<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-09-19T18:31:13+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிம்பிளான உடையில் நடிகை மமிதா பைஜு வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோ ஷுட்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/actress-mamitha-baiju-latest-cute-photoshoot-1789817224"></link>
            <id>https://cineulagam.com/article/actress-mamitha-baiju-latest-cute-photoshoot-1789817224</id>
            <summary type="text">மமிதா பைஜு2026ம் ஆண்டு சினிமாவில் உள்ள பல கலைஞர்களுக்கு வெற்றி ஆண்டாக அமைந்துள்ளது. இதில் முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து 3 ரூ. 100 கோடி படங்களை...</summary>
            <content type="html"><![CDATA[<h2>மமிதா பைஜு</h2><p>2026ம் ஆண்டு சினிமாவில் உள்ள பல கலைஞர்களுக்கு வெற்றி ஆண்டாக அமைந்துள்ளது. </p><p>இதில் முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து 3 ரூ. 100 கோடி படங்களை கொடுத்துள்ளவர் தான் நடிகை மமிதா பைஜு. </p><p>முதலில் விஜய்யின் ஜனநாயகன் ரிலீஸ், அடுத்து சூர்யாவுடன் அவர் நடித்த விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அடுத்து மலையாளத்தில் மமிதா பைஜு நடித்த பெத்லேகேம் குடும்ப யூனிட். இந்த 3 படங்களுமே ரூ. 100 கோடியை எட்டிவிட்டது. </p><p>இந்த வருடம் மமிதா பைஜுவிற்கு மாஸ் வெற்றி ஆண்டாக அமைந்துள்ளது, இந்த நிலையில் அவர் லேட்டஸ்ட்டாக வெளியிட்டுள்ள போட்டோ ஷுட் புகைப்படம் வைரலாகி வருகிறது. இதோ போட்டோஸ்,</p><p><br></p>]]></content>
            <updated>2026-09-19T18:30:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[காதலருடன் 2 மாதம் உல்லாசம் ; வீட்டுக்கு திரும்பி வந்து கணவரின் அந்தரங்க உறுப்பில் கடித்து வைத்த மனைவி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/illicit-romance-lover-wife-husband-private-part-1789842438"></link>
            <id>https://jvpnews.com/article/illicit-romance-lover-wife-husband-private-part-1789842438</id>
            <summary type="text">காதலருடன் 2 மாத உல்லாசம் அனுபவித்து விட்டு, வீட்டுக்கு திரும்பி வந்த மனைவி, கணவரின் அந்தரங்க உறுப்பில் கடித்து வைத்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
...</summary>
            <content type="html"><![CDATA[<p>காதலருடன் 2 மாத உல்லாசம் அனுபவித்து விட்டு, வீட்டுக்கு திரும்பி வந்த மனைவி, கணவரின் அந்தரங்க உறுப்பில் கடித்து வைத்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.</p><p></p><p>

உத்தர பிரதேசத்தின் ஹர்தோய் மாவட்டத்தில் வசித்து வருபவர் சாதனா. இவருடைய கணவர் தீபக். இந்த தம்பதிக்கு, 3 வயது பெண் குழந்தை உள்பட 3 பெண் குழந்தைகள் உள்ளனர்.</p><h3>குடும்பத் தகராறு</h3><p> </p><p>இந்த நிலையில், தீபக்கின் நண்பருடன் சாதனாவுக்கு நட்பு ஏற்பட்டது.

இதன்பின்னர் அவருடனான உறவு நெருக்கமடைந்தது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dc6f1d97-7c00-48f3-9ac9-ef69c907b07d/26-6aaed407b589f.webp' /></p><p>ஒரு நாள் யாரிடமும் எதுவும் கூறாமல் அவருடன் சாதனா ஓடி விட்டார். 2 மாதங்களாக அவருடனேயே தங்கி, உல்லாசம் அனுபவித்து வந்த சாதனா, நேற்று முன்தினம் கணவரின் வீட்டுக்கு திரும்பியுள்ளார்.</p><p>அப்போது, சாதனாவுடன் தீபக் வாக்குவாதம் செய்துள்ளார். இதில், இருவருக்கும் மோதல் ஏற்பட்டு வன்முறையில் முடிந்தது. விசயம் பொலிஸ் வரை சென்றது. இந்த சம்பவம் பற்றி பொலிஸார் கூறும்போது, சாதனாவின் மூக்கை தீபக் கடித்து விட்டார் என புகார் பதிவானது. </p><p>இதனால், தீபக் கைது செய்யப்பட்டு உள்ளார் என்றனர்.

தீபக், சாதனாவின் தலையில் தாக்கியதுடன், அவருடைய மூக்கை கடித்து, சாக்கடையில் வீசி விட்டார். </p><p>இந்த சண்டையின்போது மாமனாரும், மாமியாரும் சாதனாவின் கைகளை பிடித்து கொண்டனர் என சாதனா குற்றச்சாட்டாக கூறியுள்ளார். </p><p>இதனால் பலத்த காயமடைந்த மீட்ட பொலிஸார் அவரை சிகிச்சைக்கு கொண்டு சென்றனர்.</p><p>எனினும், தீபக்கின் தாய் கூறும்போது, தீபக்கின் நண்பருடன் சாதனா ஓடி விட்டார். இதுபற்றி பொலிசிடம் கூறினோம். அவர்கள் சமரசம் செய்து வைத்தனர். ஆனால், யாரும் எதிர்பாராமல் பக்கத்து வீட்டு மாடியில் இருந்து எங்களுடைய வீட்டுக்குள் சாதனா குதித்து விட்டார். </p><p>குழந்தைகளை அழைத்து செல்ல முற்பட்டார்.

இந்த தகராறில், தீபக்கின் அந்தரங்க உறுப்புகளை சாதனா கடித்து வைத்து விட்டார். </p><p>பின்னர், அவராகவே தரையில் தலையைக்கொண்டு மோதி காயம் ஏற்படுத்தி கொண்டார் என கூறினார். இதுதொடர்பாக சாதனாவுக்கு எதிராக முறைபாடு அளித்துள்ளார்.&nbsp;&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-09-19T18:27:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[டயானாவின் மரணத்தால் பேரானந்தத்தில் திளைத்த சார்லஸ்! அதிர்ச்சியூட்டும் ஸ்பென்சரின் குறிப்புகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/charles-who-was-overjoyed-by-diana-s-death-1789840601"></link>
            <id>https://ibctamil.com/article/charles-who-was-overjoyed-by-diana-s-death-1789840601</id>
            <summary type="text">டயானா உயிரிழந்த சில நாட்களுக்குப் பின்னர் மன்னர் சார்லஸ் தன்னிடம் “நாம் அவரை விரைவில் மறந்துவிடுவோம்” என்று கூறியதாக மறைந்த இளவரசி டயானாவின் சகோதரர் ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>டயானா உயிரிழந்த சில நாட்களுக்குப் பின்னர் மன்னர் சார்லஸ் தன்னிடம் “நாம் அவரை விரைவில் மறந்துவிடுவோம்” என்று கூறியதாக மறைந்த இளவரசி டயானாவின் சகோதரர் சார்லஸ் ஸ்பென்சர், தனது நினைவுக் குறிப்புகளில் கூறிய விடயங்கள் பிரித்தானியா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் பேசுபொருளாகியுள்ளது.</p><p>இங்கிலாந்தின் நாளிதழ் ஒன்றில் புதன்கிழமை வெளியான நூல் பகுதியை மேற்கோள்காட்டியே இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.
</p><p>
அப்போது வேல்ஸ் இளவரசராக இருந்த சார்லஸ், டயானாவின் இறுதி ஊர்வலத்தில் தனது மகன்களான வில்லியம் மற்றும் ஹாரி பங்கேற்கக் கூடாது என தான் கருதியதாக ஸ்பென்சர் கூறியுள்ளார்.</p><p></p><h2>கோபத்தின் வெளிப்பாடு</h2><p> </p><p>இது தொடர்பாக தொலைபேசியில் பேசியபோது சார்லஸ் கோபத்தின் வெளிப்பாடாக தொடர்ந்து பேசினார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9c6991db-0778-420f-b4f0-603722ffdc19/26-6aaecfb8517ff.webp' /></p><p>
</p><p>
மேலும், டயானா உயிரிழந்த இரவில் சார்லஸ் தன்னிடம் பேசியபோது, லாட்டரி வென்றவர் போல மிகுந்த உற்சாகத்துடன் அவரது குரல் ஒலித்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p>1997-ல் டயானா உயிரிழப்பு
வேல்ஸ் இளவரசியான டயானா, 1997 ஆகஸ்ட் மாதம் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் அதிவேகமாக சென்ற கார் விபத்தில் சிக்கி, உட்புற காயங்களுக்கு உள்ளாகி உயிரிழந்தார்.
</p><p>
அப்போது அவருடைய மகன்களான வில்லியம் மற்றும் ஹரிக்கு முறையே 15 மற்றும் 12 வயது.</p><p></p><h2>ஸ்பென்சரின் குற்றச்சாட்டு</h2><p> </p><p>டயானாவின் இறுதிச்சடங்கிற்கு சில நாட்களுக்குப் பின்னர் நடைபெற்ற இறுதி ஊர்வலத்தில் இருவரும் பங்கேற்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/095a8115-aaa6-453e-9f02-4b54f6bc77a6/26-6aaecfb90bf7b.webp' /></p><p>
</p><p>இந்நிலையில் ஸ்பென்சரின் குற்றச்சாட்டுகளுக்கு பக்கிங்ஹாம் அரண்மனை புதன்கிழமை கடும் எதிர்வினை ஆற்றியுள்ளது.</p><p>
“புத்தகங்கள் தொடர்பாக பொதுவாக கருத்து தெரிவிப்பது எங்கள் நடைமுறை அல்ல. இருப்பினும், சகோதரரை இழந்த துயரம் ஒருவரின் சிந்தனையை மங்கச் செய்யலாம். தீர்மானிக்கும் திறனை பாதிக்கலாம்.</p><p> மேலும் பல ஆண்டுகளுக்குப் பின்னரும் நினைவுகளை பிறர் உணராத வகையில் மாற்றியமைக்கலாம் என்பதை மன்னர் சார்லஸ் கவனத்தில் கொண்டுள்ளார்” என்று அரண்மனை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-19T18:09:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[குறைந்த கட்டணத்தில் வீடுகள் கட்டித்தருவதாக பணமோசடி : இரண்டு பெண்கள் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/two-women-arrested-for-housing-construction-fraud-1789837811"></link>
            <id>https://ibctamil.com/article/two-women-arrested-for-housing-construction-fraud-1789837811</id>
            <summary type="text">&amp;nbsp;குறைந்த கட்டணத்தில் வீடுகள் கட்டித் தருவதாக வாக்குறுதி அளித்து ஒரு தனியார் நிறுவனம் மக்களை ஏமாற்றிய வழக்கில் தொடர்புடைய இரண்டு பெண்களை மிரிஹானா ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;குறைந்த கட்டணத்தில் வீடுகள் கட்டித் தருவதாக வாக்குறுதி அளித்து ஒரு தனியார் நிறுவனம் மக்களை ஏமாற்றிய வழக்கில் தொடர்புடைய இரண்டு பெண்களை மிரிஹானா சிறப்பு குற்றப் புலனாய்வுப் பிரிவு கைது செய்துள்ளது.
</p><p>
பணம் பெற்ற பின்னரும் வீடுகள் கட்டத் தவறியது தொடர்பாகப் பிரிவிற்கு வந்த 245 புகார்கள் குறித்து நடத்தப்பட்ட விசாரணையின் போது, ​​அந்தத் தனியார் நிறுவனத்தின் பணிப்பாளர் ஒருவரும் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.&nbsp;</p><h2>இரண்டு பெண்கள் கைது&nbsp;</h2><p>&nbsp;இந்தச் சம்பவம் தொடர்பாக நடத்தப்பட்ட மேலதிக விசாரணையில், நிதி மோசடிக்கு உடந்தையாக இருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு, அந்த நிறுவனத்தின் பிரதம சந்தைப்படுத்தல் மேலாளர் மற்றும் செயல்பாட்டு அதிகாரியாகப் பணியாற்றிய இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2afe4fe8-05a0-4986-9248-e5d9ed4c2e8b/26-6aaecefb324cd.webp' /></p><p>
</p><p>
சந்தேக நபர்களுக்குச் சொந்தமான நான்கு கார்களும் காவல்துறை காவலில் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

