<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-09-10T01:36:11+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாட்டு வாழ் இலங்கையர்களுக்கான அறிவிப்பு: கட்டாயமாகும் நடைமுறை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/driving-licensee-new-regulation-1789003031"></link>
            <id>https://tamilwin.com/article/driving-licensee-new-regulation-1789003031</id>
            <summary type="text">&amp;nbsp;வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள், நாட்டில் சாரதி அனுமதிப்பத்திரத்தைப் பெற்றுக்கொள்வதாயின், அவர்கள் நாட்டிற்கு வருகை தந்து கட்டாயமாக மூன்று மாத ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள், நாட்டில் சாரதி அனுமதிப்பத்திரத்தைப் பெற்றுக்கொள்வதாயின், அவர்கள் நாட்டிற்கு வருகை தந்து கட்டாயமாக மூன்று மாத காலப்பகுதி வரை தங்கியிருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><p>மோட்டார் வாகனச் சட்டத்தின் பிரகாரம், சாரதி அனுமதிப்பத்திரத்திற்கான எழுத்து மூலப் பரீட்சையில் சித்தியடைந்து மூன்று மாதங்கள் நிறைவடையும் முன்னர் எக்காரணம் கொண்டும் செய்முறைப் பரீட்சைக்கு அனுமதி வழங்க முடியாது என மோட்டார் போக்குவரத்து திணைக்களம் அறிவித்துள்ளது.</p><p>மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம், ஓய்வுபெற்ற எயார் வைஸ் மார்ஷல் துஷார இந்துனில் பெர்னாண்டோ இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dc7b921d-f5f1-4b31-ac99-e8c0d7747275/26-6aa20518c9247.webp' /></p><p>
</p><p>சாரதி அனுமதிப்பத்திரப் பரீட்சை எழுதப்பட்ட நாளில் இருந்து மூன்று மாத கால அவகாசம் வழங்கப்படுவதன் முக்கிய நோக்கமே பயிற்சி பெறுவதற்காகவே ஆகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p>பரீட்சைக்குத் தோற்றிய நாளில் இருந்து ஒன்றரை ஆண்டுகள் வரை குறித்த தற்காலிக பயிற்சி அனுமதிப்பத்திரம் செல்லுபடியாகும் என மேலும் தெரிவித்துள்ளார்.</p><p>எனவே, எழுத்து மூலப் பரீட்சை எழுதிய பின்னர் மூன்று மாதங்களுக்குள் விண்ணப்பதாரர் ஒருவர் வெளிநாடு செல்வாராயின், அவர் மீண்டும் ஒன்றரை வருட காலப்பகுதி முடிவடைவதற்குள் இலங்கைக்கு வருகை தந்து, செய்முறைப் பரீட்சைக்குத் தோற்றி மட்டுமே சாரதி அனுமதிப்பத்திரத்தைப் பெற்றுக்கொள்ள முடியும்.</p><p>
நாரஹேன்பிட்டியில் அமைந்துள்ள மோட்டார் போக்குவரத்து திணைக்கள தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் இந்தத் தகவல்களை வெளியிட்டுள்ளார்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-10T01:27:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[புதன் பெயர்ச்சியால் வருமானம் அதிகரிக்க போகும் ராசிக்காரர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/budhan-peyarchi-varumanam-athikarikka-rasi-1789003374"></link>
            <id>https://jvpnews.com/article/budhan-peyarchi-varumanam-athikarikka-rasi-1789003374</id>
            <summary type="text">ஜோதிடத்தில் புத்திசாலித்தனம், பேச்சு, படிப்பு, வியாபாரம் ஆகியவற்றின் காரணியாக கருதப்படுபவர் தான் புதன்.&amp;nbsp;ஜோதிடத்தில் புதனுக்கும், சுக்கிரனுக்கும் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜோதிடத்தில் புத்திசாலித்தனம், பேச்சு, படிப்பு, வியாபாரம் ஆகியவற்றின் காரணியாக கருதப்படுபவர் தான் புதன்.&nbsp;ஜோதிடத்தில் புதனுக்கும், சுக்கிரனுக்கும் இடையே நட்புறவு இருப்பதாக கருதப்படுகிறது. எனவே இந்த புதன் பெயர்ச்சி வியாபாரம், வேலை வாய்ப்பு, நிதி விஷயங்கள் போன்றவற்றில் சிறப்பான பலன்களைத் தரும்.</p><p>இப்போது துலாம் ராசிக்கு செல்லும் புதனால் நல்ல அதிர்ஷ்டத்தைப் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8921cf8d-863d-4ff1-a4c6-c7623b50b217/26-6aa2066f81304.webp' /></p><h3>மேஷம்
</h3><p>மேஷ ராசியின் 7 ஆவது வீட்டிற்கு புதன் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் கூட்டு தொழிலில் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். பணியிடத்தில் புதிய பொறுப்புகள் வழங்கப்படலாம். உடன் வேலை செய்வோரின் முழு ஆதரவு கிடைக்கும் வாய்ப்புள்ளது. வணிகர்களுக்கு நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. மொத்தத்தில் வருமானத்தில் உயர்வும், தொழிலில் நல்ல முன்னேற்றமும் ஏற்படும் வாய்ப்புள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2f715f73-0930-4e69-8537-43678f3cbe5c/26-6aa2067034678.webp' /></p><h3>கன்னி
</h3><p>கன்னி ராசியின் 2 ஆவது வீட்டிற்கு புதன் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் நிதி ரீதியாக நல்ல பலன்களைப் பெறுவார்கள். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் புதிய பொறுப்புகள் அல்லது பதவி உயர்வைப் பெறும் வாய்ப்புள்ளது. பேச்சாற்றல் மேம்படும். இந்த பேச்சால் பல முக்கியமான வேலைகளை வெற்றிகரமாக முடிப்பீர்கள். தொழிலதிபர்களுக்கு நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. சிலருக்கு புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும் வாய்ப்புள்ளது</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5008c5b8-9f79-4098-b478-fb3cb6adaf86/26-6aa20670e03c0.webp' /></p><h3>துலாம்</h3><p>
துலாம் ராசியின் முதல் வீட்டிற்கு புதன் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் ஆளுமை மேம்படும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். முக்கியமான முடிவுகளை திறம்பட யோசித்து எடுப்பீர்கள். பணியிடத்தில் பதவி உயர்வு அல்லது புதிய பொறுப்புகள் வழங்கப்படலாம். தொழிலதிபர்கள் புதிய திட்டங்களால் தங்களின் தொழிலை விரிவுபடுத்துவதற்கான வாய்ப்புக்களைப் பெறுவார்கள். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. பணப் பிரச்சனைகள் தீர்ந்து, நிதி நிலையில் உயர்வு ஏற்படலாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/86d5164d-290d-48ca-a0c3-7f2fcbc42858/26-6aa2067191fa7.webp' /></p><h3>கும்பம்
</h3><p>கும்ப ராசியின் 9 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களின் நீண்ட காலமாக தடைபட்டு வந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளது. பணியிடத்தில் உங்களின் திறமையும், முடிவெடுக்கும் திறனும் பாராட்டப்படலாம். தொழிலதிபர்கள் புதிய நட்புகளால் நல்ல பலனைப் பெறுவார்கள். முக்கியமாக இக்காலத்தில் ஏற்கனவே செய்த முதலீடுகளில் இருந்து நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2b762505-26de-46cc-982e-c67d392b6a6d/26-6aa2067244bb4.webp' /></p>]]></content>
            <updated>2026-09-10T01:23:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[சில மாவட்டங்களில் இடைக்கிடையே மழை! வளிமண்டலவியல் திணைக்களத்தின் முன்னெச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/intermittent-rain-is-likely-today-1789001893"></link>
            <id>https://ibctamil.com/article/intermittent-rain-is-likely-today-1789001893</id>
            <summary type="text">சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் தி...</summary>
            <content type="html"><![CDATA[<p>சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
</p><p>
கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் முல்லைத்தீவு மாவட்டத்திலும் பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><h2>பலத்த காற்று மற்றும் மின்ன்ல தாக்கம்</h2><p> </p><p>

இடியுடன் கூடிய மழை பெய்கின்ற வேளைகளில் பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f9b32ea0-c364-44b2-a259-55057a44403f/26-6aa203f76308b.webp' /></p><p>

