<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-08-13T22:28:36+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[மன்னார் பொது வைத்தியசாலை முன்பாக வாகன நிறுத்தத்துக்கு தடை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/police-action-on-mannar-hospital-parking-1786660030"></link>
            <id>https://ibctamil.com/article/police-action-on-mannar-hospital-parking-1786660030</id>
            <summary type="text">மன்னார் பொது வைத்தியசாலைக்கு முன்பாக முறையற்ற வாகன நிறுத்தத்துக்கு எதிராக
நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மன்னார் பொது வைத்தியசாலைக்கு முன்பாக நீண்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>மன்னார் பொது வைத்தியசாலைக்கு முன்பாக முறையற்ற வாகன நிறுத்தத்துக்கு எதிராக
நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
</p><p>
மன்னார் பொது வைத்தியசாலைக்கு முன்பாக நீண்டகாலமாக வாகனம் நிறுத்தத் தடை (No
Parking) என அறிவிக்கப்பட்டுள்ள பகுதியில் வாகனங்கள் முறையற்ற விதத்தில்
நிறுத்தப்பட்டு வந்துள்ளது.
</p><p>
இந்தநிலையில், அதற்கு எதிராக போக்குவரத்து காவல்துறையினர் நேற்று (13-08-2026)
விசேட நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.</p><p>
</p><p></p><h2>கிடைக்கப்பெற்ற முறைப்பாடு</h2><p>வைத்தியசாலைக்கு வரும் நோயாளர்கள், பொதுமக்கள் மற்றும் ஏனைய வாகனப்
போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் வாகனங்கள் நிறுத்தப்படுவதாக
கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக
தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
இதன்போது, முறையற்ற விதத்தில் வாகனங்களை நிறுத்திய வாகன உரிமையாளர்களுக்கு
எதிராக தண்டப்பணம் விதிக்கப்பட்டதுடன், குறித்த பகுதியில் வாகனங்களை
நிறுத்துவதற்கு கடுமையான தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/890c3eb0-6aa1-4b5b-97f4-3fde114752db/26-6a7e44c7490be.webp' /></p><p>

வைத்தியசாலை வளாகத்திற்கு முன்பாக போக்குவரத்து ஒழுங்கை பேணுவதற்கும்
நோயாளர்களின் அவசரப் போக்குவரத்துக்கு எவ்வித இடையூறும் ஏற்படாத வகையிலும்
இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><p>

எனவே, குறித்த பகுதியில் வாகனங்களை நிறுத்தாமல், போக்குவரத்து காவல்துறையினரின்
அறிவுறுத்தல்களையும் வீதிப் போக்குவரத்து விதிகளையும் பொதுமக்கள்
கடைப்பிடிக்குமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p>]]></content>
            <updated>2026-08-13T22:27:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[மன்னார் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் எம்.பிக்களுக்கிடையே வாக்குவாதம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/heated-clash-over-mannar-power-cuts-1786659507"></link>
            <id>https://ibctamil.com/article/heated-clash-over-mannar-power-cuts-1786659507</id>
            <summary type="text">மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான ரிஷாட் பதியுதீன் மற்றும்
ஜெகதீஸ்வரன் ஆகியோருக்கு இடையில் கடுமையான கருத்து...</summary>
            <content type="html"><![CDATA[<p>மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான ரிஷாட் பதியுதீன் மற்றும்
ஜெகதீஸ்வரன் ஆகியோருக்கு இடையில் கடுமையான கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது.
</p><p>
குறித்த கூட்டம் நேற்று (13-08-2026) நடைபெற்றபோது, மன்னார்
மாவட்டத்தில் அடிக்கடி இடம்பெறும் மின்சாரத் தடைகள் தொடர்பாக இடம்பெற்ற
கலந்துரையாடலின் போதே இவ்வாறு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.</p><p>

மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக மின்சாரம் தடைப்படுவதால் மக்கள்
எதிர்நோக்கும் அசௌகரியங்கள் தொடர்பாக கூட்டத்தில் விவாதிக்கப்பட்டபோது,
மின்வெட்டை பற்றி நாங்கள் கதைக்கக் கூடாதா ? என ரிஷாட் பதியுதீன் கேள்வி
எழுப்பியதாக தெரிவிக்கப்பட்டது.</p><p></p><h2>அபிவிருத்திக் குழு</h2><p>

இதன்போது பதிலளித்த ஜெகதீஸ்வரன், கடந்த அரசாங்கங்களில் அமைச்சர்களாகவும்
அபிவிருத்திக் குழுத் தலைவர்களாகவும் இருந்தவர்கள், தற்போதைய நிலைமை தொடர்பாக
கேள்வி எழுப்புவது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
</p><p>
இதனைத் தொடர்ந்து இருவருக்கும் இடையில் வார்த்தைப் பரிமாற்றம்
தீவிரமடைந்ததுடன் கூட்டத்தில் சிறிது நேரம் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/53a0b3eb-33cf-420b-b910-c4c8d8885cd4/26-6a7e42b852b9f.webp' /></p><p>

நிலைமை மேலும் தீவிரமடையாத வகையில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும்
மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர் ஆகியோர் தலையிட்டு இருவரையும்
சமரசப்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக இடம்பெறும் மின்சாரத் தடைக்கு நிரந்தரத்
தீர்வு காணப்பட வேண்டும் என்பதே மக்களின் முக்கிய கோரிக்கையாக உள்ள நிலையில் இந்த விவகாரம் தொடர்பான கலந்துரையாடல் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலும்
சூடுபிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p>]]></content>
            <updated>2026-08-13T22:18:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ட்ரம்ப் அரசாங்கத்தின் நடவடிக்கை குறித்து எழுந்துள்ள விமர்சனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/criticism-regarding-trump-administration-action-1786654641"></link>
            <id>https://tamilwin.com/article/criticism-regarding-trump-administration-action-1786654641</id>
            <summary type="text">பாலியல் கடத்தலுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று
ட்ரம்பின் தலைமையிலான அமெரிக்க அரசாங்கம் உறுதியளித்திருந்த போதிலும்,
அந்நாட்டின் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பாலியல் கடத்தலுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று
ட்ரம்பின் தலைமையிலான அமெரிக்க அரசாங்கம் உறுதியளித்திருந்த போதிலும்,
அந்நாட்டின் நீதித்துறை அதற்கான நடவடிக்கைகளைச் சரியாகச் செயல்படுத்தவில்லை
என்று ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
</p><p>
நீதிமன்றப் பதிவுகளை மேற்கோள் காட்டி வெளியாகியுள்ள இந்த அறிக்கையின்படி,
நடப்பு ஆண்டின் முதல் பாதியில் பாலியல் கடத்தல் தொடர்பான வழக்குகள் கணிசமாகக்
குறைந்துள்ளன.</p><p></p><h2>ட்ரம்ப் அரசின் நடவடிக்கை</h2><p>
பாலியல் கடத்தல் தடுப்புப் பிரிவில் பணியாற்றிய அனுபவமிக்க சட்டத்தரணிகள்
மற்றும் முகவர்கள் பலர் பணியை விட்டு விலகியதும், ட்ரம்பின் தீவிரக்
குடிவரவுத் தடுப்பு நடவடிக்கைகளுக்காக அதிகாரிகள் அதிகளவில் திருப்பி
விடப்பட்டதும் இதற்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.
</p><p>
அத்துடன் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு உதவி செய்து வந்த தொண்டு நிறுவனங்களுக்கான
நிதியுதவி தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாலும் தாமதமானதாலும் வழக்குகள்
குறைந்துள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fb7af9c6-8047-456f-94dd-758826db9051/26-6a7e36dd42047.webp' /></p><p>

இதன் காரணமாகப் பல தீவிர விசாரணைகள் பாதியிலேயே முடங்கியுள்ளதாகவும்,
பாதிக்கப்பட்டவர்கள் அரசு நிறுவனங்கள் மீது கொண்டுள்ள நம்பிக்கை குறைந்து
வருவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><p>

