<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-09-01T03:54:49+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் கை விலங்குடன் தப்பி ஓடிய கைதி - காவல்துறையினர் வெளியிட்ட தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/prisoner-escapes-from-jaffna-hospital-1788232367"></link>
            <id>https://ibctamil.com/article/prisoner-escapes-from-jaffna-hospital-1788232367</id>
            <summary type="text">யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தப்பிச் சென்ற
கைதி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தப்பிச் சென்ற
கைதி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p>யாழ்ப்பாணம் இளவாலை காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமியை கடந்த 2021 ஆம் ஆண்டு தவறான முறைக்கு உட்படுத்திய குற்றத்திற்காக குறித்த நபருக்கு 24 வருட சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.</p><p></p><h2>கை விலங்குடன் தப்பி ஓட்டம்</h2><p>திடீர் சுகவீனம் என கூறி கைதி சிறை காவலர்களின் கண்காணிப்பின் கீழ் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில்
சிகிச்சை பெற்று வந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1b314491-8d47-4c8b-8b46-94b56e3c6959/26-6a9644bac1ae6.webp' /></p><p>இந்நிலையில், 30.08.2026 அன்று 3.00 மணி அளவில் வைத்தியசாலையில் இருந்து கை
விலங்குடன் தப்பிச் சென்றுள்ளார்.</p><p>இவ்வாறு தப்பிச் சென்றவர் இளவாலை பகுதியில் ஒழிந்திருப்பதாக இளவாலை காவல்துறை புலனாய்வு பிரிவினருக்கு தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் அவர் நேற்றையதினம்
காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.</p><p>
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபரை இன்று (01.09.2026) மல்லாகம் நீதவான்
நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தாவதற்கான நடவடிக்கைகளை காவல்துறையினர் மேற்கொண்டு
வருகின்றனர்.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-01T03:53:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[22ஆவது திருத்தம் தொடர்பான மனுக்கள் இன்று பரிசீலனைக்கு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/petitions-22nd-amendment-to-be-considered-today-1788233562"></link>
            <id>https://ibctamil.com/article/petitions-22nd-amendment-to-be-considered-today-1788233562</id>
            <summary type="text">இலங்கையின் 22வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அனைத்து மனுக்களும் இன்று (01) பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள...</summary>
            <content type="html"><![CDATA[<p></p><p>இலங்கையின் 22வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அனைத்து மனுக்களும் இன்று (01) பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.
</p><p>
 

பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன தலைமையிலான 5 பேர் கொண்ட நீதிபதிகள் அமர்வு முன்னிலையில் இன்று காலை 10 மணி முதல் இந்த மனுக்கள் உயர்நீதிமன்றத்தில் பரிசீலிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
 

22வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் கடந்த 18 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதை அடுத்து, அதற்கு எதிராக மனுக்களைத் தாக்கல் செய்வதற்குச் சந்தர்ப்பம் அளிக்கப்பட்டிருந்தது.</p><p></p><h2>40க்கும் மேற்பட்ட மனுக்கள்&nbsp;</h2><p>
</p><p>
 

நேற்று (31) வரை அதற்குச் சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருந்த நிலையில், 40க்கும் மேற்பட்ட ஆதரவு மற்றும் எதிர்ப்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c5a2d099-88bf-458a-8d93-1580a4af1406/26-6a964b3cd15ba.webp' /></p><p> </p><p>இந்தச் சட்டமூலத்தின் மூலம் நீதிமன்றத்தின் சுயாதீனத்திற்கும் சட்டத்தின் ஆட்சிகளுக்கும் பாதிப்பு ஏற்படுவதாகச் சுட்டிக்காட்டியும், அரசியலமைப்பு துஷ்பிரயோகம் செய்யப்படுவதாகத் தெரிவித்தும், இச்சட்டம் அரசியலமைப்பிற்கு முரணானது என்பதால் இதனை நிறைவேற்றுவதற்கு மக்கள் தீர்ப்பிற்கு (சர்வஜன வாக்கெடுப்பு) உத்தரவிடுமாறு கோரியும் குறித்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.</p><p>

 

அதற்கமைய, குறித்த மனுக்களைப் பரிசீலிப்பதற்காகப் பிரதம நீதியரசரால் 5 பேர் கொண்ட நீதிபதிகள் அமர்வு அறிவிக்கப்பட்ட நிலையில் பிரதம நீதியரசருக்கு மேலதிகமாக அசேல வெங்கப்புலி, அர்ஜுன ஒபேசேகர, சம்பத் அபேகோன் மற்றும் கிஹான் குலதுங்க ஆகிய நீதியரசர்கள் பெயரிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p><p><br></p><p></p>]]></content>
            <updated>2026-09-01T03:52:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[நல்லூர் கந்தசுவாமி ஆலய மகோற்சவம் ; வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்ட 15ஆம் திருவிழா சிறப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/15th-festival-of-nallur-kandaswamy-temple-1788234553"></link>
            <id>https://jvpnews.com/article/15th-festival-of-nallur-kandaswamy-temple-1788234553</id>
            <summary type="text">வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம் வெகுவிமரிசையாக நடைபெற்று வரும் நிலையில், நேற்றைய தினம் (திங்கட்கிழமை) 15ஆம் திருவிழா...</summary>
            <content type="html"><![CDATA[<p>வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம் வெகுவிமரிசையாக நடைபெற்று வரும் நிலையில், நேற்றைய தினம் (திங்கட்கிழமை) 15ஆம் திருவிழா சிறப்பாக இடம்பெற்றது.</p><p>
</p><p></p><p>இதன்போது, வள்ளி தெய்வானை சமேத வேல் பெருமான் கிடாய் வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருட்காட்சி வழங்கினார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ef40e70d-a6f6-46d4-9dab-3eb2e789e65e/26-6a964b3a47f02.webp' /></p><p>அதனைத் தொடர்ந்து, சுவாமி வெளிவீதியுலா இடம்பெற்றதுடன், பெருமளவான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்து அருளாசி பெற்றனர்.
</p><p>
வருடாந்த மகோற்சவத்தை முன்னிட்டு நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தைச் சூழவுள்ள பகுதிகளில் பக்தர்களின் வருகையும் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ef40e70d-a6f6-46d4-9dab-3eb2e789e65e/26-6a964b3a47f02.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/18a9b259-ec9c-43b5-8d2c-bd098cce0716/26-6a964b3aef752.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a99a5910-ca0e-4fc4-9ad6-96fce4ceb24a/26-6a964b3bb4df3.webp' /></p>]]></content>
            <updated>2026-09-01T03:49:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் பெரும் துயரம் - நண்பனை காப்பாற்ற சென்று காணாமல் போன இளைஞர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/3-boys-missing-in-water-1788233081"></link>
            <id>https://tamilwin.com/article/3-boys-missing-in-water-1788233081</id>
            <summary type="text">ஹொரணை, நாரகல பாலம் அருகில் களு கங்கையில் நீராடச் சென்ற மூன்று இளைஞர்கள் காணாமல் போயுள்ள நிலையில் இருவர் காப்பற்றப்பட்டுள்ளனர்.

காணாமல் போன மூவரில் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹொரணை, நாரகல பாலம் அருகில் களு கங்கையில் நீராடச் சென்ற மூன்று இளைஞர்கள் காணாமல் போயுள்ள நிலையில் இருவர் காப்பற்றப்பட்டுள்ளனர்.</p><p>

காணாமல் போன மூவரில் ஒரு இளைஞரை தேடும் பணி தற்போது தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
</p><p>நண்பர்கள் மூவரில் 19 வயதுடைய இளைஞர் ஒருவர் இவ்வாறு நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.</p><p>

இவ்வாறு காணாமல் போனவர் 19 வயதுடைய, யால பிரதேசத்தைச் சேர்ந்த சிரான் சஸ்மித என்ற இளைஞர் என தெரியவந்துள்ளது.</p><h2><b>

காணாமல் போன இளைஞர் </b></h2><p>நேற்று மாலை 7.30 மணியளவில் நீராடுவதற்காக குறித்த இடத்திற்கு வருகை தந்த 3 இளைஞர்களில் ஒருவர் நீரில் குதித்து நீந்த முயன்ற போது நீரோடு அடித்துச் செல்லப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/753d214a-afc8-423c-9251-fcd9c2d3a1c1/26-6a96496863cb3.webp' /></p><p>இதன் போது ஏனைய 2 இளைஞர்கள் அவரை மீட்க நீரில் குதித்துள்ளனர்.

