<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-08-06T07:40:18+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[மின்னல் தாக்கியதில் மைதானத்திலேயே கால்பந்து வீரர் பலி - அதிர்ச்சியில் ரசிகர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/footballer-dies-after-lightning-strike-in-thailand-1786001086"></link>
            <id>https://ibctamil.com/article/footballer-dies-after-lightning-strike-in-thailand-1786001086</id>
            <summary type="text">மின்னல் தாக்கியதில் தாய்லாந்து கால்பந்து வீரர் ஒருவர் மைதானத்திலேயே உயிரிழந்ததாகவும் 12 பேர் காயமடைந்ததாகவும் தாய்லாந்து காவல்துறை தெரிவித்துள்ளது.தென...</summary>
            <content type="html"><![CDATA[<p>மின்னல் தாக்கியதில் தாய்லாந்து கால்பந்து வீரர் ஒருவர் மைதானத்திலேயே உயிரிழந்ததாகவும் 12 பேர் காயமடைந்ததாகவும் தாய்லாந்து காவல்துறை தெரிவித்துள்ளது.</p><p>தென் தாய்லாந்தின் சுங்கை கோலோக் பகுதியில் நடைபெற்ற கால்பந்து போட்டியின் போதே இந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது.</p><p>24 வயதான சோஃப்வான் அவா என்ற வீரரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p></p><h2>தாய்லாந்தில் பெரும் சோகம்</h2><p>சன்டிபாப் விளையாட்டரங்கில் சொம்கொல்ட்ஸ் மற்றும் அபு எக்ஸ் நொங் சிரின் அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, சொம்கொல்ட்ஸ் அணியின் வீரரான சோவ்யான் அவேய் மீது திடீரென மின்னல் தாக்கியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/50facede-84bb-4a54-9eef-7ba880c79541/26-6a743a2f5dcdb.webp' /></p><p>



மின்னல் தாக்கியதில் அவர் மைதானத்திலேயே சரிந்து விழுந்தார். உடனடியாக சக வீரர்கள் மற்றும் அவசர வைத்திய குழுவினர் அவரைக் காப்பாற்ற முயற்சித்த போதிலும், அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>



இந்தச் சம்பவத்தில் கால்பந்து வீரர் உட்பட மொத்தம் 12 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
</p><p>


கால்பந்து போட்டி நடைபெற்று கொண்டிருந்தபோது மின்னல் தாக்கி வீரர் உயிரிழந்த இந்தச் சம்பவம் தாய்லாந்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-06T07:39:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவில் ராணுவ வீரர்கள் குடும்பத்தினர் திடீர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/families-of-military-suddenly-arrested-in-the-us-1785994044"></link>
            <id>https://canadamirror.com/article/families-of-military-suddenly-arrested-in-the-us-1785994044</id>
            <summary type="text">அமெரிக்காவில்&amp;nbsp; 50-க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்களின் பெற்றோர், மனைவி மற்றும் குழந்தைகள் திடீரென கைது செய்யப்பட்டுள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவில்&nbsp; 50-க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்களின் பெற்றோர், மனைவி மற்றும் குழந்தைகள் திடீரென கைது செய்யப்பட்டுள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.&nbsp;</p><p>&nbsp;அதிபர் டிரம்ப் நிர்வாகத்தின் தீவிர குடியேற்ற கொள்கையின் விளைவாக, பல ஆண்டுகளாக அங்கு வசித்து வந்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு குடியேற்ற பாதுகாப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.</p><p>&nbsp;இதன் காரணமாக, கைது செய்யப்பட்டவர்களில் சிலர் ஏற்கனவே அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்டுள்ளதாகவும், பலர் குடியேற்ற காவல்துறையின் காவலில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.</p><p>&nbsp;நாட்டிற்காக உயிரை பணயம் வைத்து எல்லையில் சேவை செய்யும் ராணுவ வீரர்களின் குடும்பத்தினரையே கைது செய்து வெளியனுப்புவது, அமெரிக்க வீரர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பையும் மன உளைச்சலையும் உருவாக்கியுள்ளது.</p><p> இந்த நடவடிக்கை நாட்டின் பாதுகாப்புக்கும் வீரர்களின் மன உறுதிக்கும் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என ராணுவ வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.</p>]]></content>
            <updated>2026-08-06T07:34:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[T20 கிரிக்கெட்டில் உலக சாதனை படைத்துள்ள ஜாஸ் பட்லர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/jos-buttler-record-highest-run-scorer-in-t20-1786001630"></link>
            <id>https://news.lankasri.com/article/jos-buttler-record-highest-run-scorer-in-t20-1786001630</id>
            <summary type="text">T20 கிரிக்கெட்டி அதிக ஓட்டங்கள் குவித்துள்ள வீரர் என்ற சாதனையை ஜாஸ் பட்லர்(Jos Buttler) படைத்துள்ளார்.

WF vs MSG 

&#039;தி ஹண்ட்ரட்&#039; கிரிக்கெட் தொடரி...</summary>
            <content type="html"><![CDATA[<p>T20 கிரிக்கெட்டி அதிக ஓட்டங்கள் குவித்துள்ள வீரர் என்ற சாதனையை ஜாஸ் பட்லர்(Jos Buttler) படைத்துள்ளார்.</p><h3>

WF vs MSG</h3><p> 

'தி ஹண்ட்ரட்' கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் மான்செஸ்டர் சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் வெல்ஷ் பயர் அணிகள் மோதியது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/df8ebd35-cc1d-49d1-90f1-a4a425c2a12c/26-6a7438e0f3840.webp' /></p><p>

முதலில் துடுப்பாட்டம் ஆடிய வெல்ஷ் பயர் அணி 100 பந்துகள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 155 ஓட்டங்கள் குவித்தது. </p><p>

156 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய மான்செஸ்டர் சூப்பர் ஜெயண்ட்ஸ், 69 பந்துகளில் ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து 156 ஓட்டங்கள் குவித்து வெற்றி பெற்றது.</p><h3> 

ஜோஸ் பட்லர் சாதனை</h3><p> 

இதில், ஜோஸ் பட்லர் 20 பந்துகளில் 2 பவுண்டரி, 6 சிக்ஸர்கள் உட்பட 51 ஓட்டங்கள் குவித்து புதிய சாதனை படைத்துள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/865ec186-5a3b-45aa-83b8-cc4ffabc2814/26-6a7438e04e9ee.webp' /></p><p> 

இந்த போட்டியில், 51 ஓட்டங்கள் குவித்துள்ளதன் மூலம், T20 போட்டியில் மொத்தமாக 14,833 ஓட்டங்கள் எடுத்துள்ளார்.</p><p> 

இதன் மூலம், T20 போட்டியில் அதிக ஓட்டங்களை குவித்துள்ள வீரர் என்ற உலக சாதனையை படைத்துள்ளார்.&nbsp;</p><p></p><p> 

முன்னதாக பொல்லார்ட் 746 போட்டிகளில் விளையாடி 14,803 ஓட்டங்களுடன் முதலிடத்தில் இருந்தார். </p><p>

பட்லர் 522 போட்டிகளில் 14,833 ஓட்டங்கள் குவித்து அந்த சாதனையை முறியடித்துள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-06T07:33:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[சன் டிவி மகாலட்சுமி சீரியல் புகழ் நடிகை காவ்யாவின் புதிய சீரியல்... விவரம் இதோ]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/sun-tv-mahalakshmi-fame-kaavya-new-serial-1785995794"></link>
            <id>https://cineulagam.com/article/sun-tv-mahalakshmi-fame-kaavya-new-serial-1785995794</id>
            <summary type="text">சன் டிவிசீரியல்களுக்கு பெயர் போன சன் டிவியில் சில வருடங்களுக்கு முன் வெளியான தொடர்கள் சிலவற்றை ரசிகர்களால் மறக்கவே முடியாது. அப்படி மக்கள் கொண்டாடிய த...</summary>
            <content type="html"><![CDATA[<h2>சன் டிவி</h2><p>சீரியல்களுக்கு பெயர் போன சன் டிவியில் சில வருடங்களுக்கு முன் வெளியான தொடர்கள் சிலவற்றை ரசிகர்களால் மறக்கவே முடியாது. அப்படி மக்கள் கொண்டாடிய தொடர்களில் ஒன்று தான் மகாலட்சுமி. </p><p>கடந்த 2017ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த சீரியல் மகாலட்சுமி அரவிந்த் என்பவரை சுற்றிய கதையாகும். காவ்யா சாஸ்திரி, ஹேமந்த், சிந்து சாதனா, லக்ஷ்மி ப்ரியா என பலர் நடித்திருந்தார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bf45307d-23d5-4dbc-ba8e-0a410012f48f/26-6a7427ea50108.webp' /></p><p> </p><p>அப்பா பார்த்த மாப்பிள்ளையை திருமணம் செய்துகொள்ள ஒப்புக்கொள்ளும் மகாலட்சுமி நிச்சயதார்த்தம் முன் ஒரு பெரிய முடிவு எடுக்கிறார். அதன்பின் என்ன ஆகிறது, மகாலட்சுமி வாழ்க்கை மையப்படுத்தி கதை சென்றது. </p><p>2 வருடங்கள் வெற்றிகரமாக ஒளிபரப்பாகிய இந்த சீரியல் கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் முடிவுக்கு வந்தது.</p><p>
</p><h2>புது சீரியல்</h2><p>
மகாலட்சுமி சீரியலில் நாயகியாக நடித்தவர் தான் நடிகை காவ்யா சாஸ்திரி. இந்த சீரியலுக்கு பின் தமிழ் பக்கம் இவரை காணவில்லை. </p><p>இந்த நேரத்தில் தான் நடிகை காவ்யா சாஸ்திரி தமிழில் புதிய சீரியலில் கமிட்டாகி இருப்பது குறித்த தகவல் வந்துள்ளது. சன் டிவியில் ஒளிபரப்பாக போகும் இந்த புதிய சீரியலை Aura Creations தான் தயாரிக்க இருக்கிறார்களாம்.</p><p><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/p/Dbrk7dizmCB/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/p/Dbrk7dizmCB/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/p/Dbrk7dizmCB/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by 𝙏𝙜𝙨 𝙏𝙖𝙢𝙞𝙡𝙖𝙣 𝘾𝙝𝙞𝙣𝙣𝙖𝙩𝙝𝙞𝙧𝙖𝙞 (@tgstamilanchinnathirai)</a></p></div></blockquote> <script async src="//www.instagram.com/embed.js"></script></p>]]></content>
            <updated>2026-08-06T07:30:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Farook Sihan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கல்முனையில் சுகாதார விதிமுறைகளை மீறிய வியாபாரிகளுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/legal-action-against-traders-who-violated-1786001193"></link>
            <id>https://tamilwin.com/article/legal-action-against-traders-who-violated-1786001193</id>
            <summary type="text">கல்முனை பொதுச் சந்தைப் பகுதியில் சுகாதார விதிமுறைகளை மீறிச் செயற்பட்ட
வியாபாரிகளுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகச் சுகாதாரப்
பிரிவி...</summary>
            <content type="html"><![CDATA[<p>கல்முனை பொதுச் சந்தைப் பகுதியில் சுகாதார விதிமுறைகளை மீறிச் செயற்பட்ட
வியாபாரிகளுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகச் சுகாதாரப்
பிரிவினர் தெரிவித்துள்ளனர்.</p><p>

