<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-09-02T01:52:05+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரசாங்கத்திற்கு வரி செலுத்த தவறியவர்களுக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/court-case-against-those-who-fail-to-pay-taxes-1788313377"></link>
            <id>https://tamilwin.com/article/court-case-against-those-who-fail-to-pay-taxes-1788313377</id>
            <summary type="text">அரசுக்கு செலுத்த வேண்டிய வரிகளை முறையாக செலுத்த தவறியவர்களுக்கு எதிராக உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தினால் வழக்கு தாக்கல் செய்யப்படடுள்ளது. 

அதற்கம...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரசுக்கு செலுத்த வேண்டிய வரிகளை முறையாக செலுத்த தவறியவர்களுக்கு எதிராக உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தினால் வழக்கு தாக்கல் செய்யப்படடுள்ளது. </p><p>

அதற்கமைய 57 நபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு எதிராகக் கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளது.
</p><p>
உள்நாட்டு இறைவரி ஆணையாளர் 57 வழக்குகளையும் கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றத்திற்குத் தனித்தனியாகக் அனுப்பி வைத்துள்ளார்.
</p><h2><b>
வழக்கு தாக்கல்</b></h2><p>கொழும்பில் உள்ள தொழிலதிபர்கள், வணிக நிறுவனங்களின் உரிமையாளர்கள் மற்றும் முக்கிய வணிக நிறுவனங்களின் குழுவிற்கு எதிராகவே இவ்வாறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.&nbsp; &nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/640065d8-b40a-444c-90c4-45efff97df12/26-6a978059f0512.webp' /></p>]]></content>
            <updated>2026-09-02T01:48:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரபல பாடகர் பிரியங்கர பெரேரா காலமானார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/veteran-singer-priyankara-perera-dies-at-64-1788312969"></link>
            <id>https://tamilwin.com/article/veteran-singer-priyankara-perera-dies-at-64-1788312969</id>
            <summary type="text">பிரபல பாடகரும் நடிகருமான பிரியங்கர பெரேரா தனது 64ஆவது வயதில் காலமானார்.
நீண்டகாலமாக நோய்வாய்ப்பட்டிருந்த அவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரபல பாடகரும் நடிகருமான பிரியங்கர பெரேரா தனது 64ஆவது வயதில் காலமானார்.</p><p>
நீண்டகாலமாக நோய்வாய்ப்பட்டிருந்த அவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று (01) இரவு காலமானதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
</p><p>திரைப்பட நடிகராகவும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற இவர், பிரபல பாடகர் மில்டன் பெரேராவின் புதல்வர் என்பது குறிப்பிடத்தக்கது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6af2b6d0-18eb-4f02-af3c-8becbe2f1361/26-6a977d8a8d840.webp' /></p><p>
'சுபுன் சதக்', 'சந்துன் கஸே சமன் வெலக்', 'சிகுருலியா', 'அகாத சாகரயே' போன்ற பல காலத்தால் அழியாத பாடல்கள் மூலம் ரசிகர்களின் மனங்களில் நீங்கா இடம்பெற்றிருந்தார்.
</p><p>திரைப்படங்கள், தொலைக்காட்சி நாகடகங்கள், பாடல்கள் என பல்துறைகளில் திறமைகளை வெளிப்படுத்தியுள்ள பிரியங்கர பெரேரா பல விருதுகளை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
</p><p>அன்னாரது இறுதிக் கிரியைகள் பற்றிய விபரங்கள் பின்னர் வெளியிடப்படும் என குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-02T01:36:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[மட்டக்களப்பில் இரண்டு வயது குழந்தைக்கு நேர்ந்த துயரம்! தொடரும் விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/2-year-old-child-dies-in-batticaloa-1788311032"></link>
            <id>https://ibctamil.com/article/2-year-old-child-dies-in-batticaloa-1788311032</id>
            <summary type="text">மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை காவல்துறை பிரிவுக்குட்பட்ட கற்சேனை பகுதியில் இரண்டு வயது குழந்தையொன்று நீர் நிரப்பப்பட்டிருந்த வாளிக்குள் விழுந்து உயிரி...</summary>
            <content type="html"><![CDATA[<p>மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை காவல்துறை பிரிவுக்குட்பட்ட கற்சேனை பகுதியில் இரண்டு வயது குழந்தையொன்று நீர் நிரப்பப்பட்டிருந்த வாளிக்குள் விழுந்து உயிரிழந்துள்ளது.</p><p>

நேற்று செவ்வாய்க்கிழமை (01) ஆம் திகதி காலை 10.30 மணியளவில், வீட்டின் வாசலில் நீர் நிரப்பி வைக்கப்பட்டிருந்த பெரிய வாளியின் அருகே குழந்தை விளையாடிக் கொண்டிருந்துள்ளது.</p><p>

இதன்போது, எதிர்பாராதவிதமாக சிறுவன் தலைகீழாக வாளிக்குள் விழுந்ததில் நீரில் மூழ்கி மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது.</p><p></p><h2>உயிரிழப்பு</h2><p>
உடனடியாக உறவினர்கள் குழந்தை மீட்டு பழுகாமம் பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதிலும், வழியிலேயே சிறுவன் உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a796199e-e206-4f77-8d24-32ad8e2ffa47/26-6a9775fa04832.webp' /></p><p>
</p><p>
சம்பவத்தில் கற்சேனை, முல்லை வீதியைச் சேர்ந்த 2 வயதும் 8 மாதங்களுமான நந்தகோபன் கிசோத் என்ற குழந்தையே பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது.</p><h2>உறவினர்களிடமும் விசாரணை</h2><p>

இந்நிலையில், மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்றத்தின் கட்டளைக்கு அமைவாக திடீர் மரண விசாரணை அதிகாரி வீ.ஆர். மகேந்திரன், பழுகாமம் வைத்தியசாலைக்கு வருகை தந்து சடலத்தைப் பார்வையிட்டதுடன், உறவினர்களிடமும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/30cbd17a-ae0c-49cd-b674-198dec802589/26-6a9778220a7cb.webp' /></p><p>
</p><p>
அதனைதொடர்ந்து, உடற்கூற்றுப் பரிசோதனைகளுக்காக சிறுவனின் சடலம் நேற்று(01) மாலை 6.00 மணியளவில் பழுகாமம் வைத்தியசாலையிலிருந்து களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
</p><p>
இச்சம்பவம் குறித்து கொக்கட்டிச்சோலை காவல்துறையினரால் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-02T01:26:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[முறைகேடாக செயற்பட்ட உயர் அதிகாரியை பணியிலிருந்து அதிரடியாக நீக்கிய அநுர அரசு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/port-managing-director-removed-from-post-1788311394"></link>
            <id>https://tamilwin.com/article/port-managing-director-removed-from-post-1788311394</id>
            <summary type="text">இலங்கை துறைமுக அதிகார சபையின் முகாமைத்துவ பணிப்பாளர் கணக ஹேமச்சந்திர உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இது தொடர...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை துறைமுக அதிகார சபையின் முகாமைத்துவ பணிப்பாளர் கணக ஹேமச்சந்திர உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.</p><p>

இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அனுர கருணாதிலகவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ளது. </p><p>

சமகால அநுர அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர், துறைமுகங்கள் அமைச்சராகப் பதவியேற்ற விஜித்த ஹேரத், துறைமுக அதிகார சபையின் முகாமைத்துவ பணிப்பாளராக கணக ஹேமச்சந்திரவை நியமித்தார். </p><h2><b>பல குற்றச்சாட்டுகள்</b></h2><p>எனினும், திருகோணமலை துறைமுகத்திலிருந்த வழிகாட்டிப் படகை தவறாகப் பயன்படுத்தி 20 கோடி ரூபாய்க்கும் அதிகமான நஷ்டத்தை ஏற்படுத்தியமை உட்பட பல குற்றச்சாட்டுகள் துறைமுக தொழிற்சங்கங்களால் அவருக்கு எதிராக முன்வைக்கப்பட்டன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fbc508ba-0c9b-434f-819c-d23da84fd9ef/26-6a977a9c48085.webp' /></p><p>இந்நிலையில் கணக ஹேமசந்திர பதிவியில் இருந்து நீக்க எடுத்த முடிவுக்கு துறைமுக கூட்டுத் தொழிற்சங்க கூட்டமைப்பு பாராட்டு தெரிவித்துள்ளது. </p><p>

இத்தீர்மானம் நாட்டின் பொருளாதாரத்திற்கு எடுக்கப்பட்ட நல்லதொரு தீர்மானம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. </p>]]></content>
            <updated>2026-09-02T01:25:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[கயாடு லோஹர் சேலையில் அழகிய போட்டோஷூட்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/kayadu-lohar-new-cute-photos-in-saree-1788311669"></link>
            <id>https://cineulagam.com/article/kayadu-lohar-new-cute-photos-in-saree-1788311669</id>
            <summary type="text">நடிகை கயாடு லோஹர் சேலையில் அழகிய போட்டோஷூட். ஒரே படத்தில் சென்சேஷன் நடிகையாக மாறிய அவர் பிசியாக பல படங்களில் நடித்து வருகிறார்.

