<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-08-31T10:03:08+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[கன்னியா விகாரை கட்டுமானத்திற்கு நீதிமன்றம் தற்காலிக தடை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/court-halts-construction-kanniya-hot-springs-site-1788167645"></link>
            <id>https://ibctamil.com/article/court-halts-construction-kanniya-hot-springs-site-1788167645</id>
            <summary type="text">கன்னியாவில் அமைக்கப்படும் விகாரை தொடர்பான புனர்நிர்மாண வேலைகளுக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.
விகாரை தொடர்பான புனர்நிர்மாண வேலைகளுக்கு எதிர்ப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கன்னியாவில் அமைக்கப்படும் விகாரை தொடர்பான புனர்நிர்மாண வேலைகளுக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.</p><p>
விகாரை தொடர்பான புனர்நிர்மாண வேலைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து கன்னியா காணி உரிமையாளர் கோகிலரமணியால் மனுதாக்கல் செய்யப்பட்டிருந்தது.</p><p>இந்த மனுவின் அடிப்படையில் இன்றைய தினம் (31-08-2026) வழக்கு
விசாரணை எடுத்துக் கொள்ளப்பட்டது.</p><p>
</p><p></p><h2>எட்டப்பட்ட உடன்படிக்கை</h2><p>இதன் போது மனுதாரர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் மற்றும் பிரசாந்தினி உதயகுமார் முன்னிலையாகி இருந்தனர்.
</p><p>
அதே சமயம் அரச சட்டத்தரணி, திருக்கோணமலை மாவட்ட தொல்பொருள் திணைக்கள
பணிப்பாளர் W. W. சுரங்க பெரேராவும் வருகை தந்திருந்தார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/94c41f26-4465-434f-9fb5-71289449c2af/26-6a954ef35a343.webp' /></p><p>வழக்கின் போது 2019 ஆம் ஆண்டு இரு தரப்புக்கு இடையில் எட்டப்பட்ட
உடன்படிக்கையின் அடிப்படையில் தொல்பொருள் இடங்களை பாதுகாப்பதற்கான உரிமை
மாத்திரமே கன்னியா விடயத்தில் வழங்கப்பட்டிருப்பதாகவும் புனர்நிர்மாணம்
செய்வதற்கு உடன்பாடு ஏற்படவில்லை என்ற அடிப்படையில் வழக்கு வாதம்
வைக்கப்பட்டது.
</p><p>
மேலும் அரச சட்டத்தரணியால் குறித்த இடத்தை பார்வையிட்டு வாதங்களை முன்வைக்க
காலம் கோரப்பட்ட நிலையில் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி வரை
வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. </p><p>மேலும் அதுவரையான காலப்பகுதியில் எந்த புதிய
கட்டுமானப் பணிகளையோ, மாற்றங்களையோ செய்யக்கூடாது என்ற உத்தரவும்
வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-31T10:00:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[தனியார் பாதுகாப்பு சேவைகளை ஒழுங்குபடுத்த நடவடிக்கை : வெளியான அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/new-regulations-for-private-security-services-1788159738"></link>
            <id>https://ibctamil.com/article/new-regulations-for-private-security-services-1788159738</id>
            <summary type="text">இலங்கையின் தனியார் பாதுகாப்பு சேவைகள் தொடர்பில்&amp;nbsp;பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகர அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார்.அதன்படி, நாட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் தனியார் பாதுகாப்பு சேவைகள் தொடர்பில்&nbsp;பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகர அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார்.</p><p>அதன்படி, நாட்டில் தனியார் பாதுகாப்பு சேவைகளை ஒழுங்குபடுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.</p><p>அந்தவகையில், இதற்கான சட்டத் திருத்தங்களை உள்ளடக்கிய சட்டமூலம் எதிர்வரும் சில மாதங்களுக்குள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.</p><h2>சட்டமூலத்தை தயாரித்தல்</h2><p>
</p><p>குறித்த சட்டமூலத்தை தயாரிப்பதற்கு சட்ட மா அதிபர் திணைக்களம், தொழில் திணைக்களம் மற்றும் காவல்துறை ஆகியவற்றின் உதவிகள் பெறப்படவுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2c87d60d-7238-4566-9f0d-4615fd4c2caa/26-6a954e5832957.webp' /></p><p></p><p>&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-31T09:56:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறைச்சாலை ஆடைகளை அணிவதற்கு முன்னர் சில அரசியல்வாதிகளின் திட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/the-opposition-s-intense-struggle-1788168345"></link>
            <id>https://tamilwin.com/article/the-opposition-s-intense-struggle-1788168345</id>
            <summary type="text">

சிறைச்சாலை ஆடைகளை அணிவதற்கு முன்னர் இந்த அரசாங்கத்தை கவிழ்க்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தீவிரமாக செயற்படுவதாக ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப...</summary>
            <content type="html"><![CDATA[<p>

சிறைச்சாலை ஆடைகளை அணிவதற்கு முன்னர் இந்த அரசாங்கத்தை கவிழ்க்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தீவிரமாக செயற்படுவதாக ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நந்தன பத்மகுமார தெரிவித்துள்ளார்.</p><p>

பொதுக் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,</p><p> 

தற்போது நம் நாட்டில் உள்ள எதிர்க்கட்சியினர் அரசாங்கத்தை விமர்சிப்பதற்கு மாத்திரமே காத்திருக்கின்றனர்.</p><h2>காத்திருக்கும் எதிர்க்கட்சிகள்&nbsp;</h2><p> </p><p>

வீடுகளில் கிளிகள், புறாக்கள் என செல்லப்பிராணிகளை மக்கள் கூடுகளில் வைத்து வளர்ப்பார்கள்.

அவை உணவு உண்ணும் போது அவற்றின் கூடுகளில் இருந்த உணவுகள் கீழே சிதறி விழும்.

இவ்வாறு விழும் உணவுகளுக்காகவே கூண்டுக்கு கீழே சிலப் பிராணிகள் காத்திருக்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/993f7eab-4c44-436b-a1b0-768b8cf40471/26-6a954f3c54010.webp' /></p><p> </p><p>அப்படித்தான் இன்று நம் நாட்டில் இருக்கும் எதிர்க்கட்சியும்.

அரசாங்கத்தை விமர்சிப்பதற்காக சந்தர்ப்பங்களை நோக்கிக் காத்திருக்கின்றனர்.</p><p> 

தற்போதைய வெள்ளை ஆடைகளை களைந்து, சிறைச்சாலை ஆடைகளை அணிவதற்கு முன்னர் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை வீழ்த்த வேண்டும் என்று அவர்கள் போராடிக் கொண்டிருக்கின்றனர் என குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p>&nbsp;</p><hr><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/d7-8j-P_5fw" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p> </p>]]></content>
            <updated>2026-08-31T09:54:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[சாப்பாட்டில் மயக்க மருந்து... இந்துவுக்கு காத்திருக்கும் சிக்கல்! - சின்னஞ்சிறு கிளியே இன்றைய எபிசோட் அப்டேட்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/chinnan-siru-kiliye-serial-today-episode-1788166609"></link>
            <id>https://cineulagam.com/article/chinnan-siru-kiliye-serial-today-episode-1788166609</id>
            <summary type="text">தமிழ் சின்னத்திரையில் Zee தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சின்னஞ்சிறு கிளியே. கடந்த ...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழ் சின்னத்திரையில் Zee தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சின்னஞ்சிறு கிளியே. கடந்த எபிசோடில் ஆதரவற்ற குழந்தைகளுக்காக இந்து அன்புடன் உணவு சமைத்து எடுத்துச் சென்றிருந்த நிலையில், இன்றைய எபிசோடில் பரபரப்பான திருப்பங்கள் அரங்கேற உள்ளன.</p><p>அதன்படி, இந்து சமைத்த உணவில் வாந்தி, பேதி மற்றும் மயக்கத்தை ஏற்படுத்தும் மருந்து கலக்கப்பட்டிருப்பது தெரிய வருகிறது. ஆனால் இந்த விஷயம் குறித்து எதுவும் அறியாத இந்து, அந்த உணவை ஆதரவற்ற குழந்தைகளிடம் கொண்டு செல்கிறாள்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/25702dbb-3d78-43f0-8815-f60f6a7fa88b/26-6a9541f9da15f.webp' /></p><p>மறுபக்கம், விஷ்வா பசிக்கிறது என்று கூறியதும், சுகுணா இந்து சமைத்த உணவை அவனுக்கு பரிமாறுகிறாள். விஷ்வாவும் அந்த உணவை சாப்பிடத் தொடங்க, இதைப் பார்த்த புவனா அதிர்ச்சி அடைகிறாள். பின்னர் சாப்பாட்டில் மயக்க மருந்து கலந்திருப்பதை விஷ்வாவிடம் கூறி, குழந்தைகளுக்கு ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால் இந்துவே குற்றவாளியாகி கைது செய்யப்படுவாள் என்ற தனது திட்டத்தை வெளிப்படுத்துகிறாள். அதன்பின் விஷ்வாவை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கிறாள்.
</p><p>இந்நிலையில் கர்ணாவும் பசிப்பதாக வந்து உணவு கேட்க, சுகுணா மற்றும் ஜெயந்தி அதே உணவை அவனுக்கும் கொடுக்கிறார்கள். கர்ணாவும் அதை சாப்பிடத் தொடங்கியதும் புவனா மீண்டும் அதிர்ச்சியில் உறைகிறாள்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/481d0c20-07f0-4eff-bcaf-7dba7c31257e/26-6a9541f92113f.webp' /></p><p>இதனால் அடுத்து என்ன நடக்கப் போகிறது? புவனாவின் திட்டம் வெற்றியடையுமா? இந்து புதிய சிக்கலில் சிக்கிக்கொள்ளப் போகிறாளா? என்ற பரபரப்பான கேள்விகளுக்கான பதிலை அறிய, சின்னஞ்சிறு கிளியே தொடரை Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத் தவறாதீர்கள்.
&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-31T09:50:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் வீடு புகுந்து அடாவடி ; தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் இராஜினாமா!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/rampage-house-in-jaffna-npp-member-resigns-1788163166"></link>
            <id>https://jvpnews.com/article/rampage-house-in-jaffna-npp-member-resigns-1788163166</id>
            <summary type="text">&amp;nbsp; வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்திய தேசிய மக்கள் சக்தியின் வடமராட்சி தென்மேற்கு பிரதேச சபை உறுப்பினர் சந்திரகுமார் கணேசரூபன் தனது...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்திய தேசிய மக்கள் சக்தியின் வடமராட்சி தென்மேற்கு பிரதேச சபை உறுப்பினர் சந்திரகுமார் கணேசரூபன் தனது உள்ளூராட்சி சபை உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்துள்ளார். </p><p>