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஷகிலா இஸ்ஸதீன்
நெறிப்படுத்தலில், கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஸஹ்ரா
சாரப்தீன் வழிகாட்டலில் இக்கடமை முன்னெடுக்கப்பட்டது.
</p><p>
கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் மேலதிக சுகாதார வைத்திய
அதிகாரி வைத்தியர் எம்.எச். ரிஸ்பின் தலைமையில், கல்முனை தெற்கு சுகாதார
வைத்திய அதிகாரி பணிமனை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் மற்றும் கல்முனை மாநகர
சபை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் இணைந்து கல்முனை பொதுச் சந்தைப் பகுதியில்
அதிரடிச் சுகாதாரப் பரிசோதனையை முன்னெடுத்தனர்.</p><h2>சட்ட நடவடிக்கை</h2><p>
</p><p>
இப்பரிசோதனையின் போது, மனித நுகர்வுக்குப் பொருத்தமற்ற பழுதடைந்த மரக்கறிகள்,
பழங்கள் மற்றும் ஏனைய உணவுப் பொருட்கள் கைப்பற்றப்பட்டதுடன், சுகாதார
விதிமுறைகளை மீறிச் செயற்பட்ட சில வியாபாரிகளுக்கு எதிராகச் சட்ட
நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/98b413c4-abd9-4a95-9e3f-a8cbcac42658/26-6a74373010a6b.webp' /></p><p>
</p><p>
அத்துடன், சந்தைப் பகுதியிலுள்ள வியாபாரிகளுக்குச் சுகாதார விதிமுறைகள்,
உணவுப் பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் அத்தியாவசியச் சுகாதார ஆலோசனைகளும்
அதிகாரிகளால் இதன்போது வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-08-06T07:30:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sudaron</name>
            </author>
            <title type="text"><![CDATA[சீரற்ற நீர் விநியோகத்தால் கிளிநொச்சி மக்கள் கடும் அவதி : எழுந்துள்ள விசனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/kilinochchi-residents-suffering-due-water-supply-1785999399"></link>
            <id>https://tamilwin.com/article/kilinochchi-residents-suffering-due-water-supply-1785999399</id>
            <summary type="text">கிளிநொச்சியில் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையினால்
விநியோகிக்கப்படுகின்ற குழாய் வழி குடிநீர் விநியோகம் சீரற்ற முறையில்
இடம்பெறுவதனால...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிளிநொச்சியில் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையினால்
விநியோகிக்கப்படுகின்ற குழாய் வழி குடிநீர் விநியோகம் சீரற்ற முறையில்
இடம்பெறுவதனால் பொதுமக்கள் கடும் நெருக்கடிகளைச் சந்தித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
கிளிநொச்சி நகர் மற்றும் அதனை அண்டிய பகுதிகள், தட்டுவன்கொட்டி,
ஆனையிறவு, உமையாள்புரம் மற்றும் பூநகரி உள்ளிட்ட உவர் நிலப்
பிரதேசங்களில் நிலத்தடி நீர் பயன்பாட்டுக்கு உகந்ததாக இல்லாததால்,
அப்பகுதி மக்கள் நீர் வழங்கல் சபையின் குடிநீர் விநியோகத்தையே முழுமையாக
நம்பியுள்ளனர். </p><h2>நீர் விநியோகம் வழமைக்கு&nbsp;திரும்பி விடும்</h2><p>இந்நிலையில் எவ்வித முன்னறிவிப்புமின்றி திடீரென நீர்
விநியோகம் தடைப்படுவதாக அப்பகுதி மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1357dbef-8298-42f6-9c38-66a25e21f77d/26-6a7433b515058.webp' /></p><p>

குறிப்பாக காலை வேளையில் பாடசாலைகள் மற்றும் அலுவலகங்களுக்குச் செல்லும்
நேரங்களிலும், மாலை வேளையிலும் இவ்வாறு நீர் விநியோகம் நிறுத்தப்படுவதால்
மாணவர்களும், உத்தியோகத்தர்களும் தங்களது நாளாந்தக் கடமைகளைச் சரிவரச்
செய்ய முடியாமல் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.&nbsp;</p><p>குறிப்பாக பூநகரி, தட்டுவன்கொட்டி போன்ற குடிநீர் பற்றாக்குறை நிலவும்
பிரதேச மக்கள் இதனால் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். </p><p>எனவே, கிளிநொச்சி
நீர் வழங்கல் சபை இவ்விடயத்தில் உடனடியாகக் கவனம் செலுத்தி,
எதிர்காலத்தில் சீரான நீர் விநியோகத்தை உறுதி செய்யத் தேவையான
நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை
விடுத்துள்ளனர். </p><p>எனினும், குறித்த சில நாட்களில் நீர் விநியோகம் வழமைக்கு திரும்பி விடும் என கிளிநொச்சி மாவட்ட நீர்
வழங்கல் சபையின் அதிகாரி தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-06T07:29:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டின் பல பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை: வெளியான அறிவிப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/red-warning-issued-for-strong-winds-and-rough-seas-1785993685"></link>
            <id>https://ibctamil.com/article/red-warning-issued-for-strong-winds-and-rough-seas-1785993685</id>
            <summary type="text">நாட்டின் சில பகுதிகளில் பலத்த காற்று மற்றும் மிகவும் கொந்தளிப்பான கடல் நிலவக்கூடும் என வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. அத்தோடு கட...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டின் சில பகுதிகளில் பலத்த காற்று மற்றும் மிகவும் கொந்தளிப்பான கடல் நிலவக்கூடும் என வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. </p><p>அத்தோடு கடற்தொழிலாளர்கள் மற்றும் கடற்படையினர் பாதிக்கப்பட்ட கடல் பகுதிகளுக்குள் செல்வதைத் தவிர்க்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.&nbsp;</p><p>
 

இயற்கை பேரிடர் முன் எச்சரிக்கை மையத்தால் இன்று (06.08.2026) காலை 10.00 மணிக்கு விடுக்கப்பட்ட இந்த எச்சரிக்கை, நாளை (07.08.2026) காலை 10.00 மணி வரை நடைமுறையில் இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><h2>சிவப்பு எச்சரிக்கை</h2><p>வானிலை ஆய்வு மையத்தின்படி மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலான கடல் பகுதிகளில் மணிக்கு 60 முதல் 70 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசுவதால் கடல் கொந்தளிப்பாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6d51608e-6e9f-4855-9aa0-c895ecc63313/26-6a74367939de8.webp' /></p><p>இதன் காரணமாக மறு அறிவிப்பு வரும் வரை இந்தக் கடல் பகுதிகளுக்குள் செல்ல வேண்டாம் என கடற்தொழிலாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.&nbsp;</p><p>மேலும், மட்டக்களப்பு முதல் திருகோணமலை, காங்கேசன்துறை, புத்தளம், கொழும்பு மற்றும் காலி வழியாக மாத்தறை வரையிலான கடல் பகுதிகள் அவ்வப்போது சீற்றத்துடன் காணப்படும் என்றும், காற்றின் வேகம் மணிக்கு 50 முதல் 60 கி.மீ. வரை வலுப்பெறும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p>
 

