<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-08-18T20:35:08+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானியாவில் சால்மொனெல்லா பரவல் - 200 பேர் பாதிப்பு, ஒருவர் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/uk-salmonella-outbreak-linked-to-imported-eggs-1787085189"></link>
            <id>https://news.lankasri.com/article/uk-salmonella-outbreak-linked-to-imported-eggs-1787085189</id>
            <summary type="text">UK Salmonella outbreak: பிரித்தானியாவில் சால்மொனெல்லா பாக்டீரியா தொற்று பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானியாவில் சால்மொனெல்லா நோய் பரவல்...</summary>
            <content type="html"><![CDATA[<p>UK Salmonella outbreak: பிரித்தானியாவில் சால்மொனெல்லா பாக்டீரியா தொற்று பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
</p><p>
பிரித்தானியாவில் சால்மொனெல்லா நோய் பரவல் காரணமாக ஒருவர் உயிரிழந்ததுடன், 200-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
</p><h2>
இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகளில்</h2><p>இந்த பரவல், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகளின் பயன்பாட்டால் ஏற்பட்டதாக UK Health Security Agency (UKHSA) தெரிவித்துள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/797869e7-c1b5-4262-936f-2a5ced4093b5/26-6a84c18756764.webp' /></p><p>பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் கஃபே மற்றும் உணவகங்களில் உணவு உண்டவர்கள் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.

பிரித்தானியாவில் உற்பத்தி செய்யப்பட்ட முட்டைகள் அல்லது கோழி இறைச்சி காரணமல்ல என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.</p><h2>1 வயது குழந்தை முதல் 90 வயது முதியவர்கள் வரை</h2><p>மொத்தம் 207 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 34 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இருவருக்கு இரத்தத்தில் தொற்று ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் வயது 1 வயது குழந்தையிலிருந்து 90 வயது முதியவர்கள் வரை பரவியுள்ளது.
</p><p>
லண்டனில் மட்டும் 47 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். யார்க்ஷயர் மற்றும் ஹம்பர் பகுதியில் 38 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஸ்காட்லாந்தில் 6 பேர், வேல்ஸ் மற்றும் வடக்கு அயர்லாந்தில் தலா ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
</p><p></p><p>UKHSA, “இது தனிப்பட்ட சம்பவமல்ல. 2025-இல் ஏற்பட்ட சால்மொனெல்லா பரவலுடன் தொடர்புடையது. அப்போது கூட இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகளே காரணம்” என தெரிவித்துள்ளது.
</p><p>
அதிகாரிகள், “கைகளை நன்கு கழுவுதல், உணவை முறையாக சமைத்தல், நோய் அறிகுறிகள் இருந்தால் பிறருக்காக உணவு தயாரிப்பதை தவிர்த்தல்” போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-18T20:30:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[காத்தான்குடியில் புதிய ஜனாதிபதி.. அநுரவுக்கு எதிராக கூடிய ஆறு கட்சிகளின் முடிவு என்ன!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/rauf-hakeem-kalmunai-hospital-issue-1787082727"></link>
            <id>https://tamilwin.com/article/rauf-hakeem-kalmunai-hospital-issue-1787082727</id>
            <summary type="text">கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் பெண் ஊழியர்களில் சிலர் சீருடை அணியாமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.இந்த விவகாரம் ஒரு மதப் பிரச்சினையாக மாற்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் பெண் ஊழியர்களில் சிலர் சீருடை அணியாமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.</p><p>இந்த விவகாரம் ஒரு மதப் பிரச்சினையாக மாற்றப்பட்டு, இனங்களுக்கிடையே குரோதத்தை ஏற்படுத்த முயற்சிப்பதாகவும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.&nbsp;&nbsp;</p><p> </p><p>நாட்டில் பேசுபொருளாகிய இவ்விடயத்தில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ. ஹிஸ்புல்லா நேரடியாகத் தலையிட்டிருந்தார்.&nbsp;</p><p>

இந்நிலையில், காத்தான்குடி நகர சபை உறுப்பினர் ஒருவர் முன்னதாக&nbsp;ஹிஸ்புல்லா தொடர்பில் முன்வைத்திருந்த நையாண்டிக் கருத்து தற்போது பேசுபொருளாகியுள்ளது.&nbsp;</p><p>நாட்டிற்கு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க என்ற போதிலும், காத்தான்குடி பொறுத்த மட்டில்&nbsp;ஹிஸ்புல்லா தான் ஜனாதிபதி என குறிப்பிட்டிருந்தார்.&nbsp;</p><p>இது உட்பட பல முக்கிய அரசியல் நகர்வுகள் குறித்து விரிவாக ஆராய்கின்றது நாட்டு நடப்பு நிகழ்ச்சி,&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/C4qcoQhvYv8" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-18T20:26:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமீரகத்தைக் குறிவைத்த ஈரானிய ஏவுகணைகள்...! ட்ரம்பின் திடீர் தொலைபேசி அழைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/trump-holds-phone-talks-with-uae-president-1787083729"></link>
            <id>https://ibctamil.com/article/trump-holds-phone-talks-with-uae-president-1787083729</id>
            <summary type="text">ஐக்கிய அரபு அமீரகத்தின் ஜனாதிபதி ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஆகியோருக்கு இடையே தொலைபேசி வழியிலான உரை...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஐக்கிய அரபு அமீரகத்தின் ஜனாதிபதி ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஆகியோருக்கு இடையே தொலைபேசி வழியிலான உரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.
</p><p>
ஈரானிலிருந்து ஐக்கிய அமீரகத்தை நோக்கி இரண்டு ஏவுகணைகள் ஏவப்பட முன் இந்த அழைப்பு மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>

இந்த உரையாடலின் போது இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர நலன்களை மேம்படுத்துவதற்காக உறவுகளை வலுப்படுத்தும் வழிகள் குறித்து இரு தலைவர்களும் கலந்துரையாடியதாக குறிப்பிடப்படுகின்றது.</p><p> </p><p></p><h2>அண்மைக்கால மாற்றங்கள்&nbsp;</h2><p>மேலும், மத்திய கிழக்கு பிராந்தியத்தின் தற்போதைய கள நிலவரங்கள் குறித்தும் அண்மைக்கால மாற்றங்கள் குறித்தும் இருவரும் கருத்துக்களைப் பரிமாறிக்கொண்ட போதிலும், விவாதிக்கப்பட்ட பொருட்கள் குறித்து கூடுதல் விபரங்கள் எதனையும் செய்தி நிறுவனம் வெளியிடவில்லை.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/360bf10c-1b12-4de9-998a-11be94d342ef/26-6a84bf86bb4e4.webp' /></p><p>ஹோர்முஸ் நீரிணையை நிர்வகிப்பது தொடர்பாக ஈரானுடன் ஒப்பந்தம் செய்ய முயன்ற அமீரகத்தின் அண்டை நாடான ஓமான் மீது குண்டுவீச்சு நடத்தப்படும் என ட்ரம்ப் அச்சுறுத்தல் விடுத்த மறுநாளே இந்தத் தொலைபேசி உரையாடல் இடம்பெற்றதாகவும் கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-18T20:24:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈஸ்டர் குண்டு தாக்குதல் சம்பவம்! 940 குற்றச்சாட்டுகளையும் மறுத்த நவுஃபர் மௌலவி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/easter-attacks-zahran-naufar-moulavi-1787078982"></link>
            <id>https://tamilwin.com/article/easter-attacks-zahran-naufar-moulavi-1787078982</id>
            <summary type="text">ஈஸ்டர் குண்டு தாக்குதலுக்கும் தனக்கு எந்த விதமான தொடர்பும் இல்லை.அதனை செய்தது&amp;nbsp;சஹ்ரான் தான் என நவுஃபர் மௌலவி நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.ஈஸ்டர் ஞ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈஸ்டர் குண்டு தாக்குதலுக்கும் தனக்கு எந்த விதமான தொடர்பும் இல்லை.அதனை செய்தது&nbsp;சஹ்ரான் தான் என நவுஃபர் மௌலவி நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.</p><p>ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பாக 24 பிரதிவாதிகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள 23,270 குற்றச்சாட்டுகள் கொண்ட வழக்கில், முக்கிய பிரதிவாதியான நவுஃபர் மௌலவி தனது தற்காப்பு வாக்குமூலத்தை நீதிமன்றத்தில் முன்வைத்துள்ளார்.</p><p>
சஹ்ரான் ஹாஷிம் உள்ளிட்ட தற்கொலை குண்டுதாரிகளுடன் இணைந்து தாம் ஈஸ்டர் தாக்குதலை சதி செய்ததாகவோ அல்லது திட்டமிட்டதாகவோ எந்த ஆதாரமும் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p>அத்தோடு, தமக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள&nbsp;940 குற்றச்சாட்டுகளையும்&nbsp;நவுஃபர் மௌலவி மறுத்துள்ளார்.</p><p>ஈஸ்டர் தாக்குதல் சதியுடன் தன்னை இணைக்கும் நேரடி ஆதாரம் இல்லை என வாதம்
இறுதியில், தமக்கு எதிரான அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் தன்னை விடுதலை செய்யுமாறு நவுஃபர் மௌலவி நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.</p><p>இந்த விடயம் தொடர்பான விரிவான தகவல்களை நியுஸ் இன்சைட் நிகழ்ச்சியில் காணலாம்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/NSwNngp8TV0" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-18T19:42:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரஷ்யப் படைகள் தாக்குதல்; மத்திய கிழக்கு உக்ரைனிலிருந்து கட்டாயமாக வெளியேற்றப்பட்ட பொதுமக்கள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/russia-makes-hostages-of-kherson-civilians-1787059458"></link>
            <id>https://canadamirror.com/article/russia-makes-hostages-of-kherson-civilians-1787059458</id>
            <summary type="text">ரஷ்யப் படைகள் உக்ரைனின் மத்திய கிழக்கு பகுதியில் உள்ள டினிப்ரோபெட்ரோவ்ஸ்க் பிராந்தியத்திற்குள் முன்னேறி வரும் நிலையில், அங்குள்ள 2,200 குழந்தைகள் உட்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>ரஷ்யப் படைகள் உக்ரைனின் மத்திய கிழக்கு பகுதியில் உள்ள டினிப்ரோபெட்ரோவ்ஸ்க் பிராந்தியத்திற்குள் முன்னேறி வரும் நிலையில், அங்குள்ள 2,200 குழந்தைகள் உட்பட பொதுமக்களை வெளியேற்ற உக்ரைன் அரசு உத்தரவிட்டுள்ளது.
</p><p>


