<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-09-09T10:32:32+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[சர்தார் 2 மற்றும் மண்டாடி திரைப்படங்களின் முன்பதிவு வசூல் விவரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/sardar-2-mandaadi-pre-booking-box-office-1788945749"></link>
            <id>https://cineulagam.com/article/sardar-2-mandaadi-pre-booking-box-office-1788945749</id>
            <summary type="text">இந்த வாரம் தமிழ் சினிமாவிலிருந்து வெளிவரவிருக்கும் சர்தார் 2 மற்றும் மண்டாடி ஆகிய இரண்டு திரைப்படங்களின் டிக்கெட் முன்பதிவு வசூல் குறித்த தகவல் வெளியா...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்த வாரம் தமிழ் சினிமாவிலிருந்து வெளிவரவிருக்கும் சர்தார் 2 மற்றும் மண்டாடி ஆகிய இரண்டு திரைப்படங்களின் டிக்கெட் முன்பதிவு வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.</p><p></p><p>
</p><h2>
இந்த வாரம் தமிழ் சினிமா
</h2><p>
ஒவ்வொரு வாரமும் புதிய படைப்புகள் தமிழ் சினிமாவிலிருந்து வெளியாகி வருகின்றன. கடந்த வாரம் வெளிவந்த இம்மார்ட்டல் திரைப்படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து, இந்த வாரம் கார்த்தியின் சர்தார் 2 மற்றும் சூரியின் மண்டாடி என பெரிதும் எதிர்பார்க்கப்படும் இரண்டு பிரம்மாண்ட திரைப்படங்கள் தமிழில் வெளியாகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/69dc2341-1fe7-4438-ac8e-f4849288b9cb/26-6aa125590262e.webp' /></p><p>
</p><h2>
முன்பதிவு வசூல்</h2><p>

நாளை செப்டம்பர் 10-ஆம் தேதி இந்த இரண்டு திரைப்படங்களும் வெளிவரவிருக்கும் நிலையில், டிக்கெட் முன்பதிவு அமோகமாக நடைபெற்று வருகிறது. இதில் இந்த இரு படங்களும் இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளன என்பதை பற்றிய விவரம் தற்போது வெளியாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/221af3e0-26b0-4382-9fd7-2adef8055bb2/26-6aa12559ada06.webp' /></p><p>
</p><h3>சர்தார் 2
</h3><p>
கடந்த 2022-ஆம் ஆண்டு வெளியான 'சர்தார்' திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து தற்போது 'சர்தார் 2' உருவாகியுள்ளது. இயக்குநர் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் கார்த்தி இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். மேலும், மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத் மற்றும் ரஜிஷா விஜயன் ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர். இதையெல்லாம் தாண்டி ரசிகர்களால் நடிப்பு அரக்கன், வில்லாதி வில்லன் என அழைக்கப்படும் நடிகர் எஸ்.ஜே. சூர்யா இப்படத்தில் வில்லனாக நடித்துள்ளார்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5097b409-4389-4584-8c15-fd7547b901ee/26-6aa125ad17d7e.webp' /></p><p>பெரிதும் எதிர்பார்ப்பை உண்டாகியிருக்கும் <a href="https://www.dailythanthi.com/cinema/cinemanews/sardar-2-is-not-just-an-action-movie-a-key-detail-shared-by-karthi" target="_blank">சர்தார் 2</a> திரைப்படம் நாளை வெளிவரவிருக்கும் நிலையில், இதுவரையிலான டிக்கெட் முன்பதிவில் ரூ. 1.5 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.</p><p></p><p>
</p><h3>
மண்டாடி
</h3><p>
தமிழ் சினிமாவில் இருந்து தவிர்க்க முடியாத ஆக்ஷன் ஹீரோவாக உருவாகிவிட்டார் சூரி. இவர் நடிப்பில் அடுத்ததாக மற்றும் வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகியுள்ள திரைப்படம் மண்டாடி. இப்படத்தை அறிமுக இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கியுள்ளார். இப்படத்தில் தெலுங்கு நடிகர் சுஹாஸ் தமிழில் அறிமுகமாகிறார். மேலும் மஹிமா நம்பியார், சத்யராஜ் ஆகியோர் நடித்துள்ளனர்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ad1c413d-36a8-4f37-90f9-7cd0d4553294/26-6aa125ade82ae.webp' /></p><p>இந்த நிலையில், மண்டாடி திரைப்படம் இதுவரை நடந்த டிக்கெட் முன்பதிவில் ரூ. 1.8 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/TRsmgwUINcU" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-09-09T10:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலவசமாக கிடைத்த மென்பொருளுக்கு 88 இலட்சம் செலவிட்ட தேசிய குருதி வங்கி.. இடம்பெற்றுள்ள பாரிய நிதிமோசடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/national-blood-bank-88-lakh-massive-fraud-1788943812"></link>
            <id>https://tamilwin.com/article/national-blood-bank-88-lakh-massive-fraud-1788943812</id>
            <summary type="text">தேசிய குருதி வங்கியில் மென்பொருள் கொள்வனவு என்ற பேரில் சுமார் 88 லட்சம் ரூபா மோசடி செய்யப்பட்டுள்ளதாக நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன.

தேசிய குருத...</summary>
            <content type="html"><![CDATA[<p>தேசிய குருதி வங்கியில் மென்பொருள் கொள்வனவு என்ற பேரில் சுமார் 88 லட்சம் ரூபா மோசடி செய்யப்பட்டுள்ளதாக நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன.
</p><p>
தேசிய குருதிமாற்று மையத்திடம், ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் நோயாளிகளுக்கு எவ்வளவு இரத்தம் வழங்கப்பட்டது என்பதை அறிய தரவுத்தளமொன்று இருக்கவில்லை.
</p><p>
இதன் காரணமாக, கொடையாளர்களிடமிருந்து எந்தவித கட்டுப்பாடுகளும் இன்றி சேகரிக்கப்பட்ட குருதி 45 நாட்களில் காலாவதியான பிறகு, அதிக அளவு குருதி வீணாக்கப்பட்டது.</p><p>அதன்போது இருவகையான கடுமையான குற்றங்கள் அதில் உள்ளடங்கியிருந்தன. முதலாவது, நன்னோக்குடன் கொடையாளர்களால் வழங்கப்பட்ட இரத்தம் காலாவதியாகிவிட்டது என்ற காரணத்திற்காக, அதை அறியாமலேயே வீணாக்கியது.</p><h2>புதிய கணினி மென்பொருள்&nbsp;</h2><p> இரண்டாவது, கொடையாளர்களிடமிருந்து இரத்தம் சேகரிக்கப்பட்ட தருணத்திலிருந்தே, அதை நோயாளிக்குக் கொடுப்பதற்கு ஏற்றதாக மாற்றுவதற்காக பொட்டலமிட்டு, அதைப் பாதுகாப்பதற்காக பெரும் பணம் செலவழிக்கப்பட்டு, பின்னர் 45 நாட்களில் காலாவதியாகி விட்டது என்ற காரணத்திற்காக வீணாக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a414db93-ecbb-47af-bee9-e3806d84ee1e/26-6aa133f1ce53f.webp' /></p><p>
</p><p>
மேற்கண்ட குற்றவியல் சூழ்நிலையைப் புரிந்து கொண்ட மருத்துவர் புஷ்பிக டி சில்வா என்ற இளம் மருத்துவர், பல ஆண்டுகளாகக் கடினமாக உழைத்து, மேற்கூறிய ஏறக்குறைய அனைத்துப் பிரச்சனைகளையும் தீர்க்கும் ஒரு புதிய கணினி மென்பொருள் அமைப்பை உருவாக்கியிருந்தார்.
</p><p>
அந்த இளம் மருத்துவர், தனது புலமைசார் சொத்துரிமைகளைக் கூடப் பாதுகாக்காமல், அந்த மென்பொருள் அமைப்பை தேசிய குருதிமாற்று மையத்திற்கு இலவசமாக நன்கொடையாக வழங்கியுள்ளார்.
</p><p>
மேற்கண்ட மென்பொருள் அமைப்பை உருவாக்குவதற்கு முன்பு, மருத்துவர்புஷ்பிக ஒரு டச்சு கடன் உதவித் திட்டத்தின் கீழ் அத்தகைய மென்பொருள் அமைப்பை உருவாக்க மற்றொரு நிறுவனத்திற்குப் பணம் செலுத்தியிருந்தார். </p><p>ஆனால் அந்த மென்பொருள் அமைப்பு உருவாக்கம் முடிக்கப்படாமலேயே கைவிடப்பட்டுள்ளது. அதற்காக யாருக்குப் பணம் கொடுக்கப்பட்டது, எவ்வளவு பணம் கொடுக்கப்பட்டது? என்பன குறித்து இதுவரை விசாரணைகள் நடத்தப்படவில்லை.</p><p></p><h2>தொடர்ச்சியான சேவை</h2><p>இதற்கிடையே மருத்துவர் புஷ்பிகவின் மென்பொருள் கண்டுபிடிப்புக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் 2025 ஆம் ஆண்டு உலக இரத்த தான தினத்தில் பிரதமர் ஊடாக மருத்துவர் புஷ்பிகவுக்கு ஒரு விருதும் வழங்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/65167364-bba9-4e78-a58b-246e93616681/26-6aa1343937388.webp' /></p><p> </p><p>அன்று முதல், மருத்துவர் புஷ்பிக டி சில்வாவால் உருவாக்கப்பட்ட மென்பொருள் அமைப்பு, இலங்கையில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் உள்ள இரத்த மையங்களுடன் ஒருங்கிணைந்து, தேவைக்கேற்ப இரத்த தானங்களைப் பெற்று வருகிறது. அது பல ஆண்டுகளாகத் தொடர்ச்சியான சேவையை வழங்கி வருகிறது.
</p><p>
இவ்வாறான பின்னணியில் மருத்துவர் புஷ்பிகவால் உருவாக்கப்பட்டு, இன்றும் எந்தப் பிரச்சனையும் இன்றி இயங்கிக்கொண்டிருக்கும் மென்பொருள் அமைப்பிற்கு ஏதேனும் மேம்படுத்தல் தேவைப்பட்டால், அதனை மருத்துவர் புஷ்பிகவே செய்து பராமரிப்பதற்குப் பதிலாக, தற்போதுள்ள மென்பொருள் அமைப்பை ஒரு தனியார் நிறுவனம் மூலம் மீண்டும் கொள்வனவு செய்வதற்கு தேசிய குருதிமாற்று மைய நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.</p><p>

அதற்காக பொதுமக்களின் வரிப்பணம் சுமார் 88 லட்சம் ரூபா செலவிடப்படவுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

