<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-08-15T09:39:23+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[தாயை இழந்த துயரிலும் படப்பிடிப்பை நிறைவு செய்த ராதிகா! நெகிழ்ச்சியில் படக்குழு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/vas-team-open-radhikaas-dedication-towards-cinema-1786785078"></link>
            <id>https://manithan.com/article/vas-team-open-radhikaas-dedication-towards-cinema-1786785078</id>
            <summary type="text">radhikaas dedication towards cinema : சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள விஸ்வநாத் &amp;amp; சன்ஸ் திரைப்படம் ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், படக்குழு...</summary>
            <content type="html"><![CDATA[<p>radhikaas dedication towards cinema : சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள விஸ்வநாத் &amp; சன்ஸ் திரைப்படம் ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், படக்குழுவினர் அளித்துள்ள புரமோஷனல் பேட்டியில் நடிகை ராதிகாவின் நெகிழ்ச்சியான அர்ப்பணிப்பு குறித்து பகிர்ந்துள்ள விடயம் தற்போது இணையத்தில் கவனம் பெற்றுள்ளது.&nbsp;</p><h2>ராதிகாவின் நெகிழ்ச்சி செயல்&nbsp; &nbsp;&nbsp;</h2><p>படத்தின் முக்கியமான காமெடி காட்சியை படமாக்கிக் கொண்டிருந்தபோது, ராதிகாவின் தாயார் உயிரிழந்த செய்தி அவருக்கு கிடைத்துள்ளது. அப்போது காட்சியில் இன்னும் ஐந்து ஷாட்கள் மட்டுமே எடுக்க வேண்டியிருந்ததால், அதனை முடித்துவிட்டு செல்லலாமா என ராதிகா இயக்குநர் வெங்கியிடம் கேட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/21c4152c-3c34-4810-8f4f-7e63d0865ff9/26-6a8032e0a5f27.webp' /></p><p></p><p>இதுகுறித்து இயக்குநர் வெங்கி கூறுகையில், தாயார் இறந்த செய்தி கிடைத்த நிலையிலும், காட்சியை முடித்துவிட்டு செல்ல ராதிகா விரும்பியதாகவும், அந்த நேரத்தில் என்ன சொல்வதென்றே தெரியாமல் இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.</p><p>நடிகை மமிதா பைஜூவும் ராதிகாவின் மனநிலையை நினைத்து மிகவும் வேதனைப்பட்டதாகக் கூறியுள்ளார். தன் தாயைப் பற்றி ராதிகா படப்பிடிப்பின்போது பலமுறை பகிர்ந்துகொண்டதாகவும், அந்தச் செய்தி கிடைத்த பிறகும் அவர் முழு ஈடுபாட்டுடன் காமெடி காட்சியில் நடித்தது தன்னை நெகிழச் செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/db2115b3-4408-4d93-b395-586475c58bd5/26-6a8032e156b73.webp' /></p><p>
நடிகர் சூர்யா, தாயாருக்கும் தான் சார்ந்துள்ள கலைக்கும் ராதிகா அளிக்கும் சமமான மரியாதையே இப்படிப்பட்ட அர்ப்பணிப்புக்குக் காரணம் எனக் குறிப்பிட்டுள்ளார்.</p><p>இதுகுறித்து ராதிகா கூறுகையில், அந்தக் காட்சியின் 85 சதவீத படப்பிடிப்பு முடிந்திருந்ததாகவும், மீதமிருந்த ஐந்து ஷாட்களை முடிக்காமல் சென்றால் மீண்டும் இரண்டு மாதங்கள் கழித்தே அதனை படமாக்க வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3d269eaf-bd0a-4c24-97e1-9b437b33fcaa/26-6a8032e231ae8.webp' /></p><p></p><p> </p><p>மேலும், அதே உணர்வை மீண்டும் கொண்டு வந்து நடிப்பது சாத்தியமற்றதாக இருந்திருக்கும் என்றும் கூறியுள்ளார்.

குறிப்பாக, தன் தாயார் உடல்நிலை மிகவும் மோசமாக இருந்தபோதும், “நீ கிளம்பி ஷூட்டிங் போ” என்று தன்னை அனுப்பி வைத்ததாக ராதிகா தெரிவித்துள்ளார். </p><p>தாயை இழந்த துயரத்திலும், அவர் கூறிய வார்த்தைகளுக்கு மதிப்பளித்து படப்பிடிப்பை நிறைவு செய்த ராதிகாவின் அர்ப்பணிப்பு தற்போது பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளதுடன் இந்த காணொளி இணையத்தில் வைரலாகி பாராட்டுக்களையும் குவித்து வருகின்றது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b>&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-15T09:36:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடலில் திடீரென விபத்துக்குள்ளான கப்பல்.. மீட்கப்பட்ட 11 பேர் மருத்துவமனையில்! ஒருவர் மாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/navy-vessel-accident-in-sri-lanka-1786780450"></link>
            <id>https://tamilwin.com/article/navy-vessel-accident-in-sri-lanka-1786780450</id>
            <summary type="text">புதிய இணைப்பு&amp;nbsp;கொழும்பின் புறநகர் பகுதியான அங்குலானையை அண்மித்த கடற்பகுதியில் விபத்துக்குள்ளான&amp;nbsp;கடற்படை கப்பலில் இருந்து 11 பேர் மீட்கப்பட்டு ...</summary>
            <content type="html"><![CDATA[<h2><b>புதிய இணைப்பு&nbsp;</b></h2><p>கொழும்பின் புறநகர் பகுதியான அங்குலானையை அண்மித்த கடற்பகுதியில் விபத்துக்குள்ளான&nbsp;கடற்படை கப்பலில் இருந்து 11 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.&nbsp;</p><p>ஒருவரை காணவில்லை எனவும் அவரை தேடும் பணி தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><h2><b>முதலாம் இணைப்பு&nbsp;</b></h2><p>கொழும்பின் புறநகர் பகுதியான அங்குலானையை அண்மித்த கடற்பகுதியில் கடற்படைக்கு சொந்தமான டோரா கப்பல் விபத்துக்குள்ளாகியுள்ளது. </p><p>குறித்த கப்பலில் உள்ளவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். </p><p>குறித்த கப்பலில் உள்ளவர்களை மீட்பதற்காக இலங்கை விமானப்படையின் உதவியும் வழங்கப்பட்டுள்ளது. </p><h3><b> டோரா கப்பல் விபத்து</b></h3><p>கடற்படையினர் விடுத்த கோரிக்கைக்கமைய இந்த உதவி வழங்கப்பட்டுள்ளது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9819d73f-de27-4990-bed9-b880d246717c/26-6a801c8b90507.webp' /></p><p>அதற்கமைய, விபத்துக்குள்ளான கப்பலைக் கண்காணிப்பதற்காக விமானப்படைக்குச் சொந்தமான Mi-17 மற்றும் பெல் 412 ஆகிய உலங்கு வானூர்திகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக விமானப்படை ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்</p>]]></content>
            <updated>2026-08-15T09:31:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெலிக்கடை பொலிஸ் நிலையத்தில் அடித்துக்கொல்லப்பட்ட தமிழ் பெண்! நீதிகிடைப்பதில் பாரிய சிக்கல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/welikada-police-station-woman-death-1786773271"></link>
            <id>https://tamilwin.com/article/welikada-police-station-woman-death-1786773271</id>
            <summary type="text">&amp;nbsp;வெலிக்கடை பொலிஸ் நிலையத்தில் சோடிக்கப்பட்ட குற்றச்சாட்டில் கைது செய்த தமிழ் பெண் ஒருவர் அடித்து கொலை செய்யப்படுகிறார்.இச் சம்பவம் தொடர்பில் வெலி...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;வெலிக்கடை பொலிஸ் நிலையத்தில் சோடிக்கப்பட்ட குற்றச்சாட்டில் கைது செய்த தமிழ் பெண் ஒருவர் அடித்து கொலை செய்யப்படுகிறார்.</p><p>இச் சம்பவம் தொடர்பில் வெலிக்கடை பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரியாக இருந்த OIC சிந்தக்க அனுராத வவுனியாவுக்கு இடமாற்றப்பட்டு சாதாரண சேவையில் இணைக்கப்பட்டிருந்தார்.</p><p>ஆனால் தற்போது குறித்த OIC சிந்தக்க அனுராதவுக்குப் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக லண்டனில் இருந்து இயங்கும் புலனாய்வு செய்தி சேவை ஒன்று ஆதாரங்களுடன் சுட்டிக்காட்டியுள்ளது.அது தொடர்பான முழுமையான விபரங்கள், </p><p></p><h2>கொழும்பிலுள்ள வீட்டில் வேலை செய்த பெண்</h2><p>சலாகா' (Salaka) முன்னாள் தலைவர் நெத்தி குமாரவின் மனைவி சுதர்மா நெத்தி குமாரவின் வீட்டில் 
பதுளை தெமோதரை தோட்டத்தில் வசிக்கும் ஆர்.ராஜகுமாரி 42 வயதான பெண் வேலை செய்கிறார்.</p><p>கொழும்பில் உள்ள வீடுகளில் வேலை செய்துவிட்டுச் சென்றால், பணம் திருடிவிட்டார் என்பார்கள், அல்லது தங்கம், மாணிக்கக் கற்களைத் திருடிவிட்டார் என்று பொய் வழக்குகள் தாக்கல் செய்வது வழமையாக நடைபெற்று வருவதாகும். </p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ceae7495-a5fb-4e84-bf68-bbdbd343e716/26-6a7fff1983587.webp' /></p><p>இந்தச் சம்பவத்தில் முன்னாள் அமைச்சர் டிரான் அலஸ் (Tiran Alles) மற்றும் முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் ஆகியோர் தலையிட்டுள்ளனர். </p><p>டிரான் அலஸின் திருமணத்திற்கு முரணான தொடர்பிலான பெண் ஒருவர்- சுதர்மா நெத்தி குமாரவின் வீட்டுக்கு அண்மையில் வசிப்பவர். </p><p>அந்தப் பெண் மூலமாகப் பாரிய அழுத்தத்தைக் கொடுத்து, சுதர்மா நெத்தி குமார அந்த ஏழைத் தமிழ் பெண்மணி தன் வீட்டிலிருந்து சென்று இரண்டு நாட்களில், "தங்கக் கடிகாரம் மற்றும் 500 கிராம் தங்கம் திருடிவிட்டார்" என்று பொய் குற்றச்சாட்டை பதிவிட்டு.
பின்னர் அவரை வெலிக்கடை பொலிஸுக்குக் கொண்டு வந்துள்ளனர்.
</p><h2>
வெலிக்கடை பொலிஸ் நிலையத்தில் நடந்த கொடூரம்</h2><p>அன்றைய வெலிக்கடை OIC சிந்தக்க அனுராதவின் காலத்தில், அந்த அப்பாவி பெண்ணை கொடூரமான, காட்டுமிராண்டித்தனமான முறையில் தாக்கி படுகொலை செய்கின்றனர். </p><p>அவரின் உடலில் 34 பலத்த காயங்கள் இருந்தாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தன. இரண்டு வயதில் ஒரு குழந்தை, 17 வயதில் ஒரு குழந்தை என மூன்று பிள்ளைகளின் தாயாவார். </p><p>இது சம்பவம் தொடர்பில் விடுக்கப்பட்ட கடுமையான அழுத்தத்தில் அன்று CID விசாரணைகளை மேற்கொண்டு செல்லும்போது, டிரான் அலஸ் மற்றும் நெத்தி குமார அன்றைய உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஏமில் ரஞ்சன் (Emil Ranjan) விசாரணை செய்தபோது கடும் அழுத்தம் கொடுக்கப்பட்டது.
</p><p>இந்த அரசாங்கம் வந்த பிறகு, அந்த பொலிஸ் பொறுப்பதிகாரி OIC இடமாற்றம் செய்யப்பட்டு, சிலர் கைது செய்யப்பட்டனர். இப்போது உயர் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c639875f-0328-4fe4-9ca1-f3fc243833b2/26-6a7fff1a386be.webp' /></p><p>ஆனால் இப்போது இந்த OIC சிந்தக்க அனுராதவுக்குப் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. RTM (RTM 14) உத்தரவின் மூலம் கிருலப்பனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக (OIC) நியமிக்கப்பட்டுள்ளார். </p><p>அந்த ஏழைப் பெண்ணை அடித்துக் கொன்றவர், இப்போது உயர் நீதிமன்றத்தில் வழக்கு எதிர்கொள்பவர் V8 வாகனத்தில் வந்துதான் பதியை பொறுப்பேற்கிறார். </p><p>இவர் ஒரு பெரும் ஊழல்வாதி. ராஜகிரிய, வெலிக்கடை பகுதியைச் சேர்ந்த மக்களுக்கு இவர் எவ்வளவு ஊழல்வாதி என்று தெரியும். இவர் 11 SPA (ஸ்பா) நடத்தினார். </p><p>அந்த 11 இடங்களிலிருந்தும் பணம் வசூலித்தார். அதுமட்டுமன்றி இவர் இரண்டு SPA களை ஒப்பந்த அடிப்படையில் (contract) கொடுத்துள்ளார். இது வெலிக்கடை பொலிஸாருக்கும் தெரியும். </p><p>தற்போதைய பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவுக்கும் இது தெரியும்.
இந்த ஏழைப் பெண்ணிற்காக யாரும் பேசுவதில்லை. ராஜகுமாரிக்கு என்ன நடந்தது? இன்று ராஜகுமாரியின் கோப்புகள் CID யினால் நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளன என குறிப்பிடப்பட்டுள்ளது.&nbsp;</p><p>&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-15T09:30:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜனநாயகன் பாக்ஸ் ஆபிஸ்: 23 நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/jananayagan-movie-23-days-box-office-1786777258"></link>
            <id>https://cineulagam.com/article/jananayagan-movie-23-days-box-office-1786777258</id>
            <summary type="text">ஜனநாயகன் திரைப்படம் 23 நாட்களில் உலகளவில் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா? இதோ பாருங்க.
ஜனநாயகன்

