<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-08-26T09:29:03+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜப்பானில் வரலாற்றுச் சிறப்புமிக்க ஹிரோசாகி கோட்டையை கயிறு கட்டி இழுத்து நகர்த்திய மக்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/people-who-pulled-hirosaki-castle-with-ropes-japan-1787736443"></link>
            <id>https://canadamirror.com/article/people-who-pulled-hirosaki-castle-with-ropes-japan-1787736443</id>
            <summary type="text">ஜப்பானில் சுமார் 360 டன் எடை கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க ஹிரோசாகி கோட்டையை, சுமார் 1,800 பேர் ஒன்றிணைந்து கயிற்றால் இழுத்து 2 மீட்டருக்கும் அதிகமான ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜப்பானில் சுமார் 360 டன் எடை கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க ஹிரோசாகி கோட்டையை, சுமார் 1,800 பேர் ஒன்றிணைந்து கயிற்றால் இழுத்து 2 மீட்டருக்கும் அதிகமான தூரம் வெற்றிகரமாக நகர்த்திய அரிய நிகழ்வு உலகளவில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><p>கடந்த 2011-ம் ஆண்டு ஜப்பானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால், ஹிரோசாகி கோட்டையின் அடிப்பகுதியில் இருந்த கல் சுவர்கள் பலத்த சேதமடைந்தன. </p><p>இதையடுத்து, அந்தச் சுவர்களைச் சீரமைக்கும் பணிக்காக, கடந்த 2015-ம் ஆண்டு கோட்டையை இடிக்காமல் அப்படியே பாதுகாப்பாக 78 மீட்டர் தூரத்திற்கு தற்காலிகமாக நகர்த்தி வைத்தனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/752891a1-013a-455e-bbf4-cf8347865aae/26-6a8eb17d047ba.webp' /></p><p>தற்போது, கோட்டையின் அடிப்பகுதி கல் சுவர்கள் முழுமையாகச் சீரமைக்கப்பட்டதைத் தொடர்ந்து, கோட்டையை மீண்டும் அதன் பழைய இடத்திற்குக் கொண்டு செல்லும் பணிகள் தொடங்கியுள்ளன.
</p><p>
இதற்காக, பிரம்மாண்டமான கட்டிடங்களை இடிக்காமல் அப்படியே நகர்த்துவதற்குப் பயன்படுத்தப்படும் ஜப்பானின் பாரம்பரிய தொழில்நுட்பமான ‘ஹிக்கியா’ முறை பயன்படுத்தப்பட்டது. </p><p>கோட்டையின் அடிப்பகுதியில் நவீன உருளைகள் மற்றும் தண்டவாளங்கள் போன்ற அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டு, மனித ஆற்றல் மற்றும் இயந்திரங்களின் உதவியுடன் அது நகர்த்தப்பட்டு வருகிறது.</p><p>

கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெற்ற இந்த அரிய நிகழ்வில், உள்ளூர் மக்கள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் என சுமார் 1,800 தன்னார்வலர்கள் பங்கேற்றனர். </p><p>அவர்கள் 80 பேர் கொண்ட குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, 30 மீட்டர் நீளமுள்ள தடிமனான கயிறுகளைப் பிடித்து, பாரம்பரிய உற்சாகக் கோஷங்களுடன் கோட்டையை இழுத்தனர்.</p><p>

இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த கூட்டு முயற்சியில், முதல் நாளில் 1.13 மீட்டரும், இரண்டாம் நாளில் 1.09 மீட்டரும் என மொத்தம் 2.22 மீட்டர் தூரத்திற்கு 360 டன் எடை கொண்ட கோட்டை நகர்த்தப்பட்டது.
</p><p>
ஆகஸ்ட் மாத இறுதிக்குள் சுமார் 4,100 பேர் பங்கேற்புடன் கோட்டையை 5 மீட்டர் வரை நகர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. </p><p>அதன்பின்னர், மீதமுள்ள 73 மீட்டர் தூரத்தை நவீன இயந்திரங்களின் உதவியுடன் நகர்த்தி, இந்த ஆண்டின் இறுதிக்குள் ஹிரோசாகி கோட்டையை மீண்டும் அதன் பழைய இடத்திலேயே முழுமையாக நிலைநிறுத்த திட்டமிடப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-26T09:27:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் உருக்குலைந்த நிலையில் மீட்கப்பட்ட சடலம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/body-found-in-decomposed-state-in-jaffna-1787736417"></link>
            <id>https://tamilwin.com/article/body-found-in-decomposed-state-in-jaffna-1787736417</id>
            <summary type="text">யாழ். புங்குடுதீவு கடற்கரையில் இன்று காலை (26) சடலம் ஒன்று கரையொதுங்கியுள்ளது.
இந்த சடலமானது அடையாளம் காண முடியாத அளவிற்கு உருக்குலைந்து காணப்படுவதாக...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ். புங்குடுதீவு கடற்கரையில் இன்று காலை (26) சடலம் ஒன்று கரையொதுங்கியுள்ளது.
</p><p>இந்த சடலமானது அடையாளம் காண முடியாத அளவிற்கு உருக்குலைந்து காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><h2>மேலதிக விசாரணை</h2><p>
</p><p>கடற்றொழிலுக்கு இன்று காலை சென்றவர்கள் சடலத்தை கண்டு ஊர்காவற்துறை பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e1106239-d226-45fe-a1a6-d494f52d3b5a/26-6a8eb1638ff7d.webp' /></p><p>
</p><p>குறித்த சடலத்தை மீட்டு உடற்கூற்று பரிசோதனைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா
வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு
வருகின்றனர்.</p><p>இதுவரை சடலம் அடையாளம் காணப்படவில்லை என்றும், மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.&nbsp;&nbsp;</p><p>&nbsp;</p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-26T09:27:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்க சிஐஏ இயக்குநர் மாஸ்கோவுக்கு ரகசிய பயணம் ; உற்று நோக்கும் உலக நாடுகள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/us-cia-director-secret-trip-to-moscow-1787736407"></link>
            <id>https://canadamirror.com/article/us-cia-director-secret-trip-to-moscow-1787736407</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;அமெரிக்க உளவு அமைப்பான சிஐஏ-வின் இயக்குநர் ஜான் ராட்க்ளிஃப் (John Ratcliffe), ரஷ்ய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக திடீர் பயணம...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;அமெரிக்க உளவு அமைப்பான சிஐஏ-வின் இயக்குநர் ஜான் ராட்க்ளிஃப் (John Ratcliffe), ரஷ்ய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக திடீர் பயணமாக மாஸ்கோ சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
</p><p>
 இந்த ரகசிய பயணம், ரஷ்யா–உக்ரைன் இடையேயான போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ffa66461-d841-470e-80c7-825cfc4b260c/26-6a8eb158ac48c.webp' /></p><h2>உற்று நோக்கும் உலக நாடுகள்</h2><p>
 
ராட்க்ளிஃப் (John Ratcliffe), மாஸ்கோ செல்வதற்கு முன்பாக, ரஷ்யாவின் மாஸ்கோ உள்ளிட்ட வடக்கு நகரங்கள் மீது ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல்களை தற்காலிகமாக நிறுத்துமாறு உக்ரைனிடம் அமெரிக்கா கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது.</p><p> திங்கள் முதல் புதன்கிழமை வரை இந்த கோரிக்கை அமலில் இருந்ததாகவும், உயர்மட்ட அமெரிக்க அதிகாரி ரஷ்யா செல்ல இருப்பது குறித்து உக்ரைனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
</p><p> 
இதற்கிடையே, அமெரிக்க ராணுவத்தின் போயிங் C-17 விமானம் மாஸ்கோவில் உள்ள வ்னுகோவோ விமான நிலையத்தில் தரையிறங்கியது. அந்த விமானம் அமெரிக்காவின் ஜாயின்ட் பேஸ் ஆண்ட்ரூஸில் இருந்து புறப்பட்டதாக விமான கண்காணிப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
</p><p> 
மேலும், ரஷ்யா–ஈரான் நெருக்கம், ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் புதிய பொருளாதார நடவடிக்கைகள் மற்றும் ரஷ்ய அதிபர் புதின் எதிர்காலத்தில் நேட்டோ நாடுகளுக்கு ஏற்படுத்தக்கூடிய சவால்கள் குறித்தும் இந்த பயணத்தின் பின்னணியில் முக்கியத்துவம் பெறுகின்றன.
</p><p>
கடந்த காலங்களில் அமெரிக்கா–ரஷ்யா கைதிகள் பரிமாற்றத்திலும் சிஐஏ முக்கிய பங்காற்றியுள்ளது. இதனால் ராட்க்ளிஃப்பின் தற்போதைய மாஸ்கோ பயணம் சர்வதேச அளவில் உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது.</p>]]></content>
            <updated>2026-08-26T09:24:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[செல்வச்சந்நிதி ஆலய தேர்த்திருவிழா - பலாலி வீதியில் நடந்துசெல்ல இராணுவம் அனுமதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/army-allows-people-to-walk-on-palali-road-1787735811"></link>
            <id>https://tamilwin.com/article/army-allows-people-to-walk-on-palali-road-1787735811</id>
            <summary type="text">செல்வச்சந்நிதி ஆலய தேர்த்திருவிழா, தீர்த்த உற்சவத்தை முன்னிட்டு பலாலி வீதியில் மக்கள் நடந்து செல்ல இராணுவத்தினர் அனுமதி வழங்கியுள்ளனர். 



இராணுவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>செல்வச்சந்நிதி ஆலய தேர்த்திருவிழா, தீர்த்த உற்சவத்தை முன்னிட்டு பலாலி வீதியில் மக்கள் நடந்து செல்ல இராணுவத்தினர் அனுமதி வழங்கியுள்ளனர். </p><p>



இராணுவ உயர் பாதுகாப்பு வலயத்தின் ஊடாக செல்லும் பலாலி வீதியில், கடந்த வருடம் நடந்து செல்வதற்கோ , வாகனங்களில் தரித்து நிற்பதற்கோ அனுமதி மறுக்கப்பட்டு, நேர கட்டுப்பாட்டுடன் வீதி திறந்து விடப்பட்டது.</p><h2>&nbsp;இராணுவத்தினர் அனுமதி&nbsp;</h2><p>
</p><p>


இந்நிலையில், செல்வச்சந்நிதி ஆலய தேர்த்திருவிழா நாளைய தினமும் (27) தீர்த்த திருவிழா நாளை மறுதினமும் (28) நடைபெறவுள்ள நிலையில்&nbsp; வீதியில் மக்கள் நடந்து செல்ல இராணுவத்தினர் அனுமதி வழங்கியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/43146ab5-5d26-4cd1-8ccc-61c2ace7ec36/26-6a8eaf0556884.webp' />&nbsp;</p><p>ஆலயத்திற்கு செல்லும் காவடிகள், பாத யாத்திரைகளுக்காக குறித்த வீதியூடாக காலை 06 மணி முதல் இரவு 09 மணி வரையில் நடந்து செல்லவும், வீதியில் தரித்து நிற்கவும் இராணுவத்தினர் அனுமதி வழங்கியுள்ளனர்.&nbsp; &nbsp;</p><p></p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-26T09:16:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[இரவோடு இரவாக ரஷ்யா நடத்திய வான்வழித் தாக்குதல்: சீறிப்பாய்ந்த 162 ட்ரோன்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/162-russian-targets-ukraine-major-cities-1787735269"></link>
            <id>https://news.lankasri.com/article/162-russian-targets-ukraine-major-cities-1787735269</id>
            <summary type="text">உக்ரைன் மீது இரவோடு இரவாக ரஷ்யா நடத்திய வான்வழி தாக்குதலை உக்ரைனிய வான் பாதுகாப்பு படை வெற்றிகரமாக இடைமறித்து அழித்துள்ளது. ரஷ்யாவின் வான்வழித் தாக்கு...</summary>
            <content type="html"><![CDATA[<p>உக்ரைன் மீது இரவோடு இரவாக ரஷ்யா நடத்திய வான்வழி தாக்குதலை உக்ரைனிய வான் பாதுகாப்பு படை வெற்றிகரமாக இடைமறித்து அழித்துள்ளது.</p><h2> ரஷ்யாவின் வான்வழித் தாக்குதல்</h2><p>
புதன்கிழமை உக்ரைன் மீது ரஷ்ய படைகள் இரவோடு இரவாக மிகப்பெரிய வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளன.</p><p> கிட்டத்தட்ட 162 ஆளில்லா விமானங்களை உக்ரைனிய விமானப்படை வெற்றிகரமாக இடைமறித்து அழித்து இருப்பதாக அதிகாரப்பூர்வமாக தகவல் தெரிவித்துள்ளனர்.</p><p> பல்வேறு முனைகளில் இருந்து முன்னெடுக்கப்பட்ட இந்த தாக்குதலில் ஆயுதங்கள் மற்றும் திசைதிருப்பும் ஏமாற்று அமைப்புகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/651dd687-eb7c-4a9c-97f4-6957299e3ff0/26-6a8eace695cd1.webp' /></p><p> இந்த தாக்குதல் தொடர்பாக உக்ரைனிய பாதுகாப்பு படை டெலிகிராமில் வெளியிட்ட தகவலில், ரஷ்யா ஷாஹெட் ரக ட்ரோன்கள், கெர்பர் ரக ஏமாற்று ட்ரோன்கள், பரோடி ரக ட்ரோன்கள் ஆகியவை பயன்படுத்தப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளது.</p><p></p><p> மேலும் இந்த வான்வழித் தாக்குதல் ஆயுதங்கள் குர்ஸ்க், ஓரியல், பிரிமோர்ஸ்கோ - அக்தர்ஸ்க், ஹவார்திட்ஸ்கே மற்றும் டொனெட்ஸ்க் ஆகிய பல்வேறு இடங்களில் இருந்து ஏவப்பட்டுள்ளது.</p><p> ரஷ்யா ஏவிய 162 ட்ரோன்களில் 134 ட்ரோன்களை உக்ரைனிய பாதுகாப்பு படை வெற்றிகரமாக இடைமறித்து அழித்து இருப்பதாக உக்ரைன் தரப்பு தெரிவித்துள்ளது.</p><p> இடைமறிப்பு நடவடிக்கையில் இருந்து தப்பிய ட்ரோன்கள் 18 வெவ்வேறு இடங்களில் தாக்குதலை நடத்தியுள்ளன.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்<br></td></tr></tbody></table><p>&nbsp;<br></p>]]></content>
            <updated>2026-08-26T09:08:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[அவசர தரையிறக்கப்பட்ட சுவிஸ் இன்டர்நேஷனல் ஏர் லைன்ஸ் விமானம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/swiss-airlines-flight-makes-emergency-landing-1787735140"></link>
            <id>https://canadamirror.com/article/swiss-airlines-flight-makes-emergency-landing-1787735140</id>
            <summary type="text">சிகாகோவிலிருந்து சூரிச்சிற்குச் சென்று கொண்டிருந்த சுவிஸ் இன்டர்நேஷனல் ஏர் லைன்ஸ் விமானம் ஒன்று அசோரஸில் அவசரமாக தரையிறங்கியுள்ளது.

விமானத்தில் ஏற்...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிகாகோவிலிருந்து சூரிச்சிற்குச் சென்று கொண்டிருந்த சுவிஸ் இன்டர்நேஷனல் ஏர் லைன்ஸ் விமானம் ஒன்று அசோரஸில் அவசரமாக தரையிறங்கியுள்ளது.</p><p>

விமானத்தில் ஏற்பட்ட இரசாயன வாசனையே இதற்குக் காரணம் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9bc64853-f20c-4b07-8a41-dc29d39588c1/26-6a8eac65bd58f.webp' /></p><p>அந்த விமானம் ஒரு போயிங் 777 ரகத்தைச் சேர்ந்தது என்றும், அதில் 222 பயணிகள் மற்றும் 16 பணியாளர்கள் இருந்தனர் என்றும் சுவிஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி (COO) ஆலிவர் புச்ஹோஃபர் சூரிச்சில் ஊடகங்களிடம் தெரிவித்தார். </p><p>

அட்லாண்டிக் பெருங்கடலுக்கு மேலே பறந்துகொண்டிருந்தபோது, ​​விமானக் குழுவினர் ஆபத்துக்கான அழைப்பை விடுத்தனர். </p><p>அதைத் தொடர்ந்து, விமானம் அசோரஸுக்குத் திருப்பி விடப்பட்டது.</p>]]></content>
            <updated>2026-08-26T09:05:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வலி வடக்கு காணி விடுவிப்பு போராடத்தை அரசியல்மயப்படுத்தும் சுமந்திரன்! அமைச்சர் குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/minister-chandrasekaran-accuses-sumanthiran-1787730455"></link>
            <id>https://tamilwin.com/article/minister-chandrasekaran-accuses-sumanthiran-1787730455</id>
            <summary type="text">வலி. வடக்கு மக்களின் காணி விடுவிப்பு தொடர்பில் ஜனாதிபதி உத்தரவிட்டுள்ள நிலையில்,
சுமந்திரன் கொழும்பில் போராட மக்களை அழைப்பது கபடத்தனமான அரசியல் என அம...</summary>
            <content type="html"><![CDATA[<p>வலி. வடக்கு மக்களின் காணி விடுவிப்பு தொடர்பில் ஜனாதிபதி உத்தரவிட்டுள்ள நிலையில்,
சுமந்திரன் கொழும்பில் போராட மக்களை அழைப்பது கபடத்தனமான அரசியல் என அமைச்சர் சந்திரசேகரன் குற்றச்சாட்டியுள்ளார்.</p><p>
நேற்று(25) யாழ் மாவட்ட செயலகத்தில் காணாமல் போனோர்
அலுவலகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற காணாமல் போனோர் சர்வதேச மாநாட்டில் கலந்து
கொண்டு கருத்து தெரிவிக்கும் போது அவர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துளள்ளார்.</p><h2>அரசியல் ரீதியான செயற்பாடு&nbsp;</h2><p>அவர் மேலும் தெரிவிக்கையில், எங்கள் அரசாங்கம் மக்களுக்காக செயற்பட்டுக் கொண்டிருக்கிறது.

