<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-09-17T19:23:00+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வங்காள விரிகுடாவில் உருவான தாழமுக்கம் - இலங்கையின் பல பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/a-low-pressure-area-formed-in-the-bay-of-bengal-1789671950"></link>
            <id>https://tamilwin.com/article/a-low-pressure-area-formed-in-the-bay-of-bengal-1789671950</id>
            <summary type="text">மத்திய வங்காள விரிகுடாவில், அந்தமான் தீவுகளுக்கு வடக்காக தாழமுக்கம் ஒன்று உருவாகியுள்ளதாக பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.

இது தொ...</summary>
            <content type="html"><![CDATA[<p>மத்திய வங்காள விரிகுடாவில், அந்தமான் தீவுகளுக்கு வடக்காக தாழமுக்கம் ஒன்று உருவாகியுள்ளதாக பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.
</p><p>
இது தொடர்பில் தனது முகநூல் பக்கத்தில் கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். </p><p>

பதிவில் மேலும் தெரிவிக்கப்படுவதாவது,</p><p> 

மத்திய வங்காள விரிகுடாவில் அந்தமான் தீவுகளுக்கு வடக்காக உருவாகியுள்ள தாழமுக்கம், வடக்கு - வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து புயலாக மாறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

எனினும், சில சந்தர்ப்பங்களில் இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவே கரையைக் கடக்கக்கூடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><h2>
தாழமுக்கம் ஏற்படும் அபாயம்</h2><p>

இந்த தாழமுக்கம் இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் உள்ள கஞ்சாம் மாவட்டத்தின் பிரம்மபூர் பகுதிக்கு அருகில் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
</p><p>
இது புயலாக மாறினால், பங்களாதேஷ் வழங்கியுள்ள அர்னாப் (Arnap) என்ற பெயர் வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/76b99c42-b900-43d4-a548-4b438e586550/26-6aac3b01ae1fd.webp' /></p><p>

இந்த புயலால் இலங்கையின் எந்தப் பகுதிக்கும் நேரடியான பாதிப்பு ஏற்படாது எனத் தெரிவித்துள்ள பேராசிரியர் பிரதீபராஜா, எனினும் இதன் காரணமாக அரபிக்கடலில் இருந்து ஈரப்பதன் மிக்க காற்று இலங்கையின் மேற்குப் பகுதியூடாக வங்காள விரிகுடாவை நோக்கி ஈர்க்கப்படும் வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.</p><p>

இதன் காரணமாக எதிர்வரும் 19.09.2026 முதல் 23.09.2026 வரை இலங்கையின் மேற்கு, தெற்கு, சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களின் பல பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><h2>
 19ஆம் திகதி முதல் நாட்டின் பல பகுதிகள் கனமழை</h2><p>
அதேவேளை, தற்போது வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களின் சில பகுதிகளில் பதிவாகி வரும் வெப்பச்சலன மழை, எதிர்வரும் 19ஆம் திகதி முதல் நாட்டின் பல பகுதிகளுக்கும் பரவக்கூடும் எனவும், இந்த நிலை எதிர்வரும் 23ஆம் திகதி வரை நீடிக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d208dc64-3715-4298-ba68-cfdca6d324ce/26-6aac3b02beecd.webp' /></p><p>
</p><p>
உருவாகியுள்ள தாழமுக்கத்தின் காரணமாக எதிர்வரும் 20.09.2026 முதல் 23.09.2026 வரை இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு கடற்பகுதிகள் கொந்தளிப்புடன் காணப்படக்கூடும் என்பதால், கடலுக்குச் செல்லும் கடற்றொழிலாளர்கள் இது தொடர்பில் அவதானமாக இருக்குமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.</p><p>

மேலும், எல் நினோ மற்றும் இந்து சமுத்திர இருமுனை (IOD) ஆகியவற்றின் தாக்கம் காரணமாக வங்காள விரிகுடாவில் தாழமுக்கங்கள் உருவாகுவதற்கான சாதகமான நிலைமைகள் ஏற்பட்டுள்ளதாகவும் பேராசிரியர் பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8f1cf889-29fc-4d46-aa0c-e93428d365e6/26-6aac3b038cd50.webp' /></p><p>

வங்காள விரிகுடாவின் கடல் மேற்பரப்பு வெப்பநிலை படிப்படியாக அதிகரித்து வருவதால், முன்னர் குறிப்பிடப்பட்டதைப் போன்று எதிர்வரும் டிசம்பர் மாதம் வரை சுமார் 7 தாழமுக்க நிகழ்வுகள் உருவாகுவதற்கான வாய்ப்புகள் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
அதன் ஆரம்பகட்டமாக தற்போது உருவாகியுள்ள தாழமுக்கத்தை கருதலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

இவ்வாண்டு ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் பெருமழையுடன் கூடிய வெள்ள அனர்த்தங்களுக்கான வாய்ப்புகள் இருப்பதையே பல்வேறு வானிலை மாதிரிகள் வெளிப்படுத்துவதாகவும், எனவே பொதுமக்கள் இது தொடர்பில் விழிப்புடன் இருப்பது சிறந்தது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-17T19:10:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஞானசார தேரரைக் கைது செய்யப்போவது யார்…!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/we-have-no-authority-to-arrest-gnanasara-prisons-1789670553"></link>
            <id>https://ibctamil.com/article/we-have-no-authority-to-arrest-gnanasara-prisons-1789670553</id>
            <summary type="text">&amp;nbsp;ஞானசார தேரரைக் கைது செய்ய சிறைத்துறைக்கு அதிகாரம் இல்லை என்றும், இவ்விஷயத்தை காவல்துறையே கையாள வேண்டும் என்றும் சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் சேனக ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;ஞானசார தேரரைக் கைது செய்ய சிறைத்துறைக்கு அதிகாரம் இல்லை என்றும், இவ்விஷயத்தை காவல்துறையே கையாள வேண்டும் என்றும் சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் சேனக பல்லேதென்ன தெரிவித்தார். </p><p>ஜனாதிபதி மன்னிப்பு ரத்து செய்யப்பட்டு, சிறைத் தண்டனை உறுதிசெய்யப்பட்ட ஞானசார தேரர் மீது எடுக்கப்பட வேண்டிய எதிர்கால நடவடிக்கை குறித்துக் கேட்கப்பட்டபோது அவர் இவ்வாறு கூறினார்.</p><h2>கைது தொடர்பில் காவல்துறைக்கு அறிவிப்பு</h2><p>&nbsp; ஞானசார தேரரின் கைது தொடர்பாக காவல்துறைக்கு ஏதேனும் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளதா என்று கேட்கப்பட்டபோது, ​​அத்தகைய அறிவிப்பு எதுவும் செய்யப்படவில்லை என்று சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4d102117-d34b-4f35-93cd-422293887b4d/26-6aac38869de13.webp' /></p><p>
</p><p>
இருப்பினும், முன்னதாக ஒரு விசாரணையில், உச்ச நீதிமன்றத் தீர்ப்பு காவல்துறை மா அதிபரால் அதிகாரபூர்வமாகப் பெறப்படும் வரை ஞானசார தேரர் தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது என்று காவல்துறை ஊடகப் பேச்சாளர் எஃப். யு. வூட்லர் தெரிவித்திருந்தார்.</p><p></p><h2>கொழும்பு உயர் நீதிமன்றால் விடுதலை</h2><p>
</p><p>
இந்தச் சூழலில், உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டியிருந்த ஞானசார தேரர், நேற்று (செப்டம்பர் 16) கொழும்பு உயர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ff25daa4-fbaa-4483-abe8-9bc92a31b13b/26-6aac3885e7f27.webp' /></p><p>

 ஞானசார தேரர் மீது என்ன மாதிரியான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்பதில் தற்போது சமூகத்தின் கவனம் குவிந்துள்ளது.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-17T19:01:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இராணுவத்தினருக்கு சஹ்ரான் குடும்பத்தை கைது செய்ய வாய்ப்பிருந்தும் தவறவிட்டது ஏன்..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/easter-attacks-arrested-1789670877"></link>
            <id>https://tamilwin.com/article/easter-attacks-arrested-1789670877</id>
            <summary type="text">ஈஸ்டர் தாக்குதல் இடம்பெற்ற காலப்பகுதியில் நல்லாட்சி அரசாங்கத்தின் பிரதமராக ரணில் விக்ரமசிங்கவும், எதிர்க்கட்சித் தலைவராக மகிந்த ராஜபக்சவும் இருந்தனர்....</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈஸ்டர் தாக்குதல் இடம்பெற்ற காலப்பகுதியில் நல்லாட்சி அரசாங்கத்தின் பிரதமராக ரணில் விக்ரமசிங்கவும், எதிர்க்கட்சித் தலைவராக மகிந்த ராஜபக்சவும் இருந்தனர். எனினும், குற்றவாளிகளைத் தப்பிக்க வைத்ததாக அவர்கள் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
</p><p>
நல்லாட்சி அரசாங்கத்தின் போது முக்கிய பொறுப்பில் இருந்த சுரேஷ் சலே, யாருடைய பணிப்புரைக்கமைய இவ்வளவு குற்றங்களைச் செய்தார் என்ற சந்தேகம் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு எழுந்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
</p><p>
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்ற சில மணி நேரங்களில் சஹ்ரான் குடும்பத்தினர் அவரது வீட்டில் இருந்ததாகவும், குற்றப்புலனாய்வு அதிகாரிகள் நினைத்திருந்தால் அவர்களைக் கைது செய்திருக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
ஆனால், அப்போது ஆட்சியில் இருந்தவர்கள் அவர்களைத் தப்பிக்க வைப்பதற்காகவே பொறுமையாக இருந்ததாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

