<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-09-03T05:16:25+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[வடகொரியாவைப் போல் சர்வாதிகார ஆட்சியை முன்னெடுக்க முயற்சிக்கும் அரசாங்கம்! ஹர்ஷன ராஜகருணா எம்.பி. குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/provincial-council-election-harshana-rajakaruna-1788411008"></link>
            <id>https://tamilwin.com/article/provincial-council-election-harshana-rajakaruna-1788411008</id>
            <summary type="text">மாகாணசபைத் தேர்தல்களை நடத்தாமல், அரசமைப்பின் 22ஆவது திருத்தத்தின் ஊடாகச்
சுமார் 20 ஆண்டுகள் தேர்தல்களின்றி வடகொரியாவைப் போன்ற சர்வாதிகார ஆட்சியை
முன...</summary>
            <content type="html"><![CDATA[<p>மாகாணசபைத் தேர்தல்களை நடத்தாமல், அரசமைப்பின் 22ஆவது திருத்தத்தின் ஊடாகச்
சுமார் 20 ஆண்டுகள் தேர்தல்களின்றி வடகொரியாவைப் போன்ற சர்வாதிகார ஆட்சியை
முன்னெடுக்க அரசாங்கம் முயன்று வருகின்றது என ஐக்கிய மக்கள் சக்தியின்
நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா குற்றம்சாட்டியுள்ளார்.
</p><p>
கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் நேற்றைய தினம் (02.09.2026) நடைபெற்ற ஊடகவியலாளர்
மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.</p><h2>தேர்தலை உடன் நடத்துமாறு வலியுறுத்தல்</h2><p>அவர் மேலும் தெரிவிக்கையில், மாகாணசபைத் தேர்தலை உடனடியாக நடத்துமாறு மக்களும் சர்வதேச சமூகமும்
வலியுறுத்தி வரும் நிலையில், அதனைப் புறக்கணித்துவிட்டு முழு உலகமும்
எதிர்க்கும் 22ஆவது திருத்தத்தைக் கொண்டுவர அரசாங்கம் தீவிரமாகச் செயற்பட்டு
வருகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1d5934f4-ae81-4570-80be-7101c4024068/26-6a99026ecb608.webp' /></p><p> </p><p>ஒரேயொரு அரசியல் கட்சி மட்டுமே நாட்டை ஆட்சி செய்யும் ஒரு கட்சி
ஆட்சி முறையை அமைத்து, தேர்தல்கள் இன்றி நீண்ட காலம் ஆட்சியைத் தொடரவே அரசாங்கம் திட்டமிடுகின்றது.
</p><p>
மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் ஜனநாயகக் கட்டமைப்புகள்
அழிக்கப்பட்டதாலேயே ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகை பறிபோனது.</p><h2>சர்வாதிகாரப் பாதையை நோக்கி செல்லும் அரசாங்கம்</h2><p>
</p><p>
தற்போதைய அரசாங்கம் சட்டபூர்வமான முறையில் சர்வாதிகாரப் பாதையை நோக்கிச்
செல்வதாலேயே ஐக்கிய நாடுகள் சபையும் சர்வதேச அமைப்புகளும் இந்தத்
திருத்தத்துக்கு எதிராகக் குரல் கொடுத்து வருகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cfce27cb-2836-43dc-8927-82eb08348d77/26-6a99026f7f285.webp' /></p><p>

எதிர்க்கட்சியினரே சர்வதேச சமூகத்தையும் ஐக்கிய நாடுகள் சபையையும் ஏமாற்றுவதாக
அமைச்சர்கள் கூறுவது வேடிக்கையானது. </p><p>மகாநாயக்க தேரர்கள், கத்தோலிக்க திருச்சபை
மற்றும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் போன்ற முதன்மையான அமைப்புகள் ஏமாறும்
அளவுக்கு அறிவில்லாதவர்கள் அல்லர்.

அரசின் தன்னிச்சையான நடவடிக்கைகளால் நாடு பாரிய சர்வதேச நெருக்கடிகளை
எதிர்கொள்ள நேரிடும் என்றும் அவர் எச்சரித்தார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-03T05:15:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹோர்முஸ் நீரிணையில் எண்ணெய்க் கப்பல் மீது தாக்குதல் ; இரு பிலிப்பைன்ஸ் மாலுமிகள் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/attack-on-oil-tanker-strait-hormuz-two-fili-killed-1788412128"></link>
            <id>https://canadamirror.com/article/attack-on-oil-tanker-strait-hormuz-two-fili-killed-1788412128</id>
            <summary type="text">ஹோர்முஸ் நீரிணை வழியே பயணித்த சவூதி அரேபியாவுக்குச் சொந்தமான &#039;சித்ர்&#039; (Sidr) எனும் பிரம்மாண்ட எண்ணெய்க் கப்பல் மீது திங்கள்கிழமை இரவு ஈரான் நடத்திய தா...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹோர்முஸ் நீரிணை வழியே பயணித்த சவூதி அரேபியாவுக்குச் சொந்தமான 'சித்ர்' (Sidr) எனும் பிரம்மாண்ட எண்ணெய்க் கப்பல் மீது திங்கள்கிழமை இரவு ஈரான் நடத்திய தாக்குதலில், கப்பலில் பணியாற்றிய பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த மாலுமிகள் இருவர் உயிரிழந்துள்ளதாகச் சவூதி அரேபியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.</p><p>
ஓமானின் முசந்தம் தீபகற்பத்திற்கு வடக்கே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கடற்படை பாதுகாப்பு நிறுவனங்கள் தெரிவித்துள்ள அதேவேளை, தென்கொரியாவுக்குச் சொந்தமான மற்றொரு எண்ணெய்க் கப்பலும் இதே பகுதியில் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாகப் பதிவாகியுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4b2c9e20-8ef6-4c45-9220-4d15cccd5816/26-6a9900e19642a.webp' /></p><p>இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு ஈரான் நேரடியாகப் பதிலளிக்காத போதிலும், அனுமதி பெறப்படாத கடல் வழியைப் பயன்படுத்திய இரு எண்ணெய்க் கப்பல்கள் கடல் கண்ணிவெடிகளில் மோதித் தீப்பற்றியதாகத் தெரிவித்துள்ளது.
</p><p>
மத்திய கிழக்கில் அமெரிக்கப் படைகளுக்கும் ஈரானுக்கும் இடையே ஏவுகணை மற்றும் ஆளில்லா வானூர்தி தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ள சூழலிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
</p><p>
ஈரானியப் படைகள் அண்டை அரபு நாடுகளில் உள்ள அமெரிக்கத் தளங்களைக் இலக்குவைத்துத் தாக்குதல் நடத்தியமைக்கு பதிலடியாக, அமெரிக்க இராணுவம் ஈரானில் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் 18 பேர் உயிரிழந்துள்ளதுடன் 108 பேர் காயமடைந்துள்ளதாக ஈரானிய சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
</p><p>
குறிப்பாக, தெற்கு நகரமான சிரிக்கில் இடம்பெற்ற திருமண நிகழ்வொன்றின் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலில் சிறுவர்கள் இருவர் உட்பட நால்வர் கொல்லப்பட்டதை அடுத்து, அமெரிக்கா போர்க் குற்றம் புரிந்துள்ளதாக ஈரான் குற்றம் சாட்டியுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a17dbf68-0c39-4e84-add4-1e565f36c059/26-6a9900e24a916.webp' /></p><p>இந்தச் சம்பவம் குறித்துத் தீவிரமாக ஆராய்ந்து வருவதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது.</p><p>

இத்தாக்குதல் தொடர்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ள சவூதியின் 'பஹ்ரி' (Bahri) கப்பல் போக்குவரத்து நிறுவனம், உயிரிழந்த பிலிப்பைன்ஸ் மாலுமிகளின் குடும்பத்தினருக்குத் தேவையான ஆதரவை வழங்கி வருவதாகக் குறிப்பிட்டுள்ளது. </p><p>இப்போராட்டச் சூழல் காரணமாகப் பிராந்தியக் கடல் வழியிலான சர்வதேச எண்ணெய் விநியோகத்தில் பெரும் தடையாக்கம் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-09-03T05:08:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானியா திரும்பிய ஹரி, மேகன் தம்பதியர்: ட்ரம்ப் காட்டமான விமர்சனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/trump-criticized-prince-harry-returns-to-uk-1788411722"></link>
            <id>https://news.lankasri.com/article/trump-criticized-prince-harry-returns-to-uk-1788411722</id>
            <summary type="text">Donald Trump has criticized Prince Harry and Meghan Markle after they left for the UK: இளவரசர் ஹரியும் மேகனும் மீண்டும் பிரித்தானியா திரும்பியுள்ள விட...</summary>
            <content type="html"><![CDATA[<p>Donald Trump has criticized Prince Harry and Meghan Markle after they left for the UK: இளவரசர் ஹரியும் மேகனும் மீண்டும் பிரித்தானியா திரும்பியுள்ள விடயம் தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தனது கருத்தைத் தெரிவித்துள்ளார்.
</p><p>

அமெரிக்காவில் வாழ்ந்துவந்த இளவரசர் ஹரி தன் குடும்பத்துடன் மீண்டும் பிரித்தானியா திரும்பியுள்ள விடயம் அனைவரும் அறிந்ததே.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f76d7531-6f33-4f74-9971-126816a83a2f/26-6a98ff4c4cea0.webp' /></p><p>
இந்நிலையில், அது குறித்து அமெரிக்க ஜனாதிபதியான ட்ரம்பிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினார்கள்.
</p><h3>
ட்ரம்ப் காட்டமான விமர்சனம்</h3><p>

ஹரியும் மேகனும் பிரித்தானியா திரும்பியதில் தனக்கு மகிழ்ச்சி என்று கூறியுள்ள ட்ரம்ப், தனக்கு அவர்களைப் பிடிக்காது என்றும் கூறியுள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b1cc6c8e-bec8-4582-86e6-57afee0ad404/26-6a98ff4b97b4f.webp' /></p><p>
அதே நேரத்தில், நான் ராஜ குடும்பத்தில் இருந்தால், ஹரி, மேகன் தம்பதியரை மீண்டும் ஏற்றுக்கொள்ளமாட்டேன் என்றும் கூறியுள்ளார் ட்ரம்ப்.&nbsp;</p><p>
அத்துடன், தனக்கு மறைந்த எலிசபெத் மகாராணியாருடன் நல்ல நட்பு இருந்ததாகவும், மன்னர் சார்லசுடனும் தனக்கு நல்ல நட்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ள ட்ரம்ப், தன்னைப் பொருத்தவரை, அவர்கள் இருவரையுமே ஹரி, மேகன் தம்பதியர் மரியாதைக் குறைவாக நடத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.&nbsp;&nbsp;</p><p></p><p>

