<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-08-31T07:09:29+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரசாங்கம் மக்களை ஏமாற்றுவதை நிறுத்த வேண்டும்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/anura-making-false-promises-namal-1788159149"></link>
            <id>https://tamilwin.com/article/anura-making-false-promises-namal-1788159149</id>
            <summary type="text">&amp;nbsp;அரசாங்கம், நாட்டு மக்களை ஏமாற்றுவதனை நிறுத்திக் கொள்ள வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி அநுரகுமார திஸா...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;அரசாங்கம், நாட்டு மக்களை ஏமாற்றுவதனை நிறுத்திக் கொள்ள வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
</p><p>ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நேபாளத்திற்கு நிதி உதவி வழங்குவதாக அறிவித்துள்ளார் எனவும் இலங்கையில் மக்களை ஏமாற்றியது போன்று நேபாளத்தையும் இந்த அரசாங்கம் ஏமாற்றுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>விவசாயிகளுக்கு கூறிய பொய்யை போன்று நேபாளத்திற்கு ஒரு மில்லியன் டொலர் வழங்குவதாக கூறிய வாக்குறுதியை நிறைவேற்றாமல் விட்டுவிட வேண்டாம் என நாமல் ராஜபக்ச ஜனாதிபதியிடம் கோரியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b8ae7eb8-8410-4348-8953-54bc8409d216/26-6a9524afea737.webp' /></p><p>
தித்வா புயல் ஏற்பட்ட காலத்தில் தகரம் ஒன்றிற்கு 10 லட்சம் ரூபாய் தருவதாகவும் வீட்டிற்கு 50 லட்சம் ரூபாய் தருவதாகவும் அரசாங்கம் உறுதிமொழி வழங்கியதாக அவர் நினைவூட்டியுள்ளார்.</p><p>
இதேபோன்று நேபாளத்திற்கும் இந்த அரசாங்கம் பொய் வாக்குறுதி அளித்து விட்டதோ தெரியவில்லை என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
</p><p>அரசாங்கம் தொடர்ந்தும் நாட்டு மக்களை ஏமாற்றக்கூடாது எனவும் நெல் கொள்வனவு செய்தால் அதற்கான உரிய விலையை வழங்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
</p><p>மேலும் எரிபொருள் விலைகளை குறைப்பதாக அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.</p><p>
அரசாங்கம் எரிபொருள் விலையை குறைப்பதாகவும் வரிகளை குறைப்பதாகவும் கூறிய ஆட்சி அதிகாரத்தை பெற்றுக் கொண்ட போதிலும் நாளுக்கு நாள் வரி அதிகரித்துச் செல்வதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>வாழ்க்கைச் செலவு தொடர்ச்சியாக அதிகரித்துச் செல்வதாக அவர் தெரிவித்துள்ளார்.</p><p>
அரசாங்கம் வரிகளை குறைப்பதாக வாக்குறுதி அளித்து ஆட்சி பீடம் ஏறிய போதிலும் நாளுக்கு நாள் வரி அதிகரித்துச் செல்லும் நிலையை அவதானிக்க முடிவதாக அவர் தெரிவித்துள்ளார்.</p><p>
உள்நாட்டு விவசாயிகள் தொழில் முனைவோர் நிர்க்கதி நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-31T07:05:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[வரித் திணைக்களத்திற்கு எதிரான வழக்கில் இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு வெற்றி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-lankan-cricketers-win-tax-battle-1788159834"></link>
            <id>https://tamilwin.com/article/sri-lankan-cricketers-win-tax-battle-1788159834</id>
            <summary type="text">இலங்கை உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திற்கு எதிராகத் தேசிய கிரிக்கெட் வீரர்கள் தொடர்ந்த சட்டப் போராட்டத்தில் வீரர்களுக்குச் சாதகமாக மேன்முறையீட்டு நீதி...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திற்கு எதிராகத் தேசிய கிரிக்கெட் வீரர்கள் தொடர்ந்த சட்டப் போராட்டத்தில் வீரர்களுக்குச் சாதகமாக மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.</p><p>
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் ஊழியர்களாக வீரர்களைக் கருதி, முன்நிகழ் நிபந்தனையுடன் வரி விதிப்பதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்தை நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. </p><p>
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவரான நீதியரசர் ரோஹந்த அபேசூரிய மற்றும் நீதியரசர் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய ஆயத்தால் இன்று நீதிமன்றத்தில் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2a853aad-a0ba-4866-a3ae-8b50f63781a5/26-6a95275b4665f.webp' /></p><p> </p><p>
2024 அக்டோபரில், தேசிய கிரிக்கெட் வீரர்களை இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் ‘ஊழியர்கள்’ என வகைப்படுத்தி, அவர்களுக்கு முன் கூட்டிய தனிநபர் வருமான வரியை விதிக்க உள்நாட்டு இறைவரித் திணைக்களம் முயன்றது. </p><p>
தங்களை இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் ஊழியர்களாகக் கருதக் கூடாது என்றும், தாங்கள் பல ஆண்டுகளாக 'சுயாதீன சேவை வழங்குநர்களாகவே' அங்கீகரிக்கப்பட்டு வந்துள்ளதாகவும் ஆண் மற்றும் பெண் கிரிக்கெட் அணிகளின் தலைவர்கள் வழக்கு தொடர்ந்தனர்.</p><p> 
ஊழியர் சேமலாப நிதியம் , ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதியம், பணிக்கொடை, வருடாந்த விடுமுறை மற்றும் மகப்பேறு விடுமுறை போன்ற எந்தவொரு ஊழியர் சலுகைகளும் தங்களுக்கு வழங்கப்படுவதில்லை என்பதை வீரர்கள் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டினர். </p><p>
இந்த முந்தைய திகதியிட்ட வரியை அமல்படுத்தியதால் தங்களின் ஒப்பந்தக் கொடுப்பனவுகள் பல மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டதாக 50-க்கும் மேற்பட்ட ஒப்பந்த வீரர்கள் சத்தியக் கடதாசிகள் மூலம் நீதிமன்றத்தில் முறையிட்டனர். </p><p>
வீரர்கள் வரி செலுத்துவதைத் தவிர்க்க முயல்கிறார்கள் என்ற தவறான கருத்து பொதுமக்களிடையே நிலவியதாகக் ஆண் கிரிக்கெட் வீரர்களின் சார்பாக ஆஜரான சட்டத்தரணி நிஷான் சிட்னி பிரேமதிரத்ன குறிப்பிட்டார்.</p><p> 
வீரர்கள் வரி கட்டுவதைத் தவிர்க்கவில்லை என்றும், ஊழியர்களாகத் தவறாக வகைப்படுத்தப்பட்டு வரி வசூலிப்பதை மட்டுமே எதிர்த்து வழக்காடினர் என தெளிவுபடுத்தினார். </p><p>
அண்மையில் உள்நாட்டு இறைவரிச் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தின் மூலம் 'விளையாட்டு வீரர்கள்' அதிகாரப்பூர்வமாக 'சுயாதீன சேவை வழங்குநர்களாக' வகைப்படுத்தப்பட்ட போதிலும், அந்தத் திருத்தம் மனுதாரர்களுக்குப் பொருந்தாது என இறைவரித் திணைக்களம் வாதிட்டது.</p><p> 
எனினும், இரு தரப்பு வாதங்களையும் பரிசீலித்த மேன்முறையீட்டு நீதிமன்றம், இறைவரித் திணைக்களத்தின் தீர்மானத்தை ரத்து செய்து தீர்ப்பளித்தது. </p><p>
ஆண் கிரிக்கெட் வீரர்கள் சார்பில் சட்டத்தரணிகள் ஷெனாலி டயஸ், சிதத் கஜநாயக்க ஆகியோருடன் சட்டத்தரணி நிஷான் சிட்னி பிரேமதிரத்ன முன்னிலையானார்கள்.
</p><p> பெண் கிரிக்கெட் வீரர்கள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி கலாநிதி ஹர்ஷ கப்ராலுடன் விகும் ஜெயசிங்க, மணித் தசநாயக்க ஆகியோர் முன்னிலையாகினர்.</p><p>
 அரசுத் தரப்பில் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திற்காக பிரதி சொலிசிட்டர் ஜெனரல் மனோஹர ஜெயசிங்க ஆஜரானார். இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் முன்னாள் உறுப்பினர்கள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி குவேர டி சொய்சா முன்னிலையானார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-31T07:04:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம்: தாய்மார்களின் கதறல்களுக்கு தீர்வு இல்லையே..! ஐ.நா. பிரதிநிதி கவலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/issue-of-enforced-disappearances-1788159562"></link>
            <id>https://tamilwin.com/article/issue-of-enforced-disappearances-1788159562</id>
            <summary type="text">&amp;nbsp;வடக்கு - கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் அம்மாக்கள் தமது
உறவுகளுக்கு என்ன நடந்தது என அறியாமலே இறந்து போவது மோசமான ஒரு சம்பவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;வடக்கு - கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் அம்மாக்கள் தமது
உறவுகளுக்கு என்ன நடந்தது என அறியாமலே இறந்து போவது மோசமான ஒரு சம்பவம் என
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் வலிந்து காணமல் ஆக்கப்பட்டோருக்கான
பணிக் குழு பிரதிநிதி அனா லோறினா டெல்கடிலோ பெரஸ் கவலை வெளியிட்டுள்ளார். </p><p>

நேற்று(30.08.2026) யாழ்ப்பாணம் - தந்தை செல்வா நினைவு மண்டபத்தில் வலிந்து காணாமல்
ஆக்கப்பட்ட உறவுகளால் ஏற்பாடு செய்த சர்வதேச வலிந்து காணாமல் போனோர் தினத்தை
முன்னிட்டு “சர்வதேச நீதியை நோக்கிய பயணம்” எனும் தொனிப் பொருளில் இடம்பெற்ற
சர்வதேச மாநாட்டில் பிரதம அதிதியாக கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். </p><h2>

பிள்ளைகளை இழந்த தாய்மார்களின் கதறல்கள்</h2><p>

அவர் மேலும் தெரிவிக்கையில்,</p><p> 

 வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் அம்மாக்களின் துயரங்களை நன்கு அறிவோம்.

