<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-07-31T12:41:42+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தியாவில் அதிக கடன், அதிக குற்ற வழக்குகள் உள்ள முதல்வர் யார்?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/which-cm-has-most-liabalities-criminal-case-india-1785501027"></link>
            <id>https://news.lankasri.com/article/which-cm-has-most-liabalities-criminal-case-india-1785501027</id>
            <summary type="text">ADR என்ற அமைப்பு, இந்தியாவில் உள்ள 28 மாநிலம் மற்றும் 3 யூனியன் பிரதேச முதலமைச்சர்கள் தகவல்களை ஆய்வு செய்து அறிக்கையாக வெளியிட்டுள்ளது. 

இந்த அறிக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ADR என்ற அமைப்பு, இந்தியாவில் உள்ள 28 மாநிலம் மற்றும் 3 யூனியன் பிரதேச முதலமைச்சர்கள் தகவல்களை ஆய்வு செய்து அறிக்கையாக வெளியிட்டுள்ளது. </p><p>

இந்த அறிக்கை, முதலமைச்சர்கள் கடைசியாக போட்டியிட்ட தேர்தல்களின் போது வெளியிட்ட பிராமண பத்திரங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுளளது.</p><h3> 

இந்தியாவின் இளம் முதலமைச்சர் </h3><p>

மொத்தமுள்ள 31 முதலமைச்சர்களில், டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா மற்றும் ஒரே பெண் முதலமைச்சர் ஆவார்.</p><p> 

வயதின் அடிப்படையில், இந்தியாவின் இளம் முதலமைச்சராக 44 வயதான அருணாச்சலபிரதேச முதல்வர் பெமா காண்டு மற்றும் மேகாலயா முதல்வர் கான்ராட் சங்மா உள்ளனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f561dd4a-887c-4782-95f6-aa5affdecf86/26-6a6c956472db4.webp' /></p><p>

அதிக வயதுடைய முதலமைச்சராக 75 வயதான புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி உள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e7aae966-f60d-4231-b430-17b14d2d3e29/26-6a6c95652d412.webp' /></p><p> 

41 - 50 வயதில் 8 முதலமைச்சர்களும், 51 - 60 வயதில் 17 முதலமைச்சர்களும், 61 - 70 வயதில் 2 முதலமைச்சர்களும், 71 - 80 வயதில் 4 முதலமைச்சர்களும் உள்ளனர். </p><h3> 

அதிக கடன் உள்ள முதல்வர்</h3><p>

சொத்து மதிப்பின் அடிப்படையில், ரூ.1,413 கோடிகளுடன் கர்நாடகா முதலமைச்சர் டி.கே.சிவகுமார் இந்தியாவின் பணக்கார முதலமைச்சராக உள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/efa999b3-b373-4aed-9b4f-15a954cfa79a/26-6a6c9566c48d3.webp' /></p><p>

ரூ.931 கோடிகளுடன் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு 2வது இடத்திலும், ரூ.648 கோடிகளுடன் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் 3வது இடத்திலும், ரூ.332 கோடிகளுடன் அருணாச்சலபிரதேச முதல்வர் பெமா காண்டு 3வது இடத்திலும் உள்ளனர். </p><p>

இவர்கள் 4 பேரும், ரூ.50 கோடிக்கு அதிகமாக சொத்து வைத்துள்ள முதலமைச்சராக உள்ளனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1abd1aa8-1e39-4b43-8edf-b6678d10e8f8/26-6a6c95677cbfc.webp' /></p><p> 

ஜம்மு காஷ்மீர் முதல்வர் ஓமர் அப்துல்லா ரூ.55 லட்சம் சொத்து மதிப்புடன் கடைசி இடத்தில் உள்ளார். </p><p> 

இதே போல், அதிக கடன் உள்ள முதல்வராக ரூ.265 கோடி கடனுடன் கர்நாடகா முதலமைச்சர் டி.கே.சிவகுமார் முதலிடத்தில் உள்ளார். </p><h3>

அதிக குற்ற வழக்கு உள்ள முதல்வர்</h3><p> 

31 முதலமைச்சர்களில் 14 பேர் மீது குற்ற வழக்குகள் உள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2860fcb5-09c0-49be-90fa-db6c5d676715/26-6a6c95682d4e7.webp' /></p><p>
அதிகபட்சமாக தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி மீது 72 கடுமையான இந்திய தண்டனைச் சட்ட வழக்குகள் உட்பட 89 வழக்குகள் நிலுவையில் உள்ளன. </p><p>

மேற்கு வங்க முதலமைச்சர் சுவேந்து அதிகாரி 29 வழக்குகள் நிலுவையில் உள்ளது. கர்நாடகா முதலமைச்சர் டி.கே.சிவகுமார் மற்றும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மீது 19 வழக்குகள் உள்ளது.&nbsp; &nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-31T12:30:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[போயஸ் கார்டனில் வாழ்ந்தவர்..இப்போ மாத்திரை வாங்கக்கூட காசு இல்லாத நிலை!! நடிகருக்கு ரஜினி செய்த செயல்...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/mohan-sharma-no-money-even-rajini-did-help-1785499705"></link>
            <id>https://viduppu.com/article/mohan-sharma-no-money-even-rajini-did-help-1785499705</id>
            <summary type="text">மோகன் சர்மாதமிழ் சினிமாவில் பணியாற்றிய பல கலைஞர்கள் பெரிய வீடுகள், கார்கள், புகழ், ரசிகர்கள் என எல்லாமே வியப்பாக தோன்றும், ஆனால் அந்த வெளிச்சத்துக்கு ...</summary>
            <content type="html"><![CDATA[<h2>மோகன் சர்மா</h2><p>தமிழ் சினிமாவில் பணியாற்றிய பல கலைஞர்கள் பெரிய வீடுகள், கார்கள், புகழ், ரசிகர்கள் என எல்லாமே வியப்பாக தோன்றும், ஆனால் அந்த வெளிச்சத்துக்கு பின் எத்தனையோ கலைஞர்களின் வாழ்க்கை அமைதியாக கலைந்து போயிருக்கிறது. அப்படிப்பட்ட வேதனையை அனுபவித்திருக்கிறார் நடிகரும் தயாரிப்பாளருமான மோகன் சர்மா.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5e1291ba-c4ce-4aa7-939f-35906e72a7bb/26-6a6c903bb04c5.webp' /></p><p> கடந்த சில நாட்களாக உடல் நிலை குறித்து சோசியல் மீடியாக்களில் பரவி வந்த நிலையில், அவர் அளித்த பேட்டியொன்று பலரையும் உருக வைத்துள்ளது.</p><h2>போயஸ் கார்டனில்</h2><p> </p><p>அவர் பேசுகையில், ஒருகாலத்தில் நான் தயாரிப்பாளராகவும் நடிகராகவும் நல்ல நிலையில் இருந்தபோது போயஸ் கார்டனில் ஜெயலலிதா அம்மா வீட்டுக்கு பக்கத்தில் தான் என் வீடு இருந்தது. ஆனால் இன்று மருந்து வாங்குவதற்குகூட என்னிடம் காசு இல்லை. அதனால் தான் வேறுவழியின்றில் கும்மிடிப்பூண்டி அருகே இருக்கும் இலவச முதியோர் இல்லத்தில் தங்கியிருக்கிறேன்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/64db78ee-6426-4998-9202-6e95e9a065ac/26-6a6c903c5f791.webp' /></p><h3>ரஜினி</h3><p> </p><p>இங்கதான் எனக்கு சாப்பாடும், தங்க இடமும் கிடைக்கிறது. தன்னுடைய நிலையை அறிந்த ரஜினிகாந்த் ஃபோன் செய்து பேசினார். அப்போது உங்களுடைய அக்கவுண்ட் டீலைல்ஸ் அனுப்புங்க சர்மா என்று சொன்னார். நானும் அனுப்பினேன். உடனே எனக்கு ஒரு லட்சம் கொடுத்து உதவினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/77644d86-38cf-4288-a696-669e06efcdf0/26-6a6c903d0fc32.webp' /></p><p> </p><p>ரஜினி பலருக்கு செய்த உதவிகள் வெளியே தெரியாது, அதுபோல் தான் அவர் எனக்கு செஞ்சதும் வெளியில் தெரியாது. நான் கஷ்டத்தில் இருந்தபோது எனக்கு உதவினார் என்று கூறியிருக்கிறார்.</p>]]></content>
            <updated>2026-07-31T12:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[மன்னிப்பு கேட்ட கோபி, சுதாகர்.. எதிர்ப்பு வந்ததால் அந்த காட்சி நீக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/dmk-mla-son-parithabangal-gopi-sudhakar-apologize-1785499611"></link>
            <id>https://cineulagam.com/article/dmk-mla-son-parithabangal-gopi-sudhakar-apologize-1785499611</id>
            <summary type="text">Youtubeல் பிரபலமான கோபி மற்றும் சுதாகர் இருவரும் தற்போது படங்களில் நடித்து வருகின்றனர். அதே நேரத்தில் Youtubeல் அவர்கள் மற்றவர்களை நக்கல் செய்து வெளிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>Youtubeல் பிரபலமான கோபி மற்றும் சுதாகர் இருவரும் தற்போது படங்களில் நடித்து வருகின்றனர். அதே நேரத்தில் Youtubeல் அவர்கள் மற்றவர்களை நக்கல் செய்து வெளியிடும் வீடியோக்களுக்கும் அதிகம் ரசிகர்கள் இருக்கிறார்கள்.</p><p>சமீபத்தில் திமுக எம்எல்ஏ மகன் பேசும் விதத்தை விமர்சிக்கும் வகையில் பரிதாபங்கள் வீடியோவில் ஒரு காட்சி இடம்பெற்று இருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0920a4d7-8f5c-4879-baab-3fbbf3e6456a/26-6a6c8fde0f065.webp' /></p><p>
</p><h2>மன்னிப்பு.. நீக்கம்
</h2><p>அந்த காட்சிக்கு திமுகவை சேர்ந்த சிலர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், தற்போது மன்னிப்பு கேட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கின்றனர்.
</p><p>மேலும் மற்றவர்கள் மனம் புண்படுவதால் அந்த காட்சியை வீடியோவில் இருந்து நீக்கிவிட்டதாகவும் தெரிவித்து இருக்கின்றனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-31T12:07:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈஸ்டர் தாக்குதல் ; பூஜித் ஜயசுந்தரவுக்கு மரண தண்டணை! நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/easter-attacks-death-sentence-pujith-jayasundara-1785499752"></link>
            <id>https://jvpnews.com/article/easter-attacks-death-sentence-pujith-jayasundara-1785499752</id>
            <summary type="text">&amp;nbsp; உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான வழக்கின் தீர்ப்பு வெளியாகியுள்ளது.