சஹ்ரானின் மனைவி சம்பவத்திற்குப் பின்னரும் உயிருடன் இருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
வரும் 22ஆம் திகதி தீர்ப்பு வெளியாகவுள்ள நிலையில், 100 நாட்களைக் கடந்தும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் சுரேஷ் சலே இந்த விடயங்கள் தொடர்பில் வாய் திறப்பாரா என குற்றப்புலனாய்வு அதிகாரிகள் காத்திருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
</p><p>
இவ்வாறான கடந்தகால அரசாங்கங்களால் மூடி மறைக்கப்பட்டதாகக் கூறப்படும் பல விடயங்களை உங்கள் பார்வைக்கு கொண்டு வருகின்றது News Inside நிகழ்ச்சி.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/OaFyBHp3CoU" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-17T18:48:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹூதி அமைப்பினரைக் கட்டுப்படுத்த ஈரானிடம் சீனா இரகசிய கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/china-makes-secret-request-iran-rein-in-houthis-1789667630"></link>
            <id>https://tamilwin.com/article/china-makes-secret-request-iran-rein-in-houthis-1789667630</id>
            <summary type="text">யேமன் நாட்டின் ஹூதி கிளர்ச்சியாளர்களின் இராணுவ நடவடிக்கைகள் அண்மைய நாட்களில்
தீவிரமடைந்துள்ளதைத் தொடர்ந்து, அவர்களைக் கட்டுப்படுத்த உதவுமாறு ஈரானிடம்...</summary>
            <content type="html"><![CDATA[<p>யேமன் நாட்டின் ஹூதி கிளர்ச்சியாளர்களின் இராணுவ நடவடிக்கைகள் அண்மைய நாட்களில்
தீவிரமடைந்துள்ளதைத் தொடர்ந்து, அவர்களைக் கட்டுப்படுத்த உதவுமாறு ஈரானிடம்
சீனா இரகசியமாகக் கேட்டுக்கொண்டுள்ளதாக ஈரான் விவகாரங்களை அறிந்த மூன்று
உயர்மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p>

சவூதி அரேபியா விடுத்த அவசர வேண்டுகோளின் பேறாகவே சீனா இந்த நடவடிக்கையை
எடுத்துள்ளது.
</p><h2>கப்பல் போக்குவரத்து கடுமையான அச்சுறுத்தல்</h2><p>செங்கடல் கடலோரப் பகுதிகள் மற்றும் பாப் அல்-மந்தேப் நீரிணைப் பகுதிகளில் ஹூதி
அமைப்பினர் வேகமான முன்னேற்றங்களை அடைந்து வருகின்றனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/417ab670-67ba-42b5-b203-9ec06fd4cd97/26-6aac2f1a4bbcb.webp' /></p><p>இதன் காரணமாக சவூதி அரேபியாவின் எண்ணெய் ஏற்றுமதி மற்றும் கப்பல் போக்குவரத்து
கடுமையான அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது. </p><p>இந்த நிலையிலேயே சவூதி அரேபியா
சீனாவின் உதவியை நாடியுள்ளது.

சீனா பகிரங்கமாக அமைதி மற்றும் பேச்சுவார்த்தைக்கே அழைப்பு விடுத்து வரும்
போதிலும், ஈரானுக்கு அனுப்பிய தனியாத செய்தி மூலம் தனது அழுத்தத்தை
அதிகரித்துள்ளது.
</p><h2>செங்கடலிலும் தாக்குதல்கள் தொடர்ந்தால்&nbsp;</h2><p>
உலகின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதாரத்தைக் கொண்ட சீனா, தனது எரிபொருள்
தேவைகளுக்கு பெரிதும் நம்பியிருக்கும் கடல்சார் வர்த்தக வழிகளில் இந்த மோதல்
பரவுவதைத் தடுக்கவே ஈரானின் செல்வாக்கைப் பயன்படுத்த விரும்புகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5a218614-536a-45d9-9068-7820023191a4/26-6aac2f1b6a485.webp' /></p><p>

சீனாவின் இந்த கோரிக்கைக்கு பதிலளித்துள்ள ஈரான், பிராந்தியத்தில் அமைதியும்
ஸ்திரத்தன்மையும் ஏற்பட வேண்டுமெனில் ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேல் போர்
நிறுத்தப்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
</p><p>
ஈரானின் கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் 80 சதவீதத்திற்கும் அதிகமானவற்றை சீனாவே
கொள்முதல் செய்து வரும் நிலையில், ஈரானை வலியுறுத்தக்கூடிய ஒரு சில நாடுகளில்
சீனாவும் ஒன்றாகும்.
</p><p>
அதேவேளை, ஹோர்முஸ் நீரிணை ஏற்கெனவே பாதிக்கப்பட்டுள்ள நிலையில், செங்கடலிலும்
தாக்குதல்கள் தொடர்ந்தால் அது உலகளாவிய எரிபொருள் விநியோகத்தை கடுமையாகப்
பாதிக்கும் எனக் அஞ்சப்படுகிறது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-17T18:45:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சமூக வலைத்தளப் பதிவுக்காக கைது செய்யப்பட்ட இலங்கையர் அனோஜனுக்கு மரண தண்டனை..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-lankan-anojan-arrested-over-social-media-post-1789667060"></link>
            <id>https://tamilwin.com/article/sri-lankan-anojan-arrested-over-social-media-post-1789667060</id>
            <summary type="text">சமூக வலைத்தளங்களில் நபிகள் தொடர்பாக பிழையானதொரு கருத்தைப் பதிவு செய்ததாகக் கூறி சவுதி அரேபியாவில் கைது செய்யப்பட்ட அனோஜனுக்கு முதற்கட்டமாக ஐந்து வருட ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சமூக வலைத்தளங்களில் நபிகள் தொடர்பாக பிழையானதொரு கருத்தைப் பதிவு செய்ததாகக் கூறி சவுதி அரேபியாவில் கைது செய்யப்பட்ட அனோஜனுக்கு முதற்கட்டமாக ஐந்து வருட சிறைத்தண்டனையும் 3 மில்லியன் சவுதி ரியால் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளது. </p><p> 

இந்தத் தீர்ப்பை எதிர்த்து அனோஜன் தரப்பில் மேன்முறையீடு செய்யப்பட்டிருந்த நிலையில், இன்று(17.09.2026) அதற்கான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. </p><p>

இதன்போது, அனோஜனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. </p><h2>

நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு</h2><p>
அவருக்கான தண்டனையைக் குறைப்பதற்காக அரச தரப்பில் மேற்கொள்ளப்பட்டு வந்த முயற்சிகளுக்கு மத்தியில் வெளியாகியுள்ள இந்தத் தீர்ப்பு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/518a39ea-fb8d-49c9-9eca-1884c69c8058/26-6aac27c08d854.webp' /></p><p>
</p><p>
இந்தத் தகவல் உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே வெளியிடப்படுவதாகவும், அனோஜனுக்காக அடுத்தகட்டமாக மேற்கொள்ளப்பட வேண்டிய சட்டரீதியான மற்றும் பிற முயற்சிகளுக்கு அனைவரினதும் ஒத்துழைப்பும் ஆதரவும் எதிர்பார்க்கப்படுவதாகவும் சமூக செயற்பாட்டாளர் ராஜ்குமார் ரஜீவ்காந்த் தனது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார்.
</p><p>
அத்துடன், இந்த விவகாரம் தொடர்பில் இன, மத அடிப்படையிலான இழிவான அல்லது தூண்டுதலான கருத்துக்களை வெளியிடுவதைத் தவிர்க்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
</p><p>
அனோஜனின் விடுதலைக்காக அனைவரும் ஒன்றிணைந்து குரல் கொடுப்பதுடன், அவரது குடும்பத்தினருக்கு தேவையான ஆதரவையும் வழங்க வேண்டும் என்றும் இலங்கை மக்களிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.&nbsp; </p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-17T18:32:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரயில் பயணச்சீட்டு பெற முடியவில்லையா? இணையத்தில் பெற புதிய வசதி அறிமுகம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/facility-to-obtain-train-tickets-online-1789669649"></link>
            <id>https://jvpnews.com/article/facility-to-obtain-train-tickets-online-1789669649</id>
            <summary type="text">ரயில் பயணிகள் இணையவழி ஊடாக பயணச்சீட்டுகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அந்த திணைக...</summary>
            <content type="html"><![CDATA[<p>ரயில் பயணிகள் இணையவழி ஊடாக பயணச்சீட்டுகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p> </p><p></p><p>அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அந்த திணைக்களம், www.pravesha.lk என்ற இணையதளத்தின் ஊடாக இந்த வசதி செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.</p><p> 

அத்துடன், 'pravesha' அலைபேசி செயலி (Mobile App) மூலமாகவும் ரயில் பயணச்சீட்டுகளைக் கொள்வனவு செய்யும் வசதி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> 

ரயில் பொது முகாமையாளரை நீக்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, ரயில் ஒன்றிணைந்த தொழிற்சங்க கூட்டமைப்பு பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்துள்ள பின்னணியிலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/042706c9-37d3-437c-8e1b-d0c676f201ec/26-6aac31137e433.webp' /></p><p>இதன் காரணமாக பெரும்பாலான ரயில் நிலையங்களில் பயணச்சீட்டுகள் விநியோகிக்கப்படாததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p> 

எவ்வாறாயினும், பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்பட்ட போதிலும், இன்று (17) வழக்கம்போல் ரயில்கள் இயங்கியதைக் காணக்கூடியதாக இருந்தது. </p><p>

ரயில் ஒன்றிணைந்த தொழிற்சங்க கூட்டமைப்பு நேற்று நள்ளிரவு முதல் 48 மணி நேர அடையாள பணிப்புறக்கணிப்பை ஆரம்பித்தது.</p><p> 

இலங்கை ரயில் நிலைய அதிபர்கள் சங்கம், ரயில்வே ஊழியர்கள் சங்கம், இலங்கை பாதுகாப்பற்ற ரயில் காவலர்கள் ஒன்றியம், ரயில் பாதுகாப்பு அதிகாரிகளின் சங்கம் உட்பட 29 தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளன.</p><p> 

