<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-08-13T09:43:37+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[விஸ்வநாத் &amp; சன்ஸ் படத்தை பார்த்துவிட்டு முதல் விமர்சனம் சொன்ன தெலுங்கு தயாரிப்பாளர்.. படம் எப்படி இருக்கு?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/producer-first-review-about-vishwanath-and-sons-1786614040"></link>
            <id>https://cineulagam.com/article/producer-first-review-about-vishwanath-and-sons-1786614040</id>
            <summary type="text">சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள &#039;விஸ்வநாத் &amp;amp; சன்ஸ்&#039; திரைப்படத்தை பற்றிய தனது முதல் விமர்சனத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தனது சமூக வலைத்தளத்தில் ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள 'விஸ்வநாத் &amp; சன்ஸ்' திரைப்படத்தை பற்றிய தனது முதல் விமர்சனத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.</p><p></p><p> </p><h2>

விஸ்வநாத் &amp; சன்ஸ்</h2><p>
நடிகர் சூர்யா கருப்பு திரைப்படத்தின் மூலம் தனது திரை வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்துவிட்டார். இப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து, மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் ,விஸ்வநாத் &amp; சன்ஸ், திரைப்படம் வெளியாகிறது. இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து <a href="https://www.youtube.com/watch?v=JTHZCJ8Rhxg" target="_blank">மமிதா </a>பைஜூ, ரவீனா டாண்டன், ராதிகா சரத்குமார் ஆகியோர் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் குமார் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5c9b92e1-4a2d-460c-b7c7-6d63ccdb09c6/26-6a7d911c72c11.webp' /></p><p>மாறுபட்ட கதைக்களத்தில் உருவாகியிருக்கும் இப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில், விஸ்வநாத் &amp; சன்ஸ் திரைப்படத்தை பற்றிய தனது முதல் விமர்சனத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் ஸ்வப்னா தத் X பக்கத்தில் தெரிவித்துள்ளார்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/17a6e705-8499-4b4f-a219-32e94384d1d5/26-6a7d911bbb0b9.webp' /></p><h2>ஸ்வப்னா தத்தின் முதல் விமர்சனம்</h2><p>

மிகவும் அழகான வார இறுதி வரவிருக்கிறது. சிரிப்பு, கண்ணீர், நெகிழ்ச்சி என விஸ்வநாத் &amp; சன்ஸ் திரைப்படம் உண்மையிலேயே மனதை நெகிழவைக்கும் படைப்பு. சூர்யா சார் உங்கள் மீது காதல் கொள்ளாமல் இருக்க முடியுமா? மமிதா பைஜூ நீங்கள் ஒரு துடிப்பான ஆற்றல் மிக்கவர்; இப்போது அந்த ஆற்றல் தீப்பொறியாய் ஜொலிக்கிறது.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">The cutest weekend is on the way! <br>Laughs, tears, warmth<a href="https://x.com/hashtag/VishwanathAndSons?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#VishwanathAndSons</a> has <br>so much heart♥️<a href="https://x.com/Suriya_offl?ref_src=twsrc%5Etfw">@Suriya_offl</a> sir, how can one not fall in love with you? <a href="https://x.com/_mamithabaiju?ref_src=twsrc%5Etfw">@_mamithabaiju</a>, you’re a live wire that just caught fire :))</p>&mdash; Swapnadutt Chalasani (@SwapnaDuttCh) <a href="https://x.com/SwapnaDuttCh/status/2087524253260501195?ref_src=twsrc%5Etfw">August 12, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p>]]></content>
            <updated>2026-08-13T09:42:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Fathima</name>
            </author>
            <title type="text"><![CDATA[தேநீர் விருந்தில் கனிமொழி எம்பி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/kanimozhi-at-the-lok-sabha-speakers-tea-party-1786613608"></link>
            <id>https://ibctamilnadu.com/article/kanimozhi-at-the-lok-sabha-speakers-tea-party-1786613608</id>
            <summary type="text">Kanimozhi at Lok Sabha Speakers Tea Party: மக்களவை தலைவர் ஓம் பிர்லாவின் தேநீர் விருந்தில் திமுக எம்பி கனிமொழி கலந்து கொண்டுள்ளது விவாதத்தை கிளப்பியுள...</summary>
            <content type="html"><![CDATA[<p>Kanimozhi at Lok Sabha Speakers Tea Party: மக்களவை தலைவர் ஓம் பிர்லாவின் தேநீர் விருந்தில் திமுக எம்பி கனிமொழி கலந்து கொண்டுள்ளது விவாதத்தை கிளப்பியுள்ளது.
</p><p>
நாடாளுமன்ற மக்களவை கூட்டத்தொடர் கடந்த மாதம் 20ம் தேதி தொடங்கிய நிலையில் இரு அவைகளிலும் இன்றுடன் நிறைவடைந்தது.
</p><p>
இதனை தொடர்ந்து அனைத்து கட்சி எம்பி-களுக்கும் வழக்கம் போல் அவைத்தலைவர் ஓம் பிர்லா தேநீர் விருந்து அளித்தார்.

இதனை காங்கிரஸ் உட்பட இந்தியா கூட்டணி எம்பிக்கள் புறக்கணித்த நிலையில், திமுக நாடாளுமன்ற குழு தலைவர் கனிமொழி எம்பி கலந்து கொண்டார்.
</p><p>
ஏற்கனவே பாஜக-வுடன் திமுக கூட்டணி அமையும் என தமிழகத்தில் விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் இச்செயல் விவாதத்தை மேலும் அதிகரித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/51750236-acee-4505-9c35-b58b13f0e42c/26-6a7d8fc32bec5.webp' /><br></p>]]></content>
            <updated>2026-08-13T09:35:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானில் கணவன் தாக்குதலை தடுத்ததால் தூக்கிலிடப்பட்ட 23 வயதான இளம் பெண்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/23-year-old-marzieh-nieri-hanged-in-iran-1786598914"></link>
            <id>https://canadamirror.com/article/23-year-old-marzieh-nieri-hanged-in-iran-1786598914</id>
            <summary type="text">&amp;nbsp; ஈரானில் பாலியல் தாக்குதலுக்கு முயன்ற ஒருவரிடமிருந்து தற்காப்புக்காகச் செயல்பட்டதாகக் கூறிய 23 வயதான மர்ஸியே நெய்ரி தூக்கிலிடப்பட்டுள்ளார்.

...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; ஈரானில் பாலியல் தாக்குதலுக்கு முயன்ற ஒருவரிடமிருந்து தற்காப்புக்காகச் செயல்பட்டதாகக் கூறிய 23 வயதான மர்ஸியே நெய்ரி தூக்கிலிடப்பட்டுள்ளார்.


அந்தத் தண்டனை 2026 ஆகஸ்ட் 8 அதிகாலை கஸ்வின் மத்திய சிறையில் நிறைவேற்றப்பட்டது.
</p><p>
குடும்ப அழுத்தத்தின் காரணமாக தனது 17-வது வயதில் திருமணம் செய்துகொண்டதாகக் கூறப்படும் நெய்ரி, 2021 அக்டோபரில் தனக்கு 18 வயதாக இருந்தபோது, மதுபோதையில் இருந்த தனது கணவரின் தொழில் கூட்டாளி ஒருவர் தன்னை பாலியல் ரீதியாகத் தாக்க முயன்றதாக தெரிவித்திருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bd10c2e8-b983-4edb-83d4-a96bdcbd7c7f/26-6a7d5603f3682.webp' /></p><h2>கணவரின் தொழில் கூட்டாளி&nbsp;&nbsp;பாலியல் துன்புறுத்தல்</h2><p> 

அப்போது தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்காக சமையலறைக் கத்தியைப் பயன்படுத்தியதாகவும், ஏற்பட்ட மோதலில் அந்த நபரும் தனது கணவரும் உயிரிழந்ததாகவும் அவர் நீதிமன்றத்தில் கூறியிருந்தார்.</p><p> 

சம்பவத்துக்குப் பின்னர் சில நாட்களில் அதிகாரிகளிடம் சரணடைந்த அவர், தனது செயல் தற்காப்புக்காக மேற்கொள்ளப்பட்டது என வாதிட்டபோதும், ஈரான் நீதிமன்றங்கள் அந்த வாதத்தை ஏற்கவில்லை. </p><p>

இதையடுத்து, ஈரானின் ‘கிசாஸ்’ எனப்படும் பழிக்குப் பழி சட்ட நடைமுறையின் கீழ் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. 


 2026ஆம் ஆண்டில் இதுவரை ஈரானில் தூக்கிலிடப்பட்ட பெண்களின் எண்ணிக்கை குறைந்தது 14 ஆக உயர்ந்துள்ளதாக மனித உரிமை அமைப்புகள் தெரிவித்துள்ளன. </p><p>

தன்னை பாலியல் ரீதியாகத் தாக்க முயன்ற ஒருவரைக் கொன்றதாகக் கூறப்பட்ட வழக்கில் 2014ஆம் ஆண்டு தூக்கிலிடப்பட்ட ரெய்ஹானே ஜப்பாரியின் வழக்குடன் நெய்ரியின் வழக்கும் ஒப்பிடப்படுகிறது.
</p><p>
 ஈரானின் இஸ்லாமிய குற்றவியல் சட்டத்தில் ‘கிசாஸ்’ உள்ளிட்ட நடைமுறைகள் மற்றும் பெண்கள் எதிர்கொள்ளும் சட்டப் பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து மனித உரிமை அமைப்புகள் தொடர்ந்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன.</p><p>

 இருப்பினும், நெய்ரி பாலியல் தாக்குதலுக்கு உள்ளானார் என்பது நீதிமன்றத்தால் நிரூபிக்கப்படவில்லை ஆனால் அவர் முன்வைத்தது தற்காப்பு வாதம் என்று செய்திகள் கூறுகிறது</p>]]></content>
            <updated>2026-08-13T09:27:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வறட்சியால் பிரான்சில் சீஸ் உற்பத்தி பாதிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/drought-affect-cheese-production-in-france-1786613066"></link>
            <id>https://news.lankasri.com/article/drought-affect-cheese-production-in-france-1786613066</id>
            <summary type="text">பிரான்சில் நிலவிவரும் வறட்சி காரணமாக சீஸ் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.


