<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-08-31T01:16:28+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவும் இஸ்ரேலுமே உண்மையான எதிரிகள் ; ஈரான் உச்ச தலைவர் அதிரடி கருத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/us-and-israel-are-real-enemies-iran-supreme-leader-1788112414"></link>
            <id>https://canadamirror.com/article/us-and-israel-are-real-enemies-iran-supreme-leader-1788112414</id>
            <summary type="text">அமெரிக்காவும் இஸ்ரேலுமே இஸ்லாமிய ஒற்றுமைக்கு &quot;உண்மையான எதிரிகள்&quot; என ஈரானின் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி தெரிவித்துள்ளார்.

இஸ்லாமிய நாடுகளின் தலைவர்கள...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவும் இஸ்ரேலுமே இஸ்லாமிய ஒற்றுமைக்கு "உண்மையான எதிரிகள்" என ஈரானின் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி தெரிவித்துள்ளார்.
</p><p>
இஸ்லாமிய நாடுகளின் தலைவர்கள் தங்களின் "உண்மையான எதிரியை" இனம் கண்டு, அதன் திட்டங்களைப் புரிந்து கொண்டு எதிர்க்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.</p><p>

"இஸ்லாமிய ஒற்றுமை வாரம்" குறித்த செய்தியை வெளியிடும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/94fc2c31-5395-46d0-895a-b4af48cc5a26/26-6a946e1fa462c.webp' /></p><p>ஈரான் மற்றும் பிற இஸ்லாமிய நாடுகளின் மக்களிடையே பிளவை ஏற்படுத்துவதற்காகப் பல்வேறு இன, கலாசார, சமூக, பொருளாதார, அரசியல் மற்றும் புவியியல் ரீதியான வேறுபாடுகளை அமெரிக்காவும் இஸ்ரேலும் சாக்குப்போக்குகளாகப் பயன்படுத்துவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
</p><p>
அத்துடன், ஈரானியர்கள் தங்களுக்குள் எந்தவித வேறுபாடுகளையும் அனுமதிக்க வேண்டாம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
</p><p>
விரும்பத்தக்க மற்றும் ஆதிக்கம் செலுத்தும் இஸ்லாமிய நாகரிகத்தை அடைவதற்கு முஸ்லிம்களிடையே ஒற்றுமை அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
வொஷிங்டனும் டெல் அவிவும் ஈரானின் எதிரிகள் மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த இஸ்லாமிய உலகிற்கும் "உண்மையான எதிரிகள்" என்று அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p>

கடந்த பெப்ரவரி மாத இறுதியில் அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரானின் மீது கூட்டுத் தாக்குதல்களை நடத்தியதைத் தொடர்ந்து, மத்திய கிழக்கில் பதற்ற நிலை அதிகரித்தது. இதனையடுத்து, அமெரிக்காவின் சொத்துக்கள் அமைந்துள்ள பிராந்திய நாடுகளின் மீது ஈரான் பதிலடித் தாக்குதல்களை நடத்தியது.
</p><p>
போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் கடந்த ஜூன் மாதம் ஈரானும் அமெரிக்காவும் 14 அம்ச புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட போதிலும், அந்த இடைக்கால ஒப்பந்தம் விரைவில் தோல்வியடைந்தமை குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-08-31T01:04:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ்ப்பாணத்தில் இருவருக்கு மரண தண்டனை ; நடந்தது என்ன?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/jaffna-high-court-dramatic-two-sentenced-death-1788106852"></link>
            <id>https://jvpnews.com/article/jaffna-high-court-dramatic-two-sentenced-death-1788106852</id>
            <summary type="text">யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற இருவேறு கொலைச் சம்பவங்கள் தொடர்பான வழக்குகளில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இருவருக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி பி.எஸ். ...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற இருவேறு கொலைச் சம்பவங்கள் தொடர்பான வழக்குகளில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இருவருக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி பி.எஸ். சூசைதாசன் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.</p><p>
</p><p></p><p>திருநெல்வேலி பகுதியில் கடந்த 2012ஆம் ஆண்டு மதுபோதையில் இளைஞர் ஒருவர் மூர்க்கத்தனமாக தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் 09 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.
</p><p>
இதையடுத்து, 09 பேரும் சந்தேக நபர்களாக பெயரிடப்பட்டு, சட்டமா அதிபர் திணைக்களத்தினால் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு, நீண்டகாலமாக விசாரணைகள் இடம்பெற்று வந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/66b45fbb-0a3d-4302-9451-be11f95a36b1/26-6a9458657a821.webp' /></p><p>

