<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-09-19T10:23:44+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Tony</name>
            </author>
            <title type="text"><![CDATA[முன்பதிவு வசூலில் உச்சம் தொட்ட நானி-யின் 'பாரடைஸ்']]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/paradise-movie-pre-booking-1789809627"></link>
            <id>https://cineulagam.com/article/paradise-movie-pre-booking-1789809627</id>
            <summary type="text">பாரடைஸ்நானி, கயாடு லோகர் நடிப்பில் இந்த வாரம் பிரம்மாண்டமாக திரைக்கு வரவிருக்கும் படம் பாரடைஸ். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ஏற்கனவே அனிருத...</summary>
            <content type="html"><![CDATA[<h2>பாரடைஸ்</h2><p>நானி, கயாடு லோகர் நடிப்பில் இந்த வாரம் பிரம்மாண்டமாக திரைக்கு வரவிருக்கும் படம் <a href="https://www.dinamani.com/cinema/cinema-news/2026/Sep/18/nani-doesnt-want-the-paradise-called-pan-india-heres-why" target="_blank">பாரடைஸ்</a>. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/879d56d7-9f2f-4906-9b06-cd58ebbec01a/26-6aae53de9a195.webp' /></p><p></p><p>ஏற்கனவே அனிருத் இசையில் இப்படத்தின் இரண்டு பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் ஹிட் அடித்தன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3f11af6a-b587-4a27-b96f-e5f0c5662f98/26-6aae53df55f11.webp' /></p><p></p><h2>முன்பதிவு&nbsp;</h2><p> </p><p>

இந்நிலையில் பாரடைஸ் தெலுங்கு மட்டுமின்றி தமிழ், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் வெளியாகவுள்ளது. மேலும் இந்த படம் ரசிகர்களுக்கு புதிய அனுபவமாக இருக்க வேண்டும் என ட்ரைலரே ரிலீஸ் செய்யவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2331dabf-f043-442e-9ed1-bb9b35b74169/26-6aae53e00e750.webp' /></p><p></p><p> அப்படியிருந்தும் இந்த படத்தின் முன்பதிவு நார்த் அமெரிக்காவில் தொடங்கி 5.5 லட்சம் டாலர் முன்பதிவு வசூலாகியுள்ளதாம். கண்டிப்பாக 10+ லட்சம் டாலர் முதல் நாள் வசூல் வட அமெரிக்காவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p>]]></content>
            <updated>2026-09-19T10:20:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[அனோஜனுக்கு மன்னிப்பு பெற்றுத்தர முயற்சி ; அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/minister-nalinda-jayatissa-seeks-pardon-for-anojan-1789813137"></link>
            <id>https://jvpnews.com/article/minister-nalinda-jayatissa-seeks-pardon-for-anojan-1789813137</id>
            <summary type="text">சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் சிவராசா அனோஜனுக்கு மன்னிப்பு பெற்றுத்தர முடிந்தவரை முயற்சிப்பதாக சுகாதார மற்றும் ஊடக அம...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் சிவராசா அனோஜனுக்கு மன்னிப்பு பெற்றுத்தர முடிந்தவரை முயற்சிப்பதாக சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.</p><p style="text-align: justify; ">

 

இது தொடர்பில் வெளிவிவகார அமைச்சு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும், விதிக்கப்பட்டுள்ள தண்டனையைக் குறைப்பதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு என்றும் அவர் குறிப்பிட்டார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7793291d-6b7b-44df-a087-be5d8e718201/26-6aae61931e38a.webp' /></p><p style="text-align: justify; ">

 

இது குறித்து வெளிவிவகார அமைச்சுக்குத் தகவல் கிடைத்ததையடுத்து, ஐக்கிய அரபு இராச்சிய (சவூதி) அரசாங்கத்துடன் பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.</p><p style="text-align: justify; ">

 

அத்துடன், சிவராசா அனோஜனுக்கு சட்ட உதவியை வழங்குவதற்கு தூதரகம் தலையிட்டுள்ளதுடன், இதற்காக விசேட அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் நலிந்த ஜயதிஸ்ஸ வெளிப்படுத்தினார்.
</p><p style="text-align: justify; ">
 

இச்சம்பவம் தொடர்பில் சவூதியில் நிலவும் சட்டத்திற்கு அமைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.&nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-09-19T10:19:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிக்பாஸ் 10ல் தலைமைத்துவம் பற்றி சர்ச்சை பேச்சு!! முற்றுப்புள்ளி வைத்த விஜய் சேதுபதி..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/vijay-sethupathi-stop-rumour-about-leadership-bb10-1789811667"></link>
            <id>https://viduppu.com/article/vijay-sethupathi-stop-rumour-about-leadership-bb10-1789811667</id>
            <summary type="text">நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள பத்தா படம் வரும் அக்டோபர் 2ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது. அதே நாளில் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் உருவாகி...</summary>
            <content type="html"><![CDATA[<p>நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள பத்தா படம் வரும் அக்டோபர் 2ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது. அதே நாளில் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் உருவாகியுள்ள சிக்மா படமும் ரிலீஸாகவுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4a335a94-405c-4b86-bdb5-8edfd3acb9ac/26-6aae5bd57b586.webp' /></p><p> </p><p>2 படங்களில் இசை வெளியீட்டு விழாவும் சமீபத்தில் ஒரே நாளில் நடந்தது. அப்போது விஜய் சேதுபதி, விஜய் பற்றி பேசுவார் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. அதற்கு காரணம், விஜய் சேதுபதி பிக்பாஸ் 10 நிகழ்ச்சியில் லீடர்ஷிப் பற்றி பேசியது தான்.</p><p>இந்நிலையில், இது குறித்து விஜய் தொலைக்காட்சி விளக்கம் அளித்த நிலையில், விஜய் சேதுபதி இன்றைய சனிக்கிழமை பிக்பாஸ் 10 பிரமோ வீடியோவில் விளக்கம் கொடுத்துள்ளார். இந்த பிரமோவை பார்த்த பலரும் அடி பலமோ என்று கிண்டல் செய்து வருகிறார்கள்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/d_x5jXpag8U" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-09-19T10:15:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[சொகுசு பேருந்தால் ஏற்பட்ட விபரீதம் : தம்புள்ள தேசிய பாடசாலை அதிபர் உயிரிழந்தார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/dambulla-national-school-principal-dies-1789811858"></link>
            <id>https://ibctamil.com/article/dambulla-national-school-principal-dies-1789811858</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;தம்புள்ள - ஹபரண பிரதான வீதியில் உள்ள பெல்வெஹெர பகுதியில் நேற்றையதினம்(18) நிகழ்ந்த ஒரு பயங்கரமான சாலை விபத்தில் தம்புள்ள தேசிய பாடசாலையின...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;தம்புள்ள - ஹபரண பிரதான வீதியில் உள்ள பெல்வெஹெர பகுதியில் நேற்றையதினம்(18) நிகழ்ந்த ஒரு பயங்கரமான சாலை விபத்தில் தம்புள்ள தேசிய பாடசாலையின் அதிபர் உயிரிழந்ததுடன் மேலும் இருவர் காயமடைந்தனர். </p><p>

இந்த விபத்தில் தம்புள்ள தேசிய பாடசாலையின் அதிபராக பணியாற்றி வந்த, இரண்டு பிள்ளைகளின் தந்தையான ஜனக விஜேசிங்க என்பவரே உயிரிழந்தவர் ஆவார்.</p><h2>&nbsp;சொகுசு பேருந்தால் ஏற்பட்ட விபரீதம்</h2><p>ஒரு சொகுசு பேருந்துக்கும் இரண்டு கார்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலால் இந்த விபத்து நிகழ்ந்தது.

திருகோணமலையிலிருந்து கொழும்பு நோக்கி அதிவேகமாகச் சென்று கொண்டிருந்த சொகுசு பேருந்து, தனது வேகக் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் எதிர் திசைப் பாதைக்குள் விலகிச் சென்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d6e257c1-05f5-42f3-8ffc-26b87df82eb8/26-6aae5f4c789d9.webp' /></p><p> அப்போது, ​​தம்புள்ளையிலிருந்து ஹபரண நோக்கிச் சென்று கொண்டிருந்த அதிபரின் கார், பேருந்துடன் நேருக்கு நேர் மோதியதில்,கார் சாலையிலிருந்து தூக்கி எறியப்பட்டது. நிற்காமல் தொடர்ந்து சென்ற பேருந்து, ஒரு சுற்றுலா விடுதிக்கு முன்னால் நிறுத்தப்பட்டிருந்த சொகுசு காரைக் கவிழ்த்து, அருகிலிருந்த உணவகம் ஒன்றில் மோதியது.
</p><p>
விபத்துக்குப் பிறகு, பலத்த சேதமடைந்த தனது காரில் அதிபர் ஜனக விஜேசிங்க 45 நிமிடங்களுக்கும் மேலாகச் சிக்கியிருந்தார். அவரை வெளியே கொண்டுவர உள்ளூர் மக்கள் கடுமையாகப் போராடினர்.</p><p></p><p> </p><h2>மக்களால் மிகவும் நேசிக்கப்பட்டார்</h2><p>உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அதிபர், பின்னர் தம்புள்ளை ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தம்புள்ளை தலைமையக காவல்துறை ஆய்வாளர் சுகத் விஜேசிங்க உறுதிப்படுத்தினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/740ee916-5207-476e-a5bb-08882ebe7904/26-6aae5f4d2e452.webp' /></p><p> </p><p>இச்சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் பேருந்து ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>

