<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-08-24T03:32:25+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடமையில் இருந்த விசேட வைத்தியர் திடீர் மாயம் ; பொலிஸார் தீவிர தேடுதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/special-doctor-on-duty-suddenly-disappears-1787542065"></link>
            <id>https://jvpnews.com/article/special-doctor-on-duty-suddenly-disappears-1787542065</id>
            <summary type="text">பதுளை போதனா வைத்தியசாலையின் விசேட வைத்தியர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

குறித்த விசேட வைத்தியர் நேற்று (23) காலை கடமையில்...</summary>
            <content type="html"><![CDATA[<p>பதுளை போதனா வைத்தியசாலையின் விசேட வைத்தியர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். </p><p>

குறித்த விசேட வைத்தியர் நேற்று (23) காலை கடமையில் ஈடுபட்டிருந்த போதிலும், அதன் பின்னர் இவ்வாறு காணாமல் போயுள்ளார்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c397f399-a76a-4144-9715-1f676bd5372f/26-6a8bba32e6836.webp' /></p><p>இது தொடர்பில் ஆராய்ந்த போது, வைத்தியரின் கார் மஹியங்கனை திசையை நோக்கிப் பயணிப்பது மீகஹகிவுல பகுதியில் உள்ள சிசிடிவி (CCTV) காணொளியில் பதிவாகியுள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளது.</p><p> 

இது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் போது, பதுளை - மஹியங்கனை வீதியின் 17ஆம் கட்டை, மாப்பாக்கடவெவ பகுதியில் வைத்து வைத்தியரின் கார் நேற்றிரவு கண்டுபிடிக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.</p><p> 

இதற்கமைவாக, காணாமல் போன வைத்தியரைத் தேடும் நோக்கில் இன்றைய தினம் அப்பகுதியில் பொலிஸார், குற்றச் சம்பவ இடங்களை ஆராயும் தடயவியல் அதிகாரிகள் மற்றும் இராணுவத்தினர் இணைந்து கூட்டுத் தேடுதல் நடவடிக்கையொன்றை முன்னெடுக்கவுள்ளதாகவும் பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-24T03:28:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[முழு சந்திர கிரகணத்தைப் போல் காட்சியளிக்கும் அரிய நிகழ்வு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/a-rare-event-that-looks-like-a-total-lunar-eclipse-1787541734"></link>
            <id>https://jvpnews.com/article/a-rare-event-that-looks-like-a-total-lunar-eclipse-1787541734</id>
            <summary type="text">எதிர்வரும் 28 ஆம் திகதி ஓர் அரிய பகுதியளவு சந்திர கிரகணம் நிகழவுள்ளது. 

இந்நிகழ்வில் நிலவின் பெரும் பகுதி மறைக்கப்பட்டு, கிட்டத்தட்ட முழு சந்திரகிர...</summary>
            <content type="html"><![CDATA[<p>எதிர்வரும் 28 ஆம் திகதி ஓர் அரிய பகுதியளவு சந்திர கிரகணம் நிகழவுள்ளது. </p><p>

இந்நிகழ்வில் நிலவின் பெரும் பகுதி மறைக்கப்பட்டு, கிட்டத்தட்ட முழு சந்திரகிரகணம் போலக் காட்சியளிக்கும். எனினும் இந்த நிகழ்வை இலங்கையில் காண முடியாது.</p><p> 

சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் பூமி வரும்போது, பூமியின் நிழல் சந்திரனை மறைக்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d9d9a9d8-5ff5-4e12-a6b5-4cd534a43b1e/26-6a8bb8e78fc35.webp' /></p><p> </p><p>

அப்போது சூரிய ஒளி பூமியின் வளிமண்டலத்தைக் கடந்து சந்திரனின் மீது படுகிறது. 

இதனால் சந்திரன் சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கிறது.</p><p>எனவே இதை ரத்த நிலவு (Blood Moon) என்கின்றனர். 

சாதாரண பகுதி சந்திரகிரகணங்களில் நிலவின் ஒரு சிறிய பகுதி மட்டுமே பூமியின் நிழலால் மூடி மறைக்கப்படும். </p><p>

ஆனால், வெள்ளிக்கிழமை நடக்க உள்ள இந்த கிரகணத்தின் போது நிலவின் மேற்பரப்பில் 96 சதவீத பகுதி பூமியின் நிழலால் மூடப்படுகிறது.</p><p> வெறும் 4% மட்டுமே விளிம்பில் வெளிச்சமாக இருக்கும். 

வழக்கமாக முழு சந்திரகிரகணத்தின் போது மட்டுமே சந்திரன் சிவப்பு நிறத்தில் பிரகாசிக்கும். </p><p>

ஆனால், இந்த கிரகணத்தில் 96% நிலவு மறைக்கப்படுவதால், இது பகுதி கிரகணமாக இருந்தாலும் முழு சந்திரகிரகணத்தை போலவே ரத்தச் சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும் என்பதால் இது சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகின்றது. </p><p>

வட மற்றும் தென் அமெரிக்கக் கண்டங்களில் இந்த கிரகணம் மிகவும் தெளிவாகப் புலப்படும்.</p><p> 

சுமார் 100 கோடி மக்கள் இதனை நேரடியாக காண வாய்ப்புள்ளதாக வானியல் வல்லுநர்கள் கணித்துள்ளனர். 

ஐரோப்பா, ஆப்பிரிக்கா மற்றும் மேற்கு ஆசியாவின் சில பகுதிகளில் இது பகுதி அளவாகத் தெரியும். </p><p>

இலங்கை, இந்தியா, அவுஸ்திரேலியா, அண்டார்டிகா மற்றும் பசுபிக் பெருங்கடல் நாடுகளில் இந்த கிரகணம் தெரியாது. 

இலங்கை நேரப்படி ஒகஸ்ட் 28 காலையில் இந்த கிரகணம் நிகழ்கிறது. </p><p>காலை 8:04 மணிக்கு தொடங்கி, முற்பகல் 9:43 மணிக்கு உச்சகட்டத்தை எட்டி காலை 11:22 மணிக்கு முடிவடையும். </p><p>

இக்காலகட்டத்தில் இலங்கையில் பகல் நேரமாக இருப்பதால், இந்த கிரகணத்தை நம்மால் பார்க்க முடியாது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-24T03:22:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[பசிலின் சர்ச்சைக்குரிய வீட்டில் தொடரும் சிக்கல் - ஆபத்தான கூடாரமாக மாறும் வீடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/basils-building-is-a-place-of-illegal-activities-1787539241"></link>
            <id>https://tamilwin.com/article/basils-building-is-a-place-of-illegal-activities-1787539241</id>
            <summary type="text">மாத்தறை பிரௌன்ஸில் பகுதியில் உள்ள ஒன்றரை ஏக்கர் தென்னந்தோட்டத்தில், அரைவாசி கட்டப்பட்டு கைவிடப்பட்டுள்ள கட்டடம் சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் நபர்களின...</summary>
            <content type="html"><![CDATA[<p>மாத்தறை பிரௌன்ஸில் பகுதியில் உள்ள ஒன்றரை ஏக்கர் தென்னந்தோட்டத்தில், அரைவாசி கட்டப்பட்டு கைவிடப்பட்டுள்ள கட்டடம் சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் நபர்களின் கூடாரமாக மாறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. </p><p>

அந்த கட்டடம் முன்னாள் அமைச்சர் பாசில் ராஜபக்சவினால் முறையற்ற விதத்தில் ஈட்டப்பட்ட பணத்தை பயன்படுத்தி கொள்வனவு செய்ததாக சந்தேகிக்கப்படுகின்றது. </p><p>

இந்தக் காணியை கொள்வனவு செய்தது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.</p><p> </p><h2><b>

நிர்மாணப் பணிகள் </b></h2><p>விசாரணையில் இருக்கும் போதே, வழக்கறிஞரின் தலையீட்டுடன் இக்கட்டடத்தின் நிர்மாணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டதாக அந்த பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1a44ff83-63db-45e9-bdc2-e7d87ad99afa/26-6a8bb660aacb2.webp' /></p><p>குறித்த காணியை கொள்வனவு செய்தது தொடர்பில் மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும் வழக்குக்கு பல சந்தர்ப்பங்களில் பசில் ராஜபக்ச முன்னிலையாக தவறியுள்ளார். </p><p>

இதன் காரணமாக, பாசில் ராஜபக்சவின் பிணைப் பணத்தை பறிமுதல் செய்யவும், அவரது பிணைதாரிகளிடம் இருந்து பிணைப் பணத்தை அறவிட்டுக்கொள்ளவும் மாத்தறை பிரதான நீதவான் உத்தரவிட்டிருந்தார். </p><p>

அத்துடன், பாசில் ராஜபக்சவை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட பிடியாணை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 27 ஆம் திகதி வரை நீடிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. </p><p>

நீதிமன்றத்தில் நடைபெற்றுவரும் வழக்குக்கு தொடர்புடைய காணியில் கட்டப்பட்டுள்ள வீடு தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, அதற்குள் சட்டவிரோதச் செயல்கள் இடம்பெற்று வருவதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. </p><p>

