<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-09-06T14:56:56+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[எல் நினோவால் இலங்கைக்கு வறட்சி அபாயம் - 7 மாவட்டங்களில் நீர் விநியோகம் பாதிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/drought-threat-to-sri-lanka-due-to-el-nino-1788706402"></link>
            <id>https://tamilwin.com/article/drought-threat-to-sri-lanka-due-to-el-nino-1788706402</id>
            <summary type="text">எல் நினோ காரணமாக நாட்டில் பல பகுதிகளில் கடும் வறட்சி நிலவி வரும் நிலையில், அம்பாறை மாவட்டத்தில் உள்ள ஒன்பது பிரதான நீர்ப்பாசனக் குளங்களின் நீர்மட்டம் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>எல் நினோ காரணமாக நாட்டில் பல பகுதிகளில் கடும் வறட்சி நிலவி வரும் நிலையில், அம்பாறை மாவட்டத்தில் உள்ள ஒன்பது பிரதான நீர்ப்பாசனக் குளங்களின் நீர்மட்டம் 21.5% ஆகக் குறைந்துள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது.</p><p>

இந்த அறிவிப்பு இன்று(06.09.2026) நிலவரப்படி வெளியிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><h2>

நீர்மட்டம் குறைவு</h2><p>

அதேபோன்று, மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள நான்கு பிரதான நீர்ப்பாசனக் குளங்களின் நீர்மட்டமும் 25.3% ஆகக் குறைந்துள்ளது.
</p><p>
இதனைத் தொடர்ந்து நிலவும் கடும் வறட்சியானது, பல மாவட்டங்களில் மக்களின் வாழ்க்கையைத் தொடர்ந்து கடுமையாகப் பாதித்து வருகின்றது. 

இந்த நிலையில், பொலன்னறுவை மற்றும் மொனராகலையின் பல பகுதிகளில் மழை பெய்வதால், வறட்சியிலிருந்து ஓரளவு நிவாரணம் கிடைத்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d2922fb2-55c0-4233-bbec-99c3a2480d8e/26-6a9d7ed0b7076.webp' /></p><p> </p><p>

இருப்பினும், அந்த பகுதிகளில் பிற்பகலில் சிறிதளவு மழை பெய்தபோதிலும், வரும் வாரத்திலும் கடும் வெப்பம் தொடரும் என வானிலை ஆய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><h2>

7 மாவட்டங்கள் கடுமையாக பாதிப்பு</h2><p>

இதற்கிடையில், தொடர்ந்து நிலவும் கடும் வறட்சியானது தீவின் 7 மாவட்டங்களைக் கடுமையாகப் பாதித்துள்ளது.
</p><p>
எல் நினோ சூழலானது, அந்த மாவட்டங்களின் நீர் ஆதாரங்களுக்கும், முக்கியமாக விவசாயத் தொழில்களுக்கும் ஒரு துயரமான நிலையை ஏற்படுத்தி வருகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e371ab14-af68-4a33-b3fa-a3206b8f3fce/26-6a9d7ed18a535.webp' /></p><p> </p><p>

மொனராகலை மாவட்டத்தில் வறண்ட வானிலையால் பாதிக்கப்பட்ட பல சிறிய குளங்கள் ஏற்கனவே முற்றிலுமாக வற்றிவிட்டன.</p><p>

மேலும், குடிநீர் பிரச்சினைக்குத் தீர்வாக, சியம்பலாண்டுவ பிரதேச சபையும் நீர் வழங்கல் வாரியமும், சியம்பலாண்டுவ பிரதேச செயலகப் பிரிவின் கீழ் வரும் 48 கிராம அலுவலர் பிரிவுகளில் உள்ள குழாய்களைச் சீரமைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><p></p><p>&nbsp;</p><p><br></p>]]></content>
            <updated>2026-09-06T14:55:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[40 வயதுக்கு மேல் வாழ்க்கையே மாறும்... அதிர்ஷ்ட ராசிகள் இவைதான்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/zodiac-signs-who-become-wealthy-after-40-1788704043"></link>
            <id>https://manithan.com/article/zodiac-signs-who-become-wealthy-after-40-1788704043</id>
            <summary type="text">பொதுவாக, மனிதர்களாகப் பிறந்த அனைவருக்குமே வாழ்க்கையில் அனைத்து விதமான மகிழ்ச்சிகளையும் அனுபவிக்க வேண்டும், வசதியான மற்றும் சொகுசான வாழ்க்கையை வாழ வேண்...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொதுவாக, மனிதர்களாகப் பிறந்த அனைவருக்குமே வாழ்க்கையில் அனைத்து விதமான மகிழ்ச்சிகளையும் அனுபவிக்க வேண்டும், வசதியான மற்றும் சொகுசான வாழ்க்கையை வாழ வேண்டும் என்ற ஆசை இருப்பது இயல்பானதே. </p><p>ஆனால், ஆசைப்படும் அனைவராலும் செல்வச் செழிப்புடனும், ஆடம்பரமான வசதிகளுடனும் வாழ்க்கையை அனுபவிக்க முடிவதில்லை.

ஒருவரின் வாழ்க்கையில் செல்வம், வசதி, அந்தஸ்து மற்றும் பொருளாதார முன்னேற்றம் ஆகியவை எந்த காலகட்டத்தில் ஏற்படும் என்பதைப் பற்றி ஜோதிட சாஸ்திரத்தில் பல்வேறு கருத்துகள் கூறப்படுகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1841e490-c447-4036-a4fa-869242e32bdf/26-6a9d7c92e1e7e.webp' /></p><p> </p><p>அந்த வகையில், குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்கள் தங்களின் 40 வயதைக் கடந்த பின்னர் எதிர்பாராத வகையில் வாழ்க்கையில் மிகப்பெரிய பொருளாதார முன்னேற்றத்தை அடையும் யோகம் கொண்டவர்களாக இருப்பார்கள் என ஜோதிடத்தில் கூறப்படுகிறது.</p><p>

குறிப்பாக, இவர்கள் வாழ்க்கையின் ஆரம்ப காலங்களில் பல்வேறு சவால்களையும், பொருளாதார ஏற்றத் தாழ்வுகளையும் சந்தித்தாலும், 40 வயதுக்குப் பின்னர் செல்வம், வசதி, சொத்து, சமூக அந்தஸ்து என படிப்படியாக உயர்ந்து, ராஜ வாழ்க்கையை அனுபவிக்கும் வாய்ப்பு இருப்பதாக நம்பப்படுகிறது.</p><p>
</p><p>
அப்படியானால், 40 வயதுக்கு பின்னர் வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்பத்தை சந்தித்து, செல்வச் செழிப்புடனும், வசதிகளுடனும் ராஜ வாழ்க்கை வாழும் அதிர்ஷ்டத்துடன் பிறந்த ராசியினர் யார் யார் என இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.&nbsp;</p><p></p><h2>ரிஷபம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c3662b66-1e7b-40fd-950d-3f5acbf91651/26-6a9d7c9395dcb.webp' /></p><h2>
</h2><p>ரிஷப ராசியின் அதிபதி சுக்கிரன். செல்வம் மற்றும் சுகபோகங்களுக்கு காரணியாகக் கருதப்படும் சுக்கிரனை அதிபதியாகக் கொண்டிருந்தாலும், ரிஷப ராசிக்காரர்கள் வாழ்க்கையின் ஆரம்ப கட்டத்தில் பல்வேறு சிரமங்களையும் போராட்டங்களையும் சந்திக்க வேண்டியிருக்கும்.</p><p> குறிப்பாக, இளம் வயதில் தங்களின் கடின உழைப்புக்கேற்ற பலன் கிடைக்காமல் போகும். இதனால் பல நேரங்களில் விரக்தியும் மனச்சோர்வும் அடைவார்கள்.

ஆனால் 40 வயதுக்கு பிறகு இவர்களின் வாழ்க்கையில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். </p><p>சுக்கிர திசையுடன் குருவின் பார்வையும் இணைந்து தன யோகத்தை வழங்கும். இதனால் அதிர்ஷ்டத்தின் முழுமையான ஆதரவு கிடைக்கும். குறைந்த முயற்சியிலேயே எதிர்பாராத அளவிற்கு செல்வத்தைச் சேர்ப்பதுடன், சமூகத்தில் மதிப்பு, மரியாதை மற்றும் கௌரவத்தையும் பெற்று சிறப்பான வாழ்க்கையை வாழ்வார்கள்.
</p><h2>
கன்னி</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8cd5e263-cfbc-46a6-b9cf-11d3687fa1a9/26-6a9d7c944e22a.webp' /></p><h2>
</h2><p>கன்னி ராசியின் அதிபதி புதன். கன்னி ராசிக்காரர்கள் வாழ்க்கையின் ஆரம்ப கட்டத்தில் தங்களுக்கான பாதையைத் தேர்வு செய்வதில் சிரமப்படுவதுடன், பல விஷயங்களுக்கு மற்றவர்களின் உதவியை நாடி நேரத்தை வீணடிப்பார்கள்.</p><p> எவ்வளவு கடினமாக உழைத்தாலும், எதிர்பார்த்த வெற்றியும் முன்னேற்றமும் கிடைக்காமல் போராடும் சூழ்நிலை ஏற்படலாம்.

ஆனால் 40 வயதிற்கு பிறகு இவர்களின் உண்மையான திறமைகள் வெளிப்படத் தொடங்கும்.</p><p> இதுவரை மறைந்து கிடந்த புத்திசாலித்தனமும் திறமையும் இந்த வயதில் முழுமையாக வெளிப்படும். தங்களின் அறிவையும் திறனையும் சரியான முறையில் பயன்படுத்தி, தொழிலில் உயர்ந்த நிலையை அடைவார்கள். </p><p>மேலும், எதிர்பாராத அளவிற்கு செல்வத்தைச் சேர்த்து, வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்தையும் வசதிகளையும் பெறுவார்கள்.
</p><h2>
மகரம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e24372f8-4292-42c9-8c54-17eb40ef765f/26-6a9d7c94f3d11.webp' /></p><p></p><h2>
</h2><p>மகர ராசியின் அதிபதி சனி பகவான். மகர ராசிக்காரர்கள் பொதுவாக ஒழுக்கம், பொறுப்பு மற்றும் கடின உழைப்புக்கு பெயர் பெற்றவர்கள். </p><p>இருப்பினும், வாழ்க்கையின் ஆரம்ப கட்டத்தில் பல்வேறு தடைகளையும் தோல்விகளையும் சந்திக்க நேரிடும். எதைத் தொடங்கினாலும் எதிர்பார்த்த வெற்றி கிடைக்காமல், முன்னேற்றத்திற்காக நீண்ட காலம் போராட வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.</p><p>

