<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-07-20T05:37:03+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலகக்கிண்ணத்தை வென்ற ஸ்பெயின் மற்றும் அர்ஜென்டினாவுக்கு மிகப்பெரிய பரிசுத்தொகை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/spain-and-argentina-prize-money-of-fifa-2026-1784525340"></link>
            <id>https://news.lankasri.com/article/spain-and-argentina-prize-money-of-fifa-2026-1784525340</id>
            <summary type="text">FIFA உலகக்கிண்ணம் வென்ற ஸ்பெயின் அணிக்கு 50 மில்லியன் டொலர்கள் பரிசுத்தொகை கிடைத்துள்ளது.&amp;nbsp;50 மில்லியன் டொலர்கள்&amp;nbsp;

ஈஸ்ட் ரூதர்போர்ட்டில் நட...</summary>
            <content type="html"><![CDATA[<p>FIFA உலகக்கிண்ணம் வென்ற ஸ்பெயின் அணிக்கு 50 மில்லியன் டொலர்கள் பரிசுத்தொகை கிடைத்துள்ளது.&nbsp;</p><h2>50 மில்லியன் டொலர்கள்&nbsp;</h2><p>

ஈஸ்ட் ரூதர்போர்ட்டில் நடந்த FIFA உலகக்கிண்ண இறுதிப்போட்டியில் அர்ஜென்டினாவை வீழ்த்தி ஸ்பெயின் அணி சாம்பியன் ஆனது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/98db8c0e-a38a-4a6b-94be-7b0f18c92154/26-6a5db3bc11018.webp' />&nbsp;</p><p></p><p>

சாம்பியன் பட்டம் வென்ற ஸ்பெயின் அணிக்கு பரிசுத்தொகையாக 50 மில்லியன் டொலர்கள் வழங்கப்பட உள்ளது. இந்திய மதிப்பில் ரூ.482 கோடி ஆகும்.</p><h2>
சாம்பியன்ஷிப் மோதிரங்கள்</h2><p>அத்துடன் வெற்றி பெற்ற ஸ்பெயின் அணி முதல் முறையாக, சுமார் 1,50,000 டொலர் (ரூ.1.4 கோடி) மதிப்புடையதாக கூறப்படும் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட சாம்பியன்ஷிப் மோதிரங்களையும் பெறுகிறது. </p><p>

அதேபோல் தோல்வியுற்ற அணியான அர்ஜென்டினா 33 மில்லியன் டொலர்களை (இந்திய மதிப்பில் சுமார் ரூ.318 கோடி) பெறுகிறது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dc20a90c-326a-4c0d-a9a6-ddb6666c70bc/26-6a5db3bcb469c.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-20T05:34:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[பொதுப் போக்குவரத்தில் ஈடுபடும் அனைத்து வாகனங்களுக்கும் தரப் பரிசோதனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/quality-testing-for-all-public-transport-vehicles-1784522612"></link>
            <id>https://ibctamil.com/article/quality-testing-for-all-public-transport-vehicles-1784522612</id>
            <summary type="text">நாட்டில் பொதுப் போக்குவரத்துச் சேவைகளில் ஈடுபடும் பேருந்துகள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களினதும் தரப் பரிசோதனையை மேற்கொள்ளத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வீத...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டில் பொதுப் போக்குவரத்துச் சேவைகளில் ஈடுபடும் பேருந்துகள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களினதும் தரப் பரிசோதனையை மேற்கொள்ளத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வீதிப் பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை தெரிவித்துள்ளது.</p><p>அதற்கமைய இச்செயற்பாட்டை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதல் ஆரம்பிக்க எதிர்பார்ப்பதாக அந்த சபையின் தலைவர் மஞ்சுள குலரத்ன தெரிவித்தார்.</p><p>இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், இந்நாட்டின் பொதுப் போக்குவரத்தில் ஏற்படும் வாகன விபத்துக்களுக்குச் சாரதிகளின் கவனயீனம் மற்றும் வாகனங்களில் காணப்படும் பல்வேறு குறைபாடுகளுமே பிரதான காரணம்.</p><p></p><h2>தொழில்நுட்ப அதிகாரிகள்</h2><p>இது தொடர்பில் கவனம் செலுத்தி பொதுப் போக்குவரத்தில் ஈடுபடும் பேருந்துகள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களினதும் தரப் பரிசோதனையை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0d363826-7da5-4e65-bb3b-1d30e1c82b62/26-6a5db124e5f21.webp' /></p><p>குறித்த தரப் பரிசோதனைக்காகத் தகுதிவாய்ந்த தொழில்நுட்ப அதிகாரிகளை இணைத்துக் கொள்வதற்காகத் தற்போது விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது. இந்த ஆட்சேர்ப்புகளின் பின்னர் செப்டெம்பர் மாத இறுதிக்குள் இச்செயற்பாட்டை ஆரம்பிக்க முடியும்.</p><p>அதற்கமைய இந்நாட்டின் பொதுப் போக்குவரத்தில் ஈடுபடும் அனைத்து வாகனங்களினதும் தரப் பரிசோதனைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்“ என தெரிவித்தார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-20T05:33:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[10 நாட்களில் இதயம் முரளி திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/idhayam-murali-movie-10-days-box-office-1784523482"></link>
            <id>https://cineulagam.com/article/idhayam-murali-movie-10-days-box-office-1784523482</id>
            <summary type="text">இதயம் முரளிமறைந்த நடிகர் முரளியின் மகனும் பிரபல நடிகருமான அதர்வா நடிப்பில் காதல் கதைக்களத்தில் உருவாகி வெளிவந்த திரைப்படம்தான் இதயம் முரளி. 

இப்படத...</summary>
            <content type="html"><![CDATA[<h2>இதயம் முரளி</h2><p>மறைந்த நடிகர் முரளியின் மகனும் பிரபல நடிகருமான அதர்வா நடிப்பில் காதல் கதைக்களத்தில் உருவாகி வெளிவந்த திரைப்படம்தான் இதயம் முரளி. </p><p>

இப்படத்தை அறிமுக இயக்குநர் ஆகாஷ் பாஸ்கரன் இயக்கி தயாரித்திருந்தார். இப்படத்தில் அதர்வாவுடன் இணைந்து ப்ரீத்தி முகுந்தன் மற்றும் கயாடு லோஹர் நடித்திருந்தனர்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d6fbd54c-fbe9-4aff-a02d-4c101a58d8e6/26-6a5daaddb61e1.webp' /></p><p>மேலும் பரிதாபங்கள் சுதாகர், டிராவிட், நடிகர் பகத் பாசில், ரக்ஷன், நிஹாரிகா, நட்ராஜ், தமன், ஏஞ்சலின், அஞ்சு குரியன் என மாபெரும் நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்திருந்தனர். 

நடிப்பு மட்டுமின்றி இப்படத்திற்கு இசையமைத்திருந்தார் தமன் என்பது குறிப்பிடத்தக்கது.</p><h2>வசூல் விவரம்</h2><p> </p><p>கடந்த ஜூலை 10-ஆம் தேதி வெளிவந்த இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இருந்தும் பாக்ஸ் ஆபிஸில் ஓரளவு வசூலை குவித்து வருகிறது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b85c3ad6-cd84-46d0-b2d6-e65f064f0fa8/26-6a5daade6945c.webp' /></p><p>இந்த நிலையில், 10 நாட்களில் இதயம் முரளி திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 10 நாட்களில் இப்படம் உலகளவில் ரூ. 27 கோடி வசூல் செய்துள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-20T05:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் பெரும் அச்சுறுத்தலாகும் டெங்கு; 76,000 ஐ கடந்த எண்ணிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/dengue-threat-in-sri-lanka-exceeds-76-000-effect-1784525338"></link>
            <id>https://jvpnews.com/article/dengue-threat-in-sri-lanka-exceeds-76-000-effect-1784525338</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;நாடளாவிய ரீதியில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 76,000 ஐ கடந்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. 

 
 ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;நாடளாவிய ரீதியில் <a href="https://jvpnews.com/article/dengue-a-major-threat-in-sri-lanka-70-000-affected-1784007553" target="_blank">டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை </a>76,000 ஐ கடந்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. 

 
 ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 76,044 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
</p><p>
 53 டெங்கு மரணங்களும் பதிவாகியுள்ளதாக அந்த பிரிவு நேற்று (19) இரவு விடுத்துள்ள புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதிகளவான நோயாளர்கள் மேல் மாகாணத்தின் கம்பஹா மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/80f7efda-4b39-446d-9f2d-ad5aa931e1d4/26-6a5db21be3245.webp' /></p><p> </p><p>

கம்பஹா மாவட்டத்தில் மாத்திரம் ஆண்டின் இதுவரையில் 15,910 நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன் கொழும்பு மாவட்டத்தில் 15,110 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.</p><p> 

இதுதவிர ஏனைய மாவட்டங்களான மாத்தறையில் 5330 பேரும், கண்டியில் 5111 பேரும், களுத்துறையில் 5010 பேரும் இரத்தினபுரியில் 4295 பேரும், காலியில் 4260 பேரும் டெங்கு நோயினால் அதிகளவில் இனங்காணப்பட்டுள்ளனர். </p><p>

