<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-07-24T19:40:58+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஐரோப்பாவிற்கு கடத்த முயன்ற 317 மில்லியன் டொலர் பெறுமதியான போதைப்பெருள் பறிமுதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/cocaine-worth-317-million-smuggled-to-europe-1784918535"></link>
            <id>https://tamilwin.com/article/cocaine-worth-317-million-smuggled-to-europe-1784918535</id>
            <summary type="text">மேற்கு ஆப்பிரிக்க நாடான லைபீரியாவில், ஐரோப்பாவிற்கு கடத்தப்படவிருந்த சுமார்
$317 மில்லியன் பெறுமதியான கொக்கைன் போதைப்பொருளை அதிகாரிகள் பறிமுதல்
செய்...</summary>
            <content type="html"><![CDATA[<p>மேற்கு ஆப்பிரிக்க நாடான லைபீரியாவில், ஐரோப்பாவிற்கு கடத்தப்படவிருந்த சுமார்
$317 மில்லியன் பெறுமதியான கொக்கைன் போதைப்பொருளை அதிகாரிகள் பறிமுதல்
செய்துள்ளனர்.
</p><p>
இது அந்நாட்டின் வரலாற்றிலேயே மிகப்பெரிய போதைப்பொருள் வேட்டைகளில் ஒன்றாகும்.</p><p>

தலைநகர் மன்ரோவியாவிற்கு கிழக்கே உள்ள டுவாசோன் என்ற நகரில் உள்ள ஒரு வீட்டில்
சோதனை நடத்திய காவல்துறையினர், 3,971 கிலோ எடையுள்ள கொக்கைன் போதைப்பொருளைக்
கைப்பற்றினர்.</p><p></p><h2>இருவர் கைது&nbsp;</h2><p>

அட்டைப்பெட்டிகள் மற்றும் பயணப் பைகளில் 'கோகோ' மற்றும் 'போஸைடான்' எனக்
குறியிடப்பட்டு இவை மறைத்து வைக்கப்பட்டிருந்தன.
</p><p>
இந்த கடத்தல் சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் ஒருவர்
ஸ்பெயின் மற்றும் கொலம்பியா நாடுகளின் கடவுச்சீட்டுகளையும், மற்றொருவர்
செர்பிய நாட்டின் கடவுச்சீட்டையும் வைத்துள்ளனர்.</p><p>
</p><p>
தென் அமெரிக்காவில் இருந்து ஐரோப்பாவிற்கு கொக்கைன் கடத்துவதற்குப்
போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மேற்கு ஆப்பிரிக்க நாடுகளை ஒரு முக்கிய
இடைத்தாவளமாகப் பயன்படுத்தி வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5710e7ca-ee91-46e9-bcd8-93bf8de3623f/26-6a63bf4fe60a7.webp' /></p><p>
</p><p>
கடந்த மாதமும் மன்ரோவியா விமான நிலையத்தில் $19 மில்லியன் மதிப்பிலான கொக்கைன்
பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
</p><p>
தற்போது உலக அளவில் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் தங்களின் பாதைகளை மாற்றி,
பெருமளவிலான போதைப்பொருட்களை மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் சேமித்து வைத்து
கடத்தி வருவதாக ஐக்கிய நாடுகள் சபையின் போதைப்பொருள் மற்றும் குற்றப்பிரிவு
அலுவலகம் தெரிவித்துள்ளது.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-24T19:40:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[புதிய எபோலா தடுப்பூசி: சோதனைக்கு முன்வந்த உலகின் முதல் மனிதர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/first-human-trial-of-new-ebola-vaccine-1784921179"></link>
            <id>https://news.lankasri.com/article/first-human-trial-of-new-ebola-vaccine-1784921179</id>
            <summary type="text">இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டில், 37 வயதான எட் ஹன்ட் (Ed Hunt) என்ற இளைஞர், புதிய எபோலா தடுப்பூசி சோதனைக்கு உலகில் முதல் நபராக முன்வந்துள்ளார்.காங்கோவில் ஏ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டில், 37 வயதான எட் ஹன்ட் (Ed Hunt) என்ற இளைஞர், புதிய எபோலா தடுப்பூசி சோதனைக்கு உலகில் முதல் நபராக முன்வந்துள்ளார்.</p><p>காங்கோவில் ஏற்பட்ட எபோலா பரவல் குறித்து செய்திகளை பார்த்தபின், மனிதர்களுக்காக தன்னால் இயன்ற உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் அவர் இந்த முயற்சியில் கலந்து கொண்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e36026ce-5bc3-4753-9895-6a69bcbcbbda/26-6a63bc5d69bdf.webp' /></p><p>இந்த தடுப்பூசி, ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராசெனெகா கோவிட் தடுப்பூசி உருவாக்கத்தில் பயன்படுத்திய அதே தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு, வெறும் எட்டு வாரங்களில் உருவாக்கப்பட்டது.</p><p>தற்போது 18 முதல் 55 வயதுக்குள் உள்ள 50 ஆரோக்கியமான தன்னார்வலர்கள் இந்த சோதனையில் பங்கேற்க உள்ளனர்.</p><p>
</p><p></p><p>ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் தெரசா லாம்ப் தலைமையிலான குழு, இந்த தடுப்பூசி புந்திபுக்யோ வகை எபோலா வைரஸுக்கு எதிராக பாதுகாப்பு அளிக்குமா என்பதை ஆராய்கிறது. இந்த சோதனையில் யாருக்கும் எபோலா வைரஸ் கொடுக்கப்படாது. பாதுகாப்பும், நோய் எதிர்ப்பு சக்தியும் மட்டுமே பரிசோதிக்கப்படுகிறது.
</p><p>
இப்போது வரை, புந்திபுக்யோ வகை எபோலாவுக்கு எதிராக நான்கு தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டுள்ளன. ஆனால், மனிதர்கள் மீது சோதனைக்கு வந்திருப்பது இதுவே முதலாவது. இந்தியாவின் சீரம் இன்ஸ்டிட்யூட் ஏற்கனவே 6 லட்சம் டோஸ்களை தயாரித்து வைத்துள்ளது.
</p><p></p><p>காங்கோவில் இதுவரை 2,500க்கும் மேற்பட்ட எபோலா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. அதில் 1,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். </p><p>இந்த புதிய தடுப்பூசி வெற்றிகரமாக இருந்தால், உலகளவில் எபோலா பரவலை கட்டுப்படுத்துவதில் பெரும் முன்னேற்றமாக இருக்கும்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-24T19:24:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஒருபக்கம் காதலன், மறுபக்கம் திருமணமானவருடன் பழக்கம்; சடலமாக கிடந்த பெண் பொலிஸ் அதிகாரி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/police-probe-death-of-female-officer-1784920487"></link>
            <id>https://jvpnews.com/article/police-probe-death-of-female-officer-1784920487</id>
            <summary type="text">இந்தியாவில் பெண் பொலிஸ் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர் 24 வயதுடைய...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">இந்தியாவில் பெண் பொலிஸ் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p style="text-align: justify;">

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர் 24 வயதுடைய பெண் பொலிஸ் அதிகாரி பொலிஸ் குடியிருப்பில் தங்கி பணிபுரிந்து வந்துள்ளார்.</p><p style="text-align: justify;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f7bf1b03-86d9-46be-aa29-4825733a0b73/26-6a63ba0bc1f63.webp' /></p><h2 style="text-align: justify;">முதற்கட்ட விசாரணை</h2><p>
</p><p style="text-align: justify; ">
காலை நீண்ட நேரமாக அவரது அறை தறக்கப்படாமல் பூட்டியே இருந்தது. இதனால் சந்தேக மடைந்த சக பொலிசார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது, ரஞ்சனி அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
</p><p style="text-align: justify;">

பொலிசாரின் முதற்கட்ட விசாரணையில், குறித்த இளம் பெண்ணுக்கு ஆண் பொலிஸ் ஒருவருடன் பழக்கம் இருந்ததாகவும், இவர்களது காதல் தொடர்பு குறித்து இரு தரப்பு குடும்பத்தினருக்கும் தெரிந்திருந்ததாகவும் கூறப்படுகிறது.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;">&nbsp;திருமணத்திற்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வந்துள்ளன. இந்த நிலையில் திருப்பூரில் பணியாற்றி வரும் திருமணமான பொலிஸ் ஒருவருடன் ரஞ்சினிக்கு பழக்கம் இருந்தாக கூறப்படுகிறது. மேலும் செல்போனில் இருவரும் அடிக்கடி பேசி வந்ததாக கூறப்படுகிறது.
</p><p style="text-align: justify;">
இந்த விவகாரம் காதலனுக்கு தெரியவந்தது. இதனால் ஆத்திரமடைந்த காதலன் ரஞ்சனியுடன் பேசி வந்த அந்த திருமணமான பொலிஸ்காரரை நேரில் சென்று மிரட்டியுள்ளார். "எங்களுக்குத் திருமணம் நிச்சயமாகி உள்ளது.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;">இனி ரஞ்சனியுடன் பேசுவதையும் தொடர்புகொள்வதையும் நிறுத்திக் கொள்ள வேண்டும்" எனக் கண்டிப்புடன் கூறியுள்ளார்.

