<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-07-30T04:34:45+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது நீடிப்பு: அரசின் தீர்மானத்தை முற்றாக எதிர்க்க சட்டத்தரணிகள் சங்கம் முடிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/extension-of-retirement-age-of-judges-1785385919"></link>
            <id>https://tamilwin.com/article/extension-of-retirement-age-of-judges-1785385919</id>
            <summary type="text">இலங்கையிலுள்ள சகல நீதிமன்றங்களினதும் நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை
இரண்டு வருடங்களால் நீடிப்பது குறித்து அரசால் முன்மொழியப்பட்டுள்ள
தீர்மானத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையிலுள்ள சகல நீதிமன்றங்களினதும் நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை
இரண்டு வருடங்களால் நீடிப்பது குறித்து அரசால் முன்மொழியப்பட்டுள்ள
தீர்மானத்தை முற்றாக எதிர்க்க வேண்டும் என்று இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின்
விசேட பொதுச்சபைக் கூட்டத்தில் ஏகமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
</p><p>
நீதிபதிகளின் பதவிக்கால நிர்ணயம் என்பது நீதித்துறையின் சுயாதீனத்தன்மையை
உறுதிப்படுத்தும் மிக முக்கிய விடயமாகும் என்றும், நீதித்துறை சார்ந்த பதவிகள்
தொடர்பான அரசமைப்பு உள்ளடக்கங்களை மாற்றியமைக்கும்போது பொது இணக்கப்பாடு
மற்றும் வெளிப்படைத்தன்மை முறையாகப் பின்பற்றப்பட வேண்டும் என்றும் மேற்படி
கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.</p><p></p><h2>அமைச்சரவை ஒப்புதல்</h2><p>

உயர்நீதிமன்ற நீதியரசர்கள் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள்
உள்ளடங்கலாக நாட்டின் சகல நீதிமன்றங்களினதும் நீதிபதிகளின் ஓய்வுபெறும்
வயதெல்லையை உயர்த்துவதற்கான அரசின் யோசனைக்கு கடந்த திங்கட்கிழமை அமைச்சரவை
ஒப்புதல் அளித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/40064673-a8b8-4748-a9ee-66dee0c8aebf/26-6a6ad3c1bb3dd.webp' /></p><p> இந்த விவகாரம் கடும் சர்ச்சைகளைத் தோற்றுவித்துள்ள
பின்னணியில், இது பற்றி ஆராய்வதற்காக இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் விசேட
பொதுச்சபைக் கூட்டம் நேற்று முற்பகல் 11 மணிக்குக் கொழும்பில் உள்ள
சட்டத்தரணிகள் சங்கக் கட்டடத்தில் இடம்பெற்றது.
</p><p>
இதன்போதே நாட்டிலுள்ள சகல நீதிமன்றங்களினதும் நீதிபதிகளின் ஓய்வுபெறும்
வயதெல்லையை நீடிப்பது குறித்து அரசால் முன்மொழியப்பட்டுள்ள தீர்மானத்தை
முற்றாக எதிர்க்க வேண்டும் என்று ஏகமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.</p><h2>தீர்மானத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள்</h2><p> 01. நீதித்துறையின் சுயாதீனத்தன்மை: இலங்கையில் நீதித்துறையின்
சுயாதீனத்தன்மையானது அரசமைப்பின் அடிப்படைத் தூணாகும். அத்தோடு, சட்டத்தின்
ஆட்சி, அரசமைப்பு அடிப்படையிலான ஜனநாயகம் மற்றும் மக்களின் அடிப்படை
உரிமைகளைப் பாதுகாப்பதற்கு இது இன்றியமையாததாகும்.
</p><p>
02. கலந்தாலோசனையின்மை:இந்த யோசனை நீதித்துறை, சட்டத்தரணிகள் சமூகம்,
கல்வியியலாளர்கள், சிவில் சமூகம் மற்றும் ஏனைய சம்பந்தப்பட்ட தரப்பினருடன்
விரிவான கலந்தாலோசனைகள் இன்றியும், சுயாதீன மற்றும் அரசமைப்பு ரீதியிலான
பரிசீலனைகள் இன்றியும் முன்வைக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/328cb271-e63c-4353-815d-bef20e54aa22/26-6a6ad3c26f464.webp' /></p><p>
</p><p>
03. பரிந்துரைக்கப்படாத திருத்தம்: நீதி அமைச்சால் தயாரிக்கப்பட்ட 'இலங்கையின்
நீதித்துறை பற்றிய மதிப்பீடு மற்றும் மூலோபாய நடவடிக்கைத் திட்டம்' ஊடாக
பல்வேறு கட்டமைப்புசார் மறுசீரமைப்புக்கள் அடையாளங்காணப்பட்டிருந்த போதிலும்,
அதில் நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை அதிகரித்தல் ஒரு முக்கிய
திருத்தமாகப் பரிந்துரைக்கப்பட்டிருக்கவில்லை.</p><p>
</p><p>
04. உண்மையான பிரச்சினைகளுக்குக் கவனம் செலுத்துதல்: நீதிபதிகளின்
பதவிக்காலத்தை மாற்றுவதை விடுத்து, நீதிபதி வெற்றிடங்கள், வழக்கு விசாரணைகளில்
தாமதம், போதிய வளமின்மை, தொழில்நுட்ப நவீனமயமாக்கல் இன்மை போன்ற உண்மையான
பிரச்சினைகளுக்கே விசேட கவனம் செலுத்தப்பட வேண்டும். அத்தோடு, தற்போது நிலவும்
நீதிபதி வெற்றிடங்கள் அரசமைப்புக்கு அமைவாக விரைவாக நிரப்பப்பட வேண்டும்.</p><p>

05. வெளிப்படைத்தன்மையின் அவசியம்: நீதி நிலைநாட்டப்படல் தொடர்பான
பொதுமக்களின் நம்பிக்கையானது நீதித்துறையின் உண்மையான சுயாதீனத்துவத்தில்
மாத்திரமன்றி, அந்த சுயாதீனத்துவம் வெளிப்படையாகப் புலப்படுவதிலும்
தங்கியுள்ளது என்று அந்தத் தீர்மானத்தில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-30T04:32:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[பரபரப்பான சூழல், ஜனனியிடம் தர்ஷினி சொன்ன விஷயம்... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/ethirneechal-thodargiradhu-serial-special-promo-1785381224"></link>
            <id>https://cineulagam.com/article/ethirneechal-thodargiradhu-serial-special-promo-1785381224</id>
            <summary type="text">எதிர்நீச்சல் தொடர்கிறதுசன் டிவியில் ஒளிபரப்பாகும் இந்த கதையில் இப்போது கதிரின் புதிய கடை திறப்பு விழாவிற்கான வேலைகள் பரபரப்பாக நடந்து கொண்டிருக்கிறது....</summary>
            <content type="html"><![CDATA[<h2>எதிர்நீச்சல் தொடர்கிறது</h2><p>சன் டிவியில் ஒளிபரப்பாகும் இந்த கதையில் இப்போது கதிரின் புதிய கடை திறப்பு விழாவிற்கான வேலைகள் பரபரப்பாக நடந்து கொண்டிருக்கிறது. </p><p>கதிர் கடை திறப்பு விழாவிற்காக ஒருபக்கம் வேலை நடக்க இன்னொரு பக்கம் ராவணன் ஒரு பிளான் போட்டு வருகிறார். அன்று ஏதோ நடக்கப்போகிறது என்ற பயத்தில் ஜனனி இருக்கிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0584f12d-168b-4da7-8ce1-da2e2b6fcfa9/26-6a6ac57317c9c.webp' /></p><p> </p><p>ஆனால் ராவணன் என்ன செய்யப்போகிறார், என்ன நடக்கப்போகிறது என்பதையெல்லாம் பொறுத்திருந்து காண்போம். </p><p>அவர் விசாலாட்சியை நிகழ்ச்சிக்கு வர அழைத்தது எல்லாம் ஏதோ பிளான் என ரசிகர்களே யோசித்தார்கள், ஆனால் அவர் கடைசியில் வர மாட்டேன் என உறுதியாக கூறிவிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e29c9f6f-bd4b-479b-b544-a311eec9c71f/26-6a6ac573d9d1b.webp' /></p><h2>புரொமோ</h2><p>இன்றைய எபிசோட் புரொமோவில், ராவணனுக்கு Vk உயிரோடு இருக்கும் விஷயம் தெரிந்துவிட்டது. அவரை காண செல்லும் சக்தியை டிராக் செய்ய ராவணன் யாரிடமோ கூற அதை ஜனனி கேட்டுவிடுகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ec12b184-95ff-44fa-8540-649827c6a498/26-6a6ac5723f941.webp' /></p><p>இதனால் சக்தியை தனியாக விடக் கூடாது என ஜனனியும் அவர் இடத்தை தேடி செல்கிறார். இதற்கு இடையில் தர்ஷினி, ஜனனி-சக்தியை சந்தித்து ஏதோ பிரச்சனை வரப்போவதாக தெரிகிறது என கூற கவலைப்படாதே நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்கிறார்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/tnzpVjuwWn8" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-07-30T04:30:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யானை - மனித மோதலுக்கு தீர்வு வழங்கும் நோக்கில் புதிய திட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/new-project-aims-to-solve-human-elephant-conflict-1785385507"></link>
            <id>https://tamilwin.com/article/new-project-aims-to-solve-human-elephant-conflict-1785385507</id>
            <summary type="text">இலங்கையில் நீண்டகாலமாக நிலவி வரும் யானை - மனித மோதலுக்கு ஒரு நிலையான தீர்வாக மூங்கில் &#039;உயிரியல் வேலி&#039; (bio-fences) அமைக்கும் திட்டத்துக்குத் தேவையான த...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் நீண்டகாலமாக நிலவி வரும் யானை - மனித மோதலுக்கு ஒரு நிலையான தீர்வாக மூங்கில் 'உயிரியல் வேலி' (bio-fences) அமைக்கும் திட்டத்துக்குத் தேவையான தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சி உதவிகளை வழங்க சீனா ஒப்புக்கொண்டுள்ளது.</p><p>