தெலுங்கு, மலையாளம் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நடிகை கயாடு லோஹர் சேலையில் அழகிய போட்டோஷூட். ஒரே படத்தில் சென்சேஷன் நடிகையாக மாறிய அவர் பிசியாக பல படங்களில் நடித்து வருகிறார்.</p><p>

தெலுங்கு, மலையாளம் என மற்ற மொழிகளிலும் அவருக்கு வாய்ப்புகள் குவிந்து வருகிறது.
</p><p>
Kayadu Lohar தற்போது செம அழகாக சேலையில் போஸ் கொடுத்து இருக்கும் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஸ்டில்களை பாருங்க.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-02T01:14:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பகுதியில் பெண் அரச அதிகாரிக்கு அரங்கேற்றப்பட்ட தகாத செயல் ; முன்னாள் மேயருக்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/incident-involving-female-government-officer-1788309773"></link>
            <id>https://jvpnews.com/article/incident-involving-female-government-officer-1788309773</id>
            <summary type="text">பாலியல் மற்றும் அதிகாரத் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அக்கரைப்பற்று மாநகர சபையின் முன்னாள் மேயர் எதிர...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">பாலியல் மற்றும் அதிகாரத் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அக்கரைப்பற்று மாநகர சபையின் முன்னாள் மேயர் எதிர்வரும் செப்டம்பர் 9ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p style="text-align: justify; ">



சந்தேகநபர் உடல்நலக் குறைவு காரணமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதால்,&nbsp; நீதிமன்றத்தில் நேரடியாக ஆஜர்படுத்தப்படவில்லை.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2eaa7f16-bdfe-47d5-a76c-c01b1c6205f9/26-6a97710ea8765.webp' /></p><h2 style="text-align: justify; ">விளக்கமறியல்</h2><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">


சிறைச்சாலை அதிகாரிகளின் அறிக்கைகளை பரிசீலித்த நீதிவான், சந்தேகநபரின் விளக்கமறியலை மேலும் நீடிக்க உத்தரவிட்டார்.
</p><p style="text-align: justify; ">


அக்கரைப்பற்று மாநகரசபை மேயராகப் பதவி வகித்த காலத்தில், அங்கு பணியாற்றிய பெண் அரச உத்தியோகத்தர் ஒருவரை திருமணம் செய்வதாகக் கூறி, பாலியல் மற்றும் அதிகாரத் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக அவருக்கு எதிராக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">



குறித்த பெண் சமூக வலைத்தள நேரலை மூலம் குற்றச்சாட்டுகளை வெளிப்படுத்தியதைத் தொடர்ந்து, அம்பாறை மாவட்ட பெண்கள் மற்றும் சிறுவர் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்தனர்.</p><p style="text-align: justify; "> விசாரணைகளுக்காக பொலிஸ் நிலையத்திற்கு சென்றபோது சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.
</p><p style="text-align: justify; ">


கடந்த மாதம் 18ஆம் திகதி முதன்முறையாக நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட அவர், பின்னர் ஓகஸ்ட் 19ஆம் திகதி மற்றும் செப்டம்பர் முதலாம் திகதி என தொடர்ச்சியாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மூன்றாவது முறையாக செப்டம்பர் 9ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-02T01:13:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[சச ராஜயோகத்தில் சனி பகவான் ; உச்சத்திற்கு செல்லப்போகும் ராசிகள் இவர்கள் தான்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/saturn-in-shasha-rajayoga-1788311536"></link>
            <id>https://jvpnews.com/article/saturn-in-shasha-rajayoga-1788311536</id>
            <summary type="text">&amp;nbsp;நீதி பகவானாக அறியப்படும் சனிபகவானின் மாற்றம் அனைத்து ராசியினருக்குமே தாக்கத்தை ஏற்படுத்தும்.. அதிலும் சச ராஜயோகம் என்றாலே மிகப்பெரிய அதிர்ஷ்டம் ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">&nbsp;நீதி பகவானாக அறியப்படும் சனிபகவானின் மாற்றம் அனைத்து ராசியினருக்குமே தாக்கத்தை ஏற்படுத்தும்.. அதிலும் சச ராஜயோகம் என்றாலே மிகப்பெரிய அதிர்ஷ்டம் வரப்போகிறது என்று அர்த்தம்.</p><p style="text-align: justify; ">சச ராஜயோகத்தில் சனி வலிமை பெறுவதால், நீண்ட காலமாக கஷ்டம், தடைகள், தாமதங்களை சந்தித்து வந்த சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய முன்னேற்றம் ஏற்படும் என்று சொல்லப்படுகிறது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/30c3a1b7-892d-407c-bc03-c4ad582df10c/26-6a9777f21db79.webp' /></p><h2 style="text-align: justify; ">எந்தெந்த ராசிகள்</h2><p style="text-align: justify; "><b>ரிஷபம்:
</b>ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த யோகமானது இவர்களுக்கு மிகப்பெரிய அளவில் சாதகமான பலன் கொண்டு வந்து சேர்க்கப் போகிறது. நீண்ட நாட்களாக தொழிலில் எதிர்பார்த்த வருமானமும் முன்னேற்றமும் கிடைக்கும். கடன் சுமை குறையும். உழைப்பிற்கு ஏற்ற அங்கீகாரத்தை பெறுவீர்கள்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "><b>

துலாம்:
</b>துலாம் ராசிக்காரர்களுக்கு சச ராஜயோகம் இவர்களுக்கு தொடர்ந்து சந்தித்து வந்த தாமதங்கள் தடைகளில் இருந்து விடுதலை கொடுக்கப் போகிறது. திடீர் வேலை மாற்றம் வருமானத்தில் உயர்வு ஆகியவை பெறுவீர்கள். சொத்து தொடர்பான விஷயங்களில் நல்ல முன்னேற்றம் உண்டு. எதையும் திட்டமிட்டு செய்வதால் நீங்கள் அதற்குரிய பலன்களை பெறுவீர்கள்.&nbsp;</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "><b>மகரம்:
</b>சனிபகவானுடைய சொந்த ராசியான மகர ராசிக்காரர்களுக்கு சனி பகவான் உடைய வலிமையால் வாழ்க்கையில் மிகப் பெரிய தாக்கம் கிடைக்கும். கடந்த காலங்களில் சந்தித்த சோதனைகள் உழைப்பின் மதிப்பை உணர்த்தும் வகையில் இவர்களுக்கு நல்ல தீர்வு கிடைக்கும். அவசரப்படாமல் திட்டமிட்டு செய்வதால் நல்ல பலன் உண்டு. பெயர் புகழ் உயரப் போகிறது.&nbsp;</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-02T01:12:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரேஞ்ச் ரோவரின் முதல் முழுமையான மின்சார கார் அறிமுகம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/range-rover-debuts-first-electric-suv-1788311556"></link>
            <id>https://news.lankasri.com/article/range-rover-debuts-first-electric-suv-1788311556</id>
            <summary type="text">Range Rover debuts first electric SUV: ரேஞ்ச் ரோவர் தனது முதல் முழு மின்சார காரை அறிமுகப்படுத்தியுள்ளது.ரேஞ்ச் ரோவர்&amp;nbsp;மின்சார கார்பிரபல சொகுசு கார...</summary>
            <content type="html"><![CDATA[<p>Range Rover debuts first electric SUV: ரேஞ்ச் ரோவர் தனது முதல் முழு மின்சார காரை அறிமுகப்படுத்தியுள்ளது.</p><h2>ரேஞ்ச் ரோவர்&nbsp;மின்சார கார்</h2><p>பிரபல சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான ரேஞ்ச் ரோவர், தனது முதல் முழுமையான மின்சார மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது. 
இது, நிறுவனத்தின் மின்சார வாகன உற்பத்தி திட்டத்தில் மிகப்பெரிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a1dee748-c232-40d7-91d0-b5d8c5bf3b72/26-6a97780559b42.webp' /></p><p>இந்த புதிய Range Rover Electric மாடல், இங்கிலாந்தின் Solihull தொழிற்சாலையில் தயாரிக்கப்படுகிறது. கிட்டத்தட்ட 10,500 பணியாளர்கள் மின்சார வாகன உற்பத்திக்காக புதிதாகப் பயிற்சி பெற்றுள்ளனர்.</p><p> மேலும், Wolverhampton Electric Propulsion Centre-இல் பேட்டரி மற்றும் மின்சார இயக்கக் கருவிகள் தயாரிக்கப்படுகின்றன.
</p><p></p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">REVEALED: The First-Ever All-Electric Range Rover! ⚡<br><br>Range Rover has officially ushered in a new era, revealing its first-ever all-electric flagship luxury SUV!<br><br>⚡️Dual-motor with 542hp &amp; 850 Nm!<br>🚀 0–60 mph in 4.3 seconds!<br>🔋 Up to 372 miles of range!<br>🔌 0–80% in just 22… <a href="https://t.co/cEI6l6YpyF">pic.twitter.com/cEI6l6YpyF</a></p>&mdash; carwow (@carwowuk) <a href="https://x.com/carwowuk/status/2094923594270670853?ref_src=twsrc%5Etfw">September 1, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>இந்த வாகனம் 118kWh பேட்டரி கொண்டது. ஒரே சார்ஜில் 530 கி.மீ. வரை பயணம் செய்யும் திறன் கொண்டதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், 350kW DC fast charging வசதி மூலம் மிக வேகமாக சார்ஜ் செய்ய முடியும்.
</p><p>
ரேஞ்ச் ரோவர் எலக்ட்ரிக், Mercedes-Maybach EQS மற்றும் Lotus Eletre போன்ற சொகுசு மின்சார SUV-களுடன் போட்டியிடும். 2027-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் விற்பனைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
</p><p></p><p>நிறுவனம் கடந்த ஆண்டு சைபர் தாக்குதல் மற்றும் சப்ளை சேன் சிக்கல்கள் காரணமாக உற்பத்தி பாதிக்கப்பட்டிருந்தது. அதனால், இந்த மாடல் அறிமுகம் ஒரு வருடம் தாமதமானது. இருப்பினும், புதிய மின்சார மாடல், நிறுவனத்தின் எதிர்கால வளர்ச்சிக்கு முக்கியமான படியாகக் கருதப்படுகிறது.
</p><p>
ரேஞ்ச் ரோவர் மேலாளர் Martin Limpert கூறியதாவது: “இது பத்து ஆண்டுகளாக நடந்த ஆராய்ச்சி மற்றும் பொறியியல் முயற்சியின் விளைவு. எங்கள் வாடிக்கையாளர்களுக்கு புதிய அனுபவத்தை வழங்கும்” என்றார்.&nbsp; &nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-02T01:09:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[நடிகை பிரக்யா ஜெய்ஷ்வால் கிளாமர் போட்டோஷூட்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/pragya-jaiswal-sizzling-new-glam-stills-1788310982"></link>
            <id>https://cineulagam.com/article/pragya-jaiswal-sizzling-new-glam-stills-1788310982</id>
            <summary type="text">நடிகை பிரக்யா ஜெய்ஷ்வால் தற்போது தெலுங்கு சினிமாவில் முக்கிய நடிகையாக இருப்பவர். அவர் தொடர்ந்து அதிகம் கிளாமர் காட்டி ரசிகர்களை ஈர்த்து வருகிறார்.