அங்கு வெற்று மதுபானப் போத்தல்கள், தீப்பெட்டிகள், லைட்டர்கள், படுக்கை விரிப்புகள், ஊசிகள் மற்றும் ஊசி செலுத்தும் உபகரணங்களும் ஆங்காங்கே காணக்கூடியதாக இருந்தன.</p><h3><b>சட்டவிரோத நடவடிக்கை</b></h3><p> இந்தக் கட்டடத்தைப் பல்வேறு குழுக்கள் அல்லது நபர்கள் பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்துவதாக சந்தேகிக்கப்படுகின்றது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/15ea5587-bbdd-473e-a781-b687b43ee268/26-6a8bb78f73d94.webp' /></p><p>ஆரம்பக் கட்டத்தில் 2 அல்லது 3 மாடிக் கட்டிடத்தை நிர்மாணிப்பதற்காக பாரிய தடிமன்கொண்ட கம்பிகளையிட்ட தூண்களின் மீது நிர்மாணப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. </p><p>

பின்னர் அவசரமாக அதன் மீது சுவர்கள் எழுப்பப்பட்டு, பூச்சு பூசப்பட்டு, கூரை ஒன்றை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. </p><p>9 கொள்கலன் பெட்டிகளில் கட்டடப் பொருட்கள் இவற்றுக்குக் கொண்டு வரப்பட்டதாகவும் அவ்வப்போது நிர்மாணப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வந்தன என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். </p><p>

இந்த காணி ஜெர்மன் நாட்டை சேர்ந்த ஹெர்பெட் கெல்லர் என்பவருக்குச் சொந்தமாக இருந்தது. இதன்போது, அவருக்கு 60 மில்லியன் ரூபா பணத்தைச் செலுத்தி அந்த காணி கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>

காணியைக் கொள்வனவு செய்வதற்காக செலுத்தப்பட்ட பணம் முறையற்ற விதத்தில் ஈட்டப்பட்டுள்ளது. இதனால், பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.</p><p> பாசில் இந்த வழக்கின் மூன்றாவது சந்தேகநபர் என்பது குறிப்பிடத்தக்கது.
</p>]]></content>
            <updated>2026-08-24T03:14:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[பெக்கோ சமனின் தாயார் கொலைச் சம்பவம் ; மேலும் ஒருவர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/the-murder-of-peko-saman-s-mother-person-arrested-1787540944"></link>
            <id>https://jvpnews.com/article/the-murder-of-peko-saman-s-mother-person-arrested-1787540944</id>
            <summary type="text">திட்டமிட்ட குற்றவாளியான &#039;பெக்கோ சமன்&#039; என்பவரின் தாய் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் மற்றுமொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். 

இந்தக் கொலை த...</summary>
            <content type="html"><![CDATA[<p>திட்டமிட்ட குற்றவாளியான 'பெக்கோ சமன்' என்பவரின் தாய் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் மற்றுமொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். </p><p>

இந்தக் கொலை தொடர்பில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட சந்தேகநபர் ஒருவர் வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே இந்தக் கைது இடம்பெற்றுள்ளது.</p><h3>மேலதிக விசாரணை</h3><p> 

கடந்த 19ஆம் திகதி மித்தெனிய பொலிஸ் பிரிவில் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட மித்தெனிய பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய சந்தேகநபர் ஒருவரை, மித்தெனிய பொலிஸார் தடுப்புக் காவல் உத்தரவின் பேரில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்தனர்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/23aecbb5-ea60-4c37-88c8-8885c05d3b91/26-6a8bb5d15cffb.webp' /></p><p>இதன்போது, கடந்த 12ஆம் திகதி மித்தெனிய பொலிஸ் பிரிவில் வைத்து 'பெக்கோ சமன்' என்பவரின் தாய் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு குறித்த சந்தேகநபர் உதவி மற்றும் ஒத்தாசை புரிந்துள்ளமை தெரியவந்துள்ளது. </p><p>

இதற்கமைவாக, தடுப்புக் காவல் உத்தரவின் பேரில் தடுத்து வைக்கப்பட்டிருந்த குறித்த சந்தேகநபரை நேற்று (23) வலஸ்முல்ல நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியதன் பின்னர், அவரை எதிர்வரும் 2ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. </p><p>

சந்தேகநபரிடமிருந்து பெறப்பட்ட தகவலின் அடிப்படையில், இந்தக் கொலைக்கு உதவி ஒத்தாசை புரிந்த மற்றுமொரு சந்தேகநபர் நேற்றைய தினம் தங்கல்லை குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். </p><p>

அங்கு கைது செய்யப்பட்ட சந்தேகநபரை மித்தெனிய பொலிஸாரிடம் ஒப்படைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p> 

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் மித்தெனிய பகுதியைச் சேர்ந்த 24 வயதுடையவராவார். </p><p>

இச்சம்பவம் தொடர்பில் மித்தெனிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-08-24T03:09:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[பெக்கோ சமனின் தாயார் கொலை சம்பவம் - வாக்குமூலத்தில் அடுத்தடுத்து சிக்கும் சந்தேகநபர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/another-person-arrested-murder-peko-saman-mother-1787538944"></link>
            <id>https://tamilwin.com/article/another-person-arrested-murder-peko-saman-mother-1787538944</id>
            <summary type="text">ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான பெக்கோ சமனின் தாயார்&amp;nbsp; சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் மற்றுமொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்த கொலை ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான பெக்கோ சமனின் தாயார்&nbsp; சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் மற்றுமொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.</p><p>

இந்த கொலை தொடர்பில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட சந்தேகநபர் ஒருவர் வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே இந்த கைது இடம்பெற்றுள்ளது.</p><p>மித்தெனிய பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய சந்தேகநபர் நேற்றைய தினம் தங்கல்லை குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.&nbsp;&nbsp;</p><h2>&nbsp;மித்தெனிய பொலிஸார் மேலதிக விசாரணை</h2><p>இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபரை மித்தெனிய பொலிஸாரிடம் ஒப்படைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e45c89d7-7529-445a-9a68-4388868226e6/26-6a8bb3cfd02d9.webp' /></p><p> 

கடந்த 19ஆம் திகதி மித்தெனிய பொலிஸ் பிரிவில் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட 21 வயதுடைய சந்தேகநபரை மித்தெனிய பொலிஸார் தடுப்புக் காவல் உத்தரவின் பேரில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்தனர். </p><p>இதற்கமைவாக, தடுப்புக் காவல் உத்தரவின் பேரில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேகநபரை நேற்று (23) வலஸ்முல்ல நீதவான் முன்னிலையில் முன்னிலைபடுத்தியதன் பின்னர், அவரை எதிர்வரும் 2ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.</p><p>இச்சம்பவம் தொடர்பில் மித்தெனிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-24T03:00:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Tony</name>
            </author>
            <title type="text"><![CDATA[டாக்சிக் பெண்களை கேவலமாக காட்டும் படமில்லை, யஷ் சொன்ன சுவாரஸ்ய தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/actor-yash-about-toxic-movie-1787536075"></link>
            <id>https://cineulagam.com/article/actor-yash-about-toxic-movie-1787536075</id>
            <summary type="text">&amp;nbsp;யஷ்டாக்சிக் யஷ் நடிப்பில் கீது மோகன் தாஸ் இயக்கத்தில் பிரமாண்டமாக நாளை மறு நாள் வெளி வரவிருக்கும் படம் டாக்சிக். இந்த படத்தின் முன்பதிவு தொடங்கி...</summary>
            <content type="html"><![CDATA[<h2>&nbsp;யஷ்</h2><p>டாக்சிக் யஷ் நடிப்பில் கீது மோகன் தாஸ் இயக்கத்தில் பிரமாண்டமாக நாளை மறு நாள் வெளி வரவிருக்கும் படம் டாக்சிக். இந்த படத்தின் முன்பதிவு தொடங்கி படு ஜோராக சென்று கொண்டு இருக்கிறது. </p><p>இந்நிலையில் இந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் டாக்சிக் ட்ரைலரில் பெண்களை மிக மோசமாக காட்டியுள்ளார்களா என பலரும் கேட்க, யஷ் உடனே டாக்சிக் படத்தில் பெண்களை இழிவாக சித்தரித்ததாக நீங்கள் நினைப்பது தவறு, படத்தை பார்த்தால் உங்களுக்கே தெரியும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/77d0747c-2937-420f-95b4-1851f392cb43/26-6a8ba2cebc409.webp' /></p><p> கீது மோகன் தாஸ் பெண்கள் எந்த சூழ்நிலையிலும் பிரச்சனைகளை எதிர்கொண்டு மீண்டு வரவேண்டும் என்பதை தான் அழுத்தமாக கூறியுள்ளார் என யஷ் கூறியுள்ளார். மேலும் டாக்சிக் படத்தில் கியாரா, நயன்தாரா, ஹுமா குரேஷி, ருக்மிணி, டாரா என பல ஹீரோயின்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-08-24T03:00:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவின் நடவடிக்கை விரக்தியின் அறிகுறி ; ஈரான் மீது வரலாற்றிலேயே கடுமையான தடைகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/america-s-move-is-a-sign-of-desperation-1787540146"></link>
            <id>https://canadamirror.com/article/america-s-move-is-a-sign-of-desperation-1787540146</id>
            <summary type="text">ஈரானின் மீது வரலாற்றிலேயே மிகக் கடுமையான தடைகளை இன்று விதிக்கப்போவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. 

