<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-08-12T18:26:44+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[உக்ரைனின் அதிரடி ட்ரோன் தாக்குதல்: ரஷ்யாவின் பிரதான தானிய ஏற்றுமதி முனையங்கள் முடக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/ukraine-attacks-russia-s-grain-port-1786556436"></link>
            <id>https://ibctamil.com/article/ukraine-attacks-russia-s-grain-port-1786556436</id>
            <summary type="text">ரஷ்யாவின் பிரதான கருங்கடல் துறைமுக நகரமான நோவோரோசிஸ்க் (Novorossiysk) மீது உக்ரைன் இராணுவம் பாரிய தாக்குதலை நடத்தியுள்ளது.

குறித்த இரவுநேர ட்ரோன் ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>ரஷ்யாவின் பிரதான கருங்கடல் துறைமுக நகரமான நோவோரோசிஸ்க் (Novorossiysk) மீது உக்ரைன் இராணுவம் பாரிய தாக்குதலை நடத்தியுள்ளது.
</p><p>
குறித்த இரவுநேர ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதலில், அந்நாட்டின் இரண்டு முக்கிய தானிய ஏற்றுமதி முனையங்கள் பலத்த சேதமடைந்து தங்களின் செயல்பாடுகளை முழுமையாக நிறுத்தியுள்ளன.
</p><p>
உலகின் மிகப்பெரிய கோதுமை ஏற்றுமதியாளரான ரஷ்யாவின் முக்கிய துறைமுகம் மீது நடத்தப்பட்ட இந்த நேரடித் தாக்குதல், உலகச் சந்தையில் உணவு தானிய விநியோகத்தில் பெரும் தட்டுப்பாட்டையும் விலையேற்றத்தையும் ஏற்படுத்தும் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><p>
</p><p></p><h2>அவசரநிலை பிரகடனம்</h2><ol><li>ஆண்டுக்கு 8.5 மில்லியன் மெட்ரிக் டன் ஏற்றுமதித் திறன் கொண்ட டெமெட்ரா ஹோல்டிங் (Demetra Holding) நிறுவனத்திற்குச் சொந்தமான முனையம்.</li><li>

ஆண்டுக்கு 7.1 மில்லியன் மெட்ரிக் டன் திறன் கொண்ட என்.கே.எச்.பி (NKHP) தானிய முனையம்.
</li></ol><p>
இந்த இரண்டு பிரதான முனையங்களும் சேதமடைந்துள்ளதால் அங்கிருந்து தானியங்களை ஏற்றுமதி செய்யும் பணிகள் காலவரையறையின்றி இடைநிறுத்தப்பட்டுள்ளன.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2c0b22eb-d5a3-45fd-9a65-fd84a7bba662/26-6a7cb6cba0ce0.webp' /></p><p>ட்ரோன்கள், ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா கடல்வழிப் படகுகள் (Unmanned surface vessels) மூலம் இந்த ஒருங்கிணைந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.</p><p>

கிராஸ்னோடார் (Krasnodar) பிராந்திய ஆளுநர் வெளியிட்ட தகவலின்படி, இந்தத் தாக்குதலில் 8 வயது சிறுமி உட்பட குறைந்தது 2 பேர் உயிரிழந்துள்ளனர்.</p><p> 

மேலும் துறைமுகப் பகுதியில் நீர் விநியோகம் தடைபட்டு, அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.</p><p>
</p><p></p><h2>வர்த்தக நிபுணர்கள்</h2><p>இத்தாக்குதல் செய்தி வெளியான உடனேயே, சிகாகோ வர்த்தகச் சந்தையில் (Chicago Wheat Futures) கோதுமையின் சர்வதேச விலை உடனடியாக 3% வரை அதிகரித்துள்ளது.
</p><p>
இந்தநிலையில் ரஷ்யாவின் கோதுமை ஏற்றுமதியில் பெரும்பகுதி நோவோரோசிஸ்க் துறைமுகம் வழியாகவே ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கு அனுப்பப்படுகிறது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/961fec8a-bb68-41ce-a813-4b2a09bc43e5/26-6a7cb6cc54798.webp' /></p><p>இந்த வழித்தடம் முடங்கினால் ஏழை நாடுகளில் கடுமையான உணவுப் பஞ்சம் ஏற்படும் என சர்வதேச உணவு வர்த்தக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.</p><p>

கிரிமியா பகுதியில் உள்ள ரஷ்யாவின் கருங்கடல் கடற்படை தளங்கள் மீது உக்ரைன் தொடர்ச்சியாகத் தாக்குதல் நடத்தியதால், ரஷ்யா தனது பெரும்பாலான போர்க்கப்பல்களை நோவோரோசிஸ்க் துறைமுகத்திற்கு மாற்றியிருந்தது.</p><p> 

இதனைத் தொடர்ந்து தற்போது அத்துறைமுகத்தையே இலக்கு வைத்து உக்ரைன் தனது தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-12T18:19:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[லெபனானில் இரத்து செய்யப்பட்ட மரண தண்டனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/death-penalty-abolished-in-lebanon-1786558638"></link>
            <id>https://ibctamil.com/article/death-penalty-abolished-in-lebanon-1786558638</id>
            <summary type="text">&amp;nbsp;லெபனானில் மரண தண்டனை அதிகாரபூா்வமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

அரபு நாடுகளில் மரண தண்டனையை இரத்து செய்து, அதற்குப் பதிலாகக் கடுங்காவலுடன் கூடிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;லெபனானில் மரண தண்டனை அதிகாரபூா்வமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
</p><p>
அரபு நாடுகளில் மரண தண்டனையை இரத்து செய்து, அதற்குப் பதிலாகக் கடுங்காவலுடன் கூடிய ஆயுள் தண்டனையைச் சட்டமாக்கிய முதல் நாடு என்ற வரலாற்றுச் சிறப்பை லெபனான் பெற்றுள்ளது.</p><h2>&nbsp;லெபனான் நாடாளுமன்றத்தில் தீா்மானம்</h2><p>&nbsp;லெபனான் நாடாளுமன்றத்தில் தீா்மானம் மீது செவ்வாய்க்கிழமை(11) நடைபெற்ற வாக்கெடுப்பில், மொத்தமுள்ள 128 உறுப்பினா்களில் ஹிஸ்புல்லா உறுப்பினா்களைத் தவிர பெரும்பான்மையானவா்கள் ஆதரவாக வாக்களித்தனா்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/eaf41fc3-042a-475b-af3f-ecb782e4590f/26-6a7cb8b09c82d.webp' /></p><p>
</p><p>



கடந்த 2004 முதலே லெபனானில் மரண தண்டனை நிறைவேற்றுவது அதிகாரபூா்வமற்ற முறையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது இந்த ரத்து நடவடிக்கை முழுமையாக எடுக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><p>[https://ibctamil.com/article/woman-pulled-alive-36-hours-after-colombia-quake-</p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-12T18:17:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[சீசனிங் பவுடரில் போதைப்பொருள்..! 2 நாடுகள் அதிரடி நடவடிக்கை..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/poppy-seed-blend-seasoning-powder-banned-1786557882"></link>
            <id>https://tamilwin.com/article/poppy-seed-blend-seasoning-powder-banned-1786557882</id>
            <summary type="text">&amp;nbsp;அமெரிக்காவின் பிரபல வர்த்தக நிறுவனமான டிரேடர் ஜோஸின் &quot;எவரிதிங் பட் தி
பாகல்&quot; என்ற சீசனிங் பவுடருக்கு சிங்கப்பூர் மற்றும் தென் கொரிய நாடுகள் தடை...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;அமெரிக்காவின் பிரபல வர்த்தக நிறுவனமான டிரேடர் ஜோஸின் "எவரிதிங் பட் தி
பாகல்" என்ற சீசனிங் பவுடருக்கு சிங்கப்பூர் மற்றும் தென் கொரிய நாடுகள் தடை
விதித்துள்ளன.

இந்தச் சீசனிங் பவுடரில் சேர்க்கப்பட்டுள்ள பாப்பி விதைகளில் போதைப்பொருளான
மார்பின் மற்றும் கோடீன் கலந்திருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.
</p><p>
பொப்பி விதைகள் இயற்கையிலேயே போதைத்தன்மை கொண்டவை அல்ல என்றாலும், அறுவடைக்
காலங்களில் தாவரத்தின் பாலுடன் தொடர்பு ஏற்படுவதால் போதைப்பொருள்களின் வீரியம்
அதில் கலக்க வாய்ப்புள்ளது.</p><p></p><p>
</p><h2>&nbsp;தென் கொரியாவில் தடை</h2><p>
போதைப்பொருள்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ், இணையதளங்களில் விற்கப்பட்ட
20-க்கும் மேற்பட்ட சீசனிங் பவுடர் விளம்பரங்களை சிங்கப்பூர் போதைப்பொருள்
தடுப்புப் பிரிவு அகற்றியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9c3b87ca-4967-4037-82ff-31a939cd4de9/26-6a7cb6bbcf09a.webp' /></p><p>

மேலும், கைவசம் உள்ள பொருட்களை உடனடியாக அழிக்குமாறு பொதுமக்களுக்கு
அறிவுறுத்தப்பட்டுள்ளது.
</p><p>
வெளிநாடுகளுக்குச் சென்று திரும்பிய சுற்றுலாப் பயணிகள் இதை வாங்கி வந்த
நிலையில், ஆய்வில் போதைப்பொருள் கலப்பு உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து
சியோல் நிர்வாகமும் இதற்கு முழுமையான தடை விதித்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-12T18:16:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் அதிகரிக்கும் யானைகளின் மரணங்கள் ; சுற்றாடல் அமைச்சு எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/elephant-deaths-on-the-rise-in-sri-lanka-1786558403"></link>
            <id>https://jvpnews.com/article/elephant-deaths-on-the-rise-in-sri-lanka-1786558403</id>
            <summary type="text">யானைகள் தினத்தை முன்னிட்டு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள சுற்றாடல் அமைச்சு, சூழல் தொகுதியின் தனித்துவமான அடையாளமாகவும், பல்லுயிர் பெருக்கத்தின் தீர்மானம...</summary>
            <content type="html"><![CDATA[<p>யானைகள் தினத்தை முன்னிட்டு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள சுற்றாடல் அமைச்சு, சூழல் தொகுதியின் தனித்துவமான அடையாளமாகவும், பல்லுயிர் பெருக்கத்தின் தீர்மானமிக்கதாக விளங்கும் யானைகளின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வு குறித்து இந்த சந்தர்ப்பத்தில் உலகத்தின் அவதானம் திரும்பியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.</p><p>
</p><p></p><p>பல வருடங்களாக நாட்டில் இடம்பெற்ற முறையற்ற அபிவிருத்தி நடவடிக்கைகள் காரணமாக யானைகளின் நடமாட்டப் பாதைகள் மற்றும் யானை வழித்தடங்கள் தடைப்பட்டதால், பாதகமான சுற்றுச்சூழல் தாக்கங்கள் ஏற்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/94cdc204-80e5-4150-977e-210c31eb1ec5/26-6a7cb7c4c0973.webp' /></p><p>

