<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-09-12T04:19:52+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Diasa</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஒன்ராறியோவில் முதன்முறையாக செயற்கை நுண்ணறிவுக்கான இணை அமைச்சர் நியமனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/appointment-of-minister-of-state-for-ai-1789186610"></link>
            <id>https://tamilwin.com/article/appointment-of-minister-of-state-for-ai-1789186610</id>
            <summary type="text">ஒன்ராறியோவின் முதலாவது செயற்கை நுண்ணறிவுப் பயன்பாட்டுத் துறைக்கான இணை
அமைச்சராக விஜய் தணிகாசலம் நியமிக்கப்பட்டுள்ளார்.  
 

இந்த நியமனத்தை ஒன்ராறி...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஒன்ராறியோவின் முதலாவது செயற்கை நுண்ணறிவுப் பயன்பாட்டுத் துறைக்கான இணை
அமைச்சராக விஜய் தணிகாசலம் நியமிக்கப்பட்டுள்ளார். </p><p> 
 

இந்த நியமனத்தை ஒன்ராறியோ முதல்வர் டக் ஃபோர்டுவினால் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><h2>இணை
அமைச்சர் நியமனம்</h2><p>

இது பொது சேவைக்கான அவரது அர்ப்பணிப்புக்கும் மாநிலத்தின் முன்னேற்றத்திற்கான
அவரது பங்களிப்பிற்கும் கொடுக்கப்பட்ட அங்கீகாரம் என்றும், இந்தப் புதிய அமைச்சகம்,
தொழில்நுட்பமும் செயற்கை நுண்ணறிவும் எவ்வளவு வேகமாக வளர்ந்து வருகின்றன என்றும் கூறப்படுகின்றது. </p><p>



அத்துடன், பொருளாதாரத்தை வலுப்படுத்தவும், எதிர்கால சிறந்த
வாய்ப்புகளுக்குத் தயாராகவும் ஒன்ராறியோவுக்கு அர்ப்பணிப்புடன் செயற்படும்
தலைவர்கள் தேவை என்பதையும் எடுத்துக்காட்டுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fd63cb75-e514-46b8-803a-33c24d4866d8/26-6aa4d29a2536e.webp' /></p><p> </p><p>

அமைச்ச‌ர் விஜய் தணிகாசலம், கடந்த 2018ஆம் ஆண்டில் இருந்து மூன்றாவது முறையாக
ஸ்கார்பரோ-ரூஜ் பார்க்
தொகுதியின் ஒன்ராறியோ சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றி வருவதுடன், மேலும்
2023ஆம் ஆண்டில் ஒன்ராறியோவில் அமைச்சரவைப் பதவியை வகித்த முதல் தமிழ்
அரசியல்வாதி என்ற வரலாற்றையும் படைத்தார்.</p><p> 

உலகப் பொதுமறை தந்த திருவள்ளுவரின்
வான்புகழ் திருக்குறளின் மீது மீண்டும் ஒருமுறை பதவிப் பிரமாணம் செய்து
கொண்டதன் மூலம் அவர், தனது தமிழ் மரபுடனான அவரின் ஆழமான தொடர்பையும்
வெளிப்படுத்தியிருந்தார்.
</p><h2>

பொருளாதாரத்தை மேம்படுத்த திட்டம்</h2><p>

அவர் முன்னதாக 2023ஆம் ஆண்டில் போக்குவரத்துக்கான இணை அமைச்சராகவும், 2024ஆம்
ஆண்டில் வீட்டுவசதிக்கான இணை அமைச்சராகவும், சமீபத்தில் சுகதாரா இணை
அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2dcc7fe1-d0bb-4d4d-8bd9-3ff945bd8013/26-6aa4d29b0583e.webp' /></p><p>
</p><p>

அவரது குறிப்பிடத்தக்க சாதனைகளில், 2023ஆம் ஆண்டில் போக்குவரத்துத் துறையில்
அறிமுகப்படுத்தப்பட்ட “ஒற்றைக் கட்டண (One Fare)” திட்டம், ஸ்காபரோவில்
முதன்முதலாக அமைக்கப்பட்ட மருத்துவக் கல்லூரி, வீடின்மை, போதைப் பயன்பாடு
அல்லது உளநல சவால்களை எதிர்கொள்பவர்களுக்கு ஆதரவும் சிகிச்சையும் அளிக்கும்
வகையில் “வீடின்மை மற்றும் போதை பயன்பாட்டில் சிக்கியோருக்கான மீட்பு
சிகிச்சை மையங்களை” (HART Hubs) அமைத்தமை போன்றன உள்ளடங்கும். </p><p>

செயற்கை நுண்ணறிவு தொடர்ந்து நவீனமடைந்து பல ஒன்ராறியோவாசிகளின் வாழ்க்கையில்
தாக்கத்தை ஏற்படுத்தி வருவதால், செயற்கை நுண்ணறிவுத் துறையில் புதிய
வாய்ப்புகளைப் பெறவும், பொருளாதார வளர்ச்சியை ஆதரிக்கவும், மாறிவரும் உலகளாவிய
சூழலில் போட்டித்தன்மையுடன் இருக்கவும், உரிய கட்டுப்பாட்டு வழிமுறைகளை
வகுப்பதிலும், ஒன்ராறியோவவின் வளர்ச்சிக்கு உதவுவதில் விஜய் தணிகாசலமின் 
தலைமைத்துவம் இன்றியமையாததாக அமையும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.&nbsp;</p><p></p><p></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-12T04:18:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Fathima</name>
            </author>
            <title type="text"><![CDATA[நடிகர் அஜித் பங்கேற்கும் கார்பந்தயத்தை தொடங்கி வைக்கிறார் விஜய்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/cm-vijay-is-flagging-off-the-le-mans-cup-car-race-1789186374"></link>
            <id>https://ibctamilnadu.com/article/cm-vijay-is-flagging-off-the-le-mans-cup-car-race-1789186374</id>
            <summary type="text">பிரபல நடிகர் அஜித் கலந்துகொள்ளும் Le Mans cup silverstone கார்பந்தய போட்டியில் தமிழக முதலமைச்சர் விஜய் இன்று கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.

தமிழகத...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரபல நடிகர் அஜித் கலந்துகொள்ளும் Le Mans cup silverstone கார்பந்தய போட்டியில் தமிழக முதலமைச்சர் விஜய் இன்று கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.</p><p>

தமிழகத்திற்கு புதிய முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் தமிழக முதலமைச்சர் விஜய் செப்டம்பர் 10ம் தேதி லண்டன் புறப்பட்டு சென்றார்.
</p><p>
இந்த பயணத்தின் ஒரு நிகழ்வாக இன்று Le Mans cup silverstone கார் பந்தயத்தை விஜய் தொடங்கிவைக்கவுள்ளார். </p><p>இத்தகவலை நடிகர் அஜித் உறுதிப்படுத்தியுள்ளார்.

