<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-07-23T11:07:04+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர்களை தீயிட்டு கொளுத்திய ஐக்கிய தேசியக் கொடூரர்கள்! கடுமையாகச் சாடிய சந்திரசேகர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/the-united-nationalists-who-set-tamils-on-fire-1784804247"></link>
            <id>https://ibctamil.com/article/the-united-nationalists-who-set-tamils-on-fire-1784804247</id>
            <summary type="text">தமிழர்களுக்கான உரிமைகளை மறுத்து, யாழ். நூலகம் மீது தனது அரசியல் பழிவாங்கலை காட்டிய அரசியல் நாசகார வேலைகளை முன்னெடுத்த ஐக்கியதேசிய கட்சியினரின் பின்னல்...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழர்களுக்கான உரிமைகளை மறுத்து, யாழ். நூலகம் மீது தனது அரசியல் பழிவாங்கலை காட்டிய அரசியல் நாசகார வேலைகளை முன்னெடுத்த ஐக்கியதேசிய கட்சியினரின் பின்னல் இன்று தமிழர்களுக்கான உரிமை என போலி முகத்திரையில் பலர் ஓடிக்கொண்டிருக்கின்றனர் என கடற்றொழில் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் சுட்டிக்காட்டினார்.</p><p>

நாடாளுமன்றில் கறுப்பு ஜூலை கலவரம் தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே இதனை கூறியுள்ளார்.</p><p>

மேலும் கருத்து வெளியிட்ட அவர்,</p><p></p><h2>காமினி திசாநாயக்க</h2><p> </p><p>


''அப்போதைய மகாவலி அமைச்சராக இருந்த காமினி திசாநாயக்க, தமிழ் மக்கள் மீதான அடக்குமுறைகளை முன்னெடுத்து, நாசகார அரசியலை மேற்கொண்ட ஒரு அரசியல்வாதி.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/59298508-fe2d-4d12-b888-8ad5781c8421/26-6a61f541584e8.webp' /></p><p>

பதுளை நகரம் எரிக்கப்பட்டபோது, அப்போதைய இராணுவத்தினர் கடைகளை அடையாளமிட்டு சென்ற பின்னர், ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த விஷமிகள் அந்தக் கடைகளுக்கு தீ வைத்தனர்.</p><p>

அங்கிருந்த பச்சிளம் குழந்தைகள்கூட தீயில் எரிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. 

இந்தக் கொடூரச் செயல்களை மேற்கொண்டவர்கள் ஐக்கிய தேசியக் கட்சியினரே.
</p><p>
அது மட்டுமல்லாமல், தோட்டத் தொழிலாளர்களின் சொத்துக்களைக் கொள்ளையடித்து, அந்த நாசகாரச் செயல்களையும் மேற்கொண்டவர்கள் அதே ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்தவர்களே.</p><p></p><h2>பயங்கரவாதத் தடுப்புச் சட்டம்</h2><p>
</p><p>
அதன் பின்னர், 1979 ஆம் ஆண்டு அவசரகாலச் சட்டத்தையும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தையும் கொண்டு வந்து, தமிழர்களுக்கு எதிராக திட்டமிட்ட அடக்குமுறைகளை முன்னெடுத்தனர்.</p><p>

மேலும், வடக்கு - கிழக்கில் நடைபெறவிருந்த தேர்தலை ஒத்திவைத்து, ஜனநாயகச் செயல்முறையை பாதிக்கும் வகையில் மிகவும் கொடூரமான அரசியலை முன்னெடுத்தனர்.</p><p>

அதன் பின்னர், தொடர்ச்சியாக யாழ்ப்பாணப் பொது நூலகத்தை எரித்து, தமிழர்களின் பண்பாட்டு அடையாளங்களை அழிக்கும் செயல்களிலும் ஈடுபட்டனர்.
</p><p>
முதலில் யாழ்ப்பாணத்தில் தேர்தல் மோசடிகளை முன்னெடுத்தனர். பின்னர் யாழ்ப்பாணப் பொது நூலகத்தை எரித்தனர்.

இவ்வாறான வரலாற்றுப் பின்னணியைக் கொண்ட ஐக்கிய தேசியக் கட்சியின் பின்னால் செல்லும் அரசியல்வாதிகள் இன்று மார்தட்டி அரசியல் பேசுகின்றனர்" என கூறியுள்ளார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-23T11:04:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[தெற்கு தாய்லாந்தில் பாதுகாப்பு சோதனைச் சாவடி மீது பயங்கரவாதத் தாக்குதல்: 5 இராணுவ வீரர்கள் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/attack-on-security-checkpoint-in-southern-thailand-1784804550"></link>
            <id>https://tamilwin.com/article/attack-on-security-checkpoint-in-southern-thailand-1784804550</id>
            <summary type="text">தெற்கு தாய்லாந்தின் நராத்தி வாட் மாகாணத்தில் உள்ள புகேதா சாமி பாதுகாப்புப் சோதனைச் சாவடி மீது தீவிரவாதிகள் நடத்திய கொடூரமான தாக்குதலில் 5 தாய்லாந்து
...</summary>
            <content type="html"><![CDATA[<p>தெற்கு தாய்லாந்தின் நராத்தி வாட் மாகாணத்தில் உள்ள புகேதா சாமி பாதுகாப்புப் சோதனைச் சாவடி மீது தீவிரவாதிகள் நடத்திய கொடூரமான தாக்குதலில் 5 தாய்லாந்து
இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.</p><p> 

இந்த சம்பவம் நேற்று(22.07.2026) இடம்பெற்ற நிலையில், மேலும் 6 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p> </p><h2>


5 பேர் உயிரிழப்பு - 6 பேர் படுகாயம்</h2><p>


கருப்பு நிற உடையில், பிக்கப் டிரக் மற்றும் மோட்டார் சைக்கிள்களில் வந்த
சுமார் 10 பேர் கொண்ட ஆயுதமேந்திய கும்பல், பாதுகாப்புப் பணியில்
ஈடுபட்டிருந்த 45வது ரேஞ்சர் ரெஜிமென்ட் வீரர்கள் மீது பைக் குண்டுகளை
வீசியும், துப்பாக்கிகளால் சுட்டும் இந்தத் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bb3e37cb-5377-4247-ab7c-ff85fc0e4bb9/26-6a61f5217c9b2.webp' /></p><p> </p><p>

இந்த தாக்குதலுக்கு பின்னர், அங்கிருந்த AK-47 ரக துப்பாக்கிகள், குண்டுதுளைக்காத
சட்டைகள் மற்றும் மொபைல் போன்களைப் பறித்துக்கொண்டு அந்த கூட்டத்தினர் தப்பிச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> 

இதற்கு, தாய்லாந்து அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளதோடு, இது
நாட்டின் பாதுகாப்புக்கு விடுக்கப்பட்ட தீவிரவாத அச்சுறுத்தல் என்றும்,
அமைதிப் பேச்சுவார்த்தை முயற்சிகளைச் சீர்குலைக்கும் செயல் என்றும்
குறிப்பிட்டுள்ளது. </p><h2>


நராதிவாட் மாகாணத்தில் இடம்பெற்ற தாக்குதல்</h2><p>

இந்த சம்பவத்திற்கு இதுவரை எந்த அமைப்பும் அதிகாரப்பூர்வமாகப் பொறுப்பேற்கவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9027d57d-eac5-4abb-9156-b33ff7367648/26-6a61f5223e9a9.webp' /></p><p>
</p><p>
நராதிவாட் மாகாணத்தில் நிலப்பகுதியில் கார்க் குண்டு வெடிப்பு சம்பவம்
நிகழ்ந்த அடுத்த நாளே இந்தத் தீவிரவாதத் தாக்குதல் நடந்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளன.</p><p>

2004ஆம் ஆண்டு முதல் பிரிவினைவாத மோதல்களால் பாதிக்கப்பட்டுள்ள தெற்கு
தாய்லாந்து எல்லைப் பகுதிகளில், சமீப காலத்தில் நடந்த மிக மோசமான
தாக்குதல்களில் ஒன்றாகவும் இது பார்க்கப்படுகின்றது.&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-23T11:04:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரான்சில் புதிய துப்பாக்கிச் சூட்டுச் சட்டம் ; புலம்பெயர் சமூகத்தினருக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/new-gun-laws-france-warning-immigrant-communities-1784804456"></link>
            <id>https://jvpnews.com/article/new-gun-laws-france-warning-immigrant-communities-1784804456</id>
            <summary type="text">பிரான்சில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூடு நடத்தும் அதிகாரத்தை விரிவுபடுத்தும் புதிய சட்டமூலத்திற்கு அந்நாட்டு நாடாளுமன்றத்தின் கீழவை ஒப்புதல் வழங்...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரான்சில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூடு நடத்தும் அதிகாரத்தை விரிவுபடுத்தும் புதிய சட்டமூலத்திற்கு அந்நாட்டு நாடாளுமன்றத்தின் கீழவை ஒப்புதல் வழங்கியுள்ள நிலையில், அது இந்த ஆண்டின் இறுதிக்குள் சட்டமாக அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>
</p><p></p><p>இந்தச் சட்டம் தொடர்பாக பிரான்சில் கடும் அரசியல் மற்றும் சமூக விவாதங்கள் எழுந்துள்ளன. அதிகரித்து வரும் வன்முறைகளைக் கட்டுப்படுத்த இந்தச் சட்டம் அவசியம் என வலதுசாரி அரசியல் தரப்புகள் வலியுறுத்துகின்றன. </p><p>அதேவேளை, இது மனித உரிமைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடியதாக இருப்பதாக இடதுசாரி கட்சிகளும் மனித உரிமை அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.</p><p>