எலிசபெத் மகாராணியாரையும், மன்னர் சார்லசையும் மேகன் மிக மோசமாக நடத்தியதாக தான் கருதுவதாக தெரிவித்துள்ள ட்ரம்ப், மேகன் நடந்துகொண்ட விதம் தனக்குப் பிடிக்கவில்லை என்றும், தானாக இருந்திருந்தால், அவர்களை ராஜகுடும்பத்தில் மீண்டும் ஏற்றுக்கொள்ளமாட்டேன் என்றும் மீண்டும் கூறியுள்ளார்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-03T05:05:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[கன்னியில் புதன் உதயம்: தொழில் கொடிகட்டி பறக்கப்போகும் டாப் 3 ராசிகள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/mercury-rise-in-virgo-who-get-huge-luck-1788410198"></link>
            <id>https://manithan.com/article/mercury-rise-in-virgo-who-get-huge-luck-1788410198</id>
            <summary type="text">ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் நவகிரகங்களின் நிலையில் ஏற்படுகின்ற மாற்றங்களானது 12 ராசிகளின் வாழ்க்கையிலும் நேரடியாக ஆதிக்கம் செலுத்தும் என்று தொன்று தொ...</summary>
            <content type="html"><![CDATA[<p></p><p>ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் நவகிரகங்களின் நிலையில் ஏற்படுகின்ற மாற்றங்களானது 12 ராசிகளின் வாழ்க்கையிலும் நேரடியாக ஆதிக்கம் செலுத்தும் என்று தொன்று தொட்டு நம்பப்பட்டு வருகின்றது.&nbsp;</p><p>நவகிரகங்களில் புதன் அறிவு, பேச்சு, வணிகம், தகவல் தொடர்பு மற்றும் நிதி சார்ந்த விஷயங்களின் அதிபதியாகக் கருதப்படுகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c981d6d4-d7ab-44f6-aa70-d5f11602a8df/26-6a98ff7a4e65f.webp' /></p><p> புதன் தனது பலவீனமான நிலையிலிருந்து விடுபடும்போது, அதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் வலுவாக இருக்கும்.
</p><p>
2026 செப்டம்பர் 14-ஆம் தேதி அதிகாலை 2:52 மணிக்கு புதன் கன்னி ராசியில் உதயமாகிறார். ஜோதிட சாஸ்திரப்படி, கன்னி ராசி புதனின் சொந்த ராசியாகவும், உச்சம் பெறும் ராசியாகவும் கருதப்படுகிறது.</p><p> இதனால் வேலைவாய்ப்பு, வணிகம் மற்றும் நிதி சார்ந்த விஷயங்களில் சில ராசிக்காரர்களுக்கு சாதகமான மாற்றங்கள் ஏற்படுத்தும்.புதனின் இந்த உதயத்தால் கூடுதல் நன்மைகளை அனுபவிக்கப்போகும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.</p><p></p><h2>கன்னி</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dc7c659e-5abd-45ad-983a-3e06c766cd74/26-6a98ff7b01a8f.webp' /></p><h2>
</h2><p>கன்னி ராசிக்காரர்களுக்கு, புதன் அவர்களின் சொந்த ராசியிலேயே உதயமாவது மிகவும் மங்களகரமானதாகக் கருதப்படுகிறது. </p><p>இது தன்னம்பிக்கை, முடிவெடுக்கும் திறன் மற்றும் தொழில் வாய்ப்புகளை மேம்படுத்தும். வேலையில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் அல்லது வாய்ப்புகள் கிடைக்கும்.&nbsp;</p><p> வியாபாரிகளுக்கு புதிய வாடிக்கையாளர்கள் மற்றும் வணிக ஒப்பந்தங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது.

நிதி ரீதியாக இது சிறப்பான காலமாக அமையும். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.&nbsp;</p><h2>
மிதுனம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c5559820-1c64-4bf3-b8cc-d86cf0c9e3cc/26-6a98ff7bab68c.webp' /></p><h2>
</h2><p>மிதுன ராசியின் அதிபதியாக புதன் இருப்பதால், அவரது உதயம் மிதுன ராசிக்காரர்களுக்கு சாதகமான பலன்களைத் தரும். சரியான முயற்சிகள் மூலம் வெற்றியை எளிதில் அடைய முடியும். </p><p>அலுவலகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவும், கடின உழைப்புக்கான அங்கீகாரமும் கிடைக்கும். கடந்த கால முயற்சிகளும் தற்போது நல்ல பலன்களைத் தரும். நிதி நிலையில் ஏற்றம் உண்டாகும்.&nbsp;</p><p>குடும்பத்தினருடன் மகிழ்ச்சியான நேரத்தை செலவிடும் வாய்ப்பும் கிடைக்கும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கலாம். நிலுவையில் இருந்த பணிகளை வெற்றிகரமாக முடிவடையும்.&nbsp;</p><h2>

மகரம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/64bd51c0-9296-4418-920c-aa3ea49507e0/26-6a98ff7c5c340.webp' /></p><p></p><p>
மகர ராசிக்காரர்களுக்கு புதனின் உதயம் தொழில் மற்றும் நிதி விஷயங்களில் சாதகமான பலன்களைத் தரும். வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு, கூடுதல் பொறுப்புகள் அல்லது புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.</p><p> தொழில்முனைவோருக்கு புதிய திட்டங்கள் மற்றும் ஒப்பந்தங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. நீண்டகால நிதி இலக்குகளை நோக்கிச் செயல்படுபவர்கள் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடையலாம்.</p><p>

இந்தக் காலகட்டத்தில் அதிர்ஷ்டம் சாதகமாக இருக்கும். பல்வேறு காரணங்களுக்காக பயணம் செல்லும் வாய்ப்புகளும் உருவாகலாம். எதிர்பாரா பணவரவு கிடைக்கும்.&nbsp;</p><b>இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).&nbsp; &nbsp; &nbsp; </b><p></p><p><b>&nbsp;&nbsp;</b></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g">FOLLOW NOW</a></u></b><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g">&nbsp; &nbsp;</a></td></tr></tbody></table><p><br></p><p></p>]]></content>
            <updated>2026-09-03T05:03:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Tony</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தியாவின் டாப் 5 நடிகைகள், முதலிடத்தில் யார் தெரியுமா? இதோ]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/india-s-top-5-actresses-list-1788407428"></link>
            <id>https://cineulagam.com/article/india-s-top-5-actresses-list-1788407428</id>
            <summary type="text">இந்தியா&amp;nbsp;சினிமா இந்தியாவில் சினிமா பல மொழிகளில் தயாராகி வருகிறது. இதில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் அதிகமாக படங்கள் ...</summary>
            <content type="html"><![CDATA[<h2>இந்தியா&nbsp;சினிமா </h2><p>இந்தியாவில் சினிமா பல மொழிகளில் தயாராகி வருகிறது. இதில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் அதிகமாக படங்கள் தயாராகி வருகின்றன.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2d51627c-782d-4b60-8c5c-8001ec02f76b/26-6a98ee8826765.webp' /></p><p>இந்நிலையில் தற்போது இந்தியளவில் புகழ் பெற்ற நடிகைகள் என்ற லிஸ்ட்டை பிரபல ஆங்கில பத்திரிகை வெளியிட்டுள்ளது.</p><p></p><h2>டாப் 5 நடிகைகள்</h2><p> 

அதில் இந்தியாவின் நம்பர் 5 நடிகை ஆலியா பட், நம்பர் 4 <a href="https://www.youtube.com/watch?v=icYuPFcRohY" target="_blank">சாய் பல்லவி</a>, நம்பர் 3 ஷரதா கபூர், நம்பர் 2 தீபிகா படுகோன் என இருக்க நம்பர் 1 யார் தெரியுமா?</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/acdab633-89c4-49d4-ac14-08365fbd41b3/26-6a98ee876d1ed.webp' /></p><p>நேஷ்னல் கிரஷ் ராஷ்மிகா மந்தனா தான் நம்பர் 1 இடத்தில் உள்ளார். இதற்காக ராஷ்மிகாவிற்கு ரசிகர்களிடமிருந்து வாழ்த்து மழை பொழிந்து வருகிறது.</p>]]></content>
            <updated>2026-09-03T05:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தூசு தட்டப்படும் மிக் விமானங்களை கொள்வனவு; கிலியில் ராஜபக்சர்கள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/purchase-mig-aircraft-gotabaya-rajapaksas-panic-1788411586"></link>
            <id>https://jvpnews.com/article/purchase-mig-aircraft-gotabaya-rajapaksas-panic-1788411586</id>
            <summary type="text">&amp;nbsp; இலங்கை விமானப்படைக்கு மிக் விமானங்களை கொள்வனவு செய்ததில் இடம்பெற்ற மோசடி வழக்கு மீண்டும் தூசு தட்டப்படுகின்றதாக கூறப்படும் நிலையில் ராஜபக்சர்கள...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; இலங்கை விமானப்படைக்கு மிக் விமானங்களை கொள்வனவு செய்ததில் இடம்பெற்ற மோசடி வழக்கு மீண்டும் தூசு தட்டப்படுகின்றதாக கூறப்படும் நிலையில் ராஜபக்சர்கள் மத்தியில் அச்சம் நிலவுவதாக கொழும்பு அரசியல் வட்டார தகவ்ல்கள் தெரிவிக்கின்றன. </p><p>

கோத்தபாய ராஜபக்சவை உள்ளே தள்ளும் வகையில் மீண்டும் திறக்கப்பட்டுள்ள வழக்கில் சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெறவுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bc74b150-88b3-468c-b218-f6da5d2e86f9/26-6a98fec3d8d00.webp' /></p><h2>கோத்தபாய ராஜபக்சவை உள்ளே தள்ளும் நோக்கம்&nbsp;</h2><p>

ரஸ்யாவுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் உதயங்க வீரதுங்க தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்தும் சட்டமா அதிபரின் ஆலோசனையை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் பெறவுள்ளதாக கூறப்படுகிறது.
</p><p>
இந்நிலையில் இந்த வழக்கை எதிர்வரும் ஜனவரி 6ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு கோட்டை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.</p><p>

2006ஆம் ஆண்டு இலங்கை விமானப்படைக்காக உக்ரைனில் இருந்து நான்கு மிக்-27 விமானங்களை கொள்வனவு செய்வதற்கு அப்போது பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்த கோட்டாபய ராஜபக்சவை, உக்ரைன் நிறுவனத்துடன் தொடர்புடைய உதயங்க வீரதுங்க உள்ளிட்டவர்கள் இலஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தது.</p>]]></content>
            <updated>2026-09-03T04:56:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[டாக்சிக் படம் இதுவரை செய்துள்ள வசூல், எவ்வளவு தெரியுமா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/toxic-movie-worldwide-box-office-1788411153"></link>
            <id>https://viduppu.com/article/toxic-movie-worldwide-box-office-1788411153</id>
            <summary type="text">கே.ஜி.எப் 2 வெற்றியை தொடர்ந்து யஷ் நடிப்பில் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகி கடந்த வாரம் வெளியான திரைப்படம் டாக்சிக். 

