<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-09-09T08:19:34+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[101 வயதை மனைவியுடன் கொண்டாடிய விவசாயி: ஊர் மக்கள் திரண்டு ஆசி பெற்ற நெகிழ்ச்சி தருணம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/tn-farmer-celebrates-101st-birthday-with-wife-1788941094"></link>
            <id>https://manithan.com/article/tn-farmer-celebrates-101st-birthday-with-wife-1788941094</id>
            <summary type="text">நெல்லை:

நெல்லை மாவட்டம் சேரன்மாதேவி அருகே உள்ள மேலச்செவல் தேவர் தெற்கு தெருவை சேர்ந்தவர் கோபாலசாமி. 101 வயதை எட்டியுள்ள இவர், தனது நீண்ட ஆயுளின் சி...</summary>
            <content type="html"><![CDATA[<p>நெல்லை:

நெல்லை மாவட்டம் சேரன்மாதேவி அருகே உள்ள மேலச்செவல் தேவர் தெற்கு தெருவை சேர்ந்தவர் கோபாலசாமி. 101 வயதை எட்டியுள்ள இவர், தனது நீண்ட ஆயுளின் சிறப்பை குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக கொண்டாடியுள்ளார்.</p><p>கோபாலசாமியின் மனைவி ராமலட்சுமிக்கு 92 வயது. விவசாயத்தை வாழ்வாதாரமாகக் கொண்டு வாழ்ந்து வரும் இந்த தம்பதியினர், திருமண வாழ்க்கையில் பல்வேறு இன்ப, துன்பங்களை கடந்து இன்றுவரையில் மகிழ்ச்சியாக வாழ்ந்துவருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c8d10c71-16c4-4ee1-ad1d-6a0b0b8c7e1e/26-6aa115c4635ac.webp' /></p><p></p><h2>101-வது சதாயுசு விழா</h2><p> </p><p>இவர்களுக்கு 7 மகன்கள், 2 மகள்கள், மருமகன்கள், மருமகள்கள், பேரன், பேத்திகள், கொள்ளுப்பேத்திகள் என மொத்தம் 73 பேர் கொண்ட குடும்பம் உள்ளது.
</p><p>
இந்நிலையில், கோபாலசாமியின் 101-வது சதாயுசு விழா நேற்று முன்தினம் மேலச்செவல் ஆதித்தவர்னேஸ்வரர் கோவிலில் இந்து&nbsp; முறைப்படி விமரிசையாக நடைபெற்றுள்ளது.</p><p>
விழாவில் குடும்பத்தினர், உறவினர்கள் மட்டுமின்றி ஊர் மக்களும் திரளாக பங்கேற்று மூத்த தம்பதியினரிடம் ஆசி பெற்றனர். தொடர்ந்து விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் விருந்து வழங்கப்பட்டது.</p><p></p><p>

101 வயது தாத்தாவின் சதாயுசு விழாவில் மூன்று தலைமுறைகளைச் சேர்ந்த 73 குடும்ப உறுப்பினர்கள் ஒன்றிணைந்தது அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த விழாவில் மேலச்செவல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டமை குறிப்பி்டத்தக்கது.</p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-09T08:16:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஏர்பஸ் கொள்முதல் மோசடி! ஆப்பிள் நிறுவனத்துக்கு அனுப்பப்பட்ட விசேட மின்னஞ்சல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/airbus-scam-special-email-sent-to-apple-1788941030"></link>
            <id>https://ibctamil.com/article/airbus-scam-special-email-sent-to-apple-1788941030</id>
            <summary type="text">ஏர்பஸ் கொள்முதல் மோசடி சம்பவத்தின் விசாரணைகள் குறித்து&amp;nbsp; குற்றப்புலனாய்வு திணைக்களம், ஆப்பிள் நிறுவனத்திற்கு விசேட மின்னஞ்சல் ஒன்றை அனுப்பியுள்ளது...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஏர்பஸ் கொள்முதல் மோசடி சம்பவத்தின் விசாரணைகள் குறித்து&nbsp; குற்றப்புலனாய்வு திணைக்களம், ஆப்பிள் நிறுவனத்திற்கு விசேட மின்னஞ்சல் ஒன்றை அனுப்பியுள்ளது.</p><p>இந்த மோசடி சம்பவத்தின் முக்கிய சந்தேக நபரான, சிறிலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை அதிகாரி கபில சந்திரசேனவின்(காலஞ்சென்ற) கைபேசியிலிருந்து தரவுகளைப் பெறுவதற்கான நீதிமன்ற உத்தரவுக்கு அமைய சி.ஐ.டி குறித்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.</p><p>இந்த விடயத்தை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இன்று (09) கோட்டை நீதவான் நீதிமன்றிற்கு சுட்டிக்காட்டியுள்ளது.</p><p></p><h2>குற்றப் புலனாய்வுத் திணைக்களம்&nbsp;</h2><p>இந்தச் சம்பவம் தொடர்பான நீதித்துறை நடுவர் விசாரணை இன்று (09) மீண்டும் கூடியபோது, ​​குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்தில் மேலும் ஒரு அறிக்கையைச் சமர்ப்பித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e3797040-adc9-48d1-8832-e333950a82f2/26-6aa1151e1f3a5.webp' /></p><p>&nbsp;இந்நிலையில் உயிரிழந்த சந்தேக நபரின் பிரேதப் பரிசோதனை அறிக்கை மற்றும் மரண விசாரணை அதிகாரியின் அறிக்கை ஆகியவை இன்னும் பெறப்படவில்லை என்றும் அரசு தரப்பு நீதிமன்றுக்கு அறிவித்துள்ளது.</p><p>அதன்படி, அந்த அறிக்கைகளை உடனடியாக நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்குமாறு மரண விசாரணை அதிகாரிக்கும் அரசுப் பகுப்பாய்வாளருக்கும் நீதிமன்றம் ஒரு நினைவூட்டலை விடுத்தது.
</p><p>
அதன்படி, இந்த வழக்கை ஒக்டோபர் 14ஆம் திகதிக்கு ஒத்திவைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-09T08:15:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[இன்பத்திலும் துன்பத்திலும் இலங்கையுடன் துணை நிற்போம் - கொழும்பில் ராஜ்நாத் சிங் உறுதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/rajnath-singh-say-india-always-stand-with-srilanka-1788935597"></link>
            <id>https://news.lankasri.com/article/rajnath-singh-say-india-always-stand-with-srilanka-1788935597</id>
            <summary type="text">இன்பத்திலும் துன்பத்திலும் இலங்கையுடன் துணை நிற்போம் என கொழும்பு சென்றுள்ள இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியுள்ளார். 

இலங்கை வந்த ராஜ்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இன்பத்திலும் துன்பத்திலும் இலங்கையுடன் துணை நிற்போம் என கொழும்பு சென்றுள்ள இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியுள்ளார். </p><h3>

இலங்கை வந்த ராஜ்நாத் சிங்</h3><p> 

இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் 3 நாள் அரசுமுறை பயணமாக இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fb043bfe-fa37-4707-8b4a-e9a0e9860de7/26-6aa0fdaf29a42.webp' /></p><p>
38 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சர் ஒருவர் இலங்கை வருகை தந்துள்ளார். </p><p>

கடைசியாக ராஜிவ்காந்தி அமைச்சரவையில் பாதுகாப்பு அமைச்சராக இருந்த கே.சி. பந்த் 1988 ஆம் ஆண்டில் பேச்சுவார்த்தைகளுக்காக இலங்கை சென்றார்.</p><p> 

2023 ஆம் ஆண்டில் ராஜ்நாத் சிங் இலங்கை வர திட்டமிட்டிருந்த போது, இலங்கை துறைமுகத்துக்கு சீன உளவுக் கப்பல் வந்ததற்கு இந்தியா கடும் அதிருப்தி தெரிவித்ததால் அந்த கொழும்பு பயணம் ரத்தானது. </p><h3>

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவு</h3><p>

அங்குள்ள இந்திய வம்சாவளியினரிடையே உரையாற்றிய ராஜ்நாத் சிங், "ஆன்மிகமும் கலாசாரமும் இரண்டறக் கலந்த இலங்கை மண்ணில் உங்களைச் சந்திப்பதில் பெருமையடைகிறேன். 

தமிழ் மொழி மற்றும் அதன் பண்பாடு, வளர்ச்சி மீது பிரதமர் நரேந்திர மோடியும் நாங்களும் மிகுந்த மதிப்பு வைத்துள்ளோம்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8cbf0f67-cb7d-4589-aea9-fa47188c84bf/26-6aa0fdafd40d7.webp' /></p><p>

நேர்மையான ஆட்சியின் அடையாளமாக நாடாளுமன்றத்தில் "செங்கோல்' நிறுவப்பட்டதும், திருவள்ளுவர், பாரதியாரின் கொள்கைகளை நாடு முழுவதும் கொண்டு சேர்ப்பதும் தமிழ்ப் பாரம்பரியத்துக்கு மத்திய அரசு அளிக்கும் உயர் மரியாதையாகும்.
</p><p>
இந்தியாவின் எல்லைகள் இன்று முற்றிலும் பாதுகாப்பாக உள்ளன. நாம் யாரையும் முதலில் தாக்க மாட்டோம். ஆனால், நம்மைத் தாக்கத் துணிந்தால் விட்டுவைக்கவும் மாட்டோம் என்ற நமது கொள்கை மிகவும் தெளிவாக உள்ளது.&nbsp;</p><p></p><p>
தற்சார்பு பாரதம் திட்டத்தால் இந்தியா சொந்தமாக ஆயுதங்களைத் தயாரிக்கிறது. தமிழகத்தில் அமைக்கப்படும் "பாதுகாப்புத் தொழில்வழித்தடம்' நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதோடு தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பையும் அளிக்கிறது.
</p><p>
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவு, பகிரப்பட்ட வரலாறு, கலாச்சாரம் மற்றும் நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டது. இன்பத்திலும் துன்பத்திலும் இலங்கையுடன் துணை நிற்போம். மேலும் இரு நாடுகளின் அமைதி, செழிப்பு மற்றும் வளர்ச்சிக்கு உறுதியுடன் இருக்கிறோம்.
</p><p>
இரு நாடுகளும் நெருங்கிய கலாச்சார மற்றும் நாகரிகப் பிணைப்புகளைப் பகிர்ந்து கொள்கின்றன. அவை இருதரப்பு உறவின் வளர்ச்சிக்கு ஒரு வலுவான அடித்தளத்தை வழங்கியுள்ளன.&nbsp;</p><p> 2014 ஆம் ஆண்டில் சுமார் 2 டிரில்லியன் டொலர் மதிப்புடையதாக இருந்த இந்தியாவின் பொருளாதாரம், கடந்த பத்தாண்டுகளில் இரட்டிப்பாகி சுமார் 4 டிரில்லியன் டொலராக உயர்ந்துள்ளது. </p><p>

