<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-08-01T15:52:19+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[மஹர சிறைச்சாலை பதற்றம் ; ஒருவர் உயிரிழப்பு ; அடுத்தடுத்து கேட்ட துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/one-dies-in-mahara-prison-unrest-1785598446"></link>
            <id>https://jvpnews.com/article/one-dies-in-mahara-prison-unrest-1785598446</id>
            <summary type="text">மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்ற நிலைமையின் போது காயமடைந்தவர்களில் ஒருவர் உயிரிழந்தார். 

மேலும் காயமடைந்த 6 பேர் சிகிச்சைகளுக்காக ராகம வைத்தியசாலைய...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்ற நிலைமையின் போது காயமடைந்தவர்களில் ஒருவர் உயிரிழந்தார். </p><p style="text-align: justify; ">

மேலும் காயமடைந்த 6 பேர் சிகிச்சைகளுக்காக ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p><p style="text-align: justify;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b119da44-7ae0-4fad-888d-bc53f713d107/26-6a6e11f0407f8.webp' /></p><h2 style="text-align: justify;">பதற்ற நிலை</h2><p style="text-align: justify;"> 

அதேநேரம் மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்ற நிலையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p style="text-align: justify;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2893631e-0e8b-41d8-960f-a92c17947bb5/26-6a6e15f1bc2f2.webp' /></p><p style="text-align: justify;"> </p><p style="text-align: justify;">

இன்று (01) பிற்பகல் கைதிகளுக்கும் சிறைச்சாலை அதிகாரிகளுக்கும் இடையில் ஏற்பட்ட முறுகல் நிலை காரணமாக மஹர சிறைச்சாலைக்குள் அமைதியின்மை ஏற்பட்டது.</p><p style="text-align: justify;"> 

இந்த பதற்றநிலை காரணமாக 7 பேர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அவர்கள் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;">

நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர மேலதிக சிறைச்சாலை அதிகாரிகள் அழைக்கப்பட்டுள்ளதுடன், சிறைச்சாலைக்கு வெளியே பாதுகாப்புக்காக பொலிஸார் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. </p><p style="text-align: justify;">

எவ்வாறாயினும், கைதிகள், சிறைச்சாலையின் பிரதான சிறை அதிகாரியின் அலுவலகம் மற்றும் ஒழுக்காற்றுப் பிரிவுக்கு தீ வைத்துள்ளதாகவும், தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரத் தேவையான நடவடிக்கைகள் தற்போது எடுக்கப்பட்டுள்ளதாகவும் சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.&nbsp;</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;">இன்று பிற்பகல் சிறைக் கைதிகளைப் பார்ப்பதற்காக உறவினர்கள் மஹர சிறைச்சாலைக்கு வந்திருந்த போதிலும், அவர்களுக்கு சிறைச்சாலைக்குள் செல்ல அனுமதி வழங்கப்படவில்லை. </p><p style="text-align: justify;">

அதன்படி, உறவினர்கள் தற்போது மஹர சிறைச்சாலைக்கு முன்னால் தங்கியுள்ளதாகக் குறிப்பிடப்படுகின்றது. </p><p style="text-align: justify;">

எவ்வாறாயினும், அங்கு தங்கியிருக்கும் உறவினர்கள் ஊடகங்களுக்குத் தெரிவிக்கையில், சிறைச்சாலைக்குள் இருந்து பல துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்கள் கேட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-01T15:34:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thirumal</name>
            </author>
            <title type="text"><![CDATA[பலாலி விமான நிலையத்தின் அபிவிருத்திப் பணிகளை நேரில் ஆய்வு செய்த அமைச்சர் சந்திரசேகரன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/chandrasekaran-inspected-of-palali-airport-person-1785598007"></link>
            <id>https://tamilwin.com/article/chandrasekaran-inspected-of-palali-airport-person-1785598007</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் பாரிய
அபிவிருத்திப் பணிகளை கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர்
இராமலிங்கம்...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் பாரிய
அபிவிருத்திப் பணிகளை கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர்
இராமலிங்கம் சந்திரசேகரன் நேரில் பார்வையிட்டு, பணிகளின் முன்னேற்றம் தொடர்பாக
துறைசார் அதிகாரிகளுடன் விரிவான கலந்துரையாடலை மேற்கொண்டார்.
</p><p>
வட மாகாணத்தின் விமானப் போக்குவரத்து மற்றும் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய
பங்காற்றும் பலாலி விமான நிலையத்தை சர்வதேச தரத்திற்கு ஏற்ப மேம்படுத்தும்
நோக்கில் முன்னெடுக்கப்பட்டு வரும் கட்டுமானப் பணிகளின் தற்போதைய நிலை குறித்து
அமைச்சர் நேரடியாக ஆய்வு மேற்கொண்டார்.</p><h2>பலாலி விமான நிலையம்</h2><p>

இதன்போது, விமான நிலையத்தின் விமான ஓடுபாதையை நவீன தரத்திற்கு ஏற்ப
விரிவுபடுத்தும் பணிகள், பயணிகள் புறப்பாடு மற்றும் வருகைப் பகுதிகளை
மேம்படுத்தும் திட்டங்கள், புதிய கட்டிட வசதிகள், பாதுகாப்பு மற்றும் சேவை
வசதிகளை வலுப்படுத்தும் நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு அபிவிருத்தித்
திட்டங்கள் தொடர்பில் அதிகாரிகளிடமிருந்து விரிவான விளக்கங்களை
பெற்றுக்கொண்டார்.</p><p>

அதேவேளை, திட்டமிட்ட காலக்கெடுவிற்குள் பணிகளை நிறைவு செய்வதன் அவசியத்தையும்,
எதிர்காலத்தில் அதிகளவிலான உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான சேவைகளை
கையாளக்கூடிய வகையில் அனைத்து வசதிகளும் உயர்தரத்தில் அமைக்கப்பட வேண்டியதன்
முக்கியத்துவத்தையும் அமைச்சர் வலியுறுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1a74e7d9-30ed-42ae-bb13-492698ae9387/26-6a6e11f35d108.webp' /></p><p>
</p><p>
பலாலி விமான நிலையத்தை விரிவுபடுத்தி, வடக்கு மக்களுக்கும் வெளிநாடுகளில்
வாழும் இலங்கையர்களுக்கும் சிறந்த விமானப் போக்குவரத்து சேவையை வழங்க வேண்டும்
என்ற கோரிக்கை நீண்டகாலமாக முன்வைக்கப்பட்டு வந்தது.</p><p>அந்தக் கோரிக்கைகளை
கருத்திற்கொண்டு, புதிய அரசாங்கத்தின் முன்னுரிமை அபிவிருத்தித் திட்டங்களின்
ஒரு பகுதியாக விமான நிலையத்தின் விரிவாக்கப் பணிகள் தற்போது
துரிதப்படுத்தப்பட்டு வருகின்றன.</p><p>

இந்த அபிவிருத்தித் திட்டங்கள் நிறைவடைந்ததன் பின்னர், வட மாகாணத்தின்
சுற்றுலாத்துறை, முதலீட்டு வாய்ப்புகள், வர்த்தக நடவடிக்கைகள் மற்றும்
பொருளாதார வளர்ச்சி மேலும் வலுப்பெறுவதுடன், உள்நாட்டு மற்றும் சர்வதேச
பயணிகளுக்கான சேவைகளும் குறிப்பிடத்தக்க அளவில் மேம்படும் என
எதிர்பார்க்கப்படுகிறது.</p>]]></content>
            <updated>2026-08-01T15:34:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வாழ்வதற்கு விருப்பமில்லை: யாழில் விபரீத முடிவெடுத்த இரட்டை சகோதரிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/twins-jaffna-bizarre-decision-not-want-to-live-1785597855"></link>
            <id>https://ibctamil.com/article/twins-jaffna-bizarre-decision-not-want-to-live-1785597855</id>
            <summary type="text">&amp;nbsp;யாழில் 18 வயதுடைய இரட்டைச் சகோதரிகள் இருவர் தவறான முடிவெடுத்து தமக்கு தாமே
தீ மூட்டிய நிலையில், தீ காயங்களுக்கு உள்ளாகியதால் யாழ்ப்பாணம் போதனா...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;யாழில் 18 வயதுடைய இரட்டைச் சகோதரிகள் இருவர் தவறான முடிவெடுத்து தமக்கு தாமே
தீ மூட்டிய நிலையில், தீ காயங்களுக்கு உள்ளாகியதால் யாழ்ப்பாணம் போதனா
வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
</p><p>
சுன்னாகம் காவல்துறை பிரிவிற்குட்பட்ட புன்னாலைக்கட்டுவன் பகுதியில் இந்த சம்பவம்
இன்றையதினம்(01) இடம்பெற்றுள்ளது.</p><p>&nbsp;வாழ்வதற்கு விருப்பமில்லாத காரணத்தால் இவ்வாறு செய்ததாக அவர்கள் வாக்குமூலம்
வழங்கியதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
சம்பவம் தொடர்பாக சுன்னாகம் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-01T15:33:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் தவறான முடிவெடுத்து தமக்கு தாமே தீ மூட்டிய இரட்டை சகோதரிகள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/twin-sisters-in-jaffna-made-a-rash-decision-fire-1785597044"></link>
            <id>https://tamilwin.com/article/twin-sisters-in-jaffna-made-a-rash-decision-fire-1785597044</id>
            <summary type="text">யாழில் இரட்டைச் சகோதரிகள் இருவர் தமக்கு தாமே
தீ மூட்டி தவறான முடிவெடுக்க முயற்சித்துள்ளனர்.இதனையடுத்து தீ காயங்களுக்கு உள்ளான இருவரும் யாழ்ப்பாணம் போ...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழில் இரட்டைச் சகோதரிகள் இருவர் தமக்கு தாமே
தீ மூட்டி தவறான முடிவெடுக்க முயற்சித்துள்ளனர்.</p><p>இதனையடுத்து தீ காயங்களுக்கு உள்ளான இருவரும் யாழ்ப்பாணம் போதனா
வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
</p><p>
சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புன்னாலைக்கட்டுவன் பகுதியில் இந்த சம்பவம்
இன்றையதினம்(1.8.2026) இடம்பெற்றுள்ளது.</p><p></p><h2>பொலிஸார் விசாரணை</h2><p>

வாழ்வதற்கு விருப்பமில்லாத காரணத்தால் இவ்வாறு செய்ததாக அவர்கள் வாக்குமூலம்
வழங்கியதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/afc8bec8-abe2-4ca5-81ba-27149829540a/26-6a6e11518525a.webp' /></p><p>
</p><p>இது குறித்து மானிப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-01T15:31:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[முன் ஜென்ம பாவத்தினால் மரண தண்டனைக்கு உள்ளான பூஜித]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/death-sins-for-past-sins-pujitha-1785597019"></link>
            <id>https://tamilwin.com/article/death-sins-for-past-sins-pujitha-1785597019</id>
            <summary type="text">எந்தவொரு தவறும் செய்யாத போதும், முன்ஜென்மத்தில் செய்த தவறுக்காக தற்போது தண்டடை கிடைத்துள்ளதாக முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளா...</summary>
            <content type="html"><![CDATA[<p>எந்தவொரு தவறும் செய்யாத போதும், முன்ஜென்மத்தில் செய்த தவறுக்காக தற்போது தண்டடை கிடைத்துள்ளதாக முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். </p><p>

