<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-07-23T08:52:30+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Fathima</name>
            </author>
            <title type="text"><![CDATA[நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறைத்தண்டனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/vimal-sentence-to-one-year-jail-1784796533"></link>
            <id>https://manithan.com/article/vimal-sentence-to-one-year-jail-1784796533</id>
            <summary type="text">நடிகர் விமல் தயாரித்து நடித்த மன்னர் வகையறா படத்துக்காக பைனான்சியர் கோபி என்பவரிடம் ரூ.4.5 கோடி கடனாக பெற்றுள்ளார்.

படம் வெளியான பின்னரும் அவர் வாங...</summary>
            <content type="html"><![CDATA[<p>நடிகர் விமல் தயாரித்து நடித்த மன்னர் வகையறா படத்துக்காக பைனான்சியர் கோபி என்பவரிடம் ரூ.4.5 கோடி கடனாக பெற்றுள்ளார்.
</p><p>
படம் வெளியான பின்னரும் அவர் வாங்கிய பணத்தை கொடுக்கவில்லை, காசோலையாக வழங்கிய போது வங்கி கணக்கில் பணமில்லை என கூறி திருப்பி வந்துள்ளது.
</p><p>
இதனையடுத்து 4.5 கோடி ரூபாய் செக் மோசடி வழக்கை பதிவு செய்தார் பைனான்சியர் கோபி.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fd273ee9-d2f8-4c27-9fcf-9e395e2ef011/26-6a61d637788ce.webp' /><br></p><p>
இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வந்த நிலையில் இன்று நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.
</p><p>
அதில், விமல் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கு ஓராண்டு சிறைத்தண்டனை விதிப்பதாகவும் தெரிவித்தார். மேலும் வாங்கிய பணத்தை திருப்பி தரவேண்டும் எனவும் உத்தரவிட்டார்.</p><p>
உடனடியாக விமல் தரப்பில் மேல்முறையீடு செய்யவுள்ளதாகவும், தண்டனையை நிறுத்தி வைக்குமாறும் மனு தாக்கல் செய்யப்பட்டது, இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி தண்டனையை நிறுத்தி வைத்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c5b308dc-7ee4-4082-8f38-2592bd27bf82/26-6a61d6382bf7b.webp' /><br></p>]]></content>
            <updated>2026-07-23T08:52:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொட்டகலையில் பிரதேச சபை உறுப்பினர் மீது தாக்குதல் ; பொலிஸ் விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/attack-on-pradeshiya-sabha-member-in-kotagala-1784796103"></link>
            <id>https://jvpnews.com/article/attack-on-pradeshiya-sabha-member-in-kotagala-1784796103</id>
            <summary type="text">கொட்டகலை ஈரோஸ் ஜனநாயக முன்னணியின் பிரதேச சபை உறுப்பினர் ராஜேந்திரன் மீது இரண்டு நபர்கள் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொட்டகலை ஈரோஸ் ஜனநாயக முன்னணியின் பிரதேச சபை உறுப்பினர் ராஜேந்திரன் மீது இரண்டு நபர்கள் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.</p><p>
</p><p></p><p>இந்தச் சம்பவம் கொட்டகலை இலங்கை வங்கிக்கு அருகில் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.&nbsp;</p><p> பிரதேச சபை உறுப்பினர் ராஜேந்திரனின் கூற்றுப்படி, அவர் தனது காரில் ஏறுவதற்காகச் சென்றபோது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், அவரை வலுக்கட்டாயமாக காரிலிருந்து வெளியே இழுக்க முயன்றுள்ளனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b00b92d4-5747-40c6-8ed2-50a567cc78b6/26-6a61d3c929da9.webp' /></p><p>அதன்பின்னர் தாமாகவே கீழே இறங்கியபோது, அவரை இழுத்து தாக்கியதுடன், கடுமையான வலியை ஏற்படுத்தி உயிர் அச்சுறுத்தலும் விடுத்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
</p><p>


மேலும், காரின் சாவியைப் பறித்துக்கொண்டு சந்தேகநபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றதாகவும் கூறப்படுகிறது.
</p><p>


சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ள தனக்கு இந்தச் சம்பவத்தால் உடல் உபாதைகளும் மன உளைச்சலும் ஏற்பட்டுள்ளதாகவும், கையில் லேசான முறிவு ஏற்பட்டுள்ளதாகவும் பிரதேச சபை உறுப்பினர் தெரிவித்துள்ளார்.</p><p>



சம்பவம் தொடர்பில் கொட்டகலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-23T08:41:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[மத்திய கிழக்கில் மீண்டும் அதிகரித்துள்ள பதற்றம்! அமெரிக்கர்களுக்கு அவசர எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/warning-to-americans-around-the-world-1784794866"></link>
            <id>https://tamilwin.com/article/warning-to-americans-around-the-world-1784794866</id>
            <summary type="text">மத்திய கிழக்கில் அதிகரித்துள்ள பதற்றங்கள் காரணமாக, உலகெங்கிலும் உள்ள அனைத்து அமெரிக்கர்களும் &quot;மிகுந்த எச்சரிக்கையுடனும் விழிப்புடனும் இருக்குமாறு&quot;&amp;nbs...</summary>
            <content type="html"><![CDATA[<p>மத்திய கிழக்கில் அதிகரித்துள்ள பதற்றங்கள் காரணமாக, உலகெங்கிலும் உள்ள அனைத்து அமெரிக்கர்களும் "மிகுந்த எச்சரிக்கையுடனும் விழிப்புடனும் இருக்குமாறு"&nbsp;அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p><p>அமெரிக்க வெளியுறவுத்துறை உலகளாவிய பாதுகாப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளது.</p><p></p><h2>விமான இரத்துகள் மற்றும் பயண இடையூறுகள்&nbsp;&nbsp;</h2><p><span style="font-size: 14px;">"மத்திய கிழக்கில் உள்ள சிக்கலான பாதுகாப்புச்சூழல் காரணமாக எதிர்பாராத விதமாக பதற்றம் அதிகரிக்க வாய்ப்புள்ளது" என்று அமெரிக்க வெளியுறவுத் துறை வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையில் கூறியுள்ளது.</span></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fea2138a-4854-4ff6-b461-4c2f341afb32/26-6a61d2ee45121.webp' /></p><p>
</p><p>
மத்திய கிழக்கிற்கு வெளியே உள்ள அமெரிக்க தூதரகங்கள் மீதும் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன என்றும், முக்கிய இடங்களை தாக்கும் அபாயம் உள்ளதாகவும் குறிப்பிடுகின்றது.</p><p><span style="font-size: 14px;">தற்போது மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்கர்கள் விமான இரத்துகள் மற்றும் பயண இடையூறுகள் குறித்து விழிப்புடன் இருக்குமாறும் அறிவுறுத்தியுள்ளது.</span></p><p> மத்திய கிழக்கிற்கு வெளியே உள்ள அமெரிக்கர்கள் அப்பகுதி வழியாகப் பயணம் செய்வதையோ அல்லது பார்வையிடுவதையோ மறுபரிசீலனை செய்யுமாறும் அமெரிக்க அரசாங்கம் மேலும் அறிவுறுத்தியுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-23T08:38:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாடாளுமன்றில் கறுப்பு ஜூலை நினைவுகூர்ந்த தமிழ் எம்பிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/tamil-mps-commemorated-black-july-in-parliament-1784795989"></link>
            <id>https://jvpnews.com/article/tamil-mps-commemorated-black-july-in-parliament-1784795989</id>
            <summary type="text">&amp;nbsp; இலங்கையில் கறுப்பு ஜூலை கலவரம் இடம்பெற்று 43 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. 

இதனை பாராளுமன்றில் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் பாராளுமன்ற உறுப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; இலங்கையில் கறுப்பு ஜூலை கலவரம் இடம்பெற்று 43 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. 

இதனை பாராளுமன்றில் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து இன்று (23) நினைவு கூர்ந்தனர்.</p><p> 

கடந்த நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக இலங்கை அரசியல் மற்றும் சமூகக் கட்டமைப்பில் பல மாற்றங்கள் ஏற்பட்டிருந்தாலும், 1983 ஜூலை கலவரத்தினால் ஏற்பட்ட இழப்புகள் இன்னும் நீங்காத வடுவாகவே நீடிப்பதாகவும் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b66ca2e8-03af-4ddd-9fdb-3eb4cca5321b/26-6a61d3576d4c2.webp' /></p><p></p>]]></content>
            <updated>2026-07-23T08:38:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈஸ்டர் தாக்குதல்கள் விசாரணை: கோட்டாபய மேன்முறையீட்டு நீதிமன்றில் முன்னிலை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/gotabaya-appears-in-the-court-of-appeal-1784793301"></link>
            <id>https://ibctamil.com/article/gotabaya-appears-in-the-court-of-appeal-1784793301</id>
            <summary type="text">
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மேன்முறையீட்டு நீதிமன்றில் முன்னிலையாகியுள்ளார்.

