<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-09-11T14:32:16+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[MBBS 16 பட்டமளிப்பு விழா ; பதக்கங்க பெற்று சாதனை படைத்த மாணவி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/colombo-uni-16-gold-medals-awarded-for-the-mbbs-1789130710"></link>
            <id>https://jvpnews.com/article/colombo-uni-16-gold-medals-awarded-for-the-mbbs-1789130710</id>
            <summary type="text">&amp;nbsp; கொழும்பு பல்கலைக்கழகத்தின் (University of Colombo) மருத்துவ பீட பட்டமளிப்பு விழாவில் (General Convocation 2025), MBBS மருத்துவப் படிப்பிற்காக வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; கொழும்பு பல்கலைக்கழகத்தின் (University of Colombo) மருத்துவ பீட பட்டமளிப்பு விழாவில் (General Convocation 2025), MBBS மருத்துவப் படிப்பிற்காக வழங்கப்பட்ட மொத்தமுள்ள 32 தங்கப் பதக்கங்களில் 16 தங்கப் பதக்கங்களை ஹஷினி ரங்கிக எப்பா ஆரச்சி வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.</p><p> 

கொழும்புப் பல்கலைக்கழகத்தின் வரலாற்று பக்கங்களில், ஹஷினி ரங்கிக எப்பா ஆரச்சி என்கின்ற பெயர் தங்க எழுத்துக்களால் எழுதப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e12cbe1c-6336-4a36-9bad-0ac497b97204/26-6aa3f7d8385e3.webp' /></p><h2>&nbsp;முதல் வகுப்புச் சிறப்புத் தேர்ச்சி&nbsp;</h2><p> </p><p> 

2025 பொதுப் பட்டமளிப்பு விழாவில் MBBS மருத்துவப் படிப்பிற்காக வழங்கப்பட்ட மொத்தம் 32 தங்கப் பதக்கங்களில், 16 பதக்கங்களை ஹஷினி ரங்கிக எப்பா ஆரச்சி வென்றுள்ளார்.
</p><p>
இறுதித் தேர்வு உட்பட MBBS படிப்பின் ஐந்து முக்கிய பிரிவுகளிலுமே முதல் வகுப்புச் சிறப்புத் தேர்ச்சி பெற்று அசத்தியுள்ளார் ஹஷினி ரங்கிக எப்பா ஆரச்சி .</p><p></p><p>
</p><p>
 மேலும், இலங்கையில் உள்ள அனைத்து மருத்துவப் பீட பட்டதாரிகளுக்குமான பொதுத் தரவரிசைப் பட்டியலில் நாடு முழுவதுமாக முதலிடம் பிடித்து, மருத்துவப் பயிற்சிப் பணிக்காக தேர்வாகியுள்ளார்.
</p><p>
அத்துடன், கல்விச் சிறப்பிற்காக வழங்கப்படும் உயரிய விருதான "பேராசிரியர் திலக் ஹெட்டியாரச்சி விருது" (Professor Tilak Hettiarachchy Award for Academic Excellence) இவருக்கு வழங்கி கௌரவிக்கப் பட்டுள்ளது.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-09-11T14:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆங்கிலத்தில் ரிலீஸ் ஆன டாக்சிக் படுதோல்வி.. மொத்த வசூல் இவ்வளவு தானா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/toxic-huge-flop-in-english-version-1789136766"></link>
            <id>https://cineulagam.com/article/toxic-huge-flop-in-english-version-1789136766</id>
            <summary type="text">யாஷ் நடித்த டாக்சிக் படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிலீஸ் ஆகி இருந்தது. ஆனால் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாததால் நெகடிவ் விமர்சனங்கள் தா...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாஷ் நடித்த டாக்சிக் படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிலீஸ் ஆகி இருந்தது. ஆனால் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாததால் நெகடிவ் விமர்சனங்கள் தான் அதிகம் வந்தது.</p><p>அதனால் வசூலில் சொதப்பி படம் தோல்வி அடைந்திருக்கிறது. மேலும் டாக்சிக் படத்தை ஆங்கிலத்தில் ரிலீஸ் செய்திருந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0e9fb5f0-93b9-4aa5-9ea9-4c7b610ce42d/26-6aa40f7fdb9f2.webp' /></p><h2>படுதோல்வி</h2><p>ஆங்கில வெர்சனிலும் படம் படுதோல்வி அடைந்திருக்கிறது. ;ஆங்கிலத்தில் இதுவரை மொத்தமாகவே 3 லட்சம் ரூபாய் தான் டாக்சிக் வசூல் செய்திருக்கிறது.
</p><p>முதல் நாளில் சுமார் 1.38 லட்சம் வசூல் வந்த நிலையில், நேற்று வெறும் 4655 ரூபாய் வசூல் வந்திருக்கிறது.
</p><p>அதனால் டாக்சிக் ஆங்கிலத்திலும் படுதோல்வியை சந்தித்து உள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-11T14:26:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்த 4 ராசி பெண்கள் புத்திசாலித்தனமான அம்மாக்களாக இருப்பார்களாம்... உங்க ராசியும் இதுவா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/which-zodiac-zings-women-are-mostly-wise-mothers-1789132260"></link>
            <id>https://manithan.com/article/which-zodiac-zings-women-are-mostly-wise-mothers-1789132260</id>
            <summary type="text">ஜோதிட சாஸ்திரப்படி ஒருவருடைய பிறப்பு ராசி மற்றும் நட்சத்திரமானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை, ஆளுமை, தொழில் உட்பட அவர்களின் நேர்மறை, எதிர்மறை குணங்களி...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜோதிட சாஸ்திரப்படி ஒருவருடைய பிறப்பு ராசி மற்றும் நட்சத்திரமானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை, ஆளுமை, தொழில் உட்பட அவர்களின் நேர்மறை, எதிர்மறை குணங்களில் நேரடியாக ஆதிக்கம் நெலுத்தும் என நம்பப்படுகின்றது. </p><p>அந்தவகையில், குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்த பெண்கள் அன்பும் அக்கறையும் நிறைந்தவர்களாக மாத்திரமன்றி புத்திசாலிதனம் கொண்ட அம்மாக்களாகவும் இருப்பார்கள். அவர்கள் குழந்தைகளை வளர்க்கும் விதமும் தனித்துவமானதாக இருக்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c2bc9d07-dedb-43a0-828d-25918f9319a2/26-6aa40567d9a4a.webp' /></p><p></p><p>அப்படி புத்திசாலித்தனம், நுன்னறிவு, மற்றும் குழந்தை வளர்ப்பில் தனித்துவ ஆளுமை கொண்டவர்களாக அறியப்படும் பெண் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.</p><h2>கடகம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/de050ac7-4eaf-4585-b37a-0dbda8eb6067/26-6aa405688f4cc.webp' /></p><p>கடக ராசி அம்மாக்கள் மற்றவர்களை விட அன்பும் அக்கறையும் நிறைந்தவர்களாக இருப்பார்கள். குழந்தைகளின் தேவைகளை அவர்கள் சொல்லாமலேயே புரிந்துகொள்ளும் திறன் இவர்களுக்கு இருக்கும். </p><p>குழந்தைகள் பாதுகாப்பாகவும், தங்கள் உணர்வுகளைத் தயக்கமின்றி பகிர்ந்துகொள்ளும் வகையிலும் அன்பான சூழலை உருவாக்குவார்கள். குழந்தைகளுடன் நெருக்கமான பாசப் பிணைப்பைக் கொண்டிருப்பார்கள்.</p><p> பொறுமையாகக் கேட்டு, குழந்தைகளின் மனநிலையை எளிதில் புரிந்துகொள்வார்கள். இவர்களின் அன்பும் பாசமும் குழந்தைகள் சவால்களை தைரியமாக எதிர்கொள்ள உதவும்.
</p><h2>
கன்னி</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/91d07566-80f4-4313-9500-92a328fde6f6/26-6aa4056945b05.webp' /></p><p>கன்னி ராசி அம்மாக்கள் ஒழுங்குக்கும் திட்டமிடலுக்கும் முக்கியத்துவம் கொடுப்பவர்கள். குழந்தைகள் ஆரோக்கியமாகவும் நல்ல பழக்கங்களுடனும் வளர வேண்டும் என்பதில் அதிக கவனம் செலுத்துவார்கள்.</p><p> உணவு, தூக்கம், படிப்பு, அன்றாட பழக்கங்கள் என ஒவ்வொரு விஷயத்தையும் கவனமாகப் பார்த்துக்கொள்வார்கள். குழந்தைகளின் சிறிய தேவைகளைக்கூட கவனிக்கும் இவர்களின் பழக்கம், குழந்தைகளுக்கு பாதுகாப்பான உணர்வையும் நல்ல பழக்கங்களையும் உருவாக்கும்.
</p><h2>
துலாம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1c3cf0f9-6d91-4f7c-894c-d1f8fb55b664/26-6aa405f3758f8.webp' /></p><p>துலாம் ராசி அம்மாக்கள் அமைதியையும் அன்பையும் விரும்புபவர்கள். வீட்டில் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்துவார்கள். </p><p>குழந்தைகளுக்கு நேர்மை, கருணை, பிறரை மதிக்கும் பழக்கம் போன்றவற்றைக் கற்றுக்கொடுப்பார்கள். குழந்தைகள் தங்கள் கருத்துகளைத் திறந்த மனதுடன் பேச ஊக்குவிப்பார்கள்.எந்த விஷயத்தையும் நிதானமாக அணுகும் இவர்களின் குணம், குழந்தைகளுக்கு நல்ல வழிகாட்டியாக இருக்கும்.</p><h2>

