<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-09-16T15:17:24+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பின்னணியில் புதிய திருப்பம் – புதைந்திருந்த மர்மங்களை கிளறும் விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/easter-attack-case-updates-1789564821"></link>
            <id>https://tamilwin.com/article/easter-attack-case-updates-1789564821</id>
            <summary type="text">2019ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளில் புதிய தகவல்கள் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ளன.

 உயிர்த்...</summary>
            <content type="html"><![CDATA[<p>2019ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளில் புதிய தகவல்கள் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ளன.
</p><p>
 உயிர்த்த தாக்குதலுடன் தொடர்புடைய விசாரணையில், இராணுவ மற்றும் அரச புலனாய்வுப் பிரிவுகளுக்கு தாக்குதல் தொடர்பான முன் தகவல்கள் கிடைத்திருந்தும், அவை உரிய பாதுகாப்புத் தரப்புகளுடன் பகிரப்படவில்லை என்ற தகவல்கள் கிடைத்துள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.</p><p>

இந்த விசாரணையின் ஒரு பகுதியாக முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மற்றும் மன்னாரைச் சேர்ந்த வர்த்தகர் அலாவுதீன் ஆகியோரின் தொடர்புகள் குறித்தும் விசாரணையாளர்கள் கவனம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

அலாவுதீன், உயிர்த்த தாக்குதலில் கொழும்பு ஷங்ரிலா ஹோட்டலில் தற்கொலைக் குண்டுத் தாக்குதலை மேற்கொண்ட இன்சாப் அஹமட்டின் மாமனார் என குறிப்பிடப்பட்டுள்ளார்.</p><p> 

அவரது படகுகள் மூலம் சஹ்ரான் ஹாஷிம் உள்ளிட்டோர் தாக்குதல்களுக்கு முன்னர் இந்தியாவுக்குச் சென்றனரா என்பது குறித்தும் விசாரணைகள் இடம்பெறுவதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
மேலும், கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்த காலத்தில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த அலாவுதீனின் மகள் பின்னர் விடுவிக்கப்பட்டது தொடர்பிலும் விசாரணையாளர்கள் தகவல்களை ஆராய்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

இதனிடையே, ரிஷாட் பதியுதீன் தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை அவர் ஏற்கனவே மறுத்துள்ளதுடன், ஈஸ்டர் தாக்குதலுடன் தனக்கு எந்தத் தொடர்பும் இல்லை என தெரிவித்துள்ளார்.</p><p>

 2022ஆம் ஆண்டில் ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடையதாக அவர்மீது முன்னெடுக்கப்பட்டிருந்த தனி வழக்கில், போதிய ஆதாரங்கள் இல்லை என சட்டமா அதிபர் அறிவித்ததைத் தொடர்ந்து அவர் விடுவிக்கப்பட்டிருந்தார்.
</p><p>
 இந்த விடயங்கள் தொடர்பில் விரிவாக பேசுகின்றது இன்றைய அதிர்வு நிகழ்ச்சி...</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/fw1BpKSyByI" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-16T15:11:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[இட்லி, தோசைக்கு செம காம்பினேஷன்... பெங்களூர் பாணி தேங்காய் சட்னி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/bangalore-style-tasty-coconut-chutney-1789567246"></link>
            <id>https://manithan.com/article/bangalore-style-tasty-coconut-chutney-1789567246</id>
            <summary type="text">Bangalore Hotel Style Coconut Chutney : தென்னிந்திய உணவு வகைகள் என்றாலே, இட்லி, தோசை, வடை போன்ற பாரம்பரிய உணவுகளுடன் இணைந்து நினைவுக்கு வருவது சுவையான...</summary>
            <content type="html"><![CDATA[<p>Bangalore Hotel Style Coconut Chutney : தென்னிந்திய உணவு வகைகள் என்றாலே, இட்லி, தோசை, வடை போன்ற பாரம்பரிய உணவுகளுடன் இணைந்து நினைவுக்கு வருவது சுவையான சட்னி வகைகள்தான். </p><p>குறிப்பாக, தேங்காய் சட்னிக்கு தென்னிந்திய சமையலில் தனி முக்கியத்துவம் உண்டு. எளிமையான பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படுவதுடன், அதன் மணமும், மென்மையான சுவையும் பலரது உணவு மேசையில் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ad4ebfa8-9756-40a3-bf1d-18be97b4ee05/26-6aaaaa48dded2.webp' /></p><p>
</p><p>
தேங்காய் சட்னி இன்று தென்னிந்தியாவைத் தாண்டி உலகின் பல பகுதிகளிலும் விரும்பி சுவைக்கப்படும்&nbsp; சைட்டிஷ்சாக திகழ்கின்றது.</p><p>அதேவேளை, இதனைத் தயாரிக்கும் முறையும் பயன்படுத்தப்படும் பொருட்களும் பிராந்தியத்திற்கு ஏற்ப சிறிய அளவில் மாறுபடுகின்றன.ஒவ்வொரு பகுதியினரும் தங்களுக்கே உரிய பாணியில் தேங்காய் சட்னியைத் தயாரித்து, அதற்கு தனித்துவமான சுவையை வழங்குகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4361111c-db46-4b2a-af59-fabcf7c826e3/26-6aaaaa4998d0f.webp' /></p><p></p><p>
அந்த வகையில், பெங்களூர் பாணியில் மணமும் சுவையும் நிறைந்த, வீட்டிலேயே எளிதாகத் தயாரிக்கக்கூடிய தேங்காய் சட்னியை எவ்வாறு செய்வது என்பதை இந்தப் பதிவில் விரிவாக</p><h2>தேவையான பொருட்கள்</h2><p>
தேங்காய் துருவல் – ½ கப்
</p><p>
பொட்டுக்கடலை – ¼ கப்
</p><p>
பச்சை மிளகாய் – 3முதல் 5
</p><p>
புளி – சிறிய துண்டு
</p><p>
சீரகம் – ¼ தேக்கரண்டி
</p><p>
பூண்டு – 2 பற்கள்
</p><p>
கறிவேப்பிலை – 1 கொத்து
</p><p>
புதினா – சிறிதளவு
</p><p>
கொத்தமல்லி – ஒரு கைப்பிடி
</p><p>
மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை
</p><p>
உப்பு – தேவைக்கேற்ப
</p><p>
சர்க்கரை – ஒரு சிட்டிகை
</p><p>
தண்ணீர் – தேவையான அளவு</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9da8b298-b372-4088-98d4-22d97866e5e6/26-6aaaaa4a4e031.webp' /></p><p><b>

தாளிக்க:
</b></p><p>
எண்ணெய் – 1 தேக்கரண்டி</p><p>

கடுகு – ½ தேக்கரண்டி
</p><p>
உளுந்தம் பருப்பு – ½ தேக்கரண்டி
</p><p>
வர மிளகாய் – 1
</p><h2>
செய்முறை
</h2><p>முதலில் மிக்ஸி ஜாரில் தேங்காய் துருவல், பொட்டுக்கடலை, பச்சை மிளகாய், பூண்டு, புளி, சீரகம், கறிவேப்பிலை, கொத்தமல்லி மற்றும் புதினா இலைகளைச் சேர்த்துக்கொள்ளுங்கள்.
</p><p>
அதனுடன் மஞ்சள் தூள், சர்க்கரை மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து, சிறிதளவு தண்ணீர் ஊற்றி அரைத்துக்கொள்ள வேண்டும்.

சட்னியை மிகவும் மையாக அரைக்காமல், சற்று கொரகொரப்பான பதத்தில் அரைத்தால் சுவையாக இருக்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/233ab32b-c7d1-42ce-972f-f9ece0cea324/26-6aaaaa4b00f4a.webp' /></p><p> </p><p>கறிவேப்பிலை, கொத்தமல்லி போன்றவை லேசாகத் தெரியும் அளவுக்கு அரைத்தாலே போதுமானது.

அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்திற்கு மாற்றிக்கொள்ளுங்கள். சட்னி மிகவும் கெட்டியாக இருந்தால், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கலந்து கொள்ளலாம்.</p><p>

அடுத்து ஒரு சிறிய பாத்திரத்தைஅடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றுங்கள். எண்ணெய் சூடானதும் கடுகு, உளுந்தம் பருப்பு மற்றும் வர மிளகாய் சேர்த்து தாளிக்கவும்.</p><p></p><p> கடுகு நன்றாகப் பொரிந்து, உளுந்தம் பருப்பு பொன்னிறமாக வந்ததும் இந்தத் தாளிப்பை சட்னியின் மீது ஊற்றிவிடுங்கள்.

அவ்வளவுதான், சுவையான பெங்களூர் பாணி தேங்காய் சட்னி தயார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-16T15:00:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[லண்டனில் இருந்து திரும்பும் தமிழக முதலமைச்சர் விஜய்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/chief-minister-vijay-returning-from-london-1789564748"></link>
            <id>https://jvpnews.com/article/chief-minister-vijay-returning-from-london-1789564748</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;லண்டன் சென்றிருந்த தமிழக முதலமைச்சர் விஜய், தனது அரசுமுறைப் பயணத்தை நிறைவு செய்து கொண்டு நாளை காலை சென்னை திரும்புவதாக இந்திய ஊடகங்க்கள் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;லண்டன் சென்றிருந்த தமிழக முதலமைச்சர் விஜய், தனது அரசுமுறைப் பயணத்தை நிறைவு செய்து கொண்டு நாளை காலை சென்னை திரும்புவதாக இந்திய ஊடகங்க்கள் தெரிவித்துள்ளன.</p><p>

தமிழகத்திற்குப் புதிய தொழில் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில், கடந்த செப்டம்பர் 10-ஆம் திகதி முதலமைச்சர் விஜய் லண்டனுக்குப் பயணம் மேற்கொண்டிருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2101eac2-9a62-4bff-ac69-6edc4f358b8e/26-6aaa974e9ba32.webp' /></p><h2>உற்சாக வரவேற்பு அளிக்க பாதுகாப்பு ஏற்பாடு</h2><p>
</p><p>
இந் நிலையில் தனது லண்டன் பயணத்தின் போது, அங்குள்ள பல்வேறு முன்னணி நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் தொழில் அதிபர்களைச் சந்தித்துப் பேசிய முதலமைச்சர், தமிழகத்தில் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகள் குறித்தும் ஆலோசனைகளை மேற்கொண்டார்.</p><p></p><p>
</p><p>
 தனது வெற்றிகரமான லண்டன் பயணத்தை முடித்துக்கொண்டு நாளை (செப்டம்பர் 17) காலை அவர் சென்னைசர்வதேச வானூர்தி நிலையத்தை வந்தடைகிறார்.</p><p></p><p>

