<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-08-21T18:34:14+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பல்லேகம ஹேமரத்தின தேரருக்கு VIP நுழைவாயில்! நீதிமன்றத்தில் சர்ச்சை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/pallegama-hemaratne-thero-vip-law-and-order-1787334180"></link>
            <id>https://tamilwin.com/article/pallegama-hemaratne-thero-vip-law-and-order-1787334180</id>
            <summary type="text">முன்னாள் அத்தமஸ்தானதிபதி பல்லேகம ஹேமரத்ன தேரர், குழந்தை துஷ்பிரயோகம் தொடர்பான ஒரு வழக்கில் இன்றையதினம்(21) நீதிமன்றத்திற்கு சென்ற போது அவர் எந்தவிதமான...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் அத்தமஸ்தானதிபதி பல்லேகம ஹேமரத்ன தேரர், குழந்தை துஷ்பிரயோகம் தொடர்பான ஒரு வழக்கில் இன்றையதினம்(21) நீதிமன்றத்திற்கு சென்ற போது அவர் எந்தவிதமான பரிசோதனைக்கும் உட்படுத்தப்படாமல் சென்ற விடயம் பேசுபொருளாக மாறியுள்ளது.</p><p>பல்லேகம ஹேமரத்தன தேரர் தனது சட்டத்தரணியின் காரில் நீதிமன்ற வளாகத்திற்கு வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p>இந்தநிலையிலே,&nbsp;பல்லேகம ஹேமரத்ன தேரர் மாத்திரம் எப்படி பரிசோதனைக்கு உட்படுத்தப்படாமல் நேரடியாக நீதிமன்றத்திற்கு செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டது என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.</p><p>அத்தோடு, நீதிபதியின் நுழைவாயில் ஊடாக செல்வதற்கு சந்தேகநபரான&nbsp;பல்லேகம ஹேமரத்ன தேரருக்கு யார் சிறப்புரிமை வழங்கியது என்பது தொடர்பில் விசாரிக்குமாறும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.</p><p>இந்த விடயம் தொடர்பான விரிவான தகவல்களை நியூஸ் இன்சைட் நிகழ்ச்சியில் காணலாம்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/DbqlkAYMDWI" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-21T18:08:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[தீவிரமடையும் எல் நினோ தொடர்பில் அதிர்ச்சியூட்டும் புதிய தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/el-nino-may-impact-world-1787335708"></link>
            <id>https://news.lankasri.com/article/el-nino-may-impact-world-1787335708</id>
            <summary type="text">This Year&#039;s El Nino May Impact World: இந்த ஆண்டின் எல் நினோ, இதுவரை பதிவானவற்றிலேயே மிக வலிமையானதாக அமையக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஆ...</summary>
            <content type="html"><![CDATA[<p>This Year's El Nino May Impact World: இந்த ஆண்டின் எல் நினோ, இதுவரை பதிவானவற்றிலேயே மிக வலிமையானதாக அமையக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
</p><p>இந்த ஆண்டின் 'எல் நினோ' நிகழ்வு இதுவரை பதிவானவற்றிலேயே மிகத் தீவிரமானதாக அமையக்கூடும் என்ற நிலையில் உள்ளது.</p><h2>மிகவும் தீவிரமான</h2><p>
</p><p>இது உலகம் முழுவதும் தீவிர வானிலை மாற்றங்களை ஏற்படுத்தி, 2027-ஆம் ஆண்டை இதுவரை பதிவானவற்றிலேயே மிக அதிக வெப்பமான ஆண்டாக மாற்றும் அபாயத்தை உருவாக்கியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5a48e96b-a42e-48bf-bf17-4669415398dc/26-6a88941ecf3d0.webp' /></p><p>
</p><p>கடந்த ஒரு நூற்றாண்டுக்கும் மேலான காலத்தில் இதுவே மிகவும் தீவிரமான எல் நினோவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக, பிரித்தானியாவின் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. </p><p>மேலும், மனித நடவடிக்கைகளால் ஏற்படும் நீண்டகால பருவநிலை மாற்றத்துடன் இந்தத் தற்காலிக வெப்ப உயர்வும் சேரும்போது, ​​2030-களின் பிற்பகுதியில் உலகம் எதிர்கொள்ளக்கூடிய வெப்பநிலையை இது ஒரு முன்னோட்டமாகக் காட்டும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். </p><p>எல் நினோ என்பது வெப்பமண்டல பசிபிக் பகுதியில் 'எல் நினோ-தெற்கு அலைவு' (El Nino-Southern Oscillation) என்று அழைக்கப்படும் ஒரு இயற்கையான சுழற்சியின் வெப்பமடையும் கட்டமாகும்.</p><p></p><p> </p><p>தீவிரமடையும் எல் நினோவின் சில விளைவுகள் ஏற்கனவே உணரப்பட்டு வருகின்றன. உதாரணமாக, இந்தோனேசியாவின் நீண்ட, கடுமையான வறண்ட பருவம், நூறாயிரக்கணக்கான ஹெக்டேர் பரப்பளவை எரித்த காட்டுத்தீக்கு வித்திட்டுள்ளது. </p><p>எல் நினோ தீவிரமடைய, அதன் தாக்கமும் மிக மோசமாக இருக்கும் என்றே ஆய்வாளர்களின் கணிப்பாக உள்ளது. பரவலாகக் குறிப்பிடப்படும் 'கிளைமேட் பிரிங்க்' (Climate Brink) தரவுப் பலகையின்படி, 'நினோ 3.4' பகுதியில் தினசரி கடல் மேற்பரப்பு வெப்பநிலை தற்போது, ​​கடந்த 30 ஆண்டுகளின் நகரும் சராசரியை விட சுமார் 2.6 டிகிரி செல்சியஸ் அதிகமாக உள்ளது.</p><h2>எல் நினோவின் தாக்கம்</h2><p> </p><p>இந்த நவம்பரில் எல் நினோ நிகழ்வு 3.9 டிகிரி செல்சியஸ் அளவிலான மாறுபாட்டுடன் உச்சத்தை எட்டும் என்பதையும் தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.</p><p> வெப்பத்தின் உக்கிரம் பெரும்பாலும் அடுத்த ஆண்டிலேயே உணரப்படுவதால், தற்போது சாதனை படைத்துள்ள 2024-ஆம் ஆண்டிற்குப் போட்டியாக இந்த ஆண்டை இது மாற்றக்கூடும்; அத்துடன் 2027-ஆம் ஆண்டு முதலிடத்தைப் பிடிப்பதை ஏறக்குறைய உறுதிசெய்யவும் கூடும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/399905ad-37b1-43e3-8bee-cb494d2fd4cb/26-6a88941f83116.webp' /></p><p> </p><p>காலநிலை மாற்றம் எல் நினோவின் தாக்கங்களை அதிகரிக்கிறது என்பதை விஞ்ஞானிகள் ஒப்புக்கொள்கிறார்கள். பசுமை இல்ல வாயுக்களால் வெப்பமடைந்த நமது வளிமண்டலம் அதிக ஈரப்பதத்தைத் தக்கவைத்துக் கொள்வதால், எல் நினோவுடன் தொடர்புடைய மழையானது மேலும் தீவிரமடையக்கூடும். </p><p>அதுமட்டுமின்றி, அது மண்ணை வறண்டு போகச் செய்து, எல் நினோ வறட்சியை ஏற்படுத்தும் இடங்களில் அந்த வறட்சியை மேலும் தீவிரப்படுத்துகிறது.</p><p> காலநிலை மாற்றமே தீவிரமான எல் நினோ நிகழ்வைத் தூண்டுகிறதா என்பது குறித்து ஒருமித்த கருத்து குறைவாகவே உள்ளது; இருப்பினும், இதற்கான சான்றுகள் தற்போது வெளிவரத் தொடங்கியுள்ளன.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-21T18:06:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[9.5 மில்லியன் பவுண்ஸ் செலுத்த இளவரசர் ஹெரி உள்ளிட்டோருக்கு உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/prince-harry-and-others-ordered-pay-9-5-million-1787334239"></link>
            <id>https://canadamirror.com/article/prince-harry-and-others-ordered-pay-9-5-million-1787334239</id>
            <summary type="text">பிரித்தானியாவின் &#039;டெய்லி மெயில்&#039; பத்திரிகையின் வெளியீட்டாளருக்கு ஆரம்ப சட்டச் செலவாக 9.5 மில்லியன் பவுண்ஸ்களைச் செலுத்துமாறு இளவரசர் ஹெரி உட்பட ஆறு பி...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரித்தானியாவின் 'டெய்லி மெயில்' பத்திரிகையின் வெளியீட்டாளருக்கு ஆரம்ப சட்டச் செலவாக 9.5 மில்லியன் பவுண்ஸ்களைச் செலுத்துமாறு இளவரசர் ஹெரி உட்பட ஆறு பிரமுகர்களுக்கு அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. </p><p>

சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட தனியுரிமை மீறல் வழக்கில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்தே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/afef7610-2f8b-4752-950c-f7adf97f27c1/26-6a888e617122f.webp' /></p>]]></content>
            <updated>2026-08-21T17:44:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ் திருவிழாவில் விபரீதம் ; வாண வேடிக்கையால் தீ விபத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/tragedy-at-jaffna-festival-fire-caused-fireworks-1787333451"></link>
            <id>https://jvpnews.com/article/tragedy-at-jaffna-festival-fire-caused-fireworks-1787333451</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் – நவாலி அந்திரான் கிராமத்தில் நேற்று (20) இரவு நடைபெற்ற திருவிழாவின் போது இடம்பெற்ற வாணவேடிக்கையால் தீ விபத்து ஏற்பட்டு, பனை மரம் மற்றும் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் – நவாலி அந்திரான் கிராமத்தில் நேற்று (20) இரவு நடைபெற்ற திருவிழாவின் போது இடம்பெற்ற வாணவேடிக்கையால் தீ விபத்து ஏற்பட்டு, பனை மரம் மற்றும் பாதுகாப்பு வேலி தீப்பற்றி எரிந்ததுடன், சில பொதுமக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
</p><p>
திருவிழா நிகழ்வுகளின் ஒரு பகுதியாக வாணவேடிக்கைகள் இடம்பெற்றிருந்த நிலையில், அதனால் ஏற்பட்ட தீ காரணமாக குறித்த பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8b9cfc12-6528-4a42-be4e-98505c3997aa/26-6a888b4cdc6db.webp' /></p><p>

இதன்போது அங்கிருந்த பனை மரம் ஒன்றும் பாதுகாப்பு வேலியும் தீப்பற்றி எரிந்துள்ளதுடன், அங்கு திரண்டிருந்த சில பொதுமக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
</p><p>
இச்சம்பவம் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள யாழ்ப்பாண மாவட்ட அரச அதிபர், இவ்வாறான அனர்த்தங்களைத் தவிர்ப்பதற்காக வழிபாட்டுத் தலங்களின் நிர்வாகங்களுக்கு பலமுறை அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
</p><p>
குறிப்பாக, தேவையற்ற ஒலிபெருக்கி பயன்பாடு, பட்டாசு மற்றும் வாணவேடிக்கைகளை வெடித்தல், லேசர் ஒளிக்கீற்றுகளைப் பயன்படுத்துதல், யானைகளை அழைத்துச் செல்லுதல் உள்ளிட்ட பொதுமக்களின் பாதுகாப்புக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய நடவடிக்கைகளைத் தவிர்க்குமாறு தொடர்ச்சியாக அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
இந்த விடயங்கள் தொடர்பில் ஊடகங்கள் வாயிலாகவும் பொதுமக்களுக்கும், வழிபாட்டுத் தலங்களின் நிர்வாகங்களுக்கும் தொடர்ச்சியாக கோரிக்கைகள் மற்றும் அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டு வருவதாகவும் அரச அதிபர் தெரிவித்துள்ளார்.
</p><p>
எனினும், சில ஆலய நிர்வாகங்கள் வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களுக்கு உரிய முறையில் செவிசாய்க்காமல், பொதுமக்களுக்கு சிரமத்தையும் பாதிப்பையும் ஏற்படுத்தக்கூடிய செயற்பாடுகளை தொடர்ந்து முன்னெடுத்து வருவது கவலையளிப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>
இந்நிலையில், வழிபாட்டுத் தலங்களின் நிர்வாகத்தினர், மதகுருமார்கள் உள்ளிட்ட பொறுப்புக்கூற வேண்டிய அனைத்து தரப்பினரும் பொதுமக்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை வழங்கி, திருவிழா மற்றும் மத நிகழ்வுகளை பொறுப்புடன் நடத்த வேண்டும் என அரச அதிபர் வலியுறுத்தியுள்ளார்.</p><p>

