<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-09-17T18:17:08+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[மகிந்தவிற்கு ஏற்பட்டுள்ள நிலைமை : விரைவில் நாடு திரும்பவுள்ள ஷிராந்தி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/shiranthi-to-return-to-the-country-soon-1789661275"></link>
            <id>https://ibctamil.com/article/shiranthi-to-return-to-the-country-soon-1789661275</id>
            <summary type="text">சிங்கப்பூரில் உள்ள மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில் மருத்துவ சிகிச்சை பெறும். ஷிராந்தி ராஜபக்ச கூடிய விரைவில் நாடு திரும்ப விரும்புவதாக முன்னாள் ஜனாதி...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிங்கப்பூரில் உள்ள மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில் மருத்துவ சிகிச்சை பெறும். ஷிராந்தி ராஜபக்ச கூடிய விரைவில் நாடு திரும்ப விரும்புவதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் தனிப்பட்ட வழக்கறிஞர் மனோஜ் கமகே தெரிவித்துள்ளார்.
</p><p>
“ மகிந்த ராஜபக்ச முதுமை அடைந்துள்ளார். ஒரு மனைவியாக, அவர் மகிந்த ராஜபக்சவைக் கவனித்துக்கொள்ள விரும்புகிறார். எனவே, கூடிய விரைவில் நாடு திரும்புவதே அவரது நம்பிக்கையாகும்,” என்று அவர் ஊடகங்களிடம் கூறினார்.&nbsp;</p><h2>மகிந்தவுடன் ஷராந்தி இருக்கவேண்டிய நேரம்</h2><p>“இந்த நாட்டைக் காப்பாற்றிய தலைவருக்கு 80 வயது ஆகிவிட்டது இத்தகைய சூழ்நிலையில், இது அவரது மனைவி அவருடன் இருக்க வேண்டிய நேரம்,” என்று கமகே மேலும் வலியுறுத்தினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/81e82c0d-a0eb-4a15-b799-e00124af6a21/26-6aac177f93f02.webp' /></p><p>
</p><p>
ரூ. 10 கோடி வைப்புத்தொகை தொடர்பாக ஷிராந்தி ராஜபக்சவிடம் நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவு (FCID) விசாரணை நடத்தி வரும் நிலையில், “சிரிலிய சவியா” கணக்கில் 10 மில்லியன் வரவு வைக்கப்பட்ட நிலையில், விசாரணைகளில் இருந்து தப்பிக்கும் முயற்சியாகவே ஷிராந்தி நாட்டை விட்டு வெளியேறியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை கமகே மறுத்தார்.</p><p></p><p> </p><h2>FCID-யில் ஷிராந்தி முன்னிலையாவது உறுதி</h2><p>மேலும், ஷிராந்தி மருத்துவ சிகிச்சைக்காக மட்டுமே சிங்கப்பூருக்குச் சென்றதாகவும், FCID-யின் முன் ஆஜராவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றும் அவர் உறுதிப்படுத்தினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/add4de9f-1e10-42b6-875d-e2ce6afd0b15/26-6aac186814f9c.webp' /></p><p>
</p><p>
ஷிராந்திராஜபக்ச செப்டம்பர் 24 அன்று FCID-யின் முன் ஆஜராகுமாறு அழைக்கப்பட்டுள்ளார். அவர் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புறப்படுவதற்கு முன்பு, FCID அதிகாரிகள் அது தொடர்பான எழுத்துபூர்வ உத்தரவை அவரிடம் வழங்கியதாகத் தெரிவிக்கப்படுகிறது.&nbsp; </p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p>&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-17T17:50:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாகிஸ்தானில் செலவுகளைக் கட்டுப்படுத்தக் கடும் நடவடிக்கைகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/strict-measures-in-pakistan-to-curb-expenses-1789667309"></link>
            <id>https://canadamirror.com/article/strict-measures-in-pakistan-to-curb-expenses-1789667309</id>
            <summary type="text">அரசுச் செலவுகளைக் கட்டுப்படுத்துவதற்கும் எரிபொருளைச் சேமிப்பதற்கும் பாகிஸ்தான் அரசு தொடர் கடும் நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தத் தீர்மானித்துள்ளது. 

...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரசுச் செலவுகளைக் கட்டுப்படுத்துவதற்கும் எரிபொருளைச் சேமிப்பதற்கும் பாகிஸ்தான் அரசு தொடர் கடும் நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தத் தீர்மானித்துள்ளது. </p><p>

இன்று (17) வெளியிடப்பட்ட அமைச்சரவைப் பிரிவின் அறிவிப்பின்படி, அரசு வாகனங்களுக்கு ஒதுக்கப்படும் எரிபொருளின் அளவு 50% ஆல் குறைக்கப்பட்டுள்ளது. </p><p>

எனினும் ஆயுதப்படைகள், சட்டத்தை நடைமுறைப்படுத்தும் நிறுவனங்கள், அத்தியாவசிய சேவைகள் மற்றும் கூட்டாட்சி வருவாய் வாரியத்தின் செயல்பாடுகளுக்கு இந்த வரம்பு பொருந்தாது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7d4ce15c-3a0f-4dd8-ad55-cf6de34f0288/26-6aac27ef3e08c.webp' /></p><p> 

குறித்த அறிவிப்பின்படி, 2026/27 நிதியாண்டிற்கான மீண்டும் மீளாத செலவினங்களை வரவு செலவுத் திட்டத்தில் இருந்து மாதந்தோறும் 5% குறைக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.</p><p> 

புதிய வாகனங்கள் கொள்முதல் செய்வது மற்றும் சில பயன்பாட்டுப் பொருட்களை வாங்குவது தற்காலிகமாகத் தடை செய்யப்பட்டுள்ளதுடன், வளர்ச்சித் திட்டங்களுக்கு இந்த வரம்புகள் பொருந்தாது என்றும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p> 

வெளிநாட்டுச் சுற்றுலாக்கள் மற்றும் வெளிநாட்டுப் பயணங்கள் 3 மாத காலத்திற்கு இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன், அத்தியாவசியப் பயணங்களை மேற்கொள்ள வேண்டியிருப்பின் அமைச்சர்கள், ஆலோசகர்கள் மற்றும் இதர தொடர்புடைய அதிகாரிகள் விமானங்களில் சாதாரண வகுப்பிலேயே (Economy class) பயணிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. </p><p>

அரசு நிறுவனங்களின் கூட்டங்களை முடிந்தவரை காணொளி மாநாடு (Video Conference) முறையில் நடத்தவும், வெளிநாட்டுப் பிரதிநிதிகள் வருகை தரும் சந்தர்ப்பங்களைத் தவிர்த்து அரசு சார்பில் அதிகாரப்பூர்வ விருந்துகளை நடத்த வேண்டாம் என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. </p><p>

அரசு நிதியில் நடத்தப்படும் அதிகாரப்பூர்வ கருத்தரங்குகள், பயிற்சித் திட்டங்கள் மற்றும் மாநாடுகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், அத்தியாவசிய சந்தர்ப்பங்களில் அரசின் கேட்போர் கூடங்கள், குழு அறைகள் மற்றும் இதர அதிகாரப்பூர்வ வசதிகளைப் பயன்படுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. </p><p>

இது தவிர, திருமண விழாக்கள் மற்றும் அது தொடர்பான நிகழ்வுகளில் ஒரே ஒரு வகையான உணவை மட்டுமே வழங்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. </p><p>

இதற்கிடையில், பாகிஸ்தானில் உள்ள வணிக மற்றும் வர்த்தக நிறுவனங்களுக்கு தற்போது நடைமுறையில் உள்ள கடைகளை மூடும் நேரங்கள் தொடர்ந்து அமுலில் இருக்கும் என அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. </p><p>

இதன்படி, சாதாரண கடைகள், சந்தைகள் மற்றும் வணிக வளாகங்கள் இரவு 9.00 மணிக்கும், விழா மண்டபங்கள் இரவு 10.00 மணிக்கும் மூடப்பட வேண்டும்.</p><p> 

உணவகங்கள், கேஃபேக்கள் மற்றும் உணவு விற்பனை நிலையங்கள் இரவு 11.00 மணி வரை திறக்கப்பட்டிருக்கலாம் என்பதுடன், பொதி (takeaway) மற்றும் வீட்டிற்கு விநியோகம் செய்யும் (home delivery) சேவைகளுக்கு இந்த நேரக் கட்டுப்பாட்டிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. </p><p>

மருந்தகங்கள், வைத்தியசாலைகள், கிளினிக்குகள், மருத்துவ விநியோகக் கடைகள், எரிபொருள் நிரப்பும் நிலையங்கள், மின்சார வாகன சார்ஜிங் மையங்கள், உடற்பயிற்சிக் கூடங்கள் மற்றும் விளையாட்டு வசதிகள் உள்ளிட்ட சில சேவைகளுக்கு இந்த வரம்பிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. </p><p>

இந்த நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக தேவைப்படும் இடங்களில் தனிப்பட்ட விடயங்கள் அடிப்படையில் விலக்குகளைப் பரிசீலிக்க முடியும் என்றும் பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-17T17:49:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சமூக வலைத்தளப் பதிவுக்காக கைது செய்யப்பட்ட இலங்கையர் அனோஜனுக்கு மரண தண்டனை..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-lankan-anojan-arrested-over-social-media-post-1789667060"></link>
            <id>https://tamilwin.com/article/sri-lankan-anojan-arrested-over-social-media-post-1789667060</id>
            <summary type="text">சமூக வலைத்தளங்களில் நபிகள் தொடர்பாக பிழையானதொரு கருத்தைப் பதிவு செய்ததாகக் கூறி சவுதி அரேபியாவில் கைது செய்யப்பட்ட அனோஜனுக்கு முதற்கட்டமாக ஐந்து வருட ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சமூக வலைத்தளங்களில் நபிகள் தொடர்பாக பிழையானதொரு கருத்தைப் பதிவு செய்ததாகக் கூறி சவுதி அரேபியாவில் கைது செய்யப்பட்ட அனோஜனுக்கு முதற்கட்டமாக ஐந்து வருட சிறைத்தண்டனையும் 3 மில்லியன் சவுதி ரியால் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளது. </p><p> 

