<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-07-29T00:42:32+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானின் கொசுப்படையை பாராட்டிய ரஷ்ய ஜனாதிபதி புதின்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/russian-president-putin-praises-iran-mosquito-forc-1785279946"></link>
            <id>https://canadamirror.com/article/russian-president-putin-praises-iran-mosquito-forc-1785279946</id>
            <summary type="text">ரஷ்ய கடற்படை அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் உரையாற்றிய ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின், ஈரானின் &quot;கொசுப்படை&quot; (Mosquito Fleet) போர்த் தந்திரத்தை பா...</summary>
            <content type="html"><![CDATA[<p>ரஷ்ய கடற்படை அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் உரையாற்றிய ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின், ஈரானின் "கொசுப்படை" (Mosquito Fleet) போர்த் தந்திரத்தை பாராட்டியதுடன், ரஷ்ய கடற்படையிலும் அதுபோன்ற திறன் வாய்ந்த பிரிவை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளார்.
</p><p>
மத்திய கிழக்கில் நீடித்து வரும் பதற்றமான சூழ்நிலையில், ஈரான் சிறிய அளவிலான அதிவேக தாக்குதல் படகுகளை பயன்படுத்தி கடற்படை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e2b22a49-04a3-4486-be2a-4819a0220a6c/26-6a6935cc6b115.webp' /></p><p>இதுதொடர்பாக ரஷ்ய அரச ஊடகமான ஸ்புட்னிக் வெளியிட்டுள்ள தகவலின்படி, மத்திய கிழக்கில் நடைபெற்று வரும் மோதல்களை சுட்டிக்காட்டிய புதின், ஈரானின் "கொசுப்படை" போர்க்களத்தில் திறமையாக செயல்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.
</p><p>
அந்தப் படகுகள் அளவில் சிறியதாக இருந்தாலும், நவீன ஆயுதங்கள் மற்றும் அதிவேக செயற்பாட்டு திறன் காரணமாக கடற்போரில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்றும் அவர் கூறியுள்ளார்.</p><p>

எதிர்கால கடற்படை நவீனமயமாக்கல் திட்டங்களின் ஒரு பகுதியாக, இதுபோன்ற திறன் வாய்ந்த, விரைவாக செயல்படும் சிறிய தாக்குதல் படகுகள் அடங்கிய பிரிவை ரஷ்ய கடற்படையிலும் உருவாக்க வேண்டும் என கடற்படை அதிகாரிகளிடம் புதின் வலியுறுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-29T00:41:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பகுதியில் நேர்ந்த சோகம் ; ஐந்து மாதக் குழந்தைக்கு நேர்ந்த கதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/tragedy-in-tamil-area-fate-of-five-month-old-baby-1785285592"></link>
            <id>https://jvpnews.com/article/tragedy-in-tamil-area-fate-of-five-month-old-baby-1785285592</id>
            <summary type="text">வவுனியா - கனகராயன்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நெடுங்கேணி, குளவிசுட்டான் கிராமத்தில் ஊஞ்சல் தடி முறிந்து விழுந்ததில் ஐந்து மாதக் குழந்தை ஒன்று சம்பவ ...</summary>
            <content type="html"><![CDATA[<p>வவுனியா - கனகராயன்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நெடுங்கேணி, குளவிசுட்டான் கிராமத்தில் ஊஞ்சல் தடி முறிந்து விழுந்ததில் ஐந்து மாதக் குழந்தை ஒன்று சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளது.</p><p></p><h3>மேலதிக விசாரணை</h3><p>

குழந்தை தனது தாயுடன் ஊஞ்சலில் அமர்ந்திருந்த போது எதிர்பாராதவிதமாக ஊஞ்சல் தடி சரிந்து விழுந்துள்ளததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9e211846-ab25-4287-96d5-e00a7d23743a/26-6a694bd9c6396.webp' /></p><p>இதில் படுகாயமடைந்த ஐந்து மாதக் குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன் குழந்தையின் தாய் சிறுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.</p><p>உயிரிழந்த குழந்தையின் சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
</p><p>
இந்தச் சம்பவம் தொடர்பாக கனகராயன்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-29T00:40:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[காத்திருந்து திடீரென தாக்கிய ஈரான்! முற்றாக முறியடித்த அமெரிக்க படைகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/us-military-thwart-sudden-attack-launched-by-iran-1785284053"></link>
            <id>https://ibctamil.com/article/us-military-thwart-sudden-attack-launched-by-iran-1785284053</id>
            <summary type="text">மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்கப் படைகள் மீது ஈரான் நடத்திய திடீர் தாக்குதலை அமெரிக்க இராணுவம் வெற்றிகரமாக முறியடித்ததாக அமெரிக்க மத்திய கட்டளை மையம் (...</summary>
            <content type="html"><![CDATA[<p>மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்கப் படைகள் மீது ஈரான் நடத்திய திடீர் தாக்குதலை அமெரிக்க இராணுவம் வெற்றிகரமாக முறியடித்ததாக அமெரிக்க மத்திய கட்டளை மையம் (CENTCOM) அறிவித்துள்ளது. </p><p>இது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள&nbsp; CENTCOM, “மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்கப் படைகள் மீது திடீர் தாக்குதல் நடத்தும் முயற்சியில், இஸ்லாமியப் புரட்சிகரக் காவல் படையினர் (IRGC) ஈரானிலிருந்து பல பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவினர். </p><p>

ஈரானின் அனைத்து ஏவுகணைகளும் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டன. அமெரிக்கப் படைகள் தொடர்ந்து விழிப்புடனும், உயர் தயார் நிலையிலும் உள்ளன” எனத் தெரிவித்துள்ளது.</p><p></p><h2>பாலிஸ்டிக் ஏவுகணைகள்</h2><p>

 ஆரம்பகட்ட மதிப்பீடுகளின்படி, ஏவப்பட்டவை நான்கு பாலிஸ்டிக் ஏவுகணைகளுக்கு மிகாமல் இருக்கும் என அமெரிக்க அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">At 5:45 p.m. ET today, Islamic Revolutionary Guard Corps forces launched multiple ballistic missiles from Iran in an attempted surprise attack on U.S. forces based in the Middle East. All Iranian missiles were successfully intercepted. U.S. forces remain vigilant and at a high…</p>&mdash; U.S. Central Command (@CENTCOM) <a href="https://x.com/CENTCOM/status/2082231500318114110?ref_src=twsrc%5Etfw">July 28, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>
ஈரான் மீதான தாக்குதல்களை அமெரிக்கா நிறுத்திவிட்டதாகவும், பேச்சுவார்த்தை நடத்த அந்நாடு விரும்புவதாகவும் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியதற்கு ஒரு நாள் கழித்து இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
</p><p>
 எவ்வாறாயினும், ​​ஈரானிய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாயி, ட்ரம்பின் கூற்றுக்கு முரணாக, தற்போது தாங்கள் அமெரிக்காவுடன் எந்தப் பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை எனக் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-29T00:39:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[விடுதலைப் புலிகள் அமைப்பின் கட்டுப்பாட்டில் இருந்த செம்மணி..!அதிர்ச்சியளிக்கும் நீதியமைச்சரின் கருத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/chemmani-mass-graves-srilanka-harshana-nanayakara-1785277529"></link>
            <id>https://tamilwin.com/article/chemmani-mass-graves-srilanka-harshana-nanayakara-1785277529</id>
            <summary type="text">அமைச்சர் ஹர்ச நாணயக்கார வெளியிட்ட தகவல்களின்படி, செம்மணி பகுதியில் 450-க்கும் மேற்பட்ட மனித எலும்புகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இந்த விவகாரம் பல காலங...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமைச்சர் ஹர்ச நாணயக்கார வெளியிட்ட தகவல்களின்படி, செம்மணி பகுதியில் 450-க்கும் மேற்பட்ட மனித எலும்புகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
</p><p>
இந்த விவகாரம் பல காலங்களாக பல்வேறு தரப்பினரின் (விடுதலைப் புலிகள், இந்திய அமைதிப்படை, துணை இராணுவக் குழுக்கள் மற்றும் இலங்கை இராணுவம்) கட்டுப்பாட்டில் இருந்ததால், குற்றவாளிகளைக் கண்டறிவது மிகவும் சிக்கலான ஒன்றாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

மரணங்களுக்கான காரணங்களை உறுதிப்படுத்த தடையவியல் மற்றும் DNA பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
</p><p>
 மரணங்களுக்கான காரணங்களை (இயற்கை மரணமா அல்லது வன்முறையா) தடயவியல் ஆய்வுகள் மூலம் உறுதிப்படுத்தும் பணி நடைபெறுகின்றது.</p><p> 