பிரம்மாண்ட பொருட்செலவில் எடுக்கப்பட்டு தளபதி வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜனநாயகன் திரைப்படம் 23 நாட்களில் உலகளவில் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா? இதோ பாருங்க.</p><p></p><h2>
ஜனநாயகன்
</h2><p>
பிரம்மாண்ட பொருட்செலவில் எடுக்கப்பட்டு தளபதி <a href="https://www.youtube.com/watch?v=8CIsfQ9MKF0&amp;t=289s" target="_blank">விஜய் </a>நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ஜனநாயகன். இப்படத்தை இயக்குநர் ஹெச். வினோத் இயக்க, கே.வி.என் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து முதல் முறையாக மமிதா பைஜூ நடித்துள்ளார்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a06f6b03-c228-4bb5-89eb-d9d5ac0e62bb/26-6a800eadc8635.webp' /></p><p>மேலும், பூஜா ஹெக்டே, பாபி தியோல், பிரகாஷ் ராஜ், நிழல்கள் ரவி, கௌதம் மேனன், சுனில், ப்ரியாமணி என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ac013786-3998-4c41-8de4-0ac0c7d8e4cb/26-6a800eae7e0d4.webp' /></p><h2>பாக்ஸ் ஆபிஸ்</h2><p>

2026-ஆம் ஆண்டு பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படங்களில் ஒன்றான ஜனநாயகன், பல தடைகளை தாண்டி கடந்த மாதம் வெளியானது. விஜய்யின் கடைசி திரைப்படம் என்பதால் ரசிகர்கள் மிகப்பெரிய அளவில் கொண்டாடினார்கள். ஆனால், கலவையான விமர்சனங்களும் எழுந்தன. அதேபோல், தெலுங்கானா, ஆந்திரா மற்றும் வெளிநாடுகளில் வசூல் ரீதியாகவும் சரிவை சந்தித்தது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a915c636-7781-40a0-9510-483aa951f497/26-6a800eaf32221.webp' /></p><p>இந்நிலையில், 23 நாட்களை கடந்திருக்கும் ஜனநாயகன் திரைப்படம் இதுவரை உலகளவில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 23 நாட்களில் உலகளவில் இப்படம் ரூ. 321 கோடி வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் எவ்வளவு வசூல் செய்யும் என்பதை பொறுத்திருந்து&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-15T09:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை கடற்படையின் டோரா படகு கவிழ்ந்து விபத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sri-lanka-navy-s-dvora-boat-capsizes-in-accident-1786786024"></link>
            <id>https://jvpnews.com/article/sri-lanka-navy-s-dvora-boat-capsizes-in-accident-1786786024</id>
            <summary type="text">மொறட்டுவை, அங்குலானை பகுதியை அண்மித்த கடற்பரப்பில், கடற்படைக்கு சொந்தமான டோரா ரக படகொன்று விபத்துக்குள்ளானதாக, கடற்படை பேச்சாளார் தெரிவித்துள்ளார்.இந்...</summary>
            <content type="html"><![CDATA[<p>மொறட்டுவை, அங்குலானை பகுதியை அண்மித்த கடற்பரப்பில், கடற்படைக்கு சொந்தமான டோரா ரக படகொன்று விபத்துக்குள்ளானதாக, கடற்படை பேச்சாளார் தெரிவித்துள்ளார்.</p><p>இந்த விபத்தில் சிக்குண்டவர்களில் ஒருவர் காணாமல் போயுள்ளதுடன் 11 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக, காவல்துறை ஊடகப் பிரிவுத் தெரிவித்துள்ளது.</p><p>அவர்களில் 8 பேர் சிகிச்சைக்காக களுபோவில மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>அத்துடன், குறித்த படகை கண்காணிப்பதற்காக வான் படைக்குச் சொந்தமான எம்.ஐ. 17 ரக உலங்கு வானூர்தி மற்றும் (B) பெல் 412 உலக்கு வானூர்தி ஒன்றும் குறித்த கடற்பரப்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-15T09:27:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[உயிர்த்த ஞாயிறன்று பாதுகாப்பை பலப்படுத்தாத இரு கட்டளை அதிகாரிகள்! குற்றப்புலனாய்வு திணைக்களம் ஏன் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/easter-attack-in-sri-lanka-deshabandu-tennakoon-1786785364"></link>
            <id>https://tamilwin.com/article/easter-attack-in-sri-lanka-deshabandu-tennakoon-1786785364</id>
            <summary type="text">&amp;nbsp;2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் நடந்து ஏழு ஆண்டுகள் கடந்த பின்னரும், ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு சுட்டிக்காட்டியதன் படி குண்டுதாரிகளுக்கு ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் நடந்து ஏழு ஆண்டுகள் கடந்த பின்னரும், ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு சுட்டிக்காட்டியதன் படி குண்டுதாரிகளுக்கு சாதாகமான சூழலை ஏற்படுத்திக் கொடுத்த குற்றவாளிகளான இருவர், இன்னும் எந்தவொரு ஒழுக்காற்று நடவடிக்கையும் இன்றி சுதந்திரமாக இருக்கின்றனர். </p><p>ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கைகள் குற்றப்புலனாய்வுத் துறையிடம் (CID) உள்ளன. பரிந்துரைகள் தெளிவாகக் குறிப்பிடப்பட்டு மூன்றாவது முறையாகவும் சட்டமா அதிபர் திணைக்களத்திலிருந்து நடவடிக்கை எடுக்குமாறு CID க்கு நேரடி அறிவுறுத்தல்கள் கிடைத்துள்ளன. </p><p>இருப்பினும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

