<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-08-06T18:40:12+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பு மெகசின் சிறைச்சாலையில் பதற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/tension-in-the-magazine-prison-1786041279"></link>
            <id>https://ibctamil.com/article/tension-in-the-magazine-prison-1786041279</id>
            <summary type="text">இன்று இரவு (06) பொரளை மெகசின் சிறைச்சாலையில் பதற்றமான சூழல்நிலையொன்று உருவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறைச்சாலையின் E வார்டில் தடுத்து வை...</summary>
            <content type="html"><![CDATA[<p>இன்று இரவு (06) பொரளை மெகசின் சிறைச்சாலையில் பதற்றமான சூழல்நிலையொன்று உருவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
</p><p>
சிறைச்சாலையின் E வார்டில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதிகள் குழு ஒன்று, இரவு சுமார் 10.20 மணியளவில் திடீரென வார்டிலிருந்து வெளியே வந்து ஒழுங்கற்ற முறையில் நடந்துகொண்டதால் இந்த பதற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது. </p><p> 

போதைப்பொருள் தொடர்பான தகராறே இந்தப் பதற்றமான சூழலுக்குக் காரணம் என்று கூறப்படுகிறது.</p><p>
இருப்பினும், நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்காக, காவல்துறை, காவல்துறை கலவரக் கட்டுப்பாட்டுப் பிரிவு மற்றும் காவல்துறை சிறப்பு அதிரடிப் படை (STF) உடனடியாக சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு, பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
</p><p>
பதற்றமான சூழல் ஓரளவிற்குக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், சிறைச்சாலை வளாகத்திற்குள் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-08-06T18:34:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜேர்மன் சரக்கு கப்பல் மீது ரஷ்ய ட்ரோன் தாக்குதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/russian-drones-hit-german-cargo-ship-emil-1786031510"></link>
            <id>https://news.lankasri.com/article/russian-drones-hit-german-cargo-ship-emil-1786031510</id>
            <summary type="text">EMIL எனும் ஜேர்மன் சரக்கு கப்பல் மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளது.

ஜேர்மன் சரக்கு கப்பல் மீது ரஷ்ய ட்ரோன் தாக்குதல்கருங்கடலில், ஜேர்மன் கப...</summary>
            <content type="html"><![CDATA[<p>EMIL எனும் ஜேர்மன் சரக்கு கப்பல் மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளது.
</p><h2>
ஜேர்மன் சரக்கு கப்பல் மீது ரஷ்ய ட்ரோன் தாக்குதல்</h2><p>கருங்கடலில், ஜேர்மன் கப்பல் நிறுவனமான Johann M. K. Blumenthal GmbH &amp; Co. KG-க்கு சொந்தமான ‘EMIL’ என்ற சரக்கு கப்பல் ரஷ்ய ட்ரோன்களால் பலமுறை தாக்கப்பட்டது.
</p><p>
இந்த சம்பவம் உக்ரைனின் ஓடெசா துறைமுகத்திலிருந்து சுமார் 21 கடல் மைல் தொலைவில் நடந்ததாக Bild பத்திரிகை தெரிவித்துள்ளது.</p><p>