பிரான்சில் கடுமையான வெப்பம் நிலவிவருகிறது. அதன் காரணமாக வறட்சி உருவாகியுள...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரான்சில் நிலவிவரும் வறட்சி காரணமாக சீஸ் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
</p><p>

பிரான்சில் கடுமையான வெப்பம் நிலவிவருகிறது. அதன் காரணமாக வறட்சி உருவாகியுள்ளது.
</p><p>
அதனால் நாட்டில் சுமார் 70 சதவிகித பகுதிகளில் தண்ணீர் பயன்பாட்டுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
</p><h3>
வறட்சியால் சீஸ் உற்பத்தி பாதிப்பு</h3><p>

தண்ணீர் கட்டுப்பாடுகளால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள விடயம் விவசாயம் ஆகும்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9f080b2e-3fff-4c47-aa5c-d53735c7ba93/26-6a7d8d4c3ea2d.webp' /></p><p>
அதிக வெப்பம் காரணமாக புல் உலர்ந்துபோனதால் கால்நடைகளுக்கு சரியான உணவு இல்லை.
</p><p>
கால்நடைகளுக்கு புல் இல்லாததால், பால் உற்பத்தியும், தரமும் குறைந்துள்ளன.</p><p></p><p>
</p><p>
ஆக, பால் உற்பத்தி குறைந்துள்ளதுடன் பாலின் தரமும் தேவையான அளவில் இல்லாததால், அதாவது பாலில் தேவையான அளவு கொழுப்பு இல்லாததால், பாலிலிருந்து தயாரிக்கப்படும் சீஸ் என்னும் பாலாடைக்கட்டியின் உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-13T09:24:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தங்களது 5 குழந்தைகளின் முன்னிலையில் திருமணம் செய்த கிறிஸ்டியானோ ரொனால்டோ ! இணையத்தில் வைரல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/cristiano-ronaldo-got-married-his-five-children-1786613018"></link>
            <id>https://jvpnews.com/article/cristiano-ronaldo-got-married-his-five-children-1786613018</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;தங்களது 5 குழந்தைகளின் முன்னிலையில் , போர்ச்சுகல் கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, தனது நீண்ட நாள் காதலியான ஜார்ஜ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;தங்களது 5 குழந்தைகளின் முன்னிலையில் , போர்ச்சுகல் கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, தனது நீண்ட நாள் காதலியான ஜார்ஜினா ரோட்ரிக்ஸை செவ்வாய்க்கிழமை கரம்பிடித்தார்.
</p><p>
போர்ச்சுகல் மற்றும் அல் நஸ்ர் அணியின் நட்சத்திர வீரரான 41 வயதான ரொனால்டோவும், 32 வயதான ஸ்பெயின் மாடல் ரோட்ரிக்ஸும் கடந்த பத்தாண்டுகளாக காதலித்து வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3c8cf796-c1f6-4331-b0c9-fa3bff8b2c81/26-6a7d8d1c6f6a3.webp' /></p><h2>10 ஆண்டுகால காதல்</h2><p>
 இவர்களுக்கு அலானா மார்டினா மற்றும் பெல்லா எஸ்மெரால்டா என்ற இரண்டு மகள்கள் இருக்கின்றனர்.

2017 ஆம் ஆண்டு ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டில் உள்ள ஒரு கூச்சி பேக் விற்பனையகத்தில் விற்பனையாளரான ஜார்ஜினாவை முதல்முறையாகச் சந்தித்ததாகக் கூறப்படுகிறது.</p><p></p><p>
</p><p>அப்போதிலிருந்தே இருவரும் காதலித்து வந்தனர். 

இதற்கிடையில், 2017 ஆம் ஆண்டு நவம்பரில், ஜார்ஜினா மகள் அலானா மார்டினாவைப் பெற்றெடுத்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f88b0de1-4e50-4103-a291-cec792964d64/26-6a7d8d1d27d3b.webp' /></p><p> 
அதற்கு முன், ரொனால்டோவுக்கு வாடகைத் தாய் மூலம் ரொனால்டோ ஜூனியர் மற்றும் மேட்டியோ, ஈவா மரியா என்ற இரட்டைக் குழந்தைகள் பிறந்தன.

ஐந்து குழந்தைகளையும் ஜார்ஜினா மற்றும் ரொனால்டோ இருவரும் வளர்த்து வருகின்றனர்.</p><p>நீண்டகாலமாகவே இருவரும் திருமணம் செய்துகொள்ளாமல் வாழ்ந்து வந்தனர்.

இந்த நிலையில், இருவரும் போர்ச்சுகல் தலைநகர் லிஸ்பனுக்கு அருகிலுள்ள மேற்கு போர்ச்சுகலின் கடலோர நகரான கஸ்காய்ஸில் நேற்று (12) தங்களது 5 குழந்தைகளின் முன்னிலையில் மோதிரம் மாற்றி திருமணம் செய்துகொண்டனர்.&nbsp;</p><p></p><p>இன்னிலையில்&nbsp;&nbsp; கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ திருமண புகைப்படங்கள் இணையங்க்களில்&nbsp; வைரலாகி வருகின்றது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-13T09:21:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலகின் அதிக குடிநீர் வளம் கொண்ட 10 நாடுகள்: முதலிடத்தில் ஐஸ்லாந்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/top-10-countries-with-most-freshwater-1786611333"></link>
            <id>https://news.lankasri.com/article/top-10-countries-with-most-freshwater-1786611333</id>
            <summary type="text">Top 10 countries with most freshwater: உலகில் அதிக குடிநீர் வளம் கொண்ட 10 நாடுகள் பட்டியலை இங்கே பார்க்கலாம்.

உலக அளவில் குடிநீர் வளம் மிக முக்கியம...</summary>
            <content type="html"><![CDATA[<p>Top 10 countries with most freshwater: உலகில் அதிக குடிநீர் வளம் கொண்ட 10 நாடுகள் பட்டியலை இங்கே பார்க்கலாம்.
</p><p>
உலக அளவில் குடிநீர் வளம் மிக முக்கியமான இயற்கை வளமாக கருதப்படுகிறது.</p><p>

பல நாடுகள் வறட்சி, நீர் பற்றாக்குறை, நீர்வள மேலாண்மை சிக்கல்கள் போன்றவற்றை எதிர்கொண்டு வரும் நிலையில், சில நாடுகள் மக்கள் தொகைக்கு ஒப்பிடும்போது மிக அதிக அளவு குடிநீர் வளத்தை பெற்றுள்ளன.
</p><h2>
ஐஸ்லாந்து முதலிடம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/57860fa0-e276-4693-b565-5bcb551545cd/26-6a7d8d0ea2920.webp' /></p><p>சமீபத்தில் வெளியிடப்பட்ட பட்டியலில் ஐஸ்லாந்து முதலிடத்தில் உள்ளது. பனிமலைகள், அதிக மழை, ஆறுகள், ஏரிகள் மற்றும் குறைந்த மக்கள் தொகை ஆகியவை காரணமாக, ஒவ்வொரு நபருக்கும் அதிக அளவு குடிநீர் கிடைக்கிறது.
</p><h2>
அதிக குடிநீர் வளம் கொண்ட 10 நாடுகள்:</h2><ol><li>
ஐஸ்லாந்து</li><li>
கயானா</li><li>
சுரினாம்
</li><li>பூட்டான்
</li><li>பப்புவா நியூ கினி
</li><li>கனடா
</li><li>நோர்வே
</li><li>காபோன்
</li><li>நியூசிலாந்து
</li><li>சாலமன் தீவுகள்
</li></ol><p></p><p>கயானா, சுரினாம், பூட்டான் ஆகியவை அடுத்த இடங்களில் உள்ளன. கயானா மற்றும் சுரினாம் நாடுகள் அடர்ந்த காடுகள், அதிக மழை, குறைந்த மக்கள் தொகை ஆகியவற்றால் குடிநீர் வளத்தில் முன்னணியில் உள்ளன.</p><p>

பூடான் ஹிமாலயப் பகுதியில் அமைந்ததால் பனிமலைகள், ஆறுகள், காடுகள் ஆகியவற்றின் மூலம் அதிக நீர் வளம் பெற்றுள்ளது.


பப்புவா நியூ கினி, கனடா, நோர்வே, காபோன், நியூசிலாந்து, சாலமன் தீவுகள் ஆகியவை பட்டியலில் இடம்பெற்றுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/45f8ac1d-6b48-458d-b500-8920c8529726/26-6a7d8d0de6724.webp' /></p><p>
</p><h2>
கனடா </h2><p>