2014 ஆம் ஆண்டுக்கு முன்பு 4 நாடுகளுடன் மட்டுமே தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்கள் செய்யப்பட்டிருந்த நிலையில், கடந்த 12 ஆண்டுகளில் இந்தியா 38 நாடுகளுடன், 8 முக்கிய நாடுகளுடனான தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்கள் உட்பட, வர்த்தக ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளது" என தெரிவித்துள்ளார்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-09T08:10:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரஷ்யாவின் மிகப்பெரிய துறைமுகத்தில் ட்ரோன் தாக்குதல்: குழந்தை உட்பட நால்வர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/ukraine-drones-strikes-russia-s-largest-port-1788941313"></link>
            <id>https://news.lankasri.com/article/ukraine-drones-strikes-russia-s-largest-port-1788941313</id>
            <summary type="text">Ukraine&#039;s drone strikes on largest port of russia: ரஷ்யாவின் மிகப்பெரிய துறைமுகத்தில் உள்ள எரிபொருள் எண்ணெய் முனையம் மீது உக்ரேனிய ட்ரோன் தாக்குதல் நட...</summary>
            <content type="html"><![CDATA[<p>Ukraine's drone strikes on largest port of russia: ரஷ்யாவின் மிகப்பெரிய துறைமுகத்தில் உள்ள எரிபொருள் எண்ணெய் முனையம் மீது உக்ரேனிய ட்ரோன் தாக்குதல் நடத்தியது.</p><p> 

உக்ரேனிய நடத்திய ட்ரோன் தாக்குதலில், ரஷ்யாவின் மிகப்பெரிய துறைமுகத்தில் நான்கு பேர் கொல்லப்பட்டனர்.&nbsp;</p><h2>எரிபொருள் எண்ணெய் முனையம்</h2><p>

Novorossiysk-யில் ரஷ்யாவின் மிகப்பெரிய கடல் துறைமுகம் அமைந்துள்ளது. இதில் உள்ள எரிபொருள் எண்ணெய் முனையம், இரயில் பாதையில் இருந்து கடல் வழியாக எரிபொருள் எண்ணெயை பெறுதல், சேமித்தல் மற்றும் இயக்குவதில் நிபுணத்துவம் பெற்றதாகும்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3f572afb-339d-4ba9-bb2c-f38417df516f/26-6aa114fce6d7b.webp' /></p><p></p><p>இதன் ஆண்டு கையாளும் திறன் சுமார் 4 மில்லியன் டன்கள் ஆகும். 

இந்த எண்ணெய் முனையத்தின் மீது 9ஆம் திகதி இரவு உக்ரைன் ட்ரோன் தாக்குதல் நடத்தியது.</p><p>

இந்தத் தாக்குதலில் ஒரு குழந்தை உட்பட நான்கு பேர் கொல்லப்பட்டதாகவும், 29 பேர் காயமடைந்ததாகவும் கிராஸ்னோடார் கிராயின் தலைவர் வெனியாமின் கொன்ட்ராட் யேவ் தெரிவித்தார்.
</p><p>
மேலும் அவரது கூற்றுப்படி, மூன்று தனியார் மற்றும் ஐந்து அடுக்குமாடிக் கட்டிடங்கள், அத்துடன் ஒரு ஆர்த்தடாக்ஸ் தேவாலயம் மற்றும் ஒரு மழலையர் பாடசாலை ஆகியவை சேதமடைந்தன.&nbsp; &nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f7ee8850-ded3-437f-86f4-c294335335d2/26-6aa114fdc9a99.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-09T08:09:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை மீது சர்வதேச அழுத்தம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/pressure-on-sri-lanka-at-un-human-rights-council-1788939661"></link>
            <id>https://tamilwin.com/article/pressure-on-sri-lanka-at-un-human-rights-council-1788939661</id>
            <summary type="text">இலங்கை அரசாங்கம் வழங்கிய மனித உரிமைகள் சீர்திருத்த வாக்குறுதிகளை உடனடியாக
உறுதியான நடவடிக்கைகளாக மாற்ற வேண்டும் என இங்கிலாந்து தலைமையிலான
&#039;இலங்கைக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை அரசாங்கம் வழங்கிய மனித உரிமைகள் சீர்திருத்த வாக்குறுதிகளை உடனடியாக
உறுதியான நடவடிக்கைகளாக மாற்ற வேண்டும் என இங்கிலாந்து தலைமையிலான
'இலங்கைக்கான முக்கிய குழு' வலியுறுத்தியுள்ளது.

​</p><p>ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் (UNHRC) 63வது கூட்டத்தொடரில்,
இங்கிலாந்தின் மனித உரிமைகளுக்கான தூதர் எலினோர் சாண்டர்ஸ் இங்கிலாந்து, கனடா,
மலாவி, மாண்டினீக்ரோ மற்றும் வடக்கு மெசிடோனியா ஆகிய நாடுகளின் சார்பில் இந்த
கூட்டறிக்கையைச் சமர்ப்பித்தார்.

​​</p><h2>உடன்படிக்கையில் காட்டிய ஈடுபாடு</h2><p> </p><p>பணியிட வன்முறை மற்றும் துன்புறுத்தலுக்கு எதிரான சர்வதேச தொழிலாளர்
அமைப்பின் (ILO) 190வது உடன்படிக்கையை இலங்கை ஏற்றுக்கொண்டதையும்,
மாற்றுத்திறனாளிகள் உரிமை உடன்படிக்கையில் காட்டிய ஈடுபாட்டையும் இந்த குழு
வரவேற்றுள்ளது.</p><p>

​அத்துடன் காணாமலாக்கப்பட்ட ஆயிரக்கணக்கான வழக்குகள் தீர்க்கப்படாமல்
இருப்பது, கூட்டுக்குழிகள் கண்டறியப்படுவது, சிவில் சமூக அமைப்புகள் மற்றும்
ஊடகவியலாளர்கள் சந்திக்கும் அச்சுறுத்தல்கள் குறித்தும் இந்த குழு பெரும்
கவலையை தெரிவித்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b31fcd8a-54e5-4b72-92fb-b2d1726cb403/26-6aa113eb7e491.webp' /></p><h2>வலியுறுத்தப்பட்டுள்ள விடயம்</h2><p>

பாதிக்கப்பட்டவர்களை மையமாகக் கொண்ட பொறுப்புக்கூறல் செயல்முறையை
முன்னெடுப்பது, நிலப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது, தடுப்புக்காவல்
நிலையங்களில் மனித உரிமைகளைப் பேணுவது மற்றும் சுயாதீன நிறுவனங்களை
வலுப்படுத்துவது போன்ற சட்ட சீர்திருத்தங்களை உடனே மேற்கொள்ள இந்த அறிக்கையில்
வலியுறுத்தப்பட்டுள்ளது.

​</p><p>இதன் மூலம் இலங்கையின் மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்க முயற்சிகள் மீண்டும்
சர்வதேச கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-09T08:08:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[முதலமைச்சர் விஜயின் ஆட்சி நீடிக்குமா....ஜாதகம் கூறுவது என்ன!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/will-chief-minister-vijay-s-tenure-last-horoscope-1788941486"></link>
            <id>https://jvpnews.com/article/will-chief-minister-vijay-s-tenure-last-horoscope-1788941486</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp; தமிழக வெற்றிச் கழகத்தின் தலைவரும் முதலமைச்சருமான சி.ஜோசப் விஜய்யின் பிறந்த ஜாதகம் மற்றும் அவரது பதவியேற்பு நேர ஜாதகத்தை அடிப்படையாகக் கொ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp; தமிழக வெற்றிச் கழகத்தின் தலைவரும் முதலமைச்சருமான சி.ஜோசப் விஜய்யின் பிறந்த ஜாதகம் மற்றும் அவரது பதவியேற்பு நேர ஜாதகத்தை அடிப்படையாகக் கொண்டு பிரபல ஜோதிடர்களால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், வெளியான தகவல்கள்&nbsp; பேசுபொருளாகியுள்ளது.</p><p>

தென்னிந்திய அரசியலில் விஜய் தற்போது மிகப்பெரிய சக்தியாக உருவெடுத்துள்ளார். தமிழக அரசியலில் அவரது செல்வாக்கும், மக்கள் மத்தியில் அவருக்குள்ள பிரபலமும் குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/55db420d-f0b6-44bf-84b2-708251d4e2e0/26-6aa114afec1bd.webp' /></p><h2>சவால்களை சமாளித்தால்&nbsp; 2031 வரை ஆட்சியில் நீடிப்பார்&nbsp;</h2><p>
</p><p>
அவரது பிறந்த ஜாதகத்தைப் பார்க்கும்போது, சுக்கிரன் வலிமையான நிலையில் இருப்பது முக்கியமான அம்சமாகத் தெரிகிறது. 
சுக்கிரன் பொதுவாக வசதி, செல்வம், கவர்ச்சி, புகழ் மற்றும் மக்களைக் கவரும் தன்மை ஆகியவற்றுடன் தொடர்புடைய கிரகமாகக் கருதப்படுகிறது.
</p><p>
ஆனால், அவரது பதவியேற்பு ஜாதகத்தை ஆழமாக ஆய்வு செய்யும்போது, 2029 வரை இந்த ஆட்சி நீடிப்பதில் சில முக்கியமான சந்தேகங்கள் இருப்பதாக ஜோதிடடர்கள் கூறியுள்ளதாக&nbsp; தெரிவிக்கப்படுகின்றது.</p><p>

