<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-08-10T00:23:28+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடத்தப்பட்ட ஜேர்மன் குடிமகன்: அல்ஜீரிய ராணுவம் எடுத்த அதிரடி நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/algerian-military-rescues-german-citizen-in-niger-1786296265"></link>
            <id>https://news.lankasri.com/article/algerian-military-rescues-german-citizen-in-niger-1786296265</id>
            <summary type="text">நைஜர் நாட்டு எல்லையில் கடத்தப்பட்ட ஜேர்மன் நாட்டவர் அல்ஜீரிய ராணுவத்தால் மீட்கப்பட்டுள்ளார்.கடத்தப்பட்ட ஜேர்மன் நாட்டவர்நைஜர் நாட்டின் எல்லை பகுதியில்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நைஜர் நாட்டு எல்லையில் கடத்தப்பட்ட ஜேர்மன் நாட்டவர் அல்ஜீரிய ராணுவத்தால் மீட்கப்பட்டுள்ளார்.</p><h2>கடத்தப்பட்ட ஜேர்மன் நாட்டவர்</h2><p>நைஜர் நாட்டின் எல்லை பகுதியில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு ஜேர்மன் நாட்டைச் சேர்ந்த நபர் ஒருவர் ஆயுதம் ஏந்திய குற்ற கும்பலால் வலுக்கட்டாயமாக கடத்தப்பட்டார்.</p><p> இந்நிலையில் அவர் அல்ஜீரிய ராணுவ படையால் வெற்றிகரமாக மீட்கப்பட்டுள்ளார்.</p><p> கடந்த வெள்ளிக்கிழமை அன்று கடத்தப்பட்ட ஜேர்மன் குடிமகன் செக்யூரிட்டி போர்சஸ் (பாதுகாப்பு படையினரால்) பாதுகாப்பாக மீட்கப்பட்டு தங்கள் கட்டுப்பாட்டில் இருப்பதாக அல்ஜீரிய பாதுகாப்பு அமைச்சகம் அதிகாரப்பூர்வ அறிக்கையில் உறுதிப்படுத்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f4b97439-1c37-4fb2-bb70-8e3efd4e678a/26-6a78b7caed5aa.webp' /></p><p> மீட்கப்பட்ட ஜேர்மன் குடிமகன் அல்ஜீரியாவின் தென்பகுதியான இன் குஸ்ஸாம் பகுதியில் இருந்து தலைநகருக்கு அருகிலுள்ள பூஃபாரிக்(Boufarik) ராணுவ தளத்திற்கு விமானம் மூலம் அழைத்து வரப்பட்டுள்ளார்.</p><p> மீட்கப்பட்ட ஜேர்மன் நாட்டவரின் உடல் நலம் தற்போது சீராக இருப்பதாகவும், உரிய நேரத்தில் ஜேர்மன் அதிகாரிகளிடம் அவர் ஒப்படைக்கப்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>கடத்தப்பட்ட ஜேர்மன் குடிமகன் எவ்வாறு மீட்கப்பட்டார் என்பது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ தகவல்களை அல்ஜீரிய அரசு இன்னும் வெளியிடவில்லை.</p><h2>ஜேர்மன் வெளியுறவு அமைச்சகம் வழங்கிய தகவல்</h2><p>ஜேர்மன் குடிமகன் கடத்தப்பட்ட விவகாரம் தங்களுக்கு தெரியும் என்றும், வெளிநாடுகளில் கடத்தப்படும் ஜேர்மன் குடிமக்கள் குறித்து எந்தவொரு கருத்தும் அரசாங்கம் தெரிவிப்பதில்லை என்ற கொள்கையை கடைபிடித்து வருவதாகவும் ஜேர்மன் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள். &nbsp;<br></td></tr></tbody></table><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-10T00:20:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[95 கோடியை தாண்டிய Gemini AI பயன்பாட்டாளர்கள்: கூகுள் CEO சுந்தர் பிச்சை அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/google-ai-dept-reshuffled-sundar-pichai-announces-1786321130"></link>
            <id>https://news.lankasri.com/article/google-ai-dept-reshuffled-sundar-pichai-announces-1786321130</id>
            <summary type="text">கூகுள் நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு(AI) பிரிவின் தலைமை பொறுப்புகளில் பெரும் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கூகுள் தலைமையில் அதிரடி மாற்றம்செயற்கை...</summary>
            <content type="html"><![CDATA[<p>கூகுள் நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு(AI) பிரிவின் தலைமை பொறுப்புகளில் பெரும் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p><h2> கூகுள் தலைமையில் அதிரடி மாற்றம்</h2><p>செயற்கை நுண்ணறிவு பிரிவில் கூகுள் நிறுவனம் முதன்மையான தொடர்ந்து திகழ வேண்டும் என்று கூகுள் நிறுவனம் அதிநவீன தொழில்நுட்பங்களை விரைவுபடுத்தி வருகிறது.</p><p> அதே நேரம் கூகுள் நிறுவனத்தின் உயர் பதவிகளிலும், பொறுப்புகளிலும் பெரும் மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p><p> இது தொடர்பாக கூகுள் CEO சுந்தர் பிச்சை தங்களுடைய ஊழியர்களுக்கு மின்னஞ்சல்&nbsp; அனுப்பியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ce51f2e8-04c8-4df7-bc46-5e8dfa6a6f86/26-6a7918eccf983.webp' /></p><h2> ஊழியர்களின் விலகல், புதிய பொறுப்புகள்</h2><p>கூகுள் நிறுவனத்தின் 30 வது ஊழியராக இணைந்து கிட்டத்தட்ட கடந்த 27 ஆண்டுகளாக கூகுள் நிறுவனத்தின் தேடுபொறி, கூகுள் மேப்ஸ், மற்றும் கூகுள் பிரைன் ஆகிய முக்கிய கட்டமைப்புகளை வழிநடத்திய ஜெஃப் டீன் கூகுள் நிறுவனத்தில் இருந்து விலகியுள்ளார்.</p><p> கூகுள் நிறுவனத்தின் மூத்த ஆராய்ச்சியாளரான&nbsp; சஞ்சய் கெமாவாத்&nbsp; உடன் இணைந்து ஜெஃப் டீன் புதிய தொண்டு நிறுவனம் ஒன்றை தொடங்கவுள்ளார்.</p><p> இதையடுத்து கூகுள் நிறுவனத்தின் இணை நிறுவனரான டெமிஸ் ஹசாபிஸ், கூகுளின் தாய் நிறுவனமான Alphabet நிறுவனத்தின் முதன்மை அறிவியலாளராகவும், DeepMind அமைப்பின் தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.</p><p></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b2fa0248-8628-4d3a-b49a-915ae9122f3b/26-6a7918ed84071.webp' /></p><p> அதே போல கூகுள் நிறுவனத்தின் DeepMind பிரிவின் தலைமை தொழில்நுட்ப அதிகாரியான கொரே கவுக்சியோக்லு நிறுவனத்தின் சீனியர் வைஸ் பிரசிடென்டாக பதவி உயர்வு பெற்றுள்ளார்.</p><p> இவர் Gemini AI, ஆராய்ச்சிகள் ஆகியவற்றின் அன்றாட செயற்பாடுகளை நேரடியாக தலைமையேற்று வழி நடத்துகிறார்.</p><p> கூகுளின் செயற்கை நுண்ணறிவு செயலியான Gemini AI பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை மாதத்திற்கு 95 கோடியை தாண்டியுள்ளது.</p><p> அதே போல திறந்த மூலக் குறியீடு கொண்ட Gamma மாடல்கள் இதுவரை 90 கோடிக்கும் அதிகமான பதிவிறக்கங்கள் செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள். &nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-10T00:19:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kowshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தனது பதவி விலகல் தொடர்பில் அமெரிக்காவுக்கான முன்னாள் தூதுவர் மகிந்த சமரசிங்க வெளியிட்ட பதிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/mahinda-samarasinghe-posts-about-his-resignation-1786316583"></link>
            <id>https://tamilwin.com/article/mahinda-samarasinghe-posts-about-his-resignation-1786316583</id>
            <summary type="text">பதவி விலகுமாறு அரசாங்கம் ஒருபோதும் குறிப்பிடவில்லை. தனிப்பட்ட காரணிகளுக்காக பதவி விலகியுள்ளேன் என அமெரிக்காவுக்கான முன்னாள் தூதுவர் மகிந்த சமரசிங்க தெ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பதவி விலகுமாறு அரசாங்கம் ஒருபோதும் குறிப்பிடவில்லை. தனிப்பட்ட காரணிகளுக்காக பதவி விலகியுள்ளேன் என அமெரிக்காவுக்கான முன்னாள் தூதுவர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். </p><p>

தனது பதவி விலகல் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>பதவி விலகிய மகிந்த சமரசிங்க</h2><p> </p><p> 

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், கடந்த மாதம் 31 ஆம் திகதி தூதுவர் பதவியில் இருந்து விலகி, நாட்டுக்கு வந்துள்ளேன். பதவி விலகுமாறு அரசாங்கத்திடமிருந்து எந்தவொரு அழுத்தமும் வரவில்லை.
</p><p>
சுமார் ஐந்து ஆண்டுகள் பணியாற்றிய பின்னர் தனிப்பட்ட காரணங்களினாலேயே பதவி விலகினேன். ஐந்து ஆண்டுகாலத்தில் மூன்று ஜனாதிபதிகளின் கீழ் சேவையாற்றியுள்ளேன்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/328fda07-c371-47b8-9f7b-dc4224db5bc4/26-6a79091229703.webp' /></p><p>சிறந்த முறையில் செயற்படுவதால் எவரும் என்னுடன் முரண்படவில்லை.

பதவிக்காலத்தில் இலங்கை-அமெரிக்க உறவுகளை வலுப்படுத்தவும், சர்வதேச நாணய நிதியத்துடனான இலங்கையின் ஒப்பந்தங்களுக்கு அமெரிக்காவின் ஆதரவைப் பெறவும்&nbsp;அர்ப்பணிப்புடன் செயற்பட்டேன்.</p><p>மேலும் அமெரிக்காவால் விதிக்கப்படும் வரிகளை 10 சதவீதமாக கட்டுப்படுத்தவும் அமெரிக்காவிடமிருந்து ஒரு கடற்படைக் கப்பல் மற்றும் பல ஹெலிகொப்டர்களைப் பெற்றுக்கொடுக்கவும் பெரிதும் துணை புரிந்தேன்.</p><p>
 27 வருடங்களாக நாடாளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றியுள்ளேன். அரசியலில் முக்கிய பதவிகளை வகித்துள்ளேன். 

