<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-09-13T21:21:59+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[அனுராதபுர பேரணியில் சிக்கிய இரகசிய காணொளிகள்! மகிந்தவை காப்பாற்றும் மர்ம தாயத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/anuradhapura-rally-mahinda-1789333208"></link>
            <id>https://tamilwin.com/article/anuradhapura-rally-mahinda-1789333208</id>
            <summary type="text">அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அனுராதபுரத்தில் பொதுஜன பெரமுன கட்சியினரால் நடத்தப்பட்ட பேரணிக்கு வந்த ஆதரவாளர்களில் பலர் மது போதையில் இருந்ததாகவு...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அனுராதபுரத்தில் பொதுஜன பெரமுன கட்சியினரால் நடத்தப்பட்ட பேரணிக்கு வந்த ஆதரவாளர்களில் பலர் மது போதையில் இருந்ததாகவும், அவர்களுக்கு உணவுப் பொட்டலங்கள் மற்றும் மது வழங்கப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
</p><p>
மேலும், பேரணி முடிந்த பின்னர் பலர் மதுபோதையில் இருக்கும் விதத்தில் பல காணொளிகள் வெளியாகியுள்ளன.</p><p>


இந்தநிலையில்,
அனுராதபுரத்தில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) பேரணியில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கலந்துகொண்ட நிலையில், அவர் கையில் வைத்திருந்ததாகக் கூறப்படும் மர்மமான கோல் தொடர்பில் மீண்டும் கவனம் திரும்பியுள்ளது.
</p><p>
பொது நிகழ்வுகளில் மகிந்த ராஜபக்ச கையில் வைத்திருக்கும் இந்தப் பொருள், தங்க முலாம் பூசப்பட்ட கோல் அல்லது செங்கோல் போன்ற வடிவத்தில் காணப்படுவதாகக் கூறப்படுகிறது.

இந்தப் பொருள் தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் சமூக ஊடகங்களிலும் அரசியல் வட்டாரங்களிலும் நீண்டகாலமாக நிலவி வருகின்றன. </p><p>

குறிப்பாக, இது அதிர்ஷ்டம் மற்றும் பாதுகாப்பை வழங்கும் பொருளாகவும், ஜோதிட ஆலோசனைகளின் அடிப்படையில் பயன்படுத்தப்படுவதாகவும் சில தரப்பினரால் கூறப்படுகிறது.
</p><p>
மேலும், மகிந்த ராஜபக்ச ஜோதிடத்தின் மீது அதிக நம்பிக்கை கொண்டிருந்ததாகவும், அரசியல் முடிவுகள் உள்ளிட்ட முக்கிய விடயங்களில் ஜோதிடர்களின் ஆலோசனையைப் பெற்றதாகவும் பல ஆண்டுகளாக செய்திகள் வெளியாகியுள்ளன.
</p><p>
அவரது கைகளில் காணப்படும் பல்வேறு மோதிரங்கள், தாயத்துக்கள் உள்ளிட்டவையும் இதனுடன் தொடர்புபடுத்தப்பட்டு பேசப்பட்டுள்ளன.
</p><p>
இந்த விடயங்கள் தொடர்பில் பேசுகின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி...&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/3crJrhXAriQ" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-13T21:18:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை! 21 ஆண்டுகளுக்குப் பின் வெளிவரும் அதிர்ச்சி தகவல்கள் - அம்பலமான ஆதாரங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/joseph-pararajasingham-death-1789324601"></link>
            <id>https://tamilwin.com/article/joseph-pararajasingham-death-1789324601</id>
            <summary type="text">2005ஆம் ஆண்டு டிசம்பர் 25ஆம் திகதி மட்டக்களப்பு புனித மரியாள் இணைப் பேராலயத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>2005ஆம் ஆண்டு டிசம்பர் 25ஆம் திகதி மட்டக்களப்பு புனித மரியாள் இணைப் பேராலயத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், இதுவரை வெளிவராததாகக் கூறப்படும் பல்வேறு தகவல்களை ஊடகவியலாளர் நீராஜ் டேவிட் வெளியிட்டுள்ளார்.</p><p>

கிறிஸ்மஸ் தினத்தையொட்டி நடைபெற்ற நள்ளிரவுத் திருப்பலியில் கலந்துகொண்டிருந்த ஜோசப் பரராஜசிங்கம், நற்கருணை பெற்றுக்கொண்டிருந்த வேளையில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி கொல்லப்பட்டார்.
</p><p>
இந்தப் படுகொலை திட்டமிட்டு நடத்தப்பட்டதாகவும், வழிபாட்டுத் தலத்தையே இலக்காகத் தேர்ந்தெடுத்ததன் ஊடாக பொதுமக்கள் மத்தியில் உளவியல் ரீதியான அச்சத்தை ஏற்படுத்துவதே முக்கிய நோக்கமாக இருந்ததாகவும் நீராஜ் டேவிட் தெரிவித்துள்ளார்.</p><p>

மேலும், இந்தப் படுகொலைக்கு கருணா குழுவினர் மாத்திரமே காரணம் என பொதுவாகக் கூறப்பட்டு வந்த நிலையில், தமது தகவல்களின் அடிப்படையில் பல்வேறு தரப்புகளைச் சேர்ந்தவர்கள் இந்தத் திட்டத்தில் தொடர்புபட்டிருந்ததாக நீராஜ் டேவிட் தெரிவித்துள்ளார்.
</p><p>
குறிப்பாக, கருணா குழு, ஈபிடிபி, ஈபிஆர்எல்எப் மற்றும் இலங்கை இராணுவப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்தவர்கள் எனக் கூறப்படும் நபர்கள் அடங்கிய ஒன்பது பேர் கொண்ட குழு இதில் ஈடுபட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
</p><p>
அத்துடன், தேவாலயத்தின் வழிபாட்டு நடைமுறைகள் மற்றும் நள்ளிரவுத் திருப்பலி நடைபெறும் நேரம் உள்ளிட்ட விடயங்களை அறிந்துகொள்வதற்காக கத்தோலிக்க பின்னணியைக் கொண்ட மூவர் அந்தக் குழுவில் இணைக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
</p><p>
இதேவேளை, இந்தப் படுகொலைக்கான தயாரிப்புகள் மற்றும் அதில் பங்கேற்றதாகக் கூறப்படும் நபர்கள் தொடர்பில், அக்குழுவில் பணியாற்றிய ஒருவர் தற்போது வெளிநாட்டில் இருந்து தகவல்களை வழங்கியுள்ளதாகவும் நீராஜ் டேவிட் தெரிவித்துள்ளார்.
</p><p>
இந்தப் படுகொலை தொடர்பான மேலும் பல நேரடி அனுபவங்கள் மற்றும் புலனாய்வுத் தகவல்களை அடுத்தடுத்த பகுதிகளில் வெளியிடவுள்ளதாகவும் நீரஜ் டேவிட் தெரிவித்துள்ளார்.
</p><p>
இந்த விடயங்கள் தொடர்பில் விரிவாக எடுத்துவருகின்றது உண்மைகள் நிகழ்ச்சி...</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/Mf5NlT3f33E" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-13T21:12:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[சரத் பொன்சேகா கொலை முயற்சி வழக்கு ; பிணை வழங்கிய தீர்ப்புக்கு எதிராக சட்டமா அதிபர் நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/attorney-general-regarding-fonseka-s-bail-ruling-1789333916"></link>
            <id>https://jvpnews.com/article/attorney-general-regarding-fonseka-s-bail-ruling-1789333916</id>
            <summary type="text">முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை மரணிக்க செய்வதற்கு முயற்சித்தமை தொடர்பான வழக்கில், 14 ஆண்டுகள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபருக்கு...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை மரணிக்க செய்வதற்கு முயற்சித்தமை தொடர்பான வழக்கில், 14 ஆண்டுகள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபருக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் பிணையில் செல்ல அனுமதித்தமைக்கு எதிராக, சட்டமா அதிபர் மேன்முறையீடு செய்ய நடவடிக்கை எடுத்துள்ளார்.</p><p>
</p><p></p><p>புலிகள் அமைப்பின் உறுப்பினர் என சந்தேகிக்கப்படும் தம்பையா பிரகாசன் என்பவருக்கே இவ்வாறு பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1a233535-77f6-47c0-b7ac-36d763ec3913/26-6aa7119de119a.webp' /></p><p>

கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குறித்த சந்தேகநபர் உட்பட மூவருக்கு எதிராக நடைபெற்று வரும் வழக்கு விசாரணைகளுக்கு, இவர் பிணையில் செல்ல அனுமதிக்கப்படுவதன் மூலம் பாதிப்பு ஏற்படக்கூடும் என சட்டமா அதிபர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p>

குறித்த சந்தேகநபருக்கு எதிராக 230 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாகவும், வழக்கு விசாரணை இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாகவும் சட்டமா அதிபர் மேன்முறையீட்டில் குறிப்பிட்டுள்ளார்.</p><p>

முன்னதாக, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை பரிசீலித்த நீதிமன்றம், சந்தேகநபருக்கு 200,000 ரூபாய் ரொக்கப் பிணை மற்றும் நான்கு சரீரப் பிணைகளில் செல்ல அனுமதி வழங்கி உத்தரவிட்டிருந்தது.</p><p>