முதலமைச்சரின் வருகையையொட்டி வானூர்தி நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கவும், பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பலப்படுத்தவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.</p>]]></content>
            <updated>2026-09-16T15:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாள வெள்ளப்பெருக்கு: மீட்கப்பட்ட சடலங்களை அடையாளம் காண்பதில் தொடரும் சிக்கல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/nepal-floods-recovered-bodies-1789570703"></link>
            <id>https://tamilwin.com/article/nepal-floods-recovered-bodies-1789570703</id>
            <summary type="text">நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கின் பின்னர் மீட்கப்பட்ட சடலங்களில்
சுமார் 7 சதவீதமான சடலங்கள் மாத்திரமே இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளதாக
அந...</summary>
            <content type="html"><![CDATA[<p>நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கின் பின்னர் மீட்கப்பட்ட சடலங்களில்
சுமார் 7 சதவீதமான சடலங்கள் மாத்திரமே இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளதாக
அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
</p><p>
பனிப்பாறை சரிவு காரணமாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக இதுவரை
1,399 பேர் உயிரிழந்துள்ளதுடன், 636 வெளிநாட்டவர்கள் உட்பட சுமார் 5,200 பேர்
வரை இன்னமும் காணாமல் போயுள்ளனர்.</p><p>

உயிரிழந்தவர்களிடமிருந்து 1,206 டி.என்.ஏ மாதிரிப் பரிசோதனைகளும், காணாமல்
போனவர்களின் உறவினர்களிடமிருந்து 1,889 மாதிரிகளும் சேகரிக்கப்பட்டுள்ள
போதிலும், 105 சடலங்கள் மாத்திரமே இதுவரை அடையாளம் காணப்பட்டு உறவினர்களிடம்
ஒப்படைக்கப்பட்டுள்ளன.</p><h2>பெரும் சவால்கள்&nbsp;</h2><p>
</p><p>
பாதிக்கப்பட்ட மலைப்பிரதேசங்கள் மற்றும் நீர்மின் நிலையப் பகுதிகளில்
சிக்கியுள்ளவர்களை மீட்க உலங்குவானூர்திகள் மற்றும் அதிநவீன ட்ரோன்கள்
பயன்படுத்தப்பட்டு வருகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/437efcf2-69a6-4f3b-90bd-df65d9d18587/26-6aaaae91711e0.webp' /></p><p>
</p><p>
இருப்பினும், கடுமையான புவியியல் அமைப்பு மற்றும் மலைப்பகுதிகளில்
குவிந்துள்ள பாறை இடிபாடுகள் காரணமாக மீட்புப் பணிகளை முன்னெடுப்பதில் பெரும்
சவால்கள் நிலவுவதாக நேபாளத் தேசிய பேரிடர் மேலாண்மை முகவரகம்
சுட்டிக்காட்டியுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-16T14:58:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தியாவில் Canon EOS R8 Mark II அறிமுகம் - IBIS, 40fps ஷூட்டிங் வசதியுடன்...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/canon-eos-r8-mark-ii-india-launch-specs-1789570829"></link>
            <id>https://news.lankasri.com/article/canon-eos-r8-mark-ii-india-launch-specs-1789570829</id>
            <summary type="text">Canon நிறுவனம் தனது புதிய EOS R8 Mark II full-frame mirrorless கமெராவை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கமெரா 24.2MP திறன் கொண்டது.

Canon E...</summary>
            <content type="html"><![CDATA[<p>Canon நிறுவனம் தனது புதிய EOS R8 Mark II full-frame mirrorless கமெராவை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. </p><p>இந்த கமெரா 24.2MP திறன் கொண்டது.

Canon EOS R8 Mark II body விலை ரூ.1,78,995 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e075cd2d-b40e-4254-bb22-ae3500b9e227/26-6aaaaf0eddb87.webp' /></p><p>முந்தைய EOS R8 மாடலை விட, இந்த புதிய கமெராவில் In-body Image Stabilisation (IBIS), Autofocus Joystick, மற்றும் 40fps Burst Shooting போன்ற மேம்பட்ட அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
</p><h2>
அளவு மற்றும் எடை
</h2><p> 
EOS R8 Mark II, பேட்டரி மற்றும் கார்டுடன் சேர்த்து 546 கிராம் எடையுடன், 131.4 x 90.0 x 79.7mm அளவில் வருகிறது. இது Canon நிறுவனத்தின் சிறிய மற்றும் இலகுவான IBIS கொண்ட முழு-பிரேம் கமெரா எனக் கருதப்படுகிறது.</p><p>
</p><p></p><h2>Stabilisation மற்றும் Autofocus
</h2><p> 
5-axis IBIS, RF லென்ஸ்களுடன் இணைந்து 7.5 stops correction வழங்குகிறது. </p><p>Dual Pixel CMOS AF II தொழில்நுட்பம் DIGIC X processor மூலம் இயக்கப்படுகிறது.
</p><h2>
ஷூட்டிங் திறன்</h2><p>

Electronic shutter - 40fps
</p><p>
Pre-Continuous Shooting - shutter அழுத்துவதற்கு முன்பே படங்களைப் பதிவு செய்யும் வசதி
</p><p>
ISO - 100 முதல் 102,400 வரை, விரிவாக்கம் 204,800 வரை.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/36ddffd0-e43d-42e5-bd6d-34ed98944387/26-6aaaaf0f94d7f.webp' /></p><h2>வீடியோ வசதிகள்</h2><p> 6K oversampled 4K 60p
</p><p>
Full HD 180p

</p><p>anon Log 3, LUT support, Cinema EOS line-இன் Custom Picture function.</p><h2>

இணைப்பு (Connectivity)
</h2><p>
Wi-Fi 6, Bluetooth 5.3, 3.5mm mic input, micro HDMI port ஆகியவை வழங்கப்பட்டுள்ளன.</p><p></p><p>
</p><h2>
விலை</h2><p>
EOS R8 Mark II Body - ரூ.1,78,995
</p><p>
Extension Grip EG-E2 - ரூ.9,995
</p><p>
Tripod Grip HG-1000TBR + Bluetooth Remote - ரூ.11,495.
</p><p>
இந்த கமெரா, புகைப்படக் கலைஞர்கள் மற்றும் வீடியோ கிரியேட்டர்களுக்கு Canon வழங்கும் புதிய, சக்திவாய்ந்த, இலகுவான சாதனமாகும்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-16T14:57:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானில் பயங்கரம் : பயணிகளுடன் சென்ற விமானத்திற்கு ஏற்பட்ட நிலை : சரிந்து விழுந்த விமான கூரை பாகங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/terror-in-iran-plane-midair-cabin-roof-collapses-1789570538"></link>
            <id>https://ibctamil.com/article/terror-in-iran-plane-midair-cabin-roof-collapses-1789570538</id>
            <summary type="text">ஈரான் நாட்டின் மஷாத் நகரிலிருந்து கெர்மான்ஷா நோக்கிப் பயணித்த செபெஹ்ரன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான போயிங் 737 விமானம்,பறப்பில் ஈடுபட்ட சில நிமி...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரான் நாட்டின் மஷாத் நகரிலிருந்து கெர்மான்ஷா நோக்கிப் பயணித்த செபெஹ்ரன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான போயிங் 737 விமானம்,பறப்பில் ஈடுபட்ட சில நிமிடங்களிலேயே ஏற்பட்ட தீவிர தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.
</p><p>


 விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில், அதன் சக்கரத்தின் டயர் தடம் கழன்று விழுந்தது. இதனால் விமானத்தின் என்ஜின் பகுதியில் பாதிப்பு ஏற்பட்டு, விமானம் முழுவதும் கட்டுக்கடங்காமல் பயங்கரமாக குலுங்கத் தொடங்கியது.&nbsp;</p><h2>கடும் அதிர்வுகளுக்கு உள்ளான&nbsp;விமானம்</h2><p>நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த விமானிகள் உடனடியாக அவசரநிலையை பிரகடனப்படுத்தி, விமானத்தை மீண்டும் மஷாத் விமான நிலையத்தை நோக்கித் திருப்பினர்.


விமானம் கடும் அதிர்வுகளுக்கு உள்ளானதால், பயணியர் அமர்ந்திருந்த பகுதியின் மேல் கூரை உடைந்து சரிந்தது.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">WATCH: Cabin ceiling falls apart onboard a Sepehran Airlines Boeing 737 after a tire reportedly burst shortly after takeoff from Mashhad Airport causing engine damage and severe vibrations. https://t.co/R7RP1AwZYX</p>&mdash; Breaking Aviation News &amp; Videos (@aviationbrk) <a href="https://x.com/aviationbrk/status/2099883286906478737?ref_src=twsrc%5Etfw">September 15, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p> இதன் காரணமாக விமானத்தின் உட்புறக் கட்டமைப்புகள் வெளியே தெரிந்தன. மேலடுக்கு பெட்டிகளில் இருந்த பொருட்களும் கூரை பாகங்களும் பயணிகள் மீது விழுந்ததால், அதிர்ச்சியடைந்த பயணிகள் அலறியபடி பிரார்த்தனை செய்யத் தொடங்கினர்.
</p><p>

விமானிகளின் துரிதமான செயல்பாட்டால், விமானம் மஷாத் விமான நிலையத்தில் பாதுகாப்பாக அவசரத் தரையிறக்கம் செய்யப்பட்டது. இச்சம்பவத்தில் பயணிகள் மற்றும் விமானப் பணியாளர்கள் யாருக்கும் காயங்களோ பாதிப்போ ஏற்படவில்லை&nbsp;&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-16T14:55:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவின் விசா கட்டுப்பாடுகள் குறித்து தென்னாப்பிரிக்கா கவலை வெளியீடு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/south-africa-expresses-deep-concern-over-us-visa-1789569185"></link>
            <id>https://tamilwin.com/article/south-africa-expresses-deep-concern-over-us-visa-1789569185</id>
            <summary type="text">தென்னாப்பிரிக்கப் பிரஜைகள் சிலர் மீது அமெரிக்கா விதித்துள்ள புதிய விசா
கட்டுப்பாடுகள் தொடர்பில் தென்னாப்பிரிக்க வெளிவிவகார அமைச்சு தனது கவலையை
வெளிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>தென்னாப்பிரிக்கப் பிரஜைகள் சிலர் மீது அமெரிக்கா விதித்துள்ள புதிய விசா
கட்டுப்பாடுகள் தொடர்பில் தென்னாப்பிரிக்க வெளிவிவகார அமைச்சு தனது கவலையை
வெளியிட்டுள்ளது.
</p><p>
அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மார்கோ ரூபியோவினால் அறிவிக்கப்பட்ட இந்தத் தடை
குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள தென்னாப்பிரிக்க வெளிவிவகார அமைச்சு,
தென்னாப்பிரிக்காவின் உள்நாட்டுக் கொள்கைகள் குறித்துச் சில தீவிரவாதக்
குழுக்களால் பரப்பப்படும் தவறான கருத்துக்களையே அமெரிக்காவின் இந்த நடவடிக்கை
பிரதிபலிக்கின்றது எனக் குறிப்பிட்டுள்ளது.</p><p>