அதேவேளை 2026 ஆம் ஆண்டில் ஜூலை மாதத்தின் முதல் 19 நாட்களில் மாத்திரம் 20,666 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு கட்டுப்பாட்டு பிரிவு குறிப்பிட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-20T05:27:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[அவர் ஒரு போர்க்குற்றவாளி... நியூயார்க் மேயர் மம்தானி மீண்டும் சூளுரை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/netanyahu-war-criminal-says-1784524889"></link>
            <id>https://news.lankasri.com/article/netanyahu-war-criminal-says-1784524889</id>
            <summary type="text">இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நியூயார்க் நகருக்கு வருகை தருவார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அவரைத் தனது நிர்வாகத்தால் கைது செய்ய முடி...</summary>
            <content type="html"><![CDATA[<p>இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நியூயார்க் நகருக்கு வருகை தருவார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அவரைத் தனது நிர்வாகத்தால் கைது செய்ய முடியுமா என்பது குறித்து ஆய்வு செய்து வருவதாக நியூயார்க் நகர மேயர் ஜோஹ்ரான் மம்தானி தெரிவித்துள்ளார்.</p><h2>கைது செய்ய முடியுமா</h2><p>
</p><p>எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்திற்காக இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நியூயார்க் நகருக்கு வருகை தருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b7af8e0e-0390-4ae9-b23f-56cf79dba03b/26-6a5db1976c53a.webp' /></p><p> </p><p>இந்த நிலையிலேயே, தனது நிர்வாகத்தால் நெதன்யாகுவை கைது செய்ய முடியுமா என்பது குறித்து ஆய்வு செய்து வருவதாக மம்தானி கூறியுள்ளார்.</p><p> நியூயார்க் டைம்ஸின் The Interview பாட்காஸ்டின் சனிக்கிழமை அத்தியாயத்தில் மம்தானி தெரிவித்த கருத்துகள் தற்போது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. </p><p>குறித்த பாட்காஸ்டில் பேசிய மம்தானி, பிரதமர் நெதன்யாகு தற்போது ஹேக் (The Hague) நகரில் இருக்க வேண்டியவர் என குறிப்பிட்டுள்ளார். காஸாவில் நடந்ததாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பாக 2024 நவம்பரில் நெதன்யாகுவைக் கைது செய்வதற்கான பிடிவாரண்டை வெளியிட்ட சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் அமைந்துள்ள டச்சு நகரமாகும் ஹேக். </p><p>

நெதன்யாகு சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தால் குற்றம் சாட்டப்பட்ட ஒரு போர்க்குற்றவாளி; கடந்த பல ஆண்டுகளாக அவரது நடவடிக்கைகள் ஏற்படுத்திய விளைவுகளின் காரணமாகவே, பலரும் இத்தகையதொரு கருத்தைக் கொண்டுள்ளனர் எனவும் மம்தானி அந்த பாட்காஸ்டில் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p> </p><p>மேலும், நெதன்யாகு போன்ற ஒரு வெளிநாட்டுத் தலைவரைக் கைது செய்யுமாறு, தனது மேற்பார்வையில் உள்ள நியூயார்க் காவல் துறைக்கு (NYPD) உத்தரவிடும் சட்டப்பூர்வ அதிகாரம் தமக்கு உள்ளதா என்பது குறித்துத் தனக்குத் தெளிவாகத் தெரியவில்லை என்றும் மாம்தானி குறிப்பிட்டுள்ளார். </p><p>ஆனால், இந்த விவகாரம் குறித்து நகரின் சட்டத் துறையுடன் தீவிரமாகப் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் மம்தானி தெரிவித்துள்ளார். மட்டுமின்றி, நியூயார்க் நகரில் சட்டம் எதைச் செய்ய அனுமதிக்கிறதோ, அதைத்தான் நாங்கள் செய்வோம், ஆனால், அதற்காக னகரத்தின் சட்டத்தை நாங்கள் திருத்தப்போவதில்லை என்றும் மம்தானி குறிப்பிட்டுள்ளார்.
</p><p>காஸாவில் போருக்கான ஒரு ஆயுதமாக மக்களைப் பட்டினி போடுதல், அத்துடன் கொலை, துன்புறுத்தல் மற்றும் பிற மனிதாபிமானமற்ற செயல்கள் உள்ளிட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் புரிந்ததாகக் குற்றம் சாட்டி, நெதன்யாகு மற்றும் பிற இஸ்ரேலியத் தலைவர்களைக் கைது செய்ய சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றம் (ICC) பிடியாணை பிறப்பித்திருந்தது.</p><h2>ஹமாஸ் ஆதரவாளர்</h2><p> </p><p>மம்தானி தனது மேயர் தேர்தல் பிரச்சாரத்தின் போது, ​​காஸாவில் இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கைகளை ஒரு இனப்படுகொலை என்றும், நெதன்யாகுவை ஒரு போர்க் குற்றவாளி என்றும் சித்தரித்தார். </p><p>மேலும், செப்டம்பர் மாதம் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், நெதன்யாகு எப்போதாவது நெதன்யாகு நியூயார்க்கில் கால் வைத்தால், அவரைக் கைது செய்யுமாறு நியூயார்க் நகர காவல்துறைக்கு (NYPD) உத்தரவிடுவேன் என்றும் கூறினார். </p><p>ஆனால், மம்தானிக்கு அப்போது பதிலளித்த சட்ட வல்லுநர்கள், நெதன்யாகுவைக் கைது செய்வது மம்தானிக்கு நடைமுறையில் சாத்தியமற்ற ஒன்றாக இருக்கும் என்றும், அப்படியான ஒரு சம்பவம் அமெரிக்க ஃபெடரல் அரசாங்கத்துடன் நேரடி மோதலில் ஈடுபடுத்தக்கூடும் என்றும் விளக்கமளித்திருந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7d603902-0b09-4110-bd05-da4b77abd122/26-6a5db1968b01f.webp' /></p><p> இதனிடையே, மம்தானியின் சூளுரைகளை தாம் கண்டுகொள்வதில்லை என தெரிவித்துள்ள நெதன்யாகு, அவர் ஒரு ஹமாஸ் ஆதரவாளர் என்றும் குற்றஞ்சாட்டினார். </p><p>அத்துடன், ஐக்கிய நாடுகள் சபைக்கான இஸ்ரேலின் தூதர் டேனி டானன் தெரிவிக்கையில், இஸ்ரேலியப் பிரதமர் நெதன்யாகு நியூயார்க் வந்து, ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் பெருமிதத்துடன் உரையாற்றுவார்; </p><p>மேலும், இஸ்ரேலின் உண்மையை எடுத்துரைக்கவும், தனது குடிமக்களைப் பாதுகாப்பதற்கான அதன் அசைக்க முடியாத உரிமையை வலியுறுத்தவும் உலகத்தின் முன் நிற்பார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-20T05:19:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Manchu</name>
            </author>
            <title type="text"><![CDATA[Oats Kara Paniyaram: ஆரோக்கியமான ஓட்ஸ் கார பணியாரம்... வீட்டில் செய்வது எப்படி?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/healthy-oats-kara-paniyaram-in-tamil-1784522730"></link>
            <id>https://manithan.com/article/healthy-oats-kara-paniyaram-in-tamil-1784522730</id>
            <summary type="text">ஆரோக்கிய நன்மைகள் நிறைந்த ஓட்ஸ் கொண்டு எவ்வாறு சுவையான கார பணியாரம் செய்யலாம் என்பதை தெரிந்து கொள்ளலாம்.பணியாரம் ஆரோக்கியமான உணவுகளில் ஒன்றாக உள்ளது. ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஆரோக்கிய நன்மைகள் நிறைந்த ஓட்ஸ் கொண்டு எவ்வாறு சுவையான கார பணியாரம் செய்யலாம் என்பதை தெரிந்து கொள்ளலாம்.</p><p>பணியாரம் ஆரோக்கியமான உணவுகளில் ஒன்றாக உள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுகின்றனர்.</p><p>அதிலும் இன்னும் ஆரோக்கியமான வகையில் ஓட்ஸ் கொண்டு பணியாரம் செய்யலாம். இன்றைய காலத்தில் ஓட்ஸ் ஆரோக்கிய உணவாக இருக்கின்றது.</p><p>வயது முதிர்ந்த பெரும்பாலான நபர்கள் ஓட்ஸை தான் காலை உணவாக சாப்பிடுகின்றனர். இந்நிலையில் ஓட்ஸ் கொண்டு ஆரோக்கியமான முறையில் பணியாரம் எவ்வாறு செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7ac652a2-4009-49d1-93fd-eb9ecddeada0/26-6a5daff2a367e.webp' /></p><h2><span style="color: inherit; font-size: 1.75rem;">தேவையான பொருட்கள்</span></h2><p>Instant Oats - 1 கப்
<br>அரிசி மாவு - ¼ கப்
<br>கெட்டி தயிர் - ½ கப்
<br>பெரிய வெங்காயம் - 1
<br>கேரட் - 1
<br>பேக்கிங் சோடா - 1 சிட்டிகை
<br>கடுகு - ½ டீஸ்பூன்
<br>சீரகம் - ½ டீஸ்பூன்
<br>பெருங்காய தூள் - ¼ டீஸ்பூன்
<br>எண்ணெய் - தேவையான அளவு
<br>கறிவேப்பிலை - சிறிதளவு
<br>கொத்தமல்லி இலை - சிறிதளவு
<br>உப்பு - தேவையான அளவு
<br>தண்ணீர் - தேவைக்கேற்ப</p><p></p><h2>செய்முறை</h2><p>அடுப்பில் கடாய் வைத்து சூடானதும் ஓட்ஸ் போட்டு மிதமான தீயில் 4-5 நிமிடங்களுக்கு நிறம் மாறாமல் நறுமணம் வரும் வரை வறுத்து எடுத்து நன்றாக ஆறியவுடன் மிக்ஸி ஜாரில் போட்டு கரடுமுரடான பொடியாக அரைத்து எடுத்து ஒரு பாத்திரத்தில் போட்டுக்கொள்ளவும்.</p><p>பின்னர் அதில் சலித்த அரிசி மாவு மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து கெட்டியான புதிய தயிரை சேர்த்து கட்டிகள் இல்லாமல் நன்றாகக் கலந்து அதனுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மாவு தயாரிக்கவும்.</p><p>பின்னர் அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு மற்றும் சீரகம் போட்டு கடுகு வெடித்ததும் பெருங்காய தூள் மற்றும் பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/31999079-6df9-4d5e-8bff-d2a8de41472b/26-6a5daff1f37db.webp' /></p><p>அடுத்து அதில் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கி வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வதங்கியவுடன் துருவிய கேரட்டை சேர்த்து மிதமான தீயில் வதக்கவும்.</p><p>வெங்காயம் மற்றும் கேரட் மென்மையாக வதங்கியவுடன் அவற்றை அப்படியே தயார் செய்துள்ள மாவில் கொட்டி நன்றாக கலந்துவிட்டுக் பின்பு அதில் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலையை போட்டு நன்றாக கலக்கவும்.</p><table class="table table-bordered"><tbody><tr><td><i>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் <a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள் <a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"><b>FOLLOW NOW</b></a>&nbsp;</i><br></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-20T05:19:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கால்பந்து வரலாற்றில் பிரான்ஸ் வீரர் மப்பே படைத்த சாதனை; இதுவரை யாரும் பெறவில்லை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/french-player-mbappe-won-back-to-back-golden-boots-1784524823"></link>
            <id>https://canadamirror.com/article/french-player-mbappe-won-back-to-back-golden-boots-1784524823</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;உலகக் கிண்ண கால்பந்து வரலாற்றில் இதுவரை எந்தவொரு வீரராலும் எட்ட முடியாத ஒரு இமாலய சாதனையை பிரான்ஸின் அசுர வேக முன்களவீரர் கிலியன் மப்பே ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;உலகக் கிண்ண கால்பந்து வரலாற்றில் இதுவரை எந்தவொரு வீரராலும் எட்ட முடியாத ஒரு இமாலய சாதனையை பிரான்ஸின் அசுர வேக முன்களவீரர் கிலியன் மப்பே படைத்துள்ளார். </p><p>