இந்தத் தீர்ப்பை எதிர்த்து அனோஜன் தரப்பில் மேன்முறையீடு செய்யப்பட்டிருந்த நிலையில், இன்று(17.09.2026) அதற்கான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. </p><p>

இதன்போது, அனோஜனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. </p><h2>

நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு</h2><p>
அவருக்கான தண்டனையைக் குறைப்பதற்காக அரச தரப்பில் மேற்கொள்ளப்பட்டு வந்த முயற்சிகளுக்கு மத்தியில் வெளியாகியுள்ள இந்தத் தீர்ப்பு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/518a39ea-fb8d-49c9-9eca-1884c69c8058/26-6aac27c08d854.webp' /></p><p>
</p><p>
இந்தத் தகவல் உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே வெளியிடப்படுவதாகவும், அனோஜனுக்காக அடுத்தகட்டமாக மேற்கொள்ளப்பட வேண்டிய சட்டரீதியான மற்றும் பிற முயற்சிகளுக்கு அனைவரினதும் ஒத்துழைப்பும் ஆதரவும் எதிர்பார்க்கப்படுவதாகவும் சமூக செயற்பாட்டாளர் ராஜ்குமார் ரஜீவ்காந்த் தனது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார்.
</p><p>
அத்துடன், இந்த விவகாரம் தொடர்பில் இன, மத அடிப்படையிலான இழிவான அல்லது தூண்டுதலான கருத்துக்களை வெளியிடுவதைத் தவிர்க்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
</p><p>
அனோஜனின் விடுதலைக்காக அனைவரும் ஒன்றிணைந்து குரல் கொடுப்பதுடன், அவரது குடும்பத்தினருக்கு தேவையான ஆதரவையும் வழங்க வேண்டும் என்றும் இலங்கை மக்களிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p>&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-09-17T17:47:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தொடருந்து பயணச்சீட்டுக்களி்ல் ஏற்படவுள்ள மாற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/online-train-tickets-1789664454"></link>
            <id>https://tamilwin.com/article/online-train-tickets-1789664454</id>
            <summary type="text">இனிவரும் காலங்களில் இணையவழியினூடாக தொடருந்து பயணச்சீட்டுக்களைப் பெற்றுக் கொள்ள முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைப் தொடருந்து திணைக்க பொது...</summary>
            <content type="html"><![CDATA[<p>இனிவரும் காலங்களில் இணையவழியினூடாக தொடருந்து பயணச்சீட்டுக்களைப் பெற்றுக் கொள்ள முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இலங்கைப் தொடருந்து திணைக்க பொதுமுகாமையாளர் அலுவலகம் அதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளதுடன், இன்று(17.09.202) தொடக்கம் நடைமுறைக்கு வரவுள்ளது.</p><h2>பயணச்சீட்டுக்களை இணையவழியில்</h2><p>

அதன் பிரகாரம் தொடருந்துப் பயணிகள் பயணச்சீட்டுப் பெற்றுக் கொள்வதற்காக இனிவரும் காலங்களில் தொடருந்து நிலையங்களுக்குச் செல்லத் தேவையில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/35c51f9b-1f91-42f5-8e85-aa964039cd13/26-6aac228ebc63c.webp' /></p><p>
</p><p>
அதற்குப் பதிலாக தாங்கள் இருக்கும் இடத்தில் இருந்தவாறே தொடருந்து பயணச்சீட்டுக்களை இணையவழியினுடாக பெற்றுக் கொள்ள முடியும் என்று அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.</p><p>அதன்பிரகாரம் www.pravesha.lk எனும் இணையத்தளத்தை அணுகுவதன் ஊடாக பயணிகள் தங்கள் பயணச்சீட்டுக்களைப் பெற்றுக் கொள்ள முடியும்.
</p><p>
அதேபோன்று pravesha மொபைல் செயலி ஊடாகவும் தங்களுக்கான பயணச்சீட்டுக்களைப் பெற்றுக் கொள்ள முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-17T17:37:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ்.மாவட்ட மக்களுக்கு புதிய வசதி : அரச உத்தியோகத்தரின் முறைப்பாடுகளை நேரடியாக தெரிவிக்க ஏற்பாடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/gover-employees-to-submit-complaints-directly-1789665567"></link>
            <id>https://ibctamil.com/article/gover-employees-to-submit-complaints-directly-1789665567</id>
            <summary type="text">யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள பிரதேச செயலகங்கள், கிராம அலுவலகங்கள்,
சமுர்த்தி அலுவலகங்கள், சமூக வலுவூட்டல் அலுவலகங்கள் மற்றும் மாவட்டச் செயலகம்
ஆகிய அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள பிரதேச செயலகங்கள், கிராம அலுவலகங்கள்,
சமுர்த்தி அலுவலகங்கள், சமூக வலுவூட்டல் அலுவலகங்கள் மற்றும் மாவட்டச் செயலகம்
ஆகிய அரச அலுவலகங்களில் பொதுமக்கள் அரச சேவைகளைப் பெற்றுக்கொள்ளும் போது
உத்தியோகத்தர்களால் ஏற்படுத்தப்படும் தேவையற்ற காலதாமதங்கள் மற்றும் தடைகள்
தொடர்பான விடயங்கள் குறித்து இன்று முதல் (17.09.2026) அரசாங்க அதிபருக்கு
தொலைபேசி மூலம் நேரடியாகத் தெரிவிக்க முடியும் என யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க
அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்துள்ளார்.</p><p>&nbsp;அதன் பிரகாரம் பொதுமக்கள், அரச அலுவலர்கள் தொடர்பான தமது முறைப்பாடுகளை
076 22 33 000 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அலுவலக நாட்களில் பி. ப. 5.30 மணி
முதல் பி. ப. 6.30 மணி வரை நேரடி அழைப்பு ஊடாகவும் WhatsApp அழைப்பு
ஊடாகவும் தொடர்புகொள்ள முடியும் எனவும் அரசாங்க அதிபர் தெரிவித்தார்.</p><h2>பொதுமக்களின் முறைப்பாடுகளுக்கு உரிய தீர்வு</h2><p>
</p><p>
அலுவலர்கள் தொடர்பான பொதுமக்களின் முறைப்பாடுகளுக்கு உரிய தீர்வுகளை
விரைவாகப் பெற்றுக்கொடுக்கும் நோக்கிலேயே இந்த தொடர்பு இலக்கம்
அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f0deed00-009d-415a-999d-b81ffee9f16a/26-6aac243186d30.webp' /></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-17T17:32:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[தென்னாப்பிரிக்காவில் கண்டெடுக்கப்பட்ட 9 பெண்கள் உடல்: தொடர் கொலையாளியின் செயலா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/9-women-body-found-dead-in-johannesburg-1789665959"></link>
            <id>https://news.lankasri.com/article/9-women-body-found-dead-in-johannesburg-1789665959</id>
            <summary type="text">South Africa 9 Women body Found dead in Johannesburg: ஜோகன்னஸ்பர்க் அருகில் 9 பெண்கள் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது...</summary>
            <content type="html"><![CDATA[<p>South Africa 9 Women body Found dead in Johannesburg: ஜோகன்னஸ்பர்க் அருகில் 9 பெண்கள் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது.</p><h2> கண்டெடுக்கப்பட்ட 9 பெண்கள் உடல்</h2><p>&nbsp;தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகருக்கு வடக்கே 9 பெண்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவத்தில் மிகப்பெரிய அச்சத்தை அப்பகுதியை சுற்றியுள்ள பெண்களிடம் உருவாக்கியுள்ளது.</p><p> இரண்டு மாத இடைவெளிக்குள் மீட்கப்பட்ட இந்த உடல்களிடையே ஏதேனும் பொதுவான தொடர்பு உள்ளதா என காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.</p><p> தென்னாப்பிரிக்க காவல்துறையின் தகவல்படி, சடலமாக மீட்கப்பட்ட பெண்கள் அனைவரும் 20 முதல் 38 வயதுக்கு உட்பட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> அத்துடன் இவர்களில் பலரின் உடல்கள் ஆடை இன்றி நிர்வாணமாகவோ, பாதியளவு ஆடைகளுடனோ உடலில் காயங்களுடன் கண்டெடுக்கப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cdb932d6-005c-4ad0-9ad6-0292c70e0792/26-6aac22a97de8c.webp' /></p><h2> தொடர் கொலையாளியின் செயலா?</h2><p>பாதிக்கப்பட்டவர்களின் வயது, சம்பவ இடங்கள் மற்றும் காலக்கெடு ஆகியவற்றில் உள்ள ஒற்றுமை இந்த கொலை சம்பவங்கள் தொடர் கொலையாளியின்(serial killer) செயலாக இருக்குமோ என்று காவல்துறை அதிகாரிகள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.</p><p>இருப்பினும் இவை தொடர் கொலையாளியின் செயல் என்று யாரும் முன்கூட்டியே முடிவு செய்ய வேண்டாம் என்றும், இதில் தனித் தனி நபர்கள் ஈடுபட்டு இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும் காவல்துறை அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார்.</p><p> கடந்த ஜூலை 17ம் திகதி நடந்த கொலை சம்பவத்தில் இளம் பெண் ஒருவர் கேபிள் டை மூலம் கட்டப்பட்டு நிர்வாணமான நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.</p><p> இதுவே கண்டெடுக்கப்பட்ட 9 உடல்களில் முதல் வழக்காகும். இந்த வழக்கில் சம்பந்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் கொலை செய்யப்பட்ட பெண்ணின் காதலன் பொலிஸார் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.</p><p><br></p>]]></content>
            <updated>2026-09-17T17:26:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[நொர்த் யோர்க்கில் 17 வயது சிறுவன் சுட்டுக்கொலை: 16 வயது சிறுவன் மீது கொலைக் குற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/arrest-made-in-fatal-shooting-of-17-year-old-boy-1789664343"></link>
            <id>https://canadamirror.com/article/arrest-made-in-fatal-shooting-of-17-year-old-boy-1789664343</id>
            <summary type="text">கனடாவின் நொர்த் யோர்க் பகுதியில் 17 வயது சிறுவன் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக 16 வயதுடைய சிறுவன் ஒருவன் கைது செய்யப்பட்டு முதலாம் நிலை கொலைக் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் நொர்த் யோர்க் பகுதியில் 17 வயது சிறுவன் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக 16 வயதுடைய சிறுவன் ஒருவன் கைது செய்யப்பட்டு முதலாம் நிலை கொலைக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>கடந்த திங்கட்கிழமை பிற்பகல் 3:30 மணியளவில் ஜேன் வீதி மற்றும் பின்ச் அவென்யூ வெஸ்ட் சந்திப்பிற்கு அருகில் உள்ள பேருந்து நிறுத்தத்திற்கு அருகே காஷி அகஸ்ட் என்ற சிறுவன் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானார்.</p><p> 
தீவிர காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bea658c8-9058-45d2-9b6f-7438807eeed2/26-6aac1c58dcaf6.webp' /></p><p>
இக்கொலைச் சம்பவம் தொடர்பில் வியாழக்கிழமை கைது செய்யப்பட்ட 16 வயது சிறுவன் மீது முதலாம் நிலை கொலைக் குற்றம் மற்றும் நன்னடத்தை உத்தரவை மீறியமை ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.</p><p>
கனடாவின் இளையோர் குற்றவியல் நீதிச் சட்டத்தின் கீழ் சந்தேகநபரின் பெயர் மற்றும் அடையாளங்களை வெளியிடுவது தடை செய்யப்பட்டுள்ளது.
</p><p>துப்பாக்கிச் சூட்டுக்கான பின்னணி அல்லது காரணம் குறித்து பொலிஸார் இதுவரை எவ்வித தகவலும் வெளியிடவில்லை.
</p><p>இறந்த காஷி அகஸ்டிற்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இந்த வாரத் தொடக்கத்தில் இடம்பெற்றதுடன், அவர் அனைவராலும் விரும்பப்பட்ட ஒரு நல்ல சிறுவன் என உறவினர்களும் நண்பர்களும் நினைவு கூர்ந்தனர்.
</p><p>இச்சம்பவம் தொடர்பில் மேலதிக தகவல்கள் தெரிந்தவர்கள் பொலிஸாரையோ அல்லது குற்றத் தடுப்புப் பிரிவையோ தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-17T17:14:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாளையதினம் பிணை கிடைத்தாலும் வெளியே வரமுடியாத நிலையில் நாமல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/if-namal-granted-bail-18th-he-cannot-be-released-1789664227"></link>
            <id>https://ibctamil.com/article/if-namal-granted-bail-18th-he-cannot-be-released-1789664227</id>
            <summary type="text">சிறிலங்கன் ஏர்லைன்ஸுக்காக ஏர்பஸ் விமானங்களை வாங்கியது தொடர்பான நிதி முறைகேடுகள் மற்றும் பணச்சலவை சம்பவத்தில் சந்தேக நபராகப் பெயரிடப்பட்ட நாடாளுமன்ற உற...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிறிலங்கன் ஏர்லைன்ஸுக்காக ஏர்பஸ் விமானங்களை வாங்கியது தொடர்பான நிதி முறைகேடுகள் மற்றும் பணச்சலவை சம்பவத்தில் சந்தேக நபராகப் பெயரிடப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை, கோட்டை நீதவான் பாசன் அமரசேன 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளதால்,நாளை 18ஆம் திகதி விசாரணைக்கு அழைக்கப்பட்ட வழக்கில் அவருக்கு பிணை கிடைத்தாலும் விடுதலை பெறும் வாய்ப்பை அவர் இழப்பார் என தெரியவருகிறது.
</p><p>
சந்தேக நபர் சார்பில் தாக்கல் செய்யப்பட்டபிணைமனு மீதான உத்தரவு நாளையதினம் வழங்கப்படும் என்று நீதிமன்றம் தெரிவித்தது.</p><h2>நான்காவது சந்தேக நபர்</h2><p>இந்தச் சம்பவத்தில் நாமல் ராஜபக்ச 4வது சந்தேக நபராகப் பெயரிடப்பட்டுள்ளதாக பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டார நீதிமன்றத்தில் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bdad6ee0-3013-430c-abd9-09875db2190c/26-6aac1f8e02004.webp' /></p><p>