பல ஆண்டுகளாக தம்புள்ளை தேசியபாடசாலையில் மிகவும் சுறுசுறுப்பாகப் பணியாற்றி வந்த ஜனக விஜேசிங்க, அப்பகுதியில் உள்ள கோயில்கள் மற்றும் பிற பள்ளிகளுடன் நெருங்கிய உறவைப் பேணி, பல்வேறு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்ததன் காரணமாக அப்பகுதி மக்களால் மிகவும் நேசிக்கப்பட்டார் மற்றும் மதிக்கப்பட்டார். </p><p>விபத்தில் அதிபரின் கார் பலத்த சேதமடைந்தது, மேலும் இச்சம்பவம் குறித்து தம்புள்ள காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp; &nbsp; &nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-19T10:09:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[எயார்பஸ் கொடுக்கல் வாங்கலை புரட்டிபோட்ட மற்றுமொரு பாரிய பணமோசடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/united-states-fraud-1789794096"></link>
            <id>https://tamilwin.com/article/united-states-fraud-1789794096</id>
            <summary type="text">எயார்பஸ் கொடுக்கல் வாங்கலை புரட்டிபோட்ட மேலுமொரு பாரிய பணமோசடி தொடர்பான தகவல்கள் சுவீடன் நாட்டிலிருந்து கசிந்துள்ளன. எயார்பஸ் (Airbus) மோசடியில் அமெரி...</summary>
            <content type="html"><![CDATA[<p>எயார்பஸ் கொடுக்கல் வாங்கலை புரட்டிபோட்ட மேலுமொரு பாரிய பணமோசடி தொடர்பான தகவல்கள் சுவீடன் நாட்டிலிருந்து கசிந்துள்ளன. </p><p>எயார்பஸ் (Airbus) மோசடியில் அமெரிக்க டொலர் இரண்டு மில்லியன். ஆனால் இதன் மதிப்பு அமெரிக்க டொலர் 54 மில்லியன் என்றும் கூறப்படுகின்றது.</p><p>இலங்கை ரூபாவில் சொல்ல முடியாத தொகை என்றும், இந்த மோசடி தொடர்பில் அமெரிக்க நீதிமன்றம் ஒன்றில் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
</p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">ஆரம்பிக்கப்பட்ட காலம்</span></p><p>இந்த மோசடியின் ஆரம்பம் 2008 இலிருந்து என்று தான் அறிக்கைகளில் உள்ளது. ஆனால் 2013 இலிருந்து இலங்கையில் உள்ள கணக்குகளுக்கு (Accounts) மில்லியன் கணக்கில் அமெரிக்க பணம் அனுப்பப்பட்டுள்ளது.</p><p>&nbsp;&nbsp;</p><p>2013ல் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் காலகட்டமாகும். அக்காலத்தில் இலங்கைக்கு வந்த CPCU என்னும் திட்டத்துடன் தொடர்புடைய பணம் என்றும் சொல்லப்படுகிறது.</p><p>இருப்பினும், அப்போது இலங்கையில் உள்ளவர்களுக்கு இது குறித்து பெரிய தெளிவு இருக்கவில்லை என்றும், இது தொடர்பில் 2019-இல் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் ஒரு முறைப்பாட்டை B-அறிக்கையாக கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2d1f0bae-19e2-48c1-8be2-4f6490e28946/26-6aae17322158a.webp' /></p><p>அதாவது FCID-இல் இருந்த பிரதி பொலிஸ் மா அதிபர் ரவி வைத்தியலங்கார பாரிய அளவிலான ஊழல் ஒன்றைச்செய்துள்ளார் என்றும், இது தொடர்பாக முதன்முதலில் இலங்கை ஊடகங்களில் வெளிவந்த பெயர் தான் ரியன்ஷி எட்வர்ட் (Rienzie Edwards,).
</p><p>இந்த ரியன்ஷி எட்வர்ட் என்பவர் நுவரெலியா ரேஸ்கோர்ஸ் மைதானம், ரோயல் டர்ஃப் கிளப் (Royal Turf Club) 2012-இல் ஐந்து ஆண்டுகளுக்குக் குத்தகைக்கு எடுத்துள்ளார்.</p><p>அப்போது நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு (UDA) கோட்டாபய ராஜபக்சவே பொறுப்பாக இருந்தார்.
அதாவது அமெரிக்காவிலிருந்து அவ்வப்போது 2013-14 காலப்பகுதியில் வந்த இந்த பணம், இலங்கையில் உள்ள பலரின் கணக்குகளுக்கு வந்துள்ளது.</p><p>Ascension என்ற கணக்கும், ரெயான் எட்வர்ட்டின் மனைவி புண்யாவின் கணக்கும், அதைத் தொடர்ந்து மேகான்ஃபீல்ட் (Magonfield Construction) என்ற கணக்கும் மற்றும் மேலும் சில கணக்குகளும் வந்துள்ளது.</p><p> இந்த சம்பவத்தை அமெரிக்கா இலங்கைக்கு 2016 டிசம்பர் மாதத்தில் அறிவிக்கின்றது. ஏன் இந்த ரியன்ஷி எட்வர்ட் (Rienzie Edwards பற்றிய விசாரணைகள் முன்னெடுத்துச் செல்லப்படவில்லை.
</p><h2>
</h2><h2>மோசடி மூடிமறைக்கப்பட்ட விதம்</h2><p>ரவி வைத்தியலங்கார என்ற ஊழல் அதிகாரி கோடிக்கணக்கான பணத்தை பெற்றுக்கொண்டு, தனியாக கம்பனி ஒன்றை ஆரம்பித்து, FCID-இல் இருந்து அதனை பணம் சம்பாதிக்கும் ஒரு இடமாக மாற்றியுள்ளார். </p><p>FCID-க்கு இவரை யார் கொண்டுவந்து போட்டது? இவருக்கு இங்கு வர யார் அனுமதி அளித்தது?
அதாவது 54 மில்லியன் அமெரிக்க டொலர் சம்பவம் எப்படி மூடிமறைக்கப்பட்டது? இவர் பணத்தை பெற்றுக்கொண்டு, மூடி மறைத்துள்ளார். </p><p>ஏனெனில் இது ரவி வைத்தியலங்காரவால் மட்டும் செய்யக்கூடிய விடயமல்ல. 
நல்லாட்சி அரசாங்கத்தில் ரியன்ஷி எட்வர்ட் (Rienzie Edwards- ரவி வைத்தியலங்காவை காப்பாற்றியது நவீன் திசாநாயக்க என்றும் கூறப்படுகிறது.</p><p>இந்த CPCU திட்டத்திற்காக 2016-இல் ரெயான் எட்வர்ட்டுடன் நவீன் திசாநாயக்க ஆகியோர் ஜப்பானுக்குச் சென்றுள்ளனர்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/72123656-8074-4e2e-abce-a3e6a460023d/26-6aae1732cd8cc.webp' /></p><p>ஏனெனில் 2016-இல் ரியன்ஷி எட்வர்ட்டிற்கு (Rienzie Edwards 30 வருடங்களுக்கு நுவரெலியா ரேஸ்கோர்ஸ் (Racecourse) மைதானத்தைக் குத்தகைக்கு விட திட்டமிட்டதே நவீன் திஸாநாயக்க ஆவார். </p><p>மேலும் நவீன் திசாநாயக்கதான் இந்த ரியன்ஷி எட்வர்ட்டின் பின்னணியில் இருந்து இவரை அரசியல் ரீதியாக பாதுகாத்த நபர்.
இப்போது அமெரிக்காவின் வொஷிங்டன் டி.சி. மாவட்ட நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.</p><p>இந்த வழக்குகளுக்கு அடிப்படையாக அமைந்த முக்கிய காரணங்களாக CPCU திட்டத்திற்கு முதலீட்டாளர்களிடம் (Investors) அதாவது அமெரிக்க குடிமக்களிடம் இருந்து என கூறப்படுகிறது. </p><p>
உலகத்தில் இல்லாத ஒரு திட்டத்தைக்காட்டி, இதில் முதலீடு செய்யுமாறு அமெரிக்க குடிமக்களிடம் பெறப்பட்ட பணம் என்றும் அமெரிக்க நீதிமன்றம் கூறுகிறது. குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) நிச்சயமாக இதன் தகவல்கள் இருக்கும் என்றும் கூறப்படுகின்றது.</p><p></p><p>&nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-09-19T10:06:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Farook Sihan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சஹ்ரானைக் கண்டதுமில்லை பேசியதுமில்லை : குற்றச்சாட்டை நிராகரித்த ரிசாட்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/easter-attack-sri-lanka-rishad-mp-statement-1789811351"></link>
            <id>https://ibctamil.com/article/easter-attack-sri-lanka-rishad-mp-statement-1789811351</id>
            <summary type="text">உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலின் முக்கிய சூத்திரதாரியான சஹ்ரான்
ஹாசிமுடன் தனக்கு எந்தவிதமான தொடர்பும் கிடையாது எனவும், அவரை தான் நேரில்
கண்டத...</summary>
            <content type="html"><![CDATA[<p>உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலின் முக்கிய சூத்திரதாரியான சஹ்ரான்
ஹாசிமுடன் தனக்கு எந்தவிதமான தொடர்பும் கிடையாது எனவும், அவரை தான் நேரில்
கண்டதுமில்லை, பேசியதுமில்லை எனவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும்
நாடாளுமன்ற உறுப்பினருமான ரிசாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
</p><p>
அம்பாறை - நிந்தவூர் பிரதேசத்தில் நேற்று (18) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில்
கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.</p><p>அவர் மேலும்
தெரிவிக்கையில், ”உயிரத்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலுக்கும் இலங்கை முஸ்லிம் சமூகத்திற்கும் எந்தவொரு
சம்பந்தமும் கிடையாது.</p><p></p><h2>இரவோடு இரவாகக் கைது</h2><p> </p><p>சஹ்ரானின் பயங்கரவாதச் செயற்பாடுகளை முஸ்லிம் சமூகமோ
அல்லது முஸ்லிம் அரசியல் தலைமைகளோ ஒருபோதும் ஆதரித்தது கிடையாது. இத்
தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தகுந்த நீதி கிடைக்க வேண்டும்
என்பதில் முஸ்லிம் சமூகம் உறுதியாக உள்ளது.</p><p>இப் பயங்கரவாதச் செயற்பாட்டினால்
பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்ட நிலையில், ஓர் அரசியல்வாதியாக நானும்
கடுமையாகப் பாதிக்கப்பட்டேன்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d128c74a-cd73-425c-bff1-abb3290a2ac9/26-6aae5d80957f0.webp' /></p><p>

நாடாளுமன்ற உறுப்பினராகவும் ஒரு தேசியக் கட்சியின் தலைவராகவும் இருந்த
என்னை சபாநாயகருக்குக் கூட அறிவிக்காமல் இரவோடு இரவாகக் கைது செய்து
சிறையில் அடைத்தனர்.</p><p>அரசியல்
உள்நோக்கத்தோடு முன்னாள் விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர் ஒருவர் என்
மீது முன்வைத்துள்ள ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை அடிப்படையாகக் கொண்டு, சில
தமிழ் ஊடகங்கள் தமக்கு வேண்டியவாறு செய்திகளை வெளியிட்டு வருகின்றன.</p><p></p><h2>சட்ட நடவடிக்கை&nbsp;</h2><p>
சஹ்ரானுடன் எனக்கு எவ்வித தொடர்பும் இல்லை என்பதால், இவ்வாறான பொய்யான
குற்றச்சாட்டுகளை முன்வைப்பவர்களுக்கு எதிராகத் தயங்காமல் சட்ட நடவடிக்கை
எடுப்பேன்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/354282fb-7ae5-45e0-b1af-2166d15eb39f/26-6aae5d81480c4.webp' /></p><p>