யாழ்ப்பாணம் நெல்லியடிப் பகுதியில் உள்ள ஓய்வுபெற்ற அரச உத்தியோகஸ்தர் ஒருவரின் வீட்டின் மீது கல்லெறிந்து தாக்குதல் நடத்தி இருந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d10bd686-b9b6-4202-a936-a1781315dabb/26-6a95345fd6910.webp' /></p><h2>கைது செய்த&nbsp; பொலிஸார்&nbsp;</h2><p>அத்துடன், வீட்டு வளாகத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கெமராக்களையும் (CCTV) குறித்த உள்ளூராட்சி சபை உறுப்பினர் தலைமையிலான கும்பல் கடந்த சனிக்கிழமை நள்ளிரவு சேதப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><p> </p><p>

அது தொடர்பில் வீட்டாரால் நெல்லியடி பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சந்தேகநபர்களை கைது செய்தனர். </p><p>

பொலிஸ் நிலையத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதன் பின்னர் அவர்கள் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.</p><p></p><p> 

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, குறித்த உறுப்பினர் தனது பிரதேச சபை உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-31T09:34:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[கூட்டு விருத்தசேதனச் சடங்கில் பலியான 43 சிறுவர்கள்: நாடொன்றில் அதிரவைத்த சம்பவம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/mass-circumcision-ceremony-1788168848"></link>
            <id>https://news.lankasri.com/article/mass-circumcision-ceremony-1788168848</id>
            <summary type="text">Mass circumcision ceremony leaves 43 boys dead: கூட்டு விருத்தசேதனச் சடங்கில் 43 சிறுவர்கள் மரணமடைந்துள்ளனர்.
தென்னாப்பிரிக்காவில் நடந்த கூட்டு விருத...</summary>
            <content type="html"><![CDATA[<p>Mass circumcision ceremony leaves 43 boys dead: கூட்டு விருத்தசேதனச் சடங்கில் 43 சிறுவர்கள் மரணமடைந்துள்ளனர்.
</p><p>தென்னாப்பிரிக்காவில் நடந்த கூட்டு விருத்தசேதனச் சடங்கில் 43க்கும் மேற்பட்ட சிறுவர்கள் மரணமடைந்ததுடன் டசின் கணக்கானவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/33c87310-ca6a-4596-b5a6-85164a7380a2/26-6a954a9310e7f.webp' /></p><p>
</p><p>நாடு முழுவதும் உள்ள சிறுவர்களைப் பருவ முதிர்ச்சிக்குத் தயார்படுத்தும் நோக்கில், 'உல்வாலுகோ' (Ulwaluko) என்று அழைக்கப்படும் சடங்குகள் ஆண்டுக்கு இருமுறை நடத்தப்படுகின்றன. </p><p>இதன் ஒருபகுதியாக, தீட்சை பெறுபவர்கள் மீது வெள்ளைக் களிமண் பூசப்பட்டு, அவர்களது குடும்பங்களிலிருந்து பிரிக்கப்பட்டு, வீட்டிற்குத் திருப்பி அனுப்பப்படுவதற்கு முன்பு, சிறுவன் நிலையிலிருந்து முழுமையான ஆண்மை நிலைக்கு மாறுவதற்காக மூன்று வாரங்கள் செலவிடுகின்றனர். </p><p>அந்தச் சடங்கின் ஒரு பகுதியாக, பல வருட அனுபவம் வாய்ந்த பாரம்பரிய அறுவை சிகிச்சை நிபுணர்களால் சிறுவர்களுக்கு விருத்தசேதனம் செய்யப்பட வேண்டும். </p><p>ஆனால், பல உல்வாலுகோ சடங்குகள், சட்டவிரோத தீட்சைப் பள்ளிகளில் பணிபுரியும் திறமையற்ற நபர்களால் நடத்தப்படுகின்றன; அவர்கள் பழைய ஈட்டிகள், கத்தரிக்கோல்கள் அல்லது சவரக்கத்திகளைப் பயன்படுத்தி, கொடூரமான அறுவை சிகிச்சைகளைச் செய்கின்றனர். </p><p>இச்சடங்குகள் உயிருக்கே ஆபத்தானவையாக அமையக்கூடும். 2024-ஆம் ஆண்டில், குளிர்கால மற்றும் கோடைக்காலச் சடங்குகளின்போது மொத்தம் 93 சிறுவர்கள் மரணமடைந்தனர்; மேலும் 11 பேரின் ஆண் உறுப்பு துண்டிக்கப்பட்டது.</p><p></p><p> </p><p>தென்னாப்பிரிக்க அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வறிக்கை ஒன்றில், 2021 மற்றும் 2024-ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் சிறுவர்கள் 322 பேர் மரணமடைந்ததையும், ஆயிரக்கணக்கானோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதையும், மேலும் பலரின் ஆண் உறுப்புகள் அகற்றப்படும் நிலை ஏற்பட்டதையும் பதிவு செய்துள்ளது. </p><p>முறையற்ற மற்றும் சட்டவிரோதமான சடங்குப் பயிற்சி நிலையங்களை அமைத்துள்ள குற்றவியல் குழுக்கள் மீதே இந்த அறிக்கை பழி சுமத்தியது; பயிற்சி பெறாத அறுவை சிகிச்சை நிபுணர்கள் மற்றும் செவிலியர்களைக் கொண்டு செய்யப்படும் இத்தகைய விருத்தசேதனங்கள் தவறாக அமைந்து விடுகின்றன.</p><p> பள்ளிகளில் விருப்பமில்லாத சிறுவர்கள் கத்தியால் குத்தப்பட்டும், நீரில் மூழ்கடிக்கப்பட்டும் அல்லது அடித்துக் கொல்லப்பட்டும் உள்ளதாகத் தகவல்கள் வந்தபோதிலும், திசு அழுகல், சீழ் தொற்று மற்றும் கடுமையான நீரிழப்பு ஆகியவையே மரணத்திற்கான முக்கியக் காரணங்களாக உள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6ff9c955-9129-4a6a-b917-33d1ef1dad04/26-6a954a925e2ce.webp' /></p><p> </p><p>பதிவு செய்யப்படாத தீட்சைப் பள்ளிகள் அமைப்பதை சட்டவிரோதமாக்கவும், அனைத்து பாரம்பரிய அறுவை சிகிச்சை நிபுணர்களும் அரசால் முழுமையாகப் பயிற்சி பெற்று தகுதி பெற்றிருக்க வேண்டும் எனக் கட்டாயப்படுத்தவும் மரபுசார் தீட்சைச் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. </p><p>பதிவு செய்யப்படாத தீட்சைப் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுத்த தென்னாப்பிரிக்க காவல்துறை, அவற்றில் 42 பள்ளிகளை மூடியுள்ளதுடன், 40 பேரைக் கைது செய்து 180 சிறுவர்களை மீட்டுள்ளது. </p><p>ஆனாலும், நாடு முழுவதும் உள்ள பலருக்கு இந்தச் சடங்குகள் இன்னமும் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருக்கின்றன. உல்வாலுகோ எனப்படும் சடங்கிற்கு உட்படுத்தப்படாவிட்டால், சிறுவர்கள் பூர்வகுடிச் சபைக் கூட்டங்களில் அமரவோ, பல சமூக நடவடிக்கைகளில் பங்கேற்கவோ அல்லது திருமணம் செய்துகொள்வதற்கோ அனுமதிக்கப்படுவதில்லை. </p><p>இந்தச் சடங்குகள் பல நூற்றாண்டுகளாக, கிராமங்களிலிருந்து தொலைவில் பிரத்யேகமாகக் கட்டப்பட்ட குடில்களில் இரகசியமாக நடத்தப்பட்டு வருகின்றன; பூர்வகுடி மூத்தவர்கள், ஒரு அறுவை சிகிச்சை நிபுணர் மற்றும் தீட்சை பெற்றவர்களைத் தவிர வேறு யாரும் அங்கு நுழைய முடியாது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4f83acac-cbde-4022-82d3-b638335d55b1/26-6a954a93bbdb4.webp' /></p><p> </p><p>ஆண்டுதோறும் நிகழும் அதிர்ச்சியூட்டும் இறப்பு விகிதம் இருந்தபோதிலும், நூற்றுக்கணக்கான ஆண்டுகள் பழமையான ஒரு புனிதச் சடங்கின் மூலம் பல்லாயிரக்கணக்கான சிறுவர்கள் சிறுவர் பருவத்திலிருந்து முதிர்ந்த ஆணாக மாறும் நிலையை அடைகிறார்கள். </p><p>சட்டப்படி 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் தீட்சைப் பள்ளிகளில் நுழைய அனுமதிக்கப்படுவதில்லை, ஆனால் சட்டவிரோதமான அந்தத் தீட்சைப் பள்ளிகளில் பத்து வயது சிறுவர்களுக்கும் அடிக்கடி அறுவை சிகிச்சைகள் செய்யப்படுகின்றன. </p><p>பாரம்பரிய அறுவை சிகிச்சை நிபுணர்கள், சிறுவர்களை மூன்று வாரங்கள் வரை அழைத்துச் சென்று, அவர்களுக்கு உயிர்வாழும் திறன்கள், பூர்வகுடியின வரலாறு மற்றும் ஒரு ஆணாக எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் ஆகியவற்றைக் கற்றுக்கொடுத்து, பின்னர் அந்த உயிர் பிரியும் அறுவை சிகிச்சையைச் செய்வதற்காகப் பெற்றோர்களிடமிருந்து கட்டணம் வசூலிக்கிறார்கள். </p><p>தென்னாப்பிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலா, ஒரு சுதந்திரப் போராட்ட வீரராக அங்கீகரிக்கப்படுவதற்கு முன்பு, தனது பதின்ம வயதில் மேற்கொள்ளப்பட்ட விருத்தசேதனத்தின் ஆன்மீகப் பொருள் குறித்து எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-31T09:32:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாண் விலை 10 ரூபாவால் உயர்வு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/bread-price-increased-by-10-rupees-srilanka-1788168897"></link>
            <id>https://jvpnews.com/article/bread-price-increased-by-10-rupees-srilanka-1788168897</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;கோதுமை மா விலை அதிகரிப்பை தொடர்ந்து இன்று (31) நள்ளிரவு முதல் 450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவால் உயர்த்த பேக்கரி உரிமையாளர்கள் சங...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;கோதுமை மா விலை அதிகரிப்பை தொடர்ந்து இன்று (31) நள்ளிரவு முதல் 450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவால் உயர்த்த பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. </p><p>

இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அந்தச் சங்கத்தின் தலைவர் எம். கே. ஜயவர்தன, கோதுமை மா இறக்குமதி நிறுவனங்கள் அண்மையில் ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலையை 15 ரூபாவால் உயர்த்தி இருந்தன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bcc71713-de4f-48c9-998a-7ccb6b709243/26-6a954ac29f8dd.webp' /></p><p>
</p><p>
அதனைத் தொடர்ந்தே இவ்வாறு பாணின் விலையை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். </p><p>

 அதேவேளை , ஏனைய <a href="https://jvpnews.com/article/bakery-product-prices-rise-decision-1788152006" target="_blank">பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலை</a>களை நுகர்வோருக்கு அநீதி ஏற்படாத வகையில் உயர்த்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-31T09:32:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[மன்னாரில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வீதிக்கிறங்கிய அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/development-officers-in-mannar-stage-a-protest-1788165672"></link>
            <id>https://ibctamil.com/article/development-officers-in-mannar-stage-a-protest-1788165672</id>
            <summary type="text">மன்னாரில் அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் சேவைப் பிரமாணக் குறிப்பை
உடனடியாக நடைமுறைப்படுத்த கோரி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.&amp;nbsp...</summary>
            <content type="html"><![CDATA[<p>மன்னாரில் அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் சேவைப் பிரமாணக் குறிப்பை
உடனடியாக நடைமுறைப்படுத்த கோரி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.&nbsp;</p><p>
மன்னார் மாவட்ட செய்லகத்திற்கு முன்பாக குறித்த இன்று இன்று (31.08.2026) காலை 10 மணிக்கு இடம்பெற்றது.&nbsp;</p><p>அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான சேவைப் பிரமாணக் குறிப்பை உடனடியாக நடைமுறைப்படுத்துதல், உரிமைகள் மற்றும் சேவை தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு காணுதல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து இந்தப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.</p><p></p><h2>கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்</h2><p>
</p><p>மாகாண மற்றும் மாவட்ட மட்டத்தில் பணியாற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் சேவை நிலை, பதவி உயர்வு, சம்பள நிர்ணயம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக நீண்டகாலமாக முன்வைக்கப்பட்டு வரும் கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு வழங்கப்பட வேண்டும் என தொழிற்சங்கத்தினர் வலியுறுத்துகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9ab60aaa-0195-4bef-9881-b93cdd15142f/26-6a954502c78ac.webp' /></p><p>
</p><p>
குறித்த போராட்டத்தில் மாவட்ட அரச திணைக்களங்களில் கடமையாற்றுகின்ற பல
நூற்றுக்கணக்கான அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் குறித்த போராட்டத்தில் கலந்து
கொண்டிருந்தனர்.</p><p>போராட்டத்தை தொடர்ந்து அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சார்பாக
மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் -ஐ சந்தித்து ஜனாதிபதிக்கு
கையளிக்க வேண்டிய மனுவை ரசாங்க அதிபரிடம் கையளித்தனர்.
</p><p>
அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக அரச
திணைக்களங்களில்
அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் முன்னெடுக்க வேண்டிய பணிகள் ஸ்தம்பிதம்
அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-31T09:31:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிக் பாஸ் 10-ல் கலந்துகொள்ள போகும் பிரபலங்கள்.. முழு லிஸ்ட் இதோ]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/bigg-boss-10-tamil-contestants-list-viral-on-net-1788160997"></link>
            <id>https://viduppu.com/article/bigg-boss-10-tamil-contestants-list-viral-on-net-1788160997</id>
            <summary type="text">பிக் பாஸ் 10வருகிற செப்டம்பர் 6-ஆம் தேதி முதல் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் பிக் பாஸ் 10-வது சீசன் தொடங்கவுள்ளது.
...</summary>
            <content type="html"><![CDATA[<h2>பிக் பாஸ் 10</h2><p>வருகிற செப்டம்பர் 6-ஆம் தேதி முதல் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் பிக் பாஸ் 10-வது சீசன் தொடங்கவுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0b1b4a26-d7b9-4618-a6b1-e320eca91ce7/26-6a952be84e3d8.webp' /></p><h2>பிரபலங்கள்&nbsp;லிஸ்ட் </h2><p>இந்நிலையில், பிக் பாஸ் 10-ல் கலந்துகொள்ள போகும் பிரபலங்கள் குறித்த தகவல் ஒன்றின் பின் ஒன்றாக வெளியாகி வருகிறது. 

இதில், ஜனனி அசோக் குமார், புவி அரசு, ஹேமா ராஜ்குமார், ஆர்யன், பாடினி குமார், ஆல்யா மானசா, அக்ஷிதா அசோக் ஷபானா, நவீன் குமார் மற்றும் வினோத் பாபு ஆகியோர் கலந்துகொள்ளப்போவதாக கூறப்படுகிறது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cda4046d-dc61-46c0-b019-065a17f5359f/26-6a952be90a3df.webp' /></p><p>இவர்களுடன் குக் வித் கோமாளி பிரபலம் டாலியும் பிக் பாஸ் வீட்டிற்குள் என்ட்ரி தரப்போவதாக பேச்சு அடிபடுகிறது.

