<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-09-07T11:12:40+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரஷ்யாவில் மலையேறுபவர்கள் பலர் பனிச்சரிவில் சிக்கி அடித்துச் செல்லப்பட்டு மரணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/russia-horror-avalanche-11-climbers-1788779479"></link>
            <id>https://news.lankasri.com/article/russia-horror-avalanche-11-climbers-1788779479</id>
            <summary type="text">Climbers are swept away to their death in avalanche: மலை ஏறுபவர்கள் பனிச்சரிவில் அடித்துச் செல்லப்பட்டு மரணமடைந்துள்ளனர்.  
ரஷ்யாவின் வடக்கு காகசஸ் ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>Climbers are swept away to their death in avalanche: மலை ஏறுபவர்கள் பனிச்சரிவில் அடித்துச் செல்லப்பட்டு மரணமடைந்துள்ளனர். </p><p> 
ரஷ்யாவின் வடக்கு காகசஸ் பிராந்தியத்தில் உள்ள கபர்தினோ-பால்காரியா பகுதியில், பனிச்சரிவு ஏற்பட்டதில் மலையேற்றக் குழுவினர் குறைந்தது 11 பேர் மரணமடைந்துள்ளனர்.</p><h2>ஆறு பேரின் நிலை</h2><p>
</p><p>ஞாயிற்றுக்கிழமை உள்ளூர் நேரப்படி மாலை 5 மணியளவில், ரஷ்யாவின் வடக்கு காகசஸ் பகுதியின் மிக உயர்ந்த சிகரங்களில் ஒன்றான மிசிர்கி மலையில் பனிச்சரிவு ஏற்பட்டதில், மலையேற்ற வீரர்கள் 33 பேர் கொண்ட குழு அதில் சிக்கியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/91ef9cdf-6744-4203-a707-5949fb76cc1f/26-6a9e9bd93860a.webp' /></p><p> </p><p>திங்கட்கிழமை உள்ளூர் நேரப்படி காலை 9 மணி நிலவரப்படி, 10 மலையேறுபவர்கள் தாங்களாகவே மலையிலிருந்து கீழே இறங்கியிருந்தனர்; அதேவேளை 6 பேர்கள் காயங்களுடன் மீட்கப்பட்ட நிலையில், மற்ற ஆறு பேரின் நிலை என்னவென்று தெரியவில்லை என்று அவசரச் சேவைக் குழுவினர் தெரிவித்துள்ளனர். </p><p>தேடல் மற்றும் மீட்புப் பணியில் 50-க்கும் மேற்பட்ட அவசரக்காலப் பணியாளர்கள் ஈடுபட்டிருந்தனர்; இருப்பினும், கடினமான நிலப்பரப்பு மற்றும் மேலும் பனிச்சரிவுகள் ஏற்படும் அபாயம் ஆகியவை இப்பணிகளுக்குத் தடையாக இருந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.</p><p></p><p> </p><p>காணாமல் போன ஆறு மலையேற்ற வீரர்களுக்காக Mi-8 ரக ஹெலிகொப்டர்களைப் பயன்படுத்திப் பெரிய அளவிலான மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. </p><p>காயமடைந்த ஆறு மலையேற்ற வீரர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ரஷ்யா-ஜார்ஜியா எல்லையில் சுமார் ஒன்பது மைல் நீளத்திற்குப் பரந்து விரிந்துள்ள, பனிப்பாறைகள் அடர்ந்த ஒரு பிரம்மாண்டமான மலைத் தடுப்பான பெசெங்கி பள்ளத்தாக்கில், அந்த மாபெரும் பனிச்சரிவு மலையேறுபவர்களை மொத்தமாக மூடியுள்ளது. </p><p>இரட்டைச் சிகரங்களைக் கொண்ட மிசிர்கி மலை மீது அதிகாரப்பூர்வமாகப் பதிவு செய்யப்பட்ட முதல் ஏறுதல் பயணம், 1889-ஆம் ஆண்டில் பிரித்தானிய மலையேற்ற வீரரான ஹெர்மன் வூலியால் மேற்கொள்ளப்பட்டது. </p><p>இந்த ஆண்டின் தொடக்கத்தில், ஐரோப்பாவின் மிக உயரமான மலையில் உள்ள ஒரு பனிச்சறுக்கு விடுதியை மிகப்பெரிய பனிச்சரிவு ஒன்று சூழ்ந்துகொண்டது; இதனால் சுற்றுலாப் பயணிகள் தங்கள் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள ஓடினர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f0b6153d-bf7c-4eb3-9c62-602a644b1ed4/26-6a9e9bd9e83d8.webp' /></p><p> </p><p>தெற்கு ரஷ்யாவில் உள்ள எல்ப்ரஸ் மலையில் வியாழக்கிழமையன்று, பனிப்பெருக்கெடுப்பு ஒன்று மலைச்சரிவில் அதிவேகமாகக் கீழே பாய்ந்து வருவதைக் காணொளி ஒன்றில் பதிவு செய்யப்பட்டுள்ளது. </p><p>5,642 மீற்றர் உயரமுள்ள மவுண்ட் எல்ப்ரஸ் ஐரோப்பாவின் மிக உயர்ந்த சிகரமாகும்; இது சவாலானதாக இருப்பினும், மலையேற்றத்திற்குப் பிரபலமான ஒரு இடமாகும். </p><p>இம்மலையில் ஆண்டுதோறும் சுமார் 15 முதல் 30 பேர் மரணமடைகின்றனர்; இவர்களில் பலர், திடீர் வானிலை மாற்றங்களால் சிக்கிக்கொள்ளும், போதிய முன்னேற்பாடுகள் இல்லாத மலையேறுபவர்கள் ஆவர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-07T11:08:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[அநுராதபுர பேரணியில் கலந்துகொள்ளவுள்ள மகிந்த : மொட்டுக்கட்சி அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/mahinda-to-participate-in-slpp-anuradhapura-rally-1788777922"></link>
            <id>https://ibctamil.com/article/mahinda-to-participate-in-slpp-anuradhapura-rally-1788777922</id>
            <summary type="text">சிறிலங்கா பொதுஜன பெரமுனவினால் எதிர்வரும் 12ஆம் திகதி அநுராதபுர நகரில் நடத்தப்படவுள்ள மக்கள் பேரணி எக்காரணத்தைக் கொண்டும் நடத்தப்படும் என்று&amp;nbsp;முன்ன...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிறிலங்கா பொதுஜன பெரமுனவினால் எதிர்வரும் 12ஆம் திகதி அநுராதபுர நகரில் நடத்தப்படவுள்ள மக்கள் பேரணி எக்காரணத்தைக் கொண்டும் நடத்தப்படும் என்று&nbsp;முன்னாள் அமைச்சரும் கட்சியின் செயற்பாட்டுத் தலைவருமான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.</p><p>அத்துடன் பொதுஜன பெரமுனவின் மக்கள் பேரணி மேடைக்கு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ச வருகை தரவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.</p><p>
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ச மக்கள் பேரணியில் கலந்து கொண்டாலும், அவர் பொது மேடையில் ஏறி மக்களிடையே உரையாற்றுவதைத் தவிர்த்துவிட்டு ,மேடைக்கு முன்னால் உள்ள மக்கள் மத்தியில் அல்லது வேறு அமர்வில் இருந்து கொண்டு பேரணியில் கலந்து கொள்ளத் தீர்மானித்துள்ளார்.</p><p></p><h2>இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் கைது</h2><p>கடந்த வெள்ளிக்கிழமையன்று (04) இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட நாமல் ராஜபக்‌ நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து, எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bf28d3b8-dc5f-4cf7-bb59-5104d49b3eca/26-6a9e9879d042d.webp' /></p><p>இந்த சூழ்நிலையில் சிறிலங்கா பொதுஜன பெரமுன இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளது” என ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மேலும் தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-07T11:07:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆல்பர்ட்டா மாகாணம் தனி நாடாகும் விவகாரம்: அடுத்த மாதம் வாக்கெடுப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/poll-on-alberta-separation-to-be-on-october-19-1788779227"></link>
            <id>https://canadamirror.com/article/poll-on-alberta-separation-to-be-on-october-19-1788779227</id>
            <summary type="text">Albertans go to the polls on October 19 to vote on whether Alberta should stay with Canada or leave: ஆல்பர்ட்டா மாகாண மக்கள், கனடாவுடன் இருப்பதா அல்லத...</summary>
            <content type="html"><![CDATA[<p>Albertans go to the polls on October 19 to vote on whether Alberta should stay with Canada or leave: ஆல்பர்ட்டா மாகாண மக்கள், கனடாவுடன் இருப்பதா அல்லது பிரிவதா என்பது தொடர்பில் அடுத்த மாதம் சில முடிவுகள் எடுக்க இருக்கிறார்கள்.
</p><p>

ஆல்பர்ட்டா மாகாணத்தை கனடாவிலிருந்து பிரித்து தனி நாடாக்குவதில் ஆல்பர்ட்டா மாகாண மக்களில் ஒரு பிரிவினர் உறுதியாக உள்ளார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/12064187-7d0f-4d9d-ad64-604504f7d879/26-6a9e9adc783d8.webp' /></p><p>
</p><p>
இந்நிலையில், கனடா மாகாணம் பிரிவது தொடர்பில் அக்டோபர் மாதம் 19ஆம் திகதி வாக்கெடுப்பு ஒன்று நடத்த திட்டமிடப்பட்டுவருகிறது.
</p><p>
விடயம் என்னவென்றால், அந்த வாக்கெடுப்பில், ஆல்பர்ட்டா மாகாணம் கனடாவுடன் தொடர்ந்து இணைந்தே இருப்பதா அல்லது பிரிவதா என்னும் கேள்விகள் நேரடியாக கேட்கப்படப்போவது இல்லை.
</p><p>
மாறாக, ஆல்பர்ட்டா மாகாணம் கனடாவுடன் தொடர்ந்து இணைந்தே இருப்பதா அல்லது பிரிவது தொடர்பில் ஒரு பொது வாக்கெடுப்பு நடத்தவேண்டுமா என்னும் கேள்விகள்தான் கேட்கப்பட உள்ளன.
</p><p>
இந்நிலையில், ஆல்பர்ட்டா பிரிவதற்கு ஆதரவளிக்கும் அமைப்பொன்று, வாக்கெடுப்பில் கனடாவிலிருந்து பிரிவது என ஆல்பர்ட்டா மக்கள் முடிவெடுக்கும் பட்சத்தில், ஆல்பர்ட்டாவில் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பது தொடர்பான விடயங்களைக் கூறும் 214 பக்கங்கள் கொண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
</p><p>
ஏற்கனவே ஆல்பர்ட்டா மாகாணம் இயங்கிக்கொண்டுதான் இருக்கிறது, அப்படியிருக்கும் பட்சத்தில், அது பிரிவதால் எதுவும் நின்றுவிடப்போவதில்லை என்கிறார்கள் ஆதரவாளர்கள்.
</p><p>
ஆனாலும், ராணுவம், ஆல்பர்ட்டாவிலிருந்து கனடாவின் பிற பகுதிகளுக்கு போக்குவரத்து, கடன், மின்சாரம், எரிபொருள் போன்ற விடயங்கள், ஓய்வூதியம், எல்லைகள், சொத்துக்கள் போன்ற விடயங்கள் குறித்து கனடாவுடனும், பூர்வக்குடியினர் உள்ளிட்ட மற்றவர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தவேண்டியிருக்கும் என்கிறார்கள் பிரிவதை ஆதரிப்பவர்கள்.</p><p>

எதிர்ப்பவர்களோ, பிரிந்தால் பிரிந்ததுதான், அதற்குப் பிறகு பேச்சுவார்த்தையெல்லாம் எடுபடாது என்கிறார்கள்.