இருப்பினும், இக்குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள அமெரிக்க நீதித்துறை அதிகாரிகள்,
பாலியல் கடத்தலையும் சிறுவர் சுரண்டலையும் தடுப்பது தங்களின் முக்கிய
முன்னுரிமையாகத் தொடர்ந்து நீடிக்கிறது என்று தெரிவித்துள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-08-13T22:18:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[21 நாட்கள் தொடர்ந்து 1 நெல்லிக்காய் சாப்பிட்டால் உடலில் இத்தனை நன்மைகளா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/21-naatkal-thinam-nellika-saptital-kitaikum-nanmai-1786659066"></link>
            <id>https://jvpnews.com/article/21-naatkal-thinam-nellika-saptital-kitaikum-nanmai-1786659066</id>
            <summary type="text">தற்போதைய பரபரப்பான வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கத்தால் தினந்தோறும் ஏதாவது ஒரு ஆரோக்கிய பிரச்சனையை சந்திக்க வேண்டியுள்ளது.தொடர்ந்து 2...</summary>
            <content type="html"><![CDATA[<p>தற்போதைய பரபரப்பான வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கத்தால் தினந்தோறும் ஏதாவது ஒரு ஆரோக்கிய பிரச்சனையை சந்திக்க வேண்டியுள்ளது.தொடர்ந்து 21 நாட்கள் தினமும் 1 நெல்லிக்காய் சாப்பிட்டு வந்தால், உடலில் பல அதிசயங்கள் நடக்கும் என உங்களுக்கு தெரியுமா? இந்த நெல்லிக்காயை வெறுமனே சாப்பிடாமல், கருப்பு உப்புடன் சேர்த்து எடுக்கும் போது, உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கின்றன. தினமும் 1 நெல்லிக்காய் எவ்வாறான நன்மைகள் உடலுக்கு கிடைக்கிறது என நாம் இங்கு பார்ப்போம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/771ac955-c48b-4ddb-8b3d-c417505c3970/26-6a7e40fc74a7b.webp' /></p><h4>அசிடிட்டி, அல்சர், மலச்சிக்கல்</h4><p>அசிடிட்டி பிரச்சனை உள்ளவர்கள் தினமும் 2 நெல்லிக்காய் பழத்தை சாப்பிட்டு வந்தால், இந்த பிரச்சனை தானாக குறையும். அதுவும் தொடர்ந்து 2 நாட்கள் உட்கொண்டு வந்தாலே நல்ல பலன் கிடைக்கும். மேலும் வாய்வு தொல்லை, மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்களும் தினமும் இந்த பழத்தை உட்கொண்டு வந்தால், உடனடி நிவாரணம் கிடைக்கும். அல்சர் பிரச்சனை உள்ளவர்களும் இந்த பழத்தை உட்கொண்டு வந்தால், அல்சர் குறையும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/79bea593-ea0c-4410-ac1e-0c5781a004a1/26-6a7e40fff021c.webp' /></p><h4>தலைமுடி பிரச்சனை</h4><p>தலைமுடி அதிகம் உதிர்தல், முடி அடர்த்தியின்மை போன்ற பிரச்சனைகளைக் கொண்டவர்கள், தினமும் இந்த பழத்தை ஒன்று உட்கொண்ட வந்தால், தலைமுடி தொடர்பான பிரச்சனைகள் குறையும்</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1b5a7356-770d-425d-aa59-1e71cad6c293/26-6a7e40ff48c3d.webp' /></p><h4>சரும பிரச்சனை&nbsp;</h4><p>பளபளப்பான சருமத்தைப் பெற, பருக்கள் குறைய, கரும்புள்ளிகள் நீங்க இந்த நெல்லிக்காய் பெரிதும் உதவி புரியும். அதுமட்டுமின்றி, வயதான பின் முகத்தில் தோன்றும் முதுமை தோற்றத்தை தாமதப்படுத்தவுமம், சரும வறட்சியை போக்கவும் உதவுகிறது. முக்கியமாக இந்த நெல்லிக்காயானது உள்ளிருந்து சருமத்திற்கு ஈரப்பதமூட்டும்</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1a152027-687f-4b70-aab7-65a697f3a6b4/26-6a7e40fe98970.webp' /></p><h4>நோயெதிர்ப்பு சக்தி
</h4><p>அடிக்கடி சளி, ஜலதோஷம் போன்றவற்றால் அவதிப்படுபவர்கள், தினமும் ஒரு பழத்தை உட்கொண்டு வந்தால், இவற்றை உண்டாக்கும் வைரஸ்களில் இருந்து நம்மை பாதுகாக்கலாம். ஒருவேளை வைரஸ் தொற்று ஏற்பட்டிருந்தால், நோயெதிர்ப்பு சக்தி அதிகரித்து விரைவில் அதிலிருந்து மீண்டு வரவும் உதவி புரியும்</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3328619e-e801-418f-85da-f818b796758a/26-6a7e40fde6630.webp' /></p><h4>சர்க்கரை நோய் </h4><p>சர்க்கரை நோய் உள்ளவர்களும் இதை தினமும் தவறாமல் ஒன்று உட்கொண்டு வருவது நல்லது. இதனால் சர்க்கரை நோயாளிகள் சந்திக்கும் கண் பார்வை பிரச்சனைகள், நரம்பு பிரச்சனைகள் போன்றவை தடுக்கப்படுவதோடு, இரத்த சர்க்கரையும் கட்டுப்படும்</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e18fc290-fbdd-45f0-8fd6-5e0a25c0a538/26-6a7e40fd358f9.webp' /></p>]]></content>
            <updated>2026-08-13T22:11:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[திறப்பு விழாவில் ஏற்பட்ட பிரச்சனை, ஆபத்தில் ஜனனி... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/ethirneechal-thodargiradhu-promo-14-aug-2026-1786641527"></link>
            <id>https://cineulagam.com/article/ethirneechal-thodargiradhu-promo-14-aug-2026-1786641527</id>
            <summary type="text">எதிர்நீச்சல் தொடர்கிறதுஅண்ணன் பின்னாலேயே இத்தனை நாள் ஊதாரியாக, ரவுடியாக சுற்றிவந்த கதிர் இப்போது ராவணன் கொடுத்த ஐடியாவால் சொந்த தொழில் துவங்கியுள்ளார்...</summary>
            <content type="html"><![CDATA[<h2>எதிர்நீச்சல் தொடர்கிறது</h2><p>அண்ணன் பின்னாலேயே இத்தனை நாள் ஊதாரியாக, ரவுடியாக சுற்றிவந்த கதிர் இப்போது ராவணன் கொடுத்த ஐடியாவால் சொந்த தொழில் துவங்கியுள்ளார்.</p><p>டபுப் Document உள்ள ஒரு இடத்தை ராவணன் வேண்டும் என்றே குணசேகரனுக்கு காட்ட எப்படியோ இடத்தை வாங்கிவிட்டார்கள், அதில் நந்தினி பெயரில் தொழிலையும் துவங்கிவிட்டார்.</p><p>கதிர்-நந்தினி மனமகிழ் மன்றத்தின் திறப்பு விழாவிற்காக குடும்பத்துடன் வருகிறார்கள், ஆனால் ஜனனி வரவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1ed86114-0611-4c80-bfc0-84af2cf0a856/26-6a7dfc79e99fa.webp' /></p><h2>புரொமோ</h2><p>இன்றைய எபிசோட் புரொமோவில், திறப்பு விழாவில் Furniture வரவில்லை என தெரிகிறது. நந்தினி ஒன்று&nbsp;Furniture வர வேண்டும் இல்லையென்றால் அதற்கான பணம் வர வேண்டும் என கோபமாக கூறுகிறார், நிலத்தை விற்றவர் அது எப்படி என மழுப்புகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/83cd7ed0-02ae-45aa-8c5c-99b8cd72baea/26-6a7dfc7941407.webp' /></p><p>இங்கு வீட்டில் ஜனனி யாரும் இல்லாமல் தனியாக இருக்கிறார். அப்போது ஜனனி எதர்சையாக வெளியே பார்க்கும் போது இருவர் வீட்டையே பார்க்கிறார்கள், அதைப்பார்த்து ஜனனி பதறுகிறார்.</p><p>மனமகிழ் திறப்பு விழாவில் நந்தினி-ரேணுகா ஏதோ பேச அங்கு வந்த ரேணுகா அம்மா இருவருக்கும் மனக் கசப்பு ஏற்படும் வகையில் பேசுகிறார். இதோ புரொமோ,</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/ixybIRO0B7M" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-08-13T22:00:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[சராசரி டெஸ்லா ஊழியரைவிட 2.5 மில்லியன் மடங்கு அதிகமாக சம்பளம் பெற்ற எலோன் மஸ்க்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/tesla-paid-musk-more-wokers-1786657958"></link>
            <id>https://news.lankasri.com/article/tesla-paid-musk-more-wokers-1786657958</id>
            <summary type="text">Tesla paid Elon Musk 2.5m times more: 2025-ல் டெஸ்லா நிறுவனம், தலைமைச் செயல் அதிகாரியாக இருந்த எலோன் மஸ்க்கிற்கு, அவரது சராசரி ஊழியரை விட 2.5 மில்லியன...</summary>
            <content type="html"><![CDATA[<p>Tesla paid Elon Musk 2.5m times more: 2025-ல் டெஸ்லா நிறுவனம், தலைமைச் செயல் அதிகாரியாக இருந்த எலோன் மஸ்க்கிற்கு, அவரது சராசரி ஊழியரை விட 2.5 மில்லியன் மடங்கு அதிகமாக ஊதியம் வழங்கியது.
</p><p>புதிய அறிக்கை ஒன்றின்படி, டெஸ்லா நிறுவனத்தின் சராசரி ஊழியர் பெறும் ஊதியத்தை விட 25 லட்சத்திற்கும் அதிகமான மடங்கு ஊதியத்தை எலோன் மஸ்க் பெற்றுள்ளார்.</p><h2>ஒவ்வொரு 4.23 வினாடி</h2><p>
</p><p>மஸ்க்கின் 158.3 பில்லியன் டொலர் ஊதிய ஒப்பந்தம் ஒரு விதிவிலக்கான நிகழ்வாக அமைந்தாலும், அது தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் தொழிலாளர்களின் ஊதியங்களுக்கு இடையிலான இடைவெளி தொடர்ந்து அதிகரித்து வந்த சூழலில் நிகழ்ந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/26922103-6dc9-4b40-8226-fa7af46847e9/26-6a7e3ca85f702.webp' /></p><p> </p><p>மஸ்க்கை தவிர்த்துப் பார்க்கையில், கடந்த ஆண்டில் முன்னணி S&amp;P 500 நிறுவனங்களில் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) மற்றும் ஊழியர் ஊதியங்களுக்கு இடையிலான சராசரி விகிதம் 312:1 ஆக இருந்தது; இது முந்தைய ஆண்டின் 285:1 என்ற விகிதத்தை விட அதிகமாகும். </p><p>அமெரிக்காவின் மிகப்பெரிய தொழிலாளர் சங்கங்களின் கூட்டமைப்பான AFL-CIO இந்த வாரம் வெளியிட்ட நிர்வாகிகளின் ஊதியம் குறித்த அறிக்கையின்படி, மஸ்க்கை கணக்கில் கொண்டால் சராசரி ஊதிய விகிதம் 5,387:1 ஆக இருந்தது. </p><p>2025-ஆம் ஆண்டில், ஒரு சராசரி டெஸ்லா ஊழியரின் ஊதியத்திற்கு இணையான தொகையை எலோன் மஸ்க் ஒவ்வொரு 4.23 வினாடிகளுக்கும் ஒருமுறை பெற்றார் என்றே அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><p></p><p> </p><p>மேலும், S&amp;P 500 நிறுவனங்களின் பெரும்பாலான தலைமைச் செயல் அதிகாரிகள், அமெரிக்காவின் சராசரி ஊழியர் ஒருவர் ஓராண்டில் ஈட்டும் வருமானத்தை விட அதிகமான தொகையை ஒரே நாளில் ஈட்டினர். </p><p>மஸ்க்கை தவிர்த்துப் பார்க்கையில், 2025-ல் தலைமைச் செயல் அதிகாரிகளின் சராசரி ஊதியம் 22.8 மில்லியன் டொலராக இருந்தது; இது 2024-ல் 18.9 மில்லியன் டொலராக இருந்தது.</p><h2>ஏறக்குறைய 254 சதவீதம்</h2><p> </p><p>டெஸ்லாவையும் கணக்கில் கொண்டால், இந்தச் சராசரி 340.1 மில்லியன் டொலராக உயர்கிறது. இந்த நிலையில், அமெரிக்காவின் தேசிய வருமானத்தில் தொழிலாளர்களின் பங்கு இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய மிகக் குறைந்த அளவிற்குக் குறைந்துள்ளதாக அந்த அறிக்கை குறிப்பிடுகிறது. </p><p>இந்த அறிக்கை டொனால்ட் ட்ரம்ப்பின் 2025-ஆம் ஆண்டு வருமானத்தையும் ஆராய்கிறது. முக்கியமாகத் தனது கிரிப்டோ சொத்துகள் மூலம் கிடைத்த 2.2 பில்லியன் டொலர் வருமானத்துடன், ட்ரம்ப்பின் வருமானம் 2024-ஆம் ஆண்டை விட ஏறக்குறைய 254 சதவீதம் அதிகரித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c34c6f67-badb-4a65-adc9-a1e537387051/26-6a7e3ca910929.webp' /></p><p> </p><p>2025-இல் ட்ரம்ப் பெற்ற வருமானத்தை ஈட்டுவதற்கு, அமெரிக்காவின் சராசரி (இடைநிலை) தொழிலாளிக்கு 43,154 ஆண்டுகள் தேவைப்படும். </p><p>பெரும்பாலான அமெரிக்கர்கள் எதிர்கொள்ளும் பொருளாதாரச் சிக்கல்களை அந்த அறிக்கை தரவுகள் மூலம் சுட்டிக்காட்டியுள்ளது; அதன்படி, அமெரிக்காவில் 33 சதவீதம் பெரியவர்களிடம் ஓய்வுக்கால சேமிப்பு ஏதுமில்லை, </p><p>37 சதவீதம் பேரிடம் 400 டொலர் அளவிலான அவசரச் செலவைச் சமாளிக்கப் போதுமான பணம் இல்லை, 26 சதவீதம் பேர் செலவு காரணமாக மருத்துவச் சிகிச்சையைத் தவிர்த்துள்ளனர், </p><p>மேலும் 23 சதவீதம் வாடகைதாரர்கள் கடந்த ஓராண்டில் வாடகை செலுத்துவதில் பின்தங்கியுள்ளனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-13T21:50:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[சாம்பியாவில் புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப்பதிவு தீவிரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/voting-elect-a-new-president-in-zambia-1786654730"></link>
            <id>https://tamilwin.com/article/voting-elect-a-new-president-in-zambia-1786654730</id>
            <summary type="text">சாம்பியாவில் புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான பொதுத் தேர்தல்
வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

