<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-07-27T23:38:30+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[திருமணமாகி ஐந்து மாதங்களிலே மனைவியை வெட்டிக்கொலை செய்த கணவர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/young-woman-murdered-five-months-after-marriage-1785195324"></link>
            <id>https://jvpnews.com/article/young-woman-murdered-five-months-after-marriage-1785195324</id>
            <summary type="text">தமிழ்நாட்டின் தென்காசியில் குடும்பத் தகராறு காரணமாக இளம்பெண் ஒருவர் அரிவாளால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தென்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழ்நாட்டின் தென்காசியில் குடும்பத் தகராறு காரணமாக இளம்பெண் ஒருவர் அரிவாளால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><p></p><p>

தென்காசி மங்கம்மாள் சாலை சாஸ்தா கோவில் பகுதியைச் சேர்ந்த சக்தி வீரமணிகண்டன் (33), இருசக்கர வாகன பழுதுநீக்கும் தொழிலாளி ஆவார்.</p><p> </p><h3>மேலதிக விசாரணை</h3><p>அவரது மனைவி அன்னலட்சுமி (23). இவர்களுக்கு ஐந்து மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றிருந்தது.

திருமணமான முதல் வாரத்திலிருந்தே தம்பதியருக்கு இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f11b76a6-16b2-4fe1-817c-9ed45bc47141/26-6a67eb3e87822.webp' /></p><p>இதுதொடர்பாக அன்னலட்சுமி தென்காசி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் முநைப்பாடு அளித்திருந்தார். காவல்துறையினர் இருதரப்பினருக்கும் அறிவுரை வழங்கிய போதிலும், பிரச்சினை தொடர்ந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
இந்த நிலையில், நேற்று காலை மீண்டும் ஏற்பட்ட தகராறின் போது ஆத்திரமடைந்ததாகக் கூறப்படும் சக்தி வீரமணிகண்டன், அரிவாளால் அன்னலட்சுமியை சரமாரியாக வெட்டியதாக காவல்துறையின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
</p><p>
இந்தத் தாக்குதலில் பலத்த காயமடைந்த அன்னலட்சுமி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
</p><p>
சம்பவத்துக்குப் பின்னர் தப்பிச் சென்ற சக்தி வீரமணிகண்டன், பின்னர் தென்காசி குற்றவியல் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
</p><p>
அன்னலட்சுமியின் பெற்றோர் முறைப்பாட்டின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, கொலைக்கான காரணம் மற்றும் சம்பவத்தின் பின்னணி குறித்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-27T23:35:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Erimalai</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் அடிக்கடி பழுதடையும் அரச பேருந்து.. கடும் சிரமத்திற்குள்ளாகும் பயணிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/students-delayed-getting-school-due-broken-bus-1785194363"></link>
            <id>https://tamilwin.com/article/students-delayed-getting-school-due-broken-bus-1785194363</id>
            <summary type="text">பருத்தித்துறையில் இருந்து வடமராட்சி கிழக்கு கேவில் வழியாக சேவையில் ஈடுபடும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து அடிக்கடி பழுதடைவதால் பயணிகள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>பருத்தித்துறையில் இருந்து வடமராட்சி கிழக்கு கேவில் வழியாக சேவையில் ஈடுபடும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து அடிக்கடி பழுதடைவதால் பயணிகள் பெரும் பாதிப்புக்குள்ளாவதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.&nbsp;</p><p>குறித்த பேருந்து, பருத்திதுறையில் இருந்து மாலை 6 மணிக்கு சேவையை ஆரம்பித்து கட்டை காட்டில்
தரித்து காலையில் பருத்தித்துறையை நோக்கி சேவையில் ஈடுபடும்.
</p><p>
இந்த பேருந்தில் பாடசாலை மாணவர்கள், அரச
உத்தியோகத்தர்கள், வைத்தியசாலைக்கு செல்லும் நோயாளிகள் என பலர் பயணம் செய்து
வருகின்றனர்.</p><p>இந்நிலையில், நேற்று (27.07.2026) காலை முதலாவது சேவையாக கட்டைக்காட்டிலிருந்து ஆரம்பித்து
பருத்தித்துறை நோக்கி செல்லும் வழியில் நாகர்கோயில் குடியிருப்பு பகுதியில்
பழுதடைந்ததால், அதில் பயணத்தினை மேற்கொண்ட மாணவர்கள் உட்பட பலரும் 45
நிமிடங்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.</p><p></p><h2>பாதிக்கப்படும் பயணிகள்&nbsp;</h2><p> இதனால் பருத்தித்துறையில்
உள்ள பல உயர்தர பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்களும் வழமையாக கிளினிக்
சிகிச்சைக்காக மந்திகை ஆதார வைத்தியசாலைக்கு சென்ற நோயாளர்கள் உட்பட அரச
உத்தியோகத்தர்களும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9dedb48c-7aa9-4a87-902d-3ef19adcaa4d/26-6a67eae52baa4.webp' /></p><p>இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான 762 வழி சேவை மக்களின் நலன் கருதி
குடியிருப்புகள் ஊடாக தங்களுடைய சேவைகளை செய்து வருகின்ற போதும் இரவு தங்கல்
சேவைக்காக ஈடுபடும் குறித்த பேருந்து பழைய பேருந்தாக இருப்பதினால் அடிக்கடி காலை
நேரங்களில் பழுதடைந்து வருகின்றது.</p><p>

இதேவேளை பல்கலைக்கழகத்திற்குச் செல்கின்ற மாணவர்கள் கேவிலிலிருந்து
பருத்தித்துறை நோக்கி செல்கின்ற பேருந்து தாமதமாக செல்வதனால் பெரிதும்
பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.&nbsp;</p><p>
நேற்றைய தினம் நாகர்கோவில் பகுதியில் பேருந்து பழுதான நிலையில் பிறிதொரு
பேருந்து ஒரு மணித்தியாலம் தாமதித்து சேவையில் ஈடுபடுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-27T23:34:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Erimalai</name>
            </author>
            <title type="text"><![CDATA[பருத்திதுறை நகரசபை அமர்வில் வழங்கப்பட்ட முக்கிய அனுமதிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/important-approvals-granted-municipal-council-1785193427"></link>
            <id>https://tamilwin.com/article/important-approvals-granted-municipal-council-1785193427</id>
            <summary type="text">பருத்திதுறை நகரசபை அமர்வு தவிசாளர் வின்சன் டி போல் டக்ளஸ் போல் தலைமையில் நேற்று(27.07.2026) பிற்பகல் 2 மணியளவில் நகரசபை மாநாட்டு மண்டபத்தில் நடைப்பெற்...</summary>
            <content type="html"><![CDATA[<p>பருத்திதுறை நகரசபை அமர்வு தவிசாளர் வின்சன் டி போல் டக்ளஸ் போல் தலைமையில் நேற்று(27.07.2026) பிற்பகல் 2 மணியளவில் நகரசபை மாநாட்டு மண்டபத்தில் நடைப்பெற்றுள்ளது.</p><p>இதில் முதல் நிகழ்வாக கடந்த கூட்ட அறிக்கை ஆராயப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டதுடன்
நிதி குழு கூட்டத்தில் ஆராயப்பட்ட விடயங்களுக்கான சபை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.</p><h2>வழங்கப்பட்ட அனுமதிகள்</h2><p>
மேலும் இலங்கை போக்குவரத்துச் சபையின் நேர கணிப்பாளருக்கான நவீன சந்தை
தொகுதியில் இடவசதி வழங்குவதற்கான சபை அனுமதி பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.</p><p>அத்துடன் வெளிவாரியாக ஒப்பந்த
ஆட்களை பதிவு செய்வதற்கான சபை அனுமதி, பருத்தித்துறை மீன் சந்தையில் உள்ள
கூலர் கேள்வி கோரலுக்கான சபை அனுமதி மற்றும் சபை எல்லைக்குள் கழிவு நீர் வாய்க்காலுக்குள் கழிவுநீர் தவிர்ந்த ஏனைய
கழிவுகளை அகற்றுபவர்களுக்கு தண்டம் விதிப்பதற்கான அறிவித்தலுக்கான சபை
அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e38ada52-a85a-4f7b-8ac8-d599c0c8009c/26-6a67e5b4cbdd8.webp' /></p><p>வீதியோரங்களில் வெட்டப்டுகின்ற மரங்கள் அகற்றப்படாமல் பிரதேச சபை அவற்றை
அகற்றுவதாகவும் அதற்கான கட்டணத்தை இலங்கை மின்சார சபை, இலங்கை தொலைத் தொடர்பு
நிறுவனம் ஆகியவற்றிடம் அறவீடு செய்வதற்கான சபை அனுமதியும் பெறப்பட்டுள்ளது.</p><p>அதுமட்டுமல்லாது வீதி விளக்குகளை
திருத்துவதற்கான நிதிக்கான அனுமதியும்,