இப்போட்டியில் நடிகர் அஜித் பங்கேற்கிறார் என்பதால் விஜய்- அஜித் இருவரும் சந்தித்துக்கொள்ளலாம்.</p><p>திரைப்படங்களில் அவரது ரசிகர்கள் போட்டியாக பார்க்கப்பட்டாலும் இருவருக்கும் நல்ல நட்பு இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a4526e03-ea02-47c7-8cbc-fc285480b1e9/26-6aa4d1fd60bbd.webp' /><br></p>]]></content>
            <updated>2026-09-12T04:16:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு எதிராக 50 பக்க அறிக்கை! இலஞ்சம் - ஊழல் -பக்கச்சார்பு...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/attorney-general-department-sri-lanka-1789185996"></link>
            <id>https://tamilwin.com/article/attorney-general-department-sri-lanka-1789185996</id>
            <summary type="text">சட்டமா அதிபர் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்பட்ட துஷ்பிரயோகம் மற்றும் இலஞ்ச - ஊழல் -பக்கச்சார்பான செயற்பாடுகள் தொடர்பில் 50 பக்கங்களை கொண்ட அறிக்கையொன...</summary>
            <content type="html"><![CDATA[<p>சட்டமா அதிபர் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்பட்ட துஷ்பிரயோகம் மற்றும் இலஞ்ச - ஊழல் -பக்கச்சார்பான செயற்பாடுகள் தொடர்பில் 50 பக்கங்களை கொண்ட அறிக்கையொன்றை ஜனாதிபதியின் கோரிக்கைக்கு இணங்க தயாரித்து கொடுத்ததாக சட்டத்தரணி அச்சலா செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
</p><p>ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதனை குறிப்பிட்டார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்:' சில ஊடகங்களில் அச்சலா தான் சட்டமா அதிபருக்கு எதிராக அறிக்கையைத் தயாரித்துக் கொடுத்தார் என்ற சந்தேகத்தில் செய்தி வெளியிட்டிருந்தன. ஆனால் அதுதான் உண்மை.</p><p>அவர்கள் செய்த ஊழல் செயல்கள் தொடர்பான வழக்குகளில் பாதிக்கப்பட்ட பெரும்பான்மையான மக்களின் சார்பாக ஆஜரான சட்டத்தரணி&nbsp; நான் தான். அதேபோல் பெண் சட்டத்தரணிகளும் இருந்தார்கள்.
</p><p></p><h2>அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள்</h2><p>அவர்கள் அனைவரையும் உள்ளடக்கி,அறிக்கையை நான் தயாரித்தேன். அதைத் தயாரித்தது இந்த நாட்டு மக்கள் மீது உள்ள அன்பினாலும், இந்த நாட்டு மக்களுக்கு நீதியும் நியாயமும் கிடைக்க வேண்டும் என்பதற்காகவுமே தவிர, எனக்கு உங்களுடன் எந்தவித தனிப்பட்ட பகையும் இல்லை.
</p><p>ஏனெனில் எனக்கு சட்டமா அதிபர் திணைக்களத்தின் சட்டமா அதிபர் பதவியைப் பெறவோ அல்லது அரசாங்க சட்டத்தரணியாகவோ எந்தவொரு காலத்திலும் எந்தவொரு வழியிலும் ஆசையோ அல்லது கோரிக்கையோ இருந்ததில்லை. </p><p>19 வருடங்களாக அப்படி எதுவும் இருக்கவில்லை. எனக்கு அப்படி சட்டமா அதிபர் திணைக்களத்திற்குச் செல்ல ஆசை இருந்திருந்தால், நான் சென்றிருக்க வேண்டும். </p><p>எனக்கு அப்படி எதுவுமே இருக்கவில்லை. ஆனால் நாங்கள் கஷ்டப்பட்டு, உயிர் அச்சுறுத்தல் மற்றும் பாதுகாப்பற்ற நிலையில் அன்று நிலவிய வன்முறை கலாசாரத்திற்குள், எங்கள் வீடுகளில் உள்ள சொந்தங்கள் மனதளவில் விழுந்து கிடந்த நேரத்தில் தான் நாங்கள் பாதிக்கப்பட்டவர்களுக்காகப் பணியாற்றினோம்.
</p><p>பாதிக்கப்பட்டவர்களின் அந்தத் துன்பம், அந்த வேதனை உங்களை விட எங்களுக்கு நன்றாகப் புரிகிறது. ஏனெனில் நாங்கள் அவற்றை எதிர்கொண்டோம். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a699d185-5310-4ace-a6cf-8fbd14db6541/26-6aa4cfcecff7b.webp' /></p><p>எங்களுக்கு சலுகைகள் இருக்கவில்லை.சிலர் சொல்கிறார்கள் நான் பெரிய பிரபல சட்டத்தரணி அல்ல என்று. ஆம், நான் பிரபல சட்டத்தரணி இல்லை. </p><p>ஆனால் நான் பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியிலும், அப்பாவி மக்கள் மத்தியிலும் பிரபலமடைந்தேன். அது எனக்குக் கௌரவம்.
அந்த அறிக்கையைத் தயாரிக்குமாறு கோரிக்கை விடுத்ததும் இந்த நாட்டின் ஜனாதிபதி தான்.</p><p>ஆனால் இறுதியில் அறிக்கையைத் தயாரித்து, தட்டு சூடான நேரத்தில் ரொட்டியைச் சுட்டுக் கொள்வதற்குப் பதிலாக, இப்போது நான் ஒரு ரொட்டியாக மாறியிருக்கிறேன். </p><p>அனைவரும் தட்டைச் சூடாக்கி ரொட்டியைச் சுட்டுக் கொண்டார்கள், இறுதியில் நான் தான் இப்போது ரொட்டியாக மாறியிருக்கிறேன் என்று எனக்குத் தோன்றுகிறது என குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-12T04:14:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை கடற்பரப்பில் உள்ள ஈரானிய கப்பலின் மாலுமிகளை மாற்ற அரசாங்கம் தீர்மானம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/replace-crew-members-of-iranian-ship-in-sri-lankan-1789184364"></link>
            <id>https://tamilwin.com/article/replace-crew-members-of-iranian-ship-in-sri-lankan-1789184364</id>
            <summary type="text">இலங்கையின் திருகோணமலை கடற்பரப்பில் நங்கூரமீட்டுள்ள ஈரானிய கப்பலின் மூன்று
மாலுமிகளையும் மாற்றுவதற்கு ஈரானிய அரசாங்கம் விடுத்த கோரிக்கைக்கு இலங்கை
இண...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் திருகோணமலை கடற்பரப்பில் நங்கூரமீட்டுள்ள ஈரானிய கப்பலின் மூன்று
மாலுமிகளையும் மாற்றுவதற்கு ஈரானிய அரசாங்கம் விடுத்த கோரிக்கைக்கு இலங்கை
இணக்கம் தெரிவித்துள்ளதாக பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p>நாடாளுமன்றத்தில் இந்த தகவலை வெளிப்படுத்தியுள்ளார்.&nbsp;</p><h2>நாடாளுமன்றத்தில் விடுத்த கோரிக்கை</h2><p>
இராஜதந்திர மற்றும் பாதுகாப்பு வழிகள் ஊடாக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படும்
என அவர் குறிப்பிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c29c4d68-2b72-41b7-b5ef-ad8c28669373/26-6aa4d02e4d53e.webp' /></p><p>
எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம், நீண்ட நாட்களாக மன
அழுத்தத்தில் இருக்கும் அந்த மூன்று ஈரானிய மாலுமிகளையும் மாற்ற
அனுமதிக்குமாறு நாடாளுமன்றத்தில் விடுத்த கோரிக்கைக்கு பதிலளிக்கும் போதே
பிரதி அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-12T04:10:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[செப்டம்பர் தாக்குதலுக்கு முன்னர் பிரித்தானியாவைக் குறி வைத்த ஒசாமா பின் லேடன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/bin-laden-plotting-attack-on-britain-1789185938"></link>
            <id>https://news.lankasri.com/article/bin-laden-plotting-attack-on-britain-1789185938</id>
            <summary type="text">Osama bin Laden was plotting terror attack on Britain before 9/11: 9/11 தாக்குதலுக்கு முன்பே ஒசாமா பின் லேடன் பிரித்தானியா மீது பயங்கரவாதத் தாக்குதல் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Osama bin Laden was plotting terror attack on Britain before 9/11: 9/11 தாக்குதலுக்கு முன்பே ஒசாமா பின் லேடன் பிரித்தானியா மீது பயங்கரவாதத் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டு வந்தார்.
</p><p>செப்டம்பர் 11 தாக்குதலுக்குப் பல ஆண்டுகளுக்கு முன்பே, பிரித்தானியா மீதே தாக்குதல் நடத்த ஒசாமா பின் லேடன் திட்டமிட்டதாக சிஐஏ-வின் (CIA) புதிய, பரபரப்பான குறிப்புகள் வெளிப்படுத்தியுள்ளன.</p><h2>பிரித்தானியாவும்</h2><p>
</p><p>பயங்கரவாதத் தாக்குதல்களின் 25-வது ஆண்டு நிறைவை முன்னிட்டு CIA வெளியிட்ட அதீத ரகசிய ஆவணங்களில் உள்ள தகவல்களின்படி, அல்-கொய்தாவின் தாக்குதல் பட்டியலில் பிரித்தானியாவும் இடம்பெற்றிருந்ததற்கான வலுவான அறிகுறிகள் இருந்ததாக அமெரிக்க உளவுத்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c8cd7044-99ed-4937-a4ff-4cfef83c65e7/26-6aa4cf942e8ec.webp' /></p><p> </p><p>CIA வெளியிட்ட பெருமளவிலான ஆவணங்களில், பின் லேடன் பிரித்தானியாவை குறிவைக்கத் திட்டமிட்டிருந்ததாகக் கூறும் 1998-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 28-ஆம் திகதியிட்ட ஆவணம் ஒன்றும் அடங்கும். </p><p>9/11 தாக்குதல் தொடர்பான தகவல்கள் இதுவரை இல்லாத அளவுக்கு மிகப் பெரிய அளவில் வெளியிடப்பட்ட நிலையில், புதிதாக ரகசியத் தன்மை நீக்கப்பட்ட 69 விளக்கக் குறிப்புகளில் பிரித்தானியா குறித்த ஆவணமும் ஒன்றாகும்.</p><p></p><p> </p><p>பின்லேடனின் பயங்கரவாதக் கட்டமைப்பு இன்னும் ஒரு அச்சுறுத்தலாக உள்ளது என்ற தலைப்பிலான ஆவணத்தில் பிரித்தானியா நேரடியாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. </p><p>சூடானில் உள்ள அல்-கொய்தா தளங்கள் மீது அமெரிக்கா ஏவுகணைத் தாக்குதல்களை நடத்திய பிறகு தயாரிக்கப்பட்ட அந்தக்குறிப்பு, பின் லேடன் பிரித்தானியாவைக் குறிவைக்க முயன்றதாகத் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a7c64b79-e1e1-422b-8226-611df6b900d5/26-6aa4cf94d68d5.webp' /></p><p> </p><p>அக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: அமெரிக்க ஏவுகணைத் தாக்குதல்களுக்குச் சில மணிநேரங்களுக்கு முன்பு, அமெரிக்கா மற்றும் பிரித்தானியாவுக்கு எதிராக மேலும் தாக்குதல்களை நடத்துவதற்கான வழிகளை பின்லேடன் ஆராய்ந்து கொண்டிருந்தார். </p><p>ஆனால், துல்லியமான இலக்குகளையோ அல்லது நேரத்தையோ குறிப்பிடவில்லை. மேலும், பெயர் குறிப்பிடப்படாத ஒரு நாட்டில் உள்ள அமெரிக்கத் தூதரகம் தாக்குதலுக்கு உள்ளாகக்கூடிய இலக்காக இருக்கலாம் என்றும், அமெரிக்காவில் தாக்குதல்களை நடத்துவது குறித்து ஆராய பின்லேடனால் ஒருவருக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்ததாகவும் அந்த அறிக்கை எச்சரித்துள்ளது.</p><h2>பின் லேடன்&nbsp;கோபம்</h2><p> </p><p>அந்த ஆண்டின் இறுதியில் எழுதப்பட்ட மற்றொரு குறிப்பில், அமெரிக்கா மற்றும் பிரித்தானியா, இஸ்ரேல் போன்ற அதன் நட்பு நாடுகளின் சொந்த மண்ணிலேயே தாக்குதல் நடத்த அவர் விரும்புவதற்கான வலுவான அறிகுறிகள் உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. </p><p>லண்டனைச் சேர்ந்த தனது கூட்டாளிகள் இருவர் பிரித்தானியக் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருந்ததைக் குறித்து பின் லேடன் கொண்டிருந்த கோபத்தை, 1999 ஆகஸ்ட் மாதத்தைச் சேர்ந்த ஒரு கோப்பு சுட்டிக்காட்டியது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4f26396e-0f1b-4b18-b4da-6b41100f6895/26-6aa4cf9589c12.webp' /></p><p> </p><p>இதனிடையே, நாட்டின் மிக இருண்ட தருணங்களில் ஒன்றுக்கு முந்தைய ஆண்டுகளிலும், அந்த நிகழ்வு நடந்த மறுநாளிலும் சேகரிக்கப்பட்ட மிக முக்கியமான உளவுத்துறைத் தகவல்களைப் பற்றிய ஒரு பார்வையை அமெரிக்கர்களுக்கு வழங்குவதையே இந்த மிகப்பெரிய ஆவண வெளியீடு நோக்கமாகக் கொண்டிருந்ததாக CIA தெரிவித்துள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-12T04:02:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[அநுர அரசுக்கு எதிராக போராட்டத்தில் குதித்த சாவகச்சேரி மக்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/protest-against-anura-government-in-chavakachcheri-1789185084"></link>
            <id>https://ibctamil.com/article/protest-against-anura-government-in-chavakachcheri-1789185084</id>
            <summary type="text">அநுர அரசாங்கத்திற்கு எதிராக கண்டன உண்ணாவிரதப் போராட்டம் ஒன்று யாழில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தமிழ் மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றத் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அநுர அரசாங்கத்திற்கு எதிராக கண்டன உண்ணாவிரதப் போராட்டம் ஒன்று யாழில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><p>
தமிழ் மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியமையை வலியுறுத்தில் இந்தப் போராட்டம் இன்று (12.09.2026) ஆரம்பமாகியுள்ளது.</p><p>யாழ். சாவகச்சேரி பேருந்து நிலையத்தில் ஆரம்பமான போராட்டத்தில் தமிழரசு கட்சியை சேர்ந்த சி வி கே சிவஞானம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் உள்ளிட்ட தரப்பினரும் பங்கேற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><h2>பொது தரப்பினரால்&nbsp;&nbsp;அழைப்பு </h2><p>இந்த போராட்டத்தில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு பொது தரப்பினரால் நேற்று அழைப்பு விடுக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/da762dc0-7bdb-4188-a6eb-24b270f0b582/26-6aa4ccb517364.webp' /></p><p>குறித்த போராட்டம் அபகரிக்கப்பட்ட நிலங்களை விடுவிக்க கோரியும், மாகாணசபை தேர்தலை உடனடியாக நடத்தக் கோரியும், பயங்கரவாத தடை சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும் என்றும், வலிந்து காணாமலாக்கப்பட்டோர், செம்மணி புதைகுழி விவகாரங்களுக்கு சர்வதேச நீதி விசாரணை வேண்டும் என்று கோரியும், அரசியல் கைதிகளின் உடனடி விடுதலையை வலியுறுத்தியும் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள I<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">BC தமிழ் WHATSAPP</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-12T03:53:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆசிரியர்களுக்கு கிடைக்கப்போகும் சலுகை : அரச சேவை ஆணைக்குழு அனுமதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/efficiency-barriers-in-the-sl-teachers-service-1789183013"></link>
            <id>https://ibctamil.com/article/efficiency-barriers-in-the-sl-teachers-service-1789183013</id>
            <summary type="text">இலங்கை ஆசிரியர் சேவையின் வினைத்திறன் தடைகளை நிறைவு செய்வது தொடர்பில் ஆசிரியர்களுக்கு சலுகை வழங்குவதற்கு அரச சேவை ஆணைக்குழுவின் அனுமதி கிடைத்துள்ளதாக த...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை ஆசிரியர் சேவையின் வினைத்திறன் தடைகளை நிறைவு செய்வது தொடர்பில் ஆசிரியர்களுக்கு சலுகை வழங்குவதற்கு அரச சேவை ஆணைக்குழுவின் அனுமதி கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p>