அதன்படி, முன்னாள் காவல்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு மரண தண்டனை...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான வழக்கின் தீர்ப்பு வெளியாகியுள்ளது.

அதன்படி, முன்னாள் காவல்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு மரண தண்டனையை விதித்து மூவரடங்கிய கொழும்பு மேல் நீதிமன்ற அமர்வு தீர்ப்பளித்துள்ளது.</p><p>&nbsp;பூஜித் ஜயசுந்தரவிற்கு மரண தண்டனை விதித்து கொழும்பு நிரந்தர நீதாய மேல் நீதிமன்றம் இன்று (31) உத்தரவிட்டுள்ளது.</p><p>
</p><p>
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலைத் தடுக்கத் தவறியதன் மூலம் குற்றவியல் கடமை தவறியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ், சற்று முன்னர் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fdb8df78-7a7b-42b9-bc33-bfbc8d9431bb/26-6a6c906981504.webp' /></p><h2>&nbsp;புலனாய்வு தகவல்கள் கிடைத்திருந்தும்&nbsp; தாக்குதலைத் தடுக்கத் தவறியமை</h2><p>&nbsp;போதுமான புலனாய்வு தகவல்கள் கிடைத்திருந்தும் உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலைத் தடுக்கத் தவறியமை தொடர்பாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோருக்கு எதிராக சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகைகளின் வழக்கின் தீர்ப்பு இன்று அறிவிக்கப்பட்டு இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.</p><p>

2022 ஆம் ஆண்டில் குறித்த வழக்கிலிருந்து பிரதிவாதிகள் இருவரையும் விடுவித்து மூவரடங்கிய மேல்நீதிமன்ற நீதிபதிகள் குழாம் தீர்மானித்திருந்த நிலையில், அதற்கு எதிராக சட்டமா அதிபர் தாக்கல் செய்த மேன்முறையீடு தொடர்பாக உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கு அமைய, இவ்வழக்கின் பிரதிவாதிகளின் சாட்சியங்களை மீண்டும் அழைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது.</p>]]></content>
            <updated>2026-07-31T12:07:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜிதவுக்கு மரண தண்டனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/former-igp-pujith-sentenced-to-death-1785499072"></link>
            <id>https://tamilwin.com/article/former-igp-pujith-sentenced-to-death-1785499072</id>
            <summary type="text">முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுதந்தரவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.&amp;nbsp;கொழும்பு உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.&amp;nbsp;உயிர்த்த ...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுதந்தரவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p>கொழும்பு உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.&nbsp;</p><p>உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலை தடுக்க தவறிய குற்றச்சாட்டிற்காக அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p>போதுமான உளவுத் தகவல்கள் இருந்தபோதிலும், தாக்குதலை தடுக்கத் தவறியமைக்காக முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர மற்றும் முன்னாள் ஜனாதிபதி செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ உள்ளிட்ட இருவர் மீதான வழக்கு இன்று எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p>பிரியந்த லியனகே, விராஜ் வீரசூரிய மற்றும் திலகரத்ன பண்டார ஆகியோரைக் கொண்ட மூவரடங்கிய விசேட நீதிமன்ற அமர்வு இந்த தீர்ப்பை அளித்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6f8d22de-d493-4e43-a522-631c1d6a042e/26-6a6c8fea0a1b0.webp' /></p><p></p><p></p><p></p><p><br></p><p><br></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-31T12:00:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கில் பூஜித் ஜயசுந்தரவுக்கு மரண தண்டனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/death-sentence-for-pujith-jayasundara-1785499237"></link>
            <id>https://ibctamil.com/article/death-sentence-for-pujith-jayasundara-1785499237</id>
            <summary type="text">போதுமான புலனாய்வுத் தகவல்கள் முன்கூட்டியே கிடைத்திருந்த போதிலும், 2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலைத் தடுக்கத் தவறியதாகத் தாக்கல் செய...</summary>
            <content type="html"><![CDATA[<p>போதுமான புலனாய்வுத் தகவல்கள் முன்கூட்டியே கிடைத்திருந்த போதிலும், 2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலைத் தடுக்கத் தவறியதாகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், முன்னாள் காவல்துறைமா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு கொழும்பு நிரந்தர மூவரடங்கிய விசேட உயர்நீதிமன்றம் இன்று (31) மரண தண்டனை விதித்துள்ளது.</p><p>

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் முன்னாள் காவல்துறைமா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோருக்கு எதிராக சட்டமா அதிபர் தாக்கல் செய்திருந்த குற்றப்பத்திரிகை தொடர்பான தீர்ப்பை இன்று அறிவிக்கும் போதே இந்த உத்தரவு வழங்கப்பட்டது.</p><p>

இந்த வழக்கில், 2022 ஆம் ஆண்டு மூவரடங்கிய உயர்நீதிமன்ற அமர்வு இரு பிரதிவாதிகளையும் அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவித்திருந்தது.</p><p></p><h2>மேன்முறையீட்டை விசாரித்த உச்சநீதிமன்றம்</h2><p>
</p><p>
எனினும், அந்தத் தீர்ப்பை எதிர்த்து சட்டமா அதிபர் தாக்கல் செய்த மேன்முறையீட்டை விசாரித்த உச்சநீதிமன்றம், விடுதலைத் தீர்ப்பை இரத்து செய்து, பிரதிவாதிகளின் பாதுகாப்பு சாட்சிகளை மீண்டும் பதிவு செய்து வழக்கை மறுவிசாரணைக்கு உட்படுத்துமாறு உத்தரவிட்டிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6424f537-1db8-4175-ac84-8fcb7efc47ab/26-6a6c92048fddf.webp' /></p><p>
</p><p>
அதன்படி, வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், இன்று கொழும்பு நிரந்தர மூவரடங்கிய விசேட உயர்நீதிமன்றம் தனது தீர்ப்பை வழங்கியுள்ளது.</p><p></p><p>பெரும்பான்மைத் தீர்ப்பை வாசித்த மூவரடங்கிய நீதிமன்றத் தலைவர் நீதியரசர் பிரியந்த லியனகே, 2019 ஏப்ரல் 20 ஆம் திகதி மாலை, அப்போதைய அரச புலனாய்வு சேவையின் பணிப்பாளர் நிலந்த ஜயவர்தன, மறுநாள் ஈஸ்டர் ஞாயிறன்று கொழும்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள கத்தோலிக்க தேவாலயங்கள் மற்றும் சுற்றுலா விடுதிகள் மீது தற்கொலைத் தாக்குதல் நடத்தப்படவுள்ளதாகத் தெளிவான புலனாய்வுத் தகவலை முன்னாள் காவல்துறைமா அதிபருக்கு வழங்கியிருந்ததாகக் குறிப்பிட்டார்.
</p><p>
அவ்வாறான எச்சரிக்கை கிடைத்திருந்த போதிலும், தாக்குதலைத் தடுக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும், நாட்டின் காவல்துறைமா அதிபராக பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய பொறுப்பை அவர் நிறைவேற்றத் தவறியதாகவும் நீதியரசர் சுட்டிக்காட்டினார்.
</p><p>
அந்தக் கடமையின்மை காரணமாக 268 பேர் உயிரிழந்ததுடன், மேலும் 586 பேர் காயமடைந்தனர் என்றும், குற்றத்தின் தீவிரத்தை கருத்தில் கொண்டு பிரதிவாதிக்கு மரண தண்டனை விதிக்கப்படுவதாக பெரும்பான்மை நீதியரசர்கள் அறிவித்தனர்.</p><p>

இதற்கிடையில், சிறுபான்மைத் தீர்ப்பை வழங்கிய நீதியரசர்விராஜ் வீரசூரிய, பிரதிவாதிக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை சந்தேகத்திற்கு இடமின்றி அரசுத் தரப்பு நிரூபிக்கத் தவறியுள்ளதாகக் குறிப்பிட்டு, அவரை குற்றமற்றவர் என விடுவிக்க வேண்டும் என்ற கருத்தை வெளியிட்டார்.
</p><p>
இதேவேளை, இதே வழக்கில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவுக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு பின்னர் அறிவிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.</p><p>

நான்கு மணித்தியாலங்களுக்கும் மேலாக நீடித்த தீர்ப்பு வாசிப்பின் முடிவில், முன்னாள் காவல்துறைமா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-31T12:00:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[விடுதியில் தங்கியிருந்த சுற்றுலா பயணி திடீரென உயிரிழப்பு! பொலிஸார் வெளியிட்ட தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/tourist-who-was-staying-at-the-hotel-died-suddenly-1785497980"></link>
            <id>https://tamilwin.com/article/tourist-who-was-staying-at-the-hotel-died-suddenly-1785497980</id>
            <summary type="text">சுவிட்சர்லாந்திலிருந்து இலங்கைக்கு சுற்றுலா வந்த வைத்தியர் ஒருவர் திடீரென உடல்நலம் மோசமடைந்து உயிரிழந்துள்ளதாக தியதலாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>சுவிட்சர்லாந்திலிருந்து இலங்கைக்கு சுற்றுலா வந்த வைத்தியர் ஒருவர் திடீரென உடல்நலம் மோசமடைந்து உயிரிழந்துள்ளதாக தியதலாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
சுவிட்சர்லாந்திலிருந்து தனது மனைவி மற்றும் 14 மற்றும் 15 வயதுடைய இரண்டு மகள்களுடன் இலங்கைக்கு சுற்றுலா வந்திருந்த நிலையில் இவ்வாறு உயிரிழந்துள்ளார்.</p><p></p><h2>பொலிஸார் வெளியிட்ட தகவல்&nbsp;</h2><p>
</p><p>
சுற்றுலாவின் ஒரு பகுதியாக ஹல்துமுல்லவின் கலுபஹான பகுதியில் உள்ள ஒரு சுற்றுலா விடுதியில் தங்கியிருந்தபோது திடீரென உடல்நலம் மோசமடைந்து தியதலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/45ba7eb7-7ae7-49c6-9499-92af7658031b/26-6a6c8e6518bf3.webp' />&nbsp;</p><p>

​​சுவிட்சர்லாந்தினை சேர்ந்த சௌத்ரி ராபின் ஹாக் (54) என்ற வைத்தியரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.</p><p>

இவர்கள் நாட்டை சுற்றி பார்ப்பதற்காக ஹல்துமுல்ல பகுதியில் உள்ள சுற்றுலா விடுதியில் தங்கியிருந்ததாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-31T12:00:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[பார்த்தாலே பசி எடுக்கும் மொச்சைப் பருப்பு கருவாட்டு குழம்பு : இப்படி செய்தா கொஞ்சமும் மிஞ்சாது!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/tasty-and-healthy-mocha-karuvadu-kulambu-recipe-1785496710"></link>
            <id>https://manithan.com/article/tasty-and-healthy-mocha-karuvadu-kulambu-recipe-1785496710</id>
            <summary type="text">பொதுவாகவே விதவிதமாக சமைத்து சாப்பிடுவதென்றால் அனைவருக்குமே பிடிக்கும். இது மனிதர்களுக்கு மட்டுமே கிடைத்த வரம் என்று சொன்னால் மிகையாகாது. 