இவ்வாறான சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
</p><p>
இதேவேளை, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, குருநாகல், மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் வெப்பச் சுட்டெண் காரணமாக இன்று பகல் வேளையில் அதிகரித்த வெப்பநிலையை மனித உடலினால் உணரக்கூடியதாக இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-10T01:17:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தியாவுடனான ரகசிய ஒப்பந்தங்களை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/reveal-the-real-mous-with-india-says-fsp-1788998963"></link>
            <id>https://tamilwin.com/article/reveal-the-real-mous-with-india-says-fsp-1788998963</id>
            <summary type="text">&amp;nbsp;இந்தியாவுடனான ரகசிய ஒப்பந்தங்களை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும் என முன்னிலை சோசலிசக் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர் புபுது ஜயகொட வலியுறுத்தியுள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;இந்தியாவுடனான ரகசிய ஒப்பந்தங்களை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும் என முன்னிலை சோசலிசக் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர் புபுது ஜயகொட வலியுறுத்தியுள்ளார்.
</p><p>இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் இலங்கை விஜயத்தின் போது, அரசாங்கம் கூறுவது போன்று சிறிய மற்றும் முக்கியத்துவமற்ற சில ஒப்பந்தங்களில் கையெழுத்திட வாய்ப்பில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>மக்கள் முன் அரசாங்கம் மறைக்கும் உண்மையான ஒப்பந்தங்கள் மற்றும் உடன்பாடுகள் எவை என்பதை உடனடியாக வெளிப்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/74b4eb78-e19f-414a-9a8a-24121cb3ae87/26-6aa1f53548cb0.webp' /></p><p>
</p><p>கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.</p><p>
இந்திய பாதுகாப்பு அமைச்சரின் இந்த விஜயத்தின் போது, மாணவர் படைப்பிரிவு பயிற்சி பரிமாற்றம், பாதுகாப்பு பல்கலைக்கழக ஒத்துழைப்பு மற்றும் இந்தியாவால் வழங்கப்பட்ட ஆயுதங்களின் பராமரிப்பு தொடர்பான மூன்று ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
</p><p>எனினும், இத்தகைய சிறிய ஒப்பந்தங்கள் பொதுவாக அமைச்சரவை மட்டத்திலான கீழ்நிலை அதிகாரிகளால் கையெழுத்திடப்படுபவை என புபுது ஜயகொட சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>வரலாற்றுப் பின்னணியை நினைவுபடுத்திய ஜயகொட, இதற்கு முன்னர் இந்திய பாதுகாப்பு அமைச்சர் ஒருவர் இலங்கைக்கு விஜயம் செய்தது 38 ஆண்டுகளுக்கு முன்னரே என அவர் தெரிவித்துள்ளார்.
</p><p>1987 ஆம் ஆண்டு இலங்கை - இந்திய ஒப்பந்தத்திற்குப் பின்னர் ஏற்பட்ட கடும் பதற்றமான சூழ்நிலையில், அப்போதைய பாதுகாப்பு அமைச்சராக இருந்த கே.சி. பந்த் 1988 ஆம் ஆண்டு விஜயம் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
</p><p>எனவே, 38 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்திய பாதுகாப்பு அமைச்சர் ஒருவர் இலங்கைக்கு விஜயம் செய்தது, பாடசாலை மாணவர்களின் காடெட் பயிற்சி அல்லது துப்பாக்கி பராமரிப்பு பற்றி பேசுவதற்காக என அரசாங்கம் கூறுவதை ஏற்க முடியாது என தெரிவித்துள்ளார்.
</p><p>மேலும், 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இந்தியாவில் மேற்கொண்ட விஜயத்தின் போது எட்டப்பட்ட உடன்பாடுகள் அல்லது 2025 ஏப்ரல் 05 ஆம் திகதி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு விஜயம் செய்த போது கையெழுத்திடப்பட்ட ஏழு ஒப்பந்தங்களின் பிரதிகள் இதுவரை நாட்டுக்கு வெளிப்படுத்தப்படவில்லை எனவும் அவர் குற்றம் சாட்டினார்.</p><p>
அக்காலத்தில் கையெழுத்திடப்பட்ட பாதுகாப்பு ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை சட்டப்பூர்வமான ஒப்பந்தமாக மாற்றுவது குறித்து கலந்துரையாடவே இந்திய பாதுகாப்பு அமைச்சர் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்ததையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p>
தற்போதைய அரசாங்கம் அனைத்து நடவடிக்கைகளையும் மக்களுக்குத் தெரியாமல் ரகசியமாகச் செய்வதாக புபுது ஜயகொட குற்றம் சாட்டியுள்ளார்.</p><p>
இரு நாட்டு அரசுகளுக்கும் இடையே உண்மையில் கலந்துரையாடப்பட்ட விடயங்கள், எட்டப்பட்ட ரகசிய உடன்பாடுகள் மற்றும் கையெழுத்திடப்பட்ட உண்மையான ஒப்பந்தங்கள் எவை என்பதை உடனடியாக நாட்டுக்கு வெளிப்படுத்த வேண்டுமென அவர் அரசாங்கத்திடம் கோரியுள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-10T01:02:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் இதய நோயாளிகள் தொடர்பில் வெளியிடப்படும் அதிர்ச்சி தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/heart-disease-on-rise-says-dr-1789000243"></link>
            <id>https://tamilwin.com/article/heart-disease-on-rise-says-dr-1789000243</id>
            <summary type="text">&amp;nbsp;இலங்கையில் இதய நோயாளிகள் தொடர்பில் அதிர்ச்சி தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கவழக்கங்கள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களினால் இதய ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;இலங்கையில் இதய நோயாளிகள் தொடர்பில் அதிர்ச்சி தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கவழக்கங்கள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களினால் இதய நோய்களுக்கு உள்ளாகும் மக்களின் வயதுப் பிரிவு சுமார் 40 வரை குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
</p><p>கண்டி தேசிய வைத்தியசாலையின் இதயநோய் மயக்கவியல் விசேட வைத்திய நிபுணர் ரோஷன மல்லவாரச்சி இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
</p><p>இலங்கையில் கடந்த காலங்களில் 50 முதல் 70 வயதுக்குட்பட்டவர்களுக்கே இதய நோய்கள் அதிகம் பதிவாகியிருந்த போதிலும், தற்போது 40 வயதுடையவர்கள் மற்றும் அதற்கும் குறைந்த வயதுடையவர்கள் கூட இதய நோய்களால் பாதிக்கப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/20c6f087-99ac-42a7-b450-a0b64a45dc48/26-6aa1fa39a7310.webp' /></p><p>
</p><p>ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கங்கள், உடல் பருமன், உடற்பயிற்சியின்மை, மன அழுத்தம், கொலஸ்ட்ரால் மற்றும் இரத்த அழுத்தத்தை முறையாகப் பரிசோதிக்காமை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இதய நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>40 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆறு மாதங்களுக்கு ஒருமுறையாவது இரத்தத்தில் சர்க்கரையின் அளவு, கொலஸ்ட்ரால் மற்றும் இரத்த அழுத்தம் போன்ற பரிசோதனைகளை மேற்கொள்வார்களாயின், இதய நோய் ஏற்படுவதற்கு முன்னரே வைத்தியர்களால் தகுந்த முடிவுகளுக்கு வர முடியும் என தெரிவித்துள்ளார்.</p><p>
ஆனால் பெரும்பாலானோர் இதய நோய் தாக்கிய பின்னரே வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
</p><p>இதய நோய் ஏற்பட்ட பின்னர் அறுவை சிகிச்சை தேவைப்படுபவர்கள், அந்த அறுவை சிகிச்சையை மேற்கொள்வதற்காகக் குறிப்பிட்ட காலம் காத்திருப்புப் பட்டியலில் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.</p><p> கொழும்பு, குருணாகல், கண்டி, கராப்பிட்டிய, ஸ்ரீ ஜெயவர்த்தனபுர உள்ளிட்ட பல வைத்தியசாலைகளில் இந்த நிலைமை பதிவாகியுள்ளதாகவும் வைத்திய நிபுணர் ரோஷன மல்லவாரச்சி மேலும் தெரிவித்துள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-10T01:01:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாடுகளில் பணிப்புரிவோருக்கு புதிய வீட்டுக் கடன் திட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/new-home-loan-scheme-for-those-working-abroad-1789001893"></link>
            <id>https://jvpnews.com/article/new-home-loan-scheme-for-those-working-abroad-1789001893</id>
            <summary type="text">வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களுக்கு சலுகை வட்டி வீதத்தில் வீட்டுக் கடன்களை வழங்கும் &#039;எதெர திரிய&#039; (Ethera Diriya) புதிய வீட்டுக் கடன் திட்டம் இன...</summary>
            <content type="html"><![CDATA[<p>வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களுக்கு சலுகை வட்டி வீதத்தில் வீட்டுக் கடன்களை வழங்கும் 'எதெர திரிய' (Ethera Diriya) புதிய வீட்டுக் கடன் திட்டம் இன்று (10) உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தப்படவுள்ளது.</p><p>
</p><p></p><p>இந்த திட்டத்தின் கீழ் 500,000 ரூபாய் முதல் 10 மில்லியன் ரூபாய் வரையில் சலுகை வட்டியில் கடன் வழங்கப்படவுள்ளது.</p><p>

