<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-08-11T10:36:56+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[த்ரிஷா பாட்டிக்கு 98வது பிறந்தநாள்: குடும்ப புகைப்படத்தை பார்த்து வியந்த ரசிகர்கள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/trisha-krishnan-celebrate-grandmother-98-birthday-1786442405"></link>
            <id>https://manithan.com/article/trisha-krishnan-celebrate-grandmother-98-birthday-1786442405</id>
            <summary type="text">Trisha Grandmother&#039;s Birthday : நடிகை த்ரிஷா கிருஷ்ணன் தனது பாட்டியின் 98வது பிறந்தநாளை வெகுவிமர்சையாக கொண்டாடி தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இண...</summary>
            <content type="html"><![CDATA[<p>Trisha Grandmother's Birthday : நடிகை த்ரிஷா கிருஷ்ணன் தனது பாட்டியின் 98வது பிறந்தநாளை வெகுவிமர்சையாக கொண்டாடி தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளதுடன் ரசிகர்களின் வாழ்த்துக்களையும் குவித்து வருகின்றது.&nbsp;</p><h2>நடிகை த்ரிஷா பதிவு வைரல்</h2><p>த்ரிஷா சமீபத்தில் தனது அம்மா உமாவின் 70வது பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டிருந்தார். அந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், “த்ரிஷாவின் அம்மாவுக்கு 70 வயதா? பார்த்தால் அந்த வயது போலவே தெரியவில்லை” என்று ஆச்சரியத்துடன் கருத்து தெரிவித்து வந்தனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c56ea939-2db0-409c-af47-e807c1432a10/26-6a7af9ad958ff.webp' /></p><p>இந்நிலையில், தற்போது த்ரிஷாவின் பாட்டி தனது 98வது பிறந்தநாளை கொண்டாடியிருப்பது ரசிகர்களின் கவனத்தை மேலும் ஈர்த்துள்ளது.

98வது பிறந்தநாள் கொண்டாட்டம்
த்ரிஷாவின் பாட்டியின் பிறந்தநாளை முன்னிட்டு கேக் வெட்டி குடும்பத்தினர் கொண்டாடியுள்ளனர்.</p><p>அந்த மகிழ்ச்சியான தருணத்தின் புகைப்படத்தை த்ரிஷா இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார்.

புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், 98வது பிறந்தநாளை கொண்டாடுவது மிகப்பெரிய பாக்கியம் என்றும், த்ரிஷாவின் பாட்டிக்கு தங்களது பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்தும் வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/89695cc2-d1b2-4855-a268-861045b1d25e/26-6a7af9ae4cb47.webp' /></p><p></p><p>மேலும், அவரை பார்த்தால் 98 வயது என்று சொல்ல முடியாத அளவுக்கு இளமையாக இருப்பதாகவும் ரசிகர்கள் வியந்து வருகின்றனர்.

த்ரிஷாவின் குடும்பத்தில் தலைமுறை தலைமுறையாக பெண்கள் இளமையான தோற்றத்துடன் இருப்பதாகவும் ரசிகர்கள் குறிப்பிட்டு வருகின்றனர். </p><p>குறிப்பாக, த்ரிஷாவின் பாட்டி, அவரது அம்மா உமா மற்றும் த்ரிஷா ஆகியோரை ஒப்பிட்டு, இந்த குடும்பத்தில் பெண்களுக்கு வயது கூடுவதையே தெரியவில்லை என ரசிகர்கள் கலகலப்பாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9d4a457f-9303-46f5-92bf-ed44a33251d6/26-6a7af9af000c0.webp' /></p><p></p><p>
ஒரே புகைப்படத்தில் நான்கு தலைமுறைகள்
இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தின் புகைப்படத்தில் நான்கு தலைமுறையைச் சேர்ந்த பெண்கள் இடம்பெற்றிருப்பதாக ரசிகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.</p><p> த்ரிஷாவின் பாட்டி, அம்மா உமா, த்ரிஷா மற்றும் அவர்களின் செல்லப்பிராணியான இஸ்ஸி ஆகியோரை இணைத்து, இது நான்கு தலைமுறைகளின் பாசத்தையும் குடும்ப ஆசீர்வாதத்தையும் வெளிப்படுத்தும் புகைப்படம் என ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் கூறி வருகின்றனர். குறித்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் படு வைராலாகியுள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <u><b><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></b></u>&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-11T10:31:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் மூன்று வாகனங்கள் மோதி விபத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/three-vehicle-collision-on-the-southern-expressway-1786444278"></link>
            <id>https://jvpnews.com/article/three-vehicle-collision-on-the-southern-expressway-1786444278</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;மாத்தறையில் இருந்து கொழும்பு நோக்கிச் செல்லும் பாதையில், தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இன்று (11) காலை மூன்று வாகனங்கள் மோதி விபத்துக்குள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;மாத்தறையில் இருந்து கொழும்பு நோக்கிச் செல்லும் பாதையில், தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இன்று (11) காலை மூன்று வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.</p><p>



அதிவேக நெடுஞ்சாலையின் கொக்மாதுவ மற்றும் இமதுவ பகுதிகளுக்கு இடையே, 115 ஆவது கிலோமீற்றர் தூண் அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.



இந்த விபத்தில் வாகனங்களில் ஒன்று கவிழ்ந்ததுடன், இருவர் காயமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aa25c8a9-660e-4396-a945-c1ede4209c01/26-6a7af9f7beb8a.webp' /></p><p>&nbsp;மேலும் விபத்து தொடர்பிலான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-08-11T10:29:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிரியாவின் முன்னாள் ஜனாதிபதிக்கு மரணதண்டனை விதிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/death-sentence-imposed-on-syrias-former-president-1786443409"></link>
            <id>https://ibctamil.com/article/death-sentence-imposed-on-syrias-former-president-1786443409</id>
            <summary type="text">&amp;nbsp;சிரியாவின் முன்னாள் ஜனாதிபதி பஷார் அல்-அசாத் உட்பட&amp;nbsp;மூவருக்கு &amp;nbsp;உள்நாட்டு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.

உள்நாட்டுப் போரின்போதா...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;சிரியாவின் முன்னாள் ஜனாதிபதி பஷார் அல்-அசாத் உட்பட&nbsp;மூவருக்கு &nbsp;உள்நாட்டு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.</p><p>

உள்நாட்டுப் போரின்போதான ‘போர்க்குற்றங்கள்’ மற்றும் ‘மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள்’ ஆகிய குற்றச்சாட்டுகளின் பேரில் மேற்கண்ட தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.</p><h2>அசாத்&nbsp;&nbsp;இல்லாத நிலையில் மரண தண்டனைத் தீர்ப்பு</h2><p>பஷார் அல்-அசாத் சிரியாவில் இல்லாத நிலையில் இந்த மரண தண்டனைத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. டிசம்பர் 2024-ல் கிளர்ச்சியாளர்கள் தலைநகர் டமாஸ்கஸைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து, அசாத் தனது குடும்பத்துடன் ரஷ்யாவின் மொஸ்கோவிற்குத் தப்பிச் சென்றார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d7e08db6-de94-4f99-83ad-ff772666ee89/26-6a7af80e3ba2e.webp' /></p><p>
</p><p>
பஷார் அல்-அசாத்துடன் சேர்ந்து அவரது தம்பியான மாஹெர் அல்-அசாத் மற்றும் முன்னாள் பாதுகாப்பு அதிகாரி மற்றும் அசாத்தின் உறவினரான ஆதிப் நஜீப் ஆகியோருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>முன்னாள் பாதுகாப்பு அதிகாரி நீதிமன்றில் முன்னிலை</h2><p>

மேலும் ஆதிப் நஜீப் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட நிலையில், அசாத் மற்றும் அவரது தம்பியை சர்வதேச அளவில் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6f3b9a2f-0e70-4681-9fe8-c44525230996/26-6a7af80ee27c0.webp' /></p><p>
</p><p>
சிரியாவில் 14 ஆண்டுகள் நீடித்த உள்நாட்டுப் போரின் போது, திட்டமிட்ட கொலைகள், சித்திரவதை, 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளைக் கொன்றது மற்றும் சட்டவிரோதக் காவல் போன்ற மனிதநேயமற்ற குற்றங்களுக்காக இந்தத் தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது.
</p><p>

சிரியாவில் அசாத்தின் 24 ஆண்டுகால சர்வாதிகார ஆட்சி வீழ்ந்த பிறகு, அங்கு பொறுப்பேற்றுள்ள புதிய இடைக்கால அரசு முன்னாள் ஆட்சியாளர்களுக்கு எதிராகத் தொடங்கிய சட்ட நடவடிக்கைகளின் முதல் மரண தண்டனைத் தீர்ப்பு இதுவாகும்.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-11T10:23:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரான் அச்சுறுத்தலால் ரகசிய விமானத்தில் பறந்த ட்ரம்ப்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/trump-flew-secretly-amid-iran-threat-1786438975"></link>
            <id>https://news.lankasri.com/article/trump-flew-secretly-amid-iran-threat-1786438975</id>
            <summary type="text">Trump Flew Secretly Amid Iran Threat: ஈரான் அச்சுறுத்தலால் ட்ரம்ப் ரகசியமாக சிறிய விமானத்தில் பயணித்தது தெரியவந்துள்ளது.

