<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-08-19T07:24:23+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் தொடரும் மின் தடை - அவதியில் மக்கள்: வெளியான காரணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/work-underway-to-restore-power-supply-in-jaffna-1787122339"></link>
            <id>https://ibctamil.com/article/work-underway-to-restore-power-supply-in-jaffna-1787122339</id>
            <summary type="text">யாழில் (Jaffna) கடந்த பல நாட்களாக விட்டுவிட்டு மின்தடை ஏற்பட்டது. இதனால் மக்கள்
மிகவும் அல்லல்பட்டனர். குறிப்பாக உயர்தரப் பரீட்சைக்கு தோற்றுகின்ற மாண...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழில் (Jaffna) கடந்த பல நாட்களாக விட்டுவிட்டு மின்தடை ஏற்பட்டது. இதனால் மக்கள்
மிகவும் அல்லல்பட்டனர். </p><p>குறிப்பாக உயர்தரப் பரீட்சைக்கு தோற்றுகின்ற மாணவர்கள்
பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டனர்.
</p><p>
இந்த மின் தடைக்கு காரணம் மின் இணைப்புகளில் தூசி படித்தமையே என
தெரிவிக்கப்பட்டது.</p><p></p><h2>மின்தடை</h2><p>

அந்தவகையில் இவ்வாறு படிந்த தூசியை சுத்தம் செய்யும் நடவடிக்கைகள் இலங்கை
மின்சார சபையினாரல் யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ec1f11a8-7d59-43fd-ac48-08eb5ed25753/26-6a8554f17f872.webp' /></p><p>
அந்தவகையில் நேற்றையதினம் வலிகாமம் மேற்கு பகுதியிலும் குறித்த பணி
முன்னெடுக்கப்பட்டது.
</p><p>
இவ்வாறு சுத்தம் செட்வதன் மூலம் மின்தடை ஏற்படுவதை தடைக்கு முடியும் என
தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/FJQcrzobjUcEaJJsEVOWpF" target="_blank">WHATSAPP </a>CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-19T07:17:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Malaivanjan</name>
            </author>
            <title type="text"><![CDATA[தொழில் வாய்ப்பின்றி இருக்கும் சுமார் 1,800 சுதேச வைத்திய பட்டதாரிகள் - விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/provide-employment-opportunities-graduates-1787122873"></link>
            <id>https://tamilwin.com/article/provide-employment-opportunities-graduates-1787122873</id>
            <summary type="text">சுதேச வைத்தியத்துறையை வலுப்படுத்துவதுடன், தொழில் வாய்ப்பின்றி இருக்கும்
சுமார் 1,800 சுதேச வைத்திய பட்டதாரிகளுக்கு உரிய தொழில் வாய்ப்புகளை
அரசாங்கம்...</summary>
            <content type="html"><![CDATA[<p>சுதேச வைத்தியத்துறையை வலுப்படுத்துவதுடன், தொழில் வாய்ப்பின்றி இருக்கும்
சுமார் 1,800 சுதேச வைத்திய பட்டதாரிகளுக்கு உரிய தொழில் வாய்ப்புகளை
அரசாங்கம் வழங்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன்
கோரிக்கை விடுத்துள்ளார்.</p><p>

எமது உள்நாட்டு வைத்தியத்துறை என்பது பாரம்பரிய அறிவையும் அனுபவத்தையும்
அடிப்படையாகக் கொண்ட முக்கியமான மருத்துவத் துறையாகும் என சுட்டிக்காட்டிய
அவர், இத்தகைய பாரம்பரிய மருத்துவ முறையை பாதுகாத்து, வளர்த்தெடுத்து,
எதிர்கால சந்ததியினருக்கு கொண்டு செல்வது அரசாங்கத்தின் தார்மிக பொறுப்பு
எனவும் தெரிவித்துள்ளார்.</p><h2>சுதேச வைத்தியர்களின் சேவை</h2><p>

ஆயுர்வேதம், சித்த மருத்துவம் மற்றும் யுனானி உள்ளிட்ட சுதேச மருத்துவ முறைகள்
தற்போதைய சூழலில் போதிய முக்கியத்துவம் பெறுகின்றனவா என்ற கேள்வி
எழுந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>

சுதேச மருத்துவத்துறை சார்ந்த பல்கலைக்கழகப் பட்டப்படிப்புகளை நிறைவு செய்து,
உள்ளகப் பயிற்சிகளையும் வெற்றிகரமாக முடித்துள்ள பல பட்டதாரிகள், தொழில்முறை
தகைமைகளை பெற்றிருந்த போதிலும், பல ஆண்டுகளாக தொழில் வாய்ப்பின்றி
காத்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p>

2019ஆம் ஆண்டு முதல் இதுவரை சுமார் 1,800 சுதேச வைத்தியர்கள் தொழில்
வாய்ப்பின்றி இருப்பதாகவும், சிலர் பட்டம் பெற்றும் சுமார் ஏழு ஆண்டுகளாக
தொழில் வாய்ப்பின்றி இருப்பதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர்
சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7e8dcdcb-355a-44e8-a71a-b865c2b23d0a/26-6a8557cb223f9.webp' /></p><p>

பொதுமக்களின் சுகாதாரத் தேவைகளுக்கு சுதேச வைத்தியர்களின் சேவை
அத்தியாவசியமானதாக இருந்த போதிலும், கொள்கை வகுப்பாளர்களால் அவர்களது
பங்களிப்பு போதியளவில் உணரப்படவில்லை என்பது கவலைக்குரிய விடயம் எனவும் அவர்
தெரிவித்துள்ளார்.</p><p>துறைசார் விசேட கல்வியை பெற்றுள்ள சுதேச வைத்தியர்கள், தங்களது தகைமைக்கு
பொருத்தமான வேறு தொழில்களை நாடிச் செல்ல முடியாத நிலை காணப்படுவதாகவும்,
இதனால் அவர்கள் தொழில் மற்றும் மன அழுத்தங்களுக்கு முகங்கொடுத்து வருவதாகவும்
அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><h2>&nbsp;கல்விக்காக முதலீடு</h2><p>
அதேவேளை, நாட்டில் தொற்றா நோய்களால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து
வரும் நிலையில், இத்தகைய நோய்களை கட்டுப்படுத்துவதிலும் மக்களின் ஆரோக்கியத்தை
மேம்படுத்துவதிலும் சுதேச மருத்துவத்துறைக்கும் முக்கிய பங்களிப்பை
வழங்கக்கூடிய ஆற்றல் உள்ளதாகவும் ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்துள்ளார்.</p><p>

இந்நிலையில், வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் மாகாண மட்டத்தில்
சுதேச மருத்துவ சேவைகளை வழங்கும் வைத்தியசாலைகள் போதுமான அளவில்
இல்லாதிருப்பது மற்றுமொரு முக்கிய குறைபாடாகும் என அவர்
சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/823ac174-a658-41e2-9d2c-937fd427ec82/26-6a8557cbd13fa.webp' /></p><p>

ஏனைய மாகாணங்களில் சுதேச மருத்துவ வைத்தியசாலைகள் இயங்கி வரும் நிலையில்,
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அவ்வாறான வசதிகள் போதியளவில்
இல்லாதிருப்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர்
கோரிக்கை விடுத்துள்ளார்.
</p><p>
ஊவா மாகாணத்திற்கான சுதேச மருத்துவ வைத்தியசாலை தியத்தலாவையில் இயங்கி வருவதாக
குறிப்பிடப்பட்டாலும், நாட்டின் அனைத்து பகுதிகளிலும் மக்களின் தேவைக்கு ஏற்ப
சுதேச மருத்துவ சேவைகள் விரிவுபடுத்தப்பட வேண்டும் எனவும் அவர்
வலியுறுத்தியுள்ளார்.
</p><p>
பல்கலைக்கழகங்களில் சுதேச மருத்துவத்துறைக்காக பெருமளவு அரச நிதி
செலவிடப்பட்டு பட்டதாரிகளை உருவாக்கிய பின்னர், அவர்களுக்கு தொழில்
வாய்ப்புகளை வழங்காமல் இருப்பது நாட்டின் மனித வளத்தையும் கல்விக்காக முதலீடு
செய்யப்பட்ட வளங்களையும் வீணடிப்பதாக அமையும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.</p><h2>&nbsp;பொருத்தமான தொழில் வாய்ப்பு</h2><p>

மேலும், நாட்டில் நிலவும் வைத்தியர் பற்றாக்குறையை ஓரளவாவது நிவர்த்தி
செய்வதற்கு சுதேச வைத்தியர்களின் பங்களிப்பை பயன்படுத்திக்கொள்ள முடியும்
எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>

மேலைத்தேய மருத்துவத்துறையில் கல்வி பயிலும் பட்டதாரிகளுக்கு வெளிநாடுகளில்
தொழில் வாய்ப்புகளை பெற்றுக்கொள்ளும் வாய்ப்புகள் காணப்படுகின்ற போதிலும்,
சுதேச மருத்துவப் பட்டதாரிகளுக்கு அவ்வாறான வாய்ப்புகள் குறைவாக இருப்பதாகவும்
அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>
இதன் காரணமாக, சுதேச மருத்துவத்துறையில் கல்வி பயின்ற பல பட்டதாரிகள் தங்களது
கல்வித் தகைமைக்கு பொருத்தமான தொழில் வாய்ப்பின்றி, மாற்றுத் துறைகளில் வேலை
தேடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/44516b6c-7907-4ac2-bf6a-efe1dcc9338a/26-6a8557cc84deb.webp' /></p><p>
</p><p>
எனவே, சுகாதார அமைச்சு இந்த விடயத்தில் உடனடியாக தலையிட்டு, துறைசார் தகைமை
பெற்றுள்ள சுதேச வைத்தியர்களுக்கு முறையான தொழில் வாய்ப்புகளை வழங்குவதற்கான
நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து
சிறிநேசன் கேட்டுக்கொண்டுள்ளார்.</p><p>

'வளத்தை காப்போம், வளமாக வாழ்வோம்' மற்றும் 'கிளீன் ஸ்ரீலங்கா' போன்ற தேசிய
வேலைத்திட்டங்களிலும் மக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நடவடிக்கைகளிலும்
சுதேச வைத்தியர்களின் அறிவையும் அனுபவத்தையும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்
எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.</p><p>