இந்தச் சட்டத்திற்கு எதிராக சுமார் 7 இலட்சத்து 30 ஆயிரம் பேர் கையொப்பமிட்ட மனு சமர்ப்பிக்கப்பட்டிருந்த போதிலும் அது ஏற்கப்படவில்லை. </p><p>இதையடுத்து, செப்டம்பர் 19 ஆம் திகதி நாடளாவிய அளவில் எதிர்ப்புப் பேரணி நடத்த மனித உரிமை அமைப்புகளும் பல்வேறு அரசியல் அமைப்புகளும் அழைப்பு விடுத்துள்ளன.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1614ba55-2349-447f-be36-10329fe2fcae/26-6a61f46a27baa.webp' /></p><p>இந்தச் சட்டம் அமலுக்கு வந்தால், பிரான்சில் வாழும் புலம்பெயர் சமூகங்கள், குறிப்பாக தமிழர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கு பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும் என சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
</p><p>
ஒருபுறம், வீதி வன்முறை, கொள்ளை, வழிப்பறி மற்றும் குற்றச்செயல்களை கட்டுப்படுத்த காவல்துறைக்கு கூடுதல் அதிகாரம் கிடைப்பதால், வணிகர்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பு மேம்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
</p><p>
மறுபுறம், நிறவெறி, தவறான அடையாளம் காணல் அல்லது காவல்துறையினரின் அதிகார துஷ்பிரயோகம் போன்ற காரணங்களால் சிறுபான்மையினருக்கு தேவையற்ற சிக்கல்கள் ஏற்படக்கூடும் என்ற அச்சமும் எழுந்துள்ளது.
</p><p>
குறிப்பாக, மொழிப் பிரச்சினை அல்லது பதற்றம் காரணமாக காவல்துறையின் உத்தரவுகளை சரியாகப் பின்பற்றத் தவறினால், அதனால் கடுமையான விளைவுகள் ஏற்படக்கூடும் என எச்சரிக்கப்படுகிறது.
</p><p>
இதனையடுத்து, புலம்பெயர் குடும்பங்கள் தங்களது பிள்ளைகளுக்கு சட்டங்களை மதித்து நடந்து கொள்வதன் அவசியத்தை விளக்க வேண்டும் என்றும், காவல்துறையினருடன் மோதல்களைத் தவிர்க்கும் விதமாக விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் சமூக அமைப்புகள் அறிவுறுத்தியுள்ளன.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fd0a38ac-89da-484e-b001-2d18cc63de5f/26-6a61f46976068.webp' /></p><p>அதேபோன்று, வெளியே செல்லும் போது செல்லுபடியாகும் அடையாள ஆவணங்களை எப்போதும் உடன் வைத்திருக்க வேண்டும், சட்டவிரோத பொருட்கள் அல்லது ஆயுதங்களை எடுத்துச் செல்லக் கூடாது, காவல்துறையினரின் அறிவுறுத்தல்களை அமைதியாகப் பின்பற்ற வேண்டும், தேவையற்ற வாக்குவாதங்களில் ஈடுபடாமல் இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
</p><p>
மேலும், இரவு நேரங்களில் ஆபத்தான பகுதிகளுக்குச் செல்வதைத் தவிர்ப்பதுடன், இளைஞர்களின் நட்பு வட்டம் மற்றும் அவர்கள் செல்லும் இடங்கள் குறித்து பெற்றோர் கவனம் செலுத்துவது அவசியம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
பிரான்சில் வாழும் புலம்பெயர் சமூகத்தினர் புதிய சட்டம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை தொடர்ந்து கவனித்து, நடைமுறையில் அமல்படுத்தப்படும் விதிமுறைகளைப் பின்பற்றி சட்டத்திற்குள் பாதுகாப்பாகச் செயல்பட வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-23T11:01:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[வினாத்தாள் கசிவு வழக்குகளுக்கு விரைவு நீதிமன்றம்: மோடி அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/pm-modi-announces-fast-track-courts-for-neet-1784803989"></link>
            <id>https://ibctamilnadu.com/article/pm-modi-announces-fast-track-courts-for-neet-1784803989</id>
            <summary type="text">நீட்-யுஜி (NEET-UG) வினாத்தாள் கசிவு வழக்குகளை விரைவாக விசாரிக்க விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.பிரதமர...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீட்-யுஜி (NEET-UG) வினாத்தாள் கசிவு வழக்குகளை விரைவாக விசாரிக்க விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.</p><h2>பிரதமர் மோடி பதிவு</h2><p>
</p><p>
இளைஞர்களின் நலனும் எதிர்காலமுமே அரசின் முதன்மை என்பதைக் குறிப்பிட்ட அவர், தேர்வுத் தாள் கசிவில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் கடுமையான மற்றும் விரைவான தண்டனை வழங்கப்படும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0634046c-84a6-4c90-be89-b1015dd9b20a/26-6a61f3e395c06.webp' /></p><p>மேலும், மாணவர்களின் நலனைப் பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.</p><p>
மேலும், இந்த விவகாரத்தில் மத்திய மற்றும் மாநில அரசுகள் கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டு இணைந்து செயல்பட வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.
</p><p>
இந்த அறிவிப்பை வரவேற்ற மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், விரைவு நீதிமன்றங்கள் மூலம் குற்றவாளிகள் விரைவில் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்றும், இளைஞர்களின் எதிர்காலத்தில் எந்தவித சமரசமும் இருக்காது என்றும் தெரிவித்துள்ளார்.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Nothing is more important than the welfare and future of our youth!<br><br>We have decided to set up fast-track courts to ensure swift and stringent punishment for those involved in paper leaks. Have directed the concerned authorities and officials to take all necessary steps in this…</p>&mdash; Narendra Modi (@narendramodi) <a href="https://x.com/narendramodi/status/2080135258142617785?ref_src=twsrc%5Etfw">July 23, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p>]]></content>
            <updated>2026-07-23T10:59:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[ராஜபக்சர்களின் ஆட்சியில் ஜனாதிபதி மாளிகைக்குள் நடந்தது என்ன...! அம்பலப்படுத்தும் பிரதமர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/35-crore-rs-spent-on-the-maintenance-1784781382"></link>
            <id>https://tamilwin.com/article/35-crore-rs-spent-on-the-maintenance-1784781382</id>
            <summary type="text">ஜனாதிபதி மாளிகைகளை பராமரிப்பதற்காக கடந்த ஒன்பது வருட காலத்தில் சுமார் 35 கோடி ரூபா செலவிடப்பட்டுள்ளதாகப் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். 

நாடா...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜனாதிபதி மாளிகைகளை பராமரிப்பதற்காக கடந்த ஒன்பது வருட காலத்தில் சுமார் 35 கோடி ரூபா செலவிடப்பட்டுள்ளதாகப் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். </p><p>

நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். </p><p>

கொழும்பு கோட்டை, கண்டி, நுவரெலியா, கதிர்காமம், அனுராதபுரம், மஹியங்கனை மற்றும் பெந்தோட்டை ஆகிய பிரதேசங்களில் இந்த ஜனாதிபதி மாளிகைகள் அமைந்துள்ளதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.</p><p></p><p> </p><h2><b>ஜனாதிபதி மாளிகை பராமரிப்பு</b></h2><p>ஜனாதிபதி மாளிகை பராமரிப்பு, பூங்காப் பராமரிப்பு, ஜனாதிபதி உத்தியோகபூர்வ இல்லப் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு உத்தியோகபூர்வ தங்குமிடக் கட்டடப் பராமரிப்பு என்பவற்றுக்காகவே இவ்வாறு பணம் செலவிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/51aad649-c97b-4fe3-8394-466472d0e10c/26-6a61f3be3adcb.webp' /></p><p>ஜனாதிபதி மாளிகைகளை பராமரிப்பதற்காக 2018 ஆம் ஆண்டில் 15 மில்லியன் ரூபாவும், கட்டடத் திருத்தச் செலவுகளாக 110 மில்லியன் ரூபாவும் செலவிடப்பட்டுள்ளதாக பிரதமர் தெரிவித்துள்ளார். </p><p>அத்துடன், 2019 ஆம் ஆண்டில் கட்டடப் பராமரிப்புச் செலவாக 15 மில்லியன் ரூபாவும், திருத்தச் செலவாக 62 மில்லியன் ரூபாவும் செலவிடப்பட்டுள்ளது.</p><p> கடந்த 2020 ஆம் ஆண்டில் கட்டடப் பராமரிப்புச் செலவு 12 மில்லியன் ரூபாவாகவும், திருத்தச் செலவு 22.7 மில்லியன் ரூபாவாகவும் காணப்பட்டுள்ளது. </p><h3><b>உத்தியோகபூர்வ இல்லங்கள்</b></h3><p>கடந்த 2021 ஆம் ஆண்டில் கட்டடப் பராமரிப்புச் செலவு 10 மில்லியன் ரூபாவாகவும், திருத்தச் செலவு 18.8 மில்லியன் ரூபாவாகவும் காணப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/05eb846e-f686-4a5d-91b6-a24bb0e198b4/26-6a619cc5b0659.webp' /></p><p>2022 ஆம் ஆண்டில் பராமரிப்புச் செலவாக 12 மில்லியன் ரூபாவும், திருத்தச் செலவாக 13 மில்லியன் ரூபாவும், செலவிடப்பட்டுள்ளது. </p><p>கடந்த 2023 ஆம் ஆண்டில் பராமரிப்புச் செலவு 26.04 மில்லியன் ரூபாவாகவும், திருத்தச் செலவு 11 மில்லியன் ரூபாவாகவும் இருந்ததாக பிரதமர் கூறினார். </p><p>கடந்த 2024 ஆம் ஆண்டில் பராமரிப்புச் செலவு 13.09 மில்லியன் ரூபாவாகவும், திருத்தச் செலவு 10.05 மில்லியன் ரூபாவாகவும், 2025 ஆம் ஆண்டில் பராமரிப்பு செலவு 7.05 மில்லியன் ரூபாவாகவும், திருத்தச் செலவு 3 மில்லியன் ரூபாவாகவும் பதிவாகியுள்ளன. </p><p>நடப்பாண்டில் ஜனவரி முதல் ஜூன் மாதம் வரை பராமரிப்புச் செலவாக 3 மில்லியன் ரூபாவும், திருத்தச் செலவாக 0.4 மில்லியன் ரூபாவும் செலவிடப்பட்டுள்ளதாக பிரதமர் மேலும் தெரிவித்தார்.
</p><p>
இதேவேளை சமகால அரசாங்கத்தில் அமைச்சு பதவிகளை வகிப்பவர்களுக்கு வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ இல்லங்கள் மக்களின் தேவைக்காக மட்டும் பயன்படுத்தப்படுவதாக பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p> 
</p>]]></content>
            <updated>2026-07-23T10:55:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Bavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[படையினரின் பெயரை போலியாக பயன்படுத்தி நூதனமாக பண மோசடி! மட்டக்களப்பில் சம்பவம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/action-to-arrest-person-in-money-laundering-1784801502"></link>
            <id>https://ibctamil.com/article/action-to-arrest-person-in-money-laundering-1784801502</id>
            <summary type="text">மட்டக்களப்பு மற்றும் காத்தான்குடி பிரதேசங்களில் உள்ள 6 கடைகளில் விசேட அதிரடிப்படையினர் மற்றும் விமான படை உயர் அதிகாரி என போலியாக கையடக்க தொலைபேசி வழிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>மட்டக்களப்பு மற்றும் காத்தான்குடி பிரதேசங்களில் உள்ள 6 கடைகளில் விசேட அதிரடிப்படையினர் மற்றும் விமான படை உயர் அதிகாரி என போலியாக கையடக்க தொலைபேசி வழியாக தெரிவித்து நூதனமான முறையில் பண மோசடியில் ஈடுபட்ட நபரை கைது செய்ய காவல்துறையினர் விசாரணைகளை தொடங்கியுள்ளனர்.</p><p>
இது தொடர்பில் தெரியவருவதாவது, மட்டக்களப்பில் உள்ள யூஸ் தயாரித்து விற்பனை செய்யும் கடைகள் மற்றும் உணவகம் உட்பட 4 கடைகளிலும் காத்தான்குடி பிரதேசத்தில் உள்ள 2 கடைகள் உட்பட 6 கடைகள் தமது கடைகள் தொடர்பாக சமூக வலைதளங்களில் தொலைபேசி இலக்கத்துடன் விளம்பரப்படுத்தியுள்ளனர்.</p><p>
இந்த நிலையில், மட்டு நகரிலுள்ள யூஸ் கடை ஒன்றின் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு தான் விசேட அதிரடிப்படையின் வவுணதீவு முகாம் உயர்; அதிகாரி என போலியாக தெரிவித்து முகாமில் 60 பேருக்கு 5 நாள் பயிற்சி இடம் பெறுகின்றது அவர்களுக்கு குடிப்பதற்கு யூஸ் தேவை என ஓடர் செய்து அதனை முகாமிற்கு கொண்டு வருமாறு தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>ஏமாற்றப்பட்ட பணம்</h2><p>

