<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-09-13T09:25:34+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[கூரிய ஆயுதத்தால் தாக்கி கொல்லப்பட்ட இளைஞன் ; இரவில் அரங்கேறிய பயங்கரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/youth-killed-in-sharp-weapon-attack-1789291391"></link>
            <id>https://jvpnews.com/article/youth-killed-in-sharp-weapon-attack-1789291391</id>
            <summary type="text">அநுராதபுரம், பரசன்கஸ்வெவ வன்னி பளுகொல்லேவ பகுதியில் இருவருக்கிடையில் ஏற்பட்ட கைகலப்பின்போது 21 வயதுடைய இளைஞன் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">அநுராதபுரம், பரசன்கஸ்வெவ வன்னி பளுகொல்லேவ பகுதியில் இருவருக்கிடையில் ஏற்பட்ட கைகலப்பின்போது 21 வயதுடைய இளைஞன் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார்.</p><p style="text-align: justify; ">

இந்தச் சம்பவம் நேற்று சனிக்கிழமை (12) இரவு இடம்பெற்றுள்ளதாக பரசன்கஸ்வெவ பொலிஸார் தெரிவித்தனர்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e5002ede-8c36-47a3-a537-172e4ecad19a/26-6aa66b86c7a12.webp' /></p><h2 style="text-align: justify; ">கொலைச் சம்பவம்</h2><p>
</p><p style="text-align: justify; ">
கம்பிரிகஸ்வெவ, வன்னி பளுகொல்லேவ பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக ஆரம்பகட்ட பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
</p><p style="text-align: justify; ">
உயிரிழந்த இளைஞனுக்கும் மற்றுமொரு இளைஞனுக்கும் இடையில் நீண்டகாலமாக நிலவி வந்த தனிப்பட்ட பகைமை காரணமாக இந்தக் கொலைச் சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-13T09:23:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[காசுக்காக தன்னுடைய உடலை விற்பது எவ்வளவு பெரிய வலி!! நடிகை சரண்யா ஆதங்கம்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/saranya-nagh-emotional-and-painful-interview-1789290785"></link>
            <id>https://viduppu.com/article/saranya-nagh-emotional-and-painful-interview-1789290785</id>
            <summary type="text">காதல், பேராண்மை போன்ற படங்களில் நடித்தப்பின் ஆள் அடையாளமே தெரியாமல் மாறியவர் தான் நடிகை சரண்யா. தற்போது உடல் எடையை வெகுவாக குறைத்து பேட்டிகளில் பல விஷ...</summary>
            <content type="html"><![CDATA[<p>காதல், பேராண்மை போன்ற படங்களில் நடித்தப்பின் ஆள் அடையாளமே தெரியாமல் மாறியவர் தான் நடிகை சரண்யா. தற்போது உடல் எடையை வெகுவாக குறைத்து பேட்டிகளில் பல விஷயங்களை பகிர்ந்து வருகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0bb9d78d-42c1-46f2-9c7c-62fdb3ec6bdb/26-6aa669234c711.webp' /></p><p> </p><h2>சரண்யா</h2><p>சமீபத்தில் அளித்த பேட்டியில், நான் நிறைய பெண்களை பார்த்துள்ளேன், சில பெண்கள் ரொம்பவே நெருக்கடியான சூழலில் தன் உடம்பையே விற்றிருப்பார்கள், ஆனால் அப்படிப்பட்ட எந்த பெண்ணையும் நான் ஒருநாளும் குறை சொன்னதே இல்லை. ஏன்னா, அந்த விஷயம் எவ்வளவோ பெரிய வேதனை நிறைந்தது என்று எனக்கு தெரியும்.</p><p> யாரோ முகம் தெரியாத ஒருத்தனிடம் காசுக்காக தன்னுடைய உடலை விற்பது எவ்வளவு பெரிய விஷயம். ஒரு பெண் எந்தளவுக்கு ஏழ்மையில் இருந்தால் இந்த இடத்திற்கு வந்திருப்பாங்க என்பதை நாம் புரிந்து கொள்ளணும். அப்படிப்பட்ட பெண்களை நம்மால் காப்பாத்தவே முடியவில்லை என்றாலும் பரவாயில்லை, தயவு செய்து அவர்களை குறை மட்டும் சொல்லாதீங்க.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0ddd6030-7312-42a0-88e7-70c4e4e431b9/26-6aa66923f3e98.webp' /></p><p> </p><p>நான் தனியாக இருக்கிறேன், எனக்கு என்று யாரும் இல்லை என சொன்னதும், ஆண்கள், பெண்கள் என்னை அணுகும் விதமே வேறாக இருக்கிறது. ஆண்கள் என் கண்ணை பார்த்து பேசுறதைவிட, என் கண்ணுக்கு கீழே பார்த்து பேசுறதுதான் ரொம்ப ஜாஸ்தி. இவளை எப்படி தன் வசப்படுத்திக்கலாம் என்று தான் நினைப்பார்கள். அந்த கோபம் எனக்கு இன்னும் குறையவே இல்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cc2a616a-4bee-41c0-a460-671d913766f4/26-6aa66924a94b6.webp' /></p><p> </p><p>ஆண்கள் இப்படியென்றால், ஆண்களைவிட பெண்கள் தான் ரொம்ப மோசமனவர்கள். ஒரு பெண்ணை இன்னொரு பெண் தான் அசிங்கப்படுத்த முடியும். மொத்தமாக அழிக்க முடியும். பெண்களிடம் உதவி இருக்காது, பொறாமை தான் அதிகமாக இருக்கு. ஆண்களிடமாவது ஏதாவது ஒரு கரிசனம் இருக்கும், பெண்களிடம் அதுக்கூட இருக்காது. </p><p>எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறியிருக்கிறேன். முன்னாடி குண்டா இருந்தப்ப யாரும் எதுவும் சொல்லிருவாங்களோன்னு பயந்து ஒதுங்கி இருப்பேன். ஆனா இப்போ உடல் எடையை குறைத்த்ப்பின் நானே எல்லார்கிட்டயும் போய் பேசுகிறேன், இந்த மாற்றமும் எனக்கு ரொம்பவே பிடிச்சிருக்கு என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார் நடிகை சரண்யா.</p>]]></content>
            <updated>2026-09-13T09:15:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கைக்கு வந்து குவிந்த இலட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/srilanka-records-over-1-5-mn-tourist-arrivals-2026-1789284252"></link>
            <id>https://ibctamil.com/article/srilanka-records-over-1-5-mn-tourist-arrivals-2026-1789284252</id>
            <summary type="text">2026ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 15 இலட்சத்தைக் கடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 ...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 15 இலட்சத்தைக் கடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p>

 

இலங்கை சுற்றுலா <a href="https://www.sltda.gov.lk/storage/common_media/Weekly_Report_1st_to_7th_September_2026.pdf" target="_blank">அபிவிருத்தி அதிகாரசபையினால்</a> (SLTDA) வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>அதன்படி, ஜனவரி முதலாம் திகதி முதல் செப்டம்பர் 06 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1,567,007 ஆக பதிவாகியுள்ளது.</p><p></p><h2>இந்தியாவிலிருந்தே வருகை தந்துள்ளனர்</h2><p>மேலும் செப்டெம்பர் மாதம் 01 ஆம் திகதி முதல் 06 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 31,885 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f290bd6a-7ca1-4144-959c-09f3ce26cb10/26-6aa669790e247.webp' /></p><p>

 

இந்த ஆண்டில் இதுவரையான காலத்தில் அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்தே வருகை தந்துள்ளதுடன், அவர்களின் எண்ணிக்கை 395,377 ஆகும்.
</p><p>
 

இதற்கு மேலதிகமாக, ஐக்கிய இராச்சியத்திலிருந்து 152,625 பேரும், சீனாவிலிருந்து 102,473 பேரும், ஜெர்மனியிலிருந்து 91,763 பேரும் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
</p><p>
 

செப்டெம்பர் மாதத்தின் முதல் 6 நாட்களில் அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்தே வருகை தந்துள்ளதுடன், அதன்படி இந்தியாவிலிருந்து 9,897 சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-13T09:12:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[சர்ச்சைகளுக்கு நடுவில் விஜய் - த்ரிஷா ஜோடியாக அஜித்தின் கார் பந்தயத்தில் : வைரலாகும் புகைப்படங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/cm-vijay-actress-trisha-watching-ajith-car-race-1789288961"></link>
            <id>https://manithan.com/article/cm-vijay-actress-trisha-watching-ajith-car-race-1789288961</id>
            <summary type="text">லண்டனில் நடைபெற்ற கார் பந்தயத்தில் நடிகர் அஜித்குமார் பங்கேற்ற நிலையில், அந்தப் போட்டியை தமிழக முதல்வர் விஜய் மற்றும் நடிகை த்ரிஷா நேரில் கண்டுகளித்தன...</summary>
            <content type="html"><![CDATA[<p>லண்டனில் நடைபெற்ற கார் பந்தயத்தில் நடிகர் அஜித்குமார் பங்கேற்ற நிலையில், அந்தப் போட்டியை தமிழக முதல்வர் விஜய் மற்றும் நடிகை த்ரிஷா நேரில் கண்டுகளித்தனர். இதுதொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.</p><h2>லண்டனில் விஜய் த்ரிஷா</h2><p>தமிழக முதல்வர் விஜய், ஆறு நாள் அரசியல் பயணமாக லண்டன் சென்றுள்ளார். தமிழ்நாட்டிற்கு புதிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பது உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்று வருகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ee28d7ed-cc72-4615-9100-6f31f4ed0df5/26-6aa665691e0e7.webp' /></p><p> </p><p>இதனிடையே, லண்டனின் சில்வர்ஸ்டோன் மோட்டார் ரேஸ் மைதானத்தில் நடைபெற்ற கார் பந்தயத்தில் அஜித்குமார் பங்கேற்றார்.</p><p>

பந்தய நிகழ்வில் கலந்து கொண்ட முதல்வர் விஜய்யை அஜித்குமார் அன்புடன் கட்டியணைத்து வரவேற்றார். இருவரும் சந்தித்துக் கொண்ட காட்சிகள் சமூக வலைதளங்களில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. மேலும், அஜித்தின் கார் அருகில் விஜய் புகைப்படம் எடுத்துக்கொண்டதுடன், அவருக்கு வாழ்த்துகளையும் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c8d35384-72f6-45cc-870c-695d8a7f342a/26-6aa66569c7484.webp' /></p><p>