கே.வி.என் நிறுவனம் இப்படத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>கே.ஜி.எப் 2 வெற்றியை தொடர்ந்து யஷ் நடிப்பில் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகி கடந்த வாரம் வெளியான திரைப்படம் டாக்சிக். </p><p>

கே.வி.என் நிறுவனம் இப்படத்தை தயாரிக்க, இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்கியுள்ளார். ருக்மிணி வசந்த், கியாரா அத்வானி, நயன்தாரா, தாரா சுதாரியா மற்றும் ஹுமா குரேஷி என பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d14e9183-d1c1-4988-9fb8-3d34bda1251f/26-6a98fd14768d1.webp' /></p><p>
</p><p>
முதல் நாளில் பாக்ஸ் ஆபிஸில் அமோக வரவேற்பை பெற்ற இப்படம், அதன்படி சரிவை சந்திக்க தொடங்கியது. </p><p>

இந்நிலையில், 8 நாட்களில் டாக்சிக் திரைப்படம் செய்துள்ள வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 8 நாட்களில் ரூ. 325 கோடி உலகளவில் வசூலித்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-03T04:52:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[அனுராதபுரத்தின் ஏதேனும் ஓர் இடத்தில் பேரணி நிச்சயம்! பொதுஜன பெரமுன திட்டவட்டமாக அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/protest-rally-in-anuradhapura-certain-minister-1788408608"></link>
            <id>https://tamilwin.com/article/protest-rally-in-anuradhapura-certain-minister-1788408608</id>
            <summary type="text">அனுராதபுரத்தில் எதிர்வரும் செப்டெம்பர் 12 ஆம் திகதி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன
ஏற்பாடு செய்துள்ள எதிர்ப்பு பேரணியை தடுப்பதற்கு அரசு பல்வேறு
நடவடிக்கைகள...</summary>
            <content type="html"><![CDATA[<p>அனுராதபுரத்தில் எதிர்வரும் செப்டெம்பர் 12 ஆம் திகதி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன
ஏற்பாடு செய்துள்ள எதிர்ப்பு பேரணியை தடுப்பதற்கு அரசு பல்வேறு
நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது என்றும், அனுராதபுரத்தின் ஏதேனும்
ஓர் இடத்தில் இந்த போராட்டத்தை நடத்துவதை எவராலும் தடுக்க முடியாது என்றும்
முன்னாள் இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த தெரிவித்துள்ளார்.
</p><p>
பத்தரமுல்ல நெலும் மாவத்தையிலுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சித்
தலைமையகத்தில் நேற்றுப் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்
கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,</p><h2>தொழிலாளர்களின் குரலாக போராட்டம்&nbsp;</h2><p>

"கிராமங்கள் மற்றும் நகரங்களில் உள்ள விவசாயிகள், தொழிலாளர்களின் குரலாகவே
இந்த போராட்டம் அனுராதபுரத்தில் ஒருங்கிணைக்கப்படுகின்றது. அனுராதபுர மாவட்ட
விவசாயிகளுக்குத் தேவையான உரம் கிடைக்கவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/18b07b98-97cc-474c-bea2-ba1126ad27b0/26-6a98fc12e762d.webp' />&nbsp;</p><p> </p><p>வறட்சியான காலநிலையால் மக்கள்
சொல்லொணாத் துயரங்களை எதிர்நோக்குகின்றனர். அரசின் மீதான மக்களின் எதிர்ப்பைக்
காட்டுவதற்காக 'சல் காது' அரங்கைக் கோரிய போதிலும், அரசு சட்டதிட்டங்களைச்
சுட்டிக்காட்டி மைதானத்தை வழங்க மறுத்துள்ளது.</p><p>

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் நாமல் ராஜபக்ஷவின் அரசியல் வளர்ச்சி குறித்து
அரசுக்குச் பேரச்சம் ஏற்பட்டுள்ளது. இதனாலேயே எங்களைத் தினமும் குற்றப்
புலனாய்வுத் திணைக்களத்துக்கு அழைத்து அடக்குமுறைகளைப் பிரயோகிக்க
முயல்கின்றனர். </p><p>அரங்கம் மறுக்கப்பட்டாலும் அனுராதபுரத்தின் ஏதேனும் ஓர்
இடத்தில் போராட்டம் நிச்சயமாக நடைபெறும்." - என்றார்.
</p><h2>22ஆவது அரசமைப்பு திருத்தம்</h2><p>
22ஆவது அரசமைப்புத் திருத்தம் தொடர்பான மனுக்கள் மீதான விசாரணைகள் நீதிமன்றில்
இடம்பெற்றுவரும் நிலையில், இது நீதித்துறையின் சுயாதீனத்துக்கு
விடுக்கப்படும் அச்சுறுத்தல் எனச் சட்டத்தரணிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளதை
அவர் ஆமோதித்துள்ளார்.</p><p>

நீதிபதிகளின் சேவைக் காலத்தை நீடிப்பது குறித்து மக்களுக்கு ஆட்சேபனை இல்லை
என்றாலும், நாட்டில் ஆயிரம் பிரச்சினைகள் நிலவும் போது குறுக்கு வழியில் அரசு
தனது தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள முயல்வதையே மக்கள் எதிர்க்கின்றார்கள் என்று
குறிப்பிட்ட அவர், நாட்டின் உயர்ந்த நீதித்துறைக்கும் நீதிபதிகளுக்கும்
களங்கம் விளைவிக்கும் செயற்பாடுகளை அரசு உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும்
வலியுறுத்தியுள்ளார்.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-03T04:48:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[முன்பு செய்த வரலாற்று தவறினை மீண்டும் செய்யாது; சுரேன் ராகவன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/without-repeating-historical-mistake-suren-1788411065"></link>
            <id>https://jvpnews.com/article/without-repeating-historical-mistake-suren-1788411065</id>
            <summary type="text">&amp;nbsp;முன்பு செய்த வரலாற்று தவறினை மீண்டும் இலங்கை சுதந்திர கட்சி செய்யாது என வடமாகாண முன்னாள் ஆளுநர் சுரேன் ராகவன் தெரிவித்தார். 

இலங்கை சுதந்திர ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;முன்பு செய்த வரலாற்று தவறினை மீண்டும் இலங்கை சுதந்திர கட்சி செய்யாது என வடமாகாண முன்னாள் ஆளுநர் சுரேன் ராகவன் தெரிவித்தார். </p><p>

இலங்கை சுதந்திர கட்சியின் 75 ஆவது நிறைவை முன்னிட்டு ஸ்ரீ ஜெயவர்தனபுரவில் நேற்று புதன்கிழமை (02) இடம்பெற்ற நிகழ்விலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/123a8ec1-65f5-43d0-99e3-3c9a51fa6864/26-6a98fcbb6dd4b.webp' /></p><p> </p><p>

இலங்கை சுதந்திர கட்சி தமிழுக்கும் தமிழர்களுக்குமான கனவுகளை சுமந்த கட்சியாகும். 

ஆம், நாங்கள் வரலாற்று ரீதியிலான தவறிழைத்தோம். ஆனால் அது மன்னிக்க கூடியது. </p><p> குற்றம் செய்யாத ஒரு கட்சி இல்லை. 

காந்தியடிகள் கூட குற்றம் இழைத்தார். இலங்கை சுதந்திர கட்சி இழைத்த தவறுக்கு தமிழன் என்ற வகையில் நான் மன்னிப்புக் கேட்கிறேன் என வடமாகாண முன்னாள் ஆளுநர் சுரேன் ராகவன் தெரிவித்தார். .</p>]]></content>
            <updated>2026-09-03T04:48:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Fathima</name>
            </author>
            <title type="text"><![CDATA[200 ஆண்டுகளுக்கு பின் பிறந்த பெண் குழந்தை! மேளதாளத்துடன் வரவேற்ற குடும்பம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/200-years-girl-born-in-family-viral-incident-1788410674"></link>
            <id>https://ibctamilnadu.com/article/200-years-girl-born-in-family-viral-incident-1788410674</id>
            <summary type="text">After 200 Years Girl Born in Family: இந்தியாவின் மகாராஷ்டிராவின் மாநிலத்தில் வசிக்கும் தஹிபாலே குடும்பத்தில் சுமார் 200 ஆண்டுகளுக்கு பின்னர் பெண் குழந...</summary>
            <content type="html"><![CDATA[<p>After 200 Years Girl Born in Family: இந்தியாவின் மகாராஷ்டிராவின் மாநிலத்தில் வசிக்கும் தஹிபாலே குடும்பத்தில் சுமார் 200 ஆண்டுகளுக்கு பின்னர் பெண் குழந்தை பிறந்ததை திருவிழாவாக கொண்டாடிய நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
</p><p>
மகாராஷ்டிரா மாநிலம் பீட் மாவட்டத்தை சேர்ந்த தஹிபாலே குடும்பத்தில் ஐந்து தலைமுறைகளாக ஆண் குழந்தைகள் மட்டுமே பிறந்து வந்துள்ளது.
</p><p>
அதாவது கிட்டத்தட்ட 200 ஆண்டுகளாக பெண் குழந்தை பிறக்கவில்லை, இதனால் பெண் குழந்தைக்காக ஒட்டுமொத்த குடும்பமே ஏங்கித்தவித்தது.</p><p><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/reel/DcyPnE3k6Ph/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/reel/DcyPnE3k6Ph/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/reel/DcyPnE3k6Ph/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by NDTV (@ndtv)</a></p></div></blockquote> <script async src="//www.instagram.com/embed.js"></script><br></p><p>
</p><p>
இந்நிலையில் தஹிபாலே குடும்பத்தை சேர்ந்த தம்பதி ஒருவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது, இதனால் ஒட்டுமொத்த குடும்பமே மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்தனர்.
</p><p>
அக்குழந்தைக்கு கார்கி என பெயரிட்டதுடன் மருத்துவமனையில் இருந்து வீடு வரும் வரை கொண்டாட்டங்களுடன் வரவேற்றனர், மலர்களால் அலங்கரிக்கப்பட்ட குதிரை தேரில் தாயும், சேயும் அமர்நதிருக்க மேளதாளங்கள் முழங்க குடும்பத்தினர் நடனமாடினர்.</p><p>