30 மற்றும் 31 வயதுடைய அந்த இரண்டு பெண்களும் கஹவத்த மற்றும் கடுவெலவைச் சேர்ந்தவர்கள்.

இன்று (19) நுவகொட நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட அவர்கள், 29ஆம் திகதி வரை காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-19T18:05:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[அனோஜனை விடுதலை செய்ய கோரி கவனயீர்ப்பு போராட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/protest-demanding-anojan-s-release-1789839739"></link>
            <id>https://jvpnews.com/article/protest-demanding-anojan-s-release-1789839739</id>
            <summary type="text">சவூதி அரேபியச் சிறையில் வாடும் இலங்கை இளைஞன் சிவராசா அனோஜனை உடனடியாக விடுதலை செய்யக் கோரி, இந்து அமைப்புகளின் கூட்டமைப்பு சார்பில் கவனயீர்ப்பு நிகழ்வொ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சவூதி அரேபியச் சிறையில் வாடும் இலங்கை இளைஞன் சிவராசா அனோஜனை உடனடியாக விடுதலை செய்யக் கோரி, இந்து அமைப்புகளின் கூட்டமைப்பு சார்பில் கவனயீர்ப்பு நிகழ்வொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><p></p><p>

 

இப்போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள், சிவராசா அனோஜனின் புகைப்படம் தாங்கிய பதாகைகளையும் கோரிக்கை வாசகங்கள் அடங்கிய அட்டைகளையும் ஏந்தியவாறு தமது கோரிக்கைகளை வெளிப்படுத்தினர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c3db0363-8e65-4da3-a9f2-31f108a18325/26-6aaec97cc65bc.webp' /></p><p>

 

இந்நிகழ்வின்போது ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த பேச்சாளர் ஒருவர், இரு நபர்களுக்கு இடையே ஏற்பட்ட தனிப்பட்ட கருத்து முரண்பாடு காரணமாகவே அனோஜனுக்கு இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.</p><p>

 

எனவே, சிவராசா அனோஜனை விடுதலை செய்து, அவரது குடும்பத்தினர் அமைதியாக வாழச் சவூதி அரேபிய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டார்.
</p><p>
 

இதனிடையே, இக்கவனயீர்ப்பு நிகழ்வு நடைபெற்ற இடத்திற்கு முச்சக்கர வண்டியில் மதுபோதையில் வந்த நபர் ஒருவர், அங்கு செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்த ஊடகவியலாளர்களை அச்சுறுத்தும் வகையில் நடந்துகொண்டதுடன் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-19T17:42:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானின் முதன்மை நிபந்தனைகள் அமெரிக்காவுக்கு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/iran-s-main-conditions-for-the-us-1789837284"></link>
            <id>https://tamilwin.com/article/iran-s-main-conditions-for-the-us-1789837284</id>
            <summary type="text">போர் முடிவுக்கு வருவதற்கான ஈரானின் முதன்மை நிபந்தனைகள் அமெரிக்காவுக்கு
அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரானின் தேசிய பாதுகாப்பு சபை செய...</summary>
            <content type="html"><![CDATA[<p>போர் முடிவுக்கு வருவதற்கான ஈரானின் முதன்மை நிபந்தனைகள் அமெரிக்காவுக்கு
அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

ஈரானின் தேசிய பாதுகாப்பு சபை செயலாளரும் அந்த நாட்டின் பாதுகாப்புப் படை
பிரதானியுமான மொஹ்சன் ரேசாய் (Mohsen Rezaei), இதனை ஊடகம் ஒன்றிடம்
தெரிவித்துள்ளார்.</p><h2>திருப்திகரமான பதில் வராத வரை</h2><p>

அனைத்து முனைகளிலும் ஈரான் மற்றும் அதன் நட்பு நாடுகள் மீதான தாக்குதல்களை
உடனடியாக நிறுத்துவது,