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து நேர்மையான மற்றும் சுயாதீனமான விசாரணைகள்
நடத்தப்பட்டு உண்மை வெளிக்கொண்டு வரப்பட வேண்டும்.</p><p> பாதிக்கப்பட்ட மக்களுக்கு
நீதி கிடைக்க முன்னெடுக்கப்படும் எந்தவொரு முறையான விசாரணைக்கும் முழுமையான
ஒத்துழைப்பை வழங்க நாங்கள் எந்நேரமும் தயாராக இருக்கின்றோம்" என அவர் மேலும்
குறிப்பிட்டார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-19T10:04:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[முகத்தில் கேக் பூசியதால் நண்பர் குத்திக்கொலை: பிறந்தநாள் கொண்டாட்டத்தில் அதிர்ச்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/man-killed-by-birthday-boy-after-smearing-cake-1789811812"></link>
            <id>https://news.lankasri.com/article/man-killed-by-birthday-boy-after-smearing-cake-1789811812</id>
            <summary type="text">Man killed by birthday boy after smearing cake on face: ஜம்முவில் பிறந்தநாள் கொண்டாடிய நபர், நண்பரை கத்தியால் குத்திக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படு...</summary>
            <content type="html"><![CDATA[<p>Man killed by birthday boy after smearing cake on face: ஜம்முவில் பிறந்தநாள் கொண்டாடிய நபர், நண்பரை கத்தியால் குத்திக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
</p><p>
பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கேக்கினை முகத்தில் பூசியதால், நண்பர் கத்தியால் குத்திக்கொல்லப்பட்ட சம்பவம் ஜம்முவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.</p><h2>கேக் வெட்டும்போது</h2><p>

ஜம்முவின் லோயர் ரூப் நகர் பகுதியைச் சேர்ந்த நீரஜ் என்பவர், சாலையோரத்தில் தனது பிறந்தநாளை கொண்டாடினார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/efe36fc1-823e-483e-a80a-4a6256f541ff/26-6aae5ed32af3b.webp' />&nbsp;</p><p></p><p>

அப்போது அவரது நண்பர்கள் பவன் நாயர், சோத்ரா, சிங், பாட்தி ஆகியோர் கேக் வெட்டும்போது உடனிருந்தனர். அச்சமயம் பவன் கேக்கினை முகத்தில் பூசியதால் நீரஜ் கடும் கோபமடைந்துள்ளார்.</p><p> உடனே வாக்குவாதம் ஏற்பட, அவர் கத்தியால் நாயரின் கழுத்தில் குத்தியதாக கூறப்படுகிறது.&nbsp;</p><h2>ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக</h2><p>

இதில் கழுத்தில் பலத்த காயமடைந்த பவன், அதிகப்படியான இரத்தப்போக்கு ஏற்பட மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளார். </p><p>ஆனால், அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே பவன் உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர்.</p><p>
இதனையடுத்து நீரஜ் மற்றும் அவரது சகோதரர் ரிஷு ஆகியோர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e54147a9-dd50-4351-9ad4-807c7843ffda/26-6aae5ed405767.webp' /></p>]]></content>
            <updated>2026-09-19T10:03:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆசிய விளையாட்டுப் போட்டி ; இன்று ஜப்பான் பயணமாகும் ருமேஷ் தரங்க]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/asian-games-rumesh-tharanga-heads-to-japan-today-1789808973"></link>
            <id>https://jvpnews.com/article/asian-games-rumesh-tharanga-heads-to-japan-today-1789808973</id>
            <summary type="text">ஜப்பானில் நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்பதற்காக இலங்கையின் ஈட்டி எறிதல் வீரர் ருமேஷ் தரங்க இன்று (19) இரவு ஜப்பான் புறப்பட்டுச் செல்...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">ஜப்பானில் நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்பதற்காக இலங்கையின் ஈட்டி எறிதல் வீரர் ருமேஷ் தரங்க இன்று (19) இரவு ஜப்பான் புறப்பட்டுச் செல்லவுள்ளார்.
</p><p style="text-align: justify; ">


ருமேஷ் தரங்கவுக்காக விளையாட்டு அமைச்சினால் வழங்கப்பட்டுள்ள சிறப்பு ஈட்டித் தொகுதி விரைவில் ஜப்பானைச் சென்றடையும் என அவரது பயிற்றுவிப்பாளர் ரொனி பிரசன்ன தெரிவித்துள்ளார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ba91f679-8fe1-4709-99ca-cf42e1569b6f/26-6aae514edef34.webp' /></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">


ஆசிய விளையாட்டுப் போட்டியில் ருமேஷ் தரங்க பங்கேற்கும் ஈட்டி எறிதல் போட்டியின் முதற்கட்டச் சுற்று எதிர்வரும் 26ஆம் திகதி நடைபெறவுள்ளது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-19T10:00:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[காற்றில் பறக்கும் தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு - உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/udhayanidhi-slams-cm-vijay-for-law-and-order-1789811631"></link>
            <id>https://ibctamilnadu.com/article/udhayanidhi-slams-cm-vijay-for-law-and-order-1789811631</id>
            <summary type="text">udhayanidhi stalin slams cm vijay for not maintaining law and order: தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு காற்றில் பறந்து கொண்டிருப்பதாக உதயநிதி ஸ்டாலின் விமர...</summary>
            <content type="html"><![CDATA[<p>udhayanidhi stalin slams cm vijay for not maintaining law and order: தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு காற்றில் பறந்து கொண்டிருப்பதாக உதயநிதி ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார். </p><h3>

காற்றில் பறக்கும் தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு</h3><p>

சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், "Dummy முதலமைச்சரின் ஆட்சி அமைந்த நாள் முதல் தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு காற்றில் பறந்து கொண்டிருக்கிறது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3b3b4c81-971c-4e2e-9ea6-7ae77ae3e2f7/26-6aae5bb1238bf.webp' /></p><p> 

இராமநாதபுரம் கீழக்கரையில் கடந்த 15 ஆம் தேதியும், சிவகங்கை காளையார்கோவிலில் அதற்கு அடுத்த நாளும் இரட்டைக்கொலைகள் நடந்து இருப்பது தமிழ்நாட்டையே அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.</p><p>

காளையார்கோவில் சம்பவத்தில் ஆள் மாறி கொலை செய்துவிட்டோம் என்று கூலிப்படையை சேர்ந்தவர்கள் சொன்னதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், கூலிப்படையை ஏவியவர்களை கைது செய்யாமல் காவல்துறை காலம் தாழ்த்துவது ஏன்?</p><p>

‘குற்றவாளிகளை காவல்துறை பாதுகாக்கக் கூடாது’ என்று கொலையானவர்களின் உறவினர்கள் காளையார்கோவில் பகுதியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.&nbsp;</p><p><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">Dummy முதலமைச்சரின் ஆட்சி அமைந்த நாள் முதல் தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு காற்றில் பறந்து கொண்டிருக்கிறது. <br><br>இராமநாதபுரம் கீழக்கரையில் கடந்த 15-ஆம் தேதியும், சிவகங்கை காளையார்கோவிலில் அதற்கு அடுத்த நாளும் இரட்டைக்கொலைகள் நடந்து இருப்பது தமிழ்நாட்டையே அதிர்ச்சியில் ஆழ்த்தி…</p>&mdash; Udhay (@Udhaystalin) <a href="https://x.com/Udhaystalin/status/2101192907927822706?ref_src=twsrc%5Etfw">September 19, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>

அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவோ, குற்றவாளிகளை கண்டுபிடிக்கவோ வக்கற்று, போராடுவோரின் மீது காவல்துறை தடியடி நடத்தி இருக்கிறது.</p><p> காவல்துறையின் இந்த அடக்குமுறையை வன்மையாக கண்டிக்கிறேன். 

இந்த இரட்டைக்கொலை சம்பவங்களில் தொடர்புடைய குற்றவாளிகளை உடனே கைது செய்ய வேண்டும். </p><p>