...</summary>
            <content type="html"><![CDATA[<p>நடிகை பிரக்யா ஜெய்ஷ்வால் தற்போது தெலுங்கு சினிமாவில் முக்கிய நடிகையாக இருப்பவர். அவர் தொடர்ந்து அதிகம் கிளாமர் காட்டி ரசிகர்களை ஈர்த்து வருகிறார்.
</p><p>
தற்போது பிரக்யா ஜெய்ஷ்வால் ட்ரெண்டி லுக்கில் போஸ் கொடுத்து இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்களை பாருங்க.&nbsp;</p><p>ரசிகர்களிடம் இந்த போட்டோக்களுக்கு அதிகம் லைக்குகள் குவிந்து வருகிறது.</p>]]></content>
            <updated>2026-09-02T01:03:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[வடக்கு, கிழக்கில் கொட்டித் தீர்க்கப்போகும் இடியுடன் கூடிய மழை! மக்களுக்கு முன்னெச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/thunderstorms-expected-northern-eastern-provinces-1788309482"></link>
            <id>https://ibctamil.com/article/thunderstorms-expected-northern-eastern-provinces-1788309482</id>
            <summary type="text">




வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் அடுத்துவரும் சில தினங்களில் பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கு வளிமண்டலவியல்...</summary>
            <content type="html"><![CDATA[<p>




வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் அடுத்துவரும் சில தினங்களில் பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கு வளிமண்டலவியல் நிலைமைகள் உகந்ததாக காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
</p><p>
சூரியனின் தெற்கு நோக்கிய நகர்வின் காரணமாக இன்று இன்று மதியம் சுமார் 12.10 மணியளவில் ஆனமடு, மொரகொல்லாகம, தம்புள்ளை, மன்னம்பிட்டி மற்றும் வாழைச்சேனை போன்ற இடங்களுக்கு மேலாக சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>

அதன்படி, வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் அத்துடன் மொனராகலை மாவட்டத்திலும் பகல் வேளையில் அதிகரித்த வெப்பநிலையை மனித உடலினால் உணரக்கூடியதாக இருக்கும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p></p><h2>இடியுடன் கூடிய மழை</h2><p>
</p><p>
எவ்வாறாயினும், சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என கூறப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bb96d70f-e111-4847-82b6-3ad6c77b1514/26-6a9772939b131.webp' /></p><p>
</p><p>
அத்தோடு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் முல்லைத்தீவு மாவட்டத்தின் சில இடங்களிலும் பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது.</p><h2>ஓரளவு பலத்த காற்று</h2><p>
</p><p>
மத்திய மலைப் பிராந்தியத்தின் மேற்கு சரிவுகளிலும், வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் மணித்தியாலத்திற்கு சுமார் 30 - 40 km வேகத்தில் அடிக்கடி ஓரளவு பலத்த காற்று வீசக் ஓரளவு கூடும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/acb83e34-2848-4ce7-982e-e5ef9198c267/26-6a977292e611c.webp' /></p><p>
</p><p>
இடியுடன் கூடிய மழை பெய்கின்ற வேளைகளில் பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.</p><p></p><p></p><h5><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table></h5>]]></content>
            <updated>2026-09-02T01:01:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவுக்கு மறக்க முடியாத பாடம் கற்பிக்கப்படும் ; ஈரான் உச்சத் தலைவரின் எச்சரிக்கையால் அதிரும் உலகம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/iran-leader-us-will-be-taught-unforgettable-lesson-1788310819"></link>
            <id>https://canadamirror.com/article/iran-leader-us-will-be-taught-unforgettable-lesson-1788310819</id>
            <summary type="text">அமெரிக்க எதிரிக்கு ஈரான் மறக்க முடியாத பாடங்களைக் கற்பிக்கும் என ஈரானின் உயர்மட்டத் தலைவர் அயத்துல்லா மொஜ்தபா கமேனி எச்சரித்துள்ளார். தமது எக்ஸ் (x) த...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்க எதிரிக்கு ஈரான் மறக்க முடியாத பாடங்களைக் கற்பிக்கும் என ஈரானின் உயர்மட்டத் தலைவர் அயத்துல்லா மொஜ்தபா கமேனி எச்சரித்துள்ளார்.</p><p> தமது எக்ஸ் (x) தளத்தில் அவர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c6924a39-27ad-4627-8647-343b138b12b2/26-6a97752448ac5.webp' /></p><p>
</p><p>
அத்துடன்,அமெரிக்காவின் வான்வழித் தாக்குதல்களுக்கு கடுமையான மற்றும் விரிவான பதிலடி கொடுக்கப்படும் என ஈரானின் உயர்மட்ட இராணுவக் கட்டளை மற்றும் தலைவர்கள் எச்சரித்துள்ளனர்.</p><p>

இந்தநிலையில் அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதல்களில் ஒரு குழந்தை உட்பட நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது.</p><p>

அமெரிக்கப் படைகள் தங்கியுள்ள தளங்கள் மற்றும் ரேடார் கட்டமைப்புகளை இலக்காகக் கொண்டு இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஈரான் தெரிவித்துள்ளது.</p><p>

ஜோர்டான் வான்வெளிக்குள் நுழைந்த 13 பெலிஸ்டிக் ஏவுகணைகளில் 10 ஏவுகணைகளை ஜோர்டான் நாட்டு வான் பாதுகாப்பு அமைப்புகள் இடைமறித்து அழித்துள்ளன.
</p><p>எனினும், ஜோர்டானில் உள்ள கேம்ப் டிடின் அமெரிக்க முகாம் மீதே தாக்குதல் நடத்தப்பட்டதாக ஈரானின் புரட்சிக்கர காவல்படை தெரிவித்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-02T01:00:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜேர்மனியில் மின் நிலையம் அருகே வெடிகுண்டுகள் கண்டுபிடிப்பு - மக்கள் வெளியேற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/explosives-found-near-german-power-plant-1788310770"></link>
            <id>https://news.lankasri.com/article/explosives-found-near-german-power-plant-1788310770</id>
            <summary type="text">Explosives found near German power plant: ஜேர்மனியில் மின் நிலையம் அருகே வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வெடிகுண்டுகள்..ஜேர்மனியின் சார்லாந...</summary>
            <content type="html"><![CDATA[<p>Explosives found near German power plant: ஜேர்மனியில் மின் நிலையம் அருகே வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
</p><h2>
வெடிகுண்டுகள்..</h2><p>ஜேர்மனியின் சார்லாந்து மாநிலத்தில் உள்ள ஒரு மின் நிலையம் அருகே பல வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p>

