<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-08-03T07:44:36+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[இளைஞர்கள் நடத்திய பார்ட்டி: சுவிஸ் மாகாண விவசாயிகள் புகார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/swiss-farmers-complaint-illegal-rave-hits-pastures-1785742635"></link>
            <id>https://news.lankasri.com/article/swiss-farmers-complaint-illegal-rave-hits-pastures-1785742635</id>
            <summary type="text">சுவிட்சர்லாந்தில் இளைஞர்கள் புல்வெளியில் நடத்திய பார்ட்டி தொடர்பில் விவசாயிகள் புகார்


சுவிட்சர்லாந்தின் வாட் மாகாணத்தில், இளைஞர்கள் புல்வெளியில் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சுவிட்சர்லாந்தில் இளைஞர்கள் புல்வெளியில் நடத்திய பார்ட்டி தொடர்பில் விவசாயிகள் புகார்</p><p>


சுவிட்சர்லாந்தின் வாட் மாகாணத்தில், இளைஞர்கள் புல்வெளியில் நடத்திய பார்ட்டி தொடர்பில் விவசாயிகள் புகார் ஒன்றை தெரிவித்துள்ளார்கள்.
</p><h3>
விவசாயிகள் புகார்
</h3><p>
வெள்ளிக்கிழமை இரவு, சுவிட்சர்லாந்தின் வாட் மாகாணத்தில், ஆயிரக்கணக்கான இளைஞர்கள் கூடி புல்வெளிகளில் சட்டவிரோதமாக பார்ட்டி ஒன்றை நடத்தியுள்ளார்கள்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d609f150-644a-46ee-8e67-8226468840d7/26-6a70452cd2dc2.webp' /></p><p>
அதைத் தொடர்ந்து பொலிசில் புகாரளிக்கப்பட, பொலிசார் வந்து பார்ட்டி ஒருங்கிணைப்பாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி பார்ட்டியை ஞாயிற்றுக்கிழமை காலை முடிவுக்குக் கொண்டுவந்துள்ளார்கள்.
</p><p>
விடயம் என்னவென்றால், ஏற்கனவே சுவிஸ் விவசாயிகள் பலர் தங்கள் பசுக்களுக்கு புல் இல்லாததால் கடும் நஷ்டத்தை எதிர்கொண்டுள்ளார்கள்.&nbsp;</p><p></p><p>

இந்நிலையில், ஆயிரக்கணக்கான இளைஞர்கள் புல்வெளியில் பார்ட்டி நடத்தியதால், புல்வெளி நாசமாகிவிட்டதாகவும், அதனால் தங்கள் பசுக்கள் கோடையில் மேய்வதற்கு புல் இல்லாமல் போய்விட்டதாகவும் விவசாயிகள் தெரிவித்துள்ளார்கள்.
</p><p>
சம்பந்தப்பட்ட முனிசிபாலிட்டியும் பார்ட்டி நடத்தியவர்கள் மீது புகாரளித்துள்ள நிலையில், பார்ட்டி ஒருங்கிணைப்பாளர்கள் உட்பட சிலர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-03T07:43:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[திடீரென நடுவானில் விமானத்தை நெருங்கிய பறக்கும் தட்டு - விமானியில் பகீர் தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/pilot-reports-mysterious-disc-near-airport-london-1785741032"></link>
            <id>https://ibctamil.com/article/pilot-reports-mysterious-disc-near-airport-london-1785741032</id>
            <summary type="text">லண்டன் கேட்விக் விமான நிலையத்திற்கு அருகில் தரையிறங்கத் தயாராகிக் கொண்டிருந்த போது விமானி ஒருவர் மர்மமான தட்டு வடிவப் பொருள் ஒன்றைக் கண்டதாகக் கூறியதா...</summary>
            <content type="html"><![CDATA[<p>லண்டன் கேட்விக் விமான நிலையத்திற்கு அருகில் தரையிறங்கத் தயாராகிக் கொண்டிருந்த போது விமானி ஒருவர் மர்மமான தட்டு வடிவப் பொருள் ஒன்றைக் கண்டதாகக் கூறியதாக சர்வதேச ஊடகம் வெளியிட்டுள்ளது.</p><p>அதிகாரிகள் கருத்துத் தெரிவிக்கையில்அது ஒரு நவீன டிரோனாக இருக்க கூடும். ஆனால்இ அதன் சரியான அடையாளமோ அல்லது எந்த பகுதியில் இருந்து வந்தது என்றோ தெரியவில்லை என கூறியுள்ளார்.</p><p>சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், இங்கிலாந்து நாட்டின் லண்டன் நகரில் கேட்விக் விமான நிலையத்தில் எயார்பஸ் ஏ319 என்ற பயணிகள் விமானம் தரையிறங்க வேண்டி இருந்தது.</p><p></p><h2>நவீன டிரோனாக இருக்க கூடும்&nbsp;</h2><p>இதற்காக கேட்விக் பகுதிக்கு தெற்கே 7 மைல்கள் தொலைவில், சசெக்ஸ் கவுன்டி பகுதியில் ஹேங்கிராஸ் அருகே நடுவானில் பறந்து வந்து கொண்டிருந்தது. விமானம் தரையிறங்க சில நிமிடங்கள் இருக்கும்போது, அந்த சம்பவம் நடந்தது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0edc855e-dcfa-4b2b-9632-16c0bdf1f0e5/26-6a704451b4c8a.webp' /></p><p>திடீரென மர்ம பொருள் ஒன்று மெதுவாக மேலே எழும்பி வந்தது. விமானிக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில், விமானத்தின் வலது இறக்கை பகுதியருகே வட்ட வடிவிலான அந்த பறக்கும் தட்டு 100 முதல் 300 அடி இடைவெளியில் விமானத்திற்கு மிக நெருங்கிய தொலைவில் வந்துள்ளது.</p><p>


தூரத்திலேயே விமானி அதனை கவனித்து விட்டார். வேறு திசைக்கு செல்வதற்கு ஏற்ப விமானமும், முன்பே திசை திருப்பப்பட்டு விட்டது. இதனால், பெரிய அளவில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.</p><p></p><h2>தனித்துவமான தட்டு&nbsp;</h2><p>விமானி அந்த விண்கலத்தை, அதன் வெளி விளிம்பில் அடர் நிறக் குறிகளைக் கொண்ட ஒரு தனித்துவமான தட்டு என்று விபரித்துள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2ddada92-1239-430a-a741-b77fa4915d27/26-6a7044527147b.webp' /></p><p> எனினும், விமானம் தரையிறங்கியதும் இதுபற்றி உயரதிகாரிகளுக்கு விமானி தகவல் தெரிவித்து உள்ளார். அது ஒரு வட்ட தட்டு அல்லது பறக்கும் தட்டு அல்லது டிரோனாக இருக்க கூடும் என அதிகாரிகளிடம் கூறியுள்ளார்.</p><p> அது, விமானத்திற்கு எதிர் திசையில் மிக நெருக்கத்தில், விமானத்தின் மட்டத்திற்கு இணையாக அதே மட்டத்தில் வந்தது. வலது இறக்கை பகுதியில் கடந்து சென்றது என கூறியுள்ளார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-03T07:39:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Farook Sihan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சாய்ந்தமருதில் பெய்து வரும் அடைமழை - வெள்ளநீர் தேங்கி போக்குவரத்து பாதிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/heavy-rains-in-sainthamaruthu-1785741817"></link>
            <id>https://tamilwin.com/article/heavy-rains-in-sainthamaruthu-1785741817</id>
            <summary type="text">சாய்ந்தமருது மற்றும் அதனைச் சுற்றியுள்ள உள்ளூர் பகுதிகளில்
தொடர்ச்சியாகப் பெய்து வரும் அடைமழை காரணமாக, பல பிரதான மற்றும் உட்புற
வீதிகளில் வெள்ளநீர் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சாய்ந்தமருது மற்றும் அதனைச் சுற்றியுள்ள உள்ளூர் பகுதிகளில்
தொடர்ச்சியாகப் பெய்து வரும் அடைமழை காரணமாக, பல பிரதான மற்றும் உட்புற
வீதிகளில் வெள்ளநீர் தேங்கியுள்ளது.
</p><p>நேற்று(02.08.2026) மாலை மழைநீரானது வடிகான்கள் வழியே முறையாக வழிந்தோட
வழியின்மையினாலேயே பெரும்பாலான வீதிகள் நீரில் மூழ்கியுள்ளதாகப் பிரதேசவாசிகள்
தெரிவித்துள்ளனர்.</p><p></p><h2>விரைந்து நடவடிக்கை எடுக்க&nbsp;</h2><p>இதனால் பாதசாரிகள், பாடசாலை மாணவர்கள் மற்றும் வாகனச் சாரதிகள் பாரிய
அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதோடு, அன்றாடக் காரியங்களை மேற்கொள்வதிலும்
பெரும் சிரமங்கள் ஏற்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6273f5da-e159-4ad6-8c29-a24d4c821caa/26-6a7044485af18.webp' /></p><p>