அத்துடன், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளில் ஏற்படும் சவால்களைத்
தன்னிச்சையான நடவடிக்கைகளால் அன்றி, இராஜதந்திர ரீதியிலான சுமுகமான
பேச்சுவார்த்தைகள் மூலமே தீர்த்துக்கொள்ள முடியும் என்றும் அந்த அறிக்கையில்
சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><h2>விசா கட்டுப்பாடுகள்</h2><p>
</p><p>
தென்னாப்பிரிக்காவில் நிறவெறி ஆட்சிக்குப் பின்னர் நடைமுறைப்படுத்தப்பட்ட இனச்
சமத்துவச் சட்டங்களைச் சுட்டிக்காட்டி, அங்குள்ள வெள்ளைப்பினச்
சிறுபான்மையினருக்கு எதிராக இனரீதியான அடக்குமுறைகள் இடம்பெறுவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சாடி வருகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/400b89a2-34d4-48f3-aef8-425a4ebd03ce/26-6aaaabfc4698d.webp' /></p><p>
</p><p>
இந்நிலையில், தற்போதைய விசா கட்டுப்பாடுகள் ஆரம்பக்கட்ட நடவடிக்கையே என்றும்,
அடுத்துவரும் நாட்களில் மேலதிக கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என்றும்
தென்னாப்பிரிக்காவிற்கான அமெரிக்கத் தூதுவர் தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-16T14:49:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Erimalai</name>
            </author>
            <title type="text"><![CDATA[மருதங்கேணி ஏரியில் இறந்து கிடக்கும் நன்னீர் மீன்கள் – கடற்றொழிலாளர்களுக்கு பேரதிர்ச்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/fish-are-dying-and-floating-on-the-surface-1789568748"></link>
            <id>https://tamilwin.com/article/fish-are-dying-and-floating-on-the-surface-1789568748</id>
            <summary type="text">யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு – மருதங்கேணி கடல் நீர் ஏரிப் பகுதியில் அதிகளவான நன்னீர் மீன்கள் உயிரிழந்து நீரில் மிதப்பதாக கடற்றொழிலாளர்கள் தெரிவிக்கி...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு – மருதங்கேணி கடல் நீர் ஏரிப் பகுதியில் அதிகளவான நன்னீர் மீன்கள் உயிரிழந்து நீரில் மிதப்பதாக கடற்றொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.</p><p>

இதனால், குறித்த பகுதியில் நன்னீர் மீன்பிடித் தொழிலை நம்பியுள்ள கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.</p><h2>வாழ்வாதாரம் பாதிப்பு</h2><p>

வடமராட்சி கிழக்கு பகுதியில் நன்னீர் மீன்பிடித் தொழிலை நம்பி வாழும் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள், தற்போது மீன்பிடித் தொழிலை மேற்கொள்ள முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5fcc12da-c1c2-4360-939b-7b657ca53238/26-6aaaaa07cab4a.webp' /></p><p>
</p><p>
அண்மைக்காலமாக நிலவி வரும் அதிக வெப்பநிலை காரணமாக நன்னீர் மீன்கள் உயிரிழந்திருக்கலாம் என தெரிவிக்கப்படும் நிலையில், இதற்கான காரணம் தொடர்பில் உரிய ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும் என கடற்றொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
</p><p>
இதேவேளை, அதிக வெப்பநிலை காரணமாக பல்வேறு பகுதிகளிலும் நன்னீர் மீனினங்கள் உயிரிழந்து நீரில் மிதக்கும் சம்பவங்கள் பதிவாகி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-16T14:39:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் பிறந்து நோர்வேயில் அமைச்சரான கம்சி குணரத்னம்; கடந்து வந்த பாதை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/jaffna-to-norway-cabinet-eelam-kamzy-gunaratnam-1789563232"></link>
            <id>https://jvpnews.com/article/jaffna-to-norway-cabinet-eelam-kamzy-gunaratnam-1789563232</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp; இலங்கையில் பிறந்த அரசியல்வாதியான கம்சி குணரத்னம் (Kamzy Gunaratnam), நார்வேயின் புதிய போக்குவரத்து அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளமை ஈழ தமி...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp; இலங்கையில் பிறந்த அரசியல்வாதியான கம்சி குணரத்னம் (Kamzy Gunaratnam), நார்வேயின் புதிய போக்குவரத்து அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளமை ஈழ தமிழர்களுக்கு உலகில் பெருமையை தேடி கொடுத்துள்ளது.</p><p>

 யாழ்ப்பாணத்திலிருந்து நார்வே அமைச்சரவை வரை நீண்ட அவரது அரசியல் பயணத்தில் இது மற்றொரு முக்கிய மைல்கல்லாகும்.

ஜோன்-இவார் நைகார்டுக்கு (Jon-Ivar Nygård) பதிலாக, செப்டம்பர் 11 அன்று நார்வே அரசாங்கம் குணரத்னத்தை அதிகாரப்பூர்வமாக இந்தப் பதவியில் நியமித்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b966c93d-0231-421f-8e99-2a368495b3a2/26-6aaa9161db0d6.webp' /></p><p> போக்குவரத்து அமைச்சராக, மக்கள் மற்றும் சரக்கு போக்குவரத்து மற்றும் அஞ்சல் சேவைகள் தொடர்பான கொள்கைகளுக்கு அவர் பொறுப்பாவார்.</p><h2>கம்சி குணரத்னம் கடந்து வந்த பாதை&nbsp;</h2><p>
1988-ல் இலங்கையில் 'கம்ஷஜினி குணரத்னம்' (Khamshajiny Gunaratnam) என்ற பெயரில் பிறந்த இவர், சிறு வயதிலேயே தனது குடும்பத்துடன் நார்வேக்குக் குடிபெயர்ந்தார். பின்னர் தொழிலாளர் கட்சியின் (Labour Party) ஊடாக நார்வே அரசியலில் தீவிரமாக ஈடுபட்டார்.</p><p></p><p>
</p><p>
19 வயதில், 2007-ஆம் ஆண்டில் ஒஸ்லோ நகர சபைக்குள் நுழைந்த குணரத்னம், 2015 முதல் 2021 வரை ஒஸ்லோவின் துணை மேயராகப் பணியாற்றினார். 2021-ல் நார்வே நாடாளுமன்றமான 'ஸ்டோர்டிங்' (Storting)-க்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், 2025-2029 காலப்பகுதிக்கும் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.</p><p>

தொழிலாளர் கட்சியின் இளைஞர் முகாம் ஒன்றின் மீது துப்பாக்கிதாரி ஒருவர் நடத்திய தாக்குதலான, 2011-ஆம் ஆண்டு நடந்த 'உட்டோயா' (Utøya) படுகொலைச் சம்பவத்தில் உயிர் பிழைத்தவர்களில் இவரும் ஒருவர்.</p><p></p><p>
</p><p>
நார்வேயில் தனது அரசியல் பயணத்தின்போதும், இலங்கையில் நடைபெறும் நிகழ்வுகள் குறித்து குணரத்னம் தொடர்ந்து ஆர்வம் காட்டி வந்துள்ளார்.</p><p>

1988-ல் போரினால் பாதிக்கப்பட்ட இலங்கையில் பிறந்ததை நினைவுகூர்ந்த அவர், பிப்ரவரி 2026-ல் நார்வே நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தின்போது இலங்கையின் மனித உரிமைகள் நிலைமை குறித்துக் கருத்துத் தெரிவித்தார்.</p><p></p><p>

மேலும், யாழ்ப்பாணத்தின் செம்மணிப் பகுதியில் மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டது குறித்தும் அவர் குறிப்பாகக் குறிப்பிட்டதுடன், மோதலின் போது காணாமல் போனவர்கள் தொடர்பான தீர்க்கப்படாத கேள்விகள் குறித்தும் தனது கவலையை வெளிப்படுத்தினார்</p>]]></content>
            <updated>2026-09-16T14:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[திருகோணமலை வைத்தியசாலைக்கு அதி நவீன இருதய சிகிச்சை வளாகம் : ஜனாதிபதி தலைமையில் அடிக்கல் நாட்டல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/modern-cardiology-complex-for-trincomalee-hospital-1789567720"></link>
            <id>https://ibctamil.com/article/modern-cardiology-complex-for-trincomalee-hospital-1789567720</id>
            <summary type="text">திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலையில், 8 மாடிகளைக் கொண்ட நவீன இருதய
சிகிச்சை வளாகம் நிர்மாணிக்கப்படவுள்ளது.
இதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு, ஜனாத...</summary>
            <content type="html"><![CDATA[<p>திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலையில், 8 மாடிகளைக் கொண்ட நவீன இருதய
சிகிச்சை வளாகம் நிர்மாணிக்கப்படவுள்ளது.
இதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க
தலைமையில், சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் மருத்துவர் நலிந்த ஜயதிஸ்ஸவின்
பங்கேற்புடன் இன்று 16ஆம் திகதி நடைபெற்றது.
</p><p>
சுமார் 2,403 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்படவுள்ள இந்த வளாகத்தில்,
இருதய நோய்களை கண்டறிதல், சிகிச்சையளித்தல் மற்றும் அவசரகால மருத்துவப்
பராமரிப்பு உள்ளிட்ட நவீன சிகிச்சை வசதிகள் ஏற்படுத்தப்படவுள்ளன.</p><h2>மக்களுக்கான பல்வேறு வசதிகள்</h2><p>&nbsp;மேலும், தீவிர சிகிச்சைப் பிரிவு, கெத் லேப், ஆய்வகங்கள், எக்ஸ்-ரே சேவைகள்,
நூலகம் மற்றும் கேட்போர் கூடம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளும் இங்கு
அமைக்கப்படவுள்ளன.
இந்தத் திட்டத்தின் மூலம் திருகோணமலை மாவட்ட மக்கள் மட்டுமன்றி, கிழக்கு
மாகாணத்தின் தூரப் பிரதேசங்களில் வாழும் மக்களும் தங்களுக்கு அண்மையிலேயே
உயர்தர இருதய சிகிச்சை சேவைகளைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு ஏற்படும் என
எதிர்பார்க்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5017efee-c731-4b57-9e7f-eb3815323d59/26-6aaaa70185a0e.webp' /></p><p>&nbsp;குறிப்பாக, அவசர இருதய சிகிச்சை வசதிகள் மேம்படுத்தப்படுவதன் மூலம்,
நோயாளர்களை தூர மாவட்டங்களில் உள்ள வைத்தியசாலைகளுக்கு மாற்ற வேண்டிய நிலையும்
குறையக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>ஜப்பான் சர்வதேச கூட்டுறவு நிறுவனம் JICA மற்றும் இந்திய அரசாங்கத்தின் கடன்
உதவி உள்ளிட்ட நிதியுதவியின் கீழ் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p>
</p><h2>திருகோணமலை மக்களின் நீண்டகால சுகாதாரத் தேவை</h2><p>இந்த அடிக்கல் நாட்டும் நிகழ்வில் அரசியல் பிரதிநிதிகள், ஜப்பான் தூதரக
அதிகாரிகள், சுகாதாரத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/58244791-c1c4-4fb7-b7bb-3ef3c5c010ac/26-6aaaa70256136.webp' /></p><p>
</p><p>
திருகோணமலை மக்களின் நீண்டகால சுகாதாரத் தேவைகளில் முக்கியமான ஒன்றாக
கருதப்படும் இருதய சிகிச்சை வசதிகளை மேம்படுத்தும் இந்தத் திட்டம், கிழக்கு
மாகாண சுகாதாரத் துறையில் முக்கிய முன்னேற்றமாக அமையும் என
எதிர்பார்க்கப்படுகிறது.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-16T14:26:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஐரோப்பிய ஒன்றியத்தின் முதல் இணை உறுப்பினராக கனடாவிற்கு அழைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/canada-invited-as-eu-s-first-associate-member-1789564922"></link>
            <id>https://news.lankasri.com/article/canada-invited-as-eu-s-first-associate-member-1789564922</id>
            <summary type="text">Canada invited as EUs first associate member: கனடா ஐரோப்பிய ஒன்றியத்தின் முதல் இணை உறுப்பினராக அழைக்கப்படவுள்ளது.

