<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-08-21T06:34:00+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தியாவில் சிறுவர்கள் சமூக ஊடக பயன்பாட்டிற்கு தடை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/ban-on-social-media-use-for-children-in-india-1787294004"></link>
            <id>https://jvpnews.com/article/ban-on-social-media-use-for-children-in-india-1787294004</id>
            <summary type="text">&amp;nbsp; இந்தியா முழுவதும், 13 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதை கட்டுப்படுத்துவது தொடர்பில், மத்திய அரசுக்கு டெல்லி மேல் நீதிமன்றம...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; இந்தியா முழுவதும், 13 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதை கட்டுப்படுத்துவது தொடர்பில், மத்திய அரசுக்கு டெல்லி மேல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக இந்திய ஊடகங்க்கள் தெரிவித்துள்ளன. </p><p> 

13 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதை கட்டுப்படுத்துவது மற்றும் இரவு நேர இணைய பயன்பாட்டிற்கு தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை பரிசீலித்த நீதிமன்றம் மத்திய அரசு உரிய முடிவு எடுக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f514da99-026f-45d8-a8bd-36e6e69707d6/26-6a87f13cd7d7b.webp' /></p><h2>சமூக ஊடகங்களில் சமூக சீர்கேடான உள்ளடக்கங்கள்</h2><p>

சமூக ஊடகங்களில் சமூக சீர்கேடான உள்ளடக்கங்கள் எந்தவித தணிக்கையும் இல்லாமல் வெளிப்படையாக உலா வருகின்றன.

இதை பார்க்கும் சிறுவர்கள் மனதளவில் பாதிக்கப்படுகின்றனர். </p><p>ஒரு சிலர் வழி தவறி செல்லவும் வாய்ப்பு ஏற்படுகிறது.

எனவே, 13 வயதுகுட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும்.
</p><p>
அதோடு இரவு நேரங்களில் சிறுவர்கள் இணையத்தை பயன்படுத்த முற்றிலும் தடை விதிக்க வேண்டும்.

சமூக ஊடகங்களை பயன்படுத்த கட்டாய வயது சரிபார்ப்பு முறைகளை அறிமுகம் செய்ய வேண்டும்.</p><p>

டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்பு சட்டத்தை கடுமையாக அமுல் செய்யவேண்டும் என்று கோரி குறித்த பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த டில்லி மேல் நீதிமன்றம், சிறுவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த கட்டுப்பாடு மற்றும் தடை விதிப்பது மத்திய அரசின் கொள்கை சார்ந்தது என்று குறிப்பிட்டுள்ளது.</p><p>

இதில் நீதிமன்றம் தலையிட்டு உத்தரவிட முடியாது. எனினும், மனுதாரர்கள் சுட்டிக்காட்டிய தீவிரமான சிக்கல்களை கருத்தில் கொண்டு மத்திய அரசு இந்த விவகாரத்தில் உரிய முடிவு எடுக்க வேண்டும் என்று டில்லி மேல்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p>]]></content>
            <updated>2026-08-21T06:30:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜேர்மனியில் மாறிய வானிலை... உயிர் பலி வாங்கிய மழை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/2-dies-in-powerful-storms-in-germany-1787293733"></link>
            <id>https://news.lankasri.com/article/2-dies-in-powerful-storms-in-germany-1787293733</id>
            <summary type="text">Powerful storms in Germany kills two: ஜேர்மனியில் அடித்த புயலில் இருவர் பலியாகியுள்ளார்கள்.


நேற்று வரை வெப்பத்தால் தவித்த சில நாடுகளில் மழை கொட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>Powerful storms in Germany kills two: ஜேர்மனியில் அடித்த புயலில் இருவர் பலியாகியுள்ளார்கள்.
</p><p>

நேற்று வரை வெப்பத்தால் தவித்த சில நாடுகளில் மழை கொட்டித் தீர்க்கத் துவங்கியுள்ளது.
</p><p>
பிரித்தானியாவில் பல இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்தது. ஜேர்மனியிலும் இரண்டு நாட்களாக புயலடித்துவரும் நிலையில், இரண்டு வெவ்வேறு சம்பவங்களில் இரண்டு பேர் பலியாகியுள்ளார்கள்.</p><h3>ஜேர்மனியில் மாறிய வானிலை</h3><p>

மேற்கு ஜேர்மனியிலுள்ள Rhineland-Palatinate மாகாணத்தில், இரண்டு பெண்கள் வாக்கிங் சென்றுகொண்டிருக்கும்போது திடீரென புயலடிக்கத் துவங்க, அவர்கள் மழைக்காக ஓரிடத்தில் ஒதுங்க, அப்போது மரம் ஒன்று சாய, அந்தப் பெண்களில் ஒருவர் அங்கேயே உயிரிழந்துவிட்டார். மற்றொரு பெண் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
</p><p>
மேலும், புயலால் பல இடங்களில் பல வீடுகள் சேதமடைந்துள்ளன. பல இடங்களில் மரங்கள் சாய்ந்துள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ba696b2d-7925-4565-903c-b91989ae8ea2/26-6a87f026bd732.webp' /></p><p>பவேரியாவில் விழா ஒன்றிற்காக சுமார் 3,500 பேர் மைதானம் ஒன்றில் கூடியிருந்த நிலையில், புயல் காரணமாக அவர்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ad173189-c763-4c94-b6d7-3cdafbae7c76/26-6a87f02824ffc.webp' /></p><p>Thuringia மாகாணத்தில், ஒரு தந்தை தன் குழந்தையை பள்ளிக்கு அழைத்துச் சென்றுகொண்டிருக்கும்போது மரம் ஒன்று உடைந்து விழ, அந்த தந்தை உயிரிழந்துவிட்டார், குழந்தை தப்பிவிட்டது.&nbsp;</p><p></p><p>
ஆக, வெப்பத்தால் மக்கள் தவித்த நிலை மழையால் மாறினாலும், பல இடங்களில் கட்டிடங்களுக்கும் சில இடங்களில் மக்கள் உயிருக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது!</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-21T06:29:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[பங்களாதேஸின் புதிய ஜனாதிபதியானார் ஆலம்கீர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/alamgir-becomes-new-president-of-bangladesh-1787293309"></link>
            <id>https://ibctamil.com/article/alamgir-becomes-new-president-of-bangladesh-1787293309</id>
            <summary type="text">பங்களாதேஸின் புதிய&amp;nbsp;ஜனாதிபதியாக&amp;nbsp;மிர்சா ஃபக்ரூல் இஸ்லாம் ஆலம்கீர் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.ஆளும் கட்சியின் மூத்த அரசியல்வாதியான மிர்சா ஃபக்ரூல...</summary>
            <content type="html"><![CDATA[<p>பங்களாதேஸின் புதிய&nbsp;ஜனாதிபதியாக&nbsp;மிர்சா ஃபக்ரூல் இஸ்லாம் ஆலம்கீர் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.</p><p>ஆளும் கட்சியின் மூத்த அரசியல்வாதியான மிர்சா ஃபக்ரூல் இஸ்லாம் ஆலம்கீர் அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களால் 23ஆவது ஜனாதிபதியாக தெரிவானதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p>உடல்நலக் காரணங்களால் 76 வயதான தற்போதைய ஜனாதிபதி முகமது ஷஹாபுதீன் பதவி விலகியதை தொடர்ந்து பங்களாதேஸின் ஜனாதிபதி பதவி வெற்றிடமானது.</p><p></p><h2>பெரும்பான்மை வாக்குகள்</h2><p> </p><p>இதற்கமைய புதிய ஜனாதிபதி அந்நாட்டு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை வாக்குகளால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/216a3b9a-20a7-4e34-8dce-06c30eed20f4/26-6a87f01061571.webp' /></p><p>2024-ல் இளைஞர்களின் போராட்டங்களால் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் அரசாங்கம் கவிழ்ந்ததைத் தொடர்ந்து, இந்த ஆண்டு பெப்ரவரி 12 அன்று நடைபெற்ற பொதுத் தேர்தலில் பங்களாதேஷ் தேசியவாதக் கட்சி நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சிக்கு வந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-21T06:28:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரிட்டனில் கடும் வெப்ப அலைக்கு பின்னர் கொட்டும் கனமழை !]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/heavy-rain-follows-severe-heatwave-in-britain-1787293577"></link>
            <id>https://canadamirror.com/article/heavy-rain-follows-severe-heatwave-in-britain-1787293577</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;பிரிட்டனில் (UK) பல வாரங்களாக நீடித்து வந்த கொளுத்தும் வெப்ப அலைக்கு பிறகு, தற்போது திடீரெனப் பலத்த இடி, மின்னலுடன் கூடிய கனமழை கொட்டித் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;பிரிட்டனில் (UK) பல வாரங்களாக நீடித்து வந்த கொளுத்தும் வெப்ப அலைக்கு பிறகு, தற்போது திடீரெனப் பலத்த இடி, மின்னலுடன் கூடிய கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது.
</p><p>
 இந்த எதிர்பாராதக் கனமழை காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகள் திடீர் வெள்ளப்பெருக்கால் (Flash Floods) கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6efbfebb-6d00-455c-b907-c8b99ae52cdf/26-6a87ef8b50a0d.webp' /></p><h2>தொடர்ச்சியான வெப்ப அலை</h2><p>

 சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளதுடன், போக்குவரத்துச் சேவைகளும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன. </p><p>

தொடர்ச்சியான வெப்ப அலை காரணமாகப் பிரிட்டனின் நிலப்பரப்பு மிகவும் வறண்டு கடினமாக மாறியுள்ளது. 

