<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-07-31T04:38:47+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[காவல்துறையினர் உட்பட மூவருக்குக் கடூழிய சிறைத்தண்டனை : நீதிமன்றம் அதிரடி உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/2-police-officers-sentenced-to-harsh-imprisonment-1785470571"></link>
            <id>https://ibctamil.com/article/2-police-officers-sentenced-to-harsh-imprisonment-1785470571</id>
            <summary type="text">முன்னாள் காவல்துறை அதிகாரிகள் இருவருக்கும் பொதுமகன் ஒருவருக்கும் கொழும்பு மேல் நீதிமன்றம் கடூழிய சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.தகராறு ஒன்...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் காவல்துறை அதிகாரிகள் இருவருக்கும் பொதுமகன் ஒருவருக்கும் கொழும்பு மேல் நீதிமன்றம் கடூழிய சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.</p><p>தகராறு ஒன்றைத் தொடர்ந்து பணத்தைக் கொள்ளையடித்தமை தொடர்பாகக் குறித்த மூவர் மீதும் குற்றம் சாட்டப்பட்டிருந்த நிலையிலே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.</p><p>

 

நீண்ட வழக்கு விசாரணையின் பின்னர் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரஷ்மி சிங்கப்புலி இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p></p><h2>சட்டமா அதிபரினால் தொடரப்பட்ட வழக்கு&nbsp;</h2><p>
 

2008 ஆம் ஆண்டு தெஹிவளைப் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் ஏற்பட்ட தகராறு முற்றியதைத் தொடர்ந்து பணத்தைக் கொள்ளையடித்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ், சட்டமா அதிபரினால் இந்த வழக்குத் தொடரப்பட்டிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a38da913-c302-49c2-9d78-927435a879ac/26-6a6c21eba88f5.webp' /></p><p>
</p><p>இந்தநிலையில் குறித்த குற்றச்சாட்டுகளுக்குக் குற்றவாளியாகக் காணப்பட்ட பொதுமகனுக்கு 5 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
</p><p>
 

அத்துடன், குற்றம் சாட்டப்பட்டிருந்த முன்னாள் காவல்துறை அதிகாரிகள் இருவருக்கும் தலா 3 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-31T04:36:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[CM விஜயின் தவெக அரசுக்கு வெற்றி - காவிரியில் நீர் திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/cwma-upholds-cauvery-water-release-to-tamil-nadu-1785472151"></link>
            <id>https://ibctamil.com/article/cwma-upholds-cauvery-water-release-to-tamil-nadu-1785472151</id>
            <summary type="text">தமிழகத்துக்கு 15 நாட்களுக்கு 3,500 கனஅடி வீதம் காவிரியில் நீர் திறக்க கர்நாடகாவுக்கு காவிரி நீர் ஒழுங்​காற்று குழு உத்தரவு பிறப்பித்துள்ளது.காவிரி குற...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழகத்துக்கு 15 நாட்களுக்கு 3,500 கனஅடி வீதம் காவிரியில் நீர் திறக்க கர்நாடகாவுக்கு காவிரி நீர் ஒழுங்​காற்று குழு உத்தரவு பிறப்பித்துள்ளது.</p><p>காவிரி குறுக்கே மேகதாது அணை கட்டுவது தொடர்பான விவகாரமும், காவிரியில் தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய நீரை திறப்பது தொடர்பான விவகாரமும் பேசுபொருளாகி இருக்கிறது.</p><p>டெல்​லி​யில் காவிரி நீர் ஒழுங்​காற்​றுக் குழு கூட்​டம் அதன் தலை​வர் எஸ்​.கே.ஹல்​தர் தலை​மை​யில் நடை​பெற்​றது.</p><p></p><h2>நீர் இருப்பு&nbsp;</h2><p>இதில் கர்​நாட​கா, தமிழ்​நாடு, கேரளம், புதுச்சேரி ஆகிய மாநிலங்​களை சேர்ந்த நீர்ப்​பாசனத் துறை அதிகாரி​கள் பங்​கேற்​றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1f31279d-935c-4969-b6be-93e79544e68a/26-6a6c26387163b.webp' /></p><p>கர்​நாடக அரசு தமிழகத்​துக்கு வழங்க வேண்​டிய நீரை உடனடி​யாக திறந்​து​விட உத்​தர​விட வேண்​டும்” என தமிழக அரசின் தரப்​பில் வலியுறுத்தப்பட்​டது.</p><p>இதன்போது,&nbsp;கர்​நாட​கா​வில் நிகழாண்​டில் தென்​மேற்கு பருவ மழை பொய்த்​த​தால் கிருஷ்ண​ராஜ​சாகர், கபினி, ஹாரங்​கி, ஹேமாவதி ஆகிய அணை​களில் 50% அளவுக்கு மட்​டுமே நீர் இருப்பு உள்​ளது.</p><p> 

பெங்​களூரு மாநகரின் குடிநீர் தேவைக்கு மட்​டுமே நீர் இருப்​பில் உள்​ளது. எனவே தமிழகத்​துக்கு காவிரி நீரை திறந்​து​விட இயலாது என கர்​நாடக அரசின் தரப்​பில் தெரிவிக்​கப்​பட்​டது.</p><p></p><h2>தமிழகத்​துக்கு நீர்</h2><p>இதனை ஏற்க மறுத்த காவிரி நீர் ஒழுங்​காற்று குழு, “உச்சநீதிமன்ற உத்​தர​வின்​படி தமிழகத்​துக்கு காவிரி நீரை திறந்து​விட வேண்​டும். மழை பற்​றாக்​குறை காரண​மாக அணைகளில் உள்ள நீர் இருப்​பின் அளவுக்கு ஏற்​ற​வாறு நீரை பங்கிட்​டுக் கொள்ள வேண்​டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aaf29726-0960-4514-8b4d-47e3e0ed6426/26-6a6c2637c070c.webp' /></p><p> கிருஷ்ண​ ராஜ​சாகர் மற்​றும் கபினி ஆகிய இரு அணை​களில் இருந்​தும் தமிழகத்​துக்கு அடுத்த 15 நாட்​களுக்கு தின​மும் 3500 கன அடி நீரை திறந்​து​விட வேண்டும்.</p><p> இதனை ஜூலை 29-ம் திகதி காலை 8 மணி முதல் இருமாநில எல்​லை​யான பிலிகுண்​டுலு அளவீட்டு நிலை​யத்​தில் இருந்து தமிழகத்​துக்கு நீர் செல்​வதை உறுதி செய்ய வேண்​டும்” என உத்​தர​விட்​டது.</p><p>எனினும் அவசர ஆலோசனையில் பின், மழை பெய்​யாத​தால் குடிநீருக்கே தட்​டுப்​பாடு ஏற்பட்​டுள்​ளது. இந்த சூழலில் தமிழ்​நாட்​டுக்கு நீரை திறந்​து​விட இயலாது. காவிரி நீர் ஒழுங்​காற்று குழு​வின் உத்​தரவை எதிர்த்து கா​விரி மேலாண்மை ஆணை​யத்​தில்​ முறை​யிட உள்ளோம் என நீர்ப்​பாசனத்​துறை அமைச்​சர் ராமலிங்க ரெட்​டி தெரிவித்துள்ளார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-31T04:36:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[49 வயதில் 25 இல் ஆடிய அதே பாடலுக்கு மேடையில் குத்தாட்டம் போட்ட சிம்ரன்! வைரலாகும் வீடியோ]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/49-years-old-actress-simran-dance-video-viral-1785427035"></link>
            <id>https://manithan.com/article/49-years-old-actress-simran-dance-video-viral-1785427035</id>
            <summary type="text">49 வயதிலும் குறையாத இளமையுடன் ரசிகர்களை ஈர்த்து வரும் நடிகை&amp;nbsp; சிம்ரன் தற்போது&amp;nbsp; Dance Jodi Dance நிகழ்சியில் நடுவராக பங்கேற்று வருகின்றார். இந...</summary>
            <content type="html"><![CDATA[<p>49 வயதிலும் குறையாத இளமையுடன் ரசிகர்களை ஈர்த்து வரும் நடிகை&nbsp; சிம்ரன் தற்போது&nbsp; Dance Jodi Dance நிகழ்சியில் நடுவராக பங்கேற்று வருகின்றார்.</p><p> இந்நிகழ்ச்சியின்&nbsp;தளபதி கச்சேரி Round இல் தான் 25 வயதில் இருக்கும் போது நடனமாடிய யூத் திரைப்பட பாடலுக்கு மேடையில் அதே எனர்ஜியுடன் குத்தாட்டம் போட்டு அசத்திய காணொளி இணையத்தில் படு வைராலாகி வருகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9798f260-f515-47a4-95f8-4089136afc77/26-6a6b7852df84e.webp' /></p><p></p><h2>

நடிகை சிம்ரன்
</h2><p>
தமிழ் சினிமாவில் VIP படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை சிம்ரன். இதன்பின், நேருக்கு நேர், வாலி படங்கள் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென தனித்துவமான இடத்தையும் அடையாளத்தையும் உருவாக்கிக்கொண்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7ff6139f-8f73-4992-b454-930208f6a75f/26-6a6b7853937d7.webp' /></p><p>விஜய், அஜித், கமல், ரஜினி என பல முன்னணி நட்சத்திரங்களுடன் ஜோடி சேர்ந்து பல ஹிட் படங்களை கொடுத்தவர்.

