<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-09-15T19:24:55+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானை இலக்கு வைத்து எட்டு நாடுகளின் மூத்த இராணுவத் தலைவர்களை சந்தித்த CENTCOM!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/centcom-eight-nation-talks-targeting-iran-1789499885"></link>
            <id>https://ibctamil.com/article/centcom-eight-nation-talks-targeting-iran-1789499885</id>
            <summary type="text">கடந்த வாரம் ஜெர்மனியில் நடைபெற்ற திட்டமிடப்பட்ட மாநாட்டில் எட்டு நாடுகளைச் சேர்ந்த மூத்த இராணுவத் தலைவர்களைச் அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு (CENTCOM...</summary>
            <content type="html"><![CDATA[<p>கடந்த வாரம் ஜெர்மனியில் நடைபெற்ற திட்டமிடப்பட்ட மாநாட்டில் எட்டு நாடுகளைச் சேர்ந்த மூத்த இராணுவத் தலைவர்களைச் அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு (CENTCOM) அதிகாரிகள் சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>மத்திய கிழக்கில் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்து குறித்த தரப்பினர் விவாதித்ததாக கூறப்படுகிறது.</p><p> </p><p>அமெரிக்காவைச் சேர்ந்த முக்கிய செய்தி நிறுவனத்தின் தகவலின்படி, “இஸ்ரேல், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன், குவைத், கட்டார், ஜோர்தான் மற்றும் எகிப்து ஆகிய எட்டு நாடுகளின் இராணுவத் தலைமை அதிகாரிகள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றதாக இஸ்ரேலிய அதிகாரிகள் இருவர் தெரிவித்துள்ளனர்.</p><p></p><h2>அமெரிக்க இராணுவத் தளங்கள்</h2><p>மேலும், ஈரான், அமெரிக்க இராணுவத் தளங்களைத் தாக்கியிருந்தாலும், அமெரிக்க இராணுவப் படைகள் மத்திய கிழக்கில் இருந்து வெளியேறாது என்று பங்கேற்பாளர்களிடம் CENTCOM தளபதி அட்மிரல் பிராட் கூப்பர், தெரிவித்தாகவும் கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2c3bdce3-03a9-450e-9089-fe2e398504dd/26-6aa999ef9f12f.webp' /></p><p>மேலும், ஹோர்முஸ் நீரிணை வழியாக கப்பல் போக்குவரத்தை விரிவுபடுத்துவதற்கான அமெரிக்காவின் திட்டங்கள் குறித்தும் அவர் மாநாட்டில் விளக்கமளித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
ஹோர்முஸ் நீரிணை தொடர்பான பதற்றம்
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே ஹோர்முஸ் நீரிணை விவகாரத்தில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் இந்தக் கூட்டம் நடைபெற்றுள்ளது.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள I<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">BC தமிழ் WHATSAPP</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-15T19:18:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[செப்டம்பர் 22 இறுதித் தீர்ப்பு: வைத்தியர்களுடன் போலி நாடகமா..! சுரேஷ் சலேவுக்கு கடும் அழுத்தம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/final-verdict-on-the-easter-sunday-attacks-1789499833"></link>
            <id>https://tamilwin.com/article/final-verdict-on-the-easter-sunday-attacks-1789499833</id>
            <summary type="text">உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய மூன்றாவது சந்தேக நபராக பெயரிடப்பட்டுள்ள சுரேஷ் சலே, 100 நாட்களாக வைத்தியசாலையில் தங்கியிருப்பது தொடர்பில் பல்வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய மூன்றாவது சந்தேக நபராக பெயரிடப்பட்டுள்ள சுரேஷ் சலே, 100 நாட்களாக வைத்தியசாலையில் தங்கியிருப்பது தொடர்பில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன. அவர் வைத்தியசாலையில் தங்கியிருப்பது போலி நாடகமா என்ற கேள்வியையும் இலங்கையின் மூத்த சட்டத்தரணி திலீப பீரிஸ் எழுப்பியுள்ளார்.</p><p>
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று 7 வருடங்கள் கடந்துள்ள நிலையில், அதன் பின்னர் ஆட்சிக்கு வந்த முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, தாக்குதலுக்கு காரணமானவர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பி, அவர்கள் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிச் செல்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
</p><p>
அதேவேளை, சிறையில் இருந்தவர்களையும் விடுதலை செய்து, தேசத்திற்கு பெரும் அநீதி இழைத்துள்ளதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.</p><h2>

ராஜபக்சர்கள் அரங்கேற்றும் போலி நாடகங்கள்</h2><p>
இலங்கையில் இருந்த வளங்களை கொள்ளையடித்த ராஜபக்சர்கள், தற்போது மேடைகளில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு எதிராக கோஷங்களை எழுப்பி வருவதாகவும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ea07bf8b-0987-4325-86d4-88385a483e37/26-6aa999e9092e8.webp' /></p><p>
</p><p>
மேலும், செப்டம்பர் 22ஆம் திகதி குண்டுவெடிப்புச் சம்பவங்களுடன் தொடர்புடைய 25 பிரதிவாதிகளுக்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள முக்கிய குற்றவியல் வழக்கின் இறுதித் தீர்ப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சுரேஷ் சலே வைத்தியசாலையில் தங்கியிருப்பது தொடர்பில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன.
</p><p>
இவ்வாறான நிலையில், சுரேஷ் சலேவின் வைத்தியசாலை தங்கல், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகள் மற்றும் ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் சர்ச்சைக்குரிய நடவடிக்கைகள் குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.
</p><p>
இதுபோன்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான பல்வேறு சர்ச்சைக்குரிய விடயங்களை உங்கள் பார்வைக்கு கொண்டு வருகின்றது News Insight நிகழ்ச்சி,&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/TQJRICBAAbw" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-15T19:18:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[பேய் பிடித்ததாக கூறி மாணவியை தோழிகள் செய்த சம்பவம் ; விசாரணையில் காத்திருந்த ஷாக்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/friends-act-leaves-student-distressed-1789499230"></link>
            <id>https://jvpnews.com/article/friends-act-leaves-student-distressed-1789499230</id>
            <summary type="text">மகளிர் என்ஜினீயரிங் கல்லூரி விடுதியில் பேய் பிடித்ததாக கூறி மாணவியின் கையில் கற்பூரம் ஏற்றியும், துடைப்பத்தால் அடித்தும் கொடுமைப்படுத்திய தோழிகள் மீது...</summary>
            <content type="html"><![CDATA[<p>மகளிர் என்ஜினீயரிங் கல்லூரி விடுதியில் பேய் பிடித்ததாக கூறி மாணவியின் கையில் கற்பூரம் ஏற்றியும், துடைப்பத்தால் அடித்தும் கொடுமைப்படுத்திய தோழிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
</p><p>&nbsp;கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் பொறியியல் கல்லூரியில்&nbsp; மாணவி முதலாம் ஆண்டு படிக்கும் மாணவியை 2 மாணவிகள்,&nbsp; பேய் பிடித்ததாக கூறி, அவருடன் தங்கியிருந்த தோழிகளான 4 பேரும் அந்த மாணவியின் கையில் கற்பூரத்தை ஏற்றி உள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/58319077-4ec3-4a33-b7c2-2fb6703513dc/26-6aa9975fb8f40.webp' /></p><p> </p><h2> பொலிஸார் விசாரணை</h2><p>மேலும் துடைப்பத்தால் அந்த மாணவியை அடித்து கொடுமைப்படுத்தியுள்ளனர். மேலும் இதுகுறித்து வெளியில் கூறினால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டினர். </p><p>தோழிகளின் துன்புறுத்தலை பொறுத்துக்கொள்ள முடியாத மாணவி, சின்னசேலம் போலீசில் புகார் கொடுத்தார்.</p><p></p><p> அதன்பேரில் சக மாணவிகள் 4 பேர் மீதும் சின்னசேலம் பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.&nbsp;&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-09-15T19:07:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[நோர்வேயில் முக்கிய அமைச்சு பதவியை பொறுப்பேற்றுள்ள ஈழத்தமிழ் பெண் - அநுர அரசாங்கம் வாழ்த்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/kamzy-gunaratnam-appointed-transport-minister-1789484262"></link>
            <id>https://tamilwin.com/article/kamzy-gunaratnam-appointed-transport-minister-1789484262</id>
            <summary type="text">நோர்வேயின் புதிய போக்குவரத்து அமைச்சராக ஈழத்தமிழ் பெண் கம்சி குணரத்னம் பொறுப்பேற்றுள்ள நிலையில், இலங்கை அரசாங்கம் வாழ்த்து தெரிவித்துள்ளது. 