பொலிஸார் மற்றும் பாதுகாப்பு படைகள் உடனடியாக அந்தப் பகுதியைச் சுற்றி பாதுகாப்பு வளையம் அமைத்துள்ளனர்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/03865dd2-7759-4aeb-9bf5-7514e6e76e53/26-6a9774f446351.webp' /></p><h2>சந்தேகத்திற்கிடமான பைகள்</h2><p>அறிக்கைகளின்படி, மின் நிலையத்தின் வெளிப்புற பகுதியில் சந்தேகத்திற்கிடமான பைகள் கண்டுபிடிக்கப்பட்டன. அவற்றில் வெடிகுண்டுகள் இருந்ததாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. </p><p>உடனடியாக வெடிகுண்டு நிபுணர்கள் அழைக்கப்பட்டு, அவற்றை பாதுகாப்பாக அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.</p><p>
இந்த சம்பவம், ஜேர்மனியில் சமீபத்தில் அதிகரித்து வரும் பாதுகாப்பு அச்சங்கள் மற்றும் அரசியல் பதற்றங்கள் காரணமாக பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.</p><p></p><p>மின் நிலையங்கள் மற்றும் எரிசக்தி உற்பத்தி மையங்கள் மீது தாக்குதல் நடத்தும் முயற்சிகள், நாட்டின் மின்சார விநியோகத்தையும், பொருளாதாரத்தையும் பாதிக்கக்கூடும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
</p><p>
ஜேர்மன் உள்துறை அமைச்சகம், “இது மிகக் கடுமையான பாதுகாப்பு பிரச்சினை. சம்பவம் தொடர்பான விசாரணை தீவிரமாக நடைபெறுகிறது. இதன் பின்னணியில் யார் உள்ளனர் என்பதை கண்டறிய முயற்சி நடைபெறுகிறது” என தெரிவித்துள்ளது.
</p><p>
சம்பவம் நடந்த இடம் அருகே உள்ள மக்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். பள்ளிகள், அலுவலகங்கள், போக்குவரத்து சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.
</p><p></p><p>ஐரோப்பிய ஒன்றிய பாதுகாப்பு அமைப்புகள், ஜேர்மனியுடன் இணைந்து விசாரணை நடத்துகின்றன. “மின் நிலையங்கள் மீது தாக்குதல் நடத்துவது, நாட்டின் எரிசக்தி பாதுகாப்பை குறிவைக்கும் முயற்சி” என அவர்கள் கூறினர்.
</p><p>
இந்த சம்பவம், கடந்த மாதம் ஜேர்மனியில் நடந்த ட்ரோன் தாக்குதல் முயற்சி மற்றும் எரிவாயு குழாய் வெடிப்பு சம்பவங்களுக்குப் பிறகு நடந்துள்ளதால், மக்கள் மத்தியில் அச்சத்தை அதிகரித்துள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-02T00:56:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிக் பாஸ் தொகுத்து வழங்க சல்மான் கான் வாங்கும் பிரம்மாண்ட சம்பளம்! இத்தனை கோடியா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/salman-khan-bigg-boss-20-salary-1788310540"></link>
            <id>https://cineulagam.com/article/salman-khan-bigg-boss-20-salary-1788310540</id>
            <summary type="text">ஹிந்தியில் பிக் பாஸ் நிகழ்ச்சியை சல்மான் கான் தொகுத்து வழங்குகிறார். கடந்த 17 வருடங்களாக அவர் தான் தொகுத்து வழங்கி வருகிறார்.ஒவ்வொரு வருடமும் அவர் சம்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹிந்தியில் பிக் பாஸ் நிகழ்ச்சியை சல்மான் கான் தொகுத்து வழங்குகிறார். கடந்த 17 வருடங்களாக அவர் தான் தொகுத்து வழங்கி வருகிறார்.</p><p>ஒவ்வொரு வருடமும் அவர் சம்பளம் அதிகரித்து கொண்டே தான் இருக்கிறது. பிக் பாஸ் 19 தொகுத்து வழங்க அவர் 300 கோடி ரூபாய் சம்பளமாக வாங்கியதாக கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8c16bf1f-b043-43b5-bb1c-1e495c890986/26-6a97740d818b6.webp' /></p><p>
</p><h2>பிக் பாஸ் 20
</h2><p>விரைவில் பிக் பாஸ் 20ம் சீசன் ஹிந்தியில் தொடங்குகிறது. </p><p>

அதை தொகுத்து வழங்க சுமார் 150 - 200 கோடி வரை சல்மான் கான் சம்பளமாக பெறலாம் என தகவல் வெளியாகி இருக்கிறது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-02T00:55:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[தந்தை செல்வா தூபி உடைப்பை கண்டிக்கின்றது தமிழரசுக் கட்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/itak-condemns-the-demolition-of-father-selva-1788308964"></link>
            <id>https://tamilwin.com/article/itak-condemns-the-demolition-of-father-selva-1788308964</id>
            <summary type="text">இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகர் தந்தை செல்வாவின் தூபி உடைப்பைத் தாம்
வன்மையாகக் கண்டிக்கின்றார் என்று தமிழரசுக் கட்சியின் தலைவர்
சி்.வி.கே.சிவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகர் தந்தை செல்வாவின் தூபி உடைப்பைத் தாம்
வன்மையாகக் கண்டிக்கின்றார் என்று தமிழரசுக் கட்சியின் தலைவர்
சி்.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.
</p><p>
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவிக்கையில்,</p><h2>&nbsp;தமிழரசுக் கட்சி</h2><p>
</p><p>
"தெல்லிப்பளைப் பகுதியில் அமைந்துள்ள தந்தை செல்வாவின் நினைவுத் தூபி அடையாளந் தெரியாத விஷமிகளால் உடைத்துச் சேதமாக்கப்பட்டுள்ளது.</p><p>

தமிழரசுக் கட்சியைத் தற்போது விமர்சிப்பவர்கள் கூட பெரியவரின் செயலை
விமர்சிப்பது கிடையாது.

அத்தகையவரின் தூபியை உடைக்கும் இந்த வன்மச் செயலை மேற்கொண்டமையைத் தமிழரசுக்
கட்சி வன்மையாகக் கண்டிக்கின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9f665f3e-8438-46b4-9d32-d7f6ec3b2a66/26-6a97716084e6f.webp' /></p><p>
</p><p>
அரசியல் வேறுபாடுகள் அல்லது முரண்பாடுகள் அரசியலில் இயல்பானவை. இருந்தபோதும்
ஒரு நினைவுத் தூபியை இடிக்கும் அளவுக்கு அது இட்டுச் செல்வது ஏற்றுக்கொள்ள
முடியாத காரியம் என்பதோடு இந்தச் செயல் அனைவர் நெஞ்சிலும் மற்றுமோர் இடியாகவே
அமைகின்றது. </p><p>எனவே, இது தொடர்பில் எமது ஆழ்ந்த கவலையைத் தெரிவிக்கின்றோம்.

இந்தச் செயலைப் புரிந்த விஷமிகளைக் கைது செய்ய விரைந்து நடவடிக்கை எடுக்கப்பட
வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-02T00:44:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடலுக்கு சென்ற குடும்பத்திற்கு நேர்ந்த கதி - சடலமாக கரையொதுங்கிய நால்வர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/4-family-members-death-in-gampaha-1788308367"></link>
            <id>https://tamilwin.com/article/4-family-members-death-in-gampaha-1788308367</id>
            <summary type="text">கம்பஹா - ஜாஎல, பமுனுகம பகுதியில் அமைந்துள்ள எபமுல்ல கடற்கரையில் நீராடச்
சென்று இராட்சத அலையில் இழுத்துச் செல்லப்பட்டு மாயமான 13 வயது சிறுவனின்
சடலம்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கம்பஹா - ஜாஎல, பமுனுகம பகுதியில் அமைந்துள்ள எபமுல்ல கடற்கரையில் நீராடச்
சென்று இராட்சத அலையில் இழுத்துச் செல்லப்பட்டு மாயமான 13 வயது சிறுவனின்
சடலம் மீட்கப்பட்டுள்ளது.</p><p>இந்த சடலமானது நேற்றைய தினம்(01.09.2026) கண்டெடுக்கப்பட்டுள்ளது.</p><h2>ஒரே குடும்பத்தைச் சேர்ந்த&nbsp;&nbsp;4 பேர்</h2><p> இதன் மூலம் கடலில் அடித்துச்
செல்லப்பட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வரின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன.</p><p>