முறைசாரா வடிகான் அமைப்புகள் மற்றும் அடைபட்டுள்ள நீர்வரத்து வழிகளை
உடனடியாகச் சீரமைத்து, தேங்கியுள்ள வெள்ளநீரை அகற்றுவதற்குப் பிரதேச சபையும்
உரிய அதிகாரிகளும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள்
கோரிக்கை விடுத்துள்ளனர்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-03T07:34:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யோஷித - கரன்னகோடவுக்கு எதிராகக் குற்றப்பத்திரிகை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/indictments-filed-against-yoshitha-rajapaksa-1785738155"></link>
            <id>https://ibctamil.com/article/indictments-filed-against-yoshitha-rajapaksa-1785738155</id>
            <summary type="text">முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகனான யோஷித ராஜபக்ச மற்றும் முன்னாள் கடற்படைத் தளபதியும் கடற்படை அட்மிரலுமான வசந்த கரன்னகொட ஆகியோர் மீது&amp;nbsp;குற...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகனான யோஷித ராஜபக்ச மற்றும் முன்னாள் கடற்படைத் தளபதியும் கடற்படை அட்மிரலுமான வசந்த கரன்னகொட ஆகியோர் மீது&nbsp;குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.&nbsp;</p><p>இந்த குற்றப்பத்திரிக்கையானது இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணை ஆணைக்குழுவால், கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யபட்டுள்ளது.&nbsp;</p><p>
 

குற்றச்சாட்டுகளின்படி, முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னகொட இலங்கை கடற்படையின் தளபதியாகப் பணியாற்றிய காலத்தில், 2006 செப்டம்பர் 1 முதல் 2007 ஜூன் 8 வரை ஐக்கிய இராச்சியத்தில் உள்ள பிரித்தானியா அரச கடற்படைக் கல்லூரியில் நடைபெற்ற அரச கடற்படை இளம் அதிகாரிகள் பயிற்சி வகுப்பில் யோஷித ராஜபக்ச பங்கேற்பதற்கு வசதி செய்து கொடுத்ததன் மூலம் அரசுக்கு இழப்பை ஏற்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.</p><p></p><h2>குற்றப்பத்திரிகைகள் தாக்கல்</h2><p> </p><p>

 

அதே ஏற்பாட்டின் மூலம் முறையற்ற ஆதாயத்தைப் பெற்றதாக யோஷித ராஜபக்ச மீதும் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fe6025e1-bbee-4ab8-a2d4-a1a2eb4d3ec6/26-6a703ed6b0a62.webp' /></p><p>
</p><p>
 

</p><p>இந்த வழக்கில், இருவருக்கும் எதிராக இலஞ்ச ஆணையம் மொத்தம் எட்டு குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>குற்றப்பத்திரிகைகள் தற்போது கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் குற்றச்சாட்டுகளை முறைப்படி வழங்குவதற்காக, நீதிமன்றம் உரிய காலத்தில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு அழைப்பாணை அனுப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b> WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-03T07:34:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[Gold Rate Today: ஆடிப்பெருக்கு நாளில் நகை வாங்குவோருக்கு அதிர்ச்சி - தங்கம் விலை மீண்டும் ஏற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/today-aug-3-2026-gold-and-silver-price-in-chennai-1785741231"></link>
            <id>https://manithan.com/article/today-aug-3-2026-gold-and-silver-price-in-chennai-1785741231</id>
            <summary type="text">today gold-and silver-price : இன்றைய (ஆகஸ்ட் 3) தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்து விரிவாக இந்த பதிவில் பார்க்கலாம்.
கடந்த ஜூலை மாத தொடக்கத்...</summary>
            <content type="html"><![CDATA[<p>today gold-and silver-price : இன்றைய (ஆகஸ்ட் 3) தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்து விரிவாக இந்த பதிவில் பார்க்கலாம்.</p><p>
கடந்த ஜூலை மாத தொடக்கத்திலிருந்தே தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. ஆகஸ்ட் மாதத்தின் முதல் நாளிலேயே தங்கம் விலையில் கணிசமான சரிவு பதிவாகி, நகை வாங்க திட்டமிட்டிருந்தவர்களுக்கு சற்றே நிம்மதியை ஏற்படுத்தியது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/eddf59f0-86de-4449-93d2-80332ca1de6b/26-6a7043ac68e0c.webp' /></p><p></p><p>அதன்படி, நேற்று முன்தினம் 22 காரட் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.35 குறைந்து ரூ.13,220 ஆகவும், ஒரு சவரனுக்கு ரூ.280 குறைந்து ரூ.1,05,760 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது.</p><h2>இன்றைய நிலவரம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/557fd51a-244c-47ec-903e-84eb66fcb8df/26-6a7043ad18c00.webp' /></p><p>
</p><p>
ஆனால், இன்று (ஆகஸ்ட் 3) தங்கம் விலை மீண்டும் உயர்வை பதிவு செய்துள்ளது. 22 காரட் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.30 அதிகரித்து ரூ.13,250 ஆகவும், ஒரு சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.1,06,000 ஆகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.</p><p>அதேபோல், 18 காரட் தங்கத்தின் விலையும் உயர்வை கண்டுள்ளது. ஒரு கிராமுக்கு ரூ.30 அதிகரித்து ரூ.11,065 ஆகவும், ஒரு சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.88,520 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e864186b-91fc-474b-a8e8-317435fc638c/26-6a7043adbd912.webp' /></p><p></p><p>
இதற்கிடையில், வெள்ளி விலையில் இன்று எந்த மாற்றமும் ஏற்படவில்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.235க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,35,000க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b>&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-03T07:32:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[எகிப்து கடற்கரைக்கு அப்பால் நிலநடுக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/5-0-magnitude-earthquake-off-the-coast-of-egypt-1785742402"></link>
            <id>https://canadamirror.com/article/5-0-magnitude-earthquake-off-the-coast-of-egypt-1785742402</id>
            <summary type="text">&amp;nbsp; எகிப்து கடற்கரைக்கு அப்பால் நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக ஜெர்மன் புவியியல் ஆய்வு மையம் (GFZ) தெரிவித்துள்ளது.

