<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-08-16T11:43:57+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Malaivanjan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சீரற்ற காலநிலையால் சேதமடைந்த தொடருந்து வீதியின் புனரமைப்பு பணிகள் 60 சதவீதம் பூர்த்தி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/railway-reconstruction-works-60-percent-complete-1786877572"></link>
            <id>https://tamilwin.com/article/railway-reconstruction-works-60-percent-complete-1786877572</id>
            <summary type="text">கொட்டகலை சுரங்க பாதைக்கு சமீபமாக சீரற்ற காலநிலையால் சேதமடைந்த தொடருந்து வீதி
தற்போது அறுபது சதவீதம் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக கொட்டகலை புனரமைப்பு
...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொட்டகலை சுரங்க பாதைக்கு சமீபமாக சீரற்ற காலநிலையால் சேதமடைந்த தொடருந்து வீதி
தற்போது அறுபது சதவீதம் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக கொட்டகலை புனரமைப்பு
பணிகளை மேற்பார்வை செய்யும் தொழிநுட்ப அதிகாரி அதுல விஜேசிங்க தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p>சீரான காலநிலை தொடருமானால், எதிர்வரும் செப்டெம்பர் 8ஆம் திகதியளவில் பணிகளை
முழுமையாக நிறைவு செய்து ஒப்படைக்க எதிர்பார்ப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.&nbsp;</p><p>
மலையக தொடருந்து சேவையை மீண்டும் முழுமையாக வழமைக்கு கொண்டு வருவதற்கான
புனரமைப்பு பணிகள் தற்போது தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p><h2>சேதமடைந்த தொடருந்து பாதையின் புனரமைப்பு பணிகள்</h2><p>
</p><p>
கொட்டகலை சுரங்கப்பாதைக்கு அண்மித்த பகுதியில் சீரற்ற காலநிலை மற்றும்
மண்சரிவு காரணமாக சேதமடைந்த தொடருந்து பாதையின் புனரமைப்பு பணிகள் கடந்த மே
மாதம் ஆரம்பிக்கப்பட்டன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2bfef288-29b3-4a7a-9797-3568445f283b/26-6a81a1cf862d4.webp' /></p><p>
</p><p>
எனினும், ஜூலை மாதம் முதல் நுவரெலியா மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்த கடும்
மழை காரணமாக பணிகளை திட்டமிட்ட வேகத்தில் முன்னெடுக்க முடியாத நிலை ஏற்பட்டது.</p><p>

தற்போது சீரான காலநிலை நிலவி வருவதால், புனரமைப்பு பணிகள்
துரிதப்படுத்தப்பட்டுள்ளன. தொடர்ந்து சீரான காலநிலை நிலவினால் எதிர்வரும்
செப்டெம்பர் மாதம் 8ஆம் திகதியளவில் புனரமைப்பு பணிகளை நிறைவு செய்து ஒப்படைக்க
எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.</p><p>
</p><p>
கடந்த வருடம் நவம்பர் மாதம் ஏற்பட்ட டிட்வா சூறாவளியைத் தொடர்ந்து நாட்டின் பல
பகுதிகளிலுள்ள தொடருந்து பாதைகள் கடுமையாக சேதமடைந்தன.

குறிப்பாக மலையக தொடருந்து பாதைகளில் பல இடங்களில் மண்சரிவு, வெள்ளப்பெருக்கு
உள்ளிட்ட இயற்கை அனர்த்தங்களால் பாரிய சேதங்கள் ஏற்பட்டன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/49ff7978-7964-41f0-a931-17f6614ff3cc/26-6a81a1d0a4c03.webp' /></p><h2>மீள ஆரம்பிப்பு</h2><p>
</p><p>
இதனையடுத்து, சேதமடைந்த பகுதிகள் கட்டம் கட்டமாக புனரமைக்கப்பட்டு, சில
பகுதிகளில் தொடருந்து சேவைகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன.


தற்போது மலையகத்திற்கான தொடருந்து சேவைகள் பதுளை முதல் நானுஓயா வரையிலும்,
நாவலப்பிட்டி முதல் வட்டவளை வரையிலும் மட்டுப்படுத்தப்பட்ட அளவில்
முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p><p>
</p><p>
எனினும், கொட்டகலை மற்றும் கிரேட்வெஸ்டன் பகுதிகளில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக
தொடருந்து பாதைகள் பாரியளவில் சேதமடைந்துள்ளன.

இதன் காரணமாக மலையகத்திற்கான முழுமையான தொடருந்து சேவையை தொடர்ச்சியாக
முன்னெடுப்பதில் தடைகள் ஏற்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/24ba2916-4cbb-4852-9783-3436e3360dac/26-6a81a1d17ddc9.webp' /></p><p>