இந்நிலையில், குறித்த வழக்கு நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை தீர்ப்புக்காக எடுத்துக்கொள்ளப்பட்டபோது, 09ஆம் எதிரிக்கு எதிரான குற்றச்சாட்டு சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதாக நீதிமன்றம் தீர்மானித்தது.
</p><p>
இதனையடுத்து, 09ஆம் எதிரிக்கு மரண தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். </p><p>அதேவேளை, ஏனைய 08 எதிரிகளுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்படாத நிலையில், அவர்களை நீதிமன்றம் விடுதலை செய்தது.
</p><p>
இதேவேளை, பருத்தித்துறை வல்லிபுரம் குறிச்சி பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கடந்த 2014ஆம் ஆண்டு வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கிலும் குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது.
</p><p>
குறித்த கொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இளைஞருக்கு எதிரான குற்றச்சாட்டு சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவருக்கும் மரண தண்டனை விதித்து யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி பி.எஸ். சூசைதாசன் தீர்ப்பளித்துள்ளார்.
</p><p>
இதன்மூலம், யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் இடம்பெற்ற இருவேறு கொலை வழக்குகளில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இருவருக்கு ஒரே நாளில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-31T01:04:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[உடம்பில் கெட்ட கொழுப்பை குறைக்க இந்த பழக்கங்கள் இருந்தா உடனே கைவிடுங்க]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/give-up-these-habits-to-reduce-bad-cholesterol-1788137839"></link>
            <id>https://jvpnews.com/article/give-up-these-habits-to-reduce-bad-cholesterol-1788137839</id>
            <summary type="text">உலகளவில் இதய நோய் ஒரு பெரிய கவலைக்குரிய ஒன்றாக உள்ளது. இப்படி இதய நோயால் ஒருவர் பாதிக்கப்படுவதற்கு காரணம் அவரது மோசமான வாழ்க்கை முறை, உணவுப் பழக்கங்கள...</summary>
            <content type="html"><![CDATA[<p>உலகளவில் இதய நோய் ஒரு பெரிய கவலைக்குரிய ஒன்றாக உள்ளது. இப்படி இதய நோயால் ஒருவர் பாதிக்கப்படுவதற்கு காரணம் அவரது மோசமான வாழ்க்கை முறை, உணவுப் பழக்கங்கள் போன்றவை தான். இவை ஒரே நாளில் இதயத்தில் பாதிப்பை ஏற்படுத்துவதில்லை. மாறாக தினசரி மேற்கொள்ளும் போது, அதன் விளைவாக இதய ஆரோக்கியத்தை பாழாக்குகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d4c8c761-d7bf-41a1-b859-4e3505509383/26-6a94d171e3ea1.webp' /></p><p>ஆனால் நாம் தெரியாமல் செய்யக்கூடிய சில காலை பழக்கங்கள் ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு தடையாக இருக்கும் கெட்ட கொழுப்புக்களின் அளவை அதிகரிக்கலாம். உதாரணமாக அதிக சர்க்கரை அல்லது நிறைவுற்ற கொழுப்பு கொண்ட காலை உணவைத் தேர்ந்தெடுப்பது, உடற்பயிற்சியைத் தவிர்ப்பது போன்றவை உடலில் கெட்ட கொழுப்பு அதிகரிக்க வழிவகுத்து, நீண்ட காலத்தில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். இப்போது உடலில் கெட்ட கொழுப்பை அதிகரிக்கும் சில காலை பழக்கங்களைக் காண்போம். இந்த பழக்கங்கள் இருந்தால் உடனே கைவிடுங்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/76913eeb-2882-455a-8341-ca9a30348ab1/26-6a94d17132950.webp' /></p><h4>காலை உணவை தவிர்ப்பது
</h4><p>காலை உணவைத் தவிர்ப்பது கெட்ட கொழுப்பு அதிகரிப்புடன் வலுவாக இணைக்கப்பட்டுள்ளது. காலை உணவை தவறாமல் சாப்பிடுபவர்களுடன் ஒப்பிடும் போது காலை உணவைத் தவிர்க்கும் நபர்களுக்கு மொத்த கொழுப்பு மற்றும் கெட்ட கொழுப்பின் அளவு அதிகம் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.</p><h4>அதிக கொழுப்புள்ள அல்லது பொரித்த காலை உணவை உண்பது
</h4><p>காலை வேளையில் பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள் மற்றும் எண்ணெயில் பொரித்த காலை உணவை உட்கொள்வது உடலில் கெட்ட கொலஸ்ட்ராலின் அளவை அதிகரிக்க வழிவகை செய்யும். ஏனெனில் இதில் உள்ள சாச்சுரேட்டட் கொழுப்புகள் மற்றும் ட்ரான்ஸ் கொழுப்புகள் உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அளவை நேரடியாக அதிகரிக்கும்.</p><h4>காலையில் அதிக மன அழுத்தத்தை அனுபவிப்பது</h4><p>
பொதுவாக காலையில் மன அழுத்த ஹார்மோனான கார்டிசோல் இயற்கையாகவே அதிகரிக்கும். இந்நிலையில் காலையில் அவசரமாக அலுவலகத்திற்கு கிளம்புவது அல்லது பதட்டத்துடன் நாளைத் தொடங்குவது, கூடுதல் மன அழுத்தத்தை அதிகரிக்கும். நாள்பட்ட காலை மன அழுத்தம் அதிக LDL அளவு மற்றும் அதிகரித்த வீக்கத்திற்கு பங்களிக்கக்கூடும். இது இதய நோய் அபாயத்தை அதிகரிக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.</p><h4>உடலுழைப்பில்லாமை</h4><p>காலையில் எழுந்ததும் நடைப்பயிற்சி, ஸ்ட்ரெட்ச்சிங் போன்ற லேசான உடற்பயிற்சிகளை செய்யாமல் இருந்தால், கொழுப்பைக் கட்டுப்படுத்தும் உடலின் திறனைக் கட்டுப்படுத்தும். அதுவும் காலையில் செய்யும் உடற்பயிற்சி இரவு நேர கொழுப்பு உற்பத்தியை எதிர்த்து, சீரான கொழுப்பு சுயவிவரத்தை பராமரிக்க உதவும் என்று ஆராய்ச்சி சுட்டிக்காட்டுகிறது.</p><h4>தாமதமாக தூங்கி எழுவது
</h4><p>காலையில் தாமதமாக தூங்கி எழுவது அல்லது ஒழுங்கற்ற தூக்க முறையை மேற்கொள்வது உடலின் சர்க்காடியன் தாளத்தை சீர்குலைக்கிறது. கல்லீரலில் உள்ள கொழுப்பு தொகுப்பு தான் தினசரி சர்க்காடியன் தாளத்தைப் பின்பற்றுகிறது. மேலும் ஒழுங்கற்ற காலை வழக்கங்கள் வளர்சிதை மாற்ற செயல்முறைகளை தவறாக சீரமைக்கும். இது அதிக எல்.டி.எல் உற்பத்தி மற்றும் குறைந்த எச்.டி.எல் அளவுகளுக்கு பங்களிக்கிறது.</p>]]></content>
            <updated>2026-08-31T01:02:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[தர்ஷா குப்தா காதலர் இவர்தான்.. நெருக்கமான போட்டோ இணையத்தில் வைரல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/dharsha-gupta-reveal-boyfriend-photo-1788137613"></link>
            <id>https://cineulagam.com/article/dharsha-gupta-reveal-boyfriend-photo-1788137613</id>
            <summary type="text">நடிகை தர்ஷா குப்தா தொடர்ந்து இன்ஸ்டாக்ராமில் கவர்ச்சியான போட்டோக்களை வெளியிட்டு இளசுகளை கவர்ந்து வருகிறார்.சமீபத்தில் அவர் app ஒன்றில் இணைந்து, அதில் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நடிகை தர்ஷா குப்தா தொடர்ந்து இன்ஸ்டாக்ராமில் கவர்ச்சியான போட்டோக்களை வெளியிட்டு இளசுகளை கவர்ந்து வருகிறார்.</p><p>சமீபத்தில் அவர் app ஒன்றில் இணைந்து, அதில் தன்னுடன் பணம் செலுத்தி வீடியோ காலில் பேசலாம் என அறிவித்து இருந்தது சர்ச்சை ஆனது. தான் எந்த தவறான விஷயமும் செய்யவில்லை என அவர் விளக்கம் கொடுத்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0d401485-301a-425b-9525-bcb1de1c497a/26-6a94d0908b768.webp' /></p><h2>காதலர் போட்டோ
</h2><p>இந்நிலையில் தர்ஷா குப்தா தனது காதலர் போட்டோவை வெளியிட்டு இருக்கிறார். மிக நெருக்கமாக காதலருக்கு முத்தம் கொடுக்கும் போட்டோவை அவர் வெளியிட்டுள்ளார்.
</p><p>அது இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-31T01:00:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் விடுமுறை நாளில் பணிக்கு அழைக்கப்பட்ட பெண் அரச அதிகாரி பரிதாப மரணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/female-government-officer-died-jaffna-holiday-duty-1788137548"></link>
            <id>https://tamilwin.com/article/female-government-officer-died-jaffna-holiday-duty-1788137548</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் உடுவில் பிரதேச செயலகத்தில் கடமையாற்றிய பெண் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவர், விடுமுறை நாளான நேற்று (30)அலுவலகப் பணிக்காக அழைக்கப்பட்ட நில...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் உடுவில் பிரதேச செயலகத்தில் கடமையாற்றிய பெண் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவர், விடுமுறை நாளான நேற்று (30)அலுவலகப் பணிக்காக அழைக்கப்பட்ட நிலையில், பாதுகாப்பற்ற மின் கசிவில் சிக்கி உயிரிழந்த துயரச் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
</p><p>
இந்த துயர சம்பவத்தில், உடுவில் பிரதேச செயலகத்தின் சுதேச மருத்துவ அபிவிருத்தி உத்தியோகத்தராகக் கடமையாற்றி வந்த, இரண்டு பிள்ளைகளின் தாயாரான நிசாந்தன் சிந்துப்பிரியா (வயது 37) என்பவரே உயிரிழந்துள்ளார்.
</p><p>
அரச அலுவலகங்களுக்கிடையில் நடைபெறும் உற்பத்தித் திறன் போட்டியில் பங்கேற்பதற்காக உடுவில் பிரதேச செயலகமும் அலுவலகத்தை அழகுபடுத்துதல் மற்றும் ஒழுங்குபடுத்துதல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டு வந்துள்ளது.</p><h2>மின் கசிவு</h2><p>இன்று போட்டிக்கான மதிப்பீடுகள் நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்ட நிலையில், விடுமுறை நாளான நேற்று மாலை அலுவலகத்திற்கு வருமாறு அங்கு கடமையாற்றும் உத்தியோகத்தர்களுக்கு வாட்ஸ்அப் ஊடாக அழைப்பு விடுக்கப்பட்டிருந்ததாகத் தெரியவருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3da1739c-f050-4de6-a457-181f5f01a781/26-6a94d0d9e17e3.webp' /></p><p>
</p><p>

இதனையடுத்து அலுவலகத்திற்குச் சென்ற குறித்த பெண் உத்தியோகத்தர், அங்கிருந்த மூலிகைத் தோட்டத்திற்கு நீர் பாய்ச்சும் பணியில் ஈடுபட்டிருந்துள்ளார். இதன்போது அப்பகுதியில் காணப்பட்ட பாதுகாப்பற்ற மின் கசிவு நீருடன் தொடர்புபட்ட நிலையில், அவர் மீது மின்சாரம் தாக்கியிருக்கலாம் என ஆரம்பகட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
</p><p>

மின்சாரம் தாக்கிய நிலையில் அவர் உடனடியாக மீட்கப்பட்டு தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். எனினும், வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படுவதற்கு முன்னரே அவர் உயிரிழந்துவிட்டதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
</p><p>

விடுமுறை நாளிலும் அலுவலகப் பணிக்காகச் சென்ற நிலையில், இரண்டு பிள்ளைகளின் தாயான இளம் பெண் உத்தியோகத்தர் ஒருவர் இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்துள்ளமை அவரது குடும்பத்தினரையும், சக உத்தியோகத்தர்களையும் ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.</p><p>


சம்பவம் தொடர்பில் சுன்னாகம் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். பாதுகாப்பற்ற மின் இணைப்பு அல்லது மின் கசிவே இந்த உயிரிழப்புக்குக் காரணமா என்பது தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.&nbsp; &nbsp; &nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-31T00:56:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[மீண்டும் அரியணை ஏற துடிக்கும் ராஜபக்ச அணி.. ரில்வின் சில்வாவின் கடும் விமர்சனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/rajapaksa-allaince-npp-government-tilwin-silva-1788136764"></link>
            <id>https://tamilwin.com/article/rajapaksa-allaince-npp-government-tilwin-silva-1788136764</id>
            <summary type="text">பெரும் ஊழல்வாதிகளும் கொலைகாரக் கும்பலைச் சேர்ந்தவர்களுமான ராஜபக்ச அணியினர்
மீண்டும் இந்த நாட்டின் அரியணை ஏறுவதற்கு நாட்டு மக்கள் ஒருபோதும் அனுமதிக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>பெரும் ஊழல்வாதிகளும் கொலைகாரக் கும்பலைச் சேர்ந்தவர்களுமான ராஜபக்ச அணியினர்
மீண்டும் இந்த நாட்டின் அரியணை ஏறுவதற்கு நாட்டு மக்கள் ஒருபோதும் அனுமதிக்க
மாட்டார்கள் என்று மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா
தெரிவித்தார்.
</p><p>
சிறந்த திட்டமிடலுடன் தற்போதைய அரச நிர்வாகம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது
என்றும், வெளியகத் தாக்கங்களினால் பொருளாதார ரீதியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதை
ஏற்றுக்கொள்கின்றோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.</p><p>

தேசிய மக்கள் சக்தி அரசின் செயற்பாடுகள் மற்றும் எதிர்காலத் திட்டமிடல்கள்
தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துரைக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
</p><p>
அவர் மேலும் தெரிவிக்கையில்,

"பாரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் மக்கள் உருவாக்கிய தேசிய மக்கள் சக்தி
அரசு, மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகின்றது.</p><h2>பொருளாதார நிலை&nbsp;</h2><p> </p><p>எனினும், சகல
வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளதை
ஏற்றுக்கொள்கின்றோம்.

வங்குரோத்து நிலையடைந்து வீழ்ச்சியடைந்த அரச கட்டமைப்புடனான அரசையே ஜனாதிபதி
அநுரகுமார திஸாநாயக்க பொறுப்பேற்றார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9b8d6caa-bd83-4343-9ef5-fb5b163bf94a/26-6a94cd3e60e93.webp' /></p><p>
</p><p>
கடந்த காலங்களில் போதைப்பொருள் வர்த்தகத்துக்கும் பாதாளக் குழுக்களுக்கும் அரச
அனுசரணை வழங்கப்பட்டிருந்ததுடன் செல்வந்தர்கள் எவ்வித அச்சமுமின்றி ஊழல்,
மோசடிகளில் ஈடுபட்டனர்.
</p><p>
தற்போது அந்த நிலைமை மாற்றியமைக்கப்பட்டு சட்டம் அனைவருக்கும் பொதுவானதாக
ஆக்கப்பட்டுள்ளது. பிரபுக்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் வழங்கப்பட்டிருந்த
விசேட சிறப்புரிமைகள் மற்றும் வரப்பிரசாதங்கள் அனைத்தும் நீக்கப்பட்டுள்ளன.