ஈரான் அச்சுறுத்தலின் காரணம...</summary>
            <content type="html"><![CDATA[<p>Trump Flew Secretly Amid Iran Threat: ஈரான் அச்சுறுத்தலால் ட்ரம்ப் ரகசியமாக சிறிய விமானத்தில் பயணித்தது தெரியவந்துள்ளது.</p><h2>

ஈரான் அச்சுறுத்தலின் காரணமாக...</h2><p>அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப், துருக்கியில் நடைபெற்ற நேட்டோ உச்சி மாநாட்டிற்குப் பிறகு, ஈரான் சார்ந்த கொலை அச்சுறுத்தலின் காரணமாக, வழக்கமான Air Force One விமானத்தில் அல்லாமல், சிறிய Air Force C-32A விமானத்தில் ரகசியமாக புறப்பட்டார்.</p><p>

மிகுந்த பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3cddaaed-37b4-4d69-a1ce-f0cde4612975/26-6a7ae54145cda.webp' /></p><h2>கேட்டரிங் லொறி மூலம் மறைமுகமாக..</h2><p>ஊடகங்களும், சில வெள்ளை மாளிகை அதிகாரிகளும் ட்ரம்ப் பழைய Air Force One-இல் புறப்பட்டதாக நம்பினர். ஆனால் உண்மையில், அவர் விமான நிலையத்தில் உள்ள கேட்டரிங் லொறி மூலம் மறைமுகமாக சிறிய விமானத்திற்கு மாற்றப்பட்டார்.
</p><p>
புதிய Air Force One (Qatar வழங்கிய விமானம்) மாநாட்டில் பயன்படுத்தப்பட்டிருந்தாலும், அச்சுறுத்தல் காரணமாக அதைப் பயன்படுத்தாமல், பாதுகாப்பான திட்டம் வகுக்கப்பட்டது.</p><p> </p><p></p><p>ஊடகங்களுக்கு “ஜன்னல் திரைகளை மூடிக்கொள்ளுங்கள்” என அறிவுறுத்தப்பட்டதால், அவர்கள் உண்மையான விமானத்தை அறிய முடியவில்லை.
</p><p>
ட்ரம்ப் புறப்பட்ட சிறிய விமானம் இரவு 10.20 மணிக்கு பிரித்தானியாவில் தரையிறங்கியது. சில நிமிடங்களுக்குப் பிறகு, ஊடகங்களை ஏற்றிச் சென்ற பழைய Air Force One தரையிறங்கியது.
</p><p>
இது அமெரிக்கா-ஈரான் இடையிலான பதற்றத்தை வெளிப்படுத்தும் சம்பவமாகும். ஜனாதிபதியின் பாதுகாப்பிற்காக வெள்ளை மாளிகை மேற்கொண்ட இந்த ரகசிய நடவடிக்கை, உலகளவில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-11T10:20:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆகஸ்ட் 15ஆம் தேதி விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சுதந்திர தின சிறப்பு திரைப்படங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/independence-day-special-movies-in-vijay-tv-1786442401"></link>
            <id>https://cineulagam.com/article/independence-day-special-movies-in-vijay-tv-1786442401</id>
            <summary type="text">ஆகஸ்ட் 15-ஆம் தேதி சுதந்திர தின சிறப்பாக மூன்று திரைப்படங்கள் விஜய் டிவியில் ஒளிபரப்பாகின்றன.

ஆகஸ்ட் 15

தீபாவளி, பொங்கல் போன்ற சிறப்பு நாட்களில்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஆகஸ்ட் 15-ஆம் தேதி சுதந்திர தின சிறப்பாக மூன்று திரைப்படங்கள் விஜய் டிவியில் ஒளிபரப்பாகின்றன.</p><p></p><p>
</p><h2>
ஆகஸ்ட் 15
</h2><p>
தீபாவளி, பொங்கல் போன்ற சிறப்பு நாட்களில் தொலைக்காட்சியில் என்னென்ன திரைப்படங்கள் ஒளிபரப்பாகின்றன என்பதை தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆவலுடன் இருப்பார்கள்.</p><p> <img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2b178fb3-366a-4c24-a438-e566d748d830/26-6a7af2a53a096.webp' /></p><p>அந்த வகையில் வருகிற ஆகஸ்ட் 15-ஆம் தேதி சுதந்திர தின சிறப்பாக மூன்று சூப்பர் ஹிட் திரைப்படங்கள் விஜய் டிவியில் ஒளிபரப்பாகின்றன. அதற்கான ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/487be78f-4e1b-4d7f-871a-a420666b571b/26-6a7af3d7b81ea.webp' /></p><p>
</p><h2>சிறப்பு திரைப்படங்கள்
</h2><p>
உலகளவில் மாபெரும் வசூல் வேட்டையாடிய 'துரந்தர்' திரைப்படத்தின் முதல் பாகம் ஆகஸ்ட் 15 காலை 8:30 மணிக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாகிறது.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/xdwMo8BJhJg" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p>
</p><p>
இதை தொடர்ந்து, லெஜெண்ட் சரவணன் நடிப்பில் உருவாகி மாபெரும் வெற்றி பெற்ற 'லீடர்' திரைப்படம் மதியம் 12 மணிக்கு ஒளிபரப்பாகிறது.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/S9L62wj81Vk" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p>
</p><p>
இதன்பின், மதியம் 3 மணிக்கு அபிஷன் ஜீவிந்த் மற்றும் அனஸ்வரா ராஜன் நடிப்பில் வெளியான 'வித் லவ்' திரைப்படம் ஒளிபரப்பாகிறது.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/3-d-6waIMdI" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-08-11T10:20:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[முத்துராஜவெலயில் 3 புதிய எரிபொருள் சேமிப்புத் தொட்டிகள் : கிடைத்தது அனுமதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/three-new-fuel-storage-tanks-at-muthurajawela-1786442569"></link>
            <id>https://ibctamil.com/article/three-new-fuel-storage-tanks-at-muthurajawela-1786442569</id>
            <summary type="text">முத்துராஜவெல முனையத்தில் மூன்று புதிய எரிபொருள் சேமிப்புத் தொட்டிகளை அமைப்பதற்கான ஒப்பந்தத்தை வழங்குவதற்கு எரிசக்தி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட யோச...</summary>
            <content type="html"><![CDATA[<p>முத்துராஜவெல முனையத்தில் மூன்று புதிய எரிபொருள் சேமிப்புத் தொட்டிகளை அமைப்பதற்கான ஒப்பந்தத்தை வழங்குவதற்கு எரிசக்தி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.</p><p>இலங்கை பெட்ரோலிய மொத்த சேமிப்பு முனைய நிறுவனத்தின் நிதியைப் பயன்படுத்தி 15,000 கனமீற்றர் கொள்ளளவு கொண்ட இரண்டு எரிபொருள் சேமிப்புத் தொட்டிகளையும் 10,000 கனமீற்றர் கொள்ளளவு கொண்ட மற்றொரு எரிபொருள் சேமிப்புத் தொட்டியையும் அமைப்பதற்காக 2025 ஜூன் 2 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டிருந்தது.</p><p>

 

இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் போது சுற்றாடல், சட்ட மற்றும் ஏனைய தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காகப் பின்பற்றப்பட வேண்டிய வழிமுறைகள் குறித்து சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடி பொருத்தமான தீர்மானங்களை எடுக்குமாறு மின்சக்தி மற்றும் சுற்றாடல் அமைச்சர்களுக்கு அறிவுறுத்துவதற்கு கடந்த ஜூலை 20 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.</p><p></p><h2>முன்வைக்கப்பட்ட யோசனை&nbsp;&nbsp;</h2><p>
</p><p>
 

அதன்படி, மத்திய சுற்றாடல் அதிகார சபையினால் விதிக்கப்பட்டுள்ள பரிந்துரைகள் மற்றும் நிபந்தனைகள் குறித்த கொள்முதல் ஒப்பந்தத்தில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், வனவிலங்கு மற்றும் தாவரங்கள் கட்டளைச் சட்டத்தின் விதிகளுக்கு அமைவாக இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அமைச்சர்கள் அமைச்சரவைக்கு தெளிவுபடுத்தியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/28b1c1a0-7967-4165-baba-0798b82dcf03/26-6a7af6f63751e.webp' /></p><p>
</p><p>
 

சர்வதேச போட்டித்தன்மை மிக்க விலைமனுக்களைக் கோரும் நடைமுறையின் கீழ் பெறப்பட்ட விலைமனுக்களில், உயர் மட்டக் கொள்முதல் குழுவினால் பரிந்துரைக்கப்பட்ட குறைந்த விலைமனுதாரரான M/s Indo-East Engineering &amp; Construction (Lanka) (Private) Limited மற்றும் Ceylex Engineering (Private) Limited கூட்டுப் பங்காளித்துவத்திற்கு இந்த ஒப்பந்தத்தை வழங்குவதற்காக எரிசக்தி அமைச்சரினால் யோசனை சமர்ப்பிக்கப்பட்டது.</p><p>
 

இவ்வொப்பந்தத்தின் பெறுமதி 3.04 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மற்றும் 2,796.14 மில்லியன் இலங்கை ரூபாயாகும் என்பதுடன், இத்தொகை பெறப்பட்ட பெறுமதி கூட்டப்பட்ட வரியிலிருந்து (VAT) விலக்களிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.</p><p>&nbsp;</p><p>&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-11T10:17:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலகக்கிண்ணத்திற்கு நேரடித் தகுதிபெற்ற ஆப்கானிஸ்தான்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/afghanistan-team-direct-qualify-for-2027-world-cup-1786443528"></link>
            <id>https://news.lankasri.com/article/afghanistan-team-direct-qualify-for-2027-world-cup-1786443528</id>
            <summary type="text">Afghanistan team direct qualify to play world cup 2027: ஆப்கானிஸ்தான் அணி 2027 உலகக்கிண்ணத் தொடருக்கு நேரடித் தகுதி பெற்றது. 

அயர்லாந்தை வீழ்த்திய ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Afghanistan team direct qualify to play world cup 2027: ஆப்கானிஸ்தான் அணி 2027 உலகக்கிண்ணத் தொடருக்கு நேரடித் தகுதி பெற்றது. </p><p>

அயர்லாந்தை வீழ்த்திய ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி, அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஒருநாள் உலகக்கிண்ணத் தொடரில் விளையாட நேரடித் தகுதிப் பெற்றது.&nbsp;</p><h2>2027 உலகக்கிண்ணத் தொடர் </h2><p>

2027 ஒருநாள் உலகக்கிண்ணத் தொடர் தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே மற்றும் நமீபியா நாடுகளில் நடைபெற உள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6572603a-5c3e-4922-b9d9-6514b06134d1/26-6a7af70acb9d3.webp' /></p><p></p><p>
இந்தத் தொடரில் விளையாட, ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசையில் முதல் 8 இடங்களைப் பிடிக்கும் அணிகள் நேரடியாக தகுதிபெறும். </p><p>

அந்த வகையில், போட்டியை நடத்தும் தென் ஆப்பிரிக்கா மற்றும் ஜிம்பாப்வே அணிகளைத் தவிர்த்து 7 அணிகள் நேரடித் தகுதி பெற்றுள்ளன.&nbsp;</p><h2>ஆப்கானிஸ்தான்&nbsp;</h2><p>
இந்த நிலையில், அயர்லாந்து அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணி 8வது அணியாக நேரடித் தகுதி பெற்றுள்ளது. </p><p>

இதன்மூலம் ஆப்கானிஸ்தான் அணி தொடர்ச்சியாக 4வது முறையாக ஒருநாள் உலகக்கிண்ணத் தொடரில் விளையாட உள்ளது.</p><p> 

முன்னதாக, இரண்டு முறை சாம்பியனான மேற்கிந்திய தீவுகள் அணி நேரடித் தகுதி பெறும் வாய்ப்பை இழந்தது. எனினும் தகுதிச்சுற்று மூலம் அந்த அணி நுழைய வாய்ப்புள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4f9c6139-8e69-4890-acfb-56ca9c1691b3/26-6a7af70b91a9b.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-11T10:16:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ்ப்பாண மக்களின் வெளிநாடு மோகத்தால் மாயமாகும் பெரும் தொகை பணம்; பொலிஸார் எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/money-fraud-jaffna-district-sending-people-abroad-1786443529"></link>
            <id>https://jvpnews.com/article/money-fraud-jaffna-district-sending-people-abroad-1786443529</id>
            <summary type="text">&amp;nbsp; வெளிநாடுகளுக்கு அனுப்புவதாகத் தெரிவித்து யாழ். மாவட்டத்தில் பண மோசடி செய்யும் சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன. 

