<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-08-06T22:39:43+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[டிரம்பின் வரிக்கு உச்ச நீதிமன்றம் அதிரடி முடிவு ; இறக்குமதியாளர்களுக்கு கோடிக்கணக்கில் பணம் மீள்கொடை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/supreme-court-makes-sweeping-decision-on-trump-tax-1786052875"></link>
            <id>https://canadamirror.com/article/supreme-court-makes-sweeping-decision-on-trump-tax-1786052875</id>
            <summary type="text">அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் விதித்த அதீத வரி நடவடிக்கையை அந்நாட்டு உச்ச நீதிமன்றம் ரத்து செய்ததைத் தொடர்ந்து, இறக்குமதியாளர்களிடம் இருந்து வசூல...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் விதித்த அதீத வரி நடவடிக்கையை அந்நாட்டு உச்ச நீதிமன்றம் ரத்து செய்ததைத் தொடர்ந்து, இறக்குமதியாளர்களிடம் இருந்து வசூலிக்கப்பட்ட பெரும் தொகை மீள வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
</p><p>
கடந்த ஆண்டு ஜனவரி மாதம் அமெரிக்க ஜனாதிபதியாக இரண்டாவது முறையாக பதவியேற்ற டொனால்ட் டிரம்ப், வர்த்தக பற்றாக்குறையை காரணம் காட்டி, இந்தியா உள்ளிட்ட பல நாடுகளிலிருந்து வரும் இறக்குமதிப் பொருட்களுக்கு அதிகளவிலான வரிகளை விதித்தார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b6f2faa6-7b3b-4917-b014-d693d30054df/26-6a75010d2eb7a.webp' /></p><p>இந்த வரி நடவடிக்கைக்கு எதிராக அமெரிக்காவின் சில மாகாணங்களும், பல்வேறு வர்த்தக நிறுவனங்களும் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தன.
</p><p>
இந்த வழக்கை விசாரித்த அமெரிக்க உச்ச நீதிமன்றம், குறித்த அளவிலான அதீத வரிகளை விதிக்கும் அதிகாரம் அதிபருக்கு இல்லை என தீர்ப்பளித்ததுடன், டிரம்ப் நிர்வாகம் விதித்த வரிகளை ரத்து செய்தது.
</p><p>
மேலும், அந்த வரிகளின் மூலம் இறக்குமதியாளர்களிடம் இருந்து வசூலிக்கப்பட்ட பணத்தை மீள வழங்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
</p><p>
இதனையடுத்து, மொத்தமாக வசூலிக்கப்பட்ட 15.77 லட்சம் கோடி ரூபாய் தொகையில், இதுவரை சுமார் 60 சதவீதமான 9.50 லட்சம் கோடி ரூபாய் இறக்குமதியாளர்களுக்கு திருப்பி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இந்தத் தகவலை அமெரிக்க சுங்க மற்றும் எல்லைப் பாதுகாப்புப் பிரிவு, உச்ச நீதிமன்றத்தில் சமீபத்தில் தாக்கல் செய்த ஆவணங்களில் குறிப்பிட்டுள்ளது.
</p><p>
மேலும், மீதமுள்ள தொகைகளை திருப்பி வழங்குவதற்கான கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும், அவையும் விரைவில் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-06T22:39:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[கவின் - நயன்தாரா நடித்த Hi ரிலீஸ் தள்ளிபோகிறதா? காரணம் இதுதான்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/is-kavin-nayanthara-hi-movie-release-postpone-1786055928"></link>
            <id>https://cineulagam.com/article/is-kavin-nayanthara-hi-movie-release-postpone-1786055928</id>
            <summary type="text">கவின் மற்றும் நயன்தாரா இருவரும் ஜோடியாக முதல் முறையாக நடித்து இருக்கும் படம் Hi.இந்த படம் ஆகஸ்ட் 14ம் தேதி ரிலீஸ் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் த...</summary>
            <content type="html"><![CDATA[<p>கவின் மற்றும் நயன்தாரா இருவரும் ஜோடியாக முதல் முறையாக நடித்து இருக்கும் படம் Hi.இந்த படம் ஆகஸ்ட் 14ம் தேதி ரிலீஸ் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் தற்போது சொன்ன தேதியில் படம் வெளியாகுமா என்பது கேள்விக்குறியாகி இருக்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/64c42bbc-8eb8-42c5-a8e0-7844a799d440/26-6a750cfa49e37.webp' /></p><p>
</p><h2>தள்ளிபோகிறதா?
</h2><p>
சூர்யாவின் விஸ்வநாத் &amp; சன்ஸ், விஷாலின் மகுடம் போன்ற படங்கள் அதே நேரத்தில் ரிலீஸ் ஆவதால் Hi படம் தள்ளிபோக இருப்பதாக தகவல் பரவி வருகிறது.

இருப்பினும் படக்குழு இதுபற்றி அறிவிப்பு எதுவும் வெளியிடவில்லை. அறிவிப்பு வந்தால் தான் ரிலீஸ் தள்ளிப்போவது பற்றிய செய்தி உறுதியாகும்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-06T22:39:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[கள்ளத்தொடர்பு சந்தேகம் ; மனைவியின் தொடர்பை அறிந்த கணவன் செய்த கொடூரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/wife-s-illicit-affair-husband-s-cruelty-1786048409"></link>
            <id>https://jvpnews.com/article/wife-s-illicit-affair-husband-s-cruelty-1786048409</id>
            <summary type="text">இந்தியாவின் ஜெய்ப்பூரில் மனைவியின் கள்ளத்தொடர்பு விவகாரத்தைத் தொடர்ந்து, அவரை பழிவாங்கும் நோக்கில் கொடூரமாக சித்திரவதை செய்து உயிரிழக்கச் செய்ததாகக் க...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியாவின் ஜெய்ப்பூரில் மனைவியின் கள்ளத்தொடர்பு விவகாரத்தைத் தொடர்ந்து, அவரை பழிவாங்கும் நோக்கில் கொடூரமாக சித்திரவதை செய்து உயிரிழக்கச் செய்ததாகக் கூறப்படும் வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><p>
</p><p></p><h3>மேலதிக விசாரணை</h3><p>ஜெய்ப்பூரைச் சேர்ந்த ராஜேந்திர பிரசாத் சர்மா என்ற தொழிலதிபர், தனது மனைவி கவிதா சர்மாவுக்கும், அவர்களது கார் சாரதியான முகேஷ் யாதவுக்கும் இடையில் ஏற்பட்டிருந்த நெருக்கமான தொடர்பை மனைவியின் தொலைபேசி உரையாடல்கள் மூலம் அறிந்துகொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b5d62bea-8dea-4361-b870-02135383bf03/26-6a74ef9bf3c3f.webp' /></p><p>

இந்த விவகாரம் தொடர்பில் மனைவியுடன் நேரடியாக மோதுவதற்குப் பதிலாக, ராஜேந்திர பிரசாத் திட்டமிட்டு பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டதாக காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.</p><p>காவல்துறை தகவல்களின்படி, அவர் மனைவியை நீண்ட நேரம் உடல் ரீதியாக துன்புறுத்தியதாகவும், இதன் காரணமாக கவிதா சர்மா கடுமையான உடல்நலப் பாதிப்புக்கு உள்ளானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
சம்பவம் இடம்பெற்ற நாளில் கவிதாவுக்கு கடுமையான பாதிப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து அவர் உயிரிழந்ததாகவும், பின்னர் ராஜேந்திர பிரசாத் மருத்துவ உதவியை நாடி, அதை இயற்கையான மரணம் போன்று காட்ட முயன்றதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
</p><p>
எனினும், காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணைகளில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்ததையடுத்து, கவிதாவின் தொலைபேசி தகவல்கள் மற்றும் பிற ஆதாரங்கள் பரிசோதிக்கப்பட்டன.</p><p>மேலும், பிரேதப் பரிசோதனை அறிக்கையில் அவரது உடலில் கடுமையான காயங்கள் காணப்பட்டதாகவும், இதையடுத்து சம்பவம் தொடர்பான உண்மைகள் வெளிச்சத்துக்கு வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e9fc2c55-59c2-422e-94ba-9dac31d16d5d/26-6a74ef9b4e213.webp' /></p><p>
</p><p>
விசாரணையின் போது ராஜேந்திர பிரசாத் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதாகவும், இதனைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

