<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-07-22T01:35:21+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[2016இல் சுரேஷ் சலே சமர்ப்பித்த அறிக்கை.. உயர் அதிகாரி ஒருவரின் செயலால் மறைக்கப்பட்ட உண்மை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/suresh-sallay-easter-attack-2016-police-report-1784682787"></link>
            <id>https://tamilwin.com/article/suresh-sallay-easter-attack-2016-police-report-1784682787</id>
            <summary type="text">2016இல், இஸ்லாமிய தீவிரவாதம் மற்றும் ஐ.எஸ்.ஐ.எஸ் நடவடிக்கைகள் குறித்து&amp;nbsp;சுரேஷ் சலே முன்வைத்த அறிக்கையை உயர் அதிகாரி ஒருவர் நிராகரித்ததாக நீதிமன்றி...</summary>
            <content type="html"><![CDATA[<p>2016இல், இஸ்லாமிய தீவிரவாதம் மற்றும் ஐ.எஸ்.ஐ.எஸ் நடவடிக்கைகள் குறித்து&nbsp;சுரேஷ் சலே முன்வைத்த அறிக்கையை உயர் அதிகாரி ஒருவர் நிராகரித்ததாக நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p>பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தாம் கைது செய்யப்படுவதை எதிர்த்து அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே தாக்கல் செய்த ரிட் மனு நேற்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இத்தகவல் முன்வைக்கப்பட்டுள்ளது.</p><p>இதன்போது, சுரேஷ் சலே சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சீவ ஜயவர்தன, "சுரேஷ் சலே, 2016 ஆம் ஆண்டில் இராணுவப் புலனாய்வுப் பணிப்பாளராக இருந்தபோது, இலங்கையில் ஐ.எஸ்.ஐ.எஸ் கொள்கை பரப்பப்படும் விதம் குறித்து கவனம் செலுத்தினார்.</p><p></p><h2>சிரிய விமானத் தாக்குதல்</h2><p>அந்தச் சித்தாந்தங்கள் நாட்டில் எவ்வாறு பரவுகின்றன என்பதை அவர் சுட்டிக்காட்டியிருந்தார். சிரியாவில் இடம்பெற்ற விமானத் தாக்குதலில் கொல்லப்பட்ட, ஐ.எஸ் அமைப்போடு தொடர்புடைய இலங்கை நபர் ஒருவர் குறித்து இராணுவப் புலனாய்வுத் துறையினர் விசாரணைகளை மேற்கொண்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7479d927-1de6-428e-891f-1cb9c8cde8fa/26-6a601cdbb4fc4.webp' /></p><p>பின்னர், இலங்கையில் இஸ்லாமிய தீவிரவாதத்தைக் கட்டுப்படுத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் அடங்கிய அறிக்கை ஒன்றை சுரேஷ் சலே தயாரித்தார். </p><p>அதற்காக ஒரு சிறப்புக் குழுவை நியமிக்க வேண்டும் என்றும் அவர் முன்மொழிந்தார். இவை அனைத்தையும் அப்போதைய பாதுகாப்புச் செயலாளர் பொறியியலாளர் கருணாசேன ஹெட்டியாரச்சிவிடம் அவர் சமர்ப்பித்தார்.
</p><p>
இருப்பினும், இஸ்லாமிய தீவிரவாதம் தொடர்பாக சுரேஷ் சலே செய்த விளக்கமளிப்புகளுக்குப் பாதுகாப்புச் சபையில் உள்ள உயர் மட்ட நபர் ஒருவர் எதிர்ப்புத் தெரிவித்தார்.</p><p></p><h2>கிறிஸ்தவ தாய்..&nbsp;</h2><p> </p><p>இதனை அப்போதைய இராணுவத் தளபதி ஜகத் கிரிஷாந்த டி சில்வா, ஜனக் டி சில்வா ஆணைக்குழுவில் வழங்கிய சாட்சியத்தில் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/800e1a21-6618-42c2-b80e-a688bf883d5c/26-6a601cdcc5926.webp' /></p><p> இதன் காரணமாக, இஸ்லாமிய தீவிரவாதம் குறித்து சுரேஷ் சலே பாதுகாப்புச் சபையில் முன்வைத்த தகவல்களில் சில குழப்பங்கள்/திரிபுகள் ஏற்பட்டதாக அப்போதைய இராணுவத் தளபதி ஆணைக்குழுவின் முன் தெரிவித்திருந்தார்.
</p><p>
சுமார் இரண்டு மாதங்களுக்குப் பிறகு, சுரேஷ் சலே இராணுவப் புலனாய்வுப் பிரிவில் இருந்து நீக்கப்பட்டு மலேசியாவிற்கு அனுப்பப்பட்டார். அது அரசியல் காரணங்களுக்காகவே நடந்தது. </p><p>அவ்வாறு இஸ்லாமிய தீவிரவாதத்திற்கு எதிராகச் செயல்பட்ட ஒருவரை, ஈஸ்டர் தாக்குதலின் சூத்திரதாரி என்று எவ்வாறு குறிப்பிட முடியும்?” என கேள்வி எழுப்பியுள்ளார்.&nbsp;</p><p>குறித்த உயர் அதிகாரி தொடர்பில் தகவல் எதுவும் வெளியிடப்படாத நிலையில்,&nbsp;சுரேஷ் சலேவின் தாயார் ஒரு கிறிஸ்தவப் பெண்மணி எனவும், ஈஸ்டர் தாக்குதல் நடந்த அன்று அவரும் தேவாலயத்திற்கு சென்றிருந்ததாகவும் அவர் நீதிமன்றத்தில் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-22T01:34:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[நள்ளிரவில் சிக்கிய முன்னாள் அமைச்சரின் மகன் - சுற்றிவளைத்து பிடித்த பொலிஸார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ex-ministers-son-arrested-1784682951"></link>
            <id>https://tamilwin.com/article/ex-ministers-son-arrested-1784682951</id>
            <summary type="text">ஹபரணை - அலுத்ஓய பகுதிகளில் புராதன பொருட்களைத் தேடும் நோக்கில் அனுமதியின்றி காணி ஒன்றில் அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த ஐவர் கைது செய்யப்பட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹபரணை - அலுத்ஓய பகுதிகளில் புராதன பொருட்களைத் தேடும் நோக்கில் அனுமதியின்றி காணி ஒன்றில் அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p>
கடந்த 20ஆம் திகதி இரவு வேளையில் கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். </p><p>

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களில், தற்போது உயிரிழந்த முன்னாள் புத்தசாசன மற்றும் காணி அமைச்சரொருவரின் 50 வயதுடைய மகன் ஒருவரும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.</p><p>
</p><h2><b>
அனுமதியற்ற அகழ்வாராய்ச்சி</b></h2><p>ஏனைய சந்தேகநபர்கள் 25, 26, 31 மற்றும் 44 வயதுடைய கந்தளாய், அலுத்ஓய மற்றும் இப்படுகம ஆகிய பிரதேசங்களை சேர்ந்தவர்களாகும்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8e11b620-54f9-4130-9820-f5355704046e/26-6a601bc66bb2f.webp' /></p><p>ஹபரணை - திருகோணமலை வீதியில், யகா வங்குவ அருகில் அமைந்துள்ள காணி ஒன்றிலேயே இந்த அனுமதியற்ற அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. </p><p>

பொலிஸ் அதிகாரிகள் குறித்த இடத்திற்குச் சென்ற சந்தர்ப்பத்திலும் சந்தேகநபர்கள் 8 அடிகள் வரை ஆழத்திற்கு அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். </p><p>

சந்தேகநபர்களுடன் அகழ்வாராய்ச்சிக்கு பயன்படுத்தப்பட்ட மண்வெட்டிகள், இரும்புத் கம்பிகள் மற்றும் பூஜை பொருட்கள் உள்ளிட்ட பல வழக்குப் பொருட்களும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்..</p>]]></content>
            <updated>2026-07-22T01:24:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதிகாலையில் வீடொன்றின் மீது துப்பாக்கிப் பிரயோகம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/gunmen-open-fire-at-house-in-matara-1784682730"></link>
            <id>https://ibctamil.com/article/gunmen-open-fire-at-house-in-matara-1784682730</id>
            <summary type="text">மாத்தறையில் வீடொன்றின் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தொன்றை (Dondra), கந்தற காவல் பிரிவிற்குட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>மாத்தறையில் வீடொன்றின் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
</p><p>
தொன்றை (Dondra), கந்தற காவல் பிரிவிற்குட்பட்ட ஏதண்ட வீதியில் உள்ள வீடொன்றின் மீதே இவ்வாறு துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது.</p><p>

இந்த துப்பாக்கி பிரயோகத்தை இன்று (22-07-2026) அதிகாலையில் இனந்தெரியாத நபர்கள் மேற்கொண்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p></p><h2>தீவிர விசாரணை</h2><p>

காரில் வந்த ஆயுதமேந்திய குழுவொன்றே இந்தத் தாக்குதலை நடத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது.