முடக்கி வைக்கப்பட்டுள்ள ஈரானிய நிதிகளை விடுவிப்பது,&nbsp;ஈரான் மீதான பொருளாதார மற்றும் பிற தடைகள் / முற்றுகைகளை (Blockade)
முடிவுக்குக் கொண்டுவருவது என்பன இந்த நிபந்தனைகளாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/36c1f836-b282-4188-a95d-910fc3a94952/26-6aaec9084d2a3.webp' /></p><p>
இந்த நிபந்தனைகள் கட்டார் நாட்டின் மத்தியஸ்தம் மூலமாக
அமெரிக்காவிற்கு முறைப்படி அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.</p><p>
இந்த முன்மொழிவுகள் தற்போது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் பரிசீலனை மற்றும் பதிலுக்காகக் காத்திருப்பதாக மொஹ்சன் ரேசாய் குறிப்பிட்டுள்ளார்.</p><p>
அமெரிக்க தரப்பில் இருந்து முறையான மற்றும் திருப்திகரமான பதில் வராத வரை
பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட மாட்டாது என்றும் அவர்
தெளிவுபடுத்தியுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-19T17:40:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[சவுதியின் ரியாத் விமான நிலையம் அருகே கரும்புகை: குண்டுவெடிப்பு மற்றும் வான்வழி அச்சுறுத்தல்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/riyadh-explosions-tension-spike-and-aerial-alerts-1789839467"></link>
            <id>https://news.lankasri.com/article/riyadh-explosions-tension-spike-and-aerial-alerts-1789839467</id>
            <summary type="text">Riyadh Explosions Tension Spike and Aerial Alerts: &amp;nbsp;ரியாத் சர்வதேச விமான நிலையம் அருகே திடீரென எழுந்த அடர்ந்த கரும்புகை பெரும் பரபரப்பை ஏற்படுத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>Riyadh Explosions Tension Spike and Aerial Alerts: &nbsp;ரியாத் சர்வதேச விமான நிலையம் அருகே திடீரென எழுந்த அடர்ந்த கரும்புகை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><h2>விமான நிலையம் அருகே அடர்ந்த கரும்புகை&nbsp;</h2><p> சனிக்கிழமை சவுதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தில் அமைந்துள்ள கிங் காலித் சர்வதேச விமான நிலையம் அருகே திடீரென அடர்ந்த கரும்புகை எழுந்து பரபரப்பை ஏற்படுத்தியது.</p><p>இப்பகுதியில் நள்ளிரவில் விடுக்கப்பட்ட திடீர் வான்வழி அச்சுறுத்தல்களை அடுத்து சக்திவாய்ந்த குண்டுவெடிப்பு சம்பவங்களும் அரங்கேறியது.</p><p>ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் படையினருக்கும், சவுதி ராணுவத்தினருக்கும் இடையே ஏற்பட்டுள்ள மோதல்களே தற்போதைய பதற்றமான சூழ்நிலைகளுக்கு முக்கிய காரணமாக உள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2b39222a-3eaf-4b43-aa65-78b98171728b/26-6aaec86cefcaf.webp' /></p><p> ஹவுதி படையினர் மெக்கா நகரை தாக்க முயற்சி செய்து வருவதாக சவுதி அரேபியா குற்றச்சாட்டுகளை முன்வைத்து வரும் நிலையில் இந்த குற்றச்சாட்டுகளை ஹவுதிகள் திட்டவட்டமாக மறுத்து வருகின்றனர்.</p><h2> விமான நிலையத்தில் சிக்கல்</h2><p>சவுதி தலைநகரில் அமைந்துள்ள விமான நிலையத்திற்கு செல்வதற்கான முக்கிய நெடுஞ்சாலையில் பெரும் கரும்புகை திரண்டு எழுவது தொடர்பான புகைப்படங்களை ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.</p><p> வெடிப்பு சத்தம் மற்றும் புகை மண்டலம் போன்றவை அசாதாரண சூழ்நிலையை விளக்கினாலும் இது தொடர்பான உண்மையான காரணத்தை சவுதி அதிகாரிகள் இதுவரை வெளியிடவில்லை.</p><p> இந்த பதற்றமான சூழ்நிலையை தொடர்ந்து கிங் காலித் சர்வதேச விமான நிலையத்தில் கடுமையான செயல்பாட்டு சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன என்று FlightRadar24 தெரிவித்துள்ளது.</p><p> மேலும் இந்த சம்பவத்தில் உயிரிழப்புகளோ அல்லது பொருட்சேதமோ ஏற்பட்டதாக எந்தவொரு தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.</p><p><br></p>]]></content>
            <updated>2026-09-19T17:38:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[சவுதி அரேபியாவை இலக்கு வைத்து ஹவுதிக்கள் அதிரடி ஏவுகணை தாக்குதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/houthis-launch-major-missile-attack-target-saudi-1789839432"></link>
            <id>https://ibctamil.com/article/houthis-launch-major-missile-attack-target-saudi-1789839432</id>
            <summary type="text">சவுதி அரேபியா மீது பாலிஸ்டிக் ஏவுகணைகள், குரூஸ் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களைப் பயன்படுத்தி யேமனில் செயல்பட்டு வரும் ஹவுதிகிளர்ச்சியாளர்கள்,&amp;nbsp; தாக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>சவுதி அரேபியா மீது பாலிஸ்டிக் ஏவுகணைகள், குரூஸ் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களைப் பயன்படுத்தி யேமனில் செயல்பட்டு வரும் ஹவுதிகிளர்ச்சியாளர்கள்,&nbsp; தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>இந்த விடயத்தை ஹவுதிக்களின் இராணுவப் பேச்சாளர் யஹ்யா சரீ உறுதிப்படுத்தியுள்ளார்.</p><p>“இரண்டு சிறப்பு இராணுவ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. முதலாவது நடவடிக்கை ரியாத்தில் உள்ள முக்கியத்துவம் வாய்ந்த இலக்குகளை குறிவைத்தது.</p><p></p><h2>யேமன் படைகள்&nbsp;</h2><p> </p><p>இரண்டாவது நடவடிக்கை யன்பு பகுதியில் உள்ள சவுதி அராம்கோ நிறுவனத்தின் வசதியை குறிவைத்தது” என அவர்&nbsp; கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/90a940be-cdb8-401a-a2e7-c8f32ba6f049/26-6aaec8b5e7f44.webp' /></p><p>
</p><p>
மேலும், “முற்றுகைக்கு முற்றுகை, தீவிரப்படுத்தலுக்கு தீவிரப்படுத்தல் என்ற நிலைப்பாட்டை நடைமுறைப்படுத்துவதில் யேமன் படைகள் தொடர்ந்து உறுதியாக உள்ளன. </p><p>தங்கள் நாட்டுக்கு எதிரான தாக்குதல்கள் நிறுத்தப்பட்டு, யேமன் மீதான முற்றுகை நீக்கப்படும் வரை, எதிரி சவுதி படைகளின் திரள் நிலைகளைத் தாக்குவது தொடரும்” என்றும் யஹ்யா சரீ தெரிவித்துள்ளார்.</p><p>

ஹவுதி தரப்பின் இந்தக் கூற்றுகள் தொடர்பான தாக்கத்தின் அளவு மற்றும் சேத விவரங்கள் குறித்து தனிப்பட்ட சரிபார்ப்பு தேவைப்படுகிறது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-19T17:37:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[Rajini-ஆ Vijay-ஆ னு கேட்டா என்னோட Choice எப்போதுமே....- Meesaya Murukku 2]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/meesaya-murukku-2-heroines-interview-1789810857"></link>
            <id>https://cineulagam.com/article/meesaya-murukku-2-heroines-interview-1789810857</id>
            <summary type="text">மீசைய முறுக்கு 2கடந்த 2017ம் ஆண்டு தமிழ் சினிமாவில் வெளியாகி செம ஹிட்டடித்த படங்களில் ஒன்று தான் மீசைய முறுக்கு. காதல், கனவு, நட்பு, அப்பா பாசம், காலே...</summary>
            <content type="html"><![CDATA[<h2>மீசைய முறுக்கு 2</h2><p>கடந்த 2017ம் ஆண்டு தமிழ் சினிமாவில் வெளியாகி செம ஹிட்டடித்த படங்களில் ஒன்று தான் மீசைய முறுக்கு. காதல், கனவு, நட்பு, அப்பா பாசம், காலேஜ் வாழ்க்கை என இளம் கலைஞர்களை கவரும் வண்ணம் இப்பட கதைக்களம் அமைந்தது.</p><p>முதல் பாக வெற்றியை தொடர்ந்து தற்போது மீசைய முறுக்கு இரண்டாம் பாகம் தயாராகியுள்ளது. இதில் ஹிப்ஹாப் ஆபியுடன் யூடியூப் புகர் ஹர்ஷத் கான் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.</p><p>வரும் செப்டம்பர் 25ம் தேதி படம் வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தில் நடித்துள்ள நாயகிகள் நமது சினிஉலகம் யூடியூப் பக்கத்தில் பேட்டி அளித்துள்ளனர். அவர்கள் படம் குறித்து என்ன கூறுயுள்ளார்கள் என்பதை காணுங்கள்,</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/4o7MmhmuUIY" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-19T17:30:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்கத் தடையை மீறி புதிய உச்சம் தொட்ட ஈரானின் எண்ணெய் விற்பனை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/iranian-oil-sales-reach-two-year-high-1789838757"></link>
            <id>https://tamilwin.com/article/iranian-oil-sales-reach-two-year-high-1789838757</id>
            <summary type="text">ஈரானிய ஏற்றுமதியைத் தடுக்கும் நோக்கில் அமெரிக்கா விதித்துள்ள தடையையும் மீறி, நாட்டின் எண்ணெய் விற்பனை கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவிலான புதிய உச்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானிய ஏற்றுமதியைத் தடுக்கும் நோக்கில் அமெரிக்கா விதித்துள்ள தடையையும் மீறி, நாட்டின் எண்ணெய் விற்பனை கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவிலான புதிய உச்சத்தைத் தொட்டுள்ளதாக ஈரானின் திட்டமிடல் மற்றும் வரவுசெலவுத் திட்ட அமைப்பு தெரிவித்துள்ளது. </p><p>
ஈரானின் முக்கிய செய்தி நிறுவனங்களில் ஒன்றான 'மெஹர்' வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
செப்டம்பர் மாதத்தில் ஈரானின் எண்ணெய் விற்பனை 3 பில்லியன் அமெரிக்க டாலர்களைத் தாண்டியுள்ளது. இது கடந்த இரண்டு ஆண்டுகளில் பதிவான மிக அதிகபட்ச மாதாந்த வருவாயாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3ddfb920-ab34-4694-9b8f-311ac897c558/26-6aaec5aa2e155.webp' /></p><p>
ஆயினும், அமெரிக்க தடையை மீறி ஈரான் எவ்வாறு தொடர்ந்து எண்ணெய் ஏற்றுமதி செய்து வருகிறது என்பது குறித்து இந்த அறிக்கையில் தெளிவான விளக்கம் அளிக்கப்படவில்லை.</p><p>
கடற்படைத் தடை அமலில் இருந்தபோதிலும், ஈரானிய அரசு ஏற்கனவே கடலில் நிலைகொள்ளச் செய்திருந்த தனது எண்ணெய் தாங்கிக் கப்பல்கள் மூலம் விற்பனையைத் தொடர்ந்து பராமரித்து வந்திருக்கலாம் எனப் பொருளாதார ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். </p><p>
எனினும், தற்போதும் அதே நடைமுறைதான் தொடர்கிறதா என்பது தெளிவாகத் தெரியவில்லை.
</p><p>அதேவேளையில், ஈரானிய எண்ணெயைச் சுமந்து செல்லும் ஈராக்கியக் கப்பல்கள், மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த ஹோர்மூஸ் நீரிணை வழியே பயணிக்க தெஹ்ரான் அனுமதித்து வருவதாக உறுதிப்படுத்தப்படாத சில தகவல்கள் தெரிவிக்கின்றன.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-19T17:26:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈஸ்டர் தாக்குதல் விவகாரம் ; தம்மை மீண்டும் தொடர்புபடுத்தும் செய்திகள் திரிபுபடுத்தப்பட்டவை ; றிஷாட்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/easter-sunday-attacks-repo-linking-again-distorted-1789838481"></link>
            <id>https://jvpnews.com/article/easter-sunday-attacks-repo-linking-again-distorted-1789838481</id>
            <summary type="text">அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிஷாட் பதியுதீன், ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பாக தம்மை சஹ்ரான் ஹாஷிமுடன் மீண்டும் தொடர்புபடுத்தும் வகையில் வெளிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிஷாட் பதியுதீன், ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பாக தம்மை சஹ்ரான் ஹாஷிமுடன் மீண்டும் தொடர்புபடுத்தும் வகையில் வெளியாகும் செய்திகள் திரிபுபடுத்தப்பட்டவை எனத் தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p></p><p>ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக தாம் ஏற்கனவே ஏழு மாதங்களுக்கும் மேலாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு, பின்னர் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டதாக அவர் கூறினார்.</p><p>