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கில் நேற்று மரண தண்டனை விதிக்கப்பட்டதன் பின்னர், நிரந்த மேல் நீதிமன்றத்தில் நீதிமன்றத்தில் அவரின் கருத்தினை தெரிவிக்க வாய்ப்பு வழங்கப்பட்ட போது இதனைத் தெரிவித்துள்ளார். </p><p> 

திட்டமிட்டு எந்தவொரு காரியத்தையும் செய்யவில்லை. பொலிஸ் சேவையில் இணைந்த நாளிலிருந்து பொதுமக்களின் பாதுகாப்புக்காகவே அர்ப்பணிப்புடன் செயற்பட்டேன்.</p><p> </p><h2><b>மிகுந்த வேதனை</b></h2><p>பல அதிகாரிகளைக் கொண்ட ஒரு குழுவுடன் இணைந்து பணியாற்றியதாக குறிப்பிட்டார். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7cf257dc-fceb-49ff-b998-105b858856a1/26-6a6e10755c776.webp' /></p><p>பொறுப்புகூற வேண்டிய சிலரை விடுவித்தமைக்கான அந்த சந்தர்ப்பங்களின் மிகுந்த வேதனை அடைந்ததாகவும் தெரிவித்துள்ளார். </p><p>

அடிப்படை உரிமை வழக்குகள் மற்றும் சிவில் வழக்குகள் மூலம் எனக்கும் மனைவிக்கும் எனது பிள்ளைகளுக்கும் மிகப்பெரிய மன அழுத்தம் ஏற்பட்டுள்ளது. 
</p><p>
நான் எந்தவொரு தனிநபருக்கோ அல்லது பொலிஸ் அதிகாரிக்கோ ஒருபோதும் எந்தவிதமான அநீதியையும் இழைக்கவில்லை.</p><h3><b> முன்ஜென்ம வினை</b></h3><p>நான் பின்பற்றும் பௌத்த தர்மத்தின்படி இதனை எனது முன்ஜென்ம வினையின் பயன் என்றே கருதுகிறேன்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2b46190b-cdd3-47dc-9f31-e56d57a659be/26-6a6e107655007.webp' /></p><p>வழக்கு தீர்ப்பினை பரிசீலிக்குமாறு தாழ்மையாக கேட்டுக்கொள்கிறேன். பொலிஸ் மா அதிபராகச் சேவையாற்றிய என்னை மட்டும் இவ்வாறு நடத்துவது குறித்து மனிதாபிமான அடிப்படையில் பரிசீலிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்" என நீதிமன்றத்தில் பூஜித் ஜயசுந்தர தெரிவித்தார்.</p>]]></content>
            <updated>2026-08-01T15:28:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[32 நிமிடத்திற்கு பின் அப்படி தோன்றுகிறது.. த்ரிஷாவுக்கு இப்படி ஒரு பிரச்சனையா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/trisha-post-on-thinking-at-social-gatherings-1785597084"></link>
            <id>https://cineulagam.com/article/trisha-post-on-thinking-at-social-gatherings-1785597084</id>
            <summary type="text">நடிகை த்ரிஷா தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோயினாக இருந்து வருபவர். 43 வயதாகும் அவர் தற்போதும் பிசியாக படங்களை நடத்து வருகிறார்.மேலும் அவர் நடிகரும் முதல...</summary>
            <content type="html"><![CDATA[<p>நடிகை த்ரிஷா தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோயினாக இருந்து வருபவர். 43 வயதாகும் அவர் தற்போதும் பிசியாக படங்களை நடத்து வருகிறார்.</p><p>மேலும் அவர் நடிகரும் முதலமைச்சருமான விஜய்யுடன் நிகழ்ச்சிகளில் ஒன்றாக கலந்து கொள்வதால் சமீப காலமாக நெட்டிசன்களிடம் விமர்சனத்தையும் சந்தித்து வருகிறார்.
</p><p>சமீபத்தில் த்ரிஷா விஜய்யின் பிறந்தநாள் அன்று வெளியிட்ட கேக் வெட்டும் ஃபோட்டோவும் வைரல் ஆகி இருந்தது. த்ரிஷா தற்போது இன்ஸ்டாவில் போட்ட ஒரு பதிவு இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2af8a704-ba2b-47f1-aed4-ccf099d600e4/26-6a6e0c9ea0794.webp' /></p><p>
</p><h2>இப்படி ஒரு பிரச்சனையா </h2><p>
த்ரிஷா தான் எந்த ஒரு நிகழ்ச்சிக்கு போனாலும் முதல் 32 நிமிடங்கள் ஜாலியாக இருப்பதாகவும் அதற்குப் பிறகு எப்போது வீட்டுக்கு போவோம் என நினைக்கத் தொடங்கி விடுவதாகவும் கூறியிருக்கிறார்.
</p><p>த்ரிஷாவுக்கு இப்படி ஒரு பிரச்சனையை என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-01T15:19:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[2009 - 2026 வரை ஈழத்தமிழர்கள் உணராமல் போன ஆபத்தின் பக்கங்கள்..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/danger-eelam-tamils-did-not-realize-from-2009-2026-1785596906"></link>
            <id>https://tamilwin.com/article/danger-eelam-tamils-did-not-realize-from-2009-2026-1785596906</id>
            <summary type="text">முள்ளிவாய்க்கால் இன அழிப்பின் பின்னர் தமிழர்களிடையே ஒரு பாரிய தலைமைத்துவ வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாகவும், இதனை தென்னிலங்கை சக்திகள் தங்களுக்குச் சாதகமாகப...</summary>
            <content type="html"><![CDATA[<p>முள்ளிவாய்க்கால் இன அழிப்பின் பின்னர் தமிழர்களிடையே ஒரு பாரிய தலைமைத்துவ வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாகவும், இதனை தென்னிலங்கை சக்திகள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி வருவதாகவும் யாழ் மறைமாவட்ட கத்தோலிக்க ஊடக இயக்குநரான அருட்தந்தை அன்டன் ஸ்டீபன் குறிப்பிட்டார்.</p><p>

மேலும், சர்வதேசம் தமிழர்களுக்கான நீதியைப் பெற்றுத்தரும் என்பதில் நம்பிக்கை கொள்ள முடியாது என்றும், அவர்கள் தங்கள் சொந்த லாபத்திற்காகவே இவ்வாறான விடயங்களில் ஈடுபடுவதாகவும் தெரிவித்தார்.</p><p>

தமிழ் சமூகம் தனது பிழைகளை உணர்ந்து, ஒற்றுமையுடன் தங்களை சுய மீளாய்வு செய்து கொள்ள வேண்டும்.

தற்போதைய அரசியல் சூழலில், முறையான மற்றும் இதய சுத்தியுடன் செயல்படக்கூடிய தலைமைத்துவங்கள் இல்லாமையே இந்த வெற்றிடத்திற்கு முக்கிய காரணமாக அமைகின்றது.
</p><p>
வடக்கு, கிழக்கு மற்றும் புலம்பெயர் தமிழர்கள் என அனைவரும் தங்களின் தனிப்பட்ட சுயநலங்களைக் கைவிட்டு, ஒரு பொதுவான இலக்கை நோக்கி ஓரணியில் திரள வேண்டும்.
</p><p>
தங்களை தாங்களே வழிநடத்தக்கூடிய, பொதுநலனுக்காக அர்ப்பணிப்புடன் செயல்படும் புதிய தலைமைகளை உருவாக்க வேண்டும். </p><p>வெளியில் இருந்து ஒரு தீர்வு வரும் என்று காத்திருக்காமல், நாமே அந்த வெற்றிடத்தை நிரப்ப முயற்சிக்க வேண்டும் என குறிப்பிட்டார்.</p><p>

இந்த விடயங்களை விரிவாக ஆராய்கின்றது லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சி..&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/fenqfCMRWy8" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-01T15:14:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீட் போராட்ட சர்ச்சை: மாணவர்களை மன்னித்த பிரதமர் மோடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/i-have-forgiven-the-youths-who-scolded-me-pm-modi-1785596478"></link>
            <id>https://ibctamilnadu.com/article/i-have-forgiven-the-youths-who-scolded-me-pm-modi-1785596478</id>
            <summary type="text">நீட் விவகாரம் தொடர்பாக வெளியிட்ட வீடியோவில், டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற போராட்டத்தின் போது தன்னையும், தனது மறைந்த தாயாரையும் அவதூறாக பேசிய மாணவர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீட் விவகாரம் தொடர்பாக வெளியிட்ட வீடியோவில், டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற போராட்டத்தின் போது தன்னையும், தனது மறைந்த தாயாரையும் அவதூறாக பேசிய மாணவர்களை மன்னிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
</p><h2>மாணவர்களுக்கு ஆதரவாக பிரதமர் மோடி</h2><p>
நொய்டாவைச் சேர்ந்த பெண் ஒருவர் பிரதமர் மற்றும் அவரது தாயார் குறித்து அவதூறாக பேசியதாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்திருந்த நிலையில், பிரதமர் மோடி தனது நிலைப்பாட்டை தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/543fecdc-bf80-4312-8128-e3f468fcdf19/26-6a6e0c4bb9338.webp' /></p><p>

மாணவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுப்பதை விட, அவர்களை நல்வழிப்படுத்தி, தவறுகளில் இருந்து கற்றுக்கொள்ள வாய்ப்பு வழங்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.</p><p> இளைஞர்கள் எதிர்காலத்தை உருவாக்குவதில் கவனம் செலுத்த வேண்டும் என்றும், அவர்களின் முன்னேற்றமே தனது கனவு என்றும் பிரதமர் கூறினார்.
</p><p>
ஜந்தர் மந்தர் போராட்டத்தில் சில இளைஞர்கள் பயன்படுத்திய வார்த்தைகள் நாகரிக சமூகத்திற்கு ஏற்றவை அல்ல என குறிப்பிட்ட பிரதமர், இளமைப் பருவத்தில் தவறுகள் ஏற்படுவது இயல்பு என்றும், அவர்களுக்கு திருந்துவதற்கான வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.
</p><p>
மேலும், வழக்குகள் பதிவு செய்து நீதிமன்றங்களுக்கு அழைத்துச் செல்வது மட்டுமே தீர்வாகாது என்றும், இளைஞர்களுக்கு வழிகாட்டி அவர்களை நாட்டின் வளர்ச்சியில் பங்கெடுக்கச் செய்வதே முக்கியம் என்றும் பிரதமர் மோடி கூறினார்.</p>]]></content>
            <updated>2026-08-01T15:10:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெலிக்கடை சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார் பூஜித]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/pujitha-was-imprisoned-in-welikada-prison-1785595404"></link>
            <id>https://ibctamil.com/article/pujitha-was-imprisoned-in-welikada-prison-1785595404</id>
            <summary type="text">&amp;nbsp;ஈஸ்டர் ஞாயிறன்று நிகழ்ந்த பயங்கரவாதத் தாக்குதல் குறித்த உளவுத் தகவல் கிடைத்திருந்தபோதிலும், அதனைத் தடுக்கத் தவறியதற்காக குற்றவாளி என இனம்காணப்பட...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;ஈஸ்டர் ஞாயிறன்று நிகழ்ந்த பயங்கரவாதத் தாக்குதல் குறித்த உளவுத் தகவல் கிடைத்திருந்தபோதிலும், அதனைத் தடுக்கத் தவறியதற்காக குற்றவாளி என இனம்காணப்பட்டு மரண்தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் காவல்துறை மா அதிபர் பூஜித ஜெயசுந்தர வெலிக்கடை சிறையில் அடைக்கப்பட்டார்.</p><p>இவ்வாறு (01) வெலிக்கடை சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் காவல்துறை மா அதிபரை அவரது வழக்கறிஞர் றொசான் தெகிவள சந்தித்துள்ளார்.</p><h2>உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு&nbsp;</h2><p>இதேவேளை மரண தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் காவல்துறை மா அதிபர் பூஜித ஜெயசுந்தரவுக்காக முன்னிலையான வழக்கறிஞர் றொசான் தெகிவள, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்போவதாகக் கூறியுள்ளார்.</p><p>
</p><p>