இதனைதொடர்ந்து சிறிது நேரத்தின் பின்னர் குறித்த யூஸ் கடையுடன் மீண்டும் தொடர்பு கொண்டு கேக் இருக்கிறா என வினவியபோது கடை உரிமையாளர் இல்லை என்றுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/36721ef0-22eb-476b-a39a-c268bfa1b8ec/26-6a61f0ae5a654.webp' /></p><p>

பின்னர் மீண்டும் சிறிது நேரத்தின் பின்னர் தொடர்பு கொண்டு ஒரு அம்மாவிடம் கேக் ஓடர் செய்துள்ளேன் அவரிடம் றிசீட் இல்லை (பில்) அந்த தொகையை உங்கள் யூஸ் றிசீட்டுடன் சேர்த்து கொண்டுவரவும் என தெரிவித்துள்ளார்.</p><p>

அதற்கு கடை உரிமையாளர் சம்மதம் தெரிவித்து விட்டு அவர் கேட்ட ஓடரை வழங்க தயாரிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நிலையில் மீண்டும் போலி படை அதிகாரி
தொடர்பு கொண்டு அந்த கேக் ஓடர் செய்த அம்மாவிற்கு அதற்கான பணம் 9 ஆயிரத்து 800 ரூபா வழங்க வேண்டும் எனவே அந்த பணத்தை அனுப்பும் வங்கி கணக்கிற்கு அனுப்பிவிட்டு வரவும் அந்த பணத்தை சேர்த்து தருகிறேன் என்றுள்ளார்.</p><p>
இதையடுத்து போலி நபர் அனுப்பிய வங்கி கணக்கிற்கு 9 ஆயிரத்து 800 ரூபாவை அனுப்பிவிட்டு ஓடர் செய்த யூஸ் பானத்தை எடுத்து கொண்டு குறித்த நபர் தெரிவித்த வவுணதீவு காவல்நிலையத்திற்கு அருகில் சென்று பார்த்தபோது அங்கு படை முகாம் இல்லை என அறிந்துகொண்டு குறித்த நபருடன் தொடர்பு கொண்டபோது தொலைபேசி துண்டிக்கப்பட்டிருந்ததையடுத்து கொண்டு சென்ற யூஸ் பானத்துடன் திரும்பியுள்ளார்.</p><h2>கடை உரிமையாளர்கள் முறைப்பாடு</h2><p>
இவ்வாறு நகரில் பிரபல சர்வதேச உணவகம் ஒன்றில் 21 ஆயிரம் ரூபாவும் ஒரு கடை உரிமையாளரிடம் இருந்து தலா 9 ஆயிரத்து 800 ரூபா வீதம் 3 கடைகளில் பணத்தை போலி விசேட அதிரடிப்படை மற்றும் விமானப்படை அதிகாரிகள் என தெரிவித்து நூதனமான முறையில் பண மோசடி செய்துள்ளதாக மட்டு தலைமையக காவல்நிலையத்தில் பணத்தை இழந்த கடை உரிமையாளர்கள் முறைப்பாடு செய்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/86ca5bc0-2728-450b-b888-563df4de1782/26-6a61f20808c93.webp' /></p><p>
இவ்வாறே காத்தான்குடி பிரதேசத்தில் இரு கடை உரிமையாளர்களும் பணத்தை அனுப்பி ஏமாந்துள்ளதாக காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.</p><p>
இதன்படி, இந்த மோசடி தொடர்பாக விசாரணைகளை அந்தந்த காவல்துறையினர் மேற்கொண்டு வருவதுடன் குறித்த போலி நபரை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுத்து வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-23T10:55:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[1.15 டிரில்லியன் டொலர் இராணுவ மசோதா: அமெரிக்க பிரதிநிதிகள் ஆதரவுடன் நிறைவேறிய ட்ரம்ப்பின் தீர்மானம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/1-15-trillion-military-bill-1784803489"></link>
            <id>https://tamilwin.com/article/1-15-trillion-military-bill-1784803489</id>
            <summary type="text">அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் 2027ஆம் ஆண்டிற்கான தேசிய பாதுகாப்பு
அதிகாரமளிப்புச் சட்ட மசோதா (NDAA) 216-212 என்ற குறுகிய வாக்கு
வித்தியாசத்தில் நிறை...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் 2027ஆம் ஆண்டிற்கான தேசிய பாதுகாப்பு
அதிகாரமளிப்புச் சட்ட மசோதா (NDAA) 216-212 என்ற குறுகிய வாக்கு
வித்தியாசத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
</p><p>
ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கோரிய 1.5 டிரில்லியன் டொலர் இராணுவ வரவு செலவுத்
திட்டத்தின் ஒரு பகுதியாக, 1.15 டிரில்லியன் டொலர் மதிப்பிலான இந்த மசோதா
முதன்மையாக ஈரானுக்கு எதிரான போருக்கான நிதியுதவியையும், அமெரிக்க-இஸ்ரேல்
இராணுவத் தொழில்நுட்பக் கூட்டுறவை விரிவுபடுத்துவதையும் நோக்கமாகக்
கொண்டுள்ளது.</p><p></p><p>
</p><p>
ஆளுங்கட்சியான குடியரசுக் கட்சியின் ஆதரவோடு நிறைவேற்றப்பட்ட இந்த மசோதாவிற்கு ஜனநாயகக் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.</p><p>

போருக்கான அதிகப்படியான செலவு மற்றும் சமூக நலத் திட்டங்களுக்கான நிதி
குறைப்பு ஆகியவை இதற்குக் காரணமாகக் கூறப்படுகின்றன.
</p><h2>
சர்ச்சைக்குரிய விதி</h2><p>
மேலும், இஸ்ரேலுடனான இராணுவ விநியோகச் சங்கிலி மற்றும் தொழில்நுட்பங்களை
இணைக்கும் பிரிவு 219 நாட்டின் இறையாண்மைக்கு எதிரானது என குடியரசுக்
கட்சியின் தோமஸ் மாசி போன்ற சில பிரதிநிதிகளே விமர்சித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e71f3083-480e-43db-b21b-1e462d81f6e2/26-6a61f1049c851.webp' /></p><p>


