81ரக மோட்டார் கொண்டு மீட்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>மோட்டார் குண்டு மீட்பு!</h2><p>
</p><p>
வீட்டு உரிமையாளர் காத்தான்குடி பொலிசாருக்கு குறித்த குண்டு தொடர்பாக
அறிவித்ததையடுத்து ஸ்தலத்துககு வந்த பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e0f22a8d-8179-42a3-ac17-ad24e75fbe50/26-6a8dd95e7f31c.webp' /></p><p>விடுதலைப் புலிகளின் காலத்தில் இக்குண்டு புதைக்கப்பட்டிருக்கலாம் என
தெரிவிக்கப்படுகிறது காத்தான்குடி பொலிசார் மேலதிக விகுண்டு மீட்புசாரணைகளை மேற்கொண்டு
வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-25T18:05:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தகாத உறவிலிருந்தவருடன் சேர்ந்து மனைவி செய்த சம்பவம்; மதுபோதையில் அரங்கேறிய கொடூரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/wife-s-act-with-her-illicit-partner-1787679910"></link>
            <id>https://jvpnews.com/article/wife-s-act-with-her-illicit-partner-1787679910</id>
            <summary type="text">கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொலை செய்து, அவரது உடலை வீட்டின் அருகே புதைத்ததாக மனைவி உள்பட 2 பேரை 24 மணி நேரத்திற்குள் குற்றப்பிரிவு பொலிசார் கைது ச...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொலை செய்து, அவரது உடலை வீட்டின் அருகே புதைத்ததாக மனைவி உள்பட 2 பேரை 24 மணி நேரத்திற்குள் குற்றப்பிரிவு பொலிசார் கைது செய்துள்ளனர்.


</p><p style="text-align: justify; ">
கணவருடன் அடிக்கடி தகராறு
அரியானா மாநிலம் பரீதாபாத்தில் வசித்து வந்தவர் 42 வயதுடையவரின் மனைவிக்கும் காமத் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c386935b-3d63-4da2-9587-9980be1e8f06/26-6a8dd4ae35751.webp' /></p><h2 style="text-align: justify; ">கொலை செய்ய திட்டம்</h2><p style="text-align: justify; ">

இந்த விவகாரம் கணவருக்கு தெரியவந்தநிலையில், இருவருக்கும்&nbsp; இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது.
</p><p style="text-align: justify; ">&nbsp;இதையடுத்து, மனைவியும் கள்ளக்காதலனும் சேர்ந்து கணவரை கொலை செய்ய திட்டமிட்டதாக கூறப்படுகிறது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">அதன்படி,&nbsp; கணவருக்கு அதிக அளவில் மது குடிக்க வைத்துள்ளார்.&nbsp; கணவர் மதுபோதையில் இருந்தபோது, அவரது தலையில் ‘இன்டர்லாக்’ கல்லால் தாக்கி காமத் கொலை செய்ததாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.</p><p style="text-align: justify; ">பின்னர், கொலையை மறைக்க சியாம்வீரின் உடலை வீட்டின் அருகே இருவரும் சேர்ந்து புதைத்துள்ளனர்.இதையடுத்து இருவரையும் 24 மணி நேரத்திற்குள் கைது செய்தனர்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-25T17:45:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடவுச்சொல்லை வழங்க மறுக்கும் சுரேஷ் சலே! நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட பரபரப்பு குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/suresh-sallay-not-cooperating-1787678394"></link>
            <id>https://tamilwin.com/article/suresh-sallay-not-cooperating-1787678394</id>
            <summary type="text">தேசிய புலனாய்வு பிரிவின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
சட்ட மா அதிபர் திணைக்களம...</summary>
            <content type="html"><![CDATA[<p>தேசிய புலனாய்வு பிரிவின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
</p><p>சட்ட மா அதிபர் திணைக்களம் இது தொடர்பில் இன்றைய தினம்(25.08.2026) நீதிமன்றில், குற்றம் சுமத்தியுள்ளது.</p><p>
தம்மை தடுத்து வைத்து விசாரணை நடத்துவதனை எதிர்த்து சலே தாக்கல் செய்த ரீட் மனு இன்றைய தினம் மேன்முறையீட்டு நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.</p><p>சுரேஷ் சலேவின் இலத்திரனியல் சாதனங்களின் கடவுச் சொற்களை வழங்குமாறு விடுத்த கோரிக்கைக்கு உரிய பதிலளிக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.</p><h2>சுரேஷ் சலேவுக்கு சலுகை வழங்கப்பட வேண்டும்..</h2><p>பிரதி சொலிசுட்டர் ஜெனரல் சுஹர்ஷி ஹேரத் இந்தக் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1c7dcfa0-1750-44c9-a252-d2c85950c3a8/26-6a8dcebbb819f.webp' />&nbsp; &nbsp;</p><p>
குற்றப் புலனாய்வு பிரிவின் பணிப்பாளர் ஷானி அபேசேகர, சந்தேக நபரான சலே தொடர்பில் குரோத உணர்வுடன் செயற்படுவதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களையும் அவர் நிராகரித்துள்ளார். இந்தக் குற்றச்சாட்டு அடிப்படையற்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>இந்த வழக்கு தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள 13 இடையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் அதில் ஒன்ற தவிர அனைத்து மனுக்களும் சலேவிற்கு சலுகை வழங்க வேண்டும் என்றே கோரப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
</p><p>வழக்குத் தொடர்புபடாத இந்த இடையீட்டு மனுதாரர்களின் மனுவை தள்ளுபடி செய்யுமாறு பிரதி சொலிசுட்டர் ஜெனரல் சுஹர்ஷி ஹேரத் தெரிவித்துள்ளார்.
</p><p>இதேவேளை, சுரேஷ் சலேவின் மனுவை பரிசீலனை செய்வது தொடர்பில் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 3ஆம் திகதி பரிசீலனை செய்யப்படும் என நீதிமன்றம் அறிவித்துள்ளது.&nbsp;</p><p></p><p></p><p><b>YOU MAY LIKE THIS VIDEO</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/_9MgXOwQM-Q" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p>]]></content>
            <updated>2026-08-25T17:43:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[வான்கூவரில் வரலாறு காணாத மின்னல் தாக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/record-1725-lightning-strikes-in-metro-vancouver-1787668502"></link>
            <id>https://canadamirror.com/article/record-1725-lightning-strikes-in-metro-vancouver-1787668502</id>
            <summary type="text">கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் கடந்த வார இறுதியில் வீசிய கடுமையான இடியுடன் கூடிய புயலின்போது, மெட்ரோ வான்கூவர் பகுதியில் 1,725 மின்னல் தாக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் கடந்த வார இறுதியில் வீசிய கடுமையான இடியுடன் கூடிய புயலின்போது, மெட்ரோ வான்கூவர் பகுதியில் 1,725 மின்னல் தாக்கங்கள் பதிவாகியுள்ளன.</p><p>
சனிக்கிழமை இரவு முதல் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வரை நீடித்த இந்த புயல், தற்போது பயன்படுத்தப்படும் மின்னல் கண்காணிப்பு அமைப்பின் வரலாற்றில் மெட்ரோ வான்கூவர் பகுதியில் பதிவான அதிகபட்ச மின்னல் தாக்கமாக அமைந்துள்ளது.
</p><p>கனடா சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறையின் வானிலை ஆய்வாளர் ஜெனிபர் கோவல் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னர் அதிகபட்சமாக 869 மின்னல் தாக்கங்கள் பதிவாகியிருந்தன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2005eb43-410e-4c6c-828d-d562f976b968/26-6a8da818631bd.webp' /></p><p> </p><p>அது 2013ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் பதிவானதாக கோவல் கூறியுள்ளார்.
இந்த கோடைக்காலத்தில் முன்னதாக ஏற்பட்ட இடியுடன் கூடிய புயல்களில் முறையே 128 மற்றும் 139 மின்னல் தாக்கங்கள் மட்டுமே பதிவாகியிருந்தன.</p><p> 
இதனுடன் ஒப்பிடுகையில், அண்மைய புயல் மிகவும் தீவிரமாக இருந்ததாக வானிலை ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.
இந்த புயலின்போது குறுகிய காலத்திற்குள் அதிகளவு மழையும் பெய்துள்ளது.
</p><p>விமான நிலையப் பகுதியில் ஒரு மணி நேரத்தில் மட்டும் 24 மில்லிமீட்டர் மழை பெய்ததாக கோவல் தெரிவித்துள்ளார்.
</p><p>இந்த புயல் வழக்கத்திற்கு மாறாக இருந்ததற்கு அது வந்த திசையும் முக்கிய காரணமாக அமைந்ததாக வானிலை ஆய்வாளர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>
பொதுவாக வான்கூவர் பகுதிக்கு மேற்கிலிருந்து அல்லது தென்மேற்கிலிருந்து ஈரப்பதம் கொண்ட காற்று வரும் நிலையில், இந்த முறை தெற்கிலிருந்து அதிக ஈரப்பதம் கொண்ட வெப்பமான காற்று வந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.</p><p>
இதன் காரணமாக அதிக மழை மற்றும் அதிகளவான மின்னல் தாக்கங்களுடன் கூடிய மிகவும் தீவிரமான புயல் உருவானதாக அவர் கூறியுள்ளார்.
</p><p>இந்த மின்னல் தாக்கங்களில் ஒன்று லயன்ஸ் பே அருகே சிறிய காட்டுத்தீ ஏற்படுவதற்கும் காரணமாகியுள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-25T17:30:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவுக்கு எதிராக பதில் வரிகளை அறிமுகப்படுத்திய கனடா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/canada-introduced-retaliatory-tariffs-against-us-1787677631"></link>
            <id>https://tamilwin.com/article/canada-introduced-retaliatory-tariffs-against-us-1787677631</id>
            <summary type="text">அமெரிக்கப் பொருட்களுக்கு எதிராக 19.94 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான பதில் தீர்வை வரிகளை கனடா அறிவித்துள்ளது. 