</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9656df21-9f89-4d43-aaf6-8943addff404/26-6a6e0b7670fec.webp' /></p><p>அதன்படி, அடுத்த வாரம் மேல்முறையீடு தாக்கல் செய்யப்படும் என்று வழக்கறிஞர் தெரிவித்தார்.</p><p></p><h2>பூஜித ஜெயசுந்தரவின் உடல்நிலை&nbsp;</h2><p>

மரண தண்டனை விதிக்கப்பட்ட நாளிலிருந்து 28 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட மேல்முறையீடு தாக்கல் செய்யப்பட வேண்டும் என்பதால், தேவையான நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்படும் என்று வழக்கறிஞர் கூறினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/53d20657-50dc-429e-ab69-ed9e33ce5b62/26-6a6e0b77284c6.webp' /></p><p>
</p><p>
பூஜித ஜெயசுந்தரவின் உடல்நிலை குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, அவர் தற்போது நல்ல உடல்நிலையில் இருப்பதாக வழக்கறிஞர் பதிலளித்தார்.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-01T15:07:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[உயர்தர மாணவர்களுக்கான மேலதிக வகுப்புகளுக்கு தடை! வெளியான அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ban-on-extra-classes-for-senior-students-1785595169"></link>
            <id>https://tamilwin.com/article/ban-on-extra-classes-for-senior-students-1785595169</id>
            <summary type="text">2026 ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை தொடர்பான மேலதிக வகுப்புகள், பாட ரீதியான விரிவுரைகள், கருத்தரங்குகள் மற்றும் செயலமர்வுகளை நடத...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026 ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை தொடர்பான மேலதிக வகுப்புகள், பாட ரீதியான விரிவுரைகள், கருத்தரங்குகள் மற்றும் செயலமர்வுகளை நடத்துவது ஓகஸ்ட் மாதம் 4 ஆம் திகதி நள்ளிரவுடன் நிறைவு செய்யப்பட வேண்டும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.</p><p>

இதற்கமைவாக, குறித்த பரீட்சை நடவடிக்கைகள் நிறைவடையும் வரை இந்தத் தடை நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p> 

இக்காலப்பகுதியில் உயர்தரப் பரீட்சைக்கான அனுமான வினாக்களை உள்ளடக்கிய மாதிரி வினாத்தாள்களை அச்சிடுதல் மற்றும் அவற்றை விநியோகித்தல் என்பனவற்றை மேற்கொள்ள முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>முற்றாகத் தடை</h2><p> 

மேலும், பரீட்சை வினாத்தாள்களுக்கான வினாக்கள் வழங்கப்படும் அல்லது அதற்கு நிகரான வினாக்கள் வழங்கப்படும் என சுவரொட்டிகள், பதாதைகள், துண்டுப் பிரசுரங்கள் மூலம் மின்னணு அல்லது அச்சு ஊடகங்களில் விளம்பரப்படுத்துவது அல்லது அவ்வாறான பொருட்களைத் தம்வசம் வைத்திருப்பது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/965b9841-ac1d-4a4f-bdd5-96978f56f6dc/26-6a6e0b3b0cf28.webp' /></p><p> </p><p>

2026 ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை 2026 ஓகஸ்ட் 10 ஆம் திகதி முதல் செப்டெம்பர் 05 ஆம் திகதி வரை 2532 பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-01T15:06:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் பாரிய அபிவிருத்திப் பணி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/development-work-at-jaffna-international-airport-1785591033"></link>
            <id>https://jvpnews.com/article/development-work-at-jaffna-international-airport-1785591033</id>
            <summary type="text">&amp;nbsp; யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் பாரிய அபிவிருத்திப் பணிகளை கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலி...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் பாரிய அபிவிருத்திப் பணிகளை கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் நேரில் பார்வையிட்டுள்ளார்.
</p><p>

பலாலி விமான நிலையத்தை சர்வதேச தரத்திற்கு ஏற்ப மேம்படுத்தும் நோக்கில் கட்டுமானப் பணிகள் முன்னெடுக்கபப்ட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a217ed06-55ed-4106-a300-588b721533b8/26-6a6df4fb55783.webp' /></p><h2>&nbsp;சிறந்த விமானப் போக்குவரத்து சேவை</h2><p>
</p><p>
இதன்போது, பயணிகள் புறப்பாடு மற்றும் வருகைப் பகுதிகளை மேம்படுத்தும் திட்டங்கள், புதிய கட்டிட வசதிகள், பாதுகாப்பு மற்றும் சேவை வசதிகளை வலுப்படுத்தும் நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் அதிகாரிகளிடமிருந்து விரிவான விளக்கங்களையும் அமைச்சர் பெற்றுக்கொண்டார்.



</p><p> திட்டமிட்ட காலக்கெடுவிற்குள் பணிகளை நிறைவு செய்வதன் அவசியத்தையும், அமைச்சர் வலியுறுத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p></p><p>
</p><p>


பலாலி விமான நிலையத்தை விரிவுபடுத்தி, வடக்கு மக்களுக்கும் வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களுக்கும் சிறந்த விமானப் போக்குவரத்து சேவையை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாக முன்வைக்கப்பட்டு வந்தது. </p><p>



அதற்கமைய அரசாங்கத்தின் முன்னுரிமை அபிவிருத்தித் திட்டங்களின் ஒரு பகுதியாக விமான நிலையத்தின் விரிவாக்கப் பணிகள் தற்போது துரிதப்படுத்தப்பட்டு வருகின்றன.</p><p></p><p>



 அபிவிருத்தித் திட்டங்கள் நிறைவடைந்ததன் பின்னர், வட மாகாணத்தின் சுற்றுலாத்துறை, முதலீட்டு வாய்ப்புகள், வர்த்தக நடவடிக்கைகள் மற்றும் பொருளாதார வளர்ச்சி மேலும் வலுப்பெறுவதுடன், உள்நாட்டு மற்றும் சர்வதேச பயணிகளுக்கான சேவைகளும் குறிப்பிடத்தக்க அளவில் மேம்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.</p>]]></content>
            <updated>2026-08-01T15:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[காமன்வெல்த்தில் இந்தியாவிற்கு இரட்டை பதக்கம் - சாதித்த தமிழக வீரர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/2-tamilnadu-athlets-won-medal-in-triple-jump-cwg-1785596148"></link>
            <id>https://news.lankasri.com/article/2-tamilnadu-athlets-won-medal-in-triple-jump-cwg-1785596148</id>
            <summary type="text">காமன்வெல்த் தொடரில், தமிழ்நாட்டை சேர்ந்த இரு வீரர்கள் பதக்கம் வென்றுள்ளனர்.

இந்தியாவிற்கு இரட்டை பதக்கம் வென்ற தமிழர்கள்

கிளாஸ்கோ2026 காமன்வெல்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>காமன்வெல்த் தொடரில், தமிழ்நாட்டை சேர்ந்த இரு வீரர்கள் பதக்கம் வென்றுள்ளனர்.
</p><h3>
இந்தியாவிற்கு இரட்டை பதக்கம் வென்ற தமிழர்கள்
</h3><p>
கிளாஸ்கோ2026 காமன்வெல்த் தொடரில் மும்முறை தாண்டுதலில், இந்தியாவிற்காக தமிழ்நாட்டை சேர்ந்த இரு வீரர்கள் வெள்ளி மற்றும் வெண்கல பதக்கத்தை வென்றுள்ளனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/45ceeb84-2ad5-447f-9bf5-b74c51ead7b3/26-6a6e08f5b95ac.webp' /></p><p> 

இந்த போட்டியில், ஜமைக்கா வீரர் ஜோர்டான் ஸ்காட் 16.72 மீட்டர் தாண்டி தங்கப் பதக்கத்தை வென்றார். </p><p>

தமிழ்நாட்டை சேர்ந்த பிரவீன் சித்ரவேல் 16.58 மீட்டர் தாண்டி வெள்ளிப் பதக்கமும், செல்வ பிரபு திருமாரன் 16.52 மீட்டர் தாண்டி வெண்கலப் பதக்கத்தையும் வென்றுள்ளனர்.&nbsp;</p><p>பதக்கம் வென்ற வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், பிரவீன் சித்ரவேலுக்கு ரூ.30 லட்சமும், வெண்கல பதக்கம் வென்ற செல்வ பிரபுவிற்கு ரூ.20 லட்சமும் ஊக்கதொகை அறிவித்துள்ளார்.&nbsp;</p><p><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில்<br>நடைபெற்றுவரும் 23-வது காமன்வெல்த்<br>விளையாட்டுப் போட்டியில்,<br>ஆண்களுக்கான மும்முறை தாண்டுதல்<br>போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற<br>தமிழ்நாட்டின் திருவாரூர் மாவட்டத்தைச்<br>சேர்ந்த திரு. பிரவீன் சித்ரவேல்<br>அவர்களுக்கும், வெண்கலப் பதக்கம்<br>வென்ற மதுரை… <a href="https://t.co/iRocyutKq7">pic.twitter.com/iRocyutKq7</a></p>&mdash; CMOTamilNadu (@CMOTamilnadu) <a href="https://x.com/CMOTamilnadu/status/2083552503367389492?ref_src=twsrc%5Etfw">August 1, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p><span style="color: inherit; font-size: 1.5rem;">செல்வ பிரபு</span></p><p>

மதுரையை சேர்ந்த விவசாய குடும்பத்தை சேர்ந்த 21 வயதான செல்வ பிரபு, 2022 கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் மற்றும் U20 ஃபெடரேஷன் கோப்பையில் தங்கப் பதக்கங்களையும், பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான சாம்பியன்ஷிப் போட்டிகள் மற்றும் கேலோ இந்தியா பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டிகளில் வெள்ளிப் பதக்கங்களையும் வென்றுள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6e358ef4-aea4-47b5-9d6c-02a01d08cd4d/26-6a6e08f717b6f.webp' /></p><p>