தொடர்ந்து பல ஆண்டுகளாக நாயகியாகவும் கேரக்டர் ஆர்ட்டிஸ்ட், வில்லி என பல்வேறு கதாப்பாத்திரங்களில் நடித்து மாஸ் காட்டி வருகின்றார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5f2d6f2f-45db-44d9-b688-5154464ba128/26-6a6b785446206.webp' /></p><p>கடந்த 2003 ஆம் ஆண்டு தீபக் என்பவரை திருமணம் செய்துக் கொண்டார். குழந்தைகள் உள்ள நிலையிலும் படங்களில் நடித்து வருகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0b97a493-1e33-40a1-bef6-a3f8001cc262/26-6a6b7854ec0f6.webp' /></p><p>திருமணத்திற்கு பிறகு சில படங்களை மட்டுமே தேர்ந்து எடுத்து நடித்து வரும் நடிகை சிம்ரன் தற்போது ஜீ தமிழில் ஒளிப்பரப்பாகும் Dance Jodi Dance நடன நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்று வருகின்றார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b3682ad5-1218-4445-acb4-cfeac9404441/26-6a6b7855a2aa8.webp' /></p><p></p><p>இந்நிலையில் djd மேடையில்,&nbsp; தளபதி கச்சேரி Round இல் தான் 25 வயதில் இருக்கும் போது நடனமாடிய யூத் திரைப்பட பாடலுக்கு மேடையில் அதே எனர்ஜியுடன் குத்தாட்டம் போட்டு ரசிகர்களை வாய்பிளக்க வைத்துள்ளார். குறித்த காணொளி தற்போது இணையத்தில் அசுர வேகத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.</p><p><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/reel/DbUoeC2gS9u/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/reel/DbUoeC2gS9u/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/reel/DbUoeC2gS9u/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by zeetamil (@zeetamizh)</a></p></div></blockquote> <script async src="//www.instagram.com/embed.js"></script></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b></td></tr></tbody></table><p><iframe width="325" height="578" src="https://www.youtube.com/embed/jbRkYGOxT1w" title="Successful Business ஆரம்பிக்க இந்த 3 விஷயம் இருந்தா போதும்! 💼🚀" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share" referrerpolicy="strict-origin-when-cross-origin" allowfullscreen></iframe></p>]]></content>
            <updated>2026-07-31T04:34:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[முதியோர்களுக்கான வெளியான மகிழ்ச்சி தகவல் ; அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் வெளியான அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/announcement-regarding-the-ashwesuma-allowance-1785472410"></link>
            <id>https://jvpnews.com/article/announcement-regarding-the-ashwesuma-allowance-1785472410</id>
            <summary type="text">2026 ஜூலை மாதத்திற்கான 70 வயதுக்கு மேற்பட்ட முதியோர்களுக்கான &#039;அஸ்வெசும&#039; முதியோர் கொடுப்பனவு இன்று (31) பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவு...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026 ஜூலை மாதத்திற்கான 70 வயதுக்கு மேற்பட்ட முதியோர்களுக்கான 'அஸ்வெசும' முதியோர் கொடுப்பனவு இன்று (31) பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளது.</p><p>
</p><p></p><p>அதன்படி, முதற்கட்டத்தின் கீழ் 621,638 முதியோர்களுக்காக முந்நூற்று பத்து கோடியே எண்பத்து ஒரு இலட்சத்து தொண்ணூறாயிரம் ரூபா (3,108,190,000) நிதியும், 



இரண்டாம் கட்டத்தின் கீழ் 77,324 முதியோர்களுக்காக முப்பத்து எட்டு கோடியே அறுபத்து ஆறு இலட்சத்து இருபதாயிரம் ரூபா (386,620,000) நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c51f08ab-a3f7-4346-bdec-fef041e71ff7/26-6a6c259be3be6.webp' /></p><p>



இரண்டு கட்டங்களிலும் 698,962 பயனாளிகளுக்கு மொத்தமாக முந்நூற்று நாற்பத்தொன்பது கோடியே நாற்பத்து எட்டு இலட்சத்து பத்தாயிரம் (3,494,810,000) ரூபா வழங்கப்படவுள்ளது.
</p><p>


பயனாளிகள் இன்று முதல் தங்களுக்கான கொடுப்பனவை அஸ்வெசும வங்கிக் கணக்குகள் ஊடாக பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-31T04:33:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிறப்புறுப்புச் சிதைப்பு உட்பட... உக்ரைன் போரில் ரஷ்யாவின் கொடூரங்கள் அம்பலம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/russia-uses-torture-as-war-weapon-1785471898"></link>
            <id>https://news.lankasri.com/article/russia-uses-torture-as-war-weapon-1785471898</id>
            <summary type="text">ரஷ்யா, உக்ரேனிய கைதிகளுக்கு எதிராக பாலியல் வன்முறையை ஒரு திட்டமிட்ட போர் ஆயுதமாக பயன்படுத்தி வருவது அம்பலமாகியுள்ளது.ஆண் கைதிகளை ரஷ்ய இராணுவத்தின் கொட...</summary>
            <content type="html"><![CDATA[<p>ரஷ்யா, உக்ரேனிய கைதிகளுக்கு எதிராக பாலியல் வன்முறையை ஒரு திட்டமிட்ட போர் ஆயுதமாக பயன்படுத்தி வருவது அம்பலமாகியுள்ளது.</p><h2>ஆண் கைதிகளை</h2><p> ரஷ்ய இராணுவத்தின் கொடூர நடவடிக்கைகளில் இருந்து தப்பிய வீரர்கள் மற்றும் பொதுமக்கள் இருதரப்பும், தங்களை அவமானப்படுத்தவும் மனரீதியாக துன்புறுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு பாலியல் வன்கொடுமை மற்றும் பிறப்புறுப்பு சிதைப்பு உள்ளிட்ட கொடுமைகளை முன்னெடுத்ததாகக் குற்றம் சாட்டியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8e9f5367-e66b-4e0c-92f5-dd363be09d1c/26-6a6c25e1c4761.webp' /></p><p>
</p><p>தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில், பாதிக்கப்பட்டவர்களின் நேர்காணல்கள் மற்றும் உக்ரேனிய அரசுத் தரப்பு சட்டத்தரணிகள் மற்றும் ஐ.நா. விசாரணை அதிகாரிகளின் சாட்சியங்களின் அடிப்படையில், </p><p>ரஷ்யா 2022-ல் முழு அளவிலான படையெடுப்பு தொடங்கியதிலிருந்து அதன் இராணுவப் படைகள் உக்ரேனிய ஆண் கைதிகளை முதன்மையாகப் பாலியல் சித்திரவதைக்கு உட்படுத்தி வந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது. </p><p>முன்னாள் உக்ரேனியப் போர் கைதியான Serhii Boychuk தெரிவிக்கையில், 2022-இல் ரஷ்யர்கள் அவரைச் சிறைபிடித்ததாகவும், அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு, அவர் அடைக்கப்பட்டிருந்த தடுப்பு முகாமில் ரஷ்யக் காவலர்களால் கொடூரமாகத் தாக்கப்பட்டதுடன் பாலியல் சித்திரவதைக்கும் உள்ளாக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.</p><p></p><p> </p><p>தற்போது 33 வயதாகும் அவர், மிக மோசமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதையும், தனது பிறப்புறுப்பின் மீது கத்தி வைக்கப்பட்டதையும் நினைவு கூர்ந்துள்ளார். </p><p>அவர்கள் ஒரு நபரை அவமானப்படுத்தவும் மனதளவில் சிதைக்கவும் பாலியல் ரீதியான துன்புறுத்தலை ஒரு போர் ஆயுதமாகப் பயன்படுத்துகிறார்கள் என்று, அக்டோபர் 2024-இல் கைதிகள் பரிமாற்றத்தின் ஒரு பகுதியாக விடுவிக்கப்பட்ட அந்த நபர் கூறியுள்ளார். </p><p>உக்ரைனின் முன்னாள் போர்க்கைதிகளில் மற்றொருவரும், ரஷ்யாவின் போர்க்கைதிகள் முகாம்களில் இருந்தபோது பாலியல் ரீதியான சித்திரவதைக்கு ஆளான இதே போன்ற அனுபவங்களை நினைவு கூர்ந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b235a7fd-8355-4961-98ec-4c64636d1d14/26-6a6c25e277492.webp' /></p><p> </p><p>இந்த நிலையில், இதுவரை விசாரணைகளில் இருந்து உறுதி செய்யப்பட்டத் தகவல்களின் அடிப்படையில், போர்க்கைதிகள் மற்றும் பொதுமக்கள் கைதிகளுக்கு எதிரான ரஷ்யாவின் பாலியல் வன்முறைகள் திட்டமிட்ட முறையில் நடைபெற்று வந்துள்ளதும்; இவை பெரும்பாலும் ரஷ்யாவின் உயர்மட்ட அதிகாரிகளால் ஊக்குவிக்கப்பட்டுள்ளதும் விசாரணை அதிகாரிகள் குழுவால் பதிவு செய்யப்பட்டுள்ளது.
</p><p>போரின்போது பொதுமக்களை அடக்கி ஒடுக்கவும் அவர்களுக்குள் அச்சத்தை ஏற்படுத்தவும் எதிரிப் படைகள் நீண்ட காலமாகப் பாலியல் வன்முறையைப் பயன்படுத்தி வருகின்றன.</p><h2>உள்நோக்கம் கொண்டவை</h2><p> </p><p>இருப்பினும், பெரும்பாலான சந்தர்ப்பங்களில், பெண்கள் மற்றும் சிறார்களே முக்கிய இலக்குகளாக உள்ளனர்.
ஐக்கிய நாடுகள் சபை மற்றும் 'தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல்' நடத்திய விசாரணைகளின் அடிப்படையில், </p><p>2022-இல் ரஷ்யா தொடங்கிய முழு அளவிலான படையெடுப்பின் ஆரம்பக் கட்டத்தில் நகரங்களையும் கிராமங்களையும் கைப்பற்றியபோது, ​​ரஷ்யப் படைகள் உக்ரேனியப் பெண்களையும் குறிவைத்துள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/91c8de35-c518-4ec4-87f2-59ba182dbc6d/26-6a6c25e10033e.webp' /></p><p>
</p><p>
இருப்பினும், போர் தற்போது இரு தரப்பினரின் வளங்களையும் படிப்படியாகச் சிதைக்கும் வகையிலான மோதலாக மாறியுள்ள நிலையில், போர்க்களத்தில் சிறைபிடிக்கப்பட்ட உக்ரேனிய ஆண் வீரர்களே பாதிக்கப்பட்டவர்களில் அதிகமாக உள்ளனர். </p><p>ஐக்கிய நாடுகள் சபையின் தகவலின்படி, போரின்போது ரஷ்யப் படைகளால் பாலியல் வன்முறை இழைக்கப்பட்டதாகக் கூறப்பட்டு விசாரணையில் உள்ள 310 சம்பவங்களில், பாதிக்கப்பட்டவர்களில் 280 பேர் ஆண்கள், 26 பேர் பெண்கள் மற்றும் நான்கு பேர் சிறுமிகள் என்றே தெரியவருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/468174a3-6a73-415c-8363-e46172c543e2/26-6a6c25e32b66c.webp' /></p><p> </p><p>பட்டியலிடப்பட்ட பெரும்பாலான பாதிக்கப்பட்டவர்கள், பாலியல் வன்கொடுமை, கூட்டுப் பாலியல் வன்கொடுமை, பிறப்புறுப்பு சிதைப்பு, மின் அதிர்ச்சி மற்றும் பிறப்புறுப்புகளில் தாக்குதல் உள்ளிட்ட சித்திரவதை உத்திகளுக்கு உள்ளாக்கப்பட்டனர் என்று ஐ.நா. தெரிவித்துள்ளது. </p><p>இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து ரஷ்ய அதிகாரிகள் இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை. பாலியல் துன்புறுத்தல் தொடர்பான குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை மற்றும் அரசியல் உள்நோக்கம் கொண்டவை என்று கூறி, ரஷ்யா ஏற்கனவே அவற்றை மறுத்துள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-31T04:23:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவம் ; தலைமை அதிகாரியின் சாட்சிக்கு நீதிமன்றம் இரகசிய உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/negombo-prison-incident-court-orders-secrecy-chief-1785471675"></link>
            <id>https://jvpnews.com/article/negombo-prison-incident-court-orders-secrecy-chief-1785471675</id>
            <summary type="text">நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட சம்பவத்தில் 10 சிறைச்சாலை அதிகாரிகளும் 22 கைதிகளும் உயிரிழந்தமை தொடர்பில், அச்சம்பவம் இடம்பெற்ற வேளையில் நீர்கொழும...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட சம்பவத்தில் 10 சிறைச்சாலை அதிகாரிகளும் 22 கைதிகளும் உயிரிழந்தமை தொடர்பில், அச்சம்பவம் இடம்பெற்ற வேளையில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் கடமையிலிருந்த தலைமை சிறை அதிகாரி நேற்று நீதிமன்றத்தில் சாட்சியமளித்துள்ளார்.</p><p></p><p>