கனடா உலகின் மிகப்பெரிய ஏரிகள், ஆறுகள், பனிமலைகள் ஆகியவற்றைக் கொண்டதால் குடிநீர் வளத்தில் முன்னணியில் உள்ளது. நோர்வே, நியூசிலாந்து போன்ற நாடுகள் அதிக மழை, பனிமலைகள், ஆறுகள் ஆகியவற்றால் நீர் வளம் பெற்றுள்ளன.
</p><p>
இந்த பட்டியல் காட்டும் முக்கிய அம்சம், புவியியல் அமைப்பு மற்றும் மக்கள் தொகை. அதிக மழை, பனிமலைகள், அடர்ந்த காடுகள் கொண்ட நாடுகள், குறைந்த மக்கள் தொகையால் ஒவ்வொரு நபருக்கும் அதிக அளவு குடிநீர் கிடைக்கிறது.
</p><p>
ஆனால், அதிக நீர் வளம் இருப்பது மட்டுமே போதாது. குடிநீர் அனைவருக்கும் எளிதில் கிடைக்க, அமைப்புகள், மேலாண்மை, புவியியல் சவால்கள் ஆகியவை முக்கிய பங்கு வகிக்கின்றன.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-13T09:21:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவில் இடம்பெற்ற ஹெலிகொப்டர் விபத்தில் இரண்டு இராணுவ வீரர்கள் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/two-us-army-soldiers-killed-texas-helicopter-crash-1786606551"></link>
            <id>https://ibctamil.com/article/two-us-army-soldiers-killed-texas-helicopter-crash-1786606551</id>
            <summary type="text">அமெரிக்காவின் டெக்சாஸில் உள்ள ஃபோர்ட் ஹூட் ,இராணுவ தளத்தைச் சேர்ந்த ஹெலிகாப்டர் ஒன்று விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளாகி உள்ளயுள்ளதாக அந்நாட்டு ஊடகங்...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவின் டெக்சாஸில் உள்ள ஃபோர்ட் ஹூட் ,இராணுவ தளத்தைச் சேர்ந்த ஹெலிகாப்டர் ஒன்று விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளாகி உள்ளயுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.&nbsp;&nbsp;</p><p>குறித்த விபத்து இன்று (13.08.2026) இடம்பெற்றுள்ளது. </p><p>இந்த விபத்தில் இரண்டு அமெரிக்க இராணுவ வீரர்கள் உயிரிழந்ததாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.&nbsp;</p><p></p><h2>இருவர் பலி</h2><p>
</p><p>
</p><p>டெக்சாஸின் மாறில தலைநகரான ஆஸ்டினிலிருந்து சுமார் 60 மைல்கள் (100 கி.மீ.) வடக்கே உள்ள பெல் கவுண்டியில் இந்த விபத்து நிகழ்ந்ததாக கூறப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4f314a79-09b8-4879-8550-7ae035db4f49/26-6a7d8cf589bd5.webp' /></p><p>இந்த ஹெலிகொப்டர்&nbsp; AH-64 வகையை சேர்ந்தது என மேலும் தெரிவிக்கப்படுகிறது.</p><p>இந்நிலையில் குறித்த பகுதியில் ஏற்பட்ட தீயை அணைக்க அந்நாட்டு மீட்புக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr">Two US Army Soldiers Killed in Texas Helicopter Crash<br>Two U.S. Army soldiers were killed Wednesday when an Apache military helicopter from Fort Hood crashed into a field in Bell County, Texas, sparking a large grass fire. The crash occurred about 60 miles (100 km) north of… <a href="https://t.co/T093DSIhXi">pic.twitter.com/T093DSIhXi</a></p>&mdash; RTA English (@rtaenglish1) <a href="https://x.com/rtaenglish1/status/2087773287824892069?ref_src=twsrc%5Etfw">August 13, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-13T09:20:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[வீடு கட்டித் தருவதாக கூறி கோடிக்கணக்கில் மோசடி : பொலிஸாரிடம் சிக்கிய சந்தேகநபர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/housing-scam-worth-crores-through-facebook-1786610401"></link>
            <id>https://tamilwin.com/article/housing-scam-worth-crores-through-facebook-1786610401</id>
            <summary type="text">சமூக ஊடகங்களில் தவணை முறையில் வீடுகளை நிர்மாணித்துத் தருவதாக விளம்பரங்களை வெளியிட்டு, பொதுமக்களிடம் இருந்து கோடிக்கணக்கான ரூபாயை மோசடி செய்ததாகக் கூறப...</summary>
            <content type="html"><![CDATA[<p>சமூக ஊடகங்களில் தவணை முறையில் வீடுகளை நிர்மாணித்துத் தருவதாக விளம்பரங்களை வெளியிட்டு, பொதுமக்களிடம் இருந்து கோடிக்கணக்கான ரூபாயை மோசடி செய்ததாகக் கூறப்படும் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>

இரண்டு நிறுவனங்களை நடத்தி வந்ததாகக் கூறப்படும் சந்தேகநபர், இலகுவான தவணை முறையில் வீடுகளை நிர்மாணித்துத் தருவதாகக் குறிப்பிட்டு, குறிப்பாக முகநூல் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் விளம்பரங்களை வெளியிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><h2>மேற்கொள்ளப்பட்ட விசாரணை</h2><p>
அந்த விளம்பரங்களை நம்பி பலர் பணம் செலுத்தியுள்ள நிலையில், வாக்குறுதியளித்தபடி வீடுகளை நிர்மாணித்துக் கொடுக்காமல், கோடிக்கணக்கான ரூபாயை மோசடி செய்ததாக சந்தேகநபர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/82e86fb7-abeb-4f17-896e-553f34984e42/26-6a7d87ef0e033.webp' /></p><p>
இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், சந்தேகநபர் மிரிஹான சிறப்பு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-13T09:20:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிகப்பு ஆடையில் கிளாமர் லுக்!! சச்சின் மகள் சாரா டெண்டுல்கர் போட்டோஸ்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/sara-tendulkar-recent-red-dress-photos-1786613265"></link>
            <id>https://viduppu.com/article/sara-tendulkar-recent-red-dress-photos-1786613265</id>
            <summary type="text">மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் - சான்யா திருமணம் கடந்த மார்ச் 5 ஆம்தேதி பிரமாண்டமான முறையில் மும்பையில் நடந்து முடிந்தது.சாரா டெ...</summary>
            <content type="html"><![CDATA[<p>மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் - சான்யா திருமணம் கடந்த மார்ச் 5 ஆம்தேதி பிரமாண்டமான முறையில் மும்பையில் நடந்து முடிந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/589acded-47f6-4ca5-8322-40b1ecc2e16c/26-6a7d8e185a5b6.webp' /></p><h2>சாரா டெண்டுல்கர்</h2><p> திருமணத்திற்கு சினிமா பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள் என்று பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்திச்சென்றனர். திருமணத்தில் மணமக்களைவிட அதிகமாக கவனத்தை ஈர்த்தவர்தான் சச்சினின் மகள் சாரா டெண்டுல்கர். </p><p>தனது திறமையால் பல தொழில்களை ஆரம்பித்து வருமானம் ஈட்டி வருகிறார் சார. தற்போது சிகப்புநிற ஆடையணிந்து நிகழ்ச்சி ஒன்றுக்கு சென்றுள்ளார். அங்கு அந்த ஆடையில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-08-13T09:15:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[விலை ரூ.150 மட்டுமே! மாரடைப்பு அபாயத்தை குறைக்கும் மீன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/fish-prevent-heart-attack-1786606115"></link>
            <id>https://news.lankasri.com/article/fish-prevent-heart-attack-1786606115</id>
            <summary type="text">மாரடைப்பு அபாயத்தை எளிதில் குறைக்க கூடியதாக இந்த நன்னீர் மீன்கள் இருக்கிறது. இப்பொழுது நாம் கட்லா மீன்களை பற்றி தான் பார்க்க போகின்றோம்.வாரம் ஒரு முறை...</summary>
            <content type="html"><![CDATA[<p>மாரடைப்பு அபாயத்தை எளிதில் குறைக்க கூடியதாக இந்த நன்னீர் மீன்கள் இருக்கிறது. இப்பொழுது நாம் கட்லா மீன்களை பற்றி தான் பார்க்க போகின்றோம்.<br></p><p>வாரம் ஒரு முறை இந்த மீன்கள் சாப்பிட்டால் உடலுக்கு எண்ணற்ற நன்மைகள் கிடைப்பதாக சொல்லப்படுகிறது.
</p><p>
 இந்த நன்னீர் மீன்களில் உயர்தர புரதம், ஒமேகா- 3 கொழுப்பு அமிலங்கள், வைட்டமின் டி, பி 12, பாஸ்பரஸ், செலினியம் உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் அதிகம் இருக்கின்றன. இவற்றை சாப்பிடுவதால் நமக்கு அதிக அளவில் நன்மைகள் கிடைக்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e25f2092-031b-439e-b9ee-3ae03319c88f/26-6a7d722516432.webp' /></p><p></p><p> </p><p>மேலும், இந்த மீன்களில் புரதம் அதிகம் இருப்பதால் தசைகளை வலுப்படுத்தவும், உடற்பயிற்சிக்கு பிறகு நம்முடைய தசை மீட்கவும் இவை உதவுகிறது.

 குறிப்பாக புரதம் அதிகமாக இருக்கக்கூடிய உணவுகள் நீண்ட நேரம் நம்முடைய வயிறு நிறைந்த உணர்வை கொடுக்கக்கூடியது. இதனால் எடை குறைப்பை நாம் எளிதாக பெறலாம். </p><p>எடை குறைப்பிற்காக பேலன்ஸ் டயட் உணவுகளை பின்பற்றுபவர்கள் இந்த கட்லா மீன்கள் எடுத்துக்கொள்வது மிகவும் நல்லது.

 கட்லா மீன்களில் உள்ள நல்ல கொழுப்புகள் அதிலும் குறிப்பாக ஒமேகா 3 நம்முடைய இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் சிறப்பை கொடுக்கிறது.
</p><p>
இந்த சத்துக்கள் மூளை மற்றும் நம்முடைய நரம்பு மண்டலத்தின் இயல்பான செயல்பாட்டுக்கு உதவுகிறது. அதிலும் ஒமேகா-3 சத்தானது நம்முடைய ரத்தத்தில் இருக்கக்கூடிய கெட்ட கொழுப்பை நீக்கி நல்ல கொழுப்பை அதிகரிக்க உதவுகிறது. </p><p>அதோடு, இரத்த நாளங்களில் கொழுப்பு படிவதை தடுத்து நமக்கு மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தையும் முற்றிலும் குறைக்கிறது.

 கட்லா மீனில் உள்ள கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் வைட்டமின் டி போன்ற சத்துக்கள் நம்முடைய எலும்பு ஆரோக்கியத்தை வலுப்படுத்துகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/465952a7-b721-4d33-9b4f-13d78af9df88/26-6a7d7225cdc5e.webp' /></p><p></p><p> செலினியம் உள்ளிட்ட நுண்ணூட்டச் சத்துக்கள் நம் உடலின் இயல்பான நோய் எதிர்ப்பு செயல்பாட்டிற்கு உதவுகிறது. கட்லா மீன்களை கடல் மீன்களோடு ஒப்பிடும்பொழுது ஆற்று மீன்களில் சோடியம் (உப்பு) அளவு மிகவும் குறைவாக இருக்கிறது. </p><p>அதனால் உயர் ரத்த அழுத்த உள்ளவர்கள், சிறுநீரக பிரச்சனை உள்ளவர்கள் தாராளமாக இந்த கட்லா மீனை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். அதோடு, இந்த கட்லா மீன்களில் இருக்கக்கூடிய வைட்டமின் டி நம்முடைய கண்பார்வை திறனை மேம்படுத்துவதோடு மாலைக்கண் நோய் வராமல் தடுக்க உதவுகிறது. ஆரோக்கியமான கொழுப்புகள் சரும வறட்சியை போக்கி முகத்தை பளபளப்பாகவும் இளமையாகவும் வைத்திருக்க உதவுகிறது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-13T09:14:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/dollar-rate-in-sri-lanka-banks-today-usd-to-lkr-1786612284"></link>
            <id>https://ibctamil.com/article/dollar-rate-in-sri-lanka-banks-today-usd-to-lkr-1786612284</id>
            <summary type="text">இன்றைய நாளுக்கான (13.08.2026) நாணயமாற்று விகிதங்களை இலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) வெளியிட்டுள்ளது.