காப்பாற்ற முயன்ற இளைஞர்களும் நீரில் சிக்கிக்கொண்டதுடன், அவர்கள் கடும் சிரமத்தின் மத்தியில் பின்னர் கரையேறியுள்ளனர்.
</p><p>
இதனையடுத்து இது குறித்து ஹொரணை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து, பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
</p><p>
களு கங்கையின் நீரோட்டம் பலமான பகுதியில், இன்று காலை பொலிஸ் கடற்படைப் பிரிவின் மீட்புக் குழுவினரை ஈடுபடுத்தி காணாமல் போன இளைஞரைத் தேடும் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.</p><p>

அத்துடன், அப்பகுதியில் முதலைகளின் நடமாட்டம் காணப்படுவதால் ஆற்றங்கரையில் தீ மூட்டுவதற்கும் பிரதேசவாசிகளும் நண்பர்களும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-09-01T03:41:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாக்ஸ் ஆபிஸ்: 6 நாட்களில் டாக்சிக் திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல்.. முழு விவரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/toxic-movie-6-days-worldwide-box-office-1788234056"></link>
            <id>https://cineulagam.com/article/toxic-movie-6-days-worldwide-box-office-1788234056</id>
            <summary type="text">கே.ஜி.எப் 2 வெற்றியை தொடர்ந்து யஷ் நடிப்பில் வெளிவந்த டாக்சிக் திரைப்படத்தின் 6 நாட்கள் வசூல் எவ்வளவு என்று இந்த பதிவில் பார்க்கலாம்.டாக்சிக்

கே.ஜி...</summary>
            <content type="html"><![CDATA[<p>கே.ஜி.எப் 2 வெற்றியை தொடர்ந்து யஷ் நடிப்பில் வெளிவந்த டாக்சிக் திரைப்படத்தின் 6 நாட்கள் வசூல் எவ்வளவு என்று இந்த பதிவில் பார்க்கலாம்.</p><p></p><h2>டாக்சிக்</h2><p>

கே.ஜி.எப் திரைப்படத்தின் மூலம் ஒட்டுமொத்த இந்திய சினிமாவையும் திரும்பி பார்க்க வைத்தவர் நடிகர் <a href="https://www.youtube.com/watch?v=8k-Kqg5UUq8" target="_blank">யஷ்</a>. இதை தொடர்ந்து கே.ஜி.எப் 2 மாபெரும் வெற்றி பெற்ற நிலையில், அவர் பான்-இந்தியன் ஸ்டாராக உயர்ந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c1f88c44-fe47-4998-8c96-8a36efef21fc/26-6a96494c7d8d6.webp' /></p><p> </p><p>

இவ்வளவு பெரிய வெற்றிக்கு பின் இவர் யாருடைய இயக்கத்தில் அடுத்த படம் நடிக்கப் போகிறார் என்கிற எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், இயக்குநர் கீது மோகன்தாஸின் இயக்கத்தில் டாக்சிக் படத்தில் நடிக்கிறார் எனும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. நடிப்பை தாண்டி இயக்குநர் கீதுடன் இணைந்து இப்படத்திற்கு திரைக்கதையையும் யஷ் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/099db9aa-d1a1-419c-b198-f4c96929b870/26-6a96494d36a66.webp' /></p><p>

இப்படத்தில் யஷ் உடன் இணைந்து நயன்தாரா, ஹுமா குரேஷி, ருக்மிணி வசந்த், கியாரா அத்வானி, தாரா சுதாரியா என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளிவந்த டாக்சிக் திரைப்படம் எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்துள்ளது. இதனால் பாக்ஸ் ஆபிஸில் எதிர்பார்த்த வசூலையும் இப்படத்தால் எட்ட முடியவில்லை.
</p><h2>
வசூல் விவரம்
</h2><p>
கடந்த வாரம் புதன்கிழமை அன்று வெளிவந்த டாக்சிக் திரைப்படம் முதல் நாள் உலகளவில் ரூ. 150 கோடிக்கும் மேல் வசூல் செய்தது. இது இப்படத்திற்கு கிடைத்த மாபெரும் ஓப்பனிங் நாள் வசூல் என கூறினாலும், அடுத்தடுத்த நாட்களில் பாக்ஸ் ஆபிஸில் தடுமாறி கடுமையான வீழ்ச்சியை சந்தித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8f07d277-2a58-4226-959e-3497f1267088/26-6a96494bb9d27.webp' /></p><p>
</p><p>
டாக்சிக் திரைப்படம் வெளியாகி 6 நாட்கள் கடந்துள்ள நிலையில், இதுவரை இப்படம் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 6 நாட்களில் உலகளவில் இப்படம் ரூ. 290 கோடி வசூல் செய்துள்ளது. இதன் மூலம் பாக்ஸ் ஆபிஸில் டாக்சிக் டிசாஸ்டர் ஆகியுள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-01T03:41:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[22வது திருத்தம் தொடர்பில் சாதனை அளவாக உயர் நீதிமன்றத்தில் 67 மனுக்கள் தாக்கல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/record-67-petitions-filed-high-court-22-amendment-1788233917"></link>
            <id>https://jvpnews.com/article/record-67-petitions-filed-high-court-22-amendment-1788233917</id>
            <summary type="text">அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டத்துக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் சாதனை அளவாக 67 விசேட தீர்மான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இலங்கையின் வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டத்துக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் சாதனை அளவாக 67 விசேட தீர்மான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.</p><p>
</p><p></p><p>இலங்கையின் வரலாற்றில் ஒரு அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்துக்கு இவ்வளவு அதிக எண்ணிக்கையான மனுக்கள் தாக்கல் செய்யப்படுவது இதுவே முதல்முறையாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b98cbf32-2b54-4ad3-9f73-b6474669fc92/26-6a9648bf46b9f.webp' /></p><p>இந்த மனுக்கள் மீதான பரிசீலனைகள் இன்று (1) முற்பகல் 10 மணிக்கு உயர் நீதிமன்றத்தின் ஐவர் கொண்ட நீதியரசர்கள் ஆயம் முன்னிலையில் ஆரம்பமாகவுள்ளது.</p><p>

இந்தச் சட்டமூலம் முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ அரசியலமைப்புக்கு முரணானதா என்பதையும் அவ்வாறாயின் நாடாளுமன்றத்தின் விசேட பெரும்பான்மையுடன் சேர்த்து மக்களிடம் பொது வாக்கெடுப்பு மூலம் ஒப்புதல் பெற வேண்டுமா என்பதையும் இந்த உயர்நீதிமன்ற அமர்வு ஆராய்ந்து அறிவிக்கும்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-01T03:38:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாளத்தில் இருந்து இன்னொரு துயரமான செய்தி வெளிவரலாம்... சுரங்கத்தில் சிக்கிய 900 பேர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/nepal-search-hydropower-workers-1788233441"></link>
            <id>https://news.lankasri.com/article/nepal-search-hydropower-workers-1788233441</id>
            <summary type="text">Nepal rescuers in search of hydropower workers: நேபாளத்தில் நீர்மின் தொழிலாளர்களைத் தேடும் பணியில் மீட்புப் படையினர் தீவிரப்படுத்தப்பட்டுள்ளனர்.
நேபா...</summary>
            <content type="html"><![CDATA[<p>Nepal rescuers in search of hydropower workers: நேபாளத்தில் நீர்மின் தொழிலாளர்களைத் தேடும் பணியில் மீட்புப் படையினர் தீவிரப்படுத்தப்பட்டுள்ளனர்.</p><p>
நேபாளத்தின் திரிசூலி ஆற்றின் ஓரத்தில் உள்ள, சேறு மூடியுள்ள சுரங்கத்தில் சிக்கியிருப்பதாகக் கருதப்படும் கிட்டத்தட்ட 900 தொழிலாளர்களின் குடும்பத்தினர், தங்கள் அன்புக்குரியவர்கள் உயிருடன் மீட்கப்படலாம் என்ற நம்பிக்கையைக் கைவிடாமல் உள்ளனர்.</p><h2>ஏழில் ஒருவர்</h2><p>
</p><p>சுரங்கத்தில் சிக்கியிருப்பவர்களைச் 
 சென்றடைவதற்கான முக்கியமான வாய்ப்பு முடிவுக்கு வந்து கொண்டிருக்கிறது என்ற அச்சத்தில், மீட்புக் குழுவினர் திங்கட்கிழமையன்றும் கடுமையாக போராடினர்;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9cdd56af-3794-40e7-aedc-b0321509dd71/26-6a9646e3a987c.webp' /></p><p> </p><p>மலைச்சரிவை வெடிவைத்துத் தகர்த்த அவர்கள், பின்னர் திரிசூலி-3A பகுதிக்குள் காற்று நுழையும் வழி செய்தனர். நேபாள-திபெத் எல்லையில் ஏற்பட்ட வெள்ளப் பேரழிவில் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 939-ஐ எட்டியுள்ளதாக அந்நாட்டின் பேரிடர் மேலாண்மை முகமை தெரிவித்துள்ள நிலையிலேயே, நீர்மின் தொழிலாளர்கள் 900 பேர்கள் தொடர்பில் கவலை அதிகரித்துள்ளது.
</p><p>மேலும், காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 3,925 ஆக அந்த முகமை திருத்தியுள்ளது, அவர்களில் 592 பேர் வெளிநாட்டினர் என்றும் குறிப்பிட்டுள்ளது.</p><p> காணாமல் போனவர்களில் ஏறக்குறைய ஏழில் ஒருவர் நீர்மின் நிலையங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் என நம்பப்படுகிறது. அவ்விடங்களிலிருந்து 279 பேர் மீட்கப்பட்டுள்ளதாக நேபாளப் பிரதமர் பலேந்திர ஷா திங்களன்று தெரிவித்தார்.</p><p></p><p> </p><p>சீன மற்றும் நேபாள இராணுவத்தினரைக் கொண்ட ஒரு சர்வதேசக் குழு இந்த மீட்பு நடவடிக்கையை முன்னின்று நடத்துகிறது, அதேவேளையில் இந்தியா, கொரியா மற்றும் அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த நிபுணர்களும் இதில் ஈடுபட்டுள்ளனர். </p><p>நேபாளம் நீர்மின்சக்தியை பெருமளவில் சார்ந்துள்ளதுடன், தனது மலைப்பாங்கான ஆற்றுப் படுகைகளில் இத்திட்டங்களை மேம்படுத்துவதற்காக பல ஆண்டுகளாக செலவிட்டுள்ளது. கட்டி முடிக்கப்பட்ட அல்லது கட்டுமானத்தில் இருந்த குறைந்தது 11 திட்டங்கள் வெள்ளத்தில் சேதமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1b88c4db-4839-4481-9cbf-c75a0b709ec4/26-6a9646e45bd2a.webp' /></p><p> </p><p>இதனிடையே, மீட்புக் குழுவினர் வார இறுதியில் சுரங்கத்திற்குள் காற்று நுழையும் வகை செய்தனர், ஆனால் அது முன்னதாகவே செய்யப்பட்டிருக்க வேண்டும் என்று உள்ளே சிக்கியவர்களின் குடும்பத்தினர் கூறுகின்றனர். </p><p>திங்கள்கிழமை பகல், ஒரு நீர்மின் நிலையத்திற்குச் செல்லும் சுரங்கப்பாதைக்குள் ஒரு குழுவால் நுழைய முடிந்தது, ஆனால் அங்கு யாரும் இல்லாததைக் கண்டதும் அவர்கள் அங்கிருந்து வெளியேறினர்.</p><h2>நான்கு உடல்கள்</h2><p> </p><p>இந்த நிலையில், நிலத்தடி தேடுதல் பணிகளில் நேபாள அதிகாரிகளுக்குத் தொலைதூரத்திலிருந்து உதவி வரும் அவுஸ்திரேலியப் பொறியாளர் அர்னால்ட் டிக்ஸ், சுரங்கப்பாதைகளைக் கண்டறிவதில் மீட்புக் குழுவினர் சிரமங்களை எதிர்கொண்டு வருவதாகக் கூறினார். </p><p>சேறு மூடியுள்ளதால், மீட்புக் குழுவினரால் சுரங்கப்பாதைகளை அடையாளம் காண முடியாமல் உள்ளது என்றும், 
அவை எங்கு அமைந்துள்ளன என்பதை அறிந்த பிறகு, அவற்றைச் சென்றடைவதற்கான சிறந்த வழியை மீட்புக் குழுவினரால் தீர்மானிக்க முடியும் என்றும்; பொதுவாக இதற்காக நிலத்தைத் தோண்டுவதும் பாறைகளை வெடிவைத்துத் தகர்ப்பதும் அவசியமாகிறது என்றார். </p><p>மட்டுமின்றி, மேலே கொட்டிய பெருமழையிலிருந்து நிலத்தடிச் சூழல் ஒருவிதப் பாதுகாப்பை அளித்திருக்கக்கூடும் என்பதால், நிலத்தடியில் சிக்கியுள்ளவர்கள் குறித்து தனக்கு இன்னும் நம்பிக்கை இருப்பதாக அவர் கூறினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/13488f67-8c04-4e39-af55-565fe50abd07/26-6a9646e513c6b.webp' /></p><p> </p><p>ஆனால், சம்பவம் நடந்து கிட்டத்தட்ட 7 நாட்களாகியுள்ளதால், சுரங்கத்தில் சிக்கியுள்ளவர்களின் நிலை தொடர்பில் கவலை அதிகரித்துள்ளது. மேலும், ஒரு சுரங்கத்தில் சிக்கியிருப்பவர்களுக்கு ஆக்ஸிஜன் வசதி கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் எஞ்சிய பலரது நிலை மோசமாக இருக்கவும் வாய்ப்புள்ளது என நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார். </p><p>இதனிடையே, மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்ட நிலையில், சேறு நிரம்பிய மூன்று சுரங்கப் பாதைகளிலிருந்து நான்கு உடல்கள் மீட்கப்பட்டதாக நேபாள ராணுவம் தெரிவித்தது. </p><p>கடந்த புதன்கிழமை பேரழிவு ஏற்பட்டபோது, ​​சில தொழிலாளர்களால் உதவிக்கு அழைப்பு விடுக்க முடிந்தது. மேலும், தப்பிய மற்றவர்கள், தங்கள் சக ஊழியர்களில் பலர் இன்னும் சுரங்கங்களில் சிக்கியிருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-01T03:29:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பகுதியில் கஞ்சா கலந்த மாவா போதைப்பொருளுடன் ஒருவர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/one-arrested-with-marijuana-mixed-with-cannabis-1788233079"></link>
            <id>https://jvpnews.com/article/one-arrested-with-marijuana-mixed-with-cannabis-1788233079</id>
            <summary type="text">வவுனியா கோவில்குளம் பகுதியில், மேற்கொள்ளப்பட்ட முற்றுகையின் போது, கஞ்சா கலந்த மாவா போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
...</summary>
            <content type="html"><![CDATA[<p>வவுனியா கோவில்குளம் பகுதியில், மேற்கொள்ளப்பட்ட முற்றுகையின் போது, கஞ்சா கலந்த மாவா போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p></p><p>