 கடந்த சில வாரங...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; வெளிநாடுகளுக்கு அனுப்புவதாகத் தெரிவித்து யாழ். மாவட்டத்தில் பண மோசடி செய்யும் சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன. 

 கடந்த சில வாரங்களுக்குள் ஏழரைக் கோடி ரூபாவுக்கும் மேற்பட்ட தொகை மோசடி செய்யப்பட்டுள்ளதாக , பொலிஸ் வட்டாரங்களில் இருந்து அறிய முடிகின்றது.</p><p>
 

இவ்வாறான நிலையிலேயே கடந்த சில வாரங்களாக இத்தகைய மோசடிகள் சடுதியாக அதிகரித்துள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

 
இது தொடர்பாக 10 முறைப்பாடுகளும் பதிவு செய்யப் பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0d17cbe6-b4f5-45cc-aee3-397ba9b7c80b/26-6a7af70ae63fd.webp' /></p><h2>கனடா, பிரிட்டன் அனுப்புவதாகவே&nbsp; விளம்பரங்கள்</h2><p> </p><p>அதிகபட்சமாக நபரொருவர் ஒன்றரைக் கோடி ரூபாவை இழந்துள்ளார் என்றும் கூறப்பட்டுள்ளது.

 
சமூக வலைத்தளங்களில் வெளியாகும் போலியான விளம்பரங்களை நம்பியே பெருமளவானோர் பணத்தை இழந்துள்ளனர்.</p><p></p><p>
</p><p>
 கனடா, பிரிட்டன் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு அனுப்புவதாகவே அந்த விளம்பரங்கள் அமைந்துள்ளன.

 எந்தச் செலவும் இல்லாமல் வெளிநாடுகளுக்குச் செல்லலாம் என்ற விளம்பரங்களை நம்பி பொதுமக்கள் அவர்களைத் தொடர்பு கொள்ளுகின்றனர்.
</p><p>
 காலப் போக்கில் மக்களின் நம்பகத்தன்மையைப் பெறும் மோசடியாளர்கள் அவர்களின் வங்கித் தரவுகளைப் பெற்றுக் கொள்கின்றனர்.</p><p></p><p> </p><p>

 
அதன் பின்னர் ஒரு தொகைப் பணத்தை வங்கியிலிட்டுக் காட்டுமாறு கூறிவிட்டு கடவுச்சொல்லைத் திருடி நள்ளிரவு 12 மணிக்குப் பின்னர் இந்த மோசடியில் ஈடுபடுகின்றனர் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>

 
எனவே மோசடியாளர்களிடம் மக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என்றும் பொலிஸ் வட்டாரங்கள் மேலும் குறிப்பிட்டுள்ளன.</p>]]></content>
            <updated>2026-08-11T10:16:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெள்ள அபாய முன்னறிவிப்புகள் - உள்ளூராட்சி மன்றங்களுக்கு ஆளுர் வழங்கியுள்ள அறிவுறுத்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/governor-instructions-to-local-government-councils-1786441528"></link>
            <id>https://tamilwin.com/article/governor-instructions-to-local-government-councils-1786441528</id>
            <summary type="text">குறுகிய காலத்தில் அதிகளவான மழை வீழ்ச்சி பதிவாகி வெள்ளப்பெருக்கு
ஏற்படக்கூடும் என காலநிலை முன்னறிவிப்புகள் வெளியாகி வருகின்ற நிலையில்&amp;nbsp; உள்ளூராட்ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>குறுகிய காலத்தில் அதிகளவான மழை வீழ்ச்சி பதிவாகி வெள்ளப்பெருக்கு
ஏற்படக்கூடும் என காலநிலை முன்னறிவிப்புகள் வெளியாகி வருகின்ற நிலையில்&nbsp; உள்ளூராட்சி மன்றங்கள் தயார்நிலையில் இருக்குமாறு&nbsp;ஆளுர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.</p><p> வெள்ள அபாய முன்னறிவிப்புகள் வெளியாகி வரும் நிலையில், அதனை எதிர்கொள்ள வடக்கு மாகாணத்திலுள்ள அனைத்து உள்ளூராட்சி மன்றங்களும் மனிதவளம்,
நிதி, வாகனங்கள் மற்றும் அவசரகால உபகரணங்களுடன் முழுமையான தயார்நிலையில்
இருக்க வேண்டியது அவசியம் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன்
வலியுறுத்தியுள்ளார்.</p><p>

வடக்கு மாகாண நிதி மற்றும் திட்டமிடல், சட்டமும் ஒழுங்கும், காணி, மின்சக்தி,
வீடமைப்பு மற்றும் நிர்மாணம், சுற்றுலா, உள்ளூராட்சி, மாகாண நிர்வாகம்,
கிராமிய அபிவிருத்தி, வீதி அபிவிருத்தி, மோட்டார் போக்குவரத்து மற்றும்
போக்குவரத்து அமைச்சுகளின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் இன்று (11.08.2026)
ஆளுநர் செயலகத்தில் ஆளுநரின் தலைமையில் நடைபெற்றபோதே அவர் இவ்வாறு
தெரிவித்தார்.</p><h2>&nbsp;உள்ளூராட்சி மன்றங்களின் செயற்பாடுகள்</h2><p>

கூட்டத்தில் உள்ளூராட்சி மன்றங்களின் செயற்பாடுகள் தொடர்பாக விரிவாக
ஆராயப்பட்டதுடன், தெருநாய்களுக்கான கருத்தடைச் சிகிச்சை வேலைத்திட்டத்தின்
முன்னேற்றம் மற்றும் லஞ்சீற் பாவனையைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள்
குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b704d006-fdb3-45b9-bf17-ea475654e8a5/26-6a7af4b9e50ce.webp' /></p><p> </p><p>லஞ்சீற் பாவனையைக் கட்டுப்படுத்துவதில்
முன்னேற்றம் ஏற்பட்டிருந்தாலும், அதனை மேலும் வலுப்படுத்த வேண்டிய தேவை
இருப்பதாக ஆளுநர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p> இதற்கமைய, 2027ஆம் ஆண்டு தொடக்கம்
மேலும் கடுமையான அமுலாக்க நடைமுறைகள் பின்பற்றப்படவுள்ளதாக உள்ளூராட்சி
ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
</p><p>
அத்துடன், வலிகாமம் தெற்கு மற்றும் வலிகாமம் வடக்கு பிரதேசங்களில்
நீர்ப்பாசனத் திணைக்களத்துக்குச் சொந்தமான குளங்களை உள்ளூராட்சி மன்றங்கள்
ஊடாகத் தூர்வாருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும்
உள்ளூராட்சி ஆணையாளர் ஆளுநருக்கு அறிவித்துள்ளார்.</p><h2>கட்டட அனுமதிக்காக சமர்ப்பிக்கப்பட்ட வரைபடங்களுக்கும் நடைமுறை</h2><p>

கட்டட அனுமதிக்காக சமர்ப்பிக்கப்பட்ட வரைபடங்களுக்கும் நடைமுறையில்
நிர்மாணிக்கப்பட்ட கட்டடங்களுக்கும் இடையில் காணப்படும் வேறுபாடுகள் காரணமாக
குடிபுகு சான்றிதழ்களை வழங்குவதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாகவும், கட்டட
அனுமதிக்கு முரணாக அமைக்கப்பட்ட கட்டுமானங்களுக்கு எதிராக உள்ளூராட்சி
மன்றங்கள் நீதிமன்ற நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாகவும் கூட்டத்தில்
தெரிவிக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bc958bf9-99d2-4713-95e1-b548a8d5c0e9/26-6a7af4bab727f.webp' /></p><p>
</p><p>
எதிர்வரும் ஒக்டோபர் மாதத்தின் முதல் வாரத்திலிருந்து வடகிழக்கு பருவமழை
தாக்கம் அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதால், இடர்நிலை
முகாமைத்துவத்துக்குத் தேவையான அனைத்து முன்னாயத்தங்களையும் மேற்கொள்ளுமாறு
ஏற்கனவே உள்ளூராட்சி மன்றங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக உள்ளூராட்சி
ஆணையாளர் தெரிவித்துள்ளார். </p><p>அவசரநிலைக்குத் தேவையான நிதி ஒதுக்கீடுகள், வாகனங்கள்,
இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களை தயார்நிலையில் வைத்திருக்குமாறும்
அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>

'பிராஜா சக்தி' வேலைத்திட்டத்தின் கீழ் மாகாண சபைக்குச் சொந்தமான வீதிகள்
மற்றும் கட்டடங்களைப் புனரமைப்பதற்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், அதே
பணிகள் ஏனைய நிதி மூலங்களின் கீழ் மீள இடம்பெறாதவாறு திட்டங்களை ஒருங்கிணைத்து
நடைமுறைப்படுத்துமாறு ஆளுநர் அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.</p><p>