ஊழியர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்காமல் ரயில் பொது முகாமையாளர் தன்னிச்சையாகச் செயற்படுவதால், அவரை உடனடியாகப் பதவியிலிருந்து நீக்குமாறு கோரியே இந்தப் தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. </p><p>

இதன் காரணமாக இன்று காலை ரயில் பயணச்சீட்டுகள் விநியோகிக்கப்படவில்லை என்றாலும், ரயில்கள் வழக்கம் போல் இயங்கியதாக பயணிகள் தெரிவித்தனர்.</p><p> 

பணிப்புறக்கணிப்பு அமுலில் உள்ள போதிலும், இன்று (17) காலையைப் போன்றே பிற்பகலிலும் வழக்கம்போல் ரயில்களை இயக்குவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p> 

இவ்வாறான பின்னணியில், தீர்வு வழங்கப்படாவிட்டால் எதிர்காலத்தில் தமது தொழிற்சங்க நடவடிக்கையை தீவிரப்படுத்துவோம் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-17T18:27:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[சமூக வலைத்தளப் பதிவு விவகாரம் ; கைது செய்யப்பட்ட இலங்கையருக்கு மரண தண்டனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/social-media-post-death-arrested-srilanka-national-1789669248"></link>
            <id>https://jvpnews.com/article/social-media-post-death-arrested-srilanka-national-1789669248</id>
            <summary type="text">சமூக ஊடகத்தில் நபிகள் தொடர்பாக அவதூறான கருத்தைப் பதிவு செய்ததாகக் கூறி சவுதி அரேபியாவில் கைது செய்யப்பட்ட இலங்கையர் அனோஜனுக்கு, மேன்முறையீட்டு நீதிமன்...</summary>
            <content type="html"><![CDATA[<p>சமூக ஊடகத்தில் நபிகள் தொடர்பாக அவதூறான கருத்தைப் பதிவு செய்ததாகக் கூறி சவுதி அரேபியாவில் கைது செய்யப்பட்ட இலங்கையர் அனோஜனுக்கு, மேன்முறையீட்டு நீதிமன்றத் தீர்ப்பில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p></p><p>
</p><p>முன்னதாக அனோஜனுக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 3 மில்லியன் சவுதி ரியால் அபராதமும் விதிக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது. </p><p>குறித்த தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்யப்பட்ட நிலையில், தற்போது வெளியானதாகக் கூறப்படும் மேன்முறையீட்டு தீர்ப்பிலேயே மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8c677df5-4fba-41c5-9a1b-2abb6322bfdf/26-6aac2f8280714.webp' /></p><p>சமூக ஊடகத்தில் வெளியிடப்பட்டதாகக் கூறப்படும் கருத்து தொடர்பில் சவுதி அதிகாரிகளால் அனோஜன் கைது செய்யப்பட்டு சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாக முன்னைய செய்திகள் தெரிவித்திருந்தன. </p><p>அவருக்கு விதிக்கப்பட்டிருந்த ஆரம்ப தண்டனையில் சிறைத்தண்டனை, 3 மில்லியன் சவுதி ரியால் அபராதம் உள்ளிட்ட தண்டனைகள் இடம்பெற்றிருந்ததாக தெரிவிக்கப்பட்டது.</p><p>

இந்த நிலையில், தண்டனையை குறைப்பதற்காக சட்ட ரீதியாகவும் மனிதாபிமான அடிப்படையிலும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்ததாக அவரது குடும்பத்தினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
அத்தகைய முயற்சிகளுக்கு மத்தியில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல், அனோஜனின் குடும்பத்தினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
</p><p>
இதனையடுத்து, அனோஜனுக்காக அடுத்தகட்டமாக முன்னெடுக்கப்படவுள்ள சட்ட மற்றும் மனிதாபிமான நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் தங்களால் இயன்ற ஆதரவையும் ஒத்துழைப்பையும் வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
</p><p>
எனினும், மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தற்போதைய தீர்ப்பு தொடர்பான அதிகாரப்பூர்வ ஆவணம் அல்லது சவுதி அதிகாரிகளின் உத்தியோகபூர்வ அறிவிப்பு பொதுவெளியில் உறுதிப்படுத்தப்படும் வரை, மரண தண்டனை குறித்த தகவலை “விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது” என்ற அடிப்படையிலேயே குறிப்பிடுவது பொருத்தமானதாகும்.</p><p>

முன்னதாக அனோஜனுக்கு விதிக்கப்பட்ட ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் 3 மில்லியன் சவுதி ரியால் அபராதம் தொடர்பான தகவலை இலங்கைத் தூதரகம் குடும்பத்தினருக்கு அறிவித்ததாகவும், அந்தத் தீர்ப்புக்கு எதிராக 30 நாட்களுக்குள் மேன்முறையீடு செய்ய வாய்ப்பு இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியிருந்தன.</p><p></p>]]></content>
            <updated>2026-09-17T18:20:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் இருவேறு விபத்துக்களில் ஓய்வு பெற்ற ஆசிரியர் உட்பட இருவர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/two-killed-in-separate-accidents-in-jaffna-1789667228"></link>
            <id>https://ibctamil.com/article/two-killed-in-separate-accidents-in-jaffna-1789667228</id>
            <summary type="text">&amp;nbsp;யாழ்ப்பாணம் கொடிகாமம் காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் இடம்பெற்ற இருவேறு
விபத்துக்களில் ஓய்வு பெற்ற ஆசிரியர் உள்ளிட்ட இருவர் உயிரிழந்துள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;யாழ்ப்பாணம் கொடிகாமம் காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் இடம்பெற்ற இருவேறு
விபத்துக்களில் ஓய்வு பெற்ற ஆசிரியர் உள்ளிட்ட இருவர் உயிரிழந்துள்ளனர்

கெற்பேலி பகுதியில் மகேந்திரா ரக வாகனமும் மோட்டார்
சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளானதில் , மோட்டார் சைக்கிள் ஓட்டியான ஓய்வு
பெற்ற ஆசிரியர் உயிரிழந்துள்ளார்</p><p>வரணி பகுதியில் இடம்பெற்ற மற்றுமொரு விபத்தில் முதியவர் உயிரிழந்துள்ளார்.

காரும் துவிச்சக்கர வண்டியும் மோதி விபத்துக்குள்ளானதில்,
துவிச்சக்கர வண்டி ஓட்டியான முதியவர் உயிரிழந்துள்ளார்.</p><h2>விபத்து சம்பவங்கள் தொடர்பில் விசாரணை</h2><p>

குறித்த இரு விபத்து சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ள கொடிகாமம்
காவல்துறையினர் , இரு வாகன சாரதிகளையும் கைது செய்து காவல் நிலையத்தில் தடுத்து
வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன் , விபத்துக்குள்ளான வாகனங்களையும்
காவல் நிலையம் எடுத்து சென்றுள்ளனர்&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dfc21403-817a-4783-8b0b-6078e526b794/26-6aac2f3bd9522.webp' /></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-17T18:20:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[மகிந்தவிற்கு ஏற்பட்டுள்ள நிலைமை : விரைவில் நாடு திரும்பவுள்ள ஷிராந்தி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/shiranthi-to-return-to-the-country-soon-1789661275"></link>
            <id>https://ibctamil.com/article/shiranthi-to-return-to-the-country-soon-1789661275</id>
            <summary type="text">சிங்கப்பூரில் உள்ள மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில் மருத்துவ சிகிச்சை பெறும். ஷிராந்தி ராஜபக்ச கூடிய விரைவில் நாடு திரும்ப விரும்புவதாக முன்னாள் ஜனாதி...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிங்கப்பூரில் உள்ள மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில் மருத்துவ சிகிச்சை பெறும். ஷிராந்தி ராஜபக்ச கூடிய விரைவில் நாடு திரும்ப விரும்புவதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் தனிப்பட்ட வழக்கறிஞர் மனோஜ் கமகே தெரிவித்துள்ளார்.
</p><p>
“ மகிந்த ராஜபக்ச முதுமை அடைந்துள்ளார். ஒரு மனைவியாக, அவர் மகிந்த ராஜபக்சவைக் கவனித்துக்கொள்ள விரும்புகிறார். எனவே, கூடிய விரைவில் நாடு திரும்புவதே அவரது நம்பிக்கையாகும்,” என்று அவர் ஊடகங்களிடம் கூறினார்.&nbsp;</p><h2>மகிந்தவுடன் ஷராந்தி இருக்கவேண்டிய நேரம்</h2><p>“இந்த நாட்டைக் காப்பாற்றிய தலைவருக்கு 80 வயது ஆகிவிட்டது இத்தகைய சூழ்நிலையில், இது அவரது மனைவி அவருடன் இருக்க வேண்டிய நேரம்,” என்று கமகே மேலும் வலியுறுத்தினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/81e82c0d-a0eb-4a15-b799-e00124af6a21/26-6aac177f93f02.webp' /></p><p>
</p><p>
ரூ. 10 கோடி வைப்புத்தொகை தொடர்பாக ஷிராந்தி ராஜபக்சவிடம் நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவு (FCID) விசாரணை நடத்தி வரும் நிலையில், “சிரிலிய சவியா” கணக்கில் 10 மில்லியன் வரவு வைக்கப்பட்ட நிலையில், விசாரணைகளில் இருந்து தப்பிக்கும் முயற்சியாகவே ஷிராந்தி நாட்டை விட்டு வெளியேறியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை கமகே மறுத்தார்.</p><p></p><p> </p><h2>FCID-யில் ஷிராந்தி முன்னிலையாவது உறுதி</h2><p>மேலும், ஷிராந்தி மருத்துவ சிகிச்சைக்காக மட்டுமே சிங்கப்பூருக்குச் சென்றதாகவும், FCID-யின் முன் ஆஜராவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றும் அவர் உறுதிப்படுத்தினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/add4de9f-1e10-42b6-875d-e2ce6afd0b15/26-6aac186814f9c.webp' /></p><p>
</p><p>
ஷிராந்திராஜபக்ச செப்டம்பர் 24 அன்று FCID-யின் முன் ஆஜராகுமாறு அழைக்கப்பட்டுள்ளார். அவர் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புறப்படுவதற்கு முன்பு, FCID அதிகாரிகள் அது தொடர்பான எழுத்துபூர்வ உத்தரவை அவரிடம் வழங்கியதாகத் தெரிவிக்கப்படுகிறது.&nbsp; </p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p>&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-17T17:50:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாகிஸ்தானில் செலவுகளைக் கட்டுப்படுத்தக் கடும் நடவடிக்கைகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/strict-measures-in-pakistan-to-curb-expenses-1789667309"></link>
            <id>https://canadamirror.com/article/strict-measures-in-pakistan-to-curb-expenses-1789667309</id>
            <summary type="text">அரசுச் செலவுகளைக் கட்டுப்படுத்துவதற்கும் எரிபொருளைச் சேமிப்பதற்கும் பாகிஸ்தான் அரசு தொடர் கடும் நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தத் தீர்மானித்துள்ளது. 

