<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-07-23T19:36:22+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[உயிர்த்த ஞாயிறு வழக்கில் அதிரடி திருப்பம்! சுரேஷ் சலே முன்வைத்த முக்கிய வாதங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/suresh-sallay-arrested-cid-easter-attack-1784832224"></link>
            <id>https://tamilwin.com/article/suresh-sallay-arrested-cid-easter-attack-1784832224</id>
            <summary type="text">உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்ற காலத்தில் சுரேஷ் சலே இந்தியாவில் இருந்ததாகவும் அதனால் அவர் தாக்குதலை திட்டமிட்டு நடாத்தினார் என்பது சாத்தியமற்ற வி...</summary>
            <content type="html"><![CDATA[<p>உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்ற காலத்தில் சுரேஷ் சலே இந்தியாவில் இருந்ததாகவும் அதனால் அவர் தாக்குதலை திட்டமிட்டு நடாத்தினார் என்பது சாத்தியமற்ற விடயமாகும் என சட்டத்தரணிகள் வாதித்துள்ளனர்.</p><p>அத்தோடு, பாதுகாப்பு தொடர்பான எச்சரிக்கைகளை முன்வைத்ததன் பின்னர் அரசியல் தலையீட்டின் காரணமாக சுரேஷ் சலே தனது பதவியிலிருந்து மாற்றப்பட்டு மலேசியாவுக்கு அனுப்பப்பட்டதாக&nbsp;சட்டத்தரணிகள் வாதங்களில் தெரிவிக்கின்றனர்.</p><p>மேலும் தீவிரவாதத்தை எதிர்கொள்ள இராணுவம் மற்றும் பொலிஸார் மற்றும் பிற அமைப்புக்களை இணைக்கும் திட்டம் ஒன்றை சுரேஷ் சலே முன்வைத்ததாகவும் ஆனால் அதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை எனவும் கூறப்படுகின்றது.</p><p>பிரான்ஸில் அசாத் மௌலானாவிடம் வாக்குமூலம் பெறச் சென்ற சிஐடி அதிகாரிகளின் நடவடிக்கைகள் குறித்து சுரேஷ் சலே தரப்பு கேள்வி எழுப்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.</p><p>இந்த விடயம் தொடர்பான விரிவான தகவல்களை நியூஸ் இன்சைட் நிகழ்ச்சியில் காணலாம்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/lliAp_CzpKc" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-23T19:31:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பகுதியில் குடும்பஸ்தருக்கு நேர்ந்த அசம்பாவிதம் ; இரவில் நடந்த சம்பவம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/tamil-family-man-dies-in-tragic-incident-1784834069"></link>
            <id>https://jvpnews.com/article/tamil-family-man-dies-in-tragic-incident-1784834069</id>
            <summary type="text">களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாங்காடு பகுதியில் நேற்றிரவு 11.00 மணியளவில் இடம்பெற்ற விபத்தில், மாங்காடு கிராமத்தைச் சேர்ந்த 51 வயதுடைய நபர் ஒ...</summary>
            <content type="html"><![CDATA[<p>களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாங்காடு பகுதியில் நேற்றிரவு 11.00 மணியளவில் இடம்பெற்ற விபத்தில், மாங்காடு கிராமத்தைச் சேர்ந்த 51 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். </p><p>

மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதியின் மாங்காடு பகுதியில், மோட்டார் சைக்கிளும் துவிச்சக்கர வண்டியும் மோதி விபத்துக்குள்ளாகின.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aa584de8-c02a-4372-8996-7257cf551ded/26-6a62681748bf8.webp' /></p><p> </p><p>இதில் துவிச்சக்கர வண்டியில் பயணித்தவரே உயிரிழந்துள்ளார்.</p><p></p><p> 

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளைக் களுவாஞ்சிகுடி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-23T19:14:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆயுதப்படைகள் எப்போதும் தயார்., ஈரான் விடுத்த எச்சரிக்கைக்கு பிரித்தானியா கொடுத்த பதில்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/uk-armed-forces-ready-amid-iran-warning-1784834149"></link>
            <id>https://news.lankasri.com/article/uk-armed-forces-ready-amid-iran-warning-1784834149</id>
            <summary type="text">பிரித்தானிய அரசு, நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்த ஆயுதப்படைகள் எப்போதும் தயாராக உள்ளதாக அறிவித்துள்ளது.அமெரிக்காவின் B-52 போர் விமானங்கள் பிரித்தானி...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரித்தானிய அரசு, நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்த ஆயுதப்படைகள் எப்போதும் தயாராக உள்ளதாக அறிவித்துள்ளது.</p><p>அமெரிக்காவின் B-52 போர் விமானங்கள் பிரித்தானிய தளங்களில் இருந்து பறப்பதை அனுமதித்ததைத் தொடர்ந்து, ஈரான் புரட்சிகர காவல்படை பிரித்தானியாவிற்கு எச்சரிக்கை விடுத்தது.
</p><p>&nbsp;<img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/951dec42-3843-4c7a-9a6f-cf65cdc52e9a/26-6a626867eb9a5.webp' /></p><p>பிரித்தானியாவின் புதிய பிரதமர் ஆன்டி பர்னாம் தலைமையிலான அரசு, அமெரிக்காவிற்கு பிரித்தானிய தளங்களை பயன்படுத்த அனுமதி அளித்துள்ளது.</p><p>

இது, ஹார்முஸ் நீரிணையில் கப்பல்களுக்கு எதிரான ஏவுகணை தாக்குதல்களை தடுக்க அமெரிக்கா மேற்கொள்ளும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காகவே என அரசு விளக்கமளித்துள்ளது.
</p><p></p><p>அரசாங்கத்தின் செய்தித்தொடர்பாளர், “எந்தவித தாக்குதலாக இருந்தாலும், எங்கள் ஆயுதப்படைகள் 24 மணி நேரமும் நாட்டை பாதுகாக்க தயாராக உள்ளன. ராயல் நேவி, பிரிட்டிஷ் ஆர்மி மற்றும் ராயல் ஏர் ஃபோர்ஸ் ஆகியவை நவீன பாதுகாப்பு திறன்களுடன், கூட்டாளிகளான நேட்டோவுடன் இணைந்து செயல்படுகின்றன” என்று தெரிவித்துள்ளார்.
</p><p>
பிரித்தானியா, தனது மக்களையும், நாட்டின் நலன்களையும், கூட்டாளிகளையும் சர்வதேச சட்டத்திற்கிணங்க பாதுகாக்கும் என உறுதியளித்துள்ளது. அதேசமயம், விரிவான போர் நிலைக்கு இழுக்கப்படாமல் இருக்கவும் கவனம் செலுத்துவதாகவும் அரசு கூறியுள்ளது.
</p><p>
இந்த அறிவிப்பு, ஈரான் எச்சரிக்கைக்கு நேரடி பதிலாகவும், பிரித்தானியா தனது பாதுகாப்பு நிலைப்பாட்டை உறுதியாகக் காக்கும் சின்னமாகவும் பார்க்கப்படுகிறது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-23T19:14:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[மனைவி, மகள்களுக்கு நடந்த கொடூரம் ; தொழிலதிபரின் கடிதத்தால் அதிரந்து போன குடும்பம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/businessman-s-letter-shocks-family-1784832635"></link>
            <id>https://jvpnews.com/article/businessman-s-letter-shocks-family-1784832635</id>
            <summary type="text">கர்நாடகாவில் தொழிலதிபர் ஒருவர் தனது மகள்கள் மற்றும் மனைவியை கொலை செய்துவிட்டு தனது உயிரையும் மாய்த்துக் கொண்டது குடும்பத்தினர் மத்தியில் அதிர்ச்சியை ஏ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">கர்நாடகாவில் தொழிலதிபர் ஒருவர் தனது மகள்கள் மற்றும் மனைவியை கொலை செய்துவிட்டு தனது உயிரையும் மாய்த்துக் கொண்டது குடும்பத்தினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. </p><p style="text-align: justify; ">

 ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்த தொழிலதிபர் ஒருவர் , பழைய வாகனங்களை வாங்கி விற்கும் தொழிலும் செய்து வந்துள்ளார். குடும்பத்துடன் ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து வந்தவர் திடீரென தொழிலில் சறுக்கலை சந்தித்ததாக கூறப்படுகிறது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/423236e5-2a29-424b-9014-ecc1bd072bfd/26-6a626285680ed.webp' /></p><h2 style="text-align: justify; ">விபரீத முடிவு&nbsp;</h2><p style="text-align: justify; "> 

இந்த நிலையில் உறவினர்கள் செல்போன் மூலம் அழைத்த போது நீண்ட நேரமாகியும் எந்தவொரு பதிலும் கிடைக்காததால் வீட்டிற்கு வந்து பார்த்துள்ளனர். அங்கு, தொழிலதிபர் தூக்கில் தொங்கியபடி சடலமாக கிடந்தை கண்டு அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர்.
</p><p style="text-align: justify; ">
இதனைத்தொடர்ந்து படுக்கை அறையில் அவரின் மனைவி மற்றும் இரு பெண் குழந்தைகள் இறந்த நிலையில் கிடந்ததை பார்த்து பொலிசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.</p><p style="text-align: justify; "> 

