<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-08-28T13:33:05+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடா ஏரியின் பெயரை மாற்றிய டிரம்ப்; சுட சுட பிரதமர் மார்க் கார்னி பதிலடி !]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/trump-renames-canadian-lake-mark-carney-retort-1787897383"></link>
            <id>https://canadamirror.com/article/trump-renames-canadian-lake-mark-carney-retort-1787897383</id>
            <summary type="text">&amp;nbsp;அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், கனடாவுடனான வர்த்தக மோதலுக்கு மத்தியில், வட அமெரிக்காவின் முக்கியமான ஐந்து பெரிய ஏரிகளில் ஒன்றான Lake Ontario-வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், கனடாவுடனான வர்த்தக மோதலுக்கு மத்தியில், வட அமெரிக்காவின் முக்கியமான ஐந்து பெரிய ஏரிகளில் ஒன்றான Lake Ontario-வின் பெயரை அமெரிக்க அரசு பயன்பாட்டில் “Lake America” என மாற்ற உத்தரவிட்டுள்ளார்.</p><p> 
 
 இந்த பெயர் மாற்றம் அமெரிக்க மத்திய அரசின் அதிகாரப்பூர்வ பயன்பாட்டுக்கு மட்டுமே பொருந்தும். கனடா, சர்வதேச அமைப்புகள் அல்லது பிற நிறுவனங்கள் பழைய பெயரான Lake Ontario-வை தொடர்ந்து பயன்படுத்தலாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d5a3c4f3-b361-40c5-bf49-e174d2709d92/26-6a912628d8e21.webp' /></p><h2>நியூயார்க் இதை அந்த பெயரில் அழைக்காது</h2><p>
</p><p> 
இந்த அறிவிப்புக்கு கனடா பிரதமர் மார்க் கார்னி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். 
400 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றை கொண்ட இந்த ஏரியின் பெயர், கனடா மற்றும் அமெரிக்கா நாடுகளாக உருவாவதற்கு முன்பே பயன்பாட்டில் இருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். </p><p>

அத்துடன் நியூயார்க் ஆளுநர் கேத்தி ஹோச்சுலும் “நியூயார்க் இதை அந்த பெயரில் அழைக்காது” என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
</p><p> 
Lake Ontario-வின் நீர்ப்பரப்பில் சுமார் 52 சதவீதம் கனடாவிலும், மீதமுள்ள பகுதி அமெரிக்காவின் நியூயார்க் மாநிலத்திலும் அமைந்துள்ளது.</p><p>

 இதனால் பெயர் மாற்றம் கனடாவில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், ஏற்கனவே கனடாவுடன் பல பில்லியன் டாலர் வர்த்தக வரிகள் தொடர்பாக மோதல் நீடித்து வரும் நிலையில், இந்த நடவடிக்கை அமெரிக்கா - கனடா உறவை மேலும் பதற்றமாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p>]]></content>
            <updated>2026-08-28T13:29:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாளத்தில் மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட மீட்பு பணிகள்: 90,000 இற்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/nepal-tibet-flash-floods-death-toll-reaches-543-1787921478"></link>
            <id>https://ibctamil.com/article/nepal-tibet-flash-floods-death-toll-reaches-543-1787921478</id>
            <summary type="text">நேபாளம் மற்றும் திபெத் எல்லைப் பகுதிகளில் ஏற்பட்டுள்ள பேரழிவை ஏற்படுத்திய திடீர் வெள்ளப்பெருக்கில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 543 ஆக உயர்ந்துள்ளது. இவ்வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நேபாளம் மற்றும் திபெத் எல்லைப் பகுதிகளில் ஏற்பட்டுள்ள பேரழிவை ஏற்படுத்திய திடீர் வெள்ளப்பெருக்கில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 543 ஆக உயர்ந்துள்ளது. </p><p>இவ்விபத்தில் 1,500 இற்கும் மேற்பட்டோர் இன்னமும் மாயமாகியுள்ள நிலையில், மூன்றாவது நாளாக மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.</p><p>

பனிப்பாறை உடைந்ததால் (Glacial Collapse) ஏற்பட்ட நிலச்சரிவைத் தொடர்ந்து உருவான தடுப்பு ஏரி உடைந்ததால், திரிசூலி ஆற்றுப் படுகைப் பகுதிகள் நீரில் மூழ்கின.</p><p> </p><p></p><h2>திடீர் வெள்ளம்&nbsp;</h2><p>இதனால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் நேபாளத்தில் மட்டும் 538 பேரும் மற்றும் திபெத் பகுதியில் 5 பேரும் உயிரிழந்துள்ளதாக அனர்த்த மேலாண்மை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
</p><p>இந்தநிலையில் ராசுவா மாவட்டத்தில் உருவான செயற்கை ஏரி நிரம்பி வழிந்ததால் ஏற்பட்ட இரண்டாம் கட்ட வெள்ள அபாயம் காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்ட மீட்புப் பணிகள், தற்போது மீண்டும் ஆரம்பிக்கப்ட்டு வேகப்படுத்தப்பட்டுள்ளன.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ce8a4598-80f7-4f4e-9e99-7a0e05fc8f63/26-6a9184483fc68.webp' /></p><p>அத்தோடு இதுவரை 117 வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இருப்பினும், 320 இந்தியர்கள் உட்படப் பல வெளிநாட்டவர்கள் இன்னமும் மாயமாகியுள்ளதாகக் கூறப்படும் நிலையில், அவர்களைத் தேடும் பணிகள் ஹெலிகொப்டர்கள் மூலம் தொடர்கின்றன.
</p><p>மேலும் நுவாகோட் மற்றும் பிதுர் உள்ளிட்ட பகுதிகள் வெள்ளம் மற்றும் சேற்றினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 90,000 இற்கும் மேற்பட்ட மக்கள் இப் பேரழிவால் பாதிக்கப்பட்டுள்ளதாகச் செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p>]]></content>
            <updated>2026-08-28T13:22:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலகு, உயிர்-ஆல் தான் என் பலம்..தாய்மை குறித்து நடிகை நயன் தாரா ஓபன் டாக்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/nayanthara-opens-up-about-motherhood-1787921459"></link>
            <id>https://viduppu.com/article/nayanthara-opens-up-about-motherhood-1787921459</id>
            <summary type="text">நயன்தாராதென்னிந்திய சினிமாவில் அறிமுகமாகி தற்போது பாலிவுட் படங்களில் நடித்து டாப் நடிகையாகவும் அதிக சம்பளம் வாங்கும் நாயகியாகவும் திகழ்ந்து வருபவர் தா...</summary>
            <content type="html"><![CDATA[<h2>நயன்தாரா</h2><p>தென்னிந்திய சினிமாவில் அறிமுகமாகி தற்போது பாலிவுட் படங்களில் நடித்து டாப் நடிகையாகவும் அதிக சம்பளம் வாங்கும் நாயகியாகவும் திகழ்ந்து வருபவர் தான் நடிகை நயன்தாரா. </p><p>பல சர்ச்சைகளையும் சந்தித்து வரும் நயன் தாரா, டாக்சிக் படத்தின் நெகட்டிவ் விமர்சனங்களையும் சந்தித்து வருகிறார். கடந்த இரு நாட்களில் நயன் தாரா நடிப்பில் டாக்சிக், Hi படம் ரிலீஸாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0d240408-7832-4cc5-ada8-b591eb957e44/26-6a9184358b954.webp' /></p><p> </p><p>இந்நிலையில், பிரமோஷனுக்காக பேட்டியளித்த நயன்தாரா, வேலையையும், தாய்மையையும் சரிசமமாக கொண்டு செல்வது எளிதான விஷயம் கிடையாது, ஆனால் என் மகன்களான உயிரும், உலக்கும் எனக்கு பெரிய பலமாக இருக்கிறார்கள். </p><p>அவர்களுடன் நேரத்தை செலவிடும் வகையில் என் வேலைகளை நான் திட்டமிடுகிறேன். குடும்பத்தின் ஆதரவும் முக்கியமானது, நான் என் மகன்களோடு இருக்கும்போது முழுமையாக அவர்களுடன் இருப்பதை மட்டுமே உறுதி செய்கிறேன். அதுதான் என்னை மனதளவில் நிலைத்திருக்க உதவி செய்கிறது என்று கூறியிருக்கிறார் நயன்தாரா.</p>]]></content>
            <updated>2026-08-28T13:15:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ashik</name>
            </author>
            <title type="text"><![CDATA[500 கிலோகிராம் மீனுடன் 3 கடற்றொழிலாளர்கள் கைது..! சோதனை சாவடியில் சிக்கிய வெடிப்பொருள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/3-fishermen-arrested-with-500-kilograms-of-fish-1787922634"></link>
            <id>https://tamilwin.com/article/3-fishermen-arrested-with-500-kilograms-of-fish-1787922634</id>
            <summary type="text">மன்னார் மாவட்டத்தில் முறையற்ற விதத்தில் மீன்பிடி நடவடிக்கையில்
ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் மூன்று கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>மன்னார் மாவட்டத்தில் முறையற்ற விதத்தில் மீன்பிடி நடவடிக்கையில்
ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் மூன்று கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். </p><p>

இந்த நடவடிக்கை இன்று(28.08.2026) கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், அவர்களிடம் இருந்த மீன்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><h2>