Chopper மெஷின் கொள்வனவு செய்வதற்கான மேல் அதிக நிதிக்கான சபை அனுமதியும்,
தும்பளை - கிழக்கு பகுதியில் மலசலகூட அமைப்பில் பற்றாக்குறைக்கான நிதியை
வழங்குவதற்கான சபை அனுமதியும் சபையில் வழங்கப்பட்டுள்ளது.</p><p>அத்துடன் 195
மீட்டர் பொது பாதையாக பதிவு செய்யப்பட்டுள்ள பாதையானது தற்போது 121. 5
மீட்டர் காணப்படுவது தொடர்பாக மிக நீண்ட விவாதம் இடம்பெற்றுள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-27T23:15:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thevanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிட்ணன் செல்வராஜ் எம்.பி தலைமையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/public-meeting-held-under-mp-kitnan-selvaraj-1785192274"></link>
            <id>https://tamilwin.com/article/public-meeting-held-under-mp-kitnan-selvaraj-1785192274</id>
            <summary type="text">கிளிநொச்சி - இயக்கச்சி பகுதியில் வட்டார சபை அமைக்கும் மக்கள் சந்திப்பு நாடாளுமன்ற உறுப்பினர் கிட்ணன் செல்வராஜ் தலைமையில் நடைபெற்றுள்ளது.இதன் போது
கரு...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிளிநொச்சி - இயக்கச்சி பகுதியில் வட்டார சபை அமைக்கும் மக்கள் சந்திப்பு நாடாளுமன்ற உறுப்பினர் கிட்ணன் செல்வராஜ் தலைமையில் நடைபெற்றுள்ளது.</p><p>இதன் போது
கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர்,&nbsp;</p><p></p><h2>நம்பிக்கையில்லா பிரேரணை</h2><p> இன்று விசேஷமாக எதிர்க்கட்சிகள் ஆடிப்போயிருக்கின்றன. எதிர்க்கட்சிகள் தழம்பல்
நிலையில் இருக்கின்றன. </p><p>எதிர்க்கட்சிகள் ஒன்று சேர முடியாத நிலைமையிலும், ஒன்று
சேரும் நிலைமையிலும் இருக்கின்றன. இதற்கு இவர்கள் காலத்திற்கு காலம் ஒவ்வொரு
தலைப்புகளை தங்களுடைய கையிலே எடுக்கின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/82362964-52c3-4f20-9bf4-6aaff0ff1c54/26-6a67e12894063.webp' /></p><p> எடுக்கும் எந்தவொரு தலைப்பும்
எதிர்க்கட்சிக்கு பிரயோசனமாக போகப்போவதில்லை என்பது அவர்களுக்கு தெரியும்.
</p><p>
இதில் நாங்கள் விசேஷமாக அண்மை நாட்களில் நீதி அமைச்சருக்கு எதிராக மகாணசபை
சிறைச்சாலை தொடர்பான பிரச்சனைகளை முன்வைத்து,
அவருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வந்தோம். அந்த
நம்பிக்கையில்லா பிரேரணையில் எதிர்க்கட்சிகள் சுக்குநூறாகின.</p><p></p><h2>உயர்நீதிமன்ற நீதியரசர்களின் தெரிவு</h2><p> </p><p>60-க்கும்
குறையாத எதிர்க்கட்சி ஆசனங்களைக் கொண்ட எதிர்க்கட்சி, 36-க்கு வரையறுத்தது.
அதுமட்டுமல்ல எதிர்க்கட்சியிலே அமர்ந்திருந்த ஒரு நாடாளுமன்ற
உறுப்பினரும் சஜித் அணியின் நாடாளுமன்ற உறுப்பினரும் கூட நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிராக வாக்களித்தனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/95db1e01-c565-462e-8c85-3b715cecc688/26-6a67e1296b784.webp' /></p><p>அடுத்த கட்டமாக இவர்கள் தூக்கியிருப்பது உயர்நீதிமன்ற நீதியரசர்களின்
தெரிவு சம்பந்தமாகவும், அடுத்து அவர்களுடைய பதவிகாலம் நீடிப்பு சம்பந்தமான
கருத்தியலையுமாகும்.</p><p>ஆனால், இலங்கையின் 1978-ஆம் ஆண்டு
யாப்பின் பிரகாரம் ஒருசில நீதிமன்றங்களுக்கு மட்டுமே, அந்த 78-ஆம் ஆண்டு
யாப்பின் பிரகாரம் நீதியரசர்களை தேர்வு செய்யக்கூடிய கட்டளைகள் இருக்கின்றன என குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-27T23:15:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சர்வதேச நிறுவனத்தால் இலங்கைக்கு கிடைத்துள்ள அங்கீகாரம்! நான்காவது இடத்துக்கு முன்னேற்றம்...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-lanka-records-fourth-biggest-improvement-1785193804"></link>
            <id>https://tamilwin.com/article/sri-lanka-records-fourth-biggest-improvement-1785193804</id>
            <summary type="text">சவாலான உலகளாவிய சூழ்நிலைக்கு மத்தியில் கடன் மறுசீரமைப்பு செயல்முறைக்குப் பின்னர் இலங்கை முதலீட்டாளர்களின் நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்பும் முயற்சி...</summary>
            <content type="html"><![CDATA[<p>சவாலான உலகளாவிய சூழ்நிலைக்கு மத்தியில் கடன் மறுசீரமைப்பு செயல்முறைக்குப் பின்னர் இலங்கை முதலீட்டாளர்களின் நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்பும் முயற்சியில் வெற்றி பெற்றுள்ளது. </p><p>
இலங்கை, முதலீட்டாளர் உறவுகள் (Investor Relations) மற்றும் கடன் வெளிப்படைத்தன்மை (Debt Transparency) ஆகியவற்றில் விரைவான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ள நாடுகளின் வரிசையில் முன்னிலைக்கு வந்துள்ளது.
</p><p>
சர்வதேச நிதி நிறுவனத்தால் (IIF) வெளியிடப்பட்ட 2026 ஆம் ஆண்டிற்கான அறிக்கையின்படி, இத்துறையில் மிக அதிக முன்னேற்றத்தை அடைந்த நாடுகளின் பட்டியலில் இலங்கை 4 ஆம் இடத்தைப் பிடித்துள்ளது.
</p><h2>
</h2><p></p><h2>IIF இன் அறிக்கை</h2><p>IIF இன் “Investor Relations and Debt Transparency Report 2026: The Transparency Dividend” அறிக்கையின்படி, உலகின் வளர்ந்து வரும் மற்றும் வளரும் நாடுகள் 57 இல் இலங்கையின் ஒட்டுமொத்த முதலீட்டாளர் உறவுகள் புள்ளி எண்ணிக்கை 2025 இல் 37.33 ஆகப் பதிவாகியிருந்த நிலையில், அது 2026 இல் 43.67 வரை குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளது. </p><p>

இத்துறையில் 6.3 புள்ளிகள் என்ற பாரிய வளர்ச்சியைப் பதிவு செய்துள்ள இலங்கை, வியட்நாம், பெலிஸ் மற்றும் மொசாம்பிக் ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக "வேகமாக முன்னேறும் நாடுகளின்" பட்டியலில் இணைந்துள்ளது.
</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c34d0447-a1e1-41d6-a82f-5bd73cc64657/26-6a67e54ebcafc.webp' /></p><p>கடன் வெளிப்படைத்தன்மையை அதிகரித்தல் மற்றும் சுற்றுச்சூழல், சமூகம் மற்றும் நிர்வாகம் (ESG) தரவுகள் மற்றும் கொள்கைகளை முறையாகப் பரப்புரை செய்தமையே இந்த வெற்றிக்கு முக்கியக் காரணம் என நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சு தெரிவித்துள்ளது.
</p><h2>
கடன் வெளிப்படைத்தன்மை</h2><p>
2025 இல் 19 ஆம் இடத்தில் இருந்த இலங்கை, கடந்த ஆண்டில் பின்பற்றிய முறைசார்ந்த கடன் முகாமைத்துவ நடைமுறைகள் காரணமாக 2026 இல் 5 ஆம் இடம் வரை முன்னேறியுள்ளது.
</p><p>
இந்த முன்னேற்றத்திற்கு அரச கடன் முகாமைத்துவ அலுவலகம் மற்றும் ஏனைய அரசு நிறுவனங்கள் இணைந்து முதலீட்டாளர்களுடன் பேணிய முறைசார்ந்த உறவுகள் மற்றும் வெளிப்படைத்தன்மையுடன் கூடிய கடன் தகவல்களை வழங்கியமை பெரிதும் உதவியுள்ளது.
</p><p>
</p><p></p><p>இலங்கை அடைந்துள்ள இந்த முன்னேற்றத்தின் மூலம் சர்வதேச மூலதனச் சந்தையில் நாட்டின் நம்பகத்தன்மை உறுதி செய்யப்படுவதோடு, முதலீட்டாளர் தளத்தை விரிவுபடுத்தவும், கடன் வாங்கும் செலவைக் குறைக்கவும் எதிர்காலத்தில் இது பெரும் பக்கபலமாக அமையும்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-27T23:11:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[மீண்டும் தலைதூக்கும் அபாயத்தில் எய்ட்ஸ் நோய் ; ஐ.நா எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/aids-at-risk-of-resurgence-un-warns-1785193299"></link>
            <id>https://jvpnews.com/article/aids-at-risk-of-resurgence-un-warns-1785193299</id>
            <summary type="text">உலகளாவிய நிதி ஒதுக்கீடு கடந்த ஆண்டில் ஐந்தில் ஒரு பங்காகக் குறைந்ததைத் தொடர்ந்து, எய்ட்ஸ் தொற்று மீண்டும் உலகளவில் தீவிரமடையும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக ...</summary>
            <content type="html"><![CDATA[<p>உலகளாவிய நிதி ஒதுக்கீடு கடந்த ஆண்டில் ஐந்தில் ஒரு பங்காகக் குறைந்ததைத் தொடர்ந்து, எய்ட்ஸ் தொற்று மீண்டும் உலகளவில் தீவிரமடையும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது.
</p><p>
பிரேசிலில் நடைபெற்ற சர்வதேச எய்ட்ஸ் மாநாட்டில் வெளியிட்ட அறிக்கையின்படி, கடந்த 2025ஆம் ஆண்டில் சர்வதேச நிதி உதவி 18 சதவீதம் குறைந்து 7.3 பில்லியன் டொலர்களாக சரிந்துள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/34f47979-7117-4e63-b041-4a27a6ece157/26-6a67e3553c93a.webp' /></p><p>இது கடந்த இரண்டு தசாப்தங்களில் பதிவான மிகக் குறைந்த அளவாகும்.</p><p>