EU முதல் இணை உறுப்பினராக&amp;nbsp;கனட...</summary>
            <content type="html"><![CDATA[<p>Canada invited as EUs first associate member: கனடா ஐரோப்பிய ஒன்றியத்தின் முதல் இணை உறுப்பினராக அழைக்கப்படவுள்ளது.
</p><h2>
EU முதல் இணை உறுப்பினராக&nbsp;கனடா</h2><p>ஐரோப்பிய ஒன்றியம் (EU) தனது 27 உறுப்பினர் நாடுகளுக்குள், கனடாவை முதல் இணை உறுப்பினராக (Associate Member) அழைக்கத் தீர்மானித்துள்ளது.</p><p>

இந்த அறிவிப்பை ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர்லெயன், பிரான்ஸ் ஸ்ட்ராஸ்பர்க் நகரில் நடைபெற்ற ‘State of the Union’ உரையில் வெளியிட்டார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/efca419f-409f-4e69-ac39-accd5fafef28/26-6aaa97fbb1cc8.webp' /></p><p>கனடா பிரதமர் மார்க் கார்னி, இந்த உரையில் கலந்து கொண்டார். அவர், கனடா முழுமையான உறுப்பினராக விரும்பவில்லை என்றாலும், பாதுகாப்பு மற்றும் பொருளாதார கூட்டாண்மை குறித்து தனித்துவமான ஒப்பந்தத்தை விரும்புவதாக தெரிவித்தார்.
</p><p>
தற்போது, கனடா-அமெரிக்கா இடையே கடுமையான வர்த்தக போர் நடைபெற்று வருகிறது. அமெரிக்கா ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் விதித்த சுங்க வரிகளை, கனடா ‘டொலர்-க்கு டொலர்’ என்ற முறையில் எதிர்த்து வருகிறது. இதனால், கனடா தனது பொருளாதார பாதுகாப்பை உறுதிப்படுத்த, ஐரோப்பாவுடன் நெருக்கமான உறவைத் தேடுகிறது.
</p><p></p><h2>EU - கனடா&nbsp;உறவு புதிய நிலைக்கு முன்னேற்றம்</h2><p>ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் கனடா ஏற்கனவே CETA (Comprehensive Economic and Trade Agreement) என்ற சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தில் இணைந்துள்ளன. 2017-இல் அமுலுக்கு வந்த இந்த ஒப்பந்தம், 99 சதவீத சுங்க வரிகளை நீக்கியது. இப்போது, EU-Canada உறவு, “பொது வளமும் பொருளாதார பாதுகாப்பும்” என்ற புதிய நிலைக்கு முன்னேறுகிறது.</p><p>

உர்சுலா வான் டெர்லெயன், “கனடா மற்றும் ஐரோப்பா உலகைப் பார்க்கும் பார்வை ஒன்றே. AI, காலநிலை மாற்றம், ஆர்க்டிக் பாதுகாப்பு, மற்றும் புவியியல் அரசியல் போன்ற துறைகளில் இணைந்து செயல்படுவோம்” என்று தெரிவித்தார்.
</p><p></p><h2>EU-வை 40 நாடுகளாக விரிவாக்கும் திட்டம்</h2><p>பின்லாந்து ஜனாதிபதி அலெக்சாண்டர் ஸ்டப், EU-வை 40 நாடுகளுக்கு விரிவாக்கும் யோசனையை முன்வைத்துள்ளார். அதில் கனடா, பிரித்தானியா, துருக்கி, நோர்வே, ஐஸ்லாந்து ஆகியவை சாத்தியமான உறுப்பினர்களாகக் கருதப்படுகின்றன.
</p><p>
இந்த முடிவு, அமெரிக்கா மற்றும் சீனாவை சார்ந்திருப்பதை குறைத்து, ஜனநாயக நாடுகளுடன் வலுவான கூட்டாண்மையை உருவாக்கும் முயற்சியாக பார்க்கப்படுகிறது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p>&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-16T14:22:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[போர்க்குற்றம் : வெளிநாடொன்றின் முன்னாள் ஜனாதிபதிக்கு விதிக்கப்பட்டது 25 வருட சிறை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/former-kosovo-president-sentenced-war-crimes-1789565321"></link>
            <id>https://ibctamil.com/article/former-kosovo-president-sentenced-war-crimes-1789565321</id>
            <summary type="text">சேர்பியாவிலிருந்து சுதந்திரம் பெறுவதற்கான போரின்போது போர் குற்றங்களை இழைத்ததாக, கொசோவோவின் முன்னாள் ஜனாதிபதி ஹாஷிம் தாச்சி மீது சுமத்தப்பட்ட நான்கு கு...</summary>
            <content type="html"><![CDATA[<p>சேர்பியாவிலிருந்து சுதந்திரம் பெறுவதற்கான போரின்போது போர் குற்றங்களை இழைத்ததாக, கொசோவோவின் முன்னாள் ஜனாதிபதி ஹாஷிம் தாச்சி மீது சுமத்தப்பட்ட நான்கு குற்றச்சாட்டுகளில் அவர் குற்றவாளி என கொசோவோ போர் குற்றங்கள் தீர்ப்பாயம் அறிவித்துள்ளது.</p><p>1990-களில் சேர்பியாவிலிருந்து அப்பகுதி வன்முறை வழியில் பிரிந்தபோது, ​​இன ரீதியாக அல்பேனியர்களுக்கான 'கொசோவோ விடுதலைப் படையின்' (KLA) உயர்மட்டத் தளபதியாக இருந்து கொலை, சித்திரவதை மற்றும் சட்டவிரோதக் காவல் வைப்பு உள்ளிட்ட குற்றங்களை இழைத்ததற்காக, 58 வயதான தாச்சிக்கு இன்று புதன்கிழமை அன்று 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.</p><h2>தாச்சி குற்றவாளி</h2><p>நெதர்லாந்தின் ஹேக் நகரில் உள்ள 'கொசோவோ சிறப்பு மன்றம்' (KSC), மோதலின் போது KLA அமைப்பால் 96 அரசியல் எதிரிகள் மற்றும் சேர்பியப் பாதுகாப்புப் படைகளுக்கு உடந்தையாக இருந்ததாகக் கருதப்பட்டவர்கள் கொல்லப்பட்ட விவகாரத்தில் தாச்சி குற்றவாளி என்று கூறியது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/588176bd-f46d-49c5-9b94-a7be17809ef5/26-6aaa9dbfb677a.webp' /></p><p>எனினும் தாச்சி தன் மீதான அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் மறுதலித்தார்.

சூட் மற்றும் டை அணிந்திருந்த அவர், தலைமை நீதிபதி சார்லஸ் ஸ்மித் தண்டனை விவரங்களை வாசித்தபோது அமைதியாக நின்றிருந்தார்.
</p><p>
KLA அமைப்பின் முன்னாள் மூத்த தளபதிகள் மூவருக்கும் பல்வேறு குற்றச்சாட்டுகளுக்காகத் தண்டனைகள் விதிக்கப்பட்டன.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> WHATSAPP CHANNE</a>L இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p>you may like this</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/Z8NywXpZrYo" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-09-16T14:21:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரஷ்ய எண்ணெய் இறக்குமதி - இந்தியாவிற்கு 100 சதவீதம் வரி விதிக்கவுள்ள அமெரிக்கா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/india-faces-us-100-percent-tariff-on-russian-oil-1789568471"></link>
            <id>https://news.lankasri.com/article/india-faces-us-100-percent-tariff-on-russian-oil-1789568471</id>
            <summary type="text">India faces US 100 percent tariff on Russian oil: அமெரிக்கா விரைவில் இந்தியாவிற்கு 100 சதவீத இறக்குமதி வரியை விதிக்க வாய்ப்புள்ளது.

40.8 பில்லியன் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>India faces US 100 percent tariff on Russian oil: அமெரிக்கா விரைவில் இந்தியாவிற்கு 100 சதவீத இறக்குமதி வரியை விதிக்க வாய்ப்புள்ளது.
</p><h2>
40.8 பில்லியன் டொலர் கச்சா எண்ணெய் இறக்குமதி</h2><p>இந்தியா 2026 நிதியாண்டில் ரஷ்யாவிலிருந்து 40.8 பில்லியன் டொலர் மதிப்பிலான கச்சா எண்ணெயை இறக்குமதி செய்துள்ளது.