இதன் தொடர்ச்சியாக, ரஞ்சனிக்கும் அவரது காதலனுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. </p><p style="text-align: justify;">சம்பவத்தன்றும் ரஞ்சனி தனது காதலனுடன் செல்போனில் வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளார். அவ்வாறு காதலனுடன் போனில் சண்டைபோட்டபடியே வீட்டிற்குள் சென்ற ரஞ்சனி,மன உளைச்சலில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-24T19:14:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[அர்ச்சுனாவை திணறடித்த நீதிமன்றம் - தமிழ் எம்பிக்களுக்கு அநுர அரசு விடுக்கும் எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/archuna-mp-court-tamil-mps-anura-govnt-1784916092"></link>
            <id>https://tamilwin.com/article/archuna-mp-court-tamil-mps-anura-govnt-1784916092</id>
            <summary type="text">நீதிமன்றத்தால், நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனை கைது செய்ய பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.&amp;nbsp;இந்நிலையில், இந்த விவகாரம் இன்றைய நாடாளுமன்ற அம...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீதிமன்றத்தால், நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனை கைது செய்ய பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.&nbsp;</p><p>இந்நிலையில், இந்த விவகாரம் இன்றைய நாடாளுமன்ற அமர்வில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியிருந்தது.</p><p> </p><p> 

இன்றைய நாடாளுமன்ற அமர்வில் அர்ச்சுனா எம்.பி கலந்து கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் அவரை கைது செய்ய நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது.</p><p>ஆனால், இன்று நாடாளுமன்ற அமர்வு இருப்பதாக நீதிமன்றத்திற்கு அறிவித்த போதும் இவ்வாறு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், தனது சிறப்புரிமைகள் மீறப்பட்டுள்ளதாகவும் சபை அமர்வின்போது அர்ச்சுனா இராமநாதன் கூறினார்.&nbsp;</p><p>எனவே, அர்ச்சுனா இராமநாதன் நாடாளுமன்றத்தில் இருந்தபோது, ​​அவரை கைது செய்ய நீதிமன்றம் எவ்வாறு பிடியாணை பிறப்பித்தது என்று எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா கேள்வி எழுப்பினார்.&nbsp;</p><p>இது உள்ளிட்ட பல அரசியல் நகர்வுகள் குறித்து ஆராய்கின்றது நாட்டு நடப்பு நிகழ்ச்சி,&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/U0SEwM9rO9g" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-24T18:54:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானுக்கான ஆயுத விநியோகம்...! சீனா - ரஷ்யாவிற்கு ட்ரம்ப் விடுத்துள்ள பகிரங்க எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/china-russia-supply-weapons-to-iran-trump-ann-1784913684"></link>
            <id>https://ibctamil.com/article/china-russia-supply-weapons-to-iran-trump-ann-1784913684</id>
            <summary type="text">சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் ஈரானுக்கு ஆயுதங்களை வழங்கவில்லை என்றும் இரு நாடுகளின் தலைவர்களும் தமக்கு இது குறித்து உறுதியளித்துள்ளதாகவும் அமெரிக்க ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் ஈரானுக்கு ஆயுதங்களை வழங்கவில்லை என்றும் இரு நாடுகளின் தலைவர்களும் தமக்கு இது குறித்து உறுதியளித்துள்ளதாகவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
</p><p>
தனது உத்தியோகபூர்வ ட்ரூத் சோஷியல் (Truth Social) தளத்தில் இது குறித்து அவர் பதிவொன்றை பதிவிட்டுள்ளார்.
</p><p>

குறித்த பதிவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “பெய்ஜிங்கில் நடைபெற்ற எங்களது சமீபத்திய சந்திப்பின் போது எக்காரணம் கொண்டும் ஈரானிய இஸ்லாமியக் குடியரசுக்கு ஆயுதங்களை வழங்கவோ அல்லது விற்பனை செய்யவோ மாட்டேன் என ஜனாதிபதி ஷி ஜின்பிங் என்னிடம் உறுதியளித்தார்.</p><p></p><h2>மோசமான விளைவுகள்</h2><p>

அதில் சீன நிறுவனங்களும் அடங்கும்.
</p><p>
எங்களது உறவைக் கருத்தில் கொண்டு அவரது வார்த்தையை நான் நம்புகிறேன்.</p><p> </p><p><iframe src="https://truthsocial.com/@realDonaldTrump/116975606621428184/embed" class="truthsocial-embed" style="max-width: 100%; border: 0" width="600" allowfullscreen="allowfullscreen"></iframe><script src="https://truthsocial.com/embed.js" async="async"></script></p><p>தவிர, நானும் அவருக்குப் பெரிய உதவிகளைச் செய்து வருகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
</p><p>
அத்துடன், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினும், மோஸ்கோ ஈரானுக்கு ஆயுதங்களை விற்காது எனத் தன்னிடம் தெரிவித்ததாக ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
இதன் மூலம் ஈரானுடன் தொடர்புபடுத்திப் பேசப்படும் இரு முக்கிய உலக நாடுகளும் போரில் பங்கேற்கவில்லை என்றும் ஒருவேளை அவர்கள் அப்படிச் செய்தால் அது அவர்களுக்கு மிகவும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் அவர் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-24T18:42:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் தாயகத்தில் 200 உயிர்களை காப்பாற்றிய கனேடிய தொண்டு நிறுவனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/quality-baker-in-canada-batticaloa-lady-operation-1784912299"></link>
            <id>https://tamilwin.com/article/quality-baker-in-canada-batticaloa-lady-operation-1784912299</id>
            <summary type="text">கனடாவை வாழ்விடமாக கொண்ட பாடகர் செந்தில் குமரன் தனது நிவாரண அமைப்பின் ஊடாக பாடல் நிகழ்வுகளை ஒழுங்கு செய்து, அதன் ஊடாகவும், அங்குள்ள கனடா கந்தசுவாமி ஆலய...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவை வாழ்விடமாக கொண்ட பாடகர் செந்தில் குமரன் தனது நிவாரண அமைப்பின் ஊடாக பாடல் நிகழ்வுகளை ஒழுங்கு செய்து, அதன் ஊடாகவும், அங்குள்ள கனடா கந்தசுவாமி ஆலயத்தில் பக்தர்கள் வழுங்கும் நிதியூடாகவும் இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு உதவி செய்து வருகின்றார்.</p><p>அதன்படி, இலங்கையில் தமிழர் தாயகமெங்கும் அரசாங்க மருத்துவமனைகளின் பணி புரியும் இதயநோய் நிபுணர்களான வைத்தியர்கள் லஷ்மன், குருபரன், அருள்நிதி, ரகுநாதன், அரவிந்தன், ஜெரால்டு, ஜெயகாந்தன், விநோதன், ஹார்திக், போன்றோர் ஊடாக அவசரமாக சிகிச்சை செய்ய வேண்டும் என்று அடையாளபடுத்துகின்ற நோயாளிகளுக்கு கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் இதய சத்திர சிகிச்சைகளை ஒழுங்கு செய்து அவர்களின் உயிர்களை காப்பாற்றி வருகிறார்.</p><p></p><h2>200ஆவது சத்திர சிகிச்சை</h2><p> இந்த உதவியில் பயனடைந்தோர் முழுவதும் சிறு பிள்ளைகள் மற்றும் இளம் குடும்பஸ்தர்கள் ஆவர். கடந்த சில நாட்களுக்கு முன் அவர் நிறுவனத்தால் ஒழுங்கு செய்யப்பட்ட 200ஆவது சத்திர சிகிச்சை, மட்டக்களப்பு மாவட்டம் கொக்கட்டிச்சோலையை சேர்ந்த வசந்தி அமல்ராஜுக்கு நடைபெற்று முடிந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/16c5a763-17d2-48fc-959b-386ef6165eb2/26-6a63aef7a6d50.webp' /></p><p>
</p><p>இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், இலங்கையில் உள்ள பிரபலமான சத்திர சிகிச்சை நிபுணரான வைத்தியர் காந்திஜி, மயக்க மருந்து நிபுணர் வைத்தியர் லுஷாந்த இருதய நோய் நிபுணர்கள் மற்றும் அவர்களுடன் இயங்கும் வைத்திய குழு, செந்தில் குமரனின் வேண்டுகோளை ஏற்று, தங்கள் நேரத்தை இலவசமாக வழங்கிட்டு இப்பணியில் அவருடன் சேர்ந்து உயிர்களை காப்பாற்றி வருகிறார்கள். </p><p>கொழும்பிலுள்ள லங்கா மருத்துவமனையும் இவர் ஊடாக வரும் அனைத்து சிகிச்சைகளுக்கும் சிறப்பு கட்டணத்தை வழங்கி உதவி புரிகின்றனர்.
</p><p>இதய சத்திர சிகிச்சைகள் மட்டுமல்லாது யாழ் போதனா வைத்தியசாலையின் இதய சத்திர சிகிச்சை பிரிவிற்கு தேவைப்பட்ட நான்கு கோடி மதிப்புள்ள இதய அதிர்வு கண்காணிப்பு இயந்திரம், மூன்று கோடி செலவில் மல்லாவி மற்றும் முல்லைத்தீவில் குருதி&nbsp;சுத்திகரிப்பு நிலையங்கள், அவரச இதய நோய் பிரிவு என்று மக்களுக்கு அவசியம் தேவைப்படும் மருத்துவ கட்டுமானங்களையும் கருவிகளையும் ஸ்தாபித்து இந்த நிறுவனம் பெரும் சேவையாற்றி வருகிறது.&nbsp;</p><p> செந்தில் குமரன், தான் சேர்க்கும் நூறு வீதமான நிதியினை இச்சேவைகளுக்கு வழங்கி, முழு நிதி விவரங்களை ஆண்டு தோறும் வெளியிட்டு வெளிப்படை தன்மையுடன் இயங்குவதால் அவருக்கு கனடா மட்டுமல்லாது புலம் பெயர் மக்களின் பெரும் ஆதரவு இருப்பதனை காணக்கூடியதாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-24T18:32:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[செவ்வாய் பெயர்ச்சி: நாளை முதல் இந்த ராசிகளில் வாழ்க்கையில் பொற்காலம் ஆரம்பம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/mars-transit-on-july-25-who-get-luck-and-money-1784903649"></link>
            <id>https://manithan.com/article/mars-transit-on-july-25-who-get-luck-and-money-1784903649</id>
            <summary type="text">ஜோதிட ரீதியில் நவகிரகங்களில் செவ்வாய் பகவான் கிரகம் தைரியம், லட்சியம், ஆற்றல் மற்றும் செயல்பாட்டின் அடையாளமாகக் கருதப்படுகின்றார்.ஜூலை 25ஆம் தேதி செவ்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜோதிட ரீதியில் நவகிரகங்களில் செவ்வாய் பகவான் கிரகம் தைரியம், லட்சியம், ஆற்றல் மற்றும் செயல்பாட்டின் அடையாளமாகக் கருதப்படுகின்றார்.</p><p>ஜூலை 25ஆம் தேதி செவ்வாய் தனது பாதையில் மாற்றத்தை ஏற்படுத்தவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த மாற்றம் தொழில், நிதி நிலைமை மற்றும் தனிப்பட்ட வளர்ச்சி போன்ற வாழ்க்கையின் முக்கிய அம்சங்களில் தாக்கத்தை ஏற்படுத்தும் என கணிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/757f804d-8b62-4eb6-97e3-dfc800c08c5f/26-6a637fdd64b3d.webp' /></p><p> </p><p>அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் இதன் தாக்கம் காணப்பட்டாலும், குறிப்பிட்ட சில ராசிக்காரர்கள் இந்தக் காலத்தில் கூடுதல் நன்மைகளையும் சாதகமான பலன்களையும் பெறுவார்கள் என்று ஜோதிடக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.
</p><p>
அந்த வகையில், இந்த காலகட்டத்தில் அதிக பலன்களை அனுபவிக்கப் போகும் ராசிக்காரர்கள் யார் என்பதை இந்தப் பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.</p><p></p><h2>மேஷம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/42d8f2f8-64a1-4add-a2d4-0f56cd0b3340/26-6a637fde14168.webp' /></p><p>

