<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-09-12T02:25:18+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Bavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மட்டக்களப்பில் ஆலய உற்சவத்தில் வெடி விபத்து - 13 வயது சிறுவனுக்கு நேர்ந்த பரிதாபம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/explosion-during-temple-festival-in-batticaloa-1789179550"></link>
            <id>https://tamilwin.com/article/explosion-during-temple-festival-in-batticaloa-1789179550</id>
            <summary type="text">மட்டக்களப்பு - கிரான், கூளாக்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய உற்சவத்தின் போது வெடி வெடித்ததில் 13 வயது சிறுவன் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

இ...</summary>
            <content type="html"><![CDATA[<p>மட்டக்களப்பு - கிரான், கூளாக்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய உற்சவத்தின் போது வெடி வெடித்ததில் 13 வயது சிறுவன் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
</p><p>
இந்த சம்பவம் நேற்று (11.09.2026) இரவு இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>

வெடி வெடிக்க முயன்ற சிறுவன்</h2><p>
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,</p><p>குறித்த ஆலயத்தின் உற்சவத்தின் போது பெரிய வெடியொன்றை சிறுவன் வெடிக்க வைக்க முயற்சித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e5bb7147-68ce-45ec-976e-37229411ccd9/26-6aa4b6facbd71.webp' /></p><p>
</p><p>
இதன்போது வெடிக்கு தீ வைத்தும் அது வெடிக்காத நிலையில், குறித்த சிறுவன் வெடியை பார்ப்பதற்காக அருகில் சென்றுள்ளார்.
</p><p>
அந்த சந்தர்ப்பத்தில் வெடி வெடித்ததில் 13 வயது சிறுவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.</p><h2>

பொலிஸார் விசாரணை</h2><p>
இந்த சம்பவம் இரவு 11 மணியளவில் இடம்பெற்றதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
கிரான், கூளாக்காட்டைச் சேர்ந்த நித்தியானந்தன் தனுஸ்கி என்ற 13 வயது சிறுவனே இவ்வாறு பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/881e7a97-340f-41a6-bdd5-53b07062b359/26-6aa4b6fba1a6d.webp' /></p><p>
</p><p>
இதனையடுத்து, சடலம் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p><p></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-12T02:20:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாமலுக்கு எதிராக சட்டமா அதிபர் வழங்கிய நடவடிக்கை! விசாரணையை தீவிரப்படுத்தபோகும் CID]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/attorney-general-takes-action-against-namal-1789178687"></link>
            <id>https://ibctamil.com/article/attorney-general-takes-action-against-namal-1789178687</id>
            <summary type="text">சிறிலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்காக விமானங்களை கொள்வனவு செய்தபோது இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜப...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிறிலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்காக விமானங்களை கொள்வனவு செய்தபோது இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை சந்தேகநபராக பெயரிட நடவடிக்கை எடுக்குமாறு சட்டமா அதிபர் திணைக்களம் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு (CID) ஆலோசனை வழங்கியுள்ளது.&nbsp;</p><p>சிறிலங்கன் எயார்லைன்ஸின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன மற்றும் அவரது மனைவிக்கு எதிராக கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.</p><p>&nbsp;இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், இந்த வழக்கில் பிரதான சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ள கபில சந்திரசேன பெற்றதாகக் கூறப்படும் இலஞ்சப் பணத்தில் ஒரு தொகை நாமல் ராஜபக்சவுக்கு வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.
</p><p>
இதன் காரணமாக நாமல் ராஜபக்சவை குறித்த வழக்கில் சந்தேகநபராக பெயரிட நடவடிக்கை எடுக்குமாறும் சட்டமா அதிபர் திணைக்களம் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அறிவுறுத்தியுள்ளது.
</p><p>
அதன்படி, குறித்த ஆலோசனை தொடர்பில் நீதிமன்றத்தில் ஒரு மனுவைத் தாக்கல் செய்து(Motion), வழக்கை மீண்டும் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்வது குறித்து, கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு விடயங்கள் அறிவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>இதன்படி நாமல் ராஜபக்சவை அந்த வழக்கிலும் சந்தேகநபராக பெயரிட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
இதேவேளை, சிறிலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்காக விமானங்களை கொள்வனவு செய்தமை தொடர்பான பரிவர்த்தனையில், 2014–2015ஆம் ஆண்டுகளில் பல சந்தர்ப்பங்களில் மொத்தம் 100 இலட்சம் ரூபாய் இலஞ்சமாக பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில், நாமல் ராஜபக்ச கடந்த 4ஆம் திகதி இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டிருந்தார்.
</p><p>
பின்னர் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த அவரை, எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.</p>]]></content>
            <updated>2026-09-12T02:05:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பு புறநகர் பகுதியில் கிடைத்த ஆணின் சடலம் - நீதித்துறை விசாரணைக்கு திட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/body-was-recovered-from-the-kelani-river-1789177872"></link>
            <id>https://tamilwin.com/article/body-was-recovered-from-the-kelani-river-1789177872</id>
            <summary type="text">கொழும்பு - ஹங்வெல்ல பொலிஸ் பிரிவின் ஜல்தாரா பகுதியில் உள்ள களனி ஆற்றில் அடையாளம் தெரியாத ஆணின் ஒருவரின் சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு - ஹங்வெல்ல பொலிஸ் பிரிவின் ஜல்தாரா பகுதியில் உள்ள களனி ஆற்றில் அடையாளம் தெரியாத ஆணின் ஒருவரின் சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>

இந்த சம்பவம் நேற்று(11.09.2026) இடம்பெற்றுள்ளதாகவும் கூறப்படுகின்றது. </p><h2>

ஆணின் சடலம் மீட்பு</h2><p>
 ஹங்வெல்ல பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், ஆணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bc5a5ed8-fda4-4eb7-a7bd-cfd06a2c7fbf/26-6aa4b20a8f2e2.webp' /></p><p> </p><p>


இவ்வாறு உயிரிழந்தவரின் அடையாளம் இதுவரை உறுதிச் செய்யப்படவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p> 

சடலத்தின் மீது நீதித்துறை விசாரணை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதுடன், ஹங்வெல்ல பொலிஸ் இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.</p><p></p><p></p><p><br></p><p> 








</p>]]></content>
            <updated>2026-09-12T01:59:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[எல் நினோ வானிலை சீற்றம் தீவிரம் - 8 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/over-160-000-people-affected-across-8-districts-1789177170"></link>
            <id>https://tamilwin.com/article/over-160-000-people-affected-across-8-districts-1789177170</id>
            <summary type="text">எல் நினோ வானிலையின் தாக்கத்தால், இலங்கையில் உள்ள 8 மாவட்டங்களில் உள்ள 49,344 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதற்கமைய, 16...</summary>
            <content type="html"><![CDATA[<p>எல் நினோ வானிலையின் தாக்கத்தால், இலங்கையில் உள்ள 8 மாவட்டங்களில் உள்ள 49,344 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> 

இதற்கமைய, 161,451 மக்கள் காலநிலை மாற்றத்தினால் பெரும் சிரமங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். </p><h2>

36 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு நீர் விநியோகம்</h2><p>
இன்று காலை(12.09.2026) வெளியான பேரிடர் மேலாண்மை மையம் தரவு அறிக்கையின்படி, இலங்கை முழுவதும் உள்ள 36 பிரதேச செயலகப் பிரிவுகள் பாதிக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0322b203-cfd6-47f0-9ad9-ad669f934862/26-6aa4afcacec09.webp' /></p><p> 

இருப்பினும், பாதிக்கப்பட்ட மக்களுக்குக் குடிநீர் வழங்கும் திட்டங்கள் தொடர்ச்சியாகச் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. </p><p>