அத்துடன், சில்வர்ஸ்டோன் மைதானத்தை தமிழ்நாட்டில் அமைக்கப்படவுள்ள உலகத் தரம் வாய்ந்த மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகருக்கான மாதிரியாக பார்வையிடும் நிகழ்விலும் முதல்வர் விஜய் மற்றும் தமிழ்நாடு விளையாட்டுத் துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.</p><p></p><p>
</p><p>
இந்நிலையில், அஜித்குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை காண நடிகை த்ரிஷாவும் சில்வர்ஸ்டோன் மைதானத்திற்கு வருகை தந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/85a9813d-2314-4f06-b8ad-fd362431d5d8/26-6aa6656a7abe7.webp' /></p><p> </p><p>மேலும் ஏற்கனசே விஜய் - த்ரிஷா உறவு குறித்த சர்ச்சைகள் இணையத்தில் நிலவிவரும் நிலையில், போட்டியை முதல்வர் விஜய்யுடன் இணைந்து த்ரிஷா கண்டுகளித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி புதிய சர்ச்சையை கிளப்பி வருகின்றது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW&nbsp;</a></u></b> &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-13T09:12:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kiyas Shafe</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் விற்பனை! கடை உரிமையாளர்களுக்கு எதிராக வழக்கு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sale-of-madana-modhagam-in-trinco-law-1789290114"></link>
            <id>https://tamilwin.com/article/sale-of-madana-modhagam-in-trinco-law-1789290114</id>
            <summary type="text">திருகோணமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பாடசாலை மாணவர்களுக்கு விற்பனை
செய்வதற்காக மதன மோதகங்களை வைத்திருந்ததாகக் கூறப்படும் ஆறு கடை
உரிமையாளர்களு...</summary>
            <content type="html"><![CDATA[<p>திருகோணமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பாடசாலை மாணவர்களுக்கு விற்பனை
செய்வதற்காக மதன மோதகங்களை வைத்திருந்ததாகக் கூறப்படும் ஆறு கடை
உரிமையாளர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.</p><p>சுதேச மருத்துவ திணைக்கள அதிகாரிகள் மற்றும் விசேட பொலிஸ் அதிரடிப்படையினர்
இணைந்து மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பு மற்றும் சோதனை நடவடிக்கைகளின்போதே
குறித்த மதன மோதகங்கள் கைப்பற்றப்பட்டது.</p><p>

கந்தளாய் பகுதியில் பாடசாலை மாணவர்களுக்கு விற்பனை செய்வதற்காக மதன மோதகங்கள்
மறைத்து வைக்கப்பட்டுள்ளதாகக் கிடைத்த தகவலையடுத்து, கந்தளாய் பிரதான வீதியில்
அமைந்துள்ள மருந்தகமொன்றில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.</p><h2>சட்ட நடவடிக்கை&nbsp;</h2><p>இதன்போது, பொதி செய்யப்பட்ட
நிலையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 86 மதன மோதகங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக
விசேட பொலிஸ் அதிரடிப்படையினர் தெரிவித்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8c44b921-cae7-4026-a88c-23f995fec131/26-6aa6682d24e87.webp' /></p><p>

இதனைத் தொடர்ந்து, திருகோணமலை அலஸ்தோட்டம், நாளாம் கட்டை மற்றும் பதவிஸ்ரீபுர
உள்ளிட்ட பகுதிகளில் மதன மோதகம் விற்பனை செய்ததாகக் கூறப்படும் கடை
உரிமையாளர்களுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாகாணப்
பணிப்பாளர் எம்.ஏ. நபீல் தெரிவித்தார்.
</p><p>
பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து மதன மோதகங்கள் விற்பனை செய்யப்படுவதைத்
தடுக்கும் வகையில், திருகோணமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும்
தொடர்ச்சியான சோதனை மற்றும் சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு
வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-13T09:09:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மலையகத் தமிழர் பிரச்சினையை பேரிடருக்குள் சுருக்காதீர்கள் - அருட்தந்தை சத்திவேல் கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/issue-of-upcountry-tamils-1789290267"></link>
            <id>https://tamilwin.com/article/issue-of-upcountry-tamils-1789290267</id>
            <summary type="text">மலையகத் தமிழர்களின் பிரச்சினைகளை டித்வா புயல் அனர்த்தத்துடன் மட்டும்
மட்டுப்படுத்திப் பார்ப்பது கவலையளிப்பதாக சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும்,
மலையக...</summary>
            <content type="html"><![CDATA[<p>மலையகத் தமிழர்களின் பிரச்சினைகளை டித்வா புயல் அனர்த்தத்துடன் மட்டும்
மட்டுப்படுத்திப் பார்ப்பது கவலையளிப்பதாக சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும்,
மலையக ஆய்வு மையத்தின் இணைப்பாளருமான அருட்தந்தை மா. சத்திவேல்
தெரிவித்துள்ளார்.</p><p>

அவரால் இன்று(13.09.2026) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு
தெரிவித்துள்ளார்.</p><h2>


அரசாங்கத்தின் முயற்சி</h2><p>
மேற்படி அறிக்கையில் தெரிவிக்கப்படுவதாவது, </p><p>

தற்போது நிகழ்ந்து கொண்டிருக்கும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 63 ஆம்
கூட்டத் தொடரில் வாசிக்கப்பட்ட ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை உயர்
ஸ்தானிகர் வோல்கர் டேக்கின் எழுத்து மூலம் அறிக்கையில் மலையகம் தொடர்பாகவும்
குறிப்பிட்டுள்ளமைக்கு மலைய சமூக ஆய்வு மையம் தனது நன்றியை தெரிவிப்பதோடு
மலையக தமிழர்கள் விடயத்தில் டித்வா பேரிடரை மட்டும் பார்த்திருப்பது
கவலையையும் வேதனையையும் அளிப்பதோடு ஆணையாளரின் அறிக்கைக்கு பதில் அளித்து
உரையாற்றிய இலங்கை பிரதி "மலையக மக்களின் பிரச்சனைக்கு தீர்வு காண்பதை இலக்காக
கொண்டு அரசாங்கம் முற்போக்காக செயற்பட்டு வருவதாக" குறிப்பிட்டார். </p><p>

இது மலையக தமிழர்கள் தொடர்பாக சர்வதேசத்தை ஏமாற்றும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின்
நரித்தன அரசியல் கூற்று என்றே நாம் சுட்டிக்காட்ட விரும்புகின்றம்.</p><p>

ஆணையாளரின் அறிக்கைக்கேற்ப மலையக தமிழர்களில் டித்வா புயலுக்கு முகம்
கொடுத்தவர்களுக்கு மட்டுமே பிரச்சினை உள்ளது போன்று உலகம் நினைக்கலாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e0f45e73-5623-4027-8521-35c7304e968a/26-6aa667bab87aa.webp' /></p><p>ஒட்டு
மொத்த மலையக தமிழர்களுக்கு வேறு எந்த விதமான பிரச்சினையும் இல்லாத தொனியே
உள்ளது.இது மிகுந்த கவலையையும் ஏமாற்றத்தையும் அளிக்கின்றது.
</p><p>
டித்வா புயலால் பாதிக்கப்பட்ட மலையகத் தமிழர்கள் அவர்கள் தமிழர்கள்
என்பதற்காகவும், தோட்டத் தொழிலாளர்கள் காரணமாகவும், சிங்கள மொழி தெரியாதவர்கள்
என்பதாலும், சொந்த நிலம் இல்லாமையினாலும், பெருந்தோட்ட கம்பெனிகளின்
நிர்வாகத்தின் கீழ் இருப்பதாலும், கம்பனி மற்றும் அரசு நிர்வாக மட்டத்திலும்
தமது பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ள முடியாதவர்களாக தொடர்ந்தும் உள்ளனர்
என்பதுவே உண்மை. இவ்விடயம் அறிக்கையில் தெளிவாக குறிப்பிடப்படவில்லை.</p><p>
மேலும் 2021 ஆம் ஆண்டின் இறுதியில் இலங்கை வந்த ஐக்கிய நாடுகளின் நவீன
அடிமைத்தனம் தொடர்பிலான விசேட செய்தியாளர் மலையகத்தில் மேற்கொண்ட கள ஆய்வின்
பின்னர் 2022 இல் நடத்திய ஊடக சந்திப்பொன்றில் "மலையகத் தமிழர்கள் தமிழர்கள்
என்பதற்காகவும், தொழிலாளர்கள் என்பதற்காகவும் ஒடுக்கப்படுகின்றனர்" என ஊடக
சந்திப்பொன்றில் தெரிவித்தார். </p><h2>

அடிமைகளாக இருக்கும் மலையக மக்கள்</h2><p>

அவரின் ஆய்வறிக்கை ஐக்கிய நாடுகள் அவைக்கும் கொடுக்கப்பட்டதாக அறிகின்றோம். அத்தோடு சர்வதேச மன்னிப்பு சபை இவ் வருடம் (2026) ஜூன் மாதம் வெளியிட்ட
அறிக்கையில் "தென் இலங்கையில் மலையக தமிழ் தோட்டத் தொழிலாளர்கள் அடிமைகளாக
வைக்கப்பட்டுள்ளனர்" எனும் நீண்ட அறிக்கையை வெளியிட்டது.
</p><p>
 அதுவும் உண்மையே, ஆனால் அதனை இலங்கை அரசாங்கம் ஏற்றுக் கொள்ளவில்லை. வடகிழக்கில் நடந்த யுத்த குற்றங்களையே ஏற்றுக் கொள்ளாதவர்கள் இதையும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பது
நாம் அறிந்ததே.

மலையகத் தமிழர்கள் தொடர்பாக மேற்கூறப்பட்ட இரண்டு அறிக்கைகள் உள்ள போதும்
அறிக்கையின் உள்ளடக்கம் ஐக்கிய நாடுகள் உயர் ஸ்தானிகரின் அறிக்கையில்
உள்ளடக்கப்படாது ஏன்? </p><p>நாட்டுக்காக அனைத்து வகையிலும் உழைக்கும் மலையக
தமிழர்கள் இந்நாட்டில் இன்னொரு தேசிய இனமாக தமக்கே உரிய இன அடையாளத்தை
வளர்த்து பாதுகாத்துக் கொண்டிருக்கின்ற நிலையில் அவர்களை இலங்கையில் வாழும்
இன்னுமொரு இனமாக அல்லது இந்நாட்டின் பிரஜைகளாகவோ மட்டுமல்ல மனிதர்களாகவோ
இன்னும் ஏற்றுக் கொள்ளப்படாத நிலையே தொடர்கின்றது என்பதே உண்மை.
</p><p>
மேலும் நடந்து கொண்டிருக்கும் ஐ.நா மனித உரிமை பேரவை கூட்டத்தொடரில்
ஆணையாளரின் அறிக்கைக்கு பதில் அளித்து உரையாற்றிய இலங்கை பிரதிநிதி மலையகத்
தமிழர்கள் என்று குறிப்பிடாது மலையக மக்கள் என்றே குறிப்பிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/52dbe43b-7f8d-480b-a04c-6c24e4b0acba/26-6aa667bb8a7b9.webp' /></p><p>
</p><p>
அத்தோடு "அவர்களின் பிரச்சனையை தீர்ப்பதற்கு அரசாங்கம் முற்போக்காக செயல்படுகின்றது"
என குறிப்பிட்டுள்ளார்.</p><p> 