இருந்தாலும், எவ்வளவு சிரமங்கள் வந்தாலும் தங்களின் பொறுப்புகளில் இருந்து ஒருபோதும் விலகமாட்டார்கள். இவர்கள் செய்த கடின உழைப்பிற்கான பலன் 40 வயதிற்கு பிறகு கிடைக்கத் தொடங்கும். </p><p>சனியின் முழுமையான ஆதரவு கிடைப்பதால், இந்த வயதிற்கு பிறகு மேற்கொள்ளும் காரியங்களில் வெற்றி பெறும் வாய்ப்பு அதிகரிக்கும்.</p><p><b>இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).&nbsp; &nbsp;&nbsp;</b></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b></td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-06T14:46:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[அனுராதபுர கூட்டத்தில் லிமினி ராஜபக்ச! நாமலின் ஊடகம் வெளிபடுத்திய தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/namal-s-wife-enters-politics-1788705415"></link>
            <id>https://ibctamil.com/article/namal-s-wife-enters-politics-1788705415</id>
            <summary type="text">&amp;nbsp;சிறிலங்கா பொதுஜன பெரமுனவின்&amp;nbsp; நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தற்போது விளக்கமறியிலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் அவரது மனைவி குறித்து சமூக...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;சிறிலங்கா பொதுஜன பெரமுனவின்&nbsp; நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தற்போது விளக்கமறியிலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் அவரது மனைவி குறித்து சமூக ஊடகங்களில் போலியான செய்தி ஒன்று பரவிவரவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>தற்போது நாமலின் அரசியலில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்பும் வகையில் அவரது மனைவி தயாராகி வருதாக சில கருத்துக்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது.</p><p>அந்த வகையில் முகநூல் கணக்கொன்றில், நாமல் ராஜபக்ச உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.</p><p></p><h2>போலிச்செய்திகள்</h2><p>
அதேவேளை, மற்றுமொரு முகநூல் பக்கத்தில்&nbsp; &nbsp;பரப்பப்பட்ட மற்றொரு பதிவில், நாமல் ராஜபக்சவின் அரசியல் நடவடிக்கைகளில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்பும் வகையில், அவரது மனைவி லிமினி ராஜபக்ச செப்டம்பர் 12ஆம் திகதி அனுராதபுரத்தில் நடைபெறவுள்ளதாகக் கூறப்படும் பொதுஜன பெரமுன அரசியல் மேடையில் கலந்துகொள்ள உள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4c927fd1-5026-471d-bf91-c7b7830842e0/26-6a9d7a8a02c56.webp' /></p><p>

மேலும், மற்றொரு செய்தி இணையத்தளம் வெளியிட்டதாகக் கூறப்படும் பதிவொன்றில், லிமினி ராஜபக்சவின் ஜாதகம் முன்னாள் தலைவர்களான சிறிமாவோ பண்டாரநாயக்க மற்றும் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆகியோரின் ஜாதகங்களைப் போன்று மிகவும் சக்திவாய்ந்தது எனவும், அவரது அரசியல் பிரவேசம் ஒரு முக்கிய அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.</p><p>இந்நிலையில் இந்த கருத்துக்களை போலிச்செய்திகள் என நாமல் ராஜபக்சவின் ஊடகம் நிராகரித்துள்ளது</p><p>மேலும்,இவ்வாறு போலியாக உருவாக்கப்பட்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வரும் செய்திப் பதிவுகளை போலி செய்தி என அடையாளம் இட்டு அவரது ஊடகம் பகிர்ந்துள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-06T14:37:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தோனேசியாவில் அனக் கிரக்கடோவா எரிமலை வெடிப்பு: விமான சேவைகள் பாதிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/anak-krakatoa-erupts-in-indonesia-1788701366"></link>
            <id>https://canadamirror.com/article/anak-krakatoa-erupts-in-indonesia-1788701366</id>
            <summary type="text">இந்தோனேசியாவில் ஏற்பட்டுள்ள எரிமலை வெடிப்பு காரணமாக நூற்றுக்கணக்கான வானூர்தி சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன.

வானூர்தி நிலையத்தைச் சுற்றியுள்ள பகுத...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தோனேசியாவில் ஏற்பட்டுள்ள எரிமலை வெடிப்பு காரணமாக நூற்றுக்கணக்கான வானூர்தி சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன.
</p><p>
வானூர்தி நிலையத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் எரிமலைச் சாம்பல் பரவியதைத் தொடர்ந்து, 209 வானூர்தி சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p>

இதனால், 22 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, இன்று காலை மேலும் இரண்டு எரிமலை வெடிப்புகள் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
</p><p>
அத்துடன், ஜகார்த்தா உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக்கணக்கான வானொலி நிலையங்களின் சேவைகள் தற்காலிகமாக பாதிக்கப்பட்டுள்ளன.
</p><p>
மேலும் பல பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதுடன், மக்களின் அன்றாட நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
எரிமலை அமைந்துள்ள ஜாவா பகுதியில் சுமார் 20 ஆயிரம் அடி உயரம் வரையிலும், சுமத்ரா பகுதியில் சுமார் 50 ஆயிரம் அடி உயரம் வரையிலும் எரிமலைச் சாம்பல் பரவியுள்ளதாக இந்தோனேசிய வானிலை ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
</p><p>
ஜாவா மற்றும் சுமத்ரா தீவுகளுக்கு இடையில் அமைந்துள்ள இந்தப் பகுதி புவியியல் ரீதியாக மிகவும் ஆபத்தான பகுதியாக கருதப்படுகிறது.
</p><p>
இதனால் அங்கு அடிக்கடி நில அதிர்வுகளும் எரிமலை வெடிப்புகளும் ஏற்பட்டு வருகின்றன.

இதேவேளை, பொதுமக்களை பாதுகாப்பாக இருக்குமாறும், அதிகாரிகளின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றி விழிப்புடன் செயற்படுமாறும் இந்தோனேசிய அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
</p><p>
எரிமலைச் சாம்பல் பார்வைத் திறனை குறைக்கக்கூடும் என்பதால், சாம்பல் மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் முகக்கவசம் மற்றும் கண் பாதுகாப்பு உபகரணங்களை பயன்படுத்துமாறும், தேவையற்ற வெளிப்புறப் பயணங்களை தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-09-06T14:30:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்திய பாதுகாப்பு அமைச்சர் இலங்கைக்கு விஜயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/indian-defence-minister-to-visit-sri-lanka-1788701981"></link>
            <id>https://jvpnews.com/article/indian-defence-minister-to-visit-sri-lanka-1788701981</id>
            <summary type="text">உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், நாளை மறுதினம் (08) இலங்கை வரவுள்ளார். 

இந்திய பாதுகாப்பு அமைச்சு இந்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், நாளை மறுதினம் (08) இலங்கை வரவுள்ளார்.</p><p> 

இந்திய பாதுகாப்பு அமைச்சு இந்த விஜயத்தை உறுதிப்படுத்தி இன்று (6) அறிக்கை வௌியிட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bafbae77-b09a-4df8-9a7d-d5deeeccc6b4/26-6a9d6d1f03091.webp' /></p><h2>இருதரப்பு உறவு</h2><p> 

எதிர்வரும் 10 ஆம் திகதி வரையில் அவர் இலங்கையில் தங்கியிருந்து இலங்கைத் தலைவர்களுடன் பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்துக் கலந்துரையாடல்களை நடத்துவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>

அத்துடன் கொழும்பிலுள்ள இந்திய சமூகத்தினரையும் அவர் சந்திக்கவுள்ளார். 

பாதுகாப்பு அமைச்சு மற்றும் வெளியுறவு அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகளைக் கொண்ட உயர்மட்டக் குழுவொன்றிற்கு அவர் தலைமை தாங்கவுள்ளார். </p><p>

இந்தியாவும், இலங்கையும் ஆழமான நாகரிகத் தொடர்புகளையும், பிராந்திய பாதுகாப்பு, பாதுகாப்புத்துறை, பொருளாதாரம், வர்த்தகம் மற்றும் இருநாட்டு மக்களிடையேயான பலதரப்பட்ட கூட்டாண்மையையும் பகிர்ந்து கொள்கின்றன. </p><p>

இலங்கையின் பொருளாதார நெருக்கடியின் போதும், 2025 இல் ஏற்பட்ட 'டித்வா'புயலுக்குப் பிறகும் முதலாவதாகப் நிவாரண உதவிகளை வழங்கியதன் மூலம் இருதரப்பு உறவு மேலும் வலுவடைந்தது. </p><p>

இது இந்தியாவின் 'அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை' கொள்கையையும், பிரதமர் நரேந்திர மோடியின் 'மகாசாகர்' தொலைநோக்குப் பார்வையையும் உறுதிப்படுத்துகிறது. </p><p>

பாதுகாப்பு அமைச்சரின் இந்த விஜயம், இரு நாடுகளுக்கும் இடையிலான பாரம்பரிய நட்புறவையும், குறிப்பாக கடல்சார் மற்றும் பாதுகாப்புத் துறைச் சார்ந்த கூட்டாண்மையையும் மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுவதாக இந்திய பாதுகாப்பு அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-06T14:30:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[முத்தரப்பு இறுதிப் போட்டியில் ஜிம்பாப்வேயை அலறவிட்ட ஹெர்மன், பிரேவிஸ்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/south-africa-scored-205-vs-zim-tri-series-final-1788704615"></link>
            <id>https://news.lankasri.com/article/south-africa-scored-205-vs-zim-tri-series-final-1788704615</id>
            <summary type="text">ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முத்தரப்பு இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்கா 205 ஓட்டங்கள் குவித்தது.