டினிப்ரோ நகரின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள 16 குடியிருப்புப் பகுதிகளில் இருந்து பொதுமக்களை கட்டாயமாக வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/30a43e5e-2c43-4ebc-a5c3-a15d5adf79d7/26-6a845d0408755.webp' /></p><h2>ஐந்தாவது ஆண்டை எட்டியுள்ள&nbsp; ரஷ்யப் படையெடுப்பு</h2><p>
</p><p>


ஒரு மாதத்திற்குள் குழந்தைகளுடன் உள்ள அனைத்து குடும்பங்களும் குறித்த பகுதிகளில் இருந்து வெளியேற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளதாக பிராந்திய இராணுவ நிர்வாகத் தலைவர் அலெக்சாண்டர் கொன்ஷா தெரிவித்துள்ளார்.
</p><p>


இதன்படி, பெற்றோர், பாதுகாவலர்கள் மற்றும் அரச நிர்வாக அதிகாரிகளின் உதவியுடன் 2,177 குழந்தைகள் பாதுகாப்பான பகுதிகளுக்கு அழைத்துச் செல்லப்படவுள்ளனர்.
</p><p>


வெளியேற்றப்படும் பொதுமக்கள் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டு, பின்னர் பாதுகாப்பான புதிய குடியிருப்புகளுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>



டினிப்ரோபெட்ரோவ்ஸ்க் பிராந்தியம் ரஷ்யாவின் ஆளில்லா விமானங்கள் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களுக்கு தொடர்ச்சியாக இலக்காகி வருகின்றது. பிராந்தியத்தின் கிழக்குப் பகுதிகளில் மோதல்கள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.</p><p>



இந்நிலையில், உக்ரைனில் ரஷ்யப் படையெடுப்பு ஐந்தாவது ஆண்டை எட்டியுள்ளது.
</p><p>
இந் நிலையில், ரஷ்யப் படைகளின் முன்னேற்ற வேகம் குறைந்திருந்தாலும், ஆள் பற்றாக்குறை மற்றும் இராணுவ வீரர்களின் சோர்வு காரணமாக உக்ரைன் இராணுவம் தொடர்ந்து நெருக்கடியை எதிர்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>


மேலும், கடந்த மாதம் ரஷ்ய இராணுவத்தின் தாக்குதல்களில் கொல்லப்பட்ட பொதுமக்களின் எண்ணிக்கை, போரின் ஆரம்பகாலத்துக்குப் பின்னர் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-18T19:39:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[மூன்று நீதிமன்றங்களின் பிடியில் சிக்கிய பிள்ளையான் - சுற்றிவளைக்கப்பட்ட சகாக்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/easter-attacks-pillayan-court-inquiry-1787078543"></link>
            <id>https://tamilwin.com/article/easter-attacks-pillayan-court-inquiry-1787078543</id>
            <summary type="text">பிள்ளையான் என்று அழைக்கப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.&amp;nbsp;

கிழக்கு ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிள்ளையான் என்று அழைக்கப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.&nbsp;</p><p>

கிழக்கு மாகாணத்தில் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் 05 கொலைச் சம்பவங்கள் மற்றும் வலிந்துக் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்களுடன் தொடர்புடைய வழக்கில் தற்போது அவருக்கான தடுப்புக்காவல் நீடிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p>இந்நிலையில், அவர் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளில் பல முக்கிய ஆதாரங்களும் அவரின் சகாக்கள் தொடர்பிலும் தகவல்கள் கிடைத்துள்ளதாக அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர்.</p><p>தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள சிவநேசத்துரை சந்திரகாந்தன் காணொளி மூலமாக நீதிமன்ற விசாரணைகளுக்கு முன்னிலைபடுத்தப்பட்ட போது பல தகவல்கள் வெளிவந்துள்ளன.&nbsp;</p><p>இது குறித்து விரிவாக ஆராய்கின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி,&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/XjU_g5Y62II" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-18T19:38:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[கட்டாரில் உயிரிழந்த இலங்கையர்களுக்கு ரூ. 80.8 மில்லியன் நஷ்டஈடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/rs-80-8-million-for-sri-lankans-who-died-in-qatar-1787081904"></link>
            <id>https://jvpnews.com/article/rs-80-8-million-for-sri-lankans-who-died-in-qatar-1787081904</id>
            <summary type="text">2026ஆம் ஆண்டின் முதல் ஏழு மாதங்களில், கட்டாரில் உயிரிழந்த இலங்கைச் பிரஜைகளின் சட்டப்பூர்வ வாரிசுகளுக்கு நஷ்டஈடாக 80.8 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான த...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026ஆம் ஆண்டின் முதல் ஏழு மாதங்களில், கட்டாரில் உயிரிழந்த இலங்கைச் பிரஜைகளின் சட்டப்பூர்வ வாரிசுகளுக்கு நஷ்டஈடாக 80.8 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான தொகையை தோஹாவிலுள்ள இலங்கைத் தூதரகம் பெற்றுக்கொடுத்துள்ளது.</p><p>

பிராந்தியத்தில் நிலவும் பதற்றமான சூழ்நிலைகளுக்கு மத்தியிலும், ஜனவரி முதல் ஜூலை வரையிலான காலப்பகுதியில் தூதரகம் மொத்தம் 80,886,895.32 இலங்கை ரூபாவை மரண நஷ்டஈடாக மீட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/55fc1623-a6e8-455d-bf0f-88412f0b9a8d/26-6a84b4b1e1760.webp' /></p><p>இந்த மொத்தத் தொகையில், தூதரகத்தின் முயற்சியால் 13,229,128 இலங்கை ரூபா நேரடியாக சம்பந்தப்பட்ட வாரிசுகளுக்கு வழங்கப்பட்டுள்ளதுடன், எஞ்சிய 67,657,767.32 இலங்கை ரூபாய் உரிய பயன்பெறுநர்களுக்கு வழங்குவதற்காக, வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சிடம் கையளிக்கப்பட்டு அனுப்பப்பட்டுள்ளது.</p><p>