இனி அரசியலில் ஈடுபடும் நோக்கம் கிடையாது. இருப்பினும், சர்வதேச விவகாரங்களில் ஆதரவளிக்குமாறு கோரப்பட்டால் அரசாங்கத்திற்கு உதவத் தயாராகவுள்ளேன் என குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-10T00:18:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ashik</name>
            </author>
            <title type="text"><![CDATA[மன்னாரில் சிறுவன் ஒருவன் அதிரடியாக கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/a-boy-was-arrested-without-permission-in-mannar-1786304714"></link>
            <id>https://tamilwin.com/article/a-boy-was-arrested-without-permission-in-mannar-1786304714</id>
            <summary type="text">&amp;nbsp;மன்னார் - சௌத்பார் பகுதியில் வான் வழியே பறந்து புகைப் படங்களையும்
காணொளிகளையும் எடுக்க உதவும் கருவியான ட்ரோன் கேமராவை அனுமதியின்றி
பறக்க விட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;மன்னார் - சௌத்பார் பகுதியில் வான் வழியே பறந்து புகைப் படங்களையும்
காணொளிகளையும் எடுக்க உதவும் கருவியான ட்ரோன் கேமராவை அனுமதியின்றி
பறக்க விட்ட சிறுவன் ஒருவர் கைது
செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>குறித்த கைது நடவடிக்கையானது நேற்று(09.08.2026) இடம்பெற்றுள்ளது.</p><p></p><h2>கைது செய்யப்பட்ட சிறுவன்</h2><p>
</p><p>
பாதுகாப்பு அமைச்சினால் பதிவு செய்யப்படாத ட்ரோன் ஒன்றை அனுமதியின்றி பறக்க
விட்டதாக கூறப்படும் 16 வயது சிறுவன் ஒருவனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
விமானப்படை புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், மன்னார்
பொலிஸ் புலனாய்வு பிரிவினருடன் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையின் போதே
மன்னார் - சௌத்பார், பனங்கட்டுகொட்டு பகுதியில் குறித்த சிறுவன் கைது
செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/72be78ac-22f5-4376-a55c-1faa3ecbde7c/26-6a78dc2f76932.webp' /></p><p>

கைது செய்யப்பட்டவர் சிறுவனிடமிருந்து DJI Mini 4 Pro ரகத்தைச் சேர்ந்த ஒரு ட்ரோன்
கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>குறித்த சிறுவன் மேலதிக விசாரணைகளுக்காக மன்னார் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் முன்னெடுத்து
வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-10T00:10:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் துரதிர்ஷ்டத்தை அனுபவிக்கப்போகும் ராசிக்காரர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/rahu-s-star-change-zodiac-signs-will-face-bad-luck-1786320552"></link>
            <id>https://jvpnews.com/article/rahu-s-star-change-zodiac-signs-will-face-bad-luck-1786320552</id>
            <summary type="text">ஜோதிட சாஸ்திரத்தில் நவகிரகங்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்கள் ராசி மற்றும் நட்சத்திரத்தை மாற்றிக்கொள்கின்றன. இது அவிட்டம் நட்சத்திரத்தின் வழியாகப...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜோதிட சாஸ்திரத்தில் நவகிரகங்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்கள் ராசி மற்றும் நட்சத்திரத்தை மாற்றிக்கொள்கின்றன. இது அவிட்டம் நட்சத்திரத்தின் வழியாகப் பயணிக்கத் தொடங்கியுள்ளதுடன், ஏப்ரல் 2027 வரை அதே நட்சத்திரத்தில் சஞ்சரிக்கவுள்ளது.&nbsp;</p><p>ஜோதிடத்தில், ராகு என்பது மாயை, திடீர் மாற்றங்கள், ஆசைகள் மற்றும் எதிர்பாராத நிகழ்வுகளைக் குறிக்கும் ஒரு நிழல் கிரகமாகும். அவிட்டம் நட்சத்திரம் புகழ், செல்வாக்கு, சாதனை மற்றும் தைரியம் ஆகியவற்றைக் குறிப்பதால், இந்தக் காலகட்டத்தில் சில ராசிக்காரர்கள் எதிர்பாராத சவால்களையும் மாற்றங்களையும் சந்திக்கப்போகிறார்கள். அவர்கள் எந்தெந்த ராசிக்காரர்கள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fe3b0cdf-a8a7-47e9-a776-03b10ccca89b/26-6a7916aa1cd97.webp' /></p><h3>கடகம்
</h3><p>கடக ராசிக்காரர்கள் இந்த நேரத்தில் அவர்களின் நிதி மற்றும் ஆரோக்கிய விஷயத்தில் நீங்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும். அவர்களின் சில மறைக்கப்பட்ட விஷயங்கள் இப்போது வெளிச்சத்திற்கு வரக்கூடும், இது அவர்களின் மன அழுத்தத்தை அதிகரிக்கலாம். தேவையற்ற செலவுகள் அல்லது கடன் வாங்க வேண்டிய சூழல் கூட ஏற்படலாம். எனவே, உணர்ச்சிவசப்பட்டு முடிவுகளை எடுப்பதைத் தவிர்க்கவும். </p><p>யாரையும் எளிதில் நம்பாமல் இருப்பதும், பெரிய தொகையை யாருக்கும் கடனாகக் கொடுக்காமல் இருப்பதும் நல்லது.

இந்த காலகட்டத்தில் அவர்கள் பேசும் சாதாரண வார்த்தைகள் கூட பெரிய வாக்குவாதங்களாக மாறக்கூடும் என்பதால், கடக ராசிக்காரர்கள் இப்போது அமைதி காப்பதே சிறந்தது. தேவையற்ற விவாதங்களைத் தவிர்த்து, அமைதியைக் கடைப்பிடிக்க முயற்சித்தால், இந்தக் கடினமான காலகட்டத்தை அவர்களால் வெற்றிகரமாகக் கடக்க முடியும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/758351d4-67b8-4316-9dfc-19c3185f3fff/26-6a7916ac3569a.webp' /></p><h3>கன்னி
</h3><p>கன்னி ராசிக்காரர்கள் இந்த காலகட்டத்தில் பணியிடத்தில் போட்டி, கருத்து வேறுபாடுகள் அல்லது அலுவலக அரசியல் போன்ற மோசமான சூழல்களை அவர்கள் சந்திக்க நேரிடலாம். இது அவர்களுக்கு கடுமையான மன அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடும். சிறு உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படவும் வாய்ப்புள்ளதால், அவற்றை அலட்சியப்படுத்தக் கூடாது. முக்கிய ஆவணங்கள், மருந்துகள் மற்றும் அன்றாடப் பொறுப்புகள் ஆகியவற்றில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். தேவையற்ற வாக்குவாதங்களைத் தவிர்த்து, நிதானமாகச் செயல்படுவது நல்லது.</p><p>அவர்கள் வேலை மற்றும் தொழில் வாழ்க்கையில் கடுமையான அதிருப்தி அடையலாம். கன்னி ராசிக்காரர்கள் தற்போதைய நிலையில் வாழ்க்கையின் அனைத்து முயற்சிகளிலும் பின்னடைவை சந்திக்கலாம். இந்த நேரத்தில் அவர்களின் ஒட்டுமொத்த செயல்திறனும் குறைவாக இருக்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8628296f-25b2-4a47-82e1-6bc068a3abfd/26-6a7916ab8180c.webp' /></p><h4>மகரம்
</h4><p>மகர ராசிக்காரர்களுக்கு இந்த நேரத்தில் திடீர் பணவரவு அதிகரிக்கலாம், ஆனால் அதே வேகத்தில் அவர்களின் செலவுகளும் அதிகரிக்கக்கூடும். ஆடம்பரப் பொருட்களை வாங்கும் விருப்பமோ அல்லது அவசரப்பட்டு மேற்கொள்ளும் முதலீடுகளோ பிற்காலத்தில் சிக்கல்களை ஏற்படுத்தலாம். எனவே, நிதிக் தொடர்பான முடிவுகளை நிதானமாக எடுப்பது நல்லது.
</p><p>
திருமண வாழ்க்கையில் சில பிரச்சினைகளை எதிர்கொள்ள வாய்ப்புகள் உள்ளன. இந்த காலகட்டத்தில் பயணங்களைத் தவிர்க்கவும், ஏனெனில் அவை விபத்துக்கள் அல்லது இழப்புகளை ஏற்படுத்தும். வேலையில்லாதவர்கள் இந்த காலகட்டத்தில் சில பின்னடைவுகளை சந்திக்க நேரிடும். ஆரோக்கிய பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/31131d20-fe05-4f3a-84d0-528d2dac2c1c/26-6a7916aac69cd.webp' /></p>]]></content>
            <updated>2026-08-10T00:09:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரசாங்கம் சர்வாதிகாரப் பாதையில் பயணிக்கிறது...! சாடும் நாமல் ராஜபக்ச]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/namal-accuses-govt-of-dictatorial-actions-1786319703"></link>
            <id>https://ibctamil.com/article/namal-accuses-govt-of-dictatorial-actions-1786319703</id>
            <summary type="text">அரசாங்கம் சர்வாதிகாரப் பாதையில் பயணிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச குற்றம் சுமத்தியுள்ளார்.

அரசியல் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரை...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரசாங்கம் சர்வாதிகாரப் பாதையில் பயணிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச குற்றம் சுமத்தியுள்ளார்.
</p><p>
அரசியல் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இந்த விடயங்களைக் குறிப்பிட்டுள்ளார்.</p><p>

நாட்டில் நிலவும் நெருக்கடிகளுக்கு தீர்வு காண்பதை விடுத்து, தன் மீதும் எதிர்க்கட்சிகள் மீதும் பழியைப் போட்டு அரசாங்கம் தப்பிக்கப் பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>வரிக் கொள்கைகள்&nbsp;</h2><p>

வரிக் கொள்கைகளில் அடிக்கடி மாற்றங்களைச் செய்வதன் மூலம் சாதாரண உழைப்பாளிகள், நாளாந்த வருமானம் ஈட்டுவோர் மற்றும் மாதச் சம்பளக்காரர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9621712e-b680-43d1-914d-f17d503ba0da/26-6a79135892d9a.webp' /></p><p>

அதேவேளை குறிப்பிட்ட சில தரப்பினருக்கு மாத்திரம் சலுகைகள் அள்ளிக் கொடுக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>

அரசாங்கக் கணக்குகளில் ட்ரில்லியன் கணக்கில் பணம் இருப்பதாகக் காட்டுவது மட்டுமே ஒரு அரசாங்கத்தின் வெற்றியல்ல என்றும் மற்றும் மாறாக புதிய தொழில்முனைவோரையும் செல்வத்தை உருவாக்கும் குடிமக்களையுமே அரசாங்கம் உருவாக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p></p><h2>சைபர் திருட்டு&nbsp;</h2><p>அண்மையில் இடம்பெற்ற அரச நிதி சைபர் திருட்டு சம்பவங்களின் நஷ்டம், உயர்த்தப்பட்ட வரிகள் மூலமாக பொதுமக்கள் மீதே சுமத்தப்படுவதாக நாமல் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
தரமற்ற நிலக்கரி இறக்குமதியால் ஏற்பட்ட இழப்புகள் மற்றும் மின்சாரக் கட்டண உயர்வுகளுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், அரசாங்கம் எதிர்க்கட்சியினரை இலக்கு வைப்பதிலேயே கவனம் செலுத்துவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1d873d14-1095-450b-8145-7aab97dfe708/26-6a791359455d3.webp' /></p><p>நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பதால் மட்டும் நீதித்துறையின் தாமதங்களுக்கு தீர்வு கண்டுவிட முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>