அமெரிக்காவில் ஆட்சி மாற்றம் மற்றும் நிதி நிறுத்தங்கள் காரணமாக, ஆப்பிரிக்க நாடுகளில் தடுப்பு மருந்துகள் மற்றும் பரிசோதனைத் திட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
</p><p>
முறையான நிதியுதவி மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு மீண்டும் கிடைக்கப்பெறாவிட்டால், கடந்த 30 ஆண்டுகளில் எய்ட்ஸ் நோயைக் கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட அனைத்து முயற்சிகளும் வீணாகிவிடும் என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-27T23:01:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[உயர்நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை நீடிக்கும் பிரேரணைக்கு அமைச்சரவை அங்கீகாரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/cabinet-approves-retirement-age-high-court-judges-1785192518"></link>
            <id>https://tamilwin.com/article/cabinet-approves-retirement-age-high-court-judges-1785192518</id>
            <summary type="text">உயர்நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை நீடிக்கும் பிரேரணைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

உயர்நீதிமன்ற நீதியரசர்களின் பதவிக்காலத்தை இ...</summary>
            <content type="html"><![CDATA[<p>உயர்நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை நீடிக்கும் பிரேரணைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
</p><p>
உயர்நீதிமன்ற நீதியரசர்களின் பதவிக்காலத்தை இரண்டு ஆண்டுகளால் நீடிப்பதற்கான அரசியலமைப்புத் திருத்த மசோதா, நேற்று அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.
</p><p>
குறித்த அரசியலமைப்புத் திருத்த மசோதாவுக்கு அமைச்சரவை அதன்போது அங்கீகாரம் வழங்கியுள்ளது.</p><p>

அதன்படி, அரசியலமைப்பின் 22ஆவது திருத்தம் அமைச்சரவையின் ஒப்புதலைப் பெற்றுள்ள நிலையில், அடுத்ததாக அரசாங்க வர்த்தமானியில் வெளியிடப்படும்.</p><p></p><h2>14 நாட்கள் அவகாசம்..&nbsp;</h2><p> </p><p>வர்த்தமானி வெளியிடப்பட்டு குறைந்தபட்சம் 14 நாட்கள் கடந்த பிறகு, அரசியலமைப்பின் 22ஆவது திருத்தம் முதல் வாசிப்பிற்காக நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d9fa03a2-6459-4e8c-810a-dfa13b45c40b/26-6a67e141b4135.webp' /></p><p> </p><p>நாடாளுமன்ற நிகழ்ச்சி நிரலில் சேர்க்கப்பட்ட 7 நாட்களுக்குள், எந்தவொரு பிரஜைக்கும் தொடர்புடைய வரைவை உயர் நீதிமன்றத்தில் எதிர்த்து வழக்குத் தொடர வாய்ப்பு வழங்கப்படும். </p><p>உயர் நீதிமன்றம் அந்த மனு மீதான தனது கருத்தை 14 நாட்களுக்குள் ஜனாதிபதிக்கும் சபாநாயகருக்கும் வழங்க வேண்டும்.

அதன்படி வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டதிலிருந்து உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து வழக்குத் தொடரவும், அது குறித்த அறிவிப்பை வெளியிடவும் சுமார் 35 நாட்கள் ஆகும் என்று கருதப்படுகின்றது. </p><p>அதன் பிறகு, அது குறித்த நாடாளுமன்ற விவாதமும், தேவைப்பட்டால் பொதுமக்கள் கருத்துக் கணிப்பும் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-27T22:57:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[துறைமுக நகரத்தில் இடம்பெற்ற சீன பிரஜையின் மரணம் ; வெளியான மேலும் பல திடுக்கிடும் தகவல்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/death-chinese-national-shocking-details-revealed-1785168587"></link>
            <id>https://jvpnews.com/article/death-chinese-national-shocking-details-revealed-1785168587</id>
            <summary type="text">துறைமுக நகரத்தில் (Port City) கடத்தப்பட்டுக் கொல்லப்பட்ட சீன பிரஜை, கணினி சார்ந்த மோசடிகளில் ஈடுபட்டு சட்டவிரோதமாகப் பணம் ஈட்டிய ஒருவர் என அடையாளங்காண...</summary>
            <content type="html"><![CDATA[<p>துறைமுக நகரத்தில் (Port City) கடத்தப்பட்டுக் கொல்லப்பட்ட சீன பிரஜை, கணினி சார்ந்த மோசடிகளில் ஈடுபட்டு சட்டவிரோதமாகப் பணம் ஈட்டிய ஒருவர் என அடையாளங்காணப்பட்டுள்ளதாக கொழும்புப் பிரிவுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிஷாந்த டி சொய்சா தெரிவித்துள்ளார்.</p><p> </p><p></p><p>கடந்த சில நாட்களில் கொழும்பு மற்றும் மேல் மாகாணத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பாகச் சமூக ஊடகங்களில் பரவிய தகவல்களின் உண்மை நிலையை விளக்குவதற்காக இன்று (27) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.</p><p> 

இதன்படி, கடந்த 23ஆம் திகதி நள்ளிரவு துறைமுக நகரத்திற்குள் சீன பிரஜைகள் குழுவிற்கிடையே இடம்பெற்ற சம்பவம் குறித்து முழுமையான விளக்கம் அளிக்கப்பட்டது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/71404bd7-6018-45c9-8922-fde4599b0800/26-6a6782cd0601c.webp' /></p><p>இரு வேறு சீன பிரஜைகள் குழுக்களிடையே கடந்த 23ஆம் திகதி அதிகாலை 3.00 மணியளவில் ஏற்பட்ட மோதல் காரணமாக நபர் ஒருவர் கடத்தப்பட்டுக் கொல்லப்பட்டிருந்த நிலையில், அவரது சடலம் எஹெலியகொடை பகுதியில் மீட்கப்பட்டிருந்தது. </p><p>

இச்சம்பவம் தொடர்பான விசாரணைகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்த கொழும்புப் பிரிவுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர், சம்பவம் நடந்து சில மணிநேரங்களுக்குள் நாட்டிலிருந்து தப்பிச் செல்ல முயன்ற இரு சந்தேகநபர்களைக் கைது செய்ய முடிந்ததாகவும், அவர்களே இச்சம்பவத்தின் முதன்மைச் சந்தேகநபர்கள் என தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். </p><p>

இதற்கிடையில், இச்சம்பவம் தொடர்பாக 08 சந்தேகநபர்கள் அடையாளங்காணப்பட்டுள்ள நிலையில், அவர்களில் மூவர் ஏற்கனவே நாட்டிலிருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும், அவர்களை மீண்டும் நாட்டுக்குக் கொண்டுவருவதற்கான தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். </p><p>

இச்சம்பவத்திற்காக இரண்டு வாயு துப்பாக்கி, ஒரு கையடக்க தொலைபேசி, ஒரு வோக்கி டாக்கி (Walkie-Talkie) மற்றும் சில வாகனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். </p><p>

இச்சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் வேறு பல நாடுகளில் செயற்பட்டு இலங்கைக்கு வருகை தந்தவர்கள் என அடையாளங்காணப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். </p><p>