நாட்டை வங்குரோத்து நிலைக்குத் தள்ளிய ஊழல்வாதிகள் இன்று கூட்டணியாக
ஒன்றிணைந்துள்ளனர்.</p><p> ஊழல், மோசடி வழக்குகள் தொடர்பான விசாரணைகள்
துரிதப்படுத்தப்பட்டுள்ளதால் அவர்கள் அச்சமடைந்துள்ளனர். அது அவர்களின்
தனிப்பட்ட பிரச்சினையே தவிர தேசிய பிரச்சினை அல்ல.

அரச நிர்வாகக் கட்டமைப்பில் ஒருசில தரப்பினரிடம் குறைபாடுகள் காணப்படுவதை
அவதானிக்க முடிகின்றது.</p><p> கடந்த கால மோசடியான நிர்வாகக்மைப்புக்குப்
பழக்கப்பட்டவர்கள் குறித்தும் நிர்வாகக் கட்டமைப்பின் ஊடாக உரிய நடவடிக்கைகள்
எடுக்கப்படும்." என்றார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-31T00:46:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரசாங்கம் நீதித்துறையை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சி! அஜித் பி பெரேரா பகிரங்க குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/govt-is-trying-to-take-control-judiciary-ajith-p-1788135885"></link>
            <id>https://ibctamil.com/article/govt-is-trying-to-take-control-judiciary-ajith-p-1788135885</id>
            <summary type="text">அரசியலமைப்பின் 22ஆவது திருத்தத்தின் மூலம் அரசாங்கம் நீதித்துறையைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சிப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரசியலமைப்பின் 22ஆவது திருத்தத்தின் மூலம் அரசாங்கம் நீதித்துறையைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சிப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா குற்றம் சாட்டியுள்ளார்.</p><p>
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.</p><p>
இந்தச் சட்டமூலத்திற்கு எதிரான மனுக்களை விசாரிக்க உயர் நீதிமன்றத்தின் அனைத்து 13 நீதியரசர்களும் அடங்கிய முழுமையான அமர்வு உருவாக்கப்பட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.</p><p></p><h2>நீதித்துறையின் சுதந்திரம்</h2><p>

இதன்போது, மேலும் கருத்து வெளியிட்ட அஜித் பி பெரேரா, “நீதிபதிகள் மற்றும் சட்டத்தரணிகளின் சுதந்திரம் தொடர்பான ஐக்கிய நாடுகளின் சிறப்பு அறிக்கையாளர், 22ஆவது அரசியலமைப்பு திருத்தம் குறித்து ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கடும் கவலை தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f929ed60-6179-4cfd-b6de-9bfa1d03f592/26-6a94cd556703c.webp' /></p><p>

இத்திருத்தம் சர்வதேச சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் உடன்படிக்கையின் 14(1) பிரிவுக்கு முரணானது என்றும், பதவியிலிருக்கும் நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பது நீதித்துறையின் சுதந்திரத்தைப் பாதிக்கும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.</p><p>
மேலும், இத்திருத்தத்தைக் கொண்டுவருவதற்கு முன்னர் எந்தெந்த அமைப்புகளுடன் கலந்தாலோசிக்கப்பட்டது மற்றும் ஒட்டுமொத்த நீதித்துறை மறுசீரமைப்புத் திட்டம் என்ன என்பது குறித்து விளக்குமாறு ஐ.நா பிரதிநிதி அரசாங்கத்திடம் கேள்விகளை எழுப்பியிருந்தார்.</p><p>

 ஐ.நாவின் கேள்விகளுக்கு அரசாங்கம் அளித்துள்ள பதில் மிகவும் மோசமானது. முழுமையான நீதித்துறை மறுசீரமைப்பின் ஒரு பகுதியாகவே இத்திருத்தம் செய்யப்படுகிறது. இதற்கு 2026 ஜூலையில் அமைச்சரவை ஒப்புதல் அளித்துவிட்டதாகவும் அரசு கூறியுள்ளது.&nbsp;</p><p>
ஆனால், குறிப்பிட்ட எந்த திகதியும் இல்லாத இந்த அறிக்கை ஒரு அப்பட்டமான பொய்யாகும். அரசாங்கம் இலங்கை மக்களை மட்டுமன்றி சர்வதேச அமைப்பையும் ஏமாற்றப் பார்க்கிறது.” என்றார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-31T00:39:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாங்காக் சென்ற ரம்யா பாண்டியன்.. அழகிய புகைப்படங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/ramya-pandian-dazzling-stills-from-bangkok-1788136529"></link>
            <id>https://cineulagam.com/article/ramya-pandian-dazzling-stills-from-bangkok-1788136529</id>
            <summary type="text">நடிகை ரம்யா பாண்டியன் சில படங்களில் நடித்து இருந்தாலும் அவரை அதிகம் பிரபலம் ஆக்கியது அவரது மொட்டை மாடி போட்டோஷூட் மற்றும் பிக் பாஸ் ஷோ தான்.

அவர் த...</summary>
            <content type="html"><![CDATA[<p>நடிகை ரம்யா பாண்டியன் சில படங்களில் நடித்து இருந்தாலும் அவரை அதிகம் பிரபலம் ஆக்கியது அவரது மொட்டை மாடி போட்டோஷூட் மற்றும் பிக் பாஸ் ஷோ தான்.
</p><p>
அவர் திருமணமாகி செட்டில் ஆகிவிட்ட நிலையில் தொடர்ந்து கிளாமர் ஸ்டில்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.</p><p>

தற்போது பாங்காக் சென்றுள்ள அவர் அங்கு அழகிய உடையில் வலம் வந்த ஸ்டில்களை வெளியிட்டு இருக்கிறார். இதோ பாருங்க.</p>]]></content>
            <updated>2026-08-31T00:35:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜே.ஆர். கூட செய்யாத சர்வாதிகாரம் ; அரசாங்கத்தை கடுமையாக சாடிய திலித்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/dilit-slams-dictatorship-even-jr-did-not-commit-1788136114"></link>
            <id>https://jvpnews.com/article/dilit-slams-dictatorship-even-jr-did-not-commit-1788136114</id>
            <summary type="text">முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தனவ்கூட நடைமுறைப்படுத்தாத அளவிலான சர்வாதிகாரப் போக்கை தற்போதைய அரசாங்கம் முன்னெடுத்து வருவதாக சர்வஜன அதிகாரத்தின் தலைவர...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தனவ்கூட நடைமுறைப்படுத்தாத அளவிலான சர்வாதிகாரப் போக்கை தற்போதைய அரசாங்கம் முன்னெடுத்து வருவதாக சர்வஜன அதிகாரத்தின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திலித் ஜயவீர குற்றஞ்சாட்டியுள்ளார்.</p><p>
</p><p></p><p>மகாநாயக்க தேரர்களின் அனுசாசனையையும் ஏற்றுக்கொள்ளாத நிலைக்கு தற்போதைய அரசாங்கம் வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p>

சர்வஜன அதிகாரத்தின் மொனராகலை மாவட்ட தொகுதி தலைவர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு இன்று (30) பிற்பகல் புத்தல சந்தை வளாகத்தில் நடைபெற்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cdf63a42-4c35-4f20-8e56-c501e4fdc3f5/26-6a94cab34ba35.webp' /></p><p> இதில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே திலித் ஜயவீர மேற்கண்ட கருத்துக்களை வெளியிட்டார்.
</p><p>
தற்போது நாட்டின் ஜனநாயகம் உச்சக்கட்ட சவாலுக்கு முகங்கொடுத்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், எந்த ஜனாதிபதியும் இதுவரை மகாநாயக்க தேரர்களின் கருத்துக்களை புறக்கணிக்கும் வகையில் செயற்படவில்லை என்றும் தெரிவித்தார்.</p><p>