மேலும், ஓய்வுபெற்ற முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் முரளி விஜய் இப்போட்டியில் பங்குபெற போவதாகவும் கூறப்படுகிறது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d262ece8-2b02-4fd7-bcce-12ddba6678e6/26-6a952be9ba46c.webp' /></p><p>பிரபல youtuber பிரஷாந்த், ஜாய் கிரீசிலடா ஆகியோரும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளப்போவதாக தகவல் வெளியாகியுள்ளன. 

இவர்களுடன் காமென் மேன் போட்டியில் இருந்து தேர்வு செய்யப்பட்ட முனியம்மா, ஜேசன் மற்றும் கரிஷ்மா ஆகிய மூன்று நபர்கள் கலந்துகொள்ள போகிறார்களாம்.</p>]]></content>
            <updated>2026-08-31T09:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[அர்ச்சுனா எம்.பியின் நாடாளுமன்ற உறுப்புரிமை பதவி : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/mp-archchuna-s-parliamentary-seat-to-supreme-court-1788165413"></link>
            <id>https://tamilwin.com/article/mp-archchuna-s-parliamentary-seat-to-supreme-court-1788165413</id>
            <summary type="text">நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை செல்லுபடியற்றதாக்கும் உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை செல்லுபடியற்றதாக்கும் உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை உயர் நீதிமன்றத்திற்கு அனுப்புமாறு அவரது சட்டத்தரணி இன்று (31.08.2026) மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.</p><h2>பொருத்தமான சந்தர்ப்பத்தில் உத்தரவு&nbsp;</h2><p>இம்மனு இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் அழைக்கப்பட்டபோதே, அர்ச்சுனா எம்.பி சார்பில் முன்னிலையான சட்டத்தரணி சேனானி தயாரத்ன இக்கோரிக்கையை முன்வைத்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4056913c-1bb3-40c2-9700-2ea9b38d4b11/26-6a9542093b264.webp' /></p><p>

எவ்வாறாயினும், இக்கோரிக்கை தொடர்பில் பொருத்தமான சந்தர்ப்பத்தில் உத்தரவு பிறப்பிக்கப்படும் என மேன்முறையீட்டு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-31T09:27:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மத்திய கிழக்கில் மீண்டும் மோதல் ; உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/crude-oil-rises-renewed-fighting-in-middle-east-1788168488"></link>
            <id>https://canadamirror.com/article/crude-oil-rises-renewed-fighting-in-middle-east-1788168488</id>
            <summary type="text">&amp;nbsp; மத்திய கிழக்கில் மீண்டும் ஆரம்பமாகியுள்ள புதிய போர் மோதல்கள் காரணமாகவே கச்சா எண்ணெய் விலைகள் உயர்வடைந்துள்ளன.
அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இட...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; மத்திய கிழக்கில் மீண்டும் ஆரம்பமாகியுள்ள புதிய போர் மோதல்கள் காரணமாகவே கச்சா எண்ணெய் விலைகள் உயர்வடைந்துள்ளன.
</p><p>அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே மீண்டும் போர் மோதல்கள் ஆரம்பமாகியுள்ள நிலையில், உலகச் சந்தையிலும்&nbsp; அது எதிரொலித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8e351a6d-d792-4d9b-9a47-4ecdd0a4e15f/26-6a954929e79c1.webp' /></p><p> 

இதற்கமைய, WTI ரக கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 2.57% அதிகரித்து 85.54 அமெரிக்க டொலர்களாக உயர்ந்துள்ளதுடன், ப்ரெண்ட் (Brent) ரக கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 2.84% அதிகரித்து 90.60 அமெரிக்க டொலர்களாக உயர்ந்துள்ளது.</p><p> 

 மர்பன் (Murban) ரக கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலையும் 4.04% என்ற சதவீதத்தில் அதிகரித்து 95.75 அமெரிக்க டொலர்களாக உயர்ந்துள்ளது. </p><p>

கடந்த ஜூலை மாதத்திற்குப் பிறகு முதன்முறையாக ஈரான் நாட்டின் லாரக் தீவு மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதுடன், அதற்குப் பதிலடியாக ஜோர்தானில் உள்ள இரண்டு அமெரிக்க இராணுவ முகாம்கள் மீது ஈரான் பெலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதல்களையும் நடத்தியுள்ளது.&nbsp; &nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-31T09:25:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கல்வி அனுமதி தொடர்பில் கனடா வெளியிட்டுள்ள ஒரு முக்கிய செய்தி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/study-permit-rules-changes-from-sep-1-in-canada-1788167979"></link>
            <id>https://canadamirror.com/article/study-permit-rules-changes-from-sep-1-in-canada-1788167979</id>
            <summary type="text">Canada Study Permit Rules changes from September 1: செப்டம்பர் 1ஆம் திகதி முதல், கனடா கல்வி அனுமதி விதிகளில் சில மாற்றங்கள் செய்யப்பட உள்ளன.

கனடாவி...</summary>
            <content type="html"><![CDATA[<p>Canada Study Permit Rules changes from September 1: செப்டம்பர் 1ஆம் திகதி முதல், கனடா கல்வி அனுமதி விதிகளில் சில மாற்றங்கள் செய்யப்பட உள்ளன.</p><p>

கனடாவில் கல்வி கற்க வரும் வெளிநாட்டு மாணவர்கள், தங்கள் சொந்தத் தேவைகளுக்காக கனடாவில் யாரையும் சார்ந்திருக்காமல், தங்களுக்கான தேவைகளை தாங்களே சந்திப்பதற்காக, அவர்கள் தங்கள் வங்கிக்கணக்கில் ஒரு குறிப்பிட்ட தொகையை வைத்திருப்பதை உறுதி செய்துகொள்ளவேண்டும் என்றொரு விதி உண்டு.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/249e871b-89f2-46b8-b8cb-0da55ce7bb07/26-6a95472c3c189.webp' /></p><p>
இந்நிலையில், அது தொடர்பான விதிகளில், நாளை முதல் சில மாற்றங்கள் அமுலுக்கு வருகின்றன.
</p><p>
கனடாவில் கல்வி கற்க வரும் வெளிநாட்டு மாணவர்கள், தங்களுக்கான தேவைகளை தாங்களே சந்திப்பதற்காக தங்கள் வங்கிக்கணக்கில் 22,895 டொலர்கள் வைத்திருக்கவேண்டும் என ஜூன் மாதத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது.
</p><p>
தற்போது மீண்டும் அந்த விதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆம், இனி வெளிநாட்டு மாணவர்கள் தங்களுக்கான தேவைகளை தாங்களே சந்திப்பதற்கான தங்கள் வங்கிக்கணக்கில் 23,448 டொலர்கள் வைத்திருக்கவேண்டும் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
விடயம் என்னவென்றால், இது மாணவர்கள் கல்வி கற்பது, போக்குவரத்து போன்ற விடயங்களை உள்ளடக்கிய கல்விக் கட்டணம் அல்ல. அது, தனிச் செலவு!
</p><p>
அத்துடன், கனடாவில் கல்வி கற்பதற்காக உரிமம் கோரி விண்ணப்பிக்கும் மாணவர்கள், தங்களுடன் தங்கள் குடும்ப உறுப்பினர்கள் எத்தனை பேரை அழைத்துவருகிறார்களோ, அதற்கேற்ப அவர்கள் வங்கிக்கணக்கில் வைத்திருக்கவேண்டிய தொகையும் அதிகரிக்கும்.
</p><p>
ஒரு மாணவர் தன்னுடன் தன் உறவினர்கள் இரண்டு பேரை கனடாவுக்கு அழைத்துவர விரும்பினால், அவர் தன் வங்கிக்கணக்கில் 29,192 டொலர்கள் வைத்திருக்கவேண்டும்.
</p><p>
மூன்று பேரை அழைத்துவர விரும்பினால், அவர் தன் வங்கிக்கணக்கில் 35,888 டொலர்களும், நான்கு பேரை அழைத்துவர விரும்பினால் தன் வங்கிக்கணக்கில் 43,572 டொலர்களும் வைத்திருக்கவேண்டும்.
</p><p>
இப்படியே இந்த தொகை அதிகரித்துக்கொண்டே செல்லும். அதாவது, ஒரு மாணவர் கனடாவுக்கு கல்வி கற்பதற்காக வந்தால், அவர் கனடாவில் வேலை செய்யாமலே, தனது மற்றும் தன்னுடன் அழைத்துவந்துள்ள குடும்ப உறுப்பினர்களின் செலவுகளை சந்திக்கும் வகையில் தன்னிடம் போதுமான பணம் உள்ளது என்பதை நிரூபித்தாகவேண்டும் என்கிறது, கனடா புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பு!&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-31T09:20:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[நள்ளிரவு முதல் பாணின் விலை அதிகரிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/price-of-bread-to-increase-by-rs-10-from-midnight-1788167217"></link>
            <id>https://tamilwin.com/article/price-of-bread-to-increase-by-rs-10-from-midnight-1788167217</id>
            <summary type="text">450 கிராம் நிறையுடைய ஒரு இறாத்தல் பாணின் விலையை 10 ரூபாயால் அதிகரிக்க அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.
குறித்த&amp;nbsp; விலை...</summary>
            <content type="html"><![CDATA[<p>450 கிராம் நிறையுடைய ஒரு இறாத்தல் பாணின் விலையை 10 ரூபாயால் அதிகரிக்க அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.
</p><p>குறித்த&nbsp; விலை திருத்தம் இன்று(31.08.2026) நள்ளிரவு முதல் நடைமுறைப்படுத்தப்படும் என அந்த சங்கம் அறிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c4338dfa-b63f-4d44-91a5-d71d9bef138e/26-6a954695bc877.webp' /></p><p>