கடலில் எந்தவொரு நடவடிக்கையையும் மேற்கொள்வதற்கு முன்பு, எதிர்கால வானிலை முன்னறிவிப்புகளையும் எச்சரிக்கைகளையும் உன்னிப்பாகக் கண்காணிக்குமாறு கடற்தொழிலாளர் மற்றும் கடற்படைத் தரப்பினரை வானிலை ஆய்வுத்துறை கேட்டுக்கொண்டுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-06T07:27:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[அநுர அரசின் அதிரடி - தீவிர பாதுகாப்பில் நீதிபதிகள்- அடுத்துவரும் நாட்களில் அம்பலமாகவுள்ள ரகசியம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/eater-attack-tight-security-for-judges-1785988687"></link>
            <id>https://tamilwin.com/article/eater-attack-tight-security-for-judges-1785988687</id>
            <summary type="text">உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்குடன் தொடர்புடைய மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாமின் பாதுகாப்பு உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் பலப்படுத்தப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்குடன் தொடர்புடைய மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாமின் பாதுகாப்பு உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் பலப்படுத்தப்பட்டுள்ளது. </p><p>தாக்குதல்கள் தொடர்பான அரசுத் தரப்பு வழக்கில் முக்கிய ஆதாரங்கள் ஆராயப்பட்டு வரும் நிலையில் இந்த வழக்கை விசாரிக்கும் மூன்று நீதிபதிகள் கொண்ட உயர் நீதிமன்றத்தின் நிரந்தர அமர்வின் பாதுகாப்பை உடனடியாக பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. </p><p>அதற்கமைய, மேல் நீதிமன்ற நீதிபதிகளின் பாதுகாப்பிற்காக ஈடுபடுத்தப்பட்டுள்ள பொலிஸ் மோட்டார் சைக்கிள்களின் எண்ணிக்கை நேற்றைய தினம் முதல் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><p> </p><h2><b>உயிர்த்த ஞாயிறு தாக்குதல்</b></h2><p>கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க, மேல் நீதிமன்ற நீதிபதி சுஜீவ நிஸ்ஸங்க மற்றும் மேல் நீதிமன்ற நீதிபதி ராமநாதன் கண்ணன் ஆகியோரைக் கொண்ட இந்த விசேட நீதிபதிகள் குழாம் முன்னிலையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு நாளாந்தம் விசாரிக்கப்பட்டு வருகின்றது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5b7cbf71-839f-4682-90a4-7c0cfe63c9b4/26-6a74206fc7c49.webp' /></p><p>சில சாட்சிகள் இரவு வேளைகளிலும் தொடர்ச்சியாக விசாரிக்கப்படுவதே இம்முறையீட்டு வழக்கின் சிறப்பம்சமாகும்.</p><p> இந்த வழக்கு விசாரணை, 2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறன்று கொழும்பு, நீர்கொழும்பு மற்றும் மட்டக்களப்பு ஆகிய பிரதேசங்களில் அமைந்துள்ள கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் சுற்றுலா விடுதிகளை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதல் தொடர்பிலானதாகும். </p><p>முகமது இப்ராஹிம் முகமது நவ்பர் எனப்படும் நவ்பர் மௌலவி உட்பட 24 முறைப்பாட்டாளர்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் பல தீர்க்கமான தகவல்கள் வெளிவந்துகொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-06T07:25:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜெலென்ஸ்கியின் எச்சரிக்கை... உக்ரைனுக்கு உதவ தீவிரமாகக் களமிறங்கிய நேட்டோ]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/nato-air-defences-for-ukraine-1785999523"></link>
            <id>https://news.lankasri.com/article/nato-air-defences-for-ukraine-1785999523</id>
            <summary type="text">ரஷ்யாவின் ஏவுகணை உற்பத்தி அதிகரிப்பு குறித்து உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ரஷ்யா ஏவிய ஒரு பாலிஸ்டிக் ஏவுகணையைக் கூட உக்ரைனால...</summary>
            <content type="html"><![CDATA[<p>ரஷ்யாவின் ஏவுகணை உற்பத்தி அதிகரிப்பு குறித்து உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
</p><p>ரஷ்யா ஏவிய ஒரு பாலிஸ்டிக் ஏவுகணையைக் கூட உக்ரைனால் சுட்டு வீழ்த்த முடியாததை அடுத்து, பேட்ரியாட் இடைமறிப்பு ஏவுகணைகளின் விநியோகத்தை அதிகரிக்குமாறு உக்ரைன் ஜனாதிபதி தனது நட்பு நாடுகளை வலியுறுத்தியுள்ளார்.</p><h2>ரஷ்யா தீவிரம்</h2><p>
</p><p>புதன்கிழமையன்று நடத்தப்பட்ட தாக்குதலில் ரஷ்ய ஏவுகணை எதையும் சுட்டு வீழ்த்த உக்ரைன் தரப்பு தவறிய நிலையில், உக்ரைனுக்கு அவசரமாகத் தேவைப்படும் வான் பாதுகாப்பு அமைப்புகளைப் பெற்றுத் தருவதற்கான பணிகளில் நேட்டோ (NATO) ஈடுபட்டு வருவதாக அதன் பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5d01a243-faf6-4aff-82bc-d3d475a8337f/26-6a7430a5b06a1.webp' /></p><p> </p><p>குளிர்காலத்திற்கு முன்னதாக ஏவுகணை உற்பத்தியை கணிசமாக அதிகரிக்க ரஷ்யா தீவிரம் காட்டி வருவதாக ஜெலென்ஸ்கி எச்சரித்துள்ளார். </p><p>நேட்டோ அமைப்பின் மார்க் ரூட்டைச் சந்தித்த பிறகு ஜெலன்ஸ்கி தெரிவிக்கையில், அலுவலக ரீதியான தேவையற்ற நடைமுறைச் சிக்கல்களைக் களைந்து, அவசியமான அரசியல் முடிவுகளை எடுப்பது முக்கியம். </p><p>சொல்லப்போனால், உக்ரைனில் உள்ள மக்களின் உயிர்கள் ஒவ்வொரு நாளும் ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் உள்ள நமது கூட்டாளிகளின் உறுதியான மனப்பான்மையையே சார்ந்திருக்கின்றன என்றார்.</p><p></p><p> </p><p>புதன்கிழமை இரவு நடத்தப்பட்ட தாக்குதலில் ரஷ்யா 24 பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியதில், குறைந்தது 17 பேர் கொல்லப்பட்டனர். ரஷ்யா இரவு முழுவதும் ஏவிய 115 ட்ரோன்களில் 98-ஐத் தங்கள் தற்காப்பு அமைப்புகள் சுட்டு வீழ்த்தியதாகவும், ஆனால் பாலிஸ்டிக் ஏவுகணைகள் எதையும் வீழ்த்த முடியவில்லை என்றும் உக்ரேனிய விமானப்படையின் ஆரம்பக்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cbcbee16-b449-403a-897b-105f74df0e17/26-6a7430a662d2f.webp' /></p><p> </p><p>2026-ஆம் ஆண்டின் முதல் பாதியில், உக்ரைனின் நட்பு நாடுகளிடமிருந்து பெறப்பட்ட வான் பாதுகாப்பு ஏவுகணைகளின் விநியோகம் 2025-ஆம் ஆண்டின் அளவில் மூன்றில் ஒரு பங்காகக் குறைந்துவிட்டதாக புதன்கிழமையன்று ஜெலென்ஸ்கி கூறியுள்ளார். </p><p>மேலும், உக்ரைனின் எரிசக்தித் துறைக்கு எதிரான தாக்குதல் நடவடிக்கைகளை மீண்டும் தொடங்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படும் குளிர்காலம் நெருங்கி வரும் நிலையில், பாலிஸ்டிக் ஏவுகணைகளின் உற்பத்தியை பெருமளவில் அதிகரிக்க ரஷ்யா திட்டமிட்டு வருவதாகவும் ஜெலென்ஸ்கி எச்சரித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/77ea194d-245f-453d-83f9-f126a38ed765/26-6a7430a71529d.webp' /></p><p> மட்டுமின்றி, இடைமறிக்கும் ஏவுகணைகளின் பற்றாக்குறைக்கு முக்கியக் காரணம் மத்திய கிழக்கில் நடைபெறும் போர் என்றும் ஜெலென்ஸ்கி கூறியுள்ளார்.</p><h2>பேட்ரியாட் ஏவுகணை</h2><p> உக்ரைனிய விமானப்படையின் தகவலின் அடிப்படையில், ரஷ்யாவின் இஸ்கந்தர்-எம், எஸ்-400 மற்றும் சிர்கான் ஏவுகணைகளை இடைமறிக்கும் திறன் கொண்ட ஒரே அமைப்பு, உக்ரைனியப் படையில் உள்ள பேட்ரியாட் ஏவுகணை அமைப்புகள் மட்டுமே. </p><p>ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேல் போரில் பெருமளவிலான பேட்ரியாட் மற்றும் பிற இடைமறிப்பு ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டதன் விளைவாக, இடைமறிப்பு ஏவுகணைகளின் பற்றாக்குறை மேலும் தீவிரமடைந்துள்ளது. </p><p>அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் முன்னெடுத்த ஒரு பகுப்பாய்வின்படி, போருக்கு முன்பிருந்ததை விட அமெரிக்காவின் பேட்ரியாட் ஏவுகணை இருப்பு குறைந்தது 65 சதவீதம் சரிந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e74e4592-0470-428b-8547-c7920fd41821/26-6a7430a7ba412.webp' /></p><p> </p><p>ஆனால் ஆயுதப் பற்றாக்குறை என்பதே இல்லை என பென்டகன் கூறுகிறது. இதனிடையே, ஐரோப்பாவின் முதல் பேட்ரியாட் ஏவுகணை உற்பத்தி நிலையம் ஜேர்மனியில் செப்டம்பர் மாதம் திறக்கப்படவுள்ளதாக நேட்டோ தெரிவித்துள்ளது. </p><p>கடந்த மாதம் நடைபெற்ற நேட்டோ உச்சிமாநாட்டில், உக்ரைன் 'பேட்ரியாட்' ஏவுகணைகளைத் தயாரிப்பதற்கான உரிமத்தை அமெரிக்கா வழங்கும் என்று டொனால்ட் ட்ரம்ப் உறுதி அளித்திருந்தார். </p><p>சுமார் மூன்று வாரங்களுக்குப் பிறகு, அது குறித்து தான் இன்னும் இறுதி முடிவை எடுக்கவில்லை என்று அவர் தெரிவித்தார். உரிமம் பெற்றிருந்தாலும், உக்ரைனில் உற்பத்தியைத் தொடங்க பல ஆண்டுகள் ஆகும் என்றே அதிகாரிகளும் நிபுணர்களும் மதிப்பிடுகின்றனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-06T07:20:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Erimalai</name>
            </author>
            <title type="text"><![CDATA[குட்டிமணி தங்கத்துரை சிலை அமைப்பு விவகாரம்: ஏற்பாட்டாளரிடம் புலனாய்வு பிரிவு விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/kuttimani-thangathurai-case-issus-1785999231"></link>
            <id>https://tamilwin.com/article/kuttimani-thangathurai-case-issus-1785999231</id>
            <summary type="text">வல்வெட்டித்துறை முன்னாள் உப தவிசாளரும், குட்டிமணி தங்கதுரை ஆகியோரது சிலை நிறுவுவதற்கான ஏற்பாட்டாளராக சொல்லப்படுகின்ற கந்தசாமி சதீஸ் கிளிநொச்சி விசேட க...</summary>
            <content type="html"><![CDATA[<p>வல்வெட்டித்துறை முன்னாள் உப தவிசாளரும், குட்டிமணி தங்கதுரை ஆகியோரது சிலை நிறுவுவதற்கான ஏற்பாட்டாளராக சொல்லப்படுகின்ற கந்தசாமி சதீஸ் கிளிநொச்சி விசேட குற்ற புலனாய்வு பிரிவினரால் விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளார்.</p><p>கிளிநொச்சி விசேட குற்ற புலனாய்வு பிரிவு அலுவலகத்தில் இவர் இன்று(6.8.2026) காலை முதல் தற்போது வரை விசாரணைக்கு உட்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
</p><p>
வெலிக்கடை சிறையில் படுகொலை செய்யப்பட்ட குட்டிமணி மற்றும் தங்கத்துரை ஆகியோருக்கு வல்வெட்டித்துறையில் சிலை அமைப்பதற்கு பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>விசாரணை</h2><p>
</p><p>
எந்த விதமான போதுமான ஆதாரங்களோ ஆவணங்களோ சமர்ப்பிக்கப்படாத நிலையில் நேற்றைய தினம்(5.8) பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்டிருந்த தற்காலிக தடை உத்தரவு இல்லாமலாக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f280e72e-1e38-4a52-81c4-2fc6568f3eee/26-6a74379c1a7d8.webp' /></p><p>