மேலும், இவ்வாறான அதிகாரமிக்க அரசியல் நிலை உருவாகுவதற்கு நாட்டு மக்கள் காரணமல்ல என்றும், சுயநல அரசியல்வாதிகளே அதற்கு பொறுப்புக்கூற வேண்டும் என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்.
</p><p>
தமது அரசியல் நடவடிக்கைகள் முற்போக்கு சக்திகளை ஒன்றிணைப்பதை நோக்கமாகக் கொண்டவை எனக் குறிப்பிட்ட திலித் ஜயவீர, எந்தவொரு அரசியல் கட்சிக்கும் ஆதரவாகச் செயற்படுவது இதன் நோக்கமல்ல என்றும் தெரிவித்தார்.
</p><p>
அரசியலில் குடும்பப் பின்னணி அல்லது பரம்பரை உரிமை மூலம் தலைமைத்துவம் கிடைக்கும் என்ற எண்ணம் மாற வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
</p><p>
“அரசியலில் எதுவும் தந்தையின் உரிமையால் கிடைக்காது; மக்களின் அன்பின் மூலமே அரசியல் உரிமை கிடைக்கும்” எனவும் திலித் ஜயவீர தெரிவித்துள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-31T00:28:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[அஜித்தின் டேர்டெவில் படத்தில் ஷாலினியும் நடிக்கிறாரா? உண்மை இதுதான்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/is-ajith-daredevil-have-shalini-in-guest-role-1788135945"></link>
            <id>https://cineulagam.com/article/is-ajith-daredevil-have-shalini-in-guest-role-1788135945</id>
            <summary type="text">அஜித் கார் ரேஸில் கலந்துகொள்வதற்காக சினிமாவில் இருந்து இடைவெளி எடுத்துக்கொண்டு இருக்கிறார். அவர் அடுத்து நடிக்கும் படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகி...</summary>
            <content type="html"><![CDATA[<p>அஜித் கார் ரேஸில் கலந்துகொள்வதற்காக சினிமாவில் இருந்து இடைவெளி எடுத்துக்கொண்டு இருக்கிறார். அவர் அடுத்து நடிக்கும் படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார்.</p><p>அந்த படத்திற்கு டேர்டெவில் என டைட்டில் அறிவிக்கப்பட்டு இருக்கும் நிலையில் அதை ஷாலினி அஜித் தான் தயாரிக்க போகிறார்.</p><p>செப்டம்பர் மாதத்தில் ஷூட்டிங் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1bd41f35-c09e-497d-bc7e-154ca14a3ed4/26-6a94ca0b3e6e2.webp' /></p><p>
</p><h2>ஷாலினி நடிக்கிறாரா?
</h2><p>இந்நிலையில் இந்த படத்தில் ஷாலினியை கெஸ்ட் ரோலில் நடிக்க வைக்க ஆதிக் ரவிச்சந்திரன் முயற்சி செய்ததாக தகவல் வெளியாகி இருக்கிறது.
</p><p>இருப்பினும் ஷாலினி நடிக்க மறுத்துவிட்டாராம். அஜித்தை திருமணம் செய்த பிறகு ஷாலினி படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டார். தற்போது மீண்டும் ரீஎன்ட்ரி கொடுக்கும் எண்ணம் இல்லை என சொல்லிவிட்டாராம்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-31T00:25:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரஷ்யாவின் முக்கிய பெட்ரோல் வழங்குநராக உருவெடுத்துள்ள இந்தியா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/india-key-petrol-supplier-to-russia-1788135560"></link>
            <id>https://news.lankasri.com/article/india-key-petrol-supplier-to-russia-1788135560</id>
            <summary type="text">India becomes key petrol supplier to Russia: ரஷ்யாவிற்கு முக்கிய பெட்ரோல் விநியோக நாடாக இந்தியா மாறியுள்ளது.

உக்ரைனின் தொடர்ச்சியான ட்ரோன் தாக்குதல...</summary>
            <content type="html"><![CDATA[<p>India becomes key petrol supplier to Russia: ரஷ்யாவிற்கு முக்கிய பெட்ரோல் விநியோக நாடாக இந்தியா மாறியுள்ளது.
</p><p>
உக்ரைனின் தொடர்ச்சியான ட்ரோன் தாக்குதலால் ரஷ்யாவின் உள்நாட்டு எரிபொருள் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 

இதனால், ரஷ்யா தனது தேவைகளை பூர்த்தி செய்ய வெளிநாடுகளிலிருந்து பெட்ரோல் இறக்குமதி செய்யத் தொடங்கியுள்ளது.
</p><p>
ஆகஸ்ட் மாதத்தில், ரஷ்யா தினசரி 1,25,000 பீப்பாய் பெட்ரோல் (சுமார் 4.7 லட்சம் டன்) இறக்குமதி செய்துள்ளது. இதில் இந்தியா, துருக்கி, மொராக்கோ ஆகிய மூன்று நாடுகள் முக்கிய பங்காற்றின.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/af75b6a7-312e-4733-9ea6-1739eb63c03c/26-6a94c88ab2c75.webp' /></p><p>குஜராத்தில் அமைந்துள்ள Nayara Energy-யின் Vadinar சுத்திகரிப்பு நிலையம் ரஷ்யாவின் Rosneft நிறுவனத்துடன் இணைந்து செயல்பட்டு ரஷ்யாவிற்கு பெருமளவில் பெட்ரோல் அனுப்பியுள்ளது.</p><p> கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் இந்தியா சுமார் 10 லட்சம் பீப்பாய் பெட்ரோல் ரஷ்யாவுக்கு வழங்கியுள்ளது.</p><p></p><p>

2022 முதல் இந்தியா ரஷ்யா கச்சா எண்ணெய் இறக்குமதியை அதிகரித்துள்ளது. ஜூன், ஜூலை மாதங்களில் இந்தியா தினசரி 2.6 மில்லியன் பீப்பாய் ரஷ்யா கச்சா எண்ணெய் வாங்கியுள்ளது. இதன் மூலம் தயாரிக்கப்பட்ட பெட்ரோல் மீண்டும் ரஷ்யாவுக்கு அனுப்பப்பட்டிருக்கலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.</p><p>

ஆகஸ்ட் மாதத்தில் ரஷ்யாவின் பெட்ரோல் இறக்குமதியில் 55 சதவீதம் (சுமார் 2.6 லட்சம் டன்) தடை செய்யப்பட்ட கப்பல்கள் மூலம், 40 சதவீதம் இரகசிய ship-to-ship (STS) transfers மூலம் வந்ததாக எரிசக்தி ஆய்வு நிறுவனம் Vortexa தெரிவித்துள்ளது.</p><p>
</p><p></p><p>உக்ரைன் தாக்குதலால் ரஷ்யாவின் உள்நாட்டு பெட்ரோல் உற்பத்தி 70 சதவீதம் வரை குறைந்துள்ளது. இதனால், உலகின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் ஏற்றுமதி நாடான ரஷ்யா, தனது உள்நாட்டு தேவைக்காகவே பெட்ரோல் இறக்குமதி செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.</p><p>

இந்நிலையில் இந்தியா, ரஷ்யாவிற்கு எரிபொருள் வழங்கும் முக்கிய கூட்டாளியாக உருவெடுத்துள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-31T00:16:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[வாட்ஸ்அப் குழுவில் ரகசிய பணப் பரிமாற்ற வலையமைப்பு ; வெளிச்சத்துக்கு கொண்டு வந்த உண்மை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/secret-money-transfer-network-in-whatsapp-group-1788134790"></link>
            <id>https://jvpnews.com/article/secret-money-transfer-network-in-whatsapp-group-1788134790</id>
            <summary type="text">வாட்ஸ்அப் (WatsApp) குழு ஒன்றின் ஊடாக கோடிக்கணக்கான யூரோக்கள் சட்டவிரோதமாகப் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ஐரோப்பிய ஒலிபரப்பு நிறுவனங்களின் (EBU) புலன...</summary>
            <content type="html"><![CDATA[<p>வாட்ஸ்அப் (WatsApp) குழு ஒன்றின் ஊடாக கோடிக்கணக்கான யூரோக்கள் சட்டவிரோதமாகப் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ஐரோப்பிய ஒலிபரப்பு நிறுவனங்களின் (EBU) புலனாய்வுத் தகவல்கள் கூறுகின்றன.
</p><p>
"டிரேடர்ஸ் ஒஃப் கிரேட்டர் ஐரோப்பா" (Traders of Greater Europe) என்ற பெயரிலான 532 உறுப்பினர்களைக் கொண்ட வாட்ஸ்அப் குழு மூலமாக, எந்தவிதமான அதிகாரப்பூர்வ ஆவணப் பதிவுகளும் இன்றி பல நூறு மில்லியன் யூரோக்கள் ரொக்கமாக உலகம் முழுவதும் கைமாற்றப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e4e6761b-78a9-42ab-831d-5519d4330bd7/26-6a94c588c55b3.webp' /></p><p>இந்த பணப் பரிமாற்ற வலையமைப்பு பல நாடுகளின் குற்றச் செயல்கள் போதைப்பொருள் கடத்தல் மனித கடத்தல் மற்றும் சிரியாவில் உள்ள ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு நிதி உதவி வழங்குதல் போன்றவற்றுக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

எந்தவித மின்னணுப் பதிவுகளும் இல்லாமல் நம்பிக்கையின் அடிப்படையில் உலகம் முழுவதும் பணத்தை அனுப்பப் பயன்படும் பழமையான 'ஹவாலா' பணப் பரிமாற்ற முறை இதற்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளது.
</p><p>
பெல்ஜிய நீதித்துறை மற்றும் ஐரோப்பிய காவல்துறையினர் மேற்கொண்ட சோதனைகளில் இந்த ரகசிய வலையமைப்பு கண்டறியப்பட்டுள்ளது.
</p><p>
பெல்ஜியத்தில் நடந்த நீதிமன்ற வழக்கைத் தொடர்ந்து இந்தத் தகவல்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.
</p><p>
அத்துடன் ஒஸ்திரியா உள்ளிட்ட நாடுகளில் ஹவாலா முறையைப் பயன்படுத்தி மனிதக் கடத்தலில் ஈடுபட்ட குழுக்களும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளன.</p>]]></content>
            <updated>2026-08-31T00:06:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[இஸ்தான்புலில் துருக்கி, சவுதி, பாகிஸ்தான் உயர் அதிகாரிகள் சந்திப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/turkiye-saudi-pakistan-meet-in-istanbul-1788134238"></link>
            <id>https://news.lankasri.com/article/turkiye-saudi-pakistan-meet-in-istanbul-1788134238</id>
            <summary type="text">Turkiye Saudi Pakistan meet in Istanbul: இஸ்தான்புலில் துருக்கி, சவுதி, பாகிஸ்தான் உயர் அதிகாரிகள் சந்திக்கவுள்ளனர்.