சுற்றாடல் பிரதி அமைச்சர் அன்டன் ஜெயக்கொடி தலைமையிலான இலங்கைத் தூதுக்குழுவினர், பெய்ஜிங்கில் உள்ள சர்வதேச மூங்கில் மற்றும் பிரம்பு மையத்திற்கு (ICBR) மேற்கொண்ட உத்தியோகபூர்வ விஜயத்தின் போது இந்த முன்மொழிவு குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>ஆராயப்பட்டுள்ள விடயம்</h2><p>
</p><p>
இந்தச் சந்திப்பின் போது, மூங்கில் பயிர்ச்செய்கை, நவீன பதப்படுத்தும் தொழில்நுட்பங்கள் மற்றும் மூங்கில் சார்ந்த தொழில்துறை தயாரிப்புகள் குறித்து இலங்கைத் தூதுக்குழுவினர் ஆராய்ந்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/08fe35af-951c-4a12-8c52-8e2c4405acbf/26-6a6ad3549c3fb.webp' />&nbsp; &nbsp;</p><p>
</p><p>
யானை - மனித மோதலைக் குறைப்பதற்கு மூங்கில் உயிரியல் வேலிகளை உருவாக்க சீனாவின் உதவியை இலங்கை கோரியிருந்தது.</p><p>இதற்குப் பதிலளிக்கும் விதமாக, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, நவீன தொழில்நுட்பம் மற்றும் சிறந்த நடைமுறைகள் மூலம் ஆதரவளிக்க சீனத் தரப்பு உறுதியளித்துள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-30T04:30:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டின் ஏற்றுமதித் துறையில் புதிய மைல்கல்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/over-1000-new-exporters-join-sl-export-sector-1785384345"></link>
            <id>https://ibctamil.com/article/over-1000-new-exporters-join-sl-export-sector-1785384345</id>
            <summary type="text">ஆயிரத்திற்கும் மேற்பட்ட புதிய ஏற்றுமதியாளர்கள் நாட்டின் ஏற்றுமதி துறையில் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 ஏற்றுமதி அபிவிருத்தி சபை இதனை தெரிவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஆயிரத்திற்கும் மேற்பட்ட புதிய ஏற்றுமதியாளர்கள் நாட்டின் ஏற்றுமதி துறையில் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
 ஏற்றுமதி அபிவிருத்தி சபை இதனை தெரிவித்துள்ளது.
</p><p>
இந்தநிலையில் தொழில் முயற்சியாளர்களை ஏற்றுமதியாளர்களாக மாற்றுவதற்கான பயிற்சித் திட்டங்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக சபையின் தலைவர் மங்கள விஜேசிங்க குறிப்பிட்டுள்ளார்.</p><p>
</p><p></p><h2>ஏற்றுமதியாளர்கள்&nbsp;</h2><p>இதன்போது சிறு மற்றும் நடுத்தர அளவிலான ஏற்றுமதியாளர்கள் தொடர்பில் பிரதான கவனம் செலுத்தப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.</p><p>

2025 ஆம் ஆண்டில் 650 வரையான ஏற்றுமதியாளர்களும் இந்த வருடத்தின் முதல் 06 மாதங்களில் 350 இற்கும் மேற்பட்ட ஏற்றுமதியாளர்களும் இணைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/88358411-a0fd-423f-96c3-3e54ae4bd821/26-6a6ad0495019b.webp' /></p><p>அத்தோடு தகவல் தொழில்நுட்பம், உணவு, குடிபானம், மரக்கறி, பழங்கள், கடல் உணவுகள், தேயிலை மற்றும் பெறுமதி சேர் பொருட்கள் உள்ளிட்ட ஏற்றுமதிகளில் அவர்கள் தமது பங்களிப்பை வழங்கியுள்ளதாக மங்கள விஜேசிங்க தெரிவித்துள்ளார்.</p><p>

ஏற்றுமதியாளர்களை ஊக்குவிப்பதற்கான 140 இற்கும் மேற்பட்ட வேலைத்திட்டங்களை இவ்வாண்டில் நடைமுறைப்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>

மேலும் வருடாந்தம் 1000 புதிய ஏற்றுமதியாளர்களை உருவாக்குவதே தமது இலக்காகும் எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. </p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-30T04:25:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜனநாயகன் படத்தில் நீக்கப்பட்ட காட்சிகள் மீண்டும் சேர்க்க முடிவு?- இயக்குநர் ஹெச். வினோத்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/jana-nayagan-box-office-collection-details-1785317270"></link>
            <id>https://manithan.com/article/jana-nayagan-box-office-collection-details-1785317270</id>
            <summary type="text">இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ஜனநாயகன் திரைப்படம் கடந்த 23ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. 

பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பாபி ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ஜனநாயகன் திரைப்படம் கடந்த 23ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. </p><p>

பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பாபி தியோல் உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
</p><p>
விஜயின் கடைசி திரைப்படம் ஜனநாயகன் கலவையான விமர்சனங்களை பெற்று, வசூலிலும் எதிர்பார்த்த அளவுக்கு சாதிக்கவில்லை என கூறப்படுகிறது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0e1779a3-fcae-4b10-94ff-e72d96fb1b37/26-6a69c87de78ac.webp' /></p><p>லியோ முதல் நாளில் ரூ.147 கோடியும், தி கோட் ரூ.120 கோடியும் வசூலித்த நிலையில், ஜனநாயகன் முதல் நாளில் உலகம் முழுவதும் ரூ.70 கோடிக்கும் மேல் வசூலித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
</p><p>
படம் 3 நாட்களில் ரூ.160 கோடியும், 5 நாட்களில் உலகளவில் ரூ.200 கோடியும் வசூலித்தாலும், வசூல் வேகம் குறைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0880bf8e-366d-4e52-9182-b171fbadf88d/26-6a69c87ea4867.webp' /></p><p>

ஜனநாயகன் படத்தில் நீக்கப்பட்ட 6 காட்சிகளை மீண்டும் சேர்க்கும் ஆலோசனையில் படக்குழு இருப்பதாக இயக்குநர் ஹெச். வினோத் தெரிவித்துள்ளார்.
</p><p>
நீக்கப்பட்ட காட்சிகளில் 2 நகைச்சுவை, 2 சண்டை மற்றும் 2 உணர்ச்சிப்பூர்வமான காட்சிகள் இடம்பெற்றுள்ளன. </p><p>

தயாரிப்பாளர் ஒப்புதல் அளித்தால் அந்த காட்சிகள் படத்தில் சேர்க்கப்படும் என்று ஹெச். வினோத் கூறியுள்ளார்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/kQX9tb129Ss" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-07-30T04:19:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Fathima</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதிக மின்கட்டண புகார்: ஆய்வு செய்ய உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/high-electricity-bill-complaints-1785384686"></link>
            <id>https://ibctamilnadu.com/article/high-electricity-bill-complaints-1785384686</id>
            <summary type="text">ஜூலை மாதத்துக்கான மின் கட்டணம் வழக்கத்தை விட அதிகமாக வந்துள்ளதாக புகார் எழுந்ததை தொடர்ந்து 3.70 லட்சம் வீட்டு மின் இணைப்புகளை கள ஆய்வு செய்து அறிக்கை ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜூலை மாதத்துக்கான மின் கட்டணம் வழக்கத்தை விட அதிகமாக வந்துள்ளதாக புகார் எழுந்ததை தொடர்ந்து 3.70 லட்சம் வீட்டு மின் இணைப்புகளை கள ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழ்நாடு மின்சார வாரியத் தலைவர் அருண்ராய் உத்தரவிட்டுள்ளார்.
</p><p>
ஜூலை மாதத்துக்கான மின் கட்டணம் வழக்கத்தை விட இரண்டு அல்லது மூன்று மடங்கு அதிகமாக வந்துள்ளதாக புகார்கள் எழுந்தன.
</p><p>
200 யூனிட் இலவச மின்சாரம் இருந்தும் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்தது, இதுதொடர்பில் பலரும் சமூகவலைத்தளங்களில் பதிவிட்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fd9e617a-5649-4206-8546-5a430cb8e9c9/26-6a6ad01fc2d14.webp' /><br></p><p>
</p><p>
இந்நிலையில் மின்வாரிய மூத்த அதிகாரிகள் மூலம் மின்இணைப்புகளை களஆய்வு செய்து ஆகஸ்ட் 7ம் தேதிக்குள் தாக்கல் செய்ய தமிழ்நாடு மின்சார வாரியத் தலைவர் அருண்ராய் உத்தரவிட்டுள்ளார்.</p><p>