மேலும் நீதிபதி வெற்றிடங்களை நிரப்புதல் மற்றும் புதிய நீதிமன்றங்களை உருவாக்குதல் மற்றும் நிபுணர் அறிக்கைகளை விரைவாகப் பெறுவதன் மூலமே வழக்குகளை விரைவுபடுத்த முடியும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-10T00:03:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவை உலுக்கிய இந்திய வம்சாவளி பெண் கொலை ; 7 மாதங்களுக்குப் பின்னர் வெளிச்சத்துக்கு வந்த முக்கிய திருப்பம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/boyfriend-arrested-in-murder-indian-woman-canada-1786319545"></link>
            <id>https://canadamirror.com/article/boyfriend-arrested-in-murder-indian-woman-canada-1786319545</id>
            <summary type="text">கனடாவின் டொராண்டோ நகரில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், கடந்த ஏழு மாதங்களாக தலைமறைவாக இருந்த அவரது காதலன்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் டொராண்டோ நகரில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், கடந்த ஏழு மாதங்களாக தலைமறைவாக இருந்த அவரது காதலன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>டொராண்டோவில் வசித்து வந்த ஹிமான்ஷி குரானா (30) கடந்த ஆண்டு டிசம்பர் 19ஆம் திகதி அவரது வீட்டில் சடலமாக மீட்கப்பட்டார். </p><p>சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில், அவர் கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f73c0378-39a1-44c2-ab74-5ad5dcfd7a15/26-6a7912ba9ee04.webp' /></p><p>இதனையடுத்து, ஹிமான்ஷி குரானாவின் காதலனான டொராண்டோவைச் சேர்ந்த அப்துல் கபூரி மீது முதல் நிலை கொலை குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.
</p><p>
எனினும், குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்ட பின்னர் அப்துல் கபூரி தலைமறைவானார். </p><p>அவரைக் கண்டுபிடிப்பதற்காக டொராண்டோ காவல்துறையினர் தீவிர தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்ததுடன், அவரது புகைப்படத்தையும் வெளியிட்டு, அவர் தொடர்பான தகவல்கள் தெரிந்தவர்கள் காவல்துறைக்கு தகவல் வழங்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.</p><p>

இந்நிலையில், சுமார் ஏழு மாதங்களுக்குப் பின்னர், அப்துல் கபூரி கைது செய்யப்பட்டுள்ளார். </p><p>அவர் கனடாவுக்கு வெளியே வேறு ஒரு நாட்டுக்குத் தப்பிச் சென்றிருந்த நிலையில், அந்நாட்டில் வைத்து கைது செய்யப்பட்ட பின்னர் கனடாவுக்கு அழைத்துவரப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.</p><p>

அப்துல் கபூரி எந்த நாட்டில் பதுங்கியிருந்தார் என்பது தொடர்பான தகவலை காவல்துறையினர் வெளியிடவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4b62f7d6-3e1e-422b-aaef-d5a801072b58/26-6a7912bb58e5f.webp' /></p><p>டொராண்டோ காவல்துறையின் தலைமறைவுக் குற்றவாளிகளைத் தேடும் பிரிவு மற்றும் கொலை வழக்குகளை விசாரிக்கும் பிரிவு அதிகாரிகள் இணைந்து இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.</p><p>

அவரைக் கண்டறிந்து கைது செய்து கனடாவுக்கு அழைத்துவருவதற்காக தேசிய மற்றும் சர்வதேச காவல் அமைப்புகளுடன் இணைந்து பணியாற்றியதாக டொராண்டோ காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
கைது செய்யப்பட்ட அப்துல் கபூரி மீது ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ள முதல் நிலை கொலைக் குற்றச்சாட்டு தொடர்பில் சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p><p>

இதேவேளை, ஹிமான்ஷி குரானாவின் மரணம் தொடர்பான விசாரணைகளும் தொடர்ந்து இடம்பெற்று வருவதாக டொராண்டோ காவல்துறை தெரிவித்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-09T23:52:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[டிரம்ப் கோல்ப் கிளப் மேலே பறந்த 2 சிறிய விமானங்கள்: களத்தில் இறங்கிய F-16 ரக போர் விமானங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/norad-intercepts-2-small-plane-near-president-even-1786310999"></link>
            <id>https://news.lankasri.com/article/norad-intercepts-2-small-plane-near-president-even-1786310999</id>
            <summary type="text">டிரம்ப் கோல்ஃப் கிளப்பிற்கு மேலே அத்துமீறி பறந்த இரண்டு சிறிய ரக விமானங்களை அமெரிக்க விமானப்படை F-16 ரக போர் விமானங்கள் இடைமறித்து வெளியேற்றினர். அத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>டிரம்ப் கோல்ஃப் கிளப்பிற்கு மேலே அத்துமீறி பறந்த இரண்டு சிறிய ரக விமானங்களை அமெரிக்க விமானப்படை F-16 ரக போர் விமானங்கள் இடைமறித்து வெளியேற்றினர்.</p><h2> அத்துமீறி நுழைந்த சிறிய விமானங்கள்</h2><p>
அமெரிக்காவின் பெட்மின்ஸ்டர் நகருக்கு மேல் வான்வெளி தடையை மீறி இரண்டு சிறிய ரக விமானங்கள் பறந்தன.</p><p> ஞாயிற்றுக்கிழமை பெட்மின்ஸ்டர் நகரில் அமைந்துள்ள டிரம்ப் நேஷனல் கோல்ஃப் கிளப்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கலந்து கொண்டிருந்த போது இந்த சம்பவம் நடைபெற்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">WATCH: US F-16 jet intercepts aircraft over Bedminster, New Jersey, where President Trump is present <a href="https://t.co/gS4gTP9Lbo">pic.twitter.com/gS4gTP9Lbo</a></p>&mdash; Rapid Report (@RapidReport2025) <a href="https://x.com/RapidReport2025/status/2086524153348104470?ref_src=twsrc%5Etfw">August 9, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p> இதையடுத்து அமெரிக்கா விமானப்படை பிரிவான NORAD தங்களது&nbsp; F-16 ரக போர் விமானங்கள் கொண்டு அத்துமீறிய இரண்டு சிறிய ரக விமானங்களையும் வெற்றிகரமாக இடைமறித்து அப்பகுதியில் இருந்து அப்புறப்படுத்தினர் என்று பாக்ஸ் நியூஸ் செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.</p><p></p><p> இந்த வான்வெளி அத்துமீறல் நடைபெற்ற போது ஜனாதிபதி டிரம்ப் தன்னுடைய கோல்ஃப் கிளப்பில் நேரடியாக இருந்தாரா என்பது அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை.</p><p>மேலும் அத்துமீறி தடை செய்யப்பட்ட பகுதிக்குள் விமானத்தை செலுத்தியவர் யார்? அவர்களின் இந்த செயலுக்கு என்ன காரணம்? என்பது குறித்தும்&nbsp; அதிகாரிகள் எந்தவொரு விளக்கத்தையும் வெளியிடவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4fe36dbb-a031-4df1-9425-55b248509003/26-6a78f15995aec.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள். &nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-09T23:45:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹார்முஸை திறந்தால்., ஈரானுடன் அணுசக்தி ஒப்பந்தத்தை கைவிட டிரம்ப் திட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/trump-plan-to-quit-nuclear-stand-with-iran-1786318970"></link>
            <id>https://news.lankasri.com/article/trump-plan-to-quit-nuclear-stand-with-iran-1786318970</id>
            <summary type="text">ஹார்முஸ் ஜலசந்தி மீண்டும் திறக்கப்பட்டால் ஈரான் உடனான புதிய அணுசக்தி ஒப்பந்தத்தை கைவிட டிரம்ப் தயாராக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. டிரம்பின் புதிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹார்முஸ் ஜலசந்தி மீண்டும் திறக்கப்பட்டால் ஈரான் உடனான புதிய அணுசக்தி ஒப்பந்தத்தை கைவிட டிரம்ப் தயாராக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><h2> டிரம்பின் புதிய திட்டம்</h2><p>வணிக கப்பலின் போக்குவரத்திற்காக ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் ஈரான் திறந்து விட்டால் ஈரானிடம் பெற திட்டமிட்டு இருந்த புதிய அணுசக்தி ஒப்பந்தத்தை கைவிட அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தயாராக இருப்பதாக The Wall Street Journal செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/57476c62-dcb0-4fbd-b8bd-f64980b37776/26-6a79107c9b2cd.webp' /></p><p>அணுசக்தி ஒப்பந்தத்தை வலியுறுத்துவதற்கு பதிலாக, சர்வதேச அளவில் முக்கியமான நீர்வழி வணிக பாதையான ஹார்முஸை எந்தவொரு தடையும் இன்றி மீண்டும் திறந்து விடுவதற்காக பிராந்தியத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ள இராணுவ முற்றுகையை கைவிடவும், தற்போதுள்ள போர் நிறுத்தத்தை தொடரவும் டிரம்ப் அரசு ஒப்புக் கொள்ளலாம் என எதிர்பார்க்கப்படுவதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p> கடந்த சில வாரங்களாக இதற்கான சூழலை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உருவாக்கி வருவதாகவும், ஈரானுடன் புதிய அணுசக்தி ஒப்பந்தத்தை பெற முடியாவிட்டாலும், போர் நடவடிக்கைகளில் இருந்து விலகிச் செல்லலாம் என்று தன்னுடைய மூத்த ஆலோசகர்களுடன் தனிப்பட்ட முறையில் தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.</p><p> இருப்பினும் ஹார்முஸ் நீரிணையை திறப்பது குறித்து ஈரான் பல்வேறு நிபந்தனைகளை விதிப்பதாக கூறப்படுகிறது.</p><h2> ஈரானின் நிபந்தனைகள்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bd5f01f7-6f99-4d29-87ab-6dd52fa4bf53/26-6a79107d4e0b7.webp' /></p><p>
போரினால் ஏற்பட்ட சேதங்களுக்கு இழப்பீடு வழங்கல், அமெரிக்க கடற்படை முற்றுகையை திரும்ப பெறுதல், பொருளாதார தடைகளை நீக்குதல் மற்றும் வெளிநாடுகளில் உள்ள ஈரானிய சொத்துகளை விடுவித்தல் ஆகியவற்றை ஈரான் கோருவதாக கூறப்படுகிறது.</p><p> இந்த கோரிக்கைகளின் காரணமாக அமெரிக்காவின் ராஜதந்திர முடிவுகளில் தெளிவு குறைந்து இருப்பதாகவும், ஈரான் நீண்ட கால மோதலுக்கு தயாராகி வருவதாக தெரிகிறது என்று The Wall Street Journal தெரிவித்துள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-09T23:43:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Bavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாமல் தலைமையிலான அரசியல் கலாச்சாரத்தை உருவாக்க அனைவரும் ஒன்றிணைவோம் - விடுக்கப்பட்டுள்ள அழைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/suresh-kuma-invite-people-namal-political-culture-1786298275"></link>
            <id>https://tamilwin.com/article/suresh-kuma-invite-people-namal-political-culture-1786298275</id>
            <summary type="text">நாமல் ராஜபக்ச தலைமையிலான அரசியல் கலாச்சாரத்தை
உருவாக்க மட்டக்களப்பு மக்கள் அனைவரும் என்னுடன் கை கோர்க்க வேண்டும் என சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சி மட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாமல் ராஜபக்ச தலைமையிலான அரசியல் கலாச்சாரத்தை
உருவாக்க மட்டக்களப்பு மக்கள் அனைவரும் என்னுடன் கை கோர்க்க வேண்டும் என சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சி மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர்
சுரேஸ் குமார் ஜெய்ஸ்மன் குறிப்பிட்டுள்ளார்.</p><p>