இதன்போது, கஞ்சா கலந்த மாவா போதைப்பொருள் 32 கிலோகிராம் 400 கிராம் கைப்பற்றப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/81b57b2f-7e72-496a-8d44-8a663b6dbc71/26-6a9645791ed07.webp' /></p><p>கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 41 வயதுடைய கோவில்குளம் பகுதியைச் சேர்ந்தவர் என காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
</p><p>
சந்தேகநபரை வவுனியா நீதவான் நீதிமன்றத்தில் இன்று முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
</p><p>
சம்பவம் தொடர்பில் வவுனியா காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-01T03:24:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[துப்பாக்கி வைத்திருப்பவர்களுக்கு பாதுகாப்பு அமைச்சின் முக்கிய அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/ministry-of-defence-notice-to-gun-owners-1788231790"></link>
            <id>https://ibctamil.com/article/ministry-of-defence-notice-to-gun-owners-1788231790</id>
            <summary type="text">2027 ஆம் ஆண்டுக்கான துப்பாக்கி உள்ளிட்ட சுடுபடைக்கலன்களுக்கான (Firearms) அனுமதிப் பத்திரங்களைப் புதுப்பிக்கும் பணிகள் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு அறி...</summary>
            <content type="html"><![CDATA[<p>2027 ஆம் ஆண்டுக்கான துப்பாக்கி உள்ளிட்ட சுடுபடைக்கலன்களுக்கான (Firearms) அனுமதிப் பத்திரங்களைப் புதுப்பிக்கும் பணிகள் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு அறிவிப்பொன்றை விடுத்துள்ளது.</p><p> 
</p><p>அதன்படி, இன்று (01) ஆரம்பமாகவுள்ள&nbsp;புதுப்பிக்கும் பணிகள் எதிர்வரும் டிசம்பர் 31 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள நிலையில் இதற்காக நான்கு மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.</p><p>

உரிய கால அவகாசத்துக்குள் அனுமதிப்பத்திரத்தைப் புதுப்பிக்கத் தவறும் அனைத்துத் துப்பாக்கி உரிமையாளர்களும், துப்பாக்கிச் சட்டக் கோவையின் 22 வது பிரிவின் விதிகளுக்கு அமைவாக, செல்லுபடியாகும் அனுமதியின்றித் துப்பாக்கி வைத்திருத்தல் என்ற குற்றத்தின் கீழ் தண்டனைக்குரியவர்கள் ஆவர் எனவும் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.</p><p></p><h2>பாதுகாப்பு அமைச்சின் அறிக்கை</h2><p>
</p><p>இதேவேளை, 2027-2028 ஆம் ஆண்டுக்கான தனியார் பாதுகாப்பு முகவர் நிலையப் பதிவுப் புதுப்பித்தலும் இன்று முதல் எதிர்வரும் டிசம்பர் 31 ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படவுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8abb36bb-1557-42c1-9359-35fd261b36e0/26-6a96437cc6e3e.webp' /></p><p>

அதற்குப் பின்னர் மேற்கொள்ளப்படும் புதுப்பித்தல்களுக்குத் தாமதக் கட்டணம் அறவிடப்படுவதுடன் கடுமையான சட்டநடவடிக்கைகளும் எடுக்கப்படும் எனவும் பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-01T03:22:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் எச்சரிக்கை மட்டத்தில் வெப்பச்சுட்டெண்! பொதுமக்களுக்கு அவசர அறிவுறுத்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/heat-index-at-warning-level-in-sri-lanka-warrning-1788231306"></link>
            <id>https://tamilwin.com/article/heat-index-at-warning-level-in-sri-lanka-warrning-1788231306</id>
            <summary type="text">நாட்டின் பல பகுதிகளுக்கு, இன்று (01) முதல் நடைமுறைக்கு வரும் வகையில், வெப்பமான வானிலைக்கான &#039;அம்பர்&#039; எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இயற்கை பேரிடர்கள் ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டின் பல பகுதிகளுக்கு, இன்று (01) முதல் நடைமுறைக்கு வரும் வகையில், வெப்பமான வானிலைக்கான 'அம்பர்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p><p>இயற்கை பேரிடர்கள் முன்னெச்சரிக்கை மையம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.&nbsp; &nbsp;</p><p>
</p><p>இதன்படி, வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில பகுதிகளிலும் மொணராகலை மாவட்டத்திலும் பகல் வேளையில் வெப்பச்சுட்டெண் 'கவனம்' (Caution) செலுத்த வேண்டிய மட்டத்தை எட்டும் என அறிவுறுத்தியுள்ளது.</p><h2>விழிப்புடன் இருக்குமாறும் அறிவுறுத்தல்</h2><p>எனவே பொதுமக்கள் போதியளவு நீர் அருந்தி உடலை நீரேற்றத்துடன் வைத்துக்கொள்ளுமாறும், அதிக சிரமமான வெளிப்புற நடவடிக்கைகளை குறைத்துக்கொள்ளுமாறும், முடிந்தவரையில் நிழலான இடங்களில் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9c59cd64-3c1c-414b-b3c0-3990d1205c81/26-6a96440f3cc3c.webp' />&nbsp;</p><p>


அத்துடன், முதியவர்கள் மற்றும் நோயாளிகள் குறித்து அவதானமாக இருக்குமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது.</p><p>மேலும், சிறுவர்களை வாகனங்களுக்குள் தனியாக விட்டுச் செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
</p><p>


பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள குடியிருப்பாளர்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறும், நிலவும் வானிலை குறித்து விழிப்புடன் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-01T03:18:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[வடக்கு, கிழக்கில் கடும் வெப்பம் ; பொதுமக்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/severe-heatwave-north-east-warning-issued-public-1788232671"></link>
            <id>https://jvpnews.com/article/severe-heatwave-north-east-warning-issued-public-1788232671</id>
            <summary type="text">வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், மொனராகலை மாவட்டத்தின் சில பகுதிகளிலும் இன்று பகல் நேரத்தில் வெப்பக் குறியீடு, கவனம் செலுத்த வேண்டிய ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், மொனராகலை மாவட்டத்தின் சில பகுதிகளிலும் இன்று பகல் நேரத்தில் வெப்பக் குறியீடு, கவனம் செலுத்த வேண்டிய மட்டத்தில் அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
</p><p>
இந்த நிலையில் வெப்பத்தின் தாக்கத்திலிருந்து தற்காத்துக்கொள்ள பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.</p><p></p><p>
திறந்த வெளியில் வேலை செய்வோர் போதிய அளவு நீர் அருந்துவதுடன், அடிக்கடி நிழலான இடங்களில் ஓய்வெடுக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

வீடுகளில் உள்ள முதியவர்கள் மற்றும் நோயாளிகளைக் கவனமாகப் கவனித்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4c2485fa-7b77-4738-b94e-c4ad0149f85d/26-6a9643e10de58.webp' /></p><p>அத்துடன் குழந்தைகளை ஒருபோதும் வாகனங்களுக்குள் தனியாக விட்டுச் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
</p><p>
கடுமையான உடல் உழைப்பு மற்றும் வெளிப்புற நடவடிக்கைகளைக் குறைத்துக் கொண்டு, லேசான வெள்ளை அல்லது வெளிர்நிற ஆடைகளை அணியுமாறு பரிந்துரைக்கப்படுகிறார்கள்.
</p><p>
இதேவேளை, அனுராதபுரம் மாவட்டத்தில் உள்ள 2,410 சிறிய நீர்ப்பாசனக் குளங்களில் 788 குளங்கள் முற்றாக வறண்டுள்ளதாகவும், மேலும் 612 குளங்களின் நீர்மட்டம் 5 சதவீதத்திற்கும் கீழ் குறைந்துள்ளதாகவும், மாவட்ட செயலாளர் ரஞ்சித் விமலசூரிய தெரிவித்துள்ளார்.
</p><p>
இதற்கிடையில், நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் தினமும் முற்பகல் 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நீர் விநியோகம் இடைநிறுத்தப்படுவதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.</p><p>

மேலும், தற்போதைய நிலைமையை கருத்திற்கொண்டு 7 மாவட்டங்களில் 81 ஆயிரத்து 929 பேருக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருவதாக தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-01T03:17:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[22 வது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிரான மனுக்கள் இன்று பரிசீலனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/petitions-against-22-to-be-considered-today-1788232190"></link>
            <id>https://jvpnews.com/article/petitions-against-22-to-be-considered-today-1788232190</id>
            <summary type="text">22வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அனைத்து மனுக்களும் இன்று (01) பரிசீலிக்கப்படவுள்ளன.

 

பிரதம நீதியரசர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>22வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அனைத்து மனுக்களும் இன்று (01) பரிசீலிக்கப்படவுள்ளன.</p><p>

 

பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன தலைமையிலான 5 பேர் நீதிபதிகள் அமர்வு முன்னிலையில் இந்த மனுக்கள் பரிசீலிக்கப்படவுள்ளது.</p><p>22வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் கடந்த 18 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதை அடுத்து, அதற்கு எதிராக மனுக்களைத் தாக்கல் செய்வதற்குச் சந்தர்ப்பம் அளிக்கப்பட்டிருந்தது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/86f9370a-430f-43cd-a7bc-3b72ffba99e3/26-6a9642003f741.webp' /></p><p>நேற்று (31) வரை அதற்குச் சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருந்த நிலையில், இந்தச் சட்டமூலத்தின் மூலம் நீதிமன்றத்தின் சுயாதீனத்திற்கும் சட்டத்தின் ஆட்சிகளுக்கும் பாதிப்பு ஏற்படுவதாகச் சுட்டிக்காட்டியும், அரசியலமைப்பு துஷ்பிரயோகம் செய்யப்படுவதாகத் தெரிவித்தும், </p><p>இச்சட்டம் அரசியலமைப்பிற்கு முரணானது என்பதால் இதனை நிறைவேற்றுவதற்கு மக்கள் தீர்ப்பிற்கு (சர்வஜன வாக்கெடுப்பு) உத்தரவிடுமாறு கோரியும் 40க்கும் மேற்பட்ட ஆதரவு மற்றும் எதிர்ப்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
</p><p>
 

அதற்கமைய, குறித்த மனுக்களைப் பரிசீலிப்பதற்காகப் பிரதம நீதியரசரால் 5 பேர் நீதிபதிகள் அமர்வு நேற்று அறிவிக்கப்பட்டது.</p><p>
 

 அதில் பிரதம நீதியரசருக்கு மேலதிகமாக அச்சல வெங்கப்புலி, அர்ஜுன ஒபேசேகர, சம்பத் அபேகோன் மற்றும் கிஹான் குலதுங்க ஆகிய நீதியரசர்கள் பெயரிடப்பட்டுள்ளனர்.
</p><p>
 

இதன்படி, இன்று காலை 10 மணி முதல் உயர்நீதிமன்றத்தில் இந்த மனுக்கள் பரிசீலிக்கப்படவுள்ளன.&nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-09-01T03:09:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA['சமைரா' அல்லது 'சமராஜ்'.. பிறக்கப்போகும் சமந்தாவின் குழந்தைக்கு பெயர் பரிந்துரைத்த ரசிகர்.. சமந்தா கொடுத்த பதில்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/mom-to-be-samantha-reacts-fan-ask-about-baby-name-1788231362"></link>
            <id>https://cineulagam.com/article/mom-to-be-samantha-reacts-fan-ask-about-baby-name-1788231362</id>
            <summary type="text">நடிகை சமந்தாவிடம் ரசிகர் ஒருவர் பிறக்கப்போகும் குழந்தைக்கு என்ன பெயர் என கேள்வி கேட்டதற்கு, அவர் அளித்த பதில் இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகை சம...</summary>
            <content type="html"><![CDATA[<p>நடிகை சமந்தாவிடம் ரசிகர் ஒருவர் பிறக்கப்போகும் குழந்தைக்கு என்ன பெயர் என கேள்வி கேட்டதற்கு, அவர் அளித்த பதில் இணையத்தில் வைரலாகி வருகிறது.</p><p></p><p>
</p><h2>
நடிகை சமந்தா
</h2><p>
தென்னிந்திய சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்கி, இன்று பான்-இந்தியன் ஸ்டாராக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார் சமந்தா. இவர் நடிப்பில் கடைசியாக வெளியான 'எங்கள் தங்கம்' திரைப்படம் ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்று ரூ. 100 கோடி வசூல் செய்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/efcab40b-8ee6-41c6-a6fe-1434649284f4/26-6a963ec5cabb9.webp' /></p><p> 

'எங்கள் தங்கம்' திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார் சமந்தா. இதனால், சினிமாவிலிருந்து பிரேக் எடுத்துள்ளார். இருப்பினும் இன்ஸ்டாகிராம் மூலம் தனது சமீபத்திய புகைப்படங்களை பதிவிட்டு, ரசிகர்களுடன் இணைப்பில் இருந்து வருகிறார்.</p><h2>

தாய்மை பயணம்</h2><p>

அண்மையில் கூட, கர்ப்ப காலத்தில் இதுவரை 11 கிலோ உடல் எடை அதிகரித்துள்ளதாகவும், தாய்மை பயணம் தனக்கு புதிய தன்னம்பிக்கையையும் பலத்தையும் கொடுத்திருப்பதாகவும் சமந்தா நெகிழ்ச்சியாக தனது ரசிகர்களுடன் பகிர்ந்துகொண்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/99740b4e-4749-4f17-ad6f-df59afb13e73/26-6a963ec7377fc.webp' /></p><h2> 


