<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-09-12T12:21:12+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானியா திரும்பிய ஹரி, மேகன் தம்பதியர்: எங்கு வாழ்கிறார்கள்?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/where-are-prince-harry-and-meghan-staying-in-uk-1789215331"></link>
            <id>https://news.lankasri.com/article/where-are-prince-harry-and-meghan-staying-in-uk-1789215331</id>
            <summary type="text">Prince Harry and Meghan Markle rumoured staying secret farmhouse retreat: பிரித்தானியா திரும்பிய இளவரசர் ஹரியும், மேகனும், ரகசிய பண்ணை வீடொன்றில் தங்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>Prince Harry and Meghan Markle rumoured staying secret farmhouse retreat: பிரித்தானியா திரும்பிய இளவரசர் ஹரியும், மேகனும், ரகசிய பண்ணை வீடொன்றில் தங்குவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
</p><p>

பிரித்தானிய மன்னர் சார்லசின் இளைய மகனான ஹரியும் அவரது மனைவி மேகனும், ஆறு ஆண்டுகளுக்கு முன் ராஜ குடும்பத்தை விட்டு வெளியேறினார்கள்.
</p><p>
இந்நிலையில், ஹரியும் மேகனும் தங்கள் பிள்ளைகளுடன் மீண்டும் பிரித்தானியா திரும்பியுள்ளார்கள். </p><p>அவர்களுடைய பிள்ளைகளை பள்ளியில் சேர்த்துவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.</p><p><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/reel/C66GBYdIITZ/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/reel/C66GBYdIITZ/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/reel/C66GBYdIITZ/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by 𝐑𝐨𝐛𝐞𝐫𝐭𝐨 𝐓𝐫𝐚𝐧𝐜𝐡𝐢𝐧𝐨 (@roberto_tranchino)</a></p></div></blockquote> <script async src="//www.instagram.com/embed.js"></script><br></p><h2>

இளவரசர் ஹரி, மேகன் தம்பதியர் எங்கு வாழ்கிறார்கள்?
</h2><p>
ராஜ குடும்பத்துக்கு சொந்தமாக ஏராளமான மாளிகைகள் இருந்தும், பிரித்தானியா திரும்பியுள்ள ஹரி, மேகன் தம்பதியர் சாதாரண குடிமக்களே என மன்னர் அறிவித்துவிட்ட நிலையில், அவர்களுக்கு அரண்மனையில் இடமில்லை என்பது ஏற்கனவே உறுதியாகிவிட்டது.
</p><p>
இந்நிலையில், அவர்கள் எங்கு தங்கியுள்ளார்கள் என்பது குறித்து செய்திகளும், வதந்திகளும் வெளியானவண்ணம் உள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6bd5388a-fd71-4bea-80bd-a8bad284428b/26-6aa542ddf3995.webp' /><br></p><p>

சமீபத்தில், ஹரியின் மனைவியான மேகன், Cotswolds என்னும் பகுதியில் அமைந்துள்ள பண்ணை வீடு ஒன்றிற்குச் செல்லும் காட்சிகள் வெளியாகின.</p><p>

அதைத் தொடர்ந்து, அப்பகுதியிலுள்ள ஆக்ஸ்ஃபோர்ட்ஷையரில் ஹரியும் மேகனும் தங்கக்கூடும் என ஊடகங்கள் செய்தி வெளியிட்டுவருகின்றன.
</p><p>
Chipping Norton மற்றும் Great Tew என்னும் கிராமங்கள் அமைந்துள்ள பகுதியில் உருவாக்கப்பட்டுள்ள Soho Farmhouse என்னும் ஆடம்பர மாளிகையில் உள்ள ஒரு வீட்டில் ஹரி, மேகன் குடும்பம் தங்கலாம் என கூறப்படுகிறது.
</p><p>
என்றாலும், இந்த தகவல்கள் இதுவரை உறுதி செய்யப்படவில்லை!<br></p>]]></content>
            <updated>2026-09-12T12:17:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[துப்பாக்கிசூடு நடத்துபவர்களுக்கு மரணதண்டணை : தீவிர பரிசீலனையில் அரசாங்கம்…!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/death-penalty-for-gunmen-involved-shootings-1789213452"></link>
            <id>https://ibctamil.com/article/death-penalty-for-gunmen-involved-shootings-1789213452</id>
            <summary type="text">நாடு முழுவதும் துப்பாக்கிச் சூடுகள் மற்றும் குண்டுவெடிப்புகளில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு தற்காலிகமாக மரண தண்டனையை அமல்படுத்துவதற்கான ஒரு முன்மொழிவு க...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடு முழுவதும் துப்பாக்கிச் சூடுகள் மற்றும் குண்டுவெடிப்புகளில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு தற்காலிகமாக மரண தண்டனையை அமல்படுத்துவதற்கான ஒரு முன்மொழிவு குறித்து அரசாங்கம் கவனம் ஈர்த்துள்ளது.
</p><p>
இது குறித்து கருத்து தெரிவித்த சட்டத்தரணி, பேராசிரியர் பிரதீபா மகாநாம ஹேவா, இதுபோன்ற திடீர் குற்றக் கூட்டங்களையும் போதைப்பொருள் கடத்தலையும் கட்டுப்படுத்துவதற்காக மரண தண்டனையை தற்காலிகமாக அமல்படுத்துவது மிகவும் முக்கியம் என்று கூறினார்.</p><h2>நீதியமைச்சரின் தகவல்</h2><p>மேலும், உலகின் சில நாடுகளில் இதுபோன்ற குற்றங்களுக்கு தற்காலிகமாக மரண தண்டனை அமல்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இது குறித்து கருத்து தெரிவித்த நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சரும் சட்டத்தரணியுமான ஹர்ஷன நாணயக்கார,நடைபெற்ற கூட்டத்தில் மரண தண்டனை குறித்து விவாதிக்கப்பட்டதாகக் கூறினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e0fb0268-9072-418f-9eb5-2c78b0a4a631/26-6aa542e2a84cc.webp' /></p><p>

நாடு முழுவதும் நடைபெறும் பெருந்திரள் துப்பாக்கிச் சூடுகள் குறித்து கருத்து தெரிவித்த பொதுப் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால, பெருந்திரள் துப்பாக்கிச் சூடுகளைக் கட்டுப்படுத்த புலனாய்வு அமைப்புகளை ஈடுபடுத்தி ஒரு புதிய திட்டம் செயல்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.</p><p></p><h2>தேசியப் பாதுகாப்புக்கு எந்த அச்சுறுத்தலையும் ஏற்படுத்தாது</h2><p>
</p><p>
மேலும், இதுபோன்ற தனிப்பட்ட சம்பவங்கள் தேசியப் பாதுகாப்புக்கு எந்த அச்சுறுத்தலையும் ஏற்படுத்தாது என்றும் அவர் குறிப்பிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4b4112fc-0409-4796-8191-c7099073914a/26-6aa542e35d416.webp' /></p><p>

இலங்கை காவல்துறை தலைமையகத்தின் அறிக்கைகளின்படி, இவ்வாண்டு ஜூலை மாத இறுதிக்குள் நாடு முழுவதும் 22 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இந்தத் துப்பாக்கிச் சூடுகளில் பதினைந்து பேர் கொல்லப்பட்டனர் மற்றும் பன்னிரண்டு பேர் காயமடைந்தனர்&nbsp; &nbsp; &nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-12T12:17:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thileepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெடுக்குநாறிமலைக்கு பௌத்த பிக்கு தலைமையிலான குழு சென்றுள்ள நிலையில் பொலிஸார் குவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/police-deployed-in-at-vedukkunaari-malai-1789214874"></link>
            <id>https://tamilwin.com/article/police-deployed-in-at-vedukkunaari-malai-1789214874</id>
            <summary type="text">வவுனியா - வெடுக்குநாறிமலைக்கு பௌத்த பிக்கு தலைமையிலான குழு சென்றுள்ள நிலையில் அங்கு பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக எமது பி...</summary>
            <content type="html"><![CDATA[<p>வவுனியா - வெடுக்குநாறிமலைக்கு பௌத்த பிக்கு தலைமையிலான குழு சென்றுள்ள நிலையில் அங்கு பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.</p><p>இன்று (12.09.2026) காலை அப்பகுதிக்கு பௌத்த பிக்கு தலைமையிலான குழுவினர் விசேட
பூஜை வழிபாடுகளை மேற்கொள்வதற்காகச் சென்றிருந்தனர்.</p><p>

அதேநேரம் அப்பகுதியில் சைவ மக்களும் வழிபாடுகளுக்குத் சென்றிருந்தனர். இதன் காரணமாக அப்பகுதியில் பொலிஸார் குவிக்கப்பட்டதாக தெரியவருகிறது.</p><h2>மறிக்கப்பட்ட வாகனங்கள்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e14b99d8-51b2-4199-a046-5a8c752ea44b/26-6aa542abd7ecf.webp' /></p><p> அதேநேரம் ஆலயத்திற்குச் செல்கின்ற சைவ மக்களுடைய வாகனங்கள், மோட்டார்
சைக்கிள்கள் பொலிஸாரால் மறித்து, அவர்களை நீண்ட தூரத்திற்கு
நடந்து செல்லவே அனுமதிப்பதாகக் கூறப்படுகிறது.

