<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-09-19T15:32:11+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Farook Sihan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீண்ட நாட்களாகத் தேடப்பட்டு வந்த சந்தேக நபர் கைது!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/man-arrested-in-a-van-with-ice-drugs-and-cash-1789830868"></link>
            <id>https://tamilwin.com/article/man-arrested-in-a-van-with-ice-drugs-and-cash-1789830868</id>
            <summary type="text">சம்மாந்துறைப் பகுதியில் நீண்ட காலமாகப் பொலிஸாரைத் தப்பித்து ஏமாற்றி வந்த சந்தேக நபர் ஒருவர் பெருந்தொகையான &#039;ஐஸ்&#039; போதைப்பொருளுடன்&amp;nbsp; கைது செய்யப்பட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>சம்மாந்துறைப் பகுதியில் நீண்ட காலமாகப் பொலிஸாரைத் தப்பித்து ஏமாற்றி வந்த சந்தேக நபர் ஒருவர் பெருந்தொகையான 'ஐஸ்' போதைப்பொருளுடன்&nbsp; கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
சம்மாந்துறை பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலொன்றின் அடிப்படையில் நேற்று
(18) மாலை முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போதே இந்தக் கைது சம்பவம்
இடம்பெற்றுள்ளது.
</p><p>
சம்மாந்துறைப் பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய சந்தேக நபரே, அல் முனீர் வீதியில்
வைத்து அவர் பயணித்த வானுடன் பொலிஸாரினால் வளைத்துப் பிடிக்கப்பட்டார்.</p><h2>மேலதிக விசாரணை</h2><p>
</p><p>
கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து பெருந்தொகையான ‘ஐஸ்’ போதைப்பொருளும்,
போதைப்பொருள் வியாபாரத்தின் மூலம் ஈட்டப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும்
பணத்தொகையும் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/58e088c9-1771-4486-8301-b7f5ec26ad68/26-6aaea7844ce1a.webp' /></p><p>
</p><p>சம்பவம் தொடர்பில் சம்மாந்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளைத் தீவிரமாக
முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-19T15:23:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[வவுனியாவில் வீடொன்றிலிருந்து தாயும் மகனும் சடலமாக மீட்பு…!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/mother-and-son-dead-from-a-house-in-vavuniya-1789830835"></link>
            <id>https://ibctamil.com/article/mother-and-son-dead-from-a-house-in-vavuniya-1789830835</id>
            <summary type="text">வவுனியா தோணிக்கல் பகுதியில் கத்திக்குத்துக்கு இலக்காகிய நிலையில் தாயின்
சடலம் மீட்கப்பட்டுள்ளதுடன் தூக்கில் தொங்கிய நிலையில் மகனின் சடலம்
மீட்கப்பட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>வவுனியா தோணிக்கல் பகுதியில் கத்திக்குத்துக்கு இலக்காகிய நிலையில் தாயின்
சடலம் மீட்கப்பட்டுள்ளதுடன் தூக்கில் தொங்கிய நிலையில் மகனின் சடலம்
மீட்கப்பட்டுள்ளது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
</p><p>
குறித்த சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளது.&nbsp; சம்பவம் தொடர்பாக மேலும்
தெரியவருகையில்…</p><h2>இரத்தகாயங்களுடன் வீட்டில் வீழ்ந்து கிடந்த&nbsp;தாய் </h2><p>&nbsp; இன்றையதினம் வீட்டில் தாயும் அவரது பெறாமகனும் இருந்துள்ளனர். இந்த நிலையில்
உறவினர் இருவர் இன்று மாலை குறித்த வீட்டிற்கு சென்றபோது தாய்
இரத்தகாயங்களுடன் வீட்டின் பிரதான அறையில் வீழ்ந்து கிடந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3b7ec7cc-22ff-4d05-afc5-78aadae36f71/26-6aaea8a6ad28c.webp' /></p><p>
</p><p>
இதனையடுத்து அவர் உடனடியாக மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டார். எனினும் அவர் முன்னரே உயிரிழந்து விட்டதாக வைத்தியசாலையில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>தூக்கில் தொங்கிய நிலையில்&nbsp;மகன்</h2><p> </p><p>இதேவேளை குறித்த வீட்டின் அறை ஒன்றிற்குள் அவரது மகன்
தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c1d0a809-b5c7-4725-ae0c-39e8a8290570/26-6aaea8a78bf06.webp' /></p><p>சம்பவம் தொடர்பாக வவுனியா காவல்துறைக்கு தகவல் வழங்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு
சென்ற காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
</p><p>
குறித்த சம்பவத்தில் தோணிக்கல் பகுதியை சேர்ந்த அலஸ்கிறின் வயது 60 என்ற
பெண்ணும் அவரது பெறாமகனான அயந்தன் வயது 35 என்ற இளைஞருமே சடலமாக
மீட்கப்பட்டுள்ளனர்.</p><p>&nbsp;குறித்த இளைஞர் அவரது தாயை கத்தியால் குத்திவிட்டு தானும் தற்கொலை செய்திருக்கலாம் என
காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
</p><p>
சம்பவம் தொடர்பாக தடயவியல் காவல்துறையின் உதவியுடன் வவுனியா குற்றத்தடுப்பு
காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-19T15:22:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[மிரள வைத்த நிசங்கவின் கேட்ச்சை பாய்ந்து பிடித்த கேப்டன் (வீடியோ)]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/archer-and-baker-finish-sri-lanka-as-124-runs-1789830897"></link>
            <id>https://news.lankasri.com/article/archer-and-baker-finish-sri-lanka-as-124-runs-1789830897</id>
            <summary type="text">Archer and baker finish sri lanka as 124 runs: இங்கிலாந்து அணிக்கு எதிரான 3வது டி20 போட்டியில் பதும் நிசங்க 24 பந்துகளில் 36 ஓட்டங்கள் விளாசினார்.

...</summary>
            <content type="html"><![CDATA[<p>Archer and baker finish sri lanka as 124 runs: இங்கிலாந்து அணிக்கு எதிரான 3வது டி20 போட்டியில் பதும் நிசங்க 24 பந்துகளில் 36 ஓட்டங்கள் விளாசினார்.
</p><p>
இலங்கை வீரர் பதும் நிசங்க 24 பந்துகளில் 36 ஓட்டங்கள் எடுத்த நிலையில், வில் ஜேக்ஸ் பந்துவீச்சில் ப்ரூக்கிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.&nbsp;</p><h2>பதும் நிசங்க அதிரடி&nbsp;</h2><p>

இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான கடைசி டி20 போட்டி எமிரேட்ஸ் ஓல்ட் டிராபோர்ட் மைதானத்தில் நடந்து வருகிறது.&nbsp;</p><p><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr">Incredible anticipation from Harry Brook 🤲 <a href="https://t.co/orGqaUWw7l">pic.twitter.com/orGqaUWw7l</a></p>&mdash; England Cricket (@englandcricket) <a href="https://x.com/englandcricket/status/2101313763215298990?ref_src=twsrc%5Etfw">September 19, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>
நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தெரிவு செய்ய, இலங்கை அணி முதலில் துடுப்பாடியது.

லஹிரு உதர 10 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் சோனி பேக்கர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.&nbsp;</p><p></p><p> 

அடுத்து வந்த கமில் மிஷாரா 2 ஓட்டங்களில் வில் ஜேக்ஸ் பந்துவீச்சில் வெளியேற, பதும் நிசங்க அதிரடி ஆட்டத்தில் இங்கிலாந்தை அலறவிட்டார். </p><p>

சிக்ஸர்களை பறக்கவிட்ட பதும் நிசங்க (Pathum Nissanka) 24 பந்துகளில் 36 ஓட்டங்கள் (3 சிக்ஸர், 2 பவுண்டரிகள்) விளாசிய நிலையில் ஆட்டமிழந்தார்.
</p><h2>
சுருண்ட&nbsp;இலங்கை </h2><p>வில் ஜேக்ஸ் பந்துவீச்சில் அவர் அடித்த ஷாட்டினை, இங்கிலாந்தின் கேப்டன் ஹாரி ப்ரூக் டைவ் அடித்து மிரட்டலாக கேட்ச் செய்தார். </p><p>

அதனைத் தொடர்ந்து அசலங்க (16), ஷானகா (12) இருவரும் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழக்க, கமிந்து மெண்டிஸ் 28 பந்துகளில் 35 ஓட்டங்கள் விளாசினார்.</p><p>

ஏனைய வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னில் வெளியேற, இலங்கை அணி 18.5 ஓவர்களில் 124 ஓட்டங்களுக்கு சுருண்டது. </p><p>