மேலும், 2027-ஆம் ஆண்டிற்குப் பிறகு அரசுக்கு எதிராகக் கூர்மையடையும் விமர்சனங்கள், கூட்டணிக் கட்சிகளுக்குள் எழும் முரண்பாடுகள் மற்றும் சொந்தக் கட்சிக்குள்ளேயே உருவாகக்கூடிய உட்கட்சி எதிர்ப்புகள் ஆகியவை 2028-ஆம் ஆண்டை மிகவும் சவாலான காலகட்டமாக மாற்றும் எனக் கூறப்படுகிறது.</p><p>

 இத்தகைய அரசியல் மற்றும் நிர்வாக நெருக்கடிகள் காரணமாகவே, 2029-ஆம் ஆண்டு வரை இந்த ஆட்சி தொய்வின்றி நீடிக்குமா என்ற கேள்வி ஜோதிட ரீதியாக முன்வைக்கப்படுகிறது.
</p><p>
அதேவேளையில், ஒருவேளை இக்கட்டான 2028-ஆம் ஆண்டின் சவால்களைக் கடந்து விஜய் தலைமையிலான அரசு 2029 வரை வெற்றிகரமாக நிலைத்துவிட்டால், அதன்பின்னர் 2031 வரை&nbsp; ஆட்சியில் நீடிப்பார் என்றும்&nbsp; &nbsp; ஜோதிட ஆய்வு சுட்டிக்காட்டுகிறதாக இந்திய ஊடகங்க்கள் தெரிவித்துள்ளன.</p>]]></content>
            <updated>2026-09-09T08:08:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்கா மீது பதிலடி கொடுக்கும் வகையிலான கனடாவின் வரிகள்: எந்தெந்த பொருட்கள் பாதிக்கப்படும்?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/products-to-affect-in-canada-to-us-counter-tariff-1788940867"></link>
            <id>https://news.lankasri.com/article/products-to-affect-in-canada-to-us-counter-tariff-1788940867</id>
            <summary type="text">List of products from the United States subject to counter tariffs: அமெரிக்கா மீதான கனடாவின் பதிலடி வரியால் பாதிக்கப்படவிருக்கும் பொருட்கள் குறித்த வி...</summary>
            <content type="html"><![CDATA[<p>List of products from the United States subject to counter tariffs: அமெரிக்கா மீதான கனடாவின் பதிலடி வரியால் பாதிக்கப்படவிருக்கும் பொருட்கள் குறித்த விவரம்.
</p><p>
கனடா அமெரிக்காவுக்கு இடையிலான வர்த்தகப்போர் மும்முரமாகிவருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4bba6c30-caed-4872-9b29-c3fba2581d5a/26-6aa112449e40f.webp' /></p><p>

27.6 பில்லியன் டொலர்கள் மதிப்பிலான கனேடியப் பொருட்கள் மீது 50 சதவிகித சுங்க வரியை விதிக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது.&nbsp;</p><p>
அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், அதே 27.6 பில்லியன் டொலர் மதிப்பிலான அமெரிக்கப் பொருட்கள் மீது 15 முதல் 50 சதவிகித சுங்க வரி விதிக்க கனடா முடிவு செய்துள்ளது.
</p><p>
விடயம் என்னவென்றால், இந்த வரிவிதிப்பால் கனேடிய மக்களும்தான் பாதிக்கப்பட உள்ளார்கள். ஏனென்றால், அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அந்தப் பொருட்களை கனேடியர்கள்தான் வாங்கப்போகிறார்கள்!
</p><h3>
எந்தெந்த பொருட்கள் பாதிக்கப்படும்?
</h3><p>
கனடாவின் பதிலடி வரி விதிப்பால் அதிக அளவில் பாதிக்கப்படப்போவது உணவு மற்றும் பானங்கள்தான். உணவு தயாரிக்கத் தேவையான பொருட்கள், பால் பொருட்கள், ஆகியவை அதிகம் பாதிக்கப்பட உள்ளன.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ac3ee1c8-b3c0-4797-8f58-5bc9b6f325ff/26-6aa112454fe53.webp' /></p><p>
அடுத்தபடியாக, வீட்டு உபயோகப் பொருட்களும், விவசாயத்துக்குத் தேவையான பொருட்களும் விலை உயர இருக்கின்றன.
</p><p>
விவசாயத்துக்குத் தேவையான பொருட்கள் விலை உயர உள்ளதால், அதுவும் உணவுப்பொருட்கள் விலையை பாதிக்கக்கூடும்.&nbsp;</p><p></p><p>
மேலும், கடல் உணவுகள், மரச்சாமான்கள், அழகு சாதனப்பொருட்கள், ஆண்களுக்கான உடைகள், பாதுகாப்பு உடைகள் போன்றவையும் விலை அதிகரிக்கலாம்.</p><p>

இதுபோக, கிரேன்கள், ஜாக் மற்றும் ஃபோர்க்லிஃப்ட், ரயில் பெட்டிகள், இயந்திரங்களில் பொருத்தப்படும் பம்புகள், மின்விசிறிகள் ஆகியவையும் விலை உயரலாம்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/86c87021-067e-4a18-b2dc-5a9d1facdf67/26-6aa1124601b2d.webp' /></p><p>

இவற்றை எல்லா பொதுமக்களும் வாங்குவதில்லை என்பது உண்மைதான். ஆனால், அவற்றை வாங்கும் நிறுவனங்கள் அவற்றிற்கான செலவை நுகர்வோர் மீதுதான் திணிக்கும். ஆக, அதிலும் மக்கள்தான் பாதிக்கப்பட உள்ளார்கள்.
</p><p>
மேலும், அமெரிக்க ஸ்டீல், காப்பர் தயாரிப்புகளும் விலை அதிகமாக உள்ளன.
</p><p>
ட்ரம்ப் ஜனாதிபதியானதைத் தொடர்ந்து, அமெரிக்கா கனடா மீது வரிகள் விதிக்கத் துவங்கியதிலிருந்தே கனேடிய மக்கள் பலர் கனேடிய தயாரிப்புகளையே வாங்கத் துவங்கியுள்ளார்கள்.
</p><p>
விடயம் என்னவென்றால், அமெரிக்காவுக்கும் கனடாவுக்கும் இடையிலான இந்த வரிப்போரால், அவைகளும் விலை உயர உள்ளன.
</p><p>
ஆனாலும், தாங்கள் கனேடியப் பொருட்களையே வாங்கப்போகிறோம் என உறுதியாகக் கூறுகிறார்களாம் 60 சதவிகித கனேடியர்கள்!&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-09T08:01:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Tony</name>
            </author>
            <title type="text"><![CDATA[விஸ்வநாதன் அண்ட் சன்ஸ் மைல் கல் வசூல், அமெரிக்காவும் சூர்யா கண்ட்ரோல்தான்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/vishwanath-and-sons-north-america-box-office-1788938826"></link>
            <id>https://cineulagam.com/article/vishwanath-and-sons-north-america-box-office-1788938826</id>
            <summary type="text">விஸ்வநாத் &amp;amp; சன்ஸ்சூர்யா பல வருடங்களாக ஒரு ஹிட் கூட இல்லாமல் இருந்த நிலையில், இந்த வருடம் சூர்யாவின் வருடமாக மாறிவிட்டது.
ஏற்கனவே, தற்போது வரை தமி...</summary>
            <content type="html"><![CDATA[<h2>விஸ்வநாத் &amp; சன்ஸ்</h2><p>சூர்யா பல வருடங்களாக ஒரு ஹிட் கூட இல்லாமல் இருந்த நிலையில், இந்த வருடம் சூர்யாவின் வருடமாக மாறிவிட்டது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1d579cce-fea3-40aa-af6f-b1eb1626d8e7/26-6aa10a4d58fb4.webp' /></p><p>ஏற்கனவே, தற்போது வரை தமிழ் சினிமாவின் 2026ல் அதிக <a href="https://www.youtube.com/watch?v=JTHZCJ8Rhxg&amp;t=3s" target="_blank">வசூல் </a>செய்த படமாக கருப்பு இருக்க, விஸ்வநாத் &amp; சன்ஸ் படமும் ரூ. 220 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. கண்டிப்பாக இந்த வருடம் சூர்யாவின் வருடம் தான், அதை நிரூபிக்கும் பொருட்டு, தீபாவளிக்கு சூர்யா 47-வது படமும் திரைக்கு வரவுள்ளது.</p><p></p><h2>வட அமெரிக்கா&nbsp;வசூல்</h2><p>
</p><p>
இந்நிலையில், சூர்யா வட அமெரிக்காவில் விஸ்வநாத் &amp; சன்ஸ் மூலம் மிகப்பெரிய சாதனையை நிகழ்த்தியுள்ளார். விஸ்வநாத் &amp; சன்ஸ் வட அமெரிக்காவில் 3 மில்லியன் டாலர் வசூல் செய்துள்ளது. இதன்மூலம் சூர்யா திரைப்பயணத்தின் உச்சமாக இந்த வசூல் வந்துள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/243eb31c-eb38-4189-86a6-f40fd603871b/26-6aa10a4e17f29.webp' /></p><p>அதிலும் இந்த தீபாவளிக்கு வரும் சூர்யா 47 திரைப்படம் கண்டிப்பாக ஓவர்சீஸில் மட்டுமே ரூ. 100 கோடி வசூல் வரும் என பாக்ஸ் ஆபிஸ் நிபுணர்கள் கணித்துள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-09-09T08:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுக்கிரனின் நட்சத்திர மாற்றம்: செப்டம்பர் 11 முதல் இந்த 4 ராசிகளுக்கு பொற்காலம் ஆரம்பம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/venus-transit-in-swati-nakshatra-who-get-huge-luck-1788927689"></link>
            <id>https://manithan.com/article/venus-transit-in-swati-nakshatra-who-get-huge-luck-1788927689</id>
            <summary type="text">ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படைியில் கிரகங்களின் நிலையில் ஏற்படும் மாற்றங்களானது அனைத்து ராசிகளின் வாழ்க்கையிலும் நேரடியான தாக்கத்தை கொண்டிருக்கும் என கு...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படைியில் கிரகங்களின் நிலையில் ஏற்படும் மாற்றங்களானது அனைத்து ராசிகளின் வாழ்க்கையிலும் நேரடியான தாக்கத்தை கொண்டிருக்கும் என குறிப்பிடப்படுகின்றது.</p><p>அந்தவகையில், அசுரர்களின் குருவாகக் கருதப்படும் சுக்கிரன், அழகு, ஆடம்பரம், காதல், செல்வம் மற்றும் செழிப்பின் காரணியாக விளங்குகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4df874fa-a184-4099-8b6d-d8db8ae4c4ad/26-6aa0e76cab4db.webp' /></p><p></p><p> </p><p>ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளின் அதிபதியான இவர்,&nbsp; செப்டம்பர் 11ஆம் தேதி சுவாதி நட்சத்திரத்திற்குள் நுழைகிறார். அங்கு அக்டோபர் 24ஆம் தேதி வரை சஞ்சரித்த பின்னர் சித்திரை நட்சத்திரத்திற்குள் செல்கிறார்.
</p><p>
இந்த நட்சத்திரப் பெயர்ச்சியால் அனைத்து ராசிக்கு குறிப்பிடத்தக்க சாதக , பாதக தாக்கம் காணப்பட்டாலும் , குறிப்பிட்ட சில ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கவுள்ளன. </p><p>குறிப்பாக, வாழ்க்கையில் இருந்த பிரச்சனைகள் நீங்கி, நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