கோதுமை மாவுக்கான விலை 17 ரூபாயால் அதிகரிக்கப்பட்டதை தொடர்ந்து பாணின் விலை அதிகரிக்கப்படுவதாக அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-31T09:17:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அர்ச்சுனாவின் எம்.பி பதவி ; உயர் நீதிமன்றத்திற்கு மாற்றக் கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/archchuna-ramanathan-mp-seat-petition-high-court-1788167948"></link>
            <id>https://jvpnews.com/article/archchuna-ramanathan-mp-seat-petition-high-court-1788167948</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;யாழ்ப்பாண் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை செல்லுபடியற்றதாக்கும் உத்தரவொன்றைப் பிறப்பிக...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;யாழ்ப்பாண் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை செல்லுபடியற்றதாக்கும் உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை உயர் நீதிமன்றத்திற்கு அனுப்புமாறு அவரது சட்டத்தரணி இன்று (31) மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார். </p><p>

இம்மனு இன்று (31) மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் அழைக்கப்பட்டபோதே, அர்ச்சுனா எம்.பி சார்பில் ஆஜரான சட்டத்தரணி சேனானி தயாரத்ன இக்கோரிக்கையை முன்வைத்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/90dbb8de-ca3e-4079-94fc-7dbebb2e32f1/26-6a95470e342ec.webp' /></p><p></p><p> 

எனினும், இக்கோரிக்கை தொடர்பில் பொருத்தமான சந்தர்ப்பத்தில் உத்தரவு பிறப்பிக்கப்படும் என மேன்முறையீட்டு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-31T09:16:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவுக்கு கல்வி கற்கச் செல்பவர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/canada-study-permit-rules-changes-from-september-1-1788167658"></link>
            <id>https://news.lankasri.com/article/canada-study-permit-rules-changes-from-september-1-1788167658</id>
            <summary type="text">Canada Study Permit Rules changes from September 1: செப்டம்பர் 1ஆம் திகதி முதல், கனடா கல்வி அனுமதி விதிகளில் சில மாற்றங்கள் செய்யப்பட உள்ளன.

கனடாவி...</summary>
            <content type="html"><![CDATA[<p>Canada Study Permit Rules changes from September 1: செப்டம்பர் 1ஆம் திகதி முதல், கனடா கல்வி அனுமதி விதிகளில் சில மாற்றங்கள் செய்யப்பட உள்ளன.</p><p>

கனடாவில் கல்வி கற்க வரும் வெளிநாட்டு மாணவர்கள், தங்கள் சொந்தத் தேவைகளுக்காக கனடாவில் யாரையும் சார்ந்திருக்காமல், தங்களுக்கான தேவைகளை தாங்களே சந்திப்பதற்காக, அவர்கள் தங்கள் வங்கிக்கணக்கில் ஒரு குறிப்பிட்ட தொகையை வைத்திருப்பதை உறுதி செய்துகொள்ளவேண்டும் என்றொரு விதி உண்டு.</p><p>

இந்நிலையில், அது தொடர்பான விதிகளில், நாளை முதல், அதாவது, 2026ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் 1ஆம் திகதி முதல் சில மாற்றங்கள் அமுலுக்கு வருகின்றன.
</p><h3>
கல்வி அனுமதி தொடர்பில் சில மாற்றங்கள்</h3><p>

கனடாவில் கல்வி கற்க வரும் வெளிநாட்டு மாணவர்கள், தங்களுக்கான தேவைகளை தாங்களே சந்திப்பதற்காக தங்கள் வங்கிக்கணக்கில் 22,895 டொலர்கள் வைத்திருக்கவேண்டும் என ஜூன் மாதத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6fd50aea-7019-4dfd-80ed-b1b816ab54d2/26-6a9545ebdfc0f.webp' /></p><p>
தற்போது மீண்டும் அந்த விதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆம், இனி வெளிநாட்டு மாணவர்கள் தங்களுக்கான தேவைகளை தாங்களே சந்திப்பதற்கான தங்கள் வங்கிக்கணக்கில் 23,448 டொலர்கள் வைத்திருக்கவேண்டும் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
விடயம் என்னவென்றால், இது மாணவர்கள் கல்வி கற்பது, போக்குவரத்து போன்ற விடயங்களை உள்ளடக்கிய கல்விக் கட்டணம் அல்ல. அது, தனிச் செலவு!
</p><p>
அத்துடன், கனடாவில் கல்வி கற்பதற்காக உரிமம் கோரி விண்ணப்பிக்கும் மாணவர்கள், தங்களுடன் தங்கள் குடும்ப உறுப்பினர்கள் எத்தனை பேரை அழைத்துவருகிறார்களோ, அதற்கேற்ப அவர்கள் வங்கிக்கணக்கில் வைத்திருக்கவேண்டிய தொகையும் அதிகரிக்கும்.&nbsp;</p><p></p><p>
ஒரு மாணவர் தன்னுடன் தன் உறவினர்கள் இரண்டு பேரை கனடாவுக்கு அழைத்துவர விரும்பினால், அவர் தன் வங்கிக்கணக்கில் 29,192 டொலர்கள் வைத்திருக்கவேண்டும்.</p><p>

மூன்று பேரை அழைத்துவர விரும்பினால், அவர் தன் வங்கிக்கணக்கில் 35,888 டொலர்களும், நான்கு பேரை அழைத்துவர விரும்பினால் தன் வங்கிக்கணக்கில் 43,572 டொலர்களும் வைத்திருக்கவேண்டும்.
</p><p>
இப்படியே இந்த தொகை அதிகரித்துக்கொண்டே செல்லும். அதாவது, ஒரு மாணவர் கனடாவுக்கு கல்வி கற்பதற்காக வந்தால், அவர் கனடாவில் வேலை செய்யாமலே, தனது மற்றும் தன்னுடன் அழைத்துவந்துள்ள குடும்ப உறுப்பினர்களின் செலவுகளை சந்திக்கும் வகையில் தன்னிடம் போதுமான பணம் உள்ளது என்பதை நிரூபித்தாகவேண்டும் என்கிறது, கனடா புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பு!&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-31T09:14:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[22ஆவது திருத்தத்திற்கு எதிரான மனுக்கள் நாளை பரசீலனைக்கு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/filing-of-petitions-for-and-against-22nd-amendment-1788147942"></link>
            <id>https://ibctamil.com/article/filing-of-petitions-for-and-against-22nd-amendment-1788147942</id>
            <summary type="text">புதிய இணைப்புஅரசாங்கத்தினால் நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ள 22ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை ஆட்சேபனைக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>அரசாங்கத்தினால் நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ள 22ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை ஆட்சேபனைக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை நாளைய தினம் (01) பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ள உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
</p><p>
அதன்படி குறித்த மனுக்களை பரிசீலனை செய்வதற்காக ஐவர் அடங்கிய நீதியரசர்கள் குழாமொன்று நியமிக்கப்பட்டுள்ள நிலையில் இதன் தலைவராக பிரதம நீதியரசர் ப்ரீத்தி பத்மன் சூரசேன செயற்படவுள்ளார்.</p><p>
நீதியரசர்களான அச்சல வெங்கப்புலி, அர்ச்சுன ஒபேசேகர, சம்பத் அபேகோன் மற்றும் கிஹான் குலதுங்க ஆகியோர் குறித்த குழாமின் ஏனைய உறுப்பினர்களாக செயற்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><h2>முதலாம் இணைப்பு&nbsp;</h2><h5>22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் : இன்றுடன் நிறைவடையும் காலக்கெடு!</h5><p>இலங்கையின் 22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் இன்றுடன் (31) நிறைவடைகின்றது. </p><p>

நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவால் கடந்த 18 ஆம் திகதி 22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்ட மூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.</p><p> 

இதனைத் தொடர்ந்து, எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகள், இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் உட்பட பல சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் இச்சட்ட மூலத்திற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர்.</p><p></p><h2>இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்&nbsp;</h2><p>இதேவேளை&nbsp;உத்தேச அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தத்திற்குத் தமது எதிர்ப்பை வெளிப்படுத்த அரச வைத்திய அதிகாரிகள் சங்கமும் அரச பல் சத்திர சிகிச்சை வைத்திய நிபுணர்கள் சங்கமும் தீர்மானித்துள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ebf20ee1-6ed3-4def-a238-6fae29b67117/26-6a95042d33294.webp' /></p><p> </p><p>

இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் உள்ளிட்ட தொடர்புடைய அனைத்துத் தொழில்முறை அமைப்புகளுடனும் இணைந்து இந்த முன்மொழிவுக்கு எதிராகச் செயற்பட அந்தச் சங்கங்களின் பிரதிநிதிகள் உடன்பாட்டுக்கு வந்துள்ளனர்.</p><p> </p><p>இந்தநிலையில் 22 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக இதுவரை 27 மனுக்களும், அதற்கு ஆதரவாக 3 மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-31T09:13:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Fathima</name>
            </author>
            <title type="text"><![CDATA[ராகுல்காந்தி தான் பிரதமர் வேட்பாளர்: வைகோ]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/vaiko-said-rahul-gandhi-as-pm-candidate-1788167395"></link>
            <id>https://ibctamilnadu.com/article/vaiko-said-rahul-gandhi-as-pm-candidate-1788167395</id>
            <summary type="text">இந்திய அளவில் நடைபெறும் தேர்தலில் ராகுல் காந்தி தான் பிரதமர் வேட்பாளராக இருக்க முடியும், தமிழக முதலமைச்சர் விஜய்க்கு கற்பனையில் கூட அந்த எண்ணம் இருக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்திய அளவில் நடைபெறும் தேர்தலில் ராகுல் காந்தி தான் பிரதமர் வேட்பாளராக இருக்க முடியும், தமிழக முதலமைச்சர் விஜய்க்கு கற்பனையில் கூட அந்த எண்ணம் இருக்காது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். </p><p>இதுகுறித்து அவர் மேலும் பேசுகையில், முதலமைச்சர் விஜய் ஊழலற்ற அரசாக நடத்தி வருகிறார், எந்த அலுவலகத்துக் சென்றாலும் பொதுமக்கள் பணம் கொடுக்க வேண்டியதில்லை.</p><p>

100 நாட்களை கடந்த தவெக அரசுக்கு 100க்கு 80 மதிப்பெண்கள் வழங்குகிறேன்.தமிழக அரசுக்கு எனது நற்சான்றை வழங்குகிறேன்.
</p><p>
தமிழக அரசு ஊழலை ஒழிக்கும் நடவடிக்கையில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது என தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3eed22ea-5c60-4ec8-9d6f-8de82b8b7657/26-6a9545585844e.webp' /><br></p><p>

மேலும் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் கற்பனையில் கூட பிரதமர் ஆவது நினைக்க மாட்டார், இந்திய அளவில் நடைபெறும் தேர்தலில் ராகுல்காந்தி தான் பிரதமர் வேட்பாளராக கண்டிப்பாக இருக்க முடியும், அமைச்சர்கள் சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவிக்காமல் இருக்க முதலமைச்சர் வலியுறுத்த வேண்டும் என தெரிவித்தார்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/_meFQPUBBrk" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-08-31T09:11:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Farook Sihan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சாய்ந்தமருது பிரதேசத்தில் நாயிறைச்சி விற்பனை...! மக்களுக்கு வெளியான அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/dog-meat-sale-in-the-sainthamaruthu-area-1788164993"></link>
            <id>https://ibctamil.com/article/dog-meat-sale-in-the-sainthamaruthu-area-1788164993</id>
            <summary type="text">சாய்ந்தமருது பிரதேசத்தில் நாயிறைச்சி விற்பனை செய்யப்பட்டதாக சமூக
ஊடகங்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பரப்பப்பட்டு வரும் தகவல்களில் எவ்வித
உண்மைத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>சாய்ந்தமருது பிரதேசத்தில் நாயிறைச்சி விற்பனை செய்யப்பட்டதாக சமூக
ஊடகங்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பரப்பப்பட்டு வரும் தகவல்களில் எவ்வித
உண்மைத்தன்மையும் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் இந்த தெளிவுப்படுத்தலை வழங்கியுள்ளது.</p><p>

கடந்த 29 ஆம் திகதி சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தின் கீழ்
உள்ள பிரதான வீதிப் பகுதியில் சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் பொதுச்
சுகாதாரப் பரிசோதகர்கள் இணைந்து வழக்கமான உணவுப் பாதுகாப்புப் பரிசோதனைகளை
மேற்கொண்டனர்.</p><p>
</p><p></p><h2>ஆட்டிறைச்சிக் கடை</h2><p>இதன்போது அப்பகுதியிலுள்ள ஆட்டிறைச்சிக் கடையொன்றில் விற்பனைக்காக
வைக்கப்பட்டிருந்த ஆட்டிறைச்சி பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d1a4c036-4e79-4742-a258-58e9a9d74ae4/26-6a954140f1af6.webp' /></p><p>குறித்த
இறைச்சியானது உரிய சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாமலும் அங்கீகரிக்கப்பட்ட
கால்நடை வைத்தியரின் பரிசோதனைச் சான்றிதழைப் பெறாமலும் விற்பனை செய்யப்ப்ட்டமை
கண்டறியப்பட்டது.
</p><p>
இதனையடுத்து பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களால் குறித்த ஆட்டிறைச்சி உடனடியாகக்
கையகப்படுத்தப்பட்டு கடை உரிமையாளரின் அனுமதியுடன் அழிக்கப்பட்டது.</p><p>
</p><p></p><h2>வைத்திய அதிகாரி&nbsp;</h2><p>எனினும், இச்சம்பவத்தைத் தவறாகச் சித்தரித்து சாய்ந்தமருது பகுதியில்
நாயிறைச்சி விற்பனை செய்யப்பட்டதாகவும் அதனைப் பரிசோதகர்கள் பறிமுதல்
செய்ததாகவும் சிலர் உள்நோக்கத்துடன் சமூக ஊடகங்களில் பொய்ப் பிரசாரங்களை
முன்னெடுத்து வருகின்றனர்.</p><p>
</p><p></p><p>இது குறித்துச் சுட்டிக்காட்டியுள்ள சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம்,
பொதுமக்கள் மத்தியில் தேவையற்ற அச்சத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தும்
நோக்கிலேயே இத்தகைய வதந்திகள் பரப்பப்படுவதாகத் தெரிவித்துள்ளது.
</p><p>
எனவே பொதுமக்கள் இந்த உண்மைக்குப் புறம்பான தகவல்களை நம்பவோ அல்லது சமூக
வலைத்தளங்களில் பகிரவோ வேண்டாம் என்றும் இது தொடர்பில் எவ்வித அச்சமும்
கொள்ளத் தேவையில்லை என்றும் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம்
கேட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-31T09:10:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாக்ஸ் ஆபிஸ்: 17 நாட்களில் விஸ்வநாத் &amp; சன்ஸ் திரைப்படம் செய்துள்ள வசூல்.. முழு விவரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/vishwanath-and-sons-17-days-box-office-collection-1788159551"></link>
            <id>https://cineulagam.com/article/vishwanath-and-sons-17-days-box-office-collection-1788159551</id>
            <summary type="text">முன்னணி நடிகரான சூர்யா நடிப்பில் வெளிவந்த விஸ்வநாத் &amp;amp; சன்ஸ் திரைப்படத்தின் 17 நாட்கள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

விஸ்வநாத் &amp;amp; சன்ஸ...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னணி நடிகரான சூர்யா நடிப்பில் வெளிவந்த விஸ்வநாத் &amp; சன்ஸ் திரைப்படத்தின் 17 நாட்கள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.</p><p></p><p>
</p><h2>
விஸ்வநாத் &amp; சன்ஸ்
</h2><p>
தென்னிந்திய சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக இருக்கும் வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி கடந்த ஆகஸ்ட் 14-ஆம் தேதி வெளியான திரைப்படம் விஸ்வநாத் &amp; சன்ஸ்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e41e1824-2e55-413e-a5ed-c3653c880ffb/26-6a9526429c0c7.webp' /></p><p> 

இப்படத்தில் ஜோடியாக <a href="https://www.youtube.com/watch?v=oOnYddVcTfI" target="_blank">மமிதா பைஜூ</a> நடித்துள்ளார். பிரம்மாண்ட பொருட்செலவில் எடுக்கப்பட்ட இப்படம் கலவையான விமர்சனங்களை சந்தித்தாலும், பாக்ஸ் ஆபிஸில் முதல் நாளில் இருந்தே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.</p><h2>பாக்ஸ் ஆபிஸ்
</h2><p>
விஸ்வநாத் &amp; சன்ஸ் திரைப்படத்தின் வசூல் குறித்த விவரங்களை தொடர்ந்து ஒவ்வொரு நாளும் பார்த்து வருகிறோம். அந்த வகையில், 17 நாட்களில் இப்படம் செய்துள்ள வசூல் எவ்வளவு என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/db04b6fd-5d75-4fbf-bb2c-2c5a8e496a45/26-6a952641e402f.webp' /></p><p>அதன்படி, 17 நாட்களில் விஸ்வநாத் &amp; சன்ஸ் திரைப்படம் உலகளவில் ரூ. 210 கோடி வசூல் செய்துள்ளது. மேலும், தமிழ்நாட்டில் ரூ. 60 கோடி வசூலித்துள்ளது. இனி வரும் நாட்களில் எவ்வளவு வசூல் செய்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.</p>]]></content>
            <updated>2026-08-31T09:10:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இன்று நள்ளிரவு முதல் பாண் விலை அதிகரிப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/flour-price-hike-pushes-up-bakery-prices-1788153015"></link>
            <id>https://ibctamil.com/article/flour-price-hike-pushes-up-bakery-prices-1788153015</id>
            <summary type="text">புதிய இணைப்புஇன்று (31) நள்ளிரவு முதல் 450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாயால் உயர்த்த பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. 

