<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-09-12T07:39:11+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[களனி கங்கையிலிருந்து அடையாளம் தெரியாத சடலம் மீட்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/unidentified-body-recovered-from-kelani-river-1789186999"></link>
            <id>https://ibctamil.com/article/unidentified-body-recovered-from-kelani-river-1789186999</id>
            <summary type="text">களனி கங்கையிலிருந்து அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.குறித்த சடலம்&amp;nbsp;நேற்று (11) மாலை ஹங்வெல்ல காவல்துறை பிரிவிற்குட்பட்ட ஜல்...</summary>
            <content type="html"><![CDATA[<p>களனி கங்கையிலிருந்து அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.</p><p>குறித்த சடலம்&nbsp;நேற்று (11) மாலை ஹங்வெல்ல காவல்துறை பிரிவிற்குட்பட்ட ஜல்தர பகுதியில் மீட்கபட்டுள்ளது&nbsp;&nbsp;</p><p>

ஹங்வெல்ல காவல் நிலையத்திற்கு கிடைத்த தகவலுக்கு அமைய இச்சடலம் மீட்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>மேலதிக விசாரணை</h2><p> 

உயிரிழந்தவரின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை&nbsp;என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7cd406bd-14aa-4970-b16a-877a818ac9ab/26-6aa5008137b1a.webp' /></p><p>சடலம் தொடர்பான நீதவான் விசாரணை நடாத்தப்படவுள்ளது</p><p>ஹங்வெல்ல காவல்துறையினர்
இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-12T07:34:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[நோர்வேயில் இலங்கை வம்சாவளி பெண்ணுக்கு கிடைத்த உயர் பதவி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/sri-lankan-origin-woman-gets-top-norway-post-1789198392"></link>
            <id>https://canadamirror.com/article/sri-lankan-origin-woman-gets-top-norway-post-1789198392</id>
            <summary type="text">இலங்கை வம்சாவழியைச் சேர்ந்தவரும் நோர்வேயின் தொழிலாளர் கட்சியைச் சேர்ந்தருமான கம்சி குணரட்ணம், அந்நாட்டின் புதிய போக்குவரத்து அமைச்சராக நியமிக்கப்பட்டு...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை வம்சாவழியைச் சேர்ந்தவரும் நோர்வேயின் தொழிலாளர் கட்சியைச் சேர்ந்தருமான கம்சி குணரட்ணம், அந்நாட்டின் புதிய போக்குவரத்து அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.</p><p>&nbsp;நோர்வே மன்னர் தலைமையில் நடைபெற்ற அரசாங்க சபைக் கூட்டத்தில், 2026 செப்டெம்பர் 11ஆம் திகதி கம்சி குணரட்ணம் போக்குவரத்து அமைச்சராக உத்தியோகபூர்வமாக நியமிக்கப்பட்டதாக நோர்வே அரசாங்கம் அறிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5d667326-a3ed-437d-a262-d79e39344d20/26-6aa500398df93.webp' /></p><p>
</p><p>
இதன் மூலம் நோர்வே அரசியலில் முக்கியமான அமைச்சுப் பதவியை வகிக்கும் தமிழ்ப் பின்னணியைக் கொண்ட அரசியல்வாதியாக கம்சி குணரட்ணம் உலகத் தமிழர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
</p><p>
இளம் வயதிலேயே அரசியலில் ஈடுபட்ட கம்சி குணரட்ணம், தொழிலாளர் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தி படிப்படியாக பல்வேறு அரசியல் பொறுப்புகளை வகித்து முன்னேறியுள்ளார்.</p><p> 19 வயதில் ஒஸ்லோ மாநகர சபைக்கு தெரிவான அவர், பின்னர் தேசிய அரசியலிலும் முக்கிய இடத்தைப் பெற்றார்.
</p><p>
தற்போது நோர்வே அரசாங்கத்தில் போக்குவரத்து அமைச்சராக பொறுப்பேற்றுள்ள கம்சி குணரட்ணம், பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்து, அஞ்சல் சேவைகள் உள்ளிட்ட துறைகள் தொடர்பான கொள்கைகளுக்கு பொறுப்பானவராக செயற்படவுள்ளார்.</p><p>அரசியல் செய்திகளை வாசி

கம்சியின் இந்த உயர்வு, அவரது அரசியல் பயணத்தில் முக்கியமான புதிய கட்டமாகவும், நோர்வே வாழ் தமிழர்கள் உள்ளிட்ட உலகத் தமிழர்களுக்கு பெருமைக்குரிய நிகழ்வாகவும் பார்க்கப்படுகிறது.</p><p>

நோர்வே பிரதமர் ஜோனாஸ் கார் ஸ்டோரே தலைமையிலான தற்போதைய அரசாங்கம் தொழிலாளர் கட்சி உறுப்பினர்களைக் கொண்டதாக அமைந்துள்ள நிலையில், கம்சி குணரட்ணம் போக்குவரத்து அமைச்சராக இடம்பெற்றுள்ளார்.
</p><p>
இதேவேளை, புதிய அமைச்சருக்கான மாநிலச் செயலாளர்களாக Abel Cecilie Knibe Kroglund மற்றும் Jakob Vorren ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் நோர்வே அரசாங்கம் தெரிவித்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-12T07:33:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாமலால் மகிந்தவாக மாற முடியாது - நிரோஷன் பாதுக்க]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/niroshan-statement-about-namal-and-mahinda-1789196019"></link>
            <id>https://tamilwin.com/article/niroshan-statement-about-namal-and-mahinda-1789196019</id>
            <summary type="text">நாமல், மகிந்த ராஜபக்சவின் மகனாக இருக்கலாம் அதற்காக ஒருபோதும் அவரால் மகிந்த ராஜபக்சவாக மாற முடியாது என ஐக்கிய மக்கள் சக்தியின் ஊழலுக்கு எதிரான இயக்கத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாமல், மகிந்த ராஜபக்சவின் மகனாக இருக்கலாம் அதற்காக ஒருபோதும் அவரால் மகிந்த ராஜபக்சவாக மாற முடியாது என ஐக்கிய மக்கள் சக்தியின் ஊழலுக்கு எதிரான இயக்கத்தின் தேசிய அமைப்பாளர் நிரோஷன் பாதுக்க தெரிவித்துள்ளார். </p><p>

கொழும்பில் நேற்றைய தினம் (11.09.2026) ஐக்கிய மக்கள் சக்தி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.</p><h2>நாமலால் மகிந்தவின் இடத்தை அடைய முடியாது</h2><p>
</p><p>
அவர் மேலும் தெரிவிக்கையில், மகிந்த ராஜபக்ச என்பவர் முற்றிலும் ஒரு தனித்துவமான அரசியல் ஆளுமையையும் அடையாளத்தையும் கொண்டவராவார். 

எனவே, வெறும் வாரிசு என்ற தகுதியை மட்டும் வைத்துக்கொண்டு மகிந்த ராஜபக்சவின் அரசியல் ஆளுமையையோ அல்லது அவருக்குரிய இடத்தையோ நாமல் ராஜபக்சவினால் அடைந்துவிட முடியாது.
</p><p>
அத்துடன், நாமல் ராஜபக்சவும் அங்கம் வகித்த கடந்த அரசாங்கத்தின் தவறான நிர்வாகச் செயற்பாடுகள் மற்றும் சீர்கேடான பொருளாதாரக் கொள்கைகள் காரணமாகவே இலங்கை நாடு முன்னெப்பொழுதுமில்லாதவாறு பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுத்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8d3cab32-45b3-4a4a-81d2-af7340da7192/26-6aa4fde93d858.webp' /></p><h2>ஆட்சி அதிகாரம்</h2><p> </p><p>

எனினும், நாடு எவ்வாறு இவ்வாறான வீழ்ச்சியைச் சந்தித்தது என்பதற்கான உண்மையான காரணங்களையோ அல்லது அதிலிருந்து மீண்டு வருவதற்கான சரியான தீர்வுகளையோ பற்றிய எந்தவொரு புரிதலும் தெளிவும் இல்லாத ஒரு தரப்பிடமே நாட்டின் பொதுமக்கள் தற்போதைய ஆட்சி அதிகாரத்தைக் கையளித்துள்ளனர். </p><p>

அதேவேளை, நாட்டின் பிரதான எதிர்க்கட்சி என்ற வகையில் தமக்குரிய பொறுப்புகளையும் கடமைகளையும் தாங்கள் சரியான முறையில் நிறைவேற்றி வருகிறோம்.</p><p> 