இந்நிலையில் நேற்று பிற்பகல் வல்வெட்டித்துறை பொலிஸ் ஊடக கிளிநொச்சி விசேட குற்ற புலனாய்வு பிரிவிற்கு விசாரணைக்காக இன்று அழைப்பதற்கான அழைப்பு ஆணை வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p><b>YOU MAY LIKE THIS VIDEO</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/cNHc4rtOBGE" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p>]]></content>
            <updated>2026-08-06T07:18:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தாழிறங்கும் அபாயத்தில் ஹட்டன் - கொழும்பு பிரதான வீதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/hatton-colombo-road-restricted-after-heavy-rains-1785999238"></link>
            <id>https://ibctamil.com/article/hatton-colombo-road-restricted-after-heavy-rains-1785999238</id>
            <summary type="text">கடும் மழை காரணமாக ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியின் வட்டவளை, ரொசல்ல பகுதியில் வீதி தாழிறங்கும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.வாகன...</summary>
            <content type="html"><![CDATA[<p>கடும் மழை காரணமாக ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியின் வட்டவளை, ரொசல்ல பகுதியில் வீதி தாழிறங்கும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p>வாகனச் சாரதிகளுக்கு இது குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், பாதுகாப்பு குறித்த அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டுள்ளன.</p><p>குறித்த விடயத்தை நோர்வூட் நெடுஞ்சாலைகள் அலுவலகத்தின் நிறைவேற்றுப் பொறியியலாளர் ஏ.எம். சாதிக் தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>வீதி தாழிறங்கும் அபாயம்</h2><p>வீதி தாழிறங்கும் அபாயம் ஏற்பட்டுள்ள குறித்த பகுதியில் வாகனப் போக்குவரத்து ஒரு வழிப்பாதையாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/add73f4b-4e88-40db-8d86-e48d5c2fc82c/26-6a743374d9478.webp' /></p><p>

இதேவேளை, நிலவும் கடும் சீரற்ற வானிலை காரணமாக ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியில் ஹட்டனில் இருந்து கித்துல்கல வரை வாகனங்களைச் செலுத்தும் போது மிகவும் அவதானமாகச் செயற்படுமாறு நிறைவேற்றுப் பொறியியலாளர் சாரதிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.</p><p></p><h2>சீரற்ற வானிலை&nbsp;</h2><p>இதேவேளை, தொடரும் சீரற்ற வானிலை காரணமாக சிவனொளிபாத மலையின் உச்சியில் மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/493e1acb-ce3a-4add-a42d-c533bb628375/26-6a74337596380.webp' /></p><p> </p><p>

மண்மேடு சரிந்து சிவனொளிபாத மலைக்கு செல்லும் பாதையில் சரிந்து வீழ்ந்துள்ளதாக நல்லத்தண்ணி காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். </p><p>

தற்போதைய பருவகால யாத்திரையல்லாத காலத்தில் சிவனொளிபாத மலையின் உச்சிக்கு செல்லும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள், இடிக்கட்டுபான ஊடாக இரத்தினபுரி பாதைக்குச் சென்று அதனை அடைய முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-06T07:15:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[திருகோணமலை மாணவர்கள் 50 க்கும் மேற்பட்டோர் வைத்தியசாலையில்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/over-50-students-from-trincomalee-hospital-bee-1785998898"></link>
            <id>https://jvpnews.com/article/over-50-students-from-trincomalee-hospital-bee-1785998898</id>
            <summary type="text">திருகோணமலை பாடசாலை ஒன்றின் 50 க்கும் மேற்பட்ட மாணவர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.&amp;nbsp...</summary>
            <content type="html"><![CDATA[<p>திருகோணமலை பாடசாலை ஒன்றின் 50 க்கும் மேற்பட்ட மாணவர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.&nbsp;</p><p>திருகோணமலை திவுல்வெவ மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த மாணவர்களே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.&nbsp;</p><p>பாடசாலைக் கட்டடத்தில் இருந்த குளவிக் கூடு கலைந்தமையினால் மாணவர்கள் இவ்வாறு குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.&nbsp;</p><p>குறித்த மாணவர்கள் சிகிச்சைக்காக மஹதிவுல்வெவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், அவர்களில் மூன்று மாணவிகள் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-08-06T07:09:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[மேலாடை இல்லாமல் போட்டோஷூட்!! ரூ. 2000 கோடி போதைப்பொருள் வழக்கில் மாட்டிய நடிகை மம்தாவின் நிலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/actress-topless-photoshoot-sparked-controversy-1785999582"></link>
            <id>https://viduppu.com/article/actress-topless-photoshoot-sparked-controversy-1785999582</id>
            <summary type="text">மம்தா குல்கர்னி1991ல் தமிழக முதலமைச்சர் ஷோபா இயக்கத்தில் வெளியான நண்பர்கள் என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகியவர் தான் நடிகை மம்தா குல்கர்னி. 90க...</summary>
            <content type="html"><![CDATA[<h2>மம்தா குல்கர்னி</h2><p>1991ல் தமிழக முதலமைச்சர் ஷோபா இயக்கத்தில் வெளியான நண்பர்கள் என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகியவர் தான் நடிகை மம்தா குல்கர்னி. 90களில் டாப் நடிகையாக திகழ்ந்த மம்தா, 1993ல் மாத இதழ் ஒன்றுக்கு மேலாடையின்றி போஸ் கொடுத்து போட்டோஷூட் நடத்தினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/76f3f316-5069-407d-a499-db73252ae9b9/26-6a7430e130422.webp' /></p><p> </p><p>அந்த புகைப்படம் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. பல இடங்களில் இருந்து அவருக்கு கண்டனம் எழுந்து, மம்தா குல்கர்னி மீது நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தப்பட்டது. கரியரின் உச்சத்தில் இருந்தபோது இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், பாலிவுட்டில் நடத்தை குறித்து வெளிப்படையாக விமர்சித்து பேசினார் மம்தா.</p><p> பல நியாயமான விஷயங்களை விமர்சித்தார் மம்தா. அவரின் கரியர் வீழ்ச்சிக்கு காரணமாக இதுவும் இருந்தது. இதனால் திடீரென பாலிவுட் சினிமாவில் இருந்து விலகினார. அவரது தனிப்பட்ட வாழ்வில் நடந்த பிரச்சனை, சினிமா வீழ்ச்சி, சர்வதேச குற்றவியல் நெட்வொர்க்குடன் தொடர்பு என அவரின் சினிமா விலகலுக்கு காரணமாக இருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/76f3f316-5069-407d-a499-db73252ae9b9/26-6a7430e130422.webp' /></p><p> வெளிநாட்டுக்கு சென்ற மம்தா குல்கர்னி, போதைப்பொருள் கடத்தல்காரராக கூறப்படும் விக்கி கோஸ்வாமியை திருமணம் செய்து கொண்டதாக தகவல் வெளியான நிலையில், தன் திருமண உறவு குறித்து பல கருத்துக்களை மம்தா தெரிவித்து வந்தார். 2016ல் ரூ. 2000 கோடி போதைப்பொருள் வழக்கில் அவரின் பெயரும் இடம் பெற்றது. விக்கி கோஸ்வாமியுடன் இணைந்து இந்த குற்றச்செயலில் ஈடுபட்டது. ஆனால் தன் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய் என்று விளக்கம் அளித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/980abb9f-9cb0-41ca-bbeb-9a1d4ef23b01/26-6a7430e285bea.webp' /></p><p> </p><p>மேலும் இந்த வழக்கு தொடர்பான விசாரணையில் மம்தா குல்கர்னி, நேரி ஆஜராகாததால் அவரை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்தனர். மம்தா தொடர்ந்து தவற் செய்ததை மறுத்ததோடு, தன் மீதான குற்றச்சாட்டுகளில் எந்த அடிப்படை ஆதாரமும் இல்லை என்றும் கூறினார். பொது வெளியில் விலகி இருந்த மம்தா, ஆன்மீக பாதையை தேர்ந்தெடுத்து ஆளே மாறியதை பார்த்து பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தினாலும், விமர்சனங்களும் எழுந்து வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4947aa03-b608-4861-9894-6a822ff2d893/26-6a7430e333896.webp' /></p>]]></content>
            <updated>2026-08-06T07:00:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[கர்ணாவை குத்த வந்த மர்மநபர்.. இந்துவிடம் சத்தியம் செய்த கர்ணா! சின்னஞ்சிறு கிளியே சீரியலில் பரபரப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/chinnan-siru-kiliye-serial-latest-episode-1785994500"></link>
            <id>https://cineulagam.com/article/chinnan-siru-kiliye-serial-latest-episode-1785994500</id>
            <summary type="text">சின்னஞ்சிறு கிளியேZee தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சின்னஞ்சிறு கிளியே. இன...</summary>
            <content type="html"><![CDATA[<h2>சின்னஞ்சிறு கிளியே</h2><p>Zee தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சின்னஞ்சிறு கிளியே. </p><p>இன்றைய எபிசோடில் ரசிகர்களை இருக்கையின் நுனியில் உட்கார வைக்கும் அதிரடி திருப்பங்கள் காத்திருக்கின்றன.