சோனி பேக்கர், ஜோப்ரா ஆர்ச்சர் மற்றும் வில் ஜேக்ஸ் தலா 2 விக்கெட்டுகளும், லியாம் டாவ்ஸன் மற்றும் ஜேமி ஓவர்டன் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8677bcf7-f3c9-4240-8e23-e4d67db4a35d/26-6aaea7e189f6f.webp' />&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/912af896-8e25-4669-a5f6-082fe79fc286/26-6aaea7e259c71.webp' /></p>]]></content>
            <updated>2026-09-19T15:16:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரசாங்கத்துக்கு எதிரான பரந்துபட்ட கூட்டணி! ரணில் முயற்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/a-broad-anti-government-alliance-1789829960"></link>
            <id>https://tamilwin.com/article/a-broad-anti-government-alliance-1789829960</id>
            <summary type="text">ஆளும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு எதிராக பரந்துபட்ட கூட்டணியொன்றை ஏற்படுத்தும் கலந்துரையாடல்களை முன்னெடுக்க ரணில் விக்ரமசிங்க உத்தேசித்துள்ளார்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஆளும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு எதிராக பரந்துபட்ட கூட்டணியொன்றை ஏற்படுத்தும் கலந்துரையாடல்களை முன்னெடுக்க ரணில் விக்ரமசிங்க உத்தேசித்துள்ளார்.
</p><p>
இலங்கையின் நீண்டகால சவால்களுக்குத் தீர்வுகாண்பதற்கான உத்தேச தேசிய கொள்கைக் கட்டமைப்பு தொடர்பாக, பெலவத்தையைத் தளமாகக் கொண்ட தேசிய மக்கள் சக்தியைத் தவிர்ந்த ஏனைய அரசியல் கட்சிகளுடன் கலந்துரையாடல்களை முன்னெடுக்க ஐக்கிய தேசியக் கட்சி தயாராகி வருவதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார்.</p><h2>பிரதான நோக்கம்&nbsp;</h2><p>கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.
</p><p>
நாட்டின் அரசியல் மற்றும் பொருளாதார எதிர்காலம் குறித்த கலந்துரையாடல்களை இலகுபடுத்தும் நோக்கில் விசேட கலந்துரையாடல் ஆவணமொன்று தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c4f3c3b8-7426-4aca-8573-ebfda1f41522/26-6aaea566b2eeb.webp' /></p><p>
</p><p>
குறித்த ஆவணம் ஐக்கிய தேசியக் கட்சிக்காக மாத்திரம் தயாரிக்கப்படவில்லை எனவும், பெலவத்தையைத் தவிர ஏனைய அனைத்துக் கட்சிகளுடனும் தாம் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
</p><p>
பொதுவான தேசிய வேலைத்திட்டமொன்றின் ஊடாக அரசியல் கட்சிகளிடையே சாத்தியமான பரந்த இணக்கப்பாட்டை ஏற்படுத்துவதே இதன் பிரதான நோக்கம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
</p><p>
நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மை, முதலீடுகளை ஊக்குவித்தல், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் மற்றும் மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துதல் ஆகியவற்றை இலக்காகக் கொண்டு, அடுத்த 20 ஆண்டுகளுக்கு முன்னெடுக்கக்கூடிய கொள்கைக் கட்டமைப்பொன்றை உருவாக்குவதற்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க யோசனையொன்றை முன்வைத்துள்ளார்.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-19T15:08:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாடொன்றின் மீதான பொருளாதாரத் தடைகளை நீக்கிய ட்ரம்ப்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/us-lifts-economic-sanctions-on-eritrea-1789829714"></link>
            <id>https://tamilwin.com/article/us-lifts-economic-sanctions-on-eritrea-1789829714</id>
            <summary type="text">செங்கடல் பிராந்தியத்தில் அமெரிக்காவின் பிராந்திய நலன்களை முன்னெடுக்கும்
நோக்கில் எரித்திரியா மீது விதிக்கப்பட்டிருந்த பொருளாதாரத் தடைகளை
நீக்குவதற்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>செங்கடல் பிராந்தியத்தில் அமெரிக்காவின் பிராந்திய நலன்களை முன்னெடுக்கும்
நோக்கில் எரித்திரியா மீது விதிக்கப்பட்டிருந்த பொருளாதாரத் தடைகளை
நீக்குவதற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தீர்மானித்துள்ளதாக வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது.
</p><p>
2021 ஆம் ஆண்டில் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நிர்வாகத்தினால்
எரித்திரியாவின் ஆளும் கட்சி மற்றும் இராணுவத்தைக் இலக்குவைத்து இந்தத் தடைகள்
விதிக்கப்பட்டிருந்தன.
</p><p>
எத்தியோப்பியாவின் திக்ரே (Tigray) பிராந்திய மோதலின் போது எரித்திரியப்
படைகள் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டே
இந்தக் கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தன.</p><h2>நியாயமற்ற தடை</h2><p>
</p><p>
செங்கடல் பகுதியில் ஹவுதி கிளர்ச்சையாளர்களின் அச்சுறுத்தல்கள் அதிகரித்து
வரும் நிலையிலும், ஹோர்முஸ் நீரிணை முடக்கப்பட்ட சூழலிலும், செங்கடலின் உபாய
முக்கியத்துவம் வாய்ந்த பகுதியில் அமைந்துள்ள எரித்திரியாவின் அமைவிடம்
அமெரிக்காவிற்கு மிகவும் அவசியமான ஒன்றாகப் பார்க்கப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4846a258-2de9-4582-b071-ca1d5a0cdd4c/26-6aaea2545d7d7.webp' /></p><p>
</p><p>
இந்த நிலையில், எரித்திரியா மீது பிரகடனப்படுத்தப்பட்டிருந்த 'தேசிய அவசரகால
நிலை' முடிவுக்கு வந்துள்ளதாக அமெரிக்க திறைசேரி திணைக்களம் அறிவித்துள்ளது.
</p><p>
அமெரிக்காவின் இந்த தீர்மானத்தை எரித்திரிய அரசாங்கம் வரவேற்றுள்ளதுடன்,
தங்களது நாட்டிற்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய நியாயமற்ற தடைகளை
நீக்கியமைக்காக ஜனாதிபதி ட்ரம்ப் நிர்வாகத்திற்குத் தனது நன்றியையும்
தெரிவித்துக் கொண்டுள்ளது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-19T15:03:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ். மல்லாகம் விசாலாட்சி தரம் 1 மாணவிக்கு விஞ்ஞானத்துறையில் கிடைத்த கௌரவம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/honor-bestowed-upon-a-jaffna-student-1789829949"></link>
            <id>https://ibctamil.com/article/honor-bestowed-upon-a-jaffna-student-1789829949</id>
            <summary type="text">&amp;nbsp;தேசிய விஞ்ஞான மன்றம் வருடாந்தம் விஞ்ஞானத்துறை சார் செயற்பாடுகளில் ஈடுபடும்
மாணவர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு நேற்று(18.09.2026) பண்டாரநாயக்கா சர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;தேசிய விஞ்ஞான மன்றம் வருடாந்தம் விஞ்ஞானத்துறை சார் செயற்பாடுகளில் ஈடுபடும்
மாணவர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு நேற்று(18.09.2026) பண்டாரநாயக்கா சர்வதேச
மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.</p><p>

இதில் மல்லாகம் விசாலாட்சி வித்தியாலய தரம் ஒன்று மாணவி கார்த்தீபன்
கிருணிகா வீடுகளில் பல்லிகளின் நடமாட்டம் பற்றிய அவதானத்தை மேற்கொண்டு அது
தொடர்பான அவதானிப்பு அறிக்கையை சமர்ப்பித்து "இயற்கை ஆர்வம் மிக்க சிறுமி"
(Kid Naturalist) எனும் சான்றிதழைப் பொற்றுக் கொண்டார்.</p><h2>மாணவிக்கு கிடைத்த சான்றிதழ்</h2><p>
</p><p>
இம்மாணவிக்கான சான்றிதழும், பரிசிலும் பிரதமரும்,கல்வி அமைச்சருமான 
ஹரிணி அமரசூரியவினால் பண்டாரநாயக்கா சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்
வைத்து வழங்கப்பட்டது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5287b0d4-d32c-44e8-94b9-23efe39b51b4/26-6aaea33f66a66.webp' /></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-19T14:59:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[கோரவிபத்தில் சிக்கி உயிரிழந்த விளையாட்டு அதிகாரி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/volleyball-referee-dies-in-accident-1789826793"></link>
            <id>https://ibctamil.com/article/volleyball-referee-dies-in-accident-1789826793</id>
            <summary type="text">&amp;nbsp;குருநாகல் - நீர்கொழும்பு பிரதான சாலையில், தும்மலேவத்தை பகுதியில் நிகழ்ந்த சாலை விபத்தில் வடமேற்கு மாகாண விளையாட்டு அதிகாரி மற்றும் கடற்கரை கைப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;குருநாகல் - நீர்கொழும்பு பிரதான சாலையில், தும்மலேவத்தை பகுதியில் நிகழ்ந்த சாலை விபத்தில் வடமேற்கு மாகாண விளையாட்டு அதிகாரி மற்றும் கடற்கரை கைப்பந்து நடுவர் ஒருவர் உயிரிழந்ததாக நாரம்வல காவல்துறையினர் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் சாகரிக லக்மாலி என்ற விளையாட்டு அதிகாரி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.</p><p>காவல்துறையின் தகவலின்படி, நீர்கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள், முன்னால் சென்ற ஒரு சிறிய பாரவூர்தியுடன் மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.</p><h2>தம்பதெனிய மத்திய கல்லூரியின் முன்னாள் மாணவி</h2><p> </p><p>இந்த விபத்தில் இருசக்கர வாகனம் கிட்டத்தட்ட முழுமையாக சேதமடைந்தது.

உயிரிழந்த சாகரிகா லக்மாலி, தம்பதெனியா மத்திய கல்லூரியின் முன்னாள் மாணவி ஆவார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3b82f705-78e1-412e-92d8-066923a25f13/26-6aaea09babc61.webp' /></p><p> </p><p>அங்கு அவர் கைப்பந்து விளையாட்டில் சிறந்து விளங்கியதாகவும், தேசிய அளவிலும் சிறந்து விளங்கியதாகவும் கூறப்படுகிறது.

