<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-08-10T07:09:18+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[22ஆவது அரசியலமைப்பு திருத்தம் : சட்ட நடவடிக்கை எடுக்க தயாராகும் எதிர்க்கட்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/legal-action-against-22nd-constitutional-amendment-1786342352"></link>
            <id>https://tamilwin.com/article/legal-action-against-22nd-constitutional-amendment-1786342352</id>
            <summary type="text">22 ஆவது அரசியலமைப்புத் திருத்த வரைவு சட்டமூலத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி ஆலோசனைகளில் ஈட...</summary>
            <content type="html"><![CDATA[<p>22 ஆவது அரசியலமைப்புத் திருத்த வரைவு சட்டமூலத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி ஆலோசனைகளில் ஈடுபட்டுள்ளது.
</p><p>
இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் தொடர்ச்சியான எதிர்ப்புகளுக்கு மத்தியில், குறித்த அரசியலமைப்பு திருத்த வரைவு சட்டமூலம் அரசாங்க வர்த்தமானியில் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
</p><h2>அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு எதிராக</h2><p>
இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் மத்தும பண்டார,&nbsp;வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள இந்தத் திருத்தத்தை தமது கட்சி தொடர்ச்சியாக எதிர்த்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2b1c5523-add8-48fc-9314-541b5c8b0bfa/26-6a7971eebcec2.webp' /></p><p>
அரசாங்கத்தின் இந்த தீர்மானத்திற்கு எதிராக மக்கள் எதிர்ப்பைக் கட்டியெழுப்பும் வகையில் அரசியல் பிரசாரங்கள் மற்றும் போராட்டங்களை ஏற்பாடு செய்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>அடுத்தகட்டமாக என்ன சட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பது குறித்து எமது சட்டத்தரணிகளுடன் தொடர்ச்சியாக கலந்தாலோசித்து வருகிறோம் என்றும் தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-10T07:04:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[2026 உயர் தரப் பரீட்சை பெறுபேறுகள் எப்போது வெளியிடப்படும் பரீட்சை ஆணையாளர் நாயகம் தகவல்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/al-exam-results-by-end-of-this-year-1786345285"></link>
            <id>https://tamilwin.com/article/al-exam-results-by-end-of-this-year-1786345285</id>
            <summary type="text">2026 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் முடிவுகளை இந்த ஆண்டு இறுதிக்குள் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும் என பரீட்சை ஆணையாளர் நாயக...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் முடிவுகளை இந்த ஆண்டு இறுதிக்குள் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும் என பரீட்சை ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார்.
</p><p>இன்று காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.</p><p>
விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணிகள் செப்டம்பர் 3 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாகக் குறிப்பிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3dd71553-00b1-436a-972d-f6c93d768358/26-6a7977475851f.webp' /></p><p> 
2026 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை இன்று நாடு முழுவதும் உள்ள 2,532 பரீட்சை மையங்களில் ஆரம்பமானது. இது செப்டம்பர் 5 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
</p><p>இம்முறை 264,496 பாடசாலை விண்ணப்பதாரர்கள் மற்றும் 107,814 தனிப்பட்ட விண்ணப்பதாரர்கள் உட்பட மொத்தம் 372,310 பரீட்சார்த்திகள் தோற்றுகின்றனர்.
பரீட்சை மண்டபங்களுக்குள் கைப்பேசிகள், ஸ்மார்ட் கடிகாரங்கள், மின்னணு சாதனங்கள் அல்லது குறிப்புகளை எடுத்து வரத் தடை விதிக்கப்பட்டுள்ளது. </p><p>மண்டபத்தினுள் பேசுதல், விடைத்தாள்களைப் பரிமாறிக்கொள்ளுதல் அல்லது இடையூறு விளைவித்தல் போன்ற முறைகேடுகளில் ஈடுபடும் பரீட்சார்த்திகளுக்கு எதிராகப் பரீட்சை முடிவுகளை இடைநிறுத்துவது உள்ளிட்ட கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.</p><p>பரீட்சை கடமையிலுள்ள அதிகாரிகளில், மண்டப மேலதிகாரிகள் மற்றும் மேலதிக உதவி மேலதிகாரிகளுக்கு மட்டுமே கைப்பேசியைப் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கடமையில் தவறும் ஊழியர்கள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
</p><p>நாட்டின் எந்தவொரு பகுதியிலும் இதுவரை சீற்றமான காலநிலை அல்லது அவசரச் சம்பவங்கள் எதுவும் பதிவாகவில்லை எனவும், அசாதாரண சூழ்நிலைகள் உருவானால் உடனடியாகச் செயல்பட அனைத்து நிறுவனங்களும் தயார் நிலையில் உள்ளதாகவும் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-10T07:01:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவில் காதலியை கொலை செய்து தப்பி ஓடிய இந்தியர்; ஜேர்மனியில் மடக்கிய FBI அதிகாரிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/indian-man-arrested-germany-murder-girl-friend-us-1786342395"></link>
            <id>https://canadamirror.com/article/indian-man-arrested-germany-murder-girl-friend-us-1786342395</id>
            <summary type="text">&amp;nbsp;அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தில் உள்ள பல்கலைக்கழக மாணவியான தனது காதலியைப் படுகொலை செய்துவிட்டு, தாயகமான இந்தியாவிற்குத் தப்பியோட முயன்ற 20 வயது...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தில் உள்ள பல்கலைக்கழக மாணவியான தனது காதலியைப் படுகொலை செய்துவிட்டு, தாயகமான இந்தியாவிற்குத் தப்பியோட முயன்ற 20 வயது இந்திய இளைஞர் ஜெர்மனி தலைநகர் பெர்லின் விமான நிலையத்தில் வைத்து சர்வதேசக் காவல் துறை மற்றும் FBI&nbsp; அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். </p><p>

கைது செய்யப்பட்ட வாலிபர் வருண் பேட்சிஹாரி (என அடையாளம் காணப்பட்டுள்ளார்.


அமெரிக்காவின் டியூக்சன் (Tucson) நகரில் உள்ள அரிசோனா பல்கலைக்கழகத்தில் வணிகப் பகுப்பாய்வு (Business Analytics) படித்து வந்த வருண் பேட்சிஹாரியும், 19 வயதான ஜூலிசா ரூபி சலசார் (Julissa Rubi Salazar) என்ற மாணவியும் காதலித்து வந்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/23535d90-4177-4ed6-b6ff-82f8091241e0/26-6a796bfd25453.webp' /></p><h2>ஜேர்மனியில் மடக்கிய FBI அதிகாரிகள்</h2><p> </p><p>

வருணின் வன்முறைப் போக்கால் அதிருப்தியடைந்த ஜூலிசா, அவருடனான உறவை முறித்துக் கொள்ளத் திட்டமிட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில், ஜூலிசாவை வருண் கழுத்தை நெரித்துக் கொடூரமாகப் படுகொலை செய்துள்ளார்.</p><p>

கொலைக்குப் பிறகு தப்பிப்பதற்காக, ஜூலிசாவின் செல்போன் மற்றும் வங்கிக் கார்டுகளைத் திருடிய வருண், கொலையை மறைக்க ஜூலிசாவின் தாயாருக்குத் தவறான குறுஞ்செய்திகளையும் அனுப்பியுள்ளார். </p><p>

தொடர்ந்து ஜூலிசாவின் பணத்தைப் பயன்படுத்தி டியூக்சன் சர்வதேச விமான நிலையத்திற்குச் சென்று, அங்கிருந்து ஹூஸ்டன் வழியாக ஜெர்மனிக்கு விமானத்தில் ஏறியுள்ளார். 

ஜெர்மனியில் இருந்து இந்தியாவிற்குப் பறக்க அவர் திட்டமிட்டிருந்ததாகப் புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p>

இதனிடையே ஜூலிசாவின் உடலைக் கைப்பற்றிய டியூக்சன் காவல் துறையினர், வருண் மீது முதல் நிலைக்கொலை (First-degree murder) மற்றும் கடத்தல் வழக்குப்பதிவு செய்து சர்வதேச அளவில் தேடுதல் எச்சரிக்கை விடுத்தனர்.
</p><p>
 FBI&nbsp; அமைப்பும் ஜெர்மன் அதிகாரிகளும் இணைந்து செயல்பட்டதால், ஜெர்மனியில் விமானம் தரையிறங்கிய உடனேயே வருண் மடக்கிப் பிடிக்கப்பட்டார்.