குறிப்பாக கொட்டகலை மற்றும் கிரேட்வெஸ்டன் ஆகிய இரண்டு பகுதிகளிலும்
புனரமைப்பு பணிகள் நிறைவடைந்தால், பதுளையிலிருந்து நாவலப்பிட்டி வரையான
தொடருந்து சேவையை தடையின்றி முன்னெடுக்க முடியும் என தொடருந்து திணைக்கள
அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
</p><p>மலையகத்தின் பொருளாதாரம், கல்வி, தொழில் மற்றும் அன்றாட போக்குவரத்துடன்
நெருங்கிய தொடர்புடையதாக காணப்படும் தொடருந்து சேவை, நீண்டகாலமாக ஏற்பட்டுள்ள
இந்த தடையால் பயணிகளுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளமையும்
குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/18fa6570-cc30-4e90-bc74-abe6483bfd53/26-6a81a1d259570.webp' /></p>]]></content>
            <updated>2026-08-16T11:43:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுதந்திர தின புகைப்படங்களை பகிர்ந்த த்ரிஷா! வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/trisha-independence-day-photoshoot-goes-viral-1786878075"></link>
            <id>https://manithan.com/article/trisha-independence-day-photoshoot-goes-viral-1786878075</id>
            <summary type="text">நடிகை த்ரிஷா : இந்தியாவின் 80ஆவது சுதந்திர தினத்தில்&amp;nbsp;சென்னையில் உள்ள புனித ஜோர்ஜ் கோட்டையில் நடைபெற்ற சுதந்திர தின நிகழ்வில் தமிழ்நாடு முதலமைச்சர...</summary>
            <content type="html"><![CDATA[<p>நடிகை த்ரிஷா : இந்தியாவின் 80ஆவது சுதந்திர தினத்தில்&nbsp;சென்னையில் உள்ள புனித ஜோர்ஜ் கோட்டையில் நடைபெற்ற சுதந்திர தின நிகழ்வில் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் கலந்துகொண்டு, தனது பதவிக்காலத்தில் முதன்முறையாக தேசியக் கொடியை ஏற்றிய நிகழ்வில் நடிகை த்ரிஷா பங்கேற்றது இணையத்தில் புதிய புயலை கிளப்பியுள்ளது.</p><p>இந்நிலையில், சுதந்திர தின நிகழ்வில் கலந்துக்கொண்ட உடையில் அழகிய போட்டோ ஷூட் நடத்தி த்ரிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். வழக்கமாக த்ரிஷாவின் புகைப்படங்களுக்கு லைக்குகள் குவியும்&nbsp; ஆனால், வழக்கத்துக்கு மாறாக த்ரிஷாவை நெட்டிசன்கள் கண்டபடி திட்டி கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6167312e-7c47-4049-99c8-269cfdbe49eb/26-6a819d88cf53d.webp' /></p><h2>நடிகை த்ரிஷா</h2><p> 
முன்னாள் நடிகரும் தற்போதைய தமிழக முல்வருமான விஜய் சங்கீதா விவாகரத்து விவகாரத்தின் பின்னர் த்ரிஷா மற்றும் விஜய் பற்றிய பல்வேறு வதந்திகளும் சர்ச்சையான கருத்துக்களும் இணையத்தில் பரவலாக பேசப்பட்டு வருகின்றது என்பது அனைவரும் அறிந்தது தான்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0cf05c4a-1881-4f12-a253-bd7738a9fbd7/26-6a819d8980bc0.webp' /></p><p>அதனால் த்ரிஷா வெளியிடும் அனைத்து பதிவுகளும், புகைப்படங்களும் இணையத்தில் பெருமளவில் கவனம் ஈர்த்து வருகின்றது. ஆனால் சர்ச்சைகளுக்கெல்லாம் செவி சாய்க்காது இவர் தனது வேலையில் மாத்திரம் கவனம் செலுத்தி வருகின்றார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bbd885a2-3cf6-44a4-a323-3469d426dff2/26-6a819d8a3264d.webp' /></p><p>விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை சங்கீதா திரும்ப பெற்ற நிலையில், சுதந்திர தின நிகழ்வில் சங்கீதா கலந்துக்கொள்வார் என்ற எதிர்பார்பில் விஜய் ரசிகர்களும் தவெக கட்சி தொண்டர்களும்&nbsp; இருந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9794c242-fc69-4415-bb08-34260e7c20f9/26-6a819d8ad6e8f.webp' /></p><p>ஆனால் சுதந்திர தின நிகழ்வில் முதல் வரிசையில் த்ரிஷா அமர்ந்தது இணையத்தில் பெரிய சர்சையாகவே மாறியது. இந்நிலையில்&nbsp;சுதந்திர தின நிகழ்வில் கலந்துக்கொண்ட உடையில் அழகிய போட்டோ ஷூட் நடத்தி த்ரிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். குறித்த புகைப்படத்துக்கு கீழ் பலரும் த்ரிஷாவின் செயல் குறித்து நேரடியாகவே கேள்வியெழுப்பி வருகின்றனர்.&nbsp;</p><p><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/p/DcF9h7SGfUD/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/p/DcF9h7SGfUD/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/p/DcF9h7SGfUD/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by Trish (@trishakrishnan)</a></p></div></blockquote> <script async src="//www.instagram.com/embed.js"></script></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-16T11:24:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[பனிக்கரடியின் தூக்கத்தை கெடுத்த சுற்றுலா பயணி: உள்ளூர் காவல்துறை எடுத்த நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/tourist-fined-5lakhs-for-waking-polar-bear-1786860149"></link>
            <id>https://news.lankasri.com/article/tourist-fined-5lakhs-for-waking-polar-bear-1786860149</id>
            <summary type="text">பனிக்கரடியின் தூக்கத்தை கெடுத்ததற்காக நபர் ஒருவருக்கு ரூ.5 லட்சம் வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.பனிக்கரடியின் தூக்கத்தை கெடுத்த நபர்நார்வே நாட்டின் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பனிக்கரடியின் தூக்கத்தை கெடுத்ததற்காக நபர் ஒருவருக்கு ரூ.5 லட்சம் வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.</p><h2>பனிக்கரடியின் தூக்கத்தை கெடுத்த நபர்</h2><p>நார்வே நாட்டின் தீவுக்கூட்டமான ஸ்வால்பார்ட் கடற்கரையில் வெள்ளை பனிக்கரடி ஒன்று தூங்கிக் கொண்டிருந்தது.</p><p> இந்நிலையில் அந்த கடற்கரைக்கு உள்ளூர் கப்பல் ஒன்றில் வந்த சுற்றுலா பயணி ஒருவர் பனிக்கரடி தூங்கிக் கொண்டு இருப்பதை கண்டுள்ளார்.</p><p>மேலும் கரடி நகர்ந்து செல்வதை பார்க்க விரும்பிய அந்த நபர் வேண்டுமென்றே கப்பலில் இருந்த ஒலி எழுப்பானை தொடர்ந்து எழுப்பி கரடியை பீதியடைய வைத்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3a37ba4d-3005-4a39-b330-0c090cc2feb2/26-6a8152773cf0f.webp' /></p><p> திடீரென எழுப்பப்பட்ட அந்த சத்தத்தில் திகிலடைந்த கரடி தூக்கத்தில் இருந்து எழுந்து கொண்டதோடு அந்த இடத்தை விட்டும் தப்பியோடியது.</p><p>ஸ்வால்பார்டில் 1972ம் ஆண்டு முதல் பனிக்கரடிகள் பாதுகாக்கப்பட்ட இனமாக இருந்து வருகிறது. மேலும் பனிக்கரடிகளுக்கு இடையூறு செய்வது என்பது சட்டப்படி குற்றமாகவும் கருதப்படுகிறது.</p><p></p><h2> ரூ.5 லட்சம் வரை அபராதம்</h2><p>
இந்த நிகழ்வுகளை கவனித்த உள்ளூர் காவல்துறை அதிகாரிகள், சம்பந்தப்பட்டவர் மீது வழக்கு பதிவு செய்து ஸ்வால்பார்ட் ஆளுநர் முன்பு நிறுத்தியுள்ளனர்.</p><p> விசாரணையின் இறுதியில் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்ட நிலையில், இறுதியில் சம்பந்தப்பட்ட நபருக்கு 50000 நார்வேஜியன் குரோனர்(இந்திய ரூபாய் மதிப்பில் 4.5 லட்சம் முதல் 5 லட்சம் வரை) அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-16T11:19:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் ஹெரோயினுடன் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/karaithuraipattu-deputy-chairman-arrested-heroin-1786872761"></link>
            <id>https://ibctamil.com/article/karaithuraipattu-deputy-chairman-arrested-heroin-1786872761</id>
            <summary type="text">&amp;nbsp; முல்லைத்தீவு கரைத்துறைப்பற்று பிரதேச சபையின் உபதவிசாளர் உள்ளிட்ட 5 பேர்
ஹெரோயினுடன் கொக்கிளாய் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்

இது...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; முல்லைத்தீவு கரைத்துறைப்பற்று பிரதேச சபையின் உபதவிசாளர் உள்ளிட்ட 5 பேர்
ஹெரோயினுடன் கொக்கிளாய் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்
</p><p>
இது குறித்து மேலும் தெரியவருகையில்
</p><p>
முல்லைத்தீவு முள்ளியவளை பகுதியில் இருந்து செம்மலை கொக்கிளாய் வீதியில்
வாகனத்தில் பயணித்துக் கொண்டிருந்தவேளை கொக்குளாய் காவல்துறையின் சோதனை
நடவடிக்கையின் போது 2 கிராம் அளவிலான ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டில் 5
பேர் கைதுசெய்யப்பட்டுள்ளார்கள்.</p><h2>கொக்குளாய் காவல் நிலையத்தில் தடுத்து வைப்பு</h2><p>குறித்த சம்பவம் நேற்று (15) மாலை இடம்பெற்றுள்ளது.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களும் சான்று பொருட்களுடன் கொக்குளாய் காவல்
நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்கள்</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/37430b80-5e69-497a-9f92-a1ce62e33964/26-6a81875d50e49.webp' /></p><p>
</p><p>
இவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கையில் கொக்குளாய் காவல்துறையினர்
ஈடுபட்டுள்ளார்கள்.
</p><p>
குறித்த உப தவிசாளர் கடந்த உள்ளுராட்சி மன்ற தேர்தலின்போது அகில இலங்கை மக்கள்
காங்கிரஸ் கட்சியின் போனஸ் ஆசனத்தின் ஊடாக சபைக்கு வருகைதந்து உபதவிசாளராக
தெரிவுசெய்யப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-16T11:18:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[வவுனியாவில் பெண்ணை அத்துமீறலுக்கு உட்படுத்தி நகைகளை கொள்ளையடித்த ஐவர் கைது!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/five-arrested-for-raping-a-woman-in-vavuniya-1786875607"></link>
            <id>https://ibctamil.com/article/five-arrested-for-raping-a-woman-in-vavuniya-1786875607</id>
            <summary type="text">வவுனியாவில் வீடு உடைத்து 51 வயது பெண் ஒருவரை கூட்டாக அத்துமீறலுக்கு உட்படுத்தி 
கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் திருடப்பட...</summary>
            <content type="html"><![CDATA[<p>வவுனியாவில் வீடு உடைத்து 51 வயது பெண் ஒருவரை கூட்டாக அத்துமீறலுக்கு உட்படுத்தி 
கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் திருடப்பட்ட
பொருட்களும் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டது.</p><p>கடந்த 8 ஆம் திகதி வவுனியா, மடுகந்தை, மயிலங்குளம் பகுதியில் உள்ள வீடு ஒன்றை
உடைத்து உட் சென்ற சிலர் அங்கிருந்த வாகனச் சாரதி மீது வாள் வெட்டு தாக்குதலை
மேற்கொண்டு விட்டு, வீட்டு உரிமையாளரான 51 வயது பெண்ணை வாயை பிலாஸ்டரால் ஒட்டி
கைகளை பின்பக்கமாக கட்டி, அவர் அணிந்திருந்த நகைகளை கழற்றி எடுத்து விட்டு
மூவரும் சேர்ந்து கூட்டாக அத்துமீறலுக்கு உட்படுத்தினர் </p><h2>&nbsp;வீட்டில் மறைத்து வைத்திருந்த நகைகள் கொள்ளை</h2><p>பின்னர் வீட்டில் மறைத்து
வைத்திருந்த 80 இலட்சம் பெறுமதியான இரத்தினக் கல், 56 இலட்சம் பெறுமதியான 15
பவுணுக்கு அதிகமான தங்க நகைகள், 5 இலட்சத்து 70 ஆயிரம் ரூபாய் பணம், காணி
மற்றும் வீட்டு உறுதிப்பத்திரங்கள் என பலவற்றை திருடிச் சென்றுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0287ae47-dde9-4257-990e-b27af8af54f6/26-6a818ed895996.webp' /></p><p>
</p><p>
பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக வவுனியா தலைமை காவல் நிலையத்தின்
குற்த்தடுப்பு பிரிவிற்கு கிடைத்த முறைப்பாட்டையடுத்து விரைந்து செயல்பட்ட
காவல்துறையினர் ஆபத்தான நிலையில் இருந்த, பாதிக்கப்பட்ட பெண்ணை மீட்டு வவுனியா
வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர்.
</p><p>
இதன்போது, பாதிக்கப்பட இப்பெண்ணின் தொழில்சாலையில் பணியாளர்களாக வேலை செய்த 35
வயதான உக்குவெல மாத்தறை பகுதியை சேர்த்த நபர் ஒருவரையும், 29 வயதான
களேமிதுனுவெல, சிவலாங்குளம் பகுதியை சேர்ந்த மற்றொரு இளைஞரையும் சந்தேகத்தின்
பேரில் கைது செய்தனர்.</p><p></p><h2>காட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நகைகள் மீட்பு</h2><p> அதனைத்தொடர்ந்து நேற்றையதினம் குறித்த சம்பவத்துடன்
தொடர்புடைய மேலும் மூவர் கைதுசெய்யப்பட்டனர்.

