<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-09-08T07:28:47+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வட மாகாண பாடசாலைகளில் ஆசிரியர் வெற்றிடங்கள்; பிரதமர் ஹரிணி கூறிய விடயம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/teacher-action-to-fill-the-vacancy-npc-pm-harini-1788852368"></link>
            <id>https://jvpnews.com/article/teacher-action-to-fill-the-vacancy-npc-pm-harini-1788852368</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;வட மாகாண பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை நிவர்த்தி செய்வதற்காக 23,000 ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான பரீட்சைகள் நடத்தப்பட...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;வட மாகாண பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை நிவர்த்தி செய்வதற்காக 23,000 ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான பரீட்சைகள் நடத்தப்பட்டுள்ளதாகத் பிரதமர் ஹரிணி அமரசூரிய, நாடாளும்ன்றில் இன்று (8) தெரிவித்துள்ளார்.
</p><p>
வட மாகாண பாடசாலைகளில் 170 தகவல் தொழில்நுட்ப (ICT) ஆசிரியர் வெற்றிடங்கள் காணப்படுவதாகவும், ICT ஆசிரியர் பணியிடங்களில் சுமார் 31 சதவீத வெற்றிடமாக இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b0d71a82-bd2d-40db-8a15-ce00b4405d0b/26-6a9fb891d8913.webp' /></p><h2>&nbsp;23,000 ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு&nbsp;</h2><p>
</p><p>
குறிப்பாக தீவகம், தென்மராட்சி மற்றும் மடு ஆகிய கல்வி வலயங்களில் 40 சதவீதத்துக்கும் அதிகமான ICT ஆசிரியர் வெற்றிடங்கள் காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ICT ஆசிரியர் வெற்றிடங்கள் காரணமாக, பாடசாலைகளில் பழுதடையும் கணினிகள், ஸ்மார்ட் பலகைகள் மற்றும் மடிக்கணினிகளைப் பழுதுபார்ப்பதிலும், அவற்றுக்கான தொழில்நுட்ப மதிப்பீட்டு அறிக்கைகளை வழங்குவதிலும் பெருமளவு தாமதம் ஏற்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p>

இதற்குப் பதிலளித்த பிரதமர் ஹரிணி அமரசூரிய, பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை நிவர்த்தி செய்வதற்காக 23,000 ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான பரீட்சைகள் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
</p><p>
மேலும், நடப்பு ஆண்டுக்குள் ஆசிரியர் வெற்றிடங்களில் 50 சதவீதத்தை நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிரதமர் உறுதியளித்துள்ளார்.</p><p>

இதனிடையே, பாடசாலைகளில் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ள மின்னணு சாதனங்களை எரிப்பது அல்லது மண்ணில் புதைப்பது சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், அவற்றை முறையாக மறுசுழற்சி செய்வதற்கான நடைமுறையை அறிமுகப்படுத்த வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கோரிக்கை விடுத்துள்ளார்.</p><p>

அதற்குப் பதிலளித்த பிரதமர், மின்னணுக் கழிவுகளைப் பாதுகாப்பான முறையில் அகற்றுவதற்கான தெளிவான நடைமுறைகள் உருவாக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.

டிஜிட்டல் பொருளாதார அமைச்சுடன் இணைந்து கல்வித்துறைக்கான புதிய வழிகாட்டுதல்கள் விரைவில் வெளியிடப்படும் என்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய இதன்போது மேலும், தெரிவித்துள்ளார்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-08T07:23:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[AfD கட்சியின் வெற்றி எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும்: ஜேர்மன் சேன்ஸலர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/merz-warns-afd-victory-changes-all-of-germany-1788851579"></link>
            <id>https://news.lankasri.com/article/merz-warns-afd-victory-changes-all-of-germany-1788851579</id>
            <summary type="text">Chancellor Merz says recent election result changes all of Germany: சமீபத்திய தேர்தல் முடிவுகள் முழு ஜேர்மனி மீதும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>Chancellor Merz says recent election result changes all of Germany: சமீபத்திய தேர்தல் முடிவுகள் முழு ஜேர்மனி மீதும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறியுள்ளார் சேன்ஸலர் மெர்ஸ்.
</p><p>

ஞாயிற்றுக்கிழமை வெளியான Saxony-Anhalt மாகாண தேர்தல் முடிவுகள், ஜேர்மன் சேன்ஸலரான பிரெட்ரிக் மெர்ஸ் முதல், பல தரப்பு அரசியல்வாதிகளையும் ஆட்டம் காணச் செய்துள்ளன.
</p><h3>
AfD கட்சியின் வெற்றி
</h3><p>
பொதுவாகவே, கிழக்கு ஜேர்மனியைப் பொருத்தவரை, ஒவ்வொரு முறை தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்பும் கருத்துக்கணிப்புகள் நடத்தப்படும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6386bcb5-b4c4-4e00-b096-d8968f762bad/26-6a9fb57c9efad.webp' /></p><p>

கருத்துக்கணிப்புகளில் தீவிர வலதுசாரி புலம்பெயர்தல் எதிர்ப்புக் கட்சியான AfD கட்சிக்கு அதிக ஆதரவு என முடிவுகள் வெளியாகும்.
</p><p>
ஆனால், கடைசி நேரத்தில் வேறொரு கட்சி வெற்றி பெற்று AfD கட்சியை பின்னுக்குத் தள்ளிவிடும்.
</p><p>
இம்முறை Saxony-Anhalt மாகாணத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்டபோதும், AfD கட்சிக்கு அதிக ஆதரவு என்றே முடிவுகள் வெளியாகின.&nbsp;</p><p></p><p>
ஆனால், இது வழக்கமாக நடப்பதுதானே என மற்ற கட்சிகள் அலட்சியமாக இருந்துவிட்டனவோ என்னவோ தெரியாது. இம்முறை யாரும் எதிர்பார்க்காத வகையில் AfD கட்சி அமோக வெற்றி பெற்றுவிட்டது.
</p><h3>
ஜேர்மன் சேன்ஸலரின் கருத்து
</h3><p>
Saxony-Anhalt மாகாண தேர்தல் முடிவுகள், பல தரப்பு அரசியல்வாதிகளையும் ஆட்டம் காணச் செய்துள்ள நிலையில், ஜேர்மன் சேன்ஸலரான பிரெட்ரிக் மெர்ஸ் ஆடிப்போனது வெளிப்படையாகவே தெரிகிறது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4a160959-f87c-4e78-987e-489858d6db2c/26-6a9fb57d53902.webp' /></p><p>
இந்நிலையில், தேர்தல் முடிவுகள் குறித்து கருத்து தெரிவித்துள்ள மெர்ஸ், Saxony-Anhalt மாகாண தேர்தல் முடிவுகளால், அம்மாகாணத்தில் மட்டுமல்ல, ஜேர்மனி முழுவதிலுமே சில விடயங்கள் மாறிவிட்டன என்று கூறியுள்ளார்.
</p><p>
மேலும், சர்வதேச அரங்கிலும், இந்த தேர்தல் முடிவுகள் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் கூறியுள்ளார் மெர்ஸ்.</p><p>

ஏனென்றால், ரஷ்ய உக்ரைன் போரில், உக்ரைனுக்கு ஜேர்மனி ஆதரவளிக்கிறது. ஆனால், வெற்றி பெற்றுள்ள AfD கட்சியினர், அதை எதிர்க்கிறார்கள். அத்துடன், AfD கட்சியினரில் பலர், ரஷ்ய ஜனாதிபதி புடின் அரசுடன் நெருக்கம் கொண்டவர்களாக இருக்கிறார்கள் என்கிறார் அவர்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-08T07:13:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அங்கு வேண்டாம் ... இங்கே தயாரியுங்கள்; கனடா நிறுவனத்திற்கு டிரம்ப் போட்ட உத்தரவு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/trump-order-to-the-canadian-company-bombardier-1788851716"></link>
            <id>https://canadamirror.com/article/trump-order-to-the-canadian-company-bombardier-1788851716</id>
            <summary type="text">&amp;nbsp; அமெரிக்காவில் தமது வானுார்திகளை விற்பனை செய்ய வேண்டுமானால் கனடாவைச் சேர்ந்த &#039;போம்பார்டியர்&#039; (Bombardier) நிறுவனம் அமெரிக்காவிலேயே தனது வானுார்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; அமெரிக்காவில் தமது வானுார்திகளை விற்பனை செய்ய வேண்டுமானால் கனடாவைச் சேர்ந்த 'போம்பார்டியர்' (Bombardier) நிறுவனம் அமெரிக்காவிலேயே தனது வானுார்திகளை தயாரிக்க வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
</p><p>
அமெரிக்க சந்தை வேண்டுமெனில் அவர்கள் இங்குதான் உற்பத்தி செய்ய வேண்டும், அமெரிக்காவை ஒரு 'பிக்பேங்க்' (piggybank) என்ற சொந்த சொத்து போன்று நடத்துவதை நிறுத்த வேண்டும்" என்றும்&nbsp; &nbsp;ட்ரம்ப்,&nbsp;சமூக வலைத்தளத்தில்&nbsp; பதிவிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3ffc5397-f5ee-4696-a80a-fd4e1a3c730e/26-6a9fb6068a22c.webp' /></p><h2>அமெரிக்கா -கனடா&nbsp; வர்த்தக மோதல்</h2><p>