 ஏர்பஸ் நிறுவனத்தின் உள் மின்னஞ்சல்கள் மற்றும் தடயவியல் தணிக்கை அறிக்கைகள், இந்தச் சம்பவத்துடன் நாமல் ராஜபக்சவின் தொடர்பை வெளிப்படுத்தியுள்ளதாக குற்றப் புலனாய்வுத் துறை (CID) தெரிவித்துள்ளது.
</p><p>


பிரான்சில் உள்ள ஏர்பஸ் நிறுவனத்துடனான ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, 2 மில்லியன் அமெரிக்க டொலர் (1,454 மில்லியன் யூரோ) தொகை மற்ற நிறுவனங்களுக்கு மாற்றப்பட்டது.</p><p></p><h2>வெளிநாட்டில் உள்ள சந்தேக நபர்கள்</h2><p> </p><p>மேலும், அதன் ஒரு பகுதி முன்னாள் அமைச்சர் சமல் ராஜபக்சவின் மகனான ஷமிந்த ராஜபக்சவின் கணக்குகளில் பெறப்பட்டது.

 இரண்டாவது சந்தேக நபரான பிரியங்கா நியோமாலியும், மூன்றாவது சந்தேக நபரான ஷமிந்த ராஜபக்சவும் வெளிநாட்டில் உள்ளனர், அவர்களைக் கைது செய்ய முடியவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/603caf94-438e-43f3-96c2-e3781d5b045b/26-6aac1f8d4ab89.webp' /></p><p>

 இவ்வழக்கின் முக்கிய சாட்சியான நிமல் பெரேரா, அழுத்தம் காரணமாக அவுஸ்திரேலியா சென்றுள்ளதாக நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் மூலம் தெரிவித்துள்ளார்.
</p><p>


சந்தேக நபருக்காக ஆஜரான ஜனாதிபதி சட்ட ஆலோசகர் அனில் டி சில்வா, தனது கட்சிக்காரர் இலங்கையில் ஒரு அரசியல்வாதி என்பதால், வெளிநாடு சென்று தலைமறைவாக இருக்க வேண்டிய அவசியமில்லை என்று கூறினார். மேலும், பிணைச் சட்டத்தின் கோட்பாடுகளின்படி அவருக்குப் பிணை வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் கோரினார்.
</p><p>
இலஞ்ச ஆணைக்குழுவால் பதிவு செய்யப்பட்ட ஒரு வழக்கு தொடர்பாக நாமல் ராஜபக்ச ஏற்கனவே 18ஆம் திகதி (நாளை) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார், மேலும் குற்றப் புலனாய்வுத் துறையால் பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கு தொடர்பாக அவர் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-17T17:12:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[அநுராதபுரத்தில் சாமி அம்மாவின் அருள்தேடி வந்த லிமினி ராஜபக்‌ஷ]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/limini-rajapaksa-seeking-the-blessings-sami-amma-1789663008"></link>
            <id>https://jvpnews.com/article/limini-rajapaksa-seeking-the-blessings-sami-amma-1789663008</id>
            <summary type="text">அநுராதபுரத்தில் அருள்பாலித்து வரும் சாமி அம்மா (கிரி அம்மா) அவர்களை தரிசித்து, அவர்களிடம் அருள்தேடி, தங்களது எதிர்காலம் தொடர்பாக சாமி ஆடி அருள்வாக்கு ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அநுராதபுரத்தில் அருள்பாலித்து வரும் சாமி அம்மா (கிரி அம்மா) அவர்களை தரிசித்து, அவர்களிடம் அருள்தேடி, தங்களது எதிர்காலம் தொடர்பாக சாமி ஆடி அருள்வாக்கு கேட்பதற்காக நாமல் ராஜபக்‌ஷவின் மனைவி லிமினி ராஜபக்‌ஷ அவர்கள் வருகை தந்திருந்தார்.</p><p>
</p><p></p><p>இந்நிகழ்வில் அன்னாரும் அவருடைய குடும்பத்தினரும் சாமி அம்மாவின் அருளையும் ஆசீர்வாதத்தையும் பெற்றுக்கொண்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/866e67e3-9f68-409f-8163-194705de30d3/26-6aac1721d472e.webp' /></p>]]></content>
            <updated>2026-09-17T16:57:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[நான் புலிதான் ஆனால் விடுதலைப் புலி அல்ல: சர்ச்சைக்கு மேல் சர்ச்சையை கிளப்பும் அர்ச்சுனா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/i-m-a-tiger-but-not-an-ltte-tiger-1789663763"></link>
            <id>https://tamilwin.com/article/i-m-a-tiger-but-not-an-ltte-tiger-1789663763</id>
            <summary type="text">&amp;nbsp;மேடையில்&amp;nbsp; தாம் ஓரு புலி என குறிப்பிட்டது மிருகத்தையே அன்றி&amp;nbsp; தமிழீழ விடுதலைப் புலிகளை அல்ல என யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இர...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;மேடையில்&nbsp; தாம் ஓரு புலி என குறிப்பிட்டது மிருகத்தையே அன்றி&nbsp; தமிழீழ விடுதலைப் புலிகளை அல்ல என யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.
</p><p>‘புலி’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தியமை மற்றும் புலம்பெயர் மக்கள் தொடர்பான பேச்சு குறித்து எழுந்த சர்ச்சை தொடர்பாக அவர் விளக்கமளித்துள்ளார்.
</p><p>தான் 'புலி' என்ற மிருகத்தையே குறிப்பிட்டதாகவும், அது தனக்குப் பிடித்தமான மிருகம் என தெரிவித்துள்ளார்.</p><h2>புலனாய்வுப் பிரிவினரை சந்திக்க தயார்..</h2><p>சிங்கள மக்கள் தங்களை ‘சிங்கம்’ எனக் கூறிக்கொள்வது போல, தான் ‘புலி’ எனக் கூறுவதில் எந்தத் தவறும் இல்லை எனவும், அது தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைக் குறிக்கவில்லை எனவும் அவர் தெளிவுபடுத்தினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e3889a67-7240-4207-89f1-1dbd9e60eb87/26-6aac1a1537951.webp' />&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</p><p>தாம் விடுதலைப் புலிகளின் புலம்பெயர் அமைப்பு என்று கூறவில்லை. வெளிநாடுகளில் வாழும் இலங்கைத் தமிழர்கள், முஸ்லிம்கள் மற்றும் சிங்களவர்களையே 'புலம்பெயர்ந்தோர்' எனக் குறிப்பிட்டதாக தெரிவித்துள்ளார்.</p><p>நாட்டின் மறுசீரமைப்பிற்கு அவர்கள் அளித்த நிதியைப் பெற்றுக்கொண்டு அரசாங்கம் எங்களை ஏமாற்றுகிறது என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
தான் ஒரு மருத்துவராக களுபோவில, பேராதனை ஆகிய மருத்துவமனைகளில் பணியாற்றி, சிங்கள நோயாளிகளுக்கும் சிகிச்சை அளித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><h2>அரசாங்கத்திற்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை</h2><p>
</p><p>ஆயுதம் ஏந்தும் எண்ணம் கொண்டவன் அல்ல என அவர் தெரிவித்துள்ளார்.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் விசாரணைக்கோ அல்லது கைதுக்கோ தான் அஞ்சவில்லை எனக் அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு தன்னை விசாரிக்க விரும்பினால் வாட்ஸ்அப் மூலம் இருப்பிடத்தை அனுப்பினால் போதுமானது எனவும், செருப்பு மற்றும் சாதாரண உடையில் தானாகவே நேரில் வரத் தயார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சாதாரண மனிதர்களை இலக்கு வைப்பதை விட்டுவிட்டு, மத்திய வங்கி பிணைமுறி ஊழலில் தொடர்புடைய அர்ஜுன மகேந்திரன் போன்ற பெரிய குற்றவாளிகள் மீது கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.</p><p>
மேலும், இந்த அரசாங்கத்திற்கு வாக்களிக்குமாறு மக்களுக்குக் கோரிக்கை விடுத்ததற்காகத் தற்போது வெட்கப்படுவதாக அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p><b>YOU MAY LIKE THIS VIDEO..</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/xed1HPmRx3w" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p>]]></content>
            <updated>2026-09-17T16:53:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[வசந்த கரன்னாகொட, யோஷிதவுக்கு எதிரான ஊழல் வழக்கு ; நீதிமன்றம் பிரப்பித்த உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/corruption-case-against-karannagoda-and-yoshitha-1789663881"></link>
            <id>https://jvpnews.com/article/corruption-case-against-karannagoda-and-yoshitha-1789663881</id>
            <summary type="text">ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொட மற்றும் யோஷித ராஜபக்ஷ ஆகியோருக்கு எதிராக கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொட மற்றும் யோஷித ராஜபக்ஷ ஆகியோருக்கு எதிராக கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு இன்று (17) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.</p><p>
</p><p></p><p>இதன்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள பிரதிவாதிகளான வசந்த கரன்னாகொட மற்றும் யோஷித ராஜபக்ஷ ஆகியோர் நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4e05c736-7e38-4daf-a42b-d22c0dc8eeaa/26-6aac1a8b4b751.webp' /></p><p>