சந்தேக நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளையடுத்து, காடு ஒன்றில் மறைத்து
வைக்கப்பட்டிருந்த நிலையில் திருடப்பட்ட இரத்தினக்கற்கள், தங்க நகைகள், வாகனப்
புத்தகங்கள், திறப்புகள், 35 காணி மற்றும் வீட்டு
உறுதிப்பத்திரங்கள்,கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனம் என்பன
மீட்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8d963580-b6c6-419a-aad8-e2e1804647e8/26-6a818ed969242.webp' /></p><p>
</p><p>
குறித்த கைது நடவடிக்கை
வவுனியா தலைமை காவல் நிலைய பொறுப்பதிகாரி ஆர்.எம்.யே.எஸ்.ரத்னமலலா 
வழிகாட்டலில் வவுனியா குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி லங்காசிங்க,
பதில் பொறுப்பதிகாரி ஆர். பந்துல தலைமையில் காவல்துறை சார்ஜன்டுகளான சந்தன
(16446), கேரத் (14692), பிரியங்கர(47358) உபாலி(60954)
சம்பத் ( 11388) ஆகியோர் அடங்கிய பொலிஸ் குழுவினரால் மேற்கொள்ளப்பட்டது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை நாளையதினம் நீதிமன்றில்
முற்படுத்தவுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.&nbsp;&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-16T11:18:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாருமில்லாத 1960-களின் குடியிருப்பில் வசிக்கும் நபர்: வெளியேற மறுப்பு..கூறும் காரணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/last-man-in-abandoned-1960s-estate-refuse-exit-1786878994"></link>
            <id>https://news.lankasri.com/article/last-man-in-abandoned-1960s-estate-refuse-exit-1786878994</id>
            <summary type="text">பிரித்தானியாவில் 1960-களில் கட்டப்பட்ட, கைவிடப்பட்ட நிலையில் உள்ள ஒரு குடியிருப்புப் பகுதியில் ஒரு நபர் மட்டும் வெளியேற மறுத்துள்ளார்.

பிரித்தானியா...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரித்தானியாவில் 1960-களில் கட்டப்பட்ட, கைவிடப்பட்ட நிலையில் உள்ள ஒரு குடியிருப்புப் பகுதியில் ஒரு நபர் மட்டும் வெளியேற மறுத்துள்ளார்.</p><p>

பிரித்தானியாவின் கிரேட்டர் மான்செஸ்டர் பகுதியில், 1960-களில் கட்டப்பட்ட, கைவிடப்பட்ட நிலையில் உள்ள ஒரு குடியிருப்புப் பகுதியில் எஞ்சியிருக்கும் ஒரே நபர், இடிக்கப்படவிருக்கும் தனது வீட்டைவிட்டு வெளியேற மறுத்துவிட்டார்.&nbsp;</p><h2>1960-களில் கட்டப்பட்ட குடியிருப்புகள்</h2><p>

கிரேட்டர் மான்செஸ்டரின் ரோச்டேலில் உள்ள Lower Falinge குடியிருப்புப் பகுதியில், 1960-களில் கட்டப்பட்ட குடியிருப்புகள் இடிக்கப்பட உள்ளன.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1e3f8a79-b77b-4be2-93da-e368a26f259c/26-6a819c1575900.webp' />&nbsp;</p><p></p><p> 

RBH என்ற நிறுவனம் அந்தக் கட்டிடங்களை இடித்துவிட்டு, அங்கு 270 புதிய வீடுகளைக் கட்டத் திட்டமிட்டுள்ளது. 

அங்குள்ள 7 கட்டிடங்களில் ஆறு ஏற்கனவே ஆள் நடமாட்டமின்றி வெறிச்சோடிக் கிடக்கின்றன. இதனால் மொத்தம் 126 வீடுகள் இடிக்கப்பட உள்ளன. </p><p>

ஆனால், அவற்றில் ஒன்றான Zedburgh கட்டிடத்தில் 51 வயதான ஆண்டி ரோச் என்ற நபர் வசிக்கிறார். இங்கிருக்கும் கடைசி நபரான இவரின் ஒற்றை படுக்கையறை கொண்ட வீடு மட்டுமே தற்போது பயன்பாட்டில் உள்ளது.</p><h2>28 ஆண்டுகளாக அந்தக் குடியிருப்பில்
</h2><p>
கடந்த 28 ஆண்டுகளாக அந்தக் குடியிருப்பில் வசித்து வரும் வேலையில்லாத நபரான ரோச் அங்கிருந்து நகர மறுத்துவிட்டார். </p><p>

தானும் தன் துணையும் ஆட்டிசம் பாதிப்புக்குள்ளானவர்கள் என்று குறிப்பிடும் ரோச், "நாங்கள் இந்த இடத்தை விட்டு வெளியேற விரும்பவில்லை; என் பெற்றோரின் வீட்டை விட்டு வந்ததிலிருந்து என் வாழ்நாள் முழுவதும் நான் வாழ்ந்த இடம் இதுதான்" என்கிறார். </p><p>

தன்னைச் சுற்றியுள்ள நடைபாதைகள் வெறிச்சோடிக் கிடந்தாலும், சன்னல்கள் பலகைகளால் மூடப்பட்டிருந்தாலும், அங்கு வாழ்வதை இன்னும் விரும்புவதாக அவர் உறுதியாகக் கூறுகிறார்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/845465dd-548b-4f1f-beca-fd1620d21936/26-6a819ce8598ed.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-16T11:17:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹங்கேரியில் கவிழ்ந்த போலந்து சுற்றுலா பயணிகள் பேருந்து: 12 பேர் வரை உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/poland-tourist-bus-crash-on-hungarian-motorway-1786878962"></link>
            <id>https://news.lankasri.com/article/poland-tourist-bus-crash-on-hungarian-motorway-1786878962</id>
            <summary type="text">ஹங்கேரியில் நடந்த கொடூரமான சாலை விபத்தில் 12 பேர் வரை உயிரிழந்துள்ளனர். சாலை விபத்துநள்ளிரவில் கிழக்கு ஹங்கேரியில் உள்ள M3 நெடுஞ்சாலையில் நிகழ்ந்த கோர...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹங்கேரியில் நடந்த கொடூரமான சாலை விபத்தில் 12 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.</p><h2> சாலை விபத்து</h2><p>நள்ளிரவில் கிழக்கு ஹங்கேரியில் உள்ள M3 நெடுஞ்சாலையில் நிகழ்ந்த கோரமான சாலை விபத்தில் 12 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1a8042b4-bb60-4d96-9389-3c37a2e82f87/26-6a819bf3e14da.webp' /></p><p>போலந்தில் நாட்டைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் பேருந்து இந்த விபத்தில் மிகுந்த சேதமடைந்துள்ளது. இதில் 10 பேர் வரை படுகாயமடைந்துள்ளனர்.</p><p>விபத்துக்குள்ளான பேருந்து நியிரெட்டிகாசா நகரை நோக்கிச் சென்ற போது கட்டுப்பாட்டை இழந்து சாலையோர குழியில் சிக்கி கவிழ்ந்தது.</p><p>விபத்தில் உயிர் தப்பிய பேருந்து சாரதியை காவல்துறையினர் கைது செய்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> முதற்கட்ட விசாரணையில், பேருந்து சாரதி தூக்க கலக்கத்தில் பேருந்து ஓட்டி இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2> ஹங்கேரி பிரதமர் இரங்கல்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/156b45a5-3d64-4e12-8dab-6b837b38551a/26-6a819bf497ae4.webp' /></p><p>
பேருந்து விபத்தை ஹங்கேரி பிரதமர் பீட்டர் மகியார் ஞாயிற்றுக்கிழமை தன்னுடைய சமூக வலைதள பக்கம் வாயிலாக உறுதிப்படுத்தியுள்ளார்.</p><p> மேலும் தன்னுடைய பதிவில் உயிரிழந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு தன்னுடைய ஆழ்ந்த இரங்கல்கள் என தெரிவித்துள்ளார்.</p><p> அத்துடன் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் என்னுடைய நன்றிகள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-16T11:16:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் இராணுவ சிப்பாய்க்காக கட்டப்பட்ட வீடு கையளிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/house-built-for-an-army-soldier-in-jaffna-1786878923"></link>
            <id>https://ibctamil.com/article/house-built-for-an-army-soldier-in-jaffna-1786878923</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் புத்தூர் பகுதியில் இராணுவ சிப்பாய்க்காக கட்டப்பட்ட வீடு இன்று(16)
கையளிக்கப்பட்டது.

இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரொட...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் புத்தூர் பகுதியில் இராணுவ சிப்பாய்க்காக கட்டப்பட்ட வீடு இன்று(16)
கையளிக்கப்பட்டது.
</p><p>
இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ குறித்த
வீட்டுக்கான அடிக்கல்லை நாட்டி வைத்த நிலையில், கட்டி முடிக்கப்பட்ட வீடானது இன்று யாழ்ப்பாணம் மாவட்ட
இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ரத்னாயக்காவினால் கையளிக்கப்பட்டது.</p><h2>இராணுவத்தில் பணியாற்றும் தமிழ் இராணுவ சிப்பாய்க்கே வீடு</h2><p>இராணுவத்தில் பணியாற்றும் தமிழ் இராணுவ லான்ட்ஸ்கோப்ரல் எம்.ஆர் ராஜா
என்பவருக்கு குறித்த வீடு கட்டி வழங்கப்பட்டது</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8f6dd1c2-1972-4a9b-88c4-d9a77eeef14b/26-6a819bce23dfd.webp' /></p><p>
</p><p>
இராணுவத்தின் சேவா வனிதா திட்டத்தின் ஊடாக 1.5 மில்லியன் ரூபா செலவில் குறித்த
வீடு நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
</p><p>
நிகழ்வில் சர்வ மத தலைவர்கள் யாழ்ப்பாணம் மாவட்ட அரசாங்க அதிபர், யாழ் மாவட்ட
கட்டளைத் தளபதி கோப்பாய் பிரதேச செயலாளர், இராணுவ தளபதிகள், காவல்துறையினர், பொதுமக்கள்
என பலரும் கலந்து கொண்டனர்.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p> &nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-16T11:15:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுதந்திர தின விழாவில் கலந்துகொண்ட நடிகை த்ரிஷாவின் அழகிய புகைப்படங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/actress-trisha-recent-saree-photoshoot-1786876551"></link>
            <id>https://cineulagam.com/article/actress-trisha-recent-saree-photoshoot-1786876551</id>
            <summary type="text">புடவையில் எடுத்துக்கொண்ட தனது சமீபத்திய போட்டோஷூட் புகைப்படங்களை நடிகை த்ரிஷா தனதுஇன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

த்ரிஷா

தமிழ் சினிமா...</summary>
            <content type="html"><![CDATA[<p>புடவையில் எடுத்துக்கொண்ட தனது சமீபத்திய போட்டோஷூட் புகைப்படங்களை நடிகை த்ரிஷா தனதுஇன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். </p><h2>

த்ரிஷா
</h2><p>
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் த்ரிஷா, இந்த ஆண்டு கருப்பு எனும் மாபெரும் வெற்றி படத்தை கொடுத்துள்ளார். அடுத்ததாக இவர் நடிப்பில் விஸ்வம்பரா, ராம் ஆகிய திரைப்படங்கள் வெளிவரவுள்ளன.</p><h2>

புடவையில் போட்டோஷூட்
</h2><p>
நடிகை த்ரிஷா நேற்று தமிழ்நாட்டில் நடைபெற்ற 80-வது சுதந்திர தின விழாவில் பங்கேற்றார். அப்போது அவர் அணிந்திருந்த புடவையில் எடுத்துக்கொண்ட போட்டோஷூட் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை த்ரிஷா பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-16T11:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் கோர வாகன விபத்து: ஒன்ராறியோவைச் சேர்ந்த 20 வயது இளைஞர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/ontario-man-dies-in-rollover-on-sask-highway-1786875061"></link>
            <id>https://canadamirror.com/article/ontario-man-dies-in-rollover-on-sask-highway-1786875061</id>
            <summary type="text">கனடாவின் சஸ்காட்செவன் மாகாணத்தில் உள்ள லா லோச் பகுதிக்கு தெற்கே சனிக்கிழமை அதிகாலை நடந்த ஒற்றை வாகன விபத்தில், ஒன்ராறியோவின் பிராம்ப்டன் நகரைச் சேர்ந்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் சஸ்காட்செவன் மாகாணத்தில் உள்ள லா லோச் பகுதிக்கு தெற்கே சனிக்கிழமை அதிகாலை நடந்த ஒற்றை வாகன விபத்தில், ஒன்ராறியோவின் பிராம்ப்டன் நகரைச் சேர்ந்த 20 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். </p><p>
அதிகாலை 2:20 மணியளவில், வடக்கு சஸ்காட்செவன் பகுதியிலிருந்து தெற்கே சுமார் 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நெடுஞ்சாலை 155-இல் வாகனம் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து தலைகீழாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.</p><p> 
இது குறித்துத் தகவல் கிடைத்ததும் லா லோச் பொலிஸார், உள்ளூர் தீயணைப்புப் படையினர் மற்றும் அவசர மருத்துவக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2063f97b-4efb-40b4-b813-37ad34234ace/26-6a818cb743e71.webp' /></p><p> 
வாகனத்தை ஓட்டிச் சென்ற இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டதாக அவசர மருத்துவக் குழுவினர் உறுதிப்படுத்தினர். உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு இது குறித்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>
அத்துடன், வாகனத்தில் பயணித்த மேலும் நான்கு பயணிகள் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். </p><p>அவர்களின் காயங்கள் உயிருக்கு ஆபத்தானவை அல்ல எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>விபத்துக்கான காரணம் குறித்து சஸ்காட்செவன் பொலிஸ் பிரிவின் விபத்து மறுசீரமைப்பு நிபுணரின் உதவியுடன் லா லோச் பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-16T10:56:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[காலி முகத்திடல் அருகே கரை ஒதுங்கிய அடையாளம் தெரியாத சடலம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/dead-body-fond-in-galle-face-green-1786877490"></link>
            <id>https://jvpnews.com/article/dead-body-fond-in-galle-face-green-1786877490</id>
            <summary type="text">&amp;nbsp;கோட்டை பொலிஸார் விசாரணை

கொழும்பு, காலி முகத்திடலை அண்டிய கடற்கரைப் பகுதியில் இருந்து நபர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் த...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கோட்டை பொலிஸார் விசாரணை

கொழும்பு, காலி முகத்திடலை அண்டிய கடற்கரைப் பகுதியில் இருந்து நபர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>

உயிரிழந்த நபர் யார் என்பது இதுவரை உறுதி செய்யப்படாத நிலையில், உடலமானது அடையாளம் காண முடியாத நிலையில் காணப்படுவதாகப் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
</p><p>
உயிரிழந்த நபர் இளஞ்சிவப்பு நிற நீண்ட கை சட்டையும், அரைக் காற்சட்டையும் அணிந்திருந்ததாகப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.</p><p>