2022 ஆம் ஆண்டு கொலம்பியாவில் நடைபெற்ற உலக 20 வயதுக்குட்பட்ட தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார்.&nbsp;</p><p></p><p> 
 மேலும், ஆசிய தடகள சங்கத்தால் (AAA) 'ஆண்டின் சிறந்த ஆசிய 20 வயதுக்குட்பட்ட ஆண் தடகள வீரர் என்ற விருதை பெற்ற முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றுள்ளார். </p><h3>

பிரவீன் சித்ரவேல்</h3><p>

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள விவசாய குடும்பத்தை சேர்ந்த பிரவீன் சித்ரவேல், கர்நாடகாவின் மங்களூரில் உள்ள கல்லூரியில் படித்து பி.ஏ பட்டம் பெற்றுள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3b53b12a-b2eb-4722-95ec-1b2103e50d8e/26-6a6e08f669751.webp' /></p><p> 

பிரவீன் சித்ரவேல் கேலோ இந்தியா பள்ளி விளையாட்டுப் போட்டிகளில் தங்கம், கோயம்புத்தூரில் நடைபெற்ற இளையோர் தேசிய சாம்பியன்ஷிப் போட்டியில் பிரவீன் வெள்ளி என படிக்கும் போதே பல்வேறு பதக்கங்களை வென்றுள்ளார். </p><p>

2018 ஆம் ஆண்டு நடைபெற்ற இளையோர் ஒலிம்பிக் போட்டியில், ஆடவர் மும்முறைத் தாண்டுதலில் வெண்கலப்பதக்கம் வென்றுள்ளார். </p><p>

இதே போல் குத்துச்சண்டை இறுதிப் போட்டிகளில் பங்கேற்ற இந்தியாவின் பிரீதி பவார் (Preeti Pawar) 54 கிலோ எடைப் பிரிவிலும் ஜேஸ்மின் லம்போரியா (Jaismine Lamboria) 57 கிலோ எடைப் பிரிவிலும் தங்கம் வென்றுள்ளனர்.</p><p> 

தற்போது, 8 தங்கம், 15 வெள்ளி, 7 வெண்கல பதக்கங்கள் உட்பட 30 பதக்கங்களுடன் இந்தியா பதக்க பட்டியலில் 6வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-01T14:56:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் வீதிக்கு மீண்டும் பூட்டு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/palali-raja-rajeshwari-amman-road-closed-again-1785585781"></link>
            <id>https://ibctamil.com/article/palali-raja-rajeshwari-amman-road-closed-again-1785585781</id>
            <summary type="text">இராணுவ உயர்பாதுகாப்பு வலயத்தில் இருந்து விடுவிக்கப்பட்ட பலாலி இராஜ
இராஜேஸ்வரி அம்மன் கோயிலுக்கு செல்லும் நிரந்தர வீதி திருவிழாவிற்காக
திறக்கப்பட்ட ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>இராணுவ உயர்பாதுகாப்பு வலயத்தில் இருந்து விடுவிக்கப்பட்ட பலாலி இராஜ
இராஜேஸ்வரி அம்மன் கோயிலுக்கு செல்லும் நிரந்தர வீதி திருவிழாவிற்காக
திறக்கப்பட்ட நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை முதல் மீண்டும் மூடப்பட்டது.
</p><p>
ஏற்கனவே கடந்த ஆண்டு ஆலய பகுதி விடுவிக்கப்பட்ட போதும் மக்கள் செல்லும் வீதி
மக்களின் காணியூடாக தற்காலிக பாதையூடாகவே செல்லும் வகையில் திறக்கப்பட்டதுடன்
நிரந்தர பாதை மூடப்பட்டே இருந்தது.</p><h2>தற்காலிகமாக திறக்கப்பட்டநிரந்தர பாதை</h2><p>எனினும் சில நாட்களில் அப்பகுதியில் உள்ள
மக்கள் தங்கள் காணியை சுற்றி வேலியை அமைத்ததால் மக்கள் ஆலயத்துக்கு
செல்லமுடியாத நிலை ஏற்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/56ca06d8-103e-4f4f-80da-0f32eac39cb4/26-6a6df3052aef3.webp' /></p><p>

இதையடுத்து ஆலய நிர்வாகத்தினர் இராணுவத்தினரிடமும் நாடாளுமன்ற உறுப் பினர்
இளங்குமரனிடமும் கோரிக்கை வைத்தனர். இது குறித்து இராணுவத்தினருடன்
கலந்துரையாடியதையடுத்து நிரந்தர பாதை தற்காலிகமாக திறக்கப்பட்டது.இதையடுத்து
ஆலயத்துக்கு வருபவர்கள் அடையாள அட்டை இலக்கம் பதியப்பட்ட பின் வீதியால் செல்ல
அனுமதிக்கப்பட்டிருந்தனர்.</p><p>இவ்வாறான நிலையில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை திருவிழா முடிந்த நிலையில்
நிரந்தர பாதை மூடப்பட்டுள்ளது.</p><h2>இளங்குமரன் எம்.பியின் அறிவிப்பு</h2><p>
</p><p>

இதேவேளை பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்திற்கு செல்லும் வீதியை ஒரு மாதத்திற்குள்
நிரந்தரமாக விடுவிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர்
க.இளங்குமரன் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d09285bc-dfcd-4139-b558-3aa08f5c416a/26-6a6df304763b6.webp' /></p><p>
</p><p>
ஆலயத் திருவிழாவிற்காக தற்காலிக திறக்கப்பட்ட குறித்த பாதையானது நேற்றையதினம்
மீண்டும் மூடப்பட்டது. இது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரனை எமது செய்தியாளர்
தொடர்புகொண்டு வினவியபோது அவர் இதனை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர்
மேலும் தெரிவிக்கையில்,</p><p></p><p>

</p><h2>&nbsp;காணிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கை</h2><p>கடந்த காலத்தில் மக்கள் கோரிக்கை முன்வைத்தமைக்கு அமைவாக திருவிழாவுக்காக
தற்காலிகமாக அந்த பாதை திறந்து வைக்கப்பட்டது. குறித்த பாதையானது நிரந்தரமாக
திறந்து வைப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/976095dc-e669-404a-8c90-f149877ba043/26-6a6df305d1a31.webp' /></p><p>
</p><p>அந்தவகையில் ஒரு மாத்திற்குள் அந்த பாதை நிரந்தரமாக திறக்கப்படும்.

மேலும், இரண்டு மாதத்திற்குள் குறித்த வீதிக்கு கிழக்கு பக்கமாக உள்ள
பெருமளவான காணிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு
வருகின்றன என்றார்.&nbsp; </p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-01T14:34:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் ஜோதிடர் என கூறி 800,000 டொலர் மோசடி; நாடு முழுவதும் பிடி விராந்து பிறப்பிப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/8-lak-dollar-fraud-in-toronto-indian-astrologer-1785588100"></link>
            <id>https://jvpnews.com/article/8-lak-dollar-fraud-in-toronto-indian-astrologer-1785588100</id>
            <summary type="text">இந்தியா தப்பியோட்டம்
கனடாவின் டொராண்டோவில் தன்னை ஆன்மீக சிகிச்சையாளர் மற்றும் ஜோதிடர் எனக் காட்டி, ஒருவரிடம் இருந்து சுமார் 800,000 கனேடிய டொலர் மோசட...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியா தப்பியோட்டம்
கனடாவின் டொராண்டோவில் தன்னை ஆன்மீக சிகிச்சையாளர் மற்றும் ஜோதிடர் எனக் காட்டி, ஒருவரிடம் இருந்து சுமார் 800,000 கனேடிய டொலர் மோசடி செய்ததாகக் கூறப்படும் இந்தியப் பிரஜைக்கு எதிராக நாடு முழுவதும் பிடி விராந்து பிறப்பிக்கப்பட்டுள்ளதாக டொராண்டோ காவல்துறை தெரிவித்துள்ளது.</p><p>
கங்காதர் பாபு என்பவர் மீது இந்த வழக்கில் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
 2024 ஏப்ரல் முதல் 2025 செப்டம்பர் வரை இந்த மோசடி இடம்பெற்றதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/efc5c253-d6f6-412b-ac32-a5e27ac2b1c2/26-6a6de98590d68.webp' /></p><h2>இந்தியாவுக்கு தப்பிச் சென்றிருக்கலாம்...&nbsp;</h2><p>
விசாரணையின்படி, "பாபு" என்ற பெயரில் சேவையாற்றியதாகக் கூறப்படும் சந்தேகநபர், தன்னை ஆன்மீக சக்தி கொண்டவராகவும், எதிர்காலத்தை கணிக்கும் ஜோதிடராகவும், ஆன்மீக சிகிச்சையளிப்பவராகவும் அறிமுகப்படுத்தியுள்ளார்.</p><p>பாதிக்கப்பட்டவரையும் அவரது குடும்பத்தினரையும் மரணம் அல்லது கடுமையான தீங்கு சூழும் என அச்சுறுத்தி, அதிலிருந்து காப்பாற்ற விசேட ஆன்மீக சடங்குகள் நடத்த வேண்டுமெனக் கூறி தொடர்ந்து பணம் பெற்றதாக காவல்துறை தெரிவித்துள்ளது.</p><p></p><p>கங்காதர் பாபு மீது 5,000 டொலருக்கு மேற்பட்ட மோசடி, குற்றச்செயலில் கிடைத்த வருமானத்தை வைத்திருத்தல் மற்றும் நிதிச் சலவையில் ஈடுபடல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.</p><p>
சந்தேகநபர் தற்போது இந்தியாவுக்கு தப்பிச் சென்றிருக்கலாம் என டொராண்டோ காவல்துறை நம்புவதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p></p><p>
</p><p>கங்காதர் பாபு சுமார் 5 அடி 6 அங்குல உயரம், ஒல்லியான உடலமைப்பு, கருமையான சுருட்டை முடி, அடர் பழுப்பு நிறக் கண்கள், ஒழுங்காக வெட்டப்பட்ட தாடி மற்றும் முன்பற்களுக்கு இடையில் தெளிவான இடைவெளி கொண்டவராக விவரிக்கப்பட்டுள்ளார்.</p><p>இந்த நபரால் ஏமாற்றப்பட்டிருக்கக்கூடிய மேலும் பலர் இருக்கலாம் என காவல்துறை சந்தேகிப்பதுடன், வழக்குத் தொடர்பான தகவல்கள் இருப்பவர்கள் முன்வருமாறும் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-01T14:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[மஹர சிறைச்சாலையில் மீண்டும் பதற்றம் : படையினர் மீது கற்களால் தாக்குதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/unrest-reported-at-mahara-prison-1785586076"></link>
            <id>https://ibctamil.com/article/unrest-reported-at-mahara-prison-1785586076</id>
            <summary type="text">&amp;nbsp;புதிய இணைப்பு&amp;nbsp;மஹர சிறைச்சாலையில் இன்று (1) மாலை ஏற்பட்ட அமைதியின்மை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்ட போதிலும் மீண்டும் பதற்ற நிலை ஏற்பட்...</summary>
            <content type="html"><![CDATA[<h2>&nbsp;புதிய இணைப்பு</h2><p>&nbsp;மஹர சிறைச்சாலையில் இன்று (1) மாலை ஏற்பட்ட அமைதியின்மை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்ட போதிலும் மீண்டும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
</p><p>&nbsp;கைதிகளைப் பார்க்க வந்த உறவினர்களும் குடியிருப்பாளர்களும் காவல்துறைத் தடுப்புகளை உடைத்துக்கொண்டு முன்னேற முயன்றனர்.
</p><p>
</p><h2>கூட்டத்தைக் கட்டுப்படுத்த முயன்றதால் கலவரம்</h2><p>பாதுகாப்பு அதிகாரிகள் சில அடிகள் முன்னேறி, கூட்டத்தைக் கட்டுப்படுத்த முயன்றதால் கலவரம் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aba6c93d-9603-4ad2-82a8-43a83dce0c0d/26-6a6e03517db52.webp' /></p><p>
</p><p>
அதே நேரத்தில், கைதிகளைப் பார்க்க வந்த உறவினர்களும் குடியிருப்பாளர்களும் பாதுகாப்பு அதிகாரிகள் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.</p><h2>மூன்றாம் இணைப்பு</h2><p>இன்று பிற்பகல் சிறையில் கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதல் தற்போது கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதால், அப்பகுதியில் கைதிகளை பார்வையிட வந்த உறவினர்களை அங்கிருந்து வெளியேறுமாறு காவல்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
</p><p>
இருப்பினும், கைதிகளைப் பார்க்க வந்த உறவினர்கள் இன்னும் அப்பகுதியில் தங்கியுள்ளனர்.</p><h2>காவல்துறையின் தீயணைப்பு வாகனம்&nbsp;</h2><p>அப்பகுதிக்கு காவல்துறையின் தீயணைப்பு வாகனம் வருகை தந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4e8a20fe-c497-40f7-881d-3fb24f6bf153/26-6a6e0043ef0d2.webp' /></p><h2>இரண்டாம் இணைப்பு&nbsp;</h2><p>மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்ற நிலைமையின் போது காயமடைந்தவர்களில் ஒருவர் உயிரிழந்தார். </p><p>