சமர்ப்பிக்கப்பட்ட விடயங்களை ஆராய்ந்த பின்னர்,கருத்திற்கொண்ட நீதிமன்றம், இந்த வழக்கை, முன்விளக்க மாநாட்டிற்கு அழைக்குமாறு உத்தரவிட்டது.
</p><p>
தகுந்த தகுதிகளைப் பூர்த்தி செய்யாத பின்னணியில், பிரதிவாதியான யோஷித ராஜபக்ஷவை பிரித்தானியாவின் ரோயல் கடற்படை பயிற்சி முகாமிற்கு பயிற்சிக்காக அனுப்பியதன் மூலம் ஊழல் புரிந்துள்ளதாக குற்றம்சாட்டி கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-17T16:51:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[மலேசியாவில் செம ஸ்டைலிஷ் போட்டோ எடுத்துள்ள அய்யனார் துணை சீரியல் மதுமிதா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/ayyanar-thunai-serial-actress-madhumitha-photos-1789650723"></link>
            <id>https://cineulagam.com/article/ayyanar-thunai-serial-actress-madhumitha-photos-1789650723</id>
            <summary type="text">மதுமிதாசன் டிவியில் எதிர்நீச்சல் சீரியல் செம ரீச், அந்த தொடரை தொடர்ந்து விஜய் டிவியில் அய்யனார் துணை சீரியல் கமிட்டாகி தனது சினிமா பயணத்தை வெற்றிகரமாக...</summary>
            <content type="html"><![CDATA[<h2>மதுமிதா</h2><p>சன் டிவியில் எதிர்நீச்சல் சீரியல் செம ரீச், அந்த தொடரை தொடர்ந்து விஜய் டிவியில் அய்யனார் துணை சீரியல் கமிட்டாகி தனது சினிமா பயணத்தை வெற்றிகரமாக கொண்டு செல்பவர் தான் நடிகை மதுமிதா.</p><p>கன்னட சினிமாவில் இருந்து தமிழ் பக்கம் வந்தவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் கூட்டம் உள்ளது.</p><p>இவர் அண்மையில் மலேசியா டூர் சென்றுள்ளார், அங்கு அவர் ஸ்டைலிஷ் உடையில் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதோ அந்த போட்டோஸ்,</p><p><br></p>]]></content>
            <updated>2026-09-17T16:50:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ்ப்பாண மக்களுக்கு முக்கிய அறிவிப்பு - அரச அலுவலக காலதாமதங்களை குறைக்க அதிரடி நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/important-announcement-for-people-of-jaffna-1789663298"></link>
            <id>https://tamilwin.com/article/important-announcement-for-people-of-jaffna-1789663298</id>
            <summary type="text">யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள பிரதேச செயலகங்கள், கிராம அலுவலகங்கள், சமுர்த்தி அலுவலகங்கள், சமூக வலுவூட்டல் அலுவலகங்கள் மற்றும் மாவட்டச் செயலகம் உள்ளிட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள பிரதேச செயலகங்கள், கிராம அலுவலகங்கள், சமுர்த்தி அலுவலகங்கள், சமூக வலுவூட்டல் அலுவலகங்கள் மற்றும் மாவட்டச் செயலகம் உள்ளிட்ட அரச அலுவலகங்களில் ஏற்படும் காலதாமதங்கள் தொடர்பில் முறைப்பாடு செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
</p><p>
இதற்கமைய, இன்று (17.09.2026) முதல் பொதுமக்கள் தங்களது முறைப்பாடுகளை யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபருக்கு தொலைபேசி மூலம் நேரடியாகத் தெரிவிக்க முடியும் என மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்துள்ளார்.</p><h2>