கப்பலில் தீப்பற்றியதால், பல தொழில்நுட்ப அமைப்புகள் செயலிழந்தன. இதனால் கப்பல் இயக்க முடியாத நிலையில் சிக்கியது. 11 பேர் கொண்ட குழுவினர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். அவர்களில் யாரும் ஜேர்மன் நாட்டவர்கள் அல்ல. உயிரிழப்புகள் எதுவும் இல்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ffcb0d5d-4672-4ba2-a052-864631aaa760/26-6a74ad98a616d.webp' /></p><p>ஆனால், குழுவினரை வெளியேற்றும் போது மீண்டும் ட்ரோன் தாக்குதல் நடந்ததாகவும் கூறப்படுகிறது. கப்பல் தற்போது லைபீரியா நாட்டின் கொடியின் கீழ் இயங்குகிறது.
</p><p>
ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தனது Telegram கணக்கில் தாக்குதலை உறுதிப்படுத்தியுள்ளது. அவர்கள் தெரிவித்ததாவது, “கருங்கடலில் ஓடெசாவின் தெற்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் இரு சரக்கு கப்பல்களை ட்ரோன்கள் தாக்கின. அவை இராணுவப் பொருட்களை எடுத்துச் சென்றன” என்று கூறியுள்ளது.</p><p></p><h2>புதிய அச்சுறுத்தல்</h2><p>இரண்டாவது தாக்குதலில் ‘Mera Queen’ என்ற தானியக் கப்பல் குறிவைக்கப்பட்டது. இது கினி-பிசாவ் நாட்டின் கொடியின் கீழ் இயங்குகிறது. அந்த தாக்குதலில் ஒரு குழுவினர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சம்பவம், கருங்கடலில் வணிகக் கப்பல்களுக்கு எதிரான தாக்குதல்கள் அதிகரித்து வருவதை வெளிப்படுத்துகிறது. </p><p>உக்ரைன் போரின் பின்னணியில், ரஷ்யா வணிகக் கப்பல்களை இராணுவப் பொருட்கள் எடுத்துச் செல்கின்றன என்ற குற்றச்சாட்டின் பேரில் குறிவைத்து தாக்குகிறது.
</p><p>
ஜேர்மன் கப்பல் ‘EMIL’ மீது நடந்த தாக்குதல், சர்வதேச கடல் போக்குவரத்து பாதுகாப்புக்கு புதிய அச்சுறுத்தலாகக் கருதப்படுகிறது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-06T18:31:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[கார் ஷோரூமில் வெடித்த கேஸ் சிலிண்டர்: துபாயில் உயிரிழந்த கேரள இளைஞர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/kerala-youth-dead-in-dubai-car-showroom-accident-1786040004"></link>
            <id>https://news.lankasri.com/article/kerala-youth-dead-in-dubai-car-showroom-accident-1786040004</id>
            <summary type="text">துபாய் கார் ஷோரூமில் கேஸ் சிலிண்டர் வெடித்த விபத்தில் இந்தியர் ஒருவர் உயிரிழந்து இருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.துபாயில் உயிரிழந்த கேரள இளைஞர்துபா...</summary>
            <content type="html"><![CDATA[<p>துபாய் கார் ஷோரூமில் கேஸ் சிலிண்டர் வெடித்த விபத்தில் இந்தியர் ஒருவர் உயிரிழந்து இருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><h2>துபாயில் உயிரிழந்த கேரள இளைஞர்</h2><p>துபாயின் ஷேக் சையத் சாலையில் அமைந்துள்ள கார் ஷோரூமில் கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் கொட்டாரக்கரை பகுதியை சேர்ந்த 27 வயது ஷிஜின் பால்(Shijin Paul) என்ற இளைஞர் பணியாற்றி வந்தார்.</p><p> அங்கு, மல்டிமீடியா மார்க்கெட்டிங் நிபுணராகவும், சமூக வலைதளம் மற்றும் வீடியோ கிராபி பொறுப்பாளராகவும் ஷிஜின் பால் பணியாற்றி வந்துள்ளார்.</p><p> இந்நிலையில் கார் ஷோரூமில் கேஸ் சிலிண்டர் வெடித்த விபத்தில் சிக்கி 27 வயது ஷிஜின் பால் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e07aad3c-80b3-41f6-9289-06baca030157/26-6a74cec5d01ef.webp' /></p><p>இந்த விபத்தில் 6 பேர் வரை காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், ஷிஜின் பால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளார்.</p><p></p><h2> உறுதிப்படுத்திய இந்திய தூதரகம்</h2><p>ஷிஜின் பால் உயிரிழந்ததை துபாயில் உள்ள இந்திய தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது.</p><p> மேலும் அவரது உடலை விரைவில் சொந்த ஊருக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கையில் இந்திய தூதரகம் தீவிரமாக செயல்பட்டுள்ளது.</p><p>உயிரிழந்த ஷிஜின் பாலுக்கு பெற்றோரும், மனைவியும் இருப்பது குறிப்பிடத்தக்கது.</p><p> ஷிஜின் பால் விரைவில் தன்னுடைய விடுமுறையில் ஊருக்கு சென்று அங்குள்ள தன்னுடைய மனைவியையும், குழந்தைகயையும் துபாய்க்கு அழைத்து வர திட்டமிட்டு இருந்ததாக அவரது முன்னாள் வசிப்பிட தோழர் நாசிர் தெரிவித்துள்ளார்.<br></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள். &nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-06T18:31:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுவிஸ் வள்ளுவன் பாடசாலை அதிபர் முருகவேள் அவர்களின் சிங்கப்பூர், மலேசியா மற்றும் தமிழ்நாடு பயண அனுபவ தொகுப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/swiss-valluvan-padasalai-head-murugavel-tour-blog-1786035366"></link>
            <id>https://news.lankasri.com/article/swiss-valluvan-padasalai-head-murugavel-tour-blog-1786035366</id>
            <summary type="text">சுவிஸ் பேர்ன் மாகாணத்தின் வள்ளுவன் பாடசாலை அதிபர் முருகவேள் அவர்களின் சிங்கப்பூர், மலேசியா மற்றும் தமிழ்நாடு பயணத்தின் அனுபவங்களை இந்த கட்டுரையில் பகி...</summary>
            <content type="html"><![CDATA[<p>சுவிஸ் பேர்ன் மாகாணத்தின் வள்ளுவன் பாடசாலை அதிபர் முருகவேள் அவர்களின் சிங்கப்பூர், மலேசியா மற்றும் தமிழ்நாடு பயணத்தின் அனுபவங்களை இந்த கட்டுரையில் பகிர்ந்து கொண்டுள்ளார்.<br></p><h3>சுவிஸ் பேர்ன் மாகாணத்தின் வள்ளுவன் பாடசாலை அதிபர் முருகவேள் பயணத் தொகுப்பு</h3><p>புதிய உலகில் மனிதர்கள் வேகமான வாழ்க்கை முறையில் பயணித்துக் கொண்டிருக்கின்றனர். இத்தகைய சூழலில் மன அழுத்தத்தையும் சோர்வையும் போக்கி, புதிய அனுபவங்களையும் அறிவையும் பெறுவதற்கு சுற்றுலா முக்கியமானதாக அமைகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dab5d6f8-528a-4f97-90df-aba3942d1189/26-6a74bd5503019.webp' /></p><p> அந்த வகையில், சிங்கப்பூர், மலேசியா மற்றும் தமிழ்நாட்டிற்கான எனது இந்தப் பயணம், ஒரு சாதாரண சுற்றுலாவாக அமையவில்லை. தமிழ்மொழி, தமிழர் பண்பாடு மற்றும் கல்வி சார்ந்த பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்கவும், பல அறிஞர்கள் மற்றும் நண்பர்களைச் சந்திக்கவும் இது வாய்ப்பளித்தது.</p><p> 05.07.2026 அன்று சிங்கப்பூருக்குச் சென்றடைந்தோம். அங்கு பல்வேறு முக்கிய இடங்களைப் பார்வையிட்டதுடன், நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் நேரத்தைச் செலவிட்டோம். சிங்கப்பூரின் தேசியப் பூங்கா உள்ளிட்ட பல இடங்களுக்குச் சென்று இயற்கை அழகையும் அந்நாட்டின் சிறப்புகளையும் ரசித்தோம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e92318ea-913f-496b-a82f-355e16165c72/26-6a74bd569140c.webp' /></p><p> பின்னர் மலேசியாவுக்குப் பயணம் மேற்கொண்டோம். அங்கு தமிழறிஞர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் தமிழ் அமைப்புகளுடன் தொடர்புடைய பலர் அன்புடன் வரவேற்றனர். அவர்களுடன் நடைபெற்ற சந்திப்புகள் மற்றும் உரையாடல்கள் மறக்க முடியாத அனுபவங்களாக அமைந்தன.</p><p> மலேசியாவில் பல்வேறு தமிழ் அமைப்புகளின் பிரதிநிதிகளைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. குறிப்பாக, தமிழ் மொழி மற்றும் பண்பாட்டைப் பாதுகாத்து வளர்ப்பதில் அவர்கள் மேற்கொண்டு வரும் பணிகளை அறிந்துகொள்ள முடிந்தது.</p><p></p><p> பினாங்கு உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்றதுடன், அங்குள்ள முக்கிய இடங்களையும் பார்வையிட்டோம். அதேவேளை, அங்குள்ள நண்பர்களின் அன்பான உபசரிப்பும் விருந்தோம்பலும் பயணத்தின் சிறப்பான அம்சங்களாக அமைந்தன.</p><p> மலேசியத் தமிழ் அமைப்புகளின் வரவேற்பு நிகழ்வில் பல அறிஞர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் கலந்துகொண்டனர். தமிழ்மொழியின் வளர்ச்சி, தமிழ் கல்வி மற்றும் தமிழர் அடையாளத்தைப் பாதுகாப்பது தொடர்பாக பல்வேறு கருத்துகள் பகிரப்பட்டன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c176d614-926a-4a34-a57b-8e777d173b62/26-6a74bd575c515.webp' /></p><h2> தமிழ்நாட்டில் மறைமலை அடிகளார் நினைவு நிகழ்வு</h2><p>
தமிழ்நாட்டில் நடைபெற்ற மறைமலை அடிகளாரின் 150ஆவது ஆண்டு நினைவு நிகழ்வில் கலந்துகொள்ளும் வாய்ப்பும் கிடைத்தது.</p><p> மறைமலை அடிகளார் வாழ்ந்த பல்லாவரம் இல்லத்தில் நடைபெற்ற நிகழ்விலும், சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்த் துறை ஏற்பாடு செய்த நினைவு நிகழ்விலும் பங்கேற்றேன். தமிழ்மொழிக்காக மறைமலை அடிகளார் ஆற்றிய பணிகள் மற்றும் தனித்தமிழ் இயக்கத்தின் முக்கியத்துவம் குறித்து நிகழ்வுகளில் கருத்துகள் பகிரப்பட்டன.</p><p> இந்த நிகழ்வுகளில் கல்வியாளர்கள், தமிழ் அறிஞர்கள் மற்றும் பல்வேறு தமிழ் அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். நிகழ்வுகள் தமிழ்மொழி மற்றும் தமிழர் பண்பாட்டின் முக்கியத்துவத்தை மீண்டும் நினைவூட்டும் வகையில் அமைந்தன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2cc0ed12-6556-488a-876c-c7b981c36ed6/26-6a74bd582e30f.webp' /></p><h2> தஞ்சாவூர் பயணம்</h2><p>17.07.2026 அன்று தஞ்சாவூருக்குச் சென்றோம். அங்கு கல்லூரி நிகழ்வுகளில் கலந்துகொண்டு, மாணவர்களுடன் உரையாடும் வாய்ப்பு கிடைத்தது.</p><p>தஞ்சாவூர் மருதபாண்டியர் கல்லூரியில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கில் “சுவிற்சர்லாந்தில் தமிழும் தமிழர்களும்” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினேன். சுவிற்சர்லாந்தில் தமிழ்மொழிக் கல்வி, தமிழ் பள்ளிகளின் செயற்பாடுகள் மற்றும் அங்கு வாழும் தமிழர்களின் சமூகப் பங்களிப்பு குறித்து கருத்துகளைப் பகிர்ந்தேன்.</p><p> சுவிற்சர்லாந்தில் தற்போது நூற்றுக்கணக்கான தமிழ் பள்ளிகள் இயங்கி வருவதுடன், பேர்ண் தமிழ்ப் பள்ளியும் சிறப்பாகச் செயல்பட்டு வருவதாக மாணவர்களிடம் எடுத்துரைத்தேன். தமிழ்மொழியை அக்கறையுடன் கற்றுக்கொள்வதன் மூலம் உலகளவில் உயர்ந்த அடையாளத்தைப் பெற முடியும் என்றும் அவர்களை ஊக்குவித்தேன்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/579e94a6-565f-4994-a5f7-048e99f249a1/26-6a74bd58f0f3b.webp' /></p><h2> மாணவர்களுடனான உரையாடல்</h2><p>பல்வேறு கல்லூரிகளில் மாணவர்களை சந்தித்து உரையாற்றிய போது, தமிழ் மொழியுடன் இணைந்து தங்களுடைய திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினேன்.</p><p>குறிப்பாக, மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பயிலும் மாணவர்கள் தங்களுடைய துறையுடன் தமிழையும் இணைத்துச் செயல்படுவதன் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தேன். மாணவர்களிடம் மறைந்திருக்கும் திறமைகளை அடையாளம் கண்டு, அவற்றை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் கூறினேன்.</p><h2> பயணத்தின் நிறைவு</h2><p>இந்தப் பயணத்தின் முழுவதும் பல தமிழ் அன்பர்களையும், அறிஞர்களையும், கல்வியாளர்களையும் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவர்கள் வழங்கிய அன்பும் மரியாதையும் இந்தப் பயணத்தை மறக்க முடியாத அனுபவமாக மாற்றியது.</p><p> சிங்கப்பூர், மலேசியா மற்றும் தமிழ்நாட்டில் நடைபெற்ற பல்வேறு நிகழ்வுகள் மூலம் தமிழ்மொழி மற்றும் தமிழர் பண்பாட்டின் மீது மக்கள் கொண்டுள்ள அக்கறையை நேரடியாகக் காண முடிந்தது.</p><p> இந்தப் பயணம் ஒரு சுற்றுலாவாக மட்டுமல்லாமல், தமிழ் அன்பர்களைச் சந்தித்து, அவர்களின் பணிகளை அறிந்து, மாணவர்களுடன் கருத்துகளைப் பகிர்ந்து கொண்ட ஒரு அர்த்தமுள்ள பயணமாக அமைந்தது.</p><p> தமிழுக்காக உலகின் பல பகுதிகளில் பணியாற்றி வரும் அனைவரையும் சந்தித்த அனுபவம், தமிழ் மொழியுடன் எவ்வாறு வாழ வேண்டும் என்ற எண்ணத்தை மேலும் வலுப்படுத்தியது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். &nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-06T18:31:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பு, மெகசின் சிறைச்சாலையில் சற்று முன்னர் திடீர் பதற்றம் ; பாதுகாப்பு படையினர் களத்தில்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/tension-flares-up-at-magazine-prison-in-colombo-1786040845"></link>
            <id>https://jvpnews.com/article/tension-flares-up-at-magazine-prison-in-colombo-1786040845</id>
            <summary type="text">கொழும்பு, பொறளை மெகசின் சிறைச்சாலையில் இன்று (06) இரவு திடீர் பதற்றநிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரவு சுமார் 10.20 மணியளவில், சிறைச்சா...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு, பொறளை மெகசின் சிறைச்சாலையில் இன்று (06) இரவு திடீர் பதற்றநிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p>