மேலும் காயமடைந்த 6 பேர் சிகிச்சைகளுக்காக ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p><p>&nbsp;இன்று (01) பிற்பகல் கைதிகளுக்கும் சிறைச்சாலை அதிகாரிகளுக்கும் இடையில் ஏற்பட்ட முறுகல் நிலை காரணமாக மஹர சிறைச்சாலைக்குள் அமைதியின்மை ஏற்பட்டது. </p><p>



நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர மேலதிக சிறைச்சாலை அதிகாரிகள் அழைக்கப்பட்டுள்ளதுடன், சிறைச்சாலைக்கு வெளியே பாதுகாப்புக்காக காவல்துறையினர் மற்றும் காவல்துறை விசேட அதிரடிப்படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><h2>கைதிகள் வைத்த தீ</h2><p> </p><p>

 கைதிகள், சிறைச்சாலையின் பிரதான சிறை அதிகாரியின் அலுவலகம் மற்றும் ஒழுக்காற்றுப் பிரிவுக்கு தீ வைத்துள்ளதாகவும், தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரத் தேவையான நடவடிக்கைகள் தற்போது எடுக்கப்பட்டுள்ளதாகவும் சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7b78bead-8a1e-4b5d-a5af-2574a0ccb545/26-6a6df6ae7c9d9.webp' /></p><p> </p><p>

இன்று பிற்பகல் சிறைக் கைதிகளைப் பார்ப்பதற்காக உறவினர்கள் மஹர சிறைச்சாலைக்கு வந்திருந்த போதிலும், அவர்களுக்கு சிறைச்சாலைக்குள் செல்ல அனுமதி வழங்கப்படவில்லை. </p><p>

அதன்படி, உறவினர்கள் தற்போது மஹர சிறைச்சாலைக்கு முன்னால் தங்கியுள்ளதாகக் குறிப்பிடப்படுகின்றது. 

அங்கு தங்கியிருக்கும் உறவினர்கள் ஊடகங்களுக்குத் தெரிவிக்கையில், </p><p>சிறைச்சாலைக்குள் இருந்து பல துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்கள் கேட்டதாகவும் தெரிவித்துள்ளனர். 

இந்தச் சம்பவங்கள் தொடர்பாக சிறைச்சாலைகள் திணைக்களம் இதுவரை அதிகாரபூர்வமான எவ்வித அறிவிப்பையும் வௌியிடவிவ்லை.</p><h2>முதலாம் இணைப்பு</h2><p>மஹர சிறைக்குள் அமைதியின்மை ஏற்பட்டதாகத் தகவல் வந்ததையடுத்து, அப்பகுதியில் மேலதிக படையினரை அதிகாரிகள் நிறுத்தியுள்ளனர்.</p><p>

சிறைக்குள் நிலவும் சூழ்நிலையை மதிப்பிடுவதற்கும் நிர்வகிப்பதற்கும் பல சிறப்பு காவல்துறை குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்தது.</p><h2>சிறைச்சாலையை சுற்றி பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு</h2><p>
</p><p>
சிறையைச் சுற்றியுள்ள பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது; அமைதியைப் பேணுவதற்கும், எந்தவொரு பதற்றமும் அதிகரிக்காமல் தடுப்பதற்கும் காவல்துறை மற்றும் விசேடஅதிரடிப்படை (STF) நிறுத்தப்பட்டுள்ளன&nbsp; &nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2489e9b8-dd1e-4d19-9ddd-8e6836ef8c45/26-6a6de39380103.webp' /></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-01T14:25:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kumar</name>
            </author>
            <title type="text"><![CDATA[மட்டக்களப்பில் திடீர் தீ விபத்து..! தெய்வாதீனமாக உயிர்தப்பிய வீட்டார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/batticalo-fire-accident-today-1785592960"></link>
            <id>https://tamilwin.com/article/batticalo-fire-accident-today-1785592960</id>
            <summary type="text">மட்டக்களப்பு- ஏறாவூர் 5ஆம் குறிச்சிப்
பகுதியில் இன்று(1) காலை வீடொன்றில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் பெரும்
பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இன்று காலையி...</summary>
            <content type="html"><![CDATA[<p>மட்டக்களப்பு- ஏறாவூர் 5ஆம் குறிச்சிப்
பகுதியில் இன்று(1) காலை வீடொன்றில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் பெரும்
பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
</p><p>
இன்று காலையில் குறித்த வீட்டின் ஒரு பகுதியில் திடீரென தீப்பற்றி எரியத்
தொடங்கியதை வீட்டிலிருந்தவர்கள் அவதானித்துள்ளனர்.</p><p></p><h2>தீ விபத்து</h2><p> 

தீ விபத்தைக் கண்டு
அதிர்ச்சியடைந்த குடும்பத்தினரும் அயலவர்களும் இணைந்து கடுமையான
போராட்டத்திற்கு மத்தியில் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.</p><p>

இருப்பினும் இந்தத் தீ விபத்தில் வீட்டின் ஒரு பகுதி சேதமடைந்துள்ளதுடன்
வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் மற்றும் பல மின்சார
வீட்டு உபகரணங்கள் கதிரைகள் மேசைகள் மாணவர்களின் அறநெறி பாடசாலை சீருடைகள்
என்பன முற்றாகத் தீயில் கருகி நாசமாகியுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a20e64ac-0ff8-4885-868a-f0949b9b77de/26-6a6e00014dbd5.webp' /></p><p> 

அதிர்ஷ்டவசமாக அசம்பாவிதங்கள்
எதுவும் இன்றி உயிர்ச்சேதங்கள் தவிர்க்கப்பட்டுள்ளன.
</p><p>
தீ விபத்திற்கான துல்லியமான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. </p><p>

இந்த சம்பவம்
தொடர்பில் ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், தீ
விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு
வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-01T14:17:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[உயர்தர பரீட்சை : பரீட்சைகள் திணைக்களம் விதித்துள்ள தடை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/gce-al-tuition-classes-banned-midnight-august-04-1785591879"></link>
            <id>https://ibctamil.com/article/gce-al-tuition-classes-banned-midnight-august-04-1785591879</id>
            <summary type="text">2026 ஆம் ஆண்டுக்கான உயர்தர பரீட்சை தொடர்பான பயிற்சி வகுப்புகள், பாட விரிவுரைகள், கருத்தரங்குகள் மற்றும் பயிலரங்குகள் ஓகஸ்ட் 04 ஆம் திகதி நள்ளிரவுக்குள...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026 ஆம் ஆண்டுக்கான உயர்தர பரீட்சை தொடர்பான பயிற்சி வகுப்புகள், பாட விரிவுரைகள், கருத்தரங்குகள் மற்றும் பயிலரங்குகள் ஓகஸ்ட் 04 ஆம் திகதி நள்ளிரவுக்குள் முடிக்கப்பட வேண்டும் எனத் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
</p><p>
அதன்படி, பரீட்சை நடவடிக்கைகள் நிறைவடையும் வரை இந்தத் தடை நடைமுறையில் இருக்கும்.</p><h2>யூக கேள்வி வினாத்தாள்களை வெளியிடக்கூடாது</h2><p>அந்தக் காலகட்டத்தில், உயர்தர பரீட்சைக்கான யூகக் கேள்விகளைக் கொண்ட வினாத்தாள்களை அச்சிட்டு விநியோகிக்கக் கூடாது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f1eaf953-67b6-45d4-b5e0-5fa3ba4d3109/26-6a6dfe6c536c4.webp' /></p><p>
</p><p>
மேலும், பரீட்சை வினாத் தாள்களுக்குக் கேள்விகள் வழங்கப்படும் அல்லது அதுபோன்ற கேள்விகள் வழங்கப்படும் என்று குறிப்பிடும் சுவரொட்டிகள், பதாகைகள், துண்டுப் பிரசுரங்கள், மின்னணு அல்லது அச்சு ஊடகங்களை வெளியிடுவதோ அல்லது அதுபோன்றவற்றை வைத்திருப்பதோ கண்டிப்பாகத் தடைசெய்யப்பட்டுள்ளது.</p><p>

2026 ஆம் ஆண்டுக்கான உயர்தர பரீட்சை, ஓகஸ்ட் 10 முதல் செப்டம்பர் 05, 2026 வரை 2532 பரீட்சை நிலையங்களில் நடைபெற உள்ளது.&nbsp;&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-01T14:11:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[எந்த நிலையிலும் உண்மையை மட்டுமே பேச விரும்பும் 3 ராசிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/which-zodiac-signs-are-always-speaks-the-truth-1785586222"></link>
            <id>https://manithan.com/article/which-zodiac-signs-are-always-speaks-the-truth-1785586222</id>
            <summary type="text">ஒருவரின் பிறப்பு ராசி அவர்களின் ஆளுமை, சிந்தனை முறை, உறவுகள், பொருளாதார அணுகுமுறை மற்றும் வாழ்க்கையை எதிர்கொள்ளும் விதத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஒருவரின் பிறப்பு ராசி அவர்களின் ஆளுமை, சிந்தனை முறை, உறவுகள், பொருளாதார அணுகுமுறை மற்றும் வாழ்க்கையை எதிர்கொள்ளும் விதத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கை ஜோதிடத்தில் பரவலாக காணப்படுகிறது. </p><p>பலர் தங்களின் ராசி சார்ந்த குணாதிசயங்களை ஆர்வத்துடன் அறிந்து கொள்கின்றனர்.