2023ஆம் ஆண்டு முதல் நிலுவையில் இருந்த வழக்குகளின் நஷ்டஈட்டுத் தொகைகளும் இதில் அடங்குகின்றன.
</p><p>
கட்டாருக்கான இலங்கைத் தூதுவர் சிதாரா கான் மற்றும் அமைச்சர் தர்மசிரி விஜேவர்தன ஆகியோர் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சின் தூதரக விவகாரப் பிரிவு, கட்டார் அதிகாரிகள் மற்றும் தூதரகத்துடன் இணைந்து பணியாற்றும் சட்ட நிறுவனம் ஆகியவற்றுடன் ஒருங்கிணைந்து இந்த நஷ்டஈட்டுத் தொகையை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுத்திருந்தனர்.
</p><p>
இதேவேளை, தூதரகம் 2025ஆம் ஆண்டில் மொத்தம் 197,719,710.36 இலங்கை ரூபாவை நஷ்டஈடாக மீட்டு, இலங்கையிலுள்ள வாரிசுகளுக்கு அத்தொகை வழங்கப்பட வழிவகை செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-18T19:38:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>H. A. Roshan</name>
            </author>
            <title type="text"><![CDATA[தபால் சேவையில் நிலவும் பிரச்சினைகள்: இம்ரான் எம் பி முன்வைத்துள்ள கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/issues-prevailing-in-the-postal-service-1787067062"></link>
            <id>https://tamilwin.com/article/issues-prevailing-in-the-postal-service-1787067062</id>
            <summary type="text">திருகோணமலை மாவட்ட தபால் சேவையில் நிலவும் பிரச்சினைகள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் நாடாளுமன்றத்தில் கோரிக்கை முன்வைத்துள்ளார்.கோரிக...</summary>
            <content type="html"><![CDATA[<p>திருகோணமலை மாவட்ட தபால் சேவையில் நிலவும் பிரச்சினைகள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் நாடாளுமன்றத்தில் கோரிக்கை முன்வைத்துள்ளார்.</p><p>கோரிக்கைகள் பின்வருமாறு, மாவட்டத்தில் உள்ள பல தபால் அலுவலகங்களில், அப்பகுதியின் அஞ்சல் அட்டைகளின்
எண்ணிக்கைக்கும் சேவை வழங்கும் இடத்திற்கு ஏற்ப போதுமான தபால்காரர்கள்
மற்றும் அஞ்சல் விநியோகப் பணியாளர்கள் குறைவு. </p><p>இதனால் பொதுமக்களுக்கு
வழங்கப்படும் அஞ்சல் சேவையில் தாமதம் ஏற்படுகின்றது. எனவே, ஒவ்வொரு தபால்
அலுவலகத்தின் பணிகளுக்கு ஏற்ப தேவையான மனிதவளத்தை உடனடியாக நிரப்ப நடவடிக்கை
எடுக்கப்பட வேண்டும்.</p><h2>நடவடிக்கைகள்</h2><p>
</p><p>
தற்காலிகப் பணியாளர்களை நிரந்தரப்படுத்துதல்
தற்போது தபால் திணைக்களத்தில் நீண்டகாலமாக தற்காலிக மற்றும் ஒப்பந்த
அடிப்படையில் பணியாற்றி வரும் ஊழியர்கள் பலர் உள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/05a35ebc-2bca-4f4f-b305-d9b7c1fb9046/26-6a84b3655a970.webp' /></p><p> </p><p>அவர்களின் சேவை
அனுபவத்தையும் தகுதியையும் கருத்திற்கொண்டு, அவர்களை நிரந்தர சேவையில்
இணைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றனவா என்பது தொடர்பில் அரசாங்கம்
தெளிவுபடுத்த வேண்டும்.
</p><p>
தபால் அலுவலகக் கட்டிடங்களின் அபிவிருத்தி
திருகோணமலை மாவட்டத்தில் பல தபால் அலுவலகங்களின் கட்டிடங்கள் பழமையான நிலையில்
காணப்படுகின்றன.</p><h2>தபால் விநியோகம்</h2><p> </p><p>பொதுமக்களுக்கும் ஊழியர்களுக்கும் ஏற்ற நவீன வசதிகளுடன்
இக்கட்டிடங்களைப் புனரமைத்து அபிவிருத்தி செய்வதற்கான திட்டம் உள்ளதா என்பதும்
கேள்வியாக முன்வைக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6e66f0c2-a756-4bbb-b6e8-2ff1d38795f7/26-6a84b3662ce08.webp' /></p><p>
</p><p>
தபால் விநியோகத்திற்கான போக்குவரத்து வசதிகள்
இன்றைய காலத்திற்கேற்பவும், சேவையை விரைவுபடுத்தும் வகையிலும், தேவையான
ஊழியர்களுக்கு மோட்டார் சைக்கிள்கள் அல்லது பொருத்தமான போக்குவரத்து வசதிகளை
வழங்க நடவடிக்கை எடுக்கப்படுமா என்பதும் நாடாளுமன்றத்தில்
சுட்டிக்காட்டப்பட்டது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-18T19:33:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடற்பரப்புகளுக்கு உயர் அலை எச்சரிக்கை ; மீனவர்களுக்கு எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/high-tide-warning-for-sea-areas-warning-fishermen-1787081240"></link>
            <id>https://jvpnews.com/article/high-tide-warning-for-sea-areas-warning-fishermen-1787081240</id>
            <summary type="text">நீர்கொழும்பிலிருந்து காலி, மாத்தறை மற்றும் அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலான கடற்பரப்புகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் உயர் அலை விழிப்புணர்வு எச...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீர்கொழும்பிலிருந்து காலி, மாத்தறை மற்றும் அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலான கடற்பரப்புகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் உயர் அலை விழிப்புணர்வு எச்சரிக்கையை விடுத்துள்ளது.</p><p>
</p><p>இன்று (18) மாலை 5:30 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை, புதன்கிழமை (19) மாலை 5:30 மணி வரை அமுலில் இருக்கும்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/388025c8-9fc8-4396-b797-f20b840d3536/26-6a84b21995a8e.webp' /></p><p>பாதிக்கப்பட்ட கடற்பரப்புகளில் 2.5 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு அலைகள் எழக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
அத்துடன், பேருவலையிலிருந்து காலி ஊடாக மாத்தறை வரையிலான கடலோரப் பகுதிகளில் கடல்நீர் புகும் அபாயம் உள்ளதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
</p><p>
எனவே, அந்த பகுதிகளில் செயற்படும் கடற்படையினரும் மீனவர்களும் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-18T19:27:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானுடன் பேச்சுவார்த்தை இல்லை...! ட்ரம்பின் திடீர் பின்னடைவு அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/no-talks-with-iran-says-trump-1787077841"></link>
            <id>https://ibctamil.com/article/no-talks-with-iran-says-trump-1787077841</id>
            <summary type="text">
ஈரானுடன் தற்போது எந்தப் பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என்றும் எதிர்காலத்தில் அவ்வாறு எதுவும் திட்டமிடப்படவில்லை என்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>
ஈரானுடன் தற்போது எந்தப் பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என்றும் எதிர்காலத்தில் அவ்வாறு எதுவும் திட்டமிடப்படவில்லை என்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.</p><p>

ஈரானின் இஸ்லாமிய புரட்சிகரக் காவல் படையுடன் (IRGC) பின்னணிப் பேச்சுவார்த்தைகள் நடைபெறுவதாக நேற்றுத் தெரிவித்திருந்த கருத்துகளுக்கு மாறாக இந்த கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இது தொடர்பில் மேலும் தெரிவித்த ட்ரம்ப், “ஈரானிய இஸ்லாமியக் குடியரசோடு எந்தவிதப் பேச்சுவார்த்தையோ அல்லது உரையாடலோ நடைபெறவில்லை.</p><p></p><h2>ஈரானியத் துறைமுகங்கள்&nbsp;</h2><p>

எதிர்காலத்திலும் திட்டமிடப்படவில்லை அத்தோடு ஈரானியத் துறைமுகங்கள் மீதான கடற்படை முற்றுகை முழு வீச்சில் தொடர்கிறது.</p><p>

ஹோர்முஸ் ஜலசந்தி திறக்கப்பட்டுச் சீராக இயங்கி வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a558bde7-10e4-485f-8d90-b349360ffdc8/26-6a84ae0882f05.webp' /></p><p> 