சுமார் 80 லட்சத்திற்கும் அதிகமான வாக்காளர்கள் இ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சாம்பியாவில் புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான பொதுத் தேர்தல்
வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
</p><p>
சுமார் 80 லட்சத்திற்கும் அதிகமான வாக்காளர்கள் இந்தத் தேர்தலில் வாக்களிக்கப்
பதிவெழுதியுள்ளனர்.</p><p>

மொத்தம் 14 வேட்பாளர்கள் களத்தில் உள்ளபோதிலும், தற்போதைய அதிபர் ஹக்காயிண்டே
ஹிசிலேமாவுக்கும், அவரது முக்கிய போட்டியாளரான பிரையன் முண்டுபிலேவுக்கும்
(Brian Mundubile) இடையே கடுமையான போட்டி நிலவுகிறது.</p><p></p><h2>பொருளாதார மீட்சி&nbsp;</h2><p>
</p><p>
பொருளாதார மீட்சி மற்றும் உள்கட்டமைப்பு வளர்ச்சியை முன்வைத்து ஜனாதிபதி
ஹிசிலேமா மீண்டும் ஆதரவு திரட்டி வரும் நிலையில், அதிகரித்து வரும் வாழ்க்கைச்
செலவினங்கள் மற்றும் பணவீக்கத்தால் மக்கள் அதிருப்தியில் உள்ளதாகக்
கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/153c00a8-98f1-42a8-a663-746a8549cac4/26-6a7e3a754f4d6.webp' /></p><p>

வாக்குப்பதிவு நிறைவடைந்த பின், 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப்
பெறும் வேட்பாளரே நேரடியாக ஜனாதிபதியாக தேர்வு செய்யப்படுவார்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-13T21:43:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[கல்முனை வைத்தியசாலையில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள ஆடை விவகாரம்..! யாரும் அறியாத திடுக்கிடும் தகவல்கள்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/hijab-at-kalmunai-hospital-issue-1786648877"></link>
            <id>https://tamilwin.com/article/hijab-at-kalmunai-hospital-issue-1786648877</id>
            <summary type="text">கல்முனை ஆதார வைத்தியசாலையில் (Base Hospital Kalmunai) அண்மையில் ஏற்பட்ட உடை தொடர்பான சர்ச்சை தற்போது பேசுபொருளாகியுள்ளது.
 
இந்த நிலையில், அரசு ஊழிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>கல்முனை ஆதார வைத்தியசாலையில் (Base Hospital Kalmunai) அண்மையில் ஏற்பட்ட உடை தொடர்பான சர்ச்சை தற்போது பேசுபொருளாகியுள்ளது.
</p><p> 
இந்த நிலையில், அரசு ஊழியர்கள் தங்கள் கடமையின் போது அனுமதிக்கப்பட்ட சீருடைகளை மட்டுமே அணிய வேண்டும் என்றும், இது குறித்து 2012-ம் ஆண்டு வெளியிடப்பட்ட சுற்றறிக்கையில் மிகத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
</p><p>
மேலும், அம்பாறை மாவட்டத்தில் இரண்டு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைகள் (RDHS) இருப்பதன் சட்டப்பூர்வத்தன்மை மற்றும் வைத்தியசாலைப் பெயர்களில் உள்ள மாற்றங்கள் குறித்தும் கேள்விகள் எழுப்பப்படுகின்றன.</p><p>

இந்த விவாதம் எந்த ஒரு மதத்திற்கும் அல்லது இனத்திற்கும் எதிரானது அல்ல என்றும், சட்ட மற்றும் நிர்வாக நடைமுறைகளை முறையாகப் பின்பற்றுவதே அவசியம் எனவும் சமூக மட்டங்களில் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
</p><p>
அரச ஊழியர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட சீருடைகளை (Uniform) மட்டுமே பணி நேரத்தில் அணிய வேண்டும் என்று இலங்கையின் பொது நிர்வாக மற்றும் சுகாதார அமைச்சின் சுற்றறிக்கைகள் வலியுறுத்துகின்றன.

 குறிப்பாக 2012 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 30 ஆம் திகதி வெளியிடப்பட்ட சுற்றறிக்கை (கடித இலக்கம்: 2/176/212), சுகாதாரப் பணி உதவியாளர்கள் மற்றும் கனிஷ்ட தர ஊழியர்கள் முழங்கால் வரை இருக்கும் ஆடைகளை (Cream colour gown) அணிய வேண்டும் என்பதை மிகத் தெளிவாக வரையறுத்துள்ளது.</p><p>

 எந்தவொரு மத அல்லது இன ரீதியான அடையாளங்களையும் அல்லது உடைகளையும் பணி நேரத்தில் அணிய அனுமதி இல்லை என்றும், அரசியலமைப்பு மத சுதந்திரத்தை வழங்கினாலும், அரச கடமைகளில் சீருடை தொடர்பான விதிகளைப் பின்பற்றுவது கட்டாயம் என்றும் இதில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
</p><p>
 குறித்த சீருடைகளை அணியத் தவறும் ஊழியர்களுக்கு எதிராக அரச நிறுவனங்களின் தலைவர்கள் ஒழுக்காற்று நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பது இந்தச் சுற்றறிக்கையின் கட்டாய விதிமுறையாக உள்ளது.
</p><p>
இந்த விதிமுறைகள் இலங்கையில் உள்ள அனைத்து மாவட்ட வைத்தியசாலைகளுக்கும் பொதுவானவை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
</p><p>
இந்த விடயங்கள் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி...</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/mqj0Hav3DsQ" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-08-13T21:38:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்கா–ஈரான் போர்: ட்ரம்ப் பதவிக்காலம் வரை நீடிக்க வாய்ப்பு..! ஈரானின் அதிரடி எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/mideast-war-to-continue-till-trump-s-term-ends-1786653639"></link>
            <id>https://tamilwin.com/article/mideast-war-to-continue-till-trump-s-term-ends-1786653639</id>
            <summary type="text">அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடத்திய தாக்குதலுக்குப் பின்னர் தொடங்கிய மத்திய கிழக்கு போர், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் பதவிக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடத்திய தாக்குதலுக்குப் பின்னர் தொடங்கிய மத்திய கிழக்கு போர், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் பதவிக்காலம் முடியும் வரை நீடிக்கக்கூடும் என ஈரானின் மூத்த இராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
</p><p>
இஸ்லாமிய புரட்சிகர காவல் படையான IRGC-யின் தளபதியும், ஈரானின் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனியின் நெருங்கிய உதவியாளருமான முகமது ரெசா நக்தி, அமெரிக்க ஊடகமான PBS-க்கு வழங்கிய நேர்காணலில் இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>ட்ரம்பின் பதவிக்காலம்&nbsp;</h2><p>

போர் நீடிக்கும் ஒவ்வொரு நாளும் ஈரானுக்கு போரில் அதிக அனுபவம் கிடைத்து வருவதாக அவர் கூறியுள்ளார்.
</p><p>
“இந்தப் போர் நீடிக்கும் வரை நாங்கள் கற்றுக்கொள்வோம். அமெரிக்காவுடன் எவ்வாறு போரிடுவது என்பதை கடந்த ஐந்து மாதங்களில் கற்றுக்கொண்டுள்ளோம்” என அவர் தெரிவித்துள்ளார்.
</p><p>
ட்ரம்பின் பதவிக்காலம் முடியும் வரை போரை நீட்டிப்பதே ஈரானின் நோக்கமா என கேட்கப்பட்டபோது, ஈரானுக்கு எதிராக மீண்டும் தாக்குதல் நடத்த நினைப்பவர்கள் அதன் விளைவுகளையும் செலவையும் உணரும் வகையில் தடுப்பு சக்தியை உருவாக்க வேண்டும் என நக்தி தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d7896302-98ba-4029-a7d8-a9031d44253e/26-6a7e2ef4b53c9.webp' /></p><p>
</p><p>&nbsp;ட்ரம்பின் தற்போதைய பதவிக்காலம் 2029 ஜனவரி 20ஆம் திகதி முடிவடைய உள்ளது. அமெரிக்கா போரில் அணு குண்டை பயன்படுத்த வாய்ப்புள்ளதா என கேட்கப்பட்டபோது, அது அமெரிக்காவுக்கு மிகப்பெரிய தவறாக முடியும் என நக்தி எச்சரித்துள்ளார்.
</p><p>
அமெரிக்கா அணு ஆயுதத்தை பயன்படுத்தினால், உலகம் முழுவதும் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள் பாதிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
</p><p>
அதேவேளை, ஈரான் அணு ஆயுதத்தை உருவாக்குவது குறித்து பரிசீலிக்கிறதா என கேட்கப்பட்டபோது, அதற்கான தேவை இல்லை என அவர் கூறியுள்ளார்.</p><p>&nbsp;ஈரான் தனது ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை மட்டுமே நம்பியிருக்கவில்லை என நக்தி தெரிவித்துள்ளார்.

