<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-08-19T16:41:53+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[கென்யாவில் ஹெலிகொப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில் ஏழு பேர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/seven-killed-in-helicopter-crash-in-kenya-1787157568"></link>
            <id>https://canadamirror.com/article/seven-killed-in-helicopter-crash-in-kenya-1787157568</id>
            <summary type="text">கென்யாவின் சம்புரு மாநிலத்தில் ஹெலிகொப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த விமானி மற்றும் ஆறு சுற்றுலாப் பயணிகள் உட்பட ஏழு பேர் இன்று (19)உயி...</summary>
            <content type="html"><![CDATA[<p>கென்யாவின் சம்புரு மாநிலத்தில் ஹெலிகொப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த விமானி மற்றும் ஆறு சுற்றுலாப் பயணிகள் உட்பட ஏழு பேர் இன்று (19)உயிரிழந்தனர்.</p><p> </p><p>ரொயிட்டர்ஸ் செய்தி நிறுவனத்தால் பார்வையிடப்பட்ட ஆர்ச்சர்ஸ் போஸ்ட் (Archers Post) பொலிஸ் நிலையத்தின் முதற்கட்ட அறிக்கையின்படி, இந்த ஹெலிகொப்டர் லோய்சாபா காப்பகத்தை நோக்கிப் பறந்துகொண்டிருந்த போதே விபத்துக்குள்ளாகியுள்ளது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9d0b624d-8265-4f9f-82cb-2bb0eec296d2/26-6a85dc4174e63.webp' /></p><p>பொலிஸார் தெரிவிக்கையில், உயிரிழந்த சுற்றுலாப் பயணிகளின் குடியுரிமை தொடர்பான விபரங்கள் வெளியாகவில்லை. </p><p>

தங்களது விருந்தினர்களை ஏற்றிச் சென்ற ஹெலிகொப்டர் ஒலோலோக்வே மலைக்கு அருகில் விபத்துக்குள்ளானமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. </p><p>

விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என்றும் அந்நிறுவனம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-19T16:39:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானின் ஆதரவுக்கு ஈராக் பிரதமர் பாராட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/iraqi-pm-praises-iran-s-supportive-stance-1787157200"></link>
            <id>https://tamilwin.com/article/iraqi-pm-praises-iran-s-supportive-stance-1787157200</id>
            <summary type="text">&amp;nbsp;ஈராக்கிற்கு ஈரான் வழங்கிய ஆதரவையும், குறிப்பாக சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்னர் ஐ.எஸ்.ஐ.எல். அமைப்புக்கு எதிரான போரின்போது வழங்கிய உதவியையும் ஈராக...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;ஈராக்கிற்கு ஈரான் வழங்கிய ஆதரவையும், குறிப்பாக சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்னர் ஐ.எஸ்.ஐ.எல். அமைப்புக்கு எதிரான போரின்போது வழங்கிய உதவியையும் ஈராக் பிரதமர் அலி அல்-சைதி பாராட்டியுள்ளார்.
</p><p>ஈரானின் நாடாளுமன்ற சபாநாயகர் முகம்மது பாகர் காலிபாப் ஈராக்கிற்கு மேற்கொண்டுள்ள மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தின்போது, அவருடன் இடம்பெற்ற சந்திப்பில் ஈராக் பிரதமர் இந்தக் கருத்தை வெளியிட்டதாக ஈரானின் அரச செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.</p><p>
இந்தச் சந்திப்பின்போது, இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்துதல், கூட்டு நடவடிக்கைகளை முன்னெடுத்தல் மற்றும் பல்வேறு துறைகளில் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/15d6b097-56ee-4367-b82b-30b10526aa41/26-6a85dad288e02.webp' /></p><p>
</p><p>மேலும், ஈரான்–ஈராக் உறவுகளை மேலும் மேம்படுத்தவும், இரு நாட்டு மக்களின் பொதுவான நலன்களை அடைவதற்காக ஒத்துழைப்பை விரிவுபடுத்தவும் ஈராக் அரசாங்கம் மேற்கொண்டு வரும் முயற்சிகளை காலிபாப் பாராட்டியுள்ளார்.</p><p>
இரு நாடுகளுக்கும் இடையிலான அரசியல், பொருளாதாரம் மற்றும் ஏனைய துறைகளில் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது தொடர்பிலும் இந்த விஜயத்தின்போது முக்கிய கவனம் செலுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-19T16:33:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாபர் அஸாம் இல்லை..இங்கிலாந்தில் 171 ஓட்டங்களுக்கு சுருண்ட பாகிஸ்தான்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/pakistan-all-out-for-171-vs-england-leeds-2026-1787156571"></link>
            <id>https://news.lankasri.com/article/pakistan-all-out-for-171-vs-england-leeds-2026-1787156571</id>
            <summary type="text">Pakistan all out for 171 vs england: இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்டில் பாகிஸ்தான் அணி 171 ஓட்டங்களுக்கு சுருண்டது.

லீட்ஸில் நடந்து வரும் இங்கிலாந...</summary>
            <content type="html"><![CDATA[<p>Pakistan all out for 171 vs england: இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்டில் பாகிஸ்தான் அணி 171 ஓட்டங்களுக்கு சுருண்டது.
</p><p>
லீட்ஸில் நடந்து வரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 171 ஓட்டங்களுக்கு சுருண்டது.&nbsp;</p><h2>இமாம் உல் ஹக் 42 ஓட்டங்கள்&nbsp;</h2><p>

இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் லீட்ஸில் இன்று தொடங்கியது. 

வலது கையில் ஏற்பட்ட காயம் காரணமாக பாகிஸ்தான் அணியில் பாபர் அஸாம் விளையாடவில்லை.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7fab0962-f771-4883-ae74-350a93f692c6/26-6a85da5392ab7.webp' /></p><p></p><p>

நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தெரிவு செய்தது. 

அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் அணியில் அஸான் அவைஸ் டக்அவுட் ஆனார். </p><p>ஷான் மசூத் 5 ஓட்டங்களில் வெளியேற, இமாம் உல் ஹக் 42 ஓட்டங்கள் எடுத்தார். 

சவுத் ஷகீல் 5 ஓட்டங்களிலும், அரைசதம் அடித்த அப்துல்லா ஷாஃபிக் 61 ஓட்டங்கள் எடுத்த நிலையிலும் ஓலி ராபின்ஸன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர். </p><p>

ஜோஷ் டங்கின் மிரட்டலான பந்துவீச்சில் சல்மான் ஆகா (21), மொஹம்மது ரிஸ்வான் (12) மற்றும் அலி உஸ்மான் ஆகியோர் ஆட்டமிழந்தனர்.&nbsp; &nbsp; </p><p>48.1 ஓவர்கள் தாக்குப்பிடித்த பாகிஸ்தான் அணி 171 ஓட்டங்களுக்கு சுருண்டது. ஓலி ராபின்ஸன், ஜோஷ் டங் தலா 5 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b39a0de1-103b-49af-be9c-439b843b7dc8/26-6a85da52ad192.webp' />&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bf2f897f-852e-40e6-8e97-5a79fd25d300/26-6a85da544a4e7.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-19T16:28:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பல்கலைக்கழகத்தில் தொடர் உயிர்மாய்ப்பு; அதிர்ச்சியில் மயங்கி வீழ்ந்த மாணவிகள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/eastern-university-student-takes-her-own-life-1787141731"></link>
            <id>https://jvpnews.com/article/eastern-university-student-takes-her-own-life-1787141731</id>
            <summary type="text">&amp;nbsp; கிழக்கு பல்கலைக்கழக கல்லடி சுவாமி விபுலானந்த இசை நடனக் கல்லூரி விடுதியில் மாணவி ஒருவர் இன்று(19) பிற்பகல் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு செய்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; கிழக்கு பல்கலைக்கழக கல்லடி சுவாமி விபுலானந்த இசை நடனக் கல்லூரி விடுதியில் மாணவி ஒருவர் இன்று(19) பிற்பகல் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு செய்து கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p>



அதனை கண்டு அதிர்ச்சியில் இரு மாணவிகள் மயங்கி வீழ்ந்த நிலையில் மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a22907f7-ab36-4fa9-8ea4-6b1993f54097/26-6a859e64d0993.webp' /></p><h2>8 பேர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு</h2><p> 



திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள தம்பிலுவில்&nbsp; சேர்ந்த 20 வயதுடைய மாணவி&nbsp; என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.</p><p>



குறித்த கல்லூரிக்கு நாடகத்துறைக்கு தெரிவு செய்யப்பட்டு கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் கற்கைநெறி ஆரம்பிக்கப்பட்டதையடுத்து குறித்த மாணவி கல்லூரி விடுதியில் தங்கியிருந்து முதலாம் ஆண்டில் கல்வி கற்று வருகிறார்.</p><p></p><p>



இந்நிலையில் விடுதியிலுள்ள அறையில் சம்பவதினமான இன்று பிற்பகல் சுமார்.12.00 மணியளவில் குறித்த மாணவி தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு செய்துள்ளார்.</p><p>



இதனைக்கண்ட அதிர்ச்சியில் இரு மாணவிகள் மயங்கி வீழ்ததையடுத்து அங்குள்ள மாணவர்கள் உடனடியாக தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு செய்து கொண்ட மாணவியையும் மயங்கி வீழ்ந்த மாணவிகளையும் மீட்டு மட்டு போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்தனர்.</p><p></p><p>
</p><p>


இந்த நிலையில் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு செய்து கொண்ட மாணவி ஏற்கனவே உயிரிழந்துள்ளதாகவும் மயங்கி வீழ்ந்த மாணவிகள் சிகிச்சை பெற்றுவருவதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
</p><p>


உயிரிழந்த மாணவியின் சடலம் பிரே பரிசோதனைக்காக பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.



இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p>


இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தில் இந்த வருடம் ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் ஜூலை 31 வரையிலான கடந்த 7 மாதத்தில் 84 பேரும் கடந்த ஜூன் மாதத்தில் 8 பேர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு செய்து கொண்டுள்ளதாக கூறப்படுகின்றது.
</p><p>


கடந்த வருடம் 2025 ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் டிசம்பர் 31ம் திகதி வரையான ஒரு வருடத்தில் 164 தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு செய்து கொண்டுள்ளதாக மாவட்ட பொலிஸ் தலைமைக் காரியாலய புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-19T16:28:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[காசாவில் 24 மணிநேரத்தில் 20 பலஸ்தீனர்கள் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/israel-kills-20-palestinians-in-gaza-in-24-hours-1787155994"></link>
            <id>https://canadamirror.com/article/israel-kills-20-palestinians-in-gaza-in-24-hours-1787155994</id>
            <summary type="text">காசா பகுதியில் இஸ்ரேல் இராணுவம் மேற்கொண்டதாகத் தெரிவிக்கப்படும் வான்வழி மற்றும் ட்ரோன் தாக்குதல்களில் கடந்த 24 மணி நேரத்தில் குறைந்தது 20 பலஸ்தீனர்கள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>காசா பகுதியில் இஸ்ரேல் இராணுவம் மேற்கொண்டதாகத் தெரிவிக்கப்படும் வான்வழி மற்றும் ட்ரோன் தாக்குதல்களில் கடந்த 24 மணி நேரத்தில் குறைந்தது 20 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p>2025 ஒக்டோபரில் போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், காசா பகுதியில் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்கள் மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாக கூறப்படுகிறது.
</p><p>இதேவேளை, 2024 ஜனவரியில் ஐந்து வயது சிறுமி ஹிந்த் ராஜப் மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பிலும் இஸ்ரேல் இராணுவம் தற்போது குற்றவியல் விசாரணையை ஆரம்பித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dad94ee4-ce55-4b1a-917d-bfce25c46fdb/26-6a85d61c1a2c7.webp' /></p><p>
ஹிந்த் ராஜப்பின் குடும்பத்தினர் அப்பகுதியிலிருந்து வெளியேற முயன்றபோது, அவர்களின் வாகனத்தின் பாதையை இஸ்ரேலிய இராணுவ டாங்கி ஒன்று தடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>வாகனத்திற்குள் சிக்கியிருந்த அவர்கள் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
உயிரிழந்தவர்களில் ஹிந்தின் 15 வயது உறவினரான லயானும் அடங்கினார். தாக்குதலின்போது உதவிக்காக அவசர மருத்துவப் பணியாளர்களை தொலைபேசியில் தொடர்புகொண்ட அவர், பின்னர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
ஹிந்த் மற்றும் அவரது குடும்பத்தினர் கொல்லப்பட்டபோது சம்பவ இடத்தில் தங்களது டாங்கிகளோ அல்லது இராணுவ வீரர்களோ இருக்கவில்லை என இஸ்ரேல் ஆரம்பத்தில் மறுத்திருந்தது.</p><p>
காசாவில் தொடர்ந்து இடம்பெறும் தாக்குதல்கள் குறித்து சர்வதேச அளவில் கேள்விகள் எழுந்துள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பங்கள் தங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றன.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-19T16:26:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவுக்குள் துப்பாக்கிகளை கடத்த முயன்ற 57 வயது நபர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/nb-man-charged-for-smuggling-firearms-1787155633"></link>
            <id>https://canadamirror.com/article/nb-man-charged-for-smuggling-firearms-1787155633</id>
            <summary type="text">&amp;nbsp;கனடாவுக்குள் துப்பாக்கிகள் மற்றும் மெகசின்களை சட்டவிரோதமாகக் கடத்த முயன்றதாக 57 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் கனடா...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கனடாவுக்குள் துப்பாக்கிகள் மற்றும் மெகசின்களை சட்டவிரோதமாகக் கடத்த முயன்றதாக 57 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் கனடா எல்லை சேவைகள் நிறுவனம் (CBSA) அறிக்கை வெளியிட்டுள்ளது.</p><p>
அமெரிக்காவிலிருந்து கனடாவுக்குத் திரும்பியபோது, நியூ பிரன்ஸ்விக் மாகாணத்தில் உள்ள ரிவர் டி சுட் எல்லை நுழைவுப் பகுதியில் குறித்த நபர் மேலதிக சோதனைக்காகத் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார்.</p><p>
திங்கட்கிழமை இடம்பெற்ற இந்த சோதனையின்போது, அதிகாரிகள் மற்றும் மோப்ப நாய் குழுவினர் இணைந்து வாகனத்தை சோதனையிட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4001916f-537c-451e-8005-db35a603e8b9/26-6a85d4b3a7d01.webp' /></p><p>
</p><p>நான்கு துப்பாக்கிகள், அதிக கொள்ளளவு கொண்ட 12 தோட்டாக் களஞ்சியங்கள், மேலும் இரண்டு தோட்டாக் களஞ்சியங்கள் என்பன மீட்கப்பட்டுள்ளன.</p><p>
கெய்லோன் ஸ்மித் என அடையாளம் காணப்பட்ட குறித்த நபருக்கு கடத்தல் தொடர்பில் ஐந்து குற்றச்சாட்டுகளும், தவறான தகவலை வழங்கியமை தொடர்பில் ஒரு குற்றச்சாட்டும் சுமத்தப்பட்டுள்ளன.
</p><p>அவர் செவ்வாய்க்கிழமை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், அடுத்த விசாரணை செப்டெம்பர் 14ஆம் திகதி நடைபெறவுள்ளது.
</p><p>சுங்கச் சட்டத்தின் கீழ் இடம்பெற்றதாகக் கூறப்படும் குற்றங்கள் தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாக கனடா எல்லை சேவைகள் நிறுவனம் தெரிவித்துள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-19T16:25:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலகம் மொத்த பேரதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்... முதல் முறையாக ஒப்புக்கொண்ட இஸ்ரேல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/israel-confirms-fired-hind-rajab-1787156801"></link>
            <id>https://news.lankasri.com/article/israel-confirms-fired-hind-rajab-1787156801</id>
            <summary type="text">The Israeli military has confirmed for the first time: ஹிந்த் ரஜாப் கொல்லப்பட்ட கார் மீது ராணுவ வீரர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதை இஸ்ரேல் உறுதி செய...</summary>
            <content type="html"><![CDATA[<p>The Israeli military has confirmed for the first time: ஹிந்த் ரஜாப் கொல்லப்பட்ட கார் மீது ராணுவ வீரர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதை இஸ்ரேல் உறுதி செய்துள்ளது.
</p><p>ஐந்து வயது பாலஸ்தீனச் சிறுமி ஹிந்த் ரஜாப் பயணித்த கார் மீது தாங்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதை இஸ்ரேலிய ராணுவம் முதன்முறையாக உறுதிப்படுத்தியுள்ளது.</p><h2>குற்றவியல் விசாரணை</h2><p>
</p><p>கடந்த 2024-இல் காஸாவில் தனது ஆறு உறவினர்களுடன் குறித்த சிறுமி கொல்லப்பட்டார். ஆரம்பத்தில் ரஜப் அந்தத் தாக்குதலில் இருந்து உயிர் தப்பி, உதவி கோரி வந்த ஒரு தொலைபேசி அழைப்பிற்குப் பதிலளித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5ab9d022-2a0a-437f-84fc-b1aff6e745fa/26-6a85d94510fe6.webp' /></p><p> </p><p>அந்த அழைப்பு பல மணி நேரம் நீடித்தது. இதனிடையே, இஸ்ரேலிய இராணுவத்துடன் ஒருங்கிணைந்து அவரைச் சென்றடைய அனுப்பப்பட்ட ஆம்புலன்ஸ் மீது பின்னர் குண்டுவீச்சு நடத்தப்பட்டது, இதில் இரண்டு மருத்துவப் பணியாளர்கள் கொல்லப்பட்டனர். </p><p>கொல்லப்பட்ட மற்றவர்களுடன், சிறுமி ஹிந்தின் உடலும் சில நாட்களுக்குப் பிறகு மீட்கப்பட்டது. தற்போது வெளியாகியுள்ள அறிக்கையில், 
இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் (IDF), </p><p>ஹிந்த் மற்றும் அவரது குடும்பத்தினரின் கொலை குறித்தும், அத்துடன் மார்ச் 2025-ல் மருத்துவப் பணியாளர்கள் மற்றும் ஐ.நா. ஊழியர் உட்பட 15 பாலஸ்தீனியர்களின் கொலை குறித்தும் குற்றவியல் விசாரணை தொடங்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p></p><p> </p><p>சிறுமி ஹிந்த் ரிஜப் படுகொலையும் மருத்துவப் பணியாளர்கள் மீதான குண்டுவீச்சும் சர்வதேச அளவில் கண்டனத்தைப் பெற்றன. உலகம் மொத்த பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இச்சம்பவம் தொடர்பில் இஸ்ரேல் ராணுவம் முதல் முறையாக தங்கள் பங்கை ஒப்புக்கொண்டுள்ளது. </p><p>சிறுமி ஹிந்த் கொல்லப்பட்டது குறித்து இஸ்ரேலிய பாதுகாப்புப் படை (IDF) கூறுகையில், பாலஸ்தீன செஞ்சிலுவைச் சங்கத்தின் ஆம்புலன்ஸ் வாகனத்தின் இயக்கத்தை ஒருங்கிணைப்பதில் ஏற்பட்டதாகக் கூறப்படும் குறைபாடுகள் காரணமாக, இச்சம்பவம் குறித்து இராணுவக் காவல் குற்றப் புலனாய்வுப் பிரிவின் மூலம் ஒரு குற்றவியல் விசாரணையைத் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது. </p><p>ஆனால், சிறுமி ஹிந்த் கொல்லப்பட்ட நேரத்தில் அப்பகுதியில் தங்கள் படையினர் யாரும் இல்லை என்றே இஸ்ரேலிய பாதுகாப்புப் படை (IDF) ஆரம்பத்தில் கூறியது. இருப்பினும், அந்தக் கூற்று விரைவில் கேள்விக்குள்ளாக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b14189e8-8baf-4586-8def-65dacf725be4/26-6a85d943a2472.webp' /></p><p>