அதன்படி, தற்போது அந்த 36 பிரதேச செயலகப் பிரிவுகளில் வசிக்கும் 43,221 குடும்பங்களைச் சேர்ந்த 141,312 மக்களுக்குக் குடிநீர் விநியோகம் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்டப்டுள்ளது.</p><p></p><p></p><p> </p>]]></content>
            <updated>2026-09-12T01:50:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடும் சிக்கலில் நாமல்: சட்ட மா அதிபர் திணைக்களத்தின் அதிரடி தீர்மானம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-in-trouble-1789176662"></link>
            <id>https://tamilwin.com/article/namal-in-trouble-1789176662</id>
            <summary type="text">&amp;nbsp;எயார் பஸ் வழக்கில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை சந்தேக நபராக பெயரிடுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவன...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;எயார் பஸ் வழக்கில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை சந்தேக நபராக பெயரிடுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.</p><p>
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு விமானங்கள் கொள்முதல் செய்யப்பட்டதில் இடம்பெற்ற இலஞ்ச ஊழல் சம்பவம் தொடர்பாக, கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.
</p><p>இந்த நிலையில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேன மற்றும் அவரது மனைவிக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டிருந்தது.</p><p>இந்த வழக்கில் நாமலையும் சந்தேக நபராக பெயரிடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><h2>சட்ட மா அதிபர் திணைக்களத்தின் தீர்மானம்</h2><p>
சட்டமா அதிபர் திணைக்களம் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு இந்த அறிவுறுத்தலை வழங்கியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b4222491-bea0-4f06-850d-575017e25fe0/26-6aa4ab586b094.webp' />&nbsp;&nbsp;</p><p>
இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் படி, இந்த வழக்கின் முதன்மை சந்தேகநபராகக் குறிப்பிடப்பட்டுள்ள கபில சந்திரசேன பெற்ற இலஞ்சப் பணம் நாமல் ராஜபக்சவிற்கு வழங்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.</p><p>
இதனையடுத்தே அவரை சந்தேகநபராக சேர்க்குமாறு சட்டமா அதிபர் திணைக்களம் பணித்துள்ளது.</p><p> இதற்கமைய, நீதிமன்றில் நகர்வுப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு நாமல் ராஜபக்ச இந்த வழக்கிலும் சந்தேகநபராக பெயரிடப்படவுள்ளார்.</p><p>
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான கொள்முதல் நடவடிக்கையின் போது 2014–2015 ஆம் காலப்பகுதியில் பல சந்தர்ப்பங்களில் 100 இலட்சம் ரூபாவை (10 மில்லியன்) லஞ்சமாகப் பெற்ற குற்றச்சாட்டின் பேரில், இலஞ்சம் ஊழல் மோசடி தவிர்ப்பு விசாரணை ஆணைக்குழுவால் கடந்த 04 ஆம் திகதி நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டார். </p><p>
கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதனைத் தொடர்ந்து, அவர் வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.&nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-09-12T01:43:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[உயிரை மாய்த்துக்கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ள மகிந்த]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/mahinda-driven-to-the-point-of-taking-his-own-life-1789177252"></link>
            <id>https://ibctamil.com/article/mahinda-driven-to-the-point-of-taking-his-own-life-1789177252</id>
            <summary type="text">ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த சிலர் மிக விரைவில் சிறைச்சாலைக்குச் செல்ல நேரிடும் என முன்னாள் இராணுவத் தளபதியும் பீல்ட் மார்ஷலுமான சரத் பொன்சேகா தெரிவி...</summary>
            <content type="html"><![CDATA[<p>ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த சிலர் மிக விரைவில் சிறைச்சாலைக்குச் செல்ல நேரிடும் என முன்னாள் இராணுவத் தளபதியும் பீல்ட் மார்ஷலுமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.</p><p>இணைய ஊடகமொன்றுக்கு வழங்கிய கலந்துரையாடலின்போதே அவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.</p><p>
</p><p>
அதற்கான அறிகுறிகள் தற்போது தென்படத் தொடங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த அந்த உறுப்பினர்கள் சிறைக்குச் சென்ற பின்னர், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை தூக்கிலிட வேண்டிய அவசியம் ஏற்படாது எனவும் அவர் கூறியுள்ளார்.</p><p>அவர் தானாகவே உயிரை மாய்த்துக்கொள்வார் எனவும் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.</p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-12T01:41:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆமா கரெக்ட், லண்டன்ல தானே அது நடக்குது.. கீர்த்தி சுரேஷ் வதந்திக்கு காட்டமாக பதிலடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/keerthy-suresh-clarify-on-london-visit-rumours-1789177089"></link>
            <id>https://cineulagam.com/article/keerthy-suresh-clarify-on-london-visit-rumours-1789177089</id>
            <summary type="text">நடிகர் விஜய் முதலமைச்சரான பிறகு முதல் முறையாக லண்டன் சென்று இருக்கிறார். அங்கே நடிகர் அஜித் பங்கேற்கும் கார் ரேஸை விஜய் தொடங்கி வைக்கிறார்.இது ஒருபுறம...</summary>
            <content type="html"><![CDATA[<p>நடிகர் விஜய் முதலமைச்சரான பிறகு முதல் முறையாக லண்டன் சென்று இருக்கிறார். அங்கே நடிகர் அஜித் பங்கேற்கும் கார் ரேஸை விஜய் தொடங்கி வைக்கிறார்.</p><p>இது ஒருபுறம் இருக்க கீர்த்தி சுரேஷ் தற்போது வெளிநாட்டுக்கு கிளம்பி சென்று இருக்கிறார். அவர் ஏர்போர்ட்டில் இருக்கும் வீடியோவை பகிர்ந்து, அவரும் லண்டன் செல்வதாக சிலர் வதந்தி பரப்பி உள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/97a46cf4-fc51-42c4-9ad2-a85d61f5ca9e/26-6aa4ad043c798.webp' /></p><p>
</p><h2>பதிலடி</h2><p>இந்நிலையில் அந்த பதிவுக்கு கீர்த்தி சுரேஷ் பதில் கொடுத்து இருக்கிறார். "ஆமா கரெக்ட். லண்டனில் தானே டொராண்டோ பிலிம் festival நடக்குது" என அவர் பதிவிட்டு இருக்கிறார்.</p><p>

இதன் மூலம் வதந்தி பரப்பியவர்களுக்கு கீர்த்தி நோஸ் கட் கொடுத்திருக்கிறார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-12T01:38:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பில் காணிகளுக்கு மந்திரஜாலம் செய்யும் மந்திரவாதி - பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/person-cheated-so-many-people-1789098683"></link>
            <id>https://tamilwin.com/article/person-cheated-so-many-people-1789098683</id>
            <summary type="text">
கொழும்பில் சுமார் 2 கோடி ரூபா பெறுமதியான தங்க ஆபரணங்களைக் திருடிச் சென்ற கபுவா என தன்னைத்தானே அழைத்துக்கொள்ளும் நபர் நுகேகொட பிரிவுக் குற்றத்தடுப்பு...</summary>
            <content type="html"><![CDATA[<p>
கொழும்பில் சுமார் 2 கோடி ரூபா பெறுமதியான தங்க ஆபரணங்களைக் திருடிச் சென்ற கபுவா என தன்னைத்தானே அழைத்துக்கொள்ளும் நபர் நுகேகொட பிரிவுக் குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
சந்தேக நபர் அவ்வாறு மோசடியாகப் பெற்றுக்கொண்டதாகக் கூறப்படும் 40 பவுனுக்கும் அதிகமான தங்க ஆபரணங்களை பொலிஸார் மீட்டுள்ளனர்.
</p><p>
வீடு மற்றும் காணிகள் விற்பனைக்கு உள்ளதாக பத்திரிகைகளில் விளம்பரம் செய்யும் பெண்களை இலக்கு வைத்து சந்தேக நபர் நீண்ட காலமாக இந்த மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளார்.</p><p>
</p><h2><b>
காணி மற்றும் வீடு விற்பனை</b></h2><p>மிரிஹான பிரதேசத்தை சேர்ந்த பெண் ஒருவர் தனது காணி மற்றும் வீடு விற்பனைக்கு உள்ளதாக பத்திரிகையில் பல தடவைகள் விளம்பரம் செய்திருந்தார்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fccc0397-f9d4-4dcc-b383-ec97b3ba8811/26-6aa3a740061e5.webp' /></p><p>அது தொடர்பில் கவனம் செலுத்திய சந்தேக நபர், குறித்த பெண்ணின் தொலைபேசி இலக்கத்திற்கு அழைத்துள்ளார்.</p><p> தொலைதூரப் பிரதேசத்தில் உள்ள பிரசித்தி பெற்ற தேவாலயம் ஒன்றின் பெயரைக் கூறி, அத்தேவாலயத்தில் நீண்டகாலமாக கபுவாவாக செயற்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
</p><p>
அந்த பெண்ணின் வீடும் காணியும் நீண்ட காலமாக விற்பனை செய்யப்படாமல் இருப்பது தனக்குத் தெய்வீக பலத்தால் புலப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
அக்காணியை விரைவாக விற்பனை செய்வதற்குச் சடங்கு ஒன்றைச் செய்து தர முடியும் என அந்த பெண்ணிடம் சந்தேக நபர் தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
</p><p>
சந்தேக நபரின் பேச்சுத் திறமையால் ஏமாற்றப்பட்ட பெண், குறித்த நபரை வீட்டிற்கு அழைத்து விபரங்களைக் கேட்டறிந்துள்ளார்.</p><h3><b> தங்க நகைகள் கொள்ளை</b></h3><p>இதன் போது அவர் அதற்காக 5 லட்சம் ரூபாய் பணம் தேவைப்படுவதாகத் தெரிவித்துள்ளார். 