500 கிலோகிராம் மீன்கள் பறிமுதல்</h2><p>

மன்னார் பிரதான பாலத்திற்கு அருகே உள்ள கடற்படை சோதனைச் சாவடியில்
கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது, டைனமைட் வெடி
பொருளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின்
பேரில் மூன்று கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/637d3ecf-64cd-4bab-9434-c2956555a2c5/26-6a918963a3457.webp' /></p><p> </p><p>

இதன்போது, அவர்களிடம் இருந்த மீன்கள், வெளி இணைப்பு இயந்திரம், படகு மற்றும் மீன்பிடி உபகரணங்கள் ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளன.
</p><p>



கைப்பற்றப்பட்ட பொருட்கள் மற்றும் மீன்பிடி நடவடிக்கை தொடர்பில் மேலதிக
விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு பின்னர், கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளிடம்
ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p> 

மேலும், கைப்பற்றப்பட்ட மீன்கள் மேலதிக பரிசோதனைக்காக நாரா நிறுவனத்திற்கு
அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.&nbsp; &nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e6a9e61f-28ec-4bbc-8650-f1520b8e58e8/26-6a918964a0c7c.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d013f564-8258-4120-86a7-813e733503b1/26-6a918965779ff.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/de652c01-8c61-4f50-b09d-1cb6a411083e/26-6a9189664d7ad.webp' /></p><p></p><p></p><p><br></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-28T13:13:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Erimalai</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ்ப்பாணம்- சவுக்கம் காட்டிற்கு விசமிகளால் தீ வைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/fire-breaks-out-in-jaffna-manalkadu-1787921825"></link>
            <id>https://tamilwin.com/article/fire-breaks-out-in-jaffna-manalkadu-1787921825</id>
            <summary type="text">யாழ்ப்பாணம்-&amp;nbsp; சவுக்கம் காட்டிற்கு
விஷமிகளால் தீ வைக்கப்பட்ட நிலையில் தற்போது பல ஏக்கர் பரப்பளவில் சவுக்கம்
காடு பற்றி எரிந்து கொண்டிருப்பதாக தெ...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம்-&nbsp; சவுக்கம் காட்டிற்கு
விஷமிகளால் தீ வைக்கப்பட்ட நிலையில் தற்போது பல ஏக்கர் பரப்பளவில் சவுக்கம்
காடு பற்றி எரிந்து கொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>உடனடியாக தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படவில்லை எனில் முழுமையாக
சவுக்கங்காடு ஏரிந்து நாசமாக்கும் அபாய நிலை காணப்படுவதாக குறிப்பிடப்படுகின்றது.</p><h2>தீ வைப்பு</h2><p>எனவே விரைந்து
தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து சவுக்கம் காட்டை பாதுகாப்பதற்கு உரிய
தரப்புக்குள் உதவுமாறு பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர் திரு அகஸ்டின்
கோரிக்கை விடுத்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e1165a8c-5da7-4500-8ff2-6568c254e127/26-6a918947bd42d.webp' /></p><p> </p><p>தற்போது கிராம மக்கள் நலன் விரும்பிகள் பலர் தீயை
அணைக்கின்ற முயற்சி ஈடுபட்டுக் கொண்டிருக்கின்ற போதும் தீ விளாசி எரிவதால்
அதனை கட்டுப்படுத்த முடியவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.</p><p>இன்று மதியம் 12 மணியளவில் விசமிகளால்
தீவைக்கப்பட்டிருந்த நிலையில் சம்பவ இடத்துக்குச் சென்ற வட்டார பருத்தித்துறை
பிரதேச சபை உறுப்பினர் குறித்த விடயம் தொடர்பில் பிரதேச சபை, பிரதேச
செயலகங்கள், பொலிஸார், இராணுவம் உட்பட பலருக்கும் அறிவித்திருந்தார்.</p><h2>கட்டுப்படுத்த நடவடிக்கை</h2><p>இந்தநிலையில்
பிற்பகல் 5:15 மணிக்கு பின்னரே தீயை அணைக்கும் நடவடிக்கைக்கு
மருதங்கேணியிலிருந்து இராணுவத்தினர் சுமார் 30 பேர் வரை வருகதந்து தீயை
கட்டுப்படுத்துவதற்கு மனிதவலு மூலம் தீயை கட்டுப்படுத்த நடவடிக்கைகளை
மேற்கொண்டு வருகின்றார்கள். </p><p>குறித்த இடத்தில் மருதங்கேணி பொலிஸார் நிலைய
பொறுப்பதிகாரியும் வருகை தந்துள்ளார். குறித்த பகுதி பாரிய புகைமண்டலமாக
காட்சியளிக்கிறது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-28T13:12:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டில் வேகமாக வற்றும் பிரதான நீர்த்தேக்கங்கள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/major-reservoirs-in-the-country-drying-up-rapidly-1787922888"></link>
            <id>https://jvpnews.com/article/major-reservoirs-in-the-country-drying-up-rapidly-1787922888</id>
            <summary type="text">&amp;nbsp; நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக, பல நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக, பல நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
</p><p>
இதன்படி, சேனாநாயக்க சமுத்திரத்தின் நீர்க் கொள்ளளவு 18 சதவீதமாகவும், ஹ_ருளுவெவ நீர்த்தேக்கத்தின் நீர்க் கொள்ளளவு 24 சதவீதமாகவும் குறைந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/004122c2-504f-4ac5-b7ce-7b4ff71785b5/26-6a9189c9db55b.webp' /></p><p>
</p><p>
அதேநேரம், கவுடுல்ல வாவியின் நீர்க் கொள்ளளவு 20 சதவீதமும், தப்போவ வாவியின் நீர்க் கொள்ளளவு 28 சதவீதமும் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p>
</p><p>
இதற்கிடையில், இன்றைய நாளிலும் நாட்டின் பல மாவட்டங்களில் மனித உடலால் உணரக்கூடிய வெப்பம் நிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.</p><p></p><p>
</p><p>
இதற்கமைய, கிழக்கு மாகாணத்திலும், பொலன்னறுவை, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் வெப்பநிலை செல்சியஸ் 39 முதல் 45 வரை இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-28T13:12:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஸ்பெயினில் உலகப் புகழ்பெற்ற 'லா டொமாட்டினா' திருவிழா!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/the-world-famous-la-tomatina-festival-in-spain-1787922633"></link>
            <id>https://canadamirror.com/article/the-world-famous-la-tomatina-festival-in-spain-1787922633</id>
            <summary type="text">&amp;nbsp; ஸ்பெயினின் உலகப் புகழ்பெற்ற &#039;லா டொமாட்டினா&#039; (La Tomatina) திருவிழாவில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டு உற்சாகமாக தக்காளி சண்டையில் ஈடுபட்டனர்.
...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; ஸ்பெயினின் உலகப் புகழ்பெற்ற 'லா டொமாட்டினா' (La Tomatina) திருவிழாவில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டு உற்சாகமாக தக்காளி சண்டையில் ஈடுபட்டனர்.
</p><p>
வருடந்தோறும் நடைபெறும் இந்த வித்தியாசமான திருவிழாவில், ஸ்பெயின் மட்டுமன்றி உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளும் ஆர்முடன் கலந்துகொள்வது வழக்கம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6422af49-da5a-4e4a-9787-160bac411875/26-6a9188cb8108e.webp' /></p><p>
</p><p>
தெருக்களில் திரண்ட மக்கள், ஒருவர்மீது ஒருவர் பழுத்த தக்காளிகளை வீசி மகிழ்ந்தனர். இதனால் அந்தப்பகுதி முழுவதும் தக்காளிச் சாறினால் சிவப்பு நிறமாக மாறியது.
</p><p>
களிப்பும் கொண்டாட்டமும் நிறைந்த இந்த பிரமாண்ட நிகழ்வு, உலகின் மிகவும் தனித்துவமான மற்றும் பிரபலமான திருவிழாக்களில் ஒன்றாகக் கருதப்படுகின்றது.</p>]]></content>
            <updated>2026-08-28T13:07:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலகின் பிரதான 20 கொள்கலன் துறைமுகங்களுக்குள் கொழும்பு துறைமுகம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/colombo-port-ranks-among-top-20-ports-in-world-1787920936"></link>
            <id>https://tamilwin.com/article/colombo-port-ranks-among-top-20-ports-in-world-1787920936</id>
            <summary type="text">உலகின் பிரதான 20 கொள்கலன் துறைமுகங்களுக்குள்&amp;nbsp; கொழும்பு துறைமுகம் நுழைந்துள்ளது. 

