<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-08-16T14:28:17+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[அபூர்வமான நாக பஞ்சமி: இந்த ராசிகளின் வாழ்க்கையில் வரப்போகும் அதிரடி மாற்றங்கள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/naga-panchami-2026-zodiacs-who-get-huge-luck-1786887443"></link>
            <id>https://manithan.com/article/naga-panchami-2026-zodiacs-who-get-huge-luck-1786887443</id>
            <summary type="text">Naga Panchami : இந்த ஆண்டின் நாக பஞ்சமி ஆகஸ்ட் 17ஆம் தேதி வருகிறது. நாக தெய்வங்களை வழிபடுவதற்கு மிகவும் உகந்த இந்த புனித நாள், ஆன்மீக ரீதியாக மட்டுமின...</summary>
            <content type="html"><![CDATA[<p>Naga Panchami : இந்த ஆண்டின் நாக பஞ்சமி ஆகஸ்ட் 17ஆம் தேதி வருகிறது. நாக தெய்வங்களை வழிபடுவதற்கு மிகவும் உகந்த இந்த புனித நாள், ஆன்மீக ரீதியாக மட்டுமின்றி ஜோதிட ரீதியாகவும் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. </p><p>குறிப்பாக, இந்த ஆண்டு வரும் நாக பஞ்சமி சிவபெருமானுக்கு உகந்த நாளான&nbsp; திங்கட்கிழமையில் அமைந்திருப்பது கூடுதல் சிறப்பாக பார்க்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e302f3eb-74fe-496c-a787-38c2cd35e900/26-6a81c4c3a5dcf.webp' /></p><p>இத்தகைய அபூர்வமான நாளின் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரை அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் ஏதாவது ஒரு வகையில் வெளிப்படும் என்று ஜோதிட நம்பிக்கைகள் கூறுகின்றன.</p><p>

அதிலும் குறிப்பாக, சில ராசிக்காரர்களுக்கு இந்த நாக பஞ்சமி அதிர்ஷ்டத்தின் கதவுகளைத் திறக்கப் போகிறது. சிவபெருமான் மற்றும் நாக தெய்வங்களின் அருளால், இவர்களின் வாழ்க்கையில் எதிர்பாராத நல்ல மாற்றங்கள் நிகழ வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
</p><p>
நிதி நிலையில் முன்னேற்றம், தொழிலில் வளர்ச்சி, வியாபாரத்தில் விரிவாக்கம், புதிய வேலைவாய்ப்புகள் என பல்வேறு வகையான நற்பலன்களை இவர்கள் பெறப்போகின்றார்ககள் என கணிக்கப்படுட்டுள்ளது.</p><p>அப்படி நாக பஞ்சமி நாளில் அதிர்ஷ்டத்தின் முழுமையான ஆதரவைப் பெறப்போகும் ராசிக்காரர்கள் யார் யார் என்பது குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.</p><h2>கடகம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d3afd7c7-a429-46c9-8813-6fb8ba3d8d2b/26-6a81c4c459d80.webp' /></p><p></p><p>