2026 உலகக் கிண்ணத்தின் அதிக கோல்கள் அடித்தவர்களுக்கான புகழ்பெற்ற தங்கப் பாதணி விருதைத் தன்வசப்படுத்தியதன் மூலம், உலகக் கிண்ண வரலாற்றில் இரண்டு முறை இந்த விருதை வென்ற முதல் வீரர் என்ற உலக மகா சாதனையை பிரான்ஸின் அசுர வேக முன்களவீரர் கிலியன் மப்பே பதிவு செய்துள்ளார்.&nbsp; &nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f92b3da4-ca6d-43cd-bd8a-1d6d6a541600/26-6a5db018bf2e9.webp' /></p><p>அதேவேளை 2026 கால்பந்தாட்ட உலகக் கிண்ண போட்டியின் முடிவில் ஆர்ஜென்டினா அணி தோல்வியைத் தழுவியதும், அணியின் தலைவரும் கால்பந்து ஜாம்பவானுமான லியோனல் மெஸ்ஸி, மைதானத்தில் மனமுடைந்து கண்ணீர் விட்ட காணொளி ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-20T05:18:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானின் பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/recent-earthquake-in-iran-1784523493"></link>
            <id>https://ibctamil.com/article/recent-earthquake-in-iran-1784523493</id>
            <summary type="text">ஈரானின் மேற்குப்பகுதியான&amp;nbsp;கெர்மன்ஷா மாகாணத்தில் நிலநடுக்கம் ஒன்று பதிவாகி உள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.&amp;nbsp;கெர்மன்ஷா ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானின் மேற்குப்பகுதியான&nbsp;கெர்மன்ஷா மாகாணத்தில் நிலநடுக்கம் ஒன்று பதிவாகி உள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.&nbsp;</p><p>கெர்மன்ஷா மாகாணத்தில் உள்ள குசரான் அருகே 8 கி.மீ (5 மைல்) ஆழத்தில் ரிக்டர் அளவுகோலில் 5.2 நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.&nbsp;</p><p>தெஹ்ரான் பல்கலைக்கழகத்தின் ஈரானிய நிலநடுக்கவியல் மையத்தை மேற்கோள் காட்டி அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.&nbsp;</p><p></p><h2>நிலநடுக்கத்தின் தாக்கம்</h2><p>உள்ளூர் நேரப்படி காலை 7:13 மணிக்கு (03:43 GMT) இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c6dbec35-5c90-4d84-b118-169b2437390f/26-6a5daf12a4a3e.webp' /></p><p>இதன் மையப்புள்ளி குசாரானிலிருந்து 17 கி.மீ தொலைவிலும், மாகாணத் தலைநகரான கெர்மன்ஷாவிலிருந்து 65 கி.மீ தொலைவிலும் அமைந்திருந்ததாகவும் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-20T05:17:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சி.டி.விக்ரமரத்ன மரணிப்பதற்கு முன் சந்தித்த பிரபல அரசியல்வாதி! மூன்று மணித்தியாலம் பேசிய விடயம் என்ன..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/igp-c-d-wickramaratne-s-death-1784515899"></link>
            <id>https://tamilwin.com/article/igp-c-d-wickramaratne-s-death-1784515899</id>
            <summary type="text">முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன மரணிப்பதற்கு இரு கிழமைகளுக்கு முன் அவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை தனது நெருங்கிய நண்பருடன் சந...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன மரணிப்பதற்கு இரு கிழமைகளுக்கு முன் அவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை தனது நெருங்கிய நண்பருடன் சந்தித்து இரண்டு, மூன்று மணித்தியாலங்கள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
</p><p>முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சி.டி.விக்ரமரத்னவின் பூதவுடலுக்கு இறுதி மரியாதை செலுத்திய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவித்த கருத்துக்கள், </p><p>முன்னாள் பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்ன என்னுடைய மிக நெருங்கிய நண்பர். குறிப்பாக நான் ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில் தான் அவர் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டார். அவர் நேர்மையாகவும், நற்குணங்களுடன், அமைதியாகவும், சாந்தமானகவும் பணியாற்றினார்.</p><h2>
</h2><p></p><h2>சந்தித்து கலந்துரையாடிய விடயஙகள்</h2><p>அரசியல் கட்சிகளில் ஏற்படும் பிரச்சினைகள், மோதல்கள் மற்றும் சில சமயங்களில் அரசியல் தலைவர்கள் பிளவுபட்டு பல்வேறு விடயங்களை பொலிஸ் மா அதிபரிடம் கொண்டு செல்வார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/487ced03-a716-4a0e-ab95-a4c06c157ca9/26-6a5d8d3d572c7.webp' />&nbsp;&nbsp;</p><p> </p><p>ஆனால், அந்த அனைத்து சந்தர்ப்பங்களிலும் அவர் யாரையும் கோபத்துக்கு உள்ளாக்கவில்லை என்பதோடு யாரையும் பகைத்துக் கொள்ளவில்லை. அரகலய போராட்டக் காலத்தில் கூட மிக திறமையாக செயற்பட்டவர்.
</p><p>
இந்தச் சம்பவம் நடப்பதற்கு சுமார் இரண்டு, மூன்று வாரங்களுக்கு முன்பு, அவர் எனது மற்றொரு நண்பரான ரங்க கலன்சூரிய மற்றும் சில நண்பர்களுடன் சந்தித்து இரண்டு, மூன்று மணிநேரம் பல விடயங்கள் தொடர்பில் பேசிக் கொண்டிருந்தோம். </p><p>பேச்சுவார்த்தை முடிந்து நான் போகும் போது, "சேர், நான் உங்களுடைய வீட்டுப் பக்கமும் வந்து போக வேண்டும், சும்மா ஒரு கோப்பி குடிப்போம்" என்று கூறினார்.

எனவே, அவருடைய இந்த மறைவு, இவ்வாறு நடக்கும் என்று என்னால் நினைத்துப் பார்க்கக் கூட முடியவில்லை.</p><h2>காரணம் என்ன </h2><p> </p><p>இரண்டு வாரங்களுக்கு முன்பு தான் அவரைச் சந்தித்து பல மணிநேரம் ஒன்றாக இருந்ததால், இந்தச் செய்தியைக் கேட்டதும் எனது மனதை மிக ஆழமாகப் பாதித்ததோடு பெரும் மன வேதனையைத் தந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d050d781-16e5-4811-8ed8-a9d7a12aaf5b/26-6a5dae899150d.webp' /></p><p>
எனவே, இந்தச் சம்பவம் எவ்வாறு நடந்தது, என்ன காரணம் என்று இன்னும் சொல்ல முடியாது. விசாரணைகளின் மூலமே அது தெரியவரும். </p><p>இவரைப் போன்ற முக்கியமான மனிதர்கள் அரச சேவைக்கும், பொலிஸ் துறைக்கும், ஏனைய சேவைகளுக்கும் மிகவும் முன்மாதிரியான ஒருவராவார். </p><p>
அவருடைய ஓய்வுக் காலத்தில் கூட அவரால் பணியாற்ற முடியும். 63 வயது என்பது ஒருவரின் சிறந்த அறிவும், முதிர்ச்சியும் அதிகரிக்கும் காலம், நன்றாகப் பணியாற்றக்கூடிய காலம். </p><p>ஆனால், அப்படிப்பட்ட ஒரு தருணத்தில் தான் அவர் நம்மை விட்டுப் பிரிந்துள்ளார்.

எனவே தனிப்பட்ட முறையிலும், நான் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து மக்களின் சார்பிலும் எனது ஆழ்ந்த இரங்கலையும் துயரத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.</p><p></p><p></p><p><b><i>you may like this video</i></b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/3dNaOe5-MUg" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-07-20T05:13:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானியாவிடமிருந்து சுதந்திரம் கோரும் கிராமம்: புலம்பெயர்தல் எதிர்ப்பு பின்னணி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/village-to-hold-vote-on-leaving-uk-1784524352"></link>
            <id>https://news.lankasri.com/article/village-to-hold-vote-on-leaving-uk-1784524352</id>
            <summary type="text">இங்கிலாந்திலுள்ள கிராமம் ஒன்று பிரித்தானியாவிடமிருந்து சுதந்திரம் கோருவது தொடர்பில் பொதுவாக்கெடுப்பு நடத்தப்போவதாக மிரட்டல் விடுத்துள்ளது.