இந்த புதிய தடைகள் குறித்த அறிவிப்பை அமெரிக்க நேரப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானின் மீது வரலாற்றிலேயே மிகக் கடுமையான தடைகளை இன்று விதிக்கப்போவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. </p><p>

இந்த புதிய தடைகள் குறித்த அறிவிப்பை அமெரிக்க நேரப்படி பிற்பகல் 2 மணிக்கு அறிவிக்கவுள்ளதாக அமெரிக்க திறைசேரியின் செயலாளர் ஸ்காட் பெசன்ட் தெரிவித்துள்ளார்.</p><p> 

எனினும் இந்த புதிய அமெரிக்கத் தடைகள் குறித்த அச்சுறுத்தலை ஒரு விரக்தியின் அறிகுறியாக பார்ப்பதாக ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்ச்சி குறிப்பிட்டுள்ளார்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b2193e00-320e-466a-86b9-ddb47e6ea66d/26-6a8bb2b3c4334.webp' /></p><p>இவ்வாறான புதிய நடவடிக்கைகள் ஈரானை வீழ்த்துவதில் இருந்து தோல்வியடையும் என்றும் அவர் கூறியுள்ளார். </p><p>

அமெரிக்கத் தலைவர்கள் இராணுவ நடவடிக்கைகளிலிருந்து விலகி, அதே பழைய திட்டங்களை மீண்டும் கொண்டு வந்திருப்பது அவர்களது விரக்தியை பிரதிபலிப்பதாக காட்டுகிறது. </p><p>

நீதி மற்றும் கண்ணியத்தின் அடிப்படையிலான ஒரு தீர்வைக் காண அமெரிக்கா, ஈரானுடன் கலந்துரையாட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.</p><p> 

சர்வதேசத் தடைகளால் ஈரானின் பொருளாதாரம் ஏற்கனவே பெரும் நெருக்கடியில் உள்ளது. 

பெப்ரவரி 28 ஆம் திகதியன்று அமெரிக்காவும் இஸ்ரேலும் தாக்குதல்களைத் தொடங்கியதில் இருந்து, அதன் உட்கட்டமைப்புகள் மீண்டும் மீண்டும் தாக்கப்பட்டுள்ளன. </p><p>

மேலும் இஸ்லாமியக் குடியரசின் மீதான வான்வழித் தாக்குதல்களில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். 

ஆனால் சுமார் ஆறு மாத காலப் போருக்குப் பின்னரும் தெஹ்ரான் விட்டுக் கொடுக்காமல் உறுதியாக போரிட்டு வருகின்றது. </p><p>

உலகளாவிய எண்ணெய் ஏற்றுமதிக்கு முக்கியமான நீர்வழியான ஹோர்முஸ் நீரிணையில் அனுமதியற்ற எண்ணெய் கப்பல்களைப் பயணிக்க அனுமதிக்க மறுத்து, கப்பல் போக்குவரத்தை அது முடக்கியுள்ளது.</p><p> 

நீரிணையில் ஏற்பட்டுள்ள இந்தத் தடையால் உலகளாவிய எண்ணெய் விலைகள் அதிகரித்துள்ளன.</p>]]></content>
            <updated>2026-08-24T02:55:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறைச்சாலை வன்முறைகள் குறித்து ஜெனீவாவில் விவாதிக்க திட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/prison-matters-will-raised-in-geneva-1787539369"></link>
            <id>https://tamilwin.com/article/prison-matters-will-raised-in-geneva-1787539369</id>
            <summary type="text">&amp;nbsp;ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 63 ஆவது அமர்வில், இலங்கையின் அண்மைய சிறைச்சாலை சம்பவங்கள் தொடர்பில் விவாதிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 63 ஆவது அமர்வில், இலங்கையின் அண்மைய சிறைச்சாலை சம்பவங்கள் தொடர்பில் விவாதிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. </p><p>
மேலும், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குவதில் ஏற்பட்டுள்ள தாமதங்கள் குறித்தும் இதன்போது ஆராயப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><h2>அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட முன்னேற்றங்கள்</h2><p>
</p><p>இந்த அமர்வின் போது, நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகள் மேம்பாடு தொடர்பாக இலங்கை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட முன்னேற்றங்கள் குறித்த விடயங்கள் சமர்ப்பிக்கப்படவுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/77698420-7f36-4fb8-b0fe-c35d4304f1b1/26-6a8bafab0b828.webp' /></p><p>
</p><p>கடந்த சில மாதங்களில் இலங்கையின் பல்வேறு சிறைச்சாலைகளில் வன்முறைகள் வெடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p>இந்த சம்பவங்களில் பல கைதிகள் கொல்லப்பட்டதுடன், சிறைச்சாலை அதிகாரிகளும் உயிரிழந்திருந்தனர்.</p><p>கைதிகளின் உரிமைகள் தொடர்பிலும் அவர்களின் பாதுகாப்பு தொடர்பிலும் பல்வேறு விமர்சனங்கள் எழுப்பப்பட்டிருந்த நிலையில், ஜெனீவா அமர்வுகளில் இந்த விவகாரம் தொடர்பில் பேசப்பட உள்ளதாக தெற்கு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.</p><p>ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் இந்த அமர்வு அடுத்த மாதம் ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-24T02:43:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நிகழவுள்ள வானியல் அதிசயம் - இந்த வாரம் இரத்த நிற முழு சந்திர கிரகணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/rare-lunar-eclipse-to-cover-96-of-moon-this-week-1787537938"></link>
            <id>https://ibctamil.com/article/rare-lunar-eclipse-to-cover-96-of-moon-this-week-1787537938</id>
            <summary type="text">இந்தப் பிரபஞ்சம் பல வானியல் அதிசயங்களைக் கொண்டதாகும். எதிர்வரும் வரும் ஆகஸ்ட் 28 ஆம் திகதி (வெள்ளிக்கிழமை), ரக்ஷா பந்தன் பண்டிகை தினத்தன்று ஓர் அரிய ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தப் பிரபஞ்சம் பல வானியல் அதிசயங்களைக் கொண்டதாகும். எதிர்வரும் வரும் ஆகஸ்ட் 28 ஆம் திகதி (வெள்ளிக்கிழமை), ரக்ஷா பந்தன் பண்டிகை தினத்தன்று ஓர் அரிய பகுதியளவு சந்திர கிரகணம் நிகழவுள்ளது.&nbsp;</p><p>இந்நிகழ்வில் நிலவின் பெரும் பகுதி மறைக்கப்பட்டு, கிட்டத்தட்ட முழு சந்திரகிரகணம் போலக் காட்சியளிக்கும். எனினும் இந்த நிகழ்வை இலங்கையில் காண முடியாது.</p><p>

சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் பூமி வரும்போது, பூமியின் நிழல் சந்திரனை மறைக்கிறது.</p><p></p><h2>ரத்த நிலவு</h2><p> </p><p>

அப்போது சூரிய ஒளி பூமியின் வளிமண்டலத்தைக் கடந்து சந்திரனின் மீது படுகிறது. 

இதனால் சந்திரன் சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கிறது. எனவே இதை ரத்த நிலவு (Blood Moon) என்கின்றனர்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/677011b8-874b-44db-9fd0-583c0b73e7db/26-6a8baf051ba49.webp' /></p><p>சாதாரண பகுதி சந்திரகிரகணங்களில் நிலவின் ஒரு சிறிய பகுதி மட்டுமே பூமியின் நிழலால் மூடி மறைக்கப்படும். 

ஆனால், வெள்ளிக்கிழமை நடக்க உள்ள இந்த கிரகணத்தின் போது நிலவின் மேற்பரப்பில் 96 சதவீத பகுதி பூமியின் நிழலால் மூடப்படுகிறது. </p><p>வெறும் 4% மட்டுமே விளிம்பில் வெளிச்சமாக இருக்கும். 

வழக்கமாக முழு சந்திரகிரகணத்தின் போது மட்டுமே சந்திரன் சிவப்பு நிறத்தில் பிரகாசிக்கும்.</p><p> 

ஆனால், இந்த கிரகணத்தில் 96% நிலவு மறைக்கப்படுவதால், இது பகுதி கிரகணமாக இருந்தாலும் முழு சந்திரகிரகணத்தை போலவே ரத்தச் சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும் என்பதால் இது சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகின்றது.</p><p></p><h2>நேரடியாக காண வாய்ப்பு</h2><p> </p><p>

வட மற்றும் தென் அமெரிக்கக் கண்டங்களில் இந்த கிரகணம் மிகவும் தெளிவாகப் புலப்படும். 