இரவு சுமார் 10.20 மணியளவில், சிறைச்சாலையின் ‘E’ பிரிவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதிகள் குழுவொன்று திடீரென அந்தப் பிரிவிலிருந்து வெளியேறி அமைதியற்ற முறையில் நடந்து கொண்டதாக ஆரம்பத் தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p>

இதனையடுத்து சிறைச்சாலை வளாகத்தில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டதுடன், நிலைமையைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் உடனடியாக ஆரம்பிக்கப்பட்டன.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/643d860d-46c0-4ba9-82d9-106fbefa78e2/26-6a74d20ed8910.webp' /></p><p>சம்பவம் தொடர்பில் தகவல் கிடைத்ததும் பொலிஸார் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் சம்பவ இடத்திற்கு அழைக்கப்பட்டு, சிறைச்சாலையின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
பாதுகாப்புப் பிரிவினரின் தலையீட்டின் பின்னர் ஏற்பட்ட அமைதியற்ற நிலை முழுமையாக கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
மேலும், சிறைச்சாலை வளாகத்தின் பாதுகாப்பு தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.</p><p></p>]]></content>
            <updated>2026-08-06T18:27:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[லாக்ஃப்ஸ் எரிவாயு விலைகளிலும் மாற்றம் இல்லை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/laugfs-gas-prices-unchanged-1786039345"></link>
            <id>https://ibctamil.com/article/laugfs-gas-prices-unchanged-1786039345</id>
            <summary type="text">ஓகஸ்ட் மாதத்திற்கான தனது சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகளில் திருத்தம் செய்யப்படாது என லாக்ஃப்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

அதன்படி, தற்போதைய வில...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஓகஸ்ட் மாதத்திற்கான தனது சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகளில் திருத்தம் செய்யப்படாது என லாக்ஃப்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
</p><p>
அதன்படி, தற்போதைய விலைகளில் எந்த மாற்றமும் இன்றி, லாக்ஃப்ஸ் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் தற்போதுள்ள விலையிலேயே தொடர்ந்து விற்கப்படும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.</p><p></p><h2>லிட்ரோ எரிவாயு </h2><p>
</p><p>
இதேவேளை, ஓகஸ்ட் மாதத்திற்கான லிட்ரோ சமையல் எரிவாயு விலைகளில் திருத்தம் மேற்கொள்ளப்படாது என லிட்ரோ நிறுவனமும் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/be41c55a-a335-4c1b-b82f-5b0850447e0c/26-6a74d15a1001d.webp' /></p><p>
</p><p>
உலகச் சந்தையில் எரிவாயுவின் விலைகள் அதிகரித்து வரும் நிலையிலும் நுகர்வோருக்கு நிவாரணம் அளிக்கும் நோக்கிலேயே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக குறித்த நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.&nbsp; &nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> WHATSAPP CHANNEL </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-06T18:24:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[பொறளை மெகசின் சிறையில் பதற்றம்! குவிக்கப்பட்டுள்ள பொலிஸ் விசேட அதிரடிப்படையினர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/unrest-inside-magazine-prison-1786040522"></link>
            <id>https://tamilwin.com/article/unrest-inside-magazine-prison-1786040522</id>
            <summary type="text">பொறளை மெகசின் சிறைச்சாலையில் இன்று (06) இரவு பதற்றநிலை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இரவு 10.20 மணியளவில் சிறைச்சாலையின் &#039;E&#039; பிரிவில் தடுத...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொறளை மெகசின் சிறைச்சாலையில் இன்று (06) இரவு பதற்றநிலை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. </p><p>

இரவு 10.20 மணியளவில் சிறைச்சாலையின் 'E' பிரிவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதிகள் குழுவொன்று திடீரென அந்தப் பிரிவிலிருந்து வெளியேறி வன்முறையில் ஈடுபட்டதையடுத்து அங்கு அமைதியின்மை ஆரம்பமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><h2>பொலிஸ் விசேட அதிரடிப்படையினர்</h2><p> 

எவ்வாறாயினும், நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்காக பொலிஸார் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு அழைக்கப்பட்டு பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/095c926e-3376-4599-ba39-98f00e360b55/26-6a74d22c46b51.webp' /></p><p> </p><p>

தற்போது இந்த அமைதியற்ற நிலை முழுமையாகக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், சிறைச்சாலை வளாகத்தின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-06T18:23:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[பயணிகளின் வசதிக்காக புதிய திட்டம் ; பேருந்துக் கட்டணத்தில் டிஜிட்டல் மாற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/digital-transformation-in-bus-fares-for-passengers-1786040371"></link>
            <id>https://jvpnews.com/article/digital-transformation-in-bus-fares-for-passengers-1786040371</id>
            <summary type="text">பயணிகள் தங்களது பேருந்துப் பயணக் கட்டணங்களை வங்கி அட்டைகள் (Card Payment) மூலம் செலுத்தும் முறை விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக, போக்குவரத்து மற்ற...</summary>
            <content type="html"><![CDATA[<p>பயணிகள் தங்களது பேருந்துப் பயணக் கட்டணங்களை வங்கி அட்டைகள் (Card Payment) மூலம் செலுத்தும் முறை விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p></p><p>இலங்கை போக்குவரத்து சபை முன்னெடுத்து வரும் நவீனமயமாக்கல் நடவடிக்கைகள், பேருந்து சேவைகளின் தரத்தை உயர்த்தவும், பயணிகளுக்கான அசௌகரியங்களைக் குறைத்து வசதிகளை மேம்படுத்தவும், தனியார் துறையுடன் ஆரோக்கியமான போட்டியை உருவாக்கவும் இலக்கு வைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a1adf879-f0fe-4fd2-866e-cf7af12b1543/26-6a74d034bde08.webp' /></p><p>