வெளிந...</summary>
            <content type="html"><![CDATA[<p>நோர்வேயின் புதிய போக்குவரத்து அமைச்சராக ஈழத்தமிழ் பெண் கம்சி குணரத்னம் பொறுப்பேற்றுள்ள நிலையில், இலங்கை அரசாங்கம் வாழ்த்து தெரிவித்துள்ளது.</p><p> 

வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் தனது சமூக வலைத்தளத்தில் வாழ்த்தினை தெரிவித்துள்ளார்.</p><p> 

“<i><b>நோர்வேயின் போக்குவரத்து அமைச்சராக பதவியேற்றுள்ள அமைச்சர் கம்சி குணரத்தினத்திற்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். பகிரப்பட்ட பாரம்பரியத்தைக் கொண்ட நோர்வே வாழ் இலங்கைச் சமூகத்தினருக்கு பெருமைக்குரிய தருணம் இதுவாகும். அமைச்சர் கம்சி குணரத்னம் தனது அமைச்சு பதவியை வெற்றிகரமான முன்னெடுக்க வாழ்த்துகிறேன்</b></i>” என அமைச்சர் தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Heartiest congratulations to Minister Kamzy Gunaratnam on taking oaths as the Minister of Transport of Norway. A proud moment for Sri Lankan community in Norway given the shared heritage. I wish Minister Gunaratnam every success in leading her Ministry.</p>&mdash; Vijitha Herath (@HMVijithaHerath) <a href="https://x.com/HMVijithaHerath/status/2098377957895225542?ref_src=twsrc%5Etfw">September 11, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><h2><b>முதலாவது தமிழ்&nbsp;பெண்</b></h2><p>

யாழ்ப்பாணத்தை பின்புலமாக கொண்ட 38 வயதான கம்சி குணரத்னம், நோர்வேயில் அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட முதலாவது தமிழ் பெண்ணாகும். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b76f8fff-057d-4be3-8f5d-3976bcf16d81/26-6aa9630584a9a.webp' /></p><p>கடந்த 11ஆம் திகதி தனது அமைச்சினை பொறுப்பெற்றுக் கொண்ட நிலையில், தமிழ் மக்களின் வாழ்த்தினை பெற்று வருகிறார்.</p><p> 

போக்குவரத்து அமைச்சர் என்ற முறையில், பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்து கொள்கைகள், அத்துடன் அஞ்சல் சேவைகள் தொடர்பான பொறுப்புகளுக்கு இவர் தலைமை தாங்குவார்.
</p><p>
1988ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் கம்சாயினி குணரத்னம் என்ற பெயரில் பிறந்த இவர், யுத்த சூழ்நிலை காரணமாக சிறு வயதில் பெற்றோருடன் நோர்வேக்கு சென்றிருந்தார்.</p><p> </p><h3><b>

பிரதான அமைச்சு பதவி</b></h3><p>தனது 19 வயது முதல் தொழிலாளர் கட்சியின் மூலம் அரசியல் பயணத்தை ஆரம்பித்த கம்சி, சமகாலத்தில் பிரதான அமைச்சு பதவியை பொறுப்பேற்றுள்ளார். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/17ce473e-195f-4d51-8a97-825bb5037c46/26-6aa96306382ba.webp' /></p><p>ஒஸ்லோவின் நகர சபை உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டு, பின்னர் ஒஸ்லோவின் துணை மேயர், நாடாளுமன்ற உறுப்பினர் என படிப்படியாக அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். </p><p>

இலங்கையில் போர் காரணமாக காணாமல் போனவர்கள், மனித உரிமை மீறல்கள் மற்றும் செம்மணி மனித புதைகுழி தொடர்பில் நோர்வே நாடாளுமன்றத்தில் கம்சி குணரட்னம் கேள்வி எழுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p><br></p><p> 
</p>]]></content>
            <updated>2026-09-15T18:53:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[மியன்மார் இராணுவத்திற்குத் தரவுகளை வழங்கிய குற்றச்சாட்டு : நோர்வே பொலிஸார் விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/providing-data-myanmar-military-norwegian-1789494283"></link>
            <id>https://tamilwin.com/article/providing-data-myanmar-military-norwegian-1789494283</id>
            <summary type="text">மியன்மாரில் 2021 ஆம் ஆண்டு இடம்பெற்ற இராணுவ ஆட்சிக்கவிழ்ப்பின் பின்னர்,
அந்நாட்டு இராணுவத்திற்கு வாடிக்கையாளர்களின் தொலைத்தொடர்புத் தரவுகளை வழங்கி
ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>மியன்மாரில் 2021 ஆம் ஆண்டு இடம்பெற்ற இராணுவ ஆட்சிக்கவிழ்ப்பின் பின்னர்,
அந்நாட்டு இராணுவத்திற்கு வாடிக்கையாளர்களின் தொலைத்தொடர்புத் தரவுகளை வழங்கி
மனிதநேயத்திற்கு எதிரான குற்றங்களுக்குத் துணைபுரிந்ததாகக் கூறி, பிரபல
தொலைத்தொடர்பு நிறுவனமான டெலினோர் (Telenor) மீது நோர்வே பொலிஸார் விசாரணைகளை
ஆரம்பித்துள்ளனர்.
</p><p>
விசாரணைகளின் ஒரு பகுதியாக ஓஸ்லோவிலுள்ள டெலினோர் நிறுவனத்தின் தலைமையகத்தில்
நோர்வே குற்றவியல் விசாரணைப் பிரிவினர் மற்றும் பாதுகாப்புப் பிரிவினர்
செவ்வாய்க்கிழமை சோதனைகளை மேற்கொண்டனர்.
</p><h2>மியன்மாரிலிருந்து முற்றாக வெளியேறிய</h2><p>
மியான்மார் இராணுவத்தினர் பொதுமக்கள் மீது கடுமையான மனித உரிமை மீறல்களைச்
செய்து வந்த காலப்பகுதியில், அந்நிறுவனம் தனது வாடிக்கையாளர்களின் தொலைபேசி
அழைப்பு விபரங்கள் மற்றும் இருப்பிடத் தரவுகளை இராணுவத்திடம் கைமாற்றியதாகக்
குற்றம் சாட்டப்பட்டுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/40f79765-953b-4f25-88dd-f2c7233650ca/26-6aa992c4e818d.webp' /></p><p>இதேவேளை, இராணுவ ஆட்சியாளர்களின் உத்தரவுகளுக்குக் கீழ்ப்படியாவிட்டால் தமது
ஊழியர்கள் சிறைவாசம், சித்திரவதை மற்றும் மரண தண்டனையை எதிர்கொள்ள நேரிடும்
என்ற அசாதாரண சூழல் காரணமாகவே இத்தகைய முடிவை எடுக்க வேண்டியிருந்ததாக
டெலினோர் நிறுவனம் விளக்கமளித்துள்ளது.</p><p>

அத்துடன், தடைகள் விதிக்கப்பட்ட கண்காணிப்புக் கருவிகளை வெளியாட்களுக்குக்
கைமாற்றியமை மற்றும் நோர்வே வெளியுறவு அமைச்சின் அனுமதியின்றி வர்த்தகத்தை
விற்பனை செய்தமை தொடர்பிலும் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p>

2022 மார்ச் மாதத்துடன் மியன்மாரிலிருந்து முற்றாக வெளியேறிய அந்நிறுவனம்,
பொலிஸாரின் விசாரணை நடவடிக்கைகளுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கி வருவதாகத்
தெரிவித்துள்ளது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-15T18:47:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[பொலிஸ் சான்றிதழ் பெற காத்திருப்போருக்கான முக்கிய அறிவித்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/important-notice-for-police-certificate-sri-lanka-1789495398"></link>
            <id>https://jvpnews.com/article/important-notice-for-police-certificate-sri-lanka-1789495398</id>
            <summary type="text">பொலிஸ் சான்றளிப்புச் சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்வதற்காகப் பிரதேச பொலிஸ் நிலையங்கள் ஊடாக விண்ணப்பிக்கும் வாய்ப்பு விண்ணப்பதாரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளத...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">பொலிஸ் சான்றளிப்புச் சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்வதற்காகப் பிரதேச பொலிஸ் நிலையங்கள் ஊடாக விண்ணப்பிக்கும் வாய்ப்பு விண்ணப்பதாரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p style="text-align: justify; ">

 

கணினி அமைப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள் காரணமாக, இணையவழி ஊடாக பொலிஸ் சான்றளிப்பு விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6925a2e7-d43d-4c63-99d2-e451e46888fa/26-6aa98867da309.webp' /></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
 

அதற்கமைய, கணினி முறைமை சீரமைக்கப்படும் வரை, விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்குப் பிரதேச பொலிஸ் நிலையங்கள் ஊடாகச் செயற்படுமாறு பொலிஸார் மேலும் கேட்டுக்கொண்டுள்ளனர்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-15T18:30:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் வீட்டின் உரிமையாளர்களுடன் மோதல் –இருவர் மருத்துவமனையில் அனுமதி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/two-men-injured-after-waterloo-assault-wrps-1789483206"></link>
            <id>https://canadamirror.com/article/two-men-injured-after-waterloo-assault-wrps-1789483206</id>
            <summary type="text">&amp;nbsp;கனடாவின் வாட்டர்லூ பிராந்தியத்தில் உள்ள குடியிருப்பு பகுதி ஒன்றில் ஏற்பட்ட கடுமையான தாக்குதல் சம்பவத்தில் இருவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கனடாவின் வாட்டர்லூ பிராந்தியத்தில் உள்ள குடியிருப்பு பகுதி ஒன்றில் ஏற்பட்ட கடுமையான தாக்குதல் சம்பவத்தில் இருவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
</p><p>கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4:40 மணியளவில், கிங் ஸ்ட்ரீட் நார்த் அருகே உள்ள கொலம்பியா ஸ்ட்ரீட் வெஸ்ட் பகுதியில் அமைந்த குடியிருப்பு கட்டிடம் ஒன்றில் இச்சம்பவம் நடந்துள்ளது.</p><p> 
குறிப்பிட்ட ஒரு வீட்டிற்குள் இரு நபர்கள் நுழைய முயன்றதாகக் கூறப்படும் நிலையில், அவர்களுக்கும் வீட்டின் உரிமையாளர்களுக்கும் இடையே திடீரென தகராறு ஏற்பட்டு மோதலாக மாறியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5776aef7-3ab2-492b-91e9-2c63fed6b422/26-6aa958c7a8fc9.webp' /></p><p>
இந்த மோதலில் 34 மற்றும் 29 வயதுடைய இரு ஆண்கள் பலத்த காயமடைந்து, சிகிச்சைக்காக உடனடியாக உள்ளூர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.</p><p>
இந்தத் தாக்குதல் சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சிகள் அல்லது அப்பகுதியில் பதிவுசெய்யப்பட்ட கண்காணிப்புக் கேமரா மற்றும் டேஷ்கேம் வீடியோ காட்சிகள் வைத்திருப்பவர்கள் உடனடியாகத் தொடர்புகொண்டு தகவல் தெரிவிக்குமாறு வாட்டர்லூ பிராந்தியக் காவல்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-15T18:30:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[4 மில்லியன் ரூபாய் மோசடி: மேல் மாகாண வீதிப்போக்குவரத்து அதிகார சபையின் முன்னாள் தலைவர் அதிரடி கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/prasanna-sanjeeva-arrested-1789496594"></link>
            <id>https://tamilwin.com/article/prasanna-sanjeeva-arrested-1789496594</id>
            <summary type="text">மேல் மாகாண வீதி மற்றும் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் முன்னாள் தலைவர் பிரசன்ன சஞ்சீவ, மோசடியான டெண்டர் நடைமுறைகள் செய்த குற்றத்திற்காக தொடர்பில்...</summary>
            <content type="html"><![CDATA[<p>மேல் மாகாண வீதி மற்றும் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் முன்னாள் தலைவர் பிரசன்ன சஞ்சீவ, மோசடியான டெண்டர் நடைமுறைகள் செய்த குற்றத்திற்காக தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>