நமீபியா கிரிக்கெட் மைதானத்தில் நடந்து வரும் முத்தர...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முத்தரப்பு இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்கா 205 ஓட்டங்கள் குவித்தது.</p><p>

நமீபியா கிரிக்கெட் மைதானத்தில் நடந்து வரும் முத்தரப்பு டி20 தொடரின் இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 205 ஓட்டங்கள் குவித்தது.&nbsp;</p><h2>ஜோர்டன் ஹெர்மன்&nbsp;அரைசதம் </h2><p>
தென் ஆப்பிரிக்கா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான இறுதிப்போட்டி, நமீபியா கிரிக்கெட் மைதானத்தில் நடந்து வருகிறது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/731d1617-fbd6-42a3-8f49-73427faed3e9/26-6a9d78fae18e7.webp' />&nbsp;</p><p></p><p>
முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்க அணியில் கோன்னோர் எஸ்டர்ஹுய்சென் (Connor Esterhuizen) 23 பந்துகளில் 32 ஓட்டங்கள் விளாசினார்.
</p><p>
பின்னர் களமிறங்கிய டெவல்ட் பிரேவிஸ் (Dewald Brevis) தொடக்க வீரர் ஜோர்டன் ஹெர்மனுடன் (Jordan Hermann) கைகோர்த்து ஜிம்பாப்வே பந்துவீச்சை நொறுக்கினார்.&nbsp;</p><h2>பிரேவிஸ்,&nbsp;ஜென்சன் </h2><p>
அரைசதம் விளாசிய ஜோர்டன் ஹெர்மன் 29 பந்துகளில் 53 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பிரேவிஸ் 32 (23) ஓட்டங்களில் இருந்தபோது பிராட் எவன்ஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். </p><p>

அதனைத் தொடர்ந்து ஸோர்சி 17 ஓட்டங்களிலும், ரூபின் ஹெர்மன் 16 பந்துகளில் 27 ஓட்டங்களும் விளாசினர்.
</p><p>
டுயன் ஜென்சன் ஆட்டமிழக்காமல் 14 பந்துகளில் 23 ஓட்டங்கள் விளாச, தென் ஆப்பிரிக்க அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 205 ஓட்டங்கள் குவித்தது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1d41bece-11da-4bb3-9d27-7180a6d8dc47/26-6a9d78fbbd6b5.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-06T14:29:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கைக்கு மீண்டும் ரஷ்ய - பிரிட்டிஷ் நேரடி விமான சேவைகள் ஆரம்பம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/azur-air-resumes-flights-to-sri-lanka-in-nov-1788694794"></link>
            <id>https://ibctamil.com/article/azur-air-resumes-flights-to-sri-lanka-in-nov-1788694794</id>
            <summary type="text">ரஷ்யாவின் அசூர் எயர் (Azur Air) விமான நிறுவனம் ரஷ்யாவிற்கும் இலங்கைகக்கும் இடையிலான நேரடி விமான சேவைகளை மீண்டும் தொடங்குவதற்குத் தீர்மானித்துள்ளது.
இ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ரஷ்யாவின் அசூர் எயர் (Azur Air) விமான நிறுவனம் ரஷ்யாவிற்கும் இலங்கைகக்கும் இடையிலான நேரடி விமான சேவைகளை மீண்டும் தொடங்குவதற்குத் தீர்மானித்துள்ளது.
</p><p>இதனடிப்படையில் எதிர்வரும் நவம்பர் மாதம் முதல் இந்தச் சேவைகளை மீண்டும் ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளதாக அந்த விமான நிறுவனம் அறிவித்துள்ளது.</p><p>ரஷ்யாவிலுள்ள 5 சர்வதேச விமான நிலையங்களில் இருந்து இலங்கைக்கு நேரடி விமான சேவைகளை இயக்‌க அசூர் எயர் நிறுவனம் எதிர்பார்க்கிறது.</p><p>
</p><p></p><h2>நேரடி விமான சேவை</h2><p>அசூர் எயர் தவிர, ரஷ்யாவின் பிரபல ஏரோஃப்ளோட்&nbsp; (Aeroflot) மற்றும் எஸ்7 எயர்லைன்ஸ் (S7 Airlines) ஆகிய நிறுவனங்களும் ரஷ்யா - இலங்கை இடையே நேரடி விமான சேவைகளைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளன.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5ff2ea13-746e-47f0-b5ad-c8fb6db513e2/26-6a9d550e58ca7.webp' /></p><p>இதனிடையே, பிரித்தானியாவின் பிரிட்டிஷ் எயர்வேஸ் (British Airways) நிறுவனம் 11 ஆண்டுகால இடைவெளிக்குப் பிறகு பிரிட்டனுக்கும் இலங்கைகக்கும் இடையிலான நேரடி விமான சேவைகளை அடுத்த மாதம் (அக்டோபர்) முதல் மீண்டும் தொடங்கவுள்ளது.
</p><p>பிரித்தானியாவின் லண்டன் கெட்விக் (London Gatwick) விமான நிலையத்திற்கும் கொழும்பிற்கும் இடையிலான நேரடி விமான சேவைகள் அக்டோபர் 23 ஆம் திகதி முதல் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p>]]></content>
            <updated>2026-09-06T14:27:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடற்றொழிலாளர்களிடம் கொழும்பு பேராயர் விடுத்துள்ள முக்கிய கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/cardinal-appeals-to-fishing-community-1788704557"></link>
            <id>https://tamilwin.com/article/cardinal-appeals-to-fishing-community-1788704557</id>
            <summary type="text">கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை இலங்கை கடற்றொழிலாளர்களுக்கு உருக்கமான கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார்.பேருவலை, பண்டாரவத்தையில் அமைந்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை இலங்கை கடற்றொழிலாளர்களுக்கு உருக்கமான கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார்.</p><p>பேருவலை, பண்டாரவத்தையில் அமைந்துள்ள புனித லாசரஸ் தேவாலயத்தில் இன்று(06.09.2026)&nbsp; நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.</p><p>இலங்கையில் அதிகரித்து வரும் போதைப்பொருள் அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளுக்கு முழுமையான ஆதரவை வழங்குமாறு தெரிவித்துள்ளார்.</p><h2>கடற்றொழிலாளர்களிடம் விடுக்கப்பட்ட கோரிக்கை</h2><p>போதைப்பொருள் கடத்தலுக்குத் தங்களது மீன்பிடிப் படகுகளைப் பயன்படுத்த அனுமதிக்க வேண்டாம் என கோரிக்கை விடுத்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e52c68b4-4952-4883-aa87-166ef15130fe/26-6a9d772e80a92.webp' /></p><p>
</p><p>நாட்டிற்குள் நுழையும் கணிசமான அளவிலான போதைப்பொருட்கள் கடல் வழியாக, மீன்பிடிப் படகுகளைப் பயன்படுத்தியே கொண்டு வரப்படுவது மிகவும் துரதிர்ஷ்டவசமானது என கர்தினால் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p>
போதைப்பொருள் பழக்கம் நாட்டின் இளைஞர்களின் வாழ்க்கையை முற்றிலும் சீரழிப்பதுடன், அவர்களின் குடும்பங்களுக்கும் மீள முடியாத கடுமையான பாதிப்புகளையும் துயரங்களையும் ஏற்படுத்தி வருவதாக அவர் கவலையுடன் எச்சரித்துள்ளார்.
</p><p>தங்களது படகுகள் மூலம் நாட்டிற்குள் போதைப்பொருட்களைக் கொண்டு வருவதற்கு மீனவ சமூகம் எவ்விதத்திலும் துணைபோகவோ வசதி செய்து கொடுக்கவோ வேண்டாம் என தாம் தாழ்மையுடன் கேட்டுக்கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.
</p><p><br></p>]]></content>
            <updated>2026-09-06T14:22:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[மீசை இல்லாத விஜய் சேதுபதி.. பிக் பாஸ் வந்த நடிகர் மோகன்லால் செய்த காமென்ட்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/mohanlal-comments-on-vijay-sethupathi-moustache-1788703841"></link>
            <id>https://cineulagam.com/article/mohanlal-comments-on-vijay-sethupathi-moustache-1788703841</id>
            <summary type="text">பிக் பாஸ் 10ம் சீசன் இன்று பிரம்மாண்டமாக தொடங்கி இருக்கிறது. விஜய் சேதுபதி இந்த வருடமும் தொகுத்து வழங்குகிறார்.ஒரே நாளில் தமிழ், தெலுங்கு, மலையாளம், க...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிக் பாஸ் 10ம் சீசன் இன்று பிரம்மாண்டமாக தொடங்கி இருக்கிறது. விஜய் சேதுபதி இந்த வருடமும் தொகுத்து வழங்குகிறார்.</p><p>ஒரே நாளில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் பிக் பாஸ் ஷோ தொடங்கி இருக்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e8fcc387-9302-4b32-9cc3-c727c532e47a/26-6a9d7462eb78a.webp' /></p><p>
</p><h2>மோகன்லால் செய்த கமெண்ட்
</h2><p>பிக் பாஸ் தொடங்கியதும் நான்கு மொழி தொகுப்பாளர்களும் ஒன்றாக வீடியோ கான்பரென்சில் பேசினார்கள். </p><p>

அப்போது விஜய் சேதுபதி மீசை இல்லாமல் இருப்பது பற்றி மோகன்லால் கமெண்ட் செய்தார்.

"மீசை இல்லாமல் லுக்கில் சூப்பரா இருக்கீங்க" என மோகன்லால் கூற, சார் நாம ரெண்டுபேரும் பக்கத்து பக்கத்து பில்டிங்கில் தான் இருக்கிறேன் என விஜய் சேதுபதி கூறினார்.
</p><p>
தமிழ் பிக் பாஸ் மட்டுமின்றி மலையாள பிக் பாஸ் ஷூட்டிங்கும் சென்னையில் தான் நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-06T14:20:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>H. A. Roshan</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கைக்கு வருகை தரவுள்ள இந்திய பாதுகாப்பு அமைச்சர்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/indian-defence-minister-to-visit-sri-lanka-1788701540"></link>
            <id>https://ibctamil.com/article/indian-defence-minister-to-visit-sri-lanka-1788701540</id>
            <summary type="text">இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தரவுள்ளார். இதனடிப்படையில் செப்டம்பர் 08 முதல் 10 ஆம்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தரவுள்ளார். </p><p>இதனடிப்படையில் செப்டம்பர் 08 முதல் 10 ஆம் திகதி
வரை மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை அவர் மேற்கொள்ளவுள்ளார்.</p><p>இந்த விஜயத்தின் போது, இலங்கையின் தலைவர்களுடன் பல்வேறு முக்கிய விடயங்கள்
தொடர்பில் இந்திய பாதுகாப்பு அமைச்சர் கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளார்.</p><p>
</p><p></p><h2>இந்திய வம்சாவளியினர்</h2><p>அத்துடன், கொழும்பில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர் மற்றும் இந்திய
புலம்பெயர் சமூகத்தினரையும் அவர் சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.</p><p>

</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a76ceb90-1004-4a6b-8505-2f753b6fda32/26-6a9d7643b2f58.webp' /></p><p>விஜயத்தில் பாதுகாப்பு அமைச்சு மற்றும் வெளிவிவகார அமைச்சின் சிரேஷ்ட
அதிகாரிகளை உள்ளடக்கிய உயர்மட்டக் குழுவொன்றுக்கும் ராஜ்நாத் சிங் தலைமை
தாங்கவுள்ளார்.
</p><p>
இந்தியாவும் இலங்கையும் ஆழமான நாகரிக மற்றும் வரலாற்றுத் தொடர்புகளைக்
கொண்டுள்ளதுடன் பிராந்திய பாதுகாப்பு, பாதுகாப்புத்துறை, பொருளாதாரம்,
வர்த்தகம் மற்றும் மக்கள் உறவுகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பல்துறை
ஒத்துழைப்பைக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-06T14:18:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரஷ்ய - இலங்கை நேரடி விமான சேவை விரைவில் ஆரம்பம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/direct-russia-sri-lanka-flights-to-begin-soon-1788703164"></link>
            <id>https://jvpnews.com/article/direct-russia-sri-lanka-flights-to-begin-soon-1788703164</id>
            <summary type="text">ரஷ்யாவின் அஸூர் எயார் விமான நிறுவனம், ரஷ்யாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான நேரடி விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிக்கத் தீர்மானித்துள்ளது. 