இன்று (03) அதிகாலை 5.4 மெக...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; எகிப்து கடற்கரைக்கு அப்பால் நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக ஜெர்மன் புவியியல் ஆய்வு மையம் (GFZ) தெரிவித்துள்ளது.
</p><p>
இன்று (03) அதிகாலை 5.4 மெக்னிடியூட் அளவில் பதிவான இந்த நிலநடுக்கம், பூமிக்கு அடியில் 10 கிலோமீற்றர் ஆழத்தில் இடம்பெற்றுள்ளதாக புவியியல் ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4a4a1d50-8df2-4497-ab38-d15179e7fbe9/26-6a7044443e835.webp' /></p><p>
</p><p>
இந்த நிலநடுக்கத்தின் மையம் சூயஸ் (Suez) நகரிலிருந்து 38 கிலோமீற்றர் தொலைவில் அமைந்திருந்ததாக எகிப்து அதிகாரிகள் பின்னர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இருப்பினும், இந்த நிலநடுக்கத்தால் உயிர்ச்சேதங்களோ அல்லது சொத்துச் சேதங்களோ ஏற்பட்டதாக இதுவரை எந்தவொரு தகவலும் பதிவாகவில்லை.</p>]]></content>
            <updated>2026-08-03T07:31:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[34 வருடங்களை கடந்த நடிகர் அஜித்.. டாப் 10 திரைப்படங்களின் வசூல் விவரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/34-years-of-ajith-kumar-and-top-10-box-office-1785739404"></link>
            <id>https://cineulagam.com/article/34-years-of-ajith-kumar-and-top-10-box-office-1785739404</id>
            <summary type="text">அஜித்&amp;nbsp;தமிழ் சினிமாவில் கடந்த 34 ஆண்டுகளாக நம்மை மகிழ வைத்த நடிகர் அஜித் குமாரின் அதிக வசூல் செய்த டாப் 10 திரைப்படங்கள் குறித்து தான் இந்த பதிவில...</summary>
            <content type="html"><![CDATA[<h2>அஜித்&nbsp;</h2><p>தமிழ் சினிமாவில் கடந்த 34 ஆண்டுகளாக நம்மை மகிழ வைத்த நடிகர் அஜித் குமாரின் அதிக வசூல் செய்த டாப் 10 திரைப்படங்கள் குறித்து தான் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b7b1d6a2-7689-40d8-b72a-c5de97f477ef/26-6a70388f1ca6b.webp' /></p><p>அமராவதி திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி இன்று தமிழ் சினிமாவின் அடையாளமாக திகழ்ந்து வருபவர் அஜித் குமார். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த குட் பேட் அக்லி திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. அஜித்தின் திரை வாழ்க்கையில் அதிக வசூல் செய்த திரைப்படம் என்கிற சாதனையையும் படைத்தது.</p><p></p><p>
</p><p>
GBU-வை தொடர்ந்து அஜித் நடிப்பில் AK 64 திரைப்படம் எப்போது உருவாகும் என ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கிறார்கள். தயாரிப்பாளர் இன்னும் உறுதி செய்யப்படவில்லை, இதனால் தான் AK 64 படப்பிடிப்பு தாமதமாகி வருகிறது. இதனால் அஜித்தே தற்போது AK 64 திரைப்படத்தை தயாரிக்க முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் அதிகாரப்பூர்வமான அறிவிப்பை எதிர்பார்க்கலாம் என கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fc416e8d-c72b-488b-be6e-9abfe72d21bc/26-6a70388fc8c3d.webp' /></p><h2>டாப் 10 வசூல்</h2><p>
</p><p>
இந்நிலையில், இன்றுடன் நடிகர் அஜித் திரையுலகில் காலடி எடுத்துவைத்து 34 வருடங்கள் ஆகிவிட்டது. இதனை அவருடைய ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகிறார்கள். இந்த சமயத்தில், <a href="https://www.youtube.com/watch?v=amwA8k0JR-Y" target="_blank">அஜித்</a>தின் திரை வாழ்க்கையில் அதிக வசூலித்த டாப் 10 திரைப்படங்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
</p><p>
குட் பேட் அக்லி - 268 கோடி
</p><p>துணிவு - ரூ. 210 கோடி
</p><p>விஸ்வாசம் - ரூ. 190 கோடி
</p><p>வலிமை - ரூ. 164 கோடி
</p><p>விடாமுயற்சி - ரூ. 145 கோடி
</p><p>விவேகம் - ரூ. 128 கோடி
</p><p>வேதாளம் - ரூ. 125 கோடி</p><p>
நேர்கொண்ட பார்வை - ரூ. 107 கோடி
</p><p>ஆரம்பம் - ரூ. 104 கோடி
</p><p>என்னை அறிந்தால் - ரூ. 95 கோடி&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-03T07:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஊர்காவற்றுறை – காரைநகர் பயணிகள் பாதை சேதம்: உடனடி சீரமைப்பை வலியுறுத்தும் பயணிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/damage-to-kayts-karainagar-passenger-route-1785740630"></link>
            <id>https://tamilwin.com/article/damage-to-kayts-karainagar-passenger-route-1785740630</id>
            <summary type="text">ஊர்காவற்றுறை – காரைநகர் இடையே சேவையில் ஈடுபட்டுள்ள பயணிகள் பாதையின்
அடிச்சட்டம் பல இடங்களில் வெடித்து சேதமடைந்துள்ளதால், பயணிகள் மற்றும் வாகன
ஓட்டுந...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஊர்காவற்றுறை – காரைநகர் இடையே சேவையில் ஈடுபட்டுள்ள பயணிகள் பாதையின்
அடிச்சட்டம் பல இடங்களில் வெடித்து சேதமடைந்துள்ளதால், பயணிகள் மற்றும் வாகன
ஓட்டுநர்கள் கடும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
</p><p>குறிப்பாக மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்களை பாதையில் ஏற்றி இறக்குவதில்
சிக்கல்கள் ஏற்படுவதுடன், பயணிகளின் கால்களில் காயம் ஏற்படும் அபாயமும்
நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><h2>அவசர நடவடிக்கை</h2><p>
இந்தப் பாதையை நாள்தோறும் அரச உத்தியோகத்தர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள்
அதிகளவில் பயன்படுத்தி வரும் நிலையில், நீண்டகாலமாக இந்நிலை தொடர்வதாக பயணிகள்
குற்றஞ்சாட்டுகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/31ce9e8c-ff84-4b71-9b96-1f7787a3ae95/26-6a7042e873f51.webp' /></p><p>
</p><p>எனவே, சேதமடைந்துள்ள பகுதிகளை உடனடியாக சீரமைத்து, பாதுகாப்பான மற்றும்
இடையூறற்ற சேவையை உறுதிப்படுத்த உரிய அதிகாரிகள் அவசர நடவடிக்கை எடுக்க
வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-03T07:28:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[எகிப்து கடற்கரைக்கு அப்பால் சக்திவாய்ந்த நிலநடுக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/powerful-earthquake-strikes-north-of-egypt-s-suez-1785740048"></link>
            <id>https://ibctamil.com/article/powerful-earthquake-strikes-north-of-egypt-s-suez-1785740048</id>
            <summary type="text">எகிப்து கடற்கரைக்கு அப்பால் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக ஜேர்மன் புவியியல் ஆய்வு மையம் (GFZ) தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய...</summary>
            <content type="html"><![CDATA[<p>எகிப்து கடற்கரைக்கு அப்பால் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக ஜேர்மன் புவியியல் ஆய்வு மையம் (GFZ) தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p>

இன்று (03) அதிகாலை 5.4 மெக்னிடியூட் அளவில் பதிவான இந்த நிலநடுக்கம், பூமிக்கு அடியில் 10 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>
இந்த நிலநடுக்கத்தின் மையம் சூயஸ் நகரிலிருந்து 38 கிலோமீற்றர் தொலைவில் அமைந்திருந்ததாக எகிப்து அதிகாரிகள் பின்னர் உறுதிப்படுத்தியுள்ளனர்.</p><p></p><h2>நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள்&nbsp;</h2><p>எனினும், இந்த நிலநடுக்கத்தால் உயிர்ச்சேதங்களோ அல்லது சொத்துச் சேதங்களோ ஏற்பட்டதாக இதுவரை எந்தவொரு தகவலும் பதிவாகவில்லை என குறிப்பிடப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/96c1de73-5520-42fa-984c-6c2899d11dcc/26-6a70408e248a0.webp' /></p><p>இதேவேளை நிலநடுக்கம் உணரப்பட்ட இடங்களில் தனது அவசரகால மீட்புத் திட்டத்தைச் செயற்படுத்தியுள்ளதாக எகிப்திய செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-03T07:25:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[பேராதனைப் பல்கலை விடுதிக்குள் வெள்ளப் பெருக்கு : மாணவர்கள் வெளியேற்றம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/flooding-inside-the-peradeniya-university-hostel-1785737493"></link>
            <id>https://ibctamil.com/article/flooding-inside-the-peradeniya-university-hostel-1785737493</id>
            <summary type="text">தற்போது நிலவும் மோசமான வானிலை காரணமாக மகாவலி கங்கை பகுதியில் அமைந்துள்ள பேராதனைப் பல்கலைக்கழகத்தின் &quot;சரசவி மெதுர&quot; விடுதியின் கீழ் தளத்தில் வெள்ளப்பெரு...</summary>
            <content type="html"><![CDATA[<p>தற்போது நிலவும் மோசமான வானிலை காரணமாக மகாவலி கங்கை பகுதியில் அமைந்துள்ள பேராதனைப் பல்கலைக்கழகத்தின் "சரசவி மெதுர" விடுதியின் கீழ் தளத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p>வெள்ளப் பெருக்கு காரணமாக குறித்த விடுதியில் தங்கியிருந்த மாணவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>இந்த நிலையில் ஏனைய மாணவர்களை எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக பேராதனைப் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.</p><p></p><h2>நீர்மட்டம் உயர்வு&nbsp;&nbsp;</h2><p>இதேவேளை மகாவலி கங்கையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால், வெள்ள அபாயம் குறித்து மாணவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு பேராதனைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார்.
</p><p>இதனால் ஏற்படும் பேரழிவுகளைத் தவிர்க்க, மகாவலி ஆற்றுப் படுகையில் அமைந்துள்ள பல்கலைக்கழக விடுதிகளில் தங்கியிருக்கும் மாணவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் துணைவேந்தர் வலியுறுத்தியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dd44d709-8439-4d75-a16a-c742ca11967e/26-6a7036198eab8.webp' /></p><p>

நேற்றிரவு (02) முதல் பெய்து வரும் தொடர் கனமழையால் மகாவலி ஆற்றில் நீர்மட்டம் உயர்ந்துள்ளதுடன் பேராதனை 'களு பாலம' அருகே உள்ள பாலம் புனரமைப்புத் தளம் ஏற்கனவே வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>அங்குள்ள பல கனரக இயந்திரங்கள் நீரில் மூழ்கியுள்ளதாகவும் மேலும் சில உபகரணங்கள் மற்றும் கட்டுமானப் பொருட்கள் பலத்த நீரோட்டத்தால் அடித்துச் செல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது.</p><p>
இதற்கிடையில், அடுத்த 24 மணி நேரத்தில் மகாவலி ஆற்றங்கரையோரம் உள்ள பல தாழ்வான பகுதிகளில் வெள்ள அபாயம் இருப்பதாக நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-03T07:25:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிறந்தநாள் எண் மூலம் ரூ.9.5 கோடி லொட்டரி வென்ற நபர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/us-man-wins-million-dollar-lottery-by-lucky-no-7-1785741620"></link>
            <id>https://news.lankasri.com/article/us-man-wins-million-dollar-lottery-by-lucky-no-7-1785741620</id>
            <summary type="text">தனது பிறந்தநாள் எண் கொண்ட லொட்டரியை வாங்கிய நபர் ரூ.9.5 கோடி பரிசு வென்றுள்ளார்.பிறந்தநாள் எண் மூலம் ரூ.9.5 கோடி லொட்டரி