இதனால் பெய்யும் கனமழையை நிலம் உடனடியாக உறிஞ்ச முடியாமல், நீரானது நேரடியாகச் சாலைகள் மற்றும் தாழ்வானப் பகுதிகளில் தேங்கி திடீர் வெள்ளப்பெருக்கை உருவாக்கி வருகிறது என பிரிட்டன் வானிலை மையம் (Met Office) எச்சரித்துள்ளது.</p><p>

 அதேவேளையில், இந்தத் திடீர் மழை காட்டுத் தீயைக் கட்டுப்படுத்தச் சற்றே உதவினாலும், நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவதற்குப் போதுமானதாக இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இதனிடையே, மழை பெய்த போதிலும் பிரிட்டனில் நிலவும் கடுமையானக் குடிநீர் தட்டுப்பாட்டைக் கருத்தில் கொண்டு, குழாய் மூலம் நீர் பாய்ச்சும் ‘ஹோஸ்பைப் தடை’ (Hosepipe Ban) தொடர்ந்து அமலில் இருக்கும் என நீர் விநியோக நிறுவனங்கள் அறிவித்துள்ளன.</p><p> 

50 ஆண்டுகளுக்குப் பிறகு வெசெக்ஸ் வாட்டர் நிறுவனம் உள்ளிட்ட பல முன்னணி நீர் நிறுவனங்கள் சுமார் 2.7 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு இந்த பயன்பாட்டுத் தடையை விதித்துள்ளன.
</p><p>
ஏரிகள் மற்றும் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் இயல்பு நிலைக்குத் திரும்ப பல வாரங்கள் தொடர்ந்து மழை பெய்ய வேண்டும் என்பதால், பொதுமக்கள் காரை கழுவுவதற்கோ அல்லது தோட்டங்களுக்குத் தண்ணீர் பாய்ச்சுவதற்கோ ஹோஸ்பைப் குழாய்களைப் பயன்படுத்தக் கூடாது என வலியுறுத்தப்பட்டுள்ளது.</p><p> 

ஒரே நேரத்தில் தீவிர வெப்ப அலை, திடீர் வெள்ளப்பெருக்கு மற்றும் குடிநீர் பயன்பாட்டுக் கட்டுப்பாடுகள் எனப் பிரிட்டன் மக்கள் இயற்கைச் சீற்றங்களால் பெரும் அசௌகரியங்களைச் சந்தித்து வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-08-21T06:23:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/gold-price-today-in-sri-lanka-1787292283"></link>
            <id>https://tamilwin.com/article/gold-price-today-in-sri-lanka-1787292283</id>
            <summary type="text">சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையில் இன்றைய தினம் (21.08.2026) அதிகரிப்பு பதிவாகியுள்ளது.அதன்படி, ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 4,536 டொலர்களாக பதிவாகி...</summary>
            <content type="html"><![CDATA[<p>சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையில் இன்றைய தினம் (21.08.2026) அதிகரிப்பு பதிவாகியுள்ளது.</p><p>அதன்படி, ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 4,536 டொலர்களாக பதிவாகியுள்ளது.</p><h2>வெள்ளியின் விலை</h2><p>இதேவேளை வெள்ளியின் விலையிலும் அதிகரிப்பு பதிவாகியுள்ளது.&nbsp;</p><p>அதன்படி ஒரு அவுண்ஸ் வெள்ளியின் விலை 68.94 டொலர்களாக பதிவாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5cd712aa-6cf9-4200-9758-20dcca2cf716/26-6a87ededcc6b2.webp' /></p><p>
இந்த நிலையில் உள்நாட்டுச் சந்தையிலும் தங்கத்தின் விலையில் மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-21T06:19:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரெஞ்சு பொலிஸார் மீது புலம்பெயர்ந்தோர் தாக்குதல்; சம்பவத்தால் பரபரப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/migrants-attack-french-police-1787293186"></link>
            <id>https://canadamirror.com/article/migrants-attack-french-police-1787293186</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;பிரான்ஸ் நாட்டின் வடக்குக் கடற்கரைப் பகுதியிலிருந்து சிறிய ரப்பர் படகுகள் (Small Boats) மூலம் இங்கிலாந்து நோக்கிக் சட்டவிரோதமாகப் பயணிக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;பிரான்ஸ் நாட்டின் வடக்குக் கடற்கரைப் பகுதியிலிருந்து சிறிய ரப்பர் படகுகள் (Small Boats) மூலம் இங்கிலாந்து நோக்கிக் சட்டவிரோதமாகப் பயணிக்க முயன்ற புலம்பெயர்ந்தோரைத் தடுக்க முயன்ற பிரெஞ்சு காவல் துறையினர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><p> 

கடலோரக் காவல் படையினர் படகை நோக்கிச் சென்றபோது, அங்கிருந்த புலம்பெயர்ந்தோர் அவர்களைத் தடுத்து நிறுத்தி மோதலில் ஈடுபட்ட காட்சிகள் வெளியாகியுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6cf82c50-d0e5-4a6b-babd-0a2e76f635c2/26-6a87ee036fa0e.webp' /></p><h2>மனித கடத்தல்காரர்கள் மற்றும் புலம்பெயர்ந்தோர்&nbsp;</h2><p>
</p><p>
ஆங்கிலக் கால்வாய் (English Channel) வழியாகப் பிரிட்டனை அடைய கடத்தல் கும்பல்களின் உதவியுடன் நூற்றுக்கணக்கானோர் தினமும் பிரெஞ்சு கடற்கரைகளில் திரள்கின்றனர். </p><p>

பாதுகாப்புப் படையினர் படகுகளைக் பறிமுதல் செய்யவோ அல்லது கடலுக்குள் செல்வதைத் தடுக்கவோ முயலும் போது, அவர்கள் மீது கற்களை வீசியும், தடி மற்றும் கூர்மையானப் பொருட்களைக் கொண்டும் தாக்குதல்கள் நடத்தப்படுவதாகப் பிரெஞ்சு அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
சமீபகாலமாகப் பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் அரசுகள் இணைந்து எல்லைக் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியுள்ளன. </p><p>போலீசார் கடலோரப் பகுதிகளில் ரோந்துப் பணியை அதிகரித்துள்ள போதிலும், மனித கடத்தல்காரர்கள் மற்றும் புலம்பெயர்ந்தோர் மிகவும் ஆக்ரோஷமான முறையில் சட்ட அமலாக்கப் படையினரை எதிர்கொண்டு படகுகளை இயக்க முயல்வது தொடர்கதையாகி வருகிறது.
</p><p>
ஆபத்தான இந்த கடல்சார் பயணங்களின் போது ஏற்படும் மோதல்கள் மற்றும் விபத்துக்களால் உயிரழப்புகள் அதிகரிக்கும் அபாயம் உருவாகியுள்ளது. </p><p>

இந்த வன்முறை சம்பவங்களைத் தொடர்ந்து, பிரெஞ்சு கடலோரப் பகுதிகளில் கூடுதல் காவல் படையினரைக் குவிக்கவும், கடத்தல் நெட்வொர்க்குகளுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கவும் இரு நாடுகளின் அதிகாரிகளும் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-08-21T06:17:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரீல்ஸ் வீடியோவை பகிர்ந்த நடிகை அபிராமி!! ரசிகர்கள் ரியாக்ஷன்...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/abhirami-venkatachalam-reels-video-post-fans-react-1787293022"></link>
            <id>https://viduppu.com/article/abhirami-venkatachalam-reels-video-post-fans-react-1787293022</id>
            <summary type="text">அபிராமி வெங்கடாசலம்2018ல் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான நோட்டா படத்தில் சித்ரா வினோதன் என்ற ரோலில் நடித்து பிரபலமானவர் தான் மாடல் நடிகை அபிராமி வ...</summary>
            <content type="html"><![CDATA[<h2>அபிராமி வெங்கடாசலம்</h2><p>2018ல் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான நோட்டா படத்தில் சித்ரா வினோதன் என்ற ரோலில் நடித்து பிரபலமானவர் தான் மாடல் நடிகை அபிராமி வெங்கடாசலம். பிக்பாஸ் சீசன் 3ல் போட்டியாளராக கலந்துகொண்டு 56 நாட்களுக்கு பின் எவிக்டாகி வெளியேறினார். </p><p>பிக்பாஸ் அல்டிமேட் சீசன் 1 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு 5வது ரன்னர் அப் இடத்தினை பிடித்தார். அதன்பின் வெப் தொடர்களில் நடித்தும் வரும் அபிராமி, அனந்தா, DVK உள்ளிட்ட படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/939aa13b-a390-42f0-9530-ea7ebec99e0a/26-6a87ed61065dd.webp' /></p><p> </p><p>இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் அபிராமி, இன்ஸ்டாகிராமில் சப்ஸ்கிரிப்ஷன் பக்கத்தில் கிளாமர் பதிவுகளை பதிவுட்டு வருகிறார். சப்ஸ்கிரிப்ஷனில் எல்லைமீறிய புகைப்படத்தை அபிராமி பகிர்ந்ததை இணையத்தில் நெட்டிசன்கள் லீக் செய்தனர். </p><p>இந்நிலையில், இன்ஸ்டாகிராமில் சேலையை சரி செய்து எடுத்த ரீல்ஸ் வீடியோவை பகிர்ந்துள்ளார்.</p><p><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/reel/DcRZwjavGdf/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/reel/DcRZwjavGdf/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/reel/DcRZwjavGdf/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by Abhirami (@abhirami.venkatachalam)</a></p></div></blockquote> <script async src="//www.instagram.com/embed.js"></script></p>]]></content>
            <updated>2026-08-21T06:15:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[2027 பாடசாலை தவணைகள்! கல்வி அமைச்சு வெளியிட்ட முக்கிய சுற்றறிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/2027-school-term-timetable-circular-1787291197"></link>
            <id>https://ibctamil.com/article/2027-school-term-timetable-circular-1787291197</id>
            <summary type="text">கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு 2027ஆம் ஆண்டிற்கான பாடசாலை தவணைக் கால அட்டவணை, பொது விடுமுறை நாட்கள் மற்றும் முக்கிய பரீட்சை திகதிகள் அடங...</summary>
            <content type="html"><![CDATA[<p>கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு 2027ஆம் ஆண்டிற்கான பாடசாலை தவணைக் கால அட்டவணை, பொது விடுமுறை நாட்கள் மற்றும் முக்கிய பரீட்சை திகதிகள் அடங்கிய சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது.</p><p>