அண்மைய நீதிமன்ற நடவடிக்கைகள் தொடர்பான சில தகவல்கள் ஊடகங்களில் தம்மை மீண்டும் தாக்குதலுடன் இணைக்கும் வகையில் செய்தியாக்கப்பட்டுள்ளதாக அவர் குற்றஞ்சாட்டினார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0b96d0e0-df13-46ac-9d08-5fcdc1baee84/26-6aaec4934d6cd.webp' /></p><p>வர்த்தகர் அலாவுதீனுடனான தொடர்பின் அடிப்படையில் சஹ்ரானுடன் தமக்கு தொடர்பு ஏற்பட்டதாக Additional Solicitor General கூறியதாக வெளியான செய்தியையும் அவர் மறுத்தார்.
</p><p>
ஈஸ்டர் தாக்குதலுக்குப் பொறுப்பானவர்களை சட்டத்தின் முன் நிறுத்த சுயாதீனமான, அரசியல் தலையீடற்ற விசாரணை அவசியம் என அவர் வலியுறுத்தினார்.
</p><p>
அதேவேளை, தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் நீதி கிடைக்க வேண்டும் என்றும், ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளால் குற்றமற்றவர்கள் பாதிக்கப்படக்கூடாது என்றும் தெரிவித்தார்.
</p><p>
சவூதி அரேபியாவில் மரண தண்டனை எதிர்கொள்ளும் இலங்கைத் தமிழ் இளைஞர் எஸ். அனோஜன் தொடர்பாகவும் அவர் கருத்து தெரிவித்து, அவருக்கு உதவுவதற்காக முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைய வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.</p><p>

அனோஜனுக்காக சவூதி அரசாங்கத்திடம் கருணை கோரிக்கை முன்வைப்பதற்கு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா, ஜனாதிபதி மற்றும் சவூதி தூதரகம் ஊடாக நடவடிக்கை எடுக்க எதிர்பார்ப்பதாகவும் கூறினார்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-19T17:21:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[இங்கிலாந்திடம் படுதோல்வியடைந்த இலங்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/srilanka-white-washed-by-england-1789838115"></link>
            <id>https://tamilwin.com/article/srilanka-white-washed-by-england-1789838115</id>
            <summary type="text">இங்கிலாந்து அணிக்கு எதிரான ரி20 கிரிக்கெட் தொடரைல் இலங்கை அணி படுதோல்வியைத் தழுவியுள்ளது.
இங்கிலாந்தில் நடைபெற்ற இந்த போட்டித் தொடரில் இலங்கை மூன்று ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இங்கிலாந்து அணிக்கு எதிரான ரி20 கிரிக்கெட் தொடரைல் இலங்கை அணி படுதோல்வியைத் தழுவியுள்ளது.
</p><p>இங்கிலாந்தில் நடைபெற்ற இந்த போட்டித் தொடரில் இலங்கை மூன்று போட்டிகளிலும் தோல்வியைத் தழுவியதன் மூலம், இங்கிலாந்து வைற்வொஷ் முறையில் தொடரைக் கைப்பற்றியுள்ளது.
</p><p>மான்செஸ்டர் ஓல்ட் டிரப்ட் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி நாணய சுழற்சியில் வென்று, இலங்கையைத் துடுப்பெடுத்தாடுமாறு பணித்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8ce9a02b-5636-4824-98f4-7b875cbcb4ac/26-6aaec32529a2d.webp' /></p><p>இதன்படி களமிற்கிய இலங்கை அணி 18.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 124 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக் கொண்டது.
இதில் பெத்தும் நிஷ்ஷங்க 36 ஓட்டங்களையும், கமிந்து மெண்டிஸ் 35 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.</p><p>பந்து வீச்சில் சோனி பேகர், ஜொப்ரா ஆர்ச்சர் மற்றும் வில் ஜெக்ஸ் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
</p><p>பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி அணி வெறும் 9.4 ஓவர்களில் வெற்றி இலக்கினை எட்டிப்பிடித்துள்ளது.
இங்கிலாந்து அணி 9.4 ஓவர்களில் இரண்டு விக்கெட்களை மட்டுமே இழந்து 126 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
</p><p>இதில், இங்கிலாந்து அணி சார்பில் ஜோஸ் பட்லர் ஆட்டமிழக்காது 62 ஓட்டங்களையும், ஹரி புரூக் 33 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.
</p><p>பந்து வீச்சில் இலங்கை அணியின் சார்பில் தரிந்து ரட்னாயக்க ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.
போட்டியின் ஆட்டநாயகனாக சோனி பேகரும், தொடரின் ஆட்டநாயகனாக ஹரி புருக்கும் தெரிவு செய்யப்பட்டனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-19T17:15:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thileepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வவுனியாவில் தாயும் மகனும் சடலமாக மீட்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/mother-and-son-found-dead-in-vavuniya-1789836788"></link>
            <id>https://tamilwin.com/article/mother-and-son-found-dead-in-vavuniya-1789836788</id>
            <summary type="text">வவுனியா தோணிக்கல் பகுதியில் கத்திக் குத்துக்கு இலக்காகிய நிலையில் தாயொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதுடன், தூக்கில் தொங்கிய நிலையில் அவருடைய&amp;nbsp; மகனி...</summary>
            <content type="html"><![CDATA[<p>வவுனியா தோணிக்கல் பகுதியில் கத்திக் குத்துக்கு இலக்காகிய நிலையில் தாயொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதுடன், தூக்கில் தொங்கிய நிலையில் அவருடைய&nbsp; மகனின் சடலம்
மீட்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p>
குறித்த சடலங்கள் இன்று (19.09.2026) மாலை மீட்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.&nbsp;</p><p>சம்பவம் தொடர்பாக
மேலும் தெரியவருகையில்,</p><p>
வவுனியா, தோணிக்கல் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் தாயும் அவரது மகனும்
இருந்துள்ளனர்.

இந்த நிலையில் உறவினர் இருவர் மாலை குறித்த வீட்டிற்கு சென்ற போது தாய் இரத்த
காயங்களுடன் வீட்டின் பிரதான அறையில் வீழ்ந்து கிடந்துள்ளார்.</p><h2>மேலதிக விசாரணை&nbsp;</h2><p>

இதனையடுத்து அவர் உடனடியாக மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டார். எனினும் அவர் முன்னரே உயிரிழந்துவிட்டதாக வைத்தியசாலையில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

இதேவேளை, குறித்த வீட்டின் அறை ஒன்றிற்குள் அவரது மகன் தூக்கில் தொங்கிய
நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bec25deb-840f-4d6e-a9e2-2f6c0df6ad2e/26-6aaec2abd186d.webp' /></p><p> </p><p>சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில்,&nbsp; சம்பவ இடத்திற்கு
சென்ற பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
</p><p>
குறித்த சம்பவத்தில் தோணிக்கல் பகுதியைச் சேர்ந்த அலஸ்கிறின்(வயது 60) என்ற
பெண்ணும் அவரது மகனான அயந்தன்(வயது 35) என்ற இளைஞருமே சடலமாக
மீட்கப்பட்டுள்ளனர்.
</p><p>
குறித்த இளைஞர் அவரது தாயை கத்தியால் குத்திவிட்டு தன்னுடைய உயிரை மாய்த்துக் கொண்டிருக்கலாம் என பொலிசார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
</p><p>
சம்பவம் தொடர்பாக தடயவியல் பொலிசாரின் உதவியுடன் வவுனியா குற்றத்தடுப்பு
பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.&nbsp;</p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-19T17:14:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ICU அறையில் நடந்த திருமணம் - தாயின் கடைசி ஆசையை நிறைவேற்றிய மகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/woman-weds-partner-at-icu-for-moms-wish-1789834822"></link>
            <id>https://news.lankasri.com/article/woman-weds-partner-at-icu-for-moms-wish-1789834822</id>
            <summary type="text">Woman weds partner at ICU for mom’s wish: சாகும் தருவாயில் இருந்த தாயின் கடைசி ஆசையை மகள் நிறைவேற்றியுள்ளார்.

