<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-09-15T22:11:03+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[பல இடங்களில் களம் இறங்கும் CID - திகில் அடையும் மகிந்தவும் தென்னிலங்கையும்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/cid-swing-mahinda-southern-sri-lanka-gripped-panic-1789506937"></link>
            <id>https://tamilwin.com/article/cid-swing-mahinda-southern-sri-lanka-gripped-panic-1789506937</id>
            <summary type="text">இலங்கையின் பல இடங்களில் நடைபெற்ற ஊழல் சம்பவங்களுடன் தொடர்பான சில அதிகாரிகளை தேடி சிஜடி வலை வீசியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.கோட்டாபய மற்றும் மகிந்த ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் பல இடங்களில் நடைபெற்ற ஊழல் சம்பவங்களுடன் தொடர்பான சில அதிகாரிகளை தேடி சிஜடி வலை வீசியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>கோட்டாபய மற்றும் மகிந்த ராஜபக்சவோடு தொடர்புபட்ட பல சிறிய அதிகாரிகள் இதில் ஒழிந்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது.</p><p>இதனால் குறித்த அதிகாரிகளை இலக்கு வைத்து பல மாவட்டங்களில் பரவலாக&nbsp;சிஜடியினர் களமிறக்கப்பட்டுள்ளனர்.</p><p>இதனோடு தொடர்புபட்டு பல இரகசியக் கைதுகள் தற்போது இடம்பெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இவை தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது நாட்டு நடப்புகள் நிகழ்ச்சி...</p><p>&nbsp;<iframe frameborder="0" src="//www.youtube.com/embed/pDgJ9q82r6E" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-15T21:58:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தேர்தல்கள் ஆணைக்குழுவால் மட்டும் ஜனநாயகத்தை பாதுகாக்க முடியாது- ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க வலியுறுத்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/r-m-a-l-rathnayake-emphasizes-1789509254"></link>
            <id>https://tamilwin.com/article/r-m-a-l-rathnayake-emphasizes-1789509254</id>
            <summary type="text">தேர்தல்கள் ஆணைக்குழுவினால் மாத்திரம் ஜனநாயகத்தை பாதுகாக்க முடியாது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

மா...</summary>
            <content type="html"><![CDATA[<p>தேர்தல்கள் ஆணைக்குழுவினால் மாத்திரம் ஜனநாயகத்தை பாதுகாக்க முடியாது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.</p><p>

மாகாண சபை உள்ளிட்ட தேர்தல்கள் குறித்து ஊடகவியலாளர்களுக்கு கருத்து வெளியிடும் போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.</p><h2> 


ஜனநாயகத்தை பாதுகாக்கும் முயற்சி</h2><p>
நிறைவேற்று அதிகாரம், சட்டவாக்கத்துறை மற்றும் நீதித்துறை ஆகிய அரசின் முத்துறைகளுடன் அரசியல் கட்சிகள், சிவில் சமூகத்தினர் மற்றும் ஒட்டுமொத்த மக்களும் ஜனநாயகத்தை பாதுகாக்கும் செயற்பாட்டில் பங்கேற்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/06a500cb-00f2-4c00-9a97-dd8451c44c72/26-6aa9beb5ece3e.webp' /></p><p>
</p><p>
ஜனநாயக ஆட்சிக் கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழுவின் பங்களிப்பு மாத்திரம் போதுமானதல்ல என சுட்டிக்காட்டிய அவர், ஜனநாயக விழுமியங்களையும் தேர்தல் செயற்பாடுகளையும் பாதுகாப்பதில் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருக்கும் பொறுப்பு உள்ளது என தெரிவித்துள்ளார்.
</p><p>
நாட்டில் ஜனநாயகத்தை வலுப்படுத்துவதற்கு அரச நிறுவனங்கள், அரசியல் கட்சிகள், சிவில் சமூக அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியதன் அவசியத்தையும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தொடர்ந்தும் வலியுறுத்தியுள்ளார்.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-15T21:55:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thileepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வீடு திரும்பிய ஆசிரியருக்கு காத்திருந்த அதிர்ச்சி - தடவியல் பொலிஸாருக்கு விடுக்கப்பட்ட அழைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/valuable-items-stolen-in-vavuniya-1789508670"></link>
            <id>https://tamilwin.com/article/valuable-items-stolen-in-vavuniya-1789508670</id>
            <summary type="text">வவுனியா - உக்கிளாங்குளம் பகுதியில் பட்டப்பகலில் வீடு புகுந்து பெறுமதியான
நகைககள் உள்ளிட்ட பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p>வவுனியா - உக்கிளாங்குளம் பகுதியில் பட்டப்பகலில் வீடு புகுந்து பெறுமதியான
நகைககள் உள்ளிட்ட பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
இந்த சம்பவம் நேற்று(15.09.2026) இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், </p><p> 

வவுனியா - உக்கிளாங்குளம் பகுதியில் உள்ள வீடு ஒன்றுக்குள் பட்டப்பகலில்
புகுந்த திருடர், வீட்டுக் கதவினை சூட்சுமாக உடைத்து உள் நுழைந்து அங்கிருந்த
அலுமாரிகளை உடைத்துள்ளனர். </p><h2>

வீடு திரும்பிய ஆசிரியருக்கு காத்திருந்த அதிர்ச்சி</h2><p>
அதன் பின்னர், அதற்குள் இருந்த பெறுமதியான சங்கிலி, தோடுகள் உள்ளிட்ட நகைகள் மற்றும் ஒரு தொகைப் பணம் என்பவற்றையும் திருடிச் சென்றுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/43f44f16-b083-4135-ae0e-34a9301dc415/26-6aa9bcb4162f9.webp' /></p><p> </p><p>

காலை வீட்டில் இருந்து பாடசாலைக்கு சென்ற ஆசிரியர் பாடசாலை முடிந்து வீடு
திரும்பிய போது கதவு உடைக்கப்பட்டு திருடப்பட்டு இருந்தமை தெரியவந்துள்ளது.</p><p> 

இதனையடுத்து, வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்து,
வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் சம்பவ இடத்திற்கு வருகை தந்து
விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.</p><p> 

இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதுடன், தடவியல் பொலிஸாரின் உதவியை நாடுவதற்கான நடவடிக்கையையும் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c77d1639-d184-43fc-b7c1-423a18be0320/26-6aa9bcb510521.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bc8c6f2a-b343-4071-b7a9-ab336c3c46a5/26-6aa9bcb5da4d6.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/efc5e64a-ef89-4f25-aca3-a724e735f6c3/26-6aa9bcb6c13a9.webp' /></p><p></p><p></p><p><br></p><p><br></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-15T21:46:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[100 நாட்கள் வைத்தியசாலையில்..! உயர்மட்டத்தினரை காப்பாற்ற முயற்சிக்கும் சுரேஷ் சலேவுக்கு கடைசி வாய்ப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/medical-report-regarding-suresh-sallay-1789507797"></link>
            <id>https://tamilwin.com/article/medical-report-regarding-suresh-sallay-1789507797</id>
            <summary type="text">தேசிய புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேவுக்கான சிகிச்சைகள் நிறைவடைந்த பின்னரே அவரிடம் முழுமையான விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என அமை...</summary>
            <content type="html"><![CDATA[<p>தேசிய புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேவுக்கான சிகிச்சைகள் நிறைவடைந்த பின்னரே அவரிடம் முழுமையான விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.</p><p>

நேற்று(15.09.2026) கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.</p><h2> 

100 நாட்கள் வைத்தியசாலையில் சுரேஷ் சலே</h2><p>
அவர் மேலும் தெரிவிக்கையில், 

சுரேஷ் சலே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு வைத்து அவரிடம் முழுமையான விசாரணைகளை முன்னெடுக்க முடியாது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/41ad2922-6b74-4450-bbd1-1655001aa7a4/26-6aa9b95518737.webp' /></p><p> </p><p>மருத்துவ சிகிச்சைகள் நிறைவடைந்த பின்னரே குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் வைத்து விசாரணைகள் நடத்தப்படும்.

சுரேஷ் சலே தொடர்ந்து வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற வேண்டுமா என்பது குறித்து ஆராய்வதற்கு விசேட மருத்துவர்கள் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
</p><h2>
விசேட ஆய்வுக்குழு நியமனம்</h2><p>
 அந்த குழுவின் அறிக்கைக்கு அமையவே அடுத்தகட்ட நடவடிக்கைகள் தீர்மானிக்கப்படும். தற்போது அவருக்குப் பெரியளவிலான சுகாதாரச் சிக்கல்கள் எதுவுமிருப்பதாகத் தெரியவில்லை. அவர் ஆரோக்கியமாகவே காணப்படுகின்றார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/55ad3e2f-bea7-47bf-a212-15d2a5660536/26-6aa9b955e5f45.webp' /></p><p>
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஒருவரிடம் முழுமையான விசாரணைகளை மேற்கொள்ள முடியாது. </p><p>அவர் எப்போதும் மருத்துவமனையிலேயே இருக்கப் போவதில்லை. 

சிகிச்சைகள் முடிவடைந்து வெளியேறியதும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அவரை அழைத்துச் சென்று விசாரணைகள் முன்னெடுக்கப்படும். </p><p>அதற்கான கால அவகாசம் போதாத பட்சத்தில் விசாரணைக்காலம் மேலும் நீடிக்கப்படும்.

