<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-08-14T22:27:38+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீதி அமைச்சரை கடுமையாக சாடிய சிறீதரன் எம்.பி...!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sreedharan-slams-minister-over-chemmani-1786746223"></link>
            <id>https://ibctamil.com/article/sreedharan-slams-minister-over-chemmani-1786746223</id>
            <summary type="text">தென்பகுதியில் நடந்த சூரியகந்த படுகொலையை ஏற்றுக்கொள்ளுகின்ற நீதி அமைச்சர்
ஹர்சண நாணயக்கார, செம்மணியிலே நடந்திருப்பது ஒரு மனிதப் படுகொலை, மனிதப்
பேரவல...</summary>
            <content type="html"><![CDATA[<p>தென்பகுதியில் நடந்த சூரியகந்த படுகொலையை ஏற்றுக்கொள்ளுகின்ற நீதி அமைச்சர்
ஹர்சண நாணயக்கார, செம்மணியிலே நடந்திருப்பது ஒரு மனிதப் படுகொலை, மனிதப்
பேரவலம் என்பதை ஏற்றுக்கொள்ளாத ஒரு மாற்றாந்தாய் மனப்பான்மையோடு அவருடைய
கருத்து அமைவது துரதிர்ஷ்டவசமானது என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்
தெரிவித்துள்ளார்.</p><p>

சிவஞானம் சிறீதரன் நேற்று (14-08-2026) 
நீதிமன்ற அனுமதியுடன் செம்மணி மனித புதைகுழியை பார்வையிட்டார்.
</p><p>
பார்வையிட்ட பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்படி கருத்தை தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p></p><h2>நாட்டினுடைய நீதி&nbsp;</h2><p>இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “பல குழுக்கள் இங்கு இருந்திருக்கலாம் ஆனால்,
குழுக்கள் தங்களுக்குள் மோதி யாரையும் கொண்டுவந்து தாட்டதாக நாங்கள் இதுவரை
அறியவில்லை.</p><p>

அவ்வாறான சம்பவங்களுக்கு அவர் ஒரு கதை வடிவம் கொடுக்க முனைவது
நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a703b455-6836-4d15-a091-040f78fddd53/26-6a7f9571c3797.webp' /></p><p>

 நாட்டினுடைய நீதி அமைச்சர் மக்களை
திசைதிருப்பும் வகையிலே இவ்வாறான வார்த்தைகளை உதிர்க்கக்கூடாது. </p><p>தமிழர்கள்
எதிர்பார்ப்பது போல இது நூற்றுக்கு 100 சதவீதம் உண்மையானது ஏனெனில், இங்கே
நடந்த பல பேர் காணாமல் போயிருக்கிறார்கள்.</p><p> </p><p></p><h2>போராளிக் குழு</h2><p>வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களைப்
பற்றி தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுக்கிறார்கள்.
</p><p>
யாழ்ப்பாண மண்ணிலே 95 ஆம் ஆண்டிலிருந்து 2001 ஆம் ஆண்டு வரையான இடைப்பட்ட
காலப்பகுதியில் கிட்டத்தட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்கள் காணாமல் போயும்,
கொல்லப்பட்டும் இருக்கிறார்கள் இதனை நாங்கள் சொல்லவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8740d436-18e9-4f5e-b95b-3594620db306/26-6a7f957275266.webp' /></p><p>

இலங்கையினுடைய
கிரிசாந்தி கொலை வழக்கிலே சாட்சியாக இருக்கிற சோமரத்ன ராஜபக்ச
சொல்லியிருக்கிறார் இப்பொழுதும் சொல்லுகிறார்.
</p><p>
சோமரத்ன ராஜபக்சவை அரசாங்கம் அழைத்து வந்து, அவர் அடையாளப்படுத்துகின்ற
இடங்களைக் கிண்ட வேண்டும் அப்பொழுதுதான் உண்மை வெளியிலே வரும்.</p><p>அந்த உண்மைகளை
மறைப்பதற்கு எங்களிடம் இருந்த போராளிக் குழுக்களைப் பற்றியோ அல்லது இது ஒரு
அனாமதேய விடயங்கள் போலவோ அதற்கான ஒரு சோடனைக் கதைகளைச் சொல்ல அமைச்சர்
முன்வரக் கூடாது என்பதைத்தான் நாங்கள் வலியுறுத்துகிறோம்” என தெரிவித்துள்ளார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;&nbsp;</h6></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-14T22:23:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரான்ஸில் காட்டுத்தீ! 474 பேர் அதிரடியாக கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/people-arrested-causing-wildfires-in-france-1786740780"></link>
            <id>https://canadamirror.com/article/people-arrested-causing-wildfires-in-france-1786740780</id>
            <summary type="text">பிரான்ஸில் கடந்த ஜூலை 1ஆம் திகதி முதல் காட்டுத்தீ ஏற்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் 474 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வரலாறு காணாத வெப்ப அலையால் பிர...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரான்ஸில் கடந்த ஜூலை 1ஆம் திகதி முதல் காட்டுத்தீ ஏற்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் 474 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p>
வரலாறு காணாத வெப்ப அலையால் பிரான்ஸ் உள்ளிட்ட பல ஐரோப்பிய நாடுகள் கடுமையான காட்டுத்தீயை எதிர்கொண்டு வரும் நிலையில், இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p><p>கைது செய்யப்பட்டவர்களில் 183 பேர் சிறார்கள் என பிரான்ஸ் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.</p><h3>காட்டுத்தீ&nbsp;</h3><p> </p><p>கைது செய்யப்பட்டவர்களில் சுமார் 70 சதவீதம் பேர் திட்டமிட்டு காட்டுத்தீ ஏற்படுத்தியதாகவும், ஏனையோர் தற்செயலாக தீ ஏற்படக் காரணமாக இருந்ததாகவும் சந்தேகிக்கப்படுகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/729fa1a2-672e-40d5-88f3-f253d4cfa4e4/26-6a7f802f9a56e.webp' /></p><p>இந்நிலையில் 24 மணி நேரத்திற்கும் குறைவான காலப்பகுதியில் சுமார் 1,100 ஹெக்டேர் (2,700 ஏக்கர்) அளவிலான வறண்ட பைன் காடு தீக்கிரையாகியுள்ளது என்றும் தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
மேலும் தீயைக் கட்டுப்படுத்த சுமார் 500 தீயணைப்பு வீரர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் எனவும் கூறப்படுகிறது.</p>]]></content>
            <updated>2026-08-14T22:06:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[வறட்சியான வானிலையால் ஆயிரக்கணக்கானோர் பாதிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/68-000-people-affected-by-dry-weather-1786739980"></link>
            <id>https://jvpnews.com/article/68-000-people-affected-by-dry-weather-1786739980</id>
            <summary type="text">வறட்சியான வானிலை காரணமாக 68,041 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையம் தெரிவித்துள்ளது. 

நான்கு மாவட்டங்களில் உள்ள 17 கிராம...</summary>
            <content type="html"><![CDATA[<p>வறட்சியான வானிலை காரணமாக 68,041 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையம் தெரிவித்துள்ளது. </p><p>

நான்கு மாவட்டங்களில் உள்ள 17 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளைச் சேர்ந்த மக்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதாகக் அதன் சிரேஷ்ட உதவிச் செயலாளர் பிரகீத் தனன்சூரிய குறிப்பிட்டுள்ளார்.</p><p> 

மட்டக்களப்பு, அம்பாறை, மொனராகலை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மக்களே இந்த வறட்சியான வானிலையினால் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.</p><h2>வறட்சியான வானிலை</h2><p> </p><p>

அதற்கமைய, 21,873 குடும்பங்களைச் சேர்ந்த 68,041 பேர் வறட்சியான வானிலையினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/09f1b4c6-1224-44e9-b0b7-fdd641f6a267/26-6a7f7df3037c3.webp' /></p><p>

மேலும், குடிநீர் பிரச்சினையை எதிர்நோக்கியுள்ள 3,495 குடும்பங்களைச் சேர்ந்த 12,291 பேருக்குத் தேவையான குடிநீரை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பிரகீத் தனன்சூரிய குறிப்பிட்டுள்ளார். </p><p>

பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான உதவிகளை வழங்குவதற்காக உள்ளூராட்சி அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து திட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-08-14T22:03:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹோர்முஸ் நீரிணை குறித்து ட்ரம்ப் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/trump-says-will-soon-declare-hormuz-us-territory-1786743553"></link>
            <id>https://tamilwin.com/article/trump-says-will-soon-declare-hormuz-us-territory-1786743553</id>
            <summary type="text">அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரானை தோற்கடித்த பின்னர் ஹோர்முஸ் நீரிணையை அமெரிக்காவின் பிரதேசமாக விரைவில் அறிவிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.