அத்துடன், கடன்களுக்காகச் செலுத்தப்பட வேண்டிய வட்டியின் ஒரு பகுதி இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தினால் (SLBFE) மீளச் செலுத்தப்படவுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5e115925-8c77-49c4-a082-7babe17075d7/26-6aa200a68356e.webp' /></p><p>இதன் மூலம், வீடு ஒன்றை நிர்மாணிக்க அல்லது கொள்வனவு செய்ய எதிர்பார்க்கும் வெளிநாட்டுத் தொழிலாளர்களின் நிதிச்சுமை பெருமளவு குறைவடையும்.
</p><p>
இந்தக் கடன்களுக்கு 10 ஆண்டுகள் வரையிலான திருப்பிச் செலுத்தும் கால அவகாசம் வழங்கப்படுவதுடன், அரச மற்றும் தனியார் வங்கிகள் ஊடாக இதற்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க முடியும்.</p><p>

வெளிநாடுகளில் ஈட்டும் வருமானத்தைப் பாதுகாப்பான மற்றும் இலகுவான வீடமைப்புத் துறையில் முதலீடு செய்வதற்கு வெளிநாட்டு வாழ் தொழிலாளர்களுக்கு உதவும் வகையில், இந்த வீட்டுவசதி ஆதரவுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-10T00:58:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் நீதிமன்றில் சாட்சியமளித்த இளைஞர் மீது வாள்வெட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/youth-attacked-sword-testifying-in-jaffna-court-1788983027"></link>
            <id>https://jvpnews.com/article/youth-attacked-sword-testifying-in-jaffna-court-1788983027</id>
            <summary type="text">யாழ்ப்பாணம்- ஊர்காவற்றுறை நீதிமன்றில் சாட்சியமளித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர் மீது வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது....</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம்- ஊர்காவற்றுறை நீதிமன்றில் சாட்சியமளித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர் மீது வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p><p>
</p><p></p><p>குறித்த சம்பவமானது வேலணை அராலிச் சந்தி பகுதியில் இன்று (9) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
</p><p>

நெடுந்தீவைச் சேர்ந்த இரு தரப்பினருக்கு இடையில் ஏற்கனவே இடம்பெற்றிருந்த பிரச்சினை தொடர்பான வழக்கு ஊர்காவற்றுறை நீதிமன்றில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருந்த நிலையில், குறித்த வழக்கில் சாட்சியமளிப்பதற்காக பாதிக்கப்பட்ட இளைஞர் நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3d9dac7a-57f7-4e0d-b936-9e46dd1a6b12/26-6aa1b6f590b73.webp' /></p><p>வழக்கு நடவடிக்கைகள் நிறைவடைந்த பின்னர் அவர் வீடு நோக்கி பயணித்துக் கொண்டிருந்தபோது, வேலணை அராலிச் சந்தி பகுதியில் அவரை வழிமறித்த மற்றைய தரப்பைச் சேர்ந்தவர்கள் எனக் கூறப்படும் நபர்கள் வாள்வெட்டு தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
தாக்குதலாளிகள் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும், தாக்குதலுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் சிலர் தற்போது கிளிநொச்சி பகுதியில் வசித்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>தாக்குதலில் கடும் காயமடைந்த இளைஞர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
</p><p>
சம்பவம் தொடர்பில் ஊர்காவற்றுறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன், சந்தேகநபர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ஊர்காவற்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-10T00:52:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Erimalai</name>
            </author>
            <title type="text"><![CDATA[பருத்தித்துறையில் ஆக்கிரமிக்கப்பட்ட காணிகள்: போராட்டத்திற்கு அழைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/paruthithurai-land-dispute-protest-planned-1789000877"></link>
            <id>https://tamilwin.com/article/paruthithurai-land-dispute-protest-planned-1789000877</id>
            <summary type="text">இராணுவம் மற்றும் கடற்படையினரால் பயன்படுத்தப்பட்டு வரும் காணிகளை மீண்டும் விடுவிக்கக் கோரி, பருத்தித்துறை நகரசபை ஏற்பாடு செய்துள்ள கவனயீர்ப்பு பேரணிக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>இராணுவம் மற்றும் கடற்படையினரால் பயன்படுத்தப்பட்டு வரும் காணிகளை மீண்டும் விடுவிக்கக் கோரி, பருத்தித்துறை நகரசபை ஏற்பாடு செய்துள்ள கவனயீர்ப்பு பேரணிக்கு நகரசபை உறுப்பினர் ஜெயானந்தம் ஜெயகோபி ஆதரவு தெரிவித்துள்ளார்.
</p><p>
இது தொடர்பாக அவர்&nbsp; ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தினார்.</p><h2>கவனயீர்ப்பு பேரணி</h2><p>

பருத்தித்துறை நகரில் தபால் திணைக்களம், நீதிமன்றம் மற்றும் நகரசபைக்கு சொந்தமான காணிகள் இராணுவத்தினரால் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும், அவற்றை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5c7381a7-178a-44e2-968f-b633416a0f88/26-6aa1ff4d7e435.webp' /></p><p>
</p><p>
மேலும், சுற்றுலாத்துறைக்கு சொந்தமான கடற்படை முகாம் மற்றும் கலங்கரை விளக்கம் அமைந்துள்ள பகுதிகளில் இருந்தும் கடற்படையினர் வெளியேற வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார்.</p><p>

இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி எதிர்வரும் செப்டெம்பர் 11ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 8 மணிக்கு பருத்தித்துறை துறைமுகப் பகுதியில் இருந்து கவனயீர்ப்பு பேரணி ஆரம்பமாகவுள்ளது.</p><h2>போராட்டத்திற்கு அழைப்பு</h2><p>
</p><p>
பேரணி பருத்தித்துறை பிரதேச செயலகம் வரை நடைபெறும். அங்கு ஜனாதிபதிக்கு வழங்குவதற்காக மனு ஒன்றும் பிரதேச செயலாளரிடம் கையளிக்கப்படவுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c1f345ec-077d-4526-82e8-0864749af8d6/26-6aa1ff4e6ddfa.webp' /></p><p>
</p><p>
இந்த போராட்டத்திற்கு என்பிபி தவிர்ந்த பருத்தித்துறை நகரசபையில் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளதாக ஜெயகோபி குறிப்பிட்டார்.
</p><p>
எனவே, பருத்தித்துறை மக்களின் பூர்வீக காணிகளை மீட்டெடுக்கும் இந்தப் போராட்டத்தில் மக்கள் அனைவரும் பெருமளவில் கலந்துகொண்டு ஆதரவு வழங்க வேண்டும் என அவர் அழைப்பு விடுத்துள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-10T00:52:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானின் 5 எண்ணெய் கப்பல்களை மூழ்கடித்த அமெரிக்கா ; பதிலடியாக 20 கப்பல்களை குறிவைத்த ஈரான்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/us-sank-five-iranian-oil-tankers-1789001512"></link>
            <id>https://canadamirror.com/article/us-sank-five-iranian-oil-tankers-1789001512</id>
            <summary type="text">ஈரானுக்கு சொந்தமான 5 கச்சா எண்ணெய் கப்பல்களை தாக்கி அமெரிக்கா மூழ்கடித்துள்ளது. பதிலடி நடவடிக்கையாக ஹோா்முஸ் நீரிணையில் அமெரிக்காவின் 2 போா் கப்பல்கள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானுக்கு சொந்தமான 5 கச்சா எண்ணெய் கப்பல்களை தாக்கி அமெரிக்கா மூழ்கடித்துள்ளது. பதிலடி நடவடிக்கையாக ஹோா்முஸ் நீரிணையில் அமெரிக்காவின் 2 போா் கப்பல்கள் உள்ளிட்ட 20 கப்பல்கள் மீது ஈரான் ஏவுகணைகளை வீசித் தாக்குதல் நடத்தியுள்ளது.
</p><p>
இதனால், மேற்காசியாவில் மீண்டும் மோதல் உக்கிரமடைந்துள்ளது. ஈரான், அமெரிக்கா இடையே சுமாா் 6 மாதங்களாக போா் நீடிக்கிறது. பாகிஸ்தான், கத்தாா் நாடுகளின் மத்தியஸ்தத்தால் இரு நாடுகள் இடையே இடைக்கால அமைதி ஒப்பந்தம் கையொப்பமானது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f1d55af8-2993-4aef-af1e-3a97de93f290/26-6aa1ff2b2a306.webp' /></p><p>இதனால் 2 மாதங்களுக்கு அமைதி நிலவியது. எனினும் ஒப்பந்தத்தை இரு நாடுகளும் புதுப்பிக்காததால் மீண்டும் போா் தொடங்கியுள்ளது.</p><p>கடந்த சனிக்கிழமையன்று அமெரிக்க விமானந்தாங்கி கப்பல் உள்ளிட்ட 3 கப்பல்களை குறிவைத்து ஈரான் பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசித் தாக்குதல் நடத்தியதாக கூறி, அந்த நாட்டுக்கு சொந்தமான 8 கச்சா எண்ணெய் கப்பல்களை அமெரிக்கா அடுத்தடுத்து தாக்கி மூழ்கடித்தது. </p><p>அதிலிருந்த மாலுமிகள் அனைவரும் வெளியேறும்படி முதலில் எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகவும், அதன்பிறகே கப்பல்களை மூழ்கடித்ததாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.</p><p>

ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படையினா் இருமுறை கப்பல்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாகவும், ஆனால் அதில் எந்த கப்பல்களுக்கும் சேதம் ஏற்படவில்லை என்றும், அந்த கப்பல்கள் கடல்பகுதியில் தொடா்ந்து ரோந்து சுற்றி வருவதாகவும், ஈரானின் தாக்குதல்களில் அமெரிக்கா்கள் யாரும் காயமடையவோ அல்லது உயிரிழக்கவோ இல்லை என்றும் அமெரிக்க ராணுவத்தின் மத்திய தலைமையகம் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7f914c77-df28-4871-a268-53c65790203f/26-6aa1ff2a7459c.webp' /></p><p>குவைத், பஹ்ரைன் கடல்பகுதியில் நிற்கும் எண்ணெய் கப்பல்கள் மீது தாக்குதல்கள் நடத்தப் போவதாகவும், ஆதலால் அதில் இருக்கும் மாலுமிகள் உடனடியாக வெளியேற வேண்டும் என்று ஈரான் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது. </p><p>இதனால் குவைத், பஹ்ரைனில் கடும் பதற்றம் நிலவுகிறது.

