<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-08-30T12:29:39+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Fathima</name>
            </author>
            <title type="text"><![CDATA[பெரியார், அண்ணா, அம்பேத்கர் பெயர் நீக்கம்: இயக்குனர் அமீர் கண்டன பதிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/director-ameer-statement-1788092882"></link>
            <id>https://ibctamilnadu.com/article/director-ameer-statement-1788092882</id>
            <summary type="text">தமிழக அரசின் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை கொள்கை விளக்கக் குறிப்பேட்டில், இடஒதுக்கீடு மற்றும் சமூக நீதி வரலாற்றைக் கூறும் பகுதியில் இடம்பெற்றிருந்த மு...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழக அரசின் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை கொள்கை விளக்கக் குறிப்பேட்டில், இடஒதுக்கீடு மற்றும் சமூக நீதி வரலாற்றைக் கூறும் பகுதியில் இடம்பெற்றிருந்த முக்கியத் தலைவர்களின் பெயர்கள் விடுபட்டிருந்தன. </p><p>இதற்கு பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.</p><p>இயக்குனர் அமீர்</p><p>"பெரியார், அண்ணா, அம்பேத்கர் என்பது பெயர்கள் அல்ல... தமிழ்நாட்டின் அடையாளங்கள். அதை அழிக்கவோ மறைக்கவோ எந்த முகமூடியோடு வந்தாலும் அதை எதிர்க்க வேண்டியது தமிழர்களின் கடமையாகும்” என பதிவிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e99c8415-029b-4fb6-b2cf-df2d93519ae7/26-6a942224b762b.webp' /><br></p><h2>அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்</h2><p>செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் ராஜ்மோகன், “இடஒதுக்கீடு மானிய கோரிக்கையில் சமூக நீதித் தலைவர்களின் பெயர்களை திட்டமிட்டு நீக்கவில்லை. இதற்கு முந்தைய ஆட்சியில் நீக்கப்பட்டதா என்பதை ஆய்வு செய்தோம்.</p><p> அதன்படி திமுக ஆட்சியில் கடந்த 3 ஆண்டுகளாக நேரு, பெரியார், அம்பேத்கரின் பெயர்கள் இடஒதுக்கீடு திட்டத்தில் இடம்பெறாமல் இருந்தது. எப்படி நடந்தது என்பது தெரியவில்லை.
</p><p>
ஆனால் நாங்கள் வேண்டுமென்று சமூக நீதிதலைவர்களின் பெயர்களை நீக்கவில்லை. பெரியார், அம்பேத்கரை நாங்கள் கொள்கைத் தலைவர்களாக கொண்டிருக்கிறோம். அவர்களின் பெயர்கள் விரைவில் இடஒதுக்கீடு மானிய கோரிக்கையில் சேர்க்கப்படும் என தெரிவித்துள்ளார்.<br></p>]]></content>
            <updated>2026-08-30T12:29:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் ஆரம்பமான நீதிக்கான நீள் பயண சர்வதேச மாநாடு - நேரலையில்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/long-journey-for-justice-awareness-rally-in-jaffna-1788069111"></link>
            <id>https://tamilwin.com/article/long-journey-for-justice-awareness-rally-in-jaffna-1788069111</id>
            <summary type="text">புதிய இணைப்புவலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சர்வதேச தினத்தினை முன்னிட்டு, வடக்கு கிழக்கு
இணைந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினால் யாழ்ப்பாணத்...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சர்வதேச தினத்தினை முன்னிட்டு, வடக்கு கிழக்கு
இணைந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினால் யாழ்ப்பாணத்தில்
"நீதிக்கான நீள் பயணம்" எனும் சர்வதேச மாநாடு இடம்பெற்றுள்ளது.</p><p>

இந்த மாநாட்டில் சர்வதேச மன்னிப்புச் சபையின்
தெற்காசிய பிராந்திய இயக்குநர் ஸ்மிருதி சிங் மற்றும் வலிந்து காணாமல்
ஆக்கப்பட்டோர் தொடர்பான ஐ.நா. நிபுணர் அனா லொரேனா டெல்கடில்லோ பெரெஸ்
உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டுள்ளனர். </p><p>

மாநாடு இடம்பெற்ற மண்டபத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பாவனை
பொருட்கள், அவர்கள் விரும்பி சேகரித்த பொருட்கள், அவர்களின் நினைவாக இன்றும்
உறவுகளிடம் உள்ள பொருட்கள் என்பவற்றை காட்சிப்படுத்தப்பட்ட நிலையில், அவற்றையும் பார்வையிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/09f874b2-3625-4d57-9fa5-c50202e94dc2/26-6a942206e2ba1.webp' /></p><h2>இரண்டாம் இணைப்பு</h2><p>சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு, "நீதிக்கான
நீள்பயணம்" எனும் தொனிப்பொருளில் சர்வதேச மாநாடு தற்போது யாழ்ப்பாணம் தந்தை
செல்வா கலையரங்கில் நடைபெற்று வருகின்றது.&nbsp;</p><p>வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தின்
ஏற்பாட்டில் மாநாடு நடைபெற்று வருகின்றது.</p><p>இதில் நாடாளுமன்ற உறுப்பினர்கள்,
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், வலிந்து காணாமல்
ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், அரசியல் பிரதிநிதிகள் என பலர்
கலந்துகொண்டுள்ளனர்.</p><h2>முதலாம் இணைப்பு</h2><p>சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு, "நீதிக்கான நீள்
பயணம்" எனும் தொனிப்பொருளில் யாழ்ப்பாணத்தில் இன்று கவனயீர்ப்புப் பேரணி
நடைபெற்று வருகின்றது.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/ejyJXTi2tFs" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p>
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட
குடும்பங்களின் பங்கேற்புடன் நடைபெற்ற இந்த பேரணி, யாழ்ப்பாணம் உலகத்
தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலையில் உயிரிழந்தவர்களின் நினைவிடத்தில்
சுடரேற்றி அஞ்சலி செலுத்தியதைத் தொடர்ந்து ஆரம்பமானது.</p><p>
</p><p>
காணாமல் ஆக்கப்பட்டோரின் புகைப்படங்கள் பொறிக்கப்பட்ட விசேட வாகனம் பேரணியின்
முன்னிலையில் சென்றதுடன், உறவினர்கள் தமது அன்புக்குரியவர்களின் புகைப்படங்களை
ஏந்தியவாறு பேரணியில் பங்கேற்றனர்.</p><h2>உண்மை மற்றும் நீதியை வலியுறுத்தி பேரணி</h2><p>
</p><p>
பல ஆண்டுகளாக காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளைத் தேடி வரும் குடும்பங்கள்,
உண்மை மற்றும் நீதியை வலியுறுத்தி பேரணியில் கலந்துகொண்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/197f43f3-3b8c-4f3c-83ae-34df0549769a/26-6a93c66a82665.webp' /></p><p>

உலகளவில் அதிகளவான வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான சம்பவங்கள்
பதிவாகியுள்ள நாடுகளில் இலங்கை இரண்டாவது இடத்தில் உள்ளதாகக் கூறப்படும்
நிலையில், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் நீதி கோரிக்கை இதுவரை
நிறைவேற்றப்படவில்லை.
</p><p>
யாழ்ப்பாண நகரின் ஊடாக முன்னேறிய பேரணி, தந்தை செல்வா கலையரங்கைச்
சென்றடைந்தது. அங்கு சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை
முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட சர்வதேச மாநாட்டு நிகழ்வுகள் ஆரம்பமாகின.</p><p>

காணாமல் ஆக்கப்பட்டோரின் நிலை தொடர்பில் உண்மை வெளிப்படுத்தப்பட வேண்டும்
என்றும், அவர்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என்றும் பேரணியில் பங்கேற்ற
குடும்பங்கள் கோரிக்கை விடுத்தனர்.</p><p>வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தின்
ஏற்பாட்டில் நடைபெற்றுவரும் குறித்த மாநாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர்கள்,
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், வலிந்து காணாமல்
ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், அரசியல் பிரதிநிதிகள் என பலர்
கலந்துகொண்டுள்ளனர்.</p><p></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/UU565u-hlBQ" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-30T12:29:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiva</name>
            </author>
            <title type="text"><![CDATA[இனப்படுகொலையின் அச்சாணியாக வடிவமைக்கப்பட்ட சிங்கள பௌத்த தலைமைகள்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sinhala-buddhist-leaderships-designed-genocide-1788090486"></link>
            <id>https://tamilwin.com/article/sinhala-buddhist-leaderships-designed-genocide-1788090486</id>
            <summary type="text">ஒரு பௌத்தனே இலங்கை அரசின் தலைவனாக இருக்க வேண்டும் என்பது இலங்கை அரசியல் சாசனத்தில் வரையப்படவில்லைத்தான். ஆயினும் ஒரு பௌத்தம் மட்டுமே இலங்கை சிம்மாசனத்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஒரு பௌத்தனே இலங்கை அரசின் தலைவனாக இருக்க வேண்டும் என்பது இலங்கை அரசியல் சாசனத்தில் வரையப்படவில்லைத்தான். ஆயினும் ஒரு பௌத்தம் மட்டுமே இலங்கை சிம்மாசனத்தில் அமர முடியும் என்பது எழுதப்படாத சட்டமாகவுள்ளது. </p><p>ஆயினும் இலங்கை அரசியலில் 12ம் நூற்றாண்டில் ஒரு பௌத்தன் மாத்திரமே சிம்மாசனத்தில் அமரமுடியும் என்பதை சட்டமாக்கி கல்வெட்டாக பொறிக்கப்பட்டும் விட்டது.</p><h2>தமிழினப் படுகொலை</h2><p> </p><p>அது நவீன அரசியல் சாசனத்தில் எழுதப்படவில்லை ஆயினும் பௌத்த மகா சங்கத்தின் ஊடாகவும், பௌத்த தர்மத்தின் ஊடாகவும் சிங்கள பௌத்தர்களின் சமூகச் சட்டமாக நிலைபெற்றுவிட்டது.</p><p> அதுவே இன்றைய தமிழினப் படுகொலைக்கு காரணமாகவும் இருப்பதோடு அரசின் தலைவர்களே அதன் அச்சாணியாகவும், யார் எத்தகைய நல்மனம் கொண்டவராக இருப்பினும் இலங்கை சிம்மாசனத்தில் அமர்ந்தாதும் அவர்கள் இனப்படுகொலையின் பங்குதாரராகவும், அதனை வழிநடத்திச் செல்பவராகவுமே செயலாற்ற முடியும். </p><p>

இந்தப் பின்னணியை ஆழமாக வரலாற்று உணர்வோடும், வரலாற்றுப் போக்கிலும், வரலாற்று தத்துவவியல், மற்றும் சமூகவியல் மனப்பாங்கு ஆகிய முறைகளுக்குள்ளால் ஆராய்கின்றபோது இலங்கை அரசியலில் பௌத்தத்தின் செல்வாக்கினால் இனக்குரோதம் எத்தகைய ஆழமான தாக்கத்தை செலுத்துகிறது என்பதை உணர முடியும்.
</p><p>
இலங்கை சுதந்திரத்திற்கு பின்னர் பௌத்தன் அல்லாத யாரும் பிரதமமந்திரியாகவோ, ஜனாதிபதியாகவோ இலங்கை அரசுத் தலைவராக அமரவில்லை. அமரவும் முடியாது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/50b5c847-3e1a-4871-8a2f-13d8adefc71d/26-6a94214eb1e07.webp' /></p><p> </p><p>சிங்கள அரசியல் தலைவர்களை வரிசைப்படுத்தி பார்க்கின்றபோது ஆச்சரியமான அரசியல் அதிகார அவாவின் உச்சங்களை காணமுடியும். </p><p>அந்த அரசியல் அதிகார அவாவின் நிமித்தம் மதம் மாறியவர்களையும் காணமுடியும், மதத்தின் பெயரால் அவர்கள் மேற்கொண்ட அயோக்கியத்தனங்களையும் காணமுடியும், பார்வைக்கு பௌத்தனாகவும் சொந்த வாழ்க்கை முறையால் கிறிஸ்தவனாகவும், மேற்கத்திய கலாச்சாரத்தை வரித்துக் கொண்டவர்களாகவும் இருப்பதைக் காணமுடியும். </p><p>அரசியல் அதிகாரத்திற்காக பௌத்தராகவும், சிங்களவனாகவும், தமிழினம் எதிர்பாளனாகவும், இந்திய எதிர்பாளராகவும் தம்மை காட்டிக் கொண்டவர்களை காணமுடியும். </p><p>அதே நேரத்தில் இந்திய எதிர்ப்பை காட்டியவர்கள் இந்திய அரசியல் தலைவர்களுடன் குடும்ப உறவை அன்னியோன்னியமாக பேணியதையும் காணமுடியும்.</p><p>

இந்த வகையிலானதம் அனம் சார்ந்த போக்கு முற்றிலும் மாறான போக்கே தமிழ் அரசியல் தலைவர்களிடம் உண்டு.</p><h2>சிங்கள பௌத்த தலைமைகள்</h2><p> பெயரால் தமிழனாக வாழ்ந்து கொண்டு சிங்கள தேசத்தில் சிங்களவனாகவும், மேற்குலக கலாச்சாரத்தையே வாழ்க்கை முறையாக கொண்டவர்களாகவும், தேர்தலுக்கு வரும்போது வேட்டி சட்டை போட்டவர்களாகவும், அதே நேரத்தில் கிறிஸ்தவனாக வாழ்ந்து கொண்டு அரசியல் அதிகாரங்களை பெற்றுக்கொண்டு, சிங்கள தேசத்தில் ஆதரவையும் பெற்றுக் கொண்டு, தனது மரணக்கிரியை தமிழ் சைவம் முறைப்படி நடத்தப்பட வேண்டும் என்று முன்கூட்டியே கூறிய எஸ்.ஜே.வி செல்வநாயகத்தையும் அரசியல் தலைவராக நாம் கொண்டாடியிருக்கிறோம்.</p><p> இப்போதும் தமிழின அரசியல் பேசிக் கொண்டு வாழ்க்கை முறையால் சிங்கள தேசத்தில் வாழ்ந்து சிங்கள பௌத்த கலாச்சாரத்தில் திளைத்து, வீட்டில் தனது வாரிசுகளை சிங்கள பௌத்தத்தில் கலந்துவிட்டவர்களையும் தலைவராக ஏற்று அரசியல் தற்கொலை செய்ய இப்போதும் மானங்கெட்ட தமிழர்கள் தயாரகின்றனர். அதுவும் முடஇடாள்கள் கோளோச்சும் அன்னைய காலத்தில் நடந்தே தீரும். </p><p>“கொடுகுடி செற்கேளா“ என முனுமுனுத்து மனதை ஆற்றுப்படுத்திக்கொள்வோம்.