இதேவேளையில், வாக்களிப்பு முறைகளில் புதிய கட்டுப்பாடுகளை விதிக்கும் 'SAVE America Act' என்ற சர்ச்சைக்குரிய விதியும் இந்த மசோதாவில்
சேர்க்கப்பட்டுள்ளது.
</p><p>
பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்பட்ட போதிலும், எதிர்க்கட்சியினரின் பலத்த எதிர்ப்புக் காரணமாக இந்த மசோதா அடுத்து செனட் சபையில் ஒப்புதல் பெறுவதில் பெரும் சவால்களை எதிர்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.&nbsp;&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-23T10:46:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ashik</name>
            </author>
            <title type="text"><![CDATA[தலைமன்னார் கடற்பரப்பில் கைதான கடற்றொழிலாளர்கள் - நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/fishermen-arrested-in-thalaimannar-1784802479"></link>
            <id>https://tamilwin.com/article/fishermen-arrested-in-thalaimannar-1784802479</id>
            <summary type="text">இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து கடற்றொழிலில் ஈடுபட்ட நிலையில்
தலைமன்னார் கடற்படையினரால் நேற்று(23) மாலை கைது செய்யப்பட்ட 9
இந்திய கடற்றொழிலாள...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து கடற்றொழிலில் ஈடுபட்ட நிலையில்
தலைமன்னார் கடற்படையினரால் நேற்று(23) மாலை கைது செய்யப்பட்ட 9
இந்திய கடற்றொழிலாளர்களையும் எதிர்வரும் 6 ஆம் திகதி (06.08.2026) வரை
விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.</p><p>குறித்த உத்தரவானது இன்று வியாழக்கிழமை (23) பிறப்பிக்கப்பட்டுள்ளது.
</p><p></p><h2>விளக்கமறியலில் வைக்க உத்தரவு</h2><p>இராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று புதன்கிழமை(22) காலை
மீன் பிடிக்க இழுவைப் படகு ஒன்றில் 9 கடற்றொழிலாளர்கள் கடலுக்குச் சென்ற நிலையில்
நேற்று (22) மாலை இலங்கை கடற்பரப்பில் நுழைந்த நிலையில்
கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2416f90f-5282-4118-a279-9e5bc4cf3132/26-6a61efbced6bd.webp' /></p><p>கைது செய்யப்பட்ட 9 கடற்றொழிலாளர்களும் தலைமன்னார் கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்ட
நிலையில் தலைமன்னார் கடற்படையினர் குறித்த கடற்றொழிலாளர்களை விசாரணைகளின் பின்னர்
இன்று (23) காலை மன்னார் மாவட்ட கடற்தொழில் திணைக்கள
அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
</p><p>
கடற்தொழில் திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளின் பின்னர் குறித்த கடற்றொழிலாளர்களை
இன்றையதினம் (23) மதியம் மன்னார் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினர்.
</p><p>
இதன்போது விசாரணைகளை மேற்கொண்ட நீதவான் குறித்த கடற்றொழிலாளர்களை எதிர்வரும் 6ஆம்
திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-23T10:46:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரான் நினைத்தால் மத்திய கிழக்கின் பணக்கார நாடாக மாற முடியும்: அமெரிக்க வெளியுறவுச் செயலர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/iran-can-become-the-richest-country-us-secretary-1784801581"></link>
            <id>https://tamilwin.com/article/iran-can-become-the-richest-country-us-secretary-1784801581</id>
            <summary type="text">ஈரான் நினைத்தால் மத்திய கிழக்கிலேயே மிகவும் பணக்கார நாடாக உருவாக முடியும்
என&amp;nbsp;அமெரிக்க வெளியுறவுச் செயலர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.&amp;nbsp;ஆன...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரான் நினைத்தால் மத்திய கிழக்கிலேயே மிகவும் பணக்கார நாடாக உருவாக முடியும்
என&nbsp;அமெரிக்க வெளியுறவுச் செயலர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p>ஆனால் அங்குள்ள ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் தீவிரவாத மதகுருமார்கள்
நாட்டின் பொருளாதாரத்தை சீரழித்து வருவதாகவும் அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.</p><p></p><p>
</p><p>
செய்தியாளர்களிடம் பேசிய அவர், "ஈரான் தீவிரவாத மதகுருமார்களால் நடத்தப்படும்
ஒரு நாடு. நாட்டின் பொருளாதார பிரச்சினைகள் குறித்து அவர்களுக்கு எந்தக்
கவலையும் இல்லை; அவர்கள் தங்கள் சொந்த நாட்டையே அழித்துக்
கொண்டிருக்கிறார்கள்.</p><h2>ஆயுதக் குழுக்களுக்கு வழங்கப்படும் பணம்</h2><p>
</p><p>
நாட்டின் பணத்தை மக்களுக்குப் பயன்படுத்தாமல் ஹிஸ்புல்லா, ஹமாஸ், ஹூதிகள்
மற்றும் ஷியா ஆயுதக் குழுக்களுக்கு வாரி வழங்குகிறார்கள்.
</p><p>
உலகம் முழுவதிலும் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கவே இந்தப் பணம்
பயன்படுத்தப்படுகிறது" என்று குற்றம்சாட்டினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b735b380-c67a-47f0-bc44-714ad799d46c/26-6a61f08632cd6.webp' /></p><p>
</p><p>
மேலும் பேசிய அவர், "ஈரானிடம் அணு ஆயுதங்கள் இருக்கக் கூடாது என்பதே
அமெரிக்காவின் முதன்மை இலக்காகும்.
</p><p>
அணு ஆயுதம் ஏந்திய ஈரான் இந்த உலகத்திற்கு எவ்வளவு பெரிய அச்சுறுத்தலாக மாறும்
என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும்" என தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-23T10:45:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜேர்மன் ரயில் நிலையங்களில் மது அருந்த தடை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/german-railway-to-ban-consuming-alcohol-at-station-1784803218"></link>
            <id>https://news.lankasri.com/article/german-railway-to-ban-consuming-alcohol-at-station-1784803218</id>
            <summary type="text">ஜேர்மன் ரயில் நிலையங்களில் மது அருந்த தேசிய ரயில்வே தடை விதித்துள்ளது.

பாதுகாப்பு மற்றும் தூய்மையை இலக்காகக் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜேர்மன் ரயில் நிலையங்களில் மது அருந்த தேசிய ரயில்வே தடை விதித்துள்ளது.
</p><p>
பாதுகாப்பு மற்றும் தூய்மையை இலக்காகக் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக ரயில்வே அமைப்பு தெரிவித்துள்ளது.
</p><h3>
ஜேர்மன் ரயில் நிலையங்களில் மது அருந்த தடை</h3><p>

சமீபத்தில், பாதுகாப்பு அலுவலர் ஒருவர் டிக்கெட் பரிசோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும்போது, போதையிலிருந்த பயணி ஒருவர் அவரை தாக்கியதில், ரயிலுக்கு வெளியே போய் விழுந்த அந்த அலுவலருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d54d7386-e689-4198-b514-0c237bb76508/26-6a61ef93f0bd1.webp' /></p><p>
அதை சுட்டிக்காட்டிய ஜேர்மன் தேசிய ரயில்வே அமைப்பான Deutsche Bahn அமைப்பின் முதன்மை செயல் அதிகாரியான Evelyn Palla, அதிக மதுபானம் புரண்டோடும் இடங்களில் இதுபோன்ற வன்முறைச் சம்பவங்கள் நடப்பதை அடிக்கடி காணமுடிகிறது என்றார்.&nbsp;</p><p></p><p>
ஆக, அக்டோபர் மாதம் 15ஆம் திகதிக்குள், படிப்படியாக ஜேர்மனியின் அனைத்து ரயில் நிலையங்களுக்கும், இந்த மது அருந்தும் தடை அமுல் படுத்தப்பட உள்ளது.
</p><p>
தொடர்ந்து தடையை மீறுவோர், ரயில் நிலையங்களுக்குள் நுழைய நிரந்தரத் தடை விதிக்கப்படும்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-23T10:45:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் தீவிரமடையும் எல் நினோ... நவம்பரில் உச்சத் தாக்கம் : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/strong-el-ni-o-conditions-could-hit-sri-lanka-1784801527"></link>
            <id>https://ibctamil.com/article/strong-el-ni-o-conditions-could-hit-sri-lanka-1784801527</id>
            <summary type="text">உலகளாவிய காலநிலை மாற்றத்தின் தாக்கமான &#039;எல் நினோ&#039; காலநிலை நிகழ்வு எதிர்பார்த்ததை விட முன்னதாகவே இலங்கையில் தீவிரமடைந்து, எதிர்வரும் நவம்பர் மாதமளவில் அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>உலகளாவிய காலநிலை மாற்றத்தின் தாக்கமான 'எல் நினோ' காலநிலை நிகழ்வு எதிர்பார்த்ததை விட முன்னதாகவே இலங்கையில் தீவிரமடைந்து, எதிர்வரும் நவம்பர் மாதமளவில் அதன் உச்சகட்ட நிலையை அடையக்கூடும் என சுற்றாடல் அமைச்சர் தம்மிக படபெந்தி தெரிவித்துள்ளார்.</p><p>அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (23) நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றியபோதே அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.</p><p> 

அவர் மேலும் தெரிவிக்யைில்,

ஜூலை, ஓகஸ்ட், செப்டெம்பர் மாதங்களில் நாடளாவிய ரீதியில் மிகக் கடுமையான வறட்சியான வானிலை நிலவும்.</p><p></p><h2>&nbsp;வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு&nbsp;</h2><p> </p><p>ஒக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் வறட்சியைத் தொடர்ந்து, கடும் மழை பெய்யும். இதனால் நாட்டின் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு அபாயங்கள் உருவாகலாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/224fb8f5-d16c-401b-8337-c0393016a712/26-6a61eec16b9d6.webp' /></p><p>
</p><p>
எல் நினோ என்பது இலங்கைக்கு மட்டும் உரியது அல்லாமல், ஒரு உலகளாவிய காலநிலை சவாலாகும். இதன் தாக்கங்களை எதிர்கொள்ள அனைத்து அரசாங்க நிறுவனங்கள் மற்றும் ஊடக அமைப்புகளுடன் இணைந்து விசேட ஒருங்கிணைப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.</p><p> 

விவசாயம், குடிநீர் விநியோகம், மின்சாரம், வேலைவாய்ப்பு மற்றும் மனித வாழ்வாதாரம் ஆகியவற்றில் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைக்க அரசாங்கம் ஏற்கனவே குறுகிய மற்றும் நீண்டகால திட்டங்களை வகுத்து வருகிறது.&nbsp;&nbsp;</p><p></p><h2>கடும் வறட்சி</h2><p>நாட்டில் ஏற்படவுள்ள கடும் வறட்சியைக் கருத்தில் கொண்டு, பொதுமக்கள் அனைவரும் மின்சாரம் மற்றும் குடிநீரை மிகவும் பொறுப்புடனும் சிக்கனமாகவும் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0fe99bcd-261f-4832-ab0c-9bb328a05e65/26-6a61eec093f42.webp' /></p><p> 