உலக யானைகள் தினம் இன்று அனுசரிக்கப்பட்ட போதிலும், நாட்டில் தற்போது யானைகளின் எண்ணிக்கை குறைந்த மட்டத்திலேயே காணப்படுவதாக சுற்றாடலியலாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
</p><p>
இந்த வருடத்தில் இதுவரை நாட்டில் 199 யானைகளின் மரணங்கள் பதிவாகியுள்ளதாக வனவிலங்கு பாதுகாப்பு ஒன்றியம் தெரிவித்துள்ளது.
</p><p>
இவற்றில் பெரும்பாலான மரணங்கள் துப்பாக்கிச் சூட்டினால் ஏற்பட்டுள்ளதுடன், பாதுகாப்பற்ற மின்சாரக் கம்பிகளில் சிக்குதல் மற்றும் பாதுகாப்பற்ற விவசாயக் கிணறுகளில் விழுதல் ஆகியவற்றினாலும் யானைகளின் மரணங்கள் பதிவாகியுள்ளதாக அந்த ஒன்றியத்தின் செயலாளரான சுற்றாடலியலாளர் நயனக ரன்வெல்ல தெரிவித்துள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-12T18:13:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையின் சிவில் விமானப் போக்குவரத்து பாதுகாப்புத் துறையில் வரலாறு படைத்த தமிழ் பெண்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/tamil-woman-in-sri-lanka-s-civil-aviation-sector-1786557272"></link>
            <id>https://jvpnews.com/article/tamil-woman-in-sri-lanka-s-civil-aviation-sector-1786557272</id>
            <summary type="text">இலங்கையின் சிவில் விமானப் போக்குவரத்து பாதுகாப்புத் துறையில் பெண்களின் பிரதிநிதித்துவத்திற்கு புதிய மைல்கல்லாக, வசந்தி முருகேசு விமான நிலையம் மற்றும் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் சிவில் விமானப் போக்குவரத்து பாதுகாப்புத் துறையில் பெண்களின் பிரதிநிதித்துவத்திற்கு புதிய மைல்கல்லாக, வசந்தி முருகேசு விமான நிலையம் மற்றும் விமானப் போக்குவரத்து சேவைகள் (இலங்கை) நிறுவனத்தின் (AASL) முதல் பெண் பாதுகாப்பு மார்ஷலாக நியமிக்கப்பட்டுள்ளார்.</p><p>
</p><p></p><p>விமானப் போக்குவரத்து பாதுகாப்புத் துறையில் நீண்டகாலமாக ஆண்கள் ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில், பெண்ணொருவர், அதிலும் தமிழ் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர், பாதுகாப்பு மார்ஷல் பதவியை வகிப்பது குறிப்பிடத்தக்க சாதனையாகப் பார்க்கப்படுகிறது.</p><p>

விமான நிலையங்கள் மற்றும் விமானப் போக்குவரத்து சேவைகளில் தேசிய மற்றும் சர்வதேச பாதுகாப்புத் தரங்களை உறுதி செய்வதில் பாதுகாப்பு மார்ஷல்களின் பணி முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3f832e9b-7080-47c8-a587-0eeb26afab7a/26-6a7cb359aac2e.webp' /></p><p>பயணிகள் மற்றும் விமானப் போக்குவரத்துடன் தொடர்புடைய பாதுகாப்பு நடவடிக்கைகளை உறுதிப்படுத்துவதில் இப்பதவி முக்கிய பொறுப்புகளை உள்ளடக்கியதாகும்.
</p><p>
இந்நிலையில், பாரம்பரியமாக ஆண்கள் அதிகளவில் பிரதிநிதித்துவம் பெற்றுவந்த இத்துறையில் வசந்தி முருகேசுவின் நியமனம், பெண்களுக்கான புதிய வாய்ப்புகளை உருவாக்கும் முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.
</p><p>
கடுமையான பொறுப்புகள் மற்றும் சவால்கள் நிறைந்த விமானப் பாதுகாப்புத் துறையில் பாலினத் தடைகளைத் தாண்டி அவர் பெற்றுள்ள இந்த நியமனம், இலங்கையின் தொழில்துறை மற்றும் அரச நிறுவனங்களில் பெண்களின் பங்களிப்பு அதிகரித்து வருவதற்கான முக்கிய எடுத்துக்காட்டாகவும் அமைகிறது.
</p><p>
மேலும், விமானப் போக்குவரத்து, பாதுகாப்பு மற்றும் ஏனைய சவாலான துறைகளில் எதிர்காலத்தில் சாதிக்க விரும்பும் இளம் பெண்களுக்கு வசந்தி முருகேசுவின் பயணம் ஒரு ஊக்கமளிக்கும் முன்மாதிரியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நியமனத்தின் மூலம், திறமை மற்றும் அர்ப்பணிப்புக்கு பாலினம் தடையாக இருக்கக்கூடாது என்பதையும், பெண்களுக்கும் சவாலான மற்றும் பொறுப்புமிக்க பதவிகளில் முன்னேறுவதற்கான வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்பதையும் வசந்தி முருகேசுவின் சாதனை எடுத்துக்காட்டுகிறது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-12T18:05:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்தும் திட்டம் ; இலங்கைக்கு ஐ.நா. விசேட கடிதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/un-special-letter-plan-raise-retirement-age-judges-1786557891"></link>
            <id>https://jvpnews.com/article/un-special-letter-plan-raise-retirement-age-judges-1786557891</id>
            <summary type="text">இலங்கையில் நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை மேலும் இரண்டு வருடங்களால் அதிகரிப்பதற்கு முன்மொழியப்பட்டுள்ள அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் ஐக்கிய நாடுகள...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை மேலும் இரண்டு வருடங்களால் அதிகரிப்பதற்கு முன்மொழியப்பட்டுள்ள அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை இலங்கை அரசாங்கத்துக்கு விசேட கடிதமொன்றை அனுப்பியுள்ளது.</p><p>
</p><p></p><p>நீதிபதிகள் மற்றும் சட்டத்தரணிகளின் சுதந்திரம் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் விசேட பிரதிநிதி மார்கரெட் சாட்டர்வைட் (Margaret Satterthwaite) இந்தக் கடிதத்தை அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fb5005b1-c254-4535-84a7-bb61d5c19a5d/26-6a7cb91e31ecb.webp' /></p><p>
</p><p>
தற்போதைய அரசியலமைப்பின் பிரகாரம், உயர் நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயது 65 ஆகவும், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயது 63 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.</p><p>முன்மொழியப்பட்டுள்ள அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம், உயர் நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை 67 ஆகவும், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை 65 ஆகவும் உயர்த்துவதற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
</p><p>
எனினும், அவசரமாக மேற்கொள்ளப்படும் இத்தகைய அரசியலமைப்புத் திருத்தம் நீதித்துறையின் சுதந்திரத்திற்கும், நியாயமான விசாரணைக்கான உரிமைக்கும் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என ஐக்கிய நாடுகள் சபையின் விசேட பிரதிநிதி தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளார்.
</p><p>
குறிப்பாக, முன்மொழியப்பட்டுள்ள மாற்றங்கள் எதிர்காலத்தில் நியமிக்கப்படவுள்ள நீதிபதிகளுக்கு மாத்திரம் பொருந்தாமல், தற்போது பதவியில் உள்ள நீதிபதிகளின் பதவிக்காலத்துக்கும் உடனடியாகப் பொருந்தும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளமை கவலைக்குரிய விடயம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3565a721-deef-446f-97dc-5abbf0cc704e/26-6a7cb5c50961d.webp' /></p><p>மேலும், நீதித்துறை தொடர்பான முக்கியமான சட்ட மற்றும் அரசியலமைப்பு மாற்றங்கள் உரிய கலந்தாலோசனைகள் மற்றும் வெளிப்படையான நடைமுறைகளின் ஊடாக முன்னெடுக்கப்பட வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.</p><p>