டெண்டர் நடைமுறைகளை மீறி பயணிகள் போக்குவரத்து அனுமதிகளை வழங்கியதன் மூலம் அரசாங்கத்திற்கு 4.1 மில்லியனுக்கும் அதிகமான ரூபா இழப்பை ஏற்படுத்தியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
</p><p>
அது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்திருந்த இலஞ்ச அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு இன்று(15.09.2026) அவரைக் கைது செய்துள்ளது.
</p><h2>
மோசடி குற்றச்சாட்டு</h2><p>
அவருடைய பதவிக் காலத்தில் மேல் மாகாண வீதி மற்றும் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை சட்ட விதிமுறைகளை மீறி, முறையான டெண்டர் நடைமுறைகளைப் பின்பற்றாமல் பயணிகள் போக்குவரத்து அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ad71711a-a0a8-41b5-80ae-a6d7075a226a/26-6aa98d41e1173.webp' /></p><p>
</p><p>
இந்த சட்டவிரோத அனுமதிகள் மூலமாக அரசாங்கத்திற்கு மொத்தம் 4,160,000 ரூபா நிதி இழப்பு ஏற்பட்டுள்ளது.</p><p>

வெளித்தரப்பினருக்குச் சட்டவிரோதமாகப் பயனளித்து ஊழல் புரிந்துள்ளார் என்ற சந்தேகத்தின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
</p><p>
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கொழும்பு பிரதான மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.&nbsp;&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-15T18:24:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[சவூதி அரேபியாவில் வசிக்கும் இலங்கையர்களுக்கு அவசர அறிவிப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/important-announcement-for-sri-lankans-in-saudi-1789493033"></link>
            <id>https://ibctamil.com/article/important-announcement-for-sri-lankans-in-saudi-1789493033</id>
            <summary type="text">சவூதி அரேபியாவின் மேற்குப் பகுதியில் உருவாகி வரும் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, ஜித்தா துணைத் தூதரகம் அப்பகுதியில் வசிக்கும் இலங்கையர்களுக்கு ஒரு சி...</summary>
            <content type="html"><![CDATA[<p>சவூதி அரேபியாவின் மேற்குப் பகுதியில் உருவாகி வரும் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, ஜித்தா துணைத் தூதரகம் அப்பகுதியில் வசிக்கும் இலங்கையர்களுக்கு ஒரு சிறப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.</p><p>

இதற்கமைய, தங்கள் கைபேசிகளில் அவசரகால எச்சரிக்கை வந்தால், பின்வரும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.</p><p></p><p>
</p><h2>
அவசரகால அறிவிப்பு</h2><p>
மேலும், அவசரகால சூழ்நிலைகளில், மக்கா மற்றும் மதீனா பகுதிகளில் 911 என்ற அவசரகால சேவை எண்ணையும், மற்ற பகுதிகளில் 998 என்ற எண்ணையும் அழைக்க வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/244bf37d-9f61-4e36-ab67-efaec71b7d9d/26-6aa981e9360b7.webp' /></p><p>
</p><p>
துணைத் தூதரகத்தின் அவசரகால தொடர்பு எண்ணான 056 098 6671ஐயும் அழைக்கலாம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-15T18:12:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[இன்னும் சில நாட்களில்.. சரித்திரம் படைக்கவுள்ள போராட்டம் திரைப்படம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/porattam-movie-music-launch-event-1789495539"></link>
            <id>https://tamilwin.com/article/porattam-movie-music-launch-event-1789495539</id>
            <summary type="text">யாழ்ப்பாணத்தில் தயாரிக்கப்பட்டு, எதிர்வரும் 2ஆம் திகதி வெளிவரவுள்ள
போராட்டம் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா யாழ்ப்பாண கலாச்சார மண்டபத்தில்
கோலமா...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணத்தில் தயாரிக்கப்பட்டு, எதிர்வரும் 2ஆம் திகதி வெளிவரவுள்ள
போராட்டம் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா யாழ்ப்பாண கலாச்சார மண்டபத்தில்
கோலமாக இடம்பெற்றது. </p><p>

இந்த திரைப்படமானது,உதைப்பந்தாட்ட வீரரனொருவனின் கதையாகவும், ஈழத்தை களமாகவும் 
கொண்டு பல சவால்களுக்கு மத்தியில் ராஜ் சிவராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ளது.
</p><p>
கதாநாயகனாக றீகன் அறிமுகமாகியுள்ளதுடன் , கதாநாயகியாக நிவேதிகா ராசையா நடித்துள்ளார். </p><p>