பொதுப் போக்குவரத்துச் சேவையை மறுசீரமைக்கவும், பயணிகளின் பயண அனுபவத்தை மேம்படுத்தவும் முன்னெடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, இந்த நவீன கட்டணச் செலுத்தும் முறை அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-06T18:19:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[எல் நினோ வறட்சி ; மொனராகலை மக்களுக்கு தடையற்ற குடிநீர் வழங்க நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/el-nino-drinking-water-measures-for-the-people-1786039708"></link>
            <id>https://jvpnews.com/article/el-nino-drinking-water-measures-for-the-people-1786039708</id>
            <summary type="text">எல் நினோ காலநிலை தாக்கத்தால் ஏற்பட்டுள்ள வறட்சி நிலைமையை முன்னிட்டு, மொனராகலை மாவட்ட மக்களுக்கு குடிநீர் மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்கான நீரை இடையறாத...</summary>
            <content type="html"><![CDATA[<p>எல் நினோ காலநிலை தாக்கத்தால் ஏற்பட்டுள்ள வறட்சி நிலைமையை முன்னிட்டு, மொனராகலை மாவட்ட மக்களுக்கு குடிநீர் மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்கான நீரை இடையறாது வழங்க தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p></p><p>இந்த விடயத்தை வர்த்தகம், வாணிபம் மற்றும் உணவுப் பாதுகாப்பு பிரதி அமைச்சர் மற்றும் மொனராகலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் ஆர். எம். ஜயவர்தன தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1f736dde-4995-47b7-934e-516190035a7a/26-6a74cd9db2814.webp' /></p><p>மேலும், அந்தப் பகுதியில் நீண்டகாலமாக நிலவி வரும் நீர்ப்பற்றாக்குறைக்கு நிரந்தரத் தீர்வாக கும்புக்கன் ஓயா (Kumbukkan Oya) நீர்த்தேக்கத் திட்டத்தை விரைவாக நடைமுறைப்படுத்துவது அரசின் முக்கிய நோக்கமாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
</p><p>
காலநிலை மாற்றம் மற்றும் நீடித்த வறட்சி காரணமாக ஏற்படக்கூடிய நீர்ப்பற்றாக்குறையை சமாளிக்கும் வகையில், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் இணைந்து தேவையான முன்னெச்சரிக்கை மற்றும் நிவாரண நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பிரதி அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-06T18:11:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[குளவிக்கொட்டுக்கு இலக்கான 50 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி : மூவரின் நிலை கவலைக்கிடம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/over-50-students-hospitalised-after-wasp-attack-1786039399"></link>
            <id>https://ibctamil.com/article/over-50-students-hospitalised-after-wasp-attack-1786039399</id>
            <summary type="text">திருகோணமலையில் உள்ள திவுல்வேவ மகா வித்தியாலயப் பள்ளிக் கட்டிடத்தில் இருந்த குளவிக் கூடு கலைந்ததில், குளவிகள் கொட்டியதைத்தொடர்ந்து 50க்கும் மேற்பட்ட மா...</summary>
            <content type="html"><![CDATA[<p>திருகோணமலையில் உள்ள திவுல்வேவ மகா வித்தியாலயப் பள்ளிக் கட்டிடத்தில் இருந்த குளவிக் கூடு கலைந்ததில், குளவிகள் கொட்டியதைத்தொடர்ந்து 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.</p><p>இந்த சம்பவம் இன்று(06.08.2026) இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>&nbsp;கவலைக்கிடமான நிலையில் மூன்று மாணவிகள்&nbsp;</h2><p>
</p><p>
பெரும்பாலான மாணவர்கள் சிகிச்சைக்காக மகாதிவுல்வேவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், கவலைக்கிடமான நிலையில் இருந்த மூன்று மாணவிகள் திருகோணமலை பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e05b5a95-bf55-47ca-acf1-9e399872b3f2/26-6a74cc685a89f.webp' /></p><p>இந்த சம்பவம் தொடர்பில் மொரவெவ காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-06T18:03:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுவிட்சர்லாந்தில் இலங்கை கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களுக்கு காத்திருக்கும் ஆபத்து..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/danger-sri-lankan-passport-holders-switzerland-1786037862"></link>
            <id>https://tamilwin.com/article/danger-sri-lankan-passport-holders-switzerland-1786037862</id>
            <summary type="text">சமூகப் பாதுகாப்புத் தொடர்பான &#039;ஆகாபா&#039; (AHV/IV) நிதியை, இலங்கை கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் சுவிட்சர்லாந்தை விட்டு நிரந்தரமாக வெளியேறும்போது பெறுவதில்...</summary>
            <content type="html"><![CDATA[<p>சமூகப் பாதுகாப்புத் தொடர்பான 'ஆகாபா' (AHV/IV) நிதியை, இலங்கை கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் சுவிட்சர்லாந்தை விட்டு நிரந்தரமாக வெளியேறும்போது பெறுவதில் தற்போதைய நடைமுறையில் சிக்கல்கள் உள்ளதாக சோசலிச ஜனநாயக கட்சியை சேர்ந்த கலாநிதி சிறி இராசமாணிக்கம் தெரிவித்தார்.</p><p>

லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.</p><p>

மேலும் தெரிவித்த அவர்,
</p><p>
சுவிட்சர்லாந்தில் பணியாற்றும் ஒருவர், சம்பளத்திலிருந்து கட்டாயமாகப் பிடித்தம் செய்யப்படும் தொகையில், ஓய்வுபெற்ற பின் 'ஓய்வூதியப் பணம்' (Pension) மட்டுமே அவர்களுக்குக் கிடைக்கிறது.</p><p>

 ஆனால், சமூகப் பாதுகாப்புத் தொடர்பான 'ஆகாபா' (AHV/IV) நிதியை, இலங்கை கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் நாட்டை விட்டு நிரந்தரமாக வெளியேறும்போது பெறுவதில் தற்போதைய நடைமுறையில் சிக்கல்கள் உள்ளன.
</p><p>

சுவிஸ் குடியுரிமை உள்ளவர்களுக்கு இந்தச் சலுகைகள் கிடைக்கும், ஆனால் வெறும் இலங்கை கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களுக்கு, சுவிட்சர்லாந்திற்கும் இலங்கைக்கும் இடையிலான உரிய ஒப்பந்தம் இல்லாததால், அந்தப் பணத்தை இலங்கைக்குக் கொண்டு செல்ல முடியாமல் போகிறது.</p><p>

 இது சுமார் 10,000 முதல் 15,000 பேரைப் பாதிக்கக்கூடும் எனக் கணிக்கப்படுகிறது.

இந்தச் சிக்கலைத் தீர்க்கவும், இரு நாடுகளுக்கும் இடையே ஒப்பந்தத்தை ஏற்படுத்தவும் சுவிட்சர்லாந்தில் உள்ள சோசலிசக் கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் சமூக அமைப்புகள் முன்னெடுப்புகளைத் தொடங்கியுள்ளன.</p><p>

 பாதிக்கப்பட்டவர்கள் தங்களை இணைத்துக்கொள்ளுமாறும், விபரங்களைப் பகிர்ந்து உதவுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
</p><p>
 இது ஒட்டுமொத்தப் புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்களின் ஒரு கூட்டு முயற்சியாக மாறினால் மட்டுமே அரசாங்கத்திற்கு அழுத்தத்தைக் கொடுத்து உரிமையைப் பெற முடியும் என குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
இந்த விடயங்கள் தொடர்பில் பேசுகின்றது லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சி...</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/LBHRr5sSAt8" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-06T17:50:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[மனைவியை படுகொலை செய்த கணவன்! தொடங்கப்பட்டது விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/woman-was-murdered-by-her-husband-1786037921"></link>
            <id>https://ibctamil.com/article/woman-was-murdered-by-her-husband-1786037921</id>
            <summary type="text">


வெலகெதர காவல்துறை பிரிவுக்குட்பட்ட அம்பகோட்டே பகுதியில், குடும்பத் தகராறைத் தொடர்ந்து 48 வயதான பெண் ஒருவர் தனது கணவரால் கொலை செய்யப்பட்டதாகக் கூ...</summary>
            <content type="html"><![CDATA[<p>


வெலகெதர காவல்துறை பிரிவுக்குட்பட்ட அம்பகோட்டே பகுதியில், குடும்பத் தகராறைத் தொடர்ந்து 48 வயதான பெண் ஒருவர் தனது கணவரால் கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.</p><p>

கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் காயமடைந்த பெண் ஒருவர், இன்று (06) மாவதகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது உயிரிழந்ததாகக் கிடைத்த தகவலின் பேரில் விசாரணை தொடங்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
</p><p>
அவ்வாறு கொலை செய்யப்பட்டவர், அம்பகோட்டே பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் தெரியவந்துள்ளது.</p><p></p><h2>மேலதிக விசாரணை</h2><p>

குடும்பத் தகராறைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட பெண்ணின் கணவர் என நம்பப்படும் சந்தேக நபர், அவரைக் கூர்மையான ஆயுதத்தால் தாக்கியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/649e385d-1ab9-4ac1-8da3-58cc6eeb39d2/26-6a74c9666ef30.webp' /></p><p>
</p><p>
அதன்படி, 50 வயதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இச்சம்பவம் குறித்து வெலகெதர காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> WHATSAPP CHANNEL </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-06T17:50:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ். செம்மணி புதைகுழியில் வெளிவரும் உண்மைகள் ; தொடரும் மூன்றாம் கட்ட அகழ்வாராய்ச்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/jaffna-facts-emerging-from-chemmani-burial-ground-1786038029"></link>
            <id>https://jvpnews.com/article/jaffna-facts-emerging-from-chemmani-burial-ground-1786038029</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வாராய்ச்சியின் 45-வது நாளான வியாழக்கிழமை (06), புதிதாக 8 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வாராய்ச்சியின் 45-வது நாளான வியாழக்கிழமை (06), புதிதாக 8 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.</p><p></p><p> மேலும், ஏற்கனவே அடையாளம் காணப்பட்டிருந்த 5 மனித எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
நீதிமன்றத்தின் உத்தரவின்படி 56 நாட்கள் தொடர்ச்சியாக அகழ்வுப் பணிகளை முன்னெடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், மூன்றாம் கட்ட அகழ்வாராய்ச்சி தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/341357dd-40d7-4f82-944e-56173ce2fe51/26-6a74c70ea2a0e.webp' /></p><p>இன்றைய அகழ்வுப் பணிகளின் போது, மனித எச்சங்களுடன் சிறுவர்களின் ஆடைகளில் பயன்படுத்தப்படும் பொத்தான்கள் மற்றும் பழமையான நாணயக் குற்றி ஒன்று சான்றுப் பொருட்களாக மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
</p><p>
முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டங்களைச் சேர்த்து இதுவரை மொத்தம் 99 நாட்கள் அகழ்வுப் பணிகள் நிறைவடைந்துள்ளன.
</p><p>
அகழ்வாராய்ச்சியின் தற்போதைய நிலவரப்படி, மொத்தம் 499 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. </p><p>அவற்றில் 494 எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டு மேலதிக நீதிமருத்துவ மற்றும் தடயவியல் பரிசோதனைகளுக்காக பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான இந்த அகழ்வாராய்ச்சி, கடந்தகால மனித உரிமை மீறல்கள் மற்றும் காணாமலாக்கப்பட்டோர் தொடர்பான உண்மைகளை வெளிக்கொணரும் முக்கியமான விசாரணையாகக் கருதப்படுவதால், அதன் முன்னேற்றம் உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.</p><p></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/341357dd-40d7-4f82-944e-56173ce2fe51/26-6a74c70ea2a0e.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d65b9f52-9e9b-47d0-b4bc-45a7fdb12835/26-6a74c70f66af8.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9ecc1b1b-6d7f-4cb0-8b61-5a397be2ff29/26-6a74c710215b8.webp' /></p>]]></content>
            <updated>2026-08-06T17:40:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[தடை செய்யப்படும் 146 சூதாட்ட இணையதளங்கள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/146-online-gambling-websites-to-be-banned-1786036389"></link>
            <id>https://ibctamil.com/article/146-online-gambling-websites-to-be-banned-1786036389</id>
            <summary type="text">