சுமார் 100 கோடி மக்கள் இதனை நேரடியாக காண வாய்ப்புள்ளதாக வானியல் வல்லுநர்கள் கணித்துள்ளனர்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/47f56029-1bd6-4eed-b793-c91792a41c95/26-6a8baf05c6124.webp' /></p><p>ஐரோப்பா, ஆப்பிரிக்கா மற்றும் மேற்கு ஆசியாவின் சில பகுதிகளில் இது பகுதி அளவாகத் தெரியும். </p><p>

இலங்கை, இந்தியா, அவுஸ்திரேலியா, அண்டார்டிகா மற்றும் பசுபிக் பெருங்கடல் நாடுகளில் இந்த கிரகணம் தெரியாது. </p><p>

இலங்கை நேரப்படி ஒகஸ்ட் 28 காலையில் இந்த கிரகணம் நிகழ்கிறது. காலை 8:04 மணிக்கு தொடங்கி, முற்பகல் 9:43 மணிக்கு உச்சகட்டத்தை எட்டி காலை 11:22 மணிக்கு முடிவடையும். இக்காலகட்டத்தில் இலங்கையில் பகல் நேரமாக இருப்பதால், இந்த கிரகணத்தை நம்மால் பார்க்க முடியாது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/FJQcrzobjUcEaJJsEVOWpF" target="_blank">WHATSAPP </a>CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-24T02:40:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆபத்தான நபரின் கட்டுப்பாட்டில் ஆசிரியர் - விசாரணையில் திடுக்கிடும் தகவல் - சிக்கப் போகும் மனைவியும் மகனும்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/shiran-basik-had-connection-with-a-teacher-1787535734"></link>
            <id>https://tamilwin.com/article/shiran-basik-had-connection-with-a-teacher-1787535734</id>
            <summary type="text">போதைப்பொருள் கடத்தல்காரரான ஷிரான் பாசிகிடம் நிதி உதவி பெற்றதாக கூறப்படும் தனியார் வகுப்பு ஆசிரியர், சில ஆண்டுகளுக்கு முன்பு க.பொ.த. சாதாரண தரப் பரீட்ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>போதைப்பொருள் கடத்தல்காரரான ஷிரான் பாசிகிடம் நிதி உதவி பெற்றதாக கூறப்படும் தனியார் வகுப்பு ஆசிரியர், சில ஆண்டுகளுக்கு முன்பு க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை வினாத்தாள்களை, பரீட்சைக்கு முன்பாக கசியவிட்ட நபர் என்பது தெரியவந்துள்ளது. </p><p>இந்தத் தனியார் வகுப்பு ஆசிரியர் தற்போது டுபாயில் வசித்து வருவதாக பொலிஸ் மத்திய குற்றத்தடுப்புப் பிரிவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். </p><p>குறித்த ஆசிரியரை கைது செய்வதற்காக இன்டர்போல் அமைப்பின் உதவி பெறப்படவுள்ளது.</p><p> </p><h2><b>சிவப்பு அறிவிப்பு </b></h2><p>அத்துடன், அவருக்கு எதிராகச் சிவப்பு அறிவிப்பு பிறப்பிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c99bb1e7-e79b-4a9f-932c-f4ec36957e3b/26-6a8baa8626419.webp' /></p><p> தற்போது குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் தடுப்புக் காவலில் உள்ள ஷிரான் பாசிக் தனது சொத்துக்களை எழுதி வைத்துள்ள அவரது மகனையும் மனைவியை பொலிஸார் விசாரிக்க நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக தெரியவந்துள்ளது.</p><p></p><p></p><p>
</p>]]></content>
            <updated>2026-08-24T02:21:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் எச்சரிக்கை மட்டத்தில் எல் நினோவின் தாக்கம்! வழங்கப்பட்டுள்ள முக்கிய அறிவுறுத்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/el-nino-affects-7-districts-1787535714"></link>
            <id>https://tamilwin.com/article/el-nino-affects-7-districts-1787535714</id>
            <summary type="text">நாட்டின் பல பகுதிகளுக்கு இன்று(24) பகல் வேளையில் வெப்பச் சுட்டெண் &#039; எச்சரிக்கை&#039; (Caution) மட்டத்தை எட்டக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இதன்படி, இயற்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டின் பல பகுதிகளுக்கு இன்று(24) பகல் வேளையில் வெப்பச் சுட்டெண் ' எச்சரிக்கை' (Caution) மட்டத்தை எட்டக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இதன்படி, இயற்கை அபாயங்கள் பற்றிய முன்னெச்சரிக்கை மையம் செம்மஞ்சள் நிற (Amber) வெப்ப வானிலை எச்சரிக்கையை விடுத்துள்ளது.
</p><p>குறிப்பிடப்பட்ட சில பகுதிகளில் மனித உடலால் உணரப்படும் வெப்பமானது பகல் நேரத்தில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><h2>முன்னெச்சரிக்கை நடவடிக்கை</h2><p>
</p><p>எனவே வெப்பமான வானிலையின் தாக்கத்திலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cd9b3552-34f0-42af-ae6d-6eb8b51860bf/26-6a8ba996903d9.webp' /></p><p>எனவே போதுமான அளவு நீரைக் குடிக்க வேண்டும்; முடிந்தவரை நிழலான இடங்களில் அடிக்கடி ஓய்வு எடுக்குமாறும், வெப்பத்தினால் எளிதில் பாதிக்கப்படக்கூடிய முதியவர்கள் மற்றும் நோயாளிகள் குறித்து அவதானம் செலுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><p>வாகனங்களில் சிறுவர்களைத் தனியாக வாகனங்களுக்குள் விட்டுச் செல்லக் கூடாது.

வெளியில் கடினமான உடற்பயிற்சிகள் அல்லது வெளிப்புறச் செயல்பாடுகளைக் குறைத்து, நிழலான இடங்களில் தங்குவதுடன் அதிகளவில் திரவ ஆகாரங்களை அருந்த வேண்டும்.

இலகுரக, வெள்ளை அல்லது லேசான நிறமுடைய ஆடைகளை அணியவும் கோரப்பட்டுள்ளது.</p><h2>எல் நினோவின் தாக்கம்</h2><p>இதேவேளை, 7 மாவட்டங்கள் எல் நினோவின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகப் பேரிடர் மேலாண்மை மையம் தெரிவித்துள்ளது.</p><p>
இந்த 7 மாவட்டங்களில் உள்ள 23 பிரதேச செயலகப் பிரிவுகள் வறண்ட வானிலையால் பாதிக்கப்பட்டுள்ளதாக மையம் சுட்டிக்காட்டுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/facedab5-1f65-4820-b49c-160655122bc1/26-6a8ba997411d3.webp' />&nbsp;</p><p>

மேலும், 25,628 குடும்பங்களைச் சேர்ந்த 81,865 நபர்கள் எல் நினோவின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகப் பேரிடர் மேலாண்மை மையம் கூறியுள்ளது.
</p><p>
இந்தத் தாக்கத்தின் காரணமாக, 20 பிரதேச செயலகப் பிரிவுகளுக்குக் குடிநீர் விநியோகிக்கவும் பேரிடர் மேலாண்மை மையம் நடவடிக்கை எடுத்துள்ளது.
</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-24T02:17:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் 1 கோடி பெறுமதியான நகை கொள்ளை - சிசிடிவியில் சிக்கிய நபர் - நேர்ந்த கதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/suspect-arrested-in-connection-with-theft-jaffna-1787534883"></link>
            <id>https://ibctamil.com/article/suspect-arrested-in-connection-with-theft-jaffna-1787534883</id>
            <summary type="text">யாழ். குடாநாட்டின் பல்வேறு பகுதிகளில் வீடுகளுக்குள் புகுந்து திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் பிரதான சந்தேகநபர் உட்பட மூவரை விளக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ். குடாநாட்டின் பல்வேறு பகுதிகளில் வீடுகளுக்குள் புகுந்து திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் பிரதான சந்தேகநபர் உட்பட மூவரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p>இவர்களிடம் இருந்து சுமார் ஒரு கோடியே 75 இலட்சம் ரூபா பெறுமதியான 43 பவுண்
தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
</p><p>கடந்த மாதம் 9ஆம் திகதி சாவகச்சேரி நகரில் உள்ள நகைக்கடை உரிமையாளரின்
வீட்டில் இருந்து 17 பவுண் தங்க நகைகள் திருடப்பட்டமை தொடர்பில் சாவகச்சேரி
காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.</p><p></p><h2>யாழ் நகரில் வைத்து கைது</h2><p>
இதனைத் தொடர்ந்து சிசிடிவி காணொளிகளின் உதவியுடன் காவல்துறையினர் முன்னெடுத்த
விசாரணைகளில், கல்லுண்டாய் குடியேற்றத் திட்டத்தைச் சேர்ந்த பிரதான சந்தேகநபர்
ஒருவர் நேற்று (22) யாழ்ப்பாணம் நகரில் வைத்து கைது செய்யப்பட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/79a76a92-73b1-4c32-b4ed-2ae23b82b0c8/26-6a8ba1594b656.webp' /></p><p>
அவரிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் அடிப்படையில், கோப்பாய்
பகுதியைச் சேர்ந்த ஒருவர் மற்றும் ஊர்காவற்றுறை பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர்
தொடர்பாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.
</p><p>மேலும், ஊர்காவற்றுறையில் உள்ள வங்கி ஒன்றில் 43 பவுண் தங்க நகைகள் அடகு
வைக்கப்பட்டிருந்தமை விசாரணைகளின் போது கண்டறியப்பட்டதுடன், அவை காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளன.
</p><p>திருட்டுச் சம்பவத்திற்கு சந்தேகநபருக்கு உதவியதாகக் கூறப்படும் ஊர்காவற்றுறை
பகுதியைச் சேர்ந்த பெண்ணும் சாவகச்சேரி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p></p><h2>நீதிமன்றத்தில் முன்னிலை</h2><p>
</p><p>கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இன்று சாவகச்சேரி நீதிமன்றத்தில்
முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், அவர்களை எதிர்வரும் செப்டெம்பர் 4ஆம் திகதி
வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/07bcd602-069d-46d3-bfb1-2dd9fd4a3f39/26-6a8ba15a02103.webp' /></p><p>சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து
வருகின்றனர்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/FJQcrzobjUcEaJJsEVOWpF" target="_blank">WHATSAPP </a>CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-24T01:43:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்க நீதிமன்றம் அதிரடி ; ரத்து செய்யப்பட்ட ட்ரம்ப் அரசின் தீர்மானம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/us-court-overturns-trump-decision-1787532003"></link>
            <id>https://canadamirror.com/article/us-court-overturns-trump-decision-1787532003</id>
            <summary type="text">ஆப்கானிஸ்தான், ஈரான், ரஷ்யா மற்றும் சோமாலியா உள்ளிட்ட 75 நாடுகளில் இருந்து வரும் மக்களுக்கு குடியேற்ற விசா வழங்க தடைவிதித்த டொனால்ட் ட்ரம்ப் அரசின் உத...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஆப்கானிஸ்தான், ஈரான், ரஷ்யா மற்றும் சோமாலியா உள்ளிட்ட 75 நாடுகளில் இருந்து வரும் மக்களுக்கு குடியேற்ற விசா வழங்க தடைவிதித்த டொனால்ட் ட்ரம்ப் அரசின் உத்தரவை அமெரிக்க கூட்டாட்சி நீதிமன்ற நீதிபதி ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார் </p><p>