அதற்குச் சம்மதம் தெரிவித்த பெண், அதற்காகத் திகதி ஒன்றையும் சந்தேக நபரிடம் ஒதுக்கிச் சடங்கிற்கான அனைத்தையும் ஏற்பாடு செய்திருந்ததாக குறித்த பெண் பொலிஸாரிடம் குறிப்பிட்டுள்ளார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8dc063d1-cf86-4a80-961d-866df24167cf/26-6aa3a740ad2c8.webp' /></p><p>ஒப்புக்கொண்டதற்கமைய, வீட்டிற்கு வந்திருந்த சந்தேக நபர், தான் வழங்கிய பொருட்களின் பட்டியலிலிருந்த சிறிய பானைக்குள் வீட்டின் தங்க ஆபரணங்களில் ஏதேனும் 3 அல்லது 7யை போட்டு, சிவப்பு அல்லது வெள்ளை நிறமான அடிமட்டம் போன்ற நீளமான துணியுடன் கொண்டு வருமாறு கூறியுள்ளார். </p><p>

அதன் பின்னர் அந்தப் பெண் முன்னிலையிலேயே அதனை நன்றாக மறைத்து, தாம்பூலம் மற்றும் மலர்களால் பூசை செய்யத் தயாரிக்கப்பட்டிருந்த மலர் மேடையில் வைத்து சில மணிநேரங்கள் சடங்கு செய்துள்ளார்.
</p><p>
 21 நாட்கள் கடந்ததன் பின்னர் வீட்டிலும் காணியிலும் புனித நீர் தெளித்து, 21ஆவது நாளில் பானைக்குள் போடப்பட்ட தங்க ஆபரணங்களை எடுக்குமாறு அப்பெண்ணிடம் கூறியுள்ளார்.
</p><p>
அதிலிருந்து 14 நாட்கள் செல்லும்போது நிலத்தைக் கொள்வனவு செய்வதற்காகக் வாங்குபவர் நிச்சயமாக வருவார் எனத் தெரிவித்துள்ளார்.
</p><p>
வாக்குறுதியளித்த பணத்தையும் பெற்றுக்கொண்டு அவர் அங்கிருந்து சென்றுவிட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சந்தேக நபர் கூறியவாறே வீட்டுச் சொந்தக்காரரான பெண் செயல்பட்ட போதிலும், புதைக்கப்பட்ட பானையைத் தோண்டி எடுத்தபோது அதற்குள் இருந்த தங்க ஆபரணங்கள் இருக்கவில்லை. </p><p>அத்துடன் வீட்டை கொள்வனவு செய்வதற்காக யாரும் வரவும் இல்லை.

பின்னர் இது தொடர்பில் அப்பெண் மிரிஹான பொலிஸாரிடம் செய்த முறைப்பாட்டுக்கு அமைய விசாரணைகள் மேற்கொள்ளப்பட்ட போது, இது போன்றதொரு சம்பவம் தொடர்பான முறைப்பாட்டு வெலிக்கடை பொலிஸ் நிலையத்திலும் பதிவாகியுள்ளமை தெரியவந்துள்ளது. </p><p>

அதன் பின்னர் குறித்த இரண்டு முறைப்பாடுகள் தொடர்பிலும் விசாரணை மேற்கொண்ட பொலிஸார் சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.
</p><p>
குறித்த சந்தேக நபரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது, இவ்வாறு மோசடியாக பெறப்பட்ட அனைத்துத் தங்க ஆபரணங்களையும் மட்டக்குளி பிரதேசத்தை சேர்ந்த நபர் ஒருவருக்கு விற்றுள்ளமை தெரியவந்துள்ளது.
</p><p>
இதனை அடுத்து, அந்த நபரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-12T01:26:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹவுதி கிளர்ச்சியாளர்களின் தொடர் தாக்குதல்! கைப்பற்றப்பட்ட செங்கடலின் மற்றுமொரு நகரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/another-red-sea-city-captured-by-the-houthis-1789176264"></link>
            <id>https://ibctamil.com/article/another-red-sea-city-captured-by-the-houthis-1789176264</id>
            <summary type="text">ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள், மய்யூன் (பெரிம்) தீவுக்கு எதிரே அமைந்துள்ள துபாப் என்ற கடலோர நகரத்தையும் கைப்பற்றியுள்ளனர்.

அதன்படி, உலகின் 10 முதல...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள், மய்யூன் (பெரிம்) தீவுக்கு எதிரே அமைந்துள்ள துபாப் என்ற கடலோர நகரத்தையும் கைப்பற்றியுள்ளனர்.
</p><p>
அதன்படி, உலகின் 10 முதல் 12 சதவீத கடல்வழி வர்த்தகம் நடைபெறும், மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த பாப் அல்-மண்டாப் கடல்வழிப் பாதையின் இருபுறங்களையும் ஹூதிகளால் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முடிந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
</p><p>
உலகளாவிய தொலைத்தொடர்பு, எரிசக்தி மற்றும் வர்த்தகப் போக்குவரத்தில் தீர்க்கமான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய இந்த சூழ்நிலையின் காரணமாக, செங்கடலில் பிராந்திய கடல்சார் பாதுகாப்பில் உலகம் கவனம் செலுத்தி வருகிறது.</p><p>முன்னதாக செங்கடல் பகுதியில் அமைந்துள்ள முக்கிய கடற்கரை நகரமான அல்-மோகாவை (Al-Mokha) ஹவுதி கிளர்ச்சியாளர்கள் முழுமையாகக் கடந்த 2 தினங்களுக்கு முன்னர் கைப்பற்றியிருந்தனர்.</p><p>இந்தக் கைப்பற்றலைத் தொடர்ந்து, உலகின் மிக முக்கியமான கப்பல் மற்றும் வர்த்தகப் பாதையான 'பாப் அல்-மண்டேப்' (Bab al-Mandeb) நீரிணையை நோக்கி ஹவுதி படைகள் மேலும் முன்னேறி வருவதாக அந்த ஊடகங்கள் தெரிவித்திருந்தன.</p><p><br></p>]]></content>
            <updated>2026-09-12T01:24:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[கயல் ஆனந்தி கியூட்டான லேட்டஸ்ட் போட்டோஷூட்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/kayal-anandhi-cute-new-photoshoot-1789175636"></link>
            <id>https://cineulagam.com/article/kayal-anandhi-cute-new-photoshoot-1789175636</id>
            <summary type="text">நடிகை கயல் ஆனந்தி தமிழ் மற்றும் தெலுங்கில் முக்கிய நடிகையாக வலம் வருபவர். திருமணத்திற்கு பிறகும் அவர் படங்களில் பிசியாக நடித்துவருகிறார்.

தற்போது அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நடிகை கயல் ஆனந்தி தமிழ் மற்றும் தெலுங்கில் முக்கிய நடிகையாக வலம் வருபவர். திருமணத்திற்கு பிறகும் அவர் படங்களில் பிசியாக நடித்துவருகிறார்.
</p><p>
தற்போது அழகிய உடையில் கயல் ஆனந்தி கொடுத்திருக்கும் போஸ் இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது.

ரசிகர்கள் மத்தியில் இதற்கு லைக்குகள் குவிந்து வருகிறது. </p><p>அழகிய புகைப்படங்களை பாருங்க.</p>]]></content>
            <updated>2026-09-12T01:14:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[இறுதிப் போட்டிக்கு நுழைந்தது இலங்கை மகளிர் அணி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sri-lanka-women-s-team-enters-the-final-1789175541"></link>
            <id>https://ibctamil.com/article/sri-lanka-women-s-team-enters-the-final-1789175541</id>
            <summary type="text">மகளிர் ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் பாகிஸ்தான் மகளிர் அணியை வீழ்த்திய இலங்கை மகளிர் அணி, இறுதிப் போட்டிக்கு தகுதி ...</summary>
            <content type="html"><![CDATA[<p>மகளிர் ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் பாகிஸ்தான் மகளிர் அணியை வீழ்த்திய இலங்கை மகளிர் அணி, இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
</p><p>
டுபாயில்&nbsp; நேற்று(11) நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி, முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது.</p><h2>வெற்றி இலக்கு</h2><p>
இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் மகளிர் அணி, 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகளை இழந்து 130 ஓட்டங்களைப் பெற்றது.

பாகிஸ்தான் அணியின் தலைவி ஃபாத்திமா சனா&nbsp; ஆட்டமிழக்காமல் 47 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றார்.</p><p></p><p>

இலங்கை அணியின் பந்துவீச்சில் சமரி அத்தபத்து மற்றும் சாமுடி பிரபோதா&nbsp; ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.</p><p>

இதனையடுத்து, 131 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை மகளிர் அணி, 18.4 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை எட்டியது.
</p><h2>இறுதிப் போட்டி</h2><p>
இலங்கை அணியின் வெற்றிக்கு ஹர்ஷிதா சமரவிக்ரம&nbsp; 36 ஓட்டங்களையும், கவிஷா தில்ஹாரி 33 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.</p><p>
</p><p>
பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சில் ஃபாத்திமா சனா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
</p><p>
இதன்மூலம் மகளிர் ஆசியக் கிண்ண தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கை மகளிர் அணியும் இந்திய மகளிர் அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.</p>]]></content>
            <updated>2026-09-12T01:12:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[மீனாட்சி சவுத்ரி அழகிய போட்டோஷூட்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/meenakshi-chaudhary-homely-look-photos-1789174952"></link>
            <id>https://cineulagam.com/article/meenakshi-chaudhary-homely-look-photos-1789174952</id>
            <summary type="text">நடிகை மீனாட்சி சவுத்ரி தென்னிந்திய சினிமாவில் தற்போது முன்னணி ஹீரோயின்களில் ஒருவர். அவர் அடுத்தடுத்து பல முக்கிய ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறா...</summary>
            <content type="html"><![CDATA[<p>நடிகை மீனாட்சி சவுத்ரி தென்னிந்திய சினிமாவில் தற்போது முன்னணி ஹீரோயின்களில் ஒருவர். அவர் அடுத்தடுத்து பல முக்கிய ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.</p><p>இன்ஸ்டாவில் அவருக்கு 3.1 மில்லியன் ரசிகர்கள் இருக்கிறார்கள்.</p><p>தற்போது ஹோம்லி லுக்கில் மீனாட்சி சவுத்ரி வெளியிட்டு இருக்கும் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஸ்டில்களுக்கு லைக்குகள் குவிந்து வருகிறது.