கடந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் வேளையில் கடலில் நீராடச் சென்ற ஒரே
குடும்பத்தைச் சேர்ந்த தாயார் மற்றும் அவரது மூன்று பிள்ளைகள் உட்பட 4 பேர்
பலத்த அலையில் சிக்கி அடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/397db5f0-d22a-4a2a-8153-38609100a928/26-6a976de8baf0f.webp' /></p><p>நேற்று முன்தினம் காலை மேற்கொள்ளப்பட்ட தீவிர தேடுதலில் 35
வயதுடைய தாய் மற்றும் 4 வயது, 12 வயதுடைய இரு சிறுமிகளின் சடலங்கள்
மீட்கப்பட்ட நிலையில், தேடப்பட்டு வந்த 13 வயது சிறுவனின் சடலம் நேற்று
செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டுள்ளது. </p><p>சம்பவம் நடந்ததிலிருந்து பொலிஸாரும், கடற்படையினரும், அந்தப் பகுதி கடலோர
மீட்புக் குழுவினரும் இணைந்து எபமுல்ல கடற்கரைப் பகுதி முழுவதும் தீவிர
தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டே அனைத்துச் சடலங்களையும் மீட்டுள்ளனர்.
</p><p>
இந்தப் பகுதியில் கடலில் நீராடும் போது பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன்
இருக்குமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-02T00:37:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[உண்ணாவிரத போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ள தமிழ் கட்சிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/democratic-tamil-national-alliance-calls-strike-1788306719"></link>
            <id>https://tamilwin.com/article/democratic-tamil-national-alliance-calls-strike-1788306719</id>
            <summary type="text">எதிர்வரும் 12ஆம் திகதி அரசாங்கத்திற்கு எதிராக தமிழ் கட்சிகள் அடையாள
உண்ணாவிரத போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>எதிர்வரும் 12ஆம் திகதி அரசாங்கத்திற்கு எதிராக தமிழ் கட்சிகள் அடையாள
உண்ணாவிரத போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
</p><p>
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் கலந்துரையாடல் நேற்று(01) யாழ்ப்பாணம்
இணுவில் பகுதியில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இடம்பெற்றதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளனர்.</p><h2>வாக்குறுதிகளை நிறைவேற்றப்படாமை</h2><p>அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,&nbsp; இந்த அரசாங்கம் பதவி ஏற்று 2 வருடங்கள் கடந்த போதிலும், தமிழ் மக்களுக்கு கொடுத்த
வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை.</p><p>பயங்கரவாத தடைச் சட்டம் மற்றும் காணி
விடுவிப்பு, தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை, மாகாண சபை தேர்தல், புதிய
அரசியலமைப்பு, போன்ற விடயங்களை நிறைவேற்றுவதாக தமிழ் மக்களுக்கு ஆணை கொடுத்து
வந்த அரசாங்கம் எந்த விடயங்களையும் நிறைவேற்றவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5ad3e96a-0ae1-484d-b5c4-541af1b4db64/26-6a97655372dd9.webp' /></p><p>அரசாங்கத்திற்கு உணரத்துவதற்கும், தமிழ் மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளார்கள் என்பதை
மக்களுக்கு வெளிப்படுத்தவும் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதத்தை சாவகச்சேரி
பேருந்து நிலையத்தில் மேற்கொள்ளவதற்கு தீர்மானித்துள்ளது.</p><p>

அத்துடன் இந்தப் போராட்டத்திற்கு தமிழ் கட்சிகளின் இணைந்த அழைப்பாக, பல்கலைக்கழக
மாணவர்கள், சிவில் அமைப்புக்கள் அனைவரும் ஒன்றிணைந்து வலுச்சேர்க்குமாறு அழைப்பு விடுத்துள்ளார்கள்.</p><h2>உண்ணாவிரத போராட்டம்</h2><p>ஆட்சிக்கு வந்த தேசிய மக்கள் அரசாங்கம் தேர்தல் காலத்தில்
தமிழ் மக்களிடம் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வாக்குகளை பெற்று, இன்று 2
வருடங்கள் கழிந்த நிலையிலும் கொடுத்த வாக்குகள் நிறைவேற்றப்படவில்லை.</p><p>

குறிப்பாக, வலி வடக்கில் 3 பகுதிகளாக சொந்த நிலத்தை விடுவிக்குமாறு கோரி
போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பலாலி விமான நிலையம் மற்றும் காங்கேசன்துறை
துறைமுகம் அபிவிருத்தி செய்யப்படாமல் தொடர்ந்தும் பின்னடிக்கப்பட்டு
வருகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/72e2f0e9-3409-4fdd-9303-976689f3d292/26-6a976fc15378c.webp' /></p><p>

இந்தியா 600 மில்லியன் ரூபா டொலர்களை வழங்கிய போதும், வேலைகளை
செய்வதற்கான உடன்படிக்கைகளை மேற்கொள்ளாது காலம் கடத்தி வருகின்றனர்.
</p><p>
தேர்தல் காலத்தில் மாகாணசபை அதிகாரங்களை வழங்குவோம் என்றவர்கள், மாகாண சபை
தேர்தலை நடத்துவதற்கு எல்லளவும் விரும்பாத நிலை காணப்படுகிறது.</p><p>

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் எந்தவித கரிசனையும் காட்டாது
இருப்பதை கண்டித்தும், திட்டமிட்டு தமிழ் மக்கள் மீது திணிக்கும் தொல்லியல்
துறை சார்ந்த விடயங்ளை கண்டிக்கும் முகமாகவும் எதிர்வரும் 12 ஆம் திகதிகாலை
7.30 மணியளவில் தமிழ் மக்கள் சார்ந்து தமிழ் அரசியல் கட்சிகள் அடையாள
உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளோம் என குறிப்பிட்டுள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-02T00:34:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பதவி விலகுவதாக அறிவித்த கெய்ர் ஸ்டார்மர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/keir-starmer-resigns-as-mp-focuses-on-global-role-1788282525"></link>
            <id>https://news.lankasri.com/article/keir-starmer-resigns-as-mp-focuses-on-global-role-1788282525</id>
            <summary type="text">Keir Starmer resigns as MP, focuses on global role: எம்.பி பதவியிலிருந்து விலகுவதாக கெய்ர் ஸ்டார்மர் அறிவித்துள்ளார்.

பதவி விலகும் ஸ்டார்மர்பிரித்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>Keir Starmer resigns as MP, focuses on global role: எம்.பி பதவியிலிருந்து விலகுவதாக கெய்ர் ஸ்டார்மர் அறிவித்துள்ளார்.
</p><h2>
பதவி விலகும் ஸ்டார்மர்</h2><p>பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் சர் கெய்ர் ஸ்டார்மர், ஹோல்போர்ன் மற்றும் செயின்ட் பான்க்ரஸ் தொகுதியின் எம்.பி பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
</p><p>
2015 முதல் இந்த லண்டன் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தி வந்த அவர், சர்வதேச விவகாரங்கள் மற்றும் பெண்கள், சிறுமிகளுக்கு எதிரான வன்முறையை தடுக்கும் பணிகளில் கவனம் செலுத்த விரும்புவதாக தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/191e355c-f77f-436a-bb20-e8e2ff5dbade/26-6a97069eb9b8e.webp' /></p><h2>இடைத்தேர்தல்</h2><p>2024 தேர்தலில் பெரும் வெற்றி பெற்று பிரதமராக இருந்த ஸ்டார்மர், கடந்த ஜூலையில் பதவி விலகினார். </p><p>அப்போது அவர் 2029 பொதுத் தேர்தல் வரை எம்.பி ஆக தொடருவதாக கூறியிருந்தாலும், தற்போது திடீர் முடிவெடுத்து விலகுவதாக அறிவித்துள்ளார்.</p><p>இதனால் அந்த தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
</p><p></p><p>தற்போதைய பிரித்தானிய பிரதமர் ஆன்டி பர்னாம், நாடாளுமன்றத்தில் தனது முதல் உரையில் ஸ்டார்மரின் உக்ரைன் தொடர்பான பணி மற்றும் ஹில்ஸ்பரோ சட்டம் போன்ற சாதனைகளை பாராட்டினார். “நாட்டிற்கு நீண்ட கால சேவை செய்தவர்” என அவர் புகழ்ந்தார்.
</p><p>
இடைத்தேர்தலில் லேபர் கட்சிக்கு முக்கிய சவாலாக பசுமைக் கட்சி (Green Party) இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்திய உள்ளூர் தேர்தல்களில் பசுமைக் கட்சி வாக்கு விகிதத்தில் இரண்டாம் இடம் பிடித்துள்ளது.</p><p></p><p>ஸ்டார்மர், “இது சரியான நேரம். நான் புதிய தலைமுறைக்கு வாய்ப்பு அளிக்க விரும்புகிறேன். இனி சர்வதேச பாதுகாப்பு, வர்த்தகம், தொழில்நுட்பம் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறையை தடுக்கும் பணிகளில் கவனம் செலுத்துவேன்” எனக் கூறினார்.
</p><p>
சிலர் அவரை பாராட்டினாலும், எதிர்க்கட்சிகள் “மற்றொரு யூ-டர்ன்” என விமர்சித்துள்ளனர்.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">It has been an honour and a privilege to represent Holborn and St Pancras for the last 11 years. <br><br>My statement. <a href="https://t.co/xzu4xcIno2">pic.twitter.com/xzu4xcIno2</a></p>&mdash; Keir Starmer (@Keir_Starmer) <a href="https://x.com/Keir_Starmer/status/2094750480492609634?ref_src=twsrc%5Etfw">September 1, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-02T00:33:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடல்மட்ட உயர்வால் உடனடி அபாயம் - இந்திய நகரங்களுக்கு ஐ.நா எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/un-warns-kolkata-mumbai-of-sea-level-risk-1788309281"></link>
            <id>https://news.lankasri.com/article/un-warns-kolkata-mumbai-of-sea-level-risk-1788309281</id>
            <summary type="text">UN warns Kolkata Mumbai of sea level risk: கடல்மட்ட உயர்வால் உடனடி ஆபத்து இருப்பதாக இந்திய நகரங்களுக்கு ஐ.நா எச்சரிக்கை விடுத்துள்ளது.

