<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-07-25T10:48:12+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[வத்தளை துப்பாக்கிசூடு : இந்தியாவில் படகு மூலம் தரையிறங்கிய இரண்டு இலங்கையர்கள் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/two-sri-lankans-wattala-shooting-detained-in-india-1784975608"></link>
            <id>https://ibctamil.com/article/two-sri-lankans-wattala-shooting-detained-in-india-1784975608</id>
            <summary type="text">கொழும்பு வத்தளையில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் இரண்டு இலங்கையர்கள், படகு மூலம் சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு வத்தளையில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் இரண்டு இலங்கையர்கள், படகு மூலம் சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்ததாகக் கூறப்பட்டதை அடுத்து, இந்திய கடலோர காவல்படையிளனரால் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
</p><p>
வத்தளையைச் சேர்ந்த ஜி. விக்னேஸ்வரன்(வயது31) மற்றும் எம். லூசிநாத் (வயது30) என&nbsp;அவர்கள் இருவரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.</p><h2>தனுஷ்கோடி கடற்கரையோரத்தில் கைது</h2><p>&nbsp; அந்த இருவரையும், சாகர் கவச் கடலோரப் பாதுகாப்புப் பயிற்சியின் ஒரு பகுதியாக ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த கடலோரகாவல்துறையினர், வெள்ளிக்கிழமை(234) தனுஷ்கோடி கடற்கரையோரம் சந்தேகத்திற்கிடமான முறையில் நடந்துகொண்டதைக் கண்டதையடுத்து கைது செய்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2ab5fb9b-8441-4a35-8033-ceeca39522c2/26-6a6493a606435.webp' /></p><p>

விசாரணைக்காக இருவரும் கடலோர காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர், அங்கு அவர்களின் அடையாளங்கள் உறுதி செய்யப்பட்டன.</p><p>

மேலும் விசாரணை செய்தபோது,கடந்த ​​வியாழக்கிழமை வத்தளையில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் அந்த இருவருக்கும் தொடர்பு இருப்பதாக இலங்கை அதிகாரிகள் சந்தேகிப்பதாக இந்திய அதிகாரிகளுக்குத் தெரிவிக்கப்பட்டது.</p><p></p><h2>போதைப்பொருள் தொடர்பான மூன்று வழக்குகள் நிலுவை</h2><p>
</p><p>
மேலும், அந்த இருவர் மீதும் இலங்கையில் போதைப்பொருள் தொடர்பான மூன்று வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f0cfcd3c-6e67-4a31-9224-9cda62267f9d/26-6a6493a552dec.webp' /></p><p>
</p><p>
அவர்களைக் காவலில் வைக்குமாறு இலங்கை அதிகாரிகள் விடுத்த கோரிக்கையைத் தொடர்ந்து, சந்தேக நபர்கள் திருச்சி மத்திய சிறை வளாகத்திற்குள் அமைந்துள்ள ஒரு சிறப்பு முகாமுக்கு மாற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
அவர்கள் ஒரு வாரத்திற்குள் இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்படுவார்கள் என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்ததாக அந்த ஊடகம் மேலும் குறிப்பிட்டது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-25T10:45:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி இல்லை; தங்கிய வெளிஆட்கள் 3,089 பேர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/3-089-outsiders-stay-presidential-palace-sri-lanka-1784967926"></link>
            <id>https://jvpnews.com/article/3-089-outsiders-stay-presidential-palace-sri-lanka-1784967926</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;2025ஆம் ஆண்டில் ஜனாதிபதி மாளிகைகளில் ஜனாதிபதி தங்கியிருக்காத போதிலும், நாடு முழுவதும் உள்ள அந்த மாளிகைகளில் மொத்தம் 3,089 பேர் தங்கியுள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;2025ஆம் ஆண்டில் ஜனாதிபதி மாளிகைகளில் ஜனாதிபதி தங்கியிருக்காத போதிலும், நாடு முழுவதும் உள்ள அந்த மாளிகைகளில் மொத்தம் 3,089 பேர் தங்கியுள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>



அதே காலப்பகுதியில், அந்த மாளிகைகளில் மூன்று கூட்டங்கள் மட்டுமே நடைபெற்றுள்ளதாகவும் அறிக்கை சுட்டிக்காட்டுகின்றது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fb17a280-0788-4cf5-91b0-fe84b7c9fb6d/26-6a6472f80c7c6.webp' /></p><h2>கடந்த ஆண்டில் ரூ.32,982,675 செலவு</h2><p>


ஜனாதிபதிக்காக ஒதுக்கப்பட்டுள்ள ஏழு மாளிகைகளின் மின்சாரம், தொலைபேசி மற்றும் பிற வசதிகளுக்காக கடந்த ஆண்டில் ரூ.32,982,675 செலவிடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
</p><p>


மேலும், கதிர்காமம், மஹியங்கனை மற்றும் பெந்தோட்ட ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகைகளில் 2025ஆம் ஆண்டு எந்தக் கூட்டமும் நடத்தப்படாததுடன், எவரும் தங்கியிருக்கவில்லை என்றும் அறிக்கை தெரிவிக்கின்றது.</p><p></p><p>



இருப்பினும், அந்த மூன்று மாளிகைகளின் மின்சாரம், தொலைபேசி மற்றும் ஏனைய செலவுகளுக்காக ரூ.2,447,754 செலவிடப்பட்டுள்ளதாகவும் கணக்காய்வு அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.</p><p>



ஜனாதிபதிக்காக ஒதுக்கப்பட்டுள்ள ஏழு மாளிகைகள் கொழும்பு கோட்டை, கண்டி, அனுராதபுரம், கதிர்காமம், மஹியங்கனை, நுவரெலியா மற்றும் பெந்தோட்ட ஆகிய பகுதிகளில் அமைந்துள்ளன.</p><p></p>]]></content>
            <updated>2026-07-25T10:39:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>H. A. Roshan</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தியா செல்லும் இலங்கையர்களுக்கு முக்கிய அறிவிப்பு: விசா நடைமுறையில் புதிய மாற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/high-commission-india-clarification-on-indian-visa-1784961663"></link>
            <id>https://tamilwin.com/article/high-commission-india-clarification-on-indian-visa-1784961663</id>
            <summary type="text">இலங்கையர்களுக்கு காலதாமதமின்றி மற்றும் சுமூகமாக விசாக்களை வழங்குவது எமது
நிலையான கொள்கையாகும் என இந்திய
உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
இந்தியாவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையர்களுக்கு காலதாமதமின்றி மற்றும் சுமூகமாக விசாக்களை வழங்குவது எமது
நிலையான கொள்கையாகும் என இந்திய
உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
</p><p>இந்தியாவிற்குப் பயணிக்கும்
இலங்கையர்களும் இ-விசா வசதியைப் பெற முடியும். எனினும், இந்திய
உயர்ஸ்தானிகராலயத்தின் ஊடாக விண்ணப்பிக்க விரும்பும் இலங்கைப் பிரஜைகள்,
ஆன்லைனில் விண்ணப்பித்து இந்திய துணைத்தூதரக விண்ணப்ப
மையங்களில் தங்களது
விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் இந்திய
உயர்ஸ்தானிகராலயம் குறிப்பிட்டுள்ளது.</p><p></p><h2>இந்திய உயர்ஸ்தானிகராலயம்</h2><p>குறித்த உயர்ஸ்தானிகராலயத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்ககையில்,</p><p>
இந்தியாவிற்குப் புனித யாத்திரைக்காக, குறிப்பாக பௌத்த புனிதத்
தலங்களுக்குச் செல்லும் இலங்கையர்களுக்கு, விசாக்கள் விரைவாக
வழங்கப்படுகின்றன.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4e5d5263-bdd8-4c9a-abc7-9d7ff9aab321/26-6a645ff70a27e.webp' /></p><p>இயன்றவரை, புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள்
அமைச்சினால் பரிந்துரைக்கப்படும் விண்ணப்பங்கள், 10 அல்லது அதற்கு மேற்பட்ட
யாத்திரிகர்களைக் கொண்ட குழுக்களுக்கு கட்டணமின்றி (Gratis) வழங்கப்படுகின்றன.
</p><p>
இந்திய உயர்ஸ்தானிகராலயத்திற்காகச் செயல்பட்ட விசா சேவை வழங்குநர் நிறுவனம்
மாற்றப்பட்டிருந்த காரணத்தால், குறுகிய காலத்திற்கு இந்த நடைமுறை
நிறுத்தப்பட்டிருந்தது.</p><p></p><h2>இந்திய அரசின் புதிய விதிமுறைகள்</h2><p> </p><p>தற்போது, 2026 ஜூலை 7 ஆம் திகதி முதல் புதிய சேவை
வழங்குநர் தனது பணிகளைத் தொடங்கியுள்ளதையடுத்து, இலங்கை யாத்திரிகர்களுக்கான
கட்டணமில்லா விசா வழங்கும் நடைமுறை மீண்டும் அறிமுகப்படுத்தப்படுகிறது.</p><p>
</p><p>
முன்னர் இருந்த நடைமுறையைப் போலவே, இவ்வாறான கோரிக்கைகள் புத்தசாசன, சமய
மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் ஊடாக அனுப்பப்பட வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/250b602d-31f2-451c-a8b2-f27b0e967887/26-6a645ff7b07f8.webp' /></p><p> </p><p>10 அல்லது
அதற்கு மேற்பட்டோர் கொண்ட குழுவாக விண்ணப்பிக்க முடியும். 