வீடு வரும்வரை மலர்தூவி குழந்தையை வரவேற்றனர், பெண் குழந்தை சிறந்த சொத்து, பெண் பிறப்பை கொண்டாடவே இவ்வாறு செய்தோம் என குழந்தையின் தந்தை தெரிவித்துள்ளார்.</p><p>

இந்நிகழ்வுகள் சமூகவலைத்தளங்களில் வைரலாக பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fddb896f-6a49-49d0-a82c-b478220219f6/26-6a98fbc83f3cc.webp' /><br></p>]]></content>
            <updated>2026-09-03T04:47:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் முறையற்ற குழாய்க் கிணறு வைத்திருப்போருக்கு எச்சரிக்கை! எடுக்கப்படவுள்ள நடவடிக்கை - வடக்கு ஆளுநர் அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/northern-governor-vedanayagan-s-announcement-1788409251"></link>
            <id>https://tamilwin.com/article/northern-governor-vedanayagan-s-announcement-1788409251</id>
            <summary type="text">எதிர்காலச் சந்ததியினரின் நலன் கருதி நிலத்தடி நீரைப் பாதுகாக்கும் நோக்கில்,
முறையற்ற குழாய்க் கிணறுகளின் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தத் தகுந்த சட்ட
நடவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>எதிர்காலச் சந்ததியினரின் நலன் கருதி நிலத்தடி நீரைப் பாதுகாக்கும் நோக்கில்,
முறையற்ற குழாய்க் கிணறுகளின் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தத் தகுந்த சட்ட
நடவடிக்கைகள் எடுக்கப்பட பொருத்தமான பொறிமுறைகள் உருவாக்கப்படும் என வட மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.
</p><p>
யாழ். பல்கலைக்கழகத்தின் நீர்வளம் பேணுதலுக்கான பேராய்வுச் செயற்றிட்டம்
மற்றும் வடக்கின் இளம் நீர்வாண்மையாளர் வட்டம் ஆகியன இணைந்து ஏற்பாடு
செய்துள்ள 'நிலத்தடி நீர் எங்கள் உயிர்நாடி' எனும் தொனிப்பொருளிலான நிலத்தடி
நீர் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வுக் கண்காட்சி, நேற்று (02.09.2026) மாலை
நல்லூர் பாரதியார் சிலைக்கு அருகிலுள்ள நெசவுக் கைத்தொழிற் பயிற்சி நிறுவன
வளாகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. </p><p>இந்த நிகழ்வில் பிரதம அதிதியாகக்
கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஆளுநர் மேற்கண்டவாறு கூறினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8acf25eb-405c-4565-b62d-fb3767d6b3e1/26-6a98f9c54ef11.webp' /></p><h2>யாழ்ப்பாணத்தின் நிலத்தடி நீர்&nbsp;</h2><p>அவர் மேலும் உரையாற்றுகையில், முந்தைய காலங்களில் யாழ்ப்பாணத்தின் நிலத்தடி நீர் மிகவும் தூய்மையாகக்
காணப்பட்டதுடன், மக்கள் கிணற்று நீரை நேரடியாகவே பருகி வந்தனர். ஆனால்
தற்போது, குடிதண்ணீருக்காக போத்தல்களில் அடைக்கப்பட்ட நீரை அதிக
விலைகொடுத்து வாங்க வேண்டிய துரதிஷ்டவசமான நிலைக்கு மக்கள்
தள்ளப்பட்டுள்ளனர். </p><p>1950 களுக்குப் பின்னர் நிலத்தடி நீரை உறிஞ்சும் குழாய்க்
கிணறுகளின் பயன்பாடு கட்டுக்கடங்காமல் அதிகரித்துள்ளமை, முறையற்ற விதத்தில்
அதிகளவான குழாய்க் கிணறுகள் அமைக்கப்பட்டமை மற்றும் கழிவுநீர் நிலத்தடி
நீருடன் கலக்கின்றமை போன்ற காரணங்களால் நீரின் தரமும் அளவும் வெகுவாகப்
பாதிக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8feced75-8b98-47c7-9e19-523e29db885c/26-6a98f9c63547a.webp' /></p><p>

எனவே, குழாய்க் கிணறுகளின் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தத் தகுந்த சட்ட
நடவடிக்கைகளும், முறையான கண்காணிப்பு வழிமுறைகளும் உடனடியாக
நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். இதனைச் சாத்தியமாக்க உரிய தரப்பினருக்கு
அழுத்தம் கொடுக்கப்பட வேண்டியது அவசியமாகும்.</p><h2>முறையான முகாமைத்துவ நடவடிக்கை</h2><p>
</p><p>
மழைநீரை நிலத்தடியில் சேமிக்கும் திட்டங்களை விரிவுபடுத்துவதுடன், கழிவுநீர்
மற்றும் உவர் நீர் நன்னீருடன் கலப்பதைத் தடுக்க முறையான முகாமைத்துவ
நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/05cf5768-3985-4677-abc2-b7bc12e6705b/26-6a98f9c70c598.webp' /></p><p>

நிலத்தடி நீரைப் பாதுகாப்பது என்பது ஒவ்வொரு தனிநபரின் கூட்டுப் பொறுப்பாகும்.
விழிப்புணர்வுடன் செயற்பட்டு, எதிர்காலச் சந்ததியினருக்காக நமது நீர்
வளங்களைப் பாதுகாக்கும் இவ்வாறான செயற்றிட்டங்களுக்கு அனைவரும் முழுமையான
ஆதரவை வழங்க முன்வர வேண்டும் என்றார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-03T04:46:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[நிலக்கரி பற்றாக்குறை தொடர்பில் வலுசக்தி அமைச்சரின் அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/ministry-energy-announcement-regard-coal-shortage-1788410516"></link>
            <id>https://jvpnews.com/article/ministry-energy-announcement-regard-coal-shortage-1788410516</id>
            <summary type="text">நிலக்கரி மூலமான மின் உற்பத்தி குறைக்கப்பட்ட போதிலும், போதுமான அளவு நீர்மின் உற்பத்தி மேற்கொள்ளப்படுவதால் மின் விநியோகத்திற்கு எவ்வித தடையும் ஏற்படவில்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நிலக்கரி மூலமான மின் உற்பத்தி குறைக்கப்பட்ட போதிலும், போதுமான அளவு நீர்மின் உற்பத்தி மேற்கொள்ளப்படுவதால் மின் விநியோகத்திற்கு எவ்வித தடையும் ஏற்படவில்லை என வலுசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.</p><p> </p><p></p><p>நிலக்கரி இருப்பு குறைவடைந்துள்ளதையடுத்து நுரைச்சோலை மின்னுற்பத்தி நிலையத்தின் மின் உற்பத்தியை மட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் அனுர கருணாதிலக தெரிவித்தார்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d31d739d-ea45-4966-b7d8-d40b64458a28/26-6a98fa95e2204.webp' /></p><p>இரண்டு நிலக்கரி கப்பல்கள் எதிர்வரும் நாட்களில் நாட்டை வந்தடையவுள்ளதுடன், அவற்றில் முதலாவது கப்பல் நாளை (04) வந்தடையவுள்ளது.</p><p> 

மற்றைய கப்பல் எதிர்வரும் 12 ஆம் திகதி நாட்டை வந்தடையவுள்ளதுடன், குறித்த கப்பல்களிலிருந்து நிலக்கரியை இறக்கிய பின்னர் நிலக்கரி மூலம் முறையான மின் உற்பத்தியை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் அனுர கருணாதிலக தெரிவித்தார். </p><p>

தற்போதைய சூழ்நிலையில் மின்வெட்டை அமுல்படுத்த வேண்டிய அவசியமில்லை எனவும், இது தொடர்பில் தேவையற்ற அச்சம் கொள்ளத் தேவையில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார். </p><p>

எவ்வாறாயினும், போதுமான நிலக்கரி கையிருப்பு இல்லாத காரணத்தினால் மின் உற்பத்தி தற்போது பாரிய சிக்கலுக்கு உள்ளாகியுள்ளதாக முன்னிலை சோசலிசக் கட்சியின் கல்விச் செயலாளர் புபுது ஜயகொட தெரிவித்துள்ளார். </p><p>

எதிர்காலத்தில் மின்கட்டணத்தை அதிகரிக்க வேண்டாம் என இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் கோரிக்கையொன்றை முன்வைத்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே புபுது ஜயகொட இதனை தெரிவித்தார்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-03T04:42:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெல்லம்பிட்டியவில் 130 சட்டவிரோத மின்னணு சிகரெட்டுகளுடன் நபர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/arrested-in-wellampitiya-130-electronic-cigarettes-1788407820"></link>
            <id>https://ibctamil.com/article/arrested-in-wellampitiya-130-electronic-cigarettes-1788407820</id>
            <summary type="text">சட்டவிரோதமாக விற்பனை செய்வதற்காக கொண்டு வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 130 வெளிநாட்டு தயாரிப்பு மின்னணு சிகரெட்டுகளுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>சட்டவிரோதமாக விற்பனை செய்வதற்காக கொண்டு வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 130 வெளிநாட்டு தயாரிப்பு மின்னணு சிகரெட்டுகளுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>குறித்த நபர் சட்டவிரோத மின்னணு சிகரெட்டுக்களுடன்&nbsp;வெல்லம்பிட்டிய பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>விசாரணைகளில் கைது செய்யப்பட்ட நபருக்கு 26 வயது என்பதுடன் அவர் வெல்லம்பிட்டி பகுதியை சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><h2>மின்னணு சிகரெட்</h2><p>