அவர் வடமேற்கு மாகாண விளையாட்டு அதிகாரியாகவும், தேசிய கைப்பந்து மற்றும் கடற்கரை கைப்பந்து நடுவராகவும் பணியாற்றியுள்ளார்.&nbsp; &nbsp;&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-19T14:48:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[அச்சச்சோ அப்படி ஒன்று இல்லை.. தன்னைப்பற்றிய வதந்திக்கு நடிகை வடிவுக்கரசி பதில்...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/vadivukkarasi-clears-about-her-rumour-1789814489"></link>
            <id>https://cineulagam.com/article/vadivukkarasi-clears-about-her-rumour-1789814489</id>
            <summary type="text">வடிவுக்கரசிபாரதராஜா இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த சிகப்பு ரோஜாக்கள் படத்தின் மூலம் சினிமாவில் என்ட்ரி கொடுத்தவர் தான் நடிகை வடிவுக்கரசி. அப்படத்தை தொடர...</summary>
            <content type="html"><![CDATA[<h2>வடிவுக்கரசி</h2><p>பாரதராஜா இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த சிகப்பு ரோஜாக்கள் படத்தின் மூலம் சினிமாவில் என்ட்ரி கொடுத்தவர் தான் நடிகை வடிவுக்கரசி. </p><p>அப்படத்தை தொடர்ந்து வடிவுக்கரசி நிறைய படங்கள் நடித்துள்ளார், அவரது நடிப்பு தனியாக பேசப்படும் சில படங்கள் என்றால் ஒன்று சிவாஜியுடன் அவர் நடித்த முதல் மரியாதை இன்னொன்று ரஜினியின் பாட்டியாக அருணாச்சலம் படத்தில் நடித்தது. </p><p>வெள்ளித்திரையை தாண்டி சின்னத்திரையிலும் சீரியல்கள் நடித்து அசத்தி வருகிறார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c3bd9caf-3d21-427c-8566-25837aa6d518/26-6aae69b1eccd5.webp' /></p><h2>வதந்தி</h2><p>
சமூக வலைதளங்களை பலர் நல்ல விதமாக பயன்படுத்தினாலும் சிலர் தங்களது சுய லாபத்திற்காக தவறாகவும் பயன்படுத்துகிறார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/354dbe8b-d702-4219-8602-1564d9cde0ea/26-6aae69b12aec6.webp' /></p><p> </p><p>அதிலும் பிரபலங்களின் மரணம் என்று வதந்திகள் அதிகம் வருகின்றன. அப்படி அண்மையில் நடிகை வடிவுக்கரசி இறந்துவிட்டார் என வதந்தி பரவியுள்ளது.
</p><p>இதுகுறித்து சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் வடிவுக்கரசி பேசும்போது, அப்படி எல்லாம் இல்லப்பா, நான் நேற்று வரை படப்பிடிப்பு முடிச்சிட்டு இன்னைக்கு பிரபு சார் படத்திற்காக காரைக்குடிக்கு பேக் பண்ணிட்டு இருக்கேன்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/70b9cb32-f83a-462c-b656-123fee7aae6d/26-6aae69b2bbd90.webp' /></p><p> </p><p>நான் நல்லா இருக்கேன்பா, தேங்க்யூப்பா. எனக்காக எத்தனை இதயங்கள், நான் இத்தனை பேரை சம்பாதிச்சிருக்கேனே என வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-09-19T14:38:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[அனோஜன் விவகாரம்: மோடியின் உதவியை நாடுங்கள் ; ஜனாதிபதிக்கு மனோ எம்.பி. கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/anoj-an-case-seek-modi-s-assistance-1789825583"></link>
            <id>https://jvpnews.com/article/anoj-an-case-seek-modi-s-assistance-1789825583</id>
            <summary type="text">அனோஜன் விவகாரத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் உதவியை நாடுமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அனோஜன் விவகாரத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் உதவியை நாடுமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.</p><p>



அனோஜன் சிவராசா எதிர்கொள்ளும் நிலை குறித்து பிரதமர் மோடியின் அவசர கவனத்திற்கு கொண்டு செல்லுமாறும் அவர் ஜனாதிபதியிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fdf88b1e-6eb0-496f-8e4d-846876cbca27/26-6aae9230ebab5.webp' /></p><h2>மோடியிடம் கோரிக்கை&nbsp;</h2><p>
</p><p>


இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் சவூதி அரேபிய பிரதமரும் பட்டத்து இளவரசருமான மொஹம்மத் பின் சல்மானுக்கும் இடையில் நெருக்கமான உறவு காணப்படுவதால், அந்த உறவைப் பயன்படுத்தி அனோஜனுக்கு மனிதாபிமான அடிப்படையிலான தீர்வொன்றைப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்க முடியும் என மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
</p><p>


எனவே, சவூதி இளவரசர் மொஹம்மத் பின் சல்மானுடன் தனிப்பட்ட முறையில் பேசி அனோஜன் விவகாரத்தில் தலையிடுமாறு பிரதமர் மோடியிடம் கோரிக்கை விடுக்குமாறும் அவர் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் வலியுறுத்தியுள்ளார்.
</p><p>


மேலும், இலங்கையின் உயரிய விருதான “ஸ்ரீலங்கா ரத்னா” விருதை ஏற்றுக்கொண்டதன் மூலம் பிரதமர் மோடி இலங்கையுடனான தனது நெருக்கமான உறவை வெளிப்படுத்தியுள்ளதாகவும் மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-19T14:30:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[அந்தமான் பீச்சில் டூபீஸ் ஆடையில் நடிகை ஆர்த்தி சுரேஷ்..புகைப்படங்கள்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/aarthi-subas-andamab-bicobar-with-his-lover-1789823636"></link>
            <id>https://viduppu.com/article/aarthi-subas-andamab-bicobar-with-his-lover-1789823636</id>
            <summary type="text">குறும்படங்களில் நடித்து தற்போது சின்னத்திரையில் காலெடி வைத்து நடிகைகளாக மாறியவர்களில் ஒருவர் தான் ஆர்த்தி சுரேஷ். சன் தொலைக்காட்சியில் பாண்டவர் இல்லம்...</summary>
            <content type="html"><![CDATA[<p>குறும்படங்களில் நடித்து தற்போது சின்னத்திரையில் காலெடி வைத்து நடிகைகளாக மாறியவர்களில் ஒருவர் தான் ஆர்த்தி சுரேஷ். சன் தொலைக்காட்சியில் பாண்டவர் இல்லம் சீரியலில் மல்லிகா ரோலில் நடித்து பிரபலமானார் ஆர்த்தி.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/879f800c-594b-4cec-8823-4e85c484ec49/26-6aae8a98da4cd.webp' /></p><p> </p><p>அதன்பின் விஜய் டிவியில் ஒளிபரப்பான, வீட்டுக்கு வீடு வாசப்படி சீரியலில் நடிக்க தொடங்கி, தற்போது சிந்து பைரவி கச்சேரி ஆரம்பம் தொடரில் நடித்து மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்து வருகிறார்.</p><p> சில மாதங்களுக்கு முன் மிஸ்டர் மனைவி சீரியல் நாயகன் பவன் ரவீந்திரனை காதலித்து நிச்சயம் செய்து கொண்டார். தற்போது, வருங்கால கணவருடன் அந்தமான் நிக்கோபார் தீவுக்கு சென்று அங்குள்ள பீச்சில் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-09-19T14:30:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Erimalai</name>
            </author>
            <title type="text"><![CDATA[வல்வெட்டித்துறை சந்தையில் நடக்கும் அநீதி..! பாதிப்படையும் வியாபாரிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/vendors-allege-unfair-treatment-valvettithurai-1789827141"></link>
            <id>https://tamilwin.com/article/vendors-allege-unfair-treatment-valvettithurai-1789827141</id>
            <summary type="text">யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறை நகர சபையின் மரக்கறி சந்தையில் அநீதி இடம்பெறுவதாக சந்தை வியாபாரி ஒருவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

இன்று(19) ஊடகங்களுக்கு...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறை நகர சபையின் மரக்கறி சந்தையில் அநீதி இடம்பெறுவதாக சந்தை வியாபாரி ஒருவர் குற்றம் சுமத்தியுள்ளார்.</p><p>

இன்று(19) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், </p><p>கடந்த பல வருடங்களாக 220 ரூபாவாக இருந்த நில வாடகை திடீரென 1,420 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் தாம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.</p><h2>&nbsp;மரக்கறி சந்தையில் அநீதி</h2><p>