இத்தாக்குதலுக்கு அவர்கள் கைத்துப்பாக்கி (Pistol) ரக ஆயுதத்தைப் பயன்படுத்தியுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
</p><p>
இத்தாக்குதலில் அதிர்ஷ்டவசமாக எவருக்கும் காயங்களோ அல்லது உயிரிழப்புகளோ ஏற்படவில்லை எனப் காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d40ec8c9-52c7-4f4c-b0ce-7bc6d257cd0d/26-6a601b00ad734.webp' /></p><p>

தாக்குதலுக்கு இலக்கான வீடு மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வரும் நபர் ஒருவருக்குச் சொந்தமானது என அடையாளம் காணப்பட்டுள்ளது.</p><p>

தாக்குதலை நடத்திய சந்தேகநபர்களை அடையாளம் காண்பதற்கும், இத்தாக்குதலின் பின்னணியில் உள்ள காரணத்தைக் கண்டறிவதற்கும் கந்தற காவல்துறையினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p>]]></content>
            <updated>2026-07-22T01:13:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் நான்கு பாடசாலை மாணவர்கள் கைது ; காரணத்தில் காத்திருந்த அதிர்ச்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/four-school-students-arrested-in-jaffna-1784681061"></link>
            <id>https://jvpnews.com/article/four-school-students-arrested-in-jaffna-1784681061</id>
            <summary type="text">வல்வெட்டித்துறை பொலிஸாரால் பாடசாலைக்கு ஒழுங்காக செல்வதில்லை என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நான்கு மாணவர்களும் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள...</summary>
            <content type="html"><![CDATA[<p>வல்வெட்டித்துறை பொலிஸாரால் பாடசாலைக்கு ஒழுங்காக செல்வதில்லை என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நான்கு மாணவர்களும் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.</p><p>

நேற்றையதினம்(21) காலை கைது செய்யப்பட்ட குறித்த நான்கு மாணவர்களும் இரவாகியும் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படாமல் தடுத்து வைக்கப்பட்டு இருந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/779f3bf5-5d92-47fe-82b6-c631bc8dd91f/26-6a6012d53464a.webp' /></p><h2>பிணையில் விடுதலை</h2><p>
</p><p>
இந்த நிலையில் பல்வேறு அழுத்தங்கள் பெற்றோர் மற்றும் உறவுகளால் முன்வைக்கப்பட்டு இருந்த நிலையில் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.&nbsp;</p><p>சிறுவர் என்ற காரணத்தினால் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், எனினும் நாளை காலை 7:00 மணிக்கு பொலிஸ் நிலையம் வருமாறு அழைக்கப்பட்டுள்ளதாகவும், நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டு நீதிமன்ற நடவடிக்கை நாளைய தினம் எடுக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.</p><p></p><p>
</p><p>&nbsp;இந்த விடயம் தொடர்பில் மனித உரிமைகள் ஆணையாளரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டிருந்த நிலையில் தற்போது பொலிஸ் பிணையில் மாணவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-22T01:10:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலக சாம்பியனை வரவேற்ற 20 லட்சம் பேர்; ஸ்பெயின் முழுவதும் களைக்கட்டிய கொண்டாட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/two-million-fans-welcome-world-champion-1784680427"></link>
            <id>https://canadamirror.com/article/two-million-fans-welcome-world-champion-1784680427</id>
            <summary type="text">உலக கோப்பை வென்ற ஸ்பெயின் வீரர்களை வரவேற்க, 20 லட்சம் ரசிகர்கள் திரண்டனர்.



அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் நடந்த உலக கோப்பை பைனலில், ஸ்பெயின் அணி...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">உலக கோப்பை வென்ற ஸ்பெயின் வீரர்களை வரவேற்க, 20 லட்சம் ரசிகர்கள் திரண்டனர்.
</p><p style="text-align: justify; ">


அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் நடந்த உலக கோப்பை பைனலில், ஸ்பெயின் அணி, அர்ஜென்டினாவை சாய்த்து, இரண்டாவது முறையாக சாம்பியன் ஆனது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fddc5ff4-4a54-4f9f-ab1c-84fa98082fbd/26-6a600fed5f499.webp' /></p><p> </p><p style="text-align: justify; ">இதையடுத்து 26 வீரர்கள், பயிற்சியாளர் குழுவினர் நேற்று ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட் வந்தனர்.


உலக கோப்பையுடன் மன்னர் குடும்பத்தினர், பிரதமர் பெட்ரோ சான்செசையும் சந்தித்து பாராட்டு பெற்றனர். </p><p style="text-align: justify; ">பின் பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லமான மான்க்லோவா அரண்மனையில் இருந்து சிபெலெஸ் சதுக்கம் வரை திறந்த வெளி பஸ்சில், மாட்ரிட் நகரின் மையப்பகுதியில் ஊர்வலமாக சென்றனர்.


</p><p style="text-align: justify; ">
'வி ஆர் சாம்பியன்' என்ற வாசகம் கொண்ட ஜெர்சி அணிந்து காணப்பட்டனர்.</p><p style="text-align: justify; "> பல்வேறு இடங்களில் வீரர்கள், ரசிகர்களுடன் நடனமாடி மகிழ்ந்தனர்.


சிபெலெஸ் சதுக்கத்தில் ஸ்பெஷலான மேடை அமைக்கப்பட்டு இருந்தது. இங்கு வந்ததும் ஒவ்வொரு வீரராக அறிமுகம் செய்யப்பட்டனர். </p><p style="text-align: justify; ">தனது 25 வது பிறந்த நாள் கொண்டாடிய பயனா, உலக கோப்பை ஏந்திய படி வந்தார். கடைசியில் பயிற்சியாளர் லுாயிஸ் டி லாவை வீரர்கள் மேலே துாக்கி ஆரவாரம் செய்தனர்.
</p><p style="text-align: justify; ">

பின் ஆட்டம் களை கட்டியது. வீரர்களுடன் பாடகிகள் ஐடனா, அனா மெனா உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.</p>]]></content>
            <updated>2026-07-22T01:10:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதிகாலையில் அதிர வைத்த துப்பாக்கிச்சூடு ; காரில் வந்தவர்கள் அரங்கேற்றிய சம்பவம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/early-morning-gunfire-shocks-residents-1784682547"></link>
            <id>https://jvpnews.com/article/early-morning-gunfire-shocks-residents-1784682547</id>
            <summary type="text">தேவேந்திரமுனை, கந்தர பகுதியில் உள்ள வீடு ஒன்றின் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 

இன்று (22) அதிகாலை காரில் வந்த சிலர் கைத்து...</summary>
            <content type="html"><![CDATA[<p>தேவேந்திரமுனை, கந்தர பகுதியில் உள்ள வீடு ஒன்றின் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
</p><p>
 

இன்று (22) அதிகாலை காரில் வந்த சிலர் கைத்துப்பாக்கி ஒன்றினால் இத்துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டுவிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/019723ff-ae26-45d0-8c41-796e7d4ec6a1/26-6a6018348898b.webp' /></p><p>
</p><p>
 

இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் எவருக்கும் காயம் அல்லது பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.</p><p></p><p>

 

கந்தர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஏதண்ட வீதி, தேவேந்திரமுனை பகுதியில் அமைந்துள்ள மீனவர் ஒருவரின் வீட்டின் மீதே இத்துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-22T01:09:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதிகாலையில் ஏற்பட்ட பரபரப்பு.. தென்னிலங்கையில் வீடொன்றின் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய கும்பல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/gun-shoot-in-devinuwara-gandhara-this-morning-1784681548"></link>
            <id>https://tamilwin.com/article/gun-shoot-in-devinuwara-gandhara-this-morning-1784681548</id>
            <summary type="text">தேவினுவர - கந்தார பகுதியில் உள்ள ஒரு வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