அவர்களின் வாய் மற்றும் மூக்கில் டேப் ஒட்டப்பட்டிருந்ததால் அவர்களை கொலை செய்துவிட்டு, விபரீத முடிவு எடுத்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. தொடர்ந்து தொழிலதிபர் கடைசியாக எழுதி வைத்திருந்த கடிதத்தை பொலிசார் கைப்பற்றினர்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">அதில், சொத்து விவரம், கடன் மற்றும் நண்பர்களிடம் உள்ள தனது சொத்துகள் குறித்தும் குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில் கடன் நெருக்கடியில் சிக்கித் தவித்தது தெரியவந்துள்ளது.
</p><p style="text-align: justify; ">
இதனால், அவரின் இரண்டு சொத்துகளை வங்கிகள் முடக்கியுள்ளன. எனவே, கடன் தொல்லை தாங்காமல் விபரீத முடிவு எடுத்தாரா? அல்லது 4 பேரின் மரணத்தில் வேறு ஏதேனும் மர்மம் உள்ளதாக என்று போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். </p><p style="text-align: justify; ">

மனைவி மற்றும் இரு மகள்களை கொலை செய்த தொழிலதிபர், கடிதம் எழுதி வைத்து விட்டு தனது உயிரையும் மாய்த்துக் கொண்ட சம்பவம் மைசூர் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-07-23T18:50:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் விரைவில் ஏற்பட போகும் ஆபத்து - கிளிநொச்சியில் நள்ளிரவில் தப்பி ஓடிய இருவர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/balck-july-1983-violence-remembrance-day-1784829993"></link>
            <id>https://tamilwin.com/article/balck-july-1983-violence-remembrance-day-1784829993</id>
            <summary type="text">1983 ஆம் ஆண்டு ஜூலை மாதம் இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக அரங்கேற்றப்பட்ட கொடூரமான இனப்படுகொலைகளில் உயிரிழந்த உயிர்களை நினைவுகூரும் நாள் இன்று.&amp;nbs...</summary>
            <content type="html"><![CDATA[<p>1983 ஆம் ஆண்டு ஜூலை மாதம் இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக அரங்கேற்றப்பட்ட கொடூரமான இனப்படுகொலைகளில் உயிரிழந்த உயிர்களை நினைவுகூரும் நாள் இன்று.&nbsp;</p><p>தமிழ் மக்களுக்கு எதிரான இந்தக் கொடூரக் கலவரம், யாழ்ப்பாணத்தில் 13 இராணுவத்தினர் கொல்லப்பட்ட சம்பவத்தை அடுத்துத் தொடங்கி, நாடளாவிய ரீதியில் பல வாரங்களுக்குத் தொடர்ந்தது.</p><p>இந்த கொடூரங்களில் இருந்து இலட்சக்கணக்கான மக்கள் நாட்டை விட்டு வெளியேறி உலகளாவிய ரீதியில் புலம்பெயர் வாழ்வைத் தொடங்கினர்.</p><p>23ஆம் திகதி தமிழீழ விடுதலைப் புலிகளால் யாழ்ப்பாணத்தில் இலங்கை இராணுவத்தினர் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 13 இராணுவத்தினர் கொல்லப்பட்ட பின்னணியே இப்படுகொலைகளுக்குத் தூண்டுதலாக இருந்தது எனக் கூறப்பட்டது.&nbsp;</p><p>இருப்பினும், அப்போதைய ஆளும் ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த அமைச்சர் சிறில் மத்தியூ மற்றும் கட்சி உறுப்பினர்களால் திட்டமிடப்பட்டு, விரைவில் சிங்களப் பொதுமக்களின் பங்கேற்புடன் தமிழருக்கு எதிரான வன்முறைகளாக மாறியது.</p><p>செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சியில் இதன் தற்போதைய நிலைமைகள் குறித்து ஆராய்வோம்..&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/IDXl3SqO03g" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-23T18:42:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[கட்டுப்பாட்டை மீறும் மத்திய கிழக்கு மோதல்...! உலக நாடுகளுக்கு அவசர எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/un-chief-warns-me-crisis-is-out-of-control-1784828390"></link>
            <id>https://ibctamil.com/article/un-chief-warns-me-crisis-is-out-of-control-1784828390</id>
            <summary type="text">மத்திய கிழக்கில் நிலவும் மோதல் நிலைமைகள் கட்டுப்பாட்டை மீறிச் செல்வதாக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் (Antonio Guterres) த...</summary>
            <content type="html"><![CDATA[<p>மத்திய கிழக்கில் நிலவும் மோதல் நிலைமைகள் கட்டுப்பாட்டை மீறிச் செல்வதாக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் (Antonio Guterres) தெரிவித்துள்ளார்.
</p><p>
மோதலில் ஈடுபட்டுள்ள தரப்புகள் உடனடியாக ஓரடி பின்வாங்க வேண்டிய தருணம் இதுவென எனவும் அவர் எச்சரித்துள்ளார்.</p><p>

உலக நாடுகளின் தலைவர்களுக்குத் தனது உத்தியோகபூர்வ சமூக வலைத்தளப் பக்கம் ஊடாக அவசரச் எச்சரிக்கை ஒன்றை அவர் விடுத்துள்ளார்.</p><p>
</p><p></p><h2>அவசர வேண்டுகோள்</h2><p>அதிலேயே மேற்படி விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அவர், “அனைத்துப் பகுதிகளிலும் சண்டைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.</p><p> </p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">The situation in the Middle East is getting out of control.<br><br>It&#39;s time to step back.<br><br>My clear &amp; consistent message to leaders:<br><br>The fighting must stop everywhere.<br><br>Freedom of navigation must be restored.<br><br>Diplomacy is the only way forward. <a href="https://t.co/ZfOdMyq1Td">pic.twitter.com/ZfOdMyq1Td</a></p>&mdash; António Guterres (@antonioguterres) <a href="https://x.com/antonioguterres/status/2080314067151982822?ref_src=twsrc%5Etfw">July 23, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>கடற்போக்குவரத்துச் சுதந்திரம் மீண்டும் மீட்டெடுக்கப்பட வேண்டும்.</p><p> 

இராஜதந்திர பேச்சுவார்த்தை மட்டுமே ஒரே தீர்வாகும்” எனத் திட்டவட்டமாக வலியுறுத்தியுள்ளார்.
</p><p>
அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையிலான இராணுவ மோதல்களும், ஹோர்முஸ் நீரிணையில் ஏற்பட்டுள்ள கப்பல் போக்குவரத்துப் பிரச்சினைகளும் பிராந்தியப் போராக உருவெடுத்து வரும் பின்னணியிலேயே ஐ.நா பொதுச் செயலாளர் இந்த அவசர வேண்டுகோளை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-23T18:40:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரான் மீது முன்னெப்போதும் இல்லாத தாக்குதல்...! ட்ரம்பின் அறிவிப்பால் அதிரும் உலக நாடுகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/trump-warns-of-massive-attack-on-iran-1784823107"></link>
            <id>https://ibctamil.com/article/trump-warns-of-massive-attack-on-iran-1784823107</id>
            <summary type="text">ஈரான் மீது முன்னெப்போதையும் விட மிகப் பாரிய அளவிலான இராணுவத் தாக்குதலை நடத்துவது குறித்துத் தீவிரமாகப் பரிசீலித்து வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரான் மீது முன்னெப்போதையும் விட மிகப் பாரிய அளவிலான இராணுவத் தாக்குதலை நடத்துவது குறித்துத் தீவிரமாகப் பரிசீலித்து வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். </p><p>

டெஹ்ரான் இன்னும் போதிய வலியை உணரவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
சர்வதேச ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>மிகப்பெரிய தாக்குதல்</h2><p>

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “மிகப் பாரிய அளவிலான தாக்குதல் குறித்து நான் பரிசீலித்து வருகிறேன்.</p><p> 

இதுவரை இல்லாத அளவிலான மிகப்பெரிய தாக்குதலாக அது இருக்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5354b79c-536c-473d-846b-aef953245570/26-6a624a8d55b50.webp' /></p><p> 

முடிவெடுக்கும் நிலைக்கு நான் மிக அருகில் உள்ளேன்.</p><p> 

இதற்கான அனைத்து ஆயத்தங்களும் எங்களிடம் தயாராக உள்ளன" என தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>கடுமையான விளைவுகள்</h2><p>

அத்தோடு இத்தகைய முடிவினால் கடுமையான விளைவுகள் ஏற்படும் என்பதை ஒப்புக்கொண்ட ட்ரம்ப், இருப்பினும் இது குறித்து இன்னும் இறுதி முடிவோ அல்லது காலக்கெடுவோ நிர்ணயிக்கப்படவில்லை என தெரிவித்துள்ளார்.</p><p>