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் தொ...</summary>
            <content type="html"><![CDATA[<p>
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மேன்முறையீட்டு நீதிமன்றில் முன்னிலையாகியுள்ளார்.</p><p>

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் தொடர்பாக, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் தன்னைக் கைது செய்து காவலில் வைப்பதைத் தடுக்கும் உத்தரவு கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தாக்கல் செய்த ரிட் மனு மீதான விசாரணைக்காக அவர் இவ்வாறு நீதிமன்றில் முன்னிலையாகியுள்ளார்.</p><p>கடந்த 9ஆம் திகதி மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர், நீதிபதி ரொஹந்த அபேசூரிய மற்றும் நீதிபதி சரத் திசாநாயக்க ஆகியோர் அடங்கிய மேல்முறையீட்டு நீதிமன்ற அமர்வு, மனுவை நான்காவது நாளாகப் பரிசீலித்து, அதை இன்று வரை ஒத்திவைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/42f7b668-1c73-4adf-9c82-3b063b2069f3/26-6a61cfe094a9d.webp' /></p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</h5></td></tr></tbody></table><p>


</p>]]></content>
            <updated>2026-07-23T08:36:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[இரத்தப் பரிசோதனைக்கு அதிக கட்டணம் அறவிட்ட யாழ். தனியார் வைத்தியசாலை : நீதிமன்றின் அதிரடி உத்தரவு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/jaffna-private-hospital-slapped-with-rs-3-mn-fine-1784785148"></link>
            <id>https://ibctamil.com/article/jaffna-private-hospital-slapped-with-rs-3-mn-fine-1784785148</id>
            <summary type="text">அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட, முழுமையான இரத்தப் பரிசோதனை (Full Blood Count - FBC) ஒன்றுக்கு நோயாளிகளிடம் அதிக கட்டணம் அறவிட்டதை ஒப்புக்கொ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட, முழுமையான இரத்தப் பரிசோதனை (Full Blood Count - FBC) ஒன்றுக்கு நோயாளிகளிடம் அதிக கட்டணம் அறவிட்டதை ஒப்புக்கொண்ட யாழ்ப்பாணத்தில் உள்ள ஒரு தனியார் வைத்தியசாலைக்கு 3 மில்லியன் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.</p><p>தனியார் வைத்தியசாலைகள் மற்றும் மருத்துவ ஆய்வுகூடங்களில் மேற்கொள்ளப்படும் சில மருத்துவப் பரிசோதனைகளுக்காக அறவிடப்படும் கட்டணங்கள் தொடர்பில் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையினால் அதிகபட்சக் கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. </p><p>

இதற்கமைய, முழுமையான இரத்தப் பரிசோதனை ஒன்றிற்காகத் தனியார் துறையினரால் அறவிடக்கூடிய அதிகபட்சக் கட்டணம் 400 ரூபாயாகும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><p></p><h2>நீதிமன்றத்தின் உத்தரவு&nbsp;</h2><p> 

எனினும், அந்த வைத்தியசாலை குறித்த பரிசோதனைக்காக 550 ரூபாய் வீதம் அறவிடப்பட்டுள்ளமை பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை அதிகாரிகளால் ஜூலை 13 அன்று மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பொன்றின் போது கண்டறியப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fa2732f3-fbfb-41da-a9a5-5179dc3d234b/26-6a61af0e4b725.webp' /></p><p> 

இதனையடுத்து, இச்சம்பவம் தொடர்பில் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினால் யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.</p><p>குறித்த வழக்கு ஜூலை 21 அன்று விசாரணைக்கு வந்த போது வைத்தியசாலை மீதான குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டதையடுத்து, குறித்த நிறுவனத்திற்கு 3 மில்லியன் ரூபாய் அபராதத்தை நீதிமன்றம் விதித்துள்ளது.</p><p>மேலும், இழைக்கப்பட்ட குற்றம் தொடர்பில் பிரதிவாதி நிறுவனத்தின் சொந்தச் செலவிலேயே பிரதான பத்திரிகைகளில் அறிவிப்பொன்றைப் பிரசுரிக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p></p><h2>பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை</h2><p> </p><p>தனியார் மருத்துவமனை அல்லது மருத்துவ ஆய்வுகூடங்களில் சேவைகளைப் பெற்றுக்கொள்ளும் போது, நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்சக் கட்டணங்கள் தொடர்பில் விழிப்புடன் இருக்குமாறு பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f03df02a-9b0b-44da-840a-a90388c42d41/26-6a61af0f07a7d.webp' /></p><p> 

நீங்கள் செலுத்தும் பணத்திற்குச் சரியான பட்டியல் அல்லது பற்றுச்சீட்டைப் பெற்றுக்கொள்வது உங்களது நுகர்வோர் உரிமையாகும் எனவும், தேவையான சந்தர்ப்பங்களில் அதனை ஒரு முக்கிய சான்றாகப் பயன்படுத்த முடியும் எனவும் அதிகாரசபை வலியுறுத்தியுள்ளது. </p><p>

நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்சக் கட்டணத்தை விடக் கூடுதலாகப் பணம் அறவிடப்படும் சந்தர்ப்பங்கள் தொடர்பில், அலுவலக நேரங்களில் 1977 என்ற அவசரத் தொலைபேசி இலக்கத்தின் ஊடாகப் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபைக்கு முறைப்பாடளிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/P0b0XtuX8Gk" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-23T08:36:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[விமான நிறுவனம் தொடங்கும் அதானி? விதியை தளர்த்த மத்திய அரசிடம் கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/adani-seek-rule-change-for-launch-airline-1784793220"></link>
            <id>https://news.lankasri.com/article/adani-seek-rule-change-for-launch-airline-1784793220</id>
            <summary type="text">அதானி குழுமம் விமான நிறுவனம் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இந்திய உள்நாட்டு விமான சந்தை 

இந்தியாவின் உள்நாட்டு விமான போக்குவரத்தில் இண்...</summary>
            <content type="html"><![CDATA[<p>அதானி குழுமம் விமான நிறுவனம் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. </p><h3>

இந்திய உள்நாட்டு விமான சந்தை </h3><p>

இந்தியாவின் உள்நாட்டு விமான போக்குவரத்தில் இண்டிகோ மற்றும் ஏர் இந்தியா ஆகிய இரு நிறுவனங்களும் இணைந்து சுமார் 90% பங்கைக் கொண்டுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8ad1de41-cae5-41b0-8f46-4ae0c3250670/26-6a61c8854196d.webp' /></p><p> 

இந்த நிறுவனங்களின் சேவையில் சிறிய பாதிப்பு ஏற்பட்டாலும், இந்தியா முழுவதும் விமானபயணிகள் பாதிப்பை எதிர்கொள்ளும் நிலை உள்ளது. </p><p>

கடந்த ஆண்டு இண்டிகோ விமானசேவையில் ஏற்பட்ட பாதிப்பால், நாடு முழுவதும் பயணிகள் பாரிய சிக்கலை எதிர்கொண்டனர்.&nbsp;</p><p></p><p>

இதன் காரணமாக, விமான சேவையில் உள்ள இருமுனை ஆதிக்கத்தை கட்டுப்படுத்தி, புதிய விமான நிறுவனங்களின் வருகை மூலம் போட்டியை அதிகரிக்க மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. </p><h3> 

விமான நிறுவனம் தொடங்கும் அதானி?</h3><p> 

இந்நிலையில், இந்தியாவில் பல்வேறு துறைகளில் கோலாச்சி வரும் அதானி குழுமம், விமான நிறுவனம் தொடங்குவது குறித்து ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/205647fd-04ad-4413-b2cd-031192a3eede/26-6a61c885e4f93.webp' /></p><p>

அதானி ஏர்போர்ட் ஹோல்டிங்ஸ் லிமிடெட், அகமதாபாத், லக்னோ, மும்பை, குஜராத், ஜெய்ப்பூர், குவஹாத்தி, மங்களூரு, திருவனந்தபுரம் மற்றும் நவி மும்பை உள்ளிட்ட 8 விமான நிலையங்களை இயக்கி வருகிறது. </p><p>

மேலும், மும்பை சர்வதேச விமான நிலைய லிமிடெட்டில் 73% பங்குகளையும், நவி மும்பை சர்வதேச விமான நிலைய லிமிடெட்டில் 74% பங்குகளையும் கொண்டுள்ளது.&nbsp;</p><p></p><p>

இதே போல், ஜிஆர்எம் நிறுவனம் டெல்லி, ஹைதராபாத், கோவாவில் உள்ள மனோகர் சர்வதேச விமான நிலையம், பீதர் மற்றும் நாக்பூர் ஆகிய விமான நிலையங்களை இயக்கி வருவதோடு, போகபுரத்தில் புதிய விமான நிலையத்தை கட்டி வருகிறது.
</p><p>
தற்போதுள்ள விதிமுறைகள், விமான நிலையங்களை இயக்கும் நிறுவனங்கள், விமான நிறுவனத்தில் 10% க்கும் அதிகமான பங்குகளை வைத்திருப்பதைத் தடுக்கின்றன.</p><p>

இந்நிலையில், இந்த விதியில் திருத்தம் கொண்டு வர மத்திய அரசை அதானி குழுமம் அணுகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.&nbsp;</p><p> 