எதிர்க்கட்சியில் உள்ள ஏனைய அனைத்துக் குழுக்களும் தத்தமது அரசியல் இலக்குகளை நோக்கிப் பயணிப்பதற்குத் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதுடன், நாட்டில் தற்போது உடனடியாகத் தேர்தல்கள் எதுவும் நடத்தப்படாத நிலையில், நாமல் ராஜபக்சவும் எதிர்க்கட்சியிலேயே தொடர்ந்தும் அங்கத்துவம் வகித்து வருகிறார் என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-12T07:29:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[அனைத்து பல்கலைக்கழக துணைவேந்தர்களுக்கும் அரசாங்கத்தின் முக்கிய அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/fill-academic-non-academic-vacancies-universities-1789195957"></link>
            <id>https://ibctamil.com/article/fill-academic-non-academic-vacancies-universities-1789195957</id>
            <summary type="text">பல்கலைக்கழகங்களில் வெற்றிடமாகவுள்ள கல்வி மற்றும் கல்விசாரா ஊழியர் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளை விரைவுபடுத்துமாறு துணைவேந்தர்களுக்கு அறிவு...</summary>
            <content type="html"><![CDATA[<p>பல்கலைக்கழகங்களில் வெற்றிடமாகவுள்ள கல்வி மற்றும் கல்விசாரா ஊழியர் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளை விரைவுபடுத்துமாறு துணைவேந்தர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
</p><p>
உயர்கல்வி பற்றிய ஆலோசனைக் உபகுழுவின் முன்னிலையில் துணைவேந்தர்கள் அழைக்கப்பட்டதை தொடர்ந்து இந்த அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாகக் கல்வி பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>ஆட்சேர்ப்புக்கு அனுமதி </h2><p>
</p><p>
நாடு முழுவதும் உள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் வெற்றிடமாகவுள்ள கல்வி மற்றும் கல்விசாரா பணியிடங்களை நிரப்புவதற்கு ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c60f17c9-3bee-44f0-a426-83138c27f566/26-6aa4faf00b83f.webp' /></p><p>
</p><p>
எனினும், சில பல்கலைக்கழகங்களில் ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் தாமதமடைந்துள்ளதாகச் பிரதி அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>
இவ்வாறானதொரு பின்னணியில், தற்போது நாட்டில் 19 பல்கலைக்கழகங்கள் இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-12T07:25:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜேர்மனியில் AfD-யின் வெற்றி... விளாடிமிர் புடின் சொன்ன காரணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/afd-win-caused-by-putin-says-1789197833"></link>
            <id>https://news.lankasri.com/article/afd-win-caused-by-putin-says-1789197833</id>
            <summary type="text">Putin says events in Europe caused by Western globalists: ஐரோப்பாவில் நடைபெறும் நிகழ்வுகளுக்கு மேற்கத்திய உலகளாவியவாதிகளே காரணம் என்று புடின்.
ஜேர்மன...</summary>
            <content type="html"><![CDATA[<p>Putin says events in Europe caused by Western globalists: ஐரோப்பாவில் நடைபெறும் நிகழ்வுகளுக்கு மேற்கத்திய உலகளாவியவாதிகளே காரணம் என்று புடின்.
</p><p>ஜேர்மனியில் மாகாணத் தேர்தல் ஒன்றில் தீவிர வலதுசாரிக் கட்சி வெற்றி பெற்றது உள்ளிட்ட ஐரோப்பாவில் நடைபெறும் நிகழ்வுகள், மேற்கத்திய நாடுகளில் உள்ள உலகளாவிய ஆதரவாளர்கள் (globalists) இழைத்த அமைப்புரீதியான தவறுகளின் விளைவே என்று விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.</p><h2>மேற்கத்திய மேல்தட்டு வர்க்கம்</h2><p>
இந்தியாவுக்கான தனது பயணத்தின் முதல் நாளில் செய்தியாளர்களிடம் பேசிய புடின், ரஷ்யா மீது தொடர்ந்து அழுத்தம் கொடுத்ததும், உக்ரைனை நேட்டோ (NATO) கூட்டணியில் இணைக்க முயன்றதுமே உக்ரைன் மோதலுக்குக் காரணம் என்று மேற்கத்திய நாடுகளைக் குற்றம் சாட்டினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0f5f5bfc-a10e-4420-b513-7ebee4509bd9/26-6aa4fe0b27889.webp' /></p><p> </p><p>ஜேர்மனியின் Saxony-Anhalt மாகாணத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேர்தலில் AfD கட்சி பெற்ற குறிப்பிடத்தக்க வெற்றி குறித்து எந்தக் கருத்தும் தெரிவிக்கப்போவதில்லை என்று ரஷ்ய ஜனாதிபதி கூறினார்; இருப்பினும், அத்தேர்தல் உட்பட ஐரோப்பியக் கண்டத்தில் நடைபெறும் நிகழ்வுகளுக்கு மேற்கத்திய மேல்தட்டு வர்க்கத்தினரே காரணம் என்றும் அவர் குறிப்பிட்டார். </p><p>ஐரோப்பாவில் தற்போது நடந்து கொண்டிருக்கும் அனைத்தும், அடிப்படையில் மேற்குலகம் என்று அழைக்கப்படுபவர்களின், அதாவது அரசியல், பாதுகாப்பு மற்றும் பொருளாதாரத் துறைகளைச் சேர்ந்த மேற்கத்திய உலகளாவியவாதிகளின் அமைப்புரீதியான தவறுகளின் விளைவே என்று நான் கருதுகிறேன் என்று புடின் கூறியுள்ளார்.</p><p></p><p> </p><p>மேலும், நேட்டோ அமைப்பின் கிழக்கு நோக்கிய விரிவாக்கத்திற்கு ரஷ்யா தெரிவித்த எதிர்ப்பையும் மேற்கத்திய நாடுகள் புறக்கணித்துவிட்டதாக அவர் கூறியுள்ளார். </p><p>2014-இல் ரஷ்யாவுக்கு ஆதரவான ஜனாதிபதி ஒருவர் உக்ரைனிலிருந்து தப்பிச் செல்ல நிர்பந்திக்கப்பட்ட பிறகு, உக்ரைனை நேட்டோ (NATO) அமைப்பில் இணைப்பதையே மேற்கத்திய நாடுகள் உடனடியாகத் தங்கள் குறிக்கோளாகக் கொண்டதாக அவர் கூறினார். </p><p>இறுதியில், உக்ரைனில் இன்று நிகழ்ந்துவரும் துயரமான சம்பவங்களுக்கு இதுவே முக்கிய காரணமாக அமைந்தது என்றும் புடின் குறிப்பிட்டுள்ளார். இதற்குக் காரணமானவர்கள் மேற்கத்திய உலகளாவிய மேல்தட்டு வர்க்கத்தினரே; ஆனாலும், அவர்கள் தொடர்ந்து பழி முழுவதையும் எங்கள் மீதே சுமத்தி வருகிறார்கள் என்றார். </p><p>ஐரோப்பாவில் என்ன நடக்கிறது என்பதை மக்கள் புரிந்துகொண்டிருக்கிறார்கள் என்று நான் நினைக்கிறேன் என குறிப்பிட்ட புடின், அதனால்தான் ஜேர்மனியில் இத்தகைய முடிவுகளும், ஒட்டுமொத்த ஐரோப்பாவிலும் இத்தகைய போக்குகளும் காணப்படுகின்றன என்றார்.</p><h2>அச்சுறுத்தல் எதுவும் இல்லை</h2><p> </p><p>சோவியத் ஒன்றிய காலத்திலிருந்தே உருவானதாகக் கூறப்படும் ரஷ்யாவின் போலியான அச்சுறுத்தலைக் காட்டி மேற்கத்திய நாடுகள் தங்கள் மக்களை அச்சுறுத்தி வருவதாக குறிப்பிட்ட புடின், ஆனால், அத்தகைய அச்சுறுத்தல் எதுவும் இல்லை; ஒருபோதும் இருந்ததும் இல்லை என்றார். </p><p>இந்தியாவில் சனிக்கிழமை தொடங்கவுள்ள பிரிக்ஸ் (BRICS) உச்சிமாநாட்டில், சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் மற்றும் ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியன் ஆகியோருடன் புடினும் பங்கேற்கவுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c2191d23-8d6b-4424-b196-1e6a44036e9a/26-6aa4fe0bd122a.webp' /></p><p> </p><p>இதனிடையே, புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்துவதாகவும் ரஷ்யாவுடனான உறவுகளை மீட்டெடுப்பதாகவும் உறுதியளித்த AfD கட்சி, கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேர்தலில் முதலிடம் பிடித்தது. </p><p>ஆனால், அரசாங்கத்தை அமைக்க, AfD கட்சி தற்போது பிற கட்சிகளிலிருந்து விலகி வருபவர்களை ஈர்க்க வேண்டும் அல்லது தீவிர இடதுசாரிச் சிந்தனை கொண்ட சிறிய கட்சியான BSW-உடன் ஓர் உடன்பாட்டை எட்ட வேண்டும் என்ற நிலையில் உள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-12T07:20:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தலைமன்னாரில் மணல் திட்டில் சிக்கிய இந்தியச் சிறுவன் ; பாதுகாப்பாக மீட்ட இலங்கைக் கடற்படை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/indian-boy-stranded-on-sandbar-in-talaimannar-1789197264"></link>
            <id>https://jvpnews.com/article/indian-boy-stranded-on-sandbar-in-talaimannar-1789197264</id>
            <summary type="text">தலைமன்னாருக்கு அப்பால் உள்ள கடல் பகுதியில் மணல் திட்டில் வழிதவறிச் சிக்கித் தவித்த 17 வயதுடைய இந்தியச் சிறுவன் ஒருவரை இலங்கைக் கடற்படையினர் வெள்ளிக்கி...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">தலைமன்னாருக்கு அப்பால் உள்ள கடல் பகுதியில் மணல் திட்டில் வழிதவறிச் சிக்கித் தவித்த 17 வயதுடைய இந்தியச் சிறுவன் ஒருவரை இலங்கைக் கடற்படையினர் வெள்ளிக்கிழமை (11) பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.
</p><p style="text-align: justify; ">
வட மத்திய கடற்படை கட்டளைக்குச் சொந்தமான 'இலங்கை கடற்படைக் கப்பல் தம்மென்னா' நிறுவனத்தின் கடற்படையினர் அப்பகுதியில் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, மணல் திட்டில் நபர் ஒருவர் சிக்கியிருப்பதை அவதானித்துள்ளனர்.</p><p style="text-align: justify;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/12109707-4025-468e-a403-f9f1bc2eecd5/26-6aa4fbd1a35a2.webp' /></p><h2 style="text-align: justify;">&nbsp;சட்ட&nbsp; நடவடிக்கை</h2><p style="text-align: justify;">தெற்காசிய உடைகளைத் தேர்ந்தெடு

இதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணையில், அச்சிறுவன் தென்னிந்தியப் பகுதியிலிருந்து படகு மூலம் வருகை தந்து, வழியறியாமல் மணல் திட்டில் சிக்கியது கண்டறியப்பட்டது.
</p><p style="text-align: justify;">