எதிர்வரும் ந...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">ரஷ்யாவின் அஸூர் எயார் விமான நிறுவனம், ரஷ்யாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான நேரடி விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிக்கத் தீர்மானித்துள்ளது. </p><p style="text-align: justify; ">

எதிர்வரும் நவம்பர் மாதம் முதல் இந்த விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளதாக அஸூர் எயார் நிறுவனம் அறிவித்துள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/207f5705-3051-41e2-b200-02034f0c906f/26-6a9d71bd59da6.webp' /></p><h2 style="text-align: justify; ">விமானச் சேவை</h2><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

இதற்கமைய, ரஷ்யாவின் 5 விமான நிலையங்களிலிருந்து இலங்கைக்கான விமானச் சேவைகளை முன்னெடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. </p><p style="text-align: justify; ">

அஸூர் எயார் விமான நிறுவனத்திற்கு மேலதிகமாக, எரோஃப்ளோட் (Aeroflot) மற்றும் எஸ் செவன் (S7) ஆகிய விமான நிறுவனங்களும் ரஷ்யாவிற்கும் இலங்கைக்கும் இடையில் நேரடி விமான சேவைகளை ஆரம்பிக்கவுள்ளன.</p><p style="text-align: justify; "> 

இதனிடையே, 11 வருடங்களின் பின்னர் பிரித்தானியாவின் பிரிட்டிஷ் எயார்வேஸ் (British Airways) விமான நிறுவனம் இலங்கைக்கும் பிரித்தானியாவிற்கும் இடையிலான நேரடி விமான சேவைகளை அடுத்த மாதம் முதல் ஆரம்பிக்கவுள்ளது.</p><p style="text-align: justify; "> 

மேலும், ஒக்டோபர் 23ஆம் திகதி முதல் பிரித்தானியாவின் கெட்விக் (Gatwick) விமான நிலையத்திற்கும் கொழும்புக்கும் இடையில் நேரடி விமான சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-06T14:15:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[சீரியலிலும் முதலிரவு காட்சி!! ரச்சிதாவால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/rachitha-trolled-first-night-scene-telugu-serial-1788698020"></link>
            <id>https://viduppu.com/article/rachitha-trolled-first-night-scene-telugu-serial-1788698020</id>
            <summary type="text">சின்னத்திரை சீரியலில் நடித்து தற்போது வெள்ளித்திரையில் நாயகியாக நடித்து பிரபலமானவர் தான் நடிகை ரச்சிதா மகாலட்சுமி. சீரியல், பிக்பாஸ், வெள்ளித்திரை என ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சின்னத்திரை சீரியலில் நடித்து தற்போது வெள்ளித்திரையில் நாயகியாக நடித்து பிரபலமானவர் தான் நடிகை ரச்சிதா மகாலட்சுமி. </p><p>சீரியல், பிக்பாஸ், வெள்ளித்திரை என தன் பயணத்தை மேற்கொண்டு வரும் ரச்சித்தா, சமீபத்தில் ஃபயர் படத்தில் எல்லைமீறிய காட்சிகளில் நடித்து விமர்சனத்திற்குள்ளானார். அதன்பின் அப்படி நடிக்கமாட்டேன் என்று கூறியிருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e5228afb-1e9e-4add-9881-8d32ab650b67/26-6a9d5da6d5db6.webp' /></p><h2>முதலிரவு காட்சி</h2><p> இந்நிலையில், மீண்டும் தெலுங்கு சீரியலில் எண்ட்ரி கொடுத்துள்ளார் ரச்சிதா. கடந்த ஆகஸ்ட் 31 ஆம் தேதி முதல் ஒளிப்பரப்பாகி வரும் Seetharamayya Gari Manavaralu என்ற சீரியலில் முக்கிய ரோலில் நடித்து வருகிறார் ரச்சிதா. </p><p>அம்மா ரோலில் நடித்துள்ள அவர், முதலிரவு காட்சியிலும் நடித்துள்ளார். அவர் நடித்த வீடியோ இணையத்தில் டிரெண்டாக, சீரியலிலும் இப்படி நடிச்சிட்டீங்களே என்று கடுமையான ட்ரோலுக்கு ஆளாகியுள்ளார்.</p>]]></content>
            <updated>2026-09-06T14:15:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவிற்கு வலிமிகுந்த பதிலடி கொடுக்கப்படும்: ஈரான் கடும் எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/iran-warns-of-painful-response-to-us-attacks-1788689363"></link>
            <id>https://ibctamil.com/article/iran-warns-of-painful-response-to-us-attacks-1788689363</id>
            <summary type="text">ஈரான் மீது நடத்தப்படும் தாக்குதல்களுக்கு விரைவான கடுமையான மற்றும் மிகவும் வலிமிகுந்த பதிலடி&amp;nbsp; கொடுக்கப்படும் என ஈரான் எச்சரித்துள்ளது.ஈரானின் நாடா...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரான் மீது நடத்தப்படும் தாக்குதல்களுக்கு விரைவான கடுமையான மற்றும் மிகவும் வலிமிகுந்த பதிலடி&nbsp; கொடுக்கப்படும் என ஈரான் எச்சரித்துள்ளது.</p><p>ஈரானின் நாடாளுமன்ற சபாநாயகர் மொஹமட் பாகர் கலீபாஃப் (Ghalibaf) இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.</p><p>தாக்குதல்களுக்கு ஈரானின் பதிலடி இனி விகிதாசாரமாக (Proportionate) இருக்காது என்பதை அவர் வலியுருத்தியுள்ளார்.</p><p></p><h2>சமமான பதிலடி</h2><p>அத்தோடு சமமான பதிலடிகளைக் கொடுக்கும் சகாப்தம் முடிவுக்கு வந்துவிட்டது என்பதை அமெரிக்கர்கள் நிச்சயமாகப் புரிந்துகொண்டிருப்பார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
</p><p>மேலும் தெரிவித்த அவர், “ஆக்கிரமிப்பாளர்களின் தளங்களுக்கு எதிராக நாங்கள் சமீபத்தில் நடத்திய நடவடிக்கைகள் ஒரு தொடக்கமே.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bbee5041-8b25-4e96-a027-d60974518f2a/26-6a9d4ce742ca7.webp' /></p><p>அவர்கள் இன்னும் அதைப் புரிந்துகொள்ளவில்லை என்றால் ஆட்டத்தின் விதிகள் மாறிவிட்டன என்பதை காலம் கடப்பதற்குள் புரிந்துகொள்ள வேண்டும்.</p><p>இராணுவ ரீதியாகவும் ராஜதந்திர ரீதியாகவும் அமெரிக்காவை ஈரான் எதிர்கொண்டது போல அமெரிக்காவின் பொருளாதாரப் பிரச்சாரத்தையும் ஈரான் முறியடித்து வெற்றிபெறும்” என அவர் தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p>]]></content>
            <updated>2026-09-06T14:12:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[தரையில் விழுந்து வெடித்த இராணுவ விமானம்: கிரீஸ் வான்வழி விமான கண்காட்சியில் விபத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/f-4-phantom-crash-at-athens-airshow-2-pilots-kille-1788703892"></link>
            <id>https://news.lankasri.com/article/f-4-phantom-crash-at-athens-airshow-2-pilots-kille-1788703892</id>
            <summary type="text">F-4 Phantom Crash at Athens Airshow 2 Pilots Killed: கிரீஸ் நாட்டில் நடைபெற்ற வான்வழி கண்காட்சியில் விமானம் விபத்துக்குள்ளானதில் 2 பேர் உயிரிழந்துள்ளன...</summary>
            <content type="html"><![CDATA[<p>F-4 Phantom Crash at Athens Airshow 2 Pilots Killed: கிரீஸ் நாட்டில் நடைபெற்ற வான்வழி கண்காட்சியில் விமானம் விபத்துக்குள்ளானதில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.</p><h2> வான்வழி விமான கண்காட்சியில் விபத்து</h2><p>&nbsp;கிரீஸ் நாட்டின் தலைநகரான ஏதன்ஸ் அருகே “ஏதன்ஸ் பிளையிங் வீக்”(Athens Flying Week) என்ற வருடாந்திர வான்வழி கண்காட்சி சனிக்கிழமை நடைபெற்றது.</p><p> இந்த வான்வழி விமான கண்காட்சியில் எதிர்பாராத விதமாக எஃப்-4 ஃபான்டம் (F-4 Phantom) என்ற ராணுவ விமானம் கோர விபத்தில் சிக்கியது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ceb7f9d9-f225-4e32-ab6c-9a26be435fe6/26-6a9d74963246b.webp' /></p><p> இந்த விபத்தில் விமானத்தை இயக்கிய இரண்டு விமானிகளும் பரிதாபமாக உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>கிரீஸ் நாட்டின் செய்தி நிறுவனமான ANA தகவல் படி, இந்த இராணுவ விமான விபத்தானது பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்கள் முன்னிலையில் நடைபெற்றுள்ளது.</p><p></p><h2> &nbsp;விபத்து தொடர்பான முக்கிய விவரங்கள்</h2><p>
சாகசத்திற்காக புறப்பட்ட விமானம் சிறிது நேரத்திலேயே தன்னுடைய உயரத்தை இழந்து கீழே விழுந்தது.</p><p>விமானிகள் இருவரும் விபத்திற்கு முன்னதாக துரதிர்ஷ்டவசமாக பாராசூட் மூலம் விமானத்தில் இருந்து வெளியேற வில்லை என்பதை உள்ளூர் ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">🚨 BREAKING — FULL VIDEO: Hellenic Air Force F-4E Phantom II crashes during a solo flying display at Tanagra, Greece. Footage captures the aircraft’s final maneuver before it goes down. There was no immediately visible sign of parachutes, while officials have yet to confirm the… <a href="https://t.co/1NMJQAGvJS">pic.twitter.com/1NMJQAGvJS</a></p>&mdash; OSINT AFG (@AfghanOSINT0) <a href="https://x.com/AfghanOSINT0/status/2096259739222974644?ref_src=twsrc%5Etfw">September 5, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p> விமானம் தரையில் விழுந்ததும் ஒரு பயங்கர வெடிப்பானது ஏற்பட்டது. இந்த தீயை அணைக்க தீயணைப்பு படையினர் விரைந்து செயல்பட்டனர்.</p><p> இந்த விமான விபத்தை தொடர்ந்து எஞ்சி இருந்த வான்வழி விமான கண்காட்சி ரத்து செய்யப்பட்டது.</p><p> பாதுகாப்புத்துறை அமைச்சர் நிகோஸ் டென்டியாஸ், கண்காட்சிக்கான தனது திட்டத்தை ரத்து செய்தார். அத்துடன் விபத்து நடைபெற்ற இடத்தை நேரில் சென்று பார்வையிட்டு மீட்பு பணிகளை ஆய்வு செய்தார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-06T14:11:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் பெண் ஒருவரின் வீட்டுக்குச் சென்ற விசித்திர விருந்தினர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/calgary-homeowner-gets-surprise-visit-1788689808"></link>
            <id>https://canadamirror.com/article/calgary-homeowner-gets-surprise-visit-1788689808</id>
            <summary type="text">கனடாவின் கல்காரி நகரைச் சேர்ந்த ஜானிஸ் ஆண்டர்சன் என்பவரது வீட்டின் தோட்டத்தில், ஆகஸ்ட் 27 அன்று தாய் காட்டுப்பூனை ஒன்று தனது ஐந்து குட்டிகளுடன் நுழைந்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் கல்காரி நகரைச் சேர்ந்த ஜானிஸ் ஆண்டர்சன் என்பவரது வீட்டின் தோட்டத்தில், ஆகஸ்ட் 27 அன்று தாய் காட்டுப்பூனை ஒன்று தனது ஐந்து குட்டிகளுடன் நுழைந்தது.
</p><p>அண்டை வீட்டார் கொடுத்த தகவலையடுத்து, தனது வளர்ப்பு நாயை வீட்டிற்குள் பூட்டிவிட்டு ஆண்டர்சன் உடனடியாகத் தனது கேமரா மற்றும் கைப்பேசியுடன் தோட்டத்திற்கு விரைந்தார்.</p><p>
அங்கு காட்டுப்பூனைகள் மிகவும் அமைதியாகத் தோட்டத்திலும், வீட்டின் முன்பக்கப் புல்வெளியிலும் அமர்ந்து ஓய்வெடுத்தன. தாய் காட்டுப்பூனை புல்வெளியில் சாவகாசமாகப் படுத்துக் கொண்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9925d006-fa51-490c-ad56-bcd6bfbb5989/26-6a9d3d91ec311.webp' /></p><p> </p><p>சில நிமிடங்களிலேயே அவை அங்கிருந்து புறப்பட்டுச் சென்றாலும், ஆண்டர்சன் அவற்றின் அழகிய தருணங்களைத் தனது கேமராவில் துல்லியமாகப் படம்பிடித்தார்.
</p><p>சில ஆண்டுகளுக்கு முன்புதான் வனவிலங்கு புகைப்படக் கலையை ஒரு பொழுதுபோக்காகத் தொடங்கிய ஆண்டர்சன், காட்டுப்பூனை குடும்பம் நேரடியாகத் தனது வீட்டிற்கே வந்து புகைப்படங்களுக்குப் பொஸ் கொடுத்ததை வாழ்நாளின் மறக்க முடியாத அரிய வாய்ப்பாகவும் கௌரவமாகவும் கருதுவதாகத் தெரிவித்துள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-06T14:01:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[திருமணத்தை மீறிய உறவு; காதலன், 13 வயது மகன் உதவியுடன் கணவனுக்கு செய்த பகீர் சம்பவம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/shocking-incident-involving-husband-with-lover-1788692910"></link>
            <id>https://jvpnews.com/article/shocking-incident-involving-husband-with-lover-1788692910</id>
            <summary type="text">சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே வேலகவுண்டன்புதூர் எஸ்.கே. நகரைச் சேர்ந்தவர் 45 வயதான வியாபாரி&amp;nbsp; 2 குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் ஒரு ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே வேலகவுண்டன்புதூர் எஸ்.கே. நகரைச் சேர்ந்தவர் 45 வயதான வியாபாரி&nbsp; 2 குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். </p><p>இந்நிலையில் ஒரு நாள் காருக்குள் பூபதி ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a0f82c44-fc89-44e2-acf4-72409f8437d1/26-6a9d49b5e43a8.webp' /></p><h2>வாக்குவாதம்</h2><p> தலை, முகம், முதுகு உள்ளிட்ட பல இடங்களில் வெட்டுக்காயங்கள் இருந்ததை பார்த்த பொதுமக்கள் பொலிசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.</p><p>இதற்கிடையே, கணவரை மர்ம கும்பல் வெட்டிக் கொன்று நகைகளை பறித்துச் சென்றதாக மனைவி பொலிசாரிடம் கூறியுள்ளார். </p><p>கணவர் தன்னை காரில் அழைத்துச் சென்றபோது, வழியில் சிறுநீர் கழிப்பதற்காக காரை நிறுத்தியதாகவும், அப்போது 3 பேர் கொண்ட கும்பல் பூபதியை வெட்டிக் கொலை செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.
</p><p>&nbsp;ஆனால் மனைவியின் வாக்குமூலம் போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. காரிலும், கொலை நடந்ததாக கூறப்பட்ட இடத்திலும் ரத்தக்கறைகள் இல்லாத நிலையில், வீட்டில் மட்டும் ரத்தக்கறைகள் சரியாக சுத்தம் செய்யப்படாமல் இருந்தது பொலிசாரின் சந்தேகத்தை அதிகரித்துள்ளது. </p><p>இதையடுத்து சுஜிதாஸ்ரீயிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த 34 வயதான தொழிலதிபரடன் குறித்த பெண்ணுக்கு நெருக்கமான பழக்கம் இருந்தது தெரியவந்துள்ளது.</p><p> இதனை அறிந்த பூபதி, மனைவியை கண்டித்ததால் கணவன்-மனைவிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. </p><p> இதனால் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றிய நிலையில், இருவரும் சேர்ந்து பூபதியை கத்தியால் குத்திக் கொலை செய்ததாக பொலிசார் தெரிவித்துள்ளனர். பின்னர் பூபதியின் உடலை காரில் எடுத்துச் சென்று ஆட்டுக்காரனூர் பகுதியில் நிறுத்தி, நகைக்காக மர்ம கும்பல் கொலை செய்தது போல் நாடகம் ஆடியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
</p><p>மேலும் விசாரணையில் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன. பூபதியை கொலை செய்யும்போது அவர் திமிறிய நிலையில், தனது 13 வயது மகனிடம் தந்தையின் காலை பிடித்து இழுத்துக்கொள்ளுமாறு சுஜிதாஸ்ரீ கூறியதாக போலீசார் தெரிவித்துள்ளனர். </p><p>&nbsp;இதையடுத்து 13 வயது சிறுவனையும் போலீசார் கைது செய்து சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பி வைத்தனர். </p><p><br></p>]]></content>
            <updated>2026-09-06T14:01:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[உள்ளுராட்சி மன்றம் தொடர்பான சட்டத்தை திருத்த அனுமதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/approval-amend-the-law-on-local-government-bodies-1788700661"></link>
            <id>https://jvpnews.com/article/approval-amend-the-law-on-local-government-bodies-1788700661</id>
            <summary type="text">மாநகரசபைகள், நகரசபைகள் மற்றும் பிரதேச சபைகள் தொடர்பான மூன்று பிரதான சட்டங்களின் திருத்தப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள...</summary>
            <content type="html"><![CDATA[<p>மாநகரசபைகள், நகரசபைகள் மற்றும் பிரதேச சபைகள் தொடர்பான மூன்று பிரதான சட்டங்களின் திருத்தப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி பிரதி அமைச்சர் ருவன் செனரத் தெரிவித்துள்ளார்.
</p><p>