மகரம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ce3f3408-8b22-4178-88db-ba245199f9e7/26-6aa40569eef19.webp' /></p><p></p><p> மகர ராசி அம்மாக்கள் பொறுப்பானவர்களாகவும் நம்பிக்கையானவர்களாகவும் இருப்பார்கள். குழந்தைகளின் எதிர்காலம் சிறப்பாக இருக்க வேண்டும் என்பதில் அதிக அக்கறை காட்டுவார்கள்.</p><p> ஒழுக்கம், கடின உழைப்பு, விடாமுயற்சி போன்றவற்றின் முக்கியத்துவத்தை சிறு வயதிலிருந்தே கற்றுக்கொடுப்பார்கள். குழந்தைகள் எந்தச் சூழ்நிலையையும் தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்ள வேண்டும் என்று விரும்புவார்கள்.</p><p> தேவையான நேரத்தில் வழிகாட்டுவதுடன், எப்போதும் குழந்தைகளுக்கு உறுதியான ஆதரவாகவும் இருப்பார்கள். குழந்தைகளின் விடயத்தில் எந்த நேரத்தில் எதை செய்ய வேண்டும் என்பதில் தெளிவாக இருப்பார்கள்.</p><p><b>இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;&nbsp;</b></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-11T14:25:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹவுதிகள் தாக்குதல்: சவூதி அரேபியாவின் மசகு எண்ணெய் விநியோகம் வீழ்ச்சி - 30 ஆண்டுகளுக்கு பின் பெரும் நட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/saudi-arabia-s-crude-oil-supply-drops-1789136509"></link>
            <id>https://tamilwin.com/article/saudi-arabia-s-crude-oil-supply-drops-1789136509</id>
            <summary type="text">யெமனின் ஹவுதி அமைப்பினர் மற்றும் ஈரான் ஆதரவு குழுக்கள் நடத்திய
தாக்குதல்களைத் தொடர்ந்து, கடந்த ஆகஸ்ட் மாதத்தில் சவூதி அராபியாவின் மசகு
எண்ணெய் விநிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>யெமனின் ஹவுதி அமைப்பினர் மற்றும் ஈரான் ஆதரவு குழுக்கள் நடத்திய
தாக்குதல்களைத் தொடர்ந்து, கடந்த ஆகஸ்ட் மாதத்தில் சவூதி அராபியாவின் மசகு
எண்ணெய் விநியோகம் நாளொன்றுக்கு 6 மில்லியன் பீப்பாய்களாகக் குறைந்துள்ளதாக
சர்வதேச சக்தி முகமையகம்(IEA) தெரிவித்துள்ளது.
</p><p>
இது தொடர்பில், இன்று(11.09.2026) அறிக்கையொன்றும் வெளியிடப்பட்டுள்ளது. </p><h2>


மசகு எண்ணெய் விநியோகம் சரிவு</h2><p>

இது கடந்த மூன்று தசாப்தங்களுக்கும் மேலான காலத்தில் பதிவான மிகக் குறைந்த
விநியோக அளவாகும்.

பாப் எல்-மண்டேப் நீரிணையைக் கடக்கும் கப்பல்கள், சவூதியின் ஜாஸான் எண்ணெய்
சுத்திகரிப்பு நிலையம், யான்பு பகுதிக்கு அருகிலுள்ள கப்பல் போக்குவரத்துப்
பாதைகள் மற்றும் ஈராக்கிய ஆதரவுக் குழுக்களால் அப்கைக் எண்ணெய் பதப்படுத்தும்
மையம் மீது நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதல்களே இந்த விநியோக வீழ்ச்சிக்கு
முதன்மை காரணமாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/55ce44c0-5302-4e12-90ba-d14a329e9dd1/26-6aa40ebf371e8.webp' /></p><p>

இதன் காரணமாக, 2026 ஆம் ஆண்டிற்கான சவூதி அராபியாவின் சராசரி நாளாந்த மசகு
எண்ணெய் விநியோக முன்னறிவிப்பை சர்வதேச சக்தி முகமையகம் நாளொன்றுக்கு 7.6
மில்லியன் பீப்பாய்களாகக் குறைத்துள்ளது.
</p><p>
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உற்பத்தி மீண்டும் இயல்பு நிலைக்குத்
திரும்புவதில் ஏற்பட்டுள்ள தாமதமே இதற்கு முக்கிய காரணம் எனக்
குறிப்பிடப்பட்டுள்ளது.
</p><p>
இதேவேளை, ஆகஸ்ட் மாதத்தில் தாம் சந்தைக்கு வழங்கிய மற்றும் உற்பத்தி செய்த
எண்ணெயின் அளவு சர்வதேச சக்தி முகமையகத்தின் மதிப்பீட்டை விட அதிகமாக
இருந்ததாக சவூதி அரேபியா ஓபெக்(OPEC) அமைப்பிற்குத் தெரிவித்துள்ளமை
குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-11T14:22:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தலைமன்னார் மணல் திட்டில் கடற்படையினரால் மீட்கப்பட்ட சிறுவன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/a-boy-rescued-navy-from-a-sandbank-at-talaimannar-1789131320"></link>
            <id>https://jvpnews.com/article/a-boy-rescued-navy-from-a-sandbank-at-talaimannar-1789131320</id>
            <summary type="text">&amp;nbsp; தலைமன்னாருக்கு அப்பால் கடற்பரப்பில் மணல் திட்டில் வழிதவறி சிக்கித் தவித்த 17 வயது சிறுவன் ஒருவரை இலங்கைக் கடற்படையினர் இன்று (11) பாதுகாப்பாக ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; தலைமன்னாருக்கு அப்பால் கடற்பரப்பில் மணல் திட்டில் வழிதவறி சிக்கித் தவித்த 17 வயது சிறுவன் ஒருவரை இலங்கைக் கடற்படையினர் இன்று (11) பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.
</p><p>


வடமத்திய கடற்படை கட்டளைக்குட்பட்ட இலங்கை கடற்படைக் கப்பலான ‘தம்மென்னா’ நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்ட ரோந்து நடவடிக்கையின்போது, குறித்த கடற்பரப்பில் மணல் திட்டில் சிக்கித் தவித்த சிறுவன் ஒருவர் அவதானிக்கப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4b0f29b0-c1a4-4a90-a6a2-435ac85ee602/26-6aa3fa3987ce3.webp' /></p><p></p><p>

இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், குறித்த சிறுவன் தென்னிந்தியாவில் இருந்து படகு மூலம் இலங்கையை நோக்கி வந்தபோது வழிதவறி மணல் திட்டில் சிக்கியமை தெரியவந்துள்ளது.</p><p></p><p>
</p><p>


கடற்படையினர் சிறுவனை ‘தம்மென்னா’ நிறுவனத்திற்கு அழைத்துச் சென்று, குடிநீர் மற்றும் உணவு உள்ளிட்ட தேவையான மனிதநேய உதவிகளை வழங்கியுள்ளனர்.
</p><p>


மேலும், குறித்த சிறுவன் மேலதிக சட்ட மற்றும் நிர்வாக நடவடிக்கைகளுக்காக தலைமன்னார் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்படவுள்ளதாக இலங்கைக் கடற்படை தெரிவித்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-11T14:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழகம் முகாமிலிருந்து தனித்து இலங்கை திரும்பிய சிறுவன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/boy-left-camp-alone-return-sri-lanka-rescued-navy-1789135166"></link>
            <id>https://ibctamil.com/article/boy-left-camp-alone-return-sri-lanka-rescued-navy-1789135166</id>
            <summary type="text">தமிழகம், அரியலூர் முகாமில் வசித்து வந்த 17 வயது சிறுவன் ஒருவன், தனித்து
இலங்கை திரும்பியபோது இலங்கை எல்லையில் கடற்படையினரால் மீட்கப்பட்டுத்
தலைமன்னா...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழகம், அரியலூர் முகாமில் வசித்து வந்த 17 வயது சிறுவன் ஒருவன், தனித்து
இலங்கை திரும்பியபோது இலங்கை எல்லையில் கடற்படையினரால் மீட்கப்பட்டுத்
தலைமன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.</p><p>குறித்த சம்பவம்&nbsp;இன்று(11.09.2026) இடம்பெற்றுள்ளது.</p><p></p><h2>மேலதிக சட்டநடவடிக்கைகளுக்காக</h2><p>
</p><p>தமிழகத்திலிருந்து படகு மூலம் பயணித்து, இலங்கைக்கும் இந்தியாவுக்கும்
இடைப்பட்ட கடற்பரப்பில் உள்ள மணல் திட்டுக்களில் இலங்கையின் கட்டுப்பாட்டு
எல்லைக்குள் நின்ற சமயமே மேற்படி சிறுவன் கடற்படையினரால் அவதானிக்கப்பட்டு
மீட்கப்பட்டுள்ளார்.
</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/90f008c4-c721-433c-b5bc-e179a2f60c19/26-6aa40940247c1.webp' /></p><p>மீட்கப்பட்ட சிறுவன் மேலதிக சட்டநடவடிக்கைகளுக்காகத் தலைமன்னார் பொலிஸாரிடம்
ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், பொலிஸார் இது தொடர்பில் தீவிர விசாரணைகளை
முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-11T13:59:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்க இடைக்காலத் தேர்தல்: ட்ரம்ப் விடுத்த கோரிக்கையால் விவாதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/us-midterm-elections-republican-party-s-trump-1789134070"></link>
            <id>https://tamilwin.com/article/us-midterm-elections-republican-party-s-trump-1789134070</id>
            <summary type="text">எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள அமெரிக்க இடைக்காலத் தேர்தலைத் தனக்கான
ஒரு மக்கள் தீர்ப்பாகக் கருதி வாக்களிக்குமாறு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்
வி...</summary>
            <content type="html"><![CDATA[<p>எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள அமெரிக்க இடைக்காலத் தேர்தலைத் தனக்கான
ஒரு மக்கள் தீர்ப்பாகக் கருதி வாக்களிக்குமாறு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்
விடுத்த வேண்டுகோள், குடியரசுக் கட்சியினரிடையே புதிய விவாதங்களை
ஏற்படுத்தியுள்ளது.
</p><p>
டெக்சாஸின் டலஸ் நகரில் நடைபெற்ற கட்சியின் மாநாட்டில் உரையாற்றிய ட்ரம்ப்,
"நானே தேர்தலில் போட்டியிடுவதாக நினைத்து வாக்களியுங்கள்" என ஆதரவாளர்களைக்
கேட்டுக்கொண்டார்.
</p><p>
எனினும், ட்ரம்ப்பை முதன்மைப்படுத்தி முன்னெடுக்கப்படும் இந்த தேர்தல் உத்தி
தொடர்பில் மாநாட்டில் கலந்துகொண்ட தீவிர ஆதரவாளர்கள் மற்றும் நன்கொடையாளர்கள்
சிலர் தமது கவலையை வெளியிடுகின்றனர்.</p><h2>பொருளாதார நெருக்கடி</h2><p>
அமெரிக்காவில் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவு மற்றும் ஈரான் போரினால்
ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில், சுயாதீன வாக்காளர்களை
ஈர்ப்பதில் ட்ரம்ப் சிரமங்களை எதிர்கொள்ளக்கூடும் என அவர்கள் அஞ்சுகின்றனர்.
</p><p>
சமீபத்திய கருத்துக்கணிப்புகளின்படி ஜனாதிபதி ட்ரம்பின் மக்கள் ஆதரவு விகிதம்
கணிசமாகக் குறைந்துள்ள நிலையில், தீவிரக் கட்சி ஆதரவாளர்களைத் திரட்டுவதற்கு
ட்ரம்ப் அவசியமானவர் என்ற போதிலும், கடும் போட்டி நிலவும் தொகுதிகளில் இந்த
உத்தி எந்தளவுக்குப் பலனளிக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ed62f99c-62dd-4c7a-876c-92d692a2dde9/26-6aa40895b7c2e.webp' /></p><p>
</p><p>
இதனிடையே, தேர்தல் வெற்றி பெற்றால் ஒவ்வொரு அமெரிக்கருக்கும் 5,000 டொலர்
"ட்ரம்ப் ஈவுத்தொகை" வழங்கப்படும் என அறிவித்த ட்ரம்ப், விலைவாசி உயர்வு
குறித்த வாக்காளர்களின் உடனடிக் கவலைகளுக்குத் தெளிவான தீர்வுகளை
முன்வைக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-11T13:59:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வலி. வடக்கில் ஒதுக்கப்பட்ட மயிலிட்டி மக்களின் பிரதிநிதிகள் - மனுவில் முன்வைத்த குற்றச்சாட்டுகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/displaced-people-of-myliddy-1789134439"></link>
            <id>https://tamilwin.com/article/displaced-people-of-myliddy-1789134439</id>
            <summary type="text">வலி. வடக்கு காணி விடுவிப்புக்காக போராடும் மயிலிட்டி மக்களின் பிரதிநிதிகள்
அண்மையில் இடம்பெற்ற இரண்டு பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களுக்கு
அழ...</summary>
            <content type="html"><![CDATA[<p>வலி. வடக்கு காணி விடுவிப்புக்காக போராடும் மயிலிட்டி மக்களின் பிரதிநிதிகள்
அண்மையில் இடம்பெற்ற இரண்டு பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களுக்கு
அழைக்கப்படவில்லை எனக் குற்றம் சாட்டி, தெல்லிப்பழை பிரதேச செயலரிடம் மனு ஒன்று கையளிக்கப்பட்டுள்ளது. </p><p>