மட்டக்களப்பில் நேற்று(08.08.2026) இடம்பெற்ற
ஊடக மாநாட்டில் சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் மாவட்ட அமைப்பாளராக பதவி
ஏற்றுக் கொண்ட பின்னரே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>நாமல் ராஜபக்சவின் அரசியல் பணி&nbsp;</h2><p>
</p><p>
இதன்போது அவர் மேலும் உரையாற்றுகையில், 
அமைப்பாளர் பதவி என்பது ஒரு அதிகாரமிக்க பதவி அல்ல இது மக்களுக்கான
பொறுப்பாகவே நான் கருதுகின்றேன். அந்த அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டமானது
பல சமூக, இன, மதம் சார்ந்த ஒரு கட்டமைப்பைக் கொண்ட மக்கள் வாழும் பிரதேசமாகும்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fe7bb53f-6087-4c45-92e2-86fb4f296e12/26-6a78c60550617.webp' /></p><p>நாமல் ராஜபக்சவின் அரசியல் பணி எந்தவித சமூகத்துக்கும் முரண்பாடு இல்லாமல்
அனைத்து சமூகத்தையும் இணைத்து செல்லக்கூடிய ஒரு அரசியல் நிலைப்பாட்டை கொண்டது. </p><p>

அதனடிப்படையில் மாவட்டத்திலுள்ள இளைஞர்களுக்கு உலகளாவிய ரீதியில் தொழிநுட்பம் சார்ந்த பல தொழில் வாய்ப்புக்களை பெற்றுக் கொடுக்கவுள்ளோம்.
</p><p>
அது மட்டுமல்லாது
கடற்றொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் பிரச்சினைக்கு இடைக்கால தீர்வு இல்லாமல்
நிரந்தர தீர்வை பெற்றுக் கொடுப்பதற்கும் தயாராகவுள்ளோம்.</p><p></p><h2>அபிவிருத்தித் திட்டங்கள்&nbsp;</h2><p>
</p><p>
அத்துடன் கல்வி , அடிப்படை வசதி, உட்கட்டமைப்பு போன்ற பல அபிவிருத்தி
விடயங்களை சரியாக கொண்டு செல்வதற்கு இலகுவான கட்டமைப்பை நாங்கள் உருவாக்கவுள்ளோம்.
</p><p>
அதேவேளை எதிர்கால நாட்டின் வளர்சிக்காகவும் இளைஞர்களின் வளர்ச்சிக்காகவும்
மட்டக்களப்பின் வளர்ச்சிக்காகவும் புதியதொரு சூழலை உருவாக்கும் பாரிய பொறுப்பு எமக்கு உள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cbb2ac4b-841e-42b0-a8ea-c682834b893d/26-6a78c604a04d6.webp' /></p><p>எனவே கிராமம் கிராமமாக சென்று மக்களின் பிரச்சனைகளை கேட்டறிந்து
அதற்குரிய தீர்வை பெற்றுக் கொடுக்கவே நான் இந்த
பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ளேன்.
</p><p>
அரசியலில் கருத்து வேறுபாடு இருக்கலாம். அந்த கருத்து வேறுபாடு எந்தவொரு
சமூகத்தையும் பாதிக்காமல் இருக்க வேண்டும் என்பதுடன் வார்த்தைகளால் மட்டும்
அல்லாது செயல்கள் மூலமாக மக்களுக்கு சேவை செய்யவே இந்த அரசியல் பயணத்தை நான்
ஆரம்பித்துள்ளேன் என தெரிவித்துள்ளார்.&nbsp; &nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-09T23:35:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[எரிபொருள் விநியோகஸ்தர்கள் சந்திக்கும் நெருக்கடி! அரசுக்கு அவசர கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/distributors-urge-govt-to-drop-rs-50-tax-1786316653"></link>
            <id>https://ibctamil.com/article/distributors-urge-govt-to-drop-rs-50-tax-1786316653</id>
            <summary type="text">இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் இழப்புகளை ஈடுசெய்வதற்காக விதிக்கப்பட்டிருந்த 50 ரூபாய் வரியை நீக்குவதன் மூலம் மக்களுக்கு நிவாரணம் வழங்க அரசாங்கத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் இழப்புகளை ஈடுசெய்வதற்காக விதிக்கப்பட்டிருந்த 50 ரூபாய் வரியை நீக்குவதன் மூலம் மக்களுக்கு நிவாரணம் வழங்க அரசாங்கத்தால் முடியும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
</p><p>
 பெட்ரோலிய விநியோகஸ்தர்கள் சங்கம் இதனை தெரிவித்துள்ளது.
</p><p>
கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அச்சங்கத்தின் பிரதிநிதிகள் இதனை தெரிவித்துள்ளனர்.</p><p>
</p><p></p><h2>கூட்டுத்தாபனத்தின் இழப்புகள்</h2><p>இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்கள், குறித்த இழப்புகள் தற்போது முழுமையாக ஈடுசெய்யப்பட்டுள்ளதால் இந்த வரியை மேலும் தொடர்வது அவசியமற்றது என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
</p><p>
பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் இழப்புகள் ஈடுசெய்யப்பட்டுவிட்டதால் விதிக்கப்பட்ட 50 ரூபாய் வரியை நீக்கி நுகர்வோருக்கு அந்த நிவாரணத்தை வழங்க முடியும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4a801d6c-f6d5-401c-b6b3-1a88fc862dfa/26-6a790b69cad5f.webp' /></p><p>தற்போது நடைமுறையிலுள்ள QR முறையும் எரிபொருள் விநியோகக் கட்டுப்பாடுகளும் மக்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்துவதால், அவற்றை உடனடியாக நீக்க வேண்டும் எனவும் வலியுருத்தப்பட்டுள்ளது.
</p><p>
எரிபொருளுக்கு விதிக்கப்பட்டுள்ள 18% சேர்க்கப்பட்ட மதிப்பு வரி (VAT) மற்றும் விநியோகஸ்தர்களின் கமிஷன் தொகை 3 % இலிருந்து 1.6 % ஆகக் குறைக்கப்பட்டமையால், தாம் கடும் பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
</p><p>
இலங்கைக்கு புதிதாக வருகை தந்துள்ள சினோபெக் (Sinopec), LIOC மற்றும் ஆர்.எம். பார்க்ஸ் (RM Parks) போன்ற நிறுவனங்களும் பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டு வருவதாகவும், இது தொடர்பில் அதிகாரிகள் உடனடியாக அவதானம் செலுத்த வேண்டும் என்றும் பெட்ரோலிய விநியோகஸ்தர்கள் சங்கம் மேலும் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-09T23:21:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[அடுக்குமாடி குடியிருப்பில் பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை ; சிசிடிவி ஆதாரத்தால் சிக்கிய காவலாளி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/woman-sexually-assaulted-in-apartment-building-1786317431"></link>
            <id>https://jvpnews.com/article/woman-sexually-assaulted-in-apartment-building-1786317431</id>
            <summary type="text">இந்தியாவில் குஜராத் மாநிலம் அகமதாபாத் மாவட்டத்தில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படும் கட்டிடக் காவல...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியாவில் குஜராத் மாநிலம் அகமதாபாத் மாவட்டத்தில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படும் கட்டிடக் காவலாளி ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p></p><h3>மேலதிக விசாரணை</h3><p>

குறித்த அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வந்த பெண் ஒருவர் நேற்று இரவு கட்டிடத்தின் மாடியில் நடைபயிற்சியில் ஈடுபடுவதற்காகச் சென்றுள்ளார். </p><p>இதன்போது, அவரை பின்தொடர்ந்து சென்றதாகக் கூறப்படும் கட்டிடக் காவலாளியான தரம் சிங், அப்பெண்ணை பலவந்தப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்ததாக காவல்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9e652c1b-d259-4193-92f8-1d5f69082732/26-6a790e88ed67c.webp' /></p><p>

சம்பவத்தைத் தொடர்ந்து சந்தேகநபர் அங்கிருந்து தப்பிச் சென்றதுடன், தனது கைபேசியை அணைத்துவிட்டு தலைமறைவாகியதாக காவல்துறை தெரிவித்துள்ளது.</p><p>

இதனையடுத்து பாதிக்கப்பட்ட பெண் சம்பவம் தொடர்பில் காவல்துறையில் முறைப்பாடு செய்துள்ளார். </p><p>முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை ஆரம்பித்த காவல்துறையினர், சம்பந்தப்பட்ட அடுக்குமாடிக் குடியிருப்பில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கமராக்களின் (CCTV) பதிவுகள் உள்ளிட்ட ஆதாரங்களை ஆய்வு செய்துள்ளனர்.</p><p>

விசாரணைகளின் அடிப்படையில், ஹெபத்பூர் பகுதியில் பதுங்கியிருந்த தரம் சிங்கை இன்று காலை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.</p><p>

மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தேவையான மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இதேவேளை, தரம் சிங் குறித்த அடுக்குமாடிக் குடியிருப்பில் காவலாளியாக பணியில் இணைந்து நான்கு நாட்களே ஆகியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
</p><p>
அவரை காவலாளியாக பணியில் அமர்த்திய தனியார் பாதுகாப்பு நிறுவனத்தின் நிர்வாகத்தினரிடமும் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். </p><p>தரம் சிங்கின் பின்னணி, பணியில் இணைக்கப்பட்ட விதம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலும் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.</p><p>
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-09T23:17:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[மொஜ்தபா கமேனியின் உடல்நிலை குறித்து பரபரப்பு: ஈரான் ஜனாதிபதியுடன் முக்கிய சந்திப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/mojtaba-khameneis-iran-president-meet-1786314865"></link>
            <id>https://tamilwin.com/article/mojtaba-khameneis-iran-president-meet-1786314865</id>
            <summary type="text">ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான், உச்சத் தலைவர் அயத்துல்லா மொஜ்தபா கமேனியை சமீபத்தில் சந்தித்ததாக உச்சத் தலைவரின் அலுவலகம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்து...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான், உச்சத் தலைவர் அயத்துல்லா மொஜ்தபா கமேனியை சமீபத்தில் சந்தித்ததாக உச்சத் தலைவரின் அலுவலகம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.
</p><p>
மத்திய கிழக்கு போர் தொடங்கிய பின்னர், உச்சத் தலைவர் பதவியை ஏற்றுக்கொண்ட மொஜ்தபா கமேனி பொதுவெளியில் தோன்றாத நிலையில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>அயத்துல்லா மொஜ்தபா கமேனி</h2><p>
</p><p>
“ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான், தனது பதவிக்காலத்தின் மூன்றாவது ஆண்டின் தொடக்கத்தில் அயத்துல்லா மொஜ்தபா கமேனியை சந்தித்து அவருடன் கலந்துரையாடினார்” என உச்சத் தலைவரின் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e7995fb4-e060-440e-a2dd-abc4c595fc21/26-6a79028fc5f6a.webp' /></p><p> </p><p>

எனினும், இந்த சந்திப்பு எப்போது நடைபெற்றது என்பது குறித்த தகவல் வெளியிடப்படவில்லை.

2024 ஜூலை மாதம் ஜனாதிபதியாக பதவியேற்ற பெசெஷ்கியான், கடந்த மே மாத தொடக்கத்தில் கமேனியை சந்தித்ததாக ஏற்கனவே தெரிவித்திருந்தார். </p><p>

ஆனால், அப்போது உச்சத் தலைவரின் அலுவலகம் இதுகுறித்து எந்த அறிக்கையும் வெளியிடவில்லை.