சர்வதேச Alphaliner அறிக்கைகளின்படி, 2025 ஆம் ஆண்டின் இறுதியில...</summary>
            <content type="html"><![CDATA[<p>உலகின் பிரதான 20 கொள்கலன் துறைமுகங்களுக்குள்&nbsp; கொழும்பு துறைமுகம் நுழைந்துள்ளது. </p><p>

சர்வதேச Alphaliner அறிக்கைகளின்படி, 2025 ஆம் ஆண்டின் இறுதியில் உலக தரவரிசையில் 26 ஆம் இடத்தில் இருந்த கொழும்பு துறைமுகம், இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் மாத்திரம் கொழும்பு துறைமுகம் ஊடாகக் கையாண்டுள்ள மொத்த கொள்கலன் அளவு 4.4 மில்லியனுக்கும் (4,444,034) அதிகமாகும்.</p><p>

இது 2025 ஆம் ஆண்டின் தொடர்புடைய காலப்பகுதியில் கையாளப்பட்ட 3.9 மில்லியன் (3,972,053) கொள்கலன்களுடன் ஒப்பிடும் போது 4 லட்சத்துக்கும் அதிகமான (471,981) வளர்ச்சியாகும். </p><h2>இந்தியப் பெருங்கடலின் பிரதான கப்பல் போக்குவரத்து</h2><p>

இதற்கமைய, 2025ஆம் ஆண்டில் மொத்தமாகக் கொள்கலன்களை கையாண்டு நிலைநாட்டிய சாதனையை முறியடிக்க முடியுமென இலங்கை துறைமுகங்கள் அதிகாரசபை தெரிவித்துள்ளது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/641dc412-a52e-459f-a20f-77734222840d/26-6a91874039d4a.webp' /></p><p>

கிழக்காசியா, தெற்காசியா, மத்திய கிழக்கு, ஆபிரிக்கா மற்றும் ஐரோப்பாவை இணைக்கும் பிரதான கப்பல் வழிகளின் மையமாகச் செயற்படும் கொழும்பு துறைமுகம், இந்தியப் பெருங்கடலின் பிரதான மீள் கப்பல் போக்குவரத்து மையமாகச் செயற்படுகின்றது. </p><p>

2026 ஜனவரி முதல் ஏப்ரல் வரை உள்ள காலப்பகுதியிலும் 2.915 மில்லியன் கொள்கலன்களை கையாண்டு கொழும்பு துறைமுகம் 13.9வீதம் வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. </p><p>

வளர்ந்துவரும் கொள்கலன் கொள்ளளவிற்கு இணங்க உட்கட்டமைப்பு வசதிகள், நவீன தொழில்நுட்பம் மற்றும் செயற்பாட்டுத் திறனை மேம்படுத்த நடவடிக்கை எடுப்பதாகவும், எதிர்வரும் 1-3 ஆண்டுகளுக்குள் சுமார் 2 பில்லியன் அமெரிக்க டொலர் முதலீடுகளைத் துறைமுகத் துறைக்குப் பெற்றுக்கொடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அதிகாரசபை மேலும் தெரிவித்துள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-28T13:06:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[Weekend வந்தாச்சு, செம ஜாலி மூடில் மாடர்ன் உடை போட்டோஸ் வெளியிட்ட நடிகை ரேஷ்மா..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/serial-actress-reshma-pasupuleti-modern-attire-1787918622"></link>
            <id>https://cineulagam.com/article/serial-actress-reshma-pasupuleti-modern-attire-1787918622</id>
            <summary type="text">நடிகை ரேஷ்மாபுஷ்பா என்ற ஒரே கதாபாத்திரம் நடிகை ரேஷ்மாவின் வாழ்க்கையை அப்படியே மாற்றிவிட்டது. அந்த ஒரு படம் கொடுத்த வரவேற்பு படங்கள் நடித்து வந்தவர், அ...</summary>
            <content type="html"><![CDATA[<h2>நடிகை ரேஷ்மா</h2><p>புஷ்பா என்ற ஒரே கதாபாத்திரம் நடிகை ரேஷ்மாவின் வாழ்க்கையை அப்படியே மாற்றிவிட்டது. அந்த ஒரு படம் கொடுத்த வரவேற்பு படங்கள் நடித்து வந்தவர், அப்படியே சின்னத்திரை பக்கம் வந்தார்.</p><p>இதில் அவருக்கு நிறைய வாய்ப்புகள் கிடைக்க பாக்கியலட்சுமி, கார்த்திகை தீபம் என ஹிட் சீரியல்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தார்.</p><p>சீரியல்களை தாண்டி சொந்த தொழிலிலும் கவனம் செலுத்தி வருகிறார் ரேஷ்மா. தற்போது Weekend வந்த நிலையில் ரேஷ்மா வெளியிட்ட சில மாடர்ன் உடை போட்டோஸ் இதோ,</p><p><br></p>]]></content>
            <updated>2026-08-28T13:00:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[34 வயதான உகாண்டா அரசர் காலமானார்; காரணம் வெளியாகவில்லை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/34-year-old-ugandan-king-oyo-nyimba-passes-away-1787913521"></link>
            <id>https://canadamirror.com/article/34-year-old-ugandan-king-oyo-nyimba-passes-away-1787913521</id>
            <summary type="text">&amp;nbsp; உகாண்டா அரசர் ஓயோ நியம்பா தனது 34-வது வயதில் நேற்று இரவு காலமானதாக அவரது இராஜ்ஜியத்தின் பிரதமர் அறிவித்துள்ளார்.

ஓயோ நியம்பா (Oyo Nyimba), உ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; உகாண்டா அரசர் ஓயோ நியம்பா தனது 34-வது வயதில் நேற்று இரவு காலமானதாக அவரது இராஜ்ஜியத்தின் பிரதமர் அறிவித்துள்ளார்.

ஓயோ நியம்பா (Oyo Nyimba), உகாண்டா அரசராக 1995-ல் அரியணை ஏறியதன் மூலம் உலகின் மிக இளைய மன்னராக மாறினார்.</p><p> 


உகாண்டா ஒரு குடியரசாகும், இது தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு நாட்டுத் தலைவரால் ஆளப்படுகிறது, ஆனால் அது காலனித்துவத்திற்கு முந்தைய காலத்தில் இருந்ததைப் போலவே தங்கள் இராஜ்ஜியங்களின் மீது தொடர்ந்து ஆட்சி புரியும் பல பாரம்பரிய அரசுகளைக் கொண்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f910df0b-08cb-448c-b72d-2ee341eac6fb/26-6a91653301ab3.webp' /></p><h2>இறப்புக்கான காரணத்தை வெளியிடவில்லை</h2><p> </p><p>


அவர்களின் அரசியல் அதிகாரம் பெரிதும் அடையாளமானது, ஆனால் அவர்கள் மகத்தான கலாசார மற்றும் சமூக தாக்கத்தை கொண்டுள்ளனர்.



ஓயோ நியம்பா (Oyo Nyimba) கபாம்பா இகுரு ருகிடி IV, காங்கோ ஜனநாயக குடியரசு எல்லையின் அருகே உகாண்டாவின் மேற்கில் உள்ள ஒரு சிறிய இராஜ்ஜியமான டோரோவின் மன்னனாவார்.</p><p>



"டோரோவின் ஓமுகாமா, மன்னர் ஓயோ நியம்பா கபாம்பா இகுரு ருகிடி IV இன் மறைவை ஆழ்ந்த சோகத்தோடும் கனத்த இதயத்தோடும் அறிவிக்கிறேன்" என்று ராஜ்ஜியத்தின் பிரதமர் கால்வின் ஆம்ஸ்ட்ராங் ரூமிர் அகிகி எக்ஸ் (X) தளத்தில் வியாழக்கிழமை இரவு பதிவிட்டுள்ளார்.</p><p>



மன்னர் வியாழக்கிழமை உள்ளூர் நேரப்படி இரவு 10:00 மணி அளவில் காலமானார் என்று அகிகி கூறினார், இருப்பினும் அவர் இறப்புக்கான காரணத்தை வெளியிடவில்லை.</p><p>



அவரது தந்தை ருபிரபாசாய்ஜா பேட்ரிக் டேவிட் மேத்யூ கபோயோ ஒலிமி III இன் மறைவுக்குப் பிறகு, ருகிடி IV செப்டம்பர் 12, 1995 அன்று வெறும் மூன்று வயதில் முடிசூட்டப்பட்டார்.</p>]]></content>
            <updated>2026-08-28T12:53:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Bavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரச திணைக்கள வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்புவதில் பாரிய மோசடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/fraud-in-fueling-government-department-vehicles-1787920002"></link>
            <id>https://ibctamil.com/article/fraud-in-fueling-government-department-vehicles-1787920002</id>
            <summary type="text">மட்டக்களப்பு அரச திணைக்கள சாரதிகள் சிலர் எரிபொருள் நிலைய உரிமையாளர்கள் சிலருடன் இணைந்து பண மோசடியில் ஈடுபடுவதாக ஈ.பி.டி.பி மட்டு மாவட்ட ஒருங்கிணைப்பாள...</summary>
            <content type="html"><![CDATA[<p>மட்டக்களப்பு அரச திணைக்கள சாரதிகள் சிலர் எரிபொருள் நிலைய உரிமையாளர்கள் சிலருடன் இணைந்து பண மோசடியில் ஈடுபடுவதாக ஈ.பி.டி.பி மட்டு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அந்தனிசில் ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.
</p><p>