சுக்கிரனின் இந்த நட்சத்திரப் பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் பெறப்போகும் ராசிக்காரர்கள் யார் யார் என இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.</p><h2>ரிஷபம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/140724af-ffc2-4a05-a3e8-39ee708f214c/26-6aa0e76d6768b.webp' /></p><h2>
</h2><p>சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால் ரிஷப ராசிக்காரர்களுக்கு கடின உழைப்புக்கான முழுப் பலன்கள் கிடைக்கும். நீண்ட காலமாக நிலுவையில் இருந்த வேலைகள் வெற்றிகரமாக நிறைறவடையும்.</p><p>நிதிநிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு, பல வழிகளில் பணம் சம்பாதிக்கும் வாய்ப்பு கிடைக்கும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்.பணியிடத்தில் செயல்திறன் பாராட்டப்பட்டு, சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கும்.</p><h2>

மிதுனம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0b152664-663e-458e-a791-72c26741d51e/26-6aa0e76e22527.webp' /></p><h2>
</h2><p>சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி மிதுன ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலன்களைத் தரும். திடீர் நிதி ஆதாயங்களும், முதலீடுகளில் நல்ல லாபமும் கிடைக்கும். </p><p>திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் அமையும். தடைபட்ட திட்டங்கள் வெற்றிகரமாக முடியும். புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்பு கிடைக்கும்.புதிய தொழில் தொடங்கவும் இக்காலம் உகந்தது.</p><h2>
துலாம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3360dbe7-dd49-41f9-b22e-0ba86abbf159/26-6aa0e76ecd1ec.webp' /></p><p>
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால் துலாம் ராசிக்காரர்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும். முதலீடுகளில் நல்ல லாபம் கிடைப்பதுடன், கடன் தொல்லைகளில் இருந்தும் விடுபடுவீர்கள். </p><p>கலை, ஊடகம், ஃபேஷன் துறையினர் பெரிய வெற்றியைக் காண்பார்கள். தொழிலதிபர்களுக்கு லாபம் தரும் புதிய திட்டங்கள் கிடைக்கும்.வாழ்க்கைத்துணையுடனான உறவும் வலுவடையும்.</p><h2>
கும்பம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b31ec4e0-16b5-4321-8122-1cf0e19a3ec2/26-6aa0e76f80b4e.webp' /></p><p></p><h2>
</h2><p>சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால் கும்ப ராசிக்காரர்களுக்கு நிலுவையில் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடியும். நிதிநிலையில் முன்னேற்றம் ஏற்படும்.</p><p> ஒவ்வொரு செயலிலும் அதிர்ஷ்டம் கைகொடுக்கும். தொழில் ரீதியான பயணங்கள் நல்ல லாபத்தைத் தரும். வெளிநாட்டில் வேலை செய்யும் கனவு நனவாக வாய்ப்பு கிடைக்கும்.சமூகத்தில் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும்.</p><p><b>இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</b></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்<b><u> <a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b></td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-09T07:54:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[பொதுநலவாய நாடுகள் சட்டத்தரணிகள் சங்கம் உத்தியோகபூர்வ அமைப்பல்ல : ஹர்ஷன சாடல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/commonwealth-lawyers-association-is-not-official-1788939295"></link>
            <id>https://tamilwin.com/article/commonwealth-lawyers-association-is-not-official-1788939295</id>
            <summary type="text">பொதுநலவாய நாடுகள் சட்டத்தரணிகள் சங்கம் என்பது பொதுநலவாய உறுப்பு நாடுகளினால்
உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டதொரு அமைப்பல்ல எனவும், அது தனிப்பட்ட
...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொதுநலவாய நாடுகள் சட்டத்தரணிகள் சங்கம் என்பது பொதுநலவாய உறுப்பு நாடுகளினால்
உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டதொரு அமைப்பல்ல எனவும், அது தனிப்பட்ட
நபர்களால் கட்டணம் செலுத்திச் செயற்படும் ஓர் அமைப்பாகும் எனவும் நீதி மற்றும்
தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.
</p><p>
நாடாளுமன்றத்தில் நேற்று(08.09.2026) நடைபெற்ற அமர்வில், பொதுநலவாய
நாடுகள் அமைப்பின் சட்டத்தரணிகள் சங்கம் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர்
சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும்போதே மேற்கண்டவாறு
குறிப்பிட்டார்.</p><h2>அமைப்பின் உத்தியோகபூர்வ நிலைப்பாடு</h2><p>

அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது, "எதிர்க்கட்சித் தலைவர் வழமை போன்று பல விடயங்களைச் சபையில்
குறிப்பிடுகின்றார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/942d8a2c-a884-45dc-9569-0023c52e0aa4/26-6aa10fc84ef4d.webp' /></p><p> பொதுநலவாய நாடுகள் அமைப்பின் சட்டத்தரணிகள் சங்கம்
தவறானது என்று நாங்கள் ஒருபோதும் குறிப்பிடவில்லை. ஆனால், இது பொதுநலவாய
உறுப்பு நாடுகளினால் உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டதொரு அமைப்பல்ல,
மாறாக, தனிப்பட்ட நபர்களால் கட்டணம் செலுத்திச் செயற்படும் ஓர் அமைப்பாகும்.&nbsp;</p><p>இந்த அமைப்பின் உறுப்பினர்கள் இங்கு வந்து பல விடயங்களைக் குறிப்பிட்டுச்
சென்றுள்ளார்கள். அவர்கள் குறிப்பிட்ட விடயங்களின் உண்மைத் தன்மையை நாம் ஆராய
வேண்டும்.
</p><p>
இந்த அமைப்பின் தலைவர் என்னைச் சந்திப்பதற்கு அனுமதி கோரியிருந்த நிலையில்,
நானும் அதற்கு அனுமதியளித்திருந்தேன். எனினும், அன்றைய தினம் நான் கொழும்பில்
இல்லாத காரணத்தால் அவர் அந்தச் சந்திப்பை மறுத்துவிட்டார். </p><p>ஆகவே, இந்தச்
சங்கத்தின் நிலைப்பாட்டைப் பொதுநலவாய நாடுகள் அமைப்பின் உத்தியோகபூர்வ
நிலைப்பாடாக ஏற்க முடியாது" என்றும் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-09T07:51:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிக்பாஸ் 10 தொடங்கி 2 நாள் தான் ஆகுது!! நள்ளிரவில் வீட்டைவிட்டு வெளியேறிய போட்டியாளர்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/actor-black-pandi-quit-from-biggboss-tamil-10-1788940523"></link>
            <id>https://viduppu.com/article/actor-black-pandi-quit-from-biggboss-tamil-10-1788940523</id>
            <summary type="text">பிக்பாஸ் 10விஜய் தொலைக்காட்சியில் கடந்த செப்டம்பர் 6 ஆம் தேதி நடிகர் விஜய் சேதுபதியால் தொகுத்து வழங்கப்பட்டு வரும் நிகழ்ச்சி தான் பிக்பாஸ் சீசன் 10. இ...</summary>
            <content type="html"><![CDATA[<h2>பிக்பாஸ் 10</h2><p>விஜய் தொலைக்காட்சியில் கடந்த செப்டம்பர் 6 ஆம் தேதி நடிகர் விஜய் சேதுபதியால் தொகுத்து வழங்கப்பட்டு வரும் நிகழ்ச்சி தான் பிக்பாஸ் சீசன் 10.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1c983acf-598e-4d5d-a281-f8fa30c0ae10/26-6aa110ee2f224.webp' /></p><p> </p><p>இதுவரை இல்லாத வகையில் முதல்முறையாக இந்த சீசனில் பல போட்டியாளர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிக்பாஸ் வீட்டுக்குள் செல்லும் முன்பே எவிக்ட்டாகி அறிமுக மேடையில் இருந்தபடியே வெளியேறினர். அப்படி முதல் ஆளாக நடிகை ஷப்னம் வெளியேறினார்.</p><p>இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 10 தொடங்கி 2 நாட்களான நிலையில் பிளாக் பாண்டி, நள்ளிரவில் வீட்டைவிட்டு வெளியிருக்கிறார். இதுதொடர்பாக விசாரித்ததில், உடல்நலனை காரணம் காட்டி அவரது வெளியேற்றம் நிகழ்ந்துள்ளதாம்.</p><p></p><p> </p><p>ஷதிகாவுக்கும் ஜான்சனுக்கு இடையே காரசாரமான சண்டை நடந்தபோது அவர்களை சமாதானப்படுத்தி பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வந்தார் பிளாக் பாண்டி. இரவு 2 மணிக்கு நடைபெற்ற முதல் லக்சுரி பட்ஜெட் டாஸ்கிலும் தன்னால் முடிந்தளவுக்கு கடுமையாக உழைத்தார். </p><p>என்னென்ன பொருட்கள் என்பது டாஸ்க் போர்ட்டில் தமிழில் இருந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்று கூறியிருந்தார் பிளாக் பாண்டி. </p><p>ஆனால், நேற்று வீட்டில் கிச்சன் டீமிலிருந்து அனைவருக்கும் என்னென்ன தேவை என்பதை செய்து கொடுத்துக் கொண்டிருந்த அவருக்கு கடுமையான உடல்நலக் குறைவு, மருத்துவ பிரச்சனை ஏற்பட்டதால் பிக்பாஸ் வீட்டின் மருத்துவ குழிவின் பரிந்துரைப்படி அவர் தற்காலிகமாக வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.</p><p> சிகிச்சை பெற்று மீண்டும் வீட்டிற்குள் வருவாரா? அல்லது முழுமையாக விலகுவாரா என்ற தகவல் வெளியாகவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/026d5cd7-c8ac-4059-a73a-67693123f99b/26-6aa110ef8ce03.webp' /></p>]]></content>
            <updated>2026-09-09T07:45:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இசை நிகழ்ச்சி பார்க்கச்சென்றவருக்கு இறுதியில் காத்திருந்த சோகம் ; நள்ளிரவில் நடந்த அசம்பாவிதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/tragedy-awaits-concertgoer-in-the-end-1788939469"></link>
            <id>https://jvpnews.com/article/tragedy-awaits-concertgoer-in-the-end-1788939469</id>
            <summary type="text">ஹொரணை, வகவத்த களுபஹன பாடசாலைக்கு அருகில் அதிக வேகமாகவும் தலைக்கவசம் இன்றியும் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று விபத்துக்குள்ளானதில் நபர் ஒருவர் உயிரிழந...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">ஹொரணை, வகவத்த களுபஹன பாடசாலைக்கு அருகில் அதிக வேகமாகவும் தலைக்கவசம் இன்றியும் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று விபத்துக்குள்ளானதில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
</p><p style="text-align: justify; ">
 