...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரசுச் செலவுகளைக் கட்டுப்படுத்துவதற்கும் எரிபொருளைச் சேமிப்பதற்கும் பாகிஸ்தான் அரசு தொடர் கடும் நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தத் தீர்மானித்துள்ளது. </p><p>

இன்று (17) வெளியிடப்பட்ட அமைச்சரவைப் பிரிவின் அறிவிப்பின்படி, அரசு வாகனங்களுக்கு ஒதுக்கப்படும் எரிபொருளின் அளவு 50% ஆல் குறைக்கப்பட்டுள்ளது. </p><p>

எனினும் ஆயுதப்படைகள், சட்டத்தை நடைமுறைப்படுத்தும் நிறுவனங்கள், அத்தியாவசிய சேவைகள் மற்றும் கூட்டாட்சி வருவாய் வாரியத்தின் செயல்பாடுகளுக்கு இந்த வரம்பு பொருந்தாது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7d4ce15c-3a0f-4dd8-ad55-cf6de34f0288/26-6aac27ef3e08c.webp' /></p><p> 

குறித்த அறிவிப்பின்படி, 2026/27 நிதியாண்டிற்கான மீண்டும் மீளாத செலவினங்களை வரவு செலவுத் திட்டத்தில் இருந்து மாதந்தோறும் 5% குறைக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.</p><p> 

புதிய வாகனங்கள் கொள்முதல் செய்வது மற்றும் சில பயன்பாட்டுப் பொருட்களை வாங்குவது தற்காலிகமாகத் தடை செய்யப்பட்டுள்ளதுடன், வளர்ச்சித் திட்டங்களுக்கு இந்த வரம்புகள் பொருந்தாது என்றும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p> 

வெளிநாட்டுச் சுற்றுலாக்கள் மற்றும் வெளிநாட்டுப் பயணங்கள் 3 மாத காலத்திற்கு இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன், அத்தியாவசியப் பயணங்களை மேற்கொள்ள வேண்டியிருப்பின் அமைச்சர்கள், ஆலோசகர்கள் மற்றும் இதர தொடர்புடைய அதிகாரிகள் விமானங்களில் சாதாரண வகுப்பிலேயே (Economy class) பயணிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. </p><p>

அரசு நிறுவனங்களின் கூட்டங்களை முடிந்தவரை காணொளி மாநாடு (Video Conference) முறையில் நடத்தவும், வெளிநாட்டுப் பிரதிநிதிகள் வருகை தரும் சந்தர்ப்பங்களைத் தவிர்த்து அரசு சார்பில் அதிகாரப்பூர்வ விருந்துகளை நடத்த வேண்டாம் என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. </p><p>

அரசு நிதியில் நடத்தப்படும் அதிகாரப்பூர்வ கருத்தரங்குகள், பயிற்சித் திட்டங்கள் மற்றும் மாநாடுகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், அத்தியாவசிய சந்தர்ப்பங்களில் அரசின் கேட்போர் கூடங்கள், குழு அறைகள் மற்றும் இதர அதிகாரப்பூர்வ வசதிகளைப் பயன்படுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. </p><p>

இது தவிர, திருமண விழாக்கள் மற்றும் அது தொடர்பான நிகழ்வுகளில் ஒரே ஒரு வகையான உணவை மட்டுமே வழங்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. </p><p>

இதற்கிடையில், பாகிஸ்தானில் உள்ள வணிக மற்றும் வர்த்தக நிறுவனங்களுக்கு தற்போது நடைமுறையில் உள்ள கடைகளை மூடும் நேரங்கள் தொடர்ந்து அமுலில் இருக்கும் என அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. </p><p>

இதன்படி, சாதாரண கடைகள், சந்தைகள் மற்றும் வணிக வளாகங்கள் இரவு 9.00 மணிக்கும், விழா மண்டபங்கள் இரவு 10.00 மணிக்கும் மூடப்பட வேண்டும்.</p><p> 

உணவகங்கள், கேஃபேக்கள் மற்றும் உணவு விற்பனை நிலையங்கள் இரவு 11.00 மணி வரை திறக்கப்பட்டிருக்கலாம் என்பதுடன், பொதி (takeaway) மற்றும் வீட்டிற்கு விநியோகம் செய்யும் (home delivery) சேவைகளுக்கு இந்த நேரக் கட்டுப்பாட்டிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. </p><p>

மருந்தகங்கள், வைத்தியசாலைகள், கிளினிக்குகள், மருத்துவ விநியோகக் கடைகள், எரிபொருள் நிரப்பும் நிலையங்கள், மின்சார வாகன சார்ஜிங் மையங்கள், உடற்பயிற்சிக் கூடங்கள் மற்றும் விளையாட்டு வசதிகள் உள்ளிட்ட சில சேவைகளுக்கு இந்த வரம்பிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. </p><p>

இந்த நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக தேவைப்படும் இடங்களில் தனிப்பட்ட விடயங்கள் அடிப்படையில் விலக்குகளைப் பரிசீலிக்க முடியும் என்றும் பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-17T17:49:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தொடருந்து பயணச்சீட்டுக்களி்ல் ஏற்படவுள்ள மாற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/online-train-tickets-1789664454"></link>
            <id>https://tamilwin.com/article/online-train-tickets-1789664454</id>
            <summary type="text">இனிவரும் காலங்களில் இணையவழியினூடாக தொடருந்து பயணச்சீட்டுக்களைப் பெற்றுக் கொள்ள முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைப் தொடருந்து திணைக்க பொது...</summary>
            <content type="html"><![CDATA[<p>இனிவரும் காலங்களில் இணையவழியினூடாக தொடருந்து பயணச்சீட்டுக்களைப் பெற்றுக் கொள்ள முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இலங்கைப் தொடருந்து திணைக்க பொதுமுகாமையாளர் அலுவலகம் அதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளதுடன், இன்று(17.09.202) தொடக்கம் நடைமுறைக்கு வரவுள்ளது.</p><h2>பயணச்சீட்டுக்களை இணையவழியில்</h2><p>