அதன்படி, அமெரிக்க (USD) டொலர் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இன்றைய நாளுக்கான (13.08.2026) நாணயமாற்று விகிதங்களை இலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) வெளியிட்டுள்ளது.
</p><p>
அதன்படி, அமெரிக்க (USD) டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 329.43 ஆகவும் விற்பனைப் பெறுமதி 338.57 ஆகவும் பதிவாகியுள்ளது.</p><p>

ஸ்ரேலிங் பவுண் (Pound) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 	443.35 ஆகவும் விற்பனைப் பெறுமதி 457.88 ஆகவும் பதிவாகியுள்ளது.</p><p>&nbsp;</p><h2>நாணயமாற்று விகிதம்</h2><p>யூரோ (Euro) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 	378.21 ஆகவும் விற்பனைப் பெறுமதி 391.55 ஆகவும் பதிவாகியுள்ளது.</p><p>கனேடிய (Canada) டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 	234.98 ஆகவும் விற்பனைப் பெறுமதி 243.88 ஆகவும் பதிவாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c4a5843f-8a7b-4212-9c70-0211c084de85/26-6a7d8a3e7eca9.webp' /></p><p>அவுஸ்திரேலிய&nbsp;(Australia) டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 		230.14 ஆகவும் விற்பனைப் பெறுமதி 241.04 ஆகவும் பதிவாகியுள்ளது.&nbsp; &nbsp;</p><p>சிங்கப்பூர் (Singapore) டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 	255.50 ஆகவும் விற்பனைப் பெறுமதி 266.16 ஆகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>&nbsp; செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...</h6></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-13T09:13:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானியாவில் வட்டப் பாதைக்கு கீழ் கண்டெடுக்கப்பட்ட 11 எலும்புக்கூடுகள்: தெரியவந்த கடந்த கால உண்மை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/skeletons-found-beneath-cambridgeshire-roundabout-1786612382"></link>
            <id>https://news.lankasri.com/article/skeletons-found-beneath-cambridgeshire-roundabout-1786612382</id>
            <summary type="text">பிரித்தானியாவின் கேம்பிரிட்ஜ்ஷையர் (Cambridgeshire) பகுதியில் உள்ள வட்டப்பாதையில் 11 மனித எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. கண்டெடுக்கப்பட்ட 11 ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரித்தானியாவின் கேம்பிரிட்ஜ்ஷையர் (Cambridgeshire) பகுதியில் உள்ள வட்டப்பாதையில் 11 மனித எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.</p><h2> கண்டெடுக்கப்பட்ட 11 எலும்புக்கூடுகள்</h2><p>பிரித்தானியாவின் கேம்பிரிட்ஜ்ஷையர் பகுதியில் சிட்டி லிங்க்(City Link) திட்டத்தின் கீழ் நடைபெற்ற கட்டுமானப் பணிகளின்போது பீட்டர்பரோவில் உள்ள குவின்ஸ்கேட் வட்டப்பாதையில் 11 மனித எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4fb3b94f-6214-4f31-9b96-6b8d609dba97/26-6a7d8a9f610e8.webp' /></p><p> இதையடுத்து சம்பவ இடத்திற்கு காவல்துறை அதிகாரிகள் விரைந்து வந்த நிலையில், இது ஏதேனும் குற்ற சம்பவத்துடன் தொடர்புடையதா என்று விசாரணையை தொடங்கினர்.</p><p>ஆனால் மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் குற்றங்களுடன் தொடர்புடையது அல்ல என்றும், வரலாற்று ஆவணங்கள் படி இந்த மனித எலும்புக்கூடுகள் 19ம் நூற்றாண்டை சேர்ந்த இருகாட்டைச் சேர்ந்தது என்பதையும் அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.</p><p></p><p> கிட்டத்தட்ட 160 ஆண்டுகளுக்கு முன்பு இந்த கல்லறையில் அடக்கம் செய்யும் நடைமுறைகள் நிறுத்தப்பட்டுள்ளது.</p><p> 1970 ஆண்டு கீழ்த்தள நடைபாதை அமைக்கும் பணியின் போது கல்லறையின் சில பகுதிகள் அகற்றப்பட்டன.</p><p> தற்போது கட்டுமானப் பணிகள் ஆழமாக நடைபெறுவதால் இந்த எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டு இருப்பதாக பீட்டர்பரோ மாநகராட்சி அதிகாரிகள் விளக்கம் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5ed77348-2118-4cd5-a029-91a032b231fe/26-6a7d8aa01a83e.webp' /></p><h2> மீண்டும் அடக்கம் செய்யப்பட்ட எலும்புக்கூடுகள்</h2><p>
இந்நிலையில் கண்டெடுக்கப்பட்ட 11 எலும்புக்கூடுகளும் உரிய மரியாதையுடன் இங்கிலாந்து திருச்சபையில் உள்ள கல்லறையில் மறு அடக்கம் செய்யப்படுவதை மாநகராட்சி உறுதிப்படுத்தியுள்ளது.</p><p> சிட்டி லிங்க் திட்டத்தின் கீழ் பீட்டர்பரோ ரயில் நிலையத்தில் இருந்து கவ்கேட் வழியாக நகர மையத்திற்கு நடைபயிற்சி மேற்கொள்பவர்கள் மற்றும் சைக்கிள் ஓட்டுபவர்களுக்கு நேரடி வழி உருவாக்கப்பட்டு வருகிறது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">Whatsapp</a> இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-13T09:13:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Malaivanjan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலையின் குறைபாடுகளை கண்டறிய ஜீவன் தொண்டமான் நேரடி விஜயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/jeevan-visits-maskeliya-district-hospital-1786609860"></link>
            <id>https://tamilwin.com/article/jeevan-visits-maskeliya-district-hospital-1786609860</id>
            <summary type="text">மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலையில் நிலவும் குறைபாடுகளை நேரில் சென்று
பார்வையிட்ட இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற
உறுப்பினரு...</summary>
            <content type="html"><![CDATA[<p>மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலையில் நிலவும் குறைபாடுகளை நேரில் சென்று
பார்வையிட்ட இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற
உறுப்பினருமான ஜீவன் தொண்டமான், நோயாளர்களுக்கு தடையற்றதும் தரமானதுமான
சுகாதார சேவையை வழங்குவதற்குத் தேவையான வசதிகளை விரைவில் பெற்றுக்கொடுக்க
நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
</p><p>மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலைக்கு நேற்றைய தினம் (12.08.2026) கண்காணிப்பு விஜயமொன்றை
மேற்கொண்ட ஜீவன் தொண்டமான், வைத்தியசாலையின் தற்போதைய நிலைமை, அங்கு
காணப்படும் அடிப்படை வசதிகளின் குறைபாடுகள் மற்றும் நோயாளர்கள் எதிர்நோக்கும்
பிரச்சினைகள் தொடர்பில் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
</p><p>
இதன்போது, வைத்தியசாலையின் முன்னாள் மாவட்ட வைத்திய அதிகாரியான வைத்தியர்
யு.சு.யு. ரிஷான் உள்ளிட்ட வைத்தியசாலை அதிகாரிகளுடன் அவர் விரிவான
கலந்துரையாடலில் ஈடுபட்டார்.</p><h2>மஸ்கெலியா வைத்தியசாலையின் செயற்பாடு</h2><p>
</p><p>
மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலையின் சீரான செயற்பாட்டிற்கு மொத்தமாக 27
ஊழியர்கள் தேவைப்படும் நிலையில், தற்போது 14 ஊழியர்கள் மாத்திரமே கடமையில்
இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p>

இதனால் 13 ஊழியர்களின் பற்றாக்குறை காணப்படுவதுடன், இந்த நிலைமை
வைத்தியசாலையின் அன்றாட சேவைகளிலும் நோயாளர்களுக்கான சிகிச்சை
நடவடிக்கைகளிலும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியதாக உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/23323dd5-2508-4901-b94a-2bd9ea4a14e6/26-6a7d89544f914.webp' /></p><p>
</p><p>
நோயாளர்களுக்கு தடையின்றி மருத்துவ சேவைகளை வழங்குவதற்கு இந்த ஊழியர்
பற்றாக்குறையை உடனடியாக நிவர்த்தி செய்ய வேண்டியதன் அவசியத்தை ஜீவன் தொண்டமான்
வலியுறுத்தினார்.
</p><p>
நான்கு மாடிகளைக் கொண்ட மஸ்கெலியா வைத்தியசாலையில் பொருத்தப்பட்டுள்ள இரண்டு
மின்தூக்கிகளும் கடந்த ஒன்றரை வருடங்களாக இயங்காத நிலையில் இருப்பதும் இந்த
விஜயத்தின்போது தெரியவந்தது.
</p><p>
இதனால் வயோதிபர்கள், நோயாளர்கள் மற்றும் சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு வரும்
பொதுமக்களை ஒரு மாடியிலிருந்து மற்றொரு மாடிக்கு மாற்றுவதில் பாரிய சிரமங்கள்
ஏற்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
</p><p>
குறைந்த மின் அழுத்தமே மின்தூக்கிகள் இயங்காததற்கான முக்கிய காரணமாக
தெரிவிக்கப்பட்ட நிலையில், மின்சார இணைப்பை சீரமைத்து இரண்டு
மின்தூக்கிகளையும் விரைவில் இயங்கச் செய்வதற்கான நடைமுறைத் தீர்வை
பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.
</p><p>
70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களுக்கு சேவை வழங்கும் வைத்தியசாலையாக
மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலை காணப்படுகின்ற போதிலும், முறையான வைத்திய
ஆய்வுக்கூட வசதி இல்லாதிருப்பது பாரிய குறைபாடாக சுட்டிக்காட்டப்பட்டது.
</p><p>
இரத்த மாதிரிகள் உள்ளிட்ட பல்வேறு மருத்துவப் பரிசோதனைகளுக்காக மாதிரிகளை
டிக்கோயா - கிளங்கன் வைத்தியசாலைக்கு அனுப்ப வேண்டிய நிலை காணப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/17d0fa46-1227-4b9a-ba44-72614761ab9f/26-6a7d8955229a9.webp' /></p><h2>நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை</h2><p>
</p><p>
அங்கிருந்து பரிசோதனை முடிவுகள் கிடைக்கும் வரை நோயாளர்கள் நீண்ட நேரம்
காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுவதால், சிகிச்சை வழங்குவதிலும் தாமதம்
ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டது.