செவ்வாயின் இயக்க மாற்றம் உங்கள் தொழில் வாழ்க்கையில் புதிய வாய்ப்புகளையும் முன்னேற்றத்தையும் தரும். பணியிடத்தில் உங்கள் முயற்சிகளுக்கு அங்கீகாரம் கிடைக்கும்.&nbsp;</p><p>தொழில்முனைவோருக்கு புதிய வாடிக்கையாளர்கள், திட்டங்கள் மற்றும் நல்ல நிதி முன்னேற்றம் கிடைக்கும். புதிய சொத்து அல்லது வாகனம் வாங்கும் வாய்ப்பும் உள்ளது. </p><p>காதல் மற்றும் குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும். நீண்டநாள் பிரச்சினைகள் தீர்ந்து, ஆசைகளில் ஒன்று நிறைவேறக்கூடும். ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும்.
</p><h2>
கடகம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2331bfe1-0643-42af-b716-66727f09c0a8/26-6a637fdeb9621.webp' /></p><p>செவ்வாயின் பெயர்ச்சி உங்கள் நிதி நிலையில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தும். நிலுவைத் தொகைகள் கிடைக்கலாம், செலவுகள் கட்டுப்பாட்டில் இருக்கும்.</p><p>தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். புதிய தொழில் தொடங்கவும், வேலை மாற்றவும் ஏற்ற காலம். வேலை தேடுபவர்களுக்கும் வெளிநாட்டு வேலை விரும்புபவர்களுக்கும் நல்ல வாய்ப்புகள் அமையும். </p><p>வருமானத்தை அதிகரிக்கும் புதிய வழிகள் கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் சிறப்பான வெற்றிகளைப் பெறுவார்கள்.</p><h2>

தனுசு</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/564b40ef-1eb0-44c2-acc7-ac1fd1451f8b/26-6a637fdf746cd.webp' /></p><p></p><p>

இந்த கிரக மாற்றம் தனுசு ராசிக்காரர்களுக்கு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை வழங்கும். தன்னம்பிக்கையும் தலைமைத்துவத் திறனும் அதிகரித்து, தொழிலில் புதிய வாய்ப்புகள் உருவாகும்.</p><p> புத்திசாலித்தனத்தால் பல துறைகளில் வெற்றி பெறலாம். வேலை தொடர்பாக நீண்ட தூரப் பயணம் மேற்கொண்டு அதனால் நன்மை அடையலாம்.</p><p> புதிய ஒப்பந்தங்கள் மற்றும் வணிக விரிவாக்கத்திற்கான வாய்ப்புகள் உருவாகும். துணையுடனான கருத்து வேறுபாடுகள் நீங்கி குடும்பத்தில் அமைதி நிலவும்.</p><p><b>இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).&nbsp; </b>&nbsp; &nbsp; &nbsp; &nbsp;&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-24T18:25:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA['ஜனநாயகன்' படத்தில் காட்சிகள் நீக்கப்பட்டதால் கதறி அழுத நடிகை ஆனந்தி! என்ன காரணம்?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/anandhi-cries-of-vijay-jananayagan-movie-edit-1784908916"></link>
            <id>https://manithan.com/article/anandhi-cries-of-vijay-jananayagan-movie-edit-1784908916</id>
            <summary type="text">நடிகர் விஜய்யின் பெரும்பாலான திரைப்படங்கள் வெளியாகும் முன் ஏதாவது ஒரு சர்ச்சையையோ, சிக்கலையோ சந்திப்பது ரசிகர்களுக்கு புதிதல்ல. அந்த வரிசையில், அவரது ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நடிகர் விஜய்யின் பெரும்பாலான திரைப்படங்கள் வெளியாகும் முன் ஏதாவது ஒரு சர்ச்சையையோ, சிக்கலையோ சந்திப்பது ரசிகர்களுக்கு புதிதல்ல. அந்த வரிசையில், அவரது கடைசி திரைப்படமான 'ஜனநாயகன்' எந்தவித பிரச்சனையும் இல்லாமல் வெளியாக வேண்டும் என்பதே ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக இருந்தது.</p><p>
</p><p>
ஆனால், ரசிகர்களின் அந்த ஆசை இந்த முறையும் நிறைவேறவில்லை. திரைப்படம் வெளியாவதற்கு முன் தணிக்கைச் சான்றிதழ் தொடர்பான பிரச்சனைகள் எழுந்ததால், படக்குழுவும் ரசிகர்களும் பெரும் பதற்றத்தில் இருந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9db20d84-8d7d-4926-b341-375f6326cda5/26-6a63915b9d039.webp' /></p><p></p><h2>வெற்றிநடை போடும் ஜனநாயகன்&nbsp;</h2><p> </p><p>தணிக்கைச் சான்றிதழ் முன்கூட்டியே கிடைத்திருந்தால், ரசிகர்களுக்கு அது பொங்கல் கொண்டாட்டத்தைப் போல அமைந்திருக்கும். இருப்பினும் அனைத்து தடைகளையும் தாண்டி படம் வெளியானதும், முதல் நாளையே ரசிகர்கள் திருவிழாவாக மாற்றினர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0ea09c9a-b370-49fa-8526-2eb6baed8757/26-6a63915c4a7be.webp' /></p><p>
</p><p>
வசூலில் மிரட்டிய 'ஜனநாயகன்'

வெளியான முதல் நாளிலேயே 'ஜனநாயகன்' வசூலில் அதிரடி காட்டியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சென்னையில் மட்டும் சுமார் ரூ.6 கோடி வரை வசூல் செய்ததாகவும், உலகம் முழுவதும் முதல் நாளில் ரூ.90 கோடி வரை வசூலித்து சாதனை படைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. </p><p>"ஜனநாயகன் சூப்பர்", "தளபதி மாஸ்", "பிளாக்பஸ்டர்" என்று சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கொண்டாடிக் கொண்டிருந்த நிலையில், மறுபுறம் நடிகை ஆனந்தி வெளியிட்ட ஒரு உணர்ச்சிப்பூர்வமான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.</p><p></p><h2>வைரலாகும் காணொளி&nbsp;</h2><p>
</p><p>
அந்த வீடியோவில் பேசிய ஆனந்தி, திருமணத்திற்கும் குழந்தை பிறந்த பிறகும் முதன்முறையாக கமிட்டாகி நடித்த திரைப்படம் 'ஜனநாயகன்' தான் என்று தெரிவித்துள்ளார். </p><p>அதிலும் நடிகர் விஜய்யுடன் இணைந்து ஒரு முக்கியமான காட்சியில் நடித்தது தனது நீண்டநாள் ஆசை நிறைவேறிய தருணம் என்றும் கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5f7cfc9e-b8cf-496f-9917-f182f7ef4ae5/26-6a63915aef434.webp' /></p><p>

இந்த காரணத்தால் மிகுந்த ஆவலுடன் குடும்பத்தினருடன் திரையரங்கிற்கு சென்று படம் பார்த்ததாகவும், ஆனால் படம் முழுவதும் தனது காட்சிகளை எதிர்பார்த்து காத்திருந்தபோதும், இறுதியில் தான் நடித்த அனைத்து காட்சிகளும் நீக்கப்பட்டிருப்பதை அறிந்து மிகுந்த ஏமாற்றமடைந்ததாகவும் அவர் கண்ணீருடன் பகிர்ந்துள்ளார்.</p><p>

"விஜய்யுடன் நடிக்க வேண்டும் என்ற கனவு நனவானது. ஆனால் அந்த காட்சிகள் ரசிகர்களை சென்றடையவில்லை. அது மிகவும் வருத்தமாக இருக்கிறது," என்று கண்கலங்கியபடி அவர் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் மற்றும் திரையுலகைச் சேர்ந்த பலரும் ஆனந்திக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.</p><p><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/reel/DbJF-GTzZuV/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/reel/DbJF-GTzZuV/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/reel/DbJF-GTzZuV/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by Anandhi Ajay (@anandhi_offl)</a></p></div></blockquote> <script async src="//www.instagram.com/embed.js"></script></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"><b>FOLLOW NOW</b></a></u></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-24T18:20:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[பதவியை துறந்த பங்களாதேஷ் ஜனாதிபதி ; மீண்டும் வரும் ஷேக் ஹசீனா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/bangladesh-president-steps-down-1784916951"></link>
            <id>https://jvpnews.com/article/bangladesh-president-steps-down-1784916951</id>
            <summary type="text">பங்களாதேஷ் ஜனாதிபதி மொஹமட் ஷஹாபுதீன் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். 