குறிப்பாக...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொதுவாகவே விதவிதமாக சமைத்து சாப்பிடுவதென்றால் அனைவருக்குமே பிடிக்கும். இது மனிதர்களுக்கு மட்டுமே கிடைத்த வரம் என்று சொன்னால் மிகையாகாது. </p><p>

குறிப்பாக கிராமத்து பாணியில் மசாலாக்களை அரைத்து தயாரிக்கப்படும் குழம்புகளுக்கு தனி ரசிகர் பட்டாளமே இருக்கும்.

அப்படி கிராமத்து பாணியில் ஊரே மணக்கும் மொச்சை பருப்பு கருவாட்டு குழம்பு எப்படி செய்வதென இந்த பதிவில் பார்க்கலாம்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bdd193b4-ebf3-4594-ac65-8785ea38583e/26-6a6c8d7bce832.webp' /></p><p></p><h2>



தேவையான பொருட்கள்</h2><p>
நெத்திலி கருவாடு - 200 கிராம் </p><p>மொச்சைப்பருப்பு - 150 கிராம் (குக்கரில் போட்டு 2 விசில் விட்டு வேக வைத்தது)</p><p>கத்திரிக்காய் - 4 (நறுக்கியது) </p><p>முருங்கைக்காய் - 2 (நறுக்கியது)&nbsp;</p><p> புளி - சிறிய எலுமிச்சை அளவு (நீரில் ஊற வைத்து சாறு எடுத்தது)</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/26c03274-ec70-4862-9e5a-5533342f656a/26-6a6c8d7c8459c.webp' /></p><p><b> வதக்கி அரைப்பதற்கு தேவையாவை&nbsp;</b></p><p>நல்லெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்&nbsp;</p><p> சின்ன வெங்காயம் - 25 </p><p>பூண்டு - 7-8 பல் </p><p>சீரகம் - 1 டீஸ்பூன்&nbsp;</p><p> மிளகு - 1 டீஸ்பூன்&nbsp;</p><p> தக்காளி - 1 (நறுக்கியது)&nbsp;</p><p> மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன் </p><p>மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்&nbsp;</p><p> மல்லித் தூள் - 1 டேபிள் ஸ்பூன்&nbsp;</p><p> தண்ணீர் - சிறிது </p><p><b>தாளிப்பதற்கு தேவையானவை</b></p><p> நல்லெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன் </p><p>வெந்தயம் - 1/4 டீஸ்பூன்&nbsp;</p><p> கடுகு - 1/2 டீஸ்பூன்&nbsp;</p><p> உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்&nbsp;</p><p> பூண்டு - 2 பல் </p><p>சின்ன வெங்காயம் - 4&nbsp;</p><p> பச்சை மிளகாய் - 2</p><p>கறிவேப்பிலை - 1 கொத்து </p><p>முருங்கைக்காய்&nbsp;</p><p> கத்திரிக்காய்&nbsp;</p><p> காஷ்மீரி மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்&nbsp;</p><p> புளிச்சாறு </p><p>அரைத்த மசாலா</p><p>தண்ணீர் - தேவையான அளவு </p><p>&nbsp;உப்பு - சுவைக்கேற்ப&nbsp;</p><p> வேக வைத்த மொச்சை&nbsp;</p><p> நெத்திலி கருவாடு</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/92f5bc05-f3a5-4298-b7b0-232b0e469e20/26-6a6c8d7d4513e.webp' /></p><p>
</p><h2>செய்முறை</h2><p>

முதலில் நெத்திலி கருவாட்டை கொதிக்கும் நீரில் 2–3 நிமிடம் ஊறவைத்து, கை பொறுக்கும் அளவுக்கு ஆறியதும் எடுத்து, குளிர்ந்த நீரில் 3–4 முறை நன்றாக அலசி தனியாக வைத்துக் கொள்ளவும்.</p><p>

பிறகு ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், சின்ன வெங்காயம் மற்றும் பூண்டை சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்க வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0f09ffd2-1377-4f85-ab08-fb1a19d72477/26-6a6c8d7defa9f.webp' /></p><p>அதன் பின் சீரகம், மிளகு, நறுக்கிய தக்காளி சேர்த்து, தக்காளி நன்கு மென்மையாகும் வரை வதக்க வேண்டும். தீயை குறைத்து மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள் சேர்த்து ஒரு நிமிடம் கிளறி இறக்கி ஆற விட வேண்டும்.</p><p>பின்னர் இந்தக் கலவையை ஒரு&nbsp; மிக்சியில் போட்டு, சிறிதளவு தண்ணீர் சேர்த்து நைசாக அரைத்துக் எடுத்துக்கொள்ள வேண்டும்.</p><p>

அடுத்ததாக மற்றொரு வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், வெந்தயம், கடுகு, உளுத்தம் பருப்பு சேர்த்து தாளிக்கவும். பிறகு நறுக்கிய பூண்டு, சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8380e641-54a0-4932-9ffb-95f9573ec84c/26-6a6c8d7ea2b88.webp' /></p><p></p><p> அதன்பின் நறுக்கிய முருங்கைக்காய் மற்றும் கத்திரிக்காயை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி, மூடி வைத்து 3–4 நிமிடம் வேக விட்டு,&nbsp; காஷ்மீரி மிளகாய்த்தூளை சேர்த்து கிளறி, புளிக்கரைசலை ஊற்றி பச்சை வாசனை போகும் வரை நன்றாக கொதிக்க விட வேண்டும்.</p><p>பின்னர் அரைத்து வைத்துள்ள மசாலாவையும் சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து&nbsp;அதன் பின் அதில் வேக வைத்த மொச்சை பருப்பை சேர்த்து 3-4 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.&nbsp;</p><p> இறுதியாக சுத்தம் செய்த நெத்திலி கருவாட்டை சேர்த்து கிளறி, மூடி வைத்து 5 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கினால், அவ்வளவு தான் அருமையான சுவையில் ஆரோக்கிய நன்மைகள் நிறைந்த மொச்சப்பருப்பு கருவாட்டு குழம்பு தயார்.&nbsp;</p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"><b>FOLLOW NOW</b></a></u></td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-31T11:58:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[காதல் விவகாரம் ; பட்டம் விட்டுக்கொண்டிருந்த இளைஞர் மீது கொடூர தாக்குதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/brutal-attack-on-a-young-man-flying-a-kite-1785499068"></link>
            <id>https://jvpnews.com/article/brutal-attack-on-a-young-man-flying-a-kite-1785499068</id>
            <summary type="text">&amp;nbsp; கம்பஹா - கடவத்தை பகுதியில் உள்ள நெல் வயலில் பட்டம் விட்டுக்கொண்டிருந்த இளைஞர் ஒருவரை, உந்துருளியில் வந்த மூன்று இளைஞர்கள் கூரிய ஆயுதத்தால் தாக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; கம்பஹா - கடவத்தை பகுதியில் உள்ள நெல் வயலில் பட்டம் விட்டுக்கொண்டிருந்த இளைஞர் ஒருவரை, உந்துருளியில் வந்த மூன்று இளைஞர்கள் கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளதாகக் கடவத்தை பொலிஸார்&nbsp; தெரிவித்துள்ளனர்.
</p><p>
தாக்குதலில் காயமடைந்த 17 வயதுடைய இளைஞர், ராகம மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகக் கடவத்தை காவல்துறை பொறுப்பதிகாரி தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3ea65810-b6fe-49fb-941d-d0cf899701f6/26-6a6c8dbe61978.webp' /></p><p>
</p><p>
தாக்குதல் நடத்தியதாகச் சந்தேகிக்கப்படும்&nbsp; மூவரை&nbsp; கடவத்தை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.</p><p>&nbsp; சம்பவம் காதல் விவகாரம் தொடர்பான தகராறினால் ஏற்பட்டுள்ளதாகக் காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட மூன்று சந்தேக நபர்களும் மஹர நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p>]]></content>
            <updated>2026-07-31T11:55:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thevanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[அநுர ஆட்சியில் தமிழர் பகுதிகளில் 615 ஏக்கர் காணிகள் விடுவிப்பு - இராணுவ தளபதி வெளியிட்ட தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/army-operations-to-free-the-lands-1785498311"></link>
            <id>https://tamilwin.com/article/army-operations-to-free-the-lands-1785498311</id>
            <summary type="text">முல்லைத்தீவு மாவட்டத்தின் வட்டுவாகல், கேப்பாபிலவு மற்றும் கிளிநொச்சி
மாவட்டத்தின் சில காணிகளை விரைவில் விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என பாது...</summary>
            <content type="html"><![CDATA[<p>முல்லைத்தீவு மாவட்டத்தின் வட்டுவாகல், கேப்பாபிலவு மற்றும் கிளிநொச்சி
மாவட்டத்தின் சில காணிகளை விரைவில் விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என பாதுகாப்பு பிரதியமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகர தெரிவித்துள்ளார்.</p><p>


முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் இராணுவப் பயன்பாட்டில் உள்ள
காணிகளைச் சிவில் நிறுவனங்கள் மற்றும் பொதுமக்களுக்கு விடுவிப்பதற்கான
சாத்தியக்கூறுகள் தொடர்பான விசேட கலந்துரையாடல் இன்று(31.07.2026) இடம்பெற்றுள்ளது. </p><p>

இந்த கூட்டமானது, முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றுள்ளது. </p><h2>

9,480 ஏக்கர் காணிகள் விடுவிப்பு</h2><p>
அவர் மேலும் தெரிவிக்கையில்,</p><p> 

தேசியப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காகவே நாட்டின் 25 மாவட்டங்களிலும்
முப்படையினரின் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. 