இதோ பாருங்க.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-12T01:07:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[விடுதலைப் புலிகளிடமிருந்து பெற்ற கையெறி குண்டுகள்! தாக்குதல்கள் குறித்து காவல்துறை சந்தேகம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/hand-grenades-obtained-from-the-ltte-1789174872"></link>
            <id>https://ibctamil.com/article/hand-grenades-obtained-from-the-ltte-1789174872</id>
            <summary type="text">இலங்கையில் இந்த ஆண்டில் இதுவரை ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களால் ஆறு கையெறி குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளனதாக காவல்துறை தெரிவித்துள்ளது....</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் இந்த ஆண்டில் இதுவரை ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களால் ஆறு கையெறி குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளனதாக காவல்துறை தெரிவித்துள்ளது.</p><p>
 

குறிப்பாக, இந்தத் தாக்குதல்களில் மூன்று கல்கிசை காவல் பிரிவுக்குள்ளேயே நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>
 

மேற்கு மாகாணத்தில் பாதாள உலகக் குழுக்களால் கையெறி குண்டுகள் பயன்படுத்தப்படுவது குறித்து காவல்துறை சமீபகாலமாக அதிக கவனம் செலுத்தி வருகிறது.</p><p>
</p><p>
 

போர்க்காலத்தில் விடுதலைப் புலிகளிடமிருந்து இந்தக் குழுக்கள் பெற்ற கையெறி குண்டுகள் இதுபோன்ற தாக்குதல்களில் பயன்படுத்தப்படுவதாக சந்தேகம் எழுந்துள்ளது. </p><p>அதன்படி, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை எதிர்த்துப் போராடுவதற்கான எதிர்கால முயற்சிகளில் முப்படைகளையும் ஈடுபடுத்துவது குறித்து காவல்துறை பரிசீலித்து வருவதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. </p><p>

 

இதற்கிடையில், நேற்று அதிகாலை (11) தெஹிவளையின் சிறிசங்கபோ மாவத்த பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பு மீது நடத்தப்பட்ட கையெறி குண்டு தாக்குதலில் இரண்டு குழந்தைகள் கொல்லப்பட்டனர் மற்றும் அவர்களது தந்தை காயமடைந்தார். </p><p>

 

உயிரிழந்தவர்கள் 17 வயதான கசுன் ரஷ்மிகா மற்றும் அவரது 11 வயதான சகோதரர் துமிந்தா கிஹான் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
</p><p>
 

அவர்களுடைய 55 வயதான தந்தை நலின் துசந்த பெரேரா, இந்தத் தாக்குதலில் தனது ஒரு காலில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.</p>]]></content>
            <updated>2026-09-12T01:01:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[அனுராதபுரத்தில் திசைக்காட்டிக்கு எதிராக களமிறங்கும் மகிந்தவின் மொட்டு கட்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/mahinda-s-bud-party-take-compass-in-anuradhapura-1789174485"></link>
            <id>https://ibctamil.com/article/mahinda-s-bud-party-take-compass-in-anuradhapura-1789174485</id>
            <summary type="text">ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசு அதிகாரத்துக்கு வந்து இரண்டு
ஆண்டுகள் நிறைவடையும் நிலையில், மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றத்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசு அதிகாரத்துக்கு வந்து இரண்டு
ஆண்டுகள் நிறைவடையும் நிலையில், மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றத்
தவறியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், பாதிக்கப்பட்ட மக்களின் குரலை
வெளிப்படுத்தும் வகையிலும் அனுராதபுரத்தில் பிரம்மாண்டமான
எதிர்ப்புப் பேரணி நடத்தப்படுகின்றது என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்
பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
</p><p>
கொழும்பிலுள்ள கட்சித் தலைமையகத்தில் நேற்று(11) வெள்ளிக்கிழமை நடைபெற்ற
ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர்
மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.</p><h2>பெரும் பேரணி</h2><p>
</p><p>
அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது,</p><p>
"அரசு வெளிநாடுகளிலிருந்து அரிசியை இறக்குமதி செய்வதால், உள்ளூர் விவசாயிகள்
தாங்கள் அறுவடை செய்த நெல்லை விற்றுக்கொள்ள முடியாமலும், அவசியமான உரத்தைப்
பெற்றுக்கொள்ள முடியாமலும் பெரும் நெருக்கடிக்குள்ளாகியுள்ளனர். </p><p>அதேபோன்று,
தொடரும் எரிபொருள் விலை உயர்வின் காரணமாக கடற்றொழிலாளர்கள் தங்களது அன்றாட
வாழ்வாதாரத்தை முன்னெடுக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.</p><p></p><p>
</p><p>
பட்டதாரிகள் அனைவருக்கும் வேலைவாய்ப்பு வழங்குவதாக வாக்குறுதியளித்த அரசு,
தற்போது அவர்களை முற்றாகப் புறக்கணித்துள்ளது. நாட்டில் வேலையின்மை, வறுமை
மற்றும் வாழ்க்கைச் செலவு என்பன பாரியளவில் அதிகரித்துள்ளன. </p><p>அரச ஊழியர்களுக்கு
வாழ்க்கைச் செலவுக்கு ஏற்ப சம்பளம் வழங்குவதாகக் கூறிய அரசு, தற்போது அவர்கள்
வாழ முடியாத சூழலையே உருவாக்கியுள்ளது.
</p><p>
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆட்சிக் காலத்திலேயே நாட்டின் பிரதான பாதாள உலகக்
குழுக்கள் ஒடுக்கப்பட்டு நாட்டைவிட்டுத் தப்பியோடினர். ஆனால், தற்போதைய
ஆட்சியில் தினமும் துப்பாக்கிச்சூடுகளும் குண்டுவெடிப்புகளும் இடம்பெற்று
வருகின்றன.</p><h2>ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க</h2><p> வரலாற்றில் இல்லாத வகையில் தற்போது கொள்கலன்களில் போதைப்பொருள்கள்
நாட்டுக்குள் கைப்பற்றப்படுகின்றன. அண்மையில் கொண்டுவரப்பட்ட 323
கொள்கலன்களில் போதைப்பொருள்களும் ஆயுதங்களுமே இருந்தனவா என்ற நியாயமான
சந்தேகம் மக்களுக்கு எழுந்துள்ளது.
</p><p>
துறைமுகங்கள், விமான நிலையங்கள், அதிவேக நெடுஞ்சாலைகள் போன்ற நீண்டகால
பொருளாதாரப் பலன்களைத் தரும் திட்டங்களே உண்மையான அபிவிருத்தித்
திட்டங்களாகும். வீதியில் மெட்ரோ பஸ்களை இறக்குவது மக்களுக்கு வசதிகளை
வழங்கும் ஒரு சேவையே தவிர, அது அபிவிருத்தித் திட்டம் அல்ல.</p><p></p><p> அபிவிருத்தி
பற்றிய அறிவோ திறமையோ இல்லாததால், பஸ்களை வீதியில் விட்டுவிட்டு அதையே
அபிவிருத்தி எனக் கூறி அரசு மக்களை ஏமாற்றுகின்றது.</p><p>