அமெரிக்காவின் வட கரோலினா க...</summary>
            <content type="html"><![CDATA[<p>தனது பிறந்தநாள் எண் கொண்ட லொட்டரியை வாங்கிய நபர் ரூ.9.5 கோடி பரிசு வென்றுள்ளார்.</p><h3>பிறந்தநாள் எண் மூலம் ரூ.9.5 கோடி லொட்டரி</h3><p>

அமெரிக்காவின் வட கரோலினா கல்வி லொட்டரி, புதிதாக டிரிபிள் ரெட் 777 ஜாக்பாட் என்ற லொட்டரியை தொடங்கியுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e86ae45d-84e5-4db5-86ed-8e5b180ce63d/26-6a704135b6cb6.webp' /></p><p>மாண்ட்கோமெரி கவுன்டியில் உள்ள பிஸ்கோவைச் சேர்ந்த தோமஸ் முனோஸ் என்பவர், கேண்டரில் உள்ள சவுத் மெயின் தெருவில் இருக்கும் கேண்டர் வி மார்ட் கடையில் 10 டொலர் மதிப்புள்ள 'டிரிபிள் ரெட் 777 ஜாக்பாட்' டிக்கெட்டை பார்த்துள்ளார்.</p><p> 

அவரின் பிறந்த ஆண்டு 1977 மற்றும் பிறந்தநாள் 7 ஆம் திகதி என்பதால் அதனை தனது வாழ்வின் அதிர்ஷ்டமான எண்ணாக கருதி வந்துள்ளார். 

அதனால் இந்த டிரிபிள் ரெட் 777 ஜாக்பாட்டை கண்டதும் அதனை உடனே வாங்கியுள்ளார்.&nbsp;</p><p></p><p>அந்த கடையில் வைத்தே லொட்டரி டிக்கெட்டை சுரண்டிய அவர், 1 மில்லியன் டொலர்(இந்திய மதிப்பில் ரூ.9.5 கோடி) முதல் பரிசு வென்றதை நினைத்து சந்தோஷத்தில் குதித்துள்ளார். </p><p>

அதன் பின்னர் முனோஸ் லொட்டரி தலைமையகத்திற்கு சென்ற அவருக்கு பெறுவதற்கு 2 வாய்ப்புகள் வழங்கப்பட்டது.</p><p>

பரிசை 20 ஆண்டுகளுக்கு 50,000 டொலர் தவணையாகவோ அல்லது டொலர் 600,000 மொத்தத் தொகையாகவோ பெறலாம். 

அவர் 600,000 டொலர் மொத்தத் தொகையைத் தேர்ந்தெடுத்து, வரிப் பிடித்தங்களுக்குப் பிறகு, 396,060 டொலரை பெற்றார்.</p><p>

பரிசுப் பணம் குறித்த தனது திட்டங்களைப் பற்றிப் பேசிய முனோஸ், பணத்தின் ஒரு பகுதியை முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளதாகவும், தனக்குத் தனிப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்ததாகத் தோன்றும் பழங்காலக் கார்களைப் புதுப்பிக்க தொடர்ந்து நிதியளிக்க விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார். </p><p>

1 மில்லியன் டொலர் மதிப்புள்ள மூன்று முதல் பரிசுகளுடன் அறிமுகமான டிரிபிள் ரெட் 777 ஜாக்பாட் விளையாட்டில் இன்னும் 2 பரிசுகள் வெல்லப்படாமல் உள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-03T07:20:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் வழக்கு தொடர முடியாது..! ஹரக் கட்டா வழக்கில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ag-department-will-appeal-against-harak-katta-1785741512"></link>
            <id>https://tamilwin.com/article/ag-department-will-appeal-against-harak-katta-1785741512</id>
            <summary type="text">பாதாள உலகக் குழுத் தலைவர் நதுன் சிந்தக்க விக்ரமரத்ன என்ற ஹரக் கட்டா வழக்கில், மேல் நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்ய உள்ளதாக சட்ட மா அதி...</summary>
            <content type="html"><![CDATA[<p>பாதாள உலகக் குழுத் தலைவர் நதுன் சிந்தக்க விக்ரமரத்ன என்ற ஹரக் கட்டா வழக்கில், மேல் நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்ய உள்ளதாக சட்ட மா அதிபர் தெரிவித்துள்ளார்.</p><p>
குற்றப் புலனாய்வுத் துறையின் காவலில் இருந்தபோது தப்பிச் செல்ல சதித்திட்டம் தீட்டியதாகக் குற்றம் சாட்டப்பட்ட ஹரக் கட்டா உள்ளிட்ட 4 பேருக்கு எதிராக பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் வழக்கை முன்னெடுத்துச் செல்ல முடியாது என அண்மையில் தீர்ப்பு வழங்கப்பட்டது.</p><p></p><p>
</p><p>அளிக்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்யவுள்ளதாக சட்டமா அதிபர் கொழும்பு மேல் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.</p><p>கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி புத்திக சி. ராகல முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே, சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான அரச சட்டத்தரணி இந்த அறிவிப்பைச் செய்துள்ளார்.</p><h2>நீதிமன்ற உத்தரவு</h2><p>
சந்தேகநபர்களின் பிணை மனுக்கள் தொடர்பில் பரிசீலித்த நீதிபதி, பிணை வழங்குவது குறித்த தனது உத்தரவை ஆகஸ்ட் 20 அன்று அறிவிப்பதாக உத்தரவிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c27971b4-ee24-4c28-a500-934dccb8fd89/26-6a7040ca67324.webp' />&nbsp; &nbsp;</p><p>
</p><p>பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் நீக்கப்பட்டுள்ளதால், தற்போது தங்காலை பழைய சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஹரக் கட்டாவை பொருத்தமான வேறொரு சிறைச்சாலைக்கு மாற்றுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p>
முன்னதாக, சிஐடி காவலில் இருந்தபோது தப்பிச் செல்ல முயன்ற சம்பவம் தொடர்பில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட குற்றச்சாட்டுகளைத் தொடர முடியாது எனவும், எனினும் தண்டனைச் சட்டக்கோவையின் கீழ் வழக்கை முன்னெடுத்துச் செல்வதற்கு எந்தவொரு சட்டத் தடையும் இல்லை எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-03T07:19:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நடுவானில் விமானத்திற்கு எதிரே திடீரென தோன்றிய பறக்கும் தட்டு; விமானி அதிர்ச்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/pilot-spots-flying-saucer-near-london-gatwick-1785741617"></link>
            <id>https://canadamirror.com/article/pilot-spots-flying-saucer-near-london-gatwick-1785741617</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;இங்கிலாந்தில் நடுவானில் விமானம் வந்தபோது, 300 அடி தொலைவில் பறக்கும் தட்டு நெருங்கி விமானிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



 லண்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;இங்கிலாந்தில் நடுவானில் விமானம் வந்தபோது, 300 அடி தொலைவில் பறக்கும் தட்டு நெருங்கி விமானிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><p>



 லண்டன் நகரில் கேட்விக் விமான நிலையத்தில் எயார்பஸ் ஏ319 என்ற பயணிகள் விமானம் தரையிறங்க வேண்டி இருந்தது. இதற்காக கேட்விக் பகுதிக்கு தெற்கே 7 மைல்கள் தொலைவில், சசெக்ஸ் கவுன்டி பகுதியில் ஹேங்கிராஸ் அருகே நடுவானில் பறந்து வந்து கொண்டிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d9377229-cd5a-4269-abb1-6d94091857f4/26-6a704133588aa.webp' /></p><h2>திடீரென மர்ம பொருள்</h2><p>
</p><p>


விமானம் தரையிறங்க சில நிமிடங்கள் இருக்கும்போது, அந்த சம்பவம் நடந்தது. திடீரென மர்ம பொருள் ஒன்று மெதுவாக மேலே எழும்பி வந்தது. </p><p>

விமானிக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில், விமானத்தின் வலது இறக்கை பகுதியருகே வட்ட வடிவிலான அந்த பறக்கும் தட்டு 100 முதல் 300 அடி இடைவெளியில் விமானத்திற்கு மிக நெருங்கிய தொலைவில் வந்துள்ளது.
</p><p>


தூரத்திலேயே விமானி அதனை கவனித்து விட்டார். வேறு திசைக்கு செல்வதற்கு ஏற்ப விமானமும், முன்பே திசை திருப்பப்பட்டு விட்டது. இதனால், பெரிய அளவில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. </p><p>எனினும், விமானம் தரையிறங்கியதும் இதுபற்றி உயரதிகாரிகளுக்கு விமானி தகவல் தெரிவித்து உள்ளார்.