மீட்கப்பட்ட சிறுவன் கடற்படையினரால் 'தம்மென்னா' முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டு, அவருக்குத் தேவையான குடிநீர், உணவு உள்ளிட்ட மனிதநேய உதவிகள் வழங்கப்பட்டன.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;">
</p><p style="text-align: justify;">
தற்போது அச்சிறுவனை மேலதிக சட்ட மற்றும் நிர்வாக நடவடிக்கைகளுக்காக தலைமன்னார் பொலிஸாரிடம் ஒப்படைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக இலங்கைக் கடற்படை தெரிவித்துள்ளது.</p><p style="text-align: justify;"></p>]]></content>
            <updated>2026-09-12T07:19:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[மகிந்த தலைமையிலான பேரணியில் பங்கேற்க போவதில்லை.. சாமர தெரிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/chamara-not-participating-anuradhapura-rally-1789196864"></link>
            <id>https://tamilwin.com/article/chamara-not-participating-anuradhapura-rally-1789196864</id>
            <summary type="text">இன்று அனுராதபுரத்தில் நடைபெறும் பொதுஜன பெரமுனவின் பேரணியில் தான் பங்கேற்க போவதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சமர சம்பத் தஸ்ஸநாயக்க தெரிவித்தார்.குறித்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இன்று அனுராதபுரத்தில் நடைபெறும் பொதுஜன பெரமுனவின் பேரணியில் தான் பங்கேற்க போவதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சமர சம்பத் தஸ்ஸநாயக்க தெரிவித்தார்.</p><p>குறித்த பேரணியில் கலந்துகொள்வதற்கான அழைப்பு தனக்கோ அல்லது இலங்கை சுதந்திரக் கட்சிக்கோ&nbsp; கிடைக்கவில்லை என்று அவர் குறிப்பிட்டார்.&nbsp;</p><p>
இலங்கை சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் அனுராதபுரத்திலேயே இருந்தபோதிலும், அவருக்கு எந்த அழைப்பும் விடுக்கப்படாததால், தன்னால் அந்த நிகழ்வில் கலந்துகொள்ள முடியவில்லை என்று அவர் சுட்டிக்காட்டினார்.</p><h2>அழைப்பு விடுக்கவில்லை..&nbsp;</h2><p>
</p><p>மேலும் அவர், "இன்றைய பேரணியில் ஏராளமான மக்கள் கலந்துகொள்கின்றனர். அவர்கள் எங்களுக்கு அழைப்பு விடுக்கவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2fa39cbc-bd19-451a-93dd-e484d6275e71/26-6aa4fbc8dd0c7.webp' /></p><p> </p><p>அனுராதபுரப் பேரணியில் எங்கள் தரப்பினர் கலந்துகொள்ள வேண்டும் என்று நான் நாடாளுமன்றத்திலேயே குறிப்பிட்டிருந்தேன்; இருப்பினும், இதுவரை இலங்கை சுதந்திரக் கட்சிக்கு எந்த அழைப்பும் விடுக்கப்படவில்லை.</p><p>விமல் வீரவன்ச மற்றும் பிறருக்கு அழைப்புகள் அனுப்பப்பட்டுள்ளன. எங்கள் கட்சியின் பொதுச் செயலாளர் அனுராதபுரத்தில் இருக்கிறார்; அவருக்கு அழைப்பு விடுக்கப்படாத நிலையில் என்னால் அங்கு செல்ல முடியாது. </p><p>இது எதிர்க்கட்சியால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு பிரம்மாண்டமான பேரணியாகும். வரலாற்றிலேயே மிகப்பெரிய அளவிலான மக்கள் கூட்டத்தை, அதாவது ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்டோரை ஈர்க்கவுள்ள இந்தப் பேரணி வெற்றிபெற நான் வாழ்த்துகிறேன்” என குறிப்பிட்டார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-12T07:18:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Fathima</name>
            </author>
            <title type="text"><![CDATA[இரவு உணவு சாப்பாட்டுக்கு பின்னர் 10 நிமிட நடைப்பயிற்சி அவசியம் ஏன்?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/10-mins-walking-after-eating-1789197041"></link>
            <id>https://manithan.com/article/10-mins-walking-after-eating-1789197041</id>
            <summary type="text">10 Mins Walking After Eating: இன்றைய காலகட்டத்தில் இரவு உணவை பெரும்பாலானவர்கள் தாமதமாக சாப்பிடுகின்றனர், அதுவும் மிட் நைட் பிரியாணி பல நகரங்களில் டிரெ...</summary>
            <content type="html"><![CDATA[<p>10 Mins Walking After Eating: இன்றைய காலகட்டத்தில் இரவு உணவை பெரும்பாலானவர்கள் தாமதமாக சாப்பிடுகின்றனர், அதுவும் மிட் நைட் பிரியாணி பல நகரங்களில் டிரெண்டாகி வருகிறது.
</p><p>
ருசிக்காக அதை சாப்பிட்டாலும் அதனால் ஏற்படும் பின்விளைவுகள் அதிகம்.
</p><p>
இரவு உணவு என்பது 7-8 மணிக்குள் சாப்பிட்டு முடித்தாக வேண்டும், இதுவே ஆரோக்கியமான பழக்கம் என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
</p><p>
அதிலும் முக்கியமாக இரவு உணவை முடித்தபின், அப்படியே அமர்ந்திருக்காமல் குறைந்தது 10 நிமிடமாவது மிதமான நடைப்பயிற்சி செய்தாக வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ac11038f-03d3-4abf-af40-9e4f735b8561/26-6aa4fc7a05255.webp' /><br></p><p>

இது ஏன் என்று உங்களுக்கு தெரியுமா?
</p><p>
இரவு உணவை முடித்தவுடன் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு திடீரென அதிகரிக்கும், அதாவது கார்போஹைட்ரேட்டுகள் செரிமானம் ஆகும் போது குளுக்கோஸ் ரத்தத்தில் கலக்கத் தொடங்குகிறது.
</p><p>
உணவின் அளவு, கார்போஹைட்ரேட், கொழுப்பு, புரதம் ஆகியவற்றை பொறுத்து சர்க்கரை அளவு அதிகபட்சத்தை அடையும் நேரம் மாறுபடலாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8c996452-a427-4b76-bac2-30c7b93e3167/26-6aa4fc7951ed3.webp' /><br></p><p>

அதுவே நாம் நடைப்பயிற்சி மேற்கொள்ளும் போது தசைகள் தொடர்ந்து வேலை செய்வதால் அதற்கு தேவையான ஆற்றலை நம் உடல் எடுத்துக்கொள்ளும்.
</p><p>
இதனால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிப்பது குறையும், இதற்காக வேகமாக நடப்பதோ ஓடுவதோ அவசியமில்லை, மிதமான நடைப்பயிற்சியே போதுமானது.</p><p>

உணவை முடித்தபின்னர் 10 நிமிடங்கள் காத்திருந்து மிதமான நடைப்பயிற்சியை தொடங்கலாம்.<br></p>]]></content>
            <updated>2026-09-12T07:17:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பகுதி ஆலயத்தில் நள்ளிரவில் சிறுவனுக்கு அரங்கேறிய சம்பவத்தால் பரபரப்பு ; கதறும் உறவுகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/temple-festival-boy-s-fate-at-midnight-1789187556"></link>
            <id>https://jvpnews.com/article/temple-festival-boy-s-fate-at-midnight-1789187556</id>
            <summary type="text">மட்டக்களப்பு, கிரான் கூளாக்காடு சித்தி விநாயகர் ஆலய உற்சவத்தின் போது வெடிக்க வைத்த வெடி வெடிக்காததால், அதனைப் பார்க்கச் சென்ற 13 வயதுச் சிறுவன் அது வெ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">மட்டக்களப்பு, கிரான் கூளாக்காடு சித்தி விநாயகர் ஆலய உற்சவத்தின் போது வெடிக்க வைத்த வெடி வெடிக்காததால், அதனைப் பார்க்கச் சென்ற 13 வயதுச் சிறுவன் அது வெடித்ததில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். </p><p style="text-align: justify; ">

இச்சம்பவம் நேற்று&nbsp; இரவு 11.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4d3308bc-c33e-407d-afc0-9b008a0ac8b0/26-6aa4d61906cf4.webp' /></p><h2 style="text-align: justify; ">இரவு பூஜை</h2><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify;">

கிரான் கூளாக்காட்டைச் சேர்ந்த 13 வயதுச் சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். </p><p style="text-align: justify;">

குறித்த ஆலயத்தின் வருடாந்த உற்சவம் இடம்பெற்று வரும் நிலையில், சம்பவ தினமான நேற்று இரவு பூஜை வழிபாடுகளின் போது பெரிய வெடி ஒன்று வெடிக்க வைக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify;"> எனினும், அது உடனடியாக வெடிக்காததால் அதனை அப்புறப்படுத்தி தூக்கி வீசியுள்ளனர். </p><p style="text-align: justify;">

அவ்வாறு வீசப்பட்ட வெடியைப் பார்ப்பதற்காக அச்சிறுவன் அருகில் சென்றபோது, எதிர்பாராதவிதமாக அது வெடித்துச் சிதறியுள்ளது.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;"> </p><p style="text-align: justify;">

இதில் படுகாயமடைந்த சிறுவனை உடனடியாக வாழைச்சேனை வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p style="text-align: justify;"> 

உயிரிழந்த சிறுவனின் சடலம் பிரேதப் பரிசோதனைக்காக வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. </p><p style="text-align: justify;">

இச்சம்பவம் தொடர்பாக வாழைச்சேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;&nbsp;</p><p style="text-align: justify;"></p>]]></content>
            <updated>2026-09-12T07:16:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் நடுவீதியில் வெட்டிக்கொல்லப்பட்ட இளம் குடும்பஸ்தர் ; பொலிஸார் காட்டிய அதிரடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/young-father-hacked-to-death-on-jaffna-street-1789196456"></link>
            <id>https://jvpnews.com/article/young-father-hacked-to-death-on-jaffna-street-1789196456</id>
            <summary type="text">&amp;nbsp;யாழ்ப்பாணம் வடமராட்சி, கிராமக்கோடு சந்திக்கு அருகில் முன்பகை காரணமாக குடும்பஸ்தர் ஒருவர் வீதியில் வைத்து வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துட...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">&nbsp;யாழ்ப்பாணம் வடமராட்சி, கிராமக்கோடு சந்திக்கு அருகில் முன்பகை காரணமாக குடும்பஸ்தர் ஒருவர் வீதியில் வைத்து வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p style="text-align: justify; "> எனினும், சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் தலைமறைவாகியுள்ளார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4f6a6e37-199a-44b3-83d1-2e49a7352dcc/26-6aa4f8a9e9d87.webp' /></p><h2 style="text-align: justify; ">முன்பகைமை</h2><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">