போர் பல ஆண்டுகள் நீடித்தாலும், இறுதி நாள் வரை ஈரானிடம் இருந்து ரொக்கெட்டுகள் ஏவப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.</p><p></p><h2>&nbsp;ஈரான் எச்சரிக்கை</h2><p>
மேலும், ஈரான் தினமும் உற்பத்தி செய்யும் ஏவுகணைகளின் எண்ணிக்கை, அது ஏவுகின்ற ஏவுகணைகளின் எண்ணிக்கையை விட அதிகம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p>இதற்கிடையில், போரை நிரந்தரமாக முடிவுக்கு கொண்டுவர அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நடைபெறும் பேச்சுவார்த்தைகளில் இதுவரை குறிப்பிடத்தக்க முன்னேற்றம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e9291c43-b323-4b9c-911c-46b0bd20c3f1/26-6a7e2ef569ac7.webp' /></p><p>
</p><p>
ஜூன் 17ஆம் திகதி ட்ரம்பும் ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியனும் போரை முடிவுக்கு கொண்டுவரும் வகையில் 14 அம்ச உடன்பாட்டில் கையெழுத்திட்டிருந்தனர்.</p><p>

எனினும், ஜூலை 8ஆம் திகதி அந்த உடன்பாடு முடிவடைந்துவிட்டதாக ட்ரம்ப் தெரிவித்தார். </p><p>இதனைத் தொடர்ந்து, அமெரிக்கா தனது உறுதிமொழிகளை மீறியதாக குற்றம்சாட்டி ஈரானும் அந்த ஒப்பந்தத்தை நிறுத்தியது.

இதனால், போர் நீடிக்கும் காலம் மற்றும் அமெரிக்கா–ஈரான் இடையிலான அடுத்தகட்ட பேச்சுவார்த்தைகள் குறித்து தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது.</p>]]></content>
            <updated>2026-08-13T21:34:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[ட்ரம்பின் ட்ரூத் சோஷியல் செயலி மீது பாய்ந்தது வழக்கு...!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/lawsuit-filed-against-trump-s-truth-api-1786654848"></link>
            <id>https://ibctamil.com/article/lawsuit-filed-against-trump-s-truth-api-1786654848</id>
            <summary type="text">அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் ட்ரூத் சோஷியல் சமூக வலைத்தளத்தில், அவரது பதிவுகளை மற்றவர்களுக்கு முன்பாகவே நொடிப் பொழுதில் பெறும் Truth API எனும்...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் ட்ரூத் சோஷியல் சமூக வலைத்தளத்தில், அவரது பதிவுகளை மற்றவர்களுக்கு முன்பாகவே நொடிப் பொழுதில் பெறும் Truth API எனும் புதிய சேவைக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது.
</p><p>
நியூயோர்க் கூட்டாட்சி நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.</p><p>

தி இன்டர்செப்ட் (The Intercept) மற்றும் ஃபிரீடம் ஒஃப் தி பிரஸ் ஃபவுண்டேஷன் (Freedom of the Press Foundation) ஆகிய இரண்டு அமெரிக்க ஊடக அமைப்புகள் இணைந்து இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளன.</p><p></p><h2>அரசியலமைப்புச் சட்டம்</h2><p>

மாதத்திற்கு 100,000 டொலர் (சுமார் 74,000 பவுண்டுகள்) வரை கட்டணம் வசூலிக்கும் இந்தச் சேவையின் மூலம் சந்தைப் பொருளாதாரத்தை பாதிக்கும் ஜனாதிபதியின் முக்கிய அறிவிப்புகள் சிலருக்கு மட்டும் முன்கூட்டியே கிடைப்பதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இது மிகவும் ஊழல் நிறைந்தது மற்றும் அரசியலமைப்புச் சட்டத்துக்கு முரணானது என்றும் மனுதாரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8ebbee50-3ef0-4bc6-b762-0629f574f8f1/26-6a7e30825cd07.webp' /></p><p>

இதற்கு பதிலளித்துள்ள ட்ரம்ப் மீடியா எண்ட் டெக்னாலஜி குரூப் (TMTG), ஜனாதிபதியை தணிக்கை செய்யும் நோக்கத்துடன் இடதுசாரி செயற்பாட்டாளர்கள் நீதிமன்றத்தை தவறாகப் பயன்படுத்துவதாகக் குற்றம்சாட்டியுள்ளது.</p><p>

தற்போது வரை 10 இற்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இந்த அதிவேக சேவைக்கு சந்தா செலுத்தியுள்ள நிலையில், வெள்ளை மாளிகை தரப்பில் இதுவரை இதற்கான அதிகாரப்பூர்வ விளக்கம் எதுவும் அளிக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p>]]></content>
            <updated>2026-08-13T21:01:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகை ரம்யா பாண்டியனின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/birthday-girl-ramya-pandian-latest-clicks-1786612251"></link>
            <id>https://cineulagam.com/article/birthday-girl-ramya-pandian-latest-clicks-1786612251</id>
            <summary type="text">ரம்யா பாண்டியன்ஒரே இரவில் ஒபாமா அளவிற்கு பேமஸ் என்பது போல் ஒரே ஒரு மொட்டை மாடி போட்டோ ஷுட்டில் ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களின் கவனத்தை பெற்றவர் தான் நடி...</summary>
            <content type="html"><![CDATA[<h2>ரம்யா பாண்டியன்</h2><p>ஒரே இரவில் ஒபாமா அளவிற்கு பேமஸ் என்பது போல் ஒரே ஒரு மொட்டை மாடி போட்டோ ஷுட்டில் ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களின் கவனத்தை பெற்றவர் தான் நடிகை ரம்யா பாண்டியன்.</p><p>அந்த ஒரு போட்டோ ஷுட் மூலம் பிரபலமானவர் அப்படியே விஜய் டிவி பக்கம் வந்து குக் வித் கோமாளி கலக்கினார், அந்நிகழ்ச்சியும் நல்ல பிரபலத்தை கொடுக்க அடுத்தடுத்து படங்கள் கமிட்டாகி நடித்து வந்தார்.</p><p>இப்போது குக் வித் கோமாளி புதிய சீசனிலும் கலந்துகொண்டு அருமையாக சமைத்து வருகிறார். இன்று தனது பிறந்தநாளை கொண்டாடும் ரம்யா பாண்டியனின் சில அழகிய புகைப்படங்களை காண்போம்.</p><p><br></p>]]></content>
            <updated>2026-08-13T21:00:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[சர்ச்சைக்குரிய குரில் தீவுகளுக்கு விளாடிமிர் புடின் முதல்முறையாக விஜயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/putin-visits-disputed-kuril-islands-for-first-time-1786651534"></link>
            <id>https://tamilwin.com/article/putin-visits-disputed-kuril-islands-for-first-time-1786651534</id>
            <summary type="text">ரஷ்யா மற்றும் ஜப்பான் ஆகிய இரு நாடுகளுக்கும் இடையே நீண்டகாலமாக எல்லைச்
சர்ச்சையில் இருக்கும் குரில் தீவுகளின் ஒரு பகுதியான &#039;இதுருப்&#039; (Iturup)
தீவுக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ரஷ்யா மற்றும் ஜப்பான் ஆகிய இரு நாடுகளுக்கும் இடையே நீண்டகாலமாக எல்லைச்
சர்ச்சையில் இருக்கும் குரில் தீவுகளின் ஒரு பகுதியான 'இதுருப்' (Iturup)
தீவுக்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் பயணம் மேற்கொண்டுள்ளார்.</p><p>

ரஷ்ய ஜனாதிபதியின் இந்த விஜயத்திற்கு ஜப்பான் பிரதமர் சானே தகாய்ச்சி தனது
கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.</p><p></p><h2>முதல்முறையாக விஜயம்</h2><p>
</p><p>
செய்தியாளர்களிடம் பேசிய அவர்,</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/feebcb8b-381a-4330-9665-8fb8b177d262/26-6a7e246207eb3.webp' /></p><p> </p><p>புடினின் இந்த நடவடிக்கை ஜப்பான் மக்களின்
உணர்வுகளைக் காயப்படுத்தியுள்ளதாகவும், இதனைச் சற்றும் ஏற்றுக்கொள்ள முடியாது
என்றும் தெரிவித்துள்ளார்.</p><p>

இரண்டாம் உலகப் போரின் இறுதியில் சோவியத் ஒன்றியத்தால் கைப்பற்றப்பட்ட இந்தத்
தீவுகள், வரலாற்று ரீதியாகத் தங்களுக்குச் சொந்தமானது என ஜப்பான் தொடர்ந்து
உரிமை கோரி வரும் நிலையில், இந்தச் சம்பவம் இரு நாடுகளுக்கு இடையிலான தூதரக
உறவில் மேலும் விரிசலை ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-13T20:59:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரான்ஸ் நாட்டின் சிரேஷ்ட தூதுவரின் தவறான நடத்தைகள் குறித்து தீவிர விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/france-investigation-ambassador-tcentral-african-1786653615"></link>
            <id>https://tamilwin.com/article/france-investigation-ambassador-tcentral-african-1786653615</id>
            <summary type="text">மத்திய ஆபிரிக்கக் குடியரசில் பணியாற்றி வரும் பிரான்ஸ் நாட்டின் சிரேஷ்ட
தூதுவர் புருனோ ஃபுஷே மீது பிரான்ஸ் அரசு ஒழுக்காற்று நடவடிக்கைகளைத்
தொடங்கியுள...</summary>
            <content type="html"><![CDATA[<p>மத்திய ஆபிரிக்கக் குடியரசில் பணியாற்றி வரும் பிரான்ஸ் நாட்டின் சிரேஷ்ட
தூதுவர் புருனோ ஃபுஷே மீது பிரான்ஸ் அரசு ஒழுக்காற்று நடவடிக்கைகளைத்
தொடங்கியுள்ளது.
</p><p>
பிரெஞ்சு வார இதழான 'லே கேனார்ட் என்ஷைன்' (Le Canard enchaîné) வெளியிட்ட
அறிக்கையின்படி, தலைநகர் பாங்கியிலுள்ள (Bangui) தமது உத்தியோகபூர்வ
இல்லத்திற்கு சுமார் 30 பெண்களை வரவழைத்து முறைகேடான நடவடிக்கைகளில்
ஈடுபட்டதாக அவர் மீது குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
</p><p>
2024 ஜனவரி முதல் இந்த ஆண்டு மார்ச் மாதத்திற்கு இடைப்பட்ட காலத்தில்
நடைபெற்றதாகக் கூறப்படும் இந்த சம்பவங்கள், தூதரகப் பாதுகாப்பிற்கு பெரும்
அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதாகக் கருதப்படுகிறது.</p><p></p><h2>விசாரணை</h2><p>
</p><p>
இது தொடர்பாக பிரான்ஸ் வெளியுறவு அமைச்சு விசாரணையைத் தொடர்ந்து, அவருக்கு
எதிரான நிர்வாக நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/369607ca-1f02-4aa2-9d17-6fb387e32948/26-6a7e2d57df388.webp' /></p><p>
</p><p>
65 வயதான புருனோ ஃபுஷே, கடந்த 2023-ஆம் ஆண்டு முதல் அங்குத் தூதுவராகப்
பணியாற்றி வருகிறார்.
</p><p>
பிரான்ஸ் மற்றும் மத்திய ஆப்பிரிக்கக் குடியரசுக்கு இடையிலான இருதரப்பு
உறவுகளைச் சீரமைக்க இரு நாடுகளும் தீவிர முயற்சி மேற்கொண்டு வரும் வேளையில்,
இந்தத் தூதுவரின் விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-13T20:48:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹோர்முஸ் நீரிணை முற்றிலும் மூடப்பட்டுள்ளது...! அமெரிக்காவிற்கு ஈரான் பதிலடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/iran-irgc-strait-of-hormuz-fully-closed-1786653931"></link>
            <id>https://ibctamil.com/article/iran-irgc-strait-of-hormuz-fully-closed-1786653931</id>
            <summary type="text">ஹோர்முஸ் நீரிணையில் தடையின்றி இயங்குவதாக அமெரிக்கா கூறிவரும் அறிக்கைகள் எதார்த்த நிலைக்கு மாறானவை என்றும் ஹோர்முஸ் நீரிணை முழுமையாக மூடப்பட்டுள்ளது என...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹோர்முஸ் நீரிணையில் தடையின்றி இயங்குவதாக அமெரிக்கா கூறிவரும் அறிக்கைகள் எதார்த்த நிலைக்கு மாறானவை என்றும் ஹோர்முஸ் நீரிணை முழுமையாக மூடப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரானிய இஸ்லாமிய புரட்சிகரக் காவல் படையின் (IRGC) கடற்படைத் தளபதி இதனை தெரிவித்துள்ளார்.
</p><p>
ஐஆர்ஜிசி கடற்படையின் ரியர் அட்மிரல் அலி அஸ்மாய் (Ali Azmaei) இந்தத் தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.
</p><p>
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “ஹோர்முஸ் ஜலசந்தி முற்றிலும் மூடப்பட்டுள்ளது.</p><p> </p><p></p><h2>தீர்க்கமான கட்டுப்பாடு&nbsp;</h2><p>இந்த வழித்தடத்தில் நடைபெறும் அனைத்து நகர்வுகள் மீதும் எங்களுக்கு முழுமையான மற்றும் தீர்க்கமான கட்டுப்பாடு உள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3047590c-1380-45b3-aef9-ae874ca76d15/26-6a7e2ceeaba7d.webp' /></p><p> 