பொதுமக்களுக்கு விடுக்கப்பட்ட அறிவுறுத்தல்</h2><p>

இந்த நடவடிக்கையின் மூலம் பொதுமக்கள் அரச சேவைகளைப் பெற்றுக்கொள்ளும் போது உத்தியோகத்தர்களால் ஏற்படுத்தப்படும் தேவையற்ற காலதாமதங்கள் மற்றும் தடைகள் தொடர்பில் அரசாங்க அதிபர் இலகுவாக அறிந்துகொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b149eb57-6225-4c67-8dab-eadb06dc8a69/26-6aac187425811.webp' /></p><p>
</p><p>
இதன்படி, பொதுமக்கள் அலுவலர்கள் தொடர்பான தமது முறைப்பாடுகளை 076 22 33 000 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அலுவலக நாட்களில் மாலை 5.30 மணி முதல் 6.30 மணி வரை நேரடி அழைப்பின் ஊடாகப் பதிவு செய்யலாம்.
</p><p>
அத்துடன், WhatsApp அழைப்பு மூலமாகவும் தொடர்புகொள்ள முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>
அலுவலர்கள் தொடர்பான பொதுமக்களின் முறைப்பாடுகளுக்கு விரைவாக உரிய தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கிலேயே இந்த தொடர்பு இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க அதிபர் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p><p><b>YOU MAY LIKE THIS VIDEO..</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/0VExnTldYAE" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-17T16:42:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் 71 வாகனங்களை உடைத்து திருடிய நபர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/mississauga-man-charged-after-71-vehicle-break-1789662804"></link>
            <id>https://canadamirror.com/article/mississauga-man-charged-after-71-vehicle-break-1789662804</id>
            <summary type="text">கனடாவின் ஒன்ராறியோ மாநிலத்தில் உள்ள மிசிசாகா பகுதியில் 71 வாகனங்களை உடைத்து தனியாரின் உடமைகளைத் திருடிய குற்றச்சாட்டில் 34 வயதுடைய நபர் ஒருவரை பீல் பி...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் ஒன்ராறியோ மாநிலத்தில் உள்ள மிசிசாகா பகுதியில் 71 வாகனங்களை உடைத்து தனியாரின் உடமைகளைத் திருடிய குற்றச்சாட்டில் 34 வயதுடைய நபர் ஒருவரை பீல் பிராந்திய பொலிஸார் கைது செய்துள்ளனர்.</p><p>
செப்டம்பர் 3 மற்றும் 6 ஆம் திகதிகளில் அதிகாலை வேளையில் குறிப்பிட்ட குடியிருப்புப் பகுதிகளில் இத்திருட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.</p><p> 
நிரந்தர முகவரியற்ற கோரி லவ்டன் என்ற நபரே கைது செய்யப்பட்டு குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியுள்ளார். 
வாகனங்களின் கண்ணாடிகளை உடைத்தோ அல்லது பூட்டப்படாத கதவுகள் வழியாகவோ உள்ளே நுழைந்து விலையுயர்ந்த பொருட்களைத் திருடியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d4159e0e-e393-4e89-a0f5-7fde25ba0e6e/26-6aac1655d53f3.webp' /></p><p> இதன்போது வாகனங்கள் எதுவும் திருடப்படவில்லை என்பதுடன், சம்பவங்களின் போது வாகனங்களுக்குள் எவரும் இருக்கவில்லை. </p><p>
வேறு இரு நிதி மோசடி வழக்குகள் தொடர்பிலும் இவர் மீது பிடியாணை நிலுவையில் இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.</p><p> தற்போது பிணை விசாரணை நிலுவையில் உள்ள நிலையில் இவர் காவலில் வைக்கப்பட்டுள்ளார். </p><p>
சமூக அமைதியைக் கெடுக்கும் நபர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை இந்தக் கைது உறுதி செய்வதாக பொலிஸ் தலைமை அதிகாரி நிஷான் துரையப்பா தெரிவித்துள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-17T16:38:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[உக்ரைனுக்கு ஆதரவு அளிக்கும் நாடுகள் மீது தாக்குதல் நடத்த திட்டமிடும் ரஷ்யா: போலந்து பிரதமர் எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/poland-prime-minister-warns-russia-s-striking-plan-1789662973"></link>
            <id>https://news.lankasri.com/article/poland-prime-minister-warns-russia-s-striking-plan-1789662973</id>
            <summary type="text">Poland Prime minister warns Russia’s Striking plan: உக்ரைனுக்கு ஆதரவு அளிக்கும் நாடுகள் மீது ரஷ்யா தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருப்பதாக போலந்து பிரதம...</summary>
            <content type="html"><![CDATA[<p>Poland Prime minister warns Russia’s Striking plan: உக்ரைனுக்கு ஆதரவு அளிக்கும் நாடுகள் மீது ரஷ்யா தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருப்பதாக போலந்து பிரதமர் எச்சரித்துள்ளார்.</p><h2> போலந்து பிரதமர் எச்சரிக்கை</h2><p>
உக்ரைனுக்கு ஆதரவு வழங்கும் நாடுகள் மீது ரஷ்யா ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல் நடத்த&nbsp; திட்டமிட்டு வருவதாக போலந்து பிரதமர் டொனால்ட் டஸ்க்(Donald Tusk) எச்சரித்துள்ளார்.</p><p> ரஷ்யாவின் இந்த சதி திட்டத்தில் போலந்தும் தாக்கப்படலாம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>இந்த எச்சரிக்கையை வழங்கிய உளவு அமைப்புகளின் பெயர்களை வெளியிடாமல், தற்போது உக்ரைன்-ரஷ்யா போரானது எந்த திசையை நோக்கி செல்கிறது என்பதை போலந்து பிரதமர் வெளிப்படுத்தியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/abc26986-5257-4e35-a973-f0916861ea71/26-6aac16ff26eb8.webp' /></p><p></p><p> நேட்டோ உறுப்பு நாடுகளின் எல்லைக்கு அருகே ரஷ்ய ராணுவத்தின் நடவடிக்கைகள் தீவிரமடைந்து வரும் நிலையில் போலந்து பிரதமர் இந்த எச்சரிக்கையை தெரிவித்துள்ளார்.</p><p> ரஷ்யாவின் இந்த அச்சுறுத்தல் போலந்து நாட்டுடன் நின்று விடவில்லை. சமீபத்தில் ஜேர்மனியின் லீப்ஜிக் விமான நிலையத்தில் வெடிமருந்துகள் நிரப்பப்பட்ட ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது.</p><p> இந்த அத்துமீறிய தாக்குதலுக்கு ரஷ்யா தான் காரணம் என்று ஜேர்மன் அதிகாரிகள் பகிரங்கமாக குற்றம் சாட்டி வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-09-17T16:36:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரபல ஹோட்டலில் போதைப்பொருளுடன் பிடிபட்ட பிரபல நடிகர்: நீதிமன்றம் பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/actor-fined-rs-5-000-over-cocaine-1789661401"></link>
            <id>https://tamilwin.com/article/actor-fined-rs-5-000-over-cocaine-1789661401</id>
            <summary type="text">கோகோயின் போதைப்பொருளைத் தன்வசம் வைத்திருந்த குற்றத்தை நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்ட பிரபல நடிகர் விஸ்வ கொடிகார&amp;nbsp; கைது செய்யப்பட்ட நிலையில், அவருக்கு...</summary>
            <content type="html"><![CDATA[<p>கோகோயின் போதைப்பொருளைத் தன்வசம் வைத்திருந்த குற்றத்தை நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்ட பிரபல நடிகர் விஸ்வ கொடிகார&nbsp; கைது செய்யப்பட்ட நிலையில், அவருக்கு 5000 ரூபாய் அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.&nbsp;</p><p>இது தொடர்பான வழக்கு இன்று(17.09.2026)&nbsp; விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே கல்கிஸ்ஸ பிரதான நீதவான் காஞ்சனா நெரஞ்சலா சில்வா மேற்கண்டவாறு உத்தரவு பிறப்பித்துள்ளார்.</p><h2>போதைப்பொருளுடன் கைது</h2><p>
வெள்ளவத்தை பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், வெள்ளவத்தை கடற்கரை வீதியிலுள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, நடிகர் விஷ்வ கொடிகார உட்பட ஐவர் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c819c88d-8d6e-4740-8734-a26cd9a8a0ea/26-6aac152bdb945.webp' /></p><p>
</p><p>கைதான போது விஷ்வ கொடிகாரவிடமிருந்து 1,050 மில்லிகிராம் கோகோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக வெள்ளவத்தை பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
</p><p>எதிர்காலத்தில் மீண்டும் இவ்வாறான போதைப்பொருள் குற்றச்சாட்டுகளில் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டால், எவ்வித மன்னிப்பும் இன்றி நேரடியாகப் புனர்வாழ்வு மையத்திற்கு அனுப்பப்படுவீர்கள் என நீதவான் சந்தேகநபர்களுக்குப் பகிரங்க நீதிமன்றத்தில் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.&nbsp;</p><p>விஷ்வ கொடிகார பல்வேறு சிங்களத் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நாடகங்கள் என்பனவற்றில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-09-17T16:28:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[எரிபொருள் சேமிப்பில் கடும் கட்டுப்பாடு - பாகிஸ்தான் மக்களுக்கு அரசு விடுத்துள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/pakistan-government-s-drastic-spending-cuts-1789661242"></link>
            <id>https://tamilwin.com/article/pakistan-government-s-drastic-spending-cuts-1789661242</id>
            <summary type="text">பொதுச் செலவினங்களைக் கட்டுப்படுத்தவும் எரிபொருளைச் சேமிக்கவும் பாகிஸ்தான் அரசாங்கம் அதிரடி நடவடிக்கையொன்றை நடைமுறைப்படுத்தியுள்ளது. 

இந்த விடயம் தொ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொதுச் செலவினங்களைக் கட்டுப்படுத்தவும் எரிபொருளைச் சேமிக்கவும் பாகிஸ்தான் அரசாங்கம் அதிரடி நடவடிக்கையொன்றை நடைமுறைப்படுத்தியுள்ளது. </p><p>

இந்த விடயம் தொடர்பில் இன்று(17.09.2026) அமைச்சரவையில் அறிக்கையொன்றும் வெளியிடப்பட்டுள்ளது. </p><p>

மேற்படி அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்படுவதாவது, </p><p>

அரசு வாகனங்களுக்கு ஒதுக்கப்பட்ட எரிபொருளின் அளவு 50% குறைக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், இந்த வரம்பு ஆயுதப் படைகள், சட்ட அமலாக்க முகமைகள், அத்தியாவசிய சேவைகள் மற்றும் மத்திய வருவாய் வாரியத்தின் செயல்பாடுகளுக்குப் பொருந்தாது என்று கூறப்பட்டுள்ளது.</p><h2>


இறுக்கமான நடைமுறைகள்</h2><p>
தொடர்புடைய அறிக்கையின்படி, 2026/27 நிதியாண்டிற்கான திரும்பத் திரும்ப வராத செலவினங்களை வரவு செலவுத் திட்டத்திலிருந்து மாதத்திற்கு 5% குறைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5bac8803-2aaa-4dba-862a-bd692cb58400/26-6aac13219b0a8.webp' /></p><p>
</p><p>
புதிய வாகனங்கள் மற்றும் சில நீடித்த பொருட்கள் வாங்குவதற்கும் தற்காலிகமாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த கட்டுப்பாடுகள் வளர்ச்சித் திட்டங்களுக்குப் பொருந்தாது என்றும் அந்த அறிக்கை கூறுகின்றது. </p><p>

வெளிநாட்டுப் பயணம் மற்றும் வெளிநாட்டுப் பயணங்கள் 3 மாத காலத்திற்கு இடைநிறுத்தப்பட்டுள்ளன, மேலும் தேவைப்பட்டால், அமைச்சர்கள், ஆலோசகர்கள் மற்றும் பிற தொடர்புடைய அதிகாரிகள் விமானங்களில் சாதாரண பயணிகளுடன் ஒரே வகுப்பில் பயணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
</p><h2>
மட்டுப்படுத்தப்படும் அரசக் கூட்டங்கள்</h2><p>
அரசு நிறுவனங்களின் கூட்டங்களை முடிந்தவரை காணொளிக் கருத்தரங்குகள் மூலம் நடத்தவும், வெளிநாட்டுப் பிரதிநிதிகள் குழுக்கள் வருகை தரும்போது தவிர, அதிகாரப்பூர்வ அரசு விருந்துகளை நடத்த வேண்டாம் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/00aa8c1f-f227-4d08-9251-9b7eca7593c8/26-6aac132269084.webp' /></p><p>
</p><p>