அங்கு வைக்கப்பட்டிருந்த அனைத்துக் கடலடி வெடிமருந்துகளும் அகற்றப்பட்டுச் செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளன” என தெரிவித்துள்ளார்.
</p><p>
மேலும் ட்ரம்பின் இந்த அறிவிப்புக்கு முன்னதாகவே, அமெரிக்காவுடன் எந்தவிதப் பின்னணிப் பேச்சுவார்த்தையிலும் தங்கள் அமைப்பு ஈடுபடவில்லை என ஈரானின் இஸ்லாமிய புரட்சிகரக் காவல் படையும் (IRGC) மறுப்பு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-18T19:11:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஐக்கிய அரபு அமீரகத்தைக் குறிவைத்து பாய்ந்த ஈரானிய ஏவுகணைகள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/iran-fires-two-missiles-toward-uae-1787073295"></link>
            <id>https://ibctamil.com/article/iran-fires-two-missiles-toward-uae-1787073295</id>
            <summary type="text">ஐக்கிய அரபு அமீரகத்தைக் குறிவைத்து ஈரானில் இருந்து ஏவப்பட்ட இரண்டு பாலிஸ்டிக் ஏவுகணைகளைத் தங்களது வான் பாதுகாப்பு அமைப்புகள் கண்டறிந்துள்ளதாக அமீரகப் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஐக்கிய அரபு அமீரகத்தைக் குறிவைத்து ஈரானில் இருந்து ஏவப்பட்ட இரண்டு பாலிஸ்டிக் ஏவுகணைகளைத் தங்களது வான் பாதுகாப்பு அமைப்புகள் கண்டறிந்துள்ளதாக அமீரகப் பாதுகாப்பு அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
</p><p>
முன்னதாக அமீரகப் பகுதியில் ஏவுகணை அச்சுறுத்தல் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.</p><p>

இந்தநிலையில், தற்போது இத்தாக்குதல் தொடர்பான கூடுதல் விவரங்கள் வெளியாகியுள்ளன.</p><p>
</p><p></p><h2>தீவிரக் கண்காணிப்பு</h2><p>இதனடிப்படையில் முதல் ஏவுகணை, நாட்டின் எல்லைக்குட்பட்ட கடற்பகுதிக்கு வெளியே போய் விழுந்துள்ளது.
</p><p>
இரண்டாவது ஏவுகணை, அமீரகத்தின் எல்லைக்குட்பட்ட கடற்பகுதிக்குள்ளேயே வந்து விழுந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/32cbafe6-3e64-4915-a711-fb543cd4a922/26-6a84a2e4cb83c.webp' /></p><p>

இது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், நாட்டின் பாதுகாப்பைக் குலைக்கும் நோக்கம் கொண்ட எதுவாக இருந்தாலும் அதை உறுதியோடு எதிர்கொள்ளவும், எந்தவொரு அச்சுறுத்தலையும் கையாளவும் பாதுகாப்பு அமைச்சகம் தீவிரக் கண்காணிப்புடனும் முழுத் தயார்நிலையுடனும் இருப்பதை உறுதிப்படுத்துகிறது. </p><p>

இதன் மூலம் நாட்டின் இறையாண்மை, பாதுகாப்பு, ஸ்திரத்தன்மை மற்றும் தேசிய வளங்களைப் பாதுகாப்பது உறுதி செய்யப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-18T19:11:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[மரத்தில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட பிரித்தானிய பிரஜை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/uk-national-found-dead-in-matara-temple-1787068863"></link>
            <id>https://ibctamil.com/article/uk-national-found-dead-in-matara-temple-1787068863</id>
            <summary type="text">தவறான முடிவெடுத்து உயிரிழந்த நிலையில் வெளிநாட்டவர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மாத்தறை, திஹாகொட பகுதியிலுள்ள விகாரை ஒன்றின் மரமொன்றில் தொங்கி...</summary>
            <content type="html"><![CDATA[<p>தவறான முடிவெடுத்து உயிரிழந்த நிலையில் வெளிநாட்டவர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
</p><p>
மாத்தறை, திஹாகொட பகுதியிலுள்ள விகாரை ஒன்றின் மரமொன்றில் தொங்கிய நிலையில் அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.</p><p>

இந்தநிலையில் 52 வயதுடைய கர்தெரா ஒய்தப் எனப்படும் பிரித்தானிய பிரஜை ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.</p><p>
</p><p></p><h2>தலைக்கவசம்&nbsp;</h2><p>சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த விகாரைக்கு வழிபாட்டுக்காக சென்ற இரண்டு பெண்கள், நபர் ஒருவர் மரத்தில் தொங்கிக் கொண்டிருப்பதைக் கண்டு உடனடியாக விகாராதிபதிக்கு தெரிவித்துள்ளனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4b769404-3403-4375-8162-33408f51d34e/26-6a849c2218b82.webp' /></p><p>இது குறித்து காவல்துறையினருக்கு வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
</p><p>
சடலம் தொங்கிக் கொண்டிருந்த இடத்திற்கு அருகில் காலணிகள், தலைக்கவசம் மற்றும் ஸ்கூட்டர் ரக மோட்டார் சைக்கிள் ஆகியவை காவல்துறையினரால் கண்டெடுக்கப்பட்டுள்ளன.</p><p>
</p><p></p><h2>மேலதிக விசாரணை</h2><p>குறித்த வெளிநாட்டவர் மோட்டார் சைக்கிளில் அங்கு வந்து உயிரை மாய்த்திருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
</p><p>
அவர் வருகை தந்ததாக நம்பப்படும் மோட்டார் சைக்கிள் இலக்கத்தின் ஊடாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், குறித்த நபர் வெலிகம பிரதேசத்தில் உள்ள சுற்றுலா விடுதி ஒன்றில் தங்கியிருந்தமை தெரிய வந்துள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/999a6bac-1be9-4dce-b412-e9152a1b00cb/26-6a849c22be79c.webp' /></p><p>வாடகை அடிப்படையில் இந்த மோட்டார் சைக்கிளைப் பெற்றுக்கொண்டு அவர் விகாரைக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த வெளிநாட்டவரின் விசா காலம் முடிவடைந்துள்ளதாக காவல்துறையினர் மேற்கொண்ட ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p>

வெளிநாட்டவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக மாத்தறை பொது மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் குறித்து காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-18T19:10:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சவுதி அராம்கோ சுத்திகரிப்பு நிலையம் மீது ஹவுதி ட்ரோன் தாக்குதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/yemen-houthis-drone-strike-saudi-aramco-refinery-1787080367"></link>
            <id>https://news.lankasri.com/article/yemen-houthis-drone-strike-saudi-aramco-refinery-1787080367</id>
            <summary type="text">Houthis drone strike Saudi Aramco refinery: சவுதி அராம்கோ சுத்திகரிப்பு நிலையம் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.சவுதி அரேபியாவின் அராம்கோ எண்ண...</summary>
            <content type="html"><![CDATA[<p>Houthis drone strike Saudi Aramco refinery: சவுதி அராம்கோ சுத்திகரிப்பு நிலையம் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.</p><p>சவுதி அரேபியாவின் அராம்கோ எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது யேமன் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ட்ரோன் தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
</p><p></p><p>இந்த தாக்குதல் சவுதி அரேபியாவின் கிழக்கு பகுதியில் உள்ள முக்கியமான எண்ணெய் உற்பத்தி நிலையத்தை குறிவைத்து நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.</p><p>