இன்று அதிகாலை (22) இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>தேவினுவர - கந்தார பகுதியில் உள்ள ஒரு வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
</p><p>
இன்று அதிகாலை (22) இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.&nbsp;</p><p></p><h2>பொலிஸ் விசாரணை&nbsp;</h2><p>ஒரு மோட்டார் வாகனத்தில் வந்த ஒரு கும்பல், துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/03223118-53f0-43ca-89a9-825e7bc39c7f/26-6a6015e27bd98.webp' /></p><p>

துப்பாக்கிச் சூட்டில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
</p><p>
கந்தார பொலிஸ் பிரிவு, எடண்டா வீதி, தேவினுவராவில் உள்ள கடற்றொழிலில் ஈடுபட்டு வந்த ஒருவரின் வீட்டில் இந்தத் துப்பாக்கிச் சூடு நடந்ததாகத் கூறப்படுகின்றது.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-22T01:04:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சவுதி துறைமுகங்களைத் தவிர்க்க கப்பல் நிறுவனங்களுக்கு ஹவுதிகள் எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/houthis-warn-ships-to-avoid-saudi-ports-1784682218"></link>
            <id>https://news.lankasri.com/article/houthis-warn-ships-to-avoid-saudi-ports-1784682218</id>
            <summary type="text">யேமனின் ஹவுதி கிளர்ச்சிக் குழு, சவுதி அரேபிய துறைமுகங்களை நோக்கி செல்லும் கப்பல் நிறுவனங்களுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஹவுதிகள் அனுப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>யேமனின் ஹவுதி கிளர்ச்சிக் குழு, சவுதி அரேபிய துறைமுகங்களை நோக்கி செல்லும் கப்பல் நிறுவனங்களுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது.</p><p>

ஹவுதிகள் அனுப்பிய மின்னஞ்சலில், “சவுதி துறைமுகங்களுடன் தொடர்புடைய எந்தவொரு கப்பலும் தாக்குதலுக்கு உள்ளாகலாம்” என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இந்த மின்னஞ்சல் ஹவுதிகளின் சனா-அடிப்படையிலான மனிதாபிமான நடவடிக்கை ஒருங்கிணைப்பு மையம் (HOCC) மூலம் அனுப்பப்பட்டது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f7922a8f-640b-45e8-bede-d809fa672337/26-6a6016ebca2d3.webp' /></p><p>புதிய விதிமுறைகள் திங்கட்கிழமை 12:01 GMT முதல் அமுலுக்கு வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஹவுதிகள், சவுதி அரேபியாவை ஆதரிக்கும் கப்பல்கள் அல்லது நிறுவனங்கள் மீது தண்டனைகள் மற்றும் தாக்குதல்கள் நடத்தப்படும் என எச்சரித்துள்ளனர்.
</p><p>
இந்த எச்சரிக்கை, செங்கடல் வழியாகச் செல்லும் சர்வதேச வர்த்தக பாதைகளுக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். </p><p></p><p>சவுதி அரேபியா, செங்கடல் வழியாக எண்ணெய் மற்றும் பொருட்களை ஏற்றுமதி செய்யும் முக்கிய நாடாக இருப்பதால், இந்த எச்சரிக்கை உலகளாவிய கப்பல் போக்குவரத்துக்கு புதிய சவாலாக உள்ளது.
</p><p>
ஹவுதிகள், 2024 முதல் யேமனில் நடந்து வரும் போரில் ஈடுபட்டு, சவுதி அரேபியாவை எதிர்த்து பல தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர். தற்போது, இந்த மின்னஞ்சல் எச்சரிக்கை, மத்திய கிழக்கின் கடல்வழி பாதுகாப்பு நிலைமை குறித்து சர்வதேச அளவில் கவலைகளை அதிகரித்துள்ளது.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-22T01:01:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[சீனாவின் உயரிய இலக்கிய விருதை வென்ற உணவு டெலிவரி ஊழியர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/courier-makes-history-with-top-literature-prize-1784682033"></link>
            <id>https://canadamirror.com/article/courier-makes-history-with-top-literature-prize-1784682033</id>
            <summary type="text">சீனாவைச் சேர்ந்த உணவு டெலிவரி பணியாளரும், கவிஞருமான வாங் ஜிபிங், கவிதைப் பிரிவில் சீனாவின் மதிப்புமிக்க லு சூன் இலக்கியப் பரிசை வென்றுள்ளார்.

நவீன ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சீனாவைச் சேர்ந்த உணவு டெலிவரி பணியாளரும், கவிஞருமான வாங் ஜிபிங், கவிதைப் பிரிவில் சீனாவின் மதிப்புமிக்க லு சூன் இலக்கியப் பரிசை வென்றுள்ளார்.
</p><p>
நவீன சீன இலக்கியத்தின் தந்தை என அழைக்கப்படும் லு சூனின் பெயரால் வழங்கப்படும் இந்த விருது, சீனாவின் மிக உயர்ந்த இலக்கிய அங்கீகாரங்களில் ஒன்றாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/03dc394a-c2b6-42c0-8814-217f30ee46f2/26-6a601632e3a4b.webp' /></p><p>

</p><p>
லோ பிளைட்
சீனாவில் பணிபுரியும் தொழிலாளர்களின் அன்றாடப் போராட்டங்கள், விரக்திகள் மற்றும் சவால்களை மையமாக வைத்து 'லோ பிளைட்' (Low Flight) எனும் கவிதைத் தொகுப்பு நூலை எழுதியுள்ளார்.
</p><p>
இந்த நூலுக்காக சுமார் 200 சக டெலிவரி ஊழியர்களிடம் அவர் உரையாடியுள்ளார்.
</p><p>
6,000 கவிதைகள்
பகலில் உணவு டெலிவரி செய்யும் இவர், கடந்த 8 ஆண்டுகளில் தனது ஸ்கூட்டரில் சுமார் 1,50,000 கிலோமீட்டருக்கும் அதிகமான தூரம் பயணித்து, ஓய்வு நேரங்களில் 6,000-க்கும் மேற்பட்ட கவிதைகளை எழுதியுள்ளார்.
</p><p>
களப்பணியாளர்களின் யதார்த்தமான வாழ்க்கையை எழுத்தாக்கிய இவரது வெற்றி, சீனாவில் தொழிலாளர்களின் இலக்கிய படைப்புகளுக்குக் கிடைத்துவரும் மிகப்பெரிய அங்கீகாரமாகக் கருதப்படுகிறது.
</p><p>
ஜியாங்சு மாகாணத்தில் பிறந்த வாங் ஜிபிங், வீட்டில் நிலவிய பொருளாதார நெருக்கடி காரணமாக இளமையிலேயே பள்ளியிலிருந்து விலகினார். </p><p>அவர் உணவு டெலிவரி ஊழியராக மாறுவதற்கு முன் கட்டுமானம், குப்பை சேகரிப்பு மற்றும் தெருவோர வியாபாரம் என பல்வேறு வேலைகளைச் செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-07-22T01:00:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டில் கொட்டி தீர்க்கப்போகும் கனமழை...! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/heavy-rain-with-thunderstorms-in-maritime-regions-1784681993"></link>
            <id>https://ibctamil.com/article/heavy-rain-with-thunderstorms-in-maritime-regions-1784681993</id>
            <summary type="text">சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சிறிதளவு மழை பெய்யக்கூடும்.வளிமண்டலவியல் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சிறிதளவு மழை பெய்யக்கூடும்.</p><p>வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (22-07-2026) விடுத்துள்ள அறிக்கையில் மேற்படி விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இதனடிப்படையில் வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் அத்துடன் ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் மணித்தியாலத்திற்கு சுமார் 40 - 50 km வேகத்தில் அடிக்கடி பலத்த காற்று வீசக் கூடும்.