...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரானை தோற்கடித்த பின்னர் ஹோர்முஸ் நீரிணையை அமெரிக்காவின் பிரதேசமாக விரைவில் அறிவிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.</p><p>

நியூயோர்க் மாநிலத்தில் நடைபெற்ற அரசியல் பேரணியில் பேசிய ட்ரம்ப், </p><h2>ஹோர்முஸ் நீரிணை</h2><p>“ஈரானை தோற்கடித்த பின்னர், ஹோர்முஸ் நீரிணையை அமெரிக்காவின் பிரதேசமாக அறிவிப்பேன்” எனக் குறிப்பிட்டார்.
</p><p>
மேலும், ஹோர்முஸ் நீரிணையில் அமெரிக்கா முற்றுகையை ஏற்படுத்தியுள்ளதாகவும், அமெரிக்காவின் அனுமதியின்றி எந்தக் கப்பலும் அந்தப் பகுதியை கடந்து செல்ல முடியாது என்றும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/46f87b06-8d87-44b4-96be-d4fb6934a229/26-6a7f8c13682ed.webp' /></p><p>

உலகின் முக்கியமான எரிசக்தி மற்றும் வர்த்தகப் பொருட்கள் கொண்டு செல்லப்படும் முக்கிய கடல்வழிப் பாதையாக ஹோர்முஸ் நீரிணை விளங்குகிறது.
</p><p>
 ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான மோதலின் காரணமாக இந்தப் பகுதியில் கப்பல் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-14T21:56:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானியாவில் மில்லியன் கணக்கானோருக்கு அனுப்பப்பட்ட காட்டுத்தீ எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/brits-phones-ring-alert-warning-1786743195"></link>
            <id>https://news.lankasri.com/article/brits-phones-ring-alert-warning-1786743195</id>
            <summary type="text">Millions of Brits received emergency alert: காட்டுத்தீ பரவும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கும் அவசரச் செய்தி ஒன்றை, லட்சக்கணக்கான பிரித்தானியர்கள் தங்கள் அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Millions of Brits received emergency alert: காட்டுத்தீ பரவும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கும் அவசரச் செய்தி ஒன்றை, லட்சக்கணக்கான பிரித்தானியர்கள் தங்கள் அலைபேசிகளில் பெற்றுள்ளனர்.
</p><p>நாடு மீண்டும் ஒரு கடும் வெப்ப அலையில் சிக்கியுள்ள நிலையில், பார்பிக்யூ, முகாம் தீ, பட்டாசுகள் உள்ளிட்ட தீப்பொறியை ஏற்படுத்தக்கூடிய எதையும் பற்றவைக்க வேண்டாம் என மக்களுக்கு எச்சரிக்கை விடுத்து அரசாங்கம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.</p><h2>ஆபத்தை ஏற்படுத்தக்கூடும்</h2><p> </p><p>மாலை சுமார் 7 மணியளவில், நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கானோரின் கைபேசிகளுக்கு அந்த உரத்த எச்சரிக்கை ஒலித்துள்ளது. கைபேசி அமைதி பயன்முறையில் வைக்கப்பட்டிருந்தாலும், எச்சரிக்கை அனுப்பப்பட்டுவிட்டது எனில், அதன் ஒலியும் அதிர்வும் சுமார் 10 வினாடிகள் நீடிக்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bbe9e8a8-c42d-4e6a-947a-dc57705575f1/26-6a7f899dd7826.webp' /></p><p> </p><p>சைரன் ஒலியுடன், ஒரு சிறிய தீச்சுவாலை கூட விரைவாக ஒரு பெரிய காட்டுத்தீயாகப் பரவி, உயிர்கள், வீடுகள், வணிக நிறுவனங்கள் மற்றும் அவசரகால மீட்புப் பணியாளர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என்று அது எச்சரித்தது. </p><p>அந்த எச்சரிக்கையில், காட்டுத்தீ ஏதேனும் ஏற்பட்டால், உடனடியாக 999 என்ற இலக்கத்திற்கு அழைத்துத் தெரிவிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.</p><p> சமீப வாரங்களில் நாடு முழுவதும் தீ மற்றும் காட்டுத்தீ பரவி வரும் நிலையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நேற்று மட்டும், வெஸ்ட் மிட்லாண்ட்ஸ் பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 11 பெரிய தீ விபத்துகள் பதிவாகியுள்ளன. </p><p>நேற்று மதியம் மேற்கு மிட்லாண்ட்ஸின் ஸ்டோர்பிரிட்ஜ் முழுவதும் தீ பரவியதால், மொத்தம் 19 வீடுகள் முற்றிலுமாக அழிந்தன மற்றும் 18 வீடுகள் சேதமடைந்தன. இதனால், குடும்பங்கள் வெளியேற்றப்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. </p><p>இதனிடையே, எச்சரிக்கை விடுக்கும் இந்தக் கோரிக்கை தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகளிடமிருந்து நேரடியாக வந்ததாக பிரதமர் ஆன்டி பர்னாம் தெரிவித்துள்ளார்.</p><p></p><p>
</p><p>காட்டுத்தீ அபாயம் மிக அதிகமாக நீடிப்பதால், இன்று மாலை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் முழுவதும் உள்ள மக்களுக்கு அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என பிரதமர் கூறியுள்ளார். </p><p>மேலும், அனைவரையும் பாதுகாப்பாக வைத்திருப்பதும், தீ விபத்துகள் ஏற்படுவதைத் தடுப்பதுமே தற்போது நமது முன்னுரிமையாகும். இந்தக் கடும் வெப்பக் காலத்தில், அனைவரும் கூடுதல் கவனம் செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். </p><p>தயவுசெய்து தோட்டங்கள், கிராமப்புறங்கள் அல்லது பூங்காக்கள், தரிசு நிலங்கள் மற்றும் மரங்கள் அடர்ந்த பகுதிகள் உள்ளிட்ட பிற திறந்தவெளிகளில் தீ மூட்ட வேண்டாம்.</p><h2>முந்தைய சாதனை</h2><p> </p><p>நமது தீயணைப்பு வீரர்களும் அவசரகால மீட்புப் பணியாளர்களும், மிகவும் கடினமான சூழ்நிலைகளில் இரவு பகலாக உழைத்து வருகின்றனர். நாம் அனைவரும் அவர்களுக்கு உதவலாம். தயவுசெய்து இந்த அவசரகால எச்சரிக்கையைத் தீவிரமாக எடுத்துக்கொண்டு, நடைமுறையில் உள்ள வழிகாட்டுதல்களைப் பின்பற்றுங்கள் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். </p><p>லண்டனின் கியூ கார்டன்ஸில் (Kew Gardens) வெப்பநிலை 38.5 டிகிரி செல்சியஸை எட்டியதன் மூலம், மிக வெப்பமான நாளுக்கான முந்தைய சாதனையை இங்கிலாந்து அதிகாரப்பூர்வமாக முறியடித்த நிலையில், தீ விபத்துகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2a389e4a-605a-4d08-88b5-f4a6a3527804/26-6a7f899e8bf81.webp' /></p><p> </p><p>ஸ்டோர் பிரிட்ஜில் (Stourbridge) ஏற்பட்ட தீ விபத்து, கடும் வெப்பம் மற்றும் பலத்த காற்றினால் தீவிரமடைந்து, 500 ஏக்கர் பரப்பளவில் பரவிய அந்தத் தீ விரைவிலேயே ஒரு பெரும் விபத்தாக மாறியது. </p><p>நேற்று மிட்லாண்ட்ஸ் முழுவதும், குறிப்பாக ஸ்டோக்-ஆன்-ட்ரென்ட், பர்மிங்காம், வார்விக்ஷயர் மற்றும் வொர்செஸ்டர்ஷயர் ஆகிய இடங்களிலும், அத்துடன் நார்போக் மற்றும் வேல்ஸிலும் பல காட்டுத்தீ சம்பவங்கள் பதிவாகியுள்ளன.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-14T21:31:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாலஸ்தீனிய வீடுகள் முற்றுகை: நெதன்யாகுவுக்கு அமெரிக்கா அழுத்தம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/palestinian-homes-in-the-west-bank-netanyahu-1786741027"></link>
            <id>https://tamilwin.com/article/palestinian-homes-in-the-west-bank-netanyahu-1786741027</id>
            <summary type="text">இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள குஸ்ரா எனும் பாலஸ்தீனிய
கிராமத்தில் பாலஸ்தீனியர்களின் வீடுகளை தீவிரவாத இஸ்ரேலிய குடியேற்றவாசிகள்
முற்றுகையிட்டுள்ள ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள குஸ்ரா எனும் பாலஸ்தீனிய
கிராமத்தில் பாலஸ்தீனியர்களின் வீடுகளை தீவிரவாத இஸ்ரேலிய குடியேற்றவாசிகள்
முற்றுகையிட்டுள்ள சம்பவத்திற்குப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பகிரங்கக்
கண்டனம் தெரிவிக்க வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.
</p><p>
தண்ணீர் மற்றும் மின்சார இணைப்புகளைத் துண்டித்து கடந்த ஒரு வாரமாகப்
பாலஸ்தீனியக் குடும்பங்களைச் சிறைபிடித்துள்ள இந்தச் சம்பவத்திற்கு அமெரிக்கத்
தூதுவர் மைக் ஹக்கபி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.</p><h2>ஆதரவு</h2><p>
</p><p>
அமெரிக்க குடியுரிமை பெற்ற பாலஸ்தீனியரின் வீடும் முற்றுகையிடப்பட்டுள்ளதால்
அமெரிக்கா தனது எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/79eedf0b-9427-45b2-ad4b-403e3676780f/26-6a7f826128f27.webp' /></p><p>

எனினும் வரவிருக்கும் தேர்தலில் தீவிர வலதுசாரி வாக்காளர்களின் ஆதரவு தேவை
என்பதால் நெதன்யாகு இதுவரை இதுகுறித்து கருத்து எதுவும் தெரிவிக்காமல் மௌனம்
காத்து வருகிறார்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-14T21:30:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரான் மீது கனடா அதிரடி நடவடிக்கை! 5 மூத்த அதிகாரிகளுக்குப் பொருளாதாரத் தடை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/canada-sanctions-5-iranian-officials-1786742199"></link>
            <id>https://ibctamil.com/article/canada-sanctions-5-iranian-officials-1786742199</id>
            <summary type="text">ஈரானிய இஸ்லாமிய புரட்சிகரக் காவல் படையின் (IRGC) உறுப்பினர்கள் உட்பட ஐந்து மூத்த ஈரானிய அரசு அதிகாரிகளுக்குக் கனடா பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது.
...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானிய இஸ்லாமிய புரட்சிகரக் காவல் படையின் (IRGC) உறுப்பினர்கள் உட்பட ஐந்து மூத்த ஈரானிய அரசு அதிகாரிகளுக்குக் கனடா பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது.
</p><p>
ஹோர்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்து உரிமைகளை முடக்கியதாகக் குற்றம்சாட்டி இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.</p><p>

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், சர்வதேச அமைதி, பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையைப் சீர்குலைக்கும் வகையில் இராணுவ, சட்ட மற்றும் தகவல் தொடர்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காக இந்த ஐந்து நபர்கள் மீதும் தடைகள் விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>கப்பல் போக்குவரத்து</h2><p>

கனடாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் அனிதா ஆனந்த் (Anita Anand) ஈரானைப் பதற்றத்தைக் குறைக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1e959b09-c113-48c5-8b15-8d0fc6a5d87f/26-6a7f86f4e0ed0.webp' /></p><p>மேலும் ஹோர்முஸ் ஜலசந்தி வழியிலான சுதந்திரமான கப்பல் போக்குவரத்தானது உலகளாவிய வர்த்தகத்திற்கும் எரிசக்தி பாதுகாப்பிற்கும் மிக அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>
இன்றைய பொருளாதாரத் தடைகள், இந்தக் கொள்கைகளைச் சீர்குலைத்து உலகப் பொருளாதாரம் மற்றும் எரிசக்தி பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக விளங்கும் நபர்களை இலக்கு வைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;&nbsp;</h6></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-14T21:28:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kumar</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் நடைபெறவுள்ள சர்வதேச மாநாடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/association-of-relatives-of-the-disappeared-1786735105"></link>
            <id>https://tamilwin.com/article/association-of-relatives-of-the-disappeared-1786735105</id>
            <summary type="text">எதிர்வரும் 30ஆம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ள சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு, யாழ்ப்பாணம் தந்தை செல்வா மண்டபத்தில் சர்வதேச மாநாடொன்றை ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>எதிர்வரும் 30ஆம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ள சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு, யாழ்ப்பாணம் தந்தை செல்வா மண்டபத்தில் சர்வதேச மாநாடொன்றை நடத்துவதற்கு வடக்கு–கிழக்கு இணைந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
</p><p>
இது தொடர்பில் தெளிவுபடுத்தும் வகையிலான பொதுக்கூட்டம் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள அமெரிக்கன் மிஷன் மண்டபத்தில் இடம்பெற்றது.</p><h2>&nbsp;சர்வதேச மாநாடு</h2><p>

இந்த மாநாடு தொடர்பாகவும், மாநாட்டுக்கு வலுச்சேர்க்கும் வகையிலும், மாநாட்டுக்கு ஆதரவு கோரும் வகையிலும் இந்தக் கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3fe299b9-0e04-42cf-85bf-bc194f27af6c/26-6a7f8653212c8.webp' /></p><p>
</p><p>
மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளின் சங்கத்தின் ஏற்பாட்டில், அதன் தலைவி அ. அமலநாயகி தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெற்றது.</p><p>

இந்தக் கூட்டத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா. சாணக்கியன், ஞா. சிறிநேசன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன், சிவில் செயற்பாட்டாளர்கள், மதகுருமார்கள், அமெரிக்கன் மிஷன் அருட்தந்தை டேவிட், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் மற்றும் ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.</p><p>

இதன்போது முக்கியமான சில விடயங்கள் மற்றும் மாநாடு தொடர்பான கருத்துக்கள் பகிரப்பட்டன.</p><p>

அதேபோன்று, மாநாடு தொடர்பிலான ஆலோசனைகளும் பெறப்பட்டதுடன், மாநாட்டை முன்னெடுத்துச் செல்வதற்கு அனைவரினதும் ஒத்துழைப்பும் கோரப்பட்டது.</p><h2>தாய்மார்களின் வலி</h2><p>
</p><p>
இந்த சர்வதேச மாநாடு, உள்ளகப் பொறிமுறையில் நம்பிக்கை இழந்துள்ள தாய்மார்களின் குரலை சர்வதேசத்திற்கு எடுத்துரைக்கும் வகையிலும், தங்களுக்கு நேர்ந்தது வலிந்து காணாமல் ஆக்கப்படுதல் மற்றும் திட்டமிட்ட இன அழிப்பு என்பதை சர்வதேசத்திற்கு எடுத்துக்கூறும் வகையிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/534dcd71-c5b1-441e-91d7-1f2158e2552f/26-6a7f8653eff98.webp' /></p><p>
</p><p>
இந்த மாநாட்டில் அனைத்துச் சமூகங்களும் பங்கேற்று, தாய்மார்களின் வலிகளை உணர்த்தும் மாநாடாக இது அமையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இதுவரை காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளைத் தேடிய நிலையில், 600-க்கும் மேற்பட்ட தாய்மார்கள் உயிரிழந்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளின் சங்கத்தின் தலைவி அ. அமலநாயகி தெரிவித்தார்.
</p><p>
அவர்களின் சாட்சியங்களைப் பதிவு செய்து, 'அழிக்கப்பட்ட சாட்சியங்கள்' என்ற புத்தகத்தையும், இதுவரை காலமும் போராட்டங்களின்போது கையளிக்கப்பட்ட அறிக்கைகளைப் புத்தக வடிவிலும் வெளியிடவுள்ளதாக அவர் தெரிவித்தார்.</p><h2>தமிழ் தேசியம்</h2><p>
</p><p>
அதேபோன்று, மாநாட்டில் பல்வேறு அம்சங்கள் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.</p><p>

இதில் குழு கலந்துரையாடல்கள், சிறப்புரைகள், கண்காட்சிகள், பேரணி உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0534ab86-dd6b-48f8-b8f2-31753ab04464/26-6a7f8654c64ce.webp' /></p><p>
</p><p>
இதற்கு சர்வதேச ரீதியிலும், வடக்கு–கிழக்கு சார்ந்த ரீதியிலும், தமிழ் தேசியத்துடன் பயணிக்கும் அனைவரும் ஆதரவு வழங்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
</p><p>
எமக்கு நடந்த இந்த அநியாயத்துக்கும் அநீதிக்கும் நீதி பெற்றுக்கொடுப்பதற்காக அனைவரும் ஒன்றுதிரண்டு எமக்காகக் குரல்கொடுத்து, எமக்கான நீதியைப் பெற்றுக்கொடுப்பதற்கு முன்வர வேண்டும் எனவும் இந்தச் சந்தர்ப்பத்தில் கேட்டுக்கொள்கிறேன் எனவும் அவர் தெரிவித்தார்.</p>]]></content>
            <updated>2026-08-14T21:19:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானிய மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/uk-issues-high-risk-wildfire-alert-1786739129"></link>
            <id>https://ibctamil.com/article/uk-issues-high-risk-wildfire-alert-1786739129</id>
            <summary type="text">பிரித்தானியா முழுவதும் காட்டுத்தீ ஏற்படும் அபாயம் மிகவும் அதிகமாக இருப்பதாக அந்நாட்டு அரசு அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது.

பொதுமக்கள் தீப்பற்றக்கூடி...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரித்தானியா முழுவதும் காட்டுத்தீ ஏற்படும் அபாயம் மிகவும் அதிகமாக இருப்பதாக அந்நாட்டு அரசு அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது.
</p><p>
பொதுமக்கள் தீப்பற்றக்கூடிய செயல்களில் ஈடுபட வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
</p><p>
டிஸ்போசபிள் பார்பிக்யூ, தீ மூட்டுதல், தோட்டக் கழிவுகளை எரித்தல் மற்றும் பட்டாசு வெடித்தல் உள்ளிட்டவற்றை தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.</p><p></p><h2>அவசரகால பணியாளர்கள்</h2><p>

சிறிய தீப்பொறி கூட வேகமாகப் பரவி பெரிய காட்டுத்தீயாக மாறி உயிர்கள், வீடுகள், வர்த்தக நிறுவனங்கள் மற்றும் அவசரகால பணியாளர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என அரசு எச்சரித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0bded0f3-e56a-49c4-914f-058c65cebfb9/26-6a7f7b1a247cc.webp' /></p><p>

தீ ஏற்பட்டதற்கான அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக 999 என்ற அவசர இலக்கத்திற்கு அழைக்குமாறும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-14T20:37:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிரியாவின் முன்னாள் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்ட அதிரடி தீர்ப்பு - மகிந்த - கோட்டாபயவிற்கு கிடைக்குமா..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/airstrike-on-the-sencholai-girls-home-complex-1786738447"></link>
            <id>https://tamilwin.com/article/airstrike-on-the-sencholai-girls-home-complex-1786738447</id>
            <summary type="text">2006 ஆம் ஆண்டு ஒகஸ்ட் 14ஆம் திகதி, செஞ்சோலை சிறுமிகள் இல்ல வளாகத்தின் மீது நடத்தப்பட்ட வான்படைத் தாக்குதலில் 61ற்கும் மேற்பட்ட மாணவிகள் கொல்லப்பட்டதுட...</summary>
            <content type="html"><![CDATA[<p>2006 ஆம் ஆண்டு ஒகஸ்ட் 14ஆம் திகதி, செஞ்சோலை சிறுமிகள் இல்ல வளாகத்தின் மீது நடத்தப்பட்ட வான்படைத் தாக்குதலில் 61ற்கும் மேற்பட்ட மாணவிகள் கொல்லப்பட்டதுடன், பலர் காயமடைந்தனர்.
</p><p>
அந்தக் காலகட்டத்தில் மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாகவும், கோட்டாபய ராஜபக்ச பாதுகாப்பு அமைச்சின் செயலாளராகவும் பதவி வகித்தனர்.
</p><p>
செஞ்சோலை தாக்குதல் தொடர்பாக சர்வதேச மனித உரிமை அமைப்புகள், சர்வதேச அரசு சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் உயர்ஸ்தானிகர்கள் வெளியிட்ட அறிக்கைகளில், இலங்கை வான்படையின் தாக்குதலில் சிறுவர்கள் கொல்லப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
</p><p>
எனினும், செஞ்சோலை வளாகம் விடுதலைப் புலிகளின் பயிற்சி முகாம் என இலங்கை அரசாங்கம் அப்போது விளக்கம் அளித்திருந்தது.