 தற்போது ஜெர்மனி சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவரை விரைவில் அமெரிக்காவிற்கு நாடுகடத்தி வழக்கு விசாரணை நடத்த அரிசோனா காவல் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.</p>]]></content>
            <updated>2026-08-10T07:01:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[தலையில் பொடுகு இருப்பவர்கள் எண்ணெய் வைக்கலாமா? சந்தேகத்திற்கான தீர்வு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/can-we-apply-oil-when-we-have-dandruff-1786279539"></link>
            <id>https://manithan.com/article/can-we-apply-oil-when-we-have-dandruff-1786279539</id>
            <summary type="text">Why Oiling Can Hurt Your Scalp: தலையில் பொடுகு ஏற்பட்டு விட்டால் நிச்சயமாக அதிக அளவில் முடி உதிர்தல் உண்டாக்கும். அந்த பொடுகை கட்டுப்படுத்தவும் அதிக ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>Why Oiling Can Hurt Your Scalp: தலையில் பொடுகு ஏற்பட்டு விட்டால் நிச்சயமாக அதிக அளவில் முடி உதிர்தல் உண்டாக்கும். அந்த பொடுகை கட்டுப்படுத்தவும் அதிக முடி உதிர் தலை கட்டுப்படுத்தவும் தலையில் பலரும் எண்ணெய் தேய்ப்பது உண்டு. </p><p>அதாவது முடி வறட்சியாக இருந்தாலும் பொடுகு மற்றும் முடி உதிர்தல் வரும் என்ற ஒரு செய்தி உள்ளது. உண்மையில் பொடுகு அதிகம் இருக்கின்ற வேளையில் நாம் எண்ணெய் தேய்க்கலாமா அதை பற்றி பார்ப்போம்.
</p><p> பொடுகு என்பது உச்சந்தலையில் உருவாகும் மலாசீசியா என்ற ஈஸ்ட் புஞ்சை என்றும் அது உச்சம் தலையில் உள்ள எண்ணெய்யை தான் உணவாக உட்கொள்கிறது என்றும் கூறப்படுகிறது. </p><p>எனவே பொடுகு அதிகம் இருக்கின்ற வேளையில் எண்ணெய் தடவுவது அந்த நிலையை இன்னும் தீவிரமடைய செய்யலாம். அதனால் நீங்கள் எண்ணெயை தலையில் தடவுவதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும் என்பது கிடையாது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3a6a7760-bd49-47fa-b4de-0538ce509b05/26-6a787674b83d4.webp' /></p><p></p><p> </p><p>குறிப்பிட்ட சில எண்ணெய் தேய்ப்பதை நாம் தவிர்த்து விடலாம். அதாவது அதிக அடர்த்தி கொண்ட தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய் போன்றவற்றை நாம் தவிர்ப்பது நல்லது. </p><p>மேலும், உங்களுடைய தலை முடி வறட்சியாக இருப்பது போல் நீங்கள் உணர்ந்தால். தலைக்கு குளிப்பதற்கு முன்பாக சிறிது எண்ணெய் தடவி பிறகு குளிக்கலாம். தொடர்ந்து தலையில் நீண்ட நேரம் எண்ணெய் வைத்திருப்பதை தவிர்ப்பது நல்லது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8fd4e85d-ed9a-4115-8358-c09d622fa882/26-6a78767580ba2.webp' /></p><p> </p><p>மேலும், பொடுகு வருகின்ற நேரத்தில் எதனால் பொடுகு வருகிறது என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். தலையில் அதிக அளவு அழுக்கு சேர்ந்தாலோ சரியாக தலை முடியை பராமரிக்காமல் இருந்தாலும் இவ்வாறான சிக்கல்கள் வரலாம். </p><p>பொடுகை குறைக்கும் அதிக இரசாயனம் இல்லாத தயாரிப்புகளை தேர்வு செய்து பயன்படுத்துவது நல்லது. சில முக்கியமான பொருட்களை பொடுகு நீக்குவதற்காக பயன்படுத்தும் பொழுது மருத்துவர் அணுகி ஆலோசனை பெற்று பயன்படுத்துவது நன்மை தரும்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-10T07:00:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[நடிகருடன் Living In Reationல் உள்ள பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் நடிகை... பிரபலம் ஒபன் டாக்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/pandianstores2-actress-livingin-relation-anchor-1786339682"></link>
            <id>https://cineulagam.com/article/pandianstores2-actress-livingin-relation-anchor-1786339682</id>
            <summary type="text">பாண்டியன் ஸ்டோர்ஸ் 2பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் கடந்த வாரம் ராஜி-கதிர் கர்ப்பமாக இருக்கும் கதைக்களம் ஒளிபரப்பானது. ஒரு சந்தேகத்தில் ராஜி கதிரை Preg...</summary>
            <content type="html"><![CDATA[<h2>பாண்டியன் ஸ்டோர்ஸ் 2</h2><p>பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் கடந்த வாரம் ராஜி-கதிர் கர்ப்பமாக இருக்கும் கதைக்களம் ஒளிபரப்பானது.</p><p> ஒரு சந்தேகத்தில் ராஜி கதிரை Pregnancy Kit வாங்கி வர சொல்லியுள்ளார். அந்த நேரம் பழனி கதிரை கிட்டுடன் காண அவர்களே கதிர்-ராஜி இருவரும் கர்ப்பமாக இருக்கிறார்கள் என்ற செய்தி இரு வீட்டினருக்கும் கூறிவிட்டார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/18aeaf00-9e3a-4dfc-859b-0eaf677e4190/26-6a7965302d7ef.webp' /></p><p> </p><p>அதைக்கேட்டதும் இரு குடும்பமும் செம சந்தோஷப்பட்டார்கள், அதே வேகத்தில் ராஜியை மருத்துவமனை அழைத்து சென்றார்கள். அங்கு மருத்துவர் ராஜி கர்ப்பமாக இல்லை என கூறியதும் அனைவரும் வருத்தப்பட்டார்கள்.
</p><p>இந்த வாரம் கதைக்களம் எப்படி இருக்கும் என பொறுத்திருந்து காண்போம்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6ca3fa5e-2a62-40a6-a71f-64b2e9f8d3df/26-6a7965311618d.webp' /></p><h2>சீரியல் நடிகை
</h2><p>இந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் பாண்டியனின் மூத்த மகள் கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் ஹாசினி. இவர் பிரபல நடிகர் ஆதவனுடன் Live In Relationshipல் உள்ளாராம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ec1ac381-d8c0-4957-b19d-d8775e334790/26-6a796632de8cf.webp' /></p><p> </p><p>நடிகர் ஆதவன் ஒரு பேட்டியில், எனக்கு திருமணம் ஆகி 2 மகள்கள் இருக்கிறார்கள், என் மனைவியை பிரிந்துவிட்டேன். இப்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் நடிகை ஹாசினியுடன் Living Togetherல் இருக்கேன்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/32e75f79-50ed-45d9-aae3-acc8967453ea/26-6a796633b9b5c.webp' /></p><p> </p><p>அதை சொல்ல எனக்கு எந்த வெட்கமும் இல்லை, இது என் பெரிய பொண்ணுக்கும் தெரியும். விரைவில் திருமணம் செய்தால் நிச்சயம் அறிவிப்பேன் என கூறியுள்ளார்.</p>]]></content>
            <updated>2026-08-10T06:59:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[காதல் முறிவு; யுவதியின் நிர்வாண புகைப்படங்களை வெளியிடுவதாக அச்சுறுத்திய கல்லூரி ஆசிரியர்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/breakup-teacher-threatens-young-woman-nude-photos-1786338300"></link>
            <id>https://jvpnews.com/article/breakup-teacher-threatens-young-woman-nude-photos-1786338300</id>
            <summary type="text">&amp;nbsp;இளம் பெண்ணொருவரின் நிர்வாண புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை இணையத்தில் வெளியிடுவதாகக் கூறி அச்சுறுத்தியதாகக் கூறப்படும் காவி உடை அணிந்த நபர் ஒருவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;இளம் பெண்ணொருவரின் நிர்வாண புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை இணையத்தில் வெளியிடுவதாகக் கூறி அச்சுறுத்தியதாகக் கூறப்படும் காவி உடை அணிந்த நபர் ஒருவரை உடுகம பொலிஸார் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
 கைது செய்யப்பட்டவர், கனிஷ்ட கல்லூரி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றும் 33 வயதுடைய நபர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/786d6188-977b-42ac-b348-2d66ba1b01f6/26-6a795bfe1183f.webp' /></p><p></p><h2>&nbsp;காதல் உறவு&nbsp;&nbsp;முறிவு</h2><p>

குறித்த இளம் பெண்ணுடன் காதல் உறவில் இருந்த காலப்பகுதியில், இருவரும் கையடக்கத் தொலைபேசி ஊடாக நிர்வாண காணொளிகளைப் பரிமாறிக் கொண்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>

எனினும், கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் இருவருக்கும் இடையிலான காதல் உறவு முடிவடைந்துள்ளது.</p><p></p><p>
</p><p>
இதனையடுத்து, தன்னிடம் உள்ள குறித்த பெண்ணின் நிர்வாண புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை சமூக ஊடகங்களில் வெளியிடுவதாகக் கூறி, அவர் தொடர்ந்து மிரட்டல் விடுத்ததாக இளம் பெண் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.</p><p>

 பெண்ணின் முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை முன்னெடுத்த உடுகம பொலிஸார், சந்தேகநபரை கைது செய்துள்ளனர்.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-10T06:58:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[பல வருடங்களுக்கு பின்னர் துணுக்காய் - முல்லைத்தீவு அரச பேருந்து சேவை மீண்டும் ஆரம்பம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/thunukkai-mullaitivu-govt-bus-service-resumes-1786342894"></link>
            <id>https://ibctamil.com/article/thunukkai-mullaitivu-govt-bus-service-resumes-1786342894</id>
            <summary type="text">துணுக்காயிலிருந்து முல்லைத்தீவு வரையான அரச பேருந்து சேவை இன்று (10.08.2026)
முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
யுத்தத்திற்...</summary>
            <content type="html"><![CDATA[<p>துணுக்காயிலிருந்து முல்லைத்தீவு வரையான அரச பேருந்து சேவை இன்று (10.08.2026)
முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>
யுத்தத்திற்குப் பின்னர் துணுக்காயிலிருந்து முல்லைத்தீவு வரை
ஆரம்பிக்கப்பட்டிருந்த அரச பேருந்து சேவை, பல ஆண்டுகளுக்கு முன்னர்
இடைநிறுத்தப்பட்டிருந்தது. </p><p>பேருந்து சேவை நிறுத்தப்பட்டதனால் குறித்த பிரதேசத்தில் வசிக்கும் பொதுமக்கள்
நீண்டகாலமாக போக்குவரத்து தொடர்பான பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வந்தனர்.</p><p></p><h2>முன்வைக்கப்பட்ட கோரிக்கை</h2><p>