இதனால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடும், நீதியும் கிடைக்க இந்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என தெரிவித்துள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-19T09:54:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[தலைகீழாக... 27,000 அடி உயரத்தில் சாக விடப்பட்ட நபர்: வெளிவரும் அதிர்ச்சி சம்பவம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/dying-mountain-guide-hanging-1789811170"></link>
            <id>https://news.lankasri.com/article/dying-mountain-guide-hanging-1789811170</id>
            <summary type="text">Climbers discover dying mountain guide hanging upside-down: தலைகீழாகத் தொங்கியபடி இறக்கும் தருவாயில் இருந்த மலை வழிகாட்டியை மலையேறுபவர்கள் கண்டுபிடித்...</summary>
            <content type="html"><![CDATA[<p>Climbers discover dying mountain guide hanging upside-down: தலைகீழாகத் தொங்கியபடி இறக்கும் தருவாயில் இருந்த மலை வழிகாட்டியை மலையேறுபவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
</p><p>27,000 அடி உயரத்தில், நள்ளிரவு வேளையில், உலகின் மிக ஆபத்தான மலைப் பாதைகளில் ஒன்றில், மலையேறும் குழுவினர் ஒரு வேதனையான முடிவை எடுக்க வேண்டிய இக்கட்டான சூழலை எதிர்கொண்டனர்.</p><h2>புதிய உலக சாதனை</h2><p>
</p><p>நார்வேயின் மலையேறும் நட்சத்திரமான கிறிஸ்டின் ஹரிலாவும் அவரது குழுவினரும், 2023-ஆம் ஆண்டு கே2 சிகரத்தில் சாதனை படைக்கும் வகையில் ஏறியபோது, ​​இறக்கும் தருவாயில் இருந்த ஒரு மலைச் சுமைதூக்குபவரைக் கண்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/29a77deb-b5b9-4125-b617-b31fecbae44a/26-6aae59e494101.webp' /></p><p> </p><p>அவர்கள் தங்கள் பணியைக் கைவிட்டு, அவரைப் பாதுகாப்பாகக் கொண்டு வர தங்களால் இயன்ற அனைத்தையும் செய்ய வேண்டுமா அல்லது புதிய உலக சாதனையைப் படைக்க இன்னும் சில மீற்றர் தூரத்தில் இருக்கும் உச்சியை நோக்கிச் செல்வதா என்பதை அவர்கள் முடிவு செய்ய வேண்டியிருந்தது. </p><p>அவர்கள் பிந்தையதையே தெரிவு செய்தனர்; இந்த முடிவு ஹரிலாவுக்கு எதிராக மாதக்கணக்கில் நீடித்த சர்ச்சைகள், வசைபாடல்கள் மற்றும் கொலை மிரட்டல்களைத் தூண்டியதுடன், மலையேற்ற உலகில் பெரும் அதிர்வலைகளையும் ஏற்படுத்தியது. </p><p>தற்போது வெளிவந்துள்ள ஒரு புதிய ஆவணப்படம், இதுவரை வெளிவராத பின்னணியை வெளிச்சத்திற்கு கொண்டுவந்துள்ளது. அதில், ஹரிலாவின் குழுவினர் பாகிஸ்தானிய சுமைதூக்கு வீரரான முகமது ஹசனைக் கண்டுபிடித்த தருணமும், அவரைக் காப்பாற்ற அவர்கள் மேற்கொண்ட முயற்சிகளும், இறுதியில் அந்த மீட்புப் பணியைக் கைவிட்டதும் சித்தரிக்கப்பட்டுள்ளன.</p><p></p><p>
</p><p>தற்போது 40 வயதாகும் ஹரிலா, உலகின் மிக உயரமான 14 மலைகளையும் ஏறிய மிக வேகமான மலையேற்ற வீரர் ஆனார்; பாகிஸ்தானில் உள்ள கே2 (K2) மலையில் ஏறியதன் மூலம், வெறும் 92 நாட்களில் அவர் இந்தச் சாதனையை நிறைவு செய்தார். </p><p>வெளியாகியுள்ள அந்த ஆவணப்படத்தில், ஹரிலா மலையில் தலைகீழாகத் தொங்கிக் கொண்டிருந்த பாகிஸ்தானியரைக் கண்டுபிடித்ததை நினைவு கூர்ந்தார், அவரது கால்களைச் சுற்றி கயிற்றில் ஏதோ சிக்கல் இருந்ததை நாங்கள் பார்த்தோம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ccc1ffb7-20d2-4c6e-9476-c06fd0ce56ac/26-6aae59e549475.webp' /></p><p> </p><p>அவரை நெருங்க தங்களின் குழு கடும் முயற்சிகள் மேற்கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மரணித்துக்கொண்டிருக்கும் சுமை தூக்குபவரைச் சென்றடைய முயற்சிக்கும் அக்குழுவினர், இருளில் பனி படர்ந்த மலைச்சரிவில் சிரமப்பட்டு முன்னேறுவதை இப்படம் காட்டுகிறது. </p><p>இறுதியில் ஒரு புதிய கயிற்றைப் பயன்படுத்தி ஹசனைப் பாதுகாப்பாக மீட்க அந்த அணியால் முடிந்தது என்று ஹரிலா கூறினார்; ஆனால், அனைவரும் திரும்பிச் செல்வது சாத்தியமற்றது என்றும் அவர் தெரிவித்தார்.</p><h2>மிகவும் ஆபத்தான நிலை</h2><p> </p><p>மட்டுமின்றி, அவர்கள் ஹசனை அடைந்தபோது, ​​அவர் ஏற்கனவே மிகவும் ஆபத்தான நிலையில் இருந்தார். அவர் முற்றிலும் உறைந்து போயிருந்தார்.</p><p> அவரிடம் ஆக்சிஜன் இல்லை, கையுறைகள் இல்லை, குளிரைத் தடுக்கும் சிறப்பு உடையும் (down suit) இல்லை. நான் அவரைச் சூடுபடுத்தவும், அவரது விரல்களை அசைக்கவும், அவருக்குச் சுடுநீர் கொடுக்கவும் முயன்றேன் என்கிறார் ஆவணப்படத்தின் ஒளிப்பதிவாளர், கேப்ரியல். </p><p>இந்த நிலையில், இன்னொரு பேராபத்து அவர்களைச் சூழ்ந்தது. K2 மலையின் மிகவும் ஆபத்தான பகுதிகளில் ஒன்றான 'பாட்டில்நெக்' (Bottleneck) பகுதிக்குச் சற்று அப்பால், அதிகாலை சுமார் 3:20 மணியளவில், ஒரு பெரிய பனிச்சரிவு ஒரு செராக் (செங்குத்தான பனிப்பாறை) பகுதியிலிருந்து சரிந்து விழுந்தது. </p><p>குழுவின் இரு உறுப்பினர்கள் அப்பகுதியில் ஏற்கனவே முன்னேறிச் சென்றிருந்ததால், தானும் லாமாவும் கேப்ரியலிடமிருந்து பிரிந்து மேலே செல்லத் தொடங்கியதாகவும், அதேவேளையில் அவர் ஹசனுடன் தங்கிவிட்டதாகவும் ஹரிலா விளக்கியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0d425ed1-a693-4f6a-bbe7-7f00f7b22168/26-6aae59e601065.webp' /></p><p> </p><p>ஹசன் ஏற்கனவே மிகவும் மோசமான நிலையில் இருந்ததால், அவர் பிழைப்பதற்கான வாய்ப்பு மிகக் குறைவு என்பதைத் தான் உணர்ந்துகொண்டதாக கேப்ரியல் பின்னர் நினைவுகூர்ந்தார். </p><p>விடிந்ததும், ஹசனைக் காப்பாற்ற மலையேறுபவர்களால் மேற்கொண்டு எதுவும் செய்ய முடியவில்லை; அவர்கள் மலையேற்றத்தைத் தொடர்ந்தனர். ஹசனை மீட்டுவர முடியாமல் போனதால் ஹர்லா எதிர்கொண்ட வெறுப்பையும், கொலை மிரட்டலையும் அவர் நினைவுகூர்ந்தார். </p><p>மலையேற்றத்தை முடித்துத் திரும்பிய உடனேயே முழு விவரத்தையும் வெளிப்படுத்தாததே அவர்களின் மிகப்பெரிய தவறு என்று அவர் கூறுகிறார். </p><p>அதனைத் தொடர்ந்து ஹசனின் மரணம் குறித்து விசாரணை தொடங்கப்பட்டது. ஹசன் பணியாற்றிய நிறுவனம் இரண்டு ஆண்டுகளுக்குச் செயல்பாடுகளை நிறுத்திவைக்க வேண்டியிருந்தது.</p>]]></content>
            <updated>2026-09-19T09:42:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[அழகின் இலக்கணம்.. நடிகை மிருணாள் தாகூரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/actress-mrunal-thakur-latest-photos-1789809186"></link>
            <id>https://cineulagam.com/article/actress-mrunal-thakur-latest-photos-1789809186</id>
            <summary type="text">இந்திய அளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் மிருணாள் தாகூர். இளைஞர்களின் மனம் கவர்ந்த நாயகியாக வலம் வரும் இவர், இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது பதிவிடுவார். இ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்திய அளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் மிருணாள் தாகூர். இளைஞர்களின் மனம் கவர்ந்த நாயகியாக வலம் வரும் இவர், இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது பதிவிடுவார். இவர் வெளியிடும் புகைப்படங்கள் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்க்கும். </p><p>அந்த வகையில் தற்போது கருப்பு, சிவப்பு நிற ஆடையில் விதவிதமான போஸ் கொடுத்து எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படங்களை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றன. இதோ அந்த புகைப்படங்கள்:</p>]]></content>
            <updated>2026-09-19T09:40:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Malaivanjan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மக்கள் வாழும் பகுதிகளில் கொட்டப்படும் குப்பை: விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/garbage-dump-in-hatton-residential-area-protest-1789807762"></link>
            <id>https://tamilwin.com/article/garbage-dump-in-hatton-residential-area-protest-1789807762</id>
            <summary type="text">ஹட்டன்–டிக்கோயா நகரசபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பை
மற்றும் கழிவுகளை, ஹட்டன் ரொத்தஸ் பகுதியில் அமைந்துள்ள பழைய கல் குவாரி
ஒன்றி...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹட்டன்–டிக்கோயா நகரசபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பை
மற்றும் கழிவுகளை, ஹட்டன் ரொத்தஸ் பகுதியில் அமைந்துள்ள பழைய கல் குவாரி
ஒன்றில் கொண்டு சென்று, மீள்சுழற்சி செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள்
போராட்டத்தில் ஈடுபட்டனர்.
</p><p>
மத்திய மாகாண ஆளுநர் தலைமையில் குறித்த திட்டத்திற்கான பெயர்ப்பலகை
நாட்டப்பட்டு திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்ட மறுநாளே இந்த போராட்டம்
முன்னெடுக்கப்பட்டது.
</p><p>
ஹட்டன்–கொழும்பு பிரதான வீதியின் செனன் சந்தியில் ஒன்றுகூடிய மக்கள், தமது
எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.</p><h2>போராட்டம்</h2><p>

'இயற்கை வளங்களை அழிக்க வேண்டாம்',
'ஹட்டன் குப்பைகளை ஹட்டனிலேயே கொட்டுங்கள்',
'ஹட்டன் குப்பை எங்களுக்கு வேண்டாம்'

போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு, மக்கள் கோஷங்களை எழுப்பினர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0426e673-c18c-4ad1-b533-414b7167a6d0/26-6aae579064ee1.webp' /></p><p>

இதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஊர்வலமாகச் சென்று, குப்பை
மற்றும் கழிவுகளை கொண்டு சென்று கையாளுவதற்காக தெரிவுசெய்யப்பட்டுள்ள
இடத்திற்கு அருகில் ஒன்று கூடி, தமது கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.</p><p>போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தெரிவிப்பதாவது:

இந்தப் பிரதேசத்தில் வாழும் மக்கள் தற்போதைய அரசாங்கத்திற்கு வாக்களித்தவர்கள். நாட்டின் பொருளாதாரத்திற்காக பெருந்தோட்டத் தொழிலாளர்கள் நீண்டகாலமாக
உழைத்து வருகின்றனர்.</p><h2>கோரிக்கை</h2><p>

எனினும், மக்கள் வாழும் இந்தப் பகுதிகளில் போதுமான அடிப்படை வசதிகள் கூட
ஏற்படுத்திக் கொடுக்கப்படாத நிலையில், தற்போது அவர்களது குடியிருப்புகளுக்கு
அருகிலேயே குப்பைகளைக் கொண்டு வந்து கொட்டுவதற்கும், குப்பை மீள்சுழற்சி
திட்டத்தை முன்னெடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மக்கள் குற்றம்
சுமத்தினர்.</p><p>மக்கள் வாழும் இந்தப் பகுதியில் குப்பைகளைக் கொட்டுவதற்கு ஒருபோதும்
அனுமதிக்கமாட்டோம்' என தெரிவித்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b0bc05db-08d0-4fe7-b8e4-3c34046efab8/26-6aae57913f8d0.webp' /></p><p>
</p><p>
ஹட்டன் நகரின் குப்பைகளை அகற்றுவதற்காக மக்கள் குடியிருப்புகள் இல்லாத பல
இடங்கள் காணப்படுவதாகவும், அவற்றில் பொருத்தமான ஒரு இடத்தை தெரிவுசெய்து
குப்பை முகாமைத்துவத் திட்டத்தை முன்னெடுக்குமாறும் கோரிக்கை
விடுத்தனர்.</p><p>