</p><p>மேற்கு கடற்படை கட்டளையின் கீழ் இயங்கும் SLNS ரங்கலா கடற்படை முகாமின் கடற்படையினரும், மிரிஹான பிரிவின் குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளும் இணைந்து மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின்போதே இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b3159979-da45-4e09-aa00-8f7f662808af/26-6a98f96f684ba.webp' /></p><p>சந்தேகநபர், மின்னணு சிகரெட்டுகளுடன் கைது செய்யப்பட்டதுடன், அவர் பயன்படுத்தியதாகக் கூறப்படும் கார் ஒன்றும் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.</p><p>கைது செய்யப்பட்ட சந்தேகநபர், கைப்பற்றப்பட்ட 130 மின்னணு சிகரெட்டுகள் மற்றும் வாகனம் ஆகியவை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக வெல்லம்பிட்டிய காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p><p><br></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-03T04:40:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[பொரளையில் முச்சக்கரவண்டி மீது பொலிஸார் துப்பாக்கிச்சூடு! வாள்களும் மீட்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/police-open-fire-on-three-wheeler-in-borella-1788409241"></link>
            <id>https://tamilwin.com/article/police-open-fire-on-three-wheeler-in-borella-1788409241</id>
            <summary type="text">பொரளை ,சஹஸ்புர பகுதியில் பொலிஸாரின் சமிக்ஞையை பொருட்படுத்தாமல் சென்ற முச்சக்கரவண்டி மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.



அத்துடன் கு...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொரளை ,சஹஸ்புர பகுதியில் பொலிஸாரின் சமிக்ஞையை பொருட்படுத்தாமல் சென்ற முச்சக்கரவண்டி மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.</p><p>



அத்துடன் குறித்த முச்சக்கரவண்டியில் பயணித்த ஐந்து சந்தேகநபர்களை&nbsp;பொலிஸார் உடனடியாக கைது தெரிவித்துள்ளனர்.</p><h2>வாள்களும் மீட்பு&nbsp;</h2><p>இதனையடுத்து முச்சக்கரவண்டியை சோதைனை நடத்தியதில் மூன்று வாள்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e7a0be85-9b65-4a29-8614-b8ed7c1af95a/26-6a98fa2faffaa.webp' />&nbsp;</p><p>இதற்கமைய பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.</p><p>&nbsp;</p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-03T04:35:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[இம்மாத இறுதியில் வலி. வடக்கு காணி விடுவிப்பு சாத்தியம் : அரச தரப்பின் அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/jaffna-vali-north-land-release-possible-this-month-1788407525"></link>
            <id>https://ibctamil.com/article/jaffna-vali-north-land-release-possible-this-month-1788407525</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் - வலி வடக்கு பகுதியில் விடுவிக்கப்படாத மக்களுடைய காணிகளின் ஒரு தொகுதியினை
இம்மாத இறுதியில் விடுவிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் இடம்பெற்ற...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் - வலி வடக்கு பகுதியில் விடுவிக்கப்படாத மக்களுடைய காணிகளின் ஒரு தொகுதியினை
இம்மாத இறுதியில் விடுவிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் இடம்பெற்று வருவதாக
கடற்றொழில் அமைச்சரும் யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவருமான
இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.</p><p>

அண்மையில் காணி விடுவிப்பு தொடர்பாக, பாதுகாப்பு உயர் அதிகாரிகளுக்கு
ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்த நிலையில் எப்போது காணி விடுவிப்பு சாத்தியம் என அவரிடம்
தொடர்பு கொண்டு கேட்ட போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.</p><p>இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், காணி விடுவிப்பு தொடர்பில் எமது அரசாங்கம்
ஏற்கனவே கூறிய வாக்குறுதியான மக்களின் காணி மக்களுக்கே என்ற நிலைப்பாட்டில்
தொடர்ந்து பயணித்து வருகிறது.</p><p>&nbsp;</p><h2>&nbsp;பாதுகாப்பு உயர் கூட்டம்</h2><p>
</p><p>
அண்மையில் ஜனாதிபதி அநுர தலைமையில இடம்பெற்ற பாதுகாப்பு உயர் கூட்டத்தில் வலி.வடக்கு பகுதியிலுள்ள விடுவிக்கப்படாத காணிகள் தொடர்பாக நடவடிக்கை எடுப்பதற்கு
பாதுகாப்பு உயர் அதிகாரிகளுக்கு உத்தரவு வழங்கியிருந்தார்.
</p><p>
அதன் அடிப்படையில் பாதுகாப்பு தரப்பினரிடம் உள்ள பொது மக்களின் காணிகளை
படிப்படியாக விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/428cdc28-4f9a-41c9-94d2-4b6ab4bf8131/26-6a98f732a55ab.webp' /></p><p> செப்டம்பர் மாத இறுதி பகுதியில் வலி வடக்கு பகுதியில் உள்ள ஒரு தொகுதி
காணிகளை மக்களிடம் கையளிப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.
</p><p>
எமது அரசாங்கம் பொறுப்பேற்றதன் பின் நாட்டில் ஊழல் கலாச்சாரம், போதை ஒழிப்பு
போன்ற விடயங்களை கடந்த காலங்களை விட கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளோம்.</p><p>நாட்டை அழிவு பாதையில் கொண்டு சென்ற ஒரு கூட்டத்தை நாட்டு மக்கள்
விரட்டியடித்துள்ள நிலையில் மீண்டும் அந்தக் கூட்டம் நாட்டை குழப்புவதற்கு
எத்தனித்துக் கொண்டிருக்கிறது.</p><p></p><h2>போராட்டங்களை நடத்துகின்றனர்</h2><p>நாட்டை குழப்பும் நடவடிக்கையில் மக்களால் துரத்தப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற
உறுப்பினர்களும் அவர்களிடம் ஆசி பெற்ற போதைப் பொருள் பின்னணியில்
செயற்படுபவர்களும் குழப்பம் விளைவிக்கும் செயற்பாடுகளை மேற்கொண்டு
வருகின்றனர்.</p><p>நாங்காள் அவற்றை கண்டு அஞ்சப்போவதில்லை. மக்கள் அளித்த ஆணையை பொறுப்பேற்ற எமது
தோழர் அநுரகுமார மக்களின் தோழராக எந்த சவாலையும் வெற்றி கொள்ளும் தலைவனாக
செயற்பட்டு வருகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/80013dd0-39f6-49af-a6ec-8022a9ecbd06/26-6a98f73394de9.webp' /></p><p>
நாட்டு மக்கள் தெளிவாக இருக்க வேண்டும் ஆட்சி அதிகாரத்தை இழந்த கும்பல் நாட்டை
மீண்டும் அதல பாதாளத்துக்கு கொண்டு செல்வதற்காக மக்களை இனவாத நீதியாக
தூண்டிவிடும் செயற்பாடுகளில் ஈடுபடுவார்கள். இந்த செயற்பாடுகளில் தமிழ் அரசியல்வாதிகளும் விதிவிலக்கு அல்ல.</p><p>மக்களின் காணி
விடுவிப்பு தொடர்பில் ஜனாதிபதி உத்தரவு வழங்கிய பின்னரும் தமது அரசியல்
சுயலாபங்களுக்காக மக்களை அழைத்து போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.</p><p></p><h2>ஜனாதிபதி செயலகத்துக்கு முன்னால் போராட்டம்</h2><p>
தமிழ் தேசியக் கூட்டமைப்பு பங்கு பற்றிய நல்லாட்சி அரசாங்கத்தில் காணி
விடுவிப்பு தொடர்பில் அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவுக்கு எதிராக
போராட்டம் நடத்த முடியாது என கூறினார்கள்.
</p><p>
அவ்வாறு போராட்டம் நடாத்தினால் நல்லாட்சி அரசாங்கம் குழப்பி விடும் என கூறிய
தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என தங்களைத் தாங்கள் கூறுபவர்கள் தற்போது காணி
விடுவிப்பு தொடர்பில் கொழும்பு ஜனாதிபதி செயலகத்துக்கு முன்னால் தொடர்
போராட்டம் நடாத்தப் போகிறோம் என கூறுகிறார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/564db419-470b-4571-a669-b867db2ef5f7/26-6a98f7344762e.webp' /></p><p>
</p><p>
இது அவர்களின் வங்குரோத்து அரசியலின் வெளிப்பாடாகவே பார்க்க முடியும் மக்கள்
மீது கரிசனை கொண்டவர்கள் அல்ல. மக்களால் கொண்டுவரப்பட்ட இந்த ஆட்சியை மக்கள் தான் பாதுகாக்க வேண்டும் நாட்டு
மக்களுக்கு எதிரான சூழ்ச்சிகளை மக்களால் ஒன்றிணைந்து முறியடிக்க வேண்டும்
இல்லையேல் மீண்டும் நாடு இருண்ட யுகத்தை நோக்கி தள்ளப்படும் என்பதில் எந்தவித
சந்தேகமும் இல்லை.
</p><p>
ஆகவே காணி விடுவிப்பு மற்றும் ஏனைய மக்கள் நலன் சார்ந்த திட்டங்களில் நாம்
அக்கறையுடன் செயற்பட்டு வரும் நிலையில் சில தாமதங்கள் ஏற்பட்டாலும் அதனை உரிய
முறையில் நிறைவேற்றுவோம்“ என அவர் மேலும் தெரிவித்தார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNE</a>L இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-03T04:34:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Fathima</name>
            </author>
            <title type="text"><![CDATA[2029ல் விஜய் தான் பிரதமர்: காங்கிரஸ் எதிர்ப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/congress-respond-for-tvk-mla-vijay-pm-1788406647"></link>
            <id>https://ibctamilnadu.com/article/congress-respond-for-tvk-mla-vijay-pm-1788406647</id>
            <summary type="text">2026ம் ஆண்டு ஜோசப் விஜய்யை முதலமைச்சர் நாற்காலியில் அமரவைத்த ராகுல்காந்தியே 2029ம் ஆண்டு கையை பிடித்து பிரதமர் நாற்காலியில் அமரவைப்பார் என தவெக எம்எல்...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026ம் ஆண்டு ஜோசப் விஜய்யை முதலமைச்சர் நாற்காலியில் அமரவைத்த ராகுல்காந்தியே 2029ம் ஆண்டு கையை பிடித்து பிரதமர் நாற்காலியில் அமரவைப்பார் என தவெக எம்எல்ஏ கனிமொழி சந்தோஷ் பேசியது அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
</p><p>கடந்த சில நாட்களாக தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் தான் அடுத்த பிரதமர் என அக்கட்சியின் எம்எல்ஏ-க்கள் கூறிவருகின்றனர்.
</p><p>
இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் ராகுல் காந்தி தான் பிரதமர் வேட்பாளர் என கூறிவருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/63682729-f9c4-41df-bd7b-c5ab317e27cb/26-6a98ebe7533f2.webp' /><br></p><p>