துருக்கி, சவுதி அரேபியா மற்றும...</summary>
            <content type="html"><![CDATA[<p>Turkiye Saudi Pakistan meet in Istanbul: இஸ்தான்புலில் துருக்கி, சவுதி, பாகிஸ்தான் உயர் அதிகாரிகள் சந்திக்கவுள்ளனர்.
</p><p>
துருக்கி, சவுதி அரேபியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளின் உயர்மட்ட அதிகாரிகள், திங்கட்கிழமை (ஆகஸ்ட் 31) அன்று இஸ்தான்புலில் சந்திக்க உள்ளனர்.</p><p>

இந்த சந்திப்பு, மூன்று நாடுகளுக்கிடையேயான பாதுகாப்பு மற்றும் இராணுவ ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கத்துடன் நடைபெறுகிறது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cea65d4f-8c7b-4bc9-935e-b41bdbfd9142/26-6a94c3602b302.webp' /></p><p>அல்ஜசீரா வெளியிட்ட தகவலின்படி, இந்தக் கூட்டத்தில் பாதுகாப்பு, பிராந்திய நிலைத்தன்மை, மற்றும் இராணுவ ஒத்துழைப்பு குறித்து முக்கியமான விவாதங்கள் நடைபெறவுள்ளன.
</p><p>
குறிப்பாக, மத்திய கிழக்கு மற்றும் தென் ஆசியாவில் அதிகரித்து வரும் பாதுகாப்பு சவால்கள் குறித்து மூன்று நாடுகளும் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளன.</p><p>
</p><p></p><p>துருக்கி, சவுதி அரேபியா மற்றும் பாகிஸ்தான் ஆகியவை, கடந்த சில ஆண்டுகளில் பாதுகாப்பு மற்றும் பொருளாதார உறவுகளை வலுப்படுத்தி வருகின்றன. இந்த சந்திப்பு, அந்த உறவுகளை மேலும் மேம்படுத்தும் முக்கியமான படியாகக் கருதப்படுகிறது.
</p><p>
சவுதி அரேபியா, சமீபத்தில் பாதுகாப்பு தொழில்நுட்பம் மற்றும் ஆயுத உற்பத்தி துறையில் துருக்கியுடன் இணைந்து பணியாற்றி வருகிறது. பாகிஸ்தானும், துருக்கி மற்றும் சவுதியுடன் இராணுவ பயிற்சி மற்றும் பாதுகாப்பு ஒப்பந்தங்களில் ஈடுபட்டு வருகிறது.
</p><p>
இந்த சந்திப்பு, பிராந்தியத்தில் புதிய பாதுகாப்பு கூட்டணியை உருவாக்கும் வாய்ப்பாகக் கருதப்படுகிறது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-30T23:54:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[05 வயது சிறுவனை தவறான முறைக்கு உட்படுத்திய இளைஞன்! யாழ்.மேல் நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/jaffna-youth-sentenced-to-19-years-in-prison-1788131506"></link>
            <id>https://ibctamil.com/article/jaffna-youth-sentenced-to-19-years-in-prison-1788131506</id>
            <summary type="text">





யாழ்ப்பாணத்தில் 05 வயது சிறுவனை அழைத்து சென்று பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கிய இளைஞனுக்கு 19 வருட சிறைத்தண்டனை விதித்து , யாழ். மே...</summary>
            <content type="html"><![CDATA[<p>





யாழ்ப்பாணத்தில் 05 வயது சிறுவனை அழைத்து சென்று பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கிய இளைஞனுக்கு 19 வருட சிறைத்தண்டனை விதித்து , யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி அபி.எஸ். சூசைதாசன் தீர்ப்பளித்துள்ளார்.</p><p>

அச்சுவேலி பகுதியை சேர்ந்த 05 வயதான சிறுவனை பெற்றோரின் பாதுகாப்பில் இருந்து கவர்ந்து சென்று பாலியல் துன்பறுத்தலுக்கு உள்ளாக்கிய குற்றச்சாட்டில் கைதான இளைஞனுக்கு எதிரான வழக்கு விசாரணைகள் யாழ்.மேல் நீதிமன்றில் நடைபெற்று வந்தது.</p><p></p><h2>நீதிமன்ற உத்தரவு</h2><p>
</p><p>
வழக்கு தீர்ப்புக்காக வெள்ளிக்கிழமை அழைக்கப்பட்ட போது, எதிரியான இளைஞனை குற்றவாளியாக கண்ட மன்று , பெற்றோரின் பாதுகாப்பில் இருந்து சிறுவனை கவர்ந்து சென்ற குற்றத்திற்காக 07 வருட சிறைத்தண்டனையும் 25 ஆயிரம் ரூபாய் தண்ட பணமும், பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கிய குற்றத்திற்கு 12 வருட சிறைத்தண்டனையும் விதித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4da22e5f-8a31-40e8-8127-f0bb86f537b9/26-6a94c1cb1527f.webp' /></p><p>
</p><p>
மேலும், 25 ஆயிரம் ரூபாய் தண்டமும் விதித்த மன்று, பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு 05 இலட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் இழப்பீடு வழங்க தவறின் மேலும் 3 வருட சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என மன்று தீர்ப்பளித்துள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table><p>

</p>]]></content>
            <updated>2026-08-30T23:50:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பகுதியில் தனியார் காணியிலிருந்து இரு மோட்டார் குண்டுகள் மீட்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/two-mortar-shells-recovered-from-private-land-1788133761"></link>
            <id>https://jvpnews.com/article/two-mortar-shells-recovered-from-private-land-1788133761</id>
            <summary type="text">திருகோணமலை கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆலிம் வீதி நோவா மைதானத்தில் அமைந்துள்ள தனியார் காணியிலிருந்து இரு மோட்டார் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.
மே...</summary>
            <content type="html"><![CDATA[<p>திருகோணமலை கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆலிம் வீதி நோவா மைதானத்தில் அமைந்துள்ள தனியார் காணியிலிருந்து இரு மோட்டார் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.</p><p>
</p><p></p><h3>மேலதிக விசாரணை</h3><p>ஆலிம் வீதியில் அமைந்துள்ள குறித்த காணியில் வீடொன்றை நிர்மாணிப்பதற்காக அத்திவாரத்திற்கான நிலத்தைத் தோண்டியபோதே, இந்த இரு மோட்டார் குண்டுகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8e25240e-8999-41a6-b375-67aa7a2e98cf/26-6a94c1830445e.webp' /></p><p>கிண்ணியா ஆலிம் வீதியைச் சேர்ந்த முகம்மட் ராபிக் முகம்மட் ரிபாஸ் என்பவருக்குச் சொந்தமான காணியிலேயே இக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.</p><p>இதனையடுத்து, காணி உரிமையாளர் வழங்கிய தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்த கிண்ணியா பொலிஸார், குண்டுகளை பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.</p><p>

மீட்கப்பட்ட மோட்டார் குண்டுகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக இன்று (31) நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.</p><p> சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிண்ணியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். &nbsp;&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-30T23:49:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[வாகன சாரதிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி ; நள்ளிரவு முதல் பெற்றோல் விலை குறைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/good-news-motorists-petrol-prices-reduced-midnight-1788110540"></link>
            <id>https://jvpnews.com/article/good-news-motorists-petrol-prices-reduced-midnight-1788110540</id>
            <summary type="text">இன்று (30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தனது எரிபொருட்களின் விலைகளை திருத்துவதற்கு தீர்மானித்துள்ளது. இதன்பட...</summary>
            <content type="html"><![CDATA[<p>இன்று (30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தனது எரிபொருட்களின் விலைகளை திருத்துவதற்கு தீர்மானித்துள்ளது.</p><p> </p><p></p><p>இதன்படி 414 ரூபாயாக காணப்பட்ட 92 ரக ஒக்டேன் பெற்றோல் லீற்றரின் விலை 15 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 399 ரூபாவாகும்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0654cfb8-4752-4ebe-818d-423d5ae0d3d4/26-6a9466cdb238d.webp' /></p><p>அத்துடன் 495 ரூபாயாக நிலவிய ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றரின் விலை 20 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 475 ரூபாவாகும். </p><p>

ஏனைய எரிபொருட்களின் விலைகளில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.</p><p></p>]]></content>
            <updated>2026-08-30T23:34:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[விண்ணில் பாய்ந்த நாசாவின் புதிய அதிநவீன தொலைநோக்கி ; பிரபஞ்ச ரகசியங்களை தேடுகிறது ‘ரோமன்’]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/nasa-s-new-state-art-telescope-launched-into-space-1788132826"></link>
            <id>https://jvpnews.com/article/nasa-s-new-state-art-telescope-launched-into-space-1788132826</id>
            <summary type="text">நாசா அமைப்பின் புதிய முதன்மை விண்வெளித் தொலைநோக்கியான ‘நான்சி கிரேஸ் ரோமன்’ அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் உள்ள கென்னடி விண்வெளி மையத்திலிருந்து ஸ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாசா அமைப்பின் புதிய முதன்மை விண்வெளித் தொலைநோக்கியான ‘நான்சி கிரேஸ் ரோமன்’ அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் உள்ள கென்னடி விண்வெளி மையத்திலிருந்து ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் பால்கன் ஹெவி ரொக்கெட் மூலம் ஞாயிற்றுக்கிழமை வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டுள்ளது.</p><p>
</p><p></p><p>சுமார் 4 பில்லியன் அமெரிக்க டொலர் செலவில் உருவாக்கப்பட்டுள்ள இந்த அதிநவீன விண்வெளித் தொலைநோக்கி, பிரபஞ்சத்தின் மிகப்பெரிய மர்மங்களான இருண்ட ஆற்றல், இருண்ட பருப்பொருள் மற்றும் புதிய கிரகங்கள் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்வதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.</p><p>‘ரோமன்’ தொலைநோக்கி பூமியிலிருந்து சுமார் 16 இலட்சம் கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ள லாக்ரேஞ்ச் பொயின்ட் 2 (L2) எனப்படும் பகுதியில் நிலைநிறுத்தப்படவுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aa7e19d7-282b-48a9-9822-aad00b14515e/26-6a94bddbd4bcf.webp' /></p><p>ஹப்பிள் மற்றும் ஜேம்ஸ் வெப் விண்வெளித் தொலைநோக்கிகளை விட அதிகமான பரந்த பார்வைத்திறனைக் கொண்டுள்ள ‘ரோமன்’, பிரபஞ்சத்தின் விரிவான முப்பரிமாண வரைபடத்தை உருவாக்குவதற்கும் உதவும் என நாசா தெரிவித்துள்ளது.
</p><p>
குறிப்பாக, ஹப்பிள் தொலைநோக்கியால் நீண்ட காலத்தில் மேற்கொள்ளக்கூடிய பெருமளவிலான விண்மீன் மண்டல ஆய்வுகளை, ‘ரோமன்’ தொலைநோக்கியால் குறுகிய காலத்திலேயே மேற்கொள்ள முடியும் என விண்வெளி ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
</p><p>
குறைந்தது ஐந்து ஆண்டுகள் செயல்படும் வகையில் திட்டமிடப்பட்டுள்ள இந்த விண்வெளித் தொலைநோக்கி, திட்டமிட்ட காலக்கெடுவுக்கு ஒன்பது மாதங்களுக்கு முன்னதாகவே வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p>