எனவே, மஸ்கெலியா வைத்தியசாலையிலேயே தேவையான அடிப்படை ஆய்வுக்கூட வசதிகளை
ஏற்படுத்துவது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ஜீவன்
தொண்டமான் வலியுறுத்தினார்.</p><p>

இதனுடன், வைத்தியசாலையில் காணப்படும் நோயாளர் காவுவண்டி அடிக்கடி பழுதடைவதால்,
அவசர சிகிச்சை தேவைப்படும் நோயாளர்களை மேலதிக சிகிச்சைக்காக ஏனைய
வைத்தியசாலைகளுக்கு மாற்றுவதில் காலதாமதம் ஏற்படுவதாகவும் அதிகாரிகள்
தெரிவித்தனர்.
</p><p>
நோயாளர்களின் உயிர் பாதுகாப்புடன் தொடர்புடைய விடயம் என்பதால், நோயாளர்
காவுவண்டியை முறையாக பராமரிப்பதுடன், அவசர தேவைகளின் போது பயன்படுத்தக்கூடிய
மாற்று ஏற்பாடுகளையும் மேற்கொள்ள வேண்டியது அவசியம் என நாடாளுமன்ற உறுப்பினர்
ஜீவன் தொண்டமான் சுட்டிக்காட்டினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8370ab4b-4771-4de5-9701-27a8d02dbba3/26-6a7d8955eca41.webp' /></p><p>
</p><p>
வைத்தியசாலையில் நேரில் கண்டறியப்பட்ட குறைபாடுகள் தொடர்பில் நுவரெலியா மாவட்ட
செயலாளருக்கு உடனடியாக தொலைபேசி ஊடாகத் தெரியப்படுத்தியுள்ளதாக ஜீவன்
தொண்டமான் தெரிவித்தார்.
</p><p>
மேலும், குறித்த பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வுகளை பெற்றுக்கொடுக்கும்
நோக்கில் மாவட்ட செயலாளரை இன்றைய தினம் (13.08.2026)&nbsp; நேரடியாக சந்தித்து
கலந்துரையாடவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-13T09:09:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தெற்கு லண்டனில் 25 வயதான பேருந்து ஓட்டுநர் சுட்டுக் கொலை ; நண்பர்கள் உருக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/25-year-old-bus-driver-shot-dead-in-south-london-1786609837"></link>
            <id>https://canadamirror.com/article/25-year-old-bus-driver-shot-dead-in-south-london-1786609837</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;தெற்கு லண்டனின் கிளாப்ஹாம் (Clapham) பகுதியில் உள்ள பப் ஒன்றுக்கு வெளியே 25 வயதான பேருந்து ஓட்டுநர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;தெற்கு லண்டனின் கிளாப்ஹாம் (Clapham) பகுதியில் உள்ள பப் ஒன்றுக்கு வெளியே 25 வயதான பேருந்து ஓட்டுநர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. </p><p>

லண்டன் பெருநகரக் காவல் துறையினரால் (Metropolitan Police) ஆகஸ்ட்-மேரி பைல்-அகா அமோவா (Auguste-Marie Bile-aka Amoa) என அடையாளப்படுத்தப்பட்ட அந்த இளைஞர், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/95378f96-fa19-41e0-8536-d5e960c30b87/26-6a7d80aef01db.webp' /></p><h2>அவர் மிகவும் அமைதியானவர், கடின உழைப்பாளி</h2><p>
</p><p>
வில்லிங்டன் சாலையில் (Willington Road) உள்ள தி லேண்டர் (The Landor) பப் அருகே திங்கள்கிழமை இரவு துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டதாகக் காவல் துறைக்குத் தகவல் கிடைத்தது. </p><p>நான்கு முறை துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டதாகக் கூறிய அப்பகுதி மக்கள், சாலையில் இரத்த வெள்ளத்தில் கிடந்த இளைஞருக்கு முதலுதவி செய்ய முயன்றனர். </p><p>

 மருத்துவக் குழுவினரின் தீவிர முயற்சியையும் தாண்டி அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
</p><p>
 சம்பவம் நடந்த சிறிது நேரத்திலேயே, துப்பாக்கிக் காயத்துடன் மருத்துவமனைக்கு வந்த 22 வயதுடைய இளைஞர் ஒருவரைக் கொலை சந்தேகத்தின் பேரில் போலிஸார் கைது செய்தனர். சிகிச்சை பெற்று வரும் அவர், போலிஸாரின் பலத்த காவலில் வைக்கப்பட்டுள்ளார்.</p><p>

உயிரிழந்த இளைஞரின் நண்பர்கள் மற்றும் சக பேருந்து ஓட்டுநர்கள் தெரிவிக்கையில், “அவர் மிகவும் அமைதியானவர், கடின உழைப்பாளி. </p><p>எந்தவொரு குற்றப் பின்னணியும் இல்லாத அவர், தவறான நேரத்தில் தவறான இடத்தில் இருந்ததாலேயே (Wrong Place at Wrong Time) இந்த கொடூர சம்பவத்திற்குப் பலியாகியுள்ளார்” என உருக்கமாகக் கூறினர். </p><p>

கொலைக்கான முகாந்திரம் மற்றும் பின்னணி குறித்துத் தலைமை துப்பறியும் அதிகாரி கிளேர் கைவர் (Claire Guiver) தலைமையிலான சிறப்புக் குழு தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-13T09:05:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தேனிலவை கொண்டாட ATM அட்டை திருடிய 26 வயது யுவதி! இலங்கையில் சம்பவம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/woman-uses-atm-card-to-celebrate-honeymoon-1786603408"></link>
            <id>https://jvpnews.com/article/woman-uses-atm-card-to-celebrate-honeymoon-1786603408</id>
            <summary type="text">&amp;nbsp; தனது தேனிலவைக் கொண்டாடுவதற்காகத் தேவையான பணத்தைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில், வர்த்தகர் ஒருவருக்குச் சொந்தமான ATM அட்டைகளைத் திருடிய 26 வயது யுவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; தனது தேனிலவைக் கொண்டாடுவதற்காகத் தேவையான பணத்தைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில், வர்த்தகர் ஒருவருக்குச் சொந்தமான ATM அட்டைகளைத் திருடிய 26 வயது யுவதி ஒருவர் அத்துருகிரியப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
விசாரணைகளின் போது, குறித்த வர்த்தகரின் கட்டிட நிர்மாணப் பணித்தளத்தில் மேசனாகப் பணியாற்றிய அவரது காதலனின் திட்டம் மற்றும் அறிவுறுத்தலின் பேரிலேயே திருட்டு இடம்பெற்றுள்ளமை தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/abdc9248-39d6-4ec6-81e8-9cb48b193c35/26-6a7d6791acbaa.webp' /></p><h2>வாத்துவ பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தேனிலவு</h2><p>

கொழும்புக்கு வரவிருந்த தனது காதலிக்கு ஒரு இரவு தங்குவதற்கு இடமளிக்குமாறு அந்த மேசன் வர்த்தகரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். </p><p>அதற்கு வர்த்தகர், "தான் வீட்டில் தனியாக வசிப்பதால், அந்த யுவதியுடன் அவரது தாயாரும் வந்தால் மாத்திரமே தங்குவதற்கு அனுமதிக்க முடியும்" என தெரிவித்துள்ளார்.</p><p></p><p>
</p><p>
இதையடுத்து, மேசன் தனது மனைவியையும் மனைவியின் தாயாரையும் வர்த்தகரின் வீட்டுக்கு அழைத்துச் சென்றுவிட்டு, வர்த்தகரின் ATM அட்டைகளைத் திருட காதலிக்கு அறிவுறுத்திவிட்டுச் சென்றுள்ளார்.
</p><p>
மறுநாள் காலை, இருவரும் வர்த்தகருக்குச் சொந்தமான இரண்டு ATM அட்டைகளையும் எடுத்துக் கொண்டு வீட்டிலிருந்து வெளியேறி, குறித்த மேசனைச் சந்தித்துள்ளனர்.</p><p> பின்னர், அந்த ATM அட்டைகளைப் பயன்படுத்தி முதலில் 50,000 ரூபாய் பணத்தைப் பெற்றுள்ளனர்.

தொடர்ந்து, இருவரும் திருமணத்தைப் பதிவுசெய்து கொண்டு, வாத்துவ பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தேனிலவைக் கொண்டாடியமை பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.</p><p></p><p>
</p><p>
இதற்கிடையில், வெலிகம நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த சந்தேகநபரான மேசன், திறந்த பிடியாணை ஒன்றின் அடிப்படையில் வெலிகமப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். </p><p>

அவரைக் கைதுசெய்த சந்தர்ப்பத்தில், அவரிடம் சட்டவிரோதப் போதைப்பொருட்களும் கைப்பற்றப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

கணவன் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து மாத்தறை பகுதிக்குச் சென்ற யுவதி, திருடிய ATM அட்டைகளைப் பயன்படுத்தி மீண்டும் பணத்தைப் பெற்றுள்ளார். </p><p>அந்தப் பணத்தின் மூலம் இரண்டு கையடக்கத் தொலைபேசிகளையும் தங்க நகைகளையும் கொள்வனவு செய்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p></p><p>
</p><p>
இது தொடர்பாகக் கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை ஆரம்பித்த அத்துருகிரியப் பொலிஸார், வங்கிக் கிளைகளில் பொருத்தப்பட்டிருந்த CCTV காட்சிகளை ஆய்வுசெய்து சந்தேகநபரான யுவதியை அடையாளம் கண்டு கைது செய்தனர். </p><p>

கைதான ஹம்பாந்தோட்டை, சிரிபுரப் பகுதியைச் சேர்ந்த குறித்த யுவதி ஒரு குழந்தையின் தாய் என கூறியுள்ள பொலிஸார் மீலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-08-13T09:05:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[பதவியை துறக்கவும் தயார்! ஜனாதிபதி அநுர பகிரங்கமாக வெளியிட்ட தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/president-anura-points-out-ready-to-lose-position-1786610934"></link>
            <id>https://ibctamil.com/article/president-anura-points-out-ready-to-lose-position-1786610934</id>
            <summary type="text">மாற்றத்திற்கான பயணத்தின் போது ஏற்படும் அபாயங்கள் காரணமாக&amp;nbsp; தனது பதவியை இழக்க நேர்ந்தால், பதவியிலிருந்து விலகத் தயாராக இருப்பதாக ஜனாதிபதி அநுர குமா...</summary>
            <content type="html"><![CDATA[<p>மாற்றத்திற்கான பயணத்தின் போது ஏற்படும் அபாயங்கள் காரணமாக&nbsp; தனது பதவியை இழக்க நேர்ந்தால், பதவியிலிருந்து விலகத் தயாராக இருப்பதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
</p><p>
ஜனாதிபதி செயலகத்தில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்துடன் நேற்று(12) நடைபெற்ற கலந்துரையாடலின் போது, ​​ஜனாதிபதி இதனை கூறியுள்ளார்.</p><p>