மேலும், உள்ளூராட்சி தொடர்பான ஏழு சட்டங்களைத் திருத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/85d82588-c343-4cf2-982a-0c81ee3360aa/26-6a9d67f711fc4.webp' /></p><p>



காலத்திற்கு ஒவ்வாத சட்டங்களை தற்போதைய தேவைகளுக்கு ஏற்ப மாற்றியமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பிரதி அமைச்சர் தெரிவித்தார்.
</p><p>


உள்ளூராட்சி மன்றங்களின் நிர்வாகம், கொள்முதல் நடைமுறைகள் மற்றும் சட்டரீதியான செயற்பாடுகளில் காணப்படும் சவால்களுக்கு தீர்வு காணும் வகையில் அதிகாரிகளின் அறிவு மற்றும் திறன்களை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
</p><p>


இதன் மூலம் உள்ளூராட்சி மன்றங்களின் செயற்பாடுகளை வலுப்படுத்தி, மக்களுக்கான பொதுச் சேவைகளை மேலும் திறம்பட வழங்க எதிர்பார்க்கப்படுவதாகவும் பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-09-06T14:00:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[டெங்குவை விட ஆபத்தானது இது தான் ; அதிகரிக்கும் உயிரிழப்புகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/more-dangerous-than-dengue-rising-deaths-1788702502"></link>
            <id>https://jvpnews.com/article/more-dangerous-than-dengue-rising-deaths-1788702502</id>
            <summary type="text">டெங்கு நோயைக் காட்டிலும் சாலை விபத்துகளினால் நாட்டில் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்துள்ளதாக மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">டெங்கு நோயைக் காட்டிலும் சாலை விபத்துகளினால் நாட்டில் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்துள்ளதாக மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான மருத்துவர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பின் தலைவர், விசேட வைத்தி நிபுணர் சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார். </p><p style="text-align: justify; ">



இன்றைய தினம் (06) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,



 கடந்த எட்டு மாதங்களில் டெங்கு நோயினால் நாட்டில் சுமார் 60 உயிரிழப்புகள் மட்டுமே பதிவாகியுள்ள நிலையில், அதே காலப்பகுதியில் சாலை விபத்துகள் காரணமாக 1,600-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சித் தகவலை வெளியிட்டார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/048eaf29-e1dc-437b-98f3-2b9bc9acdb0a/26-6a9d6f27ce6b6.webp' /></p><h2 style="text-align: justify; ">வீதி விபத்து</h2><p style="text-align: justify; ">இது டெங்கு உயிரிழப்புகளை விட சுமார் 30 மடங்கு அதிகம் என்றும், சராசரியாக தினமும் 4 முதல் 5 பேர் வரை வீதி விபத்துகளில் உயிரிழப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.</p><p style="text-align: justify; ">


இவ்விபத்துகளில் உயிரிழப்போரில் பெரும்பாலானோர் நாட்டின் பொருளாதாரத்திற்கு நேரடியாக பங்களிக்கும் உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்த நடுத்தர மற்றும் கிராமப்புற மக்களாவர்.
</p><p style="text-align: justify; ">


 குறிப்பாக முச்சக்கர வண்டிகள், மோட்டார் சைக்கிள்கள், உழவு இயந்திரங்கள் மற்றும் மிதிவண்டிகளை பயன்படுத்துவோரே அதிகளவில் பாதிப்புக்குள்ளாகின்றனர்.
</p><p style="text-align: justify; ">


 குடும்பத்தின் முதன்மை வாழ்வாதாரமாக இருக்கும் தந்தை அல்லது சகோதரன் உயிரிழப்பதால், அக்குடும்பங்களின் வாழ்வாதாரம் மற்றும் குழந்தைகளின் கல்வி கடுமையாக பாதிக்கப்படுகிறது.
</p><p style="text-align: justify; ">