ரசிகரின் கேள்வி
</h2><p>
இந்நிலையில், பிறக்கப்போகும் குழந்தைக்கு என்ன பெயர் வைக்கப்போகிறீர்கள் என இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமந்தாவிடம் ரசிகர் ஒருவர் கேட்க, அதற்கு <a href="https://www.youtube.com/watch?v=LDIQUrnCAGM" target="_blank">சமந்தா </a>"குழந்தைக்கு பெயர் தேர்வு செய்வது நினைத்ததை விட மிகவும் கடினமாக உள்ளது; நல்ல பெயர்களை பரிந்துரையுங்கள்" என நகைச்சுவையாக பதிலளித்துள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f24ac475-43cc-402c-8761-eedc1d5d5fa4/26-6a963ec67e21e.webp' /></p><h2>சமைரா அல்லது சமராஜ்</h2><p>இதையடுத்து மற்றொரு ரசிகர், "பெண் குழந்தையாக இருந்தால், 'சமைரா' (Samaira) அல்லது ஆண் குழந்தையாக இருந்தால் 'சமராஜ்' (Samaraj) என்று வைக்கலாமே? சாம் (Sam) மற்றும் ராஜ் (Raj) ஆகிய இரு பெயர்களுடன் சரியாக பொருந்தும் பெயர் இது" என பதிவிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/030d06e5-6928-46a5-8e0d-97b5689724d1/26-6a9641f4ad00c.webp' /></p><p>இதற்கு பதிலளித்த நடிகை சமந்தா, " 'சமராஜ்' (Samraj) என்பது நம்மை பற்றியே அதிகம் பெருமை பேசிக்கொள்வது போல் இல்லையா?" என பதிவிட்டார். ரசிகரின் இந்த பதிவுக்கு சமந்தா பதிலளித்தது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
</p>]]></content>
            <updated>2026-09-01T03:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பில் திடீரென உயிரிழந்த பிரபல அழகுக்கலை பயிற்றுவிப்பாளர்! மரணம் குறித்து பொலிஸார் விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/investigate-the-death-of-model-chula-padmendra-1788227420"></link>
            <id>https://tamilwin.com/article/investigate-the-death-of-model-chula-padmendra-1788227420</id>
            <summary type="text">பிரபல அழகுக் கலை பயிற்றுவிப்பாளர் சூலாபத்மேந்திர குமாரபத்திரன பிலியந்தல பகுதியில் உள்ள தொழிலதிபருக்கு சொந்தமான வீட்டில் சந்தேகத்திற்கிடமான முறையில் உய...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரபல அழகுக் கலை பயிற்றுவிப்பாளர் சூலாபத்மேந்திர குமாரபத்திரன பிலியந்தல பகுதியில் உள்ள தொழிலதிபருக்கு சொந்தமான வீட்டில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளதாக பிலியந்தலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>பத்தரமுல்லையில் உள்ள ஒரு ஹோட்டலில் அவர் ஏற்பாடு செய்திருந்த ஒரு நிகழ்ச்சியின் பின்னர் நேற்று காலை (31) அவர் அந்த தொழிலதிபருடன் வீட்டிற்கு வந்ததாக ஆரம்பகட்ட பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.</p><h2>பொலிஸில் முறைப்பாடு </h2><p>

இதன்போது நித்திரையிலிருந்த அவர் நீண்ட நேரம் பதிலளிக்காததால், 1990 அவசர ஆம்புலன்ஸ் சேவைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f61e0197-b535-4ffd-9e85-06a24823918a/26-6a96389af145b.webp' />&nbsp;</p><p>
</p><p>இதனை்போது சம்பவ இடத்திற்கு வந்த சுகாதார பணியாளர்கள் அவரைப் பரிசோதித்து அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக உறுதிசெய்துள்ளனர்.</p><p>இதனையடுத்து தொழிலதிபர் பிலியந்தல பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.&nbsp;&nbsp;</p><p>
</p><p>
எனினும், அவரது இறப்புக்கான காரணம் இதுவரை வெளியாகாத நிலையில், பிரேதப் பரிசோதனைகள் தற்போது நடைபெற்று வருகின்றன.</p><p>46 வயதான இவர் அண்மைய கால அழகிப் போட்டி நிகழ்வுகளிலும் கலந்துகொண்டிருந்தார்.&nbsp;</p><p> ஆடைவடிவமைப்புத் துறையிலும் அழகிப்போட்டிகளுக்கான பயிற்சிகளை வழங்குவதிலும் சிறந்த வல்லுநராக அவர் அடையாளப்படுத்தப்பட்டிருந்தமை&nbsp;குறிப்பிடத்தக்கது.&nbsp; &nbsp;&nbsp;</p><p> &nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-09-01T02:49:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இன்று முதல் ஆரம்பமாகும் நடவடிக்கை! மீறினால் கடும் நடவடிக்கையென பாதுகாப்பு அமைச்சு எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/special-announcement-from-the-ministry-of-defense-1788228488"></link>
            <id>https://tamilwin.com/article/special-announcement-from-the-ministry-of-defense-1788228488</id>
            <summary type="text">&amp;nbsp;2027 ஆம் ஆண்டிற்கான துப்பாக்கி உரிமங்களை புதுப்பிக்கும் நடவடிக்கைகள் இன்று (01) முதல் ஆரம்பமாகும் என பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.



த...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;2027 ஆம் ஆண்டிற்கான துப்பாக்கி உரிமங்களை புதுப்பிக்கும் நடவடிக்கைகள் இன்று (01) முதல் ஆரம்பமாகும் என பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.</p><p>



துப்பாக்கி உரிமங்களைக் கொண்டுள்ள அனைத்து தனிநபர்களும் நிறுவனங்களும் 2026 டிசம்பர் 31 ஆம் திகதிக்கு முன்னர் தங்களது உரிமங்களைப் புதுப்பிப்பது கட்டாயமாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.</p><p>இதற்கமைய, செல்லுபடியாகும் உரிமம் இன்றி துப்பாக்கியை வைத்திருப்பது, துப்பாக்கிகள் கட்டளைச் சட்டத்தின் 22வது பிரிவின் விதிகளுக்கு அமைய குற்றமாகும் என அமைச்சு எச்சரித்துள்ளது.</p><h2>உரிமையாளர்களுக்கு&nbsp;&nbsp;எதிராக&nbsp;சட்ட&nbsp;நடவடிக்கை </h2><p> </p><p>



எனவே, நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் உரிமங்களைப் புதுப்பிக்கத் தவறும் துப்பாக்கி உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1d2875f8-bf2c-40a1-a488-9cdb780dcb5c/26-6a96338b0ae4f.webp' /></p><p>


இதனிடையே, 2026.09.01 முதல் 2026.12.31 வரை இடைப்பட்ட காலப்பகுதியில் பதிவுகளைப் புதுப்பிக்கத் தவறுகின்ற தனியார் பாதுகாப்பு முகவர் நிலையங்களுக்குத் தாமதக் கட்டணம் விதிக்கப்படும் அல்லது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>எனவே காலக்கெடுவுக்கு முன்னர் உரிய புதுப்பித்தல்களை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-09-01T02:08:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[எதிர்வரும் தேர்தல்களில் அரசாங்கத்திற்கு தோல்வி நிச்சயம்! லக்ஷ்மன் கிரியெல்ல உறுதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/kiriella-said-government-is-certain-to-fail-1788225956"></link>
            <id>https://ibctamil.com/article/kiriella-said-government-is-certain-to-fail-1788225956</id>
            <summary type="text">தேர்தல் ஒன்று நடத்தப்பட்டால் தற்போதைய அரசாங்கம் தோல்வியடைவது நிச்சயம் என முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

கண்டியில் திங்கட்கி...</summary>
            <content type="html"><![CDATA[<p>தேர்தல் ஒன்று நடத்தப்பட்டால் தற்போதைய அரசாங்கம் தோல்வியடைவது நிச்சயம் என முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
</p><p>
கண்டியில் திங்கட்கிழமை (31) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
</p><p>
எதிர்வரும் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியும் ஐக்கிய மக்கள் சக்தியும் இணைந்து ஒரே பொதுப் பட்டியலில் போட்டியிடுவதற்குத் தீர்மானித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>தேர்தல் தோல்வி பயம்</h2><p>அங்கு மேலும் கருத்து வெளியிட்ட லக்ஷ்மன் கிரியெல்ல, “மாகாண சபைத் தேர்தலோ அல்லது உள்ளுராட்சி மன்றத் தேர்தலோ எது நடத்தப்பட்டாலும் அரசாங்கம் அதில் தோல்வியடைவது உறுதியாகும். இந்தத் தேர்தல் தோல்வி பயத்தின் காரணமாகவே அரசாங்கம் தேர்தல்களை நடத்தாமல் தொடர்ச்சியாகக் காலத்தைக் கடத்தி வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6b6782bd-f0a6-45cc-8246-97cf5c812885/26-6a9629a596a63.webp' /></p><p> 

அடுத்த ஜனாதிபதித் தேர்தல் வரும் வரை அரசாங்கம் எந்தவொரு தேர்தலையும் நடத்தப் போவதில்லை என்பதே எனது கணிப்பாகும்.
</p><p>
எதிர்க்கட்சிகளுக்கு இடையே தங்களுக்குள் கருத்து வேறுபாடுகளும் சவால்களும் நிலவிய போதிலும், ஒரு தேர்தல் என்று வரும்போது எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றாகக் கை கோர்க்கும். ஐக்கிய தேசியக் கட்சியும் ஐக்கிய மக்கள் சக்தியும் இணைந்து தேர்தலில் போட்டியிடுவது குறித்து ஏற்கனவே சுமுகமான தீர்மானத்திற்கு வந்துள்ளன.</p><p>
அதற்கமைய, வரவிருக்கும் தேர்தலில் இரு கட்சிகளையும் சேர்ந்த வேட்பாளர்கள் ஒரே பொதுப் பட்டியலில் களமிறக்கப்படுவார்கள். போட்டியிடும் தேர்தல் சின்னம் எது என்பது ஒரு சிறிய விவகாரமே தவிர அது ஒருபோதும் பிளவை ஏற்படுத்தாது. </p><p>

