<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-08-11T11:39:42+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்திய பாக்ஸ் ஆபிஸில் மாபெரும் வசூல் சாதனை படைத்துள்ள ஸ்பைடர் மேன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/spiderman-brand-new-day-indian-collection-report-1786444885"></link>
            <id>https://viduppu.com/article/spiderman-brand-new-day-indian-collection-report-1786444885</id>
            <summary type="text">250 மில்லியன் டாலர் செலவில் தயாரிக்கப்பட்டு பெரும் எதிர்பார்ப்புடன் கடந்த ஜூலை 30-ஆம் தேதி வெளிவந்த திரைப்படம் ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே. 

இப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>250 மில்லியன் டாலர் செலவில் தயாரிக்கப்பட்டு பெரும் எதிர்பார்ப்புடன் கடந்த ஜூலை 30-ஆம் தேதி வெளிவந்த திரைப்படம் ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே.</p><p> 

இப்படத்தை இயக்குநர் டெஸ்டின் டேனியல் க்ரெட்டன் இயக்க, டாம் ஹோலாண்ட், ஜென்டயா, சாடி சிங்க் ஆகியோர் நடித்துள்ளனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a47c5d80-551b-4bd5-a4e4-c8ce7f2cff84/26-6a7afc585527b.webp' /></p><p>இந்நிலையில், 12 நாட்களில் இந்தியாவில் மட்டுமே ரூ. 520 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.</p><p>

இதன் மூலம் இந்தியாவில் அதிக வசூல் செய்த ஹாலிவுட் திரைப்படம் என்கிற சாதனையை ஸ்பைடர்-மேன்: பிராண்ட் நியூ டே படைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-11T11:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[போதைப்பொருள் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை : அரச தரப்பின் நிலைப்பாடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/death-penalty-for-drug-offenders-in-sri-lanka-1786446247"></link>
            <id>https://ibctamil.com/article/death-penalty-for-drug-offenders-in-sri-lanka-1786446247</id>
            <summary type="text">இலங்கையில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனை வழங்குவது குறித்து&amp;nbsp;இதுவரை இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை என அமைச்சரவை பேச்ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனை வழங்குவது குறித்து&nbsp;இதுவரை இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.</p><p>இன்று (11) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.</p><p>இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,&nbsp;"முழு நாடும் ஒன்றாக" தேசிய செயல்பாட்டு சபையில், போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு மரண தண்டனை வழங்கப்பட வேண்டும் என சில தரப்பினரால் யோசனைகள் முன்வைக்கப்பட்டது. அது குறித்து எதிர்காலத்தில் தீர்மானிக்கப்படும்.</p><p></p><h2>சில தரப்பினரிடமிருந்து வந்த யோசனை</h2><p>இப்பிரச்சினையின் தீவிரத்தன்மை குறித்து கலந்துரையாடும் போது சில தரப்பினரிடமிருந்து வந்த ஒரு யோசனையே இது. அதை எவ்வாறு செய்வது என்பது குறித்து இதுவரை இறுதி முடிவோ அல்லது உடன்பாடோ எட்டப்படவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e54b7a28-55a8-49fe-9bef-3b3dd4229a15/26-6a7b0522afdfc.webp' /></p><p>பாதாள உலகக் குழுக்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட செயற்பாடுகள் குறித்து பேசப்படும் போது பல்வேறு தரப்பினரால் முன்வைக்கப்படும் ஒரு யோசனை மட்டுமே இது." என தெரிவித்தார்.</p><p>இலங்கையில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனை வழங்குவது குறித்து "முழு நாடும் ஒன்றாக" தேசிய செயல்பாட்டு மையத்தில் நேற்று (10) கவனம் செலுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-11T11:28:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiva</name>
            </author>
            <title type="text"><![CDATA[அஸ்வெசும பயனாளிகளின் கோடிக்கணக்கான நிதி மோசடி - அதிகாரிகளின் பிணை நிராகரிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/financial-fraud-asvesuma-beneficiaries-1786447490"></link>
            <id>https://tamilwin.com/article/financial-fraud-asvesuma-beneficiaries-1786447490</id>
            <summary type="text">நோர்வூட் பிரதேச செயலகத்தில் 1 கோடியே 62 இலட்சம் இடம்பெற்ற அஸ்வெசும
பயனாளிகளின் நிதி மோசடி செய்த சந்தேகத்துக்குரிய அதிகாரிகள் இருவரின் பிணை அனுமதியை ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>நோர்வூட் பிரதேச செயலகத்தில் 1 கோடியே 62 இலட்சம் இடம்பெற்ற அஸ்வெசும
பயனாளிகளின் நிதி மோசடி செய்த சந்தேகத்துக்குரிய அதிகாரிகள் இருவரின் பிணை அனுமதியை நீதிமன்றம் நிராகரித்துள்ளதுடன், விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>

இந்த வழக்கு இன்று(11.08.2026) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே ஹட்டன் நீதவான் நீதிபதி பீட்டர் பால் மேற்கண்டவாறு உத்தரவு பிறப்பித்துள்ளார். </p><h2>

விளக்கமறியல் நீடிப்பு உத்தரவு</h2><p>
எமது நாட்டில் பொருளாதாரத்தில் பாதிக்கப்பட்ட ஏழை மற்றும் முழுமையாக இயலாத
குடும்பங்களுக்கு நிதி உதவி வழங்க அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட சமூக நலன்புரித்
திட்டம் அஸ்வெசும என்பதால்,விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/057e6a65-0608-423e-9d99-0e611496fee4/26-6a7b06e0e7304.webp' /></p><p>


இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டவர்கள் நோர்வூட் பிரதேச செயலகத்தில்
அஸ்வெசும பிரிவின் பொறுப்பாளராக இருந்த, ஹட்டன் டிக்கோயாவைச் சேர்ந்த 31
மற்றும் 32 வயதுடையவர்கள் ஆவர்.

இரு சந்தேக நபர்களைக் கைது செய்து, அவர்களின் வாக்குமூலங்களைப் பதிவுசெய்த பின்னர், அவர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய பின், நீதிபதி அவர்களை இன்று வரை நீதிமன்ற காவலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.</p><h2>

பிணை நிராகரிப்பு</h2><p>
இதனைத் தொடர்ந்து இன்று(11) நீதிமன்றத்தில் சந்தேக நபர்களுக்காக ஆதரவாக முன்னிலையான 
வழக்கறிஞர்கள், இரு சந்தேக நபர்களும் தங்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டு, மோசடி
செய்யப்பட்ட பணத்தை வங்கிக் கணக்கில் மீண்டும் வரவு வைக்க ஒப்புக்கொண்டதால்,
அவர்கள் பிணை நிபந்தனைகள் ஏதுமின்றி விடுவிக்கப்பட வேண்டும் என்று
நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/861bbd10-42cd-4a7d-b6f2-65f45b77adbc/26-6a7b06e1d5dde.webp' /></p><p>