2009 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட இந்த சந்தேகநபருக்கு எதிராக, 2012 ஆம் ஆண்டு செப்டம்பர் 20 ஆம் திகதி அதிபயங்கர குற்றச்சாட்டுகளின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-09-13T21:12:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையின் முதல் பெண் வெளியுறவுச் சேவை அதிகாரி மானெல் அபேசேகர காலமானார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/foreign-service-officer-abeysekera-has-passed-away-1789332660"></link>
            <id>https://jvpnews.com/article/foreign-service-officer-abeysekera-has-passed-away-1789332660</id>
            <summary type="text">இலங்கை வெளியுறவுச் சேவையின் (முன்னாள் சிலோன் வெளிநாட்டுச் சேவை) முதல் பெண் அதிகாரியான ஐராங்கனி மானெல் அபேசேகர தனது 93ஆவது வயதில் காலமானார். இவரது இறுத...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை வெளியுறவுச் சேவையின் (முன்னாள் சிலோன் வெளிநாட்டுச் சேவை) முதல் பெண் அதிகாரியான ஐராங்கனி மானெல் அபேசேகர தனது 93ஆவது வயதில் காலமானார்.</p><p></p><p> </p><p>இவரது இறுதிச் சடங்கு நேற்று (12) பொரளை பொது மயானத்தில் நடைபெற்றது.
</p><p>
1933ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14ஆம் திகதி சிரேஷ்ட சிவில் அதிகாரியும் செனட் சபை உறுப்பினருமான ஈ.டபிள்யூ. கன்னங்கரவின் மகளாகப் பிறந்த மானெல் அபேசேகர, 1958ஆம் ஆண்டு வெளியுறவுச் சேவையில் இணைந்தார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c2d93da1-ded5-4a8e-8ae2-25d98e53f944/26-6aa70cb6781e4.webp' /></p><p>அரச சேவை ஆண்களின் ஆதிக்கத்தில் இருந்த அந்தக் காலத்தில், வெளியுறவுச் சேவையில் நுழைந்த முதல் பெண் என்ற பெருமையை இவர் பெற்றார்.</p><p>

ஜேர்மனி மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கான இலங்கையின் தூதுவராகப் பணியாற்றிய இவர், நாட்டின் சிறந்த தூதுவர்களில் ஒருவராக அடையாளப்படுத்தப்பட்டார்.</p><p>

1976ஆம் ஆண்டு 92 நாட்டுத் தலைவர்கள் பங்கேற்ற அணிசேரா உச்சிமாநாட்டின் தலைமை நெறிமுறை அதிகாரியாகவும் (Chief of Protocol) இவர் பணியாற்றினார்.</p><p>

1970ஆம் ஆண்டு தாய்லாந்தின் பேங்கொக் நகருக்குப் பொறுப்பு அதிகாரியாக (chargé d’affaires) இவர் சென்றபோது, வானூர்தி நிலையத்துக்கு வந்த ஓட்டுநர் ஒருவர் பெண் தூதுவரை எதிர்கொள்வதில் பழக்கமில்லாமல் "வெல்கம், மெடம்-சேர்" என்று வரவேற்ற சம்பவத்தைக் குறிப்பிடும் வகையில், 2010ஆம் ஆண்டு இவர் வெளியிட்ட சுயசரிதைக்கு "மாஸ்டர்-சேர்" (Master-Sir) தலைப்பிட்டிருந்தார்.
</p><p>
மேலும், தாய்லாந்தில் தூதுவராகப் பணியாற்றிய காலத்தில், சேபால ஏகநாயக்க என்பவரால் 169 பயணிகளுடன் கடத்தப்பட்ட இத்தாலிய விமானப் பணயக்கைதிகள் விவகாரத்தில், 40 மணி நேர பேச்சுவார்த்தையை வெற்றிகரமாக நடத்தி அசம்பாவிதங்கள் ஏதுமின்றி நிலைமையைச் சுமுகமாக முடிவுக்குக் கொண்டுவந்ததில் இவரது இராஜதந்திர பேச்சுவார்த்தைத் திறன் முக்கிய பங்கு வகித்தது.
</p><p>
இலங்கை வெளியுறவுச் சேவையில் பல பெண்கள் உயர் பதவிகளை வகிப்பதற்கு மானெல் அபேசேகரவின் ஆரம்பகாலப் பணி ஒரு முக்கிய முன்னோடியாக அமைந்தது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-13T20:51:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[மத்திய கிழக்கு பதற்றம் ; கொழும்பு-துபாய் விமான சேவையை தற்காலிக இடைநிறுத்தம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/suspension-of-colombo-dubai-flight-service-1789332124"></link>
            <id>https://jvpnews.com/article/suspension-of-colombo-dubai-flight-service-1789332124</id>
            <summary type="text">மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உருவாகி வரும் அசாதரண சூழ்நிலை காரணமாக, ஃபிட்ஸ் ஏர் நிறுவனம் தனது கொழும்பு-துபாய் விமானசேவையை தற்காலிகமாக இடைநிறுத்தம் ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உருவாகி வரும் அசாதரண சூழ்நிலை காரணமாக, ஃபிட்ஸ் ஏர் நிறுவனம் தனது கொழும்பு-துபாய் விமானசேவையை தற்காலிகமாக இடைநிறுத்தம் செய்ய முடிவு செய்துள்ளது.</p><p></p><p>

இந்த இடைநிறுத்தம் 2026 செப்டம்பர் 6 ஆம் திகதி முதல் அமலுக்கு வரும் என்று அந்த விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f547f4d5-3298-429b-81b2-081b36f9f1e2/26-6aa70a9de9967.webp' /></p><p>பிராந்தியத்தில் நிலவும் சூழ்நிலையைத் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், மேலும் அதன் தாக்கம் தனது விமானச் செயல்பாடுகளில் எவ்வாறு இருக்கும் என்பதையும் மதிப்பிட்டு வருவதாகவும் ஃபிட்ஸ் ஏர் கூறியுள்ளது.</p><p>&nbsp;தற்போதைய திட்டத்தின்படி, 2026 நவம்பர் 19 முதல் கொழும்பு-துபாய் விமான சேவையை மீண்டும் தொடங்க ஃபிட்ஸ் ஏர் எதிர்பார்க்கிறது. </p><p>இருப்பினும், இது அக்காலத்தில் நிலவும் சூழ்நிலையையும் எதிர்கால நிகழ்வுகளையும் பொறுத்தே அமையும் என்று அந்த விமான நிறுவனம் மேலும் கூறியுள்ளது. &nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-09-13T20:42:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[2026 மகளிர் ஆசிய கோப்பை: இலங்கையை வீழ்த்தி 8வது முறை சாம்பியனான இந்தியா!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/women-s-asia-cup-2026-final-india-beats-sri-lanka-1789331832"></link>
            <id>https://news.lankasri.com/article/women-s-asia-cup-2026-final-india-beats-sri-lanka-1789331832</id>
            <summary type="text">WOMEN&#039;S ASIA CUP 2026 Final India Beats Sri Lanka: மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கை அணியை வீழ்த்தி இந்திய அணி வெற்றி கோ...</summary>