பதவியிலிருந்து அகற்றப்பட்ட பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மீண்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">பங்களாதேஷ் ஜனாதிபதி மொஹமட் ஷஹாபுதீன் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். </p><p style="text-align: justify;">

பதவியிலிருந்து அகற்றப்பட்ட பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மீண்டும் நாட்டிற்கு வர ஆயத்தமாகி வருவதாக வெளியாகும் தகவல்களைத் தொடர்ந்து ஜனாதிபதி இத்தீர்மானத்தை எடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7154f10e-c5b5-43a2-9748-8a035bdddc84/26-6a63abd9633e6.webp' /></p><h2 style="text-align: justify; ">&nbsp;இராஜினாமா தீர்மானம்&nbsp;</h2><p> </p><p style="text-align: justify;">

2024ஆம் ஆண்டு பங்களாதேஷில் இடம்பெற்ற மாணவர் போராட்டங்களின் போது நபர்களைப் படுகொலை செய்த சம்பவம் தொடர்பில் நீதிமன்றத்தினால் ஹசீனாவிற்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. </p><p style="text-align: justify; ">

அவ்வழக்குகளை எதிர்கொள்வதற்காகத் தான் மீண்டும் பங்களாதேஷிற்கு வருகை தரவுள்ளதாக ஹசீனா வெளிநாட்டு ஊடகங்களுக்குத் தெரிவித்து சில நாட்களுக்குப் பின்னரே ஜனாதிபதியின் இந்த இராஜினாமா தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகின்றது.</p><p style="text-align: justify; "></p><p> </p><p style="text-align: justify; ">

மருத்துவ சிகிச்சைக்காக தாய்லாந்து சென்றுள்ள நாடாளுமன்ற சபாநாயகர் ஹபீஸ் உத்தீன் அகமட் திரும்பி வந்த பின்னர், ஜனாதிபதி தனது ராஜினாமாக் கடிதத்தைக் கையளிக்கவுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-07-24T18:15:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்கர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை...!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/us-embassy-issues-middle-east-travel-warning-1784909698"></link>
            <id>https://ibctamil.com/article/us-embassy-issues-middle-east-travel-warning-1784909698</id>
            <summary type="text">அமெரிக்கர்களுக்கு அவசர எச்சரிக்கை ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.

யோர்தானில் அமைந்துள்ள அமெரிக்கத் தூதரகம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.

பிராந்திய...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்கர்களுக்கு அவசர எச்சரிக்கை ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.</p><p>

யோர்தானில் அமைந்துள்ள அமெரிக்கத் தூதரகம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.</p><p>

பிராந்தியப் போர்ச் சூழல் மேலும் தீவிரமடைந்து வருகின்றது.</p><p>
</p><p></p><h2>கூடுதல் பாதுகாப்பு</h2><p>இந்தநிலையில் கருத்தில் கொண்டு மத்திய கிழக்கு நாடுகளுக்கான பயணங்களை உடனடியாக மறுபரிசீலனை செய்யுமாறும் மற்றும் கூடுதல் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் எச்சரிக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fb634e3d-868b-476c-81e7-94de6d1e8f80/26-6a63aa4e15163.webp' /></p><p>யோர்தான் தலைநகர் அம்மானில் உள்ள அமெரிக்கத் தூதரகம் தனது உத்தியோகபூர்வ எக்ஸ் சமூக வலைத்தளப் பக்கத்தில் இது குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.
</p><p>
குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “மத்திய கிழக்கிற்கு வெளியே உள்ள அமெரிக்கத் இராஜதந்திர நிலையங்கள் உட்படப் பல இடங்கள் இலக்கு வைக்கப்பட்டுள்ளன.</p><p> </p><p></p><h2>ஆதரவான அமைப்புகள்&nbsp;</h2><p>ஈரான் மற்றும் ஈரானுக்கு ஆதரவான அமைப்புகள், உலகெங்கிலும் உள்ள அமெரிக்க நலன்கள், அமெரிக்க நிறுவனங்கள் மற்றும் அமெரிக்கர்களுடன் தொடர்புடைய இடங்களை இலக்கு வைத்துத் தாக்குதல்களை நடத்தக்கூடும்.
</p><p>
போர்ச் சூழல் காரணமாக விமானச் சேவைகள் ரத்து செய்யப்படலாம்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/89530725-fa31-4156-8409-62cc35331ced/26-6a63aa4d632f5.webp' /></p><p>வான்வெளிகள் மூடப்படலாம் மற்றும் பயணங்களில் கடும் தடங்கல்கள் ஏற்படலாம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

அத்துடன் யோர்தானில் அமைந்துள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள் இருக்கும் பகுதிகளுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறும் உள்ளூர் அரசாங்கம் மற்றும் தூதரகம் வழங்கும் பாதுகாப்பு வழிகாட்டல்களைத் தவறாது பின்பற்றுமாறும் அமெரிக்கர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-24T18:09:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[செம்மணியில் மழை அங்கியுடனான என்புக்கூடு: தகவல் தெரிந்தால் அறிவிக்க கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/skeleton-wearing-a-raincoat-semmani-request-1784912174"></link>
            <id>https://tamilwin.com/article/skeleton-wearing-a-raincoat-semmani-request-1784912174</id>
            <summary type="text">செம்மணி புதைகுழிக்குள் நேற்றைய தினம்(23.7.2026) அடையாளம் காணப்பட்ட மழை
அங்கியுடனான சிறுவரின் என்புக்கூடு ஓகஸ்ட் 4ஆம் திகதிக்கு பின்னரே அகழ்ந்து
எடுக...</summary>
            <content type="html"><![CDATA[<p>செம்மணி புதைகுழிக்குள் நேற்றைய தினம்(23.7.2026) அடையாளம் காணப்பட்ட மழை
அங்கியுடனான சிறுவரின் என்புக்கூடு ஓகஸ்ட் 4ஆம் திகதிக்கு பின்னரே அகழ்ந்து
எடுக்கப்படவுள்ளது.
</p><p>
அதேவேளை குறித்த என்பு கூடு தொடர்பில் எவருக்கேனும் தகவல்கள்
தெரிந்திருந்தால், அது தொடர்பில் நீதிமன்றுக்கு அறிவிக்குமாறு சட்டத்தரணி
வி.எஸ் நிரஞ்சன் தெரிவித்துள்ளார்.
</p><p>
அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

செம்மணி புதைகுழிக்குள் மழை அங்கியுடன் காணப்பட்ட என்புக்கூடு இன்றைய தினம்
அகழ்ந்து எடுக்கப்படவில்லை.</p><p></p><h2>நடவடிக்கை</h2><p> </p><p>அது தொடர்பில் நிபுணர்களின் ஆலோசனைகளை பெற்ற
பின்னரே அதனை அகழ்ந்து எடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/502298fe-4c24-441d-a4da-ff96650935f8/26-6a63993068598.webp' /></p><p>குறித்த என்புக்கூடு சட்ட ரீதியாக புதைக்கப்பட்டதற்கான அனுமானம் இருப்பதனால் ,
அது தொடர்பிலான தகவல்கள் தெரிந்தவர்கள் , நீதிமன்ற பதிவாளருக்கோ , சட்டத்தரணி
ஊடாக நீதிமன்றுக்கோ , காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்திற்கோ அறிவிக்குமாறு
கேட்டுக்கொள்கிறோம்.</p><p>அது தொடர்பிலான தகவல்கள் தெரிந்தால் இந்த அகழ்வு பணிகள் தொடர்பிலான தகவல்கள்
சில வெளிப்படும் என தெரிவித்துள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-24T17:53:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[மருமகனால் கோட்டாபயவிற்கு காத்திருக்கும் பேரிடி - சகோதரி வெளியிட்ட அதிர்ச்சி காணொளி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/gotabaya-rajapaksa-may-be-arrested-cid-inquiry-1784914642"></link>
            <id>https://tamilwin.com/article/gotabaya-rajapaksa-may-be-arrested-cid-inquiry-1784914642</id>
            <summary type="text">முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தொடர்பில் தற்போது பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.&amp;nbsp;கோட்டாபய ராஜபக்சவின் சகோதரியின் மகன், அவருக்கு எதிராக கொழு...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தொடர்பில் தற்போது பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.&nbsp;</p><p>கோட்டாபய ராஜபக்சவின் சகோதரியின் மகன், அவருக்கு எதிராக கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவில் வாக்குமூலம் அளித்துள்ளார்.</p><p>