 மேலும், உயிரிழப்புகள் தவிர்த்து விபத்துகளினால் நிரந்தர அல்லது தற்காலிக ஊனத்திற்குள்ளாவோரின் எண்ணிக்கை 5,000-க்கும் அதிகமாக உள்ளதாகவும், இவர்களுக்கான மறுவாழ்வு மற்றும் மருத்துவ சிகிச்சைகளுக்கு அரசு பெருமளவிலான நிதியை செலவிட வேண்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.</p><p style="text-align: justify; ">



தனியார் பேருந்துகளுக்கு இடையே நிலவும் கடுமையான போட்டி, சாரதிகளின் வீதி ஒழுக்கமின்மை, கவனக்குறைவாக திடீரென யூ திரும்பல் ('U-Turn') எடுத்தல், பாதைகளில் வாகனங்களுக்கு இடையே போதிய இடைவெளியைப் பேணாமை மற்றும் முறையான பயிற்சியின்மை ஆகியவையே இத்தகைய விபத்துகளுக்கு முதன்மை காரணங்களாக அமைகின்றன. </p><p style="text-align: justify; ">



எனவே, சுகாதார அமைச்சு, பொலிஸ் திணைக்களம் மற்றும் போக்குவரத்து கட்டுப்பாட்டு அதிகாரசபைகள் இணைந்து கூட்டுத் திட்டமொன்றை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.</p>]]></content>
            <updated>2026-09-06T13:48:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வறுமையிலும் சாதனை படைத்த முல்லைத்தீவு மாணவன் - பதக்கம் அணிவித்து கௌரவித்த தருணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/student-achieves-good-results-in-mullaitivu-1788699866"></link>
            <id>https://tamilwin.com/article/student-achieves-good-results-in-mullaitivu-1788699866</id>
            <summary type="text">“எதிர்காலத்தில் பொறியியலாளராக வருவதே தனது இலட்சியம்” என தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 166 புள்ளிகளைப் பெற்று முல்லைத்தீவு மாவட்டத்தில் முதலிடம் பெ...</summary>
            <content type="html"><![CDATA[<p>“எதிர்காலத்தில் பொறியியலாளராக வருவதே தனது இலட்சியம்” என தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 166 புள்ளிகளைப் பெற்று முல்லைத்தீவு மாவட்டத்தில் முதலிடம் பெற்ற மாணவன் மகேந்திரன் மாருதியன் தெரிவித்துள்ளார்.
</p><p>
நடைபெற்று முடிந்த தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் கடந்த 4ஆம் திகதி வெளியாகியிருந்த நிலையில், நாட்டின் பல பகுதிகளிலும் மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று, தமது கல்விப் பயணத்தில் அடுத்த கட்டத்திற்கு முன்னேறியுள்ளனர்.
</p><h2>
தரம் 5 புலமைப் பரீட்சை பெறுபேறுகள்</h2><p>
இந்நிலையில், நாளை நாடளாவிய ரீதியில் புதிய கல்வி நடவடிக்கைகள் ஆரம்பமாகவுள்ளன.

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு, கோம்பாவில் திம்பிலி கிராமத்தில் வசித்து வரும் மாணவன் மகேந்திரன் மாருதியன், வறுமையான சூழலிலும் விடாமுயற்சியுடன் கல்வியில் கவனம் செலுத்தி சிறப்பான பெறுபேற்றைப் பெற்று மாவட்டத்தில் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2d75601c-5bf6-4502-92b8-0d8d83205518/26-6a9d6dfc8acee.webp' /></p><p>
</p><p>
மாணவனின் சாதனையைப் பாராட்டும் வகையில், புதுக்குடியிருப்பில் இயங்கி வரும் அறிவொளி புத்தகசாலையின் இயக்குநர் இன்று (06.09.2026) மாணவனின் இல்லத்திற்குச் சென்று அவருக்கு பதக்கம் அணிவித்து, பரிசுப் பொருட்களையும் வழங்கி கௌரவித்துள்ளார்.</p><h2>

மாணவனின் இலட்சியம்</h2><p>

தனது எதிர்கால இலட்சியம் தொடர்பில் மாணவன் மகேந்திரன் மாருதியன் கருத்துத் தெரிவிக்கையில்,

“எதிர்காலத்தில் பொறியியலாளராக வர வேண்டும் என்பதே எனது இலட்சியம்” எனத் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b59fe6f3-2be0-4ca9-af3d-917eb6e8cd22/26-6a9d6dfda4a30.webp' /></p><p>
</p><p>
கிராமப்புறச் சூழலில் இருந்து கல்வியில் சிறந்த பெறுபேற்றைப் பெற்று, மாவட்டத்தில் முதலிடம் பிடித்துள்ள இம்மாணவனின் சாதனை, ஏனைய மாணவர்களுக்கு சிறந்த முன்னுதாரணமாக அமைந்துள்ளது.</p><p>

இவ்வாறான திறமையான மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்கு சமூகத்தினர், நலன்விரும்பிகள் மற்றும் கல்வி ஆர்வலர்கள் தொடர்ந்தும் ஆதரவளிப்பதன் மூலம் எதிர்காலத்தில் பல சிறந்த கல்விமான்களையும் தொழில்சார் நிபுணர்களையும் உருவாக்க முடியும் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.</p><p></p><p></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-06T13:43:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானியாவில் பதின்பருவ மாணவியிடம் தகாத முறையில் பேசிய ஆசிரியர்: வாழ்நாள் தடை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/essex-teacher-duhig-banned-life-time-teaching-1788701428"></link>
            <id>https://news.lankasri.com/article/essex-teacher-duhig-banned-life-time-teaching-1788701428</id>
            <summary type="text">Essex teacher duhig banned life time teaching: பிரித்தானியாவில் மாணவியிடம் தகாத முறையில் பேசியஆசிரியருக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பிரித்...</summary>
            <content type="html"><![CDATA[<p>Essex teacher duhig banned life time teaching: பிரித்தானியாவில் மாணவியிடம் தகாத முறையில் பேசியஆசிரியருக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளது.
</p><p>
பிரித்தானியாவில் ஆசிரியர் ஒருவர், மாணவியுடன் படுக்கையை பகிர்ந்துகொள்ள விரும்புவதாக கூறியதற்காக, அவரது பணியில் இருந்து வாழ்நாள் தடை விதிக்கப்பட்டார்.&nbsp;</p><h2>டேட்டிங் செயலி மூலம்&nbsp;</h2><p>

பிரித்தானியாவின் Dagenham-யில் உள்ள Godwin தொடக்கப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றியவர் டேனியல் டுஹிக் (29).&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3e0dc8ea-bfb0-4a92-b25c-e1e35c9f479f/26-6a9d6bd0cc983.webp' />&nbsp;</p><p></p><p> 

எசெக்ஸின் ஹார்ன்சர்ச் பகுதியைச் சேர்ந்த இவர், 18 வயதிற்கும் மேற்பட்டவர்களுக்கான டேட்டிங் செயலி மூலம் 16 வயதுக்கும் குறைவான சிறுமி ஒருவரிடம் பேசியுள்ளார். </p><p>

கடந்த 2023 டிசம்பர் மாதம் குறித்த சிறுமிக்கு பாலியல் ரீதியான குறுஞ்செய்திகளை டுஹிக் அனுப்பியிருக்கிறார். அதில் பள்ளி மாணவியான அந்த சிறுமியிடம் படுக்கையை பகிர்ந்துகொள்ள விரும்புவதாக டுஹிக் கூறியிருக்கிறார்.</p><p> 

அதனைத் தொடர்ந்து எழுந்த புகாரினையடுத்து டேனியில் டுஹிக் 2024-ஆம் ஆண்டில் கைது செய்யப்பட்டார். 

பின்னர் நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்புக்கொண்ட அவர், பாதிக்கப்பட்டவர் ஒரு சிறுமி என்று தனக்கு தெரியாது என்று வாதிட்டார்.</p><p> 

என்றாலும், ஒரு சிறுமியுடன் பாலியல் ரீதியான தொடர்பை ஏற்படுத்த முயன்ற குற்றத்திற்காக டேனியல் தண்டிக்கப்பட்டார். 

பணியில் இருந்து நீக்கப்பட்ட டேனியல், தனது தொழில் வாழ்க்கையைத் தொடர மற்றொரு வாய்ப்பு வழங்குமாறு பள்ளியிடம் கோரினார்.
</p><h2>
 கற்பித்தல் பணியில் ஈடுபட தடை </h2><p>இதற்கிடையில் ஆசிரியருக்கு ஆறு மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு, அது 18 மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது. 

அத்துடன் அவர் மறுவாழ்வு பயிற்சியில் ஈடுபடவும், 100 மணிநேரம் ஊதியமில்லா சமூக பணியை செய்யவும் உத்தரவிடப்பட்டது. </p><p>

மேலும், பாதிக்கப்பட்டவருக்கு 154 பவுண்டுகள் மற்றும் அரசுத் தரப்பு வழக்கு செலவுகளுக்காக 85 பவுண்டுகளை அவர் செலுத்த வேண்டியிருந்தது; அத்துடன் அவர் ஏழு ஆண்டுகளுக்கு 'பாலியல் குற்றவாளிகள் பதிவேட்டில்' சேர்க்கப்பட்டார். </p><p>

இந்த நிலையில், லண்டனின் Redbridge பகுதியில் Learning Support Assistant ஆக முன்பு பணியாற்றிய டுஹிக், ஒரு தீர்ப்பாயத்தின் விசாரணையில் வாழ்நாள் முழுவதும் கற்பித்தல் பணியில் ஈடுபட தடை செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
ஆசிரியர் ஒழுங்குமுறைக் குழு, டேனியல் டுஹிக் எதிர்காலத்தில் இதுபோன்ற குற்றங்களை செய்வதற்கான வாய்ப்பு அதிகம் என்று கண்டறிந்தது.&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2cf07ae8-e694-45b6-a4c0-8792e52510d6/26-6a9d6bd1bffe6.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-06T13:31:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜனாதிபதியின் முக்கிய அறிவிப்பு ; 22 கட்டாயம் நிறைவேற்றப்படும்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/president-s-key-announcement-22-to-be-implemented-1788699985"></link>
            <id>https://jvpnews.com/article/president-s-key-announcement-22-to-be-implemented-1788699985</id>
            <summary type="text">உத்தேச 22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை எக்காரணம் கொண்டும் திரும்பப் பெறப்போவதில்லை என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மீண்டும் தெரிவித்துள்ளார். 