அந்த வகையில், சில ராசிகளில் பிறந்தவர்கள் இயல்பாகவே உண்மை, நேர்மை மற்றும் நம்பகத்தன்மைக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்கள் என கணிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/139afa17-8cbc-4df5-9f07-494a6feed04a/26-6a6dec25c90a0.webp' /></p><p>அப்படி&nbsp; சூழ்நிலை எவ்வளவு கடினமாக இருந்தாலும்,&nbsp; உண்மையையே பேச விரும்பும் குணம் கொண்ட ராசியினர் யார் யார் என பார்க்கலாம்.</p><p></p><h2>தனுசு</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8154fcb5-8fac-4be5-8d72-00a2901d4f6f/26-6a6dec2679bbb.webp' /></p><p>தனுசு ராசியில் பிறந்தவர்கள் உண்மையை மதிக்கும் குணம் கொண்டவர்களாக அறியப்படுகிறார்கள். எப்போதும் நேர்மையான அணுகுமுறையையே கடைப்பிடிக்க முயற்சிப்பார்கள். </p><p>சில நேரங்களில் உண்மையை மிகவும் வெளிப்படையாகச் சொல்வதால் மற்றவர்களின் மனம் புண்படலாம். இருப்பினும், பொய்யாக நடித்து ஒருவரை மகிழ்விப்பதை விட உண்மையைச் சொல்ல வேண்டும் என்பதே இவர்களின் எண்ணமாக இருக்கும்.</p><h2>கடகம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e3fa9a80-fcb3-419d-ad72-20f13231e385/26-6a6dec2729178.webp' /></p><p>கடக ராசிக்காரர்கள் இயல்பாகவே ஒரு அரசனுக்கு இருக்க வேண்டிய அனைத்து அம்சங்களையும் கொண்டவர்களாக இருப்பார்கள்.</p><p>அவர்களின் பேசும் பாணி தைரியமாகவும் நம்பிக்கையுடனும் இருக்கும். அவர்கள் எப்போதும் இதயத்திலிருந்து பேசுவார்கள். </p><p>இவர்கள் தங்களுக்கு உண்மையாக இருக்க விரும்புவதால் அவர்கள் நேர்மையானவர்களாகவும் அறியப்படுகின்றார்கள். இவர்கள் தங்களிகன் உயிரை விடவும் உண்மைக்கு அதிக முக்கியத்துவம் மற்றும் மரியாதை கொடுப்பவர்களாக இருப்பார்கள்.</p><h2>மீனம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a19c5852-a080-4a5b-b476-e0e9a8705fb9/26-6a6dec27ccf14.webp' /></p><p></p><p>மீன ராசியில் பிறந்தவர்கள் தங்களின் இரக்க குணத்துக்கும் அமைதிக்கும் பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள். ஆனால் அவர்களை சீண்டினால் முகத்துக்கு நேராகவே மற்றவர்கள் தவறுகள் குறித்து சொல்லிவிடுவார்கள்.<br></p><p>
இவர்கள் தங்களின் தனிப்பட்ட விடயங்களை அதிகம் மற்றவர்களுடன் பகிர்ந்துக்கொள்ள விரும்பாத போதும் கூட மற்றவர்களுக்கு உண்மையாகவும், விசுவாசமாகவும் நடந்துக்கொள்ள வேண்டும் என்பதில் மிகவும் உறுதியாக இருப்பார்கள்.</p><p><b>இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;</b></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b>&nbsp;</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-01T14:07:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[திருப்பதிக்கு கொண்டு செல்லப்பட்ட தமிழ்நாடு பட்ஜெட் ஆவணம் - கம்யூனிஸ்ட் கட்சிகள் கண்டனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/minister-tirupati-visit-with-tn-agriculture-budget-1785592799"></link>
            <id>https://ibctamilnadu.com/article/minister-tirupati-visit-with-tn-agriculture-budget-1785592799</id>
            <summary type="text">தமிழ்நாடு பட்ஜெட் ஆவணம் வழிபாட்டிற்காக திருப்பதிக்கு கொண்டு செல்லப்பட்டதற்கு கம்யூனிஸ்ட் கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

திருப்பதிக்கு கொண்டு செல்...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழ்நாடு பட்ஜெட் ஆவணம் வழிபாட்டிற்காக திருப்பதிக்கு கொண்டு செல்லப்பட்டதற்கு கம்யூனிஸ்ட் கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
</p><h3>
திருப்பதிக்கு கொண்டு செல்லப்பட்ட தமிழ்நாடு பட்ஜெட்</h3><p>

தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் ஆகஸ்ட் 5ஆம் தேதி தொடங்க உள்ளது. ஆகஸ்ட் 5ஆம் தேதி தமிழக பட்ஜெட்டும், ஆகஸ்ட் 6ஆம் தேதி வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட இருக்கிறது.
</p><p>
தவெக அரசின் முதல் பட்ஜெட் என்பதால், இதில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6f7347d8-dbb8-4714-be27-878a30abe173/26-6a6dfbe1a6eaa.webp' /></p><p>

இந்நிலையில், வேளாண்மை துறை அமைச்சர் வினோத், வேளாண் பட்ஜெட்டின் வரைவு நகலை திருப்பதி ஏழுமலையான கோவிலுக்கு கொண்டு சென்று சிறப்பு தரிசனம் மேற்கொண்டுள்ளார்.</p><p>

இதுவரை, தமிழ்நாட்டில் பட்ஜெட் ஆவணங்கள் தாக்கல் செய்யபப்டும் முன் இவ்வாறு கோவிலுக்கு சென்று வழிபாடு மேற்கொண்டதில்லை என்பதால் இது குறித்து விமர்சனங்கள் எழுந்துள்ளது. </p><p>

இது அமைச்சரின் தனிப்பட்ட நம்பிக்கை என ஒரு சிலர் கூறி வந்தாலும், அரசின் பட்ஜெட் ஆவணத்தை மத வழிபாட்டுடன் இணைப்பது, மதச்சார்பின்மை கோட்பாட்டிற்கு எதிரானது என பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
</p><h3> 
CPI, CPIM கண்டனம்</h3><p> 

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மதுரை எம்.பி சு.வெங்கடேசன், "பட்ஜெட் ஆவணங்கள் என்பது இறைவனுக்கான காணிக்கையோ, அல்லது ஆன்மீகப் பொருட்களோ அல்ல; அவை மக்களின் வரிப்பணம் எப்படிச் செலவிடப்படும் என்பதைக் கூறும் 
அரசியல் சாசன ஆவணம்.&nbsp;</p><p><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">பட்ஜெட் ஆவணங்கள் என்பது இறைவனுக்கான காணிக்கையோ, அல்லது ஆன்மீகப் பொருட்களோ அல்ல; அவை மக்களின் வரிப்பணம் எப்படிச் செலவிடப்படும் என்பதைக் கூறும் <br>அரசியல் சாசன ஆவணம்.<br><br>தனிமனிதர்களின் மத நம்பிக்கைக்கு அரசியல் ஆவணங்களை காணிக்கையாக்குவது அரசியல்சட்ட விரோதம்.<a href="https://x.com/vinothravi11?ref_src=twsrc%5Etfw">@vinothravi11</a> <a href="https://t.co/iTVZsuFT7J">pic.twitter.com/iTVZsuFT7J</a></p>&mdash; Su Venkatesan MP (@SuVe4Madurai) <a href="https://x.com/SuVe4Madurai/status/2083453547325308966?ref_src=twsrc%5Etfw">August 1, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>
தனிமனிதர்களின் மத நம்பிக்கைக்கு அரசியல் ஆவணங்களை காணிக்கையாக்குவது அரசியல்சட்ட விரோதம்" என தெரிவித்துள்ளார்.</p><p> 

இது குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு. வீரபாண்டியன் வெளியிட்டுள்ள பதிவில், "தமிழ்நாட்டின் வேளாண்மைத்துறை அமைச்சர் ஆர். வினோத், வரவிருக்கும் பட்ஜெட் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட உள்ள ,வேளாண் பட்ஜெட் வரைவு நகலைத் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைத்து சிறப்பு வழிபாடு செய்துள்ளார்.
</p><p>
ஒரு மதச்சார்பற்ற நாட்டில் ,பல்வேறு மதங்கள், வழிபாட்டுமுறைகள், நம்பிக்கைகள் மற்றும் நாத்திகர்களும் உள்ள ஒரு மதச்சார்பற்ற நாட்டில், மதம்,ஆன்மீகம்,கடவுள் நம்பிக்கை என்பது தனிப்பட்ட விவகாரமாக இருக்க வேண்டும். அரசோடு, அரசியலோடு அவற்றை கலகக் கூடாது.
</p><p>
தமிழ்நாடு அரசின் 2026-27 ஆம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட் என்பது அரசு ஆவணமாகும்.
அதை ஒரு குறிப்பிட்ட மதத்தின்,ஒரு குறிப்பிட்ட பிரிவினர் வணங்கும் வழிபாட்டுத் தளத்தில் வைத்து சிறப்பு வழிபாடு செய்தது நமது அரசியல் சட்டத்திற்கும்,மதச்சார்பின்மை கோட்பாட்டிற்கும் ,பன்மைத்துவத்
திற்கும் எதிரானதாகும்.
</p><p>
மதச்சார்பின்மை கோட்பாட்டிற்கு எதிராக அமைச்சர் வினோத் அவர்கள் செயல்பட்டது கண்டனத்திற்குரியது.
தவெக அரசும்,அமைச்சர்களும் மதச்சார்பற்ற கொள்கையை உறுதியுடன் கடைபிடிக்க வேண்டும்.
</p><p>
சட்டமன்றத்தில் முன்வைக்கப்பட வேண்டிய ஒரு அரசு ஆவணத்தை,அதற்கு முன்பாகவே பொதுவெளியில் வைப்பது என்பது சட்டத்திற்கு புறம்பான,ரகசியக் காப்பு உறுதி மொழிக்கு எதிரான நடவடிக்கையாகும்.</p><p>