ஆனால், தாக்குதலுக்குப் பின்னர் வெளியான புகைப்படங்களில், சிறுவயதுடைய மாணவிகள் சீருடைகளுடன் காணப்பட்டமை தொடர்பிலும் பல்வேறு தரப்பினரால் கேள்விகள் எழுப்பப்பட்டன.
</p><p>
இந்நிலையில், சிரியாவின் முன்னாள் ஜனாதிபதி பஷார் அல்-அசாத் மற்றும் அவருக்கு ஆதரவாக செயற்பட்டவர்களுக்கு எதிராக மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
</p><p>
இதுபோன்ற சூழலில், இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் கடந்தகால குற்றங்கள் மற்றும் அநீதிகளுக்கு பொறுப்பானவர்கள் தண்டிக்கப்படுவார்களா என்ற எதிர்பார்ப்பு தமிழ் சமூகத்திலும் நிலவி வருகிறது.</p><p>

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, நாட்டு மக்களின் நலனுக்காகவும் ஊழலற்ற நிர்வாகத்தை முன்னெடுப்பதற்காகவும் செயற்படுவதாகத் தெரிவித்து வருகிறார்.
</p><p>
இவ்வாறான அரசியல் மாற்றங்கள், கடந்த காலங்களில் இடம்பெற்ற அநீதிகளுக்கு தீர்வைப் பெற்றுத்தருமா என்ற எதிர்பார்ப்பு இளைஞர்கள் மத்தியிலும் எழுந்துள்ளது.</p><p>


இந்த விடயங்கள் தொடர்பில் விரிவாகப் பேசுகிறது ‘செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி...</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/6_lUEKeR67Q" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-08-14T20:24:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாடொன்றில் வரலாறு காணாத கனமழை: 8 பேர் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/heavy-rains-batter-japan-8-dead-1786735410"></link>
            <id>https://jvpnews.com/article/heavy-rains-batter-japan-8-dead-1786735410</id>
            <summary type="text">கிழக்கு ஜப்பானின் சிபா மாகாணத்தில் பெய்து வரும் வரலாறு காணாத கனமழை மற்றும்
வெள்ளப்பெருக்கினால் இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

தலைநகர் டோக்கியோவை ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிழக்கு ஜப்பானின் சிபா மாகாணத்தில் பெய்து வரும் வரலாறு காணாத கனமழை மற்றும்
வெள்ளப்பெருக்கினால் இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளனர்.
</p><p>
தலைநகர் டோக்கியோவை ஒட்டியுள்ள பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை
நீடித்து வருகிறது.</p><p>ஒரு மணி நேரத்திற்கு 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி
பதிவாகியுள்ளதாக ஜப்பான் வானிலை மையம் தெரிவித்துள்ளது.</p><h2>அவசர எச்சரிக்கை</h2><p>

மழை வெள்ளம் காரணமாக 20,000-க்கும் மேற்பட்ட வீடுகளில் மின்சாரம் முற்றிலும்
துண்டிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8b849e19-d313-4498-b893-050318d74eb7/26-6a7f6b34ed20d.webp' /></p><p>

மண்சரிவு மற்றும் வெள்ள அபாயம் காரணமாக ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்களைப்
பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறுமாறு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.</p><p>ஆபத்தின் அளவை உணர்த்தும் நிலை 5 அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டு, தற்போது
நிலை 4 ஆகக் குறைக்கப்பட்டிருந்தாலும், மண்சரிவு மற்றும் திடீர் வெள்ள அபாயம்
தொடர்ந்து நிலவுவதாகப் பேரிடர் மேலாண்மை துறை எச்சரித்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-14T20:20:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[காட்டுத்தீ அபாயம் மிக அதிகம்: பிரித்தானிய அரசின் எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/uk-issues-severe-warning-over-high-wildfire-risk-1786732676"></link>
            <id>https://jvpnews.com/article/uk-issues-severe-warning-over-high-wildfire-risk-1786732676</id>
            <summary type="text">பிரித்தானியா முழுவதும் காட்டுத்தீ ஏற்படும் அபாயம் மிகவும் அதிகமாக இருப்பதாக அந்நாட்டு அரசு அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது.

பொதுமக்கள் தீப்பற்றக்கூடி...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரித்தானியா முழுவதும் காட்டுத்தீ ஏற்படும் அபாயம் மிகவும் அதிகமாக இருப்பதாக அந்நாட்டு அரசு அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது.
</p><p>
பொதுமக்கள் தீப்பற்றக்கூடிய செயல்களில் ஈடுபட வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><h2>காட்டுத்தீ</h2><p>
</p><p>
 டிஸ்போசபிள் பார்பிக்யூ, தீ மூட்டுதல், தோட்டக் கழிவுகளை எரித்தல் மற்றும் பட்டாசு வெடித்தல் உள்ளிட்டவற்றை தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9016ea65-28ae-491f-952f-a2da50800363/26-6a7f6086692dd.webp' /></p><p>
</p><p>
சிறிய தீப்பொறி கூட வேகமாகப் பரவி பெரிய காட்டுத்தீயாக மாறி உயிர்கள், வீடுகள், வர்த்தக நிறுவனங்கள் மற்றும் அவசரகால பணியாளர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என அரசு எச்சரித்துள்ளது.
</p><p>
தீ ஏற்பட்டதற்கான அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக 999 என்ற அவசர இலக்கத்திற்கு அழைக்குமாறும் பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-08-14T20:00:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[ChatGPT-யில் தேடிய விடயம்... இளைஞர் செய்த கொடுஞ்செயல்: தந்தை வெளியிட்ட பின்னணி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/massachusetts-teen-used-chatgpt-for-1786737349"></link>
            <id>https://news.lankasri.com/article/massachusetts-teen-used-chatgpt-for-1786737349</id>
            <summary type="text">Massachusetts teenager killed his mother and brother: தனது தாயையும் சகோதரனையும் கொலை செய்வதற்கு, ChatGPT-ஐப் பயன்படுத்திய மாசசூசெட்ஸைச் சேர்ந்த ஒரு பத...</summary>
            <content type="html"><![CDATA[<p>Massachusetts teenager killed his mother and brother: தனது தாயையும் சகோதரனையும் கொலை செய்வதற்கு, ChatGPT-ஐப் பயன்படுத்திய மாசசூசெட்ஸைச் சேர்ந்த ஒரு பதின்ம வயது இளைஞன்.
</p><p>தனது தாயையும் சகோதரனையும் கொலை செய்வதற்கு முன்னதாக, ChatGPT-ஐப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் மசாசூசெட்ஸைச் சேர்ந்த பதின்ம வயது இளைஞர் ஒருவர், நீதிமன்ற விசாரணையை எதிர்கொள்ள இருக்கிறார்.</p><h2>இணையச் செயல்பாடுகள்</h2><p>
</p><p>ஆக்டனில் உள்ள தங்கள் குடியிருப்பில், தனது தாயார் சுதா வெங்கடேசன் (45) மற்றும் தம்பி சித்தார்த் அரவிந்த் (14) ஆகியோரைக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட 17 வயதான அர்ஜுன் அரவிந்த், வியாழக்கிழமை அன்று கான்கார்ட் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/60a19ba7-dba5-4fd3-ac6d-fd665cb4b35f/26-6a7f72c7be164.webp' /></p><p>
</p><p>செவ்வாய்க்கிழமை கொலை நடந்த சிறிது நேரத்திலேயே அரவிந்த், தான் பணிபுரிந்த ஸ்டாப் &amp; ஷாப் கடைக்குச் சென்று 2,000 டொலருக்கும் அதிகமான தொகைக்கு தானிய உணவுகள் மற்றும் எனர்ஜி பார்களை வாங்கியதாக காவல்துறை அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.</p><p> காவல்துறை அறிக்கையின் அடிப்படையில், தனது தாய்க்குச் சொந்தமானதாகக் கருதப்படும் கிரெடிட் கார்டை அரவிந்த் பயன்படுத்தியுள்ளார். அவர் அந்த எனர்ஜி பார்களை மீண்டும் விற்பனை செய்யத் திட்டமிட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
</p><p>அரவிந்த் தனது குடும்ப வீட்டிலிருந்து எடுத்துச் சென்றதாக விசாரணை அதிகாரிகளால் கண்டறிந்த தனது தாயின் 2014 மாடல் ஹோண்டா அக்கார்ட் (Honda Accord) காரின் உள்ளே, புதன்கிழமை அதிகாலை சுமார் 3:40 மணியளவில் தூங்கிக்கொண்டிருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதாக அரசுத் தரப்பு சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர். </p><p>அரவிந்தின் தந்தையான சுகுமாரன் அரவிந்த், தனது மகனின் அண்மைய கவலைக்குரிய இணையச் செயல்பாடுகள் காரணமாகவே குடும்பத்தினர் கத்தி போன்ற ஆபத்தானப் பொருட்களை அவனிடமிருந்து மறைத்து வைத்திருந்ததாக விசாரணை அதிகாரிகளிடம் தெரிவித்தார்.</p><p></p><p> </p><p>மேலும், தனது குடும்பத்தினரைக் கொல்வது தொடர்பான கோட்பாட்டு ரீதியான கருத்துக்கள் மற்றும் கற்பனைகள் குறித்து அரவிந்த் ChatGPT-யில் தேடியதாக அவனது தந்தை காவல்துறையிடம் தெரிவித்ததாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். </p><p>ஆக்டன்-பாக்ஸ்பரோ உயர்நிலைப் பள்ளியில் இறுதியாண்டுக்கு முந்தைய வகுப்பில் பயின்று வரும் அரவிந்திற்கு, நடத்தை சார்ந்த சிக்கல்கள் இருந்ததாகவும், அவருக்கு ஆட்டிசம் (autism) இருப்பது கண்டறியப்பட்டிருந்ததாகவும் அவரது தந்தை கூறியதாகத் தெரிகிறது. </p><p>பொலிஸ் அறிக்கையில், முந்தைய சில நடத்தைகள் காரணமாக தனது மகன் செல்போன் வைத்திருப்பதற்குத் தடை விதிக்கப்பட்டிருந்ததாகவும் அவர் விசாரணை அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.</p><h2>மனநலப் பரிசோதனை</h2><p> </p><p>கொலை நடந்த நாளன்று காலை 8 மணிக்குச் சற்று முன்பு, பெற்றோர்களைக் கொல்வது போன்ற ஒரு சூழலை உருவாக்க அரவிந்த் ChatGPT-ஐப் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது. </p><p>அரவிந்த் மீது இரண்டு கொலைக் குற்றச்சாட்டுகள், குடும்ப அல்லது வீட்டு உறுப்பினர் மீதான தாக்குதல் மற்றும் உடல்ரீதியான துன்புறுத்தல் தொடர்பான தலா இரண்டு குற்றச்சாட்டுகள், அத்துடன் அனுமதியின்றி வாகனத்தைப் பயன்படுத்தியது மற்றும் மோட்டார் வாகனத்தைத் திருடியது ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. </p><p>செவ்வாய்க்கிழமை மாலை சுமார் 6:30 மணியளவில், அரவிந்தின் தந்தை காவல்துறையைத் தொடர்புகொண்டு, தங்கள் வீட்டில் உள்ளவர்களின் நலனைச் சரிபார்க்குமாறு கேட்டுக்கொண்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/287a50ee-cdcc-4da7-a75f-4b016426ae6a/26-6a7f72c86dd7e.webp' /></p><p> </p><p>கோரிக்கையை அடுத்து பொலிசார் 
அந்தக்குடும்பத்தின் மார்த்தா லேன் (Martha Lane) இல்லத்திற்கு வந்து, அந்த அதிர்ச்சி சம்பவத்தைக் கண்டறிந்தனர்.</p><p> அரவிந்த் எவ்வாறு அந்தப் படுகொலைகளைச் செய்தார் என்று அரசுத் தரப்பு சட்டத்தரணிகள் இன்னும் உறுதி செய்யவில்லை. சித்தார்த்துக்குத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டிருந்ததாகவும், சுதா வெங்கடேசனுக்குத் தலை, முகம் மற்றும் வயிற்றுப் பகுதிகளில் காயங்கள் ஏற்பட்டிருந்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர். </p><p>இந்த நிலையில், அவரை ஜாமீன் இன்றி சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது; செப்டம்பர் 11-அன்று மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவதற்கு முன்னதாக, அவருக்கு மனநலப் பரிசோதனை நடத்தப்படவுள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-14T19:53:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சோகத்தில் முடிந்த திருமண வரவேற்பு; மணப்பெண் வீட்டில் பெரும் துயரம் ; பறிபோன உயிர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/accident-while-returning-wedding-reception-1786713787"></link>
            <id>https://jvpnews.com/article/accident-while-returning-wedding-reception-1786713787</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;கம்பஹா மகலேகொட - நைவல வீதிக்கு அருகில் இடம்பெற்ற கோர விபத்தில் இருவர் உயிரிழந்ததுடன், 7 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்....</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;கம்பஹா மகலேகொட - நைவல வீதிக்கு அருகில் இடம்பெற்ற கோர விபத்தில் இருவர் உயிரிழந்ததுடன், 7 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>