கடக ராசிக்காரர்களுக்கு நாக பஞ்சமி நாளானது மிகவும் மங்களகரமான நாளாக அமையும். பணியிடத்தில் உடன் பணிபுரிபவர்கள் மற்றும் உயர் அதிகாரிகளின் முழுமையான ஆதரவு கிடைக்கும்.</p><p> நீங்கள் மேற்கொள்ளும் பணிகளில் நல்ல வெற்றியைப் பெறுவீர்கள். நிதி நிலையிலும் முன்னேற்றம் ஏற்படும். வாழ்க்கைத் துணையுடன் மகிழ்ச்சியாக நேரத்தைச் செலவிடும் வாய்ப்பு கிடைக்கும்.</p><p> பணிபுரிபவர்களுக்கு புதிய திட்டங்களில் பணியாற்றும் வாய்ப்புகள் கிடைக்கலாம். அதேபோல், புதிய வருமான வழிகளும் உருவாகும்.இதன் மூலம் நீண்ட நாட்களாக இருந்து வந்த பணப் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும்.&nbsp;</p><h2>
கன்னி</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4cfa382b-acb2-48f2-961f-2b891874fa72/26-6a81c4c50dbb6.webp' /></p><h2>
</h2><p>
கன்னி ராசிக்காரர்களுக்கு நாக பஞ்சமி நாளானது அதிர்ஷ்டம் நிறைந்த நாளாக அமையும். இந்நாளில் நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகளில் நல்ல வெற்றி கிடைக்கும். </p><p>எதிர்பாராத வகையில் நிதி ஆதாயங்கள் கிடைப்பதற்கான வாய்ப்பும் உள்ளது. உங்கள் கடின உழைப்புக்கான உரிய பலன் கிடைக்கும்.</p><p> இதனால் தன்னம்பிக்கை அதிகரிக்கும். முக்கியமான பணிகளை எவ்வித தடையும் இன்றி வெற்றிகரமாக நிறைவேற்றுவீர்கள். </p><p>புதிய வேலை அல்லது தொழிலைத் தொடங்குவதற்கு இந்தக் காலகட்டம் சாதகமாக இருக்கும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். மேலும், தொழில் தொடர்பான முயற்சிகளிலும் சாதகமான பலன்களைப் பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
</p><h2>
மகரம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/329e4ddc-cb16-4db7-b272-37e50d08ae6b/26-6a81c4c5b225b.webp' /></p><p></p><h2>
</h2><p>
மகர ராசிக்காரர்களுக்கு இந்த நாக பஞ்சமி சிறப்பான பலன்களைத் தரக்கூடியதாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் காண்பதற்கான வாய்ப்புகள் உருவாகும்.</p><p> பணிபுரிபவர்களுக்கு புதிய பொறுப்புகள் வழங்கப்படலாம். இந்தக் காலகட்டத்தில் வேலை தொடர்பாக நீங்கள் எடுக்கும் முக்கியமான முடிவுகள் நல்ல பலன்களைத் தரும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாகவும் இனிமையாகவும் இருக்கும்.</p><p> வாழ்க்கைத் துணையுடன் மனம் மகிழும் வகையில் நேரத்தைச் செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். மன அழுத்தம் குறைந்து, மனதில் நிம்மதியும் மகிழ்ச்சியும் அதிகரிக்கும்.</p><p> ஆன்மீகப் பயணங்களை மேற்கொள்ளும் வாய்ப்பும் கிடைக்கலாம். திருமணமாகாதவர்களுக்கு தங்களுக்கான வாழ்க்கைத் துணையை சந்திக்கும் வாய்ப்பு அமையும்.</p><p><b>இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).&nbsp; &nbsp;&nbsp;</b></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b>&nbsp;</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-16T14:24:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் முதன்முறையாக இந்தியத் தமிழ் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/nallapadam-audio-launch-in-srilanka-1786890039"></link>
            <id>https://cineulagam.com/article/nallapadam-audio-launch-in-srilanka-1786890039</id>
            <summary type="text">இந்தியத் தமிழ் திரைப்படமான “நல்லபடம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா எதிர்வரும் ஆகஸ்ட் 22ஆம் தேதி கொழும்பு போர்ட் சிட்டியில் நடைபெறவுள்ள “வேர்ல்ட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியத் தமிழ் திரைப்படமான “நல்லபடம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா எதிர்வரும் ஆகஸ்ட் 22ஆம் தேதி கொழும்பு போர்ட் சிட்டியில் நடைபெறவுள்ள “வேர்ல்ட் ஆஃப் ராவண்” இசைத் திருவிழாவின் பிரமாண்ட மேடையில் நடைபெறவுள்ளது.</p><p>இந்தியத் தமிழ் திரைப்படங்களின் இசை வெளியீட்டு நிகழ்வுகள் தமிழகத்திற்கு வெளியேயும் பல்வேறு நாடுகளில் நடைபெற்றுள்ள நிலையில், இந்தியத் தமிழ் திரைப்படம் ஒன்றின் இசை வெளியீட்டு விழா இலங்கையில் நடைபெறுவது குறிப்பிடத்தக்க நிகழ்வாக அமைந்துள்ளது.
</p><p>ஹரிஷ் சினிமாஸ் சார்பில் ஏ. அழகு பாண்டியன் தயாரிப்பில் உருவாகியுள்ள “நல்லபடம்” திரைப்படத்தில் டாக்டர் ஏ. ஹரிஷ் கதாநாயகனாகவும், தனலட்சுமி கதாநாயகியாகவும் நடித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/56c26e9e-5f91-4c65-af9c-fd4f7a3b3121/26-6a81c7396d656.webp' /></p><p>
</p><p>இவர்களுடன் மொட்டை ராஜேந்திரன், கல்கி ராஜா, ரமா, பிரியதர்ஷினி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
</p><p>‘கெட்டவன்னு பேரெடுத்த நல்லவன்டா’ திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் சி. பிரபுராம் “நல்லபடம்” திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
</p><p>இப்படத்திற்கு சகிஷ்னா சேவியர் இசையமைத்துள்ளார். பிரபல இலங்கை கவிஞரும் தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியருமான, ‘அய்யோ சாமி’ பாடல் மூலம் பரவலாக அறியப்பட்ட பொத்துவில் அஸ்மின் பாடல் வரிகளை எழுதியுள்ளார்.
</p><h2>நான்கு பாடல்கள் – முன்னணி பாடகர்கள்</h2><p>“நல்லபடம்” திரைப்படத்தில் நான்கு பாடல்கள் இடம்பெற்றுள்ளன. இப்பாடல்களுக்கு சகிஷ்னா சேவியர் இசையமைத்துள்ளார்.
&nbsp;</p><p>பாடல்களை வேல்முருகன், அருள்பிரகாஷம், புண்ணியா செல்வா, காயத்ரி ராஜீவ் மற்றும் சஷாங் ஆகியோர் பாடியுள்ளனர்.</p><p>மதுவை மையப்படுத்திய சமூகக் கருப்பொருளை நகைச்சுவை, காதல், உணர்வு மற்றும் சமூகச் செய்தி ஆகிய அம்சங்களுடன் இணைத்து “நல்லபடம்” திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><h2>இசை வெளியீட்டுக்கு திரையுலக வாழ்த்துகள்
</h2><p>“நல்லபடம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டை முன்னிட்டு இந்தியத் திரையுலகைச் சேர்ந்த நடிகர்கள், இயக்குநர்கள், பாடலாசிரியர்கள் மற்றும் பாடகர்கள் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
</p><p>இந்த இசை வெளியீட்டு விழா, இந்தியத் தமிழ் சினிமாவுக்கும் இலங்கைத் தமிழ் ரசிகர்களுக்கும் இடையிலான கலைத் தொடர்பை மேலும் வலுப்படுத்தும் முக்கிய நிகழ்வாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
</p><p>இலங்கை மண்ணில் “நல்லபடம்” திரைப்படத்தின் இசை பிரமாண்டமாக அறிமுகமாகும் இந்த நிகழ்வு, இந்தியா–இலங்கை தமிழ் கலை உறவில் புதிய அத்தியாயத்தை உருவாக்கும் என திரையுலகினர் எதிர்பார்க்கின்றனர்.&nbsp;</p><p><br></p>]]></content>
            <updated>2026-08-16T14:21:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[மால் திறப்பு விழாவுக்கு சேலையில் வந்த ஸ்ரீலீலா.. நடந்த சம்பவத்தால் அவரே ஆச்சர்யம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/sreeleela-at-mall-opening-function-1786889505"></link>
            <id>https://cineulagam.com/article/sreeleela-at-mall-opening-function-1786889505</id>
            <summary type="text">நடிகை ஸ்ரீலிலா தற்போது நேஷ்னல் சென்சேஷன் நடிகையாக வலம் வருகிறார். அவருக்கு இளம் ரசிகர்கள் மிகப்பெரிய அளவில் இருக்கிறார்கள்.தெலுங்கு சினிமாவை தாண்டி தற...</summary>
            <content type="html"><![CDATA[<p>நடிகை ஸ்ரீலிலா தற்போது நேஷ்னல் சென்சேஷன் நடிகையாக வலம் வருகிறார். அவருக்கு இளம் ரசிகர்கள் மிகப்பெரிய அளவில் இருக்கிறார்கள்.</p><p>தெலுங்கு சினிமாவை தாண்டி தற்போது ஹிந்தி, தமிழிலும் அவர் படங்கள் நடித்து ரசிகர்களை கவர தொடங்கி இருக்கிறார். மேலும் அவரது டான்ஸ்க்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது என்பது சொல்லி தெரிய வேண்டியது இல்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fe98537e-8fd9-45c2-b5c3-652a06395032/26-6a81c5237dafa.webp' /></p><p>
</p><h2>கடை திறப்பு விழா </h2><p>
இந்நிலையில் இன்று ஸ்ரீலிலா மால் திறப்பு விழா ஒன்றுக்காக சேலையில் அழகாக வந்திருந்தார். அவரை வரவேற்க செய்யப்பட்ட விஷயம் அவருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்து இருந்தது.
</p><p>மேலே இருந்து ட்ரோன் மூலமாக ஸ்ரீலீலா மீது பூக்களை தூவி இருக்கின்றனர். அதை பார்த்து அவரே ஆச்சர்யம் அடைந்து விட்டார். மேலும் ஸ்ரீலீலாவை நேரில் பார்ப்பதற்காக அதிக அளவில் ரசிகர்கள் கூடி இருந்ததால் பாதுகாப்புக்கு போலீசாரும் ஏராளமாக வந்திருந்தனர்.
</p><p>ஸ்ரீலீலா போலீசார் உடன் நின்று செல்பி எடுத்துக் கொண்டார். வீடியோக்களும் தற்போது வைரலாகி இருக்கிறது.&nbsp;</p><p><blockquote class="instagram-media" data-instgrm-permalink="https://www.instagram.com/reel/DcGKy2jxmdh/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/reel/DcGKy2jxmdh/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/reel/DcGKy2jxmdh/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by Hyderabad Mode (@hyderabadmode_yt)</a></p></div></blockquote> <script async src="//www.instagram.com/embed.js"></script></p>]]></content>
            <updated>2026-08-16T14:13:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நல்லூரின் தோரண வாசல் வளைவுகளில் நாட்டப்பட்டது சேவல் கொடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/nallur-kandaswamy-kovil-festival-1786888838"></link>
            <id>https://ibctamil.com/article/nallur-kandaswamy-kovil-festival-1786888838</id>
            <summary type="text">வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த
பெருந்திருவிழா நாளை (17) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள நிலையில், நல்லூரின்
முக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த
பெருந்திருவிழா நாளை (17) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள நிலையில், நல்லூரின்
முக்கிய தோரண வாசல் வளைவுகளில் சேவல் கொடி நாட்டும் நிகழ்வு இன்று (16)
சிறப்பாக இடம்பெற்றது.
</p><p>
இதன்படி, இன்று மதியம் 12 மணியளவில் நல்லூர் செம்மணியில் முதலாவது சேவல் கொடி
நாட்டப்பட்டது. தொடர்ந்து நல்லூரான் தெற்கு மற்றும் நல்லூரான் வடக்குவாசல்
வளைவுகளிலும் சேவல் கொடிகள் நாட்டப்பட்டன.
</p><p>
</p><h2>பக்தர்களின் கவனத்தை ஈர்த்த&nbsp;நிகழ்வு </h2><p>நல்லூர் கந்தனின் பெருந்திருவிழாவை வரவேற்கும் வகையிலும், ஆலயத்தின் வெளி
வீதிகள் திருவிழாக் கோலம் பூணும் வகையிலும் இடம்பெற்ற இந்நிகழ்வு பக்தர்களின்
கவனத்தை ஈர்த்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/19962acf-edd9-4852-90ad-1e0d5d881ad7/26-6a81c288c90f0.webp' /></p><p>
</p><p>
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி ஆலயத்தின் பெருந்திருவிழா நாளை காலை கொடியேற்றத்துடன்
ஆரம்பமாகவுள்ள நிலையில், நல்லூர் சுற்றுவட்டாரம் முழுவதும் பக்தி மற்றும்
திருவிழா உணர்வுடன் களைகட்டத் தொடங்கியுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-16T14:00:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiva</name>
            </author>
            <title type="text"><![CDATA[மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஏற்பட்ட விபத்து - இருவர் படுகாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/accident-during-motorcycle-race-in-nuwara-eliya-1786888443"></link>
            <id>https://tamilwin.com/article/accident-during-motorcycle-race-in-nuwara-eliya-1786888443</id>
            <summary type="text">நுவரெலியாவில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் இரு போட்டியாளர்கள் விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்து இன்று(16.08....</summary>
            <content type="html"><![CDATA[<p>நுவரெலியாவில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் இரு போட்டியாளர்கள் விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இந்த விபத்து இன்று(16.08.2026) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><h2>
போட்டியின் போது நேர்ந்த விபத்து</h2><p>
நுவரெலியா, பிளாக்பூல் மற்றும் மகஸ்தோட்டம் இடையே
நடைபெற்ற 400சிசி மோட்டார் சைக்கிள் பந்தயத்தின் போது ஏற்பட்ட விபத்தில்
இரண்டு மோட்டார் சைக்கிள் சாரதிகள் படுகாயமடைந்து நுவரெலியா மாவட்ட பொது
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/909af4c7-c155-4981-95c1-fd4d1f6eaabd/26-6a81c152769ee.webp' /></p><p>
</p><p>
நுவரெலியா மாநகர சபையும், கொழும்பில் உள்ள ஒரு தனியார் சங்கமும் இணைந்து(16)
மற்றும் (17) ஆம் திகதிகளில் நுவரெலியா - அம்பேவளை பிரதான வீதியில்
பிளாக்பூல் பாலத்தில் இருந்து தொடங்கி, செங்குத்தான மலைகள் மற்றும் வளைந்து
செல்லும் தேயிலைத் தோட்டங்கள் வழியாக மகஸ்தோட்டமம் வரை அடையும் ஒரு நேரக்
கணக்கீட்டுப் பந்தயத்தை(TIMING RACE) நடத்தி வருகின்றனர்.
</p><p>
இதில் (16)ஆம் திகதி இடம்பெற்ற பந்தயத்தில் பல போட்டியாளர்கள் பங்கேற்ற
நிலையில், நுவரெலியா பகுதியில் நிலவிய மோசமான வானிலை காரணமாக இரண்டு மோட்டார்
சைக்கிள்கள் சாலையை விட்டு விலகி தேயிலைத் தோட்டத்தில் விழுந்ததால் இந்த
விபத்து நிகழ்ந்ததாக நேர்ந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5d3c53c7-d354-440f-8d82-06d93320d514/26-6a81c1538c4f2.webp' /></p><p>