மேலும், நான் கேட்டுக் கொண்டால் இஸ்ரேல் இரண்டு நிமிடங்களில் இந்தத் தாக்குதலில் இணைந்து கொள்ளும் எனக் குறிப்பிட்ட அவர், ஆனால் எங்களுக்கு யாருடைய உதவியும் தேவையில்லை என தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/706b03df-8ff3-4b79-9a95-7320834b5856/26-6a624a8e3e15a.webp' /></p><p>ஒருவேளை இஸ்ரேல் இத்தாக்குதலில் இணைந்தால் அதற்கு ஈரானின் பதிலடி போன்ற விளைவுகள் இருக்கும் என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p>

அத்துடன், ஈரானிய அதிகாரிகள் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த விரும்புவதாகவும் ஆனால் தற்போதைக்கு ஒரு ஒப்பந்தத்தை எட்டுவதற்கு அவர்கள் தயாராக இல்லை எனவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-23T18:39:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[ராகு - கேது ஆசியால் டிசம்பர் வரை இந்த 3 ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை உறுதி! உங்க ராசியும் இதுல இருக்கா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/rahu-ketu-transit-who-get-huge-luck-1784812503"></link>
            <id>https://manithan.com/article/rahu-ketu-transit-who-get-huge-luck-1784812503</id>
            <summary type="text">நவகிரகங்களில் ராகு மற்றும் கேது ‘நிழல் கிரகங்கள்’ என அழைக்கப்படுகின்றன. ஜோதிட நம்பிக்கைகளின்படி, இவை ஒருவரின் தொழில், நிதி நிலை, உறவுகள் மற்றும் தனிப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நவகிரகங்களில் ராகு மற்றும் கேது ‘நிழல் கிரகங்கள்’ என அழைக்கப்படுகின்றன. ஜோதிட நம்பிக்கைகளின்படி, இவை ஒருவரின் தொழில், நிதி நிலை, உறவுகள் மற்றும் தனிப்பட்ட வளர்ச்சியில் பெரும்பாலும் பாதக&nbsp; தாக்கத்தை ஏற்படுத்தும் என்று தொன்று தொட்டு நம்பப்பட்டு வருகின்றது.</p><p>
பொதுவாக ராகு, கேது சவால்களைத் தரும் கிரகங்களாகக் கருதப்பட்டாலும், சில நேரங்களில் அவற்றின் பெயர்ச்சிகள் வெற்றி மற்றும் புதிய வாய்ப்புகளையும் வழங்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/441fc2b2-c8a0-4b8f-b3ea-f3a56d6b3f4f/26-6a6219aba6fcb.webp' /></p><p>

தற்போது ராகு கும்ப ராசியிலும், கேது சிம்ம ராசியிலும் சஞ்சரித்து வருகின்றனர்.ஜோதிட கணிப்புகளின்படி, டிசம்பர் 5-ஆம் தேதி இவை முறையே மகரம் மற்றும் கடக ராசிகளுக்கு பெயர்ச்சி அடையவுள்ளன.</p><p>அதுவரை நிலவும் இந்த கிரக அமைப்பு, சில ராசிக்காரர்களுக்கு தொழில் வளர்ச்சி, நிதி ஆதாயம் மற்றும் புதிய வாய்ப்புகளை வழங்கும் என நம்பப்படுகிறது. ராகு- கேது ஆசியால் அதிர்ஷ்ட பலன்களை அனுபவிக்கப்போகும் ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.</p><p></p><h2>கடகம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e12615fa-5218-46a3-9946-51ba860fa7b8/26-6a6219ac587d3.webp' /></p><h2>
</h2><p>டிசம்பர் 5-ஆம் தேதி வரை கடக ராசிக்காரர்களுக்கு சாதகமான காலமாக இருக்கும். பல ஆசைகள் நிறைவேறவும், எதிர்பாராத நன்மைகள் கிடைக்கவும் வாய்ப்புள்ளது. </p><p>திட்டங்கள் வெற்றி பெறும், வளர்ச்சிக்கான புதிய வாய்ப்புகள் உருவாகும். குடும்ப ஆதரவு கிடைப்பதுடன், குழந்தைகள் மூலம் நல்ல செய்திகள் தேடி வரும்.</p><p>மரியாதை, நற்பெயர் உயரும். பழைய முதலீடுகள் இரட்டிப்பு லாபத்தை கொடுக்கும். நீண்ட கால கடன் தொல்லைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் அளவுக்கு நிதி நிலை வலுவடையும்.</p><h2>
கன்னி</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/96269c8b-fa4c-4053-9661-d8673900daa5/26-6a6219ad09e3a.webp' /></p><p>கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த காலம் வருமானம் மற்றும் தொழில் வளர்ச்சிக்கு சாதகமாக அமையும்.&nbsp; புதிய முயற்சிகள் எளிதில் வெற்றியை கொடுக்கும்.</p><p>நிதிநிலை மேம்படும், பணியில் இருப்பவர்களுக்கு சம்பள உயர்வு கிடைக்கலாம். சிக்கிய பணம் திரும்ப கிடைக்கவும், வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் பெறவும் வாய்ப்புள்ளது.</p><p> வேலை தொடர்பான வெளிநாட்டு வாய்ப்புகள் உருவாகலாம். பழைய முதலீடுகளில் லாபம் கிடைக்கவும், குழந்தைகள் மூலம் நல்ல செய்திகள் வரவும் வாய்ப்புள்ளது. ஆரோக்கியம் முயற்சிகளுக்கு துணையாக இருக்கும்.</p><p></p><p>
</p><h2>
கும்பம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a1f95c93-b802-4b60-ad90-8c7d9b8df184/26-6a6219adb7220.webp' /></p><h2>
</h2><p>ராகு பெயர்ச்சி கும்ப ராசிக்காரர்களுக்கு வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தை தரக்கூடிய காலமாக இருக்கும். வாழ்க்கையில் பல துறைகளில் நல்ல மாற்றங்கள் ஏற்பட்டு, பொருளாதார நிலை மேம்படும். </p><p>நீண்டகால ஆசைகள் நிறைவேற வாய்ப்புள்ளது. குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும். நிதி நிலை வலுப்பெற்று, புதிய வாய்ப்புகளை பயன்படுத்திக் கொடுக்கும்.</p><p>குறிப்பாக மனநிலையில் தெளிவும், உற்சாகமும் உண்டாகும். ஆரோக்கிய விடயங்களில் சந்தித்து வந்த பிரச்சினைகள் நீங்கும்.</p><p><b>இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;</b></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b></td></tr></tbody></table><p><br></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-23T18:25:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[டார்ஃபூர் கிளர்ச்சித் தலைவர் மீதான போர்க்குற்ற வழக்கைக் கைவிட்ட சர்வதேச குற்றவியல் நீதிமன்றம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/icc-case-against-darfur-rebel-leader-banda-1784830130"></link>
            <id>https://tamilwin.com/article/icc-case-against-darfur-rebel-leader-banda-1784830130</id>
            <summary type="text">சூடானின் டார்ஃபூர் பகுதியில் ஆப்பிரிக்க ஒன்றிய அமைதிப்படை மீது 2007-ஆம்
ஆண்டு நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பான போர்க்குற்ற வழக்கில், கிளர்ச்சித்
தலைவர...</summary>
            <content type="html"><![CDATA[<p>சூடானின் டார்ஃபூர் பகுதியில் ஆப்பிரிக்க ஒன்றிய அமைதிப்படை மீது 2007-ஆம்
ஆண்டு நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பான போர்க்குற்ற வழக்கில், கிளர்ச்சித்
தலைவர் அப்துல்லா பண்டா அபாகர் நுரைன் மீதான அனைத்துக் குற்றச்சாட்டுகளையும்
சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் அதிகாரப்பூர்வமாகக் கைவிட்டுள்ளது.</p><p>

வழக்கு திரும்பப் பெறப்பட்டதற்கான காரணம்
கடந்த 2011ஆம் ஆண்டு பண்டா மீதான குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தால்
உறுதி செய்யப்பட்டன.
</p><p>
இருப்பினும், வழக்கு பதிவாகி ஒரு தசாப்தத்திற்கும் மேலாகிவிட்ட நிலையில்,
அவருக்கு எதிரான சாட்சியங்கள் மற்றும் ஆதாரங்கள் பலவீனமடைந்துவிட்டதாக அரசுத்
தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.</p><p></p><h2>கோரிக்கை</h2><p>

"குற்றம் சாட்டப்பட்ட சம்பவங்களுக்கு பண்டாவே பொறுப்பு என்று நம்புவதற்குப்
போதிய வலுவான ஆதாரங்கள் தற்போது இல்லை."
அரசுத் தரப்பின் இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட தி ஹேக்கில் உள்ள சர்வதேச
குற்றவியல் நீதிமன்ற நீதிபதிகள், பண்டா மீதான விசாரணையை முடிவுக்குக்
கொண்டு வந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/576ec62f-12cf-4118-b28f-17e4e43fcc12/26-6a6259b225b42.webp' /></p><p>
</p><p>
அதேவேளையில், எதிர்காலத்தில் போதிய ஆதாரங்கள் கிடைக்கும் பட்சத்தில் அவருக்கு
எதிராக மீண்டும் வழக்குத் தொடர இந்தத் தீர்ப்பு தடையாக இருக்காது என்றும்
நீதிபதிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-23T18:13:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[சீனாவின் ஆதிக்கத்தை எதிர்கொள்ள சுரங்கத் தொழிலை தேசிய பாதுகாப்பு நலனாக அறிவித்தது சுவீடன்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sweden-mining-industry-counter-china-dominance-1784828992"></link>
            <id>https://tamilwin.com/article/sweden-mining-industry-counter-china-dominance-1784828992</id>
            <summary type="text">சுரங்கத் தொழில் மற்றும் அபூர்வ கனிமங்களின் அகழ்வாராய்ச்சியைத் தனது &#039;தேசிய
பாதுகாப்பு நலனாக&#039; சுவீடன் அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