...</summary>
            <content type="html"><![CDATA[<p>உத்தேச 22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை எக்காரணம் கொண்டும் திரும்பப் பெறப்போவதில்லை என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மீண்டும் தெரிவித்துள்ளார்.</p><p> 

இன்று (06) புலத்சிங்ஹல பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/16d1bd03-c23f-44ae-b7c6-c055fdf8871e/26-6a9d65531d11e.webp' /></p><p> </p><p>

இந்த அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் தொடர்பான தீர்ப்பு விரைவில் கிடைக்கும் என ஊடகச் செய்திகள் வெளியாகியுள்ளன. </p><p>

குறித்த தீர்ப்பு கிடைத்தவுடன் அது பாராளுமன்றில் நிறைவேற்றப்படும் என ஜனாதிபதி அங்கு வலியுறுத்தினார். 

நாங்கள் சட்டத் திருத்தங்களை உருவாக்கியுள்ளோம். </p><p>அதற்காகத் தேவையான அரசியலமைப்புத் திருத்தங்களையும் செய்துள்ளோம். 

நாங்கள் பயமின்றி முன்னோக்கிச் செல்வோம். </p><p>அப்போது என்ன நடக்கும்? கறுப்புச் சட்டங்களின் பாதுகாப்பில் இருந்தவர்கள் அச்சமடைவார்கள். 

தூதரகங்களை நோக்கி ஓடுவார்கள்.</p><p> உலக அமைப்புகளுக்குக் கடிதம் எழுதுவார்கள். 

நினைவில் வைத்துக்கொள்ளுங்கள், நாங்கள் இந்தத் தீர்மானங்களையும் மக்களுக்காகவே எடுக்கிறோம். </p><p>எடுக்கும் எந்தவொரு தீர்மானத்தையும் நாங்கள் திரும்பப் பெறமாட்டோம். 

22ஆவது திருத்தம் குறித்த தீர்ப்பு விரைவில் கிடைக்கும். </p><p>பத்திரிகைகளில் 18ஆம் திகதி போன்ற ஒரு நாள் குறிப்பிடப்பட்டிருப்பதை நான் கண்டேன். 

தீர்ப்பு கிடைத்ததும் அதனை விரைவில் நிறைவேற்றுவோம். </p><p>

இந்த ஊழல்வாதிகளுக்கு நாங்கள் தண்டனை வழங்க வேண்டும். அப்படித்தான் இந்தக் கறுப்பு ராஜ்யத்தை தகர்க்க வேண்டும் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content>
            <updated>2026-09-06T13:30:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் தினசரி மின்சாரத் தேவை சரிவு: மின் உற்பத்தியில் அதிகரிப்பு பதிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sl-power-demand-drops-while-generation-rises-1788699192"></link>
            <id>https://ibctamil.com/article/sl-power-demand-drops-while-generation-rises-1788699192</id>
            <summary type="text">இலங்கையில் ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 3 ஆம் திகதி வரையிலான நான்கு நாட்களில் தினசரி மின்சாரத் தேவை வீழ்ச்சியடைந்துள்ள அதேவேளையில், மின் உற்பத்தி தொடர்ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 3 ஆம் திகதி வரையிலான நான்கு நாட்களில் தினசரி மின்சாரத் தேவை வீழ்ச்சியடைந்துள்ள அதேவேளையில், மின் உற்பத்தி தொடர்ந்தும் அதிகரிப்புப் போக்கைக் காட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இலங்கை மத்திய வங்கியின் (CBSL) சமீபத்திய தரவுகள் இதனை தெரிவிக்கின்றன.</p><p>இதனடிப்படையில் ஆகஸ்ட் 31 ஆம் திகதி 2,947 மெகாவாட் (MW) ஆக இருந்த தினசரி மின்சாரத் தேவை, செப்டம்பர் 1 ஆம் திகதி 2,936 மெகாவாட் ஆகக் குறைந்துள்ளது.</p><p> </p><p></p><h2>மின்சாரத் தேவை&nbsp;</h2><p>இது செப்டம்பர் 2 ஆம் திகதி 2,934 மெகாவாட் ஆகவும், செப்டம்பர் 3 ஆம் திகதி மேலும் சரிவடைந்து 2,920 மெகாவாட் ஆகவும் பதிவாகியுள்ளது.
</p><p>மின்சாரத் தேவை குறைந்த போதிலும் ஆகஸ்ட் 31 ஆம் திகதி 57.24 கிகாவாட் மணிநேரமாக (GWh) இருந்த தினசரி மின் உற்பத்தி, செப்டம்பர் 1 ஆம் திகதி 58.37 கிகாவாட் மணிநேரமாக அதிகரித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5129d033-4fe3-4a37-bbbc-72e5627d480e/26-6a9d6883d1d1f.webp' /></p><p>அடுத்தடுத்த நாட்களிலும் மின் உற்பத்தி உயர் மட்டத்திலேயே காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் மத்திய வங்கியின் அறிக்கையின்படி செப்டம்பர் 2 ஆம் திகதி 58.34 கிகாவாட் மணிநேரமாகவும், செப்டம்பர் 3 ஆம் திகதி 58.08 கிகாவாட் மணிநேரமாகவும் மின் உற்பத்தி பதிவாகியுள்ளது. </p><p>அடுத்தடுத்த நாட்களிலும் மின் உற்பத்தி உயர் மட்டத்திலேயே காணப்பட்டதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளதுடன் மத்திய வங்கியின் அறிக்கையின்படி செப்டம்பர் 2 ஆம் திகதி 58.34 கிகாவாட் மணிநேரமாகவும், செப்டம்பர் 3 ஆம் திகதி 58.08 கிகாவாட் மணிநேரமாகவும் மின் உற்பத்தி பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-06T13:27:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[அல்பெர்ட்டா தேர்தல் ஆணையம் பகிரங்க மன்னிப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/elections-alberta-apologizes-for-confusion-1788700355"></link>
            <id>https://canadamirror.com/article/elections-alberta-apologizes-for-confusion-1788700355</id>
            <summary type="text">கனடாவின் அல்பெர்ட்டா மாகாணத் தேர்தல் ஆணையம், வாக்காளர்களுக்குத் தவறுதலாக அனுப்பப்பட்ட சிறப்புத் தபால் வாக்குச் சீட்டுகளில் ஏற்பட்ட தவறுகள் மற்றும் குழ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் அல்பெர்ட்டா மாகாணத் தேர்தல் ஆணையம், வாக்காளர்களுக்குத் தவறுதலாக அனுப்பப்பட்ட சிறப்புத் தபால் வாக்குச் சீட்டுகளில் ஏற்பட்ட தவறுகள் மற்றும் குழப்பங்களுக்காக மின்னஞ்சல் மூலம் பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளது.</p><p> 
வாக்காளர்களுக்கு அனுப்பப்பட்ட வாக்குச் சீட்டுகளில், பொய் வாக்குமூலம் அளித்தால் 50,000 டொலர் வரை அபராதம் அல்லது 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்ற எச்சரிக்கையுடன் கூடிய சுயபிரகடனப் படிவம் இடம்பெற்றிருந்தது. </p><p>
வாக்காளர்கள் அந்த குறிப்பிட்ட வாசகத்தைக் கோடு போட்டு நீக்கிவிட்டு படிவத்தின் மற்ற பகுதிகளைப் பூர்த்தி செய்து அனுப்பலாம் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6d332f12-2b4f-4d75-b930-59620fa3e063/26-6a9d66c503c89.webp' /></p><p> </p><p>
நேரில் பெறப்பட்ட வாக்குச் சீட்டுகளில் இந்த வாசகம் இடம்பெறவில்லை. தவறுக்கு வருத்தம் தெரிவித்துள்ள ஆணையம், புதிய படிவத்தைப் பெற 1.877.422.VOTE (8683) என்ற எண்ணைத் தொடர்புகொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளது.</p><p> 
எதிர்வரும் அக்டோபர் 19 அன்று நடைபெறவுள்ள மாகாணத் தேர்தலை முன்னிட்டு, இதுவரை 2,90,000-க்கும் மேற்பட்ட சிறப்புத் தபால் வாக்குச் சீட்டுகளுக்குக் கோரிக்கைகள் வந்துள்ளன.</p><p> இது 2023 தேர்தலில் பெறப்பட்டதை விட கிட்டத்தட்ட 5 மடங்கு அதிகமாகும். 
அதேசமயம், சில வாக்காளர்களுக்கு வந்த பொதிகளில் 'அல்பெர்ட்டா பிரிவினை' தொடர்பான 10-ஆவது கருத்துக் கணிப்பு கேள்வி உள்ளிட்ட சில பக்கங்கள் விடுபட்டுள்ளதாகப் புகார்கள் எழுந்துள்ளன. </p><p>
மிகச் குறைந்த எண்ணிக்கையிலான மக்களுக்கே இவ்வாறு நேர்ந்துள்ளதாகத் தெரிவித்த தேர்தல் ஆணையத் துணை அதிகாரி டாலஸ் ஸ்டோஸ், விடுபட்ட வாக்குச் சீட்டுகளைக் கொண்டவர்கள் உடனடியாக ஆணையத்தைத் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளார். </p><p>
தேர்தல் ஆணையத்தின் இந்த தெளிவுபடுத்தல் நல்ல தொடக்கம் என்றாலும், வாக்காளர்களுக்கு மேலும் தெளிவளிக்க இரண்டாம் கட்ட அறிவிப்புக் கடிதம் அனுப்பப்பட வேண்டும் என எதிர்க்கட்சியான எண்டிபி கட்சி சட்டமன்ற உறுப்பினர் கிறிஸ்டினா கிரே வலியுறுத்தியுள்ளார்.
</p><p>அதிக தேவையின் காரணமாக, சிறப்பு வாக்குச் சீட்டுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் அக்டோபர் 9-லிருந்து செப்டம்பர் 25-ஆக முன்னகர்த்தப்பட்டுள்ளது. </p><p>
ஆரம்பத்தில் அக்டோபர் 9 என அறிவித்துவிட்டு தற்போது செப்டம்பர் 25 எனக் கெடுவை மாற்றியது செய்திகளைத் தொடர்ந்து கவனிக்காத மக்களுக்குப் பெரும் குழப்பத்தையும் அநீதியையும் ஏற்படுத்தும் என அரசியல் ஆய்வாளர் லோரி வில்லியம்ஸ் எச்சரித்துள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-06T13:18:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்த அறிகுறிகளை அலட்சியம் செய்யாதீர்! அதிக கொலஸ்ட்ராலின் எச்சரிக்கை அறிகுறிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/what-are-warning-signs-of-bad-cholesterol-1788697566"></link>
            <id>https://manithan.com/article/what-are-warning-signs-of-bad-cholesterol-1788697566</id>
            <summary type="text">கொலஸ்ட்ரால் அல்லது கொழுப்பு என்பது நமது உடலில் இயற்கையாகவே காணப்படும் மெழுகு போன்ற ஒரு பொருளாகும். உடலின் சீரான செயல்பாட்டிற்கு தேவையான ஹார்மோன்கள், வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொலஸ்ட்ரால் அல்லது கொழுப்பு என்பது நமது உடலில் இயற்கையாகவே காணப்படும் மெழுகு போன்ற ஒரு பொருளாகும். </p><p>உடலின் சீரான செயல்பாட்டிற்கு தேவையான ஹார்மோன்கள், வைட்டமின் D உள்ளிட்ட பல்வேறு முக்கியப் பொருட்களை உருவாக்குவதிலும், உணவை ஜீரணிக்க உதவுவதிலும் கொலஸ்ட்ரால் முக்கியப் பங்கு வகிக்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/be735977-2adf-46bb-9038-6207f1e852dd/26-6a9d62cb782ef.webp' /></p><p></p><p>
</p><p>
பொதுவாக கொலஸ்ட்ரால் இரண்டு முக்கிய வகைகளாகப் பிரிக்கப்படுகிறது. HDL (நல்ல கொழுப்பு) உடலில் உள்ள அதிகப்படியான கொலஸ்ட்ராலை அகற்ற உதவுகிறது. அதேவேளையில், LDL (கெட்ட கொழுப்பு) அதிகரிக்கும்போது அது இரத்தக்குழாய்களின் சுவர்களில் படிந்து, இரத்த ஓட்டத்தைப் பாதிக்கக்கூடும்.
</p><p>
கொலஸ்ட்ரால் ஏன் ஆபத்தானது?
கொலஸ்ட்ரால் உடலுக்கு தேவையான ஒன்றாக இருந்தாலும், அதன் அளவு அதிகரிப்பது பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். குறிப்பாக, LDL கொலஸ்ட்ரால் அதிகமாகும்போது இரத்தக்குழாய்களில் கொழுப்புப் படிவுகள் உருவாகி, அவற்றைச் சுருக்கவோ அடைக்கவோ செய்யலாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1c5f3358-b728-438d-a660-1351b8a9b4a8/26-6a9d62cc2d498.webp' /></p><p></p><p>
இதன் காரணமாக மாரடைப்பு, பக்கவாதம் மற்றும் இதயம் தொடர்பான பிற நோய்கள் ஏற்படும் அபாயம் அதிகரிக்கலாம்.