குற்றவாளிகளை அடையாளம் காணும் நிலைக்கு விசாரணை இன்னும் செல்லவில்லை என்று அமைச்சர் குறிப்பிட்டிருந்தார்.</p><p>&nbsp;இந்த விடயங்கள் தொடர்பில் பேசுகின்றது #NewsInsightTamil நிகழ்ச்சி...</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/LNAbK0VBHs4" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-29T00:34:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பில் ஆடி வேல் ஊர்வலத்தைச் சிறப்பித்த பிரதமர் ஹரிணி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/harini-graced-the-addi-vel-procession-in-colombo-1785284355"></link>
            <id>https://tamilwin.com/article/harini-graced-the-addi-vel-procession-in-colombo-1785284355</id>
            <summary type="text">கொழும்பு, செட்டித்தெரு மற்றும் பம்பலப்பிட்டி நகரத்தார் ஸ்ரீ புதிய கதிரேசன்
கோயிலின் வருடாந்த ஆடி வேல் ஊர்வலம் நேற்று(28) செவ்வாய்க்கிழமை மாலையில் அலர...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு, செட்டித்தெரு மற்றும் பம்பலப்பிட்டி நகரத்தார் ஸ்ரீ புதிய கதிரேசன்
கோயிலின் வருடாந்த ஆடி வேல் ஊர்வலம் நேற்று(28) செவ்வாய்க்கிழமை மாலையில் அலரி
மாளிகைக்கு முன்பாக வருகை தந்தது.</p><p> இதன்போது வேல் ஊர்வலத்துக்குப் பிரதமர்
அலுவலகத்தின் சார்பாகப் பூஜை வழிபாடுகள் வழங்கிச் சிறப்பிக்கப்பட்ட
இந்நிகழ்வில் பிரதமர் ஹரிணி அமரசூரிய கலந்துகொண்டார்.

அலரி மாளிகையிலிருந்து பாரம்பரிய மேளவாத்தியங்கள் முழங்கப் பிரதமர் வேல்
இரதத்தின் முன்பாக அழைத்துச் செல்லப்பட்டார்.</p><p></p><h2>&nbsp;ஆடி வேல் ஊர்வலம்</h2><p> </p><p>அங்கு வேல் இரதத்தில்
எழுந்தருளியிருந்த முருகப்பெருமானின் திருவுருவச் சிலைக்குப் பிரதமர்
பழத்தட்டைப் பூஜையாகச் சமர்ப்பித்து, சமய வழிபாடுகளில் ஈடுபட்டுத் தெய்வ
ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொண்டார்.
</p><p>
அதனைத் தொடர்ந்து, வேல் ஊர்வல ஏற்பாட்டுக் குழுவினர் பிரதமரின் இந்தப்
பங்கேற்பைப் பாராட்டும் வகையில் அவருக்கு மாலை அணிவித்துப் பொன்னாடை
போர்த்தித் தமது நன்றியைத் தெரிவித்துக்கொண்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3390afa1-b9ed-4dd2-9f09-df438d20466d/26-6a6948ed533f7.webp' /></p><p>
</p><p>
கொழும்பு, செட்டித்தெரு மற்றும் பம்பலப்பிட்டி நகரத்தார் ஸ்ரீ புதிய கதிரேசன்
கோயிலினால் வருடாந்தம் நடத்தப்படும் 152 ஆவது வேல் ஊர்வலமே இம்முறை
நடைபெறுகின்றது.</p><p> இந்த வருடாந்த ஆடி வேல் மகோற்சவமும் இரதோற்சவ விழாவும் 1874
ஆம் ஆண்டு முதல் இதுவரை தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-29T00:31:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாங்காக்-ல் ஹாட் உடையில் நடிகை சாக்ஷி அகர்வால்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/sakshi-agarwal-short-dress-photoshoot-from-bangkok-1785284835"></link>
            <id>https://cineulagam.com/article/sakshi-agarwal-short-dress-photoshoot-from-bangkok-1785284835</id>
            <summary type="text">நடிகை சாக்ஷி அகர்வால் பல படங்களில் நடித்து இருந்தாலும், அவர் பிக் பாஸ் ஷோ மூலமாக தான் அதிகம் பிரபலம் ஆனார். 

அவரது பிறந்தநாளை கொண்டாட தற்போது கணவர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நடிகை சாக்ஷி அகர்வால் பல படங்களில் நடித்து இருந்தாலும், அவர் பிக் பாஸ் ஷோ மூலமாக தான் அதிகம் பிரபலம் ஆனார்.</p><p> 

அவரது பிறந்தநாளை கொண்டாட தற்போது கணவர் உடன் பாங்காக் சென்று இருக்கிறார் அவர்.
</p><p>
அங்கு சாக்ஷி அகர்வால் ஹாட் உடையில் படு கிளாமர் ஆக போஸ் கொடுத்து இருக்கும் லேட்டஸ்ட் ஸ்டில்களை பாருங்க.</p>]]></content>
            <updated>2026-07-29T00:29:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kowshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அநுரவின் முடிவால் தலைகீழாக போகும் இலங்கையின் தலையெழுத்து! சிறைக்குச் செல்லப்போகும் பலர்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/anura-s-move-may-lead-to-major-prison-crackdown-1785283107"></link>
            <id>https://tamilwin.com/article/anura-s-move-may-lead-to-major-prison-crackdown-1785283107</id>
            <summary type="text">தற்பொழுது நாட்டில் பேசுபொருளாக மாறியுள்ள நீதிபதிகளின் ஓய்வூதிய வயதெல்லை விவகாரத்தில் மக்கள் வாக்கெடுப்பு அவசியமில்லை என நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார...</summary>
            <content type="html"><![CDATA[<p>தற்பொழுது நாட்டில் பேசுபொருளாக மாறியுள்ள நீதிபதிகளின் ஓய்வூதிய வயதெல்லை விவகாரத்தில் மக்கள் வாக்கெடுப்பு அவசியமில்லை என நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
</p><p>
இது குறித்து ஹர்ஷண நாணயக்கார கருத்து தெரிவிக்கையில், இந்த விவகாரம் நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்படுவதற்கான வாயப்புகள் இல்லை என குறிப்பிட்டுள்ளார்.</p><p> 

நீதி அரசர்களின் ஓய்வூதிய விவகாரம் குறித்து நாமல் ராஜபக்ச கொழும்பில் நடைப்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கருத்து தெரிவிக்கையில், </p><p> “ராஜபக்சக்களுக்கு எதிரான வழக்குகளை எவ்வழியிலாவது விரைவுபடுத்துவதே அரசின் நோக்கமாகும். அரசியல் அமைப்புத் திருத்தம் ஊடாக நீதி அரசர்களின் பதவி காலத்தை நீடிக்கும் தார்மீக உரிமை அரசுக்கு கிடையாது“ என சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p>

இது இவ்வாறிருக்க, அநுரவிற்கு வசதிகளை செய்து கொடுக்கச் சென்று எங்களுக்கு அழுது புலம்ப வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக விமல் வீரவன்சவின் சகோதரன் இரங்கல் தெரிவித்துள்ளார்.</p><p>
இதனையடுத்து இனிவரும் காலங்களில் நாட்டிலுள்ள ஜனாதிபதி மாளிகைகள் எல்லாம் நீண்டகால குத்தகைக்கு சுற்றுலாத்துறை முதலீட்டாளர்களுக்கு வழங்கப்படவுள்ளன என அரசாங்கம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.</p><p>