இதனைத் தொடர்ந்து, உள்ளூராட்சி அமைச்சின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும்
வீடமைப்புத் திட்டங்கள் மற்றும் ஏனைய அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றம்
மீளாய்வு செய்யப்பட்டது.</p><p> இரண்டாம் கட்ட வீடமைப்புத் திட்டம், டிட்வா
மீள்கட்டுமானத் திட்டம், நிரல் அமைச்சு மற்றும் மாவட்டச் செயலகங்கள் ஊடான நிதி
ஒதுக்கீடுகளின் கீழ் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் திருப்திகரமாக
முன்னெடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p> அதேவேளை, உள்ளூராட்சி
மன்றங்கள் தங்களது தொழில்நுட்பக் கொள்ளளவை மீறிய அளவில் அபிவிருத்திப் பணிகளை
முன்னெடுத்து வருவதாகவும் உதவி உள்ளூராட்சி ஆணையாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.</p><p>

உள்ளூராட்சி மன்றங்களுக்கு சேவைகளைப் பெற வருகை தரும் பொதுமக்களை
கண்ணியத்துடனும் மரியாதையுடனும் நடத்துமாறு அலுவலர்களுக்கு தெளிவான
அறிவுறுத்தல்களை வழங்குமாறும் ஆளுநர் வலியுறுத்தினார். </p><p>இது தொடர்பாக தனக்குப்
பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
</p><p>
வீதி அபிவிருத்தித் திணைக்களத்தின் செயற்பாடுகள் தொடர்பாக நடைபெற்ற
கலந்துரையாடலில், வீதிப் பணிகளுக்குத் தேவையான தாரைப் பெற்றுக்கொள்வதில்
நிலவும் சிக்கல்கள் மற்றும் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்ட சிலர்
கடமைகளைப் பொறுப்பேற்காத நிலை குறித்தும் ஆராயப்பட்டதுடன், அவற்றுக்கான தீர்வு
நடவடிக்கைகள் தொடர்பாக அதிகாரிகளுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
</p><p>
தொடர்ந்து கிராமிய அபிவிருத்தித் திணைக்களம், வடக்கு மாகாண வீதிப் பயணிகள்
போக்குவரத்து அதிகாரசபை, வடக்கு மாகாண சுற்றுலா அபிவிருத்திப் பணியகம் மற்றும்
மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் ஆகியவற்றின் செயற்பாட்டு முன்னேற்றங்களும்
விரிவாக மீளாய்வு செய்யப்பட்டன.
</p><h2>&nbsp;உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை</h2><p>
தற்போதைய காலப்பகுதி வடக்கு மாகாணத்துக்கு அதிகளவிலான உள்நாட்டு மற்றும்
வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை தரும் பருவமாக இருப்பதால், தமது
எல்லைக்குட்பட்ட சுற்றுலாத் தலங்களின் தூய்மையை உறுதிப்படுத்துவதில்
உள்ளூராட்சி மன்றங்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என ஆளுநர்
அறிவுறுத்தியுள்ளார். </p><p>மேலும், பொதுமக்கள் பொது இடங்களில் குப்பைகளை கொட்டும்
சம்பவங்கள் தொடர்பான சி.சி.ரி.வி. காணொலிப் பதிவுகளை உரிய பொலிஸ்
நிலையங்களுக்கு விரைவாக அனுப்பி சட்ட நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துமாறும்
அவர் பணிப்புரை வழங்கியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/874c69e3-89e9-402e-84b3-edf694e7102a/26-6a7af4bc7f2b7.webp' /></p><p>

இதனுடன், ஜனாதிபதி செயலகத்தின் கீழ் இயங்கும் தூய்மை இலங்கை செயலணி
வழங்கியுள்ள வழிகாட்டல்களுக்கு அமைவாக, வடக்கு மாகாணத்திற்கான ஒருங்கிணைந்த
கழிவு முகாமைத்துவ செயற்றிட்டம் தற்போது தயாரிக்கப்பட்டு வருவதாகவும்
கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.</p><p>

இக்கலந்துரையாடலில் வடக்கு மாகாண பிரதம செயலாளர், ஆளுநரின் செயலாளர்,
உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர், பிரதிப் பிரதம செயலாளர்கள் (நிதி, நிர்வாகம்,
திட்டமிடல் மற்றும் பொறியியல்), உள்ளூராட்சி ஆணையாளர், திட்டமிடல் பணிப்பாளர்,
மாநகர சபை ஆணையாளர்கள், நகர சபைகளின் செயலாளர்கள், மாகாணப் பணிப்பாளர்கள்,
பொறியியலாளர்கள், பிரதேச சபைகளின் செயலாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள்
கலந்துகொண்டனர்.</p><p>&nbsp;</p><p>&nbsp;</p><p><br></p>]]></content>
            <updated>2026-08-11T10:09:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kiyas Shafe</name>
            </author>
            <title type="text"><![CDATA[40 ஆண்டுகளுக்கு பின் புனரமைக்கப்படவுள்ள இலந்தைக் குளம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/40-year-renovation-ilanthai-kulam-rs-20-million-1786440668"></link>
            <id>https://tamilwin.com/article/40-year-renovation-ilanthai-kulam-rs-20-million-1786440668</id>
            <summary type="text">நாட்டின் கிராமிய பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கும் விவசாயத் துறையில்
மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதற்கும் அரசாங்கம் முன்னுரிமை அளித்து செயற்பட்டு
வருவத...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டின் கிராமிய பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கும் விவசாயத் துறையில்
மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதற்கும் அரசாங்கம் முன்னுரிமை அளித்து செயற்பட்டு
வருவதாக வெளி விவகாரம் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் பிரதி அமைச்சர்
அருண் ஹேமச்சந்திரா தெரிவித்துள்ளார்.</p><p>

திருகோணமலை, குச்சவெளி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட இலந்தைக் குளத்தின்
புனரமைப்புப் பணிகளை சுமார் 40 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று(11)
உத்தியோபூர்வமாக ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே இவ்வாறு
குறிப்பிட்டார்.</p><h2>புனரமைப்புத் திட்டம் முழுமையடையும் போது</h2><p>

குச்சவெளி பிரதேச செயலாளர் U.L. சியாவுல் ஹக் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்
பிரதி அமைச்சர் மேலும் உரையாற்றுகையில்,&nbsp;"நீண்டகாலமாகப் புனரமைக்கப்படாமல் கைவிடப்பட்டிருந்த இலந்தைக் குளத்தைச்
செப்பனிடுவதற்காக அரசாங்கத்தினால் ரூ. 20.1 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/48476823-28b0-4729-ad90-499cd5468533/26-6a7aefcc669fb.webp' /></p><p>
இப்புனரமைப்புத் திட்டம் முழுமையடையும் போது, சுமார் 120 ஏக்கர் வயல் நிலங்கள்
நேரடி நீர்ப்பாசன வசதியைப் பெறவுள்ளன.</p><p>

இதன் மூலம் அப்பகுதியின் விவசாய நடவடிக்கைகள் புத்துயிர் பெறுவதோடு, பல
விவசாயக் குடும்பங்களின் வாழ்வாதாரமும் பொருளாதாரமும் கணிசமாக வலுப்பெறும்.
</p><p>
தற்போது திருகோணமலை மாவட்டத்திலும், குச்சவெளி பிரதேசத்திலும் பல்வேறு
உட்கட்டமைப்பு மற்றும் கிராமிய அபிவிருத்தித் திட்டங்கள் அரசாங்கத்தினால்
தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p><h2>நீண்டகால பொருளாதார மறுமலர்ச்சி</h2><p>அதன் ஒரு முக்கிய அங்கமாகவே இக்குளப் புனரமைப்புப் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.</p><p>இது மாவட்டத்தின் நீண்டகால பொருளாதார மறுமலர்ச்சிக்கு பெரும் வழிகோலும்" எனத்
தெரிவித்தார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7a385c02-5c98-4ba1-86fb-0483cfb27d84/26-6a7aefcd6c2e6.webp' /></p><p>
குச்சவெளி பிரதேச மக்களின் நீண்டகால அபிவிருத்தி எதிர்பார்ப்புகளில் ஒன்றாக
இருந்த இக்கோரிக்கைக்கு இப்புனரமைப்புப் பணியின் மூலம் தீர்வு
காணப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய அப்பகுதி பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும்,
இத்திட்டத்தினைத் துரிதமாக முன்னெடுக்க அர்ப்பணிப்புடன் செயற்பட்ட குச்சவெளி
பிரதேச செயலாளர் மற்றும் கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர் உள்ளிட்ட அனைத்து அரச
அதிகாரிகளுக்கும் தமது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொண்டனர்.
</p><p>
இந்நிகழ்வில் மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்கள உதவி ஆணையாளர் என்.
விஸ்ணுதாசன், பிரதேச செயலக அதிகாரிகள், கமநல அமைப்புகளின் பிரதிநிதிகள்
மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6af5e9c4-d198-4eb0-a702-8263553ca8ed/26-6a7af00f9f52b.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/03ef73ba-7464-48c9-a3e5-1fd932c32fc8/26-6a7af010b57fb.webp' /></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-11T10:01:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாங்கள் வெல்ல முடியாதவர்கள் என்பதை உலகிற்கு நிரூபித்துள்ளோம் : ஈரான் பெருமிதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/proud-of-iran-we-are-invincible-1786441584"></link>
            <id>https://ibctamil.com/article/proud-of-iran-we-are-invincible-1786441584</id>
            <summary type="text">ஈரான் ஒரு “வலிமையான மற்றும் வெல்ல முடியாத சக்தி” என்பதை உலகிற்குக் காட்டியுள்ளது என ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி தெரிவித்துள்ளார்.