கடந்த புதன்கிழமை இரவு இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில், துன்னாலை பகுதியைச் சேர்ந்த 33 வயதான ஜெயசீலன் ஜெனிதன் என்பவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
</p><p style="text-align: justify; ">


துன்னாலை பகுதியைச் சேர்ந்த இரு குழுக்களுக்கு இடையில் நீண்டகாலமாக நிலவி வந்த பகைமை காரணமாகவே இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. </p><p style="text-align: justify; ">

மோட்டார் சைக்கிளில் வந்த நால்வர் அடங்கிய குழுவினர், ஜெனிதனை வழிமறித்து சரமாரியாக வெட்டியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">


இச்சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வரும் நிலையில், சந்தேகநபர்கள் மூவர் முல்லைத்தீவில் பதுங்கியிருப்பதாக கிடைத்த இரகசிய தகவலையடுத்து அங்கு விரைந்த பொலிஸார் அவர்களைக் கைது செய்துள்ளனர்.</p><p style="text-align: justify; ">



கைது செய்யப்பட்ட மூவரும் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். </p><p style="text-align: justify; ">அதேவேளை, தலைமறைவாகியுள்ள பிரதான சந்தேகநபரை கைது செய்வதற்கான தொடர் விசாரணைகளையும் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-12T07:15:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Tony</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை கர்ப்பம், குவியும் வாழ்த்துக்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/pandian-stores-actress-reveals-her-pregnancy-1789196410"></link>
            <id>https://cineulagam.com/article/pandian-stores-actress-reveals-her-pregnancy-1789196410</id>
            <summary type="text">&amp;nbsp;பாண்டியன் ஸ்டோர்ஸ்பாண்டியன் ஸ்டோர்ஸ் தமிழ் சீரியல் உலக ரசிகர்களின் மிக பேவரட் சீரியல். இந்த சீரியல் வெற்றியால் தான் தற்போது இரண்டாவது சீசனும் தொ...</summary>
            <content type="html"><![CDATA[<h2>&nbsp;பாண்டியன் ஸ்டோர்ஸ்</h2><p>பாண்டியன் ஸ்டோர்ஸ் தமிழ் சீரியல் உலக ரசிகர்களின் மிக பேவரட் சீரியல். </p><p>இந்த சீரியல் வெற்றியால் தான் தற்போது இரண்டாவது சீசனும் தொடங்கியது, அதுவும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. </p><p>அதோடு பாண்டியன் ஸ்டோர்ஸில் நடிக்கும் அனைத்து நடிகைகளுக்குமே மிகப்பெரிய ரசிகர்கள் வட்டம் உள்ளது, அவர்கள் பலரும் இணையத்தில் மிகப்பெரிய இன்புலன்ஸ் நபர்களாக இருந்து வருபவர்கள்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bc6eb476-5021-4b08-ab25-2180a2cbf61b/26-6aa4f87cc3373.webp' /></p><p>இந்நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2-வில் வரும் அரசி தற்போது செம ஹாப்பி நியூஸ் ஒன்றை அறிவித்துள்ளார். ஆம், அரசி கதாபாத்திரத்தில் நடிக்கும் சத்யா தான் கர்ப்பமாக இருப்பதை கியூட் வீடியோ ஒன்றின் மூலம் தன் இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட, பல சீரியல் பிரபலங்கள் அவருக்கு வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-09-12T07:12:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/earthquake-strikes-indonesia-s-java-region-1789194178"></link>
            <id>https://ibctamil.com/article/earthquake-strikes-indonesia-s-java-region-1789194178</id>
            <summary type="text">இந்தோனேசியாவின் ஜகார்த்தா மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் 6.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன....</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தோனேசியாவின் ஜகார்த்தா மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் 6.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.<br></p><p>இந்த நிலநடுக்கம் இன்று (12) சனிக்கிழமை அதிகாலை 04:23 மணியளவில் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>நிலநடுக்கத்தின் மையப்புள்ளி, ஜகார்த்தாவின் ஆயிரம் தீவுகளுக்கு வடகிழக்கே 69 கிலோமீற்றர் தொலைவில், ஜாவா கடலில் 368 கிலோமீற்றர் ஆழத்தில் அமைந்திருந்ததாக குறிப்பிடப்படுகின்றது.</p><p></p><h2>நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேதங்கள்&nbsp;</h2><p> </p><p>இந்த நிலநடுக்கத்தினால் சுனாமி பேரலைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் எதுவும் இல்லை என இந்தோனேசிய வளிமண்டலவியல், காலநிலை மற்றும் புவிப்பௌதிகவியல் முகவரகம் உறுதிப்படுத்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bfc109f0-7e35-4dc1-9d0c-6a4c1f761107/26-6aa4f98ef16b8.webp' /></p><p>இந்தச் சம்பவத்தால் இதுவரை உயிரிழப்புகளோ அல்லது கட்டட சேதங்களோ ஏற்பட்டதாக எந்தவித அதிகாரப்பூர்வத் தகவலும் வெளியாகவில்லை.</p><p>
ஜகார்த்தா, பாந்தென், மேற்கு ஜாவா மற்றும் சுமாத்ராவின் பாலம்பாங், பெங்குலு, லம்பங் உள்ளிட்ட பல பகுதிகளில் நிலநடுக்கத்தின் அதிர்வுகள் வலுவாக உணரப்பட்டுள்ளன.</p><p>


தொடர் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதால், பொதுமக்கள் விழிப்புடனும் எச்சரிக்கையுடனும் இருக்குமாறு அதிகாரிகளால் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.&nbsp;&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-12T07:05:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறையில் உள்ள மகனுக்காக களமிறங்கும் மகிந்த - அரசைக் கவிழ்க்கவே முடியாது..! அமைச்சர் பிமல் சூளுரை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/govt-about-option-party-protest-1789195991"></link>
            <id>https://ibctamil.com/article/govt-about-option-party-protest-1789195991</id>
            <summary type="text">தற்போதைய அரசியல் சூழலில் எந்தவொரு அரசியல் கட்சியும் இந்த ஸ்திரமான அரசைக் கவிழ்க்கவோ அல்லது வீழ்த்தவோ முடியாது என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>தற்போதைய அரசியல் சூழலில் எந்தவொரு அரசியல் கட்சியும் இந்த ஸ்திரமான அரசைக் கவிழ்க்கவோ அல்லது வீழ்த்தவோ முடியாது என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். </p><p>அனுராதபுரத்தில் இன்று சனிக்கிழமை அநுர அரசுக்கு எதிராக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையில் முன்னெடுக்கப்படவுள்ள போராட்டம் தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.</p><p>நாமல் ராஜபக்ஷ கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இந்தப் பேரணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p></p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">அரசியல் காழ்ப்புணர்ச்சி</span></p><p> அவர் மேலும் குறிப்பிடுகையில், “நாட்டின் மூன்றில் இரண்டு பெரும்பான்மை மக்களின் அசைக்க முடியாத ஆதரவு எமது அரசுக்கு உள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/51103e49-aacd-4f4d-9e12-dff3ba8343c6/26-6aa4f87365370.webp' /></p><p>மக்களின் உண்மையான ஆணை அரசின் பக்கமே முழுமையாகச் சாய்ந்துள்ளது. மொட்டுக் கட்சியினர் அல்லது எதிர்க் கட்சிகள் மக்களை வலுக்கட்டாயமாகத் திரட்டி முன்னெடுக்கும் அரசுக்கு எதிரான போராட்டங்கள் எவ்விதப் பலனையும் தராது. </p><p>மக்களின் கவனத்தை திசைதிருப்பும் இத்தகைய வெற்று முயற்சிகள் யாவும் தோல்வியிலேயே முடியும். தற்போதைய அரசியல் சூழலில் எந்தவொரு அரசியல் கட்சியும் இந்த ஸ்திரமான அரசைக் கவிழ்க்கவோ அல்லது வீழ்த்தவோ முடியாது. </p><p>மக்களின் பேராதரவுடன் ஆட்சியமைத்துள்ள இந்த அரசை எந்தச் சக்தியாலும் அசைக்க முடியாது. இத்தகைய போராட்டங்கள் யாவும் நாட்டு நலனுக்காக அல்லாமல் அரசியல் காழ்ப்புணர்ச்சிகளையும் சுயநல அஜண்டாக்களையும் மட்டுமே அடிப்படையாகக் கொண்டவை.</p><p></p><h2>அரசாட்சியைக் குலைக்க&nbsp;சதி&nbsp;</h2><p> </p><p>மக்களின் நல்வாழ்வை உறுதி செய்யும் அரசாட்சியைக் குலைக்க எதிர்க்கட்சிகள் மேற்கொள்ளும் தந்திரோபாயங்களை மக்கள் நன்றாகவே புரிந்து கொண்டுள்ளனர்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/541b0026-20e1-4716-827f-b79e5c2882a4/26-6aa4f8741b9aa.webp' /></p><p>நாட்டு மக்கள் அனைவரும் எதிர்கொண்டுள்ள சவால்களைத் தீர்த்து நாட்டைப் பொருளாதார ரீதியாகக் கட்டியெழுப்பும் அரசின் முறையான வேலைத்திட்டங்களுக்குப் பொதுமக்கள் தொடர்ந்தும் முழுமையான ஒத்துழைப்பு வழங்குவர் என்றார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-12T07:00:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அனுமதியின்றி கோயிலுக்குள் நடந்த தொல்லியல் அகழ்வாராய்ச்சி - பட்டப்பகலில் மூவர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/crime-under-guise-of-archaeological-excavations-1789195233"></link>
            <id>https://tamilwin.com/article/crime-under-guise-of-archaeological-excavations-1789195233</id>
            <summary type="text">தொல்லியல் அகழ்வாராய்ச்சி என்ற போர்வையில் கோயில் வளாகத்தில் உள்ள கல் ஒன்றிற்கு அருகே அகழ்வாராய்ச்சி செய்த மூவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