கடல்பகுதியில் கப்பல்கள் தாக்குதலுக்கு ஆளாவதை பிரிட்டன் கடல்சாா் வா்த்தக நடவடிக்கை மையமும் உறுதிப்படுத்தியுள்ளது. </p><p>ஓமன் வளைகுடா மற்றும் பாரசீக வளைகுடா கடல்பகுதியில் ஏராளமான வா்த்தக கப்பல்கள் தாக்குதலுக்கு ஆளானதாக அந்த மையம் தெரிவித்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-10T00:52:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆபத்தில் நாமலே புலம்பிய இரகசியம்! இருவரை தீர்த்து கட்டிய மர்மம் - தப்பிய ஒருவர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-arrest-issue-in-sri-lanka-1788977933"></link>
            <id>https://tamilwin.com/article/namal-arrest-issue-in-sri-lanka-1788977933</id>
            <summary type="text">நாமல் ராஜபக்சவுக்கு பிணை கிடைப்பது கடினமாக இருக்கலாம் என அவர் தனது நெருக்கமானவர்களிடம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தன் மீதான வழக்குகள...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாமல் ராஜபக்சவுக்கு பிணை கிடைப்பது கடினமாக இருக்கலாம் என அவர் தனது நெருக்கமானவர்களிடம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
</p><p>
தன் மீதான வழக்குகள் சிக்கலானவை என்பதால், பிணை கிடைக்க குறைந்தது ஐந்து முதல் ஆறு மாதங்கள் அல்லது ஒரு வருடம் கூட ஆகலாம் என அவர் கூறியதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>

 சில சந்தர்ப்பங்களில் பிணை கிடைக்காமலும் போகலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.</p><p>


இந்தநிலையில், ஏர்பஸ் கொடுக்கல் வாங்கல் விவகாரத்தில் முக்கிய சாட்சிகளாக கருதப்பட்ட கபில சந்திரசேன மற்றும் ஊடகவியலாளர் ரஜீவ் பிரகாஷ் ஜெயவீர ஆகியோர் உயிரிழந்துள்ள நிலையில், தற்போது நிமல் பெரேரா முக்கிய சாட்சியாக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
நிமல் பெரேரா தற்போது அவுஸ்திரேலியாவில் இருப்பதாகவும், அவர் இலங்கைக்கு திரும்பினால் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படக்கூடும் என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p>

நாமல் ராஜபக்ச எப்போது விடுதலை செய்யப்படுவார் என்பது குறித்து இதுவரை உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை. </p><p>அவரது விடுதலை சட்ட நடவடிக்கைகளின் போக்கைப் பொறுத்தே அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.</p><p>இந்த விடயங்கள் தொடர்பில் பேசுகின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி..</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/u2NuDGRtdR8" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-10T00:37:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[வீழ்ச்சியின் விளிம்பில் ஈரானிய ஆட்சி! நெதன்யாகுவின் அறிவிப்பால் அதிகரிக்கும் பதற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/iran-s-regime-on-brink-of-collapse-says-netanyahu-1788999601"></link>
            <id>https://ibctamil.com/article/iran-s-regime-on-brink-of-collapse-says-netanyahu-1788999601</id>
            <summary type="text">மத்திய கிழக்கில் ஆறு மாதங்களாக நடைபெற்று வரும் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், ஈரானின் ஆட்சி வீழ்ச்சியின் விளிம்பில் உள்ளதாக இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமி...</summary>
            <content type="html"><![CDATA[<p>மத்திய கிழக்கில் ஆறு மாதங்களாக நடைபெற்று வரும் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், ஈரானின் ஆட்சி வீழ்ச்சியின் விளிம்பில் உள்ளதாக இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
</p><p>
நெதன்யாகு, தெற்கு சிரியாவில் உள்ள இஸ்ரேலியப் படைகளை நேரில் சென்று பார்வையிட்டபோது இதனை கூறியுள்ளார்.</p><p>

பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் உடன், இஸ்ரேல்-சிரிய எல்லையில் அமைந்துள்ள ஹெர்மன் மலையின் சிரியப் பகுதியில் நின்று பேசிய அவர், "இன்னும் செய்ய வேண்டிய பணிகள் உள்ளன.

 ஈரானில் உள்ள பயங்கரவாத ஆட்சியை வீழ்த்துவதே நமது முக்கிய பணியாகும்.</p><p></p><h2>ஈரான் ஆட்சியின் வீழ்ச்சி&nbsp;</h2><p>நாம் அதை அடைவதற்கு மிக அருகில் இருக்கிறோம். அந்த முழு கூட்டணியும் இறுதியில் வீழும் என்பதை நாம் அறிவோம்" என்று வலியுறுத்தியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f44ee1b8-b6cf-422d-b266-8c9248a06a05/26-6aa1fad8087ed.webp' /></p><p><i>Image Credit:&nbsp;jewishchronicle</i></p><p>
</p><p>
சிரியாவை நீண்டகாலமாக ஆட்சி செய்த பஷார் அல்-அசாத்தின் ஆட்சி டிசம்பர் 2024-இல் வீழ்ந்ததைத் தொடர்ந்து, தெற்கு சிரியாவில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு மண்டலத்தில் இஸ்ரேலியப் படைகள் நிலைநிறுத்தப்பட்டுள்ளன.
</p><p>
1974 முதல் இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் உள்ள கோலன் பகுதியில் இஸ்ரேல் மற்றும் சிரியப் படைகளைப் பிரித்து வைத்திருந்த, ஐக்கிய நாடுகள் சபையால் கண்காணிக்கப்பட்ட பழைய இடைப்பட்ட பகுதியையே தற்போது இப்படைகள் ஆக்கிரமித்து வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> WHATSAPP CHANNEL </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-10T00:33:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[135 ஏக்கர் தேயிலைத் தோட்டம் - வெளிவரும் முக்கிய ஆவணங்கள்! ராஜபக்ச சகோதரர்களுக்கு எதிராக அதிரடி விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/investigation-against-rohitha-yositha-rajapaksha-1789000004"></link>
            <id>https://tamilwin.com/article/investigation-against-rohitha-yositha-rajapaksha-1789000004</id>
            <summary type="text">முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் புதல்வர்களான யோசித ராஜபக்ச மற்றும் ரோஹித ராஜபக்ச ஆகியோருக்கு எதிராக, கண்டி தொலஸ்பகே பகுதியில் அமைந்துள்ள 135 ஏக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் புதல்வர்களான யோசித ராஜபக்ச மற்றும் ரோஹித ராஜபக்ச ஆகியோருக்கு எதிராக, கண்டி தொலஸ்பகே பகுதியில் அமைந்துள்ள 135 ஏக்கர் தேயிலைத் தோட்டத்தை சட்டவிரோதமாக கையகப்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
</p><p>
இலஞ்சம், ஊழல் மற்றும் வீண் விரயத்திற்கு எதிரான குடிமக்கள் சக்தி அமைப்பின் தலைவர் காமந்த துஷார குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சொத்துக்கள் தொடர்பான விசாரணைப் பிரிவில் இந்த முறைப்பாட்டை பதிவு செய்துள்ளார்.</p><p>

குறித்த காணி தொடர்பான பரிவர்த்தனையை உறுதிப்படுத்தும் உறுதி ஆவண இலக்கம் மற்றும் வரைபட இலக்கம் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் தம்மிடம் இருப்பதாக காமந்த துஷார தெரிவித்துள்ளார்.
</p><p>
மேலும், குறித்த காணியில் 1918ஆம் ஆண்டு கட்டப்பட்ட பழைய பங்களா தொடர்பான தகவல்கள் மற்றும் ஏனைய ஆவணங்களும் தம்மிடம் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>

இந்த ஆவணங்களை விசாரணை அதிகாரிகளிடம் சமர்ப்பிக்கத் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்</p><p>.