நாட்டில் ஏற்படும் அசாதாரண
மற்றும் இடர் நிலைமைகளின் போது பொலிஸாருடன் இணைந்து முப்படையினர்
களப்பணியாற்றுகின்றனர். </p><p> போர் நிறைவுற்ற 2009 ஆம் ஆண்டிலிருந்து 2024 ஆம் ஆண்டு
டிசம்பர் மாதம் வரை 9,480 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4222a576-a76c-491a-a484-2fb0147eae52/26-6a6c8c5279b84.webp' /></p><p> 

எமது அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர், இந்த ஆண்டு ஜூன் மாதம் வரை 615 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன.</p><p> தொடர்ந்தும் கலந்துரையாடல்கள் மூலம் மக்களின் காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுப்போம் என்றார்.</p><p></p><p> </p><h2>

3 குடும்பங்களுக்கு சொந்தமான காணி ஆக்கிரமிப்பு</h2><p>
கிளிநொச்சி மாவட்டச் செயலாளர் சு.முரளிதரனால் கனகாம்பிகைக்குளத்தில் காணி
விடுவிப்புக்கான கோரிக்கை முன்வைக்கப்பட்டது. </p><p>இராணுவ முகாமின் வேலியை 10
மீற்றர் தூரம் பின்னோக்கி நகர்த்துவதன் மூலம் 3 குடும்பங்களுக்குச் சொந்தமான
ஒன்றரை ஏக்கர் காணியை விடுவிக்க முடியும் என அவர் சுட்டிக்காட்டினார். 

இதனைச் சாதகமாகப் பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாகப் பாதுகாப்பு பிரதியமைச்சர்
தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e43a9710-7200-47d2-844f-70821173ad64/26-6a6c8c539c19f.webp' /></p><p>
</p><p>
திருவிழாக் காலங்களில் கனகாம்பிகைக்குள முகாம் அமைந்துள்ள வீதியைப் பொதுமக்கள்
பயன்படுத்த அனுமதிக்குமாறு முன்வைக்கப்பட்ட கோரிக்கையையும் பிரதியமைச்சர்
ஏற்றுக்கொண்டார். </p><p>

மேலும், அப்பகுதியில் இராணுவக் கட்டடத்துடன் உள்ள காணியை
விடுவிப்பதற்கு இராணுவத்தினரால் 8.5 மில்லியன் ரூபா கோரப்பட்டுள்ள நிலையில்,
கோயில் நிர்வாகத்தால் அத்தொகையைச் செலுத்த முடியாதிருப்பதை மாவட்டச் செயலாளர்
சுட்டிக்காட்டியதையடுத்து, அதனை மீள்பரிசீலனை செய்யவும் பிரதியமைச்சர் இணக்கம் தெரிவித்தார்.</p><h2>

கண்ணிவெடி அகற்றும் பணிகள் முன்னெடுப்பு</h2><p>
கடந்த மே மாதம் பாதுகாப்பு பிரதியமைச்சரால் பார்வையிடப்பட்ட இயக்கச்சியிலுள்ள
காணியை இன்னும் 3 மாதங்களுக்குள் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என
இராணுவத்தினர் இதன்போது தெரிவித்தனர்.
</p><p>
வட்டுவாகல் மற்றும் கேப்பாபிலவு காணி உரிமையாளர்கள் சார்பில்
கலந்துகொண்டவர்கள் தமது கோரிக்கைகளை முன்வைத்தனர். வட்டுவாகல் பகுதியில்
பொதுமக்களின் தனியார் காணிகளை விடுவிப்பதற்கு முன்பாக, அப்பகுதியில் கண்ணிவெடி
அகற்றும் பணிகளை நிறைவுசெய்து காணியை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனப் பிரதியமைச்சர் உறுதி அளித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/49d746ac-21c6-44da-980c-31d3dbd3edd1/26-6a6c8c5473d00.webp' /></p><p>

கேப்பாபிலவில் உடனடியாக 6.5 ஏக்கர் காணியை விடுவிப்பதற்கான சாத்தியக்கூறுகள்
இருப்பதாகக் குறிப்பிட்ட பிரதியமைச்சர், எஞ்சிய காணிகளை விடுவிப்பது தொடர்பில்
மாவட்ட மட்டத்தில் குழுவொன்று அமைக்கப்பட்டு, கள நிலைமைகளை ஆராய்ந்து
தீர்மானம் எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.
</p><p>
இந்த கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.திலகநாதன், வன்னிப்
பிராந்தியக் கட்டளைத் தளபதி, கிழக்கு கடற்படைத் தளபதி, பாதுகாப்பு அமைச்சின்
சிரேஷ்ட உதவிச் செயலாளர், மேலதிக மாவட்டச் செயலாளர், பிரதேச செயலாளர்கள்,
பாதுகாப்பு அமைச்சின் உயர் அதிகாரிகள், பாதுகாப்புத் தரப்பினர் மற்றும்
பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c21d3896-c90a-4c81-a5a8-a8e3968f00f3/26-6a6c8c554c3a7.webp' /></p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-31T11:52:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[ராயல் உடையில் ரியல் ஜோடி சித்தார்த் மற்றும் அதிதி ராவ் எடுத்த போட்டோ ஷுட்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/aditi-rao-siddharth-jodi-grand-photoshoot-1785497420"></link>
            <id>https://cineulagam.com/article/aditi-rao-siddharth-jodi-grand-photoshoot-1785497420</id>
            <summary type="text">சித்தார்த்-அதிதிதமிழ் சினிமாவில் படங்களில் ஜோடியாக நடிக்கும் நடிகர்களுக்குள் காதல் ஏற்பட்டு திருமணம் செய்து கொள்வது வழக்கம். ஆனால் ஜோடியாக நடிக்கவில்ல...</summary>
            <content type="html"><![CDATA[<h2>சித்தார்த்-அதிதி</h2><p>தமிழ் சினிமாவில் படங்களில் ஜோடியாக நடிக்கும் நடிகர்களுக்குள் காதல் ஏற்பட்டு திருமணம் செய்து கொள்வது வழக்கம். </p><p>ஆனால் ஜோடியாக நடிக்கவில்லை என்றாலும் சில பிரபலங்கள் காதலித்து திருமணம் செய்துகொள்கிறார்கள்.
அப்படி தமிழ் சினிமாவில் இவர்கள் காதலித்தார்களா என ரசிகர்கள் ஆச்சரியப்பட்ட ஒரு ரியல் ஜோடி தான் அதிதி ராவ் மற்றும் சித்தார்த். </p><p>இவர்கள் இருவரும் ராயல் லுக்கில் ஜோடியாக வெளியிட்ட போட்டோக்களுக்கு ரசிகர்கள் லைக்ஸ் குவித்து வருகிறார்கள்.</p><p><br></p>]]></content>
            <updated>2026-07-31T11:48:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரச அதிகாரிகளின் சூழ்ச்சியில் வீழ்ந்துவிட வேண்டாம்: வலிவடக்கு மீள் குடியேற்ற அபிவிருத்திக்குழு எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/compensation-for-ancestral-lands-seized-army-1785496940"></link>
            <id>https://tamilwin.com/article/compensation-for-ancestral-lands-seized-army-1785496940</id>
            <summary type="text">​மக்களின் கோரிக்கைக்கும் விருப்பங்களுக்கும் மாறாக, இராணுவத்தால்
அபகரிக்கப்பட்டுள்ள பூர்வீக நிலங்களுக்கு நஷ்டஈடு வழங்கும் சதி முயற்சியை
அரசின் ஏவுதலு...</summary>
            <content type="html"><![CDATA[<p>​மக்களின் கோரிக்கைக்கும் விருப்பங்களுக்கும் மாறாக, இராணுவத்தால்
அபகரிக்கப்பட்டுள்ள பூர்வீக நிலங்களுக்கு நஷ்டஈடு வழங்கும் சதி முயற்சியை
அரசின் ஏவுதலுடன் சில அரச அதிகாரிகள் முன்னெடுத்து வருவதாக வலிவடக்கு மீள்
குடியேற்ற அபிவிருத்திக்குழு கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளது.

​</p><p>இந்த சதி முயற்சியின் ஒரு கட்டமாக, எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 4 ஆம் திகதியன்று
தெல்லிப்பழை பிரதேச செயலகத்தில் நஷ்ட ஈடு வழங்குவதற்கான கலந்துரையாடல்
ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
</p><p>
இதற்காக, காணிகளை இழந்து தவிக்கும் மற்றும் எக்காலத்திலும் நஷ்ட ஈடு கோராத
மக்களுக்கே பிரத்தியேகமாக கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அவர்கள்
சுட்டிக்காட்டியுள்ளனர்.</p><p></p><h2>பூர்வீகக் காணி</h2><p>

​இவ்வாறு அழைக்கப்படும் மக்களிடம் ஏதோ ஒரு வகையில் சம்மதத்தைப் பெற்று,
அவர்களின் பூர்வீகக் காணிகளை நிரந்தரமாகக் கபளீகரம் செய்யவே இன்றைய அரசும்
அதன் அதிகாரிகளும் தீவிரமாக முயற்சிக்கின்றனர் என்று அக்குழு எச்சரித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/254a3f55-5a19-421d-93a8-55e4fbbee600/26-6a6c8b217dd09.webp' /></p><p>இராணுவப் பிடிக்குள் இருக்கும் தமது சொந்த நிலங்களை நிபந்தனையின்றி
விடுவிக்குமாறு கோரி மயிலிட்டி மக்கள் தொடர்ந்து 15 வாரங்களாகத் தொடர்
அடையாளப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், மக்களின் இந்த நியாயமான
போராட்டத்தை வலுவிழக்கச் செய்யும் சதி வேலைகளிலேயே அரசு இறங்கியுள்ளது.