மேலும், எதிர்காலத்தில் இவ்வாறான தீ விபத்துகள் மற்றும் ஏனைய அனர்த்தங்கள் ஏற்படுவதைத் தடுக்கும் வகையில், உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டு, சமூகப் பொறுப்புணர்வுடன் திருவிழா நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.</p><p>

நவாலி அந்திரான் பகுதியில் இடம்பெற்றுள்ள இந்தச் சம்பவம், திருவிழாக்கள் மற்றும் பொது நிகழ்வுகளின் போது பாதுகாப்பு விதிமுறைகளை முறையாகப் பின்பற்ற வேண்டியதன் அவசியத்தை மீண்டும் எடுத்துக்காட்டியுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-21T17:31:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[உக்ரைனுக்குப் புதிய ஆபத்து! ரஷ்யாவிற்குப் படையெடுக்கும் வடகொரிய இராணுவ வீரர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/north-korea-sends-drone-operators-to-russia-1787332384"></link>
            <id>https://ibctamil.com/article/north-korea-sends-drone-operators-to-russia-1787332384</id>
            <summary type="text">ரஷ்யாவின் தாக்குதல்களுக்கு ஆதரவளிக்கும் வகையில், வடகொரியாவிலிருந்து மேலும் 8500 இராணுவ வீரர்கள் கொண்ட புதிய படைப்பிரிவு ரஷ்யாவிற்கு வந்து சேர்ந்துள்ளத...</summary>
            <content type="html"><![CDATA[<p>ரஷ்யாவின் தாக்குதல்களுக்கு ஆதரவளிக்கும் வகையில், வடகொரியாவிலிருந்து மேலும் 8500 இராணுவ வீரர்கள் கொண்ட புதிய படைப்பிரிவு ரஷ்யாவிற்கு வந்து சேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>உக்ரைன் இராணுவ உளவுத்துறையின் துணைத் தலைவர் மேஜர் ஜெனரல் வடிம் ஸ்கிபிட்ஸ்கி (Vadym Skibitskyi) இதனை தெரிவித்துள்ளார்.</p><p>இந்த புதிய படையில் உக்ரைன் இலக்குகளைத் துல்லியமாகத் தாக்கும் திறன் கொண்ட 400 ட்ரோன் இயக்குநர்கள் (Drone Operators) சேர்க்கப்பட்டிருப்பது உக்ரைனுக்குப் புதிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.</p><p></p><h2>வடகொரிய வீரர்கள்&nbsp;</h2><p> ரஷ்யாவிற்கு ஆதரவாக வடகொரிய வீரர்கள் களமிறக்கப்பட்டு வரும் நிலையில் ட்ரோன்களை இயக்கும் சிறப்புப் பயிற்சி பெற்ற வீரர்கள் அதிகாரப்பூர்வமாக இந்த அலைவீச்சில் சேர்க்கப்பட்டிருப்பது இதுவே முதல்முறையாகும். </p><p>இவர்களது ட்ரோன்கள் உக்ரைன் எல்லைக்குள் உளவு பார்க்கவும் தாக்குதல் நடத்தவும் பயன்படுத்தப்படலாம் என உக்ரைன் எச்சரித்துள்ளது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5911ce48-1294-4aac-a63e-274663690da7/26-6a88894934fbd.webp' /></p><p>புதிதாக வந்துள்ள வடகொரியப் படைகள் பெரும்பாலானவை ரஷ்யாவின் குர்ஸ்க் (Kursk) எல்லைப் பகுதியில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன. </p><p>இதில் 1,000 பொறியாளர்கள் மற்றும் கண்ணிவெடிகளை அகற்றும் நிபுணர்களும் (Engineers and Deminers) அடங்குவர் என தெரிவிக்கப்படுகின்றது.</p><p> </p><p>வடகொரிய வீரர்கள் உக்ரைனிய எல்லைக்குள்ளே நேரடியாகப் போரிடாமல், ரஷ்யாவின் பின்பகுதிப் பாதுகாப்பை வலுப்படுத்துவார்கள் என்றும் இதன் மூலம் கூடுதல் ரஷ்ய வீரர்களை உக்ரைன் மீதான தாக்குதலுக்குப் பயன்படுத்த ரஷ்யா திட்டமிட்டுள்ளதாகவும் உக்ரைன் உளவுத்துறை தெரிவித்துள்ளது.</p><p></p><h2>வடகொரிய வல்லுநர்கள்</h2><p>செப்டம்பர் மாதம் நடைபெறவிருக்கும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மற்றும் வடகொரியா ஜனாதிபதி கிம் ஜோங் உன் சந்திப்பின் போது மேலும் 50,000 வடகொரிய வீரர்களை அனுப்ப ரஷ்யா கோரிக்கை விடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. </p><p>வடகொரியா இதுவரை ரஷ்யாவிற்கு 150-க்கும் மேற்பட்ட KN-23 மற்றும் KN-24 பாலிஸ்டிக் ஏவுகணைகளை வழங்கியுள்ளதாகவும் மேலும் 120 ஏவுகணைகளை வழங்க உறுதியளித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2a6627bb-9dd2-405d-a44b-b9e9ca3b3cdf/26-6a88894a05a08.webp' /></p><p>ஏவுகணைகளை இயக்குவதற்கு உதவ வொரோனேஷ் (Voronezh) பகுதிக்கு சுமார் 90 வடகொரிய வல்லுநர்கள் அனுப்பப்பட்டுள்ளனர்.</p><p>ஆட்கள் மற்றும் ஆயுதங்களை வழங்குவதற்குப் பதிலாக ரஷ்யாவின் சக்திவாய்ந்த S-400 வான் பாதுகாப்பு அமைப்பைத் தருமாறு வடகொரியா கோரியுள்ளதுடன் ஏற்கனவே Pantsir-S1 அமைப்பைப் பெற்றுள்ளதாகவும் உக்ரைன் தெரிவித்துள்ளது.&nbsp;</p><p>அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், கிம் ஜோங் உன்னைக் கோபப்படுத்தக் கூடாது என்பதற்காகத் தென்கொரியாவுடனான கூட்டுக் கடற்படைப் பயிற்சிகளைக் குறைப்பதாக அறிவித்திருந்த நிலையில் ரஷ்யா - வடகொரியா இடையிலான இந்த தீவிர இராணுவ ஒத்துழைப்பு நேட்டோ (NATO) உறுப்பு நாடுகளுக்குப் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p> </p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-21T17:26:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[விசேட தேவையுடைய சிறுவர்களின் கல்வியை டிஜிட்டல் மயமாக்குவதற்காக முன்னோடித் திட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/digitize-the-education-children-with-special-needs-1787332199"></link>
            <id>https://jvpnews.com/article/digitize-the-education-children-with-special-needs-1787332199</id>
            <summary type="text">விசேட தேவையுடைய சிறுவர்களின் கல்வி நடவடிக்கைகளை டிஜிட்டல்மயமாக்குவது மற்றும் உதவித் தொழில்நுட்பங்களை விரிவாகப் பயன்படுத்துவதற்கான மூலோபாயத் திட்டங்களை...</summary>
            <content type="html"><![CDATA[<p>விசேட தேவையுடைய சிறுவர்களின் கல்வி நடவடிக்கைகளை டிஜிட்டல்மயமாக்குவது மற்றும் உதவித் தொழில்நுட்பங்களை விரிவாகப் பயன்படுத்துவதற்கான மூலோபாயத் திட்டங்களைத் தயாரிப்பது தொடர்பிலான விசேட கலந்துரையாடல் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் தலைமையில் இடம்பெற்றது.</p><p> 

முறையான திட்டமிடலின்றி இத்தகைய திட்டங்களை நடைமுறைப்படுத்துவதன் மூலம் முதலீடுகளும் உபகரணங்களும் வீணடிக்கப்படக்கூடும் என்பதால், சம்பந்தப்பட்ட திட்டத்தின் முன்னோடி கட்டத்தை விரிவாகத் திட்டமிடுவதன் முக்கியத்துவம் மற்றும் ஒவ்வொரு துறைக்கும் உரிய சவால்கள் மீது கவனம் செலுத்த வேண்டியதன் அவசியமும் இதன்போது விசேடமாக வலியுறுத்தப்பட்டது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f503fb5d-e712-46f4-92c9-ebf8e53478cc/26-6a888669dd920.webp' /></p><p>இந்தத் திட்டத்தின் ஆரம்பத்தில் மட்டுப்படுத்தப்பட்ட பாடசாலைகள் மற்றும் உபகரணங்களைப் பயன்படுத்தி முன்னோடித் திட்டமாக நடைமுறைப்படுத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. </p><p>

அதன்மூலம் கிடைக்கும் நடைமுறை அனுபவங்கள் மற்றும் பிரச்சினைகளை ஆராய்ந்து, அவசியமான திருத்தங்களையும் மேம்பாடுகளையும் மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. </p><p>

அத்துடன், ஆரம்பக் கட்டத்தில் இனங்காணப்பட்ட குறைபாடுகளுடைய கற்கும் மாணவர்களின் குறிப்பிட்ட தேவைகளில் மட்டும் கவனம் செலுத்தி, எதிர்காலத்தில் இந்தத் திட்டத்தை முறையாக நாடளாவிய ரீதியில் விரிவுபடுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. </p><p>

தற்போது நடைமுறையிலுள்ள கல்விச் சீர்திருத்தங்களுடன் இந்தத் திட்டம் இணைக்கப்படுவதுடன், அதன் ஆரம்பக் கட்டத்தில் 1, 2 மற்றும் 6 ஆம் தரங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படவுள்ளது. </p><p>

இதன்போது, விசேட தேவையுடைய சிறுவர்களுக்காக ஏற்கனவே அடிப்படை வசதிகள் உள்ள பாடசாலைகள் அல்லது கல்விச் சீர்திருத்தங்களின் கீழ் அபிவிருத்திக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பாடசாலைகளுக்கு விசேட கவனம் செலுத்தப்படும். </p><p>

இது தவிர, முறையான அடையாள மற்றும் பரிசோதனை முறைகளை நிறுவுதல், கல்வியலாளர்களுக்குத் தேவையான பயிற்சியை வழங்குதல் மற்றும் அணுபவ வசதிகள் தொடர்பான தரங்களை வலுப்படுத்துவதன் மூலம் இந்தத் திட்டத்தை மிகவும் பயனுள்ள வகையில் நடைமுறைப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-21T17:11:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[வரலாற்றில் மிகத் தீவிர எல் நினோ நிலைமை! பிரித்தானிய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/the-most-intense-el-ni-o-event-in-history-1787332077"></link>
            <id>https://tamilwin.com/article/the-most-intense-el-ni-o-event-in-history-1787332077</id>
            <summary type="text">இந்த ஆண்டில் உருவாகிவரும் எல் நினோ காலநிலை மாற்றம், கடந்த ஒரு
நூற்றாண்டுக்கும் மேலான காலத்தில் பதிவான மிகத் தீவிரமான நிகழ்வாக அமையும் என
பிரித்தானிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்த ஆண்டில் உருவாகிவரும் எல் நினோ காலநிலை மாற்றம், கடந்த ஒரு
நூற்றாண்டுக்கும் மேலான காலத்தில் பதிவான மிகத் தீவிரமான நிகழ்வாக அமையும் என
பிரித்தானியாவின் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.</p><p>