சடலம் பிரேத பரிசோதனைக்காகக் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், இச்சம்பவம் தொடர்பில் கோட்டைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-08-16T10:55:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் மறைந்த ஊடகவியலாளர் ஆறுமுகம் சபேஸ்வரனுக்கு வடமராட்சியில் நினைவேந்தல்..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/commemorates-journalist-arumugam-sabeswaran-1786877632"></link>
            <id>https://ibctamil.com/article/commemorates-journalist-arumugam-sabeswaran-1786877632</id>
            <summary type="text">கனடாவில் மறைந்த முன்னாள் தினக்குரல் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் ஆறுமுகம்
சபேஸ்வரன் அவர்களுக்கான நினைவேந்தல் நிகழ்வு மைக்கல் நேசக்கரம், மற்றும்
மைக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவில் மறைந்த முன்னாள் தினக்குரல் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் ஆறுமுகம்
சபேஸ்வரன் அவர்களுக்கான நினைவேந்தல் நிகழ்வு மைக்கல் நேசக்கரம், மற்றும்
மைக்கல் விளையாட்டு கழகத்தின் ஏற்பாட்டில் சுயாதீன ஊடகவியலாளர் வெற்றிவேல்
துஷ்யந்தன் தலைமையில் மைக்கல் நேசக்கரம் அலுவலகத்தில் இன்று (16/08/2026) காலை
10:30 மணியளவில் இடம்பெற்றது.
</p><p>
இதில் ஆறுமுகம் சபைஸ்வரன் அவர்களது திரு உருவப் படத்திற்கு அக வணக்கம்
செலுத்தப்பட்டு ஈகை சுடர்கள் ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.</p><h2>நினைவுரைகள்</h2><p>
தொடர்ந்து நினைவுரைகளை மூத்த ஊடகவியலாளரும், யாழ்ப்பாணம் ஊடக மையத்தின்
தொடக்குனருமான தயாபரன், முன்னாள் தினக்குரல் உதவி ஆசிரியர் பிருந்தாபன்
பொன்ராசா ஊடகவியலாளர்களான அ.சசி., சி.த.காண்டீபன். உட்பட ஊடகவியலாளர்
ஆறுமுகம் சபேஸ்வரனின் நண்பர்கள் நிகழ்த்தினர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d5bcf41f-e37e-44a8-9a49-dfd6df00a61a/26-6a8196c2d0871.webp' /></p><p>
</p><p>
இன்றைய நிகழ்வில் ஊடகவியலாளர் சபேஷ்வரனின் நண்பர்கள், ஊடகவியலாளர்கள்,
மைக்கல் நேசக்கரம் மற்றும் விளையாட்டு கழகத்தின் நிர்வாகிகள் உறுப்பினர்கள்,
பிரதேச மக்கள், சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்து கொண்டு சபேஷ்வரனுக்கு
அஞ்சலி செலுத்தினர்.</p><p></p><p></p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-16T10:54:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kiyas Shafe</name>
            </author>
            <title type="text"><![CDATA[திருகோணமலையில் பொலிஸார் அதிரடி நடவடிக்கை - போதைப்பொருள் வர்த்தகர் கைது..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ice-drug-bust-in-trincomalee-1786875111"></link>
            <id>https://tamilwin.com/article/ice-drug-bust-in-trincomalee-1786875111</id>
            <summary type="text">திருகோணமலையில் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவல் அடிப்படையில், ஐஸ் போதைப்பொருள் மற்றும் ஆயுதங்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நடவடிக்கை...</summary>
            <content type="html"><![CDATA[<p>திருகோணமலையில் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவல் அடிப்படையில், ஐஸ் போதைப்பொருள் மற்றும் ஆயுதங்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>

இந்த நடவடிக்கை நேற்று(15.08.2026) முன்னெடுக்கப்பட்டது.
</p><h2>
போதைபொருளுடன் வர்த்தகர் கைது</h2><p>
</p><p>
உப்புவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திருகோணமலை, புளியங்குளம், தேவநகர், மடுமை வீதியிலுள்ள வீடொன்றிலேயே இந்தச் சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டது.
</p><p>
கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து 11 கிராம் ஐஸ் போதைப்பொருள், ஒரு வாள், இரும்புப் குழாயில் இரும்புப் பல்சக்கரத்தைப் பொருத்தி தயாரிக்கப்பட்ட அபாயகரமான கூர்மையான ஆயுதம் என்பன கைப்பற்றப்பட்டன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/46d433a7-6266-41d5-b960-1655d6ba1e73/26-6a8195078a6ba.webp' /></p><p>
</p><p>
இவ்வாறு கைது செய்யப்பட்டவர், தேவநகர் பகுதியைச் சேர்ந்த 38 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.</p><h2>

பாதாள உலகக் குழு தலைவர்</h2><p>இவர் அப்பகுதியை மையமாகக் கொண்டு “குட்டிப்புலி” மற்றும் “விஜய் டீம்” எனும் பெயர்களில் இரு பாதாள உலகக் குழுக்களை உருவாக்கி, அவற்றின் தலைவராகச் செயற்பட்டு வந்துள்ளார்.</p><p> 

அத்துடன், அப்பகுதி மக்களை அச்சுறுத்தி பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளதாகவும் முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
</p><p>
 கைது செய்யப்பட்ட சந்தேகநபரும் கைப்பற்றப்பட்ட சான்றுகளும் மேல் விசாரணைகளுக்காகவும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காகவும் உப்புவெளி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
</p><p>
 இது தொடர்பான மேலதிக விசாரணைகளை உப்புவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-16T10:47:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஊடகங்களுக்குக் கல்வி அமைச்சு கடும் எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/scholarship-exam-tv-channels-told-not-to-interview-1786876548"></link>
            <id>https://jvpnews.com/article/scholarship-exam-tv-channels-told-not-to-interview-1786876548</id>
            <summary type="text">பெற்றோர் அல்லது ஆசிரியர்களின் அனுமதியின்றி சிறுவர்களிடம் பெறப்படும் கருத்துகளைப் பதிவு செய்வதற்கோ அல்லது ஊடகங்களில் வெளியிடுவதற்கோ கல்வி அமைச்சு கடுமை...</summary>
            <content type="html"><![CDATA[<p>பெற்றோர் அல்லது ஆசிரியர்களின் அனுமதியின்றி சிறுவர்களிடம் பெறப்படும் கருத்துகளைப் பதிவு செய்வதற்கோ அல்லது ஊடகங்களில் வெளியிடுவதற்கோ கல்வி அமைச்சு கடுமையான தடையை விதித்துள்ளது.</p><p>
இவ்வாண்டு நடைபெற்ற 5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றிய சிறுவர்கள் சிலர், ஊடகங்களுக்கு வழங்கிய கருத்துகள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு, அவர்கள் கிண்டலுக்கும் பரிகாசத்திற்கும் உள்ளாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் எழுந்த கரிசனைகளைத் தொடர்ந்தே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p><p>
பரீட்சை முடிந்த பின்னர் சிறுவர்கள் கூறிய கருத்துகள், சமூக வலைத்தளங்களில் பரிகாசத்திற்கு உள்ளாக்கும் வகையில் சுட்டிக்காட்டப்பட்டுப் பகிரப்பட்டு வருவதை அவதானித்துள்ளதாகக் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.</p><p> 
பெற்றோர், பாதுகாவலர்கள் அல்லது ஆசிரியர்களின் முன்அனுமதியைப் பெறாமல் சிறுவர்களிடமிருந்து கருத்துகளைப் பெறுவதற்கோ, பதிவு செய்வதற்கோ அல்லது ஒளிபரப்புவதற்கோ ஊடக நிறுவனங்களுக்கு அனுமதி இல்லை என்று அமைச்சு அழுத்தமாகக் குறிப்பிட்டுள்ளது.
</p><p>மேலும், சிறுவர்களின் உரிமைகளைப் பாதிக்கும் வகையில் இத்தகைய காணொளிகளைச் சமூக வலைத்தளங்களில் வெளியிடும் ஊடக நிறுவனங்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கல்வி அமைச்சு எச்சரித்துள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-16T10:40:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆன்லைன் மூலம் கட்டுமானப் பொருட்கள் வாங்குவோருக்குப் பொலிஸார் எச்சரிக்கை:]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/police-warn-of-new-online-scam-targeting-hardware-1786875554"></link>
            <id>https://jvpnews.com/article/police-warn-of-new-online-scam-targeting-hardware-1786875554</id>
            <summary type="text">&amp;nbsp;இக்மன் மற்றும் பேஸ்புக் சந்தை போன்ற ஆன்லைன் தளங்கள் மூலம் கட்டுமானப் பொருட்களை வாங்குபவர்களைக் குறிவைத்து நடத்தப்படும் புதிய ரக நிதி மோசடிகள் கு...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;இக்மன் மற்றும் பேஸ்புக் சந்தை போன்ற ஆன்லைன் தளங்கள் மூலம் கட்டுமானப் பொருட்களை வாங்குபவர்களைக் குறிவைத்து நடத்தப்படும் புதிய ரக நிதி மோசடிகள் குறித்துப் பொலிஸார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். </p><p>
கட்டுமானத் துறையில் ஈடுபட்டுள்ளவர்கள் மற்றும் ஆன்லைன் வாடிக்கையாளர்களை இலக்காகக் கொண்டு இந்த மோசடி கும்பல் செயல்பட்டு வருகிறது. </p><p>
அஸ்பெஸ்டாஸ் தகடுகள், சிமெ்து உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களை சந்தை விலையை விட மிகவும் குறைவான விலைக்கு மோசடிக்காரர்கள் இணையத்தில் விளம்பரம் செய்கின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/73fa159f-33b2-4eb7-a9cc-bd24e0ad20f5/26-6a818ea441ed3.webp' /></p><p>வாடிக்கையாளர் பொருட்கள் வாங்கத் தொடர்புகொண்டதும், மோசடிக்காரர் வாடிக்கையாளரின் பகுதியில் உள்ள ஒரு உண்மையான ஹார்ட்வேர் கடைகயைத் தொடர்புகொண்டு, வாடிக்கையாளரின் வீட்டிற்கோ அல்லது கட்டுமான இடத்திற்கோ பொருட்களை வழங்குமாறு ஏற்பாடு செய்கிறார்.</p><p>
பொருட்கள் குறிப்பிட்ட இடத்திற்கு வந்து சேர்ந்தவுடன், வாடிக்கையாளரைத் தொடர்புகொள்ளும் மோசடிக்காரர், தான் வழங்கும் வங்கிக் கணக்கிற்குப் பணத்தை உடனடியாக அனுப்புமாறு கூறுகிறார்.
</p><p>பொருட்களை விநியோகித்த ஓட்டுநரோ அல்லது ஹார்ட்வேர் கடை உரிமையாளரோ நேரில் பணத்தைக் கேட்கும் போதே, தான் ஏமாற்றப்பட்டதை வாடிக்கையாளர் உணர்கிறார். இதனால் அனுப்பிய பணத்தையும், பொருட்களையும் இழக்கும் நிலை ஏற்படுகிறது.
</p><p>பொருட்கள் உங்கள் இடத்தை வந்து அடைந்துவிட்டது என்பதற்காகவே அவசரப்பட்டு ஆன்லைன் மூலம் பணம் செலுத்த வேண்டாம்.
பொருட்களைக் கொண்டுவந்த ஓட்டுநரிடமோ அல்லது ஹார்ட்வேர் கடை உரிமையாளரிடமோ நேரடியாகப் பேசி பணப் பரிவர்த்தனையை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
</p><p>வங்கிப் பரிமாற்றம் செய்வதாக இருந்தால், குறிப்பிட்ட ஹார்ட்வேர் கடையின் பெயரில் உள்ள அதிகாரப்பூர்வ வங்கிக் கணக்கிற்கு மட்டுமே பணத்தை அனுப்ப வேண்டும்.</p><p>
முடிந்தவரை பொருட்கள் கைக்கு வந்தவுடன் நேரில் ரொக்கமாகப் பணம் செலுத்தும் முறையைப் பின்பற்றுங்கள்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-16T10:39:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[டிசி திரைப்படத்தின் வசூல்.. 9 நாட்கள் பாக்ஸ் ஆபிஸ் விவரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/dc-movie-worldwide-9-days-box-office-1786874578"></link>
            <id>https://viduppu.com/article/dc-movie-worldwide-9-days-box-office-1786874578</id>
            <summary type="text">லோகேஷ் கனகராஜ் நடிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவாகி வெளிவந்த திரைப்படம் டிசி. 

ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் இப்படத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>லோகேஷ் கனகராஜ் நடிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவாகி வெளிவந்த திரைப்படம் டிசி.</p><p> 

ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் இப்படத்தின் வசூல் குறித்து தொடர்ந்து முதல் நாளிலிருந்தே பார்த்து வருகிறோம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/219041bb-7423-4e76-a575-4ce3ff310f11/26-6a818ad5f3403.webp' /></p><p> </p><p>

அந்த வகையில், 9 நாட்களில் இப்படம் உலகளவில் எவ்வளவு வசூல் செய்துள்ளது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
</p><p>
இந்நிலையில், டிசி திரைப்படம் உலகளவில் 9 நாட்களில் ரூ. 76 கோடி வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் எவ்வளவு வசூலிக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/366fe2ef-620b-4bea-80a1-f13a1ff5a3e0/26-6a818ad54af91.webp' /></p>]]></content>
            <updated>2026-08-16T10:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடற்படை படகு விபத்துக்கான காரணம்! ஆரம்பமாகும் தீவிர விசாரணைகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/inquiry-board-appointed-angulana-naval-accident-1786875328"></link>
            <id>https://ibctamil.com/article/inquiry-board-appointed-angulana-naval-accident-1786875328</id>
            <summary type="text">அங்குலான கடலில் கடற்படையின் அதிவேகத் தாக்குதல் படகு கவிழ்ந்த சம்பவம் தொடர்பாக முழுமையான விசாரணைகளை மேற்கொள்வதற்காக சிறப்பு விசாரணை சபையொன்று ஒன்று நிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>அங்குலான கடலில் கடற்படையின் அதிவேகத் தாக்குதல் படகு கவிழ்ந்த சம்பவம் தொடர்பாக முழுமையான விசாரணைகளை மேற்கொள்வதற்காக சிறப்பு விசாரணை சபையொன்று ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இந்த நிலையில், படகில் இருந்து காணாமல் போன கடற்படை வீரரைத் தேடும் பணிகள் தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருவதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.</p><p></p><h2>தேடுதல் நடவடிக்கை</h2><p> </p><p>

இந்தத் தேடுதல் நடவடிக்கைக்காக இலங்கை விமானப்படையின் Mi-17 மற்றும் Bell 412ஆகிய இரண்டு உலங்குவானூர்திகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f1098eb0-2ed0-4816-8cc9-63fdab8d8318/26-6a8190dd99ebd.webp' /></p><p>
</p><p>
இதேவேளை, விபத்தில் இருந்து மீட்கப்பட்ட 11 கடற்படை வீரர்களும் தொடர்ந்து மருத்துவ சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவர்களின் உடல்நிலை கவலைக்கிடமாக இல்லை என்பதை இலங்கை கடற்படை உறுதிப்படுத்தியுள்ளது.&nbsp;&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-16T10:28:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[இன்று பிற்பகலுக்குள் வெப்பநிலை 45 பாகை செல்சியஸ் வரை உயரக்கூடும்! வளிமண்டலவியல் திணைக்களம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/heat-alert-in-sri-lanka-1786873364"></link>
            <id>https://tamilwin.com/article/heat-alert-in-sri-lanka-1786873364</id>
            <summary type="text">இலங்கையின் பல மாவட்டங்களில் இன்று (16.08.2026) பிற்பகலுக்குள் வெப்பநிலை 39 முதல் 45 பாகை செல்சியஸ் வரை உயரக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் பல மாவட்டங்களில் இன்று (16.08.2026) பிற்பகலுக்குள் வெப்பநிலை 39 முதல் 45 பாகை செல்சியஸ் வரை உயரக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. </p><p>

நிலவும் வறண்ட வானிலை அநுராதபுரம், பொலன்னறுவை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களில் மக்களின் வாழ்க்கையை கடுமையாக பாதித்துள்ளது.</p><h2>சில பகுதிகள் கடுமையாக பாதிப்பு</h2><p> </p><p>

இதற்கிடையில், நிலவும் வறண்ட வானிலை அனுராதபுரம், பொலன்னருவை, யாழ்ப்பாணம், அம்பாறை, மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் உள்ள சில பகுதிகளை கடுமையாக பாதித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5e4448ec-3e7a-48a5-ae2f-f5590db5260e/26-6a81902477689.webp' /></p><p> </p><p>

ஏறக்குறைய நான்கு மாதங்களாக மழை இல்லாததால், அந்த மாவட்டங்களில் உள்ள பல சிறிய குளங்கள் முற்றிலுமாக வறண்டுவிட்டன. 

இதன் விளைவாக, கால்நடைகள் மற்றும் வன விலங்குகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. </p><p>

வறண்ட வானிலை காரணமாக மிஹிந்தலையில் சுமார் 30 ஏக்கர் நெல் வயல்களும் சேதமடைந்துள்ளதாக தெரியவருகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p>&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-16T10:26:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[விஸ்வநாத் &amp; சன்ஸ் திரைப்படம் தமிழ்நாட்டில் 2 நாட்களில் செய்துள்ள வசூல்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/vishwanath-and-sons-tamilnadu-2-days-box-office-1786875392"></link>
            <id>https://cineulagam.com/article/vishwanath-and-sons-tamilnadu-2-days-box-office-1786875392</id>
            <summary type="text">சூர்யா நடிப்பில் கடந்த 14-ஆம் தேதி வெளியான விஸ்வநாத் &amp;amp; சன்ஸ் திரைப்படம், 2 நாட்களில் தமிழ்நாட்டில் செய்துள்ள வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது....</summary>
            <content type="html"><![CDATA[<p>சூர்யா நடிப்பில் கடந்த 14-ஆம் தேதி வெளியான விஸ்வநாத் &amp; சன்ஸ் திரைப்படம், 2 நாட்களில் தமிழ்நாட்டில் செய்துள்ள வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.</p><p></p><p>
</p><h2>
விஸ்வநாத் &amp; சன்ஸ்
</h2><p>
சூர்யா - வெங்கி அட்லூரி கூட்டணியில் உருவாகி கடந்த 14-ஆம் தேதி வெளியான திரைப்படம் <a href="https://www.youtube.com/watch?v=JTHZCJ8Rhxg" target="_blank">விஸ்வநாத் &amp; சன்ஸ்</a>. மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளிவந்த இப்படத்திற்கு தமிழ்நாட்டில் கலவையான விமர்சனங்கள் கிடைத்துள்ளன.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/eb14a0a4-ab1f-4874-b144-b05d4023ed24/26-6a818e02da4db.webp' /></p><p>மேலும், எதிர்பார்த்த அளவிற்கு தமிழ்நாட்டில் வசூலும் வரவில்லை. ஆனால், ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் இப்படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. </p><h2>