முறையான கலந்தாலோசனைகள் இன்றி இத்தகைய திருத்தங்கள் மேற்கொள்ளப்படுமானால், நீதித்துறையின் சுயாதீனம் தொடர்பில் பொதுமக்கள் மத்தியில் சந்தேகங்கள் ஏற்படுவதுடன், நீதித்துறை மீதான நம்பிக்கையும் பாதிக்கப்படக்கூடும் என ஐ.நா. விசேட பிரதிநிதி எச்சரித்துள்ளார்.
</p><p>
இதனையடுத்து, நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பதற்கான அரசியலமைப்புத் திருத்தத்தை முன்வைப்பதற்கான காரணங்கள், அதன் சட்டரீதியான அடிப்படை மற்றும் நீதித்துறையின் சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்காக அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் தெளிவுபடுத்துமாறு ஐக்கிய நாடுகள் சபை இலங்கை அரசாங்கத்திடம் கோரியுள்ளது.
</p><p>
நீதித்துறையின் சுயாதீனம் மற்றும் நீதிபதிகளின் பதவிக்காலம் தொடர்பான இந்த விவகாரம், இலங்கையில் முன்மொழியப்பட்டுள்ள அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பான முக்கியமான சர்வதேச கவனமாக பார்க்கப்படுகிறது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-12T18:05:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ashik</name>
            </author>
            <title type="text"><![CDATA[மன்னார் மாவட்ட கடற்றொழிலாளர்களின் பிரச்சினை குறித்து கலந்துரையாடல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/issues-faced-by-the-marine-fishers-of-mannar-1786554013"></link>
            <id>https://tamilwin.com/article/issues-faced-by-the-marine-fishers-of-mannar-1786554013</id>
            <summary type="text">மன்னார் மாவட்ட கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் ஏற்பாட்டில் கடற...</summary>
            <content type="html"><![CDATA[<p>மன்னார் மாவட்ட கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.</p><p>மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் ஏற்பாட்டில் கடற்றொழில், நீரியல்
மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில்
இடம்பெற்ற கூட்டத்தில் இந்த விடயம் குறித்து பேசப்பட்டது.</p><p>அத்தோடு, தடை செய்யப்பட்ட தொழில் முறைகள் மற்றும் கடற்றொழிலாளர்களுக்கு இடை
நிறுத்தி வைக்கப்பட்ட கடற்றொழில் நடவடிக்கைகளுக்காக அனுமதியை மீண்டும் வழங்குவது
குறித்தும் ஆராயப்பட்டது.</p><p></p><h2>கடற்றொழில் நடவடிக்கை</h2><p>
</p><p>கடற்றொழில் நடவடிக்கைகளின் போது சில தொழில்களுக்கான வழங்கப்படுகின்ற பாஸ்
நடைமுறை இடை நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் கடற்றொழிலாளர்கள் பல்வேறு
அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வரும் நிலையில் குறித்த தொழில்களுக்கு
அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சரிடம் கோரிக்கை
விடுத்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/836dd8a2-1385-43e1-8836-ad075f405a15/26-6a7cb4d56571a.webp' /></p><p>
</p><p>
மேலும் மன்னார் மாவட்டத்தில் கடற்கரையோரங்களில் உள்ள கண்டல் தாவரங்களை வெட்டி
கடற்றொழில் நடவடிக்கை களுக்கு பயன்படுத்தி வருவதாகவும் இதனால் எதிர் காலத்தில்
கடலரிப்பு ஏற்படும் நிலை காணப்படுவதாகவும் எனவே குறித்த கண்டல் தாவரங்களை
வெட்டுகின்ற கடற்றொழிலாளர்களுக்கு எதிராக கடுமையான தண்டனைகள் வழங்க வேண்டும் என
கலந்து கொண்ட மீனவ சங்கங்களின் பிரதிநிதிகள் அமைச்சரிடம் தெரிவித்தனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-12T18:00:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஐரோப்பாவின் முழு சூரிய கிரகணம்... அதைப் பார்ப்பதற்கான சிறந்த இடம் எது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/solar-eclipse-best-place-to-see-1786556603"></link>
            <id>https://news.lankasri.com/article/solar-eclipse-best-place-to-see-1786556603</id>
            <summary type="text">Europe’s total solar eclipse: ஐரோப்பாவில் நிகழும் முழு சூரிய கிரகணமும், அதைக் காண்பதற்கான சிறந்த இடம் மற்றும் பாதுகாப்பாகப் பார்ப்பதற்கான வழிமுறைகளும்...</summary>
            <content type="html"><![CDATA[<p>Europe’s total solar eclipse: ஐரோப்பாவில் நிகழும் முழு சூரிய கிரகணமும், அதைக் காண்பதற்கான சிறந்த இடம் மற்றும் பாதுகாப்பாகப் பார்ப்பதற்கான வழிமுறைகளும்.
</p><p>புதன்கிழமை மாலையில், மில்லியன் கணக்கான ஐரோப்பியர்கள் ஒரு வானியல் விருந்தான சூரிய கிரகணத்தைக் காணவிருக்கிறார்கள்.</p><h2>முதல் முழு சூரிய கிரகணம்</h2><p>
</p><p>வட மற்றும் மத்திய ஸ்பெயினின் பெரும் பகுதி மக்களும், போர்த்துகலின் ஒரு சிறு பகுதி மக்களும், கிரீன்லாந்து மற்றும் ஐஸ்லாந்தின் சில பகுதி மக்களும் இந்த அரிதான முழு கிரகணத்தை அனுபவிக்க முடியும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/299d888f-0e63-426b-a4a4-0aa16256fd21/26-6a7cb0bda0b65.webp' /></p><p> </p><p>இங்கிலாந்து, பிரான்ஸ், பெல்ஜியம், சுவிட்சர்லாந்து மற்றும் வடக்கு இத்தாலி உள்ளிட்ட மேற்கு ஐரோப்பாவின் பெரும்பாலான பகுதிகளில், மறையும் சூரியனின் ஒளி முற்றிலுமாகத் தடுக்கப்படும்.
</p><p>சூரியனுக்கும் பூமிக்கும் இடையே நிலவு நேராகக் கடந்து செல்லும்போது சூரிய கிரகணம் ஏற்படுகிறது; இதனால் நிலவின் நிழல் பூமியின் மீது விழுகிறது. நிலவினால் சூரிய ஒளி முழுமையாக மறைக்கப்படும்போது, ​​பார்வையாளர்கள் முழு சூரிய கிரகணத்தைக் காண்கிறார்கள்.</p><p></p><p> </p><p>ஐரோப்பியக் கண்டத்தின் நிலப்பகுதியில் கடந்த இரு தசாப்தங்களில் நிகழும் முதல் முழு சூரிய கிரகணம் இதுவாகும். இங்கிலாந்திலிருந்து காணக்கூடிய இவ்வகையான நிகழ்வு கடைசியாக 1999-இல் நிகழ்ந்தது; அப்போது டெவன் (Devon) மற்றும் கார்ன்வால் (Cornwall) ஆகிய பகுதிகளின் சில பகுதிகள் முழுமையான சூரிய கிரகணப் பாதையில் அமைந்திருந்தன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/63ef9221-60ab-43e8-93a7-32679cf7eb01/26-6a7cb0bcec4ef.webp' /></p><p> </p><p>இங்கிலாந்திலிருந்து காணக்கூடிய அடுத்த முழுமையான சூரிய கிரகணத்திற்கு 2090-ஆம் ஆண்டு வரையில் காத்திருக்க வேண்டும்.</p><h2>மேற்கு அடிவானம்</h2><p> </p><p>பிரித்தானியாவில், லண்டனில் உள்ள பார்வையாளர்களுக்கு பகுதி கிரகணம் பிரிட்டிஷ் கோடைக்கால நேரம் 18.17 மணிக்குத் தொடங்கி, 19.13 மணிக்கு உச்சத்தை அடைந்து, 20.06 மணிக்கு முடிவடையும் என்று ராயல் அப்சர்வேட்டரி கிரீன்விச் கணக்கிட்டுள்ளது. </p><p>கார்ன்வாலில் உள்ள மக்கள் சுமார் 96 சதவீதம் கிரகணத்தை அனுபவிப்பார்கள்; அதேவேளையில், ஸ்காட்லாந்தின் மேற்குப் பகுதியில் உள்ளவர்கள் 93 சதவீதமும், லண்டனில் உள்ளவர்கள் சுமார் 92 சதவீத கிரகணத்தையும் அனுபவிப்பார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/42e5e910-8651-465b-90fd-824129c4cbd0/26-6a7cb0be52343.webp' /></p><p>
எனவே, சூரிய கிரகணத்தைப் பார்க்கச் செல்ல விரும்பும் எவரும், கட்டிடங்களோ மரங்களோ மறைக்காத வகையில் மேற்கு அடிவானத்தை நன்றாகப் பார்க்கக்கூடிய ஒரு இடத்தைத் தெரிவு செய்வது நல்லது. </p><p>சூரியனை வெறும் கண்ணால் பார்ப்பதையோ அல்லது sunglasses-களை அணிவதையோ தவிர்க்க வேண்டும் என நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர், ஏனெனில் அது நிரந்தர கண் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். </p><p>அதற்குப் பதிலாக, கிரகணத்திற்கென பிரத்யேகக் கண்ணாடிகளை வாங்குமாறு பரிந்துரைக்கின்றனர்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-12T17:41:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறகடிக்க ஆசையில் வரப்போகும் புது சிக்கல்.. மீனா ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/siragadikka-aasai-meena-shooting-spot-video-1786556229"></link>
            <id>https://cineulagam.com/article/siragadikka-aasai-meena-shooting-spot-video-1786556229</id>
            <summary type="text">விஜய் டிவியில் பரபரப்பாக ஓடி கொண்டு இருக்கிறது சிறகடிக்க ஆசை சீரியல். அதில் மனோஜ் ரகசிய இரண்டாம் திருமணம் செய்தது பெரிய பூகம்பமாக வெடிக்கும் என எதிர்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>விஜய் டிவியில் பரபரப்பாக ஓடி கொண்டு இருக்கிறது சிறகடிக்க ஆசை சீரியல். அதில் மனோஜ் ரகசிய இரண்டாம் திருமணம் செய்தது பெரிய பூகம்பமாக வெடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>இந்நிலையில் ஷூட்டிங் ஸ்பாட்டில் மீனா எடுத்த வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் மனோஜின் புது மாமியாருடன் அவர் பேசி இருக்கிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f3cc543e-990c-42c0-971b-5a8525a46854/26-6a7caf46f0163.webp' /></p><h2>பெரிய சம்பவங்கள் இருக்கு</h2><p>மனோஜன் புது மாமியார் கதாபாத்திரத்தால் கதையில் பல்வேறு பிரச்சனைகள் வரப்போகிறது என்கிற தகவலையும் அவர் தெரிவித்திருக்கிறார்.
</p><p>
பெரிய சம்பவங்கள் இருக்கு என மீனா கூறி இருப்பதால் என்னவெல்லாம் நடக்குமோ என பொறுத்திருந்து பார்க்கலாம்.&nbsp;</p><p><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/reel/Db6BAUtJtgI/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/reel/Db6BAUtJtgI/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/reel/Db6BAUtJtgI/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by Suma (@suma_kn)</a></p></div></blockquote> <script async src="//www.instagram.com/embed.js"></script></p>]]></content>
            <updated>2026-08-12T17:37:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[ட்ரம்பிற்குப் புடின் அனுப்பிய விசேட பரிசு...! ரஷ்யாவின் இராஜதந்திர நகர்வு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/putin-sends-special-gift-to-trump-1786550764"></link>
            <id>https://ibctamil.com/article/putin-sends-special-gift-to-trump-1786550764</id>
            <summary type="text">அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் விசேட பரிசொன்றை அனுப்பி வைத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்க ஜனாதிபதி <a href="https://ibctamil.com/article/trump-says-planes-were-switched-1786542046" target="_blank">டொனால்ட் ட்ரம்பிற்கு</a> ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் விசேட பரிசொன்றை அனுப்பி வைத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p>