கொல்கத்தா, ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>UN warns Kolkata Mumbai of sea level risk: கடல்மட்ட உயர்வால் உடனடி ஆபத்து இருப்பதாக இந்திய நகரங்களுக்கு ஐ.நா எச்சரிக்கை விடுத்துள்ளது.</p><h2>

கொல்கத்தா, மும்பை நகரங்களில் கடல்மட்ட உயர்வு </h2><p>ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்ட புதிய அறிக்கையில், கொல்கத்தா மற்றும் மும்பை நகரங்களில் கோடிக்கணக்கான மக்களுக்கு கடல்மட்ட உயர்வு காரணமாக உடனடி அபாயம் இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
</p><p>
அறிக்கையில், இந்தியாவின் கடலோர நகரங்கள் உலகின் மிக அதிக ஆபத்தான பகுதிகளில் ஒன்றாக குறிப்பிடப்பட்டுள்ளன.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c082e6ab-02b1-49e6-966c-beeae00f4049/26-6a976f230a4d5.webp' /></p><p>2050-க்குள் கடல்மட்டம் 30-40 செ.மீ. உயர்ந்தால், மும்பை மற்றும் கொல்கத்தாவில் உள்ள சுமார் 2 கோடி மக்கள் வெள்ள அபாயத்திற்கு உள்ளாகலாம் என கணிக்கப்பட்டுள்ளது.
</p><p>
ஐ.நா. சுற்றுச்சூழல் திட்டம் (UNEP) தெரிவித்ததாவது: “கடல்மட்ட உயர்வு, புயல், வெள்ளம் ஆகியவை இணைந்து நகரங்களில் வாழும் மக்களின் வாழ்க்கையை முற்றிலும் பாதிக்கும். உடனடி நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், பெரும் மனிதாபிமான நெருக்கடி உருவாகும்” என எச்சரித்துள்ளது.
</p><p></p><p>மும்பை, இந்தியாவின் நிதி தலைநகரம் என்பதால், கடல்மட்ட உயர்வு பொருளாதாரத்திற்கும் பெரும் தாக்கம் ஏற்படுத்தும். கொல்கத்தா, கங்கை டெல்டா பகுதியில் அமைந்துள்ளதால், வெள்ள அபாயம் அதிகம்.
</p><h2>
நிபுணர்கள் கூறுவதாவது:
</h2><p>
கடலோர பாதுகாப்பு சுவர்கள், பசுமை வளங்களை அதிகரித்தல், நகர திட்டமிடலில் மாற்றங்கள், கார்பன் உமிழ்வை குறைக்கும் நடவடிக்கைகள் - இவை அனைத்தும் உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டும்.
</p><p>
ஐ.நா. அறிக்கையில், “இந்திய அரசு மற்றும் உள்ளூர் நிர்வாகங்கள், உலகளாவிய காலநிலை மாற்றத்துக்கு எதிரான நடவடிக்கைகளை வலுப்படுத்த வேண்டும்.இல்லையெனில், 2030-க்குள் நிலைமை மோசமடையும்” என எச்சரிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இந்த எச்சரிக்கை, சமீபத்தில் வங்காளதேசம், வியட்நாம், பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது. ஆசியாவின் கடலோர நகரங்கள் அனைத்தும் ஒரே மாதிரியான அபாயத்தில் உள்ளன.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-02T00:31:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரசாங்கத்திற்கு எதிராக தமிழ் கட்சிகள் அடையாள உண்ணாவிரத போராட்டம்! விடுக்கப்பட்டுள்ள அழைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/tamil-parties-launch-hunger-strike-against-govt-1788308158"></link>
            <id>https://ibctamil.com/article/tamil-parties-launch-hunger-strike-against-govt-1788308158</id>
            <summary type="text">எதிர்வரும் 12 ஆம் திகதி அரசாங்கத்திற்கு எதிராக தமிழ் கட்சிகள் அடையாள உண்ணாவிரத போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>எதிர்வரும் 12 ஆம் திகதி அரசாங்கத்திற்கு எதிராக தமிழ் கட்சிகள் அடையாள உண்ணாவிரத போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
</p><p>
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் கலந்துரையாடல் இன்று (01) யாழ்ப்பாணம் இணுவில் பகுதியில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இடம்பெற்றது.
</p><p>
அதன்போது, அரசாங்கம் பதவி ஏற்று 2 வருடங்கள் கடந்த போதிலும், தமிழ் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றும் பயங்கரவாத தடைச் சட்டம் மற்றும் காணி விடுவிப்பு, தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை, மாகாண சபை தேர்தல், புதிய அரசியலமைப்பு, போன்ற விடயங்களை நிறைவேற்றுவதாக தமிழ் மக்களுக்கு ஆணை கொடுத்து எந்த விடயங்களையும் நிறைவேற்றவில்லை என குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.</p><p></p><h2>நிறைவேற்றப்படாத வாக்குகள்</h2><p>
</p><p>
அந்தவகையில், அதனை அரசாங்கத்திற்கு உணர்த்துவதற்கும், தமிழ் மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளார்கள் என்பதை மக்களுக்கு வெளிப்படுத்தவும் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதத்தை சாவகச்சேரி பேருந்து நிலையத்தில் மேற்கொள்ளவதற்கு தீர்மானித்துள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ed44d6a5-1b2d-4a95-a44f-1892a3ebfe41/26-6a976d786995e.webp' /></p><p>

அத்துடன், இப்போராட்டத்திற்கு தமிழ் கட்சிகளின் இணைந்த அழைப்பாக, பல்கலைக்கழக மாணவர்கள், சிவில் அமைப்புக்கள் அனைவரும் ஒன்றிணைந்து இந்த போராட்டத்திற்கு வலுச்சேர்க்குமாறும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.</p><p>

அதன்போது, அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “இந்த போராட்டமானது, ஆட்சிக்கு வந்த தேசிய மக்கள் அரசாங்கம் தேர்தல் காலத்தில் தமிழ் மக்களிடம் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வாக்குகளை பெற்று, இன்று 2 வருடங்கள் கழிந்த நிலையிலும் கொடுத்த வாக்குகள் நிறைவேற்றப்படவில்லை.</p><h2>மாகாண சபை அதிகாரங்கள்</h2><p>
</p><p>
குறிப்பாக, வலி வடக்கில் 3 பகுதிகளாக சொந்த நிலத்தை விடுவிக்குமாறு கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பலாலி விமான நிலையம் காங்கேசன்துறை துறைமுகம் அபிவிருத்தி செய்யப்படாமல் தொடர்ந்தும் பின்னடிக்கப்பட்டு வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ccfaa0a2-e875-42cf-8120-e2394e526844/26-6a976d793d00e.webp' /></p><p>
</p><p>
இந்தியா வழங்கிய 600 மில்லியன் ரூபா டொலர்களை வழங்கிய போதும், வேலைகளை செய்வதற்கான உடன்படிக்கைகளை மேற்கொள்ளாது காலம் கடத்தி வருகின்றனர்.
</p><p>
தேர்தல் காலத்தில் மாகாண சபை அதிகாரங்களை வழங்குவோம் என்றவர்கள், மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கு எல்லளவும் விரும்பாத நிலை காணப்படுகிறது.</p><p>

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் எவ்வித கரிசனையும் காட்டாது இருப்பதை கண்டித்தும், திட்டமிட்டு தமிழ் மக்கள் மீது திணிக்கும் தொல்லியல் துறை சார்ந்த விடயங்ளை கண்டிக்கும் முகமாகவும் எதிர்வரும் 12 ஆம் திகதிகாலை 7.30 மணியளவில் தமிழ் மக்கள் சார்ந்து தமிழ் அரசியல் கட்சிகள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளன.” என்றார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-02T00:30:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[கழிவறை தொட்டியில் பச்சிளம் சிசுவை கைவிட முயன்ற இளம்பெண் ; பொதுமக்கள் செய்த சம்பவம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/young-woman-tries-to-abandon-newborn-in-toilet-1788308841"></link>
            <id>https://jvpnews.com/article/young-woman-tries-to-abandon-newborn-in-toilet-1788308841</id>
            <summary type="text">கரவனெல்ல பொது பேருந்து நிலையத்தில் உள்ள பெண்களுக்கான பொதுக் கழிவறை தொட்டியில் பிறந்த குழந்தையை கைவிட முயன்றதாகக் கூறப்படும் பெண் ஒருவர் கைது செய்யப்பட...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">கரவனெல்ல பொது பேருந்து நிலையத்தில் உள்ள பெண்களுக்கான பொதுக் கழிவறை தொட்டியில் பிறந்த குழந்தையை கைவிட முயன்றதாகக் கூறப்படும் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p style="text-align: justify; ">
30 வயதுடைய குறித்த பெண் நேற்று (01) நண்பகல் 12 மணியளவில் பொதுமக்களால் பிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c164ac59-2d19-4d69-9c84-64a5f55e511c/26-6a976d6b25b19.webp' /></p><h2 style="text-align: justify; ">ஆரம்பகட்ட விசாரணை</h2><p>
</p><p style="text-align: justify; ">
குறித்த பெண், அன்றைய தினமே பிறந்ததாகக் கருதப்படும் குழந்தையை கழிவறையில் இருந்த நீர்த் தொட்டிக்குள் வைத்து விட்டு அங்கிருந்து செல்ல முயன்றதாக ஆரம்பகட்ட விசாரணை தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p style="text-align: justify; ">