அதன் பிரகாரம் தொடருந்துப் பயணிகள் பயணச்சீட்டுப் பெற்றுக் கொள்வதற்காக இனிவரும் காலங்களில் தொடருந்து நிலையங்களுக்குச் செல்லத் தேவையில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/35c51f9b-1f91-42f5-8e85-aa964039cd13/26-6aac228ebc63c.webp' /></p><p>
</p><p>
அதற்குப் பதிலாக தாங்கள் இருக்கும் இடத்தில் இருந்தவாறே தொடருந்து பயணச்சீட்டுக்களை இணையவழியினுடாக பெற்றுக் கொள்ள முடியும் என்று அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.</p><p>அதன்பிரகாரம் www.pravesha.lk எனும் இணையத்தளத்தை அணுகுவதன் ஊடாக பயணிகள் தங்கள் பயணச்சீட்டுக்களைப் பெற்றுக் கொள்ள முடியும்.
</p><p>
அதேபோன்று pravesha மொபைல் செயலி ஊடாகவும் தங்களுக்கான பயணச்சீட்டுக்களைப் பெற்றுக் கொள்ள முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-17T17:37:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ்.மாவட்ட மக்களுக்கு புதிய வசதி : அரச உத்தியோகத்தரின் முறைப்பாடுகளை நேரடியாக தெரிவிக்க ஏற்பாடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/gover-employees-to-submit-complaints-directly-1789665567"></link>
            <id>https://ibctamil.com/article/gover-employees-to-submit-complaints-directly-1789665567</id>
            <summary type="text">யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள பிரதேச செயலகங்கள், கிராம அலுவலகங்கள்,
சமுர்த்தி அலுவலகங்கள், சமூக வலுவூட்டல் அலுவலகங்கள் மற்றும் மாவட்டச் செயலகம்
ஆகிய அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள பிரதேச செயலகங்கள், கிராம அலுவலகங்கள்,
சமுர்த்தி அலுவலகங்கள், சமூக வலுவூட்டல் அலுவலகங்கள் மற்றும் மாவட்டச் செயலகம்
ஆகிய அரச அலுவலகங்களில் பொதுமக்கள் அரச சேவைகளைப் பெற்றுக்கொள்ளும் போது
உத்தியோகத்தர்களால் ஏற்படுத்தப்படும் தேவையற்ற காலதாமதங்கள் மற்றும் தடைகள்
தொடர்பான விடயங்கள் குறித்து இன்று முதல் (17.09.2026) அரசாங்க அதிபருக்கு
தொலைபேசி மூலம் நேரடியாகத் தெரிவிக்க முடியும் என யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க
அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்துள்ளார்.</p><p>&nbsp;அதன் பிரகாரம் பொதுமக்கள், அரச அலுவலர்கள் தொடர்பான தமது முறைப்பாடுகளை
076 22 33 000 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அலுவலக நாட்களில் பி. ப. 5.30 மணி
முதல் பி. ப. 6.30 மணி வரை நேரடி அழைப்பு ஊடாகவும் WhatsApp அழைப்பு
ஊடாகவும் தொடர்புகொள்ள முடியும் எனவும் அரசாங்க அதிபர் தெரிவித்தார்.</p><h2>பொதுமக்களின் முறைப்பாடுகளுக்கு உரிய தீர்வு</h2><p>
</p><p>
அலுவலர்கள் தொடர்பான பொதுமக்களின் முறைப்பாடுகளுக்கு உரிய தீர்வுகளை
விரைவாகப் பெற்றுக்கொடுக்கும் நோக்கிலேயே இந்த தொடர்பு இலக்கம்
அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f0deed00-009d-415a-999d-b81ffee9f16a/26-6aac243186d30.webp' /></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-17T17:32:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[தென்னாப்பிரிக்காவில் கண்டெடுக்கப்பட்ட 9 பெண்கள் உடல்: தொடர் கொலையாளியின் செயலா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/9-women-body-found-dead-in-johannesburg-1789665959"></link>
            <id>https://news.lankasri.com/article/9-women-body-found-dead-in-johannesburg-1789665959</id>
            <summary type="text">South Africa 9 Women body Found dead in Johannesburg: ஜோகன்னஸ்பர்க் அருகில் 9 பெண்கள் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது...</summary>
            <content type="html"><![CDATA[<p>South Africa 9 Women body Found dead in Johannesburg: ஜோகன்னஸ்பர்க் அருகில் 9 பெண்கள் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது.</p><h2> கண்டெடுக்கப்பட்ட 9 பெண்கள் உடல்</h2><p>&nbsp;தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகருக்கு வடக்கே 9 பெண்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவத்தில் மிகப்பெரிய அச்சத்தை அப்பகுதியை சுற்றியுள்ள பெண்களிடம் உருவாக்கியுள்ளது.</p><p> இரண்டு மாத இடைவெளிக்குள் மீட்கப்பட்ட இந்த உடல்களிடையே ஏதேனும் பொதுவான தொடர்பு உள்ளதா என காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.</p><p> தென்னாப்பிரிக்க காவல்துறையின் தகவல்படி, சடலமாக மீட்கப்பட்ட பெண்கள் அனைவரும் 20 முதல் 38 வயதுக்கு உட்பட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> அத்துடன் இவர்களில் பலரின் உடல்கள் ஆடை இன்றி நிர்வாணமாகவோ, பாதியளவு ஆடைகளுடனோ உடலில் காயங்களுடன் கண்டெடுக்கப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cdb932d6-005c-4ad0-9ad6-0292c70e0792/26-6aac22a97de8c.webp' /></p><h2> தொடர் கொலையாளியின் செயலா?</h2><p>பாதிக்கப்பட்டவர்களின் வயது, சம்பவ இடங்கள் மற்றும் காலக்கெடு ஆகியவற்றில் உள்ள ஒற்றுமை இந்த கொலை சம்பவங்கள் தொடர் கொலையாளியின்(serial killer) செயலாக இருக்குமோ என்று காவல்துறை அதிகாரிகள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.</p><p>இருப்பினும் இவை தொடர் கொலையாளியின் செயல் என்று யாரும் முன்கூட்டியே முடிவு செய்ய வேண்டாம் என்றும், இதில் தனித் தனி நபர்கள் ஈடுபட்டு இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும் காவல்துறை அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார்.</p><p> கடந்த ஜூலை 17ம் திகதி நடந்த கொலை சம்பவத்தில் இளம் பெண் ஒருவர் கேபிள் டை மூலம் கட்டப்பட்டு நிர்வாணமான நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.</p><p> இதுவே கண்டெடுக்கப்பட்ட 9 உடல்களில் முதல் வழக்காகும். இந்த வழக்கில் சம்பந்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் கொலை செய்யப்பட்ட பெண்ணின் காதலன் பொலிஸார் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.</p><p><br></p>]]></content>
            <updated>2026-09-17T17:26:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[நொர்த் யோர்க்கில் 17 வயது சிறுவன் சுட்டுக்கொலை: 16 வயது சிறுவன் மீது கொலைக் குற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/arrest-made-in-fatal-shooting-of-17-year-old-boy-1789664343"></link>
            <id>https://canadamirror.com/article/arrest-made-in-fatal-shooting-of-17-year-old-boy-1789664343</id>
            <summary type="text">கனடாவின் நொர்த் யோர்க் பகுதியில் 17 வயது சிறுவன் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக 16 வயதுடைய சிறுவன் ஒருவன் கைது செய்யப்பட்டு முதலாம் நிலை கொலைக் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் நொர்த் யோர்க் பகுதியில் 17 வயது சிறுவன் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக 16 வயதுடைய சிறுவன் ஒருவன் கைது செய்யப்பட்டு முதலாம் நிலை கொலைக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>கடந்த திங்கட்கிழமை பிற்பகல் 3:30 மணியளவில் ஜேன் வீதி மற்றும் பின்ச் அவென்யூ வெஸ்ட் சந்திப்பிற்கு அருகில் உள்ள பேருந்து நிறுத்தத்திற்கு அருகே காஷி அகஸ்ட் என்ற சிறுவன் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானார்.</p><p> 
தீவிர காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bea658c8-9058-45d2-9b6f-7438807eeed2/26-6aac1c58dcaf6.webp' /></p><p>
இக்கொலைச் சம்பவம் தொடர்பில் வியாழக்கிழமை கைது செய்யப்பட்ட 16 வயது சிறுவன் மீது முதலாம் நிலை கொலைக் குற்றம் மற்றும் நன்னடத்தை உத்தரவை மீறியமை ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.</p><p>
கனடாவின் இளையோர் குற்றவியல் நீதிச் சட்டத்தின் கீழ் சந்தேகநபரின் பெயர் மற்றும் அடையாளங்களை வெளியிடுவது தடை செய்யப்பட்டுள்ளது.
</p><p>துப்பாக்கிச் சூட்டுக்கான பின்னணி அல்லது காரணம் குறித்து பொலிஸார் இதுவரை எவ்வித தகவலும் வெளியிடவில்லை.
</p><p>இறந்த காஷி அகஸ்டிற்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இந்த வாரத் தொடக்கத்தில் இடம்பெற்றதுடன், அவர் அனைவராலும் விரும்பப்பட்ட ஒரு நல்ல சிறுவன் என உறவினர்களும் நண்பர்களும் நினைவு கூர்ந்தனர்.
</p><p>இச்சம்பவம் தொடர்பில் மேலதிக தகவல்கள் தெரிந்தவர்கள் பொலிஸாரையோ அல்லது குற்றத் தடுப்புப் பிரிவையோ தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-17T17:14:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாளையதினம் பிணை கிடைத்தாலும் வெளியே வரமுடியாத நிலையில் நாமல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/if-namal-granted-bail-18th-he-cannot-be-released-1789664227"></link>
            <id>https://ibctamil.com/article/if-namal-granted-bail-18th-he-cannot-be-released-1789664227</id>
            <summary type="text">சிறிலங்கன் ஏர்லைன்ஸுக்காக ஏர்பஸ் விமானங்களை வாங்கியது தொடர்பான நிதி முறைகேடுகள் மற்றும் பணச்சலவை சம்பவத்தில் சந்தேக நபராகப் பெயரிடப்பட்ட நாடாளுமன்ற உற...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிறிலங்கன் ஏர்லைன்ஸுக்காக ஏர்பஸ் விமானங்களை வாங்கியது தொடர்பான நிதி முறைகேடுகள் மற்றும் பணச்சலவை சம்பவத்தில் சந்தேக நபராகப் பெயரிடப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை, கோட்டை நீதவான் பாசன் அமரசேன 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளதால்,நாளை 18ஆம் திகதி விசாரணைக்கு அழைக்கப்பட்ட வழக்கில் அவருக்கு பிணை கிடைத்தாலும் விடுதலை பெறும் வாய்ப்பை அவர் இழப்பார் என தெரியவருகிறது.
</p><p>
சந்தேக நபர் சார்பில் தாக்கல் செய்யப்பட்டபிணைமனு மீதான உத்தரவு நாளையதினம் வழங்கப்படும் என்று நீதிமன்றம் தெரிவித்தது.</p><h2>நான்காவது சந்தேக நபர்</h2><p>இந்தச் சம்பவத்தில் நாமல் ராஜபக்ச 4வது சந்தேக நபராகப் பெயரிடப்பட்டுள்ளதாக பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டார நீதிமன்றத்தில் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bdad6ee0-3013-430c-abd9-09875db2190c/26-6aac1f8e02004.webp' /></p><p>

 ஏர்பஸ் நிறுவனத்தின் உள் மின்னஞ்சல்கள் மற்றும் தடயவியல் தணிக்கை அறிக்கைகள், இந்தச் சம்பவத்துடன் நாமல் ராஜபக்சவின் தொடர்பை வெளிப்படுத்தியுள்ளதாக குற்றப் புலனாய்வுத் துறை (CID) தெரிவித்துள்ளது.
</p><p>


பிரான்சில் உள்ள ஏர்பஸ் நிறுவனத்துடனான ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, 2 மில்லியன் அமெரிக்க டொலர் (1,454 மில்லியன் யூரோ) தொகை மற்ற நிறுவனங்களுக்கு மாற்றப்பட்டது.</p><p></p><h2>வெளிநாட்டில் உள்ள சந்தேக நபர்கள்</h2><p> </p><p>மேலும், அதன் ஒரு பகுதி முன்னாள் அமைச்சர் சமல் ராஜபக்சவின் மகனான ஷமிந்த ராஜபக்சவின் கணக்குகளில் பெறப்பட்டது.