பொதுமக்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு அமைவாக, துணுக்காய் பிரதேச
ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்கள் மற்றும் மாவட்ட மட்டக் கூட்டங்களில்,
துணுக்காயிலிருந்து முல்லைத்தீவு வரையான பேருந்து சேவையை மீண்டும்
ஆரம்பிப்பதன் அவசியம் தொடர்பில் தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டு வந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/00a1ef3a-41fc-4064-88de-516ad528dfc5/26-6a79750d16337.webp' /></p><p>

இதன் பயனாக, குறித்த பேருந்து சேவை இன்று முதல் மீண்டும் பொதுமக்களின்
பயன்பாட்டிற்காக சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளது.</p><p></p><h2>&nbsp;நிகழ்வில் கலந்துகொண்டோர்</h2><p>
</p><p>அதற்கமைய காலை 6.00 மணிக்கு துணுக்காயிலிருந்து புறப்படும் பேருந்து காலை 6.10 மணிக்கு மல்லாவியையும் காலை 7.00 மணிக்கு மாங்குளத்தையும் செ்னறடைந்து காலை 7.10 மணிக்கு மாங்குளத்திலிருந்து முல்லைத்தீவு நோக்கிப் புறப்படும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1882e0d9-4432-49fc-aa95-9f3d0f2a6c5a/26-6a79750c174e1.webp' /></p><p>

மேலும், குறித்த பேருந்து முல்லைத்தீவிலிருந்து மாலை 4.15 மணிக்கு மீண்டும்
துணுக்காய் நோக்கிப் புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இன்று நடைபெற்ற பேருந்து சேவை ஆரம்ப நிகழ்வில், வன்னி மாவட்ட நாடாளுமன்ற
உறுப்பினரும் துணுக்காய் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான செ.திலகநாதன், துணுக்காய் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டனர்.
</p><p></p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-10T06:57:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[எனது தாயார் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்; இயக்குனர் ஜேசன் சஞ்சய் நெகிழ்ச்சி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/cm-vijay-jason-sanjay-talk-sangeetha-roots-jaffna-1786345121"></link>
            <id>https://jvpnews.com/article/cm-vijay-jason-sanjay-talk-sangeetha-roots-jaffna-1786345121</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;நடிகரும் தமிழ் நாட்டின் முதலமைச்சருமான விஜய்யின் மகன்&amp;nbsp;இயக்குனர் ஜேசன் சஞ்சய், தனது இலங்கை பூர்வீகம் மற்றும் யாழ்ப்பாணத்துடனான தொடர்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;நடிகரும் தமிழ் நாட்டின் <a href="https://jvpnews.com/article/jason-sanjay-emotional-about-his-father-cm-vijay-1785559667" target="_blank">முதலமைச்சருமான விஜய்யின் மகன்&nbsp;இயக்குனர் ஜேசன் சஞ்சய்</a>, தனது இலங்கை பூர்வீகம் மற்றும் யாழ்ப்பாணத்துடனான தொடர்பு குறித்தும் நேர்காணலில் நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார்.
</p><p>
நேர்காணல் ஒன்றில் பேசிய இயக்குனர் ஜேசன், தனது தாயார் இலங்கையின் வடக்கே உள்ள யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர் என்றும், குடும்பத்தினர் வெளிநாட்டில் குடியேறும் முன்பு அவர் அங்கேயே வளர்ந்தவர் என்றும் கூறினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/711527ed-dbcf-45f5-82d0-a319af02cb49/26-6a7976a2d23c8.webp' /></p><h2>&nbsp;எதிர்காலத்தில் இலங்கையில் படப்பிடிப்பு</h2><p>
</p><p>
"என் அம்மா யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர், அதாவது இலங்கையின் வடக்குப் பகுதியைச் சேர்ந்தவர். அவர் அங்கு பிறந்து வளர்ந்தார்; பின்னர் அவர்கள் வெளிநாட்டில் குடியேறினர்," என்று அவர் குறிப்பிட்டார்.</p><p></p><p>
</p><p>
இலங்கைக்குச் செல்லும்போது, ​​தனது தாத்தாவின் சொத்துக்களில் ஒன்று தனது குடும்பத்தின் கடந்த காலத்துடனான ஒரு முக்கியத் தொடர்பை நினைவூட்டும் இடமாகத் திகழ்வதாக இயக்குனர் ஜேசன் சஞ்சய்&nbsp; கூறினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/63aa0c9d-07e7-4cc8-94c1-36c8858cb4f7/26-6a7976a38731f.webp' /></p><p>
</p><p>
மேலும், தனது 'சிக்மா' (Sigma) திரைப்படத் திட்டத்திற்காக இலங்கையை ஒரு படப்பிடிப்புத் தளமாகக் கருதியதாகவும், அதற்கான இடங்களைப் பார்வையிட படக்குழுவினர் அங்கு சென்றிருந்ததாகவும் இயக்குனர் ஜேசன் சஞ்சய்&nbsp; தெரிவித்தார்.</p><p></p><p> </p><p>இருப்பினும், அந்தத் திட்டம் கைகூடவில்லை.

எனினும் எதிர்காலத்தில் இலங்கையில் படப்பிடிப்பு நடத்தி, அந்நாட்டின் அழகை வெளிப்படுத்த விரும்புவதாகவும் இயக்குனர் ஜேசன் சஞ்சய்&nbsp; கூறியுள்ளார்.</p><p>முதலமைச்சர்&nbsp; விஜயின் மனைவி&nbsp; சங்கீதா,&nbsp; &nbsp;யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக&nbsp; கொண்ட லண்டன் வாழ்&nbsp; புலம்பெயர் தமிழர் என்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-08-10T06:56:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[2026 உயர் தர பரீட்சை பெறுபெறுகள் தொடர்பில் வெளியான தகவல்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/al-exam-results-by-the-end-of-this-year-1786343691"></link>
            <id>https://ibctamil.com/article/al-exam-results-by-the-end-of-this-year-1786343691</id>
            <summary type="text">
2026 க.பொ.த உயர் தரப் பரீட்சையின் பெறுபேறுகள் இந்த ஆண்டு இறுதிக்குள் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி தெ...</summary>
            <content type="html"><![CDATA[<p>
2026 க.பொ.த உயர் தரப் பரீட்சையின் பெறுபேறுகள் இந்த ஆண்டு இறுதிக்குள் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி தெரிவித்துள்ளார்.
</p><p>
உயர் தரப் பரீட்சை ஆரம்பமான நிலையில், இன்று காலை (10) நடைபெற்ற ஊடக சந்திப்பில் பேசிய ஆணையாளர் நாயகம், விடைத்தாள் திருத்தும் பணி செப்டம்பர் 03 ஆம் திகதி முதல் தொடங்கும் எனக் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>பரீட்சை ஆரம்பம்</h2><p>

இதன்படி, 2026 ஆம் ஆண்டுக்கான உயர் தரப் பரீட்சை இன்று (10) தொடங்கியது. அதன்படி பரீட்சையான நாடு முழுவதும் உள்ள 2,532 மையங்களில் செப்டம்பர் 05 ஆம் திகதி வரை நடைபெற உள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/04a8196a-ed93-4d90-b2cb-5c556d238821/26-6a7975f855443.webp' /></p><p>
</p><p>
அந்தவகையில், 264,496 பாடசாலை மாணவர்கள் மற்றும் 107,814 தனியார் பரீட்சார்த்திகள் உட்பட மொத்தம் 372,310 மாணவர்கள் இந்த பரீட்சையில் பங்கேற்றுள்ளனர்.</p><p>