இதன் காரணமாக, அதானி குழுமம் விமான நிறுவனத்தை தொடங்க வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
</p><p>
அதேவேளையில், விமான நிலையங்கள் நிர்வகிக்கும் நிறுவனங்கள், விமான சேவையை தொடங்கினால் விமானங்கள் புறப்படும் மற்றும் தரையிறங்கும் நேரங்களை தங்களுக்கு சாதகமாக மாற்றிக்கொள்ளும் என விமான சேவை நிறுவனங்கள் இந்த திருத்தத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கும். </p><p>

அவ்வாறு விதிகள் திருத்தப்பட்டால், விமான நிலைய மற்றும் விமான சேவை நிறுவனங்களின் வணிகங்களுக்கு இடையே ஒரு நடுநிலையான உறவைப் பேணுவதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் அறிமுகப்படுத்தப்படும்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-23T08:30:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[பணமோசடி வழக்கு!! நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறை தண்டனை?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/one-year-jail-sentence-for-actor-vimal-1784796180"></link>
            <id>https://viduppu.com/article/one-year-jail-sentence-for-actor-vimal-1784796180</id>
            <summary type="text">நடிகர் விமல்தமிழ் சினிமாவில் டாப் நடிகராக திகழ்ந்து வருபவர் தான் நடிகர் விமல். சமீபத்தில் அவர் நடிப்பில் வேதம் படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்ற...</summary>
            <content type="html"><![CDATA[<h2>நடிகர் விமல்</h2><p>தமிழ் சினிமாவில் டாப் நடிகராக திகழ்ந்து வருபவர் தான் நடிகர் விமல். சமீபத்தில் அவர் நடிப்பில் வேதம் படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது. இந்நிலையில் மன்னர் வகையறாபட தயாரிப்புக்காக ரூ. 4.5 கோடி கடனாக பெற்று அதை திரும்பி கொடுக்காததால் வழக்கு போடப்பட்டது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ad28a3f8-7566-4733-b38a-fc4458f68d5e/26-6a61d417127ee.webp' /></p><p>காசோலை மோசடி வழக்கில் விமலுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து சென்னை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மன்னர் வகையறா படத்திற்காக பைனான்சியர் கோபியிடம் 4.5 கோடி ரூபாய் கடனாக பெற்றுள்ளார். அதன்பின் அந்த தொகையை விமர் காசோலையாக கொடுத்துள்ளார். இந்த காசோயை கோபி வங்கியில் செலுத்தியபோது, கணக்கில் பணம் இல்லை என்று திரும்பி வந்துள்ளது.</p><p> இதையடுத்து ரூ. 4.5 கோடி செக் மோசடி வழக்கை நடிகர் விமல் மீது பைனான்சியர் கோபி சென்னையிலுள்ள 11வது சிறு வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். </p><p>இந்த வழக்கு விசாரணைக்காக விமல் ஏற்கனவே நீதிமன்றத்தில் ஆஜரானப்பின் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. பைனான்சியர் தரப்பு வக்கீல் ஆர் வெங்கடேஷ் ஆஜராஜி வாதிட்டார்.</p><p></p><p> இன்று இவ்வழக்கு விசாரணைக்கு வந்துள்ளது. விமலுக்கு எதிராக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் நிரூபிகப்பட்டதில், அவருக்கு ஓர் ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கிறேன், வாங்கிய தொகையை திருப்பி கொடுக்க வேண்டும் என்று நீதிபதி கூறியிருக்கிறார். </p><p>இந்த தீர்ப்பு வழங்கும்போது நடிகர் விமல் கோர்ட்டில் ஆஜராஜியிருந்தார். அவர் தரப்பில் மேல்முறையீடு செய்யவுள்ளதாகவும், அதுவரை தண்டனையை நிறுத்தி வைக்கவும் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டார்.</p>]]></content>
            <updated>2026-07-23T08:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிளாமரான குட்டை உடையில் நடிகை ஐஸ்வர்யா மேனன் வெளியிட்ட போட்டோஸ்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/actress-iswarya-menon-short-dress-photos-1784794073"></link>
            <id>https://cineulagam.com/article/actress-iswarya-menon-short-dress-photos-1784794073</id>
            <summary type="text">ஐஸ்வர்யா மேனன்மாடலிங் துறையில் இருந்து சினிமாவிற்கு வந்து கலக்கிய நடிகைகளில் பலர் உள்ளனர், அதில் ஒருவர் தான் நடிகை ஐஸ்வர்யா மேனன். கடந்த 2012ம் ஆண்டு ...</summary>
            <content type="html"><![CDATA[<h2>ஐஸ்வர்யா மேனன்</h2><p>மாடலிங் துறையில் இருந்து சினிமாவிற்கு வந்து கலக்கிய நடிகைகளில் பலர் உள்ளனர், அதில் ஒருவர் தான் நடிகை ஐஸ்வர்யா மேனன். </p><p>கடந்த 2012ம் ஆண்டு காதலில் சொதப்புவது எப்படி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அடியெடுத்து வைத்தார். </p><p>அதன்பின் ஆப்பிள் பெண்ணே, தீயா வேலை செய்யணும் குமாரு போன்ற படங்களில் நடித்தவர் தமிழை தாண்டி கன்னடம், மலையாளம் மொழிகளிலும் படங்கள் நடித்துள்ளார். </p><p>இவர் அண்மையில் குட்டை உடையில் கிளாமர் போட்டோ ஷுட் நடத்திய புகைப்படங்களுக்கு செம லைக்ஸ் குவிந்து வருகிறது.</p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-23T08:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானை அதிரவைத்த அமெரிக்காவின் 12வது சுற்று தாக்குதல்: தகர்க்கப்பட்ட போர் விமானங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/us-military-complete-12-consecutive-night-strikes-1784791745"></link>
            <id>https://ibctamil.com/article/us-military-complete-12-consecutive-night-strikes-1784791745</id>
            <summary type="text">ஈரானின் கடல்சார், ஏவுகணை, ட்ரோன் சேமிப்பு மற்றும் வான் பாதுகாப்பு இலக்குகள் மீது 12-வது நாளாக அமெரிக்கா தீவிர தாக்குதல் நடத்தியதாக மத்திய கட்டளைப் பிர...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானின் கடல்சார், ஏவுகணை, ட்ரோன் சேமிப்பு மற்றும் வான் பாதுகாப்பு இலக்குகள் மீது 12-வது நாளாக அமெரிக்கா தீவிர தாக்குதல் நடத்தியதாக மத்திய கட்டளைப் பிரிவு தெரிவித்துள்ளது.</p><p>இந்தத் தாக்குதல்கள் ஈரானை பலவீனப்படுத்த செய்யபட்டவை என&nbsp;அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவால் தெரிவிக்கபட்டுள்ளது. </p><p>ஈரான் தனது கடற்படை முற்றுகையை மீண்டும் தொடங்கியுள்ள நிலையில், இந்த மாதம் முழுவதும்&nbsp; ஈரானிய இராணுவத் தளங்களை அமெரிக்கப் படைகள் குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது.&nbsp;</p><p></p><h2>அமெரிக்காவின் 12வது சுற்று தாக்குதல்</h2><p>
</p><p>இதனால் அமெரிக்கப் படைகள் ஒன்பது வர்த்தகக் கப்பல்களை வேறு திசைக்குத் திருப்பிவிட்டதாகவும், ஒன்றைக் செயலிழக்கச் செய்துள்ளதாகவும் அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு தெரிவித்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/108f7c7f-fe51-418b-8d89-1fd2d268c98d/26-6a61ce0eb88d6.webp' /></p><p>
</p><p>மேலும் 50,000-க்கும் மேற்பட்ட அமெரிக்கப் படை வீரர்கள் மத்திய கிழக்கு முழுவதும் தொடர்ந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.</p><p>இந்நிலையில் அமெரிக்கா மேற்கொண்டு வரும் தாக்குதலுக்கு பதிலடியாக, மத்திய கிழக்கின் பல நாடுகளில் உள்ள அமெரிக்க இராணுவத்தளங்கள் மற்றும் வசதிகளை குறிவைத்து ஈரானும் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது.
</p><p>
பெப்ரவரியில் தொடங்கிய போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் பாகிஸ்தானின் மத்தியஸ்தத்தில் அமெரிக்காவும் ஈரானும் ஜூன் மாதத்தில் கட்டமைப்பு அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. </p><p>எனினும், அந்த ஒப்பந்தத்திற்குப் பின்னரும் இரு தரப்பினருக்கும் இடையிலான போர் மற்றும் தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-23T08:29:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[2 இலட்சம் இலங்கையர்களுக்கு வெளிநாட்டில் வேலைவாய்ப்பு - பொதுமக்களுக்கு வெளியான அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/250-000-sri-lankans-find-employment-abroad-1784794429"></link>
            <id>https://tamilwin.com/article/250-000-sri-lankans-find-employment-abroad-1784794429</id>
            <summary type="text">2026ஆம் ஆண்டில் 250,000 இலங்கையர்களுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை வழங்க இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் திட்டமிட்டுள்ளது. 