இதில் நீதிமன்றத்தில் சாட்சியங்களை முன்வைத்த ஹட்டன் குற்றப் புலனாய்வுப்
பிரிவின் அதிகாரிகள் நோர்வூட் பிரதேச செயலகத்தில்
அஸ்வெசும நலன்புரித் திட்ட நிதி மோசடி தொடர்பில் மோசடி செய்யப்பட்ட பணம்
குறித்த முழுமையான விசாரணை அறிக்கையை இன்னும் சமர்ப்பிக்கவில்லை என்றும், 
மேலும் நோர்வூட் பிரதேச செயலகத்தில் அலுவலகத்தில் உள்ள பல அதிகாரிகள் இந்த
மோசடியில் ஈடுபட்டதாக வந்துள்ள கூடுதல் முறைப்பாடு குறித்தும் விசாரித்து வருவதால்,
சந்தேக நபர்களுக்குப் பிணை வழங்குவதை எதிர்ப்பதாகவும் தெரிவித்தனர்.
</p><p>
இரு தரப்பினரின் வாதங்களையும் பரிசீலித்த ஹட்டன் நீதிபதி பீட்டர் பால் குறித்த
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருவதன் காரணமாகவும் இந்த
பயணம் ஏழைகளுக்கு வழங்கும் பணம் என்றும், இதுபோன்ற அரச பணத்திற்குப்
பொறுப்பான அதிகாரிகளுக்குப் பணத்தை மோசடி செய்ய எந்த உரிமையும் இல்லை என்றும் கூறினார்.
</p><p>
இதற்கமைய, நீதிபதி இரு சந்தேக நபர்களையும் தொடர்ந்து விளக்கமறியலில்
வைக்கவும், இந்த மாதம் மீண்டும் 25ஆம் திகதி வழக்கினை மீண்டும்
விசாரிக்கவும் உத்தரவிட்டார்.
</p><h2>
மோசமாகும் மக்களின் நிலை</h2><p>
இரு சந்தேக நபர்களின் சகோதரர்களில் ஒருவர் நுவரெலியா மாவட்ட செயலகத்தில் உயர்
பதவியில் உள்ள அதிகாரி எனவும், மேலும் மோசடிப் பணத்தின் ஒரு பகுதி அவரது
கணக்கிலும் வரவு வைக்கப்பட்டிருந்தமை கண்டறிந்து அந்த அதிகாரிக்கு எதிராக
நடத்தப்படும் விசாரணையின் விளைவாக, நுவரெலியா மாவட்ட செயலாளர் துஷாரி
தென்னக்கோன், அந்த அதிகாரியின் பணியை தற்காலிகமாக இடைநீக்கம் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/09694cdc-2182-439c-af4b-7cc423217cd5/26-6a7b06e2aa416.webp' /></p><p>
</p><p>
இதற்கிடையில், நோர்வூட் பிரதேச செயலகத்தின் அஸ்வெசும கணக்கில் பணம் வரவு
வைக்கப்படாத பயனாளிகள், தங்கள் கணக்குகளைச் சரிபார்க்க தினமும் நோர்வூட்
பிரதேச செயலகத்திற்குச் சென்று வருகின்றனர்.
</p><p>
அங்குள்ள அதிகாரிகள், பயனாளிகளின் கணக்கு எண் மற்றும் தொலைபேசி எண்ணைப் பெற்று, அது குறித்த தகவல்களை வழங்குவதாகக் கூறி, அந்த பொது மக்களை திருப்பி அனுப்பி வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f406cf81-e520-47b4-ba7a-4b581ea67511/26-6a7b07307adfd.webp' /></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-11T11:26:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரச தொழிலுக்காக காத்திருப்போருக்கு வெளியான அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/announcement-for-government-teacher-vacancies-1786437816"></link>
            <id>https://tamilwin.com/article/announcement-for-government-teacher-vacancies-1786437816</id>
            <summary type="text">நாட்டின் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக கணிதம் மற்றும் விஞ்ஞானம் உள்ளிட்ட முக்கிய பாடங்களுக்கான ஆசிரியர் நியமனங்களை விரைவுபடுத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டின் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக கணிதம் மற்றும் விஞ்ஞானம் உள்ளிட்ட முக்கிய பாடங்களுக்கான ஆசிரியர் நியமனங்களை விரைவுபடுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.&nbsp;</p><p>நாடாளுமன்றத்தில் பிரதமர் மற்றும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூரிய தலைமையில் நடைபெற்ற கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்திலேயே இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p><h2>வெற்றிடங்களை நிரப்ப அவசர நடவடிக்கை&nbsp;</h2><p>இதற்கமைய, ஆசிரியர் பற்றாக்குறையை எதிர்நோக்கும் பாடசாலைகள் மற்றும் பிரதேசங்களை உடனடியாக அடையாளம் கண்டு, அங்குள்ள வெற்றிடங்களை நிரப்ப அவசர நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4fb25550-8919-422e-bc02-6c9dd0ededac/26-6a7aeb2cd42ba.webp' />&nbsp;</p><p>மேலும், ஆசிரியர் இடமாற்ற முறைமையை ஒழுங்குபடுத்துவதுடன், அங்கீகரிக்கப்பட்ட கொள்கைகளுக்கு அமைவாகவும் வெளிப்படைத்தன்மையுடனும் இடமாற்றங்களை முன்னெடுப்பது குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டது.</p><p>அத்துடன், பாடசாலைகளை கஷ்டப் பிரதேசங்களாக வகைப்படுத்துவதற்கு பயன்படுத்தப்படும் அளவுகோல்கள் மற்றும் அங்கு பணியாற்றும் ஆசிரியர்களுக்கான கஷ்டப் பிரதேச கொடுப்பனவு வழங்கும் முறைமை குறித்தும் மீளாய்வு செய்யுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
&nbsp;</p><p></p><p>&nbsp;</p><p><b>YOU MAY LIKE THIS VIDEO..</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/M7NXBI6GGRc" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-11T11:19:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[த்ரிஷா பாட்டிக்கு 98வது பிறந்தநாள்: குடும்ப புகைப்படத்தை பார்த்து வியந்த ரசிகர்கள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/trisha-krishnan-celebrate-grandmother-98-birthday-1786442405"></link>
            <id>https://manithan.com/article/trisha-krishnan-celebrate-grandmother-98-birthday-1786442405</id>
            <summary type="text">Trisha Grandmother&#039;s Birthday : நடிகை த்ரிஷா கிருஷ்ணன் தனது பாட்டியின் 98வது பிறந்தநாளை வெகுவிமர்சையாக கொண்டாடி தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இண...</summary>
            <content type="html"><![CDATA[<p>Trisha Grandmother's Birthday : நடிகை த்ரிஷா கிருஷ்ணன் தனது பாட்டியின் 98வது பிறந்தநாளை வெகுவிமர்சையாக கொண்டாடி தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளதுடன் ரசிகர்களின் வாழ்த்துக்களையும் குவித்து வருகின்றது.&nbsp;</p><h2>நடிகை த்ரிஷா பதிவு வைரல்</h2><p>த்ரிஷா சமீபத்தில் தனது அம்மா உமாவின் 70வது பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டிருந்தார். அந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், “த்ரிஷாவின் அம்மாவுக்கு 70 வயதா? பார்த்தால் அந்த வயது போலவே தெரியவில்லை” என்று ஆச்சரியத்துடன் கருத்து தெரிவித்து வந்தனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c56ea939-2db0-409c-af47-e807c1432a10/26-6a7af9ad958ff.webp' /></p><p>இந்நிலையில், தற்போது த்ரிஷாவின் பாட்டி தனது 98வது பிறந்தநாளை கொண்டாடியிருப்பது ரசிகர்களின் கவனத்தை மேலும் ஈர்த்துள்ளது.

98வது பிறந்தநாள் கொண்டாட்டம்
த்ரிஷாவின் பாட்டியின் பிறந்தநாளை முன்னிட்டு கேக் வெட்டி குடும்பத்தினர் கொண்டாடியுள்ளனர்.</p><p>அந்த மகிழ்ச்சியான தருணத்தின் புகைப்படத்தை த்ரிஷா இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார்.

புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், 98வது பிறந்தநாளை கொண்டாடுவது மிகப்பெரிய பாக்கியம் என்றும், த்ரிஷாவின் பாட்டிக்கு தங்களது பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்தும் வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/89695cc2-d1b2-4855-a268-861045b1d25e/26-6a7af9ae4cb47.webp' /></p><p></p><p>மேலும், அவரை பார்த்தால் 98 வயது என்று சொல்ல முடியாத அளவுக்கு இளமையாக இருப்பதாகவும் ரசிகர்கள் வியந்து வருகின்றனர்.

த்ரிஷாவின் குடும்பத்தில் தலைமுறை தலைமுறையாக பெண்கள் இளமையான தோற்றத்துடன் இருப்பதாகவும் ரசிகர்கள் குறிப்பிட்டு வருகின்றனர். </p><p>குறிப்பாக, த்ரிஷாவின் பாட்டி, அவரது அம்மா உமா மற்றும் த்ரிஷா ஆகியோரை ஒப்பிட்டு, இந்த குடும்பத்தில் பெண்களுக்கு வயது கூடுவதையே தெரியவில்லை என ரசிகர்கள் கலகலப்பாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9d4a457f-9303-46f5-92bf-ed44a33251d6/26-6a7af9af000c0.webp' /></p><p></p><p>
ஒரே புகைப்படத்தில் நான்கு தலைமுறைகள்
இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தின் புகைப்படத்தில் நான்கு தலைமுறையைச் சேர்ந்த பெண்கள் இடம்பெற்றிருப்பதாக ரசிகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.</p><p> த்ரிஷாவின் பாட்டி, அம்மா உமா, த்ரிஷா மற்றும் அவர்களின் செல்லப்பிராணியான இஸ்ஸி ஆகியோரை இணைத்து, இது நான்கு தலைமுறைகளின் பாசத்தையும் குடும்ப ஆசீர்வாதத்தையும் வெளிப்படுத்தும் புகைப்படம் என ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் கூறி வருகின்றனர். குறித்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் படு வைராலாகியுள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <u><b><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></b></u>&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-11T11:19:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ்ப்பாணம் கீரிமலை பகுதியில் நாளையதினம் வெடிக்கவுள்ள போராட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/protest-in-keerimalai-area-of-jaffna-tomorrow-1786444759"></link>
            <id>https://ibctamil.com/article/protest-in-keerimalai-area-of-jaffna-tomorrow-1786444759</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் கீரிமலை பகுதியில் கொட்டப்பட்ட குப்பைகளை மீள அள்ளுமாறு கோரி ஆடி
அமாவாசை தினமான நாளைய தினம் புதன்கிழமை கவனயீர்ப்பு போராட்டம்
முன்னெடுக்கப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் கீரிமலை பகுதியில் கொட்டப்பட்ட குப்பைகளை மீள அள்ளுமாறு கோரி ஆடி
அமாவாசை தினமான நாளைய தினம் புதன்கிழமை கவனயீர்ப்பு போராட்டம்
முன்னெடுக்கப்பட்டவுள்ளது.
</p><p>
வலி. வடக்கு பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்ட கீரிமலை பகுதியில் சுண்ணக்கல்
அகழப்பட்ட பாரிய பள்ளங்களுக்குள், வலி. தெற்கு பிரதேச சபையினர், சட்டவிரோதமான
முறையில் இலத்திரனியல் கழிவுகள், மருத்துவ கழிவுகள் உள்ளிட்ட பல்வேறு வகையான
கழிவுகளை கொட்டியுள்ளனர்.</p><h2>காத்திரமான நடவடிக்கை எடுக்கப்படவில்லை</h2><p>கொட்டப்பட்ட கழிவுகளை மீள அள்ளவேண்டும் என வலி. வடக்கு பிரதேச சபையின் 34
உறுப்பினர்களில் 26 உறுப்பினர்கள் கையெழுத்து இட்டு, வடமாகாண ஆளுநர், வடமாகாண
உள்ளூராட்சி ஆணையாளர், மாவட்ட செயலர், மத்திய சுற்றாடல் அதிகார சபையினர்,
தெல்லிப்பழை பிரதேச செயலர் ஆகியோரிடம் கடந்த வாரம் முறையிட்டிருந்த போதிலும்,
இதுவரையில் காத்திரமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என குற்றம்
சாட்டப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7bea087c-55d2-488b-8b62-34a3e2ed8f34/26-6a7b005280297.webp' /></p><p>
</p><p>
இந்நிலையில் ஆடி அமாவசை தினமான நாளைய தினம் புதன்கிழமை, குப்பைகள் கொட்டப்பட்ட
பகுதியில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதுடன், கொட்டப்பட்ட
குப்பைகளால் ஏற்படும், சூழல்சார், சமூகம்சார் பிரச்சனைகள் தொடர்பில்
விழிப்புணர்வு ஊட்டும் நிகழ்வும் முன்னெடுக்கப்படவுள்ளது.</p><p></p><h2>பிதிர்கடன்களை&nbsp;&nbsp;பலர் ஒன்று கூடுவார்கள்</h2><p>
</p><p>
அதேவேளை, ஆடி அமாவாசை தினத்தன்று, தமது, முன்னோருக்கு பிதிர்கடன்களை நிறைவேற்ற
நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கீரிமலை பகுதியில் பலர் ஒன்று
கூடுவார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/994b9478-8e85-41a1-a56c-89859e34ad77/26-6a7b00535ffb8.webp' /></p><p>&nbsp;மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய தீர்த்தோற்சவத்தை
முன்னிட்டு குறித்த பகுதியால் மாவிட்டபுர கந்தன் தீர்த்தமாட செல்வார்
என்பதாலும், கொட்டப்பட்ட குப்பைகளை ஆடி அமாவசை தினத்திற்கு முன்னர், மீள அள்ள
வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்ட போதிலும் குப்பைகளை அள்ள எவ்வித
நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.&nbsp; &nbsp; &nbsp; </p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-11T11:18:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரான் அச்சுறுத்தலால் ரகசிய விமானத்தில் ஒழித்து ஓடிய ட்ரம்ப் !]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/iran-threat-trump-fled-in-a-secret-plan-uk-1786439764"></link>
            <id>https://canadamirror.com/article/iran-threat-trump-fled-in-a-secret-plan-uk-1786439764</id>
            <summary type="text">&amp;nbsp; அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் துருக்கியில் இருந்து பிரிட்டனுக்கு இரகசியமாக இராணுவ விமானத்தில் பயணம் செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