இந்நிலையில், முறைப்பாட்டாளரான காமந்த துஷார தனது வாக்குமூலத்தை வழங்குவதற்காக பொலிஸ் தலைமையகத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார்.
</p><p>
குறித்த 135 ஏக்கர் காணி தொடர்பான விசாரணையை குற்றத்திலிருந்து உருவான சொத்துக்கள் தொடர்பான விசாரணைப் பிரிவு (PCID) முன்னெடுத்து வருகிறது.
</p><p>
இந்த விடயங்கள் தொடர்பில் விரிவாக எடுத்து வருகின்றது லங்காசிறியின் நியூஸ் இன்சைட் நிகழ்ச்சி..</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/shVEUuotw3g" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-10T00:31:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[மனித குலத்தை AI அழிக்கலாம்! 10% -க்கும் அதிகமான வாய்ப்பு இருப்பதாக ஆய்வாளர் எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/ai-could-wipe-out-humanity-within-the-next-10-yrs-1788980667"></link>
            <id>https://news.lankasri.com/article/ai-could-wipe-out-humanity-within-the-next-10-yrs-1788980667</id>
            <summary type="text">AI Could Wipe Out Humanity Within the Next 10 Years: செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்(AI) மனித குலத்திற்கு அழிவை ஏற்படுத்தலாம் என்று ஆய்வாளர்கள் எச்சரி...</summary>
            <content type="html"><![CDATA[<p>AI Could Wipe Out Humanity Within the Next 10 Years: செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்(AI) மனித குலத்திற்கு அழிவை ஏற்படுத்தலாம் என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.</p><h2> மனித குலத்திற்கு காத்திருக்கும் பேராபத்து</h2><p>அடுத்த 10 ஆண்டுகளில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமானது(AI) மனித குலத்தையே முற்றிலுமாக அழிக்கலாம் என்றும், அதற்கான வாய்ப்புகள் 10% -க்கும் அதிகமாக இருப்பதாக முன்னணி செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப நிறுவனமான ஆந்த்ரோபிக்(Anthropic) அமைப்பின் மூத்த பாதுகாப்பு ஆராய்ச்சியாளர் எவன் ஹூபிங்கர் எச்சரித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/90f70de2-7ac7-4ad2-9ed4-1a85b0008d86/26-6aa1adbd55529.webp' /></p><p>ஆந்த்ரோபிக் நிறுவனத்தில் இருந்து விலகியவரும், ஓபன் ஏஐ(OpenAI) நிறுவனத்தில் பணியாற்றியவருமான ஜேக்கப் காக்சன்(Jacob Coxon) வெளியிட்ட பதிவுக்கு பதிலளித்த எவன் ஹூபிங்கர்(Evan Hubinger) இவ்வாறு பதிலளித்துள்ளார்.</p><p> X தளத்தில் பதிலளித்துள்ள எவன் ஹூபிங்கர், தற்போதைய AI மாடல்களால் ஏற்படும் அச்சுறுத்தல்கள் மிகவும் குறைவு என்றாலும், எதிர்காலத்தில் இந்த AI தொழில்நுட்பங்கள் தங்களை தாங்களே மேம்படுத்திக் கொண்டு மிகப் பெரிய ஆதிக்கத்தை செலுத்தும் காலம் வெகு தொலைவில் இல்லை என்று எச்சரித்துள்ளார்.</p><p>மேலும் அவை மனித குலத்தின் இருப்பிற்கே அச்சுறுத்தலாக அமையக்கூடும் என்றும் எச்சரித்துள்ளார்.</p><p> ஆனால் இதில், AI மாடல்கள் எவ்வாறு மனித குலத்தை அழிக்கும் என்பதற்கான பிரத்யேக நிகழ்வுகளை அவர் விளக்கவில்லை.</p><p></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c305c317-2279-41c1-bfc3-57fe13041a34/26-6aa1adbece5ef.webp' /></p><h2>விவாதங்களும், சந்தேகங்களும்</h2><p>இந்த கருத்துகள் துறைசார் வல்லுனர்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்கள் இடையே பெரும் விவாதங்களை கிளப்பியுள்ளது.</p><p> ஐ.நா அமைப்பின் AI ஆலோசகரும், கணினி விஞ்ஞானியுமான டேம் வெண்டி ஹால், AI அச்சுறுத்தல் தொடர்பான இந்த சமூக வலைதள பதிவை கண்டு அதிர்ச்சியடைந்ததாக தெரிவித்துள்ளார்.</p><p> மேலும் நிறுவனங்கள் பங்குச் சந்தைக்குள் நுழையும் போது இத்தகைய விவகாரங்களை விளம்பர உத்தியாக பயன்படுத்தலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e85963a2-8514-48b9-8d9e-be7ff104e031/26-6aa1adbe0e885.webp' /></p><p> அத்துடன் இத்தகைய ஆபத்தான மதிப்பீடுகள் கொண்ட நிறுவனங்கள் மீது முதலீட்டாளர்கள் முதலீடு செய்வதை தவிர்க்க வேண்டும் என்றும் கருத்து தெரிவித்துள்ளார்.</p><p> சமீபத்தில் பைனான்சியல் டைம்ஸ் வெளியிட்ட செய்தியில்,&nbsp; இங்கிலாந்து AI பாதுகாப்பு நிறுவனத்திடம், ஆந்த்ரோபிக் நிறுவனம் தங்களது அதிநவீன புதிய AI மாடலை ஆபத்து மதிப்பீட்டிற்கு வழங்கவில்லை என தகவல் தெரிவிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-10T00:25:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[3 மாதங்களுக்கு முன்பு இணையத்தில் வெளியான வீடியோ: கோபத்தில் சொந்த மகளை கொன்ற தந்தை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/ahmedabad-sofia-premeditated-honor-killing-1788999857"></link>
            <id>https://news.lankasri.com/article/ahmedabad-sofia-premeditated-honor-killing-1788999857</id>
            <summary type="text">Ahmedabad Sofia Premeditated Honor Killing: அகமதாபாத்தில் சொந்த மகளையே அவரது தந்தை மற்றும் சகோதரர் கொடூரமாக தாக்கி கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>Ahmedabad Sofia Premeditated Honor Killing: அகமதாபாத்தில் சொந்த மகளையே அவரது தந்தை மற்றும் சகோதரர் கொடூரமாக தாக்கி கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><h2> தந்தையும், சகோதரரும் சேர்ந்து நடத்திய சதி</h2><p>
அகமதாபாத்தில் சோபியா என்ற 22 வயது பெண் மருத்துவமனையில் வரவேற்பாளராக பணியாற்றி வந்த நிலையில், மூன்று மாதங்களுக்கு முன்பு ஆண் ஒருவருடன் சோபியா இருக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் பரவியுள்ளது.</p><p> இதனால் கடும் கோபமடைந்த சோபியாவின் குடும்பத்தினர், சமூக அவமானத்துக்கு பயந்து அவரை கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர்.</p><p> இதையடுத்து ஆகஸ்ட் 12ம் திகதி இரவு சோபியாவை மோட்டார் சைக்கிள் சவாரிக்கு செல்வோம் என்று அவரது தந்தை மொஹமந்த் ஃபரூக் மற்றும் அவரது 38 வயது சகோதரர் மொஹமந்த் ஹபில் ஆகிய இருவரும் வெளியே அழைத்து சென்றுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/42480047-29be-432d-8cfd-a92a7e22f18f/26-6aa1f8b373b2f.webp' /></p><p> கெல்ஜிபுரா கிராமத்திற்கு அருகில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட மண் பாதையில் பைக்கை நிறுத்திய சகோதரர் ஹபில், சோபியாவின் தலையில் இரும்பு சுத்தியால் மூன்று முறை தாக்கியுள்ளார்.</p><p>பின்னர் கொலையை மறைப்பதற்காக மீண்டும் சோபியாவின் உடலை சாலைக்கு கொண்டு வந்து, வாகன விபத்து போல் சித்தரிப்பதற்காக அவர்கள் வந்த மோட்டார் சைக்கிளையும், அவர்களையும் சேதப்படுத்தி கொண்டனர்.</p><p> பின்னர் பொலிஸார் தகவல் கொடுத்த அவர்கள், கெல்ஜிபுரா சந்திப்பு அருகில் வேகமாக வந்த கார் ஒன்று தங்களை மோதிவிட்டு நிற்காமல் சென்றதாகவும், இதில் தன்னுடைய சகோதரிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.</p><p></p><p> இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சோபியா அடுத்த நாள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டார்.</p><h2> பொலிஸாருக்கு எழுந்த சந்தேகம்</h2><p>
சோபியாவின் தந்தை மற்றும் சகோதரர் அளித்த விவரங்கள் முன்னுக்கு பின் முரணாக இருந்த காரணத்தினால் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.</p><p> அப்போது மூன்று மாதங்களுக்கு முன்பு இணையத்தில் வெளியான வீடியோ குறித்தும், சோபியா மீது குடும்பத்தினர் கொண்டிருந்த கோபம் குறித்தும் பொலிஸார் கண்டுபிடித்தனர்.</p><p> மேலும் சோபியாவை அடித்து கொன்றுவிட்டு விபத்து போல் காட்சிப்படுத்தியதையும் பொலிஸார் விசாரணையில் உறுதிப்படுத்தினர்.</p><p> இந்நிலையில் சோபியாவின் தந்தை மொஹமந்த் ஃபரூக் மற்றும் சகோதரர் மொஹமந்த் ஹபில் இருவரும் கைது செய்யப்பட்டு கொலை குற்றச்சாட்டை எதிர்கொண்டுள்ளனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p>&nbsp;<br></p>]]></content>
            <updated>2026-09-10T00:24:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[தீபாவளி ரேஸில் குதித்த சூர்யா.. &quot;சீன்&quot; படத்தின் டீஸர் இதோ]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/suriya-scene-movie-teaser-1788999561"></link>
            <id>https://cineulagam.com/article/suriya-scene-movie-teaser-1788999561</id>
            <summary type="text">ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா அடுத்து நடித்து வரும் படத்தை சூர்யா 47 என தற்காலிகமாக அழைத்து வந்தனர். இந்நிலையில் அந்த படத்திற்கு &quot;சீன்&quot; என டைட்டில்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா அடுத்து நடித்து வரும் படத்தை சூர்யா 47 என தற்காலிகமாக அழைத்து வந்தனர். இந்நிலையில் அந்த படத்திற்கு "சீன்" என டைட்டில் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.</p><p>இந்த படத்தில் சூர்யா போதை பழக்கம் இருக்கும் ஒரு போலீஸ் அதிகாரியாக நடித்து இருக்கிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4517a334-0051-4a95-a72e-26f67d8dd096/26-6aa1f78ad6489.webp' /></p><p>
</p><h2>தீபாவளி ரிலீஸ்
</h2><p>தீபாவளி ஸ்பெஷலாக வரும் நவம்பர் 6ம் தேதி இந்த படம் திரைக்கு வரும் என்றும் அறிவித்து உள்ளனர்.
</p><p>
வெளியாகி வைரல் ஆகும் டீஸர் இதோ.&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/_nuRAflabx8" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-09-10T00:20:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[விமல் வீரவன்ச - கம்மன்பில உள்ளிட்ட 6 பேருக்கு எதிரான வழக்கில் முக்கிய உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/permission-granted-to-hear-contempt-court-charges-1788998061"></link>
            <id>https://tamilwin.com/article/permission-granted-to-hear-contempt-court-charges-1788998061</id>
            <summary type="text">அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேவை கைது செய்வதற்கு எதிராக நடத்தப்பட்ட சத்தியாக்கிரகப் போராட்டம் தொடர்பி...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேவை கைது செய்வதற்கு எதிராக நடத்தப்பட்ட சத்தியாக்கிரகப் போராட்டம் தொடர்பில், விமல் வீரவன்ச, உதய கம்மன்பில உள்ளிட்ட 6 பேருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு முறைப்பாட்டை தொடர்ந்து முன்னெடுக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
</p><p>
இந்த உத்தரவு நேற்றுமுன்தினம் 8ஆம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் பிறப்பிக்கப்பட்டுள்ளது.</p><h2>சுரேஷ் சலே&nbsp;கைது</h2><p>
</p><p>
விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, திலித் ஜயவீர, சுகீஸ்வர பண்டார, அசங்க நவரத்ன மற்றும் மகிந்த பதிரண ஆகிய 6 பேருக்கு எதிராகவே இந்த முறைப்பாடு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
</p><p>
சுரேஷ் சலேவை கைது செய்வதற்கு எதிராக கடந்த ஜூலை 7ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரை கொழும்பு கோட்டை தொடருந்து நிலையத்திற்கு முன்பாக சத்தியாக்கிரகம் நடைபெற்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fe04cc62-c608-43bf-ab20-fe0bfddbb27d/26-6aa1f32e34c13.webp' /></p><p>
</p><p>
இதன்போது குறித்த 6 பேரும் தெரிவித்த சில கருத்துகள் நீதிமன்ற நடவடிக்கைகளை விமர்சிக்கும் வகையில் இருந்ததாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p>