</p><p>
இந்நிலையில் தமிழ் தேசிய பேரவையின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான
கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் சட்ட ஆலோசகர்
சட்டத்தரணி ந.காண்டீபன், வவுனியா வடக்கு பிரதைச சபை உப தவிசாளர் வி. சஞ்சுதன்
உள்ளிட்டவர்களும் ஆலயத்திற்கு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-12T12:17:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாளை திருமணம் ; இன்று மணகனின் கண் முன்னே பறிபோன மணப்பெண்ணின் உயிர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/bride-dies-tragically-before-groom-s-eyes-1789215218"></link>
            <id>https://jvpnews.com/article/bride-dies-tragically-before-groom-s-eyes-1789215218</id>
            <summary type="text">&amp;nbsp;இந்தியாவின் மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே நாளை திருமணம் நடைபெறவிருந்த நிலையில் இடம்பெற்ற வீதி விபத்தில் மணப்பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் சோ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">&nbsp;இந்தியாவின் மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே நாளை திருமணம் நடைபெறவிருந்த நிலையில் இடம்பெற்ற வீதி விபத்தில் மணப்பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
</p><p style="text-align: justify; ">
செவிலியர் தேர்வில் பங்கேற்பதற்காக மணப்பெண்ணை மணமகன் மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு சென்றுள்ளார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/99d031f0-13c4-4e14-9439-e4b85f6fa76c/26-6aa541f393f7f.webp' /></p><h2 style="text-align: justify; ">மேலதிக விசாரணை</h2><p>
</p><p style="text-align: justify; ">
வாடிப்பட்டி அருகே அவர்கள் சென்றுகொண்டிருந்தபோது, எதிரே வந்த சிற்றூந்தின் டயர் திடீரென வெடித்ததாகவும், இதனால் கட்டுப்பாட்டை இழந்த சிற்றூந்து மோட்டார் சைக்கிளில் மோதி விபத்துக்குள்ளானதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
</p><p style="text-align: justify; ">
இந்த விபத்தில் படுகாயமடைந்த மணப்பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
</p><p style="text-align: justify; ">
விபத்தில் காயமடைந்த மணமகன்&nbsp; மீட்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">

சம்பவம் தொடர்பாக பொலிஸார் வழக்குப் பதிவு செய்து, மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p style="text-align: justify; ">

நாளை திருமணம் நடைபெறவிருந்த நிலையில், மணப்பெண் விபத்தில் உயிரிழந்த சம்பவம் இரு குடும்பத்தினரிடையிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-12T12:15:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[தள்ளாடிய நிலையில் அனுராதபுர பேரணியில் பங்கேற்ற முன்னாள் ஜனாதிபதி மகிந்த]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/mahinda-in-anuradhpura-rally-slpp-namal-1789206840"></link>
            <id>https://tamilwin.com/article/mahinda-in-anuradhpura-rally-slpp-namal-1789206840</id>
            <summary type="text">புதிய இணைப்பு&amp;nbsp;கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அனுராதபுரத்தில் நடைபெறும் ஸ்ரீலங்கா பொதுஜன கட்சிய...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு&nbsp;</h2><p>கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அனுராதபுரத்தில் நடைபெறும் ஸ்ரீலங்கா பொதுஜன கட்சியின் பேரணிக்கு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தற்போது வருகை தந்துள்ளார்.&nbsp;&nbsp;</p><h2>முதலாம் இணைப்பு</h2><p>ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசாங்கத்திற்கு எதிரான பேரணி அனுராதபுரத்தில் சற்று முன்னர் ஆரம்பமாகியுள்ளது.&nbsp;</p><p>நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தலைமையில் இடம்பெறவிருந்த குறித்த பேரணியானது, அவர் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து அவரின் தந்தை தலைமை தாங்குவார் என அக்கட்சி தெரிவித்திருந்தது.&nbsp;</p><p>அதன்படி, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இன்று குறித்த பேரணியில் கலந்து கொள்வார் என உறுதிபடுத்தப்பட்டுள்ளது.&nbsp;</p><p>இந்நிலையில், மீ்ண்டும் அரசியல் களத்தில் இறங்கும் மகிந்த என்னும் பாணியில் தென்னிலங்கை அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/loEKA2X6YC0" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p></p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-12T12:05:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[எதிர்வரும் மாதங்களில் இலங்கை மின்சார நெருக்கடியைச் சந்திக்காது என அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/no-power-cuts-expected-in-coming-months-1789211312"></link>
            <id>https://tamilwin.com/article/no-power-cuts-expected-in-coming-months-1789211312</id>
            <summary type="text">எதிர்வரும் மாதங்களில் இலங்கை மின்சார நெருக்கடியைச் சந்திக்காது என எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக தெரிவித்துள்ளார்.

எல் நினோவின் தாக்கம் ஏற்பட வாய...</summary>
            <content type="html"><![CDATA[<p>எதிர்வரும் மாதங்களில் இலங்கை மின்சார நெருக்கடியைச் சந்திக்காது என எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக தெரிவித்துள்ளார்.
</p><p>
எல் நினோவின் தாக்கம் ஏற்பட வாய்ப்பிருந்தாலும், நீர்த்தேக்கங்களில் போதுமான நீர் இருப்பு உள்ளதாலும், மின்கல ஆற்றல் சேமிப்பு அமைப்பு திட்டத்தை அரசாங்கம் விரைவுபடுத்தி வருவதாலும் இது தொடர்பில் உறுதியளிக்க முடியுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
நாடாளுமன்றத்தில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். </p><p>

அவர் மேலும் தெரிவிக்கையில், செப்டம்பர் 10ஆம் திகதி நிலவரப்படி, நீர்த்தேக்கங்களில் சுமார் 750 ஜிகாவாட்-மணிநேர (GWh) மின்சாரத்தை உற்பத்தி செய்யக்கூடிய அளவுக்கு நீர் உள்ளது. இது மொத்த கொள்ளளவில் 58.7% ஆகும்.</p><h2>மழைப்பொழிவு தொடர்பான கணிப்பு</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/41f6cc5e-3e41-4327-afda-3a742ee14a95/26-6aa53ecb65f51.webp' /></p><p> </p><p>

அக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் அதிக மழைப்பொழிவு இருக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதன் மூலம் 2027ஆம் ஆண்டின் தொடக்கத்திற்குள் சுமார் 1000 ஜிகாவாட்-மணிநேர நீர்மின்சாரத்தை உற்பத்தி செய்யத் தேவையான நீர் இருப்பை அரசால் உருவாக்க முடியும்.</p><p> </p><p>

கணிப்புகளின்படி, ஜனவரி, பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் வெப்பம் அதிகமாக இருக்கும். எனவே, அடுத்த ஆண்டின் தொடக்கத்திற்குள் 1000 ஜிகாவாட்-மணிநேர மின்சாரத்தை உற்பத்தி செய்யப் போதுமான நீர் இருப்பை வைத்திருப்பது அவசியமாகும்.
</p><p>
தற்போது சுமார் 3000 மெகாவாட்டாக (MW) உள்ள உச்சகட்ட மின்சாரத் தேவை, அதிக வெப்பநிலை காரணமாக ஜனவரி, பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் சுமார் 3,350 மெகாவாட்டாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-12T12:00:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[80s டிரண்ட் லுக்கில் நடிகை ஆல்யா மானசா வெளியிட்ட கலக்கல் போட்டோஸ்...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/serial-actress-alya-manasa-80s-trend-photoshoot-1789211086"></link>
            <id>https://cineulagam.com/article/serial-actress-alya-manasa-80s-trend-photoshoot-1789211086</id>
            <summary type="text">ஆல்யா மானசாதமிழ் சின்னத்திரையில் வலம்வரும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் தான் ஆல்யா மானசா.விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியல் மூலம் பிரபலமானவர் இ...</summary>
            <content type="html"><![CDATA[<h2>ஆல்யா மானசா</h2><p>தமிழ் சின்னத்திரையில் வலம்வரும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் தான் ஆல்யா மானசா.</p><p>விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியல் மூலம் பிரபலமானவர் இப்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் பாரிஜாதம் சீரியலில் நாயகியாக நடித்து வருகிறார். தொடரை தாண்டி நிறைய விளம்பரங்கள், கடை திறப்பு விழா, போட்டோ ஷுட் என செம பிஸியாக உள்ளார்.</p><p>அண்மையில் 80ஸ் டிரண்ட் வைரலாகி வருவது அனைவருக்கும் தெரியும். அந்த டிரண்ட் ஆசை ஆல்யா மானசாவிற்கும் வர அவர் வெளியிட்ட சில கலக்கல் போட்டோஸ் இதோ,</p><p><br></p>]]></content>
            <updated>2026-09-12T12:00:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[அஜித் - CM விஜய் சந்திப்புக்கு பின் இப்படியொரு அரசியல்!! பிரபலம் சொன்ன தகவல்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/vijay-to-meet-ajith-in-london-today-anthanan-says-1789215149"></link>
            <id>https://viduppu.com/article/vijay-to-meet-ajith-in-london-today-anthanan-says-1789215149</id>
            <summary type="text">அஜித் - CM விஜய் சந்திப்புநடிகரும் கார் ரேஸருமான அஜித் குமார் லண்டனில் இருக்கும் சிலவர்ஸ்டோன் ரேஸிங் சர்க்யூட்டில் நடக்கும் மிச்செலின் லீ மான்ஸ் கோப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<h2>அஜித் - CM விஜய் சந்திப்பு</h2><p>நடிகரும் கார் ரேஸருமான அஜித் குமார் லண்டனில் இருக்கும் சிலவர்ஸ்டோன் ரேஸிங் சர்க்யூட்டில் நடக்கும் மிச்செலின் லீ மான்ஸ் கோப்பைக்கான பந்தையத்தில் இன்று கலந்து கொண்டுள்ளார். </p><p>அதை தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், தொடங்கி வைக்கவுள்ள நிலையில்ம் அவருடன் அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவும் லண்டனுக்கு சென்றுள்ளார். அங்கு சென்றதும் அஜித்துடன் உரையாடியபடி சென்ற புகைப்படங்கள் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2a05013f-2088-4ed6-94ea-4c20b7171933/26-6aa541afd3e14.webp' /></p><p> </p><p>ஏற்கனவே, நடிகை ராதிகா லண்டனுக்கு சென்று அஜித்தை சந்தித்து பேசியிருக்கிறார். </p><h2>அந்தணன்</h2><p>இந்நிலையில், விஜய் - அஜித் சந்திப்பு குறித்து பத்திரிக்கையாளர் அந்தணன் ஒருசில கருத்தை பகிர்ந்துள்ளார்.</p><p>அதில், இருவரும் கட்டாயமாக சந்திக்கிறார்கள். அதற்கு பின்னால் பல கணக்குகள் இருக்கிறது. இவ்வளவு நாட்கள் எதிரும் புதிருமாக இருந்தவர்கள் இப்போது சந்திக்கிறார்கள் என்றால் அரசியல் விஷயமும் இருக்கிறது. இடைத்தேர்தலில் வென்றாகவேண்டும் என்ற கட்டாயம் இருக்கிறது. லண்டனில் ஒன்று அஜித்தை விஜய் சந்திப்பது தேர்தலில் எதிரொலுக்கும் என கூறியிருக்கிறார் அந்தணன்.</p>]]></content>
            <updated>2026-09-12T12:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Farook Sihan</name>
            </author>
            <title type="text"><![CDATA[அம்பாறையில் போதைப்பொருளுடன் விசேட அதிரடிப்படையினரால் ஒருவர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/individual-arrested-by-special-task-force-ice-drug-1789213335"></link>
            <id>https://tamilwin.com/article/individual-arrested-by-special-task-force-ice-drug-1789213335</id>
            <summary type="text">அம்பாறை- நிந்தவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் விசேட
அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருக்கோவில்...</summary>
            <content type="html"><![CDATA[<p>அம்பாறை- நிந்தவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் விசேட
அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>