இந்நிலையில், நாடு முழுவதும் பரீட்சை திட்டமிட்டபடி தொடங்கியதாகவும், இதுவரை எந்தப் பிரச்சினைகளும் ஏற்படவில்லை என்றும் பரீட்சைகள் ஆணையர் நாயகம் இந்திகா குமாரி குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-10T06:55:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[தென்னிலங்கை அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய அநுரவின் தீர்மானம்.. ஜி.எல். பீரிஸ் விடுத்த பகிரங்க சவால்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/22nd-amendment-npp-government-g-l-peiris-1786342064"></link>
            <id>https://tamilwin.com/article/22nd-amendment-npp-government-g-l-peiris-1786342064</id>
            <summary type="text">உயர் நீதிமன்றம் மற்றும் மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பது, நாட்டில் முடங்கியுள்ள 1.1 மில்லியனுக்கும் அதிகமான வழக்குகளை...</summary>
            <content type="html"><![CDATA[<p>உயர் நீதிமன்றம் மற்றும் மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பது, நாட்டில் முடங்கியுள்ள 1.1 மில்லியனுக்கும் அதிகமான வழக்குகளை விரைவாக முடிப்பதற்கே என்ற அரசாங்கத்தின் கூற்றை நிரூபித்துக் காட்டுமாறு முன்னாள் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார் ஜி.எல்.பீரிஸ் சவால் விடுத்துள்ளார்.</p><p>கண்டி மல்வத்து மற்றும் அஸ்கிரிய மகாநாயக்க தேரர்களைச் சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே முன்னாள் வெளியுறவு அமைச்சரான ஜி.எல்.பீரிஸ் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>இதன்போது அவர், "அரசாங்கம் நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் குறிப்பிடும் 1.1 மில்லியன் வழக்குகளில், மேல் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள் வெறும் 1 சதவீதம் மாத்திரமேயாகும்.</p><h2>1 வீத வழக்குகள்..&nbsp;</h2><p> </p><p>இந்த உண்மையைத் மறைத்து தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தொடர்ந்தும் அப்பட்டமான பொய்களைக் கூறி வருகின்றது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a52a5d38-1ec7-4e7c-a16d-ad692ed73902/26-6a7974260f78f.webp' /></p><p> </p><p>மேலும், நீதிமன்ற வழக்குகளின் தாமதம் குறித்து அரசாங்கத்திற்கு உண்மையிலேயே அக்கறை இருந்திருந்தால், உயர் நீதிமன்றம் மற்றும் மேல்முறையீட்டு நீதிமன்றங்களில் காலியாக உள்ள 8 நீதிபதி இடங்களை இந்நேரம் நிரப்பியிருக்கும்.</p><p>அதனைச் செய்யாமல் 22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தைக் கொண்டுவர முற்படுவது அவர்களின் உண்மையான நோக்கத்தை வெளிப்படுத்தியுள்ளது.</p><p>
</p><p>
முன்மொழியப்பட்டுள்ள 22ஆவது திருத்தச் சட்ட மூலத்தின்படி, உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது 65 இலிருந்து 67 ஆகவும், மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது 63 இலிருந்து 65 ஆகவும் உயர்த்தப்படவுள்ளது. </p><p>அத்துடன் தலைமை நீதிபதி 67 வயதை அடைந்தவுடன் அல்லது 6 ஆண்டுகள் பதவிக் காலத்தை நிறைவு செய்தவுடன் ஓய்வு பெற வேண்டும் என முன்மொழியப்பட்டுள்ளது.</p><p></p><h2>அரசாங்கத்தின் திட்டம்..&nbsp;</h2><p> நீதித்துறையை நிறைவேற்று அதிகாரத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதே இந்த 22ஆவது திருத்தத்தின் உண்மையான நோக்கமாகும். இது ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்றத்தின் பதவிக் காலத்தை நீடிப்பதற்கான முதற் படி.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/91d29dfc-7d50-4c73-85bb-1a3cf67553c6/26-6a79772c3d7fe.webp' /></p><p>வர்த்தமானியில் வெளியிடப்பட்ட இரண்டு வாரங்களுக்குள் இந்தத் திருத்தச் சட்டம் தொடர்பில் உயர் நீதிமன்றத்தில் சவால் செய்யவுள்ளேன்” என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p>அதேவேளை, நிலுவையில் உள்ள 1.1 மில்லியன் வழக்குகளில் சுமார் 96 சதவீதமானவை நீதவான் நீதிமன்றங்கள் மற்றும் மாவட்ட நீதிமன்றங்களிலேயே காணப்படுவதாக பாட்டாலி சம்பிக்க ரணவக்க சுட்டிக்காட்டியுள்ளார். </p><p>அரசாங்கம் கிடைக்கப்பெற்ற பரிந்துரைகளைப் புறந்தள்ளி, சர்வஜன வாக்கெடுப்பு மூலம் ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்றத்தின் பதவிக் காலத்தை நீடிப்பதே 22ஆவது திருத்தத்தின் மறைமுக நோக்கம் என குற்றம் சாட்டியுள்ள அவர், ஸ்டாலினிச பாணி நிர்வாகத்தை நிறுவ முனையும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், எதிர்க்கட்சிகளை ஊழல்வாதிகள் எனச் சித்தரித்து அழிக்க முயற்சிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-10T06:54:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மன்னாரில் அனுமதியில்லாமல் ட்ரோன் பறக்கவிட்தற்காக சிறுவன் கைது!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/boyarrested-flying-drone-without-permission-mannar-1786342645"></link>
            <id>https://ibctamil.com/article/boyarrested-flying-drone-without-permission-mannar-1786342645</id>
            <summary type="text">மன்னார் சௌத்பார் பகுதியில் வான் வழியே அனுமதியின்றி ட்ரோன் கேமராவை பறக்க விட்ட சிறுவன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த சிறுவன் ஞாயிற்றுக்கிழமை (...</summary>
            <content type="html"><![CDATA[<p>மன்னார் சௌத்பார் பகுதியில் வான் வழியே அனுமதியின்றி ட்ரோன் கேமராவை பறக்க விட்ட சிறுவன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>குறித்த சிறுவன் ஞாயிற்றுக்கிழமை (09.08.2026) கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.&nbsp;</p><p>

</p><p>காவல்துறையின் விசாரணையில் கைது செய்யப்பட்ட சிறுவனுக்கு 16வயது என தெரியவந்துள்ளது.&nbsp;</p><p></p><h2>அமைச்சில் பதிவு செய்யப்படாத ட்ரோன்</h2><p>
</p><p>
</p><p>பாதுகாப்பு அமைச்சில் பதிவு செய்யப்படாத ட்ரோன் ஒன்றை அனுமதியின்றி பறக்க விட்டதன் குற்றச்சாட்டிலேயே இந்த சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e9f4cb73-c83f-42a6-8c9a-8127ab0eb352/26-6a7974e503c86.webp' /></p><p>

விமானப்படை புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், மன்னார் காவல் புலனாய்வு பிரிவினருடன் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையின் போதே மன்னார் சௌத்பார் பனங்கட்டுகொட்டு பகுதியில் குறித்த சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>கைதுசெய்யப்பட்ட குறித்த சிறுவன் மேலதிக விசாரணைகளுக்காக மன்னார் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.</p><p>
</p><p>
குறித்த சிறுவனிடமிருந்து&nbsp; DJI Mini 4 Pro ரகத்தைச் சேர்ந்த ஒரு ட்ரோன் கைப்பற்றப்பட்டுள்ளது.
</p><p>

மேலும், இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மன்னார் காவல்துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-10T06:52:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மாணவர்களின் பரீட்சையில் தாமதம்: கேகாலை மாவட்ட பரீட்சை நிலையத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/kegala-scholarship-question-paper-issue-1786343819"></link>
            <id>https://tamilwin.com/article/kegala-scholarship-question-paper-issue-1786343819</id>
            <summary type="text">கேகாலை பகுதியில் உள்ள ஒரு பாடசாலையில், 5 ஆம் வகுப்பு புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் மாணவர்களுக்கு வழங்கவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு...</summary>
            <content type="html"><![CDATA[<p>கேகாலை பகுதியில் உள்ள ஒரு பாடசாலையில், 5 ஆம் வகுப்பு புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் மாணவர்களுக்கு வழங்கவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> 

இந்த விடயம் தொடர்பில், உரிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.</p><p> 

புலமைப்பரிசில் பரீட்சை என்பது குழந்தைகளின் கல்வி எதிர்காலத்திற்கு ஒரு முக்கியமான பரீட்சை என்பதால், இதுபோன்ற சம்பவங்களால் குழந்தைகளுக்கு ஏற்படும் அநீதிக்கு அதிகாரிகளின் கவனம் ஈர்க்கப்பட வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவர் பிரியந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.</p><p> 

இந்த சம்பவம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். </p><h2>

பரீட்சை நிலையக் கண்காணிப்பாளரின் சம்பள உயர்வு</h2><p>

இதற்கிடையில், இந்த முறை உயர்தர பரீட்சை பணிகளில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் போதுமானதாக இல்லை என்றும் இலங்கை ஆசிரியர் சங்கம் சுட்டிக்காட்டுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6389c4e9-cb10-4312-9641-020d4f0ab40c/26-6a79746a97d4f.webp' /></p><p> </p><p>

இதற்கமைய, உயர்தர பரீட்சைப் பணிகளில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களின் பொறுப்புகளையும் தற்போதைய செலவுகளையும் கருத்தில் கொண்டு, அவர்களுக்குப் போதுமான சம்பளத்தை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-10T06:49:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Farook Sihan</name>
            </author>
            <title type="text"><![CDATA[தொடர்ச்சியாக இடம்பெற்று வந்த சைக்கிள் திருட்டு! ஹெரோயினுடன் சிக்கிய சகோதரர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/four-people-arrested-with-heroin-1786342796"></link>
            <id>https://tamilwin.com/article/four-people-arrested-with-heroin-1786342796</id>
            <summary type="text">கல்முனையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வந்த சைக்கிள் திருட்டுகள்
தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வந்த பொலிஸார், போதைப்பொருளுக்கு
அடிமையான இரு சகோதரர்கள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கல்முனையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வந்த சைக்கிள் திருட்டுகள்
தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வந்த பொலிஸார், போதைப்பொருளுக்கு
அடிமையான இரு சகோதரர்கள் உட்பட நால்வரைக் கைது செய்து நீதிமன்றத்தில்
முன்னிலைப்படுத்தியுள்ளனர்.</p><p>

கல்முனை தலைமையக பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி லசந்த களுவாராய்ச்சி
தலைமையில், பல்வேறு குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி உப பொலிஸ்
பரிசோதகர் கே.எல்.எம். முஸ்தபா வழிகாட்டலில் பொலிஸ் குழுவினர் இச்சோதனை
நடவடிக்கையை மேற்கொண்டிருந்தனர்.</p><h2>போதைப்பொருளுடன் சந்தேநபர்கள் கைது</h2><p>

பல்வேறு குற்றத்தடுப்புப் பிரிவுப் பொறுப்பதிகாரிக்குக் கிடைத்த இரகசியத்
தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட இச்சோதனையின் போது, கல்முனைக்குடி
செய்லான் வீதியைச் சேர்ந்த 34 வயதுடைய சகோதரர்கள் இருவர், 3 திருடப்பட்ட
சைக்கிள்கள் மற்றும் ஒரு தொகுதி ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/274d9166-d7f7-415c-9476-08b53306349d/26-6a7970c1adb16.webp' />&nbsp; &nbsp;</p><p>


கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், திருடிய 2
சைக்கிள்களை சாய்ந்தமருது பொலிவேரியன் பகுதியில் உள்ள பழைய இரும்பு வியாபாரி
ஒருவரிடம் தலா 2400 ரூபாவுக்கு விற்றுள்ளமை தெரியவந்தது.</p><p>அதேபோல், கல்முனை
பகுதியில் வைத்து மற்றொரு சைக்கிளை 1700 ரூபாவுக்கு வாங்கிய நபரையும்
பொலிஸார் கைது செய்துள்ளனர்.</p><p>கைது செய்யப்பட்ட 4 சந்தேகநபர்களையும் பொலிஸார் கல்முனை நீதிவான்
நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய நிலையில், அவர்களை எதிர்வரும் 13ஆம் திகதி வரை
விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-10T06:47:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறைக்கு செல்லும் நாட்களை எண்ணும் முன்னாள் அரசியல்வாதிகள்..! சுனில் ஹந்துன்னெத்தி பதிலடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/npp-will-fight-against-corroupt-1786344245"></link>
            <id>https://tamilwin.com/article/npp-will-fight-against-corroupt-1786344245</id>
            <summary type="text">குற்றவாளிகளை தண்டிப்பதற்கு அரசாங்கம் பின்வாங்காது என தொழில்துறை அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி தெரிவித்துள்ளார்.
மக்களால் வழங்கப்பட்ட வரலாற்றுச் சிறப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>குற்றவாளிகளை தண்டிப்பதற்கு அரசாங்கம் பின்வாங்காது என தொழில்துறை அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி தெரிவித்துள்ளார்.</p><p>
மக்களால் வழங்கப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க ஆணையின்படி, நாட்டில் ஊழலை ஒழிப்பதற்கும் குற்றவாளிகளுக்குத் தகுந்த தண்டனை வழங்குவதற்கும் தற்போதைய அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருவதாக குறிப்பிட்டுள்ளார்.</p><p>
ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.</p><h2>மத்திய வங்கி பிணைமுறி மோசடி&nbsp;</h2><p>உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் மற்றும் மத்திய வங்கி பிணைமுறி மோசடி போன்ற நாட்டிற்கும் மக்களுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய குற்றங்கள் குறித்து முறையான விசாரணைகள் நடத்தப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்படும் என அமைச்சர் உறுதியளித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6c8fa630-b57b-46e6-8485-3b48f47e0087/26-6a797637cc413.webp' /></p><p>
அரச அதிகாரத்தைப் தவறாகப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட அனைத்து ஊழல்களும் மோசடிகளும் சட்டத்தின் முன் கொண்டு வரப்பட்டுத் தண்டிக்கப்படுவது அரசாங்கத்தின் முதன்மையான பணியாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். </p><p>
அரசாங்கம் எடுக்கும் முடிவுகளால் நாட்டிற்குப் பாதிப்பு ஏற்பட்டு, அரசாங்கம் வீழ்ச்சியடையும் என்றால் எதிர்கட்சியினர் உண்மையிலேயே மகிழ்ச்சியடைய வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.</p><h2>சிறைக்கு&nbsp; செல்லும் வாய்ப்பு அதிகம்&nbsp;</h2><p>
</p><p>நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதைத் திருத்துவது தொடர்பான எதிர்கட்சியினரின் விமர்சனங்களுக்குப் பதிலளித்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
</p><p> ஏனெனில் அது அவர்களுக்கு ஆட்சிக்கு வர வாய்ப்பளிக்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d676aa97-b6e7-4952-ad56-62a6d6b347f0/26-6a797637277b6.webp' /></p><p> </p><p>ஆனால் இங்கு நடப்பது நாட்டிற்கு அழிவல்ல என்பதை அவர்கள் அறிவார்கள். சட்டம் நடுநிலையாகச் செயல்படும் போது, தாங்கள் சிறைக்குச் செல்ல நேரிடும் என்ற பயமே அவர்களின் இந்த எதிர்ப்பிற்குக் காரணம் எனக் குறிப்பிட்டுள்ளார்.</p><p> 
அரசாங்கம் எடுக்கும் ஒவ்வொரு முடிவிற்கும் முழுப் பொறுப்பேற்கும் என்றும், இத்தகைய சட்டத் திருத்தங்களின் மூலம் கடந்த காலத்தில் இழைக்கப்பட்ட தவறுகள் திருத்தப்பட்டு நாட்டின் ஜனநாயகம் வலுப்படுத்தப்படும் எனவும் அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-10T06:44:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடைசி கட்டத்தில் Own கோல் அடித்ததால் பறிபோன வெற்றி: பெனால்டிஷூட் அவுட்டில் ஏற்பட்ட குழப்பம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/chelsea-and-johor-darul-match-draw-without-penalty-1786344214"></link>
            <id>https://news.lankasri.com/article/chelsea-and-johor-darul-match-draw-without-penalty-1786344214</id>
            <summary type="text">Chelsea vs Johor Darul Ta&#039;zim club friendlies match end draw: செல்சி மற்றும் ஜோஹோர் தாருல் தாஸிம் அணிகளுக்கு இடையிலான போட்டி 3-3 என்ற கோல் கணக்கில் டி...</summary>
            <content type="html"><![CDATA[<p>Chelsea vs Johor Darul Ta'zim club friendlies match end draw: செல்சி மற்றும் ஜோஹோர் தாருல் தாஸிம் அணிகளுக்கு இடையிலான போட்டி 3-3 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.</p><p>

மலேசியாவில் நடந்த செல்சி, ஜோஹோர் தாருல் தாஸிம் அணிகளுக்கு இடையிலான கிளப் நட்பு ரீதியிலான கால்பந்து போட்டி, பெனால்டிஷூட் ரத்து செய்யப்பட்டதால் டிராவில் முடிந்தது. </p><h2>நட்பு ரீதியிலான கிளப் கால்பந்து போட்டி</h2><p> 


மலேசியாவில் நடந்த நட்பு ரீதியிலான கிளப் கால்பந்து போட்டியில் செல்சி (Chelsea) மற்றும் ஜோஹோர் தாருல் தாஸிம் (Johor Darul Ta'zim) அணிகள் மோதின.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8dae89e9-cf06-4ffb-a185-3f844b48de08/26-6a79731928963.webp' />&nbsp;</p><p></p><p>

பரபரப்பாக சென்ற இப்போட்டியில் 88 நிமிடங்கள் வரை ஜோஹோர் தாருல் தாஸிம் அணி 3-2 என்ற கணக்கில் முன்னணியில் இருந்தது. </p><p>

ஆனால், அந்த அணியின் ஆன்டோனியோ கிறிஸ்டியன் 89வது நிமிடத்தில் சுயகோல் (Own Goal) அடித்ததால் ஆட்டம் சமனில் முடிந்தது.&nbsp;</p><h2>பெனால்டிஷூட்-அவுட்&nbsp;</h2><p>

இதனால் வெற்றியாளரைத் தீர்மானிக்க பெனால்டிஷூட்-அவுட் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், அது நடைபெறாததால் மைதானத்தில் பெரும் குழப்பம் நிலவியது. </p><p>

இரு அணிகளும், ஊழியர்களும் மைதானத்தை விட்டு வெளியேறி மீண்டும் திரும்பாததால், ஆட்டம் திடீரென முடிவுக்கு வந்தது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/34f8af40-121e-4255-82a1-a2a44f3ef775/26-6a797319cc186.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-10T06:41:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானுக்கு எதிராக டிரம்ப் எடுக்கும் அதிரடி நடவடிக்கை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/trump-moves-to-increase-economic-pressure-on-iran-1786343949"></link>
            <id>https://canadamirror.com/article/trump-moves-to-increase-economic-pressure-on-iran-1786343949</id>
            <summary type="text">&amp;nbsp; ஈரான் கடும் கோரிக்கைகளை விடுத்து வந்தாலும், அதற்கு எதிரான கூடுதல் ராணுவத் தாக்குதல்களுக்கு உத்தரவிடுவதைத் தவிர்த்துவிட்டு, பொருளாதார அழுத்தத்தை...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; ஈரான் கடும் கோரிக்கைகளை விடுத்து வந்தாலும், அதற்கு எதிரான கூடுதல் ராணுவத் தாக்குதல்களுக்கு உத்தரவிடுவதைத் தவிர்த்துவிட்டு, பொருளாதார அழுத்தத்தை அதிகரிக்கத் தயாராக இருப்பதாகத் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்தார்.</p><p>



ஈரானின் நடவடிக்கைகளை நாங்கள் சாதாரணமாகக் கையாளுகிறோம் என்றும் ட்ரம்ப் தெரிவித்தார்.