தமது பிள்ளைக்கு என்ன நடந்தது என அறியாமலே அம்மாக்கள் இறக்கின்ற சம்பவங்கள்
அதிகரித்துக் கொண்டிருக்கின்ற நிலையில், உண்மைக்கும் நீதிக்குமான தேடலில்
தளர்வு நிலை இருப்பதை மறுக்க முடியாது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1880c833-93c4-4a1b-88f1-c172ad3e983f/26-6a9527410c507.webp' /></p><p>
</p><p>

இதனை அறிந்த நாம் இலங்கையில் பாதிக்கப்பட்ட தரப்புகளுடன் இணைந்து வேலை
செய்துவருகின்ற நிலையில், இலங்கையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட ஆட்கள்
தொடர்பில் இறுதியான எண்ணிக்கையை பெற முடியவில்லை.</p><h2>காணாமல் ஆக்கப்பட்டவர்களின் நிலை</h2><p>
இலங்கையில் விடுதலைப் புலிகள் காலம் மற்றும் ஜேவிபியால் காணாமல்
ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான பதிவுகளை நாம் சேகரித்து வைத்துள்ள நிலையில்,
வெள்ளை வான் காணாமல் ஆக்கப்படுதல் மற்றும் பணத்துக்காக என பல வடிவங்களில்
இலங்கையில் காணாமல் ஆக்கப்படுதல் இடம்பெற்றிருக்கின்றது.
</p><p>
வடக்கு - கிழக்கில் அரச படைகளால் காணி இழந்த மக்கள் போராடி வருகிறார்கள்,
அவர்களுடைய ஆதங்களையும் கேட்டு அளித்துள்ளேன்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/93dccbda-9ae7-4f1c-a45f-e0bb21e663c6/26-6a952741bcda0.webp' /></p><p>
</p><p>

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் இந்த சர்வதேச மாநாடு ஆனது நாம்
அவர்களுடன் நெருக்கமாவதற்கும் இலங்கையில் வலிந்து காணாமல் ஆக்கப்படுதலுக்கு
முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதே எமது விருப்பம்.


எமக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தின் அடிப்படையில் மனிதாபிமான ஆணை உள்ளது, வலிந்து
காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதியை பெற்றுக் கொடுப்பதற்காக அங்கத்துவ
நாடுகளை இணைக்க முடியும்.</p><p>

இதுவரை 61 ஆயிரத்து 626 வழக்குகளை பதிவு செய்துள்ள நிலையில்100 மேற்பட்ட
நாடுகளுக்கு அனுப்பியுள்ளதுடன், தொடர்ந்தும் வலிந்து காணாமல் ஆக்கப்படுதல்
தொடர்கிறது.
</p><h2>
சாட்சியங்கள் இருந்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை..</h2><p>

முழுமையான ஆதாரங்கள் மற்றும் சாட்சிகள் இருந்தும் வலிந்து காணாமல்
ஆக்கப்பட்டவர்களின் தரவுகளை அரச அதிகாரிகள் மறைக்க முயற்சித்தமை மட்டுமல்லாது
மறைத்தும் இருக்கிறார்கள்.
</p><p>
அதன் பாதிப்பு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட நபர்கள் உற்பட அவர்களின்
குடும்பமும் அதன் பாதிப்பை அனுபவித்து வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bc632bd1-482e-470f-aefc-6f22405ef129/26-6a95274279f41.webp' /></p><p>
</p><p>
ஆகவே, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதியைப் பெற்றுக் கொடுப்பதில்
தமது முழுமையான பங்களிப்பு தொடர்ந்து இருக்கும் என்பதை கூறிக் கொள்வதுடன், உண்மைக்கும் நீதிக்குமான தேடலில் அனைத்து தரப்பினர்களும் தமது
முழுமையான பங்களிப்பை வழங்க வேண்டும் என்றார்.
</p><p>

இந்த மாநாட்டில் இலங்கைக்கான அமெரிக்க மற்றும் ஆஸ்திரேலியா தூதரகங்களைச் 
சேர்ந்த பிரதிநிதிகள் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஸ்ரீதரன், ரவிகரன், 
ஸ்ரீநேசன் , வடக்க மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் ஐங்கரநேசன், தமிழ் மக்கள்
கூட்டணியின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன், தமிழ் தேசிய
மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் கனகரட்னம் சுகாஸ், போராளிகள் கட்சியின்
தலைவர் வேந்தன், ஈ பி ஆர் எல் தலைவர் சுரேஷ் பிரேம சந்திரன், உட்பட
மாதகுருமார்கள் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ளனர்.&nbsp; &nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-31T07:04:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[அல்லைப்பிட்டி- மண்கும்பான் இடையே புற்றரைக்கு தீவைத்தவர் பொலிஸில் ஒப்படைப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/fire-to-grassland-allaipiddy-man-arrested-1788159785"></link>
            <id>https://tamilwin.com/article/fire-to-grassland-allaipiddy-man-arrested-1788159785</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் – ஊர்காவற்றுறை பிரதான வீதியின் அல்லைப்பிட்டி–மண்கும்பான்
இடைப்பட்ட பகுதியில் அமைந்துள்ள புற்றரைக்கு தீவைத்ததாகக் கூறப்படும் ஒருவர்
இன்று...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் – ஊர்காவற்றுறை பிரதான வீதியின் அல்லைப்பிட்டி–மண்கும்பான்
இடைப்பட்ட பகுதியில் அமைந்துள்ள புற்றரைக்கு தீவைத்ததாகக் கூறப்படும் ஒருவர்
இன்று(31.8.2026) பிடிக்கப்பட்டு ஊர்காவற்றுறை பொலிஸாரிடம்
ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
</p><p>வேலணை பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட வயல்வெளிகள் மற்றும் கால்நடைகளின்
மேய்ச்சலுக்காகப் பயன்படுத்தப்படும் புற்றரைகள் உள்ளிட்ட பகுதிகளுக்கு
நீண்டகாலமாக இனந்தெரியாத நபர்கள் தீவைத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>இதன் காரணமாக பரந்தளவிலான நிலப்பரப்புகள் அடிக்கடி தீக்கிரையாகி வருவதுடன்,
புகை மற்றும் தீ பரவல் காரணமாக வீதியில் பயணிக்கும் பொதுமக்கள் மற்றும்
போக்குவரத்துக்கும் பெரும் அசௌகரியங்கள் ஏற்பட்டு வந்துள்ளன.</p><h2>மேலதிக விசாரணை</h2><p>
</p><p>புற்றரைகளுக்கு தீவைக்கும் சம்பவங்களின் பின்னணியில் உள்ளவர்களை இதுவரை
அடையாளம் காணவோ அல்லது கைது செய்யவோ முடியாத நிலை காணப்பட்டதால், வேலணை பிரதேச
சபையும் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வந்ததாக கூறப்படுகிறது.
</p><p>இந்நிலையில், இன்று குறித்த பகுதியில் ஒருவர் தீவைத்துக் கொண்டிருந்தபோது அவர்
கையும் மெய்யுமாக பிடிக்கப்பட்டு, மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக ஊர்காவற்றுறை
பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a13539f1-f51d-458d-b85c-a30af6a6a9cc/26-6a95272bc47ce.webp' /></p><p>
</p><p>எனினும், பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள குறித்த நபர் மனநலப்
பாதிப்புக்குள்ளானவர் என ஒரு தரப்பினர் தெரிவித்து வருகின்றமை
குறிப்பிடத்தக்கது.</p><p>
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஊர்காவற்றுறை பொலிஸார் முன்னெடுத்து
வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-31T07:03:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் 24 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட கைதி தப்பியோட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/prisoner-sentenced-24-years-jail-escapes-in-jaffna-1788155211"></link>
            <id>https://jvpnews.com/article/prisoner-sentenced-24-years-jail-escapes-in-jaffna-1788155211</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;யாழ்ப்பாண மேல் நீதிமன்றினால் 24 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட கைதி தப்பியோடியுள்ள நிலையால் அவரை மீள கைது செய்ய விசேட பொலிஸ் குழு தீவிர ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;யாழ்ப்பாண மேல் நீதிமன்றினால் 24 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட கைதி தப்பியோடியுள்ள நிலையால் அவரை மீள கைது செய்ய விசேட பொலிஸ் குழு தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.</p><p>

யாழ்ப்பாணம் இளவாலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமியை கடந்த 2021ஆம் ஆண்டு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றத்திற்காக 24 வருட சிறைத்தண்டனையும் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு 5 இலட்ச ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனவும்&nbsp;தீர்ப்பளித்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ba1ef7ed-572c-47b2-a399-4305c88c2858/26-6a95154d3e28b.webp' /></p><h2>&nbsp;பாலியல் வன்புணர்வு</h2><p>நஷ்ட ஈட்டை வழங்க தவறின் மேலும் 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தது.</p><p></p><p>
</p><p>
அந்நிலையில் மறுநாள் சனிக்கிழமை திடீர் சுகவீனம் என கூறி கைதி சிறைக்காவலர்களின் பாதுகாப்புடன் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மறுநாள் ஞாயிற்றுக்கிழமை மதியம் குறித்த கைதி வைத்தியசாலையில் இருந்து தப்பி சென்றுள்ளார்.
</p><p>
கைதி தப்பி சென்ற நிலையில் சிறைக்காவலர்கள் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதுடன் யாழ்ப்பாண பொலிஸ் விசேட குழுவினரும் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.</p><p></p><p>
வெள்ளிக்கிழமை தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்ட நிலையில் மறுநாள் சனிக்கிழமை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிப்பட்ட நிலையில் மறுநாள் ஞாயிற்றுக்கிழமை கைது தப்பி சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-08-31T07:02:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சர்வதேச நாணய நிதியத்துடன் தொடர்ந்தும் பயணிக்க அரசாங்கம் உத்தேசம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/government-intends-to-continue-working-imf-1788158621"></link>
            <id>https://tamilwin.com/article/government-intends-to-continue-working-imf-1788158621</id>
            <summary type="text">சர்வதேச நாணய நிதியத்துடன் தொடர்ந்தும் இணைந்து பயணிக்கும் வகையில் புதிய ஒப்பந்தமொன்றை ஏற்படுத்திக் கொள்வது தொடர்பான நகர்வுகளை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது...</summary>
            <content type="html"><![CDATA[<p>சர்வதேச நாணய நிதியத்துடன் தொடர்ந்தும் இணைந்து பயணிக்கும் வகையில் புதிய ஒப்பந்தமொன்றை ஏற்படுத்திக் கொள்வது தொடர்பான நகர்வுகளை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது.
</p><p>
சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு ஒன்று அடுத்த மாத தொடக்கத்தில் நாட்டிற்கு வருகை தர உள்ளது.</p><h2>புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட</h2><p>