மோட்டார் சைக்கிள் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி வீழ்ந்ததிலேயே இந்த விபத்து சம்பவித்துள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9cb6f510-76f1-425b-be98-c6184045b217/26-6aa10ccebf09e.webp' /></p><h2 style="text-align: justify; ">மேலதிக விசாரணை</h2><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
 

விபத்தில் உயிரிழந்தவர் 44 வயதுடைய நபராவார்.</p><p style="text-align: justify; ">

 

இவர் கடந்த நாள் ஹொரணை நகரில் நடைபெற்ற இசை நிகழ்ச்சி ஒன்றைப் பார்த்துவிட்டு, மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது நள்ளிரவு 2.00 மணியளவில் இந்த விபத்துக்கு முகங்கொடுத்துள்ளார்.</p><p style="text-align: justify; ">

 

இரவு நேரத்தில் இந்த விபத்தைக் எவரும் பார்க்கவில்லை எனவும், காலையில் வீதியால் சென்ற நபர் ஒருவர் சம்பவத்தைப் பார்த்து பொலிஸாருக்குத் தகவல் தெரிவித்துள்ளதாகவும் பொலிஸாரின் முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
 

உயிரிழந்த நபர் ஹொரணை பகுதியில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியைப் பார்த்துவிட்டு, செயலி (App) மூலம் பெறப்பட்ட மோட்டார் சைக்கிள் ஒன்றில் வகவத்த பகுதிக்கு வந்து, அங்கு நிறுத்தப்பட்டிருந்த தனது மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு மற்றொரு நண்பரின் மோட்டார் சைக்கிளுக்குப் பின்னால் அதிவேகமாகச் சென்றபோதே இந்த விபத்து நடந்துள்ளது.
</p><p style="text-align: justify; ">&nbsp;சம்பவம் தொடர்பில் ஹொரணை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;&nbsp;</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-09T07:37:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கைக்கு அருகில் நங்கூரமிட்டுள்ள ஈரானிய கப்பல்கள்.. அரசாங்கம் வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/iranian-ships-among-47-vessels-near-sri-lanka-1788867082"></link>
            <id>https://tamilwin.com/article/iranian-ships-among-47-vessels-near-sri-lanka-1788867082</id>
            <summary type="text">அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே நிலவும் இராணுவ மோதலுக்கு மத்தியில், இலங்கையின் கடல் எல்லைக்கு அருகிலுள்ள சர்வதேச கடற்பரப்பில் சுமார் 47 கப்பல்கள் நங...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே நிலவும் இராணுவ மோதலுக்கு மத்தியில், இலங்கையின் கடல் எல்லைக்கு அருகிலுள்ள சர்வதேச கடற்பரப்பில் சுமார் 47 கப்பல்கள் நங்கூரமிட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
</p><p>
வாராந்திர அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் நேற்று (08) இத்தகவலை வெளியிட்டார்.
</p><p>
இக்கப்பல்கள் இலங்கையின் பிராந்திய கடல் எல்லைக்கு 24 கடல் மைல் தொலைவுக்கு அப்பால் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெளிவுபடுத்தினார்.</p><h2>இலங்கைக்கு அருகில்..&nbsp;</h2><p>

இவற்றில் ஈரானிய கப்பல்கள் மட்டுமின்றி பிற நாடுகளைச் சேர்ந்த கப்பல்களும் அடங்கியுள்ளன என்பதைக் குறிப்பிட்ட அமைச்சர், அவை வணிக மற்றும் சரக்குக் கப்பல்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/35c202b0-e6a8-4909-905b-bc5f5f97a2e3/26-6aa10cc2d90b0.webp' /></p><p>

இதுவரை எந்தவொரு கப்பலும் இலங்கையிடம் வசதிகளையோ அல்லது உதவிகளையோ கோரவில்லை என்றும், இலங்கை தரப்பிலிருந்து அவற்றுக்கு எந்தவித வசதிகளும் வழங்கப்படவில்லை என்றும் அவர் வலியுறுத்தினார்.
</p><p>
இருப்பினும், கடற்படை தற்போது நிலைமையைக் கண்காணித்து வருவதாகக் குறிப்பிட்ட வெளிவிவகார அமைச்சர், இவ்விவகாரம் தொடர்பாக அரசாங்கத்தின் தலையீடு எதுவும் இல்லை என்றும் உறுதியளித்தார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-09T07:37:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜனாதிபதி தலைமையில் அரச இலக்கிய விருது விழா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/state-literary-awards-ceremony-of-president-1788938949"></link>
            <id>https://tamilwin.com/article/state-literary-awards-ceremony-of-president-1788938949</id>
            <summary type="text">இலங்கை இலக்கியத் துறையைத் தமது உன்னதமான படைப்புகளால் வளப்படுத்திய
இலக்கியவாதிகளைக் கௌரவிக்கும் அரச இலக்கிய விருது விழா 2026, ஜனாதிபதி
அநுரகுமார திஸா...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை இலக்கியத் துறையைத் தமது உன்னதமான படைப்புகளால் வளப்படுத்திய
இலக்கியவாதிகளைக் கௌரவிக்கும் அரச இலக்கிய விருது விழா 2026, ஜனாதிபதி
அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் நேற்று கொழும்பு
பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
</p><p>
புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு, கலாசார அலுவல்கள்
திணைக்களம், இலங்கை கலைக் கழகம் மற்றும் அரச இலக்கியக் குழு ஆகியவை இணைந்து
67ஆவது முறையாக இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தன.</p><h2>அரச விருதுகள்</h2><p>
</p><p>
2025ஆம் ஆண்டில் இலங்கை இலக்கியத் துறைக்குச் சிறந்த பங்களிப்பை வழங்கிய
எழுத்தாளர்களைப் பாராட்டி, 50 இற்கும் மேற்பட்ட பிரிவுகளில் அரச விருதுகள்
வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6ac28720-8e35-4be3-a138-bfac3424103c/26-6aa10cb22bdb0.webp' />&nbsp;</p><p>

இலங்கை இலக்கியத் துறைக்கு உன்னதமான சேவையாற்றியமைக்காக, வாழ்க்கையில் ஒருமுறை
மட்டுமே வழங்கப்படுகின்ற உயரிய 'சாஹித்யரத்ன' கௌரவ விருதுகள் மூன்று மொழிப்
படைப்பாளிகளுக்கு ஜனாதிபதியால் வழங்கிவைக்கப்பட்டன.</p><p>

சிங்கள மொழிப் பிரிவில் பராக்கிரம கொடித்துவக்குக்கும், தமிழ் மொழிப் பிரிவில்
கவிஞர் சோமசுந்தரம்பிள்ளை பத்மநாதனுக்கும், ஆங்கில மொழிப் பிரிவில்
பேராசிரியர் ஈ. ஏ. காமினி பொன்சேகாவுக்கும் மேற்படி விருதுகள் வழங்கப்பட்டன.</p><h2>2026ஆம் ஆண்டுக்கான இலக்கிய விருது</h2><p>
</p><p>
இதன்போது 2026ஆம் ஆண்டுக்கான இலக்கிய விருதுக்குரிய நூற்தொகுதி, நினைவுமலர்
மற்றும் மும்மொழிகளிலான 2026 இலக்கிய இதழ் ஆகியவை ஜனாதிபதியிடம்
உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டன.</p><p>