இங்கே தென் இலங்கையின் சிங்கள பௌத்த அரசியலில் அரசியல் தலைவர்கள் எம் மதத்திற்கு போனாலென்ன? எந்த கலாச்சாரத்தை பின்பற்றினால் என்ன?, அவர்கள் மகாவம்சத்தின் தம்மதீபக் கோட்பாட்டை கைவிட்டதுகிடையாது. </p><p>அதனை மேலும் மேலும் பலப்படுத்தி அந்தக் கோட்பாட்டின் இலட்சியத்தை அடைவதற்கான அனைத்து வகையான அரசியல் முன்னெடுப்புக்களையும் தமது அரசியல் வாழ்க்கைக்காலம் முழுவதிலும் முன்னெடுத்து இருக்கிறார்கள் என்பது சிங்கள மக்களுக்கு அவர்களின் தலைவர்கள் பற்றி பெருமிதம் அடையக்கூடிய வரலாற்றுத் பெருமைதான். </p><p>எந்தச் சிங்களத் தலைவர்களும் சிங்கள பௌத்தத்திற்கு தீங்கிழைக்கக்கூடிய எந்த ஒரு அரசியல் முடிவையோ, செயற்பாட்டையோ எந்தச் சந்தர்ப்பத்திலும் முன்னெடுக்கவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ac5c0fb6-a085-44e6-8173-13bdcafae12e/26-6a94214f75789.webp' /></p><p> இலங்கையின் முன்னாள் பிரதமர் பண்டாரநாயக்கா கொலை வழக்கில் மரண தண்டனை வழங்கப்பட்ட சோமநாமதேரர் என்ற பௌத்த துறவி தனக்கு மரணதண்டனை வழங்கப்படுவதற்கு முன்னர் கிறிஸ்தவனாக மாறி பீட்டர் என்ற பெயருடன் தூக்கு கைக்கில் தொங்கி மரணித்தார்.</p><p> அவர் மரணத்திலும் கூட தான் பின்பற்றிய பௌத்த மதத்திற்கு அபகீர்த்தி ஏற்படக் கூடாது என்பதில் திடமாக இருந்துள்ளார் என்பதை தமிழ் அரசியல் தலைவர்களும், தமிழ் மக்களும் கருத்தில் கொள்ள வேண்டும்.
</p><p>
இலங்கை சிங்களத் தலைவர்களின் பரம்பரையினர் காலனிய ஆட்சிக்காலத்தில் அரச பதவி அதிகாரங்களை பெறுவதற்காக கிறிஸ்தவர்களாக மதம் மாறி பதவிகளை பெற்றுனார்.</p><p> அவர்கள் பௌத்தத்தின் வளர்ச்சிக்கும் சிங்கள மொழி வளர்ச்சிக்கும் பெரும்பணியாற்றினர். அவர்களின் வரிசுகள்தான் சுதந்திரத்திற்கு பின்னர் அரசியல் அதிகார பதவிகளை பெறுவதற்காக மீண்டும் பௌத்தர்களாக மாறி ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றினார்கள் அல்லது பெற்றுக்கொண்டார்கள். </p><p>இத்தகைய அரசியல் அதிகார அவா என்பது 12ம் நூற்றாண்டில் நிசங்கமல்லன் மன்னன் கையாண்ட political philosophical strategic ன் அரசியல் அதிகார தன்முனைப்புக்களின் ஒரு சுவாரசியமான வரலாற்றுத் தொடர்ச்சிதான். </p><p>சிங்களத் தலைவர்களின் செயற்பாடுகள் உண்மையில் நிசங்கமல்லனின் அதிகார-அரசியல் கோட்பாட்டு மூலோபாயத்தின்(Power-political theoretical strategy) தொடர்ச்சி” என்பதை நிரூபிப்பதாகவே சிங்களத் தலைவர்களின் வாழ்க்கை முறையும் அரசியல் முன்னெடுப்புக்களும் உள்ளன.</p><p>

இலங்கையின் சிம்மாசனத்தில் ஒரு பௌத்தன் மாத்திரமே அமர வேண்டும் என்ற எழுதப்பட்ட சட்டம் எப்போது ஆரம்பம் ஆகிறது என்றால் இப்போது நமக்கு கிடைக்கும் ஆதாரங்களின் அடிப்படையில் பொல்லனார்வை ராஜதானியில் கி.பி 1187-1196 ல் நிசங்கமல்லனின் ஆட்சிக் காலத்தில் நிறுவப்பட்ட பொலநறுவை வடக்கு வாயில் கல்வெட்டு (North Gate Slab Inscription), மற்றும் கல்பொத்த (Gal Pota) கல்வெட்டு ஆகியவை இரண்டும் அவரது அரசுரிமை, பௌத்தம், வம்ச உரிமை ஆகியவற்றை இணைத்துக் காட்டுகின்றன.</p><h2>&nbsp;ஜனாதிபதிகளின் தனிப்பட்ட சமய அடையாளம்</h2><p> </p><p>
1. “பௌத்தனே அரசனாக வேண்டும்”என்பதை வடக்கு வாயில் கல்வெட்டில், சோழர், கேரளர் முதலிய நாடுகளைச் சேர்ந்த பௌத்தரல்லாத இளவரசர்களை இலங்கை அரியணையில் அமர்த்தக் கூடாது என்று கூறப்பட்டுள்ளது. அதே கல்வெட்டு, அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்களே அரச பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்துகிறது. எனவே, “இலங்கையை ஆளுபவன் பௌத்தனாக இருக்க வேண்டும்” என்ற கருத்து நேரடிக் கல்வெட்டு ஆதாரமாகிறது.</p><p>
2. “தர்மத்தைப் பாதுகாப்பது அரசனின் கடமை”என்பதை நிசங்கமல்லனின் ஹதாதகே (Hatadage) கல்வெட்டு அதன் தொடக்கத்திலேயே“This Dhamma … should always be preserved.” என்று பௌத்த தர்மத்தைப் பாதுகாக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது.
</p><p>
 இங்கு “பௌத்தனே அரசனாக வேண்டும்“ என்பதம் “அரசன் பௌத்த சாசனத்தின் பாதுகாவலன்“ என்ற அரசியல்–மதக் கருத்து வெறும் பின்னாளில் உருவாக்கப்பட்ட விளக்கம் அல்ல அது நிசங்கமல்லனின் கல்வெட்டு மரபிலேயே உள்ளது என்பதே முக்கியமாக கவனிக்கத்தக்கது.</p><p> இவை இரண்டும் ஒரே அரசியல் அதிகார அமைப்பியலாக இணைக்கப்படுகின்றமை நிசங்கமல்லனின் political philosophy மற்றும் power politics கருத்தியல் வலுவடைகிறது தொடர்வதை காட்டுகிறது.

நிசங்கமல்லனின் கல்வெட்டுகளில் மூன்று கருத்துகள் ஒன்றோடொன்று இணைகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b7794d79-a53c-42c8-b511-b03017741964/26-6a94215049c1e.webp' /></p><p>
(1)யாருக்கு இலங்கை அரியணையில் உரிமை?
(2) பௌத்தரல்லாத சோழ/கேரள ஆட்சியாளர்கள் அரசனாகக் கூடாது.
(3) அரசனின் கடமைகளில் புத்த சாசனத்தைப் பாதுகாப்பது முக்கியமானது.
மேலும் கல்பொத்த கல்வெட்டில் நிசங்கமல்லன் தனது வம்ச உரிமையை விஜயன் மற்றும் கலிங்க வம்சத்துடன் இணைத்துக் காட்டுகிறார். அதே கல்வெட்டில் தர்மத்தைப் பாதுகாக்க வேண்டும் என்றும் கூறுகிறார்.</p><p>எனவே அவரது அரசியல் தர்க்கமானது கலிங்க வம்ச உரிமை என்பது பௌத்த அரசுரிமை, புத்த சாசனப் பாதுகாப்பு என்பவற்றால் இலங்கையின் அரியணைக்கான அரசியல் சட்டபூர்வத்தன்மை(legitimacy) வலியுறுத்துவதாக அமைந்த பௌத்தத்தை முன்னிலைப்படுத்தி ஆட்சி அதிகாரத்தை கைக்கொள்ளும் கல்வெட்டு ஆதாரமாகும்.
</p><p>
 முன்கூறிய நிசங்கமல்லனின் “strategic move” எப்படி தொடர்புபடுகிறது என்றால் அதற்கான ஒரு முக்கியமான ஆதாரமாக இந்திய அரசாங்கத்தின் Indira Gandhi National Centre for the Arts (IGNCA) வெளியிட்ட நிசங்கமல்லனின் இராமேஸ்வரம் கல்வெட்டு ஆய்வு அவரது கல்வெட்டுகளின் புகழுரைகள் வெறும் அரசனைப் புகழ்வதற்காக மட்டும் அல்லாமல், “Kalinga dynasty” இலங்கை ஆட்சியை உறுதிப்படுத்தும் அரசியல் பிரச்சாரமாகவும் செயல்பட்டதாக ஆய்வாளர் குறிப்பிடுகிறார்.</p><p> இதுவும் ஏற்கனவே குறிப்பிட்டநிசங்கமல்லனின் power politics / strategic legitimacy கோட்பாட்டிற்கான இன்னுமொர் வலுவான ஆதாரம்.
</p><p>
நிசங்கமல்லனின் கல்வெட்டுகள், இலங்கை அரியணை பௌத்த அரசரால் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும், அரசனின் முக்கியக் கடமைகளில் புத்த சாசனத்தைப் பாதுகாப்பதும் அடங்கும் என்றும் காட்டுகின்றன; </p><p>அதேவேளை, கலிங்க வம்சத்தின் இலங்கை அரசுரிமையையும் அவர் வலியுறுத்துகிறார் “அரசன் என்பவன் பௌத்த சாசனத்தின் பாதுகாவலன்” என்ற அரசியல் கோட்பாடு இன்றைய இலங்கை சிங்கள பௌத்த இனவாத அரசியலின் கட்டமைக்கட்ட இனப்படுகொலை அரசியல் செயல்முறைக்கு அத்திவாரம் இடப்பட்டுவிட்டது என்பதும், அதுவே கட்டமைக்கப்பட்ட தமிழின இனப்படுகொலையாக வளர்ச்சி அடைந்துள்ளது என்ற உண்மையும் புரியும்.
</p><p>

நிசங்கமல்லன் தன்னை ஒரு தீவிர பௌத்தனாக காட்டியதே தனது அரசியல் அதிகார நலன்களின் அடிப்படையில்த்தான். </p><p>அந்த அரசியல் அதிகார நலன் என்பது இலங்கை அரசாட்சி அதிகாரத்தை கைப்பற்றவும், அந்த ஆதிகாரத்தை தொடர்ந்து தக்கவைப்பதற்குமான அரசியல் தத்துவார்த்த மூலோபாயம் வியூகம் (political philosophy strategic move).</p><p> இதனை புரியாமல் மேலெழுந்தவாரியாக நிசங்கமல்லனின் பௌத்த மதப் படிமத்தை வெறும் “தீவிர பௌத்தமதப் பக்தி” என்று எடுத்துக்கொள்வது அவரது அரசியல் அதிகார நலன் உத்தியை மறைத்துவிடுவதாகவே அமையும். </p><p>அவர் பௌத்தத்தை தனது அரசியல் அதிகார அடைதலுக்கான கருவியாக பயன்படுத்தினார்.</p><p> ஆனால் அவர் காலவோட்டத்தில் பௌத்தத்திற்குள் அமிழ்ந்துபோனார். 

 அந்த அரசியல் போக்கிற்கு அமைவாகவே காலணி ஆட்சியின் முடிவுக்கு பின்னான சுதந்திர இலங்கையின் அனைத்து பிரதமர்கள் மற்றும் ஜனாதிபதிகளின் தனிப்பட்ட சமய அடையாளம், மற்றும் அவர்களின் பரம்பரையினர் சில நூற்றாண்டுகளின் முன்னர்தான் இலங்கைத்தீவில் குறியேறினர் என்பதையும் துல்லியமாக நிரூபிக்க முடியும். </p><p>குறிப்பாக சேனநாயக்கா, கொத்தலாவல, ஜெயயவர்த்தனா, பண்டாரநாயக்கா, ரணில் விக்ரமசிங்க, ரஜபக்சேக்கள் போன்ற தலைவர்களின் மத அடையாளம், குடும்பப் பின்னணி, அரசியல் அடையாளம் ஆகியவை ஒத்த தன்மையுடையவை என்ற கட்டமைப்பு ரீதியான வாதம்(structural argument) மிகவும் சுவாரசியமானதும் ஆச்சரியமானதுமான உண்மைதான்.</p><h2>&nbsp;அரசியல் அதிகார பதவி</h2><p> </p><p>ஆயினும் இந்த ஒத்த முறைமைக்குள் பலரும் புரிந்து கொள்ள முடியாத அரசியல் தத்துவார்த்த (political philosophy) உண்மைகள் பொதிந்துள்ளது என்பதுதான் இங்கே முக்கியமானது.
</p><p>
காலனித்துவத்திற்கு முந்தைய தேவநம்பிய தீசன் ஆட்சிக் காலத்தில் இருந்து சிங்கள இராச்சியத்தில் அரச அதிகாரத்தின் சட்டபூர்வத்தன்மைக்கு(legitimacy) பௌத்தம் முக்கிய ஆதாரமாக இருந்தது. </p><p>பின்னர் ஐரோப்பிய காலனித்துவ காலத்தில் உயர்கல்வியையும், அரசியல் அதிகாரத்தைப் பெறவும் கிறிஸ்த்தவராக இருக்கவேண்டும் என்ற நிர்பந்தம் ஏற்பட்டபோது உயர்குழத்து குடும்பங்கள் கிறிஸ்தவமயமாகி அரசியல் அதிகார பதவி, பட்டங்களை பெற்றன.</p><p> அதே உயர்குழம் சுதந்திரத்திற்குப் பின்னர் அரசியல் சட்டபூர்வத்தன்மை மீண்டும் பௌத்த மதத்திற்கு மாறி பௌத்த அடையாளத்துடன் இணைந்து அதிகார பீடத்தில் அமர்ந்தனர். இந்த மாற்றத்தை வரலாற்று ரீதியாக ஆராய்வதும் அறிவதும் விடுலைக்காக அதாவது அரசியல் அதிகாரத்தை மீட்கப்போராடும் ஈழத்தமிழர்களுக்கு நிச்சயமாக பயனுள்தாக அமையும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6b1defc1-a35a-498b-bef2-f351fd19f718/26-6a942150ed089.webp' /></p><p>
</p><p>
12ம் நூற்றாண்டின் நிசங்கமல்லனுடைய அரசியல் போக்குத்தான் காலனித்துவ காலத்தில் அரசியல் அதிகார அவா குணாம்சத்திலோ, அதிகார கையிருப்பிலோ வர்க்க அடிப்படையிலோ மறவில்லை. கற்புல அடையாள மாற்றம் அதவது பௌத்தத்திற்கு பதிலாக கிறிஸ்தவ அடையாளம் மட்டுமே மறியது் இதனை மஞ்சல் அடை அணிந்தவர் வெள்ளை ஆடை அணிந்ததான தோற்றப்பாட்டு மாற்றமேயன்றி ஆள் மற்றமல்ல என்பதே உண்மையாகும்.</p><p>