ஆக, என்ன நடக்கப்போகிறது என்பது இன்னும் ஒரு மாதத்தில் தெரியலாம்!&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-07T11:07:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[குடும்பத்துடன் சென்று புதிய சொகுசு கார் வாங்கிய அபர்ணா தாஸ் – வைரலாகும் வீடியோ!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/actress-aparna-das-buys-new-car-video-viral-1788777883"></link>
            <id>https://manithan.com/article/actress-aparna-das-buys-new-car-video-viral-1788777883</id>
            <summary type="text">நடிகை அபர்ணா தாஸ் தனது குடும்பத்துடன் புதிய வெள்ளை நிற சொகுசு காரை வாங்கியுள்ளார். அந்த மகிழ்ச்சியான தருணத்தின் வீடியோவை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து...</summary>
            <content type="html"><![CDATA[<p>நடிகை அபர்ணா தாஸ் தனது குடும்பத்துடன் புதிய வெள்ளை நிற சொகுசு காரை வாங்கியுள்ளார். அந்த மகிழ்ச்சியான தருணத்தின் வீடியோவை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ள நிலையில், ரசிகர்கள் வாழ்த்துக்களையும் குவித்து வருகின்றனர்.</p><h2>அபர்ணா தாஸ் </h2><p>
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் படத்தில் ஒரு சின்ன ரோலில் நடித்து தமிழக மக்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகை அபர்ணா தாஸ்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/58a45613-267c-4be9-95d4-c576a532ef6e/26-6a9e994887b2e.webp' /></p><p></p><p>
</p><p>
பீஸ்ட் படத்தை தொடர்ந்து இவர் கடந்தாண்டு வெளியான டாடா படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார்.

இப்படத்தில் நடிகர் கவினுக்கு ஜோடியாக நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். </p><p>இந்த படம் பெரிய அளவில் வெற்றியடைய அடுத்தடுத்து இவர் தொடர்ந்தும் சினிமாவில் ஈடுபாடு காட்டுவார் என ரசிகர்களால் எதிர்ப்பார்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/009f0977-f9b8-4d32-89d3-87221e369e11/26-6a9e99494b3e7.webp' /></p><p></p><p>
</p><p>ஆனால் அபர்ணா தாஸ் மலையாள நடிகர் தீபக் பரம்போல் என்பவரை காதலித்து வந்த நிலையில் கடந்த 2024ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆனார்.அதன்பிறகும் சில படங்கள் கமிட்டாகி நடித்து வருகிறார்.</p><p>

அபர்ணா தாஸின் கணவர் தீபக் பரம்போல்,மலையாளத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆன மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><h2>புதிய சொகுசு கார்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/062bb0ec-9254-4b5f-a271-7f7077602a4d/26-6a9e9947cefeb.webp' /></p><p>
</p><p>சினிமா போட்டோ ஷுட், குடும்பம் என பிஸியாக இருக்கும் நடிகை அபர்ணா தாஸ் தற்போது புதியதாக சொகுசு கார் ஒன்று வாங்கியுள்ளார்.
வெள்ளை நிற Luxe Moto காரை வாங்கியுள்ளார், புதிய காரை தனது குடும்பத்துடன் சென்று வாங்கிய அழகிய தருணத்தின் காணொளியை ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார். </p><p>

குறித்த காணொளி தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளதுடன் ரசிகர்களின் வாழ்த்துக்களையும், லைக்குகளையும் குவித்து வருகின்றது.&nbsp; &nbsp;&nbsp;</p><p><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/reel/Dc6TJ4WT3QY/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/reel/Dc6TJ4WT3QY/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/reel/Dc6TJ4WT3QY/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by Aparna Das💃🏻 (@aparna.das1)</a></p></div></blockquote> <script async src="//www.instagram.com/embed.js"></script></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-07T11:04:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[போருக்கு பணப் பற்றாக்குறை ; ஆபாசத் துறையை சட்டப்பூர்வமாக்கும் உக்ரைன்?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/funds-war-is-ukraine-legalizing-adult-industry-1788779170"></link>
            <id>https://jvpnews.com/article/funds-war-is-ukraine-legalizing-adult-industry-1788779170</id>
            <summary type="text">&amp;nbsp;உக்ரைன் நாட்டில்&amp;nbsp; &amp;nbsp;தற்போது சட்டவிரோதமாகக் கருதப்படும் ஆபாச உள்ளடக்கத் தயாரிப்பு மற்றும் விநியோகத்தை சட்டப்பூர்வமாக்கி, அதற்கு வரி விதி...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;உக்ரைன் நாட்டில்&nbsp; &nbsp;தற்போது சட்டவிரோதமாகக் கருதப்படும் ஆபாச உள்ளடக்கத் தயாரிப்பு மற்றும் விநியோகத்தை சட்டப்பூர்வமாக்கி, அதற்கு வரி விதிப்பதன் மூலம் கிடைக்கும் வருவாயை போருக்குப் பயன்படுத்தும் திட்டம் குறித்து உக்ரைன் பரிசீலனை செய்து வருகிறது.</p><p>&nbsp;ரஷ்யாவுக்கு எதிரான போர் தொடர்ந்து நீடித்துவரும் நிலையில், கூடுதல் வருவாயை திரட்ட உக்ரைன் அரசு மேற்கொள்ளும் இந்த வித்தியாசமான முயற்சி சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4161efd1-876e-47e4-ad14-24952e66248e/26-6a9e9aa4395d4.webp' /></p><h2>இதன்மூலம் அரசுக்கு கணிசமான வரி வருவாய்&nbsp;</h2><p> 

உக்ரைனில் ஆபாசப் படங்களைத் தயாரித்தல் மற்றும் விநியோகித்தல் உள்ளிட்டவை தற்போது குற்றமாகக் கருதப்படுகின்றன. 

இதற்கு அதிகபட்சமாக 7 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படுகிறது. </p><p>ஆனால், ஆன்லைன் தளங்களின் வளர்ச்சியால் இந்தத் தொழில் ரகசியமாக தொடர்ந்து இயங்கி வருவதாக கூறப்படுகிறது. </p><p>

குறிப்பாக, OnlyFans தளத்தைச் சேர்ந்த தரவுகளின்படி, 2023 ஆம் ஆண்டில் சுமார் 7,900 உக்ரேனியர்கள் 131 மில்லியன் டொலருக்கும் அதிகமான வருவாயை ஈட்டியதாக தகவல் வெளியாகியுள்ளது.
</p><p>
 இதன்மூலம் அரசுக்கு கணிசமான வரி வருவாய் கிடைக்கக்கூடும் என கருதப்படுகிறது. 

ஆகையால், இந்தத் துறையைச் சட்டப்பூர்வமாக்கும் மசோதாவை எதிர்க்கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் யாரோஸ்லாவ் ஜெலெஸ்னியாக் உள்ளிட்டோர் முன்னெடுத்து வருகின்றனர். </p><p>
இதன்மூலம் ஆண்டுக்கு 25 மில்லியன் டொலர் வரை வரி வருவாய் கிடைக்கலாம் என அவர் மதிப்பிட்டுள்ளார். இந்தத் தொகை சுமார் 30,000 இராணுவ ட்ரோன்களை வாங்குவதற்குப் போதுமானதாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். </p><p>
 ஆபாசத் துறையை சட்டப்பூர்வமாக்குவது தொடர்பான விவாதம் நேரடியாக உக்ரைனின் போர் நிதி மற்றும் ட்ரோன் தேவையுடன் இணைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான மசோதா ஏற்கெனவே பாராளுமன்றத்தின் முதல்கட்ட வாக்கெடுப்பில் நிறைவேறி, அடுத்தகட்ட பரிசீலனைக்காக காத்திருக்கிறது. </p><p>

மேலும், இந்தத் துறையைச் சட்டவிரோதமாக வைத்திருப்பது ஊழலுக்கும் வழிவகுப்பதாக சட்டமன்ற உறுப்பினர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.</p><p> 

எனினும், 30,000 ட்ரோன்களுக்கான நிதி என்பது அரசின் மொத்த பாதுகாப்புச் செலவுடன் ஒப்பிடும்போது சிறிய தொகையே. இருந்த போதிலும், போர்க்காலத்தில் உக்ரைன் தனது உள்நாட்டு வருவாய் ஆதாரங்களை அதிகரிக்க முயல்வதன் வெளிப்பாடாக இந்தத் திட்டம் பார்க்கப்படுகிறது.</p><p> 

எனினும் அந்த மசோதா இன்னும் சட்டமாகவில்லை என்பதால், உக்ரைனில் ஆபாசத் துறையை சட்டப்பூர்வமாக்கும் முடிவு இறுதி செய்யப்படுமா என்பது குறித்து இன்னும் விவாதத்திலேயே உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-07T11:03:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆல்பர்ட்டா மாகாணம் கனடாவிலிருந்து பிரியும் விவகாரம்: வாக்கெடுப்பு குறித்த தகவல்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/albertans-go-to-vote-on-october-19-for-seperation-1788778873"></link>
            <id>https://news.lankasri.com/article/albertans-go-to-vote-on-october-19-for-seperation-1788778873</id>
            <summary type="text">Albertans go to the polls on October 19 to vote on whether Alberta should stay with Canada or leave: ஆல்பர்ட்டா மாகாண மக்கள், கனடாவுடன் இருப்பதா அல்லத...</summary>
            <content type="html"><![CDATA[<p>Albertans go to the polls on October 19 to vote on whether Alberta should stay with Canada or leave: ஆல்பர்ட்டா மாகாண மக்கள், கனடாவுடன் இருப்பதா அல்லது பிரிவதா என்பது தொடர்பில் அடுத்த மாதம் சில முடிவுகள் எடுக்க இருக்கிறார்கள்.
</p><p>