நாட்டில் தற்பொழுது இடம்பெற்று வருகின்ற இவ்வாறான பல முக்கிய தகவல்களை தொகுத்து வழங்குகிறது லங்காசிறியின் நாட்டு நடப்பு நிகழ்ச்சி..&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/9BbR3RgpR6g" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-29T00:16:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ட்ரம்ப் ஆட்சிக்கு பிறகு கனேடியர்களின் வெளிநாட்டு பயணத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/canadian-travel-to-us-drops-under-trump-1785284007"></link>
            <id>https://news.lankasri.com/article/canadian-travel-to-us-drops-under-trump-1785284007</id>
            <summary type="text">அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் 2025-இல் மீண்டும் பதவியேற்ற பிறகு, கனடியர்களின் அமெரிக்க பயணச் செலவு 3.3 பில்லியன் டொலர் குறைந்துள்ளது என Statistic...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் 2025-இல் மீண்டும் பதவியேற்ற பிறகு, கனடியர்களின் அமெரிக்க பயணச் செலவு 3.3 பில்லியன் டொலர் குறைந்துள்ளது என Statistics Canada வெளியிட்ட புதிய தரவுகள் தெரிவிக்கின்றன.
</p><p>
2024-இல் 22.1 பில்லியன் டொலராக இருந்த அமெரிக்க பயணச் செலவு, 2025-இல் 18.8 பில்லியன் டொலராகக் குறைந்தது.</p><p>
</p><p></p><p>ஆனால், கனடியர்கள் பயணத்தை முற்றிலும் குறைக்கவில்லை, அதற்கு பதிலாக, அமெரிக்காவைத் தவிர்த்து பிற சர்வதேச இடங்களுக்கு அதிகம் சென்றுள்ளனர்.
</p><p>
2025-இல், அமெரிக்காவைத் தவிர்த்த வெளிநாட்டு பயணச் செலவு 3.6 பில்லியன் டொலர் அதிகரித்து 22.8 பில்லியனாக உயர்ந்தது.</p><p>

ஐரோப்பாவிற்கு கனடியர்களின் பயணம் 14 சதவீதம் அதிகரித்தது. ஆசியாவிற்கு 17 சதவீதம் அதிகரித்தது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1b5f5b40-917f-4980-84c2-9e40c34918b2/26-6a6945a8dad9a.webp' /></p><p>இது, ட்ரம்ப் அரசின் “America First” கொள்கைகள் மற்றும் கனடாவை இணைத்துக்கொள்ளும் பேச்சுக்கள் போன்றவற்றுக்கு எதிரான அமைதியான எதிர்வினையாக கருதப்படுகிறது.
</p><p>
2025-இல், அமெரிக்காவிலிருந்து கனடாவிற்கு திரும்பிய பயணங்கள் வாகனங்களிலும் விமானங்களிலும் 25 சதவீதம் குறைந்தன. குறிப்பாக ஜூலை 2025-இல், எல்லை கடப்புகள் 33 சதவீதம் குறைந்தன. இது 1972-இல் டிஜிட்டல் பதிவுகள் தொடங்கியதிலிருந்து மிகப்பெரிய வீழ்ச்சியாகக் கருதப்படுகிறது. </p><p>இதற்கு முன்பு 2001 செப்டம்பர் மாதம் 9/11 தாக்குதலுக்குப் பிறகு மட்டுமே 30 சதவீம் வீழ்ச்சி பதிவாகியிருந்தது.
</p><p></p><p>2026-இல் இதுவரை கிடைத்த தரவுகளும், அமெரிக்காவிற்கு கனடியர்களின் பொழுதுபோக்கு பயணம் தொடர்ந்து குறைந்து கொண்டிருப்பதை காட்டுகின்றன.
</p><p>
இந்த நிலைமை, அமெரிக்காவின் வணிக மற்றும் சுற்றுலா துறைக்கு பெரிய பொருளாதார சவாலாக மாறியுள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-29T00:11:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஓய்வூதிய வயதை மேலும் 5 ஆண்டுகள் அதிகரிக்க வேண்டும் - சரத் பொன்சேகா வலியுறுத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/chief-justice-retirement-age-issue-1785283023"></link>
            <id>https://tamilwin.com/article/chief-justice-retirement-age-issue-1785283023</id>
            <summary type="text">ஓய்வூதிய வயதை மேலும் ஐந்து ஆண்டுகள் முன்னோக்கி நகர்த்துவதன் மூலம் மக்களின்
மன அழுத்தத்தைக் குறைக்க முடியும் என்று முன்னாள் அமைச்சரும் முன்னாள்
இராணு...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஓய்வூதிய வயதை மேலும் ஐந்து ஆண்டுகள் முன்னோக்கி நகர்த்துவதன் மூலம் மக்களின்
மன அழுத்தத்தைக் குறைக்க முடியும் என்று முன்னாள் அமைச்சரும் முன்னாள்
இராணுவத் தளபதியுமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா வலியுறுத்தியுள்ளார்.
</p><p>
ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.</p><p></p><h2>ஓய்வூதிய வயது</h2><p>

அவர் மேலும் தெரிவிக்கையில்,
</p><p>
"பிரதம நீதியரசரைத் தொடர்ந்து பதவியில் வைத்திருக்க வேண்டும் என்றும்,
சட்டத்தரணிகளின் சேவைக் காலத்தை நீடிக்க வேண்டும் என்றும் சிலர் கூறும்
கருத்துக்களுக்கு நான் முழுமையாக உடன்படுகின்றேன்.</p><p>

நாட்டின் சாதாரண இராணுவ வீரர்கள் 20 ஆண்டுகள் சேவைக் காலத்துக்குப் பின்னர்
(சுமார் 45 வயதில்) ஓய்வுபெற வேண்டியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a5d65dd6-91be-4c86-915c-926eafa19363/26-6a694393d21c6.webp' /></p><p> </p><p>அந்த வயதில்தான் அவர்களின்
பிள்ளைகள் சாதாரண தரப் பரீட்சைக்குத் தயாராகிக் கொண்டிருப்பதுடன், புதிதாக
வேறு ஒரு வேலையைப் பெற்றுக்கொள்வதும் அவர்களுக்குக் கடினமாகவுள்ளது. </p><p>அதேபோல,
இராணுவ அதிகாரிகள் 50 அல்லது 55 வயதிலும், அரச ஊழியர்கள் 60 வயதில்
ஓய்வுபெறும்போதும் அவர்களின் பிள்ளைகள் பாடசாலைக் கல்வியைத் தொடர்ந்துகொண்டே
இருக்கின்றனர்.</p><p></p><h2>பழைய கலாசாரம்</h2><p>
</p><p>
உலகின் வளர்ச்சியடைந்த நாடுகளைப் போல் ஓய்வூதிய வயதை மேலும் ஐந்து ஆண்டுகள்
முன்னோக்கி நகர்த்தினால், மக்களின் மன அழுத்தம் குறையும். மனிதர்களால்
தொடர்ந்து சிறப்பாகப் பணியாற்ற முடியும்.</p><p> அமெரிக்கா போன்ற நாடுகளில் 70 வயது
வரை கூட இராணுவத் தளபதிகளாகப் பணியாற்றுகின்றனர். சில நாடுகளில் நீதிபதிகள் 70
வயதிலேயே ஓய்வூதியம் பெறுகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dc9b9098-cfe7-4f82-b097-c5babb9779cc/26-6a69439482a11.webp' /></p><p> அப்படியிருக்கையில் நமது நாட்டு மக்களுக்கு
மட்டும் ஏன் இதில் தயக்கம் உள்ளது?