இந்த இராஜதந்திர நகர்வின் மூலம் ட்ரம்ப்பிடமிருந்து ரஷ்யா எத்தகைய விட்டுக்கொடுப்புகளையும் பலன்களையும் எதிர்பார்க்கிறது என்பது குறித்த அரசியல் ஆய்வுகள் வெளியாகியுள்ளன.
</p><p>
இதனடிப்படையில் இரு நாட்டுத் தலைவர்களுக்கிடையிலான<a href="https://ibctamil.com/article/us-iran-agree-to-extend-60-day-ceasefire-1786538899" target="_blank"> தனிப்பட்ட உறவை </a>வெளிப்படுத்தும் வகையிலும், அடுத்தகட்ட உயர்மட்ட பேச்சுவார்த்தைகளுக்கான பாதையைத் திறந்து வைக்கும் வகையிலும் கிரெம்ளின் மாளிகையிலிருந்து ட்ரம்பிற்கு இந்தப் பரிசு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>பொருளாதாரத் தடை</h2><p>

உக்ரைன் மீதான மேற்கத்திய நாடுகளின் இராணுவ உதவிகளைக் குறைத்து தற்போதைய கள நிலவரங்களை ஏற்றுக்கொண்டு ஒரு போர்நிறுத்த உடன்படிக்கையை முன்னெடுக்க அமெரிக்கா முன்வர வேண்டும் என்பது மாஸ்கோவின் பிரதான எதிர்பார்ப்பாக உள்ளது.
</p><p>
அத்தோடு ரஷ்யா மீது அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் விதித்துள்ள கடுமையான பொருளாதாரத் தடைகளில் (Economic Sanctions) தளர்வுகளைப் பெறுதலும் இதில் அடங்குகின்றது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/35de55ff-c98b-4a40-8eb6-753a7b373428/26-6a7cab7fc973c.webp' /></p><p>இதனுடன் உக்ரைன் அல்லது பிற அண்டை நாடுகள் நேட்டோ (NATO) அமைப்பில் இணைக்கப்படாது என்ற சர்வதேச உத்தரவாதத்தை ட்ரம்ப் நிர்வாகத்திடமிருந்து பெறுதலும் ரஷ்யாவின் முக்கிய எதிர்பார்ப்புகளில் அடங்குகின்றது.</p><p> 

முந்தைய காலங்களிலிருந்தே புடினுடன் நல்லுறவை விரும்புவதாகக் கூறிவந்த ட்ரம்ப், இத்தகைய இராஜதந்திர சமிக்ஞைகளை எவ்வாறு கையாளுவார் மற்றும் அமெரிக்காவின் நட்பு நாடுகளான ஐரோப்பிய யூனியனின் கவலைகளை எவ்வாறு சமன் செய்வார் என்பது சர்வதேச அரங்கில் உன்னிப்பாகக் கவனிக்கப்படுகிறது.
</p><p>
இந்தநிலையில் குறித்த பரிசளிக்கும் நகர்வு வெறும் சம்பிரதாய ரீதியானது மட்டுமல்லாது, சர்வதேச அழுத்தங்களுக்கு மத்தியில் அமெரிக்காவுடன் நேரடிப் பேரம் பேசும் சூழலை உருவாக்குவதற்கான ரஷ்யாவின் திட்டமிட்ட நடவடிக்கை என அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-12T17:34:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடல் கொந்தளிப்பாகும் அபாயம் ; கடற்றொழிலாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/risk-of-sea-turbulence-announcement-for-fishermen-1786555827"></link>
            <id>https://jvpnews.com/article/risk-of-sea-turbulence-announcement-for-fishermen-1786555827</id>
            <summary type="text">கொழும்பு முதல் காலி மற்றும் மாத்தறை வரையான கடற்பரப்புகளில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு திசை...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு முதல் காலி மற்றும் மாத்தறை வரையான கடற்பரப்புகளில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p>
</p><p></p><p>தென்மேற்கு திசையில் இருந்து மணித்தியாலத்திற்கு 30 முதல் 40 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும் திணைக்களம் அறிவித்துள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7178b361-47f3-414e-ab6c-8c6b7caa60db/26-6a7cadb48b3c0.webp' /></p><p>மாத்தறை முதல் ஹம்பாந்தோட்டை ஊடாக கற்பிட்டி வரையான கடற்பரப்பிலும், சிலாபம் முதல் புத்தளம் வரையான கடற்பரப்பிலும், மன்னார் முதல் காங்கேசன்துறை வரையான கடற்பரப்பிலும் காற்றின் வேகம் இடைக்கிடையே மணித்தியாலத்திற்கு 50 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

இதன் காரணமாக குறித்த கடற்பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்பான நிலையில் காணப்படக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.
</p><p>
இந்நிலையில், குறித்த கடற்பரப்புகளில் கடற்றொழில் மற்றும் படகுப் பயணங்களில் ஈடுபடுவோர் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.</p><p>

மேலும், கொழும்பு முதல் காலி வரையிலும், காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையிலும் கடல் அலைகளின் உயரம் சுமார் 2.5 முதல் 3 மீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
எனவே, கடலில் நிலவும் வானிலை மற்றும் காற்றின் நிலைமைகளை அவதானித்து, தேவையான பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கடற்றொழிலாளர்கள் மற்றும் கடல் பயணங்களில் ஈடுபடுவோருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-12T17:30:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[அல்லாஹ்வுக்கே புகழ்..! ஹோர்முஸ் குறித்து ட்ரம்பின் பரபரப்பு பதிவு..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/praise-be-to-allah-i-think-well-keep-it-trump-says-1786555216"></link>
            <id>https://tamilwin.com/article/praise-be-to-allah-i-think-well-keep-it-trump-says-1786555216</id>
            <summary type="text">அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஹோர்முஸ் நீரிணை தற்போது அமெரிக்காவின் முழுமையான கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், அதனை தொடர்ந்து தக்கவைத்துக்கொள்ளலாம...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஹோர்முஸ் நீரிணை தற்போது அமெரிக்காவின் முழுமையான கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், அதனை தொடர்ந்து தக்கவைத்துக்கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளார்.
</p><p>
Truth Social தளத்தில் வெளியிட்ட பதிவில், </p><p>அமெரிக்காவின் கடற்படை முற்றுகையைப் பாராட்டிய ட்ரம்ப், அதனை “எஃகு சுவர்” என பலரும் அழைப்பதாகக் குறிப்பிட்டார்.</p><h2>ஹோர்முஸ் நீரிணை</h2><p> </p><p>மேலும், ஈரானால் இதற்கு எதுவும் செய்ய முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.

மத்திய கிழக்கிலிருந்து உலக நாடுகளுக்கு எரிசக்தி உள்ளிட்ட பொருட்களின் போக்குவரத்துக்கு முக்கியமான ஹோர்முஸ் நீரிணை தொடர்பாக, அமெரிக்கா கட்டுப்பாட்டை பெற்றுள்ளதாக ட்ரம்ப் தொடர்ந்து கூறி வருகிறார்.</p><p> எனினும், ஈரான் இந்தக் கூற்றை கடுமையாக நிராகரித்து வருகிறது.

ஈரானிடம் தற்போது கடற்படை மற்றும் விமானப்படை இல்லை என்றும், அந்நாட்டு வீரர்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை என்றும் ட்ரம்ப் கூறினார்.</p><p><iframe src="https://truthsocial.com/@realDonaldTrump/117083017680231697/embed" class="truthsocial-embed" style="max-width: 100%; border: 0" width="600" allowfullscreen="allowfullscreen"></iframe><script src="https://truthsocial.com/embed.js" async="async"></script></p><p> மேலும், ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) பெருமளவில் சிதைக்கப்பட்டு பின்வாங்கி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
</p><p>
தனது பதிவின் இறுதியில், “ஈரான் இனி மத்திய கிழக்கின் கொடுமைப்படுத்துபவன் அல்ல” என்று கூறிய ட்ரம்ப், “அல்லாஹ்வுக்கே புகழ்!” என குறிப்பிட்டார்.
</p><p>
ஹோர்முஸ் நீரிணையை திறக்க ஈரானின் நிபந்தனைகள்

அமெரிக்காவின் கடற்படை முற்றுகை நீக்கப்பட வேண்டும், முடக்கப்பட்ட ஈரானிய சொத்துக்கள் விடுவிக்கப்பட வேண்டும், பொருளாதாரத் தடைகள் நீக்கப்பட வேண்டும் மற்றும் போரினால் ஏற்பட்ட சேதங்களுக்கு அமெரிக்கா இழப்பீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட நிபந்தனைகளை ஈரான் முன்வைத்துள்ளது.</p><h2>&nbsp;ட்ரம்ப் நிர்வாகம்</h2><p>
</p><p>
ஈரானின் புரட்சிகர காவல்படை, இந்த நிபந்தனைகள் அனைத்தையும் அமெரிக்கா ஏற்றுக்கொள்ளும் வரை தனது முற்றுகை தொடரும் என்று தெரிவித்துள்ளது.
</p><p>
ஈரானுடன் பேச்சுவார்த்தை குறித்து ட்ரம்ப்

ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டுள்ளதால் அமெரிக்காவில் எரிபொருள் மற்றும் பிற பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1a761fa3-315b-42a7-b701-a74250c99de6/26-6a7cad7eba04a.webp' /></p><p> </p><p>இது நவம்பர் இடைக்காலத் தேர்தல்கள் நெருங்கும் நிலையில் ட்ரம்ப் நிர்வாகத்துக்கு அரசியல் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
</p><p>
இந்நிலையில், ஈரானுடன் “அமைதியாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்” என ட்ரம்ப் கூறியுள்ளார். ஈரானில் பணவீக்கம் அதிகரித்து வருவதையும், அந்நாட்டிடம் பணம் இல்லை என்பதையும் அமெரிக்கா கவனித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
</p><p>
ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி, அமெரிக்காவுடன் நேரடி பேச்சுவார்த்தை நடைபெறவில்லை என்றும், இடைத்தரகர்கள் மூலம் செய்திகள் மட்டுமே பரிமாறப்பட்டு வருவதாகவும் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.</p>]]></content>
            <updated>2026-08-12T17:30:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[இன்னும் சற்று நேரத்தில் உச்சம் அடையும் ‘பெர்சீட்’ விண்கல் மழை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/the-perseid-meteor-shower-will-peak-soon-1786555105"></link>
            <id>https://jvpnews.com/article/the-perseid-meteor-shower-will-peak-soon-1786555105</id>
            <summary type="text">சுமார் 133 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் அரிய விண்கல் மழை எனக் கூறப்படும் ‘பெர்சீட்’ (Perseid) விண்கல் மழை, இன்று (12) இரவு வானில் உச்சத்தை அடையவுள்ளதா...</summary>
            <content type="html"><![CDATA[<p>சுமார் 133 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் அரிய விண்கல் மழை எனக் கூறப்படும் ‘பெர்சீட்’ (Perseid) விண்கல் மழை, இன்று (12) இரவு வானில் உச்சத்தை அடையவுள்ளதாக விண்வெளி ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.</p><p>
</p><p></p><p>பெர்சீட் விண்கல் மழையானது, 109P/Swift-Tuttle என்ற வால்நட்சத்திரம் விட்டுச் சென்ற தூசித் துகள்கள் வழியாக பூமி பயணிக்கும் போது உருவாகிறது.
</p><p>
இந்தச் சிறிய விண்கற்கள் பூமியின் வளிமண்டலத்துக்குள் மிக வேகமாக நுழையும்போது, வளிமண்டலத்துடனான உராய்வினால் வெப்பமடைந்து ஒளிர்கின்றன.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/edad856e-c2ec-4528-85fb-25df0dc3501e/26-6a7caae297daf.webp' /></p><p>இரவு வானில் காணப்படும் இந்த ஒளிரும் தடங்களே பொதுவாக ‘விண்கல் மழை’ என அழைக்கப்படுகின்றன.</p><p>

இன்றைய பெர்சீட் விண்கல் மழையின் போது, வானிலை மற்றும் வானத்தை மறைக்கும் நிலைமைகள் சாதகமாக இருந்தால், ஒரு மணி நேரத்தில் 50 முதல் 100 வரையிலான விண்கற்களைக் காணக்கூடிய வாய்ப்பு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
விண்வெளி ஆர்வலர்கள் மற்றும் வானியல் பிரியர்களுக்கு இது வானில் காணக்கூடிய குறிப்பிடத்தக்க இயற்கைக் காட்சியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
</p><p>
ஒளி மாசு குறைந்த பகுதிகளிலிருந்து, நகர்ப்புற விளக்குகளிலிருந்து விலகி, திறந்த வானத்தை நோக்கிப் பார்ப்பதன் மூலம் இந்த விண்கல் மழையை அவதானிக்க முடியும்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-12T17:18:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் வழக்கின் இறுதிக்கட்டம்: நடுக்கத்தில் பிள்ளையான்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/easter-attacks-suresh-sale-pillayan-law-and-order-1786547574"></link>
            <id>https://tamilwin.com/article/easter-attacks-suresh-sale-pillayan-law-and-order-1786547574</id>
            <summary type="text">உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் வழக்கின் மிக முக்கியமான பிரதான விசாரணை நிறைவடைந்துள்ளது.நவுஃபர் மௌலவி உட்பட 24 எதிரிகளுக்கு எதிராகக் கொழும்பு மூ...</summary>
            <content type="html"><![CDATA[<p>உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் வழக்கின் மிக முக்கியமான பிரதான விசாரணை நிறைவடைந்துள்ளது.</p><p>நவுஃபர் மௌலவி உட்பட 24 எதிரிகளுக்கு எதிராகக் கொழும்பு மூவரடங்கிய மேல் நீதிமன்றத்தில் நடைபெற்ற அரசுத் தரப்பு சாட்சிய விசாரணை நிறைவு பெற்றதை அடுத்து, வரலாற்றுச் சிறப்புமிக்க இறுதித் தீர்ப்பு வெளியாகவுள்ளது.</p><p>உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு உடந்தையான இருந்தார்கள் என்கின்ற அடிப்படையில் பிள்ளையான், சுரேஸ் சலே போன்றோர் விசாரிக்கப்படுகின்றனர்.அத்தோடு, இந்த சம்பவத்துடன் தொடர்புடைய பல்வேறு நபர்கள் தப்பித்துக் கொ்ணடு இருப்பதாக கூறப்படுகின்றது.</p><p>மேலும்,&nbsp;உயிர்த்த ஞாயிறு தாக்குதலை நடைமுறைப்படுத்திய ஒரு இராணுவ அதிகாரி இன்னும் தப்பித்துக் கொண்டு இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>
</p><p>
சுமார் 5 ஆண்டுகள் நடைபெற்ற இந்த வழக்கு விசாரணையின் பின்னணி, குற்றம் சாட்டப்பட்டவர்கள் மற்றும் அடுத்தகட்ட நகர்வுகள் பற்றிய முழுமையான தகவல்களை செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சியில் காணலாம்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/F4tJB1jZvCA" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-12T17:17:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[லொத்தர் எண்களை வைத்து சட்டவிரோத சூதாட்டம் ; கோப் உபகுழுவில் அதிர்ச்சித் தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/illegal-gambling-using-lottery-numbers-cope-1786554239"></link>
            <id>https://jvpnews.com/article/illegal-gambling-using-lottery-numbers-cope-1786554239</id>
            <summary type="text">தேசிய மற்றும் அபிவிருத்தி லொத்தர் சபைகளின் சீட்டிழுப்பு எண்களை அடிப்படையாகக் கொண்டு முன்னெடுக்கப்படும் சட்டவிரோத சூதாட்டம் காரணமாக நாட்டில் பாரிய சமூக...</summary>
            <content type="html"><![CDATA[<p>தேசிய மற்றும் அபிவிருத்தி லொத்தர் சபைகளின் சீட்டிழுப்பு எண்களை அடிப்படையாகக் கொண்டு முன்னெடுக்கப்படும் சட்டவிரோத சூதாட்டம் காரணமாக நாட்டில் பாரிய சமூகப் பேரழிவு உருவாகியுள்ளதாக தேசிய லொத்தர் சபையின் தலைவர் சிறில் எண்டனி பெரேரா தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p></p><p>தேசிய மற்றும் அபிவிருத்தி லொத்தர் சபைகளின் அதிகாரிகள் கோப் (COPE) உபகுழு முன்னிலையில் அழைக்கப்பட்டிருந்த சந்தர்ப்பத்தில், இந்த சட்டவிரோத சூதாட்டத்தின் தீவிரம் தொடர்பில் அவர் விரிவாக விளக்கமளித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/32e399d2-c19f-4144-9d80-64502ff79462/26-6a7ca781b3130.webp' /></p><p>
போதைப்பொருள் பாவனைக்கு அடுத்தபடியாக சமூகத்தில் மிகவும் வினாசகரமான நிலைமையை இந்தச் சூதாட்டம் ஏற்படுத்தி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>
சுமார் 4 முதல் 5 ஆண்டுகளுக்கு முன்னர் கிராமப்புறங்களில் 100 ரூபாய் போன்ற சிறிய தொகைகளில் ஆரம்பிக்கப்பட்ட ‘கட்டம் வெட்டும்’ என அழைக்கப்படும் இந்தச் சூதாட்டம், தற்போது பாரிய அளவில் வளர்ச்சியடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
</p><p>
பொருளாதார நடவடிக்கைகளுக்கு ஏற்ப பந்தயத் தொகையும் மாறுபடுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> குறிப்பாக, நெல் அறுவடை நடைபெறும் மனம்பிட்டி போன்ற பகுதிகளில் ஒரு கட்டத்திற்காக சுமார் 30,000 ரூபாய் வரை பந்தயம் கட்டப்படுவதாகவும், இரத்தினபுரி போன்ற மாணிக்கக்கல் வர்த்தகப் பகுதிகளில் ஒரு கட்டத்தின் பெறுமதி ஒரு இலட்சம் ரூபாயைத் தாண்டுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

இந்த சூதாட்ட முறையில் 0 முதல் 9 வரையிலான எண்களில் இருந்து இரண்டு எண்கள் தெரிவு செய்யப்பட்டு, அன்றைய தினம் வெளியாகும் லொத்தர் சீட்டின் கடைசி இரண்டு இலக்கங்களை அடிப்படையாகக் கொண்டு பந்தயம் மேற்கொள்ளப்படுவதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
</p><p>
தேசிய மற்றும் அபிவிருத்தி லொத்தர் சபைகளின் உத்தியோகபூர்வ சீட்டிழுப்புகள் இரவு 7.30 மணியளவில் இடம்பெறுகின்றன. </p><p>எனினும், ஒரு மாதத்திற்குத் தேவையான சீட்டிழுப்புகள் ஒரே தடவையில் நடத்தப்பட்டு, அவை தினமும் வெளியாகின்றன என்ற போலியான தகவல்கள் பரப்பப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
மேலும், WhatsApp குழுக்கள் ஊடாக இந்த சட்டவிரோத சூதாட்டம் ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் முன்னெடுக்கப்படுவதாகவும் கோப் உபகுழுவின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
</p><p>
இந்த சட்டவிரோத சூதாட்டத்தின் காரணமாக பலர் தங்களது காணிகள் மற்றும் சொத்துக்களை இழந்து நிர்க்கதிக்குள்ளாகியுள்ளதாக தேசிய லொத்தர் சபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a7869834-7608-4c2c-abe6-01682aba6d49/26-6a7ca78109d84.webp' /></p><p>அத்துடன், கணவன்மார்கள் இந்தச் சூதாட்டத்திற்கு அடிமையாகியதன் காரணமாக குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதுதொடர்பில் பெண்களிடமிருந்து தொடர்ச்சியாக முறைப்பாடுகள் கிடைத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>