திருக்கோவில் விசேட அதிரடிப்படை அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலின்
அடிப்படையில், கங்வெல்ல பகுதியைச் சேர்ந்த 49 வயதுடைய நபர் மீது இந்தத் திடீர்
சுற்றிவளைப்பு நடவடிக்கை நேற்று (11) மாலை முன்னெடுக்கப்பட்டது.
</p><p>இதன்போது, சந்தேகநபரிடமிருந்து 15 கிராமுக்கும்
அதிகமான ‘ஐஸ்’ போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.</p><h2>மேலதிக விசாரணை</h2><p>
</p><p>
கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் மற்றும் சான்றுப்பொருட்களுடன் சந்தேகநபர் மேலதிக
சட்ட நடவடிக்கைகளுக்காக நிந்தவூர் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bd45e841-5772-47cd-ac62-8e5b2982b442/26-6aa53e8d817c2.webp' /></p><p>
</p><p>சம்பவம் தொடர்பில் நிந்தவூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளைத் தீவிரமாக
முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-12T11:59:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[முன்னாள் பொலிஸ் அதிகாரி சம்பத் மானம்பேரி பிணையில் விடுதலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/ex-police-officer-sampath-manamperi-bailed-1789214118"></link>
            <id>https://jvpnews.com/article/ex-police-officer-sampath-manamperi-bailed-1789214118</id>
            <summary type="text">கைக்குண்டு ஒன்றை தன்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் பொலிஸ் அதிகாரியும் ஸ்ரீ லங்கா பொ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">கைக்குண்டு ஒன்றை தன்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் பொலிஸ் அதிகாரியும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் உள்ளுராட்சி மன்ற உறுப்பினருமான சம்பத் மானம்பேரியை பிணையில் விடுவிக்குமாறு தங்காலை மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p style="text-align: justify; ">

தங்காலை மேல் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை(11) இவ்வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந் நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/159dd600-ac90-4fe1-8f30-1f7c0706a359/26-6aa53da7908f4.webp' /></p><p style="text-align: justify; ">

இதற்கமைய சந்தேகநபரை 10 000 ரூபா ரொக்கப் பிணையிலும் தலா 250 000 ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளிலும் விடுவிக்க மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
</p><p style="text-align: justify; ">

ஐஸ் போதைப்பொருளை தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும் இராசயனப் பொருட்கள் மற்றும் ஆயுதங்களை கைவசம் வைத்திருந்த குற்றசாட்டின் பேரிலேயே சந்தேகநபர் ஆரம்பத்தில் கைது செய்யப்பட்டிருந்தார்.</p><p style="text-align: justify; ">

அதனைத் தொடர்ந்து அவரிடம் பெறப்பட்ட தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் மீதெனிய பிரதேசத்திலுள்ள வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கைக்குண்டு பொலிஸாரால் மீட்டெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-12T11:55:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆரம்பமானது போராட்டம் திரைப்படத்தின் பிரமாண்ட இசை வெளியீட்டு விழா!🔴 நேரலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/audio-launch-ceremony-of-the-movie-porattam-1789202975"></link>
            <id>https://ibctamil.com/article/audio-launch-ceremony-of-the-movie-porattam-1789202975</id>
            <summary type="text">புதிய இணைப்புஈழத் திரையுலகில் புதியதோர் அத்தியாயத்தைப் படைக்கவிருக்கும் “போராட்டம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சற்று முன்னர் யாழ்ப்பாணத்தில் ஆ...</summary>
            <content type="html"><![CDATA[<h5>புதிய இணைப்பு</h5><p>ஈழத் திரையுலகில் புதியதோர் அத்தியாயத்தைப் படைக்கவிருக்கும் “போராட்டம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சற்று முன்னர் யாழ்ப்பாணத்தில் ஆரம்பமானது.</p><p><b>
🔴 நேரலை&nbsp;</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/5MFc9ATcE18" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p>முதலாம் இணைப்பு</p><p>ஈழத் திரையுலகில் புதியதோர் அத்தியாயத்தைப் படைக்கவிருக்கும் “போராட்டம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று யாழில் வெகுவிமர்சையாக நடைபெறவுள்ளது.</p><p>

அதன்படி, குறித்த நிகழ்வானது, இன்று(12) மாலை 4.30 மணிக்கு யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாசார மண்டபத்தில் மிகப்பிரமாண்டமாக நடைபெறவுள்ளது.
</p><p>
ஐபிசி தமிழ் நிறுவனத்தின் பிரமாண்ட தயாரிப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படம் எதிர்வரும் ஒக்டோபர் 2ஆம் திகதி திரைக்கு வரவுள்ள நிலையில், இன்றைய இசை வெளியீட்டு விழாவில் ஏராளமான பிரமுகர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.</p><p>

ஈழத்து சினிமாவுக்கு பெருமை சேர்க்கும் இந்நிகழ்வில் அனைவரும் தவறாது கலந்துகொண்டு, “போராட்டம்” திரைப்படக் குழுவினருக்கு தங்களின் பேராதரவை வழங்கி விழாவை சிறப்பிக்குமாறு ஏற்பாட்டுக் குழுவினர் அன்புடன் அழைப்பு விடுத்துள்ளனர்.</p><p></p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h5></td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-12T11:52:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Farook Sihan</name>
            </author>
            <title type="text"><![CDATA[அக்கரைப்பற்றில் வர்த்தக நிலையத்தில் திடீர் தீ விபத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/fire-at-a-commercial-establishment-in-akkaraipattu-1789211771"></link>
            <id>https://tamilwin.com/article/fire-at-a-commercial-establishment-in-akkaraipattu-1789211771</id>
            <summary type="text">அக்கரைப்பற்று – கல்முனை பிரதான வீதியில் அமைந்துள்ள பிரபல வர்த்தக நிறுவனம்
ஒன்றில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.இதனையடுத்து, அக்கரைப்பற்று மாநகர சப...</summary>
            <content type="html"><![CDATA[<p>அக்கரைப்பற்று – கல்முனை பிரதான வீதியில் அமைந்துள்ள பிரபல வர்த்தக நிறுவனம்
ஒன்றில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.</p><p>இதனையடுத்து, அக்கரைப்பற்று மாநகர சபை தீயணைப்புப்
பிரிவினரின் விரைவான நடவடிக்கையினால் முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு
வரப்பட்டுள்ளது.
</p><p>
அக்கரைப்பற்று பிரதான வீதி, லங்கா ஸ்ரோருக்கு அருகாமையில் இயங்கி வரும் 'LU
LU' நிறுவனத்தின் மின் பிறப்பாக்கியில் ஏற்பட்ட மின் ஒழுக்கு காரணமாகவே அதன் மேல்தளத்தில் இத்தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.</p><h2>தீ விபத்து</h2><p>
</p><p>
இதனைத் தொடர்ந்து, உடனடியாகச் செயற்பட்ட அக்கரைப்பற்று மாநகர சபையின்
தீயணைப்புப் பிரிவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, தீ மேலும் பரவாமல்
முழுமையாகக் கட்டுப்படுத்தினர். </p><p>இருப்பினும் இத்தீ விபத்தினால் குறித்த
கட்டடத்தின் ஒரு பகுதி சேதமடைந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a144a6ff-4565-4800-8be0-6cdad286af6b/26-6aa539514d20d.webp' /></p><p>
</p><p>
தீ விபத்தின் போது உடனடியாக விரைந்து வந்து தீயைக் கட்டுப்பாட்டுக்குள்
கொண்டுவந்த மாநகர சபை தீயணைப்புப் பிரிவினருக்கும், அச்சேவையை
அக்கரைப்பற்றுக்குக் கொண்டுவரக் காரணமாக இருந்த முன்னாள் அமைச்சரும் தற்போதைய
மாநகர சபை முதல்வருமான ஏ.எல்.எம். அதாவுல்லாவிற்கும் அங்கு கூடியிருந்த
வர்த்தகர்களும் பொதுமக்களும் தமது நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-12T11:37:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரஷ்ய ஜனாதிபதிக்கு திருக்குறளை பரிசளித்தார் இந்திய பிரதமர் நரேந்திர மோடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/modi-gifts-thirukkural-to-russian-president-1789212830"></link>
            <id>https://canadamirror.com/article/modi-gifts-thirukkural-to-russian-president-1789212830</id>
            <summary type="text">&amp;nbsp;புதுடெல்லியில் நடைபெறவுள்ள 18 ஆவது பிரிக்ஸ் (BRICS) உச்சிமாநாட்டிற்கு முன்னதாக, இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் பு...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;புதுடெல்லியில் நடைபெறவுள்ள 18 ஆவது பிரிக்ஸ் (BRICS) உச்சிமாநாட்டிற்கு முன்னதாக, இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இடையே இருதரப்பு பேச்சுவார்த்தை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.<br></p><p>&nbsp;அதன்போது,&nbsp; திருவள்ளுவர் இயற்றிய பழமையான தமிழ் செவ்வியல் நூலான 'திருக்குறளின்' ரஷ்ய மொழிபெயர்ப்புப் பிரதியை, ரஷ்யா ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு பிரதமர் மோடி பரிசளித்தார்.
</p><p>
திருவள்ளுவரின் 1,330 குறட்பாக்களும் இந்த ரஷ்யப் பதிப்பில் இடம்பெற்றுள்ளன.</p><p>

இந்திய அரசின் மத்திய செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தால் வெளியிடப்பட்ட இந்த நூலை, நைரா எம் கர்ட்சியான் (Naira Mkrtcheyan) என்பவர் ரஷ்ய மொழியில் மொழிபெயர்த்துள்ளார்.
</p><p>
இந்தியாவின் பண்பாட்டுப் பாரம்பரியத்தைப் பிரதிபலிக்கும் பரிசுகளை ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு பிரதமர் நரேந்திர மோடி வழங்குவது இது முதல்முறையல்ல.
</p><p>
முன்னதாக, 2024ஆம் ஆண்டு கசான் நகரில் நடைபெற்ற பிரிக்ஸ் உச்சிமாநாட்டின் போது, ஜார்க்கண்ட் மாநிலத்தின் 'சோஹ்ராய்' (Sohrai) ஓவியத்தை அவர் விளாடிமிர் புடினுக்குப் பரிசளித்தார்.</p><p>