            <content type="html"><![CDATA[<p>WOMEN'S ASIA CUP 2026 Final India Beats Sri Lanka: மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கை அணியை வீழ்த்தி இந்திய அணி வெற்றி கோப்பையை தட்டிச் சென்றுள்ளது.</p><h2> இந்திய அணியின் அதிரடியான பேட்டிங்</h2><p>துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற 2026 மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கை மற்றும் இந்தியாவின் மகளிர் அணிகள் மோதின.</p><p> நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து களமிறங்கியது.</p><p><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr">🇮🇳🏆 CHAMPIONS! 🏆🇮🇳<br><br>TEAM INDIA WOMEN HAVE WON THE ASIA CUP 2026! 🔥🏏<br><br>India beat Sri Lanka by 72 runs in the final! 💙🇮🇳<br><br>8th Asia Cup title for India! 🏆🔥<br><br>JAI HIND 🇮🇳<a href="https://x.com/hashtag/INDvsSL?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#INDvsSL</a> <a href="https://x.com/hashtag/TeamIndia?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#TeamIndia</a> <a href="https://x.com/hashtag/WomensAsiaCup2026?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#WomensAsiaCup2026</a> <a href="https://t.co/BylJK9ENt9">pic.twitter.com/BylJK9ENt9</a></p>&mdash; UDAI LAL OJHA (@UDAILALOJHA1200) <a href="https://x.com/UDAILALOJHA1200/status/2099198525917835586?ref_src=twsrc%5Etfw">September 13, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>தொடக்க வீரர்களாக களமிறங்கிய ஸ்மிருதி மந்தனா(Smriti Mandhana) 39 பந்துகளில் 59 ஓட்டங்களும், ஷஃபாலி வர்மா(Shafali Verma) 39 பந்துகளில் 68 ஓட்டங்களும் குவித்து மிரட்டினர்.</p><p>இதனால் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 183 ஓட்டங்கள் குவித்தது.</p><p></p><h2> ஆசியக் கோப்பையை வென்ற இந்திய மகளிர் அணி</h2><p>
184 ஓட்டங்கள் குவித்தால் வெற்றி என்ற சற்று கடினமான இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணியில் வீராங்கனைகள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்து திணறினர்.</p><p> தொடக்க வீரராக களமிறங்கிய கேப்டன் சமரி அதபத்து(Chamari Athapaththu) 32 பந்துகளில் 36 ஓட்டங்கள் குவித்து போராடினார்.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">India, Indiaaaaaaaa..... 🇮🇳<br><br>Heartiest congratulations to our Indian Women’s Cricket Team on winning the Women’s Asia Cup 2026. This remarkable triumph reflects the team’s hard work, determination and belief.<br><br>Your performance has made the entire nation proud. Wishing the… <a href="https://t.co/hJv1Qipmrc">pic.twitter.com/hJv1Qipmrc</a></p>&mdash; Smriti Z Irani (@smritiirani) <a href="https://x.com/smritiirani/status/2099198592443678927?ref_src=twsrc%5Etfw">September 13, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p> விஷ்மி குணரத்ன 20 ஓட்டங்களிலும், நிலக்ஷிகா சில்வா 22 ஓட்டங்களில் விக்கெட்டை பறிகொடுத்தனர்.</p><p>இறுதியில் இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 10 விக்கெட்டுகளையும் இழந்து வெறும் 111 ஓட்டங்கள் மட்டுமே குவித்தது.</p><p> இந்திய அணியின் பந்துவீச்சில் ஶ்ரீ சரணி(Shree Charani) 4 விக்கெட்டுகளையும், தீப்தி சர்மா 3 விக்கெட்டுகளையும் எடுத்து அசத்தினர்.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">𝐂𝐑𝐎𝐖𝐍𝐄𝐃 𝐀𝐆𝐀𝐈𝐍 👑<br><br>India showcased their dominance with an unprecedented eighth Women’s Asia Cup title, defeating Sri Lanka in the final in style 👊<br><br>How it unfolded ➡️ <a href="https://t.co/AUjCTQEkz0">https://t.co/AUjCTQEkz0</a> <a href="https://t.co/tpnJx2ts2u">pic.twitter.com/tpnJx2ts2u</a></p>&mdash; ICC (@ICC) <a href="https://x.com/ICC/status/2099201869730201690?ref_src=twsrc%5Etfw">September 13, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p> இதன் மூலம் 2026 மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கை அணியை 72 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம் பெற்றுள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-13T20:37:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி, கைக்குண்டு உள்ளிட்ட ஆயுதங்களுடன் ஒருவர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/foreign-made-gun-one-person-arrested-1789331353"></link>
            <id>https://jvpnews.com/article/foreign-made-gun-one-person-arrested-1789331353</id>
            <summary type="text">வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட எம். எம்.12 ரக துப்பாக்கி, கைக்குண்டு மற்றும் BMG வகையைச் சேர்ந்த 6 தோட்டாக்களுடன் சந்தேகநபர் ஒருவர் குற்றப் புலனாய்வுத் த...</summary>
            <content type="html"><![CDATA[<p>வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட எம். எம்.12 ரக துப்பாக்கி, கைக்குண்டு மற்றும் BMG வகையைச் சேர்ந்த 6 தோட்டாக்களுடன் சந்தேகநபர் ஒருவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>
</p><p></p><p>குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற விசாரணைப் பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், நேற்றைய தினம் சனிக்கிழமை கந்தானேகெதர, வலகும்புரமுல்ல பகுதியில் உள்ள வீடொன்றில் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/725d8586-518a-470e-9e52-b66373fe5b08/26-6aa7079a89e31.webp' /></p><p>
</p><p>
இதன்போது குறித்த வீட்டிலிருந்து வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட 12 ரக துப்பாக்கி, கைக்குண்டு மற்றும் BMG வகையைச் சேர்ந்த 6 தோட்டாக்கள் உள்ளிட்ட ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.
</p><p>
இதனையடுத்து, வலகும்புரமுல்ல, குளியாப்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய நபர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் இருந்து மீட்கப்பட்ட ஆயுதங்கள் எவ்வாறு அவரிடம் கிடைத்தன என்பது உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-13T20:29:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்புப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் வரலாற்றுச் சாதனை படைத்த Dr. ஹாசினி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/dr-hasini-achieves-historic-milestone-16gold-medal-1789330988"></link>
            <id>https://jvpnews.com/article/dr-hasini-achieves-historic-milestone-16gold-medal-1789330988</id>
            <summary type="text">கொழும்புப் பல்கலைக்கழக மருத்துவப் பீடத்தின் பட்டமளிப்பு விழாவில், தனது சிறப்பான கல்வித் திறமையால் Dr. ஹாசினி 16 தங்கப் பதக்கங்களை வென்று சாதனை படைத்து...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்புப் பல்கலைக்கழக மருத்துவப் பீடத்தின் பட்டமளிப்பு விழாவில், தனது சிறப்பான கல்வித் திறமையால் Dr. ஹாசினி 16 தங்கப் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார்.</p><p>
</p><p></p><p>MBBS கற்கைநெறியில் முதன்மை மாணவியாகத் திகழ்ந்த அவர், இறுதி MBBS பரீட்சை உள்ளிட்ட ஐந்து பாடப்பிரிவுகளிலும் முதல் வகுப்பு சிறப்புத் தேர்ச்சியைப் பெற்றுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0a1ac0f6-68e0-41e1-bd22-01e841eccc98/26-6aa7062df0c86.webp' /></p><p>