திருமண வரவேற்பு நிகழ்ச்சியை முடித்துவிட்டு குடும்பத்தினருடன் வேனில் வீடு திரும்பிக் கொண்டிருந்த போதே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/26cda6a6-7965-483a-a3d9-5cfe9feb5f49/26-6a7f16bd09586.webp' /></p><h2>&nbsp;மணமகளின் சகோதரரும்,&nbsp; பாட்டியும் உயிரிழப்பு</h2><p>
</p><p>


விபத்தில் உயிரிழந்தவர்களில் வாகனத்தைச் செலுத்திச் சென்ற மணமகளின் சகோதரரும், அவரின் பாட்டியும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.</p><p>



விபத்து இடம்பெற்ற நேரத்தில் மணமகளின் பெற்றோர் உட்பட மொத்தம் ஒன்பது பேர் வாகனத்தில் பயணித்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p></p><p>


வாகன ஓட்டுநர் தூக்கக் கலக்கத்தில் வாகனம் ஓட்டியதே இந்த விபத்துக்குக் காரணமாக இருக்கலாம் என ஆரம்பக் கட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-14T19:44:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிளிநொச்சியில் பதுக்கி வைக்கப்பட்ட குண்டு மீட்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/bomb-recovered-in-kilinochchi-1786730605"></link>
            <id>https://jvpnews.com/article/bomb-recovered-in-kilinochchi-1786730605</id>
            <summary type="text">கிளிநொச்சி - தர்மபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரமந்தனாறு குளத்திற்கு அருகில் வெடிக்காத நிலையில் குண்டு ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிளிநொச்சி - தர்மபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரமந்தனாறு குளத்திற்கு அருகில் வெடிக்காத நிலையில் குண்டு ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
</p><p>
இந்த நடவடிக்கை இன்று(14.08.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><h2>
குண்டு செயலிழப்பு</h2><p>
சம்பவம் தொடர்பாக தருமபுர பொலிசாருக்கு வழங்கப்பட்ட
தகவலுக்கமைவாக கிளிநொச்சி நீதிமன்ற அனுமதியுடன் குறித்த பகுதியில் இருந்து குண்டு மீட்கப்பட்டு, செயலிழப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2cd04f9b-686b-4294-8e19-53e898c8af1f/26-6a7f5c1da80b4.webp' /></p><p>
</p><p>
இது தொடர்பான மேலதிக நடவடிக்கைகளை தர்மபுர பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.&nbsp; &nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-08-14T19:42:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹோர்முஸ் முற்றுகைக்கு மத்தியில் அமெரிக்க கடற்படைக்கு நெருக்கடி..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/us-faces-morale-crisis-amid-iran-war-hormuz-1786730589"></link>
            <id>https://canadamirror.com/article/us-faces-morale-crisis-amid-iran-war-hormuz-1786730589</id>
            <summary type="text">ஈரானுக்கு எதிரான போரில் நீண்டகாலமாக பயன்படுத்தப்பட்டு வரும் USS Abraham Lincoln விமானந்தாங்கிக் கப்பலில் அமெரிக்க வீரர்களின் மனநலம் மற்றும் அத்தியாவசி...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானுக்கு எதிரான போரில் நீண்டகாலமாக பயன்படுத்தப்பட்டு வரும் USS Abraham Lincoln விமானந்தாங்கிக் கப்பலில் அமெரிக்க வீரர்களின் மனநலம் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் பற்றாக்குறை தொடர்பாக கவலைகள் எழுந்துள்ளன.</p><p>

260 நாட்களுக்கும் மேலாக கடலில் இருக்கும் இந்தக் கப்பலில் சில வீரர்கள் தற்கொலைக்கு முயன்றதாகவும், மனஉறுதி குறைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><h2>ஹோர்முஸ் நீரிணை</h2><p> உணவு, சுகாதாரப் பொருட்கள் மற்றும் அஞ்சல் விநியோகத்திலும் பாதிப்பு ஏற்பட்டதாக கடற்படை ஒப்புக்கொண்டுள்ளது.
</p><p>
இதற்கிடையில், USS George Washington விமானந்தாங்கிக் கப்பல் மத்திய கிழக்கு நோக்கி அனுப்பப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ff2a1aaf-1c18-4ba5-975d-c39806e13f7e/26-6a7f5a4695d8b.webp' /></p><p>
</p><p>
எனினும், அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத், Lincoln கப்பல் தொடர்பான மோசமான நிலை குறித்த தகவல்கள் “முற்றிலும் தவறாக சித்தரிக்கப்பட்டவை” என மறுத்துள்ளார்.</p><p>

ஹோர்முஸ் நீரிணையில் அமெரிக்கா முற்றுகையை தொடரும் நிலையில், நீண்டகால போர் மற்றும் வீரர்களின் மனநிலை அமெரிக்காவுக்கு புதிய சவாலாக உருவாகியுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-14T19:41:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரான் மீதான முற்றுகை: 62 வணிகக் கப்பல்களை திருப்பி அனுப்பியது அமெரிக்கா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/us-blockade-turns-back-62-ships-in-arabian-sea-1786735710"></link>
            <id>https://ibctamil.com/article/us-blockade-turns-back-62-ships-in-arabian-sea-1786735710</id>
            <summary type="text">ஈரான் துறைமுகங்கள் மீதான கடற்படை முற்றுகை மீண்டும் தீவிரப்படுத்தப்பட்டதிலிருந்து, அரபிக்கடலில் பயணித்த 62 வணிகக் கப்பல்களைக் கடற்படைகள் தடுத்துத் திரு...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரான் துறைமுகங்கள் மீதான கடற்படை முற்றுகை மீண்டும் தீவிரப்படுத்தப்பட்டதிலிருந்து, அரபிக்கடலில் பயணித்த 62 வணிகக் கப்பல்களைக் கடற்படைகள் தடுத்துத் திருப்பி அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
அமெரிக்க மத்திய கட்டளைத் தலைமையகம் (CENTCOM) இதனை தெரிவித்துள்ளது.
</p><p>
இதனடிப்படையில் இன்று வரையிலான நிலவரப்படி முற்றுகை விதிகளை மீறாமல் பூரணமாகப் பின்பற்றுவதை உறுதிசெய்வதற்காக மூன்று கப்பல்கள் செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளதுடன் (Disabled), இரண்டு கப்பல்களில் நேரில் சென்று சோதனைகளும் (Boarded) நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p></p><h2>சர்வதேச சட்டங்கள்</h2><p>வாஷிங்டன் மற்றும் தெஹ்ரான் இடையேயான மோதல்கள் மீண்டும் வெடித்ததைத் தொடர்ந்து கடந்த ஜூலை 14 முதல் இந்த முற்றுகை நடவடிக்கை மீண்டும் நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டது.</p><p> </p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">A U.S. Sailor directs an MH-60R Sea Hawk helicopter during nighttime flight operations aboard guided-missile cruiser USS Princeton (CG 59) as the ship sails in the Arabian Sea and enforces the U.S. blockade against Iran. As of Aug. 14, CENTCOM forces have redirected 62 commercial… <a href="https://t.co/HDMlwcGzAq">pic.twitter.com/HDMlwcGzAq</a></p>&mdash; U.S. Central Command (@CENTCOM) <a href="https://x.com/CENTCOM/status/2088296512933564737?ref_src=twsrc%5Etfw">August 14, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>இருப்பினும், அமெரிக்காவின் இந்த முற்றுகை சட்டவிரோதமானது என்றும் சர்வதேச சட்டங்களை மீறும் செயல் என்றும் ஈரான் தொடர்ந்து கூறி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-14T19:37:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[திருகோணமலை GunSight முகாமில் 6 பெண்கள் கொலை! விசாரணையில் வெளியான தகவல்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/6-women-killed-at-the-gunsight-camp-in-trinco-1786733536"></link>
            <id>https://tamilwin.com/article/6-women-killed-at-the-gunsight-camp-in-trinco-1786733536</id>
            <summary type="text">திருகோணமலை பகுதியில் அமைந்திருந்த GunSight முகாமில் பலர் தடுத்து வைக்கப்பட்டு பெண்கள் உட்பட பலர் கொலை செய்யப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.இந்...</summary>
            <content type="html"><![CDATA[<p>திருகோணமலை பகுதியில் அமைந்திருந்த GunSight முகாமில் பலர் தடுத்து வைக்கப்பட்டு பெண்கள் உட்பட பலர் கொலை செய்யப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>இந்தநிலையிலே, குறித்த முகாமில் 6 பெண்கள் தடுத்து வைக்கப்பட்டு சித்திரவதைப்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என சில தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p>இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நடத்துமாறு குற்றப்புலனாய்வுப்பிரிவினருக்கு பொலிஸ்மா அதிபர் உத்தரவிட்டுள்ளார்.</p><p>அத்தோடு, இந்த முகாமில் 600 இற்கும் மேற்பட்டோர் கடத்தி கொலை செய்யப்பட்டு இருக்கலாம் எனவும் சந்தேகம் எழுந்துள்ளது.</p><p>இது தொடர்பான விசாரணைகள் திருகோணமலை நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் முன்னெடுக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.</p><p>இந்த சம்பவம் தொடர்பில் சில கடற்படை அதிகாரிகளிற்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படுகின்றது.</p><p>குறித்த விடயம் தொடர்பான விரிவான தகவல்களை நியூஸ் இன்சைட் நிகழ்ச்சியில் காணலாம்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/NyBr6WkHzr0" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-14T19:13:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[USS Abraham Lincoln கப்பல் 260 நாட்கள் கடலில் - வெளியான அதிர்ச்சி தகவல்..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/us-faces-morale-crisis-amid-iran-war-hormuz-1786728764"></link>
            <id>https://tamilwin.com/article/us-faces-morale-crisis-amid-iran-war-hormuz-1786728764</id>
            <summary type="text">அமெரிக்காவின் போர்க்கப்பலான USS Abraham Lincoln நீண்ட காலமாக கடலில் நிலைநிறுத்தப்பட்டுள்ள நிலையில், அதிலுள்ள வீரர்களின் மனநலம் மற்றும் அத்தியாவசியப் ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவின் போர்க்கப்பலான USS Abraham Lincoln நீண்ட காலமாக கடலில் நிலைநிறுத்தப்பட்டுள்ள நிலையில், அதிலுள்ள வீரர்களின் மனநலம் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் தொடர்பாக எழுந்துள்ள கவலைகளை அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் நிராகரித்துள்ளார்.
</p><p>
அவர், கப்பலில் நிலவும் மோசமான சூழ்நிலை குறித்த செய்திகள் “முற்றிலும் தவறாக சித்தரிக்கப்பட்டவை” எனத் தெரிவித்துள்ளார்.</p><h2>மத்திய கிழக்கு</h2><p>
</p><p>
அமெரிக்காவின் USS George Washington விமானந்தாங்கிக் கப்பல் மத்திய கிழக்கு நோக்கி திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. </p><p>