மேலும்,
விண்ணப்பதாரர்கள் தங்களது உயிரியல் அடையாளத் தகவல்களை (Biometrics) பதிவு
செய்வதற்காக குழுவாகவோ அல்லது தனித்தனியாகவோ தமக்குச் சௌகரியமான முறையில் ICAC
மையங்களுக்கு வரலாம்.</p><p>இது இந்திய அரசின் புதிய விதிமுறைகளின் கீழ்
கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எனினும், 12 வயது முதல் 70 வயது வரையிலானவர்களுக்கே
உயிரியல் அடையாளப் பதிவு அவசியமாகும்.</p><p></p><h2>உயிரியல் அடையாளப் பதிவு</h2><p>
உயிரியல் அடையாளப் பதிவுக்காக ICAC மையங்களுக்கு வருகை தரும் ஏனைய மூத்த
குடிமக்களுக்காக, அவர்களின் காத்திருப்பு நேரத்தை இயன்றவரை குறைக்கும் வகையில்
சிறப்பு மற்றும் விரைவுபடுத்தப்பட்ட நடைமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.</p><p>


உயிரியல் அடையாளத் தகவல்களைப் பதிவு செய்வதன் மூலம், அவர்கள் இந்தியாவிற்கு
வந்தடைந்தபோது குடிவரவு செயல்முறைகளை சுலபமாகவும் வசதியாகவும் நிறைவு செய்ய
முடியும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/151e969a-a376-4111-bf41-c8c6abec3ea4/26-6a6462b35f99a.webp' /></p><p>

மேலே குறிப்பிடப்பட்ட நடைமுறையின்படி விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கும்
இலங்கை யாத்திரிகர்களுக்கு எந்தவித விசா கட்டணமும் இல்லை. எனவே, இலங்கை
யாத்திரிகர்களுக்கான விசா கட்டணத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளது என்ற கேள்வியே
எழுவதில்லை. </p><p>இருப்பினும், ICAC வழங்கும் சேவைகளுக்காக, விண்ணப்பதாரர்கள்
இலங்கை ரூபாய் 1,855/- சேவைக் கட்டணத்தைச் செலுத்த வேண்டியுள்ளது ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளன.&nbsp; &nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-07-25T10:39:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[2011 போருக்குப் பிறகு முதல்முறையாக அந்தோனியோ குட்டேரஸ் சிரியா பயணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/antonio-guterres-visits-syria-first-time-2011-war-1784975375"></link>
            <id>https://tamilwin.com/article/antonio-guterres-visits-syria-first-time-2011-war-1784975375</id>
            <summary type="text">ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அந்தோனியோ குட்டேரஸ் சனிக்கிழமை
சிரியாவிற்கு வரலாற்றுச் சிறப்புமிக்க விஜயம் ஒன்றை மேற்கொள்கிறார்.

2011ஆம் ஆண...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அந்தோனியோ குட்டேரஸ் சனிக்கிழமை
சிரியாவிற்கு வரலாற்றுச் சிறப்புமிக்க விஜயம் ஒன்றை மேற்கொள்கிறார்.
</p><p>
2011ஆம் ஆண்டு சிரியாவில் போர் தொடங்கிய பிறகு, பதவியில் இருக்கும் ஐ.நா.
தலைவர் ஒருவர் அந்நாட்டிற்குச் செல்வது இதுவே முதல்முறையாகும்.</p><p></p><h2>&nbsp;அந்தோனியோ குட்டேரஸ்&nbsp;</h2><p>

சிரியாவில் கடந்த 2024-ஆம் ஆண்டின் பிற்பகுதியில், கிளர்ச்சியாளர்களின்
தீவிரப் போராட்டத்தைத் தொடர்ந்து அப்போதைய ஜனாதிபதி பஷார் அல்-அசாத்
பதவியிலிருந்து தூக்கி எறியப்பட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b2dcc165-2440-49e9-bbef-01db649db63f/26-6a6491c39d729.webp' /></p><p>
</p><p>
அதன் பிறகு அமைக்கப்பட்ட இடைக்கால அரசின் கீழ், உலக நாடுகளுடனான உறவைச்
சிரியா மீண்டும் புதுப்பித்து வரும் சூழலில் இந்த விஜயம் முக்கியத்துவம்
பெறுகிறது.
</p><p>
முன்னாள் தீவிரவாத அமைப்பின் தலைவராகவும், 2025 நவம்பர் வரை ஐ.நா.வின்
தடைப்பட்டியலில் இருந்தவருமான தற்போதைய சிரிய ஜனாதிபதி அகமது அல்-ஷாராவை
குட்டேரஸ் நேரில் சந்தித்துப் பேசுகிறார்.

</p><p>அத்துடன், சிரிய வெளியுறவுத்துறை அமைச்சர் அசாத் அல்-ஷைபானி, பிற அரசு
அதிகாரிகள் மற்றும் சிரிய சமூகப் பிரதிநிதிகளையும் அவர் சந்திக்கவுள்ளார்.</p><p></p><h2>பெரும் கவனம்</h2><p>

சிரியா போரிலிருந்து மீள்வது மட்டுமன்றி, அனைத்து மக்களுக்கும் அமைதியான,
அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் வளமான எதிர்காலத்திற்கான அடித்தளத்தை
அமைப்பதற்கான வாய்ப்பை இந்நாடு பெற்றுள்ளது என்பதை குட்டேரஸ் தனது பயணத்தின்
போது வலியுறுத்துவார் என ஐ.நா. செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dba367e8-5697-40a2-8321-f4ee24544914/26-6a6491c44dee5.webp' /></p><p>
</p><p>திங்கட்கிழமை சிரியாவின் புதிய நாடாளுமன்றத்தில் உரையாற்றவுள்ள குட்டேரஸ்,
இஸ்ரேல்-சிரிய எல்லைப் பகுதியில் அமைதியைப் பராமரித்து வரும் ஐ.நா. அமைதிப்
படையினரையும் நேரில் சென்று பார்வையிடவுள்ளார்.
</p><p>
முன்னாள் ஜனாதிபதி அசாத் ஆட்சியின் வீழ்ச்சிக்கு பிறகு, அமெரிக்கா உள்ளிட்ட
பல நாடுகள் சிரியா மீதான தடைகளைத் தளர்த்தி வரும் வேளையில், ஐ.நா. தலைவரின்
இந்த சிரிய விஜயம் சர்வதேச அளவில் பெரும் கவனம் ஈர்த்துள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-25T10:37:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீட் விவகாரம் எதிரொலி: மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/union-minster-dharmendra-pradhan-resign-1784975352"></link>
            <id>https://ibctamilnadu.com/article/union-minster-dharmendra-pradhan-resign-1784975352</id>
            <summary type="text">நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்துக்கு எதிராக டெல்லியில் மாணவர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் தொடர் போராட்டம் நடத்தி வந்த நிலையில், மத்தியக் கல்வித் துற...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்துக்கு எதிராக டெல்லியில் மாணவர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் தொடர் போராட்டம் நடத்தி வந்த நிலையில், மத்தியக் கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p>

ஜந்தர் மந்தரில் நடைபெற்ற போராட்டத்தில், நீட் தேர்வு முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று அமைச்சர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இந்தப் போராட்டத்திற்கு எதிர்க்கட்சிகளும் ஆதரவு தெரிவித்ததால் அது மேலும் தீவிரமடைந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/15d5719d-83d5-489f-8ffe-8703b174ffc7/26-6a6491d1c704e.webp' /></p><h2>அமைச்சர் தர்மேந்திர பிரதான்&nbsp;&nbsp;ராஜினாமா கடிதம்</h2><p>போராட்டத்தின் போது காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதில் இரு தரப்பிலும் காயமடைந்தனர்.

20 நாட்களுக்கு மேலாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக், மத்திய அரசு நடவடிக்கை எடுக்க உறுதியளித்ததைத் தொடர்ந்து&nbsp;நேற்று தனது உண்ணாவிரதப் போராட்டத்தை நிறைவு செய்தார். </p><p> இதையடுத்து போராட்டக் குழுவினருடன் மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டா பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்தச் சூழலில், நீட் விவகாரத்துக்கான அரசியல் அழுத்தம் அதிகரித்ததைத் தொடர்ந்து, மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது ராஜினாமா கடிதத்தை பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.</p><p><br></p>]]></content>
            <updated>2026-07-25T10:37:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜனாதிபதி மாளிகைகளில் தங்கியுள்ள வெளிநபர்கள் தொடர்பில் வெளியான தகவல்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/3089-outsiders-staying-at-sl-presidential-villas-1784973599"></link>
            <id>https://ibctamil.com/article/3089-outsiders-staying-at-sl-presidential-villas-1784973599</id>
            <summary type="text">2025 ஆம் ஆண்டில் நாடு முழுவதும் உள்ள ஜனாதிபதி மாளிகைகளில் தங்கியுள்ள பல்வேறு நபர்கள் தொடர்பில் தேசிய கணக்காய்வு அலுவலகம் தகவல் வெளியிட்டுள்ளது.அதன்படி...</summary>
            <content type="html"><![CDATA[<p>2025 ஆம் ஆண்டில் நாடு முழுவதும் உள்ள ஜனாதிபதி மாளிகைகளில் தங்கியுள்ள பல்வேறு நபர்கள் தொடர்பில் தேசிய கணக்காய்வு அலுவலகம் தகவல் வெளியிட்டுள்ளது.</p><p>அதன்படி, குறித்த&nbsp;மாளிகைகளில் ஜனாதிபதி தங்கியிருக்காவிட்டாலும், அவற்றில் பெரும்பாலானவற்றில் பல்வேறு நபர்கள் 3,089 பேர் தங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>மேலும் குறித்த காலத்தில் நடத்தப்பட்ட கூட்டங்களின் எண்ணிக்கை மூன்று மட்டுமே என அந்த அலுவலகம் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p></p><h2>தொலைபேசி, மின்சாரம் உள்ளிட்ட செலவுகள்&nbsp;&nbsp;</h2><p> 