போர்த்துக்கேயர், டச்சுக்கார்ர், பிரித்தானியர் என்ற காலனித்துவ அரசுகள் பாரம்பரிய இலங்கை அரச அதிகார அமைப்பை உடைத்து அதிகார மையம்தை தாம் எடுத்திக்கொண்டாலும் மக்கள் மீது அரகார்ப் பிரயோக்கத்தை காலணித்துவத்தின் பெயரால் பழையா அதிகாரவர்க்கமே பிரயோகித்தது. </p><p>இதற்காகவே புதிய கல்வி, நிர்வாகம், சட்டம், நில உரிமை, வணிகம் ஆகியவற்றின் மூலம் ஒரு புதிய மேற்கத்திய கல்வியறிவு பெற்ற, கிறிஸ்தவத்தை ஏற்றுக்கொண்ட கிறிஸ்தவ உயர்குடியாக அவர்களே உருவானார்கள். அவர்களின் குடும்பங்கள் காலனித்துவ நிர்வாகத்தில் உயர்ந்த பதவிகளைப் பெற்றனர்.</p><p> இது “அரசியல் அதிகாரத்திற்காக மதமாற்றம்” என்ற ஒரு சாத்தியமான தந்திர விளக்கத்தைக் கொண்டிருக்கிறது.</p><p>

பின்னர் 19ம் நூற்றாண்டின் இறுதியிலிருந்து பௌத்த மறுமலர்ச்சி ஏற்பட்டது. இதன் மூலம் பௌத்த அடையாளம் மீண்டும் அரசியல் மற்றும் தேசிய அடையாளத்தின் முக்கிய கூறாகியது.</p><h2>&nbsp;தமிழ் அரசியல் பரப்பு</h2><p> இதுதான் சிங்களவர்களின் அதிகார அவா மிகவும் வலுவடைந்து கட்டமைப்பு ரீதியான இணைப்புத்(structural parallel) தன்மை வெளிப்படுத்துகிறது. சிங்கள மன்னர்கள் காலத்தில் பௌத்தம் -அரச அதிகார சட்டபூர்வத்தன்மை (legitimacy) என்று இருந்த நிர்பந்தம் காலனித்துவ காலத்தில் கிறிஸ்தவம்/மேற்கத்திய கல்வி - காலனித்துவ அதிகார பதவி நுழைவு என்ற வழியே பின்பற்றப்படுகிறது. </p><p>இதன் தொடர்ச்சி இலங்கை சுதந்திரத்திற்கு முன்னும் பின்னுமான கலத்தில் பௌத்த மறுமலர்ச்சி - பௌத்த சிங்களத் தேசிய அரசியல் சட்டபூர்வத்தன்மை மறுவடிவம் பெறுகிறது.
</p><p>
இதை “நிசங்கமல்லனின் மூலோயம் ஆயிரம் ஆண்டுகள் கழிந்தும் இடையறாது தொடர்ந்தது” என்று கூறுவது நிசங்கமல்லன் காலத்தில் தெளிவாகக் காணப்படும் அரச அதிகாரத்தையும் பௌத்த சட்டபூர்வத்தன்மையையும் இணைக்கும் அரசியல் கருத்து, பின்னாளில் உறங்குநிலையிலிருந்து முற்றிலும் அதே வடிவில் இலங்கையின் சுதந்திரத்திற்கு பின்னான அரசியல் கலாச்சாரத்தில் மீண்டும் வலுப்பெற்று நிறுவன அமைப்பு முறையாக(institutional pattern) நிலைத்தது விட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e20c5661-19ba-42d6-8db4-6ac27dadaa4d/26-6a9421519d5e3.webp' /></p><p>
</p><p>
அரசியல் மேடையில் ஆடை மாற்ற வேறுபாடே அன்றி ஆனால் ஆட்டம் பழையதே. காலனித்துவ காலத்தில் கிறிஸ்தவம் ஏற்றுக்கொண்ட இலங்கை உயர்குடும்பங்களின் வாரிசுகள் சுதந்திரத்திற்குப் பின்னர் பௌத்தர்களாக மாறியது என்ற கூற்றையும் குடும்பம் குடும்பமாக ஆதாரத்துடன் ஆராய்ந்தால் உண்மை பட்டவர்த்தனமாக தெரியவரும்.
</p><p>
நிசங்கமல்லன் வெளிப்படுத்திய “பௌத்தமதம் + அரச அதிகார சட்டபூர்வத் தன்மை + தீவின் அரச இறைமை” என்ற அரசியல் வடிவம், இலங்கையின் அரசியல் கலாச்சாரத்தில் நீண்டகால நிறுவனமயமான நினைவுகளாக(institutional memory) நிலைத்துள்ளது. காலனித்துவ காலத்தில் அது தற்காலிகமாக சவாலுக்கு உட்பட்டாலும், பௌத்த மறுமலர்ச்சி மற்றும் சுதந்திரத்திற்குப் பிந்தைய பெரும்பான்மை அரசியலின் வழியாக புதிய வடிவில் மீண்டும் அரசியல் சட்டபூர்வ தன்மையின் முக்கிய ஆதாரமாகியது.</p><p> இதுதான் சிங்கள பௌத்த அரசியல் தத்துவார்த்த நடைமுறையாக உருப்பெற்றிருக்கும் மிகவும் வலுவான வடிவம்.

ஆனால் தமிழ் அரசியல் பரப்பில் தாம் பின்பற்றிய மதத்திற்கும், தன்னை பின்தொடர்ந்த மக்களுக்கும் உண்மையா நடக்காத, விசுவாசம் இல்லாதவர்களை தலைவனாக ஏற்ற தமிழ் மக்கள் இப்போது வெட்கி தலை குனிகின்றனர். </p><p>“தமிழர்களை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்“ என்ற தலைவர்களுக்கு நாம் “தந்தை“ எனபட்டம் சூட்டியிருக்கிறோம். </p><p>எதையுமே தத்துவார்த்த அணுகுமுறைக்கூடாக பார்க்காமல் வெறும் கட்புலப் பார்வைக்கூடாக பார்த்து வீட்டில் பூச்சிகளாக பறந்து நெருப்பில் விழுந்து அழிந்து கொண்டிருக்கும் தமிழினம் தன்னை சுய பரிசீலனை செய்து அவசியம். </p><p>தமது கடந்தகால தலைமைகளின் தலைமைத்துவ ஆளுமையை பகுப்பாய்வு செய்வதன் மூலமே ஆளுமை மிக்க புதிய தலைமைத்துவ உருவாக்கத்திற்கான அகப் புறச் சூழலை தமிழ அரசியல் பரப்பில் ஏற்படுத்த முடியும் அதுவே நமக்கு உடனடி தேவையாகவும் உள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-30T12:29:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[இறுதிப்போர் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம்! ஐ.நா அறிக்கையை நினைவுகூர்ந்த சிறீதரன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/evidence-for-the-final-war-allegations-1788092813"></link>
            <id>https://ibctamil.com/article/evidence-for-the-final-war-allegations-1788092813</id>
            <summary type="text">சர்வதேச சமூகத்திடம் காணமலாக்கப்பட்டோரின் உறவுகள் கோரும் ஒரே விடயம் உண்மையான நீதியை மட்டுமே என தமிழரசுக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிறீதரன் தெ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சர்வதேச சமூகத்திடம் காணமலாக்கப்பட்டோரின் உறவுகள் கோரும் ஒரே விடயம் உண்மையான நீதியை மட்டுமே என தமிழரசுக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிறீதரன் தெரிவித்துள்ளார்.
</p><p>
யாழில் இன்று இடம்பெற்ற நீதிக்கான நீள் பயணம் மாநாட்டில் கலந்துக்கொண்டு மேற்கண்ட விடயத்தை சுட்டிக்காட்டிய அவர், இந்த விவகாரம் குறித்து மேலும் பின்வருமாறு கருத்த வெளியிட்டார்.</p><p>

“இறுதி யுத்தத்தின் பின்னர் இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலை தொடர்பில ஆராய்ந்த மார்சுகி தருஸ்மன்,&nbsp;யாஸ்மின் சூக்கா,&nbsp;ஸ்டீவன் ராட்னர் உள்ளிட்ட மூன்று பேர் கொண்ட நிபுணர் குழு ”இங்கு நடந்தது மிகப்பெரிய மனித பேரவலம். இங்கு எழுபதாயிரத்துக்கும் மேற்பட்டோர் காணாமலாக்கப்பட்டும், கொல்லப்பட்டுள்ளனர்” என சுட்டிக்காட்டினர்.</p><p>(2010–2011 காலகட்டத்தில் இலங்கைக்கு வந்த ஐ.நா. நிபுணர் குழு. அது போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்றதாகக் கூறப்பட்ட மனித உரிமை மற்றும் சர்வதேச மனிதாபிமானச் சட்ட மீறல்கள் தொடர்பாக ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கி மூனுக்கு ஆலோசனை வழங்க நியமிக்கப்பட்ட மூவர் குழுவாகும்)</p><p></p><h2>சர்வதேச மனிதாபிமானச் சட்ட மீறல்கள்</h2><p>
</p><p>
மேலும், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் முன்னாள் தலைவர் நவநீதம் பிள்ளை, 2010 அம் ஆண்டு இலங்கையில் வைத்து இவை அனைத்துக்கும் நீதி வழங்கப்படும் என உறுதியளித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b7202a7e-07f5-42e4-a9f9-a5084f8ff9ea/26-6a94218e81c84.webp' /></p><p>
</p><p>
 நீதி கிடைக்கும் என்ற உறுதியான நம்பிக்கையோடே எமது தாய்மார்கள் இன்று வரை போராடுகின்றனர்.

இருந்தும் நீதிக்கான இடத்திற்கு எம்மால் இதுவரை போக முடியவில்லை.
</p><p>
இறுதி யுத்தம் நடைபெறும்போது எமது மக்கள் ஐ.நா அலுவலகம் முன்னால் இருந்து கைகூப்பி இங்கிருந்து செல்ல வேண்டாம் என அழுதார்கள்.
</p><p>
ஆனால் அவர்களை நாட்டில் இருப்பதற்கு இலங்கை அரசும் சர்வதேச சமூகமும் விடவில்லை. 

அன்று தமது உறவுகளை சர்வதேச சமூகம் கைவிட்டதன் காரணத்தினால் பலரை இழந்துள்ளோம்.
</p><p>
இந்த கொலைகளுக்கு காரணமாக இருந்தவரே அன்று ஜனாதிபதி ஆணைக்குழுவை நியமித்தார். அவர்கள் எங்கள் இழப்புக்களை நய்யாண்டி போக்கில் கையாண்டனர்.
</p><p>
அதுவே இன்று, எந்த ஒரு உள்ளக விசாரணை அலுவலகங்களையம் வேண்டாம் என்றும் சர்வதேச நீதி விசாரணையே அவசியம் எனவும் மக்கள் வலியுறுத்துகின்றனர்” என கூறினார்.&nbsp; &nbsp;</p><p><b>சிறீதரன் உரை - 01.30.00</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/uNgBlT2fVUk" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-30T12:27:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈபிடிபியும்,இராணுவமுமே பிள்ளைகளை கடத்தியது : மூன்று பிள்ளைகளின் வரவுக்காக ஏங்கும் தாய்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/mother-says-epdp-and-military-kidnapped-children-1788091703"></link>
            <id>https://ibctamil.com/article/mother-says-epdp-and-military-kidnapped-children-1788091703</id>
            <summary type="text">சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தில், மூன்று பிள்ளைகளின் புகைப்படத்தை
நெஞ்சோடு அணைத்தபடி பதிலுக்காக காத்திருக்கும் ஒரு தாயின் கண்ணீர் கதை இது.

...</summary>
            <content type="html"><![CDATA[<p>சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தில், மூன்று பிள்ளைகளின் புகைப்படத்தை
நெஞ்சோடு அணைத்தபடி பதிலுக்காக காத்திருக்கும் ஒரு தாயின் கண்ணீர் கதை இது.
</p><p>
“அன்று செய்தி பார்த்துக் கொண்டிருந்தார்கள்… துப்பாக்கிகளுடன் வந்தவர்கள்
அழைத்துச் சென்றார்கள். அதன் பிறகு என் பிள்ளைகளை நான் பார்க்கவே இல்லை…”</p><h2>தாயின் காத்திருப்பு மட்டும் இன்னும் முடிவடையவில்லை</h2><p>20 ஆண்டுகள் கடந்துவிட்டன.
ஆனால் அந்தத் தாயின் காத்திருப்பு மட்டும் இன்னும் முடிவடையவில்லை.