நீர்கொழும்பு நீதவான் ஷிலனி பெரேரா முன்னிலையில் அவர் சாட்சியமளித்தார்.
</p><p>


சம்பவத்தின் போது நீர்கொழும்பு சிறைச்சாலையின் தலைமை சிறை அதிகாரியாகப் பணியாற்றிய விக்ரம ஜயந்த குமார என்பவரே இவ்வாறு சாட்சியமளித்துள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d46e9568-e4d4-4e82-853c-6417c16d2daf/26-6a6c22bcbb41f.webp' /></p><p>பிற்பகல் 1.00 மணியளவில் ஆரம்பிக்கப்பட்ட சாட்சியப் பதிவு, பிற்பகல் 3.00 மணி வரை நீடித்துள்ளது.</p><p>சாட்சியத்தைப் பதிவு செய்த பின்னர் கருத்து தெரிவித்த நீதவான், தலைமை சிறை அதிகாரி அளித்த சாட்சியத்தில் தேசிய பாதுகாப்புக்கு மிகவும் உணர்வுப்பூர்வமான தகவல்கள் உள்ளடங்கியுள்ளதாகச் சுட்டிக்காட்டினார்.
</p><p>


அத்தகவல்கள் வெளிவரக் கூடுமாயின் நாட்டின் தேசிய பாதுகாப்புக்குக் கடுமையான அச்சுறுத்தல் ஏற்படக்கூடும் என்பதால், அச்சாட்சியின் உள்ளடக்கங்களை எந்தவொரு ஊடகத்திலும் வெளியிடக் கூடாது என நீதவான் உத்தரவிட்டுள்ளார்.</p><p>



மேலும், அச்சாட்சியத்தைப் பாதுகாப்பாக வைக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
</p><p>


இதனிடையே, வெலிக்கடை சிறைச்சாலையிலிருந்து நீர்கொழும்பு சிறைச்சாலைக்குச் சென்ற 89 சிறைச்சாலை பொலிஸ் அதிகாரிகள் தொடர்பான விரிவான அறிக்கையொன்றும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.</p><p>



இவற்றுக்கு மேலதிகமாக, கொழும்பு தேசிய வைத்தியசாலையிலும் நீர்கொழும்பு வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்று வருபவர்கள் தொடர்பான அறிக்கையொன்றும் சிறைச்சாலை அதிகாரிகளால் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-31T04:21:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[மாகாண சபை தேர்தல் தொடர்பில் அரசிடம் மஹிந்த தேசப்பிரிய விடுத்துள்ள கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/mahinda-request-government-provincial-election-1785471047"></link>
            <id>https://tamilwin.com/article/mahinda-request-government-provincial-election-1785471047</id>
            <summary type="text">இலங்கையில் மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என்று தேர்தல்கள்
ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய அரசிடம்
வலியுறுத்தியுள்ளார்....</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என்று தேர்தல்கள்
ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய அரசிடம்
வலியுறுத்தியுள்ளார்.</p><p>இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,</p><p>&nbsp;</p><h2>நேரடியான மக்கள் பிரதிநிதிகள் நியமிக்கப்பட வேண்டிய அவசியம்</h2><p>"மக்கள் பிரதிநிதித்துவம் இன்றி மாகாண சபைகள் சிறந்த முறையில் இயங்குவதாக சிலர் வாதிட்டாலும், அது யதார்த்தமானது அல்ல. அரச அதிகாரிகள் நிர்வாகத்தை
மேற்கொள்ளும்போது அவர்களுக்கு மக்களுக்கு நேரடியாக பொறுப்பு கூற வேண்டிய
அவசியம் ஏற்படுவதில்லை என்பதால், மாகாண சபைகளுக்கு நேரடியான மக்கள்
பிரதிநிதிகள் நியமிக்கப்பட வேண்டியது அவசியமாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/74443a71-e80a-4b3a-b8a8-49cf4b652dff/26-6a6c20499ecbf.webp' /></p><p>

மக்களின் பிரதிநிதித்துவம் இன்றி மாகாண சபைகள் இயங்குவது ஒரு குற்றமாகும்.
மாகாண சபை தேர்தலை நடத்தாமல் காலம் தாழ்த்தினால், எதிர்காலத்தில்
நாடாளுமன்றம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் என அனைத்து
நிறுவனங்களையும் மக்கள் பிரதிநிதிகள் இன்றி இயக்க முடியும் என்ற ஆபத்தான
நிலையை அது உருவாக்கும்.
</p><p>
எதிர்வரும் செப்டம்பர் 15 ஆம் திகதி உலக ஜனநாயக தினம் அனுஷ்டிக்கப்படவுள்ள
நிலையில், அன்றைய தினமாவது அரசு மாகாண சபைத் தேர்தலை எப்போது, எந்த முறையில்
நடத்தப் போகின்றது என்பதை உத்தியோகபூர்வமாக அறிவிக்க வேண்டும்." என்றார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-31T04:11:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[திருகோணமலை துறைமுகம் வருவாயில் புதிய சாதனை ; ரூ.958 மில்லியன் வருமானம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/trincomalee-port-new-record-revenue-958-million-1785470862"></link>
            <id>https://jvpnews.com/article/trincomalee-port-new-record-revenue-958-million-1785470862</id>
            <summary type="text">துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானச் சேவைகள் அமைச்சர் அனுர கருணாதிலக்க, பிரதியமைச்சர் ஜனிக்க ருவன் கொடிதுவக்கு மற்றும் அமைச்சின் செயலாளர் டபிள்யூ.எம்.ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானச் சேவைகள் அமைச்சர் அனுர கருணாதிலக்க, பிரதியமைச்சர் ஜனிக்க ருவன் கொடிதுவக்கு மற்றும் அமைச்சின் செயலாளர் டபிள்யூ.எம்.டபிள்யூ. மங்கள ஆகியோருடன் இணைந்து திருகோணமலை துறைமுகத்திற்கு விசேட அவதானிப்பு விஜயமொன்றை மேற்கொண்டார்.</p><p></p><p>