நீதிபதி ஜனக் டி சில்வா தலைமையில் அமைக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு, முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் மற்றும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியாட்சகர் லலித் பதிநாயக்க ஆகியோர் இத்தாக்குதலைத் திட்டமிட்டதாகக் கண்டுபிடிக்கவில்லை என்றது. </p><p>ஆனால், அதைவிடவும் பாரதூரமான ஒரு விடயத்தைக் கண்டுபிடித்துள்ளது: 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி அதிகாலைக்கு முன்னர் கொழும்பின் பாதுகாப்பு கட்டமைப்பின் முக்கிய புள்ளியான கட்டளையிடும் பதவிகளை வகித்த இவர்கள் இருவரும், தாக்குதலைத் தடுத்திருக்கக்கூடிய கட்டமைப்பு சார்ந்த புலனாய்வுத் தகவல்கள் கிடைத்திருந்தும் செயல்பாடற்று இருந்துள்ளனர்.
</p><h2>
</h2><p></p><h2>புறக்கணிக்கப்பட்ட எச்சரிக்கை</h2><p>அக்காலத்தில் கொழும்பு வடக்கு பகுதிக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபராக இருந்த தென்னகோனின் நடத்தை குறித்து ஆணைக்குழு அறிக்கையில், கட்டளைச் சங்கிலி எவ்வாறு செயலிழந்தது என்பதைச் சுட்டிக்காட்டுகிறது. </p><p>சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நந்தன முனசிங்க என்பவரால் விரிவான புலனாய்வுத் தகவல்கள் வழங்கப்பட்டு தெளிவான உத்தரவுகளும் பிறப்பிக்கப்பட்டிருந்தன. </p><p>உடல் பரிசோதனைகள், வாகனச் சோதனைகள், வாகன நிறுத்துமிடக் கட்டுப்பாடுகள் மற்றும் தேவாலயங்களைச் சுற்றி சாதாரண உடையில் பொலிஸாரைப் பாதுகாப்பில் ஈடுபடுத்துதல் ஆகியவை அந்த உத்தரவுகளில் அடங்கும்.
</p><p>இவற்றில் எதுவுமே களமட்டத்தை வந்தடையவில்லை. தென்னகோன் தனது சிரேஷ்ட பொலிஸ் அத்தியாட்சகர்களுக்கு இந்த உத்தரவுகளை அனுப்பவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/957c0f5d-2e71-46ab-a31c-33f4169fe033/26-6a802e574fd75.webp' /></p><p>பாதுகாப்பு அறிவுறுத்தல்கள் அவரது மேசை கோப்பிலேயே பார்வையிடாமல் இருந்ததாக விசாரணை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
பொலிஸ் உயர் அதிகாரிகள் நாடு முழுவதையும் விழிப்புடன் வைத்திருந்த நேரத்தில், தென்னகோனின் உத்தியோகபூர்வ தொலைபேசி துண்டிக்கப்பட்டிருந்தது. </p><p>அவர் தனது குடும்பத்தினருடன் கிழக்குக் கடற்கரை ஓய்வு விடுதி ஒன்றில் விடுமுறையைக் கழித்துக் கொண்டிருந்ததாகக் கூறப்பட்டது. ஒரு நேரடி தேசிய பாதுகாப்பு நெருக்கடியின் போது ஒரு கட்டளை அதிகாரி தொடர்பில் இல்லாமல் இருப்பது, விசாரணையாளர்கள் சுட்டிக்காட்டியபடி, முன்னெப்போதும் இல்லாத ஒரு நிலைமையாகும்.
</p><p>மேலும் அப்போதைய கொழும்புக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபராக இருந்த பதிநாயக்கவிற்கு எதிரான குற்றச்சாட்டும் பாரதூரமானதே.தாக்குதலுக்கு முன்னர் சில மணிநேரங்களில் ஏப்ரல் 20 ஆம் திகதி இரவு அவருக்கும் தெளிவான, உடனடியாகச் செயல்படக்கூடிய எச்சரிக்கைகள் கிடைத்திருந்தும் அவரும் அலட்சியப் போக்கிலே இருந்துள்ளார்.
</p><h2>
உத்தரவுகளை செயல்படுத்திய அதிகாரி</h2><p> அப்போது கொழும்பு தெற்கு பகுதிக்கு பொறுப்பாக இருந்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் வசந்த விக்கிரமசிங்க, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நந்தன முனசிங்கவின் பாதுகாப்புத் திட்டத்தை அப்படியே செயல்படுத்தியிருந்தார். </p><p>அதிகாரிகளைப் பணியில் அமர்த்துதல், தெஹிவளை உட்பட தனது அதிகாரப் எல்லைக்குட்பட்ட பகுதி முழுவதும் இலக்கு வைக்கப்பட்ட சோதனைகளை நடத்துதல் மூலம் அவரது பிரிவில் அச்சுறுத்தல்கள் கட்டுப்படுத்தப்பட்டன.
</p><p>தாக்குதலினால் ஏற்பட்ட அசம்பாவிதங்களைத் தடுத்திருக்க முடியும் என்பதற்கு ஆணைக்குழுவிற்கு கிடைத்த தெளிவான சான்று இதுவாகும். </p><h2>

ஆணைக்குழுவின் பரிந்துரைகள்: </h2><p>
தேசபந்து தென்னகோன் - புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையில் செயல்படத் தவறியமை, பாதுகாப்பு விதிமுறைகளை நடைமுறைப்படுத்தத் தவறியமை, அல்லது அதிகாரிகளைப் பணியில் அமர்த்தத் தவறியமை - முறையான ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கும், </p><p>குற்றவியல் அலட்சியம் குறித்து வழக்குத் தொடுப்பதற்கான விசாரணையை நடத்துவதற்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. லலித் பதிநாயக்கவுக்கும் மேற் குறித்த பரிந்துரைகளையே விடுத்துள்ளது.</p><p> சட்டமா அதிபர் திணைக்களத்தில் உள்ள ஆதாரங்களின்படி, இரு அதிகாரிகளுக்கும் எதிராக விசாரணைகளைத் தொடங்குமாறு சட்டமா அதிபர் திணைக்களத்தின் இரண்டு வெவ்வேறு நிர்வாகங்களின் கீழ் முறையான அறிவுறுத்தல்கள் CID க்கு இரண்டு முறை அனுப்பப்பட்டுள்ளன. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0da39d5e-3ce2-4ea4-89d1-22cc92f69dc4/26-6a802e569f93b.webp' /></p><p>இரண்டு முறையும் கோப்பு முன்னோக்கி நகரவில்லை.
முன்னாள் CID பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரசாத் ரணசிங்க - தென்னகோன் மற்றும் பதிநாயக்க ஆகிய இருவருக்கும் நெருக்கமானவர் என தெரிவிக்கப்பட்டிருந்தது.</p><p>அவரது மேற்பார்வைக் காலத்தில் விசாரணைகளைத் தாமதப்படுத்துவதில் அவரது பங்கும் இருந்தது CID ஆதாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-15T09:22:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[கோட்டாபய - ரணில் ஆட்சிக் காலங்களில் நடந்த சதி.. அம்பலப்படுத்திய புலனாய்வாளர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sugeeshwara-political-meetings-government-money-1786779442"></link>
            <id>https://tamilwin.com/article/sugeeshwara-political-meetings-government-money-1786779442</id>
            <summary type="text">முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய மற்றும் ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சிக் காலங்களில் சிறப்புத் திட்டங்களை முன்னெடுப்பதாகக் கூறி அரச நிதியைப் பயன்படுத்தி, எந்தவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய மற்றும் ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சிக் காலங்களில் சிறப்புத் திட்டங்களை முன்னெடுப்பதாகக் கூறி அரச நிதியைப் பயன்படுத்தி, எந்தவொரு திட்டத்தையும் நிறைவு செய்யாமல் அரசியல் கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p> முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் தனிப்பட்ட செயலாளராகவும், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் சிறப்புத் திட்டப் பணிப்பாளராகவும் பணியாற்றிய சுகீஸ்வர பண்டார மீதான வழக்கு விசாரணையின் போது இது தொடர்பில் அம்பலப்படுத்தப்பட்டுள்ளது.&nbsp;</p><p>சுகீஸ்வர பண்டாரவை நீதிமன்றத்தில்&nbsp; முன்னிலைபடுத்திய போது, மத்திய குற்றவியல் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் இந்த தகவலை கொழும்பு மேலதிக நீதிவானிடம் சுட்டிக்காட்டியுள்ளனர்.&nbsp;</p><h2>அரசியல் கூட்டங்கள்</h2><p>2022 ஜூலை 14 முதல் 2024 டிசம்பர் 21 வரையிலான காலப்பகுதியில், ஜனாதிபதி செலவினத் தலைப்பின் கீழ் ஒதுக்கப்பட்ட நிதியிலிருந்து சம்பளம் மற்றும் படிகளைப் பெற்று, அந்த நிதியை துஷ்பிரயோகம் செய்ததாக&nbsp;சுகீஸ்வர பண்டார மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/195bb142-870d-4500-8e19-cddba8b2558d/26-6a802e6468e39.webp' /></p><p>சிறைச்சாலை அதிகாரிகளால் சந்தேகநபர் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட்ட போது, இச்சம்பவம் குறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் மேலதிக முன்னேற்ற அறிக்கையையும் மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் சமர்ப்பித்துள்ளது.
</p><p>
குறித்த நிதியைப் பயன்படுத்தி நடத்தப்பட்ட அரசியல் கூட்டங்கள் தொடர்பான விரிவான அறிக்கையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன், சிறப்புத் திட்டப் பிரிவில் பணியாற்றியதாகக் கூறப்படும் நபர்களிடம் எதிர்காலத்தில் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p> இச்சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்படும் விசாரணைகளின் முன்னேற்றம் குறித்து எதிர்வரும் 25ஆம் திகதி நீதிமன்றத்திற்கு மீண்டும் அறிவிக்குமாறு நீதிவான் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-15T09:20:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரான்சில் பிரித்தானிய குடும்பம் ஒன்றிற்கு 3,000 யூரோக்கள் அபராதம்: சுவாரஸ்யப் பின்னணி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/british-family-defrauded-motorway-tolls-in-france-1786785544"></link>
            <id>https://news.lankasri.com/article/british-family-defrauded-motorway-tolls-in-france-1786785544</id>
            <summary type="text">தொடர்ந்து சுங்கக் கட்டணம் செலுத்தாமல் ஏமாற்றிய ஒரு பிரித்தானியக் குடும்பத்துக்கு பிரான்ஸ் அதிகாரிகள் 3,000 யூரோக்கள் அபராதம் விதித்துள்ளார்கள்.


ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>தொடர்ந்து சுங்கக் கட்டணம் செலுத்தாமல் ஏமாற்றிய ஒரு பிரித்தானியக் குடும்பத்துக்கு பிரான்ஸ் அதிகாரிகள் 3,000 யூரோக்கள் அபராதம் விதித்துள்ளார்கள்.
</p><p>

பிரித்தானியக் குடும்பம் ஒன்று, பிரான்சில் தொடர்ச்சியாக சுங்கக் கட்டணம் செலுத்தாமல் ஏமாற்றிவந்துள்ளது.
</p><h3>
3,000 யூரோக்கள் அபராதம்
</h3><p>
இந்நிலையில், Saint-Maurice-Colombier என்னுமிடத்தில் அதிகாரிகளிடம் சிக்கியுள்ளது அந்தக் குடும்பம்.
</p><p>
அப்போது, ஆறு மாதங்களாக அந்தக் குடும்பத்தினர் சுங்க கட்டணம் செலுத்தாமல் ஏமாற்றிவந்தது தெரியவந்துள்ளது.
</p><p>
அதாவது, மூன்று கார்களில் அந்தக் குடும்பத்தினர் பயணிப்பது வழக்கமாம். எங்காவது சுங்கச் சாவடி இருந்தால், அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர், காரை விட்டு இறங்கி, குறுக்கே நிற்கும் தடைக் கம்பத்தை கையால் தூக்கிப் பிடிக்க, கார்கள் நைசாக அங்கிருந்து சென்றுவிடுமாம்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7ec77c66-1510-4542-be3f-389063b6cb95/26-6a802f09a0ff9.webp' /></p><p></p><p>இந்நிலையில், அவர்கள் வசமாக பொலிசாரிடம் சிக்கியதைத் தொடர்ந்து, செலுத்தத் தவறிய கட்டணம், அதற்கான மதிப்புக் கூட்டு வரி, விதி மீறலுக்கான அபராதம் என மொத்தம் 3,000 யூரோக்கள் செலுத்த அந்தக் குடும்பத்தினருக்கு பிரான்ஸ் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-15T09:19:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[19 ஓவர்களில் 98 ஓட்டங்களே எடுத்த மொயீன் அலியின் அணி: 7.4 ஓவரில் செயின்ட் லூசியா வெற்றி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/saint-lucia-kings-beat-antigua-3-wkts-in-dls-1786785261"></link>
            <id>https://news.lankasri.com/article/saint-lucia-kings-beat-antigua-3-wkts-in-dls-1786785261</id>
            <summary type="text">ஆன்டிகுவா பார்புடா ஃபால்கன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் செயின்ட் லூசியா கிங்ஸ் வெற்றி பெற்றது. 

கரீபியன் பிரீமியர் லீக் போட்டியில் செயின்ட் லூசியா ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஆன்டிகுவா பார்புடா ஃபால்கன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் செயின்ட் லூசியா கிங்ஸ் வெற்றி பெற்றது. </p><p>

கரீபியன் பிரீமியர் லீக் போட்டியில் செயின்ட் லூசியா கிங்ஸ் அணி, 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆன்டிகுவா பார்புடா ஃபால்கன்ஸை வீழ்த்தியது.&nbsp; </p><h2>மேத்யூ ஃபோர்டே</h2><p>

செயின்ட் லூசியா கிங்ஸ் மற்றும் ஆன்டிகுவா பார்புடா ஃபால்கன்ஸ் அணிகளுக்கு இடையிலான The Hundred போட்டி கிராஸ் இஸ்லேட்டில் நடந்தது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/15878aed-a5e6-432f-8f6b-0514801cac85/26-6a802f10846af.webp' />
</p><p>
</p><p>
முதலில் ஆடிய ஆன்டிகுவா அன்ட் பார்புடா ஃபால்கன்ஸ் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது.

மேத்யூ ஃபோர்டே, பிஷோப் மற்றும் சேஸின் மிரட்டலான பந்துவீச்சில் ஆன்டிகுவா அணி ஓட்டங்கள் எடுக்க தடுமாறியது. </p><p>

மழையால் 19 ஓவர்களாக குறைக்கப்பட, ஆன்டிகுவா அணி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 98 ஓட்டங்களே எடுத்தது.</p><p> 
 
அதிகபட்சமாக ரக்கீம் கார்ன்வால் 26 ஓட்டங்களும், அமீர் ஜன்கூ 23 ஓட்டங்களும் எடுத்தனர். மேத்யூ ஃபோர்டே (Matthew Forde) 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.</p><p>

பின்னர் ஆடிய செயின்ட் லூசியா கிங்ஸ் அணிக்கு மழையால் 8 ஓவர்களில் 52 ஓட்டங்கள் எடுக்க வேண்டும் என இலக்கு மாற்றியமைக்கப்பட்டது. </p><p>