அமெரிக்காவுக்கும் கனடாவுக்கும் இடையே வர்த்தக மோதல்கள் வெடித்துள்ள நிலையில் இந்த அறிவிப்பு வந்துள்ளது.
</p><p>
கனடா பொருட்கள் மீது ட்ரம்ப் வரி விதித்துள்ளதால், அதற்குப் பதிலடியாக கனடாவும் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் அமெரிக்கப் பொருட்கள் மீது இறக்குமதி வரிகளை நடைமுறைப்படுத்தவுள்ளது.
</p><p>
கனடா தனது நாட்டின் வங்கிகளையும், அமெரிக்க நிறுவனங்களையும் குறிப்பாக ( கல்ஃப்ஸ்ட்ரீம் ஏரோஸ்பேஸ் - Gulfstream Aerospace) நிறுவனத்தை தமது சந்தையில் வியாபாரம் செய்ய அனுமதிக்கவில்லை என்று ட்ரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.
</p><p>&nbsp;அதேசமயம்&nbsp; &nbsp;போம்பார்டியர் நிறுவனத்தின் 50 வீத வருமானம் அமெரிக்காவில்தான் கிடைக்கிறது.
</p><p>
இந்த நிலையில், ட்ரம்பின் அறிவிப்பு, நெட்ஜெட்ஸ்' (NetJets) போன்ற பெரிய தனியார் ஜெட் வானுார்தி நிறுவனங்களை நேரடியாகப் பாதிக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-08T07:12:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[பட்டய ஊடகவியலாளர்கள் நிறுவன சட்டமூலம் : உயர்நீதிமன்றின் தீர்மானம் அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/chartered-institute-of-media-professionals-bill-1788845762"></link>
            <id>https://ibctamil.com/article/chartered-institute-of-media-professionals-bill-1788845762</id>
            <summary type="text">இலங்கை பட்டய ஊடகவியலாளர்கள் நிறுவனத்தை நிறுவுவதற்கான சட்டமூலம் தொடர்பில் உயர்நீதிமன்றம் வழங்கிய வியாக்கியானத்தை சபாநாயகர் நாடாளுமன்றத்துக்கு இன்று (08...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை பட்டய ஊடகவியலாளர்கள் நிறுவனத்தை நிறுவுவதற்கான சட்டமூலம் தொடர்பில் உயர்நீதிமன்றம் வழங்கிய வியாக்கியானத்தை சபாநாயகர் நாடாளுமன்றத்துக்கு இன்று (08) அறிவித்துள்ளார்.
</p><p>
இதற்கமைய, அரசியலமைப்பின் 121(1) பிரிவின் படி உயர்நீதிமன்றத்தில் சவாலுக்கு உட்படுத்தப்பட்ட இந்தச் சட்டமூலத்தின் சில பிரிவுகள் அரசியலமைப்புக்கு முரணாக அமைந்துள்ளதாக உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.</p><p>

எனவே, இதனை நிறைவேற்றுவதற்கு அரசியலமைப்பின் 84(2) பிரிவின் கீழ் விசேட பெரும்பான்மை வாக்குகள் அவசியமாகும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><p></p><h2>சபாநாயகரின் உத்தரவு&nbsp;</h2><p>

எனினும், உயர்நீதிமன்றம் யோசனை தெரிவித்துள்ளவாறு அந்தப் பிரிவுகள் நீக்கப்பட்டால் சாதாரண பெரும்பான்மையுடன் நிறைவேற்ற முடியும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3a07969e-c31c-4053-bc17-91f72e0b05a2/26-6a9fb418f2599.webp' /></p><p>
</p><p>
மேலும், சட்டமூலத்தின் ஏனைய பிரிவுகள் அரசியலமைப்புக்கு முரணானவை அல்ல என உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
</p><p>
அதன்படி, உயர்நீதிமன்றத்தின் முழுமையான தீர்மானத்தை இன்றைய நாடாளுமன்ற அதிகாரப்பூர்வ அறிக்கையில் (ஹன்சார்ட்) அச்சிடுமாறு சபாநாயகர் உத்தரவிட்டுள்ளது.</p><p> இலங்கையின் ஊடகத்துறையில் ஈடுபட்டுள்ள ஊடகவியலாளர்களுக்கு உயரிய தரநிலைகளை அறிமுகப்படுத்துவதையும் அதனைப் பேணி வருவதையும் நோக்கமாகக் கொண்டு இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p>&nbsp;</p><p>&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-08T07:11:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஏர்பஸ் பரிவர்த்தனையில் மகிந்தவுக்கான தொடர்பு! ஐ. நா சபையில் சமர்ப்பிக்கப்படவுள்ள முக்கிய அறிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/mahinda-s-involvement-in-airbus-deal-un-report-1788849269"></link>
            <id>https://ibctamil.com/article/mahinda-s-involvement-in-airbus-deal-un-report-1788849269</id>
            <summary type="text"> பரவலாக விவாதிக்கப்பட்ட சிறிலங்கன் ஏர்லைன்ஸ் - ஏர்பஸ் பரிவர்த்தனை மற்றும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடனான அதன் தொடர்பு குறித்து&amp;nbsp;ஐக்கிய நாட...</summary>
            <content type="html"><![CDATA[<p> பரவலாக விவாதிக்கப்பட்ட சிறிலங்கன் ஏர்லைன்ஸ் - ஏர்பஸ் பரிவர்த்தனை மற்றும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடனான அதன் தொடர்பு குறித்து&nbsp;ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இன்று சிறப்பு அறிக்கை ஒன்று சமர்ப்பிக்கப்படவுள்ளது.</p><p>மேலும்,&nbsp;முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சம்பந்தப்பட்ட பொது நிதி முறைகேடு குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகள் குறித்தும் இன்று சமர்ப்பிக்கப்படவுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.</p><p>இது குறித்து தெரியவருகையில்,&nbsp;</p><p></p><h2>இலங்கையின் மனித உரிமைகள் நிலைமை&nbsp;</h2><p>இலங்கையின் மனித உரிமைகள் நிலைமை குறித்த ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர் ஆணையரின் அலுவலகத்தின் சமீபத்திய அறிக்கை, இன்று (08.09.2026) அன்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் சமர்ப்பிக்கப்பட உள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f82820b5-1cd2-4ac4-95b4-968e3b7ca309/26-6a9fb20ba88ea.webp' /></p><p>

சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் நடைபெற்று வரும் ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 63வது அமர்வின் போது இந்தச் சமர்ப்பிப்பு நடைபெறவுள்ளதாக&nbsp;தெரிவிக்கப்படுகிறது.</p><p>

நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் பரந்த மனித உரிமைகள் தொடர்பான பிரச்சினைகள் உட்பட, இலங்கையில் மனித உரிமைகள் தொடர்பான முன்னேற்றங்கள் குறித்த மிகச் சமீபத்திய மதிப்பீட்டை இந்த அறிக்கை சபைக்கு வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>

கடந்த வாரம், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர் ஆணையரின் அலுவலகம் வெளியிட்ட ஒரு முன்கூட்டிய அறிக்கை, இலங்கையின் வரலாற்றிலேயே மிக மோசமான பொருளாதார நெருக்கடியானது, ஊழல் மற்றும் மோசடியால் தூண்டப்பட்ட மனித உரிமைகள் சவால்களுக்கு வழிவகுத்தது என்று குறிப்பிட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/18db856f-e793-486e-a289-73ecf028994c/26-6a9fb5cf3ff45.webp' /></p><p>

அதன் விளைவாக, நாட்டின் வருவாயில் மிகக் குறைந்த அளவிலான பங்கு மட்டுமே சமூக நலச் செலவினங்களுக்காகக் கிடைத்துள்ளது என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.</p><p>மேலும், பரவலாக விவாதிக்கப்பட்ட சிறிலங்கன் ஏர்லைன்ஸ் ஏர்பஸ் பரிவர்த்தனை மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடனான அதன் தொடர்பு குறித்தும், அத்துடன் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சம்பந்தப்பட்ட பொது நிதி முறைகேடு குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகள் குறித்தும் அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-08T07:08:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கட்டுநாயக்கவில் சட்டவிரோத போதைப்பொருளுடன் இரு வெளிநாட்டவர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/narcotics-worth-5-million-were-seized-at-airport-1788848882"></link>
            <id>https://ibctamil.com/article/narcotics-worth-5-million-were-seized-at-airport-1788848882</id>
            <summary type="text">5 கோடிக்கும் அதிக பெறுமதியான போதைப்பொருட்களை நாட்டுக்குள் கடத்தி வந்த வெளிநாட்டு விமானப் பயணிகள் இருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய...</summary>
            <content type="html"><![CDATA[<p>5 கோடிக்கும் அதிக பெறுமதியான போதைப்பொருட்களை நாட்டுக்குள் கடத்தி வந்த வெளிநாட்டு விமானப் பயணிகள் இருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p>
குறித்த இருவரும் விமான நிலையத்தின் வருகை முனையத்தில் உள்ள “பசுமைப் பாதை” ஊடாக வெளியேற முயன்றபோது, சுங்கத் திணைக்களத்தின் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>