கர்ணாவுக்கு டீ பாய் மீது ஏற்கனவே சந்தேகம் இருந்த நிலையில், அவன் குறித்து உண்மையை அறிய பாண்டிக்கு போன் செய்கிறான்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8f39879e-6911-456b-944b-95eb0767910c/26-6a741e26b8690.webp' /></p><p> அப்போது, "இன்று அந்த டீ பாய் வேலைக்கே வரவில்லை" என்று பாண்டி சொன்னதும், கர்ணாவின் சந்தேகம் உறுதியாகிறது. அப்படியானால் தன்னிடம் இருப்பவன் யார்? என்ற கேள்வி அவனை துரத்துகிறது.
</p><p>
இதையடுத்து கர்ணா நேரடியாக அந்த நபரிடம் விசாரிக்க, திடீரென அவன் கத்தியை எடுத்து கர்ணாவை குத்த முயற்சி செய்கிறான். இந்த சம்பவத்தை பார்த்த இந்து அதிர்ச்சியில் உறைந்து போகிறாள். </p><p>ஆனால் கர்ணா அவனை பிடித்து விசாரிக்க, அவர் கூறும் உண்மை அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்துகிறது.

"என் அப்பாவின் மரணத்திற்கு காரணம் கர்ணாதான்!" என்று அந்த நபர் குற்றம் சாட்ட, இந்துவின் உலகமே தலைகீழாகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c231a7a1-b9c8-4bb7-9a3d-70162895ee4a/26-6a741e27a5bf7.webp' /></p><p> </p><p>கிருபாவிடம் வாங்கிய கடன், அதற்காக நடந்த மிரட்டல்கள் மற்றும் அதன் பின்னணியில் நடந்த சோக சம்பவங்கள் குறித்து அறிந்த இந்து மனமுடைந்து போகிறாள்.

"உங்க அப்பாவுக்கு இப்படிச் நடந்திருந்தா நீங்க அமைதியா இருப்பீங்களா?" என்ற கேள்வி இந்துவின் மனதை உலுக்க, உடனே கர்ணாவிடம் இனிமேல் யாரிடமும் கந்துவட்டி வசூலிக்கக் கூடாது என்று சத்தியம் வாங்குகிறாள். </p><p>இந்துவின் கண்ணீருக்கு கர்ணா என்ன முடிவு எடுக்கப் போகிறான் என்பது பெரிய கேள்வியாக மாறுகிறது.

மறுபுறம், வீட்டில் கணக்குகளை பார்த்துக் கொண்டிருக்கும் விஷ்வா, வட்டி வசூலிக்க கர்ணாவுடன் செல்ல விரும்புகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/267781e5-7a82-4fb3-9721-3776b5b28436/26-6a741e28775e6.webp' /></p><p> </p><p>ஆனால் கிருபா, "நாம் எஜமானர்கள்... வேலை வாங்கணுமே தவிர வேலை செய்யக் கூடாது. அதற்காகத்தான் கர்ணா இருக்கான்" என்று கூறுவதோடு, கர்ணாவை அவமானப்படுத்தும் விதமாக பேசுகிறார்.
</p><p>
இந்து வாங்கிய சத்தியத்தை கர்ணா காப்பாற்றுவானா? கர்ணாவின் வாழ்க்கையில் அடுத்த திருப்பம் என்ன?

உணர்ச்சிகளும், அதிரடியும் கலந்த இந்த பரபரப்பான எபிசோடை இன்று இரவு 7 மணிக்கு Zee தமிழில் காண தவறாதீர்கள்!&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-06T07:00:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[வந்தே பாரத் ரயிலை ஓட்டும் லோகோ பைலட்டின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/vande-bharat-loco-pilot-salary-details-1785998860"></link>
            <id>https://news.lankasri.com/article/vande-bharat-loco-pilot-salary-details-1785998860</id>
            <summary type="text">இந்திய ரயில்வேயின் வந்தே பாரத் ரயில் சேவைகள் நாடு முழுவதும் வேகமாக விரிவுபடுத்தப்பட்டு வருகின்றன.

தற்போது காச்சிகுடா–யஸ்வந்த்பூர், விஜயவாடா–எம்.ஜி....</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்திய ரயில்வேயின் வந்தே பாரத் ரயில் சேவைகள் நாடு முழுவதும் வேகமாக விரிவுபடுத்தப்பட்டு வருகின்றன.
</p><p>
தற்போது காச்சிகுடா–யஸ்வந்த்பூர், விஜயவாடா–எம்.ஜி.ஆர். சென்னை சென்ட்ரல், செகந்திராபாத்–நாக்பூர், விசாகப்பட்டினம்–புவனேஸ்வர் உள்ளிட்ட வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
</p><p>
மேலும், 2026 விஜயதசமிக்குள் விஜயவாடாவில் இருந்து முதல் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலை இயக்க ரயில்வே திட்டமிட்டுள்ளது.</p><p> 

வந்தே பாரத் ரயிலுக்கு அனுபவம் மற்றும் சிறப்புப் பயிற்சி பெற்ற லோகோ பைலட்டுகள் நியமிக்கப்படுகிறார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2b4d9c88-05fb-46b2-a569-1fc731b7060a/26-6a74307c8e148.webp' /></p><p>லோகோ பைலட்டாக பணியில் சேர முதலில் RRB நடத்தும் தேர்வில் தேர்ச்சி பெற்று Assistant Loco Pilot (ALP) ஆக வேண்டும்.</p><p>

இதற்கு 10அம வகுப்பு தேர்ச்சி, தொடர்புடைய ITI சான்றிதழ் அல்லது மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், ஆட்டோமொபைல் இன்ஜினியரிங் துறைகளில் டிப்ளமோ அல்லது பட்டப்படிப்பு அவசியம்.</p><p>

விண்ணப்பதாரர்களின் வயது 18 முதல் 30 ஆண்டுகளுக்குள் இருக்க வேண்டும். மேலும், ரயில்வே நிர்ணயித்த மருத்துவ மற்றும் கண்பார்வைத் தகுதிகளையும் பூர்த்தி செய்திருக்க வேண்டும்.</p><p>