இதேவேளை, ஈழ சினிமாவின் பிரபல நடிகர் நடிகைகளும் நடித்துள்ளார்கள்.</p><p> 

அத்துடன், இந்த திரைப்படத்திற்கு பூவன் மதீசன் இசையமைத்துள்ளார்.</p><h2> 

இசை வெளியிட்டு விழா</h2><p>
படத்தில் பாடல்களை வாகீசன் ராசையா , உமாகரன் ராசையா , பொத்துவில் அஸ்மீன் ,
பூவன் மதீசன் , கே.எஸ் சாந்தகுமார் மற்றும் அருண் யோகதாசன் ஆகியோர்
எழுதியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/663d9505-26b4-4d77-b27b-4a6a0a4a9fdd/26-6aa98910beefd.webp' /></p><p>
</p><p>
பாடல்களை தென்னிந்திய பிரபல இசையமைப்பாளரும், பாடகருமான தேனிசை தென்றல் தேவா,
பாடகர் சத்யன், பாடகி கோவை கமலா ஆகியோருடன், ஈழத்தின் பிரபல பாடகரான வாகீசன், கோகுலன் சாந்தன், தேவன் அய்யா , பூவன் மதீசன், டயஸ் மற்றும் அக்சலா ஆகியோர் பாடியுள்ளனர்.
</p><p>
இசை வெளியீட்டு நிகழ்வில், தென்னிந்தியாவின் பிரபல யூடியூப்பரான மைக் செட்
சிறீராம், பிரபல பாடகர் சத்யன் உள்ளிட்டோருடன் திரைப்பட குழுவினரும் கலந்துக் கொண்டுள்ளனர்.&nbsp;&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-15T18:06:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[டசின் கணக்கான விமானங்கள், நூற்றுக்கணக்கான கட்டிடங்கள்... ஈரானால் அமெரிக்கா இழந்தவை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/us-loss-to-iran-attacks-1789495766"></link>
            <id>https://news.lankasri.com/article/us-loss-to-iran-attacks-1789495766</id>
            <summary type="text">US loss to Iran attacks revealed: ஈரான் தாக்குதல்களால் அமெரிக்காவிற்கு ஏற்பட்ட இழப்புகள் வெளியாகியுள்ளன.
ஈரான் நடத்திய தாக்குதல்களில், குறைந்தது 30 M...</summary>
            <content type="html"><![CDATA[<p>US loss to Iran attacks revealed: ஈரான் தாக்குதல்களால் அமெரிக்காவிற்கு ஏற்பட்ட இழப்புகள் வெளியாகியுள்ளன.
</p><p>ஈரான் நடத்திய தாக்குதல்களில், குறைந்தது 30 MQ-9 ரீப்பர் (MQ-9 Reaper) ட்ரோன்கள் உட்பட டசின் கணக்கான விமானங்களை அமெரிக்கா இழந்ததாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.</p><h2>சந்தித்த இழப்புகள்</h2><p>மட்டுமின்றி, மத்திய கிழக்கு நாடுகளில் அமெரிக்கா பயன்படுத்திய நூற்றுக்கணக்கான கட்டிடங்கள் மற்றும் கட்டமைப்புகள் சேதமடைந்தன அல்லது அழிக்கப்பட்டன என்றும்&nbsp;அறிக்கை ஒன்றில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8139e7ac-df5f-481c-8cbb-63b17d190cc9/26-6aa989d89c97b.webp' /></p><p>
</p><p>குறித்த தகவல்களை பென்டகனின் கண்காணிப்பு அமைப்பு ஒன்றே உத்தியோகப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. பாதுகாப்புத் துறை தலைமை ஆய்வாளரால் திங்களன்று வெளியிடப்பட்ட அறிக்கையில், பிப்ரவரி 28 முதல் ஜூன் 30 வரை போரில் அமெரிக்கா சந்தித்த இழப்புகள் குறித்த முதல் உத்தியோகப்பூர்வ விவரங்கள் அடங்கியுள்ளது.</p><p> இந்த அறிக்கையில், தற்போது அமெரிக்கா எதிர்கொள்ளும் ஆயுதப் பற்றாக்குறை தொடர்பில் விரிவாகவே குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், அமெரிக்க வரலாற்றிலேயே முன்னெப்போதும் இல்லாத வகையில் மிகச் சிறந்த மற்றும் உயர்தர ஆயுதங்களை தயாரித்து வருவதாக திங்களன்று ட்ரம்ப் கூறினார்.</p><p></p><p> </p><p>முன்பு, அமெரிக்க ஊடகங்கள் ஆயுதத் தட்டுப்பாடு குறித்துத் தெரிவித்திருந்த நிலையில், அமெரிக்காவிடம் கிட்டத்தட்ட வரம்பற்ற அளவில் ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் உள்ளதாக அவர் அழுத்தமாகக் கூறியிருந்தார்.
</p><p>பிப்ரவரி மாத இறுதியில் ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களுடன் தொடங்கிய இப்போரின்போது, ​​வளைகுடாப் பகுதியில் உள்ள அமெரிக்கத் தளங்கள் மற்றும் சொத்துகள் மீது ஈரான் தொடர்ந்து குண்டுவீச்சுத் தாக்குதல்களை நடத்தி வந்துள்ளது. </p><p>அத்தகைய தாக்குதல்களில் பெரும்பாலானவற்றை, இடைமறித்து முறியடித்துவிட்டதாக வளைகுடா நாடுகளும் அமெரிக்காவும் தெரிவித்தன. ஆனால், அப்பிராந்தியத்தில் உள்ள அமெரிக்கப் படைகளுக்கும் அதன் தளங்களுக்கும் ஏற்பட்டுள்ள சேதமும் இழப்பும் மில்லியன் கணக்கான டொலர்கள் மதிப்பிலானவை என்றும், இது முன்பு ஒப்புக்கொள்ளப்பட்டதை விட மிக அதிகம் என்றும் பென்டகனின் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. </p><p>ஈரான் மீதானப் போருக்கு முன்னர் எவ்விதக் கட்டுப்பாடும் இன்றி, எந்த நாட்டினரின் கப்பலும் கடந்து சென்றுகொண்டிருந்த ஹார்முஸ் நீரிணை தொடர்பில் தற்போது ஈரானும் அமெரிக்காவும் மோதத் தொடங்கியுள்ளன.</p><h2>417 அமெரிக்க ராணுவத்தினர்</h2><p>
</p><p>போரின்போது குறைந்தது 11 அமெரிக்க ராணுவத்தினர் போர்க்கள நடவடிக்கைகளில் கொல்லப்பட்டதாகவும், அதேவேளையில் ஏழு பேர் போர்ச் சூழல் சாராத நிகழ்வுகளில் மரணமடைந்ததாகவும் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/93e90cef-0374-4f37-a9d9-c6ffa9b38fa5/26-6aa989d956d3f.webp' /></p><p> </p><p>மேலும், அமெரிக்க நாடாளுமன்றத்திடம் சமர்ப்பிக்கப்பட வேண்டிய கட்டாய அறிக்கையில், ஜூன் 30-ஆம் திகதி வரை ஈரானியத் தாக்குதல்களில் குறைந்தது 417 அமெரிக்க ராணுவத்தினர் காயமடைந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. </p><p>அமெரிக்கா இழந்தவற்றில், முன்னணிக் களப் போர் விமானங்கள் மற்றும் தாக்குதல் விமானங்கள் முதல், வானில் எரிபொருள் நிரப்பும் விமானங்கள், வான்வழி கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு விமானங்கள், மீட்புப் பணிகள் மேற்கொள்ளும் ஹெலிகொப்டர்கள் மற்றும் கண்காணிப்பு ட்ரோன்கள் வரை அனைத்தும் அடங்கும். </p><p>அத்துடன், ஹார்முஸ் நீரிணைக்கு அருகே கண்காணிப்பு மற்றும் தாக்குதல் ட்ரோன்களைப் பலமுறை சுட்டு வீழ்த்தியதன் மூலம், அமெரிக்காவின் சொத்துக்களுக்கு மேலும் சேதத்தை ஏற்படுத்தியதாக ஈரான் ராணுவம் கூறியுள்ளது.</p><p></p><p> </p><p>மேலும், இந்த மாதத் தொடக்கத்தில் அமெரிக்காவின் 'டைவ்-எல்டி' (Dive-LD) எனும் நீர்மூழ்கிக் கருவியையும் ஈரான் கைப்பற்றியது.
ஈரானியத் தாக்குதல்களால் குவைத், பஹ்ரைன், கத்தார், ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா, ஈராக், ஓமான் மற்றும் ஜோர்டான் ஆகிய நாடுகளில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்களில் இருந்த நூற்றுக்கணக்கான கட்டிடங்களும் கட்டமைப்புகளும் சேதமடைந்தன மற்றும் அழிக்கப்பட்டன. </p><p>மேலும், ஈராக், குவைத், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நான்கு நாடுகளில் உள்ள அமெரிக்கத் தூதரக வளாகங்கள் ஈரானியத் தாக்குதல்களால் சேதமடைந்ததாகவும், அதன் மொத்தச் செலவு சுமார் 184 மில்லியன் டொலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளதாகவும் கண்காணிப்பு அமைப்பின் அறிக்கை குறிப்பிட்டுள்ளது. </p><p>அத்துடன், பாக்தாத், ஜெருசலேம், டெல் அவிவ், கெய்ரோ, அம்மான், குவைத் நகரம் மற்றும் மஸ்கட் ஆகிய இடங்களில் பிறப்பிக்கப்பட்ட வெளியேற்ற உத்தரவுகள் மற்றும் பயணக் கட்டுப்பாடுகள் காரணமாக, கட்டுமானத் திட்டங்களில் ஏற்பட்ட தாமதங்களால் அமெரிக்காவுக்கு மாதத்திற்கு சுமார் 24.5 மில்லியன் டொலர் செலவு ஏற்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ce8ad029-dcf1-4cb1-8b21-18c94aff6786/26-6aa989da109b5.webp' /></p><p> </p><p>ஜூன் மாத இறுதி வரை ஈராக் பணிக்கான நடவடிக்கை 600-க்கும் மேற்பட்ட தாக்குதல்களை எதிர்கொண்டதாகவும், இதனால் சுமார் 157 மில்லியன் டொலர் வரை செலவு ஏற்பட்டதாகவும் அமெரிக்க வெளிவிவகாரத் துறை கூறியதாக அந்த அறிக்கை தெரிவித்தது. </p><p>குவைத்தில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் நடத்திய தாக்குதலில் அந்த வளாகம் சேதமடைந்துள்ளதாகவும், அதன் சேத மதிப்பு 14.75 மில்லியன் டொலர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. </p><p>மார்ச் 3 அன்று, இரண்டு ஈரானிய ட்ரோன்கள் ரியாத்தில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தைத் தாக்கியதில், சுமார் 11.5 மில்லியன் டொலர் மதிப்பிலான சேதம் ஏற்பட்டது. </p><p>துபாயில் உள்ள அமெரிக்கத் துணைத் தூதரகத்தின் பயன்பாட்டுக் கட்டடம் ஒன்று சேதமடைந்ததாகவும், அதனால் சுமார் 1,20,000 டொலர் மதிப்பிலான இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அமெரிக்க வெளிவிவகாரத் துறை தெரிவித்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-15T18:06:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[சவூதியில் வாழும் இலங்கையர்களுக்கு வெளியான அவசர அறிவித்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/urgent-notice-for-sri-lankans-in-saudi-1789493872"></link>
            <id>https://jvpnews.com/article/urgent-notice-for-sri-lankans-in-saudi-1789493872</id>
            <summary type="text">சவூதி அரேபியாவின் மேற்குப் பிராந்தியத்தில் உருவாகி வரும் சூழ்நிலையைக் கருத்திற் கொண்டு, அப்பகுதியில் வாழும் இலங்கையர்களுக்கு ஜித்தாவில் உள்ள துணைத் தூ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">சவூதி அரேபியாவின் மேற்குப் பிராந்தியத்தில் உருவாகி வரும் சூழ்நிலையைக் கருத்திற் கொண்டு, அப்பகுதியில் வாழும் இலங்கையர்களுக்கு ஜித்தாவில் உள்ள துணைத் தூதரகக் காரியாலயம் விசேட அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
</p><p style="text-align: justify; ">
 

தமது கைபேசிக்கு அவசர எச்சரிக்கை (National Warning Alert) கிடைத்தால், பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றுமாறு அந்த அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dc7b981d-987a-45d5-9ee3-6354bf3fbdef/26-6aa98271cd090.webp' /></p><h2 style="text-align: justify; ">அவசர சேவை</h2><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
 

மேலும், அவசர நிலைகளின் போது அவசர சேவை இலக்கங்களாக மக்கா மற்றும் மதீனா பிராந்தியங்களில் 911 என்ற தொலைபேசி இலக்கத்தையும், ஏனைய பகுதிகளில் 998 என்ற தொலைபேசி இலக்கத்தையும் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
 