அதேபோல, 2025ஆம் ஆண்டில் பகவத் கீதையின் ரஷ்ய மொழிபெயர்ப்புப் பிரதி, அஸ்ஸாம் தேயிலை மற்றும் வெள்ளியிலான குதிரை சிலை ஆகியவற்றை வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-09-12T11:34:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நல்லூரில் 45 பவுண் நகைகள் திருட்டு : சிக்கிய பெண்ணொருவருக்கு விளக்கமறியல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/45-sovereigns-of-jewellry-stolen-in-nallur-kovil-1789204057"></link>
            <id>https://ibctamil.com/article/45-sovereigns-of-jewellry-stolen-in-nallur-kovil-1789204057</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் - நல்லூர் கந்தசுவாமி கோயில் தேர் திருவிழாவின் போது
தாலிக்கொடியை திருடிய குற்றச்சாட்டில் கைதான கொழும்பைச் சேர்ந்த பெண் நீதிமன்ற உத்தரவில் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் - நல்லூர் கந்தசுவாமி கோயில் தேர் திருவிழாவின் போது
தாலிக்கொடியை திருடிய குற்றச்சாட்டில் கைதான கொழும்பைச் சேர்ந்த பெண் நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.</p><p>தேர் திருவிழாவில் கலந்து கொண்டிருந்த பெண்ணொருவரின் தாலிக்கொடி
அறுக்கப்பட்டமை தொடர்பில், ஆலயச் சூழலில் கடமையில் இருந்த காவல்துறையினருக்கு
முறைப்பாடு வழங்கப்பட்டது.</p><p>இதனையடுத்து துரிதமாக செயற்பட்ட காவல்துறையினர், ஆலய
சூழலில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கமராவின் உதவியுடன் தாலிக்கொடி
அறுத்த பெண்ணை அடையாளம் கண்டு கைது செய்தனர்.</p><p></p><h2>&nbsp;விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு&nbsp;</h2><p>கைது செய்யப்பட்ட பெண்ணிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், பெண்ணிடம் இருந்து அறுக்கப்பட்ட தாலிக்கொடி மீட்கப்பட்டது.அதனையடுத்து குறித்த பெண்ணை யாழ் நீதவான் நீதிமன்றில் காவல்துறையினர்
முற்படுத்திய நிலையில் அப்பெண்ணை எதிர்வரும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில்
வைக்குமாறு மன்று உத்தரவிட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/682b6660-25a5-48a3-a3fa-b9222f26715b/26-6aa51e26d01fc.webp' /></p><p>இதேவேளை நல்லூர் ஆலய தேர் மற்றும் தீர்த்தத் திருவிழாவின் போது, சுமார் 45
பவுண் தங்க நகைகள் களவாடப்பட்டுள்ள நிலையில், ஆலய சூழலில் பொருத்தப்பட்டுள்ள
கண்காணிப்பு கமராக்களின் உதவியுடன் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.</p><p>இந்தநிலையில், சில சந்தேக நபர்களை அடையாளம் கண்டுள்ளதுடன் அவர்களை கைது
செய்வதற்கு காவல்துறையினர் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-12T11:33:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[அடுத்தடுத்து சிக்கலில் ராஜபக்ச குடும்பத்தினர்.. ஷிரந்தி தொடர்பில் புலனாய்வாளர்களிடம் முக்கிய ஆதாரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/siriliya-foundation-shirandhi-rajapaksa-cid-1789209243"></link>
            <id>https://tamilwin.com/article/siriliya-foundation-shirandhi-rajapaksa-cid-1789209243</id>
            <summary type="text">கொழும்பில் உள்ள லேடி ரிட்ஜ்வே குழந்தைகள் மருத்துவமனைக்கு CT ஸ்கேனரை வாங்குவதற்காக தேசிய சேமிப்பு வங்கியிடமிருந்து 10 மில்லியன் ரூபாய் பெறப்பட்ட நிலையி...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பில் உள்ள லேடி ரிட்ஜ்வே குழந்தைகள் மருத்துவமனைக்கு CT ஸ்கேனரை வாங்குவதற்காக தேசிய சேமிப்பு வங்கியிடமிருந்து 10 மில்லியன் ரூபாய் பெறப்பட்ட நிலையில், அதற்குப் பதிலாக சீன அரசாங்கத்திடமிருந்து நன்கொடையாகப் பெறப்பட்ட இயந்திரம் மருத்துவமனைக்கு வழங்கப்பட்ட சம்பவம் குறித்து குற்றப் புலனாய்வுத் துறை (CID) விரிவான விசாரணையைத் தொடங்கியுள்ளது.</p><p>
இந்த விசாரணையானது முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ச உள்ளிட்ட சிரிலிய அறக்கட்டளையின் உறுப்பினர்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய பிற தரப்பினரை மையமாகக் கொண்டுள்ளது.</p><p>

சட்டமா அதிபர் சார்பில் இவ்வழக்கை மேற்பார்வையிடும் மேலதிக சொலிசிட்டர் ஜெனரலும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான திலிப பீரிஸின் வழிகாட்டுதலின் கீழ், சிஐடியின் நிதி விசாரணைப் பிரிவு அதிகாரிகள் இந்த விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.</p><h3>விரைவில் சிஐடி செல்லும்&nbsp;ஷிரந்தி</h3><p> </p><p>மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்த காலத்தில், சிரிலிய அறக்கட்டளையின் தலைவியாக இருந்த ஷிரந்தி ராஜபக்ச, குழந்தைகள் மருத்துவமனைக்கு CT ஸ்கேனரை நன்கொடையாக வழங்க வேண்டியதன் அவசியத்தைக் குறிப்பிட்டு, தேசிய சேமிப்பு வங்கியிடம் கடிதம் மூலம் நிதி கோரியிருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/14bebdda-efa5-4bc2-bdfc-65482c8364f4/26-6aa5358e17f2b.webp' /></p><p> </p><p>அந்தக் கடிதத்தின் அடிப்படையிலும், தேசிய சேமிப்பு வங்கியின் முன்னாள் தலைவர் பிரதீப் காரியவசம் வழங்கிய வாய்மொழி உத்தரவின் பேரிலும், 10 மில்லியன் ரூபாய் தொகை சிரிலிய அறக்கட்டளைக்கு விடுவிக்கப்பட்டது. </p><p>இருப்பினும், வங்கியிலிருந்து பெறப்பட்ட அந்த 10 மில்லியன் ரூபாய் கையாடல் செய்யப்பட்டதாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. </p><p>அந்த நிதியைக் கொண்டு குறிப்பிட்ட இயந்திரத்தை வாங்குவதற்குப் பதிலாக, சீன அரசாங்கத்தால் கடன் அடிப்படையில் இலங்கைக்கு வழங்கப்பட்டிருந்த CT ஸ்கேன் இயந்திரமே மருத்துவமனைக்கு நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/90d0fb50-00ab-4143-bd1f-a5a3025d9825/26-6aa5358f09e04.webp' /></p><p>
</p><p>
மேலதிக சொலிசிட்டர் ஜெனரலின் அறிவுறுத்தலின் பேரில், தேசிய சேமிப்பு வங்கியின் முன்னாள் தலைவர் பிரதீப் காரியவசம் உட்படப் பலரிடமிருந்து குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் ஏற்கனவே இது தொடர்பில் வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளனர். </p><p>இச்சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், சிரிலிய அறக்கட்டளையின் தலைவி ஷிரந்தி ராஜபக்ச, அறக்கட்டளையின் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் மற்றும் பிற பொறுப்புள்ள அதிகாரிகள் ஆகியோரை நிதி விசாரணைப் பிரிவுக்கு வரவழைத்து வாக்குமூலங்களைப் பதிவு செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-12T11:30:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thileepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெடுக்குநாறிமலைக்கு சென்ற பௌத்த பிக்கு தலைமையிலான குழு : குவிக்கப்பட்டுள்ள காவல்துறை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/a-buddhist-monk-group-visited-vedukkunaari-malai-1789211584"></link>
            <id>https://ibctamil.com/article/a-buddhist-monk-group-visited-vedukkunaari-malai-1789211584</id>
            <summary type="text">வவுனியா - வெடுக்குநாறிமலைக்கு பௌத்த பிக்கு தலைமையிலான குழு சென்றுள்ள நிலையில் அங்கு காவல்துறையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.அத...</summary>
            <content type="html"><![CDATA[<p>வவுனியா - வெடுக்குநாறிமலைக்கு பௌத்த பிக்கு தலைமையிலான குழு சென்றுள்ள நிலையில் அங்கு காவல்துறையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.</p><p>அத்துடன், ஆலயத்திற்கு
செல்லும் சைவ பக்தர்களுக்கு காவல்துறையினர் இடையூறை ஏற்படுத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>இது குறித்து மேலும் தெரியவருகையில், இன்று (12) காலை அப்பகுதிக்கு பௌத்த பிக்கு தலைமையிலான குழுவினர் விசேட
பூஜை வழிபாடுகளை மேற்கொள்வதற்காகச் சென்றிருந்தனர்.</p><p></p><h2>காவல்துறையினர் இடையூறு&nbsp;</h2><p>
</p><p>
அதேநேரம் அப்பகுதியில் சைவ மக்களும் வழிபாடுகளுக்குத் சென்றிருந்த நிலையில் அப்பகுதியில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f96ded96-def9-4679-a7ee-0c9ec709bb84/26-6aa537091a813.webp' /></p><p>அத்துடன் ஆலயத்திற்குச் செல்கின்ற சைவ மக்களுடைய வாகனங்கள், மோட்டார்
சைக்கிள்கள் காவல்துறையினரால் மறிக்கப்பட்டு வருவதுடன், அவர்களை நீண்ட தூரத்திற்கு
நடந்து செல்லவே அனுமதிப்பதாகக் கூறப்படுகிறது.</p><p>