இந்த மோசடி நடவடிக்கைகள் தொடர்பில் பொலிஸ் மா அதிபர், அரச புலனாய்வு சேவை மற்றும் மத்திய ஊழல் குற்றவியல் பிரிவு உள்ளிட்ட தரப்புகளிடம் ஏற்கனவே முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், எனினும் இதுவரை எதிர்பார்க்கப்பட்ட அளவில் நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
</p><p>
தேசிய லொத்தர் சட்டத்தின் கீழ், சட்டபூர்வமான லொத்தர் குலுக்கல்கள் தொடர்பில் மட்டுமே நிறுவனத்தினால் நேரடியாக சட்டத்தை நடைமுறைப்படுத்த முடியும் என்பதால், நிதி அமைச்சின் நேரடி ஆதரவின்றி இந்த சட்டவிரோத சூதாட்டத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பது கடினமானதாக உள்ளதாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
</p><p>
இந்த சட்டவிரோத சூதாட்டம் மேலும் விரிவடைந்தால், தேசிய மற்றும் அபிவிருத்தி லொத்தர் சபைகளின் வணிக நிலைத்தன்மை பாதிக்கப்படுவதுடன், சாதாரண மக்களின் பொருளாதார நிலை மற்றும் குடும்ப வாழ்க்கையும் கடுமையாகப் பாதிக்கப்படும் என தேசிய லொத்தர் சபையின் தலைவர் எச்சரித்துள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-12T17:04:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொலம்பியா நிலநடுக்கம் : 36 மணிநேரத்திற்கு பின்னர் உயிருடன் மீட்கப்பட்ட பெண்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/woman-pulled-alive-36-hours-after-colombia-quake-1786552224"></link>
            <id>https://ibctamil.com/article/woman-pulled-alive-36-hours-after-colombia-quake-1786552224</id>
            <summary type="text">கொலம்பியா நாட்டில் நிலநடுக்கம் ஏற்பட்டு 36 மணி நேரத்திற்குப் பிறகு இடிபாடுகளிலிருந்து பெண் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டார்

மேற்கு கொலம்பியாவை உலுக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொலம்பியா நாட்டில் நிலநடுக்கம் ஏற்பட்டு 36 மணி நேரத்திற்குப் பிறகு இடிபாடுகளிலிருந்து பெண் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டார்</p><p>

மேற்கு கொலம்பியாவை உலுக்கிய 7.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, 36 மணி நேரமாக இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியிருந்த 32 வயதுப் பெண் ஒருவரேஉயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.</p><h2>பத்து மணிநேரம் மீட்பு நடவடிக்கை</h2><p>பெரேரா நகரில் இடிந்து விழுந்த கட்டிடத்தின் அடியிலிருந்து, 10 மணி நேர நீண்ட மீட்பு நடவடிக்கைக்குப் பிறகு டேனியலா லார்கோ மீட்கப்பட்டார்.</p><p><iframe src="https://www.facebook.com/plugins/video.php?height=314&href=https%3A%2F%2Fweb.facebook.com%2Freel%2F1061886856576902%2F&show_text=false&width=560&t=0" width="560" height="314" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share" allowFullScreen="true"></iframe></p><p>

அவர் இடிபாடுகளில் சிக்கியிருந்த நான்கு கொங்கிரீட் தூண்களுக்கு கீழே தீயணைப்பு வீரர்கள் தோண்டிய சுரங்கப்பாதை வழியாக இறுதியாக அவரை அடைந்தனர்.
</p><p>இடிபாடுகளுக்கு அடியில் இருந்து தனது மகள் உதவி கேட்டு கதறியதை உள்ளூர்வாசி ஒருவர் கேட்டதாக லார்கோவின் தாய் AFP செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.</p><h2>நூற்றுக்கணக்கானோரைக் காணவில்லை</h2><p>
</p><p>

கொலம்பிய ஜனாதிபதி அபெலார்டோ டி லா எஸ்பிரியெல்லா சமூக ஊடகங்களில் அவரது மீட்பைக் கொண்டாடி, அதை "நமக்கு நம்பிக்கையைத் தரும் செய்தி" என்று விவரித்தார்.&nbsp; &nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fc01fd2e-15f9-4f92-ba6a-9bc448901017/26-6a7ca36fb0b1b.webp' /></p><p>அதிகாரபூர்வ புள்ளிவிவரங்களின்படி, இந்த நிலநடுக்கத்தில் குறைந்தது 188 பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் நூற்றுக்கணக்கானோரைக் காணவில்லை. </p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-12T16:51:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ்ப்பாணத்தின் பெருமை தாய்லாந்தில் – அவுஸ்திரேலிய கராத்தே அணியில் யாழ் வீரர்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/jaffna-athlete-to-represent-the-australian-team-1786551564"></link>
            <id>https://tamilwin.com/article/jaffna-athlete-to-represent-the-australian-team-1786551564</id>
            <summary type="text">யாழ்ப்பாணத்தைப் பூர்வீகமாகக் கொண்ட கராத்தே வீரரும், அவுஸ்திரேலியாவில் பொறியியலாளராகப் பணியாற்றி வருபவருமான ரத்னம் ரோஸி ஹரிந்த், அவுஸ்திரேலிய தேசிய கரா...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணத்தைப் பூர்வீகமாகக் கொண்ட கராத்தே வீரரும், அவுஸ்திரேலியாவில் பொறியியலாளராகப் பணியாற்றி வருபவருமான ரத்னம் ரோஸி ஹரிந்த், அவுஸ்திரேலிய தேசிய கராத்தே அணிக்குத் தெரிவாகியுள்ளார்.</p><p>

இவர், இன்று(12) புதன்கிழமை தாய்லாந்தில் ஆரம்பமாகியுள்ள நான்கு நாள் சர்வதேச கராத்தே போட்டியில் அவுஸ்திரேலிய தேசிய அணியின் சார்பில் பங்கேற்றுள்ளார்.</p><h2>கராத்தே பாடசாலைகள்</h2><p>
</p><p>
சென். ஜோன்ஸ் கல்லூரியில் ஆரம்பக் கல்வியைத் தொடர்ந்த ரத்னம் ரோஸி ஹரிந்த், பின்னர் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் உயர்கல்வியைத் தொடர்ந்து, மொறட்டுவைப் பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டப்படிப்பை நிறைவு செய்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c0e82499-1bd9-4cba-97de-9b0ec16f4746/26-6a7ca18a8f2dd.webp' /></p><p>
</p><p>
அதன் பின்னர், அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து கிரிபித் பல்கலைக்கழகத்தில் பொறியியல் முதுகலைப் பட்டப்படிப்பையும் நிறைவு செய்துள்ளார்.</p><p>

தற்போது அவுஸ்திரேலியாவில் புவித்தொழில்நுட்பப் பொறியியலாளராகப் பணியாற்றி வரும் இவர், கராத்தே துறையில் 6ஆம் டான் தரத்தைப் பெற்றுள்ளதுடன், சென்செயாகவும் செயற்பட்டு வருகின்றார்.
</p><p>
மேலும், இலங்கையின் பல்வேறு பகுதிகளில் இயங்கி வரும் கராத்தே பாடசாலைகள் ஊடாக 1,000க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கராத்தே பயிற்சிகளை வழங்கி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-08-12T16:38:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thileepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வவுனியாவில் கனரக வாகனம் முச்சக்கரவண்டியுடன் மோதியதில் ஒருவர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/one-killed-tipper-truck-three-wheeler-in-vavuniya-1786552662"></link>
            <id>https://tamilwin.com/article/one-killed-tipper-truck-three-wheeler-in-vavuniya-1786552662</id>
            <summary type="text">வவுனியா-&amp;nbsp; சூடுவெந்தபுலவு அண்மித்த பகுதியில் இடம்பெற்ற
விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.குறித்த விபத்தானது இன்று(12.8.2026) மால...</summary>
            <content type="html"><![CDATA[<p>வவுனியா-&nbsp; சூடுவெந்தபுலவு அண்மித்த பகுதியில் இடம்பெற்ற
விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.</p><p>குறித்த விபத்தானது இன்று(12.8.2026) மாலை இடம்பெற்றுள்ளது.</p><p>

வவுனியாவில் இருந்து சென்று கொண்டிருந்த கனரக வாகனம் சூடுவெந்தபுலவு
பகுதியில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த முச்சக்கர வண்டியுடன் மோதியதில்
இந்த விபத்து இடம்பெற்றது.</p><p></p><h2>மேலதிக விசாரணை</h2><p>

விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த ஒருவர் படுகாயமடைந்த நிலையில் சம்பவ
இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/630f94b4-b010-4307-ba36-4d11f4764e17/26-6a7ca158e2010.webp' /></p><p> மேலும் காயமடைந்த மூவர் வவுனியா வைத்தியசாலையில்
சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
</p><p>
விபத்து தொடர்பாக வவுனியா, உளுக்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை
முன்னெடுத்து வருகின்றனர்.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-12T16:38:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ட்ரம்ப்பிற்கு எதிராக நெதன்யாகு எடுத்துள்ள அதிரடி முடிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/netanyahu-s-bold-move-against-trump-for-gaza-1786512036"></link>
            <id>https://canadamirror.com/article/netanyahu-s-bold-move-against-trump-for-gaza-1786512036</id>
            <summary type="text">இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, தனது உள்நாட்டு அரசியல் எதிர்காலத்தைப் பாதுகாத்துக் கொள்வதற்காக டொனால்ட் ட்ரம்ப்பை எதிர்க்கத் தயாராக இருப்பதாக ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, தனது உள்நாட்டு அரசியல் எதிர்காலத்தைப் பாதுகாத்துக் கொள்வதற்காக டொனால்ட் ட்ரம்ப்பை எதிர்க்கத் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளமை உகல நாடுகளில் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><p>இத் தகவலை சவூதி அரேபியாவுக்கான முன்னாள் அமெரிக்கத் தூதரும் இஸ்ரேலுக்கான அமெரிக்கத் தூதரகத்தின் சார்ஜ் டி அஃபேர்ஸாகப் பணியாற்றியவருமான மைக்கேல் ராட்னி தெரிவித்துள்ளார்.</p><p>ட்ரம்ப்பிடமிருந்து எத்தகைய எதிர்வினை வந்தாலும் அதை எதிர்கொள்வதை விட, அத்திட்டத்தைப் பகிரங்கமாக நிராகரிப்பதே தனக்கு நல்லது என்று அவர் கணக்கிடுகிறார் என நான் நினைக்கிறேன் என்று ராட்னி தெரிவித்துள்ளார்.</p><p>இது முதன்மையாக அடுத்த சில மாதங்களில் வரவுள்ள நெதன்யாகுவின் தேர்தல் வாய்ப்புகள் பற்றியது என்று அவர் மேலும் கூறினார்.</p><p>ட்ரம்ப்புடன் அவருக்குள்ள உறவு எப்படியிருந்தது அல்லது இந்தத் திட்டத்தின் சில அம்சங்களை அவர் எந்த அளவுக்கு ஏற்றுக்கொள்வார் என்பதெல்லாம் இரண்டாம் பட்சமான விடயங்கள் என்றும் தனது வாக்காளர்களுக்கு அவர் பொதுவெளியில் என்ன சொல்கிறார் என்பதுதான் அவருக்கு இப்போது முக்கியம் என்றும் ராட்னி தெரிவித்துள்ளார்.</p><p><br></p>]]></content>
            <updated>2026-08-12T16:18:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இம்ரான்கான் உயிருடன் இல்லையா? பாகிஸ்தானில் பரபரப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/is-imran-khan-no-longer-alive-sensation-pakistan-1786539174"></link>
            <id>https://jvpnews.com/article/is-imran-khan-no-longer-alive-sensation-pakistan-1786539174</id>
            <summary type="text">பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் உயிருடன் இல்லை என மூன்று மூத்த இராணுவ அதிகாரிகள் தமக்குத் தெரிவித்ததாக பாகிஸ்தான் பத்திரிகையாளர் வஜாஹத் சயீத் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் உயிருடன் இல்லை என மூன்று மூத்த இராணுவ அதிகாரிகள் தமக்குத் தெரிவித்ததாக பாகிஸ்தான் பத்திரிகையாளர் வஜாஹத் சயீத் கான் கூறியுள்ளமை&nbsp; பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><p>&nbsp;2023ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் இம்ரான் கான் கைது செய்யப்பட்டு, தற்போது அடியாலா சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில், அவரைச் சந்திக்க குடும்பத்தினருக்கும் ஆதரவாளர்களுக்கும் அனுமதி மறுக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.</p><p>இந்த நிலையில், “இம்ரான்கான் நம்முடன் இல்லை; அவர் சிறையில் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை” என மூன்று மூத்த இராணுவ அதிகாரிகள் தம்மிடம் தெரிவித்ததாக வஜாஹத் சயீத் கான் தெரிவித்துள்ளார். எனினும், இது தற்போது உறுதிப்படுத்தப்படாத தகவலாகவே உள்ளது.</p><p>அதேசமயம், பாகிஸ்தான் இராணுவம் இம்ரான்கான் உயிரிழந்ததாக வெளியான தகவல்களை மறுத்து, அவை ஆதாரமற்றவை எனத் தெரிவித்துள்ளது.</p><p>இம்ரான்கானை விடுதலை செய்யக் கோரி அவரது பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் கட்சி ஆதரவாளர்கள் போராட்டங்களை முன்னெடுத்து வரும் நிலையில், இந்த புதிய தகவல்&nbsp; அங்கு மேலும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-12T16:18:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயது ; ஜனாதிபதி அநுரவுடன் சட்டத்தரணிகள் சங்கம் முக்கிய சந்திப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/retirement-age-of-judges-important-meeting-anura-1786551391"></link>
            <id>https://jvpnews.com/article/retirement-age-of-judges-important-meeting-anura-1786551391</id>
            <summary type="text">ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திற்கும் இடையிலான சந்திப்பு இன்று (12) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திற்கும் இடையிலான சந்திப்பு இன்று (12) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. </p><p>

சுமார் ஒரு மணித்தியாலத்திற்கும் மேலாக வெற்றிகரமாக நடைபெற்ற இக்கலந்துரையாடலில், நீதிபதிகளின் ஓய்வூதிய வயதெல்லையை நீடிப்பது தொடர்பான 22 ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டதுடன், அது குறித்து இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் கருத்துகளும் ஆலோசனைகளும் இங்கு முன்வைக்கப்பட்டன.</p><p></p><p> </p><p>

இங்கு முன்வைக்கப்பட்ட அனைத்துக் கருத்துகள் குறித்தும் கவனம் செலுத்திய ஜனாதிபதி, அது தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு மற்றும் நீதிமன்றக் கட்டமைப்பின் மேம்பாட்டிற்காக அரசாங்கம் திட்டமிட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் விளக்கமளித்தார்.</p><p> 

நீதியை நிலைநாட்டும் செயற்பாடானது நீதிமன்றங்களால் மாத்திரம் இடம்பெறுவதில்லை என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அது விசாரணைகள், வழக்குத் தாக்கல், நீதிமன்றம் ஆகிய அனைத்துத் துறைகளையும் உள்ளடக்கிய ஒருங்கிணைந்த செயற்பாடாகும் என்றும், அதன்படி, அந்த செயற்பாடுகளை வலுப்படுத்துவதற்காக சட்டமா அதிபர் திணைக்களம், இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழு, இலங்கை பொலிஸ் மற்றும் அரசாங்க பகுப்பாய்வாளர் திணைக்களம் ஆகிய நிறுவனங்களின் மனிதவளத்தை அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் குறிப்பிட்டார்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/04202580-a9c0-4400-a19a-eabef28ac828/26-6a7c9c619d31f.webp' /></p><p>மேலும், இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழுவின் சேவைகளை மாவட்ட மட்டத்தில் பரவலாக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும்,மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதுடன், பொதுமக்கள் எளிதில் அணுகும் வகையில் மேன்முறையீட்டு நீதிமன்ற நடவடிக்கைகளை மாகாண மட்டத்தில் நடைமுறைப்படுத்துவதற்கான உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.</p><p> 

மேலும், மக்களுக்கு நீதிமன்றச் செயற்பாடுகளை இலகுபடுத்துவதற்காக மேல்நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீதிமன்றங்களுக்குத் தேவையான பௌதிக வசதிகளை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் ஜனாதிபதி இங்கு சுட்டிக்காட்டினார்.</p><p> 

எனவே, நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயது எல்லையை நீடிப்பது தொடர்பான முடிவு எந்தவொரு நபரையும் அல்லது குழுவையும் இலக்காகக் கொண்டதல்ல, மாறாக நாட்டின் பொது நலனுக்காக எடுக்கப்பட்ட ஒரு தீர்மானமாகும் என்பதையும் ஜனாதிபதி வலியுறுத்தினார். </p><p>

இந்த சீர்திருத்தங்கள், முழுமையான கட்டமைப்புசார் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான பரந்த மறுசீரமைப்புகளின் ஒன்று மாத்திரமேயாகும் எனவும், இது தனது தனிப்பட்ட கருத்து அல்லது அரசாங்கத்தின் தனிப்பட்ட கருத்து அல்ல எனவும் ஜனாதிபதி இங்கு மேலும் சுட்டிக்காட்டினார். </p><p>

நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதுடன் நீதிபதிகளின் ஓய்வூதிய வயது எல்லையை நீடித்தல் போன்ற விடயங்கள் தொடர்பில் கொள்கை ரீதியான எதிர்ப்புகள் எதுவும் இல்லை எனத் தெரிவித்த இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் பிரதிநிதிகள், இந்தத் தீர்மானம் தொடர்பில் மேலும் ஆராய்ந்து ஏதேனுமொரு பொதுவான இணக்கப்பாட்டுக்கு வருவது பொருத்தமானது என்றும் பரி