சுரேஷ் சலேவின் நிலைமை குறித்து நீதிமன்றத்தில் விளக்கமளிக்குமாறு தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. </p><p>அது குறித்து அறிக்கை சமர்ப்பிக்கும் பொறுப்பு வைத்தியசாலை நிர்வாகத்திற்கு உள்ளது என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-15T21:32:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[எரிபொருள் விலை திருத்தம் தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/minister-reveals-key-fuel-price-revision-details-1789504447"></link>
            <id>https://jvpnews.com/article/minister-reveals-key-fuel-price-revision-details-1789504447</id>
            <summary type="text">இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இதுவரை எரிபொருள் விலை திருத்தம் தொடர்பில் எவ்வித யோசனையும் முன்வைக்கவில்லை. எதிர்வரும் நாட்களில் உலக சந்தையில் எரிபொ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இதுவரை எரிபொருள் விலை திருத்தம் தொடர்பில் எவ்வித யோசனையும் முன்வைக்கவில்லை. எதிர்வரும் நாட்களில் உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரிக்கப்படுவதை அடிப்படையாகக் கொண்டே, உள்நாட்டில் விலைகளைத் தீர்மானிக்கலாம் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.</p><p style="text-align: justify; ">
செவ்வாய்க்கிழமை (15) கொழும்பில் உள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6005784b-b69d-4242-b0c8-a72b2b4b8e52/26-6aa9abc0e32b7.webp' /></p><h2 style="text-align: justify; ">எரிபொருள் விலை திருத்தம்</h2><p style="text-align: justify; ">

இதுவரை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் எரிபொருள் விலை திருத்தம் தொடர்பில் எவ்வித யோசனையும் முன்வைக்கவில்லை. </p><p style="text-align: justify; ">முன்னர் முற்பதிவு செய்யப்பட்ட எரிபொருட்களே தற்போது நாட்டை வந்தடைகின்றனர். இது குறித்து அரசாங்கமும் இன்னும் கலந்துரையாடவில்லை.

</p><p style="text-align: justify; ">
எவ்வாறிருப்பினும் எரிபொருள் விநியோக நிறுவனங்கள் சில, தற்போதுள்ள விலையில் எரிபொருட்களை விநியோகிப்பதில் நெருக்கடிகளை எதிர்கொள்வதாகத் தெரிவித்துள்ளன.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> கடந்த 3 மாதங்களாக எரிபொருள் விலையில் அரசாங்கம், நுகர்வோருக்கு சலுகைகளை வழங்கியிருக்கிறது.</p><p style="text-align: justify; ">

இதற்காக 57 பில்லியன் ரூபா அரசாங்கத்தால் ஒதுக்கப்பட்டது. எதிர்வரும் நாட்களில் உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரிக்கப்படுவதை அடிப்படையாகக் கொண்டே, உள்நாட்டில் விலைகளைத் தீர்மானிக்கலாம் என்றார்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-15T21:30:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[போர்நிறுத்த பேச்சுவார்த்தைக்கு அழைத்த ட்ரம்ப் ; ஈரான் கொடுத்த பதிலடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/trump-calls-for-ceasefire-talks-iran-hits-back-1789503906"></link>
            <id>https://canadamirror.com/article/trump-calls-for-ceasefire-talks-iran-hits-back-1789503906</id>
            <summary type="text">ஈரானுடன் போர்நிறுத்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ள நிலையில், அவரது அழைப்பை ஈரான்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானுடன் போர்நிறுத்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ள நிலையில், அவரது அழைப்பை ஈரான் நிராகரித்துள்ளது.
</p><p>


அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தும் நிலைப்பாட்டில் ஈரான் இல்லை என அந்நாட்டின் பாதுகாப்புத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/344801a1-025d-4a7e-b6eb-d278a086824b/26-6aa9a9a39c148.webp' /></p><p>
</p><p>


ட்ரம்ப்பின் அழைப்பு தொடர்பாக ஈரானின் தேசிய பாதுகாப்புத் துறை செயலாளர் மொஹ்சென் ரெஸாயி தனது எக்ஸ் தள பதிவில், அமெரிக்க ஜனாதிபதியின் முரண்பாடான கருத்துக்களால் யாரும் திசைதிரும்ப வேண்டாம் என குறிப்பிட்டுள்ளார்.
</p><p>


எண்ணெய் வர்த்தகம் மற்றும் ஹோர்முஸ் நீரிணை தொடர்பான சூழ்நிலை மாறிவிட்டதாகவும், ஈரான் முன்வைக்கும் நிபந்தனைகளை அமெரிக்கா ஏற்றுக்கொள்வதாக உறுதியளிக்கும் வரை பேச்சுவார்த்தை நடத்தப்படாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
</p><p>


போர்நிறுத்த ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்கு இது மிகவும் ஆரம்பகட்டம் என பல நாட்களாக கூறிவந்த ட்ரம்ப், நேற்று வெளியிட்ட சமூக ஊடகப் பதிவில் ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா தயாராக இருப்பதாக தெரிவித்திருந்தார்.</p><p>



ஈரான் விரைவாக போர்நிறுத்த ஒப்பந்தத்தை மேற்கொள்ள விரும்புவதாகவும், அதில் அமெரிக்கா ஈடுபட வேண்டுமா என்பதை தானே தீர்மானிப்பதாகவும் ட்ரம்ப் குறிப்பிட்டிருந்தார்.
</p><p>


இதனிடையே, போர்நிறுத்தம் மற்றும் ஹோர்முஸ் நீரிணை மீதான முற்றுகையை விலக்கிக் கொள்வதற்கு ஈரான் சில நிபந்தனைகளை முன்வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p> 



போரினால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கான இழப்பீடு மற்றும் பொருளாதாரத் தடைகளை நீக்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை ஈரான் முன்வைத்துள்ள போதிலும், அவற்றை ஏற்க அமெரிக்கா மறுத்து வருவதாகவும் கூறப்படுகின்றது.</p>]]></content>
            <updated>2026-09-15T21:30:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[எல் நினோவால் எங்கே மழை, வறட்சி, வெப்பம் ஏற்படும்... விரிவான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/el-nino-reaches-super-status-1789490452"></link>
            <id>https://news.lankasri.com/article/el-nino-reaches-super-status-1789490452</id>
            <summary type="text">Where will it bring rain, drought and heat? எல் நினோ எங்கே மழையையும், வறட்சியையும், வெப்பத்தையும் கொண்டு வரும்?
பசிபிக் பெருங்கடலில் ஒரு வலிமையான &#039;எல...</summary>
            <content type="html"><![CDATA[<p>Where will it bring rain, drought and heat? எல் நினோ எங்கே மழையையும், வறட்சியையும், வெப்பத்தையும் கொண்டு வரும்?
</p><p>பசிபிக் பெருங்கடலில் ஒரு வலிமையான 'எல் நினோ' உருவாகி வரும் நிலையில், இது உலகம் முழுவதும் வானிலையில் மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது.</p><h2>மிகவும் தீவிரமான நிலை</h2><p>
எல் நினோ என்பது மத்திய மற்றும் கிழக்கு பசிபிக் பெருங்கடலில் நீர் வழக்கத்தை விட வெப்பமாக இருப்பதன் காரணமாக ஏற்படும் ஒரு இயற்கையான காலநிலை நிகழ்வாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f0c125cc-9f33-4161-8703-33c2c95bd571/26-6aa97516b5f8c.webp' /></p><p>
</p><p>செப்டம்பர் 14, 2026 அன்று வெளியிடப்பட்ட அமெரிக்காவின் தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகத்தின் (NOAA) தரவுகள், எல் நினோ (El Nino) நிகழ்வானது 2 டிகிரி செல்சியஸ் (3.6°F) என்ற வெப்பநிலை உயர்வு வரம்பைக் கடந்து, மிகவும் தீவிரமான நிலையை எட்டியுள்ளதைக் காட்டுகின்றன; இது 'சூப்பர் எல் நினோ' என்று அழைக்கப்படுகிறது. </p><p>இந்த ஆண்டிற்கான எல் நினோ நிகழ்வு 2026 ஜூன் மாதத்தில் உருவாகத் தொடங்கியது; இது 2027-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் உச்சத்தை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது இதுவரை பதிவானவற்றிலேயே மிகத் தீவிரமான நிகழ்வுகளில் ஒன்றாக இருக்கக்கூடும் என்று வானிலை ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.</p><p></p><p> </p><p>இது 2027-ஆம் ஆண்டு மார்ச் முதல் மே மாதம் வரையிலும் நீடிக்கும் என்று NOAA-வின் காலநிலை முன்னறிவிப்பு மையம் எதிர்பார்க்கிறது. எல் நினோ பொதுவாக மார்ச் மற்றும் ஜூன் மாதங்களுக்கு இடையே தொடங்கி, நவம்பர் மற்றும் பிப்ரவரி மாதங்களுக்கு இடையே உச்சத்தை அடைகிறது; மேலும் இது 18 மாதங்கள் வரை நீடிக்கக்கூடும்.
</p><p>மிகவும் வலுவான எல் நினோ, கிழக்கு ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா மற்றும் தெற்கு அமெரிக்காவிற்கு அதிக மழையையும், தெற்காசியா, தென்கிழக்கு ஆசியா, அவுஸ்திரேலியா மற்றும் தெற்கு ஆப்பிரிக்காவிற்கு வறட்சியையும், அத்துடன் ஏறக்குறைய எல்லா இடங்களிலும் வெப்பமான காலநிலையையும் கொண்டுவருகிறது. </p><p>எல் நினோ பொதுவாக கிழக்கு ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா மற்றும் அமெரிக்காவின் தெற்குப் பகுதிகளில் அதிக மழையைக் கொண்டுவருகிறது.
</p><p>எல் நினோ பொதுவாக தென் அமெரிக்கா மற்றும் அமெரிக்காவின் தெற்குப் பகுதிகளுக்கு அதிக மழையைக் கொண்டுவருகிறது; 2027-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஈக்வடார் மற்றும் வடக்கு பெருவின் கடற்கரைப் பகுதிகளில் அதிக மழைப்பொழிவு நிலவும் என்றும், பின்னர் செப்டம்பர் 2026 முதல் ஜனவரி 2027 வரையிலான காலத்தில் இப்பகுதி தெற்கு பிரேசில், உருகுவே மற்றும் வடகிழக்கு அர்ஜென்டினா வரை பரவும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.</p><h2>காட்டுத்தீ அபாயம்</h2><p>
</p><p>எல் நினோ பொதுவாக தெற்காசியா, தென்கிழக்கு ஆசியா, அவுஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய பகுதிகளில் வறண்ட வானிலையை ஏற்படுத்துகிறது. இந்தியா மற்றும் பாகிஸ்தானில் கோடைக்காலப் பருவமழை பற்றாக்குறையாகவே இருந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/86213088-4e94-4c34-ba65-7ed911488c29/26-6aa97517699be.webp' /></p><p> </p><p>இந்திய வானிலை ஆய்வுத் துறையின் தகவலின்படி, ஜூன் 1 முதல் செப்டம்பர் 9 வரையிலான காலகட்டத்தில் இந்தியா முழுவதும் பதிவான மழைப்பொழிவு சராசரியை விட 15 சதவீதம் குறைவாக இருந்தது. </p><p>இந்தோனேசியா வறண்ட பருவத்தையும், அதிக காட்டுத்தீ அபாயத்தையும் எதிர்கொள்கிறது. அதன் வானிலை ஆய்வு நிறுவனமான BMKG, ஜூலை மாத இறுதியில் 5,019 அபாயப் பகுதிகளைப் பதிவு செய்துள்ளது; இதில் சுமத்ரா மற்றும் கலிமந்தான் ஆகியவை அதிகபட்ச அபாயத்தில் உள்ளன.</p><p> அவுஸ்திரேலியாவின் வானிலை ஆய்வு மையம், நாட்டின் தெற்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் சராசரிக்கும் குறைவான மழையே பெய்யக்கூடும் என்று எதிர்பார்க்கிறது; அதேவேளையில், வெப்பமான வானிலை காட்டுத்தீ அபாயத்தை அதிகரிக்கிறது. </p><p>இந்த நிலையில், 2027 ஆம் ஆண்டின் இறுதிக்குள் எல் நினோ நிகழ்வால் மேலும் குறைந்தது 49 மில்லியன் மக்கள் கடுமையான பட்டினிக்குத் தள்ளப்படலாம் என உலக உணவுத் திட்டம் (WFP) எச்சரித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f4038b53-efc5-4a51-b9c2-dd05ef738494/26-6aa975181d71d.webp' /></p><p>
</p><p>மக்காச்சோளம், அரிசி மற்றும் பிற மானாவாரிப் பயிர்களே அதிக ஆபத்தில் இருப்பதாக ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பு தெரிவிக்கிறது.</p><p> தென்னாப்பிரிக்கா மற்றும் சஹேல் முதல் தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியா வரையிலான பகுதிகளில் நிலவும் வறண்ட வானிலை, பயிர் அறுவடைக்கு அச்சுறுத்தலாக உள்ளது.
</p><p>எல் நினோ நிகழ்வு பொதுவாகப் பூமியை வெப்பமடையச் செய்கிறது; இது உருவான அடுத்த ஆண்டில் இதன் தாக்கம் மிக அதிகமாக உணரப்படுகிறது. மேலும், இப்போதிருந்து 2030-ஆம் ஆண்டுக்குள் குறைந்தபட்சம் ஒரு வருடமாவது, இதுவரை பதிவான ஆண்டுகளில் மிகவும் வெப்பமான ஆண்டாக 2024-ஐ மிஞ்சுவதற்கு 86 சதவீத வாய்ப்பு இருப்பதாகவும் கணிக்கப்பட்டுள்ளது.
</p><p>வலுவான எல் நினோ பொதுவாக அட்லாண்டிக் சூறாவளிப் பருவத்தை மொத்தமாக அமைதிப்படுத்துகிறது. இதனால் சூறாவளிகள் உருவாவது எல் நினோவால் தடுக்கப்படுகிறது என்றே நிபுணர்களின் கருத்தாக உள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-15T21:20:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பயோமெட்ரிக் தரவு அடையாள அட்டைக்கு எதிர்ப்பு - இந்திய உயர்ஸ்தானிகரகத்திற்கு முன்பாக திரண்ட மக்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/opposition-to-biometric-data-identity-cards-1789506651"></link>
            <id>https://tamilwin.com/article/opposition-to-biometric-data-identity-cards-1789506651</id>
            <summary type="text">இலங்கையில் மிக விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ள பயோமெட்ரிக் தரவு அடையாள அட்டை வழங்கும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கொழும்பில் ஆர்ப்பா...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் மிக விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ள பயோமெட்ரிக் தரவு அடையாள அட்டை வழங்கும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கொழும்பில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
</p><p>
காலிமுகத்திடல் அருகே அமைந்துள்ள இந்திய உயர்ஸ்தானிகரகத்திற்கு முன்பாக நேற்று(15.09.2026) இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது. </p><p>