நாட்டின் ஒட்டுமொத்த சுகாதாரத் துறையின் மேம்பாட்டிற்கும், தொற்றா நோய்கள்
உள்ளிட்ட பல்வேறு நோய்களால் பாதிக்கப்படும் மக்களுக்கு தேவையான மருத்துவ
சேவைகளை வழங்குவதற்கும் சுதேச மருத்துவத்துறையின் பங்களிப்பு அவசியமானது
என்பதை அரசாங்கம் உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதே அவரது பிரதான கோரிக்கையாக
உள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-19T07:17:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[மீண்டும் பொருளாதார நெருக்கடி! ரணிலின் கூற்றுக்கு அரசாங்கம் பதிலடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/government-responds-to-ranil-s-warning-1787122287"></link>
            <id>https://ibctamil.com/article/government-responds-to-ranil-s-warning-1787122287</id>
            <summary type="text">


2028 ஆம் ஆண்டிற்குப் பிறகு இலங்கை மீண்டும் ஒரு பொருளாதார நெருக்கடியைச் சந்திக்கும் என்ற முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் எச்சரிக்கையை பிர...</summary>
            <content type="html"><![CDATA[<p>


2028 ஆம் ஆண்டிற்குப் பிறகு இலங்கை மீண்டும் ஒரு பொருளாதார நெருக்கடியைச் சந்திக்கும் என்ற முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் எச்சரிக்கையை பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க திட்டவட்டமாக நிராகரித்துள்ளார்.</p><p>

நாடு மீண்டும் திவாலாவதற்கு எந்தக் காரணமும் இல்லை என்று கூறிய அவர், இலங்கையின் கடன் பொறுப்புகள் முழுமையாக நிர்வகிக்கக்கூடிய அளவில் தான் உள்ளன என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>
இலங்கை 2025 ஆம் ஆண்டில் சுமார் 3.9 பில்லியன் அமெரிக்க டொலர் கடனைச் செலுத்தியுள்ளதாகவும், ,2026 ஆம் ஆண்டில் சுமார் 3.7 பில்லியன் அமெரிக்க டொலர் செலுத்த எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.</p><p></p><h2>மத்திய வங்கி புள்ளிவிபரங்கள்</h2><p>

அதன்படி, 2027-ஆம் ஆண்டில் கடன் திருப்பிச் செலுத்தும் தொகை சுமார் 2.7 பில்லியன் அமெரிக்க டொலராகக் குறையும் என்றும் பிரதி அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2a43a365-d148-48eb-a83b-12bf48723166/26-6a85576c2d944.webp' /></p><p>

முதலீட்டாளர்களுக்கு மத்திய வங்கி வழங்கிய புள்ளிவிபரங்கள், இலங்கை தனது அந்நியச் செலாவணிக் கையிருப்பு நிலையை வலுப்படுத்திக் கொண்டே தனது கடனைத் தொடர்ந்து செலுத்த முடியும் என்பதை நிரூபிக்கின்றன என்று அவர் தெரிவித்துள்ளார்.</p><p> 

இந்தநியைலில், 2026-ஆம் ஆண்டின் இறுதிக்குள் நாட்டின் அந்நியச் செலாவணிக் கையிருப்பு சுமார் 8 பில்லியன் அமெரிக்க டொலரை எட்டும் என எதிர்பார்க்கப்படுவதால், கடன் செலுத்துவதில் எவ்விதச் சிரமமும் இருக்காது என்று அபேசிங்க வலியுறுத்தியுள்ளார்.</p><h2> மீண்டும் பொருளாதார நெருக்கடி</h2><p>
</p><p>
மேலும், 2028-க்குப் பிறகு கடன் சுமைகளை எதிர்கொள்ள கையிருப்பை 15 பில்லியன் டொலராக உயர்த்த வேண்டும் என ரணில் விக்ரமசிங்க கூறியது தவறான வழிகாட்டல் என்றும், அவர் நாட்டின் கடன் நிலவரம் குறித்து தவறான சித்திரத்தை அளிக்க முயல்வதாகவும் பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க குற்றஞ்சாட்டியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a95862d6-6b5f-4fe8-805e-639d5451891d/26-6a85576d0cd99.webp' /></p><p>
</p><p>
வெளிநாட்டவர் அனுப்பும் பணம், ஏற்றுமதி, சுற்றுலா வருவாய் மற்றும் முதலீடுகள் 2026-ஆம் ஆண்டில் மேலும் அதிகரிக்கும் என்பதால், இலங்கை மீண்டும் ஒரு பொருளாதார நெருக்கடியையோ அல்லது திவால்நிலையையோ சந்திக்க வேண்டிய அவசியம் ஏற்படாது என்று அவர் உறுதியளித்துள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-19T07:16:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெள்ளை நிற கிளாமர் உடையில் சீரியல் நடிகை காயூஸ்ரீ வெளியிட்ட போட்டோஸ்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/serial-actress-gayu-sri-glamour-photoshoot-1787119283"></link>
            <id>https://cineulagam.com/article/serial-actress-gayu-sri-glamour-photoshoot-1787119283</id>
            <summary type="text">நடிகை காயூஸ்ரீவிஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஆஹா கல்யாணம் என்ற சீரியல் மூலம் தமிழ் மக்களிடம் மிகவும் பிரபலமானவர் தான் நடிகை காயுஸ்ரீ.அந்த தொடரில் ஐ...</summary>
            <content type="html"><![CDATA[<h2>நடிகை காயூஸ்ரீ</h2><p>விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஆஹா கல்யாணம் என்ற சீரியல் மூலம் தமிழ் மக்களிடம் மிகவும் பிரபலமானவர் தான் நடிகை காயுஸ்ரீ.</p><p>அந்த தொடரில் ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடித்து கவனம் பெற்றார், அந்த தொடரை தொடர்ந்து ஜீ தமிழில் புதியதாக துவங்கப்பட்ட திருமாங்கல்யம் சீரியலில் முக்கிய நடிகையாக நடித்து வருகிறார்.</p><p>காயுஸ்ரீ சீரியலை தாண்டி தொடர்ந்து போட்டோ ஷுட்கள் அதிகம் நடத்தி வருகிறார். அப்படி அண்மையில் அவர் வெள்ளை நிறத்தில் கிளாமரான உடை அணிந்து போட்டோ ஷுட் நடத்தியுள்ளார்.</p><p>இதோ அந்த போட்டோஸ்,</p><p><br></p>]]></content>
            <updated>2026-08-19T07:15:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[எல் நினோவால் வடக்கிற்கு ஆபத்து..! எச்சரிக்கும் யாழ். பல்கலை பேராசிரியர் பிரதீபராஜா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sudden-rain-fall-impact-of-recent-super-el-ni-os-1787116531"></link>
            <id>https://ibctamil.com/article/sudden-rain-fall-impact-of-recent-super-el-ni-os-1787116531</id>
            <summary type="text">இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் வலுவான எல்நினோ செயற்படத் தொடங்கியுள்ள நிலையில், இந்து சமுத்திர இருமுனை குறியீடு திடீரென வீழ்ச்சியடைந்துள்ளதாக யாழ். ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் வலுவான எல்நினோ செயற்படத் தொடங்கியுள்ள நிலையில், இந்து சமுத்திர இருமுனை குறியீடு திடீரென வீழ்ச்சியடைந்துள்ளதாக யாழ். பல்கலைக்கழகத்தின் புவியியல் துறைப் பேராசிரியரும் வானிலை ஆய்வாளருமான பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.</p><p>

கடந்த சில வாரங்களாக அதிகரித்து +0.64 என்ற அளவை எட்டியிருந்த இந்து சமுத்திர இருமுனையின் அளவு பெறுமதி, இவ்வாரம் திடீரென +0.18 ஆகக் குறைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். </p><p>இந்த திடீர் மாற்றம் எதிர்பாராத நிகழ்வாகும் எனவும் தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>குறைந்த மழைவீழ்ச்சி</h2><p>