இக்கொள்கை சட்டத்திற்கு முரணானது எனக்கூறி கூட்டாட்சி நீதிமன்ற நீதிபதி&nbsp; ரத்து செய்து உத்தரவிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d246fb8c-e2ad-417a-95a7-ce51f65496ab/26-6a8b92e5bafe7.webp' /></p><p>

“சட்டப்பூர்வமாக எந்தவொரு அடிப்படையும் இல்லாதபோது, தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு விசாக்களை மறுக்கக் கட்டாயப்படுத்துவதன் மூலம், குடிவரவு மற்றும் குடியுரிமைச் சட்டத்தை மீறும்” கொள்கையை வெளியிட்டு, வெளியுறவுத்துறைச் செயலர் மார்கோ ரூபியோ தனது அதிகார வரம்பை மீறியுள்ளார்,” என்றும் நீதிபதி குறிப்பிட்டார்.

</p><p>தூதரக அதிகாரிகளுக்கே அதிகாரம்
சட்டத்தில் வகுக்கப்பட்டுள்ள குறிப்பிட்ட மற்றும் விரிவான அளவுகோல்களை மதிப்பாய்வு செய்வதன் அடிப்படையில், ஒரு குடியேறி விசாவுக்குத் தகுதியானவரா என்பதைத் தீர்மானிக்கும் பிரத்யேக அதிகாரம் தூதரக அதிகாரிகளுக்கே உள்ளது என்றும் குறிப்பிட்டார்.</p><p>

இரண்டு குடியேற்ற உரிமை அமைப்புகளுடன் சேர்ந்து, 11 பேர் தாக்கல் செய்த மனுமீது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
</p><p>இந்த விசா தடை கொள்கை கடந்த ஜனவரி மாதம் ட்ரம்ப் நிர்வாகத்தால் கொண்டு வரப்பட்டது. </p><p>ஆப்கானிஸ்தான், பிரேசில், எகிப்து, ஈராக், நைஜீரியா, சோமாலியா, ரஷ்யா, ஈரான் மற்றும் தாய்லாந்து உள்ளிட்ட உலகளவில் சுமார் 75 நாடுகள் இதனால் பாதிக்கப்பட்டன. </p><p>
இந்த நாடுகளில் இருந்து அமெரிக்காவிற்கு குடியேறுபவர்கள், அங்குள்ள அரசு நலத்திட்ட உதவிகளைப் பயன்படுத்தி “அந்நாட்டிற்கு பொதுச்சுமையாக” மாற அதிக வாய்ப்புள்ளது என்று ட்ரம்ப் நிர்வாகம் குறிப்பிட்டிருந்தது.</p>]]></content>
            <updated>2026-08-24T01:29:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் இளம் பொறியியலாளரின் உயிரை பறித்த சம்பவம் ; துயரில் கதறும் உறவுகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/young-engineer-killed-in-tragic-jaffna-accident-1787532738"></link>
            <id>https://jvpnews.com/article/young-engineer-killed-in-tragic-jaffna-accident-1787532738</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் நல்லூர்ப் பகுதியில் இடம்பெற்ற&amp;nbsp; மோட்டார் சைக்கிள் மற்றும் கார் விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன், மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார்.&amp;nbsp;ந...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">யாழ்ப்பாணம் நல்லூர்ப் பகுதியில் இடம்பெற்ற&nbsp; மோட்டார் சைக்கிள் மற்றும் கார் விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன், மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார்.</p><p style="text-align: justify; ">&nbsp;நல்லூர்ப் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் சிக்கி இளம் பொறியியலாளர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b1a9bd65-7887-4f55-8cd1-0f6d3c714022/26-6a8b95c48321a.webp' /></p><p style="text-align: justify; ">&nbsp;நேற்று (23) இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p style="text-align: justify; ">


விபத்தில் கார் மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகிய இரு வாகனங்களும் சேதமடைந்துள்ளன.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-24T01:28:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரேவதி நட்சத்திரத்திற்குள் நுழையும் சனிபகவான் ; சகல சௌபாக்கியத்தை பெறப்போகும் ராசிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/saturn-enters-revathi-nakshatra-in-major-shift-1787534676"></link>
            <id>https://jvpnews.com/article/saturn-enters-revathi-nakshatra-in-major-shift-1787534676</id>
            <summary type="text">நவகிரகங்களில் சனிபகவான் மிகவும் சக்திவாய்ந்த அதேசமயம் மற்ற கிரகங்களை விட மெதுவாக நகரும் கிரகமாகும். சனி பகவான் ஒரு ராசியைக் கடக்க இதற்கு சுமார் இரண்டர...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">நவகிரகங்களில் சனிபகவான் மிகவும் சக்திவாய்ந்த அதேசமயம் மற்ற கிரகங்களை விட மெதுவாக நகரும் கிரகமாகும். சனி பகவான் ஒரு ராசியைக் கடக்க இதற்கு சுமார் இரண்டரை ஆண்டுகள் ஆகின்றன.</p><p style="text-align: justify; ">தற்போது மீன ராசியில் வக்ர நிலையில் நிலைபெற்றுள்ள சனிபகவான், ஏப்ரல் 17 அன்று ரேவதி நட்சத்திரத்திற்குள் நுழைந்தது. இப்போது அது ரேவதி நட்சத்திரத்தின் முதல் பாதத்திற்குள் நுழையவுள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/53545906-8d15-4bf1-95a5-931690553f6b/26-6a8b9d569fc73.webp' /></p><h2 style="text-align: justify; ">அவர்கள் எந்தெந்த ராசிக்காரர்கள்&nbsp;</h2><p style="text-align: justify; "> இது ஜோதிடரீதியாக மிகவும் முக்கியமான கிரகப் பெயர்ச்சியாக கருதப்படுகிறது. சனி பகவான் ரேவதி நட்சத்திரத்தின் முதல் பாதத்தில் நுழைவது சில ராசிக்காரர்களுக்குச் சாதகமான பலன்களைத் தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.</p><p style="text-align: justify; "><b>
ரிஷபம் :</b>இந்த பெயர்ச்சி வருமானத்திற்கான புதிய வழிகளைத் திறப்பதுடன், நீண்ட காலமாகத் தேங்கிக் கிடந்த பணத்தை மீட்டெடுக்கவும் உதவும்.&nbsp; உங்கள் பொருளாதார நிலை படிப்படியாக மேம்படும்.