ஏழு ஜனாதிபதி மாளிகைகளின் மின்சாரம், தொலைபேசி உள்ளிட்ட ஏனைய வசதிகளுக்காக அந்த ஆண்டில் 32,982,675 ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bd0d14aa-7a70-41a1-a7ba-accf48211d2e/26-6a649116616d6.webp' /></p><p> கதிர்காமம், மஹியங்கனை மற்றும் பெந்தோட்ட ஆகிய மாளிகைகளில் 2025 ஆம் ஆண்டில் எந்தவொரு கூட்டமும் நடத்தப்படவில்லை என்பதுடன், எவரும் தங்கியிருக்கவும் இல்லை என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p>எனினும், 2025 ஆம் ஆண்டில் தொலைபேசி, மின்சாரம் உள்ளிட்ட ஏனைய செலவுகளுக்காக 2,447,754 ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இதேவேளை ஜனாதிபதிக்காக ஒதுக்கப்பட்ட ஏழு மாளிகைகள் கொழும்பு கோட்டை, கண்டி, அநுராதபுரம், கதிர்காமம், மஹியங்கனை, நுவரெலியா மற்றும் பெந்தோட்ட ஆகிய பகுதிகளில் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-25T10:33:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹீராவை காதலிக்கத்தானே செஞ்சேன்..ஏன் மறைக்கணும்? நடிகர் அஜித் இப்படி சொல்லிக்காரே...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/ajith-kumar-on-dating-heera-and-breakup-throwback-1784975386"></link>
            <id>https://viduppu.com/article/ajith-kumar-on-dating-heera-and-breakup-throwback-1784975386</id>
            <summary type="text">அஜித் -&amp;nbsp;ஹீராநடிகர் அஜித்திற்கென ஒரு பெரும் ரசிகர்கள் பட்டாளமே இருக்கும் நிலையில் அவரின் அடுத்த படம் குறித்த தகவல்கள் அவ்வப்போது வெளியாகிக் கொண்டு...</summary>
            <content type="html"><![CDATA[<h2>அஜித் -&nbsp;ஹீரா</h2><p>நடிகர் அஜித்திற்கென ஒரு பெரும் ரசிகர்கள் பட்டாளமே இருக்கும் நிலையில் அவரின் அடுத்த படம் குறித்த தகவல்கள் அவ்வப்போது வெளியாகிக் கொண்டு தான் இருக்கிறது. தற்போது கார் ரேஸிங்கில் முழு கவனம் செலுத்தி வரும் அஜித் பற்றிய சில மெமரீஸ் இணையத்தில் பகிரப்பட்டும் வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1eac0f16-7041-4020-83cf-d72d7f386276/26-6a64901d2007a.webp' /></p><p> </p><p>இந்நிலையில் நடிகை ஷாலினியை திருமணம் செய்வதற்கு முன் நடிகை ஹீராவுடனான காதல் குறித்து அஜித் கொடுத்த பேட்டி தான் தற்போது சோசியல் மீடியாவில் பகிரப்பட்டு வருகிறது.</p><h2>காதலிக்க&nbsp;செஞ்சேன்</h2><p> </p><p>அதில் அஜித், நீ ஒரு நடிகன், உணர்வுகளை எல்லாம் இப்படி திறந்த புத்தகமாக்கக்கூடாது. இப்படியெல்லாம் இருக்கக்கூடாது என்று நிறைய பேர் சொல்கிறார்கள். ஏன் இப்படி என்று எனக்கு புரியவில்லை. இமேஜ் என்றால் என்ன? நான் ஏன் என்னைப்பற்றி யாரிடமும் சொல்லாமல் மறைத்து வைக்க வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/275b2023-dba1-437a-836a-59500d4d113f/26-6a64901c6efcb.webp' /></p><p>நானும் ஹீராவும் காதல் செய்தோம் என்று எல்லாரிடமும் சொன்னேன். காதல்தானே செய்தேன். அது உயர்ந்த விஷயம் தானே? அதற்குப்பின் சில விஷயங்கள் எங்களுக்குள் ஒத்துவரவில்லை, பிரிந்துவிடலாம் என்று முடிவெடுத்தோம் என்று அந்த பேட்டியில் அஜித் கூறியிருக்கிறார்.</p>]]></content>
            <updated>2026-07-25T10:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாக்ஸ் ஆபிஸில் தடுமாறும் ஜனநாயகன்.. ஏமாற்றம் தந்த வசூல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/jananayagan-movie-overseas-box-office-1784968833"></link>
            <id>https://cineulagam.com/article/jananayagan-movie-overseas-box-office-1784968833</id>
            <summary type="text">ஜனநாயகன்விஜய் நடித்து ஒரு திரைப்படம் வெளியாகிறது என்றால், அந்த படம் பட்டிதொட்டி எங்கும் அமோக வரவேற்பை பெற்று மாபெரும் அளவில் வசூலை வாரிக்குவிக்கும். அ...</summary>
            <content type="html"><![CDATA[<h2>ஜனநாயகன்</h2><p>விஜய் நடித்து ஒரு திரைப்படம் வெளியாகிறது என்றால், அந்த படம் பட்டிதொட்டி எங்கும் அமோக வரவேற்பை பெற்று மாபெரும் அளவில் வசூலை வாரிக்குவிக்கும். அதுவே அவருடைய கடைசி படம் என்றால் சொல்லவே தேவையில்லை.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/77792582-a3b6-44b6-a071-6970ae628ceb/26-6a647684796b9.webp' /></p><p>அப்படி மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் பல தடைகளை தாண்டி கடந்த 23-ஆம் தேதி திரைக்கு வந்த படம்தான் ஜனநாயகன். கலவையான விமர்சனங்கள் ஒரு பக்கம் இருந்தாலும், ரசிகர்கள் இப்படத்தை மிகவும் எமோஷனலாக பார்த்தனர். இவ்வளவு வருடங்களாக திரையில் நம்மை மகிழ்வித்த ஒரு ஹீரோ இனி சினிமாவில் இல்லை என்பதே அவர்களுடைய எமோஷனுக்கு காரணமாக விளங்கியது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6c731061-9a69-4519-92af-7424577296e6/26-6a6476852cfda.webp' /></p><p>
ஜனநாயகன் திரைப்படம் உலகளவில் ரூ. 120 கோடியும், தமிழ்நாட்டில் ரூ. 48 கோடியும் 2 நாட்களில் வசூல் செய்துள்ளது. இதற்கு முன் வெளிவந்த விஜய் படத்தை ஒப்பிட்டால் இது சற்று குறைவுதான்.</p><h2>வெளிநாட்டு வசூல்&nbsp;&nbsp;</h2><p> </p><p>

இந்த நிலையில், வெளிநாட்டில் ஜனநாயகன் திரைப்படம் இதுவரை செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 2 நாட்களில் வெளிநாட்டில் மட்டுமே ரூ. 40+ கோடி வசூலித்துள்ளது. இது ஜனநாயகன் திரைப்படத்திற்கு வெளிநாட்டில் கிடைத்துள்ள மிக மிக குறைவான வசூலாகும்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/07cb3359-aaca-4b8e-ae79-5ee9b49e60c0/26-6a647685d2546.webp' /></p><p>படம் ஏற்கனவே இணையத்தில் லீக்காது இந்த வசூல் குறைவிற்கு காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. இனி வரும் நாட்களில் ஜனநாயகன் திரைப்படம் வெளிநாட்டு பாக்ஸ் ஆபிஸில் எவ்வளவு வசூல் செய்யப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.</p>]]></content>
            <updated>2026-07-25T10:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடமை தவறிய முக்கிய அதிகாரிகள்! பின்னணியில் திடீரென மாயமான 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/officials-dereliction-of-duty-leads-cyber-theft-1784956876"></link>
            <id>https://tamilwin.com/article/officials-dereliction-of-duty-leads-cyber-theft-1784956876</id>
            <summary type="text">நிதி அமைச்சகத்தின் கட்டமைப்பில் உள்ள பலவீனங்கள் மற்றும் அமைச்சக அதிகாரிகள் தத்தமது கடமைகளை முறையாக செய்யத்தவறியதன் காரணமாக 2.5 மில்லியன் அமெரிக்க டொலர...</summary>
            <content type="html"><![CDATA[<p>நிதி அமைச்சகத்தின் கட்டமைப்பில் உள்ள பலவீனங்கள் மற்றும் அமைச்சக அதிகாரிகள் தத்தமது கடமைகளை முறையாக செய்யத்தவறியதன் காரணமாக 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இணையவழித்திருட்டு நிகழ்ந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
</p><p>
இலங்கை மத்திய வங்கி அரச நிதிக்குழுவிடம் சமர்ப்பித்த அறிக்கையின்படி, இந்த விடயம் தெரியவந்துள்ளது.</p><p>

மேலும், இலங்கை மத்திய வங்கி தொடர்பாக நிதி அமைச்சகம் பல உண்மைக்குப்புறம்பான அறிக்கைகளை வெளியிட்டுள்ளது என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.</p><p></p><h2>2.5 மில்லியன் அமெரிக்க டொலர் இணையவழித்திருட்டு</h2><p>

2.5 மில்லியன் அமெரிக்க டொலர் இணையவழித்திருட்டு தொடர்பாக நிதி அமைச்சகம் நாடாளுமன்றத்தின் அரச நிதிக்குழுவிடம் சமர்ப்பித்த அறிக்கைக்கு பதிலளிக்கும் வகையில், இலங்கை மத்திய வங்கி இரண்டு அறிக்கைகளை சமர்ப்பித்துள்ளதுடன் அவற்றில் ஒன்றில் இந்த தகவல் உள்ளடங்கியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/91edf81d-1bc1-44a2-a51c-42b3bf69ec38/26-6a644ef7afd4d.webp' /></p><p>

 மேலும், நிதி அமைச்சகத்தில் இருந்த அடிப்படை செயல்பாட்டு மற்றும் கட்டுப்பாட்டு பலவீனங்களின் காரணமாகவே, இணையவழி மோசடி குழு திரைசேரியிலிருந்து 2.5 மில்லியன் அமெரிக்க டொலரை திருடுவதற்கு தேவையான பின்னணி உருவாக்கப்பட்டது என்றும் அறிக்கை குறிப்பிடுகின்றது.</p><p>