தமிழ்நாடு பாக்ஸ் ஆபிஸ்
</h2><p>
இந்நிலையில், கலவையான விமர்சனங்களை தமிழ் ரசிகர்களிடையே பெற்றுள்ள விஸ்வநாத் &amp; சன்ஸ் திரைப்படம், தமிழ்நாட்டில் 2 நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0694e36a-628f-4507-a050-f344eab215d7/26-6a818e03949dc.webp' /></p><p>அதன்படி, 2 நாட்களில் தமிழ்நாட்டில் மட்டுமே இப்படம் ரூ. 20 கோடி வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் எவ்வளவு வசூல் செய்யும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.</p>]]></content>
            <updated>2026-08-16T10:20:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[காலி முகத்திடல் கடற்கரையில் கண்டெடுக்கப்பட்டுள்ள சடலம்! பொலிஸார் விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/body-found-on-galle-face-beach-1786874138"></link>
            <id>https://tamilwin.com/article/body-found-on-galle-face-beach-1786874138</id>
            <summary type="text">காலி முகத்திடலுக்கு அருகில் உள்ள கடற்கரைப் பகுதியில் இருந்து நபர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.இவ்வாறு உயிரிழந்தவரின் ஆள் அடையாளம் இதுவரை உறு...</summary>
            <content type="html"><![CDATA[<p>காலி முகத்திடலுக்கு அருகில் உள்ள கடற்கரைப் பகுதியில் இருந்து நபர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.</p><p>இவ்வாறு உயிரிழந்தவரின் ஆள் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என்றும் சடலத்தை அடையாளம் காண முடியாத நிலையில் உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><h2>பொலிஸார் விசாரணை</h2><p> </p><p>

குறித்த நபர் இளஞ்சிவப்பு நிற நீண்ட கை சட்டையையும், அரைக்கால் சட்டையையும் அணிந்திருந்ததாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/55167d26-4608-4a5b-adaa-8633efef27e6/26-6a818ce3a0fa1.webp' />&nbsp;</p><p> </p><p>குறித்த சடலம் பிரேத பரிசோதனைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது.</p><p>சம்பவம் தொடர்பில் கோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p>&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-16T10:19:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kowshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மத்திய மாகாணத்தில் தொடரும் மோசடி குற்றச்சாட்டு - விசாரணைக்கு புதிய குழு நியமனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/central-province-fraud-probe-to-be-intensified-1786864180"></link>
            <id>https://tamilwin.com/article/central-province-fraud-probe-to-be-intensified-1786864180</id>
            <summary type="text">நுவரெலியா மாவட்டத்தில் உள்ள பிரதேச செயலகங்களில் நடந்ததாகக் கூறப்படும் நிதி முறைகேடுகள் குறித்து விசாரிக்க, ஜனாதிபதியின் மேற்பார்வையின் கீழ் ஒரு தணிக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>நுவரெலியா மாவட்டத்தில் உள்ள பிரதேச செயலகங்களில் நடந்ததாகக் கூறப்படும் நிதி முறைகேடுகள் குறித்து விசாரிக்க, ஜனாதிபதியின் மேற்பார்வையின் கீழ் ஒரு தணிக்கை குழுவை நியமிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக&nbsp; நாடாளுமன்ற உறுப்பினர் மஞ்சுள சுரவீர ஆராய்ச்சி தெரிவித்துள்ளார்.</p><p>இந்த விடயம் தொடர்பில் அவர் வெளியிட்ட அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.</p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">நிதி மோசடிகள்</span></p><p>மேற்படி அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்படுவதாவது,&nbsp;&nbsp;</p><p>நுவரெலியா மாவட்டத்தில் உள்ள 10 பிரதேச செயலக அலுவலகங்களில் 2023 முதல் 2026 வரையிலான காலக்கட்டத்தில் தணிக்கைகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.</p><p>நோர்வூட் மற்றும் தலவாக்கலை பிரதேச செயலகங்களில் “அஸ்வெசும” கொடுப்பனவுகளில் இடம்பெறும் மோசடி தொடர்பாக சிறப்பு கவனம் செலுத்தப்படவுள்ளதாக குறித்து ஆராயப்படும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6cb80864-2d6a-40da-a8fb-1cf9da1c0d19/26-6a817763b4c96.webp' /></p><p>மேலும் டித்வா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பேரிடர் நிவாரணக் கொடுப்பனவுகள் முறையாக விநியோகிக்கப்பட்டதா என்பதையும், கோவிட்-19 பெருந்தொற்றின் போது சமுர்த்தி திட்டத்தின் மூலம் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட ரூ.5,000 உதவித்தொகை குறித்தும் இந்தத் தணிக்கை ஆராயவுள்ளது.&nbsp;</p><p>
அத்துடன், சமுர்த்தி பயனாளிகள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு வழங்கப்பட்ட அரசாங்க மானியங்கள் உரியவர்களுக்கு முறையாக ாஎன்பதையும் இந்தக் குழு விசாரணை செய்யவுள்ளதாகவும்&nbsp; குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-16T10:02:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரபல அரசியல் முக்கியஸ்தருக்கு கோட்டாபயவினால் நேர்ந்த அவமானம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/prominent-figures-sidelined-by-gotabaya-1786859473"></link>
            <id>https://jvpnews.com/article/prominent-figures-sidelined-by-gotabaya-1786859473</id>
            <summary type="text">கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் எனக்கு உரிய மதிப்பளிக்கப்படவில்லை. இதன் காரணமாக அதிருப்தியடைந்ததாலேயே நான் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் எனக்கு உரிய மதிப்பளிக்கப்படவில்லை. இதன் காரணமாக அதிருப்தியடைந்ததாலேயே நான் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகினேன் என்று அமெரிக்காவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p>தனியார்&nbsp; ஊடகம் ஒன்றின் நிகழ்ச்சியொன்றில் கலந்து&nbsp; கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p>தொடர்ந்தும் தெரிவிக்கையில்,&nbsp;</p><p>அமெரிக்காவுக்கான இலங்கையின் தூதுவர் என்ற பதவியை வைத்துக் கொண்டு நான் ஒருபோதும் அரசியல் செய்ததில்லை. இதனை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க நன்கு அறிவார்.&nbsp;</p><p>&nbsp;முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் வெறும் பின்வரிசை உறுப்பினராகவே நான் இருந்தேன். எனக்கு உரிய மதிப்பளிக்கப்படவில்லை.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0fa3342f-0d19-42ab-8bdd-af29de795cba/26-6a814fd330a05.webp' /></p><p>அந்த&nbsp; ஆட்சியில் கடும் அதிருப்தியடைந்ததாலேயே நானாக சுய விருப்பின் அடிப்படையில் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைத் துறந்து அரசியலில் இருந்து வெளியேறினேன்.&nbsp;</p><p>&nbsp;இதனையடுத்தே அமெரிக்காவுக்கான தூதுவராக நியமிக்கப்பட்டேன். தூதுவராக நியமிக்கப்பட்டதன் பின்னர் நான் ஒருபோதும் அரசியல் செய்யவில்லை.&nbsp;&nbsp;</p><p>தூதுவராக நியமிக்கப்பட்ட காலத்தில் இருந்து பதவி விலகும் வரை இலங்கைக்கு பயன்பெறும் வகையில் செயற்பட்டேன். அமெரிக்காவிடம் இருந்து இலங்கைக்கு பல ஒத்துழைப்புக்களை பெற்றுக்கொடுத்துள்ளேன்.&nbsp;</p><p>தூதுவராகவும், ஒரு அரசியல்வாதியாகவும் நாட்டுக்கு என்னால் முடிந்த சேவைகளை ஆற்றியுள்ளேன். தூதுவராக நான் பணியாற்றியதை இட்டு மகிழ்ச்சியடைகின்றேன் என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-16T09:53:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறைச்சாலைக்குள் குயினாக மாறும் இஷாரா செவ்வந்தி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sewwandi-arrest-investigation-prison-1786864444"></link>
            <id>https://jvpnews.com/article/sewwandi-arrest-investigation-prison-1786864444</id>
            <summary type="text">கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் தொடர்புடைய பிரதான சந்தேகநபரான இஷாரா செவ்வந்தியின் 
சூட்கேஸ் சிறைச்சாலை அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளதாக நீதி அமைச்சின...</summary>
            <content type="html"><![CDATA[<p>கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் தொடர்புடைய பிரதான சந்தேகநபரான இஷாரா செவ்வந்தியின் 
சூட்கேஸ் சிறைச்சாலை அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளதாக நீதி அமைச்சின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.</p><p>
பெண்களை சிறைக்கு அழைத்துச்செல்லும்போது அவர்களுக்கு கைவிலங்கு இடப்படுவதில்லை என்றும் விளக்கமளித்துள்ளார்.</p><p>இதேவேளை, அவர் சிறைக்கு அழைத்துச்செல்லப்பட்டபோது சட்டவிரோதமான எதுவும் நடக்கவில்லை என்பதால் எந்த விசாரணையும் தேவையில்லை என்றும் கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0fc1fbc9-429a-44ec-82c1-f4119c4cfb13/26-6a81633db7322.webp' /></p><p>அவர் தற்போது அங்குனுகொலப்பலெஸ்ஸ சிறையில் ஏனைய சந்தேகநபர்களுடன் தங்கியிருப்பதாகவும், அவருக்கு எந்தவிதமான சிறப்பு சலுகைகளும் வழங்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p>
இதற்கிடையில், அங்குனுகொலப்பலெஸ்ஸ சிறையில் உள்ள பல கைதிகள் இஷாரா செவ்வந்தியை பற்றி அறிந்துகொள்ள மிகவும் ஆர்வமாக இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.
</p><p>
இருப்பினும், சிறைச்சாலை அதிகாரிகள் இஷாரா செவ்வந்தியை மிகவும் உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும், அதனால் அவருடன் அதிக தொடர்பைப் பேண முடியாது என்றும் அங்குனுகொலப்பலெஸ்ஸ சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p><br></p>]]></content>
            <updated>2026-08-16T09:52:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[மரணம் வரை அதிகாரம் இருக்காது! ஜனாதிபதி அநுரவுக்குச் சென்ற எச்சரிக்கை..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/warning-issued-to-president-anura-1786863754"></link>
            <id>https://tamilwin.com/article/warning-issued-to-president-anura-1786863754</id>
            <summary type="text">159 பெரும்பான்மை ஆசனங்கள் இருக்கின்றன என்ற அகந்தையில் செயற்பட வேண்டாம். மரணம் வரை அதிகாரம் நிலைத்திருக்காது என்று பத்தரமுல்லே சீலரத்ன தேரர் ஜனாதிபதி அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>159 பெரும்பான்மை ஆசனங்கள் இருக்கின்றன என்ற அகந்தையில் செயற்பட வேண்டாம். மரணம் வரை அதிகாரம் நிலைத்திருக்காது என்று பத்தரமுல்லே சீலரத்ன தேரர் ஜனாதிபதி அநுர குமார மற்றும் அவர் தலைமையிலான அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். </p><p>