இந்த அரசாங்கத்தை குழப்புவதற்கு மக்களை தவறான திசையில் திருப்பி தமது அரசியல்
நிகழ்ச்சிகளை அரங்கேற்றுவதற்கு சிலர் முனைகின்றார்கள்.
</p><p>
அண்மையில் வலி. வடக்கு மக்களுடைய போராட்டத்தில் தமிழரசு கட்சியின் முன்னாள்
நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்&nbsp; கலந்து கொண்டு சில
கருத்துக்களை முன்வைத்ததாக அறிந்தேன்.
</p><p>
அதாவது வலி வடக்கில் நிலத்துக்காக போராடும் மக்களை கொழும்பு
ஜனாதிபதி செயலகம் முன் தொடர் போராட்டம் ஒன்றை மேற்கொள்வதற்காகன அழைப்பை
விடுத்துள்ளார்.'</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cd2aba43-73af-4fba-8d8c-f0200f2bc518/26-6a8ea188e3040.webp' /></p><p>
</p><p>
ஜனாதிபதி கடந்த வாரம் வலி வடக்கு காணிகள் விடுவிப்பு தொடர்பில் சம்பந்தப்பட்ட
தரப்பினர்களுக்கு உத்தரவுகளை வழங்கிய நிலையில் அதை அறிந்த சுமந்திரன்
கொழும்பில் மக்களை போராட அழைத்திருக்கிறார்.
</p><p>
இந்த விடயம் தமது சுயலாப அரசியலுக்காக மேற்கொள்ளும் ஒரு விடயமாக பார்க்கின்ற
நிலையில் தமது போராட்டம் மூலமே ஜனாதிபதி காணியை விடுவித்தார் என்ற வங்குரோத்து அரசியலை மேற்கொள்வதே இவர்களுடைய நிலைப்பாடு.
</p><p>
யார் போராடினாலும் போராடாமல் விட்டாலும் ஜனாதிபதி மற்றும் எமது அரசாங்கம்
மக்களுடைய காணிகளை விடுவிக்கும் என&nbsp; குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-26T09:02:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Tony</name>
            </author>
            <title type="text"><![CDATA[லோகேஷ் கனகராஜ் படத்தின் மீது கடும் அதிருப்தியில் நிவின் பாலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/nivin-pauly-deeply-dissatisfied-with-lokesh-movie-1787728564"></link>
            <id>https://cineulagam.com/article/nivin-pauly-deeply-dissatisfied-with-lokesh-movie-1787728564</id>
            <summary type="text">நிவின் பாலிநிவின் பாலி மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டார். இவருக்கு என தென்னிந்தியா முழுவதிலும் மிகப்பெரிய ரசிகர்கள் வட்டம் உள்ளது. இதற்கு முக்கிய காரணம...</summary>
            <content type="html"><![CDATA[<h2>நிவின் பாலி</h2><p>நிவின் பாலி மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டார். இவருக்கு என தென்னிந்தியா முழுவதிலும் மிகப்பெரிய ரசிகர்கள் வட்டம் உள்ளது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7fbeb01b-d2a7-4fed-81b5-a2b892543844/26-6a8e92b76d169.webp' /></p><p>இதற்கு முக்கிய காரணம் இவர் நடிப்பில் சில வருடங்களுக்கு முன்பு வெளிவந்த பிரேமம் தான். தற்போது இவர் நடிப்பில் சமீபத்தில் வந்த பெத்லஹேம் குடும்ப யூனிட் ரூ. 100 கோடி வசூலை கடந்து செம ஹிட் ஆகியுள்ளது.</p><p></p><h2>அதிருப்தியில் நிவின் பாலி</h2><p> </p><p>

இந்நிலையில் தமிழில் லோகேஷின் LCU யுனிவர்ஸில் உருவாகி வரும் பென்ஸ் படத்தில் வில்லனாக நிவின் பாலி நடித்து வருகிறார். அந்த படத்திற்காக தற்போது வரை நான் தாடி வைத்துள்ளேன்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a64a510d-3690-42e6-af7b-ddd2905fbe29/26-6a8e92b81ee6d.webp' /></p><p>ஆனால், இந்த ஷூட்டிங் எப்போது என்று இன்னும் சொல்லவில்லை, நானும் தாடியை எடுக்க வேண்டும் என நினைக்கிறேன், இந்த படத்தால் எடுக்க முடியவில்லை என நிவின் பாலி நொந்து போய் பேசியுள்ளார்.</p>]]></content>
            <updated>2026-08-26T09:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Erimalai</name>
            </author>
            <title type="text"><![CDATA[வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டத்திற்கு ஜனநாயக போராளிகள் கட்சி ஆதரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/dm-party-backs-disappeared-family-conference-1787728395"></link>
            <id>https://tamilwin.com/article/dm-party-backs-disappeared-family-conference-1787728395</id>
            <summary type="text">வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளால் மேற்கொள்ளப்படுகின்ற மாநாட்டிற்கு
ஜனநாயக போராளிகள் கட்சி பூரண ஆதரவு வழங்கவுள்ளதாக அதன் தலைவர் சி.வேந்தன்
தெரிவித...</summary>
            <content type="html"><![CDATA[<p>வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளால் மேற்கொள்ளப்படுகின்ற மாநாட்டிற்கு
ஜனநாயக போராளிகள் கட்சி பூரண ஆதரவு வழங்கவுள்ளதாக அதன் தலைவர் சி.வேந்தன்
தெரிவித்துள்ளார். </p><p>அவர் இன்று(25.08.2026) வடமராட்சியில் தனது இல்லத்தில் நடாத்திய ஊடாக
சந்திப்பின் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.</p><h2>மாபெரும் போராட்டம்</h2><p>
</p><p>அவர் மேலும் தெரிவிக்கையில், வலிந்து காணாமல் ஆகப்பட்டோர் உறவுகள் சங்கத்தினரால் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தந்தை
செல்வாநாயகம் அரங்கில் மாபெரும் போராட்டம் ஒன்றினை நடாத்துவதற்குரிய
ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.</p><p> வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவு நடாத்துகின்ற அந்தப் போராட்டத்திற்கு ஜனநாயக
போராளிகள் கட்சி பூரண ஆதரவை வழங்குவதாக தீர்மானித்திருக்கிறோம்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8ce2d6c1-3195-4473-b2fb-4ca455459475/26-6a8e9752f335d.webp' /></p><p>யுத்தம் முடிந்து 17 வருடங்கள் கடந்துவிட்டன. ஆனால் பல நூற்றுக்கணக்கான
இளைஞர்கள், யுவதிகள் காணாமல் ஆக்கப்பட்டிருக்கின்றார்கள். </p><p>அதேபோல்
பெற்றோர்களும் தங்களுடைய பிள்ளைகளை இராணுவத்தினரிடம் ஒப்படைத்திருக்கிறார்கள்.
பல பெண்கள் தங்களுடைய கணவர்களை இராணுவத்திடம் ஒப்படைத்திருக்கிறார்கள்.</p><h2>பூரண ஆதரவு&nbsp;</h2><p> இவ்வாறு ஒப்படைக்கப்பட்டவர்களுக்கு, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு
நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காக அந்த உறவுகள் 10 ஆண்டுகளுக்கு மேலாக
பல்வேறுபட்ட போராட்டங்களை நடாத்திக் கொண்டிருக்கின்றார்கள்.
</p><p>வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் எதிர்வரும் 30ஆம் திகதி ஒரு
வித்தியாசமான போராட்டத்தை முன்னெடுக்க உள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4ee9a3ce-537f-44cc-9ea7-f7f2a7eec8ef/26-6a8e975230628.webp' /></p><p>அந்த போராட்டத்தில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும்.
காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டம் இன்று சர்வதேசம் வரை கொண்டு
செல்லப்பட்டிருக்கின்றது. </p><p>அவர்களுக்கு ஒரு நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காக
எல்லோரும் வரவேண்டும். அதே போன்று ஜனநாயக போராளிகள் கட்சி ஆகிய நாங்களும்
அவர்களுக்கு பூரண ஆதரவு வழங்க இருக்கிறோம் என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-26T08:59:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[பரந்தூரில் நிலத்தை விவசாயிகளிடம் ஒப்படைக்க வேண்டும் - CPIM சண்முகம் கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/cpim-shanmugam-request-govt-return-parandur-land-1787734278"></link>
            <id>https://ibctamilnadu.com/article/cpim-shanmugam-request-govt-return-parandur-land-1787734278</id>
            <summary type="text">cpim shanmugam request govt to return land in parandur: பரந்தூரில் கையகப்படுத்தப்பட்ட நிலத்தை விவசாயிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என CPIM தலைவர் பெ.சண்மு...</summary>
            <content type="html"><![CDATA[<p>cpim shanmugam request govt to return land in parandur: பரந்தூரில் கையகப்படுத்தப்பட்ட நிலத்தை விவசாயிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என CPIM தலைவர் பெ.சண்முகம் தெரிவித்துள்ளார்.
</p><h3>
பரந்தூரில் கையகப்படுத்தப்பட்ட நிலம்</h3><p> 

பரந்தூரில் விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை கைவிடுவதாக தமிழ்நாடு சட்டமன்றத்தில் முதல்வர் விஜய் நேற்று அறிவித்தார். </p><p>

இந்த திட்டத்திற்காக குறிப்பிட்டளவிலான நிலங்கள் ஏற்கனவே கையகப்படுத்தப்பட்டுள்ள நிலையில், கையகப்படுத்தப்பட்ட நிலத்தை என்ன செய்யப்போகிறீர்கள் என சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/acc08156-20f6-4b2f-89bd-7bbf1e8c803d/26-6a8ea9074a134.webp' /></p><p>

இதற்கு பதிலளித்த தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா, "கையப்படுத்தப்பட்ட நிலங்களில் மக்களை பாதிக்காதவாறு மாற்று திட்டங்கள் செயல்படுத்தப்படும். இதன்மூலம், தொழில் வளர்ச்சி, வேலைவாய்ப்பு பொருளாதார வளர்ச்சி இந்தப் பகுதியில் ஏற்படும். </p><p>

திட்டம் குறிப்பிட்ட காரணங்களால் செயல்படுத்தப்படவில்லை எனில் அந்த நிலத்தை மற்ற பொதுத்திட்டங்களுக்கு அரசு ஒதுக்கீடு செய்ய சட்டத்தில் வழிவகை உள்ளது" என தெரிவித்தார்.</p><h3> 