</p>]]></content>
            <updated>2026-08-16T13:56:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[மோட்டார் சைக்கிளில் சந்தைக்கு சென்ற தந்தைக்கும், மகனுக்கும் நேர்ந்த துயரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/motorcycle-rider-kills-father-and-son-1786886143"></link>
            <id>https://ibctamil.com/article/motorcycle-rider-kills-father-and-son-1786886143</id>
            <summary type="text">&amp;nbsp;மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த தந்தையும் மகனும் மின் கம்பத்தில் மோதியதில், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக கல்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த தந்தையும் மகனும் மின் கம்பத்தில் மோதியதில், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக கல்பிட்டிய காவல்தறையினர் தெரிவித்தனர்
</p><p>
மகனுடன் தேவையான பொருட்களை வீட்டிற்கு வாங்கி வர சந்தைக்குச் சென்றுகொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.</p><h2>தலைக்கவசம் அணியாததால் ஏற்பட்ட உயிரிழப்பு</h2><p>அவர்கள் இருவரும் தலைக்கவசம் அணியாததால், தலையில் ஏற்பட்ட பலத்த காயங்களே அவர்களின் மரணத்திற்குக் காரணமாக இருக்கலாம் என கல்பிட்டிய காவல்துறையினர் குறிப்பிட்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/09fddf91-e2a2-4a07-94a6-b6c484061920/26-6a81bd818c3db.webp' /></p><p>
</p><p>
உயிரிழந்தவர்கள் மீனவரான துஷ்மந்த ரோஹன மற்றும் அவரது ஆறு வயது பாடசாலை மாணவனான ரவீன் கனிஷ்கா ஆவர். அந்தச் சிறுவன் கந்தகுலியாவில் உள்ள புனித செபாஸ்டியன் பாடசாலையில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தான்.</p><p></p><p></p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-16T13:42:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Malaivanjan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொட்டகலை தொடருந்து வீதியின் புனர்நிர்மாண பணிகள் குறித்து வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/railway-track-reconstruction-work-completed-1786885689"></link>
            <id>https://tamilwin.com/article/railway-track-reconstruction-work-completed-1786885689</id>
            <summary type="text">கொட்டகலையில் சீரற்ற காலநிலையால் சேதமடைந்த தொடருந்து வீதி
தற்போது அறுபது சதவீதம் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக தொழிநுட்ப அதிகாரி அதுல விஜேசிங்க தெரிவித்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொட்டகலையில் சீரற்ற காலநிலையால் சேதமடைந்த தொடருந்து வீதி
தற்போது அறுபது சதவீதம் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக தொழிநுட்ப அதிகாரி அதுல விஜேசிங்க தெரிவித்தார். </p><p>சீரான காலநிலை தொடருமானால், எதிர்வரும் செப்டம்பர் 8ஆம் திகதியளவில் பணிகளை
முழுமையாக நிறைவு செய்து ஒப்படைக்க எதிர்பார்ப்பதாக அவர் இதன் போது மேலும்
தெரிவித்தார்.
</p><p>
மலையக தொடருந்து சேவையை மீண்டும் முழுமையாக வழமைக்கு கொண்டு வருவதற்கான
புனரமைப்பு பணிகள் தற்போது தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p><h2>சீரற்ற காலநிலை</h2><p>
</p><p>சீரற்ற காலநிலை மற்றும்
மண்சரிவு காரணமாக சேதமடைந்த தொடருந்து பாதையின் புனரமைப்பு பணிகள் கடந்த மே
மாதம் ஆரம்பிக்கப்பட்டன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/618b747e-b49f-4196-a7a7-8ebd6591bcfe/26-6a81bbcf4b2b2.webp' /></p><p>
</p><p>
எனினும், ஜூலை மாதம் முதல் நுவரெலியா மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்த கடும்
மழை காரணமாக பணிகளை திட்டமிட்ட வேகத்தில் முன்னெடுக்க முடியாத நிலை ஏற்பட்டது.
</p><p>
தற்போது சீரான காலநிலை நிலவி வருவதால், புனரமைப்பு பணிகள்
துரிதப்படுத்தப்பட்டுள்ளன.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-16T13:32:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தோனேசியாவில் பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம் - 5 ஆயிரம் பேர் இடம்பெயர்வு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/powerful-earthquake-recorded-in-indonesia-1786886296"></link>
            <id>https://tamilwin.com/article/powerful-earthquake-recorded-in-indonesia-1786886296</id>
            <summary type="text">இந்தோனேசியாவின் கிழக்கு பிராந்தியத்தில் இடம்பெற்ற சக்திவாய்ந்த நிலநடுக்கம்
காரணமாக இதுவரை குறைந்தது 51 பேர் உயிரிழந்துள்ளதுடன், சுமார் 5,000 பேர் வரை...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தோனேசியாவின் கிழக்கு பிராந்தியத்தில் இடம்பெற்ற சக்திவாய்ந்த நிலநடுக்கம்
காரணமாக இதுவரை குறைந்தது 51 பேர் உயிரிழந்துள்ளதுடன், சுமார் 5,000 பேர் வரை
இடம்பெயர்ந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
கிழக்கு நுசா தெங்காரா மாகாணத்தில் உள்ள புளோரஸ் தீவில் நேற்று(16.08.2026) அதிகாலை
7.7 மெக்னிடியூட் அளவில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.</p><h2>

341 தொடர் அதிர்வுகள்</h2><p>
நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, சுமார் 341 தொடர் அதிர்வுகள் பதிவாகியுள்ளதால்,
மக்கள் வீடுகளுக்குள் செல்ல அச்சமடைந்து தற்காலிக கூடாரங்களிலும்
திறந்தவெளிகளிலும் தங்கியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/49f6c8d7-0095-4d1e-9ab5-fba3b7e6760e/26-6a81b94b1f743.webp' /></p><p>

இந்த இயற்கை அனர்த்தத்தினால் 1,300க்கும் மேற்பட்ட வீடுகள் பலத்த
சேதமடைந்துள்ளதுடன், நிலச்சரிவு காரணமாகப் பல முக்கிய வீதிகள் தடை செய்யப்பட்டன.
</p><p>
இதனால் பாதிக்கப்பட்ட தொலைதூரப் பகுதிகளுக்கு மீட்புக் குழுவினர் செல்வதில்
பெரும் சிரமங்கள் ஏற்பட்டுள்ளன.
</p><h2>
அவசர நிலைப் பிரகடனம்</h2><p>
தற்போது வரை 36 பேர் தீவிர காயங்களுக்கும், 77 பேர் இலேசான காயங்களுக்கும்
உள்ளாகி மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/07c19760-f9bf-4613-a681-82ca06d20797/26-6a81b94c118f3.webp' /></p><p>
</p><p>
நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு ஹெலிகொப்டர்கள் மற்றும் படகுகள்
மூலம் அவசர உதவிப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன.
</p><p>
அத்துடன் நிலைமையைக் கட்டுப்படுத்தவும் மீட்புப் பணிகளை விரைவுபடுத்தவும்
சுமார் 3,500 இராணுவ மற்றும் பொலிஸ் பணியாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர்.
</p><p>
குறித்த பகுதியில் அவசர நிலையைப் பிரகடனப்படுத்துவது தொடர்பாக அதிகாரிகள்
ஆராய்ந்து வருகின்றனர்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-16T13:21:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[600 ஆளில்லா விமானங்கள் மூலம் ரஷ்யாவில் பெரும் தாக்குதலை நடத்திய உக்ரைன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/ukraine-launches-massive-attack-on-russia-1786884530"></link>
            <id>https://ibctamil.com/article/ukraine-launches-massive-attack-on-russia-1786884530</id>
            <summary type="text">&amp;nbsp; 600 ஆளில்லா விமானங்களைப் பயன்படுத்தி ரஷ்யா மீது உக்ரைன் ஒரு பெரும் தாக்குதலை நடத்தியதாக மேயர் செர்ஜி சோபியானின் தெரிவித்தார்.

இந்தத் தாக்குத...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; 600 ஆளில்லா விமானங்களைப் பயன்படுத்தி ரஷ்யா மீது உக்ரைன் ஒரு பெரும் தாக்குதலை நடத்தியதாக மேயர் செர்ஜி சோபியானின் தெரிவித்தார்.</p><p>

இந்தத் தாக்குதல் நேற்று இரவு (15) முதல் இன்று காலை (16) 6.30 மணி வரை நடைபெற்றது என்றும், ரஷ்யாவின் வான் பாதுகாப்பு அமைப்பு 201 ஆளில்லா விமானங்களை அழித்தது என்றும் அவர் கூறினார்.</p><h2>மொஸ்கோவில் நடத்தப்பட்ட தாக்குதல்</h2><p>மொஸ்கோவில் நடந்த இந்தத் தாக்குதலில் மூன்று பேர் காயமடைந்தனர், அதே நேரத்தில் உக்ரைன் எல்லைக்கு அருகிலுள்ள ரஷ்யாவின் ரோஸ்டோவ் பகுதியில் நடந்த தாக்குதல்களில் மூன்று பேர் கொல்லப்பட்டனர் மற்றும் ஒருவர் காயமடைந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/749ec543-84ad-41e5-9c6e-ec7495c95b89/26-6a81b5e30aa48.webp' /></p><p> </p><p>ரோஸ்டோவ் பிராந்தியத்தின் மூன்று நகரங்கள் மற்றும் ஒன்பது மாவட்டங்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல்களில், ரஷ்ய இராணுவத்தால் 150-க்கும் மேற்பட்ட ஆளில்லா விமானங்கள் மற்றும் ஏவுகணைகளை அழிக்க முடிந்தது.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-16T13:11:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கைக்கு எதிரான டெஸ்டில்..இந்திய அணி 460 ஓட்டங்கள் குவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/padikkal-167-runs-and-india-scored-460-day-2-1786885993"></link>
            <id>https://news.lankasri.com/article/padikkal-167-runs-and-india-scored-460-day-2-1786885993</id>
            <summary type="text">காலி டெஸ்டில் இந்திய அணி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 460 ஓட்டங்கள் குவித்தது.