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தினரின், ஜனாதிபதியுடனான சந்திப்புக் குறித்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
</p><p>
தொடர்ந்தும் தெரிவிக்கையில், </p><p>

நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை அதிகரிப்பது தொடர்பில் அண்மையில், இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தினருக்கும், ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றது.</p><h2>ஜனாதிபதிக்கு எச்சரிக்கை</h2><p> </p><p>

இந்த சந்திப்பில், ஜனாதிபதி பேசிய விடயங்களை மட்டுமே ஜனாதிபதி ஊடகப் பிரிவு மக்களுக்கு வெளிக்காட்டியுள்ளது. </p><p>ஆனால், இந்த சந்திப்பில், சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் மற்றும் பிரதிநிதிகள் முன்வைத்த கருத்துக்களை மக்களுக்கு வெளிப்படுத்தாது ஜனாதிபதி ஊடகப் பிரிவு மூடி மறைத்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/311ecf8e-1f6a-4aac-9b39-59d5c1be87ac/26-6a8173d2aef5f.webp' />&nbsp; &nbsp;</p><p> 

ஜனாதிபதியை மட்டும் போற்றிப் புகழும் இந்த அதிகாரிகளால், மக்களிடத்தில் விமர்சனத்திற்கு உள்ளாவது ஜனாதிபதியே ஆகும்.

எனவே, ஜனாதிபதி அநுர குமார தன்னைச் சுற்றியுள்ள அதிகாரிகள் குறித்து மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம்.</p><p>நாட்டின் தற்போதைய நிலையில், நீதபதிகளின் பதவிக் காலத்தை நீடிப்பது அவசியமற்றது.</p><p>அரசியலமைப்பின் 22ஆவது திருத்தம் கொண்டுவரப்படவுள்ளது. 

எதிர்வரும் 18ஆம் திகதி நாடாளுமன்றத்திற்கு இந்த சட்டமூலம் வருகின்றது. இதற்கு ஆளும் தரப்பினரும் கை உயர்த்தக் கூடாது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f660512d-93dd-45ac-a119-8b85e3c83f4c/26-6a8175ff9bcdd.webp' /></p><p>

மனச்சாட்சிக்கு விரோதமாகச் செயற்பட விரும்பாதவர்கள், 18ஆம் திகதி விடுமுறை எடுத்துக் கொண்டு மண்வெட்டியோடு தங்களுடைய வயலுக்குச் சென்று விவசாய வேலையாவது செய்யுங்கள்.</p><p>

அதைவிடுத்து 159 பெரும்பான்மை இருக்கின்றது என்ற அகந்தையில் செயற்பட வேண்டாம். மரணம் வரையில் அதிகாரம் நிலைத்திருக்காது என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;&nbsp;</p><p></p><p></p><p>YOU MAY LIKE THIS VIDEO</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/HYpHXIw2L-o" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-08-16T09:49:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[சன்ஸ்கிரீன் தோல் புற்றுநோயை ஏற்படுத்துகிறதா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/dermatologist-warns-of-the-sunscreen-paradox-1786872661"></link>
            <id>https://canadamirror.com/article/dermatologist-warns-of-the-sunscreen-paradox-1786872661</id>
            <summary type="text">கனடிய விஞ்ஞானி மறுப்பு
சன்ஸ்கிரீன் திரவம் தோல் புற்றுநோயை உண்டாக்குகின்றது என இணையத்தில் பரவி வரும் தகவல்கள் முற்றிலும் தவறானவை எனவும், தனது ஆராய்ச்ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடிய விஞ்ஞானி மறுப்பு
சன்ஸ்கிரீன் திரவம் தோல் புற்றுநோயை உண்டாக்குகின்றது என இணையத்தில் பரவி வரும் தகவல்கள் முற்றிலும் தவறானவை எனவும், தனது ஆராய்ச்சி முடிவுகள் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுள்ளதாகவும் கனடாவைச் சேர்ந்த பிரபல தோல் நோய் நிபுணரும் விஞ்ஞானியுமான இவான் லிட்வினோவ் தெரிவித்துள்ளார்.</p><p>
சமீபத்தில் இத்தாலிய மருத்துவர் ஒருவர், மெக்கில் பல்கலைக்கழகத்தின் மருத்துவப் பேராசிரியரான இவான் லிட்வினோவ் தலைமையிலான ஆய்வை மேற்கோள் காட்டி, சன்ஸ்கிரீன் தோல் புற்றுநோயை ஏற்படுத்துகிறது என்ற பிரசாரத்தை முன்னெடுத்திருந்தார்.
</p><p>இது குறித்து விளக்கமளித்துள்ள பேராசிரியர் லிட்வினோவ் சன்ஸ்கிரீன் புற்றுநோயை உருவாக்குகிறது என்ற கூற்று முற்றிலும் உண்மையற்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a1d2a239-f207-4140-b7c3-a4656d42afd2/26-6a818356e70d5.webp' /></p><p> </p><p>எனினும், சன்ஸ்கிரீன் பயன்பாடு குறித்த சில தவறான அணுகுமுறைகள் ஆபத்தானவை என்று எச்சரித்துள்ளார்.
சன்ஸ்கிரீன் பூசிக்கொள்வதால் மட்டுமே சூரிய கதிர்வீச்சிலிருந்து முழுமையான பாதுகாப்பு கிடைத்துவிட்டது என மக்கள் தவறாகக் கருதுவதே முதன்மையான சிக்கலாகும். </p><p>இதனை ஆராய்ச்சியாளர்கள் சன்ஸ்கிரீன் முரண்பாடு என்று அழைக்கின்றனர்.</p><p>
சன்ஸ்கிரீன் பூசிய பிறகு மணி கணக்கில் வெயிலில் தாராளமாக இருக்கலாம் என மக்கள் நினைக்கின்றனர்.</p><p>
இதனால் அவர்கள் அதிக நேரம் சூரிய ஒளியில் இருப்பதால் தோல் கருகதல் மற்றும் ஆபத்தான புற ஊதாக் கதிர்களின் தாக்கத்திற்கு ஆளாகின்றனர்.
</p><p>சூரிய ஒளி தோலில்படும் போது உடலுக்குள் மகிழ்ச்சியைத் தரும் என்டோர்பின்கள் வெளியாவதால், மக்கள் வெயிலில் அதிக நேரம் இருக்க விரும்புகின்றனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-16T09:45:53+00:00</updated>
        </entry>
    </feed>