மகா சங்கத்தினர் உட்பட அனைத்து மதத் தலைவர்கள், புத்தசாசன, சமய மற்றும் கலாசார
அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனெவி, புத்தசாசன, சமய மற்றும்
கலாசார அலுவல்கள் பிரதி அமைச்சர் கமகெதர திஸாநாயக்க, புத்தசாசன, சமய மற்றும்
கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் பிரின்ஸ் சேனாதீர, கலாசார அலுவல்கள்
பணிப்பாளர் கே.எஸ். தில்ஹானி, இலங்கைக் கலைக் கழகத்தின் தலைவர் கீர்த்தி
வெலிசரகே, தேசிய இலக்கிய உப கழகத்தின் தலைவர் கமல் பெரேரா ஆகியோருடன்,
நிபுணர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள் உள்ளிட்ட பலர் இந்த நிகழ்வில்
கலந்துகொண்டனர்.&nbsp;</p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-09T07:37:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் - வேட்பாளர்களை அறிவித்த திமுக]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/dmk-announced-candidates-for-by-election-1788939245"></link>
            <id>https://news.lankasri.com/article/dmk-announced-candidates-for-by-election-1788939245</id>
            <summary type="text">dmk announced candidates for madurantakam and dharapuram by election: மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பாளர்களை திமுக அறிவித...</summary>
            <content type="html"><![CDATA[<p>dmk announced candidates for madurantakam and dharapuram by election: மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பாளர்களை திமுக அறிவித்துள்ளது. </p><h3>

இடைத்தேர்தலுக்கு வேட்பாளர்களை அறிவித்த திமுக</h3><p> 

தமிழ்நாட்டில் 7 சட்டமன்ற தொகுதிகள் காலியானாதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளுக்கு இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cd4a5756-594d-4f02-991a-6ef0525d7999/26-6aa10bef28636.webp' /></p><p>

இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்குகிறது. அக்டோபர் 6 ஆம் திகதி வாக்குப்பதிவும், அக்டோபர் 8 ஆம் திகதி வாக்கு எண்னிக்கையும் நடைபெற உள்ளது.&nbsp;</p><p></p><p> 

இந்நிலையில் 2 தொகுதிகளுக்குமான வேட்பாளர்களை திமுக அறிவித்துள்ளது.</p><p>

மதுராந்தகம் தொகுதியில் திமுக சட்டத்துறை இணைச்செயலாளர் ஐ.பரந்தாமன் மற்றும் தாராபுரம் தொகுதியில் சுகன்யா போட்டியிடுவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-09T07:34:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனேடிய மதுபானம், மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட பொருட்களுக்கு அமெரிக்கா தடை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/us-bans-canadian-alcohol-bikes-dairy-imports-1788939333"></link>
            <id>https://news.lankasri.com/article/us-bans-canadian-alcohol-bikes-dairy-imports-1788939333</id>
            <summary type="text">US bans Canadian alcohol bikes dairy imports: கனேடிய மதுபானம், மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட பொருட்களுக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது.

இறக்குமதி தடைஅ...</summary>
            <content type="html"><![CDATA[<p>US bans Canadian alcohol bikes dairy imports: கனேடிய மதுபானம், மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட பொருட்களுக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது.</p><h2>

இறக்குமதி தடை</h2><p>அமெரிக்கா மற்றும் கனடா இடையிலான வர்த்தகப் போர் மேலும் தீவிரமடைந்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், அமெரிக்க பொருட்களுக்கு கனடா விதித்த எதிர் வரி நடவடிக்கைகளுக்கு பதிலடியாக, கனடாவில் இருந்து வரும் பல பொருட்களுக்கு இறக்குமதி தடை விதித்துள்ளார்.
</p><p>
செப்டம்பர் 29 முதல் அமுலுக்கு வரும் இந்த தடை, மதுபானங்கள், பால் சார்ந்த பொருட்கள், மோட்டார் சைக்கிள்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை உள்ளடக்கியது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7aa8674c-1077-4b41-86b6-af655a03a614/26-6aa10c46f2a08.webp' /></p><p> </p><p>மேலும், சில பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்கப்பட்டுள்ளது. உதாரணமாக, சீஸ், மோட்டார் படகு, உலோகங்கள், மரச்சாமான்கள் போன்றவை அதிக வரி சுமையுடன் அமெரிக்க சந்தையில் நுழைய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
</p><p>
கனடா தனது பக்கம், அமெரிக்காவின் எஃகு, ஆடை, மரச்சாமான்கள் போன்ற பொருட்களுக்கு டொலருக்கு-டொலர் வரி விதித்துள்ளது. இதனால் இரு நாடுகளின் வியாபாரிகளும் வாடிக்கையாளர்களும் பெரும் சிரமங்களை எதிர்கொள்ள வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. விலைகள் உயர்ந்து, வாடிக்கையாளர்கள் குறையும் அபாயம் இருப்பதாக வியாபாரிகள் எச்சரிக்கின்றனர்.</p><p></p><p>
அமெரிக்கா-கனடா உறவு வரலாற்று ரீதியாக நெருக்கமானது. கனடாவின் மொத்த ஏற்றுமதியில் மூன்றில் இரண்டு பங்கு அமெரிக்காவிற்கே செல்கிறது. ஆனால் தற்போதைய வர்த்தகப் போர், இரு நாடுகளின் பொருளாதாரத்தையும் கடுமையாக பாதிக்கும் அபாயம் உள்ளது.
</p><p>
பொருளாதார நிபுணர்கள், இந்த வர்த்தகப் போர் இரு தரப்புக்கும் இழப்பை ஏற்படுத்தும் ஒன்றாக இருக்கும் என எச்சரிக்கின்றனர். வாடிக்கையாளர்களே மிகப்பெரிய இழப்பாளர்ககளாக இருப்பார்கள் என அவர்கள் கூறுகின்றனர்.
</p><p></p><p>கனடா பிரதமர் மார்க் கார்னி, “செயல்படுவதற்கு எப்போதும் செலவு இருக்கும். ஆனால் செயல்படாமல் இருப்பதற்கான செலவு அதைவிட அதிகம்” என தெரிவித்துள்ளார்.
</p><p>
இந்த வர்த்தகப் போர் எப்போது முடிவடையும் என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை. இரு தரப்பும் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக கூறினாலும், புதிய பேச்சுவார்த்தைக்கான திகதிகள் அறிவிக்கப்படவில்லை.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-09T07:32:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானிடம் சிக்கிய அமெரிக்க இராணுவத்தின் அதி நவீன ஆளில்லா நீர்மூழ்கி வாகனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/iran-captures-advanced-us-unmanned-submarine-1788938184"></link>
            <id>https://canadamirror.com/article/iran-captures-advanced-us-unmanned-submarine-1788938184</id>
            <summary type="text">&amp;nbsp;அமெரிக்க இராணுவத்தின் மிக நவீன மற்றும் நுண்ணறிவு திறன் கொண்ட ஆளில்லா நீர்மூழ்கி வாகனங்களில் ஒன்று தங்களிடம் சிக்கியுள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது....</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;அமெரிக்க இராணுவத்தின் மிக நவீன மற்றும் நுண்ணறிவு திறன் கொண்ட ஆளில்லா நீர்மூழ்கி வாகனங்களில் ஒன்று தங்களிடம் சிக்கியுள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது.
</p><p>


அமெரிக்க இராணுவத்துக்குச் சொந்தமான குறித்த நவீன ஆளில்லா நீர்மூழ்கி வாகனத்தை, ஹோர்முஸ் ஜலசந்தியின் நுழைவுப் பகுதியில் கைப்பற்றியதாக ஈரான் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5fb1f9a7-f4e2-425c-8e66-63983b038d75/26-6aa107ca58894.webp' /></p><p> </p><p>



சிக்கலான உளவுத் தேடுதல் நடவடிக்கையின் மூலம் இந்த நீர்மூழ்கி வாகனம் கைப்பற்றப்பட்டதாக ஈரான் புரட்சிகர காவல்படையின் கடற்படை தெரிவித்துள்ளது. மேலும், அதனை கைப்பற்றிய காட்சிகளையும் ஈரான் வெளியிட்டுள்ளது.</p><p> இதற்கு விளக்கமளித்த அமெரிக்கா இராணுவம், ஈரான் கைப்பற்றியதாக கூறப்படும் நீர்மூழ்கி கப்பல் ஒரு நாளுக்கு முன்பே தொழில்நுட்பக் கோளாறு காரணமாக செயலிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளது.
</p><p>


மேலும், அதில் இரகசிய தகவல்களை சேகரிக்கும் கருவிகளோ, ரகசிய சோனார் அல்லது ரேடார் சாதனங்களோ இல்லை என்றும் அமெரிக்கா கூறியுள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-09T07:30:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Tony</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீங்க இல்லாம முதல் திருமண நாள், கண்ணீர் விட்ட புகழ்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/vijay-tv-pugazh-emotional-post-1788937747"></link>
            <id>https://cineulagam.com/article/vijay-tv-pugazh-emotional-post-1788937747</id>
            <summary type="text">புகழ்குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சி மூலம் உலகம் முழுவதும் உள்ள தமிழ் நெஞ்சங்களை கொள்ளையடித்தவர் புகழ். இவரின் கெட்டப், டைமிங் என அனைத்திற்கும் மிகப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புகழ்</h2><p>குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சி மூலம் உலகம் முழுவதும் உள்ள தமிழ் நெஞ்சங்களை கொள்ளையடித்தவர் புகழ்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/550920d9-1fa2-40f9-8e49-0c385bc06cd3/26-6aa10616d2893.webp' /></p><p>இவரின் கெட்டப், டைமிங் என அனைத்திற்கும் மிகப்பெரிய ரசிகர்கள் வட்டம் உள்ளது. அதிலும் குக் வித் கோமாளி 2 இவர் அஷ்வின் சிவாங்கி என பலரும் மிகப்பெரிய அளவில் ரீச் ஆகினர்.</p><p></p><h2>இன்ஸ்டா&nbsp;பதிவு </h2><p> 

இந்நிலையில், புகழ் சமீபத்தில் தன் இன்ஸ்டா பக்கத்தில் மிகவும் கண்ணீருடன் ஒரு போஸ்ட் பதிவு செய்துள்ளார். அதில் தன் அப்பா இறந்து ஒரு வருடம் ஆகிறது. நீங்கள் இல்லாமல் அம்மா கடக்கும் முதல் திருமண நாள், நீங்கள் எப்போதும் எங்கள் நினைவில் இருப்பீர்கள் என கண்ணீர் மல்க புகழ் கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/638c365b-4091-4d68-a7af-d85ce306593e/26-6aa106178c7e9.webp' /></p><p>