அது ஒரு வட்ட தட்டு அல்லது பறக்கும் தட்டு அல்லது டிரோனாக இருக்க கூடும் என அதிகாரிகளிடம் கூறியுள்ளார்.</p><p> அது, விமானத்திற்கு எதிர் திசையில் மிக நெருக்கத்தில், விமானத்தின் மட்டத்திற்கு இணையாக அதே மட்டத்தில் வந்தது. வலது இறக்கை பகுதியில் கடந்து சென்றது என கூறியுள்ளார்.
</p><p>


அந்த தட்டின் வெளிப்புற விளிம்பு பகுதிகளில் கருப்பு நிறத்தில் அடையாளங்கள் இருந்தன. அது நவீன டிரோனாக இருக்க கூடும். ஆனால், அதன் சரியான அடையாளமோ அல்லது எந்த பகுதியில் இருந்து வந்தது என்றோ தெரியவில்லை என கூறியுள்ளார்.</p><p>


 
இது தொடர்பில் எனினும் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டு உள்ளனர். இதுபற்றி இங்கிலாந்தின் எயார்பிராக்ஸ் என்ற தனியார் அமைப்பு தீவிர கவனம் கொண்டு நிலைமையை பற்றி கண்காணித்து, தீர விசாரித்து வருகிறது.</p>]]></content>
            <updated>2026-08-03T07:18:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நுவரெலியாவில் தொடரும் கனமழை: தோட்டக் குடியிருப்புகள் பெருமளவில் சேதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/heavy-rains-continue-in-nuwara-eliya-1785741334"></link>
            <id>https://tamilwin.com/article/heavy-rains-continue-in-nuwara-eliya-1785741334</id>
            <summary type="text">நுவரெலியா மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் கடும் மழை காரணமாக மண்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு அபாயம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

...</summary>
            <content type="html"><![CDATA[<p>நுவரெலியா மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் கடும் மழை காரணமாக மண்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு அபாயம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால் லிந்துலை - நோநாவத்தை தோட்டக் குடியிருப்புகள் பெருமளவில் சேதமடைந்துள்ளன.</p><p></p><p>
</p><h2>
குடியிருப்புக்கள் சேதம்</h2><p>
இதனைத் தொடர்ந்து, அப்பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான வேறு இடங்களுக்கு தற்காலிகமாக குடியமர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>மேலும், தொடர்ந்தும் கடும் மழை பெய்து வருவதால் பொதுமக்கள் அவதானமாகவும், எச்சரிக்கையுடனும் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><p></p><p></p><p>&nbsp;</p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-03T07:17:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அடுத்து சிக்கப்போகும் முன்னாள் ஜனாதிபதியின் செல்லப்பிள்ளை; குற்றப்பத்திரிகை தாக்கல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/charge-sheet-filed-against-yoshitha-karannagoda-1785740586"></link>
            <id>https://jvpnews.com/article/charge-sheet-filed-against-yoshitha-karannagoda-1785740586</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;ஊழல் குற்றச்சாட்டு ஒன்று தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் புதல்வர் யோஷித ராஜபக்ஸ மற்றும் முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;ஊழல் குற்றச்சாட்டு ஒன்று தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் புதல்வர் யோஷித ராஜபக்ஸ மற்றும் முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட ஆகியோருக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

​</p><p>2006 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 1 ஆம் திகதிக்கும் 2007 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 8 ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலத்தில் இலங்கை கடற்படையின் தளபதியாகக் கடமையாற்றியபோது,</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/694046d6-21e8-463b-b57a-7b3cc744f7e4/26-6a703d2c6f2f3.webp' /></p><h2>யோஷித ராஜபக்ஸவிற்கும் எதிராகக் குற்றச்சாட்டுகள்</h2><p> </p><p>யோஷித ராஜபக்ஸ என்ற பிரதிவாதி பிரித்தானியாவின் அரச கடற்படைப் பயிற்சிப் கல்லூரியின் 'Royal Navy Young Officers Course' பாடநெறிக்குச் செல்வதற்கு முறையற்ற விதத்தில் சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்து அரசாங்கத்திற்கு நஷ்டத்தை ஏற்படுத்தியதாகக் குற்றம் சுமத்தி, முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொடவிற்கு எதிராகக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.</p><p></p><p> </p><p>

இதனூடாக முறையற்ற இலாபத்தைப் பெற்றுக் கொண்டமை தொடர்பில் பிரதிவாதியான யோஷித ராஜபக்ஸவிற்கும் எதிராகக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. 

​ பிரதிவாதிகளுக்கு எதிராக ஆணைக்குழுவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளின் எண்ணிக்கை 08 ஆகும்.</p><p>. 

​இக்குற்றப்பத்திரிகைகள் தற்போது கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன், அதனை பிரதிவாதிகளிடம் கையளிக்க எதிர்காலத்தில் நீதிமன்றத்தினால் அழைப்பாணை பிறப்பிக்கப்படவுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-03T07:12:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Farook Sihan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சாரதிக்கு ஏற்பட்ட திடீர் சுகயீனத்தினால் விபத்தில் சிக்கிய வாகனம்! ஒருவர் பலி - மற்றொருவர் காயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/kalmunai-accident-one-death-1785739965"></link>
            <id>https://tamilwin.com/article/kalmunai-accident-one-death-1785739965</id>
            <summary type="text">கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பாண்டிருப்பு தாழவட்டுவான் சந்தி பிரதான வீதி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (02) மாலை இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்து...</summary>
            <content type="html"><![CDATA[<p>கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பாண்டிருப்பு தாழவட்டுவான் சந்தி பிரதான வீதி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (02) மாலை இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.</p><p>மேலும் இந்த விபத்தில் மற்றொருவர் பலத்த காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p><p>&nbsp;</p><h2>சாரதிக்கு ஏற்பட்ட திடீர் சுகயீனம்</h2><p>



மட்டக்களப்பிலிருந்து கல்முனை நோக்கிச்சென்று கொண்டிருந்த சிறிய ரக வாகனம், தாழவட்டுவான் சந்தியை நெருங்கியபோது சாரதிக்கு ஏற்பட்ட திடீர் சுகயீனம் காரணமாகக கட்டுப்பாட்டை&nbsp; இழந்த வாகனம் வீதியோரத்தில் அமைந்திருந்த லொத்தர் விற்பனை நிலையத்திற்குள் அதிவேகமாக மோதி தலைகீழாக புரண்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/727eb22e-df38-45dc-a1a7-4717457ebeca/26-6a703ee8d2655.webp' />&nbsp;</p><p>இதில், விற்பனை நிலையத்தின் தூண்கள் பலத்த சேதமடைந்து கடை தரைமட்டமாகியுள்ளன.</p><p>



இந்த விபத்தில் படுகாயமடைந்த வாகன சாரதியும், லொத்தர் கடை உரிமையாளரும் உடனடியாக மீட்கப்பட்டு கல்முனை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர். எனினும், அங்கு சிகிச்சை பலனின்றி வாகன சாரதி உயிரிழந்துள்ளார்.</p><p>



இவ்வாறு உயிரிழந்தவர் பொலன்னறுவை பகுதியைச் சேர்ந்த கமகே சுனில் சாந்த (63 வயது) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.</p><p>