கைது செய்யப்பட்டவர்கள் 23 மற்றும் 39 வயதுடைய தாய்லாந்து பிரஜைகள் எனவும், அவர்கள் தாய்லாந்தில் உள்ள இறைச்சிக் கடை ஒன்றில் இறைச்சி வெட்டுபவர்களாக பணியாற்றி வருவதாகவும் தெரியவந்துள்ளனர்.&nbsp;</p><p></p><h2>“குஷ்” போதைப்பொருள்&nbsp;</h2><p>சந்தேக நபர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் மொத்த பெறுமதி&nbsp;5 கோடியே 13 இலட்சத்து 70 ஆயிரம் ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a797ec7b-9c69-4fb1-b2ec-be860f35577e/26-6a9fb35e3370b.webp' /></p><p>

அவர்கள் கொண்டு வந்த இரண்டு பயணப் பொதிகளை சோதனையிட்டபோது, வைட்டமின்கள் அடங்கியதாகக் குறிப்பிடப்பட்ட 16 கொள்கலன்களுக்குள் 4 கிலோ 496 கிராம் “குஷ்” போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.</p><p>

மேலும், 641 கிராம் “ஹஷீஷ்” போதைப்பொருள், வெளிப்புறத்தில் திராட்சைப் பாகு போன்று தோற்றமளிக்கும் வகையில் தயாரிக்கப்பட்டு, பொலித்தீன் மூலம் சுற்றப்பட்ட நிலையில் கைப்பற்றப்பட்டுள்ளது.</p><p>

சம்பவம் தொடர்பில் சுங்கத் திணைக்களத்தின் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-08T07:07:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாடு முழுவதும் 31 சதொச நிலையங்களுக்கு பூட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/31-lanka-sathosa-outlets-closed-between-jan-1788850557"></link>
            <id>https://ibctamil.com/article/31-lanka-sathosa-outlets-closed-between-jan-1788850557</id>
            <summary type="text">2024 ஜனவரி முதல் 2025 அக்டோபர் வரையான காலப்பகுதியில் நாடு முழுவதும் சுமார் 31 சதொச விற்பனை நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.குறித்த விடயத்தை பிரதி அமைச்சர் ஆ...</summary>
            <content type="html"><![CDATA[<p>2024 ஜனவரி முதல் 2025 அக்டோபர் வரையான காலப்பகுதியில் நாடு முழுவதும் சுமார் 31 சதொச விற்பனை நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.</p><p>குறித்த விடயத்தை பிரதி அமைச்சர் ஆர். எம். ஜெயவர்தன நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p>தற்போது நாடு முழுவதும் 424 சதொச விற்பனை நிலையங்கள் இயங்கி வருவதாகவும், தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தபோது சதொச நிறுவனம் ரூ.24 பில்லியன் நட்டத்திலும், ரூ.11 பில்லியன் கடனிலும் இருந்ததாகவும் அவர் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3e93447d-7c7f-4ca7-991e-f722de47fbe2/26-6a9fb405c636a.webp' /></p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-08T07:07:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜெனிவாவில் இலங்கை பற்றிய அறிக்கை உத்தியோகபூர்வமாகச் சமர்ப்பிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/report-sri-lanka-officially-presented-geneva-today-1788850203"></link>
            <id>https://tamilwin.com/article/report-sri-lanka-officially-presented-geneva-today-1788850203</id>
            <summary type="text">ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 63ஆவது அமர்வில், இலங்கை தொடர்பான
மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கை இன்று உத்தியோகபூர்வமாகச்
சமர்ப்பிக்கப்படவுள...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 63ஆவது அமர்வில், இலங்கை தொடர்பான
மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கை இன்று உத்தியோகபூர்வமாகச்
சமர்ப்பிக்கப்படவுள்ளது.</p><h2>உரிய தீர்மானம்..&nbsp;</h2><p>

சுவிட்சர்லாந்தின் ஜெனிவா நகரில் நேற்று ஆரம்பமான இந்தக் கூட்டத் தொடரில்
மேற்படி அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என ஆரம்பத்தில் எதிர்பார்க்கப்பட்ட
நிலையில், அது இன்றைய தினத்துக்கு ஒத்திவைக்கப்பட்டு, இன்று ஆணையாளர் வோல்கர்
துர்க்கினால் சமர்ப்பிக்கப்படவுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/13382cbb-b35f-4ab7-97d8-88871efb12da/26-6a9fb24d91e24.webp' /></p><p>

இலங்கையின் உள்நாட்டுப்போர் முடிவுக்கு வந்து 17 ஆண்டுகள் கடந்துள்ள
நிலையிலும், நாட்டில் மனித உரிமைகள் மற்றும் பொறுப்புக்கூறல் விவகாரங்கள்
தமக்கான முழுமையான தீர்வைப் பெறவில்லை என்று வோல்கர் துர்க் தனது அறிக்கையில்
சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p>
எதிர்வரும் ஒக்டோபர் 7ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இந்த அமர்வில், மனித உரிமைகள்
பேரவையின் உறுப்பு நாடுகள் இந்த அறிக்கையைப் பரிசீலித்து, உரிய தீர்மானத்தை
நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளன.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-08T07:00:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[Happy Tuesday என நடிகை ரெஜினா கசாண்ட்ரா வெளியிட்ட கலக்கல் போட்டோஸ்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/regina-cassandra-tuesday-special-photos-1788848280"></link>
            <id>https://cineulagam.com/article/regina-cassandra-tuesday-special-photos-1788848280</id>
            <summary type="text">ரெஜினா கசாண்ட்ராரெஜினா கசாண்ட்ரா, தமிழ் சினிமாவில் வலம்வரும் இளம் நடிகைகளில் ஒருவர். நாயகியாக கலக்கி வந்தவர் அஜித்தின் விடாமுயற்சி படத்தின் வில்லியாக ...</summary>
            <content type="html"><![CDATA[<h2>ரெஜினா கசாண்ட்ரா</h2><p>ரெஜினா கசாண்ட்ரா, தமிழ் சினிமாவில் வலம்வரும் இளம் நடிகைகளில் ஒருவர். </p><p>நாயகியாக கலக்கி வந்தவர் அஜித்தின் விடாமுயற்சி படத்தின் வில்லியாக நடித்து அசத்தியிருந்தார். அப்படத்தை தொடர்ந்து ரெஜினா, சுந்தர்.சி இயக்கத்தில் தயாராகும் மூக்குத்தி அம்மன் 2 படத்தில் வில்லி கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம்.&nbsp;</p><p>அடுத்தடுத்து சில முக்கியமான படங்களில் கமிட்டாகி நடிக்கும் ரெஜினா Happy Tuesday என்று ஒரு சூப்பரான போட்டோ ஷுட் புகைப்படங்கள் வெளியிட்டுள்ளார். இதோ பாருங்கள்,</p><p><br></p>]]></content>
            <updated>2026-09-08T07:00:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[பெண்கள்தான் தாலி அணியவேண்டுமா? ஆண்களுக்கு எதுவும் இல்லையா? நமீதா ஆவேசமான கருத்து...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/actress-namitha-talks-about-thali-women-men-1788851187"></link>
            <id>https://viduppu.com/article/actress-namitha-talks-about-thali-women-men-1788851187</id>
            <summary type="text">நமீதாதென்னிந்திய சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை நமீதா, தற்போது உடல் எடையை குறைத்து மீண்டும் தன்னுடைய பழைய நிலைக்கு திரும்பியிருக்கிறார...</summary>
            <content type="html"><![CDATA[<h2>நமீதா</h2><p>தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை நமீதா, தற்போது உடல் எடையை குறைத்து மீண்டும் தன்னுடைய பழைய நிலைக்கு திரும்பியிருக்கிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/987f233f-2747-4d5f-91af-c4dccff67757/26-6a9fb3f50992f.webp' /></p><p> சமீபத்தில் அவர் அளித்த பேட்டியொன்றில், திருமணமானதுமே கண்டிப்பாக பெண்கள்தான், தாலி அணிய வேண்டும் என்று பகவத் கீதையில் எழுதப்பட்டு இருக்கிறதா? இந்த விதிமுறைகள் ஏதேனும் வேதங்களிலோ அல்லது புராணங்களிலோ சொல்லப்பட்டு இருக்கிறதா? நிச்சயம் இல்லை. இ</p><p>ந்த சமூகம் தான் பெண்களுக்காக பல கட்டுப்பாடு விதிமுறைகளை உருவாக்கி வலுக்கட்டாயமாக அவர்கள் மீது திணித்துக் கொண்டிருக்கிறது. ஆண்களுக்கு ஏன் இதில் எந்தக் கட்டுபாடும் இல்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/87733d0b-8b2a-43ba-a858-1c8686950b0f/26-6a9fb3f5b22e0.webp' /></p><p> </p><p>வரலட்சுமி நோன்பை கணவனின் ஆயுளுக்காக, நலனுக்காக மனைவிதான் இருக்க வேண்டும் என்கிறார்கள். சரி மனைவியாக நான் வருடத்திற்கு ஒருநாள் கணவருக்காக விரதமிருந்து நோன்பு இருக்கிறேன்.</p><p> ஆனால் கணவராக இருக்கும் ஒரு ஆண், வருடத்திற்கு இன்னொரு நாளாவது தன் மனைவிக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்ற விதிமுறை இச்சமூகத்தில் இருக்கிறதா என்றால் இல்லை. ஏன் அப்படியொரு விதியை உருவாக்கவில்லை, ஏன் எல்லா விதிகளும் பெண்களை நோக்கியே எழுதப்பட்டிருக்கிறது? என்று நமீதா பேசியுள்ளது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-08T07:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாமல் எந்தவிதத்திலும் விசேடமான நபர் அல்ல! பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/chaturanga-abeysinghe-s-comments-on-namal-s-arrest-1788847568"></link>
            <id>https://tamilwin.com/article/chaturanga-abeysinghe-s-comments-on-namal-s-arrest-1788847568</id>
            <summary type="text">நாட்டின் சட்டத்தையும் நீதியையும் நடைமுறைப்படுத்தும் நிறுவனங்களை
வலுப்படுத்துவதே தற்போதைய அரசாங்கத்தின் முதன்மை நோக்கம் எனவும், சட்டத்தின்
முன்னிலையி...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டின் சட்டத்தையும் நீதியையும் நடைமுறைப்படுத்தும் நிறுவனங்களை
வலுப்படுத்துவதே தற்போதைய அரசாங்கத்தின் முதன்மை நோக்கம் எனவும், சட்டத்தின்
முன்னிலையில் அனைவரும் சமமானவர்களே எனவும் பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க
தெரிவித்துள்ளார்.</p><p>