பலர் ஆலயத்திற்குச் செல்ல அச்ச நிலையில் வீதியோரங்களில் காத்திருப்பதையும்
அவதானிக்கக் கூடியதாக இருப்பதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.</p><p>
இந்தநிலையில் தமிழ் தேசிய பேரவையின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான
கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் சட்ட ஆலோசகர்
சட்டத்தரணி ந. காண்டீபன், வவுனியா வடக்கு பிரதைச சபை உப தவிசாளர் வி. சஞ்சுதன்
உள்ளிட்டவர்களும் ஆலயத்திற்கு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-12T11:29:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரான் எடுத்த முடிவு : உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்பில் வெளியான அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/rising-crude-oil-prices-following-iran-decision-1789211091"></link>
            <id>https://ibctamil.com/article/rising-crude-oil-prices-following-iran-decision-1789211091</id>
            <summary type="text">ஈரான் மற்றும் அமெரிக்காவிற்கு இடையேயான போர்ச் சூழல் மீண்டும் தீவிரமடைந்ததால், உயர்ந்து வந்த கச்சா எண்ணெய் விலை தற்போது சிறிதளவு சரிவைக் காட்டுவதாக சர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரான் மற்றும் அமெரிக்காவிற்கு இடையேயான போர்ச் சூழல் மீண்டும் தீவிரமடைந்ததால், உயர்ந்து வந்த கச்சா எண்ணெய் விலை தற்போது சிறிதளவு சரிவைக் காட்டுவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
</p><p>
அதன்படி, ஒரு பரல் பிரென்ட் கச்சா எண்ணெயின் விலை நேற்று (11) $108.2 ஆக இருந்தது, இன்று (12) $104.6 ஆகக் குறைந்துள்ளது.அதேபோல், ஒரு பரல் WTI கச்சா எண்ணெயின் விலை நேற்று (11) $103.3 ஆகப் பதிவானது.</p><h2>குறைவடைந்த விலைகள்</h2><p>&nbsp;இருப்பினும், சந்தை அறிக்கைகளின்படி, அந்த வகை கச்சா எண்ணெயின் ஒரு பரலின் விலை இன்று $100 ஆகக் குறைந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fb961724-193a-4484-b0ef-d0cc28d1a026/26-6aa537861994f.webp' /></p><p>
</p><p>
மேலும், ஒரு பரல் முர்பான் கச்சா எண்ணெயின் விலை நேற்று (11) $122.4 என்ற உச்சத்தை எட்டியிருந்தது, இன்று அந்த வகை கச்சா எண்ணெயின் ஒரு பரலின் விலை $119.5 ஆகக் குறைந்துள்ளது.
</p><p>
ஹோர்முஸ் நீரிணை குறித்து விவாதிப்பதற்காக ஈரானிய அதிகாரிகள் குழு ஒன்று ஓமானுக்குப் புறப்படுவதாக ஈரானிய அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டதைத் தொடர்ந்து, உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை சரிவைச் சந்தித்துள்ளது.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-12T11:29:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[நிக்கோலஸ் பூரன் முதல் பந்திலேயே அவுட்: புரட்டியெடுத்த ஹோப், ஹெட்மையர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/hetmyer-and-hope-partnership-beat-trinbago-1789211896"></link>
            <id>https://news.lankasri.com/article/hetmyer-and-hope-partnership-beat-trinbago-1789211896</id>
            <summary type="text">Guyana amazon warriors beat trinbago: CPL டி20 போட்டியில் கயானா அமேசான் வாரியர்ஸ் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸை வீழ்த்தியது....</summary>
            <content type="html"><![CDATA[<p>Guyana amazon warriors beat trinbago: CPL டி20 போட்டியில் கயானா அமேசான் வாரியர்ஸ் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸை வீழ்த்தியது.</p><p>

ப்ரொவிடென்ஸ் மைதானத்தில் நடந்த CPL டி20 போட்டியில், ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கயானா அமேசான் வாரியார்ஸிடம் தோல்வியுற்றது.&nbsp;</p><h2>மெஹிதி ஹசன்&nbsp;அபாரம் 
</h2><p>

ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் மற்றும் கயானா அமேசான் வாரியார்ஸ் அணிகள் மோதிய CPL டி20 போட்டி ப்ரொவிடென்ஸ் மைதானத்தில் நடந்தது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3633aa0e-9b8b-4584-ba42-4cb3118389d1/26-6aa536c180021.webp' /></p><p>

முதலில் ஆடிய ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியில் காலின் மன்ரோ 16 பந்துகளில் 26 ஓட்டங்கள் விளாசினார்.

அடுத்து வந்த நிக்கோலஸ் பூரன் சந்தித்த முதல் பந்திலேயே மிராஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.</p><p> பின்னர் அலெக்ஸ் ஹேல்ஸ் 22 ஓட்டங்களில் அவுட் ஆனார். 

அதனைத் தொடர்ந்து வந்த வீரர் சொற்ப ஓட்டங்களில் வெளியேற, ஜஸ்டின் கிரேவ்ஸ் 35 ஓட்டங்கள் எடுத்தார். </p><p>ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் 20 ஓவர்களில் 126 ஓட்டங்களே எடுத்தது.

மெஹிதி ஹசன் மிராஸ் 4 விக்கெட்டுகளும், ஷாமர் ஜோஸப் 2 விக்கெட்டுகளும், பிரிட்டோரியஸ் மற்றும் தாஹிர் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/da5cb3d9-af22-4a89-b195-1e044aa30866/26-6aa536c00988e.webp' /></p><p>
அதன் பின்னர் ஆடிய கயானா அமேசான் வாரியர்ஸ் அணியில், ஷிம்ரான் ஹெட்மையர் 19 பந்துகளில் 28 ஓட்டங்கள் (3 சிக்ஸர்கள்) விளாசி வெளியேறினார்.
</p><p>
விக்கெட் கீப்பர் ஷாய் ஹோப் ஆட்டமிழக்காமல் 35 பந்துகளில் 42 ஓட்டங்கள் விளாச, கயானா அணி 18.4 ஓவர்களில் 127 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c0a98f30-1c31-4895-93b6-4bb9d7571d1b/26-6aa536c0ca278.webp' />&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/389721e8-d741-4815-8407-2e424a275c76/26-6aa536c232162.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-12T11:22:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹவுதிகள் கேட்டுக்கொண்டார்கள்... மோதலில் அமெரிக்கா தலையிடாது: ட்ரம்ப் வெளிப்படை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/houthis-had-called-trump-says-1789212083"></link>
            <id>https://news.lankasri.com/article/houthis-had-called-trump-says-1789212083</id>
            <summary type="text">Houthis had called Trump admnistration: ஹவுதிகள் ட்ரம்ப் நிர்வாகத்தை தொடர்புகொண்டுள்ளனர்.சவுதி அரேபியாவின் கிழக்கு-மேற்கு குழாய்வழியை முடக்கிய வான்வழி...</summary>
            <content type="html"><![CDATA[<p>Houthis had called Trump admnistration: ஹவுதிகள் ட்ரம்ப் நிர்வாகத்தை தொடர்புகொண்டுள்ளனர்.</p><p>சவுதி அரேபியாவின் கிழக்கு-மேற்கு குழாய்வழியை முடக்கிய வான்வழித் தாக்குதலுக்கு ஈரானே காரணமாக இருக்கலாம் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார்.</p><h2>ஈரான் காரணமா</h2><p>
</p><p>ஹார்முஸ் நீரிணையைத் தவிர்த்து, கச்சா எண்ணெயை ஏற்றுமதி செய்வதற்கான சவுதி அரேபியாவின் முக்கிய வழித்தடங்களில் ஒன்று இந்தக் கிழக்கு-மேற்கு குழாய்வழி.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ba364968-2bab-4acb-bc90-f28ecfd51334/26-6aa535b602183.webp' /></p><p> </p><p>முக்கியமான எண்ணெய் குழாய் வழித்தடத்தின் மீதான தாக்குதலுக்கு ஈரான் காரணமா என்று டப்ளினில் செய்தியாளர்கள் கேள்விக்கு, ​​அவர்கள் தான் காரணம் என்று நான் நினைக்கிறேன்; அநேகமாக அவர்களாகத்தான் இருப்பார்கள் என்று ட்ரம்ப் பதிலளித்துள்ளார். </p><p>மட்டுமின்றி, இந்த விவகாரம் தொடர்பில், தாம் ஒரு நல்ல நண்பராகக் கருதும் சவுதி இளவரசர் முகமது பின் சல்மானுடன் பேசியதாகவும் அமெரிக்க ஜனாதிபதி கூறியுள்ளார்.</p><p></p><p> </p><p>மட்டுமின்றி, ஏமனில் ஈரானுடன் இணக்கமான போக்கைக் கொண்ட ஹவுதிகள் தமது நிர்வாகத்தைத் தொடர்புகொண்டு, இந்த மோதலில் அமெரிக்கா நேரடியாக ஈடுபடுவதை தாங்கள் விரும்பவில்லை என்று தெரிவித்ததாகவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். </p><p>ஏற்கனவே, ஹவுதிகளுக்கு எதிராக ட்ரம்பிடம் உதவிக் கோரிய சவுதி பட்டத்து இளவரசருக்கு அவர் கைவிரித்தது சர்வதேச செய்தி நிறுவனங்கள் வெளியிட்டிருந்தன.</p><h2>அவர்களுக்கு அதிருப்தி</h2><p> </p><p>தற்போது ஹவுதிகளின் வேண்டுகோளுக்கு இணங்கவே ட்ரம்ப் அந்த முடிவுக்கு வந்துள்ளது உறுதியாகியுள்ளது. மட்டுமின்றி, நாங்கள் இதில் ஈடுபடாமல் இருப்பதே ஹவுதிகளுக்கு மிகவும் விருப்பமாக உள்ளது; </p><p>அதனால்தான் அவர்கள் பெரும்பாலான கப்பல்களைச் செல்ல அனுமதிக்கிறார்கள். ஒரே ஒரு நாட்டின் மீதுதான் அவர்களுக்கு அதிருப்தி உள்ளது; அதை நாங்கள் சரிசெய்துவிடுவோம் என்றும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-09-12T11:21:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ள மொட்டுக் கட்சி உறுப்பினர்! வெளியான காரணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/slpp-pradeshiya-sabha-member-arrested-1789210538"></link>
            <id>https://ibctamil.com/article/slpp-pradeshiya-sabha-member-arrested-1789210538</id>
            <summary type="text">

ஒரே பதிவு இலக்கத்தைக் கொண்ட இரண்டு மோட்டார் சைக்கிள்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) சிலாபம் பிரதேச சபை உறுப்பின...</summary>
            <content type="html"><![CDATA[<p>