இந்து சமுத்திர இருமுனையின் நேர்மறையான பெறுமதி வலுவாக காணப்படும்போது, அக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் இலங்கைக்கு போதுமான மழை கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bad66198-fc3e-4903-b75a-2a99fb3ce8fc/26-6a85592f54636.webp' /></p><p>எனினும், எல்நினோவின் தாக்கத்தால் இந்து சமுத்திர இருமுனையின் அளவு பெறுமதி மேலும் வலுவிழந்தால், குறித்த காலப்பகுதியில் எதிர்பார்க்கப்படும் மழைவீழ்ச்சி குறைவடையக்கூடும் என அவர் எச்சரித்துள்ளார்.
</p><p>
குறிப்பாக, தென்மேற்கு இலங்கையில் பருவமழை காலத்தில் குறைந்த மழைவீழ்ச்சி பதிவான பகுதிகளில் இது எதிர்காலத்தில் நீர் நெருக்கடியை ஏற்படுத்தக்கூடும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
</p><p>
எவ்வாறாயினும், செப்டெம்பர் மாதத்தின் நடுப்பகுதி வரை இந்து சமுத்திர இருமுனையின் அளவு பெறுமதியின் போக்கை உன்னிப்பாக அவதானித்த பின்னரே, அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் கிடைக்கக்கூடிய மழைவீழ்ச்சி தொடர்பில் உறுதியான முடிவுக்கு வர முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.</p><p></p><p>
</p><h2>நீருக்கான தேவை</h2><p>
எல்நினோ தொடர்ந்து வலுவாகச் செயற்பட்டு, இந்து சமுத்திர இருமுனையின் அளவு பெறுமதி வலுவற்ற நேர்மறை அல்லது எதிர்மறை நிலையில் காணப்பட்டால், அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் மிகவும் குறைந்தளவிலான மழைவீழ்ச்சியே கிடைக்கக்கூடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0009ffb3-dbd3-45a9-b3dd-80483a5c585b/26-6a85575e9b9ec.webp' /></p><p>இந்நிலையில், இந்த ஆண்டின் இரண்டாவது இடைப்பருவ மழை மற்றும் வடகீழ் பருவமழையின் நிலைமை இந்து சமுத்திர இருமுனையின் அளவு செப்டெம்பர் நடுப்பகுதி பெறுமதியைப் பொறுத்தே அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் நீர்வளம் மற்றும் வாழ்வாதாரத்துக்கு இந்த இரு பருவமழைகளும் மிகவும் முக்கியமானவை. அப்பகுதிகளின் பெரும்பாலான நீர்த்தேவைகள் இந்த மழைப்பொழிவுகளிலேயே தங்கியுள்ளன.
</p><p>
எனவே, எதிர்வரும் காலப்பகுதியில் நீரை சிக்கனமாகப் பயன்படுத்துமாறும், தேவையற்ற நீர் விரயத்தைத் தவிர்க்குமாறும் பொதுமக்களிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
</p><p>
கோவில் திருவிழாக்கள், அதிகரிக்கும் வெப்பநிலை மற்றும் பாடசாலை விடுமுறை காலம் உள்ளிட்ட காரணங்களால் இக்காலப்பகுதியில் நீருக்கான தேவை அதிகரிக்கக்கூடும் என்பதால், தற்போதுள்ள நீர்வளத்தைப் பாதுகாப்பது அவசியம் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/FJQcrzobjUcEaJJsEVOWpF" target="_blank">WHATSAPP </a>CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-19T07:14:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[சாப்பிட மட்டும் வாய் திறக்கும் அரசாங்க தமிழ் பேசும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் - மனோ கணேசன் விளாசல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/mano-ganesan-statement-1787120410"></link>
            <id>https://tamilwin.com/article/mano-ganesan-statement-1787120410</id>
            <summary type="text">தமது அதிகாரத்தை பயன்படுத்தி பிரச்சினைகளுக்கு தீர்வு காண அரசாங்கம் தவறுகிறதா? இன்னமும் தாம் எதிரணியில் இருப்பதாக ஜேவிபி நினைக்கிறதா? என்ற கேள்வியை எழுப...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமது அதிகாரத்தை பயன்படுத்தி பிரச்சினைகளுக்கு தீர்வு காண அரசாங்கம் தவறுகிறதா? இன்னமும் தாம் எதிரணியில் இருப்பதாக ஜேவிபி நினைக்கிறதா? என்ற கேள்வியை எழுப்ப விரும்புகிறேன் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p>சமூக ஊடக பதிவில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p>

அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த அரசாங்கத்திடம் தான் அதிகாரம் இருக்கிறது. இந்த அதிகாரத்தை பயன்படுத்தி, தொடர்புள்ள எல்லோரையும், மாவட்ட செயலகத்தில் கூட்டி, சுகாதார அமைச்சர், ஒரே நாளில் முடிக்க வேண்டிய பிரச்சினை தான் இந்த, கல்முனை சீருடை பிரச்சினை!</p><h2>தற்காலிக தீர்வு</h2><p>

இதை செய்யாமல், தமிழ்
பேசும் தரப்புகள் சமூக தளங்களில் அடித்து கொண்டு நாறட்டும், சாகட்டும், என ஆகஸ்ட் 8ம் திகதி முதல் சுமார் 10 நாட்களாக, காலம் கடத்தி, விட்டு இப்போது "தற்காலிக தீர்வு" என்ற ஒன்றை அறிவித்து இருக்கிறது, அரசாங்கம். 
 
இந்த நடவடிக்கைக்கு கூட ஏன் இத்தனை தாமதம்?</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4f63f296-5ead-4903-bd79-8fc62125d25d/26-6a8556e830ea4.webp' /></p><p> </p><p>

இதற்குள் எதிரணி முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சரை சந்தித்தது ஒரு புறம் இருக்க, அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்ன செய்தார்கள், இது வரை?</p><h2>வெற்று சமத்துவ கோஷம்</h2><p> </p><p>

உண்மையில், அரசாங்க தமிழ், முஸ்லிம், கால் - அரை - முக்கால் - அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், வெளியே தத்தமது ஈழத்து - மலையக - முஸ்லிம் - தமிழ் மக்களிடம் சும்மா, சும்மா, வாய் சவடால் அடிக்கிறார்களே தவிர, உள்ளே "சாப்பிட" மட்டும் தான் வாய் திறக்கிறார்கள், என்ற உண்மையும், அரசாங்க அதிகார மையத்தின் பக்கத்தில் கூட, இவர்கள் எவருமே இல்லை என்ற நடப்பும், மீண்டும் நிரூபணம் ஆகியுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b24ca2d4-26af-4b79-97f5-459f7d2f589f/26-6a8556e8f0320.webp' /></p><p> 

இதற்குள், "நாம் இலங்கையர்" என்ற வெற்று சமத்துவ கோஷம் வேறு! எல்லோருக்கும் அதிகாரம் இருந்தால் தான் "சமத்துவம்"! இது தான் உண்மை!

நான் அமைச்சராக இருக்கும் போது, அடிக்கடி, நான் அமைச்சரவையில், எழுப்பிய கூச்சல், மேசையில் அடித்த அடி, போட்ட சண்டை, என்பன என் ஞாபகத்தில் வந்து போகின்றன என தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-19T07:10:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் பேருந்தில் சென்றவரின் முகம் சுழிக்க வைத்த செயல்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/betel-leaf-spittle-spat-bus-passenger-in-jaffna-1787123493"></link>
            <id>https://jvpnews.com/article/betel-leaf-spittle-spat-bus-passenger-in-jaffna-1787123493</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;யாழ்ப்பாணத்தில் இருந்து காரைநகர் நோக்கி பயணித்த தனியார் பேருந்தில் இருந்த பயணி ஒருவர் வெற்றிலை மென்று, பேருந்தின் யன்னல் வழியாக வெளியே து...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;யாழ்ப்பாணத்தில் இருந்து காரைநகர் நோக்கி பயணித்த தனியார் பேருந்தில் இருந்த பயணி ஒருவர் வெற்றிலை மென்று, பேருந்தின் யன்னல் வழியாக வெளியே துப்பியபோது வீதியில் சென்றவர் மீது பட்ட சம்பவம் விசனத்தை எற்படுத்த்யுள்ளது.
</p><p>
 பேருந்து பயணியால் துப்பப்பட்ட வெற்றிலை எச்சில், வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த ஒருவர்மீது பட்டதால் அவருக்கு அசௌகரியம் ஏற்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bfb4533e-11e9-4b26-8feb-36112d9846d4/26-6a8557276d3eb.webp' /></p><h2>வீதியில் சென்றவர் மீது பட்ட எச்சில்</h2><p>
</p><p>
இதனால் ஆத்திரமடைந்த மோட்டார் சைக்கிள் பயணி, தனியார் பேருந்தை இடைமறித்து, பொறுப்பற்ற முறையில் செயற்பட்ட பயணியை பேருந்தில் இருந்து இறக்கி, அவர் ஏற்படுத்திய வெற்றிலை கறையை சுத்தம் செய்ய வைத்துள்ளார்.</p><p></p><p>

இன்னிலையில் பொது இடங்களில் பயணிக்கும் அனைவரும் தங்களது செயற்பாடுகள் மற்றவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் சமூகப் பொறுப்புடனும், நாகரிகத்துடனும் நடந்து கொள்வது அவசியம் என சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-19T07:09:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிம் ஜாங் உன் - டொனால்ட் டிரம்ப் சந்திப்பு: இருதரப்பு உச்சி மாநாடு எப்போது? கசிந்த தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/trump-seeks-to-meet-kim-jong-un-in-november-1787122972"></link>
            <id>https://news.lankasri.com/article/trump-seeks-to-meet-kim-jong-un-in-november-1787122972</id>
            <summary type="text">Trump seeks to meet Kim Jong Un in November: வட கொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இடையிலான சந்திப்பு நவம்பரில் ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>Trump seeks to meet Kim Jong Un in November: வட கொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இடையிலான சந்திப்பு நவம்பரில் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><h2> கிம் ஜாங் உன் - டொனால்ட் டிரம்ப் சந்திப்பு</h2><p>வட கொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் உடன் நேரடி சந்திப்பு ஒன்றை நடத்துவதற்கான அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் திட்டமிட்டு வருகிறார்.</p><p>இலையுதிர் காலத்தில் இந்த நேரடி சந்திப்பை நடத்தவதற்காக தன்னுடைய அதிகாரிகளுடன் டிரம்ப் தீவிரமாக ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.</p><p> வால் ஸ்ட்ரீட் ஜர்னல்(Wall Street Journal) அமெரிக்க அதிகாரிகளை மேற்கோள் காட்டி இந்த செய்தியை வெளியிட்டுள்ள குறிப்பிடத்தக்கது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/08e2667c-4fd3-44fb-8abc-5618d53cdf0d/26-6a85551d95902.webp' /></p><h2> நவம்பரில் சந்திப்பு</h2><p>
கிம் ஜாங் உன் - டொனால்ட் டிரம்ப் சந்திப்பு தொடர்பான பேச்சுவார்த்தைகள் மிகவும் ரகசியமாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.</p><p> ஆசியாவிற்கு டிரம்ப் மேற்கொள்ள இருக்கும் அடுத்த சுற்றுப்பயணத்தின் போது இந்த சந்திப்பை நடத்த சரியான நேரமாக என்று டிரம்ப் கருதுவதாக கூறப்படுகிறது.</p><p> குறிப்பாக சீனாவின் சென்சென் நகரில் நவம்பர் மாதம் நடைபெறும் ஆசிய - பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்கும் போது கிம் ஜாங் உன் - டொனால்ட் டிரம்ப் சந்திப்பு நிகழ வாய்ப்பு இருப்பதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-19T07:03:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜனநாயகன் படத்தின் இறுதி வசூல்.. எவ்வளவு தெரியுமா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/jananayagan-movie-final-collection-1787122952"></link>
            <id>https://viduppu.com/article/jananayagan-movie-final-collection-1787122952</id>
            <summary type="text">பிரம்மாண்ட பொருட்செலவில் எடுக்கப்பட்டு தளபதி விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் ஜனநாயகன். இப்படத்தை இயக்குநர் ஹெச். வினோத் இயக்க, கே.வி.என் நிறுவனம் த...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரம்மாண்ட பொருட்செலவில் எடுக்கப்பட்டு தளபதி விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் ஜனநாயகன். இப்படத்தை இயக்குநர் ஹெச். வினோத் இயக்க, கே.வி.என் நிறுவனம் தயாரித்துள்ளது. </p><p>இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து முதல் முறையாக மமிதா பைஜூ நடித்துள்ளார்.