இதன் மூலம் பிரபஞ்சத்தின் தோற்றம், அதன் விரிவாக்கம் மற்றும் புதிய உலகங்கள் தொடர்பான மனிதகுலத்தின் புரிதலில் புதிய முன்னேற்றங்கள் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-30T23:33:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[உக்ரைனின் ஆயுதக் கிடங்கில் ரஷ்யா ட்ரோன் தாக்குதல் - 38 பேர் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/russia-strike-on-ukraine-ammunition-depot-kills-38-1788125393"></link>
            <id>https://news.lankasri.com/article/russia-strike-on-ukraine-ammunition-depot-kills-38-1788125393</id>
            <summary type="text">Russia strike on Ukraine ammunition depot: உக்ரைனின் ஆயுதக் கிடங்கில் ரஷ்யா ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளது.

ஆயுதக் கிடங்கில்...உக்ரைனின் தலைநகர் கீ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Russia strike on Ukraine ammunition depot: உக்ரைனின் ஆயுதக் கிடங்கில் ரஷ்யா ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளது.
</p><h2>
ஆயுதக் கிடங்கில்...</h2><p>உக்ரைனின் தலைநகர் கீவ் அருகே உள்ள மைலா பகுதியில் அமைந்திருந்த ஆயுதக் கிடங்கில் ரஷ்யா மேற்கொண்ட ட்ரோன் தாக்குதல், இந்த ஆண்டின் மிகப்பெரிய உயிரிழப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aa4c4ecc-f053-430e-a9eb-d731123bba46/26-6a94a0d3143f0.webp' /></p><p>இந்த தாக்குதலில் 38 பேர் உயிரிழந்ததாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்தார். மேலும் நான்கு பேர் காணாமல் போயுள்ளனர். </p><p>

தாக்குதலுக்குப் பிறகு கிடங்கில் இருந்த வெடிமருந்துகள் தீப்பற்றி, தொடர் வெடிப்புகள் ஏற்பட்டன. இதனால் அருகிலுள்ள குடியிருப்பு பகுதிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டன.
</p><p></p><h2>குடியிருப்பு பகுதிகள் சேதம்</h2><p>கிடங்கில் ஆர்டிலரி குண்டுகள், கண்ணிவெடிகள், ட்ரோன்கள் உள்ளிட்ட பல்வேறு ஆயுதங்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்தன. வெடிப்பின் தாக்கம் காரணமாக வீடுகள் சேதமடைந்ததோடு, வெடிக்காத குண்டுகள் குடியிருப்பு பகுதிகளில் சிதறியுள்ளன.</p><p>

ஜெலென்ஸ்கி, அதிகாரிகள் மீது கடும் விமர்சனம் செய்து, “பெரிய அளவில் வெடிமருந்துகளை குடியிருப்பு பகுதிகளுக்கு அருகில் வைத்திருப்பது தவறு” என்று கூறினார். இதனால் உக்ரைன் பாதுகாப்புத்துறை, நாடு முழுவதும் உள்ள ஆயுதக் கிடங்குகளை ஆய்வு செய்ய உத்தரவிட்டுள்ளது.
</p><p></p><h2>முதல் முறையல்ல</h2><p>இது முதல் சம்பவமல்ல. கடந்த ஜூலை மாதத்தில், கீவ் அருகே உள்ள விஷ்னேவே பகுதியில் நடந்த ஆயுதக் கிடங்கு வெடிப்பில் 10 பேர் உயிரிழந்தனர்.
</p><p>
ரஷ்யா கடந்த வாரம் மட்டும் 2,000 ட்ரோன்கள், 1,600 குண்டுகள், 31 ஏவுகணைகள் உக்ரைனின் இராணுவ, ஆற்றல், தொழில் மற்றும் போக்குவரத்து அமைப்புகளை குறிவைத்து தாக்கியதாக ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
</p><p>
இந்த தாக்குதல், உக்ரைனின் ஏற்கனவே சிரமப்பட்டு வரும் வான்வழி பாதுகாப்பு அமைப்பிற்கு கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-30T23:31:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்க சிறையில் இருந்து புகைப்படம் வெளியிட்ட முன்னாள் வெனிசுலா ஜனாதிபதி மதுரோ]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/ex-venezuela-president-maduro-shares-jail-photo-1788132492"></link>
            <id>https://news.lankasri.com/article/ex-venezuela-president-maduro-shares-jail-photo-1788132492</id>
            <summary type="text">Maduro shares jail photo stands firm: சிறையில் இருக்கும் முன்னாள் வெனிசுலா ஜனாதிபதி மதுரோ தனது புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மத...</summary>
            <content type="html"><![CDATA[<p>Maduro shares jail photo stands firm: சிறையில் இருக்கும் முன்னாள் வெனிசுலா ஜனாதிபதி மதுரோ தனது புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.</p><h2>

முன்னாள் ஜனாதிபதி மதுரோ&nbsp;புகைப்படங்கள்</h2><p>வெனிசுலாவின் முன்னாள் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ, அமெரிக்க சிறையில் இருந்து தனது புகைப்படங்களை வெளியிட்டு “நாங்கள் உறுதியாக நிற்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c675350f-4408-4855-8eef-70917dffc0b3/26-6a94bc8e45abf.webp' /></p><p>மதுரோ மற்றும் அவரது மனைவி சிலியா ஃப்ளோரஸ், கடந்த ஜனவரியில் காரகஸ் நகரில் நடந்த அமெரிக்க இராணுவ நடவடிக்கையில் கைது செய்யப்பட்டனர். </p><p>தற்போது அவர்கள் நியூயார்க், ப்ரூக்லின் சிறையில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு எதிராக போதைப்பொருள் கடத்தல் மற்றும் துப்பாக்கி வைத்திருப்பு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.</p><p></p><h2>டெலிகிராம் வழியாக செய்தி</h2><p> ஆனால், இருவரும் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளனர்.

மதுரோ, டெலிகிராம் வழியாக வெளியிட்ட செய்தியில், “என் பேரக்குழந்தைகள், சிறுவர்கள், சிறுமிகள் மற்றும் எங்களை நேசிக்கும் நல்ல மனிதர்களுக்கு இந்த புகைப்படங்களை ஒரு சிறிய பரிசாக அனுப்புகிறேன். நாங்கள் உறுதியாக நிற்கிறோம், உங்கள் அன்பால் எங்கள் இதயம் நிரம்பியுள்ளது” என்று குறிப்பிட்டார்.
</p><p>
புகைப்படங்களில் அவர் சாம்பல் நிற ட்ராக் சூட் அணிந்து, கைகளை அமைதியின் சின்னமாக உயர்த்தியுள்ளார். கைது செய்யப்பட்டதிலிருந்து அவர் அதிக எடை இழந்ததாகத் தெரிகிறது.
</p><p>
அவரது மகன் நிக்கோலஸ் மதுரோ குவேரா, “அவர் நல்ல உடல் நிலையில் உள்ளார். பைபிள் படிப்பதில் நேரத்தை செலவிடுகிறார்” என்று கூறினார்.</p><p></p><p>அமெரிக்க நீதிமன்றம், மதுரோ மற்றும் அவரது மனைவியின் வழக்கை ஜூன் 1, 2027 அன்று விசாரிக்கத் தொடங்கும் என்று அறிவித்துள்ளது.</p><p>

இந்த புகைப்படங்கள் வெளியாகிய இரண்டு நாட்களுக்கு முன்பு, வெனிசுலாவின் இடைக்கால ஜனாதிபதி டெல்சி ரொட்ரிகஸ், அமெரிக்காவுடன் வரலாற்றுச் சிறப்புமிக்க எண்ணெய் ஒப்பந்தத்தை அறிவித்தார். இதன் மூலம் அமெரிக்கா வெனிசுலாவில் எண்ணெய் களங்களை இயக்க அனுமதி பெற்றுள்ளது.</p><p>