 


</p><p> 
</p><p></p><h2>பனிமூட்டமான நிலை</h2><p>நாட்டின் ஏனைய பிராந்தியங்களில் வறட்சியான வானிலை நிலவக்கூடும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ad459c36-9459-4b9e-8a53-cd5407d93933/26-6a60160b07310.webp' /></p><p>கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் அத்துடன் கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் இன்று பகல் வேளையில் வெப்பச் சுட்டெண் காரணமாக மனித உடலினால் அதிகரித்த வெப்பநிலையை உணரக்கூடியதாக இருக்கும்.</p><p>இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-22T01:00:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறிலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் பாரிய முறைகேடுகள்: ஆரம்பிக்கப்பட்டுள்ள விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/probe-into-sri-lanka-cricket-corruption-1784681290"></link>
            <id>https://ibctamil.com/article/probe-into-sri-lanka-cricket-corruption-1784681290</id>
            <summary type="text">சிறிலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் நிருவாகத்தில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படும் நிதி முறைகேடுகள் மற்றும் மோசடிகள் தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிறிலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் நிருவாகத்தில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படும் நிதி முறைகேடுகள் மற்றும் மோசடிகள் தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இலஞ்ச, ஊழல் மோசடி தவிர்ப்பு விசாரணை ஆணைக்குழுவினால் விரிவான விசாரணையொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
</p><p>
ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் இந்த விசாரணை, சமூக ஆர்வலரான தனீஷ் அலி சமர்ப்பித்த முறைப்பாட்டிற்கு அமையவே தொடங்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p></p><h2>சிறப்பு விசாரணை</h2><p>இந்த விசாரணைக்கு அமைவாக, 2023 செப்டம்பர் 11 ஆம் திகதி வெளியிடப்பட்ட சிறப்பு கணக்காய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் தெளிவுபடுத்தி விரிவான வாக்குமூலம் அளிப்பதற்காக, தனீஷ் அலியை ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.</p><p>

இதனடிப்படையில், எதிர்வரும் 31 ஆம் திகதி உரிய ஆவணங்களுடன் ஆணைக்குழுவின் சிறப்பு விசாரணைப் பிரிவிற்கு வருகை தருமாறு அவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8f6ca7fd-80c6-4256-b5f7-c419697a414a/26-6a60134bc334b.webp' /></p><p>முன்னாள் தலைவர் ஷம்மி சில்வா தலைமையிலான நிர்வாகத்தின் கீழ் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல்கள் மற்றும் திலங்க சுமதிபாலவின் தலைமையிலான காலத்தில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படும் நிதி மோசடிகள் மற்றும் முறைகேடுகள் தொடர்பிலும் இந்த முறைப்பாட்டின் மூலம் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
</p><p>
குறிப்பாக, அப்போதைய சிறிலங்கா கிரிக்கெட் நிர்வாகத்திற்கும் சூதாட்டக்காரர்களுக்கும் இடையே நிலவியதாகக் கூறப்படும் சட்டவிரோத தொடர்புகள், போட்டி நிர்ணயக் குற்றச்சாட்டுகள் மற்றும் சிறிலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் பணத்தை தவறாகப் பயன்படுத்தியமை தொடர்பில் தனீஷ் அலி ஆணைக்குழு முன்னிலையில் கருத்துக்களை முன்வைக்கவுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.&nbsp;&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-22T00:52:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[இரு வாரத்திற்கு மாத்திரமே எம்பி பதவி! சபையில் அர்ச்சுனா வெளியிட்ட தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/archchuna-may-leave-parliament-within-weeks-1784680535"></link>
            <id>https://tamilwin.com/article/archchuna-may-leave-parliament-within-weeks-1784680535</id>
            <summary type="text">நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன், தாம் இன்னும் அதிக காலம் சட்டமன்றத்தில் நீடிக்கப் போவதில்லை என்றும், அடுத்த இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன், தாம் இன்னும் அதிக காலம் சட்டமன்றத்தில் நீடிக்கப் போவதில்லை என்றும், அடுத்த இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்குள் வெளியேறிவிடக்கூடும் என்றும் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.</p><p>நேற்றைய தினம் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், “நான் இன்னும் அதிக காலம் இந்த நாடாளுமன்றத்தில் இருக்க மாட்டேன். </p><p>நான் உங்களை நீண்ட காலத்திற்குத் தொந்தரவு செய்ய மாட்டேன். இன்னும் இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்கு மட்டுமே நான் இங்கு இருப்பேன்” என்று கூறினார்.</p><p>
மாவட்ட ஒருங்கமைப்புக் குழு (DCC) கூட்டத்தின் போது பொதுமக்களின் கவலைகளை எழுப்பிய பின்னர் தாம் அச்சுறுத்தல்களை எதிர்கொண்டதாகவும் அவர் இதன்போது குற்றம் சாட்டினார்.</p><p></p><h2>DCC&nbsp;கூட்ட சலசலப்பு&nbsp;</h2><p> </p><p>மேலும், வடக்கில் முன்வைக்கப்படும் ஊழல் தொடர்பான பல முறைப்பாடுகளையும் ஆவண ஆதாரங்களையும், இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுக்கள் விசாரணை ஆணைக்குழுவிடமும், ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவிடமும் சமர்ப்பித்ததாகவும், ஆனால் எந்த விசாரணையும் ஆரம்பிக்கப்படவில்லை என்றும் அவர் கூறினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6a53a054-ed9d-4f84-bb4a-f09f815b48c3/26-6a60133e513eb.webp' /></p><p>
</p><p>
அத்துடன், யாழ்ப்பாண போதனா மருத்துவமனையின் மருந்துக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து முறையான விசாரணை எதுவும் நடத்தப்படவில்லை என்றும், இப்பிரச்சினையை எழுப்பிய பின்னர் தாம் அச்சுறுத்தல்களையும் சட்ட நடவடிக்கைகளையும் எதிர்கொண்டதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.</p><p>

தன்னை நாடாளுமன்றத்திலிருந்து நீக்கக் கோரும் சட்ட நடவடிக்கையானது, வடக்கிலிருந்து வரும் சுயேட்சைப் பிரதிநிதிகள் நியாயமற்ற முறையில் குறிவைக்கப்படுகிறார்கள் என்ற எண்ணத்தை சில தமிழ் மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது என்று அர்ச்சுனா மேலும் கூறினார்.</p><p>மேலும், இந்தக் கவலைகளைக் களைந்து, சுயேட்சைப் பிரதிநிதிகளுக்குச் சமமான உரிமைகளை உறுதி செய்யுமாறு அவர் அரசை வலியுறுத்தினார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-22T00:48:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[23 ஏக்கர் Farm YouTube-ல சம்பாரிச்சு வாங்குனதா? - Saapattu Raman Farm Tour]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/saapattu-raman-farm-tour-video-1784646261"></link>
            <id>https://cineulagam.com/article/saapattu-raman-farm-tour-video-1784646261</id>
            <summary type="text">Farm Tourஇப்போதெல்லாம் மக்கள் ஒரு வேலையை நம்பி இருப்பது இல்லை. தமக்கு தெரிந்த விஷயங்களில் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி பெரிய அளவில் தொழிலதிபராகிவிடுகிறார...</summary>
            <content type="html"><![CDATA[<h2>Farm Tour</h2><p>இப்போதெல்லாம் மக்கள் ஒரு வேலையை நம்பி இருப்பது இல்லை. தமக்கு தெரிந்த விஷயங்களில் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி பெரிய அளவில் தொழிலதிபராகிவிடுகிறார்கள்.</p><p>அப்படி இப்போது நாம் ஒரு பிரபலத்தின் Farm Tour தான் பார்க்கப்போகிறோம். சமூக வலைதளங்களில் பிரபலம் அடைந்த சாப்பாட்டு ராமன் ஒரு Farm வைத்துள்ளார்.</p><p>அதில் என்னென்ன இருக்கிறது, எப்படியெல்லாம் பராமரிக்கிறார் என்ற முழு Farm Tourஐ இப்போது காண்போம்.</p><p>&nbsp;<iframe frameborder="0" src="//www.youtube.com/embed/gEDO5vSA97I" width="640" height="360" class="note-video-clip"></iframe></p>]]></content>
            <updated>2026-07-22T00:30:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரதமரைத் இரகசியமாக நோட்டமிட்ட மூன்று நபர்கள் அதிரடி கைது...! எழுந்த பாதுகாப்பு அச்சுறுத்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/3-arrested-for-spying-on-pm-harini-1784679813"></link>
            <id>https://ibctamil.com/article/3-arrested-for-spying-on-pm-harini-1784679813</id>
            <summary type="text">பிரதமர் ஹரினி அமரசூரியவைத் தொலைநோக்கி மூலம் கண்காணித்ததாக சந்தேகத்தின் பேரில் மூன்று நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பில் உள்ள பிரபல நட்சத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரதமர் ஹரினி அமரசூரியவைத் தொலைநோக்கி மூலம் கண்காணித்ததாக சந்தேகத்தின் பேரில் மூன்று நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p>
கொழும்பில் உள்ள பிரபல நட்சத்திர ஹோட்டல் ஒன்றுக்கு ஹரினி அமரசூரிய நேற்று (21-07-2026) சென்றிருந்த போது இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.</p><p>