Assistant Loco Pilotகளின் அடிப்படை ஊதியம் ரூ.19,900. அகவிலைப்படி, வீட்டு வாடகைப்படி உள்ளிட்ட சலுகைகளுடன் மாதம் சுமார் ரூ.35,000 முதல் ரூ.40,000 வரை சம்பளம் கிடைக்கும்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f5fe5416-cff2-4957-b788-df3fafb94d07/26-6a74307bc187e.webp' /></p><p>அனுபவம், பதவி உயர்வு மற்றும் சிறப்புப் பயிற்சிக்குப் பிறகே வந்தே பாரத் போன்ற அதிவேக ரயில்களை இயக்கும் வாய்ப்பு வழங்கப்படும்.
</p><p>
வந்தே பாரத் ரயிலை இயக்கும் அனுபவம் வாய்ந்த லோகோ பைலட்டுகள் மாதம் ரூ.1 லட்சம் அல்லது அதற்கும் அதிகமாக சம்பளம் பெறலாம்.
</p><p>
இதனுடன் Running Allowance, Night Duty Allowance, மருத்துவ வசதி, ஓய்வூதியம், ரயில் பயணச் சலுகை, ஊதியத்துடன் கூடிய விடுப்பு உள்ளிட்ட பல்வேறு நலன்களும் வழங்கப்படுகின்றன.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p>&nbsp; &nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-06T06:59:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சவுக்கு சங்கரின் மகன் தற்கொலை; சொர்க்கத்தில் என் தாய் பார்த்துக்கொள்வார்...உருகவைக்கும் பதிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/youtuber-savukku-shankar-son-died-1785993289"></link>
            <id>https://jvpnews.com/article/youtuber-savukku-shankar-son-died-1785993289</id>
            <summary type="text">யுடியூப் பிரபலம் சவுக்கு சங்கர் பதின்ம வயதான மகன் விபரீத முடிவால் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.&amp;nbsp;ஒழுங்காக படிக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>யுடியூப் பிரபலம் சவுக்கு சங்கர் பதின்ம வயதான மகன் விபரீத முடிவால் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.&nbsp;</p><p>ஒழுங்காக படிக்கவில்லை என அவரின் தாய் கண்டித்ததால் அவர்&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாக சொல்லப்படுகிறது.&nbsp;</p><p>இது தொடர்பாக மரக்காணம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். சொர்க்கத்தில் என் தாய் மகனை பார்த்துக்கொள்வார் என சவுக்கு சங்கர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கிறார்.</p><p>டிவிட்டர், யுடியூப் போன்ற சமூகவலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்த சவுக்கு சங்கர் யுடியூப்பில் தொடர்ந்து அரசியல் தொடர்பான விவாதங்களை செய்து வந்தார்.&nbsp;</p><p>குறிப்பாக 2021 முதல் 2026 வரை திமுக ஆட்சியில் நடைபெற்ற பல ஊழல்கள் மற்றும் முறைகேடுகளை வெளிச்சம் போட்டு காட்டினார். இதனால் இவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்து சிறையில் அடைக்கப்பட்டார்.</p><p>2026 தேர்தலில் தவெக ஆட்சிக்கு வந்தபின் அவர் மீதான குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டு அவர் விடுதலை செய்யப்பட்டார். அதன்பின், முதல்வர் விஜய்க்கு ஆதரவாக தொடர்ந்து சவுக்கு சங்கர் பேசி வருகிறார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-06T06:48:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹட்டன் - கொழும்பு பிரதான வீதி தாழிறங்கும் அபாயம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/risk-of-the-hatton-colombo-main-road-subsiding-1785998623"></link>
            <id>https://jvpnews.com/article/risk-of-the-hatton-colombo-main-road-subsiding-1785998623</id>
            <summary type="text">கடும் மழை காரணமாக ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியின் வட்டவளை, ரொசல்ல பகுதி வீதி தாழிறங்கும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளதாக நோர்வூட் நெடுஞ்சாலைகள் அலுவலகத...</summary>
            <content type="html"><![CDATA[<p>கடும் மழை காரணமாக ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியின் வட்டவளை, ரொசல்ல பகுதி வீதி தாழிறங்கும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளதாக நோர்வூட் நெடுஞ்சாலைகள் அலுவலகத்தின் நிறைவேற்றுப் பொறியியலாளர் ஏ.எம். சாதிக் தெரிவித்தார்.&nbsp;</p><p>&nbsp;குறித்த பகுதியில் வாகனப் போக்குவரத்து ஒரு வழிப்பாதையாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.&nbsp;</p><p>இதேவேளை, நிலவும் கடும் சீரற்ற வானிலை காரணமாக ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியில் ஹட்டனில் இருந்து கித்துல்கல வரை வாகனங்களைச் செலுத்தும் போது மிகவும் அவதானமாகச் செயற்படுமாறு&nbsp; சாரதிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-08-06T06:43:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[விமல் - கம்மன்பில உள்ளிட்ட 6 பேருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு! பிறப்பிக்கப்பட்ட உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/wimal-udaya-dilith-others-named-in-contempt-case-1785993942"></link>
            <id>https://ibctamil.com/article/wimal-udaya-dilith-others-named-in-contempt-case-1785993942</id>
            <summary type="text">நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டு தொடர்பில் முன்னாள் அமைச்சர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, சுகீஷ்வர பண்டார, திலித் ஜயவீர, அசங்க நவரத்ன மற்றும் சிர...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டு தொடர்பில் முன்னாள் அமைச்சர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, சுகீஷ்வர பண்டார, திலித் ஜயவீர, அசங்க நவரத்ன மற்றும் சிரேஷ்ட விரிவுரையாளர் மஹிந்த பதிரண ஆகியோருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது. </p><p>இதனடிப்படையில் குறித்த ஆறு பேருக்கும் எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யுமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் நேற்று (05.08.2026) உத்தரவிட்டுள்ளது.</p><p>உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளுடன் சம்பந்தப்பட்டு முன்னாள் அரச புலனாய்வுப் பணிப்பாளர் சுரேஷ் சாலே கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஜூலை 7ஆம் திகதி முதல் ஜூலை 15ஆம் திகதி வரை நடைபெற்ற சத்தியாக்கிரகப் போராட்டத்தின் போது, மேற்படி நபர்கள் பகிரங்கமாக வெளியிட்டதாகக் கூறப்படும் கருத்துகள் தொடர்பிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு</h2><p>நடைபெற்று வரும் நீதிமன்ற நடவடிக்கைகளை விமர்சிக்கும் வகையில் அவர்கள் கருத்து வெளியிட்டதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/01a4746b-7dd4-400e-857a-6ca00af68a47/26-6a7426575ed20.webp' /></p><p>இந்த விவகாரம் தொடர்பான விசாரணைகள் குறித்த உண்மைகளை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) நே்று கோட்டை நீதவான் பசன் அமரசேன முன்னிலையில் அறிக்கையிட்டது.</p><p>சமர்ப்பணங்களை ஆராய்ந்த நீதவான் நீதிமன்றம், மேற்படி நபர்களால் வெளியிடப்பட்ட கருத்துக்கள், முதற்பார்வையில் நீதித்துறை நடைமுறையை விமர்சிக்கும் வகையில் அமைந்துள்ளதாக தெரிவித்தது.&nbsp;</p><p>அதன்படி, சம்பந்தப்பட்ட நபர்களுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டின் கீழ் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தொடர நடவடிக்கை எடுக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-06T06:42:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[மூதூர் நிவாரண பணியாளர்கள் படுகொலை! இலங்கை அரசிடம் நீதி கோரும் ஐ.நாவின் நிபுணர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/muthur-relief-workers-massacre-un-demand-justice-1785997217"></link>
            <id>https://tamilwin.com/article/muthur-relief-workers-massacre-un-demand-justice-1785997217</id>
            <summary type="text">திருகோணமலை - மூதூரில் 17 நிவாரணப் பணியாளர்கள் படுகொலை செய்யப்பட்டு 20
ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு
உண்மையையும் ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>திருகோணமலை - மூதூரில் 17 நிவாரணப் பணியாளர்கள் படுகொலை செய்யப்பட்டு 20
ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு
உண்மையையும் நீதியையும் இழப்பீட்டையும் காலதாமதமின்றி உடனடியாக வழங்குமாறு
ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர்கள் இலங்கை அரசை வலியுறுத்தி கோரிக்கை
விடுத்துள்ளனர்.</p><p>

கடந்த 2006 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 4 ஆம் திகதி, இலங்கை இராணுவத்துக்கும்
தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இடையே மோதல்கள் தீவிரமடைந்திருந்த சூழலில்,
மூதூரில் பிரான்ஸ் தொண்டு நிறுவனமான 'ஏசிஎப்' அலுவலக வளாகத்தில் 17 நிவாரணப்
பணியாளர்கள் கொடூரமான முறையில் சுட்டுக்கொல்லப்பட்டனர்.</p><h2>துப்பாக்கிச்சூட்டுக்காயங்களுடன் உயிரிழந்த பலர்&nbsp;</h2><p> </p><p>பெரும்பான்மையானோர் துப்பாக்கிச்சூட்டுக்காயங்களுடன் கொல்லப்பட்டிருந்தமையுடன்,
அக்காலகட்டத்தில் அப்பகுதி மக்களுக்கு அத்தியாவசிய குடிதண்ணீர் மற்றும்
சுகாதார சேவைகளை வழங்கி வந்த ஒரே சர்வதேச தொண்டு நிறுவனமாக ஏசிஎப் மாத்திரமே
செயற்பட்டு வந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/50db7554-5f62-4e5d-a9e9-ff817d1f86bd/26-6a742cd82c649.webp' /></p><p>

இச்சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள ஐ.நா. நிபுணர்கள்,
கொல்லப்பட்டவர்கள் எவரும் ஆயுதம் ஏந்திய போராளிகள் அல்லவென்றும், மோதலில்
சிக்கிய பொதுமக்களுக்கு உயிர்காக்கும் உதவிகளை வழங்கி வந்த மனிதநேயப்
பணியாளர்கள் எனவும் சுட்டிக்காட்டியுள்ளனர். </p><p>நிவாரணப் பணியாளர்கள் மீதான
இத்தாக்குதலானது சர்வதேச மனிதநேய விதிகளுக்கு முரணானது மட்டுமன்றி, மோதலால்
பாதிக்கப்பட்ட இலட்சக்கணக்கான மக்களுக்குச் சென்றடைய வேண்டிய அத்தியாவசிய
உதவிகளையும் முற்றாக முடக்கியதாக அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.</p><p>

கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர்
அலுவலகத்தின் இலங்கை குறித்த விசாரணை அறிக்கை உட்படப் பல்வேறு சர்வதேச
விசாரணைகள், இப்படுகொலைக்கு இலங்கைப் பாதுகாப்புப் படையினரே பொறுப்பு என
நம்புவதற்குப் போதுமான ஆதாரங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளன.</p><p> இருப்பினும்,
இலங்கையின் உள்நாட்டு விசாரணை ஆணைக்குழுக்கள் போதிய சாட்சியமின்மை,
சாட்சிகளுக்கான பாதுகாப்பின்மை மற்றும் அரசியல் தலையீடுகள் காரணமாக தோல்வியடைந்தன.</p><h2>படுகொலைக்கு காரணமானவர்கள்&nbsp;</h2><p>

குறிப்பாக, 2008 ஆம் ஆண்டு இந்த விசாரணைகளைக் கண்காணித்த சர்வதேச சுயாதீன
புகழ்பெற்ற நபர்கள் குழு, இலங்கை அரசிடம் அரசியல் விருப்பமின்மை நிலவுவதாகக்
கூறி விசாரணைகளில் இருந்து விலகிக்கொண்டதை ஐ.நா. நிபுணர்கள்
நினைவுகூர்ந்துள்ளனர்.</p><p> கிட்டத்தட்ட இரண்டு தசாப்தங்கள் கடந்துவிட்ட போதிலும்,
இப்படுகொலைக்குக் காரணமானவர்கள் இதுவரை கைது செய்யப்படவோ அல்லது சட்டத்தின்
முன் நிறுத்தப்பட்டுத் தண்டிக்கப்படவோ இல்லை. </p><p>இந்த தொடர்ச்சியான
தண்டனையின்மையானது பாதிக்கப்பட்ட குடும்பங்களின் ஆறாத துயரத்தை மேலும்
நீட்டிப்பதுடன், நாட்டின் சட்டத்தின் ஆட்சியின் மீதான நம்பிக்கையையும்
சீர்குலைத்துள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.</p><p>