மயிலிட்டியில் காணி விடுவிப்புக்காக தொடர்ச்சியாக போராடிவரும் ஒரு பகுதி
மக்கள் இன்றைய தினம்(11.09.2026) வெள்ளிக்கிழமை ஒன்று திரண்டு தெல்லிப்பழை பிரதேச
செயலகத்திற்கு சென்று குறித்த மனு கையளித்துள்ளனர்.
</p><h2>
நிராகரிக்கப்பட்ட மயிலிட்டி மக்களின் பிரதிநிதிகள்</h2><p>
இதன்போது, பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் தமது பிரதிநிதிகளையும்
வழமையாக அழைத்து, காணி விடுவிப்பு உள்ளிட்ட தமது பிரச்சினைகள் தொடர்பில்
கருத்துக்களை முன்வைக்க சந்தர்ப்பம் வழங்கப்பட்டு வந்த நிலையில், அண்மையில்
இடம்பெற்ற இரண்டு கூட்டங்களுக்கு தமது அமைப்பின் பிரதிநிதிகள்
அழைக்கப்படவில்லை என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f2643851-22eb-41cf-8748-29636f23f476/26-6aa4070191198.webp' /></p><p>

இதனால், காணிகளை இழந்த மக்களின் நியாயமான கோரிக்கைகள் உரிய அதிகாரிகளின்
கவனத்திற்கு கொண்டு செல்லப்படுவதற்கான வாய்ப்பு மறுக்கப்பட்டு, தமது தரப்பு
தொடர்ந்தும் புறக்கணிக்கப்படுவதாக தெரிவித்துள்ளனர்.
</p><p>
எனவே, எதிர்வரும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களுக்கு தமது
பிரதிநிதிகளுக்கும் மீண்டும் உரிய முறையில் அழைப்பு விடுக்கப்பட வேண்டும் என
மனு மூலம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-11T13:50:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ். தேசிய கல்வியற் கல்லூரி மாணவியின் மன உளைச்சல் சம்பவம்: கல்வி நிறுவனங்களில் பொறுப்புணர்வு எங்கே...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/jaffna-national-college-of-education-incident-1789134589"></link>
            <id>https://ibctamil.com/article/jaffna-national-college-of-education-incident-1789134589</id>
            <summary type="text">யாழ். தேசிய கல்வியற் கல்லூரியில் கல்வி பயிலும் மாணவி ஒருவர், விரிவுரையாளரின் முறையற்ற கருத்துக்களால் மன உளைச்சலுக்கு உள்ளாகி பின்னர் தவறான முடிவெடுத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ். தேசிய கல்வியற் கல்லூரியில் கல்வி பயிலும் மாணவி ஒருவர், விரிவுரையாளரின் முறையற்ற கருத்துக்களால் மன உளைச்சலுக்கு உள்ளாகி பின்னர் தவறான முடிவெடுத்த சம்பவம் தற்போது கவனத்தை ஈர்த்துள்ளது.
</p><p>

 தகவல்களின் அடிப்படையில் பார்க்கும்போது, ஒரு மாணவி கல்லூரி மன்றத்தின் பணிக்காக அனுமதி கடிதம் கோரி விரிவுரையாளரை அணுகிய சந்தர்ப்பத்தில், அவரை தகாத வார்த்தைகளால் திட்டி இழிவுபடுத்தியதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. </p><p>

மேலும், சம்பவம் நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/PNrLmF8uBTw" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><h2>முக்கியமாக எழும் கேள்வி</h2><p>இங்கு முக்கியமாக எழும் கேள்வி, ஒரு மாணவர் அல்லது மாணவி தனது கல்வி நிறுவனத்தில் உதவி அல்லது நிர்வாக அனுமதி கோரி அணுகும்போது, அவரை மரியாதையுடனும் பொறுப்புடனும் கையாள வேண்டியது நிறுவனத்தின் அடிப்படை கடமை அல்லவா? என்பதாகும்.
</p><p>
கல்வி நிறுவனங்களில் அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் பயன்படுத்தும் வார்த்தைகள் சாதாரணமான உரையாடலாக மட்டும் பார்க்கப்பட முடியாது. </p><p>

குறிப்பாக மாணவர்களுடன் தொடர்புடைய சூழலில், ஒரு கடுமையான அல்லது அவமதிக்கும் வார்த்தைப் பிரயோகம் அவர்களின் மனநிலையிலும் கல்விச் சூழலிலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.
</p><p>
இத்தகைய சம்பவங்கள் முன்வைக்கப்படும் போது கல்வி நிறுவனங்களின் நிர்வாகப் பொறுப்பு குறித்து கேள்வி எழுவது தவிர்க்க முடியாதது. </p><p>

மாணவர்கள் தங்களது பிரச்சினைகளை அச்சமின்றி தெரிவிக்கக்கூடிய பாதுகாப்பான முறைப்பாட்டு நடைமுறை, முறைப்பாடுகள் கிடைத்தவுடன் அவை சுயாதீனமாக விசாரணை, மாணவர்களின் மனநல பாதுகாப்புக்கு இவை அனைத்தும் பொறுப்புமிக்க விடயங்களாக பார்க்கப்படுகிறது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-11T13:50:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[கார் வாங்கியதும் உனக்கு ஆக்சிடென்ட் ஆகிடும்ன்னு சைக்கோக்கள் சொல்வாங்க!! மதுரை முத்து டாக்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/actor-madurai-muthu-bad-comment-for-new-car-1789132497"></link>
            <id>https://viduppu.com/article/actor-madurai-muthu-bad-comment-for-new-car-1789132497</id>
            <summary type="text">மதுரை முத்துவிஜய் தொலைக்காட்சி மூலம் பிரபலமான மதுரை முத்து சமீபத்தில் ஒரு வீடியோ வெளியிட்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். அந்த வீடியோவில், இப்ப எ...</summary>
            <content type="html"><![CDATA[<h2>மதுரை முத்து</h2><p>விஜய் தொலைக்காட்சி மூலம் பிரபலமான மதுரை முத்து சமீபத்தில் ஒரு வீடியோ வெளியிட்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். அந்த வீடியோவில், இப்ப எல்லாம் நிறைய சைக்கோவில் இருக்கிறாங்க, அதை நீங்களும் பார்த்து இருக்கீங்க. நானும் பார்த்திக்கிறேன், நம் வாழ்க்கையில் பல சைக்கோக்களை நாம் கடந்து கொண்டு வருகிறோம்.</p><p> சமீபத்தில்கூட நேபாளத்தில் நடந்த சம்பவம் எல்லோருக்கும் பாடம். முந்தைய நாள் ரூ. 65 கோடிக்கு அதிபதியாக இருந்த நபர் அடுத்தநாளே எதுவும் இல்லாமல் தெருவுக்கு வந்துவிட்டார். உடுக்க உடைக்கூட இல்லாமல் இவர் தவித்ததை வீடியோவக பார்த்திருப்போம், ஆனால் அந்நேரத்திலும் கூட சில கசைக்கோக்களின் செயல் நமக்கு அதிர்ச்சியையும் கொடுத்திருக்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f40ef24d-1d35-4139-971c-ea9557df2539/26-6aa3fed39ec30.webp' /></p><p> அந்த நேபாள வெள்ளத்தில் அடுத்து வரப்பட்ட பெண்களின் உயிரற்ற உடல் சகதியில் முங்கி கிடக்கும்போது கூட அவர்களில் காதுகளில் அணிந்து இருந்த நகையை திருடுவதற்காக சில முயற்சி செய்திருக்கிறார்கள். அந்த வீடியோகளையும் நாம் பார்த்தோம்.</p><p> நிலையில்லாத வாழ்க்கை எவ்வளவு பெரிய கோடீஸ்வரனையும் பிச்சைக்காரனாக மாற்றிவிடும் என்று தெரிந்தப்பின் அந்த சூழ்நிலையிலும், என் வாழ்க்கை நல்ல இருக்க வேண்டும் என்று மனிதாபிமானமே இல்லாமல் திருடுகிறவங்களின் மூளையை நாம் என்ன சொல்றதுன்னு தெரியல, அவங்கள இரு சைக்கோக்கள் என்றே சொல்லலாம், அதேபோல் சில சைக்கோக்கள் சோசியல் மீடியாவில் பார்த்திருப்போம். யார் என்ன போஸ்ட் போட்டாலும் அதற்கு நெகட்டிவாகவே கமெண்ட் போடுவார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/606ede12-0671-4588-8fc5-0286e8aeb38f/26-6aa3fed470e2a.webp' /></p><p> </p><h2>கார் வாங்கியதும்</h2><p>சமீபத்தில்கூட நான் கார் வாங்கியிருக்கிறேன் என்று ஒரு பேட்டி கொடுத்திருந்தேன், அதற்கு கீழே ஒருவன் கமெண்ட் போட்டிருக்கிறான், நீ விரைவில் ஆக்சிடென்ட்டாவதற்கு வாழ்த்துகள் என்று சொல்லியிருக்கிறார். </p><p>இப்படிப்பட்ட மனநிலை எல்லாம் என்னவென்று சொல்வதென்று தெரியவில்லை, ஏற்கனவே எனக்கு பல ஆக்சிடென்ட் நடந்திருக்கிறது, ஆனாலும் இன்று நான் வந்திருக்கிறேன். இப்படி இருக்கும்போதும் கூட அடுத்தவங்க நல்லா இருக்கக்கூடாது என்று நினைக்கிற மனநிலையை என்ன சொல்வதென்று தெரியவில்லை. அதுபோல் இன்னும் சில சைக்கோக்கள் இருக்கிறார்கள்.</p><p><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/reel/DdG3eK5PN5i/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/reel/DdG3eK5PN5i/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/reel/DdG3eK5PN5i/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by Muthu Ramasamy (@mathuraimuthuofficial)</a></p></div></blockquote> <script async src="//www.instagram.com/embed.js"></script></p>]]></content>
            <updated>2026-09-11T13:45:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிளிநொச்சியில் திகில் சம்பவம்; எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நடந்தது என்ன!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/stabbing-at-kilinochchi-fuel-station-1789133141"></link>
            <id>https://jvpnews.com/article/stabbing-at-kilinochchi-fuel-station-1789133141</id>
            <summary type="text">&amp;nbsp; கிளிநொச்சி நகரிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றிற்குள் நேற்றிரவு (10) 8.00 மணியளவில் இடம்பெற்ற கத்திக்குத்துத் தாக்குதல் சம்பவம் பரபரப்பை ஏ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; கிளிநொச்சி நகரிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றிற்குள் நேற்றிரவு (10) 8.00 மணியளவில் இடம்பெற்ற கத்திக்குத்துத் தாக்குதல் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
</p><p>
 இந்த கதாக்குதல் சம்பவத்தில் நால்வர் காயமடைந்துள்ளனர். 