இது இந்தியாவின் மொத்த எண்ணெய் இறக்குமதியின் மூன்றில் ஒரு பங்காகும். </p><p>ஜூலை 2026-இல், ரஷ்யா இந்தியாவின் எண்ணெய் இறக்குமதியில் 51 சதவீதம் பங்கைக் கொண்டிருந்தது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/51a7ff7f-713f-408c-a73e-b1891776e693/26-6aaaa5d9a4be9.webp' /></p><h2>100 சதவீத வரி விதிக்க டிரம்புக்கு அதிகாரம்</h2><p>இந்நிலையில், அமெரிக்க காங்கிரஸில் “Sanctioning Russia and Iran Act” என்ற மசோதா நிறைவேற்றப்பட உள்ளது. </p><p>இந்த மசோதா, ஜனாதிபதி டொனால்டு டிரம்புக்கு, ரஷ்ய எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு 100 சதவீதம் வரை கூடுதல் வரி விதிக்கும் அதிகாரத்தை வழங்குகிறது.
</p><p></p><h2>இந்தியாவிற்கு&nbsp;சிக்கல் </h2><p>இந்த நடவடிக்கை இந்தியாவிற்கு பெரும் சவாலாக உள்ளது. ஏனெனில், ரஷ்ய எண்ணெய் குறைந்த விலையில் கிடைப்பதால், இந்தியா தனது இறக்குமதி செலவுகளை குறைத்து, பணவீக்கத்தை கட்டுப்படுத்தி வந்தது. ஆனால், அமெரிக்கா கூடுதல் வரி விதித்தால், ஆயிரக்கணக்கான இந்திய ஏற்றுமதி பொருட்கள் பாதிக்கப்படலாம்.
</p><p>
இந்தியா தற்போது அமெரிக்காவுடன் இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. வரி அச்சுறுத்தல், இந்த ஒப்பந்தத்தில் இந்தியாவை அமெரிக்காவின் நிபந்தனைகளை ஏற்க வைக்கும் அழுத்தமாக மாறும் அபாயம் உள்ளது.
</p><p></p><p>Global Trade Research Initiative (GTRI) நிறுவனர் அஜய் ஸ்ரீவாஸ்தவா, “இந்தியா 1.4 பில்லியன் மக்களுக்கு மலிவான எரிசக்தி வழங்க ரஷ்ய எண்ணெயை வாங்குகிறது. இது போருக்கு நிதி வழங்க அல்ல. 100 சதவீத வரி விதிப்பது இந்திய ஏற்றுமதியாளர்களையும் அமெரிக்க நுகர்வோரையும் பாதிக்கும்” என்று தெரிவித்துள்ளார்.</p><p>

அமெரிக்க காங்கிரஸில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால், இந்தியாவின் ரஷ்ய எண்ணெய் வர்த்தகம் கடுமையான சிக்கலில் சிக்கக்கூடும்.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-16T14:17:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[மேஷம் முதல் மீனம் வரை.., சொந்தத்துக்குள் யாருக்கு திருமணம்?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/12-rasi-marriage-rasi-palan-in-tamil-1789561548"></link>
            <id>https://news.lankasri.com/article/12-rasi-marriage-rasi-palan-in-tamil-1789561548</id>
            <summary type="text">திருமண வாழ்க்கை என்பது அனைவரின் வாழ்க்கையிலும் மிகவும் முக்கியமானதாகும். 

திருமணம் என்பது அனைவரின் வாழ்க்கையிலும் திருப்பத்தை ஏற்படுத்துவதாகும். 
...</summary>
            <content type="html"><![CDATA[<p>திருமண வாழ்க்கை என்பது அனைவரின் வாழ்க்கையிலும் மிகவும் முக்கியமானதாகும். </p><p>

திருமணம் என்பது அனைவரின் வாழ்க்கையிலும் திருப்பத்தை ஏற்படுத்துவதாகும். </p><p>

திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக அமைய அது எந்த நேரத்திலும், காலகட்டத்திலும் நடக்கிறது என்பது மிகவும் முக்கியமானதாகும்.</p><p> 

அதனால்தான் திருமணம் சுபமுகூர்த்தத்தில் நடத்தப்பட அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. </p><p>

ஜோதிட சாஸ்திரத்தின் படி, ஒருவரின் ஜாதகத்தில் உள்ள 7ஆம் வீடு மற்றும் 7ஆம் அதிபதி ஆகியோரின் நிலையை வைத்து திருமணம் மற்றும் திருமண வாழ்க்கை கணிக்கப்படுகிறது.
</p><p>
மேலும், நமது ராசியானது நம்முடைய திருமண வாழ்க்கையில் முக்கியப்பங்கு வகிக்கிறது.
</p><p>
ஆண்களுக்கு சுக்கிரனும், பெண்களுக்கு குருவும் திருமணத்துக்கான முக்கிய கிரகங்களாகக் கருதப்படுகின்றன.
</p><p>
அந்தவகையில், மேஷம் முதல் மீனம் வரையான ராசிக்காரர்களுக்கு, சொந்தத்துக்குள் யாருக்கு திருமணம் நடக்கும் என்று இராம்ஜி சுவாமிகள் இக்காணொளியில் பகிர்ந்துள்ளார்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/AXx7F5zFksY" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p>&nbsp; &nbsp; &nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-09-16T14:15:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[நடிகை ரைசா வில்சனின் கிளாமர் லுக் போட்டோஸ்...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/raiza-wilson-recent-glam-photos-post-nova-1789566076"></link>
            <id>https://viduppu.com/article/raiza-wilson-recent-glam-photos-post-nova-1789566076</id>
            <summary type="text">ரைசா வில்சன்கன்னட சினிமாவில் மாடலிங் மூலம் தனது சினிமா பயணத்தை துவங்கியவர் தான் ரைசா வில்சன். அந்த துறையில் பணிபுரிந்துகொண்டிருந்தபோதே தமிழ் பக்கம் வந...</summary>
            <content type="html"><![CDATA[<h2>ரைசா வில்சன்</h2><p>கன்னட சினிமாவில் மாடலிங் மூலம் தனது சினிமா பயணத்தை துவங்கியவர் தான் ரைசா வில்சன். அந்த துறையில் பணிபுரிந்துகொண்டிருந்தபோதே தமிழ் பக்கம் வந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ba8c43cd-a59c-448a-8a8b-b711cb7a5892/26-6aaa9c870c049.webp' /></p><p> விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மக்களின் கவனம் பெற்றார். அந்நிகழ்ச்சி முடிந்த கையோடு ஹரிஷ் கல்யாணுடன் இணைந்து ஒரு காதல் திரைப்படம் நடித்தார்.</p><p>நோவா என்ற படத்தில் நடித்து வரும் ரைசா தற்போது, நீச்சல் குளத்தில் எடுத்த கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-09-16T14:15:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[பட்டினபாக்கத்தில் புதிய தலைமை செயலகம் ஏன்? அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/nirmal-kumar-say-why-pattinapakkam-for-secretariat-1789568036"></link>
            <id>https://ibctamilnadu.com/article/nirmal-kumar-say-why-pattinapakkam-for-secretariat-1789568036</id>
            <summary type="text">nirmal kumar explains why pattinapakkam choosed for new secretariat: புதிய தலைமை செயலகம் கட்ட பட்டினபாக்கத்தில் இடம் தேர்வு செய்யப்பட்டது ஏன் என அமைச்...</summary>
            <content type="html"><![CDATA[<p>nirmal kumar explains why pattinapakkam choosed for new secretariat: புதிய தலைமை செயலகம் கட்ட பட்டினபாக்கத்தில் இடம் தேர்வு செய்யப்பட்டது ஏன் என அமைச்சர் நிர்மல்குமார் விளக்கமளித்துள்ளார்.</p><h3> 

பட்டினபாக்கத்தில் புதிய தலைமை செயலகம் ஏன்?
</h3><p>
சென்னை பட்டினபாக்கத்தில் ரூ.1,200 கோடி மதிப்பீட்டில், தலைமை செயலகம் மற்றும் புதிய சட்டமன்ற வளாகம் கட்டப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5ba06e90-05f0-469d-b5d0-b95a1e394493/26-6aaaa4259bcdc.webp' /></p><p>

இதற்கு பட்டினபாக்கத்தில் உள்ள மீனவ மக்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.</p><p> 

இந்நிலையில், இது குறித்து பேசிய அமைச்சர் நிர்மல் குமார், "அரசு அலுவலகங்கள் அனைத்தும் நகரத்திற்குள் தான் உள்ளது. 

பட்டினபாக்கத்தை விட்டால் மகாபலிபுரம், ஸ்ரீபெரும்புதூரில் தான் கட்ட முடியும். </p><p>அங்கு மாற்றப்பட்டால் அதிகாரிகள் வந்து செல்லவே 2 மணி நேரம் ஆகும். 

அனைத்து அம்சங்களையும் ஆராய்ந்த பின்னரே பட்டினபாக்கத்தில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. </p><p>சிலர் எதற்காக எதிர்க்கிறோம் என்று தெரியாமலே எதிர்க்கிறார்கள். 

மக்கள் பாதிப்பு அடையாத வகையில் தான் முதல்வர் நடவடிக்கை எடுப்பார்" என தெரிவித்துள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-16T14:14:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழீழம் வேண்டாம் ;அர்ச்சுனா எம்பி எம்முடன் இருப்பதில் தவறு இல்லை ; உதய கம்மன்பில]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/udaya-gammanpila-comment-archuna-mp-1789563867"></link>
            <id>https://jvpnews.com/article/udaya-gammanpila-comment-archuna-mp-1789563867</id>
            <summary type="text">&amp;nbsp; நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா, தமிழீழக் கோரிக்கையை எதிர்ப்பதால் அவர் தங்களது மேடைகளில் இருப்பதில் எந்தவொரு தவறும் இல்லை என பிவிதுரு ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா, தமிழீழக் கோரிக்கையை எதிர்ப்பதால் அவர் தங்களது மேடைகளில் இருப்பதில் எந்தவொரு தவறும் இல்லை என பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
</p><p>
ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.&nbsp; &nbsp;இதன்போது அவர்&nbsp; மேலும்&nbsp; கூறுகையில்,</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3c65eaf4-241b-42b4-b250-a82de9217744/26-6aaa93dd3d756.webp' /></p><h2>தங்களது மேடைகளில் வைத்திருப்பது அவசியம்</h2><p>அண்மையில் அனுராதபுரத்தில் இடம்பெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மக்கள் பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா, தான் புலிகளை ஆதரித்த ஒருவராக இருந்தபோதிலும், தமிழீழம் அமையப் பெறுவதை ஒருபோதும் விரும்பவில்லை எனத் தெரிவித்திருந்தார்.</p><p></p><p>

அத்துடன், சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் அனைவரும் ஒற்றுமையாக ஒன்றாக வாழ வேண்டும் என்பதே தனது விருப்பம் என்றும் அர்ச்சுனா குறிப்பிட்டிருந்தார்.
</p><p>
எனவே, தமிழீழத்தை விரும்பிய யாழ்ப்பாணத்திலிருந்து தெரிவான நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர், தற்போது தங்களது மேடையில் ஏறி, ஒருபோதும் ஈழம் கேட்க மாட்டேன் என்றும் மக்களின் ஒற்றுமையே முக்கியம் என்றும் கூறும் போது அவரை ஆதரிக்க வேண்டும்.</p><p></p><p>

அவ்வாறான எண்ணம் கொண்டவர்களைத் தொடர்ந்து தங்களது மேடைகளில் வைத்திருப்பது அவசியம் ” என்று பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில சுட்டிக்காட்டினார்.</p>]]></content>
            <updated>2026-09-16T14:01:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிக்பாஸ் பேச்சால் வெடித்த சர்ச்சை… விஜய் சேதுபதிக்கு ஆதரவாக களமிறங்கிய சீனு ராமசாமி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/director-seenu-ramasamy-post-for-vijay-sethupathi-1789565053"></link>
            <id>https://manithan.com/article/director-seenu-ramasamy-post-for-vijay-sethupathi-1789565053</id>
            <summary type="text">பிக்பாஸ் நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி பேசிய கருத்துகள் அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவரை தனிப்பட்ட முறையில் விமர்சிக்க வேண்டாம் என இயக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிக்பாஸ் நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி பேசிய கருத்துகள் அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவரை தனிப்பட்ட முறையில் விமர்சிக்க வேண்டாம் என இயக்குநர் சீனு ராமசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.</p><h2>&nbsp;விஜய் சேதுபதி சர்ச்சை கருத்து&nbsp;</h2><p>
</p><p>
கமல்ஹாசனைத் தொடர்ந்து கடந்த சில ஆண்டுகளாக பிக்பாஸ் நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். தற்போது நடைபெற்று வரும் 10வது சீசனையும் அவரே தொகுத்து வழங்குகிறார்.