சந்தேக நபர்களான மூவரையும் கொம்பனித் தெரு காவல்துறையினர் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் நேற்று முன்னிலைப்படுத்தினர்.</p><p>
</p><p></p><h2>முழுமையான அறிக்கை</h2><p>இதையடுத்து சந்தேக நபர்களான மூவரையும் இன்று (22-07-2026) வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் பசன் அமரசேன உத்தரவிட்டுள்ளார்.</p><p>

அத்தோடு இச்சம்பவம் குறித்த முழுமையான அறிக்கையை நாளை (23-07-2026) சமர்ப்பிக்குமாறு கொம்பனி தெரு காவல்துறையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/91513e12-ec10-4dee-88f0-e25e5e377098/26-6a600d86f38c9.webp' /></p><p>சந்தேக நபர்களான மூவரில் இருவர் சகோதரர்கள் என்றும் அவர்கள் கிண்ணியா பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் மற்றைய நபர் முள்ளிப்பொத்தானை பகுதியைச் சேர்ந்தவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
சந்தேக நபர்கள் மூவரும் கொழும்புப் பகுதியில் பணிபுரிவதாக தெரிவித்திருந்தனர் என காவல்துறையினர் நீதிமன்றத்தில் குறிப்பிட்டுள்ளனர்.</p><p> 

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொம்பனித் தெரு காவல்துறையினர் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-22T00:28:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்காவுக்கு விருப்பம் இல்லை ; ட்ரம்ப் திட்டவட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/trump-rules-out-talks-with-the-united-states-1784674748"></link>
            <id>https://canadamirror.com/article/trump-rules-out-talks-with-the-united-states-1784674748</id>
            <summary type="text">அமெரிக்கா-ஈரான் இடையேயான அமைதி பேச்சுவார்த்தை முறிந்து மீண்டும் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. 10 நாட்களாக நீடித்து வரும் இந்த சண்டையில் ஈரான் தனது அண்டை...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்கா-ஈரான் இடையேயான அமைதி பேச்சுவார்த்தை முறிந்து மீண்டும் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. </p><p>10 நாட்களாக நீடித்து வரும் இந்த சண்டையில் ஈரான் தனது அண்டை நாடான குவைத், பஹ்ரைன், ஐக்கிய அரபு அமீரகம், ஜோர்டன், கத்தார் உள்ளிட்டவை மீது தாக்குதல் நடத்தியது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a1353add-e951-48a3-a761-f0282837333d/26-6a5ff9bd9f715.webp' /></p><p>


</p><p>
இதற்கிடையே ஈரான் உள்துறை அமைச்சர் எஸ்கந்தர் மொமேனி, அமெரிக்காவுடனான மோதலைத் தணித்து, முறிந்த இடைக்கால அமைதி ஒப்பந்தத்தை மீட்டெடுப்பதற்காக பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். </p><p>இஸ்லாமாபாத்துக்கு நேரில் சென்று ராணுவத் தளபதி ஆசிம் முனீர் மற்றும் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் ஆகிய மத்தியஸ்தர்களைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். </p><p>ஆனால் போரை முடிவுக்குக் கொண்டுவருவது தொடர்பாக ஈரானுடன் தற்போதைக்கு பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்காவுக்கு எந்த விருப்பமும் இல்லை என்று அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
</p><p>

ஓவல் அலுவலகத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், "ஈரான் தரப்பில் பேச்சுவார்த்தை நடத்த மிகவும் ஆர்வமாக உள்ளனர். ஆனால், முறையான மற்றும் பயனுள்ள பேச்சுவார்த்தைக்கு அவர்கள் தயாராகும் வரை சந்திப்பில் எங்களுக்கு ஆர்வம் இல்லை” என்றார்.</p><p> மேலும், போரினால் ஈரான் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதால், அதை முடிவுக்கு கொண்டுவரவே அவர்கள் பேச்சுவார்த்தைக்கு துடிப்பதாக ட்ரம்ப் கூறியுள்ளார்.</p><p> தற்போது, இரு நாடுகளுக்கும் இடையேயான தற்காலிக போர்நிறுத்த ஒப்பந்தம் பலவீனமடைந்துள்ளதால், தாக்குதல்கள் மீண்டும் தீவிரமடைந்துள்ளன.</p>]]></content>
            <updated>2026-07-22T00:26:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலகில் அதிகளவில் பட்டினியை எதிர்கொள்ளும் கண்டம்: ஆசியாவை விஞ்சிய ஆப்பிரிக்கா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/africa-tops-hunger-list-surpasses-asia-un-1784662087"></link>
            <id>https://news.lankasri.com/article/africa-tops-hunger-list-surpasses-asia-un-1784662087</id>
            <summary type="text">ஐக்கிய நாடுகள் சபையின் உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து குறித்த வருடாந்திர அறிக்கையில், உலகளவில் பட்டினி குறையும் நிலையில் இருந்தாலும், அந்த முன்னே...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஐக்கிய நாடுகள் சபையின் உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து குறித்த வருடாந்திர அறிக்கையில், உலகளவில் பட்டினி குறையும் நிலையில் இருந்தாலும், அந்த முன்னேற்றம் சமமாக இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
2026 ஜூலை 21 அன்று வெளியிடப்பட்ட இந்த அறிக்கையில், ஆப்பிரிக்கா கண்டம், ஆசியாவை விட அதிகமான மக்கள் பட்டினி மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p>இதன் மூலம், முதன்முறையாக உலகில் அதிகளவில் பட்டினியை எதிர்கொள்ளும் கண்டமாக ஆப்பிரிக்கா மாறியுள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2ef1fb7d-305e-4bd5-8bfe-0f2126d4eabc/26-6a5fc8c67d0aa.webp' /></p><p>ஆப்பிரிக்காவில் பல கோடி மக்கள் போதுமான உணவின்றி வாழ்ந்து வருவதாகவும், குறிப்பாக சஹாரா தெற்குப் பகுதிகள் மற்றும் ஜிம்பாப்வே போன்ற நாடுகளில் உணவு உதவிக்கு மக்கள் அதிகமாக சார்ந்துள்ளனர்.
</p><p>
ஐ.நா. அறிக்கையில், உலகளவில் பட்டினி குறைப்பதில் முன்னேற்றம் இருந்தாலும், அது சமமாக இல்லை. சில பகுதிகளில் உணவு பாதுகாப்பு மேம்பட்டாலும், ஆப்பிரிக்காவில் நிலைமை மோசமடைந்துள்ளது.</p><p>

இதனால், ஆப்பிரிக்கா கண்டத்தில் உணவு பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் சர்வதேச உதவி, அரசியல் நிலைத்தன்மை, வேளாண் வளர்ச்சி மற்றும் பொருளாதார முன்னேற்றம் அவசியம் என வலியுறுத்தப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-22T00:25:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[உக்ரைன் தொடர்பில் ஜேர்மனி-ரஷ்யா ரகசிய சந்திப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/secret-baku-talks-germany-russia-on-ukraine-war-1784679962"></link>
            <id>https://news.lankasri.com/article/secret-baku-talks-germany-russia-on-ukraine-war-1784679962</id>
            <summary type="text">அசர்பைஜான் ஜனாதிபதி இல்ஹாம் அலியேவ் ஜூலை 21, 2026 அன்று பெர்லினில் ஜேர்மன் சேன்சலர் ஃப்ரெட்ரிக் மெர்ஸுடன் கூட்டு செய்தியாளர் சந்திப்பை மேற்கொண்டார்.
...</summary>
            <content type="html"><![CDATA[<p>அசர்பைஜான் ஜனாதிபதி இல்ஹாம் அலியேவ் ஜூலை 21, 2026 அன்று பெர்லினில் ஜேர்மன் சேன்சலர் ஃப்ரெட்ரிக் மெர்ஸுடன் கூட்டு செய்தியாளர் சந்திப்பை மேற்கொண்டார்.</p><p>