மருத்துவக் கல்வியில் தொடர்ச்சியாக சிறப்பான பெறுபேறுகளை வெளிப்படுத்தியதன் மூலம், பல்வேறு பாடப்பிரிவுகளுக்கான தங்கப் பதக்கங்களையும் அவர் தன்வசப்படுத்தியுள்ளார்.
</p><p>
ஒரே பட்டமளிப்பு விழாவில் 16 தங்கப் பதக்கங்களை வென்றிருப்பது Dr. ஹாசினியின் கல்விப் பயணத்தில் குறிப்பிடத்தக்க சாதனையாக அமைந்துள்ளது.
</p><p>
அவரது இந்த சாதனை கொழும்புப் பல்கலைக்கழக மருத்துவப் பீடத்திற்கும், அவரது குடும்பத்தினருக்கும் பெருமை சேர்த்துள்ளதுடன், இலங்கையின் மருத்துவக் கல்வித் துறையிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.</p><p>

கடின உழைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் கல்வியில் கொண்டிருந்த ஆர்வத்தின் மூலம் இந்தச் சாதனையைப் பதிவு செய்துள்ள Dr. ஹாசினிக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-13T20:23:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஸ்வீடன் பொதுத் தேர்தல்: ஆரம்ப கட்ட வாக்கெடுப்பில் முன்னிலை பெறும் இடதுசாரி கூட்டணி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/swedish-general-election-left-coalition-takes-lead-1789330172"></link>
            <id>https://news.lankasri.com/article/swedish-general-election-left-coalition-takes-lead-1789330172</id>
            <summary type="text">Swedish General Election Left Coalition Takes lead: ஸ்வீடன் பொதுத் தேர்தலின் ஆரம்ப கட்ட வாக்கெடுப்பில் இடதுசாரி கூட்டணி முன்னிலை பெற்றுள்ளது. ஸ்வீடன் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Swedish General Election Left Coalition Takes lead: ஸ்வீடன் பொதுத் தேர்தலின் ஆரம்ப கட்ட வாக்கெடுப்பில் இடதுசாரி கூட்டணி முன்னிலை பெற்றுள்ளது.</p><h2> ஸ்வீடன் பொதுத் தேர்தல்</h2><p>ஸ்வீடனில் நாடாளுமன்ற பொதுத் தேர்தல் ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்துள்ளது.</p><p>இந்த தேர்தலில் கடந்த 4 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் தற்போதைய அரசை அகற்றி விட்டு இடதுசாரி கூட்டணியை மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வருவதா? இல்லையா? என்பதை தீர்மானிக்க வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்துள்ளனர்.</p><p></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3abd2716-1d59-4fab-852d-4ccd6e191fab/26-6aa702fe08d83.webp' /></p><h2> கருத்துக்கணிப்புகள்</h2><p>நோவஸ்(Novus) கருத்துக்கணிப்பு நிறுவனத்தின் தேர்தலுக்கு பிந்தைய தரவுகளில், தற்போது ஆட்சியில் இருக்கும் பிரதமர் உல்ஃப் கிறிஸ்டர்சன்(Ulf Kristersson) தலைமையிலான வலதுசாரி கூட்டணி கிட்டத்தட்ட 47% மக்கள் ஆதரவை பெற்றுள்ளது.</p><p> ஆனால் சமூக ஜனநாயகக் கட்சியின் முன்னாள் பிரதமர் மக்டலேனா ஆண்டர்சன்(Magdalena Andersson) தலைமையிலான&nbsp; இடதுசாரி கூட்டணி சுமார் 51.3% ஆதரவுடன் ஸ்வீடனில் ஆட்சியை கைப்பற்றும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4b48804a-fd4a-4472-aa6a-08935a431483/26-6aa702feba33d.webp' /></p><p> மேலும். தேர்தலுக்கு முந்தைய கணிப்புகளில் இடதுசாரி கூட்டணி இந்த பொதுத் தேர்தலில் எளிதாக வெற்றி பெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இருப்பினும் கருத்து கணிப்புகளை மீறி கிறிஸ்டர்சன் தலைமையிலான பழமைவாத கூட்டணி வெற்றி பெற்றால் அது வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாக அமையக்கூடும்.</p><p> இதற்கிடையில் முந்தைய தேர்தலை விட இந்த தேர்தலில் வாக்கு விகிதமானது மிக குறைவாக இருக்க கூடும் என்று தேர்தலுக்கு பிந்தைய தரவுகள் தெரிவிக்கின்றன.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p>&nbsp;<br></p>]]></content>
            <updated>2026-09-13T20:09:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெடுக்குநாறிமலையில் 11 அடி புத்தர் சிலை இருந்தது ; சந்தபோதி தேரர் அதிரடி அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/an-11-foot-buddha-statue-at-vedukkunaari-malai-1789330045"></link>
            <id>https://jvpnews.com/article/an-11-foot-buddha-statue-at-vedukkunaari-malai-1789330045</id>
            <summary type="text">வவுனியா வடக்கு, வெடுக்குநாறிமலை பகுதி பௌத்த வழிபாட்டுத் தலம் எனவும், அங்கு கடந்த 2012ஆம் ஆண்டுக்கு முன்னர் 11 அடி உயரமான புத்தர் சிலை ஒன்று இருந்ததாகவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>வவுனியா வடக்கு, வெடுக்குநாறிமலை பகுதி பௌத்த வழிபாட்டுத் தலம் எனவும், அங்கு கடந்த 2012ஆம் ஆண்டுக்கு முன்னர் 11 அடி உயரமான புத்தர் சிலை ஒன்று இருந்ததாகவும், அதனை மீண்டும் அப்பகுதியில் நிறுவுவதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் சந்தபோதி தேரர் தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p></p><p>வெடுக்குநாறிமலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ள பகுதிக்கு பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்புக்கு மத்தியில் சுமார் 25 சிங்கள மக்களுடன் சந்தபோதி தேரர் தலைமையிலான குழுவினர் நேற்று சனிக்கிழமை சென்றிருந்தனர்.
</p><p>
மலைப் பகுதிக்குச் சென்ற குறித்த குழுவினர், சூலம் அமைந்திருந்த பகுதியில் சுமார் ஒன்றரை மணிநேரம் பிரித் ஓதி, பூஜை மற்றும் வழிபாடுகளில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8e2def7b-6d0f-43c8-8c58-72700fe1f1f5/26-6aa7027f74a58.webp' /></p><p>இதேவேளை, குறித்த காலப்பகுதியில் சைவ மக்களை மலை உச்சிப் பகுதிக்குச் செல்ல வேண்டாம் என பொலிஸார் அறிவுறுத்தியிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
இதன்போது கருத்து தெரிவித்த சந்தபோதி தேரர், வெடுக்குநாறிமலை ஒரு பௌத்த வழிபாட்டுத் தலம் எனக் குறிப்பிட்டதுடன், அங்கு 2012ஆம் ஆண்டுக்கு முன்னர் 11 அடி உயரமான புத்தர் சிலை ஒன்று இருந்ததாகவும், தற்போது அந்த சிலை தங்களிடம் இருப்பதாகவும் தெரிவித்தார்.
</p><p>
மேலும், அந்த புத்தர் சிலையை மீண்டும் வெடுக்குநாறிமலையில் நிறுவுவதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அவர் கூறினார்.
</p><p>
வெடுக்குநாறிமலையில் சைவ வழிபாடுகள் 2013ஆம் ஆண்டுக்குப் பின்னரே ஆரம்பிக்கப்பட்டதாகவும், தமிழர்கள் போலியான நம்பிக்கையின் அடிப்படையில் அங்கு வழிபாடுகளில் ஈடுபட்டு வருவதாகவும் சந்தபோதி தேரர் குற்றம் சாட்டினார்.
</p><p>
வெடுக்குநாறிமலை தொடர்பில் நீண்டகாலமாக சைவ மற்றும் பௌத்த தரப்புகளுக்கு இடையில் உரிமை மற்றும் வழிபாட்டு விவகாரங்கள் தொடர்பாக சர்ச்சைகள் நிலவி வருகின்ற நிலையில், சந்தபோதி தேரரின் இந்தக் கருத்துக்கள் மீண்டும் கவனம் பெற்றுள்ளன.
</p><p>
இந்நிலையில், குறித்த பகுதியில் நிலவும் நிலைமை தொடர்பில் பொலிஸார் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினரின் நடவடிக்கைகள் தொடர்ந்தும் அவதானிக்கப்பட்டு வருகின்றன.</p><p></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8e2def7b-6d0f-43c8-8c58-72700fe1f1f5/26-6aa7027f74a58.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/02254a71-c1d7-4fab-8f3c-a1929028f485/26-6aa70280d44a7.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c626e1c4-5d93-488b-99e2-9f90ad10b877/26-6aa7028028d66.webp' /></p>]]></content>
            <updated>2026-09-13T20:07:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலகின் கவனத்தை ஈர்க்கும் ஹோர்முஸ் – ஈரானின் அதிரடி நிலைப்பாடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/iran-unlikely-to-give-up-control-strait-of-hormuz-1789329532"></link>
            <id>https://tamilwin.com/article/iran-unlikely-to-give-up-control-strait-of-hormuz-1789329532</id>
            <summary type="text">ஈரான் ஹோர்முஸ் நீரிணையின் கட்டுப்பாட்டை விட்டுக்கொடுப்பதற்கான வாய்ப்பு குறைவு என மத்திய கிழக்கு விவகாரங்கள் தொடர்பான நிபுணரும், முன்னாள் அமெரிக்க இராஜ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரான் ஹோர்முஸ் நீரிணையின் கட்டுப்பாட்டை விட்டுக்கொடுப்பதற்கான வாய்ப்பு குறைவு என மத்திய கிழக்கு விவகாரங்கள் தொடர்பான நிபுணரும், முன்னாள் அமெரிக்க இராஜதந்திரியுமான அலன் ஐர் தெரிவித்துள்ளார்.</p><p>

மத்திய கிழக்கு நிறுவகத்தின் உறுப்பினரான அலன் ஐர், அல் ஜசீராவிடம் கருத்து தெரிவிக்கையில், ஹோர்முஸ் நீரிணையின் கட்டுப்பாட்டை ஈரான் தனது முக்கிய மூலோபாய தடுப்பு நடவடிக்கையாகக் கருதத் தொடங்கியுள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்.
</p><h2>ஹோர்முஸ் நீரிணை</h2><p>
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிடமிருந்து எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய தாக்குதல்களைத் தடுப்பதே ஈரான் தலைமையின் முக்கிய நோக்கமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

“அதைச் செய்வதற்கான ஒரே வழியாகவே நீரிணையின் கட்டுப்பாட்டை ஈரான் பார்க்கிறது. </p><p>எனவே, பேச்சுவார்த்தையில் விட்டுக்கொடுக்கக்கூடிய ஒரு விடயமாக அதை ஈரான் கருதாது” என அலன் ஐர் தெரிவித்துள்ளார்.</p><p>

உலகப் பொருளாதாரத்தில் ஏற்படக்கூடிய பாதிப்புகளை கட்டுப்படுத்த விரும்பினால், அமெரிக்காவும் வளைகுடா நாடுகளும் குறுகிய காலத்திலாவது ஹோர்முஸ் நீரிணையின் மீதான ஈரானின் கட்டுப்பாட்டை ஒரு நடைமுறை நிலையாக ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலை ஏற்படலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5b476c1e-a675-4c7d-843e-9f2b924bf70d/26-6aa7007ee0a2b.webp' /></p><p>
</p><p>
மேலும், இராஜதந்திர நடவடிக்கைகள் தற்போது வாஷிங்டனில் இருந்து விலகி வளைகுடா நாடுகள் மற்றும் ஈராக்கை நோக்கி நகர்ந்துள்ளதாகவும் அலன் ஐர் தெரிவித்துள்ளார்.</p><p>