சீனா மீத...</summary>
            <content type="html"><![CDATA[<p>சுரங்கத் தொழில் மற்றும் அபூர்வ கனிமங்களின் அகழ்வாராய்ச்சியைத் தனது 'தேசிய
பாதுகாப்பு நலனாக' சுவீடன் அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.</p><p>

சீனா மீதான அதிகப்படியான சார்ந்து வாழும் நிலையைத் தவிர்க்கவும், புதிய
சுரங்கக் கொள்கையை விரைவுபடுத்தவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
</p><p>
சுத்தமான ஆற்றல் உற்பத்தி, பாதுகாப்புத் துறை மற்றும் மின்சார வாகனத்
தயாரிப்பிற்குத் தேவையான அபூர்வ கனிமங்களை வெட்டி எடுப்பதிலும், அவற்றைச்
சுத்திகரிப்பதிலும் சீனா உலக அளவில் பெரும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.</p><p></p><h2>தேசிய பாதுகாப்பு&nbsp;</h2><p>
</p><p>
ஐரோப்பிய தொழில் துறை சீனா மீது கொண்டுள்ள இந்த அதிகப்படியான சார்பு ஒரு
'கட்டமைப்பு அபாயம்' என்று சுவீடன் துணைப் பிரதமரும் தொழில்துறை அமைச்சருமான
எப்பா புஷ் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/40d40910-5825-4464-99bd-19fa41eefd27/26-6a62573bcd7d4.webp' /></p><p>
</p><p>
சுவீடனில் உள்ள 'பெர் கெய்ஜர்' பகுதி, 120 கோடி டன் தாது வளங்களையும் 22
இலட்சம் டன் அபூர்வ கனிம ஒக்சைடுகளையும் கொண்டுள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின்
மிகப்பெரிய திட்டங்களில் ஒன்றாகும்.
</p><p>
சுரங்கத் தொழிலைத் தேசிய பாதுகாப்பு நலனாக அறிவிப்பதன் மூலம், திட்டமிடுதல்
மற்றும் அனுமதிகளை விரைவுபடுத்தி முதலீடுகளை ஈர்க்க முடியும் என அரசு
நம்புகிறது.</p><p></p><h2>புதிய நடவடிக்கை</h2><p>
</p><p>
இந்த புதிய நடவடிக்கை சுவீடன், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் நேட்டோ அமைப்பின்
பாதுகாப்பு திறன்களை கணிசமாக உயர்த்தும் என்றும், சுரங்க திட்டங்களுக்கு அரசு
நிலங்களை ஒதுக்குவதை எளிதாக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/37016fbc-f8a8-44ff-89e1-c63e89b5d654/26-6a62573c80604.webp' /></p><p>
</p><p>
சுரங்கத் துறையில் முதலீடுகளை ஈர்க்க அரசுக்கு சொந்தமான முதலீட்டு நிறுவனம்
ஒன்றை உருவாக்குவது குறித்தும் அரசு பரிசீலித்து வருகிறது.
</p><p>
இருப்பினும், சுரங்க விரிவாக்கம் தங்களின் பாரம்பரிய மான்களை மேய்க்கும்
வாழ்வியலைப் பாதிக்கும் எனக் கூறி, அப்பகுதியில் வாழும் 'சாமி' பழங்குடியின
மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-23T18:02:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டில் அதிகரிக்கும் மற்றொரு அபாயம் ; இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/another-growing-threat-emerges-nationwide-1784829531"></link>
            <id>https://jvpnews.com/article/another-growing-threat-emerges-nationwide-1784829531</id>
            <summary type="text">நாட்டில் எலிக் காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.

இது தொடர்பில் பொதுமக்கள் மிகுந்த...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">நாட்டில் எலிக் காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.

இது தொடர்பில் பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
</p><p style="text-align: justify;">
ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றில் உரையாற்றிய அந்தச் சங்கத்தின் பொருளாளர் எம்.ஏ.சி. பிரசாத், எலியின் சிறுநீரில் காணப்படும் பக்றீரியாவினால் இந்த நோய் பரவுவதாகத் தெரிவித்துள்ளார்.</p><p style="text-align: justify;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/acdeb954-a7f5-40c1-a257-c4e384e6fd49/26-6a62565d1b337.webp' /></p><h2 style="text-align: justify;">தொற்று நோய்கள்</h2><p style="text-align: justify;">

நாட்டில் பரவலாகக் காணப்படும் தொற்றும் நோய்களில் ஒன்றான இதனால், அதிக உயிரிழப்புகள் ஏற்படும் அபாயமும் உள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
</p><p style="text-align: justify;">
குறிப்பாக விவசாயிகள், சேறு நிறைந்த சூழலில் பணிபுரிவோர், வடிகான் சுத்திகரிப்பாளர்கள், பெருந்தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் கைவிடப்பட்ட வயல்வெளிகள் அல்லது சதுப்பு நிலங்களில் விளையாடும் சிறுவர்கள் இந்த நோயினால் பாதிக்கப்படக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify;">

எனவே, தேங்கி நிற்கும் நீர், குளங்கள் மற்றும் நீர்த்தேக்கங்களில் குளிப்பவர்கள் எச்சரிக்கையுடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;"> </p><p style="text-align: justify;">அத்துடன், சேறு நிறைந்த சூழலில் பணியாற்றுபவர்கள் மருத்துவ ஆலோசனையின் பெயரில் உரிய தடுப்பு மருந்தைப் பெற்றுக்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.</p><p style="text-align: justify;">

காய்ச்சல், தலைவலி, உடல் வலி மற்றும் கண் வலி போன்றவை இந்த நோயின் முக்கிய அறிகுறிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
</p><p style="text-align: justify;">
குறித்த அறிகுறிகள் தென்பட்டால் சுயமாக வைத்தியம் செய்வதையோ அல்லது சிகிச்சையைப் தாமதப்படுத்துவதையோ தவிர்த்து, உடனடியாக மருத்துவ ஆலோசனையைப் பெற்றுக்கொள்ளுமாறு பொதுமக்கள் வலியுறுத்தப்பட்டுள்ளனர்.</p><p style="text-align: justify;"></p>]]></content>
            <updated>2026-07-23T17:58:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரச அனுசரணையில் தமிழர்களுக்கு நடந்த கொடூரங்கள் - நீதி கிடைக்க கொஞ்சம் காலம் செல்லும்..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-lankan-tamils-chemmani-npp-government-1784825970"></link>
            <id>https://tamilwin.com/article/sri-lankan-tamils-chemmani-npp-government-1784825970</id>
            <summary type="text">தமிழின வரலாற்றில் முந்தைய அரச கட்டமைப்பு ரீதியாகவும் நடந்தேறிய அநீதிகளும் வன்முறைகளும் எளிதில் மறக்கக்கூடியவை அல்ல. தலைமுறை தலைமுறையாகச் சுமக்கப்படும்...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழின வரலாற்றில் முந்தைய அரச கட்டமைப்பு ரீதியாகவும் நடந்தேறிய அநீதிகளும் வன்முறைகளும் எளிதில் மறக்கக்கூடியவை அல்ல.</p><p> தலைமுறை தலைமுறையாகச் சுமக்கப்படும் இந்த வலியும் இழப்பும், நீதிக்கான எதிர்பார்ப்பை இன்றும் உயிர்ப்புடன் வைத்திருக்கின்றன.</p><p>வரலாற்று ரீதியான இந்த நீதிக்கான பயணத்தில், சர்வதேச அமைப்புகளின் பங்கு, வரலாற்று நிகழ்வுகளின் ஆவணப்படுத்தல் அல்லது அரசியல் தீர்வுகள் குறித்து தமிழ் மக்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர்.&nbsp;</p><p>இந்நிலையில், தமிழ் மக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட இந்த இனப்படுகொலையால் தான் இன்னமும் லட்சக்கணக்கான மக்கள் புலம்பெயர் நாடுகளில் இருந்த வருகின்றனர்.&nbsp;</p><p>இவ்விடயங்கள் உட்பட பல தகவல்கள் குறித்து கலந்துரையாடுகின்றது நேருக்கு நேர் நிகழ்ச்சி,&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/PuqfCeSztBs" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-23T17:53:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ்.பொது நூலகத்திற்கு அமைச்சர் ஹினிதும சுனில் செனவி விஜயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/hiniduma-sunil-senevi-visits-jaffna-public-library-1784827643"></link>
            <id>https://tamilwin.com/article/hiniduma-sunil-senevi-visits-jaffna-public-library-1784827643</id>
            <summary type="text">பௌத்த சாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் ஹினிதும சுனில் செனவி,
யாழ்ப்பாண பழைய மாவட்டச் செயலகக் கட்டடம் மற்றும் யாழ்ப்பாணம் பொது நூலகத்திற்கு...</summary>
            <content type="html"><![CDATA[<p>பௌத்த சாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் ஹினிதும சுனில் செனவி,
யாழ்ப்பாண பழைய மாவட்டச் செயலகக் கட்டடம் மற்றும் யாழ்ப்பாணம் பொது நூலகத்திற்கு இன்று(23) விஜயம் மேற்கொண்டார்.</p><p>