தாயின் கடைசி ஆசைஅமெரிக்காவின் புளோரிட...</summary>
            <content type="html"><![CDATA[<p>Woman weds partner at ICU for mom’s wish: சாகும் தருவாயில் இருந்த தாயின் கடைசி ஆசையை மகள் நிறைவேற்றியுள்ளார்.
</p><h2>
தாயின் கடைசி ஆசை</h2><p>அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில், 81 வயதான டோன்னா கம்மிங்ஸ், Stage 4 கல்லீரல் புற்றுநோயால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.</p><p> அவர் தனது மகள் கேமி கம்மிங்ஸ் அவரது காதலர் சேண்டி ஆடம்ஸை திருமணம் செய்துகொள்ளவேண்டும் என்பதே தனது கடைசி ஆசை என தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/feab6d48-cf88-4358-b42f-18fb04fee808/26-6aaeb6479ae81.webp' /></p><h2>ICU அறையில் திருமணம்</h2><p>அந்த விருப்பத்தை நிறைவேற்ற, காமி தனது தாயின் ICU படுக்கையருகே திருமணம் செய்து கொண்டார். மருத்துவமனை ஊழியர்கள் ICU அறையை அழகாக அலங்கரித்து, கேக் மற்றும் பானங்களுடன் சிறிய குடும்ப விழாவை ஏற்பாடு செய்தனர்.</p><p>

கேமி, “என் தாயார் எப்போதும் சேண்டியை என் தேவதை என்று அழைத்தார். அவர் நன் திருமணம் செய்து கொண்டதை பார்க்க வேண்டும் என்பதே அவரது ஆசை” என்று கூறினார். </p><p>மேலும், “என் தாயார் எங்கள் குடும்பத்திற்காக பல தியாகங்கள் செய்தார். அவரின் இறுதி நாட்களில் அவரை மகிழ்விக்க இது தான் நான் செய்யக்கூடிய சிறந்த விடயம்” என்று உணர்ச்சியுடன் தெரிவித்தார்.
</p><p></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8ce6e590-cc2e-49b8-a173-07510318d099/26-6aaeb64853c16.webp' /></p><p>திருமண விழாவுக்குப் பிறகு, டோன்னா ICU-வில் உயிரிழந்தார். கேமி, “இப்போது என் தாயார் வலியின்றி அமைதியாக இருக்கிறார்” என்று கூறினார்.
</p><p>
கேமி மற்றும் சேண்டி, வரும் ஏப்ரல் மாதத்தில் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பெரிய திருமண விழாவை நடத்த திட்டமிட்டுள்ளனர்.
</p><p>
இந்த நிகழ்வு, தாயின் இறுதி விருப்பத்தை நிறைவேற்றும் மகளின் அன்பை வெளிப்படுத்தும் உணர்ச்சிகரமான கதையாக உலகம் முழுவதும் பரவிவருகிறது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-19T17:09:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ் மாநகர சபை உறுப்பினர் பதவி நீக்கத்துக்கு நீதிமன்றம் இடைக்கால தடை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/court-grants-interim-stay-removal-jaffna-municipal-1789837131"></link>
            <id>https://jvpnews.com/article/court-grants-interim-stay-removal-jaffna-municipal-1789837131</id>
            <summary type="text">யாழ் மாநகர சபை உறுப்பினர் சுவீகரன் நிசாந்தனின் பதவி நீக்கத்துக்கு யாழ் மாவட்ட நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு பிரப்பித்துள்ளது. 
குறித்த சம்பவம் தொடர...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ் மாநகர சபை உறுப்பினர் சுவீகரன் நிசாந்தனின் பதவி நீக்கத்துக்கு யாழ் மாவட்ட நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு பிரப்பித்துள்ளது.</p><p></p><p> 
குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது, அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் சார்பில் யாழ் மாநகர சபைக்கு தெரிவான குறித்த உறுப்பினரை சில மாதங்களுக்கு முன்னர் அரச அமைச்சர் கலந்து கொண்ட மாநகரசபை நிகழ்வு ஒன்றில் குறித்த உறுப்பினர் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டு கட்சி ஒழுங்காற்று நடவடிக்கை எனும் பெயரில் உறுப்பினர் பதவியை நீக்குவதாக தேர்தல் ஆணைக்குழுவுக்கு எழுத்து மூலம் கடிதம் அனுப்பி இருந்தது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/81315959-a874-4411-8bfe-21d4cfc60a62/26-6aaebf4cb1239.webp' /></p><p>இந்நிலையில் குறித்த கடிதத்திற்கு இடைக்கால தடை விதிக்குமாறு யாழ் மாவட்ட நீதிமன்றத்தில் சட்டத்தரணி மணிவண்ணன் ஊடாக வழக்கு தாக்கல் செய்திருந்தார். </p><p>
குறித்த வழக்கில் குறித்த மாநகர சபை உறுப்பினர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் பதவி நீக்கம் தொடர்பில் தனது கட்சிக்காரர் மீதான ஒழுக்காற்று நடவடிக்கை காரணங்களுக்கு ஆட்சேபனை தெரிவித்த சட்டத்தரணி வி. மணிவண்ணன் பதவி நீக்கத்துக்கு இடைக்கால தடை வழங்குமாறு நீதிமன்றிடம் கோரிக்கை முன்வைத்தார். </p><p>
ஆராய்ந்த நீதிபதி எதிர்வரும் 29 ஆம் திகதி வரை மாநகர சபை உறுப்பினரின் பதவி நீக்கத்துக்கு இடைக்கால தடை உத்தரவு வழங்கி தவணையிட்டார்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-19T16:58:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஸ்ரீலங்கா கிரிக்கெட்டிடம் 75 மில்லியன் நட்டஈடு கோரி வழக்குத் தாக்கல் செய்த முன்னாள் வீரர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/pramodya-files-rs-75-mn-lawsuit-against-slc-1789836800"></link>
            <id>https://tamilwin.com/article/pramodya-files-rs-75-mn-lawsuit-against-slc-1789836800</id>
            <summary type="text">&amp;nbsp;ஸ்ரீலங்கா கிரிக்கட் நிறுவனத்திடமிருந்து 75 மில்லியன் ரூபா நட்ட ஈடு கோரி முன்னாள் கிரிக்கட் வீரரும், இலங்கை கிரிக்கெட் தேர்வுக்குழுவின் முன்னாள் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;ஸ்ரீலங்கா கிரிக்கட் நிறுவனத்திடமிருந்து 75 மில்லியன் ரூபா நட்ட ஈடு கோரி முன்னாள் கிரிக்கட் வீரரும், இலங்கை கிரிக்கெட் தேர்வுக்குழுவின் முன்னாள் தலைவருமான பிரமோதய விக்கிரமசிங்க வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.
</p><p>தமது பதவி நியாயமற்ற முறையில் நீக்கப்பட்டதாகக் கூறி, 75 மில்லியன் ரூபாய் நட்டஈடு கோரி கொழும்பு வணிக மேல் நீதிமன்றத்தில் இந்த வழக்கினை தாக்கல் செய்துள்ளார். </p><p>
செப்டம்பர் 19 அன்று வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையின்படி, விளையாட்டுத்துறை அமைச்சரின் ஒப்புதலுடன் 2025 டிசம்பர் 17 ஆம் திகதி தொடங்கிய தமது இரண்டு ஆண்டு காலப் பதவி, கிரிக்கெட் இடைக்கால நிர்வாக குழுவினால், பதவிக் காலம் முடிய முன்னதாகவே முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/52959ebc-6569-427f-a17b-ac38e6834b8d/26-6aaebe028aed4.webp' /></p><p> </p><p>
முன் அறிவிப்பு, போதுமான நியாயமான காரணங்கள் அல்லது முறையான சட்ட நடைமுறைகள் எதுவுமின்றி இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
</p><p>நடைமுறையிலிருந்த ஒப்பந்தத்தை திடீரென ரத்து செய்ததன் மூலம், அக்குழு பகுத்தறிவற்ற முறையிலும், இலங்கை கிரிக்கெட்டின் நலன்களுக்கு எதிராகவும் செயற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p> 
ஒப்பந்த மீறல், வருமான இழப்பு மற்றும் தனது தொழில்முறை நற்பெயருக்கு ஏற்பட்ட பாதிப்பு ஆகியவற்றைக் குறிப்பிட்டு, உரிய வட்டி மற்றும் சட்டச் செலவுகளுடன் சேர்த்து 75 மில்லியன் ரூபாயை நட்டஈடாக வழங்க வேண்டும் என அவர் இந்த வழக்கின் மூலம் கோரியுள்ளார். </p><p>
இரண்டு ஆண்டு காலப் பதவியை ஏற்ற பிறகு, இலங்கை கிரிக்கெட்டுக்காகத் தனது நேரத்தையும் அனுபவத்தையும் முழுமையாக அர்ப்பணிக்கும் நோக்கில், தனது பிற தொழில்முறை ஈடுபாடுகளையும் வணிக நலன்களையும் ஒதுக்கி வைத்திருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். </p><p>
இதன் காரணமாக, ஒப்பந்த அடிப்படையில் பெற வேண்டிய ஊதியத்தை இழந்ததுடன், கைவிட்ட வணிக வாய்ப்புகளினால் மேலதிக நிதி இழப்புகளையும் சந்திக்க நேரிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
</p><p> மேலும், இச்செயல் தனது தொழில்முறைத் தகுதி, நம்பகத்தன்மை மற்றும் நற்பெயருக்குக் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தேர்வுக்குழுத் தலைவராகத் தனது முந்தைய பதவிக் காலத்தில் இலங்கை அணி அடைந்த முக்கிய வெற்றிகளையும் இந்த அறிக்கையில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p>
தெரிவுக்குழு தலைவராக பதவி வகித்த காலத்தில், 2022 ஆம் ஆண்டு டி20 ஆசியக் கிண்ணத்தை இலங்கை அணி வென்றமை, 2023 ஆம் ஆண்டு ஆசியக் கிண்ண இறுதிப் போட்டிக்கு முன்னேறியமை மற்றும் 2023 ஆம் ஆண்டு ஐசிசி உலகக் கிண்ண தகுதிப் போட்டிகளில் ஒரு போட்டியில் கூடத் தோல்வியடையாமல் சாம்பியன் பட்டம் வென்றமை போன்ற சாதனைகளை பிரமோதய விக்ரமசிங்க பட்டியலிட்டுள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-19T16:53:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹோர்முஸில் சரிந்தது ஈரானின் சாம்ராஜ்ஜியம் : ஆதிக்கம் செலுத்தும் அமெரிக்கா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/1b-barrels-of-oil-shipped-through-strait-of-hormuz-1789833846"></link>
            <id>https://ibctamil.com/article/1b-barrels-of-oil-shipped-through-strait-of-hormuz-1789833846</id>
            <summary type="text">அமெரிக்க இராணுவத்தின் முற்றுகைக்கு மத்தியிலும், கடந்த சில மாதங்களில் ஹோர்முஸ் நீரிணை வழியாக 1 பில்லியன் பீப்பாய்களுக்கும் அதிகமான கச்சா எண்ணெய் கொண்டு...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்க இராணுவத்தின் முற்றுகைக்கு மத்தியிலும், கடந்த சில மாதங்களில் ஹோர்முஸ் நீரிணை வழியாக 1 பில்லியன் பீப்பாய்களுக்கும் அதிகமான கச்சா எண்ணெய் கொண்டு செல்லப்பட்டதாக அமெரிக்க இராணுவத்தின் மத்திய கட்டளைப் பிரிவு&nbsp;(CENTCOM), &nbsp;சனிக்கிழமையன்று தெரிவித்தது.</p><p>