மேலும் ஆய்வில் மீட்டர் கணக்கெடுப்பு, கணக்கீடு அல்லது கட்டணி நிர்ணயத்தில் ஏதேனும் தவறு கண்டறியப்பட்டால் உடனடியாக திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/ChkmtYGaKRY" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-07-30T04:16:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[முடிவுக்கு வராத ஈரான் போர்... கடும் நெருக்கடியில் அமெரிக்காவின் ஆயுத இருப்புகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/us-weapons-stockpiles-dwindle-1785384938"></link>
            <id>https://news.lankasri.com/article/us-weapons-stockpiles-dwindle-1785384938</id>
            <summary type="text">சமீபத்திய வாரங்களில் ஈரானுடனான மோதல் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, முக்கியமான வான் பாதுகாப்பு ஏவுகணைகள் உட்பட அமெரிக்க ராணுவத்தின் ஆயுத இருப்புகள் கடுமைய...</summary>
            <content type="html"><![CDATA[<p>சமீபத்திய வாரங்களில் ஈரானுடனான மோதல் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, முக்கியமான வான் பாதுகாப்பு ஏவுகணைகள் உட்பட அமெரிக்க ராணுவத்தின் ஆயுத இருப்புகள் கடுமையாகக் குறைந்துள்ளதாக தகவல் கசிந்துள்ளது.</p><h2>அதிக ஆபத்தை எதிர்கொள்ள</h2><p>
</p><p>ஈரானுடனான மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான உறுதியான தீர்வு இன்னும் எட்டப்படாமல் ட்ரம்ப் நிர்வாகம் தத்தளித்து வரும் நிலையில், ஏவுகணைகளின் பற்றாக்குறை, பிற முனைகளில் அமெரிக்கா மோதலில் ஈடுபடும் திறனைப் பாதிக்கக்கூடும் என்றே ஆய்வாளர்களின் கருத்தாக உள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f1677821-2e5b-4228-83a9-a0f1ab515507/26-6a6ad161db482.webp' /></p><p> திங்களன்று வெளியாகியுள்ள தரவுகளின் அடிப்படையில், அமெரிக்காவிடம் தற்போது 827-க்கும் குறைவான பேட்ரியாட் இடைமறிப்பு ஏவுகணைகளும், 278-க்கும் குறைவான தாட் பாலிஸ்டிக் ஏவுகணை இடைமறிப்பு ஏவுகணைகளும் எஞ்சியுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. </p><p>போருக்கு முந்தைய அமெரிக்க ராணுவத்தின் ஆயுத இருப்பானது 
CSIS-இன் மதிப்பீட்டின்படி, சுமார் 2,200 'பேட்ரியாட்' ஏவுகணைகளும் (அவற்றின் மிகவும் நவீனமயமாக்கப்பட்ட இரண்டு வகைகளைச் சேர்ந்தவை) 452 'தாட்' (THAAD) பாலிஸ்டிக் ஏவுகணைகளும் இருந்தன. </p><p>இவை அமெரிக்க ராணுவம் தங்களை நோக்கி வரும் எதிரியின் ஏவுகணைகளை இடைமறித்து அழிப்பதற்கான முதன்மையான அமைப்புகளாகும்; மேலும், ஒவ்வொரு இடைமறிப்பு ஏவுகணையின் விலையும் பல மில்லியன் டொலர்கள் ஆகும்.</p><p></p><p> </p><p>இந்த நிலையில், CSIS அறிக்கையின் ஆசிரியர்கள் குறிப்பிடுகையில், குறைந்துவிட்ட ஆயுதக் கையிருப்பு, அமெரிக்காவையும் அதன் நேச நாடுகளையும் அதிக ஆபத்தை எதிர்கொள்ள நிர்பந்திக்கக்கூடும். </p><p>பாலிஸ்டிக் ஏவுகணை அச்சுறுத்தல்களுக்கு பேட்ரியாட் மற்றும் தாட் (THAAD) ஏவுகணை அமைப்புகள் போன்ற சிறந்த மாற்று வழிகள் எதுவும் இல்லை. அத்தகைய அச்சுறுத்தல்களை இடைமறிக்கக்கூடிய சாதாரண ஏவுகணைகளைக் கொண்ட கடற்படைக் கப்பல்கள், பொதுவாக மிகவும் தொலைவில் உள்ளன.</p><p> திங்களன்று ஆயுதங்களின் கையிருப்பு குறித்துக் கேட்கப்பட்டபோது, ​​மிகவும் மேம்பட்ட ரகங்களை மீண்டும் நிரப்ப விரும்புவதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்தார், ஆனால் கையிருப்பு மிகவும் நல்ல நிலையில் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். </p><p>இதனிடையே, கூட்டுத் தலைமைப் படைத் தலைவர்களின் (Joint Chiefs of Staff) தலைவரான ஜெனரல் டான் கெய்ன், தங்களுக்குத் தேவைப்படும் கூடுதல் நிதி கிடைக்காவிட்டால், இராணுவத்திற்குத் தேவையான ஆயுதங்கள் கிடைக்காது என்று கடந்த வாரம் செனட் உறுப்பினர்களிடம் தெரிவித்திருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/21a598fd-5d41-48f4-8446-edb5661e3418/26-6a6ad162cc33e.webp' /></p><p> </p><p>ஈரான் மீதானப் போரைத் தீவிரமாக விரிவுபடுத்துவது குறித்து ஜனாதிபதி ட்ரம்ப் பரிசீலித்துக்கொண்டிருந்த நிலையில், வெள்ளிக்கிழமையன்று அவருடன் நடைபெற்ற கூட்டத்தில் ஆயுத இருப்பு குறைந்து வருவதைச் சுட்டிக்காட்டியதாக ஜெனரல் கெய்ன் கூறியதாக CNN செய்தி வெளியிட்டிருந்தது. </p><p>மோதலைத் தீவிரப்படுத்துவதால் ஏற்படக்கூடிய கூடுதல் பாதகமான விளைவுகள் குறித்து ஜெனரல் கெய்ன் மற்றும் பிற தளபதிகள் விளக்கமளித்ததைத் தொடர்ந்து, அந்தச் சந்திப்பிற்குப் பிறகு ஈரான் மீதான தாக்குதல்களை நிறுத்தி வைப்பதாக ட்ரம்ப் அறிவித்திருந்தார்.</p><h2>பல ஆண்டுகள் ஆகலாம்</h2><p> </p><p>ஆனால், அந்த இடைநிறுத்தம் குறுகிய காலமே நீடித்திருக்கலாம். செவ்வாய்க்கிழமையன்று, ஈராக்கில் உள்ள ஈரானின் ஆதரவு குழுக்கள் மீது அமெரிக்க மற்றும் சவுதிப் படைகள் கூட்டுத் தாக்குதல்களை நடத்தின. </p><p>மேலும், மத்திய கிழக்கில் அமெரிக்கப் படைகள் மீது ஈரான் நடத்திய திடீர் தாக்குதல் ஒன்றை முறியடித்ததாக அமெரிக்க ராணுவம் அறிவித்தது. இந்த மாதத் தொடக்கத்தில், ஈரானுடனான தொடர் மோதல் ஆயுத இருப்பை மிகக் குறைந்த நிலைக்குக் குறைக்கக்கூடும்; </p><p>இது சீனா அல்லது வட கொரியாவின் அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் அமெரிக்க ராணுவத்தின் திறனைப் பாதிக்கக்கூடியதாக அமையலாம் என ஓய்வுபெற்ற மரைன் கார்ப்ஸ் கர்னல் மார்க் கேன்சியன் எச்சரித்திருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f6739b14-db4f-4f2d-a954-cb3cf318a620/26-6a6ad1637dfe0.webp' /></p><p> </p><p>இந்த நிலையில், பேட்ரியாட் (Patriot) ஏவுகணைகள் போன்ற அதிநவீன ஆயுதங்களை உற்பத்தி செய்வதற்கு நீண்ட காலம் தேவைப்படுவதால், அமெரிக்காவின் ஆயுத இருப்பை முழுமையாக மீண்டும் நிரப்புவதற்குப் பல ஆண்டுகள் ஆகலாம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். </p><p>ஆயுதப் பற்றாக்குறைக்கு முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடனின் நிர்வாகமே பெரும்பாலும் காரணம் என்று ட்ரம்ப்பும் பாதுகாப்புத்துறை அமைச்சர் பீட் ஹெக்ஸெத்தும் குற்றம் சாட்டியுள்ளனர். </p><p>ஆனால், இஸ்ரேல் காரணமாக ஈரானுடன் உருவானப் போரினால் இந்தப் பிரச்சினை மிகவும் மோசமடைந்துள்ளது என்றே CSIS அறிக்கையில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-30T04:13:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பு உட்பட நாடு முழுவதுமுள்ள இளைஞர், யுவதிகளுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து - வெளியான அதிர்ச்சித் தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/man-arrested-for-selling-drugs-to-parties-1785383213"></link>
            <id>https://tamilwin.com/article/man-arrested-for-selling-drugs-to-parties-1785383213</id>
            <summary type="text">கொழும்பின் பல இடங்களில் நடைபெறும் பல்வேறு விருந்துகளில் கலந்துகொள்ளும் இளைஞர், யுவதிகள் மத்தியில் இரகசியமாக போதை மாத்திரைகளை விநியோகிக்கப்பட்டு வருவதா...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பின் பல இடங்களில் நடைபெறும் பல்வேறு விருந்துகளில் கலந்துகொள்ளும் இளைஞர், யுவதிகள் மத்தியில் இரகசியமாக போதை மாத்திரைகளை விநியோகிக்கப்பட்டு வருவதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது. </p><p>

இவ்வாறான நிகழ்வுகளின் போது போதை மாத்திரைகளை விநியோகிக்கும் இளம் கடத்தல்காரர் ஒருவர், 23,000 போதை மாத்திரைகள் மற்றும் ஹெரோயின் தொகையுடன் மாளிகாவத்தை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். </p><p>கொழும்பு சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் நிஷாந்த டி சொய்சாவின் மேற்பார்வையின் கீழ் மேற்கொள்ளப்பட்ட இச்சோதனை நடவடிக்கையின் போது 20 வயதுடைய இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p> </p><h2><b>போதை மாத்திரை விநியோகம்</b></h2><p>கைதான இளைஞரிடமிருந்து கிடைத்த தகவல்களுக்கமைய, இந்த போதை மாத்திரைகளும் ஹெரோயினும் நாளாந்தம் இளைஞர், யுவதிகளுக்கு விநியோகிப்பதற்காக இரகசியமாக வரவழைக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6026ede3-5dd9-4a15-a76d-b04996354a8f/26-6a6acf0c9c639.webp' /></p><p>இசை நிகழ்ச்சிகளில் நடனமாடும் இளைஞர் யுவதிகளை இலக்காக கொண்டு இந்த வியாபாரம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. </p><p>இந்த போதை மாத்திரைகள் கொழும்பில் மட்டுமன்றி நாட்டின் பல மாகாணங்களுக்கும் விநியோகிப்பதற்காக கடத்தல்காரர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. </p><p>ஒரு போதை மாத்திரையின் மதிப்பு 100 ரூபாவாகும், எனினும் இக்கூட்டத்தினர் அந்தப் போதை மாத்திரைகளை 200 ரூபாவுக்கும் அதிகமான விலைக்கு விற்றுள்ளனர். </p><p>இந்த போதை மாத்திரைகளுக்கு மேலதிகமாக, சந்தேக நபரிடமிருந்த சுமார் 800 மில்லிகிராம் ஹெரோயினும் கைப்பற்றப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-30T04:12:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடகத்தில் புதன் பெயர்ச்சி: ஆகஸ்ட் 5 முதல் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/mercury-transit-in-cancer-who-get-huge-money-luck-1785324037"></link>
            <id>https://manithan.com/article/mercury-transit-in-cancer-who-get-huge-money-luck-1785324037</id>
            <summary type="text">ஜோதிட சாஸ்திரத்தில் புதன் கிரகம் அறிவுத்திறன், தகவல் தொடர்பு, சிந்தனை, கற்றல், வணிகம், தொழில்நுட்பம் மற்றும் முடிவெடுக்கும் திறன் ஆகியவற்றின் காரக கிர...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜோதிட சாஸ்திரத்தில் புதன் கிரகம் அறிவுத்திறன், தகவல் தொடர்பு, சிந்தனை, கற்றல், வணிகம், தொழில்நுட்பம் மற்றும் முடிவெடுக்கும் திறன் ஆகியவற்றின் காரக கிரகமாகக் கருதப்படுகிறது.</p><p> புதன் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி அடையும் ஒவ்வொரு முறையும், அதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் சிந்தனை முறை, பேசும் விதம், தகவல் பரிமாற்றம், வணிக முடிவுகள் மற்றும் தொழில் சார்ந்த செயல்பாடுகளில் பிரதிபலிக்கும் என்று ஜோதிடர்கள் நம்புகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a73cb707-7a69-4de9-b495-60021124ef34/26-6a69e9c845da5.webp' /></p><p> </p><p>அதனால் புதனின் ராசி மாற்றம் ஜோதிடத்தில் மிகவும் முக்கியமான கிரகப் பெயர்ச்சிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