அபாயங்களை எதிர்கொள்ளாமல் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்று தாம் நம்பவில்லை என்றும், எனவே அந்த அபாயத்தை ஏற்கத் தயாராக இருப்பதாக ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.</p><p></p><h2>ஈஸ்டர் தாக்குதல் விசாரணை</h2><p>
</p><p>
"மாற்றத்தினால் ஏற்படும் அபாயத்தின் காரணமாக நான் எனது பதவியை இழந்தால், அதை ஏற்றுக்கொண்டு பதவியிலிருந்து விலக நான் தயாராக இருக்கிறேன்.," என்று அவர் அதன்போது கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c418db38-cc46-4966-8ca3-6d28b369c9ed/26-6a7d889b03d90.webp' /></p><p>
</p><p>
"நான் உங்களுக்கு ஒரு சிறந்த உதாரணத்தைக் கூறுகிறேன், ஈஸ்டர் தாக்குதல் விசாரணை புலனாய்வுத் துறையால் தொடங்கப்பட்டுள்ளது. எனது பாதுகாப்பிற்கு யார் பொறுப்பு? ஆனால் விசாரணைகள் நடந்துகொண்டிருக்கின்றன அல்லவா? அதில் உயிருக்கு ஆபத்து உள்ளது என்பதை நான் அறிவேன்," என்று ஜனாதிபதி அநுர சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-13T09:04:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பதறவைத்த சம்பவம் ;சிறுமி ஒருவரை அனாதரவாக வீதியில் விட்டு சென்ற முச்சக்கர வண்டி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/wattegama-abandoned-girl-on-the-road-1786612004"></link>
            <id>https://jvpnews.com/article/wattegama-abandoned-girl-on-the-road-1786612004</id>
            <summary type="text">&amp;nbsp; கண்டி - வத்தேகம பொலிஸ் பிரிவுக்குள் உள்ள யட்டிராவன பிரதேசத்தில் இன்று காலை (13) சிறுமி ஒருவரை முச்சக்கர வண்டி வண்டியில் கொண்டு வந்தவர்கள் வீதிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; கண்டி - வத்தேகம பொலிஸ் பிரிவுக்குள் உள்ள யட்டிராவன பிரதேசத்தில் இன்று காலை (13) சிறுமி ஒருவரை முச்சக்கர வண்டி வண்டியில் கொண்டு வந்தவர்கள் வீதியில் இறக்கிவிட்டு தப்பிச்சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
</p><p>
 

தாக்கப்பட்டுள்ள நிலையில் வத்தேகம பொலிஸாரால் மீட்கப்பட்ட சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0e37440d-d471-4e97-9462-b2d4a3b97901/26-6a7d89262458b.webp' /></p><p>
இந்த நிலையில், பத்து வயதிற்கு உட்பட்ட குறித்த சிறுமி தனது பெயர் ஆயிஷா எனவும் தனது தந்தையின் பெயர் ராசிக் எனவும் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.</p><p></p><p>
</p><p>
 சிறுமியில் புகைப்படத்தை வெளியிட்டுள்ள பொலிஸார் , சிறுமி தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் உடனடியாக வத்தேகம பொலிஸாரை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.&nbsp; &nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-13T09:04:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[குறைந்தபட்ச ஊதியம்: ஜேர்மனியில் ஏமாற்றப்படும் லட்சக்கணக்கான பணியாளர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/workers-in-germany-get-less-than-minimum-wage-1786611569"></link>
            <id>https://news.lankasri.com/article/workers-in-germany-get-less-than-minimum-wage-1786611569</id>
            <summary type="text">germany workers get less than minimum wage: ஜேர்மனியில், குறைந்தபட்ச ஊதியம் பெறும் நிலையிலுள்ள பணியாளர்களில் சுமார் 20 லட்சம் பேர் ஏமாற்றப்படுவதாக தொழ...</summary>
            <content type="html"><![CDATA[<p>germany workers get less than minimum wage: ஜேர்மனியில், குறைந்தபட்ச ஊதியம் பெறும் நிலையிலுள்ள பணியாளர்களில் சுமார் 20 லட்சம் பேர் ஏமாற்றப்படுவதாக தொழிலாளர் யூனியன் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
</p><p>

ஜேர்மனியில், சுமார் 60 லட்சம் குறைந்தபட்ச ஊதியம் பெறும் நிலையிலுள்ள பணியாளர்கள் உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.
</p><p>
இந்நிலையில், அவர்களில் 20 லட்சம் பேருக்கு குறைந்தபட்ச ஊதியம் முறையாக வழங்கப்படுவதில்லை என்கிறது ஜேர்மன் தொழிலாளர்கள் யூனியன் கூட்டமைப்பு.</p><h3>

ஏமாற்றப்படும் லட்சக்கணக்கான பணியாளர்கள்</h3><p>

ஒரு பணியாளருக்கு குறைந்தபட்சம் இவ்வளவு ஊதியம் வழங்கப்படவேண்டும் என சட்டம் கூறும்நிலையிலும், சுமார் 20 லட்சம் பேருக்கு அந்த அளவுக்கு ஊதியம் வழங்கப்படுவதில்லையாம்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f26b5cc6-5d30-40fc-af73-fee3eb50bfa4/26-6a7d8773060d2.webp' /></p><p>
அதேபோல, பல இடங்களில் பணியாளர்கள் கூடுதல் நேரம் வேலை செய்ய கட்டாயப்படுத்தப்படும் நிலையில், அதற்கான ஊதியமும் வழங்கப்படுவதில்லையாம்.</p><p>

பணியாளர்களை, பயிற்சி செய்பவர்கள் என போலியாக குறிப்பிட்டு ஏமாற்றுவதும் நடக்கிறதாம்.
</p><p>
குறிப்பாக, உணவகங்கள், சில்லறை வர்த்தகம் மற்றும் விவசாயம் சார்ந்த பணிகளில் இந்த மோசடி நடக்கிறதாம்.&nbsp;</p><p></p><p>
புதிதாக ஜேர்மனிக்கு வருவோரும், புலம்பெயர்ந்தோரும், மொழிப்பிரச்சினை மற்றும் உள்ளூர் தொழிலாளர் சட்டம் குறித்து தெரியாததால், அதிக அளவில் பாதிக்கப்படுகிறார்களாம்.
</p><p>
அவ்வப்போது அதிகாரிகள் சோதனையிட வந்தாலும், புகாரளித்தால் வேலை போய்விடுமோ என பயந்து பணியாளர்கள் புகாரளிப்பதில்லையாம்.
</p><p>
இந்நிலையில், இப்படி சரியாக குறைந்தபட்ச ஊதியம் வழங்காமல் ஏமாற்றுவதால், பணியாளர்களுக்கு முறைப்படி கிடைக்கவேண்டிய ஊதியம், காப்பீடு முதலான விடயங்களுக்கு செல்லவேண்டிய தொகை மற்றும் வரி மூலம் செலுத்தப்படவேண்டிய தொகை என 10 ஆண்டுகளில் சுமார் 64 பில்லியன் யூரோக்கள் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-13T08:59:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[வருட இறுதியில் எல் நினோ நிலை வலுவடையும் சாத்தியம் : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/impact-of-el-nino-will-last-until-april-2027-1786604734"></link>
            <id>https://ibctamil.com/article/impact-of-el-nino-will-last-until-april-2027-1786604734</id>
            <summary type="text">நவம்பர், டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் எல் நினோ நிலை வலுவடையும் சாத்தியக்கூறு அதிகமாக உள்ளதுடன் இதன் தாக்கம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வரை நீடிக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>நவம்பர், டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் எல் நினோ நிலை வலுவடையும் சாத்தியக்கூறு அதிகமாக உள்ளதுடன் இதன் தாக்கம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வரை நீடிக்கக்கூடும் என&nbsp;வளிமண்டலவியல் திணைக்களத்தின் கணிப்புப் பிரிவின் பணிப்பாளர் மெரில் மெண்டிஸ் தெரிவித்துள்ளார். 
</p><p>அத்துடன தற்போது நிலவும் வறட்சியான வானிலை காரணமாக நாட்டின் பல பகுதிகளில் மனித உடலில் உணரப்படும் வெப்பத்தின் அளவு அவதானிக்க வேண்டிய அளவிற்கு உயர்ந்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p>

இதன்படி, தற்போது நிலவும் இந்த வறட்சியான வானிலை முடிவடைந்து, போதுமான மழைவீழ்ச்சியை வரும் ஒக்டோபர் மாதத்திலேயே எதிர்பார்க்க முடியும் என மெரில் மெண்டிஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p></p><h2>மனித உடலில் உணரப்படும் வெப்பநிலை</h2><p> </p><p>

குறிப்பாக கிழக்கு மாகாணத்திலும், மொனராகலை மற்றும் பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களிலும் மனித உடலில் உணரப்படும் வெப்பநிலை கணிசமாக உயர்ந்துள்ளது.</p><p>அதற்கமைய வெளியில் நடமாடும் போது இலகுவான ஆடைகளைப் பயன்படுத்துதல், அவ்வப்போது ஓய்வெடுத்தல் மற்றும் முடிந்தவரை அதிகளவில் நீர் அருந்துதல், நோயாளிகள் மற்றும் முதியவர்கள் குறித்து சிறப்பு கவனம் செலுத்துதல் ஆகிய அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறு திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/43cf8dfd-e4f8-4058-baf7-600994c0388c/26-6a7d86d7047ca.webp' /></p><p> 

நாட்டில் தற்போது தென்மேற்கு பருவப்பெயர்ச்சி வானிலை நிலவுகிறது. 

இதன்படி, மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (13) சில இடங்களில் மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. </p><p>

இதுதவிர, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், முல்லைத்தீவு மாவட்டத்தின் சில இடங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். 