ஆல்பர்ட்டா மாகாணத்தை கனடாவிலிருந்து பிரித்து தனி நாடாக்குவதில் ஆல்பர்ட்டா மாகாண மக்களில் ஒரு பிரிவினர் உறுதியாக உள்ளார்கள்.
</p><h3>
அடுத்த மாதம் சில முடிவுகள்
</h3><p>
இந்நிலையில், கனடா மாகாணம் பிரிவது தொடர்பில் அக்டோபர் மாதம் 19ஆம் திகதி வாக்கெடுப்பு ஒன்று நடத்த திட்டமிடப்பட்டுவருகிறது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6703a8d0-90f1-48cb-8558-ec9657a6d37b/26-6a9e997b2eea2.webp' /></p><p>
விடயம் என்னவென்றால், அந்த வாக்கெடுப்பில், ஆல்பர்ட்டா மாகாணம் கனடாவுடன் தொடர்ந்து இணைந்தே இருப்பதா அல்லது பிரிவதா என்னும் கேள்விகள் நேரடியாக கேட்கப்படப்போவது இல்லை.
</p><p>
மாறாக, ஆல்பர்ட்டா மாகாணம் கனடாவுடன் தொடர்ந்து இணைந்தே இருப்பதா அல்லது பிரிவது தொடர்பில் ஒரு பொது வாக்கெடுப்பு நடத்தவேண்டுமா என்னும் கேள்விகள்தான் கேட்கப்பட உள்ளன.&nbsp;</p><p></p><p>
இந்நிலையில், ஆல்பர்ட்டா பிரிவதற்கு ஆதரவளிக்கும் அமைப்பொன்று, வாக்கெடுப்பில் கனடாவிலிருந்து பிரிவது என ஆல்பர்ட்டா மக்கள் முடிவெடுக்கும் பட்சத்தில், ஆல்பர்ட்டாவில் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பது தொடர்பான விடயங்களைக் கூறும் 214 பக்கங்கள் கொண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7cce7904-0608-4463-8dc6-7ccb28b429df/26-6a9e997bd85df.webp' /></p><p>
ஏற்கனவே ஆல்பர்ட்டா மாகாணம் இயங்கிக்கொண்டுதான் இருக்கிறது, அப்படியிருக்கும் பட்சத்தில், அது பிரிவதால் எதுவும் நின்றுவிடப்போவதில்லை என்கிறார்கள் ஆதரவாளர்கள்.
</p><p>
ஆனாலும், ராணுவம், ஆல்பர்ட்டாவிலிருந்து கனடாவின் பிற பகுதிகளுக்கு போக்குவரத்து, கடன், மின்சாரம், எரிபொருள் போன்ற விடயங்கள், ஓய்வூதியம், எல்லைகள், சொத்துக்கள் போன்ற விடயங்கள் குறித்து கனடாவுடனும், பூர்வக்குடியினர் உள்ளிட்ட மற்றவர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தவேண்டியிருக்கும் என்கிறார்கள் பிரிவதை ஆதரிப்பவர்கள்.</p><p>

எதிர்ப்பவர்களோ, பிரிந்தால் பிரிந்ததுதான், அதற்குப் பிறகு பேச்சுவார்த்தையெல்லாம் எடுபடாது என்கிறார்கள்.

ஆக, என்ன நடக்கப்போகிறது என்பது இன்னும் ஒரு மாதத்தில் தெரியலாம்!&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-07T11:01:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[குறைந்த வருமானம் உள்ள குடும்பங்களுக்கு வீடுகளை பரிசளித்த அரசாங்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/government-provides-houses-to-low-income-families-1788775296"></link>
            <id>https://ibctamil.com/article/government-provides-houses-to-low-income-families-1788775296</id>
            <summary type="text">ரண்விமன வீடமைப்புத் திட்டத்தின் கீழ் குறைந்த வருமானம் பெறும் 6 குடும்பங்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட புதிய வீடுகள் கையளிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ரண்விமன வீடமைப்புத் திட்டத்தின் கீழ் குறைந்த வருமானம் பெறும் 6 குடும்பங்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட புதிய வீடுகள் கையளிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.</p><p>
சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களத்தினால் இந்த வீடமைப்புத் திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>இதன்படி பிரதி அமைச்சர் வசந்த பியதிஸ்ஸ தலைமையில் பாணம, லாஹுகல மற்றும் பொத்துவில் ஆகிய பகுதிகளில் குறைந்த வருமானம் பெறும் 6 குடும்பங்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட வீடுகள் அண்மையில் கையளிக்கப்பட்டன.</p><p></p><h2>மொத்த பெறுமதி 20 இலட்சம் ரூபாய்</h2><p>
</p><p>
ஒவ்வொரு வீட்டின் நிர்மாணத்திற்காகவும் சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களத்தினால் 10 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c5bc3b97-9cea-4cd2-8e56-f3fd3ece023d/26-6a9e973200b3f.webp' /></p><p>கையளிக்கபட்ட வீடுகளின் பயனாளர்களின் தொழிலாளர் பங்களிப்பு உள்ளிட்டவற்றுடன் ஒவ்வொரு வீட்டினதும் மொத்த பெறுமதி 20 இலட்சம் ரூபாய்க்கும் அதிகமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

மேலும், வீடுகளைப் பெற்றுக்கொண்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அடங்கிய பொதியொன்றும் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-07T10:57:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[அம்பிட்டிய சுமணரத்ன தேரர் வழக்கில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ampitiye-sumanarathana-thero-arrested-1788764910"></link>
            <id>https://tamilwin.com/article/ampitiye-sumanarathana-thero-arrested-1788764910</id>
            <summary type="text">புதிய இணைப்புமட்டக்களப்பு&amp;nbsp;பொலிஸாரால் கைது செய்யப்பட்ட ஸ்ரீ மங்களாராம விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரர் நாளை(08.09.2026) வரை விளக்க...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>மட்டக்களப்பு&nbsp;பொலிஸாரால் கைது செய்யப்பட்ட ஸ்ரீ மங்களாராம விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரர் நாளை(08.09.2026) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.&nbsp;</p><p>மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய போதே இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><h2>முதலாம் இணைப்பு</h2><p>மட்டக்களப்பு மங்களராம விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரர் மட்டக்களப்பு பொலிஸாரால் இன்று (07) கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>மட்டக்களப்பில் உள்ள புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்க பணியகத்தின் அலுவலகத்திற்கு சென்று கடந்த 31 ஆம் திகதி அங்குள்ள அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p><span style="font-size: 14px;">கைது செய்யப்பட்ட அம்பிட்டிய சுமனரத்ன தேரர் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட உள்ளார்.</span></p><p>&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/G6qSX55IYH8" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><h2>02.09.2026 ஆம் திகதி ஏற்பட்ட சர்ச்சை..&nbsp;&nbsp;</h2><p>அம்பிட்டிய சுமனரத்ன தேரர், புவிச்சரிதவியல் அளவைகள் மற்றும் சுரங்கங்கள் பணியகத்தின் (GSMB) மட்டக்களப்பு அலுவலகத்திற்குச் சென்று, அங்கே பணியாற்றும் தமிழ் அதிகாரி ஒருவரை மிரட்டியுள்ளார் என்ற செய்தி (02.09.2026) <a href="https://tamilwin.com/article/ampitiya-sumanaratana-thero-viral-video-1788293216" target="_blank"><b>எமது தளத்தில்</b></a> செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சியை அடிப்படையாக கொண்டு வெளியிடப்பட்டிருந்தது.</p><p>குறித்த திகதியில்&nbsp;மட்டக்களப்பு பொலிஸார் முறைப்பாடு பதிவு செய்யவும், கைது செய்யவும் தயக்கம் காட்டிய நிலையில் எமது தளத்தில் செய்தி வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.</p><p>இந்த சூழலில் எமது தளத்தில் வெளியான குறித்த&nbsp;காணொளியை அடிப்படையாக வைத்து இக்கைது இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p><br></p><p>&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/_taHX-CZ18s" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-07T10:52:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அம்பிட்டிய சுமண ரத்ன தேரருக்கு விளக்கமறியல்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/remand-for-ampitiya-sumanarathana-thero-1788778462"></link>
            <id>https://jvpnews.com/article/remand-for-ampitiya-sumanarathana-thero-1788778462</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;மட்டக்களப்பில் கைதான மங்களாராம விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமண ரத்ன தேரரை நாளை (8) வரையில் விளக்கமறியலில் வைக்க மட்டக்களப்பு நீதவா...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;மட்டக்களப்பில் கைதான மங்களாராம விகாரையின்<a href="https://jvpnews.com/article/ampitiye-sumanarathana-thero-arrested-1788767996" target="_blank"> விகாராதிபதி அம்பிட்டிய சுமண ரத்ன தேரரை</a> நாளை (8) வரையில் விளக்கமறியலில் வைக்க மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. </p><p>

கடந்த 31 ஆம் திகதி, மட்டக்களப்பில் உள்ள புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்க பணியகத்தின் அலுவலகத்திற்கு சென்று, அங்குள்ள அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் மட்டக்களப்பு தலைமையக பொலிஸாரினால் அவர் இன்று முற்பகல் கைது செய்யப்பட்டிருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/63433c20-a93d-4f12-80c3-37cf0ce802cc/26-6a9e97df862a1.webp' /></p><p> 

 சந்தேகநபர் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், அவரை நாளை வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.</p><p></p><p> 

அதேநேரம் தேரருக்கு எதிராக வேறு இரண்டு வழக்குகளின் கீழ் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது. 