அதேவேளை, விபத்தில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் லொத்தர் விற்பனை நிலையத்தின் உரிமையாளரான மூர்த்திதம்பி வேணு தாஸ் (56 வயது) என பொலிஸார் தெரிவித்தனர்.</p><p>இச்சம்பவம் தொடர்பில் கல்முனைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-03T07:10:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இரண்டு உலங்கு வானூர்திகள் மோதி விபத்து; இருவர் பலி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/helicopter-collision-in-greece-two-dead-1785733850"></link>
            <id>https://canadamirror.com/article/helicopter-collision-in-greece-two-dead-1785733850</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;கிரீஸில் பரவி வரும் மிகப்பரிய காட்டுத்தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு உலங்கு வானூர்திகள் நடுவானில் மோதி விபத்துக்குள...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;கிரீஸில் பரவி வரும் மிகப்பரிய காட்டுத்தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு உலங்கு வானூர்திகள் நடுவானில் மோதி விபத்துக்குள்ளானதில் இரண்டு பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பதிவாகியுள்ளது.
</p><p>
நேற்று (02) நடந்த இந்த விபத்தில் டென்மார்க் நாட்டைச் சேர்ந்த விமானி ஒருவரும், கிரேக்க நாட்டைச் சேர்ந்த பணியாளர் ஒருவரும் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8755f394-6281-43d4-bfca-23cb54f04885/26-6a7022dc39a69.webp' /></p><p>
</p><p>
விபத்து நடந்த நேரத்தில் உலங்கு வானூர்திகளில் இருந்த பிரித்தானிய நாட்டைச் சேர்ந்த விமானி ஒருவரும், மற்றொரு கிரேக்க பணியாளரும் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
</p><p>
தற்போது ஐரோப்பா முழுவதும் நிலவும் கடுமையான வெப்பமான வானிலையால் காட்டுத்தீ தீவிரமாகப் பரவி வரும் நிலையில், தீயணைக்கும் சவாலான நடவடிக்கைகளின் போதே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-03T07:09:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ்ப்பாண சர்வதேச கிரிக்கெட் மைதானத்தின் கட்டுமானப் பணிகள் மீண்டும் ஆரம்பம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/jaffna-cricket-grounds-work-to-resume-1785738482"></link>
            <id>https://tamilwin.com/article/jaffna-cricket-grounds-work-to-resume-1785738482</id>
            <summary type="text">கிரிக்கெட் நிர்வாகத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் தீர்க்கப்பட்டவுடன், யாழ்ப்பாணம் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தின் கட்டுமானப் பணிகள் மீண்டும் தொடங்கும் என...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிரிக்கெட் நிர்வாகத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் தீர்க்கப்பட்டவுடன், யாழ்ப்பாணம் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தின் கட்டுமானப் பணிகள் மீண்டும் தொடங்கும் என விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே தெரிவித்துள்ளார். </p><p>பொது நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>அரசியல் நோக்கங்களுக்காக</h2><p> உள்ளரங்க விளையாட்டு அரங்கம் அடங்கிய இத்திட்டத்திற்கு ஏற்கனவே நிதி ஒதுக்கப்பட்டு, ஜனவரி மாதம் அடிக்கல் நாட்டப்பட்டதாகவும், செப்டெம்பர் மாதத்திற்குள் இந்த வசதியை நிறைவு செய்யும் நோக்கம் இருந்ததாகவும், ஆனால் அரசியல் உள்நோக்கம் கொண்ட குழுக்களால் நீதிமன்ற வழக்கு தொடரப்பட்டதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9b953a20-e9c3-4094-acf6-cf63fb22b66a/26-6a703bd08743a.webp' /></p><p>மேலும், அரசியல் குழுக்கள் யாழ்ப்பாண இளம் குழந்தைகளின் எதிர்கால வாய்ப்புகளை அழித்துவிட்டன.</p><p>அரசியல் நோக்கங்களுக்காக குழந்தைகளின் கனவுகளையும் விளையாட்டு வாய்ப்புகளையும் அழிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்" என அமைச்சர் கமகே தெரிவித்துள்ளார். </p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-03T07:06:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹட்டன்- போடைஸ் பிரதான வீதியில் கற்பாறை சரிவு: போக்குவரத்து பாதிப்பால் பயணிகள் அவதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/rockfall-on-hatton-bodice-main-road-1785740401"></link>
            <id>https://tamilwin.com/article/rockfall-on-hatton-bodice-main-road-1785740401</id>
            <summary type="text">ஹட்டன் - போடைஸ் பிரதான வீதியில் கற்பாறை சரிந்து விழுந்துள்ளது. 

இந்த சம்பவம் இன்று(03.08.2026) இடம்பெற்றுள்ளது. 

போடைஸ் பிரதான வீதியின் எல்பியன்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹட்டன் - போடைஸ் பிரதான வீதியில் கற்பாறை சரிந்து விழுந்துள்ளது. </p><p>

இந்த சம்பவம் இன்று(03.08.2026) இடம்பெற்றுள்ளது. </p><p>

போடைஸ் பிரதான வீதியின் எல்பியன் பகுதியில் பாரிய கற்பாறை ஒன்று சரிந்து விழுந்ததால் அந்தப் பகுதியில் போக்குவரத்து முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>

போக்குவரத்து பாதிப்பு</h2><p>

இந்தக் கற்பாறை சரிவினால் ஹட்டனிலிருந்து போடைஸ், டயகம பகுதிகளுக்குச் செல்லும் குறுக்கு வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/af59cff3-7d5f-415c-a377-ef634e8972d6/26-6a703cd32ce20.webp' /></p><p>

எனவே, பொதுமக்கள் மற்றும் வாகன சாரதிகள் பாதுகாப்பு கருதி குறித்த வீதியை பயன்படுத்துவதைத் தவிர்த்து மாற்று வழிகளை பயன்படுத்துமாறு ஹட்டன் வலய பொலிஸ் தலைமையதிகாரி பிரதீப் வீரசேகர வேண்டுகோள் விடுத்துள்ளார்.
</p><p>
கற்பாறையை அகற்றி வீதியை மீண்டும் போக்குவரத்துக்குத் திறப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.&nbsp;</p><p></p><p></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-03T07:02:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[படு கவர்ச்சி உடை அணிந்து நடிகை ராஷி கண்ணா எடுத்த போட்டோ ஷுட்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/actress-raashi-khanna-glamour-photoshoot-1785737771"></link>
            <id>https://cineulagam.com/article/actress-raashi-khanna-glamour-photoshoot-1785737771</id>
            <summary type="text">ராஷி கண்ணாநடிகை ராஷி கண்ணா, தென்னிந்திய சினிமாவில் வலம் வரும் இளம் நடிகைகளில் ஒருவர். இவர் குறித்து கடைசியாக வெளியான தகவல் என்னவென்றால், ராஷி கண்ணா ரஜ...</summary>
            <content type="html"><![CDATA[<h2>ராஷி கண்ணா</h2><p>நடிகை ராஷி கண்ணா, தென்னிந்திய சினிமாவில் வலம் வரும் இளம் நடிகைகளில் ஒருவர். </p><p>இவர் குறித்து கடைசியாக வெளியான தகவல் என்னவென்றால், ராஷி கண்ணா ரஜினியின் தர்மன் படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார் என்பது தான். </p><p>அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ரஜினிகாந்த், சிம்ரன், ராஷி கண்ணா உள்ளிட்ட பலர் நடித்துவரும் இப்படப்பிடிப்பு பிஸியாக நடந்து வருகிறது. </p><p>இப்பட படப்பிடிப்பில் நடிகை ராஷி கண்ணாவிற்கு ரஜினி ஒரு புத்தகம் பரிசு கொடுத்துள்ளார். இந்த நிலையில் நடிகை ராஷி கண்ணா கருப்பு நிறத்தில் படு கவர்ச்சியாக உடை அணிந்து புகைப்படங்கள் வெளியிட்டுள்ளார். </p><p>இதோ போட்டோஸ்,</p><p><br></p>]]></content>
            <updated>2026-08-03T07:00:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Bavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[தொல்லியல் ஊடாக தமிழ் மக்களின் பூர்வீக நிலங்களை நுட்பமாக பறித்தெடுக்கும் அரசாங்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/govt-that-seizes-the-lands-of-the-tamil-people-1785740394"></link>
            <id>https://ibctamil.com/article/govt-that-seizes-the-lands-of-the-tamil-people-1785740394</id>
            <summary type="text">வடக்கு - கிழக்கில் தொல்லியல் ஊடாக சட்டரீதியாக என கூறப்படுகின்ற வகையில் திட்டமிட்ட
முறையில் தமிழ் மக்களின் பூர்வீக நிலங்களை பறித்தெடுத்து அவர்களின் வா...</summary>
            <content type="html"><![CDATA[<p>வடக்கு - கிழக்கில் தொல்லியல் ஊடாக சட்டரீதியாக என கூறப்படுகின்ற வகையில் திட்டமிட்ட
முறையில் தமிழ் மக்களின் பூர்வீக நிலங்களை பறித்தெடுத்து அவர்களின் வாழ்வாதார
நிலங்களை சிதைப்பதற்கான நடவடிக்கையை மிக நுட்பமான முறையில் இந்த அரசு செய்து
வருகிறது என நாடாளுமன்ற உறுப்பினர் இளையதம்பி சிறிநாத் தெரிவித்துள்ளார்.</p><p> 

மட்டக்களப்பில் உள்ள அவரது காரியாலயத்தில் இன்று (03.08.2026)
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
</p><p>
மேலும் கருத்து வெளியிட்ட அவர்,</p><p></p><h2>எதிர்கால குடிநீர் தேவை</h2><p>''மிக முக்கியமாக சமகால அரசு பல வாக்குறுதிகளை தந்திருந்தது இருந்தபோதும் தமிழ்
மக்களுக்கு அரசியல் உரிமை சம்மந்தமாக இந்த அரசு ஆட்சியை பொறுப்பேற்று
ஒன்றரை வருடம் ஆகியும் இது சம்பந்தமாக எந்த நடவடிக்கைகள் எடுக்கப்படாத ஒரு
நெருக்கடியான சூழ்நிலை இருக்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b692be6e-7615-420a-82dd-36144ff6f6ab/26-6a703c6c57c3d.webp' /></p><p>
அதற்கு அப்பால் தமிழ் மக்களுக்கு ஒரு பூரணப்படுத்தப்படாத தீர்வாக இருக்கின்ற
விடயமாக இருந்தாலும் 13 வது திருத்தச்சட்டம் மூலம் கிடைத்த அந்த மாகாணசபை
தொடராமல் அல்லது அது உறுதிப்படுத்தப்படாமல் இருக்கின்ற நிலைமை இருக்கிறது.</p><p>இவ்வாறான சந்தர்ப்பத்தில் தமிழ் மக்களின் வாழ்வாதார பொருளாதார நிலைமைகளை
மேம்படுத்துவதற்கு பல விடயங்கள் கூட இன்று பாரியளவில் கொண்டு செல்லப்படாமல்
இருக்கிறது.</p><p>