இது அமெரிக்காவினால் விதிக்கப்பட...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்கப் பொருட்களுக்கு எதிராக 19.94 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான பதில் தீர்வை வரிகளை கனடா அறிவித்துள்ளது. </p><p>

இது அமெரிக்காவினால் விதிக்கப்பட்ட புதிய தீர்வை வரிகளுக்கு நிகரான டொலர் மதிப்பைக் கொண்டுள்ளது.</p><p>அத்துடன், தீவிரமடைந்து வரும் வர்த்தகப் போரில் பாதிக்கப்பட்டுள்ள கனடிய வணிகங்கள் மற்றும் தொழிலாளர்களுக்கான நிதியுதவித் திட்டத்தையும் கனடா வெளியிட்டுள்ளது.</p><h2>பதில் வரி</h2><p> 

அமெரிக்கப் பொருட்களுக்கான இந்த பதில் வரிகள் செப்டம்பர் 8 முதல் நடைமுறைக்கு வரும் என்றும், அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் 700 பொருட்களுக்கு 15%, 25% மற்றும் 50% வரிகள் விதிக்கப்படும் என்றும் அரசாங்க அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/58ce0f40-8fd4-4dd5-91dc-0f3390e6bdb0/26-6a8dd007370aa.webp' /></p><p> </p><p>

பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் மற்றும் தொழில்துறைகளுக்கான நிதி ஆதரவைப் பொறுத்தவரை, சிறு மற்றும் நடுத்தர வணிகங்களுக்கான ஆதரவு, நிறுவனங்களின் பணப்புழக்கத்திற்கு நிதியளிக்கும் வழிமுறை மற்றும் புதிய வரிகளால் ஆபத்தில் இருக்கக்கூடிய தொழிலாளர்களுக்கான ஆதரவு உள்ளிட்ட புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட நடவடிக்கைகளுக்காக 7.5 பில்லியன் கனடிய டொலர் மதிப்பிலான உதவித் திட்டத்தை கனடா அறிவித்துள்ளது. </p><p>

வரிகளைத் தவிர்ப்பதற்காக இரு நாடுகளுக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, 20 பில்லியன் டொலர் மதிப்பிலான கனடிய இறக்குமதிகள் மீது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் புதிய 50% வரிகள் சனிக்கிழமை முதல் நடைமுறைக்கு வந்தன.</p><p> 

இந்த பரஸ்பர பழிவாங்கும் வரிகள் கனடா-அமெரிக்க உறவில் ஒரு புதிய பின்னடைவைக் எடுத்துக்காட்டுகின்றன.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-25T17:26:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[விரைவில் நடைமுறைக்கு வரும் மின் ஸ்மார்ட் மீட்டர் - அமைச்சரவை ஒப்புதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/pilot-project-to-install-300-000-smart-meters-1787677018"></link>
            <id>https://tamilwin.com/article/pilot-project-to-install-300-000-smart-meters-1787677018</id>
            <summary type="text">நாடு முழுவதும் 300,000 ஸ்மார்ட் மீட்டர்களை நிறுவுவதற்கான ஒரு முன்னோடித் திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 

இதற்கமைய, இந்த திட்டத்தை 02...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடு முழுவதும் 300,000 ஸ்மார்ட் மீட்டர்களை நிறுவுவதற்கான ஒரு முன்னோடித் திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.</p><p> 

இதற்கமைய, இந்த திட்டத்தை 02 ஆண்டுகளில் மின்சார விநியோக லங்கா பிரைவேட் லிமிடெட் மூலம் செயல்படுத்துவதற்காக எரிசக்தி அமைச்சர் சமர்ப்பித்த அமைச்சரவைப் பத்திரத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. </p><p> 

நாட்டில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முயற்சிகளை வலுப்படுத்துவதற்கான துணைத் திட்டங்களுக்காக, ஆசிய அபிவிருத்தி வங்கியின் நுண் கடன் வசதி மூலம் 15 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் பெறுவதற்கு, கடந்த ஆண்டு 21 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் கோரியுள்ளது. </p><h2>

அமைச்சரவை ஒப்புதல்&nbsp;</h2><p>
இதனைத் தொடர்ந்து, மகா ஓயா நீரேற்று மின் உற்பத்தி நிலையத்தின் அபிவிருத்திக்காக, கடனிலிருந்து 2.5 மில்லியன் அமெரிக்க டொலரைப் பயன்படுத்தவும் கடந்த ஆண்டு 03 ஆம் திகதி அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e535de9d-c549-4305-9362-5ced92b8bb21/26-6a8dcf1058050.webp' /></p><p> </p><p>

நாட்டின் ஸ்மார்ட் மின்கட்டமைப்புகளை நவீனமயமாக்குவதற்கான ஒரு முக்கிய நடவடிக்கையான, பயன்பாட்டு நேரக் கட்டண முறையுடன் கூடிய ஸ்மார்ட் மீட்டரிங் அமைப்புகளை நிறுவ, மீதமுள்ள 12.5 மில்லியன் அமெரிக்க டொலர் பயன்படுத்தவும் அமைச்சரவை சம்மதம் தெரிவித்துள்ளது.</p><p></p><p></p><p>

</p>]]></content>
            <updated>2026-08-25T17:21:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நிகழ்வில் கலந்து கொண்ட நீதி அமைச்சர்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/minister-attended-an-event-for-the-disappeared-1787677584"></link>
            <id>https://ibctamil.com/article/minister-attended-an-event-for-the-disappeared-1787677584</id>
            <summary type="text">&amp;nbsp;&#039;சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தினை முன்னிட்டு , (International Day
of the Victims of Enforced Disappearances) யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;'சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தினை முன்னிட்டு , (International Day
of the Victims of Enforced Disappearances) யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில்,
காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் ஏற்பாட்டில் நிகழ்வொன்று இடம்பெற்றுள்ளது.</p><p>மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2
மணிக்கு குறித்த நிகழ்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><p>