கடந்த புதன்கிழமை, கமேனியுடன் தற்போது தொடர்புகொள்வது “மிகவும் கடினமாக உள்ளது” என பெசெஷ்கியான் தெரிவித்திருந்தார்.</p><p></p><h2>ஈரான் போர்</h2><p> 

இதற்கிடையில், அவரது தந்தையை கொன்ற தாக்குதல்களில் மொஜ்தபா கமேனியும் காயமடைந்ததாக வெளியான தகவல்களைத் தொடர்ந்து, அவரது உடல்நிலை குறித்து பல்வேறு ஊகங்கள் எழுந்துள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cd633211-60ae-4f3e-b18f-67a406c0f330/26-6a7902907856c.webp' /></p><p>
</p><p>
இந்நிலையில், ஜனாதிபதியும் உச்சத் தலைவரும் நாட்டின் பிரச்சினைகள் மற்றும் சவால்கள் குறித்து விரிவாக கலந்துரையாடியதாகவும், குறிப்பாக தற்போதைய இராணுவ நிலைமை மற்றும் எதிர்கால நிலவரங்கள் குறித்து பேசியதாகவும் உச்சத் தலைவரின் அலுவலகம் தெரிவித்துள்ளது.
</p><p>
ஈரான், போரை முடிவுக்கு கொண்டுவருவது தொடர்பாக அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருந்தது.</p><p></p><h2>உச்சத் தலைவர் சந்திப்பு</h2><p>

 ஆனால், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தொடங்கிய போருக்குப் பின்னர், ஆரம்பகட்ட ஒப்பந்தம் ஒன்று தோல்வியடைந்தது. தற்போது மத்தியஸ்தர்கள் மூலம் செய்திகளை பரிமாறிக்கொள்வது மட்டுமே நடைபெற்று வருவதாக ஈரானின் உயர்மட்ட தூதர் ஒருவர் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ec2e4c83-e279-479d-b6e0-ae5bd52b5275/26-6a790291289b2.webp' /></p><p>
</p><p>
மேலும், ஞாயிற்றுக்கிழமை ஈரானின் தஸ்னீம் செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தியில், கமேனி மக்களுடன் இருக்கும் காட்சிகள் மற்றும் அவர் பல்வேறு சந்திப்புகளில் பங்கேற்கும் காட்சிகள் எதிர்காலத்தில் வெளியிடப்படும் என புரட்சிகர காவல்படையின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. </p><p>

எனினும், அந்தக் காட்சிகள் எப்போது வெளியாகும் என்பது குறித்து அவர் எந்த காலக்கெடுவையும் தெரிவிக்கவில்லை.</p>]]></content>
            <updated>2026-08-09T23:14:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[சீனாவை புரட்டிப் போட்ட ‘டொல்பின்’ சூறாவளி ; 10 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் வெளியேற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/typhoon-dolphin-hits-china-more-1-million-people-1786313295"></link>
            <id>https://canadamirror.com/article/typhoon-dolphin-hits-china-more-1-million-people-1786313295</id>
            <summary type="text">மணிக்கு 162 கிலோமீற்றர் வேகத்தில் வீசிய பலத்த காற்று மற்றும் கனமழையுடன் &#039;டொல்பின்&#039; சூறாவளி, சீனாவின் கிழக்குக் கடற்கரையைத் தாக்கியுள்ளது.

1951 ஆம் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>மணிக்கு 162 கிலோமீற்றர் வேகத்தில் வீசிய பலத்த காற்று மற்றும் கனமழையுடன் 'டொல்பின்' சூறாவளி, சீனாவின் கிழக்குக் கடற்கரையைத் தாக்கியுள்ளது.</p><p>

1951 ஆம் ஆண்டிற்குப் பிறகு கிழக்கு சீனாவைப் பாதித்த மிகப்பெரிய சூறாவளி இதுவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் தாக்கம் சராசரியாக 12 நாட்கள் நீடிக்கும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ae0328c6-de92-4fe3-8011-2d7ed4e8aa46/26-6a78fa50c5021.webp' /></p><p>கிழக்கு சீனாவின் பல பகுதிகளில் 250 - 500 மில்லிமீற்றர் வரை பலத்த மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதுடன், சிறிய ஆறுகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ளப்பெருக்கு மற்றும் மலைப்பகுதிகளில் நிலச்சரிவு ஏற்படும் அபாயமும் அதிகரித்துள்ளது.</p><p>

கிழக்கு சீனா முழுவதும் பத்து இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், பல துறைமுகங்கள் மற்றும் வானூர்தி நிலையங்களின் சேவைகளைத் தற்காலிகமாக நிறுத்திவைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.
</p><p>
இதற்கிடையில், டொல்பின் சூறாவளியின் தாக்கம் பிலிப்பைன்ஸிலும் ஏற்பட்டுள்ளது.
</p><p>
கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக அந்த நாட்டில் 380,000 க்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-09T23:05:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறையில் உள்ள சகோதரருக்கு உணவில் போதைப்பொருள் ; இருவர் அதிரடியாக கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/two-arrested-for-drugging-brother-in-prison-1786316578"></link>
            <id>https://jvpnews.com/article/two-arrested-for-drugging-brother-in-prison-1786316578</id>
            <summary type="text">களுத்துறை சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள தமது சகோதரரைப் பார்ப்பதற்காக, உணவில் போதைப்பொருளை மறைத்து எடுத்துச் சென்ற இருவரை அங்குறுவாதொட்ட காவல்துறையின...</summary>
            <content type="html"><![CDATA[<p>களுத்துறை சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள தமது சகோதரரைப் பார்ப்பதற்காக, உணவில் போதைப்பொருளை மறைத்து எடுத்துச் சென்ற இருவரை அங்குறுவாதொட்ட காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.</p><p>
</p><p></p><p>ஹொரண பிரதேசத்தைச் சேர்ந்த இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p>
போதைப்பொருள் குற்றச்சாட்டு தொடர்பாகக் கைது செய்யப்பட்டு களுத்துறை சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தமது சகோதரரைப் பார்ப்பதற்காக, இவர்கள் இருவரும் உந்துருளியில் பயணித்துக் கொண்டிருந்த போதே கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4a053d09-c043-4a5e-afbc-1247d955a1ff/26-6a790723c7e9a.webp' /></p><p>மில்லனிய - பட்டகொட வீதியில் சோதனையில் ஈடுபட்டிருந்த காவல்துறை அதிகாரிகளால், வீதித் தடையொன்றில் வைத்து இவர்கள் பரிசோதிக்கப்பட்டனர்.
</p><p>
இதன்போது, அவர்கள் கொண்டு வந்த இரண்டு உணவுப் பொதிகளில் இருந்த 'சில்லி பேஸ்ட்' (Chili Paste) பொலித்தீன் பைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 12,400 மில்லிகிராம் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
</p><p>
வீதித் தடைக்கு சற்றுத் தொலைவில் உந்துருளியை நிறுத்தி, சந்தேகத்துக்கிடமான முறையில் நடந்துகொண்டதாலேயே காவல்துறை அதிகாரிகள் அவர்களைப் பரிசோதித்துள்ளனர்.
</p><p>
இதன்போது, அவர்கள் பயணித்த உந்துருளி மற்றும் கைபேசி என்பன காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
</p><p>
அதேநேரம், கைது செய்யப்பட்ட நபர்களுக்கு எதிராக ஏற்கனவே நீதிமன்றத்தில் போதைப்பொருள் தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ளமையும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
</p><p>
அங்குறுவாதொட்ட காவல்துறை பொறுப்பதிகாரி தலைமையிலான அதிகாரிகள் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-09T23:03:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானின் உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரி! மொஜ்தாபா காமேனியின் அதிரடி உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/mohsen-rezaee-appointed-iran-snsc-secretary-1786303554"></link>
            <id>https://ibctamil.com/article/mohsen-rezaee-appointed-iran-snsc-secretary-1786303554</id>
            <summary type="text">ஈரானின் உச்சத் தலைவர் மொஜ்தாபா காமேனி, நாட்டின் மிக உயரிய பாதுகாப்புப் பதவியான உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் (SNSC) செயலாளராக முன்னாள் ஐ.ஆர்.ஜி.சி...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானின் உச்சத் தலைவர் மொஜ்தாபா காமேனி, நாட்டின் மிக<a href="https://ibctamil.com/article/netanyahu-rejects-gaza-plan-over-elections-1786291281" target="_blank"> உயரிய பாதுகாப்புப் </a>பதவியான உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் (SNSC) செயலாளராக முன்னாள் ஐ.ஆர்.ஜி.சி (IRGC - இஸ்லாமிய புரட்சிகர காவல் படை) தலைவரான மொஹ்சென் ரெசாயை (Mohsen Rezaee) நியமித்துள்ளார்.
</p><p>
இந்த முக்கியப் பொறுப்பில் ரெசாய், உச்சத் தலைவர் காமேனியின் அதிகாரப்பூர்வப் பிரதிநிதியாகச் செயல்படுவார்.
</p><p>
இப்பதவியை வகித்து வந்த அலி லாரிஜானி, கடந்த மார்ச் மாதம் அமெரிக்க - இஸ்ரேலிய<a href="https://ibctamil.com/article/oman-iran-progress-on-hormuz-strait-talks-1786295984" target="_blank"> வான்வழித் தாக்குதலில்</a> கொல்லப்பட்டார்.</p><p></p><h2>அரசியல் ஆலோசகர்</h2><p> 

அவரைத் தொடர்ந்து முகமது பாகர் ஜோல்காதர் (Mohammad Bagher Zolghadr) இப்பதவியைக் கவனித்து வந்தார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/22991208-4e72-4cde-87de-84ba69e58bb8/26-6a78de7751a22.webp' /></p><p>இந்த மாற்றத்தைத் தொடர்ந்து, முகமது பாகர் ஜோல்காதரைத் தனது அரசியல் ஆலோசகராக உச்சத் தலைவர் காமேனி நியமித்துள்ளார்.</p><p></p><h2>உயர்மட்ட அமைப்பு&nbsp;</h2><p>

இவர், 1980 களில் நடைபெற்ற ஈரான்-ஈராக் போரின் போது (ஈரானில் இது புனிதப் பாதுகாப்புப் போர் என்று அழைக்கப்படுகிறது) முக்கிய இராணுவத் தளபதியாகச் செயல்பட்டவர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b767aef7-36c7-46fe-92c0-5d826dd1387e/26-6a78de78021db.webp' /></p><p>

அத்தோடு ஈரானின் பலம் வாய்ந்த இஸ்லாமிய புரட்சிகர காவல் படையின் (IRGC) முன்னாள் தலைவராகப் பணியாற்றியவர்.</p><p>