இதன்போது, இலங்கை துறைமுக அதிகார சபையின் சிரேஷ்ட அதிகாரிகளுடன் துறைமுகத்தின் தற்போதைய செயற்பாடுகள், அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் எதிர்கால முன்னேற்றங்கள் தொடர்பில் விரிவான கலந்துரையாடல் இடம்பெற்றது.
</p><p>
அதனைத் தொடர்ந்து கருத்துத் தெரிவித்த திருகோணமலை துறைமுக இருப்பிட முகாமையாளர் சரத் குமார, 2024 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2025 மற்றும் 2026 ஆம் ஆண்டுகளில் துறைமுகத்தின் செயற்பாட்டு வருமானம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளதாக தெரிவித்தார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/78af8d88-2956-4e8b-8331-becd414a2b06/26-6a6c1f905d19a.webp' /></p><p>அவரது விளக்கத்தின்படி, 2025 ஆம் ஆண்டில் திருகோணமலை துறைமுகம் 1,192 மில்லியன் ரூபா வருமானத்தை ஈட்டியுள்ளதுடன், 2026 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களிலேயே 958 மில்லியன் ரூபா வருமானம் பதிவாகியுள்ளது.
</p><p>
துறைமுகத்தின் செயல்திறன் மற்றும் வருவாய் உயர்வை மேலும் வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தொடர்பிலும் விஜயத்தின் போது கவனம் செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
</p><p>
இந்நிகழ்வில் பிரதி வெளிநாட்டு விவகாரங்கள் அமைச்சர் அருண் ஹேமசந்திர, திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரோஷான் அக்மீமன, பிரதேச சபை பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-31T04:07:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[8 நாள் முடிவில் விஜய்யின் ஜனநாயகன் தமிழகத்தில் மட்டுமே செய்துள்ள வசூல்... எத்தனை கோடி?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/vijay-jananayagan-movie-8-days-bo-details-1785470509"></link>
            <id>https://cineulagam.com/article/vijay-jananayagan-movie-8-days-bo-details-1785470509</id>
            <summary type="text">ஜனநாயகன்
விஜய்யின் கடைசிப் படம் என்று நினைக்கும் போது பலர் அழுதுள்ளனர். விஜய்யே கூட 69வது படம் தான் தனது கடைசிப்படம் என எழுதும் போது கஷ்டப்பட்டதாக கூ...</summary>
            <content type="html"><![CDATA[<h2>ஜனநாயகன்
</h2><p>விஜய்யின் கடைசிப் படம் என்று நினைக்கும் போது பலர் அழுதுள்ளனர். விஜய்யே கூட 69வது படம் தான் தனது கடைசிப்படம் என எழுதும் போது கஷ்டப்பட்டதாக கூறியதாக கீர்த்தி சுரேஷ் ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.</p><p> அவரைப் போல விஜய் ரசிகர்கள் அவர் இனி நடிக்க மாட்டார் என்பதை நினைத்து மிகவும் கஷ்டப்பட்டு வருகின்றனர். 
எல்லா விஷயத்திலும் போராடி வரும் விஜய்க்கு அவரது கடைசிப்படமும் வெளியாவதில் பெரிய போராட்டமாக அமைந்துவிட்டது. </p><p>ஆனால் எப்படியோ படம் கடந்த ஜுலை 23ம் தேதி வெளியாகிவிட்டது, ரசிகர்களும் கொண்டாடி வருகிறார்கள்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/793a65c5-cba8-48b8-bc96-15d9d1ea85fa/26-6a6c1e2f28f59.webp' /></p><h2>பாக்ஸ் ஆபிஸ்</h2><p>
முதல் நாளிலேயே ரூ. 90 கோடிக்கு மேலான வசூல் வேட்டை நடத்திய இப்படத்திற்கு நாளுக்கு நாள் கலெக்ஷனும் கூடிக்கொண்டே வருகிறது. </p><p>தமிழகத்தில் மட்டுமே 8 நாள் முடிவில் ஜனநாயகன் படம் ரூ. 108 கோடி வரை வசூல் வேட்டை நடத்தியுள்ளது.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/aIF0c2xWOWg" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-07-31T04:01:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[வலி நிவாரணி முதல் ஞயாபக சக்தி வரை.., வெற்றிலையில் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/health-benefits-of-betel-leaves-in-tamil-1785410279"></link>
            <id>https://manithan.com/article/health-benefits-of-betel-leaves-in-tamil-1785410279</id>
            <summary type="text">கடவுளுக்கு படைப்பதற்கும், பெரியவர்களுக்கு மரியாதையாக வழங்குவதற்கும் வெற்றிலை பயன்படுத்தப்படுகிறது.
வெற்றிலை வெப்பமான பகுதிகளிலும் சதுப்பு நிலங்களிலும...</summary>
            <content type="html"><![CDATA[<p>கடவுளுக்கு படைப்பதற்கும், பெரியவர்களுக்கு மரியாதையாக வழங்குவதற்கும் வெற்றிலை பயன்படுத்தப்படுகிறது.</p><p>
வெற்றிலை வெப்பமான பகுதிகளிலும் சதுப்பு நிலங்களிலும் வளரும் ஒரு கொடி வகை தாவரமாகும். </p><p>

இதில் கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின் சி மற்றும் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் உடலுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கின்றன.
</p><p>
அந்தவகையில், வெற்றிலையை சாப்பிடுவதால் உடலிற்கு என்னென்ன ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/44e5c547-992d-41fe-b751-d6b15a98ef5c/26-6a6b337d5db91.webp' /></p><h2>கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?
</h2><p><b>
நரம்புகளுக்கு பலம்-</b> 2 ஸ்பூன் வெற்றிலை சாறுடன் அரை ஸ்பூன் தேன் கலந்து சாப்பிட்டால் நரம்புகளுக்கு பலம் கிடைக்கும். மேலும், உடலுக்கு வெப்பம் தருவதுடன், வாய்நாற்றத்தையும் குறைக்க உதவுகிறது.
</p><p><b>
தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க உதவும்- </b>வெற்றிலை தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க உதவுவதாக பாரம்பரியமாக நம்பப்படுகிறது. </p><p><b>

பல் ஆரோக்கியம்- </b>ஈறுகளில் ஏற்படும் வலி மற்றும் ரத்தக்கசிவை குறைத்து பற்களின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவுகிறது.</p><p><b>

செரிமானத்தை மேம்படுத்தும்- </b>வெற்றிலை அஜீரணத்தை குறைத்து செரிமானத்தைத் தூண்ட உதவுகிறது. வயிற்றில் இருக்கும் வாயுவை வெளியேற்றவும் பயன்படுகிறது</p><p><b>
ஞாபக சக்தி- </b>வெற்றிலை நரம்பு மண்டலத்திற்கு பலம் அளிப்பதாக கூறப்படுகிறது. இதனால் ஞாபக சக்தியை மேம்படுத்த உதவகிறது.
</p><p><b>
முடி வளர்ச்சிக்கு உதவும்- </b>வெற்றிலையை தொடர்ந்து பயன்படுத்தினால் முடி உதிர்வை குறைத்து, முடி அடர்த்தியாகவும் நீளமாகவும் வளர உதவுகிறது. மேலும் பொடுகு மற்றும் தலை அரிப்பு போன்ற பிரச்சனைகளையும் குறைக்க உதவுகிறது.
</p><p><b>
உடல் எடை குறைக்க உதவும்- </b>2 வெற்றிலையுடன் 5 மிளகு சேர்த்து வெறும் வயிற்றில் மென்று சாப்பிடும் பழக்கம் உடல் எடையை குறைக்க உதவும் என்று பாரம்பரியமாக கூறப்படுகிறது. </p><p><b>

சிறுநீர் வெளியேற்றம் சீராகும்- </b>வெற்றிலை சாறுடன் தண்ணீர் மற்றும் பால் கலந்து குடித்தால் சிறுநீர் நன்றாக பிரிய உதவும் என்று கூறப்படுகிறது.
</p><p><b>
இருமல் மற்றும் மூச்சுத்திணறல்- </b>கடுகு எண்ணெயில் வெற்றிலையை சூடுபடுத்தி மார்பில் வைத்தால் இருமல் மற்றும் மூச்சுத்திணறலுக்கு நிவாரணம் கிடைக்கும் என்பது பாரம்பரிய மருத்துவ முறையாகும்.
</p><p><b>
வலி நிவாரணி- </b>வெற்றிலை இயற்கையான வலி நிவாரணியாக கருதப்படுகிறது. வெற்றிலையை அரைத்து காயம், சிராய்ப்பு அல்லது வீக்கம் உள்ள இடத்தில் தடவினால் வலி குறைய உதவும்.</p>]]></content>
            <updated>2026-07-31T04:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[செம்மணி விவகாரத்தை முன்வைத்து கொழும்பிலும் போராட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/protest-in-colombo-over-the-semmani-issue-1785469978"></link>
            <id>https://tamilwin.com/article/protest-in-colombo-over-the-semmani-issue-1785469978</id>
            <summary type="text">செம்மணி மனிதப்புதைகுழிக்கு நீதிகோரியும், அகழ்வுப்பணிகளை தடையின்றி தொடர வலியுறுத்தியும் கொழும்பு கோட்டை தொடருந்து நிலையத்துக்கு முன்பாக நேற்று கவனவீர்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>செம்மணி மனிதப்புதைகுழிக்கு நீதிகோரியும், அகழ்வுப்பணிகளை தடையின்றி தொடர வலியுறுத்தியும் கொழும்பு கோட்டை தொடருந்து நிலையத்துக்கு முன்பாக நேற்று கவனவீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.</p><p>