இந்த வேலைவாய்...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026ஆம் ஆண்டில் 250,000 இலங்கையர்களுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை வழங்க இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் திட்டமிட்டுள்ளது. </p><p>

இந்த வேலைவாய்ப்புகள், இலங்கை அரசாங்கம் மற்றும் பணியகத்தின் பதிவு செய்யப்பட்ட வேலைவாய்ப்பு முகவர் நிறுவனங்கள் மூலம் இலங்கையர்களுக்கு வழங்கப்படும் என்றும் பணியகம் தெரிவித்துள்ளது.</p><p></p><p> </p><h2>


மத்திய கிழக்கில் அதிகரித்த போர் பதற்றம்</h2><p>
மத்திய கிழக்கில் நிலவும் இராணுவச் சூழல் காரணமாக, வேலைவாய்ப்புக்காக வெளிநாடு செல்லும் இலங்கையர்களின் எண்ணிக்கையில் சற்றுக் குறைவு ஏற்பட்டிருந்தாலும், அதிக ஊதியம் தரும் வேலைகளுக்காகப் பாதுகாப்பான இடங்களுக்குத் தொழிலாளர்களை வழிநடத்த பணியகம் நடவடிக்கை எடுத்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c2497ab2-9eec-4734-b7d3-830406f40d14/26-6a61cfcd46b53.webp' /></p><p> 

இதற்கமைய, 2026ஆம் ஆண்டில் இதுவரை 143,087 இலங்கையர்கள் வேலைவாய்ப்புக்காக வெளிநாடு சென்றுள்ள நிலையில், இவர்களில் 92,590 பேர் ஆண் தொழிலாளர்கள் மற்றும் 50,497 பேர் பெண் தொழிலாளர்கள் உள்ளடங்குகின்றனர். </p><h2>


அந்நிய செலாவணி அதிகரிப்பு</h2><p>


இதற்கிடையில், இலங்கைத் தொழிலாளர்களின் விருப்பமான இடமான இஸ்ரேலுக்கு 14,000 தொழிலாளர்களை அனுப்ப பணியகம் திட்டமிட்டு, இதுவரை அவர்களில் 7,873 பேர் வேலைக்குச் சென்றுள்ளனர். </p><p>

அத்துடன், 8,000 தொழிலாளர்களை தென் கொரியாவிற்கு அனுப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p> </p><p>இதுவரை 4,794 பேர் அங்கு பணிக்குச் சென்றுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e32d12c6-fdbb-4e10-bdd3-7004216f0129/26-6a61cfcdecbde.webp' /></p><p>

 பணியகத் தரவுகளின்படி, 2026 ஆம் ஆண்டில் இதுவரை 73,623 தொழிலாளர்கள் திறன் சார்ந்த பணிகளுக்காகவும், 69,494 தொழிலாளர்கள் திறன்சாரா பணிகளுக்காகவும் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளனர். </p><p>

வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தொழிலாளர்கள், 2026 ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஜூன் வரையிலான ஆறு மாத காலத்தில் 4.6 பில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு அனுப்பியுள்ளதாகவும் தரவுகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-23T08:28:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவிற்கே ஆட்டம்... ரஷ்ய ராணுவத்திற்கு பெரும் பீதியை ஏற்படுத்திய உக்ரைன் Flamingo ஏவுகணை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/ukraine-flamingo-missile-fear-russian-military-1784788885"></link>
            <id>https://canadamirror.com/article/ukraine-flamingo-missile-fear-russian-military-1784788885</id>
            <summary type="text">&amp;nbsp;ரஷ்ய - உக்ரைன் போர் இன்னும் முடிவுக்கு வராத நிலையில், உக்ரைன், ‘ஃபயர் பாயிண்ட்’ (Fire Point) என்ற தனது உள்நாட்டு நிறுவனத்தின் மூலம் ‘எஃப்.பி-5 ஃ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;ரஷ்ய - உக்ரைன் போர் இன்னும் முடிவுக்கு வராத நிலையில், உக்ரைன், ‘ஃபயர் பாயிண்ட்’ (Fire Point) என்ற தனது உள்நாட்டு நிறுவனத்தின் மூலம் ‘எஃப்.பி-5 ஃப்ளமிங்கோ’ (FP-5 Flamingo) தொலைதூரக் ஏவுகணையை ரகசியமாக உருவாக்கி உள்ளமை ரஷ்ய ராணுவத் தளபதிகளுக்குப் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
</p><p>
 சுமார் 3,000 கிலோமீட்டர் தூரம் வரை பாய்ந்து சென்று தாக்கும் திறன் கொண்ட இந்த ஏவுகணைகளின் சோதனைக் மாதிரிகள் பிரகாசமான ‘இளஞ்சிவப்பு’ (Pink) நிறத்தில் வண்ணம் தீட்டப்பட்டிருந்ததால், இது ‘பிங்க் ஃப்ளமிங்கோ’ என அழைக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bae922d7-2e36-449b-980f-fe40e659e119/26-6a61b796c2df2.webp' /></p><h2>அமெரிக்காவிற்கே&nbsp; ஆட்டம்...</h2><p>
</p><p>
இந்த ஏவுகணையின் மிகவும் வியப்பூட்டும் அம்சம் என்னவென்றால், இதன் என்ஜின்கள் குப்பைக்கிடங்குகளிலிருந்தும் பயன்படுத்தப்படாத பழைய பழைய கடையிருப்புகளிலிருந்தும் சேகரிக்கப்பட்டவை . </p><p>

சோவியத் காலத்தில் உற்பத்தி செய்யப்பட்டுப் பயன்பாடின்றி வீசப்பட்ட ‘இவ்செங்கோ ஏஐ-25’ (Ivchenko AI-25) ரக டர்போஃபேன் என்ஜின்களை உக்ரேனியப் பொறியாளர்கள் தேடிக் கண்டுபிடித்து, அவற்றில் மலிவான உதிரிபாகங்களைப் பொருத்தி, ஏவுகணையில் இயங்கும் வகையில் வெற்றிகரமாக மாற்றியமைத்துள்ளனர்.</p><p>


அமெரிக்காவின் புகழ்பெற்ற ‘டொமஹாக்’ (Tomahawk) ஏவுகணையை விட இரண்டு மடங்கு அதிக எடையுள்ள (சுமார் 1,150 கிலோ) வெடிபொருட்களைச் சுமந்து செல்லும் திறன் கொண்ட இந்த ஃப்ளமிங்கோ ஏவுகணைகள், தயாரிப்புச் செலவில் டொமஹாகை விட ஐந்து மடங்கு மலிவானவை என கூறப்படுகின்றது.
</p><p>
சிக்கலான அமைப்புகள் எதுவுமின்றி மிக எளிமையான ஃபைபர் கிளாஸ் மற்றும் பிளாஸ்டிக் உடற்பகுதியைக் கொண்டு தயாரிக்கப்படும் இந்த ஏவுகணைகளை, உக்ரைன் ராணுவம் எவ்வித மேற்கத்திய நாடுகளின் அனுமதியுமின்றி ரஷ்ய நிலப்பரப்பிற்குள் மிக ஆழமாகப் பாய்ச்சி வருகிறது.
</p><p>
ரஷ்யாவின் வோல்கோகிராட் மற்றும் செபோக்சரி ஆகிய பகுதிகளில் அமைந்திருந்த முக்கிய ராணுவ ஆயுத உற்பத்தி ஆலைகள் மற்றும் போர் விமான உதிரிபாகத் தொழிற்சாலைகள் மீது இந்த ஃப்ளமிங்கோ ஏவுகணைகள் வெற்றிகரமாகத் தாக்குதல் நடத்தி அழித்துள்ளதை உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி உறுதிப்படுத்தியுள்ளார்.</p><p> 