காலியில் நடந்து வரும் இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்டில், இந்தியா 9 ...</summary>
            <content type="html"><![CDATA[<p>காலி டெஸ்டில் இந்திய அணி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 460 ஓட்டங்கள் குவித்தது.</p><p>

காலியில் நடந்து வரும் இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்டில், இந்தியா 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 460 ஓட்டங்கள் குவித்துள்ளது.&nbsp;&nbsp;</p><h2>கே.எல்.ராகுல் 82 ஓட்டங்கள்&nbsp;&nbsp;</h2><p>இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி காலியில் நடந்து வருகிறது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3cca0ca2-90fd-4a18-bf66-e049a78d382e/26-6a81b84db1b69.webp' />&nbsp;</p><p></p><p>
இரண்டாம் நாள் ஆட்டத்தைத் தொடங்கிய இந்திய அணி அணியில் ரிஷாப் பண்ட் 39 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.&nbsp;</p><p>அடுத்து மீண்டும் களத்திற்கு வந்த கே.எல்.ராகுல் 82 ஓட்டங்களுக்கு அவுட் ஆனார். 150 ஓட்டங்களைக் கடந்த தேவ்தத் படிக்கல் (Devdutt Padikkal) 167 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4f6170c0-701d-42d0-b49d-483557779401/26-6a81b84fbbeb4.webp' /></p><h2>இந்தியா 460 ஓட்டங்கள் </h2><p>
அதன் பின்னர் மானவ் சுதர் 24 ஓட்டங்களில் வெளியேற, அதிரடியில் மிரட்டிய துருவ் ஜூரேல் 51 ஓட்டங்கள் எடுத்தார்.
</p><p>
இந்திய அணி இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 460 ஓட்டங்கள் குவித்துள்ளது. 

&nbsp; &nbsp;</p><p>பிரபத் ஜெயசூரியா 4 விக்கெட்டுகளும், கேஷாரா நுவந்தா 3 விக்கெட்டுகளும், அசிதா பெர்னான்டோ ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.&nbsp; &nbsp; &nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1778c23f-14f9-4d74-be75-22819d56cfea/26-6a81b84cc2915.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/87ed6443-9b8a-4b4f-b50f-3526034a951a/26-6a81b84f17968.webp' />&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6c019431-289d-46d0-93b7-be4ca96253de/26-6a81b84e629b1.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-16T13:10:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை வாகன சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/police-action-against-vehicles-obstruct-bus-stops-1786878785"></link>
            <id>https://jvpnews.com/article/police-action-against-vehicles-obstruct-bus-stops-1786878785</id>
            <summary type="text">பேருந்து நிறுத்தங்களில் வாகனங்களை நிறுத்தி பொதுப் பேருந்துகளுக்கு இடையூறு விளைவிக்கும் வாகன ஓட்டுநர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் நிலையங்...</summary>
            <content type="html"><![CDATA[<p>பேருந்து நிறுத்தங்களில் வாகனங்களை நிறுத்தி பொதுப் பேருந்துகளுக்கு இடையூறு விளைவிக்கும் வாகன ஓட்டுநர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் நிலையங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.</p><p> 

பேருந்து நிறுத்தங்களில் நிறுத்தப்படும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு, பயணிகளின் பாதுகாப்பினை கேள்விக்கு உட்படுத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> 

சக்கர நாற்காலிகளைப் பயன்படுத்தும் பயணிகளை ஏற்றிச் செல்லும் வசதியுள்ள பேருந்துகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதால், இந்தப் பிரச்சினை மேலும் முக்கியமாக அவதானிக்கப்பட வேண்டிய இடத்தில் உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. </p><p>

அத்தகைய பேருந்துகள் பாதுகாப்பாக நிறுத்தப்படுவதற்கு ஏதுவாக, பேருந்து நிறுத்தங்கள் தடைகள் இன்றி இருக்க வேண்டும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

பேருந்து நிறுத்தங்கள் மற்ற வாகனங்களால் தடுக்கப்படும்போது, ​​மாற்றுத்திறனாளிகளும் மற்ற பயணிகளும் பேருந்துகளில் ஏறும்போதும் இறங்கும்போதும் அபாயகரமான சூழ்நிலைகளை எதிர்கொள்ள நேரிடலாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/12baadd2-8e71-44db-a626-6a039193ab5f/26-6a819b42b4c70.webp' /></p><p> </p><p>

ஒரு சிறப்பு அரசாங்க வர்த்தமானி அறிவிப்பின்படி, பேருந்து நிறுத்தத்தை அணுகும் இடத்திலிருந்து 30 மீட்டருக்குள்ளும், வெளியேறும் இடத்திலிருந்து 15 மீட்டருக்குள்ளும் வாகனங்கள் நிறுத்தப்படுவது தடைசெய்யப்பட்டுள்ளது.</p><p>

பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதையும், பேருந்துகள் நிறுத்தப்பட்டு பயணிகள் பாதுகாப்பாக ஏறி இறங்குவதை அனுமதிப்பதையும் நோக்கமாகக் கொண்டு, பேருந்து நிறுத்தங்களை மறிக்கும் ஓட்டுநர்களுக்கு எதிராக சம்பந்தப்பட்ட சட்டங்களை நடைமுறைப்படுத்துமாறு அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். </p><p>

மேலும், வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களை முறையாக நிறுத்துமாறும், பேருந்துகள் செல்வதற்கு ஏதுவாக நிறுத்தங்களை தடையின்றி வைத்திருக்குமாறும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.&nbsp;</p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-16T13:07:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[அநுரவிடம் இருக்கும் அதிகாரம்! ஜனாதிபதிக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/warning-issued-to-president-anura-1786879031"></link>
            <id>https://jvpnews.com/article/warning-issued-to-president-anura-1786879031</id>
            <summary type="text">159 பெரும்பான்மை ஆசனங்கள் இருக்கின்றன என்ற அகந்தையில் செயற்பட வேண்டாம். மரணம் வரை அதிகாரம் நிலைத்திருக்காது என்று பத்தரமுல்லே சீலரத்ன தேரர் ஜனாதிபதி அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>159 பெரும்பான்மை ஆசனங்கள் இருக்கின்றன என்ற அகந்தையில் செயற்பட வேண்டாம். மரணம் வரை அதிகாரம் நிலைத்திருக்காது என்று பத்தரமுல்லே சீலரத்ன தேரர் ஜனாதிபதி அநுர குமார மற்றும் அவர் தலைமையிலான அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். </p><p>

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தினரின், ஜனாதிபதியுடனான சந்திப்புக் குறித்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
</p><p>
தொடர்ந்தும் தெரிவிக்கையில், </p><p>

நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை அதிகரிப்பது தொடர்பில் அண்மையில், இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தினருக்கும், ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றது.</p><p>இந்த சந்திப்பில், ஜனாதிபதி பேசிய விடயங்களை மட்டுமே ஜனாதிபதி ஊடகப் பிரிவு மக்களுக்கு வெளிக்காட்டியுள்ளது.</p><p>ஆனால், இந்த சந்திப்பில், சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் மற்றும் பிரதிநிதிகள் முன்வைத்த கருத்துக்களை மக்களுக்கு வெளிப்படுத்தாது ஜனாதிபதி ஊடகப் பிரிவு மூடி மறைத்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a664eeb3-862d-4752-8e10-49c1c3d37c6d/26-6a819c38c120d.webp' /></p><p>ஜனாதிபதியை மட்டும் போற்றிப் புகழும் இந்த அதிகாரிகளால், மக்களிடத்தில் விமர்சனத்திற்கு உள்ளாவது ஜனாதிபதியே ஆகும்.

எனவே, ஜனாதிபதி அநுர குமார தன்னைச் சுற்றியுள்ள அதிகாரிகள் குறித்து மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம்.</p><p>நாட்டின் தற்போதைய நிலையில், நீதபதிகளின் பதவிக் காலத்தை நீடிப்பது அவசியமற்றது.</p><p>அரசியலமைப்பின் 22ஆவது திருத்தம் கொண்டுவரப்படவுள்ளது. 

எதிர்வரும் 18ஆம் திகதி நாடாளுமன்றத்திற்கு இந்த சட்டமூலம் வருகின்றது. இதற்கு ஆளும் தரப்பினரும் கை உயர்த்தக் கூடாது.</p><p>மனச்சாட்சிக்கு விரோதமாகச் செயற்பட விரும்பாதவர்கள், 18ஆம் திகதி விடுமுறை எடுத்துக் கொண்டு மண்வெட்டியோடு தங்களுடைய வயலுக்குச் சென்று விவசாய வேலையாவது செய்யுங்கள்.</p><p>

அதைவிடுத்து 159 பெரும்பான்மை இருக்கின்றது என்ற அகந்தையில் செயற்பட வேண்டாம். மரணம் வரையில் அதிகாரம் நிலைத்திருக்காது என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-16T13:06:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[டுபாயிலிருந்து வரும் உத்தரவில் போதைப்பொருள் கடத்தல் - இரகசிய தகவலில் சிக்கிய கும்பல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/fake-vehicle-number-plates-arrested-with-crime-1786866895"></link>
            <id>https://tamilwin.com/article/fake-vehicle-number-plates-arrested-with-crime-1786866895</id>
            <summary type="text">&amp;nbsp;கொலைகளுக்கு பயன்படுத்தப்பட்ட பல்வேறு வாகனங்களின் போலி ஆவணங்களுடன் குற்றக்கும்பல் உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

போலிப்பதிவுத்தகடு...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கொலைகளுக்கு பயன்படுத்தப்பட்ட பல்வேறு வாகனங்களின் போலி ஆவணங்களுடன் குற்றக்கும்பல் உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>