ஈரா...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் துருக்கியில் இருந்து பிரிட்டனுக்கு இரகசியமாக இராணுவ விமானத்தில் பயணம் செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

ஈரானிடமிருந்து கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, டொனால்ட் ட்ரம்ப் இரகசியமாக இராணுவ விமானத்தில் பயணம் செய்ததாக கூறப்படுகின்றது.</p><p>

கடந்த மாதம் நேட்டோ உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ட்ரம்ப் துருக்கியின் அங்காராவுக்குச் சென்றிருந்தார். அங்கிருந்து புறப்படும்போது வழக்கமாகப் பயன்படுத்தும் எயார் போர்ஸ் ஒன் விமானத்தில் ஊடகங்கள் முன்னிலையில் அவர் ஏறியதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e372dfa7-cf44-4b10-a9d0-f1013a257e56/26-6a7ae855affe9.webp' /></p><h2>பழைய எயார் போர்ஸ் ஒன் விமானத்தில் பயணித்த ட்ரம்ப்</h2><p>


எனினும், அந்த விமானம் புறப்படாத நிலையில், ஊடகவியலாளர்கள் அங்கிருந்து சென்ற பின்னர், கேட்டரிங் வாகனம் ஒன்றின் மூலம் ட்ரம்ப் வேறு விமானத்துக்கு இரகசியமாக அழைத்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகின்றது.</p><p>



பின்னர், பாதுகாப்புத்துறை செயலாளர் ஹெக்செத் மற்றும் இரகசிய பாதுகாப்பு அதிகாரிகளுடன் சி-32ஏ இராணுவ விமானத்தில் துருக்கியிலிருந்து பிரிட்டனுக்கு அவர் பயணம் செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
</p><p>


இதனிடையே, ட்ரம்ப் இல்லாமல் பழைய எயார் போர்ஸ் ஒன் விமானத்தில் பயணித்த ஊடகவியலாளர்கள் மற்றும் வெள்ளை மாளிகை ஊழியர்களிடம் விமானத்தின் ஜன்னல்களை மூடி வைக்குமாறு அறிவுறுத்தப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
</p><p>


அத்தோடு பிரிட்டனில் இருந்து பின்னர் ட்ரம்ப் பாதுகாப்பாக அமெரிக்கா திரும்பியதாகவும் அந்த தகவல்கள் கூறுகின்றது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-11T11:17:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீண்டகால ஒப்பந்தங்களின் கீழ் எரிபொருள் கொள்வனவு: அரசாங்கத்தின் தீர்மானம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/govt-approves-long-term-procurement-of-petrol-1786437883"></link>
            <id>https://ibctamil.com/article/govt-approves-long-term-procurement-of-petrol-1786437883</id>
            <summary type="text">இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தினால் (CPC) பெட்ரோல் 92 யுஎன்எல், முர்பான் கச்சா எண்ணெய் மற்றும் 0.05 சதவீத கந்தகம் கொண்ட டீசல் ஆகியவற்றை நீண்டகால அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தினால் (CPC) பெட்ரோல் 92 யுஎன்எல், முர்பான் கச்சா எண்ணெய் மற்றும் 0.05 சதவீத கந்தகம் கொண்ட டீசல் ஆகியவற்றை நீண்டகால அடிப்படையில் கொள்முதல் செய்வதற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
</p><p>
இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள வழங்குநர்களிடையே நடத்தப்பட்ட வரையறுக்கப்பட்ட சர்வதேச போட்டி ஏல நடைமுறையைத் தொடர்ந்து, குறித்த கொள்முதல் ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.
</p><p>
உயர்மட்ட நிலைக் கொள்முதல் குழுக்களின் பரிந்துரைகளின் அடிப்படையில், கணிசமான அளவில் தகுதி பெற்ற குறைந்தபட்ச ஏல விலைகளை முன்வைத்த நிறுவனங்களுக்கு ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.</p><p></p><h2>நீண்ட கால கொள்முதல் செய்ய அரசு ஒப்புதல்</h2><p>
</p><p>
அதன்படி,&nbsp;பெற்றோல் 92 Unl (1.2 மில்லியன் பீப்பாய்கள் ± 5%):&nbsp;பரிந்துரைக்கப்பட்ட நிறுவனம்: Aditya Birla Global Trading (Singapore) Pte. Ltd., Singapore&nbsp;ஒப்பந்தக் காலம்: 2026.09.01 முதல் 2027.02.28 வரை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f9b938c4-ad35-4568-a8e0-4913ee764d76/26-6a7afd0217d15.webp' /></p><p>விமான வகை டீசல் எண்ணெய் (2.8 மில்லியன் பீப்பாய்கள் ± 5%):&nbsp;&nbsp;பரிந்துரைக்கப்பட்ட நிறுவனம்: Aditya Birla Global Trading (Singapore) Pte. Ltd., Singapore&nbsp;ஒப்பந்தக் காலம்: 2026.11.01 முதல் 2027.02.28 வரை.</p><p>டீசல் - 0.05% M.S (1.12 மில்லியன் பீப்பாய்கள் ± 5%):&nbsp;பரிந்துரைக்கப்பட்ட நிறுவனம்: M/s Vitol Asia Pte. Ltd, Singapore

ஒப்பந்தக் காலம்: 2026.09.01 முதல் 2027.02.28 வரை.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-11T11:16:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தாயின் தகாத உறவு; 5 நட்சத்திர விடுதியில் சடலமாக மீட்கப்பட்ட குழந்தைகள்! சம்பவத்தால் ஷாக்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/wife-affair-bengaluru-man-kills-daughters-hotel-1786436112"></link>
            <id>https://jvpnews.com/article/wife-affair-bengaluru-man-kills-daughters-hotel-1786436112</id>
            <summary type="text">&amp;nbsp; இந்தியா பெங்களூரில் உள்ள ஒரு 5 நட்சத்திர விடுதியில் இரு குழந்தைகள் சடலமாகவும், அவர்களின் தந்தை படுகாயங்களுடனும் கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் அத...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; இந்தியா பெங்களூரில் உள்ள ஒரு 5 நட்சத்திர விடுதியில் இரு குழந்தைகள் சடலமாகவும், அவர்களின் தந்தை படுகாயங்களுடனும் கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் தொடர்பில் இந்திய ஊடகங்க்கள் குறிப்பிட்டுள்ளதாவது,</p><p> 
 
40 வயதான இம்ரான் மற்றும் அவரது இரு மகள்கள் விடுதியில் தங்கியிருந்தனர். விடுதி ஊழியர்கள் அறைக்குள் சென்று பார்த்தபோது, குழந்தைகள் கட்டிலில் சடலமாகக் கிடந்தனர். 

இம்ரான் கழுத்து அறுபட்ட நிலையில் கழிப்பறையில் ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/acf08a62-e9c8-4a4e-8ded-fd4ebb6b47fa/26-6a7ada120aeec.webp' /></p><h2>என் குழந்தைகள் இப்படிப்பட்ட தாயுடன் வளர்வதை நான் விரும்பவில்லை</h2><p> </p><p>
விடுதி ஊழியர்கள் அவரை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். தற்போது அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
 
இம்ரான் தனது மனைவிக்கு வேறு ஒருவருடன் தொடர்பு இருப்பதாக சந்தேகித்ததாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.</p><p></p><p> </p><p>

“என் குழந்தைகள் இப்படிப்பட்ட தாயுடன் வளர்வதை நான் விரும்பவில்லை. அதனால்தான் அவர்களைக் கொன்றுவிட்டு நானும் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்தேன்” என அவர் காவல்துறையினரிடம் கூறியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
</p><p> 
இம்ரான் தன் மகள்களின் கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு, கத்தியால் கழுத்தை அறுத்துத் தற்கொலைக்கு முயன்றதாக காவல்துறை தெரிவித்துள்ளது.</p><p> </p><p>

இது தொடர்பாக கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் பெங்களூரு நாகவாரா பகுதியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் , மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-11T11:15:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[கணவருடன் சுற்றுலா சென்ற இடத்தில்..பிரித்தானிய பெண் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/british-woman-killed-in-spain-after-parasailing-1786446976"></link>
            <id>https://news.lankasri.com/article/british-woman-killed-in-spain-after-parasailing-1786446976</id>
            <summary type="text">British woman killed in parasailing accident: ஸ்பெயினில் பாராசெய்லிங் விபத்தில் பிரித்தானிய பெண்ணொருவர் உயிரிழந்தார்.

ஸ்பெயின் நாட்டில் பிரித்தானிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>British woman killed in parasailing accident: ஸ்பெயினில் பாராசெய்லிங் விபத்தில் பிரித்தானிய பெண்ணொருவர் உயிரிழந்தார்.</p><p>

ஸ்பெயின் நாட்டில் பிரித்தானியப் பெண்ணொருவர், பாராசெய்லிங்&nbsp;சாகசத்தில் ஈடுபட்டிருந்தபோது ஏற்பட்ட எதிர்பாராத விபத்தில் உயிரிழந்தார்.&nbsp;</p><h2>பிரித்தானியப் பெண்&nbsp;</h2><p>பிரித்தானியாவைச் சேர்ந்த பெண்ணொருவர் தனது கணவருடன் ஸ்பெயினின் பெனிடார்ம் பகுதிக்கு சுற்றுலாவுக்காக சென்றுள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cb351900-85e4-47be-b912-6a680a4924c8/26-6a7b048358cda.webp' />&nbsp;</p><p></p><p>

அவர் பாராசெய்லிங் சாகசத்தில் ஈடுபட பலத்த காற்று வீசியுள்ளது. இதில் அவரது பாராசூட்டை இழுத்துச் செல்லும் படகை இணைத்திருந்த கயிறு அறுந்துபோனது.