இந் நிலையில் குப்பையிலிருந்து மீட்கப்பட்ட தொழில்நுட்பத்தைக் கொண்டு ரஷ்யாவின் ஆழமான ராணுவ அமைப்புகளை உக்ரைன் துல்லியமாகத் தாக்கி வருவது, சர்வதேச ராணுவ வல்லுநர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-23T08:24:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹோமாகம தொழிற்சாலையில் தீ விபத்தில் உயிரிழந்த யுவதி தொடர்பில் வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/fire-accidents-in-the-factory-homagama-1784790683"></link>
            <id>https://tamilwin.com/article/fire-accidents-in-the-factory-homagama-1784790683</id>
            <summary type="text">ஹோமாகம, கட்டுவான பகுதியில் தலைக்கவசம் தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த யுவதி தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நேற்று முன...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹோமாகம, கட்டுவான பகுதியில் தலைக்கவசம் தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த யுவதி தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
</p><p>
நேற்று முன்தினம் (21) காலை தொழிற்சாலையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் ஐவர் உயிரிழந்த நிலையில், அவர்களின் உடல்கள் அடையாளம் காணமுடியாத அளவு தீயில் எரிந்திருந்தன.</p><p></p><h2>பரிசோதனை முடிவுகள்</h2><p>
</p><p>
இதனையடுத்து ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் மரபணு பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன், பரிசோதனை முடிவுகள் வெளியாவதற்கு ஐந்து நாட்கள் வரை செல்லலாம் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/94463200-3018-4a30-8f64-9a7ac1bf3265/26-6a61c9dbbbdbe.webp' /></p><p>இந்த தீ விபத்தில் பன்னிப்பிட்டியவை சேர்ந்த 55 வயதுடைய மரியோ எட்வர்ட், தெனியாயவைச் சேர்ந்த 19 வயதுடைய சஹன் உதார, அவரது நண்பரான அதே பகுதியைச் சேர்ந்த கமகே திலீப் மதுசங்க (வயது 19) , அட்டகலம்பன்ன பகுதியை சேர்ந்த 24 வயதுடைய சச்சின் தில்ஷான், ஹட்டன் - மஸ்கெலியாவை சேர்ந்த 26 வயதுடைய வரதராஜ் தமயந்தி ஆகியோர் உயிரிழந்திருந்தனர்.</p><p>
இந்நிலையில், 26 வயதான வரதராஜன் தமயந்தியின் உடல் இன்று ( 23) ஆம் திகதி அதிகாலை 3:00 மணியளவில் அவரது இல்லத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
</p><p>
குடும்பத்தில் இரண்டாவது பிள்ளையான வரதராஜன் தமயந்தியின் குடும்பத்தில், மூத்த சகோதரர் ஒருவர் மற்றும் இரண்டு இளைய சகோதரர்கள், பெற்றோர் உள்ளடங்களாக ஆறு பேர் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><h2>குடும்பத்தின் நிதி நெருக்கடி</h2><p>
அவரது தந்தை தோட்டத்தொழிலாளி என்றும், குடும்பத்தின் நிதி நெருக்கடி காரணமாக, அவர் ஆறு மாதங்களுக்கு முன்பு ஹோமாகம தலைக்கவச தொழிற்சாலையில் பணியில் சேர்ந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/be58f707-6d7f-4f4b-8d93-9161aa6341b2/26-6a61c9db18c0f.webp' />&nbsp;&nbsp;</p><p>சிங்கள, தமிழ் புத்தாண்டுக்காக இரண்டு நாட்கள் விடுப்பில் அவர் கடைசியாக வீட்டிற்கு சென்று மீண்டும் பணிக்கு திரும்பியதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.</p><p>
இந்நிலையில், அவரது இறுதிச்சடங்குகள் இன்று ( 23) தோட்ட பொது மயானத்தில் நடைபெறவுள்ளதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-23T08:19:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கறுப்பு ஜீலையில் பலியான தமிழ் மக்களுக்குப் பொது நினைவுச்சின்னம் அமைக்கப்பட வேண்டும் - ஐங்கரநேசன் கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/black-july-p-ayngaranesan-statement-1784793164"></link>
            <id>https://tamilwin.com/article/black-july-p-ayngaranesan-statement-1784793164</id>
            <summary type="text">ஈழத்தமிழ் மக்களின் வரலாற்றுப் பேரவலத்தில் ஒன்றான கறுப்பு ஜீலை இனக்கலவரம்
அரங்கேறி 43 ஆண்டுகள் நிறைவடைகின்றன, இத்தனை ஆண்டுகளைக் கடந்தும் இதுவரையில்
1...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈழத்தமிழ் மக்களின் வரலாற்றுப் பேரவலத்தில் ஒன்றான கறுப்பு ஜீலை இனக்கலவரம்
அரங்கேறி 43 ஆண்டுகள் நிறைவடைகின்றன, இத்தனை ஆண்டுகளைக் கடந்தும் இதுவரையில்
1983 ஜீலையில் படுகொலை செய்யப்பட்ட எமது உறவுகளின் நினைவாக ஒரு முறையான
நினைவுச்சின்னம் அமைக்கப்படாமல் இருப்பது பெரும் வரலாற்றுத் தவறு ஆகும் என தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். </p><p>இது
இறந்த காலத்தை நினைத்து அழுவதற்கானது அல்ல இது ஆக்கிரமிப்புக்கு எதிரான
எதிர்கால போராட்டத்தின் ஒரு வடிவமும் ஆகும். அந்த வகையில் 2027 ஜீலைக்கு
முன்னதாகவாவது 1983 இனக் கலவரத்தில் படுகொலை செய்யப்பட்ட அனைத்துத் தமிழ்
மக்களையும் நினைவுகூரும் வகையில் பொது நினைவுச்சின்னம் ஒன்று அமைக்கப்படல்
வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p>ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தனது கோரிக்கையை
முன்வைத்துள்ளார்.</p><h2>திட்டமிடப்பட்ட ஓர் இனப்படுகொலை</h2><p> </p><p>ஊடக அறிக்கையில் மேலும்,

1983 ஜீலையில் நிகழ்ந்தது இரு சமூகங்களுக்கிடையே வெடித்த ஒரு சாதாரண கலவரம்
அல்ல. அது, அப்போதைய பேரினவாத அரசாங்கத்தின் முழுமையான ஆசீர்வாதத்தோடும்,
அனுசரணையோடும் அரச இயந்திரங்களையும், வாக்காளர் பட்டியல்களையும் பயன்படுத்தித்
தமிழ் மக்களை இனங்கண்டு மிகத் துல்லியமாக நடாத்தப்பட்ட திட்டமிடப்பட்ட ஓர்
இனப்படுகொலை ஆகும்.</p><p> </p><p>கொழும்பில் ஆரம்பித்துத் தென் இலங்கையின்
பிறபகுதிகளுக்கும் மலையகத்துக்கும் பரவிய பேரினவாத வெறியாட்டத்தில்
வெலிக்கடைச் சிறையில் கைதிகளாக இருந்த 53 பேர் உட்பட 3000 தமிழர்கள் வரையில்
படுகொலை செய்யப்பட்டார்கள்.

ஜீலை இனக்கலவரம் தமிழ் மக்களின் உயிர்களை மாத்திரம் பலியெடுக்கவில்லை.</p><p></p><p>
</p><p>அவர்களின் வீடுகள், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் அனைத்தும் திட்டமிட்டுத்
தீக்கிரையாக்கப்பட்டன. ஈழத்தமிழர்கள் பொருளாதார ரீதியாகத் தற்சார்பு அடைந்து
விடக்கூடாது என்பதற்காகத் தமிழர்களின் பல தசாப்தகாலப் பொருளாதாரக்
கட்டமைப்புகள் ஒரே வாரத்துக்குள் முற்றாகச் சிதைக்கப்பட்டன. தமிழ் மக்கள்
வெறும் கையினர்களாக அங்கிருந்து கப்பலில் ஏற்றி யாழ்ப்பாணத்துக்கு
அனுப்பிவைக்கப்பட்டார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/120c21a0-fe31-42d3-ae79-2b3d9c55f282/26-6a61ce1fcfba5.webp' /></p><h2>வரலாற்றுப் பேரவலம்</h2><p> இந்த வரலாற்றுத் துயரங்களை மறப்போம் மன்னிப்போம்
என்று கூறிவிட்டு நாம் கடந்து செல்ல முடியாது.

எமது நெஞ்சில் ஆறாத வடுவாக இருக்கும் இந்த வரலாற்றுப் பேரவலத்தின்
பின்னணியையும், அதன் மூலம் தமிழ் இனம் கற்றுக்கொண்ட அரசியல் பாடங்களையும் எமது
அடுத்த தலைமுறைகளுக்குக் கடத்துவது முதன்மையான தேசியக் கடமையாகும். </p><p>இந்த
வரலாற்றுக் கடத்துகைக்கு நினைவேந்தல்களும், நினைவுச் சின்னங்களும் அவசியமானவை
ஆகும். எனவே, கறுப்பு ஜீலையில் எமது இனம் இழந்த உயிர்களின் சாட்சியாகவும்,
எமது தேசிய விடுதலைப் பயணத்தின் வழிகாட்டியாகவும் பொருத்தமானதொரு இடத்தில்
1983 கறுப்பு ஜீலை நினைவுச்சின்னம் நிறுவப்படல் வேண்டும் என்றும்
குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-23T08:18:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பு துறைமுக நகரில் சீன நாட்டவர்களிடையே மோதல்! துப்பாக்கியொன்றும் மீட்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/clashes-between-chinese-groups-in-port-city-1784789071"></link>
            <id>https://ibctamil.com/article/clashes-between-chinese-groups-in-port-city-1784789071</id>
            <summary type="text">புதிய இணைப்புகொழும்பு துறைமுக நகரில் ஒரு வாகனத்தைச் சோதனையிட்டதில், ஒரு கைத்துப்பாக்கி மற்றும் ஒரு தகவல் தொடர்பு சாதனம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரி...</summary>
            <content type="html"><![CDATA[<h3>புதிய இணைப்பு</h3><p>கொழும்பு துறைமுக நகரில் ஒரு வாகனத்தைச் சோதனையிட்டதில், ஒரு கைத்துப்பாக்கி மற்றும் ஒரு தகவல் தொடர்பு சாதனம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>

</p><p>குறித்த பகுதியில் இரு சீனக் குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலை தொடர்ந்து மேற்படி துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.</p><p>கொழும்பு துறைமுகக் காவல்துறையினர் இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.</p><h3>முதலாம் இணைப்பு</h3><p>கொழும்பு துறைமுக நகரில் இரு சீனக் குழுக்களுக்கு இடையே மோதல் ஒன்று வெடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
 குறித்த மோதலில் இருவர் காயமடைந்துள்ளதாகவும், மற்றொரு சீன நாட்டவர் கடத்தப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
</p><p>
காவல்துறையின் தகவல்படி, இந்த மோதல் இன்று(23) அதிகாலை கொழும்பு துறைமுக நகரப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.</p><p></p><h2>விரிவான விசாரணை</h2><p>