அந்தவகையில், 2026-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 05-ஆம் தேதி புதன் மிதுன ராசியிலிருந்து கடக ராசிக்கு பெயர்ச்சி அடைகிறது. </p><p>குறித்த புதன் பெயர்ச்சியின் தாக்கம் 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் ஏதோ ஒரு வகையில் வெளிப்பட்டாலும், குறிப்பாக சில ராசிக்காரர்கள் அதிகப்படியான அதிர்ஷ்டம், முன்னேற்றம், வெற்றிகளை பெறுவார்கள் என கணிக்கப்பட்டுள்ளது. அப்படி புதன் ஆசியால் ராஜயோகத்தை அனுபவிக்கப்போகும் ராசிகள் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.</p><p></p><h2>மிதுனம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/537c552f-3ca1-44d4-bac5-095c612b9052/26-6a69e9c8eaef0.webp' /></p><p> புதன் இந்த ராசியின் அதிபதி என்பதால், இந்தப் பெயர்ச்சி மிதுன ராசிக்காரர்களுக்கு பல நன்மைகளைத் தரும். தடைபட்ட வேலைகள் குறைந்த முயற்ச்சியிலேயே வெற்றியை கொடுக்கும்.</p><p>பணியிடத்தில் அங்கீகாரம், பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. முயற்சிகளுக்கு நல்ல பலன் கிடைத்து, வருமானமும் லாபமும் அதிகரிக்கும்.கடனாகக் கொடுத்த பணம் திரும்ப கிடைக்கும்.</p><p>இந்த காலகட்டத்தில் இவர்களின் பேச்சுத் திறன் மேம்பட்டு, மற்றவர்களின் கவனத்தை ஈர்ப்பார்கள். திருமண வாழ்க்கையிலும் அன்பும் நெருக்கமும் அதிகரிக்கும்.</p><h2>
கன்னி</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/788e5f9c-0533-4289-8d96-778a374a8c39/26-6a69e9c9acb0b.webp' /></p><p>புதன் கன்னி ராசியின் அதிபதி என்பதால், இந்தக் காலம் மிகவும் சாதகமாக இருக்கும். பதவி உயர்வு, புதிய பொறுப்புகள் மற்றும் தொழிலில் முன்னேற்றம் கிடைக்கும்.</p><p> வணிகத்தில் புதிய ஒப்பந்தங்கள், தொழில்முறை தொடர்புகள் உருவாகும். வருமானம் உயரும். அலுவலகச் சூழல் சாதகமாக இருக்கும். எதிர்காலத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவீர்கள்.&nbsp;</p><p> தனிப்பட்ட வாழ்க்கையில்&nbsp; அமைதியும், மகிழ்ச்சியும் அதிகரிக்கும். திருமண வாழ்க்கையில் நீண்டகாலம் நிலவிய பிரச்சினைகள் முடிவுக்கு வரும். புதன் ஆசியால் சிந்தனையில் தெளிவு பிறக்கும்.</p><h2>துலாம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/75e517a2-6fdc-4313-9cab-ec3811b5150b/26-6a69e9ca5b687.webp' /></p><p></p><h2> </h2><p>ராசிக்காரர்களுக்கு தொழில் மற்றும் சமூக அந்தஸ்தில் முன்னேற்றத்தைத் தரும். நீண்ட நாள் முயற்சிகளுக்கு அங்கீகாரம் கிடைக்கும். </p><p>புதிய பொறுப்புகள் வளர்ச்சிக்கு வழிவகுக்கும். சமூக மரியாதை உயரும். பெற்றோர் மற்றும் மேலதிகாரிகளுடன் நல்ல உறவு உருவாகும். இனிமையான பேச்சால் உறவுகள் வலுவடையும். </p><p>வெளிநாட்டு தொடர்பான தொழில்களில் இருப்பவர்களுக்கு நல்ல பலன் கிடைக்கும். கூடுதல் வருமான வாய்ப்புகள் உருவாகும். மாணவர்களுக்கு போட்டித் தேர்வுகளுக்குத் தயாராக இது சிறந்த காலமாக இருக்கும். குறிப்பாக நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.</p><p><b>இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).&nbsp; &nbsp; &nbsp; &nbsp;&nbsp;</b></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-30T04:10:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்த வாரம் OTTயில் ரிலீஸ் ஆகப்போகும் சூப்பர் படங்கள், வெப் தொடர்கள்...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/this-week-ott-release-movies-1785380359"></link>
            <id>https://cineulagam.com/article/this-week-ott-release-movies-1785380359</id>
            <summary type="text">ஓடிடி ரிலீஸ்வாரா வாரம் திரையரங்குகளில் நிறைய சூப்பர் ஹிட் படங்கள் வெளியாகிறது. கடந்த வாரம் விஜய்யின் கடைசிப் படமான ஜனநாயகன் திரைப்படம் வெளியாகி இருந்த...</summary>
            <content type="html"><![CDATA[<h2>ஓடிடி ரிலீஸ்</h2><p>வாரா வாரம் திரையரங்குகளில் நிறைய சூப்பர் ஹிட் படங்கள் வெளியாகிறது. </p><p>கடந்த வாரம் விஜய்யின் கடைசிப் படமான ஜனநாயகன் திரைப்படம் வெளியாகி இருந்தது, அதேபோல் அன்பே டயானா படம் வெளியானது. அடுத்தடுத்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகும் படங்கள் வெப் தொடர்களில் வெளியாவது வழக்கம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/22acef3b-3c18-4118-b623-d8e2ce69cf7e/26-6a6abf222cd2b.webp' /></p><p> </p><p>ரசிகர்களும் திரையரங்கை தாண்டி ஓடிடியில் ரிலீஸ் ஆகும் படங்களை அதிகம் பார்க்க விரும்புகிறார்கள். சரி இந்த வாரம் ஓடிடியில் ரிலீஸ் ஆகும் படங்கள், வெப் தொடர்கள் என்னென்ன என்பதை இங்கே காண்போம்.</p><h3>ஜுலை 𝟐𝟗
</h3><p>Azadi501 (Telugu) - AhaVideo</p><p>

The Devil's Mouth (English) - PrimeVideo</p><p>

The Idaho Murders: College Nightmare - Season 1 (English - Original, Tamil, Telugu, Hindi)  - Netflix</p><h3>

ஜுலை 𝟑𝟎
</h3><p>HeartBeat : Season3 (Tamil, Telugu, Kannada, Hindi) - JioHotstar
</p><p>
SecondMarriage (Telugu) - ETvWin</p><h3>

ஜுலை 𝟑𝟏
</h3><p>GattaKusthi2 (Tamil, Telugu, Kannada, Malayalam, Hindi) - Netflix</p><p>

LoveOhLove (Tamil, Telugu, Kannada, Malayalam) - PrimeVideo</p><p>

BalanTheBoy (Malayalam, Tamil, Telugu, Kannada) - Zee5
</p><p>
Deewana (Telugu, Tamil) - AhaVideo
</p><p>
ObjectionMyLord (Telugu) - Zee5</p><p>

Paithalattam (Malayalam) - Sunnxt
</p><p>
HaiJawanitohIshqHonaHai (Hindi) - Zee5&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-30T04:00:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yoosuf</name>
            </author>
            <title type="text"><![CDATA[காலனித்துவ காலத்தைச் சேர்ந்ததாக நம்பப்படும் கைக்குண்டு மீட்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/hand-grenade-to-be-from-colonial-era-recovered-1785381944"></link>
            <id>https://tamilwin.com/article/hand-grenade-to-be-from-colonial-era-recovered-1785381944</id>
            <summary type="text">கந்தளாய் மணிக்கூட்டு கோபுரத்திற்கு அண்மையில் அமைந்துள்ள கழ்மலை பன்சலைக்கு
அருகிலுள்ள பாறைக் குன்றுப் பகுதியில், காலனித்துவ காலத்தைச் சேர்ந்ததாக
நம்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>கந்தளாய் மணிக்கூட்டு கோபுரத்திற்கு அண்மையில் அமைந்துள்ள கழ்மலை பன்சலைக்கு
அருகிலுள்ள பாறைக் குன்றுப் பகுதியில், காலனித்துவ காலத்தைச் சேர்ந்ததாக
நம்பப்படும் கைக் குண்டு ஒன்று நேற்று (28) கந்தளாய் பொலிஸாரால்
கண்டறியப்பட்டுள்ளது.</p><p>

இராணுவப் புலனாய்வுப் பிரிவினரால் வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் சம்பவ
இடத்துக்குச் சென்ற கந்தளாய் பொலிஸார், குறித்த கைக்குண்டை பாதுகாப்பாக
மீட்க, அப்பகுதியில் உடனடியாக பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளனர்.
</p><p></p><h2>நீதிமன்றத்தின் அனுமதியைத் தொடர்ந்து</h2><p>
சம்பவம் தொடர்பாக பொதுமக்கள் அப்பகுதிக்குச் செல்வது தற்காலிகமாகத்
தடைசெய்யப்பட்டதுடன், சம்பவ இடத்தில் பொலிஸ் பாதுகாப்பு
பலப்படுத்தப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2d1544a9-007a-4b65-90cf-8042b7791a1c/26-6a6aca76d286e.webp' /></p><p>மேலும், கந்தளாய் நீதவான் நீதிமன்றத்தின் அனுமதியைத் தொடர்ந்து, விசேட
அதிரடிப்படையின் (STF) வெடிகுண்டு அகற்றும் மற்றும் ஆய்வுப் பிரிவினரின்
உதவியுடன் குறித்த கைக் குண்டு பரிசோதிக்கப்பட்டு பாதுகாப்பான முறையில்
செயலிழக்கச் செய்யப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
கைக் குண்டு மீட்கப்பட்ட பாறைக் குன்றுப் பகுதியில் காலனித்துவ ஆட்சிக்
காலத்தைச் சேர்ந்ததாக நம்பப்படும் பழமையான கட்டிட இடிபாடுகள் காணப்படுகின்றன.</p><p>
மேலும், கந்தளாய் ஆதார வைத்தியசாலைக்கு அண்மித்த பகுதியில் காலனித்துவ
ஆட்சிக் காலத்தில் சிறிய விமான தரையிறக்குத் தளம் ஒன்று இயங்கியிருந்ததாக
உள்ளூர் வரலாற்றுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
</p><p>
எனினும், மீட்கப்பட்ட கைக் குண்டு உண்மையில் காலனித்துவ காலத்தைச் சேர்ந்ததா,
அதன் வகை மற்றும் செயல்பாட்டு நிலை என்ன என்பது தொடர்பான இறுதி
உறுதிப்படுத்தல், விசேட தொழில்நுட்ப ஆய்வுகளின் பின்னரே அறிவிக்கப்படும் என
பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-30T03:52:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீதிபதிகளின் ஓய்வு வயது நீடிப்பு தீர்மானம்: ஜனாதிபதியை சந்திக்கவும் முடிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/judges-retirement-age-extension-meet-president-1785382256"></link>
            <id>https://tamilwin.com/article/judges-retirement-age-extension-meet-president-1785382256</id>
            <summary type="text">நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை நீடிப்பது தொடர்பில் அரசு
முன்மொழிந்துள்ள தீர்மானத்தை முற்றாக நிராகரிப்பதாக நீதி மற்றும் தேசிய
ஒருமைப்பாட்டு அமைச...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை நீடிப்பது தொடர்பில் அரசு
முன்மொழிந்துள்ள தீர்மானத்தை முற்றாக நிராகரிப்பதாக நீதி மற்றும் தேசிய
ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவிடம் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்
நேரடியாக தெரிவித்துள்ளது. </p><p>அத்துடன், இந்த விடயம் குறித்து ஜனாதிபதி
அநுரகுமார திஸாநாயக்கவை நேரில் சந்தித்துக் கலந்துரையாடுவதற்கான ஏற்பாடுகளைச்
செய்து தருமாறும் அந்தச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.</p><p></p><h2>30000 மேற்பட்ட சட்டத்தரணிகளின் பங்கேற்பு</h2><p>
</p><p>
நாடளாவிய ரீதியில் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட சட்டத்தரணிகளின் பங்கேற்புடன்
நேற்று நடைபெற்ற இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் விசேட
பொதுச்சபை கூட்டத்தில், நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை நீடிக்கும்
அரசின் தீர்மானம் தூரநோக்கற்றது என்றும், அதனை முற்றாக எதிர்ப்பது என்றும்
ஏகமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a0eec53d-818b-4592-a6c4-dfc1d623ee59/26-6a6ac9bf238b3.webp' /></p><p>
</p><p>
இதனைத் தொடர்ந்து, நேற்று மாலை 5 மணிக்கு நீதி அமைச்சர் ஹர்ஷன
நாணயக்காரவுக்கும், இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சட்டத்தரணி ரஜீவ்
அமரசூரிய தலைமையிலான பிரதிநிதிகளுக்கும் இடையில் விசேட சந்திப்பு நடைபெற்றது.</p><p>