“ஈர...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரான் ஒரு “வலிமையான மற்றும் வெல்ல முடியாத சக்தி” என்பதை உலகிற்குக் காட்டியுள்ளது என ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி தெரிவித்துள்ளார்.
</p><p>
“ஈரானியர்களாகிய நீங்கள் ஒரு அற்புதத்தை நிகழ்த்தியுள்ளீர்கள்; நீங்கள் முழு உலகையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளீர்கள்,” என்று மேலும் கூறிய ஈரானிய வெளியுறவு அமைச்சர், மற்ற நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளிடமிருந்து இதை பலமுறை கேட்டிருப்பதாகவும் குறிப்பிட்டார்.</p><h2>அமெரிக்காவை இப்படி எதிர்ப்போம் என யாரும் நினைக்கவில்லை</h2><p>ஒரு சிறப்பு செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்றபோது ஈரானிய வெளியுறவு அமைச்சர் இதனை தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1ec699f6-eb1f-4c6f-90b3-b85cb1896f88/26-6a7af2ade782e.webp' /></p><p>
</p><p>
“ஈரான் அமெரிக்காவை இந்த அளவுக்கு எதிர்க்கும் என்று யாரும் நினைக்கவில்லை,” என்று ஈரானிய வெளியுறவு அமைச்சர் அராக்சி மேலும் கூறினார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-11T10:00:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ராஜித சேனாரத்னவிற்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/charge-sheet-filed-against-rajitha-senaratne-1786442225"></link>
            <id>https://jvpnews.com/article/charge-sheet-filed-against-rajitha-senaratne-1786442225</id>
            <summary type="text">&amp;nbsp; ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் முன்னாள் மீன்பிடி அமைச்சர் ராஜித சேனாரத்னவிற்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் முன்னாள் மீன்பிடி அமைச்சர் ராஜித சேனாரத்னவிற்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.</p><p>

 

மீன்பிடி அமைச்சராகப் பணியாற்றிய காலத்தில் கிரிந்த மீன்பிடித் துறைமுகத்தின் மணலை அகற்றும் நடவடிக்கையை கொரிய நிறுவனமொன்றிடம் ஒப்படைத்ததன் மூலம் அரசாங்கத்திற்கு நட்டத்தை ஏற்படுத்தியதாக குற்றம் சுமத்தியே, பிரதிவாதியான ராஜித சேனாரத்னவிற்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8ae3c77c-e3d7-4c23-afc2-81c2ee04b62a/26-6a7af1f31bc2f.webp' /></p><p></p>]]></content>
            <updated>2026-08-11T09:54:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[காத்திருக்கவைக்கும் பிரித்தானிய மருத்துவமனைகள்: பெண்ணொருவர் சந்தித்த வித்தியாசமான அனுபவம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/indian-women-face-long-wait-in-uk-hospital-1786441868"></link>
            <id>https://news.lankasri.com/article/indian-women-face-long-wait-in-uk-hospital-1786441868</id>
            <summary type="text">துபாயில் வாழும் பெண்ணொருவர், பிரித்தானிய மருத்துவமனைகளுக்கும் துபாய் மருத்துவமனைகளுக்கும் உள்ள வித்தியாசம் குறித்த ஒரு செய்தியைப் பகிர்ந்துள்ளார்.

...</summary>
            <content type="html"><![CDATA[<p>துபாயில் வாழும் பெண்ணொருவர், பிரித்தானிய மருத்துவமனைகளுக்கும் துபாய் மருத்துவமனைகளுக்கும் உள்ள வித்தியாசம் குறித்த ஒரு செய்தியைப் பகிர்ந்துள்ளார்.
</p><p>

மிருதுளா சிவகுமார் துபாயில் வாழ்ந்துவரும் இந்திய இளம்பெண். சமீபத்தில் தன் காலில் அடிபட்டதால் மருத்துவமனைக்குச் சென்றுள்ளார் அவர்.
</p><p>
அங்கு தான் சந்தித்த அனுபவம், முன்னொருமுறை பிரித்தானியாவில் சந்தித்த ஒரு அனுபவத்தை நினைவுக்குக் கொண்டுவந்ததாக தெரிவிக்கிறார் மிருதுளா.</p><h3>

காத்திருக்கவைக்கும் பிரித்தானிய மருத்துவமனைகள்</h3><p>

காலில் அடிபட்டதால் துபாயிலுள்ள மருத்துவமனைக்குச் சென்ற மிருதுளா, மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது, காலில் கட்டுப்போடுவது, மருந்துகள் வாங்குவது வரை, அனைத்துமே ஒரே மணி நேரத்தில் முடிந்துவிட்டதாகத் தெரிவிக்கிறார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/67b26616-468d-43f8-b4f7-a542c18247db/26-6a7af08e1acf5.webp' /></p><p>

அதே நேரத்தில் தான் ஒரு அவசர வேலையாக பிரித்தானியா சென்றிருந்த நேரத்தில், அவசர சிகிச்சைப் பிரிவில், மருத்துவரை சந்திக்கவே ஆறு மணி நேரம் காத்திருந்ததாகத் தெரிவிக்கிறார் மிருதுளா.&nbsp;</p><p></p><p>

இந்த தகவலை மிருதுளா சமூக ஊடகம் ஒன்றில் பகிர, அதைப் படித்த பலரும் தாங்களும் பிரித்தானியாவிலும் அமீரகத்திலும் உள்ள மருத்துவமனைகளில் தாங்கள் சந்தித்த வித்தியாசமான அனுபவங்களை நினைவுகூர்ந்துள்ளார்கள்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-11T09:51:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rusath</name>
            </author>
            <title type="text"><![CDATA[கழிவுகளை முகாமை செய்வது தொடர்பில் அரச திணைக்கள அதிகாரிகளுடன் உயர்மட்ட கலந்துரையாடல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/discussion-on-waste-management-1786440725"></link>
            <id>https://tamilwin.com/article/discussion-on-waste-management-1786440725</id>
            <summary type="text">மட்டக்களப்பு - மண்முனை தென் எருவில்பற்று பிரதேசத்தில்
சேகரிக்கப்படுகின்ற கழிவுகளை முறையாக முகாமை செய்து அவற்றை அகற்றுவது
தொடர்பில் துறைசார்ந்த அதிகா...</summary>
            <content type="html"><![CDATA[<p>மட்டக்களப்பு - மண்முனை தென் எருவில்பற்று பிரதேசத்தில்
சேகரிக்கப்படுகின்ற கழிவுகளை முறையாக முகாமை செய்து அவற்றை அகற்றுவது
தொடர்பில் துறைசார்ந்த அதிகாரிகளின் கருத்துக்களையும், ஆலோசனைகளையும் பெறும்
கூட்டம் இன்று (11.08.2026) களுதாவளையில் அமைந்துள்ள பிரதேசசபையின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.</p><p>மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜ்
தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி, கரையோரம்
பேணல் திணைக்களம், அனர்த்த முகாமைத்துவ பிரிவு, பொலிஸார், கடற்படை, பிரதேச
செயலகம், சுற்றாடல் பிரிவு, உள்ளிட்ட பல திணைக்களைங்களைச் சேர்ந்த அதிகாரிகள்
இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/867375ae-35b8-4d30-944b-632ead9dba22/26-6a7af0361983a.webp' /></p><h2>நாளாந்தம் சேகரிக்கப்படும் கழிவுகள்</h2><p>


மண்முனை தென் எருவில் பற்று பிரதேசபையினால் நாளாந்தம் சேகரிக்கப்படும்
கழிவுகள் இதுவரைகாலமும் களுவாஞ்சிகுடி கடற்கரைப் பகுதியில் கொட்டப்பட்டு
வருவதானல் அப்பகுதியைச் சூழவுள்ள மக்கள் பெரும் சுகாதாரப் பிரச்சினைகளை
எதிர்கொண்டு வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5c1e5c33-c7c1-40f0-850f-28ec1ab151f5/26-6a7af036e6960.webp' /></p><p> </p><p>அவற்றைத் தடுக்கும் முகமாகவும், எதிர்காலத்தில்
இவ்வாறு சேகரிக்கப்படும் கழிவுளை சிறந்த முறையில் முகாமை செய்வதற்காக வேண்டி
இதன்போது கலந்து கொண்டிருந்த திணைக்கள அதிகாரிகள் கருத்துக்களையும்,
ஆலோசனைகளையும் தெரிவித்தனர்.
</p><p>


அதற்கிணங்க அனைத்து திரணைக்கள அதிகாரிகளும் தற்போது கழிவுகள் கொட்டப்படும்
இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்ட பின் அவற்றை முகாமை செய்வது
தொடர்பில் மிகக் குறுகிய காலத்திற்குள் தீர்க்கமான முடிவெடுக்கப்பட்டு
அதற்குரிய திட்டம் தயாரிக்கப்பட்டு, அதனை நடைமுறைப்படுத்துவதற்கு பிரதேச
சபைக்கு வழங்குவது என இதன்போது தீர்மானிக்கப்பட்டது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d5150e81-47ab-41c5-a071-297765dbba43/26-6a7af037b9bca.webp' />
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/907390a8-802f-437a-8ddf-f27a48ee3e60/26-6a7af038922b9.webp' /></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-11T09:50:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[Ducati-யின் புதிய Monster V2 இந்தியாவில் அறிமுகம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/ducati-monster-v2-india-launch-rs-13-99-lakhs-1786441696"></link>
            <id>https://news.lankasri.com/article/ducati-monster-v2-india-launch-rs-13-99-lakhs-1786441696</id>
            <summary type="text">Ducati Monster V2 launch in India: Ducati இந்தியாவில் இரண்டு புதிய மொடல் பைக்குகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

புதிய Monster V2 மற்றும் Monster+பிரபல ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>Ducati Monster V2 launch in India: Ducati இந்தியாவில் இரண்டு புதிய மொடல் பைக்குகளை அறிமுகப்படுத்தியுள்ளது.</p><h2>

புதிய Monster V2 மற்றும் Monster+</h2><p>பிரபல மோட்டார் சைக்கிள் தயாரிப்பு நிறுவனம் டுகாட்டி (Ducati), தனது புதிய Monster V2 மற்றும் Monster+ மாடல்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.
</p><p>
இந்த புதிய தலைமுறை பைக்கின் விலை ரூ.13.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) முதல் தொடங்குகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ac6929a0-4002-45b8-9e66-62790164005e/26-6a7aefe26dfb4.webp' /></p><p>
</p><h2>2026 Monster V2</h2><p>Monster V2-இன் முக்கிய சிறப்பம்சம், புதிய 890cc V-Twin என்ஜின் ஆகும். இது Multistrada V2, Panigale V2 மற்றும் Streetfighter V2 மொடல்களிலும் பயன்படுத்தப்படும் சக்திவாய்ந்த என்ஜின்.</p><p> முந்தைய 937cc என்ஜினை விட சற்று குறைவான அளவாக இருந்தாலும், 111 ஹார்ஸ் பவர் மற்றும் 91.1 Nm டார்க் வழங்குகிறது.</p><p>4,000 முதல் 9,000 rpm வரை 80 சதவீதம் டார்க் கிடைப்பதால், வேகமான மற்றும் எளிதான ஓட்ட அனுபவத்தை தருகிறது.</p><p>
</p><p></p><p>புதிய aluminium monocoque chassis காரணமாக பைக்கின் எடை 5 கிலோ குறைக்கப்பட்டுள்ளது. இதனால் பைக் இன்னும் சுறுசுறுப்பாகவும், எளிதாகவும் இயக்கப்படலாம். </p><p>815 mm உயரம் கொண்ட சீட், விருப்பமாக 795 mm அல்லது 775 mm ஆக குறைக்கப்படலாம்.