மட்டக்களப்பு மாவட்டத்தில் மிக அண்மையில் மாவட்ட அபிவிருத்திக்குழு
கூட்டத்தில் பல விடயங்கள் முன்வைக்கின்ற முக்கியமாக கித்துள் முந்தனை ஆறு நீர்
பாசன திட்டம் சம்பந்தமாக மாவட்டத்தில் அடிப்படையாக விவசாயம் பொருளாதாரத்தையும்
அதோடு மீன்பிடி வெள்ள தடுப்பு நடவடிக்கை எதிர்கால குடிநீர் தேவைகொண்டு செல்ல
வேண்டிய திட்டம் ஒதுக்கப்பட்ட ஆய்வுகளுக்கான நிதியில் ஒரு வீதம்
பயன்படுத்தப்பட்டதாக அறிக்கை காட்டப்பட்டது.
</p><p>
இது மிக மனவருத்தமான விடயம். அது மட்டுமல்ல அது சம்மந்தமாக கேள்வி எழுப்பி
இருந்தோம். அதற்கு உரிய தீர்வுகள் முன்வைக்கப்படவில்லை" என்றார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-03T07:00:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[உச்சக்கட்ட கிளாமர் ஆடையில் நடிகை ராஷி கண்ணா!! புகைப்படங்கள்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/raashii-khanna-recent-photoshoot-post-viral-1785741150"></link>
            <id>https://viduppu.com/article/raashii-khanna-recent-photoshoot-post-viral-1785741150</id>
            <summary type="text">ராஷி கண்ணாபாலிவுட்டில் 2013ல் வெளியான Madras Cafe படத்தின் மூலம் அறிமுகமாகி தெலுங்கு சினிமா பக்கம் சென்று பிரபலமானவர் தான் நடிகை ராஷி கண்ணா.

சினிமா...</summary>
            <content type="html"><![CDATA[<h2>ராஷி கண்ணா</h2><p>பாலிவுட்டில் 2013ல் வெளியான Madras Cafe படத்தின் மூலம் அறிமுகமாகி தெலுங்கு சினிமா பக்கம் சென்று பிரபலமானவர் தான் நடிகை ராஷி கண்ணா.
</p><p>
சினிமாவில் அறிமுகமாகி 5 ஆண்டுகளுக்கு பின் தமிழில் இமைக்கா நொடிகள், அடங்க மறு, அயோக்யா, சங்கத்தமிழன் போன்ற படங்களில் கமிட்டாகி நடித்து தமிழ் ரசிகர்களை கவர்ந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/25621eea-e516-4a76-a34a-6596c51756ab/26-6a703f60a0ca3.webp' /></p><p>
இதனையடுத்து திருச்சிற்றம்பலம், சர்தார், அரண்மனை 4, அகத்தியா போன்ற படங்களில் நடித்தார். தற்போது இந்தி பக்கம் சென்றுள்ள ராஷி கண்ணா, கிளாமர் லுக்கில் நடித்து அசத்தி வருகிறார்.</p><p>

தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தர்மன், ரவுடி அண்ட் கோ போன்ற படங்களில் கமிட்டாகியுள்ளார். இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் ராஷி, தற்போது உள்ளாடையுடன் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.</p><p><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/p/DbkSwj_EUcC/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/p/DbkSwj_EUcC/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/p/DbkSwj_EUcC/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by Raashii Khanna (@raashiikhanna)</a></p></div></blockquote> <script async src="//www.instagram.com/embed.js"></script></p>]]></content>
            <updated>2026-08-03T07:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[போர் ஒருபக்கம்... உச்சம் தொடும் ரஷ்யாவின் உற்பத்தி வளர்ச்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/russia-manufacturing-growth-1785740196"></link>
            <id>https://news.lankasri.com/article/russia-manufacturing-growth-1785740196</id>
            <summary type="text">உக்ரைனுடனான போர் ஒருபக்கம் நீடிக்கும் நிலையிலும் ஜூலை மாதத்தில் ரஷ்யாவின் உற்பத்தித் துறை மிக வேகமான வளர்ச்சியைக் கண்டுள்ளது.வேகமான வளர்ச்சி
உள்நாட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>உக்ரைனுடனான போர் ஒருபக்கம் நீடிக்கும் நிலையிலும் ஜூலை மாதத்தில் ரஷ்யாவின் உற்பத்தித் துறை மிக வேகமான வளர்ச்சியைக் கண்டுள்ளது.</p><h2>வேகமான வளர்ச்சி</h2><p>
உள்நாட்டுத் தேவை அதிகரித்ததன் விளைவாக உற்பத்தி மற்றும் புதிய ஆர்டர்கள் உயர்ந்ததால், ஜூலை மாதத்தில் ரஷ்யாவின் உற்பத்தித் துறை கடந்த 18 மாதங்களில் இல்லாத அளவுக்கு மிக வேகமான வளர்ச்சியைக் கண்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7795f190-350c-4a58-8dae-e78a52b3e379/26-6a703e3f13b98.webp' /></p><p> </p><p>S&amp;P Global நடத்திய ஆய்வின் அடிப்படையில், ரஷ்யாவின் உற்பத்தித் துறைக்கான 'பர்ச்சேசிங் மேனேஜர்ஸ் இன்டெக்ஸ்' (PMI) ஜூன் மாதத்தில் இருந்த 50.3 புள்ளிகளிலிருந்து ஜூலை மாதத்தில் 50.7 புள்ளிகளாக உயர்ந்துள்ளது. </p><p>இதில் 50 புள்ளிகள் என்பது வளர்ச்சி மற்றும் சுருக்க நிலைகளை வேறுபடுத்தும் அளவுகோலாக உள்ளது. ஜூலை மாதத்தில் உற்பத்தி தொடர்ந்து மூன்றாவது மாதமாக அதிகரித்தது; அத்துடன், விரிவாக்கத்தின் வேகம் ஜனவரி 2025-க்குப் பிறகு மிக உயர்ந்த அளவை எட்டியுள்ளது. </p><p>புதிய ஒப்பந்தங்களும் தொடர்ந்து இரண்டாவது மாதமாக அதிகரித்ததோடு, மே 2025-க்குப் பிறகு மிக வேகமான விகிதத்தில் உயர்ந்துள்ளன. இருப்பினும், வெளிநாட்டுத் தேவை மந்தமாகவே நீடித்து வருகிறது.</p><p></p><p> </p><p>புதிய ஏற்றுமதி ஒப்பந்தங்கள் மீண்டும் கடுமையாகக் குறைந்துள்ளன; அக்டோபர் 2022-க்குப் பிறகு மிக வேகமான சரிவு இதுவாகும். அதேவேளையில், முக்கிய சர்வதேசச் சந்தைகளில் வாடிக்கையாளர் தேவை குறைவாக இருந்ததே வெளிநாடுகளிலிருந்தான விற்பனையைப் பாதித்ததாக நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. </p><p>மேலும், தாமாகவே வேலையை விட்டுச் சென்றவர்களின் இடங்களை உற்பத்தியாளர்கள் நிரப்பாததால் வேலைவாய்ப்பு மீண்டும் குறைந்தது; இருப்பினும், வேலைவாய்ப்பு குறைப்பு வேகம் கடந்த நான்கு மாதங்களில் இல்லாத அளவிற்கு மிதமானதாக இருந்தது.</p><h2>விலையேற்ற விகிதம்</h2><p> </p><p>நிறுவனங்களிடம் போதுமான உற்பத்தித் திறன் இருந்ததால், தொடர்ந்து 18-வது மாதமாகவும் நிலுவையில் உள்ள பணிகளின் அளவு குறைந்தது.
விலை உயர்வு அழுத்தங்கள் தீவிரமடைந்துள்ளன. </p><p>எரிபொருள் பற்றாக்குறை, போக்குவரத்துச் சிக்கல்கள் மற்றும் விநியோகஸ்தர்களின் விலை உயர்வு ஆகியவற்றால், உள்ளீட்டுச் செலவு பணவீக்கம் ஜனவரி 2026-க்குப் பிறகு மிக வேகமான வளர்ச்சியை எட்டியது; அதேவேளையில், உற்பத்திப் பொருட்களுக்கான விலையேற்ற விகிதம் கடந்த ஆறு மாதங்களில் இல்லாத அளவுக்கு உச்சத்தை எட்டியது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f19ca41c-10b4-4b62-8dbb-7ac1a5fa034c/26-6a703e3fd7fc8.webp' /></p><p> </p><p>விநியோகத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளையும் இந்த ஆய்வு சுட்டிக்காட்டியுள்ளது; இதன்படி, விநியோகஸ்தர்களின் சரக்கு விநியோக நேரம் பிப்ரவரி 2025-க்குப் பிறகு மிக அதிக அளவில் அதிகரித்துள்ளது. </p><p>வாடிக்கையாளர்களிடையே நிலவும் நிச்சயமற்ற தன்மை மற்றும் அதிகரித்த போட்டி ஆகிய காரணங்களை நிறுவனங்கள் சுட்டிக்காட்டிய நிலையில், வணிக நம்பிக்கை மே 2020-க்குப் பிறகு மிகக் குறைந்த அளவை எட்டியுள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-03T06:54:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[சனி மங்கள யோகம் 2026: நிதி நிலையில் அதிர்ஷ்டம் பெறப்போகும் டாப் 3 ராசிகள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/shani-mangal-yog-on-03-august-who-get-luck-1785736557"></link>
            <id>https://manithan.com/article/shani-mangal-yog-on-03-august-who-get-luck-1785736557</id>
            <summary type="text">ஜோதிட சாஸ்திரத்தின் படி, நவகிரகங்கள் ஒவ்வொன்றும் குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களது ராசியை மாற்றுகின்றன. அதேபோல், அவை மற்ற கிரகங்களுடன் இணைவதன் மூலமோ...</summary>
            <content type="html"><![CDATA[<p></p><p>ஜோதிட சாஸ்திரத்தின் படி, நவகிரகங்கள் ஒவ்வொன்றும் குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களது ராசியை மாற்றுகின்றன. அதேபோல், அவை மற்ற கிரகங்களுடன் இணைவதன் மூலமோ அல்லது குறிப்பிட்ட கிரக நிலைகளின் காரணமாகவோ சுப மற்றும் அசுப யோகங்களை உருவாக்குகின்றன. </p><p>இந்த கிரக மாற்றங்களும் யோகங்களும் 12 ராசியிகளின் வாழ்க்கையில் பல்வேறு விதமான தாக்கங்களை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cb4c69d4-511f-4fcf-967b-a07bff3bb037/26-6a7035445f861.webp' /></p><p>
</p><p>
அந்த வகையில், சுமார் இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை ராசியை மாற்றும் நீதிமான் சனி பகவானும், தைரியம், வீரம், வலிமை ஆகியவற்றின் அடையாளமாகவும், கிரகங்களின் தளபதியாகவும் கருதப்படும் செவ்வாய் பகவானும் ஆகஸ்ட் 3 ஆம் தேதி இணைந்து சனி மங்கள யோகத்தை உருவாக்குகின்றனர்.
</p><p>
இந்த மங்களகரமான யோகத்தின் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரை உள்ள அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் ஏதாவது ஒரு வகையில் வெளிப்படும். </p><p>குறிப்பாக, மூன்று ராசிக்காரர்கள் இந்த யோகத்தின் மூலம் செல்வ வளம், அதிர்ஷ்டம் மற்றும் முன்னேற்றத்தைப் பெறுவார்கள் என்று கூறப்படுகிறது. அப்படி கூடுதல் அதிர்ஷ்டத்தை அனுபவிக்கப்போகும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.</p><p></p><h2>மிதுனம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/05afc175-ee0e-4767-814a-de9100972efc/26-6a70354510d3c.webp' /></p><p>சனி மற்றும் செவ்வாயின் சேர்க்கையால் உருவாகும் சனி மங்கள யோகம், மிதுன ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமான பலன்களைத் தரும் எனக் கூறப்படுகிறது.குறிப்பாக, எதிர்பாராத வழிகளில் பண வரவு அதிகரிக்க வாய்ப்புள்ளது.</p><p>நீண்ட காலமாக கிடைக்காமல் இருந்த பணம் கைக்கு வரும் சூழல் உருவாகலாம்.