எங்கள் ஐஆர்ஜிசி கடற்படை வீரர்களின் கவனத்திற்குத் தப்பி எந்தவொரு நகர்வும் இங்கு நடைபெற முடியாது” என தெரிவித்துள்ளார்.
</p><p>

உண்மை நிலை என்ன என்பதைப் போர்க்களத்தில் (On the ground) தான் பார்க்க வேண்டுமே தவிர, அமெரிக்க அதிகாரிகளின் அறிவிப்புகளிலும் அறிக்கைகளிலும் பார்க்கக் கூடாது” என தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p></p><h2>ஹோர்முஸ் நீரிணை&nbsp;</h2><p>ஹோர்முஸ் நீரிணை திறக்கப்பட்டுப் போக்குவரத்து இயல்பாக நடைபெறுவதாக அமெரிக்கா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/09aa87b8-2d93-419e-912d-d40b0d4c0f3a/26-6a7e2cee054bb.webp' /></p><p>ஆனால், ஈரானின் நேரடி அனுமதி இன்றி எந்தவொரு வணிக அல்லது போர்க்கப்பலும் இந்த ஜலசந்தியைக் கடக்க முடியாது என ஈரான் தொடர்ந்து உரிமை கோரி வருகிறது.</p><p>

உலகின் மிக முக்கியமான கச்சா எண்ணெய் வர்த்தகப் பாதையான ஹோர்முஸ் வழித்தடத்தில் இரு நாடுகளும் மாறி மாறி விடுத்து வரும் இத்தகைய முரண்பாடான கருத்துக்கள், சர்வதேச வர்த்தக உலகிலும் எரிசக்தி சந்தையிலும் நிலவும் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-13T20:45:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[பெக்கோ சமனின் தாயார் சுட்டுக்கொலை ; கணேமுல்ல சஞ்ஜீவ கொலைக்கு பழிவாங்கலா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/saman-mother-shot-dead-revenge-sanjeeva-murder-1786653735"></link>
            <id>https://jvpnews.com/article/saman-mother-shot-dead-revenge-sanjeeva-murder-1786653735</id>
            <summary type="text">பூஸா அதிஉயர் பாதுகாப்புச் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பெக்கோ சமன் என்ற நிர்மல பிரசங்க என்பவரின் தாயார் சுட்டுக்கொல்லப்பட்டமையானது, கணேமுல்ல...</summary>
            <content type="html"><![CDATA[<p>பூஸா அதிஉயர் பாதுகாப்புச் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பெக்கோ சமன் என்ற நிர்மல பிரசங்க என்பவரின் தாயார் சுட்டுக்கொல்லப்பட்டமையானது, கணேமுல்ல சஞ்ஜீவவின் கொலைக்குப் பழிவாங்கும் செயலாக நடத்தப்பட்டிருக்கலாம் எனப் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.</p><p></p><p> 

வெளிநாட்டில் தலைமறைவாக உள்ள கரந்தெனிய சுத்தாவின் தரப்பினரால், கணேமுல்ல சஞ்ஜீவவின் கொலைக்குப் பழிவாங்கும் வகையிலேயே இந்தப் படுகொலைச் சம்பவம் நிகழ்த்தப்பட்டுள்ளதாகப் பொலிஸார் மேலும் சந்தேகிக்கின்றனர். </p><p>

கெஹெல்பத்தர பத்மேவுடன் சேர்ந்து பெக்கோ சமனும் இந்தோனேசியாவில் கைதுசெய்யப்பட்ட நிலையில், அவரும் கணேமுல்ல சஞ்ஜீவவின் கொலைக்கு ஒத்துழைப்பு வழங்கியதாகத் தகவல்கள் வெளியாகியிருந்தன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f3b4efc0-ea95-485d-b014-fb713b118c35/26-6a7e2c29210ea.webp' /></p><p> 

அத்துடன், கஜ்ஜா மற்றும் அவரது இரு பிள்ளைகள் கொல்லப்பட்ட சம்பவத்துடனும் பெக்கோ சமனுக்குத் தொடர்பிருப்பதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. </p><p>

இதனிடையே, துப்பாக்கிதாரிகள் வந்த மோட்டார் சைக்கிள் மாத்தறை, தம்பஹல, பொல்வத்த பகுதியில் கைவிடப்பட்டிருந்த நிலையில் இன்று (13) காலை ஊருபொக்க பொலிஸாரால் மீட்கப்பட்டது. </p><p>

மித்தேனிய, உலஹிட்டியாவ, பதலங்கல கெதர பகுதியில் நேற்று (12) மாலை 6.00 மணியளவில் இனந்தெரியாத இரு துப்பாக்கிதாரிகளால் இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருந்தது. </p><p>

இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் அங்குள்ள CCTV கெமராவிலும் பதிவாகியுள்ளது.</p><p> 

9 மில்லிமீற்றர் ரக கைத்துப்பாக்கியால் நடத்தப்பட்ட இத்தாக்குதலில், துப்பாக்கிதாரிகள் அந்தப் பெண்ணின் நெஞ்சுப் பகுதியில் சுமார் 7 முறை துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.</p><p> 

அதன் பின்னர் துப்பாக்கிதாரிகள் அப்பகுதியிலிருந்து தப்பிச் சென்றுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.</p><p> 