நில வாடகை அதிகரிப்பு தொடர்பில் வல்வெட்டித்துறை நகர சபைக்கு பல தடவைகள் எழுத்துமூலம் அறிவித்த போதிலும், தமது தரப்பு நியாயத்தை சபை கவனத்தில் கொள்ளவில்லை என அவர் குற்றம் சுமத்தினார்.
</p><p>
மேலும், தாம் வரி செலுத்தவில்லை எனக் கூறி, தமது வியாபாரப் பொருட்களை நகர சபையினர் சில நாட்களுக்கு முன்னர் வலுக்கட்டாயமாக எடுத்துச் சென்றதாகவும் அவர் தெரிவித்தார்.
</p><p>
தமது வருமானத்திற்கு ஏற்ற வகையில் குறைந்த பரப்பளவிலான இடத்தை வாடகைக்கு பெற்று அதற்கான வரியை செலுத்துவதற்கு தாம் தயாராக இருந்ததாகவும், குறைந்த நிலப்பரப்பை வழங்குவதாக உறுதியளிக்கப்பட்ட போதிலும் இதுவரை அது நடைமுறைப்படுத்தப்படவில்லை எனவும் அவர் கூறினார்.</p><p><iframe src="https://www.facebook.com/plugins/video.php?height=476&href=https%3A%2F%2Fwww.facebook.com%2Freel%2F2822341561468230%2F&show_text=true&width=267&t=0" width="267" height="591" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share" allowFullScreen="true"></iframe></p><p>
</p><p>
சந்தை குத்தகைதாரர் தம்மிடமிருந்து வரியைப் பெற மறுத்ததாகவும், அதேவேளை தாம் வரி செலுத்தவில்லை என நகர சபைக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் வியாபாரி குறிப்பிட்டார்.
</p><p>
தமது வியாபாரப் பொருட்கள் வலுக்கட்டாயமாக எடுத்துச் செல்லப்பட்டதையடுத்து, தற்போது எந்தவித தொழிலும் மேற்கொள்ள முடியாத நிலையில் இருப்பதாகத் தெரிவித்த அவர், தமக்கு நீதி கிடைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார்.
</p><p>
இது தொடர்பில் வல்வெட்டித்துறை நகர சபையின் உபதவிசாளரிடம் கருத்து கோரப்பட்டபோது, தாம் தற்போது தொலைவில் இருப்பதால் உடனடியாக பதிலளிக்க முடியாது எனவும், பிறிதொரு நாளில் பதில் வழங்குவதாகவும் தெரிவித்தார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-19T14:21:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[சட்டமன்ற கொடுமைகளை பார்க்க வைக்காமல் இருந்ததற்கு நன்றி - மு.க.ஸ்டாலின்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/mk-stalin-thanks-to-kolathur-voters-for-loss-1789827010"></link>
            <id>https://ibctamilnadu.com/article/mk-stalin-thanks-to-kolathur-voters-for-loss-1789827010</id>
            <summary type="text">&amp;nbsp;சட்டமன்ற கொடுமைகளை பார்க்க வைக்காமல் இருந்ததற்கு கொளத்தூர் மக்களுக்கு நன்றி தெரிவிப்பதாக&amp;nbsp; மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.

திமுக முப்பெரும் வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;சட்டமன்ற கொடுமைகளை பார்க்க வைக்காமல் இருந்ததற்கு கொளத்தூர் மக்களுக்கு நன்றி தெரிவிப்பதாக&nbsp; மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.
</p><h3>
திமுக முப்பெரும் விழா</h3><p>

அண்ணா மற்றும் பெரியார் பிறந்தநாள், திமுக தொடங்கப்பட்ட நாள் வருவதால் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதத்தில் திமுகவின் முப்பெரும் விழா நடத்தப்படுகிறது.
</p><p>
இந்த ஆண்டு, செப்டம்பர் 15 ஆம் தேதி நடத்த நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த நிலையில், திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதன் காரணமாக, முப்பெரும் விழா ஒத்திவைக்கப்பட்டது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3c4eb76f-16b3-485f-bd38-ebacc92261da/26-6aae97c5279c7.webp' /></p><p>
ஒத்திவைக்கப்பட்ட திமுக முப்பெரும் விழா இன்று சென்னையில் திமுகவின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்று வருகிறது.</p><p> 

இதில், பெரியார் விருது, அண்ணா விருது, கலைஞர் விருது, பாவேந்தர் விருது, பேராசிரியர் விருது, மு.க.ஸ்டாலின் விருது, முரசொலி செல்வம் விருது ஆகிய 7 விருதுகளுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு மு.க.ஸ்டாலின் விருது வழங்கினார்.</p><h3> 

திமுக பார்க்காத வெற்றி, தோல்வி இல்லை</h3><p> இதனைத்தொடர்ந்து பேசிய அவர், "அறிவியக்கமான திராவிட முன்னேற்ற கழகம் உதயமான நாள், பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழாவாக முப்பெரும் விழா நடைபெற்று வருகிறது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3eaf7ef6-2f6e-4b15-aab1-52b4a431c935/26-6aae97c3bceb5.webp' /></p><p> கடந்த 15ஆம் தேதி நடைபெற இருந்த முப்பெரும் விழாவின்போது எனக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. 

மருத்துவர்கள் இன்னும் சிறிது காலம் ஓய்வெடுக்க அறிவுறுத்தினார்கள். ஆனால், மனசு கேட்கவில்லை.</p><p> தந்தை பெரியார் பிறந்தநாளில் கலந்துகொண்டு, இன்று முப்பெரும் விழாவிலும் கலந்துகொண்டுள்ளோம்.

75 ஆண்டுகள் ஒரு இயக்கம் நிலைத்து நிற்பது சாதாரணமானது அல்ல. அதே கம்பீரத்துடன் நிலைத்து நிற்கும் இந்தச் சாதனை கழக உடன்பிறப்புகளால்தான் நடந்தது. </p><p>அவர்களால்தான் நான் வாழ்கிறேன். அவர்கள் மீதுள்ள நம்பிக்கையில்தான் வாழ்கிறேன். 

என்னைத் தலைவராக்கிய உடன்பிறப்புகள்தான் முதலமைச்சர் பொறுப்புவரை உயர்த்தி அழகு பார்த்தார்கள். அனைத்து உடன்பிறப்புகளுக்கும் எனது நன்றிகள். </p><p>

திமுக பார்க்காத வெற்றியும் இல்லை, தோல்வியும் இல்லை. வெறும் 17 லட்சம் வாக்குகளில் தான் நாம் தோற்றுள்ளோம். தேர்தலில் இன்னும் கணித்து பணியாற்றியிருந்தால் தோல்வியே இருந்திருக்காது. </p><p>

பெரும்பான்மையே இல்லாத தவெக அரசு, ஏதோ பெரிய அலை அடித்தது போலவும், தமிழ்நாடே அவர்களின் வருகைக்காக காத்திருந்தது போலவும் இமெஜ் பில்டப் செய்கிறார்கள்.
</p><p>
திமுக கூட்டணியில் இருந்து வெற்றி பெற்று தவெகவிற்கு ஆதரவு தந்த கட்சிகளையும் குதிரை பேரம் நடத்தி இழுத்து வருகிறது. திராவிட மாடல் ஆட்சியின் திட்டங்களை நிறுத்துவது, பெயரை மாற்றி ஸ்டிக்கர் ஒட்டுவதுதான் தவெக ஆட்சியின் வேலையாக இருக்கிறது. </p><p>

தினமும் சூட்டிங் மோடில்தான் இருக்கிறார் முதலமைச்சர். சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிட்டேன் என்று சொல்லிவிட்டு, இப்போது கேமராமேன் யார் என்று சொல்லாமல் மக்கள் முன்பு நடித்து வருகிறார். </p><h3>

கொளத்தூர் மக்களுக்கு நன்றி</h3><p> 

கொஞ்சம் நினைத்துப் பாருங்கள் ‘பொருளாதாரத்தில் டபுள் டிஜிட் வளர்ச்சி, கல்வியில் சிறந்த தமிழ்நாடு, முதலீட்டாளர்களின் முகவரி தமிழ்நாடு, இந்தியாவில் இல்லாத பல திட்டங்கள்’ என பேசப்பட்ட தமிழ்நாட்டில்,&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3a47791b-4e30-4739-aaf8-81d372d91278/26-6aae97c472538.webp' /></p><p>

இன்று முதலமைச்சர் ‘கோட்-சூட்டு போட்டாரு, கையால் சாப்பிட்டாரு, காலால் நடந்தாரு, இந்த சைகை செஞ்சாரு’ என்பதுதான் செய்தியாக வருகிறது. இதையெல்லாம் பார்க்க அருவருப்பாக இருக்கிறது.</p><p>

முதலில் பஞ்ச் டயலாக், இப்போது வெளிநாட்டு சுற்றுலா. முதலமைச்சரைப் பொறுத்தவரை எல்லாமே ரீல்ஸ்தான். பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை முடக்கி, தமிழ்நாட்டை 25 ஆண்டுகள் பின்னோக்கித் தள்ளிவிட்டார்கள்.</p><p> 

ரீல்ஸ் வெடி வெடித்த ஆளுங்கட்சியினரால், நூற்றாண்டு கால புகழ்பெற்ற சட்டமன்றம் தனது மாண்பை இழந்துள்ளது. 