...</summary>
            <content type="html"><![CDATA[<p>தொல்லியல் அகழ்வாராய்ச்சி என்ற போர்வையில் கோயில் வளாகத்தில் உள்ள கல் ஒன்றிற்கு அருகே அகழ்வாராய்ச்சி செய்த மூவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p>
இந்த சம்பவம், புலத்சிங்கள பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொத்தலேகம, ஹிங்குரகந்த பகுதியில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><h2>
அகழ்வாராய்ச்சி போர்வையில் மோசடியாளர்கள்</h2><p>
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், </p><p>


ஹிங்குரகந்த பகுதியில் உள்ள கோயில் ஒன்றில் அகழ்வாராய்ச்சி இடம்பெறுவதாக புலத்சிங்கள பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவல் அடிப்படையில் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4ad1f20d-dc66-481b-86bf-6d1a2e13f6e2/26-6aa4f725b7c4b.webp' /></p><p> 

இதன்போது, அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அகழ்வாராய்ச்சிக்கு பயன்படுத்திய உபகரணங்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
</p><p>
 கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் புலத்சிங்கள மற்றும் ஹொரணை பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும் இவர்களுக்கு 35 முதல் 50 வயது இருக்கும் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>

இதனைத் தொடர்ந்து, சந்தேக நபர்கள், மத்துகம நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாகவும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p><p><br></p><p> 




</p>]]></content>
            <updated>2026-09-12T06:57:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[மொட்டுக்கட்சியின் பேரணியில் லிமினி ராஜபக்சவின் பங்கேற்பு.. வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/slpp-anuradhapura-rally-mahinda-namal-wife-1789194681"></link>
            <id>https://tamilwin.com/article/slpp-anuradhapura-rally-mahinda-namal-wife-1789194681</id>
            <summary type="text">அனுராதபுரத்தில் இன்று (12) நடைபெறவுள்ள இலங்கை பொதுஜன பெரமுனவின் பேரணிக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>அனுராதபுரத்தில் இன்று (12) நடைபெறவுள்ள இலங்கை பொதுஜன பெரமுனவின் பேரணிக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி தெரிவித்தார்.</p><p>இந்தப் பேரணியானது தற்போதைய அரசாங்கத்தையோ அல்லது ஜனாதிபதியையோ பதவியிலிருந்து அகற்றுவதற்காக நடத்தப்படுவதல்ல என்றும், மாறாக தற்போதைய நிர்வாகத்தின் தன்னிச்சையான நடவடிக்கைகள் மற்றும் மக்கள் எதிர்கொள்ளும் இன்னல்களுக்கு எதிராகவே இது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் வலியுறுத்தினார்.</p><h2>அரசுக்கு எதிரானது அல்ல..&nbsp;</h2><p>
</p><p>
மேலும், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் கைது மற்றும் அதனைத் தொடர்ந்து அவர் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட்ட விவகாரத்தில் அரசியல் தலையீடு இருந்ததா என்பது குறித்து நாட்டில் சந்தேகங்கள் எழுந்துள்ளதாக குட்டியாராச்சி குறிப்பிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/60a766e9-96cb-414f-b7cd-b1b6cce04cb2/26-6aa4f657eb7dc.webp' /></p><p> </p><p>நீதிமன்றத் தீர்ப்பு வருவதற்கு முன்பே இவ்விவகாரம் நாடாளுமன்றத்திலும் அரசியல் மேடைகளிலும் விவாதிக்கப்பட்டமை, பேரணியைச் சீர்குலைக்கும் நோக்கிலேயே இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டதா என்ற கேள்வியை எழுப்புவதாகவும் அவர் கூறினார்.</p><p>இதற்கிடையில், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பேரணியில் பங்கேற்பதை கட்சி அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ள போதிலும், நாமல் ராஜபக்சவின் மனைவி பங்கேற்பது குறித்த தகவல் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.</p><p>
கூடுதலாக, அரசாங்கத்தின் அடக்குமுறை கொள்கைகளுக்கு எதிராக நடைபெறும் இந்தப் பேரணியில் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் - ஐக்கிய மக்கள் சக்தி உட்பட - எவரும் இணையலாம் என்றும், விருந்தினர் பேச்சாளர்கள் குறித்த இறுதி முடிவை கட்சியின் மூத்த உறுப்பினர்கள் எடுப்பார்கள் என்றும் அவர் கூறினார்.&nbsp;</p><p></p><p></p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-12T06:51:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதிகாலையில் விமான நிலையத்தை பரபரபாக்கிய பங்களதேஷ் இளைஞன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/bangladeshi-youth-causes-airport-chaos-1789195665"></link>
            <id>https://jvpnews.com/article/bangladeshi-youth-causes-airport-chaos-1789195665</id>
            <summary type="text">கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் வருகை முனையத்தில், பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தின் விமான நிலையப் பிரிவினரால் இன்று சனிக்கிழமை (12) அதி...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் வருகை முனையத்தில், பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தின் விமான நிலையப் பிரிவினரால் இன்று சனிக்கிழமை (12) அதிகாலை மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது, தீர்வையின்றி இலங்கைக்குக் கொண்டுவரப்பட்ட பெருந்தொகையான சிகரெட்டுகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p style="text-align: justify; ">
கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலின் அடிப்படையில் இச் சோதனையை அதிகாரிகள் முன்னெடுத்துள்ளனர்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/54e6ea68-2ab3-430e-96b9-c481cd4ed364/26-6aa4f592e8c93.webp' /></p><h2 style="text-align: justify; ">மேலதிக விசாரணை</h2><p style="text-align: justify; ">

சந்தேகநபரிடமிருந்து தீர்வையின்றி சட்டவிரோதமாகக் கொண்டுவரப்பட்ட 10,200 சிகரெட்டுகள் (51 கார்ட்டூன்கள்) கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
</p><p style="text-align: justify; ">
கைது செய்யப்பட்டவர் பங்களதேச நாட்டைச் சேர்ந்த 36 வயதுடையவர் ஆவார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">

மேலும், இச் சம்பவம் தொடர்பில் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தின் விமான நிலையப் பிரிவினர் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.&nbsp;</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-12T06:47:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[விசாரணையை புறக்கணிக்கும் மொட்டுக் கட்சி முன்னாள் எம்.பி! மீண்டும் விடுக்கப்பட்ட அழைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/summons-issued-to-tissa-kuttiarachchi-1789195075"></link>
            <id>https://ibctamil.com/article/summons-issued-to-tissa-kuttiarachchi-1789195075</id>
            <summary type="text">சிறலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனக திஸ்ஸ குட்டிஆரச்சி, இந்த மாதம் 15 ஆம் திகதி சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவி...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிறலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனக திஸ்ஸ குட்டிஆரச்சி, இந்த மாதம் 15 ஆம் திகதி சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவில் முன்னிலையாகவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
முன்னதாக, இம்மாதம் 8 ஆம் திகதி முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டிருந்தபோதிலும், அன்றைய தினம் அவர் முன்னிலையாகவில்லை என காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. &nbsp;</p><p></p><h2>மீண்டும் அழைப்பாணை</h2><p> </p><p>