தேவையான அளவிலான இராஜதந்திர நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுப்பதற்கு அமெரிக்கா “விருப்பமும் திறனும் அற்ற நிலையில் உள்ளது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-13T20:03:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[உக்ரைனில் போரிஸ் ஜான்சனுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல்: ரயில் மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/boris-johnson-face-security-threat-in-ukraine-1789328754"></link>
            <id>https://news.lankasri.com/article/boris-johnson-face-security-threat-in-ukraine-1789328754</id>
            <summary type="text">பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் பயணித்த ரயிலுக்கு அருகே ரஷ்யா ஆளில்லா விமானத் தாக்குதல் நடத்தியுள்ளது. பாதுகாப்பு அச்சுறுத்தலில் போரி...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் பயணித்த ரயிலுக்கு அருகே ரஷ்யா ஆளில்லா விமானத் தாக்குதல் நடத்தியுள்ளது.</p><h2> பாதுகாப்பு அச்சுறுத்தலில் போரிஸ் ஜான்சன்</h2><p>பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் உக்ரைனுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், அங்கு அவர் கடுமையான பாதுகாப்பு அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளார்.</p><p> உக்ரைனில் போரிஸ் ஜான்சன் பயணித்த ரயிலுக்கு சற்று பின்னால் வந்த ரயில் மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதலை நடத்தியுள்ளது.</p><p> உக்ரைனிய தலைநகர் கீவ்வில் இருந்து போலந்து நோக்கி போரிஸ் ஜான்சன் இரவில் ரயில் பயணம் செய்து கொண்டிருந்த போது எல்லைப் பகுதியில் இந்த வான்வழித் தாக்குதலானது நடத்தப்பட்டு இருப்பதாக ஜேர்மன் நாளிதழான டெர் ஸ்பீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/06e89063-d143-42fb-9716-46cc3d6162c6/26-6aa6fd74abeb1.webp' /></p><p>இந்த சம்பவத்தின் போது போரிஸ் ஜான்சனுடன் முன்னாஸ் ஸ்வீடன் பிரதமர் கார்ல் பில்ட், ஜேர்மன் சான்சலரின் பிரீட்ரிக் மெர்ஸின் நெருங்கிய ஆலோசகர் குண்டர் செளட்டர் மற்றும் பல ஐரோப்பிய தூதர்களும் உடனிருந்துள்ளனர்.</p><p>ஜான்சன் பயணித்த ரயில் எல்லைக்கு அருகில் சென்று கொண்டிருந்த போது அப்பகுதியில் ட்ரோன்களின் நடமாட்டம் இருப்பது கண்டறியப்பட்டு ரயிலானது உடனடியாக நிறுத்தப்பட்டது.</p><p>இருப்பினும் அதன் பின்னால் வந்த ரயில் மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளது. அதிர்ஷ்டவசமாக இதில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"> WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p> &nbsp; &nbsp;<br></p>]]></content>
            <updated>2026-09-13T19:46:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[போர்ட்ஸ்மவுத் அகதிகள் எதிர்ப்பு போராட்டம்: 6 பேரின் புகைப்படங்களை வெளியிட்ட காவல்துறை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/portsmouth-clash-police-release-6-men-images-1789327547"></link>
            <id>https://news.lankasri.com/article/portsmouth-clash-police-release-6-men-images-1789327547</id>
            <summary type="text">Portsmouth Clash Police Release 6 men Images: போர்ட்ஸ்மவுத் அகதிகள் எதிர்ப்பு போராட்டம் தொடர்பில் 6 பேரின் புகைப்படங்களை ஹாம்ப்ஷயர்காவல்துறை வெளியிட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>Portsmouth Clash Police Release 6 men Images: போர்ட்ஸ்மவுத் அகதிகள் எதிர்ப்பு போராட்டம் தொடர்பில் 6 பேரின் புகைப்படங்களை ஹாம்ப்ஷயர்காவல்துறை வெளியிட்டுள்ளது.</p><h2>6 பேரின் புகைப்படங்களை வெளியிட்ட காவல்துறை</h2><p>
கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை போர்ட்ஸ்மவுத்தில் அகதிகள் எதிர்ப்பு போராட்டத்தின் போது ஏற்பட்ட வன்முறை தொடர்பாக 6 பேரின் புகைப்படங்களை விசாரணைக்கு உதவும் வகையில் ஹாம்ப்ஷயர்காவல்துறை வெளியிட்டுள்ளது.</p><p> ஆங்கில கால்வாயில் அகதிகளை ஏற்றிக் கொண்டு ஈஸ்ட்னி மரீனா என்ற கப்பல் துறைமுகத்திற்கு வந்ததை அடுத்து இந்த மோதலானது வெடித்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6a4ed6ac-9be5-469c-9628-2e380d0eb642/26-6aa6f8bdb1041.webp' /></p><p> நூற்றுக்கணக்கானோர் சாலையை மறித்து பல மணி நேரம் போராட்டம் நடத்தினர். இரவு முழுவதும் அங்கேயே இருக்க போவதாக தெரிவித்தனர். இதையடுத்து இந்த விவகாரத்தில் தலையிட்ட ஹாம்ப்ஷயர் காவல்துறையினர் திங்கட்கிழமை அதிகாலை 4 மணிக்கு அங்கிருந்து 200க்கும் மேற்பட்டோரை கலைத்தனர்.</p><p> அப்போது ஏற்பட்ட வன்முறை சம்பவத்தின் போது காவல்துறையினர், கடலோர காவல் படைக்கு சொந்தமான பல வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன. சில அதிகாரிகளும் காயமடைந்தனர்.</p><p></p><h2> விசாரணை மற்றும் கைது</h2><p>
வன்முறை சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை கண்டறியும் பொருட்டு துப்பறியும் நிபுணர்கள் பல மணி நேர காணொளி காட்சிகளை ஆய்வு செய்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6d212986-0ccb-498f-bc96-e1edf494873b/26-6aa6f8bd0458f.webp' /></p><p> இதன் ஒரு பகுதியாக விசாரணைக்கு உதவும் வகையில் தற்போது 6 பேரின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர்.</p><p> வன்முறை சம்பவம் தொடர்பில் காவல்துறை ஏற்கனவே வெள்ளிக்கிழமை, ஹாம்ப்ஷயர், பால்ஸ்ரோவ் பகுதியை சேர்ந்த 42 வயது நபர் மீது குற்றச்சாட்டுகளை பதிவு செய்துள்ளது.</p><p> மேலும் சனிக்கிழமை 16 வயது சிறுவன் ஒருவனும் இதில் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.</p>]]></content>
            <updated>2026-09-13T19:25:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[மத்திய கிழக்கு மோதல் நிலைக்கு மத்தியில் இந்தியாவில் இருதரப்பு பேச்சுவார்த்தை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/bilateral-talks-in-india-regarding-iran-conflict-1789325485"></link>
            <id>https://ibctamil.com/article/bilateral-talks-in-india-regarding-iran-conflict-1789325485</id>
            <summary type="text">இந்தியாவில் நடைபெற்று வரும் 18-வது பிரிக்ஸ் (BRICS) உச்சி மாநாட்டின் இடையே, ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் மற்றும் அபுதாபி இளவரசர் ஷேக் காலித் பின்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியாவில் நடைபெற்று வரும் 18-வது பிரிக்ஸ் (BRICS) உச்சி மாநாட்டின் இடையே, ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் மற்றும் அபுதாபி இளவரசர் ஷேக் காலித் பின் முகமது பின் சயீத் அல் நஹ்யான் ஆகிய இரு தலைவர்களும் நேரில் சந்தித்துப் பேசிய விவகாரம் குறித்து, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது வெளிப்படையான கருத்தைத் தெரிவித்துள்ளார்.</p><p>இச்சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் ட்ரம்ப் கருத்து வெளியிடுகையில்,</p><p>''வளைகுடா நாடுகள் ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. அது அவர்களின் தனிப்பட்ட விருப்பம்; அதைப்பற்றி எனக்கு எந்தக் கவலையும் இல்லை (I don't care). அது அவர்களுக்கு நல்லதுதான்.</p><p></p><h2>சுமூகமான உடன்படிக்கை</h2><p>ஈரான் நாடு அமெரிக்காவுடன் ஒரு சுமூகமான உடன்படிக்கைக்கு வரக் கடுமையாக முயற்சிக்கின்றது. இதற்காகத் தொடர்ந்து பேச்சுவார்த்தைக்கான அழைப்புகளை விடுத்து வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/429003d9-3a60-48ae-a254-b3b94064c98c/26-6aa6f0af48730.webp' /></p><p>எனினும், அமெரிக்காவிற்கு முழுச் சாதகமான மற்றும் தகுந்த சரியான ஒப்பந்தத்தை மட்டுமே தனது நிர்வாகம் ஏற்றுக்கொள்ளும்” என கூறியுள்ளார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-13T18:51:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தோனேசியாவில் நடுக்கடலில் கவிழ்ந்த பயணிகள் படகு: பலி எண்ணிக்கை 6 ஆக அதிகரிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/java-sea-passenger-vessel-capsizes-6-dead-1789324904"></link>
            <id>https://news.lankasri.com/article/java-sea-passenger-vessel-capsizes-6-dead-1789324904</id>
            <summary type="text">இந்தோனேசியாவின் ஜாவா கடலில் கப்பல் காணாமல் போன விபத்தில் 6 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.மோசமான வானிலையில் சிக்கிய கப்பல்இந்தோனேசியாவின் ஜாவா கடல் பகுதியி...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தோனேசியாவின் ஜாவா கடலில் கப்பல் காணாமல் போன விபத்தில் 6 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.</p><h2>மோசமான வானிலையில் சிக்கிய கப்பல்</h2><p>இந்தோனேசியாவின் ஜாவா கடல் பகுதியில் மோசமான வானிலை காரணமாக பயணிகள் கப்பல் ஒன்று தொடர்பை இழந்து காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டது.</p><p> கிழக்கு ஜாவாவின் சுபராபாவில் இருந்து சனிக்கிழமை காலை 10.13 மணிக்கு விர்கோ டிரான்ஸ்போர்ட் 8(Virgo Transports 8) என்ற பயணிகள் கப்பல் புறப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9e833d06-cd18-4789-b633-1ff3253adecc/26-6aa6ee69e8882.webp' /></p><p> 390 அடி நீளம் கொண்ட இந்த கப்பலில் 30 பணியாளர்கள் உட்பட 243 பேர் போர்னியோவின் தெற்கு கலிமந்தன்(Kalimantan) நகரான பஞ்சர்மாசினை(Banjarmasin) நோக்கி பயணம் செய்தனர்.</p><p>கப்பல் மோசமான வானிலையில் சிக்கி தொலை தொடர்பை இழந்த போது அந்த கப்பலின் கேப்டன் ஆபத்து செய்தி அனுப்பியதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.</p><p> அதில், கடலில் அலைகள் 10 மீட்டர் வரை உயருவதாகவும், கப்பல் ஆபத்தான முறையில் ஒருபக்கமாக சாய்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p> இந்நிலையில் வான்வழி கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்ட நிலையில் கப்பல் தலைகீழாக மிதப்பது கண்டுபிடிக்கப்பட்டது.</p><p></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/38b92bde-e507-408a-827b-94d345f0507e/26-6aa6ee6aa2dd0.webp' /></p><h2> மீட்பு பணிகள் மற்றும் உயிரிழப்பு</h2><p>இந்த கப்பலில் பயணித்த 107 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். மீட்புப் பணியில் 4 கடற்படை கப்பல்கள் உட்பட 8 மீட்புக் கப்பல்கள், 2 மீட்பு ஹெலிகாப்டர்கள், பஞ்சார்மாசினை தளமாக கொண்ட உள்ளூர் மீட்புக் குழுவினர் ஆகியோர் ஈடுபடுத்தப்பட்டனர்.</p><p> இந்நிலையில் கப்பல் விபத்து சம்பவத்தில் குறைந்தது 6 பேர் வரை உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p> அத்துடன் கப்பலில் பயணித்த நுற்றுக்கணக்கானவர்களில் 130 க்கும் மேற்பட்டோர் இன்னும் என்ன ஆனார்கள் என்று தெரியவில்லை என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-13T18:41:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹோர்முஸ் நீரிணையில் ஈரானின் வணிககப்பல் மீது அதிகாலைவேளை தாக்குதல் : ஒருவர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/attack-commercial-vessel-in-the-strait-of-hormuz-1789322792"></link>
            <id>https://ibctamil.com/article/attack-commercial-vessel-in-the-strait-of-hormuz-1789322792</id>
            <summary type="text">”ஹோர்முஸ் நீரிணையில் உள்ள ஹெங்காம் மற்றும் கெஷ்ம் தீவுகளின் கடற்கரைக்கு அருகே இன்று(13) அதிகாலை 5 மணியளவில் வணிகக் கப்பல் ஒன்றின் மீது தாக்குதல் நடத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>”ஹோர்முஸ் நீரிணையில் உள்ள ஹெங்காம் மற்றும் கெஷ்ம் தீவுகளின் கடற்கரைக்கு அருகே இன்று(13) அதிகாலை 5 மணியளவில் வணிகக் கப்பல் ஒன்றின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில், ஒருவர் பலியானார். மூவர் காயமடைந்துள்ளனர்” என ஈரானின் கெஷ்ம் நகர அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தாக்குதல் யாரால் நடத்தப்பட்டது போன்ற விவரங்களை அவர்கள் குறிப்பிடவில்லை.</p><p>ஹோர்முஸ் நீரிணையில் உள்ள மிகப்பெரிய தீவான கெஷ்மைச் சுற்றி நேற்று இரவு பல தாக்குதல்கள் நடைபெற்றதாகப் பதிவாகியுள்ளது.