நான் இராணுவப் பணியிலிருந்து விலகி 20 ஆண்டுகள் ஆனாலும், எனது மூளை மற்றும்
உடல் உறுப்புகள் இன்னமும் மிகச் சிறப்பாகச் செயற்படுகின்றன.</p><p> இப்போது மீண்டும்
இராணுவப் பொறுப்பை வழங்கினாலும் அதைத் திறம்பட வழிநடத்த முடியும்.
இருப்பினும், நான் அதனை மீண்டும் பெறப்போவதில்லை. பழைய கலாசாரத்தில் சுகபோகமாக
வாழ்ந்தவர்களே இவ்வாறான சரியான திட்டங்களை விரும்புவதில்லை என குறிப்பிட்டுள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-29T00:04:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆடி பௌர்ணமியில் உருவாகும் கேந்திர திருஷ்டி யோகம் ; இந்த ராசிகளுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/these-zodiac-signs-are-going-to-hit-the-jackpot-1785283009"></link>
            <id>https://jvpnews.com/article/these-zodiac-signs-are-going-to-hit-the-jackpot-1785283009</id>
            <summary type="text">ஜோதிடத்தின் படி, இரண்டு செல்வாக்குமிக்க கிரகங்கள் ஒருவருக்கொருவர் 4 ஆவது மற்றும் 10 ஆவது வீடுகளில் இருக்கும் போது கேந்திர திருஷ்டி யோகம் உருவாகும். அப...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜோதிடத்தின் படி, இரண்டு செல்வாக்குமிக்க கிரகங்கள் ஒருவருக்கொருவர் 4 ஆவது மற்றும் 10 ஆவது வீடுகளில் இருக்கும் போது கேந்திர திருஷ்டி யோகம் உருவாகும். அப்படி தான் சுக்கிரனும், செவ்வாயும் ஒருவருக்கொருவர் 4 ஆவது மற்றும் 10 ஆவது வீடுகளில் இருந்து கேந்திர திருஷ்டி யோகத்தை உருவாக்குகின்றனர்.</p><p> ஆடி பௌர்ணமியில் உருவாகும் இந்த யோகத்தால் சில ராசிக்காரர்கள் நல்ல அதிர்ஷ்டத்தைப் பெறவுள்ளனர். இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதை நாம் இங்கு பார்ப்போம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a63aa7f8-4c1a-43fb-bed6-d5c994eca971/26-6a6941c372fbc.webp' /></p><h3>மேஷம்</h3><p>
ஆடி பௌர்ணமியில் செவ்வாய் சுக்கிரனால் உருவாகும் கேந்திர திருஷ்டி யோகத்தால் மேஷ ராசிக்காரர்களுக்கு மங்களகரமானதாக இருக்கும். புதிய வருமான வழிகள் உருவாகும் வாய்ப்புள்ளது. நீண்ட காலமாக சிக்கியிருந்த பணம் கைக்கு வந்து சேரும். ரியல் எஸ்டேட், ஃபேஷன் போன்றவற்றுடன் தொடர்புடைய தொழிலில் இருப்பவர்கள் நிறைய பணத்தை சம்பாதிக்கும் வாய்ப்பைப் பெறுவார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/50726b28-120c-4f05-bded-c166a3a94270/26-6a6941c4267ef.webp' /></p><p>
</p><h3>
ரிஷபம்
</h3><p>ஆடி பௌர்ணமியில் செவ்வாய் சுக்கிரனால் உருவாகும் கேந்திர திருஷ்டி யோகத்தால் ரிஷப ராசிக்காரர்களுக்கு தொழில் ரீதியாக மிகவும் சிறப்பாக இருக்கும். பணியிடத்தில் தலைமைத்துவ திறன்கள் மேம்படும். சிலருக்கு பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. அரசு வேலை செய்பவர்கள் நல்ல செய்திகளைப் பெறலாம். ஒவ்வொரு வேலையிலும் நல்ல வெற்றி கிடைக்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9193a0d2-c3bb-45ca-81aa-4d3461ac3188/26-6a6941c4cc366.webp' /></p><h3>
துலாம்</h3><p>
ஆடி பௌர்ணமியில் செவ்வாய் சுக்கிரனால் உருவாகும் கேந்திர திருஷ்டி யோகத்தால் துலாம் ராசிக்காரர்களுக்கு முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புக்கள் கிடைக்கும். புதிய வீடு, வாகனம் வாங்கும் எண்ணம் இருந்தால், இக்காலத்தில் அதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கலாம். வாழ்க்கைத் துணையுடனான உறவு சிறப்பாக இருக்கும். எதிர்பாராத நிதி நன்மைகள் கிடைக்கும். இதனால் நிதி நிலையில் நல்ல உயர்வு ஏற்படும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2c6d0e59-c7de-49f1-af27-85a3ee782342/26-6a6941c57d38d.webp' /></p><h3>மகரம்</h3><h3>
</h3><p>ஆடி பௌர்ணமியில் செவ்வாய் சுக்கிரனால் உருவாகும் கேந்திர திருஷ்டி யோகத்தால் மகர ராசிக்காரர்களின் நிதி நிலைமை வலுவடையும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். பணிபுரிபவர்கள் உடன் வேலை செய்வோரின் முழு ஆதரவைப் பெறுவார்கள். முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். வேலை தொடர்பான பயணங்கள் நல்ல நிதி ஆதாயங்களைத் தரும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/675f0811-0999-4d21-9102-396d135c9c9c/26-6a6941c630b43.webp' /></p>]]></content>
            <updated>2026-07-28T23:59:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kumar</name>
            </author>
            <title type="text"><![CDATA[போதை கலாச்சாரத் தொடர்புடையவர்களை வீட்டிற்கு அனுப்ப வேண்டும் - கந்திசாமி பிரபு எம்.பி விசனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/mp-prabhu-remove-those-linked-to-drug-culture-1785281646"></link>
            <id>https://tamilwin.com/article/mp-prabhu-remove-those-linked-to-drug-culture-1785281646</id>
            <summary type="text">கடந்த காலங்களில் இடம்பெற்ற குற்றச்செயல்களோடும் போதைக் கலாச்சாரத்தோடும்
தொடர்புபட்டவர்களை வீட்டிற்கு அனுப்ப வேண்டும் என தேசிய மக்கள் சக்தியின் நாடாளும...</summary>
            <content type="html"><![CDATA[<p>கடந்த காலங்களில் இடம்பெற்ற குற்றச்செயல்களோடும் போதைக் கலாச்சாரத்தோடும்
தொடர்புபட்டவர்களை வீட்டிற்கு அனுப்ப வேண்டும் என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்
கந்திசாமி பிரபு தெரிவித்துள்ளார்.
</p><p>நேற்று(28.07.2026) மட்டக்களப்பு பழைய மாவட்ட
செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைப்பெற்ற சேதமடைந்த வீடுகளைத் திருத்துவதற்கும் புனரமைப்பதற்குமான நிதி உதவி வழங்கி வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.</p><h2>தேசிய மக்கள் சக்தி அரசாங்கம்</h2><p>
</p><p>
இதன்போது அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
</p><p>
தொடர்ச்சியாகத் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஊடாக, வீடு அமைப்பதற்கென
நிதிகளை நாங்கள் பங்களித்துக் கொண்டு வருகின்றோம். </p><p>

அதேவேளை, வீதி வளர்ச்சி,
பொருளாதார வளர்ச்சிகளுக்கு ஏற்ற விதமான உள்ளீடுகளைப் பெற்றுக்கொள்வதற்கான
மேம்பாடுகள், விவசாயம் தொடர்பான திட்டங்கள் மற்றும் கிராமங்களின் ஊடாக
வளர்ச்சி செய்யக்கூடிய மக்கள் சக்தித் திட்டங்கள், கடற்றொழிலாளர்களுக்கான வளர்ச்சித்
திட்டங்கள் மற்றும் அவர்களின் வாழ்வாதாரம் தொடர்பான விடயங்கள் என அனைத்து
விடயங்களுக்கும் தொடர்ச்சியாகத் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நிதிகளை வழங்கி
வருகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/de2378c3-d7d8-4313-99c3-475e938d21ad/26-6a693d1274fa6.webp' /></p><p>
</p><p>
இதன் ஊடாக நமது பகுதியில் இருக்கின்ற அனைத்துத் தரப்பினரும் தங்களின்
வாழ்வாதாரத்தை உயர்த்திக் கொள்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் நாங்கள்
நடைமுறைப்படுத்திக் கொண்டு வருகின்றோம். </p><p>

கடந்த காலங்களில் இடம்பெற்ற குற்றச்செயல்களோடும் போதைக் கலாச்சாரத்தோடும்
தொடர்புபட்டவர்களை வீட்டிற்கு அனுப்ப வேண்டும்.
</p><p>
மக்கள்
அவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதற்காக
எங்களுக்கு ஆணைதந்திருந்தார்கள்.</p><p> ஆனால், ஆணையினை நாங்கள் நிறைவேற்றும்போது,
இன்று மக்களைக் குழப்புகின்ற செயல்பாடுகளை எதிர்க்கட்சியினர் தொடர்ச்சியாக
முன்னெடுத்து வருகின்றார்கள் என குறிப்பிட்டுள்ளார்.&nbsp; &nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-28T23:57:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[மாடர்ன் உடையில் அமெரிக்காவில் வலம் வந்த மீனாட்சி சவுத்ரி.. அழகிய புகைப்படங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/meenakshi-chaudhary-in-america-cute-stills-1785282408"></link>
            <id>https://cineulagam.com/article/meenakshi-chaudhary-in-america-cute-stills-1785282408</id>
            <summary type="text">நடிகை மீனாட்சி சவுத்ரி தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் முன்னணி நடிகையாக இருப்பவர். அவர் விரைவில் ஹிந்தியிலும் ஹீரோயினாக களமிறங்குகிறார்.

அவர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நடிகை மீனாட்சி சவுத்ரி தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் முன்னணி நடிகையாக இருப்பவர். அவர் விரைவில் ஹிந்தியிலும் ஹீரோயினாக களமிறங்குகிறார்.
</p><p>
அவர் அக்ஷய் குமார் உடன் Bhagam Bhag 2 படத்தில் தற்போது நடித்து வருகிறார்.