இந்த விடயம் தொடர்பான முறைப்பாடு முதலில் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு, பின்னர் மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கு அனுப்பப்பட்டது.</p><h2>வழக்கு விசாரணை</h2><p>

இந்நிலையில், வழக்கை தொடர்ந்து நடத்துவதற்கு போதுமான காரணங்கள் உள்ளதா என்பதை மேன்முறையீட்டு நீதிமன்றம் பரிசீலிக்கும்.

போதுமான காரணங்கள் இருப்பதாக நீதிமன்றம் தீர்மானித்தால், குற்றம் சாட்டப்பட்ட 6 பேருக்கும் தங்கள் மீதான குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்குமாறு உத்தியோகபூர்வ அறிவிப்பு அனுப்பப்பட்டு அதன் பின்னர் வழக்கு விசாரணை நடைபெறும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2db042f5-300b-4b66-9155-5815b47bd43b/26-6aa1f32f2ca40.webp' /></p><p>குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கும் தங்கள் தரப்பு சாட்சிகளை முன்வைத்து, தங்களது நிலைப்பாட்டை விளக்குவதற்கான வாய்ப்பு வழங்கப்படும்.
</p><p>
இறுதியில், நீதிமன்ற அவமதிப்பு குற்றம் இடம்பெற்றதா இல்லையா என்பது குறித்து மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கும் என கூறப்படுகின்றது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-10T00:14:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[உக்ரைனில் ரஷ்யா நடத்திய ட்ரோன் தாக்குதல்! இருவர் பலி - 20 பேர் படுகாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/two-killed-in-russian-drone-attack-in-ukraine-1788997506"></link>
            <id>https://ibctamil.com/article/two-killed-in-russian-drone-attack-in-ukraine-1788997506</id>
            <summary type="text">


உக்ரைனின் வடக்குப் பகுதியிலுள்ள சுமி நகரில் உள்ள ஒரு வணிக வளாகம் ஒன்றின் மீது ரஷ்யா நடத்திய ட்ரோன் தாக்குதலில் இருவர் பலியாகியுள்ளதுடன், 20 பேர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>