 இரண்டாவது சந்தேக நபரான பிரியங்கா நியோமாலியும், மூன்றாவது சந்தேக நபரான ஷமிந்த ராஜபக்சவும் வெளிநாட்டில் உள்ளனர், அவர்களைக் கைது செய்ய முடியவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/603caf94-438e-43f3-96c2-e3781d5b045b/26-6aac1f8d4ab89.webp' /></p><p>

 இவ்வழக்கின் முக்கிய சாட்சியான நிமல் பெரேரா, அழுத்தம் காரணமாக அவுஸ்திரேலியா சென்றுள்ளதாக நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் மூலம் தெரிவித்துள்ளார்.
</p><p>


சந்தேக நபருக்காக ஆஜரான ஜனாதிபதி சட்ட ஆலோசகர் அனில் டி சில்வா, தனது கட்சிக்காரர் இலங்கையில் ஒரு அரசியல்வாதி என்பதால், வெளிநாடு சென்று தலைமறைவாக இருக்க வேண்டிய அவசியமில்லை என்று கூறினார். மேலும், பிணைச் சட்டத்தின் கோட்பாடுகளின்படி அவருக்குப் பிணை வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் கோரினார்.
</p><p>
இலஞ்ச ஆணைக்குழுவால் பதிவு செய்யப்பட்ட ஒரு வழக்கு தொடர்பாக நாமல் ராஜபக்ச ஏற்கனவே 18ஆம் திகதி (நாளை) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார், மேலும் குற்றப் புலனாய்வுத் துறையால் பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கு தொடர்பாக அவர் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-17T17:12:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[அநுராதபுரத்தில் சாமி அம்மாவின் அருள்தேடி வந்த லிமினி ராஜபக்‌ஷ]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/limini-rajapaksa-seeking-the-blessings-sami-amma-1789663008"></link>
            <id>https://jvpnews.com/article/limini-rajapaksa-seeking-the-blessings-sami-amma-1789663008</id>
            <summary type="text">அநுராதபுரத்தில் அருள்பாலித்து வரும் சாமி அம்மா (கிரி அம்மா) அவர்களை தரிசித்து, அவர்களிடம் அருள்தேடி, தங்களது எதிர்காலம் தொடர்பாக சாமி ஆடி அருள்வாக்கு ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அநுராதபுரத்தில் அருள்பாலித்து வரும் சாமி அம்மா (கிரி அம்மா) அவர்களை தரிசித்து, அவர்களிடம் அருள்தேடி, தங்களது எதிர்காலம் தொடர்பாக சாமி ஆடி அருள்வாக்கு கேட்பதற்காக நாமல் ராஜபக்‌ஷவின் மனைவி லிமினி ராஜபக்‌ஷ அவர்கள் வருகை தந்திருந்தார்.</p><p>
</p><p></p><p>இந்நிகழ்வில் அன்னாரும் அவருடைய குடும்பத்தினரும் சாமி அம்மாவின் அருளையும் ஆசீர்வாதத்தையும் பெற்றுக்கொண்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/866e67e3-9f68-409f-8163-194705de30d3/26-6aac1721d472e.webp' /></p>]]></content>
            <updated>2026-09-17T16:57:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[நான் புலிதான் ஆனால் விடுதலைப் புலி அல்ல: சர்ச்சைக்கு மேல் சர்ச்சையை கிளப்பும் அர்ச்சுனா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/i-m-a-tiger-but-not-an-ltte-tiger-1789663763"></link>
            <id>https://tamilwin.com/article/i-m-a-tiger-but-not-an-ltte-tiger-1789663763</id>
            <summary type="text">&amp;nbsp;மேடையில்&amp;nbsp; தாம் ஓரு புலி என குறிப்பிட்டது மிருகத்தையே அன்றி&amp;nbsp; தமிழீழ விடுதலைப் புலிகளை அல்ல என யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இர...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;மேடையில்&nbsp; தாம் ஓரு புலி என குறிப்பிட்டது மிருகத்தையே அன்றி&nbsp; தமிழீழ விடுதலைப் புலிகளை அல்ல என யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.
</p><p>‘புலி’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தியமை மற்றும் புலம்பெயர் மக்கள் தொடர்பான பேச்சு குறித்து எழுந்த சர்ச்சை தொடர்பாக அவர் விளக்கமளித்துள்ளார்.
</p><p>தான் 'புலி' என்ற மிருகத்தையே குறிப்பிட்டதாகவும், அது தனக்குப் பிடித்தமான மிருகம் என தெரிவித்துள்ளார்.</p><h2>புலனாய்வுப் பிரிவினரை சந்திக்க தயார்..</h2><p>சிங்கள மக்கள் தங்களை ‘சிங்கம்’ எனக் கூறிக்கொள்வது போல, தான் ‘புலி’ எனக் கூறுவதில் எந்தத் தவறும் இல்லை எனவும், அது தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைக் குறிக்கவில்லை எனவும் அவர் தெளிவுபடுத்தினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e3889a67-7240-4207-89f1-1dbd9e60eb87/26-6aac1a1537951.webp' />&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</p><p>தாம் விடுதலைப் புலிகளின் புலம்பெயர் அமைப்பு என்று கூறவில்லை. வெளிநாடுகளில் வாழும் இலங்கைத் தமிழர்கள், முஸ்லிம்கள் மற்றும் சிங்களவர்களையே 'புலம்பெயர்ந்தோர்' எனக் குறிப்பிட்டதாக தெரிவித்துள்ளார்.</p><p>நாட்டின் மறுசீரமைப்பிற்கு அவர்கள் அளித்த நிதியைப் பெற்றுக்கொண்டு அரசாங்கம் எங்களை ஏமாற்றுகிறது என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
தான் ஒரு மருத்துவராக களுபோவில, பேராதனை ஆகிய மருத்துவமனைகளில் பணியாற்றி, சிங்கள நோயாளிகளுக்கும் சிகிச்சை அளித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><h2>அரசாங்கத்திற்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை</h2><p>
</p><p>ஆயுதம் ஏந்தும் எண்ணம் கொண்டவன் அல்ல என அவர் தெரிவித்துள்ளார்.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் விசாரணைக்கோ அல்லது கைதுக்கோ தான் அஞ்சவில்லை எனக் அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு தன்னை விசாரிக்க விரும்பினால் வாட்ஸ்அப் மூலம் இருப்பிடத்தை அனுப்பினால் போதுமானது எனவும், செருப்பு மற்றும் சாதாரண உடையில் தானாகவே நேரில் வரத் தயார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சாதாரண மனிதர்களை இலக்கு வைப்பதை விட்டுவிட்டு, மத்திய வங்கி பிணைமுறி ஊழலில் தொடர்புடைய அர்ஜுன மகேந்திரன் போன்ற பெரிய குற்றவாளிகள் மீது கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.</p><p>
மேலும், இந்த அரசாங்கத்திற்கு வாக்களிக்குமாறு மக்களுக்குக் கோரிக்கை விடுத்ததற்காகத் தற்போது வெட்கப்படுவதாக அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p><b>YOU MAY LIKE THIS VIDEO..</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/xed1HPmRx3w" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p>]]></content>
            <updated>2026-09-17T16:53:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[வசந்த கரன்னாகொட, யோஷிதவுக்கு எதிரான ஊழல் வழக்கு ; நீதிமன்றம் பிரப்பித்த உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/corruption-case-against-karannagoda-and-yoshitha-1789663881"></link>
            <id>https://jvpnews.com/article/corruption-case-against-karannagoda-and-yoshitha-1789663881</id>
            <summary type="text">ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொட மற்றும் யோஷித ராஜபக்ஷ ஆகியோருக்கு எதிராக கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொட மற்றும் யோஷித ராஜபக்ஷ ஆகியோருக்கு எதிராக கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு இன்று (17) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.</p><p>
</p><p></p><p>இதன்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள பிரதிவாதிகளான வசந்த கரன்னாகொட மற்றும் யோஷித ராஜபக்ஷ ஆகியோர் நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4e05c736-7e38-4daf-a42b-d22c0dc8eeaa/26-6aac1a8b4b751.webp' /></p><p>