அதற்கமைய, இலங்கையிலுள்ள சீனத் தூதரகத்துடனும் சீன அரசாங்கத்துடனும் சரியான ஒருங்கிணைப்புடன் இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகக் கொழும்புப் பிரிவுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிஷாந்த டி சொய்சா மேலும் தெரிவித்தார்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-27T22:52:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானுக்கு எதிரான நடவடிக்கை ; அமெரிக்க வீரர்கள் காயம் தொடர்பில் புதிய தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/action-against-iran-new-infor-injuries-us-soldiers-1785182382"></link>
            <id>https://canadamirror.com/article/action-against-iran-new-infor-injuries-us-soldiers-1785182382</id>
            <summary type="text">ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளில் இதுவரை 624க்கும் மேற்பட்ட அமெரிக்க வீரர்கள் காயமடைந்துள்ளதாக அமெரிக்க பாதுகாப்புத் திணைக்களமான பென்டகன் அறிவித்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளில் இதுவரை 624க்கும் மேற்பட்ட அமெரிக்க வீரர்கள் காயமடைந்துள்ளதாக அமெரிக்க பாதுகாப்புத் திணைக்களமான பென்டகன் அறிவித்துள்ளது.</p><p>
</p><p>
அமைதி உடன்படிக்கை முறிந்ததைத் தொடர்ந்து இரு தரப்பிற்கும் இடையே மோதல்கள் நீடித்து வரும் நிலையில், பலியான மற்றும் காயமடைந்த வீரர்களின் புள்ளிவிபரங்களை பென்டகன் இரகசியமாக மாற்றியமைத்து வருவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/569d1b08-e890-429c-853b-1232391e402a/26-6a67b8afdabe8.webp' /></p><p>பலியான வீரர்களின் பட்டியலை "வெளிநாட்டு நடவடிக்கைகள்" என்ற புதிய பிரிவின் கீழ் வகைப்படுத்தி பென்டகன் வெளியிட்டுள்ள தரவுகள், போரின் உண்மைத் தன்மையை மறைக்கும் முயற்சி என முன்னாள் இராணுவ அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
</p><p>
எனினும், தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவே இணையதளத் தரவுகளில் மாற்றம் ஏற்பட்டதாகத் தெரிவித்துள்ள பென்டகன், அதனைச் சரிசெய்யும் பணிகள் இடம்பெற்று வருவதாகவும் விளக்கமளித்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-27T22:52:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[இராணுவ எச்சரிக்கையும் இராஜதந்திர முயற்சியும் ; அமெரிக்கா–ஈரான் உறவில் பதற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/military-alert-and-diplomatic-tensions-us-iran-1785192648"></link>
            <id>https://canadamirror.com/article/military-alert-and-diplomatic-tensions-us-iran-1785192648</id>
            <summary type="text">அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான உறவில் இராணுவ எச்சரிக்கைகளும், இராஜதந்திர முயற்சியும் ஒரே நேரத்தில் தொடர்வதால் மத்திய கிழக்கில் ஒரு தெளிவற்ற சூ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான உறவில் இராணுவ எச்சரிக்கைகளும், இராஜதந்திர முயற்சியும் ஒரே நேரத்தில் தொடர்வதால் மத்திய கிழக்கில் ஒரு தெளிவற்ற சூழல் நிலவி வருவதாக ஊடகச் செய்திகள் கூறுகின்றன.
</p><p>
அமெரிக்கா தன் மீதான தாக்குதல்களைத் தொடர்ந்தால், அதற்குத் தக்க விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என ஈரானின் இராணுவமும் புரட்சிகரக் காவல்படையும் எச்சரித்துள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/372d0a3c-0032-43ad-9fab-87264485e6f0/26-6a67e0c97c04d.webp' /></p><p>

அரசியல் தலைமையைப் பொறுத்தவரை, இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளுக்கான கதவுகளை முழுமையாக மூடாமலும், அதேவேளை முழுமையாகத் திறக்காமலும் கவனமான ஒரு நிலைப்பாட்டைக் கையாண்டு வருகிறது.</p><p>

அமெரிக்காவுடனான எந்தவொரு பேச்சுவார்த்தை உடன்பாட்டிலும் தெஹ்ரானில் நிலவும் ஆழமான நம்பிக்கையின்மையே பெரும் தடையாக உள்ளது.
</p><p>
தற்போது தற்காலிகப் போர்நிறுத்தம் நடைமுறையில் இருந்தாலும், அது எந்த நேரத்திலும் முறியப்படக்கூடிய பலவீனமான சூழலிலேயே உள்ளது.
</p><p>
இரு தரப்பிற்கும் இடையே மீண்டும் ஒரு வலுவான மோதல் அலை உருவாகக்கூடும் என்ற அச்சம் நீடிக்கிறது.
</p><p>
இந்தநிலையில்,ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளை நீக்குதல் மற்றும் முடக்கப்பட்ட ஈரானிய சொத்துக்களை விடுவித்தல், போரினால் ஏற்பட்ட சேதங்களுக்கான இழப்பீட்டுக் கோரிக்கைகள் போன்ற பிரச்சினைகள், இராஜதந்திரப் பாதையில் சுமுகமாகத் தீர்க்கப்படுமா அல்லது அடுத்தகட்ட மோதலுக்கு வழிவகுக்குமா என்பதை உலக நாடுகள் உற்றுநோக்கி வருகின்றன.</p>]]></content>
            <updated>2026-07-27T22:51:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரவி மோகன் விவாகரத்து வழக்கு.. மாதம் ரூ.40 லட்சம் கேட்ட ஆர்த்தி, நீதிமன்றம் அதிரடி உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/ravi-mohan-divorce-case-court-orders-3-lakh-1785192539"></link>
            <id>https://cineulagam.com/article/ravi-mohan-divorce-case-court-orders-3-lakh-1785192539</id>
            <summary type="text">ரவி மோகன் மற்றும் ஆர்த்தி விவாகரத்து வழக்கில் நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்ட பிறப்பித்து இருக்கிறது. வழக்கு முடியும் வரை மாதம் 3 லட்சம் ஜீவனாம்சம் வழங்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>ரவி மோகன் மற்றும் ஆர்த்தி விவாகரத்து வழக்கில் நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்ட பிறப்பித்து இருக்கிறது. வழக்கு முடியும் வரை மாதம் 3 லட்சம் ஜீவனாம்சம் வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.</p><p>ஆர்த்தி தனக்கு மாதம் 40 லட்சம் ரூபாய் வேண்டும் என கேட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில் நீதிமன்றம் இந்த உத்தரவை போட்டிருக்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4b17fde8-cfe5-48b7-93ff-5a4150a43d95/26-6a67e74646091.webp' /></p><h2>அனுமதி</h2><p>மேலும் மகன்களை ரவி மோகன் பார்க்க அனுமதியும் அளிக்கப்பட்டு உள்ளது. மகன்களை பார்க்க முடியாமல் இருப்பதாக ரவி மோகன் முன்பு அளித்த பேட்டியில் பேசி இருந்த நிலையில் தற்போது visitation rights வழங்கி இருக்கிறது நீதிமன்றம்.
</p><p>ரவி மோகன் தற்போது பிசியாக பல படங்களில் நடித்து வருகிறார். அடுத்து அவரது நடிப்பில் கராத்தே பாபு படம் வெளிவர இருக்கிறது.
</p><p>&nbsp;</p><p>
</p>]]></content>
            <updated>2026-07-27T22:49:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[குளிக்கும் வீடியோவை வெளியிட்ட சீரியல் நடிகை ஃபரினாவை விமர்சிக்கும் நெட்டிசன்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/farina-azad-new-bathing-video-gets-trolled-1785192315"></link>
            <id>https://cineulagam.com/article/farina-azad-new-bathing-video-gets-trolled-1785192315</id>
            <summary type="text">பாரதி கண்ணம்மா சீரியல் புகழ் நடிகை ஃபரினா சமீபத்தில் போட்ட ஒரு பதிவு பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அதை தொடர்ந்து சேனல் கொடுத்த அழுத்தத்தால் அதை நீக்கி...</summary>
            <content type="html"><![CDATA[<p>பாரதி கண்ணம்மா சீரியல் புகழ் நடிகை ஃபரினா சமீபத்தில் போட்ட ஒரு பதிவு பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அதை தொடர்ந்து சேனல் கொடுத்த அழுத்தத்தால் அதை நீக்கிவிட்டதாக தெரிவித்து இருந்தார் அவர்.</p><p>தற்போது குளிக்கும் வீடியோவை அவர் வெளியிட நெட்டிசன்கள் அவரை ட்ரோல் செய்து வருகின்றனர்.
&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1106d401-6c99-4f56-9432-18adeba9e336/26-6a67e8a10f153.webp' /></p><h2>விமர்சனம்</h2><p>ஒரு பாடி வாஷ் விளம்பரத்துக்காக தான் குளிக்கும் வீடியோவை ஃபரினா இன்ஸ்டாவில் வெளியிட்டு இருக்கிறார்.
</p><p>
அதை பலரும் விமர்சித்து வருகிறார்கள்.&nbsp;</p><p><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">பணம் என்றால் பிணமும் வாய் திறக்கும் என்பார்கள்…<br><br>இது வெறும் body wash விளம்பரம் தான்… குளிக்கும் போது உடம்பை காட்டுவதில் தவறில்லை..<br><br>கொஞ்ச நாளுக்கு முன்பு, NEET போராட்டம் நடக்கிறது… படம் பார்க்கப் விருப்பம் இல்லை என்று சொன்னீர்கள். நல்ல விஷயம், படிப்புதான் முக்கியம் என்று…</p>&mdash; KUDALINGAM MUTHU (@KUDALINGAM49671) <a href="https://x.com/KUDALINGAM49671/status/2081738061952831907?ref_src=twsrc%5Etfw">July 27, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">இது farina தானா<br><br>என்ன குளிக்கிற வீடியோ எல்லாம் போடுது 🤔😅<br><br>மாடல்ஸ் ஆ விட மாடர்னா இருக்காங்க <br><br>இன்ஸ்டா இன்புளுன்யன்ர்ஸ் 😹<br><br> <a href="https://t.co/uIE7MFdPIZ">pic.twitter.com/uIE7MFdPIZ</a></p>&mdash; Inba _hema 24 (@HemaInba) <a href="https://x.com/HemaInba/status/2081752176695837120?ref_src=twsrc%5Etfw">July 27, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p>]]></content>
            <updated>2026-07-27T22:45:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்திய மாணவர்களுக்கு கனடாவின் குடியேற்றத் துறை முக்கிய எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/canada-clarifies-work-rules-for-students-1785192359"></link>
            <id>https://news.lankasri.com/article/canada-clarifies-work-rules-for-students-1785192359</id>
            <summary type="text">கனடாவில் படிக்கும் இந்திய மாணவர்களின் வேலை அனுமதி விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கனடாவின் IRCC துறை முக்கிய விளக்கத்தை வெளியிட்டுள்ளது....</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவில் படிக்கும் இந்திய மாணவர்களின் வேலை அனுமதி விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கனடாவின் IRCC துறை முக்கிய விளக்கத்தை வெளியிட்டுள்ளது.</p><p>IRCC தெரிவித்ததாவது: “Study Permit விதிகளில் வேலை செய்யலாம் என்று குறிப்பிட்டிருந்தால்தான் மாணவர்கள் வேலை செய்ய முடியும். வகுப்புகள் நடைபெறும் காலத்தில், மாணவர்கள் வாரத்திற்கு அதிகபட்சம் 24 மணி நேரம் மட்டுமே வேலை செய்ய அனுமதிக்கப்படுவர்.</p><p>இதை மீறுவது குடியேற்றச் சட்டத்தை மீறுவதாக கருதப்படும். எதிர்காலத்தில் அனுமதி மறுக்கப்படலாம் அல்லது நாடு கடத்தல் போன்ற கடுமையான விளைவுகள் ஏற்படலாம்” என எச்சரித்துள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/32bccffb-d7af-4beb-8d30-259e07e7011a/26-6a67dfaa7a277.webp' /></p><p>இந்த அறிவிப்பு, போர்டேஜ் கல்லூரி (Portage College) மாணவர்கள் வேலை அனுமதி மறுக்கப்பட்டதை எதிர்த்து போராட்டம் நடத்தியதையடுத்து வெளியிடப்பட்டது.
</p><p>
கல்லூரி தரப்பில், “மாணவர்கள் சட்ட ஆலோசனை பெற வேண்டும். நாங்கள் தொடர்ந்து IRCC உடன் விளக்கங்களைப் பெற முயற்சித்து வருகிறோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p></p><p>மேலும், மாணவர்கள் எதிர்கால விண்ணப்பங்களுக்கு தேவையான ஆவணங்களை பாதுகாத்து வைத்திருக்க வேண்டும் என கல்லூரி அறிவுறுத்தியுள்ளது.</p><p> இதில் Study Permit, சேர்க்கை கடிதங்கள் (Joining Letter), கல்வி பதிவுகள், பாடநெறி நிறைவு ஆவணங்கள், மதிப்பெண் பட்டியல், PGWP விண்ணப்பங்கள், IRCC மறுப்பு கடிதங்கள் உள்ளிட்டவை அடங்கும்.
</p><p>
இந்த விளக்கம், கனடாவில் படிக்கும் ஆயிரக்கணக்கான இந்திய மாணவர்களுக்கு மிக முக்கியமானதாகும். வேலை அனுமதி விதிகளை மீறாமல், சட்டப்படி வேலை செய்வது மட்டுமே பாதுகாப்பான வழி என IRCC தெரிவித்துள்ளது.&nbsp;&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-27T22:44:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீர்கொழும்பு சிறைச்சாலைக் கலவரம் - சந்தேக நபர்களாக பெயரிடப்பட்டுள்ள நான்கு பேர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/negombo-prison-riot-four-named-as-suspects-1785190944"></link>
            <id>https://tamilwin.com/article/negombo-prison-riot-four-named-as-suspects-1785190944</id>
            <summary type="text">அண்மையில் நடைபெற்ற நீர்கொழும்பு சிறைச்சாலைக் கலவரம் தொடர்பில் நான்கு பேர் சந்தேக நபர்களாக பெயரிடப்பட்டுள்ளனர்.