நிதி அமைச்சகத்தின் வெளிநாட்டுக்கடன் செலுத்தும் செயல்முறையில் ஏற்பட்ட தோல்வியும் இந்த திருட்டுக்கு தேவையான பின்னணியை உருவாக்கியது என்றும் கூறப்பட்டுள்ளது.</p><h2>நிதி அமைச்சகத்தின் மின்னஞ்சல் பாதுகாப்பு</h2><p>
</p><p>
இலங்கை மத்திய வங்கியால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில், நிதி அமைச்சகத்தின் வெளி வளங்கள் திணைக்களத்தால் பராமரிக்கப்படும் கடன் பதிவேடுகளின்படி, பெறப்பட்ட செலுத்துகை அறிவுறுத்தல்கள் சரியானவையா என்பதை சரிபார்க்கும் மிக முக்கியமான கடமை ஒப்படைக்கப்பட்டிருந்த அமைச்சக அதிகாரிகள், தத்தமது கடமைகளை முறையாக செய்யவில்லை என்றும் தெரியவந்துள்ளது.
</p><p>
மேலும், நிதி அமைச்சகத்தின் மின்னஞ்சலின் பாதுகாப்பை ஊடுருவல்காரர்களால் உடைக்க முடிந்ததாலும், அந்த கடமை ஒப்படைக்கப்பட்டிருந்த அதிகாரிகள் அறிவுறுத்தல்கள் சரியானவையா என்பதை சரிபார்க்க தவறியதாலும் இந்த திருட்டு நிகழ்ந்துள்ளது என்பது தெளிவாகின்றது என்றும் அந்த அறிக்கை குறிப்பிடுகின்றது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-25T10:29:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yoosuf</name>
            </author>
            <title type="text"><![CDATA[கந்தளாய் குளத்தின் கீழ் 22000 ஏக்கரில் சிறுபோக நெல் அறுவடை தீவிரமாக ஆரம்பம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/beginning-paddy-harvest-under-the-kanthalai-pond-1784971329"></link>
            <id>https://tamilwin.com/article/beginning-paddy-harvest-under-the-kanthalai-pond-1784971329</id>
            <summary type="text">திருகோணமலை மாவட்டத்தின் பிரதான நீர்ப்பாசன மூலாதாரமான கந்தளாய் குளத்தின்
நீரைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட இம்முறை சிறுபோக நெற்செய்கையின் அறுவடைப்
ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>திருகோணமலை மாவட்டத்தின் பிரதான நீர்ப்பாசன மூலாதாரமான கந்தளாய் குளத்தின்
நீரைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட இம்முறை சிறுபோக நெற்செய்கையின் அறுவடைப்
பணிகள் தற்போது உத்தியோகபூர்வமாக ஆரம்பமாகியுள்ளன.
</p><p>
சுமார் 22,000 ஏக்கர் பரப்பளவில் மேற்கொள்ளப்பட்ட இந்த நெற்செய்கையின்
அறுவடைப் பணிகளில் விவசாயிகள் தற்போது மிக மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.</p><p></p><p>
</p><h2>அறுவடைப் பணிகள்
கந்தளாய் குளத்தின் கீழ் நீர்ப்பாசனம் பெறும் முக்கிய பகுதிகள்</h2><ul><li>
பரட்டைக்காடு
</li><li>
செட்டிக்காடு
</li><li>
வான் எல
</li><li>
வட்டுகச்சி
</li><li>
நாலாம் வாய்க்கால்</li><li>தம்பலகாமம்

ஆகிய பிரதேசங்களில் நவீன அறுவடை இயந்திரங்கள் மூலம் நெல் அறுவடை செய்யும்
பணிகள் மிகத் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</li></ul><p></p><p>
</p><h2>
அரசாங்கத்தின் நியாயமான உத்தரவாத விலைக்கு விவசாயிகள் வரவேற்பு</h2><p>
இம்முறை சிறுபோகச் செய்கையில் சாதகமான விளைச்சல் கிடைத்துள்ள நிலையில்,
விவசாயிகள் தங்கள் கடின உழைப்பிற்கு ஏற்றவாறு நியாயமான உத்தரவாத விலையை
அரசாங்கம் நிர்ணயித்து பெற்றுக் கொடுத்துள்ளதாகத் தெரிவிக்கின்றனர்.
</p><p>
"தற்போது சந்தையில் நிலவும் விலையினை விட, எமது கடின உழைப்பிற்கு ஏற்றவாறு
நெல்லுக்கு நியாயமான உத்தரவாத விலையை அரசாங்கம் பெற்றுக்கொடுத்துள்ளது" பிரதேச விவசாயிகள்

நல்ல விளைச்சலுடன் சேர்த்து, அரசாங்கம் உரிய நியாயமான உத்தரவாத விலையையும்
உறுதி செய்துள்ளதால் அப்பகுதி விவசாயிகள் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.</p><p></p><p>
</p>]]></content>
            <updated>2026-07-25T10:28:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடத்தல்காரரின் சட்டவிரோத சொத்துக்கள் முடக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/drugs-smuggler-illegal-assets-frozen-1784975203"></link>
            <id>https://jvpnews.com/article/drugs-smuggler-illegal-assets-frozen-1784975203</id>
            <summary type="text">&amp;nbsp; இப்பாகமுவ பிரதேசத்தைச் சேர்ந்த நபரொருவர் போதைப்பொருள் கடத்தல் மூலம் சட்டவிரோதமாக சம்பாதித்த பணத்தில் கொள்வனவு செய்யப்பட்ட 50 இலட்சம் ரூபாவிற்கு...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; இப்பாகமுவ பிரதேசத்தைச் சேர்ந்த நபரொருவர் போதைப்பொருள் கடத்தல் மூலம் சட்டவிரோதமாக சம்பாதித்த பணத்தில் கொள்வனவு செய்யப்பட்ட 50 இலட்சம் ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய சட்டவிரோத சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது.
</p><p>
அதன்படி டிராக்டர் வண்டி மற்றும் நிதி நிறுவனமொன்றில் முதலீடு செய்யப்பட்டிருந்த 10 மில்லியன் ரூபா பணம் என்பன 07 நாட்களுக்கு முடக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/290eaaf0-171d-4c57-a03e-132f2643eadc/26-6a648f64d012e.webp' /></p><h2>சட்டவிரோத சொத்துக்கள்&nbsp;</h2><p>
</p><p>
 

சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப் பிரிவுக்குக் கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விரிவான விசாரணைகளின் பின்னரே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p>

 

சந்தேகநபரின் சட்டவிரோத சொத்துக்கள் தொடர்பில் பணச்சலவை தடுப்புச் சட்டத்தின் பிரகாரம், 2026 ஜூலை 24 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் 07 நாட்களுக்கு இந்த சொத்துக்கள் மற்றும் முதலீடுகளை முடக்குவதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
</p><p>
 

இந் நிலையில் சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப் பிரிவு, இந்த கடத்தல் மற்றும் இதனுடன் தொடர்புடைய ஏனைய நபர்கள் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.</p>]]></content>
            <updated>2026-07-25T10:25:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதி தீவிரமாக... தங்கத்தை வாங்கிக் குவிக்கும் உலக நாடுகள்: வெளியான காரணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/why-banks-buying-more-gold-1784975022"></link>
            <id>https://news.lankasri.com/article/why-banks-buying-more-gold-1784975022</id>
            <summary type="text">உலக நாடுகள் பல, திடீரென்று அதி தீவிரமாக பல தசாப்தங்களில் இல்லாத அளவுக்கு தங்கத்தை வாங்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.ஏறக்குறைய இரு மடங்கு
அதிகரித்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>உலக நாடுகள் பல, திடீரென்று அதி தீவிரமாக பல தசாப்தங்களில் இல்லாத அளவுக்கு தங்கத்தை வாங்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><h2>ஏறக்குறைய இரு மடங்கு</h2><p>
</p><p>அதிகரித்து வரும் புவிசார் அரசியல் பதட்டங்கள், தொடர்ச்சியான பணவீக்கக் கவலைகள், நாணய அபாயங்கள் மற்றும் அமெரிக்க டொலர் போன்ற பாரம்பரிய சொத்துக்களிலிருந்து விலகி கையிருப்புகளைப் பல்வகைப்படுத்த வேண்டும் என்ற அதிகரித்து வரும் உந்துதல் ஆகியவையே முதன்மையான காரணமாகக் கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/92568eb7-0bda-40f4-a25c-f49bb8593b9c/26-6a6490202dba8.webp' /></p><p> </p><p>உலக தங்க கவுன்சிலின் (WGC) சமீபத்திய மத்திய வங்கிகளின் தங்க இருப்பு குறித்த ஆய்வின் அடிப்படையில், கடந்த நான்கு ஆண்டுகளில் உத்தியோகப்பூர்வ நிறுவனங்கள் ஆண்டுக்கு சராசரியாக 1,000 டன் தங்கத்தை வாங்கியுள்ளன; இது முந்தைய பத்தாண்டுகளில் பதிவு செய்யப்பட்ட சராசரி ஆண்டு கொள்முதல் அளவை விட ஏறக்குறைய இரு மடங்காகும். </p><p>
இந்தக் கொள்முதல் வேகம் குறைவதற்கான அறிகுறிகள் தென்படவில்லை. மத்திய வங்கிகளில் 89 சதவீதம், அடுத்த ஆண்டில் உலகளாவிய அதிகாரப்பூர்வ தங்கக் கையிருப்பு அதிகரிக்கும் என எதிர்பார்க்கின்றன. </p><p>அதே நேரத்தில், 45 சதவீத வங்கிகள் தங்களின் சொந்த கையிருப்பை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கின்றன, இது ஒரு சாதனை அளவாகும். </p><p>புவிசார் அரசியல் மோதல்கள், வர்த்தகப் பதற்றங்கள் மற்றும் அதிகரித்த நிதிச் சந்தை நிலையற்ற தன்மை ஆகியவற்றால் உலகப் பொருளாதாரம் தத்தளித்துக் கொண்டிருக்கும் ஒரு காலகட்டத்தில், ஒரு உத்திசார் இருப்புச் சொத்தாகத் தங்கத்தின் அதிகரித்து வரும் பங்கை இந்த ஆய்வுகள் அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன.</p><p></p><p>மத்திய வங்கிகள் பொதுவாகத் தங்கள் சொந்த நாணயங்களுக்கு ஆதரவளிக்கவும் நிதி நிலைத்தன்மையைப் பேணவும், அமெரிக்க கருவூலப் பத்திரங்கள், அரசாங்கப் பத்திரங்கள் மற்றும் வெளிநாட்டு நாணயங்கள் போன்ற சொத்துக்களை உள்ளடக்கிய அந்நியச் செலாவணிக் கையிருப்புகளைப் பராமரிக்கின்றன. </p><p>இருப்பினும், தங்கம் ஒரு தனித்துவமான இடத்தைப் பெற்றுள்ளது, ஏனெனில் அது கடன் அல்லது எதிர் தரப்பு இடர்பாடுகள் இல்லாத ஒரு பௌதீகச் சொத்தாகும், மேலும் ஒரு அரசாணையால் நாணயங்களை உருவாக்குவது போல தங்கத்தை விருப்பப்படி உருவாக்கவும் முடியாது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2b9b5131-c12f-4cd0-bf91-0aeadf29aad6/26-6a649020def04.webp' /></p><p> </p><p>பணவீக்கம் அல்லது பண விநியோகத்தை அதிகரிக்கும் கொள்கைகளால் மதிப்பு குறையக்கூடிய காகித நாணயங்களைப் போலன்றி, தங்கத்தின் இருப்பு இயற்கையாகவே வரையறுக்கப்பட்டதாக உள்ளது.</p><h2>கையிருப்பை தங்கள் நாட்டிலேயே</h2><p> </p><p>மற்றொரு சிறப்பம்சம் என்னவென்றால், அமெரிக்க டாலரின் போக்கிலிருந்து சுயாதீனமாகவோ அல்லது அதற்கு நேர்மாறாகவோ கூட நகரும் தங்கத்தின் வரலாற்றுரீதியான போக்கு ஆகும். </p><p>உலகளாவிய அந்நியச் செலாவணிக் கையிருப்பில் டொலர் இன்னும் மிகப்பெரிய பங்கைக் கொண்டிருப்பதால், தங்கத்தை வைத்திருப்பது, குவிப்பு அபாயத்தைக் குறைக்கவும், டொலரின் பலவீனம் அல்லது அதிகரித்த சந்தை நெருக்கடி காலங்களில் கையிருப்புத் தொகுப்புகளைப் பாதுகாக்கவும் உதவுகிறது. </p><p>இதுவரையில் பெரும்பாலான மத்திய வங்கிகள் தங்களுடைய தங்கக் கையிருப்பை பேங்க் ஆப் இங்கிலாந்திலும் நியூயார்க் ஃபெடரல் ரிசர்வ் போன்ற வங்கியிலும் சேமித்து வந்தன
ஆனால் தற்போது சில மத்திய வங்கிகள் தங்களுடைய தங்கக் கையிருப்பை தங்கள் நாட்டிற்க்கே கொண்டுவரத் தொடங்கியுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3a1f0975-949b-463b-b60c-7988e70506f8/26-6a64902193502.webp' /></p><p> </p><p>பிற நாடுகளில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்களாலும், போர் பதற்றத்தின் காரணமாகவும் தங்களுடைய கையிருப்பை தங்கள் நாட்டிலேயே வைத்துக் கொள்ள முடிவெடுத்துள்ளன. </p><p>தற்போது ஏற்பட்டிருக்கும் பிரச்சனையை மட்டும் வைத்து உலக நாடுகள் இந்த முடிவை எடுக்கவில்லை. தங்கத்தின் விலை உச்சத்தில் இருந்த போதும் தொடர்ந்து மத்திய வங்கிகள் தங்கத்தை வாங்கி குவித்தன. இதே நிலை தொடர்ந்தால் டொலரின் பங்கு குறைந்து, தங்கத்தின் பங்கு அதிகரிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-25T10:21:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீதியமைச்சர் தொடர்பில் அர்ச்சுனா எம்.பியின் உளறல் : அமைச்சர் வசந்த சமரசிங்க தக்க பதிலடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/archuna-send-justice-minister-to-jail-in-2029-1784974016"></link>
            <id>https://ibctamil.com/article/archuna-send-justice-minister-to-jail-in-2029-1784974016</id>
            <summary type="text">&quot;2029-லும் நான் நாடாளுமன்றத்திற்கு வந்து, நீதி அமைச்சர் நாணயக்கார சிறைக்கு அனுப்பப்படுவதை உறுதி செய்வேன்,&quot; என்றுநாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநா...</summary>
            <content type="html"><![CDATA[<p>"2029-லும் நான் நாடாளுமன்றத்திற்கு வந்து, நீதி அமைச்சர் நாணயக்கார சிறைக்கு அனுப்பப்படுவதை உறுதி செய்வேன்," என்றுநாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்துள்ளார்.
</p><p>