மேலும், பூஜா ஹெக்டே, பாபி தியோல், பிரகாஷ் ராஜ், நிழல்கள் ரவி, கௌதம் மேனன், சுனில், ப்ரியாமணி என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.&nbsp;அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e617f553-edaf-4dc1-afde-de0e6c3e7461/26-6a85550b43cd2.webp' /></p><p>2026-ஆம் ஆண்டு பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படங்களில் ஒன்றான ஜனநாயகன், பல தடைகளை தாண்டி கடந்த மாதம் வெளியானது. </p><p>விஜய்யின் கடைசி திரைப்படம் என்பதால் ரசிகர்கள் மிகப்பெரிய அளவில் கொண்டாடினார்கள். ஆனால், கலவையான விமர்சனங்களும் எழுந்தன. அதேபோல், தெலுங்கானா, ஆந்திரா மற்றும் வெளிநாடுகளில் வசூல் ரீதியாகவும் சரிவை சந்தித்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/066a7017-feb7-4d06-9d6f-2c486174f848/26-6a85550bf08ab.webp' /></p><p>

இந்நிலையில், ஜனநாயகன் திரைப்படத்தின் இறுதி வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் மொத்தமாக பாக்ஸ் ஆபிஸில் ரூ. 323.5 கோடி வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-08-19T07:02:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[விசேட சோதனை நடவடிக்கை : சிக்கிய வாகனங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/28-vehicles-suspended-from-service-1787121398"></link>
            <id>https://tamilwin.com/article/28-vehicles-suspended-from-service-1787121398</id>
            <summary type="text">தலவாக்கலை பகுதி வழியாகச் சென்று கொண்டிருந்த 28 வாகனங்களைத் தற்காலிகமாகச் சேவையிலிருந்து நீக்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>தலவாக்கலை பகுதி வழியாகச் சென்று கொண்டிருந்த 28 வாகனங்களைத் தற்காலிகமாகச் சேவையிலிருந்து நீக்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்டப் பிரதம மோட்டார் வாகன ஆய்வாளர் ஜாலிய
பண்டார தெரிவித்துள்ளார்.</p><p>

குறித்த பகுதி வழியாகச் செல்லும் 40 பேருந்துகள், கார்கள், மோட்டார் சைக்கிள்கள், வேன்கள் மற்றும் லொறிகள் வீதிப் போக்குவரத்திற்கு உகந்த நிலையில் உள்ளதா என்பதை உறுதி செய்வதற்காக, நுவரெலியா பொலிஸ் பிரிவின் போக்குவரத்துப் பிரிவு அதிகாரிகளும் வாகனப் பரிசோதகர்களும் அவற்றில் அவசரகாலப் பரிசோதனை ஒன்றை நடத்தியுள்ளனர்.
</p><h2>ஆய்வுக்கு உட்படுத்தப்படும் வரை&nbsp;</h2><p>
பல்வேறு குறைபாடுகளுடன், வீதிப் போக்குவரத்திற்கு தகுதியற்ற நிலையில் இயங்கிக்கொண்டிருந்த 28 வாகனங்கள் தற்காலிகமாக சேவையிலிருந்து நீக்கப்பட்டதாகவும், அந்த வாகனங்களின் வருமான&nbsp; வரிப்பத்திரங்கள் தனது பொறுப்பில் எடுத்துக்கொள்ளப்பட்டதாகவும் மோட்டார் வாகன ஆய்வாளர் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1d894832-b981-44a1-8e69-960c88d5f9cf/26-6a8553a6d2af7.webp' /></p><p>

வீதி விபத்துக்களைக் குறைக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வின்போது, ​​4 தனியார் பேருந்துகள் மற்றும் 15 மூன்று சக்கர வாகனங்கள் உட்பட 28 வாகனங்கள் சேவையிலிருந்து நீக்கப்பட்டதாகவும்,
அந்த வாகனங்களில் கண்டறியப்பட்ட பல்வேறு குறைபாடுகள் சரிசெய்யப்பட்டு மற்றொரு ஆய்வுக்கு உட்படுத்தப்படும் வரை அவை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-19T07:02:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[தொல்லியல் தளத்திலிருந்து சந்திர வட்ட கல்லை திருடிய கெஹெலிய]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/keheliya-who-stole-the-sandakada-pahana-1787121351"></link>
            <id>https://ibctamil.com/article/keheliya-who-stole-the-sandakada-pahana-1787121351</id>
            <summary type="text">குண்டசாலை தொல்லியல் தளத்திலிருந்து சந்திர வட்ட கல்லை முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல திருடியதாக பிரதி அமைச்சர் மகிந்த ஜெயசிங்க குற்றம் சுமத்திய...</summary>
            <content type="html"><![CDATA[<p>குண்டசாலை தொல்லியல் தளத்திலிருந்து சந்திர வட்ட கல்லை முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல திருடியதாக பிரதி அமைச்சர் மகிந்த ஜெயசிங்க குற்றம் சுமத்தியுள்ளார்.
</p><p>
நாடாளுமன்றில் நேற்று(18.08.2026) கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
</p><p>
இது குறித்து மேலும் கருத்து வெளியிட்ட அவர்,</p><p></p><h2>மகிழ்ச்சியுடன் பேசும் மகான்கள் </h2><p>
</p><p>
''கெஹெலிய ரம்புக்வெல்ல இப்போது ஒரு வழக்குப் பொருளைப் போல ஆகிவிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/07462fb3-678f-4ad9-8f8c-78542a50b121/26-6a8554d25faa5.webp' /></p><p>
</p><p>
இந்த மகான்கள் எவ்வளவு மகிழ்ச்சியுடன் பேசுகிறார்கள் பாருங்கள். சந்திரக்கல்லைக்கூடதூக்கிச் சென்றிருக்கிறார்கள்.</p><p>
தொலைக்காட்சிக்கு நிர்ணயிக்கப்பட்ட பணியாளர் எண்ணிக்கைக்கு அப்பாற்பட்டவர்களையும் பணியில் அமர்த்தியிருக்கிறார்கள். இன்றும் வழக்குகள் உள்ளன.
</p><p>
நாமல் யார் என்பதை நாங்கள் அறிவோம். தாஜுதீனை எப்படிக் கொலை செய்தார்கள் என்பதும் எங்களுக்குத் தெரியும்.</p><p> 

பின்னர் பின்வாசல் வழியாகச் சென்று திருகோணமலையில் மறைந்துகொண்ட விதமும் எங்களுக்கு நினைவிருக்கிறது. 

அந்தக் காலத்தில் ராஜபக்சர்களின் பாதுகாவலராக இருந்தவர் ரணில். அதனால்தான் அது ரணில் - ராஜபக்ச அரசாங்கமாக இருந்தது" என கடுமையாக சாடியுள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-19T07:02:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[திருமணம் முடிப்பதாக ஆசை காட்டி யுவதி துஷ்பிரயோகம்; முன்னாள் மேயர் ஆட்டம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/young-woman-abused-lured-promises-of-marriage-1787115041"></link>
            <id>https://jvpnews.com/article/young-woman-abused-lured-promises-of-marriage-1787115041</id>
            <summary type="text">&amp;nbsp; திருமணம் முடிப்பதாக ஆசை வார்த்தைகள் கூறி யுவதியொருவரை துஷ்பிரயோகம் செய்த அக்கரைப்பற்று மாநகர சபையின் முன்னாள் முதல்வர் சக்கி அதாவுல்லாஹ்வை விளக...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; திருமணம் முடிப்பதாக ஆசை வார்த்தைகள் கூறி யுவதியொருவரை துஷ்பிரயோகம் செய்த அக்கரைப்பற்று மாநகர சபையின் முன்னாள் முதல்வர் சக்கி அதாவுல்லாஹ்வை விளக்கமறியலில் வைக்க அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
</p><p>

 குறித்த வழக்கு அக்கரைப்பற்று நீதவான் முன்னிலையில் நேற்று (18) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/08cf6f36-f668-411e-9baa-46dece05e1b1/26-6a853622cf102.webp' /></p><h2>&nbsp;அம்பாறை சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தில்பெண் முறைப்பாடு</h2><p>


கடந்த காலத்தில் அக்கரைப்பற்று மாநகர சபையின் முதல்வராக சக்கி அதாவுல்லாஹ் செயற்பட்டு வந்த போது, அங்கு கடமையாற்றிய அக்கரைப்பற்றை சேர்ந்த அரச உத்தியோகத்தரான பெண் ஒருவரைத் திருமணம் முடிப்பதாக வாக்குறுதி அளித்துத் தன்னைத் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாகக் குறித்த பெண் அண்மையில் நியாயம் கேட்டிருந்தார்.</p><p></p><p>
</p><p>
 இச் சம்பவம் தொடர்பில் அம்பாறை சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்திலும் பெண் முறைப்பாடு செய்திருந்தார்.
</p><p>


முறைப்பாட்டைத் தொடர்ந்து, அம்பாறை சிறுவர் மற்றும் மகளிர் பொலிஸ் பிரிவினால் தேடப்பட்டு வந்த சந்தேகநபரான சக்கி அதாவுல்லாஹ், வாக்குமூலம் வழங்குவதற்காக அம்பாறை சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்திற்கு வருகை தந்திருந்தார்.
</p><p>
இதன்போது, அப்பிரிவின் பொறுப்பதிகாரி பிரதம பொலிஸ் பரிசோதகர் தயானி கமகே தலைமையிலான குழுவினரால் அவர் உடனடியாகக் கைது செய்யப்பட்டார்.</p><p></p><p>



அதிகாரத் துஷ்பிரயோகம் மற்றும் பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபருக்கு எதிராக அம்பாறை மாவட்ட பெண்கள் மற்றும் சிறுவர் பிரிவினரால் அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
</p><p>
சட்ட நடவடிக்கைகளுக்காக நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட வேளையில், அவரை இன்றுவரை வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.



 சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அம்பாறை மாவட்ட பெண்கள் மற்றும் சிறுவர் பிரிவினர் முன்னெடுத்து வருகின்றனர்.&nbsp;&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-19T06:57:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தேனிலவு சென்ற பிரிட்டிஷ் தம்பதி உலங்கு வானூர்தி விபத்தில் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/honeymooning-uk-couple-killed-helicopter-crash-1787115636"></link>
            <id>https://canadamirror.com/article/honeymooning-uk-couple-killed-helicopter-crash-1787115636</id>
            <summary type="text">&amp;nbsp; தேனிலவு சென்ற இளம் பிரிட்டிஷ் தம்பதியினரும் அவர்களது விமானியும் உலங்கு வானூர்தி விபத்தில் உயிரிழந்ததாக கிரேக்க காவல்துறை தெரிவித்துள்ளது.

கி...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; தேனிலவு சென்ற இளம் பிரிட்டிஷ் தம்பதியினரும் அவர்களது விமானியும் உலங்கு வானூர்தி விபத்தில் உயிரிழந்ததாக கிரேக்க காவல்துறை தெரிவித்துள்ளது.
</p><p>
கிறீஸ் சிஃப்னோஸ் தீவில் நேற்றுத் திங்கள்கிழமை நடந்த உலங்கு வானூர்தி விபத்தில், 

புதுமணத் தம்பதிகளான அலெக்சாண்டர் குரோமி மற்றும் மேரி எபர்ட் ஆகியோர் தங்களது தேனிலவுக்காக கிரீஸில் இருந்ததாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8b2be035-9e04-48b5-947c-e7d1eec7e723/26-6a8538761fc0d.webp' /></p><h2>தேனிலவுக்காக கிரீஸில் இருந்ததாக அடையாளம்</h2><p>
</p><p>

தனியார் உலங்கு வானூர்தி தரையிறங்கும் தளத்திலிருந்து சில மீட்டர் தொலைவில் விபத்துக்குள்ளானதில், அதில் இருந்த இருவரும் மற்றும் அவர்களது கிரேக்க நாட்டவரான விமானியும் உயிரிழந்தனர்.
</p><p>
அந்தத் தம்பதியினர், ஏதென்ஸுக்கு அருகிலுள்ள மார்கோபோலோ கிராமத்திலிருந்து பிரபலமான விடுமுறைத் தீவுக்கு ஹெலிகாப்டரில் சென்றதாகக் கூறப்படுகிறது.
</p><p>
கிரீஸின் விமானப் பாதுகாப்பு ஆணையம், இந்த விபத்து குறித்து விசாரித்து வருவதாகவும், அதன் புலனாய்வாளர்கள் ஆதாரங்களைச் சேகரிக்கவும் சாட்சிகளிடம் பேசவும் செவ்வாயன்று சம்பவ இடத்திற்குச் செல்லவிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-19T06:57:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[22வது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிரான மனுக்கள் குறித்து சபாநாயரின் அறிவிப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/3-petitions-against-22nd-constitutional-amendment-1787120999"></link>
            <id>https://ibctamil.com/article/3-petitions-against-22nd-constitutional-amendment-1787120999</id>
            <summary type="text">இலங்கையின் 22வது அரசியலமைப்புத் திருத்தச் சட்ட மூலத்திற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மூன்று மனுக்கள் தொடர்பில் சபாநாயகர் அறிவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் 22வது அரசியலமைப்புத் திருத்தச் சட்ட மூலத்திற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மூன்று மனுக்கள் தொடர்பில் சபாநாயகர் அறிவிப்பொன்றை விடுத்துள்ளார்.</p><p>அதன்படி, குறித்த மனுக்களின் பிரதிகள் தமக்குக் கிடைத்துள்ளதாக சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன இன்றைய (19.08.2026) நாடாளுமன்ற அமர்வின் போது, தெரிவித்துள்ளார்.</p><p>
 

அத்துடன், நீதித்துறை அமைப்புகள் திருத்தச் சட்ட மூலம் தொடர்பில் உயர் நீதிமன்றத்திற்கு கிடைத்துள்ள மனுக்களின் பிரதிகளும் தமக்குக் கிடைத்துள்ளதாக சபாநாயகர் நாடாளுமன்றத்திற்கு அறிவித்தார்.</p><p></p><h2>உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்</h2><p>இலங்கை அரசியலமைப்பின் 22வது திருத்தச் சட்டமூல வரைவு மற்றும் நீதித்துறை திருத்தச் சட்டமூல வரைவு என்பன நாடாளுமன்றத்தில் நேற்று (18) சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/98ffaf56-1a32-43c3-882c-51a55fbf9fb3/26-6a8553ea359cc.webp' /></p><p>இந்தநிலையில் அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்டுள்ள அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலம் அரசியலமைப்பிற்கு முரணானது எனத் தீர்ப்பளிக்குமாறு கோரி இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தினால் உயர் நீதிமன்றத்தில் முதலாவது மனு தாக்கல் செய்யப்பட்டது.</p><p>22 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை நீதிமன்றில் சவாலுக்குட்படுத்த கோரி ஐக்கிய மக்கள் சக்தியும், 22வது திருத்தச் சட்ட மூல வரைவு அரசியலமைப்புக்கு முரணானது என தீர்ப்பளிக்குமாறு கோரி சர்வஜன அதிகாரமும் உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-19T06:56:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரபல நடிகை மரணத்தில் சிபிஐ வளையத்துள் கணவன் மற்றும் மாமியார்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/husband-mother-in-law-cbi-actress-twisha-sharma-1787122668"></link>
            <id>https://jvpnews.com/article/husband-mother-in-law-cbi-actress-twisha-sharma-1787122668</id>
            <summary type="text">&amp;nbsp; இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவைச் சேர்ந்த மொடல் அழகியும் நடிகையுமான த்விஷா சர்மாவின் மரணம் தொடர்பான வழக்கில், அவரது கணவர் சமர்த் சி...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவைச் சேர்ந்த மொடல் அழகியும் நடிகையுமான த்விஷா சர்மாவின் மரணம் தொடர்பான வழக்கில், அவரது கணவர் சமர்த் சிங் மற்றும் மாமியார் கிரிபாலா சிங் ஆகியோருக்கு எதிராக சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.</p><p>


த்விஷா சர்மா கடந்த மே 13ஆம் திகதி மத்தியப் பிரதேச மாநிலம் போபாலின் கட்டாரா மலைப்பகுதியில் உள்ள கணவர் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6bb7e5a2-9d79-4c94-8afe-68c465e8fe3b/26-6a8553ee4b08a.webp' /></p><h2>&nbsp;வரதட்சணை தொடர்பாகத் துன்புறுத்தப்பட்டு கொலை</h2><p>
</p><p>
தனது மகள் வரதட்சணை தொடர்பாகத் துன்புறுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டதாகவும், அவர் வசித்து வந்த வீட்டின் சிசிரிவி காட்சிகளில் முரண்பாடுகள் காணப்படுவதாகவும் த்விஷாவின் தந்தை நவ்நீதி சர்மா குற்றஞ்சாட்டியிருந்தார்.</p><p>

இதனையடுத்து, தலைமறைவாகியிருந்த அவரது கணவர் சமர்த் சிங் மற்றும் முன்னாள் மாவட்ட நீதிபதியான சமர்த்தின் தாயார் கிரிபாலா சிங் ஆகியோருக்கு எதிராக பொலிஸார் வழக்குப் பதிவு செய்ததுடன், இருவரையும் கைது செய்து விசாரணைக்கு உட்படுத்தினர்.
</p><p>
இந்நிலையில், வழக்கை விசாரித்து வந்த மத்திய புலனாய்வுத் திணைக்களம் (CBI), போபால் சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது.</p><p>

குற்றப்பத்திரிகையில், கணவர் மற்றும் மாமியார் ஆகியோர் தொடர்ச்சியாக ஏற்படுத்திய மன உளைச்சல் மற்றும் கொடுமைகள் காரணமாக த்விஷா சர்மா தற்கொலை செய்துகொள்வதைத் தவிர வேறு வழியில்லாத நிலைக்குத் தள்ளப்பட்டதாக சிபிஐ தெரிவித்துள்ளது</p>]]></content>
            <updated>2026-08-19T06:55:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[கெஹெலிய ரம்புக்வெல்ல ஏன் கைது செய்யப்பட்டார்.. CIABOC ஆணைக்குழு வெளிப்படுத்தியுள்ள தகவல்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/why-keheliya-rambukwella-arrested-ciaboc-reveals-1787118673"></link>
            <id>https://tamilwin.com/article/why-keheliya-rambukwella-arrested-ciaboc-reveals-1787118673</id>
            <summary type="text">ஊழல், ஊழலுக்கு உடந்தையாக இருத்தல் மற்றும் சதித்திட்டம் தீட்டுதல் ஆகிய குற்றச்சாட்டுகளின் பேரில், முன்னாள் ஊடக மற்றும் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஊழல், ஊழலுக்கு உடந்தையாக இருத்தல் மற்றும் சதித்திட்டம் தீட்டுதல் ஆகிய குற்றச்சாட்டுகளின் பேரில், முன்னாள் ஊடக மற்றும் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் (CIABOC) புலனாய்வு அதிகாரிகளால் நேற்று (18) கைது செய்யப்பட்டார் என குறித்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
</p><p>
இரண்டு வெவ்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்பாக, கெஹெலிய ரம்புக்வெல்ல நேற்று(18) காலை சுமார் 11.30 மணி மற்றும் பிற்பகல் 1.15 மணியளவில் கைது செய்யப்பட்டதாக சியாபோக் தெரிவித்துள்ளது.</p><h2>இரு குற்றச்சாட்டுக்கள்</h2><p>

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு கெஹெலிய ரம்புக்வெல்ல, மீது இரு குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளது.</p><p>