முற்போக்கு என்பதற்கு இடதுசாரி சிந்தனை கொண்ட தேசிய
மக்கள் சக்தி அரசாங்கத்தின் பிரதிநிதி கொடுக்கும் வரைவிலக்கணம் என்ன? என்று
கேட்கின்றோம்.
</p><p>
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தமது தேர்தல் காலத்தில் மலையகத் தமிழர்களுக்கு
கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற இதுவரை எந்தவிதமான ஆக்கபூர்வமான தீர்மானத்தையும் எடுக்கவில்லை.</p><h2>

53 வருட ஒப்பந்தம்</h2><p>
 இந்நிலையில் 2042 ல் முடிய போகும்
அரசாங்கத்துக்கும் பெருந்தோட்ட கம்பெனிகளுக்கும் இடையிலான ஒப்பந்தத்தில் சில
திருத்தங்களை செய்து அதை நீடிக்க உள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளமை
மலையக தமிழர்களுக்கும் அவர்களால் உருவாக்கப்பட்ட மலையகம் எனும் தேசத்துக்கும்
இடையிலான இரத்த உரிமையை மறுப்பதற்கே அன்றி வேறில்லை.
</p><p>
 அது மட்டுமல்ல மலையக
தமிழர்களின் ஒரு தொகுதியினரை தொடர்ந்து கம்பெனிகளின் அடிமைகளாகவே
வைத்திருக்கத் துடிக்கும் சிங்கள பௌத்த பேரினவாத அரசியலின் கபடத்தையே
சுட்டி நிற்கின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/35580ef3-fdbb-4dd4-ab81-3aec5cf8dd38/26-6aa667bc45fec.webp' /></p><p>

மேலும் மலையக தோட்ட வீடமைப்பு, மற்றும் உட்கட்டமைப்பு அபிவிருத்தியினை
மையமாகக் கொண்டு நல்லாட்சி காலத்தில் உருவாக்கப்பட்ட அதிகார சபையை
முடமாக்கிவிட்டு மலையகத்துக்கான புதிய அதிகார சபையை உருவாக்கப் போவதாக
ஜனாதிபதி அறிவித்துள்ளார். </p><p>

இது சிங்கள பௌத்த தீவிரவாதத்தின் அரசியலை மலையகம்
முழுவதும் வியாபிப்பதற்கான அதிகார சபையாகவே அமையும். இது மலைய தமிழர்களுக்கு
எதிரான இனவாத அதிகார சபையாகவே அமையும். 

வடக்கு கிழக்கில் மகாவலி அதிகார சபை
போன்று சிங்கள பௌத்த பேரினவாதம் மலையகத்திலும் தனது கையை நீட்டுவதற்காக
உருவாக்கப்படவே புதிய அதிகார சபை தொடர்பாக ஜனாதிபதி குறிப்பிடுகின்றார். </p><p>இது
மலையக தமிழர்களுக்கு எதிரானது என்பதே எமது நிலைப்பாடு.</p><h2>



மலையக மக்களின் பிரச்சினைக்கான தீர்வு</h2><p>
மலையகத் தமிழர்களுக்கு எதிரான சிங்கள பௌத்த ஆக்கிரமிப்பு திட்டத்தைத் தீட்டிக்
கொண்டு மலையக தமிழர்களுடைய பிரச்சினைகளை தீர்ப்பதற்கு முற்போக்கான
செயற்படுகின்றோம் என்பது மலையக தமிழர்களை மட்டுமல்ல முழு உலகத்தையும்
ஏமாற்றுவதற்கேயாகும்.</p><p> 

ஐ.நா மனித உரிமை பேரவை இது தொடர்பாக விழித்துக் கொள்ளாத விடில் இலங்கையில் மலையத் தமிழர்கள் என்போர் இல்லாமல் போய்விடும் அபாய நிலையில் உள்ளது என்பதை எச்சரிக்கையாகவே குறிப்பிடவும் வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5723101d-33ea-45bc-ab80-efb660488153/26-6aa667bced011.webp' /></p><p>
</p><p>
ஐ.நா மனித உரிமை பேரவை தொடர்ந்தும் மலைகயம் தொடர்பில் அவதானத்துடன் இருக்க
வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுப்பதோடு, அடுத்த கூட்டத் தொடரில் மலையகத்
தமிழர் தொடர்பில் விரிவான அறிக்கையை வெளியிட வேண்டுமெனவும்
எதிர்பார்க்கின்றோம்.</p><p>

 ஆனால் பேரினவாதத்தின் இன அழிப்பிற்கும் உச்சக்கட்ட
இனப்படுகொலைக்கும் நீதி கேட்டு நிற்கும் வடக்கு கிழக்கு தமிழர்களுக்கான நீதி
கிட்டாத நிலையில், மலையக தமிழர்களுக்கான நீதி என்பது எட்டா கனியாகவே
அமைந்துவிடும். </p><p>

இத்தகைய பின்புலத்தில் வடக்கு-கிழக்கு தமிழர்கள், மலையகத்
தமிழர்கள் என ஒடுக்கப்படும் தமிழர் இனங்களாக ஓரணியில் திரல்வதே காலத்தின்
கட்டாயம் என்பதை வெளிப்படுத்துகின்றோம்.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-13T09:07:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்; CPI, CPIM போட்டி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/cpim-and-cpi-to-contest-in-by-election-1789289202"></link>
            <id>https://news.lankasri.com/article/cpim-and-cpi-to-contest-in-by-election-1789289202</id>
            <summary type="text">cpim and cpi to contest in madurantakam and dharapuram by election: இடைத்தேர்தலில், தாராபுரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், மதுராந்தகத்தில் மார்க்...</summary>
            <content type="html"><![CDATA[<p>cpim and cpi to contest in madurantakam and dharapuram by election: இடைத்தேர்தலில், தாராபுரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், மதுராந்தகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் போட்டியிடுவதாக அறிவித்துள்ளன.</p><h3>

இடைத்தேர்தலில் போட்டியிட உள்ள CPI, CPIM</h3><p> 

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளுக்கும் அக்டோபர் 6 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
</p><p>
இதில் போட்டியிடுபவர்களுக்கான வேட்பாளர் பட்டியலை தவெக, திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் அறிவித்துள்ளது. </p><p>

இந்நிலையில், தவெக அரசை வெளியிலிருந்து ஆதரித்து வரும் இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் இடைதேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளன.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7598e110-cd94-46ac-b756-adafa03a36d3/26-6aa662f41b51d.webp' /></p><p> 

இடைத்தேர்தல் குறித்து இன்று நடைபெற்ற ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியன், "நாங்கள் யாருடைய கூட்டணியிலும் இல்லை. இந்த இடைத்தேர்தல் இயல்பானது அல்ல, திணிக்கப்பட்ட ஒன்று.</p><p>

ஆளுநர் ஆட்சி வந்துவிடக் கூடாது என்ற ஒரே காரணத்திற்காக, தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளித்து வருகிறோம். </p><p>

தாராபுரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், மதுராந்தகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் போட்டியிடும. எளிய உழைக்கும் மக்களின் குரல் சட்டமன்றத்தில் ஒலிக்க இடதுசாரிகளுக்கு ஆதரவு வழங்க வேண்டும்" என அறிவித்துள்ளார்.&nbsp;</p><p>திருச்சியில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆலோசனை கூட்டதிற்க்கு பிறகு பேசிய CPIM மாநில செயலாளர் பெ.சண்முகம், தவெக ஆட்சிக்கு வெளியில் இருந்து அளித்து வரும் ஆதரவு தொடரும்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b16dbacd-17c9-4b79-a99f-7891f36f027f/26-6aa664d4d1f81.webp' /></p><p>

தவெகவுக்கு ஆதரவு இல்லை என்பதால் திமுகவுக்கு ஆதரவு என்று அர்த்தம் இல்லை. இடைத்தேர்தலில் இடதுசாரிக்கு மக்கள் வாய்ப்பளிக்க வேண்டும். நாளை மறுநாள் வேட்பாளர்கள் அறிவிக்கப்படும்" என அறிவித்துள்ளார்.</p><p>நாம் தமிழர் கட்சி இன்று 2 தொகுதிகளுக்குமான வேட்பாளர்களை அறிவிக்க உள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-13T09:04:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஸ்கூட்டர்களின் SUV River Indie - பயனரின் ஒரு வருட அனுபவம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/river-indie-ev-review-after-1-year-suv-of-scooters-1789290305"></link>
            <id>https://news.lankasri.com/article/river-indie-ev-review-after-1-year-suv-of-scooters-1789290305</id>
            <summary type="text">River Indie EV customer review after 1 year: River Indie மின்சார ஸ்கூட்டரை 1 வருடம் பயன்படுத்திய நபரின் அனுபவத்தை இங்கே பார்க்கலாம்.

ஸ்கூட்டர்களின்...</summary>
            <content type="html"><![CDATA[<p>River Indie EV customer review after 1 year: River Indie மின்சார ஸ்கூட்டரை 1 வருடம் பயன்படுத்திய நபரின் அனுபவத்தை இங்கே பார்க்கலாம்.
</p><h2>
ஸ்கூட்டர்களின் SUV River Indie</h2><p>மின்சார வாகனங்கள் இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் நிலையில், ஸ்கூட்டர்களின் SUV என அழைக்கப்படும் River Indie கடந்த ஒரு வருடமாக பயணிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3812fddf-5c05-48de-9ba7-e9f799ebb20b/26-6aa6674440ea9.webp' /></p><p>டெல்லியில் சுமார் ரூ.1,60,414 விலையில் அறிமுகமான இந்த ஸ்கூட்டர், அதிக சேமிப்பு வசதி, வலுவான வடிவமைப்பு மற்றும் நீண்ட பயண திறன் காரணமாக பலரின் விருப்பமாக மாறியுள்ளது.</p><h2>

வசதிகள்</h2><p>

River Indie-யின் 787 mm உயரம் கொண்ட இருக்கை, 160 mm ground clearance, மற்றும் 14 inch alloy wheels ஆகியவை நகரப் பயணத்திலும், சாலையின் தடங்கல்களிலும் சுலபமாகச் செல்ல உதவுகின்றன.</p><p> இருவர் தாராளமாக அமரக்கூடிய நீளமான இருக்கை, பரந்த footboard, கூடுதல் foot pegs ஆகியவை நீண்ட பயணத்தில் வசதியை அதிகரிக்கின்றன.</p><p></p><p>
</p><h2>
பேட்டரி &amp; ரேஞ்ச்: </h2><p>

இந்த ஸ்கூட்டர் 4 kWh battery-யை பயன்படுத்துகிறது. நிறுவனம் கூறும் 163 km IDC range இருந்தாலும், நடைமுறை பயணத்தில் சுமார் 110 km வரை கிடைக்கிறது. Eco, Ride, Rush என மூன்று பயண முறைகள் உள்ளன. Rush mode-ல் அதிகபட்சம் 90 km/h வேகம் பெற முடிகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0a835386-4547-4b58-9e0f-0fc656a64ffe/26-6aa66743885f2.webp' /></p><p>
</p><h2>
பராமரிப்பு &amp; செலவு:</h2><p> 
 
மாதாந்திர மின்சார செலவு சுமார் ரூ.400 மட்டுமே; பெட்ரோல் ஸ்கூட்டருடன் ஒப்பிடும்போது இது பெரிய சேமிப்பு. Engine oil, clutch, gearbox போன்ற பராமரிப்பு தேவைகள் இல்லாததால், பராமரிப்பு எளிதாகிறது.
</p><h2>
சேமிப்பு வசதி: </h2><p> 
43 லிட்டர் under-seat storage, 12 லிட்டர் glove box, பெரிய footboard, bag hooks, USB charging, reverse assist போன்ற வசதிகள் பயணிகளுக்கு மிகுந்த உதவியாக உள்ளன.