இந்தச் சந்திப்பின்போது, அரசின் இந்த யோசனை நீதித்துறையின் சுயாதீனத்தன்மையைக்
கடுமையாகப் பாதிக்கும் என்று சுட்டிக்காட்டிய சட்டத்தரணிகள் சங்கப்
பிரதிநிதிகள், நீதி அமைச்சரிடம் பின்வரும் முக்கிய கேள்விகளை முன்வைத்தனர்.</p><h2>அவசரப்படுத்துவது ஏன்? </h2><p>இது குறித்துக் கலந்தாலோசிக்க முன்னரே சந்திப்பொன்றைக் கோரியிருந்த நிலையில்,
அதற்கு இடமளிக்காமல் அவசரமாக இந்த யோசனையை அமைச்சரவையில் சமர்ப்பித்து அனுமதி
பெறவேண்டிய அவசியம் என்ன?</p><h2>ஆலோசனையின்மை</h2><p> இதுவரை காலமும் புதிய சட்டங்கள் அல்லது திருத்தங்களைக் கொண்டுவரும்போது
சட்டத்தரணிகள் சங்கத்தின் ஆலோசனை பெறப்படுவது வழக்கம். ஆனால், இந்த முக்கிய
விடயத்தில் மாத்திரம் அந்த நடைமுறை ஏன் பின்பற்றப்படவில்லை?&nbsp;</p><p>தனிநபரை பாதுகாக்கும் நடவடிக்கையா?&nbsp;</p><p> ஏற்கனவே ஓய்வுபெறும் வயதை எட்டிய நீதியரசர்கள் ஓய்வுபெற்றுள்ள நிலையில்,
தற்போது அவசரமாக இத்திருத்த யோசனை முன்வைக்கப்படுவதானது, குறிப்பிட்ட ஒரு
நீதிபதியை மாத்திரம் இலக்குவைத்து (அல்லது பாதுகாப்பதற்காக)
மேற்கொள்ளப்படுகின்றதா என்ற நியாயமான சந்தேகத்தைத் தோற்றுவித்துள்ளது.</p><h2>அமைச்சரின் விளக்கமும் ஜனாதிபதியுடனான சந்திப்புக்கான கோரிக்கையும்</h2><p> சட்டத்தரணிகள் சங்கத்தின் கடுமையான கேள்விகளுக்குப் பதிலளித்த நீதி அமைச்சர்
ஹர்ஷன நாணயக்கார, "இந்தச் சட்டத் திருத்த யோசனை தனிப்பட்ட ஒருவருக்கானதல்ல.
அனைத்து நீதிபதிகளுக்கும் பொதுவானதாகவே கொண்டுவரப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2c950149-3a6d-4497-8feb-b9e838957929/26-6a6ac9c00daef.webp' /></p><p> கட்சி மற்றும்
அமைச்சரவையின் தீர்மானங்கள் உள்ளிட்ட கூட்டுப் பொறுப்புக்குக் கட்டுப்பட்டே
நான் செயற்படுகின்றேன்" என்று தெரிவித்தார்.

மேலும், சட்டத்தரணிகள் சங்கப் பிரதிநிதிகளின் நிலைப்பாட்டை ஜனாதிபதியிடம்
எடுத்துரைப்பதாகவும் அவர் உறுதியளித்தார்.</p><p>

இதற்குப் பதிலளித்த சட்டத்தரணிகள் சங்கப் பிரதிநிதிகள், தமது நிலைப்பாட்டைத்
தாமே நேரடியாக ஜனாதிபதியிடம் விளக்க விரும்புவதாகவும், அதற்காக அவருடனான
சந்திப்பொன்றுக்கு நேரத்தை ஒதுக்கித் தருமாறும் கோரிக்கை விடுத்தனர்.</p><p>

இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதி அமைச்சர், இது தொடர்பில் ஜனாதிபதியுடன்
பேசி முடிவை அறிவிப்பதாகத் தெரிவித்தார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-30T03:52:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[மிதமிஞ்சிய அலைபேசி பயன்பாடு குறித்து கர்தினால் கடும் கவலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/technology-addiction-eroding-family-values-1785382822"></link>
            <id>https://tamilwin.com/article/technology-addiction-eroding-family-values-1785382822</id>
            <summary type="text">&amp;nbsp;மிதமிஞ்சிய அலைபேசி பயன்பாடு குறித்து கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை கவலை வெளியிட்டுள்ளார்.
அளவுக்கு அதிகமான அலைபேசி பயன்பாடு...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;மிதமிஞ்சிய அலைபேசி பயன்பாடு குறித்து கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை கவலை வெளியிட்டுள்ளார்.
</p><p>அளவுக்கு அதிகமான அலைபேசி பயன்பாடு மற்றும் நவீன தொழில்நுட்பத்தின் தாக்கம் காரணமாக சமூகத்தில் மனித உறவுகளும் குடும்ப பிணைப்புகளும் சீர்குலைந்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>
சீதுவையில் நடைபெற்ற மத வழிபாட்டுக் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/01e7220a-52c5-42fa-a7cb-09d674622805/26-6a6ac7a7c0d48.webp' /></p><p>
</p><p>தாராளமய சந்தைப் பொருளாதாரத்தின் அறிமுகத்தைத் தொடர்ந்து வளர்ந்துள்ள நுகர்வோர் கலாச்சாரம், மக்களிடையே தேவையற்ற ஆசைகளை உருவாக்கியுள்ளது என தெரிவித்துள்ளார்.</p><p>
பணத்தின் பின்னால் ஓடுவதே நவீன சமூகத்தை தீர்மானிக்கும் முக்கிய காரணியாக மாறியுள்ளது.</p><p> சந்தை சார்ந்த இக்கலாச்சாரம், மக்களின் உண்மையான தேவைகள் மற்றும் நற்பண்புகளில் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக, அவசியமற்ற ஆடம்பரப் பொருட்களைத் தேடி ஓடத் தூண்டுகிறது என தெரிவித்துள்ளார்.</p><p>
ஆரம்பத்தில் தகவல்களைப் பரிமாறிக்கொள்ள மட்டுமே பயன்படுத்தப்பட்ட சாதனங்கள், இன்று மக்களின் அன்றாட வாழ்க்கையை ஆதிக்கம் செலுத்தும் அளவிற்குக் கட்டுப்படுத்தி வருவதாக குறிப்பிட்டுள்ளார்.</p><p>
இரவு நேரங்களில் நீண்ட நேரம் கைபேசிகளைப் பயன்படுத்துவது உட்பட அளவுக்கு அதிகமான பயன்பாட்டினால் பெற்றோருக்கும் குழந்தைகளுக்கும் இடையிலான ஆரோக்கியமான உரையாடல்கள் குறைந்து, குடும்ப பிணைப்புகளும் பாரம்பரிய விழுமியங்களும் பலவீனமடைந்து வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>மேலும், சமூக முன்னேற்றமும் உயர்கல்வியும் மனிதனிடம் அகந்தையை ஏற்படுத்திவிடக் கூடாது எனவும், அதிவேகமாக மாற்றமடைந்து வரும் இந்த உலகளாவிய சூழலில் பணிவையும் மனிதநேயத்தையும் பேணிப் பாதுகாப்பது மிகவும் அவசியம் எனவும் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை வலியுறுத்தியுள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-30T03:41:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[பேஸ்புக் காதலால் பொலிஸ் காவலருக்கு ஏற்பட்ட விபரீதம் - பொலிஸார் வெளியிட்ட தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/facebook-love-police-officer-dead-1785381905"></link>
            <id>https://tamilwin.com/article/facebook-love-police-officer-dead-1785381905</id>
            <summary type="text">வலான ஊழல் தடுப்புப் பிரிவில் கடமையாற்றிய பொலிஸ் காவலர் தனது சேவை துப்பாக்கியால் நேற்று அதிகாலை சுட்டுக்கொண்டு உயிரை மாய்த்துக் கொண்டமைக்கான காரணத்தை ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>வலான ஊழல் தடுப்புப் பிரிவில் கடமையாற்றிய பொலிஸ் காவலர் தனது சேவை துப்பாக்கியால் நேற்று அதிகாலை சுட்டுக்கொண்டு உயிரை மாய்த்துக் கொண்டமைக்கான காரணத்தை பொலிஸார் வெளியிட்டுள்ளனர். </p><p> 

இவ்வாறு உயிரிழந்தவர் பேராதனை முருதலாவ பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
</p><p>
அவர் நேற்று பிரதான வாயில் கடமைக்காக மற்றுமொரு அதிகாரியுடன் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்தார்.</p><p>
</p><h2><b>
விபரீத முடிவு</b></h2><p>இந்த நிலையில் இயற்கை உபாதையை கவனிப்பதற்காக சென்றுவிட்டு மீண்டும் வந்து, அதிகாலை 4.05 மணியளவில் T56 ரக துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக் கொண்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e7cbd151-be9c-437c-b338-95bfab253fb9/26-6a6ac67a15beb.webp' /></p><p>குறித்த பொலிஸ் காவலர் உடனடியாக பாணந்துரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h3><b>

உயிரிழப்புக்கான காரணம்</b></h3><p>நான்கரை வருட சேவைப் காலத்தைக் கொண்டுள்ள காவலர், பேஸ்புக் ஊடாக அறிமுகமான யுவதி ஒருவருடன் உறவில் இருந்துள்ளார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/560467da-aa19-409b-843d-09a1eb9f733f/26-6a6ac67abee6c.webp' /></p><p>இருவருக்கும் இடையில் ஏற்பட்ட மனஸ்தாபம் காரணமாகவே இவ்வாறு தன்னை தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டுள்ளார் என தெரியவந்துள்ளது.
</p><p>
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

</p>]]></content>
            <updated>2026-07-30T03:35:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரூ. 4000 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள ராமாயணா திரைப்படத்தின் பிரம்மாண்ட டிரைலர்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/namit-malhotra-ramayana-tamil-trailer-1785379976"></link>
            <id>https://cineulagam.com/article/namit-malhotra-ramayana-tamil-trailer-1785379976</id>
            <summary type="text">ராமாயணாஇந்திய சினிமாவில் அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு வரும் பிரம்மாண்ட திரைப்படம் ராமாயணா.இரண்டு பாகங்களாக எடுக்கப்படும் நிலையில், தலா ஒரு பாகத்திற்...</summary>
            <content type="html"><![CDATA[<h2>ராமாயணா</h2><p>இந்திய சினிமாவில் அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு வரும் பிரம்மாண்ட திரைப்படம் ராமாயணா.</p><p>இரண்டு பாகங்களாக எடுக்கப்படும் நிலையில், தலா ஒரு பாகத்திற்கு ரூ. 2000 கோடி பட்ஜெட் என கூறப்படுகிறது. இரண்டு பாகங்களும் சேர்த்து ரூ. 4000 கோடி பட்ஜெட்டில் ஹாலிவுட் தரத்தில் ராமாயணா உருவாகி வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ab6d55f0-66f4-47d0-a4b8-572eced07e94/26-6a6abc8b01b93.webp' /></p><p>
</p><p>
இப்படத்தை நிதேஷ் திவாரி இயக்க, ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யாஷ், ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்து வருகிறார்கள். ஹான்ஸ் சிம்மர் மற்றும் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கின்றனர்.