நடந்து முடிந்த சட்டமன்றக் கூட்டத்தொடரில் நடந்த கொடுமைகளை எல்லாம் பார்க்கும்போது, கொளத்தூர் மக்களே, கோடானகோடி நன்றி. </p><p>முதலமைச்சரின் சிரிப்பைப் பார்க்க முடியவில்லை என ஸ்க்ரீன் வைக்கச் சொல்லிக் கேட்கிறார்கள். இதுதான் நாட்டுக்கு தேவையா?</p><p>மிசா பற்றி பேசுபவர்களுக்கு நான் சொல்வது ஒன்றே ஒன்றுதான். என் மிசா கைதை எவனுக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியம் எனக்கில்லை. எனது தியாகத்திற்கு மார்க் போட எவனுக்கும் தகுதி இல்லை. </p><p>எனது மிசா வரலாற்றை அண்ணன் சிட்டிபாபு சிறையிலேயே பதிவு செய்திருக்கிறார். இது காலத்தால் அழிக்க முடியாத கல்வெட்டாகும்." என பேசியுள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-19T14:10:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[ப்ளாக்போர்ட் 149, சதர்லேண்ட் 100: ஒரு பந்து மீதமிருக்க..336 ஓட்டங்கள் சேஸ் செய்த அணி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/liam-blackford-149-runs-in-australia-domestic-1789826688"></link>
            <id>https://news.lankasri.com/article/liam-blackford-149-runs-in-australia-domestic-1789826688</id>
            <summary type="text">Victoria won by 3 wickets against queensland: அவுஸ்திரேலியா டொமெஸ்டிக் ஒருநாள் போட்டியில் விக்டோரியா அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றத...</summary>
            <content type="html"><![CDATA[<p>Victoria won by 3 wickets against queensland: அவுஸ்திரேலியா டொமெஸ்டிக் ஒருநாள் போட்டியில் விக்டோரியா அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.</p><p>

குயின்ஸ்லேண்ட் அணிக்கு எதிரான அவுஸ்திரேலியா டொமெஸ்டிக் ஒருநாள் போட்டியில், 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் விக்டோரியா வெற்றி பெற்றது.&nbsp;</p><h2>குயின்ஸ்லேண்ட்&nbsp;335 ஓட்டங்கள் </h2><p>
பிரிஸ்பேனில் நடந்த அவுஸ்திரேலியா டொமெஸ்டிக் ஒருநாள் போட்டியில், விக்டோரியா மற்றும் குயின்ஸ்லேண்ட் அணிகள் மோதின.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/db518fb1-ccb7-4a4b-bb2e-c9643a50816f/26-6aae985d76790.webp' /></p><p></p><p>
முதலில் ஆடிய குயின்ஸ்லேண்ட் அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 335 ஓட்டங்கள் குவித்தது.</p><p>

ஹூகோ பர்டன் 70 பந்துகளில் 2 சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 73 ஓட்டங்களும், டயலான் மெக்லாக்லன் 29 பந்துகளில் 7 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 66 ஓட்டங்களும் விளாசினர். </p><h2>

பிளாக்போர்ட் 149 </h2><p>பின்னர் ஆடிய விக்டோரியா அணி 14 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. பிளாக் மெக்டொனால்ட் 17 ஓட்டங்களில் வெளியேற, வில் சதர்லேண்ட் மற்றும் லியாம் பிளாக்போர்ட் கூட்டணி அமைத்தனர். </p><p>

இவர்களது ருத்ரதாண்டவ ஆட்டத்தில் விக்டோரியா அணி 49.5 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 339 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.
</p><p>
லியாம் பிளாக்போர்ட் (Liam Blackford) 113 பந்துகளில் 149 ஓட்டங்களும் (6 சிக்ஸர், 16 பவுண்டரிகள்), அணித்தலைவர் வில் சதர்லேண்ட் 106 பந்துகளில் 100 ஓட்டங்களும் (4 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகள்) விளாசினர்.&nbsp; &nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c21b63f5-4278-4020-9062-c60eb0541174/26-6aae985e67d70.webp' /></p>]]></content>
            <updated>2026-09-19T14:09:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[பயாகலவில் கடலில் மூழ்கி பாடசாலை மாணவன் மாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/schoolboy-missing-after-drowning-at-payagala-beach-1789824532"></link>
            <id>https://jvpnews.com/article/schoolboy-missing-after-drowning-at-payagala-beach-1789824532</id>
            <summary type="text">பயாகல பகுதியில் உள்ள சிறிய பயாகல தேவாலயத்திற்கு பின்னால் உள்ள கடலில் நீராடச் சென்ற பாடசாலை மாணவன் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.

 

இவ்...</summary>
            <content type="html"><![CDATA[<p>பயாகல பகுதியில் உள்ள சிறிய பயாகல தேவாலயத்திற்கு பின்னால் உள்ள கடலில் நீராடச் சென்ற பாடசாலை மாணவன் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.
</p><p>
 

இவ்வாறு காணாமல் போனவர் சிறிய பயாகல பகுதியைச் சேர்ந்த 15 வயதுடைய பாடசாலை மாணவன் ஆவார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/13429da5-67e9-47e9-8726-126ae8738133/26-6aae8e164d8cd.webp' /></p><h2>விசேட நடவடிக்கை</h2><p>

 

குறித்த மாணவன் மேலும் மூவருடன் இணைந்து கடற்கரையை ஒட்டியுள்ள பாறை அணைக்கு அருகில் நீராடிக்கொண்டிருந்த போது, நீரோட்டத்தில் சிக்கி அடித்துச் செல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><p>

 

காணாமல் போன மாணவனைத் தேடும் பணியில் கடற்படையினர் விசேட நடவடிக்கையொன்றை ஆரம்பித்துள்ளனர்.</p><p>

 

சம்பவம் தொடர்பில் பயாகல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-19T14:00:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[அகில இலங்கை தமிழ்த்தினப் போட்டியில் யாழ்.இந்துக் கல்லூரிக்கு தங்கப்பதக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/gold-medal-for-jaffna-hindu-college-1789825031"></link>
            <id>https://ibctamil.com/article/gold-medal-for-jaffna-hindu-college-1789825031</id>
            <summary type="text">அகில இலங்கை ரீதியாக நடைபெற்று வரும் தேசிய மட்ட தமிழ்மொழித்தினப்
போட்டிகளில், *தனிநடிப்புப் போட்டியில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி
தங்கப்பதக்கத்தைப் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அகில இலங்கை ரீதியாக நடைபெற்று வரும் தேசிய மட்ட தமிழ்மொழித்தினப்
போட்டிகளில், *தனிநடிப்புப் போட்டியில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி
தங்கப்பதக்கத்தைப் பெற்றுள்ளது.</p><p>இன்று(19) கொழும்பில் நடைபெற்ற தேசிய மட்ட
தமிழ்மொழித்தினப் போட்டிகளில், *தனிநடிப்பு மூன்றாம் பிரிவில்* யாழ்ப்பாணம்
இந்துக் கல்லூரியைச் சேர்ந்த *தேவானந்த் அஸ்வின்ராம்* முதலாம் இடத்தைப்
பெற்று, தேசிய ரீதியாக *தங்கப்பதக்கத்தை* வென்றுள்ளார்.
</p><p>
</p><h2>&nbsp;யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிக்கும் வடக்கு மாகாணத்திற்கும் பெருமை&nbsp;</h2><p>இலங்கையின் ஒன்பது மாகாணங்களையும் பிரதிநிதித்துவப்படுத்திய போட்டியாளர்கள்
பங்கேற்ற இப்போட்டியில், வடக்கு மாகாணத்திற்காக தங்கப்பதக்கத்தைப் பெற்றுக்
கொடுத்திருப்பது குறிப்பிடத்தக்க சாதனையாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0502b080-4c6b-49a2-83e7-51e1c6858daa/26-6aae94fb9fb1d.webp' /></p><p>
</p><p>
தேசிய மட்டத்தில் பெற்ற இவ்வெற்றி, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிக்கும் வடக்கு
மாகாணத்திற்கும் பெருமை சேர்த்துள்ளது&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-19T13:58:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஒரு வார்த்தைக்காக ஒரு உயிரைப் பறிக்காதீர்கள்..! அனோஜனுக்காக சவுதியிடம் சஜித் உருக்கமான கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/premadasa-urges-saudi-arabia-1789825027"></link>
            <id>https://tamilwin.com/article/premadasa-urges-saudi-arabia-1789825027</id>
            <summary type="text">சவுதி அரேபியாவில் இலங்கை புலம்பெயர் தொழிலாளரான சிவராசா அனோஜனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் உறுதிப்படுத்தப்பட்டால், அவருக்கு...</summary>
            <content type="html"><![CDATA[<p>சவுதி அரேபியாவில் இலங்கை புலம்பெயர் தொழிலாளரான சிவராசா அனோஜனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் உறுதிப்படுத்தப்பட்டால், அவருக்கு கருணை காட்டுமாறு சவுதி அரேபிய அதிகாரிகளிடம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்துள்ளார்.</p><p>

சமூக வலைத்தளமான எக்ஸில் வெளியிட்டுள்ள பதிவொன்றில் அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.</p><h2>மரண தண்டனை</h2><p>
</p><p>
ஒரு வார்த்தைக்காக ஒருவரின் உயிரைப் பறிக்கக்கூடாது எனத் தெரிவித்துள்ள சஜித் பிரேமதாச, அனோஜனுக்கு கருணை வழங்குவதற்கான வாய்ப்பை சவுதி அதிகாரிகள் திறந்துவைக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.</p><p>

பல நூற்றாண்டுகளாக நிலைத்திருக்கும் ஒரு மதத்தை, அவமதிப்பாகக் கருதப்படும் ஒரு வார்த்தையால் அழிக்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">A man’s life should not be taken for a word.<br><br>If the reported death sentence against Sri Lankan migrant worker Anojan Sivarasa is confirmed, I hope Saudi Arabia will show the mercy that lies at the heart of every great faith.<br><br>A religion that has endured for centuries cannot be… <a href="https://t.co/LPsXdzyED0">https://t.co/LPsXdzyED0</a></p>&mdash; Sajith Premadasa (@sajithpremadasa) <a href="https://x.com/sajithpremadasa/status/2101279904252014604?ref_src=twsrc%5Etfw">September 19, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>
</p><p>
ஒரு வார்த்தைக்கு பதிலாக ஒருவரின் உயிரைப் பறிப்பதிலேயே ஒரு மதத்தின் வலிமை தங்கியிருக்கக் கூடாது எனவும் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.</p><p>

அத்துடன், ஒவ்வொரு சிறந்த மதத்தின் அடிப்படையிலும் காணப்படும் கருணையை சவுதி அரேபியா வெளிப்படுத்தும் என தாம் நம்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.</p><p>

சவுதி அரேபியாவில் பணியாற்றி வரும் இலங்கைப் புலம்பெயர் தொழிலாளரான சிவராசா அனோஜனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்களுக்கு மத்தியில் சஜித் பிரேமதாச இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-19T13:54:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜேர்மனியில் மின்சார கார் விற்பனை அதிகரிப்பு - அரசுக்கு வருவாய் குறைவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/germanys-ev-boom-cuts-fuel-tax-revenue-1789826179"></link>
            <id>https://news.lankasri.com/article/germanys-ev-boom-cuts-fuel-tax-revenue-1789826179</id>
            <summary type="text">Germany’s EV boom cuts fuel tax revenue: ஜேர்மன் அரசுக்கு எரிபொருள் வரி வருவாய் குறைந்துள்ளது.