இந்த வாக்குமூலத்தின் படி கோட்டாபய ராஜபக்சவுக்கு பாரிய சிக்கல் ஏற்படுவதோடு சட்டத்தில் இருந்து தப்பிக்க முடியாத நிலைமை ஏற்படும் என தெரிவிக்கப்படுகின்றது.&nbsp;</p><p>
கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினால் கோட்டாபய ராஜபக்ச மற்றும் சுகீஸ்வர பண்டார ஆகியோருக்கு எதிராக பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
</p><p>கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்தபோது, சுகீஸ்வர பண்டார அவருடைய தனிப்பட்ட செயலாளராகப் பணியாற்றினார். அதற்காக அவர் சம்பளம் பெற்றார்.</p><p>
அதுமட்டுமன்றி, ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியான பின்னரும் விசேட ஜனாதிபதித் திட்டத்தை உருவாக்கி அதிலிருந்தும் அவருக்குச் சம்பளம் வழங்கப்பட்டுள்ளது.</p><p>இந்நிலையில், கோட்டாபய ராஜபக்ச தனது மருமகன் தொடர்பில் வெளியிட்ட தகவல், அவரின் மருமகன் வழங்கிய வாக்குமூலத்திற்கு முரணாகவுள்ளது. எனவே இதன் உண்மைத்தன்மை குறித்து சந்தேகம் எழுவதாக அரசியல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.&nbsp;</p><p>இவ்விடயங்கள் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி,&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/RdSZsItywV0" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-24T17:53:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[நடிகர் ஜிபி முத்து மீது தாக்குதல்.. வீட்டின் முன் மாந்திரீக பூஜை, தட்டி கேட்டதால் தாக்குதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/gp-muthu-attacked-by-neighbours-after-black-magic-1784915371"></link>
            <id>https://cineulagam.com/article/gp-muthu-attacked-by-neighbours-after-black-magic-1784915371</id>
            <summary type="text">விஜய் டிவியின் பிக் பாஸ் ஷோவில் கலந்துகொண்டவர் ஜிபி முத்து. பிரபல யூடியூபர் ஆன அவர் சில படங்களிலும் நடித்து இருக்கிறார்.அவர் சொந்த ஊரில் மற்றொரு தரப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>விஜய் டிவியின் பிக் பாஸ் ஷோவில் கலந்துகொண்டவர் ஜிபி முத்து. பிரபல யூடியூபர் ஆன அவர் சில படங்களிலும் நடித்து இருக்கிறார்.</p><p>அவர் சொந்த ஊரில் மற்றொரு தரப்பினர் உடன் தொடர்ந்து பிரச்சனை நீண்டகாலமாக இருந்து வருகிறது. கோவில் இடம் பற்றிய அந்த பிரச்சனையால் அடிக்கடி கைகலப்பும் நடந்ததாக ஜிபி முத்து வீடியோ வெளியிட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bddf0018-7a64-4af6-8a96-662c885f51b3/26-6a63a5ad55ad7.webp' /></p><p>
</p><h2>தாக்குதல்</h2><p>இந்நிலையில் நள்ளிரவில் ஜிபி முத்து வீட்டின் முன் சிலர் மாந்திரீக பூஜை நடத்திய நிலையில், அதை அவர் தட்டி கேட்டு இருக்கிறார்.

அது வாக்குவாதம் ஆகி ஜிபி முத்து மீது அவர்கள் தாக்குதல் நடத்தி இருக்கின்றனர்.</p><p> ஜிபி முத்து அளித்த புகாரின் அடிப்படையில் தற்போது போலீசார் வழக்கு பதிவு செய்து இருக்கின்றனர்.

தாக்குதல் வீடியோவும் இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-24T17:49:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[லண்டன் ஹோட்டலில் இறந்து கிடந்த சவுதி இளவரசர்., வெளிச்சத்திற்கு வந்த காரணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/saudi-princes-death-in-london-hotel-explained-1784914462"></link>
            <id>https://news.lankasri.com/article/saudi-princes-death-in-london-hotel-explained-1784914462</id>
            <summary type="text">பிரித்தானியாவில் சடலமாக கண்டுபிடிக்கப்பட்ட சவுதி இளவரசரின் மரணத்தின் பின்னால் இருக்கும் காரணம் தற்போது தெரியவந்துள்ளது.லண்டனில் உள்ள மரியட் ஹோட்டல் கெ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரித்தானியாவில் சடலமாக கண்டுபிடிக்கப்பட்ட சவுதி இளவரசரின் மரணத்தின் பின்னால் இருக்கும் காரணம் தற்போது தெரியவந்துள்ளது.</p><p>லண்டனில் உள்ள மரியட் ஹோட்டல் கென்சிங்டனில், 2025 நவம்பர் 25-ஆம் திகதி சவுதி அரேபிய இளவரசர் அப்துல்லா பின் ஃபஹத் பின் அப்துல்லா பின் அப்துல்அசீஸ் பின் ஜலாவி அல் சௌத் (29) உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.</p><p></p><p>

ஹோட்டல் பணியாளர்கள், 600 பவுண்டு மதிப்புள்ள அறையில் அவர் குளியலறையில் உயிரிழந்த நிலையில் கண்டுபிடித்தனர்.

விசாரணை அறிக்கையில், அவரது மரணத்திற்கு காரணம் மாரடைப்பு (Cardiac Arrest) என உறுதி செய்யப்பட்டுள்ளது.
</p><p>
அவர் அதிக அளவு மதுபானம், GHB எனப்படும் “Party Drug”, கஞ்சா, Xanax மற்றும் பிற மருந்துகளை எடுத்திருந்தது தெரியவந்துள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/22da4d2b-32f5-410c-b7e6-2fceffa3d83c/26-6a63a2200552b.webp' /></p><p>அவரது இரத்தத்தில் மதுபான அளவு, பிரித்தானியாவில் வாகனம் ஓட்டுவதற்கான சட்ட வரம்பை விட மூன்று மடங்கு அதிகமாக இருந்தது.
</p><p>
மருத்துவர்கள், இந்த மருந்துகள் மற்றும் மதுபானம் சேர்ந்து உடல் நரம்பு மண்டலத்தை பாதித்து, சுவாசம் மற்றும் இதய செயல்பாட்டை குறைத்ததால் உயிரிழப்பு ஏற்பட்டதாக தெரிவித்தனர்.
</p><p>
விசாரணையில் தற்கொலை அல்லது பிறர் தொடர்பு இல்லை எனவும், இது “தற்செயலான மரணம்” (Death by Misadventure) எனவும் தீர்மானிக்கப்பட்டது.</p><p></p><p>இளவரசர் முன்பு மதுபானம் மற்றும் போதை பழக்கத்திற்காக லண்டனில் உள்ள பிரையாரி மருத்துவமனையிலும், மெர்சிசைடில் உள்ள தனியார் மறுவாழ்வு மையத்திலும் சிகிச்சை பெற்றிருந்தார். </p><p>ஆனால், சிகிச்சைக்கு பின் சில பின்தொடர் சந்திப்புகளை தவறவிட்டதாகவும், அவர் தற்கொலை ஆபத்தில் இல்லை என மருத்துவர்கள் தெரிவித்தனர்.&nbsp;&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-24T17:32:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[மஹாபொல புலமைப்பரிசிலுக்கு தெரிவான மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/important-notice-for-mahapola-scholarship-students-1784913273"></link>
            <id>https://jvpnews.com/article/important-notice-for-mahapola-scholarship-students-1784913273</id>
            <summary type="text">2024/25 கல்வியாண்டிற்குரிய மஹாபொல புலமைப்பரிசிலுக்காகத் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களின் இணையவழி (Online) பதிவுகள் எதிர்வரும் 17ஆம் திகதியுடன் நிறைவடையவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>2024/25 கல்வியாண்டிற்குரிய மஹாபொல புலமைப்பரிசிலுக்காகத் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களின் இணையவழி (Online) பதிவுகள் எதிர்வரும் 17ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளதாக லலித் அதுலத்முதலி மஹாபொல உயர்கல்வி புலமைப்பரிசில் நிதியம் தெரிவித்துள்ளது. </p><p>

அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அந்நிதியம், குறித்த கொடுப்பனவிற்கான இறுதித் தெரிவுப் பட்டியல்கள் உரிய பல்கலைக்கழகங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/73da8ed0-3192-476b-bd9e-01834db31118/26-6a639d7b5a385.webp' /></p><h2>இணையவழி பதிவு&nbsp;</h2><p> </p><p>

அதற்கமைய, அப்பட்டியலில் பெயர்கள் அடங்கியுள்ள மாணவர்கள் ஓகஸ்ட் 17ஆம் திகதிக்கு முன்னர்<a href="https://mahapola.lk/BankApp2025/" target="_blank"> https://mahapola.lk/BankApp2025/</a> என்ற இணையத்தளத்திற்குப் பிரவேசித்து, தமது தேசிய அடையாள அட்டை இலக்கத்தைப் பயன்படுத்தி இணையவழி பதிவை நிறைவு செய்ய வேண்டும்.</p><p></p><p> 