இருப்பினும், வரும் நாட்களில் ஒட்டுமொத்தமாக மழைவீழ்ச்சி குறையும் என எதிர்பார்ப்பதாகப் பணிப்பாளர் சுட்டிக்காட்டியுள்ளார். </p><p>

காற்றின் நிலையைக் கருத்திற்கொள்ளும்போது, வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 30-40 கிலோமீற்றர் வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும்.</p><p></p><h2>எல் நினோ நிலையின் தாக்கம்</h2><p> </p><p>

வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் செப்டம்பர் மாதம் வரை மேலும் வறட்சியான வானிலையே எதிர்பார்க்கப்படுகிறது. </p><p>

மே முதல் செப்டம்பர் வரையிலான தென்மேற்கு பருவப்பெயர்ச்சி காலத்தில் இந்தப் பகுதிகளில் மழை குறைவது சாதாரண நிலை என்ற போதிலும், 'எல் நினோ' (El Niño) நிலை காரணமாக இது மேலும் தீவிரமடையக்கூடும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/64127a2c-8577-4347-a5e5-1d70879b6335/26-6a7d86d7b06c1.webp' /></p><p> </p><p>

எல் நினோ நிலையின் தாக்கம் குறித்து தெளிவுபடுத்திய மெரில் மெண்டிஸ் "இந்த ஆண்டில் நமக்கு இன்னும் எல் நினோ நிலையின் அதிகபட்சத் தாக்கத்தைக் காண முடியவில்லை. ஓகஸ்ட் மாதத்துடன் அதன் வளர்ச்சியை நாம் அவதானிக்க முடியும்.</p><p> எவ்வாறாயினும், நவம்பர், டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்கள் ஆகும்போது இந்த எல் நினோ நிலை வலுவடையும் சாத்தியக்கூறு 80 சதவீதத்துக்கும் அதிகமாக உள்ளது. இதன் தாக்கம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வரை நீடிக்கக்கூடும்." என தெரிவித்தார்: </p><p>
மேலும், ஒக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் நாடு முழுவதும் மழைவீழ்ச்சி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும், எல் நினோ நிலையின் தாக்கம் காரணமாக அடுத்த ஆண்டின் முதல் காலாண்டில் மீண்டும் மழைவீழ்ச்சி குறைவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-13T08:56:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA['மொத ராத்திரி' திரைப்படத்தின் டிரைலர்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/modha-rathri-movie-trailer-1786611156"></link>
            <id>https://cineulagam.com/article/modha-rathri-movie-trailer-1786611156</id>
            <summary type="text">நடிகை அனிஷ்மா அனில்குமார், நடிகர் ரிஷிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள &#039;மொத ராத்திரி&#039; திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

அனிஷ்மா அனில்குமார்

ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>நடிகை அனிஷ்மா அனில்குமார், நடிகர் ரிஷிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள '<a href="https://www.youtube.com/watch?v=cfEKCH5MuWc" target="_blank">மொத ராத்திரி</a>' திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.</p><h2>

அனிஷ்மா அனில்குமார்</h2><p>

சிறை, யூத் ஆகிய திரைப்படங்களில் நடித்து இளைஞர்களின் மனதை கவர்ந்த நடிகை அனிஷ்மா அனில்குமார். இவர் கதாநாயகியாக நடித்து தற்போது உருவாகியுள்ள திரைப்படம்தான் 'மொத ராத்திரி'. இப்படத்தில் கதாநாயகனாக ரிஷிகாந்த் நடித்துள்ளார். </p><h2>

'மொத ராத்திரி' டிரைலர் </h2><p>

இயக்குநர் ராஜா கருப்பசாமி இப்படத்தை இயக்கியுள்ளார். வருகிற ஆகஸ்ட் 21-ஆம் தேதி இப்படம் வெளியாகிறது. இந்நிலையில், 'மொத ராத்திரி' திரைப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது.</p><p> இதோ பாருங்க..</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/cfEKCH5MuWc" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-08-13T08:52:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[சென்னையில் வர உள்ள நீர் மெட்ரோ - திட்ட அறிக்கை தயாரிக்க டெண்டர் வெளியீடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/tender-for-dpr-for-chennai-water-metro-project-1786611039"></link>
            <id>https://news.lankasri.com/article/tender-for-dpr-for-chennai-water-metro-project-1786611039</id>
            <summary type="text">சென்னையில் நீர் மெட்ரோ திட்டத்தை செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறு அறிக்கை மற்றும் விரிவான திட்ட அறிக்கையை தயாரிக்க சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் டெண...</summary>
            <content type="html"><![CDATA[<p>சென்னையில் நீர் மெட்ரோ திட்டத்தை செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறு அறிக்கை மற்றும் விரிவான திட்ட அறிக்கையை தயாரிக்க சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் டெண்டர் கோரியுள்ளது.
</p><h3>
சென்னையில் நீர் மெட்ரோ
</h3><p>
சென்னையில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை சமாளிக்கும் வகையில், நீர் மெட்ரோ திட்டத்தை செயல்படுத்த தமிழ்நாடு அரசு திட்டமிட்டு வருகிறது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/14b0a343-fdcb-486b-98da-066723615492/26-6a7d856112fe6.webp' /></p><p>
சென்னை எண்ணூர் முதல் மாமல்லபுரம் வரை பக்கிங்ஹாம் கால்வாய் வழியாக 53 கிலோ மீட்டர் தூரத்துக்கு அதிநவீன படகுகளை இயக்க பரிசீலித்து வருகிறது. </p><p>

முதற்கட்டமாக நேப்பியர் பாலம் முதல் கோவளம் வரை படகுகளை இயக்க ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.&nbsp;</p><p></p><p>
இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கான விரிவான சாத்தியக்கூறு அறிக்கை மற்றும் விரிவான திட்ட அறிக்கையை தயாரிக்க சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் டெண்டர் கோரியுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c2f0172f-d7bd-4ab8-9916-74280363a977/26-6a7d8561bb7d2.webp' /></p><p>
கடந்த 2023 ஆம் ஆண்டு முதல், கேரள மாநிலம் கொச்சியில் நீர் வழி மெட்ரோ திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-13T08:50:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[செல்போனில் கேம் விளையாடியதால் ஷகீலாவுக்கு நேர்ந்த கதி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/shakeela-neck-surgery-after-mobile-gaming-habit-1786598427"></link>
            <id>https://manithan.com/article/shakeela-neck-surgery-after-mobile-gaming-habit-1786598427</id>
            <summary type="text">mobile gaming led to Shakeela’s surgery : நடிகை ஷகீலா சமீபத்தில் தீவிர உடல்நலப் பிரச்சினை காரணமாக கழுத்தில் அறுவை சிகிச்சை செய்துகொண்டுள்ளார். நீண்ட ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>mobile gaming led to Shakeela’s surgery : நடிகை ஷகீலா சமீபத்தில் தீவிர உடல்நலப் பிரச்சினை காரணமாக கழுத்தில் அறுவை சிகிச்சை செய்துகொண்டுள்ளார். </p><p>நீண்ட நேரம் தவறான உடல் நிலையில் மொபைல் போனைப் பயன்படுத்தியதே தனது உடல்நலப் பிரச்சினைக்கு காரணம் என குறிப்பிட்டு அவர் வெளியிட்டுள்ள எச்சரிக்கை காணொளி தற்போது இணையத்தில் கவனம் ஈர்த்து வருகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4755a107-1a62-42f5-8729-22ff849a6f8d/26-6a7d5889ca57a.webp' /></p><p></p><h2>நடிகை ஷகீலாவின் வைரல் பதிவு&nbsp;</h2><p>குறித்த காணொளியில், அறுவை சிகிச்சைக்குப் பிறகு கழுத்தில் காலர் அணியுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இதையடுத்து, கழுத்துக் காலர் அணிந்தபடி இருக்கும் காட்சிகளையும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது எடுக்கப்பட்ட சில காட்சிகளையும் வீடியோவில் பகிர்ந்துள்ளார்.
</p><p>
தனது உடல்நலப் பிரச்சினை குறித்து பேசிய ஷகீலா, படுக்கையில் ஒருபுறமாகச் சாய்ந்தபடி பல மணி நேரம் மொபைல் போனில் கேம்ஸ் விளையாடியதாகத் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b8164c00-ad2a-4d77-b0ec-4d5e6ac2c8b9/26-6a7d588a7d029.webp' /></p><p>சில நேரங்களில் தொடர்ந்து நான்கு மணி நேரம் வரை கேம்ஸ் விளையாடுவேன் என்றும், டீ அல்லது காபி குடிப்பதற்காக மட்டுமே எழுந்து செல்வேன் என்றும் அவர் கூறினார்.பின்னர் மீண்டும் படுக்கைக்குத் திரும்பி அதே கேமை விளையாடத் தொடங்கிவிடுவேன் என்றும் தெரிவித்துள்ளார்.
</p><p>
அதுமட்டுமின்றி, யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராமில் பல மணி நேரம் ரீல்ஸ்களையும் பார்த்ததாகக் கூறிய அவர், தவறான உடல் நிலையில் நீண்ட நேரம் மொபைல் போனைப் பயன்படுத்தியதும், அளவுக்கு அதிகமாக போனை உபயோகித்ததும் தனது கழுத்தில் உள்ள முக்கிய ரத்த நாளங்களைப் பாதித்ததாகத் தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f19d82ff-8eef-41ea-a18f-e088809edffa/26-6a7d588b2dda1.webp' /></p><p></p><p>இதன் விளைவாக இறுதியில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும், அதற்காக சுமார் ரூ.3 லட்சம் செலவானதாகவும் அவர் கூறினார்.