வழமையாக எல் நினோ நிகழ்வின் போது பசிபிக் பெருங்கடலின் மேற்பரப்பு வெப்பநிலை 1
முதல் 2 பாகை செல்சியஸ் வரை அதிகரிக்கும்.</p><p>எனினும், எதிர்வரும் மாதங்களில் இது
3 பாகை செல்சியஸிற்கும் (5.4°F) அதிகமாக உயரும் என கணிக்கப்பட்டுள்ளதாக ஆய்வு
மையம் தெரிவித்துள்ளது.</p><h2>கடுமையான வறட்சி&nbsp;</h2><p>இது தொடர்பாகக் கருத்து வெளியிட்டுள்ள நீண்டகால வானிலை கணிப்புப் பிரிவின்
தலைவர் பேராசிரியர் ஆடம் ஸ்கைஃப், "இது முன்னெப்போதுமில்லாத ஒரு தீவிரமான
காலநிலை நிகழ்வாகும். எனது கணிப்புகளில் இவ்வளவு வலுவான எல் நினோ சமிக்ஞையை
நான் இதுவரை கண்டதில்லை" எனத் தெரிவித்துள்ளார்.</p><p>
இந்த எல் நினோ தீவிரமடைவதால், தென்னமெரிக்கா, மேற்கு பசிபிக் பிராந்தியம்,
தென்னாப்பிரிக்கா மற்றும் வடகிழக்கு அவுஸ்திரேலியா போன்ற பகுதிகளில் கடுமையான
வறட்சி ஏற்படும் ஆபத்து நிலவுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7a332cca-6c9f-4fd6-acd0-3826cfe8805e/26-6a8885ef14073.webp' />&nbsp; &nbsp;</p><p>

அதேவேளை, பிரித்தானியா உள்ளிட்ட வடமேற்கு ஐரோப்பிய நாடுகளில் எதிர்வரும்
இலையுதிர் மற்றும் குளிர்காலத்தில் அதிக மழையும் புயல் சூழலும் உருவாகும் என
எச்சரிக்கப்பட்டுள்ளது.
</p><p>
மனித நடவடிக்கைகளால் ஏற்படும் புவி வெப்பமடைதலுடன் இந்த எல் நினோ நிகழ்வும்
சேர்வதால், எதிர்வரும் 2027 ஆம் ஆண்டானது உலக வரலாற்றிலேயே மிக அதிக வெப்பமான
ஆண்டாகப் பதிவாக அதிக வாய்ப்புள்ளதாக வானியல் வல்லுநர்கள்
சுட்டிக்காட்டியுள்ளனர்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-21T17:08:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹோர்முஸ் நீரிணையில் மோதல் தீவிரம்: பின்வாங்கப் போவதில்லை என ஈரான் அதிரடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/iran-navy-ready-to-guard-strategic-sea-routes-1787329026"></link>
            <id>https://ibctamil.com/article/iran-navy-ready-to-guard-strategic-sea-routes-1787329026</id>
            <summary type="text">ஹோர்முஸ் நீரிணையை சுற்றியுள்ள கடல்சார் முடக்கங்கள் மற்றும் அமெரிக்காவின் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில், தனது நாட்டின் வியூக ரீதியான கடல் வழிகளை...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹோர்முஸ் நீரிணையை சுற்றியுள்ள கடல்சார் முடக்கங்கள் மற்றும் அமெரிக்காவின் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில், தனது நாட்டின் வியூக ரீதியான கடல் வழிகளையும் எல்லைகளையும் பாதுகாக்க ஈரான் முழுமையான தயார் நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> ஈரானிய கடற்படைத் தளபதி ஷஹ்ராம் இரானி (Shahram Irani) இதனை தெரிவித்துள்ளார்.</p><p>மேலும் தெரிவித்த அவர், தங்களது படைகள் எதிரிகளைத் தடுத்து நிறுத்தியுள்ளதாகவும் எதிரிப் படைகளை ஒரு அடி கூட பின்வாங்க அனுமதிக்க மாட்டோம் என்றும் அவர் திட்டவட்டமாக எச்சரித்துள்ளார்.</p><p></p><h2>பிராந்தியப் பதற்றம்</h2><p>அத்தோடு “இன்று நாட்டின் வியூக முக்கியத்துவம் வாய்ந்த நீரிணைகளும் கடல் வழிகளும் ஈரானிய இஸ்லாமியக் குடியரசிற்கு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவை. </p><p>அப்பகுதிகளில் தனது பலமான பிரசன்னத்தின் மூலம் தேசிய நலன்களையும் நாட்டின் பாதுகாப்பையும் பாதுகாக்கும் பணியை ஈரானிய கடற்படை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது” என அவர் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/43567612-a663-466c-8728-5e302ba30802/26-6a88853818159.webp' /></p><p> ஈரானிய ஆயுதப் படைகள் முழு பலத்துடன் எதிரிகளுக்கு எதிராக உறுதியுடன் நிற்பதாகவும் எதிரிப் படைகள் நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக ஒரு அடி கூட முன்னெடுத்து வைப்பதையோ அல்லது தங்களை பின்வாங்க வைப்பதையோ அனுமதிக்க மாட்டார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே ஹோர்முஸ் நீரிணையை மையமாகக் கொண்டு பரஸ்பரக் கடற்படை முற்றுகை தீவிரமடைந்துள்ள நிலையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஈரான் மீது பேரழிவை ஏற்படுத்தக்கூடிய பொருளாதாரப் போரை அறிவித்துள்ளார். </p><p>இந்தச் சூழலில், ஈரானியக் கடற்படையின் இந்த எச்சரிக்கை அறிக்கை பிராந்தியப் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்மை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-21T17:07:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ட்ரம்பின் சந்திப்பு அழைப்பிற்கு வடகொரியா அமைதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/north-korea-silent-on-trump-s-meeting-invitation-1787330423"></link>
            <id>https://tamilwin.com/article/north-korea-silent-on-trump-s-meeting-invitation-1787330423</id>
            <summary type="text">அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன்னை
மீண்டும் சந்திக்க விருப்பம் தெரிவித்துள்ள போதிலும், அதற்கு வடகொரியா உடனடி
ஆர்வம...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன்னை
மீண்டும் சந்திக்க விருப்பம் தெரிவித்துள்ள போதிலும், அதற்கு வடகொரியா உடனடி
ஆர்வம் காட்டவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.</p><p>
இரு தலைவர்களுக்கும் இடையே சிறந்த தனிப்பட்ட உறவு நிலவியபோதிலும்,
பேச்சுவார்த்தைக்கான நிபந்தனைகளை வடகொரியா கடினமாக்கும் என்பதை இது
உணர்த்துகின்றது.
</p><p>
தென்கொரியாவுடனான கூட்டுப் இராணுவப் பயிற்சிகளை அமெரிக்கா திடீரெனக்
குறைத்ததுடன், இந்த ஆண்டின் பிற்பகுதியில் கிம் ஜோங் உன்னைச் சந்திக்க
எதிர்பார்ப்பதாக ட்ரம்ப் தெரிவித்திருந்தார்.</p><h2>பேச்சுவார்த்தை</h2><p>

இருப்பினும், அமெரிக்காவின் கொள்கைகளில் மாற்றம் ஏற்படாதவரை இவ்வாறான
சந்திப்புகள் நன்மையளிக்காது என வடகொரியத் தலைவரின் சகோதரியான கிம் யோ ஜாங்
சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b1bd0b85-259c-4310-8e40-f76d0ffe00f8/26-6a88847931940.webp' /></p><p>
</p><p>
இரு தலைவர்களுக்கும் இடையிலான நல்உறவு நாட்டின் பாதுகாப்பு நலன்களிலோ அல்லது
இராணுவத் திறன்களை வலுப்படுத்தும் முயற்சிகளிலோ எந்தவொரு தாக்கத்தையும்
ஏற்படுத்தாது என வடகொரியா தெளிவுபடுத்தியுள்ளது.
</p><p>
மேலும், பேச்சுவார்த்தைக்குத் திரும்புவதற்கு அமெரிக்கா தன் மீதான விரோதப்
போக்கைக் கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட கடும் நிபந்தனைகளை வடகொரியா
முன்வைத்துள்ளது.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-21T17:01:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[ராகு தோஷம் பில்லி சூனியம் நீக்கி வேண்டுதலை நிறைவேற்றும் எலுமிச்சை மாலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/lemon-garland-to-remove-rahu-dosha-and-black-magic-1787312418"></link>
            <id>https://manithan.com/article/lemon-garland-to-remove-rahu-dosha-and-black-magic-1787312418</id>
            <summary type="text">அம்மன் வழிபாடு என்பது மிகவும் சக்தி வாய்ந்த ஒன்றாகும். அதாவது, நீங்கள் தீய சக்திகளால் சூழ்ந்திருக்கிறீர்கள் எதிர்மறை ஆற்றலால் சூழ்ந்து இருக்கிறீர்கள் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அம்மன் வழிபாடு என்பது மிகவும் சக்தி வாய்ந்த ஒன்றாகும். அதாவது, நீங்கள் தீய சக்திகளால் சூழ்ந்திருக்கிறீர்கள் எதிர்மறை ஆற்றலால் சூழ்ந்து இருக்கிறீர்கள் என்ற பொழுது நிச்சயம் அம்மன் வழிபாடு உங்களுக்கு மிகப்பெரிய அளவில் கைகொடுக்கும். </p><p>மேலும், அம்மன் வழிபாட்டில் மிகவும் சக்தி வாய்ந்த வழிபாடாக எலுமிச்சை மாலை சாற்றி வழிபாடு செய்யக்கூடிய ஒன்று உள்ளது.