பொது விடுமுறைகள் மற்றும் பரீட்சை அட்டவணைகளைக் கருத்தில் கொண்டு, 2027ஆம் ஆண்டில் அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் மற்றும் பிரிவேனாக்களுக்கு மொத்தம் 197 பாடசாலை நாட்களை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
</p><h3>
சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளுக்கான தவணை அட்டவணை</h3><ul><li><b>
முதல் தவணை</b>: 2027 ஜனவரி 04 (திங்கள்) முதல் 2027 ஏப்ரல் 09 (வெள்ளி) வரை நடைபெறும்.
</li><li><b>இரண்டாம் தவணை</b>: 2027 ஏப்ரல் 26 (திங்கள்) முதல் 2027 ஜூலை 30 வரை நடைபெறும்.
</li><li><b>மூன்றாம் தவணை</b>: 2027 ஓகஸ்ட் 30 (திங்கள்) முதல் 2027 டிசம்பர் 03 (வெள்ளி) வரை நடைபெறும்.</li></ul><p></p><h2>பரீட்சைகள்</h2><p>அத்தோடு, முஸ்லிம் பாடசாலைகளுக்கான கல்வி ஆண்டு இரண்டு தவணைகளாகப் பிரிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1e39b113-a6c8-456a-8e47-902a9c5bf748/26-6a87ecbb14c2e.webp' /></p><p>மேலும், க.பொ.த உயர்தரப் பரீட்சை 2027 ஓகஸ்ட் மாதத்திலும், க.பொ.த சாதாரண தரப் பரீட்சை 2027 டிசம்பர் மாதத்திலும் நடத்தப்படும் என்றும் சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.</p><p>இந்நிலையில், தவிர்க்க முடியாத காரணங்களால் பாடசாலை நாட்கள் ரத்து செய்யப்பட்டால், அதற்குப் பதிலாக ஈடுசெய்ய வகுப்புகள் நடத்தப்பட வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/FJQcrzobjUcEaJJsEVOWpF" target="_blank">WHATSAPP </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-21T06:14:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜோசியம் பார்த்து மஞ்சள் துண்டு போட்டதெல்லாம் தமிழ்நாடு பார்த்துள்ளது - அமைச்சர் நிர்மல் குமார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/ctr-nirmal-kumar-about-yellow-bandana-by-astro-1787292714"></link>
            <id>https://news.lankasri.com/article/ctr-nirmal-kumar-about-yellow-bandana-by-astro-1787292714</id>
            <summary type="text">ஜோசியம் பார்த்து மஞ்சள் துண்டு போட்டதெல்லாம் தமிழ்நாடு பார்த்துள்ளது என அமைச்சர் நிர்மல் குமார் பேசியுள்ளார். 

ஜோசியக்காரர் சொன்னால்தான்&amp;nbsp;கோப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜோசியம் பார்த்து மஞ்சள் துண்டு போட்டதெல்லாம் தமிழ்நாடு பார்த்துள்ளது என அமைச்சர் நிர்மல் குமார் பேசியுள்ளார்.</p><h3> 

ஜோசியக்காரர் சொன்னால்தான்&nbsp;<span style="color: inherit; font-size: 1.5rem;">கோப்புகளை திறப்பீர்களா?</span></h3><p>

தமிழ்நாடு சட்டமன்றத்தில் இன்று நீதி, சிறை, சட்டம், எரிசக்தி, அறநிலையத்துறை ஆகிய துறைகளின் மீதான மானிய கோரிக்கை விவாதம் இன்று நடைபெற்று வருகிறது. </p><p>

இதில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், "சில தினங்களுக்கு முன் பேரவையில் பேசிய முதலமைச்சர், தனது டேபிளில் 3 கோப்புகள் இருப்பதாகவும், அதனை திறந்து பார்க்க வைத்துவிட வேண்டாம் என எதிர்க்கட்சிகளை நோக்கி குற்றம்சாட்டியுள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d0fd2766-83b3-4739-b41c-e739f2b78389/26-6a87ec2b6f1af.webp' /></p><p>
அந்த கோப்புகளை தயவு செய்து திறந்து பாருங்கள். ஏன் காலம் தாழ்த்துகிறீர்கள், இதையே 3 மாதமாக சொல்கிறீர்கள். ஜோசியக்காரர் சொன்னால்தான் அந்த கோப்புகளை திறப்பீர்களா? நல்ல நேரம் பார்த்துக் கொண்டிருக்கிறீர்களா? என பேசியுள்ளார்.&nbsp;</p><p></p><h3> 

ஜோசியம் பார்த்து மஞ்சள் துண்டு
</h3><p>
இதற்கு பதிலளித்த சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார், "ஜோசியம் என சொன்னார். ஜோசியம் பார்த்து மஞ்சள் துண்டு போட்டதெல்லாம் தமிழ்நாடு பார்த்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c8d70526-9237-42dc-b9ec-875e7cf6a389/26-6a87ec2c235ad.webp' /></p><p>அதனால் எதை செய்தாலும், வெளிப்படையாக எந்த ஒளிவுமறைவும் இல்லாமல் செய்ய தெரியும். 

எதை எப்போது எடுக்க வேண்டும் என தெரியும். எல்லா துறைகளிலும் சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என பேசியுள்ளார். </p><p>

முன்னாள் திமுக தலைவரும், மறைந்த முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதி மஞ்சள் துண்டு அணியும் வழக்கமுடையவர். ஆத்தீகரான அவர் ஜோசியம் பார்த்து மஞ்சள் துண்டு அணிபவர் என மறைமுகமாக திமுகவை சீண்டும் வகையில் அமைச்சர் நிர்மல் குமார் பதிலடி கொடுத்துள்ளார்.&nbsp; &nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-21T06:12:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர் அடிதடி; இருவர் மருத்துவமனையில்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/brawl-batticaloa-municipal-council-member-1787292811"></link>
            <id>https://jvpnews.com/article/brawl-batticaloa-municipal-council-member-1787292811</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இருதயபுரம் பகுதியில் ஆலயம் ஒன்றில் வைத்து நேற்று (20) வியாழக்கிழமை இரவு மட்டக்களப்பு மாநகரசப...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இருதயபுரம் பகுதியில் ஆலயம் ஒன்றில் வைத்து நேற்று (20) வியாழக்கிழமை இரவு மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர் ஒருவரும் அவரது சகோதரரும் தாக்குதலுக்குள்ளாகிய நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
</p><p>
இருதயபுரம் ஆலயத்தில் திருவிழா நடைபெற்றுவரும் நிலையில் நேற்றைய தினம் இரவு மாநகரசபை உறுப்பினர் தரணிராஜ் மற்றும் அவரது சகோதரர் கடுமையான தாக்குதலுக்குள்ளாகியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5e043c5a-14e1-4736-9b53-c9d3439c316a/26-6a87ec8d2c8d0.webp' /></p><p>
ஆலயத்தில் நடைபெற்ற வாய்த்தர்க்கத்தினை தொடர்ந்து இந்த தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

மட்டக்களப்பில் கடந்த காலத்தில் பிரபலமாகியிருந்த குழுவினரே இந்த தாக்குதலை முன்னெடுத்துள்ளதாகவும் இவர்கள் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளதாகவும் தாக்குதலுக்குள்ளானவர்களின் உறவினர்கள் தெரிவித்தனர்</p><p>
தாக்குள்ளானவர்கள் பலத்த காயங்களுடன் சிகிச்சைக்குட்படுத்தப்பட்டுவருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.</p>]]></content>
            <updated>2026-08-21T06:10:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[2027ஆம் ஆண்டுக்கான பாடசாலை தவணை மற்றும் பரீட்சை கால அட்டவணை வெளியீடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/school-term-schedule-for-2027-released-1787289996"></link>
            <id>https://tamilwin.com/article/school-term-schedule-for-2027-released-1787289996</id>
            <summary type="text">2027 ஆம் ஆண்டிற்கான பாடசாலை தவணை அட்டவணை, அரச விடுமுறை நாட்கள் மற்றும் பரீட்சைகள் நடைபெறும் காலப்பகுதிகள்

உள்ளிட்ட விபரங்களை&amp;nbsp; கல்வி, உயர்கல்வி...</summary>
            <content type="html"><![CDATA[<p>2027 ஆம் ஆண்டிற்கான பாடசாலை தவணை அட்டவணை, அரச விடுமுறை நாட்கள் மற்றும் பரீட்சைகள் நடைபெறும் காலப்பகுதிகள்