ஹோர்முஸ் நீரிணையை ஈரான் மூடியுள்ள நிலையில், அதுதொடர்பாக ஓமானுக்கு ஈரானுக்கும் இடையில் நாளை பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளதாகக் கூறப்பட்டது.ஆனால், அதற்கு ஒரு நாள் முன்னதாக இந்தத் தாக்குதல் சம்பவம் நடைபெற்றுள்ளது.</p><h2>ஹோர்முஸ் நீரிணைக்கான மோதல்</h2><p>

ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையில் 6 மாதங்களுக்கும் மேலாகத் தொடரும் இந்தப் போரில், ஹோர்முஸ் நீரிணையின் மீதான கட்டுப்பாடு மோதலுக்கான முக்கிய காரணமாக அமைந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2d16e53f-d418-499d-8c80-26d8cf697181/26-6aa6ea2f45378.webp' /></p><p>
</p><p>
அமெரிக்கா - ஈரான் இடையே சில வாரங்களுக்கு முன் நிறுத்தப்பட்டிருந்த போர் மீண்டும் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் ஹோர்முஸ் நீரிணையில் இரு நாடுகளும் மாறி மாறி தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.</p><p></p><h2>தொடர்ந்து அதிகரிக்கும் கச்சாய் எண்ணெய் விலை</h2><p>
</p><p>


ஆறு மாதங்களுக்கு மேலாகத் தொடரும் இந்த போரால், கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த வாரம் மட்டுமே கச்சா எண்ணெய் ஒரு பீப்பாயின் விலை 100 டாலருக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/965ffa27-55a4-4628-aa66-2a65109134dd/26-6aa6ea2e93fc6.webp' /></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-13T18:27:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையை வீழ்த்தி ஆசியக் கிண்ணத்தை தட்டிச் சென்ற இந்திய மகளிர் அணி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/india-vs-sri-lanka-live-womens-asia-cup-2026-final-1789322581"></link>
            <id>https://tamilwin.com/article/india-vs-sri-lanka-live-womens-asia-cup-2026-final-1789322581</id>
            <summary type="text">மகளிர் ஆசியக் கிண்ணம் 2026 தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கை அணியை 72 ஓட்டங்களால் வீழ்த்தி இந்திய மகளிர் அணி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.

துபாய்...</summary>
            <content type="html"><![CDATA[<p>மகளிர் ஆசியக் கிண்ணம் 2026 தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கை அணியை 72 ஓட்டங்களால் வீழ்த்தி இந்திய மகளிர் அணி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.</p><p>

துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.</p><h2>&nbsp;இந்திய அணி</h2><p>

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 183 ஓட்டங்களைப் பெற்றது.</p><p>

இந்திய அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீராங்கனைகளான ஸ்மிருதி மந்தனா மற்றும் ஷபாலி வர்மா ஆகியோர் அதிரடியாக விளையாடி அரைச்சதங்களைப் பதிவு செய்தனர்.

ஷபாலி வர்மா 39 பந்துகளில் 68 ஓட்டங்களையும், ஸ்மிருதி மந்தனா 39 பந்துகளில் 59 ஓட்டங்களையும் பெற்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6a3f0703-5e7b-4fc6-8324-a0aeb92df66d/26-6aa6e7f3d973a.webp' /></p><p> </p><p>இருவரும் இணைந்து முதல் விக்கெட்டுக்காக 129 ஓட்டங்களைப் பகிர்ந்து இந்திய அணிக்கு வலுவான அடித்தளத்தை ஏற்படுத்தினர்.

இதனையடுத்து 184 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணிக்கு இந்திய பந்துவீச்சாளர்கள் கடும் அழுத்தத்தை ஏற்படுத்தினர்.</p><p>

இலங்கை அணியின் விக்கெட்டுகள் சீரான இடைவெளிகளில் வீழ்த்தப்பட்ட நிலையில், இந்திய அணியின் இடதுகை சுழற்பந்து வீச்சாளரான ஸ்ரீ சரணி அபாரமாக பந்துவீசி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.</p><h2>ஆசியக் கிண்ண வரலாறு</h2><p>
</p><p>
இதன் காரணமாக இலங்கை அணியால் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை எட்ட முடியாமல் போனதுடன், 72 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்தியாவிடம் தோல்வியடைந்தது.

இதன் மூலம் மகளிர் ஆசியக் கிண்ணம் 2026 தொடரின் சாம்பியன் பட்டத்தை இந்திய அணி கைப்பற்றியுள்ளது.
</p><p>
கடந்த 2024ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசியக் கிண்ண இறுதிப் போட்டியில் இலங்கையிடம் தோல்வியடைந்திருந்த இந்திய அணிக்கு, இந்த வெற்றி குறிப்பிடத்தக்க மீள்வெற்றியாக அமைந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e4acad18-cffd-47f9-a374-2edfc989f2df/26-6aa6e7f48ebec.webp' /></p><p>

மேலும், இறுதிப் போட்டியில் 68 ஓட்டங்களை அதிரடியாகக் குவித்த ஷபாலி வர்மா, மகளிர் T20 ஆசியக் கிண்ண வரலாற்றில் அதிவேக அரைச்சதத்தை பதிவு செய்தார். அவர் வெறும் 24 பந்துகளில் அரைச்சதத்தை எட்டினார்.
</p><p>
அதிரடியான துடுப்பாட்டம் மற்றும் சிறப்பான பந்துவீச்சுடன் இலங்கையை வீழ்த்திய இந்திய மகளிர் அணி, ஆசியக் கிண்ணத்தை கம்பீரமாகக் கைப்பற்றியுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-13T18:14:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவின் கடல்சார் முற்றுகையையும் மீறி ஏற்றுமதி துறையில் ஈரான் படைத்த சாதனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/achievement-iran-accomplished-despite-us-blockade-1789322420"></link>
            <id>https://ibctamil.com/article/achievement-iran-accomplished-despite-us-blockade-1789322420</id>
            <summary type="text">அமெரிக்காவின் கடுமையான கடல்சார் பொருளாதார முற்றுகை மற்றும் தடைகளையும் மீறி, ஈரானின் தெற்கு மாகாணமான புஷெஹ்ர் (Bushehr), கடந்த ஐந்து மாதங்களில் 2.3 பில...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவின் கடுமையான கடல்சார் பொருளாதார முற்றுகை மற்றும் தடைகளையும் மீறி, ஈரானின் தெற்கு மாகாணமான புஷெஹ்ர் (Bushehr), கடந்த ஐந்து மாதங்களில் 2.3 பில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிக மதிப்புள்ள பொருட்களை வெற்றிகரமாக ஏற்றுமதி செய்துள்ளது.&nbsp;</p><p>இதுகுறித்து புஷெஹ்ர் மாகாண சுங்க அலுவலகத்தின் தலைவர் அலி சுலைமானி (Ali Soleimani) ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், </p><p>"இந்த ஐந்து மாத காலத்தில் மட்டும் சுமார் 5.1 மில்லியன் மெட்ரிக் டன் பொருட்கள் மாகாணத்தின் சுங்கச்சாவடிகள் மற்றும் துறைமுகங்கள் வழியாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன" என்று தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p></p><h2>அமெரிக்காவின் கடற்படை கண்காணிப்பு</h2><p>அமெரிக்காவின் கடற்படை கண்காணிப்பையும் மீறி அனுப்பப்பட்ட இந்த ஏற்றுமதிப் பொருட்களில், பெட்ரோகெமிக்கல் பொருட்கள், பல்வேறு வகையான திரவமாக்கப்பட்ட வாயுக்கள் (Liquefied Gases), சிமெண்ட், கட்டுமானக் கற்கள் மற்றும் கடல் உணவுகள் (மீன், இறால்) ஆகியவை முக்கிய பங்கு வகித்துள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1a539927-6444-4246-b535-ceebe8487884/26-6aa6e4b66353b.webp' /></p><p> குறிப்பாக, இப்பகுதியில் உள்ள 'பார்ஸ் சிறப்பு பொருளாதார எரிசக்தி மண்டலம்' (PSEEZ) மட்டுமே ஒட்டுமொத்த ஏற்றுமதி மதிப்பில் 87 சதவீத பங்களிப்பை வழங்கியுள்ளது.</p><p>ஈரான் மீது சர்வதேச அளவில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள போதிலும், இந்த ஆண்டில் புஷெஹ்ர் மாகாணம் உலகின் 32 நாடுகளுக்குத் தன் பொருட்களை விற்பனை செய்துள்ளது. </p><p>இதில் சீனா, ஐக்கிய அரபு அமீரகம் (UAE), பாகிஸ்தான், துருக்கி மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் ஈரானிய பொருட்களின் முக்கிய வர்த்தக கூட்டாளிகளாகத் திகழ்கின்றன என்று அலி சுலைமானி சுட்டிக்காட்டியுள்ளார்.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-13T18:00:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ராஜபக்சக்களின் நிலைமை மோசம்! ஆபத்தை தடுக்க முடியாத கையறு நிலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-rajapaksa-arrested-mahinda-crime-1789310832"></link>
            <id>https://tamilwin.com/article/namal-rajapaksa-arrested-mahinda-crime-1789310832</id>
            <summary type="text">கடந்த காலத்தில் இடம்பெற்ற குற்றச்செயல்களுடன் ஒப்பிட்டு பார்க்கின்ற பொழுது தற்போது இடம்பெறும் கைதுகள் திருப்தி அளிக்கக் கூடிய வகையில் இருக்கின்றது என ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>கடந்த காலத்தில் இடம்பெற்ற குற்றச்செயல்களுடன் ஒப்பிட்டு பார்க்கின்ற பொழுது தற்போது இடம்பெறும் கைதுகள் திருப்தி அளிக்கக் கூடிய வகையில் இருக்கின்றது என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞா. சிறிநேசன் எனத் தெரிவித்துள்ளார் .</p><p>லங்காசிறி ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.</p><p>அத்தோடு, ராஜபக்சக்களின் ஆட்சிக் காலத்தில் தாம் கடுமையாக பாதிக்கப்பட்டு இருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.</p><p>அரச வம்சத்தில் பிறந்தவராக இருந்தாலும் சரி யாராக இருந்தாலும் சரி குற்றம் செய்திருந்தால் நிச்சயமாக அதற்குரிய தண்டனையை அனுபவிக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.</p><p>மேலும், நியாயமான கைதுகளை தாம் வரவேற்பதாகவும், பக்கச்சார்பான பழிவாங்கும் கைதுகள் இடம்பெறுமான இருந்தால் நிச்சயமாக எதிர்த்து நிற்போம் எனவும் அவர் கூறினார்.</p><p>மேலும், ராஜபக்ச குடும்பத்தைச் சுற்றியுள்ள தற்போதைய அரசியல் சூழ்நிலை, எதிர்கொள்ளும் சவால்கள், ஆபத்துகளைத் தடுப்பதில் ஏற்பட்டுள்ள அரசியல் நிலைமை மற்றும் இலங்கையின் தற்போதைய அரசியல் மாற்றங்கள் குறித்தும் ஊடறுப்பு நிகழ்ச்சியில் விரிவாக பார்க்கலாம்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/BbNQPnS1qrA" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-13T17:48:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[கழுத்து அறுக்கப்பட்டு கிடந்த மாமனார்.. மருமகள் செய்த சம்பவம் ; 309 முறை சென்ற தொலைபேசி அழைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/daughter-in-law-allegedly-hires-hitmen-1789297871"></link>
            <id>https://jvpnews.com/article/daughter-in-law-allegedly-hires-hitmen-1789297871</id>
            <summary type="text">உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள இந்திரா நகர் பகுதியில் பிரபல தொழிலதிபர் கடந்த சனிக்கிழமை தனது வீட்டில் கழுத்து அறுக்கப்பட்டு மர்மமான முறையில் கொல...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள இந்திரா நகர் பகுதியில் பிரபல தொழிலதிபர் கடந்த சனிக்கிழமை தனது வீட்டில் கழுத்து அறுக்கப்பட்டு மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். </p><p style="text-align: justify; ">
 