மக்கள் போராட்ட இயக்கம் மற்றும் சிவில் அமைப்புகள் இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d0e75efd-5d23-448c-95cb-283800ab3778/26-6aa9b4a18e76b.webp' /></p><p> 

கண்காணிப்பு அரசுக்கு வழிவகுக்கும், இந்தியாவுக்கு தரவுகளைத் தாரைவார்க்கும் பயோமெட்ரிக் தரவு அடையாள அட்டையை எதிர்ப்போம், இந்தியாவுடனான இரகசிய ஒப்பந்தங்கள் 7ஐயும் வெளிப்படுத்துக உள்ளிட்ட பல்வேறு கோஷங்களை ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டோர் எழுப்பியுள்ளனர்.&nbsp;</p><p></p><p></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-15T21:12:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கைப் பொருளாதாரம் வீழ்ச்சி! இரண்டாம் காலாண்டில் மந்தகதி வளர்ச்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-lankan-economy-slumps-second-quarter-1789504138"></link>
            <id>https://tamilwin.com/article/sri-lankan-economy-slumps-second-quarter-1789504138</id>
            <summary type="text">இலங்கைப் பொருளாதாரத்தின் வளர்ச்சி வேகம் நடப்பு ஆண்டின் இரண்டாம் காலாண்டில் கணிசமான வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கைப் பொருளாதாரத்தின் வளர்ச்சி வேகம் நடப்பு ஆண்டின் இரண்டாம் காலாண்டில் கணிசமான வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
</p><p>
2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் இலங்கை பொருளாதாரம் 4.2 சதவீத நேர்மறையான வளர்ச்சியை மட்டுமே பதிவு செய்துள்ளமை புள்ளிவிபரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.
</p><h2>பொருளாதார வளர்ச்சி வேகம்&nbsp;</h2><p>
தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ள புதிய தேசிய கணக்கு மதிப்பீடுகளின்படி, ஏப்ரல் 1 முதல் ஜூன் 30 வரையிலான காலப்பகுதியில் இந்த பொருளாதார வளர்ச்சி பதிவாகியுள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0ec3f5b1-dc78-4ed0-b444-7cdb8241cd1a/26-6aa9b2fbf418b.webp' /></p><p>
2026 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் 5.1 சதவீத பொருளாதார வளர்ச்சி பதிவாகியிருந்த நிலையில், இரண்டாம் காலாண்டில் பொருளாதார வளர்ச்சி வேகம் 4.2 சதவீதம் வரை வீழ்ச்சியடைந்துள்ளது.</p><p>

தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ள புதிய தேசிய கணக்கு மதிப்பீடுகளின்படி, இரண்டாம் காலாண்டில் கைத்தொழில் துறை 7.3 சதவீத குறிப்பிடத்தக்க வளர்ச்சியைப் பதிவுசெய்துள்ள அதேவேளை, சேவைத் துறை 2.7 சதவீதத்தால் வளர்ச்சியடைந்துள்ளது.</p><p>அதேவேளை விவசாயத் துறையில் 2.3 சதவீத பின்னடைவு பதிவாகியுள்ளது.
</p><h2>விவசாயத் துறையின் பின்னடைவு</h2><p>
கைத்தொழில் துறையின் வளர்ச்சிக்கு சுரங்க மற்றும் அகழ்வாராய்ச்சி தொழில், கட்டுமானத் துறை மற்றும் மின்சாரம் மற்றும் எரிசக்தி விநியோகத் துறைகளின் வளர்ச்சி முக்கிய காரணியாக அமைந்துள்ளது.
</p><p>
சேவைத் துறையில் தகவல் தொழில்நுட்ப சேவைகள் 10 சதவீதமும், காப்பீட்டு சேவைகள் 8 சதவீதமும் மற்றும் நிதிச் சேவைகள் 7.7 சதவீதமும் வளர்ச்சியடைந்துள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்கள புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/981497bd-fb9d-48ca-a0e1-05b3f68dae30/26-6aa9b2fcf3aa5.webp' /></p><p>
விவசாயத் துறையின் பின்னடைவுக்கு நன்னீர் மீன்பிடி நடவடிக்கைகள் மற்றும் நெல் சாகுபடி குறைவடைந்தமையே முக்கிய காரணம் என தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவிக்கிறது.</p><p>2026 இரண்டாம் காலாண்டில் தற்போதைய சந்தை விலைகளின் கீழ் மொத்த உள்நாட்டு உற்பத்தி 8,254,176 மில்லியன் ரூபாவாக பதிவாகியுள்ளதுடன், இது 11.3 சதவீத வளர்ச்சியாகும்.
</p><p>
மத்திய கிழக்கு நெருக்கடி நிலை மற்றும் கச்சா எண்ணெய் விநியோகத்தில் நிலவும் நிச்சயமற்ற தன்மை காரணமாக சுற்றுலாத் துறையில் சற்று மந்தநிலை காணப்பட்ட போதிலும், இறக்குமதி அளவுகளின் வளர்ச்சி காரணமாக உள்நாட்டு உற்பத்திகளுக்குத் தேவையான மூலப்பொருட்களைப் பெற்றுக்கொள்ள முடிந்தமை மற்றும் கட்டுமானத் துறையின் விரிவாக்கம் என்பன பொருளாதார வளர்ச்சிக்கு நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக அத்திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-15T21:05:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[பேய் பிடித்ததாக கூறி மாணவியை தோழிகள் செய்த சம்பவம் ; விசாரணையில் காத்திருந்த ஷாக்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/friends-act-leaves-student-distressed-1789499230"></link>
            <id>https://jvpnews.com/article/friends-act-leaves-student-distressed-1789499230</id>
            <summary type="text">மகளிர் என்ஜினீயரிங் கல்லூரி விடுதியில் பேய் பிடித்ததாக கூறி மாணவியின் கையில் கற்பூரம் ஏற்றியும், துடைப்பத்தால் அடித்தும் கொடுமைப்படுத்திய தோழிகள் மீது...</summary>
            <content type="html"><![CDATA[<p>மகளிர் என்ஜினீயரிங் கல்லூரி விடுதியில் பேய் பிடித்ததாக கூறி மாணவியின் கையில் கற்பூரம் ஏற்றியும், துடைப்பத்தால் அடித்தும் கொடுமைப்படுத்திய தோழிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
</p><p>&nbsp;கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் பொறியியல் கல்லூரியில்&nbsp; மாணவி முதலாம் ஆண்டு படிக்கும் மாணவியை 2 மாணவிகள்,&nbsp; பேய் பிடித்ததாக கூறி, அவருடன் தங்கியிருந்த தோழிகளான 4 பேரும் அந்த மாணவியின் கையில் கற்பூரத்தை ஏற்றி உள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/58319077-4ec3-4a33-b7c2-2fb6703513dc/26-6aa9975fb8f40.webp' /></p><p> </p><h2> பொலிஸார் விசாரணை</h2><p>மேலும் துடைப்பத்தால் அந்த மாணவியை அடித்து கொடுமைப்படுத்தியுள்ளனர். மேலும் இதுகுறித்து வெளியில் கூறினால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டினர். </p><p>தோழிகளின் துன்புறுத்தலை பொறுத்துக்கொள்ள முடியாத மாணவி, சின்னசேலம் போலீசில் புகார் கொடுத்தார்.</p><p></p><p> அதன்பேரில் சக மாணவிகள் 4 பேர் மீதும் சின்னசேலம் பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.&nbsp;&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-09-15T20:54:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[சமூக ஊடகத்தில் பரவிய காணொளி ; பேருந்தின் சாரதிக்கு வந்த சிக்கல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/viral-video-causes-trouble-for-bus-driver-1789502981"></link>
            <id>https://jvpnews.com/article/viral-video-causes-trouble-for-bus-driver-1789502981</id>
            <summary type="text">கொழும்பு – அவிசாவளை பிரதான வீதியில், தெல்கந்த சந்திக்கு அருகில் சிவப்பு போக்குவரத்து சமிக்ஞையை சட்டவிரோதமான முறையில் மீறிச் சென்றதாகக் கூறப்படும் பேரு...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">கொழும்பு – அவிசாவளை பிரதான வீதியில், தெல்கந்த சந்திக்கு அருகில் சிவப்பு போக்குவரத்து சமிக்ஞையை சட்டவிரோதமான முறையில் மீறிச் சென்றதாகக் கூறப்படும் பேருந்தின் சாரதிக்கு எதிராக பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
</p><p style="text-align: justify; ">
கடந்த செப்டெம்பர் 12ஆம் திகதி இடம்பெற்ற இந்தச் சம்பவம் தொடர்பான காணொளி சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவியதைத் தொடர்ந்து, பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்தனர்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/57b38d2d-52ac-46f7-a4d1-e208ff180bd3/26-6aa9a606973da.webp' /></p><h2 style="text-align: justify; ">காணொளி</h2><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
குறித்த காணொளியில், போக்குவரத்து சமிக்ஞை சிவப்பு நிறத்தில் காணப்பட்டபோது, பேருந்து அந்தச் சந்தியின் இடதுபுறமுள்ள வீதிக்குள் திருப்பப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; ">