மதுரோ, “நாங்கள் வலிமையாகவும் அமைதியாகவும் நம்பிக்கையுடனும் இருப்போம். கடவுள் எங்களுடன் இருக்கிறார். வெனிசுலா மீண்டும் எழும்” என்று தனது செய்தியை முடித்தார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-30T23:25:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[லாப திருஷ்டி யோகம் ; செல்வத்தை அள்ளிக் கொடுக்க போகும் ராசிக்காரர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/zodiac-signs-that-will-give-away-wealth-1788131942"></link>
            <id>https://jvpnews.com/article/zodiac-signs-that-will-give-away-wealth-1788131942</id>
            <summary type="text">ஜோதிடரீதியாக செப்டம்பர் மாதம் மிகவும் முக்கியமான மாதமாகக் கருதப்படுகிறது. பல்வேறு கிரக மாற்றஙகளால் செப்டம்பர் மாதத்தில் சில சக்திவாய்ந்த ராஜயோகங்கள் உ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜோதிடரீதியாக செப்டம்பர் மாதம் மிகவும் முக்கியமான மாதமாகக் கருதப்படுகிறது. பல்வேறு கிரக மாற்றஙகளால் செப்டம்பர் மாதத்தில் சில சக்திவாய்ந்த ராஜயோகங்கள் உருவாகப்போகின்றன. செப்டம்பர் 1 ஆம் திகதி செவ்வாய் மற்றும் புதன் இணைந்து லாப திருஷ்டி யோகத்தை உருவாக்கப்போகிறது. ஜோதிட சாஸ்திரத்தின் படி இரண்டு கிரகங்கள் ஒன்றுக்கொன்று 60 டிகிரி கோணத்தில் சந்திக்கும் போது லாப திருஷ்டி யோகம் உருவாகிறது.</p><p> லாப திருஷ்டி யோகம் சக்திவாய்ந்த பஞ்ச யோகங்களில் ஒன்றாகும். செவ்வாய்-புதன் உருவாக்கும் இந்த யோகத்தின் பலன்கள் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் வெளிப்பட்டாலும் சில ராசிக்காரர்கள் இதனால் கூடுதல் பலன்களை அனுபவிப்பார்கள். அவர்கள் எந்தெந்த ராசிக்காரர்கள் என்று நாம் இங்கு பார்ப்போம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/73bd6f0c-8439-46e6-93df-6ac3f055e198/26-6a94ba67e9267.webp' /></p><h3>மேஷம்</h3><p>
செவ்வாயால் ஆளப்படும் மேஷ ராசிக்காரர்கள் இந்த யோகத்தால் சிறப்பான பலன்களை அனுபவிக்கப்போகிறார்கள். பொருளாதாரரீதியாக இது மிகவும் சிறப்பான காலகட்டமாக இருக்கும், மேலும் கடந்த காலத்தில் தடைப்பட்டிருந்த வேலைகளை இப்போது வெற்றிகரமாக தொடங்கலாம். வேலையில் இருப்பவர்களுக்குப் புதிய பொறுப்புகள் வழங்கப்படலாம்.அந்த பொறுப்புகள் சற்றுச் சவாலாகத் தோன்றினாலும், அவை அவர்களின் திறமையை நிரூபிக்கும் வாய்ப்புகளைக் கொடுக்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e360e5e5-d04c-4005-9940-151d5f6d82f3/26-6a94ba689f110.webp' /></p><h3>மிதுனம்
</h3><p>மிதுன ராசிக்காரர்கள் இந்த யோகத்தால் எதிர்பாராத நன்மைகளை அனுபைவிக்கப்போகிறார்கள். இந்த யோகத்தால் சமூகத்தில் அங்கீகாரத்தையும் மரியாதையையும் அடையும் நேரமாக இது இருக்கும். இந்த காலகட்டத்தில் அவர்களின் வாழ்க்கையில் நிலவி வந்த நிதி சிக்கல்கள் முடிவுக்கு வரும். அவர்கள் வாழ்க்கையின் நீண்டகால ஆசைகளில் பல இந்த காலகட்டத்தில் நிறைவேறும். நிதிப் பிரச்சினைகளிலிருந்து விடுபடுவதற்கான வாய்ப்புகள் தேடிவரும். திருமண வாழ்க்கையில் அன்பும் பரஸ்பர பாசமும் அதிகரிக்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e03b85d9-39a9-4ca6-a49a-b7acefdeedce/26-6a94ba6950fa1.webp' /></p><h3>கன்னி
</h3><p>கன்னி ராசிக்காரர்களுக்கு இது வெற்றிகள் குவியும் காலகட்டமாக இருக்கும். இந்த காலகட்டத்தில் நிதி நிலை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. லாப திருஷ்டி யோகம் உங்களுக்கு நிதி ஸ்திரத்தன்மையை வழங்கக்கூடும், மேலும் உங்கள் சமூக அந்தஸ்தை அதிகரிக்கும். புதிய கார் அல்லது வீடு வாங்குவது பற்றி நீங்கள் யோசித்துக்கொண்டிருந்தால் அதற்கு இதுதான் சரியான காலம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0417b049-801a-4ef2-8886-12fc8c706c47/26-6a94ba6a037c1.webp' /></p>]]></content>
            <updated>2026-08-30T23:19:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாளத்தில் பேரழிவு ; நீர்மின் நிலைய சுரங்கத்தில் சிக்கியவர்களை மீட்க தீவிர தேடுதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/search-and-rescue-operation-underway-in-nepal-1788130196"></link>
            <id>https://canadamirror.com/article/search-and-rescue-operation-underway-in-nepal-1788130196</id>
            <summary type="text">நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவைத் தொடர்ந்து திரிசூலி-3ஏ (Trishuli-3A) நீர்மின் நிலையத்தின் சுரங்கப்பாதையில் சிக்கியுள்ளவர்களை மீட்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவைத் தொடர்ந்து திரிசூலி-3ஏ (Trishuli-3A) நீர்மின் நிலையத்தின் சுரங்கப்பாதையில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
</p><p>
இந்த மீட்புப் பணிகளில் முப்படை வீரர்கள் காவல்துறையினர் மற்றும் பயிற்சி பெற்ற நாய்களுடன் கூடிய 90 பேர் கொண்ட சிறப்பு மீட்புக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.
</p><p>
சீனா மற்றும் இந்தியாவைச் சேர்ந்த நிபுணர்கள் அடங்கிய மீட்புக் குழுவினர் இந்த பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2ecd5ddc-9692-4b1d-a5f3-7c3a238e96d6/26-6a94b3963e050.webp' /></p><p>

சுரங்கத்தின் மேற்பகுதியில் (Crown) 2அல்லது3 அடி அளவில் துளையிடப்பட்டு கயிறுகள் மூலம் மீட்புப் படையினர் உள்ளே இறங்கிச் சோதனைகளை மேற்கொண்டனர்.</p><p>எனினும் உள்ளிருந்து எந்தப் பதிலும் கிடைக்கவில்லை.

இந்தநிலையில், கடுமையான மற்றும் ஆபத்தான சூழலிலும் மீட்புக் குழுவினர் தொடர்ந்து 24 மணி நேரமும் அயராது உழைத்து வருவதாகப் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.</p><p>

இந்தச் பேரிடரில் ஆயிரக்கணக்கானோர் காணாமல் போயுள்ள நிலையில் நீர்மின் நிலையச் சுரங்கங்களில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
</p><p>
வெள்ளத்தால் வீதிகள் அடித்துச் செல்லப்பட்டதாலும் பாலங்கள் சேதமடைந்ததாலும் ரசுவா மாவட்டம் இன்னும் வெளி உலகத்துடன் தொடர்பில்லாமல் துண்டிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இந்தப் பகுதியில் உணவுப் பொருட்கள் இன்னும் ஓரிரு நாட்களுக்கு மட்டுமே போதுமான அளவில் இருப்பதாகவும் சமையல் எரிவாயு முற்றிலுமாக தீர்ந்துவிட்டதாகவும் சுகாதாரப் பணியாளர்கள் எச்சரித்துள்ளனர்.
</p><p>
மின்சார விநியோகம் முற்றிலும் தடைப்பட்டுள்ளதால் மக்கள் உறவினர்களுடன் தொடர்புகொள்ள முடியாமல் சிரமப்படுகின்றனர்.
</p><p>
வீதிகள் சாலைகள் சீரமைக்கப்பட்டு வரும் பகுதிகளில் நிவாரணப் பொருட்கள் விநியோகிக்கப்பட்டு வருவதாகவும் இன்னும் துண்டிக்கப்பட்டுள்ள சமூகங்களை விரைந்து சென்றடைய மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தேசிய பேரிடர் ஆபத்து குறைப்பு மற்றும் முகாமை ஆணையம் தெரிவித்துள்ளது.
</p><p>
இதேவேளை இந்த பேரிடரில் சிக்கி இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 800 ஐ அண்மித்துள்ளது.
அதேநேரம் 2500 பேரை இன்னும் காணவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-30T22:50:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரணில் விரித்த காபட் விரிப்பில் மிக வேகமாக பயணிக்கும் அநுர!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ranil-wickremesinghe-anura-government-rajitha-1788128918"></link>
            <id>https://tamilwin.com/article/ranil-wickremesinghe-anura-government-rajitha-1788128918</id>
            <summary type="text">இலங்கை மக்களுக்குப் பல வாக்குறுதிகளை வழங்கி ஆட்சிக்கு வந்த அநுர அரசு,
சர்வதேச நாணய நிதியத்துடன் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விரித்த
காபட் வி...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை மக்களுக்குப் பல வாக்குறுதிகளை வழங்கி ஆட்சிக்கு வந்த அநுர அரசு,
சர்வதேச நாணய நிதியத்துடன் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விரித்த
காபட் விரிப்பிலேயே பயணிக்கின்றது என்று முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன
தெரிவித்தார்.
</p><p>
காலி நகர மண்டபத்தில் நேற்று நடைபெற்ற கூட்டு
எதிர்க்கட்சியின் மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர்
மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.</p><p>