ஹவுதி போராளிகள், “சவுதி அரேபியா யேமனில் நடத்திய தாக்குதல்களுக்கு பதிலடி” எனக் கூறி இந்த ட்ரோன் தாக்குதலை மேற்கொண்டதாக அறிவித்துள்ளனர்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/de869382-7393-4df6-9f23-173eac62e3c5/26-6a84aeb1ad1d1.webp' /></p><p>தாக்குதலால் சுத்திகரிப்பு நிலையத்தில் தீப்பற்றியதாகவும், சில பகுதிகளில் உற்பத்தி தற்காலிகமாக பாதிக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
</p><p>
சவுதி அதிகாரிகள், “தாக்குதலை தடுக்க வான்வழி பாதுகாப்பு அமைப்புகள் முயற்சி செய்தன. சில ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. ஆனால் சில தாக்குதல்கள் நிலையத்தை சென்றடைந்தன” என தெரிவித்துள்ளனர்.
</p><p>
இந்த சம்பவம் உலகளாவிய எண்ணெய் சந்தையில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அராம்கோ நிறுவனம் உலகின் மிகப்பெரிய எண்ணெய் உற்பத்தியாளர்களில் ஒன்றாக இருப்பதால், இந்த தாக்குதல் சர்வதேச அளவில் கவலைக்குரியதாக பார்க்கப்படுகிறது.
</p><p></p><p>முன்னதாகவும் ஹவுதி போராளிகள் சவுதி அரேபியாவின் எண்ணெய் நிலையங்கள் மற்றும் கப்பல்களை குறிவைத்து பல தாக்குதல்கள் நடத்தியுள்ளனர். தற்போது மீண்டும் அதிகரித்துள்ள தாக்குதல்கள், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் பதற்றத்தை மேலும் தீவிரப்படுத்துகின்றன.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-18T19:10:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[நல்லூர் ஆலயத்திற்குள் சொகுசு வாகனம் ; எழுந்துள்ள கடும் சர்ச்சை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/controversy-luxury-vehicle-entering-nallur-temple-1787079612"></link>
            <id>https://jvpnews.com/article/controversy-luxury-vehicle-entering-nallur-temple-1787079612</id>
            <summary type="text">வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் மஹோற்சவ காலத்தை முன்னிட்டு, ஆலயத்தைச் சூழவுள்ள பிரதான வீதிகள் மூடப்பட்டு பலத்த பாதுகா...</summary>
            <content type="html"><![CDATA[<p>வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் மஹோற்சவ காலத்தை முன்னிட்டு, ஆலயத்தைச் சூழவுள்ள பிரதான வீதிகள் மூடப்பட்டு பலத்த பாதுகாப்பு மற்றும் போக்குவரத்துக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், சொகுசு வாகனம் ஒன்று ஆலய வளாகத்திற்குள் நுழைந்தமை பக்தர்கள் மத்தியில் கடும் அதிருப்தியையும் கேள்விகளையும் ஏற்படுத்தியுள்ளது.</p><p>மஹோற்சவ காலத்தில் பக்தர்கள் அமைதியாகவும், தூய்மையாகவும் வழிபடுவதற்கு ஏதுவாக ஆலயத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் வாகனப் போக்குவரத்துக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதுடன், பொலிஸார் மற்றும் பாதுகாப்புத் தரப்பினரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d29663a8-47c1-4d6c-9a14-3b333f071168/26-6a84abbde069a.webp' /></p><p>அவசரத் தேவைகளுக்கான அம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனங்களைத் தவிர ஏனைய வாகனங்களின் நுழைவுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், கறுப்பு நிற சொகுசு ஜீப் ரக வாகனம் ஒன்று ஆலயத்தின் உட்பகுதி வரை சென்று நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>பொதுமக்களும் பக்தர்களும் தங்களது வாகனங்களை தூர இடங்களில் நிறுத்திவிட்டு ஆலயத்துக்கு நடந்துசெல்லும் நிலையில், குறித்த வாகனத்திற்கு மாத்திரம் எவ்வாறு அனுமதி வழங்கப்பட்டது என்ற கேள்வி எழுந்துள்ளது.
</p><p>
அத்துடன், இது உரிய அனுமதியுடன் இடம்பெற்றதா அல்லது பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்தவர்களின் கவனக்குறைவால் வாகனம் ஆலய வளாகத்திற்குள் நுழைந்ததா என்பது தொடர்பிலும் சமூக வலைத்தளங்களிலும் பொதுமக்கள் மத்தியிலும் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
</p><p>
ஆலயத்தின் புனிதத்தையும் மஹோற்சவ காலத்தில் நடைமுறைப்படுத்தப்படும் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்துக் கட்டுப்பாடுகளையும் கருத்திற்கொண்டு, இந்த வாகனம் ஆலய வளாகத்திற்குள் நுழைய அனுமதிக்கப்பட்டமை தொடர்பில் உரிய அதிகாரிகள் மற்றும் பாதுகாப்புத் தரப்பினர் தெளிவான விளக்கமொன்றை வழங்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.</p><p></p><p></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/04aaad95-b599-4e9d-a793-2caabc986d31/26-6a84abbe95ffd.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/af556116-e9bc-4e3f-b4fd-266396f9c7b2/26-6a84abbf54f88.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/20f8560a-7f1f-49eb-9bfc-6e88e44da827/26-6a84abc007b0b.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d29663a8-47c1-4d6c-9a14-3b333f071168/26-6a84abbde069a.webp' /></p>]]></content>
            <updated>2026-08-18T19:00:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[ADB வங்கியிடமிருந்து 200 மில்லியன் டொலர் கடனுக்கான ஒப்பந்தம் கைச்சாத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/signed-a-200-million-loan-agreement-from-adb-bank-1787077903"></link>
            <id>https://jvpnews.com/article/signed-a-200-million-loan-agreement-from-adb-bank-1787077903</id>
            <summary type="text">வர்த்தகம், முதலீடு மற்றும் கைத்தொழில் வளர்ச்சித் திட்டத்தின் 1 ஆம் உப திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து (ADB) 200 மி...</summary>
            <content type="html"><![CDATA[<p>வர்த்தகம், முதலீடு மற்றும் கைத்தொழில் வளர்ச்சித் திட்டத்தின் 1 ஆம் உப திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து (ADB) 200 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவியைப் பெற்றுக்கொள்வதற்கான கடன் ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன.
</p><p>
 

நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷண சூரியப்பெரும மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கைக்கான வதிவிடப் பணிப்பாளர் ஷெனான் கவ்லின் (Shannon Cowlin) ஆகியோருக்கு இடையில் இன்று (18) கொழும்பு பொதுத் திறைசேரியில் இக்கடன் ஒப்பந்தம் கையெழுத்தானது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0ff172a1-b336-4330-875f-e35c52bb1bb8/26-6a84a511825e6.webp' /></p><p>இவ்முதலீடு மற்றும் கைத்தொழில் திட்டத்திற்காக 200 மில்லியன் டொலர் கொள்கை சார்ந்த கடன் வசதியைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் அரசாங்கத்திற்கும் ஆசிய அபிவிருத்தி வங்கிக்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டிருந்தன.
</p><p>
 

இத்திட்டம் கடந்துபோன 2025 தேசிய கொள்கைக் கட்டமைப்புடன் இணங்கிச் செல்வதுடன், நிலையான பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதையே நோக்கமாகக் கொண்டுள்ளது.</p><p>

 

மேலும், வர்த்தகம் மற்றும் முதலீடு ஆகியவை அரசாங்கத்தின் முதன்மை முன்னுரிமைகளாக இருப்பதுடன், அம்முன்னுரிமைகள் 2026-2028 காலப்பகுதிக்கான பிரதான அரச முதலீட்டுத் திட்டங்களிலும் பிரதிபலிக்கின்றன என நிதி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
</p><p>
 

நாட்டின் பிரதான அபிவிருத்தி சவால்களுக்குத் திட்டமிட்ட அணுகுமுறை மூலம் தீர்வுகளை வழங்குவதற்காக வர்த்தகம், முதலீடு மற்றும் கைத்தொழில் வளர்ச்சித் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும், இத்திட்டம் இரண்டு உப திட்டங்களைக் கொண்டுள்ளதாகவும் நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-18T18:33:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டின் பொருளாதாரம் தொடர்பில் எப்போதும் கெட்ட செய்திகளையே வெளிப்படுத்தும் ரணில்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/ranil-warns-about-the-countrys-economy-1787068916"></link>
            <id>https://ibctamil.com/article/ranil-warns-about-the-countrys-economy-1787068916</id>
            <summary type="text">சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தம் மார்ச் 2027-க்குள் முடிவுக்கு வரும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

2028-க்குப் பிறகு...</summary>
            <content type="html"><![CDATA[<p>சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தம் மார்ச் 2027-க்குள் முடிவுக்கு வரும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