இந்நிகழ்வில் நீதி அமைச்சர் சட்டத்தரணி
ஹர்ஷன நாணயக்கார , கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் , நாடாளுமன்ற
உறுப்பினர்களான க. இளங்குமரன், ச பவானந்தராசா மற்றும் ரஜீவன்
ஜெயசந்திரமூர்த்தி ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.</p><p>&nbsp;</p><h2>பயனாளிகளுக்கு&nbsp; மூக்கு கண்ணாடிகள்</h2><p>
நிகழ்வின் ஒரு அங்கமாக பயனாளிகளுக்கு மூக்கு கண்ணாடிகளும் வழங்கி வைக்கப்பட்டதாக தெரியவருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d8890e3e-9a2c-4c27-83f0-04df3a6e2a28/26-6a8dcd062f81c.webp' /></p><p>
கடந்த வருடங்களில் இந்நிகழ்வு அலரி மாளிகையிலும் கொம்பனித்தெரு ஞாபகார்த்த
மண்டபத்திலும் நடைபெற்றிருந்த நிலையில், இம்முறை யாழ்ப்பாணத்தில் நடைபெற்றுள்ளது.</p><p>இதேவேளை, சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான ஓகஸ்ட் 30ஆம் திகதி வடக்கு -
கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் சங்கத்தின்
ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் சர்வதேச மாநாடும், கண்காட்சியும் இடம்பெறவுள்ளமை
குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-25T17:12:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட 42 பேர் இதுவரை இலங்கைக்கு ;பொலிஸ் ஊடகப் பேச்சாளர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/42-red-alert-individuals-yet-to-return-1787677608"></link>
            <id>https://jvpnews.com/article/42-red-alert-individuals-yet-to-return-1787677608</id>
            <summary type="text">2024 முதல் 2026 இதுவரையான காலப்பகுதியில் நாட்டினுள் குற்றச்செயல்களில் ஈடுபட்டு சட்ட நடவடிக்கைகளை புறக்கணித்து வெளிநாடு சென்று தலைமறைவாயிருந்த சிவப்பு ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">2024 முதல் 2026 இதுவரையான காலப்பகுதியில் நாட்டினுள் குற்றச்செயல்களில் ஈடுபட்டு சட்ட நடவடிக்கைகளை புறக்கணித்து வெளிநாடு சென்று தலைமறைவாயிருந்த சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட 42 சந்தேகநபர்களும், சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்படாத 38 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டு நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் உதவி பொலிஸ் அத்தியட்சகருமான எப்.யு.வுட்லர் தெரிவித்துள்ளார்.
</p><p style="text-align: justify; ">
பொலிஸ் ஊடகப் பிரிவினால் செவ்வாய்க்கிழமை (25) ஏற்பாடு செய்யப்பட்ட விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.&nbsp;</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b4c5fc6e-4acf-4b31-a1be-4e16aae0da7a/26-6a8dcc951ab36.webp' /></p><h2 style="text-align: justify; ">சிவப்பு எச்சரிக்கை</h2><p style="text-align: justify; ">
நீதிமன்றத்தை புறக்கணித்து வெளிநாடுகளில் தலைமறைவாக உள்ள பாரிய குற்றவாளிகளை நாட்டிற்கு கொண்டு வர அரச பொறிமுறை, பாதுகாப்பு அமைச்சு மற்றும் பொலிஸ் மாஅதிபரின் நேரடி மேற்பார்வையில் திட்டமிட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.</p><p style="text-align: justify; ">அதன்படி, சர்வதேச பொலிஸாரால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட 42 சந்தேகநபர்களும், சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்படாத 38 சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டு நாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
மேலும் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மேலும் 109 சந்தேக நபர்களையும் எதிர்வரும் இரண்டு, மூன்று வருடங்களுக்குள் கைதுசெய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
</p><p style="text-align: justify; ">
அத்துடன், போதைப்பொருள் கடத்தல் மற்றும் குற்றச்செயல் மூலம் சட்டவிரோதமாக ஈட்டப்பட்ட சொத்துக்களை அரசுடமையாக்கும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.&nbsp;</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-25T17:10:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மத்திய கிழக்கில் தொடர் போர் பதற்றம் - அமெரிக்காவிற்கு உதவிக் கரம் நீட்டும் தாய்லாந்து அரசு வெளியிட்ட தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/thai-army-completes-military-training-1787677748"></link>
            <id>https://tamilwin.com/article/thai-army-completes-military-training-1787677748</id>
            <summary type="text">மத்திய கிழக்கில் நீண்டகாலப் போர்ப் பணியை நிறைவு செய்த அமெரிக்க கடற்படையின்
யு.எஸ்.எஸ் ஆபிரகாம் லிங்கன் விமானம் தாங்கிக் கப்பல், எதிர்வரும் வாரம் ஓய்வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>மத்திய கிழக்கில் நீண்டகாலப் போர்ப் பணியை நிறைவு செய்த அமெரிக்க கடற்படையின்
யு.எஸ்.எஸ் ஆபிரகாம் லிங்கன் விமானம் தாங்கிக் கப்பல், எதிர்வரும் வாரம் ஓய்வு
மற்றும் பராமரிப்பு நடவடிக்கைகளுக்காகத் தாய்லாந்தை வந்தடையவுள்ளதாகத்
தாய்லாந்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
</p><p>
சுமார் 5,000 கடற்படை வீரர்களைக் கொண்ட இந்த கப்பல், கடந்த சனிக்கிழமையன்று
மத்திய கிழக்கிலிருந்து புறப்பட்டதுடன், தொடர்ச்சியாக 200 நாட்களுக்கும் மேலாக
எந்தவித இடைநிறுத்தமும் இன்றி கடலில் பயணித்து நவீன காலத்தில் புதிய சாதனையைப்
பதிவு செய்துள்ளது.
</p><p>
ஈரானுடனான அமெரிக்க-இஸ்ரேலிய போர் நடவடிக்கைகளுக்கு ஆதரவளிப்பதற்காக இந்த 
கப்பல் மத்திய கிழக்கு பிராந்தியத்திற்கு அனுப்பப்பட்டிருந்தது.
</p><h2>
அமெரிக்காவிற்கு ஆதரவு கொடுக்கும் தாய்லாந்து</h2><p>
இந்த கப்பலில் பணியாற்றும் வீரர்களிடையே மன அழுத்தம் அதிகரித்துள்ளதாகவும்,
தற்கொலை முயற்சிகள் இடம்பெற்றுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியிருந்த நிலையில்,
வீரர்களின் ஓய்வு மற்றும் தளவாடப் பொருட்களைப் பெற்றுக்கொள்வதற்காகவே இந்த 
பயணம் அமைந்துள்ளதாகத் தாய்லாந்து கடற்படை உறுதிப்படுத்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/61448f82-7181-40da-811c-81af21d78e29/26-6a8dcc859cf4c.webp' /></p><p>
</p><p>
தாய்லாந்தின் கிழக்குப் பகுதியில் நங்கூரமிடவுள்ள இந்த கப்பற்படைக் குழுவினர்
எந்தவித இராணுவப் பயிற்சிகளிலும் ஈடுபட மாட்டார்கள் என்றும்
அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

1954 ஆம் ஆண்டு முதல் அமெரிக்காவுடன் ஒப்பந்த நண்பர்களான, நேட்டோ
அல்லாத முக்கிய நட்பு நாடாகவும் விளங்கும் தாய்லாந்துக்கும் அமெரிக்காவிற்கும்
இடையே வலுவான இராணுவ உறவு நிலவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-25T17:10:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[எல் நினோ மற்றும் புவிவெப்பமயமாதல் தீவிரம்: கடல் மேற்பரப்பு வெப்பநிலை புதிய உச்சம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/intensification-of-el-ni-o-and-global-warming-1787676693"></link>
            <id>https://tamilwin.com/article/intensification-of-el-ni-o-and-global-warming-1787676693</id>
            <summary type="text">எல் நினோ காலநிலை மாற்றம் மற்றும் மனித நடவடிக்கைகளால் ஏற்படும்
புவிவெப்பமயமாதல் காரணமாக உலகப் பெருங்கடல்களின் சராசரி மேற்பரப்பு வெப்பநிலை
முன்னெப்போத...</summary>
            <content type="html"><![CDATA[<p>எல் நினோ காலநிலை மாற்றம் மற்றும் மனித நடவடிக்கைகளால் ஏற்படும்
புவிவெப்பமயமாதல் காரணமாக உலகப் பெருங்கடல்களின் சராசரி மேற்பரப்பு வெப்பநிலை
முன்னெப்போதும் இல்லாத வகையில் புதிய உச்சத்தை எட்டியுள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p><p>கடல் மேற்பரப்பின் சராசரி வெப்பநிலை கடந்த வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில்
21.1 பாகை செல்சியஸை எட்டியுள்ளது. இது இதற்கு முன்னர் 2024 ஆம் ஆண்டு மார்ச்
மாதம் பதிவான 21.09 பாகை செல்சியஸ் என்ற சாதனையை முறியடித்துள்ளது.</p><p>