இதன்போது நூலகத்தின் தற்போதைய செயற்பாடுகள், எதிர்கால அபிவிருத்தித்
திட்டங்கள் மற்றும் கலாசாரப் பாரம்பரியத்தைப் பாதுகாக்கும் நடவடிக்கைகள்
தொடர்பாக விரிவான கலந்துரையாடலில் ஈடுபட்டார்.</p><p></p><h2>எதிர்கால நடவடிக்கைகள்</h2><p>
</p><p>
மேலும், யாழ்ப்பாணம் பொது நூலகத்தின் சேவைகளை நவீனமயப்படுத்துதல்,
வாசகர்களுக்கான வசதிகளை மேம்படுத்துதல், ஆவணங்கள் மற்றும் அரிய நூல்களைப்
பாதுகாக்கும் திட்டங்கள், டிஜிட்டல் நூலக வசதிகளை விரிவுபடுத்துதல் உள்ளிட்ட
எதிர்கால நடவடிக்கைகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது.</p><p>யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்துக்கு எதிரே அமைந்துள்ள தொன்மை வாய்ந்த பழைய
மாவட்டச் செயலகக் கட்டடத்தைப் பார்வையிட்ட அமைச்சர் தலைமையிலான குழுவினர்,
அதன் புராதனத் தன்மை அழியாதவாறு அதனைப் பேணிப் பாதுகாப்பதற்கு எடுக்கப்பட
வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் அதற்கான எதிர்காலத் திட்ட ஏற்பாடுகள் குறித்து
விரிவாக ஆராய்ந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1287ba4a-31b0-4dbf-a6b8-4ba4afe956a2/26-6a62511a9f67b.webp' /></p><p> இது தொடர்பான விசேட விளக்கங்களை ஹினிதும சுனில் செனவி இதன்போது உரிய அதிகாரிகளுக்கு
வழங்கினார்.</p><p>
</p><p>
இந்தநிகழ்வில் வட மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன், யாழ் மாநகர ஆணையாளர்
அரவிந்தராஜ், யாழ்.மாநகர சபையின் பிரதி மேயர் இமானுவேல் தயாளன், யாழ்ப்பாணம்
பொது நூலகத்தின் நிர்வாகத்தினர் மற்றும் தொடர்புடைய அதிகாரிகள் உள்ளிட்ட பலர்
கலந்துக் கொண்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c9a8d415-acb1-4cf0-bc35-2990d509fdaa/26-6a62511b7b858.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cebc4f1f-2cea-4cda-9b0a-ccf2f090b732/26-6a62511c4ac15.webp' /></p><p></p>]]></content>
            <updated>2026-07-23T17:36:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பில் குழந்தையின் பிறந்தநாள் விழாவில் துப்பாக்கிச் சூடு.. ஒருவர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/gun-shoot-in-mattakkuliya-one-death-1784826853"></link>
            <id>https://tamilwin.com/article/gun-shoot-in-mattakkuliya-one-death-1784826853</id>
            <summary type="text">வத்தளை பொலிஸ் பிரிவு, பல்லியவத்தையில் உள்ள மட்டக்குளிய பாலம் அருகே உள்ள ஒரு விழா மண்டபத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் காயமடைந்த நபர் உய...</summary>
            <content type="html"><![CDATA[<p>வத்தளை பொலிஸ் பிரிவு, பல்லியவத்தையில் உள்ள மட்டக்குளிய பாலம் அருகே உள்ள ஒரு விழா மண்டபத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் காயமடைந்த நபர் உயிரிழந்துள்ளார்.&nbsp;</p><h2>பொலிஸ் விசாரணை&nbsp;</h2><p>
ஒரு குழந்தையின் பிறந்தநாள் விழா நடைபெற்றுக் கொண்டிருந்த விழா மண்டபத்தில் இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் நடந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aa34ac4c-d268-4830-9769-cc55ec6cb392/26-6a624fe01b913.webp' /></p><p>

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர் உயிரிழந்துள்ளார்.&nbsp;</p><p>
இச்சம்பவம் தொடர்பாக வத்தளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-23T17:31:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[15 வயதுக்கு உட்பட்டோரின் சமூக வலைதளக் கணக்குகள் முடக்கம்... பிரான்ஸின் புதிய சட்டம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/france-social-media-ban-under-15-kids-1784821883"></link>
            <id>https://manithan.com/article/france-social-media-ban-under-15-kids-1784821883</id>
            <summary type="text">15 வயதுக்கு உட்பட்ட சிறார்கள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்த தடை விதிக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க மசோதாவுக்கு பிரான்ஸ் நாடாளுமன்றம் ஒருமனதாக ஒப்புதல் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>15 வயதுக்கு உட்பட்ட சிறார்கள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்த தடை விதிக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க மசோதாவுக்கு பிரான்ஸ் நாடாளுமன்றம் ஒருமனதாக ஒப்புதல் அளித்துள்ளது.</p><p>

வரும் கல்வியாண்டு முதல் 15 வயதுக்கு உட்பட்டவர்கள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்த அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் ஏற்கெனவே அறிவித்திருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ae1f8adf-b7eb-434d-a41f-ce383423dc55/26-6a623b32294b1.webp' /></p><p></p><h2>நாடாளுமன்றம் ஒருமனதாக ஒப்புதல்</h2><p> அப்போது, "எங்கள் நாட்டுக் குழந்தைகளின் மூளை விற்பனைக்கான பொருள் அல்ல.அமெரிக்கா அல்லது சீனாவில் உருவாக்கப்படும் செயலிகள், பிரான்ஸ் குழந்தைகளின் சிந்தனைகளையும் உணர்வுகளையும் கட்டுப்படுத்த அனுமதிக்க முடியாது" என்று அவர் கடுமையாக விமர்சித்திருந்தார்.</p><p>

இந்தச் சூழலில், 15 வயதுக்கு உட்பட்ட சிறார்கள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்த தடை விதிக்கும் மசோதா, பிரான்ஸ் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் வாக்கெடுப்புக்கு வந்தது. இதில் அனைத்து உறுப்பினர்களின் ஏகோபித்த ஆதரவுடன் மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f00e5c35-4168-4ff5-ae35-e31ff64ff6b9/26-6a623b32ce5d1.webp' /></p><p>
</p><p>
இதையடுத்து, வரும் செப்டம்பர் 1 முதல் பிரான்ஸில் 15 வயதுக்கு உட்பட்ட சிறார்கள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவதற்கு சட்டப்பூர்வமாகத் தடை அமலுக்கு வருகிறது.
</p><p>
இந்தச் சட்டத்தின் மூலம், சிறார்களின் சமூக வலைதளப் பயன்பாட்டிற்கு இவ்வகையான முழுமையான கட்டுப்பாட்டை அமல்படுத்திய ஐரோப்பிய ஒன்றியத்தின் முதல் நாடு என்ற பெருமையை பிரான்ஸ் பெற்றுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d7a2142a-2cdd-4477-a7bb-bbe9f3dc6108/26-6a623b337f619.webp' /></p><p></p><p>