கல்வி அமைச்சினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கே அரச சேவை ஆணைக்குழு இவ்வாறு அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>
அதன்படி, 2022 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 23 ஆம் திகதி முதல் 2025 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 30 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் ஆசிரியர் சேவையின் முதலாம் தரத்திற்கு பதவி உயர்வு பெற்ற ஆசிரியர்கள், வினைத்திறன் தடைகளை நிறைவு செய்ய வேண்டிய தேவையிலிருந்து விடுவிக்கப்படுகின்றனர்.</p><p></p><h2>வினைத்திறன் தடைதாண்டல் பரீட்சைகள்</h2><p>
</p><p>
எனினும், அடுத்த பதவி உயர்வைப் பெறுவதற்கு முன்னர் குறித்த வினைத்திறன் தடையை நிறைவு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c6e29410-d6f3-4539-ab20-2a52fe4ebdc7/26-6aa4ca43b57e6.webp' /></p><p>
</p><p>
அத்துடன், ஒருவர் பதவி உயர்வு பெற்ற தரத்திற்கு முன்னதாக நிறைவு செய்ய வேண்டிய வினைத்திறன் தடையை, அடுத்த பதவி உயர்வு பெறும் திகதிக்கு முன்னர் நிறைவு செய்ய வேண்டும்.
</p><p>
எனினும் தற்போது அந்த நிபந்தனையின் அடிப்படையில் பதவி உயர்வு பெற்ற அதிகாரிகளும், அந்த முந்திய தரத்திற்கான வினைத்திறன் தடையை நிறைவு செய்ய வேண்டிய தேவையிலிருந்து விடுவிக்கப்படுகின்றனர்.</p><p></p><h2>&nbsp;கல்வி அமைச்சின் சுற்றறிக்கை</h2><p>
</p><p>
2025 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 30 ஆம் திகதி முதல், தங்களுக்கு உரிய தரத்திற்கான வினைத்திறன் தடைதாண்டல் பரீட்சைகள் நடத்தப்படும் திகதி வரையான காலப்பகுதியில் தரப் பதவி உயர்வுக்கு தகுதி பெறும் ஆசிரியர்களுக்கும் சலுகை வழங்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f7b8ae3d-4929-4ef6-b26b-4f43cec2af1e/26-6aa4ca44b7d92.webp' /></p><p>

அதன்படி, வினைத்திறன் தடையகப் பரீட்சைகளை நிறைவு செய்துள்ளார்களா என்பதை கருத்தில் கொள்ளாமல், அவர்களுக்கு தரப் பதவி உயர்வு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p>
இந்த விடயம் தொடர்பில் அனைத்து தரப்பினருக்கும் அறிவிக்கும் வகையில் கல்வி அமைச்சின் சுற்றறிக்கை ஒன்று எதிர்வரும் காலத்தில் வெளியிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-12T03:47:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[விடுதலைப்புலிகளின் தலைவர் கடைப்பிடித்த எல்லைகளை மீறிய ராஜபக்சர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/rajapaksa-crossed-boundaries-observed-prabhakaran-1789179419"></link>
            <id>https://ibctamil.com/article/rajapaksa-crossed-boundaries-observed-prabhakaran-1789179419</id>
            <summary type="text">யுத்தக் களத்தில் எதிரியாக இருந்த தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கூடக் கடைப்பிடித்த எல்லைகளை மீறி, ராஜபக்ச குடும்பத்தி...</summary>
            <content type="html"><![CDATA[<p>யுத்தக் களத்தில் எதிரியாக இருந்த தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கூடக் கடைப்பிடித்த எல்லைகளை மீறி, ராஜபக்ச குடும்பத்தினர் தனக்கெதிராக செயற்பட்டனர் என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா குற்றம் சாட்டியுள்ளார்.
</p><p>
வளைதள ஊடகம் ஒன்றுக்கு அவர் வழங்கிய நேர்காணலில் இதனை தெரிவித்துள்ளார்.
</p><p>
தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், 

“தன்னையும் தமக்கு விசுவாசமான இராணுவ அதிகாரிகளையும் அவர்களது குடும்பங்களையும் கொடூரமாக வேட்டையாடிப் ராஜபக்சர்கள் பழிவாங்கினர்.</p><p></p><h2>அதிகாரத்திற்கு வந்த&nbsp;ராஜபக்சர்கள் </h2><p>
</p><p>
தங்களைக் காப்பாற்றிய இராணுவத் தளபதியையே சிறையில் அடைத்தவர்கள் ராஜபக்சர்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0d7954cc-f8ef-4b4f-b095-ec750b19937c/26-6aa4b95e29c83.webp' /></p><p>
</p><p>
நாங்கள் விடுதலைப்புலிகள் அமைப்புக்கு எதிராக மூன்று வருடங்கள் கொடூரமான முறையில் யுத்தம் செய்தோம்.

அவர்களின் தாக்குதல்களில் இராணுவத்தினர் பலர் கொல்லப்பட்டனர்.
</p><p>
ஆனால், அந்தப் போர்க் காலத்தில்கூட பிரபாகரன், தங்களது குடும்பங்களையோ, எங்களது பிள்ளைகளையோ பழிவாங்கவில்லை.
</p><p>
போர் முடிந்த பின்னர், ராஜபக்சர்கள் அதிகாரத்திற்கு வந்ததும் தங்களது அரசியல் இலாபத்திற்காகவும், தனிப்பட்ட குரோதத்திற்காகவும் தன்னையும் தன் குடும்பத்தையும் கொடூரமாக வேட்டையாடினார்கள். </p><p>

மேலும், ஜனவரி 2008 இல், போரின் வியூகத்தை மாற்றி இராணுவத்தை வவுனியாவிலிருந்து முல்லைத்தீவு நோக்கி நேரடியாக நகரச் சொன்னதன் மூலம், மகிந்த, கோட்டாபய மற்றும் கருணாகொட ஆகியோர் இராணுவ நடவடிக்கைகளை குழப்பவும், தனது வேகத்தைக் குறைக்கவும் முயன்றனர்” என கூறியுள்ளார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-12T03:43:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[மன்னார் நீதிபதிக்கு எதிரான அவதூறு சுவரொட்டி: CIDக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/defamatory-poster-against-mannar-judge-1789183563"></link>
            <id>https://ibctamil.com/article/defamatory-poster-against-mannar-judge-1789183563</id>
            <summary type="text">மன்னார் மேல் நீதிமன்ற நீதிபதியாக பதவி வகித்த எம்.எம்.எம். மிஹால்-க்கு(தற்போது கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி) பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் அவதூறு சுவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>மன்னார் மேல் நீதிமன்ற நீதிபதியாக பதவி வகித்த எம்.எம்.எம். மிஹால்-க்கு(தற்போது கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி) பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் அவதூறு சுவரொட்டி ஒன்றை அச்சிட்டு காட்சிப்படுத்தியதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே. ஸ்ரீரங்கா உள்ளிட்டோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள முறைப்பாடு தொடர்பான நடவடிக்கை குறித்து நீதிமன்றம் விசேட உத்தரவொன்றை பிறப்பித்துள்ளது.</p><p>இதன்படி இந்த வழக்கில் சட்டமா அதிபரின் ஆலோசனையை எதிர்வரும் பெப்ரவரி 05ஆம் திகதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம, கொழும்பு குற்ற புலனாய்வு பிரிவுக்கு உத்தரவிட்டுள்ளார்.
</p><p>
குறித்த சம்பவம் தொடர்பில் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்ட சந்தேகநபர்கள் நீதிமன்றத்தில் முன்னிலையான பின்னர், கொழும்பு குற்றப்பிரிவினர் முன்வைத்த விடயங்களை பரிசீலித்த பிரதான நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.</p><p></p><h2>சட்டமா அதிபரின் ஆலோசனை</h2><p>
</p><p>
இந்த வழக்கில் மாத்தளையைச் சேர்ந்த இஷான் குணசேகர, அரவ்வலையைச் சேர்ந்த கிரிஷான் நாலக, மடபாத்தையைச் சேர்ந்த மனோஜ் மதுசங்க, பட்டதாரியான லக்மால் விக்ரமசிங்க, எஸ்.பி.எச்.எம். மதுசங்க, கொழும்பைச் சேர்ந்த வர்த்தகர் திலங்க தக்ஷித சுமதிபால, அச்சக உரிமையாளர் தசுன் தரங்க பண்டார மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே. ஸ்ரீரங்கா ஆகியோர் நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6e067804-8fba-4259-989a-771d970cfe29/26-6aa4c9b49cdbc.webp' /></p><p>
முறைப்பாட்டாளர் தரப்பில் நீதிமன்றத்தில் முன்னிலையான கொழும்பு குற்றப்பிரிவு அதிகாரிகள், சந்தேகநபர்களின் கையடக்கத் தொலைபேசிகள் அரசாங்க இரசாயன பகுப்பாய்வாளரிடம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.</p><p>
மூன்றாவது சந்தேகநபரின் கையடக்கத் தொலைபேசியின் கடவுச்சொல்லை திறப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும், எனவே அந்த சந்தேகநபரை அரசாங்க இரசாயன பகுப்பாய்வாளர் அலுவலகத்தில் முன்னிலையாகுமாறு உத்தரவிட வேண்டும் எனவும் அதிகாரிகள் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்தனர்.
</p><p>
மேலும், சம்பவம் தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெறுவதற்காக விசாரணை அறிக்கை சட்டமா அதிபரிடம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் கொழும்பு குற்றப்பிரிவினர் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
</p><p>
சட்டமா அதிபரின் ஆலோசனை கிடைத்த பின்னர், வழக்கின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பில் நீதிமன்றம் தீர்மானிக்கவுள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-12T03:41:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆலய உற்சவத்தில் திடீரென வெடித்த பெரிய வெடி - சிறுவன் பரிதாபமாக பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/boy-dies-in-temple-festival-firecracker-accident-1789181017"></link>
            <id>https://ibctamil.com/article/boy-dies-in-temple-festival-firecracker-accident-1789181017</id>
            <summary type="text"> ஆலய உற்சவத்தின் போது வெடிக்க வைத்த வெடி வெடிக்காததால், அதனைப் பார்க்கச் சென்ற 13 வயதுச் சிறுவன் அது வெடித்ததில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இச்சம்...</summary>
            <content type="html"><![CDATA[<p> ஆலய உற்சவத்தின் போது வெடிக்க வைத்த வெடி வெடிக்காததால், அதனைப் பார்க்கச் சென்ற 13 வயதுச் சிறுவன் அது வெடித்ததில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.</p><p>