தனது மூன்று பிள்ளைகளின் புகைப்படங்களை கையில் ஏந்தியபடி, “என் பிள்ளைகள்
எங்கே? அவர்களுக்கு என்ன நடந்தது?” என்ற கேள்வியுடன் இன்றும் பதிலைத் தேடி
வருகிறார் அந்தத் தாய்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a3aced97-c9e1-4981-92b9-1e15a8a465b0/26-6a94214e27470.webp' /></p><p>
</p><p>
தனது பிள்ளைகளை EPDP மற்றும் இராணுவத்தினரே அழைத்துச் சென்றதாக அவர்
குற்றஞ்சாட்டுகிறார். எனினும், அவர்களுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பில்
இதுவரை உறுதியான பதில் கிடைக்கவில்லை என அவர் தெரிவிக்கிறார்.</p><p></p><p>
</p><p>
</p><h2>எண்ணற்ற குடும்பங்களின் வலி</h2><p>ஆண்டுகள் கடந்தாலும், ஒரு தாயின் நம்பிக்கை மட்டும் மங்கவில்லை.
ஒருநாள் தனது பிள்ளைகள் பற்றிய உண்மை வெளிவரும் என்ற எதிர்பார்ப்புடன் அவர்
தொடர்ந்து காத்திருக்கிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7328a4c0-867c-498e-b6d1-631afe18b277/26-6a94214d72b7a.webp' /></p><p>
</p><p>
அவரது கைகளில் இருக்கும் அந்த மூன்று இளைஞர்களின் புகைப்படங்கள், ஒரு
குடும்பத்தின் நினைவுகள் மட்டுமல்ல; பதில் கிடைக்காமல் காத்திருக்கும் எண்ணற்ற
குடும்பங்களின் வலியையும் பிரதிபலிக்கின்றன.
</p><p>
“உண்மை வெளிவரும் வரை எங்கள் தேடல் நிற்காது…”

இது ஒரு தாயின் குரல் மட்டுமல்ல.
பல ஆண்டுகளாக பதிலை எதிர்பார்த்து காத்திருக்கும் குடும்பங்களின் மௌனக்
குரலும் கூட.&nbsp;&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-30T12:25:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Fathima</name>
            </author>
            <title type="text"><![CDATA[என்னை கொன்றுவிடுவார்கள்: மருத்துவமனையில் கதறிய கர்ப்பிணி பெண்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/pregnant-woman-dies-with-baby-after-delivery-1788081953"></link>
            <id>https://ibctamilnadu.com/article/pregnant-woman-dies-with-baby-after-delivery-1788081953</id>
            <summary type="text">என்னை கொன்றுவிடுவார்கள் என கதறிய நிறைமாத கர்ப்பிணி பெண் குழந்தை பிறந்தபின்னர் உயிரிழந்த சம்பவம் நடந்துள்ளது.மத்திய பிரதேசத்தின் ஹட்வா பகுதியை சேர்ந்தவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>என்னை கொன்றுவிடுவார்கள் என கதறிய நிறைமாத கர்ப்பிணி பெண் குழந்தை பிறந்தபின்னர் உயிரிழந்த சம்பவம் நடந்துள்ளது.</p><p>மத்திய பிரதேசத்தின் ஹட்வா பகுதியை சேர்ந்தவர் கல்பனா(வயது 25), நிறைமாத கர்ப்பிணியான கல்பனா சஞ்சய் காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கடந்த 25ம் தேதி அனுமதிக்கப்பட்டார்.</p><p>

குழந்தையை பிரசுவித்த பின்னர் கல்பனாவும், குழந்தையும் பரிதாபமாக உயிரிழந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f0765a2f-071d-40c4-a0b0-48de3ff0663b/26-6a93f79ab2d63.webp' /><br></p><p>
</p><p>
இதற்கு முன்னதாக எடுக்கப்பட்ட வீடியோவில், நான் பிழைக்கமாட்டேன், என்னை காப்பாற்றுங்கள், உயிருக்கு ஆபத்து என அவர் கூறுவதும், மிகுந்த மன உளைச்சலுடன் இருப்பதும் அவரை ஊழியர்கள் சமாதானம் செய்வதும் போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
</p><p>
தொடர்ந்து தன்னுடைய உறவினர்கள் தொடர்பு கொள்ள முயற்சிப்பதும், அழுதுகொண்டே தனக்கு முறையான சிகிச்சை அளிக்கவில்லை என குடும்பத்தினரிடம் கூறுவதும் பதிவாகியுள்ளது.</p><p>

இந்நிலையில் கல்பனாவின் தந்தை, எனது ஒரே மகள் கல்பனா, அவள் இப்போது இல்லை, இதற்கு காரணமானவர்கள் மீது காவல்துறை FIR பதிவு செய்ய வேண்டும், மருத்துவர்கள், ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.
</p><p>
மருத்துவ நெறிமுறைகளின் படியே கல்பனாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும், எந்தவித அலட்சியமும் இல்லை என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.<br></p>]]></content>
            <updated>2026-08-30T12:20:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹக்கல தாவரவியல் பூங்காவில் ஏற்படவுள்ள மாற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/changes-coming-to-hakgala-botanical-garden-1788091788"></link>
            <id>https://jvpnews.com/article/changes-coming-to-hakgala-botanical-garden-1788091788</id>
            <summary type="text">சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதிசெய்து சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கில், ஹக்கல தாவரவியல் பூங்காவை மையமாகக் கொண்டு பல புதிய அபிவிருத்தித் திட்டங்க...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதிசெய்து சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கில், ஹக்கல தாவரவியல் பூங்காவை மையமாகக் கொண்டு பல புதிய அபிவிருத்தித் திட்டங்களைச் செயற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. </p><p style="text-align: justify; ">

இதற்காக சுற்றுச்சூழல் பிரதி அமைச்சர் என்டன் ஜயகொடி தலைமையில் ஹக்கல தாவரவியல் பூங்காவில் விசேட கள விஜயமொன்றும் மேற்கொள்ளப்பட்டது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/11271297-85e2-4b35-8499-57df66018425/26-6a941d8d85b18.webp' /></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

இதன்போது பல முக்கிய அபிவிருத்தி யோசனைகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது. </p><p style="text-align: justify; ">

ஹக்கல பிரதேசத்திற்கு உரித்தான விசேட தாவர வகைகளைப் பாதுகாப்பதற்காக விசேட மையமொன்றையும், அது தொடர்பான ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்காக அடிப்படை ஆய்வகமொன்றையும் (Basic Laboratory) நிறுவுவதற்கும், அதற்கான திட்டங்களைத் தயாரிப்பதற்கும் முதற்கட்ட கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டுள்ளன.</p><p style="text-align: justify; "> 

மேலும், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையிலும், இயற்கை அழகைப் பாதுகாக்கும் வகையிலும் புதிய நடைபாதைகள் (Walking Trails) மற்றும் சிறிய பாதைகள் அடங்கிய புதிய சூழலியல் வலயமொன்றை நிறுவுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. </p><p style="text-align: justify; ">

அடையாளங்காணப்பட்ட அரிய மற்றும் உரித்தான தாவர வகைகளைப் பாதுகாப்பதற்காகப் பசுமைக்குடில்கள் நிர்மாணிக்கப்படவுள்ளதுடன், அத்தாவர மற்றும் விலங்கு இனங்கள் பற்றிய தகவல்களைக் கற்றறிவதற்குப் பொதுமக்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்குத் தேவையான வசதிகளும் செய்து கொடுக்கப்படும். </p><p style="text-align: justify; ">

இயற்கைச் சூழலுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில், இயற்கையின் அமைதியை அனுபவித்துச் சுதந்திரமாக நேரத்தைக் கழிக்கக்கூடிய 'பூஜ்ய உமிழ்வு' (Zero Emission) வலயமொன்றாக இந்த வளாகத்தை அபிவிருத்தி செய்யத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.</p><p style="text-align: justify; "> 

இயற்கைச் சூழலமைப்பிற்குப் பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் நிலையான சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதும், மலையகப் பல்லுயிர் பெருக்கத்தை எதிர்கால சந்ததியினருக்காகப் பாதுகாப்பதும் இந்த வேலைத்திட்டத்தின் முதன்மை நோக்கமாகும்.</p>]]></content>
            <updated>2026-08-30T12:19:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாளத்தில் 1643 குழந்தைகளின் உயிரை பேராபத்தில் இருந்து காப்பாற்றிய ஆசிரியர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/nepal-headmaster-saves-1643-children-life-in-flood-1788086836"></link>
            <id>https://news.lankasri.com/article/nepal-headmaster-saves-1643-children-life-in-flood-1788086836</id>
            <summary type="text">Nepal Headmaster saves 1643 children life in flood: நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவில் 1,600-க்கும் மேற்பட்ட குழந்தைகளின் உயிரை ஆசிரியர...</summary>
            <content type="html"><![CDATA[<p>Nepal Headmaster saves 1643 children life in flood: நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவில் 1,600-க்கும் மேற்பட்ட குழந்தைகளின் உயிரை ஆசிரியர் ஒருவர் காப்பாற்றினார்.</p><p>
நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் பாடசாலை ஒன்று அடித்துச் செல்லப்பட்ட நிலையில், ஆசிரியர் ஒருவர் 1,600-க்கும் மேற்பட்ட குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றினார்.&nbsp;</p><h2>பாடசாலையின் முதல்வர்</h2><p>
நேபாளத்தின் வடக்கு-மத்திய பகுதியில் உள்ள திரிசூலி பள்ளத்தாக்கில் அமைந்துள்ள திரிபுவன் திரிசூலி மேல்நிலை பாடசாலையின் முதல்வராக பணியாற்றுபவர் இராஜேந்திர தவாடி.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/81978766-d361-4340-a957-51d7e11dc501/26-6a940d4bc7873.webp' /></p><p></p><p>

அப்பகுதியில் ஆற்றின் மேல் பகுதியில் ஐந்து மைல் தொலைவில் உள்ள கிராமம் ஒன்று வெள்ளப்பெருக்கிற்கு இரையானதாக, நண்பர் ஒருவர் மூலம் தவாடிக்கு தகவல் கிடைத்துள்ளது.
</p><p>
அத்துடன் ஆற்றில் இருந்து 200 அடி உயரத்தில் அமைந்திருந்த பாடசாலைக்கு நோக்கி, வெள்ள நீர் வேகமாக உயர்ந்து வருவதாக பெற்றோரும் அவருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். </p><p>

அச்சமயம் 900 குழந்தைகள் ஏற்கனவே பாடசாலைக்கு வந்திருந்தனர். மேலும், 700 குழந்தைகள் நடந்தும், பேருந்திலும் பாடசாலைக்கு வந்து கொண்டிருந்தனர்.&nbsp;</p><h2>1,643 குழந்தைகள்</h2><p>
அப்போது தனது பாடசாலை ஆபத்தான நிலையில் இருப்பதை உணர்ந்த முதல்வர் தவாடி, உடனடியாக பாடசாலை பேருந்து சாரதிகளை தொடர்புகொண்டு திரும்பிச் செல்லுமாறு கூறியிருக்கிறார்.
</p><p>
பின்னர் பாடசாலையில் குழந்தைகளை கவனிக்கத் தொடங்கிய அவர், மாணவர்களை நடந்தே குன்றின் மீது செல்லுமாறு அனுப்பியிருக்கிறார். </p><p>அவரும் அவர்களுடன் பின்தொடர்ந்து சென்றுள்ளார். 

இவ்வாறு 1,643 குழந்தைகள் மற்றும் ஊழியர்கள் சிலரை துரிதமாக செயல்பட்டு அவர் காப்பாற்றியிருக்கிறார்.&nbsp; &nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6b422f3d-cc44-4762-95d1-e2d66a4195a0/26-6a940d4cadd50.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-30T12:15:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[திருநங்கையாக மாறிய இந்திய கிரிக்கெட் வீரரின் மகன் : அவுஸ்திரேலியாவில் விளையாட அனுமதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/australia-approve-transgender-anaya-bangar-to-play-1788065858"></link>
            <id>https://manithan.com/article/australia-approve-transgender-anaya-bangar-to-play-1788065858</id>
            <summary type="text">trans cricketer anaya bangar to play in australia: திருநங்கையாக மாறிய அனயா பங்கர் கிரிக்கெட் விளையாட அவுஸ்திரேலியா&amp;nbsp; அனுமதி வழங்கியுள்ளது.அனயா பங்...</summary>
            <content type="html"><![CDATA[<p>trans cricketer anaya bangar to play in australia: திருநங்கையாக மாறிய அனயா பங்கர் கிரிக்கெட் விளையாட அவுஸ்திரேலியா&nbsp; அனுமதி வழங்கியுள்ளது.</p><h2>அனயா பங்கர்</h2><p>இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், அணியின் முன்னாள் பேட்டிங் பயிற்சியாளருமான சஞ்சய் பங்கரின் மகன் ஆர்யன் பங்கர், தற்போது அனயா பங்கர் என்ற பெயரில் திருநங்கை பெண்ணாக மகளிர் கிரிக்கெட்டில் விளையாடுவதற்கான புதிய பாதையைத் தேர்ந்தெடுத்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5654ddb1-a21d-492f-aa2b-adc3cda1b15f/26-6a93bd8717103.webp' /></p><p></p><p>
</p><p>
மகளிர் கிரிக்கெட்டில் விளையாடுவதற்காக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திடம் (BCCI) அனுமதி கோரியிருந்த நிலையில், அங்கிருந்து பதில் கிடைக்காததால் அவுஸ்திரேலிய கிரிக்கெட் அமைப்பை அவர் அணுகியுள்ளார்.</p><p> இதையடுத்து, அவுஸ்திரேலியாவில் நடைபெறும் உள்ளூர் மகளிர் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க அனயாவுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bd1066d8-3c5a-47a7-959c-be9ae8609830/26-6a93bd87bd400.webp' /></p><p>

கிரிக்கெட்டில் இருந்து பாலின மாற்றப் பயணம்
2001 முதல் 2004ஆம் ஆண்டு வரை இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாடிய சஞ்சய் பங்கரின் மகனான ஆர்யன், உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் மும்பை மற்றும் புதுச்சேரி அணிகளுக்காக விளையாடியுள்ளார்.
</p><p>
2023ஆம் ஆண்டு, தான் பெண்ணாக மாற விரும்புவதாக வெளிப்படையாக தெரிவித்த அவர், அதற்கான ஹார்மோன் சிகிச்சையை மேற்கொண்டார். தொடர்ந்து பாலின மாற்ற சிகிச்சைகளை மேற்கொண்டு, தனது பெயரையும் அனயா பங்கர் என மாற்றிக்கொண்டார்.</p><p>

இதையடுத்து மகளிர் கிரிக்கெட்டில் தனது கிரிக்கெட் பயணத்தைத் தொடரும் நோக்கில் அவர் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/20800c02-f590-4eea-b149-d3c957776424/26-6a93bd886e244.webp' /></p><p>

அவுஸ்திரேலியாவில் புதிய வாய்ப்பு
மகளிர் கிரிக்கெட்டில், குறிப்பாக அவுஸ்திரேலியாவின் பிரீமியர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதற்கு அனயா விருப்பம் தெரிவித்திருந்தார். </p><p>இதற்கான அனுமதியை அவுஸ்திரேலிய கிரிக்கெட் அமைப்பு தற்போது வழங்கியுள்ளது.