இலங்கையில் உரிமம் பெறாத 146 இணையவழி சூதாட்ட இணையதளங்களைத் தடை செய்யுமாறு அனைத்து தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

...</summary>
            <content type="html"><![CDATA[<p>


இலங்கையில் உரிமம் பெறாத 146 இணையவழி சூதாட்ட இணையதளங்களைத் தடை செய்யுமாறு அனைத்து தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவினால் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
</p><p>
சட்டவிரோத இணையவழி சூதாட்ட நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும், இலங்கையிலிருந்து அந்த இணையதளங்களுக்கான அணுகலைத் தடுக்குமாறு அனைத்து தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் பந்துல ஹெரத் தெரிவித்துள்ளார்.
</p><p></p><h2>சட்டவிரோதக் குற்றம்</h2><p>
நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் சூதாட்டத்தை ஒழுங்குபடுத்தும் அதிகாரசபை, 2025-ஆம் ஆண்டின் சூதாட்ட ஒழுங்குபடுத்தும் சட்டம், இலக்கம் 17-இன் விதிகள் மற்றும் அதிகாரங்களுக்கு இணங்க வெளியிட்ட ஓர் அறிவிப்பின்படி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4b5acefa-2a77-4d2f-9b21-616e0a63b4db/26-6a74c46273042.webp' /></p><p>
</p><p>
மேற்கூறிய சட்டத்தின் 15, 16 மற்றும் 18-ஆம் பிரிவுகளின் கீழ் செல்லுபடியாகும் உரிமம் இல்லாமல் இலங்கையில் இணையவழி சூதாட்ட சேவைகளை இயக்குவது அல்லது ஊக்குவிப்பது, அச்சட்டத்தின் 44-ஆம் பிரிவின் கீழ் தண்டனைக்குரிய ஒரு சட்டவிரோதக் குற்றமாகும் என்று தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-06T17:34:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பகுதியில் குவிந்து கிடக்கும் குப்பைகள் ; சுகாதார அபாயம் குறித்து மக்கள் கவலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/piling-up-garbage-people-concerned-about-health-1786037056"></link>
            <id>https://jvpnews.com/article/piling-up-garbage-people-concerned-about-health-1786037056</id>
            <summary type="text">அம்பாறை கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட பல பகுதிகளில் குப்பைகள் மற்றும் திடக்கழிவுகள் முறையாக அகற்றப்படாமல் குவிந்து கிடப்பதால், அப்பகுதிகளில் கடும்...</summary>
            <content type="html"><![CDATA[<p>அம்பாறை கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட பல பகுதிகளில் குப்பைகள் மற்றும் திடக்கழிவுகள் முறையாக அகற்றப்படாமல் குவிந்து கிடப்பதால், அப்பகுதிகளில் கடும் துர்நாற்றம் வீசுவதுடன் பொதுமக்களும் பாதசாரிகளும் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.</p><p>
</p><p></p><p>கழிவுகள் உரிய முறையில் சேகரிக்கப்பட்டு அகற்றப்படாத காரணத்தால் சுற்றுச்சூழல் மாசடைந்து வருவதாகவும், இதனால் பாரிய சுகாதாரப் பாதிப்புகள் ஏற்படும் அபாயம் காணப்படுவதாகவும் பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.</p><p>



குறிப்பாக மழைக்காலங்களில் கழிவுகள் தேங்கி நிற்பதால் கொசுப் பெருக்கம் அதிகரித்து, டெங்கு உள்ளிட்ட தொற்றுநோய்கள் பரவும் அபாயம் உருவாகியுள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4c520add-3500-4de6-8e32-80eaad3255f6/26-6a74c3420c3d3.webp' /></p><p>



மேலும், வீதியோரங்களில் குப்பைகள் குவிந்து கிடப்பதால் பாதசாரிகள் பாதுகாப்பாக பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதுடன், வாகனப் போக்குவரத்துக்கும் இடையூறுகள் ஏற்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
</p><p>


இந்த நிலைமை தொடர்பில் கல்முனை மாநகர சபை மற்றும் சம்பந்தப்பட்ட பொது சுகாதார அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என பிரதேச மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
</p><p>


எனவே, சுற்றுச்சூழல் மாசடைவதைத் தடுக்கும் வகையில் குவிந்து கிடக்கும் கழிவுகளை உடனடியாக அகற்றுவதுடன், தொடர்ச்சியான மற்றும் முறையான கழிவு முகாமைத்துவ நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-06T17:24:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹோர்முஸ் நீரிணைக் கட்டுப்பாடு ஈரானுக்கு..! ஓமானுடன் முன்மொழியப்பட்டுள்ள புதிய ஒப்பந்தம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/control-of-strait-of-hormuz-iran-new-agreement-1786036084"></link>
            <id>https://tamilwin.com/article/control-of-strait-of-hormuz-iran-new-agreement-1786036084</id>
            <summary type="text">அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையிலான ஐந்து மாத காலப் போரை முடிவுக்குக்
கொண்டுவரும் நோக்கில் ஓமானுடன் முன்னெடுக்கப்பட்டு வரும் ஒப்பந்தத்தின் கீழ்,
ஹோ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையிலான ஐந்து மாத காலப் போரை முடிவுக்குக்
கொண்டுவரும் நோக்கில் ஓமானுடன் முன்னெடுக்கப்பட்டு வரும் ஒப்பந்தத்தின் கீழ்,
ஹோர்முஸ் நீரிணை ஊடாகப் பாரசீக வளைகுடாவிற்குள் நுழையும் கப்பல்கள் மீதான
கட்டுப்பாட்டை ஈரானுக்கு வழங்குவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது.
</p><p>
ஹோர்முஸ் நீரிணையின் பயன்பாடு மற்றும் பாதுகாப்பு தொடர்பாக ஈரானுக்கும்
ஓமானுக்கும் இடையில் இருதரப்பு பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருகின்றன.</p><p></p><h2>ஹோர்முஸ் நீரிணை&nbsp;</h2><p>
</p><p>
வணிகக் கப்பல்கள் ஈரானிய பிராந்திய கடற்பரப்பு ஊடாகவே பயணிக்க வேண்டும் என
ஈரான் நிபந்தனை விதித்துள்ளதுடன், இந்த பேச்சுவார்த்தைகளில் கணிசமான
முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளது.</p><p>

இருப்பினும், உலகளாவிய எரிபொருள் வர்த்தகத்திற்கு மிக முக்கியமான இந்தப்
பாதையின் கட்டுப்பாட்டை ஈரான் ஏற்றுக்கொள்வதை தாங்கள் ஒருபோதும்
அனுமதிக்கப்போவதில்லை என அமெரிக்கா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ae5391f2-8b64-4a28-ac83-5c60c57c2be1/26-6a74c0e1c4ece.webp' /></p><p>