உக்ரைனின் வடக்குப் பகுதியிலுள்ள சுமி நகரில் உள்ள ஒரு வணிக வளாகம் ஒன்றின் மீது ரஷ்யா நடத்திய ட்ரோன் தாக்குதலில் இருவர் பலியாகியுள்ளதுடன், 20 பேர் காயமடைந்துள்ளனர்.
</p><p>
ஆரம்பத்தில் மூவர் உயிரிழந்ததாகத் தெரிவித்த ஆளுநர் ஹிரிகோரோவ், பின்னர் டெலிகிராம் தளத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இரண்டு என்று திருத்திப் பதிவிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
</p><p>
தாக்குதலால் அப்பகுதியில் கடும் தீ விபத்து ஏற்பட்டதாகவும் ஆளுநர் வெளியிட்ட புகைப்படங்களில் கட்டிடம் மிக மோசமாகச் சேதமடைந்து, இடிபாடுகள் தரையில் சிதறிக் கிடப்பது காணக் கூடியதாக உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.</p><p>&nbsp;</p><h2>தொடர்ந்து மீட்புப் பணி</h2><p>
</p><p>
பாதிக்கப்பட்டவர்களில் நான்கு பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ள நிலையில், மீட்புக் குழுவினர் தொடர்ந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருவதாக அந்நாட்டு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bc4a95a3-2e87-4d2d-9278-9574bbd6fbd4/26-6aa1f4cea5552.webp' /></p><p>
</p><p>
ரஷ்ய எல்லையை ஒட்டியுள்ள சுமி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள் நீண்டகாலமாக தீவிர தாக்குதல்களுக்கு உள்ளாகி வரும் நிலையில், இப்பகுதியில் ஒரு பாதுகாப்பு இடைவெளி மண்டலத்தை உருவாக்க விரும்புவதாக ரஷ்யா ஏற்கனவே தெரிவித்திருந்ததாக கூறப்படுகிறது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table><p>
</p>]]></content>
            <updated>2026-09-10T00:07:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டில் நிலவிய பாதுகாப்பற்ற நிலையை அரசாங்கம் இல்லாதொழித்துள்ளது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/npp-will-not-turn-back-1788998106"></link>
            <id>https://tamilwin.com/article/npp-will-not-turn-back-1788998106</id>
            <summary type="text">நாட்டில் நிலவிய பாதுகாப்பற்ற நிலையை அரசாங்கம் முற்றாக இல்லாதொழித்துள்ளது என மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா போல்ராஜ் தெரிவித்துள்ளார்.
ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டில் நிலவிய பாதுகாப்பற்ற நிலையை அரசாங்கம் முற்றாக இல்லாதொழித்துள்ளது என மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா போல்ராஜ் தெரிவித்துள்ளார்.
</p><p>சமூகச் சீரழிவு, சட்டம் ஒழுங்கு சீர்குலைவு மற்றும் பாதுகாப்பற்ற நிலைமை முற்றாக ஒழிப்பதில் தற்போதைய அரசாங்கம் வெற்றியடைந்துள்ளதாக 
நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அமைச்சர் இதனைத் குறிப்பிட்டுள்ளார்.</p><p>
கடந்த காலங்களில் நாட்டில் நிலவிய பாதகமான சூழ்நிலைகள் தற்போது முடிவுக்கு வந்துள்ளதாகவும் அவர் வலியுறுத்தினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/865f556a-384f-4932-a5f4-cfcabf3fd79f/26-6aa1f1db99587.webp' /></p><p>
</p><p>அரசாங்கம் ஆரம்பித்துள்ள இந்த வேலைத்திட்டத்தை எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் பின்னோக்கி கொண்டு செல்ல முடியாது எனவும், அதனை தற்காலிகமாகவோ அல்லது நிறுத்துவதற்கு எவருக்கும் இடமளிக்கப்பட மாட்டாது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.</p><p>இந்தப் பயணம் முன்னோக்கியே செல்லும், ஒரு கணமேனும் தற்காலிகமாக நிறுத்தக்கூடிய ஒரு முற்றுப்புள்ளி, அல்லது ஒரு கால்புள்ளியை வைக்கக்கூடிய மட்டத்தில் நாடு இப்போது இல்லை என அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.
</p><p>நாட்டின் சட்டத்தையும் ஒழுங்கையும் உறுதிப்படுத்தி, மக்கள் அச்சமின்றி வாழக்கூடிய சூழலை உருவாக்குவதே அரசாங்கத்தின் முதன்மை நோக்கமாகும் என்பதையும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>தற்போதுள்ள சாதகமான நிலையை மேலும் முன்னெடுத்துச் செல்வதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும் அமைச்சர் சரோஜா போல்ராஜ் மேலும் தெரிவித்துள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-09T23:55:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானின் தாக்குதல் முயற்சிகள் படுதோல்வி! அமெரிக்கா விடுத்துள்ள அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/us-rejects-irgc-claim-strikes-on-navy-destroyers-1788988757"></link>
            <id>https://ibctamil.com/article/us-rejects-irgc-claim-strikes-on-navy-destroyers-1788988757</id>
            <summary type="text">மத்திய கிழக்கில் அமெரிக்கக் கடற்படையின் இரண்டு அழிப்புக் கப்பல்களைத் தாக்கியதாக ஈரான் புரட்சிகரப் படைகள் (IRGC) விடுத்திருந்த அறிக்கையை அமெரிக்க இராணு...</summary>
            <content type="html"><![CDATA[<p>மத்திய கிழக்கில் அமெரிக்கக் கடற்படையின் இரண்டு அழிப்புக் கப்பல்களைத் தாக்கியதாக ஈரான் புரட்சிகரப் படைகள் (IRGC) விடுத்திருந்த அறிக்கையை அமெரிக்க இராணுவத்தின் மத்தியக் கட்டளை மையம் (CENTCOM) மறுத்துள்ளது.
</p><p>
அமெரிக்கக் கடற்படையின் எந்தவொரு போர்க்கப்பலும் தாக்கப்படவில்லை எனவும் IRGC மேற்கொண்ட அனைத்துத் தாக்குதல் முயற்சிகளும் தோல்வியடைந்தன எனவும் அதன்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
முன்னதாக வளைகுடாப் பகுதியில் இரண்டு அமெரிக்கக் கப்பல்கள் மற்றும் எட்டு எண்ணெய் தாங்கிக் கப்பல்களைத் தங்கள் கடற்படை இலக்கு வைத்துத் தாக்கியதாகவும், இத்தாக்குதல்கள் பெரும் சேதத்தை ஏற்படுத்தியதாகவும் IRGC கூறியிருந்தது.</p><p></p><h2>தாக்கப்பட்ட ஈரானிய கப்பல்கள்</h2><p> </p><p>

அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்குப் பதிலடியாகவே இத்தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக ஈரான் தெரிவித்திருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/36bcaae9-7165-4f5e-98fa-95e879cd9122/26-6aa1f18d0cd2e.webp' /></p><p>
</p><p>
எனினும், கடந்த வாரத்தில் ஈரானின் 10 எண்ணெய் தாங்கிக் கப்பல்களை அமெரிக்கப் படைகள் அழித்துள்ளதாக CENTCOM தெரிவித்துள்ளது.
</p><p>
இக்கப்பல்கள் IRGC-க்கு நிதியளிக்கும் பல பில்லியன் டொலர் மதிப்புள்ள நிழல் வலைப்பின்னலின் ஒரு பகுதி என்று அமெரிக்க இராணுவம் விவரித்துள்ளது.&nbsp; &nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-09T23:53:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[இறுதிக் கிரியைக்கு சென்ற தாயும் மகனும் விபத்தில் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/mother-and-son-dies-in-an-accident-1788967752"></link>
            <id>https://tamilwin.com/article/mother-and-son-dies-in-an-accident-1788967752</id>
            <summary type="text">அனுராதபுரத்தில் இடம்பெற்ற கோர வீதி விபத்தொன்றில் தாயும் மகனும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

மரிதன்கடவல நகரில் நேற்று(9) காலை 10.35 ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அனுராதபுரத்தில் இடம்பெற்ற கோர வீதி விபத்தொன்றில் தாயும் மகனும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p> 

மரிதன்கடவல நகரில் நேற்று(9) காலை 10.35 மணியளவில் இந்த விபத்து சம்பவித்துள்ளது. </p><p>

தம்புள்ளை பகுதியில் உறவினர் ஒருவரின் இறுதிக் கிரியை நிகழ்விற்காக மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போதே விபத்து இடம்பெற்றுள்ளது.</p><h2><b>தாயும் மகனும் பலி</b></h2><p> 

இவ்வாறு உயிரிழந்தவர்கள், 47 வயதுடைய மதுஷானி குணசிங்க மற்றும் அவரது மகனான 24 வயதுடைய நிகேஷ் ருவந்த தில்ஷன் என்பவர்களாகும்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f82ebf32-8c1a-42c2-a69a-520e71e1e129/26-6aa187ff8745e.webp' /></p><p>உயிரிழந்த இளைஞன் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் பல்கலைக்கழக மாணவர் என தெரியவந்துள்ளது. </p><p>


விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-09T23:49:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[ராஜ்நாத் சிங்கை சந்தித்தார் பிரதமர் ஹரிணி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/harini-meets-india-defence-minister-rajnath-singh-1788996743"></link>
            <id>https://tamilwin.com/article/harini-meets-india-defence-minister-rajnath-singh-1788996743</id>
            <summary type="text">இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்தியாவின் பாதுகாப்புத்துறை
அமைச்சர் ஸ்ரீ ராஜ்நாத் சிங்கை, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய நேற்று(9) ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்தியாவின் பாதுகாப்புத்துறை
அமைச்சர் ஸ்ரீ ராஜ்நாத் சிங்கை, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய நேற்று(9) நாடாளுமன்றத்தில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.</p><p>

இந்தச் சந்திப்பின்போது, நாடு கடினமான காலகட்டங்களை எதிர்கொண்ட தருணங்களில்
இந்திய அரசு வழங்கிய தொடர்ச்சியான ஆதரவுக்குப் பிரதமர் தனது பாராட்டுக்களைத்
தெரிவித்தார்.</p><h2>இலங்கை - இந்தியா</h2><p>

குறிப்பாக, 'டித்வா' சூறாவளியால் ஏற்பட்ட பேரழிவைத் தொடர்ந்து இந்தியா வழங்கிய
உதவிகளுக்கு நன்றி தெரிவித்த அவர், அனர்த்த நிவாரண உதவிகளுக்காக இந்தியா
'சாகர் பந்து நடவடிக்கை'யை ஆரம்பிக்கப்பட்டதையும் வரவேற்றார்.
</p><p>
பிரதமர் மேலும் தெரிவிக்கையில்,
</p><p>
"இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவு இராஜதந்திர மற்றும் பொருளாதார
ஒத்துழைப்புகளுக்கும் அப்பாலானது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ff5ebf43-aba5-448e-b0cb-1229fe4a3b4e/26-6aa1ee9f04abe.webp' /></p><p> </p><p>இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால
நட்புறவின் ஒருங்கிணைந்த பகுதியாகக் கலாசார, வரலாற்று மற்றும் சமயத்
தொடர்புகள் விளங்குகின்றன. வர்த்தகம், அபிவிருத்தி, பாதுகாப்பு மற்றும் கல்வி
உள்ளிட்ட பல துறைகளில் இந்தியா மிக முக்கிய பங்காளியாகத் திகழ்கின்றது.</p><p>

பாதுகாப்புத்துறையில் இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் நீண்டகால ஒத்துழைப்பைத்
தொடர்ந்து பேணி, மேலும் வலுப்படுத்த வேண்டும்.