ஒரே பதிவு இலக்கத்தைக் கொண்ட இரண்டு மோட்டார் சைக்கிள்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) சிலாபம் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
சிலாபம், மாதம்பே பிரதேசத்தில் உள்ள ஜெயபிம பகுயில் அமைந்துள்ள குறித்த பிரதேச சபை உறுப்பினரின் வீட்டு வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த நிலையிலேயே இந்த மோட்டார் சைக்கிள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
</p><p>
சிலாபம் குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரிக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், அப்பிரிவின் அதிகாரிகளால் நேற்று (11) இந்த வீட்டில் சோதனை முன்னெடுக்கப்பட்ட நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p></p><h2>மனைவியின் பெயரில் பதிவு&nbsp;</h2><p>
</p><p>
அங்கு கைப்பற்றப்பட்ட இரண்டு மோட்டார் சைக்கிள்களிலும் காட்சிப்படுத்தப்பட்டிருந்த பதிவு இலக்கமானது, அந்த உறுப்பினரின் மனைவியின் பெயரில் பதிவு செய்யப்பட்ட மோட்டார் சைக்கிளுக்குரியது என காவல்துறையினர் வெளிப்படுத்தியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4b1756c3-2b8a-4730-9746-79cbccd674a8/26-6aa5346da9504.webp' />&nbsp;</p><p>

இச்சம்பவம் தொடர்பில் உறுப்பினரின் மனைவியிடமும் வாக்குமூலம் பதிவு செய்யப்படவுள்ளதுடன், கைது செய்யப்பட்ட உறுப்பினர் மற்றும் இரண்டு மோட்டார் சைக்கிள்களும் இன்று சிலாபம் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h5></td></tr></tbody></table><p>

</p>]]></content>
            <updated>2026-09-12T11:19:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[தயிரை எத்தனை நாட்கள் பிரிட்ஜில் வைத்து பயன்படுத்தலாம்?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/how-long-we-can-store-curd-in-fridge-1789205781"></link>
            <id>https://manithan.com/article/how-long-we-can-store-curd-in-fridge-1789205781</id>
            <summary type="text">தயிர் நம்முடைய அன்றாட வாழ்க்கையில் மிகவும் முக்கியமான உணவாக இருக்கிறது. இதனை நாம் சாதத்தில் கலந்தும், ரைத்தாவாகவும், மோர் லஸ்ஸி என பல வகைகளில் எடுத்து...</summary>
            <content type="html"><![CDATA[<p>தயிர் நம்முடைய அன்றாட வாழ்க்கையில் மிகவும் முக்கியமான உணவாக இருக்கிறது. இதனை நாம் சாதத்தில் கலந்தும், ரைத்தாவாகவும், மோர் லஸ்ஸி என பல வகைகளில் எடுத்துக் கொள்கிறோம். மேலும், புரோபயாடிக் (Probiotics) சத்துக்கள் அதிகம் கொண்ட இந்த தயிர் நமது குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு செரிமானத்தை எளிதாக்குகிறது. </p><p>மேலும், இதைத் தவிர பாதுகாப்பதற்கு பலரும் பிரிட்ஜில் வைத்து பயன்படுத்துவதுண்டு. ஆனால், ஃப்ரிட்ஜில் வைக்கக்கூடிய தயிர் கெட்டுப்போகாதா? எத்தனை நாட்கள் பாதுகாப்பாக இருக்கும் போன்ற பல்வேறு கேள்விகள் நமக்கு வருகிறது. அதை பற்றி பார்ப்போம்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d098b0a1-b7f4-46c2-b5a1-2b02623d279f/26-6aa51d170bc23.webp' /></p><p></p><h3>பிரிட்ஜில் வைப்பதால் தயிர் கெட்டுப்போவதை தடுக்க முடியுமா?
</h3><p>
பொதுவாக, நம்மில் பலரும் தயிரை ஃப்ரிட்ஜில் வைப்பதால் அது கெட்டுப் போகாது என்று எண்ணுவதுண்டு. உண்மையில் குளிர்சாதன பெட்டி பாக்டீரியாக்கள் உடைய செயல்பாட்டை மெதுவாக்குமே தவிர்த்து அதை முழுமையாக தடுத்து நிறுத்துவதில்லை.</p><p> Egypt National Research Centre வெளியிட்ட ஆய்வின்படி, "பிரிட்ஜில் வைக்கப்படும் அதனுடைய அமிலத்தன்மை மற்றும் நுண்ணுயிர் தரத்தில் படிப்படியான மாற்றங்களை சந்திக்கிறது என குறிப்பிடப்பட்டுள்ளது. அதனால் குளிர் சாதன பெட்டியில் நாம் தயிரை வைத்திருந்தாலும் காலப்போக்கில் அதனுடைய சுவை பதம் மற்றும் சத்துக்கள் மாறுபடலாம் என்கிறார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/957ad94a-da43-47c2-a08e-476013db4dcb/26-6aa51d17b8b3f.webp' /></p><h3>பிரிட்ஜில் தயிரை எவ்வளவு நாட்கள் வைக்கலாம்?</h3><h3>

1. பாக்கெட் தயிர்: </h3><p>
கடைகளில் இருக்கக்கூடிய தயிர் ஒவ்வொன்றுக்கும் காலாவதி தேதி குறிப்பிட்டு இருப்பார்கள். அந்த தேதிக்கு உட்பட்ட நாளில் பயன்படுத்துவதே பாதுகாப்பானது.
</p><h3>
2. வீட்டில் தயாரிக்கும் தயிர்:</h3><p> 
வீடுகளில் தயாரிக்க கூடிய தயிரை மூன்று அல்லது ஐந்து நாட்களுக்குள் பயன்படுத்துவது மிக சிறப்பு. இது எந்த வகையான பால், உறை மோர் மற்றும் ஃப்ரிட்ஜின் வெப்ப நிலைகளை குறித்து மாறப்படுகிறது. சில நாட்கள் கடந்தாலும் வீட்டு தயிர் அளவுக்கு அதிகமாக புளித்து விடும். அதனால் வயிற்று உபாதைகளில் ஏற்படுத்தலாம்.&nbsp;&nbsp;</p><h3>தயிரின் மேல் இருக்கும் தண்ணீர் கெட்டுவிட்டதற்கான அறிகுறியா? </h3><p>குளிர்சாதன பெட்டியில் வைக்கக்கூடிய தயிரின் மேல் சேரும் தண்ணீரில் தான் 'Whey' எனப்படும் சத்துக்கள் உள்ளன. தண்ணீரில் புரோட்டின் வைட்டமின் மற்றும் தாதுக்கள் உள்ளன. இந்த தண்ணீர் நிற்பதால் தயிர் கெட்டுவிட்டது என்று அர்த்தம் இல்லை. தயிரை சாப்பிடுவதற்கு முன்பாக இந்த நீரை நன்றாக கலந்து பிறகு சாப்பிடலாம். ஆனால், துர்நாற்றம் அடித்தால் அல்லது தயிரில் பூஞ்சை 
வளர்ந்திருந்தாலோ, உடனடியாக அகற்றி விடுவது அவசியம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/21368bdf-f790-4437-861d-97016631f054/26-6aa51d186f577.webp' /></p><p></p><h3>தயிரை கெடாமல் தடுக்க பின்பற்ற வேண்டிய 5 விஷயங்கள்:
</h3><p>
1. பிரிட்ஜ் உட்புற ஷெல்ப் தயிரை சேமித்து வைக்க வேண்டும். கதவு பகுதிகளில் வைப்பதே தவிர்ப்பதை நல்லது. கதவு அடிக்கடி திறக்கப்படுவதால் வெப்பநிலை மாறுபடலாம். இதனால் தயிர் சீக்கிரம் புளித்து விடும்.
</p><p>

2. தயிரை வெளியே எடுக்கும் போது சுத்தமான மற்றும் ஈரம் இல்லாத கரண்டியை பயன்படுத்துவது நல்லது. ஈரமான கரண்டிகள் தேவையில்லாத பாக்டீரியாக்களை உருவாக்கி தயிரை விரைவில் கெட்டுப் போக செய்யும்.</p><p> 

3. மேலும், காற்று புகாத இருக்குமான மூடியை கொண்ட பாத்திரங்களில் தயிரை வைக்க வேண்டும். இது பிரிட்ஜில் இருக்கக்கூடிய உணவுகளில் வாசனைகள் தயிரில் கலப்பதை தடுத்துவிடும்.</p><p> 

4. பிளாஸ்டிக் பாத்திரங்களுக்குப் பதிலாக மண் பானைகள், கண்ணாடிப் பாத்திரங்கள் அல்லது தரமான ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பாத்திரங்களில் தயிரை வைப்பது நீண்ட நேரம் கெடாமல் பாதுகாக்கும். </p><p>

5. சில வீடுகளில் செய்யக்கூடிய தயிரில் சிறிய பச்சை மிளகாய் அல்லது தேங்காய் துண்டை போட்டு வைப்பது பார்க்கலாம். இது தயிர் அதிகமாக புளிப்பதை தடுப்பதோடு அதன் புத்துணர்வியைத் தக்கவைக்க உதவும் என்று நம்பப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9ec6ac61-ac39-4913-8490-9a15d74f40a1/26-6aa51d1937261.webp' /></p><h3>தயிர் கெட்டுபோனது என்பதை குறிக்கும் அறிகுறிகள் என்ன?<br>

நிறம் மாற்றம்: </h3><p>

புதிய தயிர் நல்ல வெள்ளை அல்லது மங்கலான கிரீம் நிறத்தில் இருக்கும். அங்கு பச்சை அல்லது கருப்பு நிற புள்ளிகள் வந்தால் அங்கு பூஞ்சை அல்லது பாக்டீரியா வந்துவிட்டது என்று அர்த்தம்.</p><p> அதேபோல், தயிர் அதிகமாக வழவழப்பாக மாறினாலோ அல்லது திடீரென தண்ணீராக பிரிந்து கட்டிகட்டிகளாக மாறினாலோ அது கெட்டிருக்க வாய்ப்புள்ளது. </p><p>தயிர் இயற்கையாகவே லேசான புளிப்பு வாசனை கொண்டிருக்கும். அது அழுகிய வாசனை, ஆல்கஹால் வாசனை அல்லது தாங்க முடியாத நாற்றமடித்தால் உடனடியாக அகற்றி விடுவது நல்லது. </p><h3>

அறிய வேண்டியவை:
</h3><p>பிரிட்ஜில் வைக்கக்கூடிய தயிர் அதனுடைய ஆயுளை நீடிக்குமே தவிர என்றென்றும் கெடாமல் பாதுகாப்பதில்லை.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-12T11:15:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தோனேசியாவில் சற்று வித்தியாசமானதொரு நிலநடுக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/java-indonesia-earthquake-september-1789211383"></link>
            <id>https://news.lankasri.com/article/java-indonesia-earthquake-september-1789211383</id>
            <summary type="text">Indonesia earthquake, different from others: இந்தோனேசியாவில் சற்று வித்தியாசமானதொரு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.