பின்னர், பிரதான வீதியில் உள்ள சிவப்பு சமிக்ஞையைத் தவிர்த்து குறுக்கு வீதி வழியாகச் சென்று மீண்டும் பிரதான வீதியில் இணையும் வகையில் பேருந்து செலுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p style="text-align: justify; ">

இதையடுத்து, பேருந்தின் உரிமையாளர் மிரிஹான போக்குவரத்துக் காவல் பிரிவுக்கு அழைக்கப்பட்டு, வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.</p><p style="text-align: justify; ">&nbsp; &nbsp;</p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
இதன்போது, சம்பவம் இடம்பெற்ற வேளையில் பேருந்தைச் செலுத்திய சாரதியை மூன்று நாட்களுக்குள் காவல் நிலையத்தில் முன்னிலைப்படுத்துமாறு பேருந்தின் உரிமையாளருக்கு அறிவுறுத்தப்பட்டது.</p><p style="text-align: justify; ">அத்துடன், குறித்த சாரதி போதைப்பொருட்களைப் பயன்படுத்தியுள்ளாரா? என்பதைக் கண்டறிவதற்காக, போதைப்பொருள் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; ">
ஆபத்தான முறையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டின் கீழ் சாரதியை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-15T20:45:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[தனிநபர் ஆதாயத்திற்காக அரசை அடகு வைத்தாரா அர்ச்சுனா..! நளிந்த ஜயதிஸ்ஸ கடும் எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/nalinda-jayatissa-retaliated-against-arjuna-1789504469"></link>
            <id>https://tamilwin.com/article/nalinda-jayatissa-retaliated-against-arjuna-1789504469</id>
            <summary type="text">நாட்டில் கடந்த தேர்தல்களின் போது புலம்பெயர் இலங்கைத் தமிழர்கள்,
ஆளுங்கட்சியான தேசிய மக்கள் சக்திக்கு நிதி உதவி வழங்கினார்கள் என
அனுராதபுரத்தில் நடைப...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டில் கடந்த தேர்தல்களின் போது புலம்பெயர் இலங்கைத் தமிழர்கள்,
ஆளுங்கட்சியான தேசிய மக்கள் சக்திக்கு நிதி உதவி வழங்கினார்கள் என
அனுராதபுரத்தில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கூட்டத்தில்,
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் முன்வைத்த குற்றச்சாட்டை அரசு
முற்றாக நிராகரித்துள்ளது.
</p><p>
இவ்வாறான பொய்யான கருத்துக்களை வெளியிட்டமை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்
அர்ச்சுனா இராமநாதனுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்
அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.</p><p>

கொழும்பிலுள்ள அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று(15.09.2026) நடைபெற்ற
ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். </p><h2>


அரசுக்கு எதிராக பேசினாரா அர்ச்சுனா</h2><p>

அவர் மேலும் தெரிவிக்கையில்,</p><p>நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மேடையிலும்
அதற்கு வெளியிலும் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பாகப் பொலிஸாருக்கும் குற்றப்
புலனாய்வுத் திணைக்களத்துக்கும் முறைப்பாடுகள் கிடைத்துள்ளன என்று
தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
நாட்டின் சட்டத்துக்குப் புறம்பாக அல்லது தடை செய்யப்பட்ட அமைப்புகளை
ஊக்குவிக்கும் வகையில் உரையாற்றுபவர்கள் எவராக இருந்தாலும் அவர்களுக்கு
எதிராகச் சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/be8626e2-565d-4a18-810b-b4f21c0807be/26-6aa9acb3a3cba.webp' /></p><p> இது குறித்த விசாரணைகள்
ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்றும் எமக்கு அறியக் கிடைத்துள்ளது.

அரசின் தேர்தல் பிரசாரங்களுக்குப் புலம்பெயர் இலங்கை தமிழர்களால் நிதி உதவி
வழங்கப்பட்டது என்று நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா முன்வைத்த
குற்றச்சாட்டுகளை முற்றாக நிராகரிக்கின்றோம்.
</p><h2>
வதந்திகளுக்கு பதிலடி</h2><p>
 ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன
மேடையில் நின்றுகொண்டு இத்தகைய குற்றச்சாட்டுகளை முன்வைப்பதன் பின்னணியில்
உள்ள நோக்கம் குறித்தும், அவர்களுக்கிடையிலான தொடர்பு குறித்தும் சிந்திக்க
வேண்டியுள்ளது.

அர்ச்சுனாவைத் தவிர புதிய நபர்கள் எவரும் அந்தக் கூட்டத்தில் இணையவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/922dd18c-ff7b-4686-bacd-37ae14c4d88f/26-6aa9acb466b0e.webp' /></p><p>
</p><p>மக்கள் போராட்டத்துக்குப் பின்னர் நாட்டில் புதிய அரசியல் கலாசாரம்
உருவெடுத்துள்ள போதிலும், பழைய அரசியல்வாதிகள் தங்களது பழைய அரசியல்
கலாசாரத்தை மாற்றிக்கொள்ளவில்லை. </p><p>

அத்தகைய நிராகரிக்கப்பட்ட கலாசாரத்தையும் தலைவர்களையும் மக்கள் மீண்டும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
</p><p>
தீவிரவாத அமைப்புகளின் மீள் எழுச்சி அல்லது பாதுகாப்பு அச்சுறுத்தல்கள்
தொடர்பாகப் பரப்பப்படும் வதந்திகள் மூலம் யார் அரசியல் ஆதாயம் அடைய
முயற்சிக்கின்றார்கள் என்பதையும், அவர்களுக்குப் பின்னால் இருப்பவர்கள் யார்
என்பதையும் மக்கள் நன்கு அறிவார்கள் என்றார்.&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-15T20:38:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானியாவில் பாரிய சரிவை ஏற்படுத்திய சர்வதேச மாணவர்களுக்கான CAS வழங்கல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/restriction-on-cas-for-international-students-uk-1789504636"></link>
            <id>https://ibctamil.com/article/restriction-on-cas-for-international-students-uk-1789504636</id>
            <summary type="text">பிரித்தானியாவில் 2026 செப்டம்பர் கல்வியாண்டில் பல்கலைக்கழகங்களில் சேரவுள்ள சர்வதேச மாணவர்களுக்கான Confirmation of Acceptance for Studies (CAS) வழங்கல்...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரித்தானியாவில் 2026 செப்டம்பர் கல்வியாண்டில் பல்கலைக்கழகங்களில் சேரவுள்ள சர்வதேச மாணவர்களுக்கான Confirmation of Acceptance for Studies (CAS) வழங்கல் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 27 வீதம் குறைந்துள்ளதாக புதிய தரவுகள் தெரிவிக்கின்றன.
</p><p>
பிரித்தானிய பல்கலைக்கழகங்களுடன் இணைந்து செயல்படும் மாணவர் இணக்கத் தளமான Enroly வெளியிட்ட தரவுகளின்படி, கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடும்போது CAS வழங்கல் 26.9 வீதமும், சர்வதேச மாணவர் சேர்க்கை ஏற்றுக்கொள்ளல்கள் 22.1 வீதமும் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><h2>கடுமையான வீழ்ச்சி</h2><p>

சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கையில் நாடு, பிராந்தியம் மற்றும் கல்வித்துறை அடிப்படையில் குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளதாக Enroly தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0b9251db-48e9-47a5-a666-3aa926b5b7ee/26-6aa9ac7e22728.webp' /></p><p> </p><p>சில நாடுகளில் இருந்து மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ள நிலையில், ஏனைய சில முக்கிய சந்தைகளில் கடுமையான வீழ்ச்சி பதிவாகியுள்ளது.
</p><p>
2026 செப்டம்பர் கல்வியாண்டுக்கான முழுமையான CAS வழங்கல் கடந்த ஆண்டை விட சுமார் 28 வீதம் குறையும் என Enroly கணித்துள்ளது.</p><p></p><p>
</p><h2>
இலங்கை மாணவர்களுக்கான CAS வழங்கல்</h2><p>பிரிட்டனின் முக்கிய சர்வதேச மாணவர் சந்தைகளில், பாகிஸ்தான் மாணவர்களுக்கான CAS வழங்கலில் மிகப் பெரிய வீழ்ச்சி பதிவாகியுள்ளது. இது 57.9 வீதம் குறைந்துள்ளது.</p><p></p><p>அதனைத் தொடர்ந்து நைஜீரியா – 37.8% சரிவு,&nbsp; கானா – 36.4% சரிவு,&nbsp; இலங்கை – 36.3% சரிவு,&nbsp; பங்களாதேஷ் – 30.2% சரிவு,&nbsp; இந்தியா – 24.9% சரிவு

என தரவுகள் தெரிவிக்கின்றன.
</p><p>
பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் இருந்து மாணவர் சேர்க்கை குறைந்ததற்கு, பிரித்தானிய உள்துறை அமைச்சகம் (Home Office) அறிமுகப்படுத்திய கடுமையான இணக்க விதிமுறைகள் காரணமாக இருப்பதாக Enroly தெரிவித்துள்ளது.
</p><p>
மேலும், சில பிரித்தானிய பல்கலைக்கழகங்கள் இந்த நாடுகளில் இருந்து மாணவர்களை ஆட்சேர்ப்பு செய்வதை தற்காலிகமாக நிறுத்தியுள்ளதாகவும் அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.</p><p>

சர்வதேச மாணவர்களுக்கான விசா நிராகரிப்பு விகிதம் முக்கிய மாணவர் அனுப்பும் நாடுகளில் அதிகரித்துள்ள சூழலிலேயே இந்த CAS சரிவு ஏற்பட்டுள்ளது என கூறப்பட்டுள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-15T20:37:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஏற்கனவே 300 குழந்தைகள்... சீன கோடீஸ்வரரின் வாடகைத் தாயாக கலிபோர்னியப் பெண்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/california-woman-surrogate-for-chinese-1789504423"></link>
            <id>https://news.lankasri.com/article/california-woman-surrogate-for-chinese-1789504423</id>
            <summary type="text">California woman discovers she&#039;s the surrogate for Chinese billionaire: சீன கோடீஸ்வரருக்கு வாடகைத் தாயாக இருப்பதை கலிபோர்னியா பெண் கண்டறிந்தார்.
சுமா...</summary>
            <content type="html"><![CDATA[<p>California woman discovers she's the surrogate for Chinese billionaire: சீன கோடீஸ்வரருக்கு வாடகைத் தாயாக இருப்பதை கலிபோர்னியா பெண் கண்டறிந்தார்.
</p><p>சுமார் 300 குழந்தைகளுக்குத் தந்தையாகக் கருதப்படும் சீனாவைச் சேர்ந்த பெரும் கோடீஸ்வரர் ஒருவரின் குழந்தையைத் தான் சுமந்து கொண்டிருப்பதை கலிபோர்னியாவைச் சேர்ந்த பெண் ஒருவர் கண்டறிந்துள்ளார்.</p><h2>பிரம்மாண்டமான குடும்பம்</h2><p>
</p><p>தொடர்புடைய பெரும் கோடீஸ்வரர் குறித்து கசிந்துள்ள ஆவணங்களை சிபிஎஸ் செய்தி நிறுவனம் ஆய்வு செய்து, அந்தக் கலிபோர்னியா பெண்ணின் கர்ப்பத்தை சீன தொழிலதிபர் சூ போவுடன் தொடர்புபடுத்தியபோதுதான் குழந்தையின் தந்தை பற்றித் தெரிந்துகொண்டதாக அவர் கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/742ad388-3354-4a02-9fe5-3b98de337153/26-6aa9aba984efa.webp' /></p><p> </p><p>100-க்கும் மேற்பட்ட குழந்தைகளைக் கொண்ட பிரம்மாண்டமான குடும்பங்களை உருவாக்குவதன் மூலம், குடும்ப வம்சத்தை விரிவுபடுத்த அமெரிக்க வாடகைத் தாய்மார்களைப் பயன்படுத்தும் சீனப் பெரும் கோடீஸ்வரர்கள் குறித்த தகவல் ஒன்று கடந்த ஆண்டு வெளியாகியிருந்தது. </p><p>அப்படியான ஒரு பெரும் கோடீஸ்வரர், 48 வயதாகும் சூ போ. இவர் சாகசமான வீடியோ கேம்களை உருவாக்கி பெரும் பணம் ஈட்டி வருபவர். </p><p>அவர் இதற்கு முன்பு தனக்கு நிறைய குழந்தைகள் வேண்டும் என்ற தனது விருப்பத்தை வெளிப்படுத்தியிருந்தாலும், 300 குழந்தைகள் வரை பெற்றெடுத்ததை மறுக்கிறார்.</p><p></p><p> </p><p>
வாடகைத் தாயாகச் செயல்படுவதற்கு 120,000 டொலர் வழங்கப்படும் என்று இன்ஸ்டாகிராமில் ஒரு விளம்பரத்தைப் பார்த்த பிறகு, கலிபோர்னியாவைச் சேர்ந்த அவர் அதற்கு முயன்றுள்ளார். </p><p>ஏழு வயது குழந்தையுடன் தனித்து வாழும் அவர், இந்த பணம் தனது நிதி நிலையை மேம்படுத்த ஒரு வாய்ப்பாக இருப்பதாக கூறினார். மேலும், Patriot Conceptions என்ற நிறுவனம் அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுத்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். </p><p>வாடகைத் தாய் முறை மூலம் சூ (Xu) நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகளைப் பெற்றெடுத்ததாக 'வால் ஸ்ட்ரீட் ஜர்னல்' செய்தி வெளியிட்டுள்ளது; அதேவேளையில், அவருக்கு 300 குழந்தைகள் வரை இருக்கலாம் என்று அவரது முன்னாள் இணையான டாங் ஜிங் (Tang Jing) குறிப்பிட்டுள்ளார். </p><p>சூ போவின் நிறுவனமான டுவோயி நெட்வொர்க் (Duoyi Network), அந்தச் செய்தியின் சில பகுதிகளை மறுத்தது. மேலும், சூ ஒட்டுமொத்தமாக 100-க்கும் மேற்பட்ட குழந்தைகளைக் கொண்டிருப்பதை ஒப்புக்கொண்டதாகத் தெரிவிக்கப்படும் அதே வேளையில், அமெரிக்காவில் வாடகைத் தாய் முறை மூலம் பிறந்த 12 குழந்தைகளின் பொறுப்பு அவரிடம் உள்ளதாக அந்நிறுவனம் கூறியது.</p><h2>உயர்தரமான 50 ஆண் குழந்தைகள்</h2><p> </p><p>சூவின் (Xu) பிள்ளைகளில் பலர் கலிபோர்னியாவின் இர்வைன் (Irvine) நகரில் உள்ள ஒரு வீட்டில் வசித்து வருவதாகவும், அவர்கள் குழந்தைப் பராமரிப்பாளர்களால் வளர்க்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8f2de4b7-633a-4b14-a30b-a58ef5b0644c/26-6aa9abaa38101.webp' /></p><p>
</p><p>48 வயதான அந்தப் பெரும் பணக்காரரும் தனிமையை விரும்புபவருமான சூ, தன்னைத்தானே சீனாவின் முதல் தந்தை என்று அழைத்துக்கொள்வதோடு, குறைந்தது 50 உயர்தரமான ஆண் குழந்தைகளை உருவாக்கும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகிறார் என வால் ஸ்ட்ரீட் ஜர்னல் செய்தி வெளியிட்டுள்ளது.</p><p> இதனிடையே, கலிபோர்னியப் பெண்மணி பலமுறை சூவின் அலுவலகத்தைத் தொடர்புகொள்ள முயன்றும், ஏமாற்றமே மிஞ்சியது. ஆனால் Patriot Conceptions நிறுவனம் சூவின் வாடகைத் தாயான கலிபோர்னியப் பெண்மணிக்கான முகமை தாங்கள்தான் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-15T20:30:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஷேக் ஹசீனாவின் முக்கிய உதவியாளர்கள் 7 பேருக்குத் தூக்குத் தண்டனை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/death-sentences-to-7-aides-of-hasina-1789484265"></link>
            <id>https://canadamirror.com/article/death-sentences-to-7-aides-of-hasina-1789484265</id>
            <summary type="text">2024-ஆம் ஆண்டு பங்களாதேஷில் நடைபெற்ற மக்கள் கிளர்ச்சியை வன்முறை மூலம் ஒடுக்க முயன்ற வழக்கில், நாட்டின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் முக்கிய உதவியாள...</summary>
            <content type="html"><![CDATA[<p>2024-ஆம் ஆண்டு பங்களாதேஷில் நடைபெற்ற மக்கள் கிளர்ச்சியை வன்முறை மூலம் ஒடுக்க முயன்ற வழக்கில், நாட்டின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் முக்கிய உதவியாளர்கள் 7 பேருக்கு டாக்கா சிறப்பு தீர்ப்பாயம் மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.
</p><p>இவர்கள் அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜராகாத நிலையில் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
நீதிபதி நஸ்ருல் இஸ்லாம் சவுத்ரி தலைமையிலான மூன்று உறுப்பினர்களைக் கொண்ட டாக்கா தீர்ப்பாயம் செவ்வாய்க்கிழமை இந்தத் தீர்ப்பை வழங்கியது.</p><p>
மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள், கொலை வழக்குகள் மற்றும் வன்முறையைத் தூண்டிவிட்டமை.
அவாமி லீக் கட்சியின் பொதுச்செயலாளர் ஒபைதுல் காதர் மற்றும் முன்னாள் செய்தி மற்றும் ஒளிபரப்புத்துறை இணை அமைச்சர் முகமது அலி அராபத், ஏ.எஃப்.எம். பஹாவுதீன் நசீம், ஷேக் ஃபஸ்லே ஷாம்ஸ் பரஷ், மைனுல் ஹொசைன் கான் நிகில், சதாம் ஹுசைன் மற்றும் ஷேக் வாலி ஆசிஃப் இனான் ஆகியோருக்கு இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/43902782-20de-49a2-bdbb-033a812a0bf8/26-6aa95cea776c3.webp' /></p><p>
</p><p>மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களில் 5 பேரின் சொத்துக்களில் பாதியை அரசு உடனடியாகப் பறிமுதல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. </p><p>
இந்தப் பணம், கிளர்ச்சியின் போது உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடாகப் பகிர்ந்தளிக்கப்படும்.
</p><p>இந்த வன்முறை தொடர்பான வழக்குகளில் இதுவரை 68 பேர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளனர்; அதில் 22 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. எனினும், 4 பேர் மட்டுமே தற்போது காவலில் உள்ளனர்.
</p><p>15 ஆண்டு கால ஆட்சியை இழந்து இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ள முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு (78) கடந்த நவம்பர் மாதம் மரண தண்டனை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், வரும் டிசம்பர் மாதத்திற்குள் தான் பங்களாதேஷ் திரும்பவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-15T20:30:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[வரலாற்றுச் சிறப்புமிக்க C5+ உச்சிமாநாடு சியோலில் ஆரம்பம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/historic-c5-summit-begins-in-seoul-1789499532"></link>
            <id>https://tamilwin.com/article/historic-c5-summit-begins-in-seoul-1789499532</id>
            <summary type="text">மத்திய ஆசிய நாடுகளுடனான பொருளாதார மற்றும் தூதரக உறவுகளை வலுப்படுத்தும்
நோக்கில், தென்கொரியா முதன்முறையாக C5+ எனப்படும் ஐந்து மத்திய ஆசிய நாடுகளின்
த...</summary>
            <content type="html"><![CDATA[<p>மத்திய ஆசிய நாடுகளுடனான பொருளாதார மற்றும் தூதரக உறவுகளை வலுப்படுத்தும்
நோக்கில், தென்கொரியா முதன்முறையாக C5+ எனப்படும் ஐந்து மத்திய ஆசிய நாடுகளின்
தலைவர்களை உள்ளடக்கிய வரலாற்றுச் சிறப்புமிக்க உச்சிமாநாட்டை சியோலில்
நடத்துகிறது.
</p><p>தென்கொரிய ஜனாதிபதி லீ ஜே மியுங் அழைப்பின் பேரில் உஸ்பெகிஸ்தான்,
கஸகஸ்தான், துருக்மெனிஸ்தான், தஜிகிஸ்தான் மற்றும் கிர்கிஸ்தான் ஆகிய
நாடுகளின் தலைவர்கள் இம்மாநாட்டில் பங்கேற்கின்றனர்.</p><h2>உள்நாட்டு தொழில்துறைகளை மேம்படுத்த</h2><p>