இந்நிலையில் கவுண்டம்பாளையம் எம்எல்ஏ கனிமொழி சந்தோஷ், 2029ல் பிரதமர் யார் என்பதை தமிழகம் தான் முடிவு செய்யும், எங்கள் தலைவர் தான் பிரதமர் ஆவார். </p><p>ராகுல்காந்தியே அவரது கையை பிடித்து பிரதமர் நாற்காலியில் அமரவைப்பார் என தெரிவித்தார்.</p><p>

இதற்கு பதிலளிக்கும் விதமாக பேசிய காங்கிரஸ் எம்எல்ஏ தாரகை கத்பர்ட், தவெக எம்எல்ஏக்கள் ரசிகர் மனப்பான்மையிலேயே பேசுவதாகவும், ராகுல்காந்தி தான் பிரதமர் வேட்பாளர் என்பதில் விஜய் தெளிவாக இருப்பதாகவும் கூறியுளளார்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/D48LvuCMRmc" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-09-03T04:33:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[பொரளையில் முச்சக்கர வண்டி மீது காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு...! வாள்களுடன் 5 பேர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/police-open-fire-at-auto-in-borella-5-arrested-1788407614"></link>
            <id>https://ibctamil.com/article/police-open-fire-at-auto-in-borella-5-arrested-1788407614</id>
            <summary type="text">கொழும்பு - பொரளை சஹஸ்புர பகுதியில் முச்சக்கர வண்டி ஒன்றின் மீது காவல்துறையினர் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.காவல்துறையினரின் கட்டளையை மீறிச் சென்ற ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு - பொரளை சஹஸ்புர பகுதியில் முச்சக்கர வண்டி ஒன்றின் மீது காவல்துறையினர் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.</p><p>காவல்துறையினரின் கட்டளையை மீறிச் சென்ற முச்சக்கர வண்டி மீதே இவ்வாறு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.</p><p>இதையடுத்து குறித்த வண்டியில் பயணித்த 5 சந்தேகநபர்களைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.</p><p>
</p><p></p><h2>மேலதிக விசாரணை</h2><p>கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் இருந்து 3 வாள்கள் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b80e0c5b-29f2-41c6-84bc-2fc0004deee1/26-6a98f51b810ff.webp' /></p><p>சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p>]]></content>
            <updated>2026-09-03T04:32:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சைக்கிளில் சென்றவரை மோதித்தள்ளிய யாழிலிருந்து சென்ற கார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/accident-on-a9-road-one-injured-1788409250"></link>
            <id>https://ibctamil.com/article/accident-on-a9-road-one-injured-1788409250</id>
            <summary type="text">ஏ9 வீதியில் இடம்பெற்ற&amp;nbsp;வீதி விபத்தில் துவிச்சக்கர வண்டியில் பயணித்த நபர் ஒருவர் காயமடைந்துள்ளார்.



குறித்த விபத்து நேற்று (02.09.2026) கிளிந...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஏ9 வீதியில் இடம்பெற்ற&nbsp;வீதி விபத்தில் துவிச்சக்கர வண்டியில் பயணித்த நபர் ஒருவர் காயமடைந்துள்ளார்.</p><p>
</p><p>


குறித்த விபத்து நேற்று (02.09.2026) கிளிநொச்சி காவல்துறை பிரிவுக்குட்பட்ட ஏ9 வீதி - விளாவோடை பகுதியில் இடம்பெற்றுள்ளது</p><p>சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், ஏ9 வீதியால் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த நபர் மீது, கிளிநொச்சியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி வேகமாக பயணித்த கார் மோதியதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><h2>மேலதிக விசாரணை</h2><p>
</p><p>


விபத்தில் காயமடைந்த சைக்கிளில் சென்ற நபர் மீட்புக் குழுவினரால் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3b985b2c-d657-4264-97dd-07f96e4d3205/26-6a98f7737fa62.webp' /></p><p>விபத்தில் காரின் முன்பகுதியும் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p> 



விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-03T04:30:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[தேசிய மக்கள் சக்தியின் 159 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக முறைப்பாடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/complaint-filed-against-159-npp-members-parliament-1788409668"></link>
            <id>https://jvpnews.com/article/complaint-filed-against-159-npp-members-parliament-1788409668</id>
            <summary type="text">தேசிய மக்கள் சக்தி (NPP) சார்பில் நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 159 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் எதிராக &#039;தினன தகுண&#039; (Dhinana Dakuna) அமைப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>தேசிய மக்கள் சக்தி (NPP) சார்பில் நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 159 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் எதிராக 'தினன தகுண' (Dhinana Dakuna) அமைப்பு, கையூட்டல் அல்லது ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றை அளித்துள்ளது.</p><p>
</p><p></p><p>நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் மற்றும் கொடுப்பனவுகள் மக்கள் நலனுக்காகப் பயன்படுத்தப்பட வேண்டும் என்ற போதிலும், அவர்கள் அந்த நிதியை மக்கள் விடுதலை முன்னணியின் வங்கிக் கணக்கில் வைப்பு செய்வதன் மூலம் 2023ஆம் ஆண்டின் 09ஆம் இலக்க ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் புரிந்துள்ளதாக அந்த அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/25ac61db-a3b4-4127-9abd-1136106bd0fd/26-6a98f746294dc.webp' /></p><p>

நேற்று (2) கையூட்டல் அல்லது ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் சமர்ப்பிக்கப்பட்ட இந்த முறைப்பாட்டில், 2023ஆம் ஆண்டின் 09ஆம் இலக்க ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் விரைவான விசாரணையை நடத்துமாறு கோரப்பட்டுள்ளது.
</p><p>
ஐந்து முக்கிய காரணங்களின் அடிப்படையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த முறைப்பாட்டின் மூலம், தேசிய மக்கள் சக்தியின் 159 நாடாளுமன்ற உறுப்பினர்களையும் அழைத்து வாக்குமூலங்களைப் பதிவு செய்யுமாறும், கட்சியின் வங்கிக் கணக்குகளைப் பரிசீலிக்குமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-03T04:27:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[பெருமளவு சந்தேகநபர்கள் சார்பில் பிணை மனுக்களை தாக்கல் செய்த மர்ம நபர்களால் சர்ச்சை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/cid-investigation-into-2-people-who-sought-bail-1788408708"></link>
            <id>https://tamilwin.com/article/cid-investigation-into-2-people-who-sought-bail-1788408708</id>
            <summary type="text">போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 45க்கும் மேற்பட்ட சந்தேகநபர்கள் சார்பில் பிணை மனுக்களை தாக்கல் செய்த இருவர் தொடர்பில் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 45க்கும் மேற்பட்ட சந்தேகநபர்கள் சார்பில் பிணை மனுக்களை தாக்கல் செய்த இருவர் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
</p><p>
மேல் நீதிமன்றத்தில் பிணை மனுக்களை தாக்கல் செய்ததாக கூறப்படும் இருவர் தொடர்பில் உடனடியாக விசாரணையை மேற்கொள்ள நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p>

விசாரணையையடுத்து விரிவான அறிக்கை ஒன்றை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளருக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி லால் ரணசிங்க பண்டார உத்தரவிட்டுள்ளார்.</p><p>
</p><h2><b>
 மர்ம நபர்களால் சர்ச்சை</b></h2><p>வெல்லம்பிட்டியை சேர்ந்த நிமல் கருணாதிலக மற்றும் கொட்டாஞ்சேனையை சேர்ந்த அன்டனி அலெக்சாண்டர் ஆகிய இருவர் தொடர்பிலேயே விசாரணைகளை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/be442de1-af60-4218-a5f1-6a3d0e5000da/26-6a98f61d765ef.webp' /></p><p>போதைப்பொருள் வர்த்தகர்கள் எனக் கூறப்படுபவர்களுக்கு பிணை பெற்றுக்கொடுப்பதற்காக குறித்த இருவரும் தொழிலாகவே இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
</p><p>
இது தொடர்பில் பொலிஸார் சமர்ப்பித்த அறிக்கைகளை பரிசீலித்ததனை தொடர்ந்து நீதிபதி இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

அத்துடன், போதைப்பொருள் குற்றச்சாட்டுகள் தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 45 சந்தேகநபர்கள் சார்பில் ஒரே வழக்கறிஞரின் ஊடாக பிணை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை தொடர்பிலும் விரிவான விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
</p><p>
போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டு தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர் ஒருவருக்காக சமர்ப்பிக்கப்பட்ட பிணை மனு தொடர்பில் நீதிமன்றத்தில் வெளிவந்த தகவல்களையடுத்தே இந்த சந்தேகம் ஏற்பட்டுள்ளது.</p><p>

பிணை மனுதாரர் யார் என்பதை உறுதியாக உறுதிப்படுத்துவதற்காக அவரை நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டிருந்தது. எனினும், வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது குறித்த நபர் நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை.
</p><h3><b>
பிணை மனு</b></h3><p>இதன்போது, குறித்த பிணை மனுவைத் திரும்பப் பெற வழக்கறிஞர் அனுமதி கோரிய போதிலும், அதற்கு அனுமதி மறுத்த நீதிபதி, சந்தேகநபரையும் அவரது நெருங்கிய உறவினர்கள் இருவரையும் நீதிமன்றத்திற்கு அழைத்து விடயங்களைக் விசாரித்துள்ளார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/da9d1e88-f6e3-4839-ac28-5413299d7f6a/26-6a98f61e27481.webp' /></p><p>பிணை மனுவை சமர்ப்பிப்பதற்காக நிமல் கருணாதிலக என்பவருக்குத் தாங்கள் எந்தவித அறிவுறுத்தல்களையும் வழங்கவில்லை எனவும், அத்தகைய நபர் எவரென்றும் தனக்குத் தெரியாது எனவும் சந்தேகநபரின் நெருங்கிய உறவினர்கள் நீதிமன்றத்திற்குத் தெரிவித்தனர்.
</p><p>
இந்த உண்மைகள் வெளிப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, குறித்த பிணை மனுவை நிராகரிக்க நீதிபதி நடவடிக்கை எடுத்தார்.