மட்டக்களப்பு - பாலமீன்மடுவில் உள்ள அவரது காரியாலயத்தில் இன்று (28.08.2026) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.</p><p>இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், 'மாவட்டத்திலுள்ள அரச திணைக்களங்களின் வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்புவதற்கான பணத்தை அந்தந்த அரச திணைக்களங்கள் மாதாந்தம் வழங்குகிறது.</p><p></p><h2>எரிபொருள் நிரப்பு நிலையங்களின் அனுமதி</h2><p>உதாரணமாக ஒரு திணைக்களத்தின் அரச வாகனத்துக்கு எரிபொருள் நிரப்புவதற்கு 100 லீற்றர் டீசலுக்கான அனுமதியை பெற்றுக் கொண்டு 50 லீற்றர் டீசலை மட்டும் வாகனத்தில் நிரப்பிவிட்டு, மிகுதி 50 லீற்றர் எரிபொருளை, எரிபொருள் உரிமையாளரிடம் 1 லீற்றருக்கு 300 அல்லது 310 ரூபா வீதம் விற்று பணம் பெறுகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/becc90ed-8188-49c7-b3cf-087f9eec96af/26-6a91830f69192.webp' /></p><p>
</p><p>
இவ்வாறு பண மோசடிகளில் ஈடுபடுவோருக்கு உடந்தையாக இருக்கும் எரிபொருள் நிரப்பு நிலையங்களின் அனுமதி பத்திரத்தை இரத்து செய்ய வேண்டும்.</p><p>சுகாதாரதுறைக்கு பெரும் தொகை பணத்தை அரசாங்கம் ஒதுக்கீடு செய்தும் இவ்வாறான சில அரச அதிகாரிகளின் மோசடிகளால் அரசாங்கத்துக்கு பாரிய நட்டம் ஏற்படுகின்றது.
</p><p>
அரச திணைக்களங்களின் வாகனங்களுக்கு தேவையான எரிபொருளை நிரப்பும் போது குறித்த திணைக்களத்தின் அதிகாரி ஒருவரை எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அனுப்பி எரிபொருளை நிரப்பினால் இவ்வாறான மோசடியை தடுக்க முடியும்.</p><p>இந்த மோசடி தொடர்பாக காவல்துறையினரோ, குற்றப்புலனாய்வு பிரிவினரை அழைத்தால் எங்களிடம் இருக்கும் ஆதாரத்தை வழங்க நாங்கள் தயாராக உள்ளோம்.
</p><p>
எனவே இந்த விடயத்தில் கவனம் செலுத்தாவிட்டால் மக்கள் வரிப்பணம் வீணடிக்கப்படும்.</p><p>மேலும் இலங்கை தொடர்ந்தும் கடன் பெறுகின்ற நாடாகத்தான் இருக்கும்' என அவர் குறிப்பிட்டிருந்தார்.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-28T12:47:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[விளாடிமிர் புடினை ரஷ்யாவில் சந்திக்கும் நாடொன்றின் ஜனாதிபதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/belarus-president-meet-putin-on-saturday-in-russia-1787920679"></link>
            <id>https://news.lankasri.com/article/belarus-president-meet-putin-on-saturday-in-russia-1787920679</id>
            <summary type="text">Belarus president meet putin on saturday in russia: பெலாரஸ் ஜனாதிபதி அலெக்ஸாண்டர் லுகாஷென்கோ ரஷ்யாவின் தலைவர் விளாடிமிர் புடினை சந்தித்து பேச்சுவார்த்...</summary>
            <content type="html"><![CDATA[<p>Belarus president meet putin on saturday in russia: பெலாரஸ் ஜனாதிபதி அலெக்ஸாண்டர் லுகாஷென்கோ ரஷ்யாவின் தலைவர் விளாடிமிர் புடினை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
</p><p>
இந்த வார இறுதியில் ரஷ்யா மற்றும் பெலாரஸ் நாடுகளின் ஜனாதிபதிகள் விளாடிமிர் புடினும், அலெக்ஸாண்டர் லுகாஷென்கோவும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர் என்று கிரெம்ளின் தெரிவித்துள்ளது. </p><h2>பாதுகாப்பு விடயங்கள்&nbsp;குறித்து </h2><p>

பெலாரஸ் ஜனாதிபதி அலெக்ஸாண்டர் லுகாஷென்கோ வியாழக்கிழமையன்று ரஷ்யா வந்தடைந்தார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9d378a8b-12c2-40cc-84e9-756eff6cb63f/26-6a918319a7bae.webp' />&nbsp;</p><p></p><p> 

அவரும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினும் (Vladimir Putin) இருதரப்பு ஒத்துழைப்பின் முக்கியப் பகுதிகள், அழுத்தமான பிராந்திய மற்றும் சர்வதேச பிரச்சனைகள், பாதுகாப்பு விடயங்கள் குறித்து விவாதிப்பார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
</p><p>
கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமித்ரி பெஸ்கோவ், தலைவர்களின் பேச்சுவார்த்தைகள் சனிக்கிழமை நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ளன. </p><h2>ரஷ்ய-பெலாரஸ் வர்த்தகம் </h2><p>

மேலும், பிரதமர் மிகைல் மிஷுஸ்டினுடன் ரஷ்ய-பெலாரஸ் வர்த்தகம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு குறித்தும் லுகாஷென்கோ விவாதிக்க உள்ளார்.</p><p>

அலெக்ஸாண்டர் லுகாஷென்கோவின் ஆட்சி பொருளாதார ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் கிரெம்ளினை பெருமளவில் சார்ந்தே உள்ளது.
</p><p>
அத்துடன் ரஷ்யாவின் தந்திரோபாய அணு ஆயுதங்களில் ஒரு பகுதியை பெலாரஸ் தற்போது தனது மண்ணில் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3f4e87e1-433a-47e8-afe3-2d7d190b00e3/26-6a91831a6a7d7.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-28T12:43:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாளத்தில் நிரம்பி வழியும் சவக்கிடங்குகள்; திணறும் அதிகாரிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/morgues-overflowing-in-nepal-officials-struggling-1787917409"></link>
            <id>https://jvpnews.com/article/morgues-overflowing-in-nepal-officials-struggling-1787917409</id>
            <summary type="text">&amp;nbsp; இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள நேபாளத்தில் தற்காலிக உடல் சேமிப்பு மையங்களை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.



வெள்ளத்தால் அட...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள நேபாளத்தில் தற்காலிக உடல் சேமிப்பு மையங்களை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.</p><p>



வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்ட உடல்கள் அதிகளவில் மீட்கப்படுவதால் சவக்கிடங்கில் இடப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/05dc0ae5-41d1-4d1a-b24e-4c027c19b286/26-6a917462d5e80.webp' /></p><p></p><h2>&nbsp;உயிரிழந்தோரின் எண்ணிக்கை 500 ஐ நெருங்கியுள்ளது</h2><p>



பலரின் உடல்கள் மீட்கப்பட்டு வரும் நிலையில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 500 ஐ நெருங்கியுள்ளதுடன் காணாமல்போனோரை தேடி மீட்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.</p><p></p><p>



அத்துடன், மாயமான 1,500 பேரை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக நேபாள தேசிய பேரிடர் அபாய குறைப்பு மற்றும் மேலாண்மை ஆணையம் தெரிவித்தது.
</p><p>


நேபாளத்தைப் புரட்டிப்போட்ட பெருவெள்ளத்தால் பல கிராமங்கள், கட்டடங்கள் இடிந்து விழுந்துள்ளன.&nbsp; &nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-28T12:43:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வனப்பகுதிக்கு மனைவியை அழைத்துசென்று கணவன் அரங்கேற்றிய சம்பவம்; பொலிஸார் ஷாக்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/wife-taken-to-forest-area-and-murdered-husband-1787921138"></link>
            <id>https://jvpnews.com/article/wife-taken-to-forest-area-and-murdered-husband-1787921138</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;அனுராதபுரத்தின் கொரகெஹேவ பகுதியில் உள்ள ஒரு வனப்பகுதியில், கணவன், தனது மனைவியைக் கூர்மையான ஆயுதத்தால் கொலை செய்துவிட்டு, அதே கத்தியால் தன...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;அனுராதபுரத்தின் கொரகெஹேவ பகுதியில் உள்ள ஒரு வனப்பகுதியில், கணவன், தனது மனைவியைக் கூர்மையான ஆயுதத்தால் கொலை செய்துவிட்டு, அதே கத்தியால் தன்னையும் குத்தி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் இடபெற்றுள்ளது.
</p><p>
இன்று காலை (28), சந்தேக நபர் தனது மனைவியுடன் இருசக்கர வாகனத்தில் அந்த வனப்பகுதிக்குச் சென்றதாகவும், அங்கு அவர் கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1d0f2ced-3d64-4cb2-b000-c9c1cd9098d4/26-6a9182f3bb1f9.webp' /></p><h2>&nbsp;பொலிஸார்&nbsp; சந்தேகம்</h2><p>

கூர்மையான ஆயுதத் தாக்குதலால் மனைவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த கணவர் அனுராதபுர போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p><p></p><p>

உயிரிழந்தவர், உலுக்குளம பகுதியைச் சேர்ந்த, மூன்று பிள்ளைகளின் தாயான 59 வயதுப் பெண் ஆவார்.
</p><p>
தனிப்பட்ட தகராறு காரணமாக இந்தக் கொலை நடந்திருக்கலாம் என சந்தேகம் வெளியிட்டுள்ள அனுராதபுர பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-28T12:42:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சாலை விபத்தில் மூன்று இந்திய மாணவர்கள் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/3-indian-students-dies-in-us-car-accident-1787920400"></link>
            <id>https://news.lankasri.com/article/3-indian-students-dies-in-us-car-accident-1787920400</id>
            <summary type="text">Three Indian students killed in Florida after their car hit roadside tree: அமெரிக்காவில் சாலை விபத்தொன்றில் மூன்று இந்திய மாணவர்கள் பலியானார்கள்.