விரிவாக்கப்பட்ட கடன் வசதியின் ஏழாவது மீளாய்விற்காக வரும் பிரதிநிதிகள், அடுத்த ஆண்டு மார்ச் மாதம் காலாவதியாகும் தற்போதைய ஒப்பந்தத்திற்குப் பதிலாக, மார்ச் மாதம் முதல் நடைமுறைக்கு வரும் புதிய ஒப்பந்தமொன்றில் கையெழுத்திடுவது குறித்து ஜனாதிபதியுடன் கலந்துரையாடுவார்கள் என்று கூறப்படுகிறது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a8fd8df5-dfc3-4454-8bd4-09a056bb8ddd/26-6a952399a9bf6.webp' /></p><p>
ஏழாவது மீளாய்வும், 300 மில்லியன் டொலர் கடன் தவணையை வழங்குவதற்கான தீர்மானமும் அதன்போது மேற்கொள்ளப்படவுள்ளது.</p><p>மார்ச் 2027 முதல் நடைமுறைக்கு வரும் புதிய ஒப்பந்தத்தையும் அவர்கள் தயாரித்துள்ளதாகக் கூறப்படுகிறது. </p><p>நிதி அமைச்சின் செயலாளர் ஹர்ஷண சூரியப்பெரும மற்றும் ஜனாதிபதியின் சிரேஷ்ட பொருளாதார ஆலோசகர் துமிந்த ஹுலங்கமுவ ஆகியோர் இந்த புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டியுள்ளனர் என்று கூறப்படுகிறது.
</p><p>
அதன்படி, உள்நாட்டின் எதிர்ப்பு மற்றும் பொதுமக்களின் அதிருப்தியைப் பொருட்படுத்தாமல், மார்ச் 2027 முதல் நடைமுறைக்கு வரும் சர்வதேச நாணய நிதியத்துடனான புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட ஜனாதிபதி முடிவு செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-31T07:02:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாக்ஸ் ஆபிஸ்: 3 நாட்களில் 'ஹாய்' திரைப்படம் செய்துள்ள வசூல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/hi-movie-3-days-box-office-collection-1788149247"></link>
            <id>https://cineulagam.com/article/hi-movie-3-days-box-office-collection-1788149247</id>
            <summary type="text">கவின், நயன்தாரா நடிப்பில் கடந்த வாரம் வெளியான &#039;ஹாய்&#039; திரைப்படத்தின் 3 நாட்கள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.&#039;ஹாய்&#039;
ஒவ்வொரு வெள்ளிக...</summary>
            <content type="html"><![CDATA[<p>கவின், நயன்தாரா நடிப்பில் கடந்த வாரம் வெளியான 'ஹாய்' திரைப்படத்தின் 3 நாட்கள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.</p><p></p><h2>'ஹாய்'</h2><p>
ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் சினிமா ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுக்கும் வகையில் விதவிதமான கதைக்களத்தில் திரைப்படங்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில், கடந்த வாரம் காதல் கதைக்களத்தில் உருவாகி வெளிவந்த திரைப்படம்தான் 'ஹாய்'.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/589c3264-2ab7-45fa-b536-5a211ed061b7/26-6a94fe0306fcb.webp' /></p><p>

இப்படத்தை அறிமுக இயக்குநர் விஷ்ணு எடவன் இயக்க, <a href="https://www.youtube.com/watch?v=Dmq6sx89F9w" target="_blank">கவின் </a>மற்றும் நயன்தாரா முதல்முறையாக இணைந்து நடித்துள்ளனர். மேலும், ராதிகா சரத்குமார், பிரபு, பாக்யராஜ் ஆகியோர் நடித்துள்ளனர்.</p><h2> 

பாக்ஸ் ஆபிஸ்</h2><p>

ரசிகர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்ப்புடன் வெளியான 'ஹாய்' திரைப்படம் கலவையான விமர்சனங்களை சந்தித்துள்ளது. இருந்தும் ஓப்பனிங் வாரத்தில் பாக்ஸ் ஆபிஸில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e2fd7cfe-41e7-4a02-a78b-0a9483608509/26-6a94fe03b4bac.webp' /></p><p>

இந்நிலையில், 3 நாட்களை கடந்திருக்கும் 'ஹாய்' திரைப்படம் உலகளவில் இதுவரை செய்துள்ள வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் உலகளவில் 3 நாட்களில் ரூ. 7 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-31T07:00:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஒரு வாரத்தில் 40 கோடியை கடந்த அதிவேக நெடுஞ்சாலை வருமானம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/expressways-generate-over-rs-355-mln-in-revenue-1788157177"></link>
            <id>https://ibctamil.com/article/expressways-generate-over-rs-355-mln-in-revenue-1788157177</id>
            <summary type="text">இலங்கையின்&amp;nbsp;அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணித்த வாகனங்கள் மூலம் கடந்த வாரத்தில் கிடைத்த&amp;nbsp;வருமானம் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.அதன்படி, கடந்த 24...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின்&nbsp;அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணித்த வாகனங்கள் மூலம் கடந்த வாரத்தில் கிடைத்த&nbsp;வருமானம் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.</p><p>அதன்படி, கடந்த 24 ஆம் திகதி முதல் 30 ஆம் திகதி வரை மட்டும் 408 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான வருமானம் கிடைத்துள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.</p><p>இந்த நிலையில் அதிவேக நெடுஞ்சாலைக் கட்டமைப்பிற்குச் சொந்தமான தெற்கு அதிவேக நெடுஞ்சாலை, கொழும்பு வெளிவட்ட வீதி, கொழும்பு - கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை மற்றும் மத்திய அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணித்த வாகனங்களின் எண்ணிக்கை 1,095,895 ஆகும்.</p><p></p><h2>355 மில்லியனுக்கு அதிக வருமானம்&nbsp;</h2><p> 

இதனிடையே, கடந்த ஐந்து நாள் விடுமுறைக் காலத்தில் மட்டும் அதிவேக நெடுஞ்சாலைகள் மூலம் 355 மில்லியனுக்கும் அதிகமான சாதனை வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5db71540-b267-4afc-a523-3b48b5af1dde/26-6a9524c86dde3.webp' /></p><p>இதேவேளை கடந்த 25 மற்றும் 26ஆம் திகதிகளில் அதிவேக நெடுஞ்சாலைகள் ஊடாக 12.4 கோடி ரூபாய்க்கும் அதிக வருமானம் கிடைத்துள்ளதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-31T06:59:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கைதாகி எட்டு மாதங்களின் பின் வெளியான வெனிசுலா முன்னாள் அதிபர் புகைப்படம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/photo-of-former-venezuelan-president-released-1788159702"></link>
            <id>https://canadamirror.com/article/photo-of-former-venezuelan-president-released-1788159702</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp;அமெரிக்க காவலில் உள்ள வெனிசுலாவின் முன்னாள் அதிபர் நிக்கோலஸ் மதுரோ, தன்னை பற்றிய புகைப்படங்களை முதன்முறையாக சமூக வலைதளங்களில் வெளி...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp; &nbsp;அமெரிக்க காவலில் உள்ள வெனிசுலாவின் முன்னாள் அதிபர் நிக்கோலஸ் மதுரோ, தன்னை பற்றிய புகைப்படங்களை முதன்முறையாக சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். </p><p>

கடந்த ஜனவரி மாதம் அமெரிக்க நடவடிக்கையில் கைது செய்யப்பட்ட பின்னர், சுமார் எட்டு மாதங்களுக்கு பிறகு அவர் காவலில் இருக்கும் தோற்றத்தை வெளிப்படுத்தும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3437b06b-3db8-46e5-9f55-f1c16e93b889/26-6a9526d86761a.webp' /></p><h2>நியூயார்க்கில்&nbsp; &nbsp;புரூக்ளின் மெட்ரோபாலிட்டன் தடுப்பு மையத்தில் ...</h2><p>
 
 
ஆகஸ்ட் 30ஆம் தேதி வெளியிடப்பட்ட அந்த இரண்டு புகைப்படங்களிலும் மதுரோ சாம்பல் நிற டிராக்சூட் மற்றும் வெள்ளை நிற காலணிகள் அணிந்தபடி புன்னகையுடன் காணப்படுகிறார்.
</p><p>
 இரு கைகளாலும் வெற்றி சின்னம் காட்டும் வகையிலும் அவர் போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படங்கள் நியூயார்க்கில் உள்ள புரூக்ளின் மெட்ரோபாலிட்டன் தடுப்பு மையத்தில் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. </p><p>

எனினும், அவை சமீபத்தில் எடுக்கப்பட்டவை அல்ல என்றும், ஜூன் 25, 2026 என்ற தேதி புகைப்படங்களில் இடம்பெற்றுள்ளது.
</p><p> 
தனது பேரக்குழந்தைகள், குழந்தைகள் மற்றும் ஆதரவாளர்களுக்கு அன்பையும் நம்பிக்கையையும் தெரிவிக்கும் வகையில் மதுரோ இந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

 தானும் தனது மனைவி சிலியா புளோரஸும் உறுதியாக இருப்பதாக அவர் கூறியுள்ளார். </p><p>மேலும், தங்களது ஆதரவாளர்களின் பிரார்த்தனைகள் மற்றும் ஒற்றுமைக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
 
மதுரோ மற்றும் அவரது மனைவி ஜனவரியில் வெனிசுலாவில் கைது செய்யப்பட்டு அமெரிக்காவுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.</p><p> 

போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஆயுதம் தொடர்பான குற்றச்சாட்டுகளை அவர்கள் எதிர்கொள்கின்றனர் . எனினும் இந்த குற்றச்சாட்டுகளை மதுரோ மறுத்துள்ள்ளமை குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-08-31T06:58:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[40 கோடி வருமானம் கொடுத்த அதிவேக நெடுஞ்சாலை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/lanka-expressways-generates-40-crore-in-revenue-1788158969"></link>
            <id>https://jvpnews.com/article/lanka-expressways-generates-40-crore-in-revenue-1788158969</id>
            <summary type="text">&amp;nbsp; இலங்கைக்கு கடந்த வாரத்தில் மட்டும் அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணித்த வாகனங்கள் மூலம் 408 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான வருமானம் கிடைத்துள்ளதாக வீ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; இலங்கைக்கு கடந்த வாரத்தில் மட்டும் அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணித்த வாகனங்கள் மூலம் 408 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான வருமானம் கிடைத்துள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. </p><p>

கடந்த 24 ஆம் திகதி முதல் 30 ஆம் திகதி வரை அதிவேக நெடுஞ்சாலைக் கட்டமைப்பிற்குச் சொந்தமான தெற்கு அதிவேக நெடுஞ்சாலை, கொழும்பு வெளிவட்ட வீதி, கொழும்பு - கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை மற்றும் மத்திய அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணித்த வாகனங்களின் எண்ணிக்கை 1,095,895 ஆகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/001e8a57-a8ca-4982-b77a-d2985242a79f/26-6a9523fa76d7c.webp' /></p><p> 