இதேவேளை, குறித்த திட்டம் தொடர்பில் மக்கள் மத்தியில் காணப்படும் எதிர்ப்புகள்
மற்றும் சுற்றுச்சூழல், குடிநீர் பாதுகாப்பு தொடர்பான அச்சங்கள் குறித்து
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய முறையில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் ஜனாதிபதி இந்த பிரச்சினை குறித்து தலையிட வேண்டும் எனவும் போராட்டத்தில்
ஈடுபட்ட மக்கள் வலியுறுத்தினர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-19T09:36:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[அனோஜன் விவகாரத்தில் அரசாங்கத்தின் அடுத்தக்கட்ட நகர்வு - நியமிக்கப்பட்டுள்ள முக்கிய அதிகாரி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/government-attempts-to-reduce-anojan-s-sentence-1789809181"></link>
            <id>https://tamilwin.com/article/government-attempts-to-reduce-anojan-s-sentence-1789809181</id>
            <summary type="text">சவூதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்கொண்டுள்ள இலங்கை இளைஞர் சிவராசா அனோஜனுக்கு மன்னிப்பை பெற்று தர முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று சுகாதார மற்றும் வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சவூதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்கொண்டுள்ள இலங்கை இளைஞர் சிவராசா அனோஜனுக்கு மன்னிப்பை பெற்று தர முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று சுகாதார மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் நலிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.</p><p>
இது தொடர்பாக வெளியுறவு அமைச்சு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும், வழங்கப்பட்ட தண்டனையை குறைக்க அரசாங்கம் நம்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.</p><h2>சவூதி அரேபிய சட்ட விவகாரம்&nbsp;</h2><p>

இது தொடர்பாக வெளியுறவு அமைச்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட பின்னர், ஐக்கிய அரபு அமீரக அரசாங்கத்துடன் பல கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/464cb583-5a0d-4a2f-821f-8b9d406ee442/26-6aae56aa730e5.webp' /></p><p>

சிவராசா அனோஜனுக்கு சட்ட உதவி வழங்குவதற்காக ஐக்கிய அரபு அமீரக தூதரகம் தலையிட்டுள்ளதாகவும், இதற்காக ஒரு சிறப்பு அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளதாகவும் நலிந்த ஜெயதிஸ்ஸ மேலும் வெளிப்படுத்தியுள்ளார்.</p><p>

சவூதி அரேபியாவில் தற்போதுள்ள சட்டத்தின்படி இந்த விவகாரம் கையாளப்பட வேண்டும் என்றும் அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.</p><p>&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-09-19T09:32:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[50 அடி பள்ளத்தில் கவிழ்ந்த முச்சக்கர வண்டி ; அதீத வேகத்தால் வந்த வினை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/three-wheeler-plunges-into-50-foot-ditch-1789807881"></link>
            <id>https://jvpnews.com/article/three-wheeler-plunges-into-50-foot-ditch-1789807881</id>
            <summary type="text">ஹட்டன் - பொகவந்தலாவ பிரதான வீதியின் நோர்வூட், சென்ஜோன் டிலரி பகுதியில் முச்சக்கர வண்டி ஒன்று 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக நோர...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹட்டன் - பொகவந்தலாவ பிரதான வீதியின் நோர்வூட், சென்ஜோன் டிலரி பகுதியில் முச்சக்கர வண்டி ஒன்று 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.</p><p>

இன்று (19) சனிக்கிழமை காலை 10.30 மணியளவில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/49181735-947d-4510-98cb-5e36c0619daf/26-6aae4d0b02655.webp' /></p><h2>ஆரம்பகட்ட விசாரணை</h2><p>
</p><p>
பொகவந்தலாவ பகுதியிலிருந்து ஹட்டன் நோக்கிப் பயணித்த முச்சக்கர வண்டியே கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
</p><p>
இவ் விபத்தில் அதிர்ஷ்டவசமாக எவருக்கும் எவ்வித காயங்களும் ஏற்படவில்லை எனினும், முச்சக்கர வண்டி பலத்த சேதமடைந்துள்ளது.</p><p>

அதிக வேகம் காரணமாக வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமையினாலேயே இவ் விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
</p><p>
மேலும், இச் சம்பவம் தொடர்பில் நோர்வூட் பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-19T09:30:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[கோவிலுக்கு சீல்? சாமுண்டீஸ்வரிக்கு உருவாகும் காயம் - கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/karthigai-deepam-sep-19-episode-details-1789809904"></link>
            <id>https://viduppu.com/article/karthigai-deepam-sep-19-episode-details-1789809904</id>
            <summary type="text">கார்த்திகை தீபம்தமிழ் சின்னத்திரையில் Zee தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வர இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீப...</summary>
            <content type="html"><![CDATA[<h2>கார்த்திகை தீபம்</h2><p>தமிழ் சின்னத்திரையில் Zee தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வர இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் சிவவாண்டி ஏற்பாடு செய்த ஆட்கள் சாமுண்டீஸ்வரி ஊருக்குள் புகுந்து மக்களை தாக்க தொடங்கிய நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7778f1dd-fd47-46e8-80ad-2c1b0bf985a3/26-6aae54f2aedd0.webp' /></p><p>அதாவது, சிவனாண்டி ஏற்பாடு செய்த ஆட்கள் சாமுண்டீஸ்வரி வீட்டு முன்பு நின்று கற்களை தூக்கி வீச சாமுண்டீஸ்வரி வெளியே வர அவரது தலையில் பட்டை ரத்தம் வடிகிறது. 

இதைத்தொடர்ந்து இரண்டு ஊருக்கும் இடையே மிகப்பெரிய பிரச்சனை உருவாக கார்த்திக் அதிர்ச்சி அடைகிறான். 

இந்த சண்டையில் பாதிக்கப்பட்டவர்களை ஹாஸ்பிடல் சென்று சந்திக்கும் கார்த்திக் பிறகு பரமேஸ்வரி பாட்டியிடம் நடந்ததை சொல்லி வருத்தப்படுகிறான்.</p><p> இது அனைத்தும் சந்திரா கலாவின் சதி வேலைதான் என தெரிந்தது கார்த்திக் செய்வதறியாது இருக்கிறான். 

இப்படி பிரச்சனை பெரிதாக இரண்டு ஊர்களிலும் ஊரடங்கு உத்தரவு போடப்படுகிறது. அதாவது நான்கு பேருக்கு மேல் கூறியிருக்கக்கூடாது என்ற நிபந்தனைகள் விதிக்கப்படுகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f955900d-d0bc-479b-8ee2-b6e365689b19/26-6aae54f3622ae.webp' /></p><p> </p><p>

இன்னொரு பக்கம் சந்திர கலாகும் இதுக்கெல்லாம் காரணம் கார்த்தி தான் என சாமுண்டீஸ்வரியை ஏற்றி விடுகிறாள். பிரச்சனை நாளைக்கு நாள் பெரிதாக போலீஸ் கோவிலுக்கு சீல் வைக்க முடிவெடுக்கின்றனர். 

இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.</p>]]></content>
            <updated>2026-09-19T09:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[AIயின் பிழையான அறிக்கையால் சீனா, அமெரிக்கா இடையே ஏற்பட இருந்த மோதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/false-ai-report-lead-almost-war-between-china-us-1789810166"></link>
            <id>https://news.lankasri.com/article/false-ai-report-lead-almost-war-between-china-us-1789810166</id>
            <summary type="text">false ai report leads almost war between china and us: AIயின் பிழையான அறிக்கையால், சீனா மற்றும் அமெரிக்கா இடையே மோதல் ஏற்பட இருந்த சம்பவம் தற்போது தெர...</summary>
            <content type="html"><![CDATA[<p>false ai report leads almost war between china and us: AIயின் பிழையான அறிக்கையால், சீனா மற்றும் அமெரிக்கா இடையே மோதல் ஏற்பட இருந்த சம்பவம் தற்போது தெரிய வந்துள்ளது. </p><h3>

AIயின் பிழையான அறிக்கை</h3><p>

செயற்கை நுண்ணறிவின் தாக்கம், நாளுக்கு நாள் அனைத்து துறைகளிலும் அதிகரித்து வருகிறது. 

ஆனால், செயற்கை நுண்ணறிவு முழுமையாக நம்பகத்தன்மை உடையது இல்லை என நிபுணர்கள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர். </p><p>

நிபுணர்களின் கூற்றுப்படியே, செயற்கை நுண்ணறிவு அவ்வப்போது பிழையான தகவல்களை வழங்கி வருகிறது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/239f4664-343a-48a2-9088-1dafbe31b4de/26-6aae55f89359a.webp' /></p><p>

அவ்வாறாக AI வழங்கிய பிழையான அறிக்கை ஒன்று, அமெரிக்கா மற்றும் சீனா இடையே மோதல் ஏற்படும் வாய்ப்பை உருவாக்கியிருந்தது. </p><p>

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே போர் நடைபெற்று வந்த சூழலில், மத்திய கிழக்கு கடல் பகுதியிலிருந்து சீன கப்பல் ஒன்று அணு ஆயுதத் திட்டதிற்கான பொருட்களை ஏற்றிக் கொண்டு செல்வதாக அமெரிக்கா ராணுவத்திற்கு உளவு தகவல் அறிக்கை கிடைத்துள்ளது.&nbsp;</p><p></p><h3>

சீனா, அமெரிக்கா இடையே ஏற்பட இருந்த மோதல்</h3><p> 

இதனையடுத்து, ஆயுதங்களுடன் இருந்த அமெரிக்க ராணுவ வீரர்கள் கப்பலில் ஏற தயாராக இருந்தனர். அதே போல், அமெரிக்கா ராணுவ விமானங்களும் வானில் வட்டமிட தொடங்கியது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f8a23866-b43a-452c-9215-5fba67274f92/26-6aae55f7de600.webp' /></p><p>

இதனிடையே ராணுவ அதிகாரிகள் அந்த அறிக்கையை ஆய்வு செய்ததில், அது AI மூலம் தயாரிக்கப்பட்டது தெரிய வந்தது. </p><p>

ஹவாயில் அமைந்துள்ள அமெரிக்க பசிபிக் சிறப்பு நடவடிக்கைக் கட்டளை மையத்திலிருந்து பெறப்பட்ட, கப்பலின் பயணிகளின் பட்டியல் குறித்த உளவுத் தகவல்களை ஆய்வாளர் ஆய்வு செய்தபோது இந்தச் சம்பவம் தொடங்கியது. </p><p>