அவர் மேலும் உரையாற்றுகையில்,

"மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதை விட்டுவிட்டு, நீதிபதிகளின்
ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பதற்கே அரசு முன்னுரிமை அளிக்கின்றது.</p><h2>நீதிபதிகளின் ஓய்வு வயது..&nbsp;</h2><p> </p><p>இதற்குச்
சட்டத்தரணிகள் சங்கங்கள், ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழு, புத்திஜீவிகள்
மற்றும் அரசின் உள்ளகத் தரப்பினர் கூட எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cef4db43-3f4a-4f6b-b082-0be5087d0f1f/26-6a94b07e722f6.webp' /></p><p>
</p><p>
அமைச்சர் லால் காந்த போன்றவர்கள் கூறுவது போல் மாவட்ட செயலாளர்கள், நீதிபதிகள்
மற்றும் ஆளுநர்களை அரசே தேர்ந்தெடுக்கும் கம்யூனிஸ்ட் நாடுகளின் ஆட்சி
முறையைக் கொண்டுவரவே அநுர அரச தரப்பினர் முற்படுகின்றனர். </p><p>இதன் மூலம் காலி
மாநகர மற்றும் பிரதேச சபைகள் பெலவத்தையிலிருந்தே தேர்ந்தெடுக்கப்படும்
நிலைக்கு நாடு தள்ளப்படும்.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க
விரித்த காபட் விரிப்பிலேயே பயணிக்கின்றார். </p><p>ரணிலை விட அநுர வேகமாக சர்வதேச
நாணய நிதியத்தின் உடன்படிக்கையை நோக்கிச் செல்கின்றார். உலகில் எங்காவது ஒரு
சோசலிச அரசு சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து இயங்கியது உண்டா?" என்றும்
அவர் கேள்வி எழுப்பினார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-30T22:40:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாரிஸில் உருவான குட்டி யாழ்ப்பாணம் ; தமிழர்களின் போராட்டக் கதை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/little-jaffna-created-paris-story-struggle-tamils-1788129040"></link>
            <id>https://jvpnews.com/article/little-jaffna-created-paris-story-struggle-tamils-1788129040</id>
            <summary type="text">பிரான்சின் பாரிஸ் நகரில் உள்ள லா சப்பல் (La Chapelle) பகுதி, 1970களின் இறுதியிலும் 1980களிலும் இலங்கையில் நிலவிய போர்ச் சூழ்நிலை காரணமாக பிரான்ஸ் சென்...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரான்சின் பாரிஸ் நகரில் உள்ள லா சப்பல் (La Chapelle) பகுதி, 1970களின் இறுதியிலும் 1980களிலும் இலங்கையில் நிலவிய போர்ச் சூழ்நிலை காரணமாக பிரான்ஸ் சென்ற ஈழத்தமிழர்களின் முக்கிய வாழ்விடமாகவும் வணிக மையமாகவும் உருவெடுத்தது.</p><p>
</p><p></p><p>தாயகத்திலிருந்து கொண்டு வரப்பட்ட அரிசி மாவு, கறித்தூள், கருவாடு உள்ளிட்ட உணவுப் பொருட்களை நண்பர்களிடம் பகிர்ந்து கொள்வதில் ஆரம்பித்த முயற்சிகள், பின்னர் மளிகைக் கடைகளாகவும் தேநீர்க் கடைகளாகவும் வளர்ந்தன.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/68eb7f5e-3cc9-4c45-a4d0-39c27c3a6986/26-6a94af127be79.webp' /></p><p>காலப்போக்கில் மட்டன் ரோல்ஸ், பருப்பு வடை, கொத்துரொட்டி உள்ளிட்ட ஈழத்தமிழர் உணவுகள் பாரிஸில் பிரபலமடைந்து, உணவகங்களும் பெருகின.</p><p>

ஆரம்பகாலத்தில் மொழிப் பிரச்சினை, இனரீதியான பாகுபாடு, வன்முறைக் குழுக்களின் அச்சுறுத்தல் உள்ளிட்ட பல்வேறு சவால்களை எதிர்கொண்ட போதிலும், தமிழர்கள் தங்களது வணிகங்களை நிலைநிறுத்தினர்.
</p><p>
இன்று பட்டுச் சேலைகள், தங்க நகைகள், மளிகைக் கடைகள் மற்றும் உணவகங்கள் என லா சப்பல் ‘குட்டி யாழ்ப்பாணம்’ என அடையாளப்படுத்தப்படும் அளவுக்கு வளர்ந்துள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-30T22:30:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thileepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வவுனியாவில் மாணவர்களை இலக்கு வைத்து சூசகமான முறையில் போதைப்பொருள் விற்பனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/man-sell-drugs-to-students-in-vavuniya-arrested-1788128303"></link>
            <id>https://tamilwin.com/article/man-sell-drugs-to-students-in-vavuniya-arrested-1788128303</id>
            <summary type="text">வவுனியா நகரப்பகுதியில் பாடசாலை மாணவர்களை இலக்காகக் கொண்டு கஞ்சா கலந்த
லேகியம் விற்பனை செய்த குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.&amp;nb...</summary>
            <content type="html"><![CDATA[<p>வவுனியா நகரப்பகுதியில் பாடசாலை மாணவர்களை இலக்காகக் கொண்டு கஞ்சா கலந்த
லேகியம் விற்பனை செய்த குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.&nbsp;</p><p>பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து, மேற்கொண்ட நடவடிக்கையில் நேற்று (30.08.2026)
குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><h2>கைது நடவடிக்கை&nbsp;</h2><p>கோவில்குளம் பகுதியில் அமைந்துள்ள லேகியம்
விற்பனை செய்யும் நிலையம் ஒன்றை பொலிஸார் முற்றுகையிட்டு, அங்கு சோதனை
நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/45346300-5fec-4b20-8348-b046362debe3/26-6a94ad35e3dac.webp' /></p><p>

இதன்போது கஞ்சா கலந்ததாக சந்தேகிக்கப்படும் 400ற்கும் மேற்ப்பட்ட லேகியப்
பொதிகள் கைப்பற்றப்பட்டதுடன் வியாபார நிலையத்தில் கடமையாற்றிய 20
வயதான இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>மேலும், குறித்த லேகியம் வவுனியா நகரை அண்டிய பாடசாலை மாணவர்களை இலக்காகக் கொண்டு
விற்பனை செய்யப்பட்டு வந்துள்ளதாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.&nbsp;</p><p>இதனை தொடர்ந்து, விற்பனை நிலையத்தின் உரிமையாளரை கைது செய்வதற்கான நடவடிக்கைகள்
முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.</p><p>
</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-30T22:24:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[புலனாய்வுத் துறையால் மறைக்கப்பட்ட உண்மைகள்.. யாழில் சிறீதரன் எம்பி பகிரங்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/jaffna-missing-persons-conference-sritharan-speech-1788127925"></link>
            <id>https://tamilwin.com/article/jaffna-missing-persons-conference-sritharan-speech-1788127925</id>
            <summary type="text">நீதிக்கான இந்த நீள் பயணம் என்பது
சர்வதேசத்தின் கதவுகளைத் திறந்து, தமிழர்கள் மீதான காணாமல் போதல்களுக்கான
நீதியை நிச்சயம் நிலைநாட்டும் என்று வலிந்து க...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீதிக்கான இந்த நீள் பயணம் என்பது
சர்வதேசத்தின் கதவுகளைத் திறந்து, தமிழர்கள் மீதான காணாமல் போதல்களுக்கான
நீதியை நிச்சயம் நிலைநாட்டும் என்று வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின்
சர்வதேச மாநாட்டில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்
சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.</p><p>

அவர் மேலும் உரையாற்றுகையில்,

"இலங்கையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமிழர்களின் உறவினர்கள் நடத்தி வரும்
தொடர் போராட்டம் எதிர்வரும் பெப்ரவரி 20ஆம் திகதியுடன் 10 ஆண்டுகளை நிறைவு
செய்கின்றது. </p><p>இத்தனை ஆண்டு காலப் போராட்டப் பாதையில், "தங்கள் பிள்ளைகள்
நிச்சயம் திரும்பி வருவார்கள்" என்ற பெரும் கனவோடும் நீதிக்கான ஏக்கத்தோடும்
போராடிய 260 இற்கும் மேற்பட்ட தாய்மார்களும் தந்தையர்களும் தம் உயிரைப்
பறிகொடுத்துள்ளனர்.</p><h3>புலனாய்வாளர்களின் அச்சுறுத்தல்..&nbsp;&nbsp;</h3><p>
</p><p>
நல்லிணக்க ஆணைக்குழு போன்ற அமைப்புகள் மூலமாக உண்மை கண்டறிய முயன்றபோது,
சாட்சியமளிக்கச் சென்ற மக்களை இலங்கை புலனாய்வுத் துறையினர் அச்சுறுத்தினர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/16a1b843-3584-403b-a3e3-7bf1d132eed6/26-6a94ab9d14d61.webp' /></p><p>
வழியிலேயே கொட்டகைகளை அமைத்து மக்களைத் திசைதிருப்பி, சாட்சியம் அளிப்பதைத்
தடுத்து நிறுத்தினர். இதனால் மக்கள் எவ்வித பாதுகாப்பும் இல்லாத அச்சச்
சூழ்நிலையிலேயே வாழ நேரிட்டதுடன், முழுமையான சாட்சியங்களை வெளிப்படையாக வழங்க
முடியாமலும் போனது. </p><p>இதன் காரணமாக, உள்நாட்டு விசாரணை மற்றும் நீதி வழங்கும்
முறைகள் முற்றிலும் முடங்கிப் போய்விட்டன.

உள்நாட்டில் நீதி மறுக்கப்பட்ட நிலையில், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள்
மற்றும் தமிழ் மக்கள் அனைவரும் சர்வதேச நீதிமன்றம் மூலமாக மட்டுமே
தங்களுக்குப் பூரண நீதி கிடைக்க முடியும் என்பதைத் தொடர்ச்சியாக வலியுறுத்தி
வருகின்றனர்.</p><p>

2009 மற்றும் 2011 ஆம் ஆண்டுகளில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில்
முதன்முதலில் இலங்கைக்கு எதிரான பிரேரணைகள் கொண்டுவரப்பட்டபோது, அமெரிக்கா
மிகப்பெரிய அளவில் ஆதரவளித்து உதவியது. </p><p>அன்றுமுதல் இன்றுவரை அப்பிரேரணைகள்
வீணாகிவிடாமல், நீதியைப் பெறுவதற்கான முயற்சியில் அமெரிக்க நாடு காட்டிவரும்
கரிசனையையும் பங்களிப்பையும் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் என்றும் நன்றியுடன்
நினைவு கூருகின்றோம்." என்றார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-30T22:16:00+00:00</updated>
        </entry>
    </feed>