மாநாட்டிற்கு முன்னதாக இடம்பெற்ற இருதரப்பு பேச்சுவார்த்தைகளின் போது,
முக்கியமான கனிம வளங்கள், எரிசக்தி, டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும்
போக்குவரத்து போன்ற துறைகளில் கூட்டுப் பங்களிப்பை விரிவுபடுத்துவது குறித்து
விரிவாக ஆராயப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4bff57e6-8935-4060-824b-8e4db03fb693/26-6aa9a77d61186.webp' /></p><p>சீனாவிற்கு இருக்கும் தொழிற்சார் மூலப்பொருட்களின் அதிகளவிலான தேவையை
குறைத்து, தமக்கான விநியோகச் சங்கிலியைப் பல்வகைப்படுத்த தென்கொரியாவிற்கு
மத்திய ஆசிய நாடுகளின் கனிம வளங்கள் அவசியமாகின்றன.
</p><p>
அதேவேளை, மத்திய ஆசிய நாடுகள் மூலப்பொருட்களை ஏற்றுமதி செய்வதோடு நிறுத்திக்
கொள்ளாமல், தொழில்நுட்பம் மற்றும் முதலீடுகளை ஈர்த்து உள்நாட்டு தொழில்துறைகளை
மேம்படுத்த தென்கொரியாவை ஒரு முக்கிய பங்காளியாகக் கருதுகின்றன.</p><h2>அரசியல் ரீதியாக எந்தவொரு அழுத்தமும்&nbsp;</h2><p>
</p><p>
இரண்டாம் உலகப் போரின் போது சோவியத் யூனியனால் வலுக்கட்டாயமாக
இடம்பெயர்க்கப்பட்ட 'கொரியோ-சரம்' சமூகத்தினர் மூலமாக இரு
பிராந்தியங்களுக்கும் இடையே பல தசாப்த கால கலாசாரப் பிணைப்பு நிலவி
வருகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/93d70ba6-ae78-470c-821a-907c42760634/26-6aa9a77e1a98c.webp' /></p><p>இத்துடன், தென்கொரியாவின் கே-பாப் (K-pop) மற்றும் தொலைக்காட்சி நாடகங்கள்
மூலம் உருவாகியுள்ள கலாசாரச் செல்வாக்கும், வேலைவாய்ப்பு மற்றும் கல்விக்கான
வாய்ப்புகளும் இரு பிராந்தியங்களுக்கும் இடையிலான உறவை மேலும்
பலப்படுத்தியுள்ளன.</p><p>

ரஷ்யா மற்றும் சீனாவின் ஆதிக்கம் அதிகமாக உள்ள மத்திய ஆசிய பிராந்தியத்தில்,
அரசியல் ரீதியாக எந்தவொரு அழுத்தமும் இல்லாத ஒரு வணிகப் பங்காளியாக தென்கொரியா
தன்னை நிலைநிறுத்திக் கொள்ள இந்த உச்சிமாநாடு வழிவகுத்துள்ளதாக அரசியல்
ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-15T20:16:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[பொலிஸ் அதிகாரியின் உயிரை பறித்த கோர விபத்து ; கதறும் உறவுகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/gruesome-accident-claims-police-officer-s-life-1789501948"></link>
            <id>https://jvpnews.com/article/gruesome-accident-claims-police-officer-s-life-1789501948</id>
            <summary type="text">புத்தளம் – கொழும்பு பிரதான வீதியின் மதுரங்குளி நகரை அண்மித்த பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
க...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">புத்தளம் – கொழும்பு பிரதான வீதியின் மதுரங்குளி நகரை அண்மித்த பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
</p><p style="text-align: justify; ">கொழும்பில் இருந்து புத்தளம் நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தபோது, அவரது மோட்டார் சைக்கிள் திடீரென கட்டுப்பாட்டை இழந்து முன்னால் பயணித்த லொறியின் வலது பக்கத்தில் பலமாக மோதியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cbbf6217-0fdc-4d48-9940-e055ce574756/26-6aa9a1fe1e4e3.webp' /></p><h2 style="text-align: justify; ">மேலதிக சிகிச்சை</h2><p style="text-align: justify; ">



விபத்தில் கடுமையான காயங்களுக்கு உள்ளான சார்ஜன்ட், அங்கிருந்தவர்களால் உடனடியாக புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.</p><p style="text-align: justify; ">



எனினும், அவரது நிலைமை கவலைக்கிடமாக இருந்ததால் நேற்றிரவே மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">



</p><p style="text-align: justify; ">, விபத்துடன் தொடர்புடைய லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p style="text-align: justify; ">


சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மதுரங்குளி பொலிஸ் போக்குவரத்துப் பிரிவினர் முன்னெடுத்து வருகின்றனர்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-15T20:15:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரஷ்ய ட்ரோன் தாக்குதலில் இருந்து தப்பித்த போரிஸ் ஜோன்சன் பயணித்த தொடருந்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/boris-johnson-escapes-russian-drone-attack-1789502959"></link>
            <id>https://ibctamil.com/article/boris-johnson-escapes-russian-drone-attack-1789502959</id>
            <summary type="text">முன்னாள் பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் பயணித்த தொடருந்து பாதையை ரஷ்ய ட்ரோன் தாக்கிய சம்பவம் தொடர்பாக கிரெம்ளின் பதிலளித்துள்ளது.