அரசு தனது திறமையின்மையை மறைப்பதற்காக, சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்தித்
தங்களுக்கு எதிராகச் செயற்படும் அரசியல் தலைவர்களைச் சிறையில் அடைக்கும்
அடக்குமுறையையே செய்கின்றது.
</p><p>
ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அபிவிருத்திகளைச்
செய்யாமல் நாடு முழுவதும் பேரணிகளை நடத்தி வருகின்றார். அனுராதபுரத்தில்
நடத்தப்படும் எமது பேரணிக்கு எதிர்க்கட்சியிலுள்ள பெரும்பாலான அரசியல்
கட்சிகள் தங்களது ஆதரவைத் தெரிவித்துள்ளன என குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-12T00:54:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[“என்னைப் பார்த்து பயப்படுகிறீர்கள் என்றால், பெருமையுடன் வெளியேறுவேன்!” – பிக் பாஸ் வீட்டில் முனியம்மாள் அதிரடி சவால்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/bigg-boss-10-tamil-muniyamma-challange-1789174044"></link>
            <id>https://cineulagam.com/article/bigg-boss-10-tamil-muniyamma-challange-1789174044</id>
            <summary type="text">பிக் பாஸ் தமிழ் சீசன் 10 வீட்டில் இந்த வாரத்திற்கான நாமினேஷன் பரபரப்பு அதிகரித்துள்ளது. கேப்டன் வினோத் பாபு, முனியம்மாள், தன்யா பல்லத் மற்றும் சவின்யா...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிக் பாஸ் தமிழ் சீசன் 10 வீட்டில் இந்த வாரத்திற்கான நாமினேஷன் பரபரப்பு அதிகரித்துள்ளது. கேப்டன் வினோத் பாபு, முனியம்மாள், தன்யா பல்லத் மற்றும் சவின்யா ஆகிய மூவரையும் எவிக்ஷனுக்காக நாமினேட் செய்கிறார்.</p><p>இதனைத் தொடர்ந்து, முனியம்மாள் தனது நாமினேஷன் குறித்து தைரியமாக பதிலளிக்கிறார். தன்னை நாமினேட் செய்வதன் மூலம், வீட்டில் உள்ள போட்டியாளர்கள் அனைவரும் தன்னைக் கண்டு பயப்படுகிறார்கள் என்றால், அந்தப் பெருமையுடன் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறத் தயாராக இருப்பதாக அவர் கூறுகிறார்.</p><p>மேலும், இது வினோத் பாபுவுக்கு மட்டும் விடுக்கும் சவால் அல்லாமல், பிக் பாஸ் வீட்டில் உள்ள அனைத்து போட்டியாளர்களுக்கும் ஒரு திறந்த சவாலை முன்வைக்கிறார் முனியம்மாள். தன்னைக் கண்டு பயப்படவில்லை என்றால், தன்னுடன் போட்டியிட்டு தங்களது திறமையை நிரூபிக்குமாறு அவர் சவால் விடுக்கிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/98d830df-dcf4-4ecc-9d8c-b5ceed9c094c/26-6aa4a11ed1f28.webp' /></p><p>முனியம்மாளின் இந்த அதிரடியான பேச்சு, நாமினேஷன் பரபரப்பை மேலும் அதிகரித்துள்ள நிலையில், அவரது தன்னம்பிக்கை அவருக்கு சாதகமாக அமையுமா? அல்லது இந்த நாமினேஷன் அவரது பிக் பாஸ் பயணத்திற்கு முற்றுப்புள்ளி வைக்குமா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.</p><p>பிக் பாஸ் தமிழ் சீசன் 10-ஐ இரவு 9:30 மணிக்கு விஜய் டிவியில் காணலாம். JioHotstar-ல் எப்போது வேண்டுமானாலும் ஸ்ட்ரீம் செய்யலாம். மேலும், பிக் பாஸ் வீட்டின் 24x7 நேரலை ஒளிபரப்பையும் JioHotstar-ல் காணலாம்.</p>]]></content>
            <updated>2026-09-12T00:47:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[உக்ரைன் போரில் உயிரிழந்த ரஷ்ய வீரர்களின் எண்ணிக்கை: பிரித்தானிய உளவுத்துறை தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/half-million-russian-soldiers-killed-in-ukraine-1789149788"></link>
            <id>https://news.lankasri.com/article/half-million-russian-soldiers-killed-in-ukraine-1789149788</id>
            <summary type="text">Half Million Russian Soldiers Killed in Ukraine War: உக்ரைன் ரஷ்யா போரில் இதுவரை அரை மில்லியனுக்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டு இருப்பதாக பிரித்தானிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>Half Million Russian Soldiers Killed in Ukraine War: உக்ரைன் ரஷ்யா போரில் இதுவரை அரை மில்லியனுக்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டு இருப்பதாக பிரித்தானிய உளவுத்துறை தகவல் தெரிவித்துள்ளது.</p><h2> அரை மில்லியன் ரஷ்ய வீரர்கள் உயிரிழப்பு</h2><p>
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினால் உக்ரைனுக்கு எதிராக தொடங்கப்பட்ட போரில் இதுவரை அரை மில்லியன்(5 லட்சம்) ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டு இருப்பதாக பிரித்தானிய உளவுத்துறை தகவல் தெரிவித்துள்ளது.</p><p> ரஷ்ய வீரர்களின் உயிரிழப்பும், போரினால் ரஷ்ய பொருளாதாரத்தில் அதிகரித்து வரும் அழுத்தமும் உக்ரைனை ரஷ்யாவின் கட்டுப்பாட்டிற்கு கீழ் கொண்டு வரும் ரஷ்ய அதிபர் புடினின் திட்டத்தில் எந்தவொரு மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/62e416d0-e912-4833-bf79-344e4a907ba5/26-6aa4425dcf2d9.webp' /></p><p> பிரித்தானிய ஆயுதப் படைகளின் தலைவர் ஏர் சீப் மார்ஷல் சர் ரிச்சர்ட் நைட்டன் வழங்கிய தகவலில், கடந்த 2022ம் ஆண்டு பிப்ரவரியில் தொடங்கிய போரில் காயமடைந்தவர்கள் உட்பட கிட்டத்தட்ட 1.5 மில்லியன் ரஷ்ய வீரர்கள் பாதிப்படைந்து இருப்பதாக தெரிவித்துள்ளார்.</p><p> இதில் மிகப்பெரிய இழப்பு 2023ம் ஆண்டு ஜனவரியில் ஏற்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார். அத்துடன் இந்த போர் நடவடிக்கையில், உக்ரைனின் 2% நிலப்பரப்பை மட்டுமே ரஷ்யா கைப்பற்றி இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2> நீண்ட கால போராக தொடரும் உக்ரைன் போர்</h2><p>ரஷ்ய வீரர்கள் கிட்டத்தட்ட 1660 நாட்களாக உக்ரைனுடன் சண்டையிட்டு வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a4f10c8b-3b2d-47bb-a2fc-67d1bf63bf12/26-6aa4425e828ed.webp' /></p><p> இதனால் முதல் மற்றும் இரண்டாம் உலக போரில் ரஷ்ய வீரர்கள் சண்டையிட்ட நாட்களை விட உக்ரைன் போரில் ரஷ்ய வீரர்கள் அதிக நாட்கள் சண்டையிட்டு வருகின்றனர் என்பது உறுதியாகியுள்ளது.</p><p> இந்த போரினால் ரஷ்யாவின் பணவீக்கம் புதிய உச்சத்தை தொட்டுள்ளது. உள்நாட்டு நுகர்வோரின் தேவை பலவீனமாகியுள்ளது.</p><p> நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் படுவேகமாக சரிந்துள்ளது. இந்த போர் நடவடிக்கை தொடர்ந்தால் அது நாட்டு மக்களின் எதிர்காலத்திற்கு பெரும் சுமையாக மாறிவிடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-12T00:36:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[போக்குவரத்து காவல் ரோபோக்கள் முதல் இயந்திர ரோந்து நாய் வரை: அசத்தும் சீன கண்காட்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/china-s-public-security-technology-expo-1789173303"></link>
            <id>https://news.lankasri.com/article/china-s-public-security-technology-expo-1789173303</id>
            <summary type="text">China&#039;s Public security technology expo : சீனாவில் பொது பாதுகாப்புத் துறையில் ரோபோக்கள் பயன்படுத்துவது தொடர்பான கண்காட்சி தொடங்கியுள்ளது. பொது பாதுகாப...</summary>
            <content type="html"><![CDATA[<p>China's Public security technology expo : சீனாவில் பொது பாதுகாப்புத் துறையில் ரோபோக்கள் பயன்படுத்துவது தொடர்பான கண்காட்சி தொடங்கியுள்ளது.</p><h2> பொது பாதுகாப்புத் துறையில் ரோபோக்கள்</h2><p>

கீழக்கு சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் உள்ள லியானியுங்காங்(Lianyungang) நகரில் சிறப்பு கண்காட்சி ஒன்று தொடங்கியுள்ளது.</p><p>சீனாவின் பொது பாதுகாப்புத் துறையில் அதாவது காவல், ரோந்து மற்றும் வெடிகுண்டு அகற்றுதல் துறையில் ரோபோக்களை பயன்படுத்துவது தொடர்பான கண்காட்சி தொடங்கியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7e66b477-6e1e-4648-8901-2f5b30c44e71/26-6aa49e39a2fdb.webp' /></p><p> இந்த கண்காட்சியில் ரோந்து நாய் ரோபோக்கள், போக்குவரத்து காவலர் ரோபோக்கள் மற்றும் வெடிக்குண்டுகளை அகற்றும் சிறப்பு தடுப்பு ரோபோக்கள் ஆகியவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.</p><p>காவல்துறை மற்றும் பொதுப் பாதுகாப்புத் துறையின் இந்த கண்காட்சியில் கிட்டத்தட்ட 100 க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் ரோபோ தொழில்நுட்பங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.</p><p> இந்த கண்காட்சியில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட மனித ரோபோக்கள் பார்வையாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aec9eb58-1758-46d5-81ed-f0cdb39cc3f3/26-6aa49e3a59340.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள். &nbsp;&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-12T00:35:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவின் புதிய சாதனை ; நயகரா ஆற்றில் உருவாக்கப்பட்ட இயற்கை வாழ்விடங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/natural-habitats-along-canada-s-niagara-river-1789152185"></link>
            <id>https://canadamirror.com/article/natural-habitats-along-canada-s-niagara-river-1789152185</id>
            <summary type="text">கனடாவில் நயகரா ஆற்றின் கரையோர ஈரநிலங்களில் 75 சதவீதத்திற்கும் அதிகமானவை அழிவடைந்ததைத் தொடர்ந்து, மீள்சுழற்சி செய்யப்பட்ட கிறிஸ்துமஸ் மரங்கள் மற்றும் ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவில் நயகரா ஆற்றின் கரையோர ஈரநிலங்களில் 75 சதவீதத்திற்கும் அதிகமானவை அழிவடைந்ததைத் தொடர்ந்து, மீள்சுழற்சி செய்யப்பட்ட கிறிஸ்துமஸ் மரங்கள் மற்றும் மரக் கழிவுகளை ஆற்றுப் படுகையில் நிலைநிறுத்தி சுற்றுச்சூழல் அமைப்பை மீட்டெடுக்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.</p><p>