சமீபத்திய நிகழ்ச்சியில் போட்டியாளருக்கு அறிவுரை வழங்கிய விஜய் சேதுபதி, தலைமைத்துவம், வாக்குறுதிகள், பொறுப்பு உள்ளிட்டவை குறித்து பேசிய கருத்துகள் சமூக வலைதளங்களில் வைரலானது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/376c92bb-3e12-492e-ae8b-e45616a2a93b/26-6aaa9cd86e5cd.webp' /></p><p></p><p> </p><p>இதனைத் தொடர்ந்து, அவர் தமிழக அரசியலை மறைமுகமாக விமர்சித்ததாக சிலர் கருத்து தெரிவித்து வந்தனர். இதனால் விஜய் சேதுபதிக்கு எதிராகவும் விமர்சனங்கள் எழுந்தன.</p><h2><span style="color: inherit; font-size: 1.75rem;">இயக்குநர் சீனு ராமசாமி பதிவு&nbsp;</span></h2><p>இந்நிலையில், இயக்குநர் சீனு ராமசாமி தனது எக்ஸ் பதிவில், விஜய் சேதுபதியை நீண்ட காலமாக அறிந்திருப்பதாகவும், அவர் மறைந்திருந்து தாக்கும் குணம் கொண்டவர் அல்ல என்றும் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bc269f43-d227-4e19-a0ee-56c964861b9b/26-6aaa9cd924edf.webp' /></p><p>
</p><p>
மேலும், பொழுதுபோக்கு நிகழ்ச்சியில் இடம்பெற்ற ஒரு வசனத்தை வைத்து இவ்வளவு தீவிரமாக எதிர்வினையாற்றுவதும், அதனை அடிப்படையாகக் கொண்டு விஜய் சேதுபதியை தனிப்பட்ட முறையில் தாக்குவதும் வருத்தமளிப்பதாக தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dc531c08-1985-4027-bc1a-2a8c8121368c/26-6aaa9cd9cd12f.webp' /></p><p></p><p>

புதியவர்களை ஊக்குவிப்பது, பல்வேறு இயக்குநர்களுடன் பணியாற்றுவது, சிக்கலில் இருந்த திரைப்படங்களுக்கு உதவுவது உள்ளிட்ட விஜய் சேதுபதியின் பல்வேறு செயல்பாடுகளையும் சுட்டிக்காட்டிய சீனு ராமசாமி, அவசரப்பட்டு அவரை தனிப்பட்ட முறையில் விமர்சிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக்கொண்டுள்ளார்.குறித்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">அனைவருக்கும் அன்பான வணக்கம்.  விஜய் சேதுபதியை உள்ளும் புறமும் நன்கறிவேன். எதையும் நேர்பட கண்கள் பார்த்து சொல்லக் கூடிய மனிதன்; மறைந்திருந்து தாக்கும் குணம் கொண்ட மனிதன் அல்ல.  உண்மையில் தமிழக சட்டசபை நிகழ்ச்சிகளை மக்கள் அதிகமாக பார்க்கிறார்கள். மற்ற ஓடிடி, சினிமா, இணையதள செயல்பாடுகள் எல்லாம் சட்டசபை காலங்களிலே மந்தமாகிவிட்டது, இதுதான் உண்மை.   பிக்பாஸ் நிகழ்ச்சியை கொஞ்சம் அரசியல் சாயம் பூசி விட்டால் மக்களின் கவனத்தை பெற்று விடலாம் என்று அதை நடத்துபவர்கள் நினைத்திருக்கலாம்.   ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சியில் சொல்லப்படும் ஒரு வசனத்தை எடுத்துக் கொண்டு இவ்வளவு சீரியஸாக ரியாக்ட் பண்ண வேண்டிய அவசியம் இல்லை என்று நான் நினைக்கிறேன். அதை வைத்து அவரைத் தனிப்பட்ட முறையில் தாக்குவது என்பது மிகவும் வருத்தமாக இருக்கிறது.  இன்று இந்தியா முழுக்க நன்கறிந்த பெருமைக்குரிய கலைஞன் சேது.  புதியவர்களை ஊக்கப்படுத்த பல படங்களில் கெஸ்ட் ரோல் நடித்தவர்,  தனக்குப் பிடித்த பெரிய நடிகர்களின் படங்களிலே இமேஜ் பார்க்காமல் வில்லனாகவும் நடித்தவர்,   நிறைய புதிய இயக்குனர்களோடு பயணித்தவர்,   100 மூத்த திரைத் தொழிலாளர்களுக்கு 100 சவரன் தங்கம் தந்தவர்,  பல படங்கள் சிக்கலில் இருந்தபோது தன் சம்பளத்தை விட்டுக்கொடுத்து உதவியவர்.  முன்பின் தெரியாத பலருக்கும் நன்மைகள் செய்த மனிதன் விஜய் சேதுபதி. ஆகவே அவசரப்பட்டு தனிப்பட்ட முறையில் அவரை யாரும் தாக்க வேண்டாம் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.  🙏🙏  அன்பன்   சீனு ராமசாமி</p>&mdash; Seenu Ramasamy (@seenuramasamy) <a href="https://x.com/seenuramasamy/status/2100055025481593018?ref_src=twsrc%5Etfw">September 16, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b></td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-16T13:45:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[விஜய்–அஜித் சாதனையை முறியடித்த சூர்யா–ஜோதிகா! வெறும் 17 மணிநேரத்தில் 5.75 கோடி பார்வைகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/suriya-jyothika-video-overtakes-ajith-vijay-video-1789558574"></link>
            <id>https://manithan.com/article/suriya-jyothika-video-overtakes-ajith-vijay-video-1789558574</id>
            <summary type="text">சூர்யா -ஜோதிகா தங்களது 20-ஆவது திருமண நாளை கொண்டாடிய தருணங்களைப் பதிவு செய்த காணொளி, சமூக வலைத்தளங்களில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வருகிறது.

காண...</summary>
            <content type="html"><![CDATA[<p>சூர்யா -ஜோதிகா தங்களது 20-ஆவது திருமண நாளை கொண்டாடிய தருணங்களைப் பதிவு செய்த காணொளி, சமூக வலைத்தளங்களில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வருகிறது.

காணொளி வெளியான 17 மணிநேரங்களிலேயே 57.5 மில்லியன் பார்வைகளையும், 4.2 மில்லியன் லைக்குகளையும் குவித்துள்ளது. </p><p>திருமண வாழ்க்கையின் முக்கியமான மைல்கல்லை கொண்டாடும் இந்த காணொளி, ரசிகர்கள் மத்தியில் மட்டுமல்லாமல் சமூக வலைத்தளங்களிலும் வேகமாகப் பரவி வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3271b8e5-97b1-49bf-bb14-44a3e47c9584/26-6aaa83ebd2a78.webp' /></p><h2>5.75 கோடி பார்வைகள்</h2><p>
</p><p>
இதனிடையே, சமீபத்தில் நடிகர்கள் விஜய் மற்றும் அஜித் லண்டனில் சந்தித்துக்கொண்ட காணொளி சமூக வலைத்தளங்களில் மிகுந்த கவனத்தைப் பெற்றிருந்தது. இரு முன்னணி நட்சத்திரங்களும் ஒரே இடத்தில் சந்தித்துக்கொண்ட அந்த அரிய தருணத்தைப் பார்க்க ரசிகர்கள் ஆர்வம் காட்டியதால், அந்தக் காணொளியும் மிகப்பெரிய அளவில் வைரலானது.</p><p>

இந்நிலையில், விஜய்–அஜித் சந்திப்பு காணொளி பெற்றிருந்த பார்வை எண்ணிக்கையை, சூர்யா–ஜோதிகாவின் 20-ஆவது திருமண நாள் காணொளி வெளியான குறுகிய காலத்திலேயே முறியடித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/675f4c85-31b2-4f8a-9808-d928da3f51d5/26-6aaa83ec8c418.webp' /></p><p>விஜய்–அஜித் சந்திப்பு காணொளி இதுவரையில் 26.3 மில்லியன் பார்வைகளையும்,&nbsp; 2.3 மில்லியன் லைக்குககைளையும் பெற்றுள்ளது.</p><p>

திரையுலகில் நட்சத்திர ஜோடியாக மட்டுமல்லாமல், நீண்டகாலமாக ரசிகர்களின் அன்பைப் பெற்றுவரும் தம்பதியாக இருக்கும் சூர்யா–ஜோதிகா, தங்களது 20 ஆண்டுகால திருமண வாழ்க்கையை நினைவுகூர்ந்து பகிர்ந்த இந்தக் காணொளி இணையத்தில் அசுர வேகத்தில் லைக்குகளை அள்ளி வருகின்றது.</p><p>
விஜய்–அஜித் சந்திப்பு ஏற்படுத்திய பரபரப்புக்கு அடுத்ததாக, சூர்யா–ஜோதிகாவின் 20-ஆவது திருமண நாள் காணொளி புதிய சாதனையுடன் கவனம் ஈர்த்திருப்பது குறிப்பிடத்தக்கது.</p><p><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/reel/DdUFAt2yiyO/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/reel/DdUFAt2yiyO/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/reel/DdUFAt2yiyO/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by Jyotika (@jyotika)</a></p></div></blockquote> <script async src="//www.instagram.com/embed.js"></script></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-16T13:44:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[எங்களுக்கான நீதியை எங்களுக்குத் தாருங்கள்..ஜெனீவாவில் திரண்ட நூற்றுக்கணக்கான தமிழர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/tamils-protest-in-switzerland-1789562593"></link>
            <id>https://tamilwin.com/article/tamils-protest-in-switzerland-1789562593</id>
            <summary type="text">முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 17ஆவது ஆண்டு நினைவேந்தல் காலத்தை முன்னிட்டு, தமிழர்களுக்கான நீதியை வலியுறுத்தி சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் கவனயீர்ப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 17ஆவது ஆண்டு நினைவேந்தல் காலத்தை முன்னிட்டு, தமிழர்களுக்கான நீதியை வலியுறுத்தி சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
</p><p>
“எங்களுக்கான நீதியை எங்களுக்குத் தாருங்கள்” என்ற கோரிக்கையை முன்வைத்து, ஐக்கிய நாடுகள் சபை அலுவலகத்திற்கு அருகிலுள்ள ஈகைப்பேரொளி முருகதாசன் திடலில் இந்தப் போராட்டம் இடம்பெற்றது.</p><h2>நூற்றுக்கணக்கான தமிழர்கள்&nbsp;</h2><p> </p><p>

இதில் நூற்றுக்கணக்கான தமிழர்கள் கலந்துகொண்டனர்.</p><p>

2026 செப்டெம்பர் 14ஆம் திகதி பிற்பகல் 2.30 மணியளவில் ஜெனீவா தொடருந்து நிலையத்திற்கு அருகிலுள்ள பூங்காவில் இருந்து கவனயீர்ப்புப் பேரணி ஆரம்பமானது.