அத்துடன், துணைத் தூதரகக் காரியாலயத்தின் அவசரத் தொடர்பு இலக்கமான 056 098 6671 என்ற இலக்கத்தையும் தொடர்புகொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-15T18:00:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் பல குற்ற வழக்குகளில் தொடர்புடைய கைதி தப்பியோட்டம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/federal-offender-known-to-frequent-the-gta-wanted-1789482824"></link>
            <id>https://canadamirror.com/article/federal-offender-known-to-frequent-the-gta-wanted-1789482824</id>
            <summary type="text">கனடாவின் டொராண்டோ மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் தீவிரமாக நடமாடக்கூடிய &#039;பிராட்லி எலியட்&#039; (42) என்ற குற்றவாளியைப் பிடிக்க, பொலிஸார் நாடு தழுவிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் டொராண்டோ மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் தீவிரமாக நடமாடக்கூடிய 'பிராட்லி எலியட்' (42) என்ற குற்றவாளியைப் பிடிக்க, பொலிஸார் நாடு தழுவிய பிடியாணை பிறப்பித்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
</p><p>தனது சட்டப்பூர்வ விடுதலையின் போது விதிக்கப்பட்ட நிபந்தனைகளை மீறித் தப்பியோடியுள்ள இவர், 42 வயதுடைய வெள்ளை இனத்தவர் ஆவார். இவர் 5 அடி 9 அங்குலம் உயரமும், 75 கிலோ எடையும், பழுப்பு நிறக் கூந்தலும், ஹேசல் நிறக் கண்களும் கொண்டவர்.
காவல்துறையின் தகவல்படி, இவரது உடலில் பல இடங்களில் அடையாளப் பச்சைகள் குத்தப்பட்டுள்ளன. </p><p>
குறிப்பாக, இவரது வலது மேல் கையில் முள்வேலி, “HAWK” இதயம் மற்றும் சிலுவை அடையாளங்களும், இடது மேல் கையில் சிலுவை மற்றும் “Mom” என்ற வார்த்தையும் உள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2760b585-ee86-4171-8ae3-43b52c41e6ef/26-6aa9574a4f858.webp' /></p><p> 
மேலும், வலது முன்கையில் “Crystal”, கழுத்தில் “Bush”, இடது கையில் பிறந்த திகதியுடன் கூடிய “Jayden”, இடது முன்கையில் “Nanette” மற்றும் முதுகின் நடுப்பகுதியில் “ELLIOTT” என்ற பெயர் மற்றும் இரண்டு கைப்பாக்கிகளின் படங்களும் பச்சை குத்தப்பட்டுள்ளன.
</p><p>அடையாள மோசடி செய்து சொத்துக்களைக் கைப்பற்றுதல், குற்றங்கள் மூலம் பெறப்பட்ட சொத்துக்களை வைத்திருத்தல், அதிகாரிகளின் பணிக்கு இடையூறு செய்தல், அபாயகரமான முறையில் வாகனம் இயக்குதல், வாகனத் திருட்டு, அனுமதியின்றித் தடைசெய்யப்பட்ட ஆயுதங்களை வைத்திருத்தல், ஆயுதத்தால் தாக்குதல் மற்றும் காவலர் போல் ஆள்மாறாட்டம் செய்தல் உள்ளிட்ட பல வழக்குகளில் இவருக்கு 4 ஆண்டுகள் 1 மாதம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.
</p><p>பொதுமக்கள் இவரைப் பற்றியோ அல்லது இவரது இருப்பிடம் குறித்தோ ஏதேனும் தகவல் தெரிந்தால் உடனடியாக 416-808-5900 அல்லது 1-866-870-7673 ஆகிய எண்களிலோ, 'க்ரைம் ஸ்டாப்பர்ஸ்' அமைப்பின் மூலமாகவோ காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-15T17:30:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இவர்களுக்கு இனி அரச சேவை கிடையாது ; வெளியான அதிரடி அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/child-crime-accused-face-government-job-ban-1789492659"></link>
            <id>https://jvpnews.com/article/child-crime-accused-face-government-job-ban-1789492659</id>
            <summary type="text">அரச சேவையில் நுழையும், குறிப்பாகச் சிறுவர்களுடன் நேரடியாகத் தொடர்புடைய பணிகளுக்கு ஆட்களைச் சேர்க்கும்போது, அவர்கள் சிறுவர் குற்றங்களில் குற்றஞ்சாட்டப்...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">அரச சேவையில் நுழையும், குறிப்பாகச் சிறுவர்களுடன் நேரடியாகத் தொடர்புடைய பணிகளுக்கு ஆட்களைச் சேர்க்கும்போது, அவர்கள் சிறுவர் குற்றங்களில் குற்றஞ்சாட்டப்படாதவர்கள் என்பதை உறுதிப்படுத்தும் சான்றிதழைப் பெறுவதற்கு மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு தீர்மானித்துள்ளது. </p><p style="text-align: justify; ">

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா போல்ராஜ், இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தைச் சமர்ப்பிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e69c6493-0607-4c30-8da0-0513507f0138/26-6aa97db4ef1ae.webp' /></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

இதற்கமைய, பொலிஸார் அல்லது தொடர்புடைய உத்தியோகபூர்வ நிறுவனங்கள் மூலம் இந்தச் சான்றிதழைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதுடன், தற்போது அரச சேவையில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளும் தங்களது சேவைத் தேவைகள் மற்றும் சம்பள உயர்வுகளைப் பெறும்போது, குறித்த காலப்பகுதியில் தாங்கள் சிறுவர் குற்றங்களில் ஈடுபடவில்லை என்பதற்கான இந்தச் சான்றிதழை புதுப்பித்து வழங்க வேண்டும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.&nbsp;</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-15T17:22:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[2027ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/cabinet-approval-appropriation-bill-for-year-2027-1789491202"></link>
            <id>https://tamilwin.com/article/cabinet-approval-appropriation-bill-for-year-2027-1789491202</id>
            <summary type="text">எதிர்வரும் 2027 நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.

2027 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தைத் தய...</summary>
            <content type="html"><![CDATA[<p>எதிர்வரும் 2027 நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.</p><p>