இந்த மோசடி குறித்து சுகாதார அமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு அறிவித்தும் இதுவரை எதுவித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.&nbsp;&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-09-09T10:27:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மழலையர் பள்ளிக்குள் நுழைந்து ஆசிரியையை சுட்ட நபர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/gunman-killed-kindergarten-teacher-in-thailand-1788949637"></link>
            <id>https://news.lankasri.com/article/gunman-killed-kindergarten-teacher-in-thailand-1788949637</id>
            <summary type="text">A gunman shot and killed a kindergarten teacher in Thailand: தாய்லாந்து நாட்டில், மழலையர் பள்ளி ஒன்றிற்குள் நுழைந்த ஒருவர், ஆசிரியை ஒருவரை சுட்டுக்கொன...</summary>
            <content type="html"><![CDATA[<p>A gunman shot and killed a kindergarten teacher in Thailand: தாய்லாந்து நாட்டில், மழலையர் பள்ளி ஒன்றிற்குள் நுழைந்த ஒருவர், ஆசிரியை ஒருவரை சுட்டுக்கொன்ற விடயம் பரபரப்பை உருவாக்கியுள்ளது.
</p><p>

புதன்கிழமையன்று, தாய்லாந்திலுள்ள Chonburi என்னுமிடத்தில் அமைந்துள்ள மழலையர் பள்ளி ஒன்றிற்குள் ஒருவர் துப்பாக்கியுடன் நுழைந்துள்ளார்.</p><h3>

பரபரப்பை உருவாக்கியுள்ள சம்பவம்</h3><p>

வகுப்பொன்றில் குழந்தைகள் அமர்ந்திருக்க, அந்த நபர் அந்த வகுப்பாசிரியையை துப்பாக்கியால் சுட்டுள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/22f36c16-ec55-417e-813d-f7902f4d9b91/26-6aa1348756f2a.webp' /></p><p>
அந்த ஆசிரியை சம்பவ இடத்திலேயே உயிரிழக்க, துப்பாக்கியால் சுட்ட நபர் தப்பியோடியுள்ளார்.
</p><p>
விசாரணையில், அவர் அந்த ஆசிரியையின் கணவர் என தகவல் வெளியாகியுள்ளது.&nbsp;</p><p></p><p>
பள்ளியிலிருந்த பிள்ளைகள் அனைவரும், மற்ற ஆசிரியர்களும் பாதுகாப்பாக பள்ளியிலிருந்து வெளியேற்றப்பட்டுவிட்டார்கள்.
</p><p>
என்றாலும், அந்த பயங்கரக் காட்சியைக் கண்ட பிள்ளைகள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ள அதிர்ச்சியிலிருந்து அவர்கள் விடுபடுவதற்காக, மன நல ஆலோசகர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.
</p><p>
பட்டப்பகலில் ஒருவர் மழலையர் பள்ளிக்குள் நுழைந்து ஆசிரியை ஒருவரை சுட்டுகொன்ற விடயம் பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-09T10:27:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாமலுக்கு பிணை கிடைக்க வாய்ப்பில்லையாம்..! புலம்பும் ராஜபக்ச தரப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/no-bail-for-namal-rajapaksa-1788946294"></link>
            <id>https://tamilwin.com/article/no-bail-for-namal-rajapaksa-1788946294</id>
            <summary type="text">

கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு பிணை கிடைக்காத வகையில் சட்ட விதிகள் தவறாகப் பயன்படுத்தப...</summary>
            <content type="html"><![CDATA[<p>

கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு பிணை கிடைக்காத வகையில் சட்ட விதிகள் தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன என்று பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேம்நாத் சி தொலவத்த தெரிவித்துள்ளார்.</p><p> 

கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
</p><p>
தொடர்ந்தும் தெரிவிக்கையில், </p><p>

அரசியல் ரீதியாக எதிர்க்கட்சியினரை முடக்கும் செயற்பாட்டில் இந்த அரசாங்கம் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது.</p><h2>நாமலுக்குப் பிணை இல்லையா..</h2><p> </p><p>

சிறையில் அடைக்கப்பட்டுள்ள நாமல் ராஜபக்சவுக்கு பிணை கிடைக்காத வகையில் சட்ட விதிகள் தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன.
</p><p>
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முற்றாக நீக்குவோம் என்று கூறி ஆட்சிக்கு வந்த அரசாங்கம் அந்தச் சட்டத்தின் கீழ் 46 பேரைக் கைது செய்து வைத்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6f890b86-fcc9-47cf-87a8-99154173ea33/26-6aa131ca5f45e.webp' /></p><p>

இலங்கையில் நீதித்துறைச் சுயாதீனம் மீறப்படுவது மற்றும் மனித உரிமைகள் பேரவை மற்றும் பொதுநலவாய சட்டத்தரணிகள் சங்கம் உள்ளிட்ட சர்வதேச அமைப்புக்கள் ஏற்கனவே கவலை வெளியிட்டுள்ளன.
</p><p>
அரசாங்கம் தனது ஜனநாயக விரோதப் போக்கினை மாற்றிக் கொள்ளாவிட்டால், சர்வதேச அளவில் இலங்கை கடுமையான எச்சரிக்கைகளையும் சந்திக்க நேரிடும் என குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p><p> </p>]]></content>
            <updated>2026-09-09T10:27:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாமலை சிறையில் அடைத்த அரசின் திட்டங்கள் வெற்றிபெறாது : ரோஹித எம.பி சூளுரை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/namal-rise-cannot-be-stopped-in-prison-1788948693"></link>
            <id>https://ibctamil.com/article/namal-rise-cannot-be-stopped-in-prison-1788948693</id>
            <summary type="text">நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை சிறையில் அடைப்பதன் மூலம் அவரது அரசியல் முன்னேற்றத்தை தடுக்க முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை சிறையில் அடைப்பதன் மூலம் அவரது அரசியல் முன்னேற்றத்தை தடுக்க முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார். எதிர்வரும் செப்டம்பர் 12 ஆம் திகதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மக்கள் பேரணியை செயலிழக்கச் செய்யும் நோக்கில் நாமல் ராஜபக்சவை சிறையில் அடைக்க முயற்சித்தாலும், அந்த திட்டங்கள் ஒருபோதும் வெற்றிபெறாது என்றும் அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது சுட்டிக்காட்டினார்.&nbsp;</p><p>&nbsp; அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படும் இவ்வாறான அரசியல் பழிவாங்கல்களுக்கு மத்தியில் மக்கள் மேலும் அணிதிரள்வார்கள் என குறிப்பிட்ட நாடாளுமன்ற உறுப்பினர், ஆரம்பத்தில் எதிர்பார்த்ததை விட அதிக எண்ணிக்கையிலான மக்கள் இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள தற்போது கோரிக்கைகளை முன்வைத்து வருவதாகவும் தெரிவித்தார்.</p><h2>மக்கள் வழங்கிய அதிகாரம் பழிவாங்க அல்ல</h2><p>
</p><p>
தற்போதைய அரசாங்கத்திற்கு மக்கள் அதிகாரத்தை வழங்கியது, அவர்களின் எதிர்பார்ப்புகளையும் தேவைகளையும் பூர்த்தி செய்வதற்காகவே அன்றி, அரசியல் எதிரிகளை சிறையில் அடைத்து பழிவாங்குவதற்காக அல்ல எனவும் ரோஹித அபேகுணவர்தன எம்.பி மேலும் தெரிவித்தார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d6d6ea1b-f980-4cae-9ee5-c01db0420d25/26-6aa133e9a9030.webp' /></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-09T10:24:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இஷாரா செவ்வந்தி இந்தியாவுக்கு தப்பிச்செல்ல உதவிய நபருக்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/boat-driver-ishara-sewwandi-flee-to-india-remanded-1788947683"></link>
            <id>https://tamilwin.com/article/boat-driver-ishara-sewwandi-flee-to-india-remanded-1788947683</id>
            <summary type="text">கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் முக்கிய சந்தேகநபர்களில் ஒருவரான இஷாரா செவ்வந்தி, யாழ்ப்பாணத்திலிருந்து இந்தியாவிற்கு தப்பிச்செல்ல படகு வழங்கி உதவிய நபரு...</summary>
            <content type="html"><![CDATA[<p>கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் முக்கிய சந்தேகநபர்களில் ஒருவரான இஷாரா செவ்வந்தி, யாழ்ப்பாணத்திலிருந்து இந்தியாவிற்கு தப்பிச்செல்ல படகு வழங்கி உதவிய நபருக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.</p><p>

இதன்படி, சந்தேகநபரை 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். பொதரகம நேற்று (08) உத்தரவிட்டுள்ளார்.</p><h2>கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் 47 ஆவது சந்தேகநபர் </h2><p>

பயங்கரவாத தடுப்புச்சட்டத்தின் கீழ் 30 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்ட சந்தேகநபரான ஜேசுதாசன் செல்வசேத் எனப்படும் ‘பலசி’என்பவரை கொழும்பு குற்றப்பிரிவு நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தியபோது சமர்ப்பித்த உண்மைகளைக் கருத்தில் கொண்ட பின்னர், நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ca02d80b-cfe6-43d2-8827-999a50fe6878/26-6aa133b7465d6.webp' /></p><p>

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் சந்தேகநபர் 47 ஆவது சந்தேகநபராக பெயரிடப்படுவார் என்று கொழும்பு குற்றப்பிரிவு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.</p><p>

இஷாரா செவ்வந்தி நாட்டை விட்டு வெளியேறுவதற்கு சந்தேகநபர் தெரிந்தே ஏற்பாடு செய்ததாகவும், செவ்வந்தி இந்தியா வந்தடைந்த பிறகு, படகில் ஆதாரமாக இருந்த ஜிபிஎஸ் கருவியை அவர் அழித்துவிட்டதாகவும் கொழும்பு குற்றப்பிரிவு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.</p><p>

இவ்வாறு பெரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர்கள் நாட்டை விட்டு வெளியேற சந்தேகநபர் உதவியுள்ளதாகவும், இந்தியாவுக்கு செல்வதற்காக ஐம்பதாயிரம் ரூபாய் வசூலித்ததாகவும் தெரியவந்ததாக குற்றப்பிரிவு நீதிமன்றத்தில் ஆதாரங்களை சமர்ப்பித்துள்ளது.</p><h2>தடுப்புக்காவல் விசாரணை&nbsp;</h2><p>
</p><p>
இஷாரா செவ்வந்தி சுமார் 10 மாதங்கள் வரை தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினால் விசாரணைக்குட்படுத்தப்பட்டிருந்த நிலையில், புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட்ட போது எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/07b17432-2768-4735-ad13-0913e7feb74c/26-6aa133b7ec6e2.webp' /></p><p> 

கடந்த வருடம் பெப்ரவரி 19 ஆம் திகதி கொழும்பு - புதுக்கடை இலக்கம் 05 நீதவான் நீதிமன்ற அறையில் கணேமுல்ல சஞ்சீவ சுட்டுக் கொல்லப்பட்டார்.</p><p> 

இதன்போது, கொலைக்காக பயன்படுத்திய துப்பாக்கியை நீதிமன்ற வளாகத்திற்குள் கொண்டுவந்தவர் இஷாரா செவ்வந்தி என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p>