​</p><p>எனினும், பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரும் ஒரே நிலைப்பாட்டில் உறுதியாக நின்று
போராடினால் மட்டுமே எமது காணி நிலங்களை வெற்றிகரமாக மீட்டெடுக்க முடியும்
என்று ஏற்பாட்டுக் குழுவினர் வலுவாக வலியுறுத்தியுள்ளனர்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-31T11:46:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[தாய்லாந்தில் டூபீஸில் உலா வரும் டிராகன் பட நடிகை கோபிகா!!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/dragon-actress-gopika-suresh-thailand-phuket-photo-1785497193"></link>
            <id>https://viduppu.com/article/dragon-actress-gopika-suresh-thailand-phuket-photo-1785497193</id>
            <summary type="text">கோபிகா ரமேஷ்மலையாள சினிமாவில் அறிமுகமாகி தமிழில் ஸ்வீட் ஹார்ட்ஸ் படத்தில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை கோபிகா ரமேஷ். டிராகன் படத்தில் நடித்திருந்த க...</summary>
            <content type="html"><![CDATA[<h3>கோபிகா ரமேஷ்</h3><p>மலையாள சினிமாவில் அறிமுகமாகி தமிழில் ஸ்வீட் ஹார்ட்ஸ் படத்தில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை கோபிகா ரமேஷ். டிராகன் படத்தில் நடித்திருந்த கோபிகா, சூழல் வெப் தொடரில் நிலா என்ற ரோலில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b1d432be-e57d-4ab5-a746-ea776c43c2a6/26-6a6c8673b9a96.webp' /></p><p> </p><p>திரிஷாவின் ஐடெண்டிட்டி படத்திலும் நடித்திருந்தவர் 2கே கிட்ஸ்களின் கனவுக்கன்னியாக மாற்றியது. சோசியல் மீடியாக்களில் ஆக்டிவாக இருக்கும் கோபிகா வெகேஷனுக்கு தாய்லாந்தின் phuket தீவிற்கு சென்றுள்ளார். </p><p>அங்கு டூபீஸ் ஆடையில் உலாவந்த புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-07-31T11:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[எரிபொருள் விலை மாற்றம் தொடர்பில் வெளியான அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/monthly-fuel-price-revision-today-1785467817"></link>
            <id>https://tamilwin.com/article/monthly-fuel-price-revision-today-1785467817</id>
            <summary type="text">புதிய இணைப்புமாதாந்த எரிபொருள் விலை திருத்தத்திற்கு அமைய ஓகஸ்ட் மாதத்தில் எரிபொருள் விலையில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்பட மாட்டாது என இலங்கை பெட்ரோல...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்திற்கு அமைய ஓகஸ்ட் மாதத்தில் எரிபொருள் விலையில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்பட மாட்டாது என இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.</p><p>அதன்படி தற்போது நடைமுறையில் உள்ள, 92 ரக ஒக்டேன் பெற்றோல் விலை 414 ரூபாவாகவும், 95 ஒக்டேன் பெட்ரோல் விலை 495 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

இதேவேளை, லங்கா ஒட்டோ டீசல் விலை 382 ரூபாவாகவும் லங்கா சுப்பர் டீசல் விலை 478 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படும் என இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">முதலாம் இணைப்பு</span></p><p>மாதாந்த எரிபொருள் விலை திருத்தம் இன்று(31.07.2026) மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது</p><p>இதற்கமைய, இன்று உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலைகளை ஆய்வு செய்த பின்னர், நாட்டில் எரிபொருள் விலைகள் தொடர்பிர் முடிவு எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>எரிபொருள் விலை சூத்திரம்</h2><p>

இதற்கிடையில், நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று காலை உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் சரிவு ஏற்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/da3ba711-9496-4cdf-98ce-6205d4e3706c/26-6a6c15ea15077.webp' /></p><p>
</p><p>இதன்படி, ஒரு பரல் கச்சா எண்ணெயின் விலை 89.69 டொலராகவும், ஒரு பரல் WTI கச்சா எண்ணெய்யின் விலை 84.5 டெலராகவும் பதிவாகியுள்ளது.</p><p>எரிபொருள் விலை சூத்திரத்தின் படி ஒவ்வொரு மாதமும் கடைசி நாளில் இந்த விலை திருத்தம் மேற்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.&nbsp;&nbsp;</p><p></p><p></p><p><b><i>you may like this video</i></b></p><p>&nbsp;<iframe frameborder="0" src="//www.youtube.com/embed/OI5qZw5OcBY" width="640" height="360" class="note-video-clip"></iframe></p>]]></content>
            <updated>2026-07-31T11:28:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கோட்டாபய ராஜபக்சவினால் ஊடகங்களை அச்சுறுத்திய இரகசிய உளவுத்துறை கொலைக் கும்பல் தொடர்பான புதிய தகவல்கள்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/gotabaya-rajapaksa-army-intelligence-sri-lanka-1785460209"></link>
            <id>https://tamilwin.com/article/gotabaya-rajapaksa-army-intelligence-sri-lanka-1785460209</id>
            <summary type="text">முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்சவின் காலத்தில் இலங்கையின் இராணுவ உளவுத்துறை பொறிமுறையின் கீழ் சாதாரண கட்டளை முறைமைக்கு அப்பால்,இரகசியமா...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்சவின் காலத்தில் இலங்கையின் இராணுவ உளவுத்துறை பொறிமுறையின் கீழ் சாதாரண கட்டளை முறைமைக்கு அப்பால்,இரகசியமாக இயங்கிய ஒரு பிரிவு தொடர்பில் எவ்வித நீதி நடவடிக்கைகளும் இதுவரை மேற் கொள்ளப்படவில்லை என தெரியவந்துள்ளது. </p><p>
இந்த பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட கொலை மற்றும் அச்சுறுத்தல் -தாக்குதல்- பயமுறுத்தல் போன்ற செயற்பாடுகளில் ஈடுபட்ட இராணு அதிகாரிகள் இரண்டு தசாப்தங்கள் கடந்த நிலையில் சுதந்திரமாக நாட்டில் நடமாடுவதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>இவ்வாறான ஒரு பிரிவு இயங்குவதை அரசாங்கம் ஒருபோதும் உத்தியோகபூர்வமாக ஒப்புக்கொள்ளவில்லை. </p><h2>


</h2><p></p><h2>புலனாய்வு பிரிவில் இயங்கிய இரகசிய குழு</h2><p>இந்த குழுவுக்கு உத்தரவுகளைப் பிறப்பித்தது யார் என்பது மட்டுமல்ல அந்த உத்தரவுகள் தொடர்பான விசாரணைகளை முன்னெடுப்பதற்கு அதிகாரமுள்ள நிறுவனங்கள் தொடர்ந்தும் தவிர்த்தது ஏன் எனற் கேள்வியும் எழுந்துள்ளது.
</p><p>எந்தவொரு மேற்பார்வைக் குழுவிற்கும் பொறுப்புக்கூறக் கடமைப்படாத, பாதுகாப்புத் துறையின் உயர் அதிகாரிக்கு மட்டுமே பொறுப்புக்கூறும் ஒரு பிரிவாக இரகசியமாக இயங்கியது. இந்தப் பிரிவின் நேரடிப் தளபதியாக ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கபில ஹெந்தாவித்தாரண செயற்பட்டதாகக் கூறப்படுகிறது.</p><p>அரச புலனாய்வுச் சேவையுடன் (SIS) இணைந்து மேற்கொள்ளப்பட்ட ஆட்சேர்ப்புகளில், செயற்பாட்டுத் திறமையை விட இரகசியத்தைப் பேணுதல் மற்றும் அரசாங்கத்திற்கு, குறிப்பாக கோட்டாபய ராஜபக்சவின் தனிப்பட்ட விசுவாசத்திற்கே முன்னுரிமை அளிக்கப்பட்டது.
</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/34408139-fe84-4878-9788-14779a862bd6/26-6a6bf5f3eff6b.webp' /></p><p>இந்தப் பிரிவு கொஹுவல இராணுவ முகாமில் நிறுவப்பட்டிருந்தது. இந்த உறுப்பினர்கள் சாதாரண இராணுவத்தினரிடமிருந்து தனித்து வாழ்ந்ததுடன், தனி உணவு மற்றும் வசதிகளைப் பெற்று, சாதாரண இராணுவ ஒழுக்கம் மற்றும் பரிசோதனைகளிலிருந்து முற்றாக விடுவிக்கப்பட்டிருந்தனர்.
</p><p>2009 ஆண்டளவில் போர் இறுதிப் கட்டத்தை எட்டியிருந்ததால், இந்தப் பிரிவு யுத்த களத்திற்காகக் கட்டியெழுப்பப்படவில்லை மாறாக ஏனைய உட்புற அடக்குமுறை நடவடிக்கைகளுக்காகவே உருவாக்கப்பட்டது.
</p><p>கண்ணுக்குத் தெரியாமல் தாக்குதல் நடத்தும் தொழில்நுட்பம்.....
ஒரு சாதாரண குற்றக் கும்பலிலிருந்து இந்தப் பிரிவை வேறுபடுத்துவது, ஆயுதமேந்திய உறுப்பினர்கள் எவ்வித தடையுமின்றி கொழும்பு நகரத்திற்குள் பயணிப்பதற்காக உருவாக்கப்பட்டிருந்த சிக்கலான ஒருங்கிணைப்பு அமைப்பாகும்.
</p><p>கண்காணிப்பு கெமராக்களில் சிக்காமல் இருக்க போலி இலக்கத் தகடுகளைப் பொருத்திய வெள்ளை நிற வேன்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களை பயன்படுத்தியுள்ளனர்.
</p><h2>ஊடகங்களுக்கு எதிரான தாக்குதல்கள்</h2><p>பல ஆண்டுகளாகச் செயற்பட்ட இந்தப் பிரிவின் தாக்குதல்களில் ஒரே மாதிரியான முறைமை காணப்பட்டது. இரவு வேளையில் வெள்ளை வேன்களில் வருதல், T-56 துப்பாக்கிகளைக் காட்டி ஊடகர்களை அச்சுறுத்தல் மற்றும் இறுதியில் பெற்றோல் ஊற்றி ஊடக நிறுவனங்களைத் தீயிட்டுக் கொளுத்தி அழித்தல்.
</p><p>2009 ஜனவரி 6 அதிகாலை 2:30 மணிக்கு தெபானமவில் அமைந்துள்ள சிரச TV ஒளிபரப்பு மையத்தின் பிரதான கட்டுப்பாட்டு அறையில் மேற்கொள்ளப்பட்ட கிளைமோர் குண்டுவெடிப்பு சம்பவம். </p><p>உளவுத்துறையின் உட்புற தகவல்கள் மற்றும் முன்னாள் சிரேஷ்ட இராணுவ அதிகாரிகளின் கூற்றுகளின்படி, இது அரசாங்கத்தின் அனுசரணையுடன், அரச நிதியில் இயங்கிய ஒரு இரகசியப் பிரிவின் திட்டமிடப்பட்ட நடவடிக்கை என தெரிவிக்கப்பட்டிருந்தது. </p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4ce27932-adc4-4ca4-b51e-a25f61eed5a3/26-6a6bf5f4a36db.webp' /></p><p>2010 ஜூலை 29 சியத TV கங்காராமய 12 பேரடங்கிய கும்பல் வந்து, ஊழியர்களுக்குத் துப்பாக்கிகளைக் காட்டி முழங்காலிடச் செய்து, ஒளிபரப்பு உபகரணங்களுக்குப் பெற்றோல் இட்டு நிறுவனத்தையும் தீயிட்டுக் கொளுத்தியது.
</p><p>2011 ஜனவரி 11 லங்கா ஈ நியூஸ் மாலபே 6 பேரடங்கிய கும்பல் ஆசிரியர் சந்தருவன் சேனாதீரவின் வளாகத்திற்குள் நுழைந்து, கணினி அமைப்புகள் மற்றும் 7,000 க்கும் மேற்பட்ட புத்தகங்களைக் கொண்ட ஆவணக் காப்பகத்தைத் தீயிட்டு அழித்தது.
</p><h2>படுகொலைகள், கடத்தல்கள்</h2><p>
லசந்த விக்கிரமதுங்க: 'சண்டே லீடர்' பத்திரிகையின் ஆசிரியர் படுகொலை. பிரகீத் எக்னலிகொட கடத்தல். MBC/MTV செய்தி முகாமையாளர் செவோன் டேனியல் சர்வதேச ஊடகங்கள் மற்றும் அமெரிக்கத் தூதரகப் பிரிவுகளின் தலையீட்டின் பேரில் தப்பினார். </p><p>லங்கா ஈ நியூஸ் ஆசிரியர் சந்தருவன் சேனாதீர ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் 5 மாத தீவிர கண்காணிப்புக்குப் பிறகு ஐக்கிய இராச்சியத்திற்குத் தப்பிச் சென்றார். இந்த குழுவினர் சாதாரண இராணுவச் சம்பளத்திற்கு மேலதிகமாக பல சலுகைகளை பெற்றுக் கொண்டுள்ளனர்.</p><p></p><p>இந்தத் தாக்குதல்கள் இருளில் நடந்த ஏதேச்சையான சம்பவங்கள் அல்ல, அரச நிதியில் திட்டமிடப்பட்டு நடத்தப்பட்ட தாக்குதல்கள் என்பதால், குற்றப் புலனாய்வுத் துறை (CID), சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் நீதிமன்றங்களில் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்குப் போதுமான சான்றுகள் உள்ளன. </p><p>ஆனால் கேள்வி என்னவென்றால், இலங்கையின் பொறுப்புள்ள நிறுவனங்கள் என்றாவது சட்டத்தை நடைமுறைப்படுத்துமா என்பதாகும்.</p><p>&nbsp;&nbsp;</p><p><b><i>you may like this video</i></b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/pPKciR9T474" width="640" height="360" class="note-video-clip"></iframe>&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-31T11:28:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஓகஸ்ட் மாத எரிபொருள் விலையில் மாற்றம் இல்லை : வெளியான அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/fuel-prices-to-remain-unchanged-in-august-cpc-1785496329"></link>
            <id>https://ibctamil.com/article/fuel-prices-to-remain-unchanged-in-august-cpc-1785496329</id>
            <summary type="text">இலங்கையில் மேற்கொள்ளப்படும் மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்திற்கு அமைய ஓகஸ்ட் மாதத்தில் எரிபொருள் விலையில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்பட மாட்டாது என...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் மேற்கொள்ளப்படும் மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்திற்கு அமைய ஓகஸ்ட் மாதத்தில் எரிபொருள் விலையில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்பட மாட்டாது என இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் (CPC) தெரிவித்துள்ளது. </p><p>இன்று (31) நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஜே.டி. ராஜகருணா&nbsp; இதனைக் குறிப்பிட்டார்.</p><p>