வேலை செய்பவர்களுக்கு பதவி உயர்வு அல்லது புதிய பொறுப்புகள் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் உயரும். போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகி வருபவர்களுக்கு வெற்றி உறுதி.&nbsp;</p><h2>
மகரம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/606df16b-9a91-421b-a61c-c43c64c41d45/26-6a703545b94ea.webp' /></p><p>சனி மற்றும் செவ்வாயின் சேர்க்கையால் உருவாகும் சனி மங்கள யோகம், மகர ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பல சாதகமான மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும்.</p><p> வேலை காரணமாக அடிக்கடி பயணங்கள் மேற்கொள்ள வேண்டிய சூழல் உருவாகலாம். அதே நேரத்தில், முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புகளும் தேடி வரும்.
</p><p>
நிதி நிலைமை மேம்படும். தொழில் மற்றும் பணியிடத்தில் எதிர்பாராத முன்னேற்றம் கிடைக்கலாம். சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்பும் உள்ளது. அதோடு, புதிய வருமான வாய்ப்புகளும் உருவாகக்கூடும்.
</p><h2>
விருச்சிகம்
</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f25c8502-caf1-4a51-8f33-abf1f0c0129a/26-6a7035466bebf.webp' /></p><p></p><p>சனி மற்றும் செவ்வாயின் சேர்க்கையால் உருவாகும் சனி மங்கள யோகத்தின் தாக்கத்தால், விருச்சிக ராசிக்காரர்கள் பல செயல்களில் வெற்றியை அடையக்கூடும்.</p><p>நீண்ட காலமாக மனதில் வைத்திருந்த ஆசைகள் நிறைவேறும் வாய்ப்பு உள்ளது. ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகரித்து, வாழ்க்கையில் நல்ல மாற்றங்களை உணரலாம்.
</p><p>
பணியிடத்தில் கடின உழைப்புக்கு உரிய அங்கீகாரமும் பலனும் கிடைக்கும். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் உயரும். அதிர்ஷ்டத்தின் ஆதரவும் இந்தக் காலத்தில் அதிகமாக இருக்கும்.</p><b>இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;&nbsp;</b><p></p><p><b><br></b></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"><b>FOLLOW NOW</b></a></u></td></tr></tbody></table><p>
</p><p><br></p><p><br></p><p><br></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-03T06:52:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[டெங்குவால் கர்ப்பிணி பெண்ணும் சிசுவும் பலி; பெரும் சோகம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/a-pregnant-mother-and-unborn-child-died-dengue-1785739656"></link>
            <id>https://jvpnews.com/article/a-pregnant-mother-and-unborn-child-died-dengue-1785739656</id>
            <summary type="text">&amp;nbsp;இலங்கையில் டெங்கு பாதிப்பு தீவிரமடைந்து வரும் நிலையில், கர்ப்பிணிப் பெண் ஒருவரும் அவரது ஏழு மாதக் கருவில் இருந்த குழந்தையும் டெங்குவால் உயிரிழந்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;இலங்கையில் டெங்கு பாதிப்பு தீவிரமடைந்து வரும் நிலையில், கர்ப்பிணிப் பெண் ஒருவரும் அவரது ஏழு மாதக் கருவில் இருந்த குழந்தையும் டெங்குவால் உயிரிழந்துள்ளனர்.</p><p>

வடுவாவைச் சேர்ந்த அப்பெண், கடுமையான உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டார். 

மருத்துவர்களின் தீவிர முயற்சிகளுக்குப் பிறகும், தாயையும் குழந்தையையும் காப்பாற்ற முடியவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f781b37b-acfe-4697-a319-90f63fb81542/26-6a70398972da5.webp' /></p><h2>&nbsp;இதுவரை இலங்கையில் 86,386 டெங்கு பாதிப்புகள்</h2><p>
</p><p>
அதிகாரப்பூர்வத் தரவுகளின்படி, 2026-ஆம் ஆண்டில் இதுவரை இலங்கையில் 86,386 டெங்கு பாதிப்புகள் பதிவாகியுள்ளன. இதில் 62 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன, மேலும் இறப்பு விகிதம் 0.07% ஆக உள்ளது. </p><p>ஜூலை மாதத்தில் மட்டும் சுமார் 30,000 பேருக்குத் தொற்று ஏற்பட்டுள்ளது; ஆகஸ்ட் மாதத்தில் இதுவரை 1,000-க்கும் மேற்பட்ட பாதிப்புகள் பதிவாகியுள்ளன.

மேல் மாகாணமே டெங்குவால் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p>மொத்த பாதிப்புகளில் பாதிக்கும் மேற்பட்டவை (45,675) இங்குதான் பதிவாகியுள்ளன. இதில் கம்பஹா (18,321) மற்றும் கொழும்பு (17,101) மாவட்டங்கள் முன்னணியில் உள்ளன. தென் மாகாணத்தில் 12,969 பாதிப்புகளும், மத்திய மாகாணத்தில் 7,567 பாதிப்புகளும் பதிவாகியுள்ளன.
</p><p>
பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால், கொசு ஒழிப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்துமாறும், பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறும் சுகாதார அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-03T06:45:35+00:00</updated>
        </entry>
    </feed>