இதனால் குறித்த பிரித்தானியப் பெண் பாறைகள் மீது மோதியதாகக் கூறப்படுகிறது.</p><p> இதனையடுத்து அப்பெண்ணுக்கு மாரடைப்பு ஏற்பட, உடனடியாக அவர் துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.</p><p>அதே சமயம் அவரது கணவர் என்று கூறப்படும் நபர், விலா எலும்பு முறிவு உள்ளிட்ட காயங்களுக்கு ஆளாகியிருக்கலாம் என்றும், காயமடைந்த நிலையிலும் அவரால் நடக்க முடிந்ததாகவும் கூறப்படுகிறது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f2d74d3e-6924-4ee8-a04a-667ca8959893/26-6a7b04840b75b.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-11T11:14:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஐரோப்பிய ஊடகம் வியந்த ஈழத்தமிழ் தொழிலதிபர் பாஸ்கரன் கந்தையா!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/eelam-tamil-entrepreneur-baskaran-k-dutch-media-1786445798"></link>
            <id>https://jvpnews.com/article/eelam-tamil-entrepreneur-baskaran-k-dutch-media-1786445798</id>
            <summary type="text">றீச்சா உணவு திருவிழாவில் ஏற்பட்ட குழப்பங்களுக்கு சமூக வலைத்தளங்களில் வாதபிரதிவாதங்க்கள் இடம்பெற்று வரும் நிலையில் , நெதர்லாந்து ஊடகம் வியந்த ஈழத்தமிழர...</summary>
            <content type="html"><![CDATA[<p>றீச்சா உணவு திருவிழாவில் ஏற்பட்ட குழப்பங்களுக்கு சமூக வலைத்தளங்களில் வாதபிரதிவாதங்க்கள் இடம்பெற்று வரும் நிலையில் , நெதர்லாந்து ஊடகம் வியந்த ஈழத்தமிழர் பாஸ்கரன் கந்தையா தொடர்பில் வெளிவந்த செய்திதான் இது. </p><p>

நெதர்லாந்து ஊடகம் ஒன்றில் கடந்த வாரம், புலம்பெயர் ஈழத் தமிழர் பாஸ்கரன் கந்தையா தொடர்பில் வெளிவந்த கட்டுரையை அவதூறு பரப்புவோர் அறிந்து கொள்ளவேண்டும். 

அந்தவகையில் நெதர்லாந்து ஊடகம் வெளியிட்ட கட்டுரையில்,
 டச்சு மண்ணை அதிரவைத்த தமிழர் நெதர்லாந்து ஊடகம் வியந்த பாஸ்கரன் கந்தையாவின் 5,445 கோடி ரூபாய் சாம்ராஜ்யம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/262d7f58-4f3c-4152-a593-7d70b0dd5d21/26-6a7affe866861.webp' /></p><h2>நெதர்லாந்தின்&nbsp; செல்வாக்குமிக்க பணக்காரர்கள் பட்டியலில் இடம்பிடித்த&nbsp; ஈழத்தமிழர்</h2><p> நெதர்லாந்து நாட்டின் வர்த்தக உலகில் பிரகாசிக்கும் ஈழத்து நட்சத்திரம், பாஸ்கரன் கந்தையாவின் வரலாற்றுச் சுவடுகள்
ஐரோப்பியப் பெருநிலப்பரப்பில் ஈழ அகதிகளாக தடம் பதித்து, தமது கடின உழைப்பால் வெற்றி மீது வெற்றி குவித்து வாழும் புலம்பெயர் தமிழர்களின் பட்டியலில் , பாஸ்கரன் கந்தையா என்ற பெயர் இன்றைக்கு உலகளவில் அதிக கவனத்தை ஈர்த்து நிற்கிறது என நெதர்லாந்தின் முன்னணி பொருளாதார மற்றும் வணிக இதழான '<a href="https://www.quotenet.nl/lifestyle/reizen/a73375336/quote-500-lid-baskaran-kandiah-resort-sri-lanka/" target="_blank">Quote Net'</a> அண்மையில் வெளியிட்ட சிறப்புக் கட்டுரை ஒன்று, டச்சு மண்ணில் ஒரு ஈழத்தமிழர் உருவாக்கியுள்ள பிரமாண்டமான வணிகச் சாம்ராஜ்யத்தையும், தனது தாய்நிலம் மீதான காதலையும் , நன்றியுணர்வையும் வெகுவாக பாராட்டியுள்ளது .</p><p> 
நெதர்லாந்து நாட்டின் ஆகப்பெரிய மில்லியனர்களைக் வரிசைப்படுத்தும் 'Quote 500' பட்டியலில் பாஸ்கரன் கந்தையாவைச் சேர்த்து பெருமைப்படுத்தியிருக்கும் அந்த ஊடகம், அவரது வாழ்க்கைப் பாதையை ஒரு பரபரப்பான நாவலைப் போலவும், திரைப்படக் காட்சிகளைப் போலவும் வர்ணித்துள்ளது.
</p><p>அந்த டச்சு ஊடகத்தின் துல்லியமான நிதி மதிப்பீட்டின்படி, திரு . பாஸ்கரன் கந்தையாவின் தற்போதைய நிகர சொத்து மதிப்பானது 165 மில்லியன் யூரோக்கள் ஆகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e0d05f12-75c8-46a4-9eb8-72a2c2764e44/26-6a7b02b0b294b.webp' /></p><p>அதாவது நமது இலங்கை ரூபாய் மதிப்பில் இதைக் கணக்கிட்டுப் பார்த்தால், அது சுமார் 5,445 கோடி இலங்கை ரூபாயைத் தொடுகிறது (LKR 54.45 Billion).</p><p>
இந்த பிரமாண்டமான நிதிப் பலம்தான் அவரை நெதர்லாந்தின் மிகச் செல்வாக்குமிக்க பணக்காரர்கள் பட்டியலில் 437-வது இடத்தில் கம்பீரமாக அமர்த்தியிருக்கிறது எனவும் . 
இந்த எண்களுக்குப் பின்னால் இருக்கும் உழைப்பும் அசாத்தியமான துணிச்சலும்தான் உண்மையிலேயே வியப்பளிக்கக்கூடியவை எனவும் அவர்கள் வியப்படைந்துள்ளனர் . </p><p>
யாழ்ப்பாணத்தின் வடலியடைப்பில் ஒரு சாதாரன வறிய குடும்ப சூழலில் பிறந்து வளர்ந்த பாஸ்கரன், தனது இளமைக் காலத்தில் இலங்கையில் நிலவிய போர் மேகங்களினாலும் பொருளாதார நெருக்கடிகளினாலும் ஐரோப்பாவை நோக்கித் தனது பயணத்தைத் தொடங்கினார். </p><p>
நெதர்லாந்து மண்ணில் காலூன்றிய அவர், தன் முன்னாலுள்ள சவால்களைக் கண்டு அஞ்சாமல் தனது முப்பதாவது வயதில் தனது இரண்டு நண்பர்களுடன் இணைந்து 'லெபாரா மொபைல்' (Lebara Mobile) என்ற தொலைத்தொடர்பு நிறுவனத்தைத் தொடங்கினார்.</p><h2>ஐரோப்பாவின் முதன்மை வணிக இதழ் புகழாரம்&nbsp;</h2><p> </p><p>தாயகத்தையும், புலம்பெயர்ந்து வாழும் சொந்தங்களையும் குறைந்த செலவில் இணைக்கும் அவரது தொலைநோக்கு வர்த்தக உத்தி, ஐரோப்பா முழுவதும் காட்டுத்தீ போலப் பரவியது. 
2017-இல் அந்த நிறுவனத்தைச் சுவிட்சர்லாந்து முதலீட்டாளர்களுக்கு விற்றதன் மூலம் சர்வதேச அளவில் அறியப்படும் தமிழ் மில்லியனராக உயர்ந்தார். </p><p>அதோடு லெபாராவோடு நின்றுவிடாது 2014-இல் லண்டனைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கும் 'IBC தமிழ்' ஊடகக் குழுமத்தைக்கொள்வனவு செய்து , அதனை ஈழத்தமிழர்களுக்கான எல்லைகடந்த ஒரே ஒரு பேரூடகமாக உருவாக்கி இன்றும் அதன் தலைவராகத் தனது பயணத்தை தொடர்கிறார் .</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b70fcddd-7cef-463a-8d18-81ab46fbdbe4/26-6a7b02b1b73e2.webp' /></p><p>ஐரோப்பிய பொருளாதாரச்சூழலில் வெற்றிகரமான வியாபாரத்தில் ஆயிரக்கணக்கான கோடிகளை ஈட்டிய பிறகும், தான் பிறந்த தாய்நிலத்தின் மீது அவருக்கு இருந்த பற்றின் காரணமாக போரினால் சிதைந்து கிடந்த தாயகப்பகுதிக்கு மீண்டும் பொருளாதார ரீதியாக உயிர் கொடுக்க வேண்டும் என்ற அவரது தணியாத ஆசையின் விளைவாக உருவானதுதான் 'ரீச்சா (ReeCha) ஒருங்கிணைந்த பண்ணை சூழலியல் சுற்றுலா மையம் ஆகும் . </p><p>
பரந்து விரிந்த அந்த நிலப்பரப்பில் இயற்கை உரங்களைக் கொண்டு பராமரிக்கப்படும் கரிமப் பண்ணைகள், பலவகை மிருகங்கள் மற்றும் பறவைகள் பூங்கா, பிரமாண்டமான நீர் விளையாட்டு வளாகம், தீம் பார்க் என அனைவரையும் கவரும் வகையில் ஒரு சுற்றுலாச் சொர்க்கத்தையே உருவாக்கியுள்ளார். </p><p>
அத்துடன் பன்னாட்டுச் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் நட்சத்திர விடுதிகள் அறைகள், ஸ்பா, உடற்பயிற்சிக் கூடங்கள் மற்றும் உணவகங்களும் அங்கு அமைக்கப்பட்டுள்ளன.
 "முப்பதாண்டு கால கொடூர போருக்குப் பிறகும் நமது வடபிராந்தியத்தில் பெரிய அளவிலான பொருளாதார முதலீட்டு வளர்ச்சிப் பணிகள் எவையும் நடக்கவில்லை. </p><p>எனது சொந்த மண்ணுக்கும், என்னை உருவாக்கிய மக்களுக்கும் என்னால் முடிந்த மறுவாழ்வை அளிக்க வேண்டும் என்ற ஒரே எண்ணம்தான் இந்த பிரமாண்ட திட்டத்தின் பின்னணியில் உள்ளது" என்று Quote இதழிடம் பாஸ்கரன் கந்தையா உருக்கமுடன் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>யுத்தத்திற்குப் பிந்தைய காலத்தில் வட இலங்கையின் பொருளாதாரம் தேக்கமடைந்து கிடந்த சூழலில், ரீச்சா மையத்தில் பாஸ்கரன் செய்த முதலீட. அந்தப்பகுதியில் ஒரு புதிய மறுமலர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><p> இன்றைக்கு அந்த மையத்தில் மட்டும் சுமார் 400 பேருக்கு நிரந்தர வேலைவாய்ப்பும், 100 பேருக்குப் பகுதிநேர வேலைவாய்ப்பும் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் நேரடியாகப் பயனடைகின்றன. 
அதுமட்டுமன்றி, 2025-ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 3 லட்சம் சுற்றுலாப் பயணிகள் இந்த மையத்தைப் பார்வையிட்டுள்ளனர். </p><p>இதனால் யாழ்ப்பாணப் பகுதியிலுள்ள சிறு வியாபாரிகள், ஆட்டோ மற்றும் வாகன ஓட்டுநர்கள், உள்ளூர் கைவினைஞர்கள் என பலதரப்பட்ட மக்களின் பொருளாதாரமும் கணிசமாக உயர்ந்துள்ளது எனவும் அந்த இதழ் புகழாரம் சூடியுள்ளது </p><p>. 
ஈழத்தமிழர்களின் தேச நலன் தொடர்பிலான கருத்தாடல்களில் தேசிய முதலாளிகள் உருவாக்கப்பட வேண்டும் என்ற சிந்தனை சரியானமுறையில் சமூகமயமாக்கப்படாமல் , ஒரு தரப்பின் விமர்சனம் இருந்து வந்தாலும் , தேவையுடைய ஒரு சமூகத்தின் பொருளாதார தேவையாக பாஸ்கரன் கந்தையா இருந்து வருகிறார் . </p><p>
ஐரோப்பாவின் முதன்மை வணிக இதழ் ஒன்றில் புகழாரம் சூட்டப்படும் ஒரு ஈழத்தமிழரை எண்ணி நமது 
சமூகமும் பெருமையுறும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை . 
வடக்கு கிழக்கின் இன்றைய தேவை அதை வளப்படுத்தக்கூடிய பாரம்பரியமான முதலீட்டாளர்களே என்பதை உணர்த்தி 
ஒரு முன்னுதாரனமாக தனது கனவுகளை நோக்கி வெற்றிகரமாக நகர்ந்து வருகிறார் திரு பாஸ்கரன் கந்தையா&nbsp; என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p><br></p>]]></content>
            <updated>2026-08-11T11:12:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>H. A. Roshan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடற்றொழிலாளர்கள் தொடர்ந்து முகங்கொடுக்கும் பிரச்சினைகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-lanka-fishermen-issue-1786446599"></link>
            <id>https://tamilwin.com/article/sri-lanka-fishermen-issue-1786446599</id>
            <summary type="text">கடற்றொழிலாளர்கள் அண்மைக்காலமாக பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். குறிப்பாக வடக்கில் இந்திய கடற்றொழிலாளர்களின் அச்சுறுத்தல் மற்றும் அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கடற்றொழிலாளர்கள் அண்மைக்காலமாக பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். </p><p>குறிப்பாக வடக்கில் இந்திய கடற்றொழிலாளர்களின் அச்சுறுத்தல் மற்றும் அவர்களின்
சட்டவிரோத கடற்றொழில் நடவடிக்கையால் வடக்கு கடற்றொழிலாளர்களின் தொழில்
பாதிப்படைகின்றது.</p><p> அதேவேளை கிழக்கில் தடைசெய்யப்பட்ட சுருக்குவலை பயன்பாட்டால்
கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிப்படைகின்றது என தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியின்
திருகோணமலை மாவட்டச் செயலாளர் சின்னமோகன் தெரிவித்தார்.
</p><p>
இன்று (11) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை
தெரிவித்தார். </p><p>அவர் மேலும் கூறுகையில் எரிபொருள் விலை உயர்வின் தாக்கத்தின்
மத்தியில் கடற்றொழில் துறையில் ஈடுபடும் கடற்றொழிலாளர்களின் தொழில் நடவடிக்கை இந்த
சட்டவிரோத சுருக்குவலை பயன்பாட்டால் கிழக்கில் குறிப்பாக திருகோணமலை
மாவட்டத்தில் உள்ள மீனவர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
</p><p>
சுருக்குவலை கடற்றொழில் பயன்பாட்டால் மீன்களின் இனப்பெருக்கமும் அதன்
வளர்ச்சியும் பாதிப்படைகின்றது.