மொட்டுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டு
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் ஊடகங்களிடம் கருத்துரைக்கும்போதே
அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.</p><h2>உரிய சட்ட நடவடிக்கை</h2><p>அவர் மேலும் தெரிவிக்கையில், நாமல் ராஜபக்ச இந்த நாட்டின் ஒரு சாதாரண பிரஜையே தவிர, அவர் எந்தவிதத்திலும்
விசேடமான நபர் அல்லர். முன்பிருந்த ஊழல் மற்றும் மோசடிகளுடன் அவருக்குத்
தொடர்பு இருக்குமாயின், அது தொடர்பில் உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.</p><p>

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கூட்டம் இடம்பெறும் தருணத்தில் இந்தக் கைது
இடம்பெற்றதால், இது அரசாங்கத்தின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை எனச் சுமத்தப்படும்
குற்றச்சாட்டுகளை முற்றாக நிராகரிக்கின்றோம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/27afe84c-4793-4d9b-810d-2207224fad75/26-6a9fb153a9f40.webp' /></p><p>

சட்டத்தை நடைமுறைப்படுத்தும் சுயாதீன நிறுவனங்கள் தமது விசாரணைகளின்
முடிவுகளுக்கு அமைவாகவே நபர்களை அழைப்பதும் சட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதும்
வழக்கம்.</p><h2>சட்டபூர்வ கைது</h2><p> இத்தகைய அரசியல் நடவடிக்கைகளுக்கும் குறித்த சட்டபூர்வ கைதுக்கும்
இடையே எவ்வித தொடர்பும் இல்லை.

அரசாங்கம் என்ற ரீதியில் நாம் சட்ட அமுலாக்க நிறுவனங்களை பலப்படுத்துவதையே
செய்துள்ளோம். </p><p>மக்கள் ஆணையுடன் கட்டியெழுப்பப்பட்ட இந்த அரசாங்கத்தின் ஜனாதிபதி
உள்ளிட்ட அனைவரும், மாவட்ட மற்றும் கிராம மட்டங்களில் மக்களைத்
தெளிவுபடுத்தும் விழிப்புணர்வு வேலைத்திட்டங்களைத் தொடர்ச்சியாக முன்னெடுத்து
வருகின்றனர் என்றார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-08T06:58:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரஷ்யாவில் இருந்து வட கொரியாவுக்கு... முதல் முறையாக பாலம் திறப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/north-korea-russia-first-bridge-1788850816"></link>
            <id>https://news.lankasri.com/article/north-korea-russia-first-bridge-1788850816</id>
            <summary type="text">North Korea and Russia open their first road bridge: வட கொரியாவும் ரஷ்யாவும் தங்கள் முதல் சாலைப் பாலத்தைத் திறந்துள்ளன.
வட கொரியாவும் ரஷ்யாவும், நட்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>North Korea and Russia open their first road bridge: வட கொரியாவும் ரஷ்யாவும் தங்கள் முதல் சாலைப் பாலத்தைத் திறந்துள்ளன.
</p><p>வட கொரியாவும் ரஷ்யாவும், நட்புறவின் வெளிப்பாடாக, திங்கட்கிழமை அன்று தங்களது முதல் சாலைப் போக்குவரத்துக்கான பாலத்தைத் திறந்து வைத்துள்ளனர்.</p><h2>இருவழிப் பாலம்</h2><p>
</p><p>துமென் ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள இந்த பாலமானது, இரு தரப்பினரும் தங்களின் ஆழமடைந்து வரும் கூட்டாண்மையில் ஒரு முக்கிய மைல்கல்லாகக் கருதுகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9fc57fe0-2d2b-4f07-ad99-be5b42f23863/26-6a9fb282d9b3f.webp' /></p><p>ரஷ்யப் பிரதமர் மிகைல் மிஷுஸ்டின் மற்றும் வட கொரியப் பிரதமர் பாக் தே சோங் ஆகியோர் காணொளிக் காட்சி மூலம் இரு நாடுகளின் தொழிலாளர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகளிடம் உரையாற்றியபோது,</p><p>​​கொடிகளால் அலங்கரிக்கப்பட்ட முதல் சரக்கு லொறிகள் 1 கி.மீ தொலைவுள்ள இருவழிப் பாலத்தைக் கடந்து சென்றன. </p><p>பல ஆண்டுகளாகப் பேசப்பட்டு வந்த புதிய பாலத்தின் கட்டுமானப் பணிகள், 2024-ஆம் ஆண்டு வட கொரியாவிற்கு ஜனாதிபதி விளாடிமிர் புடின் மேற்கொண்ட பயணத்தின்போது இத்திட்டம் ஒப்புக்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கின.</p><p></p><p> </p><p>மாஸ்கோவிற்கும் பியாங்யாங்கிற்கும் இடையே ஏற்கனவே நேரடி விமான மற்றும் ரயில் இணைப்புகள் உள்ளன, ஆனால் திங்கட்கிழமை வரை முறையான சாலை இணைப்பு இருக்கவில்லை. </p><p>மாறாக, 1959 ஆம் ஆண்டு முதல் ஒரு சிறப்பு ஏற்பாட்டின் மூலம், பல தசாப்தங்களாக இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லையைக் கடந்து வாகனங்களை நகர்த்துவதற்காக, அருகிலுள்ள ரயில் பாலத்தின் மீது பலகைகள் போடப்பட்டிருந்தன - அந்தப் பாலம்தான் எல்லையைக் கடக்கும் ஒரே இடமாக இருந்தது. </p><p>இந்த நிலையில், தினமும் 300 வாகனங்கள் வரை கடந்து செல்ல முடியும் என்றும், இந்தப் பாலம் ரஷ்யாவின் ஃபெடரல் சாலை வலையமைப்புடன் இணைக்கப்பட்டு, தூர கிழக்கு நகரமான விளாடிவோஸ்டோக்கிலிருந்து செயின்ட் பீட்டர்ஸ்பர்க் வரை செல்லும் போக்குவரத்து வழித்தடத்திற்கு எளிதில் அணுகக்கூடியதாக இருக்கும் என்றும் ரஷ்ய பிரதமர் மிஷுஸ்டின் கூறியுள்ளார். </p><p>மேலும், சரக்குகளை ஏற்றிச் செல்ல லொறிகள் உடனடியாக இந்தப் பாலத்தைப் பயன்படுத்தத் தொடங்கும் என்று ரஷ்ய அரசாங்கம் தெரிவித்துள்ளது.</p><h2>பொருளாதார ஒத்துழைப்பு</h2><p> </p><p>இந்த ஆண்டின் இறுதியில், இந்தப் பாலம் முழுமையாகச் செயல்பாட்டுக்கு வரும் என்றும், பயணிகள் போக்குவரத்திற்கும் பயன்படுத்தப்படலாம் என்றும் அது கூறியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/31b8900a-fbf1-4d4a-8740-a60ff093c1f6/26-6a9fb282322e9.webp' /></p><p> </p><p>மக்கள் இடையிலான பரிமாற்றங்கள், சுற்றுலா மற்றும் சரக்கு வர்த்தகம் உள்ளிட்ட பொருளாதார ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கான முக்கிய உள்கட்டமைப்புகளை இந்த இரு தரப்பினரும் ஏற்படுத்தியிருப்பதை அந்தப் பாலம் வெளிப்படுத்தியுள்ளதாக, வட கொரியாவின் அரசு ஊடகமான கேசிஎன்ஏ (KCNA) செவ்வாய்க்கிழமை செய்தி வெளியிட்டது. </p><p>2022-இல் உக்ரைனில் போர் தொடங்கியதிலிருந்து இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் வலுவடைந்துள்ளன; குறிப்பாக, 2024-இல் ரஷ்யாவின் குர்ஸ்க் (Kursk) பகுதியில் உக்ரைன் நடத்திய ஊடுருவலை முறியடிக்க உதவும் வகையில் வட கொரியா ஆயிரக்கணக்கான துருப்புகளை அங்கு அனுப்பியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2622c343-cc9b-4c01-ae7e-8c3a19c39608/26-6a9fb28394a6d.webp' /></p><p> ஆனால் வட கொரியா மீதான பொருளாதாரத் தடைகள் எவ்வாறு அர்த்தமற்றதாகி வருகின்றன என்பதை இந்தப் பாலம் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது என்று தென் கொரியாவின் கியுங்னாம் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த தொலை கிழக்கு ஆய்வுகளுக்கான முகமையின் பேராசிரியர் லிம் யுல்-சுல் கூறியுள்ளார். </p><p>இனி இந்த பாலத்தினூடாக வட கொரியாவும் ரஷ்யாவும் ஆயுதங்கள், இராணுவம் மற்றும் ஆள்பலத்தையும் பரிமாறிக் கொள்வார்கள் என்றும், உக்ரைன் விவகாரம் இனி மேல் அடுத்தகட்டத்திற்கு நகரும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-08T06:57:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[புளோரிடா மாநிலத்தில் சிறிய ரக விமானம் விபத்து; விமானி உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/small-plane-crash-in-florida-pilot-killed-1788850479"></link>
            <id>https://canadamirror.com/article/small-plane-crash-in-florida-pilot-killed-1788850479</id>
            <summary type="text">&amp;nbsp; அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் உள்ள &#039;ஸ்பேஸ் கோஸ்ட் பிராந்திய விமான நிலையத்திற்கு&#039; அருகில் ஒற்றை எஞ்சின் கொண்ட சிறிய ரக விமானம் ஒன்று மின்சா...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் உள்ள 'ஸ்பேஸ் கோஸ்ட் பிராந்திய விமான நிலையத்திற்கு' அருகில் ஒற்றை எஞ்சின் கொண்ட சிறிய ரக விமானம் ஒன்று மின்சாரக் கம்பியில் மோதி விபத்துக்குள்ளானதில் விமானி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
</p><p>
 இந்த விபத்து திங்கட்கிழமை காலை புளோரிடா வின் டைட்டஸ்வில்லே பகுதியில் இடம்பெற்றுள்ளது.