ஈரானில் நிலவும் கடுமையான பணவீக்கம் மற்றும் அவர்களிடம் பணம் இல்லாததை நாங்கள் கவனித்துக் கொண்டிருக்கிறோம் என்றும் கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/527ff231-5d80-49bd-8f9d-ee8348301068/26-6a7977bd352c8.webp' /></p><p>
</p><p>


போர் தொடங்கியதிலிருந்து ஈரான் ஹோர்முஸ் நீரிணையை மூடியுள்ளதால் எரிபொருள் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து உலகப் பொருளாதாரத்தை உலுக்கியுள்ளது.</p><p> 



இருப்பினும், அமெரிக்க நுகர்வோர் இந்தப் போரினால் பெரியளவில் சிரமத்தை எதிர்நோக்கும் அளவிற்கு அமெரிக்கா எண்ணெய் விலைகளை உயர்த்தவில்லை என்று தெரிவித்துள்ளார்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-10T06:36:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thileepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[தந்தையின் நண்பனால் 11 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் - நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/11-year-old-girl-assaulted-by-fathers-friend-1786343591"></link>
            <id>https://tamilwin.com/article/11-year-old-girl-assaulted-by-fathers-friend-1786343591</id>
            <summary type="text">நண்பனின் 11 வயது மகளை தவறான நடத்தைக்கு உட்படுத்திய நபருக்கு 
40 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து வவுனியா மேல் நீதிமன்ற
நீதிபதி ஏ.ஏ.ஆனந்தராஜா தீ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நண்பனின் 11 வயது மகளை தவறான நடத்தைக்கு உட்படுத்திய நபருக்கு 
40 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து வவுனியா மேல் நீதிமன்ற
நீதிபதி ஏ.ஏ.ஆனந்தராஜா தீர்ப்பளித்துள்ளார். </p><p>

இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே மேற்கண்டவாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.</p><h2> 

 
11 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்</h2><p>

கடந்த 2015 மற்றும் 2016 ஆம் ஆண்டு காலப்பகுதியில் வவுனியா - தரணிக்குளம் பிரதேசத்தில்
தாயினால் கைவிடப்பட்ட தந்தையின் பராமரிப்பின் கீழ் இருந்த 11 வயதுடைய பெண்
பிள்ளையை தவறான நடத்தைக்கு உள்ளாக்கிய 36 வயது நிரம்பிய
நபருக்கு, எதிராக வவுனியா பொலிஸாரினால் 2016 ஆம் ஆண்டு பீ அறிக்கை வவுனியா
நீதிவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b56b7087-03dc-4590-b66d-699c1a7f14b0/26-6a79712d52d51.webp' /></p><p>
</p><p>
அந்த வழக்கு விசாரணைகளின் தொடர்ச்சியாக குறித்த நபருக்கு எதிராக 2025 ஆம்
ஆண்டு சட்ட மா அதிபர் திணைக்களத்தால் குற்ற பகிர்வு பத்திரம் வவுனியா மேல்
நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டது.</p><p> 

இதனையடுத்து குறித்த வழக்கு விளக்கத்துக்கு நியமிக்கப்பட்டிருந்தது.</p><h2> 

சாட்சியங்களில் உறுதிச் செய்யப்பட்ட குற்றம்</h2><p>
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் தலைமறைவாகிய நிலையில், அவருக்கு 
 எதிராக அரச சட்டத்தரணியினால் சாட்சியங்கள் மற்றும் ஆவணங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.</p><p>

இதன் அடிப்படையில், வழக்கு தொடுனர் தரப்பு குறித்த குற்றச்சாட்டுகளை சந்தேகத்துக்கு அப்பால் நிரூபித்துள்ளதாக தெரிவித்த வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ ஆனந்தராஜா,
குறித்த சந்தேக நபருக்கு 40 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை வழங்கி
தீர்ப்பளித்துள்ளார்.</p><p>அத்துடன், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூபா 2 மில்லியன் ரூபாய் இழப்பீடு
வழங்க வேண்டும் என்றும், 2 இலட்சம் ரூபாய் நீதிமன்ற அபராதம் செலுத்த
வேண்டும் என்றும் தீர்ப்பில் உள்ளடங்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e1671637-f3b8-43d9-9900-b3fbd001020f/26-6a79712e0f2f5.webp' />&nbsp; &nbsp;</p><p>
இந்த வழக்கினை சட்டமா அதிபர் திணைக்களம் சார்பில் அரச சட்டதரணி ஸ்ரீ.
சிவஸ்கந்தஸ்ரீ நெறிப்படுத்தியிருந்தார். </p><p>

இந்த நிலையில், வழக்கு நடவடிக்கையின் போது சந்தேக நபர்,தலைமறைவாகியிருந்தமை, குறித்த சம்பவத்தினால் சிறுமிக்கு ஏற்பட்ட கடுமையான உடல் மற்றும் உள பாதிப்புகள், பெருகி வரும் சிறுவர் துஸ்பிரயோகங்கள் என்பனவே
குறித்த நபருக்கு கடுமையான தண்டனை விதிக்கப்பட காரணமாக அமைந்துள்ளது என்றும் வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி தனது, தண்டனைத் தீர்ப்பில் சுட்டிக்காட்டியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.&nbsp; &nbsp;&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-10T06:35:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆடி அமாவாசை அன்று சூரிய கிரகணம் ; முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கலாமா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/solar-eclipse-on-aadi-amavasya-2026-tharpanam-1786341407"></link>
            <id>https://jvpnews.com/article/solar-eclipse-on-aadi-amavasya-2026-tharpanam-1786341407</id>
            <summary type="text">பித்ருக்களின் ஆசி கிடைக்கும் &amp;nbsp; ஆடி அமாவாசை நாளில் சூரிய கிரகணம் வருவது ஒரு அரிதான நிகழ்வு ஆகும். இந்த ஆண்டு ஆகஸ்ட் 12, 2026 புதன்கிழமை அன்று ஆடி ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பித்ருக்களின் ஆசி கிடைக்கும் &nbsp;<a href="https://jvpnews.com/article/aadi-amavasai-2024-august4-don-t-forget-1722576536" target="_blank" style="background-color: rgb(255, 255, 255);"> ஆடி அமாவாசை நாளில் </a>சூரிய கிரகணம் வருவது ஒரு அரிதான நிகழ்வு ஆகும். இந்த ஆண்டு ஆகஸ்ட் 12, 2026 புதன்கிழமை அன்று ஆடி அமாவாசை வருகிறது. அன்றைய தினம்&nbsp; இலங்கை, இந்திய இரவு&nbsp; நேரத்தில் சூரிய கிரகணம் நிகழ்வதால், இதனால் பெரிய தோஷங்கள் எதுவும் இல்லை என கூறப்படுள்ளது.</p><p>மாதம்தோறும் அமாவாசை வந்தாலும் தை புரட்டாசி ஆடி மாதங்களில் வரும் அமாவாசையன்று எமது முன்னோர்களை நினைத்து தர்ப்பணம் செய்தால் அவர்கள் மன குளிர்ந்து நமக்கு ஆசி அளிப்பார்கள் என்பது ஐதீகம்.&nbsp;</p><p>
ஆடி மாதத்தில் முன்னோர்களை வழிபட்டு, அவர்களின் ஆசியை பெறுவதற்குரிய மிக முக்கியமான நாள் ஆடி அமாவாசை. வருடத்தில் வரும் மிக முக்கியமான அமாவாசைகளில் ஒன்றான ஆடி அமாவாசை நாளில் இந்த ஆண்டு சூரிய கிரகணமும் இணைந்து வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/14e31afe-58d6-49ce-a83b-7c6f9afba65e/26-6a796820cedfd.webp' /></p><p>

 இதனால் வழக்கமான முன்னோர் வழிபாட்டினை செய்யலாமா? தர்ப்பணம் கொடுக்கலாமா? என பல சந்தேகங்கள் மக்களிடம் எழுந்துள்ளது.&nbsp;&nbsp;</p><h2>
சூரிய கிரகணம் அன்று ஆடி அமாவாசை&nbsp;</h2><p>
இந்து சமய ஆன்மீக வழிபாட்டில் சூரிய கிரகணம், அமாவாசை ஆகிய இரண்டுமே மிகவும் முக்கித்துவம் வாய்ந்த சக்தி வாய்ந்த நாட்களாகும். அதிலும் தட்சிணாயன காலத்தின் துவக்கமாக வரும் ஆடி அமாவாசை, முன்னோர் வழிபாட்டிற்கும் அம்பிகை வழிபாட்டிற்கும் மிக முக்கியமான நாளாக கருதப்படுகிறது. கிரகணத்தின் போது கோவில்கள் அனைத்தும் அடைக்கப்படுவது வழக்கம். </p><p>இந்த சமயத்தில் மந்திர ஜபம் தவிர மற்ற பூஜைகள், வழிபாடுகள் செய்யக் கூடாது என்பார்கள். 

இதனால் சூரிய கிரகணம் மற்றும் ஆடி அமாவாசை இரண்டும் இணைந்து வரும் நாளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கலாமா, கூடாதா? என்கிற சந்தேகம் எழுந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4114d0d6-d6e5-4eed-85b9-61d6658a989a/26-6a79682183163.webp' /></p><p>
</p><p>

</p><h3>வாழ்வில் வளம் தரும்&nbsp; முன்னோர் வழிபாடு</h3><p>ஒரு வருடத்தில் வரும் அமாவாசைகளில் மிக முக்கியமானவையாக கருதப்படுவது தை அமாவாசை, ஆடி அமாவாசை மற்றும் மகாளய அமாவாசை ஆகும். </p><p>மற்ற மாதங்களில் வரும் அமாவாசைகளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து, பித்ரு கடன் நிறைவேற்ற முடியவில்லை என்றாலும், இந்த மூன்று அமாவாசைகளை தவற விடாமல் அவசியம் தர்ப்பணம் கொடுத்து, முன்னோர் வழிபாட்டினை செய்ய வேண்டும் என சொல்லப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ffc1f7ae-d9fe-4b32-8a3f-96984627acf0/26-6a79682238afc.webp' /></p><p> </p><p>ஆடி அமாவாசையில், பித்ருலோகத்தில் இருக்கும் நம்முடைய முன்னோர்கள், தன்னுடைய குடும்பத்தினர் செய்யும் வழிபாடுகள், தர்ப்பணம், தானம் ஆகியவற்றை நேரடியாக பூமிக்கு வந்து ஏற்றுக் கொண்டு, அவர்களுக்கு ஆசி வழங்குவதாக சொல்லப்படுகிறது. </p><p>அதனால் ஆடி அமாவாசை, பித்ருதோஷம் உள்ளிட்ட மிக கடுமையான துன்பங்களில் இருந்து விடுபடுவதற்கு ஏற்ற நாளாக கருதப்படுகிறது.</p><p>&nbsp;சூரிய கிரகணம் இரவு நேரத்திலேயே வருகிறது.&nbsp; இதனால் கோவில் நடை அடைப்பு போன்றவை இந்த நாளில் இருக்காது. பொதுவாகவே அமாவாசை அன்று தான் சூரிய கிரகணம் வரும். </p><p>

இருந்தாலும் இரவு நேரத்தில் ஏற்படும் சூரிய கிரகணத்தால் தோஷம் ஏதும் ஏற்படாது. இதனால் வழக்கமான முறைகளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து, வழிபடலாம். </p><p>கிரகண நாளில் வரும் அமாவாசை என்பதால் இது மிகவும் சக்தி வாய்ந்த நாளாக கருதப்படுகிறது.</p><h4>தான தர்மங்கள்</h4><p> இந்த நாளில் செய்யப்படும் தான தர்மங்கள், புதிய நதிகளில் நீராடுவது, காகத்திற்கு உணவு வைப்பது ஆகியவை பித்ரு தோஷங்களை நீக்கும் என சொல்லப்படுகிறது. 