உள்ளிட்ட விபரங்களை&nbsp; கல்வி, உயர்கல்வி மற்றும் தொழில் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p>கல்வி, உயர்கல்வி மற்றும் தொழில் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள&nbsp; எண் 31/2026-ஐ&nbsp;சுற்றறிக்கையில் இந்த தகவல் உள்ளடங்கியுள்ளது.</p><h2>பொது விடுமுறைகள் மற்றும் பரீட்சை அட்டவணை</h2><p>இந்த சுற்றறிக்கைக்கு அமைய, 2027 ஆம் ஆண்டில் அரச விடுமுறை நாட்கள் மற்றும் பரீட்சை அட்டவணைகளைக் கருத்திற் கொண்டு அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் மற்றும் பிரிவெனாக்களை 197 நாட்களுக்கு நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ea350fc4-aaff-4c1b-9dc1-4d5f915d3f47/26-6a87e7f14e296.webp' />&nbsp;</p><h2>சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளுக்கான&nbsp;தவணை </h2><p>முதலாம் தவணை 2027 ஜனவரி 4 (திங்கட்கிழமை) முதல் 2027 ஏப்ரல் 09 (வெள்ளிக்கிழமை) வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இரண்டாம் தவணை&nbsp; 2027 ஏப்ரல் 26 திங்கட்கிழமை முதல் 2027 ஜூலை 30 வரை நடைபெறவுள்ளது.</p><p>மூன்றாம் தவணை 2027 ஆகஸ்ட் 30 திங்கட்கிழமை முதல் 2027 டிசம்பர் 03 (வெள்ளிக்கிழமை) வரை நடைபெறவுள்ளது.</p><h2>முஸ்லிம் பாடசாலைகளுக்கான அறிவிப்பு</h2><p>முஸ்லிம் பாடசாலைகளுக்கான கல்வி நடவடிக்கை இரண்டு தவணைகளாக பிரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இதன்படி, க.பொ.த உயர்தரப் பரீட்சை ஒகஸ்ட் மாதத்திலும், சாதாரண தரப் பரீட்சை - 2027 டிசம்பர் மாதத்திலும் நடைபெறவுள்ளன.</p><p>மேலும், சிறப்பு காரணங்களுக்காக ஒரு நாள் பாடநாலை மூடப்பட நேர்ந்தால், அதற்குப் பதிலாக வகுப்புகள் நடத்தப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><p></p><p>&nbsp;</p><p><br></p>]]></content>
            <updated>2026-08-21T06:02:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thevanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[எமது பூர்வீக நிலங்களை எம்மிடம் உடன் ஒப்படையுங்கள்.. கிளிநொச்சியில் போராட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/kilinochchi-protest-today-1787291721"></link>
            <id>https://tamilwin.com/article/kilinochchi-protest-today-1787291721</id>
            <summary type="text">&quot;எமது பூர்வீக நிலங்களை எம்மிடம் உடன் ஒப்படையுங்கள்&quot; என அரசை வலியுறுத்தி
போராட்டம் ஒன்று இன்று(21) கிளிநொச்சியில் நடைபெற்றது.

குறித்த போராட்டம் இன்...</summary>
            <content type="html"><![CDATA[<p>"எமது பூர்வீக நிலங்களை எம்மிடம் உடன் ஒப்படையுங்கள்" என அரசை வலியுறுத்தி
போராட்டம் ஒன்று இன்று(21) கிளிநொச்சியில் நடைபெற்றது.
</p><p>
குறித்த போராட்டம் இன்று காலை 9.30 மணியளவில் கிளிநொச்சி பழைய மாவட்ட செயலகம்
முன்பாக A9 வீதியில் நடைபெற்றது.</p><h2>போராட்டம்&nbsp;</h2><p>
</p><p>
மன்னர் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான அபிவிருத்தி நிறுவனத்தின் ஏற்பாட்டில்
நடைபெற்ற குறித்த போராட்டத்தில், சிவில் அமைப்புக்கள், காணி உரிமையாளர்கள்,
பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d8553768-d551-40e4-adb0-a4f31300c514/26-6a87e916341b6.webp' /></p><p>

யாழ்ப்பாணம் வலிவடக்கு, முல்லைத்தீவு கேப்பாப்புலவு, மட்டக்களப்பு மயிலத்தமடு,
மாதவனை மற்றும் இயக்கச்சி, கிராஞ்சி பகுதிகளில் காணி இழந்த மக்களின் தொடர்
உரிமைப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-21T06:01:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[கார்த்திக், ரேவதியை பிரிக்க பஞ்சாயத்து கூட்டிய சாமுண்டீஸ்வரி..- கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/zee-tamizh-karthigai-deepam-serial-episode-1787292015"></link>
            <id>https://cineulagam.com/article/zee-tamizh-karthigai-deepam-serial-episode-1787292015</id>
            <summary type="text">கார்த்திகை தீபம்தமிழ் சின்னத்திரையில் Zee தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியல் திங்கள் முதல் சனி வ...</summary>
            <content type="html"><![CDATA[<h2>கார்த்திகை தீபம்</h2><p>தமிழ் சின்னத்திரையில் Zee தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். </p><p>இந்த சீரியல் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ரசிகர்களை கவர்ந்து வருகிறது. நேற்றைய எபிசோடில் சாமுண்டீஸ்வரி, கார்த்திக் மற்றும் ரேவதியைப் பிரிக்க புதிய திட்டத்தை தீட்டிய நிலையில், இன்று நடைபெறவுள்ள சம்பவங்கள் குறித்து பார்க்கலாம்.
</p><p>
அதாவது, சாமுண்டீஸ்வரி பஞ்சாயத்தை கூட்டி, கார்த்திக் தன்னுடைய மகளை ஏமாற்றி அழைத்து வந்து விட்டதாக குற்றம் சாட்டுகிறார். மேலும், ஏற்கனவே பஞ்சாயத்தில் வைத்து அவர்களை காசு வெட்டி பிரித்து விட்டதாகவும் முறையிடுகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7acc1f4d-5fe9-454c-bdf8-ceec2ce7435a/26-6a87e97115614.webp' /></p><p>
</p><p>
இதையடுத்து கார்த்திக், ரேவதி முழு மனதோடு தான் தன்னுடன் வந்ததாக பஞ்சாயத்தாரிடம் தெரிவிக்கிறார். ஆனால் சாமுண்டீஸ்வரி அதனை ஏற்க மறுத்து, ரேவதியையே நேரில் அழைத்து வந்து பதில் சொல்ல வைக்க வேண்டும் என வலியுறுத்துகிறார். </p><p>இதனால் ரேவதியை பஞ்சாயத்துக்கு அழைத்து வரும் சூழ்நிலை உருவாகிறது.

பஞ்சாயத்தில் ஆஜராகும் ரேவதி, “நான் முழு மனதோடு தான் கார்த்தியுடன் வந்தேன். எங்களை காசு வெட்டி பிரித்தது செல்லாது என்று தீர்ப்பு வழங்க வேண்டும்” என உறுதியாக கூறுகிறார். </p><p>ரேவதியின் வாக்குமூலத்தை ஏற்றுக்கொண்ட பஞ்சாயத்தார், அவருக்கு சாதகமாக தீர்ப்பு வழங்குகின்றனர்.

இந்த தீர்ப்பால் கடும் அதிருப்தியடைந்த சாமுண்டீஸ்வரி, பஞ்சாயத்தாரிடம் கோபம் காட்டி, “உங்களால் இவ்வளவுதான் செய்ய முடியுமா? இதை நான் வேறு விதமாக பார்த்துக் கொள்கிறேன்” என்று கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பிச் செல்கிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a64a874d-a3a4-4c6d-b4e7-12722da324d3/26-6a87e971bc015.webp' /></p><p>
</p><p>
அதன்பிறகு கார்த்திக், சாமுண்டீஸ்வரியை சந்தித்து, “ரேவதி முழு மனதோடு தான் என்னுடன் வந்தார் என்பது உங்களுக்கும் நன்றாகத் தெரியும்” என்று நேருக்கு நேர் பேசுகிறார்.

இந்நிலையில், அடுத்ததாக என்ன நடக்கப் போகிறது? சாமுண்டீஸ்வரி அடுத்து என்ன முடிவு எடுக்கப் போகிறார்? என்பதை அறிய கார்த்திகை தீபம் சீரியலை இரவு 9 மணிக்கு Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத் தவறாதீர்கள்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-21T06:00:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நெடுந்தீவுக்கு புதிய குளிரூட்டப்பட்ட படகு - ரூ.235 மில்லியன் நிதி ஒதுக்கீடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/new-air-conditioned-boat-for-neduntheevu-1787289914"></link>
            <id>https://tamilwin.com/article/new-air-conditioned-boat-for-neduntheevu-1787289914</id>
            <summary type="text">நெடுந்தீவு மக்களின் நீண்டகால கடற்போக்குவரத்து பிரச்சினைக்கு தீர்வு காணும்
வகையில், புதிய படகொன்றைக் கொள்வனவு செய்வதற்காக கிராமிய அபிவிருத்தி, சமூகப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நெடுந்தீவு மக்களின் நீண்டகால கடற்போக்குவரத்து பிரச்சினைக்கு தீர்வு காணும்
வகையில், புதிய படகொன்றைக் கொள்வனவு செய்வதற்காக கிராமிய அபிவிருத்தி, சமூகப்
பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் கீழ் ரூ.235 மில்லியன் சிறப்பு
நிதி ஒதுக்கீடு கிடைத்துள்ளதாக கடற்றொழில், நீரியல் வளங்கள் மற்றும் கடல் வளங்கள்
அமைச்சர்&nbsp;இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.</p><p>சமூக சக்தி தேசிய வறுமை ஒழிப்புத் திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படவுள்ள
பன்முக வறுமை ஒழிப்புத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பான
கலந்துரையாடல்&nbsp;நேற்று(20.08.2026) பிற்பகல் 2.00 மணிக்கு அரசாங்க அதிபர்
அலுவலகத்தில் நடைபெற்றபோதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.</p><h2>நெடுந்தீவு மக்களின் கடற்போக்குவரத்து பிரச்சினை</h2><p>மேலும் தெரிவிக்கையில்,&nbsp;குறித்த திட்டத்தை விரைவாக ஆரம்பித்து நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான
அனுமதிகள், தொழில்நுட்ப நடவடிக்கைகள் மற்றும் திட்டத்தை நிறைவேற்றுவதற்கான கால
அவகாசம் தொடர்பில் ஆராய்வதற்காகவே இக் கலந்துரையாடல் இடம்பெறுவதாகவும் குறிப்பிட்டார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e1226912-be5a-4b2a-8469-fa7bcecdc476/26-6a87e50fcda39.webp' /></p><p>நெடுந்தீவிற்கான புதிய படகு கொள்வனவு செய்யப்பட்டு சேவையில்
ஈடுபடுத்தப்படுவதன் மூலம், அப்பகுதி மக்களின் பயணிகள் கடற்போக்குவரத்து மேலும்
இலகுபடுத்தப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.</p><p>