இதேவேளை, சம்பவத்தில் தொடர்புடையதாகக் கூறப்படும் கார் சாரதி முகேஷ் யாதவிடமும் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
</p><p>
இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.</p><p></p>]]></content>
            <updated>2026-08-06T22:38:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[பங்களாதேசத்தில் புதிய ஜனாதிபதி தேர்வு ; தேர்தல் திகதி அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/bangladesh-elects-president-election-date-announce-1786054439"></link>
            <id>https://canadamirror.com/article/bangladesh-elects-president-election-date-announce-1786054439</id>
            <summary type="text">பங்களாதேசத்தின் புதிய ஜனாதிபதி தெரிவு செய்வதற்கான தேர்தல் வரும் 20ஆம் திகதி நடைபெறும் என அந்நாட்டு தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

பங...</summary>
            <content type="html"><![CDATA[<p>பங்களாதேசத்தின் புதிய ஜனாதிபதி தெரிவு செய்வதற்கான தேர்தல் வரும் 20ஆம் திகதி நடைபெறும் என அந்நாட்டு தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.</p><p>

பங்களாதேச ஜனாதிபதியாக பதவி வகித்து வந்த முகமது ஷஹாபுதீன், தனது பதவிக்காலம் நிறைவடைய இன்னும் இரண்டு ஆண்டுகள் இருந்த நிலையில், கடந்த மாதம் 24ஆம் திகதி தனது பதவியை ராஜினாமா செய்தார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a0f6903a-1043-479d-8e8c-cad500fa71b5/26-6a7507292721a.webp' /></p><p>முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான ஆட்சிக்காலத்தில் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டிருந்த முகமது ஷஹாபுதீனின் ராஜினாமாவைத் தொடர்ந்து, நாட்டில் புதிய ஜனாதிபதி தெரிவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
</p><p>
இதற்கமைய, எதிர்வரும் 20ஆம் திகதி மதியம் 2.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை பங்களாதேச நாடாளுமன்ற கூட்ட அரங்கில் ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.</p><p>

மேலும், ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நடவடிக்கைகள் வரும் 13ஆம் திகதி ஆரம்பமாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

பங்களாதேச அரசியல் சூழலில் முக்கியமான கட்டமாக இந்த ஜனாதிபதி தேர்தல் பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-08-06T22:14:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[விரைவில் முடிவுக்கு வரும் ஈரான் போர்..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/trump-says-he-thinks-iran-war-to-end-pretty-soon-1786051631"></link>
            <id>https://tamilwin.com/article/trump-says-he-thinks-iran-war-to-end-pretty-soon-1786051631</id>
            <summary type="text">அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட;ரம்ப், ஈரானில் நடைபெற்று வரும் போர் விரைவில் முடிவுக்கு வரும் என்ற நம்பிக்கையை தெரிவித்துள்ளார்.

உலகளாவிய மற்றும் அமெர...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட;ரம்ப், ஈரானில் நடைபெற்று வரும் போர் விரைவில் முடிவுக்கு வரும் என்ற நம்பிக்கையை தெரிவித்துள்ளார்.
</p><p>
உலகளாவிய மற்றும் அமெரிக்காவின் எரிசக்தி விலைகள் குறித்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அவர், "இந்தப் போர் இன்னும் நீண்ட காலம் நீடிக்கும் என்று நான் நினைக்கவில்லை. இது விரைவில் முடிவுக்கு வரும்" என்று குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>முடிவுக்கு வரும்</h2><p>

இதற்கிடையில், முக்கிய கடல் வர்த்தகப் பாதையான ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) வழியாக வர்த்தகக் கப்பல்கள் பாதுகாப்பாகச் செல்லும் வகையில், ஓமான் நாட்டின் மத்தியஸ்தத்துடன் ஈரான் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/88602a34-b960-4d22-9276-cd348aef2c2d/26-6a74ff42d84e3.webp' /></p><p> </p><p>இரு தரப்புக்கும் ஏற்ற ஒப்பந்தம் எட்டப்படுவதற்கான சூழல் உருவாகி வருவதாகவும் கூறப்படுகிறது.</p><p>

அதேவேளை, போரை நிரந்தரமாக முடிவுக்குக் கொண்டுவரும் வகையில் அமெரிக்காவுடன் நேரடி பேச்சுவார்த்தையில் தற்போது ஈடுபடவில்லை என்று ஈரான் பலமுறை தெளிவுபடுத்தியுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-06T22:10:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொங்கோவில் எபோலா பரவல் தீவிரம்: ஊதியம் கோரி சுகாதாரப் பணியாளர்கள் போராட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ebola-outbreak-escalates-congo-health-workers-1786047460"></link>
            <id>https://tamilwin.com/article/ebola-outbreak-escalates-congo-health-workers-1786047460</id>
            <summary type="text">கொங்கோ ஜனநாயகக் குடியரசில் (DRC) எபோலா வைரஸ் தொற்று மிக வேகமாகப் பரவி வரும்
நிலையில், தமக்கு வழங்கப்பட வேண்டிய நிலுவைச் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொங்கோ ஜனநாயகக் குடியரசில் (DRC) எபோலா வைரஸ் தொற்று மிக வேகமாகப் பரவி வரும்
நிலையில், தமக்கு வழங்கப்பட வேண்டிய நிலுவைச் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை
உடனடியாக வழங்குமாறு வலியுறுத்திப் பெருந்திரளான சுகாதாரப் பணியாளர்கள்
பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
</p><p>
இட்டுரி மாகாணத்தின் புனியா நகரில் அமைந்துள்ள ஆளுநர் பணிமனைக்கு முன்பாக
ஒன்றுதிரண்ட சுகாதாரப் பணியாளர்கள் வியாழக்கிழமை இந்த எதிர்ப்பைப்
பதிவுசெய்துள்ளனர்.</p><p></p><h2>சுகாதாரப் பணியாளர்கள் போராட்டம்</h2><p>
</p><p>
கடந்த மே மாதம் நடுப்பகுதியில் எபோலா தொற்று பரவத் தொடங்கியது முதல் தமக்குரிய
கொடுப்பனவுகள் வழங்கப்படவில்லை என அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
</p><p>
நாட்டில் பதிவாகும் மொத்த எபோலா தொற்றாளர்களில் சுமார் 90 சதவீதமானோர் இட்டுரி
மாகாணத்திலேயே கண்டறியப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/61b5857f-f8b0-4ad9-a867-4fb5a9a69317/26-6a74f6bf16d79.webp' /></p><p>
</p><p>
அரசாங்கத்தின் அண்மைய தரவுகளின்படி, இதுவரை 3,973 பேருக்குத் தொற்று உறுதி
செய்யப்பட்டுள்ளதுடன், 1,801 பேர் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன், 674 நோயாளர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு
வருகின்றனர்.</p><p>

கிளர்ச்சிக் குழுக்களின் மோதல்கள் மற்றும் தொலைதூர கிராமங்களுக்கான
போக்குவரத்து வசதியின்மை என்பன தொற்றுக்கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்குப்
பெரும் சவாலாக அமைந்துள்ளன.
</p><p>
சுகாதாரப் பணியாளர்களின் இந்தப் பணிப்புறக்கணிப்பு நோயாளிகளுக்கான சிகிச்சைகள்
மற்றும் தொற்றாளர்களைக் கண்டறியும் நடவடிக்கைகளைப் கடுமையாகப் பாதிக்கும் எனக்
கவலை வெளியி்ட்டுள்ள சர்வதேச நிவாரண அமைப்புகள், வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த
உடனடி நடவடிக்கைகள் அவசியமென வலியுறுத்தியுள்ளன.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-06T21:44:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[இருளில் நடந்த ரகசிய சந்திப்பு..! சந்தித்தது மொஜ்தபா கமெனிதானா என ஈரான் ஜனாதிபதிக்கு சந்தேகம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/iran-president-met-mojtaba-khamenei-in-darkness-1786046532"></link>
            <id>https://tamilwin.com/article/iran-president-met-mojtaba-khamenei-in-darkness-1786046532</id>
            <summary type="text">ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் (Masoud Pezeshkian), நாட்டின் உச்சத் தலைவர் மொஜ்தபா கமெனி (Mojtaba Khamenei)யை தெஹ்ரானில் ரகசிய இடமொன்றில், முழு இரு...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் (Masoud Pezeshkian), நாட்டின் உச்சத் தலைவர் மொஜ்தபா கமெனி (Mojtaba Khamenei)யை தெஹ்ரானில் ரகசிய இடமொன்றில், முழு இருளில் நிறுத்தப்பட்டிருந்த கருப்பு கண்ணாடி பொருத்தப்பட்ட காரில் சந்தித்ததாக Iran International வெளியிட்ட செய்தி தெரிவிக்கிறது.</p><p>