தீவிர வெப்பம் மற்றும் வறட்சியினால் விவசாயம், மீன்பிடி போன்ற உணர்திறன் வாய்ந்த துறைகளில் வேலை இழப்புகள் மற்றும் வாழ்வாதாரப் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதால், பொதுமக்கள் நிலைமையைப் புரிந்து கொண்டு அரசிற்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்” என தெரிவித்தார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-23T10:45:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[சூர்யாவின் 51வது பிறந்தநாள்!! அவரின் மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/suriya-net-worth-2026-actor-owns-rs-350-crore-1784803933"></link>
            <id>https://viduppu.com/article/suriya-net-worth-2026-actor-owns-rs-350-crore-1784803933</id>
            <summary type="text">சூர்யா 51தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான நடிகர் சூர்யா நடிப்பில் சமீபத்தில் கருப்பு படம் வெளியாகி மெகா பிளாக் பஸ்டர் படமானது. சூர்யாரின் ...</summary>
            <content type="html"><![CDATA[<h2>சூர்யா 51</h2><p>தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான நடிகர் சூர்யா நடிப்பில் சமீபத்தில் கருப்பு படம் வெளியாகி மெகா பிளாக் பஸ்டர் படமானது. சூர்யாரின் சினிமா பயணத்தில் கருப்பு படம் தான் மிகப்பெரிய வெற்றி படமாக மாறியது. </p><p>கிட்டத்தட்ட ரூ. 300 கோடிக்கும் மேல் வசூல் சாதனை படைத்தது. இன்று ஜூலை 23 ஆம் தேதி தன்னுடைய 51வது பிறந்தநாளை சூர்யா கொண்டாடுகிறார். நீட் தேர்வு முறைக்கேடு குறித்து இந்தியா முழுவதும் மாணவர்கள் போராடி வருவதால் தன்னுடைய பிறந்தநாளை யாரும் கொண்டாட வேண்டாம் என்று சூர்யா கூறியிருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ede971ca-087f-4aab-955a-faa1dc8af69d/26-6a61f25f9c180.webp' /></p><h2>சொத்து மதிப்பு&nbsp;</h2><p> இந்நிலையில் சூர்யாவின் மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஒரு படத்திற்கு சம்பளமாக ரூ. 45 கோடியில் இருந்து ரூ. 50 கோடி வரை பெற்று வருகிறார். </p><p>கருப்பு படத்திற்கு இவ்வளவு தொகை தான் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிற்அது. சூர்யாவுக்கு மட்டும் மொத்தம், ரூ. 350 கோடிக்கும் மேல் சொத்துக்கள் இருக்குமாம்.</p><p> அதேபோல் அவரின் மனைவியும் நடிகையுமான ஜோதிகாவின் சொத்து கிட்டத்தட்ட ரூ. 500 கோடிக்கும் மேல் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. சூர்யா - ஜோதிகாவுக்கு சென்னை, மும்பையில் விலையுயர்ந்த சொகுசு வீடுகளும் பல சொகுசு கார்களும் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-07-23T10:45:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[லைபீரியா வரலாற்றிலே மிகப்பெரிய போதைப்பொருள் வேட்டை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/the-biggest-drug-bust-in-liberia-s-history-1784803215"></link>
            <id>https://canadamirror.com/article/the-biggest-drug-bust-in-liberia-s-history-1784803215</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp; மேற்கு ஆப்பிரிக்க கடற்கரையில் அமைந்துள்ள லைபீரியாவின் மன்ரோவியாவில் உள்ள சட்டவிரோத சேமிப்புக் கிடங்கு ஒன்றில் நடத்தப்பட்ட சோதனையில், லைப...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp; மேற்கு ஆப்பிரிக்க கடற்கரையில் அமைந்துள்ள லைபீரியாவின் மன்ரோவியாவில் உள்ள சட்டவிரோத சேமிப்புக் கிடங்கு ஒன்றில் நடத்தப்பட்ட சோதனையில், லைபீரியாவின் வரலாற்றிலேயே மிகப்பெரிய போதைப்பொருள் வேட்டை ஜூலை 21, 2026 அன்று நடைபெற்றது.
</p><p>
இதன்போது சுமார் 370 மில்லியன் டாலர் மதிப்புள்ள உயர்தர கொக்கைனைப் போலீசார் கைப்பற்றினர்.

இது குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதற்காகச் சிறப்புத் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bb0080d0-6bad-45a3-b4a9-b4e00ee95142/26-6a61ef90f3371.webp' /></p><p>
</p><p>
 லைபீரிய நாட்டின் வரலாற்றிலேயே இதுவரை பிடிபட்ட போதைப்பொருட்களின் அளவுகளில் இதுவே மிகப்பெரிய அளவாகும் என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-07-23T10:38:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டில் டெங்கு பாதிப்பு 79 ஆயிரத்தை கடந்தது ; பொதுமக்களுக்கு மீண்டும் அவசர அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/dengue-cases-in-the-country-exceed-79-000-1784802955"></link>
            <id>https://jvpnews.com/article/dengue-cases-in-the-country-exceed-79-000-1784802955</id>
            <summary type="text">நாடளாவிய ரீதியில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 79 ஆயிரத்தை கடந்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
அந்தப் பிரிவு நேற...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடளாவிய ரீதியில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 79 ஆயிரத்தை கடந்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.</p><p>
</p><p></p><p>அந்தப் பிரிவு நேற்று (22) இரவு வெளியிட்டுள்ள புதிய அறிக்கையின்படி, 2026 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் மொத்தம் 79,016 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், 57 டெங்கு மரணங்களும் பதிவாகியுள்ளன.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7c1b8119-8a1a-4ab0-84f6-3dbda6696b0a/26-6a61ee8ca5fce.webp' /></p><p>அதிகளவான நோயாளர்கள் மேல் மாகாணத்தின் கம்பஹா மாவட்டத்தில் பதிவாகியுள்ள நிலையில், அங்கு மட்டும் இதுவரை 16,676 பேர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.</p><p>



அடுத்ததாக, கொழும்பு மாவட்டத்தில் 15,748 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
</p><p>


மேலும், மாத்தறை மாவட்டத்தில் 5,495 பேரும், கண்டி மாவட்டத்தில் 5,318 பேரும், களுத்துறை மாவட்டத்தில் 5,190 பேரும், இரத்தினபுரி மாவட்டத்தில் 4,444 பேரும், காலி மாவட்டத்தில் 4,391 பேரும் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
</p><p>


இதனிடையே, 2026 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தின் முதல் 22 நாட்களில் மட்டும் 23,641 புதிய டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
</p><p>


டெங்கு பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக சுற்றுப்புறங்களை சுத்தமாக வைத்திருப்பதுடன், நீர் தேங்கும் இடங்களை அகற்றி, கொசு பெருக்கத்தைத் தடுக்கும் நடவடிக்கைகளை தொடருமாறு பொதுமக்களிடம் அதிகாரிகள் மீண்டும் வலியுறுத்தியுள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-23T10:36:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[காவல்துறை வாகனத்தை தனியாக தடுத்து நிறுத்திய பெண்- வைரல் வீடியோ]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/woman-stops-police-vehicle-single-handedly-video-1784802288"></link>
            <id>https://ibctamilnadu.com/article/woman-stops-police-vehicle-single-handedly-video-1784802288</id>
            <summary type="text">கரப்பான்பூச்சி மக்கள் கட்சி சார்பில், நீட் தேர்வுக்கு எதிராகவும், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தியும் டெல்லியில் போராட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கரப்பான்பூச்சி மக்கள் கட்சி சார்பில், நீட் தேர்வுக்கு எதிராகவும், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தியும் டெல்லியில் போராட்டம் நடைபெற்று வருகிறது. </p><p>

டெல்லியில் தொடங்கிய நீட் எதிர்ப்பு போராட்டம் தற்போது நாடு முழுவதும் பரவி வருகின்றது.
</p><p>
சென்னை, மும்பை உள்ளிட்ட நகரங்களிலும் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.</p><p>

இந்நிலையில், மும்பையில் இன்று காலை நீட் தேர்வுக்கு எதிராக போராடிய மாணவர்களை காவல்துறையினர் கைது செய்து வாகனத்தில் அழைத்துச் சென்றனர்.</p><p> </p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Mumbai today <br><br>Girl stood in front of Mumbai police truck which detained students <a href="https://t.co/nJv3FLl3qw">pic.twitter.com/nJv3FLl3qw</a></p>&mdash; 🪳Against Corruption (@akashuchani08) <a href="https://x.com/akashuchani08/status/2080002001606455375?ref_src=twsrc%5Etfw">July 22, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>அப்போது, ஒரு பெண் தனியாக நின்று அந்த காவல்துறை வாகனத்தைத் தடுத்து நிறுத்தினார்.
</p><p>
இதனால், வாகனம் செல்ல முடியாமல் சாலையில் நிறுத்தப்பட்ட நிலையில் வாகனத்தில் இருந்த மாணவர்கள் கீழே இறங்கி மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
</p><p>
காவல்துறை வாகனத்தை தனி ஒருவராகத் தடுத்து நிறுத்திய அந்தப் பெண்ணின் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-23T10:34:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[50 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும்.., முதல்வர் நடித்த படம் வெளியீடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/50-years-after-mgr-a-chief-minister-vijay-appears-1784797322"></link>
            <id>https://ibctamilnadu.com/article/50-years-after-mgr-a-chief-minister-vijay-appears-1784797322</id>
            <summary type="text">முதல்வராக பதவி வகிக்கும் போது ஒரு நடிகரின் திரைப்படம் வெளியாவது, அவரது ரசிகர்கள் மற்றும் தொண்டர்களுக்கு கொண்டாட்டமான தருணமாகும். 