இந்த கொலைக்குப் பின்னர் சில மாதங்கள் கழித்து அவர் நேபாளத்தில் தலைமறைவாகியிருந்த நிலையில் கைது செய்யப்பட்டு நாட்டுக்கு அழைத்துவரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-09T10:24:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[பொதுக் கழிப்பறைக்கு டொனால்ட் டிரம்ப் பெயர்: கனடாவில் வெளிப்பட்ட விசித்திர எதிர்ப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/trump-memorial-rogue-sign-put-up-to-washroom-in-bc-1788937935"></link>
            <id>https://canadamirror.com/article/trump-memorial-rogue-sign-put-up-to-washroom-in-bc-1788937935</id>
            <summary type="text">&amp;nbsp;கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள பொதுக் கழிப்பறை ஒன்றிற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் பெயர் சூட்டப்பட்ட சம்பவம் பெரும் ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள பொதுக் கழிப்பறை ஒன்றிற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் பெயர் சூட்டப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பையும் நகைப்பையும் ஏற்படுத்தியுள்ளது.</p><p>
விக்டோரியா நகரின் பிரபல 'கேலோப்பிங் கூஸ்' நடைபாதை அருகே அமைந்த பொதுக் கழிப்பறையின் நுழைவாயிலில், "டொனால்ட் ஜே. டிரம்ப் நினைவகம்" என்ற மரத்தாலான பலகை மர்ம நபர்களால் பொருத்தப்பட்டிருந்தது.</p><p>
ஞாயிற்றுக்கிழமை இதுகுறித்துத் தகவல் கிடைத்ததும், மாலை 6 மணியளவில் அந்தப் பலகையை விக்டோரியா நகர சபை அதிகாரிகள் அகற்றிவிட்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/353e4324-d78d-420c-9a74-d5546cfc1b23/26-6aa106d134d26.webp' /></p><p> 
அந்த இடத்தில் பாதுகாப்பு கேமராக்கள் இல்லாததால் பலகையை வைத்தது யார் என்பதைக் கண்டறிய முடியவில்லை.
</p><p> கனடா - அமெரிக்க வர்த்தகப் போரினால் ஆத்திரமுற்ற மக்கள், டிரம்ப் மீதான தங்கள் எதிர்ப்பை இத்தகைய விசித்திர வழிகளில் காட்டி வருகின்றனர். </p><p>
கடந்த கோடையில், உள்ளூர் கலைஞர் ஒருவர் குதிரைச் சாணத்தைப் பயன்படுத்தி டிரம்பின் உருவப்படத்தை வரைந்தார். </p><p>அந்த ஓவியம் 1,800 டொலருக்கு விற்பனையானது குறிப்பிடத்தக்கது.
ஒருபுறம் மக்கள் கழிப்பறைக்குப் பெயர் சூட்டி எதிர்ப்பைப் பதிவுசெய்ய, மறுபுறம் பி.சி. மாகாண முதல்வர் டேவிட் ஈபி, அமெரிக்க எல்லைப் பகுதிகளில் "கனடா ஒருபோதும் அமெரிக்காவின் 51வது மாநிலமாகாது" என்ற எச்சரிக்கைப் பலகையை நிறுவி, டிரம்பின் வர்த்தகக் கொள்கைகளுக்குத் தனது அதிகாரப்பூர்வ எதிர்ப்பையும் தெரிவித்துள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-09T10:23:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானியா தூதரகத்தை மூட இஸ்ரேல் உத்தரவு; 30 நாட்கள் கெடு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/israel-orders-closure-of-british-consulate-1788945593"></link>
            <id>https://canadamirror.com/article/israel-orders-closure-of-british-consulate-1788945593</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;கிழக்கு ஜெருசலேமில் உள்ள பிரித்தானியாவின் துணைத் தூதரகத்தை 30 நாட்களுக்குள் மூடுமாறு இஸ்ரேல் உத்தரவிட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;கிழக்கு ஜெருசலேமில் உள்ள பிரித்தானியாவின் துணைத் தூதரகத்தை 30 நாட்களுக்குள் மூடுமாறு இஸ்ரேல் உத்தரவிட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p>

 காசா தொடர்பான பணிகளில் ஈடுபட்டுள்ள அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட பிரித்தானிய அதிகாரிகள் மற்றும் ரமல்லாவில் பணியாற்றும் பிரித்தானிய ஊழியர்கள் 7 நாட்களுக்குள் அங்கிருந்து வெளியேறுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/14caf05c-a6d9-472f-af13-2a32c44d52c9/26-6aa124baeec29.webp' /></p><p>

இஸ்ரேலிய குடியேற்றங்களுக்கு எதிராக பிரித்தானியா அண்மையில் விதித்த தடைகளைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
</p><p>
இஸ்ரேல் மற்றும் பிரித்தானியா இடையிலான உறவுகளில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், இந்த உத்தரவு வெளியாகியுள்ளமை மேலும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-09T10:22:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரிட்டன் விமான சேவைகள் திடீர் முடக்கம்; 1000 இற்கு மேற்பட்ட விமானங்கள் ரத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/britain-over-1-000-flights-cancelled-1788949451"></link>
            <id>https://canadamirror.com/article/britain-over-1-000-flights-cancelled-1788949451</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;பிரிட்டனின் வான்வழிப் போக்குவரத்து கட்டுப்பாட்டு சேவை அமைப்பான ‘நாட்ஸ்’ (NATS) அமைப்பில் ஏற்பட்ட திடீர் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, 100...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;பிரிட்டனின் வான்வழிப் போக்குவரத்து கட்டுப்பாட்டு சேவை அமைப்பான ‘நாட்ஸ்’ (NATS) அமைப்பில் ஏற்பட்ட திடீர் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, 1000 இற்கு மேற்பட்ட விமான சேவைகள் நிருத்தப்பட்டதால் பயணிகள் பெரும் திண்டாட்டத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
</p><p>
லண்டனின் ஹித்ரூ, கேட்கவிக், மான்செஸ்டர் உள்ளிட்ட சர்வதேச விமான நிலையங்களில் இருந்து புறப்பட வேண்டிய விமான சேவைகளும் நிறுத்தப்பட்டு முடங்கியுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/55544911-bf69-4025-86ff-e54d3012fe03/26-6aa133cd02203.webp' /></p><h2>தொழில்நுட்பக் கோளாறு&nbsp; &nbsp;சீரமைப்புப் பணிகள்</h2><p>&nbsp;தேசிய வான்வழிப் போக்குவரத்து கட்டுப்பாட்டு மையத்தின் தரவு செயலாக்க அமைப்பில் (Data Processing System) ஏற்பட்ட எதிர்பாராத தொழில்நுட்பச் சிக்கலால், விமானங்களின் வழித்தடங்களைக் கண்காணிக்கும் பணிகள் பாதிக்கப்பட்டதாக ‘நாட்ஸ்’ நிர்வாகம் தெரிவித்துள்ளது. </p><p>இதன் காரணமாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் பிரிட்டனில் உள்ள முக்கிய விமான நிலையங்களில் இருந்து புறப்படவிருந்த விமானங்கள் அனைத்தும் ஓடுபாதையிலேயே தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன.</p><p>

லண்டனின் மிக முக்கியமான ஹித்ரூ (Heathrow) மற்றும் கேட்கவிக் (Gatwick) விமான நிலையங்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான சர்வதேச விமானங்கள் இயக்கப்படும் நிலையில், இந்தத் திடீர் முடக்கத்தால் பல்லாயிரக்கணக்கான பயணிகள் விமான நிலையங்களிலேயே பல மணி நேரமாகத் தவித்து வருகின்றனர். </p><p>

மேலும், ஐரோப்பிய நாடுகளிலிருந்து லண்டன் நோக்கி வரவிருந்த பல சர்வதேச விமானங்களும் புறப்பட்ட இடங்களிலேயே தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதால், சர்வதேச அளவிலான வான்வழிப் போக்குவரத்தில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
</p><p>
தொழில்நுட்பப் பொறியாளர்கள் களத்தில் இறங்கிப் பிரச்சனையைக் கண்டறிந்து சரிசெய்யும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p> 

இருப்பினும், இந்தத் தொழில்நுட்பக் கோளாறு காரணமாகச் சீரமைப்புப் பணிகள் நிறைவடைந்த பின்னரும் கூட, விமானங்கள் அடுத்தடுத்து இயங்குவதில் பெரும் தாமதமும் (Delays) ரத்து நடவடிக்கைகளும் (Cancellations) நாள் முழுதும் நீடிக்கக்கூடும் என்பதால், பயணிகள் தங்களது விமான நிறுவனங்களைத் தொடர்பு கொண்டு அட்டவணையை உறுதி செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-09-09T10:21:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[தனியார் மயமாகும் BBL - அணிகளை வாங்க IPL உரிமையாளர்கள் ஆர்வம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/ipl-owners-eye-on-bbl-after-privatisation-1788949195"></link>
            <id>https://news.lankasri.com/article/ipl-owners-eye-on-bbl-after-privatisation-1788949195</id>
            <summary type="text">ipl owners eye on bbl after -privatisation: BBL தொடரில் அவுஸ்திரேலியா கிரிக்கெட் தனியார் மயத்தை அனுமதித்துள்ள நிலையில், இந்திய IPL உரிமையாளர்கள் அணிகள...</summary>
            <content type="html"><![CDATA[<p>ipl owners eye on bbl after -privatisation: BBL தொடரில் அவுஸ்திரேலியா கிரிக்கெட் தனியார் மயத்தை அனுமதித்துள்ள நிலையில், இந்திய IPL உரிமையாளர்கள் அணிகளை வாங்க ஆர்வம் காட்டி வருகிறது.
</p><h3>
தனியார் மயமாகும் BBL&nbsp;</h3><p>
2011 ஆம் ஆண்டு முதல் பிக் பாஸ் லீக் (Big Bash League - BBL) T20 தொடரை அவுஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம், நடத்தி வருகிறது. இதில் 8 அணிகள் பங்கு பெற்று வருகின்றன. </p><p>

BBL தொடரை இந்தியாவில் பிரபலப்படுத்தும் வகையில், 2026 BBL தொடரின் தொடக்கப்போட்டி, சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற உள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a1cd7b87-7ebb-46cf-974f-5809d1bb4cb6/26-6aa132cd2dcb1.webp' /></p><p>

இந்நிலையில், Big Bash League போட்டிகளில் தனியார் முதலீட்டை அனுமதிக்க அவுஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் முன்வந்துள்ளது. </p><p>

அதேவேளையில். சர்வதேசப் போட்டிகளின் அட்டவணை, வீரர்களின் பங்கேற்பு, ஒளிபரப்பு உரிமைகள் மற்றும் சம்பள உச்சவரம்புகள் ஆகியவற்றின் மீதான கட்டுப்பாட்டை அவுஸ்திரேலிய வாரியம் தக்கவைத்துக் கொள்ள உள்ளது. </p><p>

மேலும், வருங்கால வாங்குபவர்களை அங்கீகரிக்கவோ அல்லது நிராகரிக்கவோ தெளிவான அதிகாரத்தையும் கொண்டுள்ளது. </p><p>

இந்திய உரிமையாளர்களுக்கு அதிகபட்சமாக 2 அல்லது 3 அணிகள் மட்டுமே விற்கப்படலாம் என கூறப்படுகிறது. </p><p>