விவசாயிகளின் ,விவசாயத் தொழிலாளர்களின் வாழ்வாதாரப் பிரச்சினையான மேகதாது பிரச்சினைக்கு அனைத்துக் கட்சிகள் மற்றும் அனைத்து விவசாயிகள் சங்கங்களின் கூட்டத்தை கூட்டி ஒத்தக்கருத்தை உருவாக்க முயலாத தவெக அரசு, விவசாயிகளின் கடன்களை முழுமையாக ரத்து செய்யாத தவெக அரசு, வேளாண்மையை ,விவசாயிகளை பாதுகாக்க வேளாண்மை பட்ஜெட்டை வைத்து சிறப்பு வழிபாடு நடத்தியுள்ளதாக தவெக அரசின் அமைச்சர் கூறுவது பகுத்தறிவுக்குப் பொருந்தாத வாதமாகும்.&nbsp;</p><p><iframe src="https://www.facebook.com/plugins/post.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2Fpermalink.php%3Fstory_fbid%3Dpfbid02Jic1Mn9MXzpMAs5aLej8TsosWUZQUVzwVqw6qJ2J6iLsNj4K6go9JYa2BEMxYphql%26id%3D61565389072881&show_text=true&width=500" width="500" height="310" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share"></iframe></p><p>

எனவே, இத்தகையப் போக்குகளை தவெக அமைச்சர்களும்,அரசும் கைவிட வேண்டுமென இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு செயற்குழு வலியுறுத்துகிறது" என தெரிவித்துள்ளார்.&nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-08-01T14:00:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ்ப்பாணத்திற்கும் வருகின்றது மெட்ரோ பேருந்து சேவை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/metro-bus-service-will-be-expanded-to-jaffna-1785588841"></link>
            <id>https://jvpnews.com/article/metro-bus-service-will-be-expanded-to-jaffna-1785588841</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;அரசாங்கத்தின் &#039;மெட்ரோ&#039; (Metro) பேருந்து சேவை இந்த ஆண்டின் இறுதிக்குள் யாழ்ப்பாணம் மற்றும் கண்டி ஆகிய பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்படும் எ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;அரசாங்கத்தின் 'மெட்ரோ' (Metro) பேருந்து சேவை இந்த ஆண்டின் இறுதிக்குள் யாழ்ப்பாணம் மற்றும் கண்டி ஆகிய பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என்றும், இதற்கான புதிய பேருந்துகள் விரைவில் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாகவும் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க, தெரிவித்தார்.</p><p>

சீனா மற்றும் பல நாடுகளிலிருந்து 121 மெட்ரோ பேருந்துகள் பெறப்பட்டுள்ளதாகவும், அவை சேவையில் ஈடுபடுத்தப்படுவதற்கு முன்னதாகப் பதிவு செய்தல் உள்ளிட்ட சட்டரீதியான நடைமுறைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகவும் அமைச்சர் கூறினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0ce6f91e-10cd-442f-a07a-2ba51a132850/26-6a6dec6a9155b.webp' /></p><h2>ஜப்பானிடமிருந்து மேலும் 50 மெட்ரோ பேருந்துகள்</h2><p>
</p><p>
தேவையான ஆவணப் பணிகள் நிறைவடைந்ததும், ஆகஸ்ட் மாத இறுதிக்குள் இப்பேருந்துகள் பொதுப் போக்குவரத்துச் சேவையில் ஈடுபடுத்தப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.
</p><p>
மெட்ரோ பேருந்து சேவைக்காகப் பல புதிய வழித்தடங்கள் ஏற்கனவே அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், இது குறித்த விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் ரத்நாயக்க மேலும் தெரிவித்தார்.</p><p></p><p>
</p><p>
இந்த ஆண்டின் இறுதிக்குள் ஜப்பானிடமிருந்து மேலும் 50 மெட்ரோ பேருந்துகள் இலங்கைக்குக் கிடைக்கவுள்ளதாகவும், இதன் மூலம் கொழும்புக்கு அப்பாலும் இச்சேவையை விரிவுபடுத்த முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
</p><p>
"இந்த ஆண்டின் இறுதிக்குள் யாழ்ப்பாணம் மற்றும் கண்டி ஆகிய இடங்களில் மெட்ரோ பேருந்து சேவையைத் தொடங்க நாங்கள் எதிர்பார்க்கிறோம். இவ்விரு மாவட்டங்களிலும் மெட்ரோ பேருந்து நிலையங்களும் (depots) அமைக்கப்படும்," என்று அவர் கூறினார்.</p><p></p><p>
போக்குவரத்து நெரிசல், எரிபொருள் பயன்பாடு மற்றும் சுற்றுச்சூழல் மாசுபாடு ஆகியவற்றைக் குறைப்பதற்காக, பயணிகள் தனியார் வாகனங்களிலிருந்து பொதுப் போக்குவரத்திற்கு மாறுவதை ஊக்குவிப்பதே அரசாங்கத்தின் நீண்டகால நோக்கம் என்று அமைச்சர் தெரிவித்தார்.
</p><p>
மேலும், மெட்ரோ பேருந்துகளில் பயணிகளுக்கான தகவல்கள் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் காட்சிப்படுத்தப்படும் என்றும், 2030-ஆம் ஆண்டிற்குள் மெட்ரோ பேருந்துகளின் எண்ணிக்கையை 500-க்கும் அதிகமாக உயர்த்த அரசாங்கம் இலக்கு நிர்ணயித்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-01T14:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[13 வயதில் தாய் - தனது 7 மாத குழந்தைக்காக சட்டப் போராட்டம் நடத்திய சிறுமி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/13-year-old-mother-case-to-get-her-7-month-baby-1785591623"></link>
            <id>https://manithan.com/article/13-year-old-mother-case-to-get-her-7-month-baby-1785591623</id>
            <summary type="text">கைகளில் தனது 7 மாதக் குழந்தையை ஏந்தியபடி, கேமராவை நோக்கி மென்மையாகச் சிரித்துக்கொண்டிருக்கும் இந்தச் சிறுமியின் பெயர் ஜூய். அந்தப் புன்னகைக்குப் பின்ன...</summary>
            <content type="html"><![CDATA[<p>கைகளில் தனது 7 மாதக் குழந்தையை ஏந்தியபடி, கேமராவை நோக்கி மென்மையாகச் சிரித்துக்கொண்டிருக்கும் இந்தச் சிறுமியின் பெயர் ஜூய். அந்தப் புன்னகைக்குப் பின்னால், பலராலும் கற்பனை செய்ய முடியாத அளவுக்கு வேதனையும் போராட்டமும் நிறைந்த வாழ்க்கைக் கதை மறைந்திருக்கிறது.</p><p>

ஜூய்க்கு தற்போது வெறும் 13 வயது மட்டுமே. ஆனால், அவரது கைகளில் இருக்கும் அந்தக் குழந்தை அவருடையது தான். இவ்வளவு இளம் வயதிலேயே தாய்மையின் பொறுப்பை ஏற்றதோடு, தனது குழந்தையை மீண்டும் பெறுவதற்காக நீதிமன்றத்தை நாட வேண்டிய கட்டாயமும் அவருக்கு ஏற்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9b9ba88b-86df-4f1b-be60-c1be2be241d7/26-6a6dfb820009f.webp' /></p><p></p><p>

தகவல்களின்படி, பங்களதேஷை சேர்ந்த&nbsp; ஜூய் 11 வயதாக இருந்தபோது, Facebook மூலம் 22 வயதுடைய ஷகிப் மியாவுடன் அறிமுகமானார். பின்னர் அந்த அறிமுகம் திருமணத்தில் முடிந்தது. திருமணமாகி ஓராண்டுக்குப் பிறகு, அவர்களுக்கு ஒரு குழந்தை பிறந்தது.
</p><p>
ஆனால், அந்த மகிழ்ச்சி நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை. குழந்தை பிறந்த சில காலத்திலேயே, ஜூயை அவரது கணவரும் மாமியாரும் வீட்டை விட்டு வெளியேற்றியதாகக் கூறப்படுகிறது. அதைவிட வேதனையானது, தனது பச்சிளம் குழந்தையை அங்கேயே விட்டுவிட்டு வெளியேற வேண்டிய நிலைக்கு அவர் தள்ளப்பட்டதுதான்.</p><p>

ஒரு தாய்க்கு தனது குழந்தையிலிருந்து பிரிந்து வாழ்வது எவ்வளவு பெரிய மனவேதனை என்பதை&nbsp; வார்த்தைகளால் விவரிக்க முடியாது. தனது குழந்தையை மீண்டும் அணைத்துக்கொள்ள வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன், ஜூய் சட்டத்தின் உதவியை நாடினார்.</p><p></p><p> நீதிமன்றத்தில் சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொண்டு, தனது குழந்தையைத் திரும்பப் பெறுவதற்காக போராடினார்.

இறுதியில், அவரது முயற்சிக்கு பலன் கிடைத்தது. நீதிமன்றத்தின் தலையீட்டின் மூலம், அந்த 7 மாதக் குழந்தை மீண்டும் ஜூயிடம் ஒப்படைக்கப்பட்டது.</p><p>இந்தச் சம்பவம் நமக்கு ஒரு முக்கியமான உண்மையை நினைவூட்டுகிறது. தாயன்புக்கு வயது என்ற வரம்பே கிடையாது. தாய் பதின்ம வயதுப் பெண்ணாக இருந்தாலும், முதிர்ந்த பெண்ணாக இருந்தாலும், தனது குழந்தையின் மீது கொண்ட அன்பும் பாசமும் ஒன்றுதான்.&nbsp;</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">13-year-old mother goes to court to get her 7-month-old baby back!!<br><br>This girl&#39;s name is Jui. Although Jui is 13 years old, the baby that Jui is holding in her arms and smiling sweetly in front of the camera is Jui&#39;s 7-month-old baby.<br><br>Jui married 22-year-old Shakib Mia after… <a href="https://t.co/z3A1YlG5tl">pic.twitter.com/z3A1YlG5tl</a></p>&mdash; मृदुल눈 (@shayari_in_) <a href="https://x.com/shayari_in_/status/2083064259366522892?ref_src=twsrc%5Etfw">July 31, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-01T13:58:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையின் பொலிஸ் மா அதிபர்களுக்கு அடுத்தடுத்து நடக்கும் சம்பவங்கள் : பின்னணி என்ன...!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/mysteries-behind-igp-s-of-sri-lanka-1785553806"></link>
            <id>https://tamilwin.com/article/mysteries-behind-igp-s-of-sri-lanka-1785553806</id>
            <summary type="text">இலங்கையில் அதிமுக்கிய பதவிகளில் வகித்த நீதித்துறை சார்ந்த அதிகாரிகள் குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்கள் என்பது நீதித்துறைக்கு பெரும் அச்சுறுத்தலாக மா...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் அதிமுக்கிய பதவிகளில் வகித்த நீதித்துறை சார்ந்த அதிகாரிகள் குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்கள் என்பது நீதித்துறைக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. </p><p>

கடந்த ஆட்சியாளர்களின் கீழ் பணியாற்றிய மூன்று பொலிஸ் மா அதிபர்கள் கடுமையான தண்டனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை மக்கள் மத்தியில் நீதித்துறை மீது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளன. </p><p>

அதற்கமைய முன்னாள் பொலிஸ் மா அதிபர்களான பூஜித் ஜயசுந்தர, சி.டி. விக்கிரமரத்ன, தேசபந்து தென்னகோன் ஆகியோர் அடுத்தடுத்து பொறிக்குள் சிக்கியுள்ளனர்.</p><p></p><p> </p><h2><b>