இந்தநிலையில் தற்போது ஈரான் நாடாளுமன்றத்திற்கும் கார்டியன் கவுன்சில் அமைப்பிற்கும் இடையிலான கருத்து வேறுபாடுகளைத் தீர்க்கும் உயர்மட்ட அமைப்பான ஈரானின் நன்மதிப்பு நிருணயக் கவுன்சிலின் (Expediency Discernment Council) உறுப்பினராகவும் ரெசாய் இருந்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-09T22:59:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[தாய்லாந்து பாடசாலை துப்பாக்கிச்சூடு: இணையத்தில் துப்பாக்கி கற்ற 14 வயது சிறுவன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/thailand-school-shooting-police-report-attacker-1786313183"></link>
            <id>https://tamilwin.com/article/thailand-school-shooting-police-report-attacker-1786313183</id>
            <summary type="text">​பேங்கொக் நகருக்கு அருகில் உள்ள பாடசாலை ஒன்றில் துப்பாக்கிச்சூடு நடத்திய 14
வயது சிறுவன், இணையத்தளம் மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் துப்பாக்கிகளைப்
பயன...</summary>
            <content type="html"><![CDATA[<p>​பேங்கொக் நகருக்கு அருகில் உள்ள பாடசாலை ஒன்றில் துப்பாக்கிச்சூடு நடத்திய 14
வயது சிறுவன், இணையத்தளம் மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் துப்பாக்கிகளைப்
பயன்படுத்தக் கற்றுக்கொண்டதுடன் வன்முறை சார்ந்த உள்ளடக்கங்களை அதிகமாகப்
பார்த்துள்ளதாக தாய்லாந்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

​</p><p>கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற இந்த கொடூர சம்பவத்தில், குறித்த சிறுவன்
முதலில் வீட்டில் இருந்த தனது தாய் வழி தாத்தா, பாட்டியைச் சுட்டுக் கொன்ற
பின்னர், பாடசாலைக்குச் சென்று மேலும் அறுவரைக் சுட்டுக் கொன்றுவிட்டுத்
தவறான முடிவெடுத்துகொண்டான்.</p><p></p><h2>பொலிஸார் தகவல்</h2><p>

​சம்பவம் தொடர்பில் 17 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்த
பிராந்திய பொலிஸ் துணை ஆணையாளர் அத்தாபோல் அனுசித், அந்த சிறுவன் கடந்த ஒரு
வருடத்திற்கும் மேலாகத் துப்பாக்கிகள் மீது ஆர்வம் காட்டி வந்துள்ளதை
உறுதிப்படுத்தியுள்ளார்.</p><p>
மேலும், கடந்த வருடம் அந்த சிறுவன் பாடசாலைக்குக் கொண்டு வந்த ஏர்-கன் (BB
gun) ரகத் துப்பாக்கியை ஆசிரியர் ஒருவர் பறிமுதல் செய்திருந்ததாகவும் அவர்
குறிப்பிட்டார்.

​</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1709d6f8-06cc-4986-9246-4cc54483e8a0/26-6a78fe19df9cf.webp' /></p><p>இந்த துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களைத் தவிர 20க்கும்
மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

2022 ஆம் ஆண்டிற்குப் பிறகு தாய்லாந்தில் இடம்பெற்ற மிக மோசமான
துப்பாக்கிச்சூட்டுச் சம்பவமாக இது கருதப்படுகின்றது.

​</p><p>இச்சம்பவத்தைத் தொடர்ந்து பாடசாலைகளில் பாதுகாப்பு விதிமுறைகளை வலுப்படுத்தத்
தாய்லாந்து கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதுடன், மாணவர்களின் மனநலப் பரிசோதனை,
அவசர காலப் பயிற்சிகள் மற்றும் ஆபத்தான பொருட்களைப் பாடசாலைக்குக்
கொண்டுவருவதைத் தடுக்கும் சோதனைகளை எதிர்வரும் மூன்று மாதங்களுக்குள்
தீவிரப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-09T22:54:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்கப் படைகள் ஈரானில் கால்பதித்தால் கடும் பதிலடி – ஈரான் இராணுவத் தளபதி எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/will-cut-them-off-iran-general-warns-us-ground-1786310871"></link>
            <id>https://tamilwin.com/article/will-cut-them-off-iran-general-warns-us-ground-1786310871</id>
            <summary type="text">ஈரான் இராணுவத்தின் தரைப்படைப் பிரிவு தளபதி பிரிகேடியர் ஜெனரல் அலி ஜஹான்ஷாஹி, அமெரிக்காவுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை அவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரான் இராணுவத்தின் தரைப்படைப் பிரிவு தளபதி பிரிகேடியர் ஜெனரல் அலி ஜஹான்ஷாஹி, அமெரிக்காவுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.</p><p>

ஞாயிற்றுக்கிழமை அவர் வெளியிட்ட எச்சரிக்கையில், </p><p>ஈரானுக்குள் எந்தவொரு வெளிநாட்டு தரைப்படை தலையீடும் மேற்கொள்ளப்பட்டால், அதற்கு உடனடியாகவும் தீர்க்கமாகவும் பதிலடி வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>இராணுவத் தளபதி எச்சரிக்கை</h2><p>

“அமெரிக்க இராணுவ வீரர்கள் யாரேனும் ஈரானில் கால்பதித்தால், அவர்களைத் தடுத்து நிறுத்துவோம்” என ஜஹான்ஷாஹி கூறியதாக ஈரான் அரச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
</p><p>
எதிரிகளின் எந்தவொரு நடவடிக்கைக்கும் உறுதியான மற்றும் தடுப்பு நடவடிக்கையாக அமையும் வகையில் பதிலளிக்க ஈரான் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c355fa0b-c632-499b-98c2-6a50d8a333f7/26-6a78f3f775469.webp' /></p><p>
</p><p>
மேலும், நாட்டின் எல்லைப் பகுதிகளில் ஈரான் இராணுவ தரைப்படைகள் முழுமையான போர்த்தயார் நிலையில் இருப்பதாகவும், எதிரிகளின் நடமாட்டங்கள் மற்றும் அச்சுறுத்தல்களைத் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், நாட்டின் எல்லைகளை உறுதியாகப் பாதுகாத்து வருவதாகவும் ஜஹான்ஷாஹி தெரிவித்துள்ளார்.</p><p>

இதனிடையே, ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கு இடையிலான இராஜதந்திர தொடர்புகள் நேரடியாக இடம்பெறாமல், இடைத்தரகர்கள் மூலம் தொடர்வதாக ஈரான் வெளியுறவு அமைச்சர் சையத் அப்பாஸ் அராக்சி தெரிவித்துள்ளார்.</p><p>[MORWWCE</p><h2>அமெரிக்காவுடன் நேரடி பேச்சுவார்த்தை</h2><p>
</p><p>
“தற்போது அமெரிக்காவுடன் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தவில்லை. இடைத்தரகர்கள் மூலம் தகவல்கள் பரிமாறப்படுகின்றன” என அவர் அரச ஊடகமான IRIB-க்கு தெரிவித்துள்ளார்.</p><p>

பல நாடுகள் மீண்டும் பேச்சுவார்த்தைக்கான சூழலை உருவாக்க முயற்சித்து வருவதாகவும், அமெரிக்கா முன்னர் செய்த ஒப்பந்த மீறல்களுக்கு தீர்வு காணும் வரை நேரடி பேச்சுவார்த்தைக்கு ஈரான் திரும்பாது என்றும் அராக்சி தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c7e0511a-8446-4f8f-828a-c25b07c21ffb/26-6a78f3f61ec69.webp' /></p><p>
</p><p>
இதற்கிடையில், ஹோர்முஸ் நீரிணை வழியாக கப்பல்கள் செல்லும் பாதை மற்றும் அதற்கான சட்டரீதியான நடைமுறைகள் தொடர்பாக ஓமானுடன் நடைபெறும் பேச்சுவார்த்தைகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகவும் அராக்சி கூறியுள்ளார்.</p><p>

எனினும், ஹோர்முஸ் நீரிணை மீண்டும் திறக்கப்படுவது அமெரிக்காவிடமிருந்து இழப்பீடு உள்ளிட்ட சில நிபந்தனைகளை நிறைவேற்றுவதற்கு உட்பட்டது என அவர் தெரிவித்துள்ளார்.</p><h2>ஹோர்முஸ் நீரிணை</h2><p>
</p><p>
ஹோர்முஸ் நீரிணை வழியாக முன்னர் பயன்படுத்தப்பட்ட கப்பல் போக்குவரத்து பிரிப்பு திட்டம் (TSS) இனி ஏற்றுக்கொள்ள முடியாது என ஈரான் தெரிவித்துள்ளதாகவும், புதிய பாதை ஒன்றை உருவாக்க வேண்டியிருப்பதாகவும் அராக்சி குறிப்பிட்டுள்ளார்.</p><p> 

இதற்கு பல்வேறு தொழில்நுட்ப மற்றும் சட்டரீதியான நடவடிக்கைகள் தேவைப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9da3d7d3-b568-4466-8a94-5322b5cd8b65/26-6a78f3f6c436e.webp' /></p><p>

மறுபுறம், ஈரான் மற்றும் ஓமானுக்கு இடையிலான பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் ஹோர்முஸ் நீரிணை மீண்டும் திறக்கப்பட்டு, மோதல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள எண்ணெய் ஏற்றுமதி மீண்டும் தொடங்க வாய்ப்புள்ளதாகவும் பெயர் குறிப்பிட விரும்பாத அமெரிக்க அதிகாரி ஒருவர் Reuters செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.
</p><p>
ஹோர்முஸ் நீரிணை தொடர்பான உடன்பாடு விரைவில் எட்டப்படும் என எதிர்பார்ப்பதாகவும், தடையின்றி வர்த்தகக் கப்பல்கள் மீண்டும் செல்லும் வகையில் உடன்பாடு அறிவிக்கப்பட்டவுடன், ஈரானிய துறைமுகங்கள் மீதான அமெரிக்க முற்றுகை நீக்கப்படும் என்றும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-09T22:51:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Erimalai</name>
            </author>
            <title type="text"><![CDATA[மணல்காடு புனித அந்தோனியார் ஆலயத்திலிருந்து மடு அன்னை திருத்தலத்திற்கு பாத யாத்திரை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/pilgrimage-from-manalkadu-to-madhu-shrine-1786299433"></link>
            <id>https://tamilwin.com/article/pilgrimage-from-manalkadu-to-madhu-shrine-1786299433</id>
            <summary type="text">மன்னார் - மருதமடு அன்னையின் பெரும் திருவிழாவை முன்னிட்டு வடமராட்சி, கிழக்கு மணல்காடு புனித அந்தோனியார் ஆலயத்திதிலிருந்து மணல்காடு
பக்தர்கள் 100 க்கு ...</summary>
            <content type="html"><![CDATA[<p>மன்னார் - மருதமடு அன்னையின் பெரும் திருவிழாவை முன்னிட்டு வடமராட்சி, கிழக்கு மணல்காடு புனித அந்தோனியார் ஆலயத்திதிலிருந்து மணல்காடு
பக்தர்கள் 100 க்கு மேற்பட்டோர் நேற்று(09.08.2026) பிற்பகல் 3:00 மணியளவில் பாத யாத்திரை
பயணத்தை ஆரம்பித்துள்ளனர்.</p><p>