ஜேர்மனியில் மின்சார கார்கள் அதிக அளவில் விற்பனையாகி ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Germany’s EV boom cuts fuel tax revenue: ஜேர்மன் அரசுக்கு எரிபொருள் வரி வருவாய் குறைந்துள்ளது.
</p><p>
ஜேர்மனியில் மின்சார கார்கள் அதிக அளவில் விற்பனையாகி வருகின்றன. இதனால் சுற்றுச்சூழல் மாசு குறைந்தாலும், அரசுக்கு எரிபொருள் வரி வருவாய் குறைந்து வருகிறது.</p><p>
</p><h2>
மின்சார கார் விற்பனை</h2><p>சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, 2025 முதல் காலாண்டில் ஐரோப்பாவில் மின்சார கார் விற்பனை 30 சதவீதம் அதிகரித்துள்ளது. நோர்வேவில் புதிய கார்கள் 95 சதவீதம் மின்சார வாகனங்களாக பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆசியா, லத்தீன் அமெரிக்கா போன்ற பகுதிகளிலும் விற்பனை வேகமாக உயர்ந்து வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c17692cb-5975-469e-8eea-d3aad85ac555/26-6aae9485c7f4f.webp' /></p><h2>அரசுக்கு வருவாய் குறைவு</h2><p>ஜேர்மனியில் டீசல் மற்றும் பெட்ரோல் மீது அதிக வரி விதிக்கப்பட்டுள்ளது. ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 2.10 யூரோவாகும், அதில் 1.14 யூரோ அரசு வரியாக வசூலிக்கப்படுகிறது. ஆனால் மின்சார வாகனங்களுக்கு இவ்வாறு எரிசக்தி வரி இல்லை. </p><p>இதனால் அரசின் வருவாய் குறைந்து வருகிறது. 2016-இல் 37 பில்லியன் யூரோவாக இருந்த எரிசக்தி வருவாய், கடந்த ஆண்டு 33 பில்லியன் யூரோவாக குறைந்துள்ளது.</p><p>
அறிக்கைகள் படி, 2050-க்குள் இந்த வருவாய் 5 பில்லியன் யூரோ மட்டுமே இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இதனால் சாலைகள் பராமரிப்பு மற்றும் போக்குவரத்து வசதிகளுக்கான நிதி குறைவது அரசுக்கு பெரிய சவாலாக உள்ளது.
</p><p></p><p>பிரித்தானியா, நோர்வே, நியூசிலாந்து, சுவிட்சர்லாந்து போன்ற நாடுகள் மின்சார வாகனங்களுக்கு புதிய வரி முறைகளை அறிமுகப்படுத்தியுள்ளன. ஜேர்மனியிலும் வாகனங்களுக்கு சாலை கட்டணம் அல்லது புதிய வரி விதிப்பது குறித்து விவாதம் நடைபெற்று வருகிறது.
</p><p>
மின்சார வாகன வளர்ச்சி சுற்றுச்சூழலுக்கு நல்லது என்றாலும், அரசின் வருவாய் குறைவு எதிர்காலத்தில் போக்குவரத்து திட்டங்களுக்கு சவாலாக இருக்கும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-19T13:53:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[அனோஜனுக்கு மன்னிப்பு : இலங்கை அரசு துரித நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sri-lankan-govertakes-action-to-pardon-anojan-1789814541"></link>
            <id>https://ibctamil.com/article/sri-lankan-govertakes-action-to-pardon-anojan-1789814541</id>
            <summary type="text">&amp;nbsp;சவுதியில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் இலங்கை தமிழ் இளைஞன் சிவராசா அனோஜனுக்கு மன்னிப்பு பெற்றுத்தர முடிந்தவரை முயற்சிப்பதாக சுகா...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;சவுதியில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் இலங்கை தமிழ் இளைஞன் சிவராசா அனோஜனுக்கு மன்னிப்பு பெற்றுத்தர முடிந்தவரை முயற்சிப்பதாக சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
</p><p>
 

இது தொடர்பில் வெளிவிவகார அமைச்சு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும், விதிக்கப்பட்டுள்ள தண்டனையைக் குறைப்பதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு என்றும் அவர் குறிப்பிட்டார்.</p><h2>&nbsp; தீவிர செயற்பாட்டில் வெளிவிவகார அமைச்சு</h2><p>&nbsp;இது குறித்து வெளிவிவகார அமைச்சுக்குத் தகவல் கிடைத்ததையடுத்து, ஐக்கிய அரபு இராச்சிய (சவுதி) அரசாங்கத்துடன் பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/345fec4c-3648-4205-af37-fb9943cbef4f/26-6aae68ce646d6.webp' /></p><p>
</p><p>
 

அத்துடன், சிவராசா அனோஜனுக்கு சட்ட உதவியை வழங்குவதற்கு தூதரகம் தலையிட்டுள்ளதுடன், இதற்காக விசேட அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் நலிந்த ஜயதிஸ்ஸ வெளிப்படுத்தினார்.</p><p>

 

இச்சம்பவம் தொடர்பில் சவுதியில் நிலவும் சட்டத்திற்கு அமைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-19T13:48:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[H-1B விசாவுக்கான கட்டணம் ; ட்ரம்ப் பிறப்பித்த உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/trump-extends-h-1b-visa-fee-for-one-year-1789803117"></link>
            <id>https://canadamirror.com/article/trump-extends-h-1b-visa-fee-for-one-year-1789803117</id>
            <summary type="text">H-1B குடியேறாதோர் விசா திட்டத்தின் கீழ் அமெரிக்காவுக்கு வரும் குறிப்பிட்ட வெளிநாட்டு பணியாளர்களுக்கான 1 இலட்சம் அமெரிக்க டொலர் கட்டணத்தை மேலும் 12 மாத...</summary>
            <content type="html"><![CDATA[<p>H-1B குடியேறாதோர் விசா திட்டத்தின் கீழ் அமெரிக்காவுக்கு வரும் குறிப்பிட்ட வெளிநாட்டு பணியாளர்களுக்கான 1 இலட்சம் அமெரிக்க டொலர் கட்டணத்தை மேலும் 12 மாதங்களுக்கு நீடிக்கும் உத்தரவை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வெளியிட்டுள்ளார். </p><p>



புதிய உத்தரவு 2026 செப்டம்பர் 21 முதல் அமுலுக்கு வந்து, 2027 செப்டம்பர் 21 வரை நீடிக்கும் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/203fff20-97ed-4d9a-8b9e-91c8f26e0c75/26-6aae3a6f5456c.webp' /></p><p>



2025ஆம் ஆண்டு முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்தக் கட்டண விதி, அமெரிக்காவுக்கு வெளியே இருக்கும் H-1B பணியாளர்களை உள்ளடக்கிய குறிப்பிட்ட புதிய மனுக்களுக்கு பொருந்துகின்றது. </p><p>



தேசிய நலன் கருதி விதிவிலக்குகளை வழங்கும் அதிகாரமும் உள்நாட்டு பாதுகாப்புத் துறைக்கு வழங்கப்பட்டுள்ளது.
</p><p>


H-1B திட்டத்தில் முறைகேடுகளைத் தடுப்பதும், அமெரிக்க தொழிலாளர்களின் வேலைவாய்ப்பைப் பாதுகாப்பதும் கட்டணத்தை நீட்டிப்பதற்கான காரணங்களாக ட்ரம்ப் நிர்வாகம் தெரிவித்துள்ளது. </p><p>



அதேவேளை, புதிய நிர்வாக உத்தரவின் கீழ் H-1B விண்ணப்பங்களை பரிசீலிக்கும்போது, தொடர்புடைய அமெரிக்க ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளதா அல்லது எதிர்காலத்தில் பணிநீக்கம் செய்யத் திட்டமிட்டுள்ளதா என்பதையும் அதிகாரிகள் கருத்தில் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><p>



வெள்ளை மாளிகையின் தகவலின்படி, 2025ஆம் ஆண்டு கட்டண விதி அமுலுக்கு வந்ததிலிருந்து 700க்கும் மேற்பட்ட H-1B மனுக்களுக்கு 1 இலட்சம் டொலர் கட்டணம் செலுத்தப்பட்டுள்ளது.</p><p>