அத்துடன், நெடுந்தீவு மக்களின் அடிப்படைத் தேவைகள் மற்றும் அபிவிருத்தி
நடவடிக்கைகளுக்கு அரசாங்கம் தொடர்ந்தும் கூடிய கவனம் செலுத்தி, தேவையான
நடவடிக்கைகளை முன்னெடுக்கும் எனவும் கடற்றொழில் அமைச்சர் தெரிவித்தார்.</p><p>யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் கருத்துத்
தெரிவிக்கையில், இன்றைய கலந்துரையாடலின் மூலம் யாழ்ப்பாண மாவட்டத்திற்கு
மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இரண்டு நிதி ஒதுக்கீடுகள் கிடைத்துள்ளதாகத்
தெரிவித்தார். </p><p>அதன்படி, கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல்
அமைச்சின் கீழ் யாழ்ப்பாண மாவட்டத்திற்கு ரூ.235 மில்லியன் சிறப்பு ஒதுக்கீடு
கிடைத்துள்ளதாகவும், சமூக சக்தி திட்டத்தின் கீழ் ஏற்கனவே யாழ்ப்பாண
மாவட்டத்திற்கு ரூ.652 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும்
தெரிவித்தார்.</p><p>

மேலும், தற்போது யாழ்ப்பாண மாவட்டம் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினைகளில்
ஒன்றாக நெடுந்தீவு மக்களின் கடற்போக்குவரத்து பிரச்சினை காணப்படுவதாக அரசாங்க
அதிபர் தெரிவித்தார்.</p><h2>கட்டணம் செலுத்திப் பயன்படுத்துவதன் மூலம்</h2><p>குறிக்கட்டுவான் – நெடுந்தீவு இடையே சேவையில் ஈடுபட்டு வரும் ‘வடதாரகை’
மற்றும் ‘நெடுந்தாரகை’ ஆகிய இரு படகுகளும் தற்போது பழுதுபார்க்கப்பட்டு
சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3e75b52b-b85e-4772-808f-862fd9d1978c/26-6a87e510dc04a.webp' /></p><p>அதேவேளை, ‘குமுதினி’ படகு திருத்தப்
பணிகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இ</p><p>தன் காரணமாக நெடுந்தீவு மக்கள் மட்டுமன்றி, நெடுந்தீவுக்கு வருகை தரும்
சுற்றுலாப் பயணிகளும் கடற்போக்குவரத்தில் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு
வருவதாக அரசாங்க அதிபர் மேலும் குறிப்பிட்டார்.</p><p>கடற்போக்குவரத்து சேவையில் கடற்படைத் தளபதி முழுமையான ஒத்துழைப்பை வழங்கி
வருவதாகத் தெரிவித்த அரசாங்க அதிபர், புதிய குளிரூட்டப்பட்ட படகு சேவையை
கட்டணம் செலுத்திப் பயன்படுத்துவதன் மூலம் நெடுந்தீவு மக்களும், உள்ளூர்
மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் பெரிதும் பயனடைவார்கள் எனக்
குறிப்பிட்டார்.</p><p> இதன் மூலம் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள்
கடற்போக்குவரத்தில் எதிர்கொள்ளும் சிரமங்களை கணிசமாகக் குறைக்க முடியும்
எனவும் தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p></p><p></p><p>
</p>]]></content>
            <updated>2026-08-21T05:57:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thevanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[புதையல் தோண்ட முற்பட்ட இராணுவ உயர் அதிகாரி உட்பட எட்டு பேர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/arrested-for-attempting-to-dig-up-treasure-1787287992"></link>
            <id>https://tamilwin.com/article/arrested-for-attempting-to-dig-up-treasure-1787287992</id>
            <summary type="text">கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட இரணைமடு 55ஆம் கட்டை பகுதியில் புதையல் தோண்ட முற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.&amp;nbsp;குறித்த சம்பவம் நேற்று ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட இரணைமடு 55ஆம் கட்டை பகுதியில் புதையல் தோண்ட முற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.&nbsp;</p><p>குறித்த சம்பவம் நேற்று முன் தினம் (19.08.2026) இரவு இடம்பெற்றுள்ளது.</p><p>கிளிநொச்சி பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலுக்கு
அமைவாக குறித்த பகுதியில் விசேட சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.&nbsp;</p><h2>எட்டு பேர் கைது</h2><p>இதன்போது புதையல் அகழ்வில் ஈடுபட்ட இராணுவ உயர் அதிகாரி உட்பட எட்டு பேர் கைது
செய்யப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ec5d2c1f-b705-4c85-9667-86e36e9ee4e1/26-6a87e6077446f.webp' /></p><p> கைது செய்யப்பட்டவர்கள் கொழும்பு, சிலாபம், யாழ்ப்பாணம், தெல்லிப்பளை, குருநாகல் பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரியவருகிறது.</p><p>குறித்த சந்தேகநபர்களிடமிருந்து புதையல் தோண்டுவதற்காக பயன்படுத்தப்பட்ட உபகரணம் மற்றும்
சிறிய ரக வாகனம் என்பன பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/425c6a57-ee4e-45b2-867d-5728c8998427/26-6a87e6088dfc3.webp' /></p><p>சந்தேகநபர்களை கிளிநொச்சி நீதிமன்றில் முற்படுத்த
நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f82e5c6e-b9ca-454a-a5c7-849bacb867ba/26-6a87e609711d0.webp' /></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-21T05:56:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறுநீர் கலந்த தண்ணீரைக் மாணவிகளுக்கு குடிக்க கொடுத்த மாணவன்; சாக்லேட் சாப்பிட கூறிய அதிபர்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/students-made-to-drink-urine-1787291776"></link>
            <id>https://jvpnews.com/article/students-made-to-drink-urine-1787291776</id>
            <summary type="text">&amp;nbsp;இந்தியாவின், மத்தியப் பிரதேச மாநிலம் குணா மாவட்டத்தில் உள்ள அரசாங்க பாடசாலை ஒன்றில் ஐந்தாம் வகுப்பு பயிலும் மாணவன் ஒருவன் சிறுநீர் கலந்த தண்ணீரை...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;இந்தியாவின், மத்தியப் பிரதேச மாநிலம் குணா மாவட்டத்தில் உள்ள அரசாங்க பாடசாலை ஒன்றில் ஐந்தாம் வகுப்பு பயிலும் மாணவன் ஒருவன் சிறுநீர் கலந்த தண்ணீரைக் குடிக்கக் கொடுத்ததாக இரு சிறுமிகள் முறைப்பாடு அளித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.</p><p>
அரோன் வட்டாரப் பகுதியில் உள்ள ஆரம்பப் பாடசாலையில் கடந்த திங்கட்கிழமை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குடிநீரில் ஏதோ கலந்திருப்பதை அறிந்து சிறுமிகள் இருவரும் உடனடியாகப் பாடசாலை அதிபரிடம் சென்று முறைப்பாடு அளித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8525891e-e83f-449d-b7ba-a334f1cf7eb2/26-6a87e88239af5.webp' /></p><h2>சாக்லேட் சாப்பிட கூறிய அதிபர்</h2><p> </p><p>

எனினும் அதிபர் அதை தீவிரமாக எடுத்துக்கொள்ளாமல், "வாய் ஒருமாதிரியாக இருந்தால் 10 ரூபாய் கொடுத்து சாக்லேட் வாங்கிச் சாப்பிடுங்கள்" என மிகவும் அலட்சியமாகப் பதிலளித்துள்ளார்.
</p><p>
இந்த சம்பவம் குறித்து செவ்வாய்க்கிழமை தகவலறிந்த சிறுமிகளின் பெற்றோரும் கிராம மக்களும் ஆத்திரமடைந்து பாடசாலைக்கு பூட்டுப் போட்டு போராட்டத்தில் ஈடுபட்டு அதிபர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோஷங்களை எழுப்பியதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
குணா மாவட்ட ஆட்சியர் கிஷோர் குமார் கன்யால் இந்த சம்பவம் குறித்துத் தீவிர விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். தவறிழைத்த மாணவன் மற்றும் அவனது பெற்றோர் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