இதற்கமைய, ஒக்டேன் 92 ரக பெட்ரோல் லீற்றர் ஒன்றின் விலை 414 ரூபாய் என்ற நிலையிலேயே தொடர்ந்தும் நிலவும் என குறிப்பிட்டார்.</p><p></p><h2>பழைய விலையில் தொடரும்&nbsp;</h2><p>

அத்துடன், ஓட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 382 ரூபாயாகவும், ஒக்டேன் 95 ரக பெட்ரோல் லீற்றர் ஒன்றின் விலை 495 ரூபாயாகவும் அதே விலையில் தொடர்கின்றது என அறிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4946cfb4-cbfd-4292-b339-460d7f35d7ae/26-6a6c85a87f7bc.webp' /></p><p>

சுப்பர் டீசலின் விலை 478 ரூபாயாகவும், மண்ணெண்ணெய் ஒரு லீற்றரின் விலை 285 ரூபாய் என்ற நிலையிலும் மாற்றமின்றி விற்பனை செய்யப்படும் பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் மேலும் தெரிவித்திருந்தார்.</p><p></p><p>கடந்த 26ஆம் திகதி இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் எரிபொருட்களின் மாதாந்த விலை தீர்மானிக்கும் காலப்பகுதியின் எஞ்சியுள்ள நாட்களில் சர்வதேச சந்தையில் நிலவும் சராசரி மசகு எண்ணெய் விலையின் அடிப்படையில் தீர்மானம் எடுக்கப்படும் என்பதால், அடுத்த மாதம் எரிபொருள் விலையில் திருத்தம் செய்யப்படுமா என்பதை இப்போது கூற முடியாதென இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கலாநிதி மயூர நெத்திகுமார தெரிவித்திருந்தார்.</p><p>
இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே ஏற்பட்டுள்ள புதிய மோதல்கள் காரணமாக உலகளாவிய ரீதியில் எரிபொருள் விலையில் ஏற்ற இறக்கங்கள் நிலவி வரும் நிலையிலேயே நிச்சயமற்ற சூழல் உருவாகியுள்ளது என அவர் குறிப்பிட்டார்.</p><p>&nbsp;இந்த தருணத்தில் விலை உயருமா இல்லையா என்பதை உறுதியாகக் கூற முடியாது என்றும் எங்களுக்கு இந்த மாதம் நிறைவடைவதற்கு இன்னும் நான்கு நாட்கள் உள்ளன எனவும் அன்று அவர் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-31T11:27:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானிய பகுதியொன்றில் 3வது நாளாக காட்டுத்தீ: மீண்டுவர 25 ஆண்டுகள் ஆகலாம்..நிபுணர்கள் எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/firefighters-continues-battling-suffolk-wildfire-1785496848"></link>
            <id>https://news.lankasri.com/article/firefighters-continues-battling-suffolk-wildfire-1785496848</id>
            <summary type="text">பிரித்தானியாவின் சஃபோக்கில் ஏற்பட்ட காட்டுத்தீ மூன்றாவது நாளாக எரிந்து கொண்டிருக்கிறது.மூன்றாவது நாளாக காட்டுத்தீ 

சஃபோக்கில் ஏற்பட்ட பாரிய காட்டுத...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரித்தானியாவின் சஃபோக்கில் ஏற்பட்ட காட்டுத்தீ மூன்றாவது நாளாக எரிந்து கொண்டிருக்கிறது.</p><h2>மூன்றாவது நாளாக காட்டுத்தீ 
</h2><p>
சஃபோக்கில் ஏற்பட்ட பாரிய காட்டுத்தீ தொடர்ந்து மூன்றாவது நாளாக எரிந்து கொண்டிருக்கிறது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f24459b8-ea1c-4469-b8d6-67ab9993b61e/26-6a6c865ab7cbd.webp' /></p><p></p><p>

தீ பரவுவதைக் கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்கள் போராடி வரும் நிலையில், ஹெலிகொப்டர்களில் இருந்து ஆயிரக்கணக்கான லிற்றர் கடல்நீர் பயன்படுத்தப்பட்டு வருகிறது. </p><p>

லெஸ்டனுக்கு அருகிலுள்ள டன்விச் ஹீத் பகுதியில், புதன்கிழமை மாலை முதல் தீயணைப்பு வீரர்கள் இந்த தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
</p><p>
லண்டன், எசெக்ஸ் மற்றும் மேற்கு யார்க்ஷயர் போன்ற தொலைதூரப் பகுதிகளிலிருந்தும் தீயணைப்புக் குழுவினர் உள்ளூர், தீயணைப்பு வீரர்களுடன் இணைந்துள்ளனர்.</p><h2>25 ஆண்டுகள் ஆகலாம்</h2><p> 

அதேபோல், தீயைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளில் டசின் கணக்கான விவசாயிகள் இணைந்துள்ளனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/63ede2cf-c482-4e5b-9d09-05327581cbb5/26-6a6c865b7493a.webp' />&nbsp;</p><p>அவர்களில் பலர், வயல்வெளித் தீ குறித்த தங்கள் அறிவைப் பகிர்ந்துகொண்டு, தண்ணீர் டேங்கர்களைக் கொண்டு செல்ல தங்கள் டிராக்டர்களைப் பயன்படுத்துகின்றனர். இதற்கிடையில் ஏராளமான குடியிருப்பாளர்களும், நூற்றுக்கணக்கான விடுமுறைக்காலப் பயணிகளும் வெளியேற்றப்பட்டுள்ளனர்.</p><p>

சஃபோக் (Suffolk) பகுதிக்கான RSPB மேலாளர் ஆடம் ரோவ்லேண்ட்ஸ் கூறுகையில், "ஆண்டின் இக்காலகட்டத்தில் இப்பகுதி மிகவும் வறண்டு காணப்படுவதால், தீ விபத்திற்கான அபாயம் உள்ளது என்பது எங்களுக்கு தெரியும். அந்த முதல் தீப்பொறி RSPB நிலப்பகுதியிலிருந்தே உருவானது என்பது மிகுந்த வேதனையளிக்கிறது. 