இதனிடையே, கடந்த ஐந்து நாள் விடுமுறைக் காலத்தில் மட்டும் அதிவேக நெடுஞ்சாலைகள் மூலம் 355 மில்லியனுக்கும் அதிகமான சாதனை வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-31T06:46:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[மைத்திரிக்கு மகிழ்ச்சியான சகாப்தத்தின் ஜனாதிபதி விருது - அப்பாவி உயிர்களை பறித்த ஈஸ்டர் தாக்கதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/maithri-honoured-as-president-of-the-happiest-era-1788155874"></link>
            <id>https://ibctamil.com/article/maithri-honoured-as-president-of-the-happiest-era-1788155874</id>
            <summary type="text">முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கு &#039;மகிழ்ச்சியான சகாப்தத்தின் ஜனாதிபதி&#039; என்ற பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் உள்ள டெம்பிள் ட்ரீ...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கு 'மகிழ்ச்சியான சகாப்தத்தின் ஜனாதிபதி' என்ற பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.
</p><p>கொழும்பில் உள்ள டெம்பிள் ட்ரீஸில் நடைபெற்ற ஒரு சிறப்பு சர்வதேச விருது வழங்கும் விழாவில் இந்த பட்டம் வழங்கப்பட்டுள்ளது</p><p>
சிறிசேனா இவ்விழாவில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட நிலையில், இலங்கை மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த வணிகத் தலைவர்கள், தொழில்முனைவோர், தொழில் வல்லுநர்கள் மற்றும் பிறபிரமுகர்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.</p><p></p><p>
</p><h2><b>எந்த அடிப்படையில் இந்த விருது வழங்கப்பட்டது?</b></h2><p>
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்குப் பின்னரான விசாரணைகள் இலங்கையின் அரசியல் வரலாற்றில் மிகக் கடுமையான கேள்விகளை இன்றும் மைத்திரிபால மீது எழுப்பப்படுகின்றன.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/120a0c7e-15f5-4587-b74d-51dc1b54cfd5/26-6a9522d56d474.webp' /></p><p>அந்தத் தாக்குதல்களில் அப்பாவி மக்கள் பலர் உயிரிழந்ததுடன், அவர்களைப் பாதுகாப்பதில் அரசின் பொறுப்பு என்னவாக இருந்தது? அப்போதைய பாதுகாப்பு அமைச்சராக இருந்த அன்றைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எடுத்த நடவடிக்கை என்ன என்பதும் அவரிடம் இருந்து தேடும் பதிலுக்கான கேள்வி ஆகும். </p><p>அன்று அவர் குடும்பத்தோடு கொண்டாட்டத்திற்க்காக சிங்கப்பூருக்கு பறந்தார். ஒரு நாட்டின் சாதாரண அமைச்சர் கூட வெளிநாட்டுக்கு சென்றால், அதற்கான அவர் வகிக்கும் பதவிக்கான பணியை வேறு ஒருவரிடம் ஒப்படைப்பார். </p><p>&nbsp;இதுவே இலங்கை அரசியல் நியதி. இருந்தும் மைத்திரி பாதுகாப்பு அமைச்சராக பொறுப்பை வகித்தும் கண்டும் காணாததுமாக, பதவிக்கான பொறுப்புக்கு எவரையும் நியமிக்கது பறந்துவிட்டார். இது எங்கோ தேடிய கருத்தல்ல.</p><p></p><p> </p><h2>பொறுப்புக்கூறல் மற்றும் நீதி</h2><p>அண்மையில் மரணதண்டனை விதிக்கப்பட்ட பூஜித் ஜயசுந்தர ஹேமசிறி பெர்னாண்டோ இருவரும் நீதிமன்றில் தெரிவித்தது. இத்தகைய பின்னணியில், அப்போது நாட்டின் ஜனாதிபதியாக இருந்த மைத்திரிபால சிறிசேனாவுக்கு மகிழ்ச்சியான சகாப்தத்தின் ஜனாதிபதி போன்ற கௌரவப் பட்டம் வழங்கப்படுவது இயல்பல்லவே? ஒரு ஜனாதிபதியின் ஆட்சிக்காலத்தை மதிப்பிடும்போது, பொருளாதாரக் கொள்கைகள், சமூகப் பணிகள் அல்லது அரசியல் சாதனைகள் மட்டுமல்லாமல், மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் அரசின் அடிப்படைப் பொறுப்பும் கணக்கில் கொள்ளப்பட வேண்டும்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0a6146c4-4c9d-4a40-87b4-7df09434097c/26-6a9522d4b3a20.webp' /></p><p>மகிந்தவை ஆட்சிக்கு வரவழைக்க ரணில் விக்கிரமசிங்கவுடன் முரண்பட்ட கதையெல்லாம் மைத்திரியின் அரசியல் பக்கத்தில் விமர்சனங்களின் அடுக்குகள். இவ்வாறு உயிர்த்த ஞாயிறு பேரழிவை ஏற்படுத்திய ஒரு பாதுகாப்புத் தோல்வி குறித்து கேள்விகள் எழுந்திருக்கும்போது, அந்தக் காலத்தின் அரசியல் தலைமைக்கு வழங்கப்படும் கௌரவம் பொதுமக்களின் மனதில் நியாயமான சந்தேகத்தை ஏற்படுத்துவது தவிர்க்க முடியாதது. </p><p>இங்கு முக்கியமானது, மைத்திரிபால சிறிசேனாவை தனிப்பட்ட முறையில் குற்றவாளி எனத் தீர்ப்பளிப்பது அல்ல. மாறாக, அரசின் பொறுப்பு, அரசியல் பொறுப்பு மற்றும் ஒழுக்கப் பொறுப்பு ஆகியவை எவ்வாறு மதிப்பிடப்படுகின்றன? என்பதே கேள்வி.</p><p> உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு முன்னர் பாதுகாப்பு தொடர்பான தகவல்கள் கிடைத்திருந்ததாகவும், அவை உரிய முறையில் பயன்படுத்தப்பட்டனவா என்பது தொடர்பாகவும் பல ஆண்டுகளாக கேள்விகள் எழுந்துள்ளன. இந்நிலையில், பாதிக்கப்பட்ட குடும்பங்கள் இன்னும் முழுமையான உண்மை, பொறுப்புக்கூறல் மற்றும் நீதியை எதிர்பார்க்கும் சூழலில், முன்னாள் அரசுத் தலைவருக்கு மகிழ்ச்சியைப் பிரதிபலிக்கும் உயரிய கௌரவத்தை வழங்குவது உணர்வுபூர்வமான முரண்பாடே...&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-31T06:44:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹோர்முஸ் நீரிணையில் அமெரிக்க MQ-9 ட்ரோனை சுட்டு வீழ்த்திய ஈரான்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/iran-shoots-down-us-drone-over-hormuz-strait-1788153562"></link>
            <id>https://ibctamil.com/article/iran-shoots-down-us-drone-over-hormuz-strait-1788153562</id>
            <summary type="text">ஹோர்முஸ் நீரிணைப் பகுதிக்கு மேல் பறந்து கொண்டிருந்த அமெரிக்காவின் MQ-9 ரீப்பர் (MQ-9 Reaper) ட்ரோனை வான் பாதுகாப்பு ஏவுகணைகள் மூலம் சுட்டு வீழ்த்தியுள...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹோர்முஸ் நீரிணைப் பகுதிக்கு மேல் பறந்து கொண்டிருந்த அமெரிக்காவின் MQ-9 ரீப்பர் (MQ-9 Reaper) ட்ரோனை வான் பாதுகாப்பு ஏவுகணைகள் மூலம் சுட்டு வீழ்த்தியுள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது.</p><p>ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படை (IRGC) இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p>இந்தநிலையில் சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்க ட்ரோன் பாரசீக வளைகுடா கடற்பகுதியில் விழுந்து நொறுங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">வான் பாதுகாப்பு</span></p><p>ஈரானின் நவீன வான் பாதுகாப்பு அமைப்புகள் ஹோர்முஸ் நீரிணை வான்வெளியில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த நீண்ட தூர அமெரிக்க ட்ரோனைத் துல்லியமாக அடையாளம் கண்டு ஏவுகணைத் தாக்குதல் நடத்தி இவ்வாறு அழித்துள்ளன.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f3179777-b9e5-4423-89f6-65e7ac72c6e4/26-6a951289cccc7.webp' /></p><p>இந்தநிலையில் தாக்குதலுக்கு இலக்கான ட்ரோன் கட்டுப்பாட்டை இழந்து பாரசீக வளைகுடா நீரில் மூழ்கியுள்ளதாக IRGC பொது உறவுகள் அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது.</p><p>ஹோர்முஸ் நீரிணைப் பகுதியில் அமெரிக்கக் கடற்படைப் படைகளுக்கும் ஈரானியப் படைகளுக்கும் இடையே கடற்படைத் தடைகள் மற்றும் இராணுவ மோதல்கள் தீவிரமடைந்து வரும் சூழலில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-31T06:43:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழ் புத்தாண்டிற்கு முன்னர் முடிவுக்கு வரும் அநுரவின் ஆட்சி! உறுதியாகக் கூறும் முக்கியப் பிரமுகர்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/anura-s-reign-to-end-before-tamil-new-year-1788157876"></link>
            <id>https://tamilwin.com/article/anura-s-reign-to-end-before-tamil-new-year-1788157876</id>
            <summary type="text">எதிர்வரும் தமிழ் - சிங்கள புத்தாண்டுக்கு முன்னர் தற்போதைய நாடாளுமன்றம் முடிவுக்கு வரும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்...</summary>
            <content type="html"><![CDATA[<p>எதிர்வரும் தமிழ் - சிங்கள புத்தாண்டுக்கு முன்னர் தற்போதைய நாடாளுமன்றம் முடிவுக்கு வரும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.</p><p> 

காலியில் இடம்பெற்ற கூட்டு எதிர்க்கட்சிகளின் அரசியல் மாநாட்டின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.</p><p> 

தொடர்ந்தும் தெரிவிக்கையில், </p><p>

தற்போதைய அரசாங்கம், அவர்களிடம் 159 பெரும்பான்மை பலம் இருப்பதாக கூறிக்கொண்டிருந்தாலும் இன்னும் சில காலத்திற்குள் இந்த அரசாங்கத்தை தோற்கடிக்க, ஒன்று சேர்ந்துள்ள இந்த எதிர்க்கட்சிகள் நடவடிக்கை எடுக்கும் என்பதை கூறிக் கொள்கின்றேன்.</p><h2>அரசாங்கத்தை தோற்கடிப்போம்..</h2><p>

எதிர்க்கட்சிகளாக இருக்கும் அனைத்துத் தரப்பினரும் ஒற்றுமையுடன் செயற்பட்டால், அரசாங்கத்தைத் தோற்கடிக்கும் இலக்கை அடைய முடியும்.
</p><p>
இந்த தேசத்திற்கு ஏதாவது சேவையைச் செய்ய வேண்டும் என்ற நோக்கத்திலேயே நாங்கள் அரசியலை தேர்ந்தெடுத்தோம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5289544e-3d62-458a-b5e7-226087797c01/26-6a952283e1387.webp' /></p><p>

தற்போதைய அரசாங்கத்தை தோற்கடிக்க அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒற்றுமையுடன் செயற்பட வேண்டியது அவசியம். </p><p>

நான் ஒரு விடயத்தை உறுதியாகச் சொல்ல முடியும். 159 உறுப்பினர்களைக் கொண்ட இந்த அரசாங்கம் நீண்ட காலத்திற்கு பயணிக்காது. விரைவில் முடிவுக்கு வரும். இதனை நினைவிற் கொள்ளுங்கள். </p><p>