சுதந்திர...</summary>
            <content type="html"><![CDATA[<p>இங்கிலாந்திலுள்ள கிராமம் ஒன்று பிரித்தானியாவிடமிருந்து சுதந்திரம் கோருவது தொடர்பில் பொதுவாக்கெடுப்பு நடத்தப்போவதாக மிரட்டல் விடுத்துள்ளது.</p><h3>

சுதந்திரம் கோரும் பிரித்தானிய கிராமம்</h3><p>

இங்கிலாந்தின் ஆக்ஸ்ஃபோர்ட்ஷையரிலுள்ள பிடிங்டன் என்னும் கிராமம், பிரித்தானியாவிடமிருந்து சுதந்திரம் கோருவது தொடர்பில் பொதுவாக்கெடுப்பு நடத்தப்போவதாக மிரட்டல் விடுத்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9e776f1e-c04f-4922-b2e5-7748841940ab/26-6a5dae420594d.webp' /></p><p>

அதாவது, பிடிங்டனுக்கு அருகிலுள்ள பைசெஸ்டர் என்னுமிடத்தில் ஒரு ராணுவ தளம் உள்ளது.
</p><p>
அந்த ராணுவ தளத்தை சுமார் 3.750 புகலிடக்கோரிக்கையாளர்கள் தங்கும் முகாமாக மாற்ற பிரித்தானிய உள்துறை அலுவலகம் திட்டமிட்டுள்ளது.
</p><p>
ஆக, தங்கள் கிராமத்துக்கு அருகில் புகலிடக்கோரிக்கையாளர்கள் முகாம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காகவே, இப்படி ஒரு முடிவை எடுத்துள்ளனர் பிடிங்டன் கிராம மக்கள்.&nbsp;</p><p></p><p>

தங்கள் கிராமத்துக்கு அருகே புகலிடக்கோரிக்கையாளர்கள் முகாம் அமைப்பது குறித்து தங்களிடம் கலந்தாலோசிக்கப்படவில்லை என்று கூறும் அக்கிராமத்தினர், பொதுவாக்கெடுப்பு நடத்தலாமா என்பது குறித்து வாக்கெடுப்பு நடத்தியுள்ளார்கள்.
</p><p>
அந்த வாக்கெடுப்பில், பொதுவாக்கெடுப்பு நடத்தலாம் என மக்கள் வாக்களித்ததைத் தொடர்ந்து, பிரித்தானியாவிடமிருந்து சுதந்திரம் கோருவது தொடர்பில் பொதுவாக்கெடுப்பு நடத்தப்போவதாக மிரட்டல் விடுத்துள்ளனர் அக்கிராம மக்கள்.</p><p>

விடயம் என்னவென்றால், பிரித்தானியாவைப் பொருத்தவரை, அப்படி பொதுவாக்கெடுப்பு நடத்தினாலும், அரசும் நாடாளுமன்றமும் ஒப்புதலளித்தால் மட்டுமே அக்கிராமம் சுதந்திரம் பெற முடியும்.</p><p>

என்றாலும், இது தங்களைக் கலந்தாலோசிக்காமலே, தங்கள் கிராமத்துக்கு அருகே புகலிடக்கோரிக்கையாளர்கள் முகாம் அமைக்க உள்துறை அலுவலகம் முடிவெடுத்ததற்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காக பிடிங்டன் மக்கள் மேற்கொள்ளும் ஒரு அடையாள நடவடிக்கை என்று வேண்டுமானால் எடுத்துக்கொள்ளலாம்.</p><p>

அதாவது, தங்கள் கிராமத்துக்கு அருகே புகலிடக்கோரிக்கையாளர்கள் முகாம் அமைவதை பிடிங்டன் மக்கள் விரும்பவில்லை என்பதை அரசுக்கு தெரியப்படுத்துவதற்காகவே இந்த வாக்கெடுப்பு குறித்த அறிவிப்பு என்பது குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-20T05:12:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[முட்டையின் விலை இன்று முதல் அதிகரிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/egg-prices-to-increase-from-today-1784523407"></link>
            <id>https://tamilwin.com/article/egg-prices-to-increase-from-today-1784523407</id>
            <summary type="text">முட்டையின் விலையை இன்று(20.07.2026) முதல் அதிகரிக்கத் தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

குருநாகல், குள...</summary>
            <content type="html"><![CDATA[<p>முட்டையின் விலையை இன்று(20.07.2026) முதல் அதிகரிக்கத் தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
</p><p>
குருநாகல், குளியாப்பிட்டியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அந்த சங்கத்தின் தலைவர் சரத் ரத்நாயக்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
</p><p></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5f440cf7-faae-46ee-8485-4ddae2031e9a/26-6a5dae123a5e6.webp' /></p><p>இதன்படி, வெள்ளை முட்டை 41 ரூபாயாகவும், சிவப்பு முட்டை 42 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படவுள்ளதாக கூறியுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-20T05:12:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[58 வயது வரை சிங்கிளாகவே இருக்கும் எஸ்.ஜே.சூர்யா சொத்து மதிப்பு இத்தனை கோடியா?... பிறந்தநாள் ஸ்பெஷல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/actor-director-sj-suryah-net-worth-details-1784522755"></link>
            <id>https://cineulagam.com/article/actor-director-sj-suryah-net-worth-details-1784522755</id>
            <summary type="text">எஸ்.ஜே.சூர்யாதுணை இயக்குனராக இருந்து பின் இயக்குனராக வெற்றிப் படங்களை கொடுத்து இப்போது குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் வில்லனாகவும் சில படங்களில் ஹீர...</summary>
            <content type="html"><![CDATA[<h2>எஸ்.ஜே.சூர்யா</h2><p>துணை இயக்குனராக இருந்து பின் இயக்குனராக வெற்றிப் படங்களை கொடுத்து இப்போது குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் வில்லனாகவும் சில படங்களில் ஹீரோவாகவும் நடித்து வருபவர் எஸ்.ஜே.சூர்யா. </p><p>வாலி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அதன்பின் குஷி, நியூ, அன்பே ஆருயிலே, இசை போன்ற தமிழ் படங்களையும் நாணி, புளி போன்ற தெலுங்கு படங்களையும் இயக்கியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8fa6c9e1-3f61-4583-8108-4712e32a04e9/26-6a5daca39e3d7.webp' /></p><p> </p><p>பின் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய இறைவி படத்தில் எஸ்.ஜே.சூர்யா நடித்தார். நடிப்பு டிராக் சூப்பராக ஒர்க் அவுட் ஆகிறது என முடிவு செய்து அப்படத்தை தொடர்ந்து ஸ்பைடர், மெர்சல், மாநாடு, டான், மார்க் ஆண்டனி, தெலுங்கு படங்கள் என நிறைய நடிக்கிறார்.
</p><p></p><h2>சொத்து மதிப்பு&nbsp;</h2><p>குணச்சித்திர வேடங்கள் மட்டுமில்லாது வில்லனாக, ஹீரோவாக கலக்கும் எஸ்.ஜே.சூர்யா ஒரு படத்தில் நடிப்பதற்காக ரூ. 7 முதல் 8 கோடி வரை சம்பளம் வாங்குகிறாராம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a79d5db2-9731-4d9e-9842-65e16b0974e2/26-6a5daca1ca1b3.webp' /></p><p> </p><p>
நடிகர் எஸ்.ஜே.சூர்யாவுக்கு சென்னையிலேயே இரண்டு வீடுகள் சொந்தமாக இருக்கிறது. மேலும் சொந்த ஊரிலும் சொத்துக்களை வாங்கி வைத்திருக்கிறாராம். BMW, ஆடி போன்ற சொகுசு கார்களும் இவரிடம் இருக்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/62952e2d-8e64-46bb-b28b-a3997546c3d4/26-6a5daca2d5df5.webp' /></p><p> 58 வயது வரை சிங்கிளாகவே இருக்கும் எஸ்.ஜே.சூர்யாவின் சொத்து மதிப்பு ரூ. 150 முதல் ரூ. 160 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது.</p>]]></content>
            <updated>2026-07-20T05:05:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[8 லட்சம் ரூபாய் ஒப்பந்தத்தில் படுகொலை; வெளிநாட்டில் இருந்து வந்த உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/youth-murdered-in-8-lakh-orders-issued-from-abroad-1784523945"></link>
            <id>https://jvpnews.com/article/youth-murdered-in-8-lakh-orders-issued-from-abroad-1784523945</id>
            <summary type="text">&amp;nbsp; வெளிநாட்டில் பதுங்கியிருந்து இலங்கையின் போதைப்பொருள் கடத்தலை வழிநடத்தும் &#039;குங்பூ ருவான்&#039; என்பவரிடமிருந்து, 15 லட்சம் ரூபாய் பெறுமதியான போதைப்பொ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; வெளிநாட்டில் பதுங்கியிருந்து இலங்கையின் போதைப்பொருள் கடத்தலை வழிநடத்தும் 'குங்பூ ருவான்' என்பவரிடமிருந்து, 15 லட்சம் ரூபாய் பெறுமதியான போதைப்பொருட்களைப் பெற்றுக்கொண்டு, அதற்குரிய பணத்தைச் செலுத்தாமல் தவிர்த்து வந்த இளைஞர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளமை பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.</p><p> 

 இளைஞரைத் தீர்த்துக் கட்டுவதற்காக 8 லட்சம் ரூபாய் ஒப்பந்தம் வழங்கப்பட்டிருந்ததாகப் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/90d3ee84-867d-4f02-9045-b6881bc698de/26-6a5dacab3d4da.webp' /></p><h2>வெளிநாட்டில் இருந்து வந்த உத்தரவு</h2><p>
</p><p>
 சம்பவம் தொடர்பில் ஹோமாகம கோட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கூறுகையில், 

நவகமுவ, கொரதொட்ட, சமனல உயன வீதியில் வைத்து இந்த இளைஞர் கடந்த 16-ஆம் திகதி சுட்டுக் கொல்லப்பட்டார். </p><p>இந்தச் சம்பவம் தொடர்பாக, கொலையைச் செய்யப் பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற நபர் மற்றும் மற்றொருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p></p><p>
</p><p>
கைது செய்யப்பட்ட இருவரில் ஒருவர், வெளிநாட்டில் தங்கி போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் 'குங்பூ ருவான்' என்பவரின் போதைப்பொருள் வலையமைப்பில் பண வசூல் செய்பவராகக் கடமையாற்றி வருவதுடன், அவர் குறித்த கடத்தல்காரரின் நெருங்கிய உறவினர் என்பதும் அம்பலமாகியுள்ளது.</p><p> 