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தில் அங்கீகரிக்கப்பட்ட பணியாளர் தொகுதிக்கு அப்பாற்பட்டு ஆறு பணியாளர்களை நியமித்தது மற்றும் கெஹெலிய ரம்புக்வெல்ல வெகுஜன ஊடக அமைச்சராகப் பணியாற்றியபோது அவர்களை சட்டவிரோதமாக அவரது அமைச்சரவைப் பணியாளர்களுடன் இணைக்க சதி செய்ததாகக் கூறப்படுவது ஒரு முதலாவது குற்றச்சாட்டாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/67396a9b-24d0-43ab-adde-d37e6c3c2c93/26-6a8550467bd62.webp' /></p><p>
</p><p>
அமைச்சுப் பணியாளர் பிரிவு ஏற்கனவே நிரம்பியிருந்ததாகவும், கெஹெலிய ரம்புக்வெல்லவின் நடவடிக்கைகளால் இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்திற்கு ரூ. 14.32 மில்லியன் இழப்பு ஏற்பட்டதாகவும் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.</p><h2>கெஹெலிய ரம்புக்வெல்ல</h2><p>

குண்டசாலை உடமலுவ தொல்பொருள் தளத்திலிருந்து சந்தகடா பஹானா (நிலாக்கல்) என அறியப்படும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தொல்பொருள் திருட்டு தொடர்பான விசாரணையில் தலையிட்டதாகக் கூறப்படுவது இரண்டாவது குற்றச்சாட்டாகும்.
</p><p>
கண்டி இராச்சியத்தின் சிங்கள வம்சத்தின் கடைசி மன்னராக அடையாளம் காணப்பட்ட ஸ்ரீ வீர பராக்கிரம நரேந்திரசிங்கனின் அரண்மனை நுழைவாயில் படிகளுக்கு அருகில் அந்த கலைப்பொருள் கண்டெடுக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fe23fe2f-fdf7-4f31-8016-ca534764a1bf/26-6a8550474ca8a.webp' /></p><p>
</p><p>
திருட்டு குறித்து முறையாக விசாரிக்க நடந்த முயற்சிகளில் கெஹெலிய ரம்புக்வெல்ல, தலையிட்டதன் மூலம், அவர் ஊழல், குற்றத்திற்கு உடந்தையாக இருத்தல் மற்றும் சதித்திட்டம் தீட்டுதல் ஆகிய குற்றங்களில் ஈடுபட்டதாக இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு குற்றம் சாட்டுகின்றது.</p><p>

கெஹெலிய ரம்புக்வெல்ல பின்னர் இரு வழக்குகளிலும் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார்.

அவரைத் தலா ரூ. 500,000 மதிப்புள்ள இரண்டு சரீர பிணைகளில் விடுவிக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் உத்தரவிட்டார்.<br><br></p><p></p><hr><p>you may like this..<br><br><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/2rFYnnkx7AQ" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><hr><p><br></p>]]></content>
            <updated>2026-08-19T06:50:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டில் அதிகரிக்கும் டெங்கு மரணங்களின் எண்ணிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/rising-number-of-dengue-deaths-in-the-country-1787122055"></link>
            <id>https://jvpnews.com/article/rising-number-of-dengue-deaths-in-the-country-1787122055</id>
            <summary type="text">&amp;nbsp;நாட்டில் பதிவாகும் டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 69 ஆக உயர்வடைந்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.



அத்துடன் இவ்வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;நாட்டில் பதிவாகும் டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 69 ஆக உயர்வடைந்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.



அத்துடன் இவ்வருடத்தில் இதுவரை மொத்தம் 92,854 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். </p><p>



மேல் மாகாணத்தில் 49,163 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் மாவட்ட மட்டத்தில் கம்பஹா மாவட்டத்தில் 19,778 நோயாளர்களும், கொழும்பு மாவட்டத்தில் 18,433 நோயாளர்களும், கண்டி மாவட்டத்தில் 6,695 நோயாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bbfe48ea-0eca-4371-888e-b37fcf50eb04/26-6a855188b4ba7.webp' /></p><p>
</p><p>


அத்துடன், கடந்த ஜூலை மாதத்தில் 29,964 என்ற எண்ணிக்கையில் அதிகளவிலான நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், ஓகஸ்ட் மாதத்தில் இதுவரை கடந்துள்ள சில நாட்களில் மட்டும் 7,516 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.</p><p>



எவ்வாறாயினும், 96 சுகாதார மருத்துவ அதிகாரி (MOH) பிரிவுகளை தொடர்ந்து டெங்கு அதி-அபாய வலயங்களாக சுகாதாரப் பிரிவினர் பெயரிட்டுள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-08-19T06:45:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[நிச்சயதார்த்தம் முடிந்தும் பாதியிலேயே த்ரிஷா திருமணம் நிற்க காரணம்?... பிரபலம் ஓபன் டாக்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/why-trisha-called-off-her-wedding-reason-1787115908"></link>
            <id>https://cineulagam.com/article/why-trisha-called-off-her-wedding-reason-1787115908</id>
            <summary type="text">நடிகை த்ரிஷாதமிழ் சினிமாவில் பல வருடங்களாக படங்கள் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை த்ரிஷா. கடந்த 2025ம் ஆண்டு த்ரிஷா நடிப்பில் தக் லை...</summary>
            <content type="html"><![CDATA[<h2>நடிகை த்ரிஷா</h2><p>தமிழ் சினிமாவில் பல வருடங்களாக படங்கள் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை த்ரிஷா. </p><p>கடந்த 2025ம் ஆண்டு த்ரிஷா நடிப்பில் தக் லைஃப், விடாமுயற்சி, குட் பேட் அக்லி போன்ற படங்கள் வெளியாகி இருந்தன.
இந்த ஆண்டு ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான கருப்பு படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f2da9272-fe7a-432c-b18e-0cee5e886102/26-6a854087d3ff5.webp' /></p><p> </p><p>இப்படம் ரசிகர்களிடையே மாபெரும் வெற்றியை கண்டது, ரூ. 300 கோடிக்கும் அதிகமான வசூல் வேட்டை செய்தது.
இப்படத்தை தொடர்ந்து நடிகை த்ரிஷா நடிப்பில் அடுத்து சதுரங்க வேட்டை 2, கர்ஜணை ஆகிய படங்கள் வெளிவர உள்ளன.
</p><p>தமிழை தாண்டி மலையாளத்தில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் நடித்துள்ள ராம் என்ற படம் தயாரானது, ஆனால் படம் வெளியாகாமல் உள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3578bd11-8624-441d-9412-e1fa4d4f8298/26-6a85408710b6d.webp' /></p><h2>திருமணம்</h2><p> 
சினிமாவில் கொடிகட்டி பறக்கும் நடிகை த்ரிஷா இதுவரை திருமணம் செய்துகொள்ளவில்லை. கடந்த 2014ம் ஆண்டு சென்னையை சேர்ந்த தொழிலதிபர் வருண் மணியனுடன் த்ரிஷாவுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. </p><p>2015, ஜனவரி மாதம் திருமணம் நடக்க இருந்த நிலையில் திடீரென திருமணம் நின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/762614cc-e746-4208-bbfc-fc1ed376ccb6/26-6a854088af2cb.webp' /></p><p>
</p><p>இதுகுறித்து த்ரிஷா சில வருடங்களுக்கு முன் ஒரு பேட்டியில், திருமணம் செய்யவிருந்த நபர், சினிமாவில் இருந்து விலகுமாறு தன்னிடம் கூறியதாகவும், அதனை ஏற்க முடியாத காரணத்தால் திருமணத்தை நிறுத்தியதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.</p>]]></content>
            <updated>2026-08-19T06:45:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொலைகாரர்களிடம் நீதியை எதிர்பார்க்கவில்லை - யாழில் மக்களை அணிதிரள கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/families-of-the-disappeared-call-for-conference-1787114079"></link>
            <id>https://ibctamil.com/article/families-of-the-disappeared-call-for-conference-1787114079</id>
            <summary type="text">வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின்
சர்வதேச மாநாட்டுக்கு அனைத்து தரப்பினரும் அணிதிரண்டு பேர் ஆதரவை வழங்க
வேண்டும் என வடக்கு கிழக்கு வழிந்து காணாமல்...</summary>
            <content type="html"><![CDATA[<p>வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின்
சர்வதேச மாநாட்டுக்கு அனைத்து தரப்பினரும் அணிதிரண்டு பேர் ஆதரவை வழங்க
வேண்டும் என வடக்கு கிழக்கு வழிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின்
தலைவி கனகரஞ்சினி அழைப்பு விடுத்தார்.
</p><p>யாழ். ஊடக அமையத்தில் நேற்று (19.08.2026) செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர்
சந்திப்பின் போது அவர் இவ்வாறு கோரிக்கை முன்வைத்தார்.
</p><p>
அவர் மேலும் தெரிவிக்கையில், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறலைக்
கோரும் தமிழ் தாய்மார்களின் அனைத்துலக மாநாட்டில் சர்வதேச இராஜதந்திரிகள்
பங்கேற்கவுள்ளதுடன் காணாமல் போனோர் விவகாரம் தொடர்பான புத்தகங்களும் வெளியீடு
செய்யப்படவுள்ளது.</p><p></p><p>
</p><h2>நீதிக்கான நீள்பயணம்</h2><p>
அனைத்துலக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினம் ஓகஸ்ட் 30ம் திகதி
அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில் "நீதிக்கான நீள்பயணம்" எனும் தலைப்பில்
அன்றையதினம் குறித்த மாநாடு யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கத்தில் காலை
9.30 மணி தொடக்கம் மாலை 4 மணி வரை நடைபெறவுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e758eee5-0dc2-4f0b-9659-496a03035bc0/26-6a854e999cd32.webp' /></p><p>வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சங்கத்தின்
ஏற்பாட்டில் நடைபெறவுள்ள மாநாடு தொடர்பாக தெளிவுபடுத்தும் ஊடக சந்திப்பு யாழ்
ஊடக அமையத்தில் நேற்று நடைபெற்றது. இதன்போதே குறித்த விடயம் தொடர்பில்
தெரிவிக்கப்பட்டது.</p><p>
இலங்கை அரசிடம் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தைக் கையாளுவற்கோ,
நீதியைப் பெற்றுத்தருவதற்கோ எவ்வித நம்பிக்கைமிகு பொறிமுறைகள் இல்லை, சர்வதேச
விசாரணையே எமக்குத் தேவை என்பதை மாநாட்டில் வலியுறுத்தவுள்ளதாக ஊடக
சந்திப்பில் தெரிவித்தனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/FJQcrzobjUcEaJJsEVOWpF" target="_blank"> WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-19T06:43:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சட்டசபையில் காரசாரமான விவாதங்கள் ; திமுக வாயை அடைத்த முதலமைச்சர் விஜய்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/heated-debates-assembly-cm-vijay-silences-dmk-1787121781"></link>
            <id>https://jvpnews.com/article/heated-debates-assembly-cm-vijay-silences-dmk-1787121781</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;தற்போது தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைத்திருக்கும் நிலையில் சட்டசபையில் தவெக எம்.எல்.ஏக்கள் மற்றும் திமுக எம்.எல்.ஏக்கள் இடைய...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;தற்போது தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைத்திருக்கும் நிலையில் சட்டசபையில் தவெக எம்.எல்.ஏக்கள் மற்றும் திமுக எம்.எல்.ஏக்கள் இடையே காரசாரமான விவாதங்கள் நடைபெற்று வருகிறது. </p><p>