H-1B விசா திட்டம் தொழில்நுட்பம் உள்ளிட்ட சிறப்புத் திறன் தேவைப்படும் துறைகளில் வெளிநாட்டு பணியாளர்களை தற்காலிகமாக அமெரிக்காவில் பணியாற்ற அனுமதிக்கும் திட்டமாகும்.</p><p> 



இந்தியா மற்றும் சீனாவைச் சேர்ந்த தொழில்நுட்ப வல்லுநர்களை பணியமர்த்தும் நிறுவனங்களுக்கு இந்தத் திட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாகவுள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-19T13:47:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் இளைஞனுக்கு நேர்ந்த துயரம் ; பொலிஸார் மறித்ததும் நிலத்தில் விழுந்து உயிரிழந்த இளைஞன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/tragedy-befalls-young-man-in-jaffna-1789817965"></link>
            <id>https://jvpnews.com/article/tragedy-befalls-young-man-in-jaffna-1789817965</id>
            <summary type="text">இன்று காலை மானிப்பாய் பொலிஸார் வீதியில் சென்ற மோட்டார் சைக்கிளை வழிமறித்தபோது, அதில் பயணித்த இளைஞன் சம்பவ இடத்திலேயே கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.
...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">இன்று காலை மானிப்பாய் பொலிஸார் வீதியில் சென்ற மோட்டார் சைக்கிளை வழிமறித்தபோது, அதில் பயணித்த இளைஞன் சம்பவ இடத்திலேயே கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.
</p><p style="text-align: justify; ">
 

சுன்னாகம், சபாபதிப்பிள்ளை வீதியைச் சேர்ந்த 26 வயதுடய இளைஞனே இவ்வாறு உயிரிழந்தவராவார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b1b43e6d-00be-467f-8e2c-9589ac34a5d5/26-6aae746e868b1.webp' /></p><h2 style="text-align: justify; ">உடற்கூற்றுப் பரிசோதனை</h2><p style="text-align: justify; ">குறித்த இளைஞன் இன்று யாழ்ப்பாணம் - காரைநகர் வீதியில், மானிப்பாய் தேவாலயத்திற்கு முன்பாக மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தபோது போக்குவரத்துப் பொலிஸார் அவரை வழிமறித்தனர்.</p><p style="text-align: justify; ">
 

இதன்போது, அந்த இளைஞன் மோட்டார் சைக்கிளை ஓரமாக நிறுத்திய பின்னர் தானாகவே கீழே சரிந்து விழுந்து அசைவற்று காணப்பட்டுள்ளார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
 

முறைப்படி அவரை வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றபோது, அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.
</p><p style="text-align: justify; ">
 

அவரது சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-19T13:47:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[முக்கிய ஊடகங்களுக்கு வெள்ளை மாளிகைக்குள் நுழைய ட்ரம்ப் தடை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/trump-bans-media-outlets-entering-white-house-1789823552"></link>
            <id>https://tamilwin.com/article/trump-bans-media-outlets-entering-white-house-1789823552</id>
            <summary type="text">தங்களுக்கு எதிராகப் பொய்ச் செய்திகளைப் பரப்புவதாகக் கூறி CNN, MS NOW
மற்றும் Politico ஆகிய முன்னணி ஊடக நிறுவனங்கள் வெள்ளை மாளிகையினுள் செய்தி
சேகரிப...</summary>
            <content type="html"><![CDATA[<p>தங்களுக்கு எதிராகப் பொய்ச் செய்திகளைப் பரப்புவதாகக் கூறி CNN, MS NOW
மற்றும் Politico ஆகிய முன்னணி ஊடக நிறுவனங்கள் வெள்ளை மாளிகையினுள் செய்தி
சேகரிப்பதற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உடனடியாக நடைமுறைக்கு வரும்
வகையில் தடை விதித்துள்ளார்.
</p><p>
தமது 'ட்ரூத் சோஷியல்' சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவொன்றை இட்டுள்ள ஜனாதிபதி
ட்ரம்ப், குறித்த ஊடகங்கள் தமது நிர்வாகத்தைப் பற்றித் தொடர்ந்து உண்மைக்குப்
புறம்பான செய்திகளை வெளியிடுவதாகக் குற்றம்சாட்டியுள்ளார்.</p><p>

அத்துடன் The New York Times மற்றும் The Washington Post ஆகிய ஊடகங்களும்
பொய்ச் செய்திகளையே வெளியிடுவதாகத் தெரிவித்துள்ள அவர், வரும் நாட்களில்
மேலும் பல ஊடகங்களுக்குத் தடை விதிக்கப்படலாம் எனவும் எச்சரித்துள்ளார்.</p><h2>நேரடித் தாக்குதல்&nbsp;</h2><p>
</p><p>
ட்ரம்பின் இந்த தீர்மானத்திற்குக் குறித்த ஊடக நிறுவனங்களும் ஊடகப்
பாதுகாப்பு அமைப்புகளும் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன.
</p><p>
அமெரிக்க அரசியலமைப்பின் முதலாவது திருத்தத்தின் மூலம் தமக்கு வழங்கப்பட்டுள்ள
செய்தி சேகரிக்கும் அடிப்படை உரிமையை அரசோ அல்லது அதிபரோ முடக்க முடியாது
எனவும், இந்தத் தடையை சட்டரீதியாக எதிர்கொள்ளவுள்ளதாகவும் CNN மற்றும்
Politico நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/651f775d-43fe-41d4-8161-60ec776a19bd/26-6aae8d7309f01.webp' /></p><p>
</p><p>
அரசியலமைப்பின் படி, ஊடகவியலாளர்களின் செய்திகளின் உள்ளடக்கத்தைக் காரணம்
காட்டி வெள்ளை மாளிகைக்கான அணுகலைத் தன்னிச்சையாக மறுக்க முடியாது என 1977 ஆம்
ஆண்டைய நீதிமன்றத் தீர்ப்புகள் சுட்டிக்காட்டுகின்றன.
</p><p>
ஜனாதிபதி ட்ரம்பின் இந்த நடவடிக்கை சுதந்திரமான ஊடகவியலின் மீதான நேரடித்
தாக்குதல் என தேசிய பிரஸ் கிளப் உட்படப் பல அமைப்புகள்
கண்டனம் தெரிவித்துள்ளன.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-19T13:40:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[மாஸாக வெளியான அஜித்தின் Gladiators டிரைலர்... வைரலாக்கும் ரசிகர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/ajith-gladiators-car-race-documentry-trailer-1789824793"></link>
            <id>https://cineulagam.com/article/ajith-gladiators-car-race-documentry-trailer-1789824793</id>
            <summary type="text">Gladiatorsவிடாமுயற்சி, குட் பேட் அக்லி படத்திற்கு பிறகு அஜித் நடிப்பில் எந்த படமும் வரவில்லை. ஆனால் ரசிகர்கள் கொண்டாடும் அளவிற்கு இப்போது ஒரு டிரெய்லர...</summary>
            <content type="html"><![CDATA[<h2>Gladiators</h2><p>விடாமுயற்சி, குட் பேட் அக்லி படத்திற்கு பிறகு அஜித் நடிப்பில் எந்த படமும் வரவில்லை. </p><p>ஆனால் ரசிகர்கள் கொண்டாடும் அளவிற்கு இப்போது ஒரு டிரெய்லர் வெளியாகியுள்ளது. படங்களை நிறுத்தி வைத்து கார் ரேஸில் அதிக கவனம் செலுத்தி வரும் அஜித் அதனை ஒரு ஆவணப்படமாக எடுத்துள்ளார், அதற்கு க்ளாடியேட்டர்ஸ் என்றும் பெயர் வைத்துள்ளார்.</p><p></p><p> </p><p>ஏ.எல்.விஜய் இயக்க அஜித்குமாரின் மனைவி ஷாலினி அஜித்குமார் மற்றும் கோல்டன் டிராபி ஃபிலிம் புரொடக்ஷ்ன் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். </p><p>இந்த ஆவணப்படத்தின் டிரெய்லர் திரையரங்குகளில் வெளியான நிலையில் இப்போது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. </p><p>இதோ பாருங்கள்,</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Here is the trailer of <a href="https://x.com/hashtag/Gladiators?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#Gladiators</a> 🏎️🎬<br><br>Subtitled in English, Malayalam &amp; Telugu.<br>No Copyright Restrictions <a href="https://x.com/hashtag/AjithKumar?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#AjithKumar</a> <a href="https://x.com/hashtag/AK?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#AK</a> <a href="https://x.com/hashtag/GladiatorsTrailer?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#GladiatorsTrailer</a> <br><br>Directed by <a href="https://x.com/hashtag/Vijay?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#Vijay</a> <a href="https://x.com/Akracingoffl?ref_src=twsrc%5Etfw">@Akracingoffl</a> <a href="https://x.com/goldentrophyllp?ref_src=twsrc%5Etfw">@goldentrophyllp</a> <a href="https://x.com/gvprakash?ref_src=twsrc%5Etfw">@gvprakash</a> <a href="https://x.com/SureshChandraa?ref_src=twsrc%5Etfw">@SureshChandraa</a> <a href="https://x.com/rajakrishnan_mr?ref_src=twsrc%5Etfw">@rajakrishnan_mr</a> <a href="https://x.com/editoranthony?ref_src=twsrc%5Etfw">@editoranthony</a> <a href="https://x.com/hashtag/SandeepKVijay?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#SandeepKVijay</a>… <a href="https://t.co/LtcCXybee9">pic.twitter.com/LtcCXybee9</a></p>&mdash; Suresh Chandra (@SureshChandraa) <a href="https://x.com/SureshChandraa/status/2101289151039468024?ref_src=twsrc%5Etfw">September 19, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p>]]></content>
            <updated>2026-09-19T13:39:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆசிய விளையாட்டு போட்டி; நக்வியிடம் பதக்கங்களை பெறுமா இந்தியா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/naqvi-can-give-asian-games-medals-will-india-get-1789824902"></link>
            <id>https://news.lankasri.com/article/naqvi-can-give-asian-games-medals-will-india-get-1789824902</id>
            <summary type="text">will india accept medal if naqvi gives asian games medals: ஆசிய கிண்ணத்தில் நக்வியிடம் கிண்ணத்தை பெற மறுத்த இந்திய அணி, ஆசிய விளையாட்டு போட்டியிலும் ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>will india accept medal if naqvi gives asian games medals: ஆசிய கிண்ணத்தில் நக்வியிடம் கிண்ணத்தை பெற மறுத்த இந்திய அணி, ஆசிய விளையாட்டு போட்டியிலும் பெற மறுக்குமா என கேள்வி எழுந்துள்ளது.</p><h3>நக்வியிடம் கிண்ணம் பெற மறுத்த இந்தியா&nbsp;</h3><p>
ஆண்கள் மற்றும் பெண்கள் ஆசியக் கிண்ண கிரிக்கெட் ஆகிய இரண்டிலும், இந்தியா நடப்பு சாம்பியனாக உள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/200041d3-c81d-48a4-8d47-65160f8c450b/26-6aae8f88dba15.webp' /></p><p>
ஆனால் பட்டங்களை வென்ற பிறகு நடைபெற்ற அதிகாரப்பூர்வ பரிசளிப்பு விழாவில், பாகிஸ்தான் அமைச்சரும், ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவருமான மொஹ்சின் நக்வி வெற்றி கிண்ணம் வழங்கியதை இரு அணிகளும் பெற்றுக் கொள்ளவில்லை.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d648285d-7fd5-46df-9d32-16eda3ded70a/26-6aae8f882d47e.webp' /></p><p>
பிசிசிஐயின் உத்தரவின் பேரிலே கிண்ணத்தை பெறவில்லை என கூறப்பட்டது.&nbsp;</p><p></p><p>
ஜப்பானில் இன்று தொடங்கியுள்ள ஆசிய விளையாட்டுப் போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்று, மொஹ்சின் நக்வி பதக்கம் வழங்கினால் இந்தியா பெற மறுக்குமா என கேள்வி எழுந்தது. </p><h3>