முறைப்பாட்டைக் கண்டுகொள்ளாமல் அலட்சியமாகப் பதிலளித்த அதிபருக்கு விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
</p><p>
அரோன் துணைப் கோட்டாட்சியர் மஞ்சுஷா கத்ரி தகவலின்படி, வட்டாட்சியர் மற்றும் வட்டாரக் கல்வி அதிகாரி ஆகியோர் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 2 நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளதுடன், கனத்த பொலிஸ் பாதுகாப்புடன் சிறுமிகள் மற்றும் சம்பந்தப்பட்ட மாணவர்களிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.
</p><p>
இச்சம்பவத்தில் மேலும் சில ஆண் மாணவர்களுக்கும் தொடர்பு இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படும் நிலையில், அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டவுடன் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p>]]></content>
            <updated>2026-08-21T05:53:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஸ்பிரிட் படக்குழுவுக்கு எக்கச்சக்க கண்டீஷன்!! தீபிகா விலகியது ஏன்? தயாரிப்பாளர் கூறிய காரணங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/deepika-padukones-exit-spirit-sought-10-profit-1787291526"></link>
            <id>https://viduppu.com/article/deepika-padukones-exit-spirit-sought-10-profit-1787291526</id>
            <summary type="text">தீபிகா விலகியது ஏன்அர்ஜுன் ரெட்டி, கபீர் சிங், அனிமல் ஆகிய பெரிய பட்ஜெட் படங்களை இயக்கி பிரபலமானவர் தான் இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா. இப்படங்களை தொ...</summary>
            <content type="html"><![CDATA[<h2>தீபிகா விலகியது ஏன்</h2><p>அர்ஜுன் ரெட்டி, கபீர் சிங், அனிமல் ஆகிய பெரிய பட்ஜெட் படங்களை இயக்கி பிரபலமானவர் தான் இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா. இப்படங்களை தொடர்ந்து தற்போது ஸ்பிரிட் என்ற படத்தை பிரபாஸ் கதாநாயகனாக வைத்து இயக்கி வருகிறார். டி-சீரிஸ் மற்றும் பத்ரகாளி பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படம் காவல்துறை அதிகாரியை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a9a04b3e-13d5-4710-bf80-94196f5e1f08/26-6a87e7880acf3.webp' /></p><p> படத்தின் நாயகியாக முதலில் தீபிகா படுகோன் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியானது. பிரபாஸ், தீபிகா இணைந்து கல்கி 2898 ஏடி படத்தில் இணைந்து நடித்திருந்த நிலையில் மீண்டும் இக்கூட்டணி தொடரும் என்ற எதிர்பார்ப்பு உருவானது. </p><p>ஆனால் இருவருக்கும் இடையேயான கூட்டணி ஸ்பிரிட் படத்தில் அமையவில்லை. அதற்கு காரணம் தீபிகா படுகோன் ஸ்பிரிட் படத்தில் இருந்து விலகியதுதான். அவர் விலகியதற்கு பல காரணங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.</p><p>இந்நிலையில் படத்தின் தயாரிப்பாளர் பிரணய் ரெட்டி வங்கா விளக்கத்தை கொடுத்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/eabb1e5a-4125-4faf-b6ee-696c8562d086/26-6a87e788b29ea.webp' /></p><h2>கண்டீஷன்</h2><p> அதில், தீபிகாவின் சம்பள எதிர்பார்ப்பு பேச்சுவார்த்தையில் முக்கிய விஷயம் இருந்தது. அதேபோல், ஷூட்டிங்கில் அவர் செலவிடும் நேரம் குறித்தும் சில நிபந்தனைகள் இருந்தது. படத்தின் வெளியீட்டுக்குப்பின் கிடைக்கும் லாபத்தில் 10 சதவீதத்தை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைத்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f223242a-61ab-4497-9568-3923dbe2ecac/26-6a87e7896433b.webp' /></p><p>தெலுங்கு வசனங்களை பேசுவது தொடர்பான விவகாரமும் அவர் படத்திலிருந்து விலகியதற்கான காரணம் என்று கூறியிருக்கிறார். அவர் விலகியப்பின் நாயகியாக திரிப்தி டிம்ரி தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.</p><p><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr"><a href="https://x.com/hashtag/DeepikaPadukone?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#DeepikaPadukone</a> asked for unreasonable Remuneration hike, her schedule was unprofessional &amp; unfair to the rest of the team, and she wanted 10% of post release profit from <a href="https://x.com/hashtag/Spirit?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#Spirit</a> - <a href="https://x.com/hashtag/PranayReddyVanga?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#PranayReddyVanga</a> <br><br>This led to Sandeep choosing <a href="https://x.com/hashtag/TriptiDimri?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#TriptiDimri</a> 👀 <a href="https://x.com/hashtag/Prabhas%E2%80%8C?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#Prabhas‌</a> <a href="https://x.com/hashtag/SandeepReddyVanga?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#SandeepReddyVanga</a> <a href="https://t.co/GnafTRUWXv">pic.twitter.com/GnafTRUWXv</a></p>&mdash; The Climax India (@TheClimaxIndia) <a href="https://x.com/TheClimaxIndia/status/2090464396979921360?ref_src=twsrc%5Etfw">August 20, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p>]]></content>
            <updated>2026-08-21T05:45:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kumar</name>
            </author>
            <title type="text"><![CDATA[நள்ளிரவில் நடந்த தாக்குதல் - தமிழர் பகுதி மாநகரசபை உறுப்பினர் ஒருவர் உட்பட இருவர் வைத்தியசாலையில்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/attack-at-batticaloa-festival-1787290940"></link>
            <id>https://tamilwin.com/article/attack-at-batticaloa-festival-1787290940</id>
            <summary type="text">மட்டக்களளப்பு தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இருதயபுரம் பகுதியில் உள்ள
ஆலயம் ஒன்றில் வைத்து மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர் ஒருவரும்
அவரது சகோதரரு...</summary>
            <content type="html"><![CDATA[<p>மட்டக்களளப்பு தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இருதயபுரம் பகுதியில் உள்ள
ஆலயம் ஒன்றில் வைத்து மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர் ஒருவரும்
அவரது சகோதரரும் தாக்குதலுக்குள்ளாகிய நிலையில் மட்டக்களப்பு போதனா
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
</p><p>
இந்த சம்பவம் நேற்று(20.08.2026) இடம்பெற்றுள்ளது. </p><h2>

திருவிழாவில் ஏற்பட்டுள்ள குழப்பம்</h2><p>

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
</p><p>
இருதயபுரம் ஆலயத்தில் திருவிழா இடம்பெற்று வரும் நிலையில் நேற்று இரவு மாநகரசபை
உறுப்பினர் தரணிராஜ் மற்றும் அவரது சகோதரர் கடுமையான
தாக்குதலுக்குள்ளாகியுள்ளனர்.
</p><p>
ஆலயத்தில் நடைபெற்ற வாய்த்தர்க்கத்தினை தொடர்ந்து இந்த தாக்குதல்
முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7df97c29-8aea-49ce-a779-c8327cfa2ba2/26-6a87e5a74f3b6.webp' /></p><p>
</p><h2>
வைத்தியசாலையில் இருவர் அனுமதி</h2><p>
மட்டக்களப்பில் கடந்த காலத்தில் பிரபலமாகியிருந்த குழுவினரே இந்த தாக்குதலை
முன்னெடுத்துள்ளதாகவும் இவர்கள் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
பதிவுசெய்யப்பட்டுள்ளதாகவும் தாக்குதலுக்குள்ளானவர்களின் உறவினர்கள்
தெரிவித்தனர்.
</p><p>
ஆனாலும் இதுவரையில் தாக்குதல் நடத்தியவர்கள் கைதுசெய்யப்படவில்லை என்றும்
தெரிவித்தனர்.</p><p>

தாக்குள்ளானவர்கள் பலத்த காயங்களுடன் சிகிச்சைக்குட்படுத்தப்பட்டு வருவதாக
வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.</p><p></p><p></p><p><b><i>you may like this..<br></i></b></p><p><b><i><br><br></i></b><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/-1jqO2syUu8" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><i><br></i></b></p>]]></content>
            <updated>2026-08-21T05:44:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வன்முறையைக் கையில் எடுக்கும் புலம்பெயர்வோர்: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள காட்சிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/migrants-attcked-cops-on-france-beach-1787287695"></link>
            <id>https://news.lankasri.com/article/migrants-attcked-cops-on-france-beach-1787287695</id>
            <summary type="text">Migrants on a French beach attacked cops as they tried to set sail for Britain: பிரித்தானியாவுக்குள் நுழையும் முயற்சியின்போது, புலம்பெயர்வோர் சிலர் பி...</summary>
            <content type="html"><![CDATA[<p>Migrants on a French beach attacked cops as they tried to set sail for Britain: பிரித்தானியாவுக்குள் நுழையும் முயற்சியின்போது, புலம்பெயர்வோர் சிலர் பிரான்ஸ் நாட்டு பொலிசார் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
</p><p>

பிரான்சிலிருந்து சிறுபடகுகள் மூலம் பிரித்தானியாவுக்குள் நுழையும் முயற்சியின்போது, புலம்பெயர்வோர் சிலர், பிரான்ஸ் நாட்டு பொலிசாரை தாக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
</p><h3>
அதிர்ச்சிக் காட்சிகள்
</h3><p>
பிரித்தானிய வெளியுறவு அலுவலகம் இந்தக் காட்சிகளை வெளியிட்டுள்ளது. இந்த சம்பவம் பிரான்ஸ் நாட்டு கடற்கரை ஒன்றில் நிகழ்ந்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fdda8ed2-2c44-4ffa-a7fc-c9dc2ffcf5bc/26-6a87d891e15e4.webp' /></p><p>
ஆம், கடத்தல்காரர்கள் வன்முறையை பயன்படுத்தி, புலம்பெயர்வோரை கட்டாயப்படுத்தி சிறுபடகுகளில் ஏற்றி அனுப்புவது குறித்த செய்திகளை கேள்விப்பட்டுள்ளோம்.
</p><p>
ஆனால், முதன்முறையாக, புலம்பெயர்வோர் வன்முறையைக் கையில் எடுக்கும் காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/29a5f78b-d280-4e33-99f4-b4670fcd736f/26-6a87d89125948.webp' /></p><p>