இரு பிரதான சக்திகளும் ஒன்றிணைவதே இங்கு முதன்மையானது. எனவே, வரவிருக்கும் சவால்களை எதிர்கொள்ள இரு கட்சிகளும் நிச்சயமாக ஒரே அணியாக இணைந்து செயற்படும்” என்றார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-01T02:00:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கற்பித்தலில் ஈடுபட ஆசிரியர்களுக்கு அனுமதிப்பத்திர முறை அறிமுகம் !]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/licenses-for-teachers-1788227505"></link>
            <id>https://tamilwin.com/article/licenses-for-teachers-1788227505</id>
            <summary type="text">&amp;nbsp;ஆசிரியர்கள் கற்பித்தலில் ஈடுபடுவதற்கு அனுமதிப்பத்திரமொன்றை அறிமுகம் செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தனியார் வகுப்புகள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;ஆசிரியர்கள் கற்பித்தலில் ஈடுபடுவதற்கு அனுமதிப்பத்திரமொன்றை அறிமுகம் செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>
தனியார் வகுப்புகள் உட்பட நாட்டிலுள்ள அனைத்து ஆசிரியர்களுக்கும் தேசிய கல்விச் சபையின் ஊடாகக் கற்பித்தல் அனுமதிப்பத்திரத்தை வழங்குவதற்கான திட்டம் தயாரிக்கப்பட்டு வருவதாக தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.</p><p>
ஒருவர் மருத்துவராகப் பணியாற்றுவதற்கு மருத்துவச் சபையின் அனுமதி மற்றும் அங்கீகாரத்தைப் பெறுவதைப் போன்றதொரு நடைமுறையே இதுவெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>தேசிய கல்விச் சபையை அமைப்பதற்காக ஏற்கனவே அமைச்சரவையின் அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
</p><p>இதற்கான புதிய சட்டமூலத்தைத் தயாரிப்பதற்காக குறித்த பணி தற்போது சட்ட வரைஞர் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
</p><p>சட்ட வரைஞர் திணைக்களத்தால் வரைவு தயாரிக்கப்பட்ட பின்னர், அது மீண்டும் அமைச்சரவை மற்றும் நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்குச் சமர்ப்பிக்கப்பட்டு, வர்த்தமானி மூலம் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.</p><p>
இந்த முழுமையான நடைமுறைகளை நிறைவுசெய்து சட்டத்தைக் நடைமுறைக்குக் கொண்டுவர குறிப்பிட்ட கால அவகாசம் தேவைப்படும் என பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.&nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-09-01T01:51:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[கலிபோர்னியாவில் கொலை செய்யப்பட்ட 2 கேரளாவை சேர்ந்த பெண்கள்: கொலையாளி அதிரடி கைது2]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/kerala-women-killed-in-california-milpitas-1788226630"></link>
            <id>https://news.lankasri.com/article/kerala-women-killed-in-california-milpitas-1788226630</id>
            <summary type="text"> kerala women killed in California Milpitas :கலிபோர்னியாவில் கேரளாவை சேர்ந்த 2 பெண்கள் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.என்ன நடந...</summary>
            <content type="html"><![CDATA[<p> kerala women killed in California Milpitas :கலிபோர்னியாவில் கேரளாவை சேர்ந்த 2 பெண்கள் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><h2>என்ன நடந்தது?</h2><p>ஆகஸ்ட் 28ம் திகதி கலிபோர்னியாவின் மில்பிடாஸ்(Moonnilavu in Kottayam) நகரில் மில் கிரிக் அடுக்குமாடி குடியிருப்பு பகுதி ஆன் மேரி மேத்யூ(40) என்ற திருவனந்தபுரத்தை சேர்ந்த பெண் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.</p><p> அதே அடுக்குமாடி குடியிருப்புக்கு அருகே உள்ள டிக்சன் சாலையில் ஏற்பட்ட வாகன மோதல் தொடர்பாக&nbsp; முதலில் காவல்துறையினர் அழைக்கப்பட்டனர்.</p><p> சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் கேரளாவின் திருச்சூரை சேர்ந்த 35 வயது அஞ்சனா ஹரி என்ற பெண் ஒருவர் வாகனம் மோதியதில் சிக்கி பலத்த காயங்களுடன் வாகன நிறுத்துமிடத்தில் உயிரிழந்து கிடந்ததை கண்டுபிடித்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b13936a2-0777-4eee-bfcb-585949392b68/26-6a962c4836bbe.webp' /></p><p></p><p> மேலும் இது தொடர்பாக விசாரணையை தொடங்கிய அதிகாரிகள், அஞ்சனா ஹரி மீது மோதி விட்டு தப்பிச் சென்ற நீல நிற எஸ்.யூ.வி (SUV) வாகனத்தை அடையாளம் கண்டனர்.</p><p>இதனை தொடர்ந்து நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில், தேடப்படும் நீல நிற எஸ்.யூ.வி (SUV) வாகனம் அருகே உள்ள வாகன நிறுத்துமிடத்தில் இருப்பதை பொலிஸார் கண்டுபிடித்தனர்.</p><p> மேலும் அதன் ஓட்டுநரான கோட்டயத்தின் மூன்னிலவு பகுதியை சேர்ந்த 32 வயது அனிலா என்பவரை பொலிஸார் அதிரடியாக கைது செய்தனர்.</p><p> இதற்கிடையில் வாகன மோதலில் உயிரிழந்த அஞ்சனாவும், அடுக்குமாடி குடியிருப்பில் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட மேரி மேத்யூவும், இந்த இரண்டு குற்றச்செயல்களை செய்ததாக சந்தேகிக்கப்படும் அனிலா மூவரும் ஏற்கனவே ஒருவருக்கு ஒருவர் தெரிந்தவர்கள் என விசாரணையில் தெரியவந்துள்ளது.</p><p>அத்துடன் கைது செய்யப்பட்ட அனிலாவும், பாதிக்கப்பட்டவர்களும் ஒரே அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தில் தான் வசித்து வருகின்றனர் என்பதை உறவினர்கள் அடையாளம் கண்டுள்ளனர்.</p><p> உயிரிழந்த இருவருக்கும் கணவர் மற்றும் குழந்தைகள் உள்ளனர். மேலும் இரண்டு நாட்களுக்கு முன்பு தான் தங்கள் குடும்பத்தினருடன் ஓணம் பண்டிகை கொண்டாடியுள்ளனர்.</p><p> இந்த கொலைக்கான காரணம் குறித்து பொலிஸார் இன்னும் அதிகாரப்பூர்வ தகவலை வெளியிடவில்லை. ஆனால் இது தொடர்பான தீவிர விசாரணையை முன்னெடுத்து வருகின்றனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-01T01:37:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[22ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்தை எதிர்த்து ஒன்றிணைந்துள்ள முக்கிய அமைப்புகள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/opposition-to-22nd-constitutional-amendment-bill-1788224818"></link>
            <id>https://ibctamil.com/article/opposition-to-22nd-constitutional-amendment-bill-1788224818</id>
            <summary type="text">முன்மொழியப்பட்ட 22ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்தை எதிர்த்து இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் (BASL) உடன் இணைந்து 40 தொழில்சார் அமைப்புகள் மற்றும் தொழ...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்மொழியப்பட்ட 22ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்தை எதிர்த்து இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் (BASL) உடன் இணைந்து 40 தொழில்சார் அமைப்புகள் மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகள்,கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். </p><p>

நேற்று BASL இல் நடந்த கூட்டத்தை தொடர்ந்து கூட்டு அறிக்கை ஒன்றையும் அவர்கள் வெளியிட்டுள்ளனர்.
</p><p>
அதன்படி, நீதிபதிகளின் ஓய்வு வயதை நீட்டிக்கும் இந்த திருத்தம் நீதித்துறையின் சுதந்திரத்துக்கு நேரடி அச்சுறுத்தலாக அமையும் என BASL முன்வைத்த நிலைப்பாட்டுக்கு அவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.</p><p></p><h2>கலந்துரையாடப்பட்டுள்ள விடயங்கள்</h2><p>
</p><p>
பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு (FUTA), அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA), புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம், தரப்படுத்தப்பட்ட அதிபர்கள் சங்கம், அரச தாதியர் சங்கம் உள்ளிட்ட சுகாதார மற்றும் அரச ஊழியர் சங்கங்கள் பல இதில் அடங்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/248b8839-c1f8-4557-8661-d943d1da4537/26-6a962721e39e4.webp' /></p><p>

அறிக்கையின் முக்கிய கருத்துகள்
</p><ol><li>உயர் நீதிமன்றம், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் உட்பட நீதிபதிகளின் ஓய்வு வயதை நீட்டிப்பது நீதித்துறை சுதந்திரம், சட்டத்தின் ஆட்சி, ஜனநாயகம் மற்றும் மக்களின் இறையாண்மையை பாதிக்கும்.
</li><li>2022 இல் உள்நாட்டு இறைவரி திருத்த சட்டமூலம் தொடர்பான உயர் நீதிமன்ற விசேட தீர்மானத்தை சுட்டிக்காட்டினர். அதில், பதவியில் உள்ள நீதிபதிகளின் ஓய்வு வயதை பாதிக்கும் அரசியலமைப்பு திருத்தம் நீதித்துறை சுதந்திரத்தை மீறுவதாகவும், அரசியலமைப்பின் 3ஆவது சரத்தை மீறுவதாகவும், எனவே அது பொது வாக்கெடுப்புக்கு உட்படுத்தப்பட வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டது.</li></ol><h2>பொது வாக்கெடுப்புக்கு வலியுறுத்து</h2><p>

இதன்படி, 40 அமைப்புகளும் ஒருமனதாக அரசாங்கம் இந்த திருத்த சட்டமூலத்தை உடனடியாக மீளப் பெற வேண்டும் எனவும், அதற்கு பதிலாக உயர் நீதிமன்றங்களில் உள்ள காலியிடங்களை நிரப்புவதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e20eaf32-fcb3-40df-bb23-cf88c68400a7/26-6a9627229bf9a.webp' /></p><p>