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா பதக்கம் பெறுமா?
</h3><p>
ஆசிய கிரிக்கெட் கவுன்சில், ஐசிசியின் கீழ் செயல்பட்டு வந்தது. ஆனால், ஆசிய விளையாட்டுப் போட்டிகள், ஆசிய ஒலிம்பிக் கவுன்சிலின் (OCA) கீழ் நடத்தப்படுகிறது.&nbsp;</p><p></p><p> 

OCA விதிகளின்படி, பதக்கங்கள் OCA தலைவரால் வழங்கப்படுகின்றன. அவர் இந்தப் பொறுப்பை மற்ற OCA உறுப்பினர்களுக்கும், தொடர்புடைய சர்வதேச அல்லது ஆசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகளுக்கும் வழங்கலாம்.&nbsp; </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d98477b0-839f-487f-a585-c2eec37beded/26-6aae8f89905f1.webp' /></p><p>
அப்படி ஒரு சூழல் நிகழ்ந்தால் இந்திய அணி பதக்கங்களை பெற்றுக்கொள்ளுமா என பிசிசிஐ தலைவர் செயலாளர் தேவாஜித் சாய்கியா கேட்கப்பட்ட போது, நாங்கள் போட்டிகளில் மட்டுமே முழு கவனம் செலுத்துகிறோம். 

அணிகள் முதலில் வெற்றி மேடையை அடைய வேண்டும்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2c75268e-d2b8-4dde-9889-ad802eeefca4/26-6aae8f8a45240.webp' /></p><p>அந்த நேரத்தில் நிலவும் அனைத்து காரணிகளையும் கருத்தில் கொண்டு, அப்போது நாங்கள் ஒரு முடிவை எடுப்போம். அது வரும்போது பார்த்துக்கொள்ளலாம்" என தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p>
OCA விதிகளின்படி, வெற்றி விழாக்களின் போது ஆர்ப்பாட்டங்கள், அரசியல், வணிக, மத அல்லது இனப் பிரச்சாரங்களையும் இந்த வழிகாட்டுதல்களை தடை செய்கின்றன.
</p><p>
OCA விதிகள், விளையாட்டுப் போட்டிகள், பதக்கங்கள், கொடிகள், சின்னங்கள் அல்லது சான்றிதழ்களுக்கு அவமரியாதையாகக் கருதப்படும் செயல்களுக்குத் தண்டனைகளை வழங்குகின்றன.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-19T13:39:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பகுதியில் வேனுக்குள் அரங்கேறிய சம்பவம் ; காட்டிக்கொடுத்த இரகசிய தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/incident-unfolds-inside-van-in-tamil-area-1789822156"></link>
            <id>https://jvpnews.com/article/incident-unfolds-inside-van-in-tamil-area-1789822156</id>
            <summary type="text">சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், வேனில் வைத்து ஐஸ் போதைப்பொருளை எடுத்துச் செல்ல முயன்றதாகக் கூறப்படும் ஒருவர், ஒரு தொகை ஐஸ் போதைப்பொருள்...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், வேனில் வைத்து ஐஸ் போதைப்பொருளை எடுத்துச் செல்ல முயன்றதாகக் கூறப்படும் ஒருவர், ஒரு தொகை ஐஸ் போதைப்பொருள் மற்றும் பணத்துடன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p style="text-align: justify; ">

சம்மாந்துறை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின்போதே, சம்மாந்துறை பகுதியைச் சேர்ந்த 40 வயது மதிக்கத்தக்க சந்தேக நபர் ஒருவரை வேனுடன் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6ed28630-3146-4e05-ae8a-af1f01cb8878/26-6aae84cdae425.webp' /></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து ஒரு தொகை ஐஸ் போதைப்பொருளும், போதைப்பொருள் விற்பனை அல்லது கடத்தல் நடவடிக்கைகளுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் ஒரு தொகை பணத்தொகையும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
</p><p style="text-align: justify; ">&nbsp;சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-09-19T13:30:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டை விட்டு தப்பிச் செல்லும் அரசியல்வாதிகள் : புலனாய்வுத்துறைக்கு பறந்த உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/intelligence-bigwigs-fleeing-abroad-by-illness-1789823308"></link>
            <id>https://ibctamil.com/article/intelligence-bigwigs-fleeing-abroad-by-illness-1789823308</id>
            <summary type="text">&amp;nbsp; இலஞ்சக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக இலஞ்ச ஆணையம் அல்லது பிற அமைப்புகள் விசாரணைகளைத் தொடங்கிய பின்னர், உடல்நலக்குறைவு என்று பொய் சொல்லி வெளிநாடு ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; இலஞ்சக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக இலஞ்ச ஆணையம் அல்லது பிற அமைப்புகள் விசாரணைகளைத் தொடங்கிய பின்னர், உடல்நலக்குறைவு என்று பொய் சொல்லி வெளிநாடு செல்ல முயற்சிக்கும் அரசியல்வாதிகள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் குறித்த தகவல்களை விசாரிக்குமாறு புலனாய்வு அமைப்புகளுக்கு அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது.
</p><p>
அதன்படி, பல புலனாய்வு அமைப்புகள் இப்போதெல்லாம் அத்தகைய நபர்களைக் கூர்ந்து கண்காணித்து வருகின்றன.</p><h2>மருத்துவ அறிக்கைகள் உண்மையானவையா&nbsp;என&nbsp;விசாரணை</h2><p>&nbsp;இதற்கிடையில், குற்றம் சாட்டப்பட்ட சில அரசியல்வாதிகள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் சமர்ப்பித்த மருத்துவ அறிக்கைகள் உண்மையானவையா என்பதை உறுதிப்படுத்த விசாரணைகளை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c30f1fbf-d138-4323-8d2b-fa8879987d62/26-6aae8e2c7ea5d.webp' /></p><p>
</p><p>
சில விசாரணைகள் தொடங்கப்பட்ட பின்னர் வெளிநாடுகளிலிருந்து திரும்பாத பல அரசியல்வாதிகளையும் உளவு அமைப்புகள் விசாரித்து வருவதாக பாதுகாப்பு வட்டாரங்களில் இருந்து தெரியவருகிறது.</p><p></p><h2>தூதரக மட்டத்திலும் பேச்சு</h2><p>
</p><p>
அவர்களைத் தாயகம் திரும்ப அழைத்து வருவது குறித்து தூதரக மட்டத்திலும் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bff7838e-f05f-4cf9-b5b7-8dc2e7cb1114/26-6aae8e2d326bc.webp' /></p><p>
</p><p>
இதற்கிடையில், பல்வேறு பொதுமன்னிப்புகளின் கீழ் விடுவிக்கப்பட்ட சில நபர்கள் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அவர்களது விடுதலை சட்டபூர்வமானதா என்பதை உறுதி செய்வதே இந்த விசாரணையின் நோக்கம் என நீதித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-19T13:29:32+00:00</updated>
        </entry>
    </feed>