ஆனால் Bluetooth connectivity, navigation போன்ற மேம்பட்ட தொழில்நுட்பங்கள் இல்லாதது குறையாகும்.</p><p></p><h2>

நன்மைகள்:</h2><ul><li>

43 லிட்டர் under-seat storage
</li><li>
பரந்த footboard மற்றும் luggage-friendly design
</li><li>
14 inch wheels மூலம் நல்ல stability
</li><li>
தினசரி பயணத்திற்கு ஏற்ற வலுவான வடிவமைப்பு
</li></ul><h2>
குறைபாடுகள்:
</h2><ul><li>
143 kg எடை, கையால் தள்ளும்போது சிரமம்</li><li>

Bluetooth connectivity, navigation வசதி இல்லை
</li></ul><p>
River Indie, தினசரி பயணத்திற்கும், கூடுதல் சுமைகளை ஏற்றிச் செல்லவும் ஏற்ற ஒரு வலுவான மின்சார ஸ்கூட்டர். ஆனால், எடை மற்றும் சில தொழில்நுட்ப குறைகள் வாங்குபவர்களுக்கு சிந்திக்க வேண்டிய அம்சங்களாகும்.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-13T09:01:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரபல வர்த்தக நிலைய காட்சியறைகளில் பாதணிகள் மோசடி விற்பனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/fraudulent-footwear-sales-in-mall-showrooms-1789288396"></link>
            <id>https://tamilwin.com/article/fraudulent-footwear-sales-in-mall-showrooms-1789288396</id>
            <summary type="text">இலங்கையின் பிரபல ஆடை மற்றும் நவநாகரிக வர்த்தக நிலைய தொடர் ஒன்றின் காட்சியறைகளில் வெளிநாட்டு தயாரிப்பு பாதணிகள் மோசடியாக விற்பனை செய்யப்பட்ட சம்பவம் தொ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் பிரபல ஆடை மற்றும் நவநாகரிக வர்த்தக நிலைய தொடர் ஒன்றின் காட்சியறைகளில் வெளிநாட்டு தயாரிப்பு பாதணிகள் மோசடியாக விற்பனை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
</p><p>
குறித்த வர்த்தக நிலையத் தொடரின் காட்சியறை ஒன்றில் கொள்வனவு செய்யப்பட்ட பாதணிகளுக்கான பற்றுச்சீட்டுகளை அடிப்படையாகக்கொண்டு மேற்கொள்ளப்பட்ட விரிவான தொடர் விசாரணையின் பின்னர், 2026 செப்டெம்பர் 11 அன்று தெஹிவளை, கவுடான பகுதியில் இரகசியமாக இயங்கி வந்த பாதணி தயாரிப்பு நிலையம் ஒன்றை நுகர்வோர் விவகார அதிகாரசபையின் புலனாய்வு அதிகாரிகள் சுற்றிவளைத்துள்ளனர்.</p><p>

சீன எழுத்துக்கள் மற்றும் “Made in China” என்ற அடையாளத்துடன் கூடிய பெட்டியில் பாதணிகள் வைக்கப்பட்டிருந்ததால், அதிக விலை கொடுத்து வாங்கும் பாதணிகள் இறக்குமதி செய்யப்பட்டவை என நுகர்வோர் நம்பக்கூடிய நிலையில் பொதிசெய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டிருந்தன.</p><h2>பாதணிகளுக்கு பொருந்தும் இறக்குமதி வரி</h2><p> எனினும் விசாரணையில் வெளிப்பட்ட தகவல்களின் அடிப்படையில், முடிவுற்ற பாதணிகளுக்கு பொருந்தும் இறக்குமதி வரிகளைத் தவிர்க்கும் நோக்கில், பாதணிகளின் அடிப்பகுதிகள் மற்றும் ஏனைய பாகங்கள் மூலப்பொருட்களாக வகைப்படுத்தப்பட்டு தனித்தனியாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e9033955-a761-4d62-a867-e22e845661f4/26-6aa6664f186b2.webp' /></p><p> </p><p>பின்னர் அவை தெஹிவளை, கவுடான பகுதியில் உள்ள இரகசிய இடமொன்றில் ஒன்றிணைக்கப்பட்டு ஒட்டப்பட்டு முழுமையான பாதணிகளாக தயாரிக்கப்பட்டதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p>இவ்வாறு இலங்கையில் ஒன்றிணைக்கப்பட்ட பாதணிகளில் உண்மையான உற்பத்தியாளரின் பெயர் மற்றும் முகவரி குறிப்பிடப்படாமல் “Made in China” என அடையாளமிடப்பட்டு, பிரபல வர்த்தக நிலையத் தொடர்களுக்கு விநியோகிக்கப்பட்டதாகவும் விசாரணைகளில் தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p>

இத்தகைய நடவடிக்கைகள் பொருளின் உண்மையான உற்பத்தி மூலத்தைப் பற்றி நுகர்வோரை தவறாக வழிநடத்தக்கூடும்.</p><h2>சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை&nbsp;</h2><p> </p><p>மேலும் பாதணிகளில் குறைபாடு ஏற்பட்டால் அதற்குப் பொறுப்பான உண்மையான உற்பத்தியாளரை அடையாளம் காண்பதும் சிரமமாகலாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3dffdde2-ebb4-48bc-a5c8-fef8a5f84b42/26-6aa6664fc86b3.webp' /></p><p> </p><p>அதேவேளை, சட்டபூர்வமாக வரிகளைச் செலுத்தி நியாயமான முறையில் வர்த்தகத்தில் ஈடுபடும் உள்ளூர் உற்பத்தியாளர்கள் மற்றும் வர்த்தகர்களுக்கும் இது நியாயமற்ற வர்த்தகப் போட்டியை ஏற்படுத்தக்கூடும் என்று நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.
</p><p>
இந்த சுற்றிவளைப்பின்போது சுமார் 1,000 ஜோடி பாதணிகள் மற்றும் அவற்றை தயாரிக்க/ஒன்றிணைக்க பயன்படுத்தப்பட்ட மூலப்பொருட்கள் அதிகாரிகளால் பொறுப்பேற்கப்பட்டுள்ளன.</p><p> இது தொடர்பான மேலதிக விசாரணைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. விசாரணைகள் நிறைவடைந்த பின்னர் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.</p><p>&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-09-13T09:01:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹார்ட் பீட் வெப் தொடர் கதாநாயகி தீபா பாலுவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/deepa-balu-latest-photoshoot-in-saree-1789289653"></link>
            <id>https://cineulagam.com/article/deepa-balu-latest-photoshoot-in-saree-1789289653</id>
            <summary type="text">ஜியோ ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகி வரும் ஹார்ட் பீட் வெப் தொடரில் கதாநாயகியாக நடித்து வருபவர் நடிகை தீபா பாலு. இவர் நடிப்பில் Maremma எனும் தெலுங்கு திரைப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜியோ ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகி வரும் ஹார்ட் பீட் வெப் தொடரில் கதாநாயகியாக நடித்து வருபவர் நடிகை தீபா பாலு. இவர் நடிப்பில் Maremma எனும் தெலுங்கு திரைப்படம் சமீபத்தில் வெளியாகியுள்ளது.
</p><p>
இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் நடிகை தீபா பாலு, அவ்வப்போது தனது புகைப்படங்களை பதிவு செய்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். அந்த வகையில், தற்போது சேலையில் எடுத்துக்கொண்ட தனது சமீபத்திய போட்டோஷூட் புகைப்படங்களை இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். </p><p>

இதோ அந்த புகைப்படங்கள்:</p>]]></content>
            <updated>2026-09-13T09:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பகுதியில் கடைகளில் அரங்கேறிய சம்பவம் ; பிறப்பிக்கப்பட்ட உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/incident-unfolds-at-shops-in-tamil-area-1789289073"></link>
            <id>https://jvpnews.com/article/incident-unfolds-at-shops-in-tamil-area-1789289073</id>
            <summary type="text">பாடசாலை மாணவர்களுக்கு விற்பனை செய்ய மறைத்து வைக்கப்பட்ட 86 மதன மோதகங்கள் கந்தளாயில் மீட்பு

திருகோணமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பாடசாலை மாணவர...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">பாடசாலை மாணவர்களுக்கு விற்பனை செய்ய மறைத்து வைக்கப்பட்ட 86 மதன மோதகங்கள் கந்தளாயில் மீட்பு

திருகோணமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பாடசாலை மாணவர்களுக்கு விற்பனை செய்வதற்காக மதன மோதகங்களை வைத்திருந்ததாகக் கூறப்படும் ஆறு கடை உரிமையாளர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர் தெரிவித்தார்.
</p><p style="text-align: justify; ">
சுதேச மருத்துவ திணைக்கள அதிகாரிகள் மற்றும் விசேட பொலிஸ் அதிரடிப்படையினர் இணைந்து மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பு மற்றும் சோதனை நடவடிக்கைகளின்போதே குறித்த மதன மோதகங்கள் கைப்பற்றப்பட்டதாக அவர் தெரிவித்தார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/98986182-67c9-43c3-bcf3-8846099a813f/26-6aa66273381fd.webp' /></p><h2 style="text-align: justify; ">சுற்றிவளைப்பு நடவடிக்கைகள்</h2><p style="text-align: justify; ">

கந்தளாய் பகுதியில் பாடசாலை மாணவர்களுக்கு விற்பனை செய்வதற்காக மதன மோதகங்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாகக் கிடைத்த தகவலையடுத்து, கந்தளாய் பிரதான வீதியில் அமைந்துள்ள மருந்தகமொன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது, பொதி செய்யப்பட்ட நிலையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 86 மதன மோதகங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக விசேட பொலிஸ் அதிரடிப்படையினர் தெரிவித்தனர்.
</p><p style="text-align: justify; ">
இதனைத் தொடர்ந்து, திருகோணமலை அலஸ்தோட்டம், நாளாம் கட்டை மற்றும் பதவிஸ்ரீபுர உள்ளிட்ட பகுதிகளில் மதன மோதகம் விற்பனை செய்ததாகக் கூறப்படும் கடை உரிமையாளர்களுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாகாணப் பணிப்பாளர்&nbsp; தெரிவித்தார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">

பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து மதன மோதகங்கள் விற்பனை செய்யப்படுவதைத் தடுக்கும் வகையில், திருகோணமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் தொடர்ச்சியான சோதனை மற்றும் சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.&nbsp;&nbsp;</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-13T08:44:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[செம்மணி மனிதப் புதைகுழி - சர்வதேச நீதிகோரும் மக்களுக்கு கந்தையா பாஸ்கரன் ஆதரவு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/kanthaiya-bhaskaran-supports-people-justice-1789288483"></link>
            <id>https://tamilwin.com/article/kanthaiya-bhaskaran-supports-people-justice-1789288483</id>
            <summary type="text">எங்களுடைய மக்களை கொன்று குவித்த தலைவர்களிடமே சென்று நியாயம் கேட்பது முட்டாள்தனமான செயல். அதனால் தான் எம்முடைய நீதியை சர்வதேசத்திடம் கேட்க முடிவு செய்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>எங்களுடைய மக்களை கொன்று குவித்த தலைவர்களிடமே சென்று நியாயம் கேட்பது முட்டாள்தனமான செயல். அதனால் தான் எம்முடைய நீதியை சர்வதேசத்திடம் கேட்க முடிவு செய்துள்ளோம் என பிரபல தொழிலதிபர் கந்தையா பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.</p><p>

“செம்மணி மனித புதைகுழி தொடர்பான விசாரணைகளை சர்வதேசம் முன்னெடுக்க வேண்டும்” எனக் கோரி, யாழ்ப்பாணத்தில் இன்று(13.09.2026) இடம்பெறும் பேரணியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
</p><h2>
செம்மணி மனித புதைகுழி மீதான விசாரணை</h2><p>

அவர் மேலும் தெரிவிக்கையில்,</p><p>

எம்முடைய மக்களை இனவாதம் மற்றும் மதவாதம் என்ற பெயரில் முன்னாள் தலைவர்கள் கொன்று குவித்தார்கள். அதன் எச்சங்களை நாம் செம்மணி மனிதப் புதைகுழியில் காணக்கூடியதாக இருக்கின்றது.

அவற்றை நாம் பாதுகாக்க வேண்டும். உறவுகளை இழந்தவர்களுக்கு அரசாங்கம் சரியான தீர்வைப் பெற்றுக்கொடுக்க வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/23f09671-0718-4120-a24f-ecd1a561407c/26-6aa660d5a3e2c.webp' /></p><p>

“நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இனவாதம் மற்றும் மதவாதம் அற்றதொரு அரசாங்கத்தை உருவாக்குவோம்” என வாக்குறுதியளித்து ஆட்சியைப் பிடித்தவர்கள் தற்போது மௌனமாக இருக்கிறார்கள்.
</p><p>
அதேவேளை, ஈஸ்டர் குண்டுத்தாக்குதலுக்குக் காரணமானவர்கள் இரண்டு ஆண்டுகளின் பின்னர் தற்போது கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கிறார்கள். </p><p>இந்த விடயம் அநுர அரசாங்கத்திற்கான வரவேற்பை அதிகரித்துள்ளது.

அதேபோன்று, எமக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்றால், தமிழர்களாகிய நாம் ஒன்றுபட்டு குரல் கொடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.&nbsp; &nbsp; </p><p></p><p><br></p><p><b>YOU MAY LIKE THIS VIDEO..</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/JK_LVuPuuxE" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-13T08:38:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தலில் போட்டியிடுவதாக CPI, CPIM அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/cpi-cpim-to-contest-in-by-election-1789288311"></link>
            <id>https://ibctamilnadu.com/article/cpi-cpim-to-contest-in-by-election-1789288311</id>
            <summary type="text">cpi and cpim to contest in dharapuram and madurantakam by election: மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தலில் CPI, CPIM போட்டியிட உள்ளதாக CPI மாநில...</summary>
            <content type="html"><![CDATA[<p>cpi and cpim to contest in dharapuram and madurantakam by election: மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தலில் CPI, CPIM போட்டியிட உள்ளதாக CPI மாநில செயலாளர் வீரபாண்டியன் அறிவித்துள்ளார்.</p><h3> 

இடைத்தேர்தலில் போட்டியிட உள்ள CPI, CPIM</h3><p> 

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளுக்கும் அக்டோபர் 6 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/46643ea0-8eb8-4ff8-9618-e04d7de6da24/26-6aa65f7901ab5.webp' /></p><p>
இதில் போட்டியிடுபவர்களுக்கான வேட்பாளர் பட்டியலை தவெக, திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் அறிவித்துள்ளது. </p><p>

இந்நிலையில், தவெக அரசை வெளியிலிருந்து ஆதரித்து வரும் இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் இடைதேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளன. </p><p>

இடைத்தேர்தல் குறித்து இன்று நடைபெற்ற ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர், தாராபுரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், மதுராந்தகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் போட்டியிடும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியன் அறிவித்துள்ளார்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-13T08:32:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[மத்திய கிழக்கில் அமெரிக்கா காவலராகச் செயற்படத் தேவையில்லை ; ஈரான் ஜனாதிபதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/us-need-not-act-as-middle-east-guardian-iran-1789288321"></link>
            <id>https://canadamirror.com/article/us-need-not-act-as-middle-east-guardian-iran-1789288321</id>
            <summary type="text">மத்திய கிழக்குப் பிராந்தியத்திற்கு அமெரிக்கா காவலராகச் செயற்படத் தேவையில்லை என ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியன் தெரிவித்துள்ளார்.



இந்தியாவில் ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>மத்திய கிழக்குப் பிராந்தியத்திற்கு அமெரிக்கா காவலராகச் செயற்படத் தேவையில்லை என ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியன் தெரிவித்துள்ளார்.</p><p>



இந்தியாவில் நடைபெறும் பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக 11 முக்கிய பொருளாதார நாடுகளின் தலைவர்கள் இந்தியா சென்றுள்ள நிலையில், ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியன் பிரதமர் நரேந்திர மோடியை நேற்று சந்தித்துப் பேசினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fabb5801-c11b-44c6-b8c5-ee5525f7d00b/26-6aa65f82e71f4.webp' /></p><p>தொடர்ந்து இன்று மலேசியப் பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.</p><p>


இதன்போது கருத்து தெரிவித்த ஈரான் ஜனாதிபதி, ஈரான் மற்றும் அதன் பிராந்திய நாடுகளின் ஒருமைப்பாடு மற்றும் பாதுகாப்பை பிராந்தியத்தில் உள்ள முக்கிய சக்திகளும் அந்நாடுகளும் இணைந்தே உறுதி செய்ய முடியும் எனத் தெரிவித்தார்.
</p><p>


மேலும், மத்திய கிழக்குப் பிராந்தியத்திற்கு அமெரிக்கா காவலராகச் செயற்படத் தேவையில்லை என்றும், ஈரான் மக்கள் பல்வேறு அநீதிகளை எதிர்கொண்ட போதிலும், தாம் போரைத் தொடர விரும்பவில்லை என்றும், அமைதிக்கே முன்னுரிமை அளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
</p><p>


அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் ஈரானின் உச்சத் தலைவர் அயத்துல்லா அலி கொமெய்னி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, பெப்ரவரி 28ஆம் திகதி முதல் இரு தரப்புக்கும் இடையிலான மோதல் தொடர்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>


இதற்குப் பதிலடியாக ஈரானும் அமெரிக்க ஆதரவு நாடுகள் மீது தாக்குதல்களை நடத்தி ஹோர்முஸ் நீரிணையை மூடியுள்ளது.</p><p> உலகின் முக்கிய எரிபொருள் வர்த்தகப் பாதைகளில் ஒன்றான ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டுள்ளதால் பல்வேறு நாடுகளில் எரிபொருள் விநியோக பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.
</p><p>


இந்நிலையில், ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கான முயற்சிகளில் அமெரிக்கா ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.</p><p> ஆறு மாதங்களுக்கும் மேலாக நீடித்து வரும் மோதல் காரணமாக மசகு எண்ணெய் விலையும் அதிகரித்து வருவதுடன், இந்த வாரம் ஒரு கொள்கலன் மசகு எண்ணெயின் விலை 100 அமெரிக்க டொலருக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-13T08:32:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Tony</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜனநாயகன் வெளிநாட்டில் ஹிட்-ஆ, ப்ளாப்-ஆ, இறுதி வசூல் விவரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/jananayagan-overseas-final-box-office-1789283991"></link>
            <id>https://cineulagam.com/article/jananayagan-overseas-final-box-office-1789283991</id>
            <summary type="text">ஜனநாயகன்தளபதி விஜய் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஒரு எமோஷன். அவர் தீவிர அரசியலில் இறங்கி முதலமைச்சர் ஆகிய நிலையில் இனி சினிமாவிலேயே நடிக்க மாட்டேன் என ம...</summary>
            <content type="html"><![CDATA[<h2>ஜனநாயகன்</h2><p>தளபதி விஜய் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஒரு எமோஷன். அவர் தீவிர அரசியலில் இறங்கி முதலமைச்சர் ஆகிய நிலையில் இனி சினிமாவிலேயே நடிக்க மாட்டேன் என முடிவெடுத்துவிட்டார்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ffb4f2be-0550-4644-8b39-e90a2112e6a3/26-6aa64e99e833a.webp' /></p><p></p><p>அந்த வகையில் அவரின் கடைசி படமாக, ஹெச். வினோத் இயக்க பகவத் கேசரி ரீமேக் ஆக 'ஜனநாயகன்' சில மாற்றங்களுடன் உருவானது. இந்த படம் தியேட்டர் ரிலிஸுக்கு முன்பே இணையத்தில் படம் லீக் ஆகி, பெரும் அதிர்ச்சியை ரசிகர்களுக்கு கொடுத்தது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f99c908e-eed6-4a06-912f-bcf16d72e6c9/26-6aa64e9aa1c4a.webp' /></p><p>இதனால், இந்த படம் ரூ. 200 கோடி வசூல் வந்தாலே பெரிது என்று இருந்த நிலையில், எல்லோர் பேச்சையும் அடைத்து, உலகம் முழுவதும் ரூ. 320 கோடிகளுக்கும் மேல் இப்படம் வசூல் செய்தது. அதே நேரத்தில் அதிக தொகைக்கு இப்படத்தை விற்றதால் பல இடங்களில் இப்படம் தோல்வி அடைந்தது. 