கடந்த 5ஆம் மற்றும் 6ஆம் திகதிகளில் ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>அண்மையில் நடைபெற்ற நீர்கொழும்பு சிறைச்சாலைக் கலவரம் தொடர்பில் நான்கு பேர் சந்தேக நபர்களாக பெயரிடப்பட்டுள்ளனர்.
</p><p>
கடந்த 5ஆம் மற்றும் 6ஆம் திகதிகளில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகளின் இரண்டு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் சம்பவத்தில், 10 சிறை அதிகாரிகளும் 22 கைதிகளும் கொல்லப்பட்டனர். மற்றும் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.</p><p></p><h2>பொலிஸார் தகவல்&nbsp;&nbsp;</h2><p>

இந்த சம்பவம் தொடர்பான வழக்கு நேற்று (27) நீதிமன்றத்தின் முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c46ef2a6-3eab-471c-b504-4bcd5b73c27b/26-6a67dbba4beb9.webp' /></p><p>மேலும் அரசுத் தரப்பு சார்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்தில் முன்னிலையானது.&nbsp;</p><p>

அதன்போது, நீர்கொழும்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதிகள் சுபுன் மதுசங்க என்ற ஹீனட்டியன சுபுன், அஷான் பெர்னாண்டோ என்ற களு மல்லி, சமீர சம்பத் என்ற பபா மற்றும் ஷேன் திலன் சில்வா ஆகியோர் சம்பவத்தின் பிரதான சந்தேக நபர்களாக தற்போதைக்கு பெயரிடப்பட்டுள்ளதாக பொலிஸார் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளனர்.</p><p></p><p></p><p>

</p>]]></content>
            <updated>2026-07-27T22:41:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[நடிகை யாஷிகா ஆனந்த் சேலையில் ஹாட் ஸ்டில்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/yashika-anand-sizzling-in-saree-photoshoot-1785191914"></link>
            <id>https://cineulagam.com/article/yashika-anand-sizzling-in-saree-photoshoot-1785191914</id>
            <summary type="text">நடிகை யாஷிகா ஆனந்த் சேலையில் கிளாமராக போஸ் கொடுத்த லேட்டஸ்ட் ஸ்டில்களை பாருங்க.

யாஷிகா தொடர்ந்து கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்நத...</summary>
            <content type="html"><![CDATA[<p>நடிகை யாஷிகா ஆனந்த் சேலையில் கிளாமராக போஸ் கொடுத்த லேட்டஸ்ட் ஸ்டில்களை பாருங்க.
</p><p>
யாஷிகா தொடர்ந்து கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்நது வரும் நிலையில், தற்போது சேலையில் ஸ்டில்களை வெளியிட்டுள்ளார்.
</p><p>
அழகிய புகைப்படங்களை பாருங்க. அழகிய புகைப்படங்களை பாருங்க.