...</summary>
            <content type="html"><![CDATA[<p>Three Indian students killed in Florida after their car hit roadside tree: அமெரிக்காவில் சாலை விபத்தொன்றில் மூன்று இந்திய மாணவர்கள் பலியானார்கள்.</p><p>


செவ்வாய்க்கிழமை காலை, அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் கார் ஒன்றில் பயணித்துக்கொண்டிருந்திருக்கிறார்கள் மூன்று இந்திய இளைஞர்கள்.</p><h3>

சாலை விபத்தில் மூன்று இந்திய மாணவர்கள் பலி
</h3><p>
தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த அந்த மூன்று பேரும், சில மாதங்களுக்கு முன்புதான் உயர் கல்வி கற்பதற்காக அமெரிக்கா சென்றுள்ளார்கள்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c7c08c05-a720-4423-b1af-d9910ebbb113/26-6a9180123217d.webp' /></p><p>

படித்துக்கொண்டே மூவரும் பகுதி நேர வேலை பார்த்துக்கொண்டிருந்த நிலையில், செவ்வாய்க்கிழமை வேலைக்குச் சென்றுகொண்டிருந்திருக்கிறார்கள் மூவரும்.
</p><p>
அப்போது, அவர்கள் பயணித்த கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து, சாலையிலிருந்து விலகி, மரம் ஒன்றில் மோதியுள்ளது.&nbsp;</p><p></p><p>
மோதிய வேகத்தில் கார் தீப்பிடிக்க, காரில் முன் இருக்கையில் அமர்ந்திருந்த இருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்கள்.&nbsp;</p><p></p><p>
பின் இருக்கையில் அமர்ந்திருந்த ராகுல் என்னும் மாணவர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார். ஆனால், சிகிச்சை பலனின்றி அவரும் உயிரிழந்துள்ளார்.
</p><p>
உயிரிழந்த மற்ற மாணவர்களின் பெயர்கள் வெளியாகவில்லை.
</p><p>
எதனால் இந்த விபத்து நிகழ்ந்தது என்பது தெரியாத நிலையில், அது குறித்து பொலிசார் விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-28T12:38:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[ட்ரம்பிற்கு மனச்சிதைவு நோய் - 24 மணி நேர சிகிச்சை தேவை...! ஈரான் எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/iran-official-mocks-trump-over-hormuz-claim-1787919108"></link>
            <id>https://ibctamil.com/article/iran-official-mocks-trump-over-hormuz-claim-1787919108</id>
            <summary type="text">அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு மனச்சிதைவு நோய் இருப்பதாக ஈரானிய வெளியுறவுத்துறை துணை அமைச்சர் காசெம் கரீபாபாடி (Kazem Gharibabadi) கடுமையாக வி...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு மனச்சிதைவு நோய் இருப்பதாக ஈரானிய வெளியுறவுத்துறை துணை அமைச்சர் காசெம் கரீபாபாடி (Kazem Gharibabadi) கடுமையாக விமர்சித்துள்ளார்.
</p><p>ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) அமெரிக்காவின் பகுதி எனக் கூறி ட்ரம்ப் பதிவிட்டமையை அடுத்து அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.</p><p>
சமீபத்தில் ட்ரம்பின் ட்ரூத் சோஷியல் (Truth Social) சமூக வலைத்தளப் பக்கத்தில், ஹோர்முஸ் நீரிணையை அமெரிக்க எல்லைப் பகுதியாகக் காட்டும் வரைபடப் பதிவொன்று வெளியிடப்பட்டது.</p><p></p><h2>கடல்சார் எண்ணெய்&nbsp;</h2><p> </p><p>அதில் உலகின் மிக முக்கியமான கடல்சார் எண்ணெய் விநியோகப் பாதையான ஹோர்முஸ் நீரிணையை அமெரிக்காவின் புதிய பகுதி (NEW US Territory) எனக் குறிப்பிட்டு ட்ரம்ப் பதிவிட்டிருந்தார்.
</p><p>
இதற்கு பதிலளித்துள்ளஅமைச்சர், ட்ரம்பிற்கு மன மாயத்தோற்றங்களும் பிரமைகளும் ஏற்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f4cca9e5-1073-44ab-8978-460ce3dd54ce/26-6a9180a525080.webp' /></p><p>மனச்சிதைவு நோய் என்பது சிந்தனைக் கோளாறு மற்றும் யதார்த்தத்தை உணர முடியாத மனநலப் பாதிப்பு என்றும் இத்தகைய நோயாளிகள் 24 மணி நேரமும் மருத்துவர்களின் கண்காணிப்பில் சிகிச்சை பெற வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>ஹோர்முஸ் நீரிணையைத் தனது முழுமையான கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளதாக அமெரிக்கா கூறிவரும் வேளையில், ஈரானின் உயர்மட்ட அதிகாரிகள் அமெரிக்காவின் இந்தக் கோரிக்கையைத் தொடர்ச்சியாக நிராகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p>]]></content>
            <updated>2026-08-28T12:36:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Diasa</name>
            </author>
            <title type="text"><![CDATA[ட்ரம்பின் சுங்க வரி தாக்குதலுக்கு பதிலடி: ஒன்ராறியோ அரசு எடுத்த அதிரடி தீர்மானம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ontario-resolution-to-trump-s-tariff-attack-1787920164"></link>
            <id>https://tamilwin.com/article/ontario-resolution-to-trump-s-tariff-attack-1787920164</id>
            <summary type="text">அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அதிகரித்து வரும் சுங்க வரி நடவடிக்கைகளுக்கு பதிலளிக்கும் வகையில், ஒன்ராறியோ மாகாணம் மற்றும் அதன் வணிகங்கள், தொழில...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அதிகரித்து வரும் சுங்க வரி நடவடிக்கைகளுக்கு பதிலளிக்கும் வகையில், ஒன்ராறியோ மாகாணம் மற்றும் அதன் வணிகங்கள், தொழிலாளர்கள் மீதான அவரது நியாயமற்ற தாக்குதல்களுக்கு முதலமைச்சர் டக் ஃபோர்ட் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
</p><p>
இதற்கமைய, பாதிக்கப்பட்டுள்ள வணிகங்கள் தங்களது ஊழியர்களுக்கான சம்பளம், குத்தகை மற்றும் பயன்பாட்டுக் கட்டணங்களைச் செலுத்துவதற்கு உதவும் வகையில், ஒரு பில்லியன் டொலர் பெறுமதியான “ஒன்ராறியோ பாதுகாப்பு நிதித் திட்டத்தின்” தகுதியை ஒன்ராறியோ அரசு விரிவுபடுத்தியுள்ளது.
</p><h2>
 30 பில்லியன் டொலர்</h2><p>
வேலைவாய்ப்புகளைப் பாதுகாப்பது, வணிகங்களுக்கு ஆதரவளிப்பது மற்றும் மாகாணத்தின் நீண்டகால பொருளாதார மீள்திறனை வலுப்படுத்துவது ஆகியவற்றை நோக்கமாகக் கொண்ட 30 பில்லியன் டொலர் பெறுமதியான பரந்த சுங்க வரி நிவாரணத் திட்டத்தின் ஒரு பகுதியாகவே இந்த நிதித் திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/933a1533-2874-45c6-94d7-275f874f332d/26-6a917fa1c0f63.webp' /></p><p>
</p><p>
மேலும், உள்ளூர் தொழிலாளர்கள் மற்றும் விநியோகச் சங்கிலிகளுக்கு ஆதரவளிக்கும் வகையில், ஆண்டுதோறும் சராசரியாக 30 பில்லியன் டொலர் பெறுமதியான பொதுத்துறை கொள்முதலைப் பயன்படுத்தி, ஒன்ராறியோ மற்றும் கனடாவில் தயாரிக்கப்பட்ட பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு முன்னுரிமை வழங்குமாறு முதலமைச்சர் டக் ஃபோர்ட் அரச நிறுவனங்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
</p><p>
“எங்கள் அரசாங்கம் ஒன்ராறியோ தொழிலாளர்களைப் பாதுகாக்கவும், அவர்களின் சம்பளத்தை உறுதி செய்யவும், வரி செலுத்துவோரின் பணம் எமது மாகாணத்தை இயக்கும் வணிகங்கள் மற்றும் சமூகங்களுக்கு ஆதரவாகப் பயன்படுத்தப்படுவதை உறுதி செய்யவும் சாத்தியமான அனைத்து வழிகளையும் தொடர்ந்து பயன்படுத்தும்” என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8e2f6e2c-d1c4-460e-8d65-685907e214ce/26-6a917fa2a4dfd.webp' /></p><p>

ஸ்கார்பரோ மற்றும் ஒன்ராறியோ முழுவதும் உள்ள குடும்பங்கள் மற்றும் வணிகங்களைப் பொறுத்தவரை, இந்த நடவடிக்கைகள் உள்ளூர் வேலைவாய்ப்புகளைப் பாதுகாக்கவும், அதிகரித்து வரும் செலவுகளை எதிர்கொள்ளும் வணிகங்களுக்கு ஆதரவளிக்கவும், பொதுமக்களின் பணம் அதிகளவில் மாகாணப் பொருளாதாரத்திற்குள்ளேயே புழங்குவதை உறுதி செய்யவும் உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
“Buy Ontario” சட்டத்தின் அடிப்படையில், ஒன்ராறியோவில் தயாரிக்கப்பட்ட பொருட்கள் மற்றும் உள்ளூர் உற்பத்திப் பொருட்களை கொள்வனவு செய்வதுடன், முடிந்தவரை கனேடிய வணிகங்களுக்கு ஆதரவளிக்குமாறும் பொதுமக்களை அந்நாட்டு அரசாங்கம் ஊக்குவித்துள்ளது.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-28T12:32:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் ஆபத்தாக மாறியுள்ள டெங்கு தொற்று]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/dengue-infection-serious-threat-in-sri-lanka-1787920477"></link>
            <id>https://jvpnews.com/article/dengue-infection-serious-threat-in-sri-lanka-1787920477</id>
            <summary type="text">&amp;nbsp; நடப்பாண்டில் இதுவரை 94,805 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், டெங்கு காரணமாக 72 உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய டெங்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; நடப்பாண்டில் இதுவரை 94,805 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், டெங்கு காரணமாக 72 உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
</p><p>


மொத்த நோயாளர்களில் 52.92 வீதத்துக்கும் அதிகமானோர் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளனர். மாவட்ட ரீதியில் கம்பஹாவில் அதிகபட்சமாக 20,207 நோயாளர்களும், கொழும்பில் 18,794 பேரும் பதிவாகியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2eee746e-9220-41f6-8abe-0cc23e3910cd/26-6a91805f5c5a7.webp' /></p><p>



மாதாந்த அடிப்படையில் ஜூலை மாதத்தில் அதிகபட்சமாக 29,962 நோயாளர்கள் பதிவாகியுள்ளது.