2028-க்குப் பிறகு நாடு வெளிநாட்டுக் கடன்களைத் திருப்பிச் செலுத்த வேண்டியிருப்பதால், நாட்டில் 15 பில்லியன் டொலர் அந்நியச் செலாவணிக் கையிருப்பு இருக்க வேண்டும் என சர்வதேச நாணய நிதியம் எதிர்பார்ப்பதாக முன்னாள் ஜனாதிபதி கூறினார்.</p><p>இந்த ஆண்டு இறுதிக்குள் 8 பில்லியன் டொலர் கையிருப்பை மத்திய வங்கி எதிர்பார்ப்பதாகவும், அது நிறைவேறினால், மேலும் 6 பில்லியன் டொலர் திரட்டப்பட வேண்டும் என்றும் முன்னாள் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
</p><p>
</p><h2>&nbsp;பயணம் இத்துடன் முடிந்துவிடவில்லை</h2><p>அதன்படி, அந்த 6 பில்லியன் டொலரைத் திரட்டுவதற்கான ஒரு திட்டம் வகுக்கப்பட வேண்டும் என அவர் சுட்டிக்காட்டினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/759ef0a4-0f5f-4b16-bb1a-d83fcd5a12e0/26-6a84887387dd0.webp' /></p><p>&nbsp;முன்னாள் அமைச்சர் ரஞ்சித் சியம்பலபிட்டிய எழுதிய&nbsp; புத்தகத்தின் வெளியீட்டு விழாவில் பங்கேற்றபோது முன்னாள் ஜனாதிபதி இவ்வாறு கூறினார்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவிக்கையில்,</p><p>"நாங்கள் வெளியேறியபோது, ​​பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தி, நாட்டின் அந்நியச் செலாவணிக் கையிருப்பில் 6 பில்லியன் டொலரைச் சேமித்தோம்.</p><p> இந்தப் பயணம் இத்துடன் முடிந்துவிடவில்லை. 2028-க்குப் பிறகு நாம் கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டும். 2028-க்குப் பிறகு கடனைத் திருப்பிச் செலுத்த, நமது அந்நியச் செலாவணிக் கையிருப்பு சுமார் 15 பில்லியன் டொலராக இருக்க வேண்டும் என்று அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். தற்போது, ​​​​6 பில்லியன் டொலர் மட்டுமே உள்ளது. இன்றிலிருந்து நாம் 8 பில்லியன் டொலரைக் கண்டுபிடிக்க வேண்டும்.</p><h2>மத்திய வங்கியின் அறிவிப்பு</h2><p> </p><p>இந்த ஆண்டின் இறுதிக்குள் 8 பில்லியன் டொலர் இருக்கும் என்று மத்திய வங்கி கூறியுள்ளது. நாம் மேலும் 6 பில்லியன் டொலரைக் கண்டுபிடிக்க வேண்டும், அதுதான் இந்த நாட்டின் பிரதான பிரச்சினை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9b044878-cc32-4127-a038-00ef7f9b4276/26-6a848872be00d.webp' /></p><p>
</p><p>
3 பில்லியன் டொலர் மதிப்புள்ள பத்திரங்களை வெளியிடுவது என்ற மற்றொரு நிபந்தனைக்கு நாங்கள் ஒப்புக்கொண்டுள்ளோம். சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தம் மார்ச் 2027-இன் இறுதியில் முடிவடையும்.</p><p></p><p> </p><h2>நாட்டின் பிரதான பிரச்சினை</h2><p>நாம் சர்வதேச நாணய நிதியத்தில் சேருவோமா இல்லையா? அரசாங்கத்தின் திட்டம் என்ன?

மீண்டும் கடனை எப்படித் திருப்பிச் செலுத்துவது என்பதுதான் இந்த நாட்டின் பிரதான பிரச்சினை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/035425a2-4f67-461a-963e-e155b15043ce/26-6a848a9c9ee68.webp' /></p><p> </p><p>அரசியலமைப்பைத் திருத்தி, நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை நீட்டிப்பதா வேண்டாமா? இல்லை, நமது கவனம் இங்கேதான் இருக்க வேண்டும். இது விவாதிக்கப்படவில்லை." நாடாளுமன்றத்திற்கு உள்ளேயோ வெளியேயோ இன்னும் முடியவில்லை. பிரச்சனை வரும்போது நாம் என்ன செய்யப் போகிறோம்? </p><p>நம்மால் பணம் செலுத்த முடியாவிட்டால், நாம் மீண்டும் திவாலாகிவிடுவோம். இந்தப் புத்தகத்தில் இரண்டு போர்கள் மட்டுமே உள்ளன, நாம் மூன்றாவது போரைப் பற்றி எழுத வேண்டும். அதை உங்களாலும் முடியாது, எங்களாலும் முடியாது. நினைவில் கொள்ளுங்கள், இந்த இரண்டு போர்கள் முடிந்த பிறகும், இன்னொரு போர் வரும். அந்தப் போரிலிருந்து நம்மால் வெளியேற முடியாவிட்டால், நாம் உண்மையான சிக்கலில் இருக்கிறோம் என்று சொல்ல வேண்டியிருக்கும். </p><p>அதனால் நான் கொண்டு வந்தது நல்ல செய்தி அல்ல. எப்படியிருந்தாலும், நான் எப்போதும் கெட்ட செய்திகளையே கொண்டு வருகிறேன்." என்றார்.&nbsp; </p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p>&nbsp; &nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-18T18:30:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானுடனான பேச்சு குறித்து ட்ரம்ப் வெளியிட்ட அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/trump-says-no-talks-with-iran-1787077619"></link>
            <id>https://ibctamil.com/article/trump-says-no-talks-with-iran-1787077619</id>
            <summary type="text">&amp;nbsp;ஈரானுடன் எந்தப் பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை அல்லது திட்டமிடப்படவில்லை என்றும், வோஷிங்டனின் கடற்படை முற்றுகையின் கீழ் ஹோர்முஸ் நீரிணை திறந்தே...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;ஈரானுடன் எந்தப் பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை அல்லது திட்டமிடப்படவில்லை என்றும், வோஷிங்டனின் கடற்படை முற்றுகையின் கீழ் ஹோர்முஸ் நீரிணை திறந்தே உள்ளது என்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று தெரிவித்தார்.</p><p>

"ஈரானிய இஸ்லாமியக் குடியரசுடன் எந்தப் பேச்சுவார்த்தையோ அல்லது உரையாடலோ நடைபெறவில்லை, அல்லது திட்டமிடப்படவில்லை," என்று ட்ரம்ப் தனது 'ட்ரூத் சோஷியல்' தளத்தில் தெரிவித்துள்ளார்.</p><h2>ஹோர்முஸ் நீரிணை திறந்தும், இயங்கியும் வருகிறது</h2><p>
</p><p>
"கடற்படை முற்றுகை முழு வீச்சில் நடைமுறையில் உள்ளது. ஹோர்முஸ் நீரிணை திறந்தும், இயங்கியும் வருகிறது. அனைத்து நீர் கண்ணிவெடிகளும் அகற்றப்பட்டுவிட்டன அல்லது வெடிக்கச் செய்யப்பட்டுவிட்டன," என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b72f76e7-2a1c-47b6-aa16-5b586e90a1ee/26-6a84a3f5764ae.webp' /></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-18T18:27:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஷார்ட்டான ஆடையணிந்து கிளாமர் போஸ்!! யாஷிகா ஆனந்த் புகைப்படங்கள்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/yashika-aanand-recent-short-dress-photoshoot-1787061404"></link>
            <id>https://viduppu.com/article/yashika-aanand-recent-short-dress-photoshoot-1787061404</id>
            <summary type="text">யாஷிகா ஆனந்த்இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் தான் நடிகை யாஷிகா ஆனந்த்.

பிக்பாஸ் ...</summary>
            <content type="html"><![CDATA[<h2>யாஷிகா ஆனந்த்</h2><p>இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் தான் நடிகை யாஷிகா ஆனந்த்.

பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்று அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்தார் யாஷிகா.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1c64949d-a2a3-4c92-9ddb-9c6d667e7d00/26-6a8464a61d242.webp' /></p><p> </p><p>இதற்கிடையில் கார் விபத்தில் சிக்கி தன்னுடைய தோழியை இழந்து படுத்தப்படுகையில் இருந்தார்.

4 மாதங்களுக்கு பின் மீண்டு வந்த யாஷிகா, மீண்டும் நடிக்க ஆரம்பித்தார்.</p><p> இணையத்தில் ஆக்டிவாக இருந்து கிளாமர் பதிவுகளை பகிர்ந்து வரும் யாஷிகா, சமீபத்தில் 27 வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.