அதன்படி, சுமார் 5...</summary>
            <content type="html"><![CDATA[<p>முதல்வராக பதவி வகிக்கும் போது ஒரு நடிகரின் திரைப்படம் வெளியாவது, அவரது ரசிகர்கள் மற்றும் தொண்டர்களுக்கு கொண்டாட்டமான தருணமாகும்.</p><p> 

அதன்படி, சுமார் 50 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழக முதல்வர் ஒருவரின் படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.</p><p>

இதற்கு முன்பு, எம்ஜிஆர் முதல்வராக இருந்தபோது அவர் நடித்த "மீனவ நண்பன்" திரைப்படம் 1977ஆம் ஆண்டு வெளியானது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/285134a6-b3df-4d3c-adf2-b513aa50bf42/26-6a61d88c208b4.webp' /></p><p>

இதனைத்தொடர்ந்து தற்போது, தமிழக முதல்வராக இருக்கும் விஜய் நடித்த "ஜனநாயகன்" திரைப்படமும் வெளியாகியுள்ளது.&nbsp;</p><p>விஜய்யின் தவெக கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, மே 10ஆம் தேதி அவர் முதல்வராக பதவியேற்ற இரண்டு மாதங்களுக்குப் பிறகு, அவர் நடித்த "ஜனநாயகன்'' திரைப்படம் வெளியாகியுள்ளது.
</p><p>
இதேபோல், எம்ஜிஆர் முதல்வராக பதவியேற்ற இரண்டு மாதங்களுக்குப் பிறகு "மீனவ நண்பன்" திரைப்படம் வெளியானது. </p><p>

மேலும், அவர் முதல்வராக பதவியேற்ற ஆறு மாதங்களுக்குப் பிறகு "மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்" திரைப்படமும் வெளியானது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9a890b37-685e-495b-bfb1-1660d1405a2a/26-6a61d88cc67f0.webp' /></p><p>இந்தப் படத்தின் சில பணிகளை முடிக்க எம்ஜிஆர் ஆளுநரிடம் 10 நாட்கள் அனுமதி கோரியதாகவும் கூறப்படுகிறது.</p><p>

எம்ஜிஆர் அரசியலுக்கு வருவதற்கு முன்பே தனது திரைப்படங்கள் மூலம் அரசியல் கருத்துகளை மக்களிடம் கொண்டு சென்றார்.</p><p> 

அதேபோல், விஜய்யும் அரசியல் கட்சி தொடங்குவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே தனது படங்கள் மூலம் அரசியல் பேசியுள்ளார்.</p><p>இருவரின் அரசியல் சார்ந்த படங்களும் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றன.
</p><p><br></p>]]></content>
            <updated>2026-07-23T10:33:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[தீவிரமாக விரிவடையும் ஈரான் போர்... சவுதி எண்ணெய் கப்பல் மீது ஹவுதிகள் தாக்குதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/houthis-claim-red-sea-attacks-1784801622"></link>
            <id>https://news.lankasri.com/article/houthis-claim-red-sea-attacks-1784801622</id>
            <summary type="text">ஈரானுக்கு எதிராக மீண்டும் தொடர்ச்சியாக 12 இரவுகள் அமெரிக்கா தாக்குதலை நடத்தி வரும் நிலையில், சவுதி அரேபிய எண்ணெய் கப்பல்கள் மீது ஏமனின் ஈரான் ஆதரவு ஹவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானுக்கு எதிராக மீண்டும் தொடர்ச்சியாக 12 இரவுகள் அமெரிக்கா தாக்குதலை நடத்தி வரும் நிலையில், சவுதி அரேபிய எண்ணெய் கப்பல்கள் மீது ஏமனின் ஈரான் ஆதரவு ஹவுதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.</p><h2>விடாப்பிடியாக இருப்போம்</h2><p>
</p><p>நாசா வெளியிட்டுள்ள தரவுகளில் சவுதி கொடியுடன் கூடிய என்செலியா என்ற எண்ணெய் கப்பல் 
செங்கடலில் தீப்பிடித்து எரிவது பதிவாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4045ca2d-28ea-43a6-970e-9b981426adda/26-6a61ec20d5798.webp' /></p><p> வெளியாகியுள்ள தகவலின் அடிப்படையில், தாக்குதலுக்கு இலக்கான இரண்டு கப்பல்களின் ஊழியர்களும் காயமின்றி தப்பியுள்ளதாகவே தெரிய வருகிறது.</p><p> இந்த நிலையில், சவுதி அரேபியாவுக்கு எதிரான தங்களது கடற்படை நடவடிக்கைகளைத் தொடர்வோம் என்றும், முற்றுகைக்கு முற்றுகை என்ற சமன்பாட்டை அமுல்படுத்துவதில் விடாப்பிடியாக இருப்போம் என்றும் ஹவுதி இராணுவ செய்தித் தொடர்பாளர் யஹ்யா சாரீ கூறியுள்ளார்.</p><p></p><p> </p><p>ஆனால், வணிகக் கப்பல்கள் மற்றும் அவற்றின் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் சர்வதேசச் சட்டங்கள் மற்றும் உடன்படிக்கைகளை இந்தத் தாக்குதல்கள் மீறுகின்றன என சவுதி அரேபியாவின் அரசாங்க செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.</p><h2>தீவிரமாக விரிவடைந்து</h2><p> </p><p>ஈரானுக்கு எதிராக அமெரிக்காவின் முற்றுகைக்கு எதிராகவே தற்போது செங்கடலில் கடற்படை முற்றுகையை ஹவுதிகள் முன்னெடுத்துள்ளனர். மட்டுமின்றி, சவுதி அரேபிய எண்ணெய் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியதன் காரணமாக ஈரான் போர் தீவிரமாக விரிவடைந்து வருவதாகவே கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/34984bb1-f91f-468e-b51a-3d31512f8487/26-6a61ec2190744.webp' /></p><p> </p><p>ஏற்கனவே இஸ்ரேலின் நட்பு நாடான ஐக்கிய அரபு அமீரகம் இரகசியமாக ஈரான் மீது தாக்குதல் நடத்தியதற்கான ஆதாரங்கள் வெளிவந்து விவாதத்திற்கு காரணமானது. </p><p>மட்டுமின்றி, பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக செங்கடலில் கப்பல்கள் மீது ஹவுதிகள் தாக்குதல் நடத்தியதும், அதற்கு பதிலடியாக அமெரிக்காவும் பிரித்தானியாவும் வான்வழித் தாக்குதல்களை முன்னெடுத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-23T10:30:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவிற்கே ஆட்டம்... ரஷ்ய ராணுவத்திற்கு பெரும் பீதியை ஏற்படுத்திய உக்ரைன் Flamingo ஏவுகணை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/ukraine-flamingo-missile-fear-russian-military-1784788885"></link>
            <id>https://canadamirror.com/article/ukraine-flamingo-missile-fear-russian-military-1784788885</id>
            <summary type="text">&amp;nbsp;ரஷ்ய - உக்ரைன் போர் இன்னும் முடிவுக்கு வராத நிலையில், உக்ரைன், ‘ஃபயர் பாயிண்ட்’ (Fire Point) என்ற தனது உள்நாட்டு நிறுவனத்தின் மூலம் ‘எஃப்.பி-5 ஃ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;ரஷ்ய - உக்ரைன் போர் இன்னும் முடிவுக்கு வராத நிலையில், உக்ரைன், ‘ஃபயர் பாயிண்ட்’ (Fire Point) என்ற தனது உள்நாட்டு நிறுவனத்தின் மூலம் ‘எஃப்.பி-5 ஃப்ளமிங்கோ’ (FP-5 Flamingo) தொலைதூரக் ஏவுகணையை ரகசியமாக உருவாக்கி உள்ளமை ரஷ்ய ராணுவத் தளபதிகளுக்குப் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
</p><p>
 சுமார் 3,000 கிலோமீட்டர் தூரம் வரை பாய்ந்து சென்று தாக்கும் திறன் கொண்ட இந்த ஏவுகணைகளின் சோதனைக் மாதிரிகள் பிரகாசமான ‘இளஞ்சிவப்பு’ (Pink) நிறத்தில் வண்ணம் தீட்டப்பட்டிருந்ததால், இது ‘பிங்க் ஃப்ளமிங்கோ’ என அழைக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bae922d7-2e36-449b-980f-fe40e659e119/26-6a61b796c2df2.webp' /></p><h2>அமெரிக்காவிற்கே&nbsp; ஆட்டம்...</h2><p>
</p><p>
இந்த ஏவுகணையின் மிகவும் வியப்பூட்டும் அம்சம் என்னவென்றால், இதன் என்ஜின்கள் குப்பைக்கிடங்குகளிலிருந்தும் பயன்படுத்தப்படாத பழைய பழைய கடையிருப்புகளிலிருந்தும் சேகரிக்கப்பட்டவை . </p><p>

சோவியத் காலத்தில் உற்பத்தி செய்யப்பட்டுப் பயன்பாடின்றி வீசப்பட்ட ‘இவ்செங்கோ ஏஐ-25’ (Ivchenko AI-25) ரக டர்போஃபேன் என்ஜின்களை உக்ரேனியப் பொறியாளர்கள் தேடிக் கண்டுபிடித்து, அவற்றில் மலிவான உதிரிபாகங்களைப் பொருத்தி, ஏவுகணையில் இயங்கும் வகையில் வெற்றிகரமாக மாற்றியமைத்துள்ளனர்.</p><p>