இதேவேளை, தமது நாட்டின் மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதல்களைத் தொடுத்தால்,
வளைகுடா பிராந்தியத்திலுள்ள ஏனைய நாடுகளின் முக்கிய எரிபொருள்
உள்கட்டமைப்புகள் மீது பதிலடித் தாக்குதல்கள் நடத்தப்படும் என ஈரான்
எச்சரிக்கை விடுத்துள்ளது.
</p><p>
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவர தூதரக
வழிமுறைகளுக்கு முன்னுரிமை அளித்து வரும் நிலையில், இந்த ஒப்பந்த முன்மொழிவு
வளைகுடா பிராந்தியத்தின் அதிகார சமநிலையை ஈரானுக்கு சாதகமாக மாற்றக்கூடும் என
பிராந்திய அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-06T17:14:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் காணி விடுவிப்புக் கோரிக்கை ; சோள விற்பனையால் எழுந்த புதிய சர்ச்சை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/land-release-requ-jaffna-new-controversy-over-sale-1786036358"></link>
            <id>https://jvpnews.com/article/land-release-requ-jaffna-new-controversy-over-sale-1786036358</id>
            <summary type="text">யாழ்ப்பாண நகரில் இலங்கைப் படையினர் சோள விற்பனை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும், இதனால் உள்ளூர் சிறு வியாபாரிகள் கடுமையான பொருளாதார நெருக்கடியை எதி...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாண நகரில் இலங்கைப் படையினர் சோள விற்பனை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும், இதனால் உள்ளூர் சிறு வியாபாரிகள் கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டு வருவதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.</p><p>
</p><p></p><p>சமூக ஆர்வலர்கள் மற்றும் அப்பகுதி மக்களின் தகவலின்படி, வலிகாமம் வடக்கு பகுதியில் இன்னும் விடுவிக்கப்படாமல் இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள மக்களின் பூர்வீகக் காணிகளில் மேற்கொள்ளப்படும் விவசாயப் பயிர்ச்செய்கையிலிருந்து அறுவடை செய்யப்படும் சோளங்களே யாழ்ப்பாண நகருக்கு கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
வலிகாமம் வடக்கில் பல குடும்பங்களின் சொந்த நிலங்கள் நீண்டகாலமாக இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள நிலையில், அவற்றை விடுவிக்குமாறு அப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dd58dd3d-8e60-470b-b41e-9e0f41e103a7/26-6a74c08786e6c.webp' /></p><p>தங்களது வீடுகள் மற்றும் காணிகளுக்குத் திரும்பிச் செல்ல முடியாமல், பல குடும்பங்கள் வாடகை வீடுகளிலும் உறவினர்களின் இல்லங்களிலும் இடம்பெயர்ந்த வாழ்க்கையைத் தொடர்ந்துவருவதாகவும் கூறப்படுகிறது.
</p><p>
இந்நிலையில், குறித்த காணிகளில் படையினர் விவசாய நடவடிக்கைகளை மேற்கொண்டு, அறுவடை செய்யப்படும் சோளங்களை தங்களது வாகனங்களில் யாழ்ப்பாண நகருக்கு கொண்டு வந்து நேரடியாக விற்பனை செய்வதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
இந்த நிலைமையால், யாழ்ப்பாண நகரில் சோள விற்பனையை நம்பி வாழும் சிறு வியாபாரிகள் கடுமையான சந்தைப் போட்டியை எதிர்கொள்வதுடன், தங்களது அன்றாட வருமானம் குறைந்து வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
</p><p>
மேலும், மக்களின் சொந்த நிலங்கள் இன்னமும் உரிய உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்படாத நிலையில், அவற்றைப் பயன்படுத்தி பொருளாதார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகக் கூறப்படுவது தங்களுக்கு வேதனையையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளதாக அப்பகுதி மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
</p><p>
எனவே, இந்த விவகாரம் தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக கவனம் செலுத்தி, படையினரின் வியாபார நடவடிக்கைகள் குறித்த குற்றச்சாட்டுகளை விசாரிப்பதுடன், இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ளதாகக் கூறப்படும் காணிகள் தொடர்பிலும் சட்டப்படி உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் வலியுறுத்தியுள்ளனர்.
</p><p>
இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பில் இலங்கை இராணுவம் அல்லது சம்பந்தப்பட்ட அரச அதிகாரிகளின் உத்தியோகபூர்வ பதில் இதுவரை வெளியாகவில்லை.</p><p></p>]]></content>
            <updated>2026-08-06T17:12:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவில் ஆயுதங்களுக்கு பற்றாக்குறையா! டிரம்ப் விளக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/us-has-massive-amounts-1786035971"></link>
            <id>https://tamilwin.com/article/us-has-massive-amounts-1786035971</id>
            <summary type="text">&amp;nbsp;அமெரிக்காவில் ஆயுதங்களுக்கு எவ்வித பற்றாக்குறையும் கிடையாது என அந்நாட்டு ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கப் பாதுகாப்பு தலைம...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;அமெரிக்காவில் ஆயுதங்களுக்கு எவ்வித பற்றாக்குறையும் கிடையாது என அந்நாட்டு ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
</p><p>அமெரிக்கப் பாதுகாப்பு தலைமையகமான பென்டகனின் ஆயுதக் கையிருப்பு வெகுவாகக் குறைந்துள்ளதாக சர்வதேச ஊகடங்களில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.
</p><p> அமெரிக்காவிடம் பாரிய அளவில் போர்க்கருவிகள் மற்றும் வெடிமருந்துகள் கையிருப்பில் உள்ளதாக ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்துத் தனது 'ட்ரூத் சோஷியல்' சமூக வலைத்தளப் பக்கத்தில் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பதிவிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2d0a67dd-8055-4bd8-b89e-fe739029f884/26-6a74bf06108ef.webp' /></p><p>அமெரிக்காவிடம் குறிப்பாக குறிப்பிட்ட வகையான ஆயுதங்கள் போதியளவில் உள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும், தேவைக்கேற்ப பெருமளவிலான போர்க்கருவிகள் உற்பத்தி செய்யப்பட்டு அமெரிக்காவிற்கு அனுப்பப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.
</p><p>நமது நாட்டின் வரலாற்றிலேயே இல்லாத அளவிற்குப் பாதுகாப்பு உற்பத்தி நிறுவனங்கள் அதிக எண்ணிக்கையிலான தொழிற்சாலைகளை ட்டியெழுப்பி வருவதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.
</p><p>எனினும், எந்த வகையான போர்க்கருவிகளைக் குறிப்பிடுகிறார் என்பதை ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெளிவாகக் குறிப்பிடவில்லை.
</p><p>அமெரிக்க இராணுவத்தின் முக்கிய வான் பாதுகாப்பு அமைப்பான தாட் (THAAD) ஏவுகணைத் தடுப்பு அமைப்பிற்கான இடைமறிப்பு ஏவுகணைகளின் கையிருப்பு கிட்டத்தட்ட 80 சதவீதம் வரை தீர்ந்துவிட்டது என ஊடகங்களில் குறிப்பிடப்பட்டிருந்தது.
</p><p>எனினும் இந்த குற்றச்சாட்டுக்களை நிராகரித்த ஜனாதிபதி டிரம்ப் போலி தகவல்களை வெளியிட்டவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-06T17:06:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[போதைப்பொருள் பயன்படுத்திய காவல் நிலையப் பொறுப்பதிகாரி பணி இடைநீக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/police-oic-suspended-for-using-drugs-1786034481"></link>
            <id>https://ibctamil.com/article/police-oic-suspended-for-using-drugs-1786034481</id>
            <summary type="text">பதுளை பிரிவில் உள்ள ஒரு காவல் நிலையத்தின் பொறுப்பதிகாரியாக பணியாற்றி வந்த காவல் ஆய்வாளர் ஒருவர், போதைப்பொருள் பயன்படுத்தியது மருத்துவப் பரிசோதனையில் உ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பதுளை பிரிவில் உள்ள ஒரு காவல் நிலையத்தின் பொறுப்பதிகாரியாக பணியாற்றி வந்த காவல் ஆய்வாளர் ஒருவர், போதைப்பொருள் பயன்படுத்தியது மருத்துவப் பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டதை அடுத்து, முதற்கட்ட விசாரணைக்கு உட்பட்டு அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.</p><p>&nbsp; &nbsp;பணியின் போது போதைப்பொருள் பயன்படுத்திய தகவலை உறுதி செய்வதற்காக, அவர் 2ஆம் திகதி தானாக முன்வந்து மருத்துவப் பரிசோதனை செய்துகொண்டதாக ஒரு சிரேஷ்ட காவல் அதிகாரி தெரிவித்தார்.</p><h2>&nbsp;மருத்துவ பரிசோதனையில் உறுதி</h2><p> </p><p>அந்தப் பரிசோதனையின் போது, ​​சிறுநீர் மாதிரிகளில் போதைப்பொருள் கண்டறியப்பட்டது. பதுளை போதனா மருத்துவமனையின் தடயவியல் மருத்துவர் தனது அறிக்கையில் இதை உறுதிப்படுத்தியுள்ளார்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2288a652-44ff-4ccf-ab2e-669d8eb010ca/26-6a74bd4ad140e.webp' /></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-06T16:58:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாரிஸ் 19-வது வட்டாரத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது ; போதைப்பொருள் வலையமைப்புக்கு கடும் அடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/security-beefed-paris-19th-major-blow-drug-network-1786035454"></link>
            <id>https://canadamirror.com/article/security-beefed-paris-19th-major-blow-drug-network-1786035454</id>
            <summary type="text">பாரிஸ் மாநகரின் 19-வது வட்டாரத்தில் (19e Arrondissement) நீண்டகாலமாகத் தலைவிரித்தாடி வரும் &#039;க்ராக்&#039; (Crack) போதைப்பொருள் பாவனையைக் கட்டுப்படுத்த காவல்...</summary>
            <content type="html"><![CDATA[<p>பாரிஸ் மாநகரின் 19-வது வட்டாரத்தில் (19e Arrondissement) நீண்டகாலமாகத் தலைவிரித்தாடி வரும் 'க்ராக்' (Crack) போதைப்பொருள் பாவனையைக் கட்டுப்படுத்த காவல்துறையினர் மேற்கொண்டுள்ள தீவிர நடவடிக்கைகளின் பலனாக, கடந்த ஏப்ரல் மாதம் முதல் இதுவரை 309 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p>
அத்துடன், போதைப்பொருள் பாவனையுடன் தொடர்புடைய சுமார் 1,940 பேர் அப்பகுதிகளிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக பாரிஸ் காவல்துறை தெரிவித்துள்ளது.</p><p> போதைப்பொருள் விற்பனை மற்றும் பாவனையை கட்டுப்படுத்துவதுடன், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தி, தொடருந்து நிலையங்களைச் சுற்றியுள்ள பதற்றமான சூழலைக் குறைப்பதே இந்த நடவடிக்கையின் பிரதான நோக்கமாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f8a9d0ce-6ecf-4a8e-b109-3949203c9880/26-6a74bcff804ee.webp' /></p><p>போதைப்பொருள் பாவனையால் அதிகரித்து வரும் குற்றச்செயல்கள் மற்றும் வன்முறைச் சம்பவங்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில், பாரிஸ் காவல்துறை (Préfecture de Police) விரிவான பாதுகாப்புத் திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளது.
</p><p>
இதன் ஒரு பகுதியாக, வீதிகளில் காவல்துறையினரின் ரோந்துப் பணிகள் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், ஆளில்லா வானூர்திகள் (Drones) மூலம் வான்வழிக் கண்காணிப்பும், நடமாடும் கண்காணிப்பு மையங்களும் (Postes d'accueil mobiles) களமிறக்கப்பட்டுள்ளன.</p><p>ரோசா-பார்க்ஸ் (Rosa Parks) தொடருந்து நிலையம், செசாரியா-எவோரா வீதி (Rue Cesaria-Évora) மற்றும் மக்டொனால்ட் நிழற்சாலை (Boulevard Macdonald) ஆகிய பகுதிகள் போதைப்பொருள் பாவனையாளர்கள் அதிகம் கூடும் இடங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
</p><p>
இந்தப் பகுதிகளில் தினசரி முன்னெடுக்கப்படும் அதிரடிச் சோதனைகள் மற்றும் தொடர்ச்சியான கண்காணிப்புகளின் காரணமாக நிலைமை கணிசமாக மேம்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.</p><p> மீண்டும் அப்பகுதிகளில் ஒன்று கூட முயற்சிப்பவர்கள் உடனடியாக அங்கிருந்து அகற்றப்படுவதால், அப்பகுதி மக்களின் அன்றாட வாழ்க்கையில் ஏற்பட்டிருந்த இடையூறுகள் குறைந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p>நிலைமையின் தீவிரத்தை கருத்தில் கொண்டு, பி.என்.பி பரிபாஸ் (BNP Paribas) வங்கி நிர்வாகமும் தனது ஊழியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் ரோசா-பார்க்ஸ் தொடருந்து நிலையத்திற்கு அருகே தனியார் பாதுகாப்பு அதிகாரிகளை பணியில் அமர்த்தியுள்ளது.
</p><p>
நீண்டகாலமாக பாதுகாப்பு அச்சத்தில் வாழ்ந்து வந்த 19-வது வட்டார மக்களுக்கு, காவல்துறையின் தொடர்ச்சியான நடவடிக்கைகள் ஓரளவு நிம்மதியை ஏற்படுத்தியுள்ளதாக உள்ளூர் தகவல்கள் தெரிவிக்கின்றன.</p>]]></content>
            <updated>2026-08-06T16:57:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[விரைவில் வரும் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள்.., பழைய காகித நோட்டுகள் செல்லுமா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/plastic-rs-10-rs-20-notes-soon-1786017341"></link>
            <id>https://manithan.com/article/plastic-rs-10-rs-20-notes-soon-1786017341</id>
            <summary type="text">இந்தியாவில் ரூபாய் நோட்டுகளை காகிதத்துக்கு பதிலாக பிளாஸ்டிக் தாள்களில் அச்சிடும் திட்டத்தை இந்திய ரிசர்வ் வங்கி முன்னெடுத்து வருகிறது.