டிப்பர் வாகனம் ஒன்றிற்கு எரிபொருள் நிரப்பிய பின்னர், அவ்வாகனத்தைச் சற்று முன்னோக்கி நகர்த்துமாறு எரிபொருள் நிரப்பு நிலையப் பணியாளர் கோரியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/365c7b2a-3e9c-44b3-b2de-5148bf95adf6/26-6aa4015723946.webp' /></p><h2>&nbsp;சாரதிக்கும் பணியாளருக்கும் வாய்த்தர்க்கம்</h2><p>

 இதன் காரணமாகச் சாரதிக்கும் பணியாளருக்கும் இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது. 

தனியே சென்ற டிப்பர் வாகனச் சாரதி, சிறிது நேரத்தின் பின்னர் மேலும் ஐந்து பேருடன் மீண்டும் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு வந்துள்ளார்.</p><p></p><p> 

அங்கு இருந்த எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர், முகாமையாளர், பணியாளர் மற்றும் வாடிக்கையாளர் ஒருவர் மீது கத்திக்குத்துத் தாக்குதல் நடத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளார். </p><p>

இத்தாக்குதலில் காயமடைந்த நான்கு பேரும் உடனடியாக மீட்கப்பட்டு சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-11T13:33:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thevanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிளிநொச்சி நகர் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கத்திக்குத்து! நான்கு பேர் காயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/four-injured-in-stabbing-kilinochchi-fuel-station-1789131779"></link>
            <id>https://tamilwin.com/article/four-injured-in-stabbing-kilinochchi-fuel-station-1789131779</id>
            <summary type="text">கிளிநொச்சி நகர் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் நான்கு பேர் காயமடைந்துள்ளனர்.குறித்த சம்பவமானது நேற்றையதினம்(10.9.20...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிளிநொச்சி நகர் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் நான்கு பேர் காயமடைந்துள்ளனர்.</p><p>குறித்த சம்பவமானது நேற்றையதினம்(10.9.2026) இரவு இடம்பெற்றுள்ளது.</p><p>சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு நேற்றிரவு எட்டு
மணியளவில் கனரக வாகனத்திற்கு எரிபொருள் நிரப்ப வந்தவர் எரிபொருளை நிரப்பிய
பின்பு வாகனத்தை முன்னோக்கி விடுமாறு எரிபொருள் நிரப்பு நிலைய பணியாளர் கூறினார்.</p><h2>மேலதிக விசாரணை</h2><p>இதன்போது பணியாளருடன் முரண்பட்டு சென்ற கனரக வாகன சாரதி சிறிது
நேரத்தின் பின்பு ஐந்து பேருடன் வருகை தந்து எரிபொருள் நிரப்பு நிலைய
உரிமையாளர், முகாமையாளர், பணியாளர், வாடிக்கையாளர் மீது கத்தி குத்து மற்றும்
தாக்குதல் நடாத்தி விட்டு தப்பிச்சென்றுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/be7afe28-beb2-4f04-a04a-738d2256153b/26-6aa403147753a.webp' /></p><p>சம்பவத்தில் காயமடைந்த நான்கு
பேரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p><p>சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-11T13:33:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இரட்டை கோபுர தாக்குதல்களின் 25வது ஆண்டு நினைவு நாள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/25th-anniversary-of-the-twin-towers-attacks-1789118530"></link>
            <id>https://canadamirror.com/article/25th-anniversary-of-the-twin-towers-attacks-1789118530</id>
            <summary type="text">&amp;nbsp; அமெரிக்காவில் 2001ஆம் ஆண்டு செப்டம்பர் 11 ஆம் திகதி நடத்தப்பட்ட இரட்டை கோபுரத் தீவிரவாதத் தாக்குதல்களின் 25வது ஆண்டு நினைவு நாள் இன்று அனுஷ்டிக...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; அமெரிக்காவில் 2001ஆம் ஆண்டு செப்டம்பர் 11 ஆம் திகதி நடத்தப்பட்ட இரட்டை கோபுரத் தீவிரவாதத் தாக்குதல்களின் 25வது ஆண்டு நினைவு நாள் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது. </p><p>

நியூயோர்க்கில் உள்ள உலக வர்த்தக மையத்தின் இரட்டைக் கோபுரங்கள் மீது இரண்டு விமானங்கள் மோதி தாக்குதல் நடத்தின.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6f96f3f1-6af7-4399-bb8c-8808c501b26a/26-6aa3c847d7ff4.webp' /></p><h2>இரண்டு விமானங்கள் மோதி தாக்குதல்&nbsp;</h2><p> </p><p>இரண்டாவது தாக்குதல் முதல் தாக்குதலுக்குப் பிறகு 17 நிமிடங்கள் கழித்து நிகழ்ந்தது. </p><p>

கட்டடங்கள் தீப்பிடித்ததால் மேல் தளங்களில் சிக்கிய மக்கள் அவதிப்பட்ட நிலையில், இரண்டு மணி நேரத்திற்குள் 110 மாடிகளைக் கொண்ட இரண்டு கோபுரங்களும் தூசு மண்டலமாக இடிந்து விழுந்தன. </p><p>

வொஷிங்டன் டிசி அருகில் உள்ள அமெரிக்க இராணுவத் தலைமையகமான பெண்டகனின் மேற்குப் பகுதியை மூன்றாவது விமானம் தகர்த்தது. 

பயணிகளின் கடுமையான எதிர்ப்பால் நான்காவது விமானம் பென்சில்வேனியாவில் உள்ள திறந்தவெளியொன்றில் விழுந்து நொறுங்கியது. </p><p>

இது வொஷிங்டனில் உள்ள பாராளுமன்றக் கட்டடத்தை குறிவைத்துத் தாக்கப்படவிருந்ததாக நம்பப்படுகிறது. இந்தத் தாக்குதல்களில் கடத்தல்காரர்கள் 19 பேர் தவிர்த்து மொத்தம் 2,977 பேர் உயிரிழந்தனர். </p><p>

இவர்களில் பெரும்பாலோர் நியூயோர்க்கைச் சேர்ந்தவர்கள் ஆவர். மேலும், அமெரிக்க வரலாற்றில் எப்போதும் இல்லாத வகையில் 441 அவசரகால மீட்புப் பணியாளர்கள் இதில் தங்கள் உயிரைத் தியாகம் செய்தனர். </p><p>

இந்தத் தாக்குதல்களும், அதைத் தொடர்ந்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகளும் இந்த நூற்றாண்டின் முதல் இரண்டு தசாப்தங்களுக்குரிய வெளியுறவு, பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை கொள்கைகளை வடிவமைப்பதில் பெரும் பங்கு வகித்ததாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.</p><p> 

இந்த நிலையில் குறித்த தாக்குதல்களில் உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்து, தாக்குதல்கள் நடைபெற்ற நியூயோர்க், வெர்ஜீனியா மற்றும் பென்சில்வேனியா ஆகிய மூன்று முக்கிய இடங்களிலும் அதிகாரப்பூர்வ நினைவு சடங்குகள் இன்று இடம்பெறுகின்றன. </p><p>