ஆனாலும், லீக் ஆன படத்திற்கு இவ்வளவு பெரிய வசூல் என்பது தளபதி ஒருத்தரால் மட்டுமே சாத்தியம்.</p><p></p><h3>இறுதி வசூல் விவரம்</h3><p> </p><p>இந்நிலையில் தற்போது வெளிநாட்டில் இந்த படம் முழுவதும் ஓடி முடிந்து எந்த நாட்டில் எவ்வளவு <a href="https://www.youtube.com/watch?v=0fDZmAUweyQ" target="_blank">வசூல் </a>குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதைப்பற்றி பார்ப்போம்...</p><ul><li>

Malaysia $2.82M</li><li>
UK Europe $1.84M</li><li>North America $1.58M
</li><li>Middle East $1.45M
</li><li>Singapore $825K
</li><li>Australia $555K
</li><li>New Zealand $54K</li><li>
Srilanka &amp; Rest $480K</li></ul><p><b>

Total Overseas $9.61M - இந்திய மதிப்பில் ரூ. 92.05 கோடி</b></p>]]></content>
            <updated>2026-09-13T08:20:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[பல்கலைக்கழக பணியிட வெற்றிடங்களை விரைவாக நிரப்ப நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/action-taken-to-fill-university-vacancies-quickly-1789287543"></link>
            <id>https://jvpnews.com/article/action-taken-to-fill-university-vacancies-quickly-1789287543</id>
            <summary type="text">நாட்டிலுள்ள பல்கலைக்கழகங்களில் வெற்றிடமாக உள்ள கல்விசார் மற்றும் கல்விசாரா பணியிடங்களை விரைவாக நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பல்கலைக்கழகங்களின் ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">நாட்டிலுள்ள பல்கலைக்கழகங்களில் வெற்றிடமாக உள்ள கல்விசார் மற்றும் கல்விசாரா பணியிடங்களை விரைவாக நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
</p><p style="text-align: justify; ">
உயர் கல்வி ஆலோசனைக் குழுவின் முன்னிலையில் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் அழைக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக கல்வி பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன தெரிவித்துள்ளார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d7478c07-9f1c-49e2-bde8-97bd0b4c931b/26-6aa65c793a427.webp' /></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
நாட்டிலுள்ள அனைத்து பல்கலைக்கழகங்களிலும் வெற்றிடமாக உள்ள கல்விசார் மற்றும் கல்விசாரா பணியிடங்களை நிரப்புவதற்கான அனுமதி ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p style="text-align: justify; ">

எனினும், சில பல்கலைக்கழகங்களில் ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதை சுட்டிக்காட்டியுள்ள பிரதி அமைச்சர், குறித்த நடவடிக்கைகளை விரைவுபடுத்துமாறு துணைவேந்தர்களிடம் கோரியுள்ளார்.
</p><p style="text-align: justify; ">
தற்போது இலங்கையில் மொத்தம் 19 அரச பல்கலைக்கழகங்கள் இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-09-13T08:19:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரிக்ஸ் அமைப்பில் இணைய காத்திருக்கும் பாகிஸ்தான் - முட்டுக்கட்டை போடும் இந்தியா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/india-blocks-pakistan-to-join-in-brics-1789287447"></link>
            <id>https://news.lankasri.com/article/india-blocks-pakistan-to-join-in-brics-1789287447</id>
            <summary type="text">india blocks pakistan to join in brics: பிரிக்ஸ் அமைப்பில் இணைய 3 ஆண்டுகளாக காத்திருக்கும் பாகிஸ்தானின் முயற்சிக்கு இந்தியாவின் எதிர்ப்பு தடையாக உள்ளத...</summary>
            <content type="html"><![CDATA[<p>india blocks pakistan to join in brics: பிரிக்ஸ் அமைப்பில் இணைய 3 ஆண்டுகளாக காத்திருக்கும் பாகிஸ்தானின் முயற்சிக்கு இந்தியாவின் எதிர்ப்பு தடையாக உள்ளது. </p><h3> 

பிரிக்ஸ் மாநாடு </h3><p>

18வது பிரிக்ஸ் மாநாடு இந்தியாவின் டெல்லியில் செப்டம்பர் 12 மற்றும் 13 ஆம் திகதிகளில் நடைபெற்றது.&nbsp;</p><p>

இதில் ரஷ்ய ஜனாதிபதி புடின், சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங், ஈரான் ஜனாதிபதி மசூத் பெசஷ்கியான் உள்ளிட்ட உறுப்பு நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/058c365b-64a4-4f6b-8621-db2781e5fd30/26-6aa65c18e4693.webp' /></p><p> 

2009 ஆம் ஆண்டில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா ஆகிய 4 நாடுகள் இணைந்து BRIC அமைப்பை உருவாக்கியது.</p><p> 

2010 ஆம் ஆண்டில் தென் ஆப்பிரிக்காவும் இந்த அமைப்பில் இணைய BRICS என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. </p><p>

அதன் பின்னர், ஈரான், எகிப்து, ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா என 7 நாடுகள் இணைய தற்போது 11 நாடுகளுடன் இந்த அமைப்பு BRICS+ என உள்ளது.</p><h3> 

பாகிஸ்தான் இணைய இந்தியா எதிர்ப்பு</h3><p> 

இந்த அமைப்பில் இணைய மேலும் 23 நாடுகள் விண்ணப்பித்துள்ளன. இதில், 2023 ஆம் ஆண்டிலே பாகிஸ்தான் விண்ணப்பித்துள்ள நிலையில், தற்போது வரை BRICS அமைப்பில் அதனால் இணைய முடியவில்லை.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1892568e-df5a-4dbc-8422-b7bbdda550f4/26-6aa65c1a66663.webp' /></p><p> 

இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, பிரிக்ஸ் ஆதரவு பெற்ற புதிய மேம்​பாட்டு வங்​கி​யில் 580 மில்​லியன் டொலர் பங்​கு​களை பாகிஸ்​தான் வாங்​கி​ இருந்தது. </p><p>

நிதி நெருக்கடியில் தவிக்கும் பாகிஸ்தான் BRICS அமைப்பில் இணைந்தால், உலக வங்கி போன்ற மேற்​கத்​திய நாடு​கள் தலை​மையி​லான நிறு​வனங்​களின் நிதி சார்பை தவிர்த்​து, பிரிக்ஸ் ஆதரவு பெற்ற புதிய மேம்​பாட்டு வங்கி (NDB) வாயி​லாக கடன்​கள் மற்​றும் உள்​கட்​டமைப்பு நிதி​யுத​வியை பெற முடி​யும். </p><p>

பாகிஸ்தான் BRICS அமைப்பில் இணைய சீனா மற்றும் ரஷ்யா ஆதரவு தெரிவித்தாலும், இந்தியா தனது வீடோ அதிகாரம் மூலம் பாகிஸ்தான் அமைப்பில் இணைய தடையாக உள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1892568e-df5a-4dbc-8422-b7bbdda550f4/26-6aa65c1a66663.webp' /></p><p> 

பிரிக்ஸ் கூட்​டமைப்​பின் சேர்க்கை விதி​களின்​படி, உறுப்பு நாடு​களின் ஒரு​மித்த ஆதரவு இருந்​தால் மட்​டுமே புதிய உறுப்​பினர்​களை கூட்​டமைப்​பில்​ சேர்க்​க முடி​யும்​.</p>]]></content>
            <updated>2026-09-13T08:17:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[மாரவில கடல் பகுதியில் நேர்ந்த பெரும் சோகம் - 5 பேரை இழுத்துச்சென்ற இராட்சத அலைகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/tragedy-in-the-marawila-sea-giant-waves-5-people-1789285636"></link>
            <id>https://tamilwin.com/article/tragedy-in-the-marawila-sea-giant-waves-5-people-1789285636</id>
            <summary type="text">மாரவில கடல் பகுதியில் நேர்ந்த விபத்துகளில் 5 பேர் கடல் அலைகளால் இழுத்துச்செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று (12) பிற்பகல் அதே பகுதியி...</summary>
            <content type="html"><![CDATA[<p>மாரவில கடல் பகுதியில் நேர்ந்த விபத்துகளில் 5 பேர் கடல் அலைகளால் இழுத்துச்செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
</p><p>
நேற்று (12) பிற்பகல் அதே பகுதியில் அலைகளால் 3 பெண்கள், 2 இளைஞர்கள் உட்பட 5 பேர் அலைகளால் இழுத்துச்செல்லப்பட்டுள்ளனர்.
</p><p>
இவ்வாறு இழுத்துச்செல்லப்பட்ட 3 பெண்களை பிரதேசவாசிகள் உடனடியாக செயற்பட்டு மீட்டுள்ளனர்.</p><h2>இளைஞர் மாயம்&nbsp;</h2><p>
</p><p>
இதில் உயர்தர கணிதப் பிரிவில் பயின்று பல்கலைக்கழகத்திற்குத் தகுதி பெற்ற குளியாபிட்டிய, அனுக்கனையைச் சேர்ந்த வித்தானகே ஷாலித தனுர்தர மதுஷான் என்ற 21 வயது இளைஞர் காணாமல்போயுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/414b4560-f2fc-408b-9cda-d2e06b413763/26-6aa65c0b2921e.webp' /></p><p>
</p><p>
இவர் உட்பட 7 பேர் கொண்ட குழுவினர் குளியாபிட்டியவிலிருந்து மாரவில கடற்கரைக்குச் சுற்றுலா சென்றுள்ளனர்.
</p><p>
கடற்கரையில் பாறைகள் அமைக்கப்பட்ட பகுதியில் மணல் திட்டில் நின்றிருந்தபோது, சீறிப்பாய்ந்த இராட்சத அலை ஒன்றில் சிக்கி இவர்கள் கடலுக்குள் இழுத்துச்செல்லப்பட்டுள்ளனர்.</p><h2>கடற்படை மற்றும் பொலிஸாரால் விசேட தேடுதல் நடவடிக்கை</h2><p>

பிரதேசவாசிகள் இணைந்து இவரை காப்பாற்ற முயன்றபோதிலும், அவர் கடலில் மாயமாகியுள்ளார். இவரை காப்பாற்றச்சென்ற மற்றொரு இளைஞர் உயிர்தப்பியுள்ளார்.
</p><p>
காணாமல்போன இளைஞரை தேடி கடற்படை மற்றும் பொலிஸாரால் விசேட தேடுதல் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. </p><p>