2027-28 BBL தொடரில், மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணியை முழுமையாக விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. </p><p>

மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணியின் விற்பனை வெற்றிகரமாக நிறைவேறினால், மற்ற அணிகளும் இதே முறையை பின்பற்றுவதற்கான வாய்ப்பு உள்ளது.</p><h3>

ஐபிஎல் உரிமையாளர்கள் ஆர்வம் </h3><p>

தங்களது உலகளாவிய கிரிக்கெட் வணிகங்களை விரிவுபடுத்த விரும்பும் ஐபிஎல் உரிமையாளர்களுக்கு ஒரு பெரிய புதிய வாய்ப்பை உருவாக்கியுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ab8b127c-420b-4efa-a424-5ab6d68f59ae/26-6aa132cc751c6.webp' /></p><p>
ஐபிஎல் உரிமையாளர்கள், SA20, ILT20, MLC ஆகிய கிரிக்கெட் லீக்களில் ஏற்கனவே சொந்தமாக அணிகளை வைத்துள்ளன. </p><p>

இந்திய ஆண்கள் கிரிக்கெட் வீரர்கள் தற்போது வெளிநாட்டு ஃபிரான்சைஸ் லீக்குகளில் பங்கேற்க அனுமதிக்கப்படுவதில்லை. </p><p>

எதிர்காலத்தில் இந்த கட்டுப்பாடு நீக்கப்பட்டால், ஐபிஎல் உரிமையாளர்களுக்கு இது பெரிய வாய்ப்பாக அமையும்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-09T10:20:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[99 ஓட்டங்களில் ஆட்டமிழந்த கேப்டன்: சொதப்பிய திலக் வர்மா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/tilak-varma-99-runs-ezone-336-all-out-1788948566"></link>
            <id>https://news.lankasri.com/article/tilak-varma-99-runs-ezone-336-all-out-1788948566</id>
            <summary type="text">துலீப் கிண்ண இறுதிப்போட்டியில் திலக் வர்மா 99 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

சேப்பாக்கத்தில் நடந்து வரும் துலீப் கிண்ண இறுதிப்போட்டியில் திலக் வர்மா 99...</summary>
            <content type="html"><![CDATA[<p>துலீப் கிண்ண இறுதிப்போட்டியில் திலக் வர்மா 99 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
</p><p>
சேப்பாக்கத்தில் நடந்து வரும் துலீப் கிண்ண இறுதிப்போட்டியில் திலக் வர்மா 99 ஓட்டங்கள் எடுக்க, தென் மண்டல அணி 336 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது.&nbsp;</p><h2>திலக் வர்மா&nbsp;99 </h2><p> 

துலீப் கிண்ண இறுதிப்போட்டியின் நான்காவது நாளில் கிழக்கு மண்டல அணி இரண்டாவது இன்னிங்ஸை ஆடி வருகிறது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e03e9507-0183-4a60-9159-2cc8f66b38cd/26-6aa1327161581.webp' /></p><p></p><p>

முன்னதாக, தென் மண்டல அணி முதல் இன்னிங்ஸில் விக்கெட்டுகளை இழந்து தடுமாற, அணித்தலைவர் திலக் வர்மா (Tilak Varma) பொறுப்பாக ஆடி அரைசதம் அடித்தார். </p><p>

சாமா வி மிலிந்த் அவருடன் பார்ட்னர்ஷிப் அமைக்க, தென் மண்டல அணி 300 ஓட்டங்களை கடந்தது. </p><p>

அதன் பின்னர் விக்கெட்டுகள் அடுத்தடுத்து சரிந்தன. சாமா 43 ஓட்டங்களில் வெளியேற, திலக் வர்மா 99 ஓட்டங்கள் எடுத்த நிலையில் குரைஷி பந்துவீச்சில் அவுட் ஆனார்.&nbsp;</p><h2>இஷான் கிஷன்&nbsp;அரைசதம் </h2><p> 

தென் மண்டல அணி 336 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது. முகேஷ் குமார் 3 விக்கெட்டுகளும், ஷமி, குரைஷி மற்றும் ஷிகர் மோகன் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c32b4a38-7c0a-4784-960d-9a3468f2c7b0/26-6aa1326fd5001.webp' /></p><p>
பின்னர் 372 ஓட்டங்கள் முன்னிலையுடன் கிழக்கு மண்டல அணி இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது.

அபிமன்யு ஈஸ்வரன் 3 ஓட்டங்களில் சிராஜ் பந்துவீச்சில் அவுட் ஆக, வைபவ் சூர்யவன்ஷி 8 ஓட்டங்களில் ஸ்டம்பிங் ஆனார். </p><p>

அடுத்து கைகோர்த்த ஷிகர் கான், இஷான் கிஷன் கூட்டணி வேகமாக ஓட்டங்களை சேர்த்தது. அணித்தலைவர் இஷான் கிஷன் (Ishan Kishan) அரைசதம் அடித்தார்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e0db85c8-5bc0-4760-a56a-ee233c1fa0ea/26-6aa13270a990a.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-09T10:15:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரஷ்யா - வடகொரியாவை இணைக்கும் புதிய பாலம் திறப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/new-bridge-russia-and-north-korea-opened-1788948877"></link>
            <id>https://canadamirror.com/article/new-bridge-russia-and-north-korea-opened-1788948877</id>
            <summary type="text">ரஷ்யா மற்றும் வடகொரியா ஆகிய இரு நாடுகளையும் இணைக்கும் முதலாவது புதிய பாலம் ஒன்று அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டுள்ளது.



இரு நாடுகளுக்கும...</summary>
            <content type="html"><![CDATA[<p>ரஷ்யா மற்றும் வடகொரியா ஆகிய இரு நாடுகளையும் இணைக்கும் முதலாவது புதிய பாலம் ஒன்று அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
</p><p>


இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தகம் மற்றும் ராணுவக் கூட்டை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும் விதமாக இந்த பாலம் திறந்து வைக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c7208279-8a5b-4bac-86e7-d2d76420b745/26-6aa1318e55d15.webp' /></p><h2>1 கி.மீ. நீளமுள்ள இருவழி வீதிப் பாலம்</h2><p>



 பாலத்தின் திறப்பு விழா, காணொளி மூலம் நடைபெற்ற நிலையில் ரஷிய பிரதமர் மிக்ஹைல் மிஷுஸ்டின் (Mikhail Mishustin) மற்றும் வடகொரிய பிரதமர் பாக் தே சோங் (Pak Thae-song) ஆகியோர் கலந்துகொண்டனர்.
</p><p>


துமேன் நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள இந்த 1 கி.மீ. நீளமுள்ள இருவழிச் வீதிப் பாலம், வடகொரியாவின் ராசான் நகரையும், ரஷ்யாவின் காசான் நகரையும் நேரடியாக இணைக்கிறது. </p><p>



இதன் மூலம் தினசரி 300 வாகனங்கள் வரை இரு நாடுகளுக்கும் இடையே பயணிக்க முடியும் என ரஷ்ய அரசு தெரிவித்துள்ளது.</p><p>



சோவியத் இராணுவ அதிகாரியான யாகோவ் நோவிசென்கோவின் நினைவாக இந்தப் பாலத்திற்கு அவரது பெயர் வைக்கப்பட்டுள்ளது.
</p><p>


கடந்த 1946-ம் ஆண்டு வடகொரியாவின் நிறுவனரான கிம் இல் சுங்கை (தற்போதைய ஜனாதிபதி கிம் ஜாங் வுன்னின் தாத்தா) படுகொலை முயற்சியில் இருந்து காப்பாற்றியவரே சோவியத் இராணுவ அதிகாரியான யாகோவ் நோவிசென்கோவின் ஆவார்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-09T10:11:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[சவூதி அரேபியா மீது தாக்குதல் ; பற்றியெறிந்த ஆலைகள்; 73 போ் காயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/saudi-arabia-attack-factories-engulfed-in-flames-1788948662"></link>
            <id>https://canadamirror.com/article/saudi-arabia-attack-factories-engulfed-in-flames-1788948662</id>
            <summary type="text">சவூதி அரேபியா மீது யேமனின் ஈரான் ஆதரவு பெற்ற ஹூதி கிளா்ச்சியாளா்கள் செவ்வாய்க்கிழமை நடத்திய தீவிர வான்வழித் தாக்குதல்களில் பெண்கள், குழந்தைகள் உள்பட 7...</summary>
            <content type="html"><![CDATA[<p>சவூதி அரேபியா மீது யேமனின் ஈரான் ஆதரவு பெற்ற ஹூதி கிளா்ச்சியாளா்கள் செவ்வாய்க்கிழமை நடத்திய தீவிர வான்வழித் தாக்குதல்களில் பெண்கள், குழந்தைகள் உள்பட 73 போ் காயமடைந்துள்ளனர்.</p><p>
சவூதியின் தெற்குப் பிராந்தியத்தில் அமைந்துள்ள அப்ஹா, ஜஸான், நஜ்ரான், கமீஸ் முஷைத் ஆகிய நகரங்களில் உள்ள முக்கிய எண்ணெய் ஆலைகள் மற்றும் மின்சாரம், குடிநீா் போன்ற பொது விநியோகக் கட்டமைப்புகள் இத்தாக்குதல்களில் குறிவைக்கப்பட்டன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/de5b0438-6674-45e2-8f27-9a63d5799a7a/26-6aa130b7b2bfe.webp' /></p><p>


</p><p>
‘பாலிஸ்டிக்’ ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் நடத்தப்பட்ட இத்தாக்குதல்களால், எண்ணெய் ஆலைகளில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது.</p><p> இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அப்பகுதிகளில் எண்ணெய் உற்பத்தி மற்றும் செயல்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
</p><p>
யேமனின் ஜாவ்ஃப் மாகாண சிறைச்சாலை மீது சவூதி நடத்திய வான்வழித் தாக்குதலில் சிறுவன் உள்பட 7 போ் உயிரிழந்ததற்குப் பதிலடியாகவே இத்தாக்குதல் முன்னெடுக்கப்பட்டதாக ஹூதிக்கள் தெரிவித்துள்ளனா்.</p><p>

ஆனால், ‘இத்தாக்குதல் மிகக் கடுமையான அத்துமீறல். இதற்கு உரிய பதிலடி நிச்சயம் கொடுக்கப்படும்’ என்று சவூதி தலைமையிலான கூட்டுப் படை எச்சரித்துள்ளது.
</p><p><br></p>]]></content>
            <updated>2026-09-09T10:11:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Malaivanjan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மேல்கொத்மலை நீர்த்தேக்கத்தில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/body-of-a-man-recovered-kotmale-reservoir-1788946933"></link>
            <id>https://tamilwin.com/article/body-of-a-man-recovered-kotmale-reservoir-1788946933</id>
            <summary type="text">தலவாக்கலை- மேல்கொத்மலை நீர்த்தேக்கத்தில் இருந்து ஆண் ஒருவரின்
சடலம் மீட்கப்பட்டுள்ளது.