மீனாட்சி தற்போது அமெரிக்காவுக்கு சென்று இருக்கும் நிலையில் அங்கு ஜாலியாக நேரத்தை செலவிட்ட புகைப்படங்களை அவர் வெளியிட்டு இருக்கிறார். </p><p>அழகிய புகைப்படங்கள் இதோ..</p>]]></content>
            <updated>2026-07-28T23:51:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Erimalai</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ்ப்பாணம் - வடமராட்சி மூத்த விநாயகர் தேர்த் திருவிழா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/jaffna-vadamaratchi-vinayakar-chariot-festival-1785280264"></link>
            <id>https://tamilwin.com/article/jaffna-vadamaratchi-vinayakar-chariot-festival-1785280264</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் - வடமராட்சி மூத்த விநாயகர் ஆலய வருடாந்தத் தேர்
திருவிழா சிறப்பாக நடைப்பெற்றுள்ளது.குறித்தத் திருவிழாவானது நேற்றைய தினம்(28.07.2026) வெரு ...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் - வடமராட்சி மூத்த விநாயகர் ஆலய வருடாந்தத் தேர்
திருவிழா சிறப்பாக நடைப்பெற்றுள்ளது.</p><p>குறித்தத் திருவிழாவானது நேற்றைய தினம்(28.07.2026) வெரு விமர்சையாக இடம்பெற்றுள்ளது.</p><p> </p><h2>தேர் திருவிழா</h2><p>அதிகாலை முதல் சிவாச்சாரியார்கள் ஓமம் வளர்த்து சிறப்பு பூஜைகள் மேற்கொண்டதனை
தொடர்ந்து வசந்த மண்டப பூஜைகள் நடைப்பெற்றுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9f6b861d-21b6-4d05-904d-7f272561a097/26-6a6937d934492.webp' /></p><p>இதனைத் தொடர்ந்து மூத்த விநாயகர்
தேரில் வலம் வந்தார்.

இதில் வடமராட்சி பிரதேசத்தை சேர்ந்த பல நூற்றுக்கணக்கான அடியார்கள் கலந்து
கொண்டு தமது நேர்த்திகளை நிறைவேற்றியுள்ளனர்.</p><h2>யாழ்ப்பாணம் வடமராட்சி வதிரி பூவற்கரை பிள்ளையார் தேர்</h2><p>

யாழ்ப்பாணம் - வடமராட்சி, வதிரி பூவற்கரை பிள்ளையார் ஆலய வருடாந்த பெருந்
திருவிழாவின் ஒன்பதாம் திருவிழாவாகிய தேர் திருவிழா நேற்று(28.07.2026) சிறப்பாக
இடம்பெற்றுள்ளது.</p><p>அதி காலை முதல் சிவ அமிர்த குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியார்கள் ஓமம்
வளர்த்து சிறப்பு பூஜைகள் மேற்கொண்டதனை தொடர்ந்து வசந்த மண்டப பூஜைகள்
இடம்பெற்றுள்ளன.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1dfbe9b2-fa33-4a3d-924a-e65cda1ad818/26-6a6937d8851ca.webp' /></p><p>அதனைத் தொடர்ந்து லட்சுமி, முருகப்பெருமான் முன்னே செல்ல
பூவக்கரை பிள்ளையார் பின்னாலே பெரும் தேரில் வலம் வந்தார்.</p><p>

இதில் வதிரி பிரதேசத்தை சேர்ந்த நூற்றுக்கணக்கான அடியவர்கள் கலந்து கொண்டு
தமது நேர்த்திகளை நிறைவேற்றியுள்ளனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-28T23:43:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Farook Sihan</name>
            </author>
            <title type="text"><![CDATA[அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் சலசலப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ampara-district-coordination-committee-meeting-1785268334"></link>
            <id>https://tamilwin.com/article/ampara-district-coordination-committee-meeting-1785268334</id>
            <summary type="text">அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் திடீர் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.நேற்றைய தினம்(28) நடைப்பெற்ற கூட்டத்திலேயே இவ்வாறானதொரு சலசலப்பான நிலை...</summary>
            <content type="html"><![CDATA[<p>அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் திடீர் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.</p><p>நேற்றைய தினம்(28) நடைப்பெற்ற கூட்டத்திலேயே இவ்வாறானதொரு சலசலப்பான நிலை தோன்றியுள்ளது.</p><p></p><h2>திடீரென உருவான வாக்குவாதம்</h2><p>

இந்தக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும் அக்கரைப்பற்று மாநகர சபையின் மேயருமான
ஏ.எல்.எம். அதாவுல்லாஹ் மற்றும் நீர்ப்பாசனத் துறை அதிகாரிகளுக்கிடையில்
முக்கிய கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது. இந்த நிகழ்வில் பிரதி அமைச்சர் வசந்த
பியதிஸ்ஸவும் பங்கெடுத்துள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/36c8be2c-aabc-4dbf-9602-42c166136bbd/26-6a690dae4550e.webp' /></p><p>கலந்துரையாடல் இடம்பெற்றுக் கொண்டிருந்த வேளையில், நாமல் ஓயா தலைவர் அனில்
சுசந்த திடீரென எழுந்து முன்னாள் அமைச்சர் அதாவுல்லா மீது குற்றச்சாட்டுகளை
முன்வைத்துள்ளார்.</p><p>

இதனை அதாவுல்லாவின் ஆதரவாளர்களும் தரப்பினரும் கடுமையாக எதிர்த்ததை அடுத்து,
கூட்டத்தில் பெரும் குழப்பமும் காரசாரமான தர்க்கமும் உருவாகியுள்ளது.</p><p></p><h2>ஆளுநரின் தலையீடு</h2><p>
</p><p>இதனை அடுத்து&nbsp;கோபமடைந்த கிழக்கு மாகாண
ஆளுநர் பேராசிரியர் லால் ரத்னசிறி,&nbsp;</p><p> "இங்கே யாரும் வன்முறையில் ஈடுபட முயல வேண்டாம். நாம் அனைவரும் இதனை ஒரு கண்ணியமான கூட்டமாக நடத்துவதற்கே
ஒத்துழைக்க வேண்டும்" என எச்சரித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f33ef1e0-daef-4da7-8dc2-f51a807a9899/26-6a690e9958b4c.webp' /></p><p>ஆளுநரின் இந்தத் தீர்க்கமான தலையீட்டையும் எச்சரிக்கையையும் தொடர்ந்து,
மண்டபத்தில் நிலவிய சலசலப்பு அடங்கி அமைதி திரும்பியுள்ளது. </p><p>இதனைத் தொடர்ந்து
ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தின் ஏனைய நடவடிக்கைகள் தடையின்றித் தொடர்ந்தும் நடைபெற்றுள்ளன.</p><p></p>]]></content>
            <updated>2026-07-28T23:42:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Erimalai</name>
            </author>
            <title type="text"><![CDATA[வரி பரிசோதகரை 4 சரீரப் பிணையில் விடுவிக்குமாறு நீதவான் உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/magistrate-orders-tax-inspector-to-go-4-bail-1785270414"></link>
            <id>https://tamilwin.com/article/magistrate-orders-tax-inspector-to-go-4-bail-1785270414</id>
            <summary type="text">வடமராட்சி - தெற்கு, மேற்கு பிரதேச சபையில் சபை உறுப்பினர்களை வெளியேறுமாறு கூறிய
வருமான வரி பரிசோதகருக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கில்&amp;nbsp;வரி பர...</summary>
            <content type="html"><![CDATA[<p>வடமராட்சி - தெற்கு, மேற்கு பிரதேச சபையில் சபை உறுப்பினர்களை வெளியேறுமாறு கூறிய
வருமான வரி பரிசோதகருக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கில்&nbsp;வரி பரிசோதகர் தலா ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான 4 சரீரப்பிணையில் செல்வதற்கு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p>சபை உறுப்பினர்களால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் நேற்றைய தினம்(28.07.2026) இந்த உத்தரவு விடுக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>நீதிமன்ற உத்தரவு</h2><p>இவர் கடந்த மாதம் சபை உறுப்பினர்கள் அமர்விற்காக சென்று மண்டபத்தில் அமர்ந்திருந்த
போது அவர்களுடன் தர்க்கத்தில் ஈடுபட்டு அவர்களை வெளியேறுமாறு கூறி
உறுப்பினர்களை அவமதிக்கும் வகையில்
நடந்து கொண்டுள்ளார்.</p><p>இதனையடுத்து சபை உறுப்பினர்களால் நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைவாக இன்றைய தினம் பருத்தித்துறை
நீதவான் நீதிமன்றில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1c1f7507-0f80-487a-baf9-7c4bf54b39ac/26-6a692a72645a6.webp' /></p><p>