சம்பவத்தை அவதானித்த பொதுமக்கள் குறித்த பெண்ணை தடுத்து நிறுத்தியதுடன், அது தொடர்பில் காவல்துறைக்கு தகவல் வழங்கியுள்ளனர்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
இதனையடுத்து கைது செய்யப்பட்ட பெண், குழந்தையும் கரவனெல்ல ஆரம்ப மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
</p><p style="text-align: justify; ">
மருத்துவமனைத் தகவல்களின்படி, குழந்தை தற்போது தேக ஆரோக்கியத்துடன் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p style="text-align: justify; ">
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ருவன்வெல்ல பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.&nbsp;</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-02T00:27:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[பியங்கர ஜயரத்ன வழக்கில் நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு: நீளும் குற்றப்பட்டியல்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/priyankara-jayaratne-sentenced-7-years-in-prison-1788308124"></link>
            <id>https://tamilwin.com/article/priyankara-jayaratne-sentenced-7-years-in-prison-1788308124</id>
            <summary type="text">முன்னாள் அமைச்சர் பியங்கர ஜயரத்னவிற்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். 


ஸ்ரீலங்கன...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் அமைச்சர் பியங்கர ஜயரத்னவிற்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.</p><p> 


ஸ்ரீலங்கன் கேட்டரிங் நிறுவனத்தின் 330,000 ரூபா அரச பணத்தைத் தவறாகப் பயன்படுத்திய வழக்கில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.இதுமட்டுமல்லாது அவர் மீது பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கபட்டுள்ளன.</p><p>

சுமார் 3,000 விசா அட்டைகளை அச்சிடுவதற்கு அதிகார சபையின் நிதியிலிருந்து 1,285,200 ரூபாவை முறைகேடாகப் பயன்படுத்தியமை.</p><p>

அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுத்து விஹெனாபாம் நிறுவனத்திற்கு 360,000 ரூபாவையும், சிலாவ் என்எஸ்பி (NSP) கணக்கிற்கு 494,000 ரூபாவையும் அரச நிதியிலிருந்து செலுத்தச் செய்தமை.</p><p>

தனது தனிப்பட்ட செயலாளரை சிவில் விமான போக்குவரத்து அதிகார சபையில் (Civil Aviation Authority) சட்டவிரோதமாக நியமித்து, அவருக்கு அரச நிதியிலிருந்து சம்பளம் மற்றும் சலுகைகளை வழங்கியமை.
</p><p>
 ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் ஏர்பஸ் விமானக் கொள்முதல் விவகாரத்தில் லஞ்சம் பெற்றதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. </p><p>

கபில சந்திரசேன அளித்த வாக்குமூலத்தின்படி, இந்த டீலிங்கின் மூலம் கிடைத்த பணத்தில் 20 மில்லியன் ரூபா பியங்கர ஜயரத்னவுக்கு வழங்கப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
</p><p>
அரச வாகனப் பயன்பாட்டில் விதிகளை மீறி, விசாரணை அறிக்கையின்படி 2,737,599 ரூபாவிற்கும் அதிகமான தொகையைத் தனது தனிப்பட்ட பயன்பாட்டிற்காகச் செலவழித்தமை போன்ற குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கபட்டுள்ளன.</p><p>

இந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்தும் அவர் சிவில் விமான போக்குவரத்து அமைச்சராகப் பணியாற்றிய காலப்பகுதியில் நிகழ்ந்தவையாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன.
</p><p>
இந்தவிடயங்கள் தொடர்பான முழுயைான தகவல்களுக்கு கீழுள்ள காணொளியை காண்க..</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/7PU8B3Mn1GA" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-02T00:25:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[22 ஆவது திருத்தம் தொடர்பில் உயர்நீதிமன்றமே தீர்மானிக்கும்.. நளிந்த ஜயதிஸ்ஸ]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/high-court-decide-on-22nd-amendment-jayatissa-1788307083"></link>
            <id>https://tamilwin.com/article/high-court-decide-on-22nd-amendment-jayatissa-1788307083</id>
            <summary type="text">அரசமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பாகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள
மனுக்களைப் பரிசீலித்து, அதனை நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு
பெரும்பான்மை...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரசமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பாகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள
மனுக்களைப் பரிசீலித்து, அதனை நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு
பெரும்பான்மையுடன் நிறைவேற்ற முடியுமா என்பதை உயர்நீதிமன்றமே தீர்மானிக்கும் என அமைச்சர்
நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.</p><p>

கொழும்பிலுள்ள அரச தகவல் திணைக்களத்தில் நேற்று(01.09.2026)நடைபெற்ற அமைச்சரவைத்
தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு
குறிப்பிட்டுள்ளார்.</p><h2>22ஆவது திருத்தச் சட்டமூலம்</h2><p>
</p><p>
அவர் மேலும் கூறுகையில்,&nbsp; இந்தத் தீர்ப்பை வழங்கி நாடாளுமன்றத்துக்கு அறிவிப்பதற்கு
உயர்நீதிமன்றத்துக்கு 3 வார கால அவகாசம் உள்ளது. </p><p>மனுக்களை விசாரிக்க எந்தெந்த
நீதியரசர்கள் அடங்கிய அமர்வு நியமிக்கப்பட வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும்
அதிகாரம் உயர்நீதிமன்றத்துக்கே உண்டு.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/51f2d30b-ccff-4eb8-a99d-6d6d32330e7f/26-6a97687168c05.webp' /></p><p>வெளியாட்கள் தங்களது விருப்பத்துக்கேற்ப
நீதியரசர்களை நியமிக்குமாறு கோருவதற்குச் சட்டத்தில் இடமில்லை.

ஜனாதிபதி தலைமையில் தேசிய மக்கள் சக்தி நடத்தி வரும் மக்கள் பேரணிகளுக்கும்
உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சர்வஜன வாக்கெடுப்பு விவகாரத்துக்கும்
எந்தவித தொடர்பும் இல்லை.
</p><p>
கடந்த டிசம்பர் மாதமே திட்டமிடப்பட்டுச் சீரற்ற காலநிலை காரணமாகத்
தள்ளிவைக்கப்பட்ட இக்கூட்டங்கள், கட்சியை அடித்தள மட்டத்தில் வலுப்படுத்தவே
நடத்தப்படுகின்றன. மேலும், இதற்கான செலவுகளைக் கட்சியே ஏற்கின்றது. பொதுப்பணம்
பயன்படுத்தப்படவில்லை.</p><p>