ஊவா கெப்பிட்டல் வங்கியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடு தொடர்பான விசாரணைக்காக வாக்குமூலம் அளிப்பதற்கே அவர் இவ்வாறு அழைக்கப்பட்டிருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7d003fed-0521-4485-b37b-d56d2022c775/26-6aa4f54aab775.webp' /></p><p>அதன்படி, முதல் அழைப்பின் போது குட்டிஆரச்சி முன்னிலையாகாத நிலையில், அவரை எதிர்வரும் 15 ஆம் திகதி சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவில் முன்னிலையாகுமாறு மீண்டும் அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.&nbsp;&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-12T06:46:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஸ்போர்ட்ஸ் விளம்பரத்திற்கு பிறந்த மேனியாக தோன்றிய 29 வயது சிட்னி ஸ்வீனி!! சொத்து மதிப்பு விவரம்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/actress-sydney-sweeney-net-worth-2026-1789195912"></link>
            <id>https://viduppu.com/article/actress-sydney-sweeney-net-worth-2026-1789195912</id>
            <summary type="text">சிட்னி ஸ்வீனிEuphoria, Immaculate, The White Lotus, The Handmaid&#039;s Tale என ஏகப்பட்ட படங்களில் தன்னுடைய சிறிய வயது முதலே நடித்து பிரபலமானவர் தான் நடிகை...</summary>
            <content type="html"><![CDATA[<h2>சிட்னி ஸ்வீனி</h2><p>Euphoria, Immaculate, The White Lotus, The Handmaid's Tale என ஏகப்பட்ட படங்களில் தன்னுடைய சிறிய வயது முதலே நடித்து பிரபலமானவர் தான் நடிகை சிட்னி ஸ்வீனி.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5a21910b-5cd4-418e-9144-967c1faf0487/26-6aa4f68a3d933.webp' /></p><p> உச்சக்கட்ட கவர்ச்சியில் வலம் வந்து ஹாலிவுட் சினிமாவின் ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்து வரும் சிட்னி ஸ்வீனியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை 25.9 மில்லியன் ரசிகர்கள் ஃபாலோ செய்து வருகிறார்கள். </p><p>சமீபத்தில் Novig என்ற ஸ்போர்ஸ் டிரேடிங் நிறுவனத்தின் விளம்பரத்திற்காக ஆடையில் இல்லாமல் நிர்வாண கோலத்தில் படு ஆபாசமாக நடித்தது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d5b9ff6f-da8a-4df6-8b6f-e8f64cf7b5ce/26-6aa4f68af1d2b.webp' /></p><h2>29 வயது</h2><p> இந்நிலையில் இன்று செப்டம்பர் 12 ஆம் தேதியோடு தன்னுடைய 29 வது பிறந்தநாளை தொட்டுள்ளார். ஒரு படத்திற்காக பல மில்லியன் சம்பளம் வாங்கும் சிட்னி, கடைசியாக வெளியான தி ஹவுஸ்மெய்ட் படத்திற்காக சுமார் 7.5 மில்லியன் அமெரிக்க டாலர் சம்பளமாக பெற்றுள்ளார். </p><p> Armani Beauty, Miu Miu, and American Eagle போன்ற பிராண்ட் அம்பாஸ்டருக்காக சுமார். 10 மில்லியன் டாலர் சம்பளமாக பெற்று வருகிறார். இதன்மூலம் அவரின் மொத்த சொத்து மதிப்பு சுமார் 40 மில்லியன் டாலர் முதல் 50 மில்லியன் டாலர் வரை இருக்கும் என்று கூறப்படுகிறது.</p>]]></content>
            <updated>2026-09-12T06:45:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Malaivanjan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மலையக மக்களின் நீண்டகால பிரச்சினைகள்! நாடாளுமன்றத்தில் கடும் கருத்து மோதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/jeevan-thondaman-statement-1789194069"></link>
            <id>https://tamilwin.com/article/jeevan-thondaman-statement-1789194069</id>
            <summary type="text">மலையக மக்களின் சம்பளம், காணி, வீடு உள்ளிட்ட நீண்டகால பிரச்சினைகளுக்கு
தீர்வு காண்பது தொடர்பில் ஆளும் தரப்பு மற்றும் எதிர்க்கட்சி
உறுப்பினர்களுக்கு இ...</summary>
            <content type="html"><![CDATA[<p>மலையக மக்களின் சம்பளம், காணி, வீடு உள்ளிட்ட நீண்டகால பிரச்சினைகளுக்கு
தீர்வு காண்பது தொடர்பில் ஆளும் தரப்பு மற்றும் எதிர்க்கட்சி
உறுப்பினர்களுக்கு இடையே நாடாளுமன்றத்தில் கடும் கருத்து மோதல்
இடம்பெற்றுள்ளது.</p><p>இதன்போது நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கிருஷ்ணன் கலைச்செல்வி கூறுகையில், மலையக
மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் எதிர்க்கட்சியினர் தொடர்ச்சியாக கேள்வி
எழுப்பி வருகின்றனர். </p><p>கடந்த காலங்களில் ஆட்சியில் இருந்தவர்கள் தங்களது
காலத்திலேயே இந்த பிரச்சினைகளுக்கு உரிய தீர்வுகளை பெற்றுக்கொடுத்திருக்க
வேண்டும்.</p><h2>கடந்த கால அரசாங்கங்கள் குறித்து குற்றச்சாட்டு</h2><p>
</p><p>
மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள், கடந்த
காலங்களில் தொடர்ச்சியாக ஆட்சியில் இருந்த அரசாங்கங்களின் பிரதிநிதிகளாகவும்
அமைச்சர்களாகவும் செயற்பட்டவர்கள் என சுட்டிக்காட்டியதுடன், அவர்கள் தங்களது அரசாங்கங்களிடமும் நாடாளுமன்றத்திலும் முறையாக இந்தப்
பிரச்சினைகளை முன்வைத்து தீர்வுகளை பெற்றிருந்தால் இன்று மலையக மக்களின்
பிரச்சினைகள் தொடர்பில் மீண்டும் மீண்டும் பேச வேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது
எனக் குறிப்பிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d241c1dd-3bce-4612-b215-29e4dd593a56/26-6aa4f4a4a8c89.webp' /></p><p>
</p><p>அத்துடன் தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்து இரண்டு வருடங்களே கடந்துள்ளதாகவும், இந்தக் காலப்பகுதியில் மலையக மக்களின் சம்பளப் பிரச்சினை, வீடமைப்பு, காணி
மற்றும் அன்றாட வாழ்க்கை தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணும்
நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் கிருஷ்ணன் கலைச்செல்வி
தெரிவித்தார்.
</p><p>மேலும் பெருந்தோட்டத்துறை அமைச்சர், பிரதி அமைச்சர் உள்ளிட்டோருடன் ஜனாதிபதி மற்றும்
அரசாங்கத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் இணைந்து மலையக மக்களுக்கு
சிறந்த வாழ்க்கை நிலையை ஏற்படுத்துவதற்கான பொறுப்பை ஏற்றுள்ளதாகவும் அவர்
கூறியுள்ளார்.</p><h2>குற்றச்சாட்டிற்கு பதில்</h2><p>
இந்த நிலையில் இதற்கு பதிலளித்த நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தாம் சுமார் ஒரு வருட காலமே அமைச்சராக
பதவி வகித்ததாகவும் அந்த காலப்பகுதியில் மலையக மக்களுக்காக பல்வேறு
வேலைத்திட்டங்களை முன்னெடுத்ததாகவும் தெரிவித்தார்.
</p><p>
தாம் முன்னெடுத்த வேலைத்திட்டங்கள் தொடர்பில் தற்போதைய அமைச்சராக உள்ள
வைத்தியர் மதுர செனரத் உள்ளிட்டவர்கள் நன்கு அறிந்திருப்பதாகவும் ஜீவன்
தொண்டமான் குறிப்பிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/45d6966f-8fb7-4abd-9b65-159c65298f04/26-6aa4f4a560cd1.webp' /></p><p>
</p><p>
மலையக மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பும்
ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அதற்கு நேரடியான பதிலை வழங்குவதற்குப் பதிலாக கடந்த கால அரசாங்கங்கள் என்ன செய்தன என்ற கேள்வியே எழுப்பப்படுவதாக அவர்
குற்றம் சுமத்தினார்.
</p><p>
மேலும் நுவரெலியா மாவட்டமே நாட்டில் அதிக வறுமை நிலை காணப்படும் மாவட்டம் என
தெரிவிக்கப்படுவதாகவும், ஆனால் கிடைக்கப்பெறும் தரவுகளின்படி முல்லைத்தீவு
மாவட்டமே முதலிடத்தில் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-12T06:44:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்க சுற்றுலா செல்லும் சுவிஸ் நாட்டவர்கள் எண்ணிக்கையில் வீழ்ச்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/us-tourism-from-switzerland-1789195015"></link>
            <id>https://news.lankasri.com/article/us-tourism-from-switzerland-1789195015</id>
            <summary type="text">US tourism from Switzerland slumps: அமெரிக்க சுற்றுலா செல்லும் சுவிஸ் நாட்டவர்கள் எண்ணிக்கை கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது.


2026ஆம் ஆண்டின் முதல் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>US tourism from Switzerland slumps: அமெரிக்க சுற்றுலா செல்லும் சுவிஸ் நாட்டவர்கள் எண்ணிக்கை கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது.
</p><p>

2026ஆம் ஆண்டின் முதல் பாதியில் அமெரிக்க சுற்றுலா சென்ற சுவிஸ் நாட்டவர்கள் எண்ணிக்கை, முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தை ஒப்பிடும்போது, 16.5 சதவிகிதம் குறைந்துள்ளதாக சுவிஸ் பயணக் கூட்டமைப்பு என்னும் அமைப்பு தெரிவிக்கிறது.
</p><p>
அமெரிக்கா செல்லும் சுவிஸ் நாட்டவர்கள் எண்ணிக்கை

2026ஆம் ஆண்டின் முதல் பாதியில் 120,000 சுவிஸ் நாட்டவர்கள் மட்டுமே அமெரிக்க சுற்றுலா சென்றுள்ளார்கள்.
</p><p>
முழு 2026ஐயும் கணக்கிடும்போது, அமெரிக்காவுக்கு சுற்றுலா செல்லும் சுவிஸ் மக்கள் எண்ணிக்கை 300,000 ஆக மட்டுமே இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
</p><p>
எப்படி கனடா மீது அமெரிக்கா கூடுதல் வரிகள் விதித்ததால் கோபமடைந்த கனேடியர்கள் அமெரிக்காவை புறக்கணிக்கத் துவங்கினார்களோ, அதேதான் சுவிட்சர்லாந்திலும் நடந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8bb0e539-ef06-49c3-9d4c-69de303a18f9/26-6aa4f3460d4e9.webp' /><br></p><p>

அமெரிக்க ஜனாதிபதியான ட்ரம்ப், சுவிஸ் தயாரிப்புகள் மீது 39 சதவிகித வரிகள் விதித்துள்ள விடயம் சுவிஸ் மக்களை கோபமடையச் செய்துள்ளது.
</p><p>
ஆகவே, அமெரிக்க சுற்றுலாவைத் தவிர்ப்பது என சுவிஸ் மக்களில் 65 சதவிகிதம் பேர் முடிவு செய்துள்ளதாக சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
</p><p>
மேலும், அமெரிக்கா செல்லும் சுவிஸ் சுற்றுலாப்பயணிகள் அமெரிக்க அதிகாரிகள் விமான நிலையங்களில் கைது செய்வதாக வெளியாகிவரும் தகவல்கள் சுவிஸ் மக்களுக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ளன.
</p><p>
ஆக மொத்தத்தில், ட்ரம்பின் நடவடிக்கைகளால், சுவிஸ் மக்களில் பெரும் எண்ணிக்கையிலானோர், அமெரிக்க சுற்றுலாவைத் தவிர்த்துவருகிறார்கள்.</p>]]></content>
            <updated>2026-09-12T06:38:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ்ப்பாணம் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் ஏற்படவுள்ள மாற்றம் ; ஒதுக்கப்பட்ட பல மில்லியன் ரூபாய்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/changes-expected-in-jaffna-and-nearby-areas-1789194618"></link>
            <id>https://jvpnews.com/article/changes-expected-in-jaffna-and-nearby-areas-1789194618</id>
            <summary type="text">பாதுகாப்பான, மக்கள் மையப்படுத்தப்பட்ட மற்றும் நிலையான நகர்ப்புறங்களை உருவாக்கும் நோக்கில், புதிய “வாழ்வாதார நகரங்கள்” அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் இ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">பாதுகாப்பான, மக்கள் மையப்படுத்தப்பட்ட மற்றும் நிலையான நகர்ப்புறங்களை உருவாக்கும் நோக்கில், புதிய “வாழ்வாதார நகரங்கள்” அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் இலங்கை முழுவதும் உள்ள 26 நகரங்களை அபிவிருத்தி செய்வதற்காக அரசாங்கம் 65 பில்லியன் ரூபாயை ஒதுக்கியுள்ளது.</p><p style="text-align: justify; ">நகர அபிவிருத்திக்கான புதிய அணுகுமுறை குறித்த 2026 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டப் பிரத்தியேகத்திற்கு இணங்க, பிரதமர் டாக்டர் ஹரினி அமரசூரியவின் தலைமையில் இத்திட்டம் கொழும்பில் அபிவிருத்தி செய்யப்பட்டது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a517ee06-7dc7-49b2-a737-a915f650b1b6/26-6aa4f17c4675e.webp' /></p><h2 style="text-align: justify; ">10 நகரங்கள்&nbsp;</h2><p style="text-align: justify; ">