2027 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தைத் தயாரிப்பதற்கு 2026 ஜூன் 30 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டிருந்தது.
</p><p>
அதனையடுத்து சட்ட வல்லுனர்களால் தயாரிக்கப்பட்ட, இந்தச் சட்டமூலம் தற்போது சட்ட மா அதிபரின் அனுமதியைப் பெற்றுள்ளது.
</p><h2>நாடாளுமன்றத்தில் முறையாகச் சமர்ப்பிக்க</h2><p>
நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால், குறித்த சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும், அதன் பின்னர் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கும் அங்கீகாரம் கோரி அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d073db3d-8e5d-48c3-bff3-2ebf727477ed/26-6aa97e68032fe.webp' /></p><p>
தற்போதைக்கு குறித்த சட்டமூலம் அமைச்சரவையின் அங்கீகாரம் பெற்றுள்ளதைத் தொடர்ந்து மிகவிரைவில் 2027 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தைப் நாடாளுமன்றத்தில் முறையாகச் சமர்ப்பிக்க அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.</p><p></p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-15T17:22:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீதிமன்றின் இரகசியத் தீர்ப்பு ஜனாதிபதிக்கு எப்படித் தெரிந்தது..! சஜித் கேள்வி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/how-anura-know-court-decision-1789488853"></link>
            <id>https://tamilwin.com/article/how-anura-know-court-decision-1789488853</id>
            <summary type="text">&amp;nbsp;22வது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பாக நீதிமன்றம் வழங்கியதாகக் கூறப்படும் இரகசியத் தீர்ப்பு குறித்து ஜனாதிபதிக்கு எவ்வாறு தெரியவந்தது என எதிர்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;22வது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பாக நீதிமன்றம் வழங்கியதாகக் கூறப்படும் இரகசியத் தீர்ப்பு குறித்து ஜனாதிபதிக்கு எவ்வாறு தெரியவந்தது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேள்வி எழுப்பியுள்ளார். </p><p>
மேல் மாகாணத்தின் களுத்துறை, கம்பஹா மற்றும் கொழும்பு மாவட்டங்களைச் சேர்ந்த உள்ளாட்சிமன்ற உறுப்பினர்கள் மற்றும் தொகுதி அமைப்பாளர்களுடன் ஐக்கிய மக்கள் சக்தி கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.</p><h2>22வது அரசியலமைப்புத் திருத்தம்</h2><p>
</p><p>22வது அரசியலமைப்புத் திருத்தத்தையும் நீதித்துறைத் திருத்தச் சட்டமூலத்தையும் ஒன்றாகவே பரிசீலிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.</p><p> இந்தத் திருத்தங்கள் மூலம் நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c80c4ce2-2584-4464-b1e8-6463c75d53be/26-6aa96ed6c5c43.webp' /></p><p>
</p><p>இதன் மூலம் நாட்டின் நீதித்துறையின் சுதந்திரத்திற்கு பலத்த பாதிப்பு ஏற்படுவதுடன், சட்டவாக்கம், நிறைவேற்றுத்துறை மற்றும் நீதித்துறை ஆகிய முத்தரப்புகளுக்கு இடையிலான அதிகாரப் பங்கீடு மற்றும் சமநிலை முறையும் சீர்குலையும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். </p><p>
மேலும், அரசியலமைப்பின் 3, 4, 83 மற்றும் 107 ஆகிய பிரிவுகளுடன் 22வது திருத்தத்தைப் பரிசீலிக்கும்போது, இது மக்களின் இறையாண்மையை பாதிக்குமானால், நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துடன் மேலதிகமாகச் சர்வஜன வாக்கெடுப்பும் நடத்தப்பட வேண்டியது அவசியமாகலாம் என சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p>
ஜனநாயகத்தைச் சுருக்கி, ஒற்றைக் கட்சி ஆட்சியை நிறுவுவதே தற்போதைய அரசாங்கத்தின் நோக்கம் எனக் குற்றம்சாட்டிய அவர், மாகாண சபை தேர்தல்களை ஒத்திவைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் மூலம் ஜனநாயக உரிமைகள் முடக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.</p><p>
எனவே, வரும் செப்டம்பர் 24 ஆம் திகதி ஐக்கிய மக்கள் சக்தி ஏற்பாடு செய்துள்ள அமைதியான போராட்டப் பேரணியில் இணைந்து ஜனநாயக நிறுவனங்களைப் பாதுகாக்க முன்வருமாறு பொதுமக்களிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.&nbsp;&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-15T17:14:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈஸ்டர் தாக்குதல் குறித்து சஜித்திடம் வாக்கு மூலம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/easter-attack-sajith-will-be-questioned-1789492296"></link>
            <id>https://tamilwin.com/article/easter-attack-sajith-will-be-questioned-1789492296</id>
            <summary type="text">உயிர்த்த ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதல் தொடர்பில் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிடம் வாக்கு மூலம் பதிவு செய்ய உள்ளதாக நீதிமன்றில்...</summary>
            <content type="html"><![CDATA[<p>உயிர்த்த ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதல் தொடர்பில் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிடம் வாக்கு மூலம் பதிவு செய்ய உள்ளதாக நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>பிரதி சொலிசுட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் இந்த விடயத்தை நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.</p><p>
அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே உள்ளிட்டவர்கள் பிரதான சூத்திரதாரிகளை பாதுகாப்பதாக தாம் முதலில் கூறவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4bf080a2-54e3-49ba-8cc6-206d3f0cbcbb/26-6aa97c4983a1c.webp' /></p><p>
தமக்கு முன்னதாகவே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றில் கூறியிருந்தனர் என அவர் தெரிவித்துள்ளார்.
</p><p>எதிர்காலத்தில் இந்த விவகாரம் தொடர்பில் அவர்களிடமும் வாக்கு மூலங்கள் பதியப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>மேலும், உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக முன்கூட்டியே அறிந்திருந்தும், இராணுவப் புலனாய்வுத் துறையினர் அனைத்துத் தகவல்களையும் சதித்திட்டமாக மறைத்து, தாக்குதல் நடப்பதற்கு அனுமதித்து அமைதியாகப் பார்த்துக்கொண்டிருந்ததாக தெரிவித்துள்ளார்.
</p><p>மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் இன்று கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் இந்த விடயங்களைத் தெரிவித்துள்ளார்.</p><p>
சுரேஷ் சலே, தேசிய வைத்தியசாலையை ஓய்வு விடுதியாக மாற்றிக் கொண்டு ஓய்வெடுத்து வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.&nbsp;</p><p>இந்த வழக்கு எதிர்வரும் 22ம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-15T17:11:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானின் சைபர் தாக்குதல்! உளவுத்திட்ட நகர்வு குறித்து அமெரிக்கா - பிரித்தானியா எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/us-and-uk-warn-of-iranian-intelligence-operation-1789491804"></link>
            <id>https://ibctamil.com/article/us-and-uk-warn-of-iranian-intelligence-operation-1789491804</id>
            <summary type="text">ஈரான் அரசுடன் தொடர்புடைய சைபர் குழுக்கள், தங்களுக்கு எதிராக செயல்படும் அதிருப்தியாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் பத்திரிகையாளர்களைக் கண்காணித்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரான் அரசுடன் தொடர்புடைய சைபர் குழுக்கள், தங்களுக்கு எதிராக செயல்படும் அதிருப்தியாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் பத்திரிகையாளர்களைக் கண்காணித்து உளவு பார்க்க 'ஸ்பைவேர்' (Spyware) எனப்படும் உளவு மென்பொருளைப் பயன்படுத்தியுள்ளதாக பிரித்தானியா, அமெரிக்கா மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகள் கூட்டு அறிக்கை வெளியிட்டுள்ளன.</p><p>பிரித்தானியாவின் தேசிய சைபர் பாதுகாப்பு மையம் (NCSC) வெளியிட்டுள்ள இந்த கூட்டு அறிக்கையின்படி, </p><p>“ஈரான் அரசு ஆதரவு பெற்ற சைபர் தாக்குதல்தாரர்கள் "CHOSEN BRICK" எனப்படும் அதிநவீன உளவு மென்பொருளைப் பயன்படுத்தியுள்ளனர்.</p><p></p><h2>திருடப்பட்ட&nbsp;மின்னஞ்சல்கள்</h2><p>WhatsApp மற்றும் டெலிகிராம் (Telegram) போன்ற குறுஞ்செய்தி செயலிகள் மூலமாக, குறிப்பிட்ட நபர்களை ஏமாற்றித் தாக்கும் 'ஸ்பியர்-ஃபிஷிங்' (Spear-phishing) பிரச்சாரங்களை மேற்கொண்டு, அவர்களின் மின்னஞ்சல்கள், தனிப்பட்ட செய்திகள் மற்றும் இதர முக்கியமான இரகசியத் தகவல்களை இக்குழுவினர் திருடியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/32310355-c360-43ee-863d-e8f5853a4c01/26-6aa97bfdd906e.webp' /></p><p>பிரித்தானியா உட்பட உலகம் முழுவதும் வாழும், ஈரானிய ஆட்சிக்கு அச்சுறுத்தலாகக் கருதப்படும் அதிருப்தியாளர்கள், ஆர்வலர்கள் மற்றும் பத்திரிகையாளர்களே இந்த உளவுத் தாக்குதலின் முக்கிய இலக்காக இருந்துள்ளனர்.</p><p>ஈரானிய ஆட்சிக்கு அச்சுறுத்தலாகத் கருதப்படும் தனிநபர்களை ஒடுக்குவதற்கும், அவர்களைக் கண்காணிப்பதற்கும் ஈரான் இத்தகைய சைபர் தாக்குதல் நடவடிக்கைகளை உறுதியாகப் பயன்படுத்துகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-15T17:11:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சவூதி அரேபியாவில் வசிக்கும் இலங்கையர்களுக்கு முக்கிய அறிவிப்பு - வெளியானது அவசர தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/important-announcement-for-sri-lankans-in-saudi-1789491793"></link>
            <id>https://tamilwin.com/article/important-announcement-for-sri-lankans-in-saudi-1789491793</id>
            <summary type="text">சவூதி அரேபியாவின் மேற்குப் பகுதியில் உருவாகி வரும் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, ஜித்தா துணைத் தூதரகம் அப்பகுதியில் வசிக்கும் இலங்கையர்களுக்கு ஒரு சி...</summary>
            <content type="html"><![CDATA[<p>சவூதி அரேபியாவின் மேற்குப் பகுதியில் உருவாகி வரும் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, ஜித்தா துணைத் தூதரகம் அப்பகுதியில் வசிக்கும் இலங்கையர்களுக்கு ஒரு சிறப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.</p><p>

இதற்கமைய, தங்கள் கைபேசிகளில் அவசரகால எச்சரிக்கை வந்தால், பின்வரும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
</p><h2>
அவசரகால அறிவிப்பு</h2><p>
மேலும், அவசரகால சூழ்நிலைகளில், மக்கா மற்றும் மதீனா பகுதிகளில் 911 என்ற அவசரகால சேவை எண்ணையும், மற்ற பகுதிகளில் 998 என்ற எண்ணையும் அழைக்க வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1ba170f6-14b3-4be5-9889-0abd3c681f31/26-6aa97b164cdd0.webp' /></p><p>
</p><p>
துணைத் தூதரகத்தின் அவசரகால தொடர்பு எண்ணான 056 098 6671ஐயும் அழைக்கலாம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-15T17:07:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[ட்ரம்பின் அழைப்பை நிராகரித்து பேச்சுவாரத்தைக்கான கதவை மூடியது ஈரான்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/no-talks-with-the-us-iran-rejects-trumps-offer-1789490467"></link>
            <id>https://ibctamil.com/article/no-talks-with-the-us-iran-rejects-trumps-offer-1789490467</id>
            <summary type="text">ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்திருந்த நிலையில், ஈரானின் பாதுகாப்புத் துறை அமெரிக்காவுடனான ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்திருந்த நிலையில், ஈரானின் பாதுகாப்புத் துறை அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையை நிராகரித்துள்ளது.</p><p>

ட்ரம்ப்பின் அழைப்பு தொடர்பாக ஈரானின் தேசிய பாதுகாப்புத் துறை செயலாளர் மொஹ்சென் ரெஸாயி தனது எக்ஸ் பதிவில், “இனி பேச்சுவார்த்தை கிடையாது என்பதிலிருந்து நாங்கள் பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருக்கிறோம் என்பது வரை அமெரிக்க ஜனாதிபதியின் முரண்பாடான சமிக்ஞைகளைக் கண்டு யாரும் திசைதிரும்ப வேண்டாம்.</p><h2>ஈரானின் கோரிக்கைகளை நிறைவேற்றினாலே பேச்சு</h2><p>எண்ணெய் வர்த்தகம் மற்றும் ஹோர்முஸ் நீரிணை சார்ந்த சூழல் மாறிவிட்டது. சேதத்தைக் குறைக்க எடுக்கும் நடவடிக்கைகளால் வரப்போகும் நிகழ்வுகளைத் தடுக்க முடியாது. ஈரானின் நிபந்தனைகளை நிறைவேற்றுவதாக அமெரிக்கா வாக்குறுதி கொடுக்கும் வரை அவர்களுடன் பேச்சுவார்த்தை இல்லை” என்று அவர் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cb050ff8-b200-45c6-92ca-ca6dbe9d1ada/26-6aa97a66a6264.webp' /></p><p>போர்நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ள இது மிகவும் ஆரம்பநிலை என்று பல நாள்களாகக் கூறி வந்த ட்ரம்ப், நேற்று தனது சமூக ஊடகப் பதிவில் ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாகக் கூறினார்.</p><p></p><h2>பேச்சுவார்த்தைக்கு தயாராக உள்ளோம்</h2><p>
</p><p>
அந்தப் பதிவில், "வீழ்ச்சியடைந்து வரும் ஈரான், மிக விரைவாகவும் தீவிரமாகவும் ஒரு போர்நிறுத்த ஒப்பந்தத்தை மேற்கொள்ள விரும்புகிறது. அமெரிக்கா இதில் ஈடுபட வேண்டுமா வேண்டாமா என்பதை நான் தீர்மானிப்பேன். ஆனால், அப்படியான பேச்சுவார்த்தைக்கு நாங்கள் தயாராக உள்ளோம்” என தனது 'ட்ரூத் சோஷியல்' தளத்தில் குறிப்பிட்டிருந்தார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/07fe01a6-50e6-47ac-8435-5ae5867af26a/26-6aa97a675c4f8.webp' /></p><p>போர் நிறுத்தம் மற்றும் ஹோர்முஸ் நீரிணை மீதான முற்றுகையை விலக்கிக் கொள்ள,போரில் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு இழப்பீடு மற்றும் பொருளாதாரத் தடைகளை நீக்குவது போன்ற கோரிக்கைகளை அமெரிக்காவிடம் ஈரான் வலியுறுத்தியுள்ளது. ஆனால், அமெரிக்கா இந்த கோரிக்கைகளை ஏற்க மறுத்து வருகிறது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-15T17:04:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கைக்கு வருகை தந்த வௌிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் தொடர்பில் வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/new-information-on-foreign-tourists-1789491436"></link>
            <id>https://jvpnews.com/article/new-information-on-foreign-tourists-1789491436</id>
            <summary type="text">இவ்ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 16 இலட்சத்தைக் கடந்துள்ளது.