Showa 43 mm USD fork முன்புற சஸ்பென்ஷன் மற்றும் பின்புற மோனோஷாக், தினசரி பயணத்திற்கும், ஸ்போர்ட்டி ரைடுக்கும் ஏற்றவாறு அமைக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8867a011-89e2-46aa-a3de-0d2124bf368d/26-6a7aefe322beb.webp' /></p><h2>

Monster+ </h2><p>Monster+ மாடலில் headlight cowl மற்றும் பாசஞ்சர் சீட் கவர் போன்ற கூடுதல் ஸ்டைலிங் அம்சங்கள் உள்ளன.

மேலும் Ducati Red, Iceberg White, Sport Livery ஆகிய நிறங்களில் கிடைக்கின்றன. </p><p>இதன் விலை ரூ.13.99 லட்சம் முதல் ரூ.14.45 லட்சம் வரை மாறுபடும்.
</p><p>
பைக்கில் 5-inch TFT டிஸ்ப்ளே, LED லைட்டிங், க்விக்‌ஷிப்டர், டிராக்ஷன் கண்ட்ரோல், கார்னரிங் ABS உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்கள் உள்ளன. கூடுதலாக க்ரூஸ் கண்ட்ரோல், ஹீட்டட் கிரிப்ஸ், TPMS போன்ற விருப்ப உபகரணங்களும் வழங்கப்படுகின்றன.</p><p>

பராமரிப்பு வசதியாக, வால்வ் கிளியரன்ஸ் இடைவெளி 45,000 km வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வருடத்திற்கு ஒருமுறை அல்லது 15,000 km-க்கு ஒருமுறை சர்வீஸ் போதுமானது. இரண்டு ஆண்டுகள் அன்லிமிடெட் மைலேஜ் வாரண்டி வழங்கப்படுகிறது.
</p><p>
இந்த புதிய Monster V2, சக்தி, ஸ்டைல் மற்றும் நவீன தொழில்நுட்பங்களை ஒருங்கிணைத்து, இந்திய பைக் ரசிகர்களுக்கு சிறந்த தேர்வாக இருக்கும்.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-11T09:46:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[திரிஷா குறித்து சர்ச்சை பேச்சு!! ஆர்.பி. உதயகுமாருக்கு எதிராக சுவரொட்டிய ரசிகர்கள்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/adurai-trisha-welfare-association-condemnation-1786442038"></link>
            <id>https://viduppu.com/article/adurai-trisha-welfare-association-condemnation-1786442038</id>
            <summary type="text">ஆர். பி. உதயகுமார்அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர். பி. உதயகுமார், நடிகை திரிஷாவையும் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய்யையும் ஒப்பிட்டு, நடிகை திரிஷாவுக்க...</summary>
            <content type="html"><![CDATA[<h2>ஆர். பி. உதயகுமார்</h2><p>அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர். பி. உதயகுமார், நடிகை திரிஷாவையும் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய்யையும் ஒப்பிட்டு, நடிகை திரிஷாவுக்கும் துணை முதலமைச்சர் பதவி வழங்கப்படலாம் என்ற பொருளில் பேசியதை எதிர்த்து பல இடங்களில் கண்டனங்கள் எழுந்து வருகிறது. </p><p>தூத்துக்குடியில் அதிமுக சார்பில் நடந்த காவிரி தண்ணீருக்காக போராடாமல் எங்கள் அண்ணி திரிஷாவுக்காக ஆளுங்கட்சியும் எதிர்கட்சியும் போராட்டம் நடத்துவதாக விமர்சனர்சித்து திரிஷா ரசிகர் மன்றம் சுவரொட்டிகளை ஒட்டி வருகிறார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/da99e6be-8eff-470b-af04-4fa18d20af62/26-6a7af1390d1b0.webp' /></p><p> </p><h2>சுவரொட்டிய ரசிகர்கள்</h2><p>அதில் இருவரின் நட்பை கொச்சைப்படுத்தும் நோக்கில் பேசியது கண்டனத்துக்குரியது. யாகாவா ராயினும் நாகாக்க வேண்டும் என்ற குறளுக்கு ஏற்றவாறு பேசுவது தமிழ் மக்களின்மாண்பு. முன்னாள் அமைச்சரே மாண்பு தவற வேண்டாம்.</p><p> எங்கள் அன்பு அக்கா திரிஷாவை பற்றி யார் தவறாக பேசினாலும் எங்களால் ஏற்க முடியாது, மீறினால் மாபெரும் ஆர்ப்பாட்டம் செய்ய நேரிடும் என்று குறிப்பிட்டுள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-08-11T09:45:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரான்சுக்கு உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் பட்டியலில் நான்காவது இடம்: ஆனால்...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/france-passport-in-4th-at-powerful-passport-list-1786441229"></link>
            <id>https://news.lankasri.com/article/france-passport-in-4th-at-powerful-passport-list-1786441229</id>
            <summary type="text">உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் பட்டியலில் நான்காவது இடம் பிடித்துள்ள பிரான்ஸ், அமைதியான நாடுகள் பட்டியலில் 99ஆவது இடத்தில் உள்ளது.



உலகின் சக்தி...</summary>
            <content type="html"><![CDATA[<p>உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் பட்டியலில் நான்காவது இடம் பிடித்துள்ள பிரான்ஸ், அமைதியான நாடுகள் பட்டியலில் 99ஆவது இடத்தில் உள்ளது.
</p><p>


உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் பட்டியலில் பிரான்ஸ் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது.
</p><p>
ஆனால், அமைதியான நாடுகள் பட்டியலில் பிரான்சுக்கு 99ஆவது இடம்தான் கிடைத்துள்ளது.
</p><h3>
உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் பட்டியல்
</h3><p>
Henley Passport Index என்னும் அமைப்பு, உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் பட்டியலை ஆண்டுதோறும் வெளியிட்டுவருகிறது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e417f4ac-2f97-41bd-85b3-9b5330ff4a55/26-6a7aee0f182ee.webp' /></p><p>
ஒரு நாட்டின் பாஸ்போர்ட் மூலம் எத்தனை நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்கலாம் என்பதன் அடிப்படையில் இந்த தரவரிசை நிர்ணயிக்கப்படுகிறது.</p><p>

அவ்வகையில், 2026ஆம் ஆண்டுக்கான உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் பட்டியலில் பிரான்ஸ் 4ஆவது இடத்தில் உள்ளது.
</p><p>
பிரான்ஸ் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் விசா இல்லாமல் 186 நாடுகளுக்குப் பயணிக்கலாம்.&nbsp;</p><p></p><p>
பிரான்ஸ் இப்படி சக்தி வாய்ந்த பாஸ்போர்ட் பட்டியலில் நான்காவது இடத்திலிருக்கும் அதே நேரத்தில், அமைதியான நாடுகள் பட்டியலில் பிரான்சுக்கு 99ஆவது இடம்தான் கிடைத்துள்ளது.
</p><p>
ஆம், Global Peace Index என்னும் அமைப்பு, ஆண்டுதோறும் அமைதியான அல்லது பாதுகாப்பான நாடுகள் பட்டியலை வெளியிடுகிறது.
</p><p>
அந்த பட்டியலில் 163 நாடுகள் இடம்பெற்றுள்ள நிலையில், பிரான்ஸ் அந்தப் பட்டியலில் 99ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.
</p><p>
இந்த பாதுகாப்பான நாடுகள் பட்டியல், குற்றங்கள், பயங்கரவாதம், அரசியல் நிலைத்தன்மை மற்றும் இராணுவமயமாக்கல் முதலான 23 பாதுகாப்பு காரணிகளின் அடிப்படையில் உருவாக்கப்படுகிறது.</p><p>