எனவே சட்டவிரோத கடற்றொழில்&nbsp; நடவடிக்கையை உடனடியாக நிறுத்த கடற்றொழில்த்துறை
அமைச்சர் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கின்றார் சின்ன
மோகன்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-11T11:10:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Malaivanjan</name>
            </author>
            <title type="text"><![CDATA[குளவி கொட்டுக்கு இலக்கான 10 தோட்டத் தொழிலாளர்கள் வைத்தியசாலையில் அனுமதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/10-plantation-workers-admitted-to-hospital-1786446474"></link>
            <id>https://tamilwin.com/article/10-plantation-workers-admitted-to-hospital-1786446474</id>
            <summary type="text">நோர்வூட் - அயரபிதோட்ட பகுதியில் குளவி கொட்டுக்கு இலக்காகிய 10 பேர் தோட்டத்
தொழிலாளர்கள் கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>நோர்வூட் - அயரபிதோட்ட பகுதியில் குளவி கொட்டுக்கு இலக்காகிய 10 பேர் தோட்டத்
தொழிலாளர்கள் கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p><p>

இந்த சம்பவம் இன்று(11.08.2026) 1 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பாதுகாப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
</p><p>
அயரபிதோட்ட பகுதியில் வழமை போன்று தேயிலை பறித்துக் கொண்டிருந்த தோட்டத் தொழிலாளர்களே இவ்வாறு குளவி கொட்டுக்கு
இலக்காகியுள்ளனர்.
</p><h2>
10 பேர் வைத்தியசாலையில் அனுமதி</h2><p>
தேயிலைத் தோட்டப் பகுதியில் உள்ள மரமொன்றில் கட்டப்பட்டிருந்த குளவிக்கூடு
கலைந்ததைத் தொடர்ந்து, அங்கிருந்த குளவிகள் திடீரென தொழிலாளர்கள் மீது
தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/58517cf0-8604-4a83-aa1f-7a3c500eac5d/26-6a7b02d071146.webp' /></p><p>
</p><p>
குளவிகள் கூட்டமாக தொழிலாளர்களைத் தாக்கியதில் குளவி கொட்டுக்கு
உள்ளனா 10 பேர் வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டதகவும், மூன்று பேர் மாத்திரம் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று
வருவதாகவும் ஏனையவர் சிகிச்சையின் பின் வீடு திரும்பியதாக வைத்தியசாலை
வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.
</p><p>
குளவி தாக்குதல் காரணமாக தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் அச்ச நிலை
ஏற்பட்டதுடன், குளவிக்கூடு அமைந்திருந்த பகுதியிலும் பாதுகாப்பு நடவடிக்கைகள்
மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>