 

சுற்றுலா அபிவிருத்தி அதிக...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">இவ்ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 16 இலட்சத்தைக் கடந்துள்ளது.
</p><p style="text-align: justify; ">
 

சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி, ஜனவரி 01 ஆம் திகதி முதல் செப்டம்பர் 14 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் 1,609,759 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/975e8e36-1723-4bde-bc46-9c4daff7144f/26-6aa978edc8618.webp' /></p><h2 style="text-align: justify; ">சுற்றுலாப் பயணிகள்</h2><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
 

அத்துடன், செப்டம்பர் 01 ஆம் திகதி முதல் 14 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் 74,637 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை குறிப்பிட்டுள்ளது.
</p><p style="text-align: justify; ">
 

இவ்வாண்டில் இதுவரை அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்தே வருகை தந்துள்ளதுடன், அவர்களின் எண்ணிக்கை 408,024 ஆகும்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
 

இதற்கு மேலதிகமாக, ஐக்கிய இராச்சியத்திலிருந்து 155,798 பேரும், சீனாவிலிருந்து 105,294 பேரும், ஜெர்மனியிலிருந்து 94,007 சுற்றுலாப் பயணிகளும் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.
</p><p style="text-align: justify; ">
 

செப்டம்பர் மாதத்தின் முதல் 14 நாட்களில் அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்தே வருகை தந்துள்ளதுடன், அதற்கமைய இந்தியாவிலிருந்து 22,541 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-15T17:02:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தென் கொரியாவுக்கு வேலைக்குச் சென்ற இலங்கை இளைஞர்கள் அதிரடி கைது..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-lankan-youths-arrested-in-south-korea-1789491106"></link>
            <id>https://tamilwin.com/article/sri-lankan-youths-arrested-in-south-korea-1789491106</id>
            <summary type="text">தென் கொரியாவில் போதைப் பொருள் விற்பனை செய்த குற்றச்சாட்டில் இலங்கையர்கள் குழுவொன்று கைது செய்யப்பட்டுள்ளது.

இலங்கையில் இருந்து தென்கொரியாவிற்கு வேல...</summary>
            <content type="html"><![CDATA[<p>தென் கொரியாவில் போதைப் பொருள் விற்பனை செய்த குற்றச்சாட்டில் இலங்கையர்கள் குழுவொன்று கைது செய்யப்பட்டுள்ளது.</p><p>