பிரான்ஸ் நாட்டு பொலிசார், பிரான்சிலிருந்து ஆங்கிலக்கால்வாய் வழியாக பிரித்தானியாவுக்குள் நுழைய முயலும் சட்டவிரோத புலம்பெயர்வோரை தடுக்க போதுமான முயற்சிகள் மேற்கொள்வதில்லை என பலமுறை பிரித்தானிய தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><p>
ஆனால், இந்த காட்சிகளைப் பார்க்கும்போது, அந்தக் குற்றச்சாட்டு முழுமையாக உண்மையானது அல்ல என்பது தெளிவாகியுள்ளது.
</p><p>
தற்போது வெளியிடப்பட்டுள்ள காட்சிகளில், புலம்பெயர்வோர் சிலர் ரப்பர் படகொன்றை தூக்கிக்கொண்டு கடலுக்குள் இறங்க முயல்வதையும், பொலிசார் அவர்களைத் தடுக்க முயல, புலம்பெயர்வோரில் சிலர் பொலிசாரை தாக்குவதையும் காணலாம்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/1LoilLwwSjQ" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p>

அவர்கள் மீது பெப்பர் ஸ்பிரே போன்ற ஒரு ஸ்பிரேயை தெளிக்கும் பொலிசார், அவர்களுடைய ரப்பர் படகுகளை கத்தியால் கீறுவதையும் அந்த வீடியோவில் பார்க்கமுடிகிறது.</p><p>

ஏப்ரல் மாதம் 27ஆம் திகதிக்கும் ஆகத்து மாதம் 2ஆம் திகதிக்கும் இடையில் இதுபோல 185 சிறுபடகுகளை தடுத்து நிறுத்தியதாக பிரான்ஸ் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
அதாவது, மூன்று மாதங்களில், சுமார் 4,300 சட்டவிரோத புலம்பெயர்வோர் பிரித்தானியாவுக்குள் நுழைவதை தடுத்து நிறுத்தியுள்ளதாக பிரான்ஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-21T05:40:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜோசியக்காரன் சொன்னால் தான் திறந்து பார்ப்பீர்களா? முதல்வர் விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் கேள்வி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/udhayanidhi-question-cm-permission-from-astrologer-1787290689"></link>
            <id>https://ibctamilnadu.com/article/udhayanidhi-question-cm-permission-from-astrologer-1787290689</id>
            <summary type="text">ஜோசியக்காரன் சொன்னால் தான் கோப்புகளை திறந்து பார்ப்பீர்களா என முதல்வர் விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

முதல்வர் விஜய்க்கு உதயநித...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜோசியக்காரன் சொன்னால் தான் கோப்புகளை திறந்து பார்ப்பீர்களா என முதல்வர் விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
</p><h3>
முதல்வர் விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் கேள்வி
</h3><p>
தமிழ்நாடு சட்டமன்றத்தில் இன்று நீதி, சிறை, சட்டம், எரிசக்தி, அறநிலையத்துறை ஆகிய துறைகளின் மீதான மானிய கோரிக்கை விவாதம் இன்று நடைபெற்று வருகிறது. </p><p>

இதில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், "ஆளும்கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் ஆதாரம் இல்லாமல் பல குற்றச்சாட்டுகளை வைக்கிறார்கள். 

வரலாற்றில் இல்லாத வகையில் எதிர்க்கட்சியை உறுப்பினர்களை விட, ஆளும் கட்சி உறுப்பினர்கள், அமைச்சரின் பேச்சுக்களெல்லாம் அவைக்குறிப்பில் நீக்கப்படுகிறது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d940f8d2-d46b-4b63-ab29-29a96706bcc0/26-6a87e4428fdea.webp' /></p><p> 

எதிர்க்கட்சி ஒரு கேள்வி கேட்டால் அமைச்சர்கள் ஆச்சரியப்படும் வகையில் பதிலெல்லாம் கொடுக்கிறார்கள். இப்போது பாடலெல்லாம் பாடுகிறார்கள். இது சட்டப்பேரவையா? பாட்டு நிகழ்ச்சியா? என தெரியவில்லை. </p><p> 

சில தினங்களுக்கு முன் பேரவையில் பேசிய முதலமைச்சர், தனது டேபிளில் 3 கோப்புகள் இருப்பதாகவும், அதனை திறந்து பார்க்க வைத்துவிட வேண்டாம் என எதிர்க்கட்சிகளை நோக்கி குற்றம்சாட்டியுள்ளார்.
</p><p>
அந்த கோப்புகளை தயவு செய்து திறந்து பாருங்கள். அதன் மீது நடவடிக்கை எடுங்கள். எதற்காக பயப்படுகிறீர்கள். காலம் தாழ்த்துகிறீர்கள், இதையே 3 மாதமாக சொல்கிறீர்கள்.
</p><p>
ஜோசியக்காரர் சொன்னால்தான் அந்த கோப்புகளை திறப்பீர்களா? நல்ல நேரம் பார்த்துக் கொண்டிருக்கிறீர்களா?
</p><p>
முதலமைச்சருக்கு நான் Open Challenge வைக்கிறேன். அவர் வைத்திருக்கும் கோப்புகளில் தவறு இருந்தால் 
நடவடிக்கை எடுக்கட்டும். சினிமா போல் சட்டப்பேரவையில் பஞ்ச் டயலாக் பேச வேண்டாம். உருட்டல், மிரட்டல்களுக்கெல்லாம் பயப்படும் இயக்கம் திமுக கிடையாது" என பேசியுள்ளார்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-21T05:38:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வடக்கு மற்றும் கிழக்கு காணி விடுப்விப்பு; ஜனாதிபதி விடுத்த உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/release-of-lands-north-and-east-president-anura-1787290653"></link>
            <id>https://jvpnews.com/article/release-of-lands-north-and-east-president-anura-1787290653</id>
            <summary type="text">&amp;nbsp; வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் யுத்த காலத்தில் இராணுவ முகாம்களை அமைப்பதற்காக கையகப்படுத்தப்பட்ட தனியார் காணிகள் மற்றும் பொதுமக்களால் பயன்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் யுத்த காலத்தில் இராணுவ முகாம்களை அமைப்பதற்காக கையகப்படுத்தப்பட்ட தனியார் காணிகள் மற்றும் பொதுமக்களால் பயன்படுத்தப்பட்ட அரச காணிகளை மீண்டும் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு விடுவித்து, வழங்குவதை விரைவுபடுத்த ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார். </p><p>
பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் நேற்றைய தினம் வியாழக்கிழமை நடைபெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி அவ்வாறு தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/272c908c-7547-4db9-a3a7-bfcc36ab5b05/26-6a87e41ed1131.webp' /></p><p>தேசிய பாதுகாப்பு மிக முக்கியமானது என்பதுடன், தேசிய பாதுகாப்பிற்காக இராணுவ முகாம்கள் எங்கு அமைக்கப்பட வேண்டும் என்பதைத் தீர்மானிப்பது முப்படையினர் மற்றும் பொலிஸார் உள்ளிட்ட பாதுகாப்புத் துறையுடன் தொடர்புடையவர்களின் பணியாகும்.</p><p>&nbsp; &nbsp; அதன் அடிப்படையில் எவ்வாறான காணிகளை விடுவிக்க முடியும், எவ்வாறான காணிகளை விடுவிக்க முடியாது என்பது குறித்து உடனடியாக இறுதித் தீர்மானம் எடுக்கப்பட வேண்டியது அவசியம்.</p><p>