மணல்காடு பங்கு தந்தையின் ஆசீர்வாத வாழிபாட்டுடன் ஆரம்பமான பாதயாத்திரை நேற்று
இரவு மணல்காடு சந்தி மருதங்கேணி புதுக்காடு ஊடக இயக்கச்சி தேவாலயத்தை
சென்றடைந்த அங்கிருந்து இன்று(10) காலை மீண்டும் பாத யாத்திரை
ஆரம்பமாகவுள்ளது.</p><h2>பெரும் திருவிழா</h2><p>இதேவேளை மணல்காடு கிராமத்திலிருந்து மருத மடு அன்னை தேவாலயம்
செல்லும் யாத்திரிகர்களுடன் பயண பாதையிலுள்ள கிறிஸ்தவ மக்கள் பலரும் இணைந்து
மடு அன்னை தேவாலயம் வரை செல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/554fc718-1fae-4d70-bed2-8868d75cc08f/26-6a78cd53113cf.webp' /></p>]]></content>
            <updated>2026-08-09T22:46:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரஷ்ய கிராமங்களை சூறையாடிய உக்ரைன்: சுட்டு வீழ்த்தப்பட்ட 285 ட்ரோன்கள்: 6 பேர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/ukraine-massive-drone-attack-in-belgorod-1786315324"></link>
            <id>https://news.lankasri.com/article/ukraine-massive-drone-attack-in-belgorod-1786315324</id>
            <summary type="text">ரஷ்யாவின் பெல்கோரோட் பகுதியில் உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதலில்&amp;nbsp; 6 பேர் வரை உயிரிழந்துள்ளனர். சுட்டு வீழ்த்தப்பட்ட 285 ட்ரோன்கள்ஞாயிற்றுக்கிழமை...</summary>
            <content type="html"><![CDATA[<p>ரஷ்யாவின் பெல்கோரோட் பகுதியில் உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதலில்&nbsp; 6 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.</p><h2> சுட்டு வீழ்த்தப்பட்ட 285 ட்ரோன்கள்</h2><p>ஞாயிற்றுக்கிழமை மாஸ்கோ நேரப்படி காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை ரஷ்ய பகுதிகளை குறிவைத்து உக்ரைன் மிகப்பெரிய ட்ரோன் தாக்குதலை நடத்தியுள்ளது.</p><p>ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகத்தின் தகவலில், கிட்டத்தட்ட 285 உக்ரைனிய ட்ரோன்களை ரஷ்ய வான் பாதுகாப்பு அமைப்புகள் இடைமறித்து சுட்டு வீழ்த்தி உள்ளன.</p><p>இந்த தாக்குதல் உக்ரைனின் எல்லையை ஒட்டிய பெல்கோரோட், பிரியான்ஸ்க் மற்றும் குர்ஸ்க் ஆகியவற்றை மையமாக கொண்டு நடத்தப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bedc2a4f-d031-4721-8661-87fd977b93f6/26-6a79023e792aa.webp' /></p><h2> அதிகரிக்கும் உயிரிழப்பு</h2><p>உக்ரைனின் சமீபத்திய ட்ரோன் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 6 ஆக அதிகரித்து இருப்பதாக உள்ளூர் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.</p><p>கிட்டத்தட்ட 30 குடியிருப்பு வீடுகள் உக்ரைன் தாக்குதலில் சிதைக்கப்பட்டுள்ளன.</p><p> &nbsp;உக்ரைனிய ட்ரோன் தாக்குதலால் ஏற்பட்ட இடிபாடுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த மீட்புப் பணியாளர்கள் மேலும் ஒரு ஆணின் உடலை பத்திரமாக மீட்டுள்ளனர்.</p><p>பேரழிவுகரமான இந்த தாக்குதலில் உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்களுக்கு உரிய உதவிகள் வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNE</a>L இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-09T22:42:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையர்களின் வெளிநாட்டுப் பணப்பரிமாற்றம் புதிய உச்சம் ; 7 மாதங்களில் 5 பில்லியன் டொலர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sri-lankans-foreign-remittances-hit-new-high-1786315127"></link>
            <id>https://jvpnews.com/article/sri-lankans-foreign-remittances-hit-new-high-1786315127</id>
            <summary type="text">வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்களால் அனுப்பப்படும் பணப்பரிமாற்றம், இந்த ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் 5 பில்லியன் அமெரிக்க டொலர்களை கடந்துள்ளதாக, இ...</summary>
            <content type="html"><![CDATA[<p>வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்களால் அனுப்பப்படும் பணப்பரிமாற்றம், இந்த ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் 5 பில்லியன் அமெரிக்க டொலர்களை கடந்துள்ளதாக, இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.</p><p>
</p><p></p><p>கடந்த ஜனவரி மாதம் முதல் ஜூலை மாதம் வரையான காலப்பகுதியில் மொத்தமாக 5.3824 பில்லியன் அமெரிக்க டொலர்கள் நாட்டிற்கு கிடைத்துள்ளன.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/36ee7663-3ff4-4b16-9d2d-2d1e47a72e29/26-6a790178b72a9.webp' /></p><p>கடந்த ஆண்டு இதே காலப்பகுதியில் 4.4352 பில்லியன் டொலர்கள் கிடைத்திருந்த நிலையில், இந்த ஆண்டு 947.2 மில்லியன் டொலர்கள் அதிகரித்துள்ளதாக மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.
</p><p>
இதேவேளை, கடந்த ஜூலை மாதத்தில் மாத்திரம் 777.6 மில்லியன் டொலர்கள் வெளிநாட்டு பணப்பரிமாற்றமாக கிடைத்துள்ளன.
</p><p>
ஜூன் மாதத்தில் 697.3 மில்லியன் டொலர்கள் கிடைத்திருந்த நிலையில், ஜூலையில் பணப்பரிமாற்றம் மேலும் அதிகரித்துள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-09T22:39:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[மயிலந்தனைப் படுகொலை...! 39 அப்பாவி தமிழ் மக்கள் பலியான சோகத்தின் வடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/1992-mailanthanai-massacre-remembered-1786312968"></link>
            <id>https://ibctamil.com/article/1992-mailanthanai-massacre-remembered-1786312968</id>
            <summary type="text">ஈழத்தமிழர்களின் தாயக நிலப்பரப்பின் கிழக்குக் கரையில், மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைக் கிராமங்களில் ஒன்றான மயிலந்தனையில் 1992 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈழத்தமிழர்களின் தாயக நிலப்பரப்பின் கிழக்குக் கரையில், மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைக் கிராமங்களில் ஒன்றான மயிலந்தனையில் 1992 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 9 ஆம் திகதி நிகழ்த்தப்பட்ட கொடூரம், ஈழத்தமிழ் மக்களின் வரலாற்றில் ஒரு துயரமான அத்தியாயமாகும்.
</p><p>
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கன்னிவெடித் தாக்குதல் ஒன்றில் சிறிலங்கா இராணுவத் தளபதி கொப்பேக்கடுவ கொல்லப்பட்ட சம்பவத்திற்குப் பதிலடியாகவே, சிறிலங்கா ராணுவத்தினரால் இத்தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
</p><p>
ஆனால், அச்சம்பவத்துடன் எவ்விதத் தொடர்புமற்ற மயிலந்தனை கிராமத்தின் மீது அங்கு வாழ்ந்தவர்கள் தமிழர்கள் என்ற ஒரே காரணத்திற்காகத் தங்களின் கோபத்தைத் திருப்பிய சிறிலங்காவின் சிங்களப் பாதுகாப்புத் தரப்பினர், அக்கிராமத்தையே கொடூரமாகச் சூறையாடினர்.
</p><p>
அன்று அமைதியாக வாழ்ந்துகொண்டிருந்த அப்பாவி கிராம மக்கள் மீது துப்பாக்கிகள், கத்திகள் மற்றும் கோடாரிகளைக் கொண்டு காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் நடத்தப்பட்டது. 

கைக்குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள், முதியவர்கள் எனப் பாரபட்சமின்றி 39 பொதுமக்கள் அன்றைய நாளில் மிகக் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டனர்.
</p><p>
அன்றைய நாளில் சிறிலங்காப் படைகள் ஆடிய மனிதவேட்டையானது தமிழ் மக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட ஒரு திட்டமிட்ட இனப்படுகொலையாகவே பார்க்கப்படுகிறது.</p><p>

உயிருக்குப் பயந்த மக்கள் தங்களின் வீடுகள், நிலங்கள் மற்றும் வாழ்வாதாரங்களை அப்படியே போட்டுவிட்டு, சொந்த ஊரை விட்டு வெளியேற நேரிட்டது. </p><p>

ஒரே நாளில் ஒரு முழு கிராமமும் சுடுகாடாக மாற்றப்பட்டு அம்மக்களின் நிம்மதியான வாழ்வு முற்றிலுமாகச் சிதைக்கப்பட்டது.
</p><p>
இதேபோன்று கொன்றொழிக்கப்பட்டு, நீதியும் நியாயமும் மறுக்கப்பட்ட அப்பாவித் தமிழ் உறவுகளை ஐபிசி தமிழ் கனதியான வலிகளோடு நெஞ்சில் நிறுத்தி நினைவேந்துகிறது.</p><p>