பிரான்சைப் பொருத்தவரை, அதன் இராணுவமயமாக்கலே அது பட்டியலில் கீழே செல்ல பெருமளவில் காரணமாக அமைந்துவிட்டது.
</p><p>
அதாவது, ஒரு பெரிய ராணுவத்தைக் கொண்டிருத்தல், பல ஆபத்தான நாடுகளில் பிரெஞ்சுப் படைகள் முகாமிட்டிருத்தல் ஆகிய காரணங்களே பிரான்ஸ் பாதுகாப்பான நாடுகள் பட்டியலில் 99ஆவது இடத்தைப் பிடிப்பதற்கு காரணமாக அமைந்துள்ளன.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-11T09:40:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[கருவை கலைக்க திட்டமிடும் திவாகரன்.. இந்துவுக்கு ஆபத்து! - சின்னஞ்சிறு கிளியே இன்றைய எபிசோட் அப்டேட்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/chinnan-siru-kiliye-today-episode-11-08-2026-1786439531"></link>
            <id>https://cineulagam.com/article/chinnan-siru-kiliye-today-episode-11-08-2026-1786439531</id>
            <summary type="text">தமிழ் சின்னத்திரையில் Zee தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சின்னஞ்சிறு கிளியே...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழ் சின்னத்திரையில் Zee தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சின்னஞ்சிறு கிளியே. நேற்றைய எபிசோடில், இந்து அக்கறையுடன் கர்ணாவுக்காக சூப் செய்து கொடுத்த நிலையில், அதை குடிக்க மறுத்த கர்ணா பின்னர் மனம் மாறியிருந்தான். இதனைத் தொடர்ந்து இன்று கதையில் பரபரப்பான திருப்பங்கள் அரங்கேறுகின்றன.</p><p>அதாவது, இந்து "வேணும்னா புவனாவை கூப்பிட்டு கொடுக்க சொல்லட்டுமா?" என்று கேட்க, கர்ணா உடனே "வேண்டாம், நானே குடிக்கிறேன்" என்று கூறி சூப்பை வாங்கிக் குடிக்கிறான்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b5ab699b-15f4-4cf7-a2bc-a8f384fd52d9/26-6a7ae76f9f776.webp' /></p><p>
</p><p>மறுபக்கம், இந்துவின் கர்ப்பத்தை உண்மை என நினைத்து எப்படியாவது கலைக்க வேண்டும் என்ற கொடூர எண்ணத்தில் இருக்கும் கிருபாவும் திவாகரனும் புதிய சதித்திட்டம் தீட்டுகின்றனர். அதற்காக கர்ணாவை ஒரு முக்கிய வேலை காரணமாக வீட்டை விட்டு வெளியே செல்லும்படி ஏற்பாடு செய்கின்றனர்.
</p><p>கர்ணா வெளியே சென்ற பிறகு, இந்துவுக்குக் கொடுக்கப்படும் ஜூஸில் கருக்கலைப்பை ஏற்படுத்தும் மருந்தைக் கலக்க திட்டமிடுகின்றனர். பின்னர் வீட்டில் அனைவருக்கும் ஜூஸ் வழங்கப்படும் நேரத்தில், சித்ரா ஏன் இந்த அக்காவுக்கு மட்டும் கொடுக்க மாட்டுறீங்க என்று கேட்க தங்களது திட்டத்தின்படி அந்த ஜூஸை இந்துவிடம் கொடுக்கின்றனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b4745b56-039c-4ffd-bb74-6f24220f6f4a/26-6a7ae76ede135.webp' /></p><p>ஆனால் எதிர்பாராத விதமாக, ஜூஸ் மிகவும் குளிர்ச்சியாக இருப்பதால் இந்து அதை உடனடியாக குடிக்காமல் வைத்திருக்கிறாள். அந்த சமயத்தில் ஜெயந்தி அந்த ஜூஸை எடுத்துக் குடிக்க முயற்சிக்க, பதறிப்போன திவாகரன் அவளைத் தடுத்து நிறுத்துகிறான். அவனுடைய அதிரடி நடவடிக்கையை பார்த்த இந்துவுக்கு ஏதோ சந்தேகம் ஏற்படுகிறது.
</p><p>இதையடுத்து ஜூஸை தனது அறைக்கு எடுத்துச் செல்லும் இந்து, "இதில் ஏதோ கலந்திருக்கிற மாதிரி இருக்கு" என்ற சந்தேகத்துடன் செல்வியிடம் போன் செய்து பேசுகிறாள்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/871d2096-5588-4e0c-9d7c-26967d47f31b/26-6a7ae77056473.webp' /></p><p>இந்து நினைப்பது போல அந்த ஜூஸில் உண்மையிலேயே ஏதாவது கலந்திருக்கிறதா? திவாகரனின் சதித்திட்டம் அம்பலமாகுமா? என்ற பரபரப்பான கேள்விகளுடன் இன்றைய எபிசோட் நகரவுள்ளது.
</p><p>பதற்றமும் பரபரப்பும் நிறைந்த இந்த காட்சிகளை காண, சின்னஞ்சிறு கிளியே சீரியலை இன்று இரவு 7 மணிக்கு Zee தமிழில் தவறாமல் பாருங்கள்!
&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-11T09:40:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தியாவிலுள்ள இலங்கையர்கள் மீண்டும் தாயகம் திரும்ப அமைச்சரவை ஒப்புதல்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/cabinet-approves-of-sri-lankans-refugees-india-1786440981"></link>
            <id>https://jvpnews.com/article/cabinet-approves-of-sri-lankans-refugees-india-1786440981</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;தாயகத்தில் இருந்து யுத்தக் காலத்தில் முறையான ஆவணங்களின்றி இந்தியாவுக்குச் சென்று ஏதிலிகளாகப் பதிவாகியுள்ள இலங்கையர்கள், மீண்டும் தாயகம் த...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;தாயகத்தில் இருந்து யுத்தக் காலத்தில் முறையான ஆவணங்களின்றி இந்தியாவுக்குச் சென்று ஏதிலிகளாகப் பதிவாகியுள்ள இலங்கையர்கள், மீண்டும் தாயகம் திரும்புவதற்குத் தேவையான குடிவரவு தடையகற்றல் வசதிகளை வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
</p><p>
பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கே அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

யுத்த காலத்தில் நிலவிய சீரற்ற சூழ்நிலை காரணமாக, அங்கீகரிக்கப்பட்ட துறைமுகங்கள் மூலமன்றி முறையான கடவுச்சீட்டின்றி இந்தியாவுக்குச் சென்ற பலர், அங்கு ஏதிலிகளாகப் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aa4aff6a-43ba-4b3d-b9eb-5b957743b174/26-6a7aed171a0b5.webp' /></p><h2>UNHCR&nbsp; ஊடாகத்&nbsp; தாயகம் திரும்ப எதிர்பார்ப்பு</h2><p> இவர்கள் ஐக்கிய நாடுகள் ஏதிலிகளுக்கான உயர்ஸ்தானிகராலயத்தின் (UNHCR) ஊடாகத் தன்னார்வமாக மீண்டும் தாயகம் திரும்ப எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
</p><p>
இதனடிப்படையில், சட்டமா அதிபரின் ஆலோசனைகளுக்கு அமையப் பின்வரும் தீர்மானங்கள் எட்டப்பட்டுள்ளன.

2006 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதிக்கு முன்னர் முறையான ஆவணங்களின்றி இந்தியாவுக்குச் சென்று, அங்குள்ள இலங்கைத் தூதரகங்கள் மூலம் இலங்கையர் என அடையாளப்படுத்தப்பட்ட நபர்களுக்கு, அரசு உளவுத்துறையின் தடையகற்றல் அறிக்கை பெறப்படும்.</p><p></p><p>
</p><p>
இவர்கள் கொலை, தேசத்துரோகம் போன்ற கடுமையான குற்றங்களில் ஈடுபடாதவர்கள் என்பது உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே நாட்டிற்குள் அனுமதிக்கப்படுவர்.
</p><p>
தொடர்புடைய நபர்களுக்குத் தற்காலிகப் பயண ஆவணங்கள் வழங்கப்பட்டு, 1948 ஆம் ஆண்டின் 20 ஆம் இலக்க குடிவரவு, குடியகல்வுச் சட்டத்தின் கீழ் எவ்வித சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படாமல், அங்கீகரிக்கப்பட்ட வழிகள் ஊடாக நாட்டிற்குள் நுழைவதற்கு வாய்ப்பளிக்கப்படும்.</p><p></p><p>
</p><p>
2006 ஆம் ஆண்டு ஆகஸ்ட் முதலாம் திகதி முதல் யுத்தம் நிறைவடைந்த 2009 ஆம் ஆண்டு மே மாதம் 19 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் இந்தியாவுக்கு இடம்பெயர்ந்தவர்களுக்கும், அடையாளப் படுத்தல் மற்றும் உளவுத்துறை தடையகற்றல் அறிக்கையின் அடிப்படையில் சட்ட நடவடிக்கைகளின்றி நாட்டிற்குள் நுழையச் சந்தர்ப்பம் வழங்கப்படும்.</p><p></p><p>
</p><p>
அதேவேளை, கொலை மற்றும் தேசத்துரோகம் உள்ளிட்ட குற்றங்களுடன் தொடர்புடைய நபர்கள் அடையாளம் காணப்பட்டால், அவர்கள் துறைமுகம் அல்லது வானூர்தி நிலையத்திலேயே தடுத்து வைக்கப்பட்டு மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காகக் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்படுவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-11T09:34:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பஞ்ச இரதமேறி பக்தர்களுக்கு அருட்காட்சியளித்த மாவைக் கந்தன்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/maviddapuram-kandaswamy-temple-car-festival-1786439283"></link>
            <id>https://ibctamil.com/article/maviddapuram-kandaswamy-temple-car-festival-1786439283</id>
            <summary type="text">வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் இரதோற்சவ திருவிழா
இன்றையதினம் வெகு சிறப்பாக நடைபெற்றது....</summary>
            <content type="html"><![CDATA[<p>வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் இரதோற்சவ திருவிழா
இன்றையதினம் வெகு சிறப்பாக நடைபெற்றது.</p><p>
இன்று (11) காலை முருகப்பெருமானுக்கு மூலஸ்தான பூசை வழிபாடுகள், வசந்த மண்டப பூஜை
வழிபாடுகள் என்பன இடம்பெற்றிருந்தன. </p><p>அதனைத் தொடர்ந்து முருகப் பெருமான் அலங்கரிக்கப்பட்ட பஞ்சரதமேறி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.</p><p></p><h2>நேர்த்திக்கடன்களை நிறைவேற்றினர்</h2><p>
</p><p>
இந்த திருக்காட்சியை காண்பதற்கு இலங்கையின் பல்வேறு பகுதிகளில் இருந்து
மட்டுமல்லாமல் புலம்பெயர் தேசத்தவர்களில் இருந்தும் பக்தர்கள் வருகை தந்து
முருகப் பெருமானை தரிசித்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6d699590-d2a5-4a9f-969e-49fc9fdcd0c1/26-6a7ae9573e28e.webp' /></p><p>
</p><p>
இன்றைய தினம் பக்தர்கள் காவடிகள், அங்கபிரதிஷ்டைகள், கற்பூரச் சட்டிகளை
எடுத்துவந்து தமது நேர்த்திக்கடன்களை நிறைவேற்றினர்.</p><p>இதேவேளை&nbsp;மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தின் தீர்த்தோற்சவம் ஆடி அமாவாசை தினமான நாளை (12) காலை 06.30 மணிக்கு கீரிமலை கண்டகி தீர்த்தத்தில் நடைபெறவுள்ளது.</p><p>ஆடி அமாவாசை தினத்தில், தந்தையை இழந்தவர்கள் பிதிர்கடன்களை நிறைவேற்றும்
விசேட பூஜை வழிபாடுகளும் கண்டகி தீர்த்த கடற்கரையில் நடைபெறவுள்ளது.
</p><p>
கண்டகி தீர்த்த கரையில் இருந்து மாவை கந்தன் மீண்டும் மாலை 06 மணிக்கு,
மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில் நோக்கி மாட்டு வண்டியில் புறப்படும் நிகழ்வு
நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-11T09:32:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரசாங்க தொழிலுக்காக காத்திருப்போருக்கு வெளியான அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/announcement-for-government-teacher-vacancies-1786437816"></link>
            <id>https://tamilwin.com/article/announcement-for-government-teacher-vacancies-1786437816</id>
            <summary type="text">நாட்டின் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக கணிதம் மற்றும் விஞ்ஞானம் உள்ளிட்ட முக்கிய பாடங்களுக்கான ஆசிரியர் நியமனங்களை விரைவுபடுத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டின் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக கணிதம் மற்றும் விஞ்ஞானம் உள்ளிட்ட முக்கிய பாடங்களுக்கான ஆசிரியர் நியமனங்களை விரைவுபடுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.&nbsp;</p><p>நாடாளுமன்றத்தில் பிரதமர் மற்றும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூரிய தலைமையில் நடைபெற்ற கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்திலேயே இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p><h2>வெற்றிடங்களை நிரப்ப அவசர நடவடிக்கை&nbsp;</h2><p>இதற்கமைய, ஆசிரியர் பற்றாக்குறையை எதிர்நோக்கும் பாடசாலைகள் மற்றும் பிரதேசங்களை உடனடியாக அடையாளம் கண்டு, அங்குள்ள வெற்றிடங்களை நிரப்ப அவசர நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4fb25550-8919-422e-bc02-6c9dd0ededac/26-6a7aeb2cd42ba.webp' />&nbsp;</p><p>மேலும், ஆசிரியர் இடமாற்ற முறைமையை ஒழுங்குபடுத்துவதுடன், அங்கீகரிக்கப்பட்ட கொள்கைகளுக்கு அமைவாகவும் வெளிப்படைத்தன்மையுடனும் இடமாற்றங்களை முன்னெடுப்பது குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டது.</p><p>அத்துடன், பாடசாலைகளை கஷ்டப் பிரதேசங்களாக வகைப்படுத்துவதற்கு பயன்படுத்தப்படும் அளவுகோல்கள் மற்றும் அங்கு பணியாற்றும் ஆசிரியர்களுக்கான கஷ்டப் பிரதேச கொடுப்பனவு வழங்கும் முறைமை குறித்தும் மீளாய்வு செய்யுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
&nbsp;</p><p></p><p>&nbsp;</p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-11T09:28:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ராஜித சேனரத்ன மீது நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/corruption-charges-filed-against-rajitha-1786438898"></link>
            <id>https://ibctamil.com/article/corruption-charges-filed-against-rajitha-1786438898</id>
            <summary type="text">ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் முன்னாள் மீன்பிடி அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு எதிராக இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் முன்னாள் மீன்பிடி அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு எதிராக இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு (CIABOC) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
</p><p>
ராஜித சேனாரத்ன கடத்தொழில் அமைச்சராகப் பதவி வகித்த காலப்பகுதியில், கிரிந்த மீன்பிடித் துறைமுகத்தில் மணல் அகற்றும் பணியை கொரிய நிறுவனமொன்றிடம் ஒப்படைத்ததன் மூலம் அரசாங்கத்திற்கு நிதி இழப்பை ஏற்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
</p><p>
இந்தக் குற்றச்சாட்டு தொடர்பிலேயே பிரதிவாதியான முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5f0657bf-3066-4286-8fe2-011044bc1a95/26-6a7aeac9dc70c.webp' /></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-11T09:26:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[யூடியூப் மூலம் வருமானம் ஈட்டுபவர்களுக்கு அதிர்ச்சி செய்தி - இரட்டிப்பாக்கப்பட்ட தகுதி வரம்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/youtube-doubled-eligibility-for-monetization-1786439871"></link>
            <id>https://news.lankasri.com/article/youtube-doubled-eligibility-for-monetization-1786439871</id>
            <summary type="text">youtube increase monetization eligibility : யூடியூப்பில் வருமானம் ஈட்டுவதற்கான தகுதி வரம்பு இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது புதிய யூடியூப் படைப்பாளர்களுக்கு...</summary>
            <content type="html"><![CDATA[<p>youtube increase monetization eligibility : யூடியூப்பில் வருமானம் ஈட்டுவதற்கான தகுதி வரம்பு இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது புதிய யூடியூப் படைப்பாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
</p><h3>
யூடியூப்பில் உயர்த்தப்பட்ட தகுதி வரம்பு
</h3><p>
யூடியூப் தளம் மூலம், உலகம் முழுவதும் லட்சக்கணக்கானோர் வருமானம் ஈட்டி வருகின்றனர். </p><p>