</p>]]></content>
            <updated>2026-07-27T22:38:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[கீர்த்தி பாண்டியன் ஷார்ட் உடையில் கிளாமர் போட்டோஷூட்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/keerthi-pandian-glam-photoshoot-1785191686"></link>
            <id>https://cineulagam.com/article/keerthi-pandian-glam-photoshoot-1785191686</id>
            <summary type="text">நடிகை கீர்த்தி பாண்டியன் கிளாமர் உடையில் அழகிய போட்டோஷூட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நடிகை கீர்த்தி பாண்டியன் கிளாமர் உடையில் அழகிய போட்டோஷூட்</p>]]></content>
            <updated>2026-07-27T22:34:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுட்டெரிக்கும் கடும் வெப்ப அலை ; 40 பாகை செல்சியஸைக் கடக்கும் வெப்பநிலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/temperatures-exceeding-40-degrees-celsius-1785190647"></link>
            <id>https://canadamirror.com/article/temperatures-exceeding-40-degrees-celsius-1785190647</id>
            <summary type="text">பிரித்தானியாவின் சில பகுதிகளில் குறுகிய கால வெப்ப அலை நிலவி வரும் நிலையில், ஐரோப்பிய கண்டத்தின் பெரும்பாலான பகுதிகள் கடுமையான வெப்ப அலையினால் பாதிக்கப...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரித்தானியாவின் சில பகுதிகளில் குறுகிய கால வெப்ப அலை நிலவி வரும் நிலையில், ஐரோப்பிய கண்டத்தின் பெரும்பாலான பகுதிகள் கடுமையான வெப்ப அலையினால் பாதிக்கப்பட்டுள்ளன.
</p><p>
ஏற்கனவே காட்டுத்தீயினால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட தென்மேற்கு பிரான்ஸ் மற்றும் ஸ்பெயினின் சில பகுதிகளில் வெப்பநிலை 40 பாகை செல்சியஸைத் தாண்டும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/43c6610d-6938-4401-ace5-d4d6fedd3e7c/26-6a67d8f9bfc10.webp' /></p><p>மேற்கு, மத்திய மற்றும் தெற்கு ஐரோப்பிய பிராந்தியங்களில் பரவலாகக் காணப்படும் இந்த வெப்ப அலை, அடுத்த வாரம் வரையிலும் நீடிக்கக்கூடும் என வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-07-27T22:17:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[புதிய சட்டத்தரணியை தேர்ந்தெடுப்பதில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்குச் சவால்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/icc-faces-challenge-in-choosing-new-prosecutor-1785187606"></link>
            <id>https://tamilwin.com/article/icc-faces-challenge-in-choosing-new-prosecutor-1785187606</id>
            <summary type="text">சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் (ICC) தலைமை அரசுத்தரப்பு சட்டத்தரணியாகப் பணியாற்றிய கரீம் கான் கடுமையான நடத்தை விதிகளை மீறிய குற்றச்சாட்டின் கீழ்
ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் (ICC) தலைமை அரசுத்தரப்பு சட்டத்தரணியாகப் பணியாற்றிய கரீம் கான் கடுமையான நடத்தை விதிகளை மீறிய குற்றச்சாட்டின் கீழ்
பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
</p><p>
இதன் காரணமாக, புதிய அரசுத்தரப்பு சட்டத்தரணியை தேர்ந்தெடுப்பதில் சர்வதேச
குற்றவியல் நீதிமன்றம் பெரும் சவால்களை எதிர்கொண்டு வருகிறது.</p><p></p><h2>அமெரிக்காவின்&nbsp;இராஜதந்திர அழுத்தம்</h2><p>
</p><p>
மேலும், அமெரிக்காவின் கடுமையான இராஜதந்திர அழுத்தம் மற்றும் உறுப்பு நாடுகள்
தொடர்ச்சியாக அமைப்பிலிருந்து வெளியேறி வருவது நீதிமன்றத்திற்கு மேலும்
நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
</p><p>
வெனிசுலா, புர்கினா பாசோ, மாலி மற்றும் நைஜர் ஆகிய நாடுகளைத் தொடர்ந்து, சாட்
நாடு சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இருந்து முறைப்படி வெளியேறுவதற்கான
நடவடிக்கைகளைத் தொடங்கிய ஐந்தாவது நாடாக மாறியுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2790877b-c4d7-4a59-9514-70199b47b549/26-6a67cec6d0fb2.webp' /></p><p>இந்த நாடுகள் அனைத்தும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் மேல்லை நைஜீரிய அல்லாத
நாடுகளுக்கு எதிராக மட்டுமே அதிக கவனம் செலுத்துவதாகக் குற்றம் சாட்டியுள்ளன.
</p><p>
அதேவேளையில், நீதிமன்றத்தின் 125 உறுப்பு நாடுகளில் 82 நாடுகள் வாக்களித்து
கரீம் கானைப் பதவியிலிருந்து நீக்கின.
</p><p>
புதிய சட்டத்தரணியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைமுறைகள் குறித்து இன்னும்
இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்றபோதிலும், வரும் புத்தாண்டுக்கு முன்பாக
இதற்கான வாக்கெடுப்பு நடைபெற வாய்ப்பில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2> சர்வதேச குற்றவியல் நீதிமன்றம்</h2><p>
</p><p>
காசாவில் போர் குற்றங்கள் புரிந்ததாக இஸ்ரேலிய தலைவர்களுக்கு எதிராகப்
பிறப்பிக்கப்பட்ட பிடியாணைகளைத் திரும்பப் பெற வேண்டும் என்றும், அமெரிக்கப்
படைகள் தொடர்பான விசாரணைகளை நிறுத்த வேண்டும் என்றும் வொஷிங்டன் தொடர்ந்து
வலியுறுத்தி வருகிறது.
</p><p>
மேலும், சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இருந்து நாடுகள் வெளியேற அமெரிக்க
அரசு அழுத்தம் கொடுத்து வருவதாகக் கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7036443f-ec18-4ec3-8c28-42885686f69a/26-6a67cec785006.webp' /></p><p>
</p><p>
புதிய சட்டத்தரணி தேர்ந்தெடுக்கப்படும் வரை, ஃபிஜி நாட்டைச் சேர்ந்த நஜாத்
ஷமீன் கான் மற்றும் செனகல் நாட்டைச் சேர்ந்த மாமே மண்டியாக் நியாங் ஆகிய
இரண்டு துணை அரசுத்தரப்பு சட்டத்தரணிகளும் இந்த அலுவலகத்தைத் தற்காலிகமாக
நிர்வாகம் செய்வார்கள்.
</p><p>
இத்தகைய பின்னடைவுகளுக்கு மத்தியிலும், "மனிதகுலத்தின் மனசாட்சியைப் உலுக்கும்
குற்றங்களுக்கு நீதியை வழங்கி, தவறு செய்தவர்களைப் பொறுப்பேற்கச் செய்வதில்
சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் உறுதியுடன் தொடர்ந்து செயல்படும்" என்று
நீதிமன்ற நிர்வாகம் தெரிவித்துள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-27T22:01:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[சீனக் கனிமங்களுக்கு அமெரிக்காத் தடை - ட்ரம்பிற்கு விடுக்கப்பட்டுள்ள அழுத்தம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/us-ban-on-chinese-minerals-pressure-on-trump-1785186522"></link>
            <id>https://tamilwin.com/article/us-ban-on-chinese-minerals-pressure-on-trump-1785186522</id>
            <summary type="text">சீனாவில் இருந்து அத்தியாவசிய கனிமங்கள் மற்றும் அரிதான பூமி காந்தங்கள்
இறக்குமதி செய்வதை ஜனவரி 1, 2027-க்குள் முற்றிலும் நிறுத்த அமெரிக்க ஜனாதிபதி
டொ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சீனாவில் இருந்து அத்தியாவசிய கனிமங்கள் மற்றும் அரிதான பூமி காந்தங்கள்
இறக்குமதி செய்வதை ஜனவரி 1, 2027-க்குள் முற்றிலும் நிறுத்த அமெரிக்க ஜனாதிபதி
டொனால்ட் ட்ரம்ப் இலக்கு நிர்ணயித்துள்ளார்.
</p><p>
இருப்பினும், அமெரிக்காவின் உள்நாட்டு உற்பத்தித் திறன் தேவையானதை விட மிகக்
குறைவாக இருப்பதால், இந்த கெடுவைச் சந்திப்பதில் பெரும் சவால் எழுந்துள்ளது.</p><p></p><h2>உள்நாட்டு உற்பத்தியில் பற்றாக்குறை</h2><p>
சீனா, ரஷ்யா, ஈரான் மற்றும் வடகொரியா ஆகிய நாடுகளிடம் இருந்து ஆயுதங்கள்
மற்றும் பாதுகாப்பு உபகரணங்களுக்கான கனிமங்களை வாங்குவதைத் தவிர்க்க
பாதுகாப்புத்துறை நிறுவனங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
</p><p>
அமெரிக்கப் பொருட்களை மட்டுமே வாங்க வேண்டும் என்றும் எவ்வித விலக்கும்
அளிக்கப்படாது என்றும் ஜனாதிபதி ட்ரம்ப் நிர்வாகம் தீவிரமாக உள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/545c18ec-4dc5-4dff-b318-cafd19c354dd/26-6a67cb9a9168a.webp' /></p><p>
இருப்பினும், உள்நாட்டு உற்பத்தியில் பெரும் பற்றாக்குறை நிலவுகிறது.