வலிகளோடு வாழும் இந்த இனத்தின் மீதான ஒவ்வொரு படுகொலைக்குமான நீதிக்கான பயணத்தில் இதயசுத்தியோடு பயணிப்போம்.</p><p></p><p></p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-09T22:31:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[சர்வதேச குற்றக் கும்பலின் தலைவன் டப்ளினுக்கு நாடு கடத்தல்: யார் இந்த டேனியல் கினஹான்?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/danial-kinahan-arrived-at-dublin-special-court-1786304922"></link>
            <id>https://news.lankasri.com/article/danial-kinahan-arrived-at-dublin-special-court-1786304922</id>
            <summary type="text">அயர்லாந்திற்கு நாடு கடத்தப்பட்ட சர்வதேச குற்ற கும்பலின் தலைவனான டேனியல் கினஹான்(Daniel Kinahan) டப்ளின் சிறப்பு கிரிமினல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>அயர்லாந்திற்கு நாடு கடத்தப்பட்ட சர்வதேச குற்ற கும்பலின் தலைவனான டேனியல் கினஹான்(Daniel Kinahan) டப்ளின் சிறப்பு கிரிமினல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார்.</p><h2>டேனியல் கினஹான் நீதிமன்றத்தில் ஆஜர்</h2><p>அயர்லாந்து ராணுவத்தின் விமானம் மூலம் அயர்லாந்துக்கு அழைத்து வரப்பட்ட சர்வதேச குற்ற கும்பலின் தலைவராக கருதப்படும் டேனியல் கினாஹான் பலத்த வாகன பாதுகாப்புடன் டப்ளினில் உள்ள சிறப்பு கிரிமினல் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்படுகிறார்.</p><p> டப்ளினின் பால்டோனலில் உள்ள காசெமெண்ட் விமான நிலையத்தில் டேனியல் கினாஹான்(Danial kinahan) வந்து இறங்கிய உடன் பலத்த பாதுகாப்பு கொண்ட வாகனங்கள் அவரை ஏற்றுக் கொண்டு அதிவேகமாக புறப்பட்ட நிலையில் தற்போது அந்த வாகன பேரணி சிறப்பு கிரிமினல் நீதிமன்றத்தை வந்தடைந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ebd1267f-73a4-4ef0-bfc7-1d545a4412f2/26-6a78d99c523cb.webp' /></p><p>டேனியல் கினாஹானை ஏற்றிக் கொண்டு விமானம் துபாயில் இருந்து புறப்பட்டதில் இருந்து கிட்டத்தட்ட 70,000க்கும் மேற்பட்டோர் இந்த விமானத்தை ஆன்லைன் மூலமாக விமானத்தை தீவிரமாக கண்காணித்துள்ளனர்.</p><p></p><h2> யார் இந்த டேனியல் கினாஹான்</h2><p>ஐக்கிய அரபு அமீரகத்தில் வசித்து வந்த டேனியல் கினாஹன், சர்வதேச அளவில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஆயுதக் கடத்தல் ஆகிய பெரும் குற்றங்களில் ஈடுபட்டு வந்துள்ளார்.</p><p> டேனியல் கினாஹன் மிகப்பெரிய குற்றக் கும்பலின் தலைவன் என்று டப்ளின்&nbsp; உயர்நீதிமன்றத்தால் ஏற்கனவே அடையாளம் காணப்பட்டுள்ளார்.</p><p> கடந்த 2015ம் ஆண்டு கினாஹன் கார்டல் கும்பலும், ஹட்சி பிரிவினருக்கும் இடையே வெடித்த அதிகாரப் போட்டியின் போது கிட்டத்தட்ட 18 உயிர்கள் கொல்லப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9e98187b-2b7c-4eb4-b337-188576290f48/26-6a78d99b9fe41.webp' /></p><p> அயர்லாந்து மற்றும் ஸ்பெயின் இந்த கார்டல் கும்பல்கள் நடத்திய இரக்கமற்ற போரினால் பலர் படுகொலை செய்யப்பட்டனர்.</p><p> கடந்த 2022ம் ஆண்டு கூட டேனியல் கினாஹனை கைது செய்ய உதவி செய்பவர்களுக்கு கிட்டத்தட்ட 5 மில்லியன் அமெரிக்க டொலர் பரிசாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.’</p><p> &nbsp;கிட்டத்தட்ட அயர்லாந்து, பிரித்தானியா, ஸ்பெயின் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் இந்த குற்ற கும்பலை அழிக்க தீவிரமாக செயல்பட்டு வருகிறது.</p><p> கொகைன், கஞ்சா, மற்றும் உள்நாட்டு சரக்கு பொருட்கள் ஆகியவற்றை கடத்தி&nbsp; பல கோடிகளுக்கு சட்டப்பூர்வ பணமாக மாற்றியதாக(money laundering) இவர் மீது குற்றச்சாட்டுகள் உள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள். &nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-09T22:10:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஏரியில் தத்தளித்து உயிரிழந்த 19 வயது இளைஞர்: கடலில் மாயமான பெண்: தீவிர தேடுதல் வேட்டை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/uk-19-yrs-old-dies-in-grasmere-lake-1786302177"></link>
            <id>https://news.lankasri.com/article/uk-19-yrs-old-dies-in-grasmere-lake-1786302177</id>
            <summary type="text">பிரித்தானியாவில் வார இறுதியில் அடுத்தடுத்து நிகழ்ந்த தனித்தனி நீர்நிலை விபத்துகள் பெரும் கவலையை ஏற்படுத்தி வருகின்றன. லேக் மாவட்டத்தில் நடந்த சோகம்லேக...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரித்தானியாவில் வார இறுதியில் அடுத்தடுத்து நிகழ்ந்த தனித்தனி நீர்நிலை விபத்துகள் பெரும் கவலையை ஏற்படுத்தி வருகின்றன.</p><h2> லேக் மாவட்டத்தில் நடந்த சோகம்</h2><p>லேக்(Lake) மாவட்டத்தின் கிராஸ்மியர்(Grasmere) ஏரியில் 19 வயது இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்து இருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><p> சனிக்கிழமை மாலை 4.35 மணியளவில் இளைஞர் ஒருவர் ஏரியில் தத்தளிப்பதாக கிடைத்த தகவலை அடுத்து கும்ப்ரியா காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.</p><p>அங்கிருந்து சிறுவனை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், துரதிர்ஷ்டவசமாக இளைஞர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/69683ad5-c219-4d8c-9996-54f3ac366101/26-6a78cee327c22.webp' /></p><p> இந்த சம்பவத்தில் யார் மீதும் சந்தேகம் இல்லை என்று காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர். மேலும் சிறுவனை காப்பாற்ற உதவிய பொதுமக்களுக்கு கும்ப்ரியா காவல்துறையினர் நன்றி தெரிவித்துள்ளனர்.</p><p></p><h2> காணாமல் போன பெண்</h2><p>சனிக்கிழமை இரவு வேமவுத்(Weymouth) கடற்கரைப் பகுதியில் பெண் ஒருவர் கடலுக்குள் சென்றதாக பொதுமக்களில் ஒருவர் இரவு 11.05 மணிக்கு டோர்செட் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.</p><p> கடலுக்கு சென்ற பெண் தனியாக இருந்ததாகவும், பின்னர் அவர் திரும்பி வெளியே வரவில்லை என்றும் நம்பப்படுகிறது.</p><p>காணாமல் போனதாக கூறப்படும் பெண் நடுத்தரமான உடல் அமைப்பு கொண்டவர் என்றும், வெளிர் நிறத்தில் உள்ள நீண்ட ஆடையை அணிந்து இருந்ததாகவும் கூறப்படுகிறது.</p><p> இந்நிலையில் கடலில் இறங்கி காணாமல் போனதாக நம்பப்படும் பெண்ணை கண்டுபிடிப்பதற்காக கடல்வழி மற்றும் வான்வழி மீட்புக் குழுவினர் தீவிர தேடுதல் வேட்டையில் களமிறங்கியுள்ளனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள். &nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-09T22:09:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Malaivanjan</name>
            </author>
            <title type="text"><![CDATA[அடைமழை, பலத்த காற்று: சாமிமலையில் 9 குடும்பங்களைச் சேர்ந்த 43 பேர் பாதிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/heavy-rain-winds-affect-9-families-in-samimale-1786302039"></link>
            <id>https://tamilwin.com/article/heavy-rain-winds-affect-9-families-in-samimale-1786302039</id>
            <summary type="text">நுவரெலியா மாவட்டம் - சாமிமலை, ஸ்டொக்ஹோம் தோட்டத்தில் அண்மையில் பெய்துவரும் அடைமழை மற்றும் பலத்த காற்றினால் 9 குடும்பங்களைச் சேர்ந்த 43 பேர் பாதிக்கப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>நுவரெலியா மாவட்டம் - சாமிமலை, ஸ்டொக்ஹோம் தோட்டத்தில் அண்மையில் பெய்துவரும் அடைமழை மற்றும் பலத்த காற்றினால் 9 குடும்பங்களைச் சேர்ந்த 43 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
</p><p>&nbsp;குறித்த லயன் குடியிருப்பில் உள்ள சில வீடுகளுக்கு அருகாமையில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதுடன், பலத்த காற்றின் காரணமாக வீடுகளின் கூரைத் தகரங்கள் கடுமையாக சேதமடைந்துள்ளன.</p><p></p><h2>சேதமடைந்த கூரைகள்&nbsp;</h2><p> </p><p>

அத்துடன், இந்தக் குடியிருப்பில் வசிக்கும் 13 பாடசாலை மாணவர்களும், தோட்டத்தில் தொழில் புரியும் தொழிலாளர்களும் தொடர்ச்சியாக பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். </p><p>

மழை தொடர்ச்சியாக பெய்துவரும் நிலையில், சேதமடைந்த கூரைகள் ஊடாக மழைநீர் வீடுகளுக்குள் கசிவதால், தங்களது பிள்ளைகளுடன் பாதுகாப்பற்ற சூழ்நிலையில் வாழ வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.
<br></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/15be9848-4353-4403-8b47-3cb5f99a8d1e/26-6a78d7bd2130e.webp' /></p><p>
குறிப்பாக, சிறுவர்கள் மற்றும் பாடசாலை மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளும் இதனால் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.</p><p> 

இந்த நிலையில், தங்களது வீடுகளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் தொடர்பாக பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியம் மற்றும் தோட்ட நிர்வாகத்திற்கு பல தடவைகள் அறிவித்துள்ளதாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர். எனினும், இதுவரை தங்களுக்கு நிரந்தரமான தீர்வு எதுவும் வழங்கப்படவில்லை என அவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.</p><p></p><h2>தொழிலாளர்கள் இடையேயான பிரிவினை</h2><p> </p><p>

கூரைத் தகரங்கள் சேதமடைந்த குடும்பங்களுக்கு உடனடியாக புதிய கூரைத் தகரங்களை வழங்குவதுடன், மண்சரிவு ஏற்பட்ட பகுதிகளை ஆய்வு செய்து, மக்கள் பாதுகாப்பாக வாழ்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p><p>
</p><p>
இதேவேளை, கடந்த பல வருடங்களாக ஸ்டொக்ஹோம் தோட்ட நிர்வாகம் மற்றும் சில அதிகாரிகளினால் தொழிலாளர்கள் மத்தியில் பாகுபாடு ஏற்படுத்தப்படுவதாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fa58d509-bfa1-4024-81d1-df3a71fc9a18/26-6a78d7bc3d047.webp' /></p><p>
</p><p>
 தோட்டத்தில் தொழில் புரிபவர்கள் மற்றும் தற்போது தொழில் வாய்ப்பு இல்லாதவர்கள் என பிரிக்கப்பட்டுவதுடன் நிர்வாகத்திற்கு சார்பானவர்கள் மற்றும் சார்பற்றவர்கள் என தொழிலாளர்களிடையே பிரிவினை ஏற்படுத்தப்படுவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
</p><p>
 இதன் காரணமாக சில தொழிலாளர்கள் தொழிலில் இருந்து நீக்கப்பட்டதாகவும், மேலும் சில தொழிலாளர்கள் பழிவாங்கும் நடவடிக்கைகளுக்கு உள்ளாக்கப்படுவதாகவும் மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். 

இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பில் தோட்ட நிர்வாகத்தின் தரப்பிலான பதில் இதுவரை கிடைக்கவில்லை.</p><p></p><h2>அதிகாரிகளால் அச்சுறுத்தல்கள்</h2><p> </p><p>

அண்மைய சீரற்ற காலநிலையினால் வீடுகளின் கூரைத் தகரங்கள் சேதமடைந்த நிலையில், பாதிக்கப்பட்ட குடும்பங்கள் கூரைத் தகரங்களை வழங்குமாறு தோட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p><p> 

இதன்போது, தோட்டத்தில் தற்போது தொழில் புரியும் குடும்பங்களுக்கு தலா 8 பழைய கூரைத் தகரங்கள் வழங்கப்பட்டதாகவும் தொழிலில் இருந்து ஓய்வு பெற்ற குடும்பங்களுக்கு கூரைத் தகரங்களை வழங்க முடியாது என தெரிவிக்கப்பட்டதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் குறிப்பிடுகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/87ae7a9f-43ed-483f-9af4-a19f7869acd8/26-6a78d7bb34621.webp' /></p><p>
</p><p>
மேலும், தங்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் தொடர்பில் கேள்வி எழுப்பியபோது, தோட்ட நலன்புரி மற்றும் வெளிக்கள அதிகாரிகளால் அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டதாகவும், பொலிஸ் முறைப்பாடுகள் செய்யப்பட்டு தங்களுக்கு அழுத்தங்கள் ஏற்படுத்தப்படுவதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். </p><p>இதனடிப்படையில் தோட்ட நிர்வாகத்தினரை உரிய முறையில் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என மக்கள் தெரிவித்துள்ளனர்.</p><p> 

தொடர்ச்சியாக பெய்துவரும் மழை மற்றும் பலத்த காற்றினால் ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ள தங்களது குடியிருப்புகள் மேலும் சேதமடைவதற்கு முன்னர், அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து நிலைமையை நேரில் பார்வையிட வேண்டும் என பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-09T22:01:35+00:00</updated>
        </entry>
    </feed>