வழக்கமாகத் தென் அரைக்கோளத்தில் கோடைகாலம் முடிவடையும் மார்ச் அல்லது ஏப்ரல்
மாதங்களிலேயே கடல் வெப்பநிலை உச்சத்தை அடையும் நிலையில், இம்முறை ஆகஸ்ட்
மாதத்தில் இப் புதிய சாதனை பதிவாகியுள்ளது.</p><h2>தீவிர காலநிலை</h2><p>

தற்போது தீவிரமடைந்து வரும் எல் நினோ நிகழ்வு எதிர்வரும் நவம்பர் முதல் ஜனவரி
மாதத்திற்குள் தனது உச்சக் கட்டத்தை அடையும் என எதிர்பார்க்கப்படுவதால், கடல்
வெப்பநிலை மேலும் அதிகரிக்கக்கூடும் என வானிலை ஆய்வாளர்கள்
சுட்டிக்காட்டியுள்ளனர். </p><p>மனித செயற்பாடுகளால் கடல் வெப்பநிலை ஏற்கனவே 0.8 பாகை செல்சியஸ் உயர்ந்துள்ள
நிலையில், எல் நினோவின் தாக்கம் அதனை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6e80fb1d-82cb-416e-b7ed-7b913e12eede/26-6a8dca5d834d3.webp' /></p><p>

கடல் வெப்பநிலை அதிகரிப்பானது கடல்சார் உயிரினங்கள் மற்றும் பவளப்பாறைகளுக்கு
பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதுடன், கடல் மட்ட உயர்வு, கடும் புயல்
போன்ற தீவிர காலநிலை மாற்றங்களுக்கும் வழிவகுக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
</p><p>
அத்துடன், சூடான கடலினால் வளிமண்டலத்திலுள்ள கார்பனீரொக்சைடு வாயுவை உறிஞ்சும்
திறன் குறைவடைவதால் உலகளாவிய காலநிலைச் சமநிலை பெருமளவில் பாதிக்கப்படும் என
நிபுணர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-25T17:01:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[இஸ்ரேல் மீது தடைகளை விதிக்குமாறு ஐ.நாவிடம் பாலஸ்தீன தலைவர் கோரிக்கை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/palestinian-leader-urges-un-to-impose-sanction-1787677216"></link>
            <id>https://tamilwin.com/article/palestinian-leader-urges-un-to-impose-sanction-1787677216</id>
            <summary type="text">பாலஸ்தீன மக்களுக்கு எதிராக இஸ்ரேல் மேற்கொண்டு வரும் மனித உரிமை மீறல்கள் மற்றும் தாக்குதல்கள் காரணமாக, அந்நாட்டின் மீது கடுமையான தடைகளை விதிக்க வேண்டும...</summary>
            <content type="html"><![CDATA[<p>பாலஸ்தீன மக்களுக்கு எதிராக இஸ்ரேல் மேற்கொண்டு வரும் மனித உரிமை மீறல்கள் மற்றும் தாக்குதல்கள் காரணமாக, அந்நாட்டின் மீது கடுமையான தடைகளை விதிக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகளுக்கு பாலஸ்தீன தேசிய இயக்கத்தின் பொதுச்செயலாளர் முஸ்தபா பர்கூட்டி கோரிக்கை விடுத்துள்ளார்.</p><p>
காசாவில் இஸ்ரேலிய அரசு இனப்படுகொலையை செய்துள்ளது, தற்போதும் அதைத் தொடர்ந்து செய்து வருகிறது என்பதை யாரும் மறந்துவிடக் கூடாது என தெரிவித்துள்ளார்.
</p><p>போர்நிறுத்த ஒப்பந்தத்தை 3,000-க்கும் மேற்பட்ட முறை மீறியுள்ள இஸ்ரேல், போர்நிறுத்தத்திற்குப் பிறகு காசாவில் 1,300-க்கும் அதிகமான பாலஸ்தீனர்களைக் கொன்று குவித்துள்ளது என குற்றம் சுமத்தியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/309b882a-d790-4286-afe6-17921d63d765/26-6a8dca2148ccf.webp' /></p><p>
</p><p>ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரை பகுதியில் பாலஸ்தீனியர்கள் மீது குடியேற்றவாசி பயங்கரவாதக் குழுக்கள் தாக்குதல் நடத்த இஸ்ரேல் அனுமதி அளிக்கிறது. இப்போது அவர்கள் ஐக்கிய நாடுகள் சபையின் நிறுவனங்கள் மீதே தாக்குதல்களை நடத்தும் நிலைக்குச் சென்றுள்ளனர் என தெரிவித்துள்ளார்.</p><p>
சர்வதேச சட்டத்தையும் ஐக்கிய நாடுகள் சபையின் அமைப்பையும் மதிக்க விரும்பும் ஒவ்வொரு ஐக்கிய நாடுகள் உறுப்பு நாட்டிற்கும், இந்த மனித உரிமை மீறல்களுக்காக இஸ்ரேல் மீது உடனடியாக தடைகளை விதிக்க வேண்டிய கடமை உள்ளது என தெரிவித்துள்ளார்.</p><p>
ஒருவேளை உறுப்பு நாடுகள் இஸ்ரேல் மீது தடைகளை விதிக்கத் தவறினால், சர்வதேச அளவில் மேலும் பல குற்றங்களையும் அத்துமீறல்களையும் செய்ய இஸ்ரேலுக்கு அது ஊக்கம் அளிப்பதாகவே அமையும் என முஸ்தபா பர்கூட்டி எச்சரிக்கை விடுத்துள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-25T17:01:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Malaivanjan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டில் நடந்த பாரிய அஸ்வெசும நிதி மோசடி: பெண் அரச ஊழியர்களுக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/largest-financial-fraud-in-sri-lanka-1787676530"></link>
            <id>https://tamilwin.com/article/largest-financial-fraud-in-sri-lanka-1787676530</id>
            <summary type="text">இலங்கையில் அதிகளவான அஸ்வெசும பயனாளிகள் காணப்படும் பிரதேச செயலகங்களில்
ஒன்றான நோர்வூட் பிரதேச செயலகத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் அஸ்வெசும நிதி
மோச...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் அதிகளவான அஸ்வெசும பயனாளிகள் காணப்படும் பிரதேச செயலகங்களில்
ஒன்றான நோர்வூட் பிரதேச செயலகத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் அஸ்வெசும நிதி
மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்ட இரண்டு அரச ஊழியர்களும், செப்டம்பர் 8ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
</p><p>
குறித்த இரண்டு அரச ஊழியர்களும் இன்று 25ஆம் திகதி ஹட்டன் நீதவான்
நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.</p><p>

இதன்போது, இருவரையும் எதிர்வரும் செப்டம்பர் 8ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஹட்டன் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
</p><h2>
அஸ்வெசும திட்டத்தில் நடந்த பாரிய நிதி மோசடி</h2><p>
நோர்வூட் பிரதேச செயலகத்தில் அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு திட்டத்தின் கீழ்
பயனாளிகளுக்கு வழங்கப்பட வேண்டிய நிதியில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக
கிடைத்த தகவல்களின் அடிப்படையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.</p><p>

இதன்போது, சுமார் ஒரு கோடியே 62 இலட்சம் ரூபாய் வரையான அஸ்வெசும நிதி மோசடி
செய்யப்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் கண்டறியப்பட்டதாக
தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிதி மோசடியுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் நோர்வூட் பிரதேச
செயலகத்தில் பணியாற்றிய இரண்டு பெண் அரச ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3fa987f3-8043-4cc5-bc99-efffc1c637a7/26-6a8dc8f3ceee1.webp' /></p><p>
</p><p>
கைது செய்யப்பட்ட இருவரும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில்,
அவர்களை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அஸ்வெசும நிதி மோசடி தொடர்பில் மேலும் பல்வேறு தரப்பினரிடம் விசாரணைகள்
முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
</p><h2>


பயனாளிகளின் கோரிக்கை</h2><p>
இதேவேளை, தமக்கான அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக
தெரிவித்து, பல பயனாளிகள் நோர்வூட் பிரதேச செயலகத்திற்கு தொடர்ச்சியாக சென்று
தங்களது நிதி தொடர்பான தகவல்களை கோரி வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dec661da-f4e3-4e88-a9dc-4fc9ae0916a1/26-6a8dc8f2f1faf.webp' />&nbsp; &nbsp;</p><p>