அப்புத்தளை ஹல்துமுல்லை தோட்டத்தைச் சேர்ந்த நபர் ஒருவரின் சட...</summary>
            <content type="html"><![CDATA[<p>தலவாக்கலை- மேல்கொத்மலை நீர்த்தேக்கத்தில் இருந்து ஆண் ஒருவரின்
சடலம் மீட்கப்பட்டுள்ளது.
</p><p>
அப்புத்தளை ஹல்துமுல்லை தோட்டத்தைச் சேர்ந்த நபர் ஒருவரின் சடலமே இன்றையதினம்(9)&nbsp; மீட்கப்பட்டுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
தலவாக்கலை சுமன பாடசாலைக்கு அருகாமையில் குறித்த நபருடைய கைப்பை ஒன்று
கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்டுள்ளது.

இதனை அவதானித்த பொதுமக்கள் உடனடியாக தலவாக்கலை பொலிஸாருக்கு தகவல்
வழங்கியுள்ளனர்.</p><h2>சடலம் மீட்பு</h2><p>

இதனையடுத்து, பொலிஸார் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினர் இன்று காலை முதல்
மேல்கொத்மலை நீர்த்தேக்கப் பகுதியில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

நீண்ட நேர தேடுதலின் பின்னர், நீர்த்தேக்கப் பகுதியில் இருந்து குறித்த நபரின்
சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/73bbae00-8256-4e22-a197-1324acc5fa55/26-6aa12e88e792d.webp' /></p><p>
</p><p>
மீட்கப்பட்ட சடலம் தொடர்பான நீதவான் விசாரணைகள் இடம்பெற்ற பின்னர், பிரேதப்
பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளது.
</p><p>
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் மேற்கொண்டு
வருகின்றனர்.</p><h2>விசாரணை</h2><p>

இதேவேளை, குறித்த நபர் நீர்த்தேக்கத்தில் மூழ்கி உயிரிழந்தாரா அல்லது வேறு
ஏதேனும் காரணங்களால் உயிரிழந்தாரா என்பது தொடர்பில் விசாரணைகள்
முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/748956f9-f2f1-4e6b-af76-bc1914cc742e/26-6aa12e89ac98f.webp' /></p><p>பிரேதப் பரிசோதனை மற்றும் பொலிஸ் விசாரணைகளின் பின்னரே மரணத்திற்கான காரணம்
தொடர்பில் மேலதிக தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-09T10:05:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rusath</name>
            </author>
            <title type="text"><![CDATA[குருக்கள்மடம் மனிதப் புதைகுழி விவகாரம்: மண் படிமப் பரிசோதனைக்கு நீதிமன்றம் உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/kurukkalmadam-mass-grave-issue-1788948133"></link>
            <id>https://ibctamil.com/article/kurukkalmadam-mass-grave-issue-1788948133</id>
            <summary type="text">1990ஆம் ஆண்டு புனித ஹஜ் யாத்திரையை நிறைவு செய்து கல்முனை வழியாக காத்தான்குடிக்கு பயணித்த முஸ்லிம்கள் ஆயுததாரிகளால் இடைமறிக்கப்பட்டு குருக்கள்மடம் பகுத...</summary>
            <content type="html"><![CDATA[<p>1990ஆம் ஆண்டு புனித ஹஜ் யாத்திரையை நிறைவு செய்து கல்முனை வழியாக காத்தான்குடிக்கு பயணித்த முஸ்லிம்கள் ஆயுததாரிகளால் இடைமறிக்கப்பட்டு குருக்கள்மடம் பகுதியில் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு, நேற்று (08.09.2026) களுவாஞ்சிகுடி நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
</p><p>
குறித்த சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மனிதப் புதைகுழி அமைந்துள்ளதாக நம்பப்படும் பகுதியில் மண் படிம மாதிரி பரிசோதனைகளை மேற்கொள்வதற்கான பூர்வாங்க நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயும் நோக்கில் வழக்கு நீதிமன்றில் அழைக்கப்பட்டது.</p><p>

கடந்த 24.08.2026 அன்று வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தின் பிரதிநிதிகள், கொழும்பு பிரதான சட்ட வைத்திய அதிகாரி, தொல்லியல் திணைக்கள அதிகாரிகள் மற்றும் மட்டக்களப்பு குற்றத்தடுப்பு பிரிவு காவல்துறை பொறுப்பதிகாரி ஆகியோர், குறித்த பகுதியில் மண் படிம மாதிரி பரிசோFW38AVதனைகளை மேற்கொள்வதற்கு தங்களுக்கு ஆட்சேபனை இல்லை என நீதிமன்றத்திற்கு அறிவித்திருந்தனர்.</p><p></p><h2>பூர்வாங்க ஏற்பாடுகள்</h2><p>
</p><p>
இதனடிப்படையில், எதிர்வரும் செப்டெம்பர் 14ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரையான ஒரு வார காலப்பகுதியில், சந்தேகிக்கப்படும் மனிதப் புதைகுழி அமைந்துள்ளதாக நம்பப்படும் பகுதியில் மண் படிம மாதிரி பரிசோதனைகளை மேற்கொள்ள நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9df74754-7273-4317-9076-3a87ec9b5873/26-6aa12ea8962bd.webp' /></p><p>

இதற்கிடையில், குறித்த பரிசோதனைகளை மேற்கொள்வதற்கான பூர்வாங்க ஏற்பாடுகள் தொடர்பில் ஆராய்வதற்காக, சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு நீதிமன்றத்தினால் அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்தது.
</p><p>
அதன்படி, மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் தவிசாளர் நீதிமன்றில் முன்னிலையாகி, சந்தேகிக்கப்படும் மனிதப் புதைகுழி அமைந்துள்ளதாக நம்பப்படும் பகுதியில் மண் படிம மாதிரி பரிசோதனைகளை மேற்கொள்வதற்கு பிரதேச சபையினால் வழங்கக்கூடிய அனைத்து ஒத்துழைப்புகளையும் வழங்கத் தயாராக இருப்பதாக நீதிமன்றத்திற்கு தெரிவித்தார்.
</p><p>
இதனைத் தொடர்ந்து, எதிர்வரும் 14ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரையான காலப்பகுதியில் குறித்த பகுதியில் மண் படிம மாதிரி பரிசோதனைகளை மேற்கொள்வதற்கான தேவையான கட்டளைகளை நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.</p><p>

மேலும், வழக்கு எதிர்வரும் 14.09.2026 அன்று மேலதிக நடவடிக்கைகளுக்காக மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-09T10:02:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[120 புலம்பெயர்வோருடன் வந்த படகுகள்: நாடாளுமன்றம் வரை சலசலப்பை ஏற்படுத்திய விவகாரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/parliment-debate-in-120-migrants-in-rnli-boats-1788948029"></link>
            <id>https://news.lankasri.com/article/parliment-debate-in-120-migrants-in-rnli-boats-1788948029</id>
            <summary type="text">Ports denied request to land 120 migrants in RNLI boats: 120 புலம்பெயர்வோருடன் வந்த படகுகளுக்கு துறைமுகங்கள் அனுமதி மறுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
...</summary>
            <content type="html"><![CDATA[<p>Ports denied request to land 120 migrants in RNLI boats: 120 புலம்பெயர்வோருடன் வந்த படகுகளுக்கு துறைமுகங்கள் அனுமதி மறுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
</p><p>


இங்கிலாந்திலுள்ள துறைமுகங்கள் இரண்டிற்கு 120 புலம்பெயர்வோருடன் வந்த படகுகளுக்கு அனுமதி மறுக்கப்பட்ட விடயம் நாடாளுமன்றம் வரை சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><h3>

120 புலம்பெயர்வோருடன் வந்த படகுகள்</h3><p>

இங்கிலாந்தின் Isle of Wight தீவினருகே 120 பேருடன், பாரம் தாங்காமல், மெல்ல நகர்ந்துகொண்டிருந்த புலம்பெயர்வோர் படகொன்றை, RNLI (Royal National Lifeboat Institution) என்னும் தொண்டு நிறுவனத்துக்குச் சொந்தமான இரண்டு படகுகள் கவனித்துள்ளன.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/450293bd-ccd0-411a-8438-0b3ccc1fdc3e/26-6aa12e3ec15ba.webp' /></p><p>
உடனடியாக அந்த படகிலிருந்தவர்கள் தங்கள் படகுகளில் ஏற்றிக்கொண்டு கரை திரும்ப முயன்றுள்ளன அந்த RNLI அமைப்பின் படகுகள்.
</p><p>
ஆனால், இங்கிலாந்திலுள்ள போர்ட்ஸ்மௌத் துறைமுகமோ, சௌதாம்டன் துறைமுகமோ, தங்களுக்கு அனுமதியளிக்கவில்லை என RNLI அமைப்பு கூறுகிறது.&nbsp;</p><p></p><p>