இப்படுகொலையின் விளைவாக, காந்தளாய் நீர் சுத்திகரிப்பு நிலையப் பணிகள் மற்றும்
கிணறுகள் சீரமைப்பு உள்ளிட்ட பல அத்தியாவசியப் பணிகள் தடைப்பட்டன.</p><p> இதனால்
அப்பகுதியில் இருந்த 3 இலட்சத்து 25 ஆயிரத்துக்கும் அதிகமான இடம்பெயர்ந்த
மக்கள் பாதுகாப்பற்ற குடிதண்ணீர், ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் நீரினால்
பரவும் நோய்களுக்கு ஆளாகினர்.</p><h2>நிவாரண பணியாளர்கள் வெளியேற்றம்</h2><p>அத்துடன், இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து ஏற்பட்ட
அச்ச சூழ்நிலையால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இருந்து 2
ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிவாரணப் பணியாளர்கள் வெளியேறியதுடன், 2009 ஆம் ஆண்டு
போர் நிறைவடையும் வரை நிவாரணப் பணிகளுக்கான இடைவெளியும் பெருமளவில்
சுருங்கியது.
</p><p>
உலகளவில் நிவாரணப் பணியாளர்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வரும் தற்போதைய
சூழலில், மூதூர் படுகொலை போன்ற கொடூர சம்பவங்களுக்கு பொறுப்புக்கூறல்
இல்லாமல் இருப்பது ஆபத்தான முன்னுதாரணத்தை ஏற்படுத்தும் என்று ஐ.நா.
நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.</p><p>

எனவே, மூதூர் படுகொலை தொடர்பில் உடனடியாகச் சுயாதீனமான, நடுநிலையான மற்றும்
நம்பிக்கையான விசாரணைகளை மீள ஆரம்பிக்குமாறும், பாதிக்கப்பட்ட
குடும்பங்களுக்கு உரிய இழப்பீட்டை வழங்குமாறும் அவர்கள் இலங்கை அரசை
வலியுறுத்தியுள்ளனர்.&nbsp;</p><p>&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-06T06:42:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[சர்வதேச தரவுத் திருட்டு வழக்கு: கனடிய நபர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/kitchener-man-faces-up-to-30-years-in-prison-1785997997"></link>
            <id>https://canadamirror.com/article/kitchener-man-faces-up-to-30-years-in-prison-1785997997</id>
            <summary type="text">மிகவும் முக்கியமான மற்றும் ரகசியத் தகவல்களை&quot; திருடிய பிரமாண்ட சர்வதேச தரவுத் திருட்டு வழக்கில், கனடாவின் ஒன்ராறியோ, கிச்சனர் நகரைச் சேர்ந்த நபர் ஒருவர...</summary>
            <content type="html"><![CDATA[<p>மிகவும் முக்கியமான மற்றும் ரகசியத் தகவல்களை" திருடிய பிரமாண்ட சர்வதேச தரவுத் திருட்டு வழக்கில், கனடாவின் ஒன்ராறியோ, கிச்சனர் நகரைச் சேர்ந்த நபர் ஒருவர் அமெரிக்க நீதிமன்றத்தில் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.
</p><p>அலெக்சாண்டர் மௌகா என்றும் அழைக்கப்படும் 26 வயதான கானர் மௌகா, 2024 அக்டோபரில் கிச்சனரில் கைது செய்யப்பட்டு, 2025 ஜூலை மாதம் அமெரிக்காவிற்கு நாடுகடத்தப்பட்டார். </p><p>இதனைத் தொடர்ந்து அவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதாக அமெரிக்க நீதித் துறை ஆகஸ்ட் 5 அன்று அறிவித்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/016b378e-529e-4ac8-8ffc-4a00766db6ac/26-6a742aaf6c191.webp' /></p><p>
</p><p>கானர் மௌகா 150 க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளை ஹேக் செய்து, மிகவும் ரகசியமான தகவல்களைப் பெற்று, பாதிக்கப்பட்டவர்களிடம் மில்லியன் கணக்கான டொலர்களைப் பறித்துள்ளார் என்று நீதித் துறையின் குற்றவியல் பிரிவின் உதவி அட்டோர்னி ஜெனரல் ஏ. டைசன் டுவா தெரிவித்துள்ளார்.</p><p>
நீதிமன்ற ஆவணங்களில் பாதிக்கப்பட்ட நிறுவனங்களின் பெயர்கள் நேரடியாகக் குறிப்பிடப்படவில்லை என்றாலும், அமெரிக்காவை தளமாகக் கொண்ட 'ஸ்னோப்லேக்' என்ற மேகக்கணி தரவுச் சேமிப்பு நிறுவனத்தின் வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்டு இந்த ஹேக்கிங் நடந்துள்ளதாக நிபுணர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். 
சில பிரபல நிறுவனங்கள் இந்த ஊடுருவலால் பாதிக்கப்பட்டதை ஒப்புக்கொண்டுள்ளன.
</p><p>கணினி மோசடி, வயர் மோசடி, தீவிர அடையாளத் திருட்டு மற்றும் அது தொடர்பான சதித்திட்டம் ஆகிய குற்றச்சாட்டுகளை மௌகா ஒப்புக்கொண்டுள்ளார். </p><p>அவருக்கு வரும் அக்டோபர் 27 அன்று தண்டனை விவரங்கள் அறிவிக்கப்படவுள்ள நிலையில், 2 முதல் 30 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-06T06:41:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு கனடாவின் ஆதரவு உறுதியானது - மார்க் கார்னி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/carney-says-canada-backs-icc-but-stays-mum-1785997414"></link>
            <id>https://canadamirror.com/article/carney-says-canada-backs-icc-but-stays-mum-1785997414</id>
            <summary type="text">சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை கலைப்பதாக அமெரிக்கா சூளுரைத்துள்ள நிலையில், அந்த நீதிமன்றத்திற்கான கனடாவின் ஆதரவு மிகவும் உறுதியானது என கனடிய பிரதமர் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை கலைப்பதாக அமெரிக்கா சூளுரைத்துள்ள நிலையில், அந்த நீதிமன்றத்திற்கான கனடாவின் ஆதரவு மிகவும் உறுதியானது என கனடிய பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.</p><p>
எனினும், வின்னிபெக்கில் பிறந்த சர்வதேச குற்றவியல் நீதிமன்ற நீதிபதி கிம்பர்லி புரோஸ்ட் மீது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தடைகளை விதித்துள்ளமை குறித்து தனது அரசாங்கம் பகிரங்கமாக எவ்வித விமர்சனத்தையும் தெரிவிக்காதது ஏன் என்பது குறித்து பிரதமர் புதன்கிழமை விளக்கம் அளிக்கவில்லை.</p><p>
டொரண்டோவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய கார்னி, தனது கடன் அட்டைகளைப் பயன்படுத்த முடியாத நிலையை ஏற்படுத்திய அமெரிக்கத் தடைகளை நீக்கக் கோரி நியூயோர்க் நீதிமன்றத்தை அணுகியுள்ள நீதிபதிக்கு கனடா தேவையான ஆதரவை வழங்கும் என கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3b4a9c3e-abeb-4c8d-96e1-24cae0f6b22f/26-6a74286c3e2a5.webp' /></p><p>
</p><p>ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படைகள் ஈடுபட்ட வழக்கு தொடர்பில் பணியாற்றியதற்காக, கடந்த ஆகஸ்ட் மாதம் நீதிபதி புரோஸ்ட் மீது டிரம்ப் தடை விதித்தார். 
பிரான்ஸ் இந்த நடவடிக்கையைக் கண்டித்த போதிலும், கனடா அரசாங்கம் இது குறித்து எவ்வித விமர்சனத்தையும் முன்வைக்கவில்லை.</p><p>
இதனிடையே, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தைக் "கலைப்பதாக" சபதம் செய்துள்ள அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ, இதுவரை எந்தவொரு அமெரிக்கரையும் முறைப்படி விசாரிக்கவோ அல்லது குற்றம் சுமத்தவோ செய்யாத அந்த நீதிமன்றத்திலிருந்து வெளியேறுமாறு தனது நட்பு நாடுகளை வலியுறுத்தியுள்ளார்.</p><p>
உலகில் ஆபத்துகள் அதிகரித்து வரும் இக்காலக்கட்டத்தில் சர்வதேச சட்டத்திற்கு ஒட்டாவா அளிக்கும் முக்கியத்துவத்தை கனடாவின் பல்வேறு ராஜதந்திர நியமனங்கள் வெளிப்படுத்துவதாகக் குறிப்பிட்ட கார்னி, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது என்றும் வலியுறுத்தினார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-06T06:40:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[எதிர்கால அறிவிப்புகள் தொடர்பில் அவதானமாக இருக்கவும்! வளிமண்டலவியல் திணைக்களத்தின் அவசர அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/weather-alert-in-sri-lanka-1785996135"></link>
            <id>https://tamilwin.com/article/weather-alert-in-sri-lanka-1785996135</id>
            <summary type="text">மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளுக்கு&amp;nbsp;பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பு&amp;nbsp;தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம்...</summary>
            <content type="html"><![CDATA[<p>மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளுக்கு&nbsp;பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பு&nbsp;தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p>இது தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தால் இன்று (06.08.2026) காலை 10 மணிக்கு எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது.</p><h2>கடற்பரப்பில் காற்றின் வேகம்</h2><p>அதன்படி, மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 60 - 70 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும். 