இன்று நட...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>இன்று (31) நள்ளிரவு முதல் 450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாயால் உயர்த்த பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. </p><p>

இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அந்தச் சங்கத்தின் தலைவர் எம். கே. ஜயவர்தன இதனைக் குறிப்பிட்டார்.</p><p> கோதுமை மா இறக்குமதி நிறுவனங்கள் அண்மையில் ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலையை 17 ரூபாயால் உயர்த்தியதனைத் தொடர்ந்தே இவ்வாறு பாணின் விலையை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். </p><p>

இதனிடையே, ஏனைய பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலைகளை நுகர்வோருக்கு அநீதி ஏற்படாத வகையில் உயர்த்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><h2>முதலாம் இணைப்பு</h2><p>கோதுமை மாவின் விலை உயர்த்தப்பட்டதைத் தொடர்ந்து, பேக்கரி உணவுகளின் விலைகளையும் அதிகரிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
</p><p>
அந்தவகையில், பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திகளின் விலை மாற்றம் தொடர்பில் இன்றைய தினம் தீர்மானம் எடுக்கப்பட உள்ளது.</p><p>குறித்த விடயத்தை அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்த்தன தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>கோதுமை மாவின் விலை</h2><p>


பிரீமா மற்றும் செரண்டிப் ஆகிய நிறுவனங்கள் ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலையை நேற்றுமுன்தினம் முதல் நடைமுறைக்கு வரும் வகையில் 17 ரூபாவினால் உயர்த்தியுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/65045cd1-f63a-45cc-8b13-f6d1c9a80588/26-6a951b5dac3fa.webp' /></p><p>



மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழல் காரணமாக, கடந்த பெப்ரவரி மாதம் முதல் கப்பல் கட்டணங்கள், காப்பீட்டுக் கட்டணங்கள் மற்றும் தானியங்களின் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளதால் இந்த விலைத்திருத்தம் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
</p><p>


இதன்படி, மாவின் விலை அதிகரிப்புக்கேற்ப பேக்கரி உற்பத்திகளின் விலைகளை உயர்த்துவது தொடர்பான இறுதி முடிவு இன்று ஊடகங்களுக்கு அறிவிக்கப்படும் என சங்கத்தின் தலைவர் ஜயவர்தன குறிப்பிட்டுள்ளார்.
</p><p>


கோதுமா மாவின் விலை உயர்வினைத் தொடர்ந்து ஏற்கனவே சிற்றுண்டிகளின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-31T09:08:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[57 ஆண்டுகால சாதனையை 15 வயதில் முறியடித்த வைபவ் சூர்யவன்ஷி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/vaibhav-sooryavanshi-breaks-57-year-record-1788167298"></link>
            <id>https://news.lankasri.com/article/vaibhav-sooryavanshi-breaks-57-year-record-1788167298</id>
            <summary type="text">Vaibhav Sooryavanshi breaks 57 years old record: இந்திய கிரிக்கெட் அணி வீரர் வைபவ் சூர்யவன்ஷி துலீப் கிண்ணத்தில் புதிய சாதனை படைத்தார். 

துலீப் கிண...</summary>
            <content type="html"><![CDATA[<p>Vaibhav Sooryavanshi breaks 57 years old record: இந்திய கிரிக்கெட் அணி வீரர் வைபவ் சூர்யவன்ஷி துலீப் கிண்ணத்தில் புதிய சாதனை படைத்தார். </p><p>

துலீப் கிண்ணப் போட்டியில் கிழக்கு மண்டல அணிக்காக விளையாடி வரும் வைபவ் சூர்யவன்ஷி 57 ஆண்டுகால சாதனையை முறியடித்தார்.&nbsp;</p><h2>வைபவ் சூர்யவன்ஷி&nbsp;</h2><p> 

கிழக்கு மண்டலம் மற்றும் மத்திய மண்டலம் அணிகளுக்கு இடையிலான துலீப் கிண்ண அரையிறுதிப் போட்டி பெங்களூருவில் நடந்து வருகிறது.&nbsp;</p><p><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr">Vaibhav Sooryavanshi hitting it all around the park🤯🔥 <a href="https://t.co/lP9WGFwVDP">pic.twitter.com/lP9WGFwVDP</a></p>&mdash; Abhishek (@unfav_abhishek3) <a href="https://x.com/unfav_abhishek3/status/2094281091062628592?ref_src=twsrc%5Etfw">August 31, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>

மத்திய மண்டல அணி முதல் இன்னிங்ஸில் 266 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது. அதிகபட்சமாக ரிங்கு சிங் 60 ஓட்டங்கள் எடுத்தார். முகேஷ் குமார், அபிஜித் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.&nbsp;</p><p></p><p>
பின்னர் முதல் இன்னிங்ஸை தொடங்கிய கிழக்கு மண்டல அணியில் வைபவ் சூர்யவன்ஷி (Vaibhav Sooryavanshi) சிக்ஸர்களை பறக்கவிட்டு வாணவேடிக்கை காட்டினார்.&nbsp;</p><h2>57 ஆண்டுகால சாதனை</h2><p>
அதிரடி அரைசதம் அடித்த அவர், லக்ஷ்மண் சிங்கின் 57 ஆண்டுகால சாதனையை முறியடித்தார். 

அதாவது, 1969ஆம் ஆண்டில் லக்ஷ்மண் சிங் தனது 16 வயது 23-வது நாளில் துலீப் கிண்ணத்தில், தனது முதல் அரை சதத்தை அடித்தார். </p><p>

ஆனால் வைபவ் சூர்யவன்ஷி 15 வயது 157 நாட்களிலேயே அரைசதம் கடந்து, துலீப் கிண்ண வரலாற்றிலேயே அரைசதம் அடித்த <b>மிக இளம் வயது துடுப்பாட்ட வீரர்</b> என்ற சாதனையைப் படைத்தார். </p><p>

தொடர்ந்து ஆடிய வைபவ் சூர்யவன்ஷி 81 பந்துகளில் 7 சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 92 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து சதத்தை தவறவிட்டார்.&nbsp; &nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/891078cc-1dea-4084-a26f-f87e1d6a5326/26-6a954485ac72c.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-31T09:08:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கைதாகி எட்டு மாதங்களின் பின் வெளியான வெனிசுலா முன்னாள் அதிபர் புகைப்படம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/photo-of-former-venezuelan-president-released-1788159702"></link>
            <id>https://canadamirror.com/article/photo-of-former-venezuelan-president-released-1788159702</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp;அமெரிக்க காவலில் உள்ள வெனிசுலாவின் முன்னாள் அதிபர் நிக்கோலஸ் மதுரோ, தன்னை பற்றிய புகைப்படங்களை முதன்முறையாக சமூக வலைதளங்களில் வெளி...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp; &nbsp;அமெரிக்க காவலில் உள்ள வெனிசுலாவின் முன்னாள் அதிபர் நிக்கோலஸ் மதுரோ, தன்னை பற்றிய புகைப்படங்களை முதன்முறையாக சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். </p><p>

கடந்த ஜனவரி மாதம் அமெரிக்க நடவடிக்கையில் கைது செய்யப்பட்ட பின்னர், சுமார் எட்டு மாதங்களுக்கு பிறகு அவர் காவலில் இருக்கும் தோற்றத்தை வெளிப்படுத்தும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3437b06b-3db8-46e5-9f55-f1c16e93b889/26-6a9526d86761a.webp' /></p><h2>நியூயார்க்கில்&nbsp; &nbsp;புரூக்ளின் மெட்ரோபாலிட்டன் தடுப்பு மையத்தில் ...</h2><p>
 
 
ஆகஸ்ட் 30ஆம் தேதி வெளியிடப்பட்ட அந்த இரண்டு புகைப்படங்களிலும் மதுரோ சாம்பல் நிற டிராக்சூட் மற்றும் வெள்ளை நிற காலணிகள் அணிந்தபடி புன்னகையுடன் காணப்படுகிறார்.
</p><p>
 இரு கைகளாலும் வெற்றி சின்னம் காட்டும் வகையிலும் அவர் போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படங்கள் நியூயார்க்கில் உள்ள புரூக்ளின் மெட்ரோபாலிட்டன் தடுப்பு மையத்தில் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. </p><p>