செயின்ட் லூசியா அணி 7.4 ஓவர்களில் 54 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது. 4 விக்கெட்டுகள் மற்றும் 11 ஓட்டங்கள் எடுத்த மேத்யூ ஃபோர்டே ஆட்டநாயகன் விருதுபெற்றார்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-15T09:16:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[காதலரை அறிமுகம் செய்துவிட்டு தாய்லந்து Krabi தீவில் ஜாலி பண்ணும் மிருணாளினி...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/mirnalini-ravi-thailand-ai-nang-krabi-photos-1786782092"></link>
            <id>https://viduppu.com/article/mirnalini-ravi-thailand-ai-nang-krabi-photos-1786782092</id>
            <summary type="text">டிக்டாக், டப்ஸ்மாஷ் போன்ற செயலிகளில் வீடியோக்களை வெளியிட்டு பிரபலமானவர்களில் ஒருவர்தான் நடிகை மிருணாளினி ரவி. இதன்மூலம் சினிமாவில் வாய்ப்பு பெற்றவர் ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>டிக்டாக், டப்ஸ்மாஷ் போன்ற செயலிகளில் வீடியோக்களை வெளியிட்டு பிரபலமானவர்களில் ஒருவர்தான் நடிகை மிருணாளினி ரவி. இதன்மூலம் சினிமாவில் வாய்ப்பு பெற்றவர் சாம்பியன், எனிமி, எம் ஜி ஆர். மகன், ஜாங்கோ, ரோமியோ, கோப்ரா உள்ளிட்ட படங்களில் நடித்து வந்தார்.
</p><p>
தமிழ், தெலுங்கு என பிஸியாக நடித்து வரும் மிருணாளினி, இன்ஸ்டாகிராமில் தன் காதலரை அறிமுகப்படுத்தியிருக்கிறார். தன் காதலரை இறுக்கமாக கட்டிப்பிடித்தபடி இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, உன்னை நேசிப்பது இறுதியாக என்னை நானே நேசிப்பது போல் உணர்கிறேன்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/644a696a-de45-4979-8647-c0ce235c6663/26-6a80218e05d32.webp' /></p><p> </p><p>ஒவ்வொரு பிறவியிலும், ஒவ்வொரு பிரபஞ்சத்திலும் நான் எப்போதும் உன்னையே தேர்ந்தெடுப்பேன் என உருகி உருகி காதலோடு பதிவிட்டிருந்தார். </p><p>தற்போது தாய்லாந்தில் இருக்கு Ao Nang, Krabi டவுனில் ஜாலி பண்ணியபடி எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.</p><p><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/p/DcDDxZ2Hx4X/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/p/DcDDxZ2Hx4X/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/p/DcDDxZ2Hx4X/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by Mirnalini Ravi (@mirnaliniravi)</a></p></div></blockquote> <script async src="//www.instagram.com/embed.js"></script></p>]]></content>
            <updated>2026-08-15T09:15:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானியாவில் விமான விபத்து: இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/light-aircraft-crashed-in-wales-gwynedd-2-dead-1786785194"></link>
            <id>https://news.lankasri.com/article/light-aircraft-crashed-in-wales-gwynedd-2-dead-1786785194</id>
            <summary type="text">வடக்கு வேல்ஸ் பகுதியில் நடந்த சிறிய ரக விமான விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். சிறிய ரக விமான விபத்துஇங்கிலாந்தில் உள்ள விமான நிலையம் ஒன்றில் இர...</summary>
            <content type="html"><![CDATA[<p>வடக்கு வேல்ஸ் பகுதியில் நடந்த சிறிய ரக விமான விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.</p><h2> சிறிய ரக விமான விபத்து</h2><p>இங்கிலாந்தில் உள்ள விமான நிலையம் ஒன்றில் இருந்து வடக்கு வேல்ஸின் கார்னர்ஃபோன் விமான நிலையத்தை நோக்கி சிறிய ரக விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது.</p><p> ஆனால் திட்டமிட்டபடி விமானம் கார்னர்ஃபோன் விமான நிலையத்தை வந்து சேராததை அடுத்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/52dcf6c9-5206-43a1-9e7a-a53d65e71302/26-6a802dabe2811.webp' /></p><p>இதையடுத்து விமானத்தை தேடும் பணியில் தரை மற்றும் வான்வழி மீட்பு படையினர் களமிறக்கப்பட்டனர்.</p><p></p><p> தீவிர தேடுதல் பணிகளுக்கு பிறகு வெள்ளிக்கிழமை பிற்பகலில் Gwynedd பகுதியில் உள்ள Porthmadog அருகே சிறிய ரக விமானத்தின் சிதைந்த பாகங்கள் கிடப்பதை அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.</p><h2>இருவர் உயிரிழப்பு</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e6201c55-b631-45cb-bb61-fa27ac074c63/26-6a802dac957bc.webp' /></p><p>இந்த விமான விபத்தை தொடர்ந்து, அதில் பயணம் செய்த இரண்டு பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.</p><p> இதுகுறித்து விமான விபத்து புலனாய்வுப் பிரிவுக்கு தெரிவிக்கப்பட்டு இருப்பதுடன், விபத்துக்கான காரணத்தை கண்டறிய சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p>&nbsp;<br></p>]]></content>
            <updated>2026-08-15T09:13:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[திருட வந்த இடத்தில் கடுப்பான திருடன்; என்னதான் நடந்தது?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/a-thief-gets-annoyed-at-the-scene-of-the-crime-1786776525"></link>
            <id>https://jvpnews.com/article/a-thief-gets-annoyed-at-the-scene-of-the-crime-1786776525</id>
            <summary type="text">நுவரெலியா பிரதான பேருந்து நிலையத்தின் மேல் மாடியில் அமைந்துள்ள பிரபல தொலைபேசி விற்பனை நிலையம் ஒன்றை உடைத்து திருட முயன்றதாக சந்தேகிக்கப்படும் அடையாளம்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நுவரெலியா பிரதான பேருந்து நிலையத்தின் மேல் மாடியில் அமைந்துள்ள பிரபல தொலைபேசி விற்பனை நிலையம் ஒன்றை உடைத்து திருட முயன்றதாக சந்தேகிக்கப்படும் அடையாளம் தெரியாத நபரின் முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது.</p><p>கடந்த வெள்ளிக்கிழமை (14) இரவு சுமார் 10.45 மணியளவில் குறித்த விற்பனை நிலையத்திற்கு வந்த சந்தேகநபர், கதவில் பொருத்தப்பட்டிருந்த பூட்டை பலவந்தமாக திறந்து உள்ளே நுழைய நீண்ட நேரமாக முயற்சித்துள்ளார்.</p><p>எனினும், பூட்டை திறக்க முடியாத நிலையில், தனது முயற்சியைக் கைவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>சந்தேகநபர் பூட்டைத் திறக்க போராடிய காட்சிகள் விற்பனை நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்பு கண்காணிப்பு கெமெராவில் தெளிவாகப் பதிவாகியுள்ளன.</p><p>சம்பவம் தொடர்பில் நுவரெலியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p>கண்காணிப்பு கெமெரா பதிவுகளின் உதவியுடன் சந்தேகநபரை விரைவில் அடையாளம் காண முடியும் என&nbsp; தெரிவித்துள்ள பொலிஸார் , பொதுமக்களின் உதவியையும் கோரியுள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-08-15T09:04:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[இங்கிலாந்து வங்கியில் முடங்கிய 31 டன் தங்கம் - விடுவிக்க கோரும் நாடு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/venezuela-demands-gold-return-bank-england-1786781588"></link>
            <id>https://manithan.com/article/venezuela-demands-gold-return-bank-england-1786781588</id>
            <summary type="text">Venezuela wants its gold back from Bank of England : இங்கிலாந்து வங்கியின் பாதுகாப்புப் பெட்டகங்களில் வைக்கப்பட்டுள்ள சுமார் 31 மெட்ரிக் டன் வெனிசுலாவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Venezuela wants its gold back from Bank of England : இங்கிலாந்து வங்கியின் பாதுகாப்புப் பெட்டகங்களில் வைக்கப்பட்டுள்ள சுமார் 31 மெட்ரிக் டன் வெனிசுலாவின் தங்கத்தை, மீண்டும் வழங்குமாறு வெனிசுலா அரசு கோரிக்கை விடுத்துள்ளது.</p><p> சுமார் 4 பில்லியன் டொலர் மதிப்புடைய இந்தத் தங்கத்தை, அண்மைய இரட்டை நிலநடுக்கங்களால் ஏற்பட்ட பாதிப்புகளைச் சீரமைக்க பயன்படுத்த விரும்புவதாக இடைக்கால ஜனாதிபதி டெல்சி ரோட்ரிக்ஸ் தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>பணவீக்கம் 575.9 சதவீதம்&nbsp;&nbsp;</h2><p>முன்னாள் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவின் தேர்தல் சட்டபூர்வமானது அல்ல என்ற பிரித்தானியாவின் நிலைப்பாட்டைத் தொடர்ந்து, இந்தத் தங்கத்தை விடுவிப்பது தொடர்பாக பல ஆண்டுகளாக சட்டப் பிரச்சினை நீடித்து வருகிறது.</p><p> இதனிடையே, பாதிக்கப்பட்ட மக்களுக்காக வீடுகளைப் புனரமைத்தல், சுகாதாரம், மின்சாரம் மற்றும் இடிபாடுகளை அகற்றுதல் உள்ளிட்ட பணிகளுக்கு தங்கத்தின் மதிப்பைப் பயன்படுத்த வெனிசுலா முயற்சித்து வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/247bf8b4-a648-4552-833d-ff5ce400df0f/26-6a8024e72d0dd.webp' /></p><p>

நீண்டகால பொருளாதார நெருக்கடி, நிர்வாகச் சீர்கேடு, ஊழல் மற்றும் அமெரிக்கத் தடைகளால் பாதிக்கப்பட்டுள்ள வெனிசுலாவில், ஜூலை மாத பணவீக்கம் 19.9 சதவீதமாகவும், ஆண்டுக்கு ஆண்டு பணவீக்கம் 575.9 சதவீதமாகவும் பதிவாகியுள்ளது.
</p><p>
ஜூன் 24ஆம் தேதி ஏற்பட்ட தொடர் நிலநடுக்கங்களில் 6,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும், 16,740 பேர் காயமடைந்ததாகவும், 17,907 பேர் வீடுகளை இழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4bf4381a-f41a-4d63-8649-328bf8796ee9/26-6a8024e815b7f.webp' /></p><p></p><p>மொத்தமாக 68 லட்சம் பேர் வரை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 18 லட்சம் பேருக்கு அவசர மனிதாபிமான உதவி தேவைப்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.</p><p>

“இந்தத் தங்கம் எங்கள் மக்களுக்குச் சொந்தமானது; பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களின் நலனுக்காக அது பயன்படுத்தப்பட வேண்டும்” என&nbsp;ஜனாதிபதி ரோட்ரிக்ஸ் வலியுறுத்தியுள்ளார்.</p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-15T09:03:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பிரதேசத்தில் அதிர்ச்சி; இளம் தாய் கூட்டு வன்புனர்வு ; மகன் செய்த கொடும் செயல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/mother-gang-raped-in-vavuniya-committed-by-son-1786784583"></link>
            <id>https://jvpnews.com/article/mother-gang-raped-in-vavuniya-committed-by-son-1786784583</id>
            <summary type="text">வவுனியாவில் வீடு உடைத்து 51 வயது பெண் ஒருவரை கூட்டு துஸ்பிரயோகம் செய்து கொள்ளைச் சம்பவத்தில்ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா குற்றத்தடுப...</summary>
            <content type="html"><![CDATA[<p>வவுனியாவில் வீடு உடைத்து 51 வயது பெண் ஒருவரை கூட்டு துஸ்பிரயோகம் செய்து கொள்ளைச் சம்பவத்தில்ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிசார்&nbsp; (14) தெரிவித்தனர். இது தொடர்பாக பொலிசார் மேலும் தெரிவித்ததாவது,</p><h2>&nbsp;முதல் கணவரின் மகனே திட்டமிட்டு&nbsp;கொடும் செயல்</h2><p>கடந்த 8 ஆம் திகதி வவுனியா, மடுகந்தை, மயிலங்குளம் பகுதியில் உள்ள வீடு ஒன்றை உடைத்து உட் சென்ற சிலர் அங்கிருந்த வாகனச் சாரதி மீது வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டு விட்டு, வீட்டு உரிமையாளரான 51 வயது பெண் அணிந்திருந்த நகைகளை&nbsp; கொள்ளையிட்டு&nbsp; கூட்டு துஸ்பிரயோகம் செய்துள்ளதாக கூறப்படுகின்றது.</p><p>அத்துடன் வீட்டில் மறைத்து வைத்திருந்த 80 இலட்சம் பெறுமதியான இரத்தினக் கல், 56 இலட்சம் பெறுமதியான 15 பவுணுக்கு அதிகமான தங்க நகைகள், 5 இலட்சத்து 70 ஆயிரம் ரூபாய் பணம், 15 வாகனப் புத்தகங்கள் மற்றும் திறப்புகள், 35 காணி மற்றும் வீட்டு உறுதிப்பத்திரங்கள் என பலவற்றை திருடிச் சென்றுள்ளனர்.</p><p>பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக வவுனியா தலைமைப் பொலிஸ் நிலையத்தின் குற்த்தடுப்பு பிரிவிற்கு கிடைத்த முறைப்பாட்டையடுத்து விரைந்து செயல்பட்ட பொலிசார் ஆபத்தான நிலையில் இருந்த, பாதிக்கப்பட்ட இருவரையும் மீட்டு வவுனியா வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர்.&nbsp;</p><p>வவுனியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரின் ஆலோசனைக்கு அமைய வவுனியா தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆர்.எம்.யே.எஸ்.ரத்னமலலா அவர்களின் வழிகாட்டலில் வவுனியா குற்றத்தடுப்பு பிரிவின் பதில் பொறுப்பதிகாரி ஆர். பந்துல தலைமையில் பொலிஸ் சார்ஜன்டுகளான சந்தன (16446), கேரத் (14692), பியங்கர ( 47358), பொலிஸ் கொன்ஸ்தாபிள்களான நவகீதன் ( 8098), சுப்புன் (28752), சம்பத் ( 11388) ஆகியோர் அடங்கிய பொலிஸ் குழுவினர் விசாரணைகளை ஆரம்பித்தனர்.</p><p>பாதிக்கப்பட இப்பெண்ணின் தொழில்சாலையில் பணியாளர்களாக வேலை செய்த 35 வயதான உக்குவெல மாத்தறை பகுதியை சேர்த்த நபர் ஒருவரையும், 29 வயதான களேமிதுனுவெல, சிவலாங்குளம் பகுதியை சேர்ந்த மற்றொரு இளைஞரையும் சந்தேகத்தின் பேரில் கைது செய்தனர்.</p><p>பெண்ணிடம் பெறப்பட்ட வாக்கு மூலத்தின் அடிப்படையில் , சொத்துக்கள் தொடர்பில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக பாதிக்கப்பட்ட பெண்ணின் முதல் கணவரின் மகனே திட்டமிட்டு இச் சம்பவத்துக்கு மூலகாரணமாக செயல்பட்டு இக் கொள்ளைச் சம்பவத்தை நடத்தியதாக கூறப்படுகின்றது.</p><p>மகனே&nbsp; தனது காரில் களேமிதுனுவெல சிவலாங்குளம் பகுதியில் இருந்து சந்தேக நபர்களை ஏற்றி வந்து வீட்டு அருகில் வீதியில் இறக்கிவிட்டுச் சென்றுள்ளதாகவும் தெரிய வருகின்றது.</p><p>மேலும் சந்தேக நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளையடுத்து, காடு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் திருடப்பட்ட இரத்தினக்கற்கள், தங்க நகைகள், வாகனப் புத்தகங்கள், திறப்புகள், 35 காணி மற்றும் வீட்டு உறுதிப்பத்திரங்கள் என்பவற்றை மீட்டது.</p><p>அத்துடன், இச் சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய நபர்களையும் கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதுடன், மேலதிக விசாரணைணகளின் பின் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்தனர்</p>]]></content>
            <updated>2026-08-15T09:03:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[Thor-ன் Stormbreaker-ஐ தூக்கி எறிந்த Dr. Doom.. வெளிவந்த Avengers: Doomsday-வின் மிரட்டலான புதிய டிரைலர்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/avengers-doomsday-special-look-tamil-1786784521"></link>
            <id>https://cineulagam.com/article/avengers-doomsday-special-look-tamil-1786784521</id>
            <summary type="text">உலக சினிமா ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் திரைப்படம் Avengers: Doomsday. வருகிற டிசம்பர் 18ஆம் தேதி வெளியாகவிருக்கும் இப்படத்...</summary>
            <content type="html"><![CDATA[<p>உலக சினிமா ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் திரைப்படம் Avengers: Doomsday. வருகிற டிசம்பர் 18ஆம் தேதி வெளியாகவிருக்கும் இப்படத்திற்கான ப்ரோமோஷன் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dbe07047-1b82-4241-9ae9-7459be918dda/26-6a802b0d38327.webp' /></p><p>சமீபத்தில் வெளிவந்த ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே திரைப்படம் உலகளவில் 2 பில்லியன் வசூல் செய்து சாதனை படைக்கப்போகிறது. இவ்வளவு பெரிய வெற்றியை தொடர்ந்து மார்வெல் தயாரிப்பில் Avengers: Doomsday வெளிவரவுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1ba4707b-1cf3-4557-870e-9f82469b3997/26-6a802b0c81dab.webp' /></p><p> 