இந்தத் திட்டத்தின் மூலம், நயகரா பூங்காக்கள் நிறுவனம் மற்றும் சுற்றுச்சூழல் துறைகள் இணைந்து இதுவரை 1.64 கிலோமீற்றர் பரப்பளவில் நீர்வாழ் உயிரினங்களுக்கான இயற்கை வாழ்விடங்களை வெற்றிகரமாக உருவாக்கியுள்ளன.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c0d2c242-4191-4e7d-a71b-88963ae7e6ab/26-6aa44bbb1b5b5.webp' /></p><p>மேலும், 2025 கோடை காலத்தில் பிளாக் கிரீக் மற்றும் பொயர்ஸ் கிரீக் நதி முகத்துவாரப் பகுதிகளில் மரக் கட்டமைப்புகள் மற்றும் பாறைகளைப் பயன்படுத்தி மேலதிகமாக 240 மீற்றர் ஈரநிலப் பகுதி புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது.
</p><p>
இந்த ஆக்கபூர்வமான நடவடிக்கையினால் அந்த பகுதிகளில் மீன்கள் மற்றும் கரையோரப் பறவைகளின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளதுடன், நீரின் தரமும் மேம்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p>]]></content>
            <updated>2026-09-12T00:34:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆண்மைக்குறைபாடு சிகிச்சை ; 24 வயது இளைஞனின் வயிற்றுக்குள் கருப்பை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/uterus-found-inside-abdomen-of-a-24-year-old-man-1789162430"></link>
            <id>https://jvpnews.com/article/uterus-found-inside-abdomen-of-a-24-year-old-man-1789162430</id>
            <summary type="text">இந்தியா டெல்லியில் குழந்தையின்மை பிரச்சினைக்காக மருத்துவமனைக்கு சென்ற 24 வயது இளைஞரின் வயிற்றுப் பகுதியில் நன்கு வளர்ச்சியடைந்த கருப்பை மற்றும் பலோப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியா டெல்லியில் குழந்தையின்மை பிரச்சினைக்காக மருத்துவமனைக்கு சென்ற 24 வயது இளைஞரின் வயிற்றுப் பகுதியில் நன்கு வளர்ச்சியடைந்த கருப்பை மற்றும் பலோப்பியன் குழாய்கள் இருப்பது மருத்துவ பரிசோதனையில் கண்டறியப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><p>
</p><p></p><p>டெல்லி ராஜோரி கார்டன் பகுதியில் உள்ள மருத்துவமனை ஒன்றுக்கு, திருமணமாகி பல ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லாததால் சிகிச்சை பெறுவதற்காக 24 வயது இளைஞர் ஒருவர் சென்றுள்ளார்.
</p><p>
வெளிப்புறமாக அவருக்கு ஆணுக்குரிய உடல் அமைப்புகள் இயல்பாகவே இருந்த நிலையில், மருத்துவர்கள் மேற்கொண்ட பரிசோதனையில் அவரது விந்தணுக்களின் எண்ணிக்கை பூஜ்யமாக இருப்பது தெரியவந்தது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/017eb9d8-3690-4c1b-ac72-ee644af969fb/26-6aa473c087110.webp' /></p><p>இதையடுத்து மேற்கொள்ளப்பட்ட மேலதிக ஸ்கேன் பரிசோதனையில், அவரது வயிற்றுப் பகுதியில் பெண்களுக்கு காணப்படும் கருப்பை மற்றும் பலோப்பியன் குழாய்கள் இருப்பது கண்டறியப்பட்டது.</p><p>

மேலும், விதைப்பையில் இருக்க வேண்டிய இரண்டு விரைகளும் விதைப்பையில் இல்லாமல் வயிற்றுப் பகுதியிலேயே இருந்ததும் மருத்துவர்களின் கவனத்திற்கு வந்துள்ளது.</p><p>

இந்த அரிய மருத்துவ நிலை, மருத்துவ ரீதியாக 'பெர்சிஸ்டண்ட் முல்லேரியன் டக்ட் சிண்ட்ரோம்' (Persistent Müllerian Duct Syndrome) என அழைக்கப்படுவதாக மருத்துவக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
</p><p>
வயிற்றுக்குள் இருக்கும் விரைகளுக்கு எதிர்காலத்தில் புற்றுநோய் உள்ளிட்ட சிக்கல்கள் ஏற்படும் அபாயம் இருக்கக்கூடும் என்பதால், உரிய மருத்துவ கண்காணிப்பு மற்றும் சிகிச்சை அவசியம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
</p><p>
இதனைத் தொடர்ந்து, குறித்த இளைஞருக்கு குறைந்த அளவு காயம் ஏற்படும் லேப்ராஸ்கோப்பிக் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு, வயிற்றுப் பகுதியில் இருந்த கருப்பை மற்றும் பிற தொடர்புடைய அமைப்புகள் தொடர்பில் மருத்துவ நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இந்த சம்பவம் மருத்துவ ரீதியாக மிகவும் அரிய ஒன்றாக கருதப்படுவதுடன், குழந்தையின்மை அல்லது இனப்பெருக்கம் தொடர்பான பிரச்சினைகள் காணப்படும் சந்தர்ப்பங்களில் உரிய மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்வதன் முக்கியத்துவத்தையும் எடுத்துக்காட்டுவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-12T00:34:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீண்டகாலமாக நடந்த கொலை வழக்கு! 11 வருடங்களுக்கு பின்னர் நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/2015-murder-case-death-sentence-in-sri-lanka-1789170751"></link>
            <id>https://tamilwin.com/article/2015-murder-case-death-sentence-in-sri-lanka-1789170751</id>
            <summary type="text">பிட்டிகல, மிரிஸ்வத்த பகுதியில் 2015ஆம் ஆண்டு இடம்பெற்ற மனிதக் கொலைச் சம்பவம் தொடர்பில் குற்றவாளியாகக் காணப்பட்ட ஒருவருக்கு பலபிட்டிய மேல் நீதிமன்றம் ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிட்டிகல, மிரிஸ்வத்த பகுதியில் 2015ஆம் ஆண்டு இடம்பெற்ற மனிதக் கொலைச் சம்பவம் தொடர்பில் குற்றவாளியாகக் காணப்பட்ட ஒருவருக்கு பலபிட்டிய மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.
</p><p>
கண்டி பகுதியைச் சேர்ந்த விந்துவ ராஜ் சந்திர மோகன் என்பவருக்கே இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
</p><h2>மரண தண்டனை</h2><p>
2015ஆம் ஆண்டு ஏப்ரல் 14ஆம் திகதி, மிரிஸ்வத்த பகுதியில் மாணிக்கம் மோகன் என்பவரைத் தடியால் தாக்கி பலத்த காயங்களை ஏற்படுத்தி கொலை செய்ததாக பிரதிவாதி மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/96e34bdc-d8ad-4cdf-8d71-833ac17b6590/26-6aa4953ac4194.webp' /></p><p>

வடக்கு பிட்டிகல பகுதியைச் சேர்ந்த சோமசுந்தரம் கிருஷ்ணகுமார் என்பவர் பிட்டிகல பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில், பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.
</p><p>
இந்த வழக்கு CRI 2264/2019 என்ற வழக்கு இலக்கத்தின் கீழ் பலபிட்டிய மேல் நீதிமன்றத்தில் நீண்டகாலமாக விசாரணை செய்யப்பட்டு வந்த நிலையில், அதன் தீர்ப்பு நேற்று (10) அறிவிக்கப்பட்டது.
</p><p>
இதன்போது, தண்டனைச் சட்டக்கோவையின் 32ஆம் பிரிவுடன் வாசிக்கப்படும் 296ஆம் பிரிவின் கீழ் பிரதிவாதி கொலைக் குற்றத்திற்கு குற்றவாளியாகக் காணப்பட்டதையடுத்து, அவருக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-12T00:30:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[தரம் 6 மாணவர்களின் புத்தகப்பை எடை குறைக்கப்படும் – பிரதமர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/weight-grade-6-students-schoolbags-will-be-reduced-1789164807"></link>
            <id>https://jvpnews.com/article/weight-grade-6-students-schoolbags-will-be-reduced-1789164807</id>
            <summary type="text">இலங்கையில் அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய கல்வி சீர்திருத்தங்களின் கீழ், பாடசாலை மாணவர்கள் சுமக்கும் புத்தகப்பைகளின் எடை கணிசமாகக் குறைக்கப்படும் என பி...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய கல்வி சீர்திருத்தங்களின் கீழ், பாடசாலை மாணவர்கள் சுமக்கும் புத்தகப்பைகளின் எடை கணிசமாகக் குறைக்கப்படும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p></p><p>நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த பிரதமர், புதிய சீர்திருத்தங்களின் கீழ் அறிமுகப்படுத்தப்படும் செயற்பாட்டு அடிப்படையிலான கற்றல் முறையின் மூலம் மாணவர்கள் வீட்டுக்கும் பாடசாலைக்கும் இடையில் எடுத்துச் செல்ல வேண்டிய புத்தகங்களின் எண்ணிக்கை குறைக்கப்படும் எனக் குறிப்பிட்டார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bdba1b5a-3562-439c-abd3-bcf7af1647f2/26-6aa47d098e16e.webp' /></p><p>வகுப்பறைச் செயற்பாடுகளுக்குப் பயன்படுத்தப்படும் புத்தகங்கள் பாடசாலையிலேயே வைக்கப்படும். இதனால், மாணவர்கள் அவற்றை தினமும் வீட்டுக்கு எடுத்துச் செல்ல வேண்டிய அவசியம் இருக்காது.
</p><p>
பாடசாலை தவணை முடிவடைந்த பின்னர், தங்களது கற்றல் செயற்பாடுகளை நிறைவு செய்த நிலையில், அந்தப் புத்தகங்களை மாணவர்கள் வீட்டுக்கு எடுத்துச் செல்ல முடியும் என பிரதமர் தெரிவித்தார்.
</p><p>
மேலும், 2027ஆம் ஆண்டு முதல் தரம் 6 மாணவர்களுக்காக தொகுதி அடிப்படையிலான கற்றல் முறை அறிமுகப்படுத்தப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.
</p><p>
இதன் கீழ், தற்போதுள்ள பெரிய அளவிலான பாடப்புத்தகங்களுக்குப் பதிலாக, ஒவ்வொரு பாடத்திற்கும் குறிப்பிட்ட தவணைக்குத் தேவையான பாடத்தொகுதிகள் மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ளன.
</p><p>
இந்த மாற்றங்களின் மூலம் மாணவர்கள் தினசரி பாடசாலைக்கு எடுத்துச் செல்லும் புத்தகப்பைகளின் எடை கணிசமாகக் குறையும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-12T00:30:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[காகிதமற்ற சுங்க ஆவண செயலாக்க முறைமை குறித்து IMFக்கு தெளிவுபடுத்தல்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/paperless-customs-document-processing-system-imf-1789166688"></link>
            <id>https://jvpnews.com/article/paperless-customs-document-processing-system-imf-1789166688</id>
            <summary type="text">இலங்கைச் சுங்கத் திணைக்களத்தினால் ஒக்டோபர் மாதம் 01ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள &quot;காகிதமற்ற சுங்க ஆவண செயலாக்க முறைமை&quot; குறித்து சர்வதேச நாண...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கைச் சுங்கத் திணைக்களத்தினால் ஒக்டோபர் மாதம் 01ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள "காகிதமற்ற சுங்க ஆவண செயலாக்க முறைமை" குறித்து சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பிரதிநிதிகளுக்கு தெளிவுபடுத்தும் விசேட கலந்துரையாடல் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.</p><p> </p><p></p><p>ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில், ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நேற்று (11) பிற்பகல் இந்த விசேட கலந்துரையாடல் நடைபெற்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/34e01e34-753a-4095-971a-b7de485e1347/26-6aa48461ec2f8.webp' /></p><p> </p><p>