ஆரம்பத்தில் இது வெளியாட்களின் கைவரிசை போல் தெரிந்தாலும், வீட்டில் எந்தப் பணமும் நகைகளும் திருடப்படாதது காவல்துறையினருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7407d0c2-dc15-4590-87b7-1897dedd42b3/26-6aa684d683463.webp' /></p><h2 style="text-align: justify; ">திட்டமிட்ட கொலை</h2><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">தீவிர விசாரணைக்குப் பிறகு, வினீத்தின் மருமகள் தான் தன் மாமனாரை தீர்த்துக்கட்ட கூலிப்படையை ஏவியது அம்பலமாகியுள்ளது.
</p><p style="text-align: justify; "> 
வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் மூலமாக கண்காணிக்கப்பட்டதாலும், பண செலவுகளில் மாமனார் கட்டுப்பாடுகளை விதித்ததாலும் ஏற்பட்ட ஆத்திரமே இந்த திட்டமிட்ட கொலைக்கு முக்கிய காரணமாகும்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">
 
வினீத்தின் முன்னாள் ஊழியரான&nbsp; மற்றும் அவரது கூட்டாளி ஆகியோர் இந்த தாக்குதலை நிகழ்த்தியுள்ளனர். </p><p style="text-align: justify; ">கொலை நடக்கும்போது குடும்பத்துடன் விருந்துக்கு சென்றிருந்த ஷாலு, விஷாலுடன் கடந்த மே மாதத்திலிருந்து 309 முறை போனில் பேசியுள்ளதும், பல தகவல்களை அழித்திருப்பதும் சைபர் துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.
</p><p style="text-align: justify; "> 
இதற்காக 6 இலட்சம் ரூபாய்க்குப் பேரம் பேசப்பட்டு, ஷாலு கைது செய்யப்பட்டுள்ளார்.&nbsp;</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-13T17:46:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[அங்குலான கடற்பரப்பில் மூழ்கிய கடற்படை படகு சுமார் ஒரு மாதத்தின் பின்னர் மீட்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/navy-boat-sank-angulana-waters-recovered-a-month-1789321303"></link>
            <id>https://jvpnews.com/article/navy-boat-sank-angulana-waters-recovered-a-month-1789321303</id>
            <summary type="text">கடந்த மாதம் அங்குலான கடற்பரப்பில் விபத்துக்குள்ளான இலங்கை கடற்படைக்கு சொந்தமான &#039;P 4447&#039; என்ற அதிவேக தாக்குதல் படகு, சிக்கலான நடவடிக்கைக்குப் பின்னர் வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கடந்த மாதம் அங்குலான கடற்பரப்பில் விபத்துக்குள்ளான இலங்கை கடற்படைக்கு சொந்தமான 'P 4447' என்ற அதிவேக தாக்குதல் படகு, சிக்கலான நடவடிக்கைக்குப் பின்னர் வெற்றிகரமாக மீட்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p></p><p>கடந்த ஓகஸ்ட் 15ஆம் திகதி வழக்கமான கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது இந்த படகு விபத்துக்குள்ளாகி, சுமார் 80 அடி ஆழத்தில் மூழ்கியது.
</p><p>
இதனைத் தொடர்ந்து, கடற்படை, விமானப்படை, காவல்துறை மற்றும் உள்ளூர் கடற்றொழிலாளர்களின் உதவியுடன் முன்னெடுக்கப்பட்ட கூட்டுத் தேடுதல் நடவடிக்கையின் மூலம் படகில் இருந்த 11 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1bb89ad9-155a-40c4-ab5d-399088b805f5/26-6aa6e0598a90f.webp' /></p><p>தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் பலனாக, விபத்தையடுத்து காணாமல் போயிருந்த படகின் இரண்டாம் நிலை அதிகாரி கடந்த 4ஆம் திகதி உடலமாக மீட்கப்பட்டார்.