 நேற்று (24)நாடாளுமன்றத்தில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தனதுரையில் மேலும் தெரிவிக்கையில்,</p><h2>மது அருந்திய நீதியமைச்சர்&nbsp;</h2><p>நீர் கொழும்பு சிறையில் மோதல் நடந்த நேரத்தில் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார மது அருந்தியிருந்ததால் உறங்கிக் கொண்டிருந்தார்.




"அமைச்சருக்கு அங்கு என்ன நடக்கிறது என்பது தெரியவில்லை," என்று அவர் குறிப்பிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/23911b7e-6c99-4bbb-a19b-e3b4833a3ae2/26-6a648db11faa8.webp' /></p><p>
</p><p>


</p><h2>அமைச்சர் வசந்த சமரசிங்கவின் பதிலடி</h2><p>இதற்குப் பதிலளித்த அமைச்சர் வசந்த சமரசிங்க, நீதி அமைச்சர் மது அருந்துவது அவரது தனிப்பட்ட விஷயம் என்றார். "இந்த எம்.பி.க்கள் அமைச்சரின் பானத்தில் சோடாவைக் கலந்தது போல் பேசுகிறார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4e16a728-8015-428a-a7b3-eda052e2868f/26-6a648db1de0aa.webp' /></p><p> </p><p>மோதலுக்குப் பிறகு அமைச்சர் தனது கடமையைச் செய்தார். மோதலில் பாதிக்கப்பட்டவர்களுக்காக அவர் அனைத்தையும் செய்தார்," என்று அவர் கூறினார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-25T10:19:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[சாக்ஷி அகர்வாலை தள்ளி விட்ட கணவர்.. அதன்பின் நடந்த டுவிஸ்ட்! படு வைரலாகும் வீடியோ]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/sakshi-agarwal-treandy-video-viral-1784972604"></link>
            <id>https://manithan.com/article/sakshi-agarwal-treandy-video-viral-1784972604</id>
            <summary type="text">நடிகை சாக்ஷி அகர்வால் தனது கணவர் தன்னை தள்ளிவிடுவது போன்று தற்போது வெளியிட்டுள்ள காணொளி தற்போது&amp;nbsp; இணையத்தி்ல் ட்ரெண்டாகியுள்ளதுடன் லைக்குகளையும் க...</summary>
            <content type="html"><![CDATA[<p>நடிகை சாக்ஷி அகர்வால் தனது கணவர் தன்னை தள்ளிவிடுவது போன்று தற்போது வெளியிட்டுள்ள காணொளி தற்போது&nbsp; இணையத்தி்ல் ட்ரெண்டாகியுள்ளதுடன் லைக்குகளையும் குவித்து வருகின்றது.&nbsp;</p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">சாக்ஷிஅகர்வால்</span></p><p>
தமிழ்சினிமாவில் சில படங்களே நடித்திருந்தாலும் நடிகை சாக்‌ஷி அகர்வால் ரசிர்கள் மத்தியில் பிரபல்யமாக இருந்து வருகின்றார்.திரைப்படங்களை விடவும் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலமாக தான் மக்கள் இவர் மக்கள் மத்தியில் பிரபலமானார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bcf6d9e0-f590-44a4-bce5-42fafd10e763/26-6a648d3cb6b94.webp' /></p><p></p><p>
 மலையாள திரைப்படத்தில் நடித்து திரையுலகிற்கு அறிமுகமான இவர், ரஜினி நடிப்பில் வெளியான காலா திரைப்படத்தில் நடித்து தமிழ் திரையுலகிலும் அறிமுகமானவர்.</p><p>அதனை தொடர்ந்து அஜித் நடிப்பில் வெளிவந்த விஸ்வாசம் திரைப்படத்தில் நயன்தாராவின் உதவியாளரான டாக்டர் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/40ea1933-473d-4f0b-833d-d824b8e6b0a7/26-6a648d3d6420a.webp' /></p><p>
பிக்பாஸ் முடிந்து நிறைய படங்கள் நடிப்பார் என எதிர்பார்த்த நிலையில், திடிரென திருமண புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தார்.</p><p>திருமணத்தின் பின்னரும் சினிமாவில் ஆர்வம் காட்டிவரும் சாக்ஷி சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவ்வாக இருப்பது வழக்கம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7bef494f-58e8-40e3-9869-e509ee27c30e/26-6a648d3e13dbf.webp' /></p><p></p><p>இந்நிலையில்&nbsp;சாக்ஷி அகர்வாலை அவரது கணவர் தள்ளிவிடுவது போன்ற வீடியோ ஒன்றை வீடியோவை வெளியிட்டு இருக்கிறார்.
</p><p>
கீழே விழுந்த சாக்ஷி கிளாமர் ஆன உடையில் எழுவது போல transformation வீடியோவை தான் வெளியிட்டு இருக்கின்றனர். குறித்த காணொளி இணையத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.</p><p><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/reel/DbFtPXvI0S7/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/reel/DbFtPXvI0S7/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/reel/DbFtPXvI0S7/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by Sakshi Agarwal (@iamsakshiagarwal)</a></p></div></blockquote> <script async src="//www.instagram.com/embed.js"></script></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b>&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-25T10:17:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[பெல்கோரோடில் கிடங்கை குறிவைத்து..300 ட்ரோன்களால் தாக்கிய உக்ரைன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/ukraine-strike-300-plus-drones-on-russia-1784974371"></link>
            <id>https://news.lankasri.com/article/ukraine-strike-300-plus-drones-on-russia-1784974371</id>
            <summary type="text">உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதலில் பெல்கோரோடில் இருவர் கொல்லப்பட்டனர்.300-க்கும் மேற்பட்ட ட்ரோன் 

சனிக்கிழமையன்று ரஷ்யா மீது உக்ரைன் 300-க்கும் மேற...</summary>
            <content type="html"><![CDATA[<p>உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதலில் பெல்கோரோடில் இருவர் கொல்லப்பட்டனர்.</p><h2>300-க்கும் மேற்பட்ட ட்ரோன் </h2><p>

சனிக்கிழமையன்று ரஷ்யா மீது உக்ரைன் 300-க்கும் மேற்பட்ட ட்ரோன் விமானங்களைக் கொண்டு தாக்குதல் நடத்தியது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e6cd8889-61b1-4ab9-967e-208dab884716/26-6a648d514e1e6.webp' />&nbsp;</p><p></p><p>
இந்த தாக்குதலில், 328 ட்ரோன் விமானங்களை வான் பாதுகாப்புப் படைகள் இடைமறித்ததாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் கூறியது.
</p><p>
மேலும், மாஸ்கோ மேயர் செர்ஜி சோபியானின் கூறும்போது, தலைநகர் பகுதியை மட்டும் குறிவைத்து கிட்டத்தட்ட 200 ட்ரோன் விமானங்கள் ஏவப்பட்டதாக தெரிவித்தார். </p><p>