நாடு முழுவதும் உள்ள 76 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் தொடர்ந்தும் அதிஅபாய வலயங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.</p>]]></content>
            <updated>2026-08-28T12:32:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[செப்டெம்பர் 8 முதல் 11 வரை கூடவுள்ள நாடாளுமன்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/parliament-to-convene-from-september-8-to-11-1787918370"></link>
            <id>https://tamilwin.com/article/parliament-to-convene-from-september-8-to-11-1787918370</id>
            <summary type="text">நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழுவின் முடிவின்படி, இலங்கை நாடாளுமன்றம் செப்டெம்பர் 8 முதல் 11 வரை கூடும் என&amp;nbsp; சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழுவின் முடிவின்படி, இலங்கை நாடாளுமன்றம் செப்டெம்பர் 8 முதல் 11 வரை கூடும் என&nbsp; சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் சமீபத்தில் நடைபெற்ற குழுவின் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
</p><p>
செப்டெம்பர் 8, செவ்வாய்க்கிழமைக்கான நிகழ்ச்சி நிரல்:</p><p>
நிலையான ஆணை 22(1) முதல் (6) வரை குறிப்பிடப்பட்டுள்ள நாடாளுமன்ற அலுவல்களுக்காக காலை 9.30 மணி முதல் 10.00 மணி வரையிலான காலம் ஒதுக்கப்பட்டுள்ளது. </p><p>வாய்மொழி பதில்களுக்கான கேள்விகளுக்காக காலை 10.00 மணி முதல் 11.00 மணி வரையிலான காலமும், நிலையான ஆணை 27(2)-இன் கீழ் கேள்விகளுக்காக காலை 11.00 மணி முதல் 11.30 மணி வரையிலான காலமும் ஒதுக்கப்பட்டுள்ளது.
</p><h2>ஒத்திவைப்பு நேரத்தில்</h2><p>
அதனைத் தொடர்ந்து, காலை 11.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை, மோட்டார் வாகனப் போக்குவரத்துச் சட்டத்தின் (அத்தியாயம் 203) கீழ் வெளியிடப்பட்ட சிறப்பு அரச வர்த்தமானி எண். 2489/22 மற்றும் 2493/19 இல் பிரசுரிக்கப்பட்ட இரண்டு உத்தரவுகள் மீது, ஒப்புதலுக்காக சபையில் விவாதம் நடைபெற உள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bc3718b4-3713-4ad2-a51c-dacaca12335b/26-6a917e8d2abed.webp' /></p><p>
இதனைத் தொடர்ந்து, ஒத்திவைப்பு நேரத்தில் எதிர்க்கட்சியால் முன்மொழியப்படவுள்ள தீர்மானத்தின் மீதான விவாதத்திற்காக மாலை 5.00 மணி முதல் 5.30 மணி வரை கால அவகாசம் ஒதுக்கப்படும்.
</p><p>
செப்டெம்பர் 9, புதன்கிழமைக்கான நிகழ்ச்சி நிரல்:</p><p>பிரதமரிடம் கேள்விகள் கேட்பதற்காக காலை 10.00 மணி முதல் 10.30 மணி வரையிலான காலமும், வாய்மொழி பதில்களுக்கான கேள்விகளுக்காக காலை 10.30 மணி முதல் 11.00 மணி வரையிலான காலமும் ஒதுக்கப்பட்டுள்ளது. </p><p>அதன்பிறகு, நிலையான ஆணை 27(2)-இன் கீழ் கேள்விகளுக்காக காலை 11.00 மணி முதல் 11.30 மணி வரை நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
</p><p>
காலை 11.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை, பாதுகாப்புப் படைத் தலைமைத் தளபதி (பதவி நீக்கம்) மசோதா மீதான இரண்டாம் வாசிப்பு விவாதம் சபையில் நடைபெற உள்ளது.

அதனைத் தொடர்ந்து, ஒத்திவைப்பு நேரத்தில் கேள்விகள் கேட்பதற்காக மாலை 5.00 மணி முதல் 5.30 மணி வரையிலான நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.</p><h2>செப்டெம்பர் 10, நிகழ்ச்சி நிரல்</h2><p>வாய்மொழி பதில்களுக்கான கேள்விகளுக்காக காலை 10.00 மணி முதல் 11.00 மணி வரையிலான காலமும், நிலையான ஆணை 27(2)-இன் கீழ் கேள்விகளுக்காக காலை 11.00 மணி முதல் 11.30 மணி வரையிலான காலமும் ஒதுக்கப்பட்டுள்ளது.
</p><p>
அதனைத் தொடர்ந்து, காலை 11.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை, மகளிர் அதிகாரமளித்தல் சட்டத்தின் கீழான ஒரு தீர்மானத்தின் மீது, ஒப்புதலுக்காக அவையில் விவாதம் நடைபெற உள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2cc48cb8-1117-4af6-b7e9-a5ac2aa1d58c/26-6a917e8dd8eb4.webp' /></p><p>செப்டெம்பர் 11, நிகழ்ச்சி நிரல்:
நிலையான ஆணை 22(1) முதல் (6) வரை குறிப்பிடப்பட்டுள்ள நாடாளுமன்ற அலுவல்களுக்காக காலை 9.30 மணி முதல் 10.00 மணி வரையிலான காலம் ஒதுக்கப்பட்டுள்ளது.</p><p>வாய்மொழி பதில்களுக்கான கேள்விகளுக்காக காலை 10.00 மணி முதல் 11.00 மணி வரையிலான காலமும், நிலையான ஆணை 27(2)-இன் கீழ் கேள்விகளுக்காக காலை 11.00 மணி முதல் 11.30 மணி வரையிலான காலமும் ஒதுக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-28T12:27:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாளப் பெருவெள்ளம்... மன்னர் சார்லஸ் வெளியிட்டுள்ள செய்தி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/king-charles-heartbroken-by-nepal-floods-1787919749"></link>
            <id>https://news.lankasri.com/article/king-charles-heartbroken-by-nepal-floods-1787919749</id>
            <summary type="text">King Charles heartbroken by deadly Nepal flash floods: நேபாளப் பெருவெள்ளம் தன் இதயத்தை நொறுக்கிவிட்டதாக மன்னர் சார்லஸ் தெரிவித்துள்ளார்.


நேபாள் -...</summary>
            <content type="html"><![CDATA[<p>King Charles heartbroken by deadly Nepal flash floods: நேபாளப் பெருவெள்ளம் தன் இதயத்தை நொறுக்கிவிட்டதாக மன்னர் சார்லஸ் தெரிவித்துள்ளார்.</p><p>


நேபாள் - திபெத் எல்லையில் ஏற்பட்டுள்ள பெருவெள்ளத்தின்போது, ஒரு 13 வயது சிறுமி மற்றும் ஒரு 14 வயதுப் பையன் உட்பட 33 பிரித்தானியர்கள் மாயமாகியுள்ளார்கள்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/29a2b59d-e3b5-42f1-940b-aff52d1f1c66/26-6a917d872dba7.webp' /></p><h3>
மன்னர் சார்லஸ் வெளியிட்டுள்ள செய்தி</h3><p>

இந்நிலையில், பிரித்தானிய மன்னர் சார்லஸ், நேபாள பெருவெள்ளம் தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.</p><p>