இந்தக் கடற்பரப்புகள் அவ்வப்போது மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும்.</p><p> 

எனவே, மறு அறிவித்தல் விடுக்கப்படும் வரை மேற்கூறிய கடற்பரப்புகளுக்குச் செல்ல வேண்டாம் என மீனவ மற்றும் கடற்படை சமூகங்களுக்குக் அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><p></p><p> </p><p>

மட்டக்களப்பிலிருந்து காங்கேசன்துறை, புத்தளம், திருகோணமலை, கொழும்பு மற்றும் காலி ஊடாக மாத்தறை வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 50 - 60 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என்பதுடன், இந்தக் கடற்பரப்புகளும் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும்.</p><h2>அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தல்</h2><p> 

எனவே, இந்தக் கடற்பரப்புகளில் மீன்பிடி மற்றும் கடல்சார் நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் இது தொடர்பில் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு கோரப்பட்டுள்ளனர். </p><p>

இது தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிடும் எதிர்கால அறிவிப்புகள் குறித்துத் தொடர்ந்தும் அவதானத்துடன் செயற்படுமாறும் கடற்படை மற்றும் மீனவ சமூகங்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-06T06:38:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[குளவிக் கொட்டுக்கு இலக்கான 30 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/30-students-admitted-to-hospital-1785997942"></link>
            <id>https://tamilwin.com/article/30-students-admitted-to-hospital-1785997942</id>
            <summary type="text">திருகோணமலை - மொரவெவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மகதிவுல்வெவ தேசிய பாடசாலையில் திடீரென குளவிக் கொட்டுக்கு இலக்காகி, 30 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப...</summary>
            <content type="html"><![CDATA[<p>திருகோணமலை - மொரவெவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மகதிவுல்வெவ தேசிய பாடசாலையில் திடீரென குளவிக் கொட்டுக்கு இலக்காகி, 30 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். </p><p>

இந்த சம்பவம் இன்று(06.08.2026) இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>30 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி</h2><p> </p><p>


பாடசாலை நேரத்தில் எதிர்பாராதவிதமாக இடம்பெற்ற இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட 30 மாணவர்கள் உடனடியாகப் பிரதேசத்திலுள்ள வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b15a2671-1529-488b-b807-629e130348cb/26-6a742b0f20db5.webp' /></p><p>

அவர்களில் மூவரின் நிலைமை தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, மேல் அதிக சிகிச்சைக்காக அவர்கள் திருகோணமலை பொதுவைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
</p><p>
இந்த சம்பவம் தொடர்பில் மொரவெவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7a0cc66f-e0fb-44ed-a91f-804cc867faf6/26-6a742b0ff01f7.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/974d97b2-353d-43b0-a3ca-16191aebaba8/26-6a742b10ba375.webp' /></p><p></p><p></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-06T06:34:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[டித்வா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மீண்டும் விடுக்கப்பட்ட எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/landslide-warning-issued-for-several-districts-1785991752"></link>
            <id>https://tamilwin.com/article/landslide-warning-issued-for-several-districts-1785991752</id>
            <summary type="text">புதிய&amp;nbsp;இணைப்புடித்வா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீண்டும் அதிக பாதிப்பிற்கு உள்ளாகும் அபாயம் இருப்பதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவி...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய&nbsp;இணைப்பு</h2><p>டித்வா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீண்டும் அதிக பாதிப்பிற்கு உள்ளாகும் அபாயம் இருப்பதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
</p><p>
மண் தற்போது நீரால் நிறைந்துள்ளதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது என்று சிரேஷ்ட விஞ்ஞானி வசந்த சேனதீரா தெரிவித்துள்ளார்.</p><p>

எனவே, லேசான மழையின் போதும் மண்சரிவுகள் மற்றும் பாறைச்சரிவுகள் ஏற்படக்கூடும் என்பதால், பொதுமக்கள் மேலும் கவனமாக இருக்குமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார். </p><p>

வானிலை முன்னறிவிப்பின்படி, நாளை (07) மற்றும் நாளை மறுநாள் (08) மழைப்பொழிவு அதிகரிக்கக்கூடும் என்றும், இந்த நாட்களில் பெய்து வரும் கனமழையால் மண்சரிவு, பாறைச்சரிவுகள் ஏற்பட அதிக அபாயம் உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.</p><h2>முதலாம் இணைப்பு</h2><p>நாட்டின் பல மாவட்டங்களுக்கு தற்போது நிலவும் மோசமான வானிலை காரணமாக,தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) மண்சரிவு குறித்த முன்கூட்டிய எச்சரிக்கை அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.
</p><p>
இந்த எச்சரிக்கை அறிவிப்பு, ஆகஸ்ட் 06, 2026 அன்று காலை 9:00 மணி முதல் ஆகஸ்ட் 07, 2026 அன்று காலை 9:00 மணி வரை 24 மணி நேரத்திற்குச் செல்லுபடியாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
</p><h2>நிலை 2 எச்சரிக்கைகள்</h2><p>அந்தவகையில் பின்வரும் பகுதிகளுக்கு நிலை 2 எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.</p><p>கண்டி மாவட்டம் - உடபலத, டோலுவ, மெததும்பர, டெல்தொட்ட, பன்வில, பஸ்பாகே கோரளை, கங்கா இஹல கோரளை மற்றும் உடுதும்பர.
</p><p>
கேகாலை மாவட்டம் - அரநாயக்க, தெரணியகல, புலத்கொஹுபிட்டிய, தெஹியோவிட்ட மற்றும் யட்டியந்தோட்டை.
</p><p>
நுவரெலியா மாவட்டம் - நுவரெலியா, கொத்மலை கிழக்கு, கொத்மலை மேற்கு, அம்பகமுவ, நோர்வூட் மற்றும் தலவாக்கலை.
</p><p>
இரத்தினபுரி மாவட்டம் - ஓபநாயக்க, இம்புல்பே மற்றும் இரத்தினபுரி.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8a71d7f2-aef9-4494-8a5a-53e84f2fa9e6/26-6a7419f8f154f.webp' /></p><p>
பின்வரும் பகுதிகளுக்கும் நிலை 1இன் கீழ் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.</p><p>கேகாலை மாவட்டம் - கேகாலை.
</p><p>
இரத்தினபுர மாவட்டம் - நிவித்திகல மற்றும் குருவிட்ட</p><h2>அவசரகால சூழ்நிலை&nbsp;</h2><p>மேலும் தொடர் மழை பெய்யும் பகுதிகளில் மண்சரி, பாறைச்சரிவுகள் போன்ற அபாயகரமான சூழ்நிலைகளைக் குறிக்கக்கூடிய மண் மேடுகளில் ஏற்படும் விரிசல்கள் குறித்து கவனமாக இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fae3576f-9504-44f9-aa3e-caafe4da1fb7/26-6a7419f9d7d07.webp' /></p><p>அவசரகால சூழ்நிலை ஏற்பட்டால் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறத் தயாராக இருக்குமாறும் பொதுமக்களுக்கு&nbsp; அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-06T06:34:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[அம்மாவுடன் முதல் படம்... ஹீரோயினாக அறிமுகமாகும் ஊர்வசியின் மகள் தேஜலட்சுமி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/first-film-with-mom-urvashi-s-daughter-heroine-1785996571"></link>
            <id>https://manithan.com/article/first-film-with-mom-urvashi-s-daughter-heroine-1785996571</id>
            <summary type="text">தமிழ் மற்றும் மலையாள திரையுலகின் முன்னணி நடிகையான ஊர்வசியின் மகள் தேஜலட்சுமி, கன்னட திரைப்படமான &#039;புல்லி&#039; மூலம் கதாநாயகியாக வெள்ளித்திரையில் அறிமுகமாகி...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழ் மற்றும் மலையாள திரையுலகின் முன்னணி நடிகையான ஊர்வசியின் மகள் தேஜலட்சுமி, கன்னட திரைப்படமான 'புல்லி' மூலம் கதாநாயகியாக வெள்ளித்திரையில் அறிமுகமாகிறார்.&nbsp;</p><h2>ஹீரோயினாகும் தேஜலட்சுமி</h2><p>இந்த டார்க் காமெடி படத்தில் புவன் பொன்னண்ணா ஹீரோவாக நடித்துள்ள நிலையில், அனுப் ஆண்டனி இயக்கியுள்ளார்.

இந்தப் படத்தின் மிகப்பெரிய சிறப்பு என்னவென்றால், ஊர்வசியும் அவரது மகள் தேஜலட்சுமியும் முதல் முறையாக ஒரே படத்தில் இணைந்து நடித்திருப்பதுதான்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6ac4536e-9010-4a40-b709-0e754fb69fdc/26-6a7429f72d794.webp' /></p><p></p><p>மேலும், 8 ஆண்டுகளுக்குப் பிறகு ஊர்வசி கன்னட சினிமாவுக்கு இந்தப் படத்தின் மூலம் மீண்டும் திரும்பியுள்ளார். இதில் அவர் ஹீரோவின் தாயாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.</p><p>

படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், டாக்டர் ராஜ்குமாரின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தியதைத் தொடர்ந்து கண்டீரவா ஸ்டுடியோவில் நடைபெற்ற விழாவில் வெளியிடப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cfdccc34-25bd-431c-86b6-7e149c0160c7/26-6a7429f7d4818.webp' /></p><p>
</p><p><b>
மகளின் அறிமுகம் குறித்து பேசிய ஊர்வசி, </b></p><p>"கதை கேட்டவுடன் மிகவும் பிடித்துவிட்டது.இந்த வாய்ப்பை தவறவிட்டிருந்தால் அது பெரிய இழப்பாக இருந்திருக்கும். என் மகள் தேஜா இந்தப் படத்தின் மூலம் கன்னட சினிமாவில் அறிமுகமாகிறாள் என்பதில் மிகுந்த மகிழ்ச்சி," என்று தெரிவித்துள்ளார்.
</p><p>
பெங்களூருவில் படிப்பை முடித்துள்ள தேஜலட்சுமி, கார்ப்பரேட் துறையில் பணியாற்றி வந்த நிலையில், எதிர்பாராத விதமாக இந்த வாய்ப்பு அவரைத் தேடி வந்துள்ளது.

ஏற்கனவே முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள 'புல்லி', தாய்–மகன் உறவை மையமாகக் கொண்ட டார்க் காமெடி திரைப்படமாக உருவாகி வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6db48032-d614-4e16-b6c8-86fffecfe083/26-6a7429f88aa40.webp' /></p><p></p><p> ஊர்வசியின் மகள் திரையுலகில் அறிமுகமாகும் இந்தப் படத்திற்காக கன்னட மற்றும் மலையாள சினிமா ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். ஊர்வசியின் மகள் என்பதால், தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியிலும் இந்த தலவல் பெரிதும் கவனத்தை ஈர்த்து வருகின்றது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b></td></tr></tbody></table><br><p><br></p>]]></content>
            <updated>2026-08-06T06:31:24+00:00</updated>
        </entry>
    </feed>