திமுக எம்.எல்.ஏக்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு தவெக அமைச்சர்கள் தக்க பதிலடி கொடுத்து வருகிறார்கள்

குறிப்பாக ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார், ராஜ் மோகன் ஆகியோர் திமுக எழுப்பும் கேள்விகளுக்கு பதிலடி கொடுத்து வருகிறார்கள்.</p><p></p><h2>&nbsp;திமுக எழுப்பும் கேள்விகளுக்கு பதிலடி</h2><p>
</p><p>
 இந்நிலையில் இன்று சட்டசபையில் பேசிய முதலமைச்சர் ஜோசப் விஜய் ‘தவெக அமைச்சர்கள் எந்த குற்றச்சாட்டுகளை சொன்னாலும் திமுக எம்.எல்.ஏக்கள் ஆதாரங்களை கொடு ஆதாரங்களை கொடு என்று கேட்கிறார்கள்’.
</p><p>
 நிதியமைச்சர் மரிய வில்சன் ஏற்கனவே சொன்ன அந்த மூன்று கோப்புகளும் என்னுடைய டேபிளில்தான் இருக்கிறது.</p><p></p><p>

அதை திறக்க வைத்து விடாதீர்கள்.. அத்தனைக்கும் ஆதாரம் இருக்கு.. மக்கள்கிட்ட என்ன, எப்போது, எப்படி பேசணும் என எல்லாம் எங்களுக்கு தெரியும்.</p><p> தேவையான நேரத்தில் அதை வெளியிடுவோம் என முதலமைச்சர் விஜய் கூறியுள்ளார். 

மக்கள் ஆசை ஆசையாக எங்களை இங்கே கொண்டு வந்து உட்கார வைத்திருக்கிறார்கள். நான் பேசுவேன்.. பேசக்கூடாது என்றெல்லாம் ஒன்றும் இல்லை.</p><p>இடைத்தேர்தலில் சிலருக்கு ஏதாவது நல்ல நடக்க வேண்டும் அல்லவா!.. அதனால்தான் பேசாமல் இருக்கிறேன்’ என்றும் முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-08-19T06:40:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[தவறான முறைக்கு உட்படுத்தப்பட்ட பெண் அதிகாரி! அக்கரைப்பற்று முன்னாள் மேயருக்கு விளக்கமறியல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/akkaraipattu-managarasabha-ex-mayor-remanded-1787119936"></link>
            <id>https://ibctamil.com/article/akkaraipattu-managarasabha-ex-mayor-remanded-1787119936</id>
            <summary type="text">அரச பெண் அதிகாரி ஒருவரைத் திருமணம் முடிப்பதாக ஆசை வார்த்தைகள் கூறி தவறான முறைக்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட அக்கரைப்பற்று மா...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரச பெண் அதிகாரி ஒருவரைத் திருமணம் முடிப்பதாக ஆசை வார்த்தைகள் கூறி தவறான முறைக்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட அக்கரைப்பற்று மாநகர சபையின் முன்னாள் முதல்வர் சக்கி அதாவுல்லாஹ்வை விளக்கமறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
</p><p>
இவ் வழக்கு அக்கரைப்பற்று நீதவான் முன்னிலையில் நேற்று(18) செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
</p><p>
கடந்த காலத்தில் அக்கரைப்பற்று மாநகர சபையின் முதல்வராக சக்கி அதாவுல்லாஹ் செயற்பட்டு வந்த போது, அங்கு கடமையாற்றிய அக்கரைப்பற்று பள்ளிக்குடியிருப்பைச் சேர்ந்த சம்பந்தப்பட்ட அரச உத்தியோகத்தரான பெண் ஒருவரைத் திருமணம் முடிப்பதாக வாக்குறுதி அளித்து தன்னைத் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளார்.</p><p></p><h2>கைது நடவடிக்கை</h2><p>
</p><p>
குறித்த விடயம் தொடர்பாக சம்பந்தப்பட்ட பெண், அண்மையில் முகநூல் நேரலை ஊடாக நியாயம் கேட்டிருந்ததுடன், சம்பவம் குறித்து அம்பாறை சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்திலும் முறைப்பாடு செய்திருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a43e8f55-1721-4913-9520-c68dbe70f2de/26-6a854d8e634f9.webp' /></p><p>
</p><p>
முறைப்பாட்டைத் தொடர்ந்து, அம்பாறை சிறுவர் மற்றும் மகளிர் காவல்துறை பிரிவினால் தேடப்பட்டு வந்த சந்தேகநபரான சக்கி அதாவுல்லாஹ், வாக்குமூலம் வழங்குவதற்காக அம்பாறை சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்திற்கு வருகை தந்திருந்தார்.</p><p>
இதன்போது, அப்பிரிவின் பொறுப்பதிகாரி பிரதம காவல்துறை பரிசோதகர் தயானி கமகே தலைமையிலான குழுவினரால் அவர் உடனடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><h2>நீதிமன்ற உத்தரவு</h2><p>

இந்நிலையில், அதிகாரத் துஷ்பிரயோகம் மற்றும் பாலியில் துஷ்பிரயோகம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபருக்கு எதிராக அம்பாறை மாவட்ட பெண்கள் மற்றும் சிறுவர் பிரிவினரால் அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d530f16d-bdae-4fa3-bf75-f07ecdcc6ffa/26-6a854d8f1cd55.webp' /></p><p>
</p><p>
இதன்படி, சட்ட நடவடிக்கைகளுக்காக நீதவான் முன்னிலையில் முற்படுத்தப்பட்ட வேளையில், அவரை இன்று ஓகஸ்ட் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
</p><p>
இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அம்பாறை மாவட்ட பெண்கள் மற்றும் சிறுவர் பிரிவினர் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-19T06:31:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Fathima</name>
            </author>
            <title type="text"><![CDATA[இறந்த கணவரின் உடலுக்கு முத்தமிட்ட மனைவி மரணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/woman-collapses-dies-after-kissing-husband-1787120856"></link>
            <id>https://ibctamilnadu.com/article/woman-collapses-dies-after-kissing-husband-1787120856</id>
            <summary type="text">கேரளாவில் இறந்த கணவரின் உடலுக்கு கடைசியாக முத்தமிட்ட மனைவியும் உயிரிழந்த சோக சம்பவம் நடந்துள்ளது.