கடந்த ஞாயிற்ற...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் பயணித்த தொடருந்து பாதையை ரஷ்ய ட்ரோன் தாக்கிய சம்பவம் தொடர்பாக கிரெம்ளின் பதிலளித்துள்ளது.</p><p>

கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5 மணியளவில், கீவில் நடைபெற்ற பாதுகாப்பு மாநாட்டில் பங்கேற்றுவிட்டு போரிஸ் ஜான்சன் திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.</p><p>

போலந்து எல்லைக்கு அருகிலுள்ள யஹொடின் பகுதியில், ஜான்சன் பயணித்த தொடருந்துக்கு பின்னால் சென்ற மற்றொரு பயணிகள் தொடருந்து பாதுகாப்பு காரணங்களுக்காக வெளியேற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>கிரெம்ளின் பேச்சாளர்</h2><p>
</p><p>இந்நிலையில் நேற்று இதுகுறித்து பேசிய கிரெம்ளின் பேச்சாளர், “இந்தத் தாக்குதலுக்கு ரஷ்யா பொறுப்பல்ல என்று மறுக்கவில்லை. அதேவேளை, ரஷ்யப் படைகள் உக்ரைன் முழுவதும் தொடர்ந்து இராணுவ நடவடிக்கைகளை முன்னெடுக்கும்” என்று தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5b4e314c-aeda-4654-81ba-9b2c22000402/26-6aa9a5f1233a0.webp' /></p><p>
</p><p>
இது தொடர்பாக சமூக வலைத்தளமான X இல் போரிஸ் ஜான்சன், “போலந்து எல்லையில் நின்றுகொண்டிருந்த உக்ரைனிய தொடருந்து இன்ஜினை தகர்க்க புடினைத் தூண்டிய அந்த சிந்தனை என்னவென்று எனக்குத் தெரியவில்லை” எனக் குறிப்பிட்டுள்ளார்.</p><p>
கீவிலிருந்து வெளிநாட்டு பிரதிநிதிகள் திரும்பிச் செல்ல அடிக்கடி பயன்படுத்தப்படும் தொடருந்து பாதையே இது என தெரிவிக்கப்படுகிறது. </p><p>எனினும், இந்தச் சம்பவத்தால் போரிஸ் ஜான்சன் வெளியேற்றப்படவோ அல்லது அவரது பயணம் தாமதமடையவோ இல்லை.
</p><p>
ஐரோப்பிய அதிகாரிகள் பயணித்ததாகக் கூறப்படும் எந்தவொரு தொடருந்தும் இந்தத் தாக்குதலில் சிக்கவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-15T20:09:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையின் கமத்தொழில் வளர்ச்சிக்கு உதவ தயார் - சீனா முன்வைத்துள்ள புதிய திட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/agricultural-development-in-sri-lanka-1789502447"></link>
            <id>https://tamilwin.com/article/agricultural-development-in-sri-lanka-1789502447</id>
            <summary type="text">இலங்கையின் கமத்தொழில் துறையை மேம்படுத்துவதற்கான உயர்தொழில்நுட்ப உதவிகளை வழங்கத் தயாராக இருப்பதாக இலங்கைக்கான சீனத் தூதுவர் வெய் ஹுவாசியாங் தெரிவித்துள...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் கமத்தொழில் துறையை மேம்படுத்துவதற்கான உயர்தொழில்நுட்ப உதவிகளை வழங்கத் தயாராக இருப்பதாக இலங்கைக்கான சீனத் தூதுவர் வெய் ஹுவாசியாங் தெரிவித்துள்ளார்.
</p><p>
கமத்தொழில், கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால் காந்தவை நேற்றுமுன் தினம்(14.09.2026) 
 சந்தித்துக் கலந்துரையாடி போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். </p><p>

இதன்போது, பசுமைக்குடில் விவசாயம் மற்றும் நவீன ஸ்மார்ட் விவசாயம் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளது.</p><h2> 

காலநிலைகளை கண்டறியும் செயலி</h2><p>
கைபேசி செயலிகள் மூலம் பயிர்களுக்கு ஏற்ற மண், ஈரப்பதம் உள்ளிட்ட அனைத்து சுற்றுச்சூழல் நிலைகளையும் அளவிட்டு விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் தொழில்நுட்பத்தை சீனா தற்போது உருவாக்கியுள்ளதாகவும், அந்தத் தொழில்நுட்ப உதவியை இலங்கைக்கு வழங்க விருப்பம் தெரிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8f21c097-fbb2-4a1c-b354-6e1398f4aa88/26-6aa9a45d75ea0.webp' /></p><p>

அத்துடன், கடல் நீரிலும் வளரக்கூடிய மேம்படுத்தப்பட்ட கலப்பின நெல் ரகங்கள் மற்றும் வறண்ட, ஈரமான வானிலை நிலைகளுக்கு ஏற்ப நிலத்தை தயார்படுத்தும் தொழில்நுட்பமும் சீனாவிடம் உள்ளதாக சீனத் தூதுவர் சுட்டிக்காட்டினார்.
</p><p>
சேவை, தொழில் மற்றும் விவசாயம் ஆகிய மூன்று துறைகளையும் ஒன்றுடன் ஒன்று இணைத்து ஒரே நேரத்தில் வளர்ச்சியை நோக்கி நகர வேண்டியதன் முக்கியத்துவமும் இங்கு வலியுறுத்தப்பட்டதாக விவசாய அமைச்சு வெளியிட்ட ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><h2>
கால்நடைத் துறை வளர்ச்சிக்கான திட்டம்</h2><p>

இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை மேலும் வலுப்படுத்தும் வகையில் கமத்தொழில், நீர்ப்பாசனம் மற்றும் கால்நடைத் துறைகளின் எதிர்கால வளர்ச்சிப் பணிகள் குறித்து இங்கு விரிவாகக் கலந்தாலோசிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/df79209d-44e2-4dec-a0bd-10da36f02c82/26-6aa9a45e44ec4.webp' /></p><p>
</p><p>
இதனிடையே, இச்சந்திப்பில் கலந்துகொண்ட விவசாய அமைச்சின் செயலாளர், இலங்கைக்குத் தேவையான பெரும்பாலான விவசாய இயந்திரங்கள் சீனாவிலிருந்தே இறக்குமதி செய்யப்படுவதாகவும், இலங்கை விவசாயிகளுக்காக சீன அரசு வழங்கும் தொழில்நுட்பப் பயிற்சித் திட்டங்களுக்குத் தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் கூறினார்.
</p><p>
பெரிய அளவிலான நீர்ப்பாசனத் திட்டங்களுக்கு சீன நிறுவனங்கள் ஏற்கனவே பங்களிப்பு செய்துள்ளதாகவும், எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள திட்டங்களுக்கும் தொழில்நுட்ப ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.&nbsp; &nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-15T20:02:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thileepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[தியாக தீபம் திலீபனின் நினைவு தினம் - வவுனியாவில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/thileepan-s-remembrance-day-1789501908"></link>
            <id>https://tamilwin.com/article/thileepan-s-remembrance-day-1789501908</id>
            <summary type="text">தியாக தீபம் திலீபனின் 39வது நினைவு தினம் வவுனியாவில் உணர்வு பூர்வமாக
அனுஸ்டிக்கப்பட்டது.

போராளிகள் நலன்புரிச் சங்கம் மற்றும் தமிழ்த் தேசிய செயற்ப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>தியாக தீபம் திலீபனின் 39வது நினைவு தினம் வவுனியாவில் உணர்வு பூர்வமாக
அனுஸ்டிக்கப்பட்டது.
</p><p>
போராளிகள் நலன்புரிச் சங்கம் மற்றும் தமிழ்த் தேசிய செயற்ப்பாட்டாளர்களின்
ஏற்பாட்டில் வவுனியா மாநகரசபை முன்றலில் அமைந்துள்ள பொங்கு தமிழ் தூபியில்
நேற்று(15.09.2026) நடைபெற்றுள்ளது.</p><p> 

இதன்போது தியாகி திலீபனின் நினைவு படத்திற்கு மலர் மாலை அணிவித்து, ஈகைசுடர்
ஏற்றி அஞ்சலி நிகழ்தப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fe6fc4a2-c624-4719-9559-07c5ca57c434/26-6aa9a1fa89a76.webp' /></p><p>
</p><p>
இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம், மாநகரசபை முதல்வர்
சு.காண்டீபன், வவுனியா தெற்கு பிரதேச சபை தவிசாளர் பா.பாலேந்திரன், மாநகர சபை
உறுப்பினர் தர்மா மற்றும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள்,
முன்னாள் போராளிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.</p>]]></content>
            <updated>2026-09-15T19:52:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[விளக்கமறியலில் இருந்தவர் கொடுத்த தகவலால் வசமாக பிடிபட்ட இருவர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/two-caught-from-detainee-s-information-1789500968"></link>
            <id>https://jvpnews.com/article/two-caught-from-detainee-s-information-1789500968</id>
            <summary type="text">மஹரகம பகுதியில் கொக்கேய்ன் மற்றும் குஷ் போதைப்பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்பு பிரி...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">மஹரகம பகுதியில் கொக்கேய்ன் மற்றும் குஷ் போதைப்பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.</p><p style="text-align: justify; ">

மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின் போது நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேகநபரிடமிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/46b88e4b-21b0-420b-90d5-ac5af2acd49e/26-6aa99e2a28f64.webp' /></p><h2 style="text-align: justify; ">போதைப்பொருள்</h2><p style="text-align: justify; ">

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து 306 கிராம் கொக்கேய்ன் மற்றும் 210 கிராம் குஷ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளன. </p><p style="text-align: justify; ">

கைது செய்யப்பட்டவர்கள் 45 மற்றும் 61 வயதுடைய ருக்மல்கம மற்றும் இரத்மல்கம பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வடக்கு குற்றத் தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-15T19:36:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுகாதார சேவையில் புதிய மாற்றம்: அரசு அறிமுகப்படுத்தும் 39 புதிய திட்டங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/new-change-in-healthcare-services-1789500803"></link>
            <id>https://tamilwin.com/article/new-change-in-healthcare-services-1789500803</id>
            <summary type="text">பொதுமக்களின் அதிகரித்து வரும் சுகாதார சேவை தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக, 39 புதிய அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்க அரசாங்கம் உத்தேசித்துள்ளது.
...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொதுமக்களின் அதிகரித்து வரும் சுகாதார சேவை தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக, 39 புதிய அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்க அரசாங்கம் உத்தேசித்துள்ளது.</p><p>
அதனடிப்படையில், மருத்துவமனைகள் உள்ளிட்ட பெரும்பாலான அரச சுகாதார சேவை நிறுவனங்களில் காணப்படும் உட்கட்டமைப்பு குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கும், அதிநவீன உட்கட்டமைப்புகளை அபிவிருத்தி செய்வதன் மூலம் நவீன சுகாதார சேவை தரநிலைகளுக்கு ஏற்ப வசதிகளை மேம்படுத்துவதை இலக்காகக் கொண்ட அபிவிருத்தித் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு ஆலோசிக்கப்பட்டுள்ளது.</p><h2>

39 புதிய திட்டங்கள்</h2><p>

இதற்கமைய, 2025 மற்றும் 2026 ஆம் ஆண்டுகளில் சமர்ப்பிக்கப்பட்ட திட்ட யோசனைகளில் 41 திட்ட யோசனைகள் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8a800a07-95a3-4c22-9655-1e740236c1fc/26-6aa99dc97fae8.webp' /></p><p>
</p><p>
குறித்த திட்ட யோசனைகளை 2027 ஆம் ஆண்டில் ஆரம்பித்து நடைமுறைப்படுத்துவதற்கு தேசிய திட்டமிடல் திணைக்களத்தினால் த்போது பரிந்துரைக்கப்பட்டுள்ளது.</p><p>

2027-2031 காலப்பகுதிக்குரிய அரசாங்க முதலீட்டுத் திட்டத்தில் யோசனைகள் தற்போது உள்வாங்கப்பட்டுள்ளன.