வேலையில் இருக்கும் நபர்களுக்குப் பணியிடத்தில் ஆதரவு கிடைப்பதுடன், உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு முக்கிய இலக்குகளை அடைய உதவும். அவர்களின் அனைத்து முயற்சிகளும் அவர்களுக்கு வெற்றி கிடைக்கும், மேலும் அவர்கள் வாழ்க்கையின் அனைத்து துறைகளிலும் முன்னேற்றத்தை அனுபவிக்க முடியும்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; "><b>மிதுனம் :</b>&nbsp;ஜோதிடக் கணிப்புகளின்படி, இக்காலம் பணியில் பல துறைகளில் வெற்றியைத் தேடித்தரக்கூடும். வேலையில் இருப்பவர்கள் தங்கள் முயற்சிகளுக்காக சக ஊழியர்கள் மற்றும் மேலதிகாரிகளிடமிருந்து பாராட்டைப் பெறலாம்,&nbsp; நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட ஆசைகள் நிறைவேறலாம், இது திருப்தி மற்றும் மனநிறைவை அளிக்கும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்,&nbsp;</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "><b>மகரம் :&nbsp;</b>ஜோதிட சாஸ்திரத்தின் படி, இக்காலம் பணியில் பல துறைகளில் வெற்றியைத் தேடித்தரக்கூடும். இந்த நேரத்தில் அவர்களின் திறமை மீதான அவர்களின் நம்பிக்கை அதிகரிக்கும், இதுவரை எதிர்பார்க்காத சில வாய்ப்புகள் அவர்களைத் தேடி வரும். இந்த காலகட்டத்தில் சில நற்செயல்களை செய்வதில் கவனம் செலுத்த வேண்டும். இது அவர்களின் நற்பெயரை அதிகரிக்கும்.&nbsp;</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-24T01:24:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மகிந்த ராஜபக்ச வீட்டு பொருட்களுடன் வீதியில் காத்திருந்த சந்தர்ப்பம்! தொழிற் கட்சியின் தலைவர் ஏ.எஸ்.பி.லியனகே வெளிப்படுத்திய தகவல்...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/asp-liyanage-mahinda-maithripala-sirisena-1787533188"></link>
            <id>https://tamilwin.com/article/asp-liyanage-mahinda-maithripala-sirisena-1787533188</id>
            <summary type="text">&amp;nbsp;மகிந்த ராஜபக்ச 2015 ஆம் ஆண்டு தேர்தலில் தோல்வியடைந்த பின்னர் கொழும்பில் தங்குவதற்காக தொழிலதிபரும் தொழிற் கட்சியின் தலைவரான ஏ.எஸ்.பி.லியனகே நிர்ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;மகிந்த ராஜபக்ச 2015 ஆம் ஆண்டு தேர்தலில் தோல்வியடைந்த பின்னர் கொழும்பில் தங்குவதற்காக தொழிலதிபரும் தொழிற் கட்சியின் தலைவரான ஏ.எஸ்.பி.லியனகே நிர்மாணித்த சொகுசு வீடான பீகொக் மென்சன் (Peacock Mansion) வழங்குவதாக அறிவித்திருந்தார்.</p><p>இறுதியில் அதை வழங்க முடியாத சூழ்நிலையில் வீட்டு பொருட்களுடன் தங்காலையில் இருந்து கொழும்புக்கு வந்த மகிந்த ராஜபக்ச வீதியில் நின்ற ஒரு கதையை வலையொளி தளமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார்.அவ்விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்..</p><h2>
</h2><p></p><h2>மைத்திரி லியனகேவிடம் என்ன கூறினார்</h2><p>மகிந்த ராஜபக்சவுக்கு கொழும்பில் ஒரு வீடு வழங்குவதாக அறிவித்திருந்தேன்.அதை அறிந்த அன்றைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன என்னை அழைத்திருந்தார்.</p><p>நான் மைத்திரியின் வீட்டுக்கு சென்றபோது ராஜித சேனாரத்தினவும் இருந்தார். அந்த வீட்டை மகிந்தவுக்கு கொடுத்தால் சிறைச்செல்ல நேரிடலாம் என்றனர்.நான் கேட்டேன், " நான் ஏன் சிறைக்குச் செல்ல வேண்டும்?".அக்காலத்தில் எதற்கெடுத்தாலும் சிறையில் அடைத்து அரசியல் பகையை தீர்த்துக் கொண்ட ஒரு கலாசாரம் இருந்தது.
</p><p>"உங்களுக்கு நாங்கள் ஒரு ஆளுநர் பதவி தருகிறோம்" என்று சொன்னார்கள்.வீட்டை கொடுக்க வேண்டாம் என்று கூறினர். நான் யோசித்தேன், சிறைக்குச் செல்வதை விட ஆளுநராவது நல்லதுதானே என்று.</p><p>ஆனாலும் நான் சொன்னேன், " தூதுவர் பதவி வேண்டாம்" என்று. இல்லை, ஆளுநர் பதவியை தருகிறோம், நாளைக்கே வீட்டின் கதவை மூடுங்கள் என்று எனக்குச் சொன்னார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3f20bb47-2c4f-4452-9adf-1842b8a1d296/26-6a8b97864362d.webp' /></p><p>ஆனால் மஹிந்த வீட்டுப் பொருட்களை ஏற்றிக் கொண்டு வந்துகொண்டிருந்தார். வரும் வழியில் என்னை பல முறை தொலைபேசியில் தொடர்பு கொண்டார்,அவரின் மனைவியும் பல அழைப்பு எடுத்திருந்தனர்.</p><p>ஆனால் என்னால் அழைப்பை எடுக்க முடியாமல் இருந்தேன். கடைசியில் வேறு வழியின்றி நான் சொன்னேன், "சர், இப்படி ஒரு சம்பவம் நடந்துவிட்டது. என்னை மன்னிக்க வேண்டும்" என்று. </p><p>அதற்கு மகிந்த ராஜபக்ச என்னிடம் சொன்னார், "நீங்கள் பயப்பட வேண்டாம். பயமில்லாமல் இதைத் திறந்துவிடுங்கள், நான் இப்போது எல்லாப் பொருட்களையும் எடுத்துக் கொண்டு வந்துவிட்டேன்" என்று.</p><p>ஒன்றும் செய்ய வழியில்லாம் வீட்டை கொடுத்தேன்.அதன்பின் சுமார் நான்கு மாதங்கள் சென்றன ஆளுநர் பதவி கிடைக்கவில்லை என குறிப்பிட்டார்.&nbsp;</p><p></p><p>&nbsp; &nbsp; &nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-08-24T01:21:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொட்டித் தீர்க்கப் போகும் மழை! வளிமண்டலவியல் திணைக்களத்தின் எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/rainy-weather-today-s-weather-forecast-1787532410"></link>
            <id>https://ibctamil.com/article/rainy-weather-today-s-weather-forecast-1787532410</id>
            <summary type="text">சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக...</summary>
            <content type="html"><![CDATA[<p>சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
</p><p>
அத்தோடு, வடமேல் மாகாணத்தில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் மொனராகலை மாவட்டங்களின் சில இடங்களில் பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்பு காணப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.</p><p></p><h2>பலத்த காற்று&nbsp;</h2><p>
</p><p>
இந்நிலையில், நாட்டின் ஏனைய பிராந்தியங்களில் வறட்சியான வானிலை நிலவக்கூடும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9a6d1d09-acfe-458e-8280-67b9e3a08461/26-6a8b965193459.webp' /></p><p>

இதேவேளை, மத்திய மலைப் பிராந்தியத்தின் மேற்கு சரிவுகளிலும், வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் மன்னார், திருகோணமலை, ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் மணித்தியாலத்திற்கு சுமார் 30 - 40 km வேகத்தில் அடிக்கடி பலத்த காற்று வீசக் ஓரளவு கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-24T00:54:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[300,000 இராணுவ வீரர்களை திரட்ட ரஷ்யா திட்டம்! கவலையில் ஜெலென்ஸ்கி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/russia-to-mobilize-300-000-more-soldiers-for-war-1787529422"></link>
            <id>https://ibctamil.com/article/russia-to-mobilize-300-000-more-soldiers-for-war-1787529422</id>
            <summary type="text">

ரஷ்யாவில் செப்டம்பர் நடுப்பகுதியில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு, போருக்காக மேலும் 3,00,000 வீரர்களைத் திரட்ட மொஸ்கோ திட்டமிட்டுள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>

ரஷ்யாவில் செப்டம்பர் நடுப்பகுதியில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு, போருக்காக மேலும் 3,00,000 வீரர்களைத் திரட்ட மொஸ்கோ திட்டமிட்டுள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். </p><p>

கிழக்கு உக்ரைனின் தொழில்மயமான டொன்பாஸ் பிராந்தியத்தின் எஞ்சிய பகுதிகளைக் கைப்பற்றும் நோக்கில் ரஷ்யப் படைகள் தீவிரமாக முன்னேறி வருகின்றன.
</p><p>
மொத்தம் 5,00,000 துருப்புக்களைத் திரட்டும் இலக்கை எட்டுவதற்காக, 2027 ஆம் ஆண்டிலும் ரஷ்யா மேலும் பலரை ராணுவத்தில் சேர்க்கக்கூடும் என்றும் ஜெலென்ஸ்கி கூறியுள்ளார்.</p><p></p><h2>ரஷ்யாவின் திட்டம்</h2><p> </p><p>

தலைநகர் அல்லது முக்கிய நகரங்களைத் தவிர்த்து, ரஷ்யாவின் தூரத்திலுள்ள தொலைதூரப் பகுதிகளை இலக்கு வைத்து இந்த ஆட்சேர்ப்பு நடைபெறும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5121ee78-e4db-4ab0-b549-fffd8cad3f2a/26-6a8b8ca2bbe0f.webp' /></p><p> </p><p>

இந்நிலையில், கொஸ்டியான்டினிவ்கா போன்ற மூலோபாய நகரத்தைச் சுற்றி கடுமையான சண்டை நடந்து வரும் நிலையில், உக்ரைனின் கோட்டை நகரங்களுக்குள் நுழைய முயன்று ரஷ்யா பெரும் எண்ணிக்கையிலான வீரர்களை இழந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p><h5><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table></h5><p>

</p>]]></content>
            <updated>2026-08-24T00:25:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் மூன்று வர்த்தக நிலையங்களுக்கு எதிராக பல இலட்சம் ரூபாய் அபராதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/jaffna-shops-fined-millions-over-violations-1787531121"></link>
            <id>https://jvpnews.com/article/jaffna-shops-fined-millions-over-violations-1787531121</id>
            <summary type="text">நிர்ணயிக்கப்பட்ட மற்றும் அச்சிடப்பட்ட விலையை விட அதிக விலைக்குப் பொருட்களை விற்பனை செய்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மூன்று வர்த்தக நிலையங்களுக்கு, யாழ்ப்...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">நிர்ணயிக்கப்பட்ட மற்றும் அச்சிடப்பட்ட விலையை விட அதிக விலைக்குப் பொருட்களை விற்பனை செய்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மூன்று வர்த்தக நிலையங்களுக்கு, யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் மொத்தம் 668,000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது.
</p><p style="text-align: justify;">
நுகர்வோர் விவகார அதிகாரசபையின் அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனைகளைத் தொடர்ந்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9179da6b-2e2b-4bc3-a64d-e0963ab43cca/26-6a8b8f73c157f.webp' /></p><h2 style="text-align: justify;">அபராதம்&nbsp;</h2><p>
</p><p style="text-align: justify; ">
120 ரூபாய் அதிகபட்ச சில்லறை விலை கொண்ட ஒரு லீட்டர் குடிநீர் போத்தலை 200 ரூபாய்க்கு விற்பனை செய்த யாழ்ப்பாணத்திலுள்ள உணவகம் மற்றும் மதுபான விற்பனையகம் ஒன்றுக்கு 300,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
</p><p style="text-align: justify;">
அச்சிடப்பட்ட சில்லறை விலையை விட அதிக விலைக்கு சோடா போத்தலை விற்பனை செய்த மற்றொரு உணவகத்திற்கு 100,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;">