போலிப்பதிவுத்தகடுகள், காப்பீட்டுச்சான்றிதழ்கள் மற்றும் வருமான சான்றிதழ்களை மறைத்து வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><h2>போதைப்பொருள் கடத்தல்&nbsp;</h2><p>
</p><p>
சந்தேகநபருடன், 2 மோட்டார் சைக்கிள்கள், 4 கார்கள், 5 லொரிகள் மற்றும் 2 முச்சக்கர வண்டிகளுக்குச் சொந்தமான போலிப் பதிவுத் தகடுகள், பதிவு எண்களை போல இருக்கும் போலி வருமான சான்றிதழ்கள் மற்றும் காப்பீட்டுச்சான்றிதழ் அட்டைகள், அத்துடன் 5400 மில்லிகிராம் 'ஐஸ்' போதைப்பொருள் ஆகியன பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c502b117-0a5a-4306-b7f5-49123013ceae/26-6a81751a28f01.webp' /></p><p>
</p><p>
டுபாயிலிருந்து நாட்டில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களில் ஈடுபட்டு வரும் டுபாய் சுத்தா மற்றும் அவரது சகோதரர் தங்களது வீட்டில் 'ஐஸ்' போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு வருவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், பொலிஸார் நடத்திய சோதனையில் போதைப்பொருளுடன் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
சந்தேகநபர் வசித்து வந்த வீட்டில் பொலிஸார் நடத்திய முழுமையான சோதனையின் போது, ​​கட்டிலுக்கு அடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சட்டவிரோத போலி வாகன பதிவுத்தகடுகளையும் பிற ஆவணங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
</p><p>
சந்தேகநபரிடம் விசாரணை நடத்தியபோது, ​​தேவைப்படும்போது பெற்றுக்கொள்ளலாம் என்று கூறி, டுபாய் சுத்தா இந்த ஆவணங்களை அனுப்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-16T12:53:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Keethan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவிலிருந்து தாயகத்துக்கு திரும்பிய ஈழப் பிரஜைக்கு நேர்ந்த விபரீதம்..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/man-from-canada-drowned-in-the-ocean-1786884513"></link>
            <id>https://tamilwin.com/article/man-from-canada-drowned-in-the-ocean-1786884513</id>
            <summary type="text">கனடாவில் இருந்து நாடு திரும்பிய ஈழப் பிரஜையொருவர் முல்லைத்தீவு
நாயாற்று கடலில் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் இன்று(16.08.2026) இடம்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவில் இருந்து நாடு திரும்பிய ஈழப் பிரஜையொருவர் முல்லைத்தீவு
நாயாற்று கடலில் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
</p><p>
இந்த சம்பவம் இன்று(16.08.2026) இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2> 

நண்பர்களுடன் கடலுக்கு சென்ற நபர்</h2><p>மேலும் தெரியவருகையில்,
</p><p>
யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாக கொண்ட இளைஞர் ஒருவர், கனடாவில் இருந்து வந்து இரண்டு நாட்கள் வருகை தந்துள்ளார்.
</p><p>
இவர், அவருடைய 5 நண்பர்களுடன் முல்லைத்தீவினை சுற்றிப்பார்பதற்காக சென்றுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3a3ab7b0-4750-4f55-b015-3b53714651ce/26-6a81b25e9e16d.webp' /></p><p>
</p><p>
 
இந்த நிலையில் நண்பகல் அளவில் நாயாற்று பகுதிக்கு நண்பர்களுடன் குளிக்க சென்ற வேளையில், கடலில் முழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.</p><h2>சடலம் மீட்பு</h2><p> </p><p>

இவ்வாறு உயிரிழந்தவர், 51 சதீசன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
</p><p>
</p><p>உயிரிழந்தவர் அருகில் நின்றவர்களின் உதவியுடன் மீட்கப்பட்டுள்ளதுடன்,
இவரது உடலம் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
</p><p>
சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-16T12:51:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாருமில்லாத 1960-களின் குடியிருப்பில் வசிக்கும் நபர்: வெளியேற மறுப்பு..கூறும் காரணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/last-man-in-abandoned-1960s-estate-refuse-exit-1786878994"></link>
            <id>https://news.lankasri.com/article/last-man-in-abandoned-1960s-estate-refuse-exit-1786878994</id>
            <summary type="text">பிரித்தானியாவில் 1960-களில் கட்டப்பட்ட, கைவிடப்பட்ட நிலையில் உள்ள ஒரு குடியிருப்புப் பகுதியில் ஒரு நபர் மட்டும் வெளியேற மறுத்துள்ளார்.

பிரித்தானியா...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரித்தானியாவில் 1960-களில் கட்டப்பட்ட, கைவிடப்பட்ட நிலையில் உள்ள ஒரு குடியிருப்புப் பகுதியில் ஒரு நபர் மட்டும் வெளியேற மறுத்துள்ளார்.</p><p>

பிரித்தானியாவின் கிரேட்டர் மான்செஸ்டர் பகுதியில், 1960-களில் கட்டப்பட்ட, கைவிடப்பட்ட நிலையில் உள்ள ஒரு குடியிருப்புப் பகுதியில் எஞ்சியிருக்கும் ஒரே நபர், இடிக்கப்படவிருக்கும் தனது வீட்டைவிட்டு வெளியேற மறுத்துவிட்டார்.&nbsp;</p><h2>1960-களில் கட்டப்பட்ட குடியிருப்புகள்</h2><p>

கிரேட்டர் மான்செஸ்டரின் ரோச்டேலில் உள்ள Lower Falinge குடியிருப்புப் பகுதியில், 1960-களில் கட்டப்பட்ட குடியிருப்புகள் இடிக்கப்பட உள்ளன.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1e3f8a79-b77b-4be2-93da-e368a26f259c/26-6a819c1575900.webp' />&nbsp;</p><p></p><p> 

RBH என்ற நிறுவனம் அந்தக் கட்டிடங்களை இடித்துவிட்டு, அங்கு 270 புதிய வீடுகளைக் கட்டத் திட்டமிட்டுள்ளது. 

அங்குள்ள 7 கட்டிடங்களில் ஆறு ஏற்கனவே ஆள் நடமாட்டமின்றி வெறிச்சோடிக் கிடக்கின்றன. இதனால் மொத்தம் 126 வீடுகள் இடிக்கப்பட உள்ளன. </p><p>

ஆனால், அவற்றில் ஒன்றான Zedburgh கட்டிடத்தில் 51 வயதான ஆண்டி ரோச் என்ற நபர் வசிக்கிறார். இங்கிருக்கும் கடைசி நபரான இவரின் ஒற்றை படுக்கையறை கொண்ட வீடு மட்டுமே தற்போது பயன்பாட்டில் உள்ளது.</p><h2>28 ஆண்டுகளாக அந்தக் குடியிருப்பில்
</h2><p>
கடந்த 28 ஆண்டுகளாக அந்தக் குடியிருப்பில் வசித்து வரும் வேலையில்லாத நபரான ரோச் அங்கிருந்து நகர மறுத்துவிட்டார். </p><p>

தானும் தன் துணையும் ஆட்டிசம் பாதிப்புக்குள்ளானவர்கள் என்று குறிப்பிடும் ரோச், "நாங்கள் இந்த இடத்தை விட்டு வெளியேற விரும்பவில்லை; என் பெற்றோரின் வீட்டை விட்டு வந்ததிலிருந்து என் வாழ்நாள் முழுவதும் நான் வாழ்ந்த இடம் இதுதான்" என்கிறார். </p><p>

தன்னைச் சுற்றியுள்ள நடைபாதைகள் வெறிச்சோடிக் கிடந்தாலும், சன்னல்கள் பலகைகளால் மூடப்பட்டிருந்தாலும், அங்கு வாழ்வதை இன்னும் விரும்புவதாக அவர் உறுதியாகக் கூறுகிறார்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/845465dd-548b-4f1f-beca-fd1620d21936/26-6a819ce8598ed.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-16T12:51:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[அவதானத்துடன் செயற்படவும்! சூரிய வெப்பத்தில் நேரடியாகச் செயற்படுபவர்களுக்கு அவசர எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/extreme-heat-can-cause-accidents-urgent-warning-1786882178"></link>
            <id>https://tamilwin.com/article/extreme-heat-can-cause-accidents-urgent-warning-1786882178</id>
            <summary type="text">அதிக வெப்பநிலை நிலவும் இடங்களுக்கு பயணம் செய்யும் போதும், சூரிய வெப்பத்தில் நேரடியாகச் செயற்படும் போதும் மயக்கம், தலைச்சுற்றல், தசைப்பிடிப்பு, தலைவலி ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அதிக வெப்பநிலை நிலவும் இடங்களுக்கு பயணம் செய்யும் போதும், சூரிய வெப்பத்தில் நேரடியாகச் செயற்படும் போதும் மயக்கம், தலைச்சுற்றல், தசைப்பிடிப்பு, தலைவலி மற்றும் பார்வைக் கோளாறுகள் ஏற்படக்கூடும் என விசேட மருத்துவர் சமல் சஞ்சீவ எச்சரிக்கை விடுத்துள்ளார். </p><p>

தற்போது நிலவி வரும் அதிக வெப்பத்துடன் கூடிய வானிலை காரணமாக பல்வேறு உடல்நல கோளாறுகள் ஏற்படக்கூடும் என்பதால் பொதுமக்கள் மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><h2>போதுமான அளவு நீர் அருந்துதல்</h2><p>
</p><p>
அவர் மேலும் தெரிவிக்கையில், பரீட்சைகளுக்குச் செல்லும் மாணவர்களுக்குப் பெற்றோர் போதுமான அளவு சுத்தமான குடிநீரைக் கொடுத்து அனுப்ப வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e96037f0-6d0c-4a19-bcab-7462b90c3cdf/26-6a81af115a066.webp' /></p><p> </p><p>