இது, USS Abraham Lincoln கப்பலில் நீண்டகாலப் பணியமர்த்தலால் வீரர்களின் மனநலம் மற்றும் விநியோகப் பிரச்சினைகள் அதிகரித்துள்ளதாக வெளியான தகவல்களுக்கு மத்தியில் இடம்பெற்றுள்ளது.

USS George Washington கடந்த வாரம் வியட்நாமின் டா நாங் துறைமுகத்திலிருந்து புறப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/67258ffb-817a-4853-bca8-9e534969983d/26-6a7f562edebf1.webp' /></p><p> </p><p>

அதனுடன் ஒரு க்ரூஸர் மற்றும் ஒரு டிஸ்ட்ராயர் கப்பலும் இணைந்துள்ளன. 

இந்தக் கப்பல்கள் சிங்கப்பூர் நீரிணையை கடந்து சென்றதாக அமெரிக்க கடற்படை தெரிவித்துள்ளது.</p><p>

அமெரிக்க கடற்படையின் தகவலின்படி, Washington தற்போது மலாக்கா நீரிணையில் இருந்ததாகவும், இந்தியப் பெருங்கடலை நோக்கி பயணித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>

USS Abraham Lincoln-க்கு மாற்றாக George Washington மத்திய கிழக்கில் நிலைநிறுத்தப்படலாம் என முன்னதாக Wall Street Journal செய்தி வெளியிட்டிருந்தது.</p><h2>போர்ச் சூழ்நிலை</h2><p>
</p><p>

பொதுவாக அமெரிக்க கடற்படை வீரர்களின் பணியமர்த்தல் காலம் 6 முதல் 9 மாதங்கள் வரை இருக்கும். ஆனால் போர் சூழ்நிலைகளில் அது நீட்டிக்கப்படலாம்.
</p><p>
USS Abraham Lincoln இந்த வாரத்துடன் 260 நாட்களுக்கும் மேலாக கடலில் உள்ளது.

 இது நவீன காலத்தில் ஒரு விமானந்தாங்கிக் கப்பல் மேற்கொண்டுள்ள மிக நீண்ட பணியமர்த்தல்களில் ஒன்றாகும்.</p><p>

இந்தக் கப்பலில் பணியாற்றும் வீரர்களிடையே மனநலப் பிரச்சினைகள் அதிகரித்துள்ளதாகவும், சிலர் கப்பலில் இருந்து குதித்து தவறான முடிவெடுக்க முயன்றதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6c289fdc-7bfe-4b92-8fc9-56650105dfdc/26-6a7f56300e8d6.webp' /></p><p>
</p><p>Lincoln கடந்த 2025 நவம்பர் 21ஆம் திகதி சான் டியாகோவிலிருந்து புறப்பட்டது. 

2026 ஜனவரியில் மத்திய கிழக்கை சென்றடைந்தது. பின்னர் பெப்ரவரி 28ஆம் திகதி ஈரானுக்கு எதிரான போர் தொடங்குவதற்கு முன்னதாகவே அங்கு நிலைநிறுத்தப்பட்டது.
</p><p>
போர்ச் சூழ்நிலை காரணமாக மத்திய கிழக்கில் உள்ள பாரம்பரிய விநியோக மையங்கள் பாதிக்கப்பட்டதால், கப்பலில் உணவு, சுகாதாரப் பொருட்கள் மற்றும் அஞ்சல் உள்ளிட்டவற்றின் விநியோகத்தில் பற்றாக்குறை ஏற்பட்டதாக அமெரிக்க கடற்படை ஒப்புக்கொண்டுள்ளது.</p><h2>பென்டகனிடம் பொறுப்புக்கூறல்</h2><p>
</p><p>
அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத், USS Lincoln கப்பலில் நிலவும் மோசமான சூழ்நிலை குறித்த செய்திகளை நிராகரித்துள்ளார்.</p><p>

நீண்டகாலப் பணியமர்த்தலிலும், குறைவான துறைமுகப் பயணங்களுடனும் கடலில் பணியாற்றும் வீரர்களின் அர்ப்பணிப்பை அவர் பாராட்டியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4590c69a-de95-4a5e-b70c-eb2b9459866e/26-6a7f5630b5712.webp' /></p><p>
</p><p>
ஆனால் Navy Times மற்றும் Stars and Stripes உள்ளிட்ட இராணுவ செய்தி நிறுவனங்கள், கப்பலில் தற்கொலை முயற்சிகள் மற்றும் வீரர்களின் மனஉறுதி குறைந்து வருவது குறித்து செய்தி வெளியிட்டுள்ளன.


இந்த விவகாரம் தொடர்பாக பல ஜனநாயகக் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் பென்டகனிடம் பொறுப்புக்கூறலைக் கோரியுள்ளனர்.
</p><p>
கனெக்டிகட் மாநில செனட்டர் ரிச்சர்ட் புளூமெந்தால், USS Lincoln-ன் நீண்டகாலப் பணியமர்த்தல் குறித்து கடற்படை தலைமையிடம் பல கேள்விகளுக்கு பதில் கோரியுள்ளார்.
</p><p>
அரிசோனா செனட்டரும் முன்னாள் மரைன் வீரருமான ரூபன் கலேகோ, கப்பலில் வீரர்களின் நிலைமையை நேரில் ஆய்வு செய்வதற்காக இரு கட்சிகளையும் சேர்ந்த பிரதிநிதிகள் குழுவை அழைத்துச் செல்ல திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.</p><h2>&nbsp;டொனால்ட் ட்ரம்ப்</h2><p>
</p><p>

இதற்கிடையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஹோர்முஸ் நீரிணை மீது அமெரிக்கா கட்டுப்பாட்டைக் கொண்டுள்ளதாகவும், அதை தொடர்ந்து வைத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9167c0b9-f39c-4fb8-811a-1450c61463bc/26-6a7f563168d27.webp' /></p><p>

ஈரானுடனான மோதல் சமீப வாரங்களில் ஓரளவு தணிந்திருந்தாலும், முக்கியத்துவம் வாய்ந்த ஹோர்முஸ் நீரிணையில் ஈரானிய துறைமுகங்களுக்கு எதிரான முற்றுகையை அமெரிக்க கடற்படை மீண்டும் நடைமுறைப்படுத்தியுள்ளது.
</p><p>
இந்தப் போரை எவ்வாறு முடிவுக்குக் கொண்டு வருவது என்பது குறித்து ட்ரம்ப் நிர்வாகம் தெளிவான திட்டத்தை வெளியிடவில்லை. 