அதே சமயம் எல்லைப் பகுதியான பெல்கோரோடில் நடந்த இரவு நேரத் தாக்குதல்களில் இருவர் கொல்லப்பட்டதாக, தற்காலிக ஆளுநர் அலெக்ஸாண்டர் ஷுவாயேவ் தெரிவித்தார்.&nbsp;&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-25T10:16:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஒரே ஒரு காணொளி ; ஒரே இரவில் பிரதமர் மோடி உலக சாதனை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/pm-modi-sets-a-new-record-on-instagram-neet-video-1784974722"></link>
            <id>https://jvpnews.com/article/pm-modi-sets-a-new-record-on-instagram-neet-video-1784974722</id>
            <summary type="text">&amp;nbsp; இந்திய பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்ட ரீல்ஸ் காணொளி, இன்ஸ்டாகிராமில் பதிவேற்றப்பட்ட 24 மணி நேரத்திற்குள் 303 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; இந்திய பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்ட ரீல்ஸ் காணொளி, இன்ஸ்டாகிராமில் பதிவேற்றப்பட்ட 24 மணி நேரத்திற்குள் 303 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்று உலகளாவிய சாதனையை முறியடித்துள்ளது.
</p><p>
இந்தியாவில் நீட் பரீட்சை வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகளுக்கு எதிராக, புதுடெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a525bb81-101e-4ace-8df4-70e0c3fe7b4d/26-6a648d8368bb0.webp' /></p><p></p><h2>24 மணி நேரத்திற்குள் 303 மில்லியனுக்கும் அதிகமான பார்வை</h2><p>

இவ்வாறான பின்னணியில், மாணவர்களின் பிரச்சினைகளுக்குப் பதிலளிக்கும் வகையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி நள்ளிரவில் செல்ஃபி காணொளி ஒன்றை வெளியிட்டிருந்தார்.
</p><p>


இதனைத் தொடர்ந்து, கிடைத்த வரலாற்றுச் சிறப்புமிக்க வரவேற்பிற்கும் இளைஞர்களின் ஆக்கபூர்வமான கருத்துக்களுக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில், பிரதமர் மோடி "நன்றி நண்பர்களே" என்ற தலைப்பில் மற்றொரு காணொளியைப் பகிர்ந்துள்ளார்.</p><p></p><p>

அதில், இளைஞர்களுடனான இந்த நேர்மறையான உரையாடலும் பிணைப்பும் மேலும் வலுவடையும் என பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை வெளியிட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.</p>]]></content>
            <updated>2026-07-25T10:16:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[சவூதி எண்ணெய் ஆலைகளை குறிவைத்து வீசப்பட்ட ஏவுகணைகள் - நடுவானில் சுட்டுவீழ்த்தப்பட்டதாக அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/missiles-target-saudi-oil-refineries-attack-1784972196"></link>
            <id>https://tamilwin.com/article/missiles-target-saudi-oil-refineries-attack-1784972196</id>
            <summary type="text">சவூதி அரேபியாவின் யான்பு நகரில் உள்ள மசகு எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளை குறிவைத்து ஏமனில் இருந்து ஏவப்பட்ட இரண்டு பாலிஸ்டிக் ஏவுகணைகளை சவூதியின்
வான் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சவூதி அரேபியாவின் யான்பு நகரில் உள்ள மசகு எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளை குறிவைத்து ஏமனில் இருந்து ஏவப்பட்ட இரண்டு பாலிஸ்டிக் ஏவுகணைகளை சவூதியின்
வான் பாதுகாப்பு அமைப்பு இன்று சுட்டுவீழ்த்தியுள்ளது.</p><p>

ஈரான் மீது அமெரிக்க படைகள் புதிய வான்வழி தாக்குதல்களை நடத்திய அடுத்த
நாளே இச்சம்பவம் நடந்துள்ளது.</p><p></p><h2>ஆபத்து நீங்கிவிட்டதாக அறிவிப்பு</h2><p>
</p><p>
செங்கடல் பகுதியில் அமைந்துள்ள யான்பு நகருக்குச் சவூதி சிவில் பாதுகாப்புத்துறை பல எச்சரிக்கைகளை விடுத்திருந்த பின்னர் ஆபத்து நீங்கிவிட்டதாக
அறிவித்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6ee98c0d-0e8c-4aa3-b3f3-4256c7809d02/26-6a648cead8264.webp' /></p><p>
</p><p>
தெற்கே ஏமன் எல்லைக்கு அருகில் உள்ள ஜிசான் துறைமுக நகரத்திற்கும் எச்சரிக்கை
விடுக்கப்பட்டது.

இந்த தாக்குதல்களில் உடனடி சேதங்கள் எதுவும் ஏற்பட்டதாக அதிகாரப்பூர்வ
தகவல்கள் இல்லை.
</p><p>
2021-ஆம் ஆண்டு ஒப்பந்தத்தின்படி, சவூதியின் எரிசக்தி உள்கட்டமைப்பைப்
பாதுகாக்க உதவி வரும் கிரேக்க இராணுவப்பணியாளர்களால் இந்த அமெரிக்க தயாரிப்பு
'பேட்ரியாட்' வான் பாதுகாப்பு அமைப்பு இயக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
</p><p>
செங்கடலில் இரண்டு சவூதி மசகு எண்ணெய் டேங்கர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக
ஹூதி கிளர்ச்சியாளர்கள் வியாழக்கிழமை தெரிவித்ததைத் தொடர்ந்து, ஈரான் மற்றும்
அதன் நட்பு அமைப்பான ஹூதிகளுக்குக் "கடுமையான இராணுவத் தண்டனை" வழங்கப்படும்
என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.</p><h2>சவூதி அரேபியாவிற்கு எதிராக கடல்சார் முற்றுகை</h2><p>

ஹூதி கிளர்ச்சியாளர்கள் சவூதி அரேபியாவிற்கு எதிராக கடல்சார் முற்றுகையை
அறிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b2990045-f877-4d93-8335-25d06fe8324f/26-6a648ceb8859d.webp' /></p><p>
</p><p>
இதனிடையே, ஹோர்முஸ் நீரிணையை ஈரான் முற்றுகையிட்டுள்ளதால், சவூதி அரேபியா தனது
கோடிக்கணக்கான பெரல் மசகு எண்ணெயைக் குழாய் வழியாகச் செங்கடலுக்குத் திருப்பி
அனுப்பி வருகின்றது.
</p><p>அதன்படி, கிட்டத்தட்ட ஐந்து மாதங்களாக நடைபெற்று வரும் இந்தப் போரினால்
பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளதுடன், உலகளாவிய பணவீக்கமும்
அதிகரித்துள்ளது.
</p><p>
இந்த வாரம் பிரெண்ட் கச்சா மசகு எண்ணெய் விலை மே மாதத்திற்குப் பிறகு
முதன்முறையாக ஒரு பேரலுக்கு 100 டொலராக உயர்ந்துள்ளது.</p><p>

நிலைமையைக் கட்டுப்படுத்த சீனாவைத் தொடர்ந்து பாகிஸ்தானும் அமெரிக்கா-ஈரான்
இடையிலான பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க முயற்சி செய்து வருகிறது.</p><p></p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-25T10:16:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கல்லுண்டாய் வெளி பிரிதொரு பிரதேச சபையின் கட்டுப்பாட்டில் உள்ளது! எழுந்துள்ள குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/kakaitivu-sewage-problem-1784964322"></link>
            <id>https://tamilwin.com/article/kakaitivu-sewage-problem-1784964322</id>
            <summary type="text">கல்லுண்டாய் வெளி வேறொரு பிரதேச சபையின் கட்டுப்பாட்டில் உள்ளதனால் எங்களது நடவடிக்கைகளை மேற்கொள்வது சிரமமாக உள்ளதென&amp;nbsp;யாழ் மாநகர சபையின் குழுத் தலைவர...</summary>
            <content type="html"><![CDATA[<p>கல்லுண்டாய் வெளி வேறொரு பிரதேச சபையின் கட்டுப்பாட்டில் உள்ளதனால் எங்களது நடவடிக்கைகளை மேற்கொள்வது சிரமமாக உள்ளதென&nbsp;யாழ் மாநகர சபையின் குழுத் தலைவர் ஜெகதீஸ்வரன் மயூரன் தெரிவித்துள்ளார்.</p><p> நேற்று(24.07.2026) நடைப்பெற்ற யாழ் மாநகர சபையின் கல்லுண்டாய் வெளி மற்றும் காக்கைதீவு கழிவகற்றல்
தொடர்பில்&nbsp; விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.</p><p>யாழ் மாநகர சபையின் சுகாதாரக் குழுவின் தலைவர் சாரூபன் மற்றும் யாழ் மாநகர சபையின் மராமத்துவ குழுவின் தலைவர் மயூரன் ஆகியோர் இணைந்து இந்த ஊடக சந்திப்பினை நடத்தியுள்ளனர்.</p><p>அவர் மேலும் தெரிவிக்கையில், </p><p>

கல்லுண்டாய் வெளியானது எமது மாநகர சபையின் எல்லைக்கு அப்பாற்பட்டு வேறொரு பிரதேச சபையின் கட்டுப்பாட்டில் காணப்படுகிறது.</p><p> இதனால் எங்களுடைய நடவடிக்கைகளை மேற்கொள்வது சிரமமாக உள்ளது. 