அஸ்வெசும போன்ற அரசாங்கத்தின் நலன்புரித் திட்டங்களின் நிதி உரிய
பயனாளிகளுக்கு முறையாக சென்றடைவதை உறுதி செய்வதுடன், நிதி மோசடிகளில்
ஈடுபடுவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்
பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p><p>நோர்வூட் பிரதேச செயலகத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் இந்த நிதி மோசடி
தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், எதிர்வரும்
செப்டம்பர் 8ஆம் திகதி இந்த வழக்கு மீண்டும் நீதிமன்றத்தில் விசாரணைக்கு
எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-25T16:55:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ்ப்பாணம் நல்லூர் பிரபல உணவகத்திற்கு 9.5 இலட்சம் ரூபா அபராதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/rs-950-000-fine-imposed-restaurant-nallur-jaffna-1787655765"></link>
            <id>https://jvpnews.com/article/rs-950-000-fine-imposed-restaurant-nallur-jaffna-1787655765</id>
            <summary type="text">&amp;nbsp; யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் உள்ள பிரபல சைவ உணவகத்தில் தண்ணீர் போத்தலை அதிக விலைக்கு விற்ற குற்றத்திற்காக 09 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் அபராதம...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் உள்ள பிரபல சைவ உணவகத்தில் தண்ணீர் போத்தலை அதிக விலைக்கு விற்ற குற்றத்திற்காக 09 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. </p><p>


குறித்த உணவகத்தில் அதிகூடிய விலைக்கு குடிநீர் போத்தல் விற்பனை செய்யப்படுவதாக யாழ்.மாவட்ட பாவனையாளர் அதிகார சபையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக , மேற்கொள்ளப்பட்ட சோதனையில் விலை அதிகமாக விற்பனை செய்யப்பட்டமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/527fcd05-9958-49f3-a26d-57530dd13326/26-6a8d77f0313e7.webp' /></p><h2>அபராத பணத்தினை செலுத்த தவறின் 06 மாத கால சிறை&nbsp;</h2><p> 

அதனை அடுத்து குறித்த உணவகத்திற்கு எதிராக , யாழ்ப்பாணம் மேலதிக நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.</p><p></p><p>
</p><p>
செவ்வாய்க்கிழமை(25) நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது உணவக உரிமையாளருக்கு 09 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்த நீதிமன்றம் , அபராத பணத்தினை செலுத்த தவறின் 06 மாத கால சிறைத்தண்டனை வழங்கப்படுமென உத்தரவிட்டுள்ளது.</p><p></p><p>

இதேவேளை குறித்த உணவகத்தில் முன்னரும் அதிக்கூடிய விலைக்கு குடிநீர் விற்ற குற்றத்திற்காக நீதிமன்றத்தினால் அபராதம் அறவிடப்பட்ட நிலையில், மீண்டும் அதே குற்றத்தை புரிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-25T16:45:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் 5 மில்லியன் லொத்தர் சீட்டு பரிசை வென்ற பெண்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/bc-woman-looking-forward-to-suite-on-a-cruise-1787667535"></link>
            <id>https://canadamirror.com/article/bc-woman-looking-forward-to-suite-on-a-cruise-1787667535</id>
            <summary type="text">கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், மளிகைப் பொருட்கள் வாங்கச் சென்றபோது தான் 5 மில்லியன் டொலர் லொட்டோ 6/49 ஜாக்பாட் பரிசை வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், மளிகைப் பொருட்கள் வாங்கச் சென்றபோது தான் 5 மில்லியன் டொலர் லொட்டோ 6/49 ஜாக்பாட் பரிசை வென்றிருப்பதை அறிந்து பெரும் அதிர்ச்சியடைந்துள்ளார்.
</p><p>ஜேன் டி. என்பவர் ஆகஸ்ட் 8ஆம் திகதி நடைபெற்ற லொட்டோ0 குலுக்கலில் கிளாசிக் ஜாக்பாட் பரிசை வென்றதாக பிரிட்டிஷ் கொலம்பியா லாட்டரி கழகம் திங்கட்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.</p><p>
எப்படி எதிர்வினையாற்றுவது என்றே எனக்குத் தெரியவில்லை. பணியாளர் என்னைவிட அதிக உற்சாகத்தில் இருந்தார் என ஜேன் டி. தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/33e2a9b5-59e6-4e6a-85e4-abcda8584785/26-6a8da45148b37.webp' /></p><p>
</p><p>தாம் வெற்றி பெற்ற செய்தியை அறிந்த பின்னர் காருக்குத் திரும்பிச் சென்று தனது கணவரிடம் கூறியபோது, அவர் முதலில் அதை நம்பவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
முதலில் அவர் என்னை நம்பவில்லை.</p><p> பின்னர் வெற்றிச் சீட்டின் சரிபார்ப்பு ரசீதைக் காட்டினேன். அதில் இருந்த பூஜ்ஜியங்களை அவர் எண்ணிப் பார்த்தார் என ஜேன் கூறியுள்ளார்.
</p><p>இந்த எதிர்பாராத பெரும் தொகை கிடைத்துள்ளதால், இனி தனது வாழ்க்கையில் “அதிக சுதந்திரத்துடன்” செயல்பட முடியும் என ஜேன் தெரிவித்துள்ளார்.
</p><p>தனது வீட்டில் சில புனரமைப்பு பணிகளை மேற்கொள்வதுடன், பணத்தின் ஒரு பகுதியை முதலீடு செய்யவும் அவர் திட்டமிட்டுள்ளார். </p><p>
அதேவேளை, தன்னை மகிழ்விக்கும் வகையில் சொகுசுக் கப்பல் பயணத்தின்போது ஒரு தனிப்பட்ட ஸ்யூட் அறையில் தங்கவும் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-25T16:44:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹக்கீம் - நிசாம் காரியப்பருக்கு பகிரங்க எச்சரிக்கை..! அரசியல் சூட்சுமங்களை அம்பலப்படுத்திய சிறிநேசன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/srinesan-exposes-political-subtleties-1787675738"></link>
            <id>https://tamilwin.com/article/srinesan-exposes-political-subtleties-1787675738</id>
            <summary type="text">கிழக்கு மாகாணத்தில் உள்ள தமிழ் தலைவர்கள், முஸ்லிம் காங்கிரஸுடன் இணைந்து பயணித்தால் மாத்திரமே மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் என மட்டக்கள...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிழக்கு மாகாணத்தில் உள்ள தமிழ் தலைவர்கள், முஸ்லிம் காங்கிரஸுடன் இணைந்து பயணித்தால் மாத்திரமே மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் என மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சிறிநேசன் தெரிவித்துள்ளார்.
</p><p>
லங்காசிறி ஊடகம் வழங்கும் “ஊடறுப்பு” நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.</p><p>

அவர் மேலும் தெரிவிக்கையில்,
</p><p>
கிழக்கு மாகாணத்தில் உள்ள நாங்கள், முஸ்லிம் காங்கிரஸுக்கு அடிமையாக இருக்கவில்லை. தமிழர்களும் முஸ்லிம்களும் ஒற்றுமையாக இருந்தால் மாத்திரமே மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும்.
</p><p>
இதுபோன்ற நடவடிக்கைகள் மாகாண சபைத் தேர்தலுக்கான அடித்தளமாக இருக்கலாம் என்ற விமர்சனங்கள் எழுந்தாலும், முஸ்லிம் தலைவர்கள் சிலர் எங்களுடன் இணைந்து பயணித்துக் கொண்டிருக்கிறார்கள்.
</p><p>
இலங்கைத் தமிழரசுக் கட்சியில் உள்ள சிலர், முஸ்லிம்களுடன் சமரசமாக இருந்து அவர்களுடைய ஆட்சியை நிலைநாட்டலாம் என்ற எண்ணத்தில் இருப்பது போன்று தெரிகிறது” என்றார்.
</p><p>
இவ்வாறு கிழக்கு மாகாணத்தில் இடம்பெறும் பல்வேறு அரசியல் சூட்சுமங்களை மக்களின் பார்வைக்கு கொண்டு வருகிறது “ஊடறுப்பு” நிகழ்ச்சி,&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/b2c_WTlll-M" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-25T16:40:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[பெற்றோர்கள் மிகுந்த அவதானம் ; குழந்தைகளுக்கு காத்திருக்கும் சிக்கல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/parents-beware-trouble-awaits-children-1787675918"></link>
            <id>https://jvpnews.com/article/parents-beware-trouble-awaits-children-1787675918</id>
            <summary type="text">தற்போது நிலவும் அதிக வெப்பமான வானிலை மற்றும் பாடசாலை விடுமுறை காலத்தைக் கருத்தில் கொண்டு, பிள்ளைகளின் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு குறித்து பெற்றோர்கள...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">தற்போது நிலவும் அதிக வெப்பமான வானிலை மற்றும் பாடசாலை விடுமுறை காலத்தைக் கருத்தில் கொண்டு, பிள்ளைகளின் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு குறித்து பெற்றோர்கள் மிகுந்த அவதானத்துடன் செயல்பட வேண்டும் என விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா சுட்டிக்காட்யுள்ளார்</p><p style="text-align: justify;">
 