</p><p>சிறுமி ஹிந்த் குடியிருந்த டெல் அல்-ஹவா உள்ளிட்ட காஸா நகரத்தின் சுற்றுப்புறங்களில் இயங்கும் படைகளைக் கொண்டு, பயங்கரவாத இலக்குகள் மீது தாக்குதல்களை நடத்தியதாக இஸ்ரேலிய பாதுகாப்புப் படை (IDF) பின்னர் விளக்கம் அளித்தது. </p><p>பாலஸ்தீன செஞ்சிலுவை சங்கத்தின் (PRCS) மருத்துவ உதவியாளர்களிடம் சிறுமி ஹிந்த் துயரத்துடனும் பதற்றத்துடனும் பேசிய ஒலிப்பதிவு உலகம் முழுவதும் ஒளிபரப்பப்பட்டதைத் தொடர்ந்து, அவரது கொலை சர்வதேச அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.</p><h2>தி வாய்ஸ் ஆஃப் ஹிந்த் ரஜப்</h2><p>
</p><p>அன்று தொலைபேசியின் மறுமுனையில் கேட்ட ஹிந்தின் மெல்லிய குரல், அவளது இறப்பிற்குப் பிறகும் 'ரெட் கிரசண்ட்' (Red Crescent) பணியாளர்களின் நினைவை விட்டு நீங்காமல் இருந்தது. </p><p>தங்களது காருக்கு நேர் முன்னால் இஸ்ரேல் பீரங்கிகள் தங்களை நோக்கி நகர்ந்து வருவதை சிறுமி ஹிந்த் அப்போது விவரித்துக் கொண்டிருந்தார்.</p><p> இதனிடையே, செஞ்சிலுவைச் சங்கக் குழுவினர், தங்கள் ஆம்புலன்ஸை அந்த இடத்திற்குள் செல்ல அனுமதிக்குமாறு இஸ்ரேலிய இராணுவத்திடம் வேண்டுகோள் விடுத்துக்கொண்டிருந்தபோது, ​​ஆபரேட்டர் ராணா ஃபகிஹ் பல மணிநேரம் ஹிந்துடன் தொலைபேசி இணைப்பில் இருந்தார். </p><p>மட்டுமின்றி, யாராவது வந்து தங்களை மீட்க வேண்டும் என்று அந்தச் சிறுமி தன்னிடம் மீண்டும் மீண்டும் கெஞ்சிக் கேட்டதாக ஃபகிஹ் கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4d1aee60-908b-47d1-ac97-ba9b0a15f50f/26-6a85d94454d63.webp' /></p><p> </p><p>சம்பவம் நடந்து மூன்று மணி நேரம் கழித்து அப்பகுதிக்குச் செல்ல ஒரு ஆம்புலன்ஸுக்கு இறுதியாக அனுமதி அளிக்கப்பட்டு, ஹிந்தை மீட்க அனுப்பி வைக்கப்பட்டது.&nbsp;
ஆனால் அந்த ஆம்புலன்ஸ் வாகனம் மீதும் இஸ்ரேல் இராணுவம் குண்டுவீச்சு நடத்தியது.</p><p>இச்சம்பவம் 'தி வாய்ஸ் ஆஃப் ஹிந்த் ரஜப்' (The Voice of Hind Rajab) என்ற ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட திரைப்படமாக பின்னர் உருவாக்கப்பட்டது.</p><p> ஐ.நா. தனது விசாரணை ஆணையம் ஒன்றில் சிறுமி ஹிந்தின் வழக்கை மேற்கோள் காட்டி, இஸ்ரேல் மீது போர்க்குற்றங்கள் புரிந்ததாகக் குற்றம் சாட்டியது; ஆனால் இஸ்ரேல் அக்குற்றங்களை மறுத்துள்ளது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-19T16:24:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[தேவையான இடங்களிலும் தேவையான நேரங்களிலும் பலத்தை பயன்படுத்துவோம் – இஸ்ரேல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/israel-to-use-force-wherever-and-necessary-1787156545"></link>
            <id>https://tamilwin.com/article/israel-to-use-force-wherever-and-necessary-1787156545</id>
            <summary type="text">இஸ்ரேலின் எல்லைப் பகுதிகளில் இராணுவ அச்சுறுத்தல்கள் உருவாகுவதை ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை என இஸ்ரேல் இராணுவத் தலைமைத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் எய...</summary>
            <content type="html"><![CDATA[<p>இஸ்ரேலின் எல்லைப் பகுதிகளில் இராணுவ அச்சுறுத்தல்கள் உருவாகுவதை ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை என இஸ்ரேல் இராணுவத் தலைமைத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் எயால் சாமிர் தெரிவித்துள்ளார்.</p><p>
சிரியாவில் உள்ள விமானப்படைத் தளம் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்திய பின்னர், இராணுவத் தளபதி வெளியிட்டுள்ள முதலாவது கருத்தாக இது அமைந்துள்ளது.</p><p>
இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள தெற்கு சிரியா பகுதிகளுக்கு மேற்கொண்ட விஜயத்தின்போது எயால் சாமிர் இந்தக் கருத்தை வெளியிட்டதாக ஹீப்ரு மொழி ஊடகங்கள் தெரிவித்துள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/38b1cf81-3ae2-42d8-b704-f3f9254c8895/26-6a85d843268ba.webp' /></p><p>
</p><p>“எமது எல்லைகளுக்கு அருகில் விரோத சக்திகள் தங்களது இருப்பை நிலைநிறுத்துவதற்கு நாம் அனுமதிக்க மாட்டோம். தேவையான இடங்களிலும் தேவையான நேரங்களிலும் எமது இராணுவ பலத்தை துல்லியமாக பயன்படுத்துவதற்கு நாம் தயாராக இருக்கிறோம்” என அவர் தெரிவித்ததாக சர்வதேச ஊடகமொன்று குறிப்பிட்டுள்ளது.
</p><p>இதேவேளை, சிரியாவின் அலெப்போ நகருக்கு அருகிலுள்ள அபு அல்-துஹூர் விமானப்படைத் தளம் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியிருந்தது.</p><p>
துருக்கி இராணுவத்தினர் குறித்த விமானப்படைத் தளத்தில் நிலைநிறுத்தப்படுவதைத் தடுப்பதற்காகவே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
</p><p>இஸ்ரேலுக்கும் சிரியாவுக்கும் இடையில் பாதுகாப்பு விவகாரங்களில் தற்போதைய நிலையைத் தொடர்வது தொடர்பில் உடன்பாடு ஏற்பட்டிருந்ததாகவும், ஆனால் துருக்கி இராணுவத்தினரை விமானப்படைத் தளத்தில் நிலைநிறுத்துவதற்கு அனுமதிப்பதன் மூலம் டமாஸ்கஸ் அந்த உடன்பாட்டை மீறும் நிலைக்கு சென்றிருந்ததாகவும் இஸ்ரேல் குற்றம்சாட்டியுள்ளது.
</p><p>எனினும், இஸ்ரேலின் இந்தக் குற்றச்சாட்டுகளை துருக்கி நிராகரித்துள்ளதுடன், அவை “அடிப்படையற்றவை” என தெரிவித்துள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-19T16:23:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[22வது அரசியலமைப்பு திருத்தம் : பொது வாக்கெடுப்பு நடத்த தயார் : அரசாங்கம் அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/22nd-amendment-govt-ready-for-referendum-1787154529"></link>
            <id>https://ibctamil.com/article/22nd-amendment-govt-ready-for-referendum-1787154529</id>
            <summary type="text">&amp;nbsp;அரசியலமைப்பின் 22வது திருத்தத்தை நிறைவேற்றுவதற்கு, நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் பொது வாக்கெடுப்பும் தேவை என்று உச்ச ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;அரசியலமைப்பின் 22வது திருத்தத்தை நிறைவேற்றுவதற்கு, நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் பொது வாக்கெடுப்பும் தேவை என்று உச்ச நீதிமன்றம் தீர்மானித்தால், பொது வாக்கெடுப்பு நடத்த அரசு தயாராக உள்ளது என சுகாதார மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் நலிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்தார்.</p><p>ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிய ஜெயதிஸ்ஸ, செப்டம்பர் அல்லது ஒக்டோபர் மாத இறுதியில் எதிர்பார்க்கப்படும் உச்ச நீதிமன்றதொடர அரசு தயாராக இருப்பதாகக் கூறினார்.</p><h2>பொது நலனுக்காகவே கொண்டுவரப்பட்டுள்ளது</h2><p>
</p><p>
முன்மொழியப்பட்ட இந்தத் திருத்தம் முற்றிலும் பொது நலனுக்காகவே கொண்டுவரப்பட்டுள்ளது என்றும், மக்களின் சார்பாகத் தொடங்கப்பட்ட சீர்திருத்தப் பணிகளை அரசு தொடரும் என்றும் அவர் வலியுறுத்தினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fa8362df-7c5c-4548-8c9d-51cec2533af9/26-6a85d6ca6e979.webp' /></p><p>
</p><p>
"நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை தேவைப்பட்டால், அதற்கேற்ப நாங்கள் செயல்படத் தயாராக இருக்கிறோம். பொது வாக்கெடுப்பு தேவைப்பட்டால், உச்ச நீதிமன்றத்தின் முடிவின் அடிப்படையில் அதற்கும் நாங்கள் தயாராக இருக்கிறோம்," என்று அவர் கூறினார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-19T16:20:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தொலைபேசி கமராக்கள் வழியாக கண்காணிக்கும் மொசாட் - நினைப்பதைவிட அருகில் அவர்கள்..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/mossad-monitors-via-phone-cameras-1787156092"></link>
            <id>https://tamilwin.com/article/mossad-monitors-via-phone-cameras-1787156092</id>
            <summary type="text">உலகின் சக்திவாய்ந்த உளவு அமைப்புகளில் ஒன்றாக பார்க்கப்படும் இஸ்ரேலின் மொசாட் அமைப்பு, தற்போது மக்களின் கைகளில் இருக்கும் ஸ்மார்ட்போன்களையும் குறிவைத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>உலகின் சக்திவாய்ந்த உளவு அமைப்புகளில் ஒன்றாக பார்க்கப்படும் இஸ்ரேலின் மொசாட் அமைப்பு, தற்போது மக்களின் கைகளில் இருக்கும் ஸ்மார்ட்போன்களையும் குறிவைத்துள்ளதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
</p><p>
நாம் 24 மணி நேரமும் பயன்படுத்தும் ஸ்மார்ட்போன்கள் மூலம் எமது நடவடிக்கைகள், புகைப்படங்கள், காணொளிகள் மற்றும் குரல் பதிவுகள் உள்ளிட்ட தகவல்கள் பதிவு செய்யப்பட்டு, எங்கோ இருக்கும் மூன்றாம் தரப்பினருக்கு சென்றடைய வாய்ப்புள்ளதாக பல்வேறு ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.</p><p>