தமிழ் - சிங்கள் புத்தாண்டிற்கு முன்னதாகவே இந்த ஆட்சி முறியடிக்கப்படும். நாடாளுமன்றம் முடிவுக்குக் கொண்டு வரப்படும் என குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-31T06:43:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[3 ஓட்டங்களில் தவறிய சதம்: இங்கிலாந்து மண்ணில்..பாகிஸ்தான் 194 ஓட்டங்கள் வித்தியாசத்தில் படுதோல்வி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/england-win-by-194-runs-agains-pak-in-lord-s-test-1788158481"></link>
            <id>https://news.lankasri.com/article/england-win-by-194-runs-agains-pak-in-lord-s-test-1788158481</id>
            <summary type="text">England won by 194 runs against pakistan in lord&#039;s: பாகிஸ்தான் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் இங்கிலாந்து 194 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்ற...</summary>
            <content type="html"><![CDATA[<p>England won by 194 runs against pakistan in lord's: பாகிஸ்தான் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் இங்கிலாந்து 194 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது.
</p><p>
லண்டன் லார்ட்'ஸ் மைதானத்தில் நடந்த டெஸ்டில், இங்கிலாந்து அணி 194 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது.&nbsp;</p><h2>389 ஓட்டங்கள் இலக்கு</h2><p>

இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்'ஸ் மைதானத்தில் நடந்தது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f8513f02-ce6c-4516-8c12-29b1d03a74d7/26-6a95233342c9d.webp' />&nbsp;</p><p></p><p>

இங்கிலாந்து அணி நிர்ணயித்த 389 ஓட்டங்கள் இலக்கினை நோக்கி களமிறங்கிய பாகிஸ்தான், தொடக்கத்தில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது.
</p><p>
அணித்தலைவர் பாபர் அஸாம் 6 ஓட்டங்களிலும், மொஹம்மது ரிஸ்வான் 1 ரன்னிலும் ஆட்டமிழக்க சவுத் ஷகீல் அபாரமாக ஆடி அரைசதம் கடந்தார். </p><p>

சதத்தை நோக்கி பயணித்த சவுத் ஷகீல் (Saud Shakeel), அணியின் ஸ்கோர் 169 ஆக இருந்தபோது ஆட்டமிழந்தார். 

அவர் 122 பந்துகளில் 2 சிக்ஸர், 13 பவுண்டரிகளுடன் 97 ஓட்டங்கள் எடுத்தார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2a6ec940-da3a-4e61-9d4b-3f9d46584cdb/26-6a9523328cbd0.webp' /></p><p>ஷாஸாத்தை 9 ஓட்டங்களிலும், மொஹம்மது அலியை 8 ஓட்டங்களிலும் ஜோஷ் டங் வெளியேற்ற பாகிஸ்தான் 194 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது.
</p><p>
இதன்மூலம் இங்கிலாந்து அணி 194 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஓலி ராபின்ஸன் 4 விக்கெட்டுகளும், ஜோஷ் டங் 3 விக்கெட்டுகளும், ஜோப்ரா ஆர்ச்சர் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4d1795ce-0614-4665-85ae-4385400781af/26-6a952331d763f.webp' />&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/974d4cdb-50ab-4cee-8d69-d757a094e6ad/26-6a952330eea8f.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-31T06:43:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Tony</name>
            </author>
            <title type="text"><![CDATA[சென்சேஷனல் இன்ஸ்டா பிரபலம் அமலா ஷாஜி தமிழ் சினிமாவில் என்ட்ரி, ஹீரோ இவரா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/amala-shaji-entry-in-tamil-cinema-1788151953"></link>
            <id>https://cineulagam.com/article/amala-shaji-entry-in-tamil-cinema-1788151953</id>
            <summary type="text">அமலா ஷாஜிஅமலா ஷாஜி இன்ஸ்டாகிராம் உலகின் லேடி சூப்பர் ஸ்டார் என்று தான் சொல்வார்கள். அந்தளவிற்கு மில்லியன் கணக்கான ஃபாலோயர்கள் இவருக்கு உண்டு. 

அமலா...</summary>
            <content type="html"><![CDATA[<h2>அமலா ஷாஜி</h2><p>அமலா ஷாஜி இன்ஸ்டாகிராம் உலகின் லேடி சூப்பர் ஸ்டார் என்று தான் சொல்வார்கள்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/296eb229-65f4-4842-95b9-b4cf80f6db34/26-6a95089422f87.webp' /></p><p>அந்தளவிற்கு மில்லியன் கணக்கான ஃபாலோயர்கள் இவருக்கு உண்டு. 

அமலா ஷாஜி நீண்ட நாட்களாக சினிமாவில் நடிப்பார் என எதிர்பார்த்த நிலையில், தற்போது தமிழ் சினிமாவில் Entry ஆகவுள்ளார்.</p><p></p><h2>சினிமாவில் என்ட்ரி</h2><p>

பிரபல நடிகர் விக்ரம் பிரபு அடுத்து நடிக்கும் படத்தில் <a href="https://www.youtube.com/watch?v=Sy-Po1ROBzM" target="_blank">அமலா ஷாஜி</a> முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளாராம். இந்த படம் விக்ரம் பிரபு அவர்களின் 26வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a6676690-2582-4c7f-aa97-f635d27d9671/26-6a950894cf34c.webp' /></p><p>மேலும் சிறை வெற்றியை தொடர்ந்து இந்த படத்தின் மீது ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு உள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/317b72a8-4e28-42ca-b1f8-4377cd081770/26-6a950895873a2.webp' /></p>]]></content>
            <updated>2026-08-31T06:40:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடல் அலைகள் நிலத்திற்குள் வரும் வாய்ப்பு - வளிமண்டலவியல் திணைக்களத்தின் எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/weather-alert-in-sri-lanka-1788155836"></link>
            <id>https://tamilwin.com/article/weather-alert-in-sri-lanka-1788155836</id>
            <summary type="text">கிழக்கு மாகாணத்தின் சில பகுதிகள், பொலன்னறுவை, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மொனராகலை மாவட்டங்களில், மனித உடலால் உணரப்படும் வெ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிழக்கு மாகாணத்தின் சில பகுதிகள், பொலன்னறுவை, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மொனராகலை மாவட்டங்களில், மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை, கவனம் தேவைப்படும் அளவில் இருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p>அதன்படி, பொதுமக்கள் முடிந்தவரை அதிக நீர் அருந்தவும், நிழலான இடங்களில் ஓய்வெடுக்கவும் அறிவுறுத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>கடல் அலைகள் உயர வாய்ப்பு</h2><p>

இதற்கிடையில், புத்தளம் முதல் கொழும்பு வரையிலும், காலி மற்றும் மாத்தறை முதல் பொத்துவில் வரையிலும் உள்ள கடலோரப் பகுதிகளில் கடல் அலைகள் சுமார் 2 - 3 மீட்டர் வரை உயர வாய்ப்புள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7230900f-697d-4c14-825d-335185427d98/26-6a95217d9a799.webp' /></p><p>
</p><p>
இதன் காரணமாக, சிலாபம் முதல் கொழும்பு வரையிலும், காலி முதல் மாத்தறை வரையிலும் உள்ள பகுதிகளில் கடல் அலைகள் நிலத்தை அடையவும் வாய்ப்புள்ளது என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p>குறித்த கடல் பகுதிகளில் கடற்தொழிலாளர்கள் மற்றும் கடலோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் இது குறித்து விழிப்புடன் இருக்க வேண்டுமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-31T06:39:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மட்டக்களப்பிலும் தினசரி 4 மணிநேர நீர் வெட்டு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/daily-4-hour-water-cut-in-batticaloa-too-1788158516"></link>
            <id>https://jvpnews.com/article/daily-4-hour-water-cut-in-batticaloa-too-1788158516</id>
            <summary type="text">&amp;nbsp; மட்டக்களப்பில் நீர் விநியோகத்தை ஒரு நாளைக்கு 4 மணித்தியாலங்களுக்குக் கட்டுப்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகத் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடி...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; மட்டக்களப்பில் நீர் விநியோகத்தை ஒரு நாளைக்கு 4 மணித்தியாலங்களுக்குக் கட்டுப்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகத் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. </p><p>

உன்னிச்சைக் குளத்தின் நீர்மட்டம் குறைந்துள்ளதால், தினசரி முற்பகல் 11.00 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை நீர் விநியோகம் இடைநிறுத்தப்படுவதாக அதன் தலைவர் ஏ.எம்.பி.சி.டி.பண்டார தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/182f68f6-f80e-4d0d-a02e-fabc00794fe4/26-6a9522359cdd8.webp' /></p><h2>வறட்சியான வானிலை</h2><p>

இருப்பினும், நாடு முழுவதும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபைக்குச் சொந்தமான நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் வழமை போல் இயங்கி வருகின்றது.</p><p> 

 
இலங்கையில் ஒரு நாளைக்கு சுமார் 28 லட்சம் கன மீற்றர் நீர் உற்பத்தி செய்யப்படுவதுடன், அதில் 23 முதல் 24 சதவீதமான நீர் பாரிய நீர்த்தேக்கங்களிலிருந்து பெறப்படுகின்றது.</p><p></p><p> </p><p>

மேலும் 65 சதவீதமான நீர் ஆறுகள் மற்றும் ஓடைகள் போன்ற நீர் ஆதாரங்களிலிருந்து பெறப்படுவதாகவும், அதில் சுமார் 6 லட்சம் கன மீற்றர் நீர் களனி கங்கையிலிருந்து பெறப்படுவதாகவும் அவர் கூறினார். </p><p>

நாடு முழுவதும் பெறப்படும் நீரில் சுமார் மூன்றில் ஒரு பங்கு களனி கங்கையிலிருந்தே பெறப்படுகின்றது.
இதனிடையே, வறட்சியான வானிலையினால் மட்டக்களப்பு மற்றும் மொனராகலை மாவட்டங்களுக்கு மட்டுமே ஓரளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தலைவர் குறிப்பிட்டார்.</p><p></p><p> </p><p>

மொனராகலை மாவட்டத்தின் பிபிலை மற்றும் மெதகம ஆகிய பகுதிகளில் நீர் ஆதாரங்களில் நீர் பற்றாக்குறை நிலவுவதால், நீர் விநியோகத்தைக் கட்டுப்படுத்தி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை கூறியுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-31T06:39:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[78 வயதிலும் அமைச்சர் செங்கோட்டையன் இவ்வளவு ஃபிட்டாக இருப்பதன் காரணம் என்ன?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/diet-secret-of-tvk-minister-sengottaiyan-1787911016"></link>
            <id>https://ibctamilnadu.com/article/diet-secret-of-tvk-minister-sengottaiyan-1787911016</id>
            <summary type="text">ஒவ்வொரு மனிதனுடைய வாழ்க்கையிலும் உணவு என்பது மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது. அந்த வகையில், காலையில் நாம் வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடிய உணவானது நமக...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஒவ்வொரு மனிதனுடைய வாழ்க்கையிலும் உணவு என்பது மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது. அந்த வகையில், காலையில் நாம் வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடிய உணவானது நமக்கு அந்த நாள் முழுவதும் நம் உடலை நல்ல ஆரோக்கியமாகவும் செரிமான பிரச்சனை இன்றியும் வைத்துக் கொள்கிறது. </p><p>


இந்நிலையில் தமிழக வெற்றிக்கழகம் அமைச்சர் செங்கோட்டையன் அவர்களுக்கு வயது 78 என்றாலும் அவர் இன்று வரை ஃபிட்டா இருப்பதற்கு பின்னால் இருக்கக்கூடிய காரணம் என்ன? என்பதை பற்றி பார்ப்போம்.</p><p>

 பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டையில் அவர் காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதாக சொல்லி இருக்கிறார். இது குறித்து சட்டமன்ற கூட்டத்தொடரிலும் திமுகவின் முன்னாள் அமைச்சரான கே.என் நேருவும் பேசி இருப்பார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/eb5cce1d-6f91-425e-97b9-5c2559bfca98/26-6a915b698a0f1.webp' /></p><p></p><p> </p><p>இதனை தொடர்ந்து வெறும் வயிற்றில் நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதால் என்னென்ன நன்மைகள் என்ற தேடல் பலருக்கும் தொடங்கியுள்ளது. அதைப்பற்றி பார்ப்போம்.