டன்விச் ஹீத் பகுதியைச் சுற்றியுள்ள நிலப்பகுதி மீண்டும் பழைய நிலையை அடைய 25 ஆண்டுகள் ஆகலாம்" என்றார்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f89c5309-8290-4594-b2d9-8c20be6bc682/26-6a6c87f9948cf.webp' />&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5ee64bb1-d348-4d3f-9663-c6eff93fb816/26-6a6c87f8c4b8e.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-31T11:24:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பில் வெளிநாட்டு பெண்களுடன் சுற்றிவளைக்கப்பட்ட விடுதி! உரிமையாளர் தப்பியோட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/11-thai-women-arrested-1785496642"></link>
            <id>https://tamilwin.com/article/11-thai-women-arrested-1785496642</id>
            <summary type="text">குருந்துவத்தை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் 
மசாஜ் நிலையப் போர்வையில் சட்டவிரோதமாக செயற்பட்ட 11 தாய்லாந்து பெண்களை கொழும்பு த...</summary>
            <content type="html"><![CDATA[<p>குருந்துவத்தை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் 
மசாஜ் நிலையப் போர்வையில் சட்டவிரோதமாக செயற்பட்ட 11 தாய்லாந்து பெண்களை கொழும்பு தெற்கு குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.</p><p>

அத்துடன், விடுதியின் உரிமையாளர் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>

22 வயதுக்கும் 48 வயதுக்கும் இடைப்பட்ட தாய்லாந்து பெண்கள் குழுவொன்றே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p></p><p>
</p><h2>
11 தாய்லாந்து பெண்கள் கைது</h2><p>

குற்றப் புலனாய்வுப் பிரிவின் நிலையத் தளபதிக்குக் கிடைத்த விசேட தகவல் ஒன்றின் அடிப்படையில், உத்தியோகத்தர் ஒருவரால் மேற்கொள்ளப்பட்ட அதிநவீன நடவடிக்கையின் பின்னரே இந்தச் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/da6922d4-2ad3-49a4-8139-1cb3a508f026/26-6a6c856698193.webp' /></p><p>ஒரு மாத காலம் மாத்திரம் விசா பெற்று இலங்கைக்கு வந்துள்ள இந்த பெண்கள், குறித்த மசாஜ் நிலையத்தில் தங்கியிருந்து சட்டவிரோத ஆட்கடத்தலில் ஈடுபட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. </p><p>

இதன் மூலம் மாதந்தோறும் இலட்சக்கணக்கில் சம்பாதித்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த சேவையை பெற்றுக் கொள்வதற்காக பெண் ஒருவரிடம் இருந்து 20,000 முதல் 30,000 ரூபா வரை அறவிடப்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணைகளின் போது மேலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
</p><p>
கைது செய்யப்பட்ட 11 தாய்லாந்து பெண்களும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-31T11:22:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சினிமா வட்டாரத்தில் சோகம்; மற்றுமொரு பழம்பெரும் பின்னணி பாடகி காலமானார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/veteran-playback-singer-jamuna-rani-passes-away-1785489200"></link>
            <id>https://jvpnews.com/article/veteran-playback-singer-jamuna-rani-passes-away-1785489200</id>
            <summary type="text">&amp;nbsp; பின்னணி பாடகி ஜானகி அம்மாவின் மறைவை தொடர்ந்து , பழம்பெரும் பின்னணி பாடகி ஜமுனா ராணி தனது 88ஆவது வயதில் காலமானாதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை சினிமா ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; பின்னணி பாடகி ஜானகி அம்மாவின் மறைவை தொடர்ந்து , பழம்பெரும் பின்னணி பாடகி ஜமுனா ராணி தனது 88ஆவது வயதில் காலமானாதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை சினிமா வட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
</p><p>
தமிழ், தெலுங்கு, சிங்களம், கன்னடம், மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 6,000க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ள அவர், இந்தியத் திரையுலகில் தனக்கென தனி இடத்தைப் பெற்றிருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/218f6766-e949-4ee9-94be-43082b1cfa05/26-6a6c6731e253c.webp' /></p><p></p><h2>பல தலைமுறை ரசிகர்களை கவர்ந்த ஜமுனா ராணி</h2><p>

நடிகை ஸ்ரீதேவி நடித்த திரைப்படங்கள், “யாரடி நீ மோகினி”, “குங்குமப் பூவே” உள்ளிட்ட பல திரைப்படங்களில் இடம்பெற்ற பாடல்கள் மூலம் அவர் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.</p><p></p><p>
</p><p>
பல தலைமுறை ரசிகர்களை தனது இனிமையான குரலால் கவர்ந்த ஜமுனா ராணியின் மறைவு, இசை உலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அவரது மறைவுக்கு திரையுலகப் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.</p><p>&nbsp; </p>]]></content>
            <updated>2026-07-31T11:22:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆயுதங்களைக் கைவிட ஹமாஸ் படைகள் ஒப்புதல்: ட்ரம்ப் அளித்த வாக்குறுதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/gaza-disarmament-agreement-1785496904"></link>
            <id>https://news.lankasri.com/article/gaza-disarmament-agreement-1785496904</id>
            <summary type="text">காஸாவில் தங்கள் ஆயுதங்களைக் கைவிடுவதற்கான திட்டத்தை முன்னெடுக்கும் ஆவணம் ஒன்றை ஹமாஸ் மற்றும் பிற பாலஸ்தீனக் குழுக்கள் ஏற்றுக்கொண்டுள்ளன.மகத்தான முன்னெ...</summary>
            <content type="html"><![CDATA[<p>காஸாவில் தங்கள் ஆயுதங்களைக் கைவிடுவதற்கான திட்டத்தை முன்னெடுக்கும் ஆவணம் ஒன்றை ஹமாஸ் மற்றும் பிற பாலஸ்தீனக் குழுக்கள் ஏற்றுக்கொண்டுள்ளன.</p><h2>மகத்தான முன்னெடுப்பு</h2><p>
</p><p>ஹமாஸ் படைகளின் இந்த முடிவை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், அமைதி மற்றும் பாதுகாப்பை நோக்கிய ஒரு மகத்தான முன்னெடுப்பு என்று குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/01656797-03dd-41e9-8309-e7d5a6577fa0/26-6a6c87058fd90.webp' /></p><p>
</p><p>ஆயுதங்களைக் கைவிடுவதற்கான துல்லியமான செயல்வடிவத்தை 14 நாட்களுக்குள் தயாரிக்க வேண்டும் என்றும், சர்வதேச சரிபார்ப்பு அமைப்பின் ஒப்புதல் மற்றும் அனைத்துத் தரப்பினரின் உடன்பாட்டுக்கு உட்பட்டு அதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வாய்ப்புள்ளது என்றும் அந்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. </p><p>இதனிடையே ஹமாஸ் தரப்பில் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்ட காஸி ஹமாத் தெரிவிக்கையில், இந்தப் பேச்சுவார்த்தைகள் கடினமாகவும் சவாலாகவும் இருந்ததாகவும், சாத்தியமான சிறந்த தீர்வை எட்டுவதற்கு முயன்றதாகவும் குறிப்பிட்டுள்ளார். </p><p>இருப்பினும், இஸ்ரேலியப் படைகள் தங்களது கடமைகளை நிறைவேற்றத் தவறினால், ஒப்பந்தத்தின் எந்தப் பகுதியையும் ஹமாஸ் படைகள் செயல்படுத்தாது என்றும் ஹமாத் கூறியுள்ளார்.</p><p></p><p> </p><p>மேலும், ஆயுதங்களைக் கைவிடுவது என்பது காஸாவிலிருந்து இஸ்ரேல் படைகள் வெளியேறுவதையும், பாலஸ்தீனப் பகுதியில் ஜனாதிபதி ட்ரம்ப் உறுதி அளித்துள்ள மறுசீரமைப்புப் பணிகளில் ஏற்படும் முன்னேற்றத்தையும் பொறுத்தே அமையும் என்றும் ஹமாத் விளக்கமளித்துள்ளார். </p><p>ஆனால், இந்த விவகாரத்தில் இதுவரை இஸ்ரேல் தரப்பில் இருந்து எவ்விதக் கருத்தும் வெளியாகவில்லை. இந்த நிலையில் ட்ரம்ப் தனது ட்ரூத் சமூக ஊடகத்தில் குறிப்பிடுகையில், </p><p>பாலஸ்தீன மக்களுக்கு உதவ 'அமைதிக்கான வாரியத்துடன்' (Board of Peace) நெருக்கமாக இணைந்து செயல்படவுள்ள புதிய பாலஸ்தீன அரசாங்கத்தின் கீழ் காஸா நிர்வகிக்கப்படுவதை நோக்கிய ஒரு முக்கியமான படியாக இந்த ஒப்பந்தம் அமைந்துள்ளது என்றார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/15069c09-0176-4282-b890-b41723c16d5e/26-6a6c8704ccf21.webp' /></p><p> </p><p>அதே வேளை, காஸா இனி பயங்கரவாதத் தாக்குதல்களுக்கான தளமாகப் பயன்படுத்தப்படாத நிலையில், இஸ்ரேல் தனக்குரிய பாதுகாப்பைப் பெறும் எனவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>காஸாவிற்கு ஒரு தேசியக் குழு மற்றும் சர்வதேச நிலைப்படுத்தல் படை ஆகியவை நுழைவதோடு ஆயுதங்களைக் கைவிடும் நடவடிக்கை தொடங்கும்.</p><p> அதன்பின்னர், சர்வதேச சரிபார்ப்புக் குழுவின் கண்காணிப்பிலும் பாலஸ்தீனக் குழுக்களின் பங்கேற்புடனும், பட்டியலிடுதல் மற்றும் சேமித்து வைத்தல் செயல்முறையைத் தேசியக் குழு மேற்பார்வையிடும்.</p><h2>இஸ்ரேலியப் படைகள்</h2><p> </p><p>ஆயுதங்களைக் கைவிடும் செயல்முறையானது, காஸாவிலிருந்து இஸ்ரேலியப் படைகள் படிப்படியாக விலக்கிக்கொள்ளப்படுவதோடும் தொடர்புடையது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/176ba642-8d2a-4059-b5bf-aabb9ea5e04c/26-6a6c870644734.webp' /></p><p> மேலும், இஸ்ரேலிடமோ அல்லது பாலஸ்தீனியர் அல்லாத எந்தவொரு அமைப்பிற்கோ ஆயுதங்கள் எதுவும் ஒப்படைக்கப்படக் கூடாது என்றும், காஸாவில் ஆயுதங்களை வைத்திருக்கும் ஒரே அமைப்பாக 'தேசியக் குழு' (National Committee) மட்டுமே இருக்க வேண்டும் என்றும் அந்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
</p><p>காஸா காவல்துறையினரிடம் உள்ள ஆயுதங்கள் முதலில் ஒப்படைக்கப்படும் என்றும், அதைத் தொடர்ந்து கனரக ஆயுதங்கள் பயன்பாட்டிலிருந்து நீக்கப்படும் என்றும் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். </p><p>இத்திட்டத்தின் கீழ் காஸாவில் அனைத்து ராணுவ நடவடிக்கைகளும் நிறுத்தப்பட வேண்டும்; இருப்பினும், இந்தச் செயல்முறையைச் செயல்படுத்தக் கால அவகாசம் தேவைப்படும் என்றும் அந்த அதிகாரி குறிப்பிட்டார். </p><p>கடந்த அக்டோபர் மாதம் ட்ரம்பின் மத்தியஸ்தத்தில் போர்நிறுத்தம் அமுலுக்கு வந்தாலும், இஸ்ரேல் போர்நிறுத்த ஒப்பந்தத்தை தொடர்ச்சியாக மீறியுள்ளது; அந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்ததிலிருந்து 1,200-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்களை இஸ்ரேல் படைகள் கொன்றுள்ளது,</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2835afd7-124a-4c98-81f3-a38754ce4bc8/26-6a6c8706eb37d.webp' /></p><p> </p><p>மேலும் நிலப்பரப்புகளைக் கைப்பற்றி வருவதுடன், காஸாவிற்குள் மற்றும் அங்கிருந்து வெளியே மக்கள் மற்றும் சரக்குகள் செல்வதற்கான கட்டுப்பாடுகளையும் தொடர்ந்து விதித்து வருகிறது.
</p><p>இந்த நிலையில், ஆயுதங்களைக் கைவிடுவது முழுமையடைந்ததும், இஸ்ரேல் காஸாவிலிருந்து வெளியேறும் என்றும், அதற்குப் பதிலாக ஒரு புதிய பாலஸ்தீனக் காவல் படையுடன் இணைந்து செயல்படும் சர்வதேச நிலைப்படுத்தல் படை அங்கு அமர்த்தப்படும் என்றும் ட்ரம்ப் கூறியுள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-31T11:19:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடற்கரையில் ஒதுங்கிய பைகளில் கட்டுக்கட்டாக பணம்: பரபரப்பை உருவாக்கிய சம்பவம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/7-lakhs-euro-cash-bag-wash-up-in-sicily-beach-1785496502"></link>
            <id>https://news.lankasri.com/article/7-lakhs-euro-cash-bag-wash-up-in-sicily-beach-1785496502</id>
            <summary type="text">சுற்றுலாவுக்கு பெயர் பெற்ற தீவொன்றில், கடற்கரையில் ஒதுங்கிய பைகளில் கட்டுக்கட்டாக பணம் இருப்பது தெரியவந்ததால் பெரும் பரபரப்பு உருவானது.