குறித்த வழக்குகளில் அவருக்கு தலா ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.</p>]]></content>
            <updated>2026-09-07T10:51:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[விஜய் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது.. 'மண்டாடி' ப்ரோமோஷனில் பேசிய நடிகர் சூரி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/actor-soori-about-cm-vijay-place-in-cinema-1788777905"></link>
            <id>https://cineulagam.com/article/actor-soori-about-cm-vijay-place-in-cinema-1788777905</id>
            <summary type="text">விஜய் இடத்தை சினிமாவில் வேறு யாராலும் நிரப்ப முடியாது என சமீபத்தில் நடிகர் சூரி பேசியது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.சூரி -&amp;nbsp;மண்டாடி
விடுத...</summary>
            <content type="html"><![CDATA[<p>விஜய் இடத்தை சினிமாவில் வேறு யாராலும் நிரப்ப முடியாது என சமீபத்தில் நடிகர் சூரி பேசியது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.</p><p></p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">சூரி -&nbsp;மண்டாடி</span></p><p>
விடுதலை திரைப்படத்திற்கு பின் ஆக்ஷன் ஹீரோவாக மாறிய சூரி, கொட்டுக்காளி, கருடன், மாமன், தொடர்ந்து ஹிட் திரைப்படங்களில் நடித்து தனி இடத்தை பிடித்துள்ளார். இவர் நடிப்பில் அடுத்ததாக உருவாகியுள்ள மாஸ் ஆக்ஷன் திரைப்படம் மண்டாடி.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b3ce6bef-a2fe-4ab5-aa65-523d5c9fd1ce/26-6a9e95b3f1d0c.webp' /></p><p>
</p><p>இப்படத்தை அறிமுக இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கியுள்ளார். இப்படத்தில் தெலுங்கு நடிகர் சுஹாஸ் தமிழில் அறிமுகமாகிறார். மேலும் மஹிமா நம்பியார், சத்யராஜ் ஆகியோர் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் குமார் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். செப்டம்பர் 10-ஆம் தேதி இப்படம் வெளியாகிறது.</p><h2>
சூரியின் பேச்சு
</h2><p>
இந்நிலையில், மண்டாடி படத்தின் ப்ரோமோஷன் வேலைகளில் இருக்கும் நடிகர் சூரி, சமீபத்தில் முதலமைச்சர் விஜய் குறித்து தெரிவித்த கருத்து இணையத்தில் வைரலாகி வருகிறது.</p><p>

அவர் பேசியது, "நான் நடித்த மண்டாடி திரைப்படம் தொடர்பான நிகழ்ச்சி கோவையில் 2 நாட்கள் நடக்கிறது. இப்படம் மீனவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் இருக்கும் என நம்புகிறேன்" என்றார்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/921e5337-1394-4e0f-b15e-b6aa47a2f9dd/26-6a9e95b4ae123.webp' /></p><p>பின் முதலமைச்சர் விஜய் குறித்து பேசும்போது, "தமிழக முதலமைச்சர் விஜய் பொறுப்பேற்ற பின், சட்டசபை நிகழ்வுகளை பொதுமக்கள் பார்க்க தொடங்கிவிட்டனர். இது ஒரு ஆரோக்கியமான விஷயம்தான். சினிமா துறையில் நடிகராக விஜய் இல்லாதது ஏமாற்றம்தான். அந்த இடத்தை யாராலும் நிரப்ப முடியாது" என கூறினார்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-07T10:45:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[10 மில்லியன் மதிப்புள்ள பறவைகள் கடத்தல்: 4 பேர் கைது - படகும் வானும் பறிமுதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/smuggling-birds-10-million-4-arrested-seized-1788776859"></link>
            <id>https://tamilwin.com/article/smuggling-birds-10-million-4-arrested-seized-1788776859</id>
            <summary type="text">கல்பிட்டிய கோட்டைக்கு அருகிலுள்ள துறைமுகப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட
சிறப்பு பொலிஸ் சோதனையின் போது, கடல் வழியாகச் சட்டவிரோதமாகக் கடத்தி
வரப்பட்டதாகச...</summary>
            <content type="html"><![CDATA[<p>கல்பிட்டிய கோட்டைக்கு அருகிலுள்ள துறைமுகப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட
சிறப்பு பொலிஸ் சோதனையின் போது, கடல் வழியாகச் சட்டவிரோதமாகக் கடத்தி
வரப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் சுமார் 200 புறாக்கள் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
</p><p>அத்துடன் இச்சம்பவம் தொடர்பாக நான்கு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>

புத்தளம் பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் கண்காணிப்பாளரின் நேரடி
வழிகாட்டலின் கீழ், சிறப்பு பொலிஸ் படையொன்றினால் இந்த நடவடிக்கை
முன்னெடுக்கப்பட்டது.</p><h3>சட்ட நடவடிக்கை&nbsp;</h3><p>

அத்துடன் பணப் பந்தயம் வைக்கும் புறாப் பந்தயங்களில் பயன்படுத்துவதற்காகவே
இந்தப் புறாக்கள் சட்டவிரோதமாக இலங்கைக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகப்
பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/15659dfd-0314-49ac-8c0a-ab8497172b6d/26-6a9e93085cd80.webp' /></p><p>

இந்த நிலையில் புறாக்களுடன் சேர்த்து, கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்டதாக
நம்பப்படும் ஒரு படகு, அதன் இயந்திரம் மற்றும் ஒரு வேன் ஆகியவையும்
பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.</p><p>

மேலும் கைப்பற்றப்பட்ட ஒரு புறாவின் மதிப்பு சுமார் ரூ. 50,000 என
மதிப்பிடப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், பறிமுதல் செய்யப்பட்ட அனைத்து புறாக்களின் மொத்த மதிப்பு
ஏறத்தாழ ரூ. 10 மில்லியன் (1 கோடி) ஆகும்.
</p><p>
இதேவேளை கைது செய்யப்பட்ட நான்கு சந்தேக நபர்களில் ஒருவர் மாவனெல்ல பகுதியைச்
சேர்ந்தவர் என்றும், ஏனைய மூவரும் கல்பிட்டிய பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும்
தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் அனைவரும் விரைவில் நீதிமன்றத்தில் முன்னிலைப்
படுத்தப்படவுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-07T10:43:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[அவுஸ்திரேலியாவில் நிமல் பெரேராவை சந்திக்க முயற்சித்த நாமலின் சட்டத்தரணி! மெல்பேர்னில் நடந்த அதிர்ச்சியளிக்கும் சம்பவங்கள்...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-rajapaksa-arrested-nimal-perera-businessman-1788742407"></link>
            <id>https://tamilwin.com/article/namal-rajapaksa-arrested-nimal-perera-businessman-1788742407</id>
            <summary type="text">நாமல் ராஜபக்சவின் நெருங்கிய நண்பராக இருந்த தொழிலதிபர் நிமல் பெரேரா, இரு சந்தர்ப்பங்களில் சாட்சியமளிக்க உள்ளதாக விசாரணை அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாமல் ராஜபக்சவின் நெருங்கிய நண்பராக இருந்த தொழிலதிபர் நிமல் பெரேரா, இரு சந்தர்ப்பங்களில் சாட்சியமளிக்க உள்ளதாக விசாரணை அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். </p><p>மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலம் முதல் ராஜபக்ச குடும்பத்தின் நெருங்கிய நண்பராக இருந்த இவர், தற்போது அவுஸ்திரேலியாவில் வசித்து வருகிறார்.</p><p>தொழிலதிபர் நிமல் பெரேராவை நாமல் தொடர்பில் சாட்சியமளிக்க வேண்டாம் என அவுஸ்திரேலியாவிலும் பாரிய முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.
</p><h2>

</h2><p></p><h2>நிமல் பெரேராவை சந்திக்க முயற்சித்தவர்</h2><p>

நாமல் ராஜபக்சவின் சகாக்களில் ஒருவரான இந்திக கருணாஜீவ, மெல்பேர்ன், விக்டோரியாவில் வசித்து வரும் வழக்கறிஞராவார். </p><p>ராஜபக்சவின் நீண்டகால நண்பரான இவர், அவுஸ்திரேலியாவில் உள்ள நிமல் பெரேராவைத் தொடர்புகொண்டு நாமல் ராஜபக்சவிற்கு எதிராக எந்தவொரு வாக்குமூலத்தையும் வழங்க வேண்டாம் என கோருவதற்கு தீவிர முயற்சி செய்ததாக தெரியவந்துள்ளது. </p><p>கருணாஜீவ, Narre Warren, VIC 3805, 66 Victor Crescent, Level 2, Suite 319 இல் அமைந்துள்ள ISK Law இன் முதன்மை வழக்கறிஞராவார்.
</p><p>
ஆனால் கருணாஜீவவால் நிமல் பெரேராவைத் தொடர்புகொள்ள முடியவில்லை. நிமல் பெரேரா அவரது அழைப்புகளுக்கு பதிலளிக்கவில்லை என்றும் குறுஞ்செய்திகளுக்கு பதிலளிப்பதைத் தவிர்த்துவிட்டார் என்றும் கூறப்படுகிறது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c3e69677-6fbf-4574-a2f3-3c5249c9250c/26-6a9e0b09be350.webp' /></p><p>இதன் காரணமாக கருணாஜீவவின் முயற்சி தோல்வியடைந்ததாகவும், இச்சம்பவம் நாமல் ராஜபக்சவை முற்றிலும் விரக்தியடையச் செய்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
</p><p>
அவுஸ்திரேலியா சென்ற CID மற்றும் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகள் இது தெரியவந்ததையடுத்து, குற்றப் புலனாய்வுத் துறை (CID) மற்றும் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகள் நிமல் பெரேராவிடமிருந்து சத்தியக்கடதாசி (Affidavit) பெறுவதற்காக அவுஸ்திரேலியா சென்றுள்ளனர். </p><p>அங்கு நிமல் பெரேரா, நாமல் ராஜபக்சவிற்கு பல்வேறு சந்தர்ப்பங்களில் 100 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான பணத்தை எவ்வாறு வழங்கினார் என்பதைக் குறிப்பிட்டு சத்தியக்கடதாசியை அதிகாரிகளிடம் வழங்கியுள்ளார்.
</p><h2>
அவுஸ்திரேலிய அரசு வழங்கிய வாக்குறுதி</h2><p>நிமல் பெரேராவிற்கு பாதுகாப்பை வழங்க அவுஸ்திரேலிய அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளதாகவும், அவர் அவுஸ்திரேலியாவிலிருந்து 'Zoom' வழியாக சாட்சியமளிக்கவுள்ளதாகவும் சட்டமா அதிபர் திணைக்களத்தின் சிரேஷ்ட வழக்கறிஞர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
</p><p>
இந்த விசாரணைக்கு அவுஸ்திரேலியா, சிங்கப்பூர், பிரான்ஸ் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் பரஸ்பர சட்ட உதவியை வழங்கியுள்ளதோடு, தற்போது விசாரணை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/56632e9d-bf35-47e9-8230-97aaa301f9f6/26-6a9e748514acb.webp' /></p><p>எயார்பஸ் (Airbus) நிறுவனத்திடமிருந்து ஆவணங்களைப் பெறுவது தொடர்பான உடன்பாடே இந்த வழக்கின் முக்கிய விடயமாகும். வழக்கு மிகவும் வலுவாக உள்ளதாகவும், நாமல் ராஜபக்சவிற்கு எதிராக மேலும் சான்றுகள் வெளிவரும் என்றும் சட்டமா அதிபர் திணைக்கள வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.</p><p>
இந்த வழக்கை விசாரிக்க மூன்று நீதிபதிகள் கொண்ட மேல் நீதிமன்ற தீர்ப்பாயத்தை நியமிக்குமாறு சட்டமா அதிபர் பிரதம நீதியரசரிடம் கோரிக்கை விடுப்பாரா என்பது இன்னும் வெளியாகவில்லை.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-07T10:42:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வியாபாரியிடம் மனைவியை இலஞ்சமாக கேட்ட பொலிஸ்! தமிழர் பகுதியில் சம்பவம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/police-demands-money-and-businessman-wife-bribe-1788777548"></link>
            <id>https://jvpnews.com/article/police-demands-money-and-businessman-wife-bribe-1788777548</id>
            <summary type="text">&amp;nbsp;திருகோணமலையில் கைது செய்யப்பட்ட போதைப்பொருள் வியாபாரி ஒருவரை விடுதலை செய்வதற்கு இலஞ்சமாக பணமும் மற்றும் வியாபாரியின் மனைவியை பாலியல் இலஞ்சாமக கோ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;திருகோணமலையில் கைது செய்யப்பட்ட போதைப்பொருள் வியாபாரி ஒருவரை விடுதலை செய்வதற்கு இலஞ்சமாக பணமும் மற்றும் வியாபாரியின் மனைவியை பாலியல் இலஞ்சாமக கோரிய சம்பவம் தொடர்பாக பொலிஸ் உப பரிசோதகர் பணி நீக்கப்பம் செய்யப்பட்டுள்ளார்.</p><p>