எனினும், சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடுவதற்கான தகுதி தொடர்பாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ICC) விதிமுறைகள் தொடர்ந்து அமலில் உள்ளன.
</p><p>
ஆண் பருவமடைதலை அடைந்த திருநங்கை பெண்கள், உயர்மட்ட மகளிர் சர்வதேச கிரிக்கெட்டில் பங்கேற்பதைத் தடுக்கும் விதிமுறைகளை ஐசிசி 2023ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தியது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bedfbd37-9168-4dbe-96fc-f40609ebb5f4/26-6a93bd891fb77.webp' /></p><p></p><p>
</p><p>
டெஸ்டோஸ்டிரோன் அளவு முக்கியம்
ஐசிசி விதிமுறைகளின்படி, உயர்மட்ட மகளிர் கிரிக்கெட்டில் விளையாடுவதற்குத் தகுதி பெற, சம்பந்தப்பட்ட வீராங்கனையின் இரத்தத்தில் உள்ள டெஸ்டோஸ்டிரோன் அளவு குறைந்தது 12 மாதங்களுக்கு 10 nmol/L-க்கும் குறைவாக இருக்க வேண்டும்.
</p><p>
அனயாவின் உயர்மட்ட கிரிக்கெட் தகுதி தொடர்பான முடிவு, அவரது டெஸ்டோஸ்டிரோன் பரிசோதனை முடிவுகளைப் பொறுத்தே அமையும்.

இதுகுறித்து கிரிக்கெட் அவுஸ்திரேலியாவின் நேர்மை பிரிவுத் தலைவர் ஜாக்கி பார்ட்ரிட்ஜ் கூறுகையில், 2027 மார்ச் மாதத்திற்குப் பின்னர் மேற்கொள்ளப்படும் டெஸ்டோஸ்டிரோன் பரிசோதனை முடிவுகளின் அடிப்படையிலேயே அனயாவின் உயர்மட்ட கிரிக்கெட் தகுதி தீர்மானிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
</p><p>
அதேவேளை, 2027 மார்ச் மாதம் வரை அவுஸ்திரேலியாவின் மாநிலங்கள் அல்லது பிராந்தியங்களில் நடைபெறும் பிரீமியர் கிரிக்கெட் போட்டிகளில் அனயா தொடர்ந்து பங்கேற்கத் தகுதியுடையவராக இருப்பார்.
</p><p>
இதன் மூலம், இந்திய உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடிய ஆர்யன் பங்கர், அனயா பங்கர் என்ற புதிய அடையாளத்துடன் மகளிர் கிரிக்கெட்டில் தனது அடுத்த அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.</p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW&nbsp;</a></u></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-30T12:11:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்க பொருட்களை புறக்கணிக்கும் கனடா இளைஞர்கள் ; ட்ரம்பின் வரியால் வந்த வினை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/canadian-youths-boycott-american-products-1788091318"></link>
            <id>https://canadamirror.com/article/canadian-youths-boycott-american-products-1788091318</id>
            <summary type="text">டிரம்ப்பின் வரிவிதிப்பு எதிரொலியாக அமெரிக்க பொருட்களை புறக்கணித்து கனடா இளைஞர்கள் எதிர்ப்பை காட்டி வருகின்றனர்.

கனடாவுக்கு எதிராக அமெரிக்க ஜனாதிபதி...</summary>
            <content type="html"><![CDATA[<p>டிரம்ப்பின் வரிவிதிப்பு எதிரொலியாக அமெரிக்க பொருட்களை புறக்கணித்து கனடா இளைஞர்கள் எதிர்ப்பை காட்டி வருகின்றனர்.
</p><p>
கனடாவுக்கு எதிராக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் கடுமையான வரிவிதிப்பை அறிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fdfb473c-307e-468b-8faa-ab075c73cf28/26-6a941bb812682.webp' /></p><p> </p><p>இதன்படி, கனடாவின் 2 ஆயிரம் கோடி அமெரிக்க டாலர் மதிப்பிலான சரக்குகளுக்கு 50 சதவீத வரி விதிக்கப்பட்டது.</p><p>&nbsp;இந்த இறக்குமதி வரி விதிப்புக்கு கனடா பிரதமர் மார்க் கர்னியின் அரசு கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. பதிலுக்கு கனடாவும், 15 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை அமெரிக்க பொருட்களுக்கு வரி விதித்து அதிரடி காட்டியது.
</p><p>
இந்த இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தக மோதல் அதிகரித்து காணப்படும் சூழலில், கனடா இளைஞர்கள் தங்களுடைய தேசப்பற்றை வெளிப்படுத்தும் வகையில், நடந்து கொள்கின்றனர்.


</p><p>
அவர்கள் அமெரிக்க தயாரிப்பு பொருட்களை நிராகரித்து வருகின்றனர். இதன்படி, அமெரிக்காவின் ஒயின் உள்ளிட்ட மதுபானங்கள் பல்வேறு மாகாணங்களில் உள்ள குடோன்களில் இருந்து நீக்கப்படுகின்றன.</p><p>

கனடாவில் வாடிக்கையாளர்களின் போக்கிலும் பெரும் மாற்றம் காணப்படுகிறது. இதுபற்றி மான்ட்ரியல் சூப்பர்மார்க்கெட் மேலாளரான பீட்டர் கியானோபோலிஸ் கூறும்போது, பொருட்கள் எங்கிருந்து வருகின்றன என வாடிக்கையாளர்கள் கேட்கின்றனர். </p><p>இந்த மனப்போக்கு அவர்களிடம் அதிகரித்து உள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-30T12:02:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் அனைத்து அரச நிறுவனங்களிலும் வந்துள்ள நடைமுறை! பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/avoid-the-use-of-single-use-plastic-water-bottles-1788090058"></link>
            <id>https://tamilwin.com/article/avoid-the-use-of-single-use-plastic-water-bottles-1788090058</id>
            <summary type="text">ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் தண்ணீர் போத்தல்களின் பயன்பாட்டைத் தவிர்க்குமாறு சுற்றாடல் அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.எதிர்கால சந்ததிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் தண்ணீர் போத்தல்களின் பயன்பாட்டைத் தவிர்க்குமாறு சுற்றாடல் அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.</p><p>எதிர்கால சந்ததியினருக்காக பசுமையான மற்றும் தூய்மையான சூழலை உருவாக்குவதற்காக இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.&nbsp;</p><p>
ஒரு சிறுபொழுது வசதிக்காகப் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் போத்தல்கள், அழியாமல் பல நூறு ஆண்டுகள் சூழலில் நிலைத்திருந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><h2>சூழலுக்கு உகந்த மாற்று வழி</h2><p>இது தொடர்பான அறிவிப்பில் மேலும், குறித்த போத்தல்களுக்கு மாற்றாக, மீண்டும் மீண்டும் பயன்படுத்தக்கூடிய கண்ணாடிப் போத்தல்கள் அல்லது சூழலுக்கு உகந்த மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
</p><p>
இதற்கமைய, அனைத்து அரச நிறுவனங்களிலும் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் தண்ணீர் போத்தல்களின் கொள்வனவு மற்றும் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் விசேட சுற்றுநிருபம், கடந்த மே மாதம் 31 ஆம் திகதி முதல் நாடு முழுவதும் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/55350194-65a8-481d-968b-5a4be35535f5/26-6a94198094e9d.webp' /></p><h2>விசேட திட்டங்கள் நடைமுறை</h2><p>
</p><p>
அத்துடன், திருத்தப்பட்ட சுற்றாடல் சட்டத்தின் ஊடாக, உற்பத்தியாளர்களின் இணக்கப்பாட்டுடன் பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைப்பதற்கான விசேட நாடளாவிய திட்டங்களை நடைமுறைப்படுத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
</p><p>
சட்டதிட்டங்களுக்கும் அப்பால், பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே செல்லும்போது மீண்டும் பயன்படுத்தக்கூடிய தண்ணீர் போத்தலை உடன் எடுத்துச் செல்வது போன்ற சிறிய அன்றாட பழக்கவழக்க மாற்றங்கள் மூலம் பிளாஸ்டிக் மாசுபாட்டைக் குறைக்க முடியும் என்றும் சுற்றாடல் அமைச்சு தெரிவித்துள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-30T11:52:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[இங்கிலாந்து 208 ஓட்டங்களுக்கு ஆல்அவுட்: பாகிஸ்தானுக்கு இமாலய இலக்கு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/england-set-389-run-target-to-pakistan-in-2nd-test-1788090189"></link>
            <id>https://news.lankasri.com/article/england-set-389-run-target-to-pakistan-in-2nd-test-1788090189</id>
            <summary type="text">England set 389 target to pakistan: லார்ட்&#039;ஸ் டெஸ்டில் பாகிஸ்தான் அணிக்கு இங்கிலாந்து 389 ஓட்டங்கள் வெற்றி இலக்கு நிர்ணயித்துள்ளது.

லண்டன் லார்ட்&#039;ஸ...</summary>
            <content type="html"><![CDATA[<p>England set 389 target to pakistan: லார்ட்'ஸ் டெஸ்டில் பாகிஸ்தான் அணிக்கு இங்கிலாந்து 389 ஓட்டங்கள் வெற்றி இலக்கு நிர்ணயித்துள்ளது.
</p><p>
லண்டன் லார்ட்'ஸ் மைதானத்தில் நடந்து வரும் டெஸ்டில், இங்கிலாந்து அணி 208 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆக, பாகிஸ்தான் அணி இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியுள்ளது.&nbsp;</p><h2>இங்கிலாந்து அணி ஆல்அவுட்</h2><p>
இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் லண்டன் லார்ட்'ஸ் மைதானத்தில் நடந்து வருகிறது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/82ac62fe-97eb-4ede-8a2c-bdea73813e4b/26-6a94188f00b5a.webp' />&nbsp;</p><p></p><p>

இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் 290 ஓட்டங்களும், பாகிஸ்தான் 110 ஓட்டங்களும் எடுத்தன. 

பின்னர் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணி அடுத்தடுத்து 2 விக்கெட்டுகளை இழந்தது. </p><p> 

ஜோ ரூட் 24 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, எமிலியோ கே 31 ஓட்டங்கள் எடுத்து மொஹம்மது அப்பாஸ் பந்துவீச்சில் lbw ஆனார்.

அணியின் ஸ்கோர் 128 ஆக உயர்ந்தபோது ஹாரி புரூக் (34) ஆட்டமிழக்க, டேன் லாரன்ஸ் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/43e77e1c-0336-461f-9fd3-ad45f9a6e870/26-6a94188fd348d.webp' /></p><p>
ஜேமி ஸ்மித் மற்றும் கஸ் அட்கின்ஸன் தலா 7 ஓட்டங்களில் வெளியேறினர். டேன் லாரன்ஸ் (Dan Lawrence) 70 பந்துகளில் 2 சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 54 ஓட்டங்கள் எடுத்தார்.&nbsp;</p><h2>இமாலய இலக்கு</h2><p>
கடைசி விக்கெட்டான ஜோஷ் டங்கினை (12) பாகிஸ்தான் அணித்தலைவர் பாபர் அஸாம் ரன்அவுட் செய்ய, இங்கிலாந்து அணி 208 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8314644d-1f6b-407e-b517-f894588b451b/26-6a94189089ced.webp' /></p><p>

அபாரமாக பந்துவீசிய மொஹம்மது அப்பாஸ் 5 விக்கெட்டுகளும், குர்ரம் ஷஷாத் மற்றும் மொஹம்மது அலி தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். </p><p>

389 ஓட்டங்கள் என்ற இலக்கினை நோக்கி களமிறங்கியுள்ள பாகிஸ்தான் அணி 8 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்துள்ளது.&nbsp; &nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/79822600-6295-4bf3-ba55-7ee742976c83/26-6a9418913aa06.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-30T11:45:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாள வெள்ளம்: ஆபத்து வருவதற்கு முன் சுதாரித்த ஆசிரியர்: காப்பாற்றப்பட்ட 1,643 உயிர்கள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/nepal-floods-headmaster-saves-1643-students-1788089324"></link>
            <id>https://manithan.com/article/nepal-floods-headmaster-saves-1643-students-1788089324</id>
            <summary type="text">எதிர்பாராத ஆபத்தான சூழ்நிலைகளில், சரியான நேரத்தில் எடுக்கப்படும் ஒரு சிறிய முடிவுகூட எத்தனை உயிர்களைக் காப்பாற்றும் என்பதற்கு நேபாளத்தைச் சேர்ந்த ராஜே...</summary>
            <content type="html"><![CDATA[<p>எதிர்பாராத ஆபத்தான சூழ்நிலைகளில், சரியான நேரத்தில் எடுக்கப்படும் ஒரு சிறிய முடிவுகூட எத்தனை உயிர்களைக் காப்பாற்றும் என்பதற்கு நேபாளத்தைச் சேர்ந்த ராஜேந்திர ததாபி ஒரு சிறந்த உதாரணமாகியிருக்கிறார்.
</p><p>
கடந்த 26-ஆம் தேதி நேபாளத்தில் ஏற்பட்ட கடுமையான வெள்ளப்பெருக்கில் பல நூறு பேர் உயிரிழந்துள்ளனர். இந்தக் கோரமான இயற்கைப் பேரிடருக்கு மத்தியில், தனது சமயோசிதமான சிந்தனையாலும், துரிதமான நடவடிக்கையாலும் 1,000-க்கும் மேற்பட்ட மாணவர்களின் உயிரைக் காப்பாற்றியிருக்கிறார் ராஜேந்திர ததாபி.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/706858c2-4e28-4b24-8acf-008d8cda545d/26-6a9417c222c82.webp' /></p><p></p><h2>தலைமையாசிரியரின் விரைவான முடிவு&nbsp;</h2><p>
</p><p>
நேபாளத்தின் நுவாகோட் மாவட்டத்தில் அமைந்துள்ள திரிபுவன் திரிசூலி மேல்நிலைப் பள்ளியின் தலைமையாசிரியராக ராஜேந்திர ததாபி பணியாற்றி வருகிறார்.</p><p> பள்ளிக்கு அருகே பாயும் திரிசூலி ஆற்றில் கடந்த 26-ஆம் தேதி திடீரென கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