இலங்கையில் இருந்து தென்கொரியாவிற்கு வேலைவாய்ப்புப் பெற்றுச் சென்றுள்ள இளைஞர் குழுவொன்றே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><h2>
கஞ்சாவை பயன்படுத்தி போதைப்பொருள் தயாரிப்பு</h2><p>
குறித்த இலங்கை இளைஞர்கள் குழு, கஞ்சாவை பயன்படுத்தி ஹஷிஷ் போதைப்பொருளை தயாரித்து தென் கொரியாவில் விற்பனை செய்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5eca14c0-d165-4e0d-93e5-01651f627e9b/26-6aa977f698c3e.webp' /></p><p>
</p><p>
இது தொடர்பாக கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில் தென்கொரியப் பொலிஸார் இளைஞர்கள் குழுவைக் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து ஹஷிஷ் போதைப் பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p> இந்தச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p><p></p><p></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-15T16:53:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[தெஹிவளை குண்டுவெடிப்பு: விசாரணையில் சிக்கிய பாதாள உலகக் குழு உறுப்பினர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/mistakenly-bombed-to-another-house-1789487955"></link>
            <id>https://tamilwin.com/article/mistakenly-bombed-to-another-house-1789487955</id>
            <summary type="text">தெஹிவளை பகுதியில் இரு சிறுவர்கள் உயிரிழக்கக் காரணமான கைக்குண்டுத் தாக்குதலில், ஒரே ஒரு சுவர் இடைவெளியால் தவறான வீடு இலக்கு வைக்கப்பட்டதாகக் கைது செய்ய...</summary>
            <content type="html"><![CDATA[<p>தெஹிவளை பகுதியில் இரு சிறுவர்கள் உயிரிழக்கக் காரணமான கைக்குண்டுத் தாக்குதலில், ஒரே ஒரு சுவர் இடைவெளியால் தவறான வீடு இலக்கு வைக்கப்பட்டதாகக் கைது செய்யப்பட்ட முக்கிய சந்தேக நபர் பொலிஸாரிடம் திடுக்கிடும் வாக்குமூலம் அளித்துள்ளார்.
</p><p>கடந்த செப்டம்பர் 11 ஆம் திகதி அதிகாலை, தெஹிவளை சிறிசங்கபோ மாவத்தையில் உள்ள வீடு ஒன்றின் மீது வீசப்பட்ட கைக்குண்டு வெடித்ததில் 11 மற்றும் 17 வயதுடைய இரு சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.</p><h2>தெஹிவளை குண்டுத்தாக்குதல்</h2><p>இந்த தாக்குதலில் படுகாயமடைந்த அவர்களின் தந்தையின் ஒரு கால் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டதாகக் பொலிஸாரிடம் தெரிவித்தனர்.</p><p>தாக்குதலுக்குத் திட்டமிடப்பட்ட வீடும், தாக்குதலுக்கு உள்ளான வீடும் ஒரே ஒரு சுவரால் மட்டுமே பிரிக்கப்பட்டிருந்ததால், தவறுதலாக இந்த குடும்பத்தின் மீது குண்டு வீசப்பட்டதாகக் கைதான நபர் ஒப்புக்கொண்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d2e4b3ef-bd2a-4719-bd5a-257825de39e8/26-6aa975591622a.webp' /></p><p>பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த “கொஸ் மல்லி” என்ற தனது உறவினர் மற்றும் போதிய வத்த பகுதியைச் சேர்ந்த “அவிஷ்கா” ஆகியோரின் தூண்டுதலின் பேரிலேயே இந்த தாக்குதலை நடத்தியதாகச் சந்தேக நபர் தெரிவித்துள்ளார்.</p><p>தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட முச்சக்கர வண்டியின் நிறத்தை மாற்றுவதற்காகக் கேரேஜ் ஒன்றிற்கு எடுத்துச் செல்லப்பட்டதைக் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.</p><h2>விசாரணையில் வெளிவந்த இரகசியம்</h2><p> 
வாகனத்தைக் கேரேஜில் ஒப்படைத்த நபர் மற்றும் கேரேஜ் உரிமையாளர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>
செப்டம்பர் 10 இரவு 9 மணியளவில், களுபோவில சரணங்கர வீதியைச் சேர்ந்த ஹிருத்ம ஷாஷ்மிக என்ற “ஹிரு மல்லி” மற்றும் தாக்குதலை நடத்திய மதுஷ்க ரேணுக பெர்னாண்டோ என்ற “மது” ஆகியோர் அந்த முச்சக்கர வண்டியை எடுத்துச் சென்றதாகக் கைது செய்யப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3c30a4f8-6b98-405b-98b7-539292286b0d/26-6aa97559bff30.webp' /></p><p> </p><p>
மேலும், ஆகஸ்ட் 1 ஆம் திகதி இரத்மலானை கண்டவல வீதியில் “ஜதுங்க பிரியந்த” என்பவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்திலும் மது என்பவரே துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் என்பதும் விசாரணையில் அம்பலமாகியுள்ளது. </p><p>
தற்போது தாக்குதலை நடத்திய நபர் மற்றும் முச்சக்கர வண்டி சாரதி ஆகிய இருவரை மேல் மாகாண தெற்கு குற்றப்பிரிவு பொலிஸார் தடுப்புக் காவலில் வைத்து விசாரித்து வருகின்றனர். 
இவர்கள் இருவரும் விரைவில் நீதிமன்ற அடையாள அணிவகுப்பில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-15T16:42:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[எல் நினோவால் எங்கே மழை, வறட்சி, வெப்பம் ஏற்படும்... விரிவான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/el-nino-reaches-super-status-1789490452"></link>
            <id>https://news.lankasri.com/article/el-nino-reaches-super-status-1789490452</id>
            <summary type="text">Where will it bring rain, drought and heat? எல் நினோ எங்கே மழையையும், வறட்சியையும், வெப்பத்தையும் கொண்டு வரும்?
பசிபிக் பெருங்கடலில் ஒரு வலிமையான &#039;எல...</summary>
            <content type="html"><![CDATA[<p>Where will it bring rain, drought and heat? எல் நினோ எங்கே மழையையும், வறட்சியையும், வெப்பத்தையும் கொண்டு வரும்?
</p><p>பசிபிக் பெருங்கடலில் ஒரு வலிமையான 'எல் நினோ' உருவாகி வரும் நிலையில், இது உலகம் முழுவதும் வானிலையில் மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது.</p><h2>மிகவும் தீவிரமான நிலை</h2><p>
எல் நினோ என்பது மத்திய மற்றும் கிழக்கு பசிபிக் பெருங்கடலில் நீர் வழக்கத்தை விட வெப்பமாக இருப்பதன் காரணமாக ஏற்படும் ஒரு இயற்கையான காலநிலை நிகழ்வாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f0c125cc-9f33-4161-8703-33c2c95bd571/26-6aa97516b5f8c.webp' /></p><p>
</p><p>செப்டம்பர் 14, 2026 அன்று வெளியிடப்பட்ட அமெரிக்காவின் தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகத்தின் (NOAA) தரவுகள், எல் நினோ (El Nino) நிகழ்வானது 2 டிகிரி செல்சியஸ் (3.6°F) என்ற வெப்பநிலை உயர்வு வரம்பைக் கடந்து, மிகவும் தீவிரமான நிலையை எட்டியுள்ளதைக் காட்டுகின்றன; இது 'சூப்பர் எல் நினோ' என்று அழைக்கப்படுகிறது. </p><p>இந்த ஆண்டிற்கான எல் நினோ நிகழ்வு 2026 ஜூன் மாதத்தில் உருவாகத் தொடங்கியது; இது 2027-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் உச்சத்தை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது இதுவரை பதிவானவற்றிலேயே மிகத் தீவிரமான நிகழ்வுகளில் ஒன்றாக இருக்கக்கூடும் என்று வானிலை ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.</p><p></p><p> </p><p>இது 2027-ஆம் ஆண்டு மார்ச் முதல் மே மாதம் வரையிலும் நீடிக்கும் என்று NOAA-வின் காலநிலை முன்னறிவிப்பு மையம் எதிர்பார்க்கிறது. எல் நினோ பொதுவாக மார்ச் மற்றும் ஜூன் மாதங்களுக்கு இடையே தொடங்கி, நவம்பர் மற்றும் பிப்ரவரி மாதங்களுக்கு இடையே உச்சத்தை அடைகிறது; மேலும் இது 18 மாதங்கள் வரை நீடிக்கக்கூடும்.
</p><p>மிகவும் வலுவான எல் நினோ, கிழக்கு ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா மற்றும் தெற்கு அமெரிக்காவிற்கு அதிக மழையையும், தெற்காசியா, தென்கிழக்கு ஆசியா, அவுஸ்திரேலியா மற்றும் தெற்கு ஆப்பிரிக்காவிற்கு வறட்சியையும், அத்துடன் ஏறக்குறைய எல்லா இடங்களிலும் வெப்பமான காலநிலையையும் கொண்டுவருகிறது. </p><p>எல் நினோ பொதுவாக கிழக்கு ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா மற்றும் அமெரிக்காவின் தெற்குப் பகுதிகளில் அதிக மழையைக் கொண்டுவருகிறது.
</p><p>எல் நினோ பொதுவாக தென் அமெரிக்கா மற்றும் அமெரிக்காவின் தெற்குப் பகுதிகளுக்கு அதிக மழையைக் கொண்டுவருகிறது; 2027-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஈக்வடார் மற்றும் வடக்கு பெருவின் கடற்கரைப் பகுதிகளில் அதிக மழைப்பொழிவு நிலவும் என்றும், பின்னர் செப்டம்பர் 2026 முதல் ஜனவரி 2027 வரையிலான காலத்தில் இப்பகுதி தெற்கு பிரேசில், உருகுவே மற்றும் வடகிழக்கு அர்ஜென்டினா வரை பரவும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.</p><h2>காட்டுத்தீ அபாயம்</h2><p>
</p><p>எல் நினோ பொதுவாக தெற்காசியா, தென்கிழக்கு ஆசியா, அவுஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய பகுதிகளில் வறண்ட வானிலையை ஏற்படுத்துகிறது. இந்தியா மற்றும் பாகிஸ்தானில் கோடைக்காலப் பருவமழை பற்றாக்குறையாகவே இருந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/86213088-4e94-4c34-ba65-7ed911488c29/26-6aa97517699be.webp' /></p><p> </p><p>இந்திய வானிலை ஆய்வுத் துறையின் தகவலின்படி, ஜூன் 1 முதல் செப்டம்பர் 9 வரையிலான காலகட்டத்தில் இந்தியா முழுவதும் பதிவான மழைப்பொழிவு சராசரியை விட 15 சதவீதம் குறைவாக இருந்தது. </p><p>இந்தோனேசியா வறண்ட பருவத்தையும், அதிக காட்டுத்தீ அபாயத்தையும் எதிர்கொள்கிறது. அதன் வானிலை ஆய்வு நிறுவனமான BMKG, ஜூலை மாத இறுதியில் 5,019 அபாயப் பகுதிகளைப் பதிவு செய்துள்ளது; இதில் சுமத்ரா மற்றும் கலிமந்தான் ஆகியவை அதிகபட்ச அபாயத்தில் உள்ளன.</p><p> அவுஸ்திரேலியாவின் வானிலை ஆய்வு மையம், நாட்டின் தெற்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் சராசரிக்கும் குறைவான மழையே பெய்யக்கூடும் என்று எதிர்பார்க்கிறது; அதேவேளையில், வெப்பமான வானிலை காட்டுத்தீ அபாயத்தை அதிகரிக்கிறது. </p><p>இந்த நிலையில், 2027 ஆம் ஆண்டின் இறுதிக்குள் எல் நினோ நிகழ்வால் மேலும் குறைந்தது 49 மில்லியன் மக்கள் கடுமையான பட்டினிக்குத் தள்ளப்படலாம் என உலக உணவுத் திட்டம் (WFP) எச்சரித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f4038b53-efc5-4a51-b9c2-dd05ef738494/26-6aa975181d71d.webp' /></p><p>
</p><p>மக்காச்சோளம், அரிசி மற்றும் பிற மானாவாரிப் பயிர்களே அதிக ஆபத்தில் இருப்பதாக ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பு தெரிவிக்கிறது.</p><p> தென்னாப்பிரிக்கா மற்றும் சஹேல் முதல் தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியா வரையிலான பகுதிகளில் நிலவும் வறண்ட வானிலை, பயிர் அறுவடைக்கு அச்சுறுத்தலாக உள்ளது.
</p><p>எல் நினோ நிகழ்வு பொதுவாகப் பூமியை வெப்பமடையச் செய்கிறது; இது உருவான அடுத்த ஆண்டில் இதன் தாக்கம் மிக அதிகமாக உணரப்படுகிறது. மேலும், இப்போதிருந்து 2030-ஆம் ஆண்டுக்குள் குறைந்தபட்சம் ஒரு வருடமாவது, இதுவரை பதிவான ஆண்டுகளில் மிகவும் வெப்பமான ஆண்டாக 2024-ஐ மிஞ்சுவதற்கு 86 சதவீத வாய்ப்பு இருப்பதாகவும் கணிக்கப்பட்டுள்ளது.
</p><p>வலுவான எல் நினோ பொதுவாக அட்லாண்டிக் சூறாவளிப் பருவத்தை மொத்தமாக அமைதிப்படுத்துகிறது. இதனால் சூறாவளிகள் உருவாவது எல் நினோவால் தடுக்கப்படுகிறது என்றே நிபுணர்களின் கருத்தாக உள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-15T16:37:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் மீண்டும் டெங்கு நோய் அதிகரிக்க வாய்ப்பு ; விடுக்கப்பட்ட எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/dengue-cases-may-rise-again-in-sri-lanka-1789489964"></link>
            <id>https://jvpnews.com/article/dengue-cases-may-rise-again-in-sri-lanka-1789489964</id>
            <summary type="text">ஒவ்வொரு மாவட்டத்திலும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வரும் டெங்கு பரிசோதனை திட்டங்களின் மூலம் டெங்கு நுளம்புகள் உருவாகும் இடங்கள் கண்டறியப்பட்டு வருவதா...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">ஒவ்வொரு மாவட்டத்திலும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வரும் டெங்கு பரிசோதனை திட்டங்களின் மூலம் டெங்கு நுளம்புகள் உருவாகும் இடங்கள் கண்டறியப்பட்டு வருவதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் பதில் பணிப்பாளர் வைத்தியர் கபில கண்ணங்கர தெரிவித்துள்ளார்.</p><p style="text-align: justify; ">

 

நேற்று (14) முதல் ஒரு வார காலத்திற்கு ஆரம்பிக்கப்பட்டுள்ள டெங்கு கட்டுப்பாட்டு திட்டம் தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6f78c187-eb5e-4f83-8d85-9f53b16d156c/26-6aa9732e6f31f.webp' /></p><h2 style="text-align: justify; ">&nbsp;மீண்டும்&nbsp;டெங்கு நோய்</h2><p style="text-align: justify; ">

 

இருப்பினும், கடந்த காலத்தில் ஏற்பட்ட டெங்கு அதி-அபாயகரமான சூழ்நிலையில் ஓரளவுக்கு வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதை சுட்டிக்காட்டிய அவர், சுகாதாரத் துறையினர் மற்றும் மக்களின் அர்ப்பணிப்பாலேயே இதனை சாதிக்க முடிந்தது என்றும் கூறினார்.</p><p style="text-align: justify; ">

 

எனினும், ஒரு வார கால டெங்கு கட்டுப்பாட்டு திட்டத்தை மீண்டும் ஆரம்பிப்பதற்குக் காரணம், வரவிருக்கும் மழைக்கால சூழ்நிலையால் டெங்கு நோய் மீண்டும் தலைதூக்குவதற்கான சாத்தியக்கூறுகள் நிலவுவதே என அவர் சுட்டிக்காட்டினார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">

 

அதற்கமைய, நோய் மீண்டும் தீவிரமடைவதைத் தடுப்பதற்காகவே இந்தத் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளதாக வைத்தியர் மேலும் தெரிவித்தார்.
</p><p style="text-align: justify; ">
 

இத்திட்டம் 6 மாகாணங்கள் மற்றும் 15 மாவட்டங்களில் நடைமுறைப்படுத்தப்படுவதோடு, அதற்கு இணையாக கொழும்பு மாநகர எல்லைக்குள்ளும் முன்னெடுக்கப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
</p><p style="text-align: justify; ">
 

அதன்படி, இத்திட்டத்திற்காக ஒவ்வொரு சுகாதார மருத்துவ அதிகாரி (MOH) பிரிவிற்கும் தலா 10 குழுக்கள் வீதம் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், இந்தக் குழுக்களில் சுகாதார ஊழியர் ஒருவர், இராணுவ அதிகாரி ஒருவர், பொலிஸ் அதிகாரி ஒருவர் மற்றும் தன்னார்வலர்கள் அடங்குவர் என்றும் குறிப்பிட்டார்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-15T16:34:35+00:00</updated>
        </entry>
    </feed>