அப்போது, ஜேர்மனி மற்றும் ரஷ்யாவின் முன்னாள் உயர் அதிகாரிகள் பாகுவில் (Baku) ரகசியமாக சந்தித்ததாக உறுதிப்படுத்தினார்.
</p><p>
அலியேவ் கூறியதாவது: “எங்கள் நாட்டின் நிலப்பரப்பை, எங்களுக்குத் தெரியாமல் இந்த சந்திப்புக்கு பயன்படுத்தினர். விமானப் பதிவுகள் மூலம் அந்த சந்திப்பு நடந்தது உறுதியாகிறது” என தெரிவித்தார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/42180a05-c6e8-4753-872d-efa473f2380a/26-6a600e1c2b345.webp' /></p><p>இந்த சந்திப்பு ஜூலை 12 முதல் 14 வரை நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில், ஜேர்மனியின் முன்னாள் சேன்சலர் அங்கேலா மேர்கலின் முன்னாள் தலைமைச் செயலாளர் ரோனால்ட் போஃபல்லா, பிராண்டன்பர்க் மாநில முன்னாள் தலைவர் மத்தியாஸ் பிளாட்செக் ஆகியோர் பங்கேற்றனர்.</p><p>

ரஷ்ய தரப்பில், விக்டர் சூப்கோவ் (Gazprom தலைவர், முன்னாள் பிரதமர்) மற்றும் வலெரி ஃபடேயேவ் (ரஷ்ய குடியரசுத் தலைவரின் மனித உரிமை கவுன்சில் தலைவர்) ஆகியோர் கலந்து கொண்டனர்.
</p><p></p><p>ஆனால், ஜேர்மன் அரசுக்கு இந்த சந்திப்பில் எந்தவித பங்கும் இல்லை என்று சேன்சலர் ஃப்ரெட்ரிக் மெர்ஸ் தெரிவித்தார். தனக்கு இப்படியான சந்திப்பு பற்றி எந்தத் தகவலும் இல்லை என்று அவர் கூறினார்.
</p><p>
இந்த சந்திப்பு, ரஷ்யா-உக்ரைன் போருக்கு முடிவு காணும் வழிகளை ஆராய்வதற்காக நடந்ததாக ஊடகங்கள் கூறுகின்றன. </p><p>அலியேவ், “இந்த சந்திப்பு உண்மையில் போருக்கு முடிவு காண உதவுவதாக இருந்தால், அதை வரவேற்கிறோம்” என்றார்.
</p><p></p><p>அசர்பைஜான், 2022-இல் ரஷ்யா உக்ரைனை முழுமையாக ஆக்கிரமித்த பிறகு, இரு தரப்புடனும் உறவை சமநிலைப்படுத்த முயற்சித்து வருகிறது. ஆனால், 2024-இல் ரஷ்ய விமானப்படை தவறுதலாக அசர்பைஜான் பயணிகள் விமானத்தை சுட்டு வீழ்த்திய சம்பவம் இரு நாடுகளின் உறவை பாதித்தது.
</p><p>
இந்த ரகசிய சந்திப்பு, ஜேர்மனி-ரஷ்யா இடையிலான பின்வழி (back-channel) தொடர்பு முயற்சியாக கருதப்படுகிறது. இது, உக்ரைன் போருக்கான அமைதி முயற்சிகளில் புதிய பரிமாணத்தை உருவாக்கியுள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-22T00:24:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீதி அமைச்சருக்கு எதிரான பிரேரணை தோல்வியடையும் - அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ திட்டவட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/motion-against-justice-minister-nalinda-jayatissa-1784678734"></link>
            <id>https://tamilwin.com/article/motion-against-justice-minister-nalinda-jayatissa-1784678734</id>
            <summary type="text">நீதி அமைச்சருக்கு எதிராக எதிர்க்கட்சிகளால் கொண்டு வரப்படும்
நம்பிக்கையில்லாப் பிரேரணையால் அரசுக்கு எவ்வித தாக்கமும் ஏற்படாது என்று
அமைச்சரவைப் பேச்ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீதி அமைச்சருக்கு எதிராக எதிர்க்கட்சிகளால் கொண்டு வரப்படும்
நம்பிக்கையில்லாப் பிரேரணையால் அரசுக்கு எவ்வித தாக்கமும் ஏற்படாது என்று
அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
</p><p>
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற வாராந்த
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைக்
குறிப்பிட்டார்.</p><p></p><h2>நம்பிக்கையில்லாப் பிரேரணை</h2><p>

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

"கல்வி மறுசீரமைப்புகள் மேற்கொள்ளப்பட்டபோது, கல்வி அமைச்சை வகிக்கும்
பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டுவரவும், அவர்
பதவியிலிருந்து விலகவும் எதிர்க்கட்சிகள் முயன்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8baae89c-c827-4b29-a4ec-d3d1d1ab7e5f/26-6a600d1a81698.webp' /></p><p> எனினும், அந்த முயற்சி
இறுதி வரை வெற்றி பெறவில்லை.

மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சராக இருந்த குமார ஜயக்கொடிக்கு எதிராகவும்
நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டுவந்தனர். </p><p>எனினும், அரசு எடுத்த
தீர்மானத்தின்படி, சுயாதீனமான விசாரணைக்கு வழிவகுக்கும் வகையிலேயே அவர்
அவராகவே பதவி விலகினாரே தவிர, எதிர்க்கட்சிகளின் பிரேரணையால் அரசுக்கு எந்தப்
பாதிப்பும் ஏற்படவில்லை.
</p><p>
தற்போது நீதி அமைச்சருக்கு எதிராகக் கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப்
பிரேரணையும் முந்தைய முயற்சிகளைப் போன்றதுதான். இதனால் அரசுக்கு எந்தவித
தாக்கமும் ஏற்படப்போவதில்லை"என்றார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-22T00:23:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் நிதி முறைகேடுகள் குறித்து விரிவான விசாரணை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/probe-against-thilanga-and-shammi-1784679709"></link>
            <id>https://tamilwin.com/article/probe-against-thilanga-and-shammi-1784679709</id>
            <summary type="text">ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் நிருவாகத்தில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் நிதி முறைகேடுகள், மோசடிகள் மற்றும் பல்வேறு அக்கிரமங்கள் தொடர்பாக இலஞ்ச, ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் நிருவாகத்தில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் நிதி முறைகேடுகள், மோசடிகள் மற்றும் பல்வேறு அக்கிரமங்கள் தொடர்பாக இலஞ்ச, ஊழல் மோசடி தவிர்ப்பு விசாரணை ஆணைக்குழுவினால் விரிவான விசாரணையொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.</p><p>
ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் இந்த விசாரணை, சமூக ஆர்வலரான தனீஷ் அலி சமர்ப்பித்த முறைப்பாட்டிற்கு அமையவே தொடங்கப்பட்டுள்ளது.
</p><p>இந்த விசாரணைக்கு அமைவாக, 2023 செப்டம்பர் 11 ஆம் திகதி வெளியிடப்பட்ட சிறப்பு கணக்காய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் தெளிவுபடுத்தி விரிவான வாக்குமூலம் அளிப்பதற்காக, தனீஷ் அலியை ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.</p><p>அதன்படி, எதிர்வரும் 31 ஆம் திகதி உரிய ஆவணங்களுடன் ஆணைக்குழுவின் சிறப்பு விசாரணைப் பிரிவிற்கு வருகை தருமாறு அவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>முன்னாள் தலைவர் ஷம்மி சில்வா தலைமையிலான நிர்வாகத்தின் கீழ் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல்கள் மற்றும் திலங்க சுமதிபாலவின் தலைமையிலான காலத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி மோசடிகள் மற்றும் முறைகேடுகள் தொடர்பிலும் இந்த முறைப்பாட்டின் மூலம் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4aecda31-859f-4769-9c2c-63ef41e5fee5/26-6a600d1eb4d4e.webp' /></p><p>
குறிப்பாக, அப்போதைய ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிர்வாகத்திற்கும் சூதாட்டக்காரர்களுக்கும் இடையே நிலவியதாகக் கூறப்படும் சட்டவிரோத தொடர்புகள், போட்டி நிர்ணயக் குற்றச்சாட்டுகள் மற்றும் ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் பணத்தை தவறாகப் பயன்படுத்தியமை தொடர்பில் தனீஷ் அலி ஆணைக்குழு முன்னிலையில் கருத்துக்களை முன்வைக்கவுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-22T00:21:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பகுதியில் பொலிஸ் நிலையத்திற்குள் குடும்பத்தினர் செய்த செயல் ; நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/family-s-actions-inside-police-station-shock-all-1784679297"></link>
            <id>https://jvpnews.com/article/family-s-actions-inside-police-station-shock-all-1784679297</id>
            <summary type="text">&amp;nbsp;குடும்பத் தகராறு தொடர்பான விசாரணைக்காக கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டிருந்த இரு தரப்பினரும், பொலிஸ் நிலைய வளாகத்திலேயே மீண்டு...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">&nbsp;குடும்பத் தகராறு தொடர்பான விசாரணைக்காக கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டிருந்த இரு தரப்பினரும், பொலிஸ் நிலைய வளாகத்திலேயே மீண்டும் மோதலில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 5 பேருக்கு கல்முனை நீதிவான் நீதிமன்றம் தலா 300 ரூபாய் அபராதமும், 5 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்பட்ட ஒரு மாத கடூழியச் சிறைத்தண்டனையும் விதித்து உத்தரவிட்டுள்ளது.
</p><p style="text-align: justify;">