அதேவேளை கொலையைச் செய்யப் பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-20T05:04:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழகத்தில் பரபரப்பு - முதல்வர் விஜய்க்கு பகிரங்க மிரட்டல்: தி.மு.க. MLA கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/dmk-mla-arrested-over-threatening-tn-cm-vijay-1784519853"></link>
            <id>https://ibctamil.com/article/dmk-mla-arrested-over-threatening-tn-cm-vijay-1784519853</id>
            <summary type="text">முதல்வர் விஜய் குறித்து சர்ச்சையாக பேசியதாக விளாத்திகுளம் திமுக சட்டப்பேரவை உறுப்பினர் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>முதல்வர் விஜய் குறித்து சர்ச்சையாக பேசியதாக விளாத்திகுளம் திமுக சட்டப்பேரவை உறுப்பினர் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p>விளாத்திகுளத்தில் உள்ள அவரது வீட்டிற்கு இன்று (20.07.2026) அதிகாலை சென்ற காவல்துறையினர் அவரை கைது செய்துள்ளனர்.</p><p>இந்த விவகாரம் தொடர்பில் தெரியவருகையில், கோவில்பட்டியில் தி.மு.க. பொதுக்கூட்டம் நேற்று முன்தினம் இரவு கிருஷ்ணன்கோவில் திடலில் நடைபெற்றது.</p><p></p><h2>முதலமைச்சருக்கு மிரட்டல்</h2><p>அந்த கூட்டத்தில் முதலமைச்சர் விஜய் குறித்து சர்ச்சைக்குரிய வகையிலும், சட்டமன்றத்திற்கு வாருங்கள் பார்த்துக்கொள்கிறோம் என்று மிரட்டும் தொனியிலும் விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்ண்டேயன் பேசிய வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/564a9ae3-bb1a-4ca2-be03-19db75833b0d/26-6a5da9cfd5f26.webp' /></p><p>திமுக எம்.எல்.ஏ.வின் பேச்சுக்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.&nbsp;இதைத் தொடர்ந்து நேற்றிரவு அவர் மீது புகார் அளிக்க தவெகவினர் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையம் முன்பு திரண்டனர். </p><p>ஆனால் புகார் எதுவும் வழங்காமல் திரும்ப சென்று விட்டனர். தொடர்ந்து அவர்கள் தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பி கண்ணனிடம் புகார் வழங்கினர்.</p><p>இந்த நிலையில், முதலமைச்சருக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேசிய விளாத்திகுளம் திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டுள்ளார்.&nbsp;</p><p></p><h2>ஆதரவாளர்கள் கோஷம்</h2><p>மார்க்கண்டேயனை கைது செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது ஆதரவாளர்கள் கோஷம் எழுப்பினர், மேலும் காவல்துறை வாகனத்தை மறித்தனர். இதனால் அவர்களை குண்டு கட்டாக தூக்கிய காவல்துறையினர் அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/da496e6d-c22e-41e1-a594-88e10231fb3b/26-6a5da9ceef147.webp' /></p><p>விளத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் எஸ்பி அலுவலகத்திற்கு அழைத்து செல்லப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p> விளாத்திகுளம் திமுக எம்.எல்.ஏ கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது..</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-20T04:53:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கைவிட்டு போன வெற்றி ; கதறி அழுத லியோனல் மெஸ்ஸி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/fifa-victory-slipped-messi-wept-bitterly-ground-1784523082"></link>
            <id>https://jvpnews.com/article/fifa-victory-slipped-messi-wept-bitterly-ground-1784523082</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;2026 கால்பந்தாட்ட உலகக் கிண்ண போட்டியின் முடிவில் ஆர்ஜென்டினா அணி தோல்வியைத் தழுவியதும், அணியின் தலைவரும் கால்பந்து ஜாம்பவானுமான லியோனல் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;2026 கால்பந்தாட்ட உலகக் கிண்ண போட்டியின் முடிவில் ஆர்ஜென்டினா அணி தோல்வியைத் தழுவியதும், அணியின் தலைவரும் கால்பந்து ஜாம்பவானுமான லியோனல் மெஸ்ஸி, மைதானத்தில் மனமுடைந்து கண்ணீர் விட்ட காணொளி ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
</p><p>
அமெரிக்காவின் நியூ ஜெர்சி மைதானத்தில் நடைபெற்ற 2026 கால்பந்தாட்ட உலகக் கிண்ண கால்பந்தாட்ட இறுதிப் போட்டியில், நடப்புச் செம்பியனான ஆர்ஜென்டினா அணியை வீழ்த்தி ஸ்பெயின் அணி இரண்டாவது முறையாக உலகக் கிண்ணத்தை கைப்பற்றியது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4cbc1d65-3f65-4eee-a08c-c5f4830e6c12/26-6a5da94c26db7.webp' /></p><p>
</p><p>


தனது வாழ்நாளின் இறுதி கால்பந்து தொடராகக் கருதப்பட்ட இதில், கிண்ணத்தை தக்க வைக்க முடியாமல் போன ஏமாற்றத்துடன் அவர் இரண்டாம் இடத்திற்கான பதக்கத்தைப் பெற்றுக் கொள்ளும்போது கண்கலங்கிய காட்சி உலகெங்கிலும் உள்ள கால்பந்து ரசிகர்களை சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><p>

இந்தநிலையில் ஆர்ஜென்டினா கால்பந்து சங்கம் (AFA) தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தில், "உங்களது கண்ணீர் எங்களது கண்ணீர் தலைவர், நீங்கள் எங்களுக்கு வழங்கிய மகிழ்ச்சிக்கு நன்றி" என்று உருக்கமாகத் பதிவிட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-20T04:49:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[அநுர ஆட்சியில் தொடரும் மர்ம மரணங்கள் : சர்வதேச விசாரணை கோரும் மொட்டுக்கட்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/mysterious-deaths-continue-under-anura-s-rule-1784518609"></link>
            <id>https://ibctamil.com/article/mysterious-deaths-continue-under-anura-s-rule-1784518609</id>
            <summary type="text">தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பிறகு இடம்பெற்றுள்ள மர்ம மரணங்கள் தொடர்பில் முறையான சர்வதேச விசாரணைகளை முன்னெடுப்பது பொருத்தமானது என சிறில...</summary>
            <content type="html"><![CDATA[<p>தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பிறகு இடம்பெற்றுள்ள மர்ம மரணங்கள் தொடர்பில் முறையான சர்வதேச விசாரணைகளை முன்னெடுப்பது பொருத்தமானது என சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேம்நாத் சி. தொலவத்த தெரிவித்துள்ளார்.</p><p>

செய்தியாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.</p><p>இது குறித்து கருத்து வெளியிட்ட அவர், ”323 கொள்கலன் விவகாரம் தொடர்பில் முறைப்பாடுகளைத் தெரிவித்த டேன் பிரியசாத் மர்மமான முறையில் உயிரிழந்தார்.</p><p></p><h2>சர்வதேச விசாரணை&nbsp;</h2><p>
</p><p>எயார் பஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட முன்னாள் அதிகாரியும் மரணித்தார்.
</p><p>
2.5 மில்லியன் அமெரிக்க டொலர் தொடர்பான விவகாரத்தில் ரங்க நிஷாந்த ராஜபக்ச என்ற திறைசேரி அதிகாரி, உயிரிழந்தமை தொடர்பில் பலத்த சந்தேகங்கள் நிலவுகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3d36428b-9776-4a00-be77-c7e06691303a/26-6a5d9a80d455e.webp' /></p><p>
</p><p>
தற்போது, முன்னாள் காவல்துறை மா அதிபர் உயிரை மாய்த்து கொண்டதாக கூறப்படுகிறது, இதில் எதுவுமே புரியாமல் உள்ளது. இவற்றை உயிர்மாய்ப்பு சம்பவங்கள் என்று மறந்துவிட முடியாது, இவற்றில் சந்தேகம் நிலவுகின்றது.</p><p>
இத்தகைய சம்பவங்கள் தொடர்பில் உண்மையை வெளிக்கொணர உள்நாட்டு விசாரணைகளை முன்னெடுக்க அரசாங்கத்துக்குத் திறனோ அல்லது வலிமையோ இல்லையெனில், FBI போன்ற சர்வதேச விசாரணை அமைப்புகளின் உதவியைப் பெற்று விசாரணைகளை நடத்த வேண்டும் என தெரிவித்தார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-20T04:49:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[மத்திய கிழக்கில் மீண்டும் அதிகரித்துள்ள பதற்றம் - உலக சந்தையில் உச்சம்தொட்ட எண்ணெய் விலைகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/crude-oil-prices-hit-record-highs-world-market-1784521588"></link>
            <id>https://tamilwin.com/article/crude-oil-prices-hit-record-highs-world-market-1784521588</id>
            <summary type="text">அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலைகள் உயர்ந்துள்ளன.அதன்படி ஆசிய சந்தையில் வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலைகள் உயர்ந்துள்ளன.</p><p>அதன்படி ஆசிய சந்தையில் வர்த்தக நடவடிக்கையின் ஆரம்பத்தில் இன்று (20) மசகு எண்ணெய் விலை 3 சதவீதத்திற்கும் மேலாக அதிகரித்துள்ளது.</p><p>

அதன்படி, ஒரு பேரல் WTI கச்சா எண்ணெயின் விலை 2.39% அதிகரித்து, தற்போது 84.46 அமெரிக்க டொலராக உயர்ந்துள்ளது.</p><p></p><h2>எரிபொருள் விநியோகம் தடைப்படும் அபாயம்</h2><p>இதற்கமைய, ப்ரெண்ட் ரக மசகு எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு 2.75 அமெரிக்க டொலர் அதிகரித்து 90.85 அமெரிக்க டொலராக விற்பனை செய்யப்படுகிறது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4903dada-e3f3-4539-92ac-5c71f8567afb/26-6a5da8ae3aea6.webp' /></p><p>இதேவேளை, WTI ரக மசகு எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு 2.56 அமெரிக்க டொலர் அதிகரித்து 85.05 அமெரிக்க டொலராக விற்பனை செய்யப்படுகிறது.</p><p>
</p><p>மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள சமீபத்திய மோதல்களால் எரிபொருள் விநியோகம் தடைபடக்கூடும் என்ற அபாயமே கச்சா எண்ணெய் விலை உயர்வுக்கு ஒரு முக்கிய காரணம் என்றும் கூறப்படுகின்றது.</p><h2>வான்வழித்தாக்குதல்</h2><p>
மோதல்கள் தொடர்ந்து அதிகரித்தால், உலகளாவிய கச்சா எண்ணெய் விலைகள் மீண்டும் உயரும் என்று உலகப் பொருளாதார வல்லுநர்களும் எச்சரித்துள்ளனர்.</p><p>இதேவேளை, தொடர்ச்சியாக 9 ஆவது இரவாக ஈரானிய இலக்குகள் மீது அமெரிக்க இராணுவம் வான்வழித் தாக்குதல்களை நடத்தியதை அடுத்து இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-20T04:48:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெள்ளைமுடியை கருப்பாக்க உதவும் கருஞ்சீரக எண்ணெய்.., எப்படி தயாரிப்பது?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/home-made-hair-oil-for-grey-hair-in-tamil-1784522463"></link>
            <id>https://news.lankasri.com/article/home-made-hair-oil-for-grey-hair-in-tamil-1784522463</id>
            <summary type="text">முடிக்கு இயற்கையான கருமை நிறத்தை அளிக்கும் மெலனின் உற்பத்தி குறையும்போது அல்லது நிறமி செல்கள் மந்தமாகும்போது முடி நரைக்கிறது. 