'நீதிக்கான மக்கள் சக்தி' அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் அருட்தந்தையர்கள், அருட்சகோதரர்கள் மற்றும் சிவில் சமூக
அமைப்புகளின் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.</p><p></p><p>
</p><h2>செம்மணி மனிதப்புதைகுழி அகழ்வுப்பணிகள்&nbsp;</h2><p>
"செம்மணி மனிதப் புதைகுழியில் அகழ்வுப் பணிகள் தடையின்றி தொடர வேண்டும்"
மற்றும் "காணாமல்போன உறவுகளுக்கு நீதி வேண்டும்" போன்ற பல்வேறு கோரிக்கைகளை
வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c6567419-cab9-4393-897b-0a153ca1f58e/26-6a6c1d804ff28.webp' /></p><p>
இதில் கலந்துகொண்டவர்கள்,"செம்மணி இனப்படுகொலையின் சாட்சி", "செம்மணிக்கு நீதி
வழங்கு!", "தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை ஏற்றுக்கொள்" மற்றும் "செம்மணி
மனிதப் புதைகுழியின் உண்மையை வெளிக்கொணர்ந்து நீதியை நிலைநாட்டுங்கள்" போன்ற
வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகள் மற்றும் மனித எலும்புக்கூடுகள் பொறிக்கப்பட்ட
பெரிய பதாகைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பியுள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-31T03:59:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீதித்துறை சீர்திருத்தங்கள் அவசர முடிவுகள் அல்ல : ஆளும் தரப்பு விளக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/people-s-freedom-of-expression-or-peaceful-protest-1785468629"></link>
            <id>https://tamilwin.com/article/people-s-freedom-of-expression-or-peaceful-protest-1785468629</id>
            <summary type="text">மக்களின் கருத்துச் சுதந்திரத்தையோ அல்லது அமைதியான முறையில் போராட்டம்
நடத்தும் உரிமையையோ அரசு ஒருபோதும் தடுக்கவில்லை என்று வீடமைப்பு,
நிர்மாணிப்பு மற...</summary>
            <content type="html"><![CDATA[<p>மக்களின் கருத்துச் சுதந்திரத்தையோ அல்லது அமைதியான முறையில் போராட்டம்
நடத்தும் உரிமையையோ அரசு ஒருபோதும் தடுக்கவில்லை என்று வீடமைப்பு,
நிர்மாணிப்பு மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் சுசில் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
</p><p>
அரசு ஜனநாயக வழியில் முன்னோக்கிச் செல்வதற்கு இத்தகைய ஆரோக்கியமான
விமர்சனங்களும் சுட்டிக்காட்டல்களும் அவசியமானவை என்றும் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>11 இலட்சம் வழக்குகள்</h2><p>
</p><p>
இது தொடர்பில் ஊடகங்களிடம் மேலும் தெரிவிக்கையில்,

"சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்தவும் நீதித்துறையைப் பலப்படுத்தவுமே மக்கள்
தெளிவான ஆணையை வழங்கினர். கடந்த காலங்களில் அரசியல் தலையீடுகளால்
பாதிக்கப்பட்டிருந்த நீதித்துறை, பொலிஸ் மற்றும் அரச நிறுவனங்களில் தற்போதைய
அரசு அரசியல் தலையீடுகளை முற்றிலும் நிறுத்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b01b696a-2f37-4125-9dab-c012b3ec59ce/26-6a6c1be5e213d.webp' /></p><p>காணி வழக்குகள் 15 முதல் 20 ஆண்டுகள் வரை இழுபறியாக இருப்பதும், சிறுவர்
துஷ்பிரயோக வழக்குகள் தாமதமாவதும் முறைப்பாட்டாளர்களையும் எதிராளிகளையும்
பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாக்குகின்றது.
</p><p>
தேங்கிக் கிடக்கும் சுமார் 11 இலட்சம் வழக்குகளை விரைவாக முடிவுக்குக்
கொண்டுவர புதிய நீதிமன்றங்களை அமைத்தல், புதிய நீதிபதிகளை நியமித்தல் மற்றும்
பணியிடங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது போன்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு
வருகின்றன.</p><h2>நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது</h2><p>
</p><p>
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பது நீதித்துறை சீர்திருத்தங்களின் ஒரு
பகுதி மட்டுமேயாகும். இது அவசர முடிவு அல்ல, இதற்கு முன் அரசமைப்புத்
திருத்தக் குழுக்களில் விமர்சகர்களாலும் விவாதிக்கப்பட்டு
ஏற்றுக்கொள்ளப்பட்டதாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/95da8b57-9a02-443a-b20f-e5573e3bf9d7/26-6a6c1be6d72d2.webp' /></p><p>நீதிமன்றங்களை டிஜிட்டல்மயமாக்குதல், அரச இரசாயனப் பகுப்பாய்வாளர் திணைக்களம்
மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்குப் புதிய அதிகாரிகளையும்
உபகரணங்களையும் வழங்குதல் போன்றன முன்னெடுக்கப்பட்டுள்ளன. </p><p>மேலும்,
பொலிஸாருக்குத் தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு, அரசியல் தலையீடின்றி
சுதந்திரமாகச் செயற்பட வழிவகை செய்யப்பட்டுள்ளது.

22 மில்லியன் மக்கள் வாழும் நாட்டில் புதிய திட்டங்கள் ஆரம்பிக்கப்படும்போது
மாறுபட்ட கருத்துக்களும் விமர்சனங்களும் எழுவது இயல்பானது. </p><p>மக்களின்
எதிர்ப்புகளையும் விமர்சனங்களையும் அரசு கவனித்து, அவற்றை மதிப்பாய்வு செய்து
பரிசீலனைக்கு எடுத்துக்கொள்கின்றது" என்றும் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-31T03:57:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இன்று வங்கி கணக்குகளுக்கு வரும் பணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/july-allowance-credit-bank-accounts-today-1785469491"></link>
            <id>https://ibctamil.com/article/july-allowance-credit-bank-accounts-today-1785469491</id>
            <summary type="text">2026 ஜூலை மாதத்திற்கான அஸ்வெசும முதியோர் கொடுப்பனவு தொடர்பில் அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.70 வயதுக்கு மேற்பட்ட முதியோர்களுக்கான ‘அஸ்வெசும’ முதியோர...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026 ஜூலை மாதத்திற்கான அஸ்வெசும முதியோர் கொடுப்பனவு தொடர்பில் அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.</p><p>70 வயதுக்கு மேற்பட்ட முதியோர்களுக்கான ‘அஸ்வெசும’ முதியோர் கொடுப்பனவு இன்று (31) பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளது.</p><h2>முதியோர் கொடுப்பனவு</h2><p>
</p><p>


அதன்படி, முதற்கட்டத்தின் கீழ் 621,638 முதியோர்களுக்காக 3,108,190,000 ரூபா நிதியும், இரண்டாம் கட்டத்தின் கீழ் 77,324 முதியோர்களுக்காக 386,620,000 ரூபா நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/467c98e7-a115-4d08-82c3-5d303ddb05d2/26-6a6c1cf74bcb5.webp' /></p><p>இரண்டு கட்டங்களிலும் 698,962 பயனாளிகளுக்கு மொத்தமாக 3,494,810,000 ரூபா வழங்கப்படவுள்ளது.
</p><p>


பயனாளிகள் இன்று முதல் தங்களுக்கான கொடுப்பனவை அஸ்வெசும வங்கிக் கணக்குகள் ஊடாக பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-31T03:56:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[எரிபொருள் விலையில் மாற்றம் வருமா? ; இன்று வெளியாகவுள்ள அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/announcement-regarding-fuel-price-revision-1785470073"></link>
            <id>https://jvpnews.com/article/announcement-regarding-fuel-price-revision-1785470073</id>
            <summary type="text">மாதாந்திர எரிபொருள் விலைத் திருத்தம் இன்று (31) மேற்கொள்ளப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் விலைச் சூத்திரத்தின் அடிப்படையில், ஒவ்வொரு மாதம...</summary>
            <content type="html"><![CDATA[<p>மாதாந்திர எரிபொருள் விலைத் திருத்தம் இன்று (31) மேற்கொள்ளப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p></p><p>எரிபொருள் விலைச் சூத்திரத்தின் அடிப்படையில், ஒவ்வொரு மாதமும் கடைசி நாளில் விலைகள் மீளாய்வு செய்யப்பட்டு புதிய விலைகள் அறிவிக்கப்படுவது வழக்கமாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8e71b1d0-7bba-4822-9428-c89392ed43db/26-6a6c1c7aa2ecb.webp' /></p><p>

அதன்படி, இன்று உலக சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைகள் உள்ளிட்ட காரணிகளை ஆய்வு செய்த பின்னர், நாட்டில் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் புதிய விலைகள் தொடர்பான இறுதி முடிவு அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இதற்கிடையில், நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று காலை உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் சரிவு பதிவாகியுள்ளது.
</p><p>
அதன்படி, ஒரு பீப்பாய் (Barrel) பிரென்ட் கச்சா எண்ணெயின் விலை 89.69 அமெரிக்க டொலர்களாகவும், ஒரு பீப்பாய் WTI கச்சா எண்ணெயின் விலை 84.50 அமெரிக்க டொலர்களாகவும் பதிவாகியுள்ளது.
</p><p>
உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றம், உள்நாட்டு எரிபொருள் விலைத் திருத்தத்தில் தாக்கத்தை ஏற்படுத்துமா என்பது குறித்து பொதுமக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவுகிறது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-31T03:54:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரில்வின் சில்வாவின் கைப்பொம்மையாக செயற்படும் அநுர : உதய கம்மன்பில குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/anura-kumara-acting-on-the-orders-of-tilvin-silva-1785468343"></link>
            <id>https://ibctamil.com/article/anura-kumara-acting-on-the-orders-of-tilvin-silva-1785468343</id>
            <summary type="text">ரில்வின் சில்வாவின் கட்டளைகளுக்கு அமைய ஜனாதிபதி செயற்படுவதாகவும் மக்கள் ஜனாதிபதியாக அநுரவை தெரிவு செய்துள்ளார்களே தவிர ரில்வின் சில்வாவை அல்ல என்பதை ஜ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ரில்வின் சில்வாவின் கட்டளைகளுக்கு அமைய ஜனாதிபதி செயற்படுவதாகவும் மக்கள் ஜனாதிபதியாக அநுரவை தெரிவு செய்துள்ளார்களே தவிர ரில்வின் சில்வாவை அல்ல என்பதை ஜனாதிபதி விளங்கிக் கொள்ள வேண்டும் எனவும் பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.</p><p>
பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் காரியாலயத்தில் நேற்று (30) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டார்.</p><p>

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, நாடாளுமன்றத்தில் மூன்று இரண்டு பெரும்பான்மை பலம் உள்ளதால் ஜனாதிபதி தான்தோன்றித்தனமாக செயற்படுகிறார். மக்களின் கருத்துக்கும், எதிர்க்கட்சியின் உறுப்பினர்களின் கருத்துகளுக்கும் மதிப்பளிப்பதில்லை.</p><p></p><h2>நீதிபதிகளின் பதவிக்காலம்</h2><p>

மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வாவின் ஆலோசனைகள் மற்றும் கட்டளைகளுக்கு அமைவாகவே ஜனாதிபதி செயற்படுகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/68c5599a-b375-42eb-a485-1fa213f11079/26-6a6c1aa7ba8f4.webp' /></p><p> </p><p>நாட்டு மக்கள் ஜனாதிபதியாக அநுரகுமார திசாநாயக்கவை தெரிவு செய்துள்ளார்களே தவிர ரில்வின் சில்வாவை அல்ல என்பதை ஜனாதிபதி விளங்கிக் கொள்ள வேண்டும்.
</p><p>

நீதிபதிகளின் பதவிக்காலம் தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள சட்டவிரோத செயற்பாட்டுக்கு எதிராக ஒட்டுமொத்த சட்டத்தரணிகள் சமூகமும் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ள பின்னணியில் அவற்றை பொருட்படுத்தாமல் தனது தீர்மானத்தில் அரசாங்கம் உறுதியாகவுள்ளது.</p><p></p><h2>நாட்டை விட்டு ஓட வேண்டிய நிலை</h2><p>
</p><p>
முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தன நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு அப்பாற்பட்டு பெரும்பான்மை ஆதரவுடன் பதவியில் இருந்தார். இறுதியில் வீதியில் இறங்க முடியாத நிலை அவருக்கு ஏற்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6510989c-d088-47cb-8a1b-7aa4217bbff3/26-6a6c1aa874649.webp' /></p><p> </p><p>முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்சவும் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் இருந்தது. இறுதியில் அறிவிக்காமலே நாட்டை விட்டு ஓட வேண்டிய நிலைமை ஏற்பட்டது. </p><p>ஆகவே மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்த சகல அரசாங்கங்களும் நெருக்கடிக்குள்ளாகின. ஆகவே கடந்த கால சம்பவங்களை ஜனாதிபதி நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும்.” என தெரிவித்துள்ளார்.</p><p></p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-31T03:54:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thileepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பதிவாளர் நாயகம் திணைக்களத்தின் வடக்கு வலய பதிவறை திறந்துவைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/inauguration-of-north-zone-registry-1785469563"></link>
            <id>https://tamilwin.com/article/inauguration-of-north-zone-registry-1785469563</id>
            <summary type="text">பதிவாளர் நாயகம் திணைக்களத்தின் வடக்கு வலய பதிவறை வவுனியா, கனகராயன்குளம்
பகுதியில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

நேற்று (30.07.) வவுனியா மாவட்டம் ஏ9 வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பதிவாளர் நாயகம் திணைக்களத்தின் வடக்கு வலய பதிவறை வவுனியா, கனகராயன்குளம்
பகுதியில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.</p><p>

நேற்று (30.07.) வவுனியா மாவட்டம் ஏ9 வீதி கனகராயன்குளம் – மன்னகுளம் பகுதியில்
பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர்
ஏ.எச்.எம்.எச். அபயரத்னவினால் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
</p><p>
வடக்கு மாகாண மக்களின் நீண்டகால தேவையை நிறைவேற்றும் வகையில் நிறுவப்பட்டுள்ள
இந்தப் பதிவறையின் மூலம், பிறப்பு, இறப்பு மற்றும் திருமணப் பதிவுகள்
சேதமடைந்திருந்தால், அவற்றின் பிரதிகளை இதுவரை கொழும்பு மாளிகாவத்தையில்
அமைந்துள்ள பதிவாளர் நாயகம் திணைக்களத்தின் தலைமையகத்தில் மட்டுமே
பெற்றுக்கொள்ள வேண்டியிருந்த நிலைமை மாற்றமடைந்துள்ளது.
</p><p>குறித்த ஆவணங்களை இனிமேல் வவுனியாவில் அமைந்துள்ள வடக்கு வலய பதிவறையிலேயே
பெற்றுக்கொள்ள முடியும்.

மேலும், உடனடியாக பிறப்புச் சான்றிதழ்களை வழங்கும் சேவை
ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் காலங்களில் திருமணச் சான்றிதழ் மற்றும்
இறப்புச் சான்றிதழ்களை இவ்வலுவலகத்தின் ஊடாக பெற்றுக்கொள்ளும் வசதிகள்
ஏற்படுத்தப்படவுள்ளன.</p><p>

இந்நிகழ்வில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வத்தம்பி
திலகநாதன், மயில்வாகனம் ஜெகதீஸ்வரன், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர்
மருதலிங்கம் பிரதீபன், முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் ஏ.உமாமகேஸ்வரன்,
பதிவாளர் நாயகம் சசிதேவி ஜலதீபன், பதிவாளர் நாயகம் திணைக்களத்தின்
அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.</p><p><br></p>]]></content>
            <updated>2026-07-31T03:46:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆடிவேல் தேர் திருவிழாவை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/special-transport-plan-colombo-adivel-festival-1785469417"></link>
            <id>https://jvpnews.com/article/special-transport-plan-colombo-adivel-festival-1785469417</id>
            <summary type="text">கொழும்பு - புறக்கோட்டை மற்றும் பம்பலப்பிட்டி புதிய கதிரேசன் ஆலயங்களின் 152ஆவது ஆண்டு ஆடிவேல் தேர் திருவிழாவை முன்னிட்டு, காவல்துறையினர் விசேட அறிவித்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு - புறக்கோட்டை மற்றும் பம்பலப்பிட்டி புதிய கதிரேசன் ஆலயங்களின் 152ஆவது ஆண்டு ஆடிவேல் தேர் திருவிழாவை முன்னிட்டு, காவல்துறையினர் விசேட அறிவித்தலை விடுத்துள்ளனர்.</p><p>
</p><p></p><p>அதற்கமைய, தேர்பவனி காரணமாக குறித்த பகுதிகளில் இன்று காலை 8.00 மணி முதல் நள்ளிரவு 12.30 மணி வரை போக்குவரத்து நெரிசல் ஏற்படக்கூடும் என காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7e9f63a9-34f9-4ee4-a2c3-2d0359303bf5/26-6a6c19eaa7a8e.webp' /></p><p>பம்பலப்பிட்டி புதிய கதிரேசன் ஆலயம், காலி வீதி, காலி முகத்திடல், செத்தம் வீதி, யோர்க் வீதி, பிரதான வீதி, செட்டி வீதி, கதிரேசன் வீதி ஆகிய பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படக்கூடும்.
</p><p>
இதனால் குறிப்பிட்ட வீதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதனால், வாகன சாரதிகளும் பொதுமக்களும் மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறு காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-31T03:43:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பின் சில பகுதி மக்களுக்கு வெளியான முக்கிய அறிவித்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/special-traffic-plan-for-vel-festival-colombo-1785467631"></link>
            <id>https://ibctamil.com/article/special-traffic-plan-for-vel-festival-colombo-1785467631</id>
            <summary type="text">கொழும்பில் (Colombo) விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.  கொழும்பு - புறக்கோட்டை மற்றும் பம்பலப்பிட...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பில் (Colombo) விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.</p><p> </p><p> கொழும்பு - புறக்கோட்டை மற்றும் பம்பலப்பிட்டி புதிய கதிரேசன் ஆலயங்களின் 152 ஆவது ஆண்டு ஆடிவேல் தேர் திருவிழாவை முன்னிட்டு,&nbsp;இந்த விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.</p><h2>போக்குவரத்து நெரிசல்</h2><p>அதற்கமைய, தேர்பவனி காரணமாக குறித்த பகுதிகளில் இன்று காலை 8.00 மணி முதல் நள்ளிரவு 12.30 மணி வரை போக்குவரத்து நெரிசல் ஏற்படக்கூடும் என காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/41bcf8ab-8a8d-4a9e-9d03-7169461be3ba/26-6a6c15dea20ed.webp' /></p><p>
பம்பலப்பிட்டி புதிய கதிரேசன் ஆலயம், காலி வீதி, காலி முகத்திடல், செத்தம் வீதி, யோர்க் வீதி, பிரதான வீதி, செட்டி வீதி, கதிரேசன் வீதி ஆகிய பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படக்கூடும்.
</p><p>
இதனால் குறிப்பிட்ட வீதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதனால், வாகன சாரதிகளும் பொதுமக்களும் மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறு காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.</p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-31T03:28:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[காஸா போரை முடிவுக்குக் கொண்டுவர புதிய அமைதி ஒப்பந்தம் ; ட்ரம்ப் முக்கிய அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/trump-proposes-new-peace-deal-to-end-gaza-war-1785468447"></link>
            <id>https://canadamirror.com/article/trump-proposes-new-peace-deal-to-end-gaza-war-1785468447</id>
            <summary type="text">காஸா பகுதியில் செயற்படும் பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பும் ஏனைய ஆயுதக் குழுக்களும் முழுமையாக நிராயுதபாணியாக்கப்படுவதற்கான &quot;சமாதான சபை&quot; (Board of Peace) ...</summary>
            <content type="html"><![CDATA[<p>காஸா பகுதியில் செயற்படும் பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பும் ஏனைய ஆயுதக் குழுக்களும் முழுமையாக நிராயுதபாணியாக்கப்படுவதற்கான "சமாதான சபை" (Board of Peace) உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
</p><p>
தனது Truth Social சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட பதிவில், இஸ்ரேல்–காஸா போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் முன்மொழியப்பட்டுள்ள "ட்ரம்ப்பின் 20 அம்சத் திட்டத்தை" நடைமுறைப்படுத்துவதில் இந்த உடன்பாடு முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b14d1402-e90f-4d16-a407-ef944028237d/26-6a6c1620d3e4a.webp' /></p><p>