ஏற்கெனவே 15 வயதுக்கு உட்பட்டோரின் பெயரில் தொடங்கப்பட்டுள்ள சமூக வலைதளக் கணக்குகளை முடக்குவதற்கு சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு நான்கு மாதங்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
</p><p>
மேலும், புதிய விதிமுறைகளை சமூக வலைதள நிறுவனங்கள் முறையாகப் பின்பற்றுகிறதா என்பதை பிரான்ஸ் தகவல் தொழில்நுட்ப ஒழுங்குமுறை அமைப்பான ஆர்காம் (ARCOM) தொடர்ந்து கண்காணிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-23T17:30:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Manchu</name>
            </author>
            <title type="text"><![CDATA[காலை உணவிற்கு ஆரோக்கியம் நிறைந்த சுவையான ரவா இட்லி செய்வது எப்படி.? ரெசிபி இதோ]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/how-to-prepare-healthy-rava-idli-for-breakfast-1784816060"></link>
            <id>https://manithan.com/article/how-to-prepare-healthy-rava-idli-for-breakfast-1784816060</id>
            <summary type="text">ஆனால் எப்போதும் அரிசி மாவிலேயே இட்லி சுட்டு சாப்பிட்டு அலுத்து விட்டதா உங்களுக்கு.? அப்படியென்றால் ரவையை வைத்து ஆரோக்கியமான மற்றும் சுவையான ரவா இட்லிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஆனால் எப்போதும் அரிசி மாவிலேயே இட்லி சுட்டு சாப்பிட்டு அலுத்து விட்டதா உங்களுக்கு.? அப்படியென்றால் ரவையை வைத்து ஆரோக்கியமான மற்றும் சுவையான ரவா இட்லியை காலை செய்து பாருங்கள், அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்...</p><p>காலை வேளையில் எளிதான மற்றும் ஆரோக்கியமான உணவை சாப்பிட்டு அந்த நாளை தொடங்க தான் பலர் விரும்புவார்கள். பொதுவாக காலையில் இட்லி, தோசை, உப்புமா என செய்து சாப்பிடுவது தான் வழக்கம். அதுதான் இல்லத்தரசிகளுக்கு காலை வேளையில் செய்ய எளிதாக இருக்கும்.</p><p>ஆனால் எப்போதும் அரிசி மாவிலேயே இட்லி சுட்டு சாப்பிட்டு அலுத்து விட்டதா உங்களுக்கு.? அப்படியென்றால் ரவையை வைத்து ஆரோக்கியமான மற்றும் சுவையான ரவா இட்லியை காலை செய்து பாருங்கள், அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்...&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/29af69aa-36ba-44fc-b01e-7981f604b907/26-6a623308b0e97.webp' /></p><h2>தேவையான பொருட்கள் :</h2><p>ரவை - 1 கப்<br>புளித்த தயிர் - 1/2 கப்<br>&nbsp;துருவிய கேரட் - 1 கப்<br>&nbsp;பீன்ஸ் - 10
<br>பெரிய வெங்காயம் - 1<br>&nbsp;பச்சை மிளகாய் - 2
<br>இஞ்சி துண்டு - 1
<br>கடலை பருப்பு - 1 டீஸ்பூன்
<br>உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
<br>கடுகு - 1/2 டீஸ்பூன்
<br>எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
<br>பேக்கிங் சோடா - 1 சிட்டிகை
<br>கறிவேப்பிலை - சிறிதளவு
<br>கொத்தமல்லி இலை - சிறிதளவு<br>&nbsp;உப்பு - தேவையான அளவு&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b108a6cf-20aa-4521-83f1-7150d2b43255/26-6a62330962a17.webp' /></p><h2>செய்முறை :</h2><p>
அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு போட்டு வெடித்ததும் உளுத்தம் பருப்பு மற்றும் கடலை பருப்பு சேர்த்து தாளித்துக்கொள்ளுங்கள்.
</p><p>பிறகு அதில் கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் இஞ்சி சேர்த்து வதக்கி வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வதங்கியவுடன் நறுக்கிய பீன்ஸ் சேர்த்து பாதி வேகும் வரை வதக்கவும்.</p><p>பிறகு அதில் துருவிய கேரட் சேர்த்து நன்கு வதக்கி இறுதியாக பேக்கிங் சோடா மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து ஒரு கிளறு கிளறி கொள்ளவும்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8b2fe3a5-b245-4f6b-a8f5-25ef52af5137/26-6a62330a1a25f.webp' /></p><p>பின்னர் அதில் ரவை சேர்த்து மசாலாக்கள் ரவையுடன் நன்கு சேரும் படி மிதமான தீயில் கைவிடாமல் கிளறி ரவை வறுபட்ட வாசம் வந்ததும் அடுப்பை அணைத்து இறக்கி அதை நன்றாக ஆறவிடவும்.</p><p>இவை நன்கு ஆறியவுடன் புளித்த தயிர் அல்லது கெட்டியான தயிர் சேர்த்து கலவையை நன்றாக கிளறி சுமார் 5 நிமிடங்களுக்கு மூடி வையுங்கள். ஐந்து நிமிடம் கழித்து பார்த்தால் ரவை தயிரை உள்ளே இழுத்து ஊறி இருக்கும்.</p><p>பின்னர் அதில் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து மீண்டும் 10 நிமிடங்களுக்கு ஊறவிடுங்கள். அதன் பின்னர் அதை இட்லி மாவு பதத்திற்கு தண்ணீர் ஊற்றி கலந்துகொள்ளுங்கள்.</p><p>பின்னர் எப்போதும் போல் இட்லி தட்டில் இந்த மாவை ஊற்றி 15 நிமிடம் வேகவைத்தால் சுவையான ரவா இட்லி ரெடி.&nbsp;&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><i>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் <a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள் <a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"><b>FOLLOW NOW</b></a>&nbsp; &nbsp; &nbsp; &nbsp;&nbsp;</i><br></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-23T17:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரஷ்ய வங்கிகள், கிரிப்டோவை குறிவைத்து ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ள தடைகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/eu-imposes-21st-sanctions-on-russia-banks-oil-1784827460"></link>
            <id>https://news.lankasri.com/article/eu-imposes-21st-sanctions-on-russia-banks-oil-1784827460</id>
            <summary type="text">உக்ரைன் போருக்கான எதிர்ப்பாக, ஐரோப்பிய ஒன்றியம் ரஷ்யாவிற்கு எதிராக 21-வது தடைகள் தொகுப்பை அறிவித்துள்ளது. இது கடந்த நான்கு ஆண்டுகளில் மிகப்பெரிய தடைகள...</summary>
            <content type="html"><![CDATA[<p>உக்ரைன் போருக்கான எதிர்ப்பாக, ஐரோப்பிய ஒன்றியம் ரஷ்யாவிற்கு எதிராக 21-வது தடைகள் தொகுப்பை அறிவித்துள்ளது. இது கடந்த நான்கு ஆண்டுகளில் மிகப்பெரிய தடைகளின் தொகுப்பாகக் கருதப்படுகிறது.</p><p>

இந்த புதிய நடவடிக்கையில் 218 நிறுவனங்கள் மற்றும் நபர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, 94 ரஷ்ய நிதி நிறுவனங்கள், மாஸ்கோ பங்குச் சந்தை உள்ளிட்டவை தடைகளில் அடங்குகின்றன.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/38740cd0-d457-4977-9bac-91ffee5401a6/26-6a624e46635ef.webp' /></p><p>இதனால் ரஷ்ய வங்கிகள், நிதி பரிவர்த்தனைகள், கிரிப்டோ நெட்வொர்க் ஆகியவை கடுமையாக பாதிக்கப்படவுள்ளன.
</p><p>
மேலும், 32 வங்கிகள் SWIFT எனப்படும் உலகளாவிய பண பரிவர்த்தனை அமைப்பிலிருந்து துண்டிக்கப்படுகின்றன. இதனால் ரஷ்யாவின் சர்வதேச நிதி தொடர்புகள் பெரிதும் சிக்கலாகும்.</p><p></p><p>எண்ணெய் விலைக்கு விதிக்கப்பட்ட உச்சவரம்பு பீப்பாய்க்கு 44.10 டொலர் விலையில் 12 மாதங்களுக்கு உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ரஷ்யா சந்தை அதிர்வுகளால் கூடுதல் லாபம் பெறுவதைத் தடுக்க முயற்சி செய்யப்படுகிறது.</p><p>

அதே நேரத்தில், கிரீஸ் நாட்டின் கோரிக்கையை கருத்தில் கொண்டு, ரஷ்ய LNG (Liquefied Natural Gas) மூன்றாம் நாடுகளுக்கு மாற்ற அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், ஐரோப்பிய ஒன்றியத்துக்குள் ரஷ்ய LNG இறக்குமதி 2027 ஜனவரி 1 முதல் தடை செய்யப்படும்.</p><p></p><p>ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிவிவகாரத் துறைத் தலைவர் காஜா கல்லாஸ், “இது நான்கு ஆண்டுகளில் மிகப்பெரிய தடைகள் தொகுப்பு. ரஷ்யாவின் போர் இயந்திரத்தை பலவீனப்படுத்துவதே எங்கள் நோக்கம்” என தெரிவித்துள்ளார்.
</p><p>
இந்த நடவடிக்கை, ரஷ்யாவின் பொருளாதாரத்தை கடுமையாக பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-23T17:22:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[செம்மணி மனித புதைகுழிக்குள் மழை அங்கியுடன் சிறுவரின் என்புக்கூடு அடையாளம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/child-s-skeleton-raincoat-semmani-mass-grave-1784826475"></link>
            <id>https://tamilwin.com/article/child-s-skeleton-raincoat-semmani-mass-grave-1784826475</id>
            <summary type="text">செம்மணி மனித புதைகுழிக்குள் மழை அங்கியை ஒத்த அங்கியுடன் சிறுவரின்
என்புக்கூடு ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளது.செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட ...</summary>
            <content type="html"><![CDATA[<p>செம்மணி மனித புதைகுழிக்குள் மழை அங்கியை ஒத்த அங்கியுடன் சிறுவரின்
என்புக்கூடு ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளது.</p><p>செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை 56 நாட்கள்
முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், 41ஆவது நாளான இன்றைய தினம்(23.7.2026) 07 என்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.</p><p>
அதேவேளை ஏற்கனவே அடையாளம் காணப்பட்டதில் 09 என்புக்கூடுகள் அகழ்ந்து
எடுக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>என்பு கூடுகள் அடையாளம்</h2><p>
</p><p>
அதேவேளை இன்றைய தினம் மூன்று என்புக் குவியல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன்,
ஆணிகளும் சீமெந்து துண்டு ஒன்றும் அடையாளம் காணப்பட்டுள்ளது.</p><p></p><p>
</p><p>
அதன் அடிப்படையில் செம்மணி புதைகுழியில் முதலாம் இரண்டாம் மற்றும் மூன்றாம்
கட்டம் என இதுவரையில் 95 நாட்கள் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் ,
478 என்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் 464 என்பு கூடுகள் முற்றாக
அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-23T17:21:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[குழந்தையொன்றின் பிறந்தநாள் விழாவில் சற்று முன் துப்பாக்கிச்சூடு ; ஒருவர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/shooting-reported-at-child-s-birthday-party-1784826785"></link>
            <id>https://jvpnews.com/article/shooting-reported-at-child-s-birthday-party-1784826785</id>
            <summary type="text">வத்தளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பள்ளியாவத்தை, மட்டக்குளி பாலத்திற்கு அருகில் இன்று (23) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் உயிரிழந்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>வத்தளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பள்ளியாவத்தை, மட்டக்குளி பாலத்திற்கு அருகில் இன்று (23) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் உயிரிழந்துள்ளார்.</p><p>
குழந்தையொன்றின் பிறந்தநாள் விழா நடைபெற்ற மண்டபம் ஒன்றை நோக்கி இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/841ed905-1aa3-4a03-a8d6-c2516806b2ce/26-6a624ba3147b1.webp' /></p><p> </p><p>