மரபியல், வைட்டமின் ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>முடிக்கு இயற்கையான கருமை நிறத்தை அளிக்கும் மெலனின் உற்பத்தி குறையும்போது அல்லது நிறமி செல்கள் மந்தமாகும்போது முடி நரைக்கிறது. </p><p>

மரபியல், வைட்டமின் பி12 மற்றும் டி குறைபாடு, மன அழுத்தம், ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை ஆகியவை இதற்கு முக்கிய காரணங்களாகும்.</p><p>

இன்றைய காலகட்டத்தில் இளநரை, நரைமுடி போன்ற பிரச்சனைகள் பலருக்கும் இருக்கிறது.
</p><p>
அந்தவகையில், ஒரே வாரத்தில் நரைமுடியை கருப்பாக்கும் கருஞ்சீரக எண்ணெய்யை எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம்.</p><p></p><h2>தேவையான பொருட்கள்</h2><ul><li>

கருஞ்சீரகம்- 3 ஸ்பூன்
</li><li>வெந்தயம்- 3 ஸ்பூன்
</li><li>கறிவேப்பிலை- 1 கைப்பிடி</li><li>கரிசலாங்கண்ணி பொடி- 2 ஸ்பூன் </li><li>தேங்காய் எண்ணெய்- 1 லிட்டர்</li></ul><h2>எப்படி தயாரிப்பது?
</h2><p>
முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் கருஞ்சீரகம் மற்றும் வெந்தயம் சேர்த்து நன்கு பொடியாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
</p><p>
பின் மிக்ஸி ஜாரில் கறிவேப்பிலை சேர்த்து நன்கு அரைத்து எடுத்துக்கொள்ளவும்.</p><p>

அடுத்து ஒரு இரும்பு வாணலில் தேங்காய் எண்ணெய் சேர்த்து மிதமான தீயில் சூடுபடுத்தி அரைத்த கலவைகளை சேர்த்து மிதமான தீயில் கொதிக்கவிடவும்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a69cb999-0da8-424a-a46d-4f7b40b11d6b/26-6a5da786d7317.webp' /></p><p>இதற்கடுத்து நன்கு கொதித்து எண்ணெய் நிறம் மாறி வந்ததும் அடுப்பை அணைக்கவும்.
</p><p>
எண்ணெய் நன்கு ஆறியதும் அதனை வடிகட்டி தலைமுடியில் தடவி 10 நிமிடம் மசாஜ் செய்து ஒரு மணி நேரம் கழித்து மென்மையான ஷாம்பு கொண்டு அலசிக்கொள்ளலாம்.
</p><p>
இந்த எண்ணெயை தொடர்ந்து பயன்படுத்தி வர நரைமுடி நிரந்தரமாக கருப்பாக மாறும்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-20T04:44:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சந்தன விக்ரமரத்னவின் உயிரிழப்பு; ஏற்றுக்கொள்ள முடியவில்லை ; கலங்கும் முன்னாள் ஜனாதிபதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sandana-wickramaratne-maithripala-sirisena-sad-1784522627"></link>
            <id>https://jvpnews.com/article/sandana-wickramaratne-maithripala-sirisena-sad-1784522627</id>
            <summary type="text">முன்னாள் பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்னவின் உயிரிழப்பு இவ்வாறு அமைந்துவிட்டது என்பதை நினைக்கும்போதே கவலையாக இருக்கிறது. இரு வாரங்களுக்கு முன்னர் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்னவின் உயிரிழப்பு இவ்வாறு அமைந்துவிட்டது என்பதை நினைக்கும்போதே கவலையாக இருக்கிறது. இரு வாரங்களுக்கு முன்னர் சந்தித்து பேசியிருந்த நிலையில் இப்படியொரு சம்பவம் இடம்பெற்றதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன கவலை வெளியிட்டார்.
</p><p>


உயிரிழந்த முன்னாள் பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்னவுக்கு இறுதி அஞ்சலி செலுத்தியதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இதுதொடர்பில் அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2064925a-8ab6-4c22-bd81-a696e347b68a/26-6a5da784c8c37.webp' /></p><p>
</p><p>


 முன்னாள் பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்ன எனக்கு மிகவும் நெருக்கமானவர். நான் ஜனாதிபதி பதவியிலிருந்தபோது அவர் பொலிஸ் மா அதிபர் பதவிக்கு நியமிக்கப்பட்டார். </p><p>மிகவும் நேர்மையான, வெளிப்படையான, நல்ல குணத்துடன் கடமையுணர்ச்சியுடன் செயற்பட்டவர்.



பல்வேறு அரசியல் கட்சிகளுக்கு மத்தியில் ஏற்படும் பிரச்சினைகள், மோதல்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களுக்கு இடையிலான நிலைப்பாட்டு மோதல்களால் பொலிஸ் மா அதிபருக்கு பல்வேறு சிக்கல்கள் ஏற்படுவதுண்டு. இருந்தபோதும் அவ்வாறான ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் எவரையும் பகைத்துக்கொள்ளாமல் செயற்பட்டார்.</p><p></p><p> </p><p>ஆர்ப்பாட்டக்காலத்திலும் கூட மிக அமைதியாகவே செயற்பட்டார்.



இந்தச் சம்பவம் இடம்பெறுவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்னர் நானும் அவரும் எனது நண்பரொருவரும் சந்தித்தோம். இரண்டு மணிநேரத்துக்கு மேல் நகைச்சுவையாகவே பேசிக் கொண்டிருந்தோம். நான் புறப்பட சிறிது நேரத்துக்கு முன்பு, “சேர் உங்களின் வீட்டுக்கும் வர வேண்டும் என்றுகூட தெரிவித்தார்.&nbsp;</p><p>அரசியலுக்கு அப்பால் சமய, தேசிய பிரச்சினைகள் குறித்து பேசியிருந்தோம். அவ்வாறிருக்கையில், அவரின் இறப்பு இவ்வாறு அமைந்துவிட்டது என்பதை நினைக்கும்போதே கவலையாக இருக்கிறது. இரு வாரங்களுக்கு முன்னர் சந்தித்து பேசியிருந்த நிலையில் இப்படியொரு சம்பவம் இடம்பெற்றதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.</p><p>



இந்தச் சம்பவம் எவ்வாறு இடம்பெற்றது என்பதை கூற முடியாது. விசாரணைகளினூடாகவே புரியும். அதனால், இதுபோன்று பெறுமதிமிக்க அதிகாரிகளை பொலிஸ் மட்டுமல்ல ஏனைய சேவைப்பிரிவுகளுக்கும் மிகவும் முன்மாதிரியான கதாபாத்திரம் அவர். இவரை போன்றவர்கள் நாட்டுக்கு அவசியமானவர்கள் என்றார்.</p>]]></content>
            <updated>2026-07-20T04:42:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[பல்கலைக்கழகங்களில் டெங்குவை கட்டுப்படுத்த புதிய வழிகாட்டல் : கல்வி அமைச்சு அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/guidelines-to-control-dengue-in-universities-moe-1784520247"></link>
            <id>https://ibctamil.com/article/guidelines-to-control-dengue-in-universities-moe-1784520247</id>
            <summary type="text">இலங்கையிலுள்ள அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் டெங்கு நோயைக் கண்காணித்தல் மற்றும் தடுப்பது தொடர்பான மருத்துவ முகாமைத்துவ மற்றும் தரப்படுத்தப்பட்ட வழிகாட...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையிலுள்ள அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் டெங்கு நோயைக் கண்காணித்தல் மற்றும் தடுப்பது தொடர்பான மருத்துவ முகாமைத்துவ மற்றும் தரப்படுத்தப்பட்ட வழிகாட்டல் தொகுப்பு வெளியிடப்படவுள்ளது.</p><p>அதன்படி, பல்கலைக்கழகங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் உத்தியோகபூர்வமாக வெளியிடும் நிகழ்வு இன்று (20) காலை 10 மணிக்கு உயர் கல்வி அமைச்சில் வெளியிடப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.</p><p>

பல்கலைக்கழகங்களில் டெங்கு நோயை முன்கூட்டியே கண்டறிவதற்கும், நோயாளிகளை முறையாகக் கையாள்வதற்கும், நோய் கண்காணிப்பை வலுப்படுத்துவதற்கும், டெங்கு நுளம்புகள் பரவுவதைத் தடுப்பதற்கும் முறையான நடவடிக்கைகளை அறிமுகப்படுத்துவதே இதன் நோக்கம் என&nbsp;உயர் கல்வி பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன தெரிவித்தார்.</p><p></p><h2>மூடப்பட்ட&nbsp;பல்கலைக்கழகங்கள்</h2><p>இதேவேளை அண்மைக் காலமாக டெங்கு நோய் தீவிரமாகப் பரவியதன் காரணமாக, சில பல்கலைக்கழகங்கள் தற்காலிகமாக மூடப்பட்டிருந்தன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2d133078-f0f7-48da-a7cd-55cb36870b75/26-6a5da421cdb9a.webp' /></p><p>அத்துடன், இந்த ஆண்டு இதுவரை பதிவான டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 75,321 ஆக உயர்ந்துள்ளது.</p><p>