அதேவேளை, பாதுகாப்புச் செயலாளர் ஹெக்செத், அமெரிக்கா இந்த முற்றுகையை “காலவரையின்றி” தொடர முடியும் எனக் கூறியுள்ளார்.&nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-08-14T18:50:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[பலஸ்தீன வீடுகளை ஆக்கிரமித்த இஸ்ரேலிய குடியேற்றவாசிகள்: பிரான்ஸ் கடும் கண்டனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/france-condemns-israeli-settler-attacks-1786727836"></link>
            <id>https://ibctamil.com/article/france-condemns-israeli-settler-attacks-1786727836</id>
            <summary type="text">குஸ்ரா (Qusra) கிராமத்தில் பலஸ்தீனியர்களின் வீடுகளை இஸ்ரேலிய குடியேற்றவாசிகள் ஆக்கிரமித்துள்ள சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸ்...</summary>
            <content type="html"><![CDATA[<p>குஸ்ரா (Qusra) கிராமத்தில் பலஸ்தீனியர்களின் வீடுகளை இஸ்ரேலிய குடியேற்றவாசிகள் ஆக்கிரமித்துள்ள சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

பிரான்ஸ் அரசு இவ்வாறு கண்டனம் தெரிவித்துள்ளது.</p><p>

இத்தகைய செயல்களில் ஈடுபட்ட குற்றவாளிகளைக் கைது செய்து நீதிமன்றத்தின் முன் நிறுத்துமாறு இஸ்ரேலிய அதிகாரிகளுக்கு பிரான்ஸ் அழைப்பு விடுத்துள்ளது.</p><p></p><h2>குடியேற்றவாசிகளின் தாக்குதல்</h2><p> 

மேலும், இஸ்ரேலின் குடியேற்றக் கொள்கையானது இரு-நாட்டுத் தீர்வுக்கு (Two-state solution) பெரும் அச்சுறுத்தலாக விளங்குவதாகவும் பிரான்ஸ் சுட்டிக்காட்டியுள்ளது.</p><p>
</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr"><a href="https://x.com/hashtag/Israel?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#Israel</a>/ <a href="https://x.com/hashtag/Palestine?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#Palestine</a> | Situation in the West Bank <a href="https://t.co/DVjssdJ4vw">pic.twitter.com/DVjssdJ4vw</a></p>&mdash; France Diplomacy 🇫🇷🇪🇺 (@francediplo_EN) <a href="https://x.com/francediplo_EN/status/2088277900462084562?ref_src=twsrc%5Etfw">August 14, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>மறுபுறம், ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையின் குஸ்ரா பகுதியில் தீவிரமடைந்துள்ள குடியேற்றவாசிகளின் தாக்குதல்களைப் பகிரங்கமாகக் கண்டிக்குமாறு இஸ்ரேலிய பிரதமர் பென்ஜமின் நெதன்யாகுவிற்கு அமெரிக்கா அழுத்தம் கொடுத்து வருகிறது.
</p><p>
இஸ்ரேலின் தீவிர ஆதரவாளரான அமெரிக்கத் தூதர் மைக் ஹக்கபி (Mike Huckabee) கூட, தாக்குதல்களில் ஈடுபட்ட அந்தக் குடியேற்றவாசிகளை இஸ்ரேலிய பயங்கரவாதிகள் என வர்ணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-14T18:40:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை முஸ்லிம் பெண் சுகாதாரப் பணி உதவியாளர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/action-against-muslim-female-health-worker-1786730359"></link>
            <id>https://tamilwin.com/article/action-against-muslim-female-health-worker-1786730359</id>
            <summary type="text">கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலைக்கு புதிதாக நியமனம் பெற்றுள்ள 09 முஸ்லிம் பெண் சுகாதாரப் பணி உதவியாளர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வைத்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலைக்கு புதிதாக நியமனம் பெற்றுள்ள 09 முஸ்லிம் பெண் சுகாதாரப் பணி உதவியாளர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வைத்தியசாலை நிர்வாகம் தற்போது தயாராகியுள்ளது.</p><p> 

இது தொடர்பில் அறிவிக்கும் கடிதம், இன்று (14.08.2026) குறித்த முஸ்லிம் பெண் சுகாதாரப் பணி உதவியாளர்களுக்கு தனித் தனியாகப் பெயரிடப்பட்டு கையளிக்கப்பட்டுள்ளது. </p><p>

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் பணிப்பாளர் எனக் குறிப்பிட்டு கையொழுத்திட்டுள்ள இந்தக் கடிதத்தில் பிரதிப் பணிப்பாளரின் இறப்பர் முத்திரையே பொறிக்கப்பட்டுள்ளது.</p><h2>அறிவுறுத்தல்</h2><p> </p><p>சுகாதார அமைச்சின் செயலாளர், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மற்றும் சுகாதார அமைச்சின் நிர்வாகப் பணிப்பாளர் ஆகியோருக்கு இந்தக் கடிதத்தின் பிரதிகள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/faeb2ff6-5ecd-4f55-a0a1-716994fba032/26-6a7f5d7a40d5e.webp' /></p><p> </p><p>

'சுகாதார பணி உதவியாளர் சீருடை தொடர்பானது' எனத் தலைப்பிடப்பட்டுள்ள இந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,&nbsp; “கடந்த ஓகஸ்ட் 6ஆம் திகதி சுகாதார பணி உதவியாளராக எமது வைத்தியசாலைக்கு சுகாதார அமைச்சினால் நியமிக்கப்பட்டிருந்தீர்கள். </p><p>

நீங்கள் கடமை பொறுப்பேற்ற அன்றைய தினத்திலேயே சுகாதார அமைச்சு மற்றும் பொது நிர்வாக அமைச்சு ஆகியவற்றினால் வெளியிடப்பட்ட சுற்றுநிரூபங்களுக்கு அமைவாக சீருடை அணியுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருந்தது.</p><h2>ஒழுக்காற்று நடவடிக்கை</h2><p> </p><p>

எனினும், சுற்றுநிரூபத்தினை பின்பற்றாமல் கடமைக்கு சமூகமளிப்பது தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4e5cc10d-d609-4591-8558-2c3df6daaad8/26-6a7f5d7ae7888.webp' /></p><p> 

நீங்கள் அனைவரும் தகுதிகாண் காலப் பகுதிக்குள் உட்பட்ட ஊழியர்கள் என்பது நினைவூட்டப்படுகின்றது. </p><p>

உடன் செயற்படும் வண்ணம் சுகாதார பணி உதவியாளர்களுக்குரிய சீருடை தொடர்பான சுற்றறிக்கையின் வழிகாட்டல்களை பின்பற்றி கடமைக்கு சமூகளிக்குமாறு பணிக்கப்படுகின்றீர்கள். 

தவறும் பட்டசத்தில் ஒழுக்காற்று நடவடிக்கைக்கு உட்படுவீர்கள்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-14T18:38:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானிய மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/uk-issues-severe-warning-over-high-wildfire-risk-1786731969"></link>
            <id>https://tamilwin.com/article/uk-issues-severe-warning-over-high-wildfire-risk-1786731969</id>
            <summary type="text">பிரித்தானியா முழுவதும் காட்டுத்தீ ஏற்படும் அபாயம் மிகவும் அதிகமாக இருப்பதாக அந்நாட்டு அரசு அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது.