தற்போது, கிளாமர் லுக்கில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-08-18T18:15:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டின் பொருளாதாரம் குறித்து ரணிலிடமிருந்து எச்சரிக்கை அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/ranil-warns-about-the-country-s-economy-1787076823"></link>
            <id>https://jvpnews.com/article/ranil-warns-about-the-country-s-economy-1787076823</id>
            <summary type="text">2027 ஆம் ஆண்டு மார்ச் மாதமடையும் போது சர்வதேச நாணய நிதியத்துடனா (IMF) ஒப்பந்தம் நிறைவடையும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
...</summary>
            <content type="html"><![CDATA[<p>2027 ஆம் ஆண்டு மார்ச் மாதமடையும் போது சர்வதேச நாணய நிதியத்துடனா (IMF) ஒப்பந்தம் நிறைவடையும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.</p><p>

 

எதிர்வரும் 2028 ஆம் ஆண்டிற்குப் பிறகு மீண்டும் வெளிநாட்டு கடன்களைச் செலுத்த வேண்டிய நிலை இலங்கைக்கேற்படும் என்பதால், இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பு 15 பில்லியன் அமெரிக்க டொலர்களாக இருக்க வேண்டும் என சர்வதேச நாணய நிதியம் எதிர்பார்ப்பதாக முன்னாள் ஜனாதிபதி கூறினார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4ae5bdb3-1adb-41e8-96b9-a7091a2964c2/26-6a84a0d93958e.webp' /></p><p>மத்திய வங்கி இவ்வருட முடிவில் 8 பில்லியன் டொலர்கள் நிலுவையில் இருக்கும் என எதிர்பார்த்துள்ளதாகவும், அவ்வாறானால் மேலும் 6 பில்லியன் டொலர்களைத் தேட வேண்டிய நிலை ஏற்படும் என்றும் முன்னாள் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.</p><p>
 

அதன்படி, அந்த 6 பில்லியன் டொலர்களைத் தேடுவதற்கான வேலைத்திட்டம் ஒன்றை வகுக்க வேண்டும் எனவும் முன்னாள் ஜனாதிபதி இங்கு வலியுறுத்தினார்.
</p><p>
 

முன்னாள் அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய எழுதிய "யுத தெக்கட உர தீ" என்ற நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே முன்னாள் ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.&nbsp; &nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-18T18:13:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஏவப்பட்ட பாரிய இரு ஏவுகணைகள்.. தாக்குதலுக்கு முன் ட்ரம்ப் மேற்கொண்ட தொலைபேசி அழைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/trump-phone-call-before-iran-attack-on-uae-1787075642"></link>
            <id>https://tamilwin.com/article/trump-phone-call-before-iran-attack-on-uae-1787075642</id>
            <summary type="text">ஐக்கிய அரபு அமீரகத்தின் ஜனாதிபதி ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஆகியோருக்கு இடையே தொலைபேசி வழியிலான உரை...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஐக்கிய அரபு அமீரகத்தின் ஜனாதிபதி ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஆகியோருக்கு இடையே தொலைபேசி வழியிலான உரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.</p><p>ஈரானிலிருந்து ஐக்கிய அமீரகத்தை நோக்கி இரண்டு ஏவுகணைகள் ஏவப்பட முன் இந்த அழைப்பு மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><h2>ட்ரம்ப் விடுத்த எச்சரிக்கை&nbsp;</h2><p> </p><p>இந்த உரையாடலின் போது இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர நலன்களை மேம்படுத்துவதற்காக உறவுகளை வலுப்படுத்தும் வழிகள் குறித்து இரு தலைவர்களும் கலந்துரையாடியதாக குறிப்பிடப்படுகின்றது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e5cae606-4e8f-44fc-b79e-f5c31ae0cd5a/26-6a849e29de7d4.webp' /></p><p>மேலும், மத்திய கிழக்கு பிராந்தியத்தின் தற்போதைய கள நிலவரங்கள் குறித்தும் அண்மைக்கால மாற்றங்கள் குறித்தும் இருவரும் கருத்துக்களைப் பரிமாறிக்கொண்ட போதிலும், விவாதிக்கப்பட்ட பொருட்கள் குறித்து கூடுதல் விபரங்கள் எதனையும் செய்தி நிறுவனம் வெளியிடவில்லை.</p><p> ஹோர்முஸ் நீரிணையை நிர்வகிப்பது தொடர்பாக ஈரானுடன் ஒப்பந்தம் செய்ய முயன்ற அமீரகத்தின் அண்டை நாடான ஓமான் மீது குண்டுவீச்சு நடத்தப்படும் என ட்ரம்ப் அச்சுறுத்தல் விடுத்த மறுநாளே இந்தத் தொலைபேசி உரையாடல் இடம்பெற்றதாகவும் கூறப்படுகின்றது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-18T18:07:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yoosuf</name>
            </author>
            <title type="text"><![CDATA[கந்தளாய் – கித்துளுத்த பகுதியில் தீப்பிடித்து எரிந்த கனரக வாகனம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/tipper-truck-catches-fire-in-the-kanthalai-1787076182"></link>
            <id>https://tamilwin.com/article/tipper-truck-catches-fire-in-the-kanthalai-1787076182</id>
            <summary type="text">கல் ஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கித்துளுத்த பகுதியில் மணல் ஏற்றிச் சென்ற கனரக வாகனம் ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்து முற்றாக சேதமடைந்துள்ளது.

இந...</summary>
            <content type="html"><![CDATA[<p>கல் ஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கித்துளுத்த பகுதியில் மணல் ஏற்றிச் சென்ற கனரக வாகனம் ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்து முற்றாக சேதமடைந்துள்ளது.
</p><p>
இந்தச் சம்பவம் இன்று (18) பிற்பகல் சுமார் 4.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
</p><p>
கந்தளாய் பகுதியைச் சேர்ந்த குறித்த கனரக வாகனம், கந்தளாய் மகாவலி கங்கைப்
பகுதியில் இருந்து மணல் ஏற்றிக்கொண்டு கொழும்பு நோக்கிப் பயணித்துக்
கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.</p><h2>தீப்பரவல்</h2><p>
</p><p>
கித்துளுத்து தேவாலயத்திற்கு முன்பாக வாகனத்தை நிறுத்திய சாரதி
வழிபாட்டிற்காக தேவாலயத்திற்குச் சென்றிருந்த சந்தர்ப்பத்திலேயே, கனரக வாகனத்தில் திடீரென தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக கல் ஓயா பொலிஸார் தெரிவித்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bfa6a3a7-a1c6-4acd-a1af-3df2962b3c27/26-6a849e590940e.webp' /></p><p>
</p><p>
இதனையடுத்து, அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் ஒன்றிணைந்து தீயை
கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
எனினும், தீப்பரவலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.

சம்பவம் தொடர்பில் கல் ஓயா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து
வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-18T18:03:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[விருது பெற்ற பாடலாசிரியரும் நூலாசிரியருமான ரம்புகன சித்தார்த்த தேரர் காலமானார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/venerable-rambukana-siddhartha-thero-passes-away-1787075524"></link>
            <id>https://jvpnews.com/article/venerable-rambukana-siddhartha-thero-passes-away-1787075524</id>
            <summary type="text">விருது பெற்ற பாடலாசிரியரும் நூலாசிரியருமான வணக்கத்திற்குரிய ரம்புகன சித்தார்த்த தேரர் தனது 76ஆவது வயதில் காலமானார்.

சுகவீனம் காரணமாக வைத்தியசாலையில...</summary>
            <content type="html"><![CDATA[<p>விருது பெற்ற பாடலாசிரியரும் நூலாசிரியருமான வணக்கத்திற்குரிய ரம்புகன சித்தார்த்த தேரர் தனது 76ஆவது வயதில் காலமானார்.</p><p></p><p>

சுகவீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே அவர் இயற்கை எய்தியுள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c71f8f54-e196-43e0-b73c-458276f755ba/26-6a849bc610cee.webp' /></p><p>இலக்கியம் மற்றும் இசைத்துறைகளில் தனது ஆக்கங்கள் மூலம் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கிய ரம்புகன சித்தார்த்த தேரரின் மறைவு, கலை மற்றும் இலக்கியத் துறையினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-18T17:52:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஐக்கிய அமீரகத்தை நோக்கி ஈரான் ஏவுகணை தாக்குதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/two-missiles-launched-from-iran-uae-1787074317"></link>
            <id>https://tamilwin.com/article/two-missiles-launched-from-iran-uae-1787074317</id>
            <summary type="text">அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகள் முடிவுக்கு வந்துள்ள நிலையில் ஈரானிலிருந்து ஐக்கிய அமீரகத்தை நோக்கி இரண்டு ஏவுகணைகள் ஏவப்பட்டுள்ளன.ஈரான் தனது தாக்குத...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகள் முடிவுக்கு வந்துள்ள நிலையில் ஈரானிலிருந்து ஐக்கிய அமீரகத்தை நோக்கி இரண்டு ஏவுகணைகள் ஏவப்பட்டுள்ளன.</p><p>ஈரான் தனது தாக்குதல் சார்ந்த இராணுவக் கோட்பாட்டை செயல்படுத்த தொடங்கக்கூடும் என தகவல் வெளியாகியுள்ளது.</p><h2>ஏவுகணை தாக்குதல்</h2><p>இரண்டு பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஐக்கிய அரபு அமீரகத்தின் வான் பாதுகாப்புப் படைகள் கண்டறிந்துள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7d56ce57-65b6-4c81-9579-69f9b4eed968/26-6a849b76b5fcc.webp' /></p><p> இதில் முதலாவது நாட்டின் கடல் எல்லைக்கு வெளியே விழுந்த நிலையில், இரண்டாவது கடல் எல்லைக்குள் விழுந்துள்ளது என்று அமீரக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-18T17:51:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[UAE-க்கு ஏவுகணை அச்சுறுத்தல் - பாதுகாப்பான இடத்தை தேடுமாறு மக்களுக்கு எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/uae-missile-threat-alert-ask-people-seeks-shelter-1787073568"></link>
            <id>https://news.lankasri.com/article/uae-missile-threat-alert-ask-people-seeks-shelter-1787073568</id>
            <summary type="text">UAE issues missile threat alert: ஐக்கிய அரபு அமீரகம் (UAE) தனது குடிமக்களுக்கும் அங்கு வசிக்கும் மக்களுக்கும் அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது.

பாதுகா...</summary>
            <content type="html"><![CDATA[<p>UAE issues missile threat alert: ஐக்கிய அரபு அமீரகம் (UAE) தனது குடிமக்களுக்கும் அங்கு வசிக்கும் மக்களுக்கும் அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது.
</p><h2>
பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் புக எச்சரிக்கை</h2><p>நாட்டின் தேசிய அவசரநிலை, பேரிடர் மேலாண்மை ஆணையம் (NCEMA) வெளியிட்ட அறிவிப்பில், UAE-க்கு எதிராக ஏவுகணை தாக்குதல் அபாயம் இருப்பதாகவும், மக்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் புக வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/69b10a2a-72a2-4851-8549-6ebe74530768/26-6a849421d5128.webp' /></p><p>அமீரகத்தின் வான்வழி பாதுகாப்பு அமைப்புகள், நாட்டை நோக்கி ஏவுகணை தாக்குதல் முயற்சி கண்டறிந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p>

“அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை மட்டும் பின்பற்றுங்கள், பாதுகாப்பான இடங்களில் தங்குங்கள்” என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
</p><h2>
புரிந்துணர்வு ஒப்பந்தம்</h2><p>இந்த எச்சரிக்கை, ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே மத்திய கிழக்குப் போரினை நிறுத்தும் நோக்கில் கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) காலாவதியான ஒரு நாளுக்குப் பிறகு வெளியிடப்பட்டுள்ளது.
</p><p></p><p>சமீபத்தில் ஈரான், அபுதாபி தேசிய எண்ணெய் நிறுவனத்தின் (ADNOC) கப்பலை ஹார்முஸ் நீரிணையில் தாக்கியதாக UAE குற்றம் சாட்டியுள்ளது.</p><p>

முன்னதாக, பிப்ரவரி மாதம் தொடங்கிய மத்திய கிழக்கு போரில், UAE மீது ஆயிரக்கணக்கான ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் தாக்குதல் நடத்தப்பட்டன. ஆனால், ஜூன் மாதத்தில் அமெரிக்கா-ஈரான் இடையே ஒப்பந்தம் கையெழுத்தான பின் தாக்குதல்கள் குறைந்திருந்தன. தற்போது அந்த ஒப்பந்தம் முடிவடைந்ததால், மீண்டும் அச்சுறுத்தல்கள் அதிகரித்துள்ளன.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">UAE air defence systems detected a missile threat targeting the county. Please remain in a safe location and follow warnings and updates issued through official channels. <a href="https://t.co/aobFA9WRdw">pic.twitter.com/aobFA9WRdw</a></p>&mdash; NCEMA UAE (@NCEMAUAE) <a href="https://x.com/NCEMAUAE/status/2089728318149193837?ref_src=twsrc%5Etfw">August 18, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>
</p><h2>மக்களிடையே பதற்றம்</h2><p>அமீரக உள்துறை அமைச்சகம், “தற்போதைய சூழ்நிலை காரணமாக மக்கள் அருகிலுள்ள பாதுகாப்பான கட்டிடங்களில் தஞ்சம் புக வேண்டும்” என அறிவுறுத்தியுள்ளது.</p><p>
இந்த எச்சரிக்கை, UAE மக்களிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிகாரிகள் தொடர்ந்து நிலைமையை கண்காணித்து வருவதாகவும், மக்கள் அமைதியாகவும் எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளனர்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-18T17:16:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[பொலன்னறுவையில் வேன் திருட்டு முறியடிப்பு ; சந்தேகநபர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/van-theft-foiled-in-polonnaruwa-suspect-arrested-1787073103"></link>
            <id>https://jvpnews.com/article/van-theft-foiled-in-polonnaruwa-suspect-arrested-1787073103</id>
            <summary type="text">பொலன்னறுவை பகுதியில் திருடப்பட்ட வேன் ஒன்றை அதிகாலை வேளையில் அங்கிருந்து வெளியே கொண்டு செல்ல முயன்ற இருவரின் முயற்சியை பொலிஸார் முறியடித்துள்ளனர்.4 மண...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொலன்னறுவை பகுதியில் திருடப்பட்ட வேன் ஒன்றை அதிகாலை வேளையில் அங்கிருந்து வெளியே கொண்டு செல்ல முயன்ற இருவரின் முயற்சியை பொலிஸார் முறியடித்துள்ளனர்.</p><h3>4 மணி நேர துரத்தல்</h3><p>

கிரித்தலே விகாரைக்கு அருகில் இரவு சுமார் 10 மணியளவில் சந்தேகத்திற்கிடமான வகையில் வேன் ஒன்று நிறுத்தப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலையடுத்து பொலிஸார் சம்பவ இடத்திற்குச் சென்றுள்ளனர்.
</p><p>
எனினும், பொலிஸார் அங்கு செல்வதற்கு முன்னரே சந்தேகநபர்கள் வேனை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b4732525-870c-4a40-bead-c91a502b74fe/26-6a849251636bc.webp' /></p><p>வேனில் எரிபொருள் குறைவாக இருந்ததாகவும், இதனால் சந்தேகநபர்கள் எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றுக்குச் செல்லக்கூடும் எனவும் பொலிஸார் எதிர்பார்த்துள்ளனர்.
</p><p>
இதையடுத்து, ஜெயந்திபுர, மின்னேரியா மற்றும் தியபெதும பகுதிகளில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு பொலிஸார் தகவல் வழங்கியுள்ளனர்.
</p><p>
இந்நிலையில், தியபெதும பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் குறித்த வேனுக்கு எரிபொருள் நிரப்பப்பட்டதாக தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, பொலிஸார் வேனை பின்தொடர்ந்து சென்றுள்ளனர்.</p><p>அதிகாலை 4.30 மணி வரை கிரித்தலே மற்றும் தியபெதும பகுதிகளில் உள்ள கிராமப்புற வீதிகளில் பொலிஸார் வேனை தொடர்ந்து சென்றபோதிலும், அதனை உடனடியாக நிறுத்த முடியவில்லை.</p><p>

பின்னர், பகமூன பகுதியில் அமைக்கப்பட்டிருந்த வீதித் தடையை நோக்கி வேன் சென்றபோது, பொலிஸார் அதனை தடுத்து நிறுத்தியுள்ளனர்.
</p><p>
இதன்போது, வேனில் இருந்த இரு சந்தேகநபர்களும் வாகனத்தை கைவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
</p><p>
இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையில், பிலியந்தலை பகுதியைச் சேர்ந்ததாகக் கூறப்படும் சந்தேகநபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>

தப்பியோடிய மற்றைய சந்தேகநபரை கைது செய்வதற்கான தேடுதல் நடவடிக்கைகளும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-18T17:11:59+00:00</updated>
        </entry>
    </feed>