இப்பகுதியில் கடலில் இறங்குவதையோ, நீராடுவதையோ தவிர்க்குமாறு மாரவில பொலிஸாரால் எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-13T08:17:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீங்கள் திருந்தாவிட்டால் திருத்தப்படுவீர்கள்..எனக்கும் வருத்தம் தான்!! ஆ ராசா..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/if-you-do-not-mend-your-ways-you-will-be-set-right-1789287875"></link>
            <id>https://viduppu.com/article/if-you-do-not-mend-your-ways-you-will-be-set-right-1789287875</id>
            <summary type="text">திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மிசா தியாகத்தை கொச்சைப்படுத்தி தமிழ்நாடு முதலமைச்சர் பேசியதை எதிர்த்து திமுக சார்பில் பல இடங்களில் போராட்டம் நடைபெற்று வரு...</summary>
            <content type="html"><![CDATA[<p>திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மிசா தியாகத்தை கொச்சைப்படுத்தி தமிழ்நாடு முதலமைச்சர் பேசியதை எதிர்த்து திமுக சார்பில் பல இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. அதில் திமுக தலைவர்கள் சேகர்பாபு, ஆர் எஸ் பாரதி உள்ளிட்ட பலர் முதல்வர் விஜய்யை ஒருமையில் பேசி விமர்சித்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/13ae0115-27ff-4547-a42a-ce471abd01ec/26-6aa65dc55b4db.webp' /></p><p> </p><p>அதிலும் எம் பி ஆ ராசா விஜய் குறித்தும் அமைச்சர் சிடி ஆர் நிர்மல் குமார் குறித்தும் பேசிய கருத்து கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியது. மாநில முதலமைசசரை தனிநபர் வன்மத்தையும், அநாகரிகமான வசவுகளையும் வீசுவது ஒட்டுமொத்த ஜனநாயக மாண்புகளுக்கு விடுக்கப்படும் பெரும் அச்சுத்தல் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் கணித்தார்.</p><p></p><p> மேலும் பலரின் கண்டனங்களை தொடர்ந்து ஆ ராசா, 'தியாகத்தில் விளைந்த ஒரு தலைவனின் அடையாளத்தை, உண்மையை வேண்டுமென்றே திட்டமிட்டு உள்நோக்கத்தோடு மீண்டும் மீண்டும் பொய் என்று கொச்சைப்படுத்தி ஏளனம் செய்ததால் ஏற்பட்ட வலியை உணர்த்த ஏளனம் செய்தவரின் அடையாளத்தை உண்மையை உணர்ச்சி உந்துதலில் கேள்விக்குள்ளாக்கியதில் எனக்கும் வருத்தம் தான். </p><p>இத்துடன் என் வார்த்தைகளை திரும்பப் பெறுவதில் தயக்கமில்லை, நீங்கள் திருந்தாவிட்டால் திருத்தப்படுவீர்கள் என்று வருத்தம் தெரிவித்துள்ளார் ஆ ராசா.</p>]]></content>
            <updated>2026-09-13T08:15:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[தனியார் நிறுவனங்களின் எரிபொருள் விலைகள்! வெளியாகியுள்ள முக்கிய தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/revising-fuel-prices-for-private-fuel-companies-1789286389"></link>
            <id>https://ibctamil.com/article/revising-fuel-prices-for-private-fuel-companies-1789286389</id>
            <summary type="text">மத்திய கிழக்கில் நிலவும் மோதல்கள் காரணமாக எரிபொருள் இறக்குமதிக்கான செலவு அதிகரித்துள்ள நிலையில், தனியார் எரிபொருள் நிறுவனங்களுக்கான எரிபொருள் விலையை த...</summary>
            <content type="html"><![CDATA[<p>மத்திய கிழக்கில் நிலவும் மோதல்கள் காரணமாக எரிபொருள் இறக்குமதிக்கான செலவு அதிகரித்துள்ள நிலையில், தனியார் எரிபொருள் நிறுவனங்களுக்கான எரிபொருள் விலையை திருத்தியமைப்பது குறித்து அரசாங்கம் பரிசீலிக்கக்கூடும் என்று எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக தெரிவித்துள்ளார்.
</p><p>
தனியார் எரிபொருள் நிறுவனங்களுடன் எட்டப்பட்டுள்ள ஒப்பந்தங்களின்படி, இவ்வாறு எரிபொருள் விலையை திருத்தியமைப்பதில் எந்தவித சட்டத் தடைகளும் இல்லை என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>

இதற்கிடையில், மத்திய கிழக்கு மோதல்களால் கடல்வழிப் பாதைகளில் ஏற்பட்டுள்ள இடையூறுகள் காரணமாக இறக்குமதிச் செலவு கணிசமாக உயர்ந்துள்ளதால், தற்போதைய விலையில் எரிபொருளை விற்பனை செய்வது கடினமாக உள்ளதாகத் தனியார் எரிபொருள் நிறுவனங்கள் அரசாங்கத்திற்குத் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.</p><p></p><h2>தனியார் எரிபொருள் விநியோகஸ்தர்கள்</h2><p>
</p><p>
அதன்படி, IOC, Sinopec மற்றும் RM Parks உள்ளிட்ட தனியார் எரிபொருள் விநியோகஸ்தர்கள் இந்த விவகாரத்தை அரசாங்கத்தின் கவனத்திற்குக் கொண்டுவந்துள்ளதாக மூத்த அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/19299843-6648-4fce-8330-d2d92f37163a/26-6aa65b09b138a.webp' /></p><p>
</p><p>
இருப்பினும், தற்போதைய சூழ்நிலையில் இலங்கை எரிபொருள் கூட்டுத்தாபனம் (CPC) மூலம் விற்பனை செய்யப்படும் எரிபொருளுக்கான அதிகரித்த செலவை முழுமையாக நுகர்வோர் மீது சுமத்த அரசாங்கம் உத்தேசிக்கவில்லை என்றும் அந்த அதிகாரி சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-13T08:13:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் நடுவீதியில் இளைஞனுக்கு நடத்தப்பட்ட கொடூரம்; வசமாக பிடிபட்ட சந்தேகநபர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/brutal-attack-on-youth-in-jaffna-street-1789275311"></link>
            <id>https://jvpnews.com/article/brutal-attack-on-youth-in-jaffna-street-1789275311</id>
            <summary type="text">ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் சாட்சியமளித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த இளைஞர் மீது அராலிச் சந்தியில் வைத்து நடத்தப்பட்ட வாள்வெட்டுத் தாக்குதல் வ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் சாட்சியமளித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த இளைஞர் மீது அராலிச் சந்தியில் வைத்து நடத்தப்பட்ட வாள்வெட்டுத் தாக்குதல் விவகாரத்தில், நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p style="text-align: justify; ">

நெடுந்தீவைச் சேர்ந்த இரு தரப்பினருக்கு இடையில் ஏற்கனவே இடம்பெற்றிருந்த பிரச்சினை தொடர்பான வழக்கு, ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் கடந்த 9 ஆம் திகதி விசாரணைக்காக எடுக்கப்பட்டது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2724bcef-0b19-4f20-9419-6322d79805d3/26-6aa62cf3b0bdd.webp' /></p><h2 style="text-align: justify; ">வாள்வெட்டுத் தாக்குதல்</h2><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
இந்த வழக்கில் சாட்சியமளித்துவிட்டுத் திரும்பும்போதே, குறித்த இளைஞர் மீது இந்த வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.
</p><p style="text-align: justify; ">
இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய நபர்கள் தலைமறைவாகியிருந்த நிலையில், வவுனியா - நெடுங்கேணி பகுதியில் வைத்து யாழ். மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவுப் பொலிஸாரால் நேற்றுக் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p style="text-align: justify; ">

இக்குற்றச் செயலில் நேரடியாக ஈடுபட்ட மூவர் மற்றும் அச்செயலுக்குத் திட்டமிட்ட ஒருவர் என மொத்தம் நால்வரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
கைது செய்யப்பட்ட நபர்களிடம் தற்போது மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், அவர்களை நீதிமன்றில் முற்படுத்தும் நடவடிக்கைகளும் இடம்பெற்று வருகின்றன.
</p><p style="text-align: justify; ">
அதேவேளை, சந்தேகநபர்களிடமிருந்து இரண்டு வாள்கள், ஒரு கத்தி, ஓர் உள்ளூர்க் கைக்குண்டு மற்றும் இரண்டு மோட்டார்சைக்கிள்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாகப் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-09-13T08:11:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[அநுராதபுர பேரணி குறித்து முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வெளியிட்ட முக்கிய அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/important-announcement-issued-by-mahinda-1789277615"></link>
            <id>https://tamilwin.com/article/important-announcement-issued-by-mahinda-1789277615</id>
            <summary type="text">
பொதுஜன பெரமுன கட்சியின் நேற்றைய அநுராதபுர போராட்டத்திற்கு வலுச் சேர்த்த நாட்டு மக்களுக்கு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நன்றி தெரிவித்துள்ளார்.
...</summary>
            <content type="html"><![CDATA[<p>
பொதுஜன பெரமுன கட்சியின் நேற்றைய அநுராதபுர போராட்டத்திற்கு வலுச் சேர்த்த நாட்டு மக்களுக்கு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நன்றி தெரிவித்துள்ளார்.
</p><p>
நேற்றைய(12.09.2026) அநுராதபுர மக்கள் பேரணி குறித்து, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்து தனது முகநூல் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
</p><p>
குறித்த பதிவில், </p><p>

அநுராதபுர இராச்சியத்தில் நிகழ்ந்த கடந்த கால வரலாறு, தற்போதைய சூழலுக்கும் பொருந்தும் என்று நினைக்கின்றேன்.</p><h2>இலங்கையர்களுக்கு எனது நன்றி..&nbsp;</h2><p> 

படையெடுப்புக்கள், எதிர்ப்புக்கள், துரோகங்கள் மட்டுமின்றி வீழ்ச்சிகளுக்குப் பின்னர் மீண்டும் எழுச்சி பெற்ற ஒரு சரித்திரமாக அது இருந்தது. </p><p>

இந்த நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் தான் பிறந்த மண்ணின் மீது அன்பு இருக்க வேண்டும். நமது நாடு என்ற உணர்வு இருக்க வேண்டும். </p><p>

ஒரு நாடு என்ற வகையில், நாட்டின் வெளிப்புற எதிரியை விட நாட்டுக்குள் இருக்கும் எதிரியே மிகவும் ஆபத்தானவன் என்பது எனது நம்பிக்கை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8f068c60-35ac-46ff-8570-7f51a4884b20/26-6aa654cdcd9a9.webp' /></p><p>
</p><p> 
இலங்கை மக்கள் அனைவரது பலத்துடனும், நான் எமது தாய் நாட்டைப் பாதுகாத்து கட்டியெழுப்பினேன்.
</p><p>
எமது மக்கள் மகிழ்ச்சியுடனும் பாதுகாப்புடனும் வாழக்கூடிய ஒரு காலகட்டத்தை மீண்டும் உருவாக்குவதே எமது நோக்கம். </p><p>

கடந்த காலத்தைப் போன்று, எமது கலாசாரம், அடையாளம் மற்றும் தனித்துவத்தைப் பாதுகாத்துக் கொண்டு, அபிவிருத்தியடைந்த தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கு உங்கள் அனைவருக்கும் நான் அழைப்பு விடுக்கின்றேன்.</p><p><iframe src="https://www.facebook.com/plugins/post.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2FPresidentRajapaksa%2Fposts%2Fpfbid0ep7tV3PyYS3j3uxSmcmxFumTkSWN7o7Lm4G8zAZSPK19BgjKSNrc7xAWtBxgEAwDl&show_text=true&width=500" width="500" height="250" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share"></iframe></p><p> </p><p>

அத்துடன், இந்த நிகழ்வை ஏற்பாடு செய்த, என்னுடைய நீண்ட கால அரசியல் சகாக்கள், மகா சங்கத்தினர், பொதுமக்கள் என அனைவருக்கும் எனது நன்றி.</p><p> 

எப்போதும் எமக்கு பலமாக இருந்த அனைத்து இலங்கையர்களுக்கும் எனது நன்றி என மேலும் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p><p> 
</p>]]></content>
            <updated>2026-09-13T08:07:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[விமான நிலையத்தில் இரு வர்த்தகர்கள் கைது; சோதனையில் சிக்கிய பொருட்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/people-arrested-illegal-cigarettes-katunayake-1789286397"></link>
            <id>https://jvpnews.com/article/people-arrested-illegal-cigarettes-katunayake-1789286397</id>
            <summary type="text">கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சட்டவிரோதமான முறையில் கொண்டுவந்த வெளிநாட்டுச் சிகரெட் தொகுதியுடன் இரண்டு இலங்கை பயணிகள் நேற்றைய தினம் சனிக்கிழமை...</summary>
            <content type="html"><![CDATA[<p>கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சட்டவிரோதமான முறையில் கொண்டுவந்த வெளிநாட்டுச் சிகரெட் தொகுதியுடன் இரண்டு இலங்கை பயணிகள் நேற்றைய தினம் சனிக்கிழமை (12) இரவில் விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>
கைது செய்யப்பட்ட இருவரும் கொழும்பு பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய வர்த்தகர்கள் ஆவார்.