இந்த திட்டங்களில் 39 திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கான தயார் நிலையைக் கருத்திற்கொண்டு, 2027 வரவு செலவுத் திட்டத்தின் மூலம் அதற்காக நிதி ஒதுக்கீடுகளை மேற்கொள்வதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.
</p><p>
குறித்த 39 புதிய திட்டங்களையும் நடைமுறைப்படுத்துவதற்காக சுகாதார மற்றும் ஊடக அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-15T19:34:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் வீடொன்றில் ஆண் சடலமாக மீட்பு – காவல்துறை தீவிர விசாரணை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/opp-investigating-death-of-man-found-in-parry-1789483562"></link>
            <id>https://canadamirror.com/article/opp-investigating-death-of-man-found-in-parry-1789483562</id>
            <summary type="text">கனடாவின் ஒன்ராறியோ மாகாணம், பாரி சவுண்ட் நகரில் உள்ள வீடொன்றில் நபர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் குறித்து ஒன்ராறியோ மாகாணக் காவல்துறை தீவிர விசா...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் ஒன்ராறியோ மாகாணம், பாரி சவுண்ட் நகரில் உள்ள வீடொன்றில் நபர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் குறித்து ஒன்ராறியோ மாகாணக் காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது. </p><p>
கடந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1:00 மணியளவில், சர்ச் வீதியில் அமைந்துள்ள குடியிருப்பு ஒன்றிற்குச் சென்ற காவல்துறையினர், அங்கு ஒரு வயது வந்த ஆண் உயிரிழந்து கிடப்பதைக் கண்டறிந்தனர்.
</p><p>இச்சம்பவம் தொடர்பாக திங்கள்கிழமை காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், இது ஒரு தனிப்பட்ட சம்பவம் என்றும், பொதுமக்களுக்கு வேறு எந்தப் பாதுகாப்பு அச்சுறுத்தலும் இல்லை என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aa0551f8-37f9-43ca-bfcd-543375759744/26-6aa95a2c4dc86.webp' /></p><p> 
எனினும், விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதால் சர்ச் வீதிப் பகுதியில் காவல்துறையினரின் நடமாட்டம் அதிகமாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>இந்த விசாரணையானது ஒன்றாரியோ பொலிஸாரின் குற்றப் புலனாய்வுக் கிளை, தலைமைச் சவப்பரிசோதனை அதிகாரி அலுவலகம் மற்றும் ஒன்ராறியோ தடயவியல் நோயியல் சேவை அமைப்பு ஆகியவற்றுடன் இணைந்து நடத்தப்பட்டு வருகிறது.</p><p> 
இச்சம்பவம் குறித்து ஏதேனும் தகவல்கள் அறிந்தவர்கள் உடனடியாக காவல்துறையை 1-888-310-1122 என்ற எண்ணிலோ அல்லது 'க்ரைம் ஸ்டாப்பர்ஸ்' அமைப்பின் மூலமாகவோ தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-15T19:30:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் ஜோதிடரிடம் வாழ்நாள் சேமிப்பு முழுவதையும் இழந்த பெண்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/woman-devastated-after-losing-96k-in-1789481669"></link>
            <id>https://canadamirror.com/article/woman-devastated-after-losing-96k-in-1789481669</id>
            <summary type="text">&amp;nbsp;கனடாவின் டொராண்டோ நகரைச் சேர்ந்த பெண் ஒருவர், தான் கடுமையான உடல்நலப் பாதிப்பிலும் குடும்ப உறுப்பினர்களின் இழப்பிலும் தவித்த தருணத்தைப் பயன்படுத்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கனடாவின் டொராண்டோ நகரைச் சேர்ந்த பெண் ஒருவர், தான் கடுமையான உடல்நலப் பாதிப்பிலும் குடும்ப உறுப்பினர்களின் இழப்பிலும் தவித்த தருணத்தைப் பயன்படுத்தி, ஜோதிடர் ஒருவர் தன்னிடம் இருந்து சுமார் 96,000 டாலர்களை ஏமாற்றிவிட்டதாக வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
</p><p>தன் அடையாளத்தை வெளிப்படுத்த விரும்பாத அந்தப் பெண், தன்னை 'நேன்சி' என்ற பெயரில் ஊடகத்திடம் தனது துயரத்தைப் பகிர்ந்துள்ளார்.
</p><p>இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, கடுமையான இடுப்பு வலியால் அவதிப்பட்டு வந்த நேன்சி, அதே காலகட்டத்தில் தனது தந்தை மற்றும் சகோதரரை அடுத்தடுத்து இழந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c3c8cbb6-aed5-4504-b8c5-e986bb822035/26-6aa952c7685b1.webp' /></p><p> </p><p>
இதனால் கடும் மன உளைச்சலில் இருந்தபோது, இன்ஸ்டாகிராமில் வெறும் 30 கட்டணத்தில் ஜோதிடம் பார்க்கப்படும் என்ற விளம்பரத்தைப் பார்த்து அந்த ஜோதிடரை அணுகியுள்ளார்.</p><p>
ஜோதிடத்தைச் சந்தித்தபோது, நேன்சியைச் சுற்றிப் பொல்லாத ஆவிகளும், கடுமையான பில்லி சூனியமும் இருப்பதாக அச்சமூட்டப்பட்டுள்ளது.
</p><p>இந்தச் சூனியத்தினால் விரைவில் நீங்கள் முடங்கி, சக்கர நாற்காலியில் அமர நேரிடும்; இறுதியில் உயிரிழப்பீர்கள்" என்று ஜோதிடர் அச்சுறுத்தியுள்ளார்.</p><p>
ஒரு துர்சக்தியை பிளாஸ்டிக் பாட்டிலில் அடைத்து ஏரியில் புதைக்க 25,000 டொலர் வேண்டும் எனக் கேட்டுப் பெற்றுள்ளார்.
</p><p>அதன் பின்னர் மேலும் 7 துர்சக்திகள் இருப்பதாகக் கூறி, சிறுகச் சிறுக நேன்சியின் வாழ்நாள் சேமிப்பான மொத்தம் 96,000 டெலாலர்களை பறித்துள்ளார்.</p><p>
தனது சேமிப்பு முழுவதையும் கொடுத்த பிறகும் நேன்சியின் உடல்நலத்திலோ பிரச்சினைகளிலோ எந்த மாற்றமும் ஏற்படவில்லை.</p><p> "இறுதியில் எதுவுமே நடக்கவில்லை. நான் மிகப்பெரிய முட்டாள்தனம் செய்துவிட்டேன். தினமும் அழுதுகொண்டிருக்கிறேன்" என நேன்சி கதறியுள்ளார்.
</p><p>இத்தகைய ஜோதிட மோசடிகள் பயம், அச்சுறுத்தல் மற்றும் உணர்ச்சிப்பூர்வமான சூழ்ச்சிகளை அடிப்படையாகக் கொண்டவை என கனடா மோசடி எதிர்ப்பு மையம் எச்சரித்துள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-15T19:29:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானை இலக்கு வைத்து எட்டு நாடுகளின் மூத்த இராணுவத் தலைவர்களை சந்தித்த CENTCOM!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/centcom-eight-nation-talks-targeting-iran-1789499885"></link>
            <id>https://ibctamil.com/article/centcom-eight-nation-talks-targeting-iran-1789499885</id>
            <summary type="text">கடந்த வாரம் ஜெர்மனியில் நடைபெற்ற திட்டமிடப்பட்ட மாநாட்டில் எட்டு நாடுகளைச் சேர்ந்த மூத்த இராணுவத் தலைவர்களைச் அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு (CENTCOM...</summary>
            <content type="html"><![CDATA[<p>கடந்த வாரம் ஜெர்மனியில் நடைபெற்ற திட்டமிடப்பட்ட மாநாட்டில் எட்டு நாடுகளைச் சேர்ந்த மூத்த இராணுவத் தலைவர்களைச் அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு (CENTCOM) அதிகாரிகள் சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>மத்திய கிழக்கில் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்து குறித்த தரப்பினர் விவாதித்ததாக கூறப்படுகிறது.</p><p> </p><p>அமெரிக்காவைச் சேர்ந்த முக்கிய செய்தி நிறுவனத்தின் தகவலின்படி, “இஸ்ரேல், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன், குவைத், கட்டார், ஜோர்தான் மற்றும் எகிப்து ஆகிய எட்டு நாடுகளின் இராணுவத் தலைமை அதிகாரிகள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றதாக இஸ்ரேலிய அதிகாரிகள் இருவர் தெரிவித்துள்ளனர்.</p><p></p><h2>அமெரிக்க இராணுவத் தளங்கள்</h2><p>மேலும், ஈரான், அமெரிக்க இராணுவத் தளங்களைத் தாக்கியிருந்தாலும், அமெரிக்க இராணுவப் படைகள் மத்திய கிழக்கில் இருந்து வெளியேறாது என்று பங்கேற்பாளர்களிடம் CENTCOM தளபதி அட்மிரல் பிராட் கூப்பர், தெரிவித்தாகவும் கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2c3bdce3-03a9-450e-9089-fe2e398504dd/26-6aa999ef9f12f.webp' /></p><p>மேலும், ஹோர்முஸ் நீரிணை வழியாக கப்பல் போக்குவரத்தை விரிவுபடுத்துவதற்கான அமெரிக்காவின் திட்டங்கள் குறித்தும் அவர் மாநாட்டில் விளக்கமளித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
ஹோர்முஸ் நீரிணை தொடர்பான பதற்றம்
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே ஹோர்முஸ் நீரிணை விவகாரத்தில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் இந்தக் கூட்டம் நடைபெற்றுள்ளது.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள I<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">BC தமிழ் WHATSAPP</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-15T19:18:14+00:00</updated>
        </entry>
    </feed>