2024/25 கல்வியாண்டிற்குரிய மஹாபொல புலமைப்பரிசிலுக்குத் தெரிவுசெய்யப்படாத மாணவர்களின் மேல்முறையீடுகள் ஒக்டோபர் 15ஆம் திகதிக்கு முன்னர் உரிய பல்கலைக்கழகங்கள் ஊடாகப் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு அனுப்பிவைக்கப்பட வேண்டும்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-24T17:30:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[மஹிந்த வீட்டில் மின்சாரத்தை துண்டிக்காது எனது வீட்டில் துண்டித்தது ஏன் என கோரி தொடரப்பட்ட வழக்கு குறித்து நீதிமன்றின் உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/lawyer-filles-case-against-mahinds-utility-bill-1784913369"></link>
            <id>https://tamilwin.com/article/lawyer-filles-case-against-mahinds-utility-bill-1784913369</id>
            <summary type="text">&amp;nbsp;முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் வீட்டில் மின் கட்டண நிலுவை இருந்த போது மின்சாரத்தை துண்டிக்காது தமது வீட்டில் மின் கட்டண நிலுவையை காரணம் கா...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் வீட்டில் மின் கட்டண நிலுவை இருந்த போது மின்சாரத்தை துண்டிக்காது தமது வீட்டில் மின் கட்டண நிலுவையை காரணம் காட்டி ஏன் மின்சாரம் துண்டிக்கப்பட்டது என நபர் ஓருவர் உச்ச நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
</p><p>இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் வீராக்கெட்டிய இல்லத்தில் 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற அவரது மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்‌சவின் திருமண விழாவிற்காகப் பயன்படுத்தப்பட்ட மின்சாரத்திற்கான கட்டணத்தை செலுத்தத் தவறியமை தொர்பில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது.
</p><p>இந்த விடயம் மக்களின் அடிப்படை மனித உரிமைகளை மீறும் செயலாகும் எனத் தீர்ப்பளிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவை எதிர்வரும் டிசம்பர் 04-ஆம் திகதி விசாரிப்பதற்கு உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1a7c2482-add6-4ea3-ac98-fd7e86f2b596/26-6a639ddab658c.webp' /></p><p> </p><p>
இம்மனு ஏ.எச்.எம்.டி. நவாஸ் மற்றும் சம்பத் அபேகோன் ஆகிய உச்ச நீதிமன்ற நீதியரசர்கள் அமர்வு முன்னிலையில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.</p><p> 
விசாரணையின் போது கருத்துக்களைக் கவனத்திற் கொண்ட நீதிபதிகள் அமர்வு, இலங்கை மின்சார சபை (CEB) தற்போது மறுசீரமைப்பிற்கு உட்படுத்தப்பட்டு வருவதால், அதற்குப் பதிலாக உருவாகியுள்ள பதிலீட்டு நிறுவனத்தை இம்மனுவின் எதிர்மனுதாரராகச் சேர்ப்பதற்கு மனுதாரர் தரப்பிற்கு அனுமதி வழங்கியது. </p><p>
இதனைத் தொடர்ந்து, இந்த மனு மீதான விசாரணையை டிசம்பர் 04-ஆம் திகதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.</p><p>
சட்டத்தரணி விஜித குமார என்பவரால் இந்த அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷவின் திருமண விழா 2019-ஆம் ஆண்டு செப்டம்பர் 12 முதல் 15 வரை மஹிந்த ராஜபக்‌ஷவின் வீராக்கெட்டிய இல்லத்தில் நடைபெற்றது.</p><p> 
இந்த விழாவிற்காகப் பயன்படுத்தப்பட்ட மின்சாரத்திற்கு ரூபா சுமார் 26.8 லட்சம் ரூபாய் கட்டணமாக செலுத்தப்பட வேண்டியிருந்தது. </p><p>
செப்டம்பர் 12 முதல் 15 வரை வீராக்கெட்டிய இல்லம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளுக்குப் பாதுகாப்பு விளக்குகள் வழங்குமாறு அப்போதைய மின்சக்தி அமைச்சரிடம் நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி. சானக்க கோரிக்கை விடுத்திருந்தார்.</p><p> 
இதற்கமைய மின்சாரம் வழங்கப்பட்டதாகவும், அதற்கான கட்டணத்தை ராஜபக்‌ச குடும்பத்தினர் செலுத்துவார்கள் எனக் கூறப்பட்ட போதிலும், நீண்டகாலமாக அத்தொகை செலுத்தப்படாமல் நிலுவையில் வைக்கப்பட்டது.</p><p> 
எதிர்மனுதாரர்கள் தங்களது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி இலவசமாக மின்சாரத்தைப் பெற்றுக்கொண்டதாக மனுதாரர் குற்றம்சாட்டியுள்ளார். </p><p>
சாதாரண குடிமகன் தனது வீட்டில் ரூபா 7,390 மாதக் கட்டணத்தைச் செலுத்தத் தவறியதற்காக உடனடியாக மின் இணைப்பைத் துண்டித்த மின்சார சபை, லட்சக்கணக்கான ரூபாய் நிலுவை வைத்திருந்த வீராக்கெட்டிய இல்லத்தின் மின்சாரத்தைத் துண்டிக்கத் தவறியது சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற கொள்கைக்கு முரணானது என மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>மின்சார சபையின் இந்த பாரபட்சமான செயல்பாடு, அரசியலமைப்பின் 12(1) பிரிவின் கீழ் உறுதி செய்யப்பட்டுள்ள மக்களின் அடிப்படை மனித உரிமைகளை மீறுவதாகும் என அறிவிக்குமாறு மனுதாரர் நீதிமன்றத்தைக் கேட்டுக்கொண்டுள்ளார். </p><p>
இதேவேளை, மறைந்த முன்னாள் ராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த உயிரிழப்பதற்கு முன்னர் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கையில், நாமல் ராஜபக்‌ஷவின் திருமண விழாவிற்கான நிலுவையில் இருந்த மின்சாரக் கட்டணத்தைத் தாம் செலுத்திவிட்டதாகக் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-24T17:24:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வரிச்சுமையால் திணறும் மக்கள்! அரசுக்கு ஆபத்தாகும் எதிர்காலம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/people-struggling-tax-burden-government-sl-anura-1784908214"></link>
            <id>https://tamilwin.com/article/people-struggling-tax-burden-government-sl-anura-1784908214</id>
            <summary type="text">இந்த பிராந்தியத்திலேயே மிகவும் அளவுக்கு அதிகமான வரிச்சுமையை கொண்ட நாடாக இலங்கை இருப்பாதாக கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர் கோ.அமிர்தலிங்கம் தெரிவித்து...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்த பிராந்தியத்திலேயே மிகவும் அளவுக்கு அதிகமான வரிச்சுமையை கொண்ட நாடாக இலங்கை இருப்பாதாக கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர் கோ.அமிர்தலிங்கம் தெரிவித்துள்ளார்.</p><p>அத்தோடு, நாட்டுமக்கள் மீது கடுமையான வரிச்சுமை இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p>மேலும், அண்டை நாடான இந்தியாவுடன் ஒப்பிடுகையில் இலங்கையின் வரிச்சுமை அதிகமாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>சர்வதேச நாணயநிதியம் நாட்டிற்கு வருகை தரும் போது இலங்கை பொருளாதாரம் மேம்பாடு அடைவதும் அதன்பிறகு நீண்ட காலத்தில்&nbsp;சர்வதேச நாணயநிதியம் நாட்டிற்கு வருகை தந்ததால் எந்த விதமான பெரிய மாற்றமும் ஏற்படவில்லை என்பதையும் ஒரு ஆய்வில் மூலம் கண்டறிந்துள்ளதாகவும் அவர் கூறினார்.</p><p>மேலும், இந்த அரசாங்கம் மட்டுமல்ல, கடந்த கால அரசாங்கங்களும் நீண்ட காலத்தில் மிகப்பெரிய நன்மையை இலங்கைக்கு கொடுக்கவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.</p><p>இந்த விடயம் தொடர்பான விரிவான தகவல்களை ஊடறுப்பு நிகழ்ச்சியில் காணலாம்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/wSySGE4DOZE" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-24T17:17:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[கைதான தென் மாகாண முன்னாள் பிரதம செயலாளருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/ex-southern-chief-secretary-faces-court-order-1784912579"></link>
            <id>https://jvpnews.com/article/ex-southern-chief-secretary-faces-court-order-1784912579</id>
            <summary type="text">ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட முன்னாள் தென் மாகாண பிரதான செயலாளரான ரன்னுளு சந்திரசிறி டி சொய...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட <a href="https://jvpnews.com/article/forme-southern-provincial-chief-secretary-arrested-1784891577" target="_blank">முன்னாள் தென் மாகாண பிரதான செயலாளரா</a>ன ரன்னுளு சந்திரசிறி டி சொய்சாவை கொழும்பு நீதிவான் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை (24) பிணையில் விடுவித்தது.</p><p style="text-align: justify; ">

அதற்கமைய தலா 10 இலட்சம் ரூபா பெறுமதியான இரு சரீரப் பிணைகள் விதித்து நீதிவான் பிணை வழங்கி வெள்ளிக்கிழமை (24) உத்தரவிட்டார்.