இந்த நாட்களில் நிலவும் அதிக வெப்பம் காரணமாக பிள்ளைகள் நீரிழப்பு நிலைக்கு உள்ளாகும் அதிக அபாயம் காணப்படுவதாக அவர் குறிப்பிடுகிறார்.</p><p style="text-align: justify;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f8bdbc85-d2e5-4396-a208-cf4a2d252f8a/26-6a8dc5b41526b.webp' /></p><h2 style="text-align: justify;">பாதுகாப்பு நடவடிக்கை</h2><p style="text-align: justify;">
</p><p style="text-align: justify; ">
 

நீண்ட நேரம் அதிக வெயிலில் விளையாடுவதால் உடலுக்குக் கடுமையான பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்பதுடன், சில சந்தர்ப்பங்களில் அதிர்ச்சி நிலைகள் ஏற்படுவதுடன் இதயம் மற்றும் மூளைக்குக்கூட பாதிப்புகள் ஏற்படக்கூடும் என வைத்தியர் எச்சரிக்கிறார்.</p><p style="text-align: justify;">

 

தலைவலி, வாந்தி, உடல் வலி, மயக்க நிலை/தூக்கக் கலக்கம், அசௌகரியம், பசியின்மை மற்றும் சிறுநீர் அடர் நிறமாக மாறுதல் என்பன நீரிழப்பின் ஆரம்ப அறிகுறிகளாகும் என்பதால், வெளியில் விளையாடும் பிள்ளைகளுக்குப் போதுமான அளவு நீரைக் கொடுப்பது அத்தியாவசியமானதாகும்.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;">
</p><p style="text-align: justify;">
 

நீருக்கு மேலதிகமாகக் இளநீர், ஜீவனி, எலுமிச்சை, நாரத்தை, மாம்பழம், மாதுளைச் சாறு, கஞ்சி மற்றும் சூப் போன்ற இயற்கை திரவ உணவுகளைப் பிள்ளைகளுக்கு வழங்குவது முக்கியம் என அவர் சுட்டிக்காட்டுகிறார்.</p><p style="text-align: justify;">

 

சூரியன் உச்சிக்கு வரும் வேளைகளில் எளிய பருத்தி ஆடைகளை அணிவித்தல், தொப்பி பயன்படுத்துதல் மற்றும் மர நிழல் போன்ற குளிர்ந்த இடங்களில் ஓய்வெடுத்தல் போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்ற வேண்டும் என வைத்தியர் கூறுகிறார்.
</p><p style="text-align: justify;">
 

இதேவேளை, விடுமுறை காலம் என்பதால் வீடுகளில் அதிக நேரம் தங்கியிருக்கும் பிள்ளைகள் குறித்துப் பெற்றோர்கள் இதைவிடவும் விழிப்புடன் இருக்க வேண்டும் என விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா வலியுறுத்துகிறார்.</p><p style="text-align: justify;"></p>]]></content>
            <updated>2026-08-25T16:38:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் கோர விபத்து: ஒருவர் உயிரிழப்பு; மூவர் வைத்தியசாலையில் அனுமதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/one-person-killed-in-two-vehicle-crash-1787668004"></link>
            <id>https://canadamirror.com/article/one-person-killed-in-two-vehicle-crash-1787668004</id>
            <summary type="text">கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் உள்ள சட்பரி பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றொருவர் படுகாயமடைந்துள்ளார்.
இந்த விபத்து...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் உள்ள சட்பரி பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றொருவர் படுகாயமடைந்துள்ளார்.</p><p>
இந்த விபத்து ஆகஸ்ட் 22ஆம் திகதி மாலை 4 மணியளவில், நொட்ரே டேம் பகுதியில் இடம்பெற்றதாக சட்பரி பொலிஸார் ஆகஸ்ட் 24ஆம் திகதி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
</p><p>நெட்ரே டேம் மற்றும் லாசேல் போல்வொர்ட் சந்திப்புக்கு வடக்கே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1a3d99f5-a08c-49ac-a80d-27a497d82fda/26-6a8da6262b795.webp' /></p><p>
பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின்படி, தெற்கு நோக்கிப் பயணித்த வாகனம் ஒன்று திடீரென வடக்கு நோக்கிய பாதைக்குள் நுழைந்து, எதிரே வந்த மற்றொரு வாகனத்துடன் மோதியுள்ளது.</p><p>
தெற்கு நோக்கிப் பயணித்த வாகனத்தின் சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>அதே வாகனத்தில் பயணித்த இளம் பயணி ஒருவர் பலத்த காயங்களுடன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
</p><p>மேலும், வடக்கு நோக்கிப் பயணித்த வாகனத்தில் இருந்த சாரதியும் பயணியும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உயிருக்கு ஆபத்தில்லாத காயங்கள் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>
விபத்து தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.</p><p>
இந்த விபத்தை நேரில் பார்த்தவர்கள் அல்லது தங்களது வாகனத்தின் டாஷ்கேம் காட்சிகளை வைத்திருப்பவர்கள், 705-675-9171 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக சட்பரி பொலிஸாரைத் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-25T16:30:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்த 3 ராசி பெண்கள் பிடிவாதத்தால் நினைத்ததை சாதிப்பதில் கில்லாடிகளாம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/which-women-zodiacs-are-very-stubborn-1787672974"></link>
            <id>https://manithan.com/article/which-women-zodiacs-are-very-stubborn-1787672974</id>
            <summary type="text">who very stubborn according to astrology : ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில், ஒருவர் பிறக்கும் ராசி மற்றும் நட்சத்திரம் அவர்களின் வாழ்க்கை முறை, ஆளுமை,...</summary>
            <content type="html"><![CDATA[<p>who very stubborn according to astrology : ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில், ஒருவர் பிறக்கும் ராசி மற்றும் நட்சத்திரம் அவர்களின் வாழ்க்கை முறை, ஆளுமை, சிந்தனைப் போக்கு மற்றும் சில தனிப்பட்ட குணாதிசயங்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருப்பதாக ஜோதிடத்தில் குறிப்பிடப்படுகிறது. </p><p>ஒருவரின் பிறப்பு ராசி மற்றும் நட்சத்திரத்தை அடிப்படையாகக் கொண்டு அவர்களின் இயல்பான குணங்கள் மற்றும் தனித்துவமான ஆளுமைப் பண்புகளைப் பற்றி அறிந்துகொள்ள முடியும் என்றும் நம்பப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fc45ce70-b3e7-4b18-89a8-81e571d7ddbc/26-6a8dbe84716c0.webp' /></p><p>
</p><p>
அந்த வகையில், குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்த பெண்கள் இயல்பிலேயே அதிகளவு பிடிவாத குணம் கொண்டவர்களாக இருப்பார்கள் என ஜோதிடக் கருத்துகள் கூறுகின்றன. </p><p>அவர்கள் ஒரு விஷயத்தை மனதில் தீர்மானித்துவிட்டால், அதை எளிதில் கைவிடாமல், எத்தகைய தடைகள் அல்லது சவால்கள் எதிர்ப்பட்டாலும் தொடர்ந்து முயற்சி செய்து, தாங்கள் நினைத்த இலக்கை அடையும் வரை ஓயாமல் செயல்படுவார்கள்.
</p><p>அந்த வகையில், பிடிவாத குணத்துடன் தாங்கள் நினைத்ததை எப்படியாவது சாதித்து முடிக்கும் பெண் ராசியினர் யார் யார் என்பதை இந்தப் பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.</p><h2>மேஷம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7c946c7b-5dad-4ccd-8b2a-c1feb15922c7/26-6a8dbe852b556.webp' /></p><p></p><h2>
</h2><p>மேஷ ராசியில் பிறந்தவர்கள் செவ்வாயின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் என்பதால், இயல்பாகவே அதிக கோபம் மற்றும் பிடிவாத குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். </p><p>எதையும் தைரியமாக எதிர்கொள்ளும் மனப்பான்மையும், தாங்கள் நினைத்ததை சாதித்தே தீர வேண்டும் என்ற உறுதியும் இவர்களிடம் அதிகமாக காணப்படும்.</p><p>