2025-ல் அமெரிக்காவின் அரிதான பூமி காந்தங்களின் தேவை சுமார் 48,000 மெட்ரிக் டொன்கள் ஆகும்.</p><p>ஆனால், அமெரிக்க உள்நாட்டு நிறுவனங்களால் 300 மெட்ரிக் டொன்கள் மட்டுமே விநியோகிக்க முடிந்தது. மேலும், அமெரிக்கா 2015-க்குப் பிறகு டங்ஸ்டனையும், 1959-க்குப் பிறகு டான்டலத்தையும் உற்பத்தி செய்யவில்லை.</p><p>

இவற்றை மீண்டும் உற்பத்தி செய்வதற்கான திட்டங்கள் இன்னும் தொடக்கக் கட்டத்திலேயே உள்ளன. உலகளவில் கனிமங்களைச் சுத்திகரிக்கும் துறையில் 80 சதவீதத்திற்கும் அதிகமான பங்கினை சீனா தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.</p><p></p><h2>கனிமச் சுத்திகரிப்பு</h2><p>
</p><p>
அமெரிக்கப் பாதுகாப்புத் துறை பில்லியன் கணக்கில் டொலர்களை முதலீடு
செய்திருந்தாலும், கனிமங்களைச் சுத்திகரித்து காந்தங்களாக மாற்றும்
தொழில்நுட்ப அமைப்புகளை உருவாக்குவதற்கு இன்னும் பல ஆண்டுகள் ஆகும் என
நிபுணர்கள் கூறுகின்றனர்.
</p><p>
சீனா மானியங்கள் வழங்கி குறைந்த விலையில் கனிமங்களைச் சந்தையில் விற்பனை
செய்வதால், அமெரிக்க நிறுவனங்களின் திட்டங்கள் பொருளாதார ரீதியாகச் செயல்பட
கடினமாக உள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b4a86864-293f-45fa-83b4-7f5ae1edbaa2/26-6a67cb99e0da8.webp' /></p><p>
</p><p>
அமெரிக்கா கனிமங்களைச் சேமித்து வைப்பதற்காக 12 பில்லியன் டொலர் மதிப்பிலான
'புரொஜெக்ட் வால்ட்' என்ற திட்டத்தை ஜனாதிபதி ட்ரம்ப் நிர்வாகம்
தொடங்கியுள்ளது.
</p><p>
ஆரம்பக் கட்டத்தில் சீனாவில் இருந்தும் கனிமங்களை வாங்க வேண்டியிருக்கும்
என்பதை அதிகாரிகளே ஒப்புக்கொண்டுள்ளனர்.</p><p>

அமெரிக்க உற்பத்தி இயல்பு நிலைக்கு வரும் வரை தென்கொரியா, ஜப்பான் போன்ற நட்பு
நாடுகளுடன் இணைந்து கனிம விநியோகத்தைப் பூர்த்தி செய்ய நிபுணர்கள்
பரிந்துரைக்கின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-27T22:00:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு - மூவர் பரிதாப பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/shooting-in-america-three-people-tragically-died-1785185311"></link>
            <id>https://tamilwin.com/article/shooting-in-america-three-people-tragically-died-1785185311</id>
            <summary type="text">அமெரிக்காவின் சியாட்டில் நகரில் நடைபெற்ற புகழ்பெற்ற உணவுத் திருவிழாவின்
போது நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளதுடன் இரண...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவின் சியாட்டில் நகரில் நடைபெற்ற புகழ்பெற்ற உணவுத் திருவிழாவின்
போது நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளதுடன் இரண்டு வயது குழந்தை உட்பட 4 பேர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
</p><p>
சியாட்டில் நகரின் 'ஸ்பேஸ் நீடில்' பகுதியின் கீழ் நடைபெற்ற 'பைட் ஆஃப்
சியாட்டில்' உணவுத் திருவிழாவில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டிருந்த போது
இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.</p><p></p><h2>துப்பாக்கிச் சூடு&nbsp;</h2><p>
</p><p>
இரண்டு சந்தேக நபர்களுக்கு இடையே ஏற்பட்ட துப்பாக்கி மோதலே இதற்குக் காரணம் என பொலிசார் சந்தேகிக்கின்றனர்.</p><p>

துப்பாக்கிச் சூடு நடத்தியதாகச் சந்தேகிக்கப்படும் இளைஞர் ஒருவர் பொலிசிடம் சரணடைந்து காவலில் வைக்கப்பட்டுள்ளார். மற்றொரு நபர் சம்பவ
இடத்தில் இருந்து தப்பி ஓடி தலைமறைவாகியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a9d7882c-2a40-412c-9221-b76338d206d6/26-6a67c63b391f1.webp' /></p><p>

தப்பியோடிய நபரைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்தச் சம்பவத்தில் 19 மற்றும் 44 வயதுடைய இரு ஆண்களும், 56 வயதுடைய பெண் ஒருவரும்
உயிரிழந்துள்ளனர்.
</p><p>
காயமடைந்த 2 வயது குழந்தை உட்பட 4 பேரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று
வரும் நிலையில், அவர்களின் உடல்நிலை சீராக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>பயங்கரமான வன்முறை</h2><p>
</p><p>
இந்தச் சம்பவம் குறித்துப் பேசிய சியாட்டில் நகரின் மேயர் கேட்டி வில்சன்
(Katie Wilson),</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a048c561-d5f7-4008-9ad7-5f9c35423072/26-6a67c63a8384a.webp' /></p><p> </p><p>"இது ஒரு பயங்கரமான வன்முறைச் சம்பவம். நமது நகரிலும்
நாட்டிலும் துப்பாக்கி கலாச்சாரம் மற்றும் வன்முறைகள் அதிகரித்து வருவது
பெரும் கவலையளிக்கிறது," என தெரிவித்துள்ளார்.
</p><p>
உணவுத் திருவிழாவில் கடை அமைத்திருந்த ஒருவர் நேரலை செய்து கொண்டிருந்த போது
இந்தத் துப்பாக்கிச் சூடு நிகழ்ந்ததால், மக்கள் அலறியடித்து ஓடும் பயங்கரக்
காட்சிகள் கெமராவில் பதிவாகியுள்ளன.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-27T22:00:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்திய மாணவர்களின் போராட்டத்திற்கு லண்டனில் இருந்தும் ஆதரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/london-supports-indian-students-protest-1785184292"></link>
            <id>https://tamilwin.com/article/london-supports-indian-students-protest-1785184292</id>
            <summary type="text">இந்தியாவில் &#039;காஃக்ரோச் ஜனதா கட்சி&#039; தலைமையிலான மாணவர் அமைப்பினர் நடத்திய
போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரெட்டா
த...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியாவில் 'காஃக்ரோச் ஜனதா கட்சி' தலைமையிலான மாணவர் அமைப்பினர் நடத்திய
போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரெட்டா
துன்பெர்க் லண்டனில் நடைபெற்ற பேரணியில் கலந்து கொண்டுள்ளார்.
</p><p>
இந்தியாவில் கல்வி முறைகேடுகளுக்கு எதிராகவும், மத்திய கல்வி அமைச்சரின் பதவி விலகலை வலியுறுத்தியும் புதுடெல்லியில் மாணவர்கள் பல நாட்கள் தீவிரப்
போராட்டங்களை நடத்தினர். இதன் விளைவாக இந்தியாவின் கல்வி அமைச்சர் தனது பதவியிலிருந்து விலகினார்.</p><p></p><h2>இந்தியக் கல்வி அமைச்சரின் பதவி விலகல்</h2><p>
லண்டனின் டிராஃபால்கர் சதுக்கத்தில் நடைபெற்ற இந்த பேரணியில் உரையாற்றிய
கிரெட்டா துன்பெர்க்,</p><p> "இந்திய மாணவர்களின் போராட்டம் நம் அனைவரையும்
பெருமையடையச் செய்துள்ளதுடன், புதிய நம்பிக்கையையும் அளித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/209faf3b-a785-4b67-9a12-c94d5e62505b/26-6a67c2619b190.webp' /></p><p>
</p><p>
மக்கள் அனைவரும் ஒன்று கூடி எதிர்த்து நிற்கும் போது என்ன சாதிக்க முடியும்
என்பதை அவர்கள் நிரூபித்துள்ளனர். </p><p>மக்களின் உண்மையான அதிகாரத்தை அவர்கள்
உலகிற்கு வெளிப்படுத்தியுள்ளனர்," என பாராட்டியுள்ளார்.
</p><p>
இந்திய மாணவர்களின் நீதிக்கும் ஜனநாயகத்திற்கும் எதிரான இந்த போராட்டம்
ஒட்டுமொத்த மனிதகுலத்திற்குமானது என்று குறிப்பிட்ட அவர், இந்திய இளைஞர்களுடன்
தாம் உறுதியாக நிற்பதாகவும் தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-27T21:58:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kowshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சாவகச்சேரி நகரசபை உப தவிசாளரின் பதவி விவகாரம்.. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்பி வெளியிட்டுள்ள பதிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/gajendrakumar-ponnambalam-special-facebook-update-1785176501"></link>
            <id>https://tamilwin.com/article/gajendrakumar-ponnambalam-special-facebook-update-1785176501</id>
            <summary type="text">சாவகச்சேரி நகரசபை உப தவிசாளரின் பதவி வறிதாக்கப்பட்டமை மற்றும் நகரசபை உறுப்புரிமை நீக்கப்பட்டமை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் 
கஜேந்திரகுமார் பொன்னம...</summary>
            <content type="html"><![CDATA[<p>சாவகச்சேரி நகரசபை உப தவிசாளரின் பதவி வறிதாக்கப்பட்டமை மற்றும் நகரசபை உறுப்புரிமை நீக்கப்பட்டமை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் 
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
</p><p>
அவர் தனது முகநூல் பக்கத்தில் இட்டுள்ள பதிவில், "இது ஒரு ஜனநாயக விரோத செயற்பாடாகும்.</p><p></p><h2>ஜனநாயக விரோதமான செயல்</h2><p>
</p><p>
எனவே,
நாளை நடைபெறவுள்ள சாவகச்சேரி நகரசபைக்கான புதிய உபதவிசாளர் தெரிவு தொடர்பில், பாதிக்கப்பட்ட தரப்பாக உள்ள ஜனநாயக தமிழ்தேசிய கூட்டமைப்பு எடுக்கும் நிலைப்பாட்டை ஆதரித்து, தமிழ்த் தேசிய பேரவை செயற்படும்" என சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4ba621c7-b7e2-46ac-93ea-7f152f2a1bf2/26-6a67c06cd257d.webp' /></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-27T21:57:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[மகிந்த குடும்பத்திற்கு பதற்றத்தை ஏற்படுத்தும் நீதிபதிகள் விவகாரம் - முடிவில் மாறாத அநுர அரசு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/rajapaksa-family-anura-government-cid-inquiry-1785177615"></link>
            <id>https://tamilwin.com/article/rajapaksa-family-anura-government-cid-inquiry-1785177615</id>
            <summary type="text">உயர்நீதிமன்ற நீதியரசர்களின் பதவிக்காலத்தை இரண்டு ஆண்டுகளால் நீடிப்பதற்கான அரசின் திட்டம் தொடர்பில் கடும் வாதப் பிரதிவாதங்கள் எழுந்துள்ளன.&amp;nbsp;
குறிப...</summary>
            <content type="html"><![CDATA[<p>உயர்நீதிமன்ற நீதியரசர்களின் பதவிக்காலத்தை இரண்டு ஆண்டுகளால் நீடிப்பதற்கான அரசின் திட்டம் தொடர்பில் கடும் வாதப் பிரதிவாதங்கள் எழுந்துள்ளன.&nbsp;</p><p>
</p><p>குறிப்பாக, இந்த அரசியலமைப்புத் திருத்த மசோதா தொடர்பில் எதிர்க்கட்சிகள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன.&nbsp;</p><p>தற்போதைய உயர்நீதிமன்ற நீதியரசர்களின் பதவிக்காலத்தை நீடிப்பதன் மூலம், நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு தீர்வு எட்ட முடியும் என அரசாங்க தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p>அதன்படியே, இந்த மசோதா முன்வைக்கப்பட்ட நிலையிலேயே இவ்வாறான கண்டனங்கள் எழுந்துள்ளன.&nbsp;</p><p>இவ்வாறிருக்கையில், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச இது குறித்து கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார்.&nbsp;</p><p>இந்நிலையில், ராஜபக்ச குடும்பத்தினர் தொடர்பில் பல ஊழல் குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படலாம். அதனாலேயே இவ்வாறு அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக அரசியல் ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.&nbsp;</p><p>இது உள்ளிட்ட பல முக்கிய அரசியல் நகர்வுகள் குறித்து விரிவாக ஆராய்கின்றது நாட்டு நடப்பு நிகழ்ச்சி,</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/qQPDt_r7lfI" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-27T21:55:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடும் வெப்பத்தால் பிரான்ஸ் வனவிலங்குகளுக்கு நேர்ந்த கதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/the-fate-of-french-wildlife-due-to-extreme-heat-1785188524"></link>
            <id>https://canadamirror.com/article/the-fate-of-french-wildlife-due-to-extreme-heat-1785188524</id>
            <summary type="text">பிரான்ஸில் நிலவி வரும் கடும் வெப்ப அலை காரணமாக வனவிலங்கு பாதுகாப்பு மையங்கள் மிகக் கடுமையான நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதாக சர்வதேச விலங்கு நல நிதியம் த...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரான்ஸில் நிலவி வரும் கடும் வெப்ப அலை காரணமாக வனவிலங்கு பாதுகாப்பு மையங்கள் மிகக் கடுமையான நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதாக சர்வதேச விலங்கு நல நிதியம் தெரிவித்துள்ளது.
</p><p>
அதிகரித்து வரும் வெப்பநிலை மற்றும் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக ஏராளமான பறவைகள் மற்றும் விலங்குகள் பாதிக்கப்பட்டு, வீதிகளில் மயங்கி விழும் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4cad7cf5-799a-4c4a-ac01-2df82f637731/26-6a67d0ae5b7d7.webp' /></p><p>