இச்சம்பவம் நேற்று 11) இரவு 11.00 மணியளவில் மட்டக்களப்பு, கிரான் கூளாக்காடு சித்தி விநாயகர் ஆலய உற்சவத்தின் போது இடம்பெற்றுள்ளது &nbsp;</p><p>கிரான் கூளாக்காட்டைச் சேர்ந்த 13 வயதுச் சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.</p><p></p><h2>மேலதிக விசாரணை</h2><p> 

குறித்த ஆலயத்தின் வருடாந்த உற்சவம் இடம்பெற்று வரும் நிலையில், சம்பவ தினமான நேற்று இரவு பூஜை வழிபாடுகளின் போது பெரிய வெடி ஒன்று வெடிக்க வைக்கப்பட்டுள்ளது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/71206939-0abb-42ec-861a-8c4c9db47b00/26-6aa4c9a9acd84.webp' /></p><p>எனினும், அது உடனடியாக வெடிக்காததால் அதனை அப்புறப்படுத்தி தூக்கி வீசியுள்ளனர். 

அவ்வாறு வீசப்பட்ட வெடியைப் பார்ப்பதற்காக அச்சிறுவன் அருகில் சென்றபோது, எதிர்பாராதவிதமாக அது வெடித்துச் சிதறியுள்ளது.</p><p> 

இதில் படுகாயமடைந்த சிறுவனை உடனடியாக வாழைச்சேனை வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. </p><p>

உயிரிழந்த சிறுவனின் சடலம் பிரேதப் பரிசோதனைக்காக வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.</p><p> 

இச்சம்பவம் தொடர்பாக வாழைச்சேனை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-12T03:40:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[விசாலாட்சிக்கு வந்த ஷாக்கிங் போன் கால், அடுத்து நடக்கப்போவது?... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/ethirneechal-thodargiradhu-promo-12-sep-2026-1789183574"></link>
            <id>https://cineulagam.com/article/ethirneechal-thodargiradhu-promo-12-sep-2026-1789183574</id>
            <summary type="text">எதிர்நீச்சல் தொடர்கிறதுசன் டிவியில்&amp;nbsp;எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் பரபரப்பின் உச்சமாக ஒளிபரப்பாகி வருகிறது.குணசேகரன் நினைத்தது போல் சாமிக்கு கட்...</summary>
            <content type="html"><![CDATA[<h2>எதிர்நீச்சல் தொடர்கிறது</h2><p>சன் டிவியில்&nbsp;எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் பரபரப்பின் உச்சமாக ஒளிபரப்பாகி வருகிறது.</p><p>குணசேகரன் நினைத்தது போல் சாமிக்கு கட்டுகட்டும் விஷயம் நடக்குமா அல்லது ஜெயிலுக்கு செல்வாரா என தெரியவில்லை. இன்னொரு பக்கம் சக்தி தேடிவந்த நபரை மீட்பாரா அல்லது ராவணனிடம் சிக்குவாரா என தெரியவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/547ac168-8486-4a73-8c65-921e3a4a02d7/26-6aa4c774e186a.webp' /></p><p>இதற்கு இடையில் சிங்கப்பூர் சென்ற விசாலாட்சி வீட்டிற்கு வந்தவுடன் அவரிடம் தேவகி மகன் பற்றிய உண்மையை நந்தினி கூற அவர் ஒருபக்கம் பதற்றத்தில் உள்ளார்.</p><p>இயக்குனர் எப்போது ஒரு பிரச்சனையை முடித்த அடுத்த பிரச்சனை செல்வார் என தெரியவில்லை. எப்போது பார்த்தாலும்&nbsp;எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் பிரச்சனையாகவே உள்ளது.</p><h2>புரொமோ</h2><p>இன்றைய எபிசோட் புரொமோவில், விசாலாட்சிக்கு அவரத சகோதரர் போன் செய்கிறார். இந்த பூஜையை மட்டும் அவன் செய்துவிட்டால் ஒன்றில்லை 2 உயிர் போகும் என கூற அவர் செம ஷாக் ஆகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a32d2384-84ed-4836-b3de-7f3183af0a5f/26-6aa4c773b78a9.webp' /></p><p>அடுத்து குணசேகரனை பிடிக்க போலீசார் அவர் இருக்கும் வீட்டிற்கே வர அறிவுக்கரசியும் ஷாக் ஆகிறார். இன்னொரு பக்கம் ஜனனி, சக்திக்கு போன் செய்து அத்தை வந்துவிட்டார்கள், உன்னை வீட்டிற்கு வர சொன்னார்கள் என்கிறார்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/J9T0X9PsLtM" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-12T03:40:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆசிரியர்களுக்கு வழங்கப்படவுள்ள முக்கிய சலுகை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/bar-examinations-in-sri-lanka-teachers-service-1789182363"></link>
            <id>https://tamilwin.com/article/bar-examinations-in-sri-lanka-teachers-service-1789182363</id>
            <summary type="text">இலங்கை ஆசிரியர் சேவையின் வினைத்திறன் தடைகளை நிறைவு செய்வது தொடர்பில் ஆசிரியர்களுக்கு சலுகை வழங்குவதற்கு அரச சேவை ஆணைக்குழுவின் அனுமதி கிடைத்துள்ளது.
...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை ஆசிரியர் சேவையின் வினைத்திறன் தடைகளை நிறைவு செய்வது தொடர்பில் ஆசிரியர்களுக்கு சலுகை வழங்குவதற்கு அரச சேவை ஆணைக்குழுவின் அனுமதி கிடைத்துள்ளது.
</p><p>
கல்வி அமைச்சினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அரச சேவை ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.</p><p>

அதன்படி, 2022 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 23 ஆம் திகதி முதல் 2025 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 30 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் ஆசிரியர் சேவையின் முதலாம் தரத்திற்கு பதவி உயர்வு பெற்ற ஆசிரியர்கள், வினைத்திறன் தடைகளை நிறைவு செய்ய வேண்டிய தேவையிலிருந்து விடுவிக்கப்படுகின்றனர்.
</p><h2>கல்வி அமைச்சின் சுற்றறிக்கை&nbsp;</h2><p>
எனினும், அடுத்த பதவி உயர்வைப் பெறுவதற்கு முன்னர் குறித்த வினைத்திறன் தடையை நிறைவு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1bceed7d-79cc-4005-a38c-28f3569bd133/26-6aa4c736a06fd.webp' /></p><p>
அத்துடன், ஒருவர் பதவி உயர்வு பெற்ற தரத்திற்கு முன்னதாக நிறைவு செய்ய வேண்டிய வினைத்திறன் தடையை, அடுத்த பதவி உயர்வு பெறும் திகதிக்கு முன்னர் நிறைவு செய்ய வேண்டும்.&nbsp;</p><p>எனினும் தற்போது அந்த நிபந்தனையின் அடிப்படையில் பதவி உயர்வு பெற்ற அதிகாரிகளும், அந்த முந்திய தரத்திற்கான வினைத்திறன் தடையை நிறைவு செய்ய வேண்டிய தேவையிலிருந்து விடுவிக்கப்படுகின்றனர்.
</p><p>
2025 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 30 ஆம் திகதி முதல், தங்களுக்கு உரிய தரத்திற்கான வினைத்திறன் தடையகப் பரீட்சைகள் நடத்தப்படும் திகதி வரையான காலப்பகுதியில் தரப் பதவி உயர்வுக்கு தகுதி பெறும் ஆசிரியர்களுக்கும் சலுகை வழங்கப்பட்டுள்ளது.
</p><p>வினைத்திறன் தடையகப் பரீட்சைகளை நிறைவு செய்துள்ளார்களா என்பதை கருத்தில் கொள்ளாமல், அவர்களுக்கு தரப் பதவி உயர்வு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் அனைத்து தரப்பினருக்கும் அறிவிக்கும் வகையில் கல்வி அமைச்சின் சுற்றறிக்கை ஒன்று எதிர்வரும் காலத்தில் வெளியிடப்படவுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-12T03:32:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[மயோசிடிஸ் நோயால் என் அடையாளத்தை இழந்தேன்..சமந்தா ஓபன் டாக்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/samantha-says-felt-loss-of-identity-after-myositis-1789139424"></link>
            <id>https://viduppu.com/article/samantha-says-felt-loss-of-identity-after-myositis-1789139424</id>
            <summary type="text">நடிகை சமந்தா பாலிவுட் ஊடகத்திற்கு அளித்த பேட்டியொன்றில் மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டது குறித்து பேசியுள்ளார். அதில், மயோசிடிஸ் நோயால் நான் பாதிகப்பட...</summary>
            <content type="html"><![CDATA[<p>நடிகை சமந்தா பாலிவுட் ஊடகத்திற்கு அளித்த பேட்டியொன்றில் மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டது குறித்து பேசியுள்ளார். அதில், மயோசிடிஸ் நோயால் நான் பாதிகப்பட்டிருந்த போது என் அடையாளத்தை நான் இழந்துவிட்டதுபோல் உணர்ந்தேன்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/408fbb5c-4a30-414e-b9bd-7cd1d5ceea36/26-6aa419e259a0f.webp' /></p><h2>மயோசிடிஸ் நோயால்</h2><p> என்னுடைய கட்டுப்பாட்டில் எதுவுமே இல்லை என்ற எண்ணம் எனக்கு தோன்றியது. மன உறுதி, நம்பிக்கை, எதிர்பார்ப்பு போன்ற முக்கியமானக் குணங்களை இந்த நோய் எனக்கு கற்றுக் கொடுத்தது. இதனால் என் வாழ்க்கை இன்னும் மேம்பட்டு இருக்கிறது. </p><p>இந்த நோய் எனக்கு வராமல் இருந்திருக்கலாம் என்று நான் நினைத்திருக்கிறேன், ஆனால் இது எனக்குக் கற்றுக்கொடுத்த பாடங்கள் என் வாழ்க்கையின் விலைமதிப்பற்ற அங்கமாக மாறிவிட்டது. </p><p>ஏன் எனக்கு மட்டும் இப்படி நடக்க வேண்டும் என்கிற கட்டத்தை நான் கடந்து, இதிலிருந்து நான் கற்றுக்கொள்ள ஏதோ இருக்கிறது என்ற தெளிவை அடைய எனக்கு சிறிது காலம் எடுத்துக் கொண்டது என்று பகிர்ந்துள்ளார் சமந்தா.</p>]]></content>
            <updated>2026-09-12T03:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[வடக்கில் வலுமிக்க கூட்டுறவுத்துறையை உருவாக்க ஆளுநர் முயற்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/strong-cooperative-sector-in-the-north-1789183380"></link>
            <id>https://tamilwin.com/article/strong-cooperative-sector-in-the-north-1789183380</id>
            <summary type="text">வடக்கு மாகாணத்தின் கூட்டுறவுத்துறையை மீண்டும் வலுவான பொருளாதார சக்தியாகக் கட்டியெழுப்புவதற்குக் கூட்டுறவுச் சங்கங்களை நிர்வகிக்கும் அதிகாரிகள்
மற்றும...</summary>
            <content type="html"><![CDATA[<p>வடக்கு மாகாணத்தின் கூட்டுறவுத்துறையை மீண்டும் வலுவான பொருளாதார சக்தியாகக் கட்டியெழுப்புவதற்குக் கூட்டுறவுச் சங்கங்களை நிர்வகிக்கும் அதிகாரிகள்
மற்றும் பணியாளர்களிடம் புதிய சிந்தனையும் மனமாற்றமும் ஏற்பட வேண்டும்.</p><p> 