இந்த ஒப்பந்தம் பல கட்டங்களாக நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாகவும், ஹமாஸ் மற்றும் ஏனைய ஆயுதக் குழுக்களின் நிராயுதபாணியாக்கல் முன்னேறியபோது, இஸ்ரேலியப் படைகள் படிப்படியாக காஸா பகுதியிலிருந்து வெளியேறும் என்றும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
</p><p>
மேலும், சர்வதேச ஸ்திரப்படுத்தல் படையினரும் புதிதாக அமைக்கப்படவுள்ள பாலஸ்தீன பொலிஸ் படையினரும் இணைந்து காஸாவின் பாதுகாப்புப் பொறுப்பை ஏற்கவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
</p><p>
இந்த உடன்பாட்டை எட்டுவதற்கான முயற்சிகளில் இடைத்தரகர்களாகச் செயற்பட்ட எகிப்து, கட்டார் மற்றும் துருக்கி ஆகிய நாடுகளுக்கு ட்ரம்ப் நன்றி தெரிவித்துள்ளார்.</p><p>

அத்துடன், புதிய பாலஸ்தீன அரசாங்கத்தின் கீழ் காஸா நிர்வகிக்கப்படுவதற்கான அடித்தளமாக இந்த உடன்பாடு அமையும் என்றும், அந்த அரசாங்கம் "Board of Peace" அமைப்புடன் இணைந்து பாலஸ்தீன மக்களின் நலனுக்காகச் செயற்படுவதோடு, இஸ்ரேலின் பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f117a5ac-8766-4186-808b-0a490adc8946/26-6a6c1621a8889.webp' /></p><p>இதனிடையே, கெய்ரோவில் இடைத்தரகர்களுக்கும் ஹமாஸ் தலைவர்களுக்கும் இடையில் அமெரிக்காவின் தலையீட்டுடன் முன்னெடுக்கப்பட்டுள்ள காஸா அமைதித் திட்டம் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
</p><p>
எனினும், முன்வைக்கப்பட்டுள்ள நிபந்தனைகள் போதுமானதாக இல்லை என இஸ்ரேலிய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p>

அதேவேளை, வியாழக்கிழமை இடம்பெற்ற இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களில் இரு சிறுவர்கள் உட்பட குறைந்தது ஆறு பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளதாக காஸா மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.</p>]]></content>
            <updated>2026-07-31T03:27:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[எரிபொருள் விலை திருத்தம் தொடர்பில் இன்று வெளியாகவுள்ள அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/monthly-fuel-price-revision-today-1785467817"></link>
            <id>https://tamilwin.com/article/monthly-fuel-price-revision-today-1785467817</id>
            <summary type="text">மாதாந்திர எரிபொருள் விலை திருத்தம் இன்று (31) மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது
அதன்படி, இன்று உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலைகளை ஆய்வு செய்த பிறகு, நா...</summary>
            <content type="html"><![CDATA[<p>மாதாந்திர எரிபொருள் விலை திருத்தம் இன்று (31) மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது</p><p>
அதன்படி, இன்று உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலைகளை ஆய்வு செய்த பிறகு, நாட்டில் எரிபொருள் விலைகள் குறித்து முடிவு எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>எரிபொருள் விலை சூத்திரம்</h2><p>

இதற்கிடையில், நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று காலை உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் சரிவு ஏற்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/da3ba711-9496-4cdf-98ce-6205d4e3706c/26-6a6c15ea15077.webp' /></p><p>
</p><p>
அதன்படி, ஒரு பெரல் பிரென்ட் கச்சா எண்ணெயின் விலை $89.69 ஆகவும், ஒரு பேரல் WTI கச்சா எண்ணெயின் விலை $84.5 ஆகவும் பதிவாகியுள்ளது.</p><p>எரிபொருள் விலை சூத்திரத்தின் படி ஒவ்வொரு மாதமும் கடைசி நாளில் இந்த விலை திருத்தம் மேற்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-31T03:26:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[செங்கடல் முற்றுகையை எதிர்த்து புதிய கடற்படைக் கூட்டணி: அமெரிக்காவை நம்பாத வளைகுடா நாடுகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/naval-coalition-protect-red-sea-1785468358"></link>
            <id>https://news.lankasri.com/article/naval-coalition-protect-red-sea-1785468358</id>
            <summary type="text">செங்கடலில் ஹவுதிகளின் தாக்குதல்களிலிருந்து கப்பல் போக்குவரத்தைப் பாதுகாப்பதற்காக, 14 நாடுகளை உள்ளடக்கிய கடல்சார் தற்காப்புக் கூட்டமைப்பை அமைப்பதற்கான ...</summary>
            <content type="html"><![CDATA[<p>செங்கடலில் ஹவுதிகளின் தாக்குதல்களிலிருந்து கப்பல் போக்குவரத்தைப் பாதுகாப்பதற்காக, 14 நாடுகளை உள்ளடக்கிய கடல்சார் தற்காப்புக் கூட்டமைப்பை அமைப்பதற்கான திட்டங்களை சவுதி அரேபியா அறிவித்துள்ளது.</p><h2>43 நாடுகளின்...</h2><p>
பாப் அல்-மண்டேப் நீரிணை, செங்கடல் மற்றும் ஏதன் வளைகுடா வழியாக முன்னெடுக்கப்படும் கப்பல் போக்குவரத்தைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டு இந்தக் கூட்டணி அமைக்கப்பட்டுள்ளதாக சவுதி பாதுகாப்பு அமைச்சகம் வியாழக்கிழமை அறிவித்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b858a63f-1bf7-4a43-be6b-72b8e028e2bb/26-6a6c17ae54907.webp' /></p><p> </p><p>ஈரான் ஆதரவு ஹவுதிகள் சவுதிக்கு எதிரான தங்களது கடற்படை முற்றுகையைத் தொடர்வதாலும், ஹார்முஸ் நீரிணையில் ஈரான் மற்றும் அமெரிக்க இராணுவத்தால் கப்பல் போக்குவரத்து முடக்கப்பட்டுள்ளதாலும், </p><p>உலகளாவிய எரிசக்தி விநியோகம் குறித்த கவலைகள் அதிகரித்து, கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு 90 டொலர் என்ற அளவை எட்டியுள்ள நிலையில் இந்த முன்னெடுப்பு நடத்தப்பட்டுள்ளது.
</p><p>சவுதி அரேபியா, குவைத், பஹ்ரைன், கத்தார், பாகிஸ்தான், துருக்கி, எகிப்து, ஜோர்தான், ஏமன், வங்கதேசம், நைஜீரியா, சூடான், ஜிபூட்டி மற்றும் சோமாலியா ஆகிய 14 நாடுகள் இதில் கையெழுத்திட்டதாக சவுதி பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.</p><p></p><p> </p><p>இந்தக் கூட்டணியின் வரைவு சாசனத்தை ஆய்வு செய்வதற்காக ரியாத்தில் நடைபெற்ற கூட்டத்தில், 43 நாடுகளின் ராணுவத் தலைமை அதிகாரிகள் மற்றும் பிரதிநிதிகள், அத்துடன் ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுக்குழுவினர் ஆகியோர் நேரில் அல்லது காணொளி வாயிலாகப் பங்கேற்றுள்ளனர். </p><p>சவுதி பாதுகாப்பு அமைச்சகத்தின் அறிக்கையில் குறிப்பிட்டபடி, சவுதி அரேபியா இக்கூட்டணியின் நிறுவன நாடாகச் செயல்படுவதோடு, அதன் தலைமையகத்தையும் தனது நாட்டில் அமைக்கும். கூட்டத்தைத் தொடர்ந்து, அந்த 14 நாடுகளும் இந்த முயற்சிக்கு ஆதரவாக ஒரு கூட்டறிக்கையை வெளியிட்டன. </p><p>கூட்டணியை அமைப்பதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை அந்த அறிக்கை வரவேற்றதோடு, கூடுதல் நாடுகள் முறையாக இணைவதற்கு முன்பு உள்நாட்டு நடைமுறைகளை இன்னும் முடித்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9a5fd4e9-4791-4879-929a-b416d0d85760/26-6a6c17accfad6.webp' /></p><p> </p><p>மட்டுமின்றி, இந்தியப் பெருங்கடலையும் மத்தியதரைக் கடலையும் இணைக்கும் ஒரு முக்கிய கடல்வழிப் பாதையாகத் திகழும் மூன்று நீர்வழிகள் வழியாக, சர்வதேச வர்த்தகம் மற்றும் எரிசக்தி விநியோகப் பாதைகளைப் பாதுகாப்பதோடு, கப்பல் போக்குவரத்தின் சுதந்திரத்தையும் காப்பதற்கான தங்கள் நோக்கத்தையும் அந்த நாடுகள் அறிவித்துள்ளன.</p><h2>அமெரிக்காவின் பங்கு</h2><p> </p><p>மேலும், ஈரானை மையமாகக் கொண்ட மோதலுக்கு மத்தியில் ஒத்த பாதுகாப்பு நோக்கங்களைக் கொண்டிருந்த போதிலும், ஐக்கிய அரபு அமீரகம் அல்லது ஓமன் ஆகிய நாடுகள் சவுதி அரேபியாவின் இந்த கூட்டமைப்பில் இணையவில்லை.
</p><p>
ஆனால், இந்தப் புதிய கூட்டமைப்பில் அமெரிக்காவின் பங்கு அல்லது, அமெரிக்கா தரப்பில் அதிகாரிகள் கலந்துகொண்டார்களா என்பது குறித்த தகவல் ஏதும் வெளியாகவில்லை. மாறாக, ஐரோப்பிய ஒன்றியத்தின் சிறப்பு அதிகாரிகள் குழு இந்தக் கூட்டங்களில் பங்கேற்றுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f320891c-64a7-47a1-ae02-eb3ab47cee14/26-6a6c17ada0d45.webp' /></p><p> பாலஸ்தீனம், லெபனான் மற்றும் ஈரான் தொடர்பில் ட்ரம்ப் நிர்வாகத்தின் செயற்பாடுகள் பல வளைகுடா நாடுகளை அதிருப்திகொள்ள வைத்துள்ளதே இதற்கு காரணமாகக் கூறப்படுகிறது. </p><p>மட்டுமின்றி, ட்ரம்ப் காரணமாகவே வளைகுடா நாடுகள் இஸ்ரேலுடன் ஒப்பந்தங்களில் ஈடுபட்டதுடன், தற்போது இஸ்ரேல் காரணமாக பாதுகாப்பு அச்சுறுத்தல்களையும் பொருளாதார நெருக்கடிகளையும் எதிர்கொண்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-31T03:24:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[பேருந்துக்குள் இளைஞனின் விபரீத முடிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/man-dies-inside-the-bus-1785460429"></link>
            <id>https://tamilwin.com/article/man-dies-inside-the-bus-1785460429</id>
            <summary type="text">
கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலையமைப்பில் உள்ள ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் வாகன ஓட்டுநராக பணியாற்றிய இளைஞன் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார்.
...</summary>
            <content type="html"><![CDATA[<p>
கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலையமைப்பில் உள்ள ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் வாகன ஓட்டுநராக பணியாற்றிய இளைஞன் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார்.
</p><p>
பேருந்திற்குள் தூக்கிட்டு அவர் உயிரை மாய்த்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><p>
</p><p><b style="color: inherit; font-size: 1.75rem;">பொலிஸார் விசாரணை</b></p><p>நேற்றையதினம் ஆடைத் தொழிற்சாலைக்கு சொந்தமான பேருந்துக்குள் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/00121aec-a893-48ac-8962-432d029d2761/26-6a6c14b781080.webp' />&nbsp;&nbsp;</p><p>உயிரிழந்தவர் மாஸ்பொத, போகொடை பிரதேசத்தை சேர்ந்த 28 வயதான சுரேஷ் காரியவசம் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p> </p><p>சம்பவம் தொடர்பில் கட்டுநாயக்க பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-31T03:21:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டில் இருவேறு காலநிலை ; மழையும் வெயிலும் ஒரே நாளில்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/two-different-climates-rain-and-sun-the-same-day-1785467874"></link>
            <id>https://jvpnews.com/article/two-different-climates-rain-and-sun-the-same-day-1785467874</id>
            <summary type="text">சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (31) அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல...</summary>
            <content type="html"><![CDATA[<p>சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (31) அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p>
</p><p></p><p>மேலும், மேற்படி பகுதிகளில் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகளவான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என்பதால் பொதுமக்கள் அவதானத்துடன் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/79c1d8c2-a03b-44ae-b7ce-03cc82fcaa1b/26-6a6c13e406ec1.webp' /></p><p>அநுராதபுரம் மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
</p><p>
அதேவேளை, நாட்டின் ஏனைய பெரும்பாலான பகுதிகளில் பிரதானமாக வறட்சியான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.</p><p>