என்றாலும் கூட நாங்கள் இந்த பிரச்சினை தொடர்பாக பல போராட்டங்களை முன்னெடுத்திருந்தோம் என குறிப்பிட்டார்.</p><p></p><p></p><p><iframe src="https://www.facebook.com/plugins/video.php?height=476&href=https%3A%2F%2Fwww.facebook.com%2Freel%2F861149336849276%2F&show_text=false&width=267&t=0" width="267" height="476" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share" allowFullScreen="true"></iframe></p><p></p>]]></content>
            <updated>2026-07-25T10:04:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் இந்திய இளம்பெண்ணுக்கு நேர்ந்த துயரம்: கணவர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/indian-women-dies-in-canada-livin-partner-arrested-1784973836"></link>
            <id>https://news.lankasri.com/article/indian-women-dies-in-canada-livin-partner-arrested-1784973836</id>
            <summary type="text">கனடாவில், இந்திய இளம்பெண்ணொருவர் கொல்லப்பட்ட நிலையில், அவரது கணவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிசாருக்கு வந்த அழைப்பு

இம்மாதம், அதாவது, ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவில், இந்திய இளம்பெண்ணொருவர் கொல்லப்பட்ட நிலையில், அவரது கணவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><h3>
பொலிசாருக்கு வந்த அழைப்பு
</h3><p>
இம்மாதம், அதாவது, ஜூலை மாதம் 9ஆம் திகதி மாலை 6.44 மணியளவில், கனடாவின் ஆல்பர்ட்டா மாகாண தலைநகரான எட்மண்டனிலுள்ள சில்வர் பெர்ரி என்னுமிடத்தில் அமைந்துள்ள வீடொன்று தொடர்பில் பொலிசாருக்கு அழைப்பொன்று வந்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fcb20635-226d-45e3-abde-ea7371c846b7/26-6a648a0dad087.webp' /></p><p>
இளம்பெண்ணொருவர் அசைவின்றிக் கிடப்பதாக கிடைத்த தகவலின்பேரில் அங்கு விரைந்த பொலிசார், படுகாயமடைந்த நிலையில் சுயநினைவிழந்து கிடந்த தமன்பிரீத் கௌர் (23) என்னும் இளம்பெண்ணை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.&nbsp;</p><p>

ஆனால், சிகிச்சை பலனின்றி கௌர் 12ஆம் திகதி உயிரிழந்துவிட்டார். கௌர் இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர் ஆவார்.&nbsp;</p><p></p><p>

இந்நிலையில், கௌரின் கணவரான ரித்திஷ் குமார் (22) என்பவரை, புதன்கிழமையன்று, அதாவது, ஜூலை மாதம் 22ஆம் திகதி, பொலிசார் கைது செய்துள்ளனர்.
</p><p>
கௌர் கழுத்து நெறிக்கப்பட்டதால் உயிரிழந்ததாக உடற்கூறு ஆய்வு முடிவுகள் தெரிவித்துள்ள நிலையில், ரித்திஷ் மீது கொலைக்குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-25T10:04:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[பதவி விலகினார் இந்திய கல்வி அமைச்சர் பிரதான்! கொண்டாடத் தொடங்கிய மாணவர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/indian-education-minister-resigns-1784973002"></link>
            <id>https://ibctamil.com/article/indian-education-minister-resigns-1784973002</id>
            <summary type="text">


இந்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.

அது தொடர்பான பதவி விலகல் கடிதத்தை இன்று(25) பிரதமர் நரேந்திர மோடிக...</summary>
            <content type="html"><![CDATA[<p>


இந்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.
</p><p>
அது தொடர்பான பதவி விலகல் கடிதத்தை இன்று(25) பிரதமர் நரேந்திர மோடிக்கு அவர் அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
சி.ஜே.பி (CJP) அமைப்பிற்கும் இந்திய அரசுக்கும் இடையிலான மூன்றாவது சுற்றுப் பேச்சுவார்த்தை தொடங்குவதற்குச் சில மணி நேரங்களுக்கு முன்பு, அவர் தனது எக்ஸ் (X) கணக்கில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.</p><p></p><h2>மாணவர்களின் முக்கியக் கோரிக்கை</h2><p>
</p><p>
ஒரு மாதத்திற்கும் மேலாக டெல்லியின் ஜந்தர் மந்தரில் முகாமிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த மாணவர்களின் முக்கியக் கோரிக்கையாக பிரதானின் பதவி விலகல் இருந்து வந்துது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/739920f9-472b-47e9-bfe9-0c4e9a699f56/26-6a648aeac3283.webp' /></p><p><i>Image Credit:&nbsp;Al Jazeera</i></p><p>
</p><p>
தர்மேந்திர பிரதானைப் பதவி நீக்கம் செய்யாவிட்டால் பேச்சுவார்த்தை தொடராது என சனிக்கிழமை காலை சி.ஜே.பி தரப்பில் தெளிவுபடுத்தப்பட்ட நிலையில், இந்த பதவி விலகல் மூலம் போராட்டக்காரர்கள் முன்வைத்த அனைத்துக் கோரிக்கைகளையும் அரசு நிறைவேற்றியுள்ளது.
</p><p>
மாணவப் போராட்டக்காரர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கக் கூடாது என்பதுடன், நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தால் தற்கொலை செய்துகொண்ட மாணவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்பனவும் இதர முக்கியக் கோரிக்கைகளாகும்.</p><p> 

இக்கோரிக்கைகளுக்கு வெள்ளிக்கிழமையன்று அரசு உடன்பட்டிருந்த போதிலும், கல்வி அமைச்சரின் பதவி விலகல் குறித்த முடிவை அறிவிக்காமல் மௌனம் காத்து வந்தது.</p><h2>பிரதானின் பதிவு&nbsp;</h2><p>

இந்நிலையில், தனது பதவி விலகலை அறிவித்து பிரதான் வெளியிட்ட பதிவில், "இந்த நாட்டின் இளைஞர்களின் அபிலாஷைகள், உணர்வுகள் மற்றும் நியாயமான எதிர்பார்ப்புகளுக்கு நான் ஆழ்ந்த மரியாதை அளிக்கிறேன்.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="zxx" dir="ltr"><a href="https://t.co/VSArqS98OJ">pic.twitter.com/VSArqS98OJ</a></p>&mdash; Dharmendra Pradhan (@dpradhanbjp) <a href="https://x.com/dpradhanbjp/status/2080938216505667663?ref_src=twsrc%5Etfw">July 25, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p> </p><p>

இந்தியாவின் இளம் தலைமுறையின் கனவுகளை நனவாக்குவதே நமது அரசியல் மற்றும் சமூக வாழ்வின் தார்மீக உறுதிப்பாடாகும். பிரதமரின் தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைமையின் கீழ் தேசத்திற்குச் சேவை செய்ய எனக்கு வாய்ப்பளித்தமைக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார். </p><p> 

அந்தவகையில், பதவி விலகல் செய்தி வெளியானதுமே ஜந்தர் மந்தரில் உள்ள போராட்டக் களம் கொண்டாட்டத்தில் மூழ்கியதுடன், "மாணவர் சக்தி வாழ்க" என சி.ஜே.பியும் பதிவிட்டுள்ளது.</p><p> 

கடந்த சில நாட்களில் நாடு முழுவதும் பல நகரங்களில் தீவிரமடைந்த இந்த மாணவர் போராட்டம், எதிர்க்கட்சிகளின் ஆதரவோடு மோடி அரசாங்கத்திற்குப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-25T10:00:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொள்ளைகொள்ளும் அழகில் இளம் நடிகை மானசா வாரணாசி.. அழகிய புகைப்படங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/actress-manasa-varanasi-latest-saree-photoshoot-1784969723"></link>
            <id>https://cineulagam.com/article/actress-manasa-varanasi-latest-saree-photoshoot-1784969723</id>
            <summary type="text">Couple Friendly திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் நடிகை மானசா வாரணாசி. இவர் கடந்த 2020-ஆம் ஆண்டு நடந்த Femina Miss India போட்டியி...</summary>
            <content type="html"><![CDATA[<p>Couple Friendly திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் நடிகை மானசா வாரணாசி. இவர் கடந்த 2020-ஆம் ஆண்டு நடந்த Femina Miss India போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெற்றுள்ளார். </p><p>அடுத்ததாக இவர் தமிழில் என்ட்ரி கொடுக்கப்போவதாகவும் பேச்சுக்கள் அடிபடுகின்றன.

இளம் நடிகை மானசா வாரணாசி இன்ஸ்டாகிராமில் தன்னுடைய லேட்டஸ்ட் புகைப்படங்களை அவ்வப்போது பதிவிடுவார். </p><p>அந்த வகையில் சேலையில் எடுத்துக்கொண்ட தனது அழகிய போட்டோஷூட் புகைப்படங்களை இன்ஸ்டாவில் தற்போது பதிவிட்டுள்ளார். 

கொள்ளைகொள்ளும் அழகில் ரசிகர்களை கவரும் வகையில் நடிகை மானசா வாரணாசி எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.</p><p><br></p>]]></content>
            <updated>2026-07-25T10:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[புலம்பெயர் பெண்ணொருவருக்கு ஆதரவாக ஜேர்மன் நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/court-says-afghan-resettlement-cant-be-revoke-1784973406"></link>
            <id>https://news.lankasri.com/article/court-says-afghan-resettlement-cant-be-revoke-1784973406</id>
            <summary type="text">ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து, ஆப்கானிஸ்தானில் ஜேர்மன் படைகளுக்கு உதவியாக பணியாற்றிவந்தவர்கள் முதலான ஆப்கன் நாட்டவர்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து, ஆப்கானிஸ்தானில் ஜேர்மன் படைகளுக்கு உதவியாக பணியாற்றிவந்தவர்கள் முதலான ஆப்கன் நாட்டவர்களை ஜேர்மனிக்கு அழைத்துவருவதாக ஜேர்மன் அரசு வாக்களித்திருந்தது.
</p><p>
அவர்களில் ஆப்கன் நாட்டவரான பெண்ணொருவரும் அவரது இரண்டு பிள்ளைகளும் அடங்குவர்.
</p><h3>
ஜேர்மன் அளித்த ஏமாற்றம்</h3><p>