அத்துடன், அலுவலக மட்டத்திலிருந்து செயற்படுவதைக் கடந்து, களத்துக்குச் சென்று சங்கங்களின்
உண்மையான தேவைகளை அறிந்து, அவற்றை உற்பத்தி, சந்தைப்படுத்தல் மற்றும் நவீன
முகாமைத்துவத்துடன் இணைத்து அபிவிருத்தி செய்ய வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் வலியுறுத்தியுள்ளார். </p><p>

கூட்டுறவுச் சங்கங்களின் பணியாளர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நேற்று(11.09.2026) வடக்கு மாகாண பிரதம செயலாளர் செயலகக்
கேட்போர் கூடத்தில் இடம்பெற்றுள்ளது. </p><p>

இந்த நிகழ்வில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். </p><h3>


கூட்டுறவுத்துறையில் நடக்கும் முறைகேடுகள்</h3><p>
அவர் மேலும் தெரிவிக்கையில், </p><p>

 ஒரு காலத்தில் குறிப்பாக வடக்கு மாகாணத்தில்
கூட்டுறவுத்துறை மக்கள் வாழ்க்கையோடும் உற்பத்தியோடும் நெருக்கமாக இணைந்து
வலுவாகச் செயற்பட்டது.

 காலப்போக்கில் ஏற்பட்ட நிர்வாகச்
சீர்கேடுகள் மற்றும் முகாமைத்துவப் பலவீனங்கள் உள்ளிட்ட காரணங்களால் அதன்
வலிமை குறைந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0fb25471-17d3-4565-be28-47addeaa0850/26-6aa4c5cf01dbb.webp' /></p><p>