பேரணியில் பங்கேற்றவர்கள் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவரின் படத்தையும் பல்வேறு பதாதைகளையும் ஏந்தியவாறு சென்றனர்.</p><p> 

செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான காட்சிப்படுத்தலும் பேரணியில் இடம்பெற்றிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/559238d5-c8a7-47cb-a5b8-0e75276c3e64/26-6aaa9c0b39e34.webp' /></p><p>
</p><p>
தமிழ் மக்களுக்கு எதிராக இடம்பெற்றதாகக் கூறப்படும் இனப்படுகொலை தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், தமிழீழத்திற்கான சர்வசன வாக்கெடுப்பு ஐக்கிய நாடுகள் சபையின் கண்காணிப்பில் நடத்தப்பட வேண்டும் என்றும் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.</p><p>

“மக்கள் புரட்சி வெடிக்கட்டும், சுதந்திர தமிழீழம் மலரட்டும்” உள்ளிட்ட கோஷங்களை எழுப்பியவாறு போராட்டக்காரர்கள் ஐக்கிய நாடுகள் சபை அலுவலகத்திற்கு அருகிலுள்ள ஈகைப்பேரொளி முருகதாசன் திடலை சென்றடைந்தனர்.

அங்கு பொதுச்சுடர் ஏற்றப்பட்டதுடன், தேசியக் கொடியேற்றும் நிகழ்வும் இடம்பெற்றது. </p><p>

தொடர்ந்து தியாக தீபம் லெப்டினன்ட் கேணல் திலீபன் மற்றும் ஈகைப்பேரொளிகளின் நினைவாக ஈகைச்சுடர்கள் ஏற்றப்பட்டன.</p><h2>ஈழத்தமிழர்களின் வரலாறு</h2><p>
</p><p>
இதன்போது மலர்மாலை அணிவித்தல், அகவணக்கம் மற்றும் மலர்வணக்கம் ஆகிய நிகழ்வுகளும் இடம்பெற்றதுடன், பங்கேற்பாளர்கள் உறுதிமொழியும் எடுத்துக்கொண்டனர்.</p><p>

புலம்பெயர் நாடுகளில் பிறந்து வளர்ந்த தமிழ் இளையோர்களும் போராட்டத்தில் குறிப்பிடத்தக்க வகையில் பங்கேற்றனர்.</p><p> அவர்கள் தங்களது வாழிட நாடுகளின் மொழிகளில் உரையாற்றியதுடன், ஒன்றுகூடலுக்கான பிரகடனத்தையும் வாசித்தனர்.

இதனிடையே, பிரித்தானிய பிரதமரின் இல்லத்திலிருந்து ஆரம்பித்து அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் ஊடாக ஐக்கிய நாடுகள் சபை நோக்கி முன்னெடுக்கப்பட்ட மனிதநேய ஈருருளிப் பயணத்தில் பங்கேற்ற செயற்பாட்டாளர்களும் நிகழ்வில் கலந்துகொண்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/49d7cea2-21a6-4d4b-ab30-70fbbf6d9e2b/26-6aaa9c0bf0cdd.webp' /></p><p>
</p><p>
தாங்கள் பயணித்த நாடுகளில் சந்தித்த அரசியல் பிரதிநிதிகளிடம் ஈழத்தமிழர்களின் வரலாறு, தற்போதைய நிலைமை மற்றும் தமிழர்களின் உரிமைகள் தொடர்பான கோரிக்கைகள் குறித்து எடுத்துரைத்ததாக அவர்கள் தெரிவித்தனர்.
</p><p>
தமிழ் மக்களுக்கு நீதியும் அரசியல் இறைமையும் கிடைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இறுதியில் தமிழீழ தேசியக் கொடி ஏற்றப்பட்டு, பாடல்கள் மற்றும் கோஷங்களுடன் கவனயீர்ப்புப் போராட்டம் நிறைவடைந்தது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-16T13:43:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[எந்தவொரு புதிய &quot;நாய் வரியையும்&quot; விதிக்கவில்லை; பரவும் வதந்தி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/no-new-dog-tax-imposed-story-is-a-lie-1789560888"></link>
            <id>https://jvpnews.com/article/no-new-dog-tax-imposed-story-is-a-lie-1789560888</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;&#039;கால்நடை மற்றும் விலங்கு நலக் கூட்டமைப்பு&#039; (Veterinary and Animal Welfare Alliance), புதிய &#039;வெறிநாய் நோய் கட்டுப்பாடு மற்றும் நாய் பதிவுச...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;'கால்நடை மற்றும் விலங்கு நலக் கூட்டமைப்பு' (Veterinary and Animal Welfare Alliance), புதிய 'வெறிநாய் நோய் கட்டுப்பாடு மற்றும் நாய் பதிவுச் சட்டம்' எந்தவொரு புதிய "நாய் வரியையும்" விதிக்கவில்லை என்றும், தெருநாய்களுக்கு உணவளிக்கும் நபர்களைச் சிறையில் அடைப்பதற்கான எந்தவொரு விதியும் இதில் இல்லை என்றும் தெரிவித்துள்ளது.</p><p> 

செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் பேசிய அக்கூட்டமைப்பின் நிர்வாக உறுப்பினரான டாக்டர் சமித் நானயக்கார, சமூக ஊடகங்கள் வாயிலாகப் பரப்பப்படும் தவறான தகவல்களால் பொதுமக்கள் தேவையற்ற அச்சத்திற்கு ஆளாகியிருப்பதாகக் குறிப்பிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4f684aa8-c0df-4aa8-b538-db10762c932c/26-6aaa883a92a67.webp' /></p><h2>பொதுமக்கள் தேவையற்ற அச்சம்</h2><p>

உள்ளூராட்சி அமைப்புகள் மூலம் நாய்களைப் பதிவு செய்யும் நடைமுறை ஏற்கனவே ஒரு சிறிய கட்டணத்தில் நடைபெற்று வருவதாகவும், இது இந்தச் சட்டத்தின் மூலம் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ஒன்றல்ல என்றும் அவர் சுட்டிக்காட்டினார். </p><p>

தற்போது இதற்காகக் கொழும்பு மாநகர சபைப் பகுதியில் 100 ரூபாயும், அனுராதபுரப் பகுதியில் 300 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.</p><p></p><p> </p><p>மக்கள் தங்கள் வேலைகளை விட்டுவிட்டு உள்ளூராட்சி அலுவலகங்களுக்குச் செல்ல வேண்டிய சிரமத்தைத் தவிர்க்கும் வகையில், கிராம மட்டத்தில் செயல்படுத்தப்படும் இலவச வெறிநாய் தடுப்பூசி முகாம்களுடன் இணைந்தே இந்தப் பதிவுகளை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது.</p><p>

தெருநாய் ஒன்றுக்கு ஒருமுறையோ அல்லது அவ்வப்போதோ உணவளிப்பது மட்டும் ஒருவரை அந்த விலங்கின் சட்டப்பூர்வ உரிமையாளராக மாற்றிவிடாது என்று டாக்டர் நானயக்கார மேலும் தெளிவுபடுத்தினார்.</p><p></p><p> </p><p>

இருப்பினும், ஒருவர் தொடர்ந்து ஒரு விலங்குக்கு உணவளித்து அதனுடன் ஒரு பிணைப்பை ஏற்படுத்திக்கொண்டால், அந்த நாயைப் பராமரிப்பதற்கும், அதற்குத் தேவையான வெறிநாய் தடுப்பூசிகளைச் செலுத்துவதற்கும் அவருக்கு ஒரு சமூகப் பொறுப்பு உள்ளது.
</p><p>
எந்தவொரு உரிமையாளரும் இல்லாத உண்மையான தெருநாய்களைப் பராமரிக்கும் பொறுப்பு தொடர்ந்து உள்ளூராட்சி அமைப்புகளிடமே உள்ளது. 

அவற்றிற்குத் தடுப்பூசி மற்றும் கருத்தடை சிகிச்சைகளை ஏற்பாடு செய்வது இந்த அமைப்புகளின் பணியாகும்.</p><p></p><p> மேலும், நாய்களைத் தன்னிச்சையாகக் கொல்வதற்கு எதிரான கடுமையான சட்ட விதிகளும் இந்த புதிய சட்டத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.</p>]]></content>
            <updated>2026-09-16T13:41:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கணவருடன் தவறான தொடர்பு; மனித மலத்தை வீசி பெண் மீது மனைவி தாக்குதல்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/affair-husband-florida-woman-throws-poop-wife-1789538549"></link>
            <id>https://canadamirror.com/article/affair-husband-florida-woman-throws-poop-wife-1789538549</id>
            <summary type="text">&amp;nbsp; அமெரிக்காவின் மியாமி பகுதியில் உள்ள ‘ராயல் கன்ட்ரி மொபைல் ஹோம்ஸ்’ பகுதியில் வசித்து வருபவர் 50 வயதான யிர்சி மச்சாடோ ரிவேரா . இவருடைய கணவருக்கும...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; அமெரிக்காவின் மியாமி பகுதியில் உள்ள ‘ராயல் கன்ட்ரி மொபைல் ஹோம்ஸ்’ பகுதியில் வசித்து வருபவர் 50 வயதான யிர்சி மச்சாடோ ரிவேரா . இவருடைய கணவருக்கும் பக்கத்து வீட்டில் வசிக்கும் பெண்ணுக்கும் இடையே தவறான தொடர்பு இருப்பதாக இவர் சந்தேகப்பட்டுள்ளார். </p><p>இதன் காரணமாக ஆத்திரமடைந்த மச்சாடோ ரிவேரா, சம்பவத்தன்று அந்தப் பெண்ணின் வீட்டிற்குச் சென்று கதவைத் தட்டியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/332e7d27-8b99-4c20-94a9-feba47d95c1f/26-6aaa30f6f1188.webp' /></p><h2>அத்துமீறல் மற்றும் தாக்குதல் குற்றச்சாட்டு</h2><p>
</p><p>
கதவைத் திறந்தவுடன் அண்டை வீட்டுப் பெண்ணைக் கடுமையாகத் திட்டிய மச்சாடோ ரிவேரா, அனுமதியின்றிப் பலவந்தமாக வீட்டிற்குள் நுழைந்துள்ளார். </p><p>தான் பழிவாங்கும் நோக்கத்தோடு மனிதக் கழிவுகளை ஒரு வாளியில் சேகரித்து வைத்துப் பாதிக்கப்பட்ட பெண்ணின் முகத்தில் வீசியதாக அவர் ஒப்புக்கொண்டுள்ளதாகக் காவல்துறை வாக்குமூலப் பதிவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இதற்கிடையே, காவல்துறையினரிடம் விசாரணைக்குப் பிறகு பேசிய மச்சாடோ ரிவேரா, தனது வீட்டில் கழிவறை பழுதாகியிருந்ததால் கழிவுப்பொருளை அப்புறப்படுத்த மட்டுமே சென்றதாகவும், அந்தப் பெண்ணுக்கும் தனக்கும் ஏற்பட்ட தகராறில் அவர் தன்னை மட்டையால் தாக்கியதாகவும் மாற்றுக்கதை கூறியுள்ளார்.</p><p>