இதேவேளை மலையகத்தின் பல்வேறு தேயிலைத் தோட்டப் பகுதிகளில் குளவி மற்றும்
தேனீக்களின் தாக்குதல்கள் அவ்வப்போது பதிவாகி வருகின்ற நிலையில்,
தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.&nbsp; &nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bc7cc6fc-9c9a-4f99-a2c7-fc45ccfd8113/26-6a7b02d140ad2.webp' /></p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-11T11:09:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் பொலிஸார் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் ஆற்றில் சடலமாக மீட்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/suspect-found-dead-after-shooting-at-police-1786445667"></link>
            <id>https://canadamirror.com/article/suspect-found-dead-after-shooting-at-police-1786445667</id>
            <summary type="text">&amp;nbsp;கனடாவின் கல்கரி நகரின் தென்மேற்குப் பகுதியில் உள்ள ஸ்ப்ரூஸ் க்ளிஃப் பகுதியில் திங்கள்கிழமை முற்பகல் 11:45 மணியளவில் பொலிஸார் வாகனச் சோதனையில் ஈட...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கனடாவின் கல்கரி நகரின் தென்மேற்குப் பகுதியில் உள்ள ஸ்ப்ரூஸ் க்ளிஃப் பகுதியில் திங்கள்கிழமை முற்பகல் 11:45 மணியளவில் பொலிஸார் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, வாகனத்தில் இருந்த நபர் ஒருவர் திடீரென பொலிஸாரை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினார்.
</p><p>இந்தத் தாக்குதலில் பொலிஸ் அதிகாரி ஒருவர் இருமுறை துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி காயமடைந்தார். தாக்குதலை நடத்திய நபர் உடனடியாக எட்வர்தி பூங்காவை நோக்கித் தப்பிச் சென்றார்.
</p><p>தப்பியோடிய நபரைக் கண்டுபிடிக்க எச்.ஏ.டபிள்யூ.சி.எஸ் ஹெலிகொப்டர் உதவியுடன் பொலிஸார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/34ce2902-cf7d-480f-9bfe-18ed2e05f114/26-6a7aff6507856.webp' /></p><p> </p><p>
தப்பிச் செல்லும் வழியில் அந்த நபர் பொலிஸாரையும் அருகிலிருந்த பொதுமக்களையும் நோக்கித் தொடர்ச்சியாகத் துப்பாக்கிச்சூடு நடத்தியதுடன், வாகனம் ஒன்றை மிரட்டிப் பறித்து பூங்காவின் வழியே ஓட்டிச் சென்றுள்ளார்.</p><p> பின்னர் அந்த வாகனம் சேற்றில் சிக்கிக் கொண்டது.
பொலிஸார் அவரை நெருங்குவதற்குள், அவர் பூங்காவிற்கு அருகில் உள்ள ஆற்றில் சடலமாக மீட்கப்பட்டார்.</p><p> அவர் தனக்குத்தானே சுட்டுத் தற்கொலை செய்துகொண்டதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p> 
எனினும், பொலிஸார் நடத்திய பதில் தாக்குதலில் அவர் காயமடைந்தாரா என்பது குறித்து 'அல்பெர்ட்டா தீவிர சம்பவங்கள் விசாரணை குழு' விசாரணை நடத்தி வருகிறது.
</p><p>காயமடைந்த பொலிஸ் அதிகாரி தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சீரான நிலையில் உள்ளதாக பொலிஸ் தலைமை அதிகாரி கேட்டி மெக்லெலன் தெரிவித்துள்ளார்.</p><p>
சம்பவத்தின் போது அப்பகுதியில் "ஆபத்தான நபர்" தொடர்பிலான எச்சரிக்கை விடுக்கப்பட்டு, பொதுமக்கள் வீடுகளுக்குள்ளேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டனர். 
பின்னர் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதை அடுத்து எச்சரிக்கை திரும்பப் பெறப்பட்டது. இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் தொடர்ந்து தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-11T11:07:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜனாதிபதிக்கு மகாநாயக்க தேரர்கள் அனுப்பிய கடிதம்.. அமைச்சர் வெளியிட்ட உத்தியோகபூர்வ தகவல்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/22nd-amendment-mahanayake-thero-nalinda-jeyatissa-1786444244"></link>
            <id>https://tamilwin.com/article/22nd-amendment-mahanayake-thero-nalinda-jeyatissa-1786444244</id>
            <summary type="text">நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்கும் அரசியலமைப்புத் திருத்தம் பொருத்தமற்றது எனத் தெரிவித்து மகாநாயக்க தேரர்களினால் அனுப்பப்பட்ட கடிதம் ஜனாதிபத...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்கும் அரசியலமைப்புத் திருத்தம் பொருத்தமற்றது எனத் தெரிவித்து மகாநாயக்க தேரர்களினால் அனுப்பப்பட்ட கடிதம் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்குக் கிடைத்துள்ளதாக அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ உறுதிப்படுத்தினார்.
</p><p>
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று (11) நடைபெற்ற போது, ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர் இதனைத் தெரிவித்தார். </p><p>குறித்த கடிதம் கிடைத்ததைத் தொடர்ந்து, தாமும் நீதி அமைச்சரும் மகாநாயக்க தேரர்களை நேரில் சந்தித்து நிலைமைகள் குறித்து தெளிவுபடுத்தியதாக அவர் குறிப்பிட்டார்.&nbsp;</p><h2>நீதியரசர்களின் ஓய்வு வயது நீட்டிப்பு..&nbsp;&nbsp;</h2><p>

22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் மற்றும் நீதிச்சேவைச் சட்டத் திருத்தம் ஆகியவற்றை அமைச்சரவையில் சமர்ப்பிப்பதற்கு முன்னதாகவே, மகாநாயக்க தேரர்கள் கடிதத்தில் குறிப்பிட்டிருந்த விடயங்கள் தொடர்பில் தமது தரப்பு விளக்கங்களை முன்வைத்ததாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0b83f802-136c-4ae7-8311-3864473ebc6c/26-6a7b00348b08e.webp' /></p><p> </p><p>மேலும், மல்வத்து, அஸ்கிரிய மற்றும் ராமன்ன மகா நிகாயக்களின் மகாநாயக்க தேரர்களைச் சந்தித்து உண்மைகளை விளக்கியதாக அவர் கூறினார்.</p><p>

இதற்கிடையில், கடந்த 4ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ, மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதம் தங்களுக்கு கிடைக்கப் பெறவில்லை என தெரிவித்தார்.&nbsp;</p><p>இந்நிலையில், அதற்கு முன்னாளே, தாமும் நீதி அமைச்சரும் மல்வத்து, அஸ்கிரிய மற்றும் ராமன்ன பிரிவுகளின் மகாநாயக்க தேரர்களைச் சந்தித்து 22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் குறித்துத் தெளிவுபடுத்தியதாக அவர் தற்போது கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-11T11:05:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழ்நாடு பாக்ஸ் ஆபிஸ்: டிசி திரைப்படம் 4 நாட்களில் செய்துள்ள வசூல் விவரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/dc-movie-4-days-tamilnadu-box-office-collection-1786444524"></link>
            <id>https://cineulagam.com/article/dc-movie-4-days-tamilnadu-box-office-collection-1786444524</id>
            <summary type="text">கடந்த வாரம் வெளிவந்த டிசி திரைப்படத்தின் 4 நாட்கள் வசூல் குறித்த விவரம் வெளியாகியுள்ளது; அதைப்பற்றி பார்க்கலாம் வாங்க.

டிசி

இயக்குநராக பல சூப்பர...</summary>
            <content type="html"><![CDATA[<p>கடந்த வாரம் வெளிவந்த டிசி திரைப்படத்தின் 4 நாட்கள் வசூல் குறித்த விவரம் வெளியாகியுள்ளது; அதைப்பற்றி பார்க்கலாம் வாங்க.</p><p></p><h2>

டிசி
</h2><p>
இயக்குநராக பல சூப்பர்ஹிட் திரைப்படங்களை கொடுத்த லோகேஷ் கனகராஜ், ஹீரோவாக அறிமுகமாகியுள்ள திரைப்படம் டிசி. இப்படத்தை இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்க, சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8e3d768f-9402-4d95-9da0-02166d20a2b3/26-6a7afaf0a50f1.webp' /></p><p>இப்படத்தில் லோகேஷுடன் இணைந்து வாமிகா கேபி, சஞ்சனா ஆகியோர் நடித்துள்ளனர். பெரிதும் எதிர்பார்ப்புடன் வெளிவந்த டிசி திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் அமோக வரவேற்பை பெற்று வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/355c1edb-9d11-4701-b5c7-539e2086c125/26-6a7afaf15761f.webp' /></p><h2> 

தமிழ்நாடு வசூல்</h2><p>

தமிழில் வெளிவரும் திரைப்படங்கள் வெளிமாநிலங்களில் எவ்வளவு <a href="https://www.youtube.com/watch?v=rB2x5qRaMNQ" target="_blank">வசூல் </a>செய்கிறது என்பது எவ்வளவு முக்கியமோ, அதே போல் தமிழ்நாட்டில் எவ்வளவு வசூலிக்கிறது என்பதும் மிகமுக்கியமாகும்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fe3fb11f-15b3-4b00-a6f8-4dc82c1429d9/26-6a7afaefebe25.webp' /></p><p>அப்படி, கடந்த வாரம் வெளிவந்த டிசி திரைப்படம் 4 நாட்களில் தமிழ்நாட்டில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 4 நாட்களில் தமிழ்நாட்டில் மட்டுமே இப்படம் ரூ. 8 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது. இனி வரும் நாட்களில் எவ்வளவு வசூல் செய்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.</p>]]></content>
            <updated>2026-08-11T11:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[போதைப்பொருள் கடத்தலுக்கு மரண தண்டனையா..! இறுதி முடிவு தொடர்பில் அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/will-drug-traffickers-receive-the-death-penalty-1786443843"></link>
            <id>https://tamilwin.com/article/will-drug-traffickers-receive-the-death-penalty-1786443843</id>
            <summary type="text">போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் தரப்பினருக்கு மரண தண்டனை வழங்குவது தொடர்பான நடவடிக்கை தொடர்பில் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என அமைச்சர் நளிந்த ஜயதிஸ...</summary>
            <content type="html"><![CDATA[<p>போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் தரப்பினருக்கு மரண தண்டனை வழங்குவது தொடர்பான நடவடிக்கை தொடர்பில் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். </p><p>

இன்றைய தினம் (11.08.2026) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
</p><p>
அவர் மேலும் தெரிவிக்கையில்,

போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் தரப்பினருக்கு மரண தண்டனை வழங்குவது தொடர்பான முன்மொழிவு குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை.</p><h2>பிரச்சினையின் தீவிரத்தன்மை</h2><p>
</p><p>
இது தொடர்பாக சில தரப்பினரால் முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டன. எதிர்காலத்தில் ஒரு முடிவு எடுக்கப்படும்.

இந்த பிரச்சினையின் தீவிரத்தன்மை குறித்து விவாதிக்கும்போது, ​​சில தரப்பினரிடமிருந்து முன்மொழிவு, யோசனை வந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/da6e07d5-3a20-46e0-a79d-0441629d65fa/26-6a7afef07e496.webp' /></p><p>
</p><p>
எனினும் அதை எப்படிச் செய்வது என்பது குறித்து இன்னும் இறுதி முடிவோ அல்லது உடன்பாடோ எட்டப்படவில்லை.</p><p>