இதன் காரணமாக, பிரான்ஸில் உள்ள 70 சதவீதத்திற்கும் அதிகமான வனவிலங்கு பாதுகாப்பு மையங்கள் தங்களது அதிகபட்ச கொள்ளளவை எட்டியுள்ளதாகவும், இதனால் புதிய விலங்குகளை பொறுப்பேற்பதை தற்காலிகமாக நிறுத்தியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
</p><p>
மேலும், காட்டுத்தீ மற்றும் கடும் வெப்பத்திலிருந்து தப்பிக்க முடியாமல் பல விலங்குகள் உயிரிழந்து வருவதாகவும், இதனால் மீளப்பெற முடியாத இயற்கை இழப்பு ஏற்பட்டு வருவதாகவும் சூழலியலாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
</p><p>
காலநிலை மாற்றத்தின் தாக்கம் காரணமாக அதிகரித்து வரும் வெப்ப அலைகள், வனவிலங்குகளின் வாழ்விடங்கள் மற்றும் உயிரினப் பாதுகாப்பில் பெரும் சவால்களை ஏற்படுத்தி வருவதாகவும் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-07-27T21:42:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[100 வருட பழமையான வீட்டில் மறைந்திருந்த பணக் குவியல்- அதிர்ச்சியடைந்த பிரித்தானிய தம்பதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/uk-couple-finds-1000-pounds-hidden-cash-stash-1785174943"></link>
            <id>https://news.lankasri.com/article/uk-couple-finds-1000-pounds-hidden-cash-stash-1785174943</id>
            <summary type="text">பிரித்தானியாவில் வசிக்கும் லூயிசா (Luisa) மற்றும் அவரது கணவர் டான் (Dan), தங்கள் 100 வருட பழமையான வீட்டின் அடித்தளத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பணக...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரித்தானியாவில் வசிக்கும் லூயிசா (Luisa) மற்றும் அவரது கணவர் டான் (Dan), தங்கள் 100 வருட பழமையான வீட்டின் அடித்தளத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பணக் குவியலை கண்டுபிடித்துள்ளனர்.</p><p>அவர்கள் வீட்டின் படிக்கட்டின் கீழ் சுவரால் மூடப்பட்டிருந்த இடத்தை ஆராய்ந்தபோது, பழைய நிலக்கரி துண்டுகள் மற்றும் சிதைந்த பைன்ட் டின் ஒன்றைக் கண்டனர்.

அந்த டின் மிகவும் பழுதடைந்த நிலையில், துர்நாற்றம் வீசியது. </p><p></p><p>ஆரம்பத்தில் அதைத் திறக்க அவர்கள் தயங்கினார்கள்.

பல மாதங்கள் கழித்து, அவர்கள் அதைத் திறந்தபோது, அதில் 1970-களில் அச்சிடப்பட்டிருந்த பணத்தாள்கள் குவிந்து கிடந்தன.

அதில் மொத்தம் 1,000 பவுண்டு இருந்தது.</p><p>இந்த சம்பவம் அவர்களின் குழந்தைகளுக்கு மறக்க முடியாத அனுபவமாக அமைந்தது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/01f4c3a2-27b7-4471-bcb9-d0078a961d2c/26-6a679ba07c0dd.webp' /></p><p>லூயிசா கூறியதாவது: “நாங்கள் இதில் பணம் இருக்கும் என்று ஒருபோதும் நினைக்கவில்லை. குழந்தைகளுக்கு இது ஒரு அற்புதமான நினைவாக இருக்கும்.”</p><p>

இந்த பணம், குடும்பத்துக்கு சரியான நேரத்தில் உதவியாக அமைந்தது. லூயிசா வேலை இழந்திருந்ததால், அந்த பணம் மூலம் சில பில்களை செலுத்தவும், குழந்தைகளுக்கு சிறிய பரிசுகளை வழங்கவும் முடிந்தது.</p><p>

இந்த வீடியோ TikTok-இல் வைரலாகி, 2 லட்சம் பார்வைகளை பெற்றுள்ளது. பலர், பழைய நோட்டுகள் இன்னும் வங்கிகளில் மாற்றிக்கொள்ளலாம் என்றும், சில நோட்டுகள் அரிய சேகரிப்புப் பொருளாக அதிக மதிப்பைப் பெறக்கூடும் என்றும் பரிந்துரைத்துள்ளனர்.
</p><p></p><p>இது போன்ற மறைந்திருக்கும் பொருட்கள் பழைய வீடுகளில் அடிக்கடி கண்டுபிடிக்கப்படுகின்றன. சிலர் பழைய திருமண உடைகள், பழமையான ஆவணங்கள் போன்றவற்றையும் கண்டுபிடித்துள்ளனர்.&nbsp;&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-27T21:15:57+00:00</updated>
        </entry>
    </feed>