இந்த ஆண்டு தீபாவளிக்கு முதல் பாகமும், அடுத்த ஆண்டு தீபாவளிக்கு இரண்டாம் பாகமும் வெளிவரவுள்ளது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0c0963fd-1f73-48d2-a982-f75a4508c9fe/26-6a6abc8bb2b81.webp' /></p><h2>டிரைலர்</h2><p>இந்நிலையில், அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த ராமாயணா முதல் பாகத்தின் பிரம்மாண்ட டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது. </p><p>

இதோ அந்த டிரைலர்:</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/K7zjRJ_0sgk" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-07-30T03:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெடிக்குமா உலகப் போர்: ஈரானை பயங்கரமாக தாக்கும் அமெரிக்கா - அச்சத்தில் உலகம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/us-launches-powerful-strikes-on-iran-1785381260"></link>
            <id>https://ibctamil.com/article/us-launches-powerful-strikes-on-iran-1785381260</id>
            <summary type="text">மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க தளங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஈரான் மீது சக்தி வாய்ந்த தாக்குதல்களைத் தொடங்கியுள்ளத...</summary>
            <content type="html"><![CDATA[<p>மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க தளங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஈரான் மீது சக்தி வாய்ந்த தாக்குதல்களைத் தொடங்கியுள்ளதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது.</p><p>ஜோர்டானில் உள்ள அமெரிக்கத் தளங்கள் மற்றும் ஹோர்முஸ் நீரிணையில் உள்ள கப்பல்கள் மீது செவ்வாய்க்கிழமை ஈரான் தாக்குதல் நடத்தியது.
</p><p>
இந்நிலையில் ஈராக்கில் உள்ள ஈரானிய ஆதரவுப் படைகளை இலக்காகக் கொண்டு, முதல் முறையாக பகிரங்கமாக அறிவிக்கப்பட்ட அமெரிக்க - சவூதி கூட்டுத் தாக்குதல்களின் பின்னர் மோதல் மேலும் விரிவடைந்துள்ளது.</p><p></p><h2>வலுவான பதிலடி&nbsp;</h2><p>அமெரிக்க இராணுவ நிலைகள் மீது ஈரான் நடத்திய தாக்குதல் முயற்சிக்கு வலுவான பதிலடி கொடுக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சூளுரைத்த சில மணி நேரங்களில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2e2a467a-48ee-4bb8-9961-a306c28aac80/26-6a6ac52c781fe.webp' /></p><p>இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக, ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படைக்குச் சொந்தமான இராணுவக் கட்டளை மையங்கள், ஏவுகணை மற்றும் ஆளில்லா விமான வசதிகள், கடலோர கண்காணிப்பு மற்றும் பாதுகாப்புத் தளங்கள் உள்ளிட்ட இலக்குகளை அமெரிக்க மத்திய கட்டளை மையம் (CENTCOM) ஒரு சமூக ஊடகப் பதிவில் தெரிவித்துள்ளது.</p><p>ஹோர்முஸ் ஜலசந்தியில் உள்ள கெஷ்ம் தீவில் நடந்த தாக்குதல்களில் இருவர் காயமடைந்ததாகவும், வடமேற்கில் உள்ள குசெஸ்தான் மாகாணத்திலும் வெடிப்புச் சம்பவங்கள் பதிவானதாகவும் ஈரானிய அரசு ஊடகங்கள் தெரிவித்தன.</p><p>இதற்கிடையில், எகிப்தின் டாமியெட்டா துறைமுகத்தில் இரண்டு இயற்கை எரிவாயுக் கப்பல்களில் ஆளில்லா விமானத் தாக்குதல்கள் மூலம் தீப்பிடித்ததாக பிரிட்டிஷ் கடல்சார் பாதுகாப்பு நிறுவனமான ஆம்ப்ரே தெரிவித்துள்ளது.</p><p> </p><p>பல நாட்கள் நிலவிய அமைதிக்குப் பிறகுஇ பல முனைகளில் ஏற்பட்ட மோதல்கள், ஒரு முழுமையான போர் மீண்டும் தொடங்குவதற்கான அபாயத்தை அதிகரித்துள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-30T03:26:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[மலேசியாவில் கைதான பாதாள உலகக் கும்பலைச் சேர்ந்த மூவர் குறித்த தகவல்கள் விரைவில்...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/police-arrest-underworld-1785381814"></link>
            <id>https://tamilwin.com/article/police-arrest-underworld-1785381814</id>
            <summary type="text">&amp;nbsp;மலேசியாவில் கைது செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படும் இலங்கையைச் சேர்ந்த பாதாள உலகக் கும்பல் உறுப்பினர்கள் மூவர் பற்றிய அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்று ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;மலேசியாவில் கைது செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படும் இலங்கையைச் சேர்ந்த பாதாள உலகக் கும்பல் உறுப்பினர்கள் மூவர் பற்றிய அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்று அல்லது நாளை வெளியிடப்படலாம் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவிப் பொலிஸ் அத்தியாட்சகர் உதயகுமார வூட்லர் தெரிவித்துள்ளார்.</p><p>
இதன்படி, கைது செய்யப்பட்டுள்ள மூன்று சந்தேகநபர்களையும் இலங்கைக்குக் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>கைது செய்யப்பட்டுள்ள இந்த மூன்று நபர்களில், பிரபல பாதாள உலகக் கும்பல் தலைவரான 'கஞ்ச்பானி இம்ரானின்' நெருங்கிய சகா ஒருவரும் அடங்குவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b197a8c0-9064-4fe3-83ad-b31e6aa3c1d5/26-6a6ac3b847f32.webp' /></p><p>
</p><p>மேலும், இவர்கள் மலேசியாவில் எவ்வாறு கைது செய்யப்பட்டார்கள் என்பது குறித்தான தெளிவான தகவல்கள் இன்று அல்லது நாளைக்குள் வெளிவரக்கூடும் என்றும் பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-30T03:24:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹார்முஸ் முடக்கத்தால் தத்தளிக்கும் ஆசிய நாடுகள்... சத்தமின்றி கனடா பக்கம் திரும்பிய ஜப்பான்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/japan-turns-to-canadian-crude-1785381473"></link>
            <id>https://news.lankasri.com/article/japan-turns-to-canadian-crude-1785381473</id>
            <summary type="text">ஹார்முஸ் நீரிணை ஊடாக எந்தக் கப்பலும் வெளியேற முடியாத நெருக்கடியான சூழலில், ஆசிய நாடுகள் எரிபொருள் நெருக்கடியால் தத்தளிக்கும் நிலையில், ஜப்பான் கனடா பக...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹார்முஸ் நீரிணை ஊடாக எந்தக் கப்பலும் வெளியேற முடியாத நெருக்கடியான சூழலில், ஆசிய நாடுகள் எரிபொருள் நெருக்கடியால் தத்தளிக்கும் நிலையில், ஜப்பான் கனடா பக்கம் திரும்பியுள்ளது.</p><h2>டிரான்ஸ் மவுண்டன் குழாய்வழி</h2><p>
</p><p>வெளியாகியுள்ள தரவுகளின் அடிப்படையில், 2025-ஆம் ஆண்டிற்குப் பிறகு கனடாவின் முதல் கச்சா எண்ணெய் ஏற்றுமதி, எக்ஸான் மொபில் நிறுவனத்தால் கப்பல் மூலம் ஜப்பானுக்குச் செல்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b32b4598-2cf0-4cf5-9acb-511d8d508311/26-6a6ac401870e5.webp' /></p><p>
</p><p>750,000 பீப்பாய்கள் வரை கச்சா எண்ணெயை ஏற்றிச் செல்லும் திறன் கொண்ட, மார்ஷல் தீவுகளில் பதிவு செய்யப்பட்ட 'ஃப்ரீடம் குளோரி' என்ற கப்பல், டிரான்ஸ் மவுண்டன் குழாய்வழி (TMX) கச்சா எண்ணெயை ஏற்றிக்கொண்டு புதன்கிழமை வான்கூவரிலிருந்து புறப்பட்டுள்ளது. </p><p>ஜப்பானின் மிகப்பெரிய சுத்திகரிப்பு நிறுவனமான ஈனியோஸ் TMX கச்சா எண்ணெயை வாங்கியுள்ளது. இதனிடையே, எண்ணெய் விலை உயர்வு காரணமாக, ஜப்பான் அரசாங்கம் இந்த ஆண்டிற்கான தங்களது வளர்ச்சி முன்னறிவிப்பை 1.3 சதவீதத்திலிருந்து 0.9 சதவீதமாகக் குறைத்துள்ளது.</p><p></p><p> </p><p>பிப்ரவரி மாதத்தில் அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது போரைத் தொடங்கும் வரை, ஜப்பான் தனது எண்ணெயில் 90 சதவீதத்திற்கும் அதிகமானவற்றை ஹார்முஸ் நீரிணை வழியாகவே இறக்குமதி செய்து வந்தது.
</p><p>போரினால் ஹார்முஸ் வழியாக எண்ணெய் விநியோகம் தடைபட்டதைத் தொடர்ந்து, தற்போது ஜப்பான் உட்பட பல ஆசிய நாடுகள் தங்களது விநியோகஸ்தர்களை அவசரமாகப் பன்முகப்படுத்த முயற்சித்து வருகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/31644137-51b5-4894-8887-abcc20e9f78b/26-6a6ac40244930.webp' /></p><p> </p><p>டிரான்ஸ் மவுண்டன் குழாய்வழியானது, கனடாவின் ஆல்பர்ட்டாவிலிருந்து பிரிட்டிஷ் கொலம்பியாவின் பர்னபியில் உள்ள ஒரு கடல் முனையத்திற்கு, ஒரு நாளைக்கு 890,000 பீப்பாய்கள் வரையிலான கச்சா எண்ணெயைக் கொண்டு செல்கிறது.</p><h2>இந்தியா, மலேசியா</h2><p> </p><p>TMX என அறியப்படும் இந்தக் குழாய்வழி ஃபெடரல் நிர்வாகத்திற்குச் சொந்தமானது, மேலும் இது 2025-ஆம் வருடத்தின் மூன்றாம் காலாண்டிலிருந்து கிட்டத்தட்ட 90 சதவீத கொள்ளளவில் இயங்கி வருகிறது. </p><p>ஆசியா நாடுகளுக்கான ஏற்றுமதி 2024-இல் சுமார் 51 சதவீதமாக இருந்த நிலையில், இந்த ஆண்டு வான்கூவரிலிருந்து மேற்கொள்ளப்பட்ட மொத்த எண்ணெய் ஏற்றுமதியில், TMX வழியாக ஆசியாவிற்குச் செய்யப்பட்ட ஏற்றுமதிகள் கிட்டத்தட்ட 77 சதவீதமாக அதிகரித்துள்ளது.
</p><p>ஈரான் போர் தொடங்கியதன் பிறகு, இந்தியா, மலேசியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகள் அனைத்தும் TMX குழாய்வழி மூலம் கொண்டுவரப்படும் கச்சா எண்ணெயை மீண்டும் வாங்கத் தொடங்கியுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b1aa0f70-208f-4483-be3d-b1c7dc033e09/26-6a6ac402eca23.webp' /></p><p> </p><p>அதேவேளையில், அமெரிக்காவின் கச்சா எண்ணெய் இறக்குமதியில் கனடிய எண்ணெய் கிட்டத்தட்ட 60 சதவீதமாக உள்ளது என்று அமெரிக்க எரிசக்தி தகவல் நிர்வாகம் (US Energy Information Administration) தெரிவித்துள்ளது. </p><p>இதற்கிடையில், கனடியப் பொருட்கள் மீது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் கடந்த வாரம் புதிய வரிகளை அறிவித்திருந்த போதிலும், அமெரிக்கா உடனான பேச்சுவார்த்தைகளில் கனடாவின் எண்ணெயை ஒரு பேராயுதமாகப் பயன்படுத்துவதில் தனக்கு உடன்பாடில்லை என்று கனடியப் பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-30T03:16:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[தீவிரமடையும் எல்நினோ தாக்கம் - இலங்கையர்களுக்கு சுகாதாரப்பிரிவு விடுத்துள்ள அவசர எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/drinking-alcohol-during-el-nino-heatwave-is-deadly-1785379299"></link>
            <id>https://tamilwin.com/article/drinking-alcohol-during-el-nino-heatwave-is-deadly-1785379299</id>
            <summary type="text">எல் நினோ தாக்கத்தினால் ஏற்படும் வெப்ப அலையின் போது மது மற்றும் குளிர்பானங்கள் அருந்துவது மனித உடலுக்கு மிகவும் தீங்கு விளைவிக்கும் என்றும், அது வெப்ப ...</summary>
            <content type="html"><![CDATA[<p>எல் நினோ தாக்கத்தினால் ஏற்படும் வெப்ப அலையின் போது மது மற்றும் குளிர்பானங்கள் அருந்துவது மனித உடலுக்கு மிகவும் தீங்கு விளைவிக்கும் என்றும், அது வெப்ப பக்கவாதம் மற்றும் மரணத்திற்கு வழிவகுக்கும் என்றும் சுகாதார அமைச்சகத்தின் தொழில்சார் சுகாதாரப்பிரிவு எச்சரித்துள்ளது.
</p><p>
இது தொடர்பில் இந்த பிரிவின் வைத்திய நிபுணர் இனோகா சுரவீர மேலும் தெரிவிக்கையில்,</p><p></p><h2>உயர்ந்த நிலையை எட்டியுள்ள&nbsp;வெப்பநிலை </h2><p>
</p><p>
இந்த நாட்களில் சுற்றுப்புற வெப்பநிலை உயர்ந்த நிலையை எட்டியுள்ளதாகவும், மது அருந்துவது நீரிழப்பு மற்றும் பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்தும் என்றும் கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d17fe01b-2604-4eab-97cd-a7f977070a81/26-6a6ac0c2b709a.webp' /></p><p>
</p><p>
எதிர்வரும் நாட்களில் இந்த வெப்பமான சூழல் மேலும் தீவிரமடையக்கூடும் என்றும், உடல் நீரிழப்புக்கு உள்ளாவதை தடுக்க சுத்தமான தண்ணீர், ஆரஞ்சு, தர்பூசணி போன்றவற்றை அதிகமாக உட்கொள்வது நல்லது என்றும் தெரிவித்துள்ளார்.
</p><p>
எல் நினோவால் வளிமண்டல வெப்பநிலை அதிகரித்துள்ளதால், சிறு குழந்தைகள், கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட பெரியவர்கள் காலை 11.00 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை வெயிலில் செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்றும், பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்ற வேண்டும் என்றும் வைத்திய நிபுணர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><h2>சுகாதார அமைச்சின் முக்கிய அறிவுறுத்தல்கள்</h2><p>
</p><p>
மேலும், சிறுநீரக நோயாளிகள், இதய நோயாளிகள், பக்கவாத நோயாளிகள் மற்றும் தொற்றா நோய்களால் பாதிக்கப்பட்ட நீரிழிவு நோயாளிகள் தங்கள் மருந்துகளை முறையாக எடுத்துக்கொண்டு ஆரோக்கியமாக இருப்பது மிகவும் முக்கியம் என்றும் அவர் கூறியுள்ளார்.
</p><p>
மேலும், வெப்பத்தாக்கம் உயிரிழப்புக்குக்கூட வழிவகுக்கக்கூடும் என்பதால், சுகாதார அமைச்சு வழங்கியுள்ள அறிவுறுத்தல்களை மக்கள் பின்பற்ற வேண்டும் என மேலும் வலியுறுத்தியுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-30T03:11:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மனைவியுடன் சண்டை - மின்சாரக் கோபுரத்தில் ஏறிய நபருக்கு நீதிமன்றத்தின் உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/man-ordered-to-pay-ceb-losses-after-protest-1785380254"></link>
            <id>https://ibctamil.com/article/man-ordered-to-pay-ceb-losses-after-protest-1785380254</id>
            <summary type="text">உயர் அழுத்த மின்சாரக் கோபுரத்தில் ஏறிப் போராட்டத்தில் ஈடுபட்ட நபரால் இலங்கை மின்சார சபைக்கு ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுசெய்ய வேண்டும் என மாத்தறை நீதவான் நீதி...</summary>
            <content type="html"><![CDATA[<p>உயர் அழுத்த மின்சாரக் கோபுரத்தில் ஏறிப் போராட்டத்தில் ஈடுபட்ட நபரால் இலங்கை மின்சார சபைக்கு ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுசெய்ய வேண்டும் என மாத்தறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p>இந்த சம்பவம் கம்புருபிட்டிய பகுதியில் கடந்த 21 ஆம் திகதி&nbsp; இடம்பெற்றுள்ளது.</p><p>
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், குறித்த நபர் உயர் அழுத்த மின்சார விநியோகக் கட்டமைப்புக்குச் சொந்தமான கோபுரமொன்றில் ஏறிப் போராட்டத்தில் ஈடுபட்டார்.</p><p></p><h2>கோபுரத்திலிருந்து கீழே இறங்கினார்</h2><p>