விபத்துக்குள்ளான விமானம் 'Mooney M20F' ரகத்தைச் சேர்ந்த 04 பேர் பயணிக்கக்கூடிய சிறிய ரகப் புரோப்பல்லர் விமானம் என அமெரிக்க தேசிய போக்குவரத்து பாதுகாப்பு சபை உறுதிப்படுத்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a5eb9b3a-e986-44f4-b647-7a0fba332802/26-6a9fb1306cafc.webp' /></p><h2>&nbsp;24 மணி நேரத்திற்குள்,&nbsp; &nbsp;இரண்டாவது விமான&nbsp; விபத்து</h2><p>
</p><p>
வீதியில் விழுந்து தீப்பற்றி எரிந்ததில் விமானி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.விமானியின் அடையாளத்தை அதிகாரிகள் இன்னும் உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தவில்லை.</p><p>
 இதனையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுச் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p> 

மியாமி சர்வதேச விமான நிலையத்தில் அமேசான் நிறுவனத்தின் போயிங் 767 சரக்கு விமானம் ஓடுதளத்தை விட்டு விலகி வாகனங்கள் மீது மோதித் தீப்பற்றி எரிந்து 05 பேர் பலியான சோகம் நடந்து 24 மணி நேரத்திற்குள், புளோரிடாவில் இரண்டாவது விமான விபத்தாக இது பதிவாகியுள்ளது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-08T06:51:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Fathima</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிறந்த பச்சிளம் குழந்தைக்கு கொரோனா தொற்று: உயிரை காப்பாற்றிய மருத்துவர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/newborn-baby-infected-with-coronavirus-1788849948"></link>
            <id>https://ibctamilnadu.com/article/newborn-baby-infected-with-coronavirus-1788849948</id>
            <summary type="text">இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பிறந்த பச்சிளம் குழந்தைக்கு சிகிச்சையளித்து மருத்துவர்கள் காப்பாற்றியுள்ளனர்.

மேற்குவங்கத்தில் கர்ப்பிணி ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பிறந்த பச்சிளம் குழந்தைக்கு சிகிச்சையளித்து மருத்துவர்கள் காப்பாற்றியுள்ளனர்.
</p><p>
மேற்குவங்கத்தில் கர்ப்பிணி பெண் ஒருவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் குழந்தைக்கும் தொற்று உறுதியானது.
</p><p>
அத்துடன் உயிருக்கு ஆபத்தை விளைவிக்ககூடிய செப்சிஸ் நோயாலும் குழந்தை பாதிக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது.</p><p>

இதனால் குழந்தையின் உடல் உள்ளுறுப்புகள் செயலிழக்கும் அபாயம் இருந்தது, குழந்தையின் உடல்நிலை குறித்து அறிந்து கொண்ட மருத்துவர்கள் குழுவினர் தீவிர கண்காணிப்பில் அனுமதித்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8ffa7cc0-e5f3-45fa-acd3-482619a195e4/26-6a9fafdb17225.webp' /><br></p><p>

தனியார் மருத்துவமனையின் குழந்தை நல தீவிர சிகிச்சை பிரிவு மருத்துவர் சாந்தனு ரே மற்றும் அவரது குழுவினர் குழந்தையின் நோய் பாதிப்பை கண்டறிந்து அதற்கேற்ற மருத்துவ சிகிச்சையை தொடங்கினர்.
</p><p>
குழந்தைக்கு செயற்கை சுவாச கருவிகள் பொருத்தப்பட்டு நரம்பு வழியாக நோய் எதிர்ப்பு மருந்துகள் வழங்கப்பட்டன.
</p><p>
தொடர் கண்காணிப்பால் குழந்தையின் உடலிலிருந்து தொற்றுகள் முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டது, குழந்தையும் பூரண குணமடைந்து பெற்றொருடன் வீடு திரும்பியுள்ளது.<br></p>]]></content>
            <updated>2026-09-08T06:49:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Bavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மட்டக்களப்பில் இரகசிய தகவலில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை - ஒருவர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/leaking-production-plant-in-batticaloa-under-siege-1788848293"></link>
            <id>https://tamilwin.com/article/leaking-production-plant-in-batticaloa-under-siege-1788848293</id>
            <summary type="text">மட்டக்களப்பு - ஆரையம்பதி பிரதேசத்தில் வீடொன்றில் இடம்பெற்று வந்த கசிப்பு
உற்பத்தி நிலையமொன்று முற்றுகையிடப்பட்டுள்ளது.நேற்று திங்கட்கிழமை (7) கசிப்பு...</summary>
            <content type="html"><![CDATA[<p>மட்டக்களப்பு - ஆரையம்பதி பிரதேசத்தில் வீடொன்றில் இடம்பெற்று வந்த கசிப்பு
உற்பத்தி நிலையமொன்று முற்றுகையிடப்பட்டுள்ளது.</p><p>நேற்று திங்கட்கிழமை (7) கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகையிடப்பட்ட நிலையில், உற்பத்தியில் ஈடுபட்டிருந்த ஒருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.</p><p>இதன்போது சந்தேகநபரிடம் இருந்து 1500
மில்லி லீற்றர் கசிப்பும், 83000 மில்லி லீற்றர் கோடா மற்றும் கசிப்பு
உற்பத்தி உபகரணங்களை மீட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><h2>&nbsp;பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவல்</h2><p>
காத்தான்குடி பொலிஸ் நிலைய போதை ஒழிப்பு மற்றும் இலஞ்ச ஒழிப்பு பிரிவின்
பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் தவராசா றஜிக்காந்தனுக்கு கிடைத்த இரகசிய தகவல்
ஒன்றையடுத்து அவர் தலைமையிலான பொலிஸ் குழுவினர் சம்பவ தினமான நேற்று
திங்கட்கிழமை ஆரையம்பதி செவநகர் பகுதியிலுள்ள குறித்த வீட்டை முற்றுகையிட்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d8629825-2c97-41e8-af54-a29102b9e536/26-6a9faff1bb1ba.webp' /></p><p>
</p><p>
இதன்போது கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 54 வயதுடைய ஒரு வரை
கைது செய்ததுடன் 1500 மில்லி லீற்றர் கசிப்பும், 83000 மில்லி லீற்றர் கோடா
மற்றும் கசிப்பு உற்பத்தி உபகரணங்களை மீட்டுள்ளனர்.
</p><p>
இதில் கைது செய்தவரை நீதிமன்றில் முன்னிலைபடுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக
பொலிஸார் தெரிவித்துள்ளனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d8629825-2c97-41e8-af54-a29102b9e536/26-6a9faff1bb1ba.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e3d0b399-0fea-4d69-9142-b92e6196fe8e/26-6a9faff294ce2.webp' /></p>]]></content>
            <updated>2026-09-08T06:47:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட ஷிரான் பாசிக் : பிறப்பிக்கப்பட்ட உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/hc-postpones-case-involving-shiran-basik-1788847245"></link>
            <id>https://ibctamil.com/article/hc-postpones-case-involving-shiran-basik-1788847245</id>
            <summary type="text">பிரபல போதைப்பொருள் கடத்தல்காரர் எனக் கூறப்படும் ஷிரான் பாசிக் உள்ளிட்ட மூன்று பிரதிவாதிகளுக்குமான வழக்கு தொடர்பில் நீதிமன்றம் உத்தரவொன்றைப் பிறப்பித்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரபல போதைப்பொருள் கடத்தல்காரர் எனக் கூறப்படும் ஷிரான் பாசிக் உள்ளிட்ட மூன்று பிரதிவாதிகளுக்குமான வழக்கு தொடர்பில் நீதிமன்றம் உத்தரவொன்றைப் பிறப்பித்துள்ளது.</p><p>அதன்படி, குறித்த வழக்கை மீண்டும் ஒக்டோபர் மாதம் 02 ஆம் திகதி அழைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p>போதைப்பொருள் தொடர்பான இந்த வழக்கு இன்று (08) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நயோமி விக்கிரமசேகர முன்னிலையில் அழைக்கப்பட்டது.</p><p></p><h2>மத்திய குற்றவியல் விசாரணை பணியகம்</h2><p> 