அதிக வெப்பநிலை காரணமாக பரீட்சை மண்டபங்களில் மாணவர்களுக்கு அதிகளவிலான வியர்வை, மயக்கம், தலைச்சுற்றல், குமட்டல், வாந்தி, கடுமையான தலைவலி மற்றும் தசைப்பிடிப்பு போன்றவை ஏற்பட வாய்ப்புள்ளது. </p><p>

எனவே, பரீட்சை நிலையங்களில் மாணவர்களுக்குக் காற்றோட்டமான சூழலை ஏற்படுத்திக் கொடுப்பது அவசியமாகும்.</p><h2>ஏற்படக்கூடிய பாதிப்புகள்</h2><p>
</p><p>
அதிக வெப்பநிலை நிலவும் இடங்களுக்கு பயணம் செய்யும் போதும், சூரிய வெப்பத்தில் நேரடியாகச் செயற்படும் போதும் மயக்கம், தலைச்சுற்றல், தசைப்பிடிப்பு, தலைவலி மற்றும் பார்வைக் கோளாறுகள் ஏற்படக்கூடும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c81ed886-3b5e-4bef-a0de-268a20d6b47d/26-6a81af122039f.webp' /></p><p> 

வெயிலில் நீண்டநேரம் நேரடியாக இருப்பதைத் தவிர்ப்பது நல்லது; அவ்வாறு செய்யாத பட்சத்தில் இதய நோய் தொடர்பான பாதிப்புகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
</p><p>
மேலும், அதிக வெப்பநிலை காரணமாக மன அழுத்தம், அதிக கோபம் மற்றும் வன்முறை எண்ணங்கள் ஏற்படக்கூடும்.

வாகனம் செலுத்துபவர்களுக்கு விபத்துகள் ஏற்படும் அபாயமும் அதிகம் என்பதால் கவனமாக இருக்குமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-16T12:46:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[350-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தும் இப்படி ஒரு நிலை: மன்சூர் அலிகான் ஆதங்கம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/mansoor-ali-khan-angry-over-deleted-karuppu-scenes-1786882762"></link>
            <id>https://manithan.com/article/mansoor-ali-khan-angry-over-deleted-karuppu-scenes-1786882762</id>
            <summary type="text">mansoor ali khan: சூர்யா நடிப்பில், ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் கடந்த மே மாதம் வெளியான ‘கருப்பு’ திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப...</summary>
            <content type="html"><![CDATA[<p>mansoor ali khan: சூர்யா நடிப்பில், ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் கடந்த மே மாதம் வெளியான ‘கருப்பு’ திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தில் நடிகர் மன்சூர் அலிகானும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஆனால், தான் நடித்த பல காட்சிகள் படத்திலிருந்து நீக்கப்பட்டதாக அவர் தற்போது அதிருப்தி தெரிவித்துள்ளார்.</p><h2>மன்சூர் அலிகான் வருத்தம்</h2><p>

சென்னை வடபழனியில் கடந்த ஆகஸ்ட் 14-ஆம் தேதி நடைபெற்ற ‘ஆல் பாஸ்’ திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட மன்சூர் அலிகான், இதுகுறித்து தனது வேதனையை வெளிப்படையாகப் பகிர்ந்துகொண்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0ea574c4-c332-41fe-b83f-aa798a3d151c/26-6a81b00324206.webp' /></p><p></p><p>
</p><p>
அவர் கூறுகையில், ‘கருப்பு’ படத்துக்காக தான் கடினமாக உழைத்து நடித்த காட்சிகள் இருட்டடிப்பு செய்யப்பட்டுவிட்டதாகவும், குறிப்பாக ‘நாங்க நாலு பேரு’ பாடலுக்காக மிகவும் சிரமப்பட்டு நடனமாடியதாகவும் தெரிவித்தார். </p><p>நேரமின்மை காரணமாக அந்தக் காட்சிகள் படத்தில் இடம்பெறவில்லை என்றும், பின்னர் அவற்றை யூடியூபில் வெளியிடுவதாக தயாரிப்பாளர் தெரிவித்திருந்ததாகவும் அவர் கூறினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/602af0ac-17d3-492a-b415-f94978677fa8/26-6a81b003da0cc.webp' /></p><p> </p><p>ஆனால், இதுவரை அந்தக் காட்சிகள் வெளியாகவில்லை என்றும், அதுகுறித்து கேட்டபோது பொறுப்பற்ற பதில் கிடைத்ததாகவும் மன்சூர் அலிகான் குற்றஞ்சாட்டினார்.
</p><p>
“350-க்கும் மேற்பட்ட படங்களில் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறேன். தயாரிப்பாளராகவும் இருந்திருக்கிறேன். இத்தனை ஆண்டுகால அனுபவம் கொண்ட என்னை ஒரு காட்சியில் வெறுமனே நிற்க வைத்து வேடிக்கை பார்த்திருக்கிறார்கள்” என தனது ஆதங்கத்தை அவர் வெளிப்படுத்தினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1af2c467-ce04-431a-a2d1-5a886f89e7ea/26-6a81b0048e590.webp' /></p><p></p><p>
</p><p>
மேலும், இன்றைய திரைப்படங்களில் சில ஹீரோக்கள் வெறும் ‘பில்டப்’ காட்சிகளின் மூலமே தங்களது பயணத்தைத் தொடர்வதாக விமர்சித்த மன்சூர் அலிகான், “நான் யாரிடமும் பிச்சை எடுக்கவில்லை; எனது உழைப்பால் உயர்ந்தவன்” என்றும் காட்டமாகத் தெரிவித்த காணொளி தற்போது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW&nbsp;</a></u></b></td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-16T12:41:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் நடிகை த்ரிஷாவின் சமீபத்திய போட்டோஷூட்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/trisha-recent-saree-photos-1786877599"></link>
            <id>https://viduppu.com/article/trisha-recent-saree-photos-1786877599</id>
            <summary type="text">சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருப்பவர் நடிகை த்ரிஷா. புகைப்படங்கள் அல்லது ஸ்டோரீஸ் என தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் பதிவு செய்து வருகிறார்.

இவர் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருப்பவர் நடிகை த்ரிஷா. புகைப்படங்கள் அல்லது ஸ்டோரீஸ் என தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் பதிவு செய்து வருகிறார்.</p><p>

இவர் வெளியிடும் ஸ்டோரீஸ் இணையத்தில் நெட்டிசன்கள் மத்தியில் பரவலாக பேசப்படுகின்றன.</p><p>அதுவும் சமீபகாலமாக இவர் வெளியிடும் பதிவுகள் அனைத்தும் உடனடியாகவே வைரலாகிவிடுகின்றன. 

80-வது சுதந்திர தின விழாவில் நடிகை த்ரிஷா பங்கேற்றிருந்தார்.</p><p>அப்போது அவர் அணிந்திருந்த புடவை ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. 

இந்நிலையில், அந்த புடவையில் எடுத்துக்கொண்ட போட்டோஷூட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் த்ரிஷா. இதோ பாருங்க:</p>]]></content>
            <updated>2026-08-16T12:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமைதியை இழந்த பலாலி மக்கள் - வீதிக்கிறங்கி போராட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/palali-residents-protest-over-loss-of-peace-1786881027"></link>
            <id>https://tamilwin.com/article/palali-residents-protest-over-loss-of-peace-1786881027</id>
            <summary type="text">தமது பூர்வீக காணிகளை விடுவிக்குமாறு கோரி அமைதிவழியில் தொடர்ந்து
போராடி வரும் வலி. வடக்கு - பலாலி மக்கள் தமது போராட்ட வடிவத்தை மாற்றி
வீதிக்கிறங்கியு...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமது பூர்வீக காணிகளை விடுவிக்குமாறு கோரி அமைதிவழியில் தொடர்ந்து
போராடி வரும் வலி. வடக்கு - பலாலி மக்கள் தமது போராட்ட வடிவத்தை மாற்றி
வீதிக்கிறங்கியுள்ளனர்.</p><p>

 குறித்த பகுதி மக்கள் இன்று(16.08.2026) வீதிக்கிறங்கி தமது வலிகளையும் கோரிக்கைகளையும் வெளிப்படுத்தி இருந்தனர்.</p><h2>வீதிக்கிறங்கி&nbsp;போராட்டம் </h2><p>
</p><p>


உயர் பாதுகாப்பு வலயம் என்ற பெயரில் இராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள்
கொண்டுவரப்பட்ட தமது பூர்வீக நிலங்கள் இதுவரை முழுமையாக மீள வழங்கப்படவில்லை என தெரிவித்து, பலாலி மக்கள் தொடர்ச்சியாக போராட்டங்களை முன்னெடுத்து
வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/18db5d6b-f09a-4667-ab32-678af14e0082/26-6a81a8d474110.webp' /></p><p>
</p><p>
இந்த நிலையில், இன்று 9ஆவது வாரமாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டதுடன், கடந்த
வாரம் அறிவித்திருந்தபடி மக்கள் தமது போராட்ட வடிவத்தை மாற்றி வீதிக்கு
இறங்கியுள்ளனர்.
</p><p>
பலாலி - செபஸ்தியர் ஆலயம் அமைந்துள்ள பகுதியிலிருந்து கறுப்பு உடையணிந்து,
கறுப்புக் கொடிகளை ஏந்தியவாறு ஊர்வலமாக புறப்பட்ட போராட்டக்காரர்கள், பலாலி
சந்தியை சென்றடைந்துள்ளனர். 