கடைசியாக, லாங்ஸ்டோன் துறைமுகத்துக்கு வந்தால், அங்கு புலம்பெயர்தல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் திரண்டு சாலையை மறித்துக்கொண்டு நின்றதாகவும் கூறுகிறது RNLI அமைப்பு.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/58c06170-03d0-499c-85fb-e11720c41424/26-6aa12e3f73e5a.webp' /></p><p>
இந்த விடயம் நாடாளுமன்றம் வரை சென்றுள்ளது.
</p><p>
போர்ட்ஸ்மௌத் நகர கவுன்சில் தலைவரான ஸ்டீவ் பிற், உள்துறை அலுவலகத்தில் சரியான திட்டமிடல் இல்லாததால் நிகழ்ந்த சம்பவங்களுக்கு உள்துறை அலுவலகம் பதில் கூறவேண்டியிருக்கும் என்று கூறியுள்ளார்.
</p><p>
அத்துடன், கோஸ்போர்ட் நாடாளுமன்ற உறுப்பினரான Dame Caroline Dinenage, Solent பகுதியிலுள்ள அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் என்ன நடக்கிறது என்பது குறித்த தகவல்களை சேகரிக்க முயன்றோம், உள்துறை அலுவலக தரப்பிலிருந்து மௌனம் மட்டுமே கிடைத்தது என்கிறார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a9a062aa-7aba-452f-903f-18f5242aab02/26-6aa12e4026b45.webp' /></p><p>
ஆகவே, பதற்றத்தையும் பயத்தையும் கட்டுப்படுத்தும் நிலையில் நாங்கள் இல்லை என்கிறார் அவர்.
</p><p>
அதாவது, கடலில் பயணித்துக்கொண்டிருந்த அந்த 120 புலம்பெயர்ந்தோர் எதற்காக சம்பந்தப்பட்ட துறைமுகங்களுக்குக் கொண்டுவரப்பட்டார்கள்.
</p><p>
அதற்கு உள்துறை அலுவலகம் அனுமதியளித்ததா, ஏன் அந்த துறைமுகங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன, ஏன் முன்கூட்டியே சம்பந்தப்பட்ட தொகுதிகளுக்கு தகவல் அளிக்கப்படவில்லை என கேள்விகள் முன்வைக்கப்பட்டுள்ளன. உள்துறை அலுவலகத் தரப்பில் திருப்திகரமான பதிலிலில்லை!&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-09T10:01:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிக்பாஸ் சொன்ன ஒரு விஷயம், கண்ணீர் விட்டு அழும் போட்டியாளர்கள்... பிக்பாஸ் 10, 3து புரொமோ இதோ]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/bigg-boss-tamil-season-10-9th-september-promo-3-1788947005"></link>
            <id>https://cineulagam.com/article/bigg-boss-tamil-season-10-9th-september-promo-3-1788947005</id>
            <summary type="text">பிக்பாஸ் 10105 நாட்கள் மக்களை என்டர்டெயின்மென்ட் செய்யும் நிகழ்ச்சியாக ஒளிபரப்பாகி வருகிறது பிக்பாஸ். 10வது சீசன் கடந்த செப்டம்பர் 6ம் தேதி படு பிரம்ம...</summary>
            <content type="html"><![CDATA[<h2>பிக்பாஸ் 10</h2><p>105 நாட்கள் மக்களை என்டர்டெயின்மென்ட் செய்யும் நிகழ்ச்சியாக ஒளிபரப்பாகி வருகிறது பிக்பாஸ். </p><p>10வது சீசன் கடந்த செப்டம்பர் 6ம் தேதி படு பிரம்மாண்டமாக துவங்கப்பட்டது, மக்கள் ஏற்கெனவே சீரியல்களில், படங்களில், ரியாலிட்டி ஷோக்களில் பார்த்து ரசித்த பிரபலங்கள் கலந்துகொண்டுள்ளனர்.
</p><p>அதேபோல் மக்களுக்கு அறிமுகம் இல்லாத சிலரும் கலந்துகொண்டுள்ளனர், அதிரடி சரவெடியாக முதல் நாள் நிகழ்ச்சி இருந்த நிலையில் கடந்த 2 நாட்களும் பிக்பாஸ் பரபரப்பாக தான் செல்கிறது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7785391e-2399-4ef5-a118-79436749041d/26-6aa12c431772b.webp' /></p><h2>புரொமோ
</h2><p>இன்று பிக்பாஸ் 10வது சீசனின் 3வது புரொமோ வெளியாகியுள்ளது. </p><p>அதில் பிக்பாஸ் சொன்ன ஒரு விஷயத்தை கேட்டு போட்டியாளர்கள் அனைவரும் கண்ணீர்விட்டு அழுகிறார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/05571290-ee5b-44e8-af76-bc04fd7487cd/26-6aa12c42209d6.webp' /></p><p> </p><p>அது என்ன விஷயம் என்றால், பிளாக் பாண்டியின் உடல்நிலை சரியில்லையாம், மருத்துவர் ஆலோசனைப்படி அவரை இந்த வீட்டைவிட்டு வெளியே அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது என கூற அனைவரும் கண்ணீர்விட்டு அழுகிறார்கள். </p><p>இதோ புரொமோ,</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/SD6_n1XZLi0" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-09-09T10:00:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ராஜ்நாத் சிங் பயணத்தின் பின்னணியில் கொழும்பை வந்த ஐ.என்.எஸ் போர்க்கப்பல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/ins-udaygiri-arrives-colombo-amid-indian-defence-1788945106"></link>
            <id>https://ibctamil.com/article/ins-udaygiri-arrives-colombo-amid-indian-defence-1788945106</id>
            <summary type="text">இந்திய கடற்படையால் உள்நாட்டில் நிர்மாணிக்கப்பட்ட பல்நோக்கு ஸ்டெல்த் போர்க்கப்பலான INS உதயகிரி, மூன்று நாள் செயல்பாட்டு இடைநிறுத்தப் பயணத்திற்காக நேற்ற...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்திய கடற்படையால் உள்நாட்டில் நிர்மாணிக்கப்பட்ட பல்நோக்கு ஸ்டெல்த் போர்க்கப்பலான INS உதயகிரி, மூன்று நாள் செயல்பாட்டு இடைநிறுத்தப் பயணத்திற்காக நேற்று (08) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
</p><p>
இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் இலங்கை விஜயம் இடம்பெறும் நிலையில், இந்தப் போர்க்கப்பலின் வருகையும் இடம்பெற்றுள்ளது.</p><p>

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் தகவலின்படி, இந்திய கடற்படையின் நடமாடும் பயிற்சிக் குழுவினரால் தொழில்நுட்பப் பயிற்சிகள் மற்றும் அனுபவப் பகிர்வுகளை வழங்குவதன் மூலம், இலங்கை கடற்படையுடனான இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதே இந்த விஜயத்தின் நோக்கமாகும்.</p><p></p><h2>விமானந்தாங்கிக் கப்பலுடன்</h2><p>

மேலும், இலங்கை கடற்படை மற்றும் விமானப்படைக்குத் தேவையான இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களுக்கான உதிரிப் பாகங்களையும் INS உதயகிரி கொண்டு வந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bc0216ab-ad29-481c-a1d1-9e5e749a2843/26-6aa1295972b83.webp' /></p><p>
</p><p>
கப்பலின் கட்டளை அதிகாரி கெப்டன் விகாஸ் சூட், மேற்கு கடற்படைப் பிராந்தியத் தளபதி ரியர் அட்மிரல் G.H.S.E. டி சில்வாவை உத்தியோகபூர்வமாக சந்திக்கவுள்ளார்.
</p><p>
இந்திய பாதுகாப்பு அமைச்சரின் இலங்கை விஜயத்தின் ஒரு பகுதியாக, இலங்கை முக்கியஸ்தர்களுக்கான வரவேற்பு நிகழ்வொன்றும் INS உதயகிரி கப்பலில் நடத்தப்படவுள்ளது.
</p><p>
இதேவேளை, இந்திய மற்றும் இலங்கை கடற்படை வீரர்களுக்கு இடையில் தொழில்சார் மற்றும் விளையாட்டு நடவடிக்கைகள் இடம்பெறவுள்ளதுடன், “க்ளீன் ஸ்ரீலங்கா” திட்டத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் கொழும்பில் நடைபெறும் கடற்கரை சுத்தப்படுத்தும் பணியிலும் கப்பல் குழுவினர் பங்கேற்கவுள்ளனர்.</p><p>

INS உதயகிரி கடந்த 2025 நவம்பர் மாதம் INS விக்ராந்த் விமானந்தாங்கிக் கப்பலுடன் இணைந்து கொழும்புக்கு விஜயம் செய்திருந்ததுடன், SLN IFR-2025 நிகழ்விலும் பங்கேற்றிருந்தது.</p><p>

மேலும், டித்வா சூறாவளியின் போது மனிதாபிமான உதவி மற்றும் அனர்த்த நிவாரண நடவடிக்கைகளிலும் இந்தப் போர்க்கப்பல் பங்கேற்று, உடனடி நிவாரணப் பொருட்களை வழங்கியிருந்தது.
</p><p>
இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் தகவலின்படி, இந்திய கடற்படைக் கப்பல்களின் இலங்கை விஜயங்கள் “பிராந்தியங்கள் முழுவதும் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிக்கான பரஸ்பர மற்றும் முழுமையான முன்னேற்றம்” (MAHASAGAR) என்ற இந்தியாவின் தொலைநோக்குப் பார்வையையும், “அயல்நாடுகளுக்கு முதலிடம்” (Neighbourhood First) என்ற கொள்கையையும் உறுதிப்படுத்துகின்றன.</p><p>

இதன் மூலம் இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலான நட்புறவும், பிராந்திய பாதுகாப்பு ஒத்துழைப்பும் மேலும் வலுப்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-09T09:56:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை பெண்கள் இருவர் விமான நிலையத்தில் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/two-sri-lankan-women-arrested-at-the-airport-1788947846"></link>
            <id>https://jvpnews.com/article/two-sri-lankan-women-arrested-at-the-airport-1788947846</id>
            <summary type="text">&amp;nbsp; சுமார் 5 கோடியே 37 இலட்சத்து 20 ஆயிரம் ரூபாய் பெறுமதியான &#039;குஷ்&#039; போதைப்பொருளை நாட்டுக்குள் கடத்த முற்பட்ட இரண்டு இலங்கை பெண் வர்த்தகர்கள் கட்டுந...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; சுமார் 5 கோடியே 37 இலட்சத்து 20 ஆயிரம் ரூபாய் பெறுமதியான 'குஷ்' போதைப்பொருளை நாட்டுக்குள் கடத்த முற்பட்ட இரண்டு இலங்கை பெண் வர்த்தகர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டனர். </p><p>

விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகள் குறித்த சந்தேகநபர்களை இன்று (09) காலை கைது செய்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/be9ac26b-6be7-41cc-8e64-33761eb1499c/26-6aa12d885970a.webp' /></p><p></p><h2>&nbsp;தாய்லாந்தின் பேங்கொக் நகரிலிருந்து&nbsp;&nbsp;குஷ்' போதைப்பொருள்</h2><p> 

கைதானவர்கள் கொழும்பு, தெமட்டகொட மற்றும் தொட்டலங்க ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 33 மற்றும் 35 வயதுடைய இரண்டு பெண்கள் என தெரியவந்துள்ளது. </p><p>

இவர்கள் தாய்லாந்தின் பேங்கொக் நகரிலிருந்து இன்று முற்பகல் 10.55 மணிக்கு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் UL-403 ரக விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.</p><p></p><p> 

சந்தேகநபர்கள் கொண்டு வந்த இரண்டு பயணப் பொதிகளில், 5 பொதிகளில் பொதியிடப்பட்டிருந்த 5 கிலோ 372 கிராம் எடையுள்ள 'குஷ்' போதைப்பொருளை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.</p><p></p><p> 

கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேகநபர்களும் இன்று நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-09T09:54:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[அஸ்வெசும நிதி மோசடி ; 6 ஆசிரியர்கள் இடைநிறுத்தம் ; பெண் அதிகாரிகளுக்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/aswesuma-fraud-6-teachers-suspended-1788947283"></link>
            <id>https://jvpnews.com/article/aswesuma-fraud-6-teachers-suspended-1788947283</id>
            <summary type="text">நோர்வூட் பிரதேச செயலகத்தில் 2 கோடி ரூபாய்க்கும் அதிகமான அஸ்வெசும நிதி மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள, அங்குள்ள பிரிவு பொறுப்பாளர்களான இரண்டு பெண...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">நோர்வூட் பிரதேச செயலகத்தில் 2 கோடி ரூபாய்க்கும் அதிகமான அஸ்வெசும நிதி மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள, அங்குள்ள பிரிவு பொறுப்பாளர்களான இரண்டு பெண் சந்தேகநபர்களையும் எதிர்வரும் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க ஹட்டன் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
</p><p style="text-align: justify;">
குறித்த இருவரும் நேற்று (08) ஸ்கைப் தொழில்நுட்பம் ஊடாக நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2559ae3e-4042-4fbf-bed6-89ed2360ea29/26-6aa12b55354d3.webp' /></p><h2 style="text-align: justify;">&nbsp;மேலதிக விசாரணைகள்&nbsp;</h2><p style="text-align: justify; ">நிதி அமைச்சு மற்றும் நுவரெலியா மாவட்ட செயலக அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணைகளில், ஹட்டன் வலயக் கல்வி அலுவலகத்தின் கீழ் பணியாற்றும் 6 ஆசிரியர்களின் வங்கிக் கணக்குகளுக்கும் சந்தேகத்திற்கிடமான முறையில் பணம் வரவு வைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
</p><p style="text-align: justify;">
நுவரெலியா மாவட்ட செயலாளர் துஷாரி தென்னகோனின் அறிவுறுத்தலின் பேரில், குறித்த 6 ஆசிரியர்களின் பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன், அவர்களின் வங்கிக் கணக்குகள் தொடர்பிலும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.</p><p>
</p><p style="text-align: justify;">
இந்த மோசடி தொடர்பில் மேலும் 13 சந்தேகநபர்கள் கைது செய்யப்படவுள்ளதாகவும், மோசடி செய்யப்பட்ட தொகை 2 கோடி ரூபாயைத் தாண்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;">
</p><p style="text-align: justify;">
இதனையடுத்து, குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக ஹட்டன் குற்ற விசாரணைப் பிரிவு நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.</p><p style="text-align: justify;">