இதன் காரணமாக, ஹிஸ்புல்லா போன்ற அமைப்புகளுடன் தொடர்புடையவர்கள் தொலைபேசி பயன்பாட்டை தவிர்ப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.</p><p> 

இதேவேளை, பயனர்களின் தேவைகளுக்கேற்ப வடிவமைக்கப்பட்டு சந்தைக்கு வரும் ஐபோன்கள் உள்ளிட்ட ஸ்மார்ட்போன்களின் கமராக்கள் மற்றும் பிற தொழில்நுட்ப அம்சங்கள் தொடர்பிலும் பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.
</p><p>
இது போன்ற நாம் அறிந்திராத பல சுவாரஸ்யமான தகவல்களுடன் வருகிறது “உண்மையின் தரிசனம்” நிகழ்ச்சி,</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/NNqduegvc0Y" width="640" height="360" class="note-video-clip"></iframe></p>]]></content>
            <updated>2026-08-19T16:16:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[வரி தொடர்பில் கனடிய உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்களின் நிலைப்பாடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/canadian-manufacturers-say-tariff-delay-1787152309"></link>
            <id>https://canadamirror.com/article/canadian-manufacturers-say-tariff-delay-1787152309</id>
            <summary type="text">அமெரிக்காவின் புதிய வரிகள் அமல்படுத்தப்படுவதைத் தற்காலிகமாக ஒத்திவைக்க எடுக்கப்பட்ட முடிவுக்கு கனடிய உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் அமைப்பு...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவின் புதிய வரிகள் அமல்படுத்தப்படுவதைத் தற்காலிகமாக ஒத்திவைக்க எடுக்கப்பட்ட முடிவுக்கு கனடிய உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் அமைப்பு வரவேற்பு தெரிவித்துள்ளது. </p><p>
எனினும், வரிகள் குறித்த இந்தத் தொடர் அச்சுறுத்தல், நிறுவனங்களையும் அவற்றின் தொழிலாளர்களையும் பேரழிவை ஏற்படுத்தும் அதே அபாயநிலைக்குத் தள்ளுவதாகக் கவலை வெளியிட்டுள்ளது. </p><p>
எதிர்கால வரிக் கொள்கைகள் எவ்வாறு இருக்கும் என்பது தெரியாமல், வர்த்தக நிறுவனங்களால் நீண்டகால திட்டமிடல் மற்றும் முதலீட்டு முடிவுகளைத் தெளிவான நம்பிக்கையுடன் எடுக்க முடியாது என்று கனடாவின் உற்பத்தித் துறையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இந்த அமைப்பு கூறியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/91731b8d-e362-4f28-a491-223a0a7c95af/26-6a85c7b7c45e5.webp' /></p><p>
புதிய வர்த்தக ஒப்பந்தத்தைச் இறுதி செய்வதற்கான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், சுமார் 28 பில்லியன் டொலர் மதிப்பிலான பொருட்கள் மீது விதிக்கப்படவிருந்த புதிய 50 சதவீத வரியை மூன்று நாட்களுக்கு ஒத்திவைப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்திருந்தார். </p><p>
இதனிடையே, பேச்சுவார்த்தைகளில் "குறிப்பிடத்தக்க முன்னேற்றம்" ஏற்பட்டுள்ள போதிலும், இன்னும் செய்ய வேண்டிய பணிகள் மீதமுள்ளதாகப் பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார். </p><p>
புதிய வரிகள் விதிக்கப்பட்டால் அது கனடா மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளையுமே பலவீனப்படுத்தும், செலவுகளை அதிகரிக்கும் மற்றும் உலக அளவில் இரு நாட்டு நிறுவனங்களின் போட்டியிடும் திறனைக் குறைக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.
</p><p>எனவே, பேச்சுவார்த்தையாளர்கள் இந்த கூடுதல் நேரத்தைப் பயன்படுத்தி ஒரு முழுமையான வர்த்தக ஒப்பந்தத்தை எட்ட முயற்சி செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-19T16:13:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[பெல்ஜியத்தில் 10 மில்லியன் டொலர் மதிப்புள்ள தங்கம் கண்டெடுப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/construction-workers-strike-gold-at-belgian-1787151773"></link>
            <id>https://canadamirror.com/article/construction-workers-strike-gold-at-belgian-1787151773</id>
            <summary type="text">பெல்ஜியத்தில் கட்டடப் பணி நடந்த இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட தங்கம் தொடர்பாக, அப்பகுதிக்கு வர வேண்டாம் எனப் புதையல் தேடுபவர்களுக்குப் பெல்ஜியம் காவல்து...</summary>
            <content type="html"><![CDATA[<p>பெல்ஜியத்தில் கட்டடப் பணி நடந்த இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட தங்கம் தொடர்பாக, அப்பகுதிக்கு வர வேண்டாம் எனப் புதையல் தேடுபவர்களுக்குப் பெல்ஜியம் காவல்துறை கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது. </p><p>
கிழக்கு பிளெமிஷ் நகரமான டென்டர்மொண்டே பகுதியில் உள்ள கட்டடம் ஒன்றில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.</p><p> அப்போது, வடிகால் குழாய் அமைப்பதற்காகத் தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள், தற்செயலாகப் பெருமளவிலான தங்கக் கட்டிகள் மற்றும் நாணயங்களைக் கண்டெடுத்தனர். </p><p>
இதுகுறித்துத் தகவலறிந்த காவல்துறை, சுமார் 50 தங்கக் கட்டிகள் மற்றும் தங்க நாணயங்களை மீட்டு, தங்களது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் புகைப்படங்களாகப் பகிர்ந்தனர். 
சிஏடபிள்யூ ஈஸ்ட்-ப்ளாண்டர்ஸ் என்ற உள்ளூர் தொண்டு நிறுவனத்திற்குச் சொந்தமான இந்தக் கட்டடத்தின் அடித்தளச் சுவரில் சுமார் 10.4 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்புள்ள இந்தத் தங்கக் கட்டிகளும் நாணயங்களும் மறைத்து வைக்கப்பட்டிருந்தமை தெரியவந்தது. </p><p>
ஆரம்பத்தில் அதிர்ச்சியும் வியப்புமாக இருந்தது. கழிவுநீர் குழாய் பதிக்கும் பணியின் போதுதான் இதைக் கண்டெடுத்தோம்; நிச்சயமாகத் தங்கம் கிடைக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை என கோபி என்ற கட்டுமானத் தொழிலாளி க் கூறியுள்ளார்.
</p><p>கண்டெடுக்கப்பட்ட தங்கம் அனைத்தும் விரைவாகப் கணக்கெடுக்கப்பட்டு, பெல்ஜியம் அரசாங்கத்திற்குச் சொந்தமான உயர்பாதுகாப்பு பெட்டகத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.</p><p> 
இதனிடையே, ஃபேஸ்புக் பக்கத்தின் சுயவிவரப் படத்தை (Profile picture) தங்க நாணயத்தின் படமாக மாற்றிய காவல்துறை, "இந்தப் பகுதிக்கு மீண்டும் வருகை தரப் பல புதையல் வேட்டைக்காரர்கள் விரும்புவது தெரிகிறது. உங்களுக்கு ஒரு 'தங்கமான அறிவுரை': இங்கு வருவது முற்றிலும் வீண் முயற்சி" என்று குறிப்பிட்டுள்ளதுடன், வேலி அமைக்கப்பட்டுள்ள அந்தப் பகுதிக்கு யாரும் வர வேண்டாம் எனவும் எச்சரித்துள்ளது.</p><p> 
இந்தத் தங்கப் புதையல் சட்டப்பூர்வமாக யாருக்குச் சொந்தமானது, இதை யார் வைத்துக்கொள்வார்கள் என்பது குறித்த விவரங்கள் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. "இந்தச் செல்வம் சரியான நபர்களின் கரங்களைச் சென்றடையும் என நம்புவோம்" என்றும் காவல்துறை தனது பதிவில் குறிப்பிட்டுள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-19T16:13:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[பூட்டப்படாத காரில் மாட்டிக்கொண்ட கரடி பரிதாமாக உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/bear-dies-after-becoming-trapped-inside-car-1787151341"></link>
            <id>https://canadamirror.com/article/bear-dies-after-becoming-trapped-inside-car-1787151341</id>
            <summary type="text">அமெரிக்காவின் கொலராடோ ஸ்பிரிங்ஸ் பகுதியில், பூட்டப்படாத காரில் சிக்கிக்கொண்ட கரடி ஒன்று, வெளியே வர முடியாமல் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவின் கொலராடோ ஸ்பிரிங்ஸ் பகுதியில், பூட்டப்படாத காரில் சிக்கிக்கொண்ட கரடி ஒன்று, வெளியே வர முடியாமல் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. </p><p>சில நாட்களுக்குப் பிறகே அந்தப் பிணம் கண்டெடுக்கப்பட்டது.
சுமார் 113 கிலோ எடையுள்ள அந்தப் கறுங்கரடி, பூட்டப்படாத காரின் கதவைத் திறந்து உள்ளே நுழைந்துள்ளது. </p><p>
கதவு தானாக மூடிக்கொண்டதால் வெளியே வர முடியாமல் காரை சேதப்படுத்திய நிலையில், அதிக வெப்பம் காரணமாகக் காரின் உள்ளேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/82825382-7190-4d79-a21d-93eb4e545344/26-6a85c3eed01b4.webp' /></p><p>
இச்சம்பவத்தையடுத்து, கொலராடோ பூங்காக்கள் மற்றும் வனவிலங்குத் துறை வாகன ஓட்டிகளுக்கு முக்கிய எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. </p><p>கார் கதவுகளை எப்போதும் பூட்டி வைக்கவும், வாகனங்களுக்குள் உணவுகள் மற்றும் குப்பைகளை வைக்க வேண்டாம் என்றும், ஜன்னல்களை முழுமையாக மூடி வைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><p>
நடப்பு ஆண்டில் இதுவரை 6,000-க்கும் மேற்பட்ட கரடி நடமாட்டங்கள் குறித்துப் புகார்கள் வந்துள்ளதாக கொலராடோ பூங்காக்கள் மற்றும் வனவிலங்குத் துறை தெரிவித்துள்ளது. </p><p>
இது கடந்த ஆண்டின் இதே காலக்கட்டத்தை விட இருமடங்காகும். வறட்சி காரணமாகக் காடுகளில் உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், உணவைத் தேடி கரடிகள் மலைப் பகுதிகளிலிருந்து மக்கள் வாழும் குடியிருப்புகளை நோக்கி வரத் தொடங்கியுள்ளதாக அதிகாரிகள் விளக்கியுள்ளனர்.</p><p>
மனிதர்களும் வனவிலங்குகளும் பாதுகாப்பாக இணைந்து வாழ்வது குறித்தும், கரடிகளின் பழக்கவழக்கங்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் கொலராடோ பூங்காக்கள் மற்றும் வனவிலங்குத் துறை தனது இணையதளத்தில் 'Living with Bears' என்ற சிறப்புப் பிரிவைத் தொடங்கியுள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-19T16:12:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[டொராண்டோ நகரசபை தேர்தலில் போட்டியிடும் முன்னாள் எம்.பி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/former-mp-erskine-smith-expected-to-run-toronto-1787150716"></link>
            <id>https://canadamirror.com/article/former-mp-erskine-smith-expected-to-run-toronto-1787150716</id>
            <summary type="text">முன்னாள் லிபரல் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான நெய்ட் எர்ஸ்கைன்-ஸ்மித் டொராண்டோ நகரசபை உறுப்பினராகப் போட்டியிடுவதற்காகத் தனது வேட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் லிபரல் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான நெய்ட் எர்ஸ்கைன்-ஸ்மித் டொராண்டோ நகரசபை உறுப்பினராகப் போட்டியிடுவதற்காகத் தனது வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளார்.</p><p> 
வழக்கறிஞராக இருந்து அரசியல்வாதியான 42 வயதான எர்ஸ்கைன்-ஸ்மித், 'பீச்சஸ்-ஈஸ்ட் யார்க்' தொகுதி நகரசபை இடத்திற்கு போட்டியிடுவதற்காகக் கடந்த புதன்கிழமை காலை டொராண்டோ சிட்டி ஹாலில் ஆவணங்களைச் சமர்ப்பித்தார். </p><p>
2015-ஆம் ஆண்டு இதே தொகுதியிலிருந்து கூட்டாட்சி நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், வீடமைப்பு அமைச்சராகக் குறுகிய காலம் பணியாற்றினார். மே மாதம் பிரதமர் மார்க் கார்னி அமைச்சரவையை மாற்றியமைத்தபோது இவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f0e566e6-5c27-4957-ab02-9148b76c9d44/26-6a85c17e53e86.webp' /></p><p> </p><p>
புதன்கிழமை சிட்டி ஹாலில் செய்தியாளர்களிடம் பேசிய எர்ஸ்கைன்-ஸ்மித், டொராண்டோ மேயர் ஒலிவியா சோ தன்னை தேர்தலில் போட்டியிடுமாறு ஊக்குவித்ததாகத் தெரிவித்தார்.
</p><p>ஒட்டாவாவில் வீடமைப்புத் துறையில் பணியாற்றிய காலத்தில் தாமும் மேயர் ஒலிவியா சோவும் மிக நெருக்கமாகப் பணியாற்றியதாக அவர் குறிப்பிட்டார். 
"நாங்கள் இருவரும் இணைந்து நமது நகரத்திற்காகப் பல நன்மைகளைச் செய்துள்ளோம். இணைந்து செயல்படுவதற்கான நல்ல வாய்ப்பு மீண்டும் கிடைத்துள்ளது. மேயர் சோவுடன் இணைந்து எனது தொகுதி மற்றும் நகரத்தின் வளர்ச்சிக்காகப் பணியாற்றுவதை எதிர்நோக்கியுள்ளேன்," என்று அவர் கூறினார்.</p><p>
முன்னதாக மாகாண அரசியலில் கவனம் செலுத்திய எர்ஸ்கைன்-ஸ்மித், 'ஸ்கார்பரோ சவுத்வெஸ்ட்' இடைத்தேர்தலில் லிபரல் கட்சி சார்பில் போட்டியிட முயன்றார். ஆனால் அந்த உட்கட்சித் தேர்தலில் தோல்வியடைந்தார். அதை எதிர்த்து அவர் செய்த மேல்முறையீடும் தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து, கடந்த ஜூலை மாதம் அவர் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-19T16:12:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[800 ஆண்டுகள் பழமையான கைவிடப்பட்ட கோட்டை: பாரிய செலவில் புனரமைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/haverfordwest-castle-in-refurb-work-1787155175"></link>
            <id>https://news.lankasri.com/article/haverfordwest-castle-in-refurb-work-1787155175</id>
            <summary type="text">Haverfordwest castle in refurb work: வேல்ஸில் 800 ஆண்டுகள் பழமையான கைவிடப்பட்ட கோட்டை புனரமைக்கப்பட உள்ளது.