அரசு நிதியுதவியுடன் நடத்தப்படும் அதிகாரப்பூர்வ மாநாடுகள், பயிற்சித் திட்டங்கள் மற்றும் கருத்தரங்குகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், அரசு அரங்குகள், குழு அறைகள் மற்றும் பிற அதிகாரப்பூர்வ வசதிகளை அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

கூடுதலாக, திருமணங்கள் மற்றும் அது தொடர்பான நிகழ்வுகளில் ஒரே ஒரு வகை உணவு மட்டுமே பரிமாறப்பட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.</p><p>

இதற்கிடையில், பாகிஸ்தானில் உள்ள வணிக மற்றும் வர்த்தக நிறுவனங்களுக்கான கடைகளின் தற்போதைய மூடும் நேரங்கள் தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.</p><h2>

இரவு 10 மணிக்கு பின்னர் மூடப்படும் சேவைகள்</h2><p>
அதன்படி, பொதுக் கடைகள், சந்தைகள் மற்றும் வணிக வளாகங்கள் இரவு 9 மணி வரையிலும், பொழுதுபோக்கு இடங்கள் இரவு 10 மணி வரையிலும் மூடப்பட வேண்டும்.</p><p>

உணவகங்கள், சிற்றுண்டிச்சாலைகள் மற்றும் உணவு விற்பனை நிலையங்கள் இரவு 11 மணி வரை திறந்திருக்கலாம், ஆனால் பார்சல் மற்றும் வீட்டு விநியோக சேவைகளுக்கு இந்தக் கட்டுப்பாட்டிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e407e2cd-9717-4ea5-9b06-80bd52d86352/26-6aac13231c0e1.webp' /></p><p>
</p><p>
மருந்தகங்கள், மருத்துவமனைகள், மருத்துவ நிலையங்கள், மருத்துவப் பொருட்கள் விற்பனை நிலையங்கள், எரிபொருள் நிலையங்கள், மின்சார வாகன மின்னேற்றும் நிலையங்கள், உடற்பயிற்சிக் கூடங்கள் மற்றும் விளையாட்டு வசதிகள் உள்ளிட்ட சில சேவைகளுக்கு இந்தக் கட்டுப்பாட்டிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.</p><p>

இந்த நடவடிக்கைகளைச் செயல்படுத்தும்போது, ​​தேவைப்படும் பட்சத்தில் ஒவ்வொரு வழக்கையும் பொறுத்து விலக்குகள் பரிசீலிக்கப்படலாம் என்றும் பாகிஸ்தான் அரசாங்கம் தெரிவித்துள்ளது.</p><p></p><p></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-17T16:19:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[$1 பில்லியன் பணத்தை வெளியேற்றிய வழக்கில் வங்கி அதிகாரிகளுக்கு பிணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/bank-officials-granted-bail-1-billion-outflow-case-1789661966"></link>
            <id>https://jvpnews.com/article/bank-officials-granted-bail-1-billion-outflow-case-1789661966</id>
            <summary type="text">பொருட்களை இறக்குமதி செய்வதாகக் கூறி 1 பில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான பணத்தை சட்டவிரோதமான முறையில் நாட்டிற்கு வெளியே அனுப்பிய சம்பவத்திற்கு உடந...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொருட்களை இறக்குமதி செய்வதாகக் கூறி 1 பில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான பணத்தை சட்டவிரோதமான முறையில் நாட்டிற்கு வெளியே அனுப்பிய சம்பவத்திற்கு உடந்தையாக இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 4 தனியார் வங்கி அதிகாரிகளை பிணையில் விடுவிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.</p><p> </p><p></p><p>கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரமக இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளதுடன், இதன்படி ஒவ்வொரு சந்தேகநபரும் தலா 25,000 ரூபாய் ரொக்கப் பிணையிலும், தலா 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான 2 சரீரப் பிணைகளிலும் விடுவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7825bd65-108d-49f4-a76a-7f28fae81e20/26-6aac131041a66.webp' /></p><p>எனினும், பிணையாளர்கள் நெருங்கிய உறவினர்களாக இருக்க வேண்டும் என்றும் நீதவான் இதன்போது அறிவித்துள்ளார். </p><p>

மேலும், குறித்த வங்கி அதிகாரிகள் அவர்கள் பணிபுரிந்த வங்கி கிளை மற்றும் அதன் தலைமை அலுவலகத்திற்குள் நுழைவதைத் தடை செய்து மற்றொரு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. </p><p>

இதனிடையே, இச்சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மொஹமட் ஜிப்ரி என்ற வர்த்தகரின் பிணை கோரிக்கை இதன்போது நிராகரிக்கப்பட்டுள்ளது. </p><p>

முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களை பரிசீலித்த நீதவான், இச்சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் உள்ள பிரதான சந்தேகநபரான வர்த்தகர் மற்றும் மற்றொரு சந்தேகநபரை வரும் 1 ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-17T16:19:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[கர்ப்பமாக இருக்கும் நடிகை சமந்தா.. திடீரென சென்னைக்கு வந்தது ஏன்?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/samantha-in-chennai-to-host-celebrity-master-chef-1789661895"></link>
            <id>https://cineulagam.com/article/samantha-in-chennai-to-host-celebrity-master-chef-1789661895</id>
            <summary type="text">சமீபத்தில் அவருடைய வளைகாப்பு நிகழ்ச்சியும் நடந்து முடிந்திருந்தது. இந்நிலையில் தற்போது சமந்தா திடீரென ஐதராபாத்தில் இருந்து சென்னைக்கு விமானம் மூலம் வந...</summary>
            <content type="html"><![CDATA[<p>சமீபத்தில் அவருடைய வளைகாப்பு நிகழ்ச்சியும் நடந்து முடிந்திருந்தது. இந்நிலையில் தற்போது சமந்தா திடீரென ஐதராபாத்தில் இருந்து சென்னைக்கு விமானம் மூலம் வந்திருக்கிறார்.</p><p>படங்களில் இருந்து அவர் பிரேக் எடுத்துக் கொண்டிருந்தாலும், டிவியில் தொகுப்பாளராக அவர் இப்போது அறிமுகம் ஆகிறார். தமிழில் சோனி விழா சேனல் நடத்தும் செலிபிரிட்டி மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியின் தொகுப்பாளராக தான் சமந்தா வருகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c427ec63-846e-475c-9f0a-6c8cf5b0e95c/26-6aac12c967ac1.webp' /></p><p>
</p><p>ஷூட்டிங் தற்போது தொடங்கியிருக்கும் நிலையில் அதில் பங்கேற்பதற்காக சமந்தா விமானத்தில் வந்திருக்கிறார். அந்த ஏர்போர்ட் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி இருக்கிறது.
</p><p>செலிபிரிட்டி மாஸ்டர் செப் நிகழ்ச்சியில் பல முக்கிய பிரபலங்கள் போட்டியாளர்களாக வர இருப்பதாகவும் கூறப்படுகிறது. அது யார் யார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.&nbsp;</p><p><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/reel/DdY9zmuhdgm/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/reel/DdY9zmuhdgm/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/reel/DdY9zmuhdgm/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by Prashanth (@prashanth_cinema_world)</a></p></div></blockquote> <script async src="//www.instagram.com/embed.js"></script></p>]]></content>
            <updated>2026-09-17T16:18:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் மோசமாக நடந்துக் கொண்ட கனேடிய பெண் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/canadian-women-arrested-in-sri-lanka-1789617504"></link>
            <id>https://tamilwin.com/article/canadian-women-arrested-in-sri-lanka-1789617504</id>
            <summary type="text">கொழும்பின் புறநகர் பகுதியான கல்கிஸ்ஸ பகுதியில் உள்ள ஒரு மருத்துவ ஆய்வகத்திற்கு சென்று தங்குவதற்கு இடம் கேட்ட கனேடிய பெண் ஒருவர், அங்கு மோசமாக நடந்து க...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பின் புறநகர் பகுதியான கல்கிஸ்ஸ பகுதியில் உள்ள ஒரு மருத்துவ ஆய்வகத்திற்கு சென்று தங்குவதற்கு இடம் கேட்ட கனேடிய பெண் ஒருவர், அங்கு மோசமாக நடந்து கொண்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
பயணப் பையுடன் மருத்துவ மையத்திற்கு வந்த வெளிநாட்டுப் பெண் தங்குவதற்கு இடம் கேட்டுள்ளார். </p><p>அவர் அங்கிருந்து வெளியேற மறுப்பதாகவும், அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டதும் ஊழியர்களிடம் ஆக்ரோஷமாக நடந்து கொண்டதாகவும் அவசர உதவி எண் ஊடாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. </p><h2><b>பெண்ணிடம் மேற்கொண்ட விசாரணை</b></h2><p>இந்த முறைப்பாட்டிற்கமைய, சுற்றுலாப் பிரிவுப் பொறுப்பதிகாரி மிலன் ராஜபதிரன தலைமையிலான குழுவினர் அந்த மருத்துவ ஆய்வகத்திற்கு சென்றனர். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/99912ebe-e67a-47aa-a7d4-a88ed96e73f7/26-6aac11a3a15df.webp' /></p><p>கனேடிய பெண்ணிடம் மேற்கொண்ட விசாரணையில் அவரிடம் செல்லுபடியாகும் விசா அல்லது கடவுச்சீட்டு இல்லை என்பது தெரியவந்துள்ளது. </p><p>சந்தேக நபர் பல ஆண்டுகளுக்கு முன்பு அஹங்கம பகுதியில் வசித்தவர் என்பது விசாரணையில் தெரியவந்தது. </p><p>