கடந்த 4 ஆண்டுகளில், 100 பில்லியன் டொலர்களை கலைஞர்கள், ஊடக நிறுவனங்கள் மற்றும் படைப்பாளிகளுக்கு வழங்கியுள்ளதாக யூடியூப் தெரிவித்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/45d16b3c-e688-49c5-9b0f-1ea0ebc4274c/26-6a7ae8c0e05b1.webp' /></p><p>

இதில் வருமானம் பெறுவதற்கான தகுதி வரம்பாக 1000 சந்தாதாரர்களை பெற்றிருக்க வேண்டும் என்பது நிபந்தனையாக உள்ளது. </p><p>

மேலும், வீடியோக்களுக்கு 4,000 மணி நேரம் பார்வை நேரம் மற்றும் ஷார்ட் வீடியோக்களுக்கு 90 நாட்களில் 10 மில்லியன் பார்வைகள் பெற்றிருக்க வேண்டும் என்ற தகுதி வரம்பு உள்ளது. </p><p>

தற்போது, அதனை 2 மடங்காக உயர்த்தி 4,000 மணி நேரம் பார்வை நேரம் மற்றும் 20 மில்லியன் பார்வைகள் என தகுதி வரம்பை உயர்த்தி உள்ளது.&nbsp;&nbsp;</p><p></p><p>அதேவேளையில், 1000 சந்தாதாரர்கள் இருக்க வேண்டும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை.</p><p>

இந்த புதிய தகுதி வரம்பு, பிப்ரவரி 2027 ஆம் ஆண்டு முதல் அமுலுக்கு வர உள்ளது.</p><p>
இது புதிய யூடியூப் படைப்பாளர்களுக்கு வருமானம் ஈட்ட தகுதி பெறுவதில் பாரிய சிக்கலாக அமையும்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-11T09:18:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மிலன் விமான நிலையத்தில் வாகனம் மீது மோதிய ஜெட் விமானம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/private-jet-hit-by-ground-vehicle-in-milan-airport-1786426341"></link>
            <id>https://canadamirror.com/article/private-jet-hit-by-ground-vehicle-in-milan-airport-1786426341</id>
            <summary type="text">&amp;nbsp; இத்தாலியின் மிலன் லினேட் விமான நிலையத்தில், நேற்று (9) தரைவழியாகச் சென்றுகொண்டிருந்த ஹாக்கர் பீச்கிராஃப்ட் 400A தனியார் ஜெட் விமானம் மீது தரை க...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; இத்தாலியின் மிலன் லினேட் விமான நிலையத்தில், நேற்று (9) தரைவழியாகச் சென்றுகொண்டிருந்த ஹாக்கர் பீச்கிராஃப்ட் 400A தனியார் ஜெட் விமானம் மீது தரை கையாளும் வாகனம் ஒன்று மோதியதால் அங்க்கு பரபரப்பு ஏற்பட்டதாக சர்வதேச ஊடகங்க்கள் தெரிவித்துள்ளன. </p><p> 

 இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றாலும், இது சில விமானச் செயல்பாடுகளில் தாமதத்தை ஏற்படுத்தியது.
அதேசமயம் வாகனம் பீரிய சீததிற்கு உள்ளாகியுள்ளதுடன், விமானத்திலும் சேதம் ஏற்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5ccea1ff-6831-4398-a55b-86c6749ee6ee/26-6a7ab3e78bfcd.webp' /></p><p> இது குறித்த புகைப்படங்க்களும் வேளியாகியுள்ளது.

அத்துடன், வரவிருந்த இரண்டு விமானங்கள் பெர்கமோ ஓரியோ அல் செரியோ மற்றும் மிலன் மால்பென்சா விமான நிலையங்களுக்குத் திருப்பிவிடப்படப்பட்டதாகவும்&nbsp; தெரிவிக்கப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a9184002-fea7-4d55-b333-9bfaf02d9f99/26-6a7ab3e84ddf1.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6d53226a-1451-45ac-a366-f8b4d5773ce6/26-6a7ab3e923295.webp' /></p>]]></content>
            <updated>2026-08-11T09:16:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பஞ்ச இரதமேறி வீதியுலா வந்த மாவைக் கந்தன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/maavaikandhan-pancha-ratham-1786434548"></link>
            <id>https://tamilwin.com/article/maavaikandhan-pancha-ratham-1786434548</id>
            <summary type="text">மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் இரதோற்சவ திருவிழா
இன்றையதினம்(11.08.2026) வெகு சிறப்பாக நடைபெற்றது.

ஆரம்பத்தில் முருகப்பெ...</summary>
            <content type="html"><![CDATA[<p>மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் இரதோற்சவ திருவிழா
இன்றையதினம்(11.08.2026) வெகு சிறப்பாக நடைபெற்றது.
</p><p>
ஆரம்பத்தில் முருகப்பெருமானுக்கு மூலஸ்தான பூஜை வழிபாடுகள், வசந்த மண்டப பூஜை
வழிபாடுகள் என்பன இடம்பெற்றிருந்தன.</p><h2>நேர்த்திக்கடன்களை நிறைவேற்றி</h2><p> அதனைத் தொடர்ந்து முருகப் பெருமான்
பஞ்சரதமேறி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/51d8a6d9-8371-4c85-aa2a-ee34432e204c/26-6a7ad9685511a.webp' /></p><p>
இந்த திருக்காட்சியை காண்பதற்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து
மட்டுமல்லாமல் புலம்பெயர் தேசத்தவர்களில் இருந்தும் பக்தர்கள் வருகை தந்து
முருகப் பெருமானை தரிசித்தனர்.</p><p>

அத்துடன் பக்தர்கள் காவடிகள், அங்கம் பிரதிஷ்டைகள், கற்பூரச் சட்டிகளை
எடுத்துவந்து நேர்த்திக்கடன்களை நிறைவேற்றினர்.</p><p></p><p></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e5d4f380-451d-4e9d-9715-ab0128021a2f/26-6a7ad969638ab.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9470c0fa-2a58-42ad-815d-c50083598ec2/26-6a7ad96a3edba.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cd0f1e3e-6699-4faa-85fc-c280d35e398e/26-6a7ad96b2078a.webp' /></p>]]></content>
            <updated>2026-08-11T09:16:01+00:00</updated>
        </entry>
    </feed>