பின்னர், துப்பாக்கிச் சூட்டில் பலத்த காயமடைந்த பெண் சிகிச்சைக்காக மித்தெனிய பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-13T20:42:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[அனுமதியின்றி காரை எடுத்துச் சென்று விபத்து: 13 வயது சிறுமியை கைது செய்தது கனடா காவல்துறை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/13-year-old-crashes-family-vehicle-after-nanaimo-1786643409"></link>
            <id>https://canadamirror.com/article/13-year-old-crashes-family-vehicle-after-nanaimo-1786643409</id>
            <summary type="text">&amp;nbsp;கனடாவின் நானைமோ நகரில், பெற்றோருக்குத் தெரியாமல் குடும்ப காரை எடுத்துக்கொண்டு, அனுமதிக்கப்பட்ட வேகத்தை விட இருமடங்கிற்கும் அதிகமான வேகத்தில் ஓட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கனடாவின் நானைமோ நகரில், பெற்றோருக்குத் தெரியாமல் குடும்ப காரை எடுத்துக்கொண்டு, அனுமதிக்கப்பட்ட வேகத்தை விட இருமடங்கிற்கும் அதிகமான வேகத்தில் ஓட்டிச் சென்று சாக்கடையில் மோதி விபத்துக்குள்ளாக்கிய 13 வயது சிறுமியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
</p><p>ஜூலை 25 அன்று அதிகாலை 2 மணியளவில் இச்சம்பவம் நடந்துள்ளது. டெர்மினல் அவென்யூ பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த நானைமோ போலீஸ் அதிகாரி ஒருவர், மணிக்கு 50 கி.மீ வேகம் மட்டுமே அனுமதிக்கப்பட்ட பகுதியில், கார் ஒன்று 118 கி.மீ வேகத்தில் அதிவேகமாகச் செல்வதைக் கண்டறிந்தார்.</p><p> 
காரை நிறுத்த அதிகாரி முயன்றபோது, அது அதிவேகத்தில் தப்பிச் சென்றது. இதையடுத்து, காரின் அதிவேகம் மற்றும் ஆபத்தான பயணத்தைக் கருத்தில் கொண்டு, பொதுமக்களின் பாதுகாப்பிற்காக அதனைப் பின்தொடர்ந்து துரத்த வேண்டாம் என காவல்துறை முடிவு செய்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6fd28ae0-8635-4fc9-97f6-a44c936db4e0/26-6a7e03d399d15.webp' /></p><p> </p><p>
அதிவேகம் மற்றும் காரை ஓட்டிய விதம் காரணமாக நாங்கள் அதனைப் பின்தொடர வேண்டாம் என முடிவு செய்தோம் எனபொலிஸார் தெரிவித்தனர்.
சிறிது நேரத்தில், அந்த கார் அருகிலுள்ள சாக்கடையில் மோதி விபத்துக்குள்ளானதாகக் காவல்துறைக்குத் தகவல் கிடைத்தது. </p><p>சம்பவ இடத்திலிருந்து தப்பிக்க முயன்ற சிறுமியைத் தேடிக் கண்டுபிடித்த காவல்துறையினர் அவரைக் கைது செய்தனர்.
காரை ஓட்டியவர் வெறும் 13 வயது சிறுமி என்பதைக் கண்டு அதிகாரிகள் பெரும் அதிர்ச்சியடைந்தனர்.</p><p> காரில் அந்த சிறுமி மட்டுமே இருந்தாரென்றும், அதிர்ஷ்டவசமாக அவருக்கு எவ்வித காயமும் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பொதுச் சொத்துக்கள் எதுவும் சேதமடையவில்லை. சேதமடைந்த கார் மீட்கப்பட்டு இழுத்துச் செல்லப்பட்டது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-13T20:27:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[பெண்கள் கழிப்பறையில் ரகசிய கேமரா ; அதிர்ச்சியில் உறைந்த பெண்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/hidden-camera-in-the-women-s-toilet-1786648715"></link>
            <id>https://jvpnews.com/article/hidden-camera-in-the-women-s-toilet-1786648715</id>
            <summary type="text">இரத்தினபுரியில் உள்ள நிதி நிறுவனமொன்றில் பணிபுரியும் பெண்களின் நிர்வாணப் புகைப்படங்களை ரகசியமாக எடுத்ததாகக் கூறப்படும் நபர் ஒருவர் இரத்தினபுரி பொலிஸார...</summary>
            <content type="html"><![CDATA[<p>இரத்தினபுரியில் உள்ள நிதி நிறுவனமொன்றில் பணிபுரியும் பெண்களின் நிர்வாணப் புகைப்படங்களை ரகசியமாக எடுத்ததாகக் கூறப்படும் நபர் ஒருவர் இரத்தினபுரி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>
</p><p></p><h3>மேலதிக விசாரணை</h3><p>கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நிதி நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
குறித்த நிதி நிறுவனத்தில் பெண்கள் பயன்படுத்தும் கழிப்பறையில், அவர்கள் கவனிக்காத வகையில் கைபேசி ஒன்றை மறைத்து பொருத்தி, நிர்வாணப் புகைப்படங்கள் மற்றும் காட்சிகளை பதிவு செய்ததாக சந்தேகநபர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/50f0bf14-26d9-4bc3-b73a-68f6f5e7d159/26-6a7e188d79c18.webp' /></p><p>இந்த சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட நான்கு பெண்கள் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.</p><p> அதன் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் பின்னர் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
இந்நிலையில், குறித்த பெண்களில் ஒருவர் கழிப்பறைக்கு அருகில் இரண்டு துளைகள் காணப்பட்ட காகிதத் துண்டொன்றை அவதானித்துள்ளார். </p><p>அதனை பரிசோதித்தபோது, காகிதத்திற்குள் கைபேசி ஒன்று மறைத்து வைக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
இதனையடுத்து குறித்த கைபேசியை எடுத்துச் சென்ற அவர், சம்பவம் தொடர்பில் ஏனைய பெண்களுக்கும் தெரியப்படுத்தியுள்ளார்.
</p><p>
பின்னர், குறித்த கைபேசியில் இருந்த சிம் அட்டையை அகற்றி தனது தனிப்பட்ட மடிக்கணினியில் பயன்படுத்திப் பார்த்தபோது, அதில் பெண்களின் நிர்வாணப் புகைப்படங்கள் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><p>

இதனைத் தொடர்ந்து இரத்தினபுரி பொலிஸாருக்கு முறைப்பாடு செய்யப்பட்ட நிலையில், சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
</p><p>
விசாரணைகளின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர், இரத்தினபுரி நீதவான் சமன் டி.கே. பரணாலியனகே முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.
</p><p>
குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டதாகத் தெரிவிக்கப்படும் சந்தேகநபரை எதிர்வரும் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
</p><p>
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மற்றும் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தினர் முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-13T20:27:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[டொனால்ட் ட்ரம்பின் 'ட்ரூத் சோஷியல்' செயலி மீது தொடரப்பட்டுள்ள வழக்கு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/trump-truth-social-faces-lawsuit-over-100-000-news-1786649713"></link>
            <id>https://tamilwin.com/article/trump-truth-social-faces-lawsuit-over-100-000-news-1786649713</id>
            <summary type="text">அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் &#039;ட்ரூத் சோஷியல்&#039; சமூக வலைத்தளத்தில்,
அவரது பதிவுகளை மற்றவர்களுக்கு முன்பாகவே நொடிப் பொழுதில் பெறும் &#039;Truth API&#039;...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் 'ட்ரூத் சோஷியல்' சமூக வலைத்தளத்தில்,
அவரது பதிவுகளை மற்றவர்களுக்கு முன்பாகவே நொடிப் பொழுதில் பெறும் 'Truth API'
எனும் புதிய சேவைக்கு எதிராக நியூயோர்க் கூட்டாட்சி நீதிமன்றத்தில் வழக்கு
தொடரப்பட்டுள்ளது.</p><p>

'தி இன்டர்செப்ட்' (The Intercept) மற்றும் 'ஃபிரீடம் ஒஃப் தி பிரஸ்
ஃபவுண்டேஷன்' (Freedom of the Press Foundation) ஆகிய இரண்டு அமெரிக்க ஊடக
அமைப்புகள் இணைந்து இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளன.</p><h2>&nbsp;ட்ரம்பின் 'ட்ரூத் சோஷியல்'</h2><p>

மாதத்திற்கு 100,000 டொலர் (சுமார் 74,000 பவுண்டுகள்) வரை கட்டணம்
வசூலிக்கும் இந்தச் சேவையின் மூலம், சந்தைப் பொருளாதாரத்தை பாதிக்கும்
ஜனாதிபதியின் முக்கிய அறிவிப்புகள் சிலருக்கு மட்டும் முன்கூட்டியே கிடைப்பதாக
மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e76574fc-96ea-41e8-b950-6aa272671e6c/26-6a7e1e816b366.webp' /></p><p>

இது "மிகவும் ஊழல் நிறைந்தது மற்றும் அரசியலமைப்புச் சட்டத்துக்கு முரணானது"
என்றும் மனுதாரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
</p><p>
இதற்கு பதிலளித்துள்ள 'ட்ரம்ப் மீடியா எண்ட் டெக்னாலஜி குரூப்' (TMTG),
ஜனாதிபதியை தணிக்கை செய்யும் நோக்கத்துடன் "இடதுசாரி செயற்பாட்டாளர்கள்"
நீதிமன்றத்தை தவறாகப் பயன்படுத்துவதாகக் குற்றம்சாட்டியுள்ளது.</p><p>

தற்போது வரை 10-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இந்த அதிவேக சேவைக்கு சந்தா
செலுத்தியுள்ள நிலையில், வெள்ளை மாளிகை தரப்பில் இதுவரை இதற்கான அதிகாரப்பூர்வ
விளக்கம் எதுவும் அளிக்கப்படவில்லை.</p>]]></content>
            <updated>2026-08-13T20:14:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[கத்தோலிக்க சபையுடன் அரசாங்கம் முக்கிய கலந்துரையாடல் ; பாடசாலைகள் தொடர்பில் பல தீர்மானங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/government-holds-important-discuss-catholic-church-1786651927"></link>
            <id>https://jvpnews.com/article/government-holds-important-discuss-catholic-church-1786651927</id>
            <summary type="text">விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் கிரிஷாந்த அபேசேன மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க ஆகியோரின் இணைத் தலைமையில் கத்தோலி...</summary>
            <content type="html"><![CDATA[<p>விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் கிரிஷாந்த அபேசேன மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க ஆகியோரின் இணைத் தலைமையில் கத்தோலிக்க சபையுடனான கலந்துரையாடல் இன்று (13) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.</p><p> </p><p></p><p>அரசாங்கத்தினால் பொறுப்பேற்கப்பட்ட கத்தோலிக்கப் பாடசாலைகளின் நிர்வாகச் சிக்கல்கள், கத்தோலிக்க மதத்திற்கான ஆசிரியர்கள் தொடர்பான பொறிமுறையினைத் தயாரித்தல், ஆசிரியர் தொழிலுக்காக கத்தோலிக்கத் கன்னியாஸ்திரிகளையும் அருட்தந்தைமார்களையும் உள்வாங்குவது குறித்த தற்போதைய முன்னேற்றங்களை மீளாய்வு செய்தல் என்பன இதன்போது இடம்பெற்றன.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d5f1bc70-296a-428b-8f9b-d8aef1e300a4/26-6a7e26192d889.webp' /></p><p>மேலும், அரசாங்கத்தினால் பொறுப்பேற்கப்பட்ட பாடசாலைகளின் செயற்பாடுகள் தொடர்பாக கல்வி அமைச்சின் ஆதரவைப் பெறும் முறைமை பற்றியும் கலந்துரையாடப்பட்டது.</p><p> 

வருடத்திற்கு மூன்று தடவைகள் கத்தோலிக்க சபையுடன் கலந்துரையாடல்கள் நடத்தப்படுவது தொடர்பில் கத்தோலிக்க சபை சார்பில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க உள்ளிட்ட அரசாங்கத்திற்கு தமது நன்றியைத் தெரிவிப்பதாக இதன்போது கருத்துத் தெரிவித்த பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை குறிப்பிட்டார். </p><p>

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் காரணமாக நாட்டின் சமுத்திர எல்லைக்கு ஏற்பட்டுள்ள சேதம் தொடர்பாக அரசாங்கம் மேலும் ஆராய வேண்டும் என்றும் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை இங்கு தெரிவித்தார். </p><p>

எந்தவித பேதமுமின்றி அனைத்து மாணவர்களுக்கும் தங்களது மதத்தைக் கற்றுக்கொள்வதற்கான வாய்ப்பினை உறுதிப்படுத்திக் கொள்வதே தமது அபிலாஷை என்றும், கல்வித்துறையில் ஏற்பட்டுள்ள நிலைமையை நிவர்த்தி செய்து கொள்ள வேண்டும் என்பதையும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-13T20:12:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் கிளம்பிய எதிர்ப்புப் புயல்! அமெரிக்கத் தூதுவருக்குப் பாரிய சிக்கல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/petition-demands-us-envoy-expulsion-from-canada-1786649595"></link>
            <id>https://ibctamil.com/article/petition-demands-us-envoy-expulsion-from-canada-1786649595</id>
            <summary type="text">70,000 இற்கும் மேற்பட்ட கனடா குடிமக்கள் இணையவழி மனுவில் கையெழுத்திட்டுள்ளனர்.