எனவே ஆகஸ்ட் 12ம் தேதியன்று இரவு தான் சூரிய கிரகணம் நிகழ உள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e6e4a9a3-9dfc-4ffe-a050-dacfbfdaf974/26-6a7968d2390fe.webp' /></p><p> அதனால் வழக்கம் போல் ஆகஸ்ட் 12ம் தேதியன்று காலை சூரிய உதயத்திற்கு பிறகு நதிகள் அல்லது கடலில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபடலாம். அதே போல் பகல் நேரத்தில் முன்னோர்களுக்கு இலை போட்டு படையல் வைப்பது, காகத்திற்கு உணவு அளிப்பது போன்ற சடங்குகளை செய்யலாம்.</p>]]></content>
            <updated>2026-08-10T06:32:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[மாலத்தீவில் நீச்சல் குளத்தில் பாடகி ஜோனிடா காந்தி... கிளாமர் போட்டோஸ்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/popular-singer-jonita-gandhi-maldives-photos-1786343832"></link>
            <id>https://cineulagam.com/article/popular-singer-jonita-gandhi-maldives-photos-1786343832</id>
            <summary type="text">ஜோனிடா காந்திஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில் எத்தனையோ பாடகர்கள் சினிமாவில் அறிமுகமாகியுள்ளனர். அப்படி ஓகே கண்மணி படத்தில் இடம்பெற்ற மனம் மனம் மென்டல் மனதில...</summary>
            <content type="html"><![CDATA[<h2>ஜோனிடா காந்தி</h2><p>ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில் எத்தனையோ பாடகர்கள் சினிமாவில் அறிமுகமாகியுள்ளனர்.</p><p> அப்படி ஓகே கண்மணி படத்தில் இடம்பெற்ற மனம் மனம் மென்டல் மனதில் பாடல் மூலம் தமிழ் சினிமாவில் பாடகியாக அறிமுகமானவர் தான் ஜோனிடா காந்தி.</p><p> செல்லம்மா செல்லம்மா, அரபிக் குத்து பாடல்கள் மூலம் தமிழில் டாப் பாடகியாக வலம்வர தொடங்கினார். பாடல்கள் பாடிக்கொண்டு பிஸியாக இருக்கும் ஜோனிடா காந்தி அண்மையில் மாலத்தீவு சென்றுள்ளார்.</p><p>அங்கு அவர் நீச்சல் குளத்தில் செம கிளாமர் புகைப்படங்கள் எடுத்துள்ளார். இதோ மாலத்தீவில் ஜோனிடா எடுத்த கிளாமர் போட்டோஸ்,</p><p><br></p>]]></content>
            <updated>2026-08-10T06:30:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் அதிரடியாக கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sagara-kariyawasam-arrested-1786343499"></link>
            <id>https://jvpnews.com/article/sagara-kariyawasam-arrested-1786343499</id>
            <summary type="text">இலங்கை பொதுஜன பெரமுனவின் (SLPP) பொதுச் செயலாளரும், சட்டத்தரணியுமான சாகர காரியவசம், மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் (CCIB) இன்று (10) காலை கைது ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை பொதுஜன பெரமுனவின் (SLPP) பொதுச் செயலாளரும், சட்டத்தரணியுமான சாகர காரியவசம், மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் (CCIB) இன்று (10) காலை கைது செய்யப்பட்டார்.
</p><p>
காவல்துறை மாஅதிபர் தொடர்பில் வெளியிடப்பட்ட கருத்துகள் குறித்து இடம்பெற்று வரும் விசாரணைக்கு அமைய வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் மத்திய குற்ற விசாரணை பணியகத்துக்கு இன்று வருகை தந்தார்.

இதன்போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a34dd8b3-b9e5-41c8-9ca3-36fc257be8b9/26-6a79704d3f390.webp' /></p>]]></content>
            <updated>2026-08-10T06:29:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் காலமான ஊடகவியலாளர் சபேஸ்வரனின் இறுதிகிரியை யாழில்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/funeral-rites-for-journalist-sabeswaran-in-jaffna-1786342909"></link>
            <id>https://ibctamil.com/article/funeral-rites-for-journalist-sabeswaran-in-jaffna-1786342909</id>
            <summary type="text">கனடாவில் காலமான யாழ்ப்பாணத்தை சேர்ந்த மூத்த ஊடகவியலாளர் ஆறுமுகம் சபேஸ்வரனின் இறுதி கிரியைகள் யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ளது.ஆறுமுகம்
சபேஸ்வரனின் இறுத...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவில் காலமான யாழ்ப்பாணத்தை சேர்ந்த மூத்த ஊடகவியலாளர் ஆறுமுகம் சபேஸ்வரனின் இறுதி கிரியைகள் யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ளது.</p><p>ஆறுமுகம்
சபேஸ்வரனின் இறுதி
கிரியைகள் எதிர்வரும் வியாழக்கிழமை கொக்குவிலில் உள்ள அவரது இல்லத்தில்
நடைபெறவுள்ளது.</p><p>குறித்த தகவலை அன்னாரின் குடும்பத்த்தினர் அறிவித்துள்ளனர்.</p><h2>இறுதி கிரியைகள்</h2><p>
</p><p>
யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் யாழ். தினக்குரல் பத்திரிகையின் முன்னாள்
ஆசிரியரும் , யாழ்.பல்கலைக்கழக ஊடக வளங்கள் பயிற்சி மையத்தின் முன்னாள்
விரிவுரையாளரும், யாழ். ஊடக அமையத்தின் முன்னாள் தலைவரும் மூத்த
ஊடகவியலாளருமான ஆறுமுகம் சபேஸ்வரன் உடல்நல குறைவு காரணமாக கனடாவில் , தனது
47 ஆவது வயதில் கடந்த 30ஆம் திகதி காலமானார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ab1b59ea-5082-4445-94cf-7f37f6ec2daa/26-6a796f1d66098.webp' /></p><p>
அவரது பூதவுடல் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டு, நாளை மறுதினம் புதன்கிழமை
அஞ்சலிக்காக கொக்குவிலில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டு இருக்கும்.
</p><p>
மறுநாள் வியாழக்கிழமை இறுதி கிரியைகள் இடம்பெற்று , தகன கிரியைகளுக்காக
பூதவுடல் , கோம்பயன் மணல் இந்து மயானத்திற்கு எடுத்து செல்லப்படும் என
குடும்பத்த்தினர் அறிவித்துள்ளனர்.</p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP</a> CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-10T06:26:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சொல்லாதே யாரும் கேட்டால்....கிசுகிசு விற்று 2 வீடுகள் வாங்கிய மூதாட்டி! இணையவாசிகள் திகைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/colombian-woman-buys-two-houses-by-selling-gossip-1786342980"></link>
            <id>https://jvpnews.com/article/colombian-woman-buys-two-houses-by-selling-gossip-1786342980</id>
            <summary type="text">&amp;nbsp; கிசுகிசு விற்று மூதாட்டி ஒருவர் 2 வீடுகள் வாங்கிய சம்பவம் இணையவாசிகளை திகைக்க வைத்துள்ளது. 

கொலம்பியாவை சேர்ந்த மூதாட்டி ஒருவரே இவ்வாறு கிசு...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; கிசுகிசு விற்று மூதாட்டி ஒருவர் 2 வீடுகள் வாங்கிய சம்பவம் இணையவாசிகளை திகைக்க வைத்துள்ளது. 

கொலம்பியாவை சேர்ந்த மூதாட்டி ஒருவரே இவ்வாறு கிசுகிசுக்களை விற்று இரு வீடுகளை வாங்கியுள்ளார்.</p><p>

கொலம்பியாவை சேர்ந்த மிர்யம் என்கிற ஒரு மூதாட்டி சுற்றுவட்டாரத்தில் நடக்கும் சுவாரசியமான கிசுசுக்கள் அதாவது மற்றவர்களின் ரகசியங்களையும் அருகில் வசிப்பவர்களிடம் கேட்டு பெறுவார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/283e43dd-9ad4-4709-a77d-55a75b807f8e/26-6a796e460c130.webp' /></p><h2>&nbsp;கள்ளக்காதல் விவகாரம் என்றால்&nbsp; அதிக தொகை</h2><p>

அதன்பின் அதை ஒரு நோட்டில் குறித்து வைத்துக்கொள்வார். அதன்பின் சம்மந்தப்பட்டவரிடம் அதை சொல்லி அதை வெளியில் சொல்லாமல் இருக்க கிசுகிசுவுக்கு ஏற்ற மாதிரி பணம் வசூலித்து வந்திருக்கிறார்.</p><p></p><p>
</p><p>
 இதில், கள்ளக்காதல் விவகாரம் என்றால் அதற்கு அதிக தொகையை வசூலித்திருக்கிறார்.