நாடாளுமன்ற மற்றும் அரச துறைகள் உள்ளிட்ட திறன் அபிவிருத்தித் துறைகளில் இரு
நாடுகளும் ஒத்துழைப்பைப் பேணி வருகின்றன.</p><h2>பேச்சுவார்த்தை</h2><p> </p><p>இது நிறுவன ரீதியான ஆற்றல்களைப்
பலப்படுத்துவதற்கும் நல்லாட்சியை முன்னெடுப்பதற்கும் பங்களிப்புச்
செய்கின்றது என குறிப்பிட்டார்.</p><p>
சுற்றுலா மற்றும் கல்வித் துறைகளில் பிராந்திய ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதன்
அவசியம் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0b0d130b-fd8a-419c-b4fb-fe7f1ceeb659/26-6aa1ee9fb5448.webp' /></p><p> </p><p>அறிவுப் பரிமாற்றம்,
புத்தாக்கம் மற்றும் திறன் அபிவிருத்தியைப் பலப்படுத்துவதற்காக, இந்திய
தொழில்நுட்ப நிறுவனங்கள் போன்ற விசேட கல்வி நிறுவனங்கள் மற்றும் திட்டங்கள்
உட்பட இரு நாட்டுப் பல்கலைக்கழகங்களுக்கு இடையே அதிக ஒத்துழைப்புக்கான
சாத்தியக்கூறுகள் உள்ளன என்றும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.
</p><p>
இந்த நிகழ்வில் இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா, இந்தியப் பாதுகாப்பு
அமைச்சின் இணைச் செயலாளர் கலாநிதி அமித் தெலாங், இந்திய வெளியுறவு அமைச்சின்
இணைச் செயலாளர் பிரசன்னா ஸ்ரீவஸ்தவா, பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி,
பிரதமரின் மேலதிக செயலாளர் சாகரிகா போகஹவத்த மற்றும் வெளிநாட்டலுவல்கள்,
வெளிநாட்டு வேலைவாய்ப்பு, சுற்றுலா அமைச்சின் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-09T23:41:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[நூலிழையில் தப்பிய ஜெலென்ஸ்கி! பயணித்த விமானத்தை நெருங்கி வந்த ட்ரோன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/danger-posed-to-zelenskyy-s-plane-by-a-drone-1788987096"></link>
            <id>https://ibctamil.com/article/danger-posed-to-zelenskyy-s-plane-by-a-drone-1788987096</id>
            <summary type="text">நோர்வே மன்னரின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி ஒஸ்லோ சென்ற விமானம், செவ்வாய்க்கிழமை மால்டோவாவிலிருந்து புறப்பட...</summary>
            <content type="html"><![CDATA[<p>நோர்வே மன்னரின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி ஒஸ்லோ சென்ற விமானம், செவ்வாய்க்கிழமை மால்டோவாவிலிருந்து புறப்பட்டபோது ட்ரோன் ஒன்றினால் தாக்கப்படும் அபாயத்தை எதிர்கொண்டதாக நோர்வே பிரதமர் யோனாஸ் கார் ஸ்டோர் தெரிவித்துள்ளார்.</p><p>

மல்டோவிய வான்வெளியில் நுழைந்த இரு ரஷ்ய ட்ரோன்கள் காரணமாக, செவ்வாய்க்கிழமை கிஷினாவ் விமான நிலையத்தின் விமானப் போக்குவரத்து சில மணிநேரம் இடைநிறுத்தப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
</p><p>
அதனால் அந்நாட்டின் தலைநகருக்கு வரவிருந்த பல விமானங்கள் மல்டோவாவுக்கு வெளியே உள்ள விமான நிலையங்களில் தரையிறக்கப்பட்டதுடன் வான்வெளியிலேயே காத்திருக்கப் பணிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.</p><p></p><h2>ஜெலென்ஸ்கியின் விமானம்</h2><p>

இந்நிலையிலேயே, மல்டோவாவிலிருந்து புறப்படத் தயாராக இருந்தபோது ஜெலென்ஸ்கியின் விமானம் ட்ரோன் ஒன்றால் தாக்கப்படும் நிலை ஏற்பட்டதாக நோர்வே பிரதமர் கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1975ecf8-dae2-4737-9ed6-418826162677/26-6aa1ca9e0f363.webp' /></p><p><i>Image Credit:&nbsp;kyivindependent</i></p><p>
</p><p>
எவ்வாறாயினும், ஜெலென்ஸ்கியின் விமானம் தொடர்பான நார்வே பிரதமரின் இந்தக் கூற்று குறித்து மல்டோவா அதிகாரிகள் எவ்விதக் கருத்தும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.&nbsp;&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-09T23:34:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாமல் வாங்கியது லஞ்சமா நன்கொடையா! குழப்பத்தில் மகிந்த தரப்பு..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/was-what-namal-received-a-bribe-or-a-donation-1788987416"></link>
            <id>https://tamilwin.com/article/was-what-namal-received-a-bribe-or-a-donation-1788987416</id>
            <summary type="text">நிமல் பெரேரா என்பவர் வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

நாமல் ராஜபக்ச பெற்றதாக கூறப்படும் பணம் ல...</summary>
            <content type="html"><![CDATA[<p>நிமல் பெரேரா என்பவர் வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>

நாமல் ராஜபக்ச பெற்றதாக கூறப்படும் பணம் லஞ்சமா அல்லது நன்கொடையா என்பது தொடர்பில் மகிந்த ராஜபக்ச தரப்பில் குழப்பம் நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>

இந்நிலையில், லஞ்சம் பெறுவதும் வழங்குவதும் தவறு என சுட்டிக்காட்டியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத், பணத்தை முதலில் வழங்கியதாக கூறப்படும் நிமால் பெரேராவையும் கைது செய்து விசாரணைக்கு உட்படுத்தியிருக்க வேண்டும் என விமர்சித்துள்ளார்.
</p><p>
நாமல் ராஜபக்சவின் கைது அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை என கருதும் தரப்பினரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
</p><p>
மறுபுறம், நாமல் ராஜபக்ச தரப்பினர், குறித்த பணம் லஞ்சமாக பெறப்படவில்லை என்று உதயகம்மன்பில குறிப்பிடுகின்றார்.
</p><p>
இவ்விவகாரத்தில் பணம் வழங்கியவர் மற்றும் பெற்றவர் ஆகிய இரு தரப்பினரிடமும் சமமான முறையில் விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் குறிப்பிடப்படுகின்றது.
</p><p>
இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடுகின்றது நாட்டு நடப்பு நிகழ்ச்சி...</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/25vMZicgGkI" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-09T23:24:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[VJ அஞ்சனா சேலையில் அசத்தலான போட்டோஷூட்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/vj-anjana-black-saree-photoshoot-1788994229"></link>
            <id>https://cineulagam.com/article/vj-anjana-black-saree-photoshoot-1788994229</id>
            <summary type="text">சின்னத்திரையில் பிரபல தொகுப்பாளராக இருப்பவர் அஞ்சனா. டிவி நிகழ்ச்சிகளை தாண்டி அவர் பட விழாக்கள் மற்றும் விருது விழாக்கள் போன்ற நிகழ்ச்சிகளை தான் அதிகம...</summary>
            <content type="html"><![CDATA[<p>சின்னத்திரையில் பிரபல தொகுப்பாளராக இருப்பவர் அஞ்சனா. டிவி நிகழ்ச்சிகளை தாண்டி அவர் பட விழாக்கள் மற்றும் விருது விழாக்கள் போன்ற நிகழ்ச்சிகளை தான் அதிகம் தொகுத்து வழங்கி வருகிறார்.</p><p>இன்ஸ்டாவில் 1.4 மில்லியன் ரசிகர்களை வைத்திருக்கும் அஞ்சனா அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.&nbsp;</p><p>&nbsp;தற்போது கருப்பு நிற சேலையில் அவர் போஸ் கொடுத்த லேட்டஸ்ட் ஸ்டில்களை பாருங்க.</p><p>
</p>]]></content>
            <updated>2026-09-09T22:50:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[நடிகை க்ரித்தி ஷெட்டி அழகிய போட்டோஷூட்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/krithi-shetty-cute-photos-1788994104"></link>
            <id>https://cineulagam.com/article/krithi-shetty-cute-photos-1788994104</id>
            <summary type="text">இளம் நடிகை க்ரித்தி ஷெட்டி தற்போது தமிழ், தெலுங்கில் முக்கிய ஹீரோயினாக இருந்து வருகிறார். தமிழில் அவர் விக்னேஷ் சிவனின் LIK படத்தில் நடித்து இருந்த நி...</summary>
            <content type="html"><![CDATA[<p>இளம் நடிகை க்ரித்தி ஷெட்டி தற்போது தமிழ், தெலுங்கில் முக்கிய ஹீரோயினாக இருந்து வருகிறார். தமிழில் அவர் விக்னேஷ் சிவனின் LIK படத்தில் நடித்து இருந்த நிலையில் அது பிளாப் ஆனது.
</p><p>
தற்போது க்ரித்தி அடுத்த படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இன்ஸ்டாவில் அவர் வெளியிடும் போட்டோக்களும் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
</p><p>
க்ரித்தி கியூட்டாக போஸ் கொடுத்துள்ள லேட்டஸ்ட் ஸ்டில்களை பாருங்க.</p>]]></content>
            <updated>2026-09-09T22:48:28+00:00</updated>
        </entry>
    </feed>