வெள்ளத்தின் தீவிரம் குறித்து தன்னுடைய நண்பர் மூலம் தகவல் கிடைத்தவுடன், நிலைமையின் ஆபத்தை உணர்ந்த ததாபி, அடுத்த நொடியே செயல்படத் தொடங்கினார்.</p><p>முதலில் பள்ளி மணியை அடித்து, பள்ளியில் இருந்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவரையும் தாமதமின்றி பாதுகாப்பான, உயரமான பகுதிகளுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/88111768-df2f-45d9-adb5-27a1bcd091d9/26-6a9417c2c85d1.webp' /></p><p>
அதோடு நின்றுவிடாமல், பள்ளிப் பேருந்துகளின் ஓட்டுநர்களையும் தொலைபேசியில் தொடர்புகொண்டு, மாணவர்களை மீண்டும் பள்ளிக்கு அழைத்து வராமல் அவரவர் வீடுகளிலேயே பாதுகாப்பாக இறக்கிவிடுமாறு தெரிவித்துள்ளார்.</p><p>

அந்த நேரத்தில், ஒரு பள்ளிப் பேருந்து மட்டும் திரிசூலி ஆற்றின் பாலத்தைக் கடந்து சென்றுகொண்டிருந்தது. நிலைமையை அறிந்த ததாபி, அந்தப் பேருந்தின் ஓட்டுநரையும் உடனடியாகத் தொடர்புகொண்டு, எப்படியாவது பாதுகாப்பான இடத்துக்குச் செல்லுமாறு எச்சரித்துள்ளார்.&nbsp;</p><p>

அவரது அந்த ஒரு தொலைபேசி அழைப்பு எவ்வளவு முக்கியமானது என்பதை அடுத்த சில நிமிடங்களிலேயே நடந்த சம்பவம் உணர்த்தியது. பேருந்து பாலத்தைக் கடந்து சென்ற சில நிமிடங்களிலேயே, அந்தப் பாலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c213354a-021b-4016-83ff-2499c76dc20c/26-6a9417c37dfe0.webp' /></p><p></p><p>
</p><p>
இதற்குப் பிறகு நிகழ்ந்த சம்பவம் இன்னும் அதிர்ச்சியளிக்கக்கூடியது. மூன்று அடுக்குகளைக் கொண்ட பள்ளிக் கட்டடமே அடுத்த சில நிமிடங்களில் வெள்ளநீரின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடித்துச் செல்லப்பட்டது.&nbsp;</p><p>ஆபத்து வருவதற்கு முன்பே மாணவர்களையும் ஆசிரியர்களையும் பாதுகாப்பான இடத்துக்கு அனுப்பியதுடன், பள்ளிப் பேருந்தில் சென்றுகொண்டிருந்த மாணவர்களையும் உரிய நேரத்தில் எச்சரித்து காப்பாற்றியிருந்தார்.

இதன் மூலம், 1,643 மாணவர்கள் எந்தவித பாதிப்பும் இன்றி பாதுகாப்பாக உள்ளனர்.
</p><p>
ஒரு பேரிடர் நேரத்தில் பதற்றமடையாமல், கிடைத்த தகவலை சரியாகப் புரிந்துகொண்டு, சில நிமிடங்களுக்குள் அடுத்தடுத்த நடவடிக்கைகளை எடுத்த ராஜேந்திர ததாபியின் செயல்பாடு உண்மையிலேயே பாராட்டுக்குரியது.
</p><p>
சில நேரங்களில் உயிருக்கும் மரணத்துக்கும் இடையிலான வித்தியாசம் வெறும் சில நிமிடங்களாக மட்டுமே இருக்கலாம். அந்த சில நிமிடங்களில் எடுக்கப்படும் சரியான முடிவுதான் நூற்றுக்கணக்கான உயிர்களின் விதியை மாற்றியுள்ளது.</p><p>அந்த வகையில், ‘விதியை மதியால் வெல்லலாம்’ என்ற பழமொழிக்கு ராஜேந்திர ததாபியின் செயல் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.</p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW&nbsp;</a></u></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-30T11:45:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பகுதியில் இரு இளைஞர்களின் தகாத செயல் ; அதிரடி காட்டிய பொலிஸார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/inappropriate-act-by-two-youths-in-tamil-area-1788090205"></link>
            <id>https://jvpnews.com/article/inappropriate-act-by-two-youths-in-tamil-area-1788090205</id>
            <summary type="text">கந்தளாய், சீனிபுர பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போதைப்பொருள் கடத்தல் சம்...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">கந்தளாய், சீனிபுர பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p style="text-align: justify; ">
போதைப்பொருள் கடத்தல் சம்பவம் தொடர்பில் கந்தளாய், அக்போபுர பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் இந்தச் சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5dae3f14-f1b3-44fb-b6f9-a22437363a63/26-6a94175e6704d.webp' /></p><h2 style="text-align: justify; ">போதைப்பொருள்</h2><p style="text-align: justify; ">

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் திகம்பதான மற்றும் சீனிபுர பகுதிகளைச் சேர்ந்த 22 மற்றும் 33 வயதுடைய நபர்களாவர்.
</p><p style="text-align: justify; ">
கைது செய்யப்பட்ட இருவரில் ஒருவரிடமிருந்து 50 கிராம் ஐஸ் போதைப்பொருளும், மற்றைய நபரிடமிருந்து 10 கிராம் ஐஸ் போதைப்பொருளும் பொலிஸ் உத்தியோகத்தர்களால் கைப்பற்றப்பட்டுள்ளன.

</p><p style="text-align: justify; ">மேலும், சந்தேகநபர்கள் இருவரையும் கந்தளாய் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது</p>]]></content>
            <updated>2026-08-30T11:43:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாடுகளில் தலைமறைவான குற்றவாளிகளுக்கு எதிராக பொலிஸாரின் அதிரடி நகர்வு.. முடக்கப்பட்டுள்ள பல மில்லியன் ரூபா சொத்துக்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/66-suspects-involved-in-organized-crime-1788076816"></link>
            <id>https://tamilwin.com/article/66-suspects-involved-in-organized-crime-1788076816</id>
            <summary type="text">ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் தொடர்பான குற்றச்சாட்டுகளின் கீழ் வெளிநாடுகளில் தலைமறைவாகியிருந்த 66 சந்தேகநபர்கள் 2024 ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் தொடர்பான குற்றச்சாட்டுகளின் கீழ் வெளிநாடுகளில் தலைமறைவாகியிருந்த 66 சந்தேகநபர்கள் 2024 செப்டெம்பர் 21ஆம் திகதி முதல் இதுவரை இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
இதேவேளை, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் தொடர்பான 113 விசாரணைகளுடன் தொடர்புடைய சுமார் 6,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான சொத்துக்கள் இந்தக் காலப்பகுதியில் முடக்கப்பட்டுள்ளன.</p><h2>சிவப்பு அறிவித்தல்கள்</h2><p>
</p><p>
இதன்படி, 102 சந்தேகநபர்களுக்குச் சொந்தமான 5,423 மில்லியன் ரூபாய் பெறுமதியான சொத்துக்கள் போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடையவை எனவும், மூன்று ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளுக்குச் சொந்தமான 209 மில்லியன் ரூபாய் பெறுமதியான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

மேலும், பிரமிட் மோசடி, சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் வெடிபொருட்கள் தொடர்பான குற்றங்களுடன் தொடர்புடைய எட்டு சந்தேகநபர்களுக்குச் சொந்தமான 367 மில்லியன் ரூபாய் பெறுமதியான சொத்துக்களும் முடக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/906fc762-a5a2-4671-9c2c-de2ba6b09781/26-6a93f53ac4a8a.webp' /></p><p>
</p><p>
முடக்கப்பட்ட சொத்துக்களில் 2 கிலோ 140 கிராம் தங்கம், 136 ஏக்கர் காணிகள், 55 வீடுகள் மற்றும் 142 வாகனங்கள் அடங்குவதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
</p><p>
2024 செப்டெம்பர் 21ஆம் திகதிக்குப் பின்னர் நாட்டுக்கு அழைத்து வரப்பட்ட 66 சந்தேகநபர்களில் 28 பேருக்கு சர்வதேச சிவப்பு அறிவித்தல்கள் (Red Notices) பிறப்பிக்கப்பட்டிருந்தன. ஏனைய 38 சந்தேகநபர்கள் சிவப்பு அறிவித்தல்கள் இன்றி நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.</p><h2>பொலிஸ் அறிக்கைகள்</h2><p>
</p><p>
இதேவேளை, 2024 செப்டெம்பர் மாதத்திற்குப் பின்னர் சந்தேகநபர்களை நாட்டுக்கு அழைத்து வருவதற்காக இன்டர்போல் ஊடாக 110 புதிய சிவப்பு அறிவித்தல்கள் பெறப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
மேலும், கடந்த ஒகஸ்ட் 18ஆம் திகதி வரையில் இலங்கை பொலிஸாரால் பெறப்பட்டு நடைமுறையில் உள்ள மொத்த சிவப்பு அறிவித்தல்களின் எண்ணிக்கை 236 ஆகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/90ea3074-906a-4c7e-a0ff-4d8e3ec62645/26-6a93f53b8bffb.webp' /></p><p>
</p><p>
 அவற்றில் 96 சிவப்பு அறிவித்தல்கள் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்களுக்காக பெறப்பட்டுள்ளன.</p><p>

தலைமறைவாகியுள்ள சந்தேகநபர்களில் 35 பேர் தங்கியுள்ள நாடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.</p><p> 

அதன்படி, 18 சந்தேகநபர்கள் ஐக்கிய அரபு இராச்சியத்திலும், 11 பேர் இந்தியாவிலும் தலைமறைவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
மேலும், ஐக்கிய இராச்சியம், பிரான்ஸ், ரஷ்யா, கனடா மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளில் தலா ஒரு சந்தேகநபர் வீதம் தலைமறைவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-30T11:42:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் விவகாரத்தில் குற்றம் செய்தவர்களை பாதுகாக்கும் இலங்கை அரசு : வேலன் சுவாமிகள் குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sri-lankan-government-protects-criminals-1788089094"></link>
            <id>https://ibctamil.com/article/sri-lankan-government-protects-criminals-1788089094</id>
            <summary type="text">வலிந்து காணாமலாக்கப்பட்டோர் விடயத்தில் யார் சித்திரவதை செய்தார்களோ அவர்களே இன்று பாதுகாக்கப்பட்டு வருகின்றனர் என பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி போராட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>வலிந்து காணாமலாக்கப்பட்டோர் விடயத்தில் யார் சித்திரவதை செய்தார்களோ அவர்களே இன்று பாதுகாக்கப்பட்டு வருகின்றனர் என பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி போராட்ட ஒருங்கிணைப்பாளர் வேலன் சுவாமிகள் குற்றம் சுமத்தியுள்ளார். </p><p>

யாழில் இன்று இடம்பெற்ற காணாமலாக்கப்பேடார் சங்க மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.</p><p> 

இது குறித்து மேலும் கருத்து தெரிவித்த அவர்,</p><p></p><h2>வேலன் சுவாமிகள்</h2><p>'வலிந்து காணாமலாக்கப்படுவது என்பது மிகவும் வேதனையான துன்பியலான விடயம் ஒரு மனிதனுடைய வாழ்வுரிமை மறுக்கப்படுகிறது. அந்த மனிதனுக்கு நிகழ்த்தப்படவிருந்த சித்திரவதைகளிலிருந்து யார் சித்திரவதை செய்கிறார்களோ அவர்கள் காப்பாற்றப்படுகின்றார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/156d6de4-152c-48c5-b41e-be12e7371afc/26-6a9416039b79b.webp' /></p><p> </p><p>&nbsp;உறவை பிரிந்து அந்த உறவிற்கு என்ன நமந்தது அவர்கள் உயிரோட இருக்கின்றாரா இல்லையா என்கின்ற அந்த வேதனையோடு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தவிக்கின்ற தவிப்பு வேதனை என்பது ஒரு ஆன்மீக பிரதிநிதியாக மிகவும் ஆழமான வலியை கொண்டிருக்க்கூடியது. </p><p>எம்முடைய தாயகத்தித்தில் காணாமலாக்கப்பட்டோரின் போராட்டம் நீண்ட பயணமாக தொடர்ந்துகொண்டிருக்கின்றது.</p><p> உலகத்திலேயே வலிந்து காணாமலாக்கப்பட்டோருடைய இரண்டாவது அதிகமான தொகையை இலங்கை நாடு கொண்டிருக்கிறது. </p><p>2009 ஆயுதப்போராட்டம் மௌனிக்கப்பட்டதன் பிற்பாடு எங்களுடைய வடக்கு கிழக்கு தமிழர் தயகத்திலே எங்களுடைய தாய்மார்கள் வீதிகளிலே தொடர்ந்து போராடுவதும் சிறிலங்கா அரசினுடைய அராஜகமான கட்டமைப்புக்கள் சிறிலங்கா காவல்துறையினராக இருக்கட்டும் சிறிலங்கா இராணுவ புலனாய்வு துறையினராக இருக்கட்டும் அவர்களுடைய அச்சுறுத்தலும் துன்புறுத்தலும் ஏற்கனவே உறவகளை பிரிந்தவர்களின் துன்பத்தை மேலும் அதிகரித்திருக்கிறது.</p><p><b>வேலன் சுவாமிகள் உரை 03.27</b>&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/uNgBlT2fVUk" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p><p> </p>]]></content>
            <updated>2026-08-30T11:40:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரதேச சபையின் அனுமதியின்றி யாழில் அடாத்தாக அமைக்கப்படும் பௌத்த மத்திய நிலையம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/buddhist-center-established-illegally-in-jaffna-1788088947"></link>
            <id>https://ibctamil.com/article/buddhist-center-established-illegally-in-jaffna-1788088947</id>
            <summary type="text">வலி தெற்கு சுன்னாகம் பிரதேச சபையின் உரிய அனுமதியின்றி கந்தரோடை விகாரைக்
காணிக்குள் பௌத்த மத்திய நிலையம் அடாத்தாக அமைக்கப்பட்டு வருவதாக
குற்றச்சாட்டு...</summary>
            <content type="html"><![CDATA[<p>வலி தெற்கு சுன்னாகம் பிரதேச சபையின் உரிய அனுமதியின்றி கந்தரோடை விகாரைக்
காணிக்குள் பௌத்த மத்திய நிலையம் அடாத்தாக அமைக்கப்பட்டு வருவதாக
குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.
</p><p>
சுமார் 4 பரப்பு விஸ்தீரணம் உள்ள கந்தரோடை விகாரை காணியில் இரண்டு
வருடங்களுக்கு முன்பு குறித்த பௌத்த மத்திய நிலையம் அமைப்பதற்கான ஏற்பாடுகள்
இடம்பெற்றது.</p><h2>அனுமதியின்றி கட்டப்படும் கட்டடம்</h2><p>&nbsp;அக் காலப்பகுதியில் பிரதேச சபை அனுமதியின்றி கட்டப்படும் கட்டடத்தை
நிறுத்துமாறு அறிவித்தல் ஒட்டியிருந்த நிலையில் குறித்த கட்டுமானங்கள்
நிறுத்தப்பட்டிருந்தது</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/10a17355-bdb6-488a-a21e-be7fc67ae0f1/26-6a941627610ec.webp' /></p><p>
</p><p>
இந்நிலையில் மீண்டும் குறித்த பௌத்த மத்திய நிலையக் கட்டுமானம் வெளியார்
பார்க்காத வகையில் உயரமாக மறைப்புச் செய்யப்பட்டு மீண்டும் கட்டுமான
பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது .</p><p></p><p>