அங்கு வீதிச் சோதனை சாவடிக்கு முன்பாக ஒன்றுகூடி,
தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி கோஷங்களை எழுப்பியவாறு போராட்டத்தை
வலுப்படுத்தியுள்ளனர்.</p><h2>போராட்டக் களத்தில் சற்று பதற்றம்</h2><p>
</p><p>
இதன்போது, தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி போராட்டக்காரர்கள் பொலிஸாருடன்
சிறிது நேரம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், போராட்டக் களத்தில் சற்று பதற்றமான
சூழல் ஏற்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/36aec62b-fde8-4d86-b2b4-7a01bcdeb17f/26-6a81a8d54b719.webp' /></p><p>
எனினும், போராட்டக்காரர்கள் அமைதியை கடைப்பிடித்து தமது போராட்டத்தை தொடர்ந்து
முன்னெடுத்துள்ளதுடன், வழமையான நேரம் வரை போராட்டக் களத்தில் நிலைத்திருந்தனர்.
</p><p>
பல ஆண்டுகளாக அமைதிவழியில் போராடி வரும் பலாலி மக்களின் போராட்ட வடிவம்
தற்போது படிப்படியாக மாறி வருகின்றது. தமது பூர்வீக நிலங்களை மீளப்பெறும் வரை
போராட்டத்தை தொடரப் போவதாகவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.&nbsp; &nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-16T12:28:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் கார் கொள்ளையுடன் தொடர்புடைய இளைஞர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/nb-rcmp-arrest-wanted-man-accused-of-assault-1786880260"></link>
            <id>https://canadamirror.com/article/nb-rcmp-arrest-wanted-man-accused-of-assault-1786880260</id>
            <summary type="text">கனடாவின் நியூ பிரன்சுவிக் மாகாணத்தில் பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பாகப் பொலிஸாரால் தேடப்பட்டு வந்த 25 வயதுடைய இளைஞர் ஒருவரைக் கனடிய அரச காவல்துறை கை...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் நியூ பிரன்சுவிக் மாகாணத்தில் பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பாகப் பொலிஸாரால் தேடப்பட்டு வந்த 25 வயதுடைய இளைஞர் ஒருவரைக் கனடிய அரச காவல்துறை கைது செய்துள்ளது.</p><p>
நிக்கோலஸ் கெல்லி என்ற இந்த நபரை ரிச்சிபுக்டோ பகுதியில் பொலிஸார் தீவிரமாகத் தேடி வந்தனர். அவர் கடைசியாக ஆகஸ்ட் 4 ஆம் திகதி கென்ட் கவுண்டியில் காணப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
</p><p>கைது செய்யப்பட்ட 25 வயதான நிக்கோலஸ் கெல்லி மீது, ஆட்களைத் தாக்குதல், ஓட்டுநர் உரிமம் இடைநிறுத்தப்பட்ட நிலையில் வாகனம் ஓட்டுதல், வாகனத் திருட்டு உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f2b134ad-a959-4ac8-8325-3dc35edd111a/26-6a81a1068e183.webp' /></p><p>
சந்தேகநபர் எந்த இடத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டார் என்ற விவரங்களைப் பொலிஸார் வெளியிடவில்லை.</p><p>
எனினும், சந்தேகநபரைப் பிடிப்பதற்குத் தேவையான தகவல்களை வழங்கி உதவிய பொதுமக்களுக்குச் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் பொலிஸார் தமது நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-16T12:23:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[822 உக்ரேனிய ட்ரோன்களை சுட்டு வீழ்த்திய ரஷ்யப் படை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/russia-says-their-defense-downed-822-drones-1786882942"></link>
            <id>https://news.lankasri.com/article/russia-says-their-defense-downed-822-drones-1786882942</id>
            <summary type="text">உக்ரைனின் 822 ட்ரோன்களை நாடு முழுவதும் சுட்டு வீழ்த்தியதாக, ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.மாஸ்கோ பிராந்தியத்தின் மீது உக்ரைன் தாக்குத...</summary>
            <content type="html"><![CDATA[<p>உக்ரைனின் 822 ட்ரோன்களை நாடு முழுவதும் சுட்டு வீழ்த்தியதாக, ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.</p><p>மாஸ்கோ பிராந்தியத்தின் மீது உக்ரைன் தாக்குதல் நடத்திய நிலையில், 822 ட்ரோன்களை நாடு முழுவதும் சுட்டு வீழ்த்தியதாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.&nbsp;</p><h2>மாஸ்கோ&nbsp;மீது மிகப்பெரிய தாக்குதல்&nbsp;</h2><p> 

ஞாயிற்றுக்கிழமை இரவு ரஷ்யாவின் மாஸ்கோ பிராந்தியத்தின் மீது உக்ரேனிய ட்ரோன்கள் தாக்குதல் நடத்தின.&nbsp;</p><p>&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/50d379e9-db98-4574-a9af-6e192d281f79/26-6a81ab8147f3a.webp' /></p><p>
இது மாஸ்கோ பிராந்தியத்தின் மீது நடத்தப்பட்ட மிகப்பெரிய தாக்குதல்களில் இதுவும் ஒன்று என்று கூறப்பட்டுள்ளது.</p><p>

ரஷ்யாவின் மிகப்பெரிய ஒன்லைன் வர்த்தக நிறுவனமான Wildberries-க்கு சொந்தமான கிடங்கு தாக்கப்பட்ட Podolsk நகரில் 83 வயது முதியவர் ஒருவர் உயிரிழந்தார். </p><h2>

822 உக்ரேனிய ட்ரோன்கள்</h2><p>மேலும், பலர் காயமடைந்ததாகவும் மாஸ்கோ பிராந்தியத்தின் ஆளுநர் ஆண்ட்ரி வெரோபியோவ் தனது டெலிகிராம் பதிவுகளில் தெரிவித்துள்ளார். </p><p>