மரண தண்டனை</b></h2><p>34ஆவது பொலிஸ் மா அதிபராக இருந்த பூஜித் ஜயசுந்தரவிற்கு நேற்றையதினம் மரண தண்டனை விதித்து கொழும்பு நிரந்தர மேல் நீதிமன்றத்தினால் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0dbe544b-adbc-474a-9e18-e98ee25a80a3/26-6a6d68cc9068f.webp' /></p><p>2019 உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலை தடுக்கத் தவறிய குற்றத்திற்காக பூஜித் ஜயசுந்தரவிற்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. </p><p>

35 ஆவது பொலிஸ் மா அதிபராக பதவி வகித்த சி.டி. விக்கிரமரத்ன கடந்த வாரம் அவரின் வீட்டில் உயிரை மாய்த்துக் கொண்டார்.</p><p> தனது மெய்பாதுகாவலரின் துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டதாக பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. </p><p>

கோட்டாபய ஆட்சிக்காலத்தில் பல்வேறு அடக்குமுறைகளை மேற்கொண்டு ராஜபக்சர்களுக்கு விசுவசமாக செயற்பட்டவர்களில் இவரும் ஒருவர் ஆவார். </p><p>உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் இவருக்கும் தொடர்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகின.</p><p></p><p> </p><h3><b>

கடும் அழுத்தம் </b></h3><p>அவரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்படலாம் என்ற அச்சத்தில், மூன்றாம் தரப்பினால் கொடுக்கப்பட்ட கடும் அழுத்தம் காரணமாக இவ்வாறு உயிரை மாய்த்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0757b634-3fb3-4c5a-a2a5-0ead195a554e/26-6a6d68cd5db16.webp' /></p><p>36ஆவது பொலிஸ் மா அதிபரான தேசபந்து தென்னகோன் கைது செய்யப்பட்டு வலுகட்டாயமாக அவரின் பதறி பறிக்கப்பட்டது.</p><p>நாடாளுமன்றக் குழுவின் விசாரணையின் மூலம் பதவி நீக்கம் செய்யப்பட்டதுடன் தற்போது பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார். </p><p>

கடந்த ராஜபக்சக்களின் ஆட்சியின் போது போதைப்பொருள் உட்பட பல்வேறு குற்றச்செயல்களுக்கு உடந்தையாக இவர் செயற்பட்டார் என்ற குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.</p><p>இந்நிலையில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள பூஜித் ஜயசுந்தர அடிப்படையில் நல்ல மனிதர் என்ற போதிலும், ஆட்சியாளர்களுக்கு விசுவாசமாக செயற்பட்டு இன்று சிறைக் கைதியாக மாறியுள்ளதாக சமூக வலைத்தளங்களில் சிலர் கருத்து மோதலில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. </p><p>பொம்மைகளாக செயற்பட்டவர்கள் இன்று தண்டிக்கப்பட்டுள்ளனர். எனினும் பொம்மைகளை ஆட்டுவித்த வித்தைக்காரர்கள் எப்போது தண்டிக்கப்படுவார்கள் என நாட்டு மக்கள் காத்திருக்கின்றனர்.&nbsp;</p><p></p><p></p><p> 
 </p>]]></content>
            <updated>2026-08-01T13:55:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[காதலர் போட்டோவை வெளியிட்ட நடிகை மிர்னாலினி ரவி! குவியும் வாழ்த்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/mirnalini-ravi-confirm-relationship-mahavishnu-1785592371"></link>
            <id>https://cineulagam.com/article/mirnalini-ravi-confirm-relationship-mahavishnu-1785592371</id>
            <summary type="text">மிர்னாலினி ரவி டப்ஸ்மாஷ், டிக் டாக் போன்ற தளங்களில் வீடியோ வெளியிட்டு பிரபலம் ஆகி, அந்த புகழை கொண்டு சினிமாவில் நடிக்க வந்தவர்.சூப்பர் டீலக்ஸ், எனிமி,...</summary>
            <content type="html"><![CDATA[<p>மிர்னாலினி ரவி டப்ஸ்மாஷ், டிக் டாக் போன்ற தளங்களில் வீடியோ வெளியிட்டு பிரபலம் ஆகி, அந்த புகழை கொண்டு சினிமாவில் நடிக்க வந்தவர்.</p><p>சூப்பர் டீலக்ஸ், எனிமி, கோப்ரா, ரோமியோ என பல படங்களில் அவர் நடித்து இருக்கிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4260d871-e4d9-4705-8829-83d28a0cdcd6/26-6a6dfa36d5d78.webp' /></p><p>
</p><h2>காதலர் போட்டோ
</h2><p>இந்நிலையில் தனது காதலர் போட்டோவை தற்போது மிர்னாலினி வெளியிட்டு இருக்கிறார். மஹாவிஷ்ணு என்பவரை தான் மிர்னாலினி காதலிக்கிறாராம்.
</p><p>7 வருடங்கள் நட்பாக இருந்த நிலையில் தற்போது அது காதலாக மாறி இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
</p><p>இதற்கு முன் பல சர்ச்சைகளில் சிக்கி இருக்கும் பரம்பொருள் அறக்கட்டளை நிறுவனர் மஹாவிஷ்ணுவை தன மிர்னாலினி காதலிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-01T13:53:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[தினமும் ஒரு கொய்யாப்பழம் சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/health-benefits-of-eating-guava-every-day-1785499506"></link>
            <id>https://manithan.com/article/health-benefits-of-eating-guava-every-day-1785499506</id>
            <summary type="text">பழங்கள் உடலுக்கு தேவையான பல்வேறு ஊட்டச்சத்துக்களை வழங்குகின்றன. 

அவற்றில் விலைக்குறைவாகவும், அதிக சத்துக்கள் கொண்டதாகவும் இருக்கும் பழம் கொய்யாப்பழ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பழங்கள் உடலுக்கு தேவையான பல்வேறு ஊட்டச்சத்துக்களை வழங்குகின்றன.</p><p> 

அவற்றில் விலைக்குறைவாகவும், அதிக சத்துக்கள் கொண்டதாகவும் இருக்கும் பழம் கொய்யாப்பழம்.
</p><p>
கொய்யாப்பழத்தில் வைட்டமின் சி, நார்ச்சத்து, பொட்டாசியம், ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், வைட்டமின் ஏ, வைட்டமின் பி6 மற்றும் ஃபோலேட் போன்ற சத்துக்கள் அதிகம் உள்ளன.
</p><p>தினமும் ஒரு கொய்யாப்பழம் சாப்பிடுவது பல்வேறு உடல்நல நன்மைகளை அளிக்கும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.</p><h3>வைட்டமின் சி நிறைந்தது</h3><p>

கொய்யாப்பழத்தில் ஆரஞ்சு பழத்தை விட சுமார் 4 மடங்கு அதிக வைட்டமின் சி உள்ளது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், இரத்த நாளங்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்கவும் உதவுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/11b906e8-0e78-42ef-bf61-df114762af18/26-6a6c8f7479770.webp' />&nbsp;&nbsp;</p><p>
</p><h3>
அசிடிட்டி குறையும்
</h3><p>
அசிடிட்டி மற்றும் நெஞ்செரிச்சல் பிரச்சனையை குறைக்க கொய்யாப்பழம் உதவுகிறது. இதில் உள்ள நார்ச்சத்து செரிமானத்தை மேம்படுத்தி மலச்சிக்கலைத் தடுக்கிறது.</p><h3>

இரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் இருக்கும்
</h3><p>
கொய்யாப்பழத்தில் உள்ள பொட்டாசியம், இரத்த அழுத்தத்தை சீராக பராமரிக்க உதவுகிறது. உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் இதை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/18192357-1117-46c2-b76c-3622b55ac444/26-6a6df8c27ec88.webp' />&nbsp;<br></p><p>
</p><h3>
சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது
</h3><p>
கொய்யாப்பழத்தின் கிளைசீமிக் இன்டெக்ஸ் குறைவாக இருப்பதால், இரத்த சர்க்கரை அளவு திடீரென உயர்வதைத் தடுக்க உதவுகிறது.
</p><h3>
இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கும்</h3><p>

இதில் உள்ள கரையக்கூடிய நார்ச்சத்து கெட்ட கொழுப்பைக் குறைக்க உதவுகிறது. ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் இதய செல்களை சேதத்திலிருந்து பாதுகாத்து, இதய நோய் அபாயத்தையும் குறைக்க உதவுகின்றன.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/19da3275-2b74-4102-9ddc-a9b7c39171a5/26-6a6df8c348182.webp' /><br></p>]]></content>
            <updated>2026-08-01T13:47:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[நடிகை காவியா அறிவுமணியின் சேலையில் மயக்கும் ரீல்ஸ் வீடியோ..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/serial-actress-kaaviya-arivumani-reels-video-post-1785587044"></link>
            <id>https://viduppu.com/article/serial-actress-kaaviya-arivumani-reels-video-post-1785587044</id>
            <summary type="text">காவியா அறிவுமணிவிஜய் டிவியில் மூலம் பிரபலமானவர் வரிசையில் இருப்பவர் நடிகை காவியா அறிவுமணி. இவர் பாரதி கண்ணம்மா முதல் சீசனில் பாரதியின் தங்கையாக காவியா...</summary>
            <content type="html"><![CDATA[<h2>காவியா அறிவுமணி</h2><p>விஜய் டிவியில் மூலம் பிரபலமானவர் வரிசையில் இருப்பவர் நடிகை காவியா அறிவுமணி. இவர் பாரதி கண்ணம்மா முதல் சீசனில் பாரதியின் தங்கையாக காவியா ரோலில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bd6d51fa-068a-4e08-8a55-cf8cd33820bb/26-6a6de5667baa7.webp' /></p><p>
</p><p>
இதையடுத்து பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் விஜே சித்ரா மறைவுக்கு பின் அந்த ரோலில் நடிக்க ஆரம்பித்தார் காவியா அறிவுமணி.</p><p> அதன்பின் முல்லை ரோலில் இருந்து விலகி வெள்ளித்திரை வாய்ப்பினை பெற்றார் காவியா அறிவுமணி. மிரள், ரிப்பப்பரி என்ற படங்களில் நடித்துள்ளார்.</p><p>
கவின், நயன் தாரா நடிப்பில் உருவாகியுள்ள HI படத்தில் முக்கிய ரோலில் நடித்துள்ளார் காவியா. இணையத்தில் ஆக்டிவாக இருந்து வரும் காவியா, தற்போது சேலையில் எடுத்த ரீல்ஸ் வீடியோவை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.</p><p><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/reel/Dbf0A1HSJY9/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/reel/Dbf0A1HSJY9/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/reel/Dbf0A1HSJY9/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by Ar.Kaavya🌟 (@kaavyaarivumanioffl)</a></p></div></blockquote> <script async src="//www.instagram.com/embed.js"></script></p>]]></content>
            <updated>2026-08-01T13:45:00+00:00</updated>
        </entry>
    </feed>