 மட்டக்களப்பு கல்குடா பொலிஸ் நிலையத்தில் கடமையயாற்றிவரும் ஓட்டுமாவடியைச் சோந்த பொலிஸ் உப பரிசோதகர் (எஸ்.ஜ) ஒருவரை&nbsp; &nbsp;சனிக்கிழமை (5) பணியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f2ed3c44-4b02-4828-96b6-8b4d24803032/26-6a9e944e7e258.webp' /></p><h2>&nbsp;வியாபாரியை விடுவிப்பதற்கு&nbsp; &nbsp; பாலியல்&nbsp;இலஞ்சம்</h2><p>
</p><p>
குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் கடந்த 2021ம் ஆண்டு திருகோணமலை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய போது ஹெரோயின் போதை பொருளுடன் கைது செய்யப்பட்ட போதை பொருள் வியாபாரியை விடுவிப்பதற்கு ஒரு தொகை பணம் மற்றும் வியாபரியின் மனைவியை பாலியல் இலஞ்சமாக கோரியுள்ளார்.</p><p>.</p><p>
 வியாபாரி இது தொடர்பாக பொலிஸ் உத்தியோகத்தருக்கு எதிராக திருகோணமலை மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து விசாரணைகள் இடம்பெற்று வந்தது.</p><p>&nbsp; இந்த நிலையில் பொலிஸ் உத்தியோகத்தர் அங்கிருந்து வாழைச்சேனை மற்றும் கந்தளாய் பொலிஸ் பிரிவிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டு அங்கிருந்து கடந்த சில வாரங்களுக்கு முன்னர் கல்குடா பொலிஸ் நிலையத்திற்கு இடமாற்றப்பட்டு கடமையாற்றி வருகின்றதாக கூறப்படுகின்றது.</p><p></p><p>
</p><p>&nbsp;இதனையடுத்து&nbsp; பொலிஸ் உப பரிசோதகரை உடனடியாக பணி இடைநீக்கம் செய்துள்ளது பொலிஸ் தலைமையகம் அறிவித்து கடிதம் அனுப்பியுள்ளதாக அவர் தெரிவித்தார்.</p>]]></content>
            <updated>2026-09-07T10:39:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மின்சாரம் தாக்கி இளம் தாய் உயிரிழப்பு; தவிக்கும் பிள்ளைகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/bibile-young-mother-dies-of-electrocution-1788765247"></link>
            <id>https://jvpnews.com/article/bibile-young-mother-dies-of-electrocution-1788765247</id>
            <summary type="text">&amp;nbsp; பிபிலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தோதம்வள்ளை பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றில், மின்சாரம் தாக்கி மூன்று பிள்ளைகளின் தாய் ஞாயிற்றுக்கிழமை (06) உயிரிழந...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; பிபிலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தோதம்வள்ளை பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றில், மின்சாரம் தாக்கி மூன்று பிள்ளைகளின் தாய் ஞாயிற்றுக்கிழமை (06) உயிரிழந்துள்ள சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><p>&nbsp;உயிரிழந்தவர் தோதம்வள்ளை ஈதனவத்தையைச் சேர்ந்த பிரசந்திகா மதுமாலி (30) எனப்படும் மூன்று பிள்ளைகளின் தாயாவார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f3866da1-34a3-4f22-9f5f-a99400159b39/26-6a9e650645d0a.webp' /></p><h2>&nbsp;சார்ஜரை&nbsp; இணைக்க முற்பட்டவேளை உயிரிழப்பு</h2><p>
 வீட்டில் மின்விளக்கு ஒன்றை மின்னேற்றம் (சார்ஜ்) செய்வதற்காக,&nbsp; சார்ஜரை சுவிட்சில் இணைக்க முற்பட்டவேளை மின்சாரம் தாக்கியுள்ளது.</p><p></p><p>இதனையடுத்து , பிபிலை முஸ்தபா வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் முன்பே அவர் உயிரிழந்திருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
 மரணம் தொடர்பில் பிபிலை பதில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் ஆர்.எஸ். ஜகத் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-07T10:36:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[இங்கிலாந்தில் புகலிடக்கோரிக்கையாளர்களுக்கு எதிராக திரண்ட ஆர்ப்பாட்டக்காரர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/protest-against-asylum-seekers-in-portsmouth-1788773765"></link>
            <id>https://news.lankasri.com/article/protest-against-asylum-seekers-in-portsmouth-1788773765</id>
            <summary type="text">Hundreds of protesters gathered in Portsmouth against asylum seekers: போர்ட்ஸ்மௌத் துறைமுகத்தில் புகலிடக்கோரிக்கையாளர்களுக்கு எதிராக திரண்ட ஆர்ப்பாட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>Hundreds of protesters gathered in Portsmouth against asylum seekers: போர்ட்ஸ்மௌத் துறைமுகத்தில் புகலிடக்கோரிக்கையாளர்களுக்கு எதிராக திரண்ட ஆர்ப்பாட்டக்காரர்களால் பெரும் பரபரப்பு உருவானது.
</p><p>

நேற்றிரவு, சிறுபடகொன்றில் வந்துகொண்டிருந்த சுமார் 140 புகலிடக்கோரிக்கையாளர்களை, அதிகாரிகள், போர்ட்ஸ்மௌத் துறைமுகத்துக்கு அழைத்துவருவதாக செய்தி பரவியுள்ளது.
</p><h3>
துறைமுகத்தில் திரண்ட ஆர்ப்பாட்டக்காரர்கள்</h3><p>

சிறிது நேரத்தில், நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கு வந்து குவிந்துள்ளார்கள்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/da92eda1-1884-46d1-b959-07faac35cc4c/26-6a9e85864f7d0.webp' /></p><p>
அதிகாரிகள் அந்த புகலிடக்கோரிக்கையாளர்களை Manston என்னுமிடத்திலுள்ள புகலிடக்கோரிக்கையாளர்கள் பரிசீலனை மையத்துக்கு அழைத்துச் செல்ல திட்டமிட்டிருந்த நிலையில், ஆர்ப்பாட்டக்காரர்கள், புகலிடக்கோரிக்கையாளர்கள் பயணிக்கும் வாகனங்கள் நகராமல் தடுத்ததாக கூறப்படுகிறது.</p><p>

ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் பொலிசாருக்கும் தள்ளு முள்ளு ஏற்பட்டதாகவும், பொலிஸ் வாகனங்கள் தாக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகிவருகின்றன.</p><p></p><p>

பின்னர், அதிகாலை 3.00 மணியளவில், கலைந்துபோக உத்தரவிடும் ஆணையுடன் வந்து ஆர்ப்பாட்டக்காரர்களை கலைந்துபோக அதிகாரிகள் உத்தரவிட்டதைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டக்காரர்கள் கலைந்துபோயிருக்கிறார்கள்.
</p><p>
பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த ஆர்ப்பாட்டத்தில் முக்கிய பங்கு வகித்தவர்களில், டேனியல் தாமஸ் என்பவரும் ஒருவர்.

சில மாதங்களுக்கு முன், பிரித்தானியாவிலிருந்து சிலர் பிரான்சுக்கே சென்று, அங்கிருந்த சிறுபடகுகளையும், இயந்திரங்களையும் அடித்து நொறுக்கிய சம்பவம் நினைவிருக்கலாம்.</p><p>

அவர்களில், முதன்மையானவர் இதே தாமஸ்தான் என்பது குறிப்பிடத்தக்கது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-07T10:35:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Tony</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரூ. 500 கோடிக்கும் மேல் நஷ்டத்தில் யஷ் படம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/yash-toxic-500-crore-loss-1788762827"></link>
            <id>https://viduppu.com/article/yash-toxic-500-crore-loss-1788762827</id>
            <summary type="text">யஷ் இந்திய சினிமாவின் முன்னணி நடிகராக வளர்ந்துவிட்டார். அவரின் கேஜிஎஃப் படம் ஒன்றே, அவரின் புகழ் எப்படி இந்தியா முழுவதும் பரவியது என்று.