எவ்வாறாயினும், அத்துமீறல் மற்றும் தாக்குதல் குற்றச்சாட்டுகளின் கீழ் மச்சாடோ ரிவேராவைக் கைது செய்துள்ள மயாமி-டேட் ஷெரிப் அலுவலக அதிகாரிகள், அவர் மீது உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-09-16T13:40:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தாயின் இறுதிச்சடங்கு ;முன்னாள் கிரிக்கெட் வீரர் அரவிந்த டி சில்வா மற்றும் மனைவிக்கு பிடியாணை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/court-issues-warrants-aravinda-de-silva-and-wife-1789561751"></link>
            <id>https://jvpnews.com/article/court-issues-warrants-aravinda-de-silva-and-wife-1789561751</id>
            <summary type="text">முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் அரவிந்த டி சில்வா மற்றும் அவரது மனைவி பிரியங்கா அனுஷ்கா விஜேநாயக்க ஆகியோரைக் கைது செய்வதற்கான பிடியாணையை&amp;nbsp; &amp;nbsp;...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் அரவிந்த டி சில்வா மற்றும் அவரது மனைவி பிரியங்கா அனுஷ்கா விஜேநாயக்க ஆகியோரைக் கைது செய்வதற்கான பிடியாணையை&nbsp; &nbsp; கொழும்பு கோட்டை நீதவான் பாசன் அமரசேன இன்று (16)&nbsp; பிறப்பித்தார்.</p><p>

முன்னாள் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேனவின் மனைவிக்கு எதிராக விசாரிக்கப்பட்டு வரும் ஒரு வழக்கில் அரவிந்த டி சில்வாவும் அவரது மனைவியும் ஜாமீன்தாரர்களாக ஆஜராகியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ca6d2220-c8e3-4f83-b7e2-d5cc96d3ed86/26-6aaa8b98a89da.webp' /></p><p></p><h2>நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியதால் பிடியாணை&nbsp;</h2><p>
</p><p>
 இன்று வழக்கு விசாரணைக்கு அழைக்கப்பட்டபோது அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியதால் இந்த பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்டன.</p><p></p><p>
</p><p>
 கபில சந்திரசேன&nbsp; அரவிந்த சில்வாவின் வீட்டில் இருந்தபோது உயிரிழந்தார். சிசிடிவி மற்றும் பிற ஆதாரங்கள் இல்லாதபோதிலும், மரணத்திற்கான காரணம் இன்னும் மர்மமாகவே உள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7665c5fb-d62c-425e-8896-1c4805c95c04/26-6aaa8b99856a5.webp' /></p><p>
இதற்கிடையில், அரவிந்த டி சில்வாவின் தாயார் திருமதி ராணி டி சில்வா 14ஆம் தேதி காலமானார். </p><p>

அவரது இறுதிச் சடங்குகள் இன்று நடைபெறவிருந்தன. இறுதிச் சடங்கு காரணமாக அவரால் இன்று நீதிமன்றத்தில் ஆஜராக முடியவில்லை என்று கூறப்படுகிறது.</p><p></p><p>
</p><p>இந்த&nbsp; நிலையிலேயே அரவிந்த டி சில்வா மற்றும் அவரது மனைவி பிரியங்கா அனுஷ்கா விஜேநாயக்க ஆகியோரைக் கைது செய்வதற்கான பிடியாணை பிறபிக்கப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-16T13:38:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நியூயார்க்கில் தண்டவாளத்தை கடக்க முயன்ற இந்திய பெண் உட்பட 2 பேர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/indian-woman-killed-in-new-york-train-accident-1789555184"></link>
            <id>https://canadamirror.com/article/indian-woman-killed-in-new-york-train-accident-1789555184</id>
            <summary type="text">&amp;nbsp; நியூயார்க்கில் ரயில் விபத்தில் இந்திய வம்சாவளி பெண் உட்பட 2 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மலாய்க்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; நியூயார்க்கில் ரயில் விபத்தில் இந்திய வம்சாவளி பெண் உட்பட 2 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது.
</p><p>
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மலாய்க்கா சித்ரே (24), அமெரிக்​கா​வின் நியூ ஜெர்​ஸி​யிலுள்ள டேடன் நகரில் வசித்து வந்​தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4d205646-1ebc-4b65-b5aa-32d370bfc5c0/26-6aaa721b27858.webp' /></p><p> </p><p>

இவரும், நேபாளத்​தைச் சேர்ந்த இவரது நண்​பர் நவம்கவுலும் இங்​குள்ள ரட்​கர்ஸ் பல்​கலைக்​கழகத்​தில் பட்​டப்​படிப்பு படித்​து​விட்டு அமெரிக்​கா​விலேயே தங்கி வேலை பார்த்து வந்​தனர்.
</p><p>
இந்​நிலை​யில் கடந்த ஞாயிற்​றுக்​கிழமை இரு​வரும் லோயர் மன்​ஹாட்​டன் சப்வே ரயில் நிலை​யத்​துக்கு சென்​றுள்​ளனர்.

 ரயில்வே தண்​ட​வாளத்​தைக் கடக்க முயன்​ற​போது இரு​வரும் அந்த வழியே வந்த ரயில் மோதி அதே இடத்​திலேயே இறந்​தனர்.</p><p> பின்​னர் அவர்களது உடல்​கள் மீட்​கப்​பட்டு மருத்​து​வ​மனை​யில் வைக்கப்பட்டுள்ளது

ரயில் தண்​ட​வாளத்​தில் நவம் கவுல் தவறி விழுந்​த​தாக​வும், இதைப் பார்த்த மலாய்க்கா சித்ரே அவரைக் காப்​பாற்​றச் சென்று விபத்​தில் சிக்​கிய​தாக​வும் நியூ​யார்க் போஸ்ட் பத்​திரிகை செய்தி வெளி​யிட்​டுள்​ளது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-16T13:37:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[மருத்துவ பட்டதாரிகள் தொடர்பில் கனடிய நீதிமன்றின் அதிரடி தீர்ப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/bc-rule-forcing-foreign-trained-doctors-1789546377"></link>
            <id>https://canadamirror.com/article/bc-rule-forcing-foreign-trained-doctors-1789546377</id>
            <summary type="text">&amp;nbsp;கனடாவிற்கு வெளியே மருத்துவக் கல்வியை முடித்த பட்டதாரிகள், பிரிட்டிஷ் கொலம்பியாவின் பின்தங்கிய அல்லது தொலைதூரப் பகுதிகளில் கட்டாயம் பணியாற்ற வேண்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கனடாவிற்கு வெளியே மருத்துவக் கல்வியை முடித்த பட்டதாரிகள், பிரிட்டிஷ் கொலம்பியாவின் பின்தங்கிய அல்லது தொலைதூரப் பகுதிகளில் கட்டாயம் பணியாற்ற வேண்டும் என்ற மாகாண அரசின் நிபந்தனை சட்டவிரோதமானது என பிரிட்டிஷ் கொலம்பியா உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
</p><p>வெளிநாட்டு மருத்துவக் கல்லூரிகளிலிருந்து மருத்துவப் பயிற்சிக்கு விண்ணப்பிப்போருக்கு இத்தகைய "சேவைத் திரும்பச் செலுத்தல்" நிபந்தனையை விதிக்க மாகாண சுகாதார அமைச்சுக்கு சட்டப்பூர்வ உரிமை இல்லை என நீதிபதி மெத்யூ கெர்ச்னர் தெரிவித்துள்ளார்.</p><p>
கனடிய மருத்துவக் கல்லூரிகளில் படித்த பட்டதாரிகளுக்கு இல்லாத இந்த நிபந்தனை, வெளிநாட்டுப் பட்டதாரிகளுக்கு மட்டும் கட்டாயமாக்கப்பட்டிருந்தது. 
இதனை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கிலேயே இத்தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d4b642e3-96b6-479e-88f1-54bc8ea25842/26-6aaa4f8b015be.webp' /></p><p>
</p><p>ஒருவர் எங்கு வாழ வேண்டும் என்பதைத் தீர்மானிப்பது அவருடைய அடிப்படைத் தனிப்பட்ட முடிவாகும். அரசின் தலையீடின்றி வாழும் தனிநபர் சுதந்திர உரிமையில் அரசாங்கம் தலையிட முடியாது என நீதிபதி மெத்யூ கெர்ச்னர் தெரிவித்துள்ளார்.
</p><p>ஒப்பந்தத்தை மீறிச் செயல்படும் மருத்துவப் பட்டதாரிகளுக்குக் கடுமையான நிதி அபராதங்கள் விதிக்கப்பட்டு வந்ததாக நீதிமன்றத் தீர்ப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
</p><p>பயிற்சி வாய்ப்பைப் பெறுவதற்காக வெளிநாட்டுப் பட்டதாரிகள் வேறு வழியின்றி இந்த நிபந்தனைகளுக்கு ஒப்புக்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படுவதாகவும் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.
</p><p>இந்த விவகாரத்தில் தேவையான சட்ட மாற்றங்களைச் செய்யுமாறு பிரிட்டிஷ் கொலம்பியா சுகாதார அமைச்சுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
</p><p>எனினும், இத்தீர்ப்பு கிராமப்புறங்களில் மருத்துவர்களின் இருப்பை உடனடியாகப் பாதிக்கக்கூடும் என்பதால், அமைச்சு இப் பிரச்சினையைச் சீர்செய்வதற்காக இத்தீர்ப்பின் அமலாக்கத்தை 60 நாட்களுக்கு ஒத்திவைப்பதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-16T13:36:46+00:00</updated>
        </entry>
    </feed>