ந்துரைத்தனர். </p><p>நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நானாயக்கார, ஜனாதிபதியின் சட்ட ஆலோசகர் சட்டத்தரணி ஜே.எம். விஜேபண்டார மற்றும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சட்டத்தரணி ரஜீவ் அமரசூரிய உட்பட அதன் சிரேஷ்ட பிரதிநிதிகள் பலர் இக்கலந்துரையாடலில் பங்கேற்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-12T16:16:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேட்டோ உச்சிமாநாட்டில் ட்ரம்ப் தங்கியிருந்த அறை வரை தகவல் திரட்டியிருந்த ஈரான்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/trump-during-nato-summit-1786551367"></link>
            <id>https://news.lankasri.com/article/trump-during-nato-summit-1786551367</id>
            <summary type="text">Iran Knew Where Trump Was Staying: துருக்கியில் நேட்டோ உச்சிமாநாட்டின்போது ட்ரம்ப் தங்கியிருந்த அறையின் தகவல் வரை ஈரான் தெரிந்து வைத்திருந்தது.
கடந்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>Iran Knew Where Trump Was Staying: துருக்கியில் நேட்டோ உச்சிமாநாட்டின்போது ட்ரம்ப் தங்கியிருந்த அறையின் தகவல் வரை ஈரான் தெரிந்து வைத்திருந்தது.
</p><p>கடந்த மாதம் துருக்கியில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ரகசியமாக விமானத்தை மாற்றிய அந்த அசாதாரண நடவடிக்கைக்கு, ஒரு தீவிரமான பாதுகாப்பு எச்சரிக்கையே காரணமாகக் கூறப்படுகிறது.</p><h2>ஏவுகணைத் தாக்குதல்</h2><p> நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தி ஒன்றில், ட்ரம்ப் பயணப்படும் விமானத்தின் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தக்கூடும் என்பது குறித்த தகவலை அமெரிக்க உளவுத்துறை அறிந்திருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/245fda99-8185-4395-992b-dd3e07703503/26-6a7c9c4a2556c.webp' /></p><p> </p><p>நேட்டோ உச்சிமாநாட்டின் இறுதி நாளான ஜூலை 8 அன்று, ட்ரம்ப் அங்காராவிலிருந்து புறப்படத் தயாராகிக்கொண்டிருந்தபோது இந்த அச்சுறுத்தல் எழுந்தது.</p><p>
அமெரிக்க ஜனாதிபதியின் உத்தியோகப்பூர்வ விமானமான 'ஏர் ஃபோர்ஸ் ஒன்' விமானத்தை இலக்கு வைக்கும் தரை-வான் ஏவுகணை தொடர்பான ஒரு குறிப்பிட்ட அச்சுறுத்தல் குறித்த பல்வேறு தகவல்களை அமெரிக்க உளவு அமைப்புகள் பெற்றிருந்ததாகவே, இந்த விவகாரம் தொடர்பில் தகவல் தெரிந்த இரு அமெரிக்க அதிகாரிகள் நியூயார்க் டைம்ஸ் நாளேடிடம் தெரிவித்துள்ளனர். </p><p>இது மட்டுமின்றி, நேட்டோ உச்சிமாநாடு நடைபெற்ற இடத்திற்கு அருகில், தோளில் வைத்து ஏவக்கூடிய ஏவுகணை ஒன்றை ஒருவர் எடுத்துச் சென்றதாகக் காணப்பட்டார் என்பது மற்றொரு கவலைக்குரிய தகவலாக இருந்தது.</p><p></p><p> </p><p>மேலும், அங்காராவில் ட்ரம்ப் எங்கு தங்கியிருந்தார் என்பது குறித்தும், அவர் தங்கியிருந்த கட்டிடத்தின் எந்தத் தளத்தில் இருந்தார் என்பது குறித்தும் ஈரானிய உளவு அமைப்புகளுக்குத் துல்லியமாகத் தெரிந்திருந்ததாக அமெரிக்க உளவுத்துறையும் நம்பியது. </p><p>இதனையடுத்து, துருக்கியிலிருந்து ஜனாதிபதியை வெளியேற்றுவதற்காக ஒரு அசாதாரணமான நடவடிக்கையை முன்னெடுக்கும் அளவுக்கு அந்தத் தகவல்கள் நம்பகமானதாகக் கருதப்பட்டது.</p><h2>ஈரானை நம்பவைக்க</h2><p> </p><p>இந்த நிலையிலேயே, ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்திலேயே தாம் புறப்பட இருப்பதாக ட்ரம்ப் வெளிப்படையாக அறிவித்ததும், ஊடகங்களின் முன்னிலையில் அவர் அந்த விமானத்தில் ஏறுவதும் ஊடகங்கள் பதிவு செய்தன. </p><p>ஆனால் உண்மையில் அது ஈரானை நம்பவைக்கும் ஒரு திட்டம். அந்த விமானமானது வெள்ளை மாளிகை அதிகாரிகள், பாதுகாப்புப் பணியாளர்கள், துணைப் பணியாளர்கள் மற்றும் பயணத்தை மேற்கொள்ளும் செய்தியாளர்கள் குழுவினர் ஆகியோருடன் குறித்த நேரத்தில் புறப்பட்டு சென்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/31fd73fe-e9fb-457b-bacd-c24c71a45101/26-6a7c9c496ea83.webp' /></p><p>
</p><p>ட்ரம்பை, விமான நிலைய உணவு வழங்கும் கொள்கலனுக்குள் வைத்து விமான நிலையத்தில் இருந்து ரகசியமாக வெளியேற்றி, பின்னர் ஒரு சிறிய இராணுவ விமானத்திற்கு மாற்றப்பட்டு, துருக்கியிலிருந்து வெளியேற்றப்பட்டார். </p><p>இந்த விவகாரம் தொடர்பில் ட்ரம்ப் ஊடகங்களிடம் இதுவரை விளக்கமளிக்கவில்லை என்பதுடன், அதிகாரிகள் ஆலோசனைகளுக்கு தாம் கட்டுப்பட்டதாக மட்டுமே பதிலளித்துள்ளார். </p><p>ஆனால், பத்திரிகையாளர்களில் சிலர், தாங்கள் பகடைக்காய்களாகப் பயன்படுத்தப்பட்டதற்கு தங்கள் கோபத்தை வெளிப்படுத்தியதோடு, பாதுகாப்பு அச்சுறுத்தல் குறித்துத் தங்களுக்குத் தெரிவிக்கத் தவறியதற்காக வெள்ளை மாளிகை அதிகாரிகளையும் விமர்சித்துள்ளனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-12T16:13:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான பெக்கோ சமனின் தாயார் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/mother-of-peko-saman-who-was-shot-dead-dies-1786550327"></link>
            <id>https://jvpnews.com/article/mother-of-peko-saman-who-was-shot-dead-dies-1786550327</id>
            <summary type="text">ஹம்பாந்தோட்டை மித்தெனிய, உல்ஹிட்டியாவ பகுதியில் இன்று (15) மாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களுடன் தொட...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹம்பாந்தோட்டை மித்தெனிய, உல்ஹிட்டியாவ பகுதியில் இன்று (15) மாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடையவராகக் குறிப்பிடப்படும் ‘பெக்கோ சமன்’ என்பவரின் தாயார் உயிரிழந்துள்ளார்.</p><p>
</p><p></p><p>துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த குறித்த பெண் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/33d20612-1d7f-40ac-bbcb-24ce66c9cc47/26-6a7c9839025e4.webp' /></p><p>சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. </p><p>துப்பாக்கிச் சூடு எதற்காக மேற்கொள்ளப்பட்டது, சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யார் என்பது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>

இந்நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதுடன், துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் மற்றும் சந்தேகநபர்கள் தொடர்பான தகவல்கள் விசாரணைகளின் பின்னர் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-12T15:58:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[துப்பாக்கிசூட்டிற்கு இலக்கான பெக்கோ சமனின் தாயார் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/backo-saman-s-mother-shot-1786540458"></link>
            <id>https://ibctamil.com/article/backo-saman-s-mother-shot-1786540458</id>
            <summary type="text">&amp;nbsp; புதிய இணைப்புமித்தெனிய, உல்ஹிட்டியாவ பகுதியில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான பெக்கோ சமனின் தாயார் உயிரிழந்தார்...</summary>
            <content type="html"><![CDATA[<h3>&nbsp; புதிய இணைப்பு</h3><p>மித்தெனிய, உல்ஹிட்டியாவ பகுதியில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான பெக்கோ சமனின் தாயார் உயிரிழந்தார். </p><p>

இன்று (15) மாலை இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றிருந்தது.
</p><p>
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><h2>முதலாம் இணைப்பு</h2><p>இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டு தடுப்புகாவலில் வைக்கப்பட்டுள்ள பாதாள உலக குற்றவாளி பெக்கோ சமனின் தாய் மீது துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
</p><p>
மித்தெனிய - உல்ஹிடியாவ பிரதேசத்தில் இன்று துப்பாக்கிச் சூடு பதிவாகியுள்ளது.</p><p></p><h2>காவல்துறையினர் விசாரணை</h2><p>
</p><p>
இதன்போது, காயமடைந்த பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bb841c5b-7491-4bd3-93c3-185d574457f9/26-6a7c744e4265e.webp' /></p><p>
</p><p>அத்தோடு, இந்த சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp; &nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-12T15:57:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சர்வதேச கராத்தே போட்டியில் அவுஸ்திரேலிய அணிக்காக களமிறங்கும் யாழ் வீரர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/jaffna-youth-in-international-karate-competition-1786548437"></link>
            <id>https://ibctamil.com/article/jaffna-youth-in-international-karate-competition-1786548437</id>
            <summary type="text">&amp;nbsp;யாழ்ப்பாணத்தைப் பூர்வீகமாகக் கொண்ட கராத்தே வீரரும், அவுஸ்திரேலியாவில்
பொறியியலாளராகப் பணியாற்றி வருபவருமான ரத்னம் ரோஸி ஹரிந்த் அவுஸ்திரேலிய தேச...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;யாழ்ப்பாணத்தைப் பூர்வீகமாகக் கொண்ட கராத்தே வீரரும், அவுஸ்திரேலியாவில்
பொறியியலாளராகப் பணியாற்றி வருபவருமான ரத்னம் ரோஸி ஹரிந்த் அவுஸ்திரேலிய தேசிய கராத்தே அணிக்கு தெரிவாகி, இன்று புதன்கிழமை
தாய்லாந்தில் ஆரம்பமாகவுள்ள நான்கு நாள் சர்வதேச கராத்தே போட்டியில் தேசிய
அணியின் சார்பில் பங்கேற்கவுள்ளார்.</p><p>சென்.ஜோன்ஸ் கல்லூரியில் ஆரம்பக் கல்வியையும், யாழ்ப்பாணம் இந்துக்
கல்லூரியில் உயர்கல்வியையும் தொடர்ந்த இவர், மொறட்டுவை பல்கலைக்கழகத்தில்
பொறியியல் பட்டப்படிப்பை நிறைவு செய்தவராவார்.</p><h2>ஆஸியில் புவித்தொழில்நுட்பப் பொறியியலாளராக கடமை</h2><p>

தொடர்ந்து அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து கிறிபித் பல்கலைக்கழகத்தில்
பொறியியல் முதுகலைப் பட்டப்படிப்பை நிறைவு செய்ததுடன், தற்போது
அவுஸ்திரேலியாவில் புவித்தொழில்நுட்பப் பொறியியலாளராகப் பணியாற்றி
வருகின்றார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f410ac6b-c52a-4a52-80b6-479e6c8f4a9c/26-6a7c948cb4137.webp' /></p><p>
</p><p>
கராத்தே துறையில் 6ஆம் டான் தரத்தைப் பெற்றுள்ள இவர், இலங்கையின் பல்வேறு பகுதிகளில் இயங்கிவரும் கராத்தே பாடசாலைகளின் ஊடாக, ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கராத்தே பயிற்சி வழங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-12T15:48:00+00:00</updated>
        </entry>
    </feed>