இவர்கள் கோபம் கொள்ளும் போது மிகவும் கடுமையாகவும், சில நேரங்களில் கொடூரமாகவும் நடந்து கொள்வார்கள். இருப்பினும், இவர்களின் கோபமும் பிடிவாதமும் பெரும்பாலும் தாங்கள் சரி என்று நம்பும் விஷயங்களுக்காக மட்டுமே வெளிப்படும். இவர்களின்&nbsp; பிடிவாத குணம் அவர்களுக்கு ஒரு பலமாகவும் அமையும்.&nbsp;</p><h2>
சிம்மம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bb12cb7b-c78b-4f00-a419-209a05ea22ac/26-6a8dbe85d9419.webp' /></p><p>
சிம்ம ராசியில் பிறந்த பெண்கள் சூரியனின் ஆதிக்கத்தில் இருப்பதால், இவர்களிடம் எல்லை மீறிய பிடிவாதமும் கோபமும் நிச்சயம் காணப்படும். </p><p>அதே நேரத்தில், தன்னம்பிக்கை, துணிச்சல் மற்றும் தலைமைத்துவ குணங்களும் இவர்களிடம் அதிகமாக இருக்கும்.

இவர்கள் சிறந்த தலைமைத்துவ பண்புகளைக் கொண்டவர்களாகவும், எந்தவொரு சூழ்நிலையிலும் தங்களால் முடிந்தவரை கடினமாக உழைக்கக் கூடியவர்களாகவும் இருப்பார்கள். </p><p>வாழ்க்கையில் எப்போதும் முன்னேற்றம் அடைய வேண்டும் என்ற எண்ணத்தில் மிகவும் உறுதியுடன் செயல்படுவார்கள்.

தாங்கள் நினைத்த இலக்கை அடையும் வரை ஓயாமல் முயற்சி செய்வது இவர்களின் முக்கியமான குணமாகும். </p><h2>விருச்சிகம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ae8dddf9-f4de-4933-8a8e-392fb3ff2a04/26-6a8dbe868b5c2.webp' /></p><p></p><h2>
</h2><p>விருச்சிக ராசியில் பிறந்த பெண்களும் செவ்வாயின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் என்பதால், சின்னச் சின்ன விஷயங்களுக்குக்கூட அதிகமாக கோபம் கொள்ளும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.</p><p>அதேபோல், தாங்கள் நினைத்ததை சாதிப்பதில் மிகவும் பிடிவாதமாகவும் உறுதியுடனும் செயல்படுவார்கள்.

இவர்களின் கோபமே சில நேரங்களில் இவர்களுக்கு மிகப்பெரிய எதிரியாக மாறிவிடும். </p><p>கோபத்தின் வேகத்தில் எடுக்கும் சில முடிவுகள் பின்னாளில் வருத்தத்தை ஏற்படுத்தக்கூடும். குறிப்பாக, இவர்களின் கோபத்தால் சில முக்கியமான உறவுகளையும் இவர்கள் இழக்க நேரிடலாம்.

இருப்பினும், இவர்களிடம் இருக்கும் பிடிவாதமும் விடாமுயற்சியும் வாழ்க்கையில் பல வெற்றிகளை பெற்றுத் தரும்.&nbsp;</p><p><b>இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).</b></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-25T16:11:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[ட்ரம்பின் வர்த்தகப் போர்... திருப்பியடித்த கார்னி: 700 அமெரிக்கப் பொருட்கள் மீது வரி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/canada-to-impose-tariffs-on-1787674412"></link>
            <id>https://news.lankasri.com/article/canada-to-impose-tariffs-on-1787674412</id>
            <summary type="text">Canada announced retaliatory tariffs on 700 US goods: 20 பில்லியன் டொலர் மதிப்பிலான 700 அமெரிக்கப் பொருட்கள் மீது கனடா கூடுதல் வரிகளை அறிவித்தது.
கனட...</summary>
            <content type="html"><![CDATA[<p>Canada announced retaliatory tariffs on 700 US goods: 20 பில்லியன் டொலர் மதிப்பிலான 700 அமெரிக்கப் பொருட்கள் மீது கனடா கூடுதல் வரிகளை அறிவித்தது.
</p><p>கனடா செவ்வாய்க்கிழமையன்று, 20 பில்லியன் டொலர் மதிப்பிலான 700 அமெரிக்கப் பொருட்கள் மீது 15 முதல் 50 சதவீதம் வரையிலான கூடுதல் வரிகளை விதிப்பதாக அறிவித்துள்ளது.</p><h2>சுமார் 700 வகை</h2><p>
</p><p>சனிக்கிழமையன்றே கனடாவுக்கு எதிரான அமெரிக்காவின் வரிகள் நடைமுறைக்கு வந்துவிட்ட நிலையில், கனடா அறிவித்துள்ள வரிகள் செப்டம்பர் 8 முதல் அமுல்படுத்தப்படும். </p><p>கனடா விதிக்கும் இறக்குமதி வரிகள் அமெரிக்காவின் வரி விகிதங்களுக்கு இணையாக இருக்கும் என்றும், அவை எஃகு, பால் மற்றும் மின்னணுவியல் ஆகிய துறைகளைப் பாதிக்கும் என்றும் கனடிய அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர். </p><p>வெளியாகியுள்ள தகவலின் அடிப்படையில், அழகுசாதனப் பொருட்கள் முதல் ஸ்மார்ட்போன்கள் மற்றும் சமையலறை உபகரணங்கள் வரை, சுமார் 700 வகையான அமெரிக்கப் பொருட்களைப் பாதிக்கும் வகையிலான சமமான மதிப்பிலான பதிலடி வரி விதிப்புத் திட்டத்தை ஃபெடரல் அரசு வகுத்து வருகிறது.</p><p> 27.6 பில்லியன் டொலர் மதிப்பிலான அமெரிக்க இறக்குமதிப் பொருட்கள் மீது, அப்பொருட்களைப் பொறுத்து 15 சதவீதம், 25 சதவீதம் மற்றும் 50 சதவீதம் என்ற விகிதங்களில் சுங்க வரிகள் விதிக்கப்படும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1de0a6b8-efae-40b0-927d-aa488d6446a4/26-6a8dbf2e31818.webp' /></p><p> </p><p>இந்த வரிகள் செப்டம்பர் 8 முதல் அமுலுக்கு வரும். நிதி அமைச்சர் ஃபிரான்சுவா-ஃபிலிப் ஷாம்பேன், தொழில் துறை அமைச்சர் மெலனி ஜோலி, வேலைவாய்ப்பு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் பாட்டி ஹஜ்டு மற்றும் தெற்கு ஒன்ராறியோவிற்கான ஃபெடரல் மேம்பாட்டு முகமைக்கு பொறுப்பான அமைச்சர் இவான் சாலமன் ஆகியோர் ஒருங்கிணைந்து செவ்வாய்க்கிழமை ஒட்டாவாவில் இந்த அறிவிப்பை வெளியிட்டனர். </p><p>பல வாரங்களாக நடைபெற்ற தீவிர பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகும், கனடாவும் அமெரிக்காவும் ஒரு இறுதி நேர வர்த்தக ஒப்பந்தத்தை எட்டத் தவறியதால், பல பில்லியன் டொலர் மதிப்பிலான கனடியப் பொருட்கள் மீது 50 சதவீத இறக்குமதி வரிகளை விதிக்கும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் புதிய நடவடிக்கை வெள்ளிக்கிழமை இரவு நடைமுறைக்கு வந்தது. </p><p>வரிகளுக்கு உட்பட்ட பொருட்களில் கனடா-அமெரிக்கா-மெக்ஸிகோ ஒப்பந்தத்தின் (CUSMA) கீழ் அடங்கும் பொருட்களும் கூட இடம்பெற்றுள்ளன. அமெரிக்க மதுபானங்கள் மீதான மாகாண அளவிலான தடை உள்ளிட்ட, பாகுபாடு காட்டுவதாக அமெரிக்கர்களால் விவரிக்கப்படும் வர்த்தகக் கொள்கைகள் காரணமாக, 1930-ஆம் ஆண்டின் சுங்கவரிச் சட்டத்தின் (Tariff Act) பிரிவு 338-இன் கீழ் புதிய சுங்கவரிகளை விதிப்பதாக ட்ரம்ப் நிர்வாகம் தெரிவித்துள்ளது.</p><p></p><p> </p><p>இந்த நிலையில், கனடியப் பொருட்கள் மீது அமெரிக்கா விதித்துள்ள வரிகளுக்கு இணையாக அமையும் வகையிலேயே இந்த வரி விதிக்கப்படவுள்ள பொருட்களின் பட்டியல் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும், ஒவ்வொரு பொருளின் மீதான வரி விகிதமும் அதே பொருட்களுக்கான அமெரிக்க வரி விகிதத்திற்கு ஏற்ப நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் அரசு அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் தெரிவித்தனர். </p><p>உதாரணமாக, அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் எஃகு மற்றும் அலுமினியம் மீதான வரிகள் தற்போது 25 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாக உயரும்; அதேபோல, தளபாடங்கள் மற்றும் ஆடைகள் மீதான வரிகளும் உயர்த்தப்படும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a11895c3-371b-4338-b7b3-9b793bb630e9/26-6a8dbf2ed8f76.webp' /></p><p> </p><p>50 சதவிகிதம் வரி விதிக்கப்படும் மற்ற குறிப்பிடத்தக்க பொருட்கள் பின்வருமாறு:

வாசனைத் திரவியங்கள் மற்றும் ஒப்பனைப் பொருட்கள், ஸ்மார்ட்போன்கள், பால் பொருட்கள், மேசை மற்றும் சமையலறைப் பொருட்கள், ஒட்டுப்பலகைப் பொருட்கள், காகிதப் பொருட்கள், தேன், கரும்புப்பாகு மற்றும் மால்ட் சாறு, கதவுகள், ஜன்னல்கள் மற்றும் சட்டங்கள், கத்தி, முள் கரண்டி வகைகள் இதில் அடங்கும். </p><p>
25 சதவீத இறக்குமதி வரி விதிக்கப்படும் பொருட்களின் பட்டியலில் பின்வருவன அடங்கும்:

பல்வேறு வகையான கடல் உணவுப் பொருட்கள், பெரிய அளவிலான சமையலறை உபகரணங்கள், சீஸ் மற்றும் தயிர் சார்ந்த பொருட்கள், தரைவிரிப்புகள் மற்றும் ஜவுளிப் பொருட்கள். அதே சமயம், 15 சதவீத வரி விதிக்கப்படும் பொருட்களின் குறுகிய பட்டியலில் குளிரூட்டும் இயந்திரங்களும் அடங்கும்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-25T16:11:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[குக் வித் கோமாளி 7 டைட்டில் வின்னர் இவர் தான்! பைனல் ரிசல்ட் இதோ]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/cooku-with-comali-7-finale-title-winner-1787674037"></link>
            <id>https://cineulagam.com/article/cooku-with-comali-7-finale-title-winner-1787674037</id>
            <summary type="text">விஜய் டிவியின் முன்னணி ஷோக்களில் ஒன்றாக இருந்து வருகிறது குக் வித் கோமாளி. கடந்த பல வருடங்களாகவே இந்த நிகழ்ச்சி பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வந்திருக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>விஜய் டிவியின் முன்னணி ஷோக்களில் ஒன்றாக இருந்து வருகிறது குக் வித் கோமாளி. கடந்த பல வருடங்களாகவே இந்த நிகழ்ச்சி பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.</p><p>இந்த வருடம் போட்டி முறையில் சில மாற்றங்களை செய்து இருந்தனர். போட்டியாளர்கள் ஜோடிகளாக இந்த வருடம் கலந்து கொண்டு இருக்கின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c503885c-0a75-4914-8f12-410e3de25672/26-6a8dbdb7351ae.webp' /></p><p>
</p><h2>பைனல் </h2><p>இந்நிலையில் தற்போது குக் வித் கோமாளி 7வது சீசனின் பைனல் ஷூட்டிங் நடந்து முடிந்து இருக்கிறது. அதில் சம்யுக்தா மற்றும் அனிருதா ஸ்ரீகாந்த் ஆகியோர் வின்னர் என அறிவிக்கப்பட்டிருக்கின்றனர்.
</p><p>மேலும் ரன்னராக ஷபானா அறிவிக்கப்பட்டு இருக்கிறார்.
&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/971991ee-1e3a-4744-a97d-94ea474ec444/26-6a8dbe1c5f74f.webp' /></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-25T16:08:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழ் தலைமைகள் மக்களுக்கு செய்தது என்ன..! கனடா உயர்ஸ்தானிகரை வியக்க வைத்த ஈழத்தமிழன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/senthil-kumaran-medical-assistance-to-sri-lanka-1787674001"></link>
            <id>https://tamilwin.com/article/senthil-kumaran-medical-assistance-to-sri-lanka-1787674001</id>
            <summary type="text">தமிழர் பகுதிகளில் வாழும் மக்கள் முள் கம்பியின் மீது நிற்பதைப் போன்ற நெருக்கடியான சூழ்நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கும் நிலையில், அவர்களுக்கு உதவுவதற்கு...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழர் பகுதிகளில் வாழும் மக்கள் முள் கம்பியின் மீது நிற்பதைப் போன்ற நெருக்கடியான சூழ்நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கும் நிலையில், அவர்களுக்கு உதவுவதற்கு எந்தவொரு தமிழ் தலைமையும் முன்வரவில்லை என கனடாவில் வசிக்கும் சமூக சேவையாளரான செந்தில் குமரன் (மின்னல் செந்தில்) குற்றம் சுமத்தியுள்ளார்.
</p><p>
லங்காசிறி ஊடகத்தின் “நேருக்கு நேர்” நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
அவர் மேலும் தெரிவிக்கையில்,
</p><p>
மலையக மக்கள் போதிய மருத்துவ வசதிகளின்றி பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். சுமார் நான்கு மணி நேரம் பேருந்தில் பயணித்து மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டிய நிலை காணப்படுகிறது. அவர்களுக்கு என்னால் முடிந்த உதவிகளை வழங்குவதற்காக சுகாதார அமைச்சிடம் கோரிக்கை முன்வைத்துள்ளேன்.</p><p>

அரசாங்கத்தில் இடம்பெறும் விடயங்களை மக்கள் புரிந்துகொண்டு, அதன் பின்னர் தங்களது முடிவுகளை எடுப்பது சிறந்தது. ஏனெனில், இலங்கையில் வாழும் எமது தாய் உறவுகளுக்கு பல்வேறு விதமான உதவிகளை வழங்குவதற்கு புலம்பெயர் தமிழர்கள் தயாராக உள்ளனர். அவர்களுடன் இணைந்து பயணிப்பது அவசியம்.
</p><p>
இதுவரையில் 200க்கும் மேற்பட்டோருக்கு நான் வழங்கியுள்ள மருத்துவ உதவிகள் அவர்களது வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன” என்றார்.
</p><p>
இதேவேளை, இலங்கையில் வாழும் மக்கள் போதிய மருத்துவ வசதிகளின்றி எதிர்கொள்ளும் சிரமங்கள் மற்றும் தமிழ் தலைவர்களால் மேற்கொள்ளப்படுவதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பிலும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p>

இது தொடர்பான மேலதிக தகவல்களை காணொளியில் தொடர்ந்து காணலாம்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/A8S2Fxo6eOQ" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-25T16:07:29+00:00</updated>
        </entry>
    </feed>