சமர்ப்பிக்கப்பட்ட விடயங்களை ஆராய்ந்த பின்னர்,கருத்திற்கொண்ட நீதிமன்றம், இந்த வழக்கை, முன்விளக்க மாநாட்டிற்கு அழைக்குமாறு உத்தரவிட்டது.
</p><p>
தகுந்த தகுதிகளைப் பூர்த்தி செய்யாத பின்னணியில், பிரதிவாதியான யோஷித ராஜபக்ஷவை பிரித்தானியாவின் ரோயல் கடற்படை பயிற்சி முகாமிற்கு பயிற்சிக்காக அனுப்பியதன் மூலம் ஊழல் புரிந்துள்ளதாக குற்றம்சாட்டி கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-17T16:51:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[மலேசியாவில் செம ஸ்டைலிஷ் போட்டோ எடுத்துள்ள அய்யனார் துணை சீரியல் மதுமிதா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/ayyanar-thunai-serial-actress-madhumitha-photos-1789650723"></link>
            <id>https://cineulagam.com/article/ayyanar-thunai-serial-actress-madhumitha-photos-1789650723</id>
            <summary type="text">மதுமிதாசன் டிவியில் எதிர்நீச்சல் சீரியல் செம ரீச், அந்த தொடரை தொடர்ந்து விஜய் டிவியில் அய்யனார் துணை சீரியல் கமிட்டாகி தனது சினிமா பயணத்தை வெற்றிகரமாக...</summary>
            <content type="html"><![CDATA[<h2>மதுமிதா</h2><p>சன் டிவியில் எதிர்நீச்சல் சீரியல் செம ரீச், அந்த தொடரை தொடர்ந்து விஜய் டிவியில் அய்யனார் துணை சீரியல் கமிட்டாகி தனது சினிமா பயணத்தை வெற்றிகரமாக கொண்டு செல்பவர் தான் நடிகை மதுமிதா.</p><p>கன்னட சினிமாவில் இருந்து தமிழ் பக்கம் வந்தவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் கூட்டம் உள்ளது.</p><p>இவர் அண்மையில் மலேசியா டூர் சென்றுள்ளார், அங்கு அவர் ஸ்டைலிஷ் உடையில் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதோ அந்த போட்டோஸ்,</p><p><br></p>]]></content>
            <updated>2026-09-17T16:50:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ்ப்பாண மக்களுக்கு முக்கிய அறிவிப்பு - அரச அலுவலக காலதாமதங்களை குறைக்க அதிரடி நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/important-announcement-for-people-of-jaffna-1789663298"></link>
            <id>https://tamilwin.com/article/important-announcement-for-people-of-jaffna-1789663298</id>
            <summary type="text">யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள பிரதேச செயலகங்கள், கிராம அலுவலகங்கள், சமுர்த்தி அலுவலகங்கள், சமூக வலுவூட்டல் அலுவலகங்கள் மற்றும் மாவட்டச் செயலகம் உள்ளிட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள பிரதேச செயலகங்கள், கிராம அலுவலகங்கள், சமுர்த்தி அலுவலகங்கள், சமூக வலுவூட்டல் அலுவலகங்கள் மற்றும் மாவட்டச் செயலகம் உள்ளிட்ட அரச அலுவலகங்களில் ஏற்படும் காலதாமதங்கள் தொடர்பில் முறைப்பாடு செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
</p><p>
இதற்கமைய, இன்று (17.09.2026) முதல் பொதுமக்கள் தங்களது முறைப்பாடுகளை யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபருக்கு தொலைபேசி மூலம் நேரடியாகத் தெரிவிக்க முடியும் என மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்துள்ளார்.</p><h2>

பொதுமக்களுக்கு விடுக்கப்பட்ட அறிவுறுத்தல்</h2><p>

இந்த நடவடிக்கையின் மூலம் பொதுமக்கள் அரச சேவைகளைப் பெற்றுக்கொள்ளும் போது உத்தியோகத்தர்களால் ஏற்படுத்தப்படும் தேவையற்ற காலதாமதங்கள் மற்றும் தடைகள் தொடர்பில் அரசாங்க அதிபர் இலகுவாக அறிந்துகொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b149eb57-6225-4c67-8dab-eadb06dc8a69/26-6aac187425811.webp' /></p><p>
</p><p>
இதன்படி, பொதுமக்கள் அலுவலர்கள் தொடர்பான தமது முறைப்பாடுகளை 076 22 33 000 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அலுவலக நாட்களில் மாலை 5.30 மணி முதல் 6.30 மணி வரை நேரடி அழைப்பின் ஊடாகப் பதிவு செய்யலாம்.
</p><p>
அத்துடன், WhatsApp அழைப்பு மூலமாகவும் தொடர்புகொள்ள முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>
அலுவலர்கள் தொடர்பான பொதுமக்களின் முறைப்பாடுகளுக்கு விரைவாக உரிய தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கிலேயே இந்த தொடர்பு இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க அதிபர் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p><p><b>YOU MAY LIKE THIS VIDEO..</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/0VExnTldYAE" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-17T16:42:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் 71 வாகனங்களை உடைத்து திருடிய நபர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/mississauga-man-charged-after-71-vehicle-break-1789662804"></link>
            <id>https://canadamirror.com/article/mississauga-man-charged-after-71-vehicle-break-1789662804</id>
            <summary type="text">கனடாவின் ஒன்ராறியோ மாநிலத்தில் உள்ள மிசிசாகா பகுதியில் 71 வாகனங்களை உடைத்து தனியாரின் உடமைகளைத் திருடிய குற்றச்சாட்டில் 34 வயதுடைய நபர் ஒருவரை பீல் பி...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் ஒன்ராறியோ மாநிலத்தில் உள்ள மிசிசாகா பகுதியில் 71 வாகனங்களை உடைத்து தனியாரின் உடமைகளைத் திருடிய குற்றச்சாட்டில் 34 வயதுடைய நபர் ஒருவரை பீல் பிராந்திய பொலிஸார் கைது செய்துள்ளனர்.</p><p>
செப்டம்பர் 3 மற்றும் 6 ஆம் திகதிகளில் அதிகாலை வேளையில் குறிப்பிட்ட குடியிருப்புப் பகுதிகளில் இத்திருட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.</p><p> 
நிரந்தர முகவரியற்ற கோரி லவ்டன் என்ற நபரே கைது செய்யப்பட்டு குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியுள்ளார். 
வாகனங்களின் கண்ணாடிகளை உடைத்தோ அல்லது பூட்டப்படாத கதவுகள் வழியாகவோ உள்ளே நுழைந்து விலையுயர்ந்த பொருட்களைத் திருடியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d4159e0e-e393-4e89-a0f5-7fde25ba0e6e/26-6aac1655d53f3.webp' /></p><p> இதன்போது வாகனங்கள் எதுவும் திருடப்படவில்லை என்பதுடன், சம்பவங்களின் போது வாகனங்களுக்குள் எவரும் இருக்கவில்லை. </p><p>
வேறு இரு நிதி மோசடி வழக்குகள் தொடர்பிலும் இவர் மீது பிடியாணை நிலுவையில் இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.</p><p> தற்போது பிணை விசாரணை நிலுவையில் உள்ள நிலையில் இவர் காவலில் வைக்கப்பட்டுள்ளார். </p><p>
சமூக அமைதியைக் கெடுக்கும் நபர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை இந்தக் கைது உறுதி செய்வதாக பொலிஸ் தலைமை அதிகாரி நிஷான் துரையப்பா தெரிவித்துள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-17T16:38:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[உக்ரைனுக்கு ஆதரவு அளிக்கும் நாடுகள் மீது தாக்குதல் நடத்த திட்டமிடும் ரஷ்யா: போலந்து பிரதமர் எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/poland-prime-minister-warns-russia-s-striking-plan-1789662973"></link>
            <id>https://news.lankasri.com/article/poland-prime-minister-warns-russia-s-striking-plan-1789662973</id>
            <summary type="text">Poland Prime minister warns Russia’s Striking plan: உக்ரைனுக்கு ஆதரவு அளிக்கும் நாடுகள் மீது ரஷ்யா தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருப்பதாக போலந்து பிரதம...</summary>
            <content type="html"><![CDATA[<p>Poland Prime minister warns Russia’s Striking plan: உக்ரைனுக்கு ஆதரவு அளிக்கும் நாடுகள் மீது ரஷ்யா தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருப்பதாக போலந்து பிரதமர் எச்சரித்துள்ளார்.</p><h2> போலந்து பிரதமர் எச்சரிக்கை</h2><p>
உக்ரைனுக்கு ஆதரவு வழங்கும் நாடுகள் மீது ரஷ்யா ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல் நடத்த&nbsp; திட்டமிட்டு வருவதாக போலந்து பிரதமர் டொனால்ட் டஸ்க்(Donald Tusk) எச்சரித்துள்ளார்.</p><p> ரஷ்யாவின் இந்த சதி திட்டத்தில் போலந்தும் தாக்கப்படலாம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>இந்த எச்சரிக்கையை வழங்கிய உளவு அமைப்புகளின் பெயர்களை வெளியிடாமல், தற்போது உக்ரைன்-ரஷ்யா போரானது எந்த திசையை நோக்கி செல்கிறது என்பதை போலந்து பிரதமர் வெளிப்படுத்தியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/abc26986-5257-4e35-a973-f0916861ea71/26-6aac16ff26eb8.webp' /></p><p></p><p> நேட்டோ உறுப்பு நாடுகளின் எல்லைக்கு அருகே ரஷ்ய ராணுவத்தின் நடவடிக்கைகள் தீவிரமடைந்து வரும் நிலையில் போலந்து பிரதமர் இந்த எச்சரிக்கையை தெரிவித்துள்ளார்.</p><p> ரஷ்யாவின் இந்த அச்சுறுத்தல் போலந்து நாட்டுடன் நின்று விடவில்லை. சமீபத்தில் ஜேர்மனியின் லீப்ஜிக் விமான நிலையத்தில் வெடிமருந்துகள் நிரப்பப்பட்ட ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது.</p><p> இந்த அத்துமீறிய தாக்குதலுக்கு ரஷ்யா தான் காரணம் என்று ஜேர்மன் அதிகாரிகள் பகிரங்கமாக குற்றம் சாட்டி வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-09-17T16:36:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரபல ஹோட்டலில் போதைப்பொருளுடன் பிடிபட்ட பிரபல நடிகர்: நீதிமன்றம் பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/actor-fined-rs-5-000-over-cocaine-1789661401"></link>
            <id>https://tamilwin.com/article/actor-fined-rs-5-000-over-cocaine-1789661401</id>
            <summary type="text">கோகோயின் போதைப்பொருளைத் தன்வசம் வைத்திருந்த குற்றத்தை நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்ட பிரபல நடிகர் விஸ்வ கொடிகார&amp;nbsp; கைது செய்யப்பட்ட நிலையில், அவருக்கு...</summary>
            <content type="html"><![CDATA[<p>கோகோயின் போதைப்பொருளைத் தன்வசம் வைத்திருந்த குற்றத்தை நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்ட பிரபல நடிகர் விஸ்வ கொடிகார&nbsp; கைது செய்யப்பட்ட நிலையில், அவருக்கு 5000 ரூபாய் அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.&nbsp;</p><p>இது தொடர்பான வழக்கு இன்று(17.09.2026)&nbsp; விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே கல்கிஸ்ஸ பிரதான நீதவான் காஞ்சனா நெரஞ்சலா சில்வா மேற்கண்டவாறு உத்தரவு பிறப்பித்துள்ளார்.</p><h2>போதைப்பொருளுடன் கைது</h2><p>
வெள்ளவத்தை பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், வெள்ளவத்தை கடற்கரை வீதியிலுள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, நடிகர் விஷ்வ கொடிகார உட்பட ஐவர் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c819c88d-8d6e-4740-8734-a26cd9a8a0ea/26-6aac152bdb945.webp' /></p><p>
</p><p>கைதான போது விஷ்வ கொடிகாரவிடமிருந்து 1,050 மில்லிகிராம் கோகோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக வெள்ளவத்தை பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
</p><p>எதிர்காலத்தில் மீண்டும் இவ்வாறான போதைப்பொருள் குற்றச்சாட்டுகளில் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டால், எவ்வித மன்னிப்பும் இன்றி நேரடியாகப் புனர்வாழ்வு மையத்திற்கு அனுப்பப்படுவீர்கள் என நீதவான் சந்தேகநபர்களுக்குப் பகிரங்க நீதிமன்றத்தில் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.&nbsp;</p><p>விஷ்வ கொடிகார பல்வேறு சிங்களத் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நாடகங்கள் என்பனவற்றில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-09-17T16:28:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிகிச்சைக்காக சிங்கப்பூர் சென்ற ஷிரந்தி சூப்பர் மார்க்கெட்டில் ஷொப்பிங்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/shiranthi-visited-singapore-shopping-supermarket-1789657609"></link>
            <id>https://ibctamil.com/article/shiranthi-visited-singapore-shopping-supermarket-1789657609</id>
            <summary type="text">சிங்கப்பூரில் சிகிச்சை பெறுவதற்காக சென்றுள்ள முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ச தொடர்பில் சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்பட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிங்கப்பூரில் சிகிச்சை பெறுவதற்காக சென்றுள்ள முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ச தொடர்பில் சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்பட்டு வருகிறது.</p><p>