அத்துடன், இன்றைய தினம் லண்டனில் உள்ள குவீன் எலிசபெத் ஒலிம்பிக் பூங்காவிலும் உயிரிழந்தவர்களின் நினைவாக விசேட நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.</p>]]></content>
            <updated>2026-09-11T13:32:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இளவரசி டயானாவின் ‘Revenge Dress’ ஏலம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/princess-diana-s-revenge-dress-up-for-auction-1789132585"></link>
            <id>https://canadamirror.com/article/princess-diana-s-revenge-dress-up-for-auction-1789132585</id>
            <summary type="text">&amp;nbsp; பிரிட்டனின் மறைந்த இளவரசி டயானா அணிந்திருந்த, அரச குடும்ப வரலாற்றில் மிகவும் பிரபலமான ஆடைகளில் ஒன்றாகக் கருதப்படும் ‘Revenge Dress’ என அழைக்கப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; பிரிட்டனின் மறைந்த இளவரசி டயானா அணிந்திருந்த, அரச குடும்ப வரலாற்றில் மிகவும் பிரபலமான ஆடைகளில் ஒன்றாகக் கருதப்படும் ‘Revenge Dress’ என அழைக்கப்படும் கருப்பு நிற ஆடை ஏலத்திற்கு வரவுள்ளது.
</p><p>
1994ஆம் ஆண்டு, அப்போதைய இளவரசர் சார்லஸ் தன்னுடைய திருமணத்திற்கு வெளியான உறவை ஒப்புக்கொண்ட தொலைக்காட்சி நேர்காணல் ஒளிபரப்பான அதே இரவில், டயானா இந்த கருப்பு நிற "Christina Stambolian" ஆடையை அணிந்து பொது நிகழ்வில் கலந்துகொண்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d567b018-4307-4bc0-9ed2-a1e765d7c943/26-6aa3ff2ab1264.webp' /></p><p>
</p><p>
இதன் காரணமாக இந்த ஆடை பின்னர் ‘Revenge Dress’ எனப் பிரபலமானது.

அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் உள்ள Sotheby’s ஏல நிறுவனத்தில் எதிர்வரும் டிசம்பர் மாதம் இந்த ஆடை ஏலத்திற்கு விடப்படவுள்ளது.</p><p>&nbsp; இந்த ஆடை 150,000 முதல் 300,000 அமெரிக்க டொலர் வரை விலைக்கு ஏலம் போகும் என எதிர்பார்க்கப்படுகிறது</p>]]></content>
            <updated>2026-09-11T13:32:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நோர்வேயின் புதிய போக்குவரத்து துறை அமைச்சராக ஈழத்தமிழ் பெண்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/kamzy-eelam-tamil-norway-minister-of-transport-1789124470"></link>
            <id>https://jvpnews.com/article/kamzy-eelam-tamil-norway-minister-of-transport-1789124470</id>
            <summary type="text">&amp;nbsp;நோர்வேயின் பாராளுமன்றத்தில் பாராளுமன்ற உறுப்பினராக இருக்கின்ற முதல் ஈழத்தமிழர் என்ற பெருமை பெற்ற கம்சி குணரத்தினம், நோர்வேயின் ஈழத்தமிழ் பின்னணி...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;நோர்வேயின் பாராளுமன்றத்தில் பாராளுமன்ற உறுப்பினராக இருக்கின்ற முதல் ஈழத்தமிழர் என்ற பெருமை பெற்ற கம்சி குணரத்தினம், நோர்வேயின் ஈழத்தமிழ் பின்னணியை கொண்ட முதலாவது அமைச்சர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.</p><p>

ஈழத்தில் இருந்து 5 வயதில் புலம்பெயர்ந்து வந்த சிறுமியான கம்சி குணரத்தினம் நோர்வேயின் போக்குவரத்துதுறையின் அமைச்சராகி இருப்பது உலகெங்க்கும் வாழும் ஈழத தமிழர்களை மகிழ்ச்சி கொள்ள வைத்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a03402da-f920-408a-ad1b-b26bf4b79bb3/26-6aa3df77b3fda.webp' /></p><p>
</p><p>
இந் நிலையில் பலரும் வாழ்த்துக்களையும் பாராட்டுகாளையும் கூறி வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-11T13:30:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thevanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிளிநொச்சியில் இடம்பெறும் வீதி அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் முக்கிய மீளாய்வு கூட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/road-development-projects-underway-in-kilinochchi-1789133214"></link>
            <id>https://tamilwin.com/article/road-development-projects-underway-in-kilinochchi-1789133214</id>
            <summary type="text">நடைமுறைப்படுத்திய வீதி அபிவிருத்தி வேலைத்திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பான மீளாய்வு கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்த கூட்டமானது, இன்று(11....</summary>
            <content type="html"><![CDATA[<p>நடைமுறைப்படுத்திய வீதி அபிவிருத்தி வேலைத்திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பான மீளாய்வு கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
</p><p>
இந்த கூட்டமானது, இன்று(11.09.2026) குறித்த மீளாய்வு கலந்துரையாடல், கிளிநொச்சி மாவட்ட செயலாளர் சுப்பிரமணியம் முரளிதரன், தேசிய
வேலைத்திட்டத்தின் மாவட்ட இணைப்பாளர் மருங்கன் மோகன் ஆகியோரின் தலைமையில்
கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது. </p><p>

இதன்போது, கிளிநொச்சி மாவட்டத்திற்கு உட்பட்டுள்ள பிரதேச செயலாளர்
பிரிவுகளில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள மற்றும் நடைமுறைப்படுத்தப்பட்டு
வருகின்ற வீதி வேலைத்திட்டங்கள் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது. </p><p>

இதற்கமைய, கரைச்சி, பூநகரி,
பச்சிலைப்பள்ளி, கண்டாவளை உள்ளிட்ட பிரிவுகளுக்கு உட்பட்ட பிரதேசங்களிற்கு
முன்மொழியப்பட்ட வீதி வேலைத்திட்டங்கள் தொடர்பாக ஆராயப்பட்டுள்ளது.</p><h2> 

அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ள நிதி</h2><p>

அரசாங்கத்தினால் வீதி அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு
செய்யப்பட்டுள்ள நிலையில், சில வீதிகளின் அபிவிருத்திப் பணிகள் ஆரம்பிக்கப்படாத
நிலை தொடர்பாகவும், அத்துடன் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வருகின்ற
வீதிகளின் தற்போதைய முன்னேற்றம் தொடர்பாகவும் அதிகாரிகளிடம் கேட்டறியப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/53519221-e9e4-4e40-b256-698c7cb6c555/26-6aa401ceaebe3.webp' /></p><p> </p><p>

வீதி அபிவிருத்திப் பணிகளை நடைமுறைப்படுத்துவதில் துறைசார்ந்த
திணைக்களங்களுக்கு ஏற்பட்டுள்ள சவால்கள் பல்வேறு அனுமதிகளைப்
பெற்றுக்கொள்வதில் ஏற்படுகின்ற தாமதங்கள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. </p><p>

இதேவேளை, மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களில் அரசாங்கத்தினால் நிதி ஒதுக்கீடு
செய்யப்பட்டுள்ள கிராமிய மற்றும் நகர வீதிகளின் நிலைமைகள் தொடர்பாக
அதிகாரிகளிடம் விளக்கம் பெறப்பட்டு,
வீதி அபிவிருத்திப் பணிகள் தாமதமடைவதற்கான காரணங்கள் தொடர்பாகவும், அதேபோன்று
வீதி அபிவிருத்திப் பணிகளுக்கு தேவையான அனுமதிகளை விரைவாகப் பெற்றுக்கொள்வது
தொடர்பாகவும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது. </p><p>

திருநகர் வீதி அபிவிருத்தி தொடர்பாக சமூக ஊடகங்களில் ஆலமரம் வெட்டுதல்
குறித்து பல்வேறு கருத்துகள் பரபரப்பாக விவாதிக்கப்பட்டிருந்த நிலையில், அது
தொடர்பாகவும் இந்த கலந்துரையாடலில் கருத்துகள் முன்வைக்கப்பட்டன.
</p><h2>
வீதி அபிவிருத்திப் பணிகள்</h2><p>

வீதி அபிவிருத்திப் பணிகளின் போது தொழில்நுட்ப ரீதியாக மரங்களை அகற்ற வேண்டிய
அவசியம் ஏற்படும் சூழ்நிலைகள் தொடர்பாகவும் இதன்போது கலந்துரையாட்ட நிலையில்,
அவ்வாறான சந்தர்ப்பங்களில் உரிய நடைமுறைகளைப் பின்பற்றி தேவையான அனுமதிகளை
வழங்க முடியும் என மாவட்ட செயலாளர் கருத்து தெரிவித்திருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/39f7eb59-0f1f-432c-af48-bf1e05fcbeee/26-6aa401cf8ccfa.webp' /></p><p>
</p><p>
நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள அனைத்து வீதி வேலைத்திட்டங்களையும்
திட்டமிட்ட காலத்திற்குள் நிறைவு செய்வதன்
அவசியம் வலியுறுத்தப்பட்டதுடன்,
2026 ஆம் ஆண்டுக்குள் அனைத்து வீதி வேலைத்திட்டங்களையும் நிறைவு செய்ய வேண்டும்.