விவசாயிகளிடம் நிலத்தை ஒப்படைக்க வேண்டும்</h3><p>

அரசின் இந்த முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் விவசாயிகளிடம் நிலத்தை ஒப்படைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cefd6ded-7bc7-4253-9592-7dab792203aa/26-6a8ea9080195b.webp' /></p><p> 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், "பரந்தூர் விமான நிலையத்திற்காகக் கையகப்படுத்தப்பட்ட நிலங்களை அரசு என்ன செய்யப் போகிறது என்று சட்டமன்ற உறுப்பினர்கள் இன்று கேள்வி எழுப்பியுள்ளனர். அதற்குப் பதிலளித்த தொழில்துறை அமைச்சர், மாற்றுத் தொழில் திட்டங்களுக்குப் பயன்படுத்தப் போகிறோம் என்று பதிலளித்துள்ளார்.
</p><p>
நிலம் கையகப்படுத்துதல், மறுவாழ்வு மற்றும் மறு குடியேற்ற சட்டம் 2013-ன் அடிப்படையில், குறிப்பிட்ட திட்டத்திற்காகக் கையகப்படுத்தப்பட்ட நிலம் 5 ஆண்டுகளுக்குள் பயன்படுத்தப்படவில்லை என்றாலோ அல்லது அந்தத் திட்டம் கைவிடப்பட்டாலோ, நிலத்தைச் சம்பந்தப்பட்ட விவசாயிகளிடமே மீண்டும் ஒப்படைக்க வேண்டும். வேறு ஒரு திட்டத்திற்கு மாற்ற முடியாது.&nbsp;&nbsp;</p><p><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">பரந்தூர் விமான நிலையத்திற்காகக் கையகப்படுத்தப்பட்ட நிலங்களை அரசு என்ன செய்யப் போகிறது என்று சட்டமன்ற உறுப்பினர்கள் இன்று கேள்வி எழுப்பியுள்ளனர். அதற்குப் பதிலளித்த தொழில்துறை அமைச்சர், மாற்றுத் தொழில் திட்டங்களுக்குப் பயன்படுத்தப் போகிறோம் என்று பதிலளித்துள்ளார்.<br><br>நிலம்… <a href="https://t.co/qVX7Psqg9l">pic.twitter.com/qVX7Psqg9l</a></p>&mdash; Shanmugam P (@Shanmugamcpim) <a href="https://x.com/Shanmugamcpim/status/2092462041038721199?ref_src=twsrc%5Etfw">August 26, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>எனவே, சட்டத்திற்கு விரோதமாகத் தமிழக அரசு நடந்துகொள்ளக் கூடாது.

விவசாயிகளிடம் நிலத்தை ஒப்படைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்" என தெரிவித்துள்ளார்.</p><p> 

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அமைச்சர் ராஜ்மோகன், "பரந்தூர் விமான நிலையத்திற்காக நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு அந்த நிலத்தை மீண்டும் வழங்குவது தொடர்பாக சட்ட வல்லுநர்களுடன் கலந்து ஆலோசிக்க வேண்டியுள்ளது.</p><p> 

அந்த நிலத்தில் மீண்டும் விவசாயம் செய்ய முடியுமா என்பது குறித்து சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்த பிறகே முடிவு எடுக்க முடியும். ஆலோசனைக்குப் பிறகு, விவசாயிகளுக்கு சாதகமாக முடிவு எடுக்கப்படும். என கூறினார்.</p>]]></content>
            <updated>2026-08-26T08:51:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[மர்மமான முறையில் உயிரிழந்த மயக்கவியல் வைத்திய நிபுணர்! பிரேதப்பரிசோதனையில் வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/badulla-hospital-anesthesiologist-dies-1787731533"></link>
            <id>https://tamilwin.com/article/badulla-hospital-anesthesiologist-dies-1787731533</id>
            <summary type="text">காணாமல்போன நிலையில் சடலமாக மீட்கப்பட்டிருந்த பதுளை போதனா வைத்தியசாலையில் மயக்கவியல் வைத்திய நிபுணரின் மரணம் தொடர்பில் கண்டறிய மேலதிக பரிசோதனைக்காக உடல...</summary>
            <content type="html"><![CDATA[<p>காணாமல்போன நிலையில் சடலமாக மீட்கப்பட்டிருந்த பதுளை போதனா வைத்தியசாலையில் மயக்கவியல் வைத்திய நிபுணரின் மரணம் தொடர்பில் கண்டறிய மேலதிக பரிசோதனைக்காக உடல் பாகங்களை அரசாங்க ஆய்வாளரிடம் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளதாக பொலிஸ் தெரிவித்துள்ளது.</p><p>

மஹியங்கனை ஆதார வைத்தியசாலையின் சிறப்பு நீதித்துறை வைத்தியஅதிகாரி ஜே.எஸ்.டி. பீரிஸ் பிரேதப் பரிசோதனையை நடத்தியதாகவும், பின்னர் மரணம் குறித்து திறந்த தீர்ப்பை வழங்கி, மேலதிக பரிசோதனைக்காக உடல் பாகங்களை அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.</p><h2>வைத்திய அறிக்கைகளை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு உத்தரவு</h2><p>
</p><p>
சிறப்பு மயக்கவியல் வைத்திய நிபுணரான பிரபாத் அனுராத தயரத்ன என்பவரே (24) சடலமாக கண்டெடுக்கப்பட்ட நிலையில், மஹியங்கனை வனப்பகுதியில் சுமார் 800 மீட்டர் தொலைவில் பாறையில் சடலமாக மீட்கப்பட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/62fa39a7-c0d8-4f10-aa02-33848ae560fb/26-6a8ea79fdcc5c.webp' /></p><p>
</p><p>
இதனையடுத்து மஹியங்கனை வைத்தியசாலையின் நீதித்துறை வைத்திய அதிகாரி மூலம் இறந்தவரின் உடலுக்கு பிரேத பரிசோதனை நடத்தி, வைத்திய அறிக்கைகளை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.</p><p> 

மேலும் அவரது மரணம் குறித்து திறந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதுடன், மேலதிக பரிசோதனைக்காக உடல் பாகங்களை அரசாங்க பகுப்பாய்வாளரிடம் அனுப்புமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.</p><h2>மயானத்தில் நல்லடக்கம்&nbsp;</h2><p>
</p><p>
கினிகத்தேனை பகுதியை சேர்ந்த மயக்கவியல் நிபுணர், மாத்தளையில் வசித்து வந்துள்ளதுடன், பணியில் இருந்த போது , தனது உத்தியோகபூர்வ இல்லத்தில் தங்கியிருந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e6b76e92-2409-4fb1-a0e3-1a9f4a26bfcf/26-6a8ea7a090d80.webp' /></p><p> 

இந்த வைத்தியருக்கு இரண்டு சகோதரிகள் உள்ளனர் என்றும், அவர்களில் ஒருவர் வைத்தியர் என்றும், மற்றொருவர் பிரதேச செயலகத்தில் பணிபுரிவதாகவும் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். </p><p>

இந்நிலையில், மயக்கவியல் நிபுணரின் உடல் நேற்று (25) பதுளை தனியார் மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-26T08:49:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை பாடகர் சரிகமப புகழ் சபேஷனின் திருமணம்... இணையத்தில் வைரலாகும் காணொளி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/saregamapa-sabesan-got-married-video-goes-viral-1787730764"></link>
            <id>https://manithan.com/article/saregamapa-sabesan-got-married-video-goes-viral-1787730764</id>
            <summary type="text">தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற இசை நிகழ்ச்சிகளில் ஒன்றாக Saregamapa தமிழ் நிகழ்ச்சி இருந்து வருகிறது. இந்த நிகழ்ச்சியின் மூலம் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற இசை நிகழ்ச்சிகளில் ஒன்றாக Saregamapa தமிழ் நிகழ்ச்சி இருந்து வருகிறது. இந்த நிகழ்ச்சியின் மூலம் ஏராளமான திறமையான பாடகர்கள் ரசிகர்களுக்கு அறிமுகமாகியுள்ளனர். </p><p>நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக பங்கேற்ற பலரும், தற்போது பல்வேறு இசை நிகழ்ச்சிகள் மற்றும் கச்சேரிகளில் பாடி, தங்களுக்கென தனி ரசிகர் பட்டாளத்தையும் உருவாக்கி வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/786586de-3308-4c3c-8667-ae1c288e71dc/26-6a8ea178a2304.webp' /></p><p></p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">சரிகமப சபேஷன்</span></p><p>அந்த வகையில், இலங்கையைச் சேர்ந்த சபேஷன் Saregamapa தமிழ் சீனியர் சீசனில் போட்டியாளராகக் கலந்துகொண்டு ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தவர்.
</p><p>
தனது இனிமையான குரல், பாடல்களை உணர்வுப்பூர்வமாக வெளிப்படுத்தும் விதம் மற்றும் மேடைப் பாடலில் காட்டிய திறமை ஆகியவற்றின் மூலம் நிகழ்ச்சியின் ஆரம்பம் முதலே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d880300b-5c30-4a2b-abf1-5ae649639b84/26-6a8ea1795683d.webp' /></p><p>குறிப்பாக, ஒவ்வொரு சுற்றிலும் தனது திறமையை நிரூபித்து வந்த சபேஷன், நிகழ்ச்சியின் இறுதிச்சுற்று வரை முன்னேறி ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களின் மனதையும் கவர்ந்தார்.
</p><p>
Saregamapa நிகழ்ச்சிக்குப் பிறகும் சபேஷனுக்கு ரசிகர்களின் ஆதரவு தொடர்ந்து வருகிறது. அவருக்கென தனி ரசிகர் கூட்டமும் உருவாகியுள்ளது. </p><p>இசைத்துறையில் தொடர்ந்து பயணித்து வரும் அவர், பல்வேறு இசை நிகழ்ச்சிகள் மற்றும் கச்சேரிகளிலும் தனது பாடல் திறமையை வெளிப்படுத்தி வருகிறார்.</p><p></p><h2>