ஒரு கிலோகிராம் பொன்னி சம்பா அரிசிக்கான அதிகபட்ச சில்லறை விலையான 255 ரூபாயை விட அதிக விலைக்கு விற்பனை செய்த வர்த்தகர் ஒருவருக்கு 268,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
</p><p style="text-align: justify;">&nbsp;வர்த்தக அத்துமீறல்கள் தொடர்பில் 1977 என்ற உடனடி தொலைபேசி இலக்கத்தின் ஊடாக வேலை நேரங்களில் அறிவிக்க முடியும் என்றும் நுகர்வோர் விவகார அதிகாரசபை அறிவித்துள்ளது.</p><p style="text-align: justify;"></p>]]></content>
            <updated>2026-08-24T00:25:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[உயரும் சர்க்கரை விலை... அமைச்சர் சொன்ன விளக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/sugar-prices-are-rising-1787530941"></link>
            <id>https://news.lankasri.com/article/sugar-prices-are-rising-1787530941</id>
            <summary type="text">Sugar production had declined due to red rot disease and El Nino: சிவப்பு அழுகல் நோய் மற்றும் எல் நினோ சூழ்நிலைகள் காரணமாக சர்க்கரை உற்பத்தி சரிந்து, ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Sugar production had declined due to red rot disease and El Nino: சிவப்பு அழுகல் நோய் மற்றும் எல் நினோ சூழ்நிலைகள் காரணமாக சர்க்கரை உற்பத்தி சரிந்து, விவசாய உற்பத்தி பாதிப்பு.
</p><p>பண்டிகைக் காலத்தை முன்னிட்டு சர்க்கரை கிடைப்பது மற்றும் சில்லறை விலைகள் உயர்வது குறித்த கவலைகளைத் தீர்க்கும் வகையில், கச்சா சர்க்கரையை தற்காலிகமாக இறக்குமதி செய்வது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை இந்திய அரசு எடுத்து வருவதாக ஒன்றிய அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/622fdc26-25fc-4257-b974-0d760890a6a3/26-6a8b8ec04e9e6.webp' /></p><p>
</p><p>சிவப்பு அழுகல் நோய் மற்றும் எல் நினோ நிலைமைகள் காரணமாக சர்க்கரை உற்பத்தி குறைந்துள்ளதாகவும், இது இந்தியாவிலும் உலக அளவிலும் விவசாய உற்பத்தியைப் பாதித்துள்ளதாகவும் பிரல்ஹாத் ஜோஷி கூறினார். </p><p>செய்தியாளர்கள் சந்திப்பின்போது பேசிய அமைச்சர், இது குறித்து நாங்கள் மிகவும் கவலைப்படுகிறோம், அதனால்தான் உடனடியாகப் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். இந்தியாவின் தேவை சுமார் 280 லட்சம் டன்கள், ஆனால் இன்றுவரை... நம்மிடம் 20 முதல் 25 லட்சம் டன்களுக்கும் அதிகமான உபரி சர்க்கரை உள்ளது என்றார்.</p><p></p><p>
</p><p>சமீபத்தில் சில்லறை சர்க்கரை விலையில் ஏற்பட்ட உயர்விற்கு மத்தியில் இந்த உறுதி வழங்கப்பட்டுள்ளது. சில்லறை சர்க்கரை விலையானது ஜூலை 20 அன்று ஒரு கிலோவுக்கு ரூ.48.18-லிருந்து ஆகஸ்ட் 20 அன்று ஒரு கிலோவுக்கு ரூ.55.70 ஆக உயர்ந்துள்ளதாகவும், இந்த உயர்வுக்குப் பல்வேறு காரணிகளின் கலவையே காரணம் என்றும் நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகம் வெள்ளிக்கிழமை அன்று தெரிவித்துள்ளது.</p><p> இதற்கிடையில், விவசாயிகள் வழங்கும் கரும்புக்கு அவர்களுக்கு உரிய நேரத்தில் பணம் வழங்கப்படவில்லை என்று காங்கிரஸ் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரந்தீப் சிங் சுர்ஜேவாலா தெரிவித்தார். மேலும், முன்னர் சர்க்கரையை ஏற்றுமதி செய்து வந்த இந்தியா, தற்போது முதன்முறையாக அதை இறக்குமதி செய்வதாக அவர் மேலும் சாட்டினார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-24T00:19:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[மோசடியில் தொடர்ந்து சிக்கும் நாமல் - 6 மணிநேரம் சி.ஐ.டி விசாரணையில் நடந்தது என்ன...!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/reason-behind-the-namal-s-investigation-1787494281"></link>
            <id>https://tamilwin.com/article/reason-behind-the-namal-s-investigation-1787494281</id>
            <summary type="text">ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச, நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜராகி 6 மணி நேரம் வாக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச, நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜராகி 6 மணி நேரம் வாக்குமூலம் வழங்கியதன் பின்னணி தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.</p><p> கடற்கரை ஓரத்தில் அமைந்துள்ள தங்காலை பே ஹோட்டல் கொள்வனவு தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைக்காக நாமல் அழைக்கப்பட்டிருந்தார்.
</p><p>
ராஜபக்ச குடும்பத்துடன் தொடர்புடைய CSN தொலைக்காட்சி ஊடாகப் ஈட்டப்பட்ட பணத்தை கொண்டே இந்த ஹோட்டல் வர்த்தகப் பரிமாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.</p><p> </p><h2><b>

வாக்குமூலம் பதிவு </b></h2><p>இதனடிப்படையிலேயே இந்த விசாரணைகள் இடம்பெற்றுள்ளன. வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதன் பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கிருந்து சென்றுள்ளார். </p><p>அத்துடன் நாமலுக்கு எதிராகப் புதிய குற்றச்சாட்டுகள் எதுவும் முன்வைக்கப்படவில்லை. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/74269162-f58b-44a6-9f60-c9ec104d4e02/26-6a8b2bf985a63.webp' /></p><p>முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகனான நாமல் ராஜபக்ச, இதற்கு முன்பும் பல்வேறு நிதி முறைகேடுகள் தொடர்பாக விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். </p><p>

Krish Lanka நிறுவனத்தால் ரக்பி விளையாட்டு மேம்பாட்டிற்காக வழங்கப்பட்ட 70 மில்லியன் ரூபாய் நிதியைத் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படுகின்றது. </p><p>

இந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் 2025ஆம் ஆண்டு ஜனவரியில் சட்டமா அதிபரால் அவருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. </p><p>மேலும் NR Consultancy நிறுவனத்துடன் தொடர்புடைய 15 மில்லியன் ரூபாய் பணமோசடி பரிமாற்றம் குறித்தும் விசாரணைகள் நடத்தப்பட்டன. </p><p>எவ்வாறாயினும், Gowers Corporation நிறுவனத்துடன் தொடர்புடைய மற்றொரு பணமோசடி வழக்கில் 2023ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கொழும்பு மேல்நீதிமன்றத்தால் நாமல் ராஜபக்ச குற்றச்சாட்டுகளில் இருந்து விடுதலை செய்யப்பட்டார். </p><p>அவரது சட்டத் தகுதிகள் மற்றும் இலங்கை சட்டக் கல்லூரியில் இணைந்து கொள்வது தொடர்பிலும் குற்றப் புலனாய்வு திணைக்களம் அண்மையில் விசாரணை ஒன்றை ஆரம்பித்திருந்தது. </p><p> எனினும் அந்த குற்றச்சாட்டுகளை நாமல் வன்மையாக மறுத்துள்ளார். இந்த புதிய அழைப்பு முற்றிலும் தங்காலை பே ஹோட்டல் பரிமாற்றம் தொடர்பான விசாரணைக்கு மட்டுமே என தகவல்கள் வெளியாகி உள்ளன. </p>]]></content>
            <updated>2026-08-24T00:13:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[உசைன் போல்ட் சாதனையை முறியடித்த சீனாவின் அதிவேக ரோபோ]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/china-s-superfast-robot-breaks-usain-bolt-s-record-1787530023"></link>
            <id>https://canadamirror.com/article/china-s-superfast-robot-breaks-usain-bolt-s-record-1787530023</id>
            <summary type="text">ஜமைக்காவின் புகழ்பெற்ற ஓட்டப்பந்தய வீரா் உசைன் போல்ட் படைத்திருந்த 100 மீட்டா் ஓட்டப்பந்தய உலக சாதனையை, சீனாவைச் சோ்ந்த மனித உருவ ரோபோ ஒன்று முறியடித...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜமைக்காவின் புகழ்பெற்ற ஓட்டப்பந்தய வீரா் உசைன் போல்ட் படைத்திருந்த 100 மீட்டா் ஓட்டப்பந்தய உலக சாதனையை, சீனாவைச் சோ்ந்த மனித உருவ ரோபோ ஒன்று முறியடித்துள்ளது.
</p><p>
கடந்த 2009-ஆம் ஆண்டு, பொ்லினில் நடந்த உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் உசைன் போல்ட் 100 மீட்டா் தூரத்தை 9.58 விநாடிகளில் கடந்ததே மனிதா்களின் உலக சாதனையாக இருந்து வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ff1416c3-1df6-4fcb-8db6-7d87a28e5360/26-6a8b8b29a4b6e.webp' /></p><p> இந்நிலையில், சீன ஸ்மாா்ட்போன் தயாரிப்பு நிறுவனமான ‘ஹானா்’ உருவாக்கியுள்ள இந்த மனித உருவ ரோபோ, வெறும் 9.32 விநாடிகளில் 100 மீட்டா் தூரத்தைக் கடந்துள்ளது.