அதற்கமைய, ஒவ்வொரு வீதி வேலைத்திட்டத்திற்கும் தேவையான நடவடிக்கைகளை 
முன்னெடுக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. </p><p>

 அதே சமயம், வீதி அபிவிருத்திப் பணிகளில் ஏற்படுகின்ற சவால்களை
உடனடியாகத் தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் 
தெரிவிக்கப்பட்டதுடன், துறைசார்ந்த நிறுவனங்களுக்கு இடையில் ஒருங்கிணைந்த
செயற்பாடு அவசியம் என்றும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.&nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-09-11T13:27:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[முகாமிலிருந்து தனித்து இலங்கை திரும்பிய சிறுவன் கடற்படையினரால் மீட்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/boy-left-camp-alone-return-sri-lanka-rescued-navy-1789130920"></link>
            <id>https://tamilwin.com/article/boy-left-camp-alone-return-sri-lanka-rescued-navy-1789130920</id>
            <summary type="text">தமிழகம், அரியலூர் முகாமில் வசித்து வந்த 17 வயது சிறுவன் ஒருவன், தனித்து
இலங்கை திரும்பியபோது இலங்கை எல்லையில் கடற்படையினரால் மீட்கப்பட்டுத்
தலைமன்னா...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழகம், அரியலூர் முகாமில் வசித்து வந்த 17 வயது சிறுவன் ஒருவன், தனித்து
இலங்கை திரும்பியபோது இலங்கை எல்லையில் கடற்படையினரால் மீட்கப்பட்டுத்
தலைமன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.</p><p>குறித்த சம்பவம்&nbsp;இன்று(11.09.2026) இடம்பெற்றுள்ளது.</p><h2>மேலதிக சட்டநடவடிக்கைகளுக்காக</h2><p>
</p><p>தமிழகத்திலிருந்து படகு மூலம் பயணித்து, இலங்கைக்கும் இந்தியாவுக்கும்
இடைப்பட்ட கடற்பரப்பில் உள்ள மணல் திட்டுக்களில் இலங்கையின் கட்டுப்பாட்டு
எல்லைக்குள் நின்ற சமயமே மேற்படி சிறுவன் கடற்படையினரால் அவதானிக்கப்பட்டு
மீட்கப்பட்டுள்ளார்.
</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7fcba5cf-763f-4557-afbd-cce7b5124cbe/26-6aa401ba22150.webp' /></p><p>மீட்கப்பட்ட சிறுவன் மேலதிக சட்டநடவடிக்கைகளுக்காகத் தலைமன்னார் பொலிஸாரிடம்
ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், பொலிஸார் இது தொடர்பில் தீவிர விசாரணைகளை
முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-11T13:27:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மிகப்பெரிய சந்தையாக உருவெடுக்கும் சொகுசு பதுங்குகுழிகள் - 2035-க்குள் 10 பில்லியன் டொலர் மதிப்பை எட்டும்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/luxury-bunker-market-to-hit-10-bn-dollars-by-2035-1789133357"></link>
            <id>https://news.lankasri.com/article/luxury-bunker-market-to-hit-10-bn-dollars-by-2035-1789133357</id>
            <summary type="text">Luxury bunker market to hit 10 Bn dollar by 2035: உலகில் பெரும் செல்வந்தர்களிடையே சொகுசான பதுங்குகுழிகள் கட்டப்படுவது பிரபலமாகிவருகிறது.

மிகப்பெரிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>Luxury bunker market to hit 10 Bn dollar by 2035: உலகில் பெரும் செல்வந்தர்களிடையே சொகுசான பதுங்குகுழிகள் கட்டப்படுவது பிரபலமாகிவருகிறது.</p><h2>

மிகப்பெரிய சந்தையாக உருவெடுக்கும் பதுங்குகுழிகள்</h2><p>உலக நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள அரசியல் பதற்றங்கள், போர் அபாயங்கள் மற்றும் இயற்கை பேரழிவுகள் அதிகரித்து வரும் நிலையில், பதுங்குகுழி சந்தை (Underground Bunker Market) வேகமாக வளர்ந்து வருகிறது.</p><p>
</p><p></p><p>2024-இல் பதுங்குகுழி சந்தையின் மதிப்பு சுமார் 3.07 பில்லியன் டொலராக இருந்தது. Spherical Insights &amp; Consulting வெளியிட்ட அறிக்கையின் படி, இது 2035-க்குள் 9.49 பில்லியன் டொலராக உயரக்கூடும். இதன் வருடாந்திர வளர்ச்சி விகிதம் 10.8 சதவீதம் என கணிக்கப்பட்டுள்ளது.
</p><p>
மத்திய கிழக்கு மற்றும் உக்ரைன் போர் சூழ்நிலைகள், அணு ஆயுத தாக்குதல் அபாயங்கள், காலநிலை மாற்றம் போன்ற காரணங்களால், பொதுமக்கள் தனிப்பட்ட பதுங்குகுழிகள் மீது அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/28ab7c06-d621-4912-9c74-ed0953f7fdfe/26-6aa4022f0e39c.webp' /></p><p>பனிப்போர் காலத்தில் மக்கள் தொகை முழுவதற்கும் பதுங்குகுழிகள் கட்டப்பட்டன. ஆனால் இப்போது, செல்வந்தர்களுக்கான தனிப்பட்ட சொகுசு பதுங்குகுழிகள் (Luxury Bunkers) அதிகமாக உருவாக்கப்படுகின்றன.
</p><p>
2025-இல் வெளியான BBC அறிக்கையின் படி, Facebook நிறுவனர் மார்க் சுக்கர்பெர்க் ஹவாய் தீவில் உள்ள தனது 1,400-acre நிலப்பரப்பில் தனிப்பட்ட பங்கர் ஒன்றை கட்டியுள்ளார். இதில் தனி மின்சாரம் மற்றும் உணவு வசதிகளும் உள்ளன.</p><p></p><p>

உலகளாவிய பாதுகாப்பு அச்சங்கள், “Doomsday” போன்ற சூழ்நிலைகளுக்கான தயாரிப்புகள், மற்றும் செல்வந்தர்களின் தனிப்பட்ட பாதுகாப்பு தேவைகள் ஆகிய காரணங்களால் இந்த பதுங்குகுழி சந்தை வளர்ந்துகொண்டே போகிறது.
</p><p>
2035-க்குள், இந்த பதுங்குகுழி சந்தை 10 பில்லியன் டொலர் மதிப்பை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது, பாதுகாப்பு தொழில்நுட்பம் மற்றும் தனிப்பட்ட சொகுசு வசதிகள் இணைந்த புதிய வணிக துறையாக உருவெடுக்கிறது.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-11T13:26:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பிரதேசத்தில் பெரும் துயரம்; அநியாயமாக பறிபோன உயிர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/death-young-girl-falling-into-a-well-in-mullaitivu-1789120402"></link>
            <id>https://jvpnews.com/article/death-young-girl-falling-into-a-well-in-mullaitivu-1789120402</id>
            <summary type="text">&amp;nbsp; முல்லைத்தீவில் கிணற்றில் தவறி விழுந்து இளம் பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவத்தில் முல்லைத்தீவு - திருமுறிகண்...</summary>
            <content type="html"><![CDATA[<p><a href="https://jvpnews.com/article/youth-dies-hospital-wrong-medication-mullaithivu-1788330244" target="_blank">&nbsp; முல்லைத்தீவில்</a> கிணற்றில் தவறி விழுந்து இளம் பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
</p><p>
சம்பவத்தில் முல்லைத்தீவு - திருமுறிகண்டியை வசிப்பிடமாகக் கொண்ட யுவதியே உயிரிழதுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d103d733-b534-4cc2-a12a-827a56a76282/26-6aa3d140aed02.webp' /></p><p></p><p> </p><p>இன்னிலையில் யுவதியின் எதிர்பாராத இந்த இழப்பால் யுவதியின் உறவுகள் அதிர்ச்சியை யும் துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.</p><p>மேலும் சம்பவம்&nbsp; தொடர்பில்&nbsp; மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது.</p><p></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-11T13:24:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மாகாண சபைத் தேர்தல் மீண்டும் ஒத்திவைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/npp-provincial-council-elections-postponed-again-1789132329"></link>
            <id>https://jvpnews.com/article/npp-provincial-council-elections-postponed-again-1789132329</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;ஜனாதிபதி அனுர தலமையிலான அரசாங்கம், மாகாண சபைத் தேர்தல் எந்தத் தேர்தல் முறையின் கீழ் நடத்தப்பட வேண்டும் என்பது குறித்து ஆராய்ந்து அறிக்கை ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;ஜனாதிபதி அனுர தலமையிலான அரசாங்கம், மாகாண சபைத் தேர்தல் எந்தத் தேர்தல் முறையின் கீழ் நடத்தப்பட வேண்டும் என்பது குறித்து ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக நாடாளுமன்ற விசேட குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இந்தக் குழுவின் கால எல்லையை மேலும் நீடிப்பதற்கு இன்று (11) நாடாளுமன்றத்தின் அனுமதி கிடைத்துள்ளது.

இதற்கமைய, குறித்த குழுவின் செயற்பாட்டுக் காலம் எதிர்வரும் டிசம்பர் 17 ஆம் திகதி வரை நீடிக்கப்படவுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d1352e55-566e-4f32-af99-d7c86fc977f0/26-6aa3fe2aeb6bc.webp' /></p><p></p><p>
</p><p>
எவ்வாறாயினும், மாகாண சபைத் தேர்தலை வேண்டுமென்றே ஒத்திவைப்பதற்காகவே இந்த விசேட குழுவின் காலம் நீடிக்கப்படுவதாக எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டியுள்ளனர்.</p><p></p><p>