இந்த நிலையிலேயே நீதிமன்றம் தலா ஒரு இலட்சம் ரூபா பெருமதியான 4 சரீர பிணையில்
செல்வதற்கு உத்தரவிட்டுள்ளது.</p><p>
இதேவேளை அவரை பிணை எடுப்பதற்காக 4 வடமராட்சி - தெற்கு, மேற்கு பிரதேச சபை
உத்தியோகாத்தர்களும் கடமையிலிருந்தாவாறே நீதிமன்றிற்கு சென்றுள்ளாதாகவும்,
இதனான் அவர்கள் தமது கடமைகளை துஸ்பிரயோகம் செய்துள்ளதாகவும் சபை உறுப்பினர்கள்
விசனம் தெரிவித்துள்ளனர்.</p><p>
</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-28T23:41:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[27 கோடி அபராதம் - 5 வருடங்கள் ஜெயில்..! முகப்புத்தகத்ததால் அழிந்த வாழ்க்கை..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/subramaniyan-dog-social-controversy-anojan-arrest-1785281040"></link>
            <id>https://tamilwin.com/article/subramaniyan-dog-social-controversy-anojan-arrest-1785281040</id>
            <summary type="text">இலங்கையில் பாதயாத்திரை சென்ற சுப்பிரமணி என்ற நாயைத் தாக்கிய சம்பவம் சமூக ஊடகங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.

இந்த விவகாரம் மத ரீதியான மோதல்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் பாதயாத்திரை சென்ற சுப்பிரமணி என்ற நாயைத் தாக்கிய சம்பவம் சமூக ஊடகங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.
</p><p>
இந்த விவகாரம் மத ரீதியான மோதல்களாக மாறியபோது, அனோஜன் தனது முகநூல் பக்கத்தில் கருத்துகளைப் பகிர்ந்தார்.</p><p>

சவுதி அரேபியாவின் கடுமையான இணையவழி குற்றத்தடுப்புச் சட்டத்தின் கீழ், மதத்தைப் புண்படுத்தியதாகக் கூறி அனோஜனுக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 3 மில்லியன் சவுதி ரியால் (சுமார் 27 கோடி இலங்கை ரூபாய்) அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
</p><p>
வெளிநாடுகளில், குறிப்பாக வளைகுடா நாடுகளில் பணிபுரியும் புலம்பெயர் தொழிலாளர்கள் சமூக ஊடகங்களில் கருத்துகளைப் பகிரும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்றும், அந்தந்த நாட்டுச் சட்டங்களைப் புரிந்துகொண்டு செயல்பட வேண்டும். </p><p>

தற்போது இலங்கை அரசாங்கம், தூதரகம் மூலம் அனோஜனின் தண்டனைக் குறைப்புக்கான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/KFyBlufwECs" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-28T23:37:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ்ப்பாண மக்களின் பயணத்தை இலகுபடுத்த புதிய போக்குவரத்து நடவடிக்கைகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/new-transportation-ease-travel-people-of-jaffna-1785261357"></link>
            <id>https://jvpnews.com/article/new-transportation-ease-travel-people-of-jaffna-1785261357</id>
            <summary type="text">யாழ்ப்பாண மாவட்ட மக்களின் போக்குவரத்து வசதிகளை மேலும் மேம்படுத்தும் நோக்கில், யாழ்ப்பாண மாவட்ட போக்குவரத்து ஒருங்கிணைப்புக் உப குழுக் கூட்டம் இன்று நட...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாண மாவட்ட மக்களின் போக்குவரத்து வசதிகளை மேலும் மேம்படுத்தும் நோக்கில், யாழ்ப்பாண மாவட்ட போக்குவரத்து ஒருங்கிணைப்புக் உப குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது.</p><p>
</p><p></p><p>இதன்போது, யாழ்ப்பாண மாவட்டத்தில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் மற்றும் எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள வீதி அபிவிருத்தித் திட்டங்கள், உள்ளூராட்சி சபைகளின் ஊடாக மேற்கொள்ளப்படும் வீதி புனரமைப்புப் பணிகள், அத்துடன் டித்வா புயலால் சேதமடைந்த பாலங்கள் மற்றும் வீதிகளை விரைவாக சீரமைக்கும் நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ef6fe76b-8774-467c-ba3b-631b67e7a794/26-6a68ed325dcb6.webp' /></p><p>மேலும், தீவகப் பகுதிகளுக்கான போக்குவரத்து சேவையை மேலும் வலுப்படுத்துவது, பொதுமக்களின் அன்றாடப் பயணத் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் சீரான, பாதுகாப்பான மற்றும் தரமான போக்குவரத்து சேவையை உறுதிப்படுத்துவது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தேவையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.
</p><p>
மக்களின் அன்றாட வாழ்க்கையை எளிதாக்கும் பாதுகாப்பான, தரமான மற்றும் நிலையான போக்குவரத்து கட்டமைப்பை உருவாக்க அரசாங்கம் உறுதியுடன் செயற்பட்டு வருவதாகவும், யாழ்ப்பாண மாவட்டத்தின் போக்குவரத்து உட்கட்டமைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-28T23:32:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[உக்ரைனின் ட்ரோன் தாக்குதல்: ரஷ்யாவில் பலியான உயிர்கள் - பலர் படுகாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/ukraine-drone-attack-on-russia-1785275638"></link>
            <id>https://ibctamil.com/article/ukraine-drone-attack-on-russia-1785275638</id>
            <summary type="text">ரஷ்யாவின் எல்லைப் பகுதியான பெல்கோரோடில் உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதல்களில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 19 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ரஷ்யாவின் எல்லைப் பகுதியான பெல்கோரோடில் உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதல்களில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 19 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
</p><p>
இத்தாக்குதல்களை மொஸ்கோவில் உள்ள ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் கடுமையாகக் கண்டித்துள்ளது.</p><p>
எல்லைக்கு அருகிலுள்ள கிராமமொன்றில் உள்ள வணிக நிறுவனம் மீது நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டுள்ளதுடன், பெல்கோரோட் நகருக்கு வெளியே உள்ள பிறிதொரு நகரத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் மற்றொருவர் உயிரிழந்துள்ளார்.</p><p></p><h2>உக்ரைன் போர்முனையில்&nbsp;தோல்வி</h2><p>
</p><p>
இதேவேளை, உக்ரைன் எல்லைக்கு அருகிலுள்ள ஷெபெகினோ நகரில் பேருந்து ஒன்று தாக்குதலுக்கு உள்ளானதில் காயமடைந்த 19 பேரில் ஒருவரைத் தவிர மற்ற அனைவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d8977f1e-4e0e-44f7-b0d1-dcf3926106ca/26-6a6948c39c77c.webp' /></p><p><i>Image Credit: NBC News</i></p><p>
</p><p>
ரஷ்யாவின் பல்வேறு பகுதிகளில் பேருந்துகளைக் குறிவைத்து உக்ரைன் திட்டமிட்ட தாக்குதல்களை நடத்தி வருவதாக மொஸ்கோ குற்றம் சாட்டியுள்ளது.</p><p> </p><p>

இது குறித்துப் பேசிய ரஷ்ய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மரியா ஜகரோவா, "போர்முனையில் அதிகரித்து வரும் தோல்விகளுக்குப் பழிவாங்கும் வகையில், சாதாரண மக்கள் பயணிக்கும் பொதுப் போக்குவரத்து மீது உக்ரைன் வெறித்தனமாகத் தாக்குதல்களை நடத்தி வருகிறது" எனக் குற்றஞ்சாட்டியுள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table><p>
</p>]]></content>
            <updated>2026-07-28T23:27:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவில் பரபரப்பு ; மின்கம்ப உச்சியில் உயிரிழந்த கரடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/bear-dies-on-top-of-power-pole-in-america-1785281128"></link>
            <id>https://canadamirror.com/article/bear-dies-on-top-of-power-pole-in-america-1785281128</id>
            <summary type="text">அமெரிக்காவின் நியூ மெக்சிகோ மாநிலம், யூனியன் கவுண்டியில் உள்ள கிளாட்ஸ்டோன் வனப்பகுதியில் மின்கம்பத்தில் ஏறிய கரடி, உயர் அழுத்த மின்சாரம் தாக்கி உயிரிழ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவின் நியூ மெக்சிகோ மாநிலம், யூனியன் கவுண்டியில் உள்ள கிளாட்ஸ்டோன் வனப்பகுதியில் மின்கம்பத்தில் ஏறிய கரடி, உயர் அழுத்த மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
</p><p>
கடந்த 20ஆம் திகதி, சாலையோரத்தில் அமைந்திருந்த சுமார் 22 அடி உயர மின்கம்பத்தில் கரடி ஏறி அதன் உச்சிப்பகுதி வரை சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c76d1ab2-02bf-4040-b306-443ac6671082/26-6a693a69bfc19.webp' /></p><p>அப்போது, மின்கம்பத்தின் உயர் மின்னழுத்த கம்பிகளை கரடியின் உடல் தொட்டதால் அதன்மீது மின்சாரம் பாய்ந்துள்ளது.