அந்த ஆய்வாளர் பயன்படுத்திய AI மென்பொருள், கப்பல் கொண்டு சென்ற பொருளைத் தவறாக அடையாளம் கண்டதை அதிகாரிகள் உறுதிசெய்ததை அடுத்து, அந்த நடவடிக்கை கைவிடப்பட்டது.</p><p>

இந்த சம்பவம் குறித்து விவரித்த அமெரிக்கா ராணுவ அதிகாரிகள், "அந்த உளவுத்துறை அறிக்கை முற்றிலும் பொய்யானது ஆனால் கிட்டத்தட்ட ஒரு போரைத் தொடங்கிவிட்டது" என தெரிவித்துள்ளனர்.&nbsp;</p><p></p><p>

அந்தக் கப்பல் உண்மையில் எதை ஏற்றிச் சென்றது, எங்கு சென்றுகொண்டிருந்தது என்பது குறித்து தெரிவிக்கப்படவில்லை.</p><p>

AI தொழில்நுட்பம் மனித கட்டுப்பாட்டிலிருந்து தப்பிக்கக்கூடும், AI இன்னும் சில ஆண்டுகளில் மனித குலத்தையே அழித்து விட வாய்ப்புள்ளதாக Open AI மற்றும் Anthropic ஆகிய முன்னணி AI நிறுவனங்களில் பணியாற்றிய ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்த பின்னர் தங்களது பணியை ராஜினாமா செய்த நிலையில், இந்த தகவல் வெளியாகியுள்ளது. </p><p>

ஆனால், செயற்கை நுண்ணறிவு துறையின் வளர்ச்சியை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் அனைத்தும் இந்த துறைக்கு எதிரான ஒரு அபத்தமான சதி என அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-09-19T09:29:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Farook Sihan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சஹ்ரானுடன் தொடர்பா..! உண்மையை அம்பலப்படுத்திய ரிசாட் பதியுதீன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/easter-attack-1789807660"></link>
            <id>https://tamilwin.com/article/easter-attack-1789807660</id>
            <summary type="text">உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலின் முக்கிய சூத்திரதாரியான சஹ்ரான்
ஹாசிமுடன் தனக்கு எந்தவிதமான தொடர்பும் கிடையாது எனவும், அவரை தான் நேரில் கண்டது...</summary>
            <content type="html"><![CDATA[<p>உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலின் முக்கிய சூத்திரதாரியான சஹ்ரான்
ஹாசிமுடன் தனக்கு எந்தவிதமான தொடர்பும் கிடையாது எனவும், அவரை தான் நேரில் கண்டதுமில்லை, பேசியதுமில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாட் பதியுதீன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
</p><p>
அம்பாறை, நிந்தவூர் பிரதேசத்தில் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில்
கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.</p><h2>உயிர்த்த பயங்கரவாதத் தாக்குதல்</h2><p>
</p><p>
மேலும் தெரிவித்த ஒருவர், 

"உயிர்த்த பயங்கரவாதத் தாக்குதலுக்கும் இலங்கை முஸ்லிம் சமூகத்திற்கும் எந்தவொரு
சம்பந்தமும் கிடையாது. </p><p>சஹ்ரானின் பயங்கரவாதச் செயற்பாடுகளை முஸ்லிம் சமூகமோ
அல்லது முஸ்லிம் அரசியல் தலைமைகளோ ஒருபோதும் ஆதரித்தது கிடையாது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/637a978c-f5dd-48c8-bfda-76ea992233e5/26-6aae528cabc7d.webp' /></p><p> 

இந்த தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தகுந்த நீதி கிடைக்க வேண்டும்
என்பதில் முஸ்லிம் சமூகம் உறுதியாக உள்ளது. 

இந்த பயங்கரவாதச் செயற்பாட்டினால்
பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்ட நிலையில், ஓர் அரசியல்வாதியாக நானும்
கடுமையாகப் பாதிக்கப்பட்டேன்.</p><p>

நாடாளுமன்ற உறுப்பினராகவும் ஒரு தேசியக் கட்சியின் தலைவராகவும் இருந்த
என்னைக் சபாநாயகருக்குக் கூட அறிவிக்காமல் இரவோடு இரவாகக் கைது செய்து
சிறையில் அடைத்தனர்.</p><h2>சூத்திரதாரி சஹ்ரான்</h2><p> 

சட்ட நடவடிக்கை எடுக்கத் தயங்கேன் அரசியல்
உள்நோக்கத்தோடு முன்னாள் விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர் ஒருவர் என்
மீது முன்வைத்துள்ள ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை அடிப்படையாகக் கொண்டு, சில
தமிழ் ஊடகங்கள் தமக்கு வேண்டியவாறு செய்திகளை வெளியிட்டு வருகின்றன.</p><p>
சஹ்ரானுடன் எனக்கு எவ்விதப் தொடர்பும் இல்லை என்பதால், இவ்வாறான பொய்யான
குற்றச்சாட்டுகளை முன்வைப்பவர்களுக்கு எதிராகத் தயங்காமல் சட்ட நடவடிக்கை
எடுப்பேன்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5e5f6824-41f0-421d-8b94-f16a69366d1b/26-6aae528da23a8.webp' /></p><p>

உயிர்த்த தாக்குதல் குறித்து நேர்மையான மற்றும் சுயாதீனமான விசாரணைகள்
நடத்தப்பட்டு உண்மை வெளிக்கொண்டு வரப்பட வேண்டும். </p><p>


பாதிக்கப்பட்ட மக்களுக்கு
நீதி கிடைக்க முன்னெடுக்கப்படும் எந்தவொரு முறையான விசாரணைக்கும் முழுமையான
ஒத்துழைப்பை வழங்க நாங்கள் எந்நேரமும் தயாராக இருக்கின்றோம்" என அவர் மேலும்
குறிப்பிட்டார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-19T09:20:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் கடலாமையை வைத்திருந்தவர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/one-person-arrested-in-jaffna-with-sea-turtles-1789799452"></link>
            <id>https://ibctamil.com/article/one-person-arrested-in-jaffna-with-sea-turtles-1789799452</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் - சேந்தான்குளம் பகுதியில் இன்றைய தினம் சனிக்கிழமை இரண்டு
கடலமைகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சேத்தான்குளம் பகுதியில் கடலமையுடன...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் - சேந்தான்குளம் பகுதியில் இன்றைய தினம் சனிக்கிழமை இரண்டு
கடலமைகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>

சேத்தான்குளம் பகுதியில் கடலமையுடன் படகில் ஒருவர் கரை சேர்ந்துள்ளதாக
காவல்துறையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறை குழுவினர், ஆமைகளுடன் கரை சேர்ந்த நபரை கைது செய்தனர்.</p><p></p><h2>பறிமுதல்</h2><p>
கைது செய்யப்பட்ட நபரிடம் இருந்து 50 கிலோவிற்கும் அதிக எடையுள்ள இரண்டு
ஆமைகளையும், ஆமைகளை கரைக்கு கொண்டு வர பயன்படுத்திய படகினையும் பறிமுதல்
செய்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/42e315e3-5615-43ca-9ec6-c9e4951e7c57/26-6aae5216d6642.webp' /></p><p>
கைது செய்யப்பட்ட நபரையும், பறிமுதல் செய்யப்பட்ட படகு மற்றும் ஆமைகள்
இரண்டையும் இளவாலை காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ள காவல்துறையினர் மேலதிக
விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.</p><p>அத்துடன், கைது செய்யப்பட்ட நபரை மல்லாகம் நீதவான்
நீதிமன்றில் முற்படுத்த காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-19T09:13:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[H-1B விசாவுக்கான கட்டணம் ; ட்ரம்ப் பிறப்பித்த உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/trump-extends-h-1b-visa-fee-for-one-year-1789803117"></link>
            <id>https://canadamirror.com/article/trump-extends-h-1b-visa-fee-for-one-year-1789803117</id>
            <summary type="text">H-1B குடியேறாதோர் விசா திட்டத்தின் கீழ் அமெரிக்காவுக்கு வரும் குறிப்பிட்ட வெளிநாட்டு பணியாளர்களுக்கான 1 இலட்சம் அமெரிக்க டொலர் கட்டணத்தை மேலும் 12 மாத...</summary>
            <content type="html"><![CDATA[<p>H-1B குடியேறாதோர் விசா திட்டத்தின் கீழ் அமெரிக்காவுக்கு வரும் குறிப்பிட்ட வெளிநாட்டு பணியாளர்களுக்கான 1 இலட்சம் அமெரிக்க டொலர் கட்டணத்தை மேலும் 12 மாதங்களுக்கு நீடிக்கும் உத்தரவை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வெளியிட்டுள்ளார். </p><p>



புதிய உத்தரவு 2026 செப்டம்பர் 21 முதல் அமுலுக்கு வந்து, 2027 செப்டம்பர் 21 வரை நீடிக்கும் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/203fff20-97ed-4d9a-8b9e-91c8f26e0c75/26-6aae3a6f5456c.webp' /></p><p>



2025ஆம் ஆண்டு முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்தக் கட்டண விதி, அமெரிக்காவுக்கு வெளியே இருக்கும் H-1B பணியாளர்களை உள்ளடக்கிய குறிப்பிட்ட புதிய மனுக்களுக்கு பொருந்துகின்றது. </p><p>



தேசிய நலன் கருதி விதிவிலக்குகளை வழங்கும் அதிகாரமும் உள்நாட்டு பாதுகாப்புத் துறைக்கு வழங்கப்பட்டுள்ளது.
</p><p>


H-1B திட்டத்தில் முறைகேடுகளைத் தடுப்பதும், அமெரிக்க தொழிலாளர்களின் வேலைவாய்ப்பைப் பாதுகாப்பதும் கட்டணத்தை நீட்டிப்பதற்கான காரணங்களாக ட்ரம்ப் நிர்வாகம் தெரிவித்துள்ளது. </p><p>



அதேவேளை, புதிய நிர்வாக உத்தரவின் கீழ் H-1B விண்ணப்பங்களை பரிசீலிக்கும்போது, தொடர்புடைய அமெரிக்க ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளதா அல்லது எதிர்காலத்தில் பணிநீக்கம் செய்யத் திட்டமிட்டுள்ளதா என்பதையும் அதிகாரிகள் கருத்தில் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><p>



வெள்ளை மாளிகையின் தகவலின்படி, 2025ஆம் ஆண்டு கட்டண விதி அமுலுக்கு வந்ததிலிருந்து 700க்கும் மேற்பட்ட H-1B மனுக்களுக்கு 1 இலட்சம் டொலர் கட்டணம் செலுத்தப்பட்டுள்ளது.</p><p>