இதன்போது, காவல்துறை மத்திய குற்றவியல் விசாரணை பணியகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பிரதிவாதியான ஷிரான் பாசிக் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தார்.&nbsp; &nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fcd9ab4e-5573-4a19-97a7-a3ebe5dfaa21/26-6a9faf9abc11f.webp' /></p><p>இலங்கைக்கு பெருமளவில் போதைப்பொருட்களை விநியோகித்த முக்கிய 5 கடத்தல்காரர்களில் ஒருவராகக் கருதப்படுவதும், சர்வதேச காவல்துறையினரால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்ததுமான மொஹமட் ஷிரான் பாசிக், டுபாயில் இருந்து கடந்த 14ஆம் திகதி இரவு நாட்டிற்கு அழைத்து வரப்பட்டார்.</p><p>தெஹிவளை, களுபோவில பகுதியைச் சேர்ந்த 48 வயதான ஷிரான் பாசிக் கடந்த மே 26ஆம் திகதி டுபாய் பாதுகாப்புப் படையினரால் அந்நாட்டில் வைத்துக் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-08T06:46:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நிலவும் எனக்குதான்... சொந்தம் கோரும் டிரம்ப்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/trump-stakes-claim-to-the-moon-1788849933"></link>
            <id>https://canadamirror.com/article/trump-stakes-claim-to-the-moon-1788849933</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;பூமியின் இயற்கை துணைக்கோளான சந்திரன் அமெரிக்காவிற்குச் சொந்தமானது என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உரிமை கோரியுள்ளார்.

தனது ட்வி...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;பூமியின் இயற்கை துணைக்கோளான சந்திரன் அமெரிக்காவிற்குச் சொந்தமானது என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உரிமை கோரியுள்ளார்.
</p><p>
தனது ட்விட்டர் கணக்கில் பதிவிட்ட ஒரு பதிவில், அமெரிக்காவின் புகைப்படத்துடன் சந்திரன் எங்களுடையது என்று டிரம்ப் எழுதியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3588713f-3483-449d-bb0d-0a366ee19fcb/26-6a9faf0f1c60d.webp' /></p><p>
</p><p>
மேலும், செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட தொடர்ச்சியான பதிவுகளை சமூக ஊடகங்களில் டிரம்ப் வெளியிட்டுள்ளார், அதில் ஹார்முஸ் ஜலசந்தி அமெரிக்காவின் பிரதேசம் என்றும் அவர் அறிவித்துள்ளார்.
</p><p>
நிலவு போன்ற விண் பொருட்களின் மீது எந்தவொரு நாடும் இறையாண்மையைக் கோருவதைத் தடைசெய்யும் 1967-ஆம் ஆண்டின் விண்வெளி ஒப்பந்தம் போன்ற சர்வதேச ஒப்பந்தங்கள் இருந்தபோதிலும், இந்த உரிமை கோரல் வந்துள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-08T06:42:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இஸ்ரேலிய குடியிருப்புகளுக்கு பிரித்தானியா வர்த்தகத் தடை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/britain-imposes-trade-ban-on-israeli-settlements-1788843113"></link>
            <id>https://canadamirror.com/article/britain-imposes-trade-ban-on-israeli-settlements-1788843113</id>
            <summary type="text">&amp;nbsp; மேற்குக்கரையில் உள்ள இஸ்ரேலிய குடியிருப்புகளுக்கு வர்த்தகத் தடைகளை விதிக்க பிரித்தானியா தீர்மானித்துள்ளதாக பிரித்தானிய ஊடகச் செய்திகள் தெரிவிக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; மேற்குக்கரையில் உள்ள இஸ்ரேலிய குடியிருப்புகளுக்கு வர்த்தகத் தடைகளை விதிக்க பிரித்தானியா தீர்மானித்துள்ளதாக பிரித்தானிய ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன. </p><p>

இந்தத் தீர்மானம் குறித்த அறிவிப்பை பிரதமர் எண்டி பர்னம் இன்று (08) வெளியிடவுள்ளதாக 'நியூயோர்க் டைம்ஸ்' செய்தி வெளியிட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cb1850cb-331d-4cd3-bc19-92b8c217d00b/26-6a9f946b4b2f4.webp' /></p><p> 

கடந்த ஜூலை மாதம் அதிகாரத்திற்கு வந்த பின்னர், பிரதமர் தலையிடும் மிகப்பெரிய வெளிநாட்டுக் கொள்கை தீர்மானமாக இது அமையும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p> 

அதேசம்யம் பிரித்தானியாவின் இந்தத் தீர்மானத்திற்கு அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளிடமிருந்து பலத்த எதிர்ப்புகள் கிளம்பக்கூடும் என அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.&nbsp; &nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-08T06:39:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாட்டு வாழ் இலங்கையர்கள் பொருளாதாரத்தின் பலம் : விஜித ஹேரத் பகிரங்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/contribution-overseas-sri-lankans-economy-1788845672"></link>
            <id>https://tamilwin.com/article/contribution-overseas-sri-lankans-economy-1788845672</id>
            <summary type="text">பொருளாதார ரீதியில் பாதகமான நிலையைச் சந்தித்திருந்த இலங்கையை மீண்டும்
சொந்தக் காலில் நிற்க வைக்கும் நோக்கில் தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு
வருகின்...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொருளாதார ரீதியில் பாதகமான நிலையைச் சந்தித்திருந்த இலங்கையை மீண்டும்
சொந்தக் காலில் நிற்க வைக்கும் நோக்கில் தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு
வருகின்றன என்றும், நாட்டின் பொருளாதாரத்தைப் பலப்படுத்துவதில் வெளிநாட்டு
வாழ் இலங்கையர்களின் பங்களிப்பே மிக முதன்மையானது என்றும் வெளிவிவகார,
வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத்
தெரிவித்தார்.
</p><p>
கொழும்பில் நேற்று(07.09.2026) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
</p><h2>பெருமளவு நிதியை அனுப்பி வைக்கும்</h2><p>மேலும் தெரிவிக்கையில்,&nbsp;"கடந்த இரண்டு ஆண்டுகளில் நாடு மீண்டும் எழுச்சி பெறத் தொடங்கியுள்ளது.
</p><p>குறிப்பாக, வெளிநாட்டு வேலைவாய்ப்புத் துறையின் மூலம் கடந்த ஆண்டில் மட்டும்
இலங்கைக்கு 8.2 பில்லியன் அமெரிக்க டொலர் வருமானமாகக் கிடைத்துள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3d3c4545-de99-44ac-a64c-a43f3777626f/26-6a9fa60ea3a18.webp' /></p><p>
சுற்றுலாத் துறையைப் போன்றே, வெளிநாட்டு வேலைவாய்ப்புகளில் ஈடுபட்டுள்ளவர்கள்
அனுப்பும் அந்நியச் செலாவணியே நாட்டின் பொருளாதாரத்தைப் பலப்படுத்தி
முன்னோக்கி கொண்டு செல்ல பெரிதும் உதவுகின்றது.</p><p>