இந்த சம்பவத்தை அவதானித்த வாகன ஓட்டிகள் உடனடியாக பொலிஸாருக்கும் மீட்புப் பிரிவினருக்கும் தகவல் வழங்கினர். </p><p>சம்பவ இடத்துக்கு விரைந்த மீட்புக் குழுவினர் கரடியை உயிருடன் மீட்க முயற்சித்த போதிலும், கடுமையான மின்சார தாக்குதலால் கரடி மின்கம்பத்தின் உச்சியிலேயே உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.</p><p>

இதையடுத்து, கரடியின் உடல் பாதுகாப்பாக கீழே இறக்கப்பட்டதுடன், சம்பவம் தொடர்பில் அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
</p><p>
இந்நிலையில், மின்கம்பத்தின் உச்சியில் சிக்கியிருந்த கரடியின் புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகின்றன.</p>]]></content>
            <updated>2026-07-28T23:25:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறகடிக்க ஆசை சீரியல் நடிகர் மரணம்! அதிர்ச்சியில் சின்னத்திரை ரசிகர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/serial-actor-jayamani-passes-away-1785280689"></link>
            <id>https://cineulagam.com/article/serial-actor-jayamani-passes-away-1785280689</id>
            <summary type="text">திருமதி செல்வம், சிறகடிக்க ஆசை உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்திருக்கும் நடிகர் ஜெயமணி திடீர் மரணம் அடைந்திருப்பது ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>திருமதி செல்வம், சிறகடிக்க ஆசை உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்திருக்கும் நடிகர் ஜெயமணி திடீர் மரணம் அடைந்திருப்பது ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.</p><p>சிறகடிக்க ஆசை சீரியலில் மலேசியா மாமா ரோலில் அவர் நடித்து இருந்தார். ஜெயமணி நடிப்பை தாண்டி சுமார் 40 சீரியல்களை இயக்கி இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c92b5c1c-0ffd-4659-b762-0425a65baaf3/26-6a6938b37061f.webp' /></p><p>
</p><h2>மரணம்</h2><p>நடிகர் ஜெயமணிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் உயிர் பிரிந்தது. அவரது மறைவுக்கு சின்னத்திரை பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து இருக்கின்றனர்.</p><p>

மேலும் ரசிகர்களும் உருக்கமாக சமூக வலைத்தளங்களில் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.


&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f8c94e02-e6f9-486f-9538-712cbb22e177/26-6a6938b44a7ab.webp' /></p>]]></content>
            <updated>2026-07-28T23:18:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Malaivanjan</name>
            </author>
            <title type="text"><![CDATA[லிந்துலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் மீது மோதி விட்டு தப்பிச் சென்றவர்! தீவிர விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/man-who-hit-parked-vehicles-in-lindulai-and-fled-1785279517"></link>
            <id>https://tamilwin.com/article/man-who-hit-parked-vehicles-in-lindulai-and-fled-1785279517</id>
            <summary type="text">நுவரெலியா மாவட்டம், லிந்துலை பகுதியில் நேற்று (28) அதிகாலை இடம்பெற்ற வாகன
விபத்து தொடர்பில் லிந்துலை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
...</summary>
            <content type="html"><![CDATA[<p>நுவரெலியா மாவட்டம், லிந்துலை பகுதியில் நேற்று (28) அதிகாலை இடம்பெற்ற வாகன
விபத்து தொடர்பில் லிந்துலை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
</p><p>
நேற்று அதிகாலை சுமார் 4.30 மணியளவில், லிந்துலை வீதியோரத்தில் நிறுத்தி
வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் மீது போல்ரோ ரக வாகனம் ஒன்று மோதியுள்ளதாக
தெரிவிக்கப்படுகிறது.
</p><h2>தீவிர விசாரணை</h2><p>
எனினும், விபத்தை ஏற்படுத்திய வாகனம் சம்பவ இடத்தில் நிறுத்தப்படாமல்
அங்கிருந்து சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
இந்த விபத்தில் சிறிய ரக கார் ஒன்றும், சிறிய ரக வான் ஒன்றும், இரண்டு
மோட்டார் சைக்கிள்களும் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/449b5df6-61a6-42bc-ad6e-801abe12dd14/26-6a6937cf099c9.webp' /></p><p>

சம்பவம் தொடர்பில் தகவல்களை திரட்டும் நோக்கில், குறித்த பகுதியில்
பொருத்தப்பட்டுள்ள பாதுகாப்பு கமராக்களின் காணொளிகளை ஆய்வு செய்து, விபத்தை
ஏற்படுத்திவிட்டு தப்பிச் சென்றதாக கூறப்படும் வாகனத்தை அடையாளம் காணும்
நடவடிக்கைகளை லிந்துலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.</p><p>

மேலும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு
வருவதாக லிந்துலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-07-28T23:14:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹார்முஸ் நீரிணையில் ஈரான் புதிய திட்டம்., ஓமனுக்கு எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/iran-seeks-control-in-hormuz-transit-plan-1785279691"></link>
            <id>https://news.lankasri.com/article/iran-seeks-control-in-hormuz-transit-plan-1785279691</id>
            <summary type="text">ஈரான், ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க ஓமன் நாட்டிற்கு தற்காலிக திட்டம் ஒன்றை முன்மொழிந்துள்ளது.இந்த திட்டத்தின் படி, ஒரு திசை போக்குவரத்து ஈரான் நீ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரான், ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க ஓமன் நாட்டிற்கு தற்காலிக திட்டம் ஒன்றை முன்மொழிந்துள்ளது.</p><p>இந்த திட்டத்தின் படி, ஒரு திசை போக்குவரத்து ஈரான் நீர்வழியாகவும், எதிர் திசை போக்குவரத்தின் ஒரு பகுதியும் ஈரான் நீர்வழியாகவும் செல்ல வேண்டும் என ஈரான் துணை வெளிவிவகார அமைச்சர் காஸிம் கரிபாபாதி தெரிவித்துள்ளார்.
</p><p></p><p>ஓமன் முன்மொழிந்த “சமமாகப் பகிர்ந்துகொள்ளும் திட்டத்தை” ஈரான் நிராகரித்துள்ளது. காரணம், அது ஈரானின் பாதுகாப்பு கவலைகளை தீர்க்காது என கரிபாபாதி கூறியுள்ளார்.</p><p>அவர் மேலும், ஓமன் இந்த திட்டத்தை ஏற்காவிட்டால், ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டே இருக்கும் என எச்சரித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ecd0cc96-89f6-4040-86f3-d009137a12d7/26-6a6934cd0816e.webp' /></p><p>ஈரான், ஹார்முஸ் நீரிணையில் 60 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்த Traffic Separation Scheme (TSS)-ஐ இனி அங்கீகரிக்கவில்லை என அறிவித்துள்ளது. அந்த பாதை பெரும்பாலும் ஓமன் நீர்வழியில் அமைந்துள்ளது, இது ஈரானின் பாதுகாப்பு தேவைகளுக்கு முரணாக உள்ளது என அவர் தெறிவித்துள்ளார்.
</p><p>
ஈரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதலுக்குப் பிறகு, ஹார்முஸ் நீரிணை செல்லும் கப்பல்களை கண்காணிக்க அதிக கட்டுப்பாடு தேவைப்படுவதாக தெரிவித்துள்ளது. மேலும், ஓமன் அழைத்தாலும், எந்த மூன்றாம் நாடும் ஹார்முஸ் நீரிணையில் கடல் கண்ணிவெடிகளை அகற்ற அனுமதிக்கப்படமாட்டாது என ஈரான் எச்சரித்துள்ளது.
</p><p></p><p>இந்த நிலைமை, உலகின் முக்கியமான எண்ணெய் போக்குவரத்து பாதையான ஹார்முஸ் நீரிணையில் புதிய பதற்றத்தை உருவாக்கியுள்ளது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-28T23:00:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[ட்ரெண்டி உடையில் த்ரிஷாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/trisha-latest-photoshoot-1785278925"></link>
            <id>https://cineulagam.com/article/trisha-latest-photoshoot-1785278925</id>
            <summary type="text">நடிகை த்ரிஷா சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு சென்று இருந்தார். அங்கு அவர் ட்ரெண்டி உடையில் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட வீடியோவும் வெளியாகி வைரல் ஆகி இருந்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>நடிகை த்ரிஷா சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு சென்று இருந்தார். அங்கு அவர் ட்ரெண்டி உடையில் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட வீடியோவும் வெளியாகி வைரல் ஆகி இருந்தது.</p><p>