இந்த போஸ்ட் பார்த்த பலரும் மிகவும் எமோஷனல் ஆகி புகழுக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.</p><p><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/p/DdAraCMk0QT/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/p/DdAraCMk0QT/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/p/DdAraCMk0QT/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by Pugazh (@pugazhoffl_)</a></p></div></blockquote> <script async src="//www.instagram.com/embed.js"></script></p>]]></content>
            <updated>2026-09-09T07:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானியாவில் 1,000க்கும் மேற்பட்ட விமான சேவைகள் திடீர் இரத்து; பயணிகள் பெரும் அவதி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/over-1-000-flights-suddenly-cancelled-in-britain-1788938394"></link>
            <id>https://jvpnews.com/article/over-1-000-flights-suddenly-cancelled-in-britain-1788938394</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;பிரித்தானியாவின் தேசிய விமானச் செயலாக்க அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, அந்நாடு முழுவதும் விமானப் போக்குவரத்து கடுமையாகப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;பிரித்தானியாவின் தேசிய விமானச் செயலாக்க அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, அந்நாடு முழுவதும் விமானப் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
</p><p>
பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தானியங்கி விமானக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, 15-க்கும் மேற்பட்ட பிரித்தானிய விமான நிலையங்களில் 1,000-க்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/11b87fcb-d851-488c-82fb-de19106c3982/26-6aa1089b9969c.webp' /></p><h2>&nbsp;பல விமான நிலையங்களில் பெரும் குழப்பம்&nbsp;</h2><p>
</p><p>
தொழில்நுட்பக் கோளாறு தற்போது சரிசெய்யப்பட்டுவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ள போதிலும், அதன் தாக்கம் இன்னும் நீடிப்பதால் பல விமான நிலையங்களில் பெரும் குழப்பம் நிலவுவதாக கூறப்படுகிறது.
</p><p>
 இந்த திடீர் விமான இரத்துகள் மற்றும் தாமதங்கள் காரணமாக ஆயிரக்கணக்கான பயணிகள் விமான நிலைய முனையங்களிலும், ஓடுதளங்களில் நிறுத்தப்பட்டுள்ள விமானங்களுக்குள்ளும் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><p>

பிரிட்டிஷ் ஏர்வேஸ் 100-க்கும் மேற்பட்ட விமானச் சேவைகளை இரத்து செய்ய அல்லது மாற்று விமான நிலையங்களுக்கு திருப்பிவிட வேண்டிய நிலைக்கு ஆளாகியுள்ளது.
</p><p>
அதேவேளை, ரையான்ஏர் நிறுவனத்தின் 50-க்கும் மேற்பட்ட திட்டமிடப்பட்ட விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதால், சுமார் 65,000-க்கும் அதிகமான பயணிகள் நேரடியாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><p>
</p><p>
இந்தத் தொழில்நுட்பக் கோளாறு ஐரோப்பா முழுவதும் விமானச் சேவைகளில் குறிப்பிடத்தக்க தாமதங்களை ஏற்படுத்தியுள்ளதாக ஈஸிஜெட் தெரிவித்துள்ளது.

அத்துடன் ஹீத்ரோ, ஸ்டான்ஸ்டெட், இலண்டன் சிட்டி, மான்செஸ்டர், பர்மிங்ஹாம் உள்ளிட்ட முக்கிய விமான நிலையங்களிலும், ஸ்காட்லாந்தின் சில விமான நிலையங்களிலும் இதன் தாக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>

 இந் நிலையில் விமானப் பயண அட்டவணைகள் மாற்றமடைந்துள்ள நிலையில், பயணிகள் தங்களது விமானங்களின் நிலவரத்தை சம்பந்தப்பட்ட விமான நிறுவனங்களிடம் சரிபார்த்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-09-09T07:28:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நல்லூர் கந்தன் தேர்த் திருவிழாவில் தாலிக்கொடியை பறிகொடுத்து கதறும் பெண்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/woman-losing-thali-chain-nallur-chariot-festival-1788935884"></link>
            <id>https://jvpnews.com/article/woman-losing-thali-chain-nallur-chariot-festival-1788935884</id>
            <summary type="text">&amp;nbsp;&amp;nbsp;நல்லூர் கந்தன் தேர்த் திருவிழாவில் தாலிக்கொடியை பறிகொடுத்து கதறும் பெண்!

வரலாற்று பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் நல்லூர் கந்தன் தேர்த் திர...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;<a href="https://jvpnews.com/article/nallur-kandan-blesses-devotees-from-chariot-1788928177" target="_blank">&nbsp;நல்லூர் கந்தன் தேர்த் திருவிழாவி</a>ல் தாலிக்கொடியை பறிகொடுத்து கதறும் பெண்!

வரலாற்று பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் நல்லூர் கந்தன் தேர்த் திருவிழாவில் (9) தாலிக்கொடியைப் பறிகொடுத்து பெண் ஒருவர் கதரி அழுத காணொளி சமூக ஊடகங்க்களில் வெளியாகியுள்ளது.</p><p> 

 
இன்று காலை நல்லூரான் தேர்த் திருவிழாவை காண வந்த பெண் தாலிக்கொடியை பறிகொடுத்து விட்டு தாயொருவர் நிலத்தில் இருந்து அழுதவாறு நின்றுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d4c78acd-8686-4669-97e9-c56a4860aea8/26-6aa10168d6818.webp' /></p><p></p><h2>திருடர்கள் குறித்து பொலிஸார்&nbsp; &nbsp;எச்சரிக்கை</h2><p> 

 அந்த பெண் மட்டுமல்லாது விலையுயர்ந்த அணிகலன்களை பறிகொடுத்து விட்டு தவித்த வண்ணம் உள்ளார்கள். சிலர் காவல்துறையினரிடம் வாக்குமூலத்தை பதிவு செய்துள்லதாகவும் கூறப்படுகின்றது.</p><p></p><p>

அதேவேளை நல்லூர் கந்தன் ஆலய திருவிழா திருடர்கள் குறித்து பொலிஸார் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p><iframe src="https://www.facebook.com/plugins/video.php?height=476&href=https%3A%2F%2Fwww.facebook.com%2Freel%2F1390156846568193%2F&show_text=false&width=380&t=0" width="380" height="476" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share" allowFullScreen="true"></iframe></p>]]></content>
            <updated>2026-09-09T07:27:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாமலை பிச்சைக்காரருடன் ஒப்பிட்ட கம்மன்பில.. 800,000 அமெரிக்க டொலர்கள் நன்கொடையா!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-arrest-vijitha-hearath-responds-gammanpila-1788937122"></link>
            <id>https://tamilwin.com/article/namal-arrest-vijitha-hearath-responds-gammanpila-1788937122</id>
            <summary type="text">ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச பெற்றதாகக் கூறப்படும் தொகையை பிச்சைக்காரனுக்கு வழங்கும் பணத்துடன...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச பெற்றதாகக் கூறப்படும் தொகையை பிச்சைக்காரனுக்கு வழங்கும் பணத்துடன் ஒப்பிட்டு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில வெளியிட்ட கருத்தை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் நிராகரித்துள்ளார். </p><p>அரசியல் விடயம் தொடர்பில் பெருந்தொகை பணத்தை பெற்றுக்கொள்வதை பிச்சைக்காரனுக்கு பணம் கொடுப்பதுடன் ஒப்பிட முடியாது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.&nbsp;</p><p>அத்துடன், அவ்வாறு பார்த்தால் நாமல் ராஜபக்ச ஒரு பிச்சைக்காரராகவே இருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்ட அமைச்சர், இவ்வாறான ஒப்பீட்டை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் எனக் கூறியுள்ளார்.&nbsp;</p><h2>&nbsp;800,000 அமெரிக்க டொலர்..&nbsp;</h2><p> பிச்சைக்காரருக்கு பணம் கொடுப்பதற்கும் அரசியல்வாதிக்கு பணம் கொடுப்பதற்கும் இடையே தெளிவான வேறுபாடு உள்ளதுடன், அரசியல்வாதிகள் எவ்வாறு பணம் சம்பாதித்தார்கள் என்பதை நாட்டு மக்கள் அறிவர் என்பதால் கம்மன்பிலவின் தர்க்கத்தையே கேள்விக்குட்படுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3c9a91fe-b6c8-4f7f-a36b-e5a64a9fb301/26-6aa107e6076ed.webp' /></p><p> </p><p>அத்துடன், ஊழல் மற்றும் மோசடிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதில் Gen Z தலைமுறையினர் ஆதரவாக இருப்பதாகவும், நாமல் ராஜபக்சவுக்கு எதிரான வழக்கு தற்போதைய அரசாங்கத்தால் தொடரப்படவில்லை மாறாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சியின் போதே தாக்கல் செய்யப்பட்டது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.&nbsp;</p><p> முன்னதாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருந்த கம்மன்பில, தொழிலதிபர் நிமல் பெரேராவினால் நாமல் ராஜபக்சவுக்கு 800,000 அமெரிக்க டொலர் வழங்கப்பட்டதாகக் கூறப்படும் தொகையை எவ்வாறு தரகு எனக் கூற முடியும் எனக் கேள்வி எழுப்பினார்.&nbsp;</p><p>அத்துடன், நன்கொடைகளைப் பெறுவது சட்டவிரோதம் என்றால் வீதியிலுள்ள பிச்சைக்காரர் கூட சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும் என வாதிட்டிருந்தமைக்கே அமைச்சர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-09T07:21:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[செப்டம்பர் 19 ஆம் திகதி முதல் இது கட்டாயம் - பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/seat-belts-mandatory-on-expressways-ways-from-sept-1788929518"></link>
            <id>https://ibctamil.com/article/seat-belts-mandatory-on-expressways-ways-from-sept-1788929518</id>
            <summary type="text">அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் சகல வாகனங்களிலும் ஆசனப்பட்டி அணிவது எதிர்வரும் 19 ஆம் திகதி முதல் கட்டாயமாக்கப்படுமென&amp;nbsp;அரசாங்கம் அறிவித்துள்ளது....</summary>
            <content type="html"><![CDATA[<p>அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் சகல வாகனங்களிலும் ஆசனப்பட்டி அணிவது எதிர்வரும் 19 ஆம் திகதி முதல் கட்டாயமாக்கப்படுமென&nbsp;அரசாங்கம் அறிவித்துள்ளது.</p><p>நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற மோட்டார் வாகன கட்டளைச் சட்டத்தின் ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க இதனைக் குறிப்பிட்டார்.</p><p></p><h2>கடுமையான நடவடிக்கைகள்&nbsp;</h2><p>


அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,



பயணிகள் போக்குவரத்துச் சேவையில் ஈடுபடும் பேருந்துகள், வேன் மற்றும் முச்சக்கரவண்டிகள் மூன்று மாதத்துக்கு ஒருமுறை தமது வாகனத்தின் தரம் தொடர்பில் பரிசீலனைசெய்து உரிய சான்றிதழைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/acf98091-4e39-4fff-91d5-a8c986e789f4/26-6aa0ff17675e1.webp' /></p><p>



கடந்த காலங்களில் இடம்பெற்ற வீதி விபத்துகள் தொடர்பில் முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. வாகனங்களின் தரம் தொடர்பில் முறையான பரிசீலனை செய்யாமல் அவற்றைப் பயன்படுத்தியுள்ளமை இவ்வாறான விபத்துகளுக்குக் காரணமாக அமைந்துள்ளதென்பது தெளிவாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.</p><p>



வீதி விபத்துகளைக் கட்டுப்படுத்த வேண்டுமாயின் சட்டங்களையும் ஒழுங்குவிதிகளையும் கட்டாயப்படுத்த வேண்டும். ஏனெனில், ஏனைய நாடுகளை விட இலங்கையில் வீதி போக்குவரத்து தொடர்பில் திருப்திகரமான தன்மை கிடையாது. </p><p>இந்த நிலைமையை மாற்றியமைக்க வேண்டும்.



வீதி விபத்துகளைத் தடுப்பதற்கு கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். அதிவேக நெடுஞ்சாலை வீதிகளில் பயணிக்கும் சகல வாகனங்களிலும் ஆசனப்பட்டி அணிதல் எதிர்வரும் 19ஆம் திகதி முதல் கட்டாயமாக்கப்படும் என்றார்.&nbsp;&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-09T07:20:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[சபையின் நடவடிக்கைகளுக்கு இடையூறு! அர்ச்சுனா எம்.பிக்கு சபாநாயகர் கடுமையான எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/speaker-issues-stern-warning-to-mp-arjuna-1788938373"></link>
            <id>https://ibctamil.com/article/speaker-issues-stern-warning-to-mp-arjuna-1788938373</id>
            <summary type="text">யாழ்.மாவட்ட நாடாளுன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதனுக்கு சபாநாயகர் கடுமையான எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற விவாதத்தி...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்.மாவட்ட நாடாளுன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதனுக்கு சபாநாயகர் கடுமையான எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.</p><p>

நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற விவாதத்தின் போது, நிலையியற் கட்டளைகள் தொடர்பில் எழுப்பிய கேள்வி குறித்தே சபாநாயகர் இந்த விடயத்தை சுட்டிகாகாட்டினார்.</p><p>சபையின் நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவித்தால் 72, 79 நிலையியற் கட்டலைகளின் படி தண்டனை வழங்க நேரிடும் என சபாநாயகர் கூறியிருந்தார்.</p><p></p><h2>நிலையியற் கட்டளை கருத்து</h2><p>இது குறித்து தெரியவருகையில்,</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c4d1456b-99e7-4f14-9060-e07c9b5124a1/26-6aa10ebb2d3e3.webp' /></p><p>இன்றைய நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றிய சாமர சம்பத் தசனாயக்க வெளிப்படுத்திய கருத்தொன்றை ஹன்சாட் செய்யுமாறு ஆளும் கட்சியின் உறுப்பினர் ஒருவர் வலியுறுத்தினார்.</p><p> இதன்போது நிலையியற் கட்டளைகள் குறித்து தனது கருத்தை வெளியிட்ட அர்ச்சுனா, நிலையியற் கட்டளையில் உள்ள விடயங்கள் பற்றி விளக்கம் இல்லாவிட்டால் இணையத்தில் சென்று பார்வையிடுமாறு குறித்த ஆளும் கட்சி எம்.பியின் கருத்துக்கு பதில் வழங்கினார்.</p><p>
இதனை தொடர்ந்தே சபாநாயகர் மேற்கண்ட விடயத்தை சுட்டிக்காட்டினார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-09T07:19:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[முன்னாள் அமைச்சரின் செயலாளர் கொலை! வெளிநாட்டிலிருந்து நாடு கடத்தப்பட்ட ஆபத்தான நபர் சி.ஐ.டியிடம் ஒப்படைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/konda-ranji-back-to-the-island-today-1788920335"></link>
            <id>https://tamilwin.com/article/konda-ranji-back-to-the-island-today-1788920335</id>
            <summary type="text">புதிய இணைப்புடுபாயில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட பாதாள உலகக்கும்பல் உறுப்பினர் ரஞ்சித் குமார என்ற ‘கொண்ட ரஞ்சி’, கட்டுநாயக்க விமான ...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>டுபாயில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட பாதாள உலகக்கும்பல் உறுப்பினர் ரஞ்சித் குமார என்ற ‘கொண்ட ரஞ்சி’, கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டார்.
</p><p>
இன்று காலை (09) கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தால் அவர் கைது செய்யப்பட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5b476ebc-f478-4ebf-b383-16c7ad5cd7af/26-6aa107cf821fb.webp' /></p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">இரண்டாம் இணைப்பு</span></p><p>டுபாயில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு நாடுகடத்தப்பட்ட பாதாள உலகக் குழு உறுப்பினரான ரஞ்சித் குமார் என்ற ‘கொண்ட ரஞ்சி’ குற்றப்புலனாய்புத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
 

இன்று (09) காலை 8.00 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த நிலையில் அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.</p><h2>முதலாம் இணைப்பு</h2><p>ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்கும்பல் உறுப்பினரான ரஞ்சித் குமார் என்ற 'கொண்ட ரஞ்சி' டுபாயிலிருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

</p><p>இன்று (09) காலை 8.00 மணிக்கு அவர் டுபாயிலிருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>இத்தாலிக்கு தப்பிச்செல்ல முயற்சி</h2><p>'கொண்ட ரஞ்சி', இத்தாலிக்கு தப்பிச்செல்ல முயன்றபோது, ​​ஜனவரி 09 திகதி டுபாயில் கைது செய்யப்பட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d1f3d237-d22b-4484-83e9-bfe334436d18/26-6aa0c473cf192.webp' /></p><p>
</p><p>இதன்போது அவரது மனைவியும் குழந்தைகளும் அந்நாட்டின் பாதுகாப்புப்படையினரால் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர். </p><p>கொண்டா ரஞ்சி', முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவின் ஒருங்கிணைப்புச்செயலாளர் கொலை வழக்கில் பொலிஸாரால் தேடப்படும் சந்தேகநபராகவும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-09T07:17:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[பொதுக் கழிப்பறைக்கு டொனால்ட் டிரம்ப் பெயர்: கனடாவில் வெளிப்பட்ட விசித்திர எதிர்ப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/trump-memorial-rogue-sign-put-up-to-washroom-in-bc-1788937935"></link>
            <id>https://canadamirror.com/article/trump-memorial-rogue-sign-put-up-to-washroom-in-bc-1788937935</id>
            <summary type="text">&amp;nbsp;கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள பொதுக் கழிப்பறை ஒன்றிற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் பெயர் சூட்டப்பட்ட சம்பவம் பெரும் ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள பொதுக் கழிப்பறை ஒன்றிற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் பெயர் சூட்டப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பையும் நகைப்பையும் ஏற்படுத்தியுள்ளது.</p><p>
விக்டோரியா நகரின் பிரபல 'கேலோப்பிங் கூஸ்' நடைபாதை அருகே அமைந்த பொதுக் கழிப்பறையின் நுழைவாயிலில், "டொனால்ட் ஜே. டிரம்ப் நினைவகம்" என்ற மரத்தாலான பலகை மர்ம நபர்களால் பொருத்தப்பட்டிருந்தது.</p><p>
ஞாயிற்றுக்கிழமை இதுகுறித்துத் தகவல் கிடைத்ததும், மாலை 6 மணியளவில் அந்தப் பலகையை விக்டோரியா நகர சபை அதிகாரிகள் அகற்றிவிட்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/353e4324-d78d-420c-9a74-d5546cfc1b23/26-6aa106d134d26.webp' /></p><p> 
அந்த இடத்தில் பாதுகாப்பு கேமராக்கள் இல்லாததால் பலகையை வைத்தது யார் என்பதைக் கண்டறிய முடியவில்லை.
</p><p> கனடா - அமெரிக்க வர்த்தகப் போரினால் ஆத்திரமுற்ற மக்கள், டிரம்ப் மீதான தங்கள் எதிர்ப்பை இத்தகைய விசித்திர வழிகளில் காட்டி வருகின்றனர். </p><p>
கடந்த கோடையில், உள்ளூர் கலைஞர் ஒருவர் குதிரைச் சாணத்தைப் பயன்படுத்தி டிரம்பின் உருவப்படத்தை வரைந்தார். </p><p>அந்த ஓவியம் 1,800 டொலருக்கு விற்பனையானது குறிப்பிடத்தக்கது.
ஒருபுறம் மக்கள் கழிப்பறைக்குப் பெயர் சூட்டி எதிர்ப்பைப் பதிவுசெய்ய, மறுபுறம் பி.சி. மாகாண முதல்வர் டேவிட் ஈபி, அமெரிக்க எல்லைப் பகுதிகளில் "கனடா ஒருபோதும் அமெரிக்காவின் 51வது மாநிலமாகாது" என்ற எச்சரிக்கைப் பலகையை நிறுவி, டிரம்பின் வர்த்தகக் கொள்கைகளுக்குத் தனது அதிகாரப்பூர்வ எதிர்ப்பையும் தெரிவித்துள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-09T07:17:24+00:00</updated>
        </entry>
    </feed>