அந்த சந்திப்பு சில நிமிடங்கள் மட்டுமே நீடித்ததாகவும், மொஜ்தபா கமெனியின் பாதுகாப்பு அதிகாரிகள் பெசெஷ்கியானுக்கு கை குலுக்கக்கூட அனுமதிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.</p><p></p><h2>மொஜ்தபா கமெனி</h2><p> 

இருள் காரணமாக இருவரும் ஒருவரை ஒருவர் பார்க்க முடியாத சூழல் இருந்ததால், பின்னர் "நான் பேசியவர் உண்மையில் மொஜ்தபா கமெனிதானா?" என்று ஜனாதிபதி தனது அலுவலகத்தில் கேள்வி எழுப்பியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p>
</p><p>
இந்த சந்திப்புக்காக பெசெஷ்கியான் பலமுறை கோரிக்கை வைத்ததுடன், பதவி விலகுவதாக எச்சரித்த பிறகே காமெனியின் அலுவலகம் ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/20174468-4839-43f8-b5e5-a87ebfa20c2a/26-6a74e9f81cec9.webp' /></p><p>
</p><p>
 ஆனால் வழக்கம்போல் உச்சத் தலைவரின் இல்லத்தில் அல்லாமல், ரகசிய இடத்தில் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
</p><p>
எனினும், கடந்த மே மாதத்தில் வர்த்தக அமைப்புகளின் பிரதிநிதிகளை சந்தித்தபோது, மொஜ்தபா கமெனியுடன் இரண்டரை மணி நேரம் "நட்பான சூழலில்" பேச்சுவார்த்தை நடத்தியதாக பெசெஷ்கியான் தெரிவித்திருந்தார்.</p><p></p><h2>இறுதி எச்சரிக்கை</h2><p>

இதற்கிடையில், மொஜ்தபா கமெனியுடன் தொடர்பு கொள்வது தற்போது மிகவும் கடினமாக இருப்பதாகவும், இருப்பினும் அவரது இருப்பு நாட்டுக்கு மிகப்பெரிய பலமாக உள்ளது என்றும் பெசெஷ்கியான் கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c1970d21-19fc-44be-ae01-0da5c056e3b2/26-6a74e9f8c25c5.webp' /></p><p>
</p><p>
மேலும், தேசிய பாதுகாப்பு மற்றும் வெளிநாட்டு கொள்கை தொடர்பான முடிவுகளில் தனது அரசு புறக்கணிக்கப்படுவதாகக் கூறி, பெசெஷ்கியான் மே மாதத்தில் பதவி விலக முயன்றதாகவும், அதற்கு பதிலாக மொஜ்தபா கமெனி இறுதி எச்சரிக்கை விடுத்ததாக இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
</p><p>
குறிப்பாக, தனது தந்தை அயத்துல்லா அலி கமெனி உயிரிழந்ததைத் தொடர்ந்து பதவியேற்ற மொஜ்தபா காமெனி கடந்த ஐந்து மாதங்களாக பொதுமக்கள் முன்னிலையில் தோன்றவில்லை என்றும், எழுத்து மூலமான அறிக்கைகள் மட்டுமே வெளியிட்டு வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-06T21:40:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரஷ்யாவின் சரடோவ் விமான நிலையத்தில் விமானங்கள் பறக்க தடை: அதிகரிக்கும் உக்ரைன் ட்ரோன் தாக்குதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/russia-saratov-airport-cancelled-flight-service-1786052217"></link>
            <id>https://news.lankasri.com/article/russia-saratov-airport-cancelled-flight-service-1786052217</id>
            <summary type="text">உக்ரைனின் ட்ரோன் தாக்குதல் காரணமான ரஷ்யாவின் சரடோவ்(saratov) விமான நிலையம் தற்காலிகமாக முடங்கியுள்ளது. விமானங்கள் பறக்க தடை
உக்ரைனின் தொடர்ச்சியான ட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>உக்ரைனின் ட்ரோன் தாக்குதல் காரணமான ரஷ்யாவின் சரடோவ்(saratov) விமான நிலையம் தற்காலிகமாக முடங்கியுள்ளது.</p><h2> விமானங்கள் பறக்க தடை</h2><p>
உக்ரைனின் தொடர்ச்சியான ட்ரோன் தாக்குதல்கள் காரணமாக தென்மேற்கு ரஷ்யாவில் அமைந்துள்ள சரடோவ் விமான நிலையத்தில் விமான போக்குவரத்தை ரஷ்ய அதிகாரிகள் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளனர்.</p><p>முன்னதாக ரோசவியாட்சியா (Rosaviatsiya) வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பில், விமானம் மற்றும் பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை நடைமுறைப்படுத்தப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4d705fb6-0b83-49a6-8201-ba33f39c5d82/26-6a74fe7ad69b9.webp' /></p><p>கடந்த வாரம் சரடோவ் பகுதியில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதல் நடத்தியது.</p><p>]<br></p><p> அதே நேரத்தில் அருகில் இருந்த மூலோபாய விமான தளம் அமைந்துள்ள எங்கெல்ஸ் நகரமும் உக்ரைனிய ட்ரோன் தாக்குதலுக்கு உள்ளானது குறிப்பிடத்தக்கது.</p><p> இந்நிலையில் ரஷ்யாவில் பல்வேறு இடங்களை குறிவைத்து மிகப்பெரிய ட்ரோன் தாக்குதல்களை உக்ரைன் மீண்டும் நடத்த திட்டமிட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள். &nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-06T21:37:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[உக்ரைனில் ரஷ்யா பயங்கர தாக்குதல்! பொதுமக்கள் பலர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/russia-s-attack-on-civilians-in-ukraine-1786050333"></link>
            <id>https://ibctamil.com/article/russia-s-attack-on-civilians-in-ukraine-1786050333</id>
            <summary type="text">உக்ரைனின் கிழக்கு நகரமான பாலக்லியாவில் உள்ள வீடுகள் மீது ரஷ்யா நடத்திய தாக்குதலில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.

அதன்போது ஏற்பட்ட தீய...</summary>
            <content type="html"><![CDATA[<p>உக்ரைனின் கிழக்கு நகரமான பாலக்லியாவில் உள்ள வீடுகள் மீது ரஷ்யா நடத்திய தாக்குதலில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.
</p><p>
அதன்போது ஏற்பட்ட தீயை அணைக்கவும், இடிபாடுகளை அகற்றவும் மீட்புக் குழுவினர் தீவிரமாகப் பணியாற்றி வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
</p><p>
இதேவேளை, வடக்கு சுமி பிராந்தியத்தில் உள்ள குடியிருப்புகள் மீது ரஷ்யப் படைகள் நடத்திய தாக்குதலில் மூன்று பேர் உயிரிழந்ததுள்ளதாகவும், சுமார் 19 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><h2>ஏனைய தாக்குதல்கள்</h2><p>
</p><p>
அத்தோடு, சுமி நகரிலேயே வான்வழி குண்டுகள் மூலம் நடத்தப்பட்ட மற்றுமொரு தாக்குதலில் மேலும் 12 பேர் காயமடைந்துள்ளதாக உக்ரைன் காவல்துறை தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0945e6f4-8e33-441b-b23c-6b9bfb6a0720/26-6a74fa2dccfa3.webp' /></p><p><i>Image Credit:&nbsp;Reuters</i></p><p>