கடந்த வெள்ளிக்கிழமை (19) கல்முனை புறநகர்ப் பகுதியைச் சேர்ந்த இரு தரப்பினருக்கிடையில் ஏற்பட்ட குடும்பத் தகராறு தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக அவர்கள் கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டிருந்தனர்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ef0f869c-17e3-4dc8-9de9-7a86ef84bc18/26-6a600c4f64409.webp' /></p><h2 style="text-align: justify; ">வாக்குமூலங்கள்&nbsp;</h2><p>
</p><p style="text-align: justify; ">


அவர்களிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டதையடுத்து, இரு தரப்பினரும் சமாதானமாகச் செல்ல இணக்கம் தெரிவித்தனர். </p><p style="text-align: justify; ">இதன்பின், பல்வேறு குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் அவர்களை தலைமையகப் பொறுப்பதிகாரியின் அறைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.</p><p style="text-align: justify;">



அப்போது, பொலிஸ் நிலைய வளாகத்திற்குள்ளேயே பொதுமக்கள் மற்றும் அங்கிருந்தோரின் முன்னிலையில் இரு தரப்பினரும் மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு மோதிக்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p style="text-align: justify;">
</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">இதனைத் தொடர்ந்து, கல்முனை தலைமையக பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, பொது இடத்தில் அமைதிக்குப் பங்கம் விளைவித்த குற்றச்சாட்டின் பேரில் இரு தரப்பினரையும் சேர்ந்த 5 பேரை உடனடியாகக் கைது செய்து, நீதிமன்ற உத்தரவின் பேரில் பொலிஸ் நிலையத்திலுள்ள இரு தனித்தனி சிறைக்கூடங்களில் தடுத்து வைத்தார்.
</p><p style="text-align: justify; ">


கைது செய்யப்பட்ட 5 சந்தேகநபர்களும்&nbsp; கல்முனை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். </p><p style="text-align: justify;">விசாரணையின்போது, சந்தேகநபர்கள் தரப்பில் மன்னிப்புக் கோரப்பட்டதுடன், சமாதானமாகச் செல்ல விரும்புவதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.</p><p style="text-align: justify;"></p>]]></content>
            <updated>2026-07-22T00:15:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரதமர் ஹரினி அமரசூரியவை இரகசியமாக கண்காணித்த மூவர் அதிரடி கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/3-arrested-allegedly-spying-pm-through-binoculars-1784676171"></link>
            <id>https://tamilwin.com/article/3-arrested-allegedly-spying-pm-through-binoculars-1784676171</id>
            <summary type="text">பிரதமர் ஹரினி அமரசூரியவைத் தொலைநோக்கி மூலம் கண்காணித்ததாகக் கூறப்படும் மூன்று நபர்கள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பில் உள்ள ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரதமர் ஹரினி அமரசூரியவைத் தொலைநோக்கி மூலம் கண்காணித்ததாகக் கூறப்படும் மூன்று நபர்கள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p>
கொழும்பில் உள்ள பிரபல நட்சத்திர ஹோட்டல் ஒன்றுக்கு பிரதமர் ஹரினி அமரசூரிய நேற்று சென்றிருந்தபோது, ​​இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
</p><p>
சந்தேக நபர்களான மூவரையும் கொம்பனித் தெரு பொலிஸார் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் நேற்று (21) முன்னிலைப்படுத்தினர்.</p><p></p><h2>நீதிமன்றில் முன்னிலை..&nbsp;</h2><p>

அப்போது சந்தேக நபர்களான மூவரையும் இன்று (22) வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் பசன் அமரசேன உத்தரவிட்டதோடு, இச்சம்பவம் குறித்த முழுமையான அறிக்கையை நாளை சமர்ப்பிக்குமாறு கொம்பனி தெரு பொலிஸாருக்கும் உத்தரவிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5b1b0b18-9295-4e9c-bfd4-842bcf01d072/26-6a60024ebc1b3.webp' /></p><p>
</p><p>
சந்தேக நபர்களான மூவரில் இருவர் சகோதரர்கள் என்றும், அவர்கள் கிண்ணியா பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் மற்றைய நபர் முள்ளிப்பொத்தானை பகுதியைச் சேர்ந்தவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
சந்தேக நபர்கள் மூவரும் கொழும்புப் பகுதியில் பணிபுரிவதாகக் கூறியிருந்ததாக பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொம்பனித் தெரு பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-22T00:08:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வல்வெட்டித்துறை காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட 4 மாணவர்கள்: பிணையில் விடுதலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/valvettithurai-students-released-on-bail-1784678286"></link>
            <id>https://ibctamil.com/article/valvettithurai-students-released-on-bail-1784678286</id>
            <summary type="text">வல்வெட்டித்துறை காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட பாடசாலை மாணவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட நால்வரும் நேற்று இரவு (21-07-...</summary>
            <content type="html"><![CDATA[<p>வல்வெட்டித்துறை காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட பாடசாலை மாணவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.</p><p>

கைது செய்யப்பட்ட நால்வரும் நேற்று இரவு (21-07-2026) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
</p><p>
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், நேற்றைய தினம் வல்வெட்டித்துறை காவல்துறையினரால் சீலாப்புலம் கிராமத்தைச்
சேர்ந்த நான்கு பாடசாலை மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>
</p><p></p><h2>மனித உரிமைகள்&nbsp;</h2><p>பாடசாலைக்கு ஒழுங்காகச் சமூகமளிக்கவில்லை என்ற குற்றச்சாட்டின் பேரில்
இம்மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p>
கைது செய்யப்பட்ட மாணவர்கள், இரவு 7:48 மணி வரை நீதிமன்றத்தில்
முன்னிலைப்படுத்தப்படவோ அல்லது விடுவிக்கப்படவோ இல்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/542df260-fb3c-4ea9-8d59-e74fc885db10/26-6a60079033b93.webp' /></p><p>

இதனால் காவல் நிலையத்திற்குச்
சென்ற பெற்றோர், மாணவர்களைத் தங்களுடன் அனுப்பி வைக்குமாறும் நாளை காலை
மீண்டும் காவல் நிலையத்திற்கு அழைத்து வருமாறும் கோரியபோதிலும் அவர்களை
விடுவிப்பதற்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனப் பெற்றோர்
தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
</p><p>
இதையடுத்து இது தொடர்பில் மனித உரிமைகள் ஆணையாளரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டிருந்த
நிலையில் மாணவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-22T00:03:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[5 பேரை பலியெடுத்த தீ விபத்து ; அடுத்தடுத்து வெளிவரும் அதிர்ச்சி தகவல்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/five-killed-in-fire-new-details-surface-1784677919"></link>
            <id>https://jvpnews.com/article/five-killed-in-fire-new-details-surface-1784677919</id>
            <summary type="text">ஹோமாகம கட்டுவான தொழிற்பேட்டையில் தீப்பற்றிய தொழிற்சாலை, 2024 ஆம் ஆண்டிற்குப் பிறகு சுற்றுச்சூழல் பாதுகாப்பு உரிமத்தைப் புதுப்பிக்கவில்லை எனவும், அவசரக...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">ஹோமாகம கட்டுவான தொழிற்பேட்டையில் தீப்பற்றிய தொழிற்சாலை, 2024 ஆம் ஆண்டிற்குப் பிறகு சுற்றுச்சூழல் பாதுகாப்பு உரிமத்தைப் புதுப்பிக்கவில்லை எனவும், அவசரகால சூழ்நிலையை எதிர்கொள்வதற்கான திட்டத்தைக் கூட தயாரிக்கவில்லை எனவும் மத்திய சுற்றுச்சூழல் அதிகாரசபை தெரிவித்துள்ளது.</p><p style="text-align: justify; ">