22ஆவது திருத்தத்துக்கு எதிராகக் கருத்துத் தெரிவிக்க உரிமையுள்ள போதிலும்,
அதனைச் சாட்டாக வைத்து வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டால் நாட்டின்
அப்பாவிப் பொதுமக்களும் நோயாளிகளுமே கடுமையாகப் பாதிக்கப்படுவர். எனவே,
நோயாளிகளை பிணையாக வைத்து இத்தகைய தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட
வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-02T00:17:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவில் H-1B விசா வைத்திருப்பவர்களுக்கு பேரிடியான அறிவிப்பு! ட்ரம்ப் நிர்வாகம் எடுக்கவுள்ள முடிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/h-1b-visa-holders-in-the-united-states-1788297408"></link>
            <id>https://ibctamil.com/article/h-1b-visa-holders-in-the-united-states-1788297408</id>
            <summary type="text">அமெரிக்காவில் எச்-1பி (H-1B) விசா வைத்திருப்பவர்களின் கணவன் அல்லது மனைவிக்கு எச்-4 (H-4) விசாவின் கீழ் வழங்கப்படும் வேலை செய்யும் உரிமையை ரத்து செய்ய ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவில் எச்-1பி (H-1B) விசா வைத்திருப்பவர்களின் கணவன் அல்லது மனைவிக்கு எச்-4 (H-4) விசாவின் கீழ் வழங்கப்படும் வேலை செய்யும் உரிமையை ரத்து செய்ய ஜனாதிபதி ட்ரம்ப் தலைமையிலான நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருவதாக கூறப்படுகிறது.</p><p>
அமெரிக்காவில் தற்காலிகமாகத் தங்கிப் பணியாற்றும் வெளிநாட்டினருக்கு எச்-1பி விசா வழங்கப்படுகிறது. இவர்களைச் சார்ந்து வாழும் வாழ்க்கைத் துணைவர்கள் மற்றும் 21 வயதுக்குட்பட்ட திருமணம் ஆகாதவர்களுக்கு எச்-4 விசா வழங்கப்பட்டு வருகிறது.</p><p>
ஆரம்பத்தில் எச்-4 விசா வைத்திருப்பவர்கள் அமெரிக்காவில் வேலை செய்ய அனுமதி இருக்கவில்லை. 2015-ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட சட்டத் திருத்தத்தின் மூலமே, நிரந்தரக் குடியுரிமைக்கு (Green Card) விண்ணப்பித்துக் காத்திருக்கும் எச்-1பி பணியாளர்களின் துணைவர்கள் வேலை அனுமதிப் பத்திரம் (EAD) பெற்றுப் பணியாற்ற வழிவகை செய்யப்பட்டது.&nbsp;</p><p></p><h2>சட்ட நடைமுறைகள்</h2><p>
இச்சலுகையைப் பயன்படுத்தி வேலை செய்பவர்களில் 90 சதவீதத்திற்கும் அதிகமானோர் இந்தியர்கள் ஆவர்; குறிப்பாக எச்-1பி பணியாளர்களின் மனைவிகளே அதிகளவில் இதன்மூலம் பயனடைந்து வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ac9a4e5b-98f8-4867-890c-c2231a7cb16b/26-6a9742a13332c.webp' /></p><p>
தற்போது இந்த வேலை அனுமதியைத் திரும்பப் பெறுவதற்கான முதற்கட்ட சட்ட நடைமுறைகளை அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை தொடங்கியுள்ளதுடன், இது தொடர்பான பரிந்துரையையும் வெளியிட்டுள்ளது.&nbsp;</p><p>
ஏற்கனவே ட்ரம்பின் முதலாவது ஆட்சிக்காலத்தில் 2017-ஆம் ஆண்டு இவ்வாறான முயற்சி எடுக்கப்பட்டு, பின்னர் 2021-ல் கைவிடப்பட்டிருந்த நிலையில் தற்போது மீண்டும் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-02T00:13:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்கா உடன்பட்டால் நாங்கள் தயாா் ; ஈரான் வெளியிட்ட தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/ready-to-return-to-ceasefire-if-the-us-agrees-1788307961"></link>
            <id>https://canadamirror.com/article/ready-to-return-to-ceasefire-if-the-us-agrees-1788307961</id>
            <summary type="text">அமெரிக்கா தனது உறுதிமொழிகளை முறையாக நிறைவேற்ற முன்வந்தால், கடந்த ஜூன் மாதம் எட்டப்பட்ட போா் நிறுத்த ஒப்பந்தத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த ஈரான் தயாராக ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்கா தனது உறுதிமொழிகளை முறையாக நிறைவேற்ற முன்வந்தால், கடந்த ஜூன் மாதம் எட்டப்பட்ட போா் நிறுத்த ஒப்பந்தத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த ஈரான் தயாராக உள்ளதாக அந்நாட்டு ஜனாதிபதி மசூத் பெசஷ்கியான் தெரிவித்துள்ளாா்.
</p><p>
கிா்கிஸ்தானில் நடைபெற்று வரும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) உச்சிமாநாட்டுக்கிடையே பேசிய அவா், ‘புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கடமைகளுக்கு அமெரிக்கா திரும்பினால், ஈரான் உடனடியாக அதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும்’ என்று தெரிவித்தாா்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/72ec6fd6-b354-4e0e-a9f1-879e0fdbb3f2/26-6a9769fae9865.webp' /></p><p>

</p><p>முன்னதாக, இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதலைத் தொடா்ந்து, பாகிஸ்தானின் மத்தியஸ்தத்தில் கடந்த ஜூன் மாதம் கையொப்பமான இடைக்கால ஒப்பந்தத்தில் உடனடி போா்நிறுத்தம் அறிவிக்கப்பட்டது.</p><p> மேலும், 60 நாள்களுக்குள் விரிவான அமைதிப் பேச்சுவாா்த்தையை முன்னெடுக்கவும் முடிவானது.
</p><p>
இதன்படி, ஹோா்முஸ் நீரிணையில் அமைக்கப்பட்டிருந்த கண்ணிவெடிகளை அகற்றி, கப்பல் போக்குவரத்தை அனுமதிக்க ஈரானும்; கடல்வழி முற்றுகை மற்றும் பொருளாதாரத் தடைகளை விலக்கி, ஈரான் எண்ணெய் ஏற்றுமதிக்கு அனுமதி வழங்கி மறுசீரமைப்புப் பணிகளைத் தொடங்க அமெரிக்காவும் ஒப்புக்கொண்டன.</p><p>

எனினும், ஹோா்முஸ் நீரிணை கட்டுப்பாடு தொடா்பான கருத்து வேறுபாட்டால் இந்த ஒப்பந்தம் விரைவில் முறிவடைந்த நிலையில்,இரு தரப்புக்கும் இடையே ராணுவ மோதல் அவ்வப்போது நீடித்து வருகிறது; கடந்த வார இறுதியிலும் புதிய மோதல் வெடித்தது.
</p><p>
இதற்கு மத்தியில், ஹோா்முஸ் நீரிணை மற்றும் அதைச் சுற்றியுள்ள கடல் பகுதிகளில் 2 வணிகக் கப்பல்கள் மீது அடுத்தடுத்து தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. </p><p>இத்தாக்குதல்களால் உயிரிழப்புகளோ, சுற்றுச்சூழல் பாதிப்போ ஏற்படவில்லை என்றும், இதற்கு இதுவரை யாரும்ம் பொறுப்பேற்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-02T00:12:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்க விமானப்படை தளத்தை சிதைத்தது ஈரான்! அழிக்கப்பட்டுள்ள முக்கிய ஆயுதங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/iran-missile-strike-on-us-drone-hangars-in-jordan-1788306589"></link>
            <id>https://ibctamil.com/article/iran-missile-strike-on-us-drone-hangars-in-jordan-1788306589</id>
            <summary type="text">ஜோர்டானில் உள்ள அமெரிக்காவின் பிரின்ஸ் ஹசன் விமானப்படைத் தளத்தின் மீது, நீண்ட தூரம் சென்று தாக்கும் RQ-4 மற்றும் MQ-9 ட்ரோன்கள் நிறுத்தி வைக்கப்பட்டிர...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜோர்டானில் உள்ள அமெரிக்காவின் பிரின்ஸ் ஹசன் விமானப்படைத் தளத்தின் மீது, நீண்ட தூரம் சென்று தாக்கும் RQ-4 மற்றும் MQ-9 ட்ரோன்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விமானக் கொட்டகைகளைக் குறிவைத்து, சக்திவாய்ந்த பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதலை நடத்தியதாக ஈரானின் புரட்சிகர காவல் படை (IRGC) அறிவித்துள்து.
</p><p>
ஈரானிய அரசு ஒளிபரப்பு நிறுவனமான IRIB வெளியிட்ட அறிக்கையில், இத்தாக்குதலில் பல ஆளில்லா விமானங்கள் அழிக்கப்பட்டதுடன், அமெரிக்க விமான மற்றும் தொழில்நுட்பப் பணியாளர்கள் சிலர் கொல்லப்பட்டதாகவும், பல தொழில்நுட்ப உள்கட்டமைப்புகள் தீக்கிரையாக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

இருப்பினும், இத்தாக்குதல் குறித்து அமெரிக்காவோ அல்லது ஜோர்டானோ உடனடியாக எந்தவொரு அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தலையும் வெளியிடவில்லை எனக் கூறப்படுகிறது.</p><p></p><h2>அமெரிக்காவின் தாக்குதலுக்கு பதிலடி</h2><p>

ஈரானின் ஹோர்மோஸ்கான் மாகாணத்தில் உள்ள சிரிக் நகரில் நடந்த திருமணக் கொண்டாட்டத்தின் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலில், ஒரு குழந்தை உட்பட நால்வர் கொல்லப்பட்டதுடன் பலர் படுகாயமடைந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9d220cc1-5412-4422-b7af-827a47a5e1b8/26-6a9765ff20b5e.webp' /></p><p> </p><p>

அந்தச் சம்பவத்திற்குப் பழிவாங்கும் நடவடிக்கையாகவே பிரின்ஸ் ஹசன் விமானப்படைத் தளத்தைக் குறிவைத்து இத்தாக்குதலை நடத்தியதாக IRGC சுட்டிக்காட்டியுள்ளது.</p><p>

தற்போதைய மோதலின் போது ஈரான் இந்த இராணுவத் தளத்தை பலமுறை குறிவைத்துத் தாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-02T00:01:06+00:00</updated>
        </entry>
    </feed>