கொலஸ்ட்ரால் அதிகரித்தால் அறிகுறிகள் இருக்குமா?
கொலஸ்ட்ரால் அதிகரிப்பது பல நேரங்களில் வெளிப்படையான அறிகுறிகளை ஏற்படுத்தாது. </p><p>அதனால், ஒருவருக்கு கொலஸ்ட்ரால் அதிகமாக இருப்பது தெரியாமலேயே இருக்கலாம். இதனால்தான் கொலஸ்ட்ராலை அவ்வப்போது பரிசோதித்துக் கொள்வது முக்கியமாகக் கருதப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0b84e997-b326-4cb5-91b9-5db417e8dbf5/26-6a9d62ccd7253.webp' /></p><p>
</p><p>
இருப்பினும், கொலஸ்ட்ரால் நீண்ட காலமாக அதிகமாக இருந்து இரத்தக்குழாய்களில் பாதிப்பை ஏற்படுத்தும்போது, அதனுடன் தொடர்புடைய சில உடல்நலப் பிரச்சினைகள் வெளிப்படக்கூடும்.</p><p>அப்படி உடலில் கொலஸ்ட்ரால் அதிகரிப்பதற்கான முக்கிய எச்சரிக்கை அறிகுறிகளாக&nbsp; தோன்றும் உடல் நல பிரச்சினைகள் குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.</p><h2>கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிப்பதற்கான அறிகுறிகள்</h2><p><b>1.நெஞ்சு வலி: </b>கரோனரி தமனிகளில் கொலஸ்ட்ரால் படிவதால் இரத்த ஓட்டம் குறைந்து, உடற்பயிற்சி அல்லது மன அழுத்தத்தின் போது நெஞ்சு வலி ஏற்படலாம். பெண்கள் மற்றும் சர்க்கரை நோயாளிகளுக்கு குமட்டல், சோர்வு போன்ற லேசான அறிகுறிகள் அடிக்கடி தோன்றும்.</p><p><b>2.கொழுப்பு கட்டிகள்:</b> கொலஸ்ட்ரால் அதிகரிக்கும்போது சருமத்தின் கீழ், குறிப்பாக முழங்கை, முழங்கால் போன்ற பகுதிகளில் கொழுப்பு கட்டிகள் தோன்றும்.&nbsp;தீவிர நிலையில் பிட்டங்களில் கூட ஏற்படும்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3ad69204-64dd-49c2-95df-360bcee57a49/26-6a9d62cd8a2c2.webp' /></p><p><b>3.சுவாசிப்பதில் சிரமம்:</b> இரத்த ஓட்டம் பாதிக்கப்படுவதால் படிக்கட்டுகளில் ஏறுதல் அல்லது வேகமாக நடப்பது போன்ற சிறிய முயற்சிகளிலேயே மூச்சுத்திணறல் ஏற்படும்.</p><p><b>4.கால் வலி அல்லது தசைப்பிடிப்பு: </b>கால்களுக்குச் செல்லும் இரத்த ஓட்டம் குறைவதால், சிறிது தூரம் நடந்தாலே கால் வலி, இறுக்கம் அல்லது தசைப்பிடிப்பு ஏற்ப்படும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5e10e267-c7c3-4fca-b9c9-ee3d9ed71527/26-6a9d62ce3da4f.webp' /></p><p><br></p><p><b>5.தொடர்ச்சியான உடல் சோர்வு:</b> இரத்த ஓட்டம் பாதிக்கப்படுவதால் தசைகள் மற்றும் உறுப்புகளுக்கு போதுமான ஆக்ஸிஜன் கிடைக்காமல் தொடர்ந்து சோர்வு அல்லது பலவீனம் ஏற்படும்.</p><p><b>6.தலைவலி அல்லது மந்தத்தன்மை: </b>கழுத்துத் தமனிகளில் கொழுப்பு படிவதால் மூளைக்குச் செல்லும் இரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு தலைவலி, தலைச்சுற்றல், கவனச் சிதறல் போன்றவை ஏற்படலாம். சில சமயங்களில் இது பக்கவாத அபாயத்தையும் அதிகரிக்கலாம். எனவே மேற்கண்ட அறிகுறிகளை அலட்சியம் செய்யாது உடனடி மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம்.</p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-06T13:08:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாமல் ராஜபக்சவுக்கு எதிர்வரும் கிழமைகளில் காத்திருக்கும் அபாயம்! பிணை பெறுவதில் பாரிய சிக்கல்...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-rajapaksa-arrested-judgement-1788699794"></link>
            <id>https://tamilwin.com/article/namal-rajapaksa-arrested-judgement-1788699794</id>
            <summary type="text">நாமல் ராஜபக்சவுக்கு எதிராக வரும் கிழமைகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட உள்ளதாக தெரியவந்துள்ளது.
அத்துடன், கிரிஷ் கொடுக்கல் வாங்கல் தொடர்பான வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாமல் ராஜபக்சவுக்கு எதிராக வரும் கிழமைகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட உள்ளதாக தெரியவந்துள்ளது.
</p><p>அத்துடன், கிரிஷ் கொடுக்கல் வாங்கல் தொடர்பான வழக்கும் இலஞ்ச ஊழல் வழக்காக பதிவு செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p>இந்த விடயம் ராஜபக்சர்கள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில்,&nbsp; கிரிஷ் வழக்கில் 70 மில்லியன் இலஞ்சம் பெறப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.</p><p>மேலும், இது சம்பந்தமாகவும் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களை விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் 
பணிப்பாளர் நாயகத்தால் 'பீ' அறிக்கை சமர்ப்பித்தால் அந்த வழக்கும் இதனுடன் சேர்ந்து, நாமலுக்கு பிணையில் செல்லும் அனுமதியில் சிக்கலை ஏற்படுத்தும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.&nbsp;</p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">எயார்பஸ் நிறுவனத்தின் பிரதிநிதிகளின் வருகை</span></p><p>நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்ட வழக்கில் வரலாற்றுச் சிறப்புமிக்க சம்பவம் ஒன்று நிகழவுள்ளது.</p><p> உலகின் மிகப்பெரிய இரு விமான தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான “எயார்பஸ்” நிறுவனத்தின் பிரதிநிதிகள் இலங்கைக்கு வந்து வாக்குமூலம் மற்றும் சாட்சியங்களை வழங்கவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/zS2Cv0mlPKk" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p>
தொழிலதிபர் நிமல் பெரேராவின் வாக்குமூலத்தின் அடிப்படையில், மட்டுமே நாமல் இதில் தொடர்புபடுத்தப்படுகிறார் என்பதல்ல. நாமலை இதில் தொடர்புபடுத்துவதற்கு பிரதானமாக சான்றுகள் பல சமர்ப்பிக்கப்படவுள்ளன. </p><p>இதன்படி, இலங்கையில் உள்ள மேலும் சில சாட்சியாளர்கள் வாக்குமூலம் வழங்கவுள்ளதாகக் கூறப்படும் வேளையில், அதில், ஒரு பாதுகாப்பு அதிகாரி மற்றும் ஒரு சாரதியும் அடங்கியுள்ளனர்.</p><h2>வெளிச்சத்திற்கு வரும் ஆதாரங்கள்</h2><p> </p><p>எனவே இது நிமலின் வாக்குமூலம் மட்டுமல்ல, எயார்பஸ் நிறுவனத்தின் சாட்சியங்களில் நாமலுடன் மேற்கொள்ளப்பட்ட பரிவர்த்தனைகள் கலந்துரையாடல்கள் மற்றும் மின்னஞ்சல்கள் போன்ற பல விடயங்கள் சேர்க்கப்படவுள்ளதாகக் கூறப்படுகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2cee8cdb-1e8e-4087-8437-a05aee318e2c/26-6a9d6494e913a.webp' /></p><p>நீதிமன்ற தகவல்களின் படி, எயார்பஸ் நிறுவனத்தில் சாட்சியம் அளிப்பது யார் அவர்களின் உண்மைத்தன்மை என்ன என்பது போன்ற தகவல்கள் இதுவரை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை.</p><p> அதாவது, ஒரு இலஞ்ச வழக்கில் இலஞ்சம் கொடுத்த தரப்பு தான் இலஞ்சம் கொடுத்ததாகக் கூற வேண்டும்.</p><p>மேலும் அந்த இலஞ்சம் கொடுத்த நபருடன் இந்த குறிப்பிட்ட நபர் எவ்வாறு தொடர்புபடுகிறார் என்பது பற்றிய தெளிவான சான்றுகளையோ அல்லது இலஞ்சம் கொடுத்த தரப்பின் வாக்குமூலத்தையோ சமர்ப்பிக்க வேண்டும்.</p><p>தற்போது கூறப்படும் தகவல்களின் படி இதுவரை வெளிப்படுத்தப்படாத பல விடயங்கள் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.&nbsp;</p><p></p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-06T13:06:06+00:00</updated>
        </entry>
    </feed>