திருமணம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7e438eef-350d-4ff8-ad81-1713437a9504/26-6a8ea17a117fa.webp' /></p><h2>
</h2><p>இந்நிலையில், சபேஷனின் வாழ்க்கையில் தற்போது ஒரு முக்கியமான புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளது. நீண்ட வருடங்களாக காதலித்து வந்த தனது காதலியை சபேஷன் சமீபத்தில் திருமணம் செய்துகொண்டுள்ளார்.
</p><p>
அவரது திருமண புகைப்படங்கள்&nbsp; மற்றும் காணொளி தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி, ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருவதுடன் வாழ்த்துக்களையும் குவித்து வருகின்றது.&nbsp;</p><p><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/reel/Dcco8O1SVvj/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/reel/Dcco8O1SVvj/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/reel/Dcco8O1SVvj/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by Royal Beauty Care (@royalbeautycare8)</a></p></div></blockquote> <script async src="//www.instagram.com/embed.js"></script></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW&nbsp;</a></u></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-26T08:49:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆகஸ்ட் 28 பிளட் மூன் சந்திர கிரகணம்; ஜோதிட வல்லுநர்கள் கூறுவது என்ன!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/blood-moon-lunar-eclipse-august-28-raksha-bhandan-1787733756"></link>
            <id>https://jvpnews.com/article/blood-moon-lunar-eclipse-august-28-raksha-bhandan-1787733756</id>
            <summary type="text">&amp;nbsp; 2026-ஆம் ஆண்டின் முக்கிய விண்வெளி நிகழ்வுகளில் ஒன்றான ஆழ்ந்த பகுதி சந்திர கிரகணம் (Deep Partial Lunar Eclipse) ஆகஸ்ட் 28-ஆம் திகதி வெள்ளிக்கிழம...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; 2026-ஆம் ஆண்டின் முக்கிய விண்வெளி நிகழ்வுகளில் ஒன்றான ஆழ்ந்த பகுதி சந்திர கிரகணம் (Deep Partial Lunar Eclipse) ஆகஸ்ட் 28-ஆம் திகதி வெள்ளிக்கிழமை நிகழவுள்ளது.</p><p> 

இது நிலவின் 96 சதவீதத்திற்கும் அதிகமான பரப்பைப் பூமியின் அடர்ந்த நிழல் மூடுவதால், இந்நிகழ்வின் போது நிலவு சிவப்பு மற்றும் செம்பு நிறத்தில் தோன்றி ‘இரத்த நிலவு’ (Blood Moon) காட்சி அளிக்கும் என விண்வெளி ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fdb522de-f11c-4a05-a779-49c1e7baf1fb/26-6a8ea6fe710a9.webp' /></p><h2>இந்தியாவிலிருந்து நேரடியாகக் காண முடியாது&nbsp;</h2><p>
</p><p>

இந்திய நேரப்படி (IST) ஆகஸ்ட் 28 காலை 6:53 மணிக்குத் தொடங்கி பிற்பகல் 12:32 மணி வரை இந்த கிரகண நிகழ்வு தொடரும்.

 குறிப்பாகக் காலை 9:43 மணி அளவில் கிரகணம் அதன் உச்சக்கட்டத்தை எட்டும் என நாசா தரவுகள் தெரிவிக்கின்றன.</p><p></p><p> இருப்பினும், இந்தியாவில் இந்த நேரத்தில் பகல் பொழுதாக இருப்பதோடு நிலவு அடிவானத்திற்கு கீழே சென்றுவிடும் என்பதால், இந்தியாவிலிருந்து இதை நேரடியாகக் காண முடியாது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cfc12804-c608-4c24-b525-5db439448c03/26-6a8ea6ff28fd5.webp' /></p><p>

இந்தச் சந்திர கிரகணம் வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்காவின் பல பகுதிகளில் மிகத் தெளிவாகக் காட்சி அளிக்கும்.</p><p>

 இந்தியாவில் உள்ள விண்வெளி ஆர்வலர்கள் நாசா மற்றும் சர்வதேச வானியல் அமைப்புகள் நடத்தும் இணைய நேரலைகள் (Live Streaming) மூலம் இந்த அரிய ‘பிளட் மூன்’ நிகழ்வைக் கண்டு களிக்கலாம்.</p><p></p><p>
</p><p>
மேலும், ஆகஸ்ட் 28-ஆம் தேதி ரக்ஷா பந்தன் பண்டிகையுடன் இந்தச் சந்திர கிரகணம் இணைந்து வருவதால் பலருக்கும் ஆன்மீக சந்தேகங்கள் எழுந்துள்ளன.</p><p> 

ஆனால், இந்த கிரகணம் இந்தியாவில் தென்படாது என்பதால், பாரம்பரிய சாஸ்திர விதிகளின்படி ‘சுதக் காலம்’ (Sutak Kaal) இந்தியாவில் பொருந்தாது என்றும் ஜோதிட வல்லுநர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-08-26T08:47:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இடம்மாறும் முதலமைச்சர் விஜயின் ஆஸ்தான ஜோதிடர் ரத்தன் பண்டிட் !]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/cm-vijay-astrologer-radhan-pandit-exit-tamilnadu-1787732267"></link>
            <id>https://jvpnews.com/article/cm-vijay-astrologer-radhan-pandit-exit-tamilnadu-1787732267</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp;தமிழக அரசியல் களத்திலும் திரையுலகிலும் முன்னணி ஜோதிடராக அறியப்படும் ரத்தன் பண்டிட் (Rickey Radhan Pandit Vettrivel), இனி தான் தமிழ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp; &nbsp;தமிழக அரசியல் களத்திலும் திரையுலகிலும் முன்னணி ஜோதிடராக அறியப்படும் ரத்தன் பண்டிட் (Rickey Radhan Pandit Vettrivel), இனி தான் தமிழ்நாட்டிற்கே வரப் போவதில்லை என்றும் தெலங்கானா மற்றும் பிற மாநிலங்களின் அரசியல் பணிகளில் கவனம் செலுத்தப் போவதாகவும் தெரிவித்துள்ள கருத்துக்கள் பேசுபொருளாகியுள்ளது. </p><p>

2026 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) தலைவர் சி. ஜோசப் விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, ரத்தன் பண்டிட்டுக்கு ‘முதலமைச்சரின் சிறப்புப் பிரிவு அதிகாரி’ (OSD – Political) என்ற அரசாங்கப் பதவி வழங்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/57befc3e-cd09-4814-9669-d2e62643df30/26-6a8ea12cbd293.webp' /></p><h2>தன் மீது வைக்கப்பட்ட தேவையற்ற விமர்சனங்கள்&nbsp;</h2><p>சுற்றுலாத் தலங்களை ஆராய்தல்

இருப்பினும், ஒரு மதச்சார்பற்ற ஆட்சியில் அரசாங்க நிர்வாகப் பதவிக்கு ஜோதிடரை நியமிப்பது அறிவியல் பூர்வமான அணுகுமுறை அல்ல என எதிர்க்கட்சிகள் மற்றும் தவெகவின் கூட்டணித் தோழமை அமைப்புகள் கடும் எதிர்ப்புகளைப் பதிவு செய்தன.</p><p></p><p> </p><p>

சட்டப்பேரவையிலும் பொதுவெளியிலும் எழுந்த இந்த விமர்சனங்கள் முதலமைச்சர் விஜய் தரப்பிற்குப் பெரும் அரசியல் அழுத்தத்தை உருவாக்கியதால், நியமிக்கப்பட்ட அடுத்த சில தினங்களிலேயே அந்தப் பதவி நியமன அரசாணைத் திரும்பப் பெறப்பட்டது.
</p><p>
அரசுப் பதவி ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து வெளிநாட்டிற்குச் சென்ற ரத்தன் பண்டிட், அண்மையில் வெளியிட்ட வீடியோ நேர்காணலில் தனது அதிருப்தியைப் வெளிப்படுத்தியுள்ளார்.</p><p></p><p>

 அதில், “தான் 2026 தேர்தலில் ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் தோல்வியடைவார் என்றும், பல அரசியல் மாற்றங்கள் நிகழும் என்றும் முன்கூட்டியே சரியாகக் கணித்ததாக” உரிமை கோரியுள்ளார். </p><p>மேலும், பிற மாநிலங்களின் முதலமைச்சர்களும் வெளிநாட்டுப் பிரதமர்களும் தனது ஆலோசனைகளைக் கேட்கும் போது, தமிழகத்தில் இத்தகைய தேவையற்ற சர்ச்சைகள் உருவாக்கப்பட்டது தனக்கு வேதனையளிப்பதாகக் கூறியுள்ளார்.</p><p></p><p>
</p><p>
தன் மீது வைக்கப்பட்ட தேவையற்ற விமர்சனங்கள் மற்றும் பதவி விலகல் சர்ச்சை காரணமாகவே தான் தமிழ்நாட்டுப் பக்கமே வரப்போவதில்லை என்ற முடிவை எடுத்துள்ளதாக ரத்தன் பண்டிட் விளக்கியுள்ளார்.</p><p> 

இந்த விவகாரம் தவெக அரசு அமைந்த தொடக்கக் காலத்திலேயே பெரிய அரசியல் பேசுபொருளாக மாறியிருந்த நிலையில், ரத்தன் பண்டிட்டின் இந்தத் திடீர் முடிவு இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-26T08:46:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[எயர் அரேபியா விமானச் சக்கரத்தில் இருந்த சடலம் ; விசாரணையில் வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/body-found-in-airplane-wheel-inquest-underway-1787730612"></link>
            <id>https://canadamirror.com/article/body-found-in-airplane-wheel-inquest-underway-1787730612</id>
            <summary type="text">லண்டன் கேட்விக் (Gatwick) விமான நிலையத்தை வந்தடைந்த விமானம் ஒன்றின் சக்கரப் பகுதியில் அடையாளம் தெரியாத நபர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொ...</summary>
            <content type="html"><![CDATA[<p>லண்டன் கேட்விக் (Gatwick) விமான நிலையத்தை வந்தடைந்த விமானம் ஒன்றின் சக்கரப் பகுதியில் அடையாளம் தெரியாத நபர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பான மரண விசாரணை தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகிறது.</p><p>