அதன் தொடர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>யஷ் இந்திய சினிமாவின் முன்னணி நடிகராக வளர்ந்துவிட்டார். அவரின் கேஜிஎஃப் படம் ஒன்றே, அவரின் புகழ் எப்படி இந்தியா முழுவதும் பரவியது என்று.</p><p>

அதன் தொடர்ச்சியாக அவர் நடிப்பில் 'டாக்சிக்' படம் பிரம்மாண்டமாக கடந்த மாதம் வெளியானது. இப்படத்தில் கியாரா, நயன்தாரா, ருக்மிணி, ஹுமா, தாரா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bc2fa080-784c-4c92-8ed2-2c946f8873a5/26-6a9e5acde1356.webp' /></p><p>இந்நிலையில், டாக்சிக் படம் முதல் நாள் ரூ. 150 கோடி வசூல் செய்த நிலையில், தற்போது படம் வந்து 10 நாட்கள் ஆகிய நிலையில் ரூ. 350 கோடி தான் வசூல் செய்துள்ளது.</p><p>
இதன் மூலம் தயாரிப்பாளர் தரப்பிற்கு இப்படம் ரூ. 500 கோடிக்கும் மேல் இப்படம் நஷ்டத்தை கொடுத்து இருக்கும் என கூறப்படுகிறது.</p>]]></content>
            <updated>2026-09-07T10:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[அம்பிட்டிய சுமண ரத்ன தேரருக்கு விளக்கமறியல் : நீதிமன்றம் அதிரடி உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/arrested-ampitiye-sumanarathana-thero-1788765664"></link>
            <id>https://ibctamil.com/article/arrested-ampitiye-sumanarathana-thero-1788765664</id>
            <summary type="text">புதிய இணைப்புகைது செய்யப்பட்ட அம்பிட்டிய சுமண ரத்ன தேரரை நாளை (8) வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>கைது செய்யப்பட்ட அம்பிட்டிய சுமண ரத்ன தேரரை நாளை (8) வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p> 

கடந்த 31 ஆம் திகதி, மட்டக்களப்பில் உள்ள புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்க பணியகத்தின் அலுவலகத்திற்கு சென்று, அங்குள்ள அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் மட்டக்களப்பு தலைமையக காவல்துறையினரினால் கைது செய்யப்பட்டிருந்தார்.</p><p> 

பின்னர் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், அவரை நாளை வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><h2>முதலாம் இணைப்பு</h2><p><u><b>அம்பிட்டிய சுமணரத்ன தேரர் கைது</b></u></p><p>மங்களாராம விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் தற்போது மட்டக்களப்பு காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.</p><p>
மட்டக்களப்பில் உள்ள புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகத்தின் அதிகாரிகளின் பணிகளுக்கு இடையூறு விளைவித்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.</p><h2>நீதிமன்றத்தில் முன்னிலை</h2><p>இந்நிலையில் கைது செய்யப்பட்ட அம்பிட்டிய சுமண ரத்ன தேரரை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9a4df37b-f81d-4f97-b493-0a8cab872c16/26-6a9e6897ea491.webp' /></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-07T10:29:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[எலான் மஸ்க்கிற்கு நன்றி தெரிவித்த ஜேர்மனியின் AfD: வெளிப்படையாக எச்சரித்த பிரான்ஸ்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/afd-thanks-elon-musk-france-warns-1788776573"></link>
            <id>https://news.lankasri.com/article/afd-thanks-elon-musk-france-warns-1788776573</id>
            <summary type="text">Germany’s far-right AfD thanks Elon Musk: ஜேர்மனியின் தீவிர வலதுசாரி கட்சியான AfD, எலான் மஸ்க்கிற்கு நன்றி தெரிவித்தது. 
ஜேர்மனியின் Saxony-Anhalt மா...</summary>
            <content type="html"><![CDATA[<p>Germany’s far-right AfD thanks Elon Musk: ஜேர்மனியின் தீவிர வலதுசாரி கட்சியான AfD, எலான் மஸ்க்கிற்கு நன்றி தெரிவித்தது. </p><p>
ஜேர்மனியின் Saxony-Anhalt மாகாணத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க தேர்தல் வெற்றியை அடுத்து, தீவிர வலதுசாரி கட்சியான AfD-ன் முதன்மை வேட்பாளர், டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க்கிற்கு நன்றி தெரிவித்துள்ளார்.</p><h2>நன்றி</h2><p>
</p><p>ஜேர்மனியின் Saxony-Anhalt மாகாணத்தில் தங்கள் ஆதரவை இருமடங்கிற்கும் மேல் உயர்த்தியுள்ள AfD, இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, ஜேர்மனியில் மாகாண அளவில் அதிகாரத்தைக் கைப்பற்றும் முதல் தீவிர வலதுசாரி கட்சியாக உருவெடுக்கும் நிலையில் இருப்பதாகத் தெரிகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/34d7fa32-31f2-4440-b939-59a3e6ff6f66/26-6a9e907f5f751.webp' /></p><p> </p><p>ஞாயிற்றுக்கிழமை இரவு, AfD கட்சியின் முதன்மை வேட்பாளரான உல்ரிச் சீக்மண்ட் (Ulrich Siegmund), உங்கள் ஆதரவிற்கும், தற்கால அரசியல் நிகழ்வுகள் குறித்த தெளிவான மற்றும் மிக முக்கியமான கண்ணோட்டத்திற்கும் நன்றி தெரிவித்து சமூக ஊடகப் பக்கத்தில் மஸ்க்கிற்கு நன்றி கூறியுள்ளார்.</p><p> அத்துடன், வலுவான மற்றும் ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்புக்கான வாய்ப்பை மிகவும் வரவேற்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். முன்னர், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தனது 'ட்ரூத் சோஷியல்' தளத்தில் Saxony-Anhalt மாகாணத் தேர்தல் கணிப்பின் ஸ்கிரீன்ஷாட்டை எந்தக் கருத்தும் தெரிவிக்காமல் பதிவிட்டிருந்தார்.</p><p></p><p> </p><p>மட்டுமின்றி, ரஷ்ய ஜனாதிபதியின் தூதர் கிரில் டிமிட்ரியேவ், ட்ரம்ப்பின் பதிவினை மீள் பதிவிட்டு, யதார்த்தவாதப் போக்குடைய AfD கட்சியின் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி என்று அதைப் பாராட்டினார். </p><p>ரஷ்ய ஆதரவு AfD உக்ரைனுக்கான ஆதரவை நிறுத்துமாறும், உக்ரைனியர்களுக்கு இனி அகதி அந்தஸ்து வழங்கப்படக்கூடாது என்றும் ஜேர்மன் அரசாங்கத்தை வலியுறுத்தி வந்துள்ளது. </p><p>இதனிடையே, அமோக வெற்றி பெற்ற போதிலும், AfD பெரும்பான்மையைப் பெறுவதில் சற்று பின்தங்கியுள்ளது. இறுதி முடிவுகளின்படி, 83 உறுப்பினர்களைக் கொண்ட சட்டமன்றத்தில் 39 ஆசனங்களைப் பெற்ற AfD கட்சி, பெரும்பான்மைக்குத் தேவையான ஆசனங்களை விட மூன்று ஆசனங்கள் குறைவாகவே பெற்றுள்ளது. </p><p>பெர்லினுக்கு மேற்கே சுமார் 21 லட்சம் மக்கள் வசிக்கும் Saxony-Anhalt மாகாணத்தில், ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு பெற்ற வாக்குகளை விட இருமடங்கிற்கும் அதிகமாக, அதாவது 43.8 சதவீத வாக்குகளை AfD கட்சி பெற்றுள்ளது.</p><h2>அந்நிய வெறுப்பு</h2><p> </p><p>இந்த நிலையில், பிரான்ஸின் ஐரோப்பிய விவகாரங்களுக்கான அமைச்சர் பெஞ்சமின் ஹடாட், இந்த வெற்றியை ஐரோப்பாவைப் பொறுத்தவரை ஒரு முக்கியமான தருணம் என்று குறிப்பிட்டதுடன், தேசியவாதமும் அந்நிய வெறுப்பும் ஒருபோதும் தீர்வாக அமையாது என்றும் எச்சரித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/79293f88-119c-4962-886c-681b0e08bd83/26-6a9e908012dd6.webp' /></p><p> </p><p>அத்துடன், கோபம், கவலைகள், அச்சங்கள் ஆகியவற்றை நாம் பணிவுடன் செவிமடுத்து, அவற்றுக்குப் பதிலளிக்க வேண்டும் என்றார். நமது வரலாற்றை நம்மால் மறக்க முடியாது. பிரான்சும் ஜேர்மனியும் எடுத்த முடிவுகளுக்குப் பின்னால் உள்ள அர்த்தம் இதுதான் என்றார். </p><p>போலந்தின் பிரதமர் டொனால்ட் டஸ்க் தெரிவிக்கையில், போலந்தில், முட்டாள்கள் அல்லது துரோகிகள் மட்டுமே ஜேர்மனியில் AfD-யின் வெற்றியைக் கண்டு மகிழ முடியும் என்றார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-07T10:19:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[இன்று நாமல்.. நாளை ஹரிணி..! நிமல் பெரேராவுக்கு அரசின் சக்திவாய்ந்த அமைச்சருடன் தொடர்பு - எழுந்துள்ள புதிய சர்ச்சை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-rajapaksa-nimal-perera-npp-government-1788772770"></link>
            <id>https://tamilwin.com/article/namal-rajapaksa-nimal-perera-npp-government-1788772770</id>
            <summary type="text">நாமல் ராஜபக்வுக்கு எதிராக சாட்சியமளித்த தொழிலதிபர் நிமல் பெரேரா ஒரு ஊழல்வாதி என்றும், தற்போதைய அரசாங்கத்தின் சக்திவாய்ந்த அமைச்சர் ஒருவரே அவரது வியாபா...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாமல் ராஜபக்வுக்கு எதிராக சாட்சியமளித்த தொழிலதிபர் நிமல் பெரேரா ஒரு ஊழல்வாதி என்றும், தற்போதைய அரசாங்கத்தின் சக்திவாய்ந்த அமைச்சர் ஒருவரே அவரது வியாபார பங்குதாரர் என்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் டி.வி. சானக்க குற்றம் சுமத்தியுள்ளார்.</p><p> நெலும் மாவத்தையிலுள்ள கட்சித் தலைமையகத்தில் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p> நாமல் ராஜபக்வுக்கு எதிராக, 2016ஆம் ஆண்டுக்குப் பின்னரான ஒரேயொரு சாட்சியான நிமல் பெரேரா, தனது சாட்சியத்தை பலமுறை மாற்றியுள்ளதாகவும், சாட்சியின் நம்பகத்தன்மை குறித்து கடுமையான கேள்விகள் எழுந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><h2>அமைச்சரின் பங்குதாரர்..&nbsp;</h2><p>"அரசாங்கத்தின் சக்திவாய்ந்த ஒரு அமைச்சரும் நிமல் பெரேராவும் இணைந்து மூன்று வெவ்வேறு சந்தர்ப்பங்களில் முரண்பாடான சாட்சியங்களை வழங்கியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d5fe20ff-4cf5-4de1-85a0-1223e6be8d6d/26-6a9e8b4580553.webp' /></p><p> ஆரம்பத்தில் 50 மில்லியன் ரூபா வழங்கப்பட்டதாகக் கூறியவர்கள், பின்னர் ஒரு ரூபாய்கூட வழங்கவில்லை என்றும், அதன் பின்னர் 100 மில்லியன் ரூபா வழங்கப்பட்டதாகவும் கூறியுள்ளனர்.</p><p> </p><p>பணம் வழங்கப்பட்ட நாள், நேரம் அல்லது அது இலங்கை வந்தடைந்த விதம் குறித்து எந்த ஆதாரமும் இல்லை. </p><p>இந்நிலையில் தான், 2019 ஆம் ஆண்டு நீதிமன்றத்தில் வழக்குப் பதிவின் போது, நிமல் பெரேரா ஒரு பொய்சாட்சி என ஷானி அபேசேகர தெரிவித்திருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6f4864ca-a220-4d8e-aaf8-d1566526bd2e/26-6a9e8b4646931.webp' /></p><p>தற்போது அரசாங்கத்திற்கு எதிரானவர்களை ஒடுக்க இத்தகைய நபர்களை அரசாங்கம் பயன்படுத்துகிறது.