 இந்த எலுமிச்சை மாலை அம்மனுடைய வெப்பமான திருமேனியை குளிர்விப்பதற்காக சாற்றக்கூடிய ஒன்றாக கருதப்படுகிறது. </p><p>மேலும், அம்மனுக்கு எலுமிச்சை மாலை மிகவும் உகந்ததாகவும் கருதப்படுகிறது. இவ்வாறு அம்மனுக்கு எலுமிச்சை மாலை சாற்றி வழிபாடு செய்வதனால் நமக்கு குடும்பத்தில் மகிழ்ச்சியும் துன்பங்கள் விலகி தீய சக்திகளிடம் இருந்து நம்மை காப்பாற்றியும் அம்மன் அருள் புரிவாள் என்பது ஐதீகம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9311ae52-2731-4f1f-ba7d-ab7918c63730/26-6a88392392832.webp' /></p><p></p><h3>
 ராகு தோஷம்:
</h3><p> அதைப்போல், நம்முடைய ஜாதகத்தில் இருக்கக்கூடிய ராகு, கேது, தோஷம் ஒருவருக்கு செய்யக்கூடிய பில்லி, சூனியம், பாதிப்புகளில் இருந்து காப்பாற்றவும் இந்த எலுமிச்சை மாலை மிகவும் உதவியாக இருக்கிறது. மேலும், ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சை தீபம் ஏற்றி எலுமிச்சை மாலை சாற்றி வழிபாடு செய்வதால் நாம் முற்றிலும் ராகு தோஷத்தில் இருந்து விடுபடலாம்.
</p><h3> விரதம்:
</h3><p> அம்மனுக்கு எலுமிச்சை மாலை சாற்றும் பொழுது நாம் விரதம் மேற்கொள்ள வேண்டும். இதன் வழியாக அம்மனுடைய முழு ஆசீர்வாதத்தையும் நாம் பெறலாம். பொதுவாக, எலுமிச்சம் பழம் தீய சக்திகளை விரட்டக்கூடிய சக்தி வாய்ந்தது.
</p><h3>பன்னீர்:
</h3><p> எலுமிச்சை மாலை சாற்றும் முன்பு நாம் பழங்களை வாங்கி சுத்தமான தண்ணீரில் சிறிது பன்னீர் ஊற்றி பழங்களை போட்டு நன்றாக கழுவிக்கொள்ள வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/43d779d0-55c2-4615-bd95-9059342f2953/26-6a8839244a267.webp' /></p><p></p><h3> எலுமிச்சை மாலை:
</h3><p> மஞ்சள் தேய்த்த நூலை நாம் இந்த எலுமிச்சை மாலை கோர்ப்பதற்கு பயன்படுத்தலாம். மேலும், ஒற்றைப்படை எண்ணிக்கையில் எலுமிச்சை பழங்களை கோர்த்து மாலையாக கட்டி அம்மனிடம் வேண்டிக்கொண்டு சாற்றுவது நம்மளுடைய வேண்டுதலை நிறைவேற்றும். </p><p>இவ்வாறு அம்மனுக்கு செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் செய்வதினால் நமக்கு அம்மனுடைய பரிபூரண அருளும் ஆசீர்வாதமும் கிடைக்கும். அதோடு, நம்முடைய குடும்பத்தில் மகிழ்ச்சியும் தீய சக்திகளின் தாக்கங்களும் விலகும்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-21T16:41:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[போலி கனேடிய கடவுச்சீட்டுடன் பயணித்த இலங்கையர் தாய்வானில் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sri-lankan-arrested-thailand-fake-canad-passport-1787330135"></link>
            <id>https://jvpnews.com/article/sri-lankan-arrested-thailand-fake-canad-passport-1787330135</id>
            <summary type="text">சிங்கப்பூரில் இருந்து கனடாவின் டொராண்டோ நோக்கி சென்ற விமானத்தில் பயணித்த இலங்கையர் ஒருவர், தாய்வானின் சர்வதேச விமான நிலையத்தில் போலி கனேடிய கடவுச்சீட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிங்கப்பூரில் இருந்து கனடாவின் டொராண்டோ நோக்கி சென்ற விமானத்தில் பயணித்த இலங்கையர் ஒருவர், தாய்வானின் சர்வதேச விமான நிலையத்தில் போலி கனேடிய கடவுச்சீட்டுடன் சிக்கியுள்ளார்.</p><p>

தாய்வான் உள்துறை அமைச்சின் தேசிய குடிவரவு முகவரகத்தின் தகவலின்படி, அவரது கடவுச்சீட்டில் காணப்பட்ட முரண்பாடுகளை EVA Air நிறுவன ஊழியர்கள் முதலில் அவதானித்துள்ளனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/93c2ed1c-daea-457b-bac2-b51de0abf59e/26-6a887e5960e09.webp' /></p><p>இதையடுத்து விமான நிலைய குடிவரவு அதிகாரிகளுக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில், ஆவணப் பரிசோதனை மற்றும் அடையாளச் சரிபார்ப்பின் மூலம் கடவுச்சீட்டு போலியானது கண்டறியப்பட்டது.</p><p>இந்நிலையில் குறித்த நபர் விமானத்தில் தொடர்ந்து பயணிப்பதற்கு தாய்வான் அதிகாரிகள் அனுமதி மறுத்துள்ளனர்.</p><p>விசாரணையின்போது தனது ஆவணங்களில் பிரச்சினைகள் உள்ளதா என ஆராய்ந்த அதிகாரிகள், போலி கடவுச்சீட்டு பயன்படுத்தியதை குறித்த நபர் மறைக்க முயன்றதாக தெரிவித்துள்ளனர்.
</p><p>
மேலும், அதிகாரிகள் கடவுச்சீட்டின் பாதுகாப்பு அம்சங்களை பரிசோதித்து, அதிலுள்ள தகவல்களை அவரது அடையாளத் தகவல்களுடன் ஒப்பிட்டுள்ளனர்.
</p><p>
மேலும், விசாரணையில் சரியாக பதில் வழங்கவில்லை என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
</p><p>
இதன் பின்னர் சர்வதேச நடைமுறைகளுக்கு அமைவாக குறித்த இலங்கையர் சிங்கப்பூருக்கு நாடுகடத்தப்பட்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-21T16:35:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் சர்ச்சையை ஏற்படுத்திய ஆலய சம்பவம்! சந்தேகநபருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/excessive-use-of-lighting-at-a-temple-in-jaffna-1787293143"></link>
            <id>https://tamilwin.com/article/excessive-use-of-lighting-at-a-temple-in-jaffna-1787293143</id>
            <summary type="text">புதிய இணைப்புபண்டத்தரிப்பு- பிரான்பற்று முருகன் ஆலயத் திருவிழாவின் போது ஏற்பட்ட கண்
பாதிப்பு சம்பவத்தையடுத்து, இந்த நேரம் வரை 385 பேர் பாதிக்கப்பட்டு...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>பண்டத்தரிப்பு- பிரான்பற்று முருகன் ஆலயத் திருவிழாவின் போது ஏற்பட்ட கண்
பாதிப்பு சம்பவத்தையடுத்து, இந்த நேரம் வரை 385 பேர் பாதிக்கப்பட்டு
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.</p><h2>ஆறாம் இணைப்பு</h2><p>யாழ்ப்பாணம் பிரான்பற்று முருகன் ஆலய திருவிழாவில் பயன்படுத்தப்பட்ட அதிகளவான
ஒளிப்பாவனையால் 200க்கும் மேற்பட்டோர் கண்கள் பாதிக்கப்பட்ட நிலையில்
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
</p><p>
இந்நிலையில் குறித்த ஒளிக்கு காரணமான மின்குமிழ்களை தம்வசம் வைத்திருந்தவர்
இளவாலை பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் விசாரணைகளின் பின்னர் இன்றையதினம்(21) மல்லாகம்
நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டார்.</p><p> அந்தவகையில் அவரை எதிர்வரும் மூன்றாம்
திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.</p><h2>ஐந்தாவது இணைப்பு</h2><p>யாழ்ப்பாணம், பிரான்பற்று பகுதியில் உள்ள முருகன் ஆலயத்தில் திருவிழாவை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்ட மின் விளக்கு அலங்காரத்தால் தற்போதுவரை 235 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.<br><br>பாதிக்கப்பட்டவர்களை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்வதற்காக பேருந்து ஒன்றும் அனுப்பி
வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>நான்காவது இணைப்பு</h2><p>பண்டத்தரிப்பு பிரான்பற்று முருகன் ஆலயத்தில் நேற்றைய(20) ஆலயத் திருவிழாவின் போது
நூற்றுக்கணக்கானோர் கண் பாதிப்புக்குள்ளான சம்பவம் தொடர்பான விசாரணைகள்
முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p><p>கண் பாதிப்புக்கான காரணத்தை கண்டறியும் நோக்கில் பொலிஸார் மற்றும்
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ள நிலையில், ஆலய
வளாகத்தில் பொருத்தப்பட்டிருந்த அதிக சக்தி கொண்ட சீனத் தயாரிப்பு மின்
விளக்குகள் சிலவற்றை பொலிஸார் கையகப்படுத்தி எடுத்துச் சென்றுள்ளனர்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/WQ7bM1YT4SA" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p>
கையகப்படுத்தப்பட்ட மின் விளக்குகள் தற்போது ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு
வருவதுடன், அவற்றின் மின்சக்தி அளவு, பயன்பாட்டுத் தன்மை மற்றும் பொதுமக்கள்
பயன்பாட்டிற்கு அவை அனுமதிக்கப்பட்டவையா அல்லது தடை செய்யப்பட்டவையா என்பது
தொடர்பிலும் ஆராயப்பட்டு வருகிறது.&nbsp;</p><h2>மூன்றாம் இணைப்பு</h2><p>யாழ்.பண்டத்தரிப்பு பிரான்பற்று முருகமூர்த்தி ஆலயத்தில் நேற்றிரவு நடைபெற்ற
திருவிழாவில் அதிகளவு ஒலி காரணமாக கண் பாதிப்புக்குள்ளானவர்கள் அனைவரும்
உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டு, அங்கு சிகிச்சை
மற்றும் விசேட கண்காணிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக
வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2c9126fe-085d-4814-86c6-16b9041742f6/26-6a8843de7f133.webp' /></p><p>
</p><p>கண் பாதிப்புக்குள்ளானவர்களில் இம்முறை உயர்தரப் பரீட்சைக்கு தோற்றும் இரு
மாணவர்களுக்கு மேலதிக சிகிச்சைகளைப் பெற்று வீடு திரும்பியுள்ளதுடன், அவர்கள்
தொடர்ந்தும் மருத்துவ கண்காணிப்பில் இருக்குமாறு பெற்றோருக்கு
அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><p>
இதற்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் தனியான விடுதியொன்று
ஒதுக்கப்பட்டு, அனுமதிக்கப்பட்டவர்களுக்கு மேலதிக வைத்தியர்கள், தாதியர்கள்
மற்றும் ஊழியர்களின் பங்களிப்புடன் சிகிச்சைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
</p><p>இந்நிலையில், தற்போது ஆண்கள் 58 பேரும், பெண்கள் 44 பேரும், சிறுவர்கள் 55
பேரும் என மொத்தம் 157 பேர் கண் பாதிப்பு உள்ளிட்ட பாதிப்புகளுக்காக
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/84d11e32-fddd-485e-bc99-2487af8f2a96/26-6a8843df65f63.webp' /></p><p>
கண் பாதிப்புக்கான அறிகுறிகள் தென்படும் அனைவரும் தாமதமின்றி உடனடியாக
வைத்தியசாலைக்கு வருமாறு சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.</p><p>
மேலும், சுகாதார சேவைகள் பணிமனை, பொலிஸார், பிரதேச செயலாளர்கள் மற்றும்
தொடர்புடைய அதிகாரிகள் இணைந்து நிலைமையை தொடர்ந்து கண்காணித்து, தேவையான
நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p><h2>இரண்டாவது இணைப்பு&nbsp;</h2><p>பண்டத்தரிப்பு பிரான்பற்று பகுதியில் நடைபெற்ற ஆலயத் திருவிழாவின் போது
இடம்பெற்ற அதிகளவிலான வாணவேடிக்கை மற்றும் லேசர் ஒளிக்கீற்றுப் பயன்பாடு
காரணமாக பலர் கண் பாதிப்புக்குள்ளாகி வைத்தியசாலைகளை நாடி வருகின்றனர்.
</p><p>இதுதொடர்பில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் கண் வைத்திய நிபுணர் வைத்தியர்&nbsp; எம். மலரவன் பொதுமக்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்களை விடுத்துள்ளார்.</p><p>
️ கண்களில் எரிச்சல், சிவத்தல், நீர்வருதல், வலி, பார்வை மங்குதல் அல்லது
ஏதேனும் மாற்றம் ஏற்பட்டால் அலட்சியம் செய்ய வேண்டாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dbf0db8c-637c-4ee7-a408-b2a7e2bc8c8e/26-6a880a998b5a2.webp' /></p><p>
</p><p>உடனடியாக அருகிலுள்ள வைத்தியசாலைக்குச் சென்று பரிசோதனை செய்து
கொள்ளுமாறும், தேவையானவர்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் கண்
சிகிச்சைப் பிரிவை நாடுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><p>
️ குறிப்பாக நேற்றைய திருவிழாவில் கலந்துகொண்ட சிறுவர்கள், பெண்கள் உள்ளிட்ட
அனைவரும் தங்களது கண்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை கவனமாக அவதானிக்க வேண்டும்.
கண்களை தேய்க்க வேண்டாம்.
</p><p>சுயமாக எந்தவொரு கண் மருந்தையும் பயன்படுத்த வேண்டாம்.
சந்தேகம் ஏற்பட்டாலும் உடனடியாக வைத்திய ஆலோசனையைப் பெறுங்கள்.
</p><p>“கண் பாதிப்பு ஏற்பட்டால் தாமதிக்காமல் வைத்தியசாலையை நாடுங்கள்” – வைத்தியர் எம். மலரவன்
இந்த அறிவிப்பை அதிகமானவர்களுக்கு பகிர்ந்து, பாதிக்கப்பட்டவர்களை உடனடியாக
வைத்தியசாலைக்கு செல்லுமாறு அறிவுறுத்துவோம்.</p><h2>வைத்தியசாலையில் அனுமதி</h2><p>யாழ்ப்பாணம்,பண்டத்தரிப்பு பிரான்பற்று பகுதியில் உள்ள முருகமூர்த்தி
ஆலயத்தில் நேற்று (20.08.2026) நடைபெற்ற திருவிழாவின் போது அதிகளவில்
வாணவேடிக்கைகள் மற்றும் அதிக சக்தி கொண்ட லேசர் ஒளிக்கீற்றுகள்
பயன்படுத்தப்பட்டதால், சிறுவர்கள், பெண்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர்
கண் பாதிப்புக்குள்ளாகி வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக
அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p><p>முதற்கட்ட தகவல்களின் அடிப்படையில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சுமார்
120 பேரும், தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் 46 பேரும் சிகிச்சைக்காக
அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><h2>நோயாளிகளின் எண்ணிக்கை&nbsp;</h2><p>