முதல் கட்டத்தின் கீழ், மாத்தறை, மட்டக்களப்பு, மாத்தளை, வவுனியா, பதுளை, யாழ்ப்பாணம், சிலாபம், ஹட்டன், தலாவ மற்றும் எஹலியகொட ஆகிய 10 நகரங்கள் அபிவிருத்திக்காக தெரிவு செய்யப்பட்டுள்ளன.
</p><p style="text-align: justify; ">
நாடு முழுவதும் உள்ள 26 நகரங்களின் அபிவிருத்திக்காக ரூ. 65 பில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், முன்னேற்றத்தின் அடிப்படையில் மேலதிக ஒதுக்கீடுகள் செய்யப்படும் என்றும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.</p><p style="text-align: justify; ">

"தேவையான நிதியை நாங்கள் ஏற்கனவே ஒதுக்கிவிட்டோம். நாளைய தினம் முதல் பணிகளைத் தொடங்குங்கள்," என்று உள்ளூராட்சிப் பிரதிநிதிகளிடம் ரத்நாயக்க கூறினார். மேலும், மேயர்கள் வெளிப்படுத்தும் முன்னேற்றத்தைப் பொறுத்தே அடுத்தகட்ட நிதி ஒதுக்கீடு அமையும் என்றும் அவர் குறிப்பிட்டார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
நகர மேம்பாடு என்பது கட்டிடங்களைக் கட்டுவதோடு மட்டும் நின்றுவிடக்கூடாது என்றும், நகரங்கள் விலங்குகள் உட்பட அனைவருக்கும் பாதுகாப்பையும், தாங்கள் இந்த சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்ற உணர்வையும் வழங்க வேண்டும் என்றும் பிரதமர் அமரசூரிய வாதிட்டார்.</p><p style="text-align: justify; ">

இலங்கையின் நகர்ப்புறங்கள் பெரும்பாலும் முறையான திட்டமிடல் இன்றி வளர்ச்சி அடைந்துள்ளதாகவும், மக்கள் தொகையில் 44.5% அத்தகைய பகுதிகளில் வசிப்பதாகவும் அவர் கூறினார்.
</p><p style="text-align: justify; ">
இத்திட்டத்திற்காகத் தேர்ந்தெடுக்கப்படும் நகரங்கள், வெளிப்படையான மதிப்பெண் வழங்கும் முறையின் மூலம் தேர்வு செய்யப்பட வேண்டும் என்றும், வளர்ச்சித் திட்டங்கள் ஒவ்வொரு நகரத்தின் தனித்துவமான அடையாளத்தையும் அங்கீகரிக்க வேண்டும் என்றும் பிரதமர் வலியுறுத்தினார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">

"ஒரு நகரம் என்பது கான்கிரீட் காடு அல்ல," என்று கூறிய அவர், நகர்ப்புறங்களில் வாழும் மக்கள் மற்றும் விலங்குகள் ஆகிய இருவரையும் வளர்ச்சி கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
</p><p style="text-align: justify; ">
தொடக்க விழாவின்போது, ​​முதல் 10 நகரங்களுக்கான திட்ட வரைவுகள் அந்தந்த உள்ளாட்சி அமைப்புப் பிரதிநிதிகளிடம் ஒப்படைக்கப்பட்டன.</p><p style="text-align: justify; ">

இந்தத் திட்டம் மக்கள் மையப்படுத்தப்பட்ட மற்றும் நிலையான வளர்ச்சியில் கவனம் செலுத்தும். மேலும், ஒவ்வொரு நகரத்திற்குமான தனிப்பட்ட திட்டங்களைச் செயல்படுத்துவதில் உள்ளாட்சி அமைப்புகள் முக்கியப் பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.&nbsp;&nbsp;</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-12T06:31:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் நாளை சர்வதேச விசாரணை கோரி பேரணி முன்னெடுப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/rally-in-jaffna-demanding-an-international-inquiry-1789193334"></link>
            <id>https://tamilwin.com/article/rally-in-jaffna-demanding-an-international-inquiry-1789193334</id>
            <summary type="text">செம்மணி மனித படுகொலை தொடர்பான விசாரணைகளை சர்வதேச சமூகம் முன்னெடுக்க
வேண்டும் என கோரி யாழ்ப்பாணத்தில் நாளைய தினம்(13.09.2026) பேரணி
முன்னெடுக்கப்படவு...</summary>
            <content type="html"><![CDATA[<p>செம்மணி மனித படுகொலை தொடர்பான விசாரணைகளை சர்வதேச சமூகம் முன்னெடுக்க
வேண்டும் என கோரி யாழ்ப்பாணத்தில் நாளைய தினம்(13.09.2026) பேரணி
முன்னெடுக்கப்படவுள்ளது.
</p><p>
செம்மணி மனித புதைகுழியில் இருந்து 583 மனித என்புக்கூடுகளும் சான்று
பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன.</p><p> அவை தொடர்பில் சர்வதேச விசாரணைகள்
முன்னெடுக்கப்பட வேண்டும்.

இலங்கையில் நடைபெற்றது இனப்படுகொலை என்பதற்கான சான்றாக செம்மணி மனித புதைகுழி
காணப்படுகிறது.</p><h2>துண்டுப்பிரசுரங்களை வழங்கிவைத்து</h2><p> அதனால் அது தொடர்பில் சர்வதேச விசாரணை முன்னெடுக்க வேண்டும் என
கோரியே பேரணி நடைபெறவுள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8d62e295-ac19-420e-be39-4717b569dab5/26-6aa4f0ef47b52.webp' /></p><p>
நல்லூர் பகுதியில் அமைந்துள்ள ஐ.நா காரியாலயத்திற்கு அருகில் இருந்து
ஆரம்பமாகவுள்ள பேரணி, கிட்டுப்பூங்கா பகுதியில் நிறைவடையவுள்ளது.
</p><p>
இந்த பேரணிக்கு ஆதரவு கோரி தமிழ் தேசிய பேரவையினாரால் நேற்றைய தினம்
சனிக்கிழமை துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.
</p><p>
இதில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், பருத்தித்துறை நகர
பிதா டக்ளஸ் போல், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் முக்கியஸ்தர்கள் கலந்து
கொண்டு வர்த்தகர்கள் மற்றும் மக்களுக்கு துண்டுப்பிரசுரங்களை வழங்கிவைத்து
போராட்டத்திற்கு ஆதரவு கோரினர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-12T06:29:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தெஹிவளை சம்பவத்தில் உயிரிழந்த சிறுவனின் நிறைவேறாத கனவு - துயரில் முழ்கிய நண்பர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/dream-of-boy-who-tragically-died-in-dehiwela-1789193915"></link>
            <id>https://tamilwin.com/article/dream-of-boy-who-tragically-died-in-dehiwela-1789193915</id>
            <summary type="text">தெஹிவளை - சிறிசங்கபோ மாவத்தையில் உள்ள ஒரு வீட்டின் மீது நடத்தப்பட்ட கையெறி குண்டு தாக்குதலின் போது இரண்டு சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாகவும், அவரின் தந்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>தெஹிவளை - சிறிசங்கபோ மாவத்தையில் உள்ள ஒரு வீட்டின் மீது நடத்தப்பட்ட கையெறி குண்டு தாக்குதலின் போது இரண்டு சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாகவும், அவரின் தந்தை வைத்தியசாலையில் பலத்த காயங்களுடன் சிகிச்சை பெற்றுக் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> 

இந்த சம்பவம் நேற்று(11.09.2026) இடம்பெற்ற நிலையில், அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.</p><p> 

தந்தை - ஹெட்டியாராச்சிங்கே நலின் துசந்தா, 17 வயதான கசுன் ரஸ்மகா மற்றும் அவரது 11 வயதான தம்பி அஜித் கிஹான் ஆகியோரே இந்த தாக்கதலின் போது பாதிக்கப்பட்டுள்ளனர்.
</p><h2>
நள்ளிரவில் நடந்த கொடூரம்</h2><p>
சம்பவம் தொடர்பான விசாணையில்,</p><p> 

முச்சக்கர வண்டி சாரதியான நலின் அவருடைய மனைவியை பிரிந்து மகன்களுடன் வாழ்ந்து வந்துள்ளார். </p><p>அவருடைய மூத்தமகன் கசுன் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் தேர்ச்சி பெற்றிருந்தார், அதே சமயம் அவரது தம்பி எட்டாம் வகுப்பில் படித்து வந்தார். </p><p>

சம்பவம் நடப்பதற்கு முந்தைய நாள் இரவு, நலினும் அவரது இரண்டு குழந்தைகளும் வீட்டின் தரையில் ஒரு பாயில் உறங்கச் சென்றிருந்தனர்.