இந்த ஆண்டு இதுவரை டெங்குவால் 53 மரணங்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் பதில் பணிப்பாளர் சபாநாயகர் கபில கன்னங்கர தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-20T04:37:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வவுனியாவில் ஊடகவியலாளர் ஒருவருக்கு பொலிஸார் அழைப்பாணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/police-summons-journalist-in-vavuniya-1784519393"></link>
            <id>https://tamilwin.com/article/police-summons-journalist-in-vavuniya-1784519393</id>
            <summary type="text">வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் தற்போதைய தவிசாளரினால்&amp;nbsp; மக்கள் வரிப்பணம் பெருமளவில் வீணடிக்கப்படுவதாக ஆதாரங்களுடன்
செய்தி வெளியிட்ட ஊடகவியலாள...</summary>
            <content type="html"><![CDATA[<p>வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் தற்போதைய தவிசாளரினால்&nbsp; மக்கள் வரிப்பணம் பெருமளவில் வீணடிக்கப்படுவதாக ஆதாரங்களுடன்
செய்தி வெளியிட்ட ஊடகவியலாளரை நெளுக்குளம் பொலிஸார் விசாரணைக்கு அழைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>பிரதேச சபையினால் நிதி வீண் விரயம் செய்யப்படுகின்றமை தொடர்பாக தொடர்ச்சியாக
வெளிக்கொண்டு வந்ததற்காக, தவிசாளரினால் செய்யப்பட்ட முறைப்பாட்டின்
அடிப்படையில், 21.07.2026ஆம் திகதி நெளுக்குளம் பொலிஸ் நிலையத்தில்
முன்னிலையாகுமாறு ஊடகவியலாளர் ஒருவருக்கு உத்தரவுப் பத்திரம் வழங்கப்பட்டுள்ளது.
</p><p></p><h2>பொலிஸார் மூலம் நடவடிக்கை</h2><p>
பொதுமக்களின் வரிப்பணம் வீணடிக்கப்படுவதைத் தடுத்து, உண்மைகளை ஆவணங்களுடன்
வெளிப்படுத்திய ஊடகவியலாளருக்கு எதிராக, தவிசாளர்
பொலிஸார் மூலம் நடவடிக்கை எடுக்க முயல்வது ஊடகங்களின் சுதந்திரத்தைப்
பறிக்கும் ஒரு பழிவாங்கல் நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/938779cb-7c87-4f96-bb38-33e50243120c/26-6a5da5a8bf80a.webp' /></p><p>
</p><p>
தான் தோன்றித்தனமான செயற்பாடுகளுக்கு எதிராக உண்மையை உரக்கச் சொல்லும்
ஊடகவியலாளர்களின் குரலை ஒடுக்க நினைக்கும் இச்செயல் வவுனியா அரசியல் மற்றும்
சமூக வட்டாரங்களில் கடும் கண்டனத்திற்குள்ளாகியுள்ளது.
</p><p>
பொதுமக்களின் வரிப்பணம் மற்றும் சபை நிதி எவ்வாறு பயன்படுத்தப்பட்டுள்ளது
என்பது குறித்து ஊடகவியலாளர் வெளிப்படுத்திய முக்கிய தகவல்களின் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (RTI) மூலம் பெறப்பட்ட உத்தியோகபூர்வ
ஆவணங்களின்படி,&nbsp;</p><p>1. பகிரங்க டெண்டர் இன்றி ஆயுட்கால சிசிடிவி (CCTV) ஒப்பந்தம்!
</p><p>
வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையினால் எவ்வித பகிரங்க பத்திரிகை விளம்பரங்களோ
அல்லது திறந்த கேள்வி கோரல்களோ (Tenders) இன்றி, முற்றிலும் வாடகை
அடிப்படையில் 50 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது அம்பலமாகியுள்ளது.
</p><p>
ஒப்பந்த விபரம்: சபைக்குட்பட்ட முக்கிய 25 இடங்களில், ஒரு இடத்திற்கு தலா
இரண்டு கேமராக்கள் வீதம் மொத்தம் 50 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
</p><p>
ஆயுட்கால ஒப்பந்தம்: இத்திட்டமானது ஆயுட்காலம் வரை (Lifetime Contract) என்ற
நீண்டகால ஒப்பந்த அடிப்படையில், கொடிகாமம் மீசாலை வடக்குப் பகுதியைச் சேர்ந்த
'Microwin Hi-End (Pvt) Ltd' என்ற தனியார் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.&nbsp;</p><h2>வாடகை மற்றும் இணையக் கட்டணம்</h2><p>விதிமுறை மீறல்: பொது இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படுவதற்கு
பாதுகாப்பு அமைச்சின் அனுமதி பெறப்பட வேண்டும் என்ற விதிமுறை உள்ள போதிலும்,
இத்திட்டத்திற்கு பாதுகாப்பு அமைச்சின் எவ்வித அனுமதியும் பெறப்படவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/11b3553c-19fd-4840-aaeb-5c29197af5a3/26-6a5da5a970796.webp' /></p><p>

நிதி விரயம்: ஒரு கேமராவுக்கான வாடகை மற்றும் இணையக் கட்டணம் உள்ளடங்கலாக
2,758 ரூபா வீதம், 50 கேமராக்களுக்கும் சேர்த்து மாதாந்த வாடகை கட்டணமாக
மொத்தம் 1,37,900 ரூபா சபை நிதியிலிருந்து வழங்கப்பட்டு வருகிறது.
</p><p>
மக்களின் கேள்வி: தற்போது சந்தையில் சாதாரண ஒரு சிசிடிவி கேமராவின் விலை
30,000 ரூபா முதல் 35,000 ரூபா வரை விற்கப்படுகிறது. </p><p>இந்த மாதாந்த வாடகைத்
தொகையைக் கொண்டு, மாதமொன்றுக்கு தலா 4 புதிய கேமராக்கள் வீதம் சபை நிதியிலேயே
வாங்கியிருக்க முடியும். </p><p>சில மாதங்களிலேயே அவை சபையின் சொந்த சொத்தாக
மாறியிருக்கும். ஆனால், அவ்வாறு செய்யாமல் மக்கள் பணம் வாடகை என்ற பெயரில்
தனியார் நிறுவனத்திற்கு வழங்கப்படுகின்றது.</p><p>2. தவிசாளரின் சொகுசு வாகனத்திற்காக 5 மாதத்தில் 17 இலட்சம் காலி!
</p><p>
சபையிடம் ஏற்கனவே போதுமான வாகன வசதிகள் இருக்கும் போது, தற்போதைய தவிசாளர்
மக்களின் வரிப்பணத்தைப் பயன்படுத்தி அதிக விலைக்கு வாடகை வாகனம் ஒன்றை ஒப்பந்த
அடிப்படையில் பெற்றுள்ளார்.
</p><p>
ஏற்கனவே உள்ள வாகனங்கள்: அதிகாரிகளினதும் தவிசாளரினதும் பயன்பாட்டிற்காக ஒரு
'சிங்கிள் கப்' (Single Cab) வாகனமும், ஒரு முச்சக்கர வண்டியும் உள்ளன. </p><p>இது
தவிர அரசாங்க அதிபரினால் மற்றுமொரு 'டபிள் கப் பிக்கப்' (Double Cab Pickup)
வாகனமும் சபைக்கு வழங்கப்பட்டுள்ளது.</p><p>
புதிய சொகுசு வாகன ஒப்பந்தம்: இவ்வாறான நிலையில், புதிய டொயோட்டா பிக்கப் வாகனம் ஒன்றை மாதாந்த வாடகை 3,40,000 ரூபா (3000
கிலோமீட்டர் வரை) என்ற அடிப்படையில் ஓராண்டு காலப்பகுதிக்கு (2025.11.13 முதல்
2026.11.12 வரை) வாடகைக்கு அமர்த்தியுள்ளார். </p><p>நிர்ணயிக்கப்பட்ட தூரத்தைத்
தாண்டினால் ஒரு கிலோமீட்டருக்கு 150 ரூபாய் மேலதிகக் கட்டணமாகும்.