இதற்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையிலான எதிர்க்கட்சிப் பிரதிநிதிகள் நாடாளுமன்றத்தில் தமது கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-09-11T13:09:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[மகாநதி சீரியல் புகழ் சுவாமிநாதனின் புதிய தொடர்... நாயகி மற்றும் சீரியல் பெயர், வெளிவந்த தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/swaminathan-new-serial-name-and-actress-details-1789129183"></link>
            <id>https://cineulagam.com/article/swaminathan-new-serial-name-and-actress-details-1789129183</id>
            <summary type="text">சுவாமிநாதன்விஜய் டிவியில் ஒளிபரப்பான காற்றுக்கென்ன வேலி என்ற தொடர் மூலம் தமிழ் சினிமாவிற்கு என்ட்ரி கொடுத்தவர் தான் நடிகர் சுவாமிநாதன். கன்னட சினிமாவி...</summary>
            <content type="html"><![CDATA[<h2>சுவாமிநாதன்</h2><p>விஜய் டிவியில் ஒளிபரப்பான காற்றுக்கென்ன வேலி என்ற தொடர் மூலம் தமிழ் சினிமாவிற்கு என்ட்ரி கொடுத்தவர் தான் நடிகர் சுவாமிநாதன். </p><p>கன்னட சினிமாவில் கலக்கிவந்தவருக்கு தமிழில் முதல் சீரியலே பெரிய ரீச் கொடுத்தது. அந்த சீரியல் முடிந்த கையோடு விஜய் டிவியிலேயே ஒளிபரப்பாகி வந்த மகாநதி சீரியலில் என்ட்ரி கொடுத்தார். </p><p>இந்த சீரியல் சுவாமிநாதனுக்கு மிகப்பெரிய அளவில் பிரபலத்தை கொடுத்தது, சீரியல் நாயகர்கள் என்றாலே முதலில் சுவாமிநாதன் பெயரை சொல்லும் அளவிற்கு கொண்டாடப்பட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ac5ecf37-1edb-4f61-9ce0-7daab8760928/26-6aa3f97b5a1c0.webp' /></p><h2>
புதிய தொடர்
</h2><p>மகாநதி சீரியல் முடிந்த பிறகு அவர் என்ன தொடர் நடிப்பார் என ரசிகர்கள் எதிர்ப்பார்த்தார்கள். </p><p>இந்த நிலையில் சுவாமிநாதன் விஜய் டிவியிலேயே சீரியல் கமிட்டாகி இருக்கிறார் என தெரியவந்த நிலையில் நாயகி மற்றும் பெயர் பற்றிய தகவல் வந்துள்ளது. சுவாமிநாதன் ஹீரோவாக நடிக்க கிருத்திகா நாயகியாக நடிக்க உள்ளாராம். </p><p>தொடருக்கு கோமதி ஷங்கர் என பெயரிட்டுள்ளனராம்.</p><p><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/p/DdJRVL3EmbU/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/p/DdJRVL3EmbU/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/p/DdJRVL3EmbU/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by Hemalatha V (@tamilserialexpress)</a></p></div></blockquote> <script async src="//www.instagram.com/embed.js"></script></p>]]></content>
            <updated>2026-09-11T12:56:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Fathima</name>
            </author>
            <title type="text"><![CDATA[சாலமன் பாப்பையா மறைவு: அரசியல் தலைவர்கள் இரங்கல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/salomon-pappaiya-passed-away-in-madurai-1789130497"></link>
            <id>https://ibctamilnadu.com/article/salomon-pappaiya-passed-away-in-madurai-1789130497</id>
            <summary type="text">திமுக தலைவர் முக ஸ்டாலின்: ‘சிரித்த முகம் - சிந்தையைக் கவரும் தமிழ் – மதுரை மண்ணின் மணம் ஆகியவற்றால் உலகெங்கும் வாழும் தமிழர்களின் பேரன்பைப் பெற்ற பேர...</summary>
            <content type="html"><![CDATA[<p><b>திமுக தலைவர் முக ஸ்டாலின்:</b> ‘சிரித்த முகம் - சிந்தையைக் கவரும் தமிழ் – மதுரை மண்ணின் மணம் ஆகியவற்றால் உலகெங்கும் வாழும் தமிழர்களின் பேரன்பைப் பெற்ற பேராசிரியர் சாலமன் பாப்பையாவின் மறைவுச் செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் ஆற்றொணாத் துயரும் அடைந்தேன்.

திருக்குறளுக்கு உரை கண்டவர், புறநானூற்றுக்குப் புதிய வரிசை கண்டவர், கம்பனையும் ஆய்ந்தறிந்தவர் எனப் பண்டைத் தமிழிலக்கியத்தில் எந்த அளவுக்கு விற்பன்னராகத் திகழ்ந்தாரோ, அதே அளவுக்கு எளிய மொழியில் நகைச்சுவையாகப் பேசும் திறனும் கைவரப் பெற்றவராகப் பாப்பையா திகழ்ந்தார்.</p><p>பொங்கல், புத்தாண்டு உள்ளிட்ட பண்டிகை நாட்கள் பாப்பையாவின் பட்டிமன்றத்தோடுதான் தமிழர்களுக்குத் தொடங்கும் எனும் அளவுக்குத் தமிழர்களின் அன்றாட வாழ்க்கையோடு இரண்டற இயைந்துவிட்ட பெருமைக்குரியவர் பேராசிரியர் சாலமன் பாப்பையா. பட்டிமன்றம் என்றாலே பாப்பையாதான் எனக் கூறும் அளவுக்குத் தமிழ்நாடு மட்டுமல்லாது, உலகின் பல நாடுகளிலும் பல்லாயிரம் பட்டிமன்றங்களுக்கு நடுவராக இருந்தவர். தற்கால மதுரையின் பெருமைமிகு அடையாளமாகவே மாறிப் போனவர். பாப்பையா பரம்பரை எனச் சொல்லத்தக்க அளவுக்குத் தன்னைப் போலவே பல பேச்சாளர்களைத் தமிழுக்குக் கொடையாகத் தந்தவர்.</p><p>கருணாநிதி மீதும் என் மீதும் மிகுந்த அன்பைப் பொழிந்தவர் பேராசிரியர் பாப்பையா. திமுக ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவர் எங்கள் மீது காட்டும் அன்பில் எந்த மாற்றமும் இருந்ததில்லை. எப்போது சந்தித்தாலும் புன்னகையோடும் வாஞ்சையோடும் கரங்களைப் பற்றிக்கொள்ளும் அன்பிலான உறவை நாங்கள் கொண்டிருந்தோம்.
</p><p>
கடந்த ஆண்டு மே மாதம் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக நான் மதுரை சென்றிருந்தபோது நடந்த மக்கள் சந்திப்பில் அவரது வீட்டு வாசலுக்கு வந்து என்னை வரவேற்றார். சில மாதங்களுக்கு முன்புதான் துணைவியாரை இழந்திருந்த பேராசிரியரிடம், “உடல்நலனைப் பார்த்துக்கொள்ளுங்கள்” என்று சொல்லிவிட்டு வந்தேன். </p><p>அவர் இன்று நம்மை விட்டுப் பிரிந்ததை மனம் ஏற்க மறுக்கிறது.

தனது அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள். சாலமன் பாப்பையாவை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தார்க்கும் மதுரை மக்களுக்கும் உலகெங்கும் வாழும் அவரது ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்<br></p><p><b>அன்புமணி ராமதாஸ் (பாமக தலைவர்): </b>"மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தமிழ்த்துறை பேராசிரியராக பணியாற்றி ஓய்வுபெற்ற சாலமன் பாப்பையா, தமிழ் இலக்கியங்கள் குறித்து விரிவான ஆராய்ச்சிகளை மேற்கொண்டிருக்கிறார். திருக்குறள் உள்ளிட்ட இலக்கியங்களுக்கு உரைகளை எழுதியுள்ளார்.</p><p>

தமிழ்நாட்டில் மட்டுமின்றி உலகம் முழுவதும் சாலமன் பாப்பையாவை அறியாத தமிழர்களே இல்லை என்று கூறும் அளவுக்கு நகைச்சுவையாகவும், நாகரிகமாகவும் பட்டிமன்றங்களை நடத்தியதன் மூலம் அனைத்துத் தமிழ் குடும்பங்களுக்கும் அறிமுகமானவர்.

பேராசிரியர் அன்பழகன் உள்ளிட்ட தமிழகத்தின் அரசியல் மற்றும் தமிழ் ஆளுமைகளுடன் நெருங்கிய நட்பு கொண்டவர். சாலமன் பாப்பையாவை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள், தமிழறிஞர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்."</p><p><b>


சீமான் (தலைமை ஒருங்கிணைப்பாளர், நாம் தமிழர் கட்சி)</b>: “தமிழ்நாடு முழுவதும் மட்டுமல்லாது தமிழர்கள் வாழ்கின்ற உலக நாடுகள் பலவற்றிலும், அறிவுக்கு விருந்து படைக்கும், இலக்கிய சுவைமிகுந்த, பட்டிமன்றங்களை நடத்தி, தமிழும், பேச்சுக்கலையும் வளர்த்த பேராசிரியர் சாலமன் பாப்பையாவின் அரும்பணிகள் போற்றுதற்குரியது.
</p><p>
எளிய மக்களும் அறிந்துகொள்ளும் வண்ணம், தமிழ்மறையாம் திருக்குறளுக்கு எளிய தமிழில் உரை எழுதிய ஐயாவின் தமிழ்த்தொண்டு தமிழின வரலாற்றில் என்றும் நிலைபெற்றிருக்கும். சாலமன் பாப்பையாவின் மறைவு தமிழ் அறிவுலகத்திற்கு ஏற்பட்ட பேரிழப்பாகும்.”
</p><p><b>பிரேமலதா (தேமுதிக பொதுச்செயலாளர்):</b> “தனது தனித்துவமான பேச்சாற்றலாலும், நகைச்சுவை கலந்த தமிழ் நடையாலும், பட்டிமன்றங்கள் வாயிலாக இலக்கியத்தையும் தமிழின் சிறப்பையும் எளிய மக்களிடமும் கொண்டு சேர்த்த பெருமைக்குரியவர் சாலமன் பாப்பையா.

எழுத்தாளர், பட்டிமன்றப் பேச்சாளர், பதிப்பாசிரியர், தமிழ்ப் பேராசிரியர், நடிகர் என பன்முகத் திறமைகளைக் கொண்டு தமிழ் சமூகத்தில் சிறப்பாக வாழ்ந்தவர்.</p><p> தமிழ் மொழி, இலக்கியம் மற்றும் பட்டிமன்ற உலகுக்கு அவர் ஆற்றிய பங்களிப்பு என்றும் நினைவுகூரப்படும். தமிழ் மொழி மற்றும் கலைத்துறைக்கு அவர் ஆற்றிய சிறப்பான பங்களிப்பைப் பாராட்டி பத்மஸ்ரீ மற்றும் கலைமாமணி உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும் சிறப்புகளையும் பெற்றவர்.