அவசியமான காணி அளவைத் தீர்மானிக்கும் போது இயன்றவரை மக்களின் தரப்பிலிருந்து சிந்தித்து, விடுவிக்கக் கூடிய அதிகபட்ச காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
</p><p>
அவ்வாறு வழங்கப்படும் காணிகளுக்கு மேலதிகமாக அந்த மக்களின் வாழ்வாதார வழிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கான வேலைத்திட்டத்தின் அவசியம் தொடர்பிலும் , கவனம் செலுத்த வேண்டும் என தெரிவித்தார்&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-21T05:35:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[மேற்கு கரையில் இஸ்ரேலின் E1 குடியேற்றத் திட்டம்: E4 கூட்டமைப்பு கடும் கண்டனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/e4-nations-condemn-israel-s-e1-settlement-plan-1787290362"></link>
            <id>https://news.lankasri.com/article/e4-nations-condemn-israel-s-e1-settlement-plan-1787290362</id>
            <summary type="text">E4 Nations Condemn Israel’s West Bank E1 Settlement Expansion&amp;nbsp;Plan: மேற்கு கரை பகுதியில் இஸ்ரேலின் E1 குடியேற்றத் திட்டத்தை E4 நாடுகளின் கூட்டமைப...</summary>
            <content type="html"><![CDATA[<p>E4 Nations Condemn Israel’s West Bank E1 Settlement Expansion&nbsp;Plan: மேற்கு கரை பகுதியில் இஸ்ரேலின் E1 குடியேற்றத் திட்டத்தை E4 நாடுகளின் கூட்டமைப்பு கடுமையாக கண்டித்துள்ளது.</p><h2>இஸ்ரேலின் E1 குடியேற்றத் திட்டம்</h2><p>
மேற்கு கரையின் E1 பகுதியில் புதிய கட்டுமானத்திற்கான ஒப்பந்தப் புள்ளிகளை வெளியிடும் இஸ்ரேலின் முடிவை எதிர்த்து பிரித்தானியா, ஜேர்மனி, பிரான்ஸ் மற்றும் இத்தாலி ஆகிய E4 நாடுகளின் கூட்டமைப்பு கண்டித்து கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.</p><p> இஸ்ரேலின் இந்த நடவடிக்கை ஏற்றுக் கொள்ள முடியாது என E4 நாடுகளின் கூட்டமைப்பு கண்டித்துள்ளது.</p><p> மேலும் இத்தகைய குடியேற்ற நடவடிக்கைகளை உலக நாடுகள் தீவிரமாக எதிர்த்து வருவதையும் அந்த கூட்டறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d1aa0320-4927-43a0-8d66-3b9d929c4331/26-6a87e2fb8f7c9.webp' /></p><p> அத்துடன் இந்த நடவடிக்கையானது எதிர்காலத்தில் இரு நாடுகளுக்கும் இடையிலான தீர்வுகளுக்கு நேரடி அச்சுறுத்தல்களை ஏற்படுத்துவதாகவும் E4 நாடுகள் எச்சரித்துள்ளன.</p><p> பாலஸ்தீனத்தின் மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதார கட்டுப்பாடுகளை சுட்டிக்காட்டியுள்ள E4 நாடுகள்,&nbsp; இந்த நேரத்தில் விரிவாக்க நடவடிக்கை என்பது கவலை ஏற்படுத்துவதாக உள்ளது என தெரிவித்துள்ளது.</p><p></p><h2> E4 நாடுகளின் நேரடி வேண்டுகோள்கள்</h2><p>E1 குடியேற்றத் திட்டம் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளையும் இஸ்ரேல் உடனடியாக நிறுத்த வேண்டும் என்று E4 நாடுகள் கோரிக்கை வைத்துள்ளன.</p><p>மேலும் வணிக நிறுவனங்கள் கட்டுமான பணிகளுக்கான ஒப்பந்தங்களுக்கு விண்ணப்பிக்க வேண்டாம் என்றும் வலியுறுத்தியுள்ளன.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p>&nbsp;<br></p>]]></content>
            <updated>2026-08-21T05:32:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாடொன்றில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/earthquake-in-peru-1787289886"></link>
            <id>https://ibctamil.com/article/earthquake-in-peru-1787289886</id>
            <summary type="text">பெரு நாட்டின் தென்பிராந்தியத்தில் உள்ள ஆயாகுச்சோவில் 7.2 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

நிலநடுக்க மையத்திற்கு அருகில் உள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p>பெரு நாட்டின் தென்பிராந்தியத்தில் உள்ள ஆயாகுச்சோவில் 7.2 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.</p><p>

நிலநடுக்க மையத்திற்கு அருகில் உள்ள ஒன்பது மாவட்டங்களில் இது கடுமையான அதிர்வாக உணரப்பட்ட போதிலும், இதுவரை எந்தவித பாதிப்புகளும் ஏற்படவில்லை அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
</p><p>
அந்நாட்டு நேரப்படி வியாழக்கிழமை பிற்பகல் 1:00 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், கொராகோராவுக்கு வடக்கே 35 கிலோமீற்றர் தொலைவில், பூமிக்கு அடியில் 108 கிலோமீற்றர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.</p><p></p><h2>தயார் நிலையில் மீட்புக் குழுக்கள்</h2><p>

பூமியின் மிக ஆழமான பகுதியில் இது உருவானதால், தலைநகர் லிமா உட்பட அந்நாட்டின் பல பிராந்தியங்களில் இந்த அதிர்வு உணரப்பட்ட போதிலும், எவ்வித கடுமையான பாதிப்புகளையும் இது ஏற்படுத்தவில்லை என பெருவின் புவிப்பௌதிக நிறுவனத்தின் (IGP) தலைவர் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6b9b1acd-ae89-490e-a01c-460d8e44be88/26-6a87e2aca9d2d.webp' /></p><p>

எவ்வாறாயினும், துரிதப் மீட்புக் குழுக்களும் உள்ளூர் அதிகாரிகளும் இணைந்து ஆபத்துக்கள் ஏற்படக்கூடிய பகுதிகளைத் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், இதுவரை சேதங்கள் எதுவும் பதிவாகவில்லை என்றும் தெரியவருகின்றது.&nbsp;&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/FJQcrzobjUcEaJJsEVOWpF" target="_blank">WHATSAPP </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-21T05:31:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் இருந்து சென்னைக்கு புறப்பட்ட சொகுசு கப்பல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/cordelia-cruise-return-chennai-from-jaffna-1787290354"></link>
            <id>https://jvpnews.com/article/cordelia-cruise-return-chennai-from-jaffna-1787290354</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp; இந்தியாவின் மும்பையிலிருந்து கடந்த 12ஆம் திகதி புறப்பட்ட கார்டெலியா குரூஸ் (Cordelia Cruises) சுற்றுலாப் பயணிகள் கப்பல் கடந்த 14 ஆம் திக...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp; இந்தியாவின் மும்பையிலிருந்து கடந்த 12ஆம் திகதி புறப்பட்ட கார்டெலியா குரூஸ் (Cordelia Cruises) சுற்றுலாப் பயணிகள் கப்பல் கடந்த 14 ஆம் திகதி யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை துறைமுகத்தை வந்தடைந்த நிலையில் இன்றைய தினம் மீண்டும் தனது பயணத்தை ஆரம்பித்துள்ளது.</p><p>

862 சுற்றுலாப் பயணிகளுடன் வருகை தந்த குறித்த கப்பல் இன்றைய தினம் காலை மீண்டும் காங்கேசன்துறை துறைமுகத்திலிருந்து சென்னை நோக்கிப் புறப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ce36d479-51c7-470e-8e5b-3c96bd6ed3e1/26-6a87e2f9551c1.webp' /></p><p>

இக்கப்பலில் லண்டன், இந்தியா, ஜேர்மனி, மொரீஷியஸ், அமெரிக்கா மற்றும் இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் வருகை தந்து இருந்தனர்.</p><p> இலங்கைதேநீர்

யாழ்ப்பாணத்தின் முக்கிய சுற்றுலாத் தலங்களை பார்வையிட்ட பின்னர் அவர்கள் மீண்டும் காங்கேசன்துறை துறைமுகத்திற்குத் திரும்பி கப்பல் மூலம் சென்னை நோக்கி பயணித்தனர்.</p>]]></content>
            <updated>2026-08-21T05:30:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[திருமண கொண்டாட்டத்திற்கு இடையில் செம ஷாக்கில் குடும்பத்தினர், அப்படி யார் வந்தது?... சிறகடிக்க ஆசை புரொமோ]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/siragadikka-aasai-serial-august-21-episode-1787289613"></link>
            <id>https://cineulagam.com/article/siragadikka-aasai-serial-august-21-episode-1787289613</id>
            <summary type="text">சிறகடிக்க ஆசை
அண்ணாமலை குடும்பத்தில் இப்போது கொண்டாட்டத்தின் உச்சமாக சென்று கொண்டிருக்கிறது. அண்ணாமலையின் அம்மா எல்லா விஷயங்களையும் மறந்து விடவே இப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<h2>சிறகடிக்க ஆசை</h2><p>
அண்ணாமலை குடும்பத்தில் இப்போது கொண்டாட்டத்தின் உச்சமாக சென்று கொண்டிருக்கிறது. அண்ணாமலையின் அம்மா எல்லா விஷயங்களையும் மறந்து விடவே இப்போது தனது பேரன்களுக்கு திருமணம் செய்துவைக்க ஆசைப்படுகிறார். </p><p>எனவே முத்து-மீனா, ரவி-ஸ்ருதி இருவருக்கும் மீண்டும் திருமணம் நடக்க இருக்கிறது.
இன்றைய எபிசோடில், வீட்டில் திருமண கொண்டாட்டங்கள் தான் நடக்கிறது. மீனாவிற்காக முத்து புதிய செயின், வளையல் எல்லாம் வாங்கிக்கொடுக்கிறார், அதில் மீனாவும் சந்தோஷப்படுகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5433d871-2529-491a-b608-7e91be4b4d96/26-6a87e00f5511e.webp' /></p><p> </p><p>வீட்டில் எல்லோரும் சூழ்ந்து கொண்டிருக்க மெஹந்தி விசேஷம் நடக்கிறது. எல்லா பெண்களும் கையில் மெஹந்தி வைத்துக்கொண்டிருக்க யார் கையில் அதிகம் கலர் பிடிக்கிறது என்பதை காண ஆவலாக உள்ளனர். </p><p>அடுத்து குடும்பத்தினர் ஒன்றாக அமர்ந்து பாடல் பாடி சந்தோஷமாக இருக்கிறார்கள்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c6c426e8-f5e4-4e9b-b5c0-3f51b041cc18/26-6a87e01016945.webp' /></p><h2>புரொமோ
</h2><p>நாளைய எபிசோடின் புரொமோவில், வீட்டிற்கு சத்யா மற்றும் ரேகா வருகிறார்கள். அப்போது திடீரென சிந்தாமணி என்ட்ரி கொடுக்க குடும்பமே ஷாக் ஆகிறார்கள். </p><p>விஜயா அவள் ஏன் இங்கே வந்தார் என கேட்க, நாம் இப்போது உறவினர்கள் அதான் வந்தேன் என்கிறார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/35d83c6a-ad00-45bb-8319-f506d9a3e896/26-6a87e010c8a20.webp' /></p>]]></content>
            <updated>2026-08-21T05:20:26+00:00</updated>
        </entry>
    </feed>