இந்த நிலையில், மோதலின் போது இருவர் காயமடைந்ததையடுத்து, சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8e214f34-0195-4038-a9e3-21fe8c5f3039/26-6a61bb403f579.webp' /></p><p>
</p><p>
அத்தோடு, சம்பத்தில் ​​மற்றொரு சீன நாட்டவரும் கடத்தப்பட்டிருபப்தாக கூறப்படும் நிலையில், கொழும்பு துறைமுகப் காவல்துறையினர் இது தொடர்பான விரிவான விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-23T08:18:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Manchu</name>
            </author>
            <title type="text"><![CDATA[Today Gold Rate: அதிர்ச்சி கொடுத்த தங்கத்தின் விலை... இன்று சவரன் எவ்வளவு?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/gold-rate-july-23-2026-india-and-srilanka-1784794692"></link>
            <id>https://manithan.com/article/gold-rate-july-23-2026-india-and-srilanka-1784794692</id>
            <summary type="text">ஆபரணத் தங்கத்தின் விலை அடுத்தடுத்து தாறுமாறாக அதிகரித்துள்ளது பாமர மக்களிடையே அதிர்ச்சியடைய வைத்துள்ளது.இன்றைய தங்கம் விலை
ஆபரணத் தங்கத்தின் விலை தொட...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஆபரணத் தங்கத்தின் விலை அடுத்தடுத்து தாறுமாறாக அதிகரித்துள்ளது பாமர மக்களிடையே அதிர்ச்சியடைய வைத்துள்ளது.</p><h2>இன்றைய தங்கம் விலை
</h2><p>ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து சில தினங்களாக குறைந்து வந்த நிலையில், இன்று சவரனுக்கு 560 ரூபாய் அதிகரித்துள்ளது. நேற்றைய தினத்தில் கிராம் ரூ 13,430 ஆகவும் சவரன், ரூ.1,07,440 ஆகவும் இருந்து வந்தது.</p><p></p><p>
</p><p>
இந்நிலையில் சென்னையில் இன்று 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.70 அதிகரித்து, 13,500 ரூபாயாகவும், சவரனுக்கு ரூபாய் 560 அதிகரித்து, 1,08,000 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது.
</p><p>ஆனால் வெள்ளியின் விலையில் எந்தவொரு மாற்றமும் இல்லாமல் இருக்கின்றது. இன்று கிராமுக்கு ரூ. 245.00ஆகவும், கிலோவிற்கு ரூ.2,45,000 ஆகவும் விற்கப்பட்டு வருகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bb297217-5027-4a9a-a9b6-42f10471a954/26-6a61ce465ddd3.webp' /></p><p>
</p><h2>
இலங்கையில் தங்கம் விலை
</h2><p>இலங்கையிலும் ஆபரணத்தங்கத்தின் விலை குறைந்துள்ளது. இன்று 24 காரட் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.3,73,200 அதுவே கிராமிற்கு ரூ.46,650க்கு விற்கப்படுகின்றது.
</p><p>
மேலும் 22 காரட் தங்கத்தின் விலை ரூ. 3,42,160க்கும் ஒரு கிராமிற்கு ரூ. 42,770க்கு விற்கப்படுகின்றது.
</p><p>
இலங்கையில் வெள்ளியின் விலை ஒரு கிராமிக்கு&nbsp;641.73 LKR என்றும் ஒரு அவுன்ஸ 19,959.90 LKR என்று விற்பனை ஆகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/042476ec-82da-491a-be46-139305eba326/26-6a61ce4717258.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td><i>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன்<a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள் <a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"><b>FOLLOW NOW</b></a>&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;&nbsp;</i><br></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-23T08:18:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[தேசபந்து தென்னகோன் அடிப்படை உரிமைகளை மீறியதாக உயர் நீதிமன்றம் தீர்ப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/high-court-rules-that-deshabandhu-fundamental-1784794468"></link>
            <id>https://jvpnews.com/article/high-court-rules-that-deshabandhu-fundamental-1784794468</id>
            <summary type="text">கடந்த 2022ஆம் ஆண்டு “காலிமுகத்திடல்” போராட்டத்தின் போது சமூக செயற்பாட்டாளரான அனுருத்த பண்டாரவைக் கைது செய்து தடுத்து வைத்ததன் மூலம், மேல் மாகாணத்துக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>கடந்த 2022ஆம் ஆண்டு “காலிமுகத்திடல்” போராட்டத்தின் போது சமூக செயற்பாட்டாளரான அனுருத்த பண்டாரவைக் கைது செய்து தடுத்து வைத்ததன் மூலம், மேல் மாகாணத்துக்குப் பொறுப்பாக இருந்த முன்னாள் சிரேஷ்ட பிரதி காவல்துறை மாஅதிபர் தேசபந்து தென்னகோன் மற்றும் கொழும்பு வடக்கு விசேட விசாரணைப் பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரி நளின் ஸ்ரீயந்த ஆகியோர் அவரது அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.</p><p></p><p>

சமூகச் செயற்பாட்டாளர் அனுருத்த பண்டாரவினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட போதே உயர் நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ba6c1eee-b4ef-46fd-90a3-8a45ebe54d50/26-6a61cd65dfa4c.webp' /></p>]]></content>
            <updated>2026-07-23T08:14:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[இரண்டு நாட்களுக்கு நீர் விநியோகம் நிறுத்தம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/two-day-water-cut-1784792438"></link>
            <id>https://tamilwin.com/article/two-day-water-cut-1784792438</id>
            <summary type="text">தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்புச் சபை பல பகுதிகளில் நீர் விநியோகம் நிறுத்தம் செய்வது குறித்து அறிவிப்பு ஒன்றை&amp;nbsp; வெளியிட்டுள்ளது.

இந்...</summary>
            <content type="html"><![CDATA[<p>தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்புச் சபை பல பகுதிகளில் நீர் விநியோகம் நிறுத்தம் செய்வது குறித்து அறிவிப்பு ஒன்றை&nbsp; வெளியிட்டுள்ளது.
</p><p>
இந்த நீர் விநியோகத்&nbsp;தடை திகன மற்றும் மெனிகின்ன பகுதிகளுக்கு நீர் விநியோகம் நிறுத்தப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
</p><p></p><h2>அத்தியாவசியப் பராமரிப்புப் பணிகள்&nbsp;</h2><p>
அந்த அறிவிப்பின்படி, இன்று (23ஆம் திகதி) காலை 8.30 மணி முதல் 25ஆம் திகதி வரை 48 மணி நேரத்திற்கு நீர் விநியோகம் நிறுத்தப்படும்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/93e34228-3f23-4280-a92b-36651d2c9a9c/26-6a61cc34015a1.webp' /></p><p>
இதற்கிடையில், அப்பகுதிகளில் அத்தியாவசியப் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் நீர் விநியோகம் தடைப்படுவதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்புச் சபை தெரிவித்துள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-23T08:14:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[பெருவில் வீடொன்றில் பயங்கர தீ: 5 குழந்தைகள் உட்பட 10 பேர் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/peru-residential-fire-10-dead-1784794013"></link>
            <id>https://news.lankasri.com/article/peru-residential-fire-10-dead-1784794013</id>
            <summary type="text">பெருவில் உள்ள வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.வீடொன்றில் பயங்கர தீபெரு தலைநகர் லீமாவில் உள்ள வீடு ஒன்றில் அதிகாலை ஏற்பட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>பெருவில் உள்ள வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.</p><h2>வீடொன்றில் பயங்கர தீ</h2><p>பெரு தலைநகர் லீமாவில் உள்ள வீடு ஒன்றில் அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் 5 குழந்தைகள் மற்றும் 5 பெரியவர்கள் என மொத்தம் 10 பேர்&nbsp; பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.</p><p> லீமாவின் லா விக்டோரியா மாவட்டத்தில் உள்ள குடியிருப்பு பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் இந்த கோர சம்பவமானது அரங்கேறியுள்ளது.</p><p> குடிமை பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்த தகவலின் படி, இந்த சம்பவத்தில் மேலும் 2 பேர் காயமடைந்து இருப்பதாக தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4ca80c6e-47d3-4909-95d1-7aba020f3a50/26-6a61cb9ead826.webp' /></p><p> சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு அதிகாரிகள் தீயை கட்டுப்படுத்த தீவிர முயற்சியில் ஈடுபட்டனர்.&nbsp;
மேலும் முதற்கட்ட விசாரணையில், தீ விபத்து ஏற்பட்ட பகுதியில் இருந்த எரியக்கூடிய மற்றும் அங்கு நிறுத்தப்பட்டிருந்த மின்சார வாகனங்கள் காரணமாக தீ மிகவும் வேகமாக பரவியது என தெரியவந்துள்ளது.</p><p></p><p> தீ விபத்தில் 10 பேர் வரை உயிரிழந்ததை அடுத்து பாதிக்கப்பட்ட பகுதியை பெரு ஜனாதிபதி கெய்கோ கியூமோரி பார்வையிட்டார்.</p><p> தீ விபத்துக்கான மூல காரணத்தை கண்டறிய சூழ்நிலைகள் மற்றும் காரணங்களை முழுமையாக கண்டறிய விசாரணை தீவிரமாக நடைபெற்று வருவதாக காவல்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p>&nbsp;<br></p>]]></content>
            <updated>2026-07-23T08:07:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கோட்டாபய ராஜபக்ஷ நீதிமன்றத்தில் ஆஜர்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/gotabaya-rajapaksa-appears-court-of-appeal-1784794126"></link>
            <id>https://jvpnews.com/article/gotabaya-rajapaksa-appears-court-of-appeal-1784794126</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp; முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, தனது கைது மற்றும் தடுப்புக்காவலைத் தடுக்கும் உத்தரவு கோரி தாக்கல் செய்துள்ள ரிட் மனு மீதான மேலதிக பர...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp; முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, தனது கைது மற்றும் தடுப்புக்காவலைத் தடுக்கும் உத்தரவு கோரி தாக்கல் செய்துள்ள ரிட் மனு மீதான மேலதிக பரிசீலனை இன்று (23) மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் நடைபெறவுள்ளது.
</p><p>