பாதாள உலகம், போதைப்பொருள் கடத்தல் மற்றும் இது போன்றவற்றுடன் நடைபெறும் செயல்முறை குறித்து விவாதிக்கும்போது ஒவ்வொரு தரப்பினராலும் முன்வைக்கப்பட்ட முன்மொழிவு மட்டுமே இது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-11T10:58:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாளை கீரிமலையில் முன்னெடுக்கப்படவுள்ள போராட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/protest-in-keerimalai-1786444405"></link>
            <id>https://tamilwin.com/article/protest-in-keerimalai-1786444405</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் கீரிமலை பகுதியில் கொட்டப்பட்ட குப்பைகளை மீள அள்ளுமாறு கோரி ஆடி
அமாவாசை தினமான நாளைய தினம்(12.08.2026) கவனயீர்ப்பு போராட்டம்
முன்னெடுக்கப...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் கீரிமலை பகுதியில் கொட்டப்பட்ட குப்பைகளை மீள அள்ளுமாறு கோரி ஆடி
அமாவாசை தினமான நாளைய தினம்(12.08.2026) கவனயீர்ப்பு போராட்டம்
முன்னெடுக்கப்பட்டவுள்ளது.
</p><p>
வலி. வடக்கு பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்ட கீரிமலை பகுதியில் சுண்ணக்கல்
அகழப்பட்ட பாரிய பள்ளங்களுக்குள், வலி. தெற்கு பிரதேச சபையினர் சட்டவிரோதமான
முறையில் இலத்திரனியல் கழிவுகள், மருத்துவ கழிவுகள் உள்ளிட்ட பல்வேறு வகையான
கழிவுகளை கொட்டியுள்ளனர்.</p><h2>கீரிமலை பகுதியில் பலர் ஒன்று கூடுவார்கள்</h2><p>கொட்டப்பட்ட கழிவுகளை மீள அள்ளவேண்டும் என வலி. வடக்கு பிரதேச சபையின் 34
உறுப்பினர்களில் 26 உறுப்பினர்கள் கையெழுத்து இட்டு, வடமாகாண ஆளுநர், வடமாகாண
உள்ளூராட்சி ஆணையாளர், மாவட்ட செயலர், மத்திய சுற்றாடல் அதிகார சபையினர்,
தெல்லிப்பழை பிரதேச செயலர் ஆகியோரிடம் கடந்த வாரம் முறையிட்டிருந்த போதிலும்,
இதுவரையில் காத்திரமான எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என குற்றம்
சாட்டப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/867cff4e-22f9-4205-994f-10d2eee503d7/26-6a7b0042e56f2.webp' /></p><p>இந்நிலையில் ஆடி அமாவசை தினமான நாளைய தினம் புதன்கிழமை, குப்பைகள் கொட்டப்பட்ட
பகுதியில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதுடன், கொட்டப்பட்ட
குப்பைகளால் ஏற்படும் சூழல்சார், சமூகம்சார் பிரச்சினைகள் தொடர்பில்
விழிப்புணர்வு ஊட்டும் நிகழ்வும் முன்னெடுக்கப்படவுள்ளது.
</p><p>
அதேவேளை, ஆடி அமாவாசை தினத்தன்று தமது முன்னோருக்கு பிதிர்கடன்களை நிறைவேற்ற
நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கீரிமலை பகுதியில் பலர் ஒன்று
கூடுவார்கள் என்றும், மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய தீர்த்தோற்சவத்தை
முன்னிட்டு குறித்த பகுதியால் மாவிட்டபுர கந்தன் தீர்த்தமாட செல்வார்
என்பதாலும், கொட்டப்பட்ட குப்பைகளை ஆடி அமாவசை தினத்திற்கு முன்னர், மீள அள்ள
வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்ட போதிலும் குப்பைகளை அள்ள எவ்வித
நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-11T10:58:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Farook Sihan</name>
            </author>
            <title type="text"><![CDATA[முஸ்லிம் பெண் ஊழியர்களின் உரிமை மீறல் : மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/violation-of-rights-of-muslim-female-employees-1786444827"></link>
            <id>https://ibctamil.com/article/violation-of-rights-of-muslim-female-employees-1786444827</id>
            <summary type="text">கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் முஸ்லிம் பெண் ஊழியர்களின் ஆடையைக் காரணம் காட்டி, கடமை பொறுப்பேற்பதைத் தடுத்த விவகாரம் தொடர்பில்&amp;nbsp;இலங்கை மனித உ...</summary>
            <content type="html"><![CDATA[<p><https: fromsmash.com="" qn13yzn51~-dt="">கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் முஸ்லிம் பெண் ஊழியர்களின் ஆடையைக் காரணம் காட்டி, கடமை பொறுப்பேற்பதைத் தடுத்த விவகாரம் தொடர்பில்&nbsp;இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அலுவலகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.</https:></p><p><https: fromsmash.com="" qn13yzn51~-dt="">குறித்த வைத்தியசாலையில் நியமனம் பெற்ற உதவி சுகாதார
உத்தியோகத்தர்களின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளமைக்கு எதிராக, நேற்று (10)
மாலை கல்முனை பிராந்திய இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அலுவலகத்தில்
ஐந்து முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
</https:></p><p><https: fromsmash.com="" qn13yzn51~-dt="">

இப்பிரச்சினையை சுமூகமான முறையில் தீர்த்துக்கொள்வது தொடர்பில், கல்முனை
வடக்கு ஆதார வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளரையும், சம்பந்தப்பட்ட சுகாதார
அதிகாரியையும் சட்டத்தரணி முபாறக் முஅஸ்ஸம் மற்றும் சட்டத்தரணி றுடானி ஸாஹிர்
ஆகியோர் நேரில் சந்தித்து கலந்துரையாடல்களை மேற்கொண்டனர்.</https:></p><p><https: fromsmash.com="" qn13yzn51~-dt=""></https:></p><h2><https: fromsmash.com="" qn13yzn51~-dt="">அடிப்படை உரிமைகள் மீறல்&nbsp;</https:></h2><p><https: fromsmash.com="" qn13yzn51~-dt="">
</https:></p><p><https: fromsmash.com="" qn13yzn51~-dt="">எனினும், குறித்த சந்திப்பின் போது நியமனம் பெற்ற உதவி சுகாதார
உத்தியோகத்தர்கள் வேறு வைத்தியசாலைகளுக்கு இடமாற்றம் பெற்றுச் செல்வதே இதற்கான
சிறந்த தீர்வாகும் என்ற நிலைப்பாட்டை அதிகாரிகள் தொடர்ந்தும் தெரிவித்துள்ளனர்.</https:></p><p><https: fromsmash.com="" qn13yzn51~-dt=""><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e338f1e3-9431-4df7-8e34-0de7280ddbad/26-6a7affb0ca976.webp' /></https:></p><p><https: fromsmash.com="" qn13yzn51~-dt="">
</https:></p><p><https: fromsmash.com="" qn13yzn51~-dt="">பாதிக்கப்பட்ட உதவி சுகாதார உத்தியோகத்தர்களுடன் மேற்கொள்ளப்பட்ட ஆலோசனைகளின்
அடிப்படையில், அவர்களின் அடிப்படை உரிமைகள் அப்பட்டமாக மீறப்பட்டுள்ளமை உறுதி
செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.</https:></p><p><https: fromsmash.com="" qn13yzn51~-dt="">இன்று அல்லது நாளை, அடிப்படை உரிமை மீறலுக்குப் பொறுப்பான
அதிகாரிகளுக்கு உத்தியோகபூர்வ அறிவுறுத்தல் அனுப்பப்படவுள்ளதாகவும் அதனைத் தொடர்ந்து முறைப்படியான சட்டரீதியான நடவடிக்கைகளும், விசாரணைகளும்
தீவிரமாக முன்னெடுக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.</https:></p><p><https: fromsmash.com="" qn13yzn51~-dt="">