H-1B விசா திட்டம் தொழில்நுட்பம் உள்ளிட்ட சிறப்புத் திறன் தேவைப்படும் துறைகளில் வெளிநாட்டு பணியாளர்களை தற்காலிகமாக அமெரிக்காவில் பணியாற்ற அனுமதிக்கும் திட்டமாகும்.</p><p> 



இந்தியா மற்றும் சீனாவைச் சேர்ந்த தொழில்நுட்ப வல்லுநர்களை பணியமர்த்தும் நிறுவனங்களுக்கு இந்தத் திட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாகவுள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-19T09:11:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[OpenAI 2030-க்குள் 278 பில்லியன் டொலர் இழப்பை சந்திக்கலாம் - FT அறிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/openai-may-burn-278-bn-dollars-by-2030-ft-report-1789809001"></link>
            <id>https://news.lankasri.com/article/openai-may-burn-278-bn-dollars-by-2030-ft-report-1789809001</id>
            <summary type="text">OpenAI may burn 278 Bn Dollars by 2030: OpenAI நிறுவனம் 2030-க்குள் மிகப்பெரிய நிதி இழப்பை சந்திக்கக்கூடும் என Financial Times வெளியிட்ட தகவல் அதிர்ச்...</summary>
            <content type="html"><![CDATA[<p>OpenAI may burn 278 Bn Dollars by 2030: OpenAI நிறுவனம் 2030-க்குள் மிகப்பெரிய நிதி இழப்பை சந்திக்கக்கூடும் என Financial Times வெளியிட்ட தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><p>

அந்த அறிக்கையின் படி, 2026 முதல் 2030 வரை OpenAI-யின் negative free cash flow (செலவுகள் வருமானத்தை விட அதிகம்) 278 பில்லியன் டொலர் வரை செல்லும் என கணிக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/915df1be-94ec-462d-a7b6-15cd2003b123/26-6aae516b00dbf.webp' /></p><p>இது ஜூலை மாதம் நடந்த தனியார் நிறுவனக் கூட்டத்தில் வெளியிடப்பட்ட தகவல். அப்போது, OpenAI மிகப்பெரிய கணினி சக்தி (computing power) ஒப்பந்தம் தொடர்பான விவரங்களை பகிர்ந்ததாக கூறப்படுகிறது.
</p><p>
OpenAI-யின் வருமானம் 2026-இல் 36 பில்லியன் டொலரில் இருந்து 2030-இல் 350 பில்லியன் டொலர் வரை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், கணினி சக்தி மற்றும் தொழில்நுட்ப முதலீடுகளில் மிகப்பெரிய செலவுகள் காரணமாக, அந்த வருமானம் போதாது என FT தெரிவித்துள்ளது.
</p><p></p><p>மேலும், Bloomberg தகவலின்படி, OpenAI புதிய முதலீட்டாளர்களுடன் 1.2 டிரில்லியன் டொலர் மதிப்பீட்டில் நிதி திரட்டும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது. IPO (Initial Public Offering) இன்னும் திட்டமிடப்பட்டுவருவதால், இந்த ஆண்டு நடைபெறாது என CEO சாம் ஆல்ட்மன் தெரிவித்துள்ளார்.
</p><p>
இந்த கூடுதல் நிதி, IPO-வை தள்ளிப்போடுவதற்கும், mergers &amp; acquisitions (இணைப்பு மற்றும் கையகப்படுத்தல்) நடவடிக்கைகளுக்கும் உதவக்கூடும்.</p><p>

OpenAI-யின் இந்த மிகப்பெரிய செலவுகள், AI துறையில் உலகளாவிய போட்டியை அதிகரிக்கும் நிலையில், நிறுவனத்தின் எதிர்கால வளர்ச்சியைப் பற்றி பல கேள்விகளை எழுப்புகிறது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-19T09:06:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானியாவில் உயர் கல்வி முடித்த இளைஞர்: பணத்துக்காக செய்த பயங்கர செயல்?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/uk-returned-graduate-held-in-1-cr-ransom-plot-1789808739"></link>
            <id>https://news.lankasri.com/article/uk-returned-graduate-held-in-1-cr-ransom-plot-1789808739</id>
            <summary type="text">UK returned graduate held in1 crore Rupees ransom plot: பிரித்தானியாவில் பட்டப்படிப்பு முடித்த இளைஞர் ஒருவர், ஒரு கோடி ரூபாய் கேட்டு சிறுவன் ஒருவனை கட...</summary>
            <content type="html"><![CDATA[<p>UK returned graduate held in1 crore Rupees ransom plot: பிரித்தானியாவில் பட்டப்படிப்பு முடித்த இளைஞர் ஒருவர், ஒரு கோடி ரூபாய் கேட்டு சிறுவன் ஒருவனை கடத்திய விடயம் கொலையில் முடிந்துள்ளது.</p><p>


பிரித்தானியாவில் உயர் கல்வி முடிந்த இளைஞர் ஒருவர், கொலை வழக்கொன்றில் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><h3>
சிறுவனை கடத்திய இளைஞர்</h3><p>

பெங்களூருவைச் சேர்ந்த வாலா பாஸ்கர் ரெட்டி (28) என்னும் இளைஞர், சமீபத்தில்தான் பிரித்தானியாவில் உயர் கல்வி முடித்து இந்தியா திரும்பியுள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ca90d601-d43c-402e-a03c-7671ce8d4426/26-6aae506516b59.webp' /></p><p>

இந்நிலையில், ரெட்டியும், பள்ளி ஒன்றில் பேருந்து கிளீனராக வேலை செய்யும் ஏடுகொண்டலு என்னும் நபரும் சேர்ந்து, சிறுவன் ஒருவனை கடத்த திட்டமிட்டுள்ளனர்.
</p><p>
அதன்படி, முன்பு ரெட்டி வீட்டுக்கு அருகில் வாழ்ந்துவந்த ப்ரஜ்வால் என்னும் எட்டாம் வகுப்பு சிறுவனை, பட்டாசு வாங்கித் தருவதாகவும், தனது காரை ஓட்ட அனுமதிப்பதாகவும் கூறி, ஆசை காட்டி அழைத்துச் சென்றுள்ளனர் இருவரும்.
</p><p>
வழியில் ஓரிடத்தில் அந்த சிறுவனை ஒரு கட்டிடத்தில் அடைத்துவைத்து, அவனை பேசவைத்து, வீடியோ ஒன்றை எடுத்து, அவனது பெற்றோரை மிரட்டி பணம் பறிப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர் இருவரும்.&nbsp;</p><p></p><p>
அப்போது, அந்தச் சிறுவனை இரண்டு முறை அவர்கள் தாக்கியுள்ளார்கள். இரண்டாவது முறை தாக்கும்போது அந்தச் சிறுவன் எதிர்பாராதவிதமாக உயிரிழந்துள்ளான்.
</p><p>
பயந்துபோன, ஏடுகொண்டலு ஓட்டம் பிடிக்க, சிறுவனின் உடலை காரின் பின்பக்கத்தில் அடைத்து, காரை எடுத்துக்கொண்டு ஆந்திரா செல்ல முடிவு செய்துள்ளார் ரெட்டி.
</p><p>
ஆனால், பதற்றத்தில் அவரது கார் இரண்டு இடங்களில் விபத்துக்குள்ளாகியுள்ளது. மின் கம்பம் ஒன்றிலும், பின் ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பின் அருகே நின்றிருந்த இரண்டு கார்கள் மீதும் ரெட்டியின் கார் மோத, அங்கிருந்தவர்கள் ரெட்டியை மடக்கிப் பிடித்துள்ளார்கள்.&nbsp;</p><p></p><p>
அவரது காரை சோதனையிடும்போது, காரின் பின் பக்கத்தில் சிறுவன் ஒருவன் உடல் இருக்கவே, உடனடியாக பொலிசார் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
</p><p>
ரெட்டியைக் கைது செய்த பொலிசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருவதுடன், ஏடுகொண்டலுவையும் தேடி வருகிறார்கள்.
</p><p>
ரெட்டிக்கும் அவர் கடத்திய சிறுவன் குடும்பத்துக்கும் பகை எதுவும் இல்லை என்பது உறுதியான நிலையில், எதனால் அவர் அந்தச் சிறுவனை கடத்தினார் என்பது குறித்து பொலிசார் விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.
</p><p>
இந்நிலையில், ரெட்டி பிரித்தானியாவுக்குக் கல்வி கற்கச் சென்றதில், அவரது தந்தைக்கு மூன்று கோடி ரூபாய் கடன் ஆகிவிட்டதால், அந்தக் கடனை அடைக்க, அந்தச் சிறுவனைக் கடத்தி அவனது பெற்றோரிடமிருந்து பணம் பறிக்க ரெட்டி திட்டமிட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-19T09:05:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஷார்ட்டான ஆடையில் புகைப்படத்தை பகிர்ந்த நடிகை ரைசா வில்சன்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/raiza-wilson-recent-photoshoot-1789808665"></link>
            <id>https://viduppu.com/article/raiza-wilson-recent-photoshoot-1789808665</id>
            <summary type="text">ரைசா வில்சன்கன்னட சினிமாவில் மாடலிங் மூலம் தனது சினிமா பயணத்தை துவங்கியவர் தான் ரைசா வில்சன். அந்த துறையில் பணிபுரிந்துகொண்டிருந்தபோதே தமிழ் பக்கம் வந...</summary>
            <content type="html"><![CDATA[<h2>ரைசா வில்சன்</h2><p>கன்னட சினிமாவில் மாடலிங் மூலம் தனது சினிமா பயணத்தை துவங்கியவர் தான் ரைசா வில்சன். அந்த துறையில் பணிபுரிந்துகொண்டிருந்தபோதே தமிழ் பக்கம் வந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f6d453b4-2c7f-453d-a0e9-f48fef9a6f3e/26-6aae502126407.webp' /></p><p>
</p><p>
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மக்களின் கவனம் பெற்றார். அந்நிகழ்ச்சி முடிந்த கையோடு ஹரிஷ் கல்யாணுடன் இணைந்து ஒரு காதல் திரைப்படம் நடித்தார்.
</p><p>
நோவா என்ற படத்தில் நடித்து வரும் ரைசா தற்போது, ஷார்ட்டான ஆடையில் எடுத்த ரீல்ஸ் வீடியோவை பகிர்ந்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-09-19T09:04:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[விருந்துபச்சாரத்தில் பரபரப்பை கிளப்பிய துப்பாக்கிச்சூடு ; ஒருவர் காயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/gunfire-sparks-panic-at-a-party-1789807308"></link>
            <id>https://jvpnews.com/article/gunfire-sparks-panic-at-a-party-1789807308</id>
            <summary type="text">கேகாலை நகரிலுள்ள விருந்தகம் ஒன்றில், அதன் ஊழியர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