அந்த உடையில் த்ரிஷா போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்களை காஸ்டியூம் டிசைனர் Eka Lakhani வெளியிட்டுள்ளார்.
</p><p>
இந்த புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்து வருகிறது.</p>]]></content>
            <updated>2026-07-28T22:48:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[24 மணி நேரம் இடைவிடாமல் பறந்த விமானம்., ஏர்பஸ் A350 புதிய சாதனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/airbus-a350-sets-24-hour-flight-record-1785268081"></link>
            <id>https://news.lankasri.com/article/airbus-a350-sets-24-hour-flight-record-1785268081</id>
            <summary type="text">ஏர்பஸ் நிறுவனம், உலகின் நீண்ட தூர வணிக விமான சேவைகளை உருவாக்கும் முயற்சியில், A350-1000ULR விமானத்தை 24 மணி நேரம் 24 நிமிடங்கள் இடைவிடாமல் பறக்கச் செய...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஏர்பஸ் நிறுவனம், உலகின் நீண்ட தூர வணிக விமான சேவைகளை உருவாக்கும் முயற்சியில், A350-1000ULR விமானத்தை 24 மணி நேரம் 24 நிமிடங்கள் இடைவிடாமல் பறக்கச் செய்து சாதனை படைத்துள்ளது.
</p><h2>
அவுஸ்திரேலியாவிலிருந்து பிரான்ஸ் வரை</h2><p>இந்த விமானம் அவுஸ்திரேலியாவின் மெல்போர்னிலிருந்து புறப்பட்டு, 23,075 கிலோமீட்டர் (14,338 மைல்கள்) தூரம் பறந்து, பிரான்சின் டூலூஸ் நகரில் உள்ள ஏர்பஸ் தொழிற்சாலையில் தரையிறங்கியது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4e729c79-6826-454c-a67c-b7937f70bb01/26-6a69077393164.webp' /></p><p>இந்த சோதனை, அவுஸ்திரேலிய விமான நிறுவனம் Qantas-இன் Project Sunrise திட்டத்தின் முக்கிய கட்டமாகும்.</p><p> இந்த திட்டம், சிட்னி-லண்டன் மற்றும் சிட்னி-நியூயார்க் இடையே 20 மணி நேரம் நீடிக்கும் நேரடி விமான சேவைகளை 2027 முதல் தொடங்க திட்டமிட்டுள்ளது.
</p><p></p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">The <a href="https://x.com/hashtag/A350?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#A350</a>-1000ULR is just back from its longest flight ever from Melbourne 🇦🇺 to Toulouse 🇫🇷! That’s a 12,460NM (23,075.92 km) hop 🦘 in 24 hours 24 minutes!<br><br>And for the crew, that meant flying from winter to summer, crossing 2 oceans, 3 continents, and seeing 2 sunrises + 2… <a href="https://t.co/Xk3Gbfq3HL">pic.twitter.com/Xk3Gbfq3HL</a></p>&mdash; Airbus (@Airbus) <a href="https://x.com/Airbus/status/2082126647533150280?ref_src=twsrc%5Etfw">July 28, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>ஏர்பஸ், கூடுதல் எரிபொருள் தொட்டியுடன் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட A350-1000ULR-ஐ உருவாக்கியுள்ளது. 238 பயணிகள் அமரக்கூடிய இந்த விமானம், 20,000 லீற்றர் எரிபொருளை ஏற்றிச் செல்லும் திறன் கொண்டது.
</p><h2>
அதிகம் கண்காணிக்கப்பட்ட விமானம்</h2><p>இந்த விமானப் பயணம், Flightradar24-இல் 3.6 மில்லியனுக்கும் மேற்பட்டோர் கண்காணித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இது, 2024-இல் ராணி இரண்டாம் எலிசபெத்தின் உடலை எடுத்துச் சென்ற விமானத்திற்குப் பிறகு, அதிகம் கண்காணிக்கப்பட்ட இரண்டாவது விமானமாகும்.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">23,075.92 km in 24 hours, 24 minutes. <br><br>We tallied up a few other facts and figures from this historic <a href="https://x.com/Airbus?ref_src=twsrc%5Etfw">@Airbus</a> A350-1000ULR flight. <a href="https://t.co/nJnJIQwQYC">pic.twitter.com/nJnJIQwQYC</a></p>&mdash; Flightradar24 (@flightradar24) <a href="https://x.com/flightradar24/status/2082127854939082802?ref_src=twsrc%5Etfw">July 28, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>Qantas, 12 A350-1000ULR விமானங்களை ஆர்டர் செய்துள்ளது. 2027 அக்டோபர் மாதம் முதல், சிட்னி-லண்டன் இடையே தினசரி நேரடி விமான சேவைகள் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
</p><p>
இந்த சாதனை, நீண்ட தூர விமானப் பயணங்களில் இடைநிறுத்தங்களை நீக்கி, பயணிகளுக்கு நேரத்தைச் சேமிக்கும் புதிய யுகத்தைத் தொடங்கிவைக்கிறது.</p><p></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/805f1b1a-0df7-49d2-9fe4-8082754cd6ad/26-6a69077442c87.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-28T22:36:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ். சுதுமலை அம்மன் ஆலய நிர்மாணப் பணி வழக்கில் முக்கிய முன்னேற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/jaffna-important-progr-sudumalai-amman-temple-case-1785277926"></link>
            <id>https://jvpnews.com/article/jaffna-important-progr-sudumalai-amman-temple-case-1785277926</id>
            <summary type="text">சுதுமலை அம்மன் ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் நிர்மாணப் பணிகள் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனு, யாழ்ப்பாண மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்து...</summary>
            <content type="html"><![CDATA[<p>சுதுமலை அம்மன் ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் நிர்மாணப் பணிகள் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனு, யாழ்ப்பாண மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.</p><p>
</p><p></p><p>குறித்த ஆலயத்தின் மூலஸ்தானம், கோபுரம் மற்றும் தேர்முட்டி ஆகியவற்றைத் தவிர்ந்த ஏனைய கட்டடங்கள் கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதத்தில் அகற்றப்பட்டதைத் தொடர்ந்து, புதிய நிர்மாணப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
</p><p>
இந்த நிலையில், உரிய கட்டட அனுமதியின்றி ஆலயக் கட்டடங்கள் நிர்மாணிக்கப்படுவதாகக் கூறி, அவற்றை இடித்து அகற்றுமாறு கோரி முன்னாள் யாழ்ப்பாண மாநகர முதல்வர் வி. மணிவண்ணன், தனது சட்டத்தரணி ஊடாக யாழ்ப்பாண மேல் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/46654b65-c0cb-483b-a777-9d3d6c2ee767/26-6a692de78302a.webp' /></p><p>இந்த மனு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, மனுதாரர் சார்பில் வி. மணிவண்ணன் ஆஜராகியிருந்தார்.
</p><p>
ஆலயம் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி கலாநிதி கு. குருபரன், கட்டட அனுமதிக்காக ஏற்கனவே விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டினார்.</p><p> அதேவேளை, சம்பந்தப்பட்ட பிரதேச சபையும் தனது நிலைப்பாட்டை நீதிமன்றத்தில் விளக்கியது.
</p><p>
இரு தரப்பினரின் வாதங்களையும் பரிசீலித்த யாழ்ப்பாண மேல் நீதிமன்றம், அனுமதியின்றி கட்டப்பட்டதாகக் கூறப்படும் ஆலயக் கட்டடங்களை இடித்து அகற்றுமாறு கோரிய மனு தொடர்பான கட்டளையை எதிர்வரும் ஜூலை 30ஆம் திகதி வழங்க தீர்மானித்துள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-28T22:32:16+00:00</updated>
        </entry>
    </feed>