இதற்கமைய, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சற்று நேரத்திற்கு முன்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1d7cafa4-e57a-40de-9a02-6acf576104be/26-6a61cc0fd7373.webp' /></p><p>
</p><p>


இந்த மனு, மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி ரோஹந்த அபேசூரிய மற்றும் நீதிபதி சரத் திசாநாயக்க ஆகியோர் அடங்கிய அமர்வில் கடந்த 9ஆம் திகதி நான்காவது நாளாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, மேலதிக பரிசீலனைக்காக இன்று வரை ஒத்திவைக்கப்பட்டிருந்தது.</p><p></p><p>



கோட்டாபய ராஜபக்ஷவின் ரிட் மனு தொடர்பான மேலதிக விசாரணைகள் இன்று தொடரவுள்ளன.</p><p><iframe src="https://www.facebook.com/plugins/video.php?height=476&href=https%3A%2F%2Fwww.facebook.com%2Freel%2F901592169693205%2F&show_text=true&width=380&t=0" width="380" height="591" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share" allowFullScreen="true"></iframe></p>]]></content>
            <updated>2026-07-23T08:07:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[மிருகசீரிடம் நட்சத்திரத்தில் நுழையும் செவ்வாய்.., பணயோகத்தை பெறப்போகும் 3 ராசிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/3-zodiac-get-money-due-to-sevvai-transit-1784793653"></link>
            <id>https://news.lankasri.com/article/3-zodiac-get-money-due-to-sevvai-transit-1784793653</id>
            <summary type="text">நவகிரகங்களின் தளபதியாக செவ்வாய் பகவான் விளங்கி வருகின்றார்.

செவ்வாய் பகவான் தன்னம்பிக்கை, வீரம், விடாமுயற்சி, வலிமை உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நவகிரகங்களின் தளபதியாக செவ்வாய் பகவான் விளங்கி வருகின்றார்.
</p><p>
செவ்வாய் பகவான் தன்னம்பிக்கை, வீரம், விடாமுயற்சி, வலிமை உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார்.</p><p>

இந்நிலையில். செவ்வாய் ஜூலை 24ஆம் திகதியான நாளை மிருகசீரிடம் நட்சத்திரத்திற்குள் நுழையவுள்ளார்.&nbsp;</p><p> மேலும், செவ்வாய் இந்த நட்சத்திரத்தில் ஆகஸ்ட் 12 ஆம் தேதி வரை இருப்பார்.
</p><p>
அந்தவகையில், நாளை மிருகசீரிடம் நட்சத்திரத்தில் நுழையும் செவ்வாயால் குறிப்பிட்ட 3 ராசிகள் நற்பலன்களை பெறப்போகின்றனர்.&nbsp;</p><p></p><h2>மேஷம் </h2><ul><li>மங்களகரமானதாக இருக்கும். </li><li>தொழில் ரீதியாக நல்ல பலனைப் பெறுவார்கள்.</li><li> நிதி நிலைமை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும். </li><li>பணிபுரிபவர்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும்.</li><li>பதவி உயர்வு கிடைக்கும்.</li><li> தலைமைத்துவ திறன்கள் மேம்படும். </li><li>புதிய வழிகளில் பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கும்.</li><li> சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும். </li><li>புதிய வேலை யை தொடங்கினால் வெற்றி கிடைக்கும். </li><li>ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும்.</li></ul><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d1d80d6d-6c9d-49eb-9ce7-77cf3fb38e60/26-6a61ca3742f08.webp' /></p><h2>சிம்மம்</h2><ul><li>அதிர்ஷ்டம் பிரகாசிக்கும். </li><li>வேலையை மாற்ற நினைப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். </li><li>வியாபாரிகளுக்கு எதிர்பாராத அளவில் லாபம் கிடைக்கும்.</li><li>புதிய ஒப்பந்தங்கள் தேடி வரும்.</li><li> சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். </li><li>பணியிடத்தில் நல்ல செய்திகளைப் பெறக்கூடும். </li><li>சிலருக்கு நிதி நிலையில் நல்ல உயர்வு ஏற்படும்.</li></ul><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c0e7f856-c295-4c88-92e2-4de9905f9930/26-6a61ca37e67e1.webp' /></p><p>
</p><h2>விருச்சிகம் </h2><ul><li>தைரியம் அதிகரிக்கும். </li><li>முடிவெடுக்கும் திறனும் அதிகரிக்கும். </li><li>போட்டி தேர்வுகளில் மாணவர்கள் நல்ல வெற்றியைக் காண்பார்கள். </li><li>அலுவலகத்தில் உயர் அதிகாரிகளால்&nbsp; பாராட்டைப் பெறுவார்கள். </li><li>வெளிநாடு செல்லும் கனவு நனவாகும். </li><li>பரம்பரை சொத்துக்களால் நல்ல ஆதாயம் கிடைக்கும்.</li></ul><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6f262c58-b698-4325-81db-d99a0b4710ef/26-6a61ca3898ad0.webp' /></p><p>இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-23T08:01:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[500 பவுண் தங்கத்துடன் சிக்கிய 10 பேர்; பின்னணியில் திடுக்கிடும் தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/10-people-caught-with-500-sovereigns-of-gold-kandy-1784786356"></link>
            <id>https://jvpnews.com/article/10-people-caught-with-500-sovereigns-of-gold-kandy-1784786356</id>
            <summary type="text">&amp;nbsp; கண்டி, வத்தேகம - மடவளை பகுதியில் சுமார் 500 பவுண் தங்க மற்றும் பெருமளவான பணத்துடன் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் மேலும் பல&amp;nbs...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; கண்டி, வத்தேகம - மடவளை பகுதியில் சுமார் 500 பவுண் தங்க மற்றும் பெருமளவான பணத்துடன் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் மேலும் பல&nbsp; திடுக்கிடும்&nbsp; தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p>

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 3 கிலோ 930 கிராம் மொத்த எடையுடைய கொண்ட 4 தங்கம் பாளங்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், அவற்றுள் ஒரு தங்கம் பாளம் மாத்திரம் சுமார் 1 கிலோ 500 கிராம் எடையைக் கொண்டுள்ளதாக&nbsp; பொலிஸார்&nbsp; தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/00ee094b-4f4e-402d-a638-9edaf111c81b/26-6a61aeac96d24.webp' /></p><h2>&nbsp;சட்டவிரோதமான முறையில் கொண்டுவரப்பட்டிருக்கலாம்</h2><p>
</p><p>சந்தேக நபர்களிடம்&nbsp; இருந்து&nbsp; 1 கோடியே 69 இலட்சம் ரூபா ரொக்கப் பணமும் கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்தத் தங்கத் தொகையானது சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குக் கொண்டுவரப்பட்டிருக்கலாம் என&nbsp; பொலிஸார் சந்தேகிக்கின்றனர். </p><p>கொழும்பு - கொட்டாஞ்சேனை பகுதியிலிருந்து கண்டிக்கு வந்துள்ள&nbsp; சந்தேக நபர்கள், வத்தேகமவிலுள்ள தங்குமிடம் ஒன்றில் தங்கியிருந்தபோதே நேற்று (22) பிற்பகல்&nbsp; அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p></p><p>

கைது செய்யப்பட்டவர்கள் தங்களிடம் உள்ள தங்கத் தொகையை அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காகவே கொண்டு வந்தமை&nbsp; &nbsp;ஆரம்பகட்ட விசாரணைகளின்போது&nbsp; &nbsp;ஒப்புக்கொண்டுள்ளனர்.
</p><p>
எனினும், கைப்பற்றப்பட்ட தங்கம் மற்றும் பணத்துக்கான முறையான உரிமையை நிரூபிக்கும் எந்தவிதமான ஆவணங்களையும் அவர்களால் சமர்ப்பிக்க முடியவில்லை. </p><p>தாங்கள் தங்க ஆபரண விற்பனை நிலையம் ஒன்றை நடத்தி வருவதாக அவர்கள் தெரிவித்திருந்தாலும், அது தொடர்பிலும் விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><p></p><p>