இவர்களில் சிறுவர்கள் மற்றும் பெண்கள் சுமார் 60 பேரும், ஆண்கள் 50-க்கும்
மேற்பட்டோரும் அடங்குவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. </p><p>மேலும்
பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து வைத்தியசாலைகளை நாடி வருவதால், நோயாளிகளின்
எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

“பொதுமக்கள் எவ்வித பதற்றமும் இன்றி உடனடியாக வைத்தியசாலைகளை நாடலாம்.
</p><p>அதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளன” என யாழ்ப்பாணம் போதனா
வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் ரி. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.</p><p>

இதேவேளை, பாதிக்கப்பட்டவர்களை உடனடியாக வைத்தியசாலைகளுக்குச் செல்லுமாறு
பிரதேச சபையினால் ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்டு வருகிறது.
</p><p>
குறிப்பாக கண்களில் பாதிப்பு, எரிச்சல் அல்லது பார்வை தொடர்பான பிரச்சினைகள்
ஏற்பட்டவர்கள் தாமதிக்காமல் அருகிலுள்ள வைத்தியசாலையை நாடுமாறு
அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><h2>ஆலயத் திருவிழா</h2><p>
</p><p>
மேலும், ஆலயத் திருவிழாவின் போது மின் இணைப்புகளை வழங்கியதாகக் கூறப்படும்
சிலர் இளவாலை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.</p><p>

இதனிடையே, இதேபோன்று நவாலி அந்திரான் பகுதியில் நடைபெற்ற ஆலயத் திருவிழாவின்
போதும் வாணவேடிக்கையால் அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2a4f5d61-1510-4a3f-bdb4-a5434702ed78/26-6a87f1b62cc5d.webp' /></p><p>
</p><p>இதன்போது பனை மரம் ஒன்றும் பாதுகாப்பு வேலியும் தீப்பற்றி எரிந்ததுடன், சில
பொதுமக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.</p><p>

இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் கவலை வெளியிட்டுள்ள யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க
அதிபர் மருதலிங்கம் பிரதீபன், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும்
வகையில் ஆலய நிர்வாகங்கள் மற்றும் மதகுருமார்கள் உள்ளிட்ட அனைத்து
பொறுப்புக்கூற வேண்டிய தரப்பினரும் சமூகப் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என
கேட்டுக்கொண்டுள்ளார்.
</p><p>
தேவையற்ற ஒலிபெருக்கி பயன்பாடு, அதிகளவிலான பட்டாசு மற்றும் வாணவேடிக்கை, அதிக
சக்தி கொண்ட லேசர் ஒளிக்கீற்றுகள் உள்ளிட்ட பொதுமக்களின் பாதுகாப்புக்கு
பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய செயற்பாடுகளைத் தவிர்க்குமாறும் அவர்
வலியுறுத்தியுள்ளார்.
</p><p>
பொதுமக்களின் பாதுகாப்பை விட எந்தவொரு திருவிழா கொண்டாட்டமும் முக்கியமானதல்ல
எனவும், எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாத வகையில் ஆலய
நிர்வாகங்கள் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும்
கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p><p><b><i>&nbsp;மேலதிக தகவல் - தீபன்</i></b></p><h2>முதலாம் இணைப்பு</h2><p>யாழ்ப்பாணம், பிரான்பற்று பகுதியில் உள்ள முருகன் ஆலயத்தில் திருவிழாவை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்ட மின் விளக்கு அலங்காரத்தால் சுமார் 35 பேருக்கு கண் பார்வை பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>

குறித்த ஆலயத்தில் திருவிழா நடைபெற்று வரும் நிலையில், ஆலய வளாகம் பல்வேறு மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
</p><h2>பார்வை பிரச்சினை</h2><p>
இந்நிலையில், அதிகளவில் பயன்படுத்தப்பட்ட மின் விளக்குகளின் ஒளியால் நேற்று ஆலயத்திற்கு சென்றவர்களில் சுமார் 35 பேருக்கு கண் பார்வை தொடர்பான பாதிப்புகள் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b96d6b16-a4d5-4f7b-9533-87ec33cef535/26-6a87f1b55bdf5.webp' /></p><p>பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
</p><p>
இதனையடுத்து, குறித்த ஆலயத்திற்கு நேற்று சென்ற அனைவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குச் சென்று கண் பரிசோதனை மேற்கொள்ளுமாறு யாழ்ப்பாணம் மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் அறிவுறுத்தியுள்ளனர்.</p><p></p><p></p><p>YOU MAY LIKE THIS VIDEO</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/CFWVi5B8mkE" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-08-21T16:33:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[தோல்வியடைந்த வழக்கு... இளவரசர் ஹரி உட்பட 6 பேர் ரூ 124 கோடி செலுத்த உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/harry-celeb-pals-hit-court-bill-1787329337"></link>
            <id>https://news.lankasri.com/article/harry-celeb-pals-hit-court-bill-1787329337</id>
            <summary type="text">Prince Harry and others ordered to pay: தனியுரிமை தொடர்பான வழக்கில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, இளவரசர் ஹரி மற்றும் மற்ற ஆறு பேர் ரூ. 124 கோடியைச் செல...</summary>
            <content type="html"><![CDATA[<p>Prince Harry and others ordered to pay: தனியுரிமை தொடர்பான வழக்கில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, இளவரசர் ஹரி மற்றும் மற்ற ஆறு பேர் ரூ. 124 கோடியைச் செலுத்த உத்தரவு.
</p><p>தனியுரிமை மீறல் தொடர்பான வழக்கில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, இளவரசர் ஹரி மற்றும் இசைக்கலைஞர் எல்டன் ஜான், நடிகை எலிசபெத் ஹர்லி உள்ளிட்ட ஆறு பேரும் 'டெய்லி மெயில்' (Daily Mail) பத்திரிகை வெளியீட்டாளரின் சட்டச் செலவுகளுக்காக ஏழு நாட்களுக்குள் 9.54 மில்லியன் பவுண்டுகள் (சுமார் 124 கோடி ரூபாய்) இடைக்காலத் தொகையைச் செலுத்த வேண்டும் என்று நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/47376e05-3d0c-4058-837d-e9465da9770d/26-6a887b3c04ba2.webp' /></p><p>
</p><p>இருப்பினும், இடைக்காலத் தொகையானது 7.9 மில்லியன் பவுண்டுகள் அல்லது 102 கோடி ரூபாய்க்கும் சற்று அதிகமான தொகையாக மட்டுமே இருக்க வேண்டும் என்று மனுதாரர்களின் சட்டத்தரணிகள் கூறியுள்ளனர். </p><p>அதன் பிறகு, மனுதாரர்கள் கூடுதலாக ரூ. 326 கோடி செலுத்த நேரிடலாம். வெள்ளிக்கிழமை அன்று வழங்கப்பட்ட தீர்ப்பில், நீதிபதி மேத்யூ நிக்லின் குறிப்பிடுகையில், பிரபலங்களால் குற்றச்சாட்டுகளை நிரூபிக்க முடியாததால், அந்தப் பணம் ஒரு வாரத்திற்குள் செலுத்தப்பட வேண்டும் என்று கூறினார்.</p><p> அசோசியேட்டட் நியூஸ்பேப்பர்ஸ் நிறுவனத்தால் அலைபேசிகள் சட்டவிரோதமாக ஹேக் செய்யப்பட்டது போன்ற முறைகேடுகள் நடந்ததாக ஏழு மனுதாரர்களும் குற்றம் சாட்டியிருந்தனர். இருப்பினும், அந்தப் பதிப்பகம் இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்தது.</p><p></p><p> </p><p>மேலும், குற்றச்சாட்டுகளை ஆதரிக்கப் போதுமான ஆதாரங்கள் இல்லை என்றும், அந்தச் செய்திகள் நம்பகமான வட்டாரங்களிலிருந்து வந்திருக்கலாம் என்றும் நீதிபதி கூறியுள்ளார். </p><p>இவ்வழக்குடன் தொடர்புடைய பிற முக்கியப் பிரமுகர்களில், இனவெறிக்கு எதிரான செயல்பாட்டாளரான டோரின் லாரன்ஸ் (இவரது மகன் ஸ்டீபன் 1993-ல் பேருந்துக்காகக் காத்திருந்தபோது கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார்), எல்டன் ஜானின் கணவரும் திரைப்படத் தயாரிப்பாளருமான டேவிட் ஃபர்னிஷ், நடிகை சேடி ஃப்ரோஸ்ட் மற்றும் அரசியல்வாதி சைமன் ஹியூஸ் ஆகியோர் அடங்குவர். </p><p>இளவரசர் ஹரியும் அவரது மனைவி மேகன் மெர்க்கலும் மீண்டும் பிரித்தானியாவுக்குக் குடியேறவிருப்பது பொதுவெளியில் தெரியவந்த இரண்டு நாட்களுக்குப் பிறகு இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/18386d04-f62f-44ca-b694-7af43e4b14ed/26-6a887b3cae5af.webp' /></p><p> </p><p>டெய்லி மிரர் பத்திரிகையின் வெளியீட்டாளர்கள் பரவலாகவும் தொடர்ச்சியாகவும் தொலைபேசி ஒட்டுக் கேட்பதில் ஈடுபட்டதைக் கண்டித்து, இளவரசர் ஹரி 2023ல் தொடர்ந்த வழக்கில் அவருக்கு சாதகமான தீர்ப்பு வந்திருந்தது.
</p><p>கடந்த ஆண்டு, தி சன் நாளேடு, பல ஆண்டுகளாக இளவரசர் ஹரியின் வாழ்க்கையில் அத்துமீறி நுழைந்ததற்காக மன்னிப்புக் கோரியதுடன், அவரது தனியுரிமை மீறல் வழக்கை முடிவுக்குக் கொண்டுவர கணிசமான இழப்பீட்டைச் செலுத்தவும் ஒப்புக்கொண்டது.
</p><p>தற்போதைய இந்த விவகாரத்தில் 
மேல்முறையீடு செய்வதற்கான அனுமதியைத் தாக்கல் செய்ய, சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு அக்டோபர் 2 ஆம் திகதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-21T16:19:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[வாகனத் திருட்டுகள் குறித்து பொலிஸாரின் அவசர எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/police-issue-urgent-warning-about-vehicle-thefts-1787328718"></link>
            <id>https://jvpnews.com/article/police-issue-urgent-warning-about-vehicle-thefts-1787328718</id>
            <summary type="text">மோட்டார் வாகன சாரதிகள் மற்றும் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களினாலும் வாகங்கள் அலட்சியமாக நிறுத்திச் செல்வதால், அவை குற்றவாளிகளால் திருடப்படுவது தொடர்பில...</summary>
            <content type="html"><![CDATA[<p>மோட்டார் வாகன சாரதிகள் மற்றும் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களினாலும் வாகங்கள் அலட்சியமாக நிறுத்திச் செல்வதால், அவை குற்றவாளிகளால் திருடப்படுவது தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். </p><p>