அத்துடன் மாஸ்கோவின் முக்கிய விமான நிலையங்களில் ஒன்றுக்கு அருகில் உள்ள டெமோடெடோவோ நகரில் உள்ள கிடங்கு உட்பட, வேறு பல இடங்களிலும் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
</p><p>
இதற்கிடையில், நாடு முழுவதும் 822 உக்ரேனிய ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியதாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/da449382-ae81-40c1-ac5d-e2d2bc33b29f/26-6a81ab829e07e.webp' />&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a86a0d12-3758-4bb6-8e12-87db5ff9086c/26-6a81ab81ec62f.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-16T12:20:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீதித்துறை விவகாரங்களில் ஜனாதிபதி யாரைக் கலந்தாலோசிக்கிறார்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/namal-slams-anura-1786879906"></link>
            <id>https://jvpnews.com/article/namal-slams-anura-1786879906</id>
            <summary type="text">நீதித்துறையின் செயற்பாடுகள் மற்றும் அதன் வரம்பெல்லைகள் தொடர்பாக ஜனாதிபதி ஆலோசனை பெற்றுக்கொண்டதாகக் கூறப்படும் சிரேஷ்ட நிபுணர்கள் மற்றும் சட்ட வல்லுநர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீதித்துறையின் செயற்பாடுகள் மற்றும் அதன் வரம்பெல்லைகள் தொடர்பாக ஜனாதிபதி ஆலோசனை பெற்றுக்கொண்டதாகக் கூறப்படும் சிரேஷ்ட நிபுணர்கள் மற்றும் சட்ட வல்லுநர்கள் யார் என்பதை நாட்டுக்கு வெளிப்படுத்த வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார்.</p><p>
நெலும் மாவத்தையில் அமைந்துள்ள கட்சித் தலைமையகத்தில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
</p><p>நீதித்துறையின் சுயாதீனம் மற்றும் சீர்திருத்தங்கள் தொடர்பாக எடுக்கப்படும் தீர்மானங்கள் குறித்து பல்வேறு தரப்பினரின் அவதானமும் திரும்பியுள்ள பின்னணியில், இந்தச் செயற்பாடுகள் மிகவும் வெளிப்படைத்தன்மையுடன் நடைபெற வேண்டும் என அவர் சுட்டிக்காட்டினார்.
</p><p>நீதித்துறை அமைப்பில் காணப்படும் வெற்றிடங்களை நிரப்புவது மற்றும் கட்டமைப்பு ரீதியிலான மாற்றங்களை மேற்கொள்வது குறித்து கருத்துத் தெரிவித்த நாமல் ராஜபக்ஷ, இத்துறையில் நீண்டகால அனுபவம் கொண்ட பல நிபுணர்கள் நாட்டிலிருப்பதாகச் சுட்டிக்காட்டினார்.
</p><p>இத்தகைய சீர்திருத்தங்களின் போது இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் காமன்வெல்த் மற்றும் பிராந்திய சட்ட அமைப்புகளின் பிரதிநிதிகளின் கருத்துகளைக் கருத்தில் கொள்வது மிகவும் முக்கியமானது என்றும் அவர் குறிப்பிட்டார்.</p><p>
 அத்துடன், ஜனாதிபதிக்கும் சட்டத்தரணிகள் சங்கத்திற்கும் இடையிலான சந்திப்புகள் குறித்த தகவல்களை ஊடகங்களுக்கு வெளியிடும் போது, இரு தரப்பினரின் கருத்துகளும் சமநிலையாக முன்வைக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-16T12:18:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[டொராண்டோவில் கத்திக்குத்து தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகநபரை தேடும் பொலிஸார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/toronto-police-identify-suspect-wanted-in-stabbing-1786880704"></link>
            <id>https://canadamirror.com/article/toronto-police-identify-suspect-wanted-in-stabbing-1786880704</id>
            <summary type="text">&amp;nbsp;கனடாவின் டொராண்டோ நகரின் மையப்பகுதியில் போக்குவரத்து ஊழியர் ஒருவர் மீது எவ்வித காரணமுமின்றி நடத்தப்பட்ட கத்திக்குத்துச் சம்பவம் தொடர்பாகத் தேடப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கனடாவின் டொராண்டோ நகரின் மையப்பகுதியில் போக்குவரத்து ஊழியர் ஒருவர் மீது எவ்வித காரணமுமின்றி நடத்தப்பட்ட கத்திக்குத்துச் சம்பவம் தொடர்பாகத் தேடப்பட்டு வரும் சந்தேகநபரை டொராண்டோ பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.
</p><p>வெள்ளிக்கிழமை காலை 8.00 மணியளவில் புளோர் மற்றும் யோங் வீதிகளுக்கு அருகே குறித்த ஊழியர் நடைபாதையில் தனியாக நடந்து சென்றுகொண்டிருந்த போது, பின்னால் வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அவர் மீது கத்திக்குத்துத் தாக்குதல் நடத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளார்.
</p><p>சம்பவத்தின் போது அந்த ஊழியர் தனது இடைவேளையில் இருந்ததாக ரீ.ரீ.சீ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கத்திக்குத்துத் தாக்குதலில் பலத்த காயமடைந்த ஊழியர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c3d6599a-1f17-44fa-b641-37a2ecad38db/26-6a81a2c1e922f.webp' /></p><p> அவரது காயங்கள் உயிருக்கு ஆபத்தானவை அல்ல எனப் பொலிஸார் தெரிவித்தனர்.</p><p> 
பின்னர் அவர் மருத்துவமனையிலிருந்து விடுவிக்கப்பட்டு வீட்டில் நலமடைந்து வருவதாக ரீ.ரீ.சீ தெரிவித்துள்ளது.
சந்தேகநபர் 36 வயதான அந்தோணி கிறிஸ்டோபர் டேவிட் மெக்லாலின் எனப் பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர். </p><p>ஆயுதத்தால் தாக்குதல் நடத்தியமை மற்றும் படுகாயம் ஏற்படுத்தியமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் அவர் தேடப்பட்டு வருகிறார்.
</p><p>5 அடி 8 அங்குலம் முதல் 5 அடி 10 அங்குலம் வரை உயரம் கொண்ட நடுத்தர உடல்வாகு உடையவர். முகம் மற்றும் கைகளில் பல பச்சைக் குத்தல்கள் மற்றும் முழுமையான தாடி வைத்துள்ளார் என குறித்த நபர் பற்றிய அடையாள விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
</p><p>சாம்பல் நிற டி-சர்ட், நீல நிற வெஸ்ட் ஜோக்கெட், சாம்பல் நிறப் பேன்ட், பழுப்பு நிற லெதர் காலணிகள் மற்றும் பின்புறமாகத் திருப்பி வைக்கப்பட்டக் கருப்பு நிற தொப்பி (வெள்ளை எழுத்துகளில் "We The North" என எழுதப்பட்டது).
</p><p>இச்சம்பவம் குறித்துத் தகவல் தெரிந்தவர்கள் 416-808-5300 என்ற எண்ணில் பொலிஸாரையோ அல்லது 416-222-TIPS (8477) என்ற எண்ணில் குற்றத் தடுப்புப் பிரிவையோ (Crime Stoppers) தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-16T12:17:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கியூபெக்கில் பொலிஸார் சந்தேக நபர்களை துரத்திய போது ஒருவர் பலியான விடயம் தொடர்பில் விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/police-chase-leaves-1-dead-and-1-injured-quebec-1786881179"></link>
            <id>https://canadamirror.com/article/police-chase-leaves-1-dead-and-1-injured-quebec-1786881179</id>
            <summary type="text">கனடாவின் கியூபெக் மாகாணத்தில், லேவிஸ் பகுதிக்கு அருகே பொலிஸார் சந்தேக நபர்களை துரத்திச் சென்ற சம்பவத்தின் போது நபர் ஒருவர் உயிரிழந்தது குறித்து கியூபெ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் கியூபெக் மாகாணத்தில், லேவிஸ் பகுதிக்கு அருகே பொலிஸார் சந்தேக நபர்களை துரத்திச் சென்ற சம்பவத்தின் போது நபர் ஒருவர் உயிரிழந்தது குறித்து கியூபெக்கின் சுயாதீன பொலிஸ் கண்காணிப்புக் குழு விசாரணையைத் தொடங்கியுள்ளது.</p><p>
வெள்ளிக்கிழமை இரவு 11:21 மணியளவில், கியூபெக்கில் உள்ள பியர் லபோர்ட் பாலத்தில் வாகன விபத்து மற்றும் துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டதாகக் கிடைத்த தகவலை அடுத்து அதிகாரிகள் விரைந்தனர்.
</p><p>விபத்தை ஏற்படுத்திய நபர், மற்றொருவரைப் பலத்த காயப்படுத்திவிட்டு வாகனத்தில் தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7828b564-cb12-4471-98b2-ce3d4d7d463b/26-6a81a49dcbc60.webp' /></p><p>
</p><p>இதையடுத்து, கியூபெக் மாகாண பொலிஸார் அதிகாலை 1:25 மணியளவில் நெடுஞ்சாலை 20-இல் அந்த நபரின் வாகனத்தைக் கண்டுபிடித்துத் துரத்தத் தொடங்கினர்.</p><p>சக்கரங்களின் காற்றைப் போக்கும் ஸ்பைக் கீற்றுகளைப் பயன்படுத்தி வாகனத்தை நிறுத்த அவர்கள் முயன்றனர்.
இறுதியில், லேவிஸில் உள்ள ரூட் 132-இல் அந்த நபர் வாகனத்தை நிறுத்தினார்.</p><p>எனினும், அவர் வாகனத்திற்குள்ளேயே உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டார்.
</p><p>சம்பவம் நடந்த இடத்தை கியூபெக் மாகாண பொலிஸார், கியூபெக் நகரப் பொலிஸார் மற்றும் லேவிஸ் பொலிஸார் இணைந்து சுற்றி வளைத்துப் பாதுகாத்தனர்.
</p><p>இச்சம்பவம் தொடர்பான சூழ்நிலைகளை ஆராய, சுயாதீன புலனாய்வு அமைப்பான BEI-ன் ஏழு விசாரணை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-16T12:16:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹங்கேரியில் பஸ் விபத்து: போலந்து யாத்ரீகர்கள் 12 பேர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/twelve-killed-as-polish-bus-veers-off-hungari-1786881580"></link>
            <id>https://canadamirror.com/article/twelve-killed-as-polish-bus-veers-off-hungari-1786881580</id>
            <summary type="text">ஹங்கேரியின் நெடுஞ்சாலையில் போலந்து நாட்டினரை ஏற்றிச் சென்ற பஸ் ஒன்று வீதியை விட்டு விலகி பள்ளத்தில் கவிழ்ந்ததில் 12 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் பல...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹங்கேரியின் நெடுஞ்சாலையில் போலந்து நாட்டினரை ஏற்றிச் சென்ற பஸ் ஒன்று வீதியை விட்டு விலகி பள்ளத்தில் கவிழ்ந்ததில் 12 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் பல டஜன் கணக்கானோர் காயமடைந்துள்ளனர்.</p><p>
தலைநகர் புடாபெஸ்ட்டை வடகிழக்கு நகரமான நைரேகிஹாசாவுடன் இணைக்கும் எம்3 நெடுஞ்சாலையில் ஞாயிற்றுக்கிழமை உள்ளூர் நேரப்படி அதிகாலை 01:00 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
</p><p>பஸ் ஓட்டுநர் தூங்கியதே விபத்துக்குக் காரணம் எனச் சந்தேகிக்கப்படும் நிலையில், அவரைப் பொலிஸார் காவலில் எடுத்துள்ளனர்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/72475b50-c7ea-4171-bd77-cd89ef9e6683/26-6a81a62ded399.webp' /></p><p>பஸ்ஸில் மொத்தம் 57 பயணிகளும் இரண்டு ஓட்டுநர்களும் இருந்த நிலையில், இதுவரை 35 பேரைத் தீயணைப்புப் படையினர் மீட்டுள்ளதாக ஹங்கேரிய அரசு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.</p><p>
 24 தொன் எடையுள்ள பஸ்ஸை முழுமையாக உயர்த்த கிரேன்கள் வரும் வரை, அதற்கு அடியில் சிக்கியிருந்தவர்களை மீட்க அவசர உதவிப் பிரிவினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டனர்.
</p><p>விபத்தில் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையிலும், 9 பேர் பலத்த காயங்களுடனும், 37 பேர் சிறு காயங்களுடனும் சிகிச்சை பெற்று வருவதாக அந்நாட்டின் அவசர மருத்துவ சேவைப் பிரிவு தெரிவித்துள்ளது.
</p><p>இந்தச் சம்பவத்திற்குத் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ள ஹங்கேரியப் பிரதமர் பீட்டர் மகியர், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையப் பிரார்த்திப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>போலந்துப் பிரதமர் டொனால்ட் டஸ்க் தனது இரங்கலைத் தெரிவித்ததுடன், வெளியுறவு அமைச்சு அதிகாரிகள் மற்றும் மருத்துவக் குழுவினர் அடங்கிய சிறப்பு விமானம் ஒன்றை ஹங்கேரிக்கு அனுப்பி வைத்துள்ளதாகத் தெரிவித்தார்.
</p><p>போஸ்னியா மற்றும் ஹெர்சகோவினாவிலிருந்து திரும்பி வந்த இந்த பஸ்ஸில், போலந்தின் போட்கார்பாசி பிராந்தியத்தைச் சேர்ந்த யாத்ரீகர்கள் பயணித்துள்ளதாகப் போலந்து செய்தி நிறுவனங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.</p><p> விபத்து தொடர்பில் ஓட்டுநரிடம் பொலிஸார் விசாரணைகளைத் தொடங்கியுள்ளனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-16T12:16:10+00:00</updated>
        </entry>
    </feed>