நேற்று (18)...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">கேகாலை நகரிலுள்ள விருந்தகம் ஒன்றில், அதன் ஊழியர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
</p><p style="text-align: justify; ">
நேற்று (18) இரவு நடைபெற்ற விருந்துபசாரம் ஒன்றின்போது ஏற்பட்ட தகராறு காரணமாக நிலவிய பதற்றமான சூழ்நிலையைக் கட்டுப்படுத்த முயன்றபோதே, விருந்தக ஊழியர் ஒருவர் ஏர் ரைபிள்&nbsp; துப்பாக்கியால் இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/16b89286-feac-4ff3-a98f-adb7121b010a/26-6aae4ace72b64.webp' /></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் சிகிச்சைக்காக கேகாலை போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
</p><p style="text-align: justify; ">
இந்த சம்பவம் தொடர்பில் கேகாலை பொலிஸார்&nbsp; மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-09-19T09:00:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[Daayra (இந்தி): திரை விமர்சனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/daayra-movie-review-1789807141"></link>
            <id>https://cineulagam.com/article/daayra-movie-review-1789807141</id>
            <summary type="text">பிரித்விராஜ், கரீனா கபூர் நடிப்பில் வெளியாகியுள்ள Daayra இந்தி திரைப்படம் எப்படி இருக்கிறது என்று பார்ப்போம் வாங்க.கதைக்களம் 

2019ஆம் ஆண்டில் DCP ர...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரித்விராஜ், கரீனா கபூர் நடிப்பில் வெளியாகியுள்ள Daayra இந்தி திரைப்படம் எப்படி இருக்கிறது என்று பார்ப்போம் வாங்க.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dc066b00-29cc-4307-9301-861017bac6dd/26-6aae4a28e99b6.webp' /></p><h2>கதைக்களம் </h2><p>

2019ஆம் ஆண்டில் DCP ராமன் குமார் செய்த ஒரு விஷயத்திற்காக மக்கள் பட்டாசுகளை வெடித்து கொண்டாடுகிறார்கள். 

அதனை டிவியில் பார்க்கும் ஒரு குடும்பம் சோகத்தில் இருக்க, ராகினி என்ற இளம்பெண்ணை வன்புணர்வு செய்து கொன்றவர்களை DCP ராமன் என்கவுன்டர் செய்திருக்கிறார் என்பது பின்னர் தெரிய வருகிறது.
</p><p>
அதுகுறித்து பத்திரிகையாளர்கள் சில கிடுக்குப்பிடி கேள்விகளை கேட்க, அதற்கு பதில் கொடுக்க முடியாமல் தடுமாறும் DCP ராமன் சட்டென பேட்டியை முடிக்கிறார்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e0827a91-65a2-44d1-9d1b-4b712ed11d7d/26-6aae4b8816ffa.webp' /></p><p>இதனால் அது போலி என்கவுன்டர் ஆக இருக்கலாம் என சந்தேகம் எழ, மற்றொரு DCP அஜோனி கோஹ்லி (கரீனா கபூர்) தனது குழுவுடன் உண்மையை கண்டுபிடிக்க களமிறங்குகிறார். </p><p>

அதனைத் தொடர்ந்து, அவருக்கு ஒவ்வொரு விஷயமாக தெரிய வர சில சந்தேகங்களும் ஏற்படுகின்றன.

பின்னர் அது போலி என்கவுன்டரா? இல்லையா? என்பதை அஜோனி நிரூபித்தாரா என்பதே மீதிக்கதை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3ef756b5-d9fa-442e-8711-c3debc5681c5/26-6aae4b88dd4cd.webp' /></p><p></p><h3>படம் பற்றிய அலசல் </h3><p>

இந்தியாவை உலுக்கிய நிர்பயா சம்பவத்தை கண்முன் நிறுத்தும் கதைக்களத்தை மேக்னா குல்ஸர் எழுதி இயக்கியுள்ளார். 

பிரித்விராஜ் சுகுமாரன் இருப்பதால் இந்தி மற்றும் மலையாளம் என இருமொழிகளில் இப்படம் வெளியாகியுள்ளது. </p><p>

ஆனால் படத்தின் திரைக்கதை ஸ்லோபர்ன் திரில்லர் ஆக மலையாளப் படம் போன்றே மெதுவாக நகரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. 

அதுவே படத்திற்கு பின்னடைவாகவும் அமைந்துள்ளதுதான் வருத்தம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/65ba33bd-1145-4007-84fc-565e6b64089d/26-6aae4b899509a.webp' /></p><p> பிரித்விராஜ் நல்லவரா கெட்டவரா என்ற சஸ்பென்ஸை கிளைமேக்ஸ் வரை தக்கவைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

முதல் பாதி வரை வரும் கரீனா கபூர் ஒரு கட்டத்தில் காணாமல் போகிறார். பின்னர் திடீரென கதைக்குள் வருவது உறுத்தல்.
</p><p>
பாதிக்கப்பட்ட குடும்பத்தின் வலியையும், காவல்நிலையத்தில் எளிய மக்களை நடத்தும் விதத்தையும் எதார்த்தமாகவும், நேர்த்தியாகவும் காட்டியுள்ளார் இயக்குநர் மேக்னா.

அதே சமயம், சிறு சிறு அலட்சியங்களும் பெரிய தப்புகளுக்கு வழிவகுக்கும் என்கிற கருத்தை இயக்குநர் இன்னும் சுவாரஸ்யமான திரைக்கதையில் கூறும் வாய்ப்பை தவறவிட்டுவிட்டார்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ddc63714-60a8-49f3-8b70-97ff54c82071/26-6aae4b8a4d8f4.webp' /></p><p></p><p>பிரிதிவிராஜ், கரீனாவைத் தாண்டி ஷிதீ ஜோஷி, பவேஷ் பப்பாணி இருவரும் மிகச் சிறப்பாக நடித்துள்ளனர். அசிந்த் கௌரின் அறிமுக காட்சி தேவையில்லாத ஆணி.

டெக்னிக்கலாக எந்த குறையும் இல்லாத படம். அமித் திரிவேதியின் பாடல்கள், கேத்தன் சோதாவின் பின்னணி இசை சிறப்பு. சௌரப் கோஸ்வாமியின் ஒளிப்பதிவு மிரட்டல்.</p><p><b><u>க்ளாப்ஸ் </u></b></p><ul><li>

கதை </li><li>

நடிகர்களின் பங்களிப்பு </li><li>

இசை </li></ul><p><b><u>

பல்ப்ஸ் </u></b></p><ul><li>

மெதுவான திரைக்கதை </li><li>

பொறுமையை சோதிக்கும் படத்தின் நீளம் </li></ul><p><b>

மொத்தத்தில் Daayra சொல்ல வந்த கருத்தை முன்னிறுத்தாமல், நட்சத்திரங்களை முதன்மைப்படுத்த பார்த்ததால் சறுக்கிவிட்டது. எனினும் ஒருமுறை பார்க்கலாம்.</b></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ea8d39fb-ecd0-4476-9c4e-19cd3cce0d31/26-6aae54034c331.webp' /></p>]]></content>
            <updated>2026-09-19T09:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[வக்ர நிவர்த்தியடையும் சனி.., பணமழையில் நனையப்போகும் 3 ராசிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/3-zodiac-get-money-due-to-sani-vakra-peyarchi-1789806963"></link>
            <id>https://news.lankasri.com/article/3-zodiac-get-money-due-to-sani-vakra-peyarchi-1789806963</id>
            <summary type="text">நவகிரகங்களின் நீதிமானாக விளங்கக்கூடிய சனிபகவான் செய்யும் செயலுக்கு ஏற்ப கர்ம பலன்களை கொடுக்கக்கூடியவர்.

இவர் நீதி, நேர்மை, ஒழுக்கம், கடின உழைப்பு ஆ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நவகிரகங்களின் நீதிமானாக விளங்கக்கூடிய சனிபகவான் செய்யும் செயலுக்கு ஏற்ப கர்ம பலன்களை கொடுக்கக்கூடியவர்.
</p><p>
இவர் நீதி, நேர்மை, ஒழுக்கம், கடின உழைப்பு ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார்.
</p><p>
இந்நிலையில், தற்போது சனி பகவான் மீன ராசியில் ஜூலை 27ஆம் திகதி முதல் வக்ர நிலையில் பயணித்து வருகிறார்.</p><p> </p><p></p><p>மேலும், சனி டிசம்பர் 11ஆம் திகதி வக்ர நிவர்த்தி அடைந்து நேர்கதியில் பயணிக்கவுள்ளார். </p><p>

அந்தவகையில், சனி வக்ர நிவர்த்தி அடைவதால் குறிப்பிட்ட 3 ராசிக்காரர்கள் நற்பலன்களை பெறப்போகின்றனர்.&nbsp;&nbsp;</p><h2>ரிஷபம்
</h2><ul><li>
வேலையில் இருந்த பிரச்சனைகள் தீரும்.
</li><li>
வாழ்க்கையில் சந்தித்து வந்த சிரமங்கள் முடிவுக்கு வரும்.
</li><li>
பணிபுரிபவர்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும்.
</li><li>
பணப் பிரச்சனைகள் தீர்ந்து, நிதி ஆதாயங்கள் கிடைக்கும்.</li></ul><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/161d19c5-c51e-4f8f-ab3a-ae96c4fe0a61/26-6aae49758a557.webp' /></p><p>
</p><h2>
மிதுனம்
</h2><ul><li>
நல்ல பலன்கள் கிடைக்கும்.
</li><li>
புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.
</li><li>
நீண்ட நாட்களாக முடியாமல் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடியும்.</li><li>

பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.</li><li>

மன அழுத்தம் குறைந்து, மன அமைதி கிடைக்கும்.</li></ul><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/430fbd3f-6b58-4652-9d95-2f5f7ea6d146/26-6aae4976417c5.webp' /></p><h2>

துலாம்</h2><ul><li>

தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
</li><li>
வேலையில் இருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும்.
</li><li>
முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.</li><li>

நீண்ட நாட்களாக முடியாமல் இருந்த வேலைகள் நிறைவு பெறும்.
</li><li>
சிலருக்கு நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும்.&nbsp; &nbsp;</li></ul><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/59b09021-f855-431c-b8cc-4a120b4de449/26-6aae4976e7c16.webp' /></p><p>இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p>&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-19T08:36:57+00:00</updated>
        </entry>
    </feed>