 

தொழிற்சாலையின் உற்பத்தி நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படும் PVC உள்ளிட்ட இரசாயனப் பொருட்கள் தீப்பற்றும்போது மனித உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் இரசாயனக் சேர்மங்களை உருவாக்கக்கூடும் என்பதால், சுற்றுச்சூழல் பாதுகாப்பு உரிமம் வழங்கப்படாததற்கு அதுவும் ஒரு காரணமாக இருந்துள்ளது எனக் குறிப்பிடப்படுகிறது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/386f7e6a-9e05-4631-b4f8-1ebf8b127092/26-6a6006215a57f.webp' /></p><h2 style="text-align: justify; ">முழுமையான விசாரணை</h2><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
 

அத்துடன், சுற்றுச்சூழல் பாதுகாப்பு உரிமத்தைப் பெறுவதற்கு பூர்த்தி செய்யப்பட வேண்டிய அளவுகோல்களான சப்தம் மற்றும் காற்றின் தரம் குறித்த பகுப்பாய்வு அறிக்கைகள் மற்றும் கழிவு அகற்றும் அறிக்கை ஆகியவற்றை அந்தத் தொழிற்சாலை மத்திய சுற்றுச்சூழல் அதிகார சபையிடம் சமர்ப்பிக்கவில்லை என அதன் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
</p><p style="text-align: justify; ">
 

அவசரகால சூழ்நிலையை எதிர்கொள்வதற்குத் தேவையான திட்டத்தையும் தொழிற்சாலை தயாரித்திருக்கவில்லை என மத்திய சுற்றுச்சூழல் அதிகாரசபை தெரிவித்துள்ளது.</p><p style="text-align: justify; ">

 

உரிய அளவுகோல்களைப் பூர்த்தி செய்து சுற்றுச்சூழல் பாதுகாப்பு உரிமத்தைப் பெற்றுக் கொள்ளுமாறு பல சந்தர்ப்பங்களில் தொழிற்சாலை நிர்வாகத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், கடைசியாக கடந்த ஜூலை 2 ஆம் திகதியும் இது தொடர்பாக நினைவூட்டல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
 

ஹோமாகம கட்டுவான தொழிற்பேட்டையில் உள்ள தலைக்கவசம் தயாரிக்கும் தொழிற்சாலையில் இன்று காலை ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர் தீ விபத்து ஏற்பட்ட போது தொழிற்சாலைக்குள் 80 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது.</p><p style="text-align: justify; ">

 

காலை 9:50 மணியளவில் ஏற்பட்ட தீ, பின்னர் விரைவாகத் தொழிற்சாலை முழுவதும் பரவியதுடன், சுற்றியுள்ள பகுதி அடர்ந்த கருப்பு புகையால் சூழப்பட்டது.</p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
 

தீயைக் கட்டுப்படுத்துவதற்காக கொழும்பு, கோட்டே, தெஹிவளை-கல்கிஸ்சை மாநகர சபைகள், ஹோரணை நகர சபை மற்றும் இலங்கை விமானப்படையின் தீயணைப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டன.&nbsp;</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
 

தொழிற்சாலையின் உட்பகுதியைக் குளிர்விப்பதற்காகப் பயன்படுத்தப்பட்ட மின்விசிறி ஒன்றில் ஏற்பட்ட மின் கசிவே தீ விபத்துக்குக் காரணம் என பொலிஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் சந்தேகிக்கப்படுகிறது.
</p><p style="text-align: justify; ">
 

தீ விபத்து ஏற்பட்ட போது தலைக்கவச தயாரிப்புக்கு பயன்படுத்தப்படும் PVC உள்ளிட்ட பெருமளவிலான இரசாயனப் பொருட்கள் தொழிற்சாலைக்குள் சேமித்து வைக்கப்பட்டிருந்ததும் தெரியவந்துள்ளது.</p><p style="text-align: justify; ">
 

இதனிடையே, கட்டுவான தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து முழுமையான விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு தொழிலாளர் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தொழிலாளர் திணைக்கள அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.&nbsp;</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-07-21T23:52:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[செம்மணிக்கு விரையும் சர்வதேசக் குழு...! இன்று வெடிக்கவுள்ள பாரிய போராட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/protest-at-chemmani-mass-grave-today-jaffna-1784676751"></link>
            <id>https://ibctamil.com/article/protest-at-chemmani-mass-grave-today-jaffna-1784676751</id>
            <summary type="text">செம்மணியில் பாரிய போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

குறித்த போராட்டம் செம்மணி வளைவு பகுதியில் இன்று (22.07.2026) இடம்பெறவுள்ளது.

சர்வதேச விச...</summary>
            <content type="html"><![CDATA[<p>செம்மணியில் பாரிய போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
</p><p>
குறித்த போராட்டம் செம்மணி வளைவு பகுதியில் இன்று (22.07.2026) இடம்பெறவுள்ளது.
</p><p>
சர்வதேச விசாரணையை வலியுறுத்தி இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.</p><p></p><h2>சமூக பிரதிநிதிகள்</h2><p>
வடக்கு-கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இப்போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/74ec9d03-0060-49a6-bdec-53558c3169b6/26-6a6001910bd56.webp' /></p><p>

இன்றைய நாள் செம்மணி மனிதப் புதைகுழியைப் பார்வையிட வருகை தரும் ஐரோப்பிய ஒன்றியத்தின் சிறப்புப் பிரதிநிதிகள் குழுவின் கவனத்தை ஈர்க்கும் நோக்கிலேயே இக்கவனயீர்ப்புப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
</p><p>
இப்போராட்டத்தில் தமிழ் அரசியல் கட்சிகள், பல்கலைக்கழக மாணவர்கள், சிவில் சமூக பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-21T23:42:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[Whoop-க்கு போட்டியாக Garmin-ன் புதிய திரை இல்லாத ஸ்மார்ட் பேண்ட்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/garmin-cirqa-smart-band-launch-like-whoop-1784677065"></link>
            <id>https://news.lankasri.com/article/garmin-cirqa-smart-band-launch-like-whoop-1784677065</id>
            <summary type="text">Garmin நிறுவனம் தனது புதிய Cirqa Smart Band-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. இது Whoop போன்ற பிரபலமான fitness tracker-க்கு போட்டியாக வந்துள்ளது.

முக்கியமா...</summary>
            <content type="html"><![CDATA[<p>Garmin நிறுவனம் தனது புதிய Cirqa Smart Band-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. இது Whoop போன்ற பிரபலமான fitness tracker-க்கு போட்டியாக வந்துள்ளது.</p><p>

முக்கியமாக, Cirqa-வில் subscription கட்டணம் தேவையில்லை. ஒருமுறை வாங்கினால் அனைத்து அம்சங்களையும் பயன்படுத்தலாம்.</p><p>

இந்த பேண்ட் திரை (screen) இல்லாமல் வடிவமைக்கப்பட்டுள்ளது. 10 நாட்கள் வரை நீடிக்கும் battery life கொண்டது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6c850eee-4576-4e0c-be19-3f5bbc4febf7/26-6a6002caebe0c.webp' /></p><p>பயனர்கள் சேகரிக்கப்பட்ட தரவுகளை Garmin Connect app-இல் காணலாம். இதில் heart rate, Body Battery energy monitoring, Pulse Ox, stress, skin temperature போன்ற முக்கியமான biometrics தரவுகள் கிடைக்கும்.
</p><p>
மேலும், பெண்களின் health &amp; cycle tracking வசதியும் உள்ளது. Cirqa-வில் திரை இல்லாவிட்டாலும், activity detection மற்றும் recording செய்யும்.
</p><p>
இந்த பேண்ட் citron gray, mauve, French gray, dark olive, captain blue, French blue, black போன்ற நிறங்களில் கிடைக்கிறது. </p><p></p><p>wrist band அல்லது arm band ஆக அணியலாம். இரண்டு அளவுகளில் (small/medium மற்றும் large/extra-large) கிடைக்கிறது.
</p><p>
Cirqa-வின் விலை 199.99 டொலராக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஜூலை 24, 2026 முதல் வாங்க கிடைக்கும். Subscription இல்லாததால், fitness tracking-க்கு எளிய, குறைந்த செலவிலான தீர்வாக இது பார்க்கப்படுகிறது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-21T23:36:02+00:00</updated>
        </entry>
    </feed>