மேலும், அரசு இந்த திருத்தத்தை முன்னெடுக்க விரும்பினால், அதனை நேரடியாக மக்களிடம் பொது வாக்கெடுப்புக்கு விட வேண்டும் எனவும் அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
</p><p>
அத்தோடு, நீதித்துறை சுதந்திரத்தை பலவீனப்படுத்தும் எந்த நடவடிக்கையையும் எதிர்பதாகவும், சட்டத்தின் ஆட்சி, ஜனநாயகம் மற்றும் மக்களின் இறையாண்மையை பாதுகாக்க தாங்கள் உறுதிபூண்டுள்ளதாகவும் BASL தெரிவித்துள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-01T01:30:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[அர்ஜுன் மகேந்திரனை அழைத்துவருவதில் எந்த சட்டத்தடையும் இல்லை! சம்பிக்க ரணவக்க குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/no-legal-impediment-to-bringing-arjun-mahendran-1788223707"></link>
            <id>https://ibctamil.com/article/no-legal-impediment-to-bringing-arjun-mahendran-1788223707</id>
            <summary type="text">அர்ஜுன் மகேந்திரனை நாட்டுக்கு அழைத்துவர சிங்கப்பூரில் எந்த சட்ட ரீதியான தடைகளும் இல்லை என ஜனநாயக கூடியரசு முன்னணியின் தலைவர் சம்பிக்க ரணவக்க தெரிவித்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>அர்ஜுன் மகேந்திரனை நாட்டுக்கு அழைத்துவர சிங்கப்பூரில் எந்த சட்ட ரீதியான தடைகளும் இல்லை என ஜனநாயக கூடியரசு முன்னணியின் தலைவர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.</p><p>

அவர் வழங்கியுள்ள வாக்குமூலம் காரணமாகவே அவரை நாட்டுக்கு கொண்டுவர அரசாங்கம் பின்வாங்கி வருகிறது என அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
</p><p>
திருடர்களை கைதுசெய்வதாக தெரிவித்து அரசாங்கம் மேற்கொண்டுவரும் நடவடிக்கை தொடர்பில் திங்கட்கிழமை (31) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இதனை குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>பொருளாதார வீழ்ச்சி</h2><p>
</p><p>
அதன்போது மேலும் கருத்து வெளியிட்ட சம்பிக்க ரணவக்க, “திருடர்களை கைதுசெய்யும் அரசாங்கத்தின் வேவைத்திட்டத்துக்கு நாங்கள் எதிர்ப்பு இல்லை. ஆனால் அரசியல் நாடகத்துக்காக அதனை செய்வதையே நாங்கள் எதிர்க்கிறோம்.திருடர்களை கைதுசெய்வதுபோல், நாட்டை வங்குரோத்தாகியவர்களுக்கு எதிராகவும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8f58b1e0-7a60-468f-9d5d-1e25488011e0/26-6a9623510fbc8.webp' /></p><p>எமது நாடு விடுதலை புலிகளின் யுத்தத்துக்கு முன்னர் பொருளாதார ரீதியில் முன்னேற்றமடைந்து வந்தது ஆனால் 87,88 காலப்பகுதியில் மக்கள் விடுதலை முன்னணியின் கலவரத்தினால் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைய ஆரம்பித்தது.</p><p>அதனைத் தொடர்ந்து விடுதலை புலிகளின் 30 வருட யுத்தம் காரணமாக எமது நாடு வீழ்ச்சியடைந்தது. இந்த இரண்டு போராட்டங்களும் இடம்பெறாமல் இருந்திருந்தால், எமது நாடு அபிவிருத்தியடைந்த நாடாக மாறி இருக்கும்.” என தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<b> <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> </b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-01T01:30:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இதை செய்தால் வரிகள் இல்லை ; ட்ரம்பின் மற்றொரு அதிரடி அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/trump-s-latest-shock-announcement-1788219362"></link>
            <id>https://canadamirror.com/article/trump-s-latest-shock-announcement-1788219362</id>
            <summary type="text">அமெரிக்க-கனடா வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் முறிந்ததைத் தொடர்ந்து சுமார் 20 பில்லியன் டாலர் மதிப்புள்ள கனடியப் பொருட்கள் மீது அமெரிக்கா 50 சதவீதம் வரி வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்க-கனடா வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் முறிந்ததைத் தொடர்ந்து சுமார் 20 பில்லியன் டாலர் மதிப்புள்ள கனடியப் பொருட்கள் மீது அமெரிக்கா 50 சதவீதம் வரி விதித்தது. இந்த வரிகள் 2027-ஆம் ஆண்டு முதல் அமலுக்கு வரும் என கூறப்படுகிறது.


</p><p>
பேச்சுவார்த்தைகளில் உடன்பாடு எட்டப்படாததால் 2 நாடுகளும் ஒன்றையொன்று குற்றம்சாட்டின. அமெரிக்காவுடன் மோதலுக்குத் தங்கள் நாடு தயாராக இருப்பதாக கனடா அதிகாரிகள் எச்சரித்திருந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/590f874a-d51d-44c7-9878-8f6aae7c3440/26-6a960fe45a461.webp' /></p><p>

புதிதாக விதிக்கப்பட்டு உள்ள வரிகளைத் தவிர்ப்பதற்காக, கனடிய நிறுவனங்கள் தங்கள் தலைமையகங்களையும் உற்பத்தி வசதிகளையும் அமெரிக்காவுக்கு இடமாற்றம் செய்ய வேண்டும் என்று அதிபர் ட்ரம்ப் கூறியுள்ளார்.
</p><p>

இதுதொடர்பாக அவர் சமூகவலைதள பதிவில் அமெரிக்காவுடன் வர்த்தகம் செய்யும் அனைத்து கனடிய நிறுவனங்களும் உடனடியாக அமெரிக்காவிற்கு இடம் பெயரட்டும்.</p><p>

அவற்றுள் பல, அமெரிக்காவின் முட்டாள்தனமான தலைமை காரணமாக பல ஆண்டுகளுக்கு முன்பே வெளியேறிய நிறுவனங்களாகும்.

நீங்கள் திரும்பி வரும்போது, ​​சுங்க வரிகள் எதுவும் இருக்காது என்று குறிப்பிட்டுள்ளார். </p><p>மற்றொரு பதிவில், கனடா அமெரிக்காவின் 2-வது பெரிய வர்த்தகப் பங்காளியாக இருந்தபோதிலும், அது அமெரிக்காவின் மிக மோசமான வர்த்தகப் பங்காளிகளில் ஒன்றாகும் என்று அவர் குறிப்பிட்டு உள்ளார்.</p><p>


அமெரிக்கப் பொருளாதாரம் கனடாவைவிடப் பல மடங்கு பெரியது. கனடாவின் ஏற்றுமதியில் சுமார் 70 சதவீதம் அமெ ரிக்காவிற்கே செல்கிறது. </p><p>அதே நேரத்தில் பல அமெரிக்க மாநிலங்களுக்கு மிக முக்கிய வாடிக்கையாள ராகக் கனடா விளங்குறது என்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-09-01T00:54:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் சொந்த மகளுக்கு தந்தை செய்த தகாத செயல் ; 18 வருடத்தின் பின்னர் கிடைத்த அதிரடி தண்டனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/father-s-inappropriate-act-against-daughter-1788222221"></link>
            <id>https://jvpnews.com/article/father-s-inappropriate-act-against-daughter-1788222221</id>
            <summary type="text">யாழ்ப்பாணத்தில் தனது சொந்த மகளை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய தந்தைக்கு 16 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 

கோப்பாய் பகுதியில் கடந்த 20...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">யாழ்ப்பாணத்தில் தனது சொந்த மகளை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய தந்தைக்கு 16 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. </p><p style="text-align: justify;">

கோப்பாய் பகுதியில் கடந்த 2008 ஆம் ஆண்டு மகளை வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றத்தில் தந்தை கைது செய்யப்பட்டார்.</p><p style="text-align: justify;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/af98b951-4b9c-44f9-80f6-6eebc6ef499d/26-6a961b0f458e0.webp' /></p><p> </p><p style="text-align: justify; ">

அது தொடர்பிலான வழக்கு விசாரணைகள் யாழ்ப்பாண மேல் நீதிமன்றில் நடைபெற்று வந்த வேளை தீர்ப்புக்காக கடந்த 28 ஆம் திகதி வழக்கு அழைக்கப்பட்டது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify;"> 

அதன் போது, எதிரியான தந்தையை குற்றவாளியாக கண்ட மன்று, 16 வருட சிறைத்தண்டனை விதித்ததுடன், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 5 இலட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் இழப்பீடு வழங்க தவறின் மேலும் 3 வருட சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என மன்று தீர்ப்பளித்தது.</p><p style="text-align: justify;"></p>]]></content>
            <updated>2026-09-01T00:54:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாபா வாங்கா கணிப்புப்படி செப்டம்பர் மாதத்தில் இவர்களுக்கு பெரும் அதிஸ்டம் காத்திருக்கு...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/baba-vanga-predicts-luck-for-them-in-september-1788223974"></link>
            <id>https://jvpnews.com/article/baba-vanga-predicts-luck-for-them-in-september-1788223974</id>
            <summary type="text">பாபா வாங்கா, உலகளவில் மிகவும் பிரபலமான எதிர்காலத்தை கணித்துக் கூறும் தீர்க்கத்தரசியாவார். இவரது எதிர்கால கணிப்புகளுள் பல நிஜமாகிவிட்டதோடு, இன்னும் நடந...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">பாபா வாங்கா, உலகளவில் மிகவும் பிரபலமான எதிர்காலத்தை கணித்துக் கூறும் தீர்க்கத்தரசியாவார். இவரது எதிர்கால கணிப்புகளுள் பல நிஜமாகிவிட்டதோடு, இன்னும் நடந்து கொண்டிருக்கிறது. </p><p style="text-align: justify; ">அந்த வகையில் இவரது 2026 ஆம் ஆண்டின் செப்டம்பர் மாத கணிப்புகளும் இணையத்தில் அதிகம் பரவி வருகின்றன. மாதத்தின் முதல் வாரம் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது. ஏனெனில் இந்த வாரத்தில் பல சுப யோகங்கள் உருவாகின்றன.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b9516097-27ad-4b31-a881-18618517a479/26-6a9621e7a66da.webp' /></p><h2 style="text-align: justify; ">&nbsp;சுப யோகங்கள்</h2><p style="text-align: justify; ">&nbsp;பாபா வாங்காவின் கணிப்புப்படி, செப்டம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் அதிர்ஷ்டத்தின் ஆதரவைப் பெறப்போகும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

</p><p style="text-align: justify; "><b>தனுசு :</b> செப்டம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். பயணங்களால் நல்ல ஆதாயம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படவும் வாய்ப்புள்ளது. தொழில் வாழ்க்கையில் முன்னேற்றத்திற்கான புதிய வழிகள் கிடைக்கும் வாய்ப்புள்ளது.