மேலும் சந்தேகநபருக்கு வெளிநாடு செல்வதற்கும் நீதிவான் இதன்போது பயணத்தடை விதித்து பிணையில் விடுவித்திருந்தார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2484e216-0cc0-48bd-8270-3568eb41cd30/26-6a639ac589eb8.webp' /></p><h2 style="text-align: justify; ">பிணையில் விடுதலை</h2><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
தென் மாகாண அபிவிருத்தி அதிகார சபையினால் 2019 ஆம் ஆண்டில் 16.5 மில்லியன் ரூபா தென் மாகாண சபை உறுப்பினர்களின் நிதி ஒதுக்கீட்டைப் பயன்படுத்தி, தென் மாகாணத்தின் பொது தன்னார்வ தொண்டர் சங்கங்களுக்கு நாற்காலிகளை வழங்கும் திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட்டது.
</p><p style="text-align: justify; ">
குறித்த திட்டத்தின் போது, உரிய கொள்முதல் நடைமுறைகளிலிருந்து விலகி, ஒரு குறிப்பிட்ட தயாரிப்பு நிறுவனத்துக்கு சாதகமாக செயற்பட்டமை மற்றும் அதன் மூலம் அரசாங்கத்துக்கு நட்டத்தை ஏற்படுத்தப்பட்டுள்ளதாக சந்தேகநபருக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணைப் பிரிவு குற்றம்சாட்டியுள்ளது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">இச்சம்பவம் தொடர்பில் வெள்ளிக்கிழமை (24) கைது செய்யப்பட்ட முன்னாள் பிரதம செயலாளர், கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து பிணையில் விடுவிக்கப்பட்டார்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-07-24T17:03:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜனநாயகன் முதல் நாள் வசூல்.., எத்தனை கோடிகள் தெரியுமா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/how-much-did-vijays-jananayagan-earn-on-day-one-1784891125"></link>
            <id>https://manithan.com/article/how-much-did-vijays-jananayagan-earn-on-day-one-1784891125</id>
            <summary type="text">முதல்வர் விஜயின் கடைசி திரைப்படமான ஜனநாயகனின் முதல் நாள் வசூல் எவ்வளவு என்பது குறித்து பார்க்கலாம்.
ஜனநாயகன்&amp;nbsp;திரைப்படம்  
நடிகர் விஜய்யின் 69வத...</summary>
            <content type="html"><![CDATA[<p>முதல்வர் விஜயின் கடைசி திரைப்படமான ஜனநாயகனின் முதல் நாள் வசூல் எவ்வளவு என்பது குறித்து பார்க்கலாம்.
</p><h2>ஜனநாயகன்&nbsp;திரைப்படம் </h2><p> 
நடிகர் விஜய்யின் 69வது திரைப்படமான ஜனநாயகன் நேற்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது.</p><p> 

கே.வி.என். புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சுமார் ரூ.500 கோடி பட்ஜெட்டில் இந்த படத்தை தயாரித்துள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e1666b96-5caf-433d-bea8-2eb632732ec1/26-6a6346f751ee2.webp' /></p><p>மேலும், அனிருத் இசையமைப்பில் வெளியான இந்த படத்தில், பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். </p><p> 

இந்நிலையில், ஜனநாயகனின் முதல் நாள் வசூல் எவ்வளவு என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
</p><h2>
எத்தனை கோடி வசூல்?
</h2><p>
வர்த்தக கண்காணிப்பு நிறுவனம் வெளியிட்ட தகவலின்படி, ஜனநாயகன் திரைப்படம் இந்தியாவில் மொத்தமாக ரூ.48.27 கோடியும், நிகரமாக ரூ.41 கோடியும் வசூலித்துள்ளது. </p><p>

மேலும், வெளிநாடுகளில் ரூ.30 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இதன்மூலம் இப்படத்தின் உலகளாவிய முதல் நாள் வசூல் ரூ.78.27 கோடியாக உயர்ந்துள்ளது.</p><p>
இந்தி மொழியில் ரூ.1.75 கோடியும், தெலுங்கில் ரூ.2.75 கோடியும் முதல் நாள் வசூல் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p>

முதல் நாளில் ரூ.50 கோடிக்கும் அதிகமாக வசூலித்த தமிழ் திரைப்படங்களின் பட்டியலிலும் ஜனநாயகன் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-24T17:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[டொராண்டோவில் துப்பாக்கிச் சூடு: பெண் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/woman-shot-dead-in-etobicoke-toronto-1784900304"></link>
            <id>https://canadamirror.com/article/woman-shot-dead-in-etobicoke-toronto-1784900304</id>
            <summary type="text">கனடாவின் டொராண்டோ நகரில் உள்ள எட்டோபிகோக் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக டொராண்டோ பொலிஸார் தெரிவித...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் டொராண்டோ நகரில் உள்ள எட்டோபிகோக் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக டொராண்டோ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>ஹம்பர்வுட் மற்றும் ரெக்ஸ்டேல் புலிவார்ட்ஸ் சந்திப்புக்கு அருகிலுள்ள குடியிருப்பு வீதியொன்றில் காலை 7:00 மணியளவில் இத்துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது.
</p><p>தகவலறிந்து பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்தபோது, துப்பாக்கிச்சூட்டு காயங்களுடன் காணப்பட்ட பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c057ffe7-db27-4da3-8b46-141d4427b222/26-6a636ad20cd97.webp' /></p><p>உயிரிழந்த பெண்ணின் வயது அல்லது இச்சம்பவத்திற்கு வழிவகுத்த காரணம் குறித்து இதுவரை தகவல்கள் வெளியாகவில்லை.
பொலிஸார் வருவதற்கு முன்னரே சந்தேகநபர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். </p><p>அவர் குறித்த அடையாளங்களோ அல்லது விவரங்களோ இதுவரை வெளியிடப்படவில்லை.</p><p>
இக்கொலை வழக்கை கொலை வழக்கு விசாரணைப் பிரிவு ஏற்று தீவிரமாக விசாரித்து வருகிறது.
விசாரணைகள் காரணமாக மார்னிங் ஸ்டார் டிரைவ் மற்றும் ரெக்ஸ்டேல் புலிவார்ட் இடையேயான ஹம்பர்வுட் புலிவார்ட் பகுதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.</p><p>
இச்சம்பவம் தொடர்பான தகவல்கள் ஏதேனும் தெரிந்தால், 416-808-2222 என்ற எண்ணில் பொலிஸாரைத் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-24T16:46:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பிரதேசத்தில் துயரத்தை ஏற்படுத்திய முன்னாள் பெண் போராளியின் மரணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/former-female-combatant-dies-of-cancer-1784899272"></link>
            <id>https://jvpnews.com/article/former-female-combatant-dies-of-cancer-1784899272</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;முல்லைத்தீவு -விசுவமடு பிரதேசத்தில் முன்னாள் பெண் போராளி ஒருவர் புற்றுநோய் காரணமாக உயிரிழத சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவத்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;முல்லைத்தீவு -விசுவமடு பிரதேசத்தில் முன்னாள் பெண் போராளி ஒருவர் புற்றுநோய் காரணமாக உயிரிழத சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><p>

சம்பவத்தில் புன்னைநீராவி விசுவமடு பிரதேசத்தை சேர்ந்த 52 வயதான பத்மாவதி சந்திரசேகர் என்பவரே கடந்த 22 ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7d082798-ee7c-4d71-8f24-2836c3cb51b5/26-6a6366c9d8eeb.webp' /></p><p>