ஏற்கனவே பல டீசர்கள் மற்றும் டிரைலர் வெளியாகியுள்ள நிலையில், இன்று Avengers: Doomsday ஸ்பெஷல் லுக் என்கிற பெயரில் புதிய டிரைலரை வெளியிட்டுள்ளது மார்வெல். இதோ பாருங்க:</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/cHoFtQMOd5g" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-08-15T09:02:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஊதா பூ நிற புடவையின் அழகில் மயக்கும் தொகுப்பாளினி அஞ்சனா போட்டோ ஷுட்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/anchor-anjana-rangan-latest-saree-attire-photos-1786781123"></link>
            <id>https://cineulagam.com/article/anchor-anjana-rangan-latest-saree-attire-photos-1786781123</id>
            <summary type="text">அஞ்சனாசினிமா துறையில் களமிறங்கி சாதிக்கும் ஒவ்வொருவருக்கும் ஒரு ஸ்டைல் உண்டு. அப்படி தமிழ் சினிமாவில் தொகுப்பாளர்களாக கலக்கும் அனைவருக்குமே நிகழ்ச்சி ...</summary>
            <content type="html"><![CDATA[<h2>அஞ்சனா</h2><p>சினிமா துறையில் களமிறங்கி சாதிக்கும் ஒவ்வொருவருக்கும் ஒரு ஸ்டைல் உண்டு. </p><p>அப்படி தமிழ் சினிமாவில் தொகுப்பாளர்களாக கலக்கும் அனைவருக்குமே நிகழ்ச்சி எடுத்து செல்லும் விதம் ஒவ்வொரு மாதிரியாக இருக்கும். சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றி மிகப்பெரிய அளவில் பிரபலம் அடைந்தவர் தான் அஞ்சனா. </p><p>அவர் தனது இன்ஸ்டாவில் அண்மையில் ஊதா நிற புடவையில் வெளியிட்ட அழகிய புகைப்படங்களுக்கு செம லைக்ஸ் குவிந்து வருகிறது.</p><p><br></p>]]></content>
            <updated>2026-08-15T09:00:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பலத்த பாதுகாப்புடன் நிறைவு பெற்ற ஆவணித் திருவிழா - மடு அன்னையின் ஆசிர்வாதத்திற்காக திரண்ட பக்தர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/festival-of-mother-madu-1786783160"></link>
            <id>https://tamilwin.com/article/festival-of-mother-madu-1786783160</id>
            <summary type="text">
வரலாற்றுச் சிறப்புமிக்க மன்னார் மடு தேவாலயத்தின் ஆவணித் திருவிழா திருப்பலி இன்று(15.08.2026) 6 மணியளவில் ஒப்புக் கொடுக்கப்பட்டுள்ளது. &amp;nbsp;மன்னார் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>
வரலாற்றுச் சிறப்புமிக்க மன்னார் மடு தேவாலயத்தின் ஆவணித் திருவிழா திருப்பலி இன்று(15.08.2026) 6 மணியளவில் ஒப்புக் கொடுக்கப்பட்டுள்ளது. &nbsp;</p><p>மன்னார் மறைமாவட்ட ஆயர் அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகை மற்றும் கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை ஆகியோர் தலைமையில் இந்த திருப்பலி இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
அத்துடன், பதுளை மறைமாவட்ட ஆயர் யூட் நிஷாந்த சில்வா, மன்னார் மறைமாவட்ட ஓய்வு நிலை ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை, அனுராதபுரம் மறைமாவட்ட ஓய்வு நிலை ஆயர் நோபட் அன்ராடி ஆண்டகை ஆகியோரும் திருப்பலியில் இணைந்து கொண்டு சிறப்பித்துள்ளனர்.
</p><h2>
10 இலட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள்</h2><p>
திருவிழா திருப்பலியை தொடர்ந்து மடு அன்னையின் திருச்சொரூப பவனி நடைபெற்றுள்ளது.
</p><p>
இந்த திருவிழா திருப்பலியில் மடு திருத்தலத்தின் பரிபாலகர் அருட்தந்தை எஸ்.ஜே. பெப்பி சோசை அடிகளார், மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை பி. கிறிஸ்து நேசரத்தினம் அடிகளார், அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், அகில இலங்கை கிறிஸ்தவ அபிவிருத்தி ஒன்றியத்தின் தலைவரும், சர்வதேச இசைக்கல்லூரிக்கான பயிற்சி நிலையத்தின் இலங்கை தூதுவருமான அருட்கலாநிதி எஸ். சந்துரு பெர்னாண்டோ, பாலஸ்தீன அரசின் தூதுவர் இஹாப் ஐ.எம். கலீல் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c1a6817b-54e6-46d9-9192-a1416b095454/26-6a8029d6ccc9a.webp' /></p><p>
</p><p>
இதேவேளை், நாட்டின் பல பகுதிகளில் இருந்து வருகை தந்த சுமார் 10 இலட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் பங்கேற்றுள்ளனர்.


பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் மடு அன்னையின் ஆவணித் திருவிழா நடந்து முடிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/077496bf-a5a0-4405-adb2-d63a6c9cedcc/26-6a8029d798bbf.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b8270e06-6f7f-45ce-b6ea-cda9b7223ae2/26-6a8029d874774.webp' /></p><p></p>]]></content>
            <updated>2026-08-15T08:57:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் இடம்பெற்ற இந்தியாவின் 80வது சுதந்திர தின நிகழ்வு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/india-80th-independence-day-celebrations-in-jaffna-1786782458"></link>
            <id>https://ibctamil.com/article/india-80th-independence-day-celebrations-in-jaffna-1786782458</id>
            <summary type="text">இந்தியாவின் 80ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தில் சுதந்திர தின நிகழ்வு நடைபெற்றது.யாழ்ப்பாணம் கச்சேரி - ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியாவின் 80ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தில் சுதந்திர தின நிகழ்வு நடைபெற்றது.</p><p>யாழ்ப்பாணம் கச்சேரி - நல்லூர் வீதியில் அமைந்துள்ள இந்தியத் துணைத் தூதுவரின் வாசஸ்தலத்தில் இன்று (15) காலை 9மணியளவில் இந்தியாவின் தேசியக் கொடியை துணைத் தூதர் சாய் முரளி ஏற்றிவைத்தார்.&nbsp;</p><p>அதனைத் தொடர்ந்து, சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்திய குடியரசுத் தலைவரின் வாழ்த்துச் செய்தியை துணைத் தூதர் வாசித்தார்.&nbsp;</p><p></p><h2>சுதந்திர தின நிகழ்வு</h2><p>இந்த நிகழ்வில் இந்தியத் துணைத் தூதரக அதிகாரிகள், உத்தியோகஸ்தர்கள், அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bcf95b92-8e44-40eb-ab7a-ff457ff91c14/26-6a8029172b624.webp' /></p><p>இதேவேளை இந்தியாவின் 80 ஆவது சுதந்திர தினம் இன்று இந்தியா முழுவதும் வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், புதுடெல்லியில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடியை ஏற்றிவைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.</p><p>இந்தியாவின் சுதந்திர தினமான இன்று (15) சென்னை புனித ஜோர்ஜ் கோட்டை கொத்தளத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் தமிழக முதலமைச்சர் தேசியக் கொடியை ஏற்றி வைத்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f5352ee0-3008-4849-bfb1-d381fa1ed1b1/26-6a802917ec841.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4383a5d5-a1c4-437d-89d2-53475701a627/26-6a802918ce106.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-15T08:55:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[பலத்த பாதுகாப்பில் CCIBயில் ஷிரான் பாசிக்..! சட்டவிரோத சொத்துக்கள் குறித்தும் தீவிர விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/powerful-drug-trafficker-shiran-basik-island-1786757347"></link>
            <id>https://tamilwin.com/article/powerful-drug-trafficker-shiran-basik-island-1786757347</id>
            <summary type="text">புதிய இணைப்புடுபாயில் கைது செய்யப்பட்டு நாட்டுக்கு அழைத்து வரப்பட்ட பிரபல போதைப்பொருள் கடத்தல்காரர் &quot;ஷிரான் பாசிக்&quot; என்பவருக்கு 72 மணி நேர தடுப்புக்கா...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>டுபாயில் கைது செய்யப்பட்டு நாட்டுக்கு அழைத்து வரப்பட்ட பிரபல போதைப்பொருள் கடத்தல்காரர் "ஷிரான் பாசிக்" என்பவருக்கு 72 மணி நேர தடுப்புக்காவல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தெரிவித்துள்ளது.&nbsp;</p><p>டுபாயில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர், நேற்று (14) நாட்டிற்கு அழைத்து வரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">முதலாம் இணைப்பு</span></p><p>டுபாயில் கைது செய்யப்பட்டு நாட்டுக்கு அழைத்து வரப்பட்ட பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான ஷிரான் பாசிக் மேலதிக விசாரணைக்காக கொழும்பு மத்திய குற்றவியல் விசாரணை பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.</p><p>சந்தேகநபர் நேற்று (14) இரவு அபுதாபியில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.</p><p>சந்தேகநபருடன், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்கும்பலின் உறுப்பினர்கள் என சந்தேகிக்கப்படும் மேலும் இரண்டு நபர்களும் விசாரணைக்காக பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.</p><h2>&nbsp;சர்வதேச பொலிஸாரினால் சிவப்பு எச்சரிக்கை&nbsp;</h2><p>தெஹிவளை, களுபோவில பிரதேசத்தைச் சேர்ந்த 48 வயதான ஷிரான் பாசிக் சர்வதேச பொலிஸாரினால் (இண்டர்போல்) சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட ஒருவராவார். இவர் 2018 ஆம் ஆண்டு ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திற்கு தப்பிச்சென்றிருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/63c09c02-5390-416e-850e-e0e47814360e/26-6a7fcf5b6905f.webp' /></p><p>இந்நிலையில், ஈரான்-அமெரிக்கப் போரின்போது ஐக்கிய அரபு அமீரகத்தைத் தாக்க ஈரான் பயன்படுத்திய ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளின் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளைத் தனது கைப்பேசியில் சேமித்து வைத்திருந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், சந்தேகநபர் மே 26 அன்று டுபாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார்.</p><p>சந்தேகநபருக்கு எதிராக போதைப்பொருள் கடத்தல், துப்பாக்கிகளை வைத்திருத்தல், பயங்கரமான மற்றும் கூர்மையான ஆயுதங்களை வைத்திருத்தல், சட்டவிரோத கூட்டத்தின் உறுப்பினராக இருத்தல் மற்றும் சேதம் / தீங்கு விளைவித்தல் ஆகிய குற்றச்சாட்டுகள் நிலுவையில் உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.</p><p>மேலும், சந்தேகநபர் போதைப்பொருள் கடத்தல் மற்றும் பிற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்கள் மூலம் ஈட்டியதாக சந்தேகிக்கப்படும் சட்டவிரோத சொத்துக்கள் தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/lmxEkperTlA" width="640" height="360" class="note-video-clip"></iframe>

</p>]]></content>
            <updated>2026-08-15T08:49:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அங்குலான கடற்பரப்பில் விபத்து - 11 பேர் மருத்துவமனையில் அனுமதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/eleven-peoplestricken-vessel-rescued-1786781036"></link>
            <id>https://tamilwin.com/article/eleven-peoplestricken-vessel-rescued-1786781036</id>
            <summary type="text">அங்குலான அருகே கடலில் டோரா என்ற கடற்படைக் கப்பல் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. 


கிடைத்த தகவலின் அடிப்படையில், கப்பலில் உள்ளவர்களை மீட்கும் பணிக...</summary>
            <content type="html"><![CDATA[<p>அங்குலான அருகே கடலில் டோரா என்ற கடற்படைக் கப்பல் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.</p><p> 


கிடைத்த தகவலின் அடிப்படையில், கப்பலில் உள்ளவர்களை மீட்கும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.</p><h2>