எனவே, நாட்டுக்குப் பெருமளவு நிதியை அனுப்பி வைக்கும் வெளிநாட்டுத்
தொழிலாளர்களின் வேலைப் பாதுகாப்பு, நலன்புரி மற்றும் அவர்களின் தேவைகளைக்
கண்டறிந்து பூர்த்தி செய்ய வேண்டியது அதிகாரிகளின் பொறுப்பாகும்.
</p><p>
அத்துடன், வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் குறித்துப் பொதுமக்களிடையே
பொதுவாக நிலவி வரும் எதிர்மறையான கருத்துக்களை மாற்றியமைக்க வேண்டும் எனவும்,
அந்த அமைப்பின் மீதான நம்பகத்தன்மையை மேம்படுத்தும் பொறுப்பு அதிகாரிகளுக்கு
உள்ளது" என்றும் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-08T06:37:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[31 லங்கா சதொச விற்பனை நிலையங்கள் மூடல்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/31-lanka-sathosa-outlets-closed-1788849562"></link>
            <id>https://jvpnews.com/article/31-lanka-sathosa-outlets-closed-1788849562</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;நிதி நெருக்கடி கரணமாக 2024 ஜனவரி முதல் 2025 ஒக்டோபர் வரையிலான காலப்பகுதியில் நாடு முழுவதும் சுமார் 31 ‘லங்கா சதொச’ (Lanka Sathosa) விற்பன...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;நிதி நெருக்கடி கரணமாக 2024 ஜனவரி முதல் 2025 ஒக்டோபர் வரையிலான காலப்பகுதியில் நாடு முழுவதும் சுமார் 31 ‘லங்கா சதொச’ (Lanka Sathosa) விற்பனை நிலையங்கள் மூடப்பட்டதாகத் வர்த்தகம், வணிகம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் ஆர். எம். ஜெயவர்தன குறிப்பிட்டார். </p><p>

நாடாளுமன்ற உறுப்பினர் சனக மதுகொட எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் வகையில், அவர் இன்று (08) நாடாளுமன்றத்தில் இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6718938b-ce3a-4057-a44e-f2248ce1b098/26-6a9fad9c181b0.webp' /></p><h2>&nbsp;424 ‘லங்கா சதொச’ விற்பனை நிலையங்கள்</h2><p>

இந்த ஆண்டு ஆகஸ்ட் 17 ஆம் திகதி நிலவரப்படி, நாடு முழுவதும் 424 ‘லங்கா சதொச’ விற்பனை நிலையங்கள் இயங்கி வந்ததாகவும் பிரதி அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.</p><p>

தற்போதைய அரசாங்கம் பதவியேற்றபோது, ​​’லங்கா சதொச’ நிறுவனம் 24 பில்லியன் ரூபா நஷ்டத்தை எதிர்கொண்டிருந்ததையும் அவர் சுட்டிக்காட்டினார்.</p><p></p><p>

அக்காலகட்டத்தில், அந்நிறுவனம் 11 பில்லியன் ரூபா கடனையும், 5 பில்லியன் ரூபா வங்கி மேலதிக பற்று வசதியையும் கொண்டிருந்ததாகவும் அவர் இதன்போது மேலும் குறிப்பிட்டார்.&nbsp;&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-09-08T06:36:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[நகைப்பிரியர்களுக்கு அதிர்ச்சி! தங்கம் விலை ஒரே நாளில் ரூ.1,120 உயர்வு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/today-sept-8th-gold-and-silver-price-in-chennai-1788846441"></link>
            <id>https://manithan.com/article/today-sept-8th-gold-and-silver-price-in-chennai-1788846441</id>
            <summary type="text">தங்கம் மற்றும் வெள்ளியின் விலை தினந்தோறும் ஏற்ற இறக்கங்களை சந்தித்து வரும் நிலையில், இன்று (செப்டம்பர் 8) தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.

...</summary>
            <content type="html"><![CDATA[<p>தங்கம் மற்றும் வெள்ளியின் விலை தினந்தோறும் ஏற்ற இறக்கங்களை சந்தித்து வரும் நிலையில், இன்று (செப்டம்பர் 8) தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.
</p><p>
ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் தொடர்ந்து அதிகரித்து வந்த தங்கத்தின் விலை, மாத இறுதியில் சரிவை சந்தித்தது. இதனைத் தொடர்ந்து செப்டம்பர் மாதத்திலும் தங்கத்தின் விலையில் தொடர்ச்சியாக ஏற்ற இறக்கங்கள் பதிவாகி வருகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/76649ff3-8508-4bf0-b903-e957a9f71f56/26-6a9fa4ca2c610.webp' /></p><p></p><p>
</p><p>
அந்த வகையில், நேற்று (செப்டம்பர் 7) தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.60 குறைந்து ரூ.14,130 ஆகவும், ஒரு சவரனுக்கு ரூ.480 குறைந்து ரூ.1,13,040 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது.</p><h2>இன்றைய நிவலரம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dd52b365-3b44-4972-8d5b-004974dad5f2/26-6a9fa6f2c46e4.webp' /></p><p>
</p><p>
இந்நிலையில், இன்று தங்கத்தின் விலை மீண்டும் குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.140 அதிகரித்து ரூ.14,270 ஆகவும், ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.1,120 உயர்ந்து ரூ.1,14,160 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.இதன்படி, ஒரே நாளில் ஒரு சவரனுக்கு ரூ.1,120 என்ற அளவில் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3e4c23f1-e170-4699-952c-30e0a9564947/26-6a9fa6f3ba53c.webp' /></p><p></p><p>மறுபுறம், வெள்ளியின் விலையில் இன்று எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.255 என்ற விலையிலும், ஒரு கிலோ வெள்ளிப் பார் ரூ.2,55,000 என்ற விலையிலும் விற்பனை செய்யப்படுகிறது.
</p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-08T06:36:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[66 கிலோ தங்கம், 335 கிலோ வெள்ளியில் தயாராகும் பிரம்மாண்ட விநாயகர்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/lord-vinayagar-made-of-66-kg-of-gold-335-kg-silver-1788846986"></link>
            <id>https://jvpnews.com/article/lord-vinayagar-made-of-66-kg-of-gold-335-kg-silver-1788846986</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;வரும் 14 ஆம் திகதி ஆவணி விநாயகர் சதுர்த்தி வரவுள்ள நிலையில் இந்தியாவில் விநாயகர் சிலைகள் பிரமாண்டமாக தாயாரிக்கும் புகைப்படங்கள் வெளியாகிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;வரும் 14 ஆம் திகதி ஆவணி விநாயகர் சதுர்த்தி வரவுள்ள நிலையில் இந்தியாவில் விநாயகர் சிலைகள் பிரமாண்டமாக தாயாரிக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. </p><p>

இன்னிலையில் மும்பையின் பணக்கார விநாயகர் மண்டலமாக கிங்கிஸ் சர்க்கிள் ஜி.எஸ்.பி சேவா மண்டல் உள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/eda7366f-e821-4687-8631-f8217f670c38/26-6a9fa38c37c48.webp' /></p><h2>&nbsp;விநாயகர் சதுர்த்தி செப்டம்பர் 14,&nbsp; முதல்&nbsp; &nbsp;18&nbsp; வரை</h2><p> </p><p>

இந்த ஆண்டு தனது 72வது விநாயகர் சதுர்த்தியை செப்டம்பர் 14, 2026 முதல் செப்டம்பர் 18, 2026 வரை என மொத்தம் 5 நாட்கள் வெகு விமரிசையாக கொண்டாட தயாராகி வருகிறது.</p><p>

 இந்த நிலையில் தான், மிகவும் விலை உயர்ந்த விநாயகர் சிலையை தயார் செய்து அசத்தியுள்ளது.
</p><p>
இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி அன்று பிரதிஷ்டை செய்யப்பட உள்ள விநாயகர் சிலைக்கு பொதுமக்கள் காணிக்கையாக அளித்த சுமார் 66 கிலோ தங்கம் மற்றும் 335 கிலோ வெள்ளி ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு அலங்கரிக்கப்பட உள்ளது.
</p><p>
 இத்தகைய மிகவும் விலை உயர்ந்த விநாயகர் சிலைக்கு அந்த மண்டல் சுமார் ரூ.703 கோடியே 27 லட்சத்தில் காப்பீடு செய்துள்ளது.