தற்போது அறுவை சிகிச்சைக்குப் பிறகு படுக்கையில் இருந்து எழுவது, சாப்பிடுவது போன்ற அன்றாட அடிப்படை விஷயங்களுக்குக்கூட மற்றவர்களின் உதவி தேவைப்படுவதாக ஷகீலா தெரிவித்துள்ளார்.</p><p>இந்த அனுபவத்தை பகிர்வதன் மூலம் மொபைல் போன் பயன்பாடு குறித்து மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள ஷகீலா, செல்போனை அத்தியாவசியமான விஷயங்களுக்கு மட்டுமே பயன்படுத்துமாறு கேட்டுக்கொண்டார். தேவையில்லாத வீடியோக்களைத் தொடர்ந்து பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும் என்றும், பயனுள்ள உள்ளடக்கங்களை மட்டுமே பார்க்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.
</p><p>
மேலும், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு செல்போன் மற்றும் பிற கேஜெட்களை அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்த அனுமதிக்க வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

“செல்போன் மிகவும் பயனுள்ள ஒரு பொருள்தான். ஆனால், தேவைக்கு அதிகமாக அதை பயன்படுத்தாதீர்கள். </p><p>நான் செய்த தவறை நீங்களும் செய்ய வேண்டாம். இல்லையென்றால், பணத்தை இழப்பதுடன் தாங்க முடியாத வலியையும் அனுபவிக்க வேண்டியிருக்கும்” என்ற வகையில் தனது அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டு ஷகீலா எச்சரிக்கை விடுத்துள்ளார்.</p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b>&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-13T08:48:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையின் வரலாற்றை மாற்றியமைக்கவுள்ள அநுர! பதவி விலகவும் தயார் என பகிரங்கமாக அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ready-to-face-consequences-anura-1786604816"></link>
            <id>https://tamilwin.com/article/ready-to-face-consequences-anura-1786604816</id>
            <summary type="text">நாட்டின் அரசியலமைப்பிற்கு அப்பாற்பட்டு தனது அதிகாரத்தை பயன்படுத்தப் போவதில்லை என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

இலங்கை சட்டத்தரணி...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டின் அரசியலமைப்பிற்கு அப்பாற்பட்டு தனது அதிகாரத்தை பயன்படுத்தப் போவதில்லை என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
</p><p>
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் பிரதிநிதிகளுடன் நேற்று இடம்பெற்ற சந்திப்பின் போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
“எனது நிர்வாக அதிகாரமோ அல்லது எங்களிடம் உள்ள எந்த அதிகாரமோ அரசியலமைப்பிற்கு அப்பாற்பட்டுப் பயன்படுத்தப்படாது.</p><h2><b>அரசியலமைப்பில் மாற்றம்</b></h2><p> அரசியலமைப்புத் திருத்தங்களின் காரணமாக, முன்னாள் ஜனாதிபதி பதவி விலக வேண்டியிருந்தது. 

நீங்களும் பதவி விலக வேண்டியிருக்கும்&nbsp;என சட்டத்தரணிகளால் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f0a38cea-bae6-4cbb-b57e-0c667e69bf07/26-6a7d82698a140.webp' /></p><p>நான் பதவி விலகத் தயாராகவே உள்ளேன். மக்களின் ஆணையை மீறி ஆட்சியில் இருக்க ஒருபோதும் முயற்சிக்க மாட்டேன் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். </p><p>

மேலும், அரசியலமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான ஆபத்தை ஏற்கத் தயாராக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.</p><p> ஆபத்துக்கள் இல்லாமல் மாற்றம் நிகழும் என்று நான் நினைக்கவில்லை. மாற்றம் எப்போதும் ஆபத்துக்களுடன் ஏற்படுவதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். </p><p>

ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பு சுமார் ஒரு மணித்தியாலங்கள் வரை நீடித்துள்ளது. </p><h3><b>

அரசாங்கம் திட்டமிட்டுள்ள நடவடிக்கை</b></h3><p>இதன்போது நீதிபதிகளின் ஓய்வூதிய வயதெல்லையை நீடிப்பது தொடர்பான 22 ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டதுடன், அது குறித்து இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் கருத்துகளும் ஆலோசனைகளும் இங்கு முன்வைக்கப்பட்டன.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/48bf7657-e35f-4b64-ab91-33c7a8eb2a45/26-6a7d826a43de6.webp' /></p><p>இங்கு முன்வைக்கப்பட்ட அனைத்துக் கருத்துகள் குறித்தும் கவனம் செலுத்திய ஜனாதிபதி, அது தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு மற்றும் நீதிமன்றக் கட்டமைப்பின் மேம்பாட்டிற்காக அரசாங்கம் திட்டமிட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் விளக்கமளித்தார்.
</p><p>
நீதியை நிலைநாட்டும் செயற்பாடானது நீதிமன்றங்களால் மட்டுமே இடம்பெறுவதில்லை என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அது விசாரணைகள், வழக்குத் தாக்கல், நீதிமன்றம் ஆகிய அனைத்துத் துறைகளையும் உள்ளடக்கிய ஒருங்கிணைந்த செயற்பாடாகும்.</p><p>அதன்படி, அந்த செயற்பாடுகளை வலுப்படுத்துவதற்காக சட்டமா அதிபர் திணைக்களம், இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழு, இலங்கை பொலிஸ் மற்றும் அரசாங்க பகுப்பாய்வாளர் திணைக்களம் ஆகிய நிறுவனங்களின் மனிதவளத்தை அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் குறிப்பிட்டார். </p><p>மேலும், இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழுவின் சேவைகளை மாவட்ட மட்டத்தில் பரவலாக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதுடன், பொதுமக்கள் எளிதில் அணுகும் வகையில் மேன்முறையீட்டு நீதிமன்ற நடவடிக்கைகளை மாகாண மட்டத்தில் நடைமுறைப்படுத்துவதற்கான உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.</p>]]></content>
            <updated>2026-08-13T08:38:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[சூரிய கிரகணத்தில் துல்லியமாக சாகசம் செய்த ஒலிம்பிக் ஸ்கேட்போர்டு வீரர்! படு வைரலாகும் வீடியோ]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/olympic-skateboarder-epic-solar-eclipse-moment-1786609295"></link>
            <id>https://manithan.com/article/olympic-skateboarder-epic-solar-eclipse-moment-1786609295</id>
            <summary type="text">Danny Leon performed a jump during the solar eclipse :&amp;nbsp; சுமார் 121 ஆண்டுகளுக்குப் பிறகு ஸ்பெயினில் முழு சூரிய கிரகணம் நேற்று (ஆகஸ்ட் 12) தென்பட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>Danny Leon performed a jump during the solar eclipse :&nbsp; சுமார் 121 ஆண்டுகளுக்குப் பிறகு ஸ்பெயினில் முழு சூரிய கிரகணம் நேற்று (ஆகஸ்ட் 12) தென்பட்ட நிலையில், இந்த அரிய வானியல் நிகழ்வைக் காண மில்லியன் கணக்கான மக்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் திரண்டனர். </p><p>வானில் சூரியனை சந்திரன் முழுமையாக மறைத்த அந்த சில நிமிடங்கள், பார்வையாளர்களுக்கு மறக்க முடியாத அனுபவமாக அமைந்தன. இந்த நிலையில், ஸ்பெயின் ஒலிம்பிக் ஸ்கேட்போர்டிங் வீரர் டேனி லியோன், சூரிய கிரகணத்தை தனது விளையாட்டுத் திறமையுடன் இணைத்து, இந்த அரிய நிகழ்வை மேலும் சுவாரஸ்யமானதாக மாற்றியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6e998813-4714-4039-b5ff-045cc043db88/26-6a7d821bb191f.webp' /></p><p></p><h2>ஒலிம்பிக் ஸ்கேட்போர்டிங் வீரரின் செயல்&nbsp;</h2><p>
சூரியனுக்கு முன்னால் சந்திரன் நகர்ந்து, பகல் நேரத்திலேயே வானம் இருளில் மூழ்கிய அந்த முக்கியமான தருணத்தைத் துல்லியமாகப் பயன்படுத்திய லியோன், ஸ்கேட்போர்டில் பிரமிக்க வைக்கும் வகையில் வானில் தாவினார்.</p><p></p><p> </p><p>அந்தத் தாவுதலின் பின்னணியில் முழு சூரிய கிரகணம் இடம்பெற்றதால், அவர் இருண்ட வானத்திற்கு எதிராக ஒரு நிழல் உருவமாகத் தோன்றிய காட்சி பார்ப்பவர்களை வெகுவாகக் கவர்ந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/65b72a1e-12a7-403e-8b5c-0599d170644c/26-6a7d821c61285.webp' /></p><p>
</p><p>
ஒரே ஒரு வாய்ப்பில் சரியான தருணத்தைப் பிடிக்க வேண்டிய இந்த சாகசக் காட்சி, பின்னர் சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவியது. தனது இந்தச் சாதனையைப் பகிர்ந்த டேனி லியோன், இதனை தனது “வாழ்வின் மிகச் சிறந்த நகர்வு” என வர்ணித்துள்ளார். குறித்த காணொளி தற்பொது இணையத்தில் வைரலாகியுள்ளதுடன் லைக்குகளையும் குவித்து வருகின்றது.</p><p><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/reel/Db89wBgRB3B/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/reel/Db89wBgRB3B/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/reel/Db89wBgRB3B/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by Danny Leon 🦁 (@danny_leon)</a></p></div></blockquote> <script async src="//www.instagram.com/embed.js"></script></p><table class="table table-bordered"><tbody><tr><td><br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-13T08:37:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இஸ்ரேலில் வேலைவாய்ப்பு ; ஏமாற்றிய இருவருக்கு நேர்ந்த கதி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/employment-in-israel-two-arrested-sri-lanka-1786610341"></link>
            <id>https://jvpnews.com/article/employment-in-israel-two-arrested-sri-lanka-1786610341</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;இஸ்ரேலில் வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாகக் கூறி போலி வேலைவாய்ப்பு ஒப்பந்தங்களை தயாரித்து வந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 சந்தேகநபர...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;இஸ்ரேலில் வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாகக் கூறி போலி வேலைவாய்ப்பு ஒப்பந்தங்களை தயாரித்து வந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>

 சந்தேகநபர்கள் இருவரும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் முதலாவது மாடியில் வைத்துகைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>

இதன்போது, சந்தேகநபர்களிடமிருந்து 7 கடவுச்சீட்டுகள், இஸ்ரேல் வேலைவாய்ப்பு ஒப்பந்தங்கள் உள்ளிட்ட பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/18b102a5-48d7-4814-bfe7-0361fc39c431/26-6a7d82a73c438.webp' /></p><p>
</p><p>
இஸ்ரேலில் வேலை பெற்றுத்தருவதாகக் கூறி பல்வேறு நபர்களை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு அழைத்து வந்து, போலி ஒப்பந்தங்களை தயாரித்ததாக சந்தேகநபர்கள் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.</p><p></p><p>
</p><p>
கைதான சந்தேக நபர்கள் இருவரும் இன்று கடுவெல நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-13T08:36:43+00:00</updated>
        </entry>
    </feed>