வேல்ஸில் 800 ஆண்டுகள் பழமையான கைவிடப்பட...</summary>
            <content type="html"><![CDATA[<p>Haverfordwest castle in refurb work: வேல்ஸில் 800 ஆண்டுகள் பழமையான கைவிடப்பட்ட கோட்டை புனரமைக்கப்பட உள்ளது.
</p><p>
வேல்ஸில் 800 ஆண்டுகள் பழமையான கைவிடப்பட்ட கோட்டை ஒன்றை, முக்கிய சுற்றுலாத் தலமாக மாற்ற பாரிய அளவில் செலவு செய்யப்பட உள்ளது.</p><h2>800 ஆண்டுகள் பழமையான&nbsp;கோட்டை </h2><p>

வேல்ஸில் உள்ள பெம்ப்ரோஷையரில் Cleddau நதியின் அருகேயுள்ள குன்றின் உச்சியில் Haverfordwest கோட்டை அமைந்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b81f2cb2-c52d-45d4-807f-3ed2bf7add60/26-6a85d3b9367c0.webp' />&nbsp;</p><p></p><p>

1188-ஆம் ஆண்டில் இந்தக் கோட்டை வெறும் மரம் மற்றும் மண்ணால் கட்டப்பட்டது.

800 ஆண்டுகள் பழமையான இந்தக் கோட்டை, பல ஆண்டுகளாக நடந்த பல்வேறு போர்கள் மற்றும் சண்டைகளில் இருந்து தப்பிப் பிழைத்தது.
</p><p>
என்றாலும், இதன் உள் முற்றம் மற்றும் சுற்றுச்சுவரின் எலும்புக்கூடும், பல கோபுரங்களும் இன்னும் எஞ்சியுள்ளன. சிதைந்த காரணத்தால் இக்கோட்டை கைவிடப்பட்டது.</p><p>

இந்த நிலையில், இதனை ஒரு முக்கிய சுற்றுலாத் தலமாக மாற்றுவதற்காக புனரமைப்பு பணிகள் தொடங்கியுள்ளன.

இதற்காக, பெம்ப்ரோஷையர் கவுண்டி கவுன்சிலின் நிதியுதவியுடன் 17.7 மில்லியன் பவுண்ட் செலவிடப்படுகிறது. </p><p>

மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படும்போது ஹேவர்ஃபோர்ட்வெஸ்ட் கோட்டை பொதுமக்களுக்கு மூடப்பட்டிருக்கும் என்று டைம் அவுட் செய்தி வெளியிட்டுள்ளது.&nbsp; &nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b4c481fb-f93e-43d4-b53e-7dd2bff041c0/26-6a85d3b8711fe.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-19T16:00:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[பெண் கேட்ட கேள்வி.. கடும் அதிர்ச்சி ஆன ஆரி, ராஜு! பிக் பாஸ் காமன் மேன் சம்பவம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/bigg-boss-common-man-girl-question-shocks-judges-1787154309"></link>
            <id>https://cineulagam.com/article/bigg-boss-common-man-girl-question-shocks-judges-1787154309</id>
            <summary type="text">பிக் பாஸ் ஷோவில் பொதுமக்களும் போட்டியாளர்களாக கலந்து கொள்ளலாம் என அறிவித்து, அதற்காக பிக் பாஸ் காமன் மேன் என்ற நிகழ்ச்சியையும் நடத்தி இருக்கிறது விஜய்...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிக் பாஸ் ஷோவில் பொதுமக்களும் போட்டியாளர்களாக கலந்து கொள்ளலாம் என அறிவித்து, அதற்காக பிக் பாஸ் காமன் மேன் என்ற நிகழ்ச்சியையும் நடத்தி இருக்கிறது விஜய் டிவி.</p><p>அதில் போட்டியாளர்களாக வர விரும்புபவர்களை தேர்வு செய்யும் ஜட்ஜுகளாக முந்தைய சீசன் வெற்றியாளர்கள் ஆன ராஜு, ஆரி, ஓவியா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டிருந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ea2db8aa-0a68-41cb-aa12-07056f0d1bcd/26-6a85cf872fbc2.webp' /></p><p>
</p><h2>அதிர்ந்த நடுவர்கள் </h2><p>
பிக் பாஸ் காமன் மேன் இன்றைய எபிசோடு ப்ரொமோவில் பெண் ஒருவர் கேட்ட கேள்வி நடுவர்கள் எல்லோரையும் கடும் அதிர்ச்சியாக்கி இருக்கிறது.
</p><p>கரிஷ்மா என்ற பெண் வந்தபோது அவரைப் பார்த்து ஆரி ஒரு கேள்வி கேட்டார், "கார், வீடு என சொகுசாக priveleged ஆக இருக்கிறீர்கள். உங்களை ஏன் பிக் பாஸ் வீட்டுக்குள் அனுப்ப வேண்டும்" என ஆரி கேட்டார்.
</p><p>அதற்கு பதில் அளித்த அந்த பெண், "உங்களுக்கும் எல்லாமே இருக்கு தானே. நீங்கள் எதற்கு வந்து ஜட்ஜ் செய்கிறீர்கள்" என எதிர் கேள்வி கேட்டார். அது நடுவர்களை கடும் அதிர்ச்சி ஆக்கிவிட்டது. ப்ரோமோவை நீங்களே பாருங்க.&nbsp;&nbsp;</p><p><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="ta" dir="ltr">உங்கள எதுக்காக Bigg Boss வீட்டுக்குள்ள அனுப்பனும்?? 😒 <br><br>Bigg Boss - The Common Man திங்கள்- வெள்ளி இரவு 10.00 மணிக்கு.. சனி - ஞாயிறு மாலை 5.30 மணிக்கு.. நம்ம விஜய் டிவில.. <a href="https://x.com/hashtag/BiggBossTheCommonMan?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#BiggBossTheCommonMan</a> <a href="https://x.com/hashtag/BBTheCommonMan?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#BBTheCommonMan</a> <a href="https://x.com/hashtag/VijaySethupathi?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#VijaySethupathi</a> <a href="https://x.com/hashtag/CommonMan?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#CommonMan</a> <a href="https://x.com/hashtag/BiggBoss?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#BiggBoss</a> <a href="https://x.com/hashtag/BiggBossTamil?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#BiggBossTamil</a> <a href="https://x.com/hashtag/VijayTV?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#VijayTV</a>… <a href="https://t.co/pbzxEADvYP">pic.twitter.com/pbzxEADvYP</a></p>&mdash; Vijay Television (@vijaytelevision) <a href="https://x.com/vijaytelevision/status/2090006788427182092?ref_src=twsrc%5Etfw">August 19, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p>]]></content>
            <updated>2026-08-19T15:45:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவின் பாஃன்ப் தேசிய பூங்கா ஏரியில் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/second-person-drowns-in-12-hours-in-rocky-mountain-1787150224"></link>
            <id>https://canadamirror.com/article/second-person-drowns-in-12-hours-in-rocky-mountain-1787150224</id>
            <summary type="text">&amp;nbsp;கனடாவின் அல்பெர்ட்டாவில் உள்ள புகழ்பெற்ற பாஃன்ப் தேசிய பூங்காவில் உள்ள பிரபல நீச்சல் பகுதியில் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் உற...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கனடாவின் அல்பெர்ட்டாவில் உள்ள புகழ்பெற்ற பாஃன்ப் தேசிய பூங்காவில் உள்ள பிரபல நீச்சல் பகுதியில் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.</p><p>
பாஃன்ப் நகரில் இருந்து வடகிழக்கே சுமார் 11 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஜான்சன் ஏரியிலிருந்து ஞாயிற்றுக்கிழமை மாலை 7 மணியளவில் ஒருவரது சடலம் மீட்கப்பட்டதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர். </p><p>
இந்த உயிரிழப்பில் எந்தவித சந்தேகமும் இல்லை என்று காவல்துறை செய்தித் தொடர்பாளர் கார்ப்பரல் ஜினா ஸ்லேனி தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/08bc07af-7c34-40c5-bf2f-0d7de486a245/26-6a85bf9222b55.webp' /></p><p> </p><p>
இதனிடையே செவ்வாய்க்கிழமை காவல்துறை வெளியிட்ட புதிய தகவலின்படி, உயிரிழந்தவர் பாஃன்ப் பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய நபர் என்பது தெரியவந்துள்ளது. </p><p>
ராக்கி மலைத்தொடர் நீர்வழிப்பாதைகளில் வார இறுதியில் இடம்பெற்ற இரண்டாவது நீரில் மூழ்கிய சம்பவம் இதுவாகும். ஞாயிற்றுக்கிழமை காலையில் போ ஆற்றில் 52 வயதான கேன்மோர் பகுதியைச் சேர்ந்த ஒருவரது சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பாகவும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.</p><p> 
கண்டெடுக்கப்பட்ட அந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டதாகக் கூறியுள்ள காவல்துறையினர், அவரது உயிரிழப்பிற்கான சூழல் குறித்துத் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-19T15:39:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் மர்மமான முறையில் உயிரிழந்த சிறுமி ; சந்தேகத்தில் சிறுவன் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/youth-arrested-in-edmonton-girls-suspicious-death-1787149749"></link>
            <id>https://canadamirror.com/article/youth-arrested-in-edmonton-girls-suspicious-death-1787149749</id>
            <summary type="text">கனடாவின் எட்மண்டன் நகரில் 16 வயது சிறுமியான ஜாஸ்மின் தீசி என்பவரின் சந்தேகத்திற்கு இடமான உயிரிழப்பு தொடர்பாக காவல்துறை ஒரு சிறுவனைக் கைது செய்துள்ளது....</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் எட்மண்டன் நகரில் 16 வயது சிறுமியான ஜாஸ்மின் தீசி என்பவரின் சந்தேகத்திற்கு இடமான உயிரிழப்பு தொடர்பாக காவல்துறை ஒரு சிறுவனைக் கைது செய்துள்ளது. </p><p>
ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 139 அவென்யூ மற்றும் 32 ஸ்ட்ரீட் பகுதிக்கு அருகில் துப்பாக்கிச் சூடு நடந்ததாகத் தகவல் கிடைத்ததையடுத்து, அங்கு படுகாயங்களுடன் மீட்கப்பட்ட ஜாஸ்மின் தீசி உயிரிழந்தார். </p><p>
அவர் தனது நண்பரைப் பார்க்கச் சென்றிருந்ததாகக் குடும்பத்தினர் தெரிவித்தனர். 
கைது செய்யப்பட்டுள்ள சிறுவன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதை எட்மண்டன் காவல் துறை இன்னும் உறுதிப்படுத்தவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f266b227-91eb-428d-b3fc-76b5a5d9309f/26-6a85bdb7bbc99.webp' /></p><p>
அல்பெர்ட்டா தலைநகரில் நடைபெற்ற 121-வது வருடாந்த உச்சிமாநாடு மற்றும் காவல் வர்த்தகக் கண்காட்சியில் செவ்வாய்க்கிழமை ஊடகவியலாளர்களிடம் பேசிய காவல் தலைமை அதிகாரி வாரன் டிரைஷல், கைது செய்யப்பட்ட நபருக்கு 16 வயது என்று தெரிவித்தார். </p><p>
புதன்கிழமை உடற்கூறாய்வு செய்யப்பட உள்ளதாகவும், அதன்பின்னரே கூடுதல் தகவல்கள் வெளியிடப்படும் என்றும் எட்மண்டன் காவல் துறை தெரிவித்துள்ளது. </p><p>
எட்மண்டனில் சிறுவர்களிடையே வன்முறைகள் அதிகரித்து வருவதாகவும், அதற்குப் பதிலளிக்கும் விதமாகச் சிறுவர்களுக்கான சிறப்புத் திட்டங்களை அதிகரித்து வருவதாகவும் காவல் தலைமை அதிகாரி தெரிவித்துள்ளார். </p><p>
இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக, கும்பல் குற்றங்களில் ஈடுபடும் அபாயத்தில் உள்ள சிறுவர்களுக்கு, முன்னாள் குற்றவாளிகளைக் கொண்டு வழிகாட்டுதல் வழங்கப்படும். 
இதனிடையே, மற்றொரு சிறுவன் கொல்லப்பட்டது தொடர்பாகவும் எட்மண்டன் காவல்துறையும், கனடிய மத்திய அரச காவல்துறையும் விசாரணை நடத்தி வருகின்றன. </p><p>ஆகஸ்ட் 6 அன்று எட்மண்டனின் வடக்கு பகுதியில், ஃபைசல் உசேன் என்ற 12 வயது சிறுவனின் உடல் கண்டெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.&nbsp; &nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-19T15:38:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thevanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[16 வருடங்களாக போக்குவரத்து வசதியின்றி தவிக்கும் மக்கள் - கிளிநொச்சியில் வெடித்த போராட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/protest-demanding-reconstruction-of-kilinochchi-1787153708"></link>
            <id>https://tamilwin.com/article/protest-demanding-reconstruction-of-kilinochchi-1787153708</id>
            <summary type="text">கிளிநொச்சி - கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பிரமந்தனாறு பகுதிக்கு செல்லும் பிரதான வீதி புனரமைக்கப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று(19....</summary>
            <content type="html"><![CDATA[<p>கிளிநொச்சி - கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பிரமந்தனாறு பகுதிக்கு செல்லும் பிரதான வீதி புனரமைக்கப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று(19.08.2026) வீதியை மறித்து போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
</p><p>
விஸ்வமடு சந்தியில் இருந்து பிரமந்தனாறு பகுதிக்குச் செல்லும் பிரதான வீதியின் சுமார் இரண்டு கிலோமீட்டர் பகுதி ஏற்கனவே புனரமைக்கப்பட்டு காபெட் வீதியாக காணப்படுகிறது. எனினும், எஞ்சியுள்ள சுமார் மூன்று கிலோமீட்டர் வீதி இதுவரை புனரமைக்கப்படாமல் குன்றும் குழியுமாக காணப்படுவதாக போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.
</p><h2>
16 வருடங்களாக புனரமைக்கப்படாத வீதி</h2><p>

குறித்த வீதி புனரமைக்கப்படாத பிரச்சினை சுமார் 16 வருடங்களுக்கும் மேலாக தொடர்வதாகவும், இதனால் அப்பகுதி மக்கள் நாளாந்த போக்குவரத்து நடவடிக்கைகளில் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/12ee1d30-153e-4e75-a419-d9af8395f441/26-6a85cdc667f4a.webp' /></p><p>
</p><p>
குறிப்பாக, மாணவர்கள் பாடசாலைகளுக்குச் செல்வதிலும், கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்வதிலும் இந்த வீதியின் மோசமான நிலை பாதிப்பை ஏற்படுத்துவதாக போராட்டக்காரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
</p><p>
தற்போதைய அரசாங்கம் நாட்டின் பல்வேறு பகுதிகளில் அபிவிருத்திப் பணிகளை முன்னெடுத்து வரும் நிலையில், பிரமந்தனாறு பிரதான வீதியின் எஞ்சிய பகுதியையும் விரைவாக புனரமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/78a21d2f-aedf-4e6d-8827-bac728475daf/26-6a85cdc76f039.webp' /></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-19T15:38:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலகை அச்சுறுத்தும் எரிபொருள் நெருக்கடி? பாபா வங்காவின் 2026 கணிப்பு வைரல்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/baba-vanga-predicts-about-petrol-diesel-crisis-1787142881"></link>
            <id>https://manithan.com/article/baba-vanga-predicts-about-petrol-diesel-crisis-1787142881</id>
            <summary type="text">உலகப்புகழ் பெற்ற தீர்க்கதரிசிகள் என்று கூறப்படும் பாபா வங்கா மற்றும் நாஸ்ட்ரடாமஸ் என்ற பெயர்கள், உலகில் முக்கிய சம்பவங்கள் நிகழும் போதெல்லாம் மீண்டும்...</summary>
            <content type="html"><![CDATA[<p>உலகப்புகழ் பெற்ற தீர்க்கதரிசிகள் என்று கூறப்படும் பாபா வங்கா மற்றும் நாஸ்ட்ரடாமஸ் என்ற பெயர்கள், உலகில் முக்கிய சம்பவங்கள் நிகழும் போதெல்லாம் மீண்டும் பேசப்படுவது வழக்கம்.</p><p> அந்த வகையில், தற்போது ஈரான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இடையிலான பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், பாபா வங்கா 2026-ஆம் ஆண்டுக்காகக் கணித்ததாகக் கூறப்படும் தகவல்கள் மீண்டும் கவனம் பெற்றுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d9ad9c64-8efa-4857-9b94-f303707b1734/26-6a85a7a1369b4.webp' /></p><h2>பாபா வங்கா 2026 கணிப்புகள்</h2><p>பல்கேரிய நாட்டை சேர்ந்தவர் பாபா வங்கா. 1911ஆம் ஆண்டு வடக்கு மேசிடோனியாவில் பிறந்த பாபா வங்கா சிறுவயதில் கடுமையான புயல் ஒன்றில் சிக்கி கண் பார்வையை இழந்தார்.