கடந்த ஜூன் 16ஆம் திகதி மொராக்கோவின் டான்ஜியர் (Tangier) நகரிலிருந்து கேட்விக் விமான நிலையத்தை வந்தடைந்த ‘எயர் அரேபியா’ (Air Arabia) விமானத்தின் லேண்டிங் கியர் பகுதியில் குறித்த நபரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/033bd060-586d-4a56-8ce5-11f954c3e2e9/26-6a8e9ab5bd5d2.webp' /></p><p>விமானத்தை பரிசோதித்துக் கொண்டிருந்த தரைக்கட்டுப்பாட்டு பொறியாளர் ஒருவர் சடலத்தை கண்டுபிடித்ததையடுத்து, குறித்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருந்தமை உறுதிப்படுத்தப்பட்டது.</p><p>

இந்நிலையில், ஹார்ஷாம் (Horsham) மரண விசாரணை நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை குறித்த மரணம் தொடர்பான விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.</p><p>

அப்பகுதியின் மரண விசாரணை அதிகாரி ஜோசப் டர்னர் (Joseph Turner) முன்னிலையில் இடம்பெற்ற விசாரணையில், பிரேதப் பரிசோதனை அறிக்கை தொடர்பான தகவல்கள் முன்வைக்கப்பட்டன.
</p><p>
அதன்படி, ஹைபோக்சியா (Hypoxia – உடலுக்கு போதியளவு ஒட்சிசன் கிடைக்காத நிலை), ஹைபோதெர்மியா (Hypothermia – உடல் வெப்பநிலை கடுமையாகக் குறைதல்) மற்றும் மாரடைப்பு ஆகியவை மரணத்திற்கான முக்கிய காரணிகளாக இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
விமானத்தின் சக்கரப் பகுதி பயணத்தின் போது கடுமையான குளிர் மற்றும் குறைந்தளவிலான ஒட்சிசன் கொண்ட சூழலாக இருந்திருக்கலாம் என மரண விசாரணை அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
மேலும், குறித்த மரணம் இயற்கையான முறையில் ஏற்பட்டதாகக் கருத முடியாததற்கான போதுமான காரணங்கள் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-26T08:40:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழ்நாட்டில் அதிகரிக்கும் பன்றிக்காய்ச்சல் - சுகாதாரத்துறை எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/swine-flu-rises-in-tamilnadu-what-are-the-symptoms-1787730965"></link>
            <id>https://news.lankasri.com/article/swine-flu-rises-in-tamilnadu-what-are-the-symptoms-1787730965</id>
            <summary type="text">Swine flu rises in tamilnadu: தமிழ்நாட்டில் பன்றிக்காய்ச்சல் அதிகரித்து வருவதாகவும், அறிகுறிகள் தென்பட்டால் மருத்துவமனை சென்று பரிசோதனை செய்யுமாறு சுக...</summary>
            <content type="html"><![CDATA[<p>Swine flu rises in tamilnadu: தமிழ்நாட்டில் பன்றிக்காய்ச்சல் அதிகரித்து வருவதாகவும், அறிகுறிகள் தென்பட்டால் மருத்துவமனை சென்று பரிசோதனை செய்யுமாறு சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. </p><h3>

தமிழ்நாட்டில் அதிகரிக்கும் பன்றிக்காய்ச்சல்
</h3><p>
இந்தியாவில் டெல்லி, ராஜஸ்தான் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பன்றிக்காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.</p><p> 

டெல்லியில் 2,000க்கும் அதிகமானோர் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், டெல்லி முதல்வர் ரேகா குப்தா அவசர ஆலோசனை நடத்தியுள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2af8d60c-69e7-4e6b-9965-4e187157d845/26-6a8e9c16b0431.webp' /></p><p>

தற்போது தமிழ்நாட்டிலும் பன்றிக்காய்ச்சல் வேகமாக பரவி வருவதாக சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. </p><p>

ஜனவரி மாதத்தில் தமிழ்நாட்டில் 19 பேருக்கு மட்டுமே இருந்த பன்றிக்காய்ச்சல் பாதிப்பு, தற்போது அந்த எண்ணிக்கை 339 ஆக அதிகரித்துள்ளது.&nbsp;</p><p></p><p>

பன்றிக்காய்ச்சல் அறிகுறிகளான காய்ச்சல், தொடர் சளி, இருமல், தொண்டை வலி, உடல் சோர்வு, கடுமையான தலைவலி, மூட்டு வலி, குளிர் நடுக்கம், மூச்சுத் திணறல், சுவாசிப்பதில் சிரமம் ஆகிய பாதிப்புகள் இருந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்யுமாறு சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.</p><p> 

மருந்தகங்களிலும் தானாகச் சென்று மருந்துகளை வாங்கி உட்செலுத்தும் சுய மருத்துவத்தைத் (Self-medication) கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும் எனவும், உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றுவதன் மூலம் கட்டுப்படுத்தலாம் என சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.&nbsp;&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-26T08:35:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சமூக வலைத்தளங்களில் ஆபாசம்; பிரபல நடிகைக்கு பொலிஸார் வலைவீச்சு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/obscenity-on-social-media-actress-dharsha-gupta-1787724309"></link>
            <id>https://jvpnews.com/article/obscenity-on-social-media-actress-dharsha-gupta-1787724309</id>
            <summary type="text">&amp;nbsp; சமூக வலைத்தாளங்களில் ஆபாச பேசியமை தொடர்பில் நடிகை தர்ஷா குப்தாவை கைது செய்ய பொலிஸார் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றதாக இந்திய ஊடகங்க்கள...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; சமூக வலைத்தாளங்களில் ஆபாச பேசியமை தொடர்பில் நடிகை தர்ஷா குப்தாவை கைது செய்ய பொலிஸார் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றதாக இந்திய ஊடகங்க்கள் தெரிவித்துள்ளன.
</p><p>
சமூக வலைத்தளங்களில் ஆபாசமாக பேசுதல் போன்ற பதிவுகளை வெளியிட்ட திருச்சி சாதனா, நடிகை தர்ஷா குப்தா உள்பட 12 பேர் மீது பொலிஸார் வழக்கு பதிவுசெய்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8b39bea3-5b5a-4a14-b53f-72119e5c5430/26-6a8e8217ecf35.webp' /></p><p> </p><h2>&nbsp;திருச்சி சாதனா, நடிகை தர்ஷா குப்தா உள்பட 12 பேர் மீது வழக்கு</h2><p>

மேலும் அவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் பொலிஸார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். 

சேலத்தை சேர்ந்த சட்டத்தரணி அஜித் என்பவர், மாநகர சைபர் கிரைம் பொலிஸில் புகார் மனு ஒன்றை அளித்தார்.</p><p></p><p> </p><p>

அதில் இன்ஸ்டாகிராம், யூடியூப் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் சிலர், 18 வயதுக்கும் கீழ் உள்ள இளம் வயதுடையவர்களுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் ஆபாசமாக பேசுதல் உள்ளிட்டவைகளை பதிவிட்டு வெளியிடுகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6d4f95e5-14bf-4492-b1c8-c30003582c3c/26-6a8e82173f69a.webp' /></p><p> 

குறிப்பாக திருச்சி சாதனா, நடிகை தர்ஷா குப்தா உள்பட 12 பெண்கள் சமூக வலைத்தளங்களில் நேரடியாக வந்து ஆபாசத்தை தூண்டும் வகையில் பேசுகின்றனர். 

அவர்கள் பல லட்சம் ரூபாய் வரை சம்பாதிக்கின்றனர்.</p><p> இவர்களின் நடவடிக்கையால் இளைஞர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். 

எனவே சமூக வலைத்தளங்களில் ஆபாசமாக பேசுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.</p><p></p><p> </p><p>அதன்பேரில் பொலிஸ் இன்ஸ்பெக்டர் மெட்டில்டா ஜோசி தலைமையிலான பொலிஸார் விசாரணை நடத்தினர். </p><p>

இதையடுத்து சமூக வலைத்தளங்களில் ஆபாசமாக பேசுதல் போன்ற பதிவுகளை வெளியிட்ட திருச்சி சாதனா, நடிகை தர்ஷா குப்தா உள்பட 12 பேர் மீது பொலிஸார் வழக்கு பதிவுசெய்தனர். 