"வளைகுடாப் பகுதியிலிருந்து 1 பில்லியன் பீப்பாய்களுக்கும் அதிகமான கச்சா எண்ணெய் வெளியேறுவதற்கு CENTCOM படைகள் ஆதரவளித்துள்ளன" என்று அட்மிரல் பிராட் கூப்பர் கூறினார்.</p><p>&nbsp;இத்தகவலை&nbsp; x சமூக ஊடகத் தளத்தில் அக் கட்டளைப் பிரிவு வெளியிட்டது.</p><h2>நீரிணையை கடந்த 2,000-க்கும் மேற்பட்ட வணிகக் கப்பல்கள்</h2><p>
</p><p>
ஒருங்கிணைந்த பாதுகாப்பை வழங்குவதன் மூலம், இந்த முக்கியத்துவம் வாய்ந்த நீர்வழிப் பாதையில் 2,000-க்கும் மேற்பட்ட வணிகக் கப்பல்கள் கடந்து செல்வதற்கும் அமெரிக்கப் படைகள் உதவியுள்ளதாக கூப்பர் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bc05fb52-0af5-41f4-a2b4-28d710f036dd/26-6aaeb8e81b229.webp' /></p><p>
</p><p>
நீரிணையில் உள்ள முக்கிய போக்குவரத்துப் பாதைகளில் இருந்த கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுவிட்டதாகவும், ஆயிரக்கணக்கான கப்பல்கள் அந்த நீர்வழிப் பாதை வழியாகக் கடந்து சென்றுள்ளதாகவும் அவர் கூறினார்.</p><p></p><p>
</p><p>
</p><h2>ஈரான் எண்ணெய் ஏற்றுமதி&nbsp;</h2><p>அதே வேளையில், ஈரான் "பூஜ்ஜியம் பீப்பாய்" அளவிலேயே எண்ணெயை ஏற்றுமதி செய்துள்ளதாகக் குறிப்பிட்ட கூப்பர், இந்தத் தடைக்கு அமெரிக்காவின் "உறுதியான முற்றுகையே" காரணம் என்று தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2446baa7-68ad-4f48-8b81-90d00d566d66/26-6aaeb8e8dd70c.webp' /></p><p>
</p><p>
கடந்த இரண்டு வாரங்களில் இந்த நீரிணை வழியாகக் கொண்டு செல்லப்பட்ட கச்சா எண்ணெய், சரக்கு மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவின் அளவு, முந்தைய ஆறு மாதங்களில் இருந்த எந்தவொரு காலகட்டத்தை விடவும் அதிகமாக இருந்ததாக கூப்பர் தெரிவித்தார்.
</p><p>
உலகின் மிக முக்கியமான எரிசக்திப் போக்குவரத்துப் பாதைகளில் ஒன்றான இந்த நீர்வழிப் பாதை வழியாகப் போக்குவரத்தை மேலும் அதிகரிக்க, வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் (GCC) நாடுகள், காப்பீட்டு நிறுவனங்கள் மற்றும் கப்பல் நிறுவனங்களுடன் அமெரிக்கா இணைந்து பணியாற்றி வருவதாகவும் அவர் மேலும் கூறினார்.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-19T16:48:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து அணி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/england-defeated-the-sri-lankan-team-by-8-wickets-1789836168"></link>
            <id>https://jvpnews.com/article/england-defeated-the-sri-lankan-team-by-8-wickets-1789836168</id>
            <summary type="text">இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான 3ஆவது டி20 கிரிக்கெட் போட்டியில், இலங்கை அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து அணி...</summary>
            <content type="html"><![CDATA[<p>இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான 3ஆவது டி20 கிரிக்கெட் போட்டியில், இலங்கை அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றுள்ளது.</p><p>
</p><p></p><p>அத்துடன் 3 போட்டிகள் கொண்ட இந்த டி20 தொடரையும் 3-0 என இங்கிலாந்து அணி முழுமையாகக் கைப்பற்றியது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8ee93c7d-3f5e-4e5a-a092-c63cb57ab45c/26-6aaebb898506f.webp' /></p><p>


மான்செஸ்டரில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, இங்கிலாந்தின் துல்லியமான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் 18.5 ஓவர்களில் 124 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.</p><p> இலங்கை அணி தரப்பில் பெத்தும் நிஸ்ஸங்க 36 ஓட்டங்களையும், கமிந்து மெந்திஸ் 35 ஓட்டங்களையும் எடுத்தனர். இங்கிலாந்து தரப்பில் சோனி பேக்கர், ஜோஃப்ரா ஆர்ச்சர் மற்றும் வில் ஜாக்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் வீழ்த்தினர்.</p><p>

 

125 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களம் இறங்கிய இங்கிலாந்து அணி, தொடக்கத்திலிருந்தே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது. </p><p>ஜோஸ் பட்லர் அதிரடியாக விளையாடி 32 பந்துகளில் 62 ஓட்டங்களை குவித்தார். அணித்தலைவர் ஹேரி புரூக் 33 ஓட்டங்கள் சேர்த்தார். </p><p>இறுதியில் இங்கிலாந்து அணி 9.4 ஓவர்களிலேயே 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 126 ஓட்டங்கள் எடுத்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.</p><p> ஆட்டநாயகன் விருதை சோனி பேக்கர் தட்டிச் சென்றார்.&nbsp;&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-09-19T16:42:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தீபிகா படுகோனே, ரன்வீர் சிங்கிற்கு இரண்டாவது குழந்தை பிறந்தது... போட்டோ இதோ]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/deepika-padukone-ranveer-singh-blessed-with-baby-1789833068"></link>
            <id>https://cineulagam.com/article/deepika-padukone-ranveer-singh-blessed-with-baby-1789833068</id>
            <summary type="text">தீபிகா-ரன்வீர்பாலிவுட் சினிமா ரசிகர்களின் பேவரெட் நட்சத்திர ஜோடி தீபிகா படுகோனே மற்றும் ரன்வீர் சிங். இருவருக்கும் கடந்த 2018ம் ஆண்டு கோலாகலமாக திருமண...</summary>
            <content type="html"><![CDATA[<h2>தீபிகா-ரன்வீர்</h2><p>பாலிவுட் சினிமா ரசிகர்களின் பேவரெட் நட்சத்திர ஜோடி தீபிகா படுகோனே மற்றும் ரன்வீர் சிங். </p><p>இருவருக்கும் கடந்த 2018ம் ஆண்டு கோலாகலமாக திருமணம் நடந்தது. திருமண புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி செம வைரலானது. பின் இவர்களுக்கு கடந்த 2024ம் ஆண்டு ஒரு பெண் குழந்தை பிறந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0cc3e391-fb45-4616-8928-948cd4ea28f5/26-6aaeb51e07b7d.webp' /></p><p> </p><p>அவளுக்கு துவா என பெயரிட்டுள்ளதாக அறிவித்திருந்தனர். குழந்தை பிறந்த பிறகு கொஞ்ச நாள் படங்கள் கமிட்டாகாமல் இருந்தார் தீபிகா, பின் ஒரு படத்தில் கமிட்டானவர் நேர பிரச்சனை காரணமாக வெளியேறி இருந்தார். </p><p>தீபிகா 8 மணி நேரத்திற்கு மேல் பணிபுரிய முடியாது என கூறிய விஷயம் பேசும் பொருளானது.</p><h2>குழந்தை
</h2><p>சமீபத்தில் தீபிகா-ரன்வீர் ஜோடி இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை அழகிய குடும்ப புகைப்படத்துடன் அறிவித்தார்கள். </p><p>இந்த நிலையில் தீபிகா-ரன்வீர் இருவருக்கும் இரண்டாவது முறையாக பெண் குழந்தை பிறந்துள்ளார். நடிகை தீபிகா இந்த விஷயத்தை தனது இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.</p><p><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/p/DdeF9lOsviM/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/p/DdeF9lOsviM/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/p/DdeF9lOsviM/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by दीपिका पादुकोण (@deepikapadukone)</a></p></div></blockquote> <script async src="//www.instagram.com/embed.js"></script></p>]]></content>
            <updated>2026-09-19T16:40:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கட்டுப்பாட்டை மீறிய Google Gemini AI - 3 நிறுவனங்களை ஹேக் செய்த சம்பவம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/google-gemini-ai-hacks-firms-in-test-1789836010"></link>
            <id>https://news.lankasri.com/article/google-gemini-ai-hacks-firms-in-test-1789836010</id>
            <summary type="text">Google நிறுவனம் தனது புதிய செயற்கை நுண்ணறிவு (AI) மாடல் Gemini குறித்து அதிர்ச்சிகரமான தகவலை வெளியிட்டுள்ளது.