நேபாள பெருவெள்ளம் குறித்த செய்தி தங்கள் இதயத்தை நொறுக்கிவிட்டதாக மன்னர் சார்லசும் ராணி கமீலாவும் தெரிவித்துள்ள நிலையில், பெருவெள்ளத்தில் உயிரிழந்தவர்களுக்கு தங்கள் இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதாக மன்னர் சார்லஸ் தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/14bc57c6-0ee9-4a57-9d39-510e00eadbdb/26-6a917d87d52ac.webp' /></p><p>
மேலும், நேபாளத்துடன் பிரித்தானியர்கள் பலர் வலிமையான, ஆழ்ந்த மற்றும் தனிப்பட்ட முறையிலான உறவு வைத்துள்ளார்கள் என்று கூறியுள்ள மன்னர் சார்லஸ், தங்கள் உறவினர்கள், நண்பர்களுக்கு என்ன நேர்ந்தது என்று தெரியாமல், அவர்களைக் குறித்த தகவலுக்காக கவலையுடன் காத்திருக்கும் பல குடும்பங்களுக்கு தங்கள் ஆறுதலைத் தெரிவித்துக்கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p></p><p>
இந்நிலையில், இளவரசர் வில்லியமும் இளவரசி கேட்டும், நேபாள பெருவெள்ளம் குறித்து அறிந்து அதிர்ச்சியடைந்ததாகவும், இந்த பயங்கர இயற்கைச் சீற்றத்தால் பாதிக்கப்பட்டுள்ள அனைவரையும் நினைவுகூர்வதாகவும் தெரிவித்துள்ளனர்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-28T12:24:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிளிநொச்சியில் இரவோடு இரவாக இரகசியமாக எழுப்பப்படவிருந்த கோபுரம்! தடுத்து நிறுத்திய மக்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/secret-tower-in-kilinochchi-night-after-night-1787919211"></link>
            <id>https://ibctamil.com/article/secret-tower-in-kilinochchi-night-after-night-1787919211</id>
            <summary type="text">கிளிநொச்சி - பூநகரி கிராஞ்சி எல்லைப் பகுதியான எருமை தீவு பகுதியில் இரகசியமாக கோபுரம் ஒன்றை அமைப்பதற்கான முயற்சி தற்காலிகமாக தடுத்த நிறுத்தப்பட்ட்டுள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிளிநொச்சி - பூநகரி கிராஞ்சி எல்லைப் பகுதியான எருமை தீவு பகுதியில் இரகசியமாக கோபுரம் ஒன்றை அமைப்பதற்கான முயற்சி தற்காலிகமாக தடுத்த நிறுத்தப்பட்ட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>இரவு வேளை வாகனங்களில் வந்தவர்களால் இரகசியமாக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்ட நிலையில், அப்பகுதி மக்கள் ஒன்று கூடியதால் நடவடிக்கை நிறுத்தப்பட்டுள்ளது.
</p><p>
குறித்த விடயம் தொடர்பில் அப்பகுதியைச் சேர்ந்த பொது அமைப்பின் பிரதிநிதி ஒருவர் பின்வருமாறு கருத்து தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>பெரும்பான்மை இன நபர்கள்</h2><p>கிராஞ்சி பொன்னாவெளியை ஊடார்த்து சுமார் 238 ஏக்கர் பரப்பளவில் காற்றாலை
திட்டம் ஒன்று அமைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3b2b6bdf-a1c3-4358-8d03-2f5d1168ed45/26-6a917dc98e515.webp' /></p><p>அப்பகுதி மக்களின்
பாரிய எதிர்ப்பை மீறி திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக
அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளின் ஒத்துழைப்புடனும் 34 காற்றாலை அமைக்கும்
திட்டத்திற்கான ஏற்பாடுகள் மும்மரமாக இடம்பெற்று வருகிறது.</p><p>
இதன் பின்னணியில் இரவு வேளை வாகனத்தில் வந்த பெரும்பான்மை இன மொழியை பேசும்
நபர்கள் எருமை தீவுப் பகுதியில் நிற்பதாக தகவல் கிடைத்த நிலையில்&nbsp;காவல்துறையினர் உடனடியாக தகவல் வழங்கிய போதும் அவர்கள் இடத்துக்கு வரவில்லை.
</p><p>
இந்நிலையில் ஊர் மக்கள் பகுதிக்கு சென்று பார்வையிட்டபோது வாகனம்
ஒன்றில் ஐந்துக்கும் மேற்பட்ட நபர்கள் தங்குவதற்காக நிழல் கொட்டகை ஒன்றை இரவு
வேளை அமைத்துக் கொண்டிருந்தார்கள்.
</p><p>
அவர்களிடம் விடயத்தை வினவியபோது காற்றாலை திட்டத்தை கொழும்பிலிருந்து
பார்ப்பதற்கும் தகவல் வழங்குவதற்கும் கண்காணிப்பு கோபுரம் ஒன்றை அமைக்க
வந்ததாக தெரிவித்தனர்.
</p><p>
நாங்கள் காற்றாலை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறோம் என தெரிவித்து
அவர்களின் பொருட்களை மீட்கச் சென்ற போது தாங்கள் வெளியேறுகிறோம் எனத்
தெரிவித்து அவ்விடத்தில் இருந்து சென்றார்சென்றார்கள்.</p><p></p><h2>மக்களின் எதிர்ப்பு</h2><p>குறித்த விடயம் தொடர்பில் கிளிநொச்சி அரசாங்க அதிபரை மறுநாள் தொடர்பு கொண்டு
கேட்டபோது அவர் தனக்கு ஏதும் தெரியாது என பதிலளித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/37ccfafe-dab8-41e1-8a18-3a98028bf699/26-6a917dca48a60.webp' /></p><p>&nbsp;காற்றாலை திட்டம் கிராஞ்சி பொன்னாவெளியைச் சேர்ந்த சுமார் 2ஆயிரம்
குடும்பங்களை சேர்ந்த சுமார் பத்தாயிரம் பேர் திட்டத்தினால் நேரடியாக
பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.
</p><p>
குறித்த பகுதிகள் அதிகளவிலான தென்னை மரங்கள் காணப்படுகின்ற நிலையில் 12
காற்றாலை நிறுவும் இடங்களில் சுமார் 7 ஆயிரம் தென்னங்கன்றுகள் அழிக்கப்பட
உள்ளது.
</p><p>
ஒரு காற்றாலையின் விட்டம் 165 மீட்டர் நீளம் கொண்ட நிலையில் ஒரு காற்றாலை
அமைப்பதற்கு சுமார் 7 ஏக்கர் காணி கையகப்படுத்தப்படவுள்ளது.
</p><p>
ஒரு காற்றாலை 120 அடி நீளம் கொண்டதாக காணப்படுகின்ற நிலையில் நிலத்துக்கு கீழ்
சுமார் 60 அடி நீளத்தில் பொருத்தப்பட உள்ள நிலையில் ஒரு காற்றாலைக்கு சுமார்
3000 தொடக்கம் 4000 ஆயிரம் பொதியில் அடைக்கப்பட்ட சீமெந்து செலவாகும் என
கணிப்பிடப்பட்டுள்ளது.
</p><p>
இந்தத் திட்டம் மக்களின் எதிர்ப்பை மீறி நடைமுறைப்படுத்துவதற்கு முயற்சிகள்
மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் இந்தப் பிரதேசத்தின் வயல் நிலங்கள்
,வழிபாட்டு இடங்கள் , மற்றும் நல்ல தண்ணிக் கிணறு என்பன பாதிக்கப்படும் சூழல்
உருவாகியுள்ளது.
</p><p>
மக்கள் வாழுகின்ற வளமான பகுதியை அழித்து அபிவிருத்தி என்ற போர்வையில் கனிம
மண்ணையும் காற்றாலையையும் நிறுவும் திட்டத்தை கைவிட்டு பிரதேசத்தில்
மாற்றுக்காணியை தெரிவு செய்ய வேண்டும்.
</p><p>
ஆகவே மக்களுக்கு ஆபத்தை விளைவிக்க கடிய திட்டங்களை அடுத்த நிறுத்த வேண்டிய
பொறுப்பு அரசியல்வாதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் உள்ளது என்பதை சுட்டி காட்ட
விரும்புகிறேன் என அவர் மேலும் தெரிவித்தார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-28T12:23:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அனுராதபுரத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொன்ற கணவன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/husband-took-his-wife-forest-area-and-killed-her-1787917450"></link>
            <id>https://ibctamil.com/article/husband-took-his-wife-forest-area-and-killed-her-1787917450</id>
            <summary type="text">அனுராதபுரம், கொரக்கஹவெவ வனப்பகுதியில் தனது மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிக் கொலை செய்த கணவன், பின்னர் அதே ஆயுதத்தால் தன்னையும் காயப்படுத்திக் கொண்டுள...</summary>
            <content type="html"><![CDATA[<p>அனுராதபுரம், கொரக்கஹவெவ வனப்பகுதியில் தனது மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிக் கொலை செய்த கணவன், பின்னர் அதே ஆயுதத்தால் தன்னையும் காயப்படுத்திக் கொண்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்</p><p>குறித்த சம்பவம் இன்று (28.08.2026) காலை இடம்பெற்றுள்ளதாக&nbsp;கூறப்படுகிறது.</p><p>அனுராதபுரம் - உலுக்குளம் பகுதியைச் சேர்ந்த 59 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.</p><p></p><h2>தனிப்பட்ட குடும்பத் தகராறு&nbsp;</h2><p>குறித்த நபர் இன்று காலை தனது மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் வனப்பகுதிக்குச் சென்றுள்ளதாகவும், அங்கு வைத்து மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளதாகவும் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1a2a3e86-1d3b-4a78-86e9-6ca5f94c0140/26-6a917a0eac554.webp' /></p><p>இந்த தாக்குதலில் மனைவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், படுகாயமடைந்த கணவர் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p><p>தனிப்பட்ட குடும்பத் தகராறு காரணமாக இந்தக் கொலை இடம்பெற்றிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
</p><p>
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அனுராதபுரம் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-28T12:21:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[21 வயது அஜித்தின் ரீல் மகள் அனிகா சுரேந்திரன்!! ரீசெண்ட் சேரி கிளிக்ஸ்.]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/21-actress-anikha-onam-special-photos-with-family-1787919178"></link>
            <id>https://viduppu.com/article/21-actress-anikha-onam-special-photos-with-family-1787919178</id>
            <summary type="text">அனிகா சுரேந்திரன்மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அடுத்தடுத்த படங்களில் நடித்து பலரது கவனத்தையும் ஈர்த்தவர் தான் நடிகை அனிகா சுரேந்தி...</summary>
            <content type="html"><![CDATA[<h2>அனிகா சுரேந்திரன்</h2><p>மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அடுத்தடுத்த படங்களில் நடித்து பலரது கவனத்தையும் ஈர்த்தவர் தான் நடிகை அனிகா சுரேந்திரன்.
</p><p>
என்னை எறிந்தால், விஸ்வாசம் படங்களில் அஜித்தின் மகளாக நடித்த அனிகா, தெலுங்கில் தி கோஸ்ட் என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4f30417a-9d51-4eff-9485-b549ee9c08f7/26-6a917b524ebc5.webp' /></p><p>
</p><p>
அதன்பின் புட்ட மொம்மா, ஓ மை டார்லிங், PT சார், நிலவுக்கு என் மேல் என்னடி கோபம், இந்ரா போன்ற படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார்.
</p><p>
14 வயதில் போட்டோஷூட் பக்கம் சென்ற நடிகை அனிகா, கிளாமர் பக்கம் சென்று போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். தற்போது ஓணம் ஸ்பெஷலாக சேலையணிந்து தன் குடும்பத்துடன் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-08-28T12:15:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழ் சினிமாவின் டாப் இயக்குனர்கள் ஏ.ஆர்.முருகதாஸ்-ஷங்கர் கூட்டணி அமைக்கிறார்களா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/ar-murugadoss-shankar-2-top-directors-teaming-up-1787917025"></link>
            <id>https://cineulagam.com/article/ar-murugadoss-shankar-2-top-directors-teaming-up-1787917025</id>
            <summary type="text">இயக்குனர்கள்ஏ.ஆர்.முருகதாஸ், தமிழ் சினிமாவில் பல ஹிட் படங்களை இயக்கியவர். கடைசியாக முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க மதராஸி என்ற திரைப்படம...</summary>
            <content type="html"><![CDATA[<h2>இயக்குனர்கள்</h2><p>ஏ.ஆர்.முருகதாஸ், தமிழ் சினிமாவில் பல ஹிட் படங்களை இயக்கியவர். </p><p>கடைசியாக முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க மதராஸி என்ற திரைப்படம் வெளியாகி இருந்தது, ஆனால் படம் எதிர்ப்பார்த்த அளவு சரியான வரவேற்பு பெறவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d03d6c6b-f64e-4d88-9546-9a1e0604367f/26-6a91757240d1f.webp' /></p><p> </p><p>இப்படத்திற்கு முன் ஹிந்தியில் சல்மான் கானை வைத்து சிகந்தர் என்ற படம் இயக்கினார், ஆனால் அதுவும் சரியாக ஓடவில்லை.
தமிழ் சினிமா கொண்டாடும் இயக்குனர்களில் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரும் முக்கிய பங்கு வகிக்கிறார். </p><p>கடைசியாக ஷங்கர் இயக்கத்தில் கேம் சேஞ்சர் என்ற படம் வெளியானது. தெலுங்கில் ராம் சரண் நடிக்க வெளியாக சுத்தமாக படம் வரவேற்பு பெறவில்லை, பிளாப் ஆனது.
அடுத்து ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 3 வரும் என எதிர்ப்பார்க்கப்பட்டது, ஆனால் படம் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7600fe98-9f54-4e36-85bc-cd70921da237/26-6a91757175721.webp' /></p><h2>கூட்டணி
</h2><p>தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் மற்றும் ஷங்கர் கூட்டணியில் ஒரு படம் வெளியாக இருப்பதாக தகவல்கள் வருகின்றன. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b8193087-97d5-4c28-a772-5260aae2f7b0/26-6a91757065e3c.webp' /></p><p>அதாவது ஷங்கரின் கதைக் குழுவுடன் ஏ.ஆர்.முருகதாஸ் இணைந்து புதிய கமர்ஷியல் படத்திற்கான கதை உருவாக்கத்தில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏ.ஆர்.முருகதாஸ் கதையை ஷங்கர் இயக்க உள்ளாராம்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-28T12:10:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாளத்தில் நிரம்பி வழியும் சவக்கிடங்குகள் - செய்வதறியாது திணறும் அதிகாரிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/death-toll-in-nepal-floods-rises-1787899767"></link>
            <id>https://tamilwin.com/article/death-toll-in-nepal-floods-rises-1787899767</id>
            <summary type="text">புதிய இணைப்புநேபாள எல்லைப் பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 547 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன், இந்த இயற்கைப் ப...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>நேபாள எல்லைப் பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 547 ஆக அதிகரித்துள்ளது.</p><p>