தெற்கு கெர்சன் பிராந்தியத்தில் ஒரு வான் மீது நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் 6 பேர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது.
</p><p> 
எவ்வாறாயினும், 2022-ல் தொடங்கிய இந்தப் போரில், பொதுமக்களைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்துவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகிய இரு நாடுகளுமே தொடர்ந்து மறுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> WHATSAPP CHANNEL</a> </b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-06T21:18:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[தென் கொரியாவை நோக்கி ஏவுகணைகளை ஏவிய வடகொரியா: அமெரிக்கா, ஜப்பானுக்கு அனுப்பப்பட்ட தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/n-korea-fires-ballistic-missiles-seoul-confirms-1786050921"></link>
            <id>https://news.lankasri.com/article/n-korea-fires-ballistic-missiles-seoul-confirms-1786050921</id>
            <summary type="text">வடகொரியா தனது குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியதாக தென் கொரியா குற்றஞ்சாட்டியுள்ளது. ஏவுகணைகளை ஏவிய வடகொரியா
வியாழக்கிழமை தென் கொரியாவின் கிழக்கு...</summary>
            <content type="html"><![CDATA[<p>வடகொரியா தனது குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியதாக தென் கொரியா குற்றஞ்சாட்டியுள்ளது.</p><h2> ஏவுகணைகளை ஏவிய வடகொரியா</h2><p>
வியாழக்கிழமை தென் கொரியாவின் கிழக்கு கடற்கரையை நோக்கி வடகொரியா தனது குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவி இருப்பதாக தென் கொரியாவின் கூட்டு படைத் தளபதிகள் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளனர்.</p><p> வடகொரியாவின் வோன்சான் பகுதியில் இருந்து உள்ளூர் நேரப்படி மாலை 5 மணியளவில் இந்த ஏவுகணையானது ஏவப்பட்டதாக தென் கொரிய அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/760f5a31-63b0-470d-bf57-a1c6e13452a4/26-6a74f96b257c5.webp' /></p><p> இதையடுத்து தென் கொரியா ராணுவம் ஏவுகணை தடுப்பு மற்றும் கண்காணிப்பு பணியில் தீவிரமாக களமிறங்கியுள்ளது.</p><p> அத்துடன் அமெரிக்கா மற்றும் ஜப்பான் போன்ற நட்பு நாடுகளுடன் இதனை பகிர்ந்து, தென் கொரியா தன்னுடைய பாதுகாப்பு நடவடிக்கைகளை ஒருங்கிணைத்து வருகிறது.</p><p style="margin-left: 25px;"></p><h2> ஜப்பானின் எச்சரிக்கை</h2><p>இந்த ஏவுகணை ஏவுதலுக்கு முன்னதாக வட கொரியா ஏவுகணைகளை ஏவி இருக்கலாம் என்று எச்சரிக்கை விடுத்திருந்தது.</p><p>ஆனால் இந்த ஏவுகணைகள் தங்களது பயணத்தை முடித்து கொண்டதாகவும், இதனால் ஜப்பானுக்கோ அல்லது அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கோ எந்தவொரு பாதிப்பும் இல்லை என்று உறுதிப்படுத்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dac50d58-f5df-4f55-8654-f813916a8662/26-6a74f96bcbe32.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள். &nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-06T21:15:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தியா–இலங்கை உறவில் மேலும் ஒரு இணைப்பு ; புதிய பால உதவி வழங்கல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/india-sri-lanka-relations-bridge-assistance-provid-1786050316"></link>
            <id>https://jvpnews.com/article/india-sri-lanka-relations-bridge-assistance-provid-1786050316</id>
            <summary type="text">இருதரப்பு போக்குவரத்து இணைப்பை வலுப்படுத்தும் நோக்கில், 250 மெட்ரிக் தொன்னிற்கும் அதிக எடையைக் கொண்ட &#039;பெய்லி&#039; (Bailey) தற்காலிகப் பாலங்களின் புதிய தொக...</summary>
            <content type="html"><![CDATA[<p>இருதரப்பு போக்குவரத்து இணைப்பை வலுப்படுத்தும் நோக்கில், 250 மெட்ரிக் தொன்னிற்கும் அதிக எடையைக் கொண்ட 'பெய்லி' (Bailey) தற்காலிகப் பாலங்களின் புதிய தொகுப்பினை இந்தியா இன்று (ஆகஸ்ட் 6) இலங்கையிடம் உத்தியோகபூர்வமாகக் கையளித்துள்ளது.</p><p></p><p>

இலங்கைக்கான இந்திய பிரதி உயர்ஸ்தானிகர் மைத்ரேய் கே, இந்த திட்டப் பொருட்களை இலங்கையின் கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்கவிடம் உத்தியோகபூர்வ நிகழ்வொன்றில் கையளித்தார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5c528618-8acc-440a-ab9d-9689142f2fc8/26-6a74f70d931c6.webp' /></p><p>இலங்கைக்கு இந்தியா வழங்கும் 450 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான மறுசீரமைப்பு உதவிக் கடனுதவித் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை அமைந்துள்ளது.</p><p>

இந்திய இராணுவப் பொறியாளர்களால் நாடு முழுவதும் நிறுவப்படவுள்ள இந்தப் பாலங்கள், நாட்டின் போக்குவரத்துப் பாதைகளைச் சீரமைப்பதுடன் உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கும் பெரும் பக்கபலமாக அமையும்.

இதற்கிடையில், இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி தனது உத்தியோகபூர்வ இலங்கை பயணத்தை நிறைவு செய்துள்ளார்.
</p><p>
இந்த பயணத்தின் போது, இந்தியாவின் 'அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை' (Neighbourhood First) கொள்கையின் கீழ் இலங்கைக்கு ஆதரவளிப்பதற்கான இந்தியாவின் உறுதியை அவர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-06T21:05:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் அமெரிக்க தூதரகம் மீது தாக்குதல்: சிறுவன் உட்பட இரண்டு பேர் அதிரடி கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/canada-police-arrest-two-over-us-embassy-attack-1786047168"></link>
            <id>https://news.lankasri.com/article/canada-police-arrest-two-over-us-embassy-attack-1786047168</id>
            <summary type="text">டொராண்டோவில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவத்தில் இரண்டு பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். அமெரிக்க தூதரகம் மீது தாக்குதல்கடந...</summary>
            <content type="html"><![CDATA[<p>டொராண்டோவில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவத்தில் இரண்டு பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.</p><h2> அமெரிக்க தூதரகம் மீது தாக்குதல்</h2><p>கடந்த ஜூலை 26ம் திகதி அதிகாலை 5 மணியளவில் டொராண்டா நகரின் மையப்பகுதியான யுனிவர்சிட்டி அவென்யூவில் அமைந்துள்ள அமெரிக்க தூதரகத்தின் முன்பு குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.</p><p> இந்த சம்பவத்தில் ஈடுபட்ட வெள்ளை நிற கார் ஒன்று அங்கிருந்து தப்பிச் செல்வதை தூதரக காவலர் கண்டுள்ளார்.</p><p> இதனையடுத்து தகவலறிந்து வெள்ளை நிற காரை துரத்திய பொலிஸார், ஒருகட்டத்தில் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி அந்த துரத்தலை கைவிட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7dcbbf56-8d28-4c3e-96d3-3dc570078328/26-6a74eac1c2fb4.webp' />&nbsp;<br></p><h2> இரண்டு சந்தேக நபர்கள் கைது</h2><p>இந்நிலையில் அமெரிக்க தூதரகம் மீது குண்டு வீசி தாக்குதல் நடத்திய சந்தேக நபர்கள் இரண்டு பேரை&nbsp; டொராண்டோ பொலிஸார் கைது செய்துள்ளனர்.</p><p>இது தொடர்பாக வியாழக்கிழமை செய்தியாளர்களை சந்தித்த காவல்துறை தலைவர் டெம்கிவ், இந்த தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைய 19 வயது ஜென்-உல்-அபிதீன் சையத் என்ற இளைஞர் ஒருவரும், பெயர் வெளியிடப்படாத 15 வயது சிறுவனும் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.</p><p> அத்துடன் அவர்கள் மீது தீவைப்பு, ஆயுதச் சட்ட மீறல்கள், சர்வதேச அளவில் பாதுகாக்கப்பட்ட நபர்களை குறிவைத்து தாக்குதல், ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டுதல், காவல்துறையிடம் இருந்து தப்பித்தல் ஆகிய பல கடுமையான பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.</p><p></p><p> குற்றவாளிகளை பிடிப்பதில் எந்தவொரு சமரசமும் இருக்காது என்று அப்போதே தெரிவித்தேன் என காவல்துறை தலைவர் டெம்கிவ் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p> முதல் சந்தேக நபர் கடந்த சனிக்கிழமை கைது செய்யப்பட்டதாகவும், இரண்டாவது நபர் புதன்கிழமை கைது செய்யப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.</p><p>இவர்கள் மறைக்கப்பட்ட செய்தியியல் செயலிகள்(Encrypted messaging apps) மூலம் இந்த தாக்குதல் நடத்த அவர்கள் கட்டளை பெற்று இருப்பதாகவும், இதற்கு மாறாக அவர்களுக்கு பணம் வழங்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டு இருப்பதாக நாங்கள் நம்புகிறோம் என்றும் டெம்கிவ் தெரிவித்துள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள். &nbsp;<br></td></tr></tbody></table><p>&nbsp;<br></p>]]></content>
            <updated>2026-08-06T20:54:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[பசிலைப் போல் திறமைசாலி யாரும் இல்லை! நாமல் புகழாரம்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/there-is-no-one-as-talented-as-basil-namal-praise-1786049193"></link>
            <id>https://tamilwin.com/article/there-is-no-one-as-talented-as-basil-namal-praise-1786049193</id>
            <summary type="text">பசில் ராஜபக்ச மிகவும் திறமையான ஒரு தலைவர் என்றும், அவரைப் போன்ற ஆளுமைமிக்க ஒருவர் இலங்கையில் வேறு யாரும் இல்லை என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பசில் ராஜபக்ச மிகவும் திறமையான ஒரு தலைவர் என்றும், அவரைப் போன்ற ஆளுமைமிக்க ஒருவர் இலங்கையில் வேறு யாரும் இல்லை என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.</p><p>

ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) முக்கிய தலைவரான பசில் ராஜபக்சவின் அரசியல் மற்றும் நிர்வாகத் திறன்களைப் பாராட்டிப் பேசியுள்ளார்.</p><p>


நாட்டின் பொருளாதார மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளை திறம்பட முன்னெடுக்கும் ஆற்றல் பசில் ராஜபக்சவுக்கு மட்டுமே உண்டு என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p>

இந்த விடயங்கள் தொடர்பிலும் இலங்கை அரசியல் பரப்பில் நடந்த முக்கிய விடயங்கள் தொடர்பிலும் பேசுகின்றது லங்காசிறியின் Political Arena நிகழ்ச்சி..</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/2eh90AvrUac" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p>[A8HKFC8[</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-06T20:48:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானில் கேட்ட வெடிப்பு சத்தங்கள்! ஹோர்முஸ் நுழைவாயிலில் பதற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/two-explosions-heard-in-southern-iran-overnight-1786047483"></link>
            <id>https://ibctamil.com/article/two-explosions-heard-in-southern-iran-overnight-1786047483</id>
            <summary type="text">தெற்கு ஈரானில் வியாழக்கிழமை இரவு இரண்டு வெடிப்பு சத்தங்கள் கேட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதன்படி, குறித்த சத்தங்கள் ஹோர்முஸ் நீரிணையில் நுழைவாய...</summary>
            <content type="html"><![CDATA[<p>தெற்கு ஈரானில் வியாழக்கிழமை இரவு இரண்டு வெடிப்பு சத்தங்கள் கேட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
</p><p>
அதன்படி, குறித்த சத்தங்கள் ஹோர்முஸ் நீரிணையில் நுழைவாயிலுக்கு அருகில் இருந்த எதிரி இலக்குகளுக்கு எதிராக நடத்தப்பட்ட இராணுவ நடவடிக்கையுடன் தொடர்புடையவை என ஈரானிய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
</p><p>
உள்நாட்டு நேரப்படி இரவு சுமார் 9.40 மணியளவில் கெஷ்ம் பகுதியில் இந்த வெடிப்புச் சத்தங்கள் கேட்டுள்ளன.</p><p></p><h2>தீவிர விசாரணை&nbsp;</h2><p> </p><p>

மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த இந்த நீர்வழியில் ஈரானிய கடற்படையினர் மேற்கொண்ட இந்நடவடிக்கையின் முழு விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7647bbe8-f3c5-4d6d-8c3e-a2253283bb28/26-6a74eed5a8819.webp' /></p><p><i>Image Credit:&nbsp;Al Jazeera</i></p><p>
</p><p>
இதேவேளை, கெஷ்மிலோ அல்லது அருகில் உள்ள பந்தர் அப்பாஸ் துறைமுக நகரத்திலோ எவ்விதப் பாதிப்புகளும் ஏற்படவில்லை என ஹோர்மோஸ்கான் மாகாணத்தின் பாதுகாப்பு விவகாரங்களுக்கான துணை ஆளுநர் தெரிவித்துள்ளார். </p><p>

எவ்வாறாயினும், இந்த வெடிப்புகளுக்கான பின்னணி மற்றும் காரணத்தை கண்டறிய ஈரானிய பாதுகாப்பு அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-06T20:30:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[பூசணி விதைகள் சாப்பிடுவதால் கிடைக்கும் முக்கிய நன்மைகள் எவையென தெரியுமா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/key-benefits-of-eating-pumpkin-seeds-1786046617"></link>
            <id>https://jvpnews.com/article/key-benefits-of-eating-pumpkin-seeds-1786046617</id>
            <summary type="text">ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளில் ஒன்று பூசணி விதை. இதய ஆரோக்கியத்திற்கு தேவையான நல்ல கொழுப்புகள், நார்ச்சத்து, மெக்னீசியம், பொட்டாசியம், துத்தநாகம்,...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளில் ஒன்று பூசணி விதை. இதய ஆரோக்கியத்திற்கு தேவையான நல்ல கொழுப்புகள், நார்ச்சத்து, மெக்னீசியம், பொட்டாசியம், துத்தநாகம், வைட்டமின் இ போன்ற சத்துக்களை கொண்டது. பூசணி விதைகளை சாப்பிடுவதால் கிடைக்கும் முக்கிய நன்மைகளை பார்ப்போம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e469707a-d202-4bce-8c24-bbb547dd2a9e/26-6a74e89ae82c6.webp' /></p><p>
</p><h3>
ஆன்டி ஆக்சிடென்டுகள்
</h3><p>வைட்டமின் இ, பீட்டா கரோட்டீன் உள்ளிட்ட ஆன்டி ஆக்சிடென்டுகள் பூசணி விதையில் அதிகம் உள்ளன. இவை உடலில் ஏற்படும் அழற்சியை குறைத்து, செல்கள் சேதமடைவதை தடுக்க உதவக்கூடும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/75567514-0faa-4de0-8a11-e4c119beb1e3/26-6a74e89b9aa8c.webp' /></p><p>
</p><h3>இதய ஆரோக்கியம்
</h3><p>பூசணி விதையில் மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் அதிகம் இருப்பதால் ரத்த அழுத்தத்தை சீராக வைத்திருக்க உதவிடும், இதயத்தின் செயல்பாட்டை மேம்படுத்தி, ரத்த நாளங்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்கவும் உதவக்கூடும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5afc5ba0-e063-4898-a45d-70f8f32d33a1/26-6a74e89c4a912.webp' /></p><p>
</p><h3>நல்ல தூக்கம்
</h3><p>பூசணி விதைகளில் டிரிப்டோபன் என்ற அமினோ அமிலம் உள்ளது. இது உடலில் செரோட்டோனின் உற்பத்திக்கு உதவுவதால், தூக்கத்தின் தரத்தை மேம்படுத்தக்கூடும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/59460006-a542-48f6-9aaf-bfbe0dc8b97e/26-6a74e89cef802.webp' /></p><h3><span style="color: inherit; font-size: 1.5rem;">நோய் எதிர்ப்பு</span></h3><p>சக்தி
வைட்டமின் இ மற்றும் துத்தநாகம் இருப்பதால் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தவும் உதவும். குறிப்பாக பருவகால காய்ச்சல் மற்றும் தொற்றுகள் பரவும் காலங்களில் பூசணி விதையை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/db5c57de-0de4-4590-b07c-b54df047ad6c/26-6a74e89d9eb93.webp' /></p><p>
</p><h3>
செரிமானம்
</h3><p>பூசணி விதையில் நார்ச்சத்து நிறைந்திருப்பதால் மலச்சிக்கலை தடுக்கவும், குடல் இயக்கத்தை சீராக வைத்திருக்கவும் உதவும். போதுமான அளவு தண்ணீர் குடித்தால் கூடுதல் பலன் கிடைக்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ffba0e98-b72e-40bc-bd98-e68f14546ecd/26-6a74e89e503a6.webp' /></p><p>
</p><h3>
ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும்
</h3><p>சில ஆய்வுகளின்படி, பூசணி விதைகள் ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவக்கூடும்.குறிப்பாக டைப்-2 நீரிழிவு நோய் உள்ளவர்கள் சமச்சீர் உணவின் ஒரு பகுதியாக பூசணி விதையை அளவோடு சேர்த்துக் கொள்ளலாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/88507850-997f-470a-854b-7db1fa0a8e53/26-6a74e89f02e45.webp' /></p>]]></content>
            <updated>2026-08-06T20:03:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[முக்கிய நகர்வில் ஈரான்! ஹோர்முஸ் நீரிணையை முழுக்கட்டுப்பாட்டுக்கு கொண்டு வர புதிய சட்டமூலம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/irant-reviews-bill-to-restrict-hormuz-transit-1786043998"></link>
            <id>https://ibctamil.com/article/irant-reviews-bill-to-restrict-hormuz-transit-1786043998</id>
            <summary type="text">
ஹோர்முஸ் நீரிணை மற்றும் பாரசீக வளைகுடாவில் கப்பல் போக்குவரத்தின் மீதான அந்நாட்டு அரசின் கட்டுப்பாட்டை கணிசமாகக் கடுமையாக்கும் ஒரு புதிய வரைவு சட்டமூ...</summary>
            <content type="html"><![CDATA[<p>
ஹோர்முஸ் நீரிணை மற்றும் பாரசீக வளைகுடாவில் கப்பல் போக்குவரத்தின் மீதான அந்நாட்டு அரசின் கட்டுப்பாட்டை கணிசமாகக் கடுமையாக்கும் ஒரு புதிய வரைவு சட்டமூலத்தை ஈரானிய நாடாளுமன்றம் ஆய்வு செய்து வருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.</p><p>