தாம் நான்கு மாவட்டங்களில் மாவட்டச் செயலராகப் பணியாற்றிய காலப்பகுதியில்
கூட்டுறவுச் சங்கங்களின் அபிவிருத்திக்காக பல்வேறு உதவிகளை மேற்கொண்டிருந்த
போதிலும், சில நிர்வாகங்களின் முறைகேடுகள் மற்றும் பலவீனங்களால் அவை
எதிர்பார்த்த பலனை வழங்கத் தவறியதால், ஒரு கட்டத்தில் கூட்டுறவுத்துறையின்
மீதான தமது நம்பிக்கையே பாதிக்கப்பட்டது.
</p><p>
இந்த நிலையை மாற்றுவதற்குத் திறமையான, வெளிப்படையான மற்றும் பொறுப்புக்கூறல்
மிக்க முகாமைத்துவம் உருவாக்க வேண்டும்.
</p><p>
கூட்டுறவுத்துறையின் எதிர்காலம் நவீன முகாமைத்துவம், வெளிப்படையான கணக்கியல்,
மின்னணு நிதி முகாமைத்துவம், சந்தைப்படுத்தல் திறன், புதிய தொழில்நுட்பப்
பயன்பாடு மற்றும் உறுப்பினர்களுக்கான பொறுப்புக்கூறல் ஆகியவற்றுடன்
இணைந்திருக்க வேண்டும் என்றார்.&nbsp;</p><p> </p><p></p><p></p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-12T03:24:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[மின்னல் வேகத்தில் முன்னேறும் ஹவுதிகள்... எண்ணெய் குழாய் வழித்தடத்தை மூடிய சவுதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/saudis-shut-down-oil-pipeline-1789183413"></link>
            <id>https://news.lankasri.com/article/saudis-shut-down-oil-pipeline-1789183413</id>
            <summary type="text">Saudis shut down oil pipeline: ஹவுதிகளால் எண்ணெய் குழாய் வழித்தடத்தை மூடிய சவுதி அரேபியா.
மத்திய கிழக்கில் விரிவடைந்து வரும் போரின் ஒரு பகுதியாக, மிக...</summary>
            <content type="html"><![CDATA[<p>Saudis shut down oil pipeline: ஹவுதிகளால் எண்ணெய் குழாய் வழித்தடத்தை மூடிய சவுதி அரேபியா.
</p><p>மத்திய கிழக்கில் விரிவடைந்து வரும் போரின் ஒரு பகுதியாக, மிக முக்கியமான எண்ணெய் வழித்தடமான 'கிழக்கு-மேற்கு' குழாய் வழித்தடம் வான்வழித் தாக்குதலுக்கு உள்ளானதைத் தொடர்ந்து, சவுதி அரேபியா அதனை மூடியுள்ளது.</p><h2>முன்னெச்சரிக்கை நடவடிக்கை</h2><p>
</p><p>ஈரான் ஆதரவு ஆயுதக் குழுக்கள் செயல்படும் ஈராக்கில் இருந்து இந்த ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஈராக்கும் சவுதி அரேபியாவும் தெரிவித்ததை அடுத்து, உலகின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் ஏற்றுமதியாளரான சவுதி அரேபியா, குழாய்வழியை தற்காலிகமாக மூடியது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3efc9f5b-6544-4900-8bbf-c4b66b88bb58/26-6aa4c5b767f16.webp' /></p><p> </p><p>அரேபிய தீபகற்பம் முழுவதும் செல்லும் 745 மைல் நீளமுள்ள இந்தக் குழாய்த்தொடர், ஹார்முஸ் நீரிணையில் நிலவும் கப்பல் போக்குவரத்து நெரிசலைத் தவிர்த்துச் செல்ல சவுதி அரேபியாவுக்கு உதவியது; அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான போரின் காரணமாக அந்த நீரிணையில் கப்பல் போக்குவரத்து மிகக் குறைவாகவே நடைபெற்று வருகிறது. </p><p>இதனிடையே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த எரிபொருள் குழாய் வழித்தடத்தை மூடியுள்ளதாக சவுதி எரிசக்தி அமைச்சகம் தெரிவித்துள்ளது.</p><p> கப்பல் போக்குவரத்து கண்காணிப்பு நிறுவனங்கள் மற்றும் ஆய்வாளர்களின் தகவல்படி, கடந்த சில மாதங்களாக இக்குழாய் வழித்தடம் வழியாக நாளொன்றுக்கு 40 முதல் 50 லட்சம் பீப்பாய் எரிபொருள் கொண்டு செல்லப்பட்டு வந்தது; இது உலகளாவிய விநியோகத்தில் 4 சதவீதம் முதல் 5 சதவீதம் வரை என்றே கூறப்படுகிறது.</p><p></p><p>
</p><p>ஏமனில் ஈரானின் ஆதரவு பெற்ற ஹவுதிகள் செங்கடலில் தங்கள் பிடியை இறுக்கியுள்ள சூழலில் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது; ஹார்முஸ் நீரிணையில் ஏற்பட்டுள்ள இடையூறுகளுடன் இந்தச் சூழலும் இணைந்து, அரேபியத் தீபகற்பத்தின் இரு பகுதிகளிலும் எரிசக்தி விநியோகத்தில் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதுடன், உலகளாவிய கச்சா எண்ணெய் விலையை மீண்டும் ஒரு பீப்பாய்க்கு 100 டொலருக்கும் அதிகமாக உயர்த்தியுள்ளது. </p><p>இந்த நிலையில், மின்னல் வேகத்தில் முன்னேறும் ஹவுதிகள் செங்கடலின் நுழைவாயிலில், பாப் அல்-மண்டேப் நீரிணையில் அமைந்துள்ள அதி முக்கியத்துவம் வாய்ந்த பெரிம் தீவை வெள்ளிக்கிழமையன்று கைப்பற்றினர்.</p><h2>பரந்த அளவிலான நடவடிக்கை</h2><p> </p><p>ஈரான் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான இராஜதந்திர முயற்சிகள் முடங்கியுள்ள நிலையில், சவுதி குழாய்வழித்தடம் மற்றும் பெரிம் தீவு மீது வெள்ளிக்கிழமை அன்று நடந்ததாகப் பதிவான இரட்டைத் தாக்குதல்கள், ஒரு அபாயகரமான பதற்ற அதிகரிப்பை ஏற்படுத்தியுள்ளது.
</p><p>நவம்பர் மாதம் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, போரின் காரணமாக உயர்ந்த எரிபொருள் விலைகள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அவரது குடியரசுக் கட்சிக்கு அரசியல் ரீதியாகப் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள சூழலில், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக இராணுவ உதவி கோரி சவுதி அரேபியா ட்ரம்ப் நிர்வாகத்தை அணுகியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5babd456-9ce9-477d-bfcd-804f0421e44a/26-6aa4c5b81b65b.webp' /></p><p> </p><p>ஆனால், வெளியாகியுள்ள தகவலின் அடிப்படையில், சவுதி பட்டத்து இளவரசர் பின் சல்மானின் கோரிக்கையை ஜனாதிபதி ட்ரம்ப் நிராகரித்துள்ளார் என்றே தெரிய வருகிறது. </p><p>சவுதி அரேபியாவின் ரியாத் மற்றும் மதீனா பகுதிகளில் உள்ள கிழக்கு-மேற்கு குழாய் வழித்தடம் வியாழக்கிழமை காலை தாக்கப்பட்டதாக சவுதி எரிசக்தி அமைச்சகம் தெரிவித்துள்ளது. </p><p>இதனிடையே, குழாய் வழித்தடத் தாக்குதலுக்குப் பொறுப்பானவர்களைக் கண்டறியும் வகையில் பரந்த அளவிலான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவே தகவல் கசிந்துள்ளது. </p><p>ஹவுதிகள் பாப்-எல்-மண்டேப் நீரிணையின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றினால், அவர்களுக்கு ஆதரவளிக்கும் ஈரானானது அமெரிக்காவுடனான போரில் ஒரு முக்கிய சாதகமான நிலையைப் பெறக்கூடும்.
</p><p>ஏமன் உள்நாட்டுப் போரின்போது சவுதி அரேபியாவின் கடுமையான வான்வழித் தாக்குதல்களைத் தாக்குப் பிடித்து நின்ற மலைப்பகுதிப் போராளிகளான ஹவுதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை, செங்கடல் கடற்கரையோரத்தில் இந்த வாரம் மேற்கொள்ளப்படும் மின்னல் வேகத் தாக்குதலின் மூலம் மீண்டும் கைப்பற்ற முயற்சிப்பதாக ஏமன் அரசுப் படைகள் தெரிவித்துள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f61509f4-3c7e-4c82-aa59-0594653ca3d8/26-6aa4c5b8c15d8.webp' /></p><p> </p><p>இதனிடையே, ஏமனின் செங்கடல் கடற்கரைப் பகுதியில் ஹவுதிகள் மேற்கொண்ட அதிரடி முன்னேற்றமானது, ஈரானின் புரட்சிகரப் படைகளின் நேரடி வழிகாட்டுதலின் கீழ் நடைபெற்றது என்றே தெரிய வருகிறது.
</p><p>ஹவுதிகளுக்கு எதிரான போராட்டத்தில் அமெரிக்காவின் ராணுவ உதவியைக் கோருவதற்காக, சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் வியாழக்கிழமையன்று குறைந்தது இருமுறை ட்ரம்ப்பைத் தொடர்புகொண்டு பேசியுள்ளார். </p><p>ஏற்கனவே ஈரான் போரில் சிக்கிக்கொண்டு வெளியேற முடியாமல் தவிக்கும் ட்ரம்ப் நிர்வாகம், தற்போதைக்கு நேரடி ராணுவ நடவடிக்கையை மேற்கொள்ளத் தயாராக இல்லை என்றும், ஆனால் உளவுத் தகவல் பகிர்வு மற்றும் இலக்குகளைக் கண்டறிதல் ஆகியவற்றில் உதவுவதாக மட்டும் சவுதியிடம் தெரிவித்துள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-12T03:20:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[திருகோணமலையில் நங்கூரமிடப்பட்ட ஈரானிய கப்பல்! இலங்கை முன்னெடுக்கவுள்ள இராஜதந்திர நகர்வு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/diplomatic-move-lanka-set-regarding-iranian-ship-1789182700"></link>
            <id>https://ibctamil.com/article/diplomatic-move-lanka-set-regarding-iranian-ship-1789182700</id>
            <summary type="text">திருகோணமலை கடற்பரப்பில் நங்கூரமிடப்பட்டுள்ள ஈரானிய கடற்படைக் கப்பலில் பணியாற்றும் மாலுமிகளை சொந்த நாட்டுக்கு அனுப்ப அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.ஈ...</summary>
            <content type="html"><![CDATA[<p>திருகோணமலை கடற்பரப்பில் நங்கூரமிடப்பட்டுள்ள ஈரானிய கடற்படைக் கப்பலில் பணியாற்றும் மாலுமிகளை சொந்த நாட்டுக்கு அனுப்ப அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.</p><p>ஈரானிய அரசாங்கம் விடுத்த கோரிக்கைக்கு அமைய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தெரிவித்துள்ளார்.</p><p>இதன்படி இராஜதந்திர மற்றும் பாதுகாப்பு வழிகள் ஊடாக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.&nbsp;</p><p></p><h2>ரவூப் ஹக்கீம் கேள்வி</h2><p>எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம், நீண்ட நாட்களாக மன அழுத்தத்தில் இருக்கும் அந்த மூன்று ஈரானிய மாலுமிகளையும் மாற்ற அனுமதிக்குமாறு நாடாளுமன்றத்தில் விடுத்த கோரிக்கைக்கு பதிலளிக்கும் போதே பிரதி அமைச்சர் இதனை கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e120d9d8-75d2-4680-9e70-9e6bc8080f11/26-6aa4c46dcb2bb.webp' /></p><p>முன்னதாக, ஈரானிய கப்பலான IRIS Bushehr கப்பலானது கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் அவசர உதவி கோரியதைத் தொடர்ந்து, அதிலிருந்த 208 பேரை இலங்கை கடற்படை பாதுகாப்பாக கரைக்கு அழைத்து வந்திருந்தது. </p><p>அவர்களில் அதிகாரிகள், பயிற்சி அதிகாரிகள் மற்றும் கடற்படை வீரர்களும் அடங்கியிருந்தனர்.
</p><p>
கொழும்பு துறைமுகத்தில் வர்த்தக நடவடிக்கைகளுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் மற்றும் பாதுகாப்பு காரணிகளை கருத்திற்கொண்டு, குறித்த கப்பலை திருகோணமலைக்கு மாற்ற இலங்கை அரசாங்கம் தீர்மானித்திருந்தது.</p><p></p><h2>ஈரான் - அமெரிக்கா&nbsp;பதற்றம்</h2><p> </p><p>பின்னர் கப்பல் திருகோணமலை நோக்கி இழுவை மூலம் கொண்டு செல்லப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6db76aa9-9b4a-4422-ac41-2a9c8800fd42/26-6aa4c46e834c6.webp' /></p><p>
</p><p>
ஈரான் - அமெரிக்கா இடையிலான பதற்றமான சூழ்நிலைக்கு மத்தியில், இலங்கை தனது கடற்பரப்பை எந்தவொரு தரப்புக்கும் சாதகமாக பயன்படுத்த அனுமதிக்கப் போவதில்லை என அரசாங்கம் முன்னதாக தெரிவித்திருந்தது. </p><p>இதன்படி மனிதாபிமான அடிப்படையிலும் சர்வதேச சட்டங்களுக்கு அமைவாகவும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-12T03:18:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பில் காணிகளுக்கு மந்திரஜாலம் செய்யும் மந்திரவாதி - பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/person-cheated-so-many-people-1789098683"></link>
            <id>https://tamilwin.com/article/person-cheated-so-many-people-1789098683</id>
            <summary type="text">
கொழும்பில் சுமார் 2 கோடி ரூபா பெறுமதியான தங்க ஆபரணங்களைக் திருடிச் சென்ற கபுவா என தன்னைத்தானே அழைத்துக்கொள்ளும் நபர் நுகேகொட பிரிவுக் குற்றத்தடுப்பு...</summary>
            <content type="html"><![CDATA[<p>
கொழும்பில் சுமார் 2 கோடி ரூபா பெறுமதியான தங்க ஆபரணங்களைக் திருடிச் சென்ற கபுவா என தன்னைத்தானே அழைத்துக்கொள்ளும் நபர் நுகேகொட பிரிவுக் குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
சந்தேக நபர் அவ்வாறு மோசடியாகப் பெற்றுக்கொண்டதாகக் கூறப்படும் 40 பவுனுக்கும் அதிகமான தங்க ஆபரணங்களை பொலிஸார் மீட்டுள்ளனர்.
</p><p>
வீடு மற்றும் காணிகள் விற்பனைக்கு உள்ளதாக பத்திரிகைகளில் விளம்பரம் செய்யும் பெண்களை இலக்கு வைத்து சந்தேக நபர் நீண்ட காலமாக இந்த மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளார்.</p><p>
</p><h2><b>
காணி மற்றும் வீடு விற்பனை</b></h2><p>மிரிஹான பிரதேசத்தை சேர்ந்த பெண் ஒருவர் தனது காணி மற்றும் வீடு விற்பனைக்கு உள்ளதாக பத்திரிகையில் பல தடவைகள் விளம்பரம் செய்திருந்தார்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fccc0397-f9d4-4dcc-b383-ec97b3ba8811/26-6aa3a740061e5.webp' /></p><p>அது தொடர்பில் கவனம் செலுத்திய சந்தேக நபர், குறித்த பெண்ணின் தொலைபேசி இலக்கத்திற்கு அழைத்துள்ளார்.</p><p> தொலைதூரப் பிரதேசத்தில் உள்ள பிரசித்தி பெற்ற தேவாலயம் ஒன்றின் பெயரைக் கூறி, அத்தேவாலயத்தில் நீண்டகாலமாக கபுவாவாக செயற்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
</p><p>
அந்த பெண்ணின் வீடும் காணியும் நீண்ட காலமாக விற்பனை செய்யப்படாமல் இருப்பது தனக்குத் தெய்வீக பலத்தால் புலப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
அக்காணியை விரைவாக விற்பனை செய்வதற்குச் சடங்கு ஒன்றைச் செய்து தர முடியும் என அந்த பெண்ணிடம் சந்தேக நபர் தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
</p><p>
சந்தேக நபரின் பேச்சுத் திறமையால் ஏமாற்றப்பட்ட பெண், குறித்த நபரை வீட்டிற்கு அழைத்து விபரங்களைக் கேட்டறிந்துள்ளார்.</p><h3><b> தங்க நகைகள் கொள்ளை</b></h3><p>இதன் போது அவர் அதற்காக 5 லட்சம் ரூபாய் பணம் தேவைப்படுவதாகத் தெரிவித்துள்ளார். 