மே மாதத்தில் நடைபெற்ற சைபர் பாதுகாப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>Google நிறுவனம் தனது புதிய செயற்கை நுண்ணறிவு (AI) மாடல் Gemini குறித்து அதிர்ச்சிகரமான தகவலை வெளியிட்டுள்ளது.
</p><p>
மே மாதத்தில் நடைபெற்ற சைபர் பாதுகாப்பு சோதனையின் போது, Gemini தனது கட்டுப்படுத்தப்பட்ட சூழலை விட்டு வெளியேறி, மூன்று உண்மையான நிறுவனங்களின் நெட்வொர்க்கில் நுழைந்ததாக Google தெரிவித்துள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b148adb0-9af4-44ff-93a8-1b222d90d244/26-6aaebaebf271c.webp' /></p><p>இந்தச் சம்பவம், சோதனை நடத்தும் மூன்றாம் தரப்பு நிறுவனம் தவறுதலாக Gemini-க்கு இணைய அணுகலை வழங்கியதால் ஏற்பட்டது. </p><p>

ஆரம்பத்தில், Gemini ஒரு கற்பனை நிறுவனத்தை தாக்க வேண்டும் என்ற பயிற்சியில் ஈடுபட்டிருந்தது. ஆனால் அந்த கற்பனை நிறுவனத்தின் பெயர், உண்மையான நிறுவனத்தின் பெயருடன் பொருந்தியதால், AI தவறுதலாக உண்மையான நிறுவனங்களின் நெட்வொர்க்கில் நுழைந்தது.
</p><p></p><p>Google-ன் அறிக்கையின்படி, இந்த ஹேக்கிங் சம்பவத்தால் எந்த நிறுவனத்திற்கும் சேதம் ஏற்படவில்லை. ஆனால், AI மாடல்கள் கட்டுப்படுத்தப்பட்ட சூழலை விட்டு வெளியேறி, இணையத்தில் சுதந்திரமாக செயல்படக்கூடிய அபாயம் இருப்பதை இது வெளிப்படுத்துகிறது.
</p><p>
இந்தச் சோதனையின் நோக்கம், Gemini எவ்வாறு சைபர் பாதுகாப்பு குறைகளை கண்டறிந்து பயன்படுத்துகிறது என்பதை மதிப்பிடுவதாகும். ஆனால் நிகழ்ந்த தவறுகள், AI-யின் சக்தி மற்றும் அபாயங்களை உலகளவில் விவாதிக்க வைக்கும் வகையில் அமைந்துள்ளன.</p><p>

AI மாடல்கள் கட்டுப்பாட்டை மீறி செயல்படுவது எதிர்காலத்தில் பெரிய அபாயமாக மாறக்கூடும். அதனால் சோதனைகள் மிகுந்த கவனத்துடன் நடத்தப்பட வேண்டும் என்று சைபர் பாதுகாப்பு நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-19T16:36:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[அவிட்டம் நட்சத்திரத்தில் ராகு.., செழிப்புடன் வாழப்போகும் 3 ராசிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/3-zodiac-get-money-due-to-rahu-peyarchi-1789822779"></link>
            <id>https://manithan.com/article/3-zodiac-get-money-due-to-rahu-peyarchi-1789822779</id>
            <summary type="text">ஜோதிடத்தில் ராகுவும் கேதுவும் நிழல் கிரகங்களாகக் கருதப்படுகின்றன.

இந்த ராகு எப்போதும் பின்னோக்கி வக்ர நிலையில் பயணிப்பதோடு, ஒரு ராசியில் 1½ ஆண்டுகள...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜோதிடத்தில் ராகுவும் கேதுவும் நிழல் கிரகங்களாகக் கருதப்படுகின்றன.</p><p>

இந்த ராகு எப்போதும் பின்னோக்கி வக்ர நிலையில் பயணிப்பதோடு, ஒரு ராசியில் 1½ ஆண்டுகள் வரை இருப்பார்.
</p><p>
இந்நிலையில், தற்போது கும்ப ராசியில் சஞ்சரித்து வரும் ராகு ஆகஸ்ட் 1 அன்று அவிட்டம் நட்சத்திரத்திற்குள் நுழைந்தார். </p><p>

மேலும், அக்டோபர் 3ஆம் தேதி, ராகு பகவான் அவிட்டம் நட்சத்திரத்தின் மூன்றாம் பாதத்திற்குப் பெயர்ச்சி அடைந்து, டிசம்பர் 5ஆம் தேதி வரை அங்கேயே நிலைத்திருக்கப் போகிறார். </p><p>

அந்தவகையில், அவிட்டம் நட்சத்திரத்தில் ராகு இருப்பதால் குறிப்பிட்ட 3 ராசிக்காரர்கள் நற்பலன்களை பெறப்போகின்றனர்.</p><h2>மேஷம் </h2><ul><li> 

சாதகமான மாற்றங்கள் ஏற்படும்.
</li><li>புதிய யோசனைகளைச் செயல்படுத்துவதில் ஆர்வம் அதிகரிக்கும்.</li><li>
தொழிலில் இருந்த சவால்கள் குறைந்து, வளர்ச்சிக்கான வாய்ப்பு கிடைக்கும்.
</li><li>நிதி நிலை மேம்பட்டு, பொருளாதார முன்னேற்றம் கிடைக்கும்.</li><li>
உடல்நிலை நன்றாக இருக்கும்.
</li><li>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பயணங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்.
</li><li>புதிய தொடக்கங்களுக்கு ஏற்ற காலமாக அமையும்.</li></ul><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/75be6791-4e88-48c9-8778-ce515118bebf/26-6aae873d76f1d.webp' /></p><p>
</p><h2>
சிம்மம்</h2><ul><li>

தனிப்பட்ட வாழ்க்கையில் சாதகமான மாற்றங்கள் உண்டாகும்.
</li><li>தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
</li><li>வேலைகளில் புதிய முன்னேற்றம் கிடைக்கும்.
</li><li>வாழ்க்கையில் இருந்த சில பிரச்சனைகள் முடிவுக்கு வரும்.
</li><li>பணியில் உயர்ந்த பதவிகளை அடையும் வாய்ப்பு கிடைக்கும்.
</li><li>வணிகர்களுக்கு அதிக லாபம் கிடைக்கும்.
</li><li>நிதி நிலை மேம்படும்.</li><li>
பணத்தைச் சேமிக்கும் வாய்ப்புகள் அதிகரிக்கும்.
</li><li>உடல்நலப் பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்கும்.</li></ul><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9f34a9a8-c4b0-4cb3-8ce9-a7e953280484/26-6aae873e2cf1f.webp' /></p><p>
</p><h2>
கும்பம்
</h2><ul><li>
சாதகமான பலன்கள் கிடைக்கும்.</li><li>
முன்னேற்றத்தை ஏற்படுத்தும்.
</li><li>நீண்ட நாட்களாக இருந்த நிதி சிக்கல்கள் குறையும்.
</li><li>நீண்டகால ஆசைகளில் சில நிறைவேறும் வாய்பபுள்ளன.
</li><li>பொருளாதாரப் பிரச்சனைகளிலிருந்து விடுபடும் வாய்ப்பு கிடைக்கும்.
</li><li>திருமண வாழ்க்கையில் அன்பும், பரஸ்பர பாசமும் அதிகரிக்கும்.
</li><li>வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும்.
</li><li>அலுவலகத்தில் செயல்திறன் அதிகரித்து, அங்கீகாரம் கிடைக்கும்.</li><li>
குடும்பத்தினரின் முழு ஆதரவும் கிடைக்கும்.</li></ul><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a04724e6-ee7d-49ca-8fde-eec6b9a9a6d5/26-6aae873ed6728.webp' /></p>]]></content>
            <updated>2026-09-19T16:24:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[H-1B விசாவுக்கான கட்டணம் ; ட்ரம்ப் பிறப்பித்த உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/trump-extends-h-1b-visa-fee-for-one-year-1789803117"></link>
            <id>https://canadamirror.com/article/trump-extends-h-1b-visa-fee-for-one-year-1789803117</id>
            <summary type="text">H-1B குடியேறாதோர் விசா திட்டத்தின் கீழ் அமெரிக்காவுக்கு வரும் குறிப்பிட்ட வெளிநாட்டு பணியாளர்களுக்கான 1 இலட்சம் அமெரிக்க டொலர் கட்டணத்தை மேலும் 12 மாத...</summary>
            <content type="html"><![CDATA[<p>H-1B குடியேறாதோர் விசா திட்டத்தின் கீழ் அமெரிக்காவுக்கு வரும் குறிப்பிட்ட வெளிநாட்டு பணியாளர்களுக்கான 1 இலட்சம் அமெரிக்க டொலர் கட்டணத்தை மேலும் 12 மாதங்களுக்கு நீடிக்கும் உத்தரவை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வெளியிட்டுள்ளார். </p><p>



புதிய உத்தரவு 2026 செப்டம்பர் 21 முதல் அமுலுக்கு வந்து, 2027 செப்டம்பர் 21 வரை நீடிக்கும் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/203fff20-97ed-4d9a-8b9e-91c8f26e0c75/26-6aae3a6f5456c.webp' /></p><p>



2025ஆம் ஆண்டு முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்தக் கட்டண விதி, அமெரிக்காவுக்கு வெளியே இருக்கும் H-1B பணியாளர்களை உள்ளடக்கிய குறிப்பிட்ட புதிய மனுக்களுக்கு பொருந்துகின்றது. </p><p>



தேசிய நலன் கருதி விதிவிலக்குகளை வழங்கும் அதிகாரமும் உள்நாட்டு பாதுகாப்புத் துறைக்கு வழங்கப்பட்டுள்ளது.
</p><p>