இந்நிலையில் கைது செய்யப்பட்ட கனேடிய பெண், நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார். இதன்போது எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது. </p><p>இந்தக் காலப்பகுதியில் அவரை வெலிசர பகுதியில் உள்ள வெளிநாட்டினருக்கான தடுப்பு முகாமிற்கு மாற்றவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. </p>]]></content>
            <updated>2026-09-17T16:13:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பு தெஹிவளையில் கைக்குண்டு தாக்குதல் நடத்தியவரின் பரபரப்பு வாக்குமூலம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/statement-person-who-carried-out-grenade-attack-1789660835"></link>
            <id>https://jvpnews.com/article/statement-person-who-carried-out-grenade-attack-1789660835</id>
            <summary type="text">கொழும்பு தெஹிவளையில் உள்ள வீடொன்றின் மீது கடந்த 11ஆம் திகதி கைக்குண்டு தாக்குதல் நடத்திய நபர் பொலிஸாரிடம் பல அதிர்ச்சி தகவல்களை வெளிப்படுத்தியுள்ளார்....</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு தெஹிவளையில் உள்ள வீடொன்றின் மீது கடந்த 11ஆம் திகதி கைக்குண்டு தாக்குதல் நடத்திய நபர் பொலிஸாரிடம் பல அதிர்ச்சி தகவல்களை வெளிப்படுத்தியுள்ளார்.</p><p></p><p> 

இந்தக் கைக்குண்டு தாக்குதலில் இரண்டு சிறுவர்கள் உயிரிழந்ததுடன் அவர்களின் தந்தை படுகாயமடைந்தார்.</p><h4>மேலதிக விசாரணை</h4><p> </p><p>

சம்பவம் தொடர்பாக பொலிஸ் மா அதிபரின் அறிவுறுத்தலுக்கு அமைய மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சஜீவ மெதவத்தவின் மேற்பார்வையில் பல பொலிஸ் குழுக்கள் விசாரணைகளைத் தொடங்கின.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/70f7639b-3448-4472-8d9c-dfbb39955162/26-6aac0ea5cf324.webp' /></p><p>இவ்வாறான பின்னணியில் கைது செய்யப்பட்ட, கைக்குண்டு தாக்குதலை நடத்திய நபர் மேலதிக விசாரணைகளுக்காக மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவுக்கு இன்று அழைத்துச் செல்லப்பட்டார். </p><p>

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் 2025 ஆம் ஆண்டு நெதிமாலை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டு கடந்த ஜூலை மாதம் 19 ஆம் திகதி பிணையில் விடுதலையாகி வந்தவர் என்பது தெரியவந்துள்ளது. </p><p>

பின்னர் அவர் கடந்த ஓகஸ்ட் முதலாம் திகதி இரத்மலானையில் 'குடு அஞ்சு'வின் நெருங்கிய ஆதரவாளர் ஒருவரை சுட்டுக் கொன்றுள்ளார். </p><p>

அதற்காக போதியாவத்த அவிஷ்க மற்றும் 'கொஸ் மல்லி' ஆகியோர் தனக்கு 5 இலட்சம் ரூபாய் பணமும் 10 கிராம் 'ஐஸ்' போதைப்பொருளும் வழங்கியதாக அவர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார். </p><p>

அதனைத் தொடர்ந்து தெஹிவளை வீட்டிற்கு கைக்குண்டு தாக்குதல் நடத்தும் ஒப்பந்தத்தையும் போதியாவத்த அவிஷ்க மற்றும் 'கொஸ் மல்லி' ஆகியோரே தன்னிடம் ஒப்படைத்ததாக அவர் கூறியுள்ளார். </p><p>

அதன்படி தாக்குதல் நடத்தச் சென்ற முச்சக்கர வண்டியில் கைக்குண்டு வைக்கப்பட்டிருந்ததாகவும், தாக்குதலுக்குரிய வீட்டைக் காட்டுவதற்காக அதில் மற்றொரு நபர் இருந்ததாகவும் சந்தேகநபர் தெரிவித்துள்ளார்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0020574c-7425-4946-bb24-941aca49ef06/26-6aac0ea6a09cb.webp' /></p><p>இருப்பினும், அந்த நபர் தனக்குக் காட்டியது தவறான வீடு என்றும் சந்தேகநபர் பொலிஸாரிடம் கூறியுள்ளார். </p><p>

குறித்த தாக்குதலின் பின்னர் போதியாவத்த அவிஷ்க மற்றும் 'கொஸ் மல்லி' ஆகியோர் தனக்கு ஒரு இலட்சத்து இருபதாயிரம் ரூபாய் பணத்தை வழங்கி, பிபிலை பகுதிக்கு தப்பிச் செல்லுமாறு அறிவுறுத்தியதாக சந்தேகநபர் தெரிவித்துள்ளார்.</p><p> 

பிபிலையில் உள்ள தனது நண்பர் ஒருவரின் வீட்டில் மறைந்திருந்த போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். </p><p>

இதற்கிடையில், தாக்குதலுக்காக வீட்டைக் காட்டிய நபரும் மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். </p><p>

அவரிடம் நடத்திய விசாரணையில், அதற்காக அவிஷ்க மற்றும் 'கொஸ் மல்லி' ஆகியோர் இருபதாயிரம் ரூபாய் பணம் வழங்கியமை தெரியவந்துள்ளது.</p><p> 

சம்பவம் தொடர்பில் மேல் மாகாண தெற்கு பிரிவுக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் சமந்த விஜேசேகரவின் மேற்பார்வையில் மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-17T16:00:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்கா- ஈரான் போர் நடவடிக்கைகளுக்கு ஐ.நா. கண்டனம் - விரைவில் சமர்ப்பிக்கப்படவுள்ள அறிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/un-condemns-us-iran-military-actions-1789660336"></link>
            <id>https://tamilwin.com/article/un-condemns-us-iran-military-actions-1789660336</id>
            <summary type="text">ஈரானில் உள்ள பாடசாலை மற்றும் விளையாட்டு மையமொன்றின் மீது அமெரிக்கா நடத்திய
இராணுவத் தாக்குதல்கள் போர்க்குற்றங்களுக்குச் சமமானவை என்றும், அதேவேளை அரச...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானில் உள்ள பாடசாலை மற்றும் விளையாட்டு மையமொன்றின் மீது அமெரிக்கா நடத்திய
இராணுவத் தாக்குதல்கள் போர்க்குற்றங்களுக்குச் சமமானவை என்றும், அதேவேளை அரச
எதிர்ப்புப் போராட்டங்களை அடக்குவதற்கு ஈரான் மனிதகுலத்திற்கு எதிரான
குற்றங்களைப் புரிந்துள்ளது என்றும் நம்புவதற்கு நியாயமான காரணங்கள் இருப்பதாக
ஐக்கிய நாடுகள் சபையின் உண்மை கண்டறியும் குழு தெரிவித்துள்ளது.</p><p>

கடந்த பெப்ரவரி மாதம் ஈரானின் மினாப் நகரில் அமைந்திருந்த பாடசாலையொன்றின்
மீது அமெரிக்கப் படைகள் நடத்திய தாக்குதலில் 120 பாடசாலை சிறுவர்கள் உட்பட
150க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
</p><p>
குறித்த பாடசாலை பொதுமக்கள் பயன்படுத்திய கட்டிடம் என்பதை உறுதிப்படுத்தாமல்
அமெரிக்கா நடத்திய இந்த இலக்குத் தவறான தாக்குதல், சர்வதேசச் சட்டத்தின் கீழ்
போர்க்குற்றமாகும் என ஐ.நா அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.</p><h2>

மக்கள் மீதான சித்திரவதை</h2><p>

இதேவேளை, கடந்த டிசம்பர் மாதம் ஈரானில் வெடித்த அரச எதிர்ப்புப்
போராட்டங்களின் போது, பொதுமக்கள் மீது ஈரான் அரசாங்கம் மேற்கொண்ட
அடக்குமுறைகள் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களாகக் கருதப்படுகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/27df25f9-cd13-402f-aac3-b45eba15a574/26-6aac0dc132ad0.webp' /></p><p>
</p><p>
இதில் சட்டவிரோதப் படுகொலைகள், சித்திரவதைகள், தன்னிச்சையான கைதுகள் மற்றும்
பலவந்தமாக காணாமல் ஆக்கப்படுதல்கள் போன்றவை உள்ளடங்குவதாகத்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
ஈரான் அதிகாரப்பூர்வமாக வெளியிட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கையை விடவும், இந்த
அடக்குமுறைகளில் உயிரிழந்தோர் மற்றும் காயமடைந்தோரின் எண்ணிக்கை மிக அதிகமாக
இருக்கும் என ஐ.நா குழு கவலை வெளியிட்டுள்ளது.</p><p>

ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில்
சமர்ப்பிக்கப்படவுள்ள அறிக்கையிலேயே இந்த விடயங்கள் விவரிக்கப்பட்டுள்ளன.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-17T15:57:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஏர்பஸ் டீல் மின்னஞ்சலில் ஜனாதிபதியின் மகன் என்ற வாசகம்! சிக்கலில் நாமல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/presidents-son-caught-up-in-airbus-deal-1789659703"></link>
            <id>https://ibctamil.com/article/presidents-son-caught-up-in-airbus-deal-1789659703</id>
            <summary type="text">சிறிலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் சர்ச்சைக்குரிய ஏர்பஸ் விமான கொள்வனவு தொடர்பான விசாரணையில், பல்வேறு முக்கிய விடயங்கள் வெளிச்சமிடப்பட்டுள்ளன. நாடாளுமன...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிறிலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் சர்ச்சைக்குரிய ஏர்பஸ் விமான கொள்வனவு தொடர்பான விசாரணையில், பல்வேறு முக்கிய விடயங்கள் வெளிச்சமிடப்பட்டுள்ளன.</p><p> நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கும் ஏர்பஸ் நிறுவன அதிகாரிகளுக்கும் இடையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மின்னஞ்சல் பரிமாற்றங்கள் தடயவியல் விசாரணைகளின் போது மீட்கப்பட்டுள்ளதாக கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

நாமல் ராஜபக்சவுக்கு எதிரான பணமோசடி விசாரணை தொடர்பான வழக்கு விசாரணையின்போது, அரச தரப்பு சார்பில் முன்னிலையான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டார இந்த தகவலை நீதிமன்றில் முன்வைத்துள்ளார்.</p><p></p><h2>தடயவியல் விசாரணை</h2><p>