அமெரிக்காவின் புகழ்பெற்ற ‘டொமஹாக்’ (Tomahawk) ஏவுகணையை விட இரண்டு மடங்கு அதிக எடையுள்ள (சுமார் 1,150 கிலோ) வெடிபொருட்களைச் சுமந்து செல்லும் திறன் கொண்ட இந்த ஃப்ளமிங்கோ ஏவுகணைகள், தயாரிப்புச் செலவில் டொமஹாகை விட ஐந்து மடங்கு மலிவானவை என கூறப்படுகின்றது.
</p><p>
சிக்கலான அமைப்புகள் எதுவுமின்றி மிக எளிமையான ஃபைபர் கிளாஸ் மற்றும் பிளாஸ்டிக் உடற்பகுதியைக் கொண்டு தயாரிக்கப்படும் இந்த ஏவுகணைகளை, உக்ரைன் ராணுவம் எவ்வித மேற்கத்திய நாடுகளின் அனுமதியுமின்றி ரஷ்ய நிலப்பரப்பிற்குள் மிக ஆழமாகப் பாய்ச்சி வருகிறது.
</p><p>
ரஷ்யாவின் வோல்கோகிராட் மற்றும் செபோக்சரி ஆகிய பகுதிகளில் அமைந்திருந்த முக்கிய ராணுவ ஆயுத உற்பத்தி ஆலைகள் மற்றும் போர் விமான உதிரிபாகத் தொழிற்சாலைகள் மீது இந்த ஃப்ளமிங்கோ ஏவுகணைகள் வெற்றிகரமாகத் தாக்குதல் நடத்தி அழித்துள்ளதை உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி உறுதிப்படுத்தியுள்ளார்.</p><p> 

இந் நிலையில் குப்பையிலிருந்து மீட்கப்பட்ட தொழில்நுட்பத்தைக் கொண்டு ரஷ்யாவின் ஆழமான ராணுவ அமைப்புகளை உக்ரைன் துல்லியமாகத் தாக்கி வருவது, சர்வதேச ராணுவ வல்லுநர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-23T10:30:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/warning-issued-by-yemen-s-houthi-rebels-red-sea-1784802529"></link>
            <id>https://canadamirror.com/article/warning-issued-by-yemen-s-houthi-rebels-red-sea-1784802529</id>
            <summary type="text">&amp;nbsp; சவூதி அரேபியாவின் எண்ணெய் விநியோகப் பாதைகளைப் பயன்படுத்தும் கப்பல்கள் மீதும் தாக்குதல் நடத்தப்படலாம் என ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் எச்சரிக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; சவூதி அரேபியாவின் எண்ணெய் விநியோகப் பாதைகளைப் பயன்படுத்தும் கப்பல்கள் மீதும் தாக்குதல் நடத்தப்படலாம் என ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
</p><p>
செங்கடல் பகுதியில் ஈரான் ஆதரவு பெற்ற ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்களின் அச்சுறுத்தல் அதிகரித்துள்ளதால், சவூதி அரேபியா வழியாக இந்தியாவுக்கு அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் எரிபொருள் ஏற்றி வந்த 2 வர்த்தகச் சரக்குக் கப்பல்கள் நடுவழியிலேயே திருப்பியனுப்பப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/86e2a17d-29a3-4268-9fa7-b3d0a32a506a/26-6a61ece2a7e03.webp' /></p><p>
</p><p>


காசா போருக்கு எதிர்ப்பு தெரிவித்து நீரிணை வழியாகச் செல்லும் கப்பல்களை இலக்கு வைக்கும் ஹவுதியினர், சவூதி அரேபியாவின் எண்ணெய் விநியோகப் பாதைகளைப் பயன்படுத்தும் கப்பல்கள் மீதும் தாக்குதல் நடத்தப்படலாம் என உத்தியோகபூர்வ எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
</p><p>


வழக்கமாகச் செங்கடல் வழியாக வரும் கப்பல்கள், இந்த அச்சுறுத்தல் காரணமாகத் தற்போது ஆப்பிரிக்க கண்டத்தைச் சுற்றி (நன்னம்பிக்கை முனை வழியாக) மிக நீண்ட சுழற்சிப் பாதையில் பயணிக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-07-23T10:27:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[மன்னாரில் பாடசாலை அதிபரை இடமாற்றக் கோரி தொடர் போராட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/protests-mannar-demanding-transfer-principal-1784801295"></link>
            <id>https://ibctamil.com/article/protests-mannar-demanding-transfer-principal-1784801295</id>
            <summary type="text">&amp;nbsp; அதிபரை இடமாற்றம் செய்ய வலியுறுத்தி மன்னார் அல்-அஸ்ஹர் பாடசாலை மாணவர்களும்
பெற்றோர்களும் இணைந்து பாடசாலையைப் புறக்கணித்து இராண்டாவது
நாளாக போர...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; அதிபரை இடமாற்றம் செய்ய வலியுறுத்தி மன்னார் அல்-அஸ்ஹர் பாடசாலை மாணவர்களும்
பெற்றோர்களும் இணைந்து பாடசாலையைப் புறக்கணித்து இராண்டாவது
நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

முறையான தீர்வு கிடைக்கும் வரை பிள்ளைகளைப் பாடசாலைக்கு அனுப்பப் போவதில்லை என
பெற்றோர்கள் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர்.</p><p>மன்னார் அல்-அஸ்ஹர்
பாடசாலை அதிபரை மாற்றக் கோரி தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வரும்
போராட்டங்களுக்கு உரிய தீர்வு கிடைக்காத நிலையில், இன்றைய தினம் (23)
பெற்றோர்கள் மாணவர்களைப் பாடசாலைக்கு அனுப்பாது புறக்கணித்துள்ளனர்.</p><h2>10 மாணவர்களே பாடசாலைக்கு வருகை</h2><p>&nbsp;அதிபர் விவகாரம் தொடர்பில் தொடர் போராட்டங்கள் இடம்பெற்று வரும் சூழலில்,
இன்றைய தினம் பாடசாலைக்கு வருகை தந்த மாணவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாகும்.
அதன்படி, குறித்த பாடசாலைக்கு வெறும் 10 மாணவர்களே வருகை தந்திருந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ee87b12f-0bfa-4612-9df1-67e029eff27a/26-6a61eb559fa2f.webp' /></p><p>தமக்கு நியாயமான தீர்வு கிடைக்கும் வரை தொடர்ந்தும் பிள்ளைகளைப் பாடசாலைக்கு
அனுப்பப் போவதில்லை எனப் பெற்றோர்கள் உறுதியாகத் தெரிவித்துள்ளனர்.
</p><p>
இந்த போராட்டம் தொடர்பில் மன்னார் வலய கல்விப் பணிப்பாளரிடம் எமது செய்தியாளர்
வினவியபோது</p><p></p><p>
</p><p>
</p><h2>தொடர்ச்சியாகப் போராட்டங்கள்&nbsp;</h2><p>குறித்த பாடசாலை அதிபர் விவகாரம் தொடர்பாகத் தொடர்ச்சியாகப் போராட்டங்கள்
இடம்பெற்று வருவது எமது கவனத்திற்கு வந்துள்ளது. இது குறித்து பாடசாலை சமூகத்தினர், பழைய மாணவர்கள் மற்றும் பெற்றோர்களை இணைத்து விரைவில் ஒரு
கலந்துரையாடலை மேற்கொள்ளவுள்ளோம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/170b6acf-bdb0-4ba7-bfa6-2ef801d88568/26-6a61ef2629155.webp' /></p><p> அதனைத் தொடர்ந்து, இது தொடர்பான முழுமையான
அறிக்கையை மாகாண கல்விப் பணிப்பாளர் மற்றும் மத்திய கல்வி அமைச்சுக்கு
விரைவில் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும்." என தெரிவித்துள்ளார்
</p><p>
இந்த நிலையில் தொடர்ந்து பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பாது பெற்றோர்
புறக்கணிக்கப்போவதாக தெரிவித்துள்ளனர்&nbsp;&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-23T10:22:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[மதுபானத்தின் விலை அதிகரிப்பு..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/increase-in-the-price-of-liquor-1784801307"></link>
            <id>https://tamilwin.com/article/increase-in-the-price-of-liquor-1784801307</id>
            <summary type="text">750 மில்லிலீற்றர் அதிவிசேட மதுபானத்தின் விலை 20 ரூபாவினால் உயர்த்தப்பட்டுள்ளது.&amp;nbsp;உற்பத்திச் செலவுகள் அதிகரித்துள்ளதன் காரணமாக இந்த விலை அதிகரிப்பு...</summary>
            <content type="html"><![CDATA[<p>750 மில்லிலீற்றர் அதிவிசேட மதுபானத்தின் விலை 20 ரூபாவினால் உயர்த்தப்பட்டுள்ளது.&nbsp;</p><p>உற்பத்திச் செலவுகள் அதிகரித்துள்ளதன் காரணமாக இந்த விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.&nbsp;&nbsp;</p><h2>விலை அதிகரிப்பு</h2><p>அதன்படி, 750 மில்லிலீற்றர் மதுபானத்தின் புதிய விலை 3,700 ரூபாவாகும்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e616077a-56f2-4e14-8ad4-3d7855d2582e/26-6a61eb1b6edcf.webp' /></p><p>மேலும், அதே வகையைச் சேர்ந்த 375 மில்லிலீற்றர் மதுபானப் போத்தலின் விலையும் 10 ரூபாவால் உயர்த்தப்பட்டுள்ளது. அதன் புதிய விலை, 1,860 ரூபாவாகும்.</p><p>எனினும், 180 மில்லிலீற்றர் மதுபானத்தின் விலையில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை.</p><p></p><p></p><p></p><p>
</p>]]></content>
            <updated>2026-07-23T10:22:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[பலத்த பாதுகாப்புடன் ஆரம்பமாகும் தேவேந்திரமுனை பெரஹர - குவிக்கப்பட்டுள்ள பொலிஸ் மற்றும் புலனாய்வு அதிகாரிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/devendramunai-vihara-perahara-procession-safety-1784785661"></link>
            <id>https://tamilwin.com/article/devendramunai-vihara-perahara-procession-safety-1784785661</id>
            <summary type="text">புதிய இணைப்புமாத்தறை, தேவேந்திரமுனை விகாரையில் நடைபெறும் வருடாந்த பெரஹரவிற்காக 650 பொலிஸ் அதிகாரிகளும் 100 பொலிஸ் சிறப்பு அதிரடிப்படை அதிகாரிகளும் பணி...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>மாத்தறை, தேவேந்திரமுனை விகாரையில் நடைபெறும் வருடாந்த பெரஹரவிற்காக 650 பொலிஸ் அதிகாரிகளும் 100 பொலிஸ் சிறப்பு அதிரடிப்படை அதிகாரிகளும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தெரிவித்துள்ளது.
</p><p>
இதற்கு கூடுதலாக, பாதுகாப்பு பணிகளுக்காக புலனாய்வு அதிகாரிகளும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
</p><p>
வருடாந்த எசல பெரஹராவின் முதல் நாள் இன்று (23) தொடங்கி, ஜூலை 29 அன்று மாபெரும் பெரஹரவுடன் நிறைவடையவுள்ளது.</p><p>