H-1B திட்டத்தில் முறைகேடுகளைத் தடுப்பதும், அமெரிக்க தொழிலாளர்களின் வேலைவாய்ப்பைப் பாதுகாப்பதும் கட்டணத்தை நீட்டிப்பதற்கான காரணங்களாக ட்ரம்ப் நிர்வாகம் தெரிவித்துள்ளது. </p><p>



அதேவேளை, புதிய நிர்வாக உத்தரவின் கீழ் H-1B விண்ணப்பங்களை பரிசீலிக்கும்போது, தொடர்புடைய அமெரிக்க ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளதா அல்லது எதிர்காலத்தில் பணிநீக்கம் செய்யத் திட்டமிட்டுள்ளதா என்பதையும் அதிகாரிகள் கருத்தில் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><p>



வெள்ளை மாளிகையின் தகவலின்படி, 2025ஆம் ஆண்டு கட்டண விதி அமுலுக்கு வந்ததிலிருந்து 700க்கும் மேற்பட்ட H-1B மனுக்களுக்கு 1 இலட்சம் டொலர் கட்டணம் செலுத்தப்பட்டுள்ளது.</p><p>



H-1B விசா திட்டம் தொழில்நுட்பம் உள்ளிட்ட சிறப்புத் திறன் தேவைப்படும் துறைகளில் வெளிநாட்டு பணியாளர்களை தற்காலிகமாக அமெரிக்காவில் பணியாற்ற அனுமதிக்கும் திட்டமாகும்.</p><p> 



இந்தியா மற்றும் சீனாவைச் சேர்ந்த தொழில்நுட்ப வல்லுநர்களை பணியமர்த்தும் நிறுவனங்களுக்கு இந்தத் திட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாகவுள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-19T16:08:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் இளைஞனுக்கு நேர்ந்த துயரம் ; பொலிஸார் மறித்ததும் நிலத்தில் விழுந்து உயிரிழந்த இளைஞன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/tragedy-befalls-young-man-in-jaffna-1789817965"></link>
            <id>https://jvpnews.com/article/tragedy-befalls-young-man-in-jaffna-1789817965</id>
            <summary type="text">இன்று காலை மானிப்பாய் பொலிஸார் வீதியில் சென்ற மோட்டார் சைக்கிளை வழிமறித்தபோது, அதில் பயணித்த இளைஞன் சம்பவ இடத்திலேயே கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.
...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">இன்று காலை மானிப்பாய் பொலிஸார் வீதியில் சென்ற மோட்டார் சைக்கிளை வழிமறித்தபோது, அதில் பயணித்த இளைஞன் சம்பவ இடத்திலேயே கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.
</p><p style="text-align: justify; ">
 

சுன்னாகம், சபாபதிப்பிள்ளை வீதியைச் சேர்ந்த 26 வயதுடய இளைஞனே இவ்வாறு உயிரிழந்தவராவார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b1b43e6d-00be-467f-8e2c-9589ac34a5d5/26-6aae746e868b1.webp' /></p><h2 style="text-align: justify; ">உடற்கூற்றுப் பரிசோதனை</h2><p style="text-align: justify; ">குறித்த இளைஞன் இன்று யாழ்ப்பாணம் - காரைநகர் வீதியில், மானிப்பாய் தேவாலயத்திற்கு முன்பாக மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தபோது போக்குவரத்துப் பொலிஸார் அவரை வழிமறித்தனர்.</p><p style="text-align: justify; ">
 

இதன்போது, அந்த இளைஞன் மோட்டார் சைக்கிளை ஓரமாக நிறுத்திய பின்னர் தானாகவே கீழே சரிந்து விழுந்து அசைவற்று காணப்பட்டுள்ளார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
 

முறைப்படி அவரை வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றபோது, அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.
</p><p style="text-align: justify; ">
 

அவரது சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-19T16:08:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[அனோஜனுக்காக முன் நிற்க அரசாங்கம் தயங்காது ; நாடாளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/government-will-hesitate-stand-anojan-aboobakkar-1789834045"></link>
            <id>https://jvpnews.com/article/government-will-hesitate-stand-anojan-aboobakkar-1789834045</id>
            <summary type="text">சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கையரான அனோஜனுக்கு இராஜதந்திர ரீதியில் மன்னிப்பைப் பெற்றுக்கொடுக்க எடுக்கக்கூடிய எந்தவொரு நடவடிக்கைய...</summary>
            <content type="html"><![CDATA[<p>சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கையரான அனோஜனுக்கு இராஜதந்திர ரீதியில் மன்னிப்பைப் பெற்றுக்கொடுக்க எடுக்கக்கூடிய எந்தவொரு நடவடிக்கையையும் முன்னெடுக்க இலங்கை அரசாங்கம் தயங்காது என தேசிய மக்கள் சக்தியின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவா தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p></p><p>சவூதி அரேபியாவில் மத நிந்தனைக் குற்றச்சாட்டின் கீழ், அங்கு பணியாற்றி வந்த அனோஜன் என்பவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள விவகாரம் தொடர்பில் எமது செய்திப்பிரிவுக்கு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
</p><p>
தற்போது அவர் தான் செய்த தவறை உணர்ந்து மன்னிப்புக் கோரியுள்ளதாகக் குறிப்பிட்ட நாடாளுமன்ற உறுப்பினர், அவர் ஓர் இலங்கைப் பிரஜை என்பதால் விடுதலை பெற வேண்டும் என்பதே அனைவரினதும் விருப்பம் எனக் கூறினார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1927877a-b6ad-452d-93e5-2b161c1e2fd0/26-6aaeb33ea57e1.webp' /></p><p>இது தொடர்பாக விடயப்பரப்பிற்குரிய அமைச்சருடன் பேசப்பட்டுள்ளதாகவும், தீர்ப்பு வழங்கப்பட்ட சந்தர்ப்பத்திலும் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.</p><p> இந்த விவகாரத்தில் அரசாங்கம் மேலதிக நடவடிக்கைகளை உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
</p><p>
இதேவேளை, சிலர் இந்த விவகாரத்தை அரசியல் இலாபத்திற்காகப் பயன்படுத்த முயல்வதாகவும், அதனைத் தவிர்க்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
</p><p>
எது எவ்வாறாயினும், தவறை உணர்ந்து மன்னிப்புக் கேட்டுள்ள அவருக்கு மன்னிப்பு வழங்கப்பட வேண்டும் என்பதே பெரும்பான்மையானோரினதும் அரசாங்கத்தினதும் நிலைப்பாடாக உள்ளது என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவா மேலும் தெரிவித்தார்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-19T16:07:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[அனோஜன் விவகாரத்தில் மோடியின் தலையீடு.. அநுரவிடம் விடுக்கப்பட்டுள்ள அவசர கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/anojan-sivarasa-saudi-death-penalty-mano-ganesan-1789805503"></link>
            <id>https://tamilwin.com/article/anojan-sivarasa-saudi-death-penalty-mano-ganesan-1789805503</id>
            <summary type="text">சவூதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்கொண்டுள்ள இலங்கை இளைஞர் அனோஜன் சிவராசாவின் விவகாரத்திற்குத் தீர்வு காண, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் உதவியை ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சவூதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்கொண்டுள்ள இலங்கை இளைஞர் அனோஜன் சிவராசாவின் விவகாரத்திற்குத் தீர்வு காண, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் உதவியை நாட வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன், ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.</p><h2>மோடியின் நெருங்கிய நண்பர்</h2><p>தனது 'X' தள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், சவூதி இளவரசர் முகமது பின் சல்மானுடன் நெருங்கிய தொடர்பைப் பேணி வரும் மோடி, இலங்கையின் உயரிய சிவில் விருதான ஸ்ரீலங்கா ரத்னாவை ஏற்றுக்கொண்டவர் என்பதோடு இலங்கையின் நீண்டகால நண்பராகவும் திகழ்கிறார் என்று குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/12841f69-88ca-4726-8436-19aacd55933f/26-6aae4672a6f19.webp' /></p><p>
</p><p>மேலும், "உங்கள் நண்பரும் ஸ்ரீலங்கா ரத்னா விருது பெற்றவருமான பிரதமர் நரேந்திர மோடியின் அவசரக் கவனத்திற்கு அனோஜன் சிவராசாவின் இக்கட்டான நிலையை கொண்டு வருமாறு நான் வலியுறுத்துகிறேன்” என சுட்டிக்காட்டியுள்ளார்.&nbsp;</p><p>
மனிதாபிமான அடிப்படையில் ஒரு தீர்வைப் பெறுவதற்காக, இளவரசர் சல்மானிடம் மோடி தனிப்பட்ட முறையில் தலையிட்டுப் பேசுமாறு ஜனாதிபதியிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.&nbsp;</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">&lt;Appeal to President&gt; I urge President <a href="https://x.com/anuradisanayake?ref_src=twsrc%5Etfw">@anuradisanayake</a> to bring <a href="https://x.com/hashtag/Anojan_Sivarasa?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#Anojan_Sivarasa</a>’s desperate plight to the urgent attention of your friend, recipient of &quot;SriLanka Rathna&quot; Prime Minister Narendra Modi. <br><br>Given PM Modi’s close ties with Saudi Prime Minister and Crown Prince… <a href="https://t.co/4wFbn1RoZh">pic.twitter.com/4wFbn1RoZh</a></p>&mdash; Mano Ganesan (@ManoGanesan) <a href="https://x.com/ManoGanesan/status/2101198855983509724?ref_src=twsrc%5Etfw">September 19, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p></p><p></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/UlxAFBUeGpA" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p><br></p><p><b><i>You may Like this...</i></b></p><p><b><i><br></i></b></p><p><b><i><br></i></b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/e7LboISYa4M" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><i><br></i></b></p>]]></content>
            <updated>2026-09-19T16:02:07+00:00</updated>
        </entry>
    </feed>