மேலதிக விசாரணைகளை மத்திய மாகாண சிரேஷ்ட பிரதி காவல்துறை மாஅதிபர் லலித் பத்தினாயக்க மற்றும் மத்திய மாகாண பிரதி காவல்துறை மாஅதிபர் சுதத் மாசிங்க ஆகியோரின் பணிப்புரையின் பேரில் வத்தேகம காவல்துறையினர் இது குறித்து&nbsp; மேற்கொண்டு வருகின்றனர்.</p><p>&nbsp;கைதான&nbsp; மேலதிக விசாரணைகளுக்காக குறித்த சந்தேக நபர்களை இன்று (23) கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவிடம் (CCD) ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வத்தேகம காவல்துறையினர் தெரிவித்தனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-23T07:59:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்ட மாற்றம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/change-in-the-price-of-gold-in-sri-lanka-1784793646"></link>
            <id>https://jvpnews.com/article/change-in-the-price-of-gold-in-sri-lanka-1784793646</id>
            <summary type="text">&amp;nbsp; இலங்கையில் தங்கத்தின் விலை இன்று (23) வீழ்ச்சியடைந்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதேசமயம் நேற்று (22) 24 கர...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; இலங்கையில் தங்கத்தின் விலை இன்று (23) வீழ்ச்சியடைந்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
</p><p>
அதேசமயம் நேற்று (22) 24 கரட் தங்கம் ஒரு பவுண் ரூ.378,000 ஆக விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று அதன் விலை ரூ.1,000 குறைந்து ரூ.377,000 ஆகப் பதிவாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d79c9ec3-a0c7-4c0a-a26d-6b22d303d39b/26-6a61ca2fb973d.webp' /></p><p>
</p><p>
தற்போதைய விலை நிலவரப்படி, 22 கரட் தங்கம் ஒரு பவுண் ரூ.346,800 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

 24 கரட் தங்கத்தின் ஒரு கிராம் ரூ.47,125 ஆகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராம் ரூ.43,350 ஆகவும் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை மாற்றங்களுக்கு ஏற்ப, உள்நாட்டு தங்க விலைகளிலும் தொடர்ந்து ஏற்ற, இறக்கங்கள் பதிவாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-07-23T07:59:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாடாளுமன்றத்தை விளையாட்டாக மாற்ற வேண்டாம் ; அர்ச்சுனாவுக்கு சபாநாயகர் எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/don-t-turn-parliament-game-speaker-warns-archuna-1784793299"></link>
            <id>https://jvpnews.com/article/don-t-turn-parliament-game-speaker-warns-archuna-1784793299</id>
            <summary type="text">நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் நிலையியல் கட்டளைகள் தொடர்பில் எழுப்பிய கேள்வியைத் தொடர்ந்து, நாடாளுமன்றத்தில் இன்று (23) கடும் வாக்குவாதம் ஏ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் நிலையியல் கட்டளைகள் தொடர்பில் எழுப்பிய கேள்வியைத் தொடர்ந்து, நாடாளுமன்றத்தில் இன்று (23) கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.</p><p>
</p><p></p><p>இன்றைய நாடாளுமன்ற அமர்வின்போது, நிலையியல் கட்டளைகள் தொடர்பான கேள்வியை எழுப்ப முற்பட்ட அர்ச்சுனா இராமநாதன், கேள்வியை முன்வைப்பதற்கு முன்னரே அதற்கு தடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக சபாநாயகரிடம் தெரிவித்தார்.
</p><p>
இதற்கு பதிலளித்த சபாநாயகர், நாடாளுமன்ற நடவடிக்கைகளை விளையாட்டுத்தனமாக மாற்ற முயற்சிக்க வேண்டாம் என எச்சரித்ததுடன், நாடாளுமன்றத்தில் பொறுப்புடன் செயற்படுமாறும் அறிவுறுத்தினார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/32ca2c25-9921-4662-a2ff-669de863ec58/26-6a61c8d55a537.webp' /></p><p>சபாநாயகரின் இந்தக் கருத்துக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எதிர்ப்புத் தெரிவித்தார்.
</p><p>
நிலையியல் கட்டளைகளின்படி எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினரையும் தகாத வார்த்தைகளால் குறிப்பிட முடியாது என சுட்டிக்காட்டிய அவர், சபாநாயகர் ஆசனத்தில் அமர்ந்துள்ளவர் நிலையியல் கட்டளைகளுக்கு அமைய செயற்பட வேண்டும் எனவும், உறுப்பினர்களுக்கு கேள்விகளை எழுப்புவதற்கான வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.
</p><p>
இதன்போது கருத்து தெரிவித்த சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க, நாடாளுமன்றத்தின் அனைத்து உறுப்பினர்களும் நிலையியல் கட்டளைகளுக்கு அமைய செயற்படுவதாகக் குறிப்பிட்டார்.
</p><p>
மேலும், அர்ச்சுனா இராமநாதனின் நாடாளுமன்ற செயற்பாடுகள் தொடர்பில் கடுமையான விமர்சனங்களை முன்வைத்த அவர், இதுவரை காலமும் நாடாளுமன்றத்தில் இவ்வாறான முறையில் நேரத்தை வீணடிக்கும் செயற்பாடுகளை எவரும் மேற்கொண்டதில்லை என தெரிவித்தார்.</p><p>
</p><p></p><p>அத்துடன், அர்ச்சுனா இராமநாதனின் செயற்பாடுகள் ஒட்டுமொத்த தமிழ் மக்களையும் அவமதிக்கும் வகையில் அமைந்துள்ளதாகவும், அவரது செயற்பாடுகள் தொடர்பில் பலரும் அதிருப்தி தெரிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.</p><p>நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கூட அவருடன் அருகில் அமர முடியாது எனக் குறிப்பிட்டு கடிதம் ஒன்றை சமர்ப்பித்துள்ளதாகவும், யாழ்ப்பாணத்தில் அவரால் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் ஒன்றைக்கூட நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
</p><p>
மேலும், கடந்த காலங்களில் அரசியல் ரீதியாக கருத்து வேறுபாடுகள் காணப்பட்ட போதிலும், தனிப்பட்ட முறையில் சபாநாயகரை இலக்காகக் கொண்டு இவ்வாறான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டதில்லை எனவும் அவர் கூறினார்.
</p><p>
இந்த விவகாரத்தினால் நாடாளுமன்றத்தில் சில நிமிடங்கள் பதற்றமான சூழ்நிலை நிலவியதுடன், அமர்வு பரபரப்பாக அமைந்தது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-23T07:55:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[மகிழ்ச்சியான காட்சிகளுடன் முடிவுக்கு வந்தது LBW வெப் சீரிஸ்... கடைசி காட்சி போட்டோ இதோ]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/love-beyond-wicket-web-series-ends-1784785865"></link>
            <id>https://cineulagam.com/article/love-beyond-wicket-web-series-ends-1784785865</id>
            <summary type="text">LBW வெப் சீரிஸ்திரைப்படங்களை தாண்டி சின்னத்திரை சீரியல்கள் மற்றும் ரியாலிட்டி ஷோக்கள் மக்களால் கொண்டாடப்பட்டது. அதையும் தாண்டி வெப் தொடர்களுக்கு என்று...</summary>
            <content type="html"><![CDATA[<h2>LBW வெப் சீரிஸ்</h2><p>திரைப்படங்களை தாண்டி சின்னத்திரை சீரியல்கள் மற்றும் ரியாலிட்டி ஷோக்கள் மக்களால் கொண்டாடப்பட்டது. </p><p>அதையும் தாண்டி வெப் தொடர்களுக்கு என்று மக்களிடம் தனி வரவேற்பு உள்ளது. சமீப காலங்களில் வெப் தொடர்களில் ஹிட்டாக ஓடியது என்றால் Love Beyond Wicket தான். விக்ராந்த் மற்றும் நியதி கடம்பி ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க விளையாட்டை மையப்படுத்தி உருவானது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e0730c4f-1668-4a6f-a165-a4816d6b9fe2/26-6a61c752409b3.webp' /></p><p> </p><p>கணேஷ் கார்த்திகேயன் இயக்கியுள்ள இப்படம் சிறந்து விளங்கிய கிரிக்கெட் வீரரான ரங்கன், தனது வாழ்க்கையில் பெரிய முன்னேற்றம் இல்லாமல் போகவே, தகுதி குறைந்த மாணவர்களைக் கொண்ட ஒரு அணிக்கு பயிற்சியாளராகிறார். </p><p>அவர்கள் அனைவரும் தங்கள் பாரம்பரியத்தை மீட்டெடுக்கவும்,&nbsp; &nbsp;தங்கள் வாழ்க்கைப் பாதையைக் கண்டறியவும் போராடுவதே இத்தொடரின் மையக்கதை.</p><p>
ரசிகர்களின் பேராதரவுடன் வெற்றிகரமாக ஒளிபரப்பாகிய இந்த வெப் தொடர் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. 120 எபிசோடுகளுடன் இந்த வெப் தொடர் முடிந்துள்ளது, கடைசி காட்சியின் போட்டோ இதோ,</p><p><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/p/DbGxLVLy4tB/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/p/DbGxLVLy4tB/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/p/DbGxLVLy4tB/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by Hemalatha V (@tamilserialexpress)</a></p></div></blockquote> <script async src="//www.instagram.com/embed.js"></script></p>]]></content>
            <updated>2026-07-23T07:51:06+00:00</updated>
        </entry>
    </feed>