 நெல்லிக்காயில் வைட்டமின் சி, ஆன்ட்டி ஆக்ஸிடன்ட்கள், பாலிபினால்கள் மற்றும் நார்ச்சத்து போன்ற பல்வேறு ஊட்டச் சத்துக்கள் நிறைந்து இருக்கிறது. </p><p>மேலும், நெல்லிக்காயில் உள்ள வைட்டமின் சி மற்றும் பிற ஆன்டி ஆக்ஸிடென்ட் உடல் நலத்திற்கு நன்மை வழங்கும் என்று பல ஆய்வுகள் தெரிவித்து இருக்கிறது.

 இருந்தாலும் குறிப்பிட்ட சில நூல்களுக்கு இதனை நாம் சிகிச்சையாக கருதக்கூடாது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/67a468df-3dbb-426b-82db-7f5e666e990d/26-6a915b6a41c18.webp' /></p><p> </p><h3>

1. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்:
</h3><p>நெல்லிக்காயில் அதிக அளவில் இருக்க கூடய வைட்டமின் சி, நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உதவுகிறது. மேலும், உடலை பல்வேறு நோய்த்தொற்றுகளில் இருந்து பாதுகாத்து நம்மை வெளிப்புற கிருமி தாக்குதல்களை எதிர்க்கவும் உதவுகிறது. ஒருவர் தொடர்ச்சியாக நெல்லிக்காய் ஜூஸ் குடித்து வருவது அடிக்கடி அவர்களுக்கு ஏற்படும் சளி காய்ச்சல் போன்ற பாதிப்புகளின் வீரிய தாக்குதலை குறைக்கிறது.
</p><h3>
 2. செரிமான ஆரோக்கியத்தை பாதுகாக்கும்: </h3><p>

ஒருவர் வெறும் வயிற்றில் நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பது என்பது அவர்களுக்கு வயிற்றில் செரிமான நொதிகள் மற்றும் சார்களின் சுரப்பை தூண்டி உணவை எளிதில் செரிமானம் செய்ய உதவியாக அமைகிறது. அஜீரணம் மற்றும் உப்புசம் மற்றும் மலச்சிக்கல் போன்ற செரிமான கோளாறுகள் குறையவும் அவை நமக்கு உதவியாக இருக்கிறது.
</p><h3>
3. சரும ஆரோக்கியத்தை காக்கும்:
</h3><p>
 நெல்லிக்காயில் இருக்கக்கூடிய வைட்டமின் சி மற்றும் ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் உடலில் கொலாஜன் உற்பத்தியை தூண்டுகிறது. </p><p>சருமத்தின் நெகிழ்வுத் தன்மையை அவை பாதுகாத்து நமக்கு சுருக்கம் மற்றும் வயதான தோற்றம் ஏற்படுவதையும் தாமதப்படுத்துவதற்கு உதவுகிறது. அதோடு, சருமத்திற்கு இயற்கையான பொழிவையும் ஆரோக்கியமான தோற்றத்தையும் அவை வழங்குகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/67768f54-d293-4af7-8e3b-21762762b582/26-6a915b6af06b7.webp' /></p><p></p><p>
</p><h3>
4. தலைமுடி ஆரோக்கியத்திற்கு நல்லது:</h3><p>
நெல்லிக்காயில் உள்ள அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் தலைமுடியின் வேர்களில் மிகவும் ஆழமாக சென்று நம்முடைய முடியை வலுப்படுத்துகின்றன. </p><p>அவை நம்முடைய வேர்களில் ஆரோக்கியத்தை பாதுகாத்து முடி உதிர்வை தடுக்கிறது. அதைவிட, நம்முடைய தலைமுடி நரைப்பதை தாமதப்படுத்தி இயற்கையான கருமையாக இருக்க உதவுகிறது.</p><h3>

5. ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும்:
</h3><p> நெல்லிக்காயில் உள்ள பயோ ஆக்டிவ் கலவைகள் உடலில் இருக்கக்கூடிய இன்சுலின் உற்பத்தியும் அதனுடைய செயல்பாட்டையும் ஆதரிக்க உதவுகின்றன. </p><p>இதனால் நம்முடைய ரத்த சர்க்கரை அளவை சீராக வைத்திருக்கவும் திடீர் என உயர்வை தவிர்க்கவும் உதவியாக அமைகிறது. நீரழிவு நோய் உள்ளவர்கள் நிச்சயம் நெல்லிக்காய் எடுப்பதற்கு முன்பாக மருத்துவரை ஆலோசிப்பது நன்மையை வழங்கும்.
</p><h3>
6. இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கும்:</h3><p>
 நெல்லிக்காயில் இருக்கக்கூடிய சக்தி வாய்ந்த ஆன்ட்டி ஆக்ஸிடன்ட்கள் உடலில் ஏற்படக்கூடிய ஆக்சிஜனேற்ற அழுத்தத்தை குறைக்க பெரிதும் உதவுகிறது. இது நம்முடைய ரத்தத்தில் கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து ரத்த நாளங்களின் ஆரோக்கியத்தை பாதுகாப்பாக வைக்கிறது. இது நம்முடைய ஒட்டுமொத்த இதய ஆரோக்கியத்தையும் மேம்படுத்தி இதயம் சார்ந்த பிரச்சினைகள் ஏற்படாத அபாயத்தை குறைக்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/adfd9f25-322c-4544-abdd-2ff3e101189e/26-6a915b6bafa1a.webp' /></p><p></p><p>
</p><h3>7. உடல் எடை மேலாண்மைக்கு உதவும்:
</h3><p> நெல்லிக்காய் ஜூஸில் கலோரிகள் மிகக் குறைவாகவும் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் அதிகமாகவும் இருப்பதால் இவை நம்முடைய உடல் எடையை கட்டுப்படுத்த உதவுகிறது. இது நம்முடைய உடலின் மெட்டபாலிசத்தை தூண்டி கொழுப்பை எரிக்கும் திறனை மேம்படுத்த உதவுகிறது. </p><p>ஆதலால், உடல் எடை குறைக்க மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு இவை ஆரோக்கியமான மற்றும் ஆற்றல் தரும் பானமாக விளங்கும்.
</p><h3>
 நெல்லிக்காய் ஜூஸ் குடிக்கும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்:
</h3><p>
 நெல்லிக்காய் பல ஆரோக்கியமான நன்மைகளைக் கொண்டிருந்தாலும் அதனை பயன்படுத்தும் போது நாம் சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்.</p><p> அதாவது, அதிக அமிலத்தன்மை அல்லது வயிற்றுப்புண் பிரச்சனை இருப்பவர்கள் நெல்லிக்காய் ஜூஸை அளவோடு எடுத்துக் கொள்வதே நல்லது. அளவுக்கு அதிகமாக குடிப்பது சிலருக்கு வயிற்று எரிச்சல் அல்லது செரிமான கோளாறுகள் போன்ற அசௌகரியங்களை ஏற்படுத்தப்படும். </p><p>மேலும், நெல்லிக்காய் ஜூஸில் சர்க்கரை அல்லது செயற்கை இனிப்பு சேர்ப்பதை தவிர்த்து இயற்கையான முறையில் நாம் பருகுவதை நமக்கு முழுமையான ஆரோக்கியத்தை வழங்கும். யாருக்காவது தீவிர உடல் நலப் பிரச்சினைகள் இருந்தால் தொடர்ந்து மருந்துகள் எடுத்துக் கொள்பவராக இருந்தால் வழக்கமான உணவில் சேர்ப்பதற்கு முன்பாக மருத்துவரை அணுக வேண்டும்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-31T06:37:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[259 பயணிகளுடன் புறப்பட்ட படகு கவிழ்ந்து விபத்து: 8 பேர் பலி, 18 பேர் மாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/8-dead-as-boat-capsizes-cyprus-with-267-on-board-1788157289"></link>
            <id>https://news.lankasri.com/article/8-dead-as-boat-capsizes-cyprus-with-267-on-board-1788157289</id>
            <summary type="text">Eight dead as boat capsizes off Cyprus with 267 on board: 267 பேருடன் புறப்பட்ட படகொன்று சைப்ரஸ் அருகே கவிழ்ந்ததில் 8 பேர் பலியாகியுள்ளார்கள்.


நே...</summary>
            <content type="html"><![CDATA[<p>Eight dead as boat capsizes off Cyprus with 267 on board: 267 பேருடன் புறப்பட்ட படகொன்று சைப்ரஸ் அருகே கவிழ்ந்ததில் 8 பேர் பலியாகியுள்ளார்கள்.</p><p>


நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை, அதாவது, ஆகத்து மாதம் 30ஆம் திகதி, சைப்ரஸ் நாட்டிலிருந்து துருக்கி நோக்கி படகொன்று புறப்பட்டுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d68915c5-9018-47dc-bef5-0c78380d4603/26-6a951d6b96662.webp' /></p><h3>267 பேருடன் புறப்பட்ட படகு
</h3><p>
சைப்ரஸ் நாட்டிலுள்ள Girne துறைமுகத்திலிருந்து, துருக்கி நாட்டிலுள்ள Taşucu துறைமுகம் நோக்கி, 259 பயணிகள், 8 பணியாளர்களுடன் FILOJET என்னும் அந்தப் படகு புறப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cef31e45-ecba-407f-89f9-25e143107474/26-6a951d6ae1605.webp' /></p><p>படகு புறப்பட்டு சுமார் 15 நிமிடங்களே ஆன நிலையில், சுமார் 11.30 மணியளவில், படகு அலைகளில் சிக்கியுள்ளது. முதல் அலையை சமாளித்தாலும், இரண்டாம் அலையில் சிக்கி கவிழ்ந்துள்ளது அந்தப் படகு.&nbsp;</p><p></p><p>
தகவலறிந்து சைப்ரஸ் நாட்டு மீட்புப் படகுகளும் ஹெலிகொப்டர்களும் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/59342900-48a4-4a67-83b3-95dd99e9bd66/26-6a951d6c4bc6e.webp' /></p><p>தண்ணீரில் தத்தளித்துக்கொண்டிருந்த 249 பேர் மீட்கப்பட்ட நிலையில், எட்டு உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், 18 பேரைக் காணவில்லை என்றும், அவர்களைத் தேடும் பணி தொடர்வதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7c939fcf-0f61-4e79-93e6-3bf284ea2e09/26-6a951d6cf37d0.webp' /></p><p>அந்தப் படகு, 1,686 அடி ஆழத்தில் முழுமையாக மூழ்கிவிட்ட நிலையில், அந்த சம்பவம் தொடர்பில், படகின் கேப்டனும் 7 பணியாளர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-31T06:30:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[சம்பிக ரணவக்க இல்லத்தில் துண்டிக்கப்பட்டதா மின்சாரம்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/was-electricity-cut-off-champika-ranawaka-s-house-1788156340"></link>
            <id>https://ibctamil.com/article/was-electricity-cut-off-champika-ranawaka-s-house-1788156340</id>
            <summary type="text">அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானுக்கு எதிராகப் போரைத் தொடங்கிய நிலையில், &quot;மக்கள்தொகை கூட்டு எதிர்க்கட்சி&quot; என்ற பெயரில் ஒன்றிணைந்த பிளவுபட்ட எதிர்க்கட்சியா...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானுக்கு எதிராகப் போரைத் தொடங்கிய நிலையில், "மக்கள்தொகை கூட்டு எதிர்க்கட்சி" என்ற பெயரில் ஒன்றிணைந்த பிளவுபட்ட எதிர்க்கட்சியானது, இலங்கையின் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு எதிராகப் பொதுக் கருத்தைக் கட்டியெழுப்புவதற்காக, பிரச்சாரத்தை மேற்கொண்டது.
</p><p>
அந்த கும்பலின் கோட்பாட்டாளரும் பிரதான பிரச்சாரக்காரரும் ஆன முன்னாள் எரிசக்தி அமைச்சர் பாட்டலி சம்பிக ரணவக்க, ஏப்ரல் 23 அன்று ஒரு ஊடக மாநாட்டில், ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்திற்குள் நாட்டில் ஒரு பெரிய எரிசக்தி நெருக்கடி ஏற்படும் என்றும், மின்வெட்டு ஏற்படும் என்றும் கூறியிருந்தார்.</p><p>

இருப்பினும், போரின் மத்தியகிழக்கு விளைவுகள் மிகக் கடுமையாக உணரப்பட்டபோது, ​​எரிபொருள் ஒதுக்கீட்டு முறை, வாரத்தின் நடுவில் ஒரு குறுகிய விடுமுறை, மற்றும் சீரான மின்சார விநியோகத்தைப் பராமரிப்பதற்கான முறையான திட்டமிடல் ஆகியவற்றைச் செயல்படுத்தி, உலகம் முழுவதும் போரினால் ஏற்பட்ட நெருக்கடி இந்த நாட்டு மக்களைப் பாதிக்காத வகையில் அரசாங்கம் தேவையான நடவடிக்கைகளை எடுத்தது.</p><p></p><h2>ரணவக்க முன்வைத்திருந்த எச்சரிக்கை</h2><p>

தற்போது 7 மாவட்டங்களைப் பாதிக்கும் கடுமையான வறட்சிக்கு மத்தியிலும், ஆகஸ்ட் மாத இறுதிக்குள் அரசாங்கம் எவ்வித மின்வெட்டும் இன்றி பொது இயல்பு வாழ்க்கையைத் தக்கவைத்துள்ளது.
</p><p>

இந்நிலையில் சம்பிக்கவின் கருத்து குறித்து விமர்சிக்கும் சமூக ஆர்வலர்கள், ''பாட்டலி சம்பிக்கவின் வீட்டில் என்ன மின்சாரம் தடைபட்டு விட்டதா? அல்லது நின்றுவிட்டதா" என கேள்வி எழுப்பி வருகின்றனர்.</p><p>

நாட்டின் எரிசக்தி நிலைமை தொடர்பாக முன்னாள் எரிசக்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க முன்வைத்திருந்த எச்சரிக்கைகள் மீண்டும் அரசியல் விவாதப் பொருளாகியுள்ளன.
</p><p>
எரிபொருள் விநியோகம், மின்சார உற்பத்தி மற்றும் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் உள்ளிட்ட காரணிகள் நாட்டின் மின்சார விநியோகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவை என அப்போது சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. </p><p>

குறிப்பாக, நீடித்த வறட்சி ஏற்பட்டால் நீர்மின் உற்பத்தி பாதிக்கப்படக்கூடும் என்ற அச்சமும் நிலவியது.</p><p></p><h2>மின்சாரத் தேவை முகாமைத்துவம்&nbsp;</h2><p>
</p><p>
எனினும், அரசாங்கத்தின் தரப்பில், எரிபொருள் விநியோகத்தை ஒழுங்குபடுத்துதல், மின்சார உற்பத்திக்குத் தேவையான வளங்களைத் திட்டமிட்டு பயன்படுத்துதல் மற்றும் மின்சாரத் தேவையை முகாமைத்துவம் செய்தல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

இதனிடையே, நாட்டில் எதிர்பார்க்கப்பட்ட அளவிலான மின்வெட்டு ஏற்படாததை அரசாங்கம் தனது நிர்வாக நடவடிக்கைகளின் வெற்றியாக முன்னிறுத்தி வருகிறது.
</p><p>
 மறுபுறம், எதிர்க்கட்சிகள் மின்சாரத் துறையின் நீண்டகால நிலைத்தன்மை, உற்பத்திச் செலவு மற்றும் எரிசக்திப் பாதுகாப்பு தொடர்பில் தொடர்ந்து கேள்விகளை எழுப்பி வருகின்றன.
</p><p>
இதனால், தற்போதைய நிலைமை அரசாங்கத்துக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையிலான மற்றுமொரு அரசியல் விவாதமாக மாறியுள்ளது. </p><p>

எனினும் எதிர்காலத்தில் மின்சாரத் தேவையை எவ்வாறு பூர்த்தி செய்வது, நீர்மின் உற்பத்தியில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளை எவ்வாறு சமாளிப்பது மற்றும் எரிபொருள் இறக்குமதியில் ஏற்படும் சர்வதேச விலை மாற்றங்களை எவ்வாறு கையாள்வது என்பதே அடுத்த கட்டத்தில் அரசாங்கத்துக்கு இருக்கும் முக்கியமான கேள்விகளாக உள்ளன.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP CHANNEL</a><a> </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-31T06:30:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sudaron</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிளிநொச்சியில் தொடரும் தொடருந்து விபத்துகள் - புனரமைக்கக் கோரி கவனயீர்ப்பு போராட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/protest-in-kilinochchi-1788157604"></link>
            <id>https://tamilwin.com/article/protest-in-kilinochchi-1788157604</id>
            <summary type="text">கிளிநொச்சி மாவட்டத்தில் பாதுகாப்பற்ற தொடருந்து கடவைகளை புனரமைத்து தருமாறு கோரி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

இந்த போராட்டமா...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிளிநொச்சி மாவட்டத்தில் பாதுகாப்பற்ற தொடருந்து கடவைகளை புனரமைத்து தருமாறு கோரி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. </p><p>

இந்த போராட்டமானது, இன்று(31.08.2026) கிளிநொச்சி மாவட்ட செயலகம் முன்பாக இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2> 


பாதுகாப்பு தொடருந்து கடவை புனரமைப்பு</h2><p>
இதன்போது, கிளிநொச்சி உமையாள் புரம் முதல் முறிகண்டி வரையான பகுதிகளில் சுமார்
35க்கும் மேற்பட்ட பாதுகாப்புபற்ற கடவைகள் காணப்படுகின்றன. இந்த கடவைகளுக்கு பாதுகாப்பு கடவைகளை அமைக்குமாறு போராட்டக்காரர்களால் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cd377bf3-3fdf-414c-8ea1-fa282525a4de/26-6a951f479a0c4.webp' /></p><p> 

 நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், மத்த
தலைவர்கள் பிரதேச சபைகளின் தவிசாளர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள், பொதுமக்கள்,
பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் அண்மையில் தொடருந்து விபத்தில் உயிரிழந்த மாணவியின் உறவினர்கள் உள்ளிட்ட பலரும் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.</p><p>