இந்தோனேசியா நாட்டில் இன்று பகல் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Indonesia earthquake, different from others: இந்தோனேசியாவில் சற்று வித்தியாசமானதொரு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
</p><p>


இந்தோனேசியா நாட்டில் இன்று பகல் உள்ளூர் நேரப்படி 2.53 மணியளவில் நிலநடுக்கம் ஒன்று தாக்கியது.</p><h2>

சற்று வித்தியாசமானதொரு நிலநடுக்கம்
</h2><p>
ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவானது இந்த நிலநடுக்கம், ஜகார்த்தா, சுமத்ரா உட்பட பல இடங்களில் உணரப்பட்டுள்ளது.
</p><p>
விடயம் என்னவென்றால், இந்த நிலநடுக்கம் சற்று வித்தியாசமானது என அழைக்கப்படுகிறது.
</p><p>
அதாவது, நிலநடுக்கத்தைப் பொருத்தவரை, அது ரிக்டர் அளவுகோலில் எத்தனையாக பதிவாகிறது என்பதுடன், எவ்வளவு ஆழத்தில் உருவாகிறது என்பதும் முக்கியம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f7733e2b-d5b2-4847-b8f6-ceb882b14240/26-6aa533f3e9f50.webp' /><br></p><p>
</p><p>
இன்று உருவான நிலநடுக்கத்தைப் பொருத்தவரை, அது ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவானாலும், பூமியின் பரப்புக்குக்குக் கீழே 376 கிலோமீற்றர் ஆழத்தில் உருவாகியுள்ளது.
</p><p>
இதுபோல் அதிக ஆழத்தில் ஏற்படும் நிலநடுக்கத்தால் ஏற்படும் நில அதிர்வுகள், பொதுவாக நிலப்பரப்பை அடைவதற்குள் அவற்றின் ஆற்றல் வெகுவாகக் குறைந்துவிடும்.
</p><p>
அதனால், அதிக ஆழத்தில் ஏற்படும் நிலநடுக்கத்தால் அபாயம் இல்லை என்று கூறிவிடமுடியாது, இதே அழவில் ஆழம் குறைந்த இடத்தில் ஏற்படும் நிலநடுக்கத்தால் ஏற்படும் அதிர்வுகளை ஒப்பிடும்போது, ஆழம் அதிகமான இடங்களில் ஏற்படும் அதிர்வுகள் வித்தியாசமாக இருக்கும் என்று வேண்டுமானால் கூறலாம்.
</p><p>
இந்நிலையில், இந்த நிலநடுக்கத்தால் எந்த பாதிப்பும் ஏற்பட்டதாக இதுவரை தகவல் இல்லை!<br></p>]]></content>
            <updated>2026-09-12T11:14:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Bavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரதமர் தலைமையில் மட்டக்களப்பில் மாற்றுத்திறனாளி பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஊக்குவிப்பு கொடுப்பனவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/incentive-payments-for-university-students-pm-1789211125"></link>
            <id>https://tamilwin.com/article/incentive-payments-for-university-students-pm-1789211125</id>
            <summary type="text">மட்டக்களப்பில் மாற்றுத்திறனாளி பல்கலைக்கழக மாணவர்களைப் பாராட்டும் தேசிய நிகழ்ச்சித் தொடரின் மூன்றாவது நிகழ்வு இடம்பெற்றது.குறித்த நிகழ்வானது பிரதமரும்...</summary>
            <content type="html"><![CDATA[<p>மட்டக்களப்பில் மாற்றுத்திறனாளி பல்கலைக்கழக மாணவர்களைப் பாராட்டும் தேசிய நிகழ்ச்சித் தொடரின் மூன்றாவது நிகழ்வு இடம்பெற்றது.</p><p>குறித்த நிகழ்வானது பிரதமரும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய தலைமையில் இன்று (12 ) நடைபெற்றது.
</p><p>
ஜனாதிபதி நிதியத்தின் ஏற்பாட்டில் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் (SVIAS) ராஜதுரை அரங்கில் நடைபெற்ற இந்நிகழ்வில், மாற்றுத்திறனாளி பல்கலைக்கழக மாணவர்களுக்கு பிரதமர் அவர்களால் ஊக்குவிப்பு கொடுப்பனவுக்கான காசோலைகள் வழங்கி வைக்கப்பட்டன.</p><h2>பாராட்டு நிகழ்வு</h2><p>
</p><p>
இதன்போது 55 மாற்றுத்திறனாளி பல்கலைக்கழக மாணவர்கள் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.

 மாணவர்களின் கல்வி சாதனைகள் மற்றும் திறமைகளை ஊக்குவிப்பதுடன், சமூகத்தில் அவர்களுக்கான சம வாய்ப்புகளை உறுதிப்படுத்தும் நோக்கில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/35be4fb9-3f38-4906-8bcc-a360779eaa3f/26-6aa533d0b6fad.webp' /></p><p>
</p><p>
மேலும் ஜனாதிபதி செயலகத்தின் செயற்பாடுகளை பிரதேச மட்டத்தில் சிறப்பாகவும் பன்முகப்படுத்தப்பட்ட வகையிலும் முன்னெடுத்த பிரதேச செயலகங்களைப் பாராட்டும் நிகழ்வும் இதன்போது இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
</p><p>
இந்நிகழ்வில் சுவாமி நிலமாதவானந்த ஜீ மஹாராஜ், சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்கிரமரத்தின, கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்தலால் ரத்னசேகர, கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுனில் ஹந்துன்னெத்தி, மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு, ஜனாதிபதி நிதியத்தின் செயலாளர் ரோசான் கமகே, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர்கள் என உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-12T11:13:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுமார் 50,000 யேமன் பொதுமக்கள்... செங்கடல் கடற்கரையோரமாக முன்னேறும் ஹவுதிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/houthis-advance-along-red-sea-1789208646"></link>
            <id>https://news.lankasri.com/article/houthis-advance-along-red-sea-1789208646</id>
            <summary type="text">Nearly 50,000 Yemeni civilians flee as Houthis advance: ஹவுதிகள் முன்னேறுவதால் சுமார் 50,000 யேமன் பொதுமக்கள் வெளியேறியுள்ளனர்.
மேற்கு ஏமனில் ஹவுதிகள...</summary>
            <content type="html"><![CDATA[<p>Nearly 50,000 Yemeni civilians flee as Houthis advance: ஹவுதிகள் முன்னேறுவதால் சுமார் 50,000 யேமன் பொதுமக்கள் வெளியேறியுள்ளனர்.
</p><p>மேற்கு ஏமனில் ஹவுதிகள் திடீரென முன்னேறியதைத் தொடர்ந்து, சுமார் 50,000 பேர் அங்கிருந்து வெளியேறியுள்ளனர்; இதனால் முழு கிராமங்களும் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடிக் காணப்படுகின்றன.</p><h2>உள்நாட்டுப் போர் மீண்டும்</h2><p>
</p><p>உதவிப் பணியாளர்களின் தகவலின்படி, உணவு இருப்பு குறைந்து வரும் நிலையில், போர்முனைக்கு அருகில் குடும்பங்கள் பல சிக்கியுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d4275ecc-6273-478b-b894-287ad7179965/26-6aa5284823119.webp' /></p><p> </p><p>உலகின் மிக முக்கியமான கப்பல் போக்குவரத்துப் பாதைகளில் ஒன்றைக் கட்டுப்பாட்டில் கொண்டுவருவதற்கான உலகளாவிய அதிகாரப் போட்டியால், மத்திய கிழக்கின் மிக ஏழ்மையான நாடான ஏமனின் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்; இந்தப் போட்டி, அந்நாட்டில் அவ்வப்போது நிகழ்ந்துவரும் மோதலை ஒரு முடிவில்லாத போராக மாற்றும் அபாயத்தை உருவாக்கியுள்ளது. </p><p>இந்த வாரம் மின்னல் வேக முன்னேற்றத்தின் ஊடாக, ஹவுதிகள், அமெரிக்கா மற்றும் சவுதி ஆதரவு பெற்ற ஏமன் அரசாங்கப் படைகளிடமிருந்து செங்கடல் கடற்கரையோரத்தில் உள்ள பல நகரங்களைக் கைப்பற்றியுள்ளனர். </p><p>இதில் நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சவுதி அரேபியாவின் தலையீட்டால் 1,50,000 பேரின் உயிரைப் பறித்து, பலரைத் தீவிரப் பஞ்சத்தின் விளிம்பிற்குக் கொண்டு சென்ற முழு அளவிலான உள்நாட்டுப் போர் மீண்டும் வந்துவிடுமோ என்றும் பலர் அஞ்சுகின்றனர்.</p><p></p><p> </p><p>தைஸ் (Taiz) மற்றும் ஹோடைடா (Hodeidah) மாகாணங்களில், 46,000 பேர் இடம்பெயர்ந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச இடம்பெயர்வு அமைப்பு (IOM) வெள்ளிக்கிழமை தெரிவித்தது. </p><p>பல குடும்பங்களைப் பொறுத்தவரை, தங்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்படுவது இது இரண்டாவது அல்லது மூன்றாவது முறையாகும். குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான மக்கள் தங்கள் உடைமைகளுடன் நகரத்தை விட்டு வெளியேறி வருகின்றனர். </p><p>அவசரகாலத் தங்குமிடங்கள், பண உதவி, உணவு, குடிநீர், வீட்டு உபயோகப் பொருட்கள், சுகாதாரம் மற்றும் பாதுகாப்புச் சேவைகள் ஆகியவை மிக அவசரமான தேவைகளாக உள்ளன.</p><h2>பாதுகாப்பு சார்ந்த</h2><p> </p><p>
ஹவுதிகளின் முன்னேற்றம் எதிர்பாராத விதமாகவும் வேகமாகவும் நிகழ்ந்துள்ளது; குறிப்பாக, உலகளாவிய காபி வர்த்தகத்தின் பிறப்பிடமாகவும், சாக்லேட் சுவையிலான காபி வகைக்குப் பெயர்க்காரணமாகவும் பரவலாகக் கருதப்படும் 'மோச்சா' (Mocha) எனும் முக்கியத்துவம் வாய்ந்த துறைமுக நகரம் ஹவுதிகளிடம் வீழ்ந்தது இதில் குறிப்பிடத்தக்கது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cd7487fd-4f43-4e50-adc5-5e4d2174765f/26-6aa52848ccb10.webp' /></p><p> </p><p>ஏமன் விவகார ஆய்வாளர்கள், அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளும் ஏமன் விவகாரத்தில் இராஜதந்திரம் மற்றும் மேம்பாட்டிற்குப் போதிய முக்கியத்துவம் அளிக்காமல், பாதுகாப்பு சார்ந்த அணுகுமுறையைக் கடைப்பிடிப்பதாக நீண்டகாலமாக விமர்சித்து வருகின்றனர். </p><p>21-ஆம் நூற்றாண்டின் பெரும்பகுதியில் சன்னி அல்-கொய்தா போராளிகளுக்கு எதிராக அமெரிக்கா ட்ரோன் தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொண்டது; ஆனால், 2014-இல் ஷியா ஹவுதிகள் தலைநகரைக் கைப்பற்றும் வரை, அவர்களின் தீவிரவாதக் கிளர்ச்சி மீது அமெரிக்கா குறிப்பிடத்தக்க கவனம் செலுத்தவில்லை. </p><p>கடலோரத் தீவுகள் உட்பட முக்கியப் பகுதிகளைத் தங்கள் கட்டுப்பாட்டிற்குக் கொண்டுவருவதன் மூலம், ஆசியாவையும் ஐரோப்பாவையும் இணைக்கும் மிக முக்கியமான வர்த்தக மற்றும் எரிசக்திப் பாதையான 'பாப் அல்-மண்டப்' (Bab al-Mandab) நீரிணைக்கு அருகில் நேரடி இருப்பை ஏற்படுத்திக்கொள்ள மேற்கத்திய எதிர்ப்பு மனப்பான்மை கொண்ட ஹவுதிகள் நம்புகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/69a58b93-750d-4935-8f02-12d159bec6b2/26-6aa5284984b99.webp' /></p><p> </p><p>ஆனால் ஹவுதிகள் இயற்கையான பாப் அல்-மண்டப் நீரிணையை முடக்கினால், உலகப் பொருளாதாரத்தின் மீதான தாக்கம் பேரழிவை ஏற்படுத்தும். பல வாரங்களாக ஒரு பீப்பாய் 80 டொலருக்கு அருகில் வர்த்தகம் செய்யப்பட்ட நிலையில், தற்போது நடைபெற்று வரும் மோதல்கள் கச்சா எண்ணெயின் விலையை ஒரு பீப்பாய் 100 டொலருக்கும் அதிகமாக உயர்த்தக் காரணமாக அமைந்துள்ளன. </p><p>ஏமனில் நடைபெறும் சண்டையும், சவுதி அரேபியா மீதான ஹவுதி ஏவுகணைத் தாக்குதல்களும், 2022-ல் ஐக்கிய நாடுகள் மன்றத்தின் மத்தியஸ்தத்துடன் மேற்கொள்ளப்பட்ட அமைதி ஒப்பந்தத்திற்குப் பிறகு அந்நாட்டில் நிகழ்ந்த மிக முக்கியமான வன்முறைச் சம்பவங்களாகும். </p><p>ஏமனில் நிலவும் ஸ்திரமின்மையை, சவுதி அரேபியா, ஈரான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் போன்ற பிராந்திய சக்திகள் மறைமுகப் போர்களை நடத்துவதற்குப் பயன்படுத்திக்கொண்டுள்ளன; மேலும், வன்முறையை முடிவுக்குக் கொண்டுவரத் தவறியது சக்திவாய்ந்த ஆயுதக் குழுக்களின் வளர்ச்சிக்கு வழிவகுத்துள்ளது.</p><p> ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலியப் போர் பதற்றத்தை அதிகரித்துள்ளதுடன், பிராந்திய அளவிலான விரோத உணர்வும் உச்சத்தை எட்டியுள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-12T11:10:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[Fall 2: Deadpoint திரை விமர்சனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/fall-2-deadpoint-movie-review-1789210198"></link>
            <id>https://cineulagam.com/article/fall-2-deadpoint-movie-review-1789210198</id>
            <summary type="text">Fall 2: Deadpointஹாலிவுட்டில் மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியாகியுள்ள Fall 2: Deadpoin சர்வைவல் த்ரில்லர் படம் எப்படி இருக்கிறது என்று பார்ப்போம் வாங்க...</summary>
            <content type="html"><![CDATA[<h2>Fall 2: Deadpoint</h2><p>ஹாலிவுட்டில் மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியாகியுள்ள Fall 2: Deadpoin சர்வைவல் த்ரில்லர் படம் எப்படி இருக்கிறது என்று பார்ப்போம் வாங்க.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7ec07dd8-44eb-40eb-854d-bdd1d23d2c9e/26-6aa52f6b23f45.webp' /></p><h2>
கதைக்களம்</h2><p> 