இந்நிலையில், வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களிலும், இரத்தினபுரி, மொனராகலை, அம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 40 முதல் 50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
எனவே, பலத்த மழை மற்றும் காற்று காரணமாக ஏற்படக்கூடிய பாதிப்புகளைத் தவிர்க்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-31T03:18:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜனனி மீது கொலைவெறியில் இருக்கும் கதிர், ராவணன் போட்ட பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/ethirneechal-thodargiradhu-serial-promo-31-july-1785465880"></link>
            <id>https://cineulagam.com/article/ethirneechal-thodargiradhu-serial-promo-31-july-1785465880</id>
            <summary type="text">எதிர்நீச்சல் தொடர்கிறதுசன் டிவியில் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் கதைக்களம் எதை நோக்கி செல்கிறது என்பது தெரியவில்லை. பெண்கள் எழுச்சி பற்றிய கதை என ஆ...</summary>
            <content type="html"><![CDATA[<h2>எதிர்நீச்சல் தொடர்கிறது</h2><p>சன் டிவியில் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் கதைக்களம் எதை நோக்கி செல்கிறது என்பது தெரியவில்லை. </p><p>பெண்கள் எழுச்சி பற்றிய கதை என ஆரம்பத்தில் இயக்குனர் சொன்னார், ஆனால் கதை செல்லும் விதம் பார்க்கும் போது வில்லன்களின் எழுச்சியாக தான் கதை உள்ளது. கதை இப்படி செல்கிறதே என ரசிகர்கள் பலரும் நிறைய புலம்பிவிட்டார்கள், ஆனால் இயக்குனர் திருச்செல்வம் கேட்பதாக தெரியவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2e39dc3e-86e6-4aeb-adc5-ae00bebdac78/26-6a6c0c1ac9189.webp' /></p><p>நாளுக்கு நாள் வில்லன்கள், ஆண்கள் ராஜ்ஜியமாக கதை நகர்ந்து வருகிறது. பெண்களை அடிமைப்படுத்தி குணசேகரன் என்ற வில்லனை இதுநாள் வரை கெத்தாக வாழ வைத்த இயக்குனர் இப்போது ராவணனை சேர்த்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9262cf3d-1183-402a-8ce7-7b92806f5d70/26-6a6c0c1b78ba6.webp' /></p><h2>புரொமோ</h2><p>இன்றைய எபிசோட் புரொமோவில், ஒரு நபர் வீட்டிற்கு வந்து ஜனனி என்பவரின் பேச்சைக் கேட்டு மதிவதனி என்பவர் என்னை மிரட்டுகிறார் என ஒருவர்&nbsp; கூறுகிறார். அதைக்கேட்டு கதிர் ஜனனி மீது செம கோபத்தில் உள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/28c7e058-d74d-4e07-bd05-9f76d5aa0982/26-6a6c0c1a2164a.webp' /></p><p>ஜனனி மதிவதனியை சந்தித்து VKவை இப்போதைக்கு வேறு ஏதாவது இடத்தில் மாற்ற வேண்டும் என்கிறார்.&nbsp;</p><p>அவரிடம் பேசிவிட்டு வீட்டிற்கு வந்த ஜனனியை அடிக்க பாய்கிறார் கதிர். இதோ பரபரப்பான எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ,</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/ivfZNWhVWaU" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-07-31T03:10:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[மட்டக்களப்பில் உணவகத்தில் தங்கியிருந்த இருவரிடம் போதைப்பொருள் மீட்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/two-arrested-with-ice-and-heroin-in-batticaloa-1785467156"></link>
            <id>https://jvpnews.com/article/two-arrested-with-ice-and-heroin-in-batticaloa-1785467156</id>
            <summary type="text">நீர்கொழும்பு சிறைச்சாலையில் இருந்து மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட போதைப்பொருள் வியாபாரியைப் பார்வையிடுவதற்காக, கொழும்பில் இருந்து மட்டக்களப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீர்கொழும்பு சிறைச்சாலையில் இருந்து மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட போதைப்பொருள் வியாபாரியைப் பார்வையிடுவதற்காக, கொழும்பில் இருந்து மட்டக்களப்பிற்குச் சென்று உணவகம் ஒன்றில் தங்கியிருந்த இருவரை ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்களுடன் நேற்று முன்தினம் (29) இரவு கைது செய்துள்ளதாக மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸார் தெரிவித்தனர்.</p><p>
</p><p></p><p>கைது செய்யப்பட்டவர்கள் தெமட்டகொட பகுதியைச் சேர்ந்த, சிறையிலுள்ள போதைப்பொருள் வியாபாரியின் சகோதரர் மற்றும் அவரது நண்பர் ஆவர்.
</p><p>
 

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,</p><p>கடந்த ஏப்ரல் 7-ஆம் திகதி 7.5 கிலோ கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட போதைப்பொருள் வியாபாரி, நீர்கொழும்பு சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5a297782-052d-42f0-9dc4-04273cc3f694/26-6a6c11165d5ec.webp' /></p><p>

 

இந்நிலையில், குறித்த சிறைச்சாலையில் அண்மையில் ஏற்பட்ட படுகொலைச் சம்பவத்தைத் தொடர்ந்து, அங்கிருந்து அந்தப் போதைப்பொருள் வியாபாரி உட்பட 60 கைதிகள் மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டனர்.</p><p>

 

இதனையடுத்து, சிறையிலுள்ள சகோதரனைப் பார்வையிடுவதற்காக அவரது தம்பியும் நண்பரும் கொழும்பில் இருந்து மட்டக்களப்பிற்குச் சென்று, கல்லடிப் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் தங்கியிருந்துள்ளனர்.
</p><p>
 

இந்நிலையில், மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, பொலிஸ் நிலைய போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவுப் பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸ் குழுவினர், சம்பவத்தினமான புதன்கிழமை இரவு குறித்த உணவகத்தை முற்றுகையிட்டுச் சோதனை நடத்தினர்.
</p><p>
 

இதன்போது, அங்குள்ள அறையில் இருந்த தெமட்டகொட பிரதேசத்தைச் சேர்ந்த 26 மற்றும் 31 வயதுடைய இருவரை 100 மில்லிகிராம் ஹெரோயின் மற்றும் 500 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருட்களுடன் பொலிஸார் கைது செய்தனர்.
</p><p>
 

கைது செய்யப்பட்டவர்களில் போதைப்பொருள் வியாபாரியின் சகோதரன், ஏற்கனவே போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டு ஒன்றரை ஆண்டுகள் சிறையிலிருந்த பின்னரே நீதிமன்றப் பிணையில் அண்மையில் வெளிவந்துள்ளார். </p><p>

 

கைது செய்யப்பட்ட இருவருமே போதைப்பொருள் வியாபாரிகள் என்றும், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
</p><p>
 

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-07-31T03:06:58+00:00</updated>
        </entry>
    </feed>