இதனைத் தொடர்ந்து, கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர், போக்குவரத்து அமைச்சர், தொடருந்து திணைக்களம் ஆகியவற்றிற்கான மனுக்களும் போராட்டக்காரர்களால் கையளிக்கப்பட்டுள்ளன.&nbsp; &nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/865ce238-d88d-43c2-96a4-7f750ce75c5d/26-6a951f48c199f.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2a78ef65-348c-481f-9608-08b9324fbd4b/26-6a951f499932b.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b89a01cf-4852-4eac-9717-d345191867cb/26-6a951f4a81368.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7504cb51-2bbe-4df8-ace4-626fa1878e10/26-6a951f4b5d99d.webp' /></p><p></p><p></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-31T06:29:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாள சுரங்கத்திற்குள் இன்னமும் சிக்கியுள்ள பல நூறு பேர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/workers-trapped-nepal-tunnels-1788157816"></link>
            <id>https://news.lankasri.com/article/workers-trapped-nepal-tunnels-1788157816</id>
            <summary type="text">933 workers trapped in Nepal tunnels: நேபாள சுரங்கப்பாதைகளில் குறைந்தது 933 தொழிலாளர்கள் சிக்கியிருப்பதாகக் கருதப்படுகிறது.
சுமார் அரை டசின் நீர்மின்...</summary>
            <content type="html"><![CDATA[<p>933 workers trapped in Nepal tunnels: நேபாள சுரங்கப்பாதைகளில் குறைந்தது 933 தொழிலாளர்கள் சிக்கியிருப்பதாகக் கருதப்படுகிறது.
</p><p>சுமார் அரை டசின் நீர்மின் திட்டங்களில் உள்ள சுரங்கங்களில் குறைந்தது 933 தொழிலாளர்கள் சிக்கியிருக்கலாம் என நேபாளத்தின் பேரிடர் மேலாண்மை முகமை தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1a4a41cf-9bcc-4df6-a100-c31513eaaf85/26-6a951f7ade17d.webp' /></p><p>
</p><p>நேபாள வெள்ளப்பெருக்கிற்குப் பிறகு காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 4,247 ஆக உயர்ந்துள்ளது, மேலும் 900-க்கும் மேற்பட்டோர் மரணமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. </p><p>இந்த நிலையில், நீர்மின் திட்டங்களில் உள்ள சுரங்கங்களில் குறைந்தது 933 தொழிலாளர்கள் சிக்கியிருக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அப்பர் திரிசூலி வளாகத்தில், சுமார் 350 பேர் சிக்கியிருக்கக்கூடும் என்று அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்திருந்தனர். </p><p>இந்தியா மற்றும் சீனாவைச் சேர்ந்த ராணுவத்தினர் மற்றும் சிறப்புப் படைகள் பங்கேற்கும் ஒரு பிரம்மாண்டமான மீட்புப் பணி நடைபெற்று வருகிறது.</p><p> ஞாயிற்றுக்கிழமையன்று ராணுவம் தொலைதூரப் பகுதிக்கு ஹெலிகொப்டர் மூலம் இயந்திரங்களைக் கொண்டு சென்றதுடன், மீட்புப் படையினர் சுரங்கத்தின் ஒன்றின் நுழைவாயிலில் இருந்து இடிபாடுகளை அகற்றும் பணியைத் தொடங்கியுள்ளனர்.</p><p></p><p> </p><p>புதன்கிழமை ஏற்பட்ட வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நுவாகோட் மற்றும் ரசுவா மாவட்டங்களில் அமைந்துள்ள திரிசூலி ஆற்றின் 'அப்பர் திரிசூலி ஹைட்ரோபவர் 3A' மற்றும் '3B' ஆகியன ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட மின் நிலையங்களாகும். </p><p>இதனிடையே, சுரங்கங்களில் ஒன்றின் வாயிலிலிருந்து சேறு படிந்த நிலையில் வெளியே இழுக்கப்பட்ட இருவரைக் காட்டும் புகைப்படத்தை நேபாள ராணுவம் முன்னதாக வெளியிட்டிருந்தது. </p><p>சுரங்கத்திற்குள் சுமார் 180 மீற்றர் தொலைவில் முக்கியப் பணி நடைபெறும் பகுதி அமைந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. அந்த இடத்தை அடைவது, அங்கு கடந்த ஆறு நாட்களாகச் சிக்கியிருப்பவர்களின் நிலை குறித்த தகவலை அறிய வாய்ப்பாக அமையும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c50e9b7e-6285-4035-83cd-baf2335fd37e/26-6a951f7b9a4f9.webp' /></p><p> </p><p>இந்த நிலையில், 2க்கு 3 அடி அளவுள்ள துளையின் வழியாக மீட்புக் குழுவினர் கீழே இறங்கியதாகவும், அந்தத் துளை விரிவுபடுத்தப்பட்டு வருவதாகவும் பிரதமர் அலுவலகம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது. </p><p>ஆனால், இதுவரை உள்ளிருந்து எந்தப் பதிலும் வரவில்லை என்றே அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், தொழிலாளர்களின் நிலை குறித்த அச்சம் அதிகரித்துள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-31T06:28:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[மட்டக்களப்பில் தினமும் 4 மணி நேரம் நீர் விநியோகம் தடை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/water-supply-to-batticaloa-for-4-hours-daily-1788155905"></link>
            <id>https://tamilwin.com/article/water-supply-to-batticaloa-for-4-hours-daily-1788155905</id>
            <summary type="text">வறண்ட வானிலை காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள உன்னிச்சைக் குளத்தில் நீர்மட்டம் குறைந்திருப்பதால், அங்கு தினமும் 4 மணி நேரம் நீர் விநியோகம் கட்டு...</summary>
            <content type="html"><![CDATA[<p>வறண்ட வானிலை காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள உன்னிச்சைக் குளத்தில் நீர்மட்டம் குறைந்திருப்பதால், அங்கு தினமும் 4 மணி நேரம் நீர் விநியோகம் கட்டுப்படுத்தப்பட வேண்டியுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
</p><p>
அதன் தலைவர் ஏ. எம். பி. சி. டி. பண்டாரா, உன்னிச்சை குளத்தின் நீர்மட்டம் குறைந்ததன் காரணமாக, தினமும் காலை 11.00 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை நீர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.</p><p>

இருப்பினும், நாடு முழுவதும் உள்ள தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்புச் சபைக்குச் சொந்தமான நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் வழக்கம் போல் இயங்கி வருவதாகவும் தலைவர் தெரிவித்தார்.
</p><h2>நீர் விநியோகத்தைக் கட்டுப்படுத்த&nbsp;</h2><p>இலங்கை ஒரு நாளைக்குச் சுமார் 2.8 மில்லியன் கன மீட்டர் நீரை உற்பத்தி செய்கிறது என்றும், அதில் 23 முதல் 24 சதவீதம் பெரிய நீர்த்தேக்கங்களிலிருந்து பெறப்படுகிறது என்றும் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f998aa40-90e6-4fe2-8c14-e566b0cba601/26-6a951ea922d95.webp' /></p><p>மேலும் 65 சதவீதம் ஆறுகள் மற்றும் ஓடைகள் தொடர்பான நீர் ஆதாரங்களில் இருந்து பெறப்படுகிறது என்றும், அதில் கிட்டத்தட்ட 600,000 கன மீட்டர் களனி ஆற்றில் இருந்து பெறப்படுகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.</p><p>இதற்கிடையில், மட்டக்களப்பு மற்றும் மொனராகலை மாவட்டங்கள் மட்டுமே வறண்ட வானிலையால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
</p><p>
மொனராகலை மாவட்டத்தின் பிபில மற்றும் மெடகம பகுதிகளில் தண்ணீர் பற்றாக்குறை நிலவுவதால், நீர் விநியோகத்தைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதன் தலைவர் ஏ. எம். பி. சி. டி. பண்டார தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-31T06:27:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் விடுமுறை நாளில் அலுவலகம் சென்ற பெண் உத்தியோகஸ்தருக்கு நேர்ந்த துயரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/female-government-employee-dies-in-jaffna-uduvil-1788151488"></link>
            <id>https://jvpnews.com/article/female-government-employee-dies-in-jaffna-uduvil-1788151488</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp; யாழ்ப்பாணம் உடுவில் பிரதேச செயலகத்தில் கடமையாற்றிய பெண் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவர், விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை அலுவலகப் பணிக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp; யாழ்ப்பாணம் உடுவில் பிரதேச செயலகத்தில் கடமையாற்றிய பெண் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவர், விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை அலுவலகப் பணிக்காக அழைக்கப்பட்ட நிலையில், பாதுகாப்பற்ற மின் கசிவில் சிக்கி உயிரிழந்த துயரச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><p> 

 சம்பவத்தில் உடுவில் பிரதேச செயலகத்தின் சுதேச மருத்துவ அபிவிருத்தி உத்தியோகத்தராகக் கடமையாற்றி வந்த, இரண்டு பிள்ளைகளின் தாயாரான நிசாந்தன் சிந்துப்பிரியா (வயது 37) என்பவரே நேற்று (30) உயிரிழந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ac189a9e-b511-499a-97db-35647fef5e56/26-6a9506c2485df.webp' /></p><h2>விடுமுறை நாளிலும் அலுவலகப் பணி</h2><p> </p><p>

அரச அலுவலகங்களுக்கு இடையே நடைபெறும் உற்பத்தித்திறன் போட்டியில் பங்கேற்பதற்காக, உடுவில் பிரதேச செயலகத்தை அழகுபடுத்துதல் மற்றும் ஒழுங்குபடுத்துதல் உள்ளிட்ட பணிகளில் ஊழியர்கள் ஈடுபட்டு வந்துள்ளனர்.</p><p></p><p> </p><p>

திங்கட்கிழமை போட்டிக்கான மதிப்பீடுகள் நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்ட நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாலை அலுவலகத்திற்கு வருமாறு அங்கு கடமையாற்றும் உத்தியோகத்தர்களுக்கு வாட்ஸ்அப் (WhatsApp) ஊடாக அழைப்பு விடுக்கப்பட்டிருந்ததாகத் தெரிகிறது. </p><p>

இதனையடுத்து அலுவலகத்திற்குச் சென்ற பெண் உத்தியோகத்தர், அங்கிருந்த மூலிகைத் தோட்டத்திற்கு நீர் பாய்ச்சும் பணியில் ஈடுபட்டுள்ளார்.</p><p></p><p> </p><p>

இதன்போது அப்பகுதியில் காணப்பட்ட பாதுகாப்பற்ற மின் கசிவு நீருடன் தொடர்புற்றதால், அவர் மீது மின்சாரம் தாக்கியிருக்கலாம் என ஆரம்பக்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. </p><p>

மின்சாரம் தாக்கிய நிலையில் அவர் உடனடியாக மீட்கப்பட்டு, தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டார். 

எனினும், வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்படுவதற்கு முன்னரே அவர் உயிரிழந்துவிட்டதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.</p><p></p><p> </p><p>

விடுமுறை நாளிலும் அலுவலகப் பணிக்காகச் சென்ற நிலையில், இளம் பெண் உத்தியோகத்தர் ஒருவர் இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்தமை , சக உத்தியோகத்தர்களை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. </p><p>
 சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-31T06:24:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாண் உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் விலை அதிகரிப்பு - வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/flour-price-hike-pushes-up-bakery-prices-1788153015"></link>
            <id>https://ibctamil.com/article/flour-price-hike-pushes-up-bakery-prices-1788153015</id>
            <summary type="text">கோதுமை மாவின் விலை உயர்த்தப்பட்டதைத் தொடர்ந்து, பேக்கரி உணவுகளின் விலைகளையும் அதிகரிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

அந்தவக...</summary>
            <content type="html"><![CDATA[<p>கோதுமை மாவின் விலை உயர்த்தப்பட்டதைத் தொடர்ந்து, பேக்கரி உணவுகளின் விலைகளையும் அதிகரிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
</p><p>
அந்தவகையில், பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திகளின் விலை மாற்றம் தொடர்பில் இன்றைய தினம் தீர்மானம் எடுக்கப்பட உள்ளது.</p><p>குறித்த விடயத்தை அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்த்தன தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>கோதுமை மாவின் விலை</h2><p>


பிரீமா மற்றும் செரண்டிப் ஆகிய நிறுவனங்கள் ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலையை நேற்றுமுன்தினம் முதல் நடைமுறைக்கு வரும் வகையில் 17 ரூபாவினால் உயர்த்தியுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/65045cd1-f63a-45cc-8b13-f6d1c9a80588/26-6a951b5dac3fa.webp' /></p><p>



மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழல் காரணமாக, கடந்த பெப்ரவரி மாதம் முதல் கப்பல் கட்டணங்கள், காப்பீட்டுக் கட்டணங்கள் மற்றும் தானியங்களின் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளதால் இந்த விலைத்திருத்தம் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
</p><p>


இதன்படி, மாவின் விலை அதிகரிப்புக்கேற்ப பேக்கரி உற்பத்திகளின் விலைகளை உயர்த்துவது தொடர்பான இறுதி முடிவு இன்று ஊடகங்களுக்கு அறிவிக்கப்படும் என சங்கத்தின் தலைவர் ஜயவர்தன குறிப்பிட்டுள்ளார்.
</p><p>


கோதுமா மாவின் விலை உயர்வினைத் தொடர்ந்து ஏற்கனவே சிற்றுண்டிகளின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-31T06:14:56+00:00</updated>
        </entry>
    </feed>