சுமார் 3.15 மணியளவில், வீட்டின் முன் கதவை யாரோ தட்டும் சத்தம் கேட்டு நலின் கதவைத் திறக்கச் சென்றபோது, ​​கதவருகே இருந்த ஒருவர் வீட்டிற்குள் ஒரு கையெறி குண்டை வீசினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cad78c7e-424e-4df8-8ff0-7448ab6c2f11/26-6aa4f04280931.webp' /></p><p> </p><p>அதன் பின்னர் அந்த நபர் உடனடியாக கதவை மூடிவிட்டு, தனது மற்றொரு கூட்டாளியுடன் வெளியே ஒரு முச்சக்கர வண்டியில் தப்பிச் சென்றுள்ளார்.
</p><p>
வீட்டிற்குள் கையெறி குண்டு வெடித்ததில் நலினும் அவரது இரண்டு குழந்தைகளும் படுகாயம் அடைந்தனர். மூவரையும் அக்கம்பக்கத்தினர் களுபோவில போதனா வைத்தியசாலைக்கு கொண்டுச் சென்றுள்ளனர். 

எனினும் சிகிச்சை பலனின்றி சிறுவர்கள் இருவரும் உயிரிழந்த நிலையில், தந்தை நலின் இரு கால்களிலும் பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்.</p><h2>
சிறுவர்களின் கடைசி ஆசை</h2><p>
மேலும், சாதாரண தரப் பரீட்சையில் தேர்ச்சி பெற்றிருந்த கசுன் ரஸ்மகா, வீட்டில் நிலவிய கடுமையான வறுமையின் காரணமாக தனது உயர்நிலை படிப்பைத் தொடர பாடசாலைக்குச் செல்லவில்லை. அடுத்த திங்கட்கிழமை முதல் ஒரு பெட்ரோல் நிலையத்தில் வேலைக்குச் சேரத் தயாராகி வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/36721db3-4a5b-4e45-a9a2-b4d0d06ee9f9/26-6aa4f0435855c.webp' /></p><p> </p><p>

இதேவேளை, என் அம்மா வீட்டை விட்டுச் சென்ற நாள் முதல், எனக்கும் என் தம்பிக்கும் உணவும் நீரும் வழங்கவும், பாடசாலைக்கு எங்களை அனுப்பவும் அப்பா கடுமையாகப் போராடி வருகிறார். அதனால், என்னால் உயர்நிலை படிப்புக்குச் செல்ல வழியில்லை. வகுப்புகளுக்குச் செல்ல என்னிடம் பணமும் இல்லை. </p><p>

எனவே, நான் மீண்டும் பாடசாலைக்குச் செல்ல மாட்டேன். நான் என் வேலையைச் செய்வேன், என் தம்பிக்கு நன்றாகக் கற்பித்து அவனை ஒரு சிறந்த நிலைக்குக் கொண்டு வருவேன் என அவருடைய நண்பர்களிடம் கசுன் கூறியதாகவும் விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.&nbsp; &nbsp;&nbsp;</p><p></p><p></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-12T06:25:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[மறைந்த சாலமன் பாப்பையாவின் நிறைவேறாத கடைசி ஆசை என்ன தெரியுமா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/solomon-pappaiah-last-wish-before-death-1789192341"></link>
            <id>https://manithan.com/article/solomon-pappaiah-last-wish-before-death-1789192341</id>
            <summary type="text">தமிழ் பேராசிரியர் பட்டிமன்ற பேச்சாளரும் நடுவருமான சாலமன் பாப்பையா பற்றி தமிழ்நாட்டில் தெரியாத நபர்களையே இல்லை. அவரின் பேச்சு பலரும் ரசிக்கும் படியும் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழ் பேராசிரியர் பட்டிமன்ற பேச்சாளரும் நடுவருமான சாலமன் பாப்பையா பற்றி தமிழ்நாட்டில் தெரியாத நபர்களையே இல்லை. அவரின் பேச்சு பலரும் ரசிக்கும் படியும் சிந்திக்கும் படியும் இருக்கும். அவர் தற்பொழுது வயது மூப்பின் காரணமாக 91 வயதில் காலமாக இருக்கிறார். </p><p>இதற்கு பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். சாலமன் பாப்பையா அவர்கள் மகாகவி சுப்பிரமணியர் பாரதியார் மறைந்த அதே தினத்தில் உயிரிழந்திருக்கிறார். அது மட்டும் அல்லாமல் சாலமன் பாப்பையாவிற்கு மகாகவி பாரதி குறித்து நிறைவேறாத கடைசி ஆசை ஒன்றும் இருந்திருக்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c3c92cbc-4cfa-47f8-8845-3d992aa18b63/26-6aa4e896a0702.webp' /></p><p></p><p> </p><p>அதை தொடர்பாக அவருடைய உதவியாளர் பேசியுள்ளார்.


சாலமன் பாப்பையாவின் கடைசி ஆசையை குறித்து அவருடைய உதவியாளர் ராஜா அவர்கள் பேசுகிற பொழுது பேராசிரியர் சாலமன் பாப்பையா 1965 ஆம் ஆண்டு பிறந்திருக்கிறார்.</p><p> அவருக்கு வயது தற்போது 91. 3 தினங்களுக்கு முன்பாக விநாயகர் சதுர்த்திக்கு பட்டிமன்றம் நடந்தது அதற்காக அவர் சிவகாசி வந்திருக்கிறார் நன்றாக இருந்துள்ளார் நேற்று இரவு சற்று தூக்கம் வராமல் தவித்திருக்கிறார் இன்று காலை அவரால் மூச்சு விடவே முடியவில்லை என்றும் அவர் கூறியிருக்கிறார். </p><p>மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற பொழுது அவர்கள் அப்போலோ அழைத்து செல்ல சொன்னார்கள். அப்போலோ சென்ற பொழுது மருத்துவர்கள் பரிசோதனை செய்துள்ளார்கள். அவர்கள் சாலமன் பாப்பையா அவர்கள் நம்மை விட்டு பிரிந்த அந்த துயரச் செய்தி தெரிவித்ததாக அவர் சொல்கிறார். </p><p>முக்கியமாக அதைவிட முக்கியமாக சாலமன் பாப்பையா அவர்கள் கிறிஸ்துவராக பிறப்பெடுத்திருந்தாலும் அவர் சாதி மத வேறுபாடுகளை கடந்து வாழ்ந்ததால் தன்னுடைய உடலை அவர் இந்திய சட்ட முறைப்படி தகனம் செய்ய வேண்டும் என உயில் எழுதி வைத்திருக்கிறார். அதன்படியே அவருடைய உடல் தகனம் செய்யப்பட உள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6de99a31-968c-41a1-b22b-d1a077438352/26-6aa4e89759cdd.webp' /></p><p></p><p> </p><p>மேலும், சாலமன் பாப்பையா பிறந்து வளர்ந்த வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட உள்ளது. அதுமட்டுமல்லாமல் பாரதியார் குறித்து ஒரு நூல் எழுதிக் கொண்டிருந்தார். அவருக்கு அது எப்படியாவது முடித்து விட வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தார். அதுதான் அவருடைய கடைசி ஆசையாகவும் இருந்தது.</p><p>பாரதியாருடைய வரலாற்றை மக்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று அவர் நினைத்தார். அது நிறைவேறும் முன்னதாகவே அவர் காலமாகி இருப்பது மிகுந்த வேதனையை தெரிவிப்பதாகவும் அவர் சொல்லியிருக்கிறார்.</p>]]></content>
            <updated>2026-09-12T06:24:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிக்பாஸ் 10 போட்டியாளரின் தாயார் திடீர் மரணம்.. அவர் எடுத்த அதிரடி முடிவு..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/bigg-boss-10-contestant-mom-sudden-death-1789192255"></link>
            <id>https://cineulagam.com/article/bigg-boss-10-contestant-mom-sudden-death-1789192255</id>
            <summary type="text">பிக்பாஸ் 10விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் கூட்டம் உள்ளது, இப்போது 10வது சீசன் கடந்த செப்டம்பர் 6ம் தேதி...</summary>
            <content type="html"><![CDATA[<h2>பிக்பாஸ் 10</h2><p>விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் கூட்டம் உள்ளது, இப்போது 10வது சீசன் கடந்த செப்டம்பர் 6ம் தேதி துவங்கப்பட்டு வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது.</p><p> 7 சீசன்கள் வரை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வர கடந்த 2 சீசன்களை தொகுத்து வழங்கிய நிலையில் இப்போது 10வது சீசன் தொகுத்து வழங்குகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/88fcc136-5394-4302-a6b2-a4f9eb8c54db/26-6aa4ee6e49aa2.webp' /></p><p>
இந்த சீசனில் தேர்வு செய்யப்பட்ட நபர்களை 3ஆக பிரித்து நிற்க வைத்து அங்குள்ள மக்களை ஓட்டு போட வைத்து இருவரை உள்ளே அனுப்பி குறைந்த வாக்குகளை பெற்ற ஒருவரை வெளியே அனுப்பினார்கள்.
</p><p>அப்படி மொத்தம் 19 போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு வீட்டிற்குள் அனுப்பப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aadff7e5-e5d8-4f41-b29d-c05353112c95/26-6aa4ee6fe3ecd.webp' /></p><h2>சோகம்</h2><p>
இந்த பிக்பாஸ் 10வது சீசனில் பிளாக் பாண்டி உடல்நலக் குறைவு காரணமாக வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். இந்த நிலையில் பிக்பாஸ் 10 போட்டியாளர் ஒருவரின் தாயார் இறப்பு செய்தி வந்துள்ளது.</p><p>அதாவது போட்டியாளர் மணிவண்ணன் தாயார் இறந்துள்ளாராம், அவர் வெளியே செல்ல விரும்புகிறாரா என கேட்கப்பட அதற்கு அவர் வீட்டில் இருக்கிறேன் என கூறியுள்ளார். </p><p>பின் அவரது அம்மா இடம்பெறும் ஒரு வீடியோ பிக்பாஸ் 10 வீட்டிற்குள் ஒளிபரப்பு செய்யப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/665c2781-0bfc-4ff0-99c3-e8269ec2ae56/26-6aa4ee6f1657d.webp' /></p>]]></content>
            <updated>2026-09-12T06:20:29+00:00</updated>
        </entry>
    </feed>