மேலும், பிரதான சந்தேகநபர்களில் ஒருவரின் சகோதரரின் வங்கிக் கணக்கிலும் பெருமளவு பணம் வரவு வைக்கப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
</p><p style="text-align: justify;">
இதையடுத்து, நுவரெலியா மாவட்ட செயலகத்தில் உயர் பதவி வகித்த குறித்த சந்தேகநபரின் பணியையும் தற்காலிகமாக இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p style="text-align: justify;">

குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p><p style="text-align: justify;"></p>]]></content>
            <updated>2026-09-09T09:50:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஏமன் போர் சவுதி அரேபியாவை எட்டினால், மெக்கா பாதுகாப்பு உடன்படிக்கை செயல்படும்: பாகிஸ்தான் எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/pakistan-warns-mecca-pact-may-trigger-war-1788946175"></link>
            <id>https://news.lankasri.com/article/pakistan-warns-mecca-pact-may-trigger-war-1788946175</id>
            <summary type="text">Pakistan warns mecca pact may trigger war: ஏமன் போர் சவுதி அரேபியாவை எட்டினால், மெக்கா பாதுகாப்பு உடன்படிக்கை செயல்படும் என பாகிஸ்தான் எச்சரித்துள்ளது...</summary>
            <content type="html"><![CDATA[<p>Pakistan warns mecca pact may trigger war: ஏமன் போர் சவுதி அரேபியாவை எட்டினால், மெக்கா பாதுகாப்பு உடன்படிக்கை செயல்படும் என பாகிஸ்தான் எச்சரித்துள்ளது.
</p><p>
பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் கவாஜா ஆசிப், ஏமன் போரின் தாக்கம் சவுதி அரேபியாவை எட்டினால், கடந்த மாதம் மெக்காவில் கையெழுத்திடப்பட்ட மெக்கா கூட்டு பாதுகாப்பு உடன்படிக்கை உடனடியாக செயல்படுத்தப்படும் என தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/60e1d4b9-236f-4ef7-8ec9-530e60d1ed09/26-6aa12bc1e9fd9.webp' /></p><p>

இந்த உடன்படிக்கை ஆகஸ்ட் 7 அன்று பாகிஸ்தான், சவுதி அரேபியா மற்றும் துருக்கி ஆகிய மூன்று நாடுகளால் கையெழுத்திடப்பட்டது. ஒரு உறுப்புநாட்டின் மீது தாக்குதல் நடத்தப்படுவது, மூன்று நாடுகளின் மீதும் தாக்குதல் நடத்தப்படுவது போலவே கருதப்படும் என ஆசிப் எச்சரித்துள்ளார்.
</p><p>
“இதில் எந்த குழப்பமும் இருக்கக் கூடாது. இது ஒரு கூட்டு பாதுகாப்பு உடன்படிக்கை. சவுதி அரேபியாவிற்கு எதிரான தாக்குதல், மூன்று நாடுகளின் மீதும் தாக்குதல் என கருதப்படும்” என ஆசிப் தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p></p><p>இந்த அறிவிப்பு, ஏமனின் ஹவுதி படைகள் சவுதி அரேபியாவின் நகரங்கள் மற்றும் எரிசக்தி அமைப்புகளை குறிவைத்து ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல்கள் நடத்திய சில மணி நேரங்களுக்குப் பிறகு வெளியிடப்பட்டது. இதில் குறைந்தது 73 பொதுமக்கள் காயமடைந்தனர்.
</p><p>
இந்த நிலைமை, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் புதிய பதற்றத்தை உருவாக்கியுள்ளது. ஏமன் போரின் தாக்கம் சவுதி அரேபியாவை எட்டினால், துருக்கி மற்றும் பாகிஸ்தான் நேரடியாக இராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டிய சூழல் உருவாகும் அபாயம் உள்ளது.
</p><p>
பொருளாதார மற்றும் பாதுகாப்பு நிபுணர்கள், இந்த உடன்படிக்கை செயல்படுத்தப்பட்டால், பிராந்தியத்தில் பெரிய அளவிலான போர் வெடிக்கும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கின்றனர்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-09T09:47:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[4 கல்யாணம் பண்ண உனக்கு திமிரா? முனியம்மாவுக்கு பதிலடி கொடுத்த வனிதா..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/muniyamma-attacks-vanitha-vijayakumar-biggboss10-1788947530"></link>
            <id>https://viduppu.com/article/muniyamma-attacks-vanitha-vijayakumar-biggboss10-1788947530</id>
            <summary type="text">வனிதாபிக்பாஸ் சீசன் 10 நிகழ்ச்சி கடந்த செப்டம்பர் 6 ஆம் தேதி தொடங்கியது. விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சியில் காமன் மேட் போட்டியில் வெற்றி...</summary>
            <content type="html"><![CDATA[<h3>வனிதா</h3><p>பிக்பாஸ் சீசன் 10 நிகழ்ச்சி கடந்த செப்டம்பர் 6 ஆம் தேதி தொடங்கியது. விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சியில் காமன் மேட் போட்டியில் வெற்றிப்பெற்ற முனியம்மாள் பிக்பாஸ் சீசன் 10 வீட்டிற்குள் போட்டியாளராக சென்றுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c1a9f770-c8cd-4de0-9207-948fbf8c50a1/26-6aa12c4ce0686.webp' /></p><p> </p><p>இந்நிலையில் காமன் மேன் போட்டியின் போது முனியம்மாள், வனிதாவிடம் பேசிய விஷயம் தான் தற்போது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. போட்டியாளர் டார்வின், வனிதாவிடம், நீங்க பல திருமணங்கள் பண்ணியிருந்தாலும், உங்க அப்பா விஜயகுமார் பேரை மட்டும் ஏன் விடாம வச்சுருக்கீங்க என்று கேட்டார். </p><p>அதற்கு வனிதா பெத்தவன் அவன் தானே என்று கூற, போட்டியாளர் மணி, உங்களுக்கு ஏன் இவ்வளவு திமிரு என்றதும், நான் விஜயகுமாரோட பொண்ணுடா! என்று வனிதா பதிலளித்தார். </p><p>அதன்பின் பேசிய முனியம்மா, நீங்க ஒரு தமிழ் பெண் தானே? அப்போவோட திமிரு இருக்குனு சொன்னீங்க என்று கேட்க, கடுப்பான வனிதா, தமிழை முதல்ல ஒழுங்கா சொல்லு, அதைக்கூட சொல்ல தெரியாம என்ன கேள்வி கேட்க வந்துட்ட என்றார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/be1eeaac-41d0-4a86-86a7-0e0cb6e2934d/26-6aa12c4d95586.webp' /></p><p> </p><h2>முனியம்மா</h2><p>உடனே முனியம்மா, நான் தமிழை ஒழுங்கா சொல்றேனோ இல்லையோ, ஆனா உனக்கு உங்க சொந்த வாழ்க்கையை ஒழுங்கா வாழத் தெரியலையே, எதற்காக 4 பேரை கல்யாணம் பண்ணீங்க என்று மேடையிலேயே கேட்டுள்ளார். </p><p>ஆத்திரத்தின் உச்சிக்கே சென்ற வனிதா, உங்க புருஷம், பொண்டாட்டி, அப்பன் பேர்லாம் எனக்கு தெரியாது, தேவையும் இல்லை, ஆனா என் அடையாளம் என்னன்னு எனக்கு நல்லாவே தெரியும். அதுதான் என் ஐடெண்டிட்டி, இதற்கு மேல என் பர்சனல் வாழ்க்கையை பத்தி பேசினீங்கன்னா, உங்களைவிட ஒரு கேவலமான ஜந்து இந்த உலகத்திலையே இருக்க முடியாது என்று விளாசியுள்ளார்.</p>]]></content>
            <updated>2026-09-09T09:45:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[Instagram Photo Trend: வைரலாகும் 80-ஸ் போட்டோ ட்ரெண்ட்! நீங்களும் எளிதில் உருவாக்கலாம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/1980s-look-chatgpt-prompts-for-the-viral-ai-trend-1788945468"></link>
            <id>https://manithan.com/article/1980s-look-chatgpt-prompts-for-the-viral-ai-trend-1788945468</id>
            <summary type="text">80s photo trend : இன்ஸ்டாகிராமில் ஒரு புதிய டிரெண்ட் பிரபலமாகி வருகிறது. இதில் பயனர்கள் ChatGPT-யின் AI இமேஜ் ஜெனரேஷன் மூலம் தங்களை 1980-களின் ஸ்டைலில...</summary>
            <content type="html"><![CDATA[<p>80s photo trend : இன்ஸ்டாகிராமில் ஒரு புதிய டிரெண்ட் பிரபலமாகி வருகிறது. இதில் பயனர்கள் ChatGPT-யின் AI இமேஜ் ஜெனரேஷன் மூலம் தங்களை 1980-களின் ஸ்டைலில் போட்டோவாக மாற்றுகிறார்கள். இதனை எவ்வாறு எளிமையான முறையில் உருவாக்கலாம் என்பது குறித்து இங்கு பார்க்கலாம்.</p><p>தற்போது பயனர்கள் சாட்ஜிபிடி போன்ற AI கருவிகளைப் பயன்படுத்தி தங்களின் தற்போதைய புகைப்படங்களை 1980-களின் விண்டேஜ் தோற்றம் கொண்ட படங்களாக மாற்றி வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fc64b09a-b7b2-4e49-bfa8-c58c601a776a/26-6aa12a10888c6.webp' /></p><p> பழைய கால உடைகள், ஹேர் ஸ்டைல், நிறங்கள் மற்றும் கேமரா எஃபெக்ட்களுடன் உருவாகும் இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பலரது கவனத்தையும் ஈர்த்து வருகின்றன.நீங்களும் இதுபோன்ற புகைப்படங்களை எளிதாக உருவாக்கலாம்.</p><h2>பழைய நினைவுகளை மீட்டெடுக்கும் AI!</h2><p>சாட்ஜிபிடி 80-ஸ் போட்டோ டிரெண்ட் என்பது வெறும் ஃபில்டர் மாற்றம் மட்டுமல்ல. AI தொழில்நுட்பம் மூலம் புகைப்படத்தில் உள்ள ஹேர்ஸ்டைல், உடை, மேக்கப், பின்னணி, ஒளியமைப்பு உள்ளிட்ட பல அம்சங்கள் மாற்றப்படுகின்றன.</p><p>இதன் மூலம் 1980-களின் ஃபேஷன் மற்றும் கேமரா தோற்றத்துடன் தத்ரூபமான விண்டேஜ் புகைப்படத்தை உருவாக்க முடியும். பழைய கால நினைவுகளை மீண்டும் உருவாக்கும் வகையில் இந்த டிரெண்ட் தற்போது சமூக வலைதளங்களில் பிரபலமாகி வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f505c72e-2805-4e03-8fc3-fabda4f05ced/26-6aa12a113da36.webp' /></p><p><b>&nbsp;உங்கள் 80-ஸ் போட்டோவை நீங்களே எளிதாக உருவாக்கலாம். </b></p><p>முதலில் சாட்ஜிபிடியில் உங்களின் புகைப்படத்தை அப்லோட் செய்யுங்கள். பின்னர் 1980-களின் உடை, ஹேர்ஸ்டைல், மேக்கப், பின்னணி, கேமரா எஃபெக்ட் உள்ளிட்ட விவரங்களை தெளிவாகக் குறிப்பிடுங்கள்.</p><p> நீங்கள் விரும்பும் ரெட்ரோ ஸ்டைலையும் சொல்லலாம். அதற்கேற்ப AI உங்கள் புகைப்படத்தை விண்டேஜ் தோற்றத்தில் மாற்றி உருவாக்கும். </p><p>பின்னர் தேவைக்கேற்ப மாற்றங்களைச் சொல்லி, படத்தை மேலும் தத்ரூபமாகவும் அழகாகவும் உருவாக்கிக் கொள்ளலாம்.</p><p>
</p><p>பாலிவுட் ஸ்டைல் முதல் குடும்ப ஆல்பம் வரை, உங்கள் 80-ஸ் போட்டோவை விருப்பத்திற்கேற்ப கஸ்டமைஸ் செய்யலாம். </p><p>ரெட்ரோ திருமணம், டிஸ்கோ பார்ட்டி, பழைய குடும்ப புகைப்படம், விண்டேஜ் ஸ்டுடியோ என பல்வேறு பின்னணிகளைத் தேர்வு செய்யலாம்.உடை, ஹேர்ஸ்டைல், மேக்கப் உள்ளிட்டவற்றையும் மாற்றி அமைக்க முடியும்.</p><p>குறிப்பாக இந்திய 80-ஸ் காலத்து கலாச்சாரம் மற்றும் ஃபேஷனை பிரதிபலிக்கும் வகையில் தத்ரூபமான புகைப்படங்களையும் உருவாக்கலாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/142d54dc-074e-4210-8cfa-e6730f5a88a4/26-6aa12a11e5834.webp' /></p><p>
</p><h2>எப்படி உருவாக்குவது?</h2><p>80-ஸ் போட்டோவை உருவாக்கும் வழிகள்:

சாட்ஜிபிடியை திறக்கவும்: ChatGPT-ல் படத்தை உருவாக்கும் வசதியைத் தேர்வு செய்யுங்கள். </p><p>உங்கள் புகைப்படத்தை அப்லோட் செய்யவும்:
தெளிவான, முகம் நன்றாகத் தெரியும் புகைப்படத்தை பதிவேற்றுங்கள்.
விரும்பிய ஸ்டைலை குறிப்பிடவும்: “1980-களின் இந்திய விண்டேஜ் புகைப்படமாக மாற்றவும்” என்று கேட்கலாம்.</p><p>
விவரங்களைச் சேர்க்கவும்: பழைய கால உடை, ஹேர்ஸ்டைல், ஸ்டுடியோ பின்னணி, ஃபிலிம் கேமரா தோற்றம், விண்டேஜ் நிறங்கள் போன்றவற்றைக் குறிப்பிடுங்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ec57225b-68f0-439f-b3ef-11088c24a269/26-6aa12a129bc78.webp' /></p><p>
</p><p>பின்னணியை தேர்வு செய்யவும்: பழைய குடும்ப ஆல்பம், திருமண நிகழ்வு, பாலிவுட் ஸ்டைல், டிஸ்கோ பார்ட்டி அல்லது ரெட்ரோ ஸ்டுடியோ போன்ற பின்னணிகளை கேட்கலாம்.
</p><p>மாற்றங்களைச் சொல்லுங்கள்: முதல் படம் பிடிக்கவில்லை என்றால், “இன்னும் 80-ஸ் காலத்து தோற்றம் வேண்டும்”, “இந்திய ரெட்ரோ ஸ்டைலில் மாற்றவும்” எனக் கூறி மீண்டும் உருவாக்கலாம்.
</p><p>இறுதியில் உங்கள் விருப்ப்படி உருவாக்கப்பட்ட புகைப்படத்தை சேமிக்கவும்: பிடித்த தோற்றம் கிடைத்தவுடன், அதை உங்கள் சமூக வலைதளங்களில் பகிரலாம்.
</p><p>இவ்வாறு சில வரிகள் கொண்ட AI கட்டளையைப் பயன்படுத்தினாலே, பழைய ஆல்பம் புகைப்படங்களை நினைவுபடுத்தும் வகையில் புதிய படங்களை&nbsp; எளிமையாக உருவாக்க முடியும்.</p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்<b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"> FOLLOW NOW</a></u></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-09T09:43:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் புதிய பிரதம நிறைவேற்று அதிகாரி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/new-chief-executive-officer-of-srilankan-airlines-1788944180"></link>
            <id>https://tamilwin.com/article/new-chief-executive-officer-of-srilankan-airlines-1788944180</id>
            <summary type="text">ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் புதிய பிரதம நிறைவேற்று அதிகாரியாக விபுல் மிஸ்ர நியமிக்கப்பட்டுள்ளார்.இவர் இதற்கு முன்னர் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவன...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் புதிய பிரதம நிறைவேற்று அதிகாரியாக விபுல் மிஸ்ர நியமிக்கப்பட்டுள்ளார்.</p><p>இவர் இதற்கு முன்னர் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் பொறியியல் தலைவராகப் பணியாற்றினார்.&nbsp;</p><p>இந்நிறுவனத்தில் பொறியியல் பிரிவுத் தலைவராகவும் பொறுப்பான மேலாளராகவும் (Accountable Manager) பணியாற்றி வந்த இவர், தற்போது இப் புதிய பொறுப்பை ஏற்றுள்ளார்.</p><p>
2024ஆம் ஆண்டில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் இணைந்த விபுல் மிஸ்ரா, விமானப் பொறியியல் மற்றும் சிரேஷ்ட விமானப் போக்குவரத்து நிர்வாகத்தில் பரந்த அனுபவம் கொண்டவராவார்.</p><h2>முக்கிய பதவிகள்..&nbsp;</h2><p> </p><p>இதற்கு முன்னர், இந்தியாவின் முன்னணி விமான நிறுவனங்களான ஏர் இந்தியா, ஸ்பைஸ்ஜெட், விஸ்தாரா மற்றும் இண்டிகோ ஆகியவற்றில் சிரேஷ்ட பதவிகளை வகித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f0e94ef0-1019-453f-ad08-6dbda721871b/26-6aa129227fb9a.webp' /></p><p>
</p><p>
தேசிய விமான நிறுவனமான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் ஒரு முக்கிய மறுசீரமைப்பு கட்டத்திற்குள் நுழைய ஆயத்தமாகி வரும் முக்கியமானதொரு சூழலில் இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளது. </p><p>அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட ஹன்ஸ் விஜயசூரிய தலைமையிலான நிபுணர் குழுவின் பரிந்துரைகளைத் தொடர்ந்து, எதிர்வரும் ஆறு மாதங்களுக்குள் இந்த மறுசீரமைப்பு நடவடிக்கைகள் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், மிஸ்ரவின் இந்நியமனம் நிறுவனத்தின் செயல்பாட்டுத் திறன் மற்றும் நிதி ஸ்திரத்தன்மைக்கு பெரும் பக்கபலமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-09T09:43:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thevanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுதுமலைப் பகுதியில் நிலவும் வெள்ளப் பிரச்சினை : நிரந்தரத் தீர்வை முன்னெடுக்க தீர்மானம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/the-flooding-problem-in-the-sutumalai-area-1788945161"></link>
            <id>https://tamilwin.com/article/the-flooding-problem-in-the-sutumalai-area-1788945161</id>
            <summary type="text">சுதுமலைப் பகுதியில் நிலவும் வெள்ளப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வை
ஏற்படுத்தும் வகையில், மாகாண நீர்ப்பாசனத் திணைக்களமும் வலிகாமம் தெற்கு
மேற்கு பிரத...</summary>
            <content type="html"><![CDATA[<p>சுதுமலைப் பகுதியில் நிலவும் வெள்ளப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வை
ஏற்படுத்தும் வகையில், மாகாண நீர்ப்பாசனத் திணைக்களமும் வலிகாமம் தெற்கு
மேற்கு பிரதேச சபையும் இணைந்து வாய்க்கால் புனரமைப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளை
உடனடியாக முன்னெடுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. </p><p>அத்துடன், குறித்த பகுதியில்
நீரைத் தேக்கி வைக்கும் திறனை மேம்படுத்துவதற்காக பொருத்தமான குளங்களையும்
உடனடியாகத் தூர்வாருவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
</p><h2>வெள்ளப்பாதிப்பைத் தடுப்பதற்கு</h2><p>
சுதுமலைப் பகுதியில் நிலவும் வெள்ளப்பெருக்கு மற்றும் வாய்க்கால்களில்
காணப்படும் தடைகள் தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில்
ஆளுநர் செயலகத்தில் நேற்று(08.09.2026) முன்னெடுக்கப்பட்ட
கலந்துரையாடலின் போது இவ்வாறு தீர்மானிக்கப்பட்டது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3e72cecc-b2fa-4108-9165-31e7ad2b2846/26-6aa12579af60f.webp' /></p><p>
வெள்ளநீர் இயற்கையாகச் சென்று தேங்கக்கூடிய வகையில் நீர்வழிகளைச்
சீரமைப்பதுடன், மழைக்காலங்களில் அதிகளவில் தேங்கும் நீரைச் சேமித்து
பயன்படுத்தக்கூடிய வகையில் அப்பகுதியில் காணப்படும் பொருத்தமான குளங்களைத்
தூர்வாருவதற்கும் உடனடி நடவடிக்கை எடுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.</p><p>

சுதுமலைப் பகுதியில் வெள்ளப்பாதிப்பைத் தடுப்பதற்கான இந்நடவடிக்கைகள்
தாமதமின்றி ஆரம்பிக்கப்பட்டு, தேவையான மேலதிக நடவடிக்கைகளும் நிலைமைகளின்
அடிப்படையில் தொடர்ந்து அடுத்தகட்டமாகவும் முன்னெடுக்கப்படவுள்ளன.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-09T09:43:09+00:00</updated>
        </entry>
    </feed>