உதவிக்கு சென்ற இலங்கை விமானப்படை</h2><p>
 கடற்படை விடுத்த அறிவிப்பின் அடிப்படையில், கப்பலில் உள்ளவர்களை மீட்க இலங்கை விமானப்படையும் உதவி செய்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/710c2dca-9506-4877-a5af-46118cb900e4/26-6a802171d877d.webp' /></p><p>இதற்கமைய, விபத்துக்குள்ளான கப்பலைக் கண்காணிப்பதற்காக விமானப்படையின் MI 17 ரக ஹெலிகாப்டரும், பெல் 412 ரக விமானமும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன என்றும் விமானப்படை ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content>
            <updated>2026-08-15T08:38:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடவுளுக்கு நன்றி; முதலமைச்சர் விஜய் இன் தாயார் நெகிழ்ச்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/cm-vijay-mother-moved-emotion-inderscience-day-1786782813"></link>
            <id>https://jvpnews.com/article/cm-vijay-mother-moved-emotion-inderscience-day-1786782813</id>
            <summary type="text">இந்தியாவின் 80ஆவது சுதந்திர தினம் இன்று (15) நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.சென்னை புனித ஜோர்ஜ் கோட்டை கொத்தளத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் த...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியாவின் 80ஆவது சுதந்திர தினம் இன்று (15) நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.</p><p>சென்னை புனித ஜோர்ஜ் கோட்டை கொத்தளத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில்<a href="https://jvpnews.com/article/india-independence-day-celebration-led-by-cm-vijay-1786769256" target="_blank"> தமிழக முதலமைச்சர் விஜய்யின் பெற்றோர்</a> கலந்துகொண்டனர்.</p><p>இதன்போது, சுதந்திர தின வாழ்த்துகளைத் தெரிவித்த முதலமைச்சரின் தாயார், “அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துகள். மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. கடவுளுக்கு நன்றி” எனத் தெரிவித்தார்.</p><p>முதலமைச்சர் விஜய் தலைமையில் நடைபெற்ற சுதந்திர தின நிகழ்வில் பல்வேறு அரசியல் பிரமுகர்கள், அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.</p>]]></content>
            <updated>2026-08-15T08:33:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[புதிய உச்சத்தை எட்டிய சன் டிவியின் கயல் சீரியல்... கொண்டாட்டத்தில் ரசிகர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/kayal-serial-reached-new-milestone-1786775946"></link>
            <id>https://cineulagam.com/article/kayal-serial-reached-new-milestone-1786775946</id>
            <summary type="text">கயல் சீரியல்சன் தொலைக்காட்சியில் பரபரப்பின் உச்சமாக செல்லும் கதைகளில் ஒன்று தான் கயல். ஆனந்தி திருமண பிரச்சனையால் கயலை விட்டு பிரிந்த எழிலை பழைய பகையா...</summary>
            <content type="html"><![CDATA[<h2>கயல் சீரியல்</h2><p>சன் தொலைக்காட்சியில் பரபரப்பின் உச்சமாக செல்லும் கதைகளில் ஒன்று தான் கயல். </p><p>ஆனந்தி திருமண பிரச்சனையால் கயலை விட்டு பிரிந்த எழிலை பழைய பகையாக இருந்துவந்த பாலுவின் நண்பர்கள் அவரை மோசமாக அடித்து காயப்படுத்தியுள்ளனர். </p><p>எழில் ஆபத்தான நிலையில் இருப்பதை அறிந்த அவரது அம்மா இதுதான் நேரம் கயலிடம் இருந்து எழிலை பிரிக்க வேண்டும் என கிரிமினல் வேலைகள் செய்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0cf50569-4c43-4077-8420-cf89a8037c8a/26-6a80102fda7ca.webp' /></p><p> </p><p>கயலும் எழிலை காணாமல் மனம் உடைந்து போய்விட்டார், எங்கெங்கோ எழிலை தேடி அலைகிறார் ஆனால் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் எழில் இருக்கும் சில விஷயங்களின் ஆதாரம் கயலுக்கு கிடைத்துள்ளது, கண்டிப்பாக எழிலை மீட்பேன் என போராடி வருகிறார்.
</p><p></p><h2>குட் நியூஸ்</h2><p>
இந்த நேரத்தில் கயல் சீரியல் ரசிகர்களுக்கு ஒரு குட் நியூஸ் வந்துள்ளது. </p><p>அதாவது புதிய ஜோடி இணைய கடந்த 2021ம் ஆண்டு கயல் சீரியல் துவங்கப்பட்டது, அன்று முதல் விறுவிறுப்பான கதைக்களத்துடன் சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது, டிஆர்பியில் டாப்பில் இடம்பெற்று வருகிறது.
</p><p>இந்த நிலையில் கயல் சீரியல் ஒளிபரப்பாகி 1500 எபிசோடுகளை எட்டிவிட்டதாம், புதிய சாதனையை கயல் சீரியல் படைக்க ரசிகர்கள் சீரியல் குழுவிற்கு வாழ்த்து கூறி வருகிறார்கள்.</p><p><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/p/DcC-SFaxBb-/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/p/DcC-SFaxBb-/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/p/DcC-SFaxBb-/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by SE (@sun_express___)</a></p></div></blockquote> <script async src="//www.instagram.com/embed.js"></script></p>]]></content>
            <updated>2026-08-15T08:30:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[குக் வித் கோமாளி சுனிதாவின் ரீசெண்ட் போட்டோஸ்...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/cook-with-comali-sunita-recent-shoot-post-1786781700"></link>
            <id>https://viduppu.com/article/cook-with-comali-sunita-recent-shoot-post-1786781700</id>
            <summary type="text">தமிழ் சின்னத்திரையில் மிகவும் பிரபலமானவர்கள் கலைஞர்கள் பலர் உள்ளனர். அதில் ஒருவர் தான் சுனிதா. நடனம் என்பதை மட்டுமே அடிப்படையாக வைத்து தமிழ்நாட்டிற்கு...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழ் சின்னத்திரையில் மிகவும் பிரபலமானவர்கள் கலைஞர்கள் பலர் உள்ளனர். அதில் ஒருவர் தான் சுனிதா. நடனம் என்பதை மட்டுமே அடிப்படையாக வைத்து தமிழ்நாட்டிற்கு வந்தவர் நிறைய ஷோக்களில் நடனம் ஆடி அப்படியே விஜய் டிவி பக்கம் வந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/df738610-352f-4b95-bf68-c2d6f39b751d/26-6a80200f56920.webp' />]</p><p>
விஜய்யில் வந்த எல்லா நடன நிகழ்ச்சிகளிலும் பங்குபெற்று கலக்கி வந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சி, குக் வித் கோமாளி போன்ற நிகழ்ச்சிகளிலும் பங்குபெற்ற சுனிதா அடிக்கடி போட்டோ ஷுட் நடத்துவது வழக்கம்.
</p><p>
தற்போது, குக் வித் கோமாள் நிகழ்ச்சியின் ஷூட்டிங்கில் எடுத்த க்யூட் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-08-15T08:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kowshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரியான்ஏர் விமான பயணத்தில் ஏற்பட்ட திடீர் கோளாறு! புலனாய்வாளர்கள் வெளியிட்ட காரணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ntsb-passenger-dragged-out-after-window-breaks-1786770191"></link>
            <id>https://tamilwin.com/article/ntsb-passenger-dragged-out-after-window-breaks-1786770191</id>
            <summary type="text">கடந்த மாதம் ரியான்ஏர் விமானப் பயணத்தின் போது உடைந்த என்ஜின் விசிறி பிளேடில் உலோக சோர்வுக்கான ஆதாரங்களை அமெரிக்க விமான பாதுகாப்பு புலனாய்வாளர்கள் கண்டற...</summary>
            <content type="html"><![CDATA[<p>கடந்த மாதம் ரியான்ஏர் விமானப் பயணத்தின் போது உடைந்த என்ஜின் விசிறி பிளேடில் உலோக சோர்வுக்கான ஆதாரங்களை அமெரிக்க விமான பாதுகாப்பு புலனாய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
</p><p>இதன்போது, ​​விமானத்தின் உள்ளே பாகங்கள் சிதறி, ஜன்னலை உடைத்துள்ளன. அந்த ஜன்னலின் திறப்பிற்குள் பயணி ஒருவர் சிக்கியுள்ளார்.
இதனையடுத்து விமானத்திற்குள் இருந்த மருத்துவர் ஒருவர் அவருக்கு சிகிச்சை அளித்துள்ளார்.</p><h2>தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம்&nbsp;</h2><p>
</p><p>
தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் (NTSB) தனது பூர்வாங்க அறிக்கையில், உடைந்த பிளேடின் பரப்பில் சுமார் 37 சதவீதம், சோர்வுடன் ஒத்துப்போகும் அம்சங்களை காட்டியதாக கூறியுள்ளது.
</p><p>
புலனாய்வாளர்கள், பிளேடின் அடிப்பகுதிக்கு அருகிலுள்ள ஒரு பகுதியில் சேதத்தைக் கண்டறிந்துள்ளதுடன் தொடர்ச்சியான அழுத்தத்தால் ஏற்பட்ட உயர்-வீச்சு சோர்வின் அறிகுறிகள கண்டறிந்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/60c9f228-345c-41ac-b6c4-d6206270a320/26-6a80025e297c5.webp' /></p><p> </p><p>இந்த செயலிழப்பிற்கான மூல காரணத்தை அந்த அமைப்பு இன்னும் கண்டறியவில்லை.

ஜூலை 10 அன்று நடந்த இந்த சம்பவம், ரியான்ஏரின் துணை நிறுவனமான மால்டா ஏர் இயக்கிய போயிங் 737-800 விமானத்தில் நிகழ்ந்துள்ளது. </p><p>இந்த விமானம் கிரீஸின் தெசலோனிகியிலிருந்து ஜெர்மனி - மெம்மிங்கனுக்கு பயணித்துக் கொண்டிருந்தது.

NTSBஇன் தகவலின்படி, விமானம் 16,000 அடி (4,877 மீட்டர்) உயரத்தில் ஏறிக்கொண்டிருந்தபோது, ​​விமானிகளுக்கு வலது இன்ஜினில் இருந்து அதிகளவான அதிர்வு வந்துள்ளது.</p><h2>உடைந்த இன்ஜினின் துண்டுகள்</h2><p> </p><p>

அதிர்வு வேகமாக அதிகரித்த பிறகு, விமானக் குழுவினர் ஒரு பெரிய வெடிச்சத்தத்தைக் கேட்டுள்ளனர். இதனையடுத்து கேபினில் அழுத்தம் குறைந்துள்ளது.</p><p>

இன்ஜினின் துண்டுகள் விமானத்தின் உடற்பகுதியில் மோதி கேபினுக்குள் புகுந்து, 11ஆவது வரிசையில் இருந்த ஜன்னலை உடைத்துள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d672669f-f789-49a6-a41a-7ce4827a0c3a/26-6a80025d58050.webp' /></p><p>
</p><p>
உதவிக்கான அழைப்புகளுக்கு பதிலளித்த ஒரு விமானப் பணிப்பெண், 11F இருக்கையில் இருந்த 61 வயது பயணி ஒருவர், உடைந்த ஜன்னல் திறப்பில் பாதியளவு சிக்கியிருப்பதைக் கண்டுள்ளார். </p><p>பயணிகள் அந்த நபரை மீண்டும் உள்ளே இழுத்து வந்துள்ளனர்.

அந்தப் பயணிக்கு கழுத்து மற்றும் தோள்பட்டையில் காயங்களும், உராய்வினால் ஏற்பட்ட தீக்காயங்களும் ஏற்பட்டிருந்தன.</p><h2>பறவைகளின் இறகுகள்</h2><p> விமானம் தெசலோனிக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது, ​​விமானத்தில் இருந்த ஒரு மருத்துவர் அவருக்கு சிகிச்சை அளித்துள்ளார்.</p><p> 

அத்துடன் பயணிகள் சமையலறையில் இருந்த ஒரு உலோகப் பெட்டியை கொண்டு அந்தத் திறப்பை அடைக்க முயன்றனர்.

விசாரணையாளர்கள் இன்ஜினின் பல பகுதிகளில் இறகுகளையும் பறவையின் எச்சங்களையும் கண்டறிந்துள்ளனர், ஆனால் பறவை மோதியதால் பிளேடு உடைந்ததா என்பதை NTSB இன்னும் உறுதி செய்யவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bbd70cd2-572a-457b-b065-682cac24ed39/26-6a8000d6d2289.webp' /></p><p>

பராமரிப்பு பதிவுகளின்படி, கடந்த ஆண்டில் இந்த இயந்திரம் நான்கு முறை பறவைகளால் மோதப்பட்டதாக சந்தேகிக்கப்படுகிறது. அவற்றில் இரண்டு மோதல்களுக்குப் பிறகு பறவைகளின் எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.</p><p>

நவம்பர் 2025 மற்றும் மே 2026 இல் இயந்திரத்தின் விசிறி இறக்கைகளுக்கு மீயொலி ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவற்றில் எந்த சேதமும் கண்டறியப்படவில்லை என்றாலும் NTSB-யின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-15T08:27:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[டுபாயில் கைது செய்யப்பட்ட ஷிரான் பாசிக்கு 72 மணி நேர தடுப்புக் காவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/72-hour-detention-shiran-basic-arrested-in-dubai-1786782300"></link>
            <id>https://jvpnews.com/article/72-hour-detention-shiran-basic-arrested-in-dubai-1786782300</id>
            <summary type="text">முக்கிய போதைப்பொருள் கடத்தல்காரர் எனக் கூறப்படும் ‘ஷிரான் பாசிக்’ என்பவரை 72 மணி நேர தடுப்புக் காவலில் வைத்து விசாரணை நடத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்து...</summary>
            <content type="html"><![CDATA[<p>முக்கிய போதைப்பொருள் கடத்தல்காரர் எனக் கூறப்படும் ‘ஷிரான் பாசிக்’ என்பவரை 72 மணி நேர தடுப்புக் காவலில் வைத்து விசாரணை நடத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.</p><p>டுபாயில் வைத்து கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நேற்று (14) இலங்கைக்கு அழைத்து வரப்பட்டிருந்தார்.</p><p>நாட்டிற்கு அழைத்து வரப்பட்டதையடுத்து, அவரிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் தெரிவித்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-15T08:25:06+00:00</updated>
        </entry>
    </feed>