“ஹோர்முஸ் நீரிணை மற்றும் பாரசீக வளைகுடாவின் பாதுகாப்பு மற்றும் நீடித்த வளர்ச்சிக்கான மூலோபாய நடவடிக்கை” எனும் இந்த சட்டமூலம், தற்போது ஈரான் நாடாளுமன்றத்தின் தேசிய பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கைக் குழுவின் பரிசீலனையில் உள்ளதாக கூறப்படுகிறது.</p><p>

இந்த வரைவு சட்டமூலத்தின்படி, அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் விரோத நாடுகளாகக் கருதும் பிற நாடுகளுக்குச் சொந்தமான கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையை கடந்து செல்ல முழுமையாகத் தடை விதிக்கப்படும்.</p><p></p><h2>கப்பல்களுக்கு அபராதம் </h2><p>

மேலும், இஸ்ரேலுடன் தொடர்புடைய இராணுவ மற்றும் பொதுமக்கள் சரக்குகள் செல்வதற்கும், ஈரான் “எதிர்ப்பின் அச்சு” என்று அழைக்கும் குழுக்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு ஆதரவளித்ததாகக் கருதப்படும் கப்பல்கள் அல்லது சரக்குகளுக்கும் தடை முன்மொழியப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fb1f6528-093d-43af-a6c4-de25fb8fcf0e/26-6a74e3475f8ad.webp' /></p><p>ஈரானுக்குச் சேதம் விளைவித்ததாகக் கருதப்படும் நாடுகளும் தனிநபர்களும் உரிய இழப்பீடு வழங்கும் வரை இந்த நீர்வழிப்பாதையைப் பயன்படுத்த அனுமதி மறுக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.</p><p>
இந்நிலையில், விதிமீறல்களில் ஈடுபடும் கப்பல்களுக்கு அவற்றின் சரக்கு மதிப்பில் 20 வீதம் வரை அபராதம் விதிக்கவும் இதில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table><p> 
</p>]]></content>
            <updated>2026-08-06T19:41:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலகக் கிண்ணப் புறக்கணிப்பு தொடரும்: ஃபிஃபா தலைவரின் முடிவை நிராகரித்தது ஐரோப்பிய கால்பந்து சம்மேளனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/world-cup-boycott-to-continue-european-football-1786043277"></link>
            <id>https://tamilwin.com/article/world-cup-boycott-to-continue-european-football-1786043277</id>
            <summary type="text">&amp;nbsp;உலகக் கிண்ணப் போட்டிகளின் சிறுபான்மைப் பங்குகளை விற்பனை செய்யும் யோசனையை
சர்வதேச கால்பந்து சம்மேளனமான ஃபிஃபா (FIFA) திரும்பப் பெற்றுக்கொண்ட
போ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;உலகக் கிண்ணப் போட்டிகளின் சிறுபான்மைப் பங்குகளை விற்பனை செய்யும் யோசனையை
சர்வதேச கால்பந்து சம்மேளனமான ஃபிஃபா (FIFA) திரும்பப் பெற்றுக்கொண்ட
போதிலும், உலகக் கிண்ணப் போட்டிகளைப் புறக்கணிக்கும் தீர்மானத்தில்
மாற்றமில்லை என ஐரோப்பிய கால்பந்து சம்மேளனமான யுவேஃபா (UEFA) அறிவித்துள்ளது.</p><p>

உலகக் கிண்ணம் உள்ளிட்ட முக்கிய தொடர்களின் பங்குகளை விற்பனை செய்ய ஃபிஃபாவின்
தலைவர் ஜியானி இன்ஃபான்டினோ எடுத்த தீர்மானத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து,
ஃபிஃபாவின் அனைத்து நிகழ்வுகளிலிருந்தும் விலகுவதாக யுவேஃபாவின் 55 உறுப்பு
நாடுகளும் கடந்த வாரம் ஏகமனதாகத் தீர்மானித்திருந்தன.</p><p></p><h2>ஐரோப்பிய கால்பந்து சம்மேளனம்</h2><p>

கடுமையான எதிர்ப்புகள் காரணமாக ஃபிஃபா தலைவர் தனது முன்மொழிவைத் திரும்பப்
பெற்றுக்கொண்ட போதிலும், யுவேஃபா விதித்த நிபந்தனைகள் முழுமையாக
நிறைவேற்றப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ed27e8e5-a183-4df5-aa94-2fb9c862fd06/26-6a74e08f73daf.webp' /></p><p>

எதிர்காலத்தில் இவ்வாறான முயற்சிகள் மீண்டும் இடம்பெறாது என்ற உறுதியான
வாக்குறுதி வழங்கப்படாமை மற்றும் ஃபிஃபா தலைவர் மீதான நம்பிக்கையை யுவேஃபா
இழந்துள்ளமை ஆகிய காரணங்களால் இந்த புறக்கணிப்புத் தீர்மானம் தொடர்வதாக
யுவேஃபா விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-06T19:29:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீதிபதிகள் ஓய்வு வயது உயர்வுக்கு UNP எதிர்ப்பு ; அரசின் சட்டத்திருத்தம் நிராகரிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/unp-opposes-raising-the-retirement-age-of-judges-1786044127"></link>
            <id>https://jvpnews.com/article/unp-opposes-raising-the-retirement-age-of-judges-1786044127</id>
            <summary type="text">அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள அரசியலமைப்பு மற்றும் நீதித்துறை சட்டத்திருத்தங்களை ஐக்கிய தேசியக் கட்சி நிராகரித்துள்ளதுடன், நீதிபதிகளின் ஓய்வுபெற...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள அரசியலமைப்பு மற்றும் நீதித்துறை சட்டத்திருத்தங்களை ஐக்கிய தேசியக் கட்சி நிராகரித்துள்ளதுடன், நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பது இலங்கையின் நீதிமன்ற வழக்குத் தேக்கத்திற்குத் தீர்வாகாது என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.</p><p></p><p>