மேலும், பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு நியாயத்தைப் பெற்றுக்கொடுக்கும் வகையில்,
இவ்விடயம் தொடர்பாக இலங்கையின் உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைகள் மனுவைத்
தாக்கல் செய்வதற்கான முதற்கட்ட ஏற்பாடுகளும் பாதிக்கப்பட்ட தரப்பின் சார்பில்
தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.</https:></p><p><https: fromsmash.com="" qn13yzn51~-dt=""></https:></p><p><https: fromsmash.com="" qn13yzn51~-dt=""></https:></p><p><https: fromsmash.com="" qn13yzn51~-dt=""><br></https:></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><https: fromsmash.com="" qn13yzn51~-dt=""><br></https:></p>]]></content>
            <updated>2026-08-11T10:55:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தீவிரமடையும் மத்திய கிழக்கு போர்: உலக நாடுகளுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/standoff-between-us-iran-over-the-strait-of-hormuz-1786438034"></link>
            <id>https://ibctamil.com/article/standoff-between-us-iran-over-the-strait-of-hormuz-1786438034</id>
            <summary type="text">ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கு ஈரான் பல நிபந்தனைகளை முன்வைத்துள்ளது. இதற்கு பதிலளிக்கும் விதமாக, கடந்தகால போர்கள், தாக்குதல்கள் மற்றும் மோதல்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கு ஈரான் பல நிபந்தனைகளை முன்வைத்துள்ளது. </p><p>இதற்கு பதிலளிக்கும் விதமாக, கடந்தகால போர்கள், தாக்குதல்கள் மற்றும் மோதல்களால் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு ஈரான் இழப்பீடு வழங்க வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கோரியுள்ளார்.
</p><p>
ட்ரம்பின் இந்தக் கோரிக்கையால் அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளில் மேலும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.</p><p></p><h2>அதிகரித்த எண்ணெய் விலை</h2><p>இதனால் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பது தொடர்பான உடன்பாடு எட்டப்படுவதற்கான வாய்ப்புகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5eb17352-fdf0-4d21-9224-a06a71e3b52e/26-6a7af39971168.webp' /></p><p>
இதன் தாக்கமாக சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை மீண்டும் அதிகரித்துள்ளது. </p><p>நேற்று மசகு எண்ணெய் விலை சுமார் 5 சதவீதம் உயர்ந்ததைத் தொடர்ந்து, இன்று பிரெண்ட் ரக மசகு எண்ணெயின் விலை சுமார் 88 டொலரை அண்மித்துள்ளதுடன், WTI ரக மசகு எண்ணெயின் விலையும் 82 டொலருக்கு மேல் உயர்ந்துள்ளது.
</p><p>
உலகின் முக்கியமான எண்ணெய் போக்குவரத்து பாதைகளில் ஒன்றான ஹோர்முஸ் நீரிணை வழியாக கச்சா எண்ணெய் ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளமை, சந்தையில் விநியோகத் தட்டுப்பாடு குறித்த அச்சத்தை அதிகரித்துள்ளதாக சந்தை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.</p><p> இதனால் அமெரிக்கா ஈரான் இடையிலான பேச்சுவார்த்தைகளில் ஏற்படும் ஒவ்வொரு முன்னேற்றமும் அல்லது பின்னடைவும் சர்வதேச எண்ணெய் விலையில் உடனடி தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-11T10:45:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் ஹெலிகொப்டர் விபத்து: 3 பேர் லேசான காயங்களுடன் மீட்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/three-people-injured-after-helicopter-crashed-1786444342"></link>
            <id>https://canadamirror.com/article/three-people-injured-after-helicopter-crashed-1786444342</id>
            <summary type="text">&amp;nbsp;கனடாவின் &#039;நார்த்வெஸ்ட் டெரிட்டரீஸ்&#039; பகுதியில் உள்ள ஏரி ஒன்றில் ஹெலிகொப்டர் விழுந்து விபத்துக்குள்ளானதில் மூன்று பேர் காயமடைந்துள்ளதாக கனடிய பொலி...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கனடாவின் 'நார்த்வெஸ்ட் டெரிட்டரீஸ்' பகுதியில் உள்ள ஏரி ஒன்றில் ஹெலிகொப்டர் விழுந்து விபத்துக்குள்ளானதில் மூன்று பேர் காயமடைந்துள்ளதாக கனடிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். </p><p>
யெல்லோநைஃப் நகருக்கு வடமேற்கே சுமார் 375 கிலோமீட்டர் தொலைவில் உள்ள 'கமேட்டி' பழங்குடியின குடியிருப்பு பகுதிக்கு அருகே ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. </p><p>
விபத்து நடந்து சுமார் மூன்று மணி நேர தேடுதலுக்குப் பிறகு, ஹெலிகொப்டரில் இருந்த மூன்று பேரும் கண்டுபிடிக்கப்பட்டு லேசான காயங்களுடன் உள்ளூர் சுகாதார மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/221b674e-fa6c-4d5f-9a4e-af45ffdff168/26-6a7afa389e561.webp' /></p><p> </p><p>
பாதிக்கப்பட்டவர்களைத் தேடும் பணியில் உள்ளூர் அதிகாரிகளும் அப்பகுதி மக்களும் உதவிகளை வழங்கியதாக பொலிஸார் தெரிவித்தனர். </p><p>
இந்த விபத்துக்கான காரணம் குறித்து புலனாய்வாளர்கள் இதுவரை விவரங்களை வெளியிடவில்லை.</p><p>எனினும், விபத்து தொடர்பில் மேல் விசாரணைகளை மேற்கொள்வதற்காக இது கனடாவின் போக்குவரத்து பாதுகாப்பு வாரியத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-11T10:42:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shan</name>
            </author>
            <title type="text"><![CDATA[முல்லைத்தீவில் கடற்றொழிலாளர்களின் வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/seawater-enters-fishermen-s-huts-in-mullaitivu-1786443235"></link>
            <id>https://tamilwin.com/article/seawater-enters-fishermen-s-huts-in-mullaitivu-1786443235</id>
            <summary type="text">கடல்நீர்&amp;nbsp;வாடிகளுக்குள்&amp;nbsp;புகுந்தமையினால்&amp;nbsp;பாதிக்கப்பட்ட&amp;nbsp;முல்லைத்தீவு கடற்றொழிலாளர்களை&amp;nbsp;பிரதேச சபை உறுப்பினர்&amp;nbsp;நேரில் சந்தித்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>கடல்நீர்&nbsp;வாடிகளுக்குள்&nbsp;புகுந்தமையினால்&nbsp;பாதிக்கப்பட்ட&nbsp;முல்லைத்தீவு கடற்றொழிலாளர்களை&nbsp;பிரதேச சபை உறுப்பினர்&nbsp;நேரில் சந்தித்து நிலைமைகளை கேட்டறிந்துள்ளார்.</p><p>முல்லைத்தீவு மாவட்டத்தில் திடீரென அதிகரித்த கடற்சீற்றம் காரணமாக கடல்நீர்
கரையைத் தாண்டி கடற்றொழிலாளர்களின் வாடிகளுக்குள் இன்று (11.08.2026) காலை
புகுந்ததால், அப்பகுதி கடற்றொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.</p><p>
கடல்நீர் உட்புகுந்ததன் காரணமாக கடற்றொழிலாளர்களின் வாடிகள் மற்றும் அதனைச் சூழவுள்ள
பகுதிகளில் நீர் தேங்கியுள்ளதுடன்,&nbsp; அன்றாட நடவடிக்கைகளும்
பாதிக்கப்பட்டுள்ளன</p><p>
இந்நிலையில், பாதிக்கப்பட்ட மக்களை கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினர்
தொம்மைப்பிள்ளை பவுள்ராஜ் நேரில் சந்தித்து நிலைமைகள் தொடர்பிலும்.,
கடற்சீற்றம் தொடரும் பட்சத்தில் ஏற்படக்கூடிய பாதிப்புகளைத் தவிர்ப்பதற்காக
உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.</p><p></p><p>&nbsp;</p><p><br></p>]]></content>
            <updated>2026-08-11T10:41:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுரேஷ் சலே மீதான விசாரணை.. ஷானி அபேசேகர - ரவி செனவிரத்னவை நியமிக்க கோரிய கர்தினால்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/suresh-salley-shani-abeysekara-cardinal-malcom-1786430719"></link>
            <id>https://tamilwin.com/article/suresh-salley-shani-abeysekara-cardinal-malcom-1786430719</id>
            <summary type="text">அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே தாக்கல் செய்த ரிட் மனுவுடனான இடைக்கால மனுக்கள் நேற்றைய தினம் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் பரி...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே தாக்கல் செய்த ரிட் மனுவுடனான இடைக்கால மனுக்கள் நேற்றைய தினம் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.</p><p>உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பிலான விசாரணைகளுக்கு அமைவாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தாம் கைது செய்யப்பட்டுத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் அவர் இந்த மனுவை தாக்கல் செய்திருந்தார்.&nbsp;</p><p>சுரேஷ் சலே சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சீவ ஜெயவர்தன நீதிமன்றத்தில் தெரிவிக்கையில், மதத் தலைவர்கள் அரசியல் நடவடிக்கைகளில் தலையிடுவது பொருத்தமானது அல்ல எனக் குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><h2>கர்தினாலின் கோரிக்கை..&nbsp;</h2><p>இதன்போது அவர், அமைச்சர் பிமல் ரத்நாயக்க நாடாளுமன்றத்தில் உரையாற்றிய கூற்றை சுட்டிக்காட்டிய அவர், ஷானி அபேசேகர மற்றும் ரவி செனவிரத்ன ஆகிய இரு அதிகாரிகளையும் அந்தந்தப் பதவிகளுக்கு நியமிக்குமாறு பேராயரே (கர்டினல்) கோரிக்கை விடுத்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளதை நினைவுகூர்ந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e882c8ec-8eb5-4d8e-9be4-f4c9eafaa491/26-6a7af830566d8.webp' /></p><p>அத்துடன், குறித்த இரு அதிகாரிகளும் தாம் தீவிர அரசியலில் ஈடுபட்டதாகவும், தேசிய மக்கள் சக்தியின் ஓய்வுபெற்ற பொலிஸ் கூட்டு அமைப்பில் பணியாற்றியதாகவும் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த சத்தியக்கடதாசிகளில் குறிப்பிட்டுள்ளதாகவும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><p>குற்றவியல் விசாரணைகளில் அரசியல் தலையீடுகளுக்கு அனுமதிக்கக் கூடாது என்றும், நீதித்துறை மற்றும் சட்டமா அதிபர் திணைக்களத்தின் சுயாதீனத்தன்மை பாதிக்கப்படக் கூடாது என்றும் ஜானக டி சில்வா ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளதாகவும் அவர் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.</p><p> இருப்பினும், பேராயரால் சமர்ப்பிக்கப்பட்ட இடைக்கால மனுவுக்கு தாம் ஆட்சேபனை தெரிவிக்கப் போவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-11T10:37:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[பூனையால் வந்த வினை!! வீங்கிப்போன முகத்தால் ஸ்ருதி ஹாசன் எடுத்த முடிவு..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/shruti-ihaasan-affected-skin-alergy-for-her-cat-1786444615"></link>
            <id>https://viduppu.com/article/shruti-ihaasan-affected-skin-alergy-for-her-cat-1786444615</id>
            <summary type="text">ஸ்ருதி ஹாசன்தென்னிந்திய சினிமாவில் பாடகியாகவும் நடிகையாகவும் திகழ்ந்து வரும் நடிகை ஸ்ருதி ஹாசன், பாலிவுட்டிலும் கால் பதித்து நடித்து வருகிறார். ஸ்ருதி...</summary>
            <content type="html"><![CDATA[<h2>ஸ்ருதி ஹாசன்</h2><p>தென்னிந்திய சினிமாவில் பாடகியாகவும் நடிகையாகவும் திகழ்ந்து வரும் நடிகை ஸ்ருதி ஹாசன், பாலிவுட்டிலும் கால் பதித்து நடித்து வருகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7129b346-caa3-4588-a8a3-5f9ce2063eb5/26-6a7afb49eda53.webp' /></p><p> ஸ்ருதி ஹாசன் தனிப்பட்ட விதத்தில் பூனை பிரியர். ஆசை ஆசையாக தான் வளர்த்த பூனையை, அதன் பழைய உரிமையாளரிடமே கொடுத்துவிட்டதாக ஸ்ருதி ஹாசன் வேதனையுடன் தெரிவித்துள்ளார். </p><p>பூனையால் முகத்தில் கொப்பளங்கள், தோல் அலர்ஜி போன்றவை ஏற்பட்டதால் இந்த முடிவை எடுத்துள்ளதாக ஸ்ருதிஹாசன் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2d64f3d4-ab92-4e82-ba8f-23e31f99d871/26-6a7afb4aa2462.webp' /></p>]]></content>
            <updated>2026-08-11T10:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் மூன்று வாகனங்கள் மோதி விபத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/three-vehicle-collision-on-the-southern-expressway-1786444278"></link>
            <id>https://jvpnews.com/article/three-vehicle-collision-on-the-southern-expressway-1786444278</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;மாத்தறையில் இருந்து கொழும்பு நோக்கிச் செல்லும் பாதையில், தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இன்று (11) காலை மூன்று வாகனங்கள் மோதி விபத்துக்குள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;மாத்தறையில் இருந்து கொழும்பு நோக்கிச் செல்லும் பாதையில், தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இன்று (11) காலை மூன்று வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.</p><p>



அதிவேக நெடுஞ்சாலையின் கொக்மாதுவ மற்றும் இமதுவ பகுதிகளுக்கு இடையே, 115 ஆவது கிலோமீற்றர் தூண் அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.



இந்த விபத்தில் வாகனங்களில் ஒன்று கவிழ்ந்ததுடன், இருவர் காயமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aa25c8a9-660e-4396-a945-c1ede4209c01/26-6a7af9f7beb8a.webp' /></p><p>&nbsp;மேலும் விபத்து தொடர்பிலான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-08-11T10:29:12+00:00</updated>
        </entry>
    </feed>