இதில் ஆச்சர்யம் என்னவெனில், அதன் மூலம் கிடைத்த வருமானத்தில் இரண்டு வீடுகளையும் அவர் வாங்கி இருக்கிறார்.</p><p></p><p> 

சிலர் அவருக்கு 7 லட்சம் வரை கூட பணம் கொடுத்திருக்கிறார்களாம். இது குறித்து அந்த மூதாட்டி சமீபத்தில் மிர்யம் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியும் கொடுத்துள்ளதாக&nbsp; கூறப்படுகின்றது.</p>]]></content>
            <updated>2026-08-10T06:20:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[சமூக ஊடகத்தில் இருந்தே... தாய்லாந்து துப்பாக்கிச் சூடு தொடர்பில் பொலிசார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/thai-school-shooter-learnt-1786342843"></link>
            <id>https://news.lankasri.com/article/thai-school-shooter-learnt-1786342843</id>
            <summary type="text">Thai school shooter learnt via social media: தாய்லாந்து பாடசாலையில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் சமூக ஊடகங்கள் மூலம் துப்பாக்கிகளைப் பயன்படுத்தக் கற்ற...</summary>
            <content type="html"><![CDATA[<p>Thai school shooter learnt via social media: தாய்லாந்து பாடசாலையில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் சமூக ஊடகங்கள் மூலம் துப்பாக்கிகளைப் பயன்படுத்தக் கற்றுக்கொண்டார்.
</p><p>தாய்லாந்தில் துப்பாக்கிச் சூடு நடத்தி, எட்டு பேரைக் கொலை செய்ததுடன் தனது உயிரையும் மாய்த்துக்கொண்ட பதின்ம வயது இளைஞர் ஒருவர், சமூக ஊடகங்கள் வாயிலாகத் துப்பாக்கியைப் பயன்படுத்தும் முறையைத் தானே கற்றுக்கொண்டதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><h2>குடும்பப் பிரச்சினை</h2><p>
</p><p>வன்முறை சார்ந்த சமூக ஊடக உள்ளடக்கங்களைப் பார்த்தது, படிப்பு மற்றும் குடும்பப் பிரச்சினைகள் குறித்த பதற்றம், அத்துடன் நண்பர்களுடனான மோதல் ஆகியவையும் அந்தச் சிறுவனின் செயல்களுக்குத் தூண்டுகோலாக அமைந்திருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8c77706a-3e0f-45b9-a325-517452b8b1fb/26-6a796dbd98187.webp' /></p><p> </p><p>தாக்குதலில் ஈடுபட்ட அந்த 14 வயது சிறுவனின் செயல் நோக்கத்தை விசாரிக்கும்போது, ​​இதுவரை 17 சாட்சிகளிடம் விசாரணை நடத்தியுள்ளதாக மூத்த காவல் அதிகாரி அத்தபோல் அனுசித் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
</p><p>பல ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிக மோசமான துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தால் தாய்லாந்து தத்தளித்து வரும் நிலையில், அந்நாட்டுத் தலைவர் புதிய துப்பாக்கிச் சட்டங்களைக் கொண்டுவருவதாக உறுதியளித்துள்ளார்.
</p><p>புகழ்பெற்ற ஒரு மேல்நிலைப் பள்ளியின் உள்ளூர் கிளையான டெப்சிரின் நோந்தபுரி பள்ளியைச் சேர்ந்த மாணவர் ஒருவர், தனது தாத்தாவுக்குச் சொந்தமான கைத்துப்பாக்கியைப் பயன்படுத்தி வீட்டில் வைத்துத் தனது தாத்தா-பாட்டியைச் சுட்டுக் கொன்றதாகவும், பின்னர் பள்ளிக்குச் சென்று ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.</p><p></p><p> </p><p>இந்தச் செயல் திட்டமிட்டுச் செய்யப்பட்டதா என்று செய்தியாளர்கள் கேள்விக்கு, ​​அத்தபோல் அது அநேகமாக அப்படித்தான் இருக்கும் என்று கூறியுள்ளார்.</p><p>
காவல்துறையினர் சேகரித்துள்ள ஆதாரங்களில், துப்பாக்கிச் சூடு நடத்த அந்தச் சிறுவன் பயன்படுத்திய துப்பாக்கி, தோட்டா உறைகள், அவனது அலைபேசி மற்றும் பள்ளிக்கு அவன் எடுத்துச் சென்ற பையில் கண்டெடுக்கப்பட்ட கத்தி ஆகியவை அடங்கும்.</p><h2>ஆதாரம் இல்லை</h2><p> </p><p>அவரது வீட்டில் உள்ள கணினி, அவர் சமூக ஊடகங்களில் வன்முறை சார்ந்த லாட்சிகளைப் பார்த்திருந்ததைக் காட்டுவதாகக் காவல்துறை கூறுகிறது.</p><p> அத்துடன், குறித்த சிறுவனின் தாக்குதலானது துல்லியமாக இருந்தது எனவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். அந்தப் பதின்ம வயதுடையவர் துப்பாக்கி சுடும் பயிற்சி மேற்கொண்டதற்கோ அல்லது துப்பாக்கி சுடும் தளத்தில் பயிற்சி பெற்றதற்கோ எந்த ஆதாரமும் காவல்துறை விசாரணையில் கிடைக்கவில்லை என்றும் அத்தபோல் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/344b7d4e-07a7-4011-aab5-71ee970a1a0f/26-6a796dbe4d4eb.webp' /></p><p> </p><p>இதனிடையே, பெற்றோர் பிரிந்துவிட்டதால், அந்தப் பதின்ம வயது இளைஞர் தனது இரண்டு வயது முதலே தாத்தா-பாட்டியுடன் வசித்து வந்ததாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். </p><p>அந்தப் பதின்ம வயதினரின் தந்தை அவரது செயல்களுக்காக மன்னிப்பு கோரியதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உயிரிழப்புகளை ஏற்படுத்திய அந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்த விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், பலர் பாதிக்கப்பட்டவர்களுக்காகத் துயரம் தெரிவித்து வருகின்றனர்; சிலர் பள்ளியின் முன் மலர்களை வைத்து அஞ்சலி செலுத்துகின்றனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-10T06:18:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[உயர்தரப் பரீட்சை மாணவர்களுக்காக சிறப்பு போக்குவரத்து சேவை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/special-transport-services-for-al-exam-candidates-1786341695"></link>
            <id>https://ibctamil.com/article/special-transport-services-for-al-exam-candidates-1786341695</id>
            <summary type="text">
க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்காக இன்று முதல் சிறப்புப் போக்குவரத்து சேவைகள் இயக்கப்படவுள்ளன. 

இதற்காக சுமார் 1,700 “சிசு செர...</summary>
            <content type="html"><![CDATA[<p>
க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்காக இன்று முதல் சிறப்புப் போக்குவரத்து சேவைகள் இயக்கப்படவுள்ளன.</p><p> 

இதற்காக சுமார் 1,700 “சிசு செரிய” பேருந்துகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தேசியப் போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் நிலான் மிரந்த தெரிவித்துள்ளார்.</p><p> 

அதன்படி, உயர்தரப் பரீட்சை முடிவடையும் வரை பாடசாலைப் பேருந்து சேவைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என இலங்கை போக்குவரத்துச் சபை அறிவித்துள்ளது.</p><p></p><h2>தொடருந்து சேவை</h2><p> 

அத்தோடு, பரீட்சை நடைபெறும் காலத்தில் பாடசாலைப் பேருந்து சேவைகள் எவ்விதத் தடையுமின்றித் தொடர்ச்சியாக இயங்குவதை உறுதி செய்யுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7ba2df2f-019b-4eb3-a52a-c3e6ced66011/26-6a796c820dea6.webp' /></p><p> </p><p> 

இதேவேளை, பரீட்சைக் காலம் முழுவதும் தொடருந்துகள் எவ்வித ரத்தும் இன்றி வழக்கமான கால அட்டவணைப்படி இயக்குவதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p>

 மேலும், பரீட்சைக் காலத்தில் சனிக்கிழமைகளில் திட்டமிடப்பட்டிருந்த தொருடருந்து தண்டவாளப் பராமரிப்புப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-10T06:15:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாணந்துறை அடுக்குமாடிக் குடியிருப்பில் தீவிர சோதனை - 22 வயது இளைஞர் கைது..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/22-year-old-youth-arrested-in-panadura-apartment-1786342143"></link>
            <id>https://tamilwin.com/article/22-year-old-youth-arrested-in-panadura-apartment-1786342143</id>
            <summary type="text">பாணந்துறை - மொதரவிலாவில் உள்ள ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில், சட்டவிரோத போதைப்பொருட்களுடன் ஒரு இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த கைது நடவடிக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>பாணந்துறை - மொதரவிலாவில் உள்ள ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில், சட்டவிரோத போதைப்பொருட்களுடன் ஒரு இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
இந்த கைது நடவடிக்கை, பாணந்துறையில் ஹொரானா பொலிஸ் சிறப்பு அதிரடிப்படையின் ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற ஒழிப்புப் பிரிவு அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. </p><p>

இதன்போது கைது செய்யப்பட்ட இளைஞர் 22 வயதுடையவர் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளது. </p><h2>


22 வயது இளைஞர் கைது</h2><p>
அத்துடன், சந்தேக நபரிடமிருந்து 810 சட்டவிரோத போதைப்பொருள் மாத்திரைகளும், 2 இரும்பு வாள்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6f797a64-42b7-44dc-a790-b53be068d531/26-6a796bc1ce974.webp' /></p><p> </p><p>

பொலிஸ் சிறப்பு அதிரடிப்படை அதிகாரிகளால் அவர் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்குழுவின் உறுப்பினர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.</p><p>

சந்தேக நபரும், அது தொடர்பான பொருட்களும் பாணந்துறை தெற்கு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-10T06:12:22+00:00</updated>
        </entry>
    </feed>