</p><h2>வடக்கு ஆளுநருக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை</h2><p>சாதாரண மக்களின் கட்டுமானங்கள் அனுமதியின்றி அமைக்கப்படும் போது அதனை
நீதிமன்றம் மூலம் அகற்றும் பிரதேச சபைகள் குறித்த தியான மண்டபம் உரிய
அனுமதிகள் பெறப்படாது அமைக்கப்பட்டுவருவதை கண்டும் காணாமல் இருக்கிறதா என்ற
கேள்வியும் எழுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/67534eb1-b5eb-4763-a06a-aea61e7e532d/26-6a9416282dfb9.webp' /></p><p>

உள்ளூர் ஆட்சி மன்ற அதிகாரங்களை
சவாலுக்கு உட்படுத்தும் வகையில் குறித்த பௌத்த கட்டுமானம் அமைக்கப்பட்டு
வருகின்ற நிலையில் வடமாகாண ஆளுநர் குறித்த விடயம் தொடர்பில் கவனம் செலுத்த
வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்படுகிறது.
</p><p>



உள்ளூர் ஆட்சி சட்ட அதிகாரங்களுக்கு உட்பட்டு கட்டுமானம் தொடர்பில் உரிய
நடைமுறைகளை பின்பற்றி அனுமதிக்கு சமர்ப்பிக்காமல் கட்டுமானம் தொடருமானால்
நீதிமன்றத்தை நாடுவதற்கு சபை தீர்மானித்துள்ளதாக சபை உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-30T11:38:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[எனக்கு தெரியாம என்னை ஃபாலோ பண்ணுவார்!! அனுபமா வெளியிட்ட வீடியோ..நெட்டிசன்கள் ரியாக்ட்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/anupama-post-sparks-a-stir-among-netizens-1788016184"></link>
            <id>https://viduppu.com/article/anupama-post-sparks-a-stir-among-netizens-1788016184</id>
            <summary type="text">அனுபமாபிரேமம் படத்தின் மூலம் அறிமுகமாகி தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை அனுபமா பரமேஸ்வரன். தமிழில் சமீபத்தில்...</summary>
            <content type="html"><![CDATA[<h2>அனுபமா</h2><p>பிரேமம் படத்தின் மூலம் அறிமுகமாகி தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை அனுபமா பரமேஸ்வரன். தமிழில் சமீபத்தில் பைசன் படத்தில் நடித்தபோது நடிகர் துருவ் விக்ரமுடன் காதலில் இருப்பதாக கிசுகிசுக்கப்பட்டது. </p><p>அதனையடுத்து தனது படங்களில் கவனம் செலுத்தி வந்த அனுபமா, சமீபத்தில் டாக்ஸிக்கான காதலரிடம் இருந்து தான் பட்ட கஷ்டங்களால் பிரிந்துவிட்டதாக கூறி அதிர்ச்சி கொடுத்தார். அந்த உறவை நார்சிசிஸ்டிக் அபியூஸ் என்றும் குறிப்பிட்டிருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/78c2ab83-9e62-44de-b736-c3c0f404b082/26-6a92f63a9b542.webp' /></p><h2>எனக்கு தெரியாம என்னை</h2><p> </p><p>இந்நிலையில், அனுபமா சமீபத்தில் பகிர்ந்த வீடியோவில், யாருடைய பெயரையும் குறிப்பிடாமல், டீ குடித்தபடியே ரசிப்பது, பின் கதவுக்குப்பின் மறைந்திருந்து பார்ப்பது, ஸ்டைலாக போஸ் கொடுத்தபடியே ரசிப்பது என விதவிதமாக போஸ் கொடுத்திருந்தார். </p><p>அந்த வீடியோவை மெர்ச் செய்து பல பெண்களும் வீடியோக்களை வெளியிட்டு இருந்தனர். அது அந்நேரத்தில் மீடியாவில் வைரலானது. இதை துருவ் விக்ரமை வைத்து தான் அனுபமா பகிர்கிறார் என்று கூறி வருகிறார்கள் நெட்டிசன்கள்.</p>]]></content>
            <updated>2026-08-30T11:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Bavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மட்டக்களப்பில் இளைஞர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடையிலான விசேட உரையாடல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/special-youth-mp-dialogue-held-in-batticaloa-1788086938"></link>
            <id>https://tamilwin.com/article/special-youth-mp-dialogue-held-in-batticaloa-1788086938</id>
            <summary type="text">மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் தலைவர்களுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும்
இடையிலான குரலிலிருந்து கொள்கை நோக்கி உரையாடல் எனும் உயர்மட்டக்
கலந்துரையாட...</summary>
            <content type="html"><![CDATA[<p>மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் தலைவர்களுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும்
இடையிலான குரலிலிருந்து கொள்கை நோக்கி உரையாடல் எனும் உயர்மட்டக்
கலந்துரையாடல் நிகழ்வொன்று நடைபெற்றுள்ளது.</p><p>இந்த நிகழ்வானது நேற்றைய தினம்(29.08.2026) மட்டக்களப்பில் இடம்பெற்றுள்ளது.</p><h2>இளைஞர்களின் பங்கேற்பு</h2><p> இந்த நிகழ்வில், இளைஞர்களின் பங்கேற்பை நாட்டின் அரசியல் மற்றும் தேசிய
கொள்கை உருவாக்கச் செயற்பாடுகளில் வலுப்படுத்துவதை முதன்மை நோக்கமாக்கிக் கொண்டு கலந்துரையாடப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/176909dd-3396-4b68-bdf9-0838ba2ebc35/26-6a940fc05010d.webp' /></p><p>இதன்போது மட்டக்களப்பு மாவட்ட இளைஞர்கள் எதிர்கொள்ளும் சமூகப் பிரச்சினைகள், அவர்களின்
எதிர்பார்ப்புகள் மற்றும் எதிர்கால தொலைநோக்குகள் தொடர்பான ஆலோசனைகள்,
நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் நேரடியாக முன்வைக்கப்பட்டு கொள்கை ரீதியிலான
தீர்வுகளைப் பெறுவது குறித்து விரிவாக ஆராயப்பட்டுள்ளது.
</p><p>
இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன், வைத்தியர் இளையதம்பி ஸ்ரீநாத் உட்பட நாட்டின் பல்வேறு
பாகங்களிலிருந்தும் வருகை தந்த 12 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்று, இளைஞர்
தலைவர்களின் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் நேரடியாக கேட்டறிந்துகொண்டுள்ளனர்.</p><p>
</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-30T11:28:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[உண்மையான எதிரியை அடையாளம் காணுங்கள்: முஸ்லிம் நாடுகளுக்கு மொஜ்தபா கமேனி கடிதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/khamenei-letter-to-muslim-countries-1788088867"></link>
            <id>https://news.lankasri.com/article/khamenei-letter-to-muslim-countries-1788088867</id>
            <summary type="text">Mojtaba Khamenei&#039;s Letter To Muslim Countries: முஸ்லிம் நாடுகளுக்கு மொஜ்தபா கமேனி கடிதம் எழுதியுள்ளார்.
ஈரானின் உயர் தலைவர் மொஜ்தபா கமேனி, அமெரிக்கா ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Mojtaba Khamenei's Letter To Muslim Countries: முஸ்லிம் நாடுகளுக்கு மொஜ்தபா கமேனி கடிதம் எழுதியுள்ளார்.
</p><p>ஈரானின் உயர் தலைவர் மொஜ்தபா கமேனி, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிராக ஒன்றிணையுமாறு அப்பிராந்தியத்தில் உள்ள முஸ்லிம் நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.</p><h2>தீர்வு என்பது</h2><p>
</p><p>மத்திய கிழக்குப்போர் தொடங்கி ஆறு மாதங்கள் கடந்த நிலையில் ஞாயிறன்று வெளியிடப்பட்ட ஒரு கடிதத்தில் இதை அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/16570d70-8fc4-4029-9de1-278af1f994d0/26-6a94122555599.webp' /></p><p> </p><p>பிப்ரவரி 28 அன்று போர் தொடங்கியபோது அலி கமேனி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அதிகாரத்திற்கு வந்த மொஜ்தபா கமேனி, பதவியேற்றதிலிருந்து இதுவரை பொதுவெளியில் காணப்படவில்லை; மேலும் அதிகாரிகள் அவரைப் பற்றிய எந்தவொரு காணொளியையோ அல்லது ஒலிப்பதிவையோ வெளியிடவில்லை. </p><p>இந்த நிலையில், வெளியாகியுள்ள கடிதத்தில், இஸ்லாமிய நாடுகளின் பிரச்சினைகளுக்குத் தீர்வு என்பது நல்வழியில் ஒற்றுமை, நட்பு மற்றும் ஒத்துழைப்பு ஆகியவற்றிலேயே உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். </p><p>ஷியா முஸ்லிம்கள் நபிகள் நாயகத்தின் பிறந்தநாளைக் கொண்டாடி வரும் நிலையிலேயே அவரது கடிதமும் வெளியாகியுள்ளது.</p><p></p><p> </p><p>எந்தவொரு பதவியில் இருப்பவரானாலும் சரி, தெரிந்தோ அல்லது தெரியாமலோ, வேண்டுமென்றோ அல்லது தற்செயலாகவோ, முஸ்லிம்களிடையே பிளவை ஏற்படுத்தும் அல்லது முஸ்லிம் சமூகத்தில் மோதலை உருவாக்கும் செயலில் ஈடுபடுபவர் எவரும் இஸ்லாத்தின் எதிரிகளின் நோக்கத்திற்கே சேவை செய்தவராவார் எனவும் கமேனி குறிப்பிட்டுள்ளார். </p><p>மட்டுமின்றி, பிராந்திய நாடுகளின் ஆட்சியாளர்கள் தங்கள் உண்மையான எதிரியை அடையாளம் கண்டு, அதன் திட்டத்தைப் புரிந்துகொண்டு, அதை எதிர்கொள்ளுமாறும் கமேனி அழைப்பு விடுத்துள்ளார்.</p><p> போரின்போது, ​​சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், ஜோர்டான், குவைத், கத்தார் மற்றும் பஹ்ரைன் உள்ளிட்ட மத்திய கிழக்கு முழுவதும் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்களை ஈரான் குறிவைத்தது. அதன்பிறகு அந்த நாடுகளுடனான உறவுகள் மோசமடைந்துள்ளன.</p><h2>டொலர் பயன்பாடு</h2><p> </p><p>முக்கிய அரசு கொள்கைகள் குறித்து இறுதி முடிவெடுக்கும் அதிகாரத்தைக் கொண்ட கமேனி, ஈரானிய அதிகாரிகளும் குடிமக்களும் தங்கள் கருத்து வேறுபாடுகளை மறந்து, இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவிற்கு எதிராக ஒன்றிணையுமாறு அழைப்பு விடுத்துள்ளார். </p><p>வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், சமூக நல்லிணக்கத்திற்குப் பாதிப்பை ஏற்படுத்தும் எதையும் செய்வது தடைசெய்யப்பட்டுள்ளது என்று நான் உறுதியாகத் தெரிவிக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார். </p><p>மட்டுமின்றி, பல மாதங்களாக நீடித்த அமெரிக்கக் கடற்படை முற்றுகை மற்றும் வாழ்வாதாரங்களைப் பாதித்த பல ஆண்டுகால முடக்கும் பொருளாதாரத் தடைகளுக்குப் பிறகு, ஈரானியப் பொருளாதாரத்தை படிப்படியாக டொலர் பயன்பாட்டிலிருந்து விடுவிக்கவும், வளர்ச்சியை ஆதரிக்கும் வகையில் பொருளாதார உற்பத்தியை அதிகரிக்கவும் அவர் வெள்ளிக்கிழமை அழைப்பு விடுத்திருந்தார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-30T11:18:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வீட்டருகே இரவில் நடந்த மோதல் - 17 வயது மாணவருக்கு நேர்ந்த பரிதாபம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/schoolboy-stabbed-to-death-1788087560"></link>
            <id>https://tamilwin.com/article/schoolboy-stabbed-to-death-1788087560</id>
            <summary type="text">எஹெலியகொட - எரெபொல பகுதியில் நடந்த கத்திக்குத்து சம்பவத்தில் 17 வயது பாடசாலை மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் இன்று(30.08.2026) இடம்பெற...</summary>
            <content type="html"><![CDATA[<p>எஹெலியகொட - எரெபொல பகுதியில் நடந்த கத்திக்குத்து சம்பவத்தில் 17 வயது பாடசாலை மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.</p><p>

இந்த சம்பவம் இன்று(30.08.2026) இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p> 

எரெபொலபாடசாலைக்கு அருகே தனது நண்பனுடன் உரையாடிய காணொளி தொடர்பாக, உயிரிழந்த மாணவர் அப்பகுதியைச் சேர்ந்த மற்றொரு இளைஞருடன் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டுள்ளார். </p><h2> 

இரு தரப்பினருக்குள் வெடித்த மோதல்</h2><p>
இந்த பிரச்சினை முற்றியதை தொடர்ந்து, இரவில் மாணவனின் இல்லத்திற்கு அருகே இரு தரப்பினருக்கும் இடையே மற்றொரு மோதல் வெடித்துள்ளதாக தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fabfce79-6943-47d8-b7fe-8b00ba6c0792/26-6a94115e6903a.webp' /></p><p>
</p><p>
கத்திக்குத்து காயங்களால் படுகாயமடைந்த குறித்த மாணவர், எஹெலியகொட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட பின்னர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.</p><p>

இவ்வாறு உயிரிழந்தவர், 17 வயதாகும் பாடசாலை மாணவர் என்றும் அடையாளப்படுத்தப்பட்டுள்ளார்.</p><p>

இந்த சம்பவத்தில் தொடர்புடைய சந்தேக நபர் தற்போது அப்பகுதியிலிருந்து தப்பிச் சென்றுள்ள நிலையில், அவரைக் கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை எஹெலியகொட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p><p>YOU MAY LIKE THIS VIDEO</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/CTT60-og4Nw" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p> 

</p>]]></content>
            <updated>2026-08-30T11:18:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுவிட்சர்லாந்தில் அதிகாலைவேளை துப்பாக்கிசூடு : ஒருவர் பலி ஐவர் படுகாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/shooting-at-event-in-switzerland-1788087798"></link>
            <id>https://ibctamil.com/article/shooting-at-event-in-switzerland-1788087798</id>
            <summary type="text">இன்று (30)ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில், சுவிட்சர்லாந்தின் ஆராவு நகரில் சுமார் 3,500 பேர் கலந்துகொண்ட ஒரு நிகழ்ச்சியில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில...</summary>
            <content type="html"><![CDATA[<p>இன்று (30)ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில், சுவிட்சர்லாந்தின் ஆராவு நகரில் சுமார் 3,500 பேர் கலந்துகொண்ட ஒரு நிகழ்ச்சியில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில், குறைந்தது ஒருவர் கொல்லப்பட்டார் மற்றும் ஐந்து பேர் காயமடைந்தனர் என்று அந்நாட்டு காவல்துறை தெரிவித்துள்ளது.
</p><p>
துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து காயமடைந்தவர்களில் சிலர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர் என்று ஆராவு மாகாண காவல்துறை, X-இல் தெரிவித்துள்ளது.</p><h2>பெரிய அளவிலான தேடுதல் வேட்டை</h2><p>&nbsp;காவல்துறை ஒரு பெரிய அளவிலான தேடுதல் வேட்டையைத் தொடங்கியுள்ளதுடன், இதற்குப் பொறுப்பான நபர் அல்லது நபர்களைத் தேடி வருகிறது.