முதற்கட்டமாக...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியாவில் ரூபாய் நோட்டுகளை காகிதத்துக்கு பதிலாக பிளாஸ்டிக் தாள்களில் அச்சிடும் திட்டத்தை இந்திய ரிசர்வ் வங்கி முன்னெடுத்து வருகிறது.
</p><p>
முதற்கட்டமாக ரூ.10 மற்றும் ரூ.20 மதிப்பிலான பிளாஸ்டிக் நோட்டுகளை அச்சிட்டு, அடுத்த ஆண்டு சோதனை அடிப்படையில் புழக்கத்தில் விட திட்டமிடப்பட்டுள்ளது.</p><p>

இதற்காக 100 கோடி ரூ.10 நோட்டுகள் மற்றும் 100 கோடி ரூ.20 நோட்டுகள் அச்சிடப்பட உள்ளன. இதன் மொத்த மதிப்பு ரூ.3,000 கோடியாக இருக்கும்.
</p><p>
பிளாஸ்டிக் நோட்டுகளுக்கான சோதனையை தொடங்க ரிசர்வ் வங்கியின் பரிந்துரைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/63004b6b-c6a0-4662-80dd-7e5e2641695e/26-6a7476405ee5e.webp' /></p><p>இதனால் தற்போது புழக்கத்தில் உள்ள காகித ரூபாய் நோட்டுகள் உடனடியாக நீக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.</p><p>

இந்நிலையில், தற்போது பயன்பாட்டில் உள்ள காகித ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறும் திட்டம் எதுவும் இல்லை என்று மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது.</p><p>

சோதனை முயற்சியாக பிளாஸ்டிக் நோட்டுகள், காகித நோட்டுகளுடன் சேர்த்தே புழக்கத்தில் விடப்படும்.
</p><p>
இந்த முயற்சி வெற்றி பெற்றால், எதிர்காலத்தில் பிளாஸ்டிக் நோட்டுகளின் பயன்பாட்டை விரிவுபடுத்துவது குறித்து ரிசர்வ் வங்கி பரிசீலிக்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8befc73a-72b5-47d7-9c81-b2b8bd26c34a/26-6a74763fa4cdf.webp' /></p><p>

ரூ.10 மற்றும் ரூ.20 போன்ற குறைந்த மதிப்புள்ள நோட்டுகள் அடிக்கடி கைமாறுவதால் விரைவில் சேதமடைவதால், நீண்ட காலம் நீடித்து எளிதில் பாதிக்கப்படாத பிளாஸ்டிக் நோட்டுகளை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. </p><p>பிளாஸ்டிக் நோட்டுகளை தயாரிக்க ஆரம்பத்தில் செலவு அதிகமாக இருந்தாலும், அவை நீண்ட காலம் பயன்பாட்டில் இருப்பதால் அச்சிடும் செலவை குறையும்.
</p><p>
மேலும், பிளாஸ்டிக் நோட்டுகளில் அதிக பாதுகாப்பு அம்சங்களை சேர்க்க முடியும் என்பதால் கள்ளநோட்டுகளைத் தடுக்கவும் உதவும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.</p>]]></content>
            <updated>2026-08-06T16:56:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[கோடீஸ்வர யோகம் கிடைக்க எந்த பூஜை செய்ய வேண்டும்?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/millionaire-yogam-in-tamil-1786020113"></link>
            <id>https://manithan.com/article/millionaire-yogam-in-tamil-1786020113</id>
            <summary type="text">வீட்டில் பணவரவு அதிகரிக்கவும், செல்வம் பெருகவும் ஆன்மீகத்தில் சில எளிய வழிமுறைகள் மற்றும் பரிகாரங்கள் சொல்லப்பட்டுள்ளன. 

வெள்ளிக்கிழமை வழிபாடு, தீப...</summary>
            <content type="html"><![CDATA[<p>வீட்டில் பணவரவு அதிகரிக்கவும், செல்வம் பெருகவும் ஆன்மீகத்தில் சில எளிய வழிமுறைகள் மற்றும் பரிகாரங்கள் சொல்லப்பட்டுள்ளன. </p><p>

வெள்ளிக்கிழமை வழிபாடு, தீபம் ஏற்றுதல் மற்றும் நேர்மறை ஆற்றலை ஈர்க்கும் எளிய செயல்கள் மூலம் மகாலட்சுமி அருள் பெறலாம்.
</p><p>
அதன்படி, வெள்ளிக்கிழமைகளில் தாயார் மகாலட்சுமிக்கு செந்தாமரை மலர் சாற்றி வழிபாடு செய்யலாம்.
</p><p>
வீட்டின் பூஜை அறையில் பசு நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றலாம். பர்ஸில் அல்லது பீரோவில் பச்சை கற்பூரம் மற்றும் ஏலக்காய் வைக்கலாம்.</p><p>

குபேர மூலைக்கு தீபம் காட்டி வழிபாடு நடத்துவது, மஹாலட்சுமி ஸ்தோத்திரம் மற்றும் கன்கதார ஸ்தோத்திரம் படிக்கலாம்.</p><p>
மேலும், வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் ஏழைகளுக்கு தானம் செய்யலாம் என்று சொல்லப்படுகிறது.
</p><p>
அந்தவகையில், வீட்டில் பணவரவை அதிகரிக்க சில ஆன்மிக குறிப்புகளை ஜோதிடர் மீனாட்சி தேவி பகிர்ந்துள்ளார்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/AnxLjgfTLLg" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-08-06T16:54:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலகிலேயே அதிக ஆண்டுகள் வாழும் உயிரினம்.., எது தெரியுமா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/which-living-creature-has-the-longest-lifespan-1786004937"></link>
            <id>https://manithan.com/article/which-living-creature-has-the-longest-lifespan-1786004937</id>
            <summary type="text">பொதுவாக மனிதர்களின் சராசரி ஆயுட்காலம் 70 முதல் 80 ஆண்டுகள். 