இலங்கைச் சுங்கத் திணைக்களத்தால் நடைமுறைப்படுத்தப்படவுள்ள காகிதமற்ற சுங்க ஆவண செயலாக்க முறைமை, அது தொடர்பான விழிப்புணர்வு திட்டங்கள் மற்றும் இலங்கைச் சுங்கத்தின் தொழில்நுட்ப தயார்நிலை குறித்து சுங்கத் திணைக்களம் மற்றும் வருமான நிர்வாக சீர்திருத்த அலகு என்பனவற்றினால் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கு இங்கு விரிவான விளக்கமளிக்கப்பட்டது. </p><p>

இலங்கைச் சுங்கத் திணைக்களம் மற்றும் ஜனாதிபதி செயலகத்தின் வருமான நிர்வாக சீர்திருத்த மற்றும் நவீனமயமாக்கல் பிரிவு இணைந்து இந்தச் செயற்பாட்டிற்காக வழங்கும் பங்களிப்பைச் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் பாராட்டியதுடன், இத்திட்டத்தை வெற்றிகரமாக முன்னோக்கி கொண்டு செல்வதற்குத் தேவையான ஒத்துழைப்பை வழங்கவும் உடன்பாடு தெரிவித்துள்ளனர். </p><p>

ஜனாதிபதி அலுவலகத்தின் வருமான நிர்வாக சீர்திருத்த மற்றும் நவீனமயமாக்கல் பிரிவின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் சீவலி அருக்கொட, இலங்கை சுங்க பணிப்பாளர் நாயகம் விமல் லியனகம மற்றும் வருமான நிர்வாக சீர்திருத்த மற்றும் நவீனமயமாக்கல் பிரிவு மற்றும் இலங்கை சுங்கத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் பலரும், சர்வதேச நாணய நிதியத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி டினார் பிரிஹார்தினி (Dinar Prihardini) மற்றும் கிளாக்கோவ் அகேபன்னிட்சாவோர்ன் (Klakow Akepannidtaworn) ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-12T00:00:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[போரை காட்டி கோட்டாபய ராஜபக்ச செய்த மிக் டீல்! உண்மைகளை அம்பலப்படுத்தியவர்கள் மரணம்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/gotabaya-rajapaksa-arrives-at-fcid-1789168115"></link>
            <id>https://tamilwin.com/article/gotabaya-rajapaksa-arrives-at-fcid-1789168115</id>
            <summary type="text">மிக்-27 போர் விமானங்களைக் கொள்முதல் செய்ததில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பில், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் குற்றப் புலனாய்...</summary>
            <content type="html"><![CDATA[<p>மிக்-27 போர் விமானங்களைக் கொள்முதல் செய்ததில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பில், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் குற்றப் புலனாய்வு பிரிவினரால் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
</p><p>
2006ஆம் ஆண்டு இடம்பெற்ற இந்த கொள்முதல் நடவடிக்கையின் போது, கோட்டாபய ராஜபக்ச பாதுகாப்புச் செயலாளராகவும், மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாகவும் பதவி வகித்திருந்தனர்.</p><p> 

இந்த கொள்முதல் நடவடிக்கையால் அரசுக்கு சுமார் 14 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி இழப்பு ஏற்பட்டதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
</p><p>
இந்த விவகாரத்தில் ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் உதயங்க வீரதுங்கவின் பங்கு குறித்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. </p><p>

கொள்முதல் நடவடிக்கையில் முறைகேடான கொடுப்பனவுகள் மற்றும் கமிஷன் தொடர்பான குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டுள்ளன.</p><p>

இதேவேளை, மிக்-27 கொள்முதல் தொடர்பான தகவல்களை வெளிக்கொண்டு வந்திருந்த ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க , பின்னர் படுகொலை செய்யப்பட்ட சம்பவமும் இந்த விவகாரத்துடன் தொடர்புபடுத்தி பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.</p><p>

மிக்-27 கொள்முதல் விவகாரம் தொடர்பாக முன்னாள் விமானப்படை தளபதிகள் மற்றும் அதிகாரிகளிடமும் விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளன.
</p><p>
அரசாங்கத்தின் ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த முன்னாள் ஆட்சியாளர்கள் தொடர்பான பல்வேறு விவகாரங்கள் குறித்த விசாரணைகளும் தற்போது தீவிரமடைந்துள்ளன.</p><p>

இந்த விடயங்கள் தொடர்பில் பேசுகின்றது நியூஸ் இன்சைட் நிகழ்ச்சி...</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/U28cBjQXzNE" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-11T23:57:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[மக்களின் குரலாக அனுராதபுரத்தில் பிரம்மாண்ட பேரணி! அரசுக்கு எதிராக களமிறங்கும் பொதுஜன பெரமுன]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/slpp-to-hold-mass-rally-in-anuradhapura-1789169577"></link>
            <id>https://tamilwin.com/article/slpp-to-hold-mass-rally-in-anuradhapura-1789169577</id>
            <summary type="text">ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசு அதிகாரத்துக்கு வந்து இரண்டு
ஆண்டுகள் நிறைவடையும் நிலையில், மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றத்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசு அதிகாரத்துக்கு வந்து இரண்டு
ஆண்டுகள் நிறைவடையும் நிலையில், மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றத்
தவறியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், பாதிக்கப்பட்ட மக்களின் குரலை
வெளிப்படுத்தும் வகையிலும் அனுராதபுரத்தில் பிரம்மாண்டமான
எதிர்ப்புப் பேரணி நடத்தப்படுகின்றது என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்
பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
</p><p>
கொழும்பிலுள்ள கட்சித் தலைமையகத்தில் நேற்று(11) வெள்ளிக்கிழமை நடைபெற்ற
ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர்
மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.</p><h2>பெரும் பேரணி</h2><p>
</p><p>
அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது,</p><p>
"அரசு வெளிநாடுகளிலிருந்து அரிசியை இறக்குமதி செய்வதால், உள்ளூர் விவசாயிகள்
தாங்கள் அறுவடை செய்த நெல்லை விற்றுக்கொள்ள முடியாமலும், அவசியமான உரத்தைப்
பெற்றுக்கொள்ள முடியாமலும் பெரும் நெருக்கடிக்குள்ளாகியுள்ளனர். </p><p>அதேபோன்று,
தொடரும் எரிபொருள் விலை உயர்வின் காரணமாக கடற்றொழிலாளர்கள் தங்களது அன்றாட
வாழ்வாதாரத்தை முன்னெடுக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f1e0d150-d09c-45a7-933e-20d7b2e92a86/26-6aa49176a4143.webp' /></p><p>
</p><p>
பட்டதாரிகள் அனைவருக்கும் வேலைவாய்ப்பு வழங்குவதாக வாக்குறுதியளித்த அரசு,
தற்போது அவர்களை முற்றாகப் புறக்கணித்துள்ளது. நாட்டில் வேலையின்மை, வறுமை
மற்றும் வாழ்க்கைச் செலவு என்பன பாரியளவில் அதிகரித்துள்ளன. </p><p>அரச ஊழியர்களுக்கு
வாழ்க்கைச் செலவுக்கு ஏற்ப சம்பளம் வழங்குவதாகக் கூறிய அரசு, தற்போது அவர்கள்
வாழ முடியாத சூழலையே உருவாக்கியுள்ளது.
</p><p>
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆட்சிக் காலத்திலேயே நாட்டின் பிரதான பாதாள உலகக்
குழுக்கள் ஒடுக்கப்பட்டு நாட்டைவிட்டுத் தப்பியோடினர். ஆனால், தற்போதைய
ஆட்சியில் தினமும் துப்பாக்கிச்சூடுகளும் குண்டுவெடிப்புகளும் இடம்பெற்று
வருகின்றன.</p><h2>ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க</h2><p> வரலாற்றில் இல்லாத வகையில் தற்போது கொள்கலன்களில் போதைப்பொருள்கள்
நாட்டுக்குள் கைப்பற்றப்படுகின்றன. அண்மையில் கொண்டுவரப்பட்ட 323
கொள்கலன்களில் போதைப்பொருள்களும் ஆயுதங்களுமே இருந்தனவா என்ற நியாயமான
சந்தேகம் மக்களுக்கு எழுந்துள்ளது.
</p><p>
துறைமுகங்கள், விமான நிலையங்கள், அதிவேக நெடுஞ்சாலைகள் போன்ற நீண்டகால
பொருளாதாரப் பலன்களைத் தரும் திட்டங்களே உண்மையான அபிவிருத்தித்
திட்டங்களாகும். வீதியில் மெட்ரோ பஸ்களை இறக்குவது மக்களுக்கு வசதிகளை
வழங்கும் ஒரு சேவையே தவிர, அது அபிவிருத்தித் திட்டம் அல்ல.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d058e251-9c13-4384-867e-58ffc1373f05/26-6aa4917797423.webp' /></p><p> அபிவிருத்தி
பற்றிய அறிவோ திறமையோ இல்லாததால், பஸ்களை வீதியில் விட்டுவிட்டு அதையே
அபிவிருத்தி எனக் கூறி அரசு மக்களை ஏமாற்றுகின்றது.</p><p>