திரைப்படங்களிலும் நடித்து தனது பன்முகத் திறமையை வெளிப்படுத்தியவர். அவரது மறைவு தமிழ் இலக்கியம், பட்டிமன்றம் மற்றும் கலைத்துறைக்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.<br></p>]]></content>
            <updated>2026-09-11T12:48:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[காட்டிக்கொடுத்து சூர்யாவை திட்டுவாங்க வைத்த கார்த்தி!! அண்ணன் செய்த செயல்...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/karthi-exposed-suriyas-secret-to-dad-sivakumar-1789129897"></link>
            <id>https://viduppu.com/article/karthi-exposed-suriyas-secret-to-dad-sivakumar-1789129897</id>
            <summary type="text">சர்தார் 2சர்தார் 2 படம் ரிலீஸாகி கலவையான விமர்சனத்தை பெற்றும் வரும் நிலையில், ஹைதராபாத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கல்ந்து கொண்டு பேசியுள்ளார். அதில், நான்...</summary>
            <content type="html"><![CDATA[<h2>சர்தார் 2</h2><p>சர்தார் 2 படம் ரிலீஸாகி கலவையான விமர்சனத்தை பெற்றும் வரும் நிலையில், ஹைதராபாத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கல்ந்து கொண்டு பேசியுள்ளார். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/75ac8f87-7378-4f9a-8e6c-0644b660f7bb/26-6aa3f4abbb9bb.webp' /></p><p>அதில், நான் 12வது படித்துக் கொண்டிருந்தபோது பொதுத்தேர்வுகளுக்காக படித்தேன். படிக்கிறேனோ இல்லையோ எப்போதும் கையில் புத்தகத்துடன் தான் இருப்பேன். அதனால் இவன் தான் நல்லா படிக்கிறான் என்று பெற்றோர்கள் நினைத்தார்கள். என் அண்ணன் அப்போது கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தார்.</p><p>தினமும் இரவு படம் பார்க்க தியேட்டருக்கு செல்வார். பகலில் நீ எங்கு வேண்டுமானாலும் போ, ஆனால் இரவானால் வீட்டிற்கு வந்துவிட வேண்டும் என்று எங்கள் அப்பாவின் ரூல்ஸ்.</p><h2>சூர்யாவை திட்டுவாங்க வைத்த கார்த்தி</h2><p> இரவு 12 மணிக்குள் வராவிட்டால் நான் கேட்டை பூட்டிவிடுவேன் என்றார் அப்பா. அதனால் இரவு 12 மணிக்கு முன்பே வீட்டுக்குள் வந்துவிடணும். படிப்பதால் இரவு 12 மணிக்கு நான் விழித்துக் கொண்டிருப்பேன்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d8c010e3-a07e-41a7-86f0-11d72d043e89/26-6aa3f4ac6f81e.webp' /></p><p> நைசா கேட் திறக்கும் சத்தம் கேட்டதும், அப்பா, அண்ணா இப்போ தான் வர்றான் என்று போட்டுக் கொடுத்துவிடுவேன். உடனே பால்கனியில் இருந்து கத்துவாரு அப்பா, எனக்கு அதைக்கேட்டு ஒரே சந்தோஷமாகிவிடும்.</p><p> நான் தான் போட்டுக் கொடுக்கிறேன் என்று அண்ணனுக்கு முதலில் தெரியாது, தனக்காக அப்பா காத்திருந்து கேட் திறக்கும் சத்தம் கேட்டதும் திட்டுகிறார் என்று நினைத்தார். அதன்பின் தூங்கும் அப்பாவை எழுப்பி திட்ட வைத்ததே நான் தான் என்று அண்ணனுக்கு தெரியும் என்று கூறியுள்ளார் கார்த்தி.</p>]]></content>
            <updated>2026-09-11T12:45:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாட்டுச் சேமிப்புகள் வீழ்ச்சியடையும்போது ஏற்படும் விளைவு - மத்திய வங்கி ஆளுநர் விளக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/cbsl-governor-nandhalal-statement-about-economy-1789126225"></link>
            <id>https://tamilwin.com/article/cbsl-governor-nandhalal-statement-about-economy-1789126225</id>
            <summary type="text">போதுமான அந்நியச் செலாவணிக் கையிருப்பை பேணுவது ஒரு ஆடம்பரமல்ல என மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்தார். 

கொழும்பில் நடைபெற்ற இல...</summary>
            <content type="html"><![CDATA[<p>போதுமான அந்நியச் செலாவணிக் கையிருப்பை பேணுவது ஒரு ஆடம்பரமல்ல என மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்தார். </p><p>

கொழும்பில் நடைபெற்ற இலங்கை மத்திய வங்கியின் வெளிநாட்டுச் சேமிப்பு முகாமைத்துவ மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.</p><p>மேலும் தெரிவிக்கையில், வெளிநாட்டுப் பாதுகாப்பு நடவடிக்கைகள் போதுமானதாக இல்லாதபோது என்ன நடக்கும் என்பதை, 2022ஆம் ஆண்டில் நாம் முகம்கொடுத்த பொருளாதார நெருக்கடி மிகத் தெளிவாகவும் நடைமுறையிலும் எடுத்துக்காட்டியுள்ளது.</p><h2>வெளிநாட்டுச் சேமிப்புகள்</h2><p> </p><p>வெளிநாட்டுச் சேமிப்புகள் மிகக் குறைந்த மட்டத்திற்கு வீழ்ச்சியடையும்போது, அதன் விளைவுகள் மத்திய வங்கியின் நிதி அறிக்கைகள் அல்லது சேமிப்பு முகாமைத்துவப் பொறுப்புகளையும் தாண்டிச் செல்கின்றன. </p><p>இறக்குமதி நடவடிக்கைகள் மட்டுப்படுத்தப்படுகின்றன, கடன்களைத் திருப்பிச் செலுத்துவது கடினமாகிறது, நாணய மாற்று விகித அழுத்தங்கள் அதிகரிக்கின்றன. பணவீக்க அழுத்தங்கள் அதிகரிக்கக்கூடும். அத்துடன், பொருளாதாரமும் நாடும் மீதான நம்பிக்கையும் சீர்குலைந்து போகலாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8ee6fcec-7fb5-4234-b93a-2e34d284f264/26-6aa3f48aa9c06.webp' /></p><p> </p><p>2022 நெருக்கடி காலப்பகுதியில் இந்த விளைவுகளை நாம் மிகக் கடினமான அனுபவங்களாக எதிர்கொள்ள நேரிட்டது. முக்கியமானது என்னவென்றால், இருந்த கொள்கை ரீதியான வெளியும் கடுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டமையாகும்.</p><h2>பேரண்ட பொருளாதார ஸ்திரத்தன்மை</h2><p> எனவே, அதிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் தெளிவாக உள்ளது. போதுமான அளவு வெளிநாட்டுச் சேமிப்பைப் பேணுவது என்பது ஆடம்பரமான விடயமல்ல. அது பேரண்ட பொருளாதார ஸ்திரத்தன்மையின் அவசியமான அங்கமாகும். </p><p>நடைமுறையில், சேமிப்புகளைத் திரட்டுவது சிக்கலான ஒரு விடயமாகும். ஏனெனில் நல்ல காலங்கள் எப்போதும் நிலைத்திருப்பதில்லை, கடினமான காலப்பகுதிகளும் ஏற்படக்கூடும் என்றார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-11T12:43:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[சாலமன் பாப்பையா மறைவு மதுரைக்கே ஒரு வெறுமை: வைரமுத்து ஆழ்ந்த இரங்கல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/solomon-pappaiah-demise-vairamuthu-condolences-1789129379"></link>
            <id>https://manithan.com/article/solomon-pappaiah-demise-vairamuthu-condolences-1789129379</id>
            <summary type="text">“பாரதி மறைந்த நாளில் பாப்பையாவும் மறைந்திருக்கிறார்…”&amp;nbsp;சாலமன் பாப்பையாவின் 
மறைவு
உள்ளத்தை உடைக்கிறது என கவிஞர் வைரமுத்து இரங்கல் தெரிவித்துள்ளா...</summary>
            <content type="html"><![CDATA[<p>“பாரதி மறைந்த நாளில் பாப்பையாவும் மறைந்திருக்கிறார்…”&nbsp;சாலமன் பாப்பையாவின் 
மறைவு
உள்ளத்தை உடைக்கிறது என கவிஞர் வைரமுத்து இரங்கல் தெரிவித்துள்ளார்.</p><h2>வைரமுத்துவின்&nbsp; இரங்கல் பதிவு&nbsp;</h2><p>
</p><p>இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்ட இரங்கல் பதிவில், “சாலமன் பாப்பையாவின் மறைவு உள்ளத்தை உடைக்கிறது. பாரதி மறைந்தநாளில் பாப்பையாவும் மறைந்திருக்கிறார். 

செப்டம்பர் 11 தமிழுக்கு நல்லநாள் இல்லை போலும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bb71c016-6549-4715-98d2-70250bba47fa/26-6aa3f5b2eb275.webp' /></p><p><br></p><p> </p><p>பட்டிமன்றத் தமிழ்
முடிந்துவிட்டதா? பாமரத் தமிழ் மூச்சை நிறுத்திக்கொண்டதா?. கல்லூரிகளில் பயிற்றுவித்த தமிழைக் கடைவீதிக்குக் கொண்டுசேர்த்தவர் சாலமன் பாப்பையா. </p><p>

இந்தக் குளத்தில் கல்லெறிந்தவர்கள் நூலில் அவர்குறித்தும் எழுதியிருக்கிறேன். சிரிக்க வைத்துச் சிந்திக்கவும் வைத்த மேடைக் கலைவாணர் மறைந்துவிட்டார்.</p><p>

அவரது நாற்காலி காலியாகவே இருக்கும்; நிரப்ப முடியாது. மதுரைக்கே ஒரு வெறுமை வந்துவிட்டது;மனம் கலங்குகிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தார்க்கும் உலகத் தமிழர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்” என தெரிவித்து.&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</p><p><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">சாலமன் பாப்பையாவின்  மறைவு உள்ளத்தை உடைக்கிறது  பாரதி மறைந்தநாளில் பாப்பையாவும் மறைந்திருக்கிறார்  செப்டம்பர் 11 தமிழுக்கு நல்லநாள் இல்லை போலும்  பட்டிமன்றத் தமிழ் முடிந்துவிட்டதா? பாமரத் தமிழ் மூச்சை நிறுத்திக்கொண்டதா?  கல்லூரிகளில் பயிற்றுவித்த தமிழைக்  கடைவீதிக்குக் கொண்டுசேர்த்தவர் சாலமன் பாப்பையா  இந்தக் குளத்தில் கல்லெறிந்தவர்கள் நூலில் அவர்குறித்தும் எழுதியிருக்கிறேன்  சிரிக்க வைத்துச்  சிந்திக்கவும் வைத்த மேடைக் கலைவாணர் மறைந்துவிட்டார்  அவரது நாற்காலி காலியாகவே இருக்கும்; நிரப்ப முடியாது  மதுரைக்கே ஒரு வெறுமை வந்துவிட்டது; மனம் கலங்குகிறது  அவரை இழந்து வாடும் குடும்பத்தார்க்கும் உலகத் தமிழர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்</p>&mdash; வைரமுத்து (@Vairamuthu) <a href="https://x.com/Vairamuthu/status/2098329703870521693?ref_src=twsrc%5Etfw">September 11, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-11T12:43:06+00:00</updated>
        </entry>
    </feed>