நாளை பிரதமர் ஹரிணி அமரசூரிய 22வது திருத்தச்சட்டத்திற்கு எதிராகத் தனது மனசாட்சிப்படி செயல்பட்டால், பணத்தை நாமலுக்கு அல்ல ஹரிணிக்கே கொடுத்ததாக நிமல் பெரேரா கூறுவார்” என சானக்க விமர்சித்துள்ளார். </p><p>அரசாங்கம் தனக்கு எதிரான குரல்களை ஒடுக்கவும், நெல் கொள்முதல் விலை மற்றும் ஊழல் மோசடிகளை மூடிமறைக்கவும் முற்படுகிறது. </p><p>எனினும், விவசாயிகளின் பிரச்சினைகளை முன்வைத்து நமால் ராஜபக்ச தலைமையில் எதிர்வரும் 12ஆம் திகதி நடைபெறவுள்ள பிரம்மாண்ட பேரணியை எந்த அடக்குமுறையாலும் தடுக்க முடியாது என்றும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவோ அல்லது ராஜபக்ஷக்களோ இத்தகைய அச்சுறுத்தல்களுக்கு பயப்படப் போவதில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-07T10:12:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Keethan</name>
            </author>
            <title type="text"><![CDATA[விபத்தில் படுகாயமடைந்த இளைஞன் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/young-man-seriously-injured-in-accident-death-1788774315"></link>
            <id>https://tamilwin.com/article/young-man-seriously-injured-in-accident-death-1788774315</id>
            <summary type="text">விபத்தில் சிக்கி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 19
வயது இளைஞன் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
முல்லைத்தீவு - துண...</summary>
            <content type="html"><![CDATA[<p>விபத்தில் சிக்கி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 19
வயது இளைஞன் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.</p><p>
முல்லைத்தீவு - துணுக்காய் பகுதியில் கடந்த 04.09.2026 அன்று சைக்கிளில்
பயணித்துக்கொண்டிருந்த இளைஞன் மீது எதிரே அதி வேகமாக வந்த முச்சக்கரவண்டி மோதியதில்
இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த இளைஞன், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின்
அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை
பலனின்றி நேற்றையதினம் (06.09.2026) உயிரிழந்துள்ளார்.</p><h2>மேலதிக விசாரணை</h2><p>விபத்தில் படுகாயமடைந்த அவர் அவசர சிகிச்சைக்காக வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டு, தொடர்ந்து தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வந்ததாக
தெரிவிக்கப்பட்டது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/16aeea49-a153-4abd-b845-36e6ac3e3373/26-6a9e8d9288077.webp' /></p><p>இந்நிலையில், அவரது மரணம் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள்
மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
</p><p>விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மல்லாவி பொலிஸார் மேற்கொண்டு
வருகின்றனர்.</p><p></p><p></p><p><b>YOU MAY LIKE THIS VIDEO..</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/JNLjT9Oh6Aw" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p>]]></content>
            <updated>2026-09-07T10:12:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[யால தேசிய வனத்தை தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/yala-national-park-s-temporarily-closed-1788771717"></link>
            <id>https://ibctamil.com/article/yala-national-park-s-temporarily-closed-1788771717</id>
            <summary type="text">யால தேசிய வனத்தின் 01 மற்றும் 02 ஆம் வலயங்களை தற்காலிகமாக மூடுவதற்கு&amp;nbsp;வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் தீர்மானித்துள்ளது.நாட்டில் நிலவும் கடுமைய...</summary>
            <content type="html"><![CDATA[<p>யால தேசிய வனத்தின் 01 மற்றும் 02 ஆம் வலயங்களை தற்காலிகமாக மூடுவதற்கு&nbsp;வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் தீர்மானித்துள்ளது.</p><p>நாட்டில் நிலவும் கடுமையான வெப்பநிலை காரணமாக விலங்குகள் மற்றும் வனவிலங்கு அதிகாரிகளுக்கு ஏற்படும் வெப்ப அழுத்தத்தைக் கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.</p><p>அதற்கமைய குறித்த இரண்டு வலயங்களையும் எதிர்வரும் 14ஆம் திகதி முதல் மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகம் மஞ்சுள அமரரத்ன தெரிவித்தார்.</p><p></p><h2>கடும் வெப்பமான வானிலை</h2><p>இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், நிலவும் கடும் வெப்பமான வானிலை காரணமாக விலங்குகளுக்கு நீர் பற்றாக்குறை மற்றும் வெப்ப அழுத்தம் கடுமையாகப் பாதித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4bc87b7d-3992-43b3-8f5d-b9ab512f75c8/26-6a9e8beb392fa.webp' /></p><p> 

மேலும், அதிகளவிலான சுற்றுலா ஜீப் வண்டிகள் வனத்திற்குள் பயணிப்பதால், தற்போதைய சூழ்நிலையில் வனவிலங்கு அதிகாரிகள் தமது கடமைகளை முன்னெடுப்பதில் அசௌகரியங்கள் ஏற்பட்டுள்ளன. </p><p>

இலங்கையின் வறண்ட வலயத்தைச் சேர்ந்த யால 1 மற்றும் 2 மட்டுமன்றி, மன்னார் மற்றும் வில்பத்து தேசிய வனங்களை அண்டிய பகுதிகளில் நிலவும் நிலைமை தொடர்பிலும் அதிகாரிகள் அவதானத்துடன் செயற்பட்டு வருகின்றனர்.</p><p> 

தேவைப்படும் சந்தர்ப்பங்களில் குறித்த வனங்களை மூடுவதற்கோ அல்லது விலங்குகள் மற்றும் அதிகாரிகளுக்கு வெப்ப அழுத்தம் இன்றி செயற்படுவதற்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கோ நடவடிக்கை எடுக்கப்படும்“ என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-07T10:12:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[15 வயது சிறுமி உட்பட 6 பேர் பலி: 306 ட்ரோன்களை இடைமறித்த ரஷ்யா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/russia-said-intercepted-306-ukrainian-drones-1788776005"></link>
            <id>https://news.lankasri.com/article/russia-said-intercepted-306-ukrainian-drones-1788776005</id>
            <summary type="text">Russia said intercepted 306 ukrainian drones: உக்ரைனின் ட்ரோன் தாக்குதலில் ரஷ்யா மற்றும் இணைக்கப்பட்ட கிரிமியாவில் 15 வயது சிறுமி உட்பட 6 பேர் பலியாகி...</summary>
            <content type="html"><![CDATA[<p>Russia said intercepted 306 ukrainian drones: உக்ரைனின் ட்ரோன் தாக்குதலில் ரஷ்யா மற்றும் இணைக்கப்பட்ட கிரிமியாவில் 15 வயது சிறுமி உட்பட 6 பேர் பலியாகினர்.</p><p> 

ரஷ்யா மற்றும் இணைக்கப்பட்ட கிரிமியா பகுதிகளை குறிவைத்து, உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதல்களில் ஆறு பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><h2>உக்ரைன் ட்ரோன் தாக்குதல்</h2><p>
ரஷ்யாவின் பெல்கோரோட் மற்றும் பெர்ம் பிராந்தியங்கள் மற்றும் ரஷ்யாவால் இணைக்கப்பட்ட கிரிமியா ஆகிய பகுதிகளை குறிவைத்து உக்ரைன் ட்ரோன் தாக்குதல் நடத்தியது.

இதில் எல்லை நகரமான Grayvoron-யில் ஒருவர் கொல்லப்பட்டார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/31bac478-120f-473a-883d-e63fa26fe882/26-6a9e8e48acffd.webp' /></p><p></p><p> பெல்கோரோட் பிராந்தியத்தில் கார் ஒன்றின் மீது ட்ரோன் மோதியதில் ஒரு ஆணும், பெண்ணும் உயிரிழந்ததாக உள்ளூர் அவசரகால தலைமையகம் தெரிவித்துள்ளது.
</p><p>
அதேபோல் பெர்ம் பிராந்தியத்தில், அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் ஒன்றின் மீது ட்ரோன் மோதியதில் ஒருவர் உயிரிழந்ததாகவும், நான்கு பேர் காயமடைந்ததாகவும் ஆளுநர் டிமிட்ரி மஹோனின் தெரிவித்தார்.&nbsp;</p><h2>15 வயது சிறுமி&nbsp;பலி</h2><p>

இணைக்கப்பட்ட கிரிமியாவில், செவாஸ்டோபோல் துறைமுக நகரில் இரவு நேரத்தில் நடந்த தாக்குதலில் 15 வயது சிறுமியும், ஒரு ஆணும் கொல்லப்பட்டனர்.</p><p>

இதற்கிடையில், ஞாயிற்றுக்கிழமை மாலைக்கும் திங்கட்கிழமை காலைக்கும் இடையில் ரஷ்யா மற்றும் இணைக்கப்பட்ட கிரிமியா முழுவதும் 306 உக்ரேனிய ட்ரோன்களை இடைமறித்ததாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.&nbsp; &nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1ceeba47-b60d-40ad-b8fe-cc9424e8c09e/26-6a9e8e4961911.webp' />&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p><br>]]></content>
            <updated>2026-09-07T10:10:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[மஞ்சணத்தி திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி வைத்த இளையராஜா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/manjanathi-movie-shoot-starts-from-today-1788775808"></link>
            <id>https://cineulagam.com/article/manjanathi-movie-shoot-starts-from-today-1788775808</id>
            <summary type="text">இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகும் மஞ்சணத்தி திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியது.

மஞ்சணத்தி

பைசன்: காளைமாடன் திரைப்படத்தின்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகும் மஞ்சணத்தி திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியது.</p><p></p><p>
</p><h2>
மஞ்சணத்தி</h2><p>

பைசன்: காளைமாடன் திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் மஞ்சணத்தி. இப்படத்தை நாவி ஸ்டுடியோஸ் மற்றும் ஸ்கந்தா பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கின்றன.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/699de753-6754-4a43-b8df-434d6abfde44/26-6a9e8d84a8437.webp' /></p><p>இப்படத்திற்கு இசைஞானி <a href="https://www.instagram.com/p/Dc-bweCiQGT/?img_index=1" target="_blank">இளையராஜா </a>இசையமைக்கிறார்.