ஆனால், பூமியில் சில விலங்குகள் 100 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்கின்றன.

அந்தவகையில், உல...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொதுவாக மனிதர்களின் சராசரி ஆயுட்காலம் 70 முதல் 80 ஆண்டுகள். </p><p>

ஆனால், பூமியில் சில விலங்குகள் 100 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்கின்றன.
</p><p>
அந்தவகையில், உலகிலேயே அதிக ஆண்டுகள் வாழும் உயிரினம் எது என்பது குறித்து பார்க்கலாம்.</p><p>

அதன்படி, உலகிலேயே அதிக ஆண்டுகள் அதாவது 150 ஆண்டுகள் வரை வாழக்கூடிய விலங்கு ஆமை.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b3dffb8b-7d3b-4e6a-a6d2-d966098dc040/26-6a7445ccbe659.webp' />
</p><p>
குறிப்பாக சில பெரிய நில ஆமை இனங்கள் 100 முதல் 150 ஆண்டுகள் அல்லது அதற்கும் மேலாக வாழ்வதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.</p><p>
</p><p>உலகின் பழமையான உயிரினங்களில் ஒன்றான ஆமைகளின் மூதாதையர் டைனோசர் காலத்தில் இருந்து பல பேரழிவுகளில் தப்பி இந்த பூமியில் வசித்து வருகின்றன.</p><p>
ஆமைகள் 200 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பிருந்து இந்த உலகில் வாழ்கின்றன.
</p><p>
ஆமைகள் நீண்ட காலம் வாழ முக்கிய காரணம் அவற்றின் மெதுவான வளர்சிதை மாற்றம். 

அவை குறைந்த ஆற்றலை பயன்படுத்தி அமைதியான வாழ்க்கை முறையை பின்பற்றுகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2850d6d5-909b-4517-b308-58c3b673c006/26-6a7445cbe4c18.webp' /></p><p>
ஆமைகளின் வலிமையான ஓடு, அதனை தாக்கும் எதிரிகளிடமிருந்து பாதுகாப்பு அளிக்கிறது. 

ஆபத்து ஏற்படும்போது தலை மற்றும் கால்களை ஓட்டிற்குள் இழுத்து உயிர் பிழைக்கிறது.
</p><p>
பெரும்பாலான நில ஆமைகள் புல், இலைகள், பழங்கள் உள்ளிட்ட தாவர உணவுகளை சாப்பிடுகின்றன.</p><p> 

ஆமை ஓடுகள், அதன் உடலின் இன்றியமையாத பாகம். ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்ட சராசரியாக50 எலும்புகளால் ஆனது ஆமை ஓடு.
</p><p>

அவற்றின் எளிய வாழ்க்கை முறையும் ஆரோக்கியமான உணவுப் பழக்கமும் நீண்ட ஆயுளுக்கு உதவுகின்றன.</p>]]></content>
            <updated>2026-08-06T16:53:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[புதிய கருத்துக் கணிப்பில் டிரம்ப் அரசுக்கு பின்னடைவு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/polls-show-majority-of-americans-oppose-trump-1786033959"></link>
            <id>https://canadamirror.com/article/polls-show-majority-of-americans-oppose-trump-1786033959</id>
            <summary type="text">&amp;nbsp;அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட அண்மைய கருத்துக் கணிப்பு முடிவுகள், அந்நாட்டு ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் போர் நடவடிக்கைகளுக்கு மக்களிடையே கடும் எ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட அண்மைய கருத்துக் கணிப்பு முடிவுகள், அந்நாட்டு ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் போர் நடவடிக்கைகளுக்கு மக்களிடையே கடும் எதிர்ப்பு நிலவி வருவதை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளன.</p><p>
அமெரிக்க மக்களில் சுமார் 60 சதவீதத்தினர் அதிபர் டிரம்ப் போருக்குச் செல்ல எடுத்த முடிவை கடுமையாக எதிர்ப்பதாகத் தெரிவித்துள்ளனர்.
</p><p>எனினும், குடியரசுக் கட்சியைச் சேர்ந்த வாக்காளர்களில் 60 சதவீதத்தினர் அதிபரின் இந்த முடிவுக்குத் தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
 எனினும், ஒட்டுமொத்த அமெரிக்கர்களில் பெரும்பான்மையானோர் தமது எதிர்ப்பை மிகத் தெளிவாகப் பதிவு செய்துள்ளனர்.</p><p>
இந்தக் கருத்துக் கணிப்பில் வெளிவந்த மற்றொரு மிக முக்கிய அம்சம், 'போர் மற்றும் பயங்கரவாத விவகாரங்களை எந்தக் கட்சி சிறப்பான முறையில் கையாள்கிறது?' என்ற கேள்வியாகும்.</p><p>
2024ஆம் ஆண்டில் இந்த கேள்வி கேட்கப்பட்டபோது, குடியரசுக் கட்சியே இதனைச் சிறப்பாகக் கையாளும் என 10 சதவீதத்திற்கும் அதிகமான பெரும்பான்மை மக்கள் தெரிவித்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e0636c25-486f-4011-9d4a-9aaa9009b17f/26-6a74b72964f89.webp' /></p><p>
திங்கள்கிழமை நடத்தப்பட்ட அண்மைய கருத்துக் கணிப்பில், 38% மக்கள் ஜனநாயகக் கட்சியும், 37% மக்கள் குடியரசுக் கட்சியும் இதனைச் சிறப்பாகக் கையாளும் எனக் கூறியுள்ளனர்.
</p><p>குறிப்பாக நாட்டின் பாதுகாப்பு, போர் மற்றும் பயங்கரவாதம் போன்ற விவகாரங்களில் வாக்காளர்களின் பார்வை பெருமளவில் மாறியுள்ளதை இந்தத் தரவு காட்டுகிறது.
</p><p>வரவிருக்கும் நவம்பர் மாத இடைக்காலத் தேர்தலை நோக்கியுள்ள அதிபர் டிரம்ப் மற்றும் அவரது குடியரசுக் கட்சிக்கு இந்தக் புள்ளிவிவரங்கள் பெரும் பின்னடைவாகவும் கடுமையான சவாலாகவும் பார்க்கப்படுகின்றன.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-06T16:41:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[தென்-கிழக்கு கடற்பரப்பில் மீன்பிடி நடவடிக்கைகள் நிறுத்தம் ; மீனவர்களுக்கு அவசர எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/fishing-activities-emergency-warning-fishermen-1786034486"></link>
            <id>https://jvpnews.com/article/fishing-activities-emergency-warning-fishermen-1786034486</id>
            <summary type="text">மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலான கடற்பரப்பு கரையோர மீன்பிடி நடவடிக்கைகளுக்குப் பொருத்தமற்றது என மீன்பிடி மற்றும் நீரியல் வளங்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலான கடற்பரப்பு கரையோர மீன்பிடி நடவடிக்கைகளுக்குப் பொருத்தமற்றது என மீன்பிடி மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களம் அறிவித்துள்ளது.</p><p> </p><p></p><p>வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (06) வெளியிட்ட பலத்த காற்று தொடர்பான ஆபத்தான வானிலை எச்சரிக்கை அறிவித்தலுக்கு அமைவாகவே இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/316e0285-6e26-4e59-95c9-c818f830f4b2/26-6a74b93760868.webp' /></p><p>இதற்கமைய, மறுஅறிவித்தல் வரை குறித்த கடற்பரப்புகளில் மீன்பிடி நடவடிக்கைகளுக்காகக் கடலுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு அனைத்து மீனவர்களுக்கும் கடுமையாக அறிவுறுத்தப்பட்டுள்ளது. </p><p>

மேலும், ஏனைய பிரதேசங்களிலிருந்து மீன்பிடி நடவடிக்கைகளுக்காகப் புறப்படும் படகுகளும் மாத்தறையிலிருந்து பொத்துவில் வரை பெயரிடப்பட்டுள்ள ஆபத்தான கடற்பிரதேசத்திற்குள் நுழைவதையோ அல்லது அங்கு மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவதையோ தவிர்க்குமாறு விசேட அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. </p><p>

நிலவும் வானிலை நிலைமை குறித்துப் வௌியிடப்படும் எதிர்கால அறிவித்தல்கள் தொடர்பில் தொடர்ச்சியான அவதானத்துடன் இருக்குமாறும், பாதுகாப்பு வழிகாட்டல்களைப் பின்பற்றிப் பொறுப்புடன் செயற்படுமாறும் மீன்பிடி மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-06T16:41:36+00:00</updated>
        </entry>
    </feed>