தடயவியல் விசாரணைகளின்போது ஏர்பஸ் நிறுவன அதிகாரிகளுக்கும் சந்தேகநபருக்கும் இடையில் பரிமாறப்பட்ட மின்னஞ்சல்கள் கிடைத்ததாகவும், அவை இந்த பரிவர்த்தனை தொடர்பில் சந்தேகநபர் செயற்பட்ட விதம் குறித்து தகவல்களை வெளிப்படுத்துவதாகவும் அரச தரப்பு தெரிவித்துள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/89c2e42b-7f9c-46d0-9062-d561828d315b/26-6aac0c91312cd.webp' /></p><p>மேலும், ஏர்பஸ் நிறுவன அதிகாரிகள் இலங்கைக்கு வந்து இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் வாக்குமூலங்களை வழங்கியுள்ளதாகவும் நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

இதனுடன், குறித்த விமான கொள்வனவு தொடர்பான வெளிநாட்டு தடயவியல் தணிக்கை ஆவணங்களும் விசாரணையாளர்களுக்கு கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
முன்னதாக விசாரணையாளர்களால் முன்வைக்கப்பட்ட ஆவணங்களில், 2013 மார்ச் 23ஆம் திகதியிட்டதாகக் கூறப்படும் ஏர்பஸ் நிறுவன மின்னஞ்சல் ஒன்றும் உள்ளடங்கியுள்ளது.</p><p></p><h2>முன்மொழியப்பட்ட விமான விற்பனை</h2><p> அதில் “ஜனாதிபதியின் மகன்” எனக் குறிப்பிடப்பட்ட ஒருவர், முன்மொழியப்பட்ட விமான விற்பனை தொடர்பான ஏர்பஸ் நிறுவனத்தின் நிலைப்பாட்டை ஜனாதிபதி ஊடாக அமைச்சரவைக்கு முன்வைக்க நடவடிக்கை எடுப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
</p><p>
இதேவேளை, இந்த விமான கொள்வனவுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் நிதி பரிமாற்றங்கள் தொடர்பில் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
</p><p>
அரச தரப்பு தகவலின்படி, பிஸ் சொல்யூஷன்ஸ் (Biz Solutions) என்ற நிறுவனத்திற்கு சொந்தமான சிங்கப்பூர் வங்கிக் கணக்கொன்றில் 2 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வரவு வைக்கப்பட்டுள்ளதாகவும், அதில் 800,000 அமெரிக்க டொலர்கள் வர்த்தகர் நிமல் பெரேராவுடன் தொடர்புடைய நிறுவனமொன்றின் கணக்கிற்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

இந்த நிதியில் சுமார் 100 மில்லியன் ரூபாவுக்கு சமமான தொகை பின்னர் நாமல் ராஜபக்சவுக்கு வழங்கப்பட்டதாக நிமல் பெரேரா இலஞ்ச ஆணைக்குழுவில் வழங்கிய வாக்குமூலத்திலும் பிரமாணப் பத்திரத்திலும் குறிப்பிட்டுள்ளதாக அரச தரப்பு நீதிமன்றில் தெரிவித்துள்ளது.</p><p>

எனினும், நாமல் ராஜபக்ச சார்பிலான சட்டத்தரணிகள் இந்தக் குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-17T15:51:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[மயக்கம் என்ன’ ரிச்சாவா இது? குடும்பத்துடன் வெளிநாட்டில்... வைரலாகும் புகைப்படங்கள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/actress-richa-gangopadhyay-family-photos-viral-1789658666"></link>
            <id>https://manithan.com/article/actress-richa-gangopadhyay-family-photos-viral-1789658666</id>
            <summary type="text">நடிகை ரிச்சா&amp;nbsp; திருமணத்துக்குப் பிறகு சினிமாவை விட்டு விலகி வெளிநாட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். தற்போது தனது குடும்பத்துடன் இருக்கும் அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நடிகை ரிச்சா&nbsp; திருமணத்துக்குப் பிறகு சினிமாவை விட்டு விலகி வெளிநாட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். தற்போது தனது குடும்பத்துடன் இருக்கும் அழகிய புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ள நிலையில், ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.</p><h2>நடிகை ரிச்சா</h2><p>தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும், ரசிகர்களின் மனதில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்த நடிகைகள் பலர் இருக்கிறார்கள். அந்த வரிசையில், குறுகிய காலத்திலேயே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் நடிகை ரிச்சா.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4b949292-06fd-40aa-b5ae-923abeac5fab/26-6aac08c5adb55.webp' /></p><p></p><p>
</p><p>
தனுஷ் நடிப்பில் வெளியான ‘மயக்கம் என்ன’ திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமானவர் ரிச்சா. இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்த அவர், கதாபாத்திரத்திற்கு ஏற்ற இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் கவனத்தை பெற்றார்.</p><p> குறிப்பாக, படத்தின் கதைக்களத்துடன் ஒன்றிப்போகும் வகையில் அவரது நடிப்பு அமைந்திருந்தது.

‘மயக்கம் என்ன’ படத்திற்குப் பிறகு சிம்பு நடிப்பில் வெளியான ‘ஒஸ்தி’ திரைப்படத்திலும் ரிச்சா நடித்திருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ced9425b-cd90-48d7-a39c-e39b4b4a9551/26-6aac08c662d53.webp' /></p><p> </p><p>தொடர்ந்து தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வருவார் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், அவர் திரையுலகில் இருந்து படிப்படியாக விலகினார்.

அதன்பிறகு திருமணம் செய்து கொண்ட ரிச்சா, கணவருடன் வெளிநாட்டில் வசித்து வருகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/266bb7bd-ab11-44da-9a46-bffb45160f64/26-6aac08c7198b0.webp' /></p><p></p><p> </p><p>குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்தி வரும் அவர், அவ்வப்போது தனது குடும்பத்தினருடன் எடுத்துக்கொள்ளும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார்.குறிப்பாக, அவரது சமீபத்திய குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன.</p><p>

சினிமாவில் குறுகிய காலமே பயணித்திருந்தாலும், ‘மயக்கம் என்ன’ திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் நினைவில் நிற்கும் நடிகையாக மாறிய ரிச்சா, தற்போது திரைத்துறையை விட்டு விலகி இருப்பது குறிப்பிடத்தக்கது.</p><p><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/p/DdUKVYnms5b/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/p/DdUKVYnms5b/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/p/DdUKVYnms5b/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by Richa Langella (@richalangella)</a></p></div></blockquote> <script async src="//www.instagram.com/embed.js"></script></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW&nbsp;&nbsp;</a></u></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-17T15:42:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாடொன்றில் டெக்சியில் பயணித்த இந்தியர் சந்தித்த அனுபவம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/indian-shares-norway-taxi-bill-rs-9508-for-29km-1789646831"></link>
            <id>https://news.lankasri.com/article/indian-shares-norway-taxi-bill-rs-9508-for-29km-1789646831</id>
            <summary type="text">Indian shares Norway taxi bill of Rs. 9,508: நோர்வே நாட்டில் டெக்சியில் பயணித்த இந்தியர் ஒருவர், டெக்சி கட்டணம் 9,508 ரூபாய் என்பதால் வியப்படைந்துள்ளா...</summary>
            <content type="html"><![CDATA[<p>Indian shares Norway taxi bill of Rs. 9,508: நோர்வே நாட்டில் டெக்சியில் பயணித்த இந்தியர் ஒருவர், டெக்சி கட்டணம் 9,508 ரூபாய் என்பதால் வியப்படைந்துள்ளார்.
</p><p>

இந்தியரான வினோத் என்பவர் நோர்வே நாட்டில் டெக்சி ஒன்றில் பயணித்துள்ளார்.
</p><h3>
டெக்சியில் பயணித்த இந்தியர் சந்தித்த அனுபவம்</h3><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/23bb3108-8d62-4bf7-b20e-a405c8fc1a0f/26-6aabd7f08133b.webp' /></p><p>29 கிலோமீற்றர் தூரத்தை 22 நிமிடத்தில் அவர் எட்டிய நிலையில், டெக்சி கட்டணம் 934 Norwegian Krone என பில் வந்துள்ளது.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Sharing my today&#39;s taxi ride experience in Norway. 🇳🇴🚕<br><br>22 minutes. 29 km. Smooth ride and a great experience.<br><br>The bill? 934 NOK — roughly ₹9,580. 😳<br><br>There are a few things India does far better than Norway… this is one of them. 🇮🇳😊<br><br>I’ve had much more affordable Uber rides… <a href="https://t.co/aNk1fCqEXF">pic.twitter.com/aNk1fCqEXF</a></p>&mdash; Vinod (@turiyatman) <a href="https://x.com/turiyatman/status/2100266845857042673?ref_src=twsrc%5Etfw">September 16, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>
வழக்கமாக ஆசியர்கள் செய்வதைப் போலவே அதை தன் நாட்டுப் பணமாக மாற்றி கணக்குப் பார்த்துள்ளார் அவர். </p><p>அவ்வகையில், இந்திய மதிப்பில் டெக்சி கட்டணம் 9,508 ரூபாய் என வரவே, ஆச்சரியமடைந்துள்ளார் அவர்.&nbsp;</p><p></p><p>
அது குறித்து சமூக ஊடகம் ஒன்றில் பகிர்ந்துள்ள அவர், தன் நாட்டில் இவ்வளவு தொலைவு பயணிக்க சிறிய தொகைதான் செலவாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.</p><p>

அவரது இடுகை வேகமாக பகிரப்பட்ட நிலையில், சிலர், நோர்வேயில் சராசரி மாதாந்திர ஊதியம் இந்திய மதிப்பில் 6.5 லட்ச ரூபாய் என்றும், ஆகவே, அங்கு டெக்சி கட்டணம் அப்படித்தான் இருக்கும் என்னும் ரீதியில் கருத்து தெரிவித்துள்ளார்கள்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-17T15:40:49+00:00</updated>
        </entry>
    </feed>