இன்று (21) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யூ. வூட்லர் இதனைக் குறிப்பிட்டார்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e41d72d4-f871-402d-975d-8d77b158c9aa/26-6a8878cfbdb44.webp' /></p><p>அத்தகைய வாகனங்கள் அல்லது மோட்டார் சைக்கிள்களுக்குள் விடப்படும் விலைமதிப்பற்ற ஆவணங்கள் மற்றும் பொருட்கள் என்பவை காணாமல் போவது தொடர்பிலும் தற்போது பதிவாகியுள்ளதாகத் அவர் மேலும் தெரிவித்தார். </p><p>

சில சந்தர்ப்பங்களில், முச்சக்கர வண்டி சாரதிகள் மற்றும் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் இயந்திரம் இயங்கிக் கொண்டிருக்கும் போதே வேறு வேலைகளில் ஈடுபடுவதுடன், மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டிகளின் சாவிகளை அவற்றிலேயே விட்டுச் செல்வதன் மூலம் குற்றவாளிகள் உடனடியாக அவற்றைத் திருடிச் செல்வது அவதானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.</p><p> 

அத்துடன், தங்களது வாகனம், மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டியை வீட்டின் திறந்த வெளியில் நிறுத்தி வைப்பதும், வீட்டின் வாயில் கதவுகளுக்கு பூட்டுப் போடாமல் இருப்பதன் மூலமும் மோட்டார் சைக்கிள்கள் அல்லது வாகனங்கள் திருடப்படுவது தொடர்பில் பொலிஸாருக்குத் தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். </p><p>

மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் வாகனம் நிறுத்தப்பட்டால், அந்த இடத்தைச் சுற்றியுள்ள பாதுகாப்பு உத்தியோகத்தரிடமும், வர்த்தக நிலைய வளாகத்தில் வாகனம் நிறுத்தப்பட்டால் அது தொடர்பான பாதுகாப்பு உத்தியோகத்தர் அல்லது வர்த்தக நிலையத்தின் கடமையில் உள்ள ஊழியரிடம் அது குறித்துத் தெரிவிக்குமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார். </p><p>

அத்துடன், இரவில் இருண்ட பகுதியிலோ அல்லது தனிமையான இடத்திலோ மோட்டார் சைக்கிள் அல்லது வாகனம் நிறுத்தப்பட்டிருந்தால், அது குற்றவாளி ஒருவருக்குக் குற்றம் இழைப்பதற்கு உதவி புரிவதாக அமையும் என்பதால், அது குறித்தும் விழிப்புடன் இருக்க வேண்டும் என அவர் சுட்டிக்காட்டினார். </p><p>

எவ்வாறாயினும், தங்களது வாகனம் திருடப்பட்டால், பொலிஸ் அவசர அழைப்பு இலக்கங்களான 119 / 118 அல்லது அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கும், அருகில் உள்ள பொலிஸ் அதிகாரிகளுக்கும் உடனடியாக அறிவிக்குமாறு அவர் மேலும் கேட்டுக்கொண்டார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-21T16:12:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ்.கதிரிப்பாய் பகுதியில் திடீர் தீ பரவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/fire-broke-kathirippai-area-of-achchuveli-1787328049"></link>
            <id>https://tamilwin.com/article/fire-broke-kathirippai-area-of-achchuveli-1787328049</id>
            <summary type="text">யாழ்ப்பாணம்- அச்சுவேலி கதிரிப்பாய் பகுதியில் திடீர் தீ பரவல்
ஏற்பட்டுள்ளது.குறித்த சம்பவமானது&amp;nbsp; இன்று(21.8.2026) மதியம் இடம்பெற்றள்ளது.

தரிசு ...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம்- அச்சுவேலி கதிரிப்பாய் பகுதியில் திடீர் தீ பரவல்
ஏற்பட்டுள்ளது.</p><p>குறித்த சம்பவமானது&nbsp; இன்று(21.8.2026) மதியம் இடம்பெற்றள்ளது.</p><p>
</p><p>
தரிசு நிலமாக காணப்படும் பல ஏக்கர் புற்களைக் கொண்ட சமவெளியில் ஏற்பட்ட தீயில்
பல ஏக்கர் நிலத்தில் தீ பரவியது.</p><h2>தீ பரவல்</h2><p>
</p><p>இதனால் அருகில் உள்ள வீடுகள் மற்றும் வயல் நிலங்கள் பகுதிளவில் பாதிப்படைந்தன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e193262d-7144-4943-a0d2-7487be5da469/26-6a88763415594.webp' /></p><p>