இதன் காரணமாக திஹகொட, கம்புருபிட்டிய, அக்குரஸ்ஸ, முலட்டியன, தேவேந்திரமுனை, மாவறல மற்றும் தெனியாய உள்ளிட்ட பல பகுதிகளுக்கான மின்சார விநியோகத்தை இரண்டு மணித்தியாலங்களுக்கும் மேலாக இடைநிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8707e409-a0af-498f-b65a-237f0850c094/26-6a6abff13a1c6.webp' /></p><p>பின்னர் காவல்துறையினர் குறித்த நபரின் குடும்பத்தினரைச் சம்பவ இடத்திற்கு அழைத்து வந்ததையடுத்து, அவர் கோபுரத்திலிருந்து கீழே இறங்கினார்.
</p><p>
இதனையடுத்து, உடனடியாகக் கைது செய்யப்பட்ட அவர் மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து கடந்த 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
</p><p>
இந்த வழக்கு 24 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, இந்த சம்பவத்தால் இலங்கை மின்சார சபைக்கு ஏற்பட்ட நிதி இழப்பைக் கணிப்பிட்டு நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு கம்புருபிட்டிய காவல்துறையினருக்கு மாத்தறை தலைமை நீதவான் உத்தரவிட்டதுடன், சந்தேகநபரை 28 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.</p><p></p><h2>மின்சார சபைக்கு இழப்பு</h2><p>

நேற்றுமுன்தினம் (28) வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, இரண்டு மணித்தியாலங்களுக்கும் மேலாக நிலவிய மின்வெட்டு காரணமாக இலங்கை மின்சார சபைக்கு 201,059.90 ரூபா இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் காவல்துறையினர் நீதிமன்றத்துக்கு அறிவித்தனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/68c79e94-62ab-4923-9d9c-3f87fb1af2c1/26-6a6abff04a69c.webp' /></p><p>விசாரணையின் போது சந்தேகநபர் குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்து, இலங்கை மின்சார சபைக்கு ஏற்பட்ட இழப்பீட்டுத் தொகையைச் செலுத்துமாறு மாத்தறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.
</p><p>
மேலதிக விசாரணை நடவடிக்கைகளுக்காக இந்த வழக்கு எதிர்வரும் நவம்பர் 3 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-30T03:07:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[7-வது நாளில் சரிந்த ஜனநாயகன் வசூல்.. விஜய் படத்திற்கே இந்த நிலைமையா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/jananayagan-movie-7-days-worldwide-box-office-1785379368"></link>
            <id>https://cineulagam.com/article/jananayagan-movie-7-days-worldwide-box-office-1785379368</id>
            <summary type="text">ஜனநாயகன்தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகர் விஜய்யின் நடிப்பில் கடந்த வாரம் வெளியான திரைப்படம் ஜனநாயகன். இயக்குநர் ஹெ...</summary>
            <content type="html"><![CDATA[<h2>ஜனநாயகன்</h2><p>தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகர் <a href="https://www.youtube.com/watch?v=6H7VlBCIG3Y" target="_blank">விஜய்</a>யின் நடிப்பில் கடந்த வாரம் வெளியான திரைப்படம் ஜனநாயகன்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/27e0d209-93de-4f10-b55d-b560565c3d22/26-6a6aba2b36da1.webp' /></p><p>இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் உருவான இப்படத்தை கே.வி.என் நிறுவனம் தயாரிக்க, அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார். மேலும், பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பாபி தியோல், பிரகாஷ் ராஜ் ஆகியோர் நடித்துள்ளனர்.</p><p></p><p>

பிரம்மாண்ட பொருட்செலவில் எடுக்கப்பட்ட இப்படம் பல தடைகளை தாண்டி கடந்த வாரம் வெளியானது. விஜய் படம் என்றாலே மாபெரும் அளவில் அப்படத்தை கொண்டாடுவார்கள், அதுவும் அவருடைய கடைசி படம் என்றால் சொல்லவே வேண்டாம்.</p><h2>வசூல்&nbsp;</h2><p> 

ஜனநாயகன் திரைப்படம் வெளியாகி 7 நாட்கள் ஆகியுள்ளது. இதுவரை ஒவ்வொரு நாளும் இப்படம் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பதை தொடர்ந்து பார்த்து வந்துள்ளோம். 