கண் பார்வையை இழந்த பாபா வங்காவிற்கு எதிர்காலத்தை கணித்து கூறும் சக்தி கிடைத்ததாக கூறப்படகிறது. </p><p>பாபா வங்கா, பல்கேரிய நாஸ்டர்டாமஸ் என்றும் அழைக்கப்பட்டு வருகிறார்.

பல்கேரியாவின் சோபியா பகுதியில் வசித்து வந்த பாபா வங்கா கடந்த 1996 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 11ஆம் திகதி மரணம் அடைந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fecfeb2c-26b9-4b39-bb44-cdb7af2ec9f4/26-6a85a7a1dd164.webp' /></p><p></p><p>
</p><p>
பாபா வங்கா உலக நடப்புகள் குறித்து கணித்து கூறியவைகளில் இதுரையில் சுமார் 85 சதவீதம் அப்படியே நடந்தேறியுள்ளதுள்ளதால் மக்கள் மத்தியில் பாபாவங்காவின் கணிப்புகள் மீது அதீத நம்பிக்கை காணப்படுகின்றது.&nbsp;&nbsp;</p><p>

குறிப்பாக, உலகளாவிய மோதல், பொருளாதார நெருக்கடி மற்றும் எரிபொருள் நெருக்கடி குறித்து பாபா வங்கா முன்கூட்டியே கணித்ததாக பல வைரல் பதிவுகள் தெரிவிக்கின்றன. </p><p>ஏற்கனவே பெட்ரோல், டீசல், CNG மற்றும் LPG விலைகள் பல குடும்பங்களை பாதித்து வரும் நிலையில், இந்தக் கணிப்புகள் தற்போது நடப்பில் வெளிப்படத் தொடங்கியுள்ளதாக பெரும்பாலானவர்கள் நம்புகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2a448e89-05bc-46d9-8ae7-f16bdf3567e5/26-6a85a7a28fb1f.webp' /></p><p>
மத்திய கிழக்கில் பதற்றம் மேலும் அதிகரித்தால், உலகளாவிய கச்சா எண்ணெய் விநியோகத்தில் பாதிப்பு ஏற்படலாம். குறிப்பாக ஈரானைச் சார்ந்த மோதல் தீவிரமடைந்தாலோ அல்லது முக்கிய கப்பல் போக்குவரத்து பாதைகள் பாதிக்கப்பட்டாலோ, சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை மேலும் உயர அதிக வாய்ப்புள்ளது.&nbsp;</p><p>இதன் தாக்கம் இந்தியா போன்ற நாடுகளில் பெட்ரோல், டீசல், CNG மற்றும் LPG விலைகளிலும் பிரதிபலிக்கும்.உலகில் போர், பொருளாதார நெருக்கடி அல்லது இயற்கைப் பேரிடர் போன்ற அசாதாரண சூழல்கள் உருவாகும் ஒவ்வொரு முறையும், பாபா வங்காவின் பெயரும் அவரது கணிப்புகளும் மீண்டும் பேசப்படுகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/25b56e2e-8356-4994-a716-01db210c3455/26-6a85a7a33f21d.webp' /></p><p></p><p> அவரது கணிப்புகள் பல்வேறு விதமாகப் பொருள் கொள்ளக்கூடியதாக இருப்பதால், அவற்றை தற்போதைய நிகழ்வுகளுடன் மக்களால் எளிதாக தொடர்புபடுத்திக் கொள்ள முடிகின்றது. இதனால், உலகளவில் நிச்சயமற்ற சூழல் நிலவும் போதெல்லாம் பாபா வங்காவின் கணிப்புகள் மீண்டும் மீண்டும் சமூக வலைதளங்களில் கவனம் ஈர்த்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW&nbsp;</a></u></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-19T15:25:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அநுர ஆட்சியில் 6 பில்லியன் ரூபாய் மோசடி குற்றச்சாட்டு - இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/allegations-of-6-billion-rupees-fraud-goverment-1787152842"></link>
            <id>https://tamilwin.com/article/allegations-of-6-billion-rupees-fraud-goverment-1787152842</id>
            <summary type="text">தேசிய மக்கள் கட்சியின் அதிகார வரம்பிற்கு உட்பட்ட காலி, போப் போத்தல பிரதேச சபையைச் சேர்ந்த எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு ஒன்று, மயானக் கட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>தேசிய மக்கள் கட்சியின் அதிகார வரம்பிற்கு உட்பட்ட காலி, போப் போத்தல பிரதேச சபையைச் சேர்ந்த எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு ஒன்று, மயானக் கட்டுமானத்தில் முறைகேடுகள் மற்றும் மோசடி நடந்ததாகக் குற்றம் சாட்டி இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முறைப்பாடு கொடுக்கப்பட்டுள்ளது. </p><p>

இந்த நடவடிக்கை இன்று(19.08.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது. </p><h2>



மயான கட்டுமானத்தில் ஏற்பட்டுள்ள மோசடி</h2><p>
இந்த விடயம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,</p><p>


மயானக் கட்டுமானங்கள் திட்டம் கொள்முதல் நடைமுறையின்படியும், முறையான ஒப்புதல் இல்லாமலும் செயல்படுத்தப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b1f6b107-b743-494f-a8b6-7fbc35a40cb3/26-6a85ca1f84f65.webp' /></p><p>
</p><p>
இந்தத் திட்டத்திற்கான ஆரம்ப ஒப்பந்தத் தொகை சுமார் ரூ. 3.5 மில்லியனாக இருந்தபோதிலும், ரூ. 6 பில்லியனுக்கும் அதிகமான புதிய மதிப்பீடு சபையிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இது பொதுமக்களின் வரிப்பணத்தை தவறாகப் பயன்படுத்துவதாகும் என்பதால், கொள்முதல் நடைமுறையும் முறையான ஒப்புதலும் புறக்கணிக்கப்பட்டதா என்பது குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-19T15:22:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[உங்களை அறியாமலேயே உங்கள் போனுக்குள் மொசாட்..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/mossad-is-in-your-phone-without-you-knowing-1787152495"></link>
            <id>https://ibctamil.com/article/mossad-is-in-your-phone-without-you-knowing-1787152495</id>
            <summary type="text">இஸ்ரேலில் அப்பிள் நிறுவனத்தின் மிகப்பெரிய இரண்டு ஆராய்ச்சி மையங்கள் இருக்கின்றன.

இந்த ஆராய்ச்சி மையங்களில் ஐபோன்களுக்கு முக்கிய பாகங்களை பொருத்தும்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இஸ்ரேலில் அப்பிள் நிறுவனத்தின் மிகப்பெரிய இரண்டு ஆராய்ச்சி மையங்கள் இருக்கின்றன.

இந்த ஆராய்ச்சி மையங்களில் ஐபோன்களுக்கு முக்கிய பாகங்களை பொருத்தும் பணி இஸ்ரேலில் மட்டும்தான் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>

கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் அமெரிக்க வர்த்தக அமைச்சர்அவார்ட் லுட்னிக் ஒரு அவசர அறிவித்தலை விடுத்திருந்தார்.அப்பிள் நிறுவனம் சீனாவில் தயாரிக்கப்பட்டு வருகின்ற மெமரி சிப்ஸை ஐபோன்களில் பாவிக்கக் கூடாதென்று அவர் ஆலாசனை வழங்கியிருந்தார்.
</p><p>
அந்த இரண்டு நிறுவனங்களும் சீன இராணுவத்துடன் தொடர்புபட்டவை என்றும் அந்த நிறுவனங்களால் தயாரிக்கப்படும் பொருட்களை அமெரிக்க மக்கள் நாள்தோறும் தமது சட்டைப் பைகளில் கொண்டு திரிவது அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பிற்கு ஆபத்தென்று அமெரிக்க அரசாங்கம் தெரிவித்துள்ளது.</p><p>

இந்த நிலையில் கைபேசிகளில் பொருத்தப்படும் கமராக்கள் மூலம் அவற்றை பாவிப்பவருக்கு தெரியாமலேயே அதனை பொருத்திய நிறுவனத்திற்கோ அல்லது நாட்டிற்கோ தகவல்கள் சென்றடைவது கண்டு பிடிக்கப்பட்டமை தற்போது உலகை பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.</p><p>