இந் நிலையில்&nbsp; முன்னாள் பெண் போராளியின் மரணத்திற்கு பலரும் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-24T16:44:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[சீனா மற்றும் ரஷ்யாவிற்கு டிரம்ப் விடுக்கும் கடும் எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/trump-warns-china-russia-1784911457"></link>
            <id>https://tamilwin.com/article/trump-warns-china-russia-1784911457</id>
            <summary type="text">&amp;nbsp;ஈரான் போர் தொடர்பில் சீனா மற்றும் ரஷ்யாவிற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அமெரிக்க-ஈரான் நாடுகளுக்கு இட...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;ஈரான் போர் தொடர்பில் சீனா மற்றும் ரஷ்யாவிற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.</p><p>
அமெரிக்க-ஈரான் நாடுகளுக்கு இடையில் தற்பொழுது நடைபெற்று வரும் போரில் சீனாவோ அல்லது ரஷ்யாவோ பங்கேற்கவில்லை என்று தாம் நம்புவதாக அவர் தெரிவித்துள்ளார். </p><p>
எனினும், அந்த நாடுகள் இதில் தலையிட்டால் அது அவர்களுக்கு "மிகவும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்" என அவர் எச்சரித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dca82ed2-f194-45d2-915c-e556069fbe42/26-6a63966325f74.webp' /></p><p> </p><p>
இது குறித்து தமது 'ட்ரூத் சோஷியல்' (Truth Social) சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள டிரம்ப், சீனா மற்றும் ரஷ்ய அதிபர்களுடனான பேச்சுவார்த்தைகளைச் சுட்டிக்காட்டியுள்ளார். </p><p>
சீனாவின் பெய்ஜிங் நகரில் அண்மையில் நடைபெற்ற சந்திப்பின் போது, ஈரானுக்கு எந்தச் சூழ்நிலையிலும் ஆயுதங்களை வழங்கவோ அல்லது விற்பனை செய்யவோ போவதில்லை என ஜனாதிபதி ஷி ஜின்பிங் தம்மிடம் உறுதியளித்தார் எனவும் இதில் சீன நிறுவனங்களும் அடங்கும்எனவும் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். </p><p>
அதேபோல, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினும் ஈரானுக்கு ஆயுதங்களை விற்கப் போவதில்லை என் கூறியுள்ளதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். </p><p>
சிலவேளகைளில் சீனாவோ அல்லது இதில் ஈடுபட்டால், அது அவர்களுக்கு மிகவும் மோசமானதாக முடியும். நிச்சயம் அது அவர்களின் நலனுக்கு உகந்ததாக இருக்காது எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.</p><p>
கடந்த பிப்ரவரி மாதம் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் இணைந்து ஈரானின் உயர்மட்ட அதிகாரிகள் மற்றும் அந்நாட்டின் உச்ச தலைவரைக் இலக்கு வைத்து நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து, அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே போர் வெடித்தது.</p><p> 
இப்போரின் தொடக்கத்தில் வளைகுடா பகுதியில் உள்ள சி.ஐ.ஏ மையங்கள் மீது ஈரான் நடத்திய தாக்குதல்களுக்கு, ரஷ்யா இலக்கு தொடர்பான தகவல்களையோ அல்லது ட்ரோன் தொழில்நுட்பங்களையோ வழங்கி உதவியதா என்பது குறித்து அமெரிக்க உளவுத்துறை விசாரணை நடத்தியதாக தகவல்கள் வெளியாகின.</p><p> 
எனினும், இது குறித்த அறிக்கைக்கு கருத்து தெரிவிக்க ரஷ்ய அரசாங்கம் மறுத்துவிட்டது. 
ஈரானுக்கு ஆயுதங்களைக் கொள்முதல் செய்ய உதவியதற்காக ரஷ்யா மற்றும் சீனாவைச் சேர்ந்த நபர்கள் மற்றும் நிறுவனங்கள் மீது அமெரிக்கா ஏற்கனவே பல்வேறு தடைகளை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-24T16:44:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thevanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரசுக்கு சொந்தமான காட்டு பகுதிக்குள் அத்துமீறிய நடவடிக்கை.. 9 பேர் அதிரடி கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/nine-people-arrested-trespassing-govt-forests-1784910633"></link>
            <id>https://tamilwin.com/article/nine-people-arrested-trespassing-govt-forests-1784910633</id>
            <summary type="text">கிளிநொச்சி மாவட்டத்தின் அக்கரையான் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கண்ணகி புறம்
பகுதியின் அரச காட்டுக்குள் அத்துமீறி கற்றாழை செய்கையில் ஈடுபட்டதுடன் அனுமதி...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிளிநொச்சி மாவட்டத்தின் அக்கரையான் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கண்ணகி புறம்
பகுதியின் அரச காட்டுக்குள் அத்துமீறி கற்றாழை செய்கையில் ஈடுபட்டதுடன் அனுமதியின்றி கட்டடம் அமைத்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.&nbsp;</p><p>அரசிற்கு சொந்தமான குறித்த பகுதி தொடர்பாக நீதிமன்ற வழக்கு
நடைபெற்று வரும் நிலையில் எவரும் செல்வதற்கு அனுமதி
மறுக்கப்பட்டிருந்தது.&nbsp;</p><p></p><h2>அதிகாரிகளுக்கு&nbsp;இடையூறு </h2><p>இந்நிலையில், அத்துமீறி கட்டட அபிவிருத்தி
நடவடிக்கையில் ஈடுபட்டமை தொடர்பாக வனவள திணைக்களத்தினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/22fe2ee1-6e33-42db-bfdb-c264c9709172/26-6a6395a316260.webp' /></p><p>இதன்போது, அதிகாரிகளின் பணிக்கு இடையூறு விளைவித்ததன் காரணமாக சிறப்பு
அதிரடிப்படையினர் வரவழைக்கப்படுள்ளனர்.&nbsp;</p><p>இதனை அடுத்து 09 சந்தேக நபர்கள் கைது
செய்யப்பட்டு, பொலிஸ்
நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.</p><p>சந்தேக நபர்களை கிளிநொச்சி
மாவட்ட நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அக்கரையான்
பொலிஸார் தெரிவிக்கின்றனர்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-24T16:41:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் ; 1200 கைதிகளிடம் வாக்குமூலம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/negombo-prison-clash-triggers-investigation-1784911069"></link>
            <id>https://jvpnews.com/article/negombo-prison-clash-triggers-investigation-1784911069</id>
            <summary type="text">நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதுவரையில் 1200 கைதிகளிடம் வாக்குமூல...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதுவரையில் 1200 கைதிகளிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளன. </p><p style="text-align: justify;">சிறைச்சாலை உத்தியோகத்தர் வசமிருந்த ஆயுதங்கள் நீதிமன்றில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.</p><p style="text-align: justify;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c70f31df-74c7-4151-877f-2f8d73547359/26-6a6394df3a5f0.webp' /></p><h2 style="text-align: justify; ">விசாரணைகள்&nbsp;</h2><p style="text-align: justify;">விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்ற நிலையில் அனுமானத்தின் அடிப்படையில் எவர் மீதும் குற்றச்சாட்டுக்களை முன்வைக்க முடியாது என பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
</p><p style="text-align: justify;">அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் மற்றும் பதிவாகிய உயிரிழப்புக்கள் கவலைக்குரியது. </p><p style="text-align: justify;">கடந்த காலங்களில் அரச அனுசரணையுடன் சிறைச்சாலைகளுக்குள் மோதல்கள் உருவாக்கப்பட்டன. ஆனால் இந்த சம்பவம் அவ்வாறானதல்ல,


போதைப்பொருளுக்கு எதிராக கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் முதல் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.</p><p style="text-align: justify;">அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்தின் பணிகள் விரைவுப்படுத்தப்பட்டுள்ளன. நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் சம்பவமானது போதைப்பொருள் குற்றத்தின் விளைவாகும்.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;">போதைப்பொருள் வலைப்பின்னலுடன் தொடர்புடைய தரப்பினருக்கும், அதற்கு எதிர்ப்பு தெரிவித்த தரப்பினருக்கும் இடையிலான முரண்பாடு இவ்வாறு மோதலாக உருவெடுத்தது.

</p><p style="text-align: justify;">
நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் சம்பவத்துக்கு நீதியமைச்சர் மாத்திரம் பொறுப்புக்கூற வேண்டிய அவசியம் இல்லை. </p><p style="text-align: justify;">நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.. இதுவரையில் 1200 கைதிகளிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளன.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;">&nbsp;சிறைச்சாலைகளில் இவ்வாறான சம்பவங்கள் எதிர்காலத்தில் தோற்றம் பெறாமல் இருப்பதற்குரிய கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. போதைப்பொருளுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளுக்கு எதிராகவே நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் திட்டமிட்ட வகையில் இடம்பெற்றது.</p><p style="text-align: justify;">இந்த சம்பவம் தொடர்பான உண்மை விரைவில் வெளிப்படுத்தப்படும் என்றார்.</p>]]></content>
            <updated>2026-07-24T16:37:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[நூறாண்டுகள் பழைமையான புதிருக்கு விடை - இரண்டு சீனர்கள் வரலாற்றுச் சாதனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/answer-century-old-puzzle-2-history-winning-1784909658"></link>
            <id>https://tamilwin.com/article/answer-century-old-puzzle-2-history-winning-1784909658</id>
            <summary type="text">கணிதத் துறையின் நோபல் பரிசாகக் கருதப்படும் புகழ்பெற்ற ஃபீல்ட்ஸ் மெடல் விருதை வரலாற்றிலேயே முதன்முறையாக இரண்டு சீனர்கள் வென்று சாதனை படைத்துள்ளனர்.

...</summary>
            <content type="html"><![CDATA[<p>கணிதத் துறையின் நோபல் பரிசாகக் கருதப்படும் புகழ்பெற்ற ஃபீல்ட்ஸ் மெடல் விருதை வரலாற்றிலேயே முதன்முறையாக இரண்டு சீனர்கள் வென்று சாதனை படைத்துள்ளனர்.
</p><p>
சீனாவைச் சேர்ந்த 35 வயதான ஹோங் வாங்கி மற்றும் 37 வயதான யு டெங் ஆகிய
இருவருக்கும் அமெரிக்காவில் நடைபெற்ற விழாவில் இவ்விருது வழங்கப்பட்டது.</p><p>

100 ஆண்டுகளுக்கும் மேலாகத் தீர்க்கப்படாமல் இருந்த கடினமான கணிதப்
புதிர்களுக்குத் தீர்வு கண்டதற்காக இவர்களுக்கு இந்த உயரிய விருது
கிடைத்துள்ளது.</p><p></p><h2>உலகளாவிய கணித வல்லுநர்கள்</h2><p>

இதில் ஹோங்வாங்கி, 1917இல் ஜப்பானிய கணிதவியலாளர் சோய்ச்சி காக்கியா
முன்வைத்த காக்கியா ஊசிப் புதிருக்கு முப்பரிமாண அடிப்படையில் விடை
கண்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/eedcce3f-8001-421e-b791-22d3ec9c77a9/26-6a63917a2e5ea.webp' /></p><p>

ஃபீல்ட்ஸ் மெடல் விருதைப் பெறும் வரலாற்றின் 3ஆவது பெண்மணி என்ற பெருமையை
ஹாங் வாங்கி பெற்றுள்ளதால், இச்சாதனை சீனாவில் பெரும் கொண்டாட்டமாக
மாறியுள்ளது.
</p><p>
6சீனாவில் பிறந்து அமெரிக்கா மற்றும் பிரான்ஸில் உயர்கல்வி கற்ற இவ்விரு
பேராசிரியர்களுக்கும் உலகளாவிய கணித வல்லுநர்கள் தங்களது வாழ்த்துகளைத்
தெரிவித்து வருகின்றனர்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-24T16:24:31+00:00</updated>
        </entry>
    </feed>