இந்த நிலையில், 7 நாட்களில் இப்படம் உலகளவில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d7aa3095-ee96-48ba-939f-e3be40c11153/26-6a6aba2bdf021.webp' /></p><p>அதன்படி, 7 நாட்களில் ரூ. 245 கோடி வசூல் செய்துள்ளது. 6 நாட்கள் முடிவில் ரூ. 234 கோடி வசூல் செய்திருந்த நிலையில், 7-வது நாளில் ரூ. 11 கோடி மட்டுமே வசூலித்துள்ளது. 

இது ஜனநாயகன் திரைப்படத்திற்கு வார நாட்களில் பாக்ஸ் ஆபிஸில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய சரிவாகும். ஆனால், வார இறுதியில் கண்டிப்பாக இந்த வசூல் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.</p>]]></content>
            <updated>2026-07-30T03:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[என்னை சிறையில் அடைப்பது சுலபமானதல்ல! வகுக்கப்பட்டுள்ள அரசியல் திட்டங்கள்: சவால் விடும் நாமல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-challanges-to-npp-1785380382"></link>
            <id>https://tamilwin.com/article/namal-challanges-to-npp-1785380382</id>
            <summary type="text">தன்னை சிறையில் அடைப்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.ஸ்ரீலங்கா பொது...</summary>
            <content type="html"><![CDATA[<p>தன்னை சிறையில் அடைப்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.</p><p>ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.</p><p>இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,&nbsp;&nbsp;</p><p>&nbsp;</p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">வகுக்கப்பட்ட திட்டங்கள்</span></p><p> </p><p>தன்னை சிறையில் அடைப்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. ஒருவேளை அப்படி நடந்தாலும் கூட கட்சியின் எதிர்கால நடவடிக்கைகளை எந்தவித தடங்கலும் இன்றி முன்னெடுத்துச்செல்வதற்கான அனைத்து திட்டங்களும் ஏற்கனவே வகுக்கப்பட்டுவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cbd2b5e8-6101-4db8-8778-591275e903ad/26-6a6abe1fc5cc6.webp' />&nbsp;&nbsp;</p><p>எந்தவொரு சவாலான சூழ்நிலையையும் எதிர்கொள்வதற்குக் கட்சி கிராம அளவிலும் மாவட்ட அளவிலும் பலமாக அமைக்கப்பட்டிருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-30T02:59:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அர்ஜென்டினாக்கு எதிராக திரும்பும் FIFA - மைதானத்தில் உச்சக்கட்ட வன்மம்: சிக்கலில் மெஸ்ஸி அணி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/fifa-disciplinary-proceedings-against-argentina-1785376198"></link>
            <id>https://ibctamil.com/article/fifa-disciplinary-proceedings-against-argentina-1785376198</id>
            <summary type="text">2026 ஆம் ஆண்டு உலக கோப்பை கால்பந்து போட்டி நிறைவடைந்துள்ள நிலையில், அர்ஜென்டினா அணி மற்றும் வீரர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என ஃபிஃபா அற...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026 ஆம் ஆண்டு உலக கோப்பை கால்பந்து போட்டி நிறைவடைந்துள்ள நிலையில், அர்ஜென்டினா அணி மற்றும் வீரர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என ஃபிஃபா அறிவித்துள்ளது.</p><p>ஃபாக்லாந்து தீவுகளுக்கு உரிமை கோரும் பதாகையை காட்சிப்படுத்தியது உட்பட பல விதிமீறல்கள் நடந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பாகவே விசாரணைகள் நடத்தப்பட உள்ளளதாக ஃபிஃபா தெரிவித்துள்ளது.</p><p>ஃபிஃபா புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் குறித்த விடயத்தை தெரிவித்துள்ளது.</p><p></p><h2>பாகுபாடு காட்டும் கோஷங்கள்&nbsp;</h2><p>இங்கிலாந்திற்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் அர்ஜென்டினா 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, அர்ஜென்டினா வீரர்கள் "ஃபாக்லாண்ட்ஸ் அர்ஜென்டினாவிற்குச் சொந்தமானது" என்று பொருள்படும் "லாஸ் மால்வினாஸ் சோன் அர்ஜென்டினாஸ்" என்ற வாசகம் அடங்கிய பதாகையை ஏந்தியபடி கொண்டாடினர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fec4d9f9-04a1-48c6-ae48-bad9d73b0e95/26-6a6ab2360cfef.webp' /></p><p>அத்துடன் பல அர்ஜென்டினா போட்டிகளின் போது, ​​பாகுபாடு காட்டும் கோஷங்கள் மற்றும் சைகைகள், மீண்டும் மீண்டும் தாமதமாகத் தொடங்கப்பட்ட போட்டிகள், போட்டி மற்றும் பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்றத் தவறியது, அணி மற்றும் பார்வையாளர்களால் காட்டப்பட்ட பொருத்தமற்ற செய்திகள், மற்றும் ரசிகர்களால் வீசப்பட்ட பொருட்கள் ஆகியவை குறித்தும் ஃபிஃபா விசாரணை நடத்துகின்றது.</p><p>அர்ஜென்டினாவை 1-0 என்ற கோல் கணக்கில் ஸ்பெயின் தோற்கடித்த உலகக் கோப்பை இறுதிப் போட்டியைத் தொடர்ந்து நடந்த மோதலில் ஈடுபட்ட வீரர்கள் மீது தனி ஒழுங்கு நடவடிக்கைகளும் தொடங்கப்பட்டுள்ளன.</p><p>மேலும் அர்ஜென்டினா வீரர்களான நஹுயல் மோலினா மற்றும் லியாண்ட்ரோ பரேடெஸ், மற்றும் அர்ஜென்டினா அதிகாரியான ராபர்டோ அயலா ஆகியோர் மீது தாக்குதல் நடத்தியிருக்கலாம் என்ற குற்றச்சாட்டின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஃபிஃபா தெரிவித்துள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-30T02:51:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஷூட்டிங்கில் எல்லைமீறிய நடிகர்..கன்னத்தில் பளார் விட்ட நடிகை நோரா பதேஹி..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/nora-fatehi-slapped-co-star-after-he-misbehaved-1785332541"></link>
            <id>https://viduppu.com/article/nora-fatehi-slapped-co-star-after-he-misbehaved-1785332541</id>
            <summary type="text">நோரா பதேஹிபாலிவுட்டில் பிரபல நடிகையாகவும் நடனக் கலைஞராகவும் திகழ்ந்து வரும் நடிகை நோரா பதேஹி, தன்னுடைய அறிமுக படத்தின் படப்பிடிப்பின்போது சக நடிகர் ஒர...</summary>
            <content type="html"><![CDATA[<h2>நோரா பதேஹி</h2><p>பாலிவுட்டில் பிரபல நடிகையாகவும் நடனக் கலைஞராகவும் திகழ்ந்து வரும் நடிகை நோரா பதேஹி, தன்னுடைய அறிமுக படத்தின் படப்பிடிப்பின்போது சக நடிகர் ஒருவர் தன்னிடம் தவறாக நடக்க முயன்றது குறித்து பகிர்ந்துள்ளார். </p><p>தி கிரேட் இந்தியன் கபில் ஷோ நிகழ்ச்சியில் பங்கேற்ற நோரா, என்னுடைய அறிமுக படத்தின் ஷூட்டிங்கின்போது சக நடிகர் என்னிடம் தவறாக நடக்க முயன்றார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ea98ad1f-e0bd-4b57-9e66-bce5c883cd26/26-6a6a033f9bd56.webp' /></p><h2>கன்னத்தில் பளார்</h2><p> </p><p>இதனால் நான் கோபமடைந்து அவரை அறைந்தேன். அவரும் பதிலுக்கு என்னை அறைந்தார். அதன்பின் மீண்டும் நான் அவரை அறைந்தேன். </p><p>பின் அவர் என் தலைமுடியை இழுக்க, நானும் அவரது தலைமுடியை பிடித்து இழுத்தேன். இதனால் ஷூட்டிங் ஸ்பாட்டில் பெரிய கைகலப்பு ஏற்பட்டது. பின் இயக்குநர் தலையிட்டு எங்களை பிரித்தார் என்று நோரா பதேஹி தெரிவித்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-07-30T02:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாடுகளில் உற்பத்தி செய்யப்பட்ட ஆபத்தான பொருள்..! பொலிஸ் பரிசோதகர் அதிரடியாக கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/dehiwala-police-si-arrested-with-drugs-1785377471"></link>
            <id>https://tamilwin.com/article/dehiwala-police-si-arrested-with-drugs-1785377471</id>
            <summary type="text">தெஹிவளை பொலிஸ் நிலையத்தின் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார். 

தெஹிவளை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த உப பொ...</summary>
            <content type="html"><![CDATA[<p>தெஹிவளை பொலிஸ் நிலையத்தின் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார். </p><p>

தெஹிவளை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த உப பொலிஸ் பரிசோதகர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப்பொலிஸ் அத்தியட்சகர் எப்.யு.வுட்லர் தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>நீதிமன்றத்தில் முன்னிலை</h2><p> </p><p>

இதன்போது சந்தேகநபரிடமிருந்து ஹெரோயின், கஞ்சா மற்றும் வெளிநாடுகளில் உற்பத்தி செய்யப்பட்ட சிகரெட்டுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aabf885d-328a-4a56-85fa-d275daa232cf/26-6a6ab4475e97d.webp' /></p><p> </p><p>

இவர் போதைப்பொருள் பாவனைக்கு கடுமையாக அடிமையானவர் என்பதும் தெரியவந்துள்ளது.</p><p> 

குறித்த உப பொலிஸ் பரிசோதகர் 26 வயதுடையவர் என்பதுடன், சந்தேகநபரை கல்கிசை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-30T02:18:10+00:00</updated>
        </entry>
    </feed>