எனினும், அவை சமீபத்தில் எடுக்கப்பட்டவை அல்ல என்றும், ஜூன் 25, 2026 என்ற தேதி புகைப்படங்களில் இடம்பெற்றுள்ளது.
</p><p> 
தனது பேரக்குழந்தைகள், குழந்தைகள் மற்றும் ஆதரவாளர்களுக்கு அன்பையும் நம்பிக்கையையும் தெரிவிக்கும் வகையில் மதுரோ இந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

 தானும் தனது மனைவி சிலியா புளோரஸும் உறுதியாக இருப்பதாக அவர் கூறியுள்ளார். </p><p>மேலும், தங்களது ஆதரவாளர்களின் பிரார்த்தனைகள் மற்றும் ஒற்றுமைக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
 
மதுரோ மற்றும் அவரது மனைவி ஜனவரியில் வெனிசுலாவில் கைது செய்யப்பட்டு அமெரிக்காவுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.</p><p> 

போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஆயுதம் தொடர்பான குற்றச்சாட்டுகளை அவர்கள் எதிர்கொள்கின்றனர் . எனினும் இந்த குற்றச்சாட்டுகளை மதுரோ மறுத்துள்ள்ளமை குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-08-31T09:06:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹோர்முஸ் நீரிணையில் தாக்குதல்: உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை உயர்வு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/attack-strait-of-hormuz-crude-oil-prices-1788166372"></link>
            <id>https://tamilwin.com/article/attack-strait-of-hormuz-crude-oil-prices-1788166372</id>
            <summary type="text">&amp;nbsp;சர்வதேசச் சந்தையில் மசகு
எண்ணெய் விலைகள் 2 வீதத்திற்கு மேல் உயர்ந்துள்ளதாக சர்லதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.ஹோர்முஸ் நீரிணையில உள்ள ஈரானி...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;சர்வதேசச் சந்தையில் மசகு
எண்ணெய் விலைகள் 2 வீதத்திற்கு மேல் உயர்ந்துள்ளதாக சர்லதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p>ஹோர்முஸ் நீரிணையில உள்ள ஈரானின் 'லராக்' தீவில் அமைந்திருந்த இரண்டு ஏவுகணை
ஏவுதளங்கள் மீது அமெரிக்கப் படைகள் வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ள நிலையில்
அங்கு பதற்றம் அதிகரித்துள்ளதால் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.</p><p>

இதற்கமைய பிரென்ட் மசகு எண்ணெய் பீப்பாய்க்கு $ 2.21 (2.51%) உயர்ந்து $ 90.31
ஆகவும் அமெரிக்க WTI மசகு எண்ணெய் பீப்பாய்க்கு $1.83 (2.19%) உயர்ந்து $
85.23 ஆகவும் அதிகரித்துள்ளன.</p><h2>எண்ணெய் விநியோகம்</h2><p>

மேலும் எண்ணெய் விநியோகம் பாதிக்கப்படலாம் என்ற அச்சத்தால் எதிர்வரும்
நாட்களில் உலகப் பொருளாதாரத்தில் பெரும் தாக்கம் ஏற்படக்கூடும் என
எதிர்பார்க்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6357fa47-6c4c-474f-9d29-562ea840f47d/26-6a9543c3b2141.webp' /></p><p>

கடந்த ஜூலைக்குப் பிறகு ஈரானிய எல்லைக்குள் அமெரிக்கா நடத்திய முதல் நேரடித்
தாக்குதல் இதுவாகும். </p><p>ஈரானும் இதற்கு உடனடியாகப் பதிலடி கொடுத்துள்ளதால் இரு
நாடுகளுக்கு இடையிலான போர் பதற்றம் 6ஆவது மாதமாகத் தீவிரமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-31T09:06:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[யோஷித - டெய்ஸி ஃபாரஸ்ட் மீதான பணச்சலவை வழக்கு விசாரணை ஒத்திவைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/yoshitha-rajapaksa-and-daisy-forest-case-adjourned-1788166438"></link>
            <id>https://ibctamil.com/article/yoshitha-rajapaksa-and-daisy-forest-case-adjourned-1788166438</id>
            <summary type="text">முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகனான யோஷித ராஜபக்ச மற்றும் அவரது பாட்டியான டெய்சி போரஸ்ட் ஆகியோருக்கு எதிராக, பணச்சலவை தடுப்புச் சட்டத்தின் கீழ்...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகனான யோஷித ராஜபக்ச மற்றும் அவரது பாட்டியான டெய்சி போரஸ்ட் ஆகியோருக்கு எதிராக, பணச்சலவை தடுப்புச் சட்டத்தின் கீழ் சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணையானது, ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
</p><p>
இதன்படி வழக்கனது எதிர்வரும் 2026 செப்டம்பர் 28 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. </p><p>இந்த வழக்கு இன்று (31.08.2026) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரஷ்மி சிங்கப்புலி முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.</p><p></p><h2>உயர் நீதிமன்ற விசாரணை</h2><p>
</p><p>
இந்த வழக்கு தொடர்பான விடயம் குறித்து பிரதிவாதி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளதாகவும், அந்த மேல்முறையீடு செப்டம்பர் 04 ஆம் திகதி விசாரணைக்கு வரவிருப்பதாகவும் அரசுத் தரப்பு சட்டத்தரணி நீதிமன்றத்திற்கு தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bad9bfed-abe9-4bc7-8979-74b5a8721472/26-6a9543733cff3.webp' /></p><p>
</p><p>
அதன்படி, உயர் நீதிமன்ற விசாரணைக்குப் பிறகு ஒரு திகதியில் வழக்கை விசாரணைக்கு அழைக்க வேண்டும் என்று அரசுத் தரப்பு கோரியது. </p><p>

இதன்படி சமர்ப்பிப்புகளைப் பரிசீலித்த நீதிபதி, இவ்வழக்கை செப்டம்பர் 28 அன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு உத்தரவிட்டார்.</p><p>

 சட்டவிரோதமாகப் பெறப்பட்டதாகக் கூறப்படும் ஏறத்தாழ 57 மில்லியன் ரூபாயை மூன்று வங்கிக் கணக்குகளில் வைப்பு செய்ததன் மூலம், பணமோசடித் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் இழைத்ததாக யோஷிதா மற்றும் டெய்சி ஃபாரஸ்ட் மீது சட்டமா அதிபர் வழக்குப் பதிவு செய்தார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-31T09:03:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுவிட்சர்லாந்தில் மலையேற்றத்துக்குச் சென்ற நபருக்கு நேர்ந்த துயர முடிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/hiker-dies-after-fall-from-650-feet-in-swiss-1788166941"></link>
            <id>https://news.lankasri.com/article/hiker-dies-after-fall-from-650-feet-in-swiss-1788166941</id>
            <summary type="text">Hiker dies after 650 feet fall in Switzerland: சுவிட்சர்லாந்தில் மலையேற்றத்துக்குச் சென்ற ஒருவர் 650 அடி பள்ளத்தில் விழுந்து உயிரிழந்தார்.சனிக்கிழமையன...</summary>
            <content type="html"><![CDATA[<p>Hiker dies after 650 feet fall in Switzerland: சுவிட்சர்லாந்தில் மலையேற்றத்துக்குச் சென்ற ஒருவர் 650 அடி பள்ளத்தில் விழுந்து உயிரிழந்தார்.</p><p>சனிக்கிழமையன்று, மேற்கு சுவிட்சர்லாந்திலுள்ள Fribourg Pre-Alps என்னும் மலையில் மலையேற்றத்துக்குச் சென்றுள்ளார் 69 வயது நபர் ஒருவர்.
</p><h3>
துயர முடிவு
</h3><p>
இந்நிலையில், அவர் 650 அடி பள்ளத்தில் விழுந்து விட்டதாக அவசர உதவிக் குழுவினருக்கு தகவல் கிடைத்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a55924f4-3100-4a6a-933a-788faf8e16db/26-6a95431f2c9ba.webp' /></p><p>
ஹெலிகொப்டர் உதவியுடன் அவர் மேலே கொண்டுவரப்பட்ட நிலையில், காயங்கள் காரணமாக அவர் உயிரிழந்துவிட்டுள்ளார்.
</p><p>
அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் உயிரிழந்துவிட்டதை உறுதி செய்துள்ளனர்.&nbsp;</p><p></p><p>
இந்த விபத்து எப்படி நிகழ்ந்தது என்பதை அறிவதற்காக Fribourg மாகாண பொலிசார் விசாரணை ஒன்றைத் துவக்கியுள்ளனர்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-31T09:02:29+00:00</updated>
        </entry>
    </feed>