மேலும் அவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் பொலிஸார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-26T08:30:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[கர்ப்பமாக இருந்தபோது தனது மனைவியுடன் நடிகர் கவின் எடுத்த அழகிய போட்டோ ஷுட்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/kavin-monica-maternity-photoshoot-1787728048"></link>
            <id>https://cineulagam.com/article/kavin-monica-maternity-photoshoot-1787728048</id>
            <summary type="text">நடிகர் கவின்தமிழ் சினிமாவில் வலம் வரும் இளம் நடிகர்களில் ஒருவர் தான் கவின். இவரது நடிப்பில் இன்னும் சில தினங்களில் ஹாய் என்ற படம் வெளியாகவுள்ளது.முதன்...</summary>
            <content type="html"><![CDATA[<h2>நடிகர் கவின்</h2><p>தமிழ் சினிமாவில் வலம் வரும் இளம் நடிகர்களில் ஒருவர் தான் கவின். இவரது நடிப்பில் இன்னும் சில தினங்களில் ஹாய் என்ற படம் வெளியாகவுள்ளது.</p><p>முதன்முறையாக கவின், நயன்தாராவுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ள இப்படத்திற்கான புரொமோஷன் அமோகமாக நடந்துள்ளது.&nbsp;</p><p>இந்த நிலையில் நடிகர் கவினுக்கு சமீபத்தில் இரட்டை குழந்தைகள் பிறந்தது நமக்கு தெரியும். தற்போது கவின் தனது மனைவி கர்ப்பமாக இருந்த போது எடுக்கப்பட்ட போட்டோ ஷுட் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.</p><p>இதோ அந்த போட்டோஸ்,</p><p><br></p>]]></content>
            <updated>2026-08-26T08:30:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஃபைனலுக்கு முன்பே கசிந்த குக் வித் கோமாளில் 7-ன் டைட்டில் வின்னர் ரிசல்ட்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/cook-with-comali-season-7-winner-leaked-1787732944"></link>
            <id>https://viduppu.com/article/cook-with-comali-season-7-winner-leaked-1787732944</id>
            <summary type="text">குக் வித் கோமாளி சீசன் 7விஜய் தொலைக்காட்சியில் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றுதான் குக் வித் கோமாளி. கடந்த ஏப்ரல் 4 ஆம் தேதி குக் வித் கோமாளி சீசன் 7 தொ...</summary>
            <content type="html"><![CDATA[<h2>குக் வித் கோமாளி சீசன் 7</h2><p>விஜய் தொலைக்காட்சியில் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றுதான் குக் வித் கோமாளி. கடந்த ஏப்ரல் 4 ஆம் தேதி குக் வித் கோமாளி சீசன் 7 தொடங்கப்பட்டு வரும் ஞாயிற்றுக்கிழமை கிராண்ட் ஃபினாலே ஒளிபரப்பாகவுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/940e94ec-fc05-4820-b9e0-637870cd4342/26-6a8ea3d282a20.webp' /></p><p> செஃப் தாமு, மாதம்பட்டி ரங்கராஜ், செஃப் கெளஷிக், நடிகை ரோஜா போன்றவர்கள் நடுவர்களாக இருக்க, ரக்ஷன், மாகாபா ஆன்ந்த், ஷாலின் சோயா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்கள்.</p><p> இறுதி போட்டிக்கு சம்யுக்தா &amp; அனிருதா ஸ்ரீகாந்த், சித்து &amp; ஸ்ரேயா அஞ்சன், ஷபானா மற்றும் உமர் ஆகியோர் தேர்வாகினர்.</p><h2>டைட்டில் வின்னர்</h2><p> இந்நிலையில் குக் வித் கோமாளி சீசன் 7-ன் டைட்டில் வின்னார் யார் என்ற தகவல் கசிந்துள்ளது.

குக் வித் கோமாளி 7 பட்டத்தை சம்யுக்தா - அனிருதா ஸ்ரீகாந்த் ஜோடி தட்டிச்சென்றுள்ளதாம். கடுமையான போட்டியை கொடுத்த சபானா ரன்னர் அப் இடத்தையும் பிடித்திருக்கிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f04b5abc-f04c-4e55-a927-a9de05db43a2/26-6a8ea3d332cf0.webp' /></p>]]></content>
            <updated>2026-08-26T08:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[டிரம்ப் மகன் உயிருக்கு ரூ.95 கோடி பரிசு ; ஈரான் தொடர்புடைய ஊடகம் வெளியிட்ட வீடியோ]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/trump-son-life-reward-95-crore-iranian-media-video-1787732881"></link>
            <id>https://canadamirror.com/article/trump-son-life-reward-95-crore-iranian-media-video-1787732881</id>
            <summary type="text">அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் 20 வயது மகன் பாரன் டிரம்பை குறிவைத்து, ஈரானுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் ஊடகம் ஒன்று அதிர்ச்சி வீடியோவை வெளியிட...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் 20 வயது மகன் பாரன் டிரம்பை குறிவைத்து, ஈரானுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் ஊடகம் ஒன்று அதிர்ச்சி வீடியோவை வெளியிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p>

“பாரனை எங்கு கொல்லலாம்?” என்ற தலைப்பில் வெளியிடப்பட்டதாக கூறப்படும் அந்த வீடியோவில், பாரன் டிரம்பின் நடமாட்டங்கள் கண்காணிக்கப்படுவதாகவும், அவரை கொலை செய்பவர்களுக்கு 1 கோடி அமெரிக்க டாலர் பரிசாக வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4c38759c-147a-43b4-a476-010a04a836af/26-6a8ea392ca302.webp' /></p><p>மேலும், பாரன் டிரம்ப் கல்வி பயிலும் பல்கலைக்கழகம், அவருக்குப் பாதுகாப்பு வழங்கும் அமெரிக்க ரகசிய சேவை அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு வாகனங்கள் தொடர்பான காட்சிகளும் அந்த வீடியோவில் இடம்பெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
</p><p>
இந்த தகவல் அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக அமெரிக்க ரகசிய சேவை அமைப்புக்கும் தகவல் கிடைத்துள்ளது.</p><p>
இதுகுறித்து ரகசிய சேவை அதிகாரி ஒருவர், பாதுகாப்பில் உள்ள நபர்களுக்கு அச்சுறுத்தலாக அமையக்கூடிய தகவல்கள் தொடர்பாக விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளார்.</p><p> எனினும், பாரன் டிரம்பின் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த விரிவான தகவல்களை வெளியிட அவர் மறுத்துவிட்டார்.
</p><p>
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே ஏற்கனவே கடுமையான அரசியல் மற்றும் ராணுவ பதற்றம் நிலவி வரும் நிலையில், அமெரிக்க ஜனாதிபதியின் குடும்ப உறுப்பினரை குறிவைத்து இத்தகைய மிரட்டல் வெளியாகியுள்ளதாக கூறப்படுவது புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-26T08:28:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவுக்கு பதிலடி: 700 பொருட்களுக்கு வரி விதித்த கனடா!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/canada-hits-us-imposes-tariffs-on-700-products-1787732836"></link>
            <id>https://canadamirror.com/article/canada-hits-us-imposes-tariffs-on-700-products-1787732836</id>
            <summary type="text">&amp;nbsp; அமெரிக்கா விதித்துள்ள 50 சதவீத சுங்கவரிக்கு பதிலடியாக, அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் 700 பொருட்களுக்கு 15 முதல் 50 சதவீதம் வரை வரி...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; அமெரிக்கா விதித்துள்ள 50 சதவீத சுங்கவரிக்கு பதிலடியாக, அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் 700 பொருட்களுக்கு 15 முதல் 50 சதவீதம் வரை வரி விதிக்க கனடா தீர்மானித்துள்ளது.
</p><p>
இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வந்த நிலையில், அமெரிக்கா திடீரென கனடா மீது 50 சதவீத வரியை விதித்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4623198e-4434-4fa9-bc67-89cf7ef3be6f/26-6a8ea36652568.webp' /></p><h2>அமெரிக்கா – கனடா உறவில் மேலும் விரிசல்&nbsp;</h2><p> இதனால் ஏற்கனவே பதற்றமடைந்திருந்த அமெரிக்கா – கனடா உறவில் மேலும் விரிசல் ஏற்பட்டுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் வர்த்தகக் கொள்கைகள் மற்றும் கடுமையான நடவடிக்கைகளால் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக முரண்பாடுகள் தீவிரமடைந்துள்ளன.
</p><p>
இந்த வர்த்தக முரண்பாடுகளுக்கு தீர்வு காணவும், அமெரிக்கா விதித்துள்ள வரியை தவிர்ப்பது தொடர்பிலும் வொஷிங்டனில் இரு நாடுகளின் பிரதிநிதிகளுக்கு இடையே அண்மையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. </p><p>எனினும், அந்த பேச்சுவார்த்தையில் எந்தவொரு இறுதி உடன்பாடும் எட்டப்படவில்லை.

இதனையடுத்து, கனடா மீது 50 சதவீத சுங்கவரி விதிக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்தார். </p><p>அத்துடன், கனடா தொடர்பில் கடுமையான விமர்சனங்களையும் அவர் முன்வைத்திருந்தார்.

இந்த நிலையில், அமெரிக்காவின் நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும் வகையில், அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் 700 பொருட்களுக்கு 15 முதல் 50 சதவீதம் வரை சுங்கவரி விதிக்கப்படும் என கனடா பிரதமர் மார்க் கார்னி அறிவித்துள்ளார்.
</p><p>
இந்த புதிய வரி நடவடிக்கை எதிர்வரும் செப்டெம்பர் 8 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, அமெரிக்காவுடன் முன்னர் காணப்பட்ட உறவு மீண்டும் அதே நிலைக்கு திரும்புவதற்கான வாய்ப்பு இல்லை என கனடா பிரதமர் மார்க் கார்னி முன்னதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p>

அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய இரு நாடுகளும் நீண்டகாலமாக நெருக்கமான வர்த்தக உறவுகளை கொண்டுள்ள நிலையில், தற்போது ஏற்பட்டுள்ள வர்த்தக மோதல் இரு நாடுகளின் பொருளாதார உறவுகளில் மேலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p>]]></content>
            <updated>2026-08-26T08:24:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பலாலி வீதியில் நடந்து செல்ல இராணுவம் அனுமதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/army-grants-permission-to-walk-along-palaly-road-1787728841"></link>
            <id>https://ibctamil.com/article/army-grants-permission-to-walk-along-palaly-road-1787728841</id>
            <summary type="text">செல்வ சந்நிதி ஆலய தேர் மற்றும் தீர்த்த உற்சவங்களை முன்னிட்டு, பலாலி வீதியில் மக்கள் நடந்து செல்லவும், வாகனங்களைத் தரித்து நிறுத்தவும் இராணுவத்தினர் அன...</summary>
            <content type="html"><![CDATA[<p>செல்வ சந்நிதி ஆலய தேர் மற்றும் தீர்த்த உற்சவங்களை முன்னிட்டு, பலாலி வீதியில் மக்கள் நடந்து செல்லவும், வாகனங்களைத் தரித்து நிறுத்தவும் இராணுவத்தினர் அனுமதி வழங்கியுள்ளனர்.</p><p>