செலவிடப்பட்ட தொகை: கடந்த ஐந்து மாதங்களில் மாத்திரம் இந்த வாடகை
வாகனத்திற்காக 17,24,750 ரூபா கட்டணம் செலுத்தப்பட்டுள்ளது.</p><p>இந்த வாகன வாடகை ஒப்பந்தம் தொடர்பான எந்தவொரு விளம்பரமும் அல்லது கோரிக்கையும்
பத்திரிகைகளில் உத்தியோகபூர்வமாக வெளியிடப்படவில்லை.</p><p> "அடிப்படைத் தேவைகளான
வீதிகள், வடிகால்கள் மற்றும் மின்விளக்குகளைச் சீரமைக்க நிதியில்லை என்று
கூறும் சபை, தவிசாளரின் தனிப்பட்ட தேவைக்கு மட்டும் மக்கள் பணத்தை வாரி
இறைப்பது மக்கள் பணத்தினை விரயமாக்கும் செயல் என மக்கள் விசனம்
தெரிவித்துள்ளனர்.</p><p></p><h2>உத்தியோகபூர்வ கடிதம்</h2><p>3. வடமாகாண ஆளுநர் செயலகம் அதிரடி விசாரணைக்கு உத்தரவு!
</p><p>
வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையில் மக்கள் நிதி பாரியளவில் விரயம்
செய்யப்படுவதாகவும், பல்வேறு நிர்வாக முறைகேடுகள் இடம்பெற்று வருவதாகவும்
பொதுமக்கள் ஆதாரங்களுடன் வடமாகாண ஆளுநருக்குப் முறைப்பாட்டு கடிதம்
அனுப்பியிருந்தனர்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0cf9cf68-7828-4de7-aaff-f523aa07f778/26-6a5da5aa25aca.webp' /></p><p>
இந்த முறைப்பாட்டை ஆராய்ந்த வடமாகாண ஆளுநரின் அறிவுறுத்தலுக்கு இணங்க, ஆளுநர்
செயலகம் உடனடியாகச் செயற்பட்டுள்ளது.</p><p>இதன்படி, 2026.05.29 அன்று ஆளுநர்
செயலகத்தினால் (கடித இலக்கம்: G/NPC/A4/LG/COM/VA/26/A/15) வடமாகாண
உள்ளூராட்சி ஆணையாளருக்கு உத்தியோகபூர்வ கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.
</p><p>
அதில், முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் மற்றும் முறைகேடுகள் குறித்து
உடனடியாக முழுமையான ஆய்வுகளை மேற்கொண்டு, பொருத்தமான சட்டப்பூர்வ மற்றும்
நிர்வாக நடவடிக்கைகளை எடுக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இவற்றினை மக்கள் மத்தியில் வெளிப்படுத்திய ஊடகவியலாளரின் ஊடக சுதந்திரத்தினை
முடக்கும் வகையிலேயே தவிசாளரின் இவ் நடவடிக்கை அமைந்துள்ளது</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-20T04:37:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன விஷயம்.. வருத்தத்திலும் ஷாக்கிலும் ரசிகர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/hit-show-ended-in-vijay-tv-fans-shock-1784518935"></link>
            <id>https://cineulagam.com/article/hit-show-ended-in-vijay-tv-fans-shock-1784518935</id>
            <summary type="text">பிரியங்காதொகுப்பாளினி பிரியங்கா, தமிழ் சின்னத்திரையில் ரசிகர்கள் அதிகம் விரும்பும் பிரபலங்களில் ஒருவர்.மாகாபாவை போல விஜய் டிவியில் எந்த ஒரு நிகழ்ச்சி ...</summary>
            <content type="html"><![CDATA[<h2>பிரியங்கா</h2><p>தொகுப்பாளினி பிரியங்கா, தமிழ் சின்னத்திரையில் ரசிகர்கள் அதிகம் விரும்பும் பிரபலங்களில் ஒருவர்.</p><p>மாகாபாவை போல விஜய் டிவியில் எந்த ஒரு நிகழ்ச்சி எடுத்தாலும் அவர் இவரும் இருக்கிறார், எந்த நிகழ்ச்சி கொடுத்தாலும் அந்நிகழ்ச்சியை நகைச்சுவையாக, கலகலப்பாக கொண்டு செல்வார்.&nbsp;</p><p>மாகாபாவுடன் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியும் சரி, ஸ்டார்ட் மியூசிக் நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி பிரியங்கா தொகுத்து வழங்கும் எல்லா ஷோவும் ஹிட் தான்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8bfd2672-ac9e-49e6-9381-fde22bb2d645/26-6a5da0823c63a.webp' /></p><h2>முடிந்த நிகழ்ச்சி</h2><p>கடந்த மார்ச் 14ம் தேதி பிரியங்கா தொகுத்து வழங்க ஒரு புதிய ஷோ ஒளிபரப்பாக தொடங்கியது. அது என்ன ஷோ என்றால் பிரபலங்கள் தங்களது துணையுடன் பங்குபெற்ற ஷோ தான்.</p><p>Happy Wife Happy Life, பிரியங்கா தொகுத்து வழங்க ஒவ்வொரு வாரமும் 3 பிரபலங்கள் தங்களது வாழ்க்கைத் துணையுடன் வந்து கலந்துகொண்டு நிறைய விஷயங்கள் பகிர்ந்துகொண்டார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c35a67ff-2961-4ef2-b0af-e353f0cee6ea/26-6a5da08316a2a.webp' /></p><p>முதல் ஷோவிலேயே ரசிகர்களின் ஆதரவு பெறுகியது, அடுத்தடுத்து நிகழ்ச்சி ஹிட்டாக ஓடிக் கொண்டிருந்த நிலையில் திடீரென இந்த ஷோவை முடித்துள்ளனர். பிரியங்கா கடைசி நிகழ்ச்சியில் இந்த ஷோ முடிந்துவிட்டது என கூறிய விஷயத்தால் ரசிகர்கள் அதிர்ச்சியும், வருத்தமும் அடைந்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f2f412f3-6044-46ca-9f7c-067e7ef7ae69/26-6a5da083d715f.webp' /></p><p>பலர் நல்ல ஷோ முடித்திருக்க வேண்டாம் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.</p>]]></content>
            <updated>2026-07-20T04:30:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Tony</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜனநாயகனுக்கு அமெரிக்காவில் பெரும் சறுக்கல், புக்கிங் நிலவரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/jananayagan-america-pre-booking-box-office-1784514482"></link>
            <id>https://viduppu.com/article/jananayagan-america-pre-booking-box-office-1784514482</id>
            <summary type="text">ஜனநாயகன் தளபதி விஜய் நடிப்பில் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பில் திரைக்கு வரவிருக்கும் படம். இப்படம் ஏற்கனவே இணையத்தில் லீக் ஆகியிருந்தாலும் தற்போது புக்கி...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜனநாயகன் தளபதி விஜய் நடிப்பில் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பில் திரைக்கு வரவிருக்கும் படம். </p><p>இப்படம் ஏற்கனவே இணையத்தில் லீக் ஆகியிருந்தாலும் தற்போது புக்கிங் ஓபன் பண்ண அனைத்து இடங்களிலும் படத்தின் புக்கிங் அதிர வைக்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/50b232d6-5f53-478b-a671-968ca099560e/26-6a5d87b561a2d.webp' /></p><p> </p><p>இந்த நிலையில் ஜனநாயகன் ஜனவரி மாதம் வர இருந்த போது அமெரிக்காவில் ரிலிஸுக்கு 3 நாள் இருக்கும் போது அரை மில்லியன் டாலர் வசூலை நெருங்கி விட்டது, ஆனால் தற்போது 2 லட்சம் டாலர் கூட இன்னும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. </p><p>இதற்கு முக்கிய காரணம் படம் தள்ளி சென்றது ஒரு புறம் என்றாலும், மற்றொரு பக்கன் ஒடிசி, ஸ்பைடர் மேன் போன்ற படங்களால் ஜனநாயகனுக்கு தியேட்டர் எண்ணிக்கை மிகவும் குறைந்துள்ளதாம், இதனால் தான் புக்கிங் மிக குறைவு என கூறப்படுகிறது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-20T04:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[கட்டுநாயக்க விமான நிலையத்தில் மலேசிய நாட்டவர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/malaysian-arrested-in-katunayake-airport-1784517937"></link>
            <id>https://tamilwin.com/article/malaysian-arrested-in-katunayake-airport-1784517937</id>
            <summary type="text">கட்டுநாயக்க விமான நிலையத்தில் மலேசிய நாட்டவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பெருந்தொகை போதைப்பொருளுடன் விமான நிலையத்தில் இருந்து வெளியேற முயன்ற போது...</summary>
            <content type="html"><![CDATA[<p>கட்டுநாயக்க விமான நிலையத்தில் மலேசிய நாட்டவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். </p><p>பெருந்தொகை போதைப்பொருளுடன் விமான நிலையத்தில் இருந்து வெளியேற முயன்ற போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார். </p><p>இவ்வாறு கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் பெறுமதி 9 கோடி 8 லட்சம் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளதாக சுங்க பிரிவினர் தெரிவித்துள்ளனர்.</p><p></p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">போதைப்பொருள் தொகை</span></p><p>மலேசியாவில் உள்ள சிற்றுண்டிச்சாலை ஒன்றில் பணிபுரியும் 23 வயதுடையவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ed010ad2-a6a1-4444-9e0f-ef00873c94dd/26-6a5da392bef00.webp' />&nbsp;&nbsp;</p><p>

அவருக்கு 10,000 மலேசிய ரிங்கிட் வழங்குவதாக உறுதியளிக்கப்பட்ட நிலையில் போதைப்பொருள் தொகை நாட்டுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.</p><p> </p><p><span style="font-size: 14px;">இந்த போதைப்பொருளை மலேசியாவின் கோலாலம்பூர் நகரில் கொள்வனவு செய்து பின்னர் அங்கிருந்து டுபாய்க்கு வந்து, அங்கிருந்து எமிரேட்ஸ் விமானத்தில் நேற்று முன்தினம் காலை 09.30 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.</span></p><h2>அதிகாரிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை&nbsp;<span style="font-size: 14px;"></span></h2><p>இதன்போது அவர் கொண்டு வந்த பைக்குள், சொக்லட் மற்றும் டொபி அடங்கிய 03 பைகளுக்குள் 1 கிலோகிராம் 816 கிராம் எடையுடைய இந்த கொக்கெய்ன் போதைப்பொருள் 92 மாத்திரைகளாக தயாரிக்கப்பட்டு, சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டு எடுத்து வரப்பட்டுள்ளது.</p><p>

சந்தேகநபரான விமானப் பயணியும் கொக்கெய்ன் போதைப்பொருள் தொகையும் மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-20T04:27:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடுமையாகும் சட்ட நடவடிக்கை - 4ஜி கமரா மூலம் இரகசியமாக கண்காணிக்கப்படும் நபர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/cameras-will-be-installed-to-catch-litterers-1784517751"></link>
            <id>https://tamilwin.com/article/cameras-will-be-installed-to-catch-litterers-1784517751</id>
            <summary type="text">வீதிகளில் குப்பைகளை வீசி சுற்றுச்சூழலை மாசுபடுத்துபவர்கள் மற்றும் டெங்கு நோயை பரப்பும் வகையில் செயற்படும் நபர்களை கண்டறிந்து அவர்கள் மீது கடுமையான சட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>வீதிகளில் குப்பைகளை வீசி சுற்றுச்சூழலை மாசுபடுத்துபவர்கள் மற்றும் டெங்கு நோயை பரப்பும் வகையில் செயற்படும் நபர்களை கண்டறிந்து அவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கும் திட்டமொன்று தொடங்கப்பட்டுள்ளது.
</p><p>
கெஸ்பேவ நகராட்சி மன்றம் இது தொடர்பிலான திட்டத்தை தொடங்கியுள்ளது.

இதன்படி, நாட்டில் உள்ள ஒரு உள்ளாட்சி அமைப்பால் முதன்முறையாக செயல்படுத்தப்படும் இத்திட்டத்தில், 4ஜி கமரா தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>&nbsp;தனிநபர்களின் செயற்பாடு</h2><p>
</p><p>
மேலும், பதிவு செய்யப்பட்ட காட்சிகள் தலைமை அலுவலகத்திலிருந்து கணினித்திரை மூலம் கண்காணிக்கப்படவுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d3720399-e0ff-4e9d-b1f3-569aaa1b8af3/26-6a5da219bfa0c.webp' /></p><p>
</p><p>
குப்பைகளை பொது இடங்களில் வீசக்கூடாது என்பது குறித்த விழிப்புணர்வை பரப்புவதற்காக கெஸ்பேவா நகராட்சி மன்றம், பொலிஸ் மற்றும் சுகாதாரத்துறை ஆகியவற்றால் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்ட போதிலும், சில தனிநபர்களின் செயல்கள் தொடர்வதால் இத்தகைய நடவடிக்கையை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-20T04:21:01+00:00</updated>
        </entry>
    </feed>