கேரளாவின் புதன்பள்ளிக்குனனு பகுதியை சேர்ந்தவர் சூ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கேரளாவில் இறந்த கணவரின் உடலுக்கு கடைசியாக முத்தமிட்ட மனைவியும் உயிரிழந்த சோக சம்பவம் நடந்துள்ளது.
</p><p>
கேரளாவின் புதன்பள்ளிக்குனனு பகுதியை சேர்ந்தவர் சூரியன் ஜோசப்(வயது 73), இவரது மனைவி ஷெர்லி(வயது 21), இவர்களுக்கு மூன்று மகள்கள் இருக்கின்றனர்.
</p><p>
கடந்த 15ம் தேதி வயது முதிர்வு காரணமாக சூரியன் ஜோசப் உயிரிழந்தார், கணவரின் திடீர் மரணத்தால் நிலைகுலைந்து போனார் ஷெர்லி.
</p><p>
தொடர்ந்து சூரியன் ஜோசப்புக்கு இறுதிச்சடங்குகள் நடைபெற்று இறுதியாக தேவாலயத்துக்கு கொண்டு செல்லும் பணிகள் நடந்தன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/901f24c6-a895-426b-ac99-9a360f7c41c0/26-6a854d592f1cf.webp' /><br></p><p>
அப்போது இறுதியாக தனது கணவருக்கு முத்தமிட்டார் ஷெர்லி, முத்தமிடுவதற்காக குனிந்த ஷெர்லி எழுந்திருக்கவில்லை, இதனை கவனித்த உறவினர்கள் அவரை தூக்க முயன்ற போது எந்த வித அசைவும் இல்லை.
</p><p>
இதனால் பதறிப்போய் மருத்துவமனைக்கு அழைத்துசென்ற போது அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர், இதனையடுத்து இருவருக்கும் இறுதிச்சடங்குகள் மேற்கொள்ளப்பட்டு ஒன்றாக அடக்கம் செய்யப்பட்டனர்.<br></p>]]></content>
            <updated>2026-08-19T06:29:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவின் சர்ரே பூங்காவில் இளம்பெண்ணுக்கு நேர்ந்த பயங்கரம்: இந்திய வம்சாவளி நபர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/indian-man-arrested-after-surrey-park-assault-1787120962"></link>
            <id>https://news.lankasri.com/article/indian-man-arrested-after-surrey-park-assault-1787120962</id>
            <summary type="text">Indian Origin Man arrested after surrey park assault: கனடாவில் இளம்பெண் நடத்தப்பட்ட பாலியல் தாக்குதல் சம்பவத்தில் இந்திய வம்சாவளி நபர் கைது செய்யப்பட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>Indian Origin Man arrested after surrey park assault: கனடாவில் இளம்பெண் நடத்தப்பட்ட பாலியல் தாக்குதல் சம்பவத்தில் இந்திய வம்சாவளி நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><h2> இந்திய வம்சாவளி நபர் கைது</h2><p>
கனடாவின் சர்ரே நகரில் அமைந்துள்ள பூங்காவில் இளம்பெண் ஒருவர் மீது நடத்தப்பட்ட பாலியல் தாக்குதல் தொடர்பாக 40 வயது மதிக்கத்தக்க இந்திய வம்சாவளி நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.</p><p> ஜகந்தர் குரானா(Jagendar Kurana) என்று அடையாளம் காணப்பட்டுள்ள சந்தேக நபர், சர்ரேவில் உள்ள பியர் கிரீக் பூங்காவில்(Bear Creek Park) இளம்பெண் ஒருவரை தகாத முறையில் தொட்டுவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.</p><p> &nbsp;ஆகஸ்ட் 9ம் திகதி இது தொடர்பாக அந்த பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், அவர் மீது பாலியல் சீண்டல் மற்றும் பாலியல் வன்கொடுமை ஆகிய பிரிவுகளின் கீழ் பொலிஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.</p><p></p><p> இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு எந்தவொரு உடல் காயங்களும் ஏற்படவில்லை என்பதை பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cd926498-4df0-41ec-bc45-83357fa3a959/26-6a854d4395010.webp' /></p><h2>கைது நடவடிக்கை</h2><p>பொதுமக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் விசாரணையை முன்னெடுத்த பொலிஸார், ஆகஸ்ட் 12ம் திகதி ஜகந்தர் குரானா-வை கைது செய்தனர்.</p><p> சந்தேக நபர் மீது போடப்பட்டுள்ள இரண்டு குற்றச்சாட்டுகளுக்கும் பிரிட்டிஷ் கொலம்பியா வழக்கு தொடரகம் அனுமதியளித்துள்ளது.</p><p> கைது செய்யப்பட்ட ஜகந்தர் குரானா தற்போது பொலிஸ் காவலில் வைக்கப்பட்டு ஜாமீன் விசாரணைக்காக காத்திருக்கிறார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p>&nbsp;<br></p>]]></content>
            <updated>2026-08-19T06:29:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்க அதிபர் ட்ரம்பின் செல்வாக்கில் பாரிய சரிவு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/massive-drop-in-us-president-trump-s-popularity-1787119620"></link>
            <id>https://canadamirror.com/article/massive-drop-in-us-president-trump-s-popularity-1787119620</id>
            <summary type="text">அமெரிக்க மக்கள் மத்தியில் அதிபர் டொனால்ட் டிரம்பின் ஆதரவு விகிதம் (Approval rating) அவரது பதவிக் காலத்திலேயே மிகக் குறைந்த அளவான 33 சதவீதமாகச் சரிந்து...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்க மக்கள் மத்தியில் அதிபர் டொனால்ட் டிரம்பின் ஆதரவு விகிதம் (Approval rating) அவரது பதவிக் காலத்திலேயே மிகக் குறைந்த அளவான 33 சதவீதமாகச் சரிந்துள்ளது.
</p><p>
அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே நடைபெறும் போர் நீண்ட காலம் நீடிக்கும் என்ற கவலையே, டொனால்ட் ட்ரம்பின் செல்வாக்கு அமெரிக்க மக்கள் மத்தியில் சரிந்து போயுள்ளமைக்கான காரணம் என்பது தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/621cce5f-3e96-4414-a7a6-0274834f3d63/26-6a85480d52064.webp' /></p><h2>ஈரான் மீதான தாக்குதல்</h2><p>

ரொய்ட்டர்ஸ்ஃஇப்சாஸ் (Reuters/Ipsos) கருத்துக்கணிப்பில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.</p><p>

நான்கு நாட்களால் நடைபெற்று நேற்று முடிவடைந்த இந்த கருத்துக்கணிப்பின்படி, ட்ரம்பின் செயல்பாட்டிற்கு 33வீத மக்கள் மட்டுமே ஆதரவு தெரிவித்துள்ளதுடன் 64வீதமானோர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.</p><p>

கருத்துக்கணிப்பில் பங்கேற்ற 80வீத அமெரிக்கர்கள் (87வீத ஜனநாயகக் கட்சியினர் மற்றும் 71வீத குடியரசுக் கட்சியினர்) ஈரானுடனான அமெரிக்காவின் மோதல் நீண்ட காலத்திற்குத் தொடரும் என நம்புகின்றனர்.</p><p>

சில வாரங்களில் முடிவடையும் என 16வீதமானோர் மட்டுமே நினைக்கின்றனர். ஈரான் மீதான தாக்குதல்களால் அமெரிக்கா உட்பட்ட உலகளாவிய எண்ணெய் விலையில் உயர்வும் ட்ரம்பின் சரிவுக்கான காரணமாகும்.
</p><p>
இந்தநிலையில் எதிர்வரும் நவம்பர் 3 நடைபெறும் இடைத்தேர்தலில் பிரதிநிதிகள் சபையில் தங்கள் பெரும்பான்மையைத் தக்கவைப்பது குறித்து குடியரசுக் கட்சியினருக்கு அச்சம் உருவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-19T06:27:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[நைட்டி விவகாரத்தில் என்னை டி.ஆர்.பிக்காக பயன்படுத்திவிட்டார்கள் : பிரிய வர்ஷினி பரபரப்பு பேச்சு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/bigg-boss-the-common-man-priya-varshini-goes-viral-1787055809"></link>
            <id>https://manithan.com/article/bigg-boss-the-common-man-priya-varshini-goes-viral-1787055809</id>
            <summary type="text">பிக் பாஸ் தி காமன்மேன் நிகழ்ச்சி கடந்த 16ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகி வருகிறது. பொது மக்களையும் போட்டியாளர்களாக தேர்வு செய்வதாக கூறப்பட்ட இந்த நிகழ்ச்சி...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிக் பாஸ் தி காமன்மேன் நிகழ்ச்சி கடந்த 16ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகி வருகிறது. பொது மக்களையும் போட்டியாளர்களாக தேர்வு செய்வதாக கூறப்பட்ட இந்த நிகழ்ச்சி, தொடங்கிய முதல் நாளிலேயே பல்வேறு விமர்சனங்களை சந்தித்து வருகிறது.</p><h2>பிக் பாஸ் தி காமன்மேன்&nbsp;</h2><p>

முதலில், 50 போட்டியாளர்களை இரண்டு பேருந்துகளில் அழைத்துச் சென்று, விசில் அடித்ததும் போட்டி போட்டு பேருந்தில் ஏற வைத்த சம்பவம் சமூக வலைதளங்களில் விமர்சனத்தை ஏற்படுத்தியது.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/LQGwnOq51sc" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p>சாதாரண மக்களை இவ்வாறு நடத்துவது ஏன் என பலரும் கேள்வி எழுப்பினர்.

இதற்கிடையே, போட்டியாளர் பிரிய வர்ஷினி நைட்டி அணிந்து வந்ததும் சர்ச்சையானது.</p><p> இது ஷூட்டிங் என்பதால் வேறு உடையில் வருமாறு நடுவர்கள் கூறிய நிலையில், தான் நைட்டியில் வருவது குறித்து ஏற்கனவே அனுமதி கேட்டதாகவும், அதற்கு சம்மதம் தெரிவித்திருந்ததாகவும் பிரிய வர்ஷினி கூறினார்.
</p><p>
“நைட்டி அணிவது கொலைக் குற்றமா? நான் என்ன பிறந்தமேனியாகவா வந்தேன்?” எனக் கேள்வி எழுப்பிய அவர், தன்னை தேர்வு செய்யவில்லை என்றால் பரவாயில்லை என்றும் தெரிவித்தார்.இதையடுத்து அவர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cb5871c9-80d8-44b2-9a02-0f70079b18f9/26-6a84536a90e94.webp' /></p><h2>பிரிய வர்ஷினி&nbsp; பேச்சு வைரல்</h2><p>
இதுகுறித்து பேசிய பிரிய வர்ஷினி, “காமன்மேன் என பெயர் வைத்துவிட்டு உண்மையான காமன்மேன்களை தேர்வு செய்வதில்லை. </p><p>நைட்டியில் வருவதற்கு முன்பே அனுமதி கேட்டிருந்தேன். நைட்டி கூடாது என முன்பே கூறியிருந்தால் வேறு உடையில் வந்திருப்பேன். என்னை டி.ஆர்.பிக்காக பயன்படுத்திக் கொண்டது போல் இருக்கிறது” என குற்றம்சாட்டியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d972f8be-e1db-432a-abfd-8c0b113ab065/26-6a845369dca43.webp' /></p><p>
மேலும், நிகழ்ச்சியில் ஆரி, மாயா உள்ளிட்டோர் பேசிய விதம் தனக்கு பிடிக்கவில்லை என்றும், அந்த காட்சிகளை முழுமையாக ஒளிபரப்புமாறு விஜய் டிவி மற்றும் ஹாட்ஸ்டாருக்கு சவால் விடுவதாகவும் அவர் கூறினார்.
</p><p>
பிரிய வர்ஷினியின் பேச்சுக்கு ஆதரவாகவும் எதிராகவும் சமூக வலைதளங்களில் விவாதம் நடைபெற்று வரும் நிலையில், அவரை பிக் பாஸ் வீட்டிற்கு அனுப்பியிருந்தால் நல்ல கன்டென்ட் கிடைத்திருக்கும் என சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
</p><p>
இதற்கிடையே, பிக் பாஸ் அல்டிமேட் டைட்டில் வென்ற பாலாஜி முருகதாஸ், “ஆடிஷனுக்காக கண்ணியத்தை விடுவதா? சுயமரியாதை முக்கியம்” என தனது எக்ஸ் பதிவில் கருத்து தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த விவகாரம் தற்போது இணையத்தில் சூடுபிடிக்க ஆரம்பித்திருக்கின்றது.</p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW&nbsp;</a></u></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-19T06:25:41+00:00</updated>
        </entry>
    </feed>