சந்தேகநபர்கள் இருவரும் நேற்றைய தினம் மாலை 06.00 மணியளவில் டுபாயிலிருந்து 'எமிரேட்ஸ்' விமானச் சேவைக்குச் சொந்தமான EK-654 எனும் விமானத்தின் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ecf6f317-b461-45f1-a036-6dd1b3bce86b/26-6aa657fff01de.webp' /></p><p>
</p><p>
அவர்கள் கொண்டு வந்த 4 பயணப் பைகளைச் சோதனையிட்ட போது, அவற்றுள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 01 கோடியே 59 இலட்சத்து 90 ஆயிரம் ரூபா பெறுமதியான 'டொப் கன்' மற்றும் 'பிளாட்டினம் 07' வகையைச் சேர்ந்த 1,06,600 சிகரெட்டுகளைக் கொண்ட 533 சிகரெட் கார்ட்டூன்கள் சுங்க அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.

</p><p>மேலும், கைது செய்யப்பட்ட இரு வர்த்தகர்களையும் சுங்கப் பிரிவினர் தடுத்து வைத்துள்ளதுடன், இச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-09-13T08:00:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[சர்வாதிகாரியாக செயற்படுகிறாரா அநுர..! சுமந்திரன் குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sumanthiran-levels-allegations-against-anura-1789286144"></link>
            <id>https://tamilwin.com/article/sumanthiran-levels-allegations-against-anura-1789286144</id>
            <summary type="text">ஊழல் மற்றும் முறைகேடு விவகாரங்களில் கடந்த அரசுகளை விட மும்முரமாகச்
செயற்படும் தேசிய மக்கள் சக்தி அரசு, தமிழ் மக்களுக்குரிய எந்தவொரு
பிரச்சினையையும் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஊழல் மற்றும் முறைகேடு விவகாரங்களில் கடந்த அரசுகளை விட மும்முரமாகச்
செயற்படும் தேசிய மக்கள் சக்தி அரசு, தமிழ் மக்களுக்குரிய எந்தவொரு
பிரச்சினையையும் தீர்க்கத் துளியளவும் முன்வரவில்லை என இலங்கை தமிழரசுக்
கட்சியின் பொதுச்செயலாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன்
கடுமையாக விமர்சித்துள்ளார்.</p><p>

சாவகச்சேரியில் நேற்று(12.09.2026) நடைபெற்ற அநுர அரசுக்கு எதிரான உணவு தவிர்ப்புப்
போராட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். </p><h2>

சர்வாதிகாரியாக செயற்படுகிறாரா அநுர</h2><p>

அவர் மேலும் தெரிவிக்கையில், </p><p>

நாட்டை ஆட்சி செய்பவர்கள் அதிகாரங்கள் பகிரப்பட்டதாகக் கூறினாலும், மாகாண
சபைகள் அற்ப சொற்ப அதிகாரங்களோடு இயங்காமல் கிடக்கின்றன. </p><p>மத்திய அரசுக்கு
இல்லாத அதிகாரங்களையும் தன் முகவர்கள் மூலம் ஒன்பது மாகாணங்களிலும்
நிறைவேற்றும் முழுச் சர்வாதிகார நிறைவேற்று அதிகாரியாகவே தற்போதைய ஜனாதிபதி
செயற்படுகின்றார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/552a85f1-aefe-427d-a6db-ab31c9569b95/26-6aa6574961eec.webp' /></p><p>
</p><p>
இந்த அரசு ஊழல், இலஞ்சம், பாதாள உலகக் குழுக்கள் மற்றும் போதைப்பொருள்
வியாபாரிகளுக்கு எதிராகத் துணிச்சலாக நடவடிக்கை எடுப்பதை நாங்கள்
வரவேற்கின்றோம்.</p><p> இதற்கு முன்னர் மாறி மாறி ஆட்சி செய்த கட்சிகளைப் போலன்றி,
இரு தரப்புக்கும் எதிராக அவர்கள் எந்தவித சமரசமுமின்றி நடவடிக்கை எடுத்து
வருவது பாராட்டத்தக்கது.

ஊழல்வாதிகளுக்கு எதிராக அவ்வளவு மும்முரமாகச் செயற்படும் இந்த அரசு, தமிழ்
மக்களுக்குரிய எந்தவொரு விடயத்தையும் தொட்டுக்கூடப் பார்க்கவில்லை. </p><p>

எங்களது
வாழ்வாதாரத்துக்கு அத்திவாரமான நிலங்களை விடுவிப்பதாகக் கூறிவிட்டு, ஏற்கனவே
2024ஆம் ஆண்டு விடுவிக்கப்பட்ட 700 ஏக்கர் காணிகளையும், ஏற்கனவே திறக்கப்பட்ட
பலாலி வீதியையுமே மீளவும் காட்டி மக்களை ஏமாற்றுகின்றனர். வடக்கில் இதுவரை ஓர்
அங்குல நிலம் கூட புதிதாக விடுவிக்கப்படவில்லை.
</p><h2>

காணி விடுவிப்பு கோரிக்கை</h2><p>

எதிர்க்கட்சியில் இருந்தபோது எங்களுடன் இணைந்து தனியார் காணிகள் விடுவிக்கப்பட
வேண்டும் என்று வாய் கிழியக் கத்தியவர்கள், இப்போது ஜனாதிபதியாகிவிட்டு
இராணுவத்திடம் அறிக்கை கேட்டுள்ளோம் என்று கூறுகின்றார்கள்.</p><p>

அரசின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ள முதலாவது வாக்குறுதியான புதிய அரசமைப்பு
உருவாக்கம் தொடர்பில் இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/71cddb2c-d668-4b9f-aedd-a3fd78dd59ef/26-6aa6574a779e3.webp' /></p><p>
</p><p>
பௌத்த மதபீடங்களின் எதிர்ப்பையும் மீறி அரசமைப்பின் 22ஆவது திருத்தத்தைக்
கொண்டுவரும் துணிவைக் காட்டும் அரசு, அதிகாரப் பகிர்வு குறித்துச்
சிந்திப்பதில்லை. </p><p>

எல்லாவற்றையும் தங்களுடைய கைக்குள்ளே கொண்டு வந்து ஒரு கட்சி
ஆட்சியாக மாற்றும் நடவடிக்கைகள்தான் நடக்கின்றன. எனவே, இவற்றை எதிர்த்துத்
தொடர் போராட்டங்கள் நடத்தப்பட வேண்டும் என்றார்.&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-13T07:57:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடா குடியுரிமைச் சான்றிதழ் விண்ணப்பங்கள் தேக்கம்: காத்திருப்பு காலம் 33 மாதங்களாக அதிகரிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/proof-of-citizenship-applications-surge-estimated-1789263996"></link>
            <id>https://canadamirror.com/article/proof-of-citizenship-applications-surge-estimated-1789263996</id>
            <summary type="text">&amp;nbsp;கனடாவில் புதிய சி-3 சட்டத் திருத்தம் அமலுக்கு வந்ததைத் தொடர்ந்து, பரம்பரை வழியிலான குடியுரிமைச் சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்பங்களின் எண்ணிக்கைய...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கனடாவில் புதிய சி-3 சட்டத் திருத்தம் அமலுக்கு வந்ததைத் தொடர்ந்து, பரம்பரை வழியிலான குடியுரிமைச் சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்பங்களின் எண்ணிக்கையும், அவற்றுக்கான காத்திருப்பு காலமும் மிகக் கடுமையாக அதிகரித்துள்ளன.</p><p>
கனடா குடியேற்ற, அகதிகள் மற்றும் குடியுரிமை அமைச்சு வெளியிட்டுள்ள புதிய தரவுகளின்படி இந்த விடயம் தெரியவந்துள்ளது.</p><p>
தற்போது 1,36,000க்கும் அதிகமானோர் குடியுரிமைச் சான்றிதழ் முடிவுகளுக்காகக் காத்திருக்கின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f2ef4fb4-606e-4aae-84d3-b7c9754c385b/26-6aa6007e164fd.webp' /></p><p> </p><p>ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடுகையில் இது 14,000 விண்ணப்பங்கள் அதிகம் ஆகும்.
விண்ணப்பங்களை பரிசீலிப்பதற்கான காலம் 33 மாதங்களுக்கும் மேலாக அதிகரித்துள்ளது. </p><p>ஆகஸ்ட் மாத நிலவரப்படி 25 மாதங்களாக இருந்த இக்காலம், ஒரே மாதத்தில் மேலும் 8 மாதங்கள் உயர்ந்துள்ளது.
பிற நாடுகளிலிருந்து பெறப்படும் விண்ணப்பங்களுக்கு மேலதிகமாக 3 முதல் 4 மாதங்கள் வரை தேவைப்படும்.</p><p>
மே 31 நிலவரப்படி, புதிய விதிகளின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட விண்ணப்பங்களில் 51 சதவீதம் அமெரிக்காவில் பிறந்தவர்களுடையதாகும். </p><p>அமெரிக்காவின் தற்போதைய அரசியல் சூழலே இந்த திடீர் அதிகரிப்புக்கு முக்கியக் காரணம் எனப்படுகிறது.
</p><p>அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக மெக்சிகோ, பொலிவியா, ஐக்கிய ராஜ்யம், சீனா, இந்தியா, பிரான்ஸ், ஆஸ்திரேலியா மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளிலிருந்தும் அதிகளவில் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.&nbsp;</p><p>சிக்கலான விண்ணப்பங்களுக்கு மேலதிக ஆவணப் பரிசீலனைகளும் தீவிர சரிபார்ப்புகளும் தேவைப்படுவதாலேயே காலதாமதம் ஏற்படுவதாகவும், இதர பல காரணிகளும் இந்த அதிகரிப்புக்குக் காரணம் எனவம் அரசாங்கத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><br></p>]]></content>
            <updated>2026-09-13T07:51:34+00:00</updated>
        </entry>
    </feed>