</p><p>
‘லைட்னிங்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த அதிவேக ரோபோ, பெய்ஜிங்கில் சனிக்கிழமை தொடங்கிய 2-ஆவது உலக மனித உருவ ரோபோ விளையாட்டுப் போட்டிக்கான முன்னோட்ட சோதனையின்போது விநாடிக்கு 14.5 மீட்டா் என்ற அதிகபட்ச வேகத்தை எட்டி, இச்சாதனையைப் படைத்துள்ளது.
</p><p>
முன்னதாக, கடந்த ஏப்ரலில் நடைபெற்ற பெய்ஜிங் அரை மாரத்தான்(21 கி.மீ) ஓட்டப் பந்தயத்திலும் இந்த ‘லைட்னிங்’ ரோபோ பங்கேற்று, 50 நிமிடங்கள் மற்றும் 26 விநாடிகளில் இலக்கை அடைந்து வெற்றி பெற்றது.</p><p>

அந்த அரை மாரத்தான் போட்டியின்போது 169 செ.மீ. உயரமும், 95 செ.மீ. நீளமுள்ள கால்களையும் கொண்டிருந்த இந்த ரோபோவின் கால்கள், தற்போது உலக மனித உருவ ரோபோ விளையாட்டுப் போட்டிக்காக ஆராய்ச்சியாளா்களால் மேலும் 10 செ.மீ. நீட்டிக்கப்பட்டு, 1.05 மீட்டராக மேம்படுத்தப்பட்டுள்ளது.
</p><p><br></p>]]></content>
            <updated>2026-08-24T00:07:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரூபாவைப் பாதுகாக்கும் இலங்கை அரசாங்கத்தின் திட்டம்! குறையும் கையிருப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/low-foreign-reserves-1787528239"></link>
            <id>https://tamilwin.com/article/low-foreign-reserves-1787528239</id>
            <summary type="text">&amp;nbsp;சர்வதேச நாணய நிதியம் கூறியதை விட இலங்கை அரசாங்கத்திடம் வெளிநாட்டுக் கையிருப்பு குறைவாகவே உள்ளது என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;சர்வதேச நாணய நிதியம் கூறியதை விட இலங்கை அரசாங்கத்திடம் வெளிநாட்டுக் கையிருப்பு குறைவாகவே உள்ளது என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
</p><p>
கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.</p><p>

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,</p><p> 

சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தத்தின் படி இந்த வருடத்தில் நாட்டின் மொத்த வெளிநாட்டுக் கையிருப்பு 8.8 பில்லியன் அமெரிக்க டொலராக இருக்க வேண்டும். எனினும், தற்போது 6.5 பில்லியன் டொலர்களே கையிறுப்பில் உள்ளது.</p><h2>கையிருப்பு</h2><p> </p><p>

இந்தநிலையில், மாதத்திற்கு 250 முதல் 300 மில்லியன் டொலர் வரை சேமிப்பது இலகுவானதல்ல.

2024 ஆம் ஆண்டு ஆட்சிமாற்றத்தின்போது வெளிநாட்டு கையிருப்பு 6100 மில்லியன் டொலராக இருந்தது.</p><p> அதன் பின்னர் சர்வதேச நாணய நிதியத்தின் வெளிநாட்டு கையிருப்பு அதிகரிப்புக்காக மூன்று காலாண்டுக்கான நிதி ஒத்துழைப்பு வழங்கியது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cae29a83-2648-4645-b95c-ac83f7fb5fce/26-6a8b867631d8e.webp' /></p><p>
</p><p>
இந்த ஒத்துழைப்புக்கு அமைய வெளிநாட்டு கையிருப்பு குறைந்தது 7,100 மில்லியன் டொலராக இருந்திருக்க வேண்டும். ஆனால் அதற்கு பதிலாக இன்று 6591 மில்லியன் டொலரே கையிருப்பில் உள்ளது.</p><p> சர்வதேச நாணய நிதியம் கூறியதை விட வெளிநாட்டு கையிருப்பு குறைவாக உள்ளது.

எனவே இது குறித்து அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன.</p><p>கையிருப்பைக் கொண்டு ரூபாயின் மதிப்பைப் பாதுகாக்க இந்த டொலர்களைப் பயன்படுத்துகிறார்கள்.&nbsp; கையிருப்பைப் பாதுகாக்கும் வேலைத்திட்டத்தை முன்னெடுக்குமாறு அரசாங்கத்தைக் கேட்டுக்கொள்கிறோம். இறுதியில் இந்தச் சுமை அரசாங்கத்தின் மீதே விழும் என குறிப்பிட்டுள்ளார்.&nbsp; &nbsp; &nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-23T23:47:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் போலி மருத்துவர்கள் இருவருக்கு நீதிமன்றின் அதிரடி உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/two-fake-doctors-receive-suspended-prison-1787527923"></link>
            <id>https://jvpnews.com/article/two-fake-doctors-receive-suspended-prison-1787527923</id>
            <summary type="text">நீண்டகாலமாக மருத்துவர்கள் என தங்களை அடையாளம் காட்டி நோயாளர்களுக்கு சிகிச்சையளித்து மோசடியில் ஈடுபட்டு வந்த இருவரக்கு 5 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்பட்ட 6...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">நீண்டகாலமாக மருத்துவர்கள் என தங்களை அடையாளம் காட்டி நோயாளர்களுக்கு சிகிச்சையளித்து மோசடியில் ஈடுபட்டு வந்த இருவரக்கு 5 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்பட்ட 6 மாத கால சிறைத்தண்டனை விதித்து, களுத்துறை மேலதிக நீதிவான்&nbsp; உத்தரவிட்டுள்ளார்.</p><p style="text-align: justify;">

அத்துடன், குற்றம் சாட்டப்பட்ட இருவருக்கும் தலா 50,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.</p><p style="text-align: justify;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aa07c6ac-ef29-4628-959e-b629283ed6d1/26-6a8b8516a2ec9.webp' /></p><h2 style="text-align: justify;">விசேட நடவடிக்கை</h2><p>
</p><p style="text-align: justify;">
பேருவளை மற்றும் கல்முனை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த இருவருக்கே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; ">
அளுத்கம, தர்கா நகர் பகுதியில் சிகிச்சை நிலையங்களை நடத்திச் சென்ற இவர்கள், களுத்துறை தேசிய சுகாதார விஞ்ஞான நிறுவகத்தினால் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போதே கைது செய்யப்பட்டனர்.</p><p style="text-align: justify; "></p><p>
</p><p style="text-align: justify; ">
இவர்கள் இலங்கை மருத்துவ பேரவையில் (SLMC) பதிவு செய்யப்படாமல் சட்டவிரோதமாக மருத்துவத் தொழிலில் ஈடுபட்டு வந்தமை இதன்போது தெரியவந்தது.</p><p>
</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-23T23:41:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹோர்முஸ் நீரிணையில் விதிகளை மீறும் கப்பல்கள்! ஈரான் விடுத்துள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/iran-warns-ships-violating-rules-in-hormuz-1787519818"></link>
            <id>https://ibctamil.com/article/iran-warns-ships-violating-rules-in-hormuz-1787519818</id>
            <summary type="text">ஹோர்முஸ் நீரிணையை கடப்பதற்கான விதிமுறைகளை மீறும் கப்பல்கள் எதிர்காலத்தில் பயணக் கட்டுப்பாடுகளை எதிர்கொள்ள நேரிடும் என ஈரான் எச்சரித்துள்ளது.

ஈரானின...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹோர்முஸ் நீரிணையை கடப்பதற்கான விதிமுறைகளை மீறும் கப்பல்கள் எதிர்காலத்தில் பயணக் கட்டுப்பாடுகளை எதிர்கொள்ள நேரிடும் என ஈரான் எச்சரித்துள்ளது.</p><p>

ஈரானின் பெர்சியன் வளைகுடா நீரிணை அதிகாரசபை இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.
</p><p>
இதன்படி, ஈரான் விதித்துள்ள வழிமுறை கட்டுப்பாடுகளை மீறும் கப்பல்களுக்கு அபராதம் விதிக்கப்படலாம் அல்லது அவை பறிமுதல் மற்றும் சிறைபிடிக்கப்படலாம் என எக்ஸ் தளத்தில் PGSA வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p></p><h2>விதிமீறல் பட்டியல்</h2><p> </p><p>

மேலும், இத்தகைய தடைசெய்யப்பட்ட கப்பல்களுக்கு ஒத்துழைப்பு வழங்கும் ஏனைய கப்பல்களும் விதிமீறல் பட்டியலில் சேர்க்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4cfaef34-62ce-4c8e-babf-f6f3762f5460/26-6a8b65d9ed9ec.webp' /></p><p> </p><p> 

கப்பல் நிறுவனங்கள் மற்றும் சரக்கு உரிமையாளர்கள் தங்களது பெயர்களை இந்தப் பட்டியலில் இருந்து நீக்க வேண்டுமாயின் உரிய ஆவணங்களுடன் கோரிக்கை விடுக்க வேண்டும் என்றும், சிரமங்களைத் தவிர்க்க தமது இணையதளத்தில் உள்ள பட்டியலைச் சரிபார்த்து இதுபோன்ற கப்பல்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.&nbsp; &nbsp; &nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-23T23:32:53+00:00</updated>
        </entry>
    </feed>