கனடாவுக்கான அமெரிக்கத் தூதுவர் பீட் ஹோக்ஸ்ட்ராவை தூதுவர் பதவியிலிருந்...</summary>
            <content type="html"><![CDATA[<p>70,000 இற்கும் மேற்பட்ட கனடா குடிமக்கள் இணையவழி மனுவில் கையெழுத்திட்டுள்ளனர்.
</p><p>
கனடாவுக்கான அமெரிக்கத் தூதுவர் பீட் ஹோக்ஸ்ட்ராவை தூதுவர் பதவியிலிருந்து நீக்கி நாட்டிலிருந்து வெளியேற்ற வேண்டும் என வலியுறுத்தி இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
</p><p>
கனடாவின் உள்நாட்டு அரசியல் விவகாரங்களில் அவர் தலையிடுவதாகக் கூறி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p>
</p><p></p><h2>ட்ரம்பின் நிர்வாகம்&nbsp;</h2><p>அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகம் கனடாவை அமெரிக்காவின் 51 ஆவது மாநிலமாக இணைப்பது குறித்துப் பேசிய கருத்துகளைத் தூதுவர் ஹோக்ஸ்ட்ரா நியாயப்படுத்திப் பேசியதே இந்த எதிர்ப்பிற்குக் முக்கியக் காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f5fef211-be9c-4133-99ff-bddf0d1193f5/26-6a7e21dd9bf37.webp' /></p><p>

கனடாப் பொருட்களுக்கு அமெரிக்கா 50 வீதம் கூடுதல் வரி விதிக்கத் திட்டமிட்டுள்ளதால் இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தகப் போர் தீவிரமடைந்துள்ள சூழலில் இந்த மனு விரைவில் கனடா நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-13T20:10:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[Powerball லொட்டரியில் 1 பில்லியன் டொலர் வென்ற நபர்: உரிமை கோர ஓராண்டு அவகாசம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/someone-won-1-billion-powerball-1786651825"></link>
            <id>https://news.lankasri.com/article/someone-won-1-billion-powerball-1786651825</id>
            <summary type="text">Someone won $1 billion in Powerball: இல்லினாய்ஸில் உள்ள ஒருவர் பவர்பால் லொட்டரியில் 1 பில்லியன் டொலர்களை வென்றுள்ளார்.

புதன்கிழமை இரவு நடைபெற்ற 1.0...</summary>
            <content type="html"><![CDATA[<p>Someone won $1 billion in Powerball: இல்லினாய்ஸில் உள்ள ஒருவர் பவர்பால் லொட்டரியில் 1 பில்லியன் டொலர்களை வென்றுள்ளார்.
</p><p>
புதன்கிழமை இரவு நடைபெற்ற 1.04 பில்லியன் டொலர் பவர்பால் குலுக்கலுக்கான வெற்றியாளர் அமெரிக்காவின் இல்லினாய்ஸில் மாகாணத்தை சேர்ந்தவர் என தகவல் வெளியாகியுள்ளது.</p><h2>ஓராண்டுக்குள்</h2><p>
</p><p>இது கடந்த ஆண்டுக்குப் பிறகு கிடைத்த மிகப்பெரிய பெரும் பரிசுத்தொகை என லொட்டரி நிறுவனம் தெரிவித்துள்ளது. </p><p>மேற்கு இல்லினாய்ஸில் உள்ள ஸ்பிரிங்ஃபீல்டிலிருந்து மேற்கே சுமார் 100 மைல் தொலைவில் அமைந்துள்ள குவின்சி பகுதியில் ஒரு 'ஹை-வீ' (Hy-Vee) எரிபொருள் நிலையத்தில் இருந்து அந்தச் சீட்டு வாங்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dfaa94e6-0aa1-4e8d-8af0-962d24bf4dd4/26-6a7e24b381b96.webp' /></p><p> </p><p>இல்லினாய்ஸ் லொட்டரி அமைப்பின் தகவலின்படி, ஜாக்பாட் பரிசை வென்ற சீட்டை விற்பனை செய்ததற்காக Hy-Vee எரிபொருள் நிலையத்திற்கு 500,000 டொலர் ரொக்கப் போனஸ் வழங்கப்படும். </p><p>இல்லினாய்ஸ் மாகாணத்தில் லொட்டரி வெற்றியாளர் தனது அடையாளத்தை வெளிப்படுத்தாமலே இருக்க முடியும் என்பதால், அந்த வெற்றியாளர், 29 ஆண்டுகளில் 30 தவணைகளாக வழங்கப்படும் 1.04 பில்லியன் டொலர் மதிப்பிலான வருடாந்திரத் தவணை முறையிலான பரிசைப் பெறுவதைத் தெரிவு செய்யலாம். </p><p>அல்லது 450.5 மில்லியன் டொலர் என மதிப்பிடப்பட்ட ஒரு தொகையை மொத்தமாகப் பெறலாம். இவ்விரு தொகைகளும் வரிக்கு உட்பட்டவை ஆகும்.</p><p> குலுக்கல் நடைபெற்ற திகதியிலிருந்து ஓராண்டுக்குள் வெற்றியாளர் பரிசைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று லொட்டரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.</p><p></p><p>
மாசசூசெட்ஸில் விற்கப்பட்ட ஒரு டிக்கெட், பவர் பிளே மல்டிபிளையருடன் ஆறு எண்களில் ஐந்து எண்களைப் பொருத்தி 2 மில்லியன் டொலர்களை வென்றுள்ளது. </p><p>அதே நேரத்தில், அரிசோனா, கலிபோர்னியா, புளோரிடா மற்றும் வட கரோலினா ஆகிய நான்கு மாகாணங்களில் விற்கப்பட்ட ஐந்து டிக்கெட்டுகள் தலா 1 மில்லியன் டொலர்களை வென்றன என்று லொட்டரி நிறுவனம் தெரிவித்துள்ளது. </p><p>கடந்த ஆண்டு கிறிஸ்துமஸ் தினத்தன்று ஆர்கன்சாஸைச் சேர்ந்த ஒருவர் 1.8 பில்லியன் டொலர்களை வென்ற பிறகு, புதன்கிழமை நடந்த குலுக்கல்தான் முதல் பில்லியன் டொலர் பவர்பால் ஜாக்பாட் ஆகும். </p><p>மே 2 அன்று புளோரிடா மற்றும் டெக்சாஸைச் சேர்ந்த இருவர் 20 மில்லியன் டொலர் பரிசைப் பகிர்ந்துகொண்ட பிறகு, கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக ஒருவர் முதன்மைப் பரிசை வென்றது இதுவே முதல் முறையாகும்.</p><h2>மிகப்பெரிய பவர்பால் பரிசு</h2><p> </p><p>புதன்கிழமை நடந்த ஆட்டம், தற்போதைய ஜாக்பாட் தொடரில் நடைபெற்ற 44வது தொடர்ச்சியான குலுக்கலாகும், மேலும் அதன் பரிசுத்தொகை பவர்பால் வரலாற்றில் எட்டாவது பெரிய பரிசுத்தொகையாகப் பதிவாகியுள்ளது.</p><p> 2016-ல் 1.586 பில்லியன் டொலர் பவர்பால் பரிசைப் பிரித்துக்கொண்டதன் மூலம், புளோரிடா, கலிபோர்னியா மற்றும் டென்னசியைச் சேர்ந்த மூவர் 1 பில்லியன் டொலருக்கும் அதிகமான ஜாக்பாட்டை வென்ற முதல் நபர்கள் ஆனார்கள். </p><p>பதிவுசெய்யப்பட்டதிலேயே மிகப்பெரிய பவர்பால் பரிசுத் தொகையான 2.04 பில்லியன் டொலர்கள் 2022-ல் கலிபோர்னியாவில் வெல்லப்பட்டது; கடந்த ஆண்டு ஆர்கன்சாஸில் வெல்லப்பட்ட 1.8 பில்லியன் டொலர் ஜாக்பாட் பரிசு இரண்டாவது இடத்தைப் பிடிக்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0b418f82-c365-487f-8b3e-06bda943ebef/26-6a7e24b433dea.webp' /></p><p> </p><p>புளோரிடா, டெக்சாஸ் மற்றும் டென்னசி உள்ளிட்ட சில மாகாணங்கள் லொட்டரி பரிசுத்தொகைக்கு வரி விதிப்பதில்லை. பெரும்பாலான பவர்பால் மற்றும் பிற முக்கிய லொட்டரி வெற்றியாளர்கள், ஆண்டுத் தவணைகளை விட மொத்தத் தொகையையே தெரிவு செய்கின்றனர். </p><p>பவர்பால் சீட்டுகள் அமெரிக்காவின் 45 மாகாணங்கள், கொலம்பியா மாவட்டம், புவேர்ட்டோ ரிக்கோ, அமெரிக்க விர்ஜின் தீவுகள் மற்றும் பிரித்தானியா ஆகியவற்றில் விற்பனை செய்யப்படுகின்றன. </p><p>குலுக்கல்கள் ஒவ்வொரு திங்கள், புதன் மற்றும் சனிக்கிழமைகளில் இரவு 10:59 மணிக்கு (ET) நடைபெறுகின்றன.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-13T20:08:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[நுவரெலியா கித்துள்கலை பகுதியில் கைகுண்டு மீட்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/hand-grenade-recovered-kithulkala-nuwara-eliya-1786650531"></link>
            <id>https://jvpnews.com/article/hand-grenade-recovered-kithulkala-nuwara-eliya-1786650531</id>
            <summary type="text">நுவரெலியா, கித்துல்கலை பகுதியில் கைக்குண்டொன்று மீட்கப்பட்டுள்ளது.குறித்த பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் கைக்குண்டொன்று காணப்படுவதாக காவல்துறைய...</summary>
            <content type="html"><![CDATA[<p>நுவரெலியா, கித்துல்கலை பகுதியில் கைக்குண்டொன்று மீட்கப்பட்டுள்ளது.</p><p></p><p>குறித்த பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் கைக்குண்டொன்று காணப்படுவதாக காவல்துறையினருக்கு நேற்று தகவல் கிடைத்துள்ளது.
</p><p>
இதனையடுத்து சம்பவ இடத்துக்குச் சென்ற கித்துல்கலை காவல்துறையினர் அந்தப் பகுதியை பாதுகாப்பான முறையில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததுடன், விசேட அதிரடிப்படையினருக்கும் தகவல் வழங்கியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e17ff9a7-2f00-43a6-ab06-7b2adabcb52c/26-6a7e1fa572957.webp' /></p><p>

பின்னர் காவல்துறையினரும் விசேட அதிரடிப்படையினரும் இணைந்து முன்னெடுத்த நடவடிக்கையின் மூலம் மீட்கப்பட்ட கைக்குண்டு உரிய பாதுகாப்பு நடைமுறைகளுக்கு அமைய செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளது.
</p><p>
இதன் மூலம் அந்தப் பகுதியில் ஏற்படக்கூடிய ஆபத்து தவிர்க்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p>