அரசு தனது திறமையின்மையை மறைப்பதற்காக, சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்தித்
தங்களுக்கு எதிராகச் செயற்படும் அரசியல் தலைவர்களைச் சிறையில் அடைக்கும்
அடக்குமுறையையே செய்கின்றது.
</p><p>
ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அபிவிருத்திகளைச்
செய்யாமல் நாடு முழுவதும் பேரணிகளை நடத்தி வருகின்றார். அனுராதபுரத்தில்
நடத்தப்படும் எமது பேரணிக்கு எதிர்க்கட்சியிலுள்ள பெரும்பாலான அரசியல்
கட்சிகள் தங்களது ஆதரவைத் தெரிவித்துள்ளன என குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-11T23:44:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[செவ்வாயால் டபுள் ஜாக்பாட் ; உங்க ராசியும் இதுல இருக்கா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sevvayal-double-jackpot-your-zodiac-sign-on-this-1789167518"></link>
            <id>https://jvpnews.com/article/sevvayal-double-jackpot-your-zodiac-sign-on-this-1789167518</id>
            <summary type="text">ஜோதிட சாஸ்திரத்தில் செவ்வாய் கிரகங்களின் தளபதி என்று அறியப்படுகிறார். செவ்வாய் தைரியம் மற்றும் ஆற்றலின் அதிபதியாகக் கருதப்படுகிறது. செவ்வாயின் இயக்கத்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜோதிட சாஸ்திரத்தில் செவ்வாய் கிரகங்களின் தளபதி என்று அறியப்படுகிறார். செவ்வாய் தைரியம் மற்றும் ஆற்றலின் அதிபதியாகக் கருதப்படுகிறது. செவ்வாயின் இயக்கத்தில் ஏற்படும் மாற்றங்கள் ஜோதிடத்தில் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. செவ்வாயின் ராசி மாற்றம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் மாற்றத்தை ஏற்படுத்தும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fd6d7aef-b855-4f8d-a341-b88790e792c1/26-6aa487a12e803.webp' /></p><p> சில ராசிக்காரர்கள் இந்த கிரக மாற்றத்தால் நேர்மறையான விளைவுகளை அனுபவிப்பார்கள், சில ராசிக்காரர்கள் எதிர்மறையான விளைவுகளை அனுபவிப்பார்கள். இந்த பதிவில் செவ்வாய் கடக ராசிக்குள் நுழைவதால் அதிர்ஷ்டமடையப் போகும் ராசிகள் என்னென்னெ என்று தெரிந்து கொள்ளலாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/12008d73-ad87-4c8d-87ac-546325b15f6f/26-6aa487a06b0cd.webp' /></p><h4>ரிஷபம்</h4><p>
செவ்வாய் கிரகம் ரிஷப ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமான பலன்களை அளிக்கும் கிரகமாக கருதப்படுகிறது. இந்த மாற்றத்தால் அவர்கள் அனைத்து வகையான நிதி நன்மைகளையும் அடையப்போகிறார்கள். பல மகிழ்ச்சியான மாற்றங்கள் அவர்கள் வாழ்க்கையில் ஏற்படப்போகிறது. நிலுவையில் உள்ள அனைத்துப் பணிகளையும் முடிக்க இதுவே சிறந்த நேரம்.

வேலையில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. மேலும், ஒரு புதிய வேலை உங்களைத் தேடி வருகிறது. நிதி நிலைமை அவர்கள் முற்றிலும் எதிர்பாராத அளவிற்கு அதிகரிக்கும். புதிய சொத்து மற்றும் வாகனம் வாங்க இந்த காலகட்டம் சாதகமாக இருக்கும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும். நீண்ட கால ஆசைகளை நிறைவேற்ற இது மிகவும் பொருத்தமான நேரமாகும். அவர்களின் கடின உழைப்பிற்கான பலனை இப்போது அறுவடை செய்யலாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e59737d5-deb5-4fe7-a241-596c57dfcaa4/26-6aa487a1e1f1c.webp' /></p><h4>துலாம்
</h4><p>துலாம் ராசிக்காரர்களுக்கு செவ்வாய் கிரகம் இரண்டு மற்றும் ஏழாம் வீடுகளுக்கு அதிபதியாக உள்ளார். தற்போது செவ்வாய் அவர்களின் பத்தாவது வீட்டிற்குள் நுழையப்போகிறார். இதனால் அவர்கள் வணிகம் மற்றும் வேலையில் பெரிய வெற்றியை எதிர்பார்க்கலாம். வேலையில் இருப்பவர்களுக்கு பணியிடத்தில் சகஊழியர்களின் ஆதரவு முழுமையாக கிடைக்கும். இந்த காலகட்டத்தில் பதவி உயர்வுகள் கிடைக்கும். இது நிதி நிலையை அதிகரிக்கும் மற்றும் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்களைக் கொண்டுவரும்.

புதிய முயற்சிகள் சிறப்பான பலன்களைக் கொடுக்கும், மேலும் வணிகர்கள் புதிய ஆர்டர்களைப் பெறலாம். கடக ராசிக்காரர்களுக்கு பல்வேறு ஒப்பந்தங்கள் மூலம் பண ஆதாயத்திற்கான வாய்ப்புகள் உள்ளன. அவர்களின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும், இதனால் பல்வேறு பணிகளில் தடையின்றி பங்கேற்க முடியும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ba36a56c-fec4-45d6-bcc5-b873e5d6c1b5/26-6aa487a295a95.webp' /></p><h4>கும்பம்</h4><p>
கும்ப ராசிக்காரர்களுக்கு செவ்வாய் கிரகம் மூன்றாம் மற்றும் பத்தாம் வீடுகளுக்கு அதிபதியாக இருந்து, தற்போது ஆறாம் வீட்டில் சஞ்சரிக்கிறார். ஆறாம் வீட்டில் செவ்வாயின் சஞ்சாரம் சாதகமான பலன்களைத் தருவதாகக் கருதப்படுகிறது. இந்த காலகட்டத்தில் அவர்கள் வேலை மற்றும் வணிகத்தில் சிறப்பான முன்னேற்றத்தை அனுபவிப்பார்கள். செவ்வாயின் ராசி மாற்றத்தால் சமூகத்தில் அவர்களின் மரியாதை அதிகரிக்கும். பணியிடத்திலிருந்து குடும்பம் வரை அனைத்து விஷயங்களிலும் சிறப்பான பலன்களை பெறுவார்கள்.</p><p>அதே நேரத்தில் வேலையில்லாதவர்களுக்கு சரியான வேலைகள் கிடைக்கும், இந்த காலகட்டத்தில் வணிகர்கள் நல்ல லாபம் சம்பாதிக்கலாம். கும்ப ராசிக்காரர்கள் தங்கள் கடின உழைப்பால் வேலையில் நல்ல நற்பெயரைப் பெறலாம், மேலும் பல்வேறு திட்டங்களை முடிப்பதில் அதிர்ஷ்டம் அவர்களுக்கு சாதகமாக இருக்கும். மொத்தத்தில் இது அவர்களுக்கு பொற்காலமாக இருக்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b9bd97cd-6290-4c70-a1f0-bd4b1dcda1c4/26-6aa487a34e53f.webp' /></p>]]></content>
            <updated>2026-09-11T23:00:18+00:00</updated>
        </entry>
    </feed>