மற்றொரு பிணை மனு வழக்கறிஞர் பிரபாஸ்வர பீரிஸ் ஊடாகச் சமர்ப்பிக்கப்பட்ட சந்தர்ப்பத்திலும் நீதிமன்றத்தில் இது போன்றதொரு விடயம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
</p><p>
இதன்போது, குறித்த போதைப்பொருள் வழக்கின் சந்தேகநபரை நீதிமன்றத்திற்கு அழைத்து, அவருக்காக பிணை மனுவை சமர்ப்பித்த நபர் தனக்குத் தெரிந்தவரா என நீதிபதி வினவியுள்ளார்.
</p><p>
அதற்குப் பதிலளித்த சந்தேகநபர், தனக்காக பிணை மனுவைச் சமர்ப்பித்த நபர் யார் என்பது தனக்குத் தெரியாது என தெரிவித்தார்.</p>]]></content>
            <updated>2026-09-03T04:23:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஓடிடியில் இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்கள்.. முழு லிஸ்ட் இதோ]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/this-week-ott-release-movie-list-1788406655"></link>
            <id>https://cineulagam.com/article/this-week-ott-release-movie-list-1788406655</id>
            <summary type="text">இந்த வாரம் ஓடிடியில் வெளியாகப்போகும் திரைப்படங்களின் லிஸ்ட் வெளியாகியுள்ளது.

ஓடிடி

திரையரங்கில் வெளிவரும் படங்களுக்கு எந்த அளவிற்கு எதிர்பார்ப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்த வாரம் ஓடிடியில் வெளியாகப்போகும் திரைப்படங்களின் லிஸ்ட் வெளியாகியுள்ளது.</p><p></p><p>
</p><h2>
ஓடிடி
</h2><p>
திரையரங்கில் வெளிவரும் படங்களுக்கு எந்த அளவிற்கு எதிர்பார்ப்பு இருக்கிறதோ, அதே அளவிற்கு தற்போது ஓடிடியிலும் எதிர்பார்ப்பு கூடியுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0a0ea24d-4a14-406d-beab-d55a0f183e91/26-6a98eb820baeb.webp' /></p><p>ஒவ்வொரு வாரமும் ஓடிடியில் என்னென்ன புதிய திரைப்படங்கள், வெப் தொடர்கள் வெளியாகின்றன என்பதை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருப்பார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/882afa67-1dbb-4ab6-8561-5efaf3c724dd/26-6a98eb82b7cef.webp' /></p><h2>இந்த வார ரிலீஸ்
</h2><p>
அந்த வகையில், இந்த வாரம் செப்டம்பர் 4-ஆம் தேதி <a href="https://www.youtube.com/watch?v=b5klRM2KX9w" target="_blank">ஓடிடி</a>யில் வெளிவரவுள்ள திரைப்படங்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது; அதைப்பற்றி பார்க்கலாம் வாங்க.
</p><p>
டிசி (தமிழ்) - சன் நெக்ஸ்ட்
</p><p>
ஜிடிஎன் (தமிழ்) - நெட்பிளிக்ஸ்
</p><p>
உன்மாதம் (மலையாளம்) - சோனி லிவ்
</p><p>
கொரியன் கனகராஜு (தெலுங்கு) - நெட்பிளிக்ஸ்
</p><p>
தமால் 4 (ஹிந்தி) - நெட்பிளிக்ஸ்
</p><p>
மே டே (ஆங்கிலம்) - ஆப்பிள் டிவி</p>]]></content>
            <updated>2026-09-03T04:20:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[22ஆவது திருத்தச்சட்ட மூல வழக்கு விசாரணை குறித்து பொதுநலவாய சட்டத்தரணிகள் சங்கம் கடும் அதிருப்தி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/commonwealth-bar-association-deeply-dissatisfied-1788409062"></link>
            <id>https://jvpnews.com/article/commonwealth-bar-association-deeply-dissatisfied-1788409062</id>
            <summary type="text">22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்துக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான உயர்நீதிமன்ற விசாரணைகளைக் அவதானித்த பொதுநலவாய சட்டத்தரணிகள...</summary>
            <content type="html"><![CDATA[<p>22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்துக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான உயர்நீதிமன்ற விசாரணைகளைக் அவதானித்த பொதுநலவாய சட்டத்தரணிகள் சங்கத்தின் (Commonwealth Lawyers' Association) தலைவர் ஸ்டீவன் திரு, வழக்கின் இறுதித் தருணங்களில் இடம்பெற்ற நிகழ்வுகள் மற்றும் விசாரணை நடைமுறைகள் குறித்துத் தனது ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளார்.</p><p>
</p><p></p><p>இந்த அவதானிப்புகளின் அடிப்படையில் விசேட அறிக்கையொன்று தயாரிக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>

நீதிமன்ற நடவடிக்கைகள் நிறைவடைந்த பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அவர், மனுதாரர் தரப்புச் சட்டத்தரணிகள் தங்களது வாதங்களுக்கு வாய்மொழி மூலம் பதிலளிப்பதற்கான உரிமையை மறுத்து (Right of Reply), எழுத்துப்பூர்வமாக மட்டும் சமர்ப்பிப்புகளை வழங்குமாறு கோரப்பட்டமையானது பெரும்பாலான நீதித்துறை வரம்புகளில் வழக்கமாக இடம்பெறாத ஒன்று எனக் சுட்டிக்காட்டினார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9280a164-11dc-4ad4-863b-c53bf9fe444c/26-6a98f4e7cea61.webp' /></p><p>இவ்வாறானதொரு முக்கியத்துவம் வாய்ந்த வழக்கில் வாய்மொழி மூல பதிலளிப்புக்கான உரிமை கட்டாயம் வழங்கப்பட்டிருக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
</p><p>
அத்துடன், நீதித்துறையின் சுதந்திரம் சார்ந்த இந்த முக்கிய வழக்கை விசாரிப்பதற்கு பூரண நீதியரசர்கள் ஆயம் (Full Bench) அல்லது விரிவான நீதியரசர்கள் குழாம் நியமிக்கப்படாமையும், உயர்நீதிமன்றத்தின் ஏனைய சிரேஷ்ட நீதியரசர்கள் இந்த ஆயத்தில் இடம்பெறாமையும் சட்டத்தரணிகள் மத்தியில் பெரும் கேள்விகளை எழுப்பியுள்ளதாக அவர் தெரிவித்தார்.</p><p>

ஏனைய நாடுகளில் இவ்வாறான முக்கிய வழக்குகளின் போது மிக சிரேஷ்ட நீதியரசர்கள் இணைந்து அமர்வில் பங்கேற்பதை அவர் சுட்டிக்காட்டினார்.
</p><p>
பிரதம நீதியரசர் ப்ரீத்தி பத்மன் சூரசேன தலைமை தாங்குவது தொடர்பில் வெளிப்படைத்தன்மை குறித்த சந்தேகங்களைத் தவிர்க்கும் பொருட்டு, அவர் இந்த வழக்கிலிருந்து விலகி வேறு தரப்புக்கு வாய்ப்பளித்திருக்கலாமா என்பது குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
எவ்வாறாயினும், வழக்கின் சட்டப்பூர்வமான வாதங்களை விட நீதித்துறையின் சுதந்திரத்தைப் பாதுகாப்பதே முக்கியமானது என அவர் அழுத்தமாகக் கூறினார்.
</p><p>
நீதித்துறை சுதந்திரத்துக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் ஏதேனும் சந்தேகங்கள் எழுந்தால், சட்டக் கோட்பாடுகள் பற்றி வாதிடுவதில் பலனில்லை என்றும், குடிமக்களின் கடைசி அரணாக விளங்கும் நீதித்துறை மீதான மக்களின் நம்பிக்கை சீர்குலைந்தால், அதை மீண்டும் கட்டியெழுப்பப் பல ஆண்டுகள் ஆகும் என்றும் எச்சரித்தார்.</p><p>

எனவே, இந்த முழுமையான செயன்முறையின் பின்னர் நீதித்துறை மீதான மக்களின் நம்பிக்கை அதிகரித்துள்ளதா அல்லது சீர்குலைந்துள்ளதா என்பது குறித்து தீவிரமாக பரிசீலிக்கப்பட வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-03T04:17:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்த ராசியினர் இருக்கும் இடத்தில் சிரிப்புக்கு பஞ்சமே இருக்காது! ஏன்னு தெரியுமா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/zodiac-signs-who-make-everyone-laugh-1788361518"></link>
            <id>https://manithan.com/article/zodiac-signs-who-make-everyone-laugh-1788361518</id>
            <summary type="text">வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமும். ஆனால் அது எத்தனை பேருக்கு நிஜமாகிறது என்றால், வெகு சிலருக்கே. சிரிப்பு மனித வாழ...</summary>
            <content type="html"><![CDATA[<p>வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமும். ஆனால் அது எத்தனை பேருக்கு நிஜமாகிறது என்றால், வெகு சிலருக்கே. சிரிப்பு மனித வாழ்க்கையின் முக்கிய அம்சங்களில் ஒன்று. சிலர் எப்போதும் மற்றவர்களின் முகத்தில் புன்னகையை வரவழைக்கும் அசாத்திய திறன் கொண்டவர்களாக இருப்பார்கள்.</p><p>