எவ்வாறாயினும், குறித்த கைக்குண்டு அந்தப் பகுதிக்கு எவ்வாறு கொண்டு வரப்பட்டது, அது எவ்வளவு காலமாக அங்கு இருந்தது என்பது தொடர்பில் இதுவரை உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை.
</p><p>
மேலும், கைக்குண்டு மீட்கப்பட்ட பகுதி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வேறு ஏதேனும் வெடிபொருட்கள் அல்லது சந்தேகத்திற்கிடமான பொருட்கள் உள்ளனவா என்பது குறித்தும் விசாரணைகள் முன்னெடுத்து வருவதாகவும் கித்துல்கலை காவல்துறையினர் தெரிவித்தனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-13T19:48:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[மனிதர்களின் உணர்வுகளை நாய்கள் புரிந்து கொள்ளுமா? விஞ்ஞானிகள் வெளியிட்ட புதிய ஆதாரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/dogs-understand-human-emotions-scientist-find-evid-1786649750"></link>
            <id>https://jvpnews.com/article/dogs-understand-human-emotions-scientist-find-evid-1786649750</id>
            <summary type="text">மனிதர்களின் முகபாவனைகளில் வெளிப்படும் உணர்வுகளை நாய்களால் வேறுபடுத்தி அறிந்துகொள்ள முடியும் என்பதற்கான முதல் ஆதாரம் கிடைத்துள்ளதாக வியன்னா பல்கலைக்கழக...</summary>
            <content type="html"><![CDATA[<p>மனிதர்களின் முகபாவனைகளில் வெளிப்படும் உணர்வுகளை நாய்களால் வேறுபடுத்தி அறிந்துகொள்ள முடியும் என்பதற்கான முதல் ஆதாரம் கிடைத்துள்ளதாக வியன்னா பல்கலைக்கழக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.</p><p>
</p><p></p><p>நாய்களின் மூளைச் செயல்பாடுகளை ஆய்வு செய்ததன் மூலம் இந்த ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.</p><p>

இதற்காக 12 நாய்களின் மூளைச் செயல்பாடுகள் ஆய்வு செய்யப்பட்டதுடன், வெவ்வேறு உணர்வுகளை வெளிப்படுத்தும் மனிதர்களின் முகப்படங்கள் அவற்றுக்குக் காண்பிக்கப்பட்டுள்ளன.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/92ccf06f-cf23-4faa-a6c5-8daf17de00a9/26-6a7e1c98166a5.webp' /></p><p>ஆய்வில், மகிழ்ச்சியான முகங்களைப் பார்த்தபோது நாய்களின் மூளையில் உயர்நிலை அறிவாற்றல் செயல்பாடுகள் மற்றும் வெகுமதி உணர்வுடன் தொடர்புடைய Temporal Cortex மற்றும் Caudate Nucleus ஆகிய பகுதிகள் செயல்பட்டதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
</p><p>
மறுபுறம், கோபம், பயம் மற்றும் சோகம் போன்ற உணர்வுகளை வெளிப்படுத்தும் முகங்களைப் பார்த்தபோது, இந்த குறிப்பிட்ட மூளைப் பகுதிகளில் அதே அளவிலான செயல்பாடு காணப்படவில்லை என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.</p><p>

எனினும், ஒட்டுமொத்த மூளையின் செயல்பாட்டை ஆய்வு செய்தபோது, பயம், கோபம் மற்றும் சோகம் ஆகிய எதிர்மறை உணர்வுகளை நாய்கள் தனித்தனியாக வேறுபடுத்தி அறிந்துகொள்ளக்கூடும் என்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
</p><p>
மனிதர்களுடன் நீண்டகாலமாக இணைந்து வாழ்ந்ததன் விளைவாக, மனிதர்களின் முகபாவனைகளைப் புரிந்துகொண்டு அவர்களுடன் ஒத்துழைக்கும் வகையில் நாய்கள் பரிணாம வளர்ச்சி பெற்றிருக்கலாம் என அறிவியல் நிபுணர் லோரா குவாயா தெரிவித்துள்ளார்.
</p><p>
அடுத்தகட்ட ஆய்வுகளில், மனிதர்களின் உடல் மொழி, குரலில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் வாசனை உள்ளிட்ட பல்வேறு சைகைகளை நாய்கள் எவ்வாறு ஒருங்கிணைத்து மனிதர்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்கின்றன என்பது குறித்து ஆய்வு செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>

இந்த ஆய்வில் பங்கேற்ற அனைத்து நாய்களும் அன்பான குடும்பங்களில் வளர்க்கப்பட்ட செல்லப்பிராணிகள் என்பதுடன், வேறுபட்ட சூழலில் வளர்ந்த நாய்கள் மனிதர்களின் உணர்வுகளுக்கு மாறுபட்ட விதத்தில் பதிலளிக்கக்கூடும் என்பதையும் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-13T19:35:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[DC பாத்துட்டு என் Family-ஏ என்ன வெறுக்குறாங்க | DC Bhojaraj Exclusive]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/dc-bhojaraj-exclusive-srikrishna-dayal-1786640557"></link>
            <id>https://cineulagam.com/article/dc-bhojaraj-exclusive-srikrishna-dayal-1786640557</id>
            <summary type="text">டிசி திரைப்படம்தமிழ்த் திரையுலகின் முன்னணி இயக்குநரான லோகேஷ் கனகராஜ் நாயகனாக நடித்து இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி வெளியான படம் “டிசி...</summary>
            <content type="html"><![CDATA[<h2>டிசி திரைப்படம்</h2><p>தமிழ்த் திரையுலகின் முன்னணி இயக்குநரான லோகேஷ் கனகராஜ் நாயகனாக நடித்து இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி வெளியான படம் “டிசி”. </p><p>இப்படம், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

அனிருத் இசையமைத்துள்ள இந்தப் படத்தில், வாமிகா கபி, சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.&nbsp;&nbsp;</p><p>படம் சமீபத்தில் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் கலக்கிவரும் நிலையில் இப்படம் குறித்து நிறைய விஷயங்களை நமது சினிஉலகம் யூடியூப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் Bhojaraj. இதோ அவரது பேட்டியை காண்போம்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/pfnU64kk3LM" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-08-13T19:30:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[4 வினாடியில் ஒரு வருடச் சம்பளம் - மஸ்க்கின் வருமானம்...! வெளியான அறிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/elon-musk-paid-2-5m-times-more-than-staff-1786642063"></link>
            <id>https://ibctamil.com/article/elon-musk-paid-2-5m-times-more-than-staff-1786642063</id>
            <summary type="text">அமெரிக்காவின் மின்சார வாகனத் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லாவில் (Tesla) கடந்த 2025 ஆம் ஆண்டில் அதன் சராசரி ஊழியர் பெற்ற ஊதியத்தை விட அந்நிறுவனத்தின் தலைமை...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவின் மின்சார வாகனத் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லாவில் (Tesla) கடந்த 2025 ஆம் ஆண்டில் அதன் சராசரி ஊழியர் பெற்ற ஊதியத்தை விட அந்நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியான (CEO) எலான் மஸ்க்கிற்கு 25 லட்சம் மடங்கு கூடுதல் ஊதியம் வழங்கியுள்ளதாக புதிய அறிக்கை ஒன்று வெளிப்படுத்தியுள்ளது.</p><p>

அமெரிக்காவின் மிகப்பெரிய தொழிற்சங்க கூட்டமைப்பான AFL-CIO வெளியிட்ட நிர்வாகிகள் ஊதியக் கண்காணிப்பு (Executive Pay Watch) அறிக்கையில் இந்த தகவல் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
</p><p>
கடந்த ஆண்டில் எலான் மஸ்க்கின் மொத்த ஊதியப் தொகுப்பு 158.3 பில்லியன் அமெரிக்க டாலர்களாக ($158.3bn) இருந்தது.</p><p>
</p><p></p><h2>ஊதிய விகிதம்&nbsp;</h2><p>அறிக்கையின்படி, 2025 ஆம் ஆண்டில் ஒரு சாதாரண டெஸ்லா ஊழியர் ஒரு வருடம் முழுமையாக உழைத்து ஈட்டும் சராசரி ஊதியத்தை எலான் மஸ்க் வெறும் 4.23 வினாடிகளில் ஈட்டியுள்ளார்.</p><p>

எலான் மஸ்க்கின் ஊதியத்தையும் சேர்த்து கணக்கிட்டால், டெஸ்லாவின் CEO - ஊழியர் ஊதிய விகிதம் 5,387 : 1 ஆக உயர்ந்துள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/44358eb5-4213-47a5-b1e7-75c1e67fbf55/26-6a7e16723c335.webp' /></p><p>மஸ்க்கை விலக்கிப் பார்த்தால் S&amp;P 500 முன்னணி நிறுவனங்களின் சராசரி CEO - ஊழியர் ஊதிய விகிதம் 312 : 1 ஆக உள்ளது (இது 2024-இல் 285 : 1 ஆக இருந்தது).</p><p>

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னரான காலத்தில் அமெரிக்க தேசிய வருவாயில் தொழிலாளர்களின் பங்கு தற்போதைய அளவிற்குக் குறைந்ததே இல்லை என குறித்த அறிக்கை கவலை தெரிவித்துள்ளது.</p><p>
</p><p></p><h2>மிகப்பெரிய வரிவிலக்கு</h2><p>இவ்வறிக்கையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் வருமானமும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. </p><p>

கிரிப்டோ முதலீடுகள் மூலம் 2025 இல் ட்ரம்ப்பின் வருமானம் $2.2 பில்லியனாக (254% உயர்வு) அதிகரித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b0de0656-5165-41a8-ac8a-c7dfeba6d8a6/26-6a7e1672e09d2.webp' /></p><p> 

ஒரு சாதாரண அமெரிக்க ஊழியர் இந்தத் தொகையை ஈட்ட 43,154 ஆண்டுகள் தேவைப்படும்.</p><p>

AFL-CIO கூட்டமைப்பின் செயலாளர் ஃப்ரெட் ரெட்மண்ட் கூறுகையில், "கார்ப்பரேட்களுக்கும் கோடீஸ்வரர்களுக்கும் மிகப்பெரிய வரிவிலக்குகளை வழங்குவதற்காக ஏழை எளிய குடும்பங்களுக்கான சுகாதார மற்றும் உணவு உதவிகளை முடக்கி பொருளாதாரத்தை தங்களுக்கு சாதகமாக அமைத்துக் கொண்டுள்ளனர்" எனக் கடுமையாகச் சாடியுள்ளார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-13T19:22:21+00:00</updated>
        </entry>
    </feed>