சர்வதேச நாணய நிதியத்தின் ஆட்சிமுறை சார்ந்த மதிப்பீட்டு அறிக்கையில் விசேட நீதிமன்றங்களை அமைத்தல், நீதிபதி வெற்றிடங்களை நிரப்புதல், நீதிமன்ற நிர்வாகத்தை மேம்படுத்துதல் மற்றும் சட்ட நடைமுறைகளில் சீர்திருத்தங்களைக் கொண்டு வருதல் போன்ற பரிந்துரைகளே முன்வைக்கப்பட்டுள்ளதாகவும், நீதிபதிகளின் பதவிக் காலத்தை நீடிப்பது குறித்து பரிந்துரைக்கப்படவில்லை என்றும் ஐக்கிய தேசியக் கட்சி குறிப்பிட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4534b6f2-5eaa-4058-af0a-c6ad3d227496/26-6a74dee166dcc.webp' /></p><p>எனவே, முன்மொழியப்பட்டுள்ள சட்டத்திருத்தங்களை தற்காலிகமாக இடைநிறுத்தி, இது குறித்து விரிவான கலந்துரையாடல்களை முன்னெடுக்குமாறு அரசாங்கத்திடம் ஐக்கிய தேசியக் கட்சி கேட்டுக்கொண்டுள்ளது.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-06T19:22:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜேர்மனியில் உளவு பார்த்த உக்ரைனியர் கைது: நாசவேலைக்கு திட்டமிட்டது அம்பலம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/ukrainian-arrested-by-german-police-in-bavaria-1786042488"></link>
            <id>https://news.lankasri.com/article/ukrainian-arrested-by-german-police-in-bavaria-1786042488</id>
            <summary type="text">&amp;nbsp;உளவு பார்த்த குற்றச்சாட்டில் உக்ரைன் நாட்டை சேர்ந்தவர் ஜேர்மனியில் கைது செய்யப்பட்டுள்ளார்.ஜேர்மனியில் உளவு பார்த்த உக்ரைனியர் கைது
ஜேர்மனியின்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;உளவு பார்த்த குற்றச்சாட்டில் உக்ரைன் நாட்டை சேர்ந்தவர் ஜேர்மனியில் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><h2>ஜேர்மனியில் உளவு பார்த்த உக்ரைனியர் கைது</h2><p>
ஜேர்மனியின் பவேரியா(Bavaria) மாகாணத்தில் அமைந்துள்ள பாதுகாப்பு தளவாட நிறுவனத்தின் ரகசியங்களை உளவு பார்த்து நாச வேலைகளுக்கு திட்டமிட்டதாக கூறப்படும் வழக்கில் உக்ரைன் நாட்டவர் ஒருவர் கைது ஜேர்மனியில் செய்யப்பட்டுள்ளார்.</p><p> கைது செய்யப்பட்டவர் 33 வயதுடைய நபர் என்றும், அவர் கடந்த ஜூன் மாதம் பவேரியாவிலுள்ள பாதுகாப்பு நிறுவனத்தின் வளாகங்களை புகைப்படம் எடுத்து வெளிநாட்டு உளவு அமைப்புகளுக்கு கொடுத்துள்ளார் என்று சந்தேகிப்பதாக மியூனிக் நகர வழக்கறிஞர்கள் மற்றும் பவேரியா காவல்துறையினர் வெளியிட்ட தகவலில் குறிப்பிட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/de19fddb-b240-4bea-9cf5-7451dc1e910b/26-6a74d879d4150.webp' /></p><p> கிழக்கு துரிங்கியா மாநிலத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை சந்தேக நபரான 33 வயதுடையர் பொலிஸாரால் சுற்றி வளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>திங்கட்கிழமை மியூனிக் நீதிமன்றம் அவருக்கு பிடியாணை பிறப்பித்த நிலையில், தற்போது அவர் பவேரியா நீதிமன்ற காவலில் அடைத்து வைக்கப்பட்டுள்ளார்.</p><p></p><p>கைது செய்யப்பட்ட நபர் மீது நாசவேலையை செய்ய திட்டமிட்டு உளவு வேலையில் ஈடுபட்டதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.</p><p> ஜேர்மனியில் புதிதாக தொடங்கப்பட்ட GAZ-Hybrid அமைப்பின் ஒருங்கிணைப்பில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p><p> இதற்கிடையில், உளவு வேலைக்கு உத்தரவிட்ட வெளிநாட்டு உளவு அமைப்பு எது என்பது குறித்து எந்தவொரு தகவலையும் அதிகாரிகள் இன்னும் வெளியிடவில்லை.</p><p> அத்துடன் விசாரணை தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருவதால் கூடுதல் தகவல்கள் இப்போதைக்கு வெளியிடப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"> WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள். &nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-06T18:57:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[பயங்கரவாதச் செயல்பாட்டிற்கு உதவியதாக குற்றம் சாட்டப்பட்டவர் படையில் இருந்து நீக்கம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/canadian-armed-forces-member-charged-1786031062"></link>
            <id>https://canadamirror.com/article/canadian-armed-forces-member-charged-1786031062</id>
            <summary type="text">கனடாவில் பயங்கரவாதச் செயல்பாடுகளுக்கு வசதி செய்து கொடுத்ததாகக் கடந்த ஆண்டு குற்றம் சாட்டப்பட்ட கியூபெக் பிராந்தியத்தைச் சேர்ந்த நபர் ஒருவர், தற்போது க...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவில் பயங்கரவாதச் செயல்பாடுகளுக்கு வசதி செய்து கொடுத்ததாகக் கடந்த ஆண்டு குற்றம் சாட்டப்பட்ட கியூபெக் பிராந்தியத்தைச் சேர்ந்த நபர் ஒருவர், தற்போது கனடிய ஆயுதப்படையில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.</p><p> 
மார்க்-அவுரேல் சாபோட் என்பவரது பட விலகல் குறித்தான மேலதிக விவரங்களை வழங்கத் தேசிய பாதுகாப்புத் துறையின் செய்தித் தொடர்பாளர் ஷெரில் ஃபாரஸ்ட் மறுத்துவிட்டார். </p><p>இந்தத் தகவல்கள் 'தனியுரிமைச் சட்டத்தின்' கீழ் பாதுகாப்பக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/642b5433-9f06-469f-a7e5-f6f46ec033a3/26-6a74abd89d635.webp' /></p><p> 
கியூபெக் சிட்டி பகுதியில் அரசிற்கு எதிரான தீவிரவாதச் சதித்திட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறி, ஜூலை 2025 இல் ராயல் கனடியன் மவுண்டட் பொலிஸாரால் குற்றம் சாட்டப்பட்ட மூவரில் சாபோட்டும் ஒருவர் ஆவார். </p><p>
குற்றம் சாட்டப்பட்டவர்கள் அரசாங்கத்திற்கு எதிரான ஒரு ஆயுதப் படையை உருவாக்கத் திட்டமிட்டதாகவும், பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு வசதி செய்யத் தேவையான தீவிர நடவடிக்கைகளை எடுத்ததாகவும் பொலிஸ் திணைக்களம் குற்றம் சாட்டியிருந்தது. </p><p>
இதே வழக்கில் ஆயுதக் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியுள்ள நான்காவது சந்தேக நபர், இன்னமும் கனடிய ஆயுதப்படையில் உறுப்பினராக தொடர்கிறார்; எனினும் அவர் இராணுவப் பணிகளைச் செய்யவில்லை என்பதை செய்தித் தொடர்பாளர் ஃபாரஸ்ட் உறுதிப்படுத்தியுள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-06T18:57:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட கொழும்பு மெகசின் சிறைச்சாலை ; STF களத்தில்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/colombo-magazine-prison-brought-under-control-1786042556"></link>
            <id>https://jvpnews.com/article/colombo-magazine-prison-brought-under-control-1786042556</id>
            <summary type="text">கொழும்பு மெகசின் சிறைச்சாலையின் &#039;ஈ&#039; (E) பிரிவில் இன்று (06) இரவில் ஏற்பட்ட பதற்ற நிலைமை தற்போது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக காவல்துறை ஊட...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு மெகசின் சிறைச்சாலையின் 'ஈ' (E) பிரிவில் இன்று (06) இரவில் ஏற்பட்ட பதற்ற நிலைமை தற்போது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் எஃப்.யு. வூட்லர் தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p></p><p>சுமார் 40 பேர் கொண்ட குழுவினருக்கிடையில் இந்த மோதல் மற்றும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/414ee433-da14-47d6-b0c5-10c03b6d2e56/26-6a74d8be77e9a.webp' /></p><p>இந்தச் சம்பவத்தையடுத்து, சிறைச்சாலையின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக காவல்துறை விசேட அதிரடிப்படை அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-06T18:56:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[பொறளை மெகசின் சிறையில் கைதிகள் குழுவால் பதற்றம்! குவிக்கப்பட்டுள்ள பொலிஸ் விசேட அதிரடிப்படையினர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/unrest-inside-magazine-prison-1786040522"></link>
            <id>https://tamilwin.com/article/unrest-inside-magazine-prison-1786040522</id>
            <summary type="text">புதிய இணைப்புகொழும்பு மெகசின் சிறைச்சாலையின் &#039;ஈ&#039; (E) பிரிவில் இன்று (06) இரவில் ஏற்பட்ட பதற்ற நிலைமை தற்போது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>கொழும்பு மெகசின் சிறைச்சாலையின் 'ஈ' (E) பிரிவில் இன்று (06) இரவில் ஏற்பட்ட பதற்ற நிலைமை தற்போது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் எஃப்.யு. வூட்லர் தெரிவித்துள்ளார்.</p><h2>முதலாம் இணைப்பு</h2><p>பொறளை மெகசின் சிறைச்சாலையில் இன்று (06) இரவு பதற்றநிலை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. </p><p>

இரவு 10.20 மணியளவில் சிறைச்சாலையின் 'E' பிரிவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதிகள் குழுவொன்று திடீரென அந்தப் பிரிவிலிருந்து வெளியேறி வன்முறையில் ஈடுபட்டதையடுத்து அங்கு அமைதியின்மை ஆரம்பமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p></p><h2>பொலிஸ் விசேட அதிரடிப்படையினர்</h2><p> 

எவ்வாறாயினும், நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்காக பொலிஸார் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு அழைக்கப்பட்டு பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/095c926e-3376-4599-ba39-98f00e360b55/26-6a74d22c46b51.webp' /></p><p> </p><p>