இப்படத்தில் கதிர், விது, கயாடு லோஹர், பிரியங்கா மோகன், பூர்ணிமா ரவி ஆகியோர் நடிக்கிறார்கள். இன்று இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகியுள்ளது. படப்பிடிப்பை இளையராஜா விளக்கு ஏற்றி தொடங்கி வைத்துள்ளார்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cc7bdfed-b1ee-49d4-be8c-07f97e18357f/26-6a9e8d833e86f.webp' /></p><p>படப்பிடிப்பு தொடங்கியுள்ளது என்கிற அறிவிப்பு மட்டுமின்றி, மஞ்சணத்தி திரைப்படத்திற்கான புதிய போஸ்டரையும் இயக்குநர் மாரி செல்வராஜ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும், இளையராஜாவிற்கு தனது நன்றியையும் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/240e869a-47e8-4397-8585-a01d5787dc9b/26-6a9e8d83ef0fa.webp' /></p><p><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/p/Dc-bweCiQGT/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/p/Dc-bweCiQGT/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/p/Dc-bweCiQGT/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by Mari Selvaraj (@mariselvaraj84)</a></p></div></blockquote> <script async src="//www.instagram.com/embed.js"></script></p>]]></content>
            <updated>2026-09-07T10:10:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[அநுர அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்! சர்வதேசத்துக்கு ஐ.நா. அழைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/volker-turk-s-latest-report-on-sri-lanka-1788771862"></link>
            <id>https://ibctamil.com/article/volker-turk-s-latest-report-on-sri-lanka-1788771862</id>
            <summary type="text">ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளும் ஏனைய நாடுகளும் உண்மை மற்றும் நீதியை உறுதிப்படுத்துவதற்காக திசாநாயக்க அரசாங்கம் வழங்கிய உறுதிமொழிகளை நட...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளும் ஏனைய நாடுகளும் உண்மை மற்றும் நீதியை உறுதிப்படுத்துவதற்காக திசாநாயக்க அரசாங்கம் வழங்கிய உறுதிமொழிகளை நடைமுறைப்படுத்த அழுத்தம் கொடுக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் அழைப்பு விடுத்துள்ளது.</p><p>ஜெனிவா மனித உரிமை பேரவை கூட்டமானது இன்று ஆரம்பமான நிலையில்,&nbsp;ஐக்கிய நாடுகள் மனித உரிமைகளுக்கான உயர் ஆணையாளர் <a href="https://www.hrw.org/news/2026/09/07/un-finds-little-progress-on-justice-in-sri-lanka" target="_blank">வோல்கர் டர்க்</a> வெளியிட்ட சமீபத்தய அறிக்கையில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><p>இலங்கையின் உள்நாட்டுப் போர் முடிவடைந்து 17 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், நாட்டின் தற்போதைய மனித உரிமைகள் நிலைமை தொடர்பான புதிய அறிக்கையை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகளுக்கான உயர் ஆணையாளர் வோல்கர் டர்க் வெளியிட்டுள்ளார்.</p><p></p><h2>கடந்த கால மனித உரிமை மீறல்</h2><p>

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் 2024 செப்டெம்பரில் பதவியேற்றபோது, கடந்த கால மனித உரிமை மீறல்களுக்கு நீதி வழங்கப்படும் என உறுதியளித்திருந்தது என்பதையும் இந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/37f1b7b2-2167-46e8-b013-19a6117d1558/26-6a9e846ad66d3.webp' /></p><p>அறிக்கையின்படி, “சில முக்கிய வழக்குகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் காணப்பட்ட போதிலும், 2009ஆம் ஆண்டு முடிவடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளுடனான போரின்போது அனைத்து தரப்பினராலும் மேற்கொள்ளப்பட்ட சர்வதேச சட்டத்தின் கீழான குற்றங்கள், பாரிய மனித உரிமை மீறல்கள் மற்றும் சர்வதேச மனிதாபிமானச் சட்டத்தின் தீவிர மீறல்கள் தொடர்பில் இதுவரை போதுமான அங்கீகாரமோ பொறுப்புக்கூறலோ ஏற்படுத்தப்படவில்லை.</p><p>
இதேபோன்ற கவலைகளை மனித உரிமைகள் கண்காணிப்பகம் (Human Rights Watch) செப்டெம்பர் 1ஆம் திகதி வெளியிட்ட அறிக்கையிலும் பதிவு செய்துள்ளது.
</p><p>
சில முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளில் வரையறுக்கப்பட்ட முன்னேற்றம் ஏற்பட்டுள்ள போதிலும், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர், நிவாரணப் பணியாளர்கள் கொல்லப்பட்டமை மற்றும் ஊடகவியலாளர்கள் இலக்கு வைக்கப்பட்டமை தொடர்பான வழக்குகளில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை என அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.</p><p>
கடந்த கால மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதற்காக சுயாதீன பொது அலுவலகத்தை நிறுவுவதாக அரசாங்கம் வழங்கிய உறுதியும் இதுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை.
</p><p>
அதேபோன்று, பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதற்கு அவசியமான சட்ட மற்றும் கட்டமைப்பு ரீதியான சீர்திருத்தங்களும் மேற்கொள்ளப்படவில்லை.
</p><p>
கடுமையான மனித உரிமை மீறல்கள் தொடர்பான ஆதாரங்களை சேகரிப்பதற்காக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையால் நிறுவப்பட்ட Sri Lanka Accountability Project எனப்படும் பொறிமுறையையும் திசாநாயக்க அரசாங்கம் இதுவரை ஏற்றுக்கொள்ளவில்லை.&nbsp;</p><p></p><h2>அடக்குமுறைக்குரிய பயங்கரவாதத் தடுப்புச் சட்டம்</h2><p> மனித உரிமை பாதுகாவலர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரைத் துன்புறுத்தவும் கைது செய்யவும் இலங்கை அரசாங்கம் இன்னமும் அடக்குமுறைக்குரிய பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை (PTA) பயன்படுத்தி வருவதாக அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f9040e5c-d23a-4074-a2c9-5cf1fb80aadc/26-6a9e846b8d299.webp' /></p><p>
</p><p>
குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் அரச புலனாய்வு அமைப்புகளின் கண்காணிப்பு மற்றும் விசாரணைகளுக்கு முகங்கொடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை முழுமையாக நீக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் வரை, அதன் பயன்பாட்டை இடைநிறுத்துவதற்கான தற்காலிகத் தடை விதிக்குமாறு ஐ.நா. மனித உரிமைகளுக்கான உயர் ஆணையாளரால் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p><p>

மேலும், இந்தச் சட்டத்தின் கீழ் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை விடுதலை செய்யுமாறும் வலியுறுத்தப்படுகிறது.</p><p> நீண்டகாலமாக நிலுவையில் உள்ள சட்ட மற்றும் கட்டமைப்பு ரீதியான சீர்திருத்தங்களை இலங்கை அரசாங்கம் அவசரமாக முன்னெடுக்க வேண்டும்.</p><p>
அடக்குமுறை சட்டங்களை நீக்குதல், பாதுகாப்புத் துறையில் விரிவான சீர்திருத்தங்களை மேற்கொள்ளுதல் மற்றும் உண்மையான நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்தல் ஆகியவை அவசியம்.</p><p>
இத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாவிட்டால், குற்றங்களுக்கான தண்டனையின்மை மேலும் வலுப்பெறுவதுடன், பாதிக்கப்பட்டவர்களுக்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான நம்பிக்கையின்மை மேலும் ஆழமடையும் அபாயம் இருக்கின்றது.</p><p>சர்வதேச குற்றங்களுக்கு பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதில் இலங்கை அரசாங்கம் மேற்கொள்ளும் முன்னேற்றங்களை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகளுக்கான உயர் ஆணையாளர் அலுவலகம் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.</p><p>

மேலும், ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளும் ஏனைய நாடுகளும் உண்மை மற்றும் நீதியை உறுதிப்படுத்துவதற்காக திசாநாயக்க அரசாங்கம் வழங்கிய உறுதிமொழிகளை நடைமுறைப்படுத்த அழுத்தம் கொடுக்க வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-07T10:06:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[நெருங்கிய கூட்டாளிகளின் பெயர்களில் கோடிக்கணக்கான சொத்துக்கள்! அதிகாரிகளிடம் சிக்கிய இருவர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/action-to-freeze-the-assets-of-the-two-1788774781"></link>
            <id>https://tamilwin.com/article/action-to-freeze-the-assets-of-the-two-1788774781</id>
            <summary type="text">போதைப்பொருள் கடத்தல்காரர்கள் என சந்தேகிக்கப்படும் இருவரின் சொத்துக்களை முடக்க சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப்பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது.அதன்படி, கட...</summary>
            <content type="html"><![CDATA[<p>போதைப்பொருள் கடத்தல்காரர்கள் என சந்தேகிக்கப்படும் இருவரின் சொத்துக்களை முடக்க சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப்பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது.</p><p>அதன்படி, கடத்தல்காரர்களில் ஒருவருக்கு எம்பிலிப்பிட்டிய, காந்திசபுர பகுதியில் உள்ள ஏக்கர் நிலம் மற்றும் மூன்று மாடி வீடு ஆகியவற்றின் பயன்பாடு தடை செய்யப்பட்டுள்ளது. </p><p>மேலும், அதன் மதிப்பு சுமார் 7 கோடி ரூபாய் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>பொலிஸார் தீவிர விசாரணை</h2><p>
</p><p>
மேலும், மற்றொரு கடத்தல்காரருக்கு எம்பிலிப்பிட்டிய, நியூ டவுன் பகுதியில் உள்ள 23.7 பேர்ச் நிலம் மற்றும் மூன்று மாடி வீடு ஆகியவற்றின் பயன்பாட்டை முடக்க சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப்பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b4a5749b-b929-4b59-adcd-19202279c873/26-6a9e8b2f44bd7.webp' /></p><p>

இந்த கடத்தல்காரர்கள் தங்களின் நெருங்கிய கூட்டாளிகளின் பெயர்களில் இந்த சொத்துக்களை வாங்கியிருக்கலாம் என தற்போது சந்தேகிக்கப்படுவதாக பொலிஸ் தெரிவித்துள்ளது.</p><p>

இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.</p><p> </p><p></p>]]></content>
            <updated>2026-09-07T10:05:26+00:00</updated>
        </entry>
    </feed>