யாழ்ப்பாண மாநகர சபையின் தீயணைப்பு படையினரின் பல மணி நேர போராட்டத்தின்
பின்னர் தீயினைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-21T16:01:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[வருங்கால முதலமைச்சர் என கத்திய ரசிகர்.. சிவகார்த்திகேயன் கொடுத்த ரியாக்ஷனை பாருங்க]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/sivakarthikeyan-silences-fan-for-saying-next-cm-1787327277"></link>
            <id>https://cineulagam.com/article/sivakarthikeyan-silences-fan-for-saying-next-cm-1787327277</id>
            <summary type="text">நடிகர் விஜய் சினிமாவை விட்டுவிட்டு முழு நேர அரசியலில் களமிறங்கி, தேர்தலில் ஜெயித்து தற்போது முதலமைச்சராகவும் பதவி வகுத்து வருகிறார். அவர் வெற்றி பெற்ற...</summary>
            <content type="html"><![CDATA[<p>நடிகர் விஜய் சினிமாவை விட்டுவிட்டு முழு நேர அரசியலில் களமிறங்கி, தேர்தலில் ஜெயித்து தற்போது முதலமைச்சராகவும் பதவி வகுத்து வருகிறார். அவர் வெற்றி பெற்ற பிறகு தமிழ் சினிமாவில் மேலும் பல நடிகர்கள் தாங்கள் அரசியலுக்கு வர விரும்புவதாக வெளிப்படையாகவே தெரிவித்து வருகின்றனர்.</p><p>ராகவா லாரன்ஸ், விஷால் தொடங்கி தனுஷ் வரை இந்த லிஸ்ட் நீள்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b3404bc9-684b-417e-a6fd-50e3f5ebe67f/26-6a88732f656a5.webp' /></p><p>
</p><h2>சிவகார்த்திகேயன் </h2><p>இந்நிலையில் முன்னணி ஹீரோவான சிவகார்த்திகேயன் இன்று நகை கடை திறப்பு விழா ஒன்றுக்காக வந்திருந்தார்.
</p><p>அப்போது ரசிகர் ஒருவர் "வருங்கால முதலமைச்சர்" என அவரை பார்த்து கத்தினார். அதற்கு சிவகார்த்திகேயன் உடனே வாய் மீது விரல் வைத்து அந்த ரசிகரை அமைதியாக இருக்க சொல்லி இருக்கிறார். அந்த வீடியோ தற்போது வைரலாகி இருக்கிறது. இதோ பாருங்கள்.&nbsp;</p><p><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="in" dir="ltr">Fan: Varingala Mudhalvar..<a href="https://x.com/hashtag/Sivakarthikeyan?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#Sivakarthikeyan</a>: Shhh..🤫😄 <a href="https://t.co/2d6ISvEXAD">pic.twitter.com/2d6ISvEXAD</a></p>&mdash; Laxmi Kanth (@iammoviebuff007) <a href="https://x.com/iammoviebuff007/status/2090684923204309041?ref_src=twsrc%5Etfw">August 21, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p>]]></content>
            <updated>2026-08-21T15:55:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்கா - கனடா இடையே எல்லை தாண்டிய பயணம் அதிகரிப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/canadians-and-americans-are-crossing-the-border-1787323518"></link>
            <id>https://canadamirror.com/article/canadians-and-americans-are-crossing-the-border-1787323518</id>
            <summary type="text">அரசியல் மற்றும் வர்த்தக ரீதியிலான பதற்றங்கள் நீடித்து வரும் நிலையிலும், கனடா மற்றும் அமெரிக்காவிற்கு இடையேயான எல்லை தாண்டிய சுற்றுலாப் பயணிகளின் எண்ணி...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரசியல் மற்றும் வர்த்தக ரீதியிலான பதற்றங்கள் நீடித்து வரும் நிலையிலும், கனடா மற்றும் அமெரிக்காவிற்கு இடையேயான எல்லை தாண்டிய சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை ஜூன் மாதத்தில் இருபுறமும் அதிகரித்துள்ளதாகக் கனடா புள்ளிவிவர திணைக்களம் தெரிவித்துள்ளது.
</p><p>கனடாவைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவிற்குச் சென்று திரும்பிய பயணங்களின் எண்ணிக்கை 2.3 மில்லியனாக உயர்ந்துள்ளது.இது கடந்த ஆண்டை விட 5 சதவீதம் அதிகமாகும்.
</p><p>அதேபோல, அமெரிக்க வாழ் மக்கள் கனடாவிற்கு மேற்கொண்ட பயணங்களின் எண்ணிக்கை 3 மில்லியன் ஆக உயர்ந்து, 6.1 சதவீத வளர்ச்சியைக் கண்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fd7ac0cc-5364-4de9-b423-6f007533e7a3/26-6a886481092a4.webp' /></p><p>சாலை வழியாக வாகனம் மூலம் மேற்கொள்ளப்பட்ட பயணங்களே இந்த உயர்வுக்கு முக்கியக் காரணமாக அமைந்துள்ளன. </p><p>அதேசமயம், இரு நாடுகளுக்கும் இடையேயான வான்வழிப் பயணம் சற்று குறைந்துள்ளது.
சில சுற்றுலாப் பயணிகள் இரு நாடுகளுக்கு இடையேயான நல்லுறவை ஆதரித்துச் சுற்றுலா மேற்கொள்வதாகத் தெரிவித்துள்ளனர். </p><p>
எனினும், அரசியல் சூழல் காரணமாகக் கனடாவின் உள்ளூர் இடங்களிலேயே விடுமுறையைக் கழிக்க விரும்புவதாகச் சிலர் கூறியுள்ளனர்.</p><p>
நீண்டகாலப் புள்ளிவிவரங்களின்படி, இரு நாடுகளுக்கும் இடையேயான பதற்றம் அதிகரிப்பதற்கு முன்பிருந்த அளவை விட, கனடியர்களின் அமெரிக்கப் பயணம் இன்னமும் 24.6 சதவீதம் குறைவாகவே உள்ளது குறிப்பிடத்தக்கது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-21T15:42:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[மகனின் உணவகத்திற்குத் தீ வைத்த தாய்: நீதிமன்றம் வழங்கிய தண்டனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/sentencing-for-mother-who-burned-down-1787322975"></link>
            <id>https://canadamirror.com/article/sentencing-for-mother-who-burned-down-1787322975</id>
            <summary type="text">&amp;nbsp;கனடாவின் ஒன்டாரியோ மாகாணம் பேஃபீல்ட் பகுதியில் அமைந்துள்ள தனது மகனின் உணவகத்திற்குத் தீ வைத்த குற்றத்திற்காக சோனியா லார்சன் என்பவருக்கு 12 மாதங்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கனடாவின் ஒன்டாரியோ மாகாணம் பேஃபீல்ட் பகுதியில் அமைந்துள்ள தனது மகனின் உணவகத்திற்குத் தீ வைத்த குற்றத்திற்காக சோனியா லார்சன் என்பவருக்கு 12 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. </p><p>
சிறைத் தண்டனையுடன் இரண்டு ஆண்டுகள் கண்காணிப்புப் பிணை மற்றும் 60 மணி நேரச் சமூக சேவையும் அவருக்கு தண்டனையாக வழங்கப்பட்டுள்ளது.</p><p>
அக்டோபர் 17, 2023 அன்று 'தி ஹப் ஆன் தி டாக்ஸ்'உணவகத்தில் ஏற்பட்ட பெருந்தீயில் கட்டிடம் கடுமையாகச் சேதமடைந்தது. இதனால் சுமார் 1.7 மில்லியன் டாலர் அளவிற்கு இழப்பு ஏற்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/663d78f2-013a-4d46-98e2-022590330be3/26-6a886261210ba.webp' /></p><p>
</p><p>அக்டோபர் 13 மற்றும் 16 ஆகிய திகதிகளிலும் சோனியா உணவகத்திற்குள் புகுந்து தீ வைக்க முயன்றது கண்காணிப்பு கேமராக்கள் மூலம் தெரியவந்தது. </p><p>
அக்டோபர் 17 ம் திகதி பாதுகாப்பு அலாரம் அமைப்பை முடக்கிவிட்டு திட்டமிட்டுத் தீ வைத்துள்ளார்.
திட்டமிட்டு இந்தத் தீவைப்பு சம்பவம் நடத்தப்பட்டுள்ளது, இது சமூகத்திற்குப் பெரும் ஆபத்தை ஏற்படுத்தியுள்ளது" என்று நீதிபதி டி.ஜி. மெக்டொனால்ட் சுட்டிக்காட்டினார்.
</p><p>சோனியா இதற்கான தெளிவான காரணத்தைக் கூறவில்லை என்றாலும், அந்தச் சமயத்தில் தான் மனதளவில் கடுமையான பின்னடைவைச் சந்தித்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>பாதிக்கப்பட்ட உணவகத்தின் உரிமையாளரும் சோனியாவின் மகனுமான கெவின் லார்சன், காப்பீட்டுத் தொகை போகத் தான் 1 மில்லியன் டாலருக்கும் அதிகமாக இழந்துவிட்டதாகவும், வணிகத்தை மீண்டும் தொடங்க முடியாமல் போய்விட்டது என்றும் தெரிவித்தார்.
</p><p>எனினும், தனது தாயை மன்னித்து அவருடனான உறவை மீண்டும் புதுப்பிக்க விரும்புவதாக அவர் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-21T15:41:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் மனிதக் கடத்தல்: சோமாலிய அகதிக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/somali-refugee-gets-4-years-for-transporting-1787322524"></link>
            <id>https://canadamirror.com/article/somali-refugee-gets-4-years-for-transporting-1787322524</id>
            <summary type="text">கனடாவின் மனிட்டோபா எல்லையைக் கடந்து சட்டவிரோதமாக குடியேறுபவர்களுக்குப் பணத்திற்காக உதவிய சோமாலிய அகதி அப்தி ஹாசன் அலிக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் மனிட்டோபா எல்லையைக் கடந்து சட்டவிரோதமாக குடியேறுபவர்களுக்குப் பணத்திற்காக உதவிய சோமாலிய அகதி அப்தி ஹாசன் அலிக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. </p><p>
பிணையில் வெளிவந்த நிலையிலும் மீண்டும் அதே குற்றத்தில் ஈடுபட்டது நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டுள்ளது.
குடிவரவு மற்றும் அகதிகள் சட்டத்தை மீறி, முறையான விசா அல்லது பாஸ்போர்ட் இல்லாதவர்களை எல்லை தாண்டி அழைத்துச் சென்ற குற்றத்தை அப்தி ஹாசன் அலி நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார்.
</p><p>2024 பிப்ரவரி மாதம் அமெரிக்க எல்லையிலிருந்து கடுங்குளிரில் பல மணி நேரம் நடந்து வந்த 8 வெளிநாட்டினரை வாகனத்தில் அழைத்துச் சென்றபோது முதல்முறை சிக்கினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8597ddb3-6eed-4950-a46d-1eb30a8ae37d/26-6a88609e2b892.webp' /></p><p> </p><p>பின்னர் பிணையில் வெளிவந்த அவர், அதே ஆண்டு டிசம்பர் மாதம் மீண்டும் 5 வெளிநாட்டினரை வாடகை வாகனத்தில் கடத்த முயன்றபோது கைது செய்யப்பட்டார்.
</p><p>-20 முதல் -25 பாகை செல்சியஸ் வரையிலான கடுமையான குளிர்காலச் சூழ்நிலையில் இந்த மனிதக் கடத்தல் நடந்துள்ளது. </p><p>
அதிர்ஷ்டவசமாக உயிரிழப்புகள் எதுவும் தவிர்க்கப்பட்டுள்ளதாக நீதிபதி ரேச்சல் ரூசன் தெரிவித்துள்ளார்.
அரசு தரப்பு மற்றும் வழக்கறிஞரின் கூட்டுப் பரிந்துரையை ஏற்று நீதிபதி 4 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கினார்.</p><p> 
ஏற்கனவே சிறையில் கழித்த நாட்களைக் கணக்கில் கொண்டால், இன்னும் 500 நாட்கள் அவர் தண்டனையை அனுபவிக்க வேண்டும். </p><p>மேலும் இவருக்கு நாடு கடத்தப்படும் அபாயமும் உள்ளது.
சோமாலியாவில் அரசியல் வன்முறையிலிருந்து தப்பிப் பிழைத்த இவர், மற்றவர்களும் பாதுகாப்பான இடத்தை அடைய உதவ வேண்டும் என்ற எண்ணத்திலும், நிதிச் சிக்கல் காரணமாகவுமே இதைச் செய்ததாகத் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-21T15:40:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் நான்கு வயது சிறுவனின் சாதனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/calgary-4-year-old-scores-160-on-1787321940"></link>
            <id>https://canadamirror.com/article/calgary-4-year-old-scores-160-on-1787321940</id>
            <summary type="text">கனடாவின் கல்காரி நகரைச் சேர்ந்த அலி அல்தாலவி என்ற 5 வயது சிறுவன், தனது 4 வயதிலேயே ஐக்யூ தேர்வில் 160 புள்ளிகள் பெற்று உலகளவில் உள்ள 0.1 சதவீத முன்னணி ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் கல்காரி நகரைச் சேர்ந்த அலி அல்தாலவி என்ற 5 வயது சிறுவன், தனது 4 வயதிலேயே ஐக்யூ தேர்வில் 160 புள்ளிகள் பெற்று உலகளவில் உள்ள 0.1 சதவீத முன்னணி அறிவுத்திறன் கொண்ட சிறுவர்களில் ஒருவராக இடம்பெற்றுள்ளார்.</p><p>
உலகின் பழமையான மற்றும் புகழ்பெற்ற உயர் ஐக்யூ அமைப்பான 'மென்சா'வில் இணைவதற்கு 130 அல்லது அதற்கு மேற்பட்ட ஐக்யூ புள்ளிகள் தேவை. 160 புள்ளிகள் பெற்ற அலி, கடந்த ஆண்டு கனடாவில் மென்சா அமைப்பில் சேர்க்கப்பட்ட இரு 4 வயது சிறுவர்களில் ஒருவர் ஆவார்.
</p><p>அலீயின் சகோதரி லமீஸ் (7) மற்றும் சகோதரன் உமர் (10) ஆகிய இருவருமே ஏற்கெனவே மென்சா அமைப்பின் உறுப்பினர்களாக உள்ளது குறிப்பிடத்தக்கது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d03b7cc8-af21-4162-8b95-77305b81fe3e/26-6a885e565b271.webp' /></p><p>
</p><p>கணிதம் மற்றும் வாசிப்பில் அதிக ஆர்வம் கொண்ட அலி, பல்வேறு நாடுகளின் கொடிகளைப் பார்த்து அவற்றின் பெயர்களைத் துல்லியமாகக் கூறுகிறார்.
</p><p>அலிக்கு 2 வயதாக இருக்கும்போதே புதிர் விளையாட்டுகள் மற்றும் புதிய விஷயங்களை உருவாக்குவதில் அதிக ஆர்வம் இருந்ததாகத் அவரது தாய் அலா ஹாசன் தெரிவித்துள்ளார்.
</p><p>கணிதத்தைத் தவிர, அலிக்கு கால்பந்து விளையாட்டிலும் அதிக ஆர்வம் உண்டு. அவருக்கு விருப்பமான வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ என்பதால், அவரைப் போலவே தலைமுடியை அலங்கரித்துக் கொண்டுள்ளார்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-21T15:40:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாடொன்றில் பாடசாலை மீது வாள் வீச்சுத் தாக்குதல்: பலர் காயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sword-attack-at-sweden-school-several-injured-1787326441"></link>
            <id>https://tamilwin.com/article/sword-attack-at-sweden-school-several-injured-1787326441</id>
            <summary type="text">ஸ்வீடனின் மத்திய பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் வாள் ஏந்திய நபர்
ஒருவர் நடத்திய கொடூரத் தாக்குதலில் பலர் காயமடைந்துள்ளதுடன், சந்தேகநபர்
பொலிஸா...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஸ்வீடனின் மத்திய பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் வாள் ஏந்திய நபர்
ஒருவர் நடத்திய கொடூரத் தாக்குதலில் பலர் காயமடைந்துள்ளதுடன், சந்தேகநபர்
பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>

பாகெர்ஸ்டா பகுதியில் அமைந்துள்ள பிரினெல்ஸ்கோலன் என்ற உயர் பாடசாலைக்கே இன்று(21.8.2026) பிற்பகல் வேளையில் புகுந்த தாக்குதல்தாரி, அங்கிருந்தவர்கள் மீது இந்த வாள்
வீச்சுத் தாக்குதலை மேற்கொண்டுள்ளார்.
</p><p>
சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்த பொலிஸார், சந்தேகநபரை சுட்டு வீழ்த்தித்
தடுத்து நிறுத்தியதுடன் அவரைக் கைது செய்துள்ளனர்.</p><h2>தீவிர சோதனைகள்</h2><p>

தாக்குதலில் காயமடைந்தவர்களின் துல்லியமான எண்ணிக்கை இதுவரை அதிகாரப்பூர்வமாக
அறிவிக்கப்படவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7bf8a1a0-1205-48f8-aebd-5afd46f68513/26-6a886fec259bc.webp' /></p><p> </p><p>எனினும், பாதுகாப்பு நிமித்தம் அப்பகுதியிலுள்ள ஏனைய
பாடசாலைகளும் உடனடியாக பூட்டப்பட்டு தீவிர சோதனைகள் முன்னெடுக்கப்பட்டு
வருகின்றன.</p><p>

இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ள நிலையில்,
நிலைமையை அரசாங்கம் உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக அந்நாட்டின் நீதி
அமைச்சர் தெரிவித்தார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-21T15:34:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[10 வயது சிறுவன் வென்ற சிலிகான் வாலி விருது - அவர் கண்டுபிடித்த AI Electronic Nose]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/taiwan-10-years-boy-wins-silicon-valley-ai-award-1787325845"></link>
            <id>https://news.lankasri.com/article/taiwan-10-years-boy-wins-silicon-valley-ai-award-1787325845</id>
            <summary type="text">10-year-old Taiwanese inventor wins top Silicon Valley award: தைவானைச் சேர்ந்த 10 வயது சிறுவன், உலகின் முன்னணி தொழில்நுட்ப மையமான சிலிகான் வாலியில் நட...</summary>
            <content type="html"><![CDATA[<p>10-year-old Taiwanese inventor wins top Silicon Valley award: தைவானைச் சேர்ந்த 10 வயது சிறுவன், உலகின் முன்னணி தொழில்நுட்ப மையமான சிலிகான் வாலியில் நடைபெற்ற போட்டியில் மிக உயர்ந்த விருதைப் பெற்றுள்ளார்.
</p><p>
காங் சியாவோ சர்வதேச பள்ளியின் மாணவரான சு டிங்-வெய் (Hsu Ting-wei) என்ற இந்த சிறுவன், Novel Artificial Electronic Nose என்கிற AI அடிப்படையிலான மோப்பம் பிடிக்கும் கருவியை கண்டுபிடித்துள்ளார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5e592f90-e4cd-467e-946d-84a9be212b5e/26-6a886d986d5db.webp' /></p><h2>Electronic Nose</h2><p>இது விமான நிலையங்களில் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், அபாயகரமான பொருட்கள் மற்றும் தடைசெய்யப்பட்ட ரசாயனங்களை மணம் மூலம் கண்டறியும் திறன் கொண்டது.
</p><p>
இந்த “மின்மூக்கு” (Electronic Nose) செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் சென்சார் தொழில்நுட்பத்தை இணைத்து உருவாக்கப்பட்டுள்ளது. </p><p>

மனித மூக்கின் மணம் அறியும் திறனைப் போல, AI மூலம் தரவுகளை பகுப்பாய்வு செய்து, சந்தேகத்திற்கிடமான பொருட்களை உடனடியாக அடையாளம் காணும். </p><p>விமான நிலையங்களில் பாதுகாப்பு சோதனைகளில் இது மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
</p><p></p><h2>Top Young Innovator விருது</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3a635daf-d721-4d21-bc50-57c52999d4f9/26-6a886d97b63dd.webp' /></p><p>சிறுவனின் கண்டுபிடிப்பு, Silicon Valley International Tech Awards 2026-இல் “Top Young Innovator” விருதைப் பெற்றது. உலகம் முழுவதும் இருந்து வந்த ஆயிரக்கணக்கான கண்டுபிடிப்புகளில், அவரது யோசனை தனித்துவம் மற்றும் சமூகப் பயன்பாட்டுக்காக தேர்வு செய்யப்பட்டது.
</p><p>
விமான நிலையங்களில் பாதுகாப்பு சோதனைகள் பெரும்பாலும் நேரம் எடுத்துக்கொள்ளும். ஆனால், இந்த AI மின்மூக்கு, சில வினாடிகளில் அபாயகரமான பொருட்களை கண்டறிய முடியும். இதனால், பயணிகள் விரைவாகவும் பாதுகாப்பாகவும் சோதனைகளை கடக்க முடியும்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-21T15:21:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[கட்டா குஸ்தி 2 மீனு டீச்சர்!! நடிகை மோக்‌ஷாவின் ஓணம் ஸ்பெஷல் புகைப்படங்கள்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/gatta-kushthi-2-actress-mokksha-onam-special-photo-1787318624"></link>
            <id>https://viduppu.com/article/gatta-kushthi-2-actress-mokksha-onam-special-photo-1787318624</id>
            <summary type="text">மோக்‌ஷாநடிகர் விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பல நடிப்பில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் படம் தான் கட்டா குஸ்தி 2. இப்...</summary>
            <content type="html"><![CDATA[<h2>மோக்‌ஷா</h2><p>நடிகர் விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பல நடிப்பில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் படம் தான் கட்டா குஸ்தி 2. இப்படத்தின் மீனு டீச்சர் ரோலில் நடிகை மோக்‌ஷா நடித்திருந்தார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a1e05e8a-4ccf-4822-9cdc-dfeb284079d2/26-6a88516b16d7a.webp' /></p><p>
மீனு டீச்சராக நடித்து ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்த மோக்‌ஷா, பெங்காளி மொழியில் நடிக்க ஆரம்பித்தார். சப்போர்ட்டிங் ரோலில் நடித்த மோக்‌ஷா, தெலுங்கில் லக்கி லக்ஷ்மன் படத்தில் கதாநாயகியாக நடித்து அறிமுகமாகினார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a4c546f4-2aba-45ac-8d18-51f0c31b9058/26-6a88516bbdc8a.webp' /></p><p>
அதன்பின் தெலுங்கு, மலையாளம் மொழிகளில் நடித்துள்ள மோக்‌ஷாவுக்கு இப்போது 26 வயதுதான். இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் மோக்‌ஷா, தற்போது ஓணம் ஸ்பெஷல் போட்டோஷூட்டை பதிவிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-08-21T15:15:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[போலி கடவுச்சீட்டுடன் கனடா செல்ல முயற்சித்த இலங்கையர் தாய்வானில் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/srilankan-arrest-taiwan-while-trying-travel-canada-1787324528"></link>
            <id>https://ibctamil.com/article/srilankan-arrest-taiwan-while-trying-travel-canada-1787324528</id>
            <summary type="text">சிங்கப்பூரில் இருந்து கனடாவின் டொராண்டோ நோக்கி சென்ற விமானத்தில் பயணித்த இலங்கையர் ஒருவர், தாய்வானின் சர்வதேச விமான நிலையத்தில் போலி கனேடிய கடவுச்சீட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிங்கப்பூரில் இருந்து கனடாவின் டொராண்டோ நோக்கி சென்ற விமானத்தில் பயணித்த இலங்கையர் ஒருவர், தாய்வானின் சர்வதேச விமான நிலையத்தில் போலி கனேடிய கடவுச்சீட்டுடன் சிக்கியுள்ளார்.</p><p>
தாய்வான் உள்துறை அமைச்சின் தேசிய குடிவரவு முகவரகத்தின் தகவலின்படி, அவரது கடவுச்சீட்டில் காணப்பட்ட முரண்பாடுகளை EVA Air நிறுவன ஊழியர்கள் முதலில் அவதானித்துள்ளனர்.
</p><p>இதையடுத்து விமான நிலைய குடிவரவு அதிகாரிகளுக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில், ஆவணப் பரிசோதனை மற்றும் அடையாளச் சரிபார்ப்பின் மூலம் கடவுச்சீட்டு போலியானது கண்டறியப்பட்டது.</p><p></p><h2>அனுமதி மறுப்பு&nbsp;</h2><p>
</p><p>இந்நிலையில் குறித்த நபர் விமானத்தில் தொடர்ந்து பயணிப்பதற்கு தாய்வான் அதிகாரிகள் அனுமதி மறுத்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f5dbb5db-c4df-4024-a092-dfa4013abbe3/26-6a88687298a9d.webp' /></p><p>
விசாரணையின்போது தனது ஆவணங்களில் பிரச்சினைகள் உள்ளதா என ஆராய்ந்த அதிகாரிகள், போலி கடவுச்சீட்டு பயன்படுத்தியதை குறித்த நபர் மறைக்க முயன்றதாக தெரிவித்துள்ளனர்.</p><p>மேலும், அதிகாரிகள் கடவுச்சீட்டின் பாதுகாப்பு அம்சங்களை பரிசோதித்து, அதிலுள்ள தகவல்களை அவரது அடையாளத் தகவல்களுடன் ஒப்பிட்டுள்ளனர்.</p><p>
மேலும், விசாரணையில் சரியாக பதில் வழங்கவில்லை என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.</p><p>இதன் பின்னர் சர்வதேச நடைமுறைகளுக்கு அமைவாக குறித்த இலங்கையர் சிங்கப்பூருக்கு நாடுகடத்தப்பட்டுள்ளார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-21T15:07:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நவாலி திருவிழா வாண வேடிக்கையால் தீ விபத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/navali-festival-fireworks-cause-disaster-1787319178"></link>
            <id>https://ibctamil.com/article/navali-festival-fireworks-cause-disaster-1787319178</id>
            <summary type="text">நவாலி அந்திரான் கிராமத்தில் நேற்று இரவு நடைபெற்ற திருவிழாவின் போது
வாணவேடிக்கையால் தீ விபத்து சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.பனை மரம் ஒன்றும் மற்றும் ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>நவாலி அந்திரான் கிராமத்தில் நேற்று இரவு நடைபெற்ற திருவிழாவின் போது
வாணவேடிக்கையால் தீ விபத்து சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.</p><p>பனை மரம் ஒன்றும் மற்றும் பாதுகாப்பு வேலியும் சம்பவத்தில் தீப்பற்றி எரிந்ததுடன், சில
பொதுமக்களும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அறியப்பட்டுள்ளது.</p><p>

ஆதலால், இவ்வாறான சம்பவங்களைத் தவிர்ப்பதற்காக வழிபாட்டு தலங்களின்
நிர்வாகங்களுக்கு பலமுறை அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அரசாங்க
அதிபர் தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>தேவையற்ற&nbsp;பயன்பாடு</h2><p>
</p><p>
தேவையற்ற ஒலிபெருக்கி பயன்பாடு, பட்டாசு வெடித்தல், லேசர் ஒளிக்கீற்றுகளைப்
பயன்படுத்துதல், யானைகளை அழைத்துச் செல்லுதல் உள்ளிட்ட பொதுமக்களின்
பாதுகாப்புக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய செயற்பாடுகளைத் தவிர்க்குமாறு
தொடர்ச்சியாக கோரிக்கைகள் மற்றும் அறிவுறுத்தல்கள் ஊடகங்கள் வாயிலாகவும்
விடுக்கப்பட்டுள்ளது.</p><p>எனினும் சில ஆலயங்கள் வழங்கப்பட்ட
அறிவுறுத்தல்களுக்கு உரிய முறையில் செவிசாய்க்காமல், பொதுமக்களுக்கு சிரமத்தையும் பாதிப்பையும் ஏற்படுத்தக்கூடிய செயற்பாடுகளை முன்னெடுத்து வருவது
கவலையளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/126091cd-6d20-4eab-8919-79f75c92f206/26-6a8855c421567.webp' /></p><p>

எனவே, வழிபாட்டுத் தலங்களின் நிர்வாகத்தினர், மதகுருமார்கள் உள்ளிட்ட
பொறுப்புக்கூற வேண்டிய அனைத்து தரப்பினரும் இவ்விடயம் தொடர்பில் உரிய
நடவடிக்கைகளை முன்னெடுத்து, எதிர்காலத்தில் பொதுமக்களின் பாதுகாப்பை
உறுதிப்படுத்தும் வகையில் சமூகப் பொறுப்புணர்வுடன் திருவிழா நடவடிக்கைகளை
முன்னெடுக்க வேண்டும் என அரசாங்க அதிபர் கோரிக்கை விடுத்துள்ளார்.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-21T15:06:55+00:00</updated>
        </entry>
    </feed>