"சம்பவத்தின் சாத்தியமான நோக்கங்களும், அதன் சரியான சூழ்நிலைகளும் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை," என்று காவல்துறை கூறியதுடன், சாத்தியமான சந்தேக நபர்கள் குறித்த மேலதிக தகவல்களையும் வழங்கவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/099450be-d627-43bd-af7a-04681867e9ba/26-6a94115873cfe.webp' /></p><p>
</p><p>
சுவிஸ் செய்தித்தாளான 'பிளிக்' வெளியிட்ட மற்றும் சம்பவ இடத்திற்கு அருகில் பதிவு செய்யப்பட்டதாகக் கூறப்படும் ஒரு காணொளியில், சுமார் 10 துப்பாக்கிச் சூடுகள் பதிவாகியிருப்பது தெரிகிறது.</p><p></p><h2>மக்களுக்கு வெளியான அறிவிப்பு</h2><p>
</p><p>
தேடுதல் வேட்டை தொடர்வதால், பாதிக்கப்பட்ட பகுதியைத் தவிர்க்குமாறு அதிகாரிகள் பொதுமக்களை வலியுறுத்தினர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ac0b1ed2-5443-4edb-8374-ec3b7a6d0e09/26-6a94115932759.webp' /></p><p>
</p><p>
சுவிஸ் அவசரகால செய்தி நிறுவனமான BRK நியூஸின்படி, சுவிஸ் இராணுவத்தின் சூப்பர் பூமா உலங்குவானூர்தி ஒன்றும் ஆராவுவின் பரந்த பகுதிக்கு மேல் பணியில் ஈடுபடுத்தப்பட்டது.
</p><p>
ஆராவு, சூரிச்சிலிருந்து சுமார் 40 கிலோமீட்டர் (25 மைல்கள்) மேற்கே அமைந்துள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-30T11:17:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[பொதுமக்களுக்கு பொலிஸார் வெளியிட்டுள்ள மிக முக்கிய அறிவிப்பு..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/new-regulations-for-the-use-of-sound-equipment-1788087264"></link>
            <id>https://tamilwin.com/article/new-regulations-for-the-use-of-sound-equipment-1788087264</id>
            <summary type="text">பொதுமக்களின் அமைதியான வாழ்க்கைக்கும், அக்கம் பக்கத்தினருக்கும் இடையூறு ஏற்படாத வகையில் ஒலிபெருக்கிகள், ஆம்பிளிஃபயர்கள் மற்றும் ஏனைய ஒலி உபகரணங்களை சட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொதுமக்களின் அமைதியான வாழ்க்கைக்கும், அக்கம் பக்கத்தினருக்கும் இடையூறு ஏற்படாத வகையில் ஒலிபெருக்கிகள், ஆம்பிளிஃபயர்கள் மற்றும் ஏனைய ஒலி உபகரணங்களை சட்டப்பூர்வமாகப் பயன்படுத்துமாறு இலங்கை பொலிஸார் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளனர். </p><p>

இது தொடர்பில் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இந்த ஒலி மாசுபாடானது கைக்குழந்தைகள், பாடசாலை மாணவர்கள், முதியவர்கள் மற்றும் நோயாளிகளுக்கு பாரிய சுகாதார மற்றும் உளவியல் ரீதியான பிரச்சினைகளை ஏற்படுத்துவதாக அவதானிக்கப்பட்டுள்ளது.</p><h2>&nbsp;சட்ட நடவடிக்கை</h2><p>
</p><p>
உயர்நீதிமன்ற வழக்கு இலக்கம் 38/2005 இன் உத்தரவிற்கு அமைய, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் ஒலி உபகரணங்களைப் பயன்படுத்துவது தண்டனைச் சட்டக்கோவையின் 261 ஆவது பிரிவின் கீழ் பொதுத் தொல்லையாகக் கருதப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/55456a9c-a9c3-4b4d-a836-fa5f74c84590/26-6a941069e0091.webp' /></p><p>
</p><p>
பொதுவாக இரவு 10.00 மணி முதல் மறுநாள் காலை 06.00 மணி வரையிலான காலப்பகுதியில் ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்த அனுமதி வழங்கப்படுவதில்லை.</p><p> 

எனினும், மத அல்லது விசேட நிகழ்வுகளின் போது உரிய விடயங்களைக் கருத்திற்கொண்டு சட்டப்பூர்வமாக அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.</p><h2>அனுமதிக்கப்பட்ட நேரங்கள்</h2><p> 

பொலிஸ் அனுமதி பெறப்பட்டுள்ள சந்தர்ப்பங்களில் ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்த அனுமதிக்கப்பட்ட நேரங்கள்: </p><p>

திங்கட்கிழமை முதல் வியாழக்கிழமை வரை: இரவு 10.00 மணி வரை 

வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில்: அதிகாலை 01.00 மணி வரை</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/70918cf8-4c2a-4efc-b485-e89d80c10ac9/26-6a94106b500a2.webp' /></p><p> 

ஞாயிற்றுக்கிழமைகளில்: அதிகாலை 12.30 மணி வரை 

எவ்வாறாயினும், இந்த நேர வரையறைகள் அனுமதிப் பத்திரம் பெற்றவர்களுக்கு தானாகவே கிடைக்கும் உரிமையல்ல.</p><p> 

அத்துடன், அனுமதி பெறப்பட்டிருந்தாலும், ஒலியானது சம்பந்தப்பட்ட வளாகத்திற்குள் மாத்திரம் மட்டுப்படுத்தப்படும் வகையில் பேணப்படுவது கட்டாயமாகும்.</p><h2>பொதுமக்கள் முறைப்பாடு</h2><p> 

அனுமதி வழங்கப்பட்டுள்ள சந்தர்ப்பங்களில் நிபந்தனைகள் முறையாகப் பின்பற்றப்படுகின்றனவா என்பதைக் கண்காணிக்க பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fd4542ff-86e0-491c-a785-bb6b49968a6c/26-6a94106a9f496.webp' /></p><p> 

பொதுமக்கள் முறைப்பாடு செய்து, ஒலியால் இடையூறு ஏற்படுவது உறுதிப்படுத்தப்பட்டால், அந்தச் செயற்பாட்டை உடனடியாக நிறுத்துமாறு அறிவிக்கப்படும்.</p><p> 

பொலிஸாரின் அறிவிப்பை மீறித் தொடர்ந்தும் அதிக ஒலியுடன் செயற்பட்டால், சம்பந்தப்பட்ட ஒலி உபகரணங்களை பொலிஸார் பொறுப்பேற்பது உட்பட கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும். </p><p>

எனவே, சட்டவிரோதமான முறையிலோ அல்லது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையிலோ அதிக ஒலி எழுப்பப்படுவது தொடர்பில் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கோ அல்லது 118, 119 ஆகிய அவசர தொலைபேசி இலக்கங்களுக்கோ அறிவிக்குமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-30T11:17:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஒலிபெருக்கிகளை பயன்படுத்த கட்டுப்பாடு ; காத்திருக்கும் சட்ட நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/restrictions-imposed-on-loudspeaker-use-1788088259"></link>
            <id>https://jvpnews.com/article/restrictions-imposed-on-loudspeaker-use-1788088259</id>
            <summary type="text">பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைக்கும் அமைதிக்கும் பாதிப்பு ஏற்படும் வகையில் ஒலிப்பெருக்கி மற்றும் ஒலிபெருக்கிச் சாதனங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாற...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைக்கும் அமைதிக்கும் பாதிப்பு ஏற்படும் வகையில் ஒலிப்பெருக்கி மற்றும் ஒலிபெருக்கிச் சாதனங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு பொலிஸார்&nbsp; வேண்டுகோள் விடுத்துள்ளனர்.</p><p style="text-align: justify; ">

ஒலி மாசுபாடானது குழந்தைகள், மாணவர்கள், முதியவர்கள் மற்றும் நோயாளிகளுக்குப் பெரும் சுகாதார மற்றும் மன ரீதியான பாதிப்புகளை ஏற்படுத்துவது கண்டறியப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2b8efb59-5c80-4232-9da9-8bf1a0a28439/26-6a940fc543cbf.webp' /></p><h2 style="text-align: justify; ">அனுமதிப்பத்திரம்</h2><p style="text-align: justify; ">

உயர் நீதிமன்றத்தின் 38/2005 இலக்க கட்டளை மற்றும் தண்டனைச் சட்டக்கோவையின் 261 ஆம் பிரிவின் கீழ், பொதுமக்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் ஒலிபெருக்கிப் பயன்பாடானது பொது தொல்லையாகக் கருதப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p style="text-align: justify; ">
இதன்படி, இரவு 10 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரையான காலப்பகுதியில் ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட மாட்டாது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
அனுமதிப்பத்திரம் பெறப்பட்டிருப்பினும், திங்கள் முதல் வியாழன் வரையிலான நாட்களில் இரவு 10 மணி வரையிலும், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் நள்ளிரவு ஒரு மணி வரையிலும், ஞாயிற்றுக்கிழமைகளில் நள்ளிரவு 12.30 வரையிலும் மட்டுமே ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்த அனுமதி வழங்கப்படும்.</p><p style="text-align: justify; ">

எனினும், விசேட சட்டரீதியான அனுமதிகள் வழங்கப்பட்ட குறிப்பிட்ட மத அல்லது விசேட நிகழ்வுகளுக்கு இந்தக் கட்டுப்பாடுகளிலிருந்து விலக்களிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">

அனுமதி பெறப்பட்டிருந்தாலும் ஒலி குறிப்பிட்ட எல்லைக்குள்ளேயே இருக்க வேண்டும் என்றும், மீறுபவர்களின் ஒலிபெருக்கிச் சாதனங்களைக் கைப்பற்றிச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; ">

சட்டவிரோத ஒலி மாசுபாடு தொடர்பில் 118 அல்லது 119 ஆகிய அவசர இலக்கங்களுக்குத் தொடர்பு கொண்டு அறிவிக்க முடியும் என காவல்துறை தெரிவித்துள்ளது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-30T11:11:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழ் மக்களின் நம்பிக்கைக்கு சர்வதேச சுயாதீன பங்களிப்பே ஒரே பதில்! கனகரஞ்சனி யோகராசா திட்டவட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/special-speech-by-kanakaranjani-yogarasa-1788088171"></link>
            <id>https://ibctamil.com/article/special-speech-by-kanakaranjani-yogarasa-1788088171</id>
            <summary type="text">வலிந்து காணாமலாக்கப்பட்டடோருக்கான நீதித்தேடலில் காணாமல் போனார் அலுவலகம் மட்டும் போதாது என்றும், சரியான நீதிப்பொறிமுறை ஒன்றையே தாங்கள் கோருவதாகவும், வட...</summary>
            <content type="html"><![CDATA[<p>வலிந்து காணாமலாக்கப்பட்டடோருக்கான நீதித்தேடலில் காணாமல் போனார் அலுவலகம் மட்டும் போதாது என்றும், சரியான நீதிப்பொறிமுறை ஒன்றையே தாங்கள் கோருவதாகவும், வடக்கு, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத் தலைவி கனகரஞ்சனி யோகராசா சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>
 வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளினால் இன்று (30) ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற சர்வதேச மாநாட்டில் கருத்து வெளியிடுகையிலேயே இதனை கூறினார்.</p><p>


 இலங்கையில் காணாமலாக்கப்பட்டடோருக்கான விவகாரத்தில் பல்வேறு ஆணைக்குழுக்களும் நிறுவனங்களும் உறுவாக்கப்பட்ட போதிலும் எமது உறவுகளின் அடிப்படை கோரிக்கை இதுவரையில் எந்த விதத்திலும் நிறைவேற்றவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.</p><p></p><h2>நம்பிக்கை இழந்த மக்கள்</h2><p>
</p><p>
ஒரு நிறுவனத்தின் சுயாதீனம் செய்தித்திறன் மீதே மக்கள் இன்று நம்பிக்கை இழந்துள்ளனர் என்றும் அந்த நம்பிக்கையை உறுவாக்குவதற்கு சர்வதேச சுயாதீன பங்களிப்பு மிக அவசியம் எனவும் கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9757fe7f-cfe0-4e9f-958a-ce3f2b92443e/26-6a940f6cca1c4.webp' /></p><p>இதன் பொருள் இலங்கைக்கு எதிரான பாதுகாப்பு மிக்க சுயாதீன சர்வதேச விசாரணை வேண்டும் என்பதே ஆகும் எனவும் கூறியுள்ளார்.</p><p></p><p><b>00.11.00 - கனகரஞ்சனி யோகராசா உரை</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/uNgBlT2fVUk" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-30T11:09:56+00:00</updated>
        </entry>
    </feed>