ஒருவரின் பிறந்த ராசி, அவர்களின் ஆளுமை மற்றும் குணாதிசயங்களில் முக்கியப் பங்கு வகிக்கிறது. அதில் நகைச்சுவை உணர்வும் முக்கிய இடம் வகிக்கின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8f860bbb-041d-45bb-b538-731049fae25c/26-6a98432d38e52.webp' /></p><p></p><p> ஜோதிடத்தின் படி, சில ராசிகளில் பிறந்தவர்கள் இயற்கையாகவே அதிக நகைச்சுவை உணர்வு கொண்டவர்களாக இருப்பார்கள். அவர்கள் இருக்கும் இடம் எப்போதும் கலகலப்பாக இருக்கும். அவர்களைச் சுற்றியிருப்பவர்களின் முகத்திலும் புன்னகை நிறைந்திருக்கும் படி பார்த்துக்கொள்வார்கள்.&nbsp;</p><p>அப்படி இருக்கும் இடத்தில் அனைவரையுமே சிரிக்க வைக்கும் ஆற்றல் கொண்ட ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.</p><h2>மிதுனம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5698a06b-0979-4496-acd1-bcc3a5152622/26-6a98432de36de.webp' /></p><h2>
</h2><p>மிதுன ராசிக்காரர்கள் புத்திக்கூர்மை மற்றும் தகவல் தொடர்பின் அதிபதியான புதனால் ஆளப்படுகிறார்கள். அவர்களின் புத்திசாலித்தனம் நகைச்சுவை உணர்விலும் வெளிப்படும்.</p><p> விரைவாகச் சிந்திக்கும் இவர்கள், வார்த்தை விளையாட்டுகள் மற்றும் சுவாரஸ்யமான கதைகள் மூலம் எந்தச் சூழலையும் வேடிக்கையாக மாற்றி அனைவரையும் சிரிக்க வைப்பார்கள். </p><p>அவர்களின் நகைச்சுவை புத்திசாலித்தனமாகவும் இலகுவாகவும் இருப்பதால், மற்ற ராசிகளை விட வேடிக்கையானவர்களாகத் திகழ்கிறார்கள்.</p><h2>

சிம்மம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/355fd10f-9a42-4c4c-ada7-9daaeb834472/26-6a98432e9bfcd.webp' /></p><h2>
</h2><p>சிம்ம ராசிக்காரர்கள் கிரகங்களின் ராஜாவான சூரியனால் ஆளப்படுவதால், பிரகாசமான மற்றும் கவர்ச்சியான ஆளுமை கொண்டவர்கள். </p><p>மக்களைச் சிரிக்க வைத்து கவனத்தை ஈர்ப்பதையும், மற்றவர்களை மகிழ்விப்பதையும் விரும்புவார்கள். இவர்களுக்கு மற்றவர்களின் கவனத்தை ஈர்க்கும் எந்த செயலும் மிகவும் பிடித்தாகவே இருக்கும்.&nbsp;</p><p> குறும்பு கலந்த நகைச்சுவை உணர்வு கொண்ட இவர்கள், உடல் மொழி மற்றும் கதை சொல்லும் திறன் மூலம் அனைவரையும் சிரிக்க வைப்பார்கள்.</p><h2>

தனுசு</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e31ee235-e01c-478d-b1ce-fcfd8144b7dc/26-6a98432f4baec.webp' /></p><p></p><h2>
</h2><p>தனுசு ராசிக்காரர்கள் வேடிக்கையாகவும் சாகசமாகவும் இருக்க விரும்புவார்கள். நகைச்சுவையாகப் பேசத் தயங்காத இவர்களின் நகைச்சுவை வெளிப்படையானதாகவும், மற்றவர்களைப் புண்படுத்தாத வகையிலும் இருக்கும். </p><p>மற்றவர்கள் சொல்லத் தயங்கும் விஷயங்களைக்கூட சிரிக்க வைக்கும் விதத்தில் வெளிப்படையாகச் சொல்வதில் இவர்கள் கில்லாடிகளாக இருப்பார்கள்.</p><p>அவர்களின் பரந்த மனப்பான்மையும் விளையாட்டுத்தனமான குணமும் நகைச்சுவையை இயல்பாகவும் உற்சாகமாகவும் மாற்றுகின்றது.&nbsp;</p><p><b>இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).&nbsp; &nbsp;&nbsp;</b></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b>&nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-03T04:16:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[மீண்டும் ராஜபக்சர்கள் யுகம்..! அரசாங்கம் சதி செய்வதாக நாமல் தரப்பு புலம்பல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/the-rajapaksa-era-is-back-1788407617"></link>
            <id>https://tamilwin.com/article/the-rajapaksa-era-is-back-1788407617</id>
            <summary type="text">
மீண்டும் ராஜபக்சர்கள் தலைமையிலான அரசாங்கத்தைத் தோற்றுவிக்க இலங்கை மக்கள் தயாராகியுள்ளனர் என்று பொதுஜன பெரமுன கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர...</summary>
            <content type="html"><![CDATA[<p>
மீண்டும் ராஜபக்சர்கள் தலைமையிலான அரசாங்கத்தைத் தோற்றுவிக்க இலங்கை மக்கள் தயாராகியுள்ளனர் என்று பொதுஜன பெரமுன கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இந்திக அனுருத்த தெரிவித்துள்ளார்.</p><p>

நேற்றையதினம்(02.09.2026) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.</p><p> 

தொடர்ந்தும் தெரிவிக்கையில், </p><p>

இலங்கை மக்கள் தேசிய மக்கள் சக்தி கட்சிக்கு வாக்களித்து ஆட்சிக்குக் கொண்டு வந்து இழைத்த தவறை திருத்துவதற்கு தயாராகியுள்ளனர்.</p><h2>நாமலுக்கு வாய்ப்பு..</h2><p> 

இதன்படி, அடுத்த ஜனாதிபதி தேர்தலில் நாமல் ராஜபக்சவுக்கு ஆதரவு தெரிவிக்க மக்கள் முடிவு செய்துள்ள நிலையில், அதனை தடுப்பதற்கு இந்த அரசாஙக்ம் பல சதிகளை செய்து வருகின்றது.</p><p> 

நடைமுறைக்குச் சாத்தியமற்ற பல பொய்யான வாக்குறுதிகளை வழங்கியே இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது. எனினும், மக்கள் இதனை தற்போது புரிந்து கொண்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c016b23d-abe1-4edb-bc34-8d714c3474c7/26-6a98f3f899e67.webp' /></p><p> </p><p> அரசாங்த்தின் மீதும், ஆட்சியாளர்களின் மீதும் மக்களுக்கு இப்போது நம்பிக்கைக் கிடையாது. 

மக்கள் இழைத்த தவறை சரிசெய்யும் பொருட்டு ராஜபக்சர்களின் ஆட்சியை மீளக் கட்டியெழுப்ப மக்கள் தயாராகியுள்ளனர்.
</p><p>
2029ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலின்போது மக்கள் நாமல் ராஜபக்சவை ஜனாதிபதியாக தெரிவு செய்வார்கள். இதனால் நாமல் ராஜபக்சவை எந்த வழியிலாவது நெருக்கடிக்கு உள்ளாக்குவதற்கு அரசாங்கம் முயற்சி செய்து வருகின்றது என குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p><p> </p>]]></content>
            <updated>2026-09-03T04:13:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரச ஊடகத்திலிருந்து வெளியேற்றப்பட்ட யாழ். ஊடகவியலாளர் - யாழ். ஊடக அமையத் தலைவர் விசனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/tamil-journalists-still-face-challenges-1788404344"></link>
            <id>https://ibctamil.com/article/tamil-journalists-still-face-challenges-1788404344</id>
            <summary type="text">போர் முடிவடைந்து 17 வருடங்கள் கடந்த போதும் தமிழ் ஊடகவியலாளர்களுக்கான பிரச்சினைகள் தொடர்ந்து கொண்டே உள்ளன என யாழ். ஊடக அமையத்தின் தலைவரும் சிரேஷ்ட ஊடகவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>போர் முடிவடைந்து 17 வருடங்கள் கடந்த போதும் தமிழ் ஊடகவியலாளர்களுக்கான பிரச்சினைகள் தொடர்ந்து கொண்டே உள்ளன என யாழ். ஊடக அமையத்தின் தலைவரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான கு.செல்வகுமார் தெரிவித்துள்ளார்.</p><p>யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர் பிரபாகரன் டிலக்சன் அரச ஊடகத்திலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளமை இதற்குச் சான்றாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>
</p><p>யாழ். ஊடக அமையத்தில் நேற்று (02.09.2026) இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே கு.செல்வகுமார் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>மக்களின் பிரச்சினை</h2><p>அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ் பகுதிகளில் இடம்பெறும் மக்களின் பிரச்சினைகளைத் தமிழ் ஊடகவியலாளர்களே தொடர்ந்தும் வெளிப்படுத்தி வருகின்றனர்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c8f91f1f-42de-4d93-8b4d-3bab6e5911d9/26-6a98e4a96ec9a.webp' /></p><p>தென்னிலங்கை ஊடகங்கள் அதனை வெளிப்படுத்தத் தவறிவிட்டன.

தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கப்பெற்றிருந்தால், இந்த அரசைத் தமிழ் மக்கள் தங்களது அரசாகக் கருதியிருப்பார்கள். </p><p>அரச ஊடகங்களில் நேர்மையாகப் பணியாற்றுபவர்கள் வெளியேற்றப்படுகின்றனர்.&nbsp; &nbsp;</p><p></p><h2>போராட்டங்கள் மற்றும் படுகொலை</h2><p>செம்மணி மனிதப் புதைகுழி, காணாமல் ஆக்கப்பட்டோருக்கான போராட்டங்கள் மற்றும் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரும் போராட்டங்களில் செய்தி சேகரித்தமை போன்ற காரணங்களைக் காட்டி, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர் பிரபாகரன் டிலக்சன் அரச ஊடகத்திலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளமை இதற்குச் சான்றாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9f402415-a7ab-4884-9e06-dd73a25173bf/26-6a98e4aa2431e.webp' /></p><p>

நடைபெறும் உண்மையான சம்பவங்களை மறைக்காமல் வெளிப்படுத்துவதே ஊடகவியலாளர்களின் கடமை. தங்களுக்கு எதிரான விடயங்களை மறைக்கும் விதமாகச் செய்திகளைத் தணிக்கை செய்வதில் அரச ஊடகங்கள் செயற்படுகின்றன.</p><p>

சுதந்திரமாகச் செய்தி அறிக்கையிடுவதற்குத் தடை விதித்து ஊடகவியலாளர்களை மன உளைச்சலுக்குள்ளாக்கும் போக்கு ஜனநாயக நாட்டுக்கு முரணானது என குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-03T04:12:55+00:00</updated>
        </entry>
    </feed>