பொதுமக்கள் தீப்பற்றக்கூடி...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரித்தானியா முழுவதும் காட்டுத்தீ ஏற்படும் அபாயம் மிகவும் அதிகமாக இருப்பதாக அந்நாட்டு அரசு அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது.
</p><p>
பொதுமக்கள் தீப்பற்றக்கூடிய செயல்களில் ஈடுபட வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><h2>காட்டுத்தீ</h2><p>
</p><p>
 டிஸ்போசபிள் பார்பிக்யூ, தீ மூட்டுதல், தோட்டக் கழிவுகளை எரித்தல் மற்றும் பட்டாசு வெடித்தல் உள்ளிட்டவற்றை தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c589e4c9-cae1-48f4-b84b-680a083cb6f2/26-6a7f5f6277908.webp' /></p><p>
</p><p>
சிறிய தீப்பொறி கூட வேகமாகப் பரவி பெரிய காட்டுத்தீயாக மாறி உயிர்கள், வீடுகள், வர்த்தக நிறுவனங்கள் மற்றும் அவசரகால பணியாளர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என அரசு எச்சரித்துள்ளது.
</p><p>
தீ ஏற்பட்டதற்கான அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக 999 என்ற அவசர இலக்கத்திற்கு அழைக்குமாறும் பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-08-14T18:33:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானியாவில் உள்ள தங்களின் டன் கணக்கான தங்கத்தைத் திருப்பிக் கேட்கும் நாடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/venezuela-demands-return-of-gold-1786730859"></link>
            <id>https://news.lankasri.com/article/venezuela-demands-return-of-gold-1786730859</id>
            <summary type="text">Venezuela demands tonnes of gold from Bank of England: இங்கிலாந்து வங்கியின் பாதுகாப்புப் பெட்டகங்களில் இருந்து 31 டன் தங்கத்தைத் திருப்பித் தருமாறு வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Venezuela demands tonnes of gold from Bank of England: இங்கிலாந்து வங்கியின் பாதுகாப்புப் பெட்டகங்களில் இருந்து 31 டன் தங்கத்தைத் திருப்பித் தருமாறு வெனிசுலா கோரிக்கை விடுத்துள்ளது.
</p><p>பேரழிவுகரமான நிலநடுக்கங்களில் இருந்து மீள்வதற்காக, இங்கிலாந்து வங்கியில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள 4 பில்லியன் டொலர் மதிப்புள்ள தங்கத்தை வெனிசுலா கோருகிறது.</p><h2>நீண்ட காலமாக மறுப்பு</h2><p>
</p><p>முன்னாள் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவின் தேர்தலின் சட்டப்பூர்வத் தன்மையை பிரித்தானியா அங்கீகரிக்காததால், தங்களது நிலத்தடிப் பாதுகாப்புப் பெட்டகங்களில் பூட்டி வைத்துள்ள 31 மெட்ரிக் டன் வெனிசுலா தங்கத்தை விடுவிக்க நீண்ட காலமாக மறுத்து வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4104ebbd-d012-41aa-848a-9320643e3de0/26-6a7f596d9e8ed.webp' /></p><p> </p><p>ஜனவரியில் அமெரிக்காவால் நிக்கோலஸ் மதுரோ சிறைபிடிக்கப்பட்ட போதிலும், பல வருடங்களாக வங்கியும் பிரித்தானிய அரசாங்கமும் அந்தத் தங்கக் கட்டிகளைத் தக்கவைக்கப் போராடி வருகின்றன. </p><p>பல திருப்பங்கள் மற்றும் மாற்றங்கள் ஏற்பட்டதன் பிறகும், இந்த வழக்கு தீர்க்கப்படாமல் உள்ளது. ஜூன் மாத இறுதியில் ஏற்பட்ட இரட்டை நிலநடுக்கங்களைத் தொடர்ந்து, வெனிசுலா தனது மீட்புப் பணிகளுக்காக அந்தப் பணத்தைப் பயன்படுத்த முனைந்து வருகிறது. </p><p>மேலும், வீடுகளைப் புனரமைத்தல், சுகாதார நிலைமைகளை மேம்படுத்துதல், மின்சாரம் கிடைப்பதை உறுதி செய்தல் மற்றும் இடிபாடுகளை அகற்றுதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்ட திட்டங்களில் கவனம் செலுத்த அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளதாக இடைக்கால ஜனாதிபதி டெல்சி ரோட்ரிக்ஸ் தெரிவித்தார்.</p><p></p><p> </p><p>மட்டுமின்றி, இந்த நோக்கத்திற்காக, இங்கிலாந்தில் உள்ள வெனிசுலாவின் தங்கத்தை மீட்பதை ஊக்குவிப்பதில் முயற்சிகளை முன்னெடுப்போம் என்றும் அவர் கூறியுள்ளார். </p><p>இங்கிலாந்து வங்கியிடம் 
இருந்து தங்கத்தை விடுவிக்குமாறு மன்னர் சார்லஸிடம் அவர் மன்றாடிய ஒரு மாதத்திற்குப் பிறகு மீண்டும் இந்த கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. </p><p>அந்தத் தங்கம் எங்கள் மக்களுக்குச் சொந்தமானது. இந்த இரட்டை நிலநடுக்கத்தின் பயங்கரமான, துயரமான விளைவுகளைச் சரிசெய்ய அது பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி ரோட்ரிக்ஸ் அரசு தொலைக்காட்சியில் கூறியிருந்தார். </p><p>பாதிக்கப்பட்ட மக்களின் சமூக நலனுக்காக அந்தச் சொத்துக்களை நேரடியாகப் பயன்படுத்துவதற்கு, அவற்றை மீட்க வேண்டியதன் அவசரத் தேவையை அவர் அப்போது வெளிப்படுத்தினார்.</p><h2>பணவீக்கம் 575.9 சதவீதம்</h2><p> </p><p>கடுமையான அரசாங்க நிர்வாகச் சீர்கேடு, ஊழல் மற்றும் அமெரிக்கத் தடைகள் ஆகியவற்றின் விளைவாக, வெனிசுலா ஒரு தசாப்தத்திற்கும் மேலாகப் பொருளாதார வீழ்ச்சியில் மூழ்கியுள்ளது. </p><p>முந்தைய மாதத்தில் 13.8 சதவீதமாக இருந்த பணவீக்கம், ஜூலை மாதத்தில் 19.9 சதவீதமாக உயர்ந்ததற்கு நிலநடுக்கங்களும் ஒரு காரணம் என்று அதன் மத்திய வங்கி தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/93578d2e-d45b-4810-9f5f-ef28591d04c8/26-6a7f596e501bb.webp' /></p><p> </p><p>வெனிசுல மத்திய வங்கியின் புள்ளிவிவரங்களை அடிப்படையாகக் கொண்ட ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் கணக்கீடுகளின்படி, ஜூலை மாத முடிவுகளுடன், ஆண்டுக்கு ஆண்டு பணவீக்கம் 575.9 சதவீதமாக உள்ளது. </p><p>ஜூன் 24 ஆம் திகதி மாலையில் ஏற்பட்ட அடுத்தடுத்த நில நடுக்கங்களில் சிக்கி 6,000 க்கும் மேற்பட்டோர் மரணமடைந்தனர், 16,740 பேர் காயமடைந்தனர், மேலும் 17,907 பேர் தங்கள் வீடுகளை இழந்தனர். </p><p>நிலநடுக்கங்களால் 68 லட்சம் வரையிலான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்; இவர்களில் 680,000 குழந்தைகள் உட்பட 18 லட்சம் பேருக்கு அவசர மனிதாபிமான உதவி தேவைப்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-14T18:05:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீதிக்கான ஓலம்: சர்வதேச விசாரணையை வலியுறுத்தி ஒன்றிணையும் தமிழர் தரப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/cry-for-justice-tamil-groups-unite-to-demand-1786728740"></link>
            <id>https://tamilwin.com/article/cry-for-justice-tamil-groups-unite-to-demand-1786728740</id>
            <summary type="text">கடந்த காலங்களில் இடம்பெற்ற படுகொலைகள், காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள்
மற்றும் ஏனைய மனித உரிமை மீறல்களுக்கு நீதியும் பொறுப்புக்கூறலும் கோரி, சர்வதேச
வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கடந்த காலங்களில் இடம்பெற்ற படுகொலைகள், காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள்
மற்றும் ஏனைய மனித உரிமை மீறல்களுக்கு நீதியும் பொறுப்புக்கூறலும் கோரி, சர்வதேச
விசாரணையை வலியுறுத்தி முன்னெடுக்கப்படும் “நீதிக்கான ஓலம்” போராட்டம் இன்று(14.8.2026) யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் ஆரம்பமானது.&nbsp;</p><p>இதன்போது செம்மணி உள்ளிட்ட தமிழர் தாயகப் பகுதிகளில் இடம்பெற்றதாகக்
கூறப்படும் பல்வேறு படுகொலைச் சம்பவங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களை
நினைவுகூரும் வகையில் காட்சிப்படுத்தல்கள் இடம்பெற்றன. </p><p>கடந்த காலத்தில்
உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்ததுடன், அவர்களுக்கான நீதி இதுவரை முழுமையாக
கிடைக்கவில்லை என்ற வலியையும் போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள்
வெளிப்படுத்தினர்.</p><h2>முக்கிய கோரிக்கை</h2><p>
</p><p>
இதேவேளை, இந்த நீதிக்கான போராட்டத்தின் அடுத்த முக்கிய கட்டமாக எதிர்வரும்
17ஆம் திகதி யாழ்ப்பாணம் பொது நூலகத்திலிருந்து பேரணி ஆரம்பிக்கப்பட்டு,
ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகம் வரை சென்று மகஜர் கையளிக்கப்படவுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/15268bcd-0340-4cf5-95c0-c065ea7e12c5/26-6a7f53a54194d.webp' /></p><p>தமிழர் தாயகத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் படுகொலைகள், காணாமல்
ஆக்கப்பட்டோர் தொடர்பான விவகாரம் மற்றும் நீண்டகாலமாக தீர்வு காணப்படாத மனித
உரிமை மீறல்கள் தொடர்பில் உள்நாட்டு பொறிமுறைகளுக்கு அப்பால், சுயாதீனமான
சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதே போராட்டத்தின் முக்கிய
கோரிக்கையாக முன்வைக்கப்படுகிறது.&nbsp;</p><p>நீதிக்கான ஓலம்” என்பது கடந்த காலத்தை மட்டும் நினைவுகூரும் நிகழ்வல்ல;
உண்மையை வெளிக்கொண்டு வந்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்கச்
செய்வதற்கான தொடர்ச்சியான குரல் என ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.</p><p></p><h2>அழைப்பு&nbsp;</h2><p>
எனவே, காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் குடும்பங்கள் மற்றும் படுகொலைகளில்
பாதிக்கப்பட்ட குடும்பங்களுடன் தோளோடு தோள் நின்று, சர்வதேச விசாரணை, உண்மை,
நீதி மற்றும் பொறுப்புக்கூறலை வலியுறுத்தும் இந்தப் பயணத்தில் அனைத்து
தரப்பினரும் இணைந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b5432024-9c15-4cc8-82b3-558023d7e51b/26-6a7f53a5e8c87.webp' /></p><p>செம்மணியில் எழுந்த நீதிக்கான குரல், எதிர்வரும் 17ஆம் திகதி யாழ்ப்பாணம்
பொது நூலகத்திலிருந்து ஐ.நா. அலுவலகம் வரை செல்லும் பேரணியில் மேலும்
வலுப்பெறவுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-14T17:44:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாரசீக வளைகுடாவில் பெரும் எண்ணெய்க் கசிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/major-oil-spill-in-the-persian-gulf-1786727089"></link>
            <id>https://jvpnews.com/article/major-oil-spill-in-the-persian-gulf-1786727089</id>
            <summary type="text">பாரசீக வளைகுடா கடற்பகுதியில் ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையே நீடித்து
வரும் மோதல்கள் காரணமாகக் கப்பல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களால் கடலில்
...</summary>
            <content type="html"><![CDATA[<p>பாரசீக வளைகுடா கடற்பகுதியில் ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையே நீடித்து
வரும் மோதல்கள் காரணமாகக் கப்பல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களால் கடலில்
பெரும் எண்ணெய்க் கசிவு ஏற்பட்டுள்ளது.</p><p>

ஈரானின் கெஷ்ம் மற்றும் சிரி தீவுகளுக்கு அருகே செயற்கைக்கோள் படங்களின் மூலம்
இரு பெரிய எண்ணெய் படலங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
</p><p>
லைபீரியக் கொடியுடன் சென்ற சரக்குக் கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டதே
கெஷ்ம் தீவு அருகே ஏற்பட்ட எண்ணெய்க் கசிவுக்கு முக்கியக் காரணம் எனக்
கூறப்படுகிறது.</p><h2>மீட்புப் பணி</h2><p>

மற்றொருபுறம் ஓமன் கடற்பகுதியில் ரஷ்ய கச்சா எண்ணெயைச் சுமந்து சென்ற கப்பல்
தரைதட்டி சுமார் 2000 சதுர கிலோமீற்றர் பரப்பளவிற்கு எண்ணெய் பரவியுள்ளதால்
அரிய வகை கடல்வாழ் உயிரினங்கள் பெரும் ஆபத்தைச் சந்தித்துள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8f6920ce-0cce-4bb7-867a-842b6ba8f5cb/26-6a7f4ab4272c6.webp' /></p><p>
</p><p>
தற்போதைய போர்ப் பதற்றம் காரணமாக மீட்புப் பணிகளை மேற்கொள்வதில் பெரும்
சிக்கல் நீடித்து வருகிறது.</p>]]></content>
            <updated>2026-08-14T17:26:05+00:00</updated>
        </entry>
    </feed>