</p><p style="text-align: justify; "><b>சிம்மம் : </b>செப்டம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் உங்களின் முக்கியமான பெரிய வேலைகள் வெற்றிகரகமாக முடிவடையும். பணியிடத்தில் புதிய பொறுப்புக்கள் வழங்கப்படலாம். நிதி ரீதியாக சிறப்பாக இருக்கும். நீண்ட காலமாக சிக்கியிருந்த பணம் இந்த வாரத்தில் கைக்கு கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">

</p><p style="text-align: justify; "><b>
ரிஷபம் : </b>&nbsp;மிகவும் சிறப்பாக இருக்கப் போகிறது. குறிப்பாக நிதி ரீதியாக நன்றாக இருக்கும். நீண்ட காலமாக முடிக்க முடியாமல் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். தொழில் ரீதியாக முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புக்களும் கிடைக்கும் வாய்ப்புள்ளது. குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். பல வழிகளில் இருந்து நல்ல செய்திகளைப் பெறக்கூடும்.



</p><p style="text-align: justify; "><b>துலாம் : </b>தொழில் ரீதியாக சாதகமாக இருக்கும். எதிர்காலத்தில் பயனுள்ளதாக இருக்கும் சில நட்புகள் இந்த வாரத்தில் கிடைக்கும். வியாபாரத்தில் எடுக்கும் முடிவுகள் நல்ல பலன்களைத் தரும். முக்கியமாக நீண்ட காலமாக இருந்த மன அழுத்தம் குறையும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்க யோகா, தியானம் போன்றவற்றை மேற்கொள்வது நல்லது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "><b>
மிதுனம் : </b>முன்னேற்றத்தைத் தரும் வாரமாக இருக்கப் போகிறது. பணியிடத்தில் ஒவ்வொரு முயற்சிகளிலும் நல்ல வெற்றி கிடைக்கும். மேலும் நல்ல நிதி ஆதாயங்கள் கிடைப்பதற்கான வாய்ப்புக்களும் உள்ளன. நண்பர்களின் முழு ஆதரவு கிடைக்கும். முக்கியமாக இந்த வாரத்தில் சில முக்கியமான வேலைகள் தடையின்றி வெற்றிகரமாக முடிவடையும்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-01T00:52:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[தீவிரம் அடையும் எல் நினோ நிலைமை - அபாய கட்டத்தில் இலங்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-lanka-among-countries-of-concern-1788187941"></link>
            <id>https://tamilwin.com/article/sri-lanka-among-countries-of-concern-1788187941</id>
            <summary type="text">ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் எல் நினோ காரணமாக, உன்னிப்பாக கவனிக்கப்பட வேண்டிய நாடுகளுள் ஒன்றாக இலங்கை அடையாளம் காணப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், நாட...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் எல் நினோ காரணமாக, உன்னிப்பாக கவனிக்கப்பட வேண்டிய நாடுகளுள் ஒன்றாக இலங்கை அடையாளம் காணப்பட்டுள்ளது. </p><p>

இந்த நிலையில், நாட்டின் இயல்பான மழை அளவைக் காட்டிலும் அதிகமான மழைவீழ்ச்சி, வெள்ள அபாயம் அதிகரிப்பு மற்றும் எரிபொருள், உரங்கள் மற்றும் உணவுப் பொருட்களின் விலையேற்றம் போன்ற தொடர்ச்சியான பொருளாதார சுமை ஆகியவற்றுக்கு இலங்கை முகங்கொடுக்க நேரிடும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.</p><h2>எல் நினோ தாக்கம்</h2><p> </p><p>

புதிய பிராந்திய மதிப்பீட்டு அறிக்கையிலேயே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. </p><p>ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பு , உலக உணவுத் திட்டம், ஐநா பெண்கள் அமைப்பு, உலக வானிலை அமைப்பு மற்றும் ஐ.நா மனித உரிமை விவகாரங்களின் ஒருங்கிணைப்புக்கான அலுவலகம் ஆகியவை இணைந்து இந்த அறிக்கையை தயாரித்துள்ளது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/71eaf399-c6b5-484e-8d77-126739a0d32a/26-6a96117dabe19.webp' /></p><p>ஆசிய பசிபிக் பிராந்தியமானது மிகவும் சிக்கலான மற்றும் ஒன்றுக்கொன்று தொடர்புடைய ஆபத்துக்களுக்கு முகங்கொடுத்து வருவதாக அந்த அறிக்கை எச்சரிக்கிறது. </p><p>

வலுவடைந்து வரும் எல் நினோ, சாதகமான இந்தியப் பெருங்கடல் இருமுனை மற்றும் மத்திய கிழக்கு நெருக்கடியின் தொடர்ச்சியான பொருளாதாரத் தாக்கங்கள் இதற்கு காரணமாக கூறப்படுகின்றது. </p><p>

தற்போதைய எல் நினோ பதிவுகளில் வலிமையான ஒன்றாக அமையக்கூடுவதுடன், 2027 ஆம் ஆண்டு வரை நீடிக்கக்கூடும்.</p><h2>இலங்கைக்கு முக்கிய அச்சுறுத்தல்&nbsp;</h2><p> இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் மற்றும் பப்புவா நியூ கினி போன்ற நாடுகளில் வறட்சி அபாயம் குறித்து அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
</p><p>
 எனினும் சராசரிக்கும் அதிகமான மழைவீழ்ச்சி கிடைக்கும் நாடுகளின் பட்டியலில் இலங்கை முக்கிய அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் நாடாக குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e6ebcb69-e56d-415b-bbdb-b33ed740aa62/26-6a96117cdca1a.webp' /></p><p>இந்த மதிப்பீடானது இலங்கையை உயர்ந்த கவலைக்குரிய நாடுகளின் பிரிவில் வைக்கப்பட்டுள்ளது. 

அத்துடன் 2026 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் சராசரிக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பெய்யக்கூடும் என்பதையும் சுட்டிக்காட்டுகிறது.</p><p> 

இலங்கையின் இரண்டாவது இடைப்பருவ காற்று வீசும் காலமான ஒக்டோபர் மாதம் முதல் இந்த ஆபத்து குறிப்பாக முக்கியத்துவம் பெறுவதாக அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர்.
</p><p>
இது பாரம்பரியமாக ஆண்டின் அதிக மழை பெய்யும் காலங்களில் ஒன்றாகும், இதனைத் தொடர்ந்து ஈசான் பருவமழையும் ஆரம்பமாகிறது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-01T00:49:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[சூரியனின் தெற்கு நோக்கிய நகர்வு! வடக்கு கிழக்கில் அதிகரிக்கும் வெப்பம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/today-weather-alert-sri-lanka-1788222498"></link>
            <id>https://ibctamil.com/article/today-weather-alert-sri-lanka-1788222498</id>
            <summary type="text">




சூரியனின் தெற்கு நோக்கிய நகர்வின் காரணமாக இன்று இன்று மதியம் சுமார் 12.10 மணியளவில் நெரியகுளம், பூனாவ, கெப்பித்திகொள்ளாவ பன்குளம் மற்றும் சி...</summary>
            <content type="html"><![CDATA[<p>




சூரியனின் தெற்கு நோக்கிய நகர்வின் காரணமாக இன்று இன்று மதியம் சுமார் 12.10 மணியளவில் நெரியகுளம், பூனாவ, கெப்பித்திகொள்ளாவ பன்குளம் மற்றும் சிங்கபுர போன்ற இடங்களுக்கு மேலாக சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.</p><p>
இதன்போது, கிழக்கு மாகாணத்திலும் அத்துடன் பொலனறுவை, யாழ்ப்பாணம், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் பகல் வேளையில் வெப்பச் சுட்டெண் காரணமாக அதிகரித்த வெப்பநிலையை மனித உடலினால் உணரக்கூடியதாக இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.</p><p>

எனினும், சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என திணைக்களம் தெரிவிக்கிறது.</p><p></p><h2>ஓரளவு பலத்த காற்று</h2><p>
</p><p>
இதேவேளை, வடமேல் மாகாணத்தில் சிறிதளவு மழை பெய்யக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.</p><p>
ஊவா மாகாணத்தின் சில இடங்களிலும் அத்துடன் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களின் சில இடங்களிலும் பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3c69eec9-88db-42f1-aa06-8735226907bc/26-6a961fa3930e0.webp' /></p><p>

நாட்டின் ஏனைய பிராந்தியங்களில் வறட்சியான வானிலை நிலவக்கூடும்.
</p><p>
மத்திய மலைப் பிராந்தியத்தின் மேற்கு சரிவுகளிலும், வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் திருகோணமலை, ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் மணித்தியாலத்திற்கு சுமார் 30 - 40 km வேகத்தில் அடிக்கடி ஓரளவு பலத்த காற்று வீசக் ஓரளவு கூடும்.
</p><p>
இடியுடன் கூடிய மழை பெய்கின்ற வேளைகளில் பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.</p><p>&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-01T00:43:32+00:00</updated>
        </entry>
    </feed>