அத்துடன், இந்த இயற்கைப் பேரிடரால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,473 ஆக உயர்ந்துள்ளது.
</p><p>
இந்தப் பேரிடர் மீட்புப் பணிகளில் 4,473 பொலிஸ் அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.</p><p>

இதற்கமைய, 517 வெளிநாட்டவர்கள் உட்பட 977 பேர் இதுவரை காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

மீட்புப் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், அதன் முன்னேற்றம் தொடர்பான தனித்தனி தகவல்களை இரு அமைப்புகளும் அவ்வப்போது வெளியிட்டு வருகின்றன.</p><p>இந்த நிலையில்,&nbsp; நேபாள வெள்ளத்தால் 90,000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
</p><p>இதற்கமைய, சுமார் 93,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக செஞ்சிலுவைச் சங்கம் அறிவித்துள்ளது.</p><h2>முதலாம் இணைப்பு</h2><p>நேபாளம் - சீன எல்லைப் பகுதியில் இமயமலையில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 472 ஆக அதிகரித்துள்ளது. </p><p>

மேலும், 1,535 பேர் இதுவரை காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காணாமல் போனவர்களில் நேபாளத்தைச் சேர்ந்த 469 பேரும், திபெத்தைச் சேர்ந்த மூவரும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><h2>
 இயற்கைப் பேரழிவு</h2><p>
கடந்த 26ஆம் திகதி பாறைகள், பனி, மண் மற்றும் பெருக்கெடுத்த நீர் ஆகியவை ஒன்றிணைந்து ஏற்பட்ட இயற்கைப் பேரழிவினால் இப்பகுதி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.</p><p>

இந்நிலையில், “வான்டர்” என்ற வர்த்தக செயற்கைக்கோள் நிறுவனத்தால் வெளியிடப்பட்ட உயர் தெளிவுத்திறன் கொண்ட செயற்கைக்கோள் படங்கள், வெள்ளத்திற்கு முன்னரும் பின்னரும் அப்பகுதியில் ஏற்பட்டுள்ள பாரிய மாற்றங்களை வெளிப்படுத்தியுள்ளன.</p><p><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr">Our thoughts are with the communities affected by this week’s devastating flash floods in Nepal. <br><br>To support ongoing response and recovery efforts, Vantor has activated its Open Data Program, providing free access to high-resolution satellite imagery for frontline organizations… <a href="https://t.co/RqQJdqAghr">pic.twitter.com/RqQJdqAghr</a></p>&mdash; Vantor (@vantortech) <a href="https://x.com/vantortech/status/2093038515927842948?ref_src=twsrc%5Etfw">August 27, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>
</p><p>
2024ஆம் ஆண்டு ஏப்ரல் 19ஆம் திகதி எடுக்கப்பட்ட படங்களில், ஆற்றங்கரையில் அமைந்திருந்த பல அடுக்குகளைக் கொண்ட பெரிய எல்லைக் கட்டிடம், சாலைகள், நடைபாதைகள் உள்ளிட்ட பல்வேறு உள்கட்டமைப்புகள் தெளிவாகக் காணப்படுகின்றன.</p><h2>

வர்த்தக செயற்கைக்கோள் எடுத்த புகைப்படங்கள்</h2><p>

ஆனால், 2026ஆம் ஆண்டு ஆகஸ்ட் 27ஆம் திகதி, அதாவது பேரழிவு ஏற்பட்ட ஒரு நாளுக்குப் பின்னர் எடுக்கப்பட்ட படங்களில், அந்த உள்கட்டமைப்புகளில் பெரும்பாலானவை பாறைகள், மண் மற்றும் இடிபாடுகளால் முழுமையாக மூடப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/728aac89-81e9-46b2-a4e0-d509bc20daad/26-6a9130cfb93e9.webp' /></p><p>

பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து பெறப்பட்ட ஏனைய செயற்கைக்கோள் படங்களிலும் வீடுகள், பாலங்கள், சாலைகள் மற்றும் பல்வேறு உள்கட்டமைப்புகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதையோ அல்லது இடிபாடுகளுக்குள் புதையுண்டுள்ளதையோ காண முடிகிறது.
</p><p>
இந்தப் பேரழிவைத் தொடர்ந்து, நேபாளத்தில் 977 பேரும், திபெத்தில் 558 பேரும் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

இன்னும் கண்டுபிடிக்கப்படாதவர்களில், அப்பகுதி வழியாகப் பயணித்த சுற்றுலாப் பயணிகள் மற்றும் யாத்ரீகர்கள் உட்பட குறைந்தது 540 வெளிநாட்டவர்களும் உள்ளடங்குவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.&nbsp;</p><p></p><p></p><p></p><p><b>YOU MAY LIKE THIS VIDEO..</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/opvUtIueMWg" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-28T12:05:36+00:00</updated>
        </entry>
    </feed>