2021ஆம் ஆண்டு, ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து, ஆப்கானிஸ்தானில் ஜேர்மன் படைகளுக்கு உதவியாக பணியாற்றிவந்தவர்கள் முதலான ஆப்கன் நாட்டவர்கள் சுமார் 2,000 பேரை ஜேர்மனிக்கு அழைத்துவருவதாக ஜேர்மன் அரசு வாக்களித்திருந்தது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c99fdb17-1488-4808-a2cb-8da91eb2ec7d/26-6a64885f8a49c.webp' /></p><p>
அதை நம்பி ஏராளமானோர் பாகிஸ்தானுக்கு தப்பியோடினர். ஜேர்மன் விசா கிடைக்கும் என இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக அவர்கள் காத்திருக்க, ஜேர்மனியில் புலம்பெயர்தல் அரசியலாகிவிட்ட நிலையில், அந்த ஆப்கன் நாட்டவர்களை ஜேர்மனிக்கு அழைத்துக்கொள்ள ஜேர்மன் அரசு தயக்கம் காட்டிவந்தது.&nbsp;</p><p></p><p>
இந்நிலையில், ஜேர்மன் உள்துறை அமைச்சகம், ஜேர்மனிக்கு வருவதற்காக பாகிஸ்தானில் காத்திருக்கும் 640 ஆப்கன் நாட்டவர்கள் இனி ஜேர்மனிக்கு வர முடியாது என்று கூறிவிட, அந்த அகதிகள் கடும் ஏமாற்றம் அடைந்தார்கள்.</p><h3>

புலம்பெயர் பெண்ணொருவருக்கு ஆதரவாக தீர்ப்பு
</h3><p>
தான் ஏமாற்றப்பட்டதால், ஜேர்மன் ஃபெடரல் அரசியல் சாசன நீதிமன்றத்தில் அந்தப் பெண் வழக்குத் தொடர்ந்தார்.
</p><p>
இந்நிலையில், அவருக்கு ஆதரவாக அரசியல் சாசன நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

ஜேர்மனிக்கு அழைத்து வருவதாக வாக்களித்த அந்த ஆப்கன் நாட்டவர்கள் அடங்கிய குழுவுக்கு, மொத்தமாக ஜேர்மனிக்கு வர சட்டப்படி அனுமதி மறுக்கமுடியாது என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
</p><p>
அத்துடன், அந்தப் பெண் மற்றும் அவரது பிள்ளைகள் வழக்கை தனியாக பரிசீலிக்கவேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-25T09:57:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ். பல்கலை முன்னாள் துணைவேந்தருக்கு எதிராக பேராசிரியர் தொடுத்த வழக்கு தள்ளுபடி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/case-against-former-vice-chancellor-of-jaffna-uni-1784971682"></link>
            <id>https://ibctamil.com/article/case-against-former-vice-chancellor-of-jaffna-uni-1784971682</id>
            <summary type="text">யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் சி.
சிறிசற்குணராஜா மற்றும் முன்னாள் பேரவைக்கு எதிராக தாவரவியல் துறைப்
பேராசிரியர் ஆர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் சி.
சிறிசற்குணராஜா மற்றும் முன்னாள் பேரவைக்கு எதிராக தாவரவியல் துறைப்
பேராசிரியர் ஆர்.கபிலன் செய்த முறைப்பாடு பல்கலைக்கழக சேவைகள்
மேன்முறையீட்டுச் சபையினால் வறிதாக்கப்பட்டுள்ளது.
</p><p>
கடந்த 2022 ஆம் ஆண்டு தாவரவியல் துறையின் தலைவராகத் தான் செயற்பட்ட வேளையில்
பல்கலைக்கழகத்தில் அரச நிதி துஷ்பிரயோகம் இடம்பெற்றது என பகிரங்கப்படுத்தியமை
பல்கலைக்கழக விதிமுறைகளுக்கு அமைவாகத் தவறானது எனக் காரணம் காட்டி அப்போதைய
பேரவை அவரை பதவி நீக்கியது.</p><p>தன்னைத் துறைத் தலைவர் பதவியில் இருந்து நீக்கியமை தவறு எனத்
தீர்பளித்து, மீளவும் 27.08.2022 முதல் செல்லுபடியாகும் வகையில் அப்
பதவியில் நியமிக்கக் கட்டளையிடுமாறு கோரி பேராசிரியர் ஆர்.கபிலன் முறைப்பாடளித்திருந்தார்.</p><p></p><h2>நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த வழக்கு</h2><p>இந்த வழக்கு மீதான கட்டளை கடந்த ஜூன் 30 ஆம் திகதி பல்கலைக்கழக சேவைகள்
மேன்முறையீட்டுச் சபையினால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5b19d4af-c2cf-49f5-8239-5b7251610b7a/26-6a648559c8845.webp' /></p><p> முறைப்பாட்டாளரால்
முன்வைப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை ஆராயும் நியாயாதிக்கம் மேன்முறையீட்டு
சபைக்கு இல்லை என்று குறிப்பிட்டுள்ள ஜூரிகள் வழக்கைத் தள்ளுபடி செய்து கட்டளை
பிறப்பித்தனர்.
</p><p>
இதேவேளை குறித்த பேராசியர் பல்கலைக்கழகத்துக்கு எதிராக நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த
வழக்குகளைக் கடந்த வருடம் மீளப்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-25T09:50:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தியாவில் நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் - பதவி விலகிய மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/neet-protest-india-1784952262"></link>
            <id>https://tamilwin.com/article/neet-protest-india-1784952262</id>
            <summary type="text">புதிய இணைப்புநீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராட்டம் தீவிரமடைந்த நிலையில், மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகியுள்ளார்.

 ந...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராட்டம் தீவிரமடைந்த நிலையில், மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகியுள்ளார்.
</p><p>
 நீட் தேர்வு முறைகேட்டிற்கு பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் பதவி விலகியுள்ளார்.
</p><p>
அவர் தனது பதவி விலகல் கடிதத்தை பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பிவைத்துள்ளார்.&nbsp;&nbsp;</p><h2>முதலாம் இணைப்பு</h2><p>இந்திய மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினரின் கோரிக்கை குறித்து மத்திய அரசு இன்று(25.07.2026) முடிவெடுக்கவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p>

நீட் பரீட்சை வினாத்தாள் கசிந்த விவகாரம் குறித்து மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் எனக் கோரி, கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் ஜூன் 20 ஆம் திகதியில் டெல்லியின் ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டம் நடத்தத் தொடங்கினர்.</p><p></p><h2>இன்று நண்பகலுக்குள் முடிவு</h2><p>ஒரு மாதத்துக்கும் மேலாக நடக்கும் இப்போராட்டத்தில் மாணவர்கள், இளைஞர்கள், அரசியல் தலைவர்கள் உள்பட பல்வேறு தரப்பினர் பங்கேற்று வருகின்றனர்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/33128aeb-11c7-4a19-aa4e-76e67644a2aa/26-6a643ab13ca93.webp' /></p><p>

இதனைத் தொடர்ந்து, போராட்டத்தைக் கைவிடக் கோரி தொடர்ந்து வலியுறுத்திய நிலையில், மாணவர்கள் கடுமையான தாக்குதலுக்கு உள்ளானர். </p><p>மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனிடையே, போராட்டம் நடத்தி வரும் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினருடன் மத்திய அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர்.</p><p>

இரண்டாவது முறையாக வெள்ளிக்கிழமை நடந்த பேச்சுவார்த்தையின்போது, கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகல் குறித்தே கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் தொடர்ந்து வலியுறுத்தினர்.
</p><p>
இதனையடுத்து, அவர்களின் கோரிக்கை மீது முடிவெடுக்க மத்திய அமைச்சர்கள் அவகாசம் கோரியதுடன், தர்மேந்திர பிரதானின் பதவி விலகல் குறித்து இன்று (ஜூலை 25) நண்பகலுக்குள் முடிவெடுப்பதாகவும் மத்திய அமைச்சர்கள் கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-25T09:41:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[லண்டன் ஹோட்டலில் மர்மமாக உயிரிழந்த சவுதி இளவரசர்; 8 மாதம் கழித்து வந்த அதிர்ச்சி தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/alcohol-cannabis-saudi-prince-died-london-hotel-1784960598"></link>
            <id>https://canadamirror.com/article/alcohol-cannabis-saudi-prince-died-london-hotel-1784960598</id>
            <summary type="text">&amp;nbsp; லண்டனில் உள்ள பிரபல மேரியட் ஹோட்டலில் சவுதி இளவரசர் அப்துல்லா பின் ஃபஹத் கடந்த ஆண்டு நவம்பர் 25 அன்று மர்மமான முறையில் உயிரிழந்தார். 

அவரது ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; லண்டனில் உள்ள பிரபல மேரியட் ஹோட்டலில் சவுதி இளவரசர் அப்துல்லா பின் ஃபஹத் கடந்த ஆண்டு நவம்பர் 25 அன்று மர்மமான முறையில் உயிரிழந்தார். 

அவரது மரணம் தொடர்பான பிரேத பரிசோதனை மற்றும் விசாரணை முடிவுகள் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><p> 
 
ஹோட்டல் அறையின் குளியலறையில் மயங்கிக்கிடந்த இளவரசரை ஹோட்டல் ஊழியர் கண்டுபிடித்து அவசர உதவிக்கு அழைத்துள்ளார். 

இருப்பினும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7d1c8e2f-7563-40db-86da-fcefc593d29a/26-6a64565788776.webp' /></p><h2>ஆபத்தான அளவில்&nbsp;&nbsp;போதைப்பொருள்</h2><p> </p><p>பிரேத பரிசோதனை அறிக்கையின்படி, அவரது உடலில் அனுமதிக்கப்பட்ட அளவை விட மூன்று மடங்கு அதிக மது அருந்தியிருந்தது தெரியவந்துள்ளது. 
 
மேலும், ஆபத்தான அளவில் ஜி.எச்.பி போதைப்பொருள், கானபியா மற்றும் ஜானக்ஸ் போன்ற மாத்திரைகளும் கலந்திருந்தன. </p><p>

இந்த நச்சுப் பொருட்களின் அதிவேக கலவையே அவரது திடீர் மாரடைப்புக்குக் காரணம் என மருத்துவ அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது.
 
 இதற்கு முன் அவர் மது மற்றும் மருந்து அடிமைத்தனத்துக்காக லண்டனில் உள்ள பிரபல மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பெற்றுள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.</p><p> 

எனினும், அவர் தற்கொலை செய்துகொள்ளவில்லை என்றும், இது ஒரு எதிர்பாராத விபத்து மரணம் என்றும் உதவி coroner ஜீன் ஹார்க்கின் தீர்ப்பளித்துள்ளார். 

இதனையடுத்து சவுதி அரச குடும்பத்தினர் அவரது மறைவை உறுதிசெய்து, இறுதிச்சடங்குகளை நடத்தியுள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-07-25T09:41:07+00:00</updated>
        </entry>
    </feed>