அதற்குச் சம்மதம் தெரிவித்த பெண், அதற்காகத் திகதி ஒன்றையும் சந்தேக நபரிடம் ஒதுக்கிச் சடங்கிற்கான அனைத்தையும் ஏற்பாடு செய்திருந்ததாக குறித்த பெண் பொலிஸாரிடம் குறிப்பிட்டுள்ளார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8dc063d1-cf86-4a80-961d-866df24167cf/26-6aa3a740ad2c8.webp' /></p><p>ஒப்புக்கொண்டதற்கமைய, வீட்டிற்கு வந்திருந்த சந்தேக நபர், தான் வழங்கிய பொருட்களின் பட்டியலிலிருந்த சிறிய பானைக்குள் வீட்டின் தங்க ஆபரணங்களில் ஏதேனும் 3 அல்லது 7யை போட்டு, சிவப்பு அல்லது வெள்ளை நிறமான அடிமட்டம் போன்ற நீளமான துணியுடன் கொண்டு வருமாறு கூறியுள்ளார். </p><p>

அதன் பின்னர் அந்தப் பெண் முன்னிலையிலேயே அதனை நன்றாக மறைத்து, தாம்பூலம் மற்றும் மலர்களால் பூசை செய்யத் தயாரிக்கப்பட்டிருந்த மலர் மேடையில் வைத்து சில மணிநேரங்கள் சடங்கு செய்துள்ளார்.
</p><p>
 21 நாட்கள் கடந்ததன் பின்னர் வீட்டிலும் காணியிலும் புனித நீர் தெளித்து, 21ஆவது நாளில் பானைக்குள் போடப்பட்ட தங்க ஆபரணங்களை எடுக்குமாறு அப்பெண்ணிடம் கூறியுள்ளார்.
</p><p>
அதிலிருந்து 14 நாட்கள் செல்லும்போது நிலத்தைக் கொள்வனவு செய்வதற்காகக் வாங்குபவர் நிச்சயமாக வருவார் எனத் தெரிவித்துள்ளார்.
</p><p>
வாக்குறுதியளித்த பணத்தையும் பெற்றுக்கொண்டு அவர் அங்கிருந்து சென்றுவிட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சந்தேக நபர் கூறியவாறே வீட்டுச் சொந்தக்காரரான பெண் செயல்பட்ட போதிலும், புதைக்கப்பட்ட பானையைத் தோண்டி எடுத்தபோது அதற்குள் இருந்த தங்க ஆபரணங்கள் இருக்கவில்லை. </p><p>அத்துடன் வீட்டை கொள்வனவு செய்வதற்காக யாரும் வரவும் இல்லை.

பின்னர் இது தொடர்பில் அப்பெண் மிரிஹான பொலிஸாரிடம் செய்த முறைப்பாட்டுக்கு அமைய விசாரணைகள் மேற்கொள்ளப்பட்ட போது, இது போன்றதொரு சம்பவம் தொடர்பான முறைப்பாட்டு வெலிக்கடை பொலிஸ் நிலையத்திலும் பதிவாகியுள்ளமை தெரியவந்துள்ளது. </p><p>

அதன் பின்னர் குறித்த இரண்டு முறைப்பாடுகள் தொடர்பிலும் விசாரணை மேற்கொண்ட பொலிஸார் சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.
</p><p>
குறித்த சந்தேக நபரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது, இவ்வாறு மோசடியாக பெறப்பட்ட அனைத்துத் தங்க ஆபரணங்களையும் மட்டக்குளி பிரதேசத்தை சேர்ந்த நபர் ஒருவருக்கு விற்றுள்ளமை தெரியவந்துள்ளது.
</p><p>
இதனை அடுத்து, அந்த நபரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-12T03:10:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மஹியங்கனை பகுதியில் நடந்த கொடூர கொலை - 22 வயது இளைஞர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/suspect-arrested-in-connection-with-murder-1789181870"></link>
            <id>https://tamilwin.com/article/suspect-arrested-in-connection-with-murder-1789181870</id>
            <summary type="text">ஊவா - மஹியங்கனையில் உள்ள அழுக்கெட்டியாவை பகுதியில் ஒரு வீட்டின் முன்பாக, கூர்மையான ஆயுதத்தால் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஊவா - மஹியங்கனையில் உள்ள அழுக்கெட்டியாவை பகுதியில் ஒரு வீட்டின் முன்பாக, கூர்மையான ஆயுதத்தால் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>

இந்த கைது நடவடிக்கை நேற்று(11.09.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். </p><p>


குறித்த சம்பவம் கடந்த 10 ஆம் திகதி இடம்பெற்ற நிலையில், மஹியங்கனை பொலிஸார் சிறப்பு விசாரணை நடத்தி வந்துள்ளனர். </p><h2>

22 வயது இளைஞர் கைது</h2><p>
இதன்போது, கொலை வழக்கு தொடர்பில் தேடப்பட்டு வந்த முக்கிய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e29b6871-b1d9-4f17-86e8-b63ab55372d5/26-6aa4c224744de.webp' /></p><p> </p><p>


இவ்வாறு கைது செய்யப்பட்டவர், மபாகடாவேவ பகுதியைச் சேர்ந்த 22 வயது இளைஞர் ஆவார்.
</p><p>
இந்தச் சம்பவம் தொடர்பில் மஹியங்கனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p><p><br></p><p> 



</p>]]></content>
            <updated>2026-09-12T03:09:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Tony</name>
            </author>
            <title type="text"><![CDATA[மண்டாடி 2 நாளில் இத்தனை கோடிகள் வசூலா, சூரி சம்பவம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/mandadi-2-days-box-office-collection-1789179744"></link>
            <id>https://cineulagam.com/article/mandadi-2-days-box-office-collection-1789179744</id>
            <summary type="text">மண்டாடி&amp;nbsp;சூரி நடிப்பில் மதிமாறன் இயக்கத்தில் பிரமாண்ட பொருட்செலவில் எடுக்கப்பட்ட படம் மண்டாடி. இந்த படம் இரண்டு நாள் முன்பு பிரமாண்டமாக திரைக்கு வ...</summary>
            <content type="html"><![CDATA[<h2>மண்டாடி</h2><p>&nbsp;சூரி நடிப்பில் மதிமாறன் இயக்கத்தில் பிரமாண்ட பொருட்செலவில் எடுக்கப்பட்ட படம் மண்டாடி. </p><p>இந்த படம் இரண்டு நாள் முன்பு பிரமாண்டமாக திரைக்கு வந்தது. இந்த படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அதிலும் படத்தில் இடம்பெற்ற படகு போட்டி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/da61ef91-ebea-4e94-9264-a22ea916fec1/26-6aa4b763d22b2.webp' /></p><p>இந்நிலையில் மண்டாடி படம் முதல் நாள் 8 கோடி வரை வசூல் செய்த நிலையில் இரண்டாம் நாள் உலகம் முழுவதும் ரூ 10+ கோடிகள் வசூல் செய்ய, மொத்தம் ரூ 18+ கோடிகளுக்கு மேல் படம் வசூல் செய்துள்ளது. </p><p>கண்டிப்பாக இந்த படம் சூரியின் கெரியர் பெஸ்ட் வசூல் வரும் என்பதில் எந்த மாற்றுகருத்தும் இல்லை. மேலும் இன்று இந்த படம் உலகம் முழுவதும் மேலும் 10+ கோடி வசூல் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p>]]></content>
            <updated>2026-09-12T03:00:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[22 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்ட மூலம்: விவாதத்திற்கான திகதிகள்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/22nd-amendment-parliament-of-sri-lanka-1789181844"></link>
            <id>https://tamilwin.com/article/22nd-amendment-parliament-of-sri-lanka-1789181844</id>
            <summary type="text">&amp;nbsp;நாடாளுமன்றத்தில் சபை நடவடிக்கைகளைத் தீர்மானிக்கும் கட்சித் தலைவர்களைக் கொண்ட குழு (பிசினஸ் கமிட்டி (Party Leaders&#039; Committee / Parliamentary Bus...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;நாடாளுமன்றத்தில் சபை நடவடிக்கைகளைத் தீர்மானிக்கும் கட்சித் தலைவர்களைக் கொண்ட குழு (பிசினஸ் கமிட்டி (Party Leaders' Committee / Parliamentary Business Committee) கூட்டம் இடம்பெற்றுள்ளது.</p><p>இந்த கூட்டமானது, நேற்று(11.09.2026) இடம்பெற்ற&nbsp; நிலையில், 24 மற்றும் 25 ஆகிய இரு தினங்கள், 22 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்ட மூலம் மற்றும்&nbsp; நீதிமன்றங்களின் கட்டமைப்பு திருத்தச் சட்ட மூலம் உள்ளிட்ட இரு சட்ட மூலங்கள் மீதான விவாதங்களை எடுத்துக் கொள்வதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><h2>விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும் திகதி</h2><p>அவ்வாறானால் குறைந்தபட்சம் 23 ஆம் திகதியாவது சபாநாயகர் உயர் நீதிமன்றத் தீர்ப்பை அறிவிக்க வேண்டும்.</p><p>24 ஆம் திகதி காலையில் நீதிமன்ற தீர்ப்பை அறித்துவிட்டு அன்றே விவாதிக்க முடியாது அல்லவா,&nbsp; பொதுவாக நாடாளுமன்றத்தில் அப்படிச் செய்யும் மரபு இல்லை. பெரும்பாலும் 22 அல்லது 23 ஆம் திகதி காலையில் சபாநாயகர் இந்த அறிவிப்பைச் சமர்ப்பிப்பதாக இருந்தால் நாடாளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பமாகும் போதே சமர்ப்பிப்பார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dc8e1892-b0a6-4fcc-9186-6a050e41dd92/26-6aa4bf975003c.webp' /></p><p>இப்படி தான் இதுவரை காலமும் வழிமுறை பின்பற்றப்படுகின்றன.&nbsp;</p><p> இந்தத் தீர்மானத்தை எடுக்கும்போது சட்டமா அதிபர் திணைக்களத்திடம் அரசுத் தரப்பு விசாரித்திருக்கக்கூடும்.
</p><p>22 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பெரும்பாலான மனுக்களில்&nbsp; சர்வஜன வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று தான் வலியுறுத்தப்பட்டிருந்தது.&nbsp;</p><p>அதற்கு மேலதிகமாக எதிர்க்கட்சி கூறுவது என்னவென்றால், 22 ஆவது திருத்தத்தைக் கொண்டு வருவதன் நோக்கம் தேர்தலை ஒத்திவைப்பது தான்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-12T03:00:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[அநுரவின் வடக்கு பயணம் : ஆளுநர் தலைமையில் விசேட கலந்துரையாடல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/president-anura-visit-mannar-and-mullaitivu-1789181128"></link>
            <id>https://tamilwin.com/article/president-anura-visit-mannar-and-mullaitivu-1789181128</id>
            <summary type="text">ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க எதிர்வரும் புதன்கிழமை மன்னார் மற்றும்
முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு மேற்கொள்ளவுள்ள பயணத்துக்கான முன்னேற்பாடுகள்
தொடர்பா...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க எதிர்வரும் புதன்கிழமை மன்னார் மற்றும்
முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு மேற்கொள்ளவுள்ள பயணத்துக்கான முன்னேற்பாடுகள்
தொடர்பான விசேட கலந்துரையாடல், வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன்
தலைமையில் நேற்று(11.09.2026) காலை ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.
</p><p>
ஜனாதிபதியின் இந்தப் பயணத்தின் போது, மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட
மருத்துவமனைகளில் இந்திய அரசின் நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்படவுள்ள கட்டடத்
தொகுதிகளுக்கான அடிக்கல் நடும் நிகழ்வில் ஜனாதிபதி கலந்துகொள்ளவுள்ளார்.</p><h2>நிகழ்வுகளுக்கான ஒருங்கிணைப்பு</h2><p>
இந்நிகழ்வில் இலங்கைக்கான இந்தியத் தூதுவரும் கலந்துகொள்ளவுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8e0fbe20-0b43-4e02-82c5-80a7cc7c2ccc/26-6aa4c0157969b.webp' /></p><p>
இதன்படி, மன்னார் மாவட்டத்தில் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவுக்கான
கட்டடமும், முல்லைத்தீவு மாவட்டத்தில் மருத்துவ விடுதிக்கான கட்டடமும்
நிர்மாணிக்கப்படவுள்ள நிலையில், அந்தக் கட்டடங்களுக்கான அடிக்கல் நடும்
நிகழ்வுகளைச் சிறப்பாகவும் ஒழுங்காகவும் முன்னெடுப்பதற்கான ஏற்பாடுகள்
தொடர்பில் இந்தக் கலந்துரையாடலில் விரிவாக ஆராயப்பட்டது.</p><p>குறிப்பாக, இரு மாவட்டங்களிலும் நடைபெறவுள்ள நிகழ்வுகளுக்கான ஒருங்கிணைப்பு,
தேவையான உட்கட்டமைப்பு மற்றும் நடைமுறை ஏற்பாடுகள் உள்ளிட்ட விடயங்கள்
தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1aba6d2e-1ce3-4e70-8c27-a39499e6902f/26-6aa4c0165307f.webp' /></p><p>
</p><p>
இந்தக் கலந்துரையாடலில் ஆளுநரின் செயலாளர், சுகாதார அமைச்சின் செயலாளர்,
பிரதிப் பிரதம செயலாளர் – பொறியியல், வடக்கு மாகாண சுகாதாரப் பணிப்பாளர்,
மாகாண கட்டடங்கள் திணைக்களத்தின் மேலதிக மாகாணப் பணிப்பாளர் மற்றும் ஆளுநரின்
பிரத்தியேகச் செயலாளர் ஆகியோர் கலந்துகொண்டனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-12T02:59:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[புதிதாக கொள்வனவு செய்த வாகனம் - மூன்று நாளில் பற்றி எரிந்தமையால் அதிர்ச்சியில் உரிமையாளர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/new-van-got-fired-owner-injured-1789179768"></link>
            <id>https://tamilwin.com/article/new-van-got-fired-owner-injured-1789179768</id>
            <summary type="text">களுத்துறை பிரதேசத்தில் புதிய வாகனம் ஒன்று முழுமையாக தீக்கிரையாகியுள்ளதுடன், சாரதி படுகாயமடைந்துள்ளார். சாரதி தீக்காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>களுத்துறை பிரதேசத்தில் புதிய வாகனம் ஒன்று முழுமையாக தீக்கிரையாகியுள்ளதுடன், சாரதி படுகாயமடைந்துள்ளார். </p><p>சாரதி தீக்காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். </p><p>வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர் கலப்புகம பனாபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 52 வயதுடையவராவார். </p><p>மூன்று நாட்களுக்கு முன்னர் கொள்வனவு செய்யப்பட்ட புதிய வேனை இயக்க முற்பட்டபோது இயங்காமல் போயுள்ளது.</p><p> </p><h2><b>தீப்பற்றி எரிந்த&nbsp;வாகனம் </b></h2><p>அதனைத் தள்ளிக்கொண்டிருந்த போது தீப்பற்றி எரிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fc9d4a51-1c71-4778-9bac-9cd24c5c572e/26-6aa4beb3e828a.webp' /></p><p>பொலிஸார், பிரதேசவாசிகள் மற்றும் களுத்துறை மாநகரசபையின் தீயணைப்பு வாகனம் என்பன வந்து தீயைக் கட்டுப்படுத்திய போதிலும், அதற்குள் வேன் முழுமையாக எரிந்து நாசமாகியுள்ளது. </p><p>சாரதி பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-09-12T02:53:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[அநுர அரசுக்கு எதிராக போராட்டத்தில் குதித்த சாவகச்சேரி மக்கள் - களத்தில் தமிழ் தலைவர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/protest-against-anura-government-in-chavakachcheri-1789181321"></link>
            <id>https://tamilwin.com/article/protest-against-anura-government-in-chavakachcheri-1789181321</id>
            <summary type="text">புதிய இணைப்புமக்களின் கோரிக்கைகளை முன்வைத்து முன்னெடுக்கப்படும் உண்ணாவிரதப் போராட்டத்தில் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ. சுமந்திரன், சி.வி...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>மக்களின் கோரிக்கைகளை முன்வைத்து முன்னெடுக்கப்படும் உண்ணாவிரதப் போராட்டத்தில் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ. சுமந்திரன், சி.வி.கே. சிவஞானம், செல்வம் அடைக்கலநாதன் மற்றும் சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.&nbsp; &nbsp; &nbsp; &nbsp;</p><h2>முதலாம் இணைப்பு</h2><p>தமிழ் மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிய அநுர அரசாங்கத்திற்கு எதிராக கண்டன உண்ணாவிரதப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><p>
இந்தப் போராட்டம் இன்று (12.09.2026) சாவகச்சேரியில் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><h2>
வாக்குறுதிகளை நிறைவேற்றாத அரசு</h2><p>

ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் தலைமையில் முன்னெடுக்கப்படும் இந்தக் கண்டன உண்ணாவிரதப் போராட்டத்தில் மக்கள் கலந்துகொண்டு, தங்களுடைய கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர்.
</p><p>
அத்துடன், அநுர அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் தமிழ் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் பதாதைகளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ba314cc6-d308-4b80-999d-df8b3d3f78ff/26-6aa4cba6ca7a6.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f4a211e0-b646-4413-b343-d56bfbd089e2/26-6aa4cba7a2b78.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/17270493-c5be-4238-a1f7-c53bf6e5fc8e/26-6aa4cb849074c.webp' /></p><p></p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-12T02:51:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[உயிரை மாய்த்துக்கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ள மகிந்த]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/mahinda-driven-to-the-point-of-taking-his-own-life-1789177252"></link>
            <id>https://ibctamil.com/article/mahinda-driven-to-the-point-of-taking-his-own-life-1789177252</id>
            <summary type="text">ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த சிலர் மிக விரைவில் சிறைச்சாலைக்குச் செல்ல நேரிடும் என முன்னாள் இராணுவத் தளபதியும் பீல்ட் மார்ஷலுமான சரத் பொன்சேகா தெரிவி...</summary>
            <content type="html"><![CDATA[<p>ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த சிலர் மிக விரைவில் சிறைச்சாலைக்குச் செல்ல நேரிடும் என முன்னாள் இராணுவத் தளபதியும் பீல்ட் மார்ஷலுமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.</p><p>இணைய ஊடகமொன்றுக்கு வழங்கிய கலந்துரையாடலின்போதே அவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.</p><p>
</p><p>
அதற்கான அறிகுறிகள் தற்போது தென்படத் தொடங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>உயிரை மாய்த்துக்கொள்வார்&nbsp;</h2><p>
</p><p>
ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த அந்த உறுப்பினர்கள் சிறைக்குச் சென்ற பின்னர், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை தூக்கிலிட வேண்டிய அவசியம் ஏற்படாது எனவும் அவர் கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/940eb78c-6aaa-4028-bf1b-8abe7a183a3d/26-6aa4bc11ec99c.webp' /></p><p>அவர் தானாகவே உயிரை மாய்த்துக்கொள்வார் எனவும் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-12T02:42:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மகிந்தவின் மகன் என்பது மட்டும் போதாது..! நாமல் நிரூபிக்க வேண்டும் - நிரோஷன் பாதுக்க]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/namal-rajapaksa-can-never-become-mahinda-1789179453"></link>
            <id>https://ibctamil.com/article/namal-rajapaksa-can-never-become-mahinda-1789179453</id>
            <summary type="text">நாமல் ராஜபக்ச தனது தந்தை மகிந்த ராஜபக்சவின் மகனாக இருக்கலாம், ஆனால் அதற்காக ஒருபோதும் அவரால் மகிந்த ராஜபக்சவாக மாற முடியாது&amp;nbsp; என ஐக்கிய மக்கள் சக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாமல் ராஜபக்ச தனது தந்தை மகிந்த ராஜபக்சவின் மகனாக இருக்கலாம், ஆனால் அதற்காக ஒருபோதும் அவரால் மகிந்த ராஜபக்சவாக மாற முடியாது&nbsp; என ஐக்கிய மக்கள் சக்தியின் ஊழலுக்கு எதிரான இயக்கத்தின் தேசிய அமைப்பாளர் நிரோஷன் பாதுக்க தெரிவித்தார்.</p><p>கொழும்பில் வெள்ளிக்கிழமை (11) ஐக்கிய மக்கள் சக்தி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
</p><p>அவர் மேலும் தெரிவிக்கையில்,

அத்துடன், நாமல் ராஜபக்சவும் அங்கம் வகித்த கடந்த அரசாங்கத்தின் தவறான நிர்வாகச் செயற்பாடுகள் மற்றும் சீர்கேடான பொருளாதாரக் கொள்கைகள் காரணமாகவே இலங்கை நாடு முன்னெப்பொழுதுமில்லாதவாறு பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுத்தது.</p><p></p><h2>தத்தமது அரசியல் இலக்கு</h2><p> எனினும், நாடு எவ்வாறு இவ்வாறான வீழ்ச்சியைச் சந்தித்தது என்பதற்கான உண்மையான காரணங்களையோ அல்லது அதிலிருந்து மீண்டு வருவதற்கான சரியான தீர்வுகளையோ பற்றிய எந்தவொரு புரிதலும் தெளிவும் இல்லாத ஒரு தரப்பிடமே நாட்டின் பொதுமக்கள் தற்போதைய ஆட்சி அதிகாரத்தைக் கையளித்துள்ளனர்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e8acddf4-c8f8-47cf-8602-5ed0a09ca31d/26-6aa4bb9aba0aa.webp' /></p><p>
அதேவேளை, நாட்டின் பிரதான எதிர்க்கட்சி என்ற வகையில் தமக்குரிய பொறுப்புகளையும் கடமைகளையும் தாங்கள் சரியான முறையில் நிறைவேற்றி வருகிறோம்.</p><p> எதிர்க்கட்சியில் உள்ள ஏனைய அனைத்துக் குழுக்களும் தத்தமது அரசியல் இலக்குகளை நோக்கிப் பயணிப்பதற்குத் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதுடன், நாட்டில் தற்போது உடனடியாகத் தேர்தல்கள் எதுவும் நடத்தப்படாத நிலையில், நாமல் ராஜபக்சவும் எதிர்க்கட்சியிலேயே தொடர்ந்தும் அங்கத்துவம் வகித்து வருகிறார் என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும் என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-12T02:40:39+00:00</updated>
        </entry>
    </feed>