இதன் மூலம் மீட்புப் பணியின் முதற்கட்டம் நிறைவடைந்தது.
</p><p>
அதனைத் தொடர்ந்து, கொந்தளிப்பான கடல் அலைகள் மற்றும் சவாலான கடல் அடி சூழ்நிலைகளுக்கு மத்தியிலும், கடற்படையின் விசேட பிரிவினர் படகை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.
</p><p>
பொறியியல், மின்சார மற்றும் இலத்திரனியல் துறை சார்ந்த நிபுணர்களின் ஒருங்கிணைப்பில், விசேட சாதனங்களைப் பயன்படுத்தி கடந்த 11ஆம் திகதி படகு கடலின் மேற்பகுதிக்குக் கொண்டுவரப்பட்டது.
</p><p>
பின்னர், அந்தப் படகு கொழும்பு துறைமுக வளாகத்துக்கு பாதுகாப்பாக இழுத்து வரப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-13T17:43:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[தாக்குதலுக்குள்ளாகும் ரஷ்யாவின் எரிபொருள் உள்கட்டமைப்பு! ஜெலன்ஸ்கிக்கு ட்ரம்ப் பலத்த அறிவுறுத்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/russia-s-fuel-infrastructure-under-attack-1789320934"></link>
            <id>https://ibctamil.com/article/russia-s-fuel-infrastructure-under-attack-1789320934</id>
            <summary type="text">ரஷ்யாவின் டீசல் எரிபொருள் உள்கட்டமைப்புகள் மற்றும் சுத்திகரிப்பு ஆலைகளை இலக்கு வைத்து உக்ரைன் நடத்தி வரும் வான்வழித் தாக்குதல்களை உடனடியாக நிறுத்துமாற...</summary>
            <content type="html"><![CDATA[<p>ரஷ்யாவின் டீசல் எரிபொருள் உள்கட்டமைப்புகள் மற்றும் சுத்திகரிப்பு ஆலைகளை இலக்கு வைத்து உக்ரைன் நடத்தி வரும் வான்வழித் தாக்குதல்களை உடனடியாக நிறுத்துமாறு, தனது உக்ரேனிய சகா வோலோடிமிர் ஜெலென்ஸ்கியை அமெரிக்க ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.</p><p> இந்தத் தாக்குதல்கள் உலகளாவிய தட்டுப்பாட்டை ஏற்படுத்தி ஒட்டுமொத்த உலகையும் பாதிப்பதாக அவர் கவலை தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p>ரஷ்யாவின் வருவாய் ஆதாரத்தையும், அதன் ராணுவப் பயன்பாட்டிற்கான எரிபொருள் விநியோகத்தையும் முடக்கும் நோக்கில், உக்ரைன் சமீபகாலமாக நீண்ட தூர ஆளில்லா விமானங்கள் (Drones) மூலம் ரஷ்யாவின் முக்கிய எரிபொருள் சுத்திகரிப்பு ஆலைகளைத் தொடர்ந்து தாக்கி வருகிறது.</p><p></p><h2>அயர்லாந்திற்கு அதிகாரப்பூர்வப் பயணம்&nbsp;</h2><p> </p><p>இதன் காரணமாக ரஷ்யாவின் ஒட்டுமொத்த எரிபொருள் சுத்திகரிப்புத் திறன் கணிசமாகக் குறைந்துள்ளது. அமெரிக்காவிலும் டீசல் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/51d7ff98-7f25-464b-bf93-b7821a461e81/26-6aa6df652d4a2.webp' /></p><p>இந்நிலையில் அயர்லாந்திற்கு அதிகாரப்பூர்வப் பயணம் மேற்கொண்டுள்ள ட்ரம்ப் இதுகுறித்துப் கருத்து வெளியிடுகையில், </p><p>“ஜெலென்ஸ்கி உடனடியாக ஒரு காரியத்தைச் செய்ய வேண்டும். அவர் ரஷ்யாவில் உள்ள டீசல் எரிபொருள் ஆலைகளை முடக்குவதை நிறுத்த வேண்டும்.</p><p> அவர் பிற இராணுவ இலக்குகளைத் தாக்கட்டும், ஆனால் டீசல் எரிபொருளை அல்ல. ஏனெனில், உலகளவில் அவர் பெரும் டீசல் தட்டுப்பாட்டை ஏற்படுத்தி வருகிறார்," என்று குறிப்பிட்டார்.&nbsp;</p><p>மேலும், உலகளாவிய இந்த எரிபொருள் நெருக்கடிக்கு மத்திய கிழக்கு நாடுகள் காரணமல்ல என்றும், ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே நடக்கும் இந்த மோதல்களால்தான் உலக சந்தையில் டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-13T17:35:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரஷ்யா மீது தாக்குதல் நடத்தும் உக்ரைன்: ஜெலென்ஸ்கியை எச்சரித்த டிரம்ப்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/trump-urges-ukraine-to-stop-attack-on-russian-oil-1789320836"></link>
            <id>https://news.lankasri.com/article/trump-urges-ukraine-to-stop-attack-on-russian-oil-1789320836</id>
            <summary type="text"> Trump Urges Ukraine to stop Attack on Russian oil: ரஷ்யாவின் டீசல் உள்கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்துவதை உக்ரைன் நிறுத்த வேண்டும் என்று அமெரிக்க ...</summary>
            <content type="html"><![CDATA[<p> Trump Urges Ukraine to stop Attack on Russian oil: ரஷ்யாவின் டீசல் உள்கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்துவதை உக்ரைன் நிறுத்த வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கோரியுள்ளார்.</p><h2> ஜெலென்ஸ்கியை வலியுறுத்திய டிரம்ப்</h2><p>ரஷ்யாவின் டீசல் உள்கட்டமைப்புகள் மீது நடத்தப்படும் ஆளில்லா விமானத் தாக்குதல்களை&nbsp; உடனடியாக நிறுத்தும்படி உக்ரைனிய ஜனாதிபதி விளாடிமிர் ஜெலென்ஸ்கியை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வலியுறுத்தியுள்ளார்.</p><p> டீசல் உள்கட்டமைப்புகள் மீது நடத்தப்படும் இந்த தாக்குதல்கள் உலகளாவிய எரிபொருள் விநியோகத்தில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி வருவதாக டிரம்ப் எச்சரித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/003bed0e-47f4-446f-9645-f74702aa75fb/26-6aa6de85a45df.webp' /></p><p> சர்வதேச அளவில் எரிபொருள் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள அழுத்தங்களுக்கு உக்ரைன் - ரஷ்யா இடையிலான மோதல்களே முக்கியக் காரணம் என்று ஞாயிற்றுக்கிழமை அயர்லாந்து ஓபன் போட்டியில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் டிர்ம்ப் குறிப்பிட்டார்.</p><p></p><p> பிராந்திய விவகாரங்கள்.&nbsp;
அமெரிக்காவுடன் இராஜதந்திர ஓப்பந்தத்தை ஏற்படுத்திக் கொள்ள ஈரான் தீவிரமாக முயற்சித்து வருவதாகவும், இறுதியில் இந்த மோதல் அமெரிக்காவிடம் இருந்து விலகி செல்லும் என்றும்&nbsp; செய்தியாளர் சந்திப்பில் டிரம்ப் குறிப்பிட்டார்.</p><p> மேலும் காற்று ஆற்றல் உள்கட்டமைப்பு தொடர்பாக பிரித்தானிய பிரதமர் ஆண்டி பர்னாமுடன் பேசி வருவதாகவும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள். &nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-13T17:34:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஏமன் மோதல்களில் ஒரே மாதத்தில் 1,500க்கும் அதிகமான வீரர்கள் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/1500-soldiers-killed-yemen-conflicts-single-month-1789318534"></link>
            <id>https://tamilwin.com/article/1500-soldiers-killed-yemen-conflicts-single-month-1789318534</id>
            <summary type="text">ஏமன் அரசாங்கப் படைகளுக்கும் ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே நாட்டின்
மேற்கு கடலோரப் பகுதியில் இடம்பெற்று வரும் மோதல்களில், கடந்த ஒரு மாத
காலத்தில...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஏமன் அரசாங்கப் படைகளுக்கும் ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே நாட்டின்
மேற்கு கடலோரப் பகுதியில் இடம்பெற்று வரும் மோதல்களில், கடந்த ஒரு மாத
காலத்தில் மாத்திரம் இருதரப்பையும் சேர்ந்த 1,500 க்கும் அதிகமான போர்
வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.
</p><p>
கடந்த ஒகஸ்ட் 9 ஆம் திகதி முதல் செப்டெம்பர் 10 ஆம் திகதி வரையிலான
காலப்பகுதியில் இடம்பெற்ற மோதல்களில், அரசாங்க ஆதரவு தேசிய எதிர்ப்புப்
படையைச் சேர்ந்த 500 க்கும் மேற்பட்ட வீரர்கள் உயிரிழந்துள்ளதுடன் 1,500 பேர்
காயமடைந்துள்ளதாக அல்ஜும்ஹூரியா தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.</p><h2>1,500க்கும் வீரர்கள் பலி</h2><p>
</p><p>
இதேவேளை, இதே காலப்பகுதியில் 1,000 க்கும் மேற்பட்ட ஹூதி கிளர்ச்சியாளர்கள்
கொல்லப்பட்டுள்ளதுடன், ஆயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ளதாகவும்
தெரிவிக்கப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9755f26b-2eb3-40f7-9867-122e7ac1a0b6/26-6aa6dbd00b449.webp' /></p><p>
</p><p>
இருப்பினும் இச்சேத விபரங்களை சுயாதீனமாக உறுதிப்படுத்த முடியவில்லை என
தெரிவிக்கப்படுகின்றது.
</p><p>
சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட யேமன் அரசாங்கத்தின் தெற்கு மற்றும்
வடக்கு பிராந்தியங்களில் உள்ள முக்கிய முகாம்களைக் கைப்பற்றும் நோக்கில்
ஹூதிகள் முன்னேறி வரும் நிலையில், அங்கு தொடர்ந்தும் தீவிர மோதல்கள்
இடம்பெற்று வருகின்றன.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-13T17:32:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கல்கரியில் அடர்ந்த பனிமூட்டம்: சாரதிகளுக்குக் கனடா காலநிலை மையம் எச்சரிக்கை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/fog-advisory-issued-for-calgary-1789319623"></link>
            <id>https://canadamirror.com/article/fog-advisory-issued-for-calgary-1789319623</id>
            <summary type="text">&amp;nbsp;கனடாவின் கல்கரி நகரில் அடர்ந்த பனிமூட்டம் நிலவியதை அடுத்து, கனடிய சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்ற அமைப்பு எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கனடாவின் கல்கரி நகரில் அடர்ந்த பனிமூட்டம் நிலவியதை அடுத்து, கனடிய சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்ற அமைப்பு எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
</p><p>கனடிய சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்ற அமைப்பு தனது இணையதளத்தில் மஞ்சள் நிற எச்சரிக்கையை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p>

சில பகுதிகளில் அடர்ந்த பனிமூட்டம் காரணமாகப் பார்வைத் திறன் கிட்டத்தட்ட பூஜ்ஜிய நிலைக்குக் குறைந்துள்ளது.

காலையின் பிற்பகுதியில் இந்த பனிமூட்டம் மெல்ல மெல்ல விலகக்கூடும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8cd46e9e-a2c8-4aac-8386-f2502e61541d/26-6aa6d9c9760b4.webp' /></p><p>
</p><p>
சில பகுதிகளில் பயணம் செய்வது ஆபத்தானதாக இருக்க வாய்ப்புள்ளது.
சாரதிகள் தங்கள் வாகனங்களின் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி பயணிக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> வேகத்தைக் குறைத்தும், முன்னால் செல்லும் வாகனங்களுக்கு இடையே போதுமான பாதுகாப்பான இடைவெளியைப் பராமரித்தும் கவனமாக வாகனத்தைச் செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-13T17:23:47+00:00</updated>
        </entry>
    </feed>