சாகசங்களை மேற்கொள்ளும் தனது சகோதரி ஷைலோ ஹன்டரின் மரணத்திற்கு பிறகு ஜாக்ஸ் ஹன்டர் துயரத்தில் மூழ்கியிருக்கிறார்.

அந்த சமயத்தில் ஷைலாவின் மீட்கப்பட்ட ட்ரக் ஒன்றை விற்பதற்காக, அவளது தோழி லூஸ் என்ற பெண் ஜாக்ஸை சந்திக்கிறார். </p><p>

ட்ரக்கின் உள்ளே ஷைலோ எழுதிய எதிர்கால திட்டங்களை இருவரும் படிக்கின்றனர். அதில் தாய்லாந்தில் உள்ள மலையில் சாகச பயணம் மேற்கொண்டு டிராகன் சிலையை பார்க்க வேண்டும் என்ற குறிப்பு உள்ளது. </p><p>

அதனைக் குறிப்பிட்டு மலை சாகச பயணம் மேற்கொள்ளலாம் என ஜாக்சிடம் கூறி லூஸ் அவளை தாய்லாந்திற்கு அழைத்துச் செல்கிறாள்.

அங்கு ஜான் என்ற நபரை சந்திக்கும் இருவரும் டிராகனை அடைய பயணம் மேற்கொள்ள தங்களை அழைத்து செல்ல வேண்டும் என்று கோருகின்றனர். </p><p>

அதற்கு ஜான் 5000 டாலர்கள் ஆகும் என்று கூற, தயக்கத்துடன் இருவரும் சம்மதித்து மூவரும் பயணம் மேற்கொள்கின்றனர்.

தடை செய்யப்பட்ட வழியில், மோசமான பாதையில் மூவரும் பயணம் மேற்கொள்ள அவர்கள் என்னவெல்லாம் சிக்கல்களை எதிர்கொண்டார்கள்? மூவரும் உயிரிபிழைத்தார்களா? என்பதே மீதிக்கதை.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/05ef6984-fd5d-4cfc-b8ac-fade2c33f67d/26-6aa52f6bf1bbe.webp' /></p><h2>
படம் பற்றிய அலசல்</h2><p> 

2022யில் வெளியான Fall திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தி ஸ்பியரிக் சகோதரர்கள் இப்படத்தை இயக்கியுள்ளனர்.

இதற்கு முன் இவர்களது இயக்கத்தில் வெளியான ஜிக்ஸா, வின்செஸ்டர் ஆகிய படங்கள் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதாலும், Fall இரண்டாம் பாகம் எப்படி இருக்கும் என்பதும் Fall 2-விற்கு பெரிய எதிர்பார்ப்பை கிளப்பின.
</p><p>
ஜாக்ஸின் மூவர் குழு மலையேறி, ஒரு கட்டத்தில் ஜானை பிரிந்து இருவர் மட்டுமே தப்பிக்க வேண்டும் என்ற கட்டம் வர படம் விறுவிறுப்பாக செல்கிறது.

துருப்பிடித்த இரும்பு படிகள், நடைபாதை பலகைகள் ஆகியவற்றை பனி படர்ந்ததுபோல் காட்டும்போது நமக்கு பயம் தொற்றிக் கொள்கிறது.
</p><p>
ஜானை (டாம் பிரிட்னி) பிரிந்ததும் ஜாக்ஸ், லூஸ் இருவரும் தப்பிக்க மேற்கொள்ளும் முயற்சிகளும், 4000 அடி உயரத்தில் அவர்கள் சகஜமாக இருப்பதையும் பார்க்கும்போது நமக்கு எந்த பதட்டமும் வரவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ac1d8688-1faf-4c31-ad40-3901f930f480/26-6aa52f6cc164f.webp' /></p><p>
</p><p>அதுவே படத்தை சுவாரஸ்யமற்றதாக மாற்றிவிடுகிறது. அதன் பிறகு வரும் ஒன்றிரண்டு ட்விஸ்ட் பெரிய ஆச்சரியத்தை தரவில்லை. 

அத்துடன் கிளைமேக்சில் வரும் சண்டைக்காட்சியும், அதற்கான காரணமும் தேவையில்லாத ஆணி. பிண்ணனி இசையும் பெரிதளவில் பதட்டத்தை கூட்டவில்லை.
</p><p>
ஜாக்ஸ் ஆக நடித்திருக்கும் ஹாரியேட்டும், லூஸ் ஆக நடித்திருக்கும் அர்சேமாவும், ஜேக்ஸாக வரும் டாம் பிரிட்டினியும் சுமாரான நடிப்பையே தந்துள்ளனர். </p><h2>

க்ளாப்ஸ்</h2><p> 

முதல் அரைமணிநேரம் 

ட்விஸ்ட்</p><h2> 

பல்ப்ஸ்</h2><p> 

சுவாரஸ்யம் இல்லாத திரைக்கதை 

சுமாரான நடிப்பு </p><p><b>


மொத்தத்தில் இந்த Fall 2: Deadpoint படமாகவே Fall (சறுக்கி) ஆகிவிட்டது. </b></p><h3>

ரேட்டிங்: 2/5</h3>]]></content>
            <updated>2026-09-12T11:10:40+00:00</updated>
        </entry>
    </feed>