கொழும்பிலுள்ள பிரபல தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்றையதினம் நாட்டில் இருந்து சிங்கபூருக்கு சென்றிருந்தார்.
</p><p>
இந்நிலையில் இதயம் தொடர்பான சத்திர சிகிச்சை மேற்கொள்வதற்காக சிங்கபூரில் மிகவும் பிரபல்யம் பெற்ற மவுண்ட் எலிசபெத் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p></p><h2>வலைத்தளங்களில் வெளியான&nbsp;புகைப்படங்கள் </h2><p>ஆனால் மிகவும் உல்லாசமாக சிங்கப்பூரில் சுப்பர் மார்க்கெட்டுகளில் பொருட்களை கொள்வனவு செய்யும் நடவடிக்கையில் ஷிரந்தி ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0366884d-e677-4ae5-88c6-5b97f80263d2/26-6aac032ed5e58.webp' /></p><p>அது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள நிலையில் பல சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
</p><p>
நோயாளியாக சென்ற ஒரே நாளில் குணமடைந்து பொருட்களை கொள்வனவு செய்யும் அளவுக்கு நிலைமை மாறியுள்ளதாக பலரும் கருத்து வெளியிட்டு வருகின்றனர்.
</p><p>

புதிய புகைப்படங்கள்
ஏற்கனவே நிதி மோசடி குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணைகள் இடம்பெறவுள்ள நிலையில், அதிலிருந்து தப்பித்துக் கொள்ளவே ஷிரந்தி சிங்கப்பூர் சென்றுள்ளதாக பலரும் சுட்டிக்காட்டி வருகின்றனர்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-17T16:23:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[எரிபொருள் சேமிப்பில் கடும் கட்டுப்பாடு - பாகிஸ்தான் மக்களுக்கு அரசு விடுத்துள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/pakistan-government-s-drastic-spending-cuts-1789661242"></link>
            <id>https://tamilwin.com/article/pakistan-government-s-drastic-spending-cuts-1789661242</id>
            <summary type="text">பொதுச் செலவினங்களைக் கட்டுப்படுத்தவும் எரிபொருளைச் சேமிக்கவும் பாகிஸ்தான் அரசாங்கம் அதிரடி நடவடிக்கையொன்றை நடைமுறைப்படுத்தியுள்ளது. 

இந்த விடயம் தொ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொதுச் செலவினங்களைக் கட்டுப்படுத்தவும் எரிபொருளைச் சேமிக்கவும் பாகிஸ்தான் அரசாங்கம் அதிரடி நடவடிக்கையொன்றை நடைமுறைப்படுத்தியுள்ளது. </p><p>

இந்த விடயம் தொடர்பில் இன்று(17.09.2026) அமைச்சரவையில் அறிக்கையொன்றும் வெளியிடப்பட்டுள்ளது. </p><p>

மேற்படி அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்படுவதாவது, </p><p>

அரசு வாகனங்களுக்கு ஒதுக்கப்பட்ட எரிபொருளின் அளவு 50% குறைக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், இந்த வரம்பு ஆயுதப் படைகள், சட்ட அமலாக்க முகமைகள், அத்தியாவசிய சேவைகள் மற்றும் மத்திய வருவாய் வாரியத்தின் செயல்பாடுகளுக்குப் பொருந்தாது என்று கூறப்பட்டுள்ளது.</p><h2>


இறுக்கமான நடைமுறைகள்</h2><p>
தொடர்புடைய அறிக்கையின்படி, 2026/27 நிதியாண்டிற்கான திரும்பத் திரும்ப வராத செலவினங்களை வரவு செலவுத் திட்டத்திலிருந்து மாதத்திற்கு 5% குறைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5bac8803-2aaa-4dba-862a-bd692cb58400/26-6aac13219b0a8.webp' /></p><p>
</p><p>
புதிய வாகனங்கள் மற்றும் சில நீடித்த பொருட்கள் வாங்குவதற்கும் தற்காலிகமாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த கட்டுப்பாடுகள் வளர்ச்சித் திட்டங்களுக்குப் பொருந்தாது என்றும் அந்த அறிக்கை கூறுகின்றது. </p><p>

வெளிநாட்டுப் பயணம் மற்றும் வெளிநாட்டுப் பயணங்கள் 3 மாத காலத்திற்கு இடைநிறுத்தப்பட்டுள்ளன, மேலும் தேவைப்பட்டால், அமைச்சர்கள், ஆலோசகர்கள் மற்றும் பிற தொடர்புடைய அதிகாரிகள் விமானங்களில் சாதாரண பயணிகளுடன் ஒரே வகுப்பில் பயணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
</p><h2>
மட்டுப்படுத்தப்படும் அரசக் கூட்டங்கள்</h2><p>
அரசு நிறுவனங்களின் கூட்டங்களை முடிந்தவரை காணொளிக் கருத்தரங்குகள் மூலம் நடத்தவும், வெளிநாட்டுப் பிரதிநிதிகள் குழுக்கள் வருகை தரும்போது தவிர, அதிகாரப்பூர்வ அரசு விருந்துகளை நடத்த வேண்டாம் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/00aa8c1f-f227-4d08-9251-9b7eca7593c8/26-6aac132269084.webp' /></p><p>
</p><p>

அரசு நிதியுதவியுடன் நடத்தப்படும் அதிகாரப்பூர்வ மாநாடுகள், பயிற்சித் திட்டங்கள் மற்றும் கருத்தரங்குகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், அரசு அரங்குகள், குழு அறைகள் மற்றும் பிற அதிகாரப்பூர்வ வசதிகளை அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

கூடுதலாக, திருமணங்கள் மற்றும் அது தொடர்பான நிகழ்வுகளில் ஒரே ஒரு வகை உணவு மட்டுமே பரிமாறப்பட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.</p><p>

இதற்கிடையில், பாகிஸ்தானில் உள்ள வணிக மற்றும் வர்த்தக நிறுவனங்களுக்கான கடைகளின் தற்போதைய மூடும் நேரங்கள் தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.</p><h2>

இரவு 10 மணிக்கு பின்னர் மூடப்படும் சேவைகள்</h2><p>
அதன்படி, பொதுக் கடைகள், சந்தைகள் மற்றும் வணிக வளாகங்கள் இரவு 9 மணி வரையிலும், பொழுதுபோக்கு இடங்கள் இரவு 10 மணி வரையிலும் மூடப்பட வேண்டும்.</p><p>

உணவகங்கள், சிற்றுண்டிச்சாலைகள் மற்றும் உணவு விற்பனை நிலையங்கள் இரவு 11 மணி வரை திறந்திருக்கலாம், ஆனால் பார்சல் மற்றும் வீட்டு விநியோக சேவைகளுக்கு இந்தக் கட்டுப்பாட்டிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e407e2cd-9717-4ea5-9b06-80bd52d86352/26-6aac13231c0e1.webp' /></p><p>
</p><p>
மருந்தகங்கள், மருத்துவமனைகள், மருத்துவ நிலையங்கள், மருத்துவப் பொருட்கள் விற்பனை நிலையங்கள், எரிபொருள் நிலையங்கள், மின்சார வாகன மின்னேற்றும் நிலையங்கள், உடற்பயிற்சிக் கூடங்கள் மற்றும் விளையாட்டு வசதிகள் உள்ளிட்ட சில சேவைகளுக்கு இந்தக் கட்டுப்பாட்டிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.</p><p>

இந்த நடவடிக்கைகளைச் செயல்படுத்தும்போது, ​​தேவைப்படும் பட்சத்தில் ஒவ்வொரு வழக்கையும் பொறுத்து விலக்குகள் பரிசீலிக்கப்படலாம் என்றும் பாகிஸ்தான் அரசாங்கம் தெரிவித்துள்ளது.</p><p></p><p></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-17T16:19:50+00:00</updated>
        </entry>
    </feed>