இது தொடர்பாக விரிவாக ஆராய்கிறது இந்த உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி&nbsp; &nbsp; &nbsp; &nbsp; </p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/NNqduegvc0Y" width="640" height="360" class="note-video-clip"></iframe>&nbsp; &nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-19T15:15:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[புலிகளின் பயிற்சி முகாம் என கதையளந்தவர் கம்பி எண்ணுகிறார்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/ltte-training-camp-false-information-remand-court-1787143766"></link>
            <id>https://jvpnews.com/article/ltte-training-camp-false-information-remand-court-1787143766</id>
            <summary type="text">&amp;nbsp; கிளிநொச்சி, பளை பகுதியில் புலிகள் பயிற்சி முகாம் அமைக்கப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் போலியான தகவல்களைப் பரப்பியதாக கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் எ...</summary>
            <content type="html"><![CDATA[<p><a href="https://jvpnews.com/article/ltte-training-camp-kilinochchi-person-spread-false-1787114482" target="_blank">&nbsp; கிளிநொச்சி, பளை பகுதியில் புலிகள் பயிற்சி முகாம்</a> அமைக்கப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் போலியான தகவல்களைப் பரப்பியதாக கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 2ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.</p><p>
கொழும்பின் புறநகரான பெல்லன்வில பகுதியில் வைத்து குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/83b26ad0-77e1-4578-bf44-3456623cffb5/26-6a85a65801b81.webp' /></p><p>
</p><p>
 கிளிநொச்சியில் ,LTTE பயிற்சி முகாம் இருப்பதாக உறுதிப்படுத்தப்படாத போலி தகவல்களை வெளியிட்ட நபர் ஒருவர் பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவினரால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-19T15:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்கா அணு ஆயுதத்தை பிரயோகித்தால் அதே வழியில் பதிலடி : ஈரான் கடும் எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/tehran-would-respond-if-us-used-nuclear-weapon-1787144493"></link>
            <id>https://ibctamil.com/article/tehran-would-respond-if-us-used-nuclear-weapon-1787144493</id>
            <summary type="text">அமெரிக்கா ஈரானுக்கு எதிராக அணு ஆயுதத்தைப் பயன்படுத்தினால், தெஹ்ரான் அதேபோன்ற பதிலடி கொடுக்கும் என்று ஒரு ஈரானிய நாடாளுமன்ற உறுப்பினர் கூறியதாக,உள்ளூர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்கா ஈரானுக்கு எதிராக அணு ஆயுதத்தைப் பயன்படுத்தினால், தெஹ்ரான் அதேபோன்ற பதிலடி கொடுக்கும் என்று ஒரு ஈரானிய நாடாளுமன்ற உறுப்பினர் கூறியதாக,உள்ளூர் ஊடகங்கள் இன்று(19) புதன்கிழமை செய்தி வெளியிட்டுள்ளன.</p><p>ஈரானிய நாடாளுமன்றத்தின் தேசிய பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கை ஆணையத்தின் உறுப்பினரான ஃபதா ஹொசைன் மலேகி (Fada Hossein Maleki), ஈரானிய செய்தி நிறுவனமான கபார் ஒன்லைனுக்கு அளித்த பேட்டியில் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.</p><h2>ட்ரம்ப் இன் நிலைப்பாடு எப்படி அமையும்</h2><p>&nbsp;ஈரான் மீது அமெரிக்கா அணு ஆயுதத் தாக்குதல் நடத்துவதற்கான சாத்தியக்கூறு எவ்வளவு என்று கேட்டதற்கு, மலேகி இவ்வாறு பதிலளித்தார்: “(அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்) ஒரு தவறான நடவடிக்கையை எடுப்பதை நான் நிராகரிக்கவில்லை, ஆனால் அவர் அப்படிச் செய்யத் துணிவார் என்று நான் நினைக்கவில்லை, ஏனெனில் அத்தகைய நடவடிக்கை உலகை ஒரு ஆபத்தான போருக்குள் தள்ளக்கூடும்.”</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e947a116-1874-4565-8ead-307731933f96/26-6a85aee44555b.webp' /></p><p>“அத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டால், ஈரான் இஸ்லாமியக் குடியரசும் பதிலடி கொடுக்கும், மேலும் அதன் எதிர்வினை, ஈரானுக்கு எதிராகப் பயன்படுத்தப்படும் ஆயுதத்தின் வகைக்கு ஏற்ப விகிதாசாரமாக இருக்கும்,” என்றும் அவர் மேலும் கூறினார்.</p><p></p><h2>அமெரிக்காவின் அணு ஆயுதத்திற்கு சமாந்தரமாக பதிலடி</h2><p>அமெரிக்கா அணு ஆயுதத்தால் ஈரானைத் தாக்கினால், ஈரானும் அணு ஆயுதத்தைப் பயன்படுத்துமா என்று கேட்கப்பட்டபோது, ​​மலேகி, “அமெரிக்கா எதைப் பயன்படுத்தினாலும், ஈரான் அதற்குப் பதிலடி கொடுக்கும்” என்று பதிலளித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3d6253bb-fb64-478d-af64-ee8b1862613d/26-6a85aee385dcf.webp' /></p><p>&nbsp;ஈரான் அணு ஆயுதங்களைக் கொண்டுள்ளது என்று மலேகி வெளிப்படையாகக் கூறவில்லை.</p><p>மேலும் இராணுவ நடவடிக்கை எடுப்பதற்கு எதிராக வோஷிங்டனை எச்சரித்த அவர், ஈரானிடம் “பல வழிகள்” இருப்பதாகவும், அமெரிக்காவின் எந்தவொரு நடவடிக்கையும் “அதே அளவில் அல்லது அதற்கும் மேலான” பதிலடியைத் தூண்டக்கூடும் என்றும் கூறினார்.</p><p>“ஈரானின் பல ஆயுதங்களும் இராணுவத் திறன்களும் இன்னும் வெளியிடப்படவில்லை,” என்று கூறிய மலேகி, தெஹ்ரான் தற்காப்பு நிலையில் இருந்து,“செயல்திறன் மிக்க மற்றும் தாக்குதல் சார்ந்த தடுப்பு” நிலைக்கு நகர்ந்துள்ளதாக குறிப்பிட்டார்.</p><p></p><h2>ஹோர்முஸ் நீரிணை உள்ளிட்ட பிரச்சினைகள்</h2><p>முடங்கிப்போன தெஹ்ரான்-வோஷிங்டன் பேச்சுவார்த்தைகள் குறித்துப் பேசிய மலேகி, இரு தரப்புக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ் உள்ள கடமைகளை ட்ரம்ப் நிறைவேற்றத் தவறிவிட்டார் என்று குற்றம் சாட்டினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fe4057a1-f324-4d4e-b52e-ab892b2ccdb7/26-6a85aee295b54.webp' /></p><p>வோஷிங்டன் தனது முந்தைய கடமைகளைக் கடைப்பிடிக்காவிட்டால், ஈரான் பேச்சுவார்த்தைகளுக்குத் திரும்பாது என்றும், இல்லையெனில் ஹோர்முஸ் நீரிணை உள்ளிட்ட பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் இருக்கும் என்றும் அவர் கூறினார்.
</p><p>
ஓமானுடன் ஈரான் நடத்தும் பேச்சுவார்த்தைகள் ஒரு தனிப்பட்ட இருதரப்புப் பாதை என்றும், அந்தப் பேச்சுவார்த்தைகளில் அமெரிக்காவின் பங்கேற்பை தெஹ்ரான் நிராகரித்துவிட்டது என்றும் மலேகி மேலும் தெரிவித்தார்.</p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-19T14:47:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[விகாராதிபதி ஒருவரின் இரட்டை வேடம் அம்பலம்: மனைவிக்கு சொகுசு காரும் இருமாடி வீடும்...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/a-buddhist-monk-crime-1787060778"></link>
            <id>https://tamilwin.com/article/a-buddhist-monk-crime-1787060778</id>
            <summary type="text">கொழும்பு - குருநாகல் பிரதான வீதிக்கு அருகில் அமைந்துள்ள புராதன விகாரையின் விகாராதிபதி ஒருவர் திருமணம் செய்து கொண்டு விகாராதிபதியாகவும் நல்ல கணவராகவும்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு - குருநாகல் பிரதான வீதிக்கு அருகில் அமைந்துள்ள புராதன விகாரையின் விகாராதிபதி ஒருவர் திருமணம் செய்து கொண்டு விகாராதிபதியாகவும் நல்ல கணவராகவும் இரு வேறுவாழ்க்கை வாழ்ந்துள்ளமை தெரியவந்துள்ளது. </p><p>விகாரையின் அறங்காவல் சபையினர் தேரரின் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தில் தேடிப்பார்த்ததில் இவரின் மோசடி முகம் தெரியவந்துள்ளது.
ஒருபுறம் அறங்காவல் சபையை ஏமாற்றி மறுபுறம் நல்ல கணவராகவும் இருந்துள்ளார். </p><p>தனது மனைவிக்கு ஆடம்பரக் கார் ஒன்றையும் வாங்கிக் கொடுத்து இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக இவ்வாறு விசித்திரமான இரட்டை வேடம் தரித்துள்ளார்.
</p><h2>
</h2><p></p><h2>விகாராதிபதி போட்ட இரட்டை வேடம்</h2><p>சுமார் இரண்டு வருடங்களாக இவர் விகாராதிபதி பதவியில் இருந்துள்ளார். இவர் தனியார் பாடசாலை ஒன்றில் ஊழியராகப் பணியாற்றி வந்த இந்த இளம் பெண்ணுடன் காதல் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டு 2021 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் போலியான பொதுப்பெயரில் சட்டப்பூர்வமாகத் திருமணம் செய்து கொண்டுள்ளார்.
</p><p>குருநாகலையில் அமைந்துள்ள மணமகளின் வீட்டிலேயே இந்தத் திருமணம் நடந்துள்ளது. 
தான் திருமணம் செய்தது ஒரு பௌத்த துறவியை என்பது மணமகளுக்கும் அவரது பெற்றோருக்கும் தெரிந்தே இருந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ccb84cbb-d298-47cf-8a06-5c19944c3a63/26-6a857fa964808.webp' /></p><p>அனைத்தும் தெரிந்தே இந்த காரியத்தை செய்துள்ளனர். பின்னர் குருநாகலை பகுதியில் உள்ள ஆடம்பர இரண்டு மாடி வீட்டில் அப்பெண்ணை அவரது பெற்றோருடனும் தனது குழந்தையுடன் குடியமர்த்தியுள்ளார்.
</p><p>ஊர் மக்களுக்குச் சந்தேகம் வராதிருக்க விக் அணிந்து கொண்டு பிரதேச செயலகத்தின் அதிகாரி அல்லது சர்வதேச பாடசாலை ஆசிரியர் என்று அப்பெண்ணின் வீட்டாரிடமும் ஊர் மக்களிடமும் கூறியுள்ளார்.</p><h2>நான்கு இலட்சம் ரூபா</h2><p>
</p><p>மாதம் ஒருமுறை சொந்த ஊருக்குச் செல்வதாகக் கூறி விகாரையிலிருந்தும் தான தர்மங்கள் மூலம் கிடைக்கும் உணவுகளை எடுத்துக் கொண்டு அந்த வீட்டிற்குச் சென்று 5-6 நாட்கள் தங்கியிருந்துள்ளார்.</p><p>பின்னர் விகாரையிலிருந்து கொண்டு வந்த உணவை ஊர் மக்களுக்குப் பகிர்ந்து கொடுத்து சந்தேகம் வராதவாறு நடந்து கொண்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/41f939cb-0b09-4af8-a318-2a1feaf9251d/26-6a857faa1a28f.webp' /></p><p>
</p><p>வெளிநாட்டில் இருக்கும் பரோபகாரிகளிடம் விகாரையை அபிவிருத்தி செய்வதாகக் கூறி 2-3 இலட்சம் ரூபாய்களை நன்கொடையாகப் பெற்றுள்ளார். </p><p>அந்தப் பணத்தையே இந்தப் பெண்ணுக்குச் செலவிட்டுள்ளார். அதுமட்டுமன்றி விகாரைக்குச் சொந்தமான 10 ஏக்கர் காணியை 35 இலட்சம் ரூபாய்க்கு குத்தகைக்கு விட்டுள்ளார். </p><p>இவை தெரியவந்ததை அடுத்து குறித்த தேரர் விகாரைக்கு வந்து நான்கு இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்களுடன் தலைமறைவாகியுள்ளதாக விகாரையின் அறங்காவல் சபையினர் குறிப்பிட்டுள்ளனர்.</p><p></p><p></p><p><br><br><b><i>you may like this..</i></b></p><p><b><i><br></i></b></p><p><b><i><br><br></i></b><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/O8f4RVu6rWg" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><i><br></i></b></p>]]></content>
            <updated>2026-08-19T14:34:17+00:00</updated>
        </entry>
    </feed>