தற்போது இந்த அமைதியற்ற நிலை முழுமையாகக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், சிறைச்சாலை வளாகத்தின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.&nbsp;</p><p></p><p><br></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/OuQjIYXGhm4" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-08-06T18:45:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பு மெகசின் சிறைச்சாலையில் பதற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/tension-in-the-magazine-prison-1786041279"></link>
            <id>https://ibctamil.com/article/tension-in-the-magazine-prison-1786041279</id>
            <summary type="text">பொரளை மெகசின் சிறைச்சாலையில் இன்று இரவு (06) பதற்றமான சூழல்நிலையொன்று உருவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறைச்சாலையின் E வார்டில் தடுத்து வை...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொரளை மெகசின் சிறைச்சாலையில் இன்று இரவு (06) பதற்றமான சூழல்நிலையொன்று உருவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
</p><p>
சிறைச்சாலையின் E வார்டில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதிகள் குழு ஒன்று, இரவு சுமார் 10.20 மணியளவில் திடீரென வார்டிலிருந்து வெளியே வந்து ஒழுங்கற்ற முறையில் நடந்துகொண்டதால் இந்த பதற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது. </p><p> 

போதைப்பொருள் தொடர்பான தகராறே இந்தப் பதற்றமான சூழலுக்குக் காரணம் என்று கூறப்படுகிறது.</p><p></p><h2>பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு</h2><p>
இருப்பினும், நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்காக, காவல்துறை, காவல்துறை கலவரக் கட்டுப்பாட்டுப் பிரிவு மற்றும் காவல்துறை சிறப்பு அதிரடிப் படை (STF) உடனடியாக சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு, பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.</p><p><iframe src="https://www.facebook.com/plugins/video.php?height=314&href=https%3A%2F%2Fwww.facebook.com%2Freel%2F1716597379640602%2F&show_text=false&width=560&t=0" width="560" height="314" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share" allowFullScreen="true"></iframe></p><p>
</p><p>
பதற்றமான சூழல் ஓரளவிற்குக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், சிறைச்சாலை வளாகத்திற்குள் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-06T18:34:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜேர்மன் சரக்கு கப்பல் மீது ரஷ்ய ட்ரோன் தாக்குதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/russian-drones-hit-german-cargo-ship-emil-1786031510"></link>
            <id>https://news.lankasri.com/article/russian-drones-hit-german-cargo-ship-emil-1786031510</id>
            <summary type="text">EMIL எனும் ஜேர்மன் சரக்கு கப்பல் மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளது.

ஜேர்மன் சரக்கு கப்பல் மீது ரஷ்ய ட்ரோன் தாக்குதல்கருங்கடலில், ஜேர்மன் கப...</summary>
            <content type="html"><![CDATA[<p>EMIL எனும் ஜேர்மன் சரக்கு கப்பல் மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளது.
</p><h2>
ஜேர்மன் சரக்கு கப்பல் மீது ரஷ்ய ட்ரோன் தாக்குதல்</h2><p>கருங்கடலில், ஜேர்மன் கப்பல் நிறுவனமான Johann M. K. Blumenthal GmbH &amp; Co. KG-க்கு சொந்தமான ‘EMIL’ என்ற சரக்கு கப்பல் ரஷ்ய ட்ரோன்களால் பலமுறை தாக்கப்பட்டது.
</p><p>
இந்த சம்பவம் உக்ரைனின் ஓடெசா துறைமுகத்திலிருந்து சுமார் 21 கடல் மைல் தொலைவில் நடந்ததாக Bild பத்திரிகை தெரிவித்துள்ளது.</p><p>

கப்பலில் தீப்பற்றியதால், பல தொழில்நுட்ப அமைப்புகள் செயலிழந்தன. இதனால் கப்பல் இயக்க முடியாத நிலையில் சிக்கியது. 11 பேர் கொண்ட குழுவினர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். அவர்களில் யாரும் ஜேர்மன் நாட்டவர்கள் அல்ல. உயிரிழப்புகள் எதுவும் இல்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ffcb0d5d-4672-4ba2-a052-864631aaa760/26-6a74ad98a616d.webp' /></p><p>ஆனால், குழுவினரை வெளியேற்றும் போது மீண்டும் ட்ரோன் தாக்குதல் நடந்ததாகவும் கூறப்படுகிறது. கப்பல் தற்போது லைபீரியா நாட்டின் கொடியின் கீழ் இயங்குகிறது.
</p><p>
ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தனது Telegram கணக்கில் தாக்குதலை உறுதிப்படுத்தியுள்ளது. அவர்கள் தெரிவித்ததாவது, “கருங்கடலில் ஓடெசாவின் தெற்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் இரு சரக்கு கப்பல்களை ட்ரோன்கள் தாக்கின. அவை இராணுவப் பொருட்களை எடுத்துச் சென்றன” என்று கூறியுள்ளது.</p><p></p><h2>புதிய அச்சுறுத்தல்</h2><p>இரண்டாவது தாக்குதலில் ‘Mera Queen’ என்ற தானியக் கப்பல் குறிவைக்கப்பட்டது. இது கினி-பிசாவ் நாட்டின் கொடியின் கீழ் இயங்குகிறது. அந்த தாக்குதலில் ஒரு குழுவினர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சம்பவம், கருங்கடலில் வணிகக் கப்பல்களுக்கு எதிரான தாக்குதல்கள் அதிகரித்து வருவதை வெளிப்படுத்துகிறது. </p><p>உக்ரைன் போரின் பின்னணியில், ரஷ்யா வணிகக் கப்பல்களை இராணுவப் பொருட்கள் எடுத்துச் செல்கின்றன என்ற குற்றச்சாட்டின் பேரில் குறிவைத்து தாக்குகிறது.
</p><p>
ஜேர்மன் கப்பல் ‘EMIL’ மீது நடந்த தாக்குதல், சர்வதேச கடல் போக்குவரத்து பாதுகாப்புக்கு புதிய அச்சுறுத்தலாகக் கருதப்படுகிறது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-06T18:31:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[கார் ஷோரூமில் வெடித்த கேஸ் சிலிண்டர்: துபாயில் உயிரிழந்த கேரள இளைஞர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/kerala-youth-dead-in-dubai-car-showroom-accident-1786040004"></link>
            <id>https://news.lankasri.com/article/kerala-youth-dead-in-dubai-car-showroom-accident-1786040004</id>
            <summary type="text">துபாய் கார் ஷோரூமில் கேஸ் சிலிண்டர் வெடித்த விபத்தில் இந்தியர் ஒருவர் உயிரிழந்து இருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.துபாயில் உயிரிழந்த கேரள இளைஞர்துபா...</summary>
            <content type="html"><![CDATA[<p>துபாய் கார் ஷோரூமில் கேஸ் சிலிண்டர் வெடித்த விபத்தில் இந்தியர் ஒருவர் உயிரிழந்து இருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><h2>துபாயில் உயிரிழந்த கேரள இளைஞர்</h2><p>துபாயின் ஷேக் சையத் சாலையில் அமைந்துள்ள கார் ஷோரூமில் கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் கொட்டாரக்கரை பகுதியை சேர்ந்த 27 வயது ஷிஜின் பால்(Shijin Paul) என்ற இளைஞர் பணியாற்றி வந்தார்.</p><p> அங்கு, மல்டிமீடியா மார்க்கெட்டிங் நிபுணராகவும், சமூக வலைதளம் மற்றும் வீடியோ கிராபி பொறுப்பாளராகவும் ஷிஜின் பால் பணியாற்றி வந்துள்ளார்.</p><p> இந்நிலையில் கார் ஷோரூமில் கேஸ் சிலிண்டர் வெடித்த விபத்தில் சிக்கி 27 வயது ஷிஜின் பால் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e07aad3c-80b3-41f6-9289-06baca030157/26-6a74cec5d01ef.webp' /></p><p>இந்த விபத்தில் 6 பேர் வரை காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், ஷிஜின் பால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளார்.</p><p></p><h2> உறுதிப்படுத்திய இந்திய தூதரகம்</h2><p>ஷிஜின் பால் உயிரிழந்ததை துபாயில் உள்ள இந்திய தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது.</p><p> மேலும் அவரது உடலை விரைவில் சொந்த ஊருக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கையில் இந்திய தூதரகம் தீவிரமாக செயல்பட்டுள்ளது.</p><p>உயிரிழந்த ஷிஜின் பாலுக்கு பெற்றோரும், மனைவியும் இருப்பது குறிப்பிடத்தக்கது.</p><p> ஷிஜின் பால் விரைவில் தன்னுடைய விடுமுறையில் ஊருக்கு சென்று அங்குள்ள தன்னுடைய மனைவியையும், குழந்தைகயையும் துபாய்க்கு அழைத்து வர திட்டமிட்டு இருந்ததாக அவரது முன்னாள் வசிப்பிட தோழர் நாசிர் தெரிவித்துள்ளார்.<br></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள். &nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-06T18:31:12+00:00</updated>
        </entry>
    </feed>