காவடி பெரஹராஜூலை 28 அன்றும், ரந்தோலி பெரஹரா ஜூலை 29 அன்றும் நடைபெறும் என பொலிஸ் தெரிவிக்கின்றது.
</p><p>
குறித்த நாட்களில் மாலை 4.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை கொழும்பு-கதிர்காமம் பிரதான வீதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படக்கூடும் என்பதால், வாகன சாரதிகள் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸ் கேட்டுக்கொள்கின்றது.
</p><p>
 நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், பொதுமக்களின் மற்றும் உடைமைகளின் பாதுகாப்பிற்காகவும், போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்துவதற்காகவும் இந்த பாதுகாப்பு ஏற்பாடு செயல்படுத்தப்பட்டுள்ளது.</p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">முதலாம் இணைப்பு</span></p><p>மாத்தறை, தேவேந்திரமுனை விகாரையின் 769வது பெரஹர ஊர்வலம் இன்று (23) பலத்த பாதுகாப்புடன் ஆரம்பமாகவுள்ளது. </p><p>

இதற்கமைய, பொலிஸ் விசேட அதிரடிப்படை, இராணுவம் மற்றும் பொலிஸார் என 500 பேர் பாதுகாப்புப்பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.</p><p></p><h2>தேவேந்திரமுனை துப்பாக்கிச்சூடு</h2><p> </p><p>

குறித்த விகாரைக்கு அருகில் அமைந்துள்ள வீடொன்றின் மீது அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரி ஒருவர் நேற்றுமுன் தினம் (21) இரவு துப்பாக்கிச்சூடு நடத்தி தப்பிசென்ற நிலையில் பெரும் பதற்றத்தினை ஏற்படுத்தியிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0f0b4969-12c3-4322-a52f-49e7a068783c/26-6a61af2babcc6.webp' /></p><p>
</p><p>
கடற்தொழிலில் ஈடுபடும் நபரொருவரின் வீட்டின் மீதே இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் குறித்த துப்பாக்கிச்சூடானது 'தெஹிபாலே மல்லி' எனும் நபரின் தரப்பினரால் வழிநடத்தப்பட்டுள்ளதாக தெரியவந்தது.
</p><p>
தெஹிபாலே மல்லி' மற்றும் கஞ்சிபானை இம்ரான் ஆகிய திட்டமிட்ட பாதாள உலகக்குழுக்கள் இம்மோதலுக்குப் பின்னணியில் இருப்பதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.</p><p> 

தேவேந்திரமுனை விகாரை பெரஹரவில் கலந்துகொள்ளும் காவடி நடனக்குழுக்களை குறைப்பது தொடர்பாக கஞ்சிபானை இம்ரானால் பயன்படுத்தப்படும் 'KPI' என்ற புனைப்பெயரைப் பயன்படுத்தி மிரட்டல் விடுக்கப்பட்டதாக தகவல்கள் பரவியிருந்தது.</p><h2>சந்தேகநபர் வந்த கார் மீட்பு</h2><p>
</p><p>
இந்நிலையிலேயே, குறித்த விகாரைக்கு சுமார் 200 மீற்றர் தொலைவில் உள்ள வீடொன்றிற்கு காரில் வந்து நபர் துப்பாக்கிச்சூட்டை நடத்தி தப்பிச்சென்றமை அருகில் இருந்த சிசிடிவி (CCTV) கமராவிலும் பதிவாகியிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9e01d340-a89d-437d-8de3-00f6b42f4990/26-6a61af2c5947d.webp' /></p><p>
</p><p>
இதனையடுத்து துப்பாக்கிதாரி தப்பிச்சென்ற கார் திக்வெல்ல பகுதியில் வைத்து நேற்று (22) இரவு கண்டுபிடிக்கப்பட்டது. </p><p>

இவ்வாறான பின்னணியில், எதிர்வரும் 29 ஆம் திகதி நடைபெறவுள்ள தேவேந்திரமுனை விகாரை பெரஹரவிற்காக பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
</p><p>
இன்று (23) ஆரம்பமாகும் பெரஹர நிகழ்வு எதிர்வரும் ஆகஸ்ட் 05 திகதி வரை நடைபெறவுள்ளது.
</p><p>
இதற்கமைய, பொலிஸ் விசேட அதிரடிப்படை, இராணுவம் மற்றும் பொலிஸார் என 500 பேர் பாதுகாப்புப்பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-23T10:17:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[சாந்த பண்டாரவின் மகன் உள்ளிட்ட ஐவர் விளக்கமறியலில்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/five-people-including-shantha-son-remanded-custody-1784801658"></link>
            <id>https://jvpnews.com/article/five-people-including-shantha-son-remanded-custody-1784801658</id>
            <summary type="text">சீன நாட்டவரிடம் இருந்து 2 கோடி ரூபாய் பணத்தைக் கொள்ளையிட்ட சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கைது செய்யப்பட்டுள்ள, முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டாரவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சீன நாட்டவரிடம் இருந்து 2 கோடி ரூபாய் பணத்தைக் கொள்ளையிட்ட சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கைது செய்யப்பட்டுள்ள, முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டாரவின் மகன் அநுத ஜனாதித் பண்டார உள்ளிட்ட 5 சந்தேகநபர்களையும் இந்த மாதம் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.</p><p></p><p>சந்தேகநபர்களைக் கோட்டை நீதவான் பசன் அமரசேன முன்னிலையில் இன்று (23) ஆஜர்படுத்தியபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6d7a98e9-3d1c-4dba-9686-fedff7592cc7/26-6a61e97bb1723.webp' /></p>]]></content>
            <updated>2026-07-23T10:14:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[திருச்சி முகாமில் வருடக்கணக்கில் தனது மகளை பார்க்காமல் தவிக்கும் இலங்கை தாய்! விஜய்யிடம் விசேட கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/srilankan-mother-at-the-trichy-camp-request-vijay-1784801637"></link>
            <id>https://ibctamil.com/article/srilankan-mother-at-the-trichy-camp-request-vijay-1784801637</id>
            <summary type="text">திருச்சி சிறப்பு முகாமில் தொடரும் ஈழ ஏதிலிகளின் உண்ணாவிரத போராட்டம் குறித்து தமிழ்நாட்டு முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு கடிதம் ஒன்று வழங்கப்பட்டுள்ளது.
...</summary>
            <content type="html"><![CDATA[<p>திருச்சி சிறப்பு முகாமில் தொடரும் ஈழ ஏதிலிகளின் உண்ணாவிரத போராட்டம் குறித்து தமிழ்நாட்டு முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு கடிதம் ஒன்று வழங்கப்பட்டுள்ளது.</p><p>

திருச்சி சிறப்பு முகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ள 7 பேருக்கான குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாது தொடரும் விடயத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும் தமக்கான நீதியை பெற்றுத்தர கோரியும் இந்த ஆர்ப்பாட்டம் எட்டாவது நாளாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.</p><p>

இதில் சுகந்தினி என்பவரும், அவரது மகனும் கடந்த 3 ஆண்டுகளாக நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக இதன்மூலம் தெரியவந்துள்ளது.
</p><p>
இதன்படி குறித்த அகதிகளை இலங்கைக்கு அனுப்புவது குறித்து தமிழ்நாட்டு முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
</p><p>
இந்த விடயம் குறித்து திருச்சி சிறப்பு முகாமிற்கு விஜயம் செய்திருந்த தமிழ்நாட்டு சட்டத்தரணி கருத்து தெரிவிக்கையில்,&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/uEa2iTcxXu8" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-23T10:14:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டாரவின் மகன் உட்பட 5 பேருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/shantha-bandara-s-son-and-4-others-remanded-1784800684"></link>
            <id>https://tamilwin.com/article/shantha-bandara-s-son-and-4-others-remanded-1784800684</id>
            <summary type="text">சீனப் பிரஜை ஒருவரிடமிருந்து பணம் மோசடி செய்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டாரவின் மகன் உள்ளிட்ட 5 பேரையும் எ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சீனப் பிரஜை ஒருவரிடமிருந்து பணம் மோசடி செய்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டாரவின் மகன் உள்ளிட்ட 5 பேரையும் எதிர்வரும் ஜூலை 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p>அதன்படி, கோட்டை நீதிபதி பசன் அமரசேன, சீன நாட்டவர் உட்பட 5 சந்தேக நபர்களை இன்று (23) விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.
</p><p></p><h2>நீதிமன்றத்தில் முன்னிலை</h2><p>
அனுத பண்டார, தொடர்புடைய குற்றச்சாட்டுகள் தொடர்பாக 21ஆம் திகதி கொள்ளுப்பிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, நேற்று (22) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ef666b9b-e1fc-4430-ac87-de549494e842/26-6a61e931644e9.webp' /></p><p>
மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவு விடுத்த கோரிக்கையைத் தொடர்ந்து, விசாரணைக்காக அவரை 24 மணி நேரம் காவலில் வைக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-23T10:13:16+00:00</updated>
        </entry>
    </feed>