 

பின்னர் துப்பாக்கிச் சூட்டை நடத்தியவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.</p><p></p><p>இந்த சம்பவத்தில் காயமடைந்தவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-23T17:13:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பில் இன்றிரவு இடம்பெற்ற துப்பாக்கிசூடு : ஒருவர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/shooting-near-mattakkuliya-bridge-1784826629"></link>
            <id>https://ibctamil.com/article/shooting-near-mattakkuliya-bridge-1784826629</id>
            <summary type="text">கொழும்பு வத்தளை காவல்துறைபிரிவு, பள்ளியவத்தையில் உள்ள மட்டக்குளிய பாலம் அருகே அமைந்துள்ள ஒரு விழா மண்டபத்தில் இன்று இரவு (23) துப்பாக்கிச் சூடு சம்பவம...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு வத்தளை காவல்துறைபிரிவு, பள்ளியவத்தையில் உள்ள மட்டக்குளிய பாலம் அருகே அமைந்துள்ள ஒரு விழா மண்டபத்தில் இன்று இரவு (23) துப்பாக்கிச் சூடு சம்பவம் நிகழ்ந்துள்ளது.
</p><p>
ஒரு குழந்தையின் பிறந்தநாள் விழா நடைபெற்றுக் கொண்டிருந்த விழா மண்டபத்தில் துப்பாக்கிச் சூடு சம்பவம் நிகழ்ந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><p>&nbsp;இந்த சம்பவத்தில் காயமடைந்தவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது.</p><p>
வத்தளை காவல்துறையினர் இதுகுறித்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-23T17:11:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரான்ஸில் 1.3 மில்லியன் யூரோ மதிப்புள்ள நகைகளுடன் கைப்பை மாயம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/us-man-hand-bag-worth-jewelry-missing-in-france-1784809089"></link>
            <id>https://canadamirror.com/article/us-man-hand-bag-worth-jewelry-missing-in-france-1784809089</id>
            <summary type="text">அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு கோடீஸ்வர தொழிலதிபர், பரிசில் உள்ள ஆடம்பர தங்கும் விடுதியில் தான் கொண்டு வந்த கைப்பை மர்மமான முறையில் காணாமல் போயுள்ளதாக முறை...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு கோடீஸ்வர தொழிலதிபர், பரிசில் உள்ள ஆடம்பர தங்கும் விடுதியில் தான் கொண்டு வந்த கைப்பை மர்மமான முறையில் காணாமல் போயுள்ளதாக முறைப்பாடு செய்துள்ளார்.
</p><p>
 காணமல் போன பையில் மொத்தம் 1.3 மில்லியன் யூரோக்கள் மதிப்புள்ள உயர்தர நகைகள் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d813559d-6fb9-4bae-9f89-d9c69153718b/26-6a62068283293.webp' /></p><h2>&nbsp;8 இலட்சம் யூரோக்கள் மதிப்புள்ள வைர மோதிரம்</h2><p>
</p><p>
காணாமல் போன பொருட்களில் சுமார் 8 இலட்சம் யூரோக்கள் மதிப்புள்ள வைர மோதிரம் உள்ளிட்ட பல விலையுயர்ந்த நகைகள் இருந்ததாக ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p> 

பயணத்தின் எந்தக் கட்டத்தில் கைப்பை மாயமானது என்பது இதுவரை உறுதியாகத் தெரியாத நிலையில், சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். 

இந்த மர்மமான நகை மாயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. </p><p>விமான நிலையம், பயண வழித்தடங்கள் மற்றும் தங்கும் விடுதியின் பாதுகாப்பு காட்சிப்பதிவுகள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. 

கைப்பையை கண்டுபிடிக்கவும், சம்பவத்தின் உண்மை நிலையை வெளிக்கொணரவும் பிரான்ஸ் காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-23T17:06:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை மீண்டும் உயர்வு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/global-crude-oil-prices-rise-again-1784826093"></link>
            <id>https://canadamirror.com/article/global-crude-oil-prices-rise-again-1784826093</id>
            <summary type="text">அமெரிக்காவிற்கும் ஈரானுக்குமிடையே நிலவி வரும் போர்ப் பதற்றம் தொடர்ந்து தீவிரமடைந்து வரும் நிலையில், சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை தொடர்ந்தும...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவிற்கும் ஈரானுக்குமிடையே நிலவி வரும் போர்ப் பதற்றம் தொடர்ந்து தீவிரமடைந்து வரும் நிலையில், சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை தொடர்ந்தும் அதிகரித்து வருகின்றது.
</p><p>


கடந்த ஆறு வாரக் காலத்தில் பதிவான மிக உயர்ந்த விலை மதிப்புகளைக் குறிக்கும் வகையில், உலக சந்தையின் பிரதான ப்ரென்ட் மசகு எண்ணெய், ஒரு பீப்பாயின் விலை 98 அமெரிக்க டொலர் எல்லையைத் தாண்டியுள்ளதுடன், WTIமசகு எண்ணெய் ஒரு பீப்பாயின் விலையும் 90 அமெரிக்க டொலரைத் தாண்டியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/befcce61-b10b-43a5-abc8-eb273c388460/26-6a6248ef17afd.webp' /></p><p> </p><p>



மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள இந்த அரசியல் பதற்றம் காரணமாக, எண்ணெய் விநியோகத்தில் பாதிப்பு ஏற்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ள நிலையில், நேரடி விளைவாக, மசகு எண்ணெய் விலையேற்றம் ஆசிய சந்தைகளிலும் கடுமையான பொருளாதார தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றமைக் குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-07-23T17:01:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yoosuf</name>
            </author>
            <title type="text"><![CDATA[குச்சவெளி இளைஞர் துன்புறுத்தப்பட்டு பொய் வழக்கில் சிக்கவைக்கப்பட்டதாக முறைப்பாடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/complaint-that-a-kuchchaveli-youth-was-tortured-1784825162"></link>
            <id>https://tamilwin.com/article/complaint-that-a-kuchchaveli-youth-was-tortured-1784825162</id>
            <summary type="text">குச்சவெளி, காசிம்நகர் பகுதியைச் சேர்ந்த முகம்மது ரஹீம் முகம்மது நிஸ்லான்
என்ற இளைஞர், கடற்படையினரால் தாக்கப்பட்டதுடன், பொய் வழக்கில்
சிக்கவைக்கப்பட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>குச்சவெளி, காசிம்நகர் பகுதியைச் சேர்ந்த முகம்மது ரஹீம் முகம்மது நிஸ்லான்
என்ற இளைஞர், கடற்படையினரால் தாக்கப்பட்டதுடன், பொய் வழக்கில்
சிக்கவைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ்
நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.
</p><p>
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த 16.07.2026 அன்று பிற்பகல் 3.00 மணியளவில், நண்பருடன் மோட்டார்
சைக்கிளில் பிரதான வீதியில் பயணித்துக்கொண்டிருந்தபோது, கடற்படையைச் சேர்ந்த
இருவர் தங்களை வழிமறித்தனர்.</p><p>பின்னர் மோட்டார் சைக்கிளிலிருந்து வலுக்கட்டாயமாக
இழுத்துச் சென்று சுமார் 200 முதல் 300 மீற்றர் தூரம் கடற்கரையை நோக்கி
அழைத்துச் சென்றதாக தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>அச்சுறுத்தல்</h2><p>
</p><p>
இந்தச் சம்பவம் பொருத்தப்பட்டிருந்த சிசிரிவி கமெராவில் பதிவாகியுள்ளதாகவும் அவர்
கூறியுள்ளார்.
</p><p>
சம்பவத்தை அறிந்து அங்கு வந்த தனது தாயாரையும் சகோதரியையும் கடற்படையினர்
தாக்க முயன்றதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3bfc1faf-01e2-430c-a967-09f8737b0c79/26-6a624894e21e4.webp' /></p><p>
</p><p>
அதன் பின்னர், எவ்வித விசாரணையும் மேற்கொள்ளாமல், கரையில் நிறுத்தப்பட்டிருந்த
OFRP-A-5694 CHW பதிவு இலக்கம் கொண்ட படகில் தன்னை வலுக்கட்டாயமாக
ஏற்றியதாகவும், தனது காலில் சுமார் 40 கிலோ எடையுள்ள பாராங்கல்லைக் கட்டி,
"சட்டவிரோத கடற்றொழிலில் ஈடுபட்டதாக ஒப்புக்கொள்ள வேண்டும்; இல்லையெனில்
கடலில் தூக்கி வீசிவிடுவோம்" என உயிர் அச்சுறுத்தல் விடுத்ததாகவும்
தெரிவித்துள்ளார்.
</p><p>
பின்னர் படகு மூலம் கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும், அங்கு
வந்த தனது பெற்றோரை துப்பாக்கியைக் காட்டி அச்சுறுத்திய பின்னர், தன்னையும்
குறித்த படகையும் குச்சவெளி வடக்கு கடற்றொழில் பரிசோதகரிடம் ஒப்படைத்து பொய்
வழக்குப் பதிவு செய்ததாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-23T17:00:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[சீன நாட்டவரை கடத்த பயன்படுத்திய சொகுசு ஜீப் இரத்தக்கறைகளுடன் இன்றிரவு கண்டுபிடிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/bloodstained-jeep-found-in-padukka-1784823220"></link>
            <id>https://ibctamil.com/article/bloodstained-jeep-found-in-padukka-1784823220</id>
            <summary type="text">கொழும்பு துறைமுக நகரத்தில் ஒரு சீன நாட்டவரைக் கடத்தி கொலை செய்த சம்பவத்தில் சந்தேக நபர்கள் பயன்படுத்தியதாக நம்பப்படும் சொகுசு ஜீப், இன்று இரவு (23) பா...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு துறைமுக நகரத்தில் ஒரு சீன நாட்டவரைக் கடத்தி கொலை செய்த சம்பவத்தில் சந்தேக நபர்கள் பயன்படுத்தியதாக நம்பப்படும் சொகுசு ஜீப், இன்று இரவு (23) பாதுக்க பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
</p><p>
பாதுக்கவில் உள்ள பஹால போப் சந்திப்பில் நிறுத்தப்பட்டிருந்த அந்த வாகனம், கண்டுபிடிக்கப்பட்டபோது பின்னோக்கிச் செல்லும் கியரில் இருந்ததாக காவல்துறை தெரிவித்தது</p><h2>கண்டுபிடிக்கப்பட்ட ஜீப்பின் உள்ளே&nbsp; இரத்தக்கறைகள்&nbsp;</h2><p>கண்டுபிடிக்கப்பட்ட ஜீப்பின் உள்ளே பல இரத்தக்கறைகள் காணப்படுவதாகவும் அந்த வாகனத்தில் கைரேகை சோதனைகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/378e7587-4132-406f-8dc2-9e2fd3e7fc5c/26-6a62464b57700.webp' /></p><p>
</p><p>
சம்பந்தப்பட்ட ஜீப்பில் வந்த மூன்று சீன நாட்டவர்கள், ஒரு முச்சக்கர வண்டியில் கொள்ளுப்பிட்டி நோக்கி தப்பிச் சென்றதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
</p><p>
தப்பிச் சென்ற மூன்று சீன நாட்டவர்களில் இருவர் இன்று (23) கட்டுநாயக்க விமான நிலையம் அருகே காவல்துறையினரால் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p>
</p><p>
</p><h2>முச்சக்கர வண்டியின் ஓட்டுநரும் கைது</h2><p>சந்தேக நபர்களைக் கொள்ளுப்பிட்டிக்கு ஏற்றிச் சென்ற முச்சக்கர வண்டியின் ஓட்டுநரும் கைது செய்யப்பட்டு, கொள்ளுப்பிட்டி காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/75ce01e0-0387-4073-b976-e40e91c6ab97/26-6a62474c9f056.webp' /></p><p>

இந்த மோதல் மற்றும் கடத்தலில் பலியான சீன நாட்டவரின் சடலம், எஹெலியகொடவின் கரந்தன பகுதியில் உள்ள ஒரு வனப்பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று காவல்துறையினரால் கண்டெடுக்கப்பட்டது.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p> &nbsp;</p>]]></content>
            <updated>2026-07-23T16:54:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானிய களியாட்ட விடுதிகளுக்கு வர்த்தக வரி குறைப்பு: புதிய பிரதமர் ஆண்டி பர்ன்ஹாம் அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/business-tax-cut-uk-nightclubs-prime-minister-1784824023"></link>
            <id>https://tamilwin.com/article/business-tax-cut-uk-nightclubs-prime-minister-1784824023</id>
            <summary type="text">பிரித்தானியாவின் புதிய பிரதமராகப் பொறுப்பேற்றுள்ள ஆண்டி பர்ன்ஹாம், நாட்டின்
களியாட்ட விடுதிகள், கிளப்புகள் மற்றும் நேரலை இசைக்கூடங்களுக்கான வர்த்தக
...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரித்தானியாவின் புதிய பிரதமராகப் பொறுப்பேற்றுள்ள ஆண்டி பர்ன்ஹாம், நாட்டின்
களியாட்ட விடுதிகள், கிளப்புகள் மற்றும் நேரலை இசைக்கூடங்களுக்கான வர்த்தக
வரியை வரும் ஏப்ரல் மாதம் முதல் 20 வீதம் குறைப்பதாக அறிவித்துள்ளார்.
</p><p>
அதிகாரத்திற்கு வந்த மூன்று நாட்களில் அவர் வெளியிட்டுள்ள மூன்றாவது முக்கிய
நிவாரண அறிவிப்பு இதுவாகும்.
</p><p>
இந்த வரி குறைப்பின் மூலம் சராசரியாக ஒரு களியாட்ட விடுதி ஆண்டுக்கு சுமார்
£1,100 (தோராயமாக $1,472) வரை சேமிக்க முடியும்.

நாட்டின் சுமார் 32,000 வணிக நிறுவனங்கள் இதனால் பயனடையும்.</p><p></p><h2>முக்கிய நடவடிக்கைகள்&nbsp;</h2><p> </p><p>இந்த வரி சலுகை
திட்டத்தால் பிரித்தானிய அரசுக்கு ஆண்டிற்கு £100 மில்லியன் செலவாகும் என
மதிப்பிடப்பட்டுள்ளது.

பதவிக்கு வந்த குறுகிய காலத்தில், வீட்டு மின்சாரக் கட்டணத்தில் வரியை
நீக்கியது மற்றும் பேருந்துக் கட்டணங்களுக்கு உச்சவரம்பு நிர்ணயித்தது போன்ற
அதிரடி நடவடிக்கைகளையும் பர்ன்ஹாம் எடுத்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/628daf4a-aa90-4fc5-b930-0d4c58a7fbf1/26-6a6244e71b529.webp' /></p><p>
</p><p>
மக்கள் தங்கள் சமூகத்தில் விரும்பும் உள்ளூர் வணிக நிறுவனங்களுக்கு இந்த
அரசாங்கம் எப்போதும் உறுதுணையாக நிற்கும் என பிரதமர் ஆண்டி பர்ன்ஹாம்
தெரிவித்துள்ளார்.
</p><p>
அரசாங்கத்தின் இந்த முடிவை சிறு சுயாதீன உணவகங்கள் மற்றும் ஜே.டி. வெதர்ஸ்பூன்
போன்ற முன்னணி களியாட்ட விடுதி நிறுவனங்கள் வரவேற்றுள்ளன.

இருப்பினும், இந்த வரி தள்ளுபடி ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களுக்கு
விரிவாக்கப்படவில்லை.
</p><p>
உணவகங்களும் கடுமையான நிதி நெருக்கடியைச் சந்தித்து வருவதாகவும்,
ஹோட்டல்களுக்கான வரி 110 வீதம் வரை உயர வாய்ப்புள்ளதால், பட்ஜெட்டில் இதர
விருந்தோம்பல் துறை நிறுவனங்களுக்கும் வரிச் சீர்திருத்தங்கள் செய்யப்பட
வேண்டும் என்றும் 'யூகே ஹாஸ்பிட்டாலிட்டி' அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
</p><p>
வரி ஏய்ப்பு செய்யும் ஒன்லைன் வர்த்தக நிறுவனங்கள் மீதான நடவடிக்கை மற்றும்
புகைப்பிடிக்கும் 'வேப்' கடைகளுக்கான சலுகைகளை ஆய்வு செய்வதன் மூலம் இந்த வரி
குறைப்பிற்கான நிதி திரட்டப்படும் என பிரித்தானிய அரசு தரப்பில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-23T16:46:09+00:00</updated>
        </entry>
    </feed>