இராணுவ உயர் பாதுகாப்பு வலயத்தினூடாக செல்லும் பலாலி வீதியில் கடந்த வருடம் மக்கள் நடந்து செல்லவும், வாகனங்களை நிறுத்தவும் அனுமதி மறுக்கப்பட்டிருந்ததுடன், குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே வீதி திறந்து விடப்பட்டது.
</p><p>
இந்நிலையில், செல்வ சந்நிதி ஆலயத்தின் தேர் திருவிழா நாளை (27.08.2026) வியாழக்கிழமையும், மறுநாள் (28.08.2026) வெள்ளிக்கிழமை தீர்த்த உற்சவமும் நடைபெறவுள்ளது.</p><p></p><h2>பலாலி வீதி&nbsp;</h2><p>
</p><p>
இதனை முன்னிட்டு, ஆலயத்தை நோக்கிச் செல்லும் காவடி மற்றும் பாதயாத்திரை பக்தர்கள் பலாலி வீதியூடாக காலை 6.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை நடந்து செல்லவும், வீதியில் தரித்து நிற்கவும் இராணுவத்தினர் அனுமதி வழங்கியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/81a6c8c5-413d-4209-bac2-f312740b9b6c/26-6a8e987f57bb1.webp' /></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-26T08:22:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[சரவெடி ஆட்டமாடிய மொயீன் அலி: ஆன்டிகுவா அபார வெற்றி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/moeen-ali-blast-56-runs-antigua-won-by-30-runs-1787732171"></link>
            <id>https://news.lankasri.com/article/moeen-ali-blast-56-runs-antigua-won-by-30-runs-1787732171</id>
            <summary type="text">Moeen ali blast 56 runs in caribbean premier league 2026: கரீபியன் டி20 போட்டியில் ஆன்டிகுவா அன்ட் பார்புடா ஃபால்கன்ஸ் அணி 30 ஓட்டங்கள் வித்தியாசத்தில...</summary>
            <content type="html"><![CDATA[<p>Moeen ali blast 56 runs in caribbean premier league 2026: கரீபியன் டி20 போட்டியில் ஆன்டிகுவா அன்ட் பார்புடா ஃபால்கன்ஸ் அணி 30 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.</p><p>

சர் விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் நடந்த கரீபியன் பிரீமியர் லீக் போட்டியில், ஆன்டிகுவா அன்ட் பார்புடா ஃபால்கன்ஸ் அணி 30 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பார்படோஸ் ட்ரிடென்ட்ஸை வீழ்த்தியது.&nbsp;</p><h2>மொயீன் அலி&nbsp;வாணவேடிக்கை </h2><p>
ஆன்டிகுவா அன்ட் பார்புடா ஃபால்கன்ஸ் மற்றும் பார்படோஸ் ட்ரிடென்ட்ஸ் அணிகள் மோதிய போட்டி சர் விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் நடந்தது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9b80a0cf-f178-4a5b-9347-9dfa8caa2784/26-6a8ea1a4be49b.webp' />&nbsp;</p><p></p><p>
முதலில் ஆடிய ஆன்டிகுவா அன்ட் பார்புடா ஃபால்கன்ஸ் அணியில் ரகீம் கார்ன்வால் டக்அவுட் ஆனார். அதன் பின்னர் கரிமா கோர் 27 ஓட்டங்கள் எடுத்தார்.

ஹசன் நவாஸ் 7 ஓட்டங்களில் வெளியேற, ஆமிர் ஜான்கூ 26 ஓட்டங்கள் எடுத்து மோட்டி பந்துவீச்சில் அவுட் ஆனார்.</p><p> எனினும் அணித்தலைவர் மொயீன் அலி (Moeen Ali) சிக்ஸர்களை பறக்கவிட்டு வாணவேடிக்கை காட்டினார்.

இதன்மூலம் சரிவில் இருந்து மீண்ட அணி 155 ஓட்டங்கள் எடுத்தது. </p><p>கடைசிவரை களத்தில் நின்ற மொயீன் அலி 37 பந்துகளில் 4 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 56 ஓட்டங்கள் விளாசினார். ஷாமர் ஸ்ப்ரிங்கர் 19 ஓட்டங்கள் எடுத்தார்.&nbsp;</p><h2>ஆன்டிகுவா வெற்றி </h2><p>
அடுத்து களமிறங்கிய பார்படோஸ் ட்ரிடென்ட்ஸ் அணி 18 ஓவர்களில் 125 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது.</p><p> இதன்மூலம் ஆன்டிகுவா அன்ட் பார்புடா ஃபால்கன்ஸ் 30 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
</p><p>
அதிகபட்சமாக ரிவால்டோ கிளார்க் 27 ஓட்டங்களும், கெவ்லோன் ஆண்டர்சன் 22 ஓட்டங்களும் எடுத்தனர். ஜோஷுவா ஜேம்ஸ் 3 விக்கெட்டுகளும், அல்ஸாரி ஜோஸப், ஷதாப் கான் மற்றும் சுஃபியான் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/81a29b40-2ab5-47cd-a316-de98116b711f/26-6a8ea1a5a4c48.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><i> <b>WHATSAPP CHANNEL</b></i></a><i><b> </b></i>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-26T08:17:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு குறித்து எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/warning-regarding-strong-winds-and-rough-seas-1787730228"></link>
            <id>https://ibctamil.com/article/warning-regarding-strong-winds-and-rough-seas-1787730228</id>
            <summary type="text">காங்கேசன்துறை முதல் மன்னார் ஊடாக புத்தளம் வரையான மற்றும் அம்பாந்தோட்டை முதல் பொத்துவில் வரையான கடற்பரப்புகளுக்கு பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு...</summary>
            <content type="html"><![CDATA[<p>காங்கேசன்துறை முதல் மன்னார் ஊடாக புத்தளம் வரையான மற்றும் அம்பாந்தோட்டை முதல் பொத்துவில் வரையான கடற்பரப்புகளுக்கு பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு&nbsp;தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம்&nbsp; எச்சரிக்கை விடுத்துள்ளது.</p><p> 

இதன்படி, காங்கேசன்துறை முதல் மன்னார் ஊடாக புத்தளம் வரையான மற்றும் அம்பாந்தோட்டை முதல் பொத்துவில் வரையான கரையை அண்டிய கடற்பரப்புகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 50-60 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என்பதுடன், அப்பகுதிகளில் கடல் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும் என தெரிவி்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p> 

புத்தளம் முதல் கொழும்பு, காலி மற்றும் மாத்தறை ஊடாக பொத்துவில் வரையான கரையை அண்டிய கடற்பகுதிகளில் கடல் அலைகள் சுமார் 2.0 - 2.5 மீற்றர் வரை உயரக்கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளன என்றும் கூறப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><h2>பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு</h2><p> 

</p><p>எனவே, கடற்றொழில் மற்றும் கடற்படைச் சமூகத்தினர் இது குறித்து அவதானத்துடன் செயல்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7579e0bc-8989-4ade-99aa-ab37edcb3ba1/26-6a8e9c740d62d.webp' /></p><p>மேலும் கொழும்பு உள்ளிட்ட பல மாவட்டங்களில் மழையுடனான வானிலை அவ்வப்போது தொடரும் என தெரிவிக்கப்பட்டு்ளளது.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-26T08:07:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ். செல்வச் சந்நிதி பக்தர்கள் பலாலி வீதியில் நடந்து செல்ல அனுமதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/selva-shrine-devotees-allowed-to-walk-palali-road-1787731417"></link>
            <id>https://jvpnews.com/article/selva-shrine-devotees-allowed-to-walk-palali-road-1787731417</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் செல்வச் சந்நிதி ஆலயத்தின் தேர் மற்றும் தீர்த்த உற்சவங்களை முன்னிட்டு, இராணுவ உயர் பாதுகாப்பு வலயத்தினூடாகச் செல்லும் பலாலி வீதியில் பக்தர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் செல்வச் சந்நிதி ஆலயத்தின் தேர் மற்றும் தீர்த்த உற்சவங்களை முன்னிட்டு, இராணுவ உயர் பாதுகாப்பு வலயத்தினூடாகச் செல்லும் பலாலி வீதியில் பக்தர்கள் நடந்து செல்லவும், வாகனங்களை தரித்து நிறுத்தவும் இராணுவத்தினர் அனுமதி வழங்கியுள்ளனர்.</p><p>
</p><p></p><p>செல்வச் சந்நிதி ஆலயத்தின் தேர் திருவிழா நாளை (27) வியாழக்கிழமையும், தீர்த்தத் திருவிழா நாளை மறுதினம் (28) வெள்ளிக்கிழமையும் நடைபெறவுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bde488db-340c-4e88-ac98-e2e322336980/26-6a8e9dda83f44.webp' /></p><p>

இதனை முன்னிட்டு ஆலயத்திற்கு காவடிகள் மற்றும் பாத யாத்திரைகளாகச் செல்லும் பக்தர்களின் நலனை கருத்திற்கொண்டு, பலாலி வீதியை பயன்படுத்துவதற்கு விசேட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
</p><p>
இதற்கமைய, குறித்த வீதியூடாக காலை 6.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை பக்தர்கள் நடந்து செல்லவும், தேவையான இடங்களில் வாகனங்களை தரித்து நிறுத்தவும் இராணுவத்தினர் அனுமதி வழங்கியுள்ளனர்.
</p><p>
பலாலி வீதி இராணுவ உயர் பாதுகாப்பு வலயத்தினூடாகச் செல்வதால், கடந்த வருடம் குறித்த வீதியில் பொதுமக்கள் நடந்து செல்லவும் வாகனங்களை தரித்து நிறுத்தவும் அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. </p><p>எனினும், பொதுமக்களின் போக்குவரத்து தேவையை கருத்திற்கொண்டு நேரக் கட்டுப்பாட்டுடன் வீதி திறந்து விடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-26T08:05:51+00:00</updated>
        </entry>
    </feed>