கடந்த ஆண்டு ரூ.474 கோடிக்கு காப்பீடு செய்யப்பட்ட நிலையில், இந்த ஆண்டு அது கிட்டத்தட்ட இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது. </p><p>

விநாயகர் சிலைக்கு அணிவிக்கப்படும் தங்கம், வெள்ளி உள்ளிட்ட ஆபரணங்களுக்கு சேர்த்து இந்த காப்பீடு செய்யப்பட்டுள்ளது.</p><p> அதுமட்டுமன்றி, இந்த விநாயகர் சதுர்த்தி விழாவில் பங்கேற்கும் பக்தர்களுக்கும் சேர்த்து காப்பீடு செய்யப்பட்டுள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-08T06:33:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுவிட்சர்லாந்தில் பொதுக்கழிவறையை பயன்படுத்திய இந்திய இளம்பெண் பகிர்ந்துள்ள தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/influencer-on-cost-of-using-public-toilet-in-swiss-1788848974"></link>
            <id>https://news.lankasri.com/article/influencer-on-cost-of-using-public-toilet-in-swiss-1788848974</id>
            <summary type="text">Influencer reveals the surprising cost of using a public toilet in Switzerland: சுவிட்சர்லாந்தில் பொதுக்கழிவறையை பயன்படுத்திய இளம்பெண்ணொருவர், கழிவறைக...</summary>
            <content type="html"><![CDATA[<p>Influencer reveals the surprising cost of using a public toilet in Switzerland: சுவிட்சர்லாந்தில் பொதுக்கழிவறையை பயன்படுத்திய இளம்பெண்ணொருவர், கழிவறைக்கான கட்டணம் தன்னை வியப்படைய வைத்ததாகத் தெரிவிக்கிறார்.</p><p>


உலகம் சுற்றுவதற்காக வேலையையும் விட்டு, சொத்துக்களையும் விற்ற இந்திய இளம்பெண், சோனி சலோனி.
</p><h3>
கழிவறையை பயன்படுத்துவதற்கான கட்டணம்</h3><p>

சமீபத்தில் சோனி சுவிட்சர்லாந்துக்குச் சென்றுள்ளார். இயற்கை உபாதையைத் தீர்த்துக்கொள்ளவேண்டிய நிலை ஏற்பட்டதால், கட்டணக் கழிப்பிடம் ஒன்றிற்குச் சென்றுள்ளார் சோனி.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1980f5a6-3baf-4bdf-8efe-5f18ceb2befe/26-6a9fab501ad15.webp' /></p><p>

பார்த்தால், அங்கு கழிவறையை ஒரு முறை பயன்படுத்த 1.50 சுவிஸ் ஃப்ராங்குகள் என எழுதப்பட்டிருந்திருக்கிறது.
</p><p>
பொதுவாகவே வெளிநாடு செல்லும் பலரும் அங்கு ஏற்படும் செலவுகளை தங்கள் நாட்டுப் பணமாக மாற்றி யோசிப்பதுண்டு என்பதால், 1.50 சுவிஸ் ஃப்ராங்குகள் என்பது இந்திய மதிப்பில் எவ்வளவு என கணக்குப் பார்த்துள்ளார் சோனி.</p><p>

ஆக, கழிவறையை பயன்படுத்த ஒரு நாளைக்கு 1,000 ரூபாய் வரை செலவிடவேண்டியுள்ளதே என வியக்கிறார் சோனி.&nbsp;</p><p></p><p>
அவர் தனது அனுபவத்தை சமூக ஊடகம் ஒன்றில் பகிர்ந்துகொள்ள, தங்களுக்கும் இதே அனுபவம் ஏற்பட்டதாக சிலர் தெரிவித்துள்ளார்கள்.
</p><p>
வேறு சிலர், சுவிட்சர்லாந்தில் இலவச கழிப்பறைகளும் உண்டு என்று கூற, அப்படி இலவச கழிப்பறையை பயன்படுத்திவிட்டு, பிறகு நோய் வந்து எக்கச்சக்கமாக செலவு செய்வதைவிட, நல்ல, சுத்தமான ஒரு கழிவறைக்கு இவ்வளவு பணம் கொடுப்பது எவ்வளவோ மேல் என்கிறார் ஒருவர்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-08T06:32:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[போராட்டத்தில் குதிக்கும் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/university-lecturers-to-protest-tomorrow-1788848570"></link>
            <id>https://ibctamil.com/article/university-lecturers-to-protest-tomorrow-1788848570</id>
            <summary type="text">2025 உயர் தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களை அரச பல்கலைக்கழகங்களில் சேர்த்துக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக என்று பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கங்...</summary>
            <content type="html"><![CDATA[<p>2025 உயர் தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களை அரச பல்கலைக்கழகங்களில் சேர்த்துக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக என்று பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கங்களின் சங்கம் தெரிவித்துள்ளது.</p><p>இந்நிலையில், நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழக ஆசிரியர்கள் நாளை (09) வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கங்களின் சங்கம் அறிவித்துள்ளது.&nbsp;&nbsp;</p><p>குறித்த விடயத்தை சங்கத்தின் செயலாளர் சிரேஷ்ட விரிவுரையாளர் சாருதத்த இலங்கசிங்க தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>கடுமையான நெருக்கடிகள்</h2><p>அரச பல்கலைக்கழக அமைப்பில் நிலவும் கடுமையான நெருக்கடிகள் தொடர்பில் தமது சங்கம் கடந்த வாரம் முழுவதும் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் குறிப்பிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/613e5961-22c0-4051-88ce-7c37746cddc1/26-6a9faba1e4a08.webp' /></p><p> 

அரசுப் பல்கலைக்கழகங்களில் விரிவுரையாளர்களின் பற்றாக்குறை மற்றும் தகுதியான விரிவுரையாளர்கள் இல்லாமை என்பன கடுமையான பிரச்சினையாக உருவெடுத்துள்ளதாகக் கூறிய அவர், தற்போது 2025 உயர் தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களை அரச பல்கலைக்கழகங்களில் சேர்த்துக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். </p><p>

ஜனாதிபதி புதிதாக 50 அரச பல்கலைக்கழகங்களை உருவாக்குவதாகக் கூறிய போதிலும், புதியவற்றை உருவாக்குவதற்கு முன்னர் தற்போதுள்ள 17 பல்கலைக்கழகங்களின் தரத்தைப் பேணிப் பாதுகாப்பது மிகவும் முக்கியமானது என அவர் சுட்டிக்காட்டினார்.</p><p> 

இது தொடர்பில் கலந்துரையாடுவதற்குத் தமது சம்மேளனம் எதிர்பார்ப்பதுடன், இதற்கு நிலையான தீர்வு அவசியமானது என்றும் சாருதத்த இலங்கசிங்க தெரிவித்தார்.&nbsp;&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-08T06:31:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரேவதியின் உறவே வேண்டாம்.. அதிரடி முடிவு எடுத்த சாமுண்டீஸ்வரி- கார்த்திகை தீபம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/zee-tamizh-karthigai-deepam-serial-episode-1788846992"></link>
            <id>https://cineulagam.com/article/zee-tamizh-karthigai-deepam-serial-episode-1788846992</id>
            <summary type="text">கார்த்திகை தீபம்&amp;nbsp;திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு Zee தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலின் இன்றைய எபிசோட் அப்ட...</summary>
            <content type="html"><![CDATA[<h2>கார்த்திகை தீபம்&nbsp;</h2><p><b>திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு Zee தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலின் இன்றைய எபிசோட் அப்டேட்.</b>
</p><p>
நேற்றைய எபிசோடில் சாமுண்டீஸ்வரி அனுப்பிய சட்ட நோட்டீஸை பார்த்து கார்த்திக் அதிர்ச்சியடைந்த நிலையில், இன்று என்ன நடக்கப் போகிறது என்று பார்க்கலாம்.

நோட்டீஸை கையில் எடுத்துக்கொண்டு நேராக சாமுண்டீஸ்வரி வீட்டுக்கு வரும் கார்த்திக், "இது என்ன?" என்று கேள்வி கேட்கிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/03665eab-8f2f-4bcb-94c5-02933309c219/26-6a9fa39192cdd.webp' /></p><p> </p><p>அப்போது சந்திரகலா அந்த நோட்டீஸை வாங்கி வீட்டில் இருந்த அனைவரின் முன்னிலையிலும் வாசித்துக் காட்டுகிறார்.

அதில், சாமுண்டீஸ்வரி தனக்கும் ரேவதிக்கும் இனி எந்த உறவும் இல்லை என்று சட்டப்படி நடவடிக்கை எடுத்திருப்பது தெரியவருகிறது. </p><p>இதைக் கேட்டு வீட்டில் இருப்பவர்கள் எல்லோரும் அதிர்ச்சியில் உறைந்து போகிறார்கள்.

ஆனால், இந்த விஷயம் எப்படியும் ரேவதிக்கு தெரியக்கூடாது என்று கார்த்திக் முடிவு செய்கிறார். இருந்தாலும் அவர் நினைத்தது போல நடக்கவில்லை. </p><p>எதிர்பாராதவிதமாக ரோகிணி, ரேவதியிடம் உண்மையை சொல்லிவிடுகிறார்.

இதனால் மனவேதனையில் ஆழும் ரேவதி, சாமுண்டீஸ்வரியை நேரில் சந்தித்து, "நாளைக்கு வந்து தேவையான இடத்தில் கையெழுத்து போட்டுக் கொடுத்துவிடுகிறேன்" என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்புகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9eb42e75-a8f4-411b-8bad-176259ae8c0d/26-6a9fa39249f3e.webp' /></p><p>
</p><p>
அதே நேரத்தில், இவ்வளவு பெரிய விஷயத்தை கார்த்திக் தன்னிடம் மறைத்துவிட்டாரே என்ற வருத்தமும் ரேவதியின் மனதில் ஆழமாக பதிகிறது.
</p><p>
சாமுண்டீஸ்வரியின் இந்த முடிவு ரேவதியின் வாழ்க்கையில் என்ன மாற்றத்தை ஏற்படுத்தப் போகிறது? கார்த்திக் மற்றும் ரேவதி இடையே உருவாகும் இந்த விரிசல் அடுத்து என்ன திருப்பத்தை கொடுக்கப் போகிறது? என்பதை தெரிந்துகொள்ள இன்றைய கார்த்திகை தீபம் எபிசோடை தவறாமல் பாருங்கள்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-08T06:30:40+00:00</updated>
        </entry>
    </feed>