கரையில் ஒது...</summary>
            <content type="html"><![CDATA[<p>சுற்றுலாவுக்கு பெயர் பெற்ற தீவொன்றில், கடற்கரையில் ஒதுங்கிய பைகளில் கட்டுக்கட்டாக பணம் இருப்பது தெரியவந்ததால் பெரும் பரபரப்பு உருவானது.</p><h3>

கரையில் ஒதுங்கிய பைகளில் கட்டுக்கட்டாக பணம்</h3><p>

இத்தாலிக்கு சொந்தமான சிசிலித் தீவிலுள்ள, Casuzze என்னும் இடத்தில் அமைந்துள்ள கடற்கரை ஒன்றில் பல பைகள் கரையொதுங்கியுள்ளன.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/581c6333-e03a-4768-9ce7-e6192324d6d6/26-6a6c83b9211ab.webp' /></p><p>
அதைக் கண்ட மக்கள் அந்த பைகளை சேகரித்து அதில் என்ன உள்ளது என சோதிக்க, அந்தப் பைகளில் கட்டுக்கட்டாக பணம் இருப்பது தெரியவந்தது.
</p><p>
அதாவது, மால்ட்டா தீவிலிருந்து ஒரு படகு வந்துள்ளது. அதில் மூன்று ஆண்களும் ஒரு சிறுபையனும் இருந்துள்ளார்கள்.&nbsp;</p><p></p><p>
வரும் வழியில் எரிபொருள் தீர்ந்துபோகவே, அந்த படகு அலைகளால் கரையை நோக்கி இழுத்துவரப்பட்டுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6522fe58-d130-49f3-920e-c3544ff9ef01/26-6a6c83b857846.webp' /></p><p>
பொலிசார் அவர்களை நெருங்க, பொலிசாரைக் கண்டதும் படகிலிருந்தவர்களில் மூன்று பேர் கடலில் குதிக்க, ஒருவர் படகிலிருந்த பைகளை கடலுக்குள் வீசியுள்ளார். அந்த பைகள்தான் கரையில் ஒதுங்கியுள்ளன!
</p><p>
பொலிசார் அந்த பணத்தை பறிமுதல் செய்துள்ள நிலையில், அந்தப் பைகளில் சுமார் 500,000 முதல் 600,000 பவுண்டுகள் வரை இருக்கலாம் என கணக்கிடப்பட்டுள்ளது.</p><p>

படகிலிருந்த நால்வரையும் பொலிசார் விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ள நிலையில், அது சட்ட விரோதப் பணமா, அது யாருக்கு சொந்தமானது என்பது குறித்து விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-31T11:18:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[எரிபொருள் விலையில் எந்த மாற்றமும் இருக்காது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/there-will-be-no-change-in-fuel-prices-srilanka-1785496528"></link>
            <id>https://jvpnews.com/article/there-will-be-no-change-in-fuel-prices-srilanka-1785496528</id>
            <summary type="text">&amp;nbsp; ஒகஸ்ட் மாதத்தில் எரிபொருள் விலையில் எந்த மாற்றமும் இருக்காது என இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.



அதன்படி த...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; ஒகஸ்ட் மாதத்தில் எரிபொருள் விலையில் எந்த மாற்றமும் இருக்காது என இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.</p><p>



அதன்படி தற்போது நடைமுறையில் உள்ள, 92 ரக ஒக்டேன் பெற்றோல் விலை 414 ரூபாவாகவும், 95 ஒக்டேன் பெற்றோல் விலை 495 ரூபாவாகவும், லங்கா ஒட்டோ டீசல் விலை 382 ரூபாவாகவும் லங்கா சுப்பர் டீசல் விலை 478 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படும் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/08c1535d-03aa-48c3-b7b4-eaa794f9ff70/26-6a6c83d23fcab.webp' /></p>]]></content>
            <updated>2026-07-31T11:13:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் விவகாரம் ; நீதிமன்றத்திற்கு வந்தடைந்த ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் பூஜித் ஜயசுந்தர]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/hemasiri-fernando-pujith-jayasundara-arrive-court-1785496372"></link>
            <id>https://jvpnews.com/article/hemasiri-fernando-pujith-jayasundara-arrive-court-1785496372</id>
            <summary type="text">முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் முன்னாள் காவல்துறை மாஅதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோர் சற்று நேரத்திற்கு முன்னர் நீதிமன்றத்திற்...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் முன்னாள் காவல்துறை மாஅதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோர் சற்று நேரத்திற்கு முன்னர் நீதிமன்றத்திற்கு வந்தடைந்தனர்.</p><p></p><h3>ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்&nbsp;</h3><p>

உளவுத்துறைத் தகவல்கள் கிடைத்தபோதிலும் ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலைத் தடுக்கத் தவறியதன் மூலம் குற்றவியல் கடமை தவறியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் அவர்களுக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கு தொடர்பான தீர்ப்புக்காகவே வருகை தந்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f57fa12a-cc60-4983-a9ad-acb6900a3008/26-6a6c8335a4793.webp' /></p><p>

சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கின் தீர்ப்பு, கொழும்பு மேல் நீதிமன்றத்தின் மூவர் அடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் அறிவிக்கப்படவுள்ளது.</p><p>

குறித்த இருவருக்கும் எதிரான வழக்கின் விசாரணை அண்மையில் முடிவடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-31T11:13:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பில் சற்றுமுன் வெளியான அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/fuel-price-in-sri-lanka-1785495787"></link>
            <id>https://tamilwin.com/article/fuel-price-in-sri-lanka-1785495787</id>
            <summary type="text">ஆகஸ்ட் எரிபொருள் விலையில் எந்த மாற்றமும் இருக்காது என இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பான அறிவிப்பு இன்று பிற்பகல் (31.07.2...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஆகஸ்ட் எரிபொருள் விலையில் எந்த மாற்றமும் இருக்காது என இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.</p><p>
</p><p>இது தொடர்பான அறிவிப்பு இன்று பிற்பகல் (31.07.2026) வெளியிடப்பட்டுள்ளது.&nbsp;</p><p>செய்தியாளர் சந்திப்பில் வைத்து இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி. ஜெ. ராஜகருண இதனை அறிவித்துள்ளார்.&nbsp;</p><p></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/39233f36-453a-4ec5-adee-55a0641bc992/26-6a6c830e7e67e.webp' /></p><h2>விலைகள்</h2><p>அதன்படி தற்போது நடைமுறையில் உள்ள, 92 ரக ஒக்டேன் பெற்றோல் விலை 414 ரூபாவாகவும், 95 ஒக்டேன் பெற்றோல் விலை 495 ரூபாவாகவும், லங்கா ஒட்டோ டீசல் விலை 382 ரூபாவாகவும் லங்கா சுப்பர் டீசல் விலை 478 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படும் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-31T11:12:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாகிஸ்தானில் நிலக்கரி சுரங்கத்தில் வெடி விபத்து : பலி எண்ணிக்கை 34ஆக உயர்வு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/pakistan-coal-mine-explosion-1785493509"></link>
            <id>https://tamilwin.com/article/pakistan-coal-mine-explosion-1785493509</id>
            <summary type="text">தெற்கு பாகிஸ்தானில் உள்ள நிலக்கரிச் சுரங்கத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 34 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.வெடிவிபத்தில் மேலும் பலர் காயமடைந்து மருத்துவம...</summary>
            <content type="html"><![CDATA[<p>தெற்கு பாகிஸ்தானில் உள்ள நிலக்கரிச் சுரங்கத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 34 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.</p><p>வெடிவிபத்தில் மேலும் பலர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p></p><h2>தொடரும் மீட்புப் பணிகள்&nbsp;</h2><p>
இந்த வெடிவிபத்தில் மேலும் பலர் காணாமல் போயுள்ளதாகவும், அவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a9ea8129-0d06-4423-a639-7803dc47f004/26-6a6c7f7025c9f.webp' /></p><p>மேலும் அதிகாரிகள் இச்சம்பவம் குறித்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.</p><p>சுமார் 4 ஆயிரம் அடி ஆழத்தில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p>மீத்தேன் வாயு கசிவினால் இந்த வெடி விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>சுரங்க வெடிவிபத்து குறித்து விரிவான விசாரணைக்கு அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-31T11:12:01+00:00</updated>
        </entry>
    </feed>
