<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-08-08T05:47:58+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[தனது காதலிக்கு UEFA பெருந்தொகை வழங்கியதாக எழுந்த குற்றச்சாட்டு: ஃபிஃபா தலைவர் மறுப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/uefa-paid-off-infantino-lover-1786168043"></link>
            <id>https://news.lankasri.com/article/uefa-paid-off-infantino-lover-1786168043</id>
            <summary type="text">கியானி இன்ஃபான்டினோ UEFA-வின் பொதுச் செயலாளராக இருந்தபோது அவரது காதலி என்று கூறப்படுபவருக்கு பணிவிலகல் தொகையொன்று வழங்கப்பட்டுள்ளது.
கியானி இன்ஃபான்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>கியானி இன்ஃபான்டினோ UEFA-வின் பொதுச் செயலாளராக இருந்தபோது அவரது காதலி என்று கூறப்படுபவருக்கு பணிவிலகல் தொகையொன்று வழங்கப்பட்டுள்ளது.
</p><p>கியானி இன்ஃபான்டினோ UEFA-வின் பொதுச் செயலாளராக இருந்தபோது, ​​அவரது காதலி என்று கூறப்படும் நபருக்கு அந்த அமைப்பு பணிநீக்க இழப்பீடு வழங்கியதாக டெய்லி டெலிகிராப் புலனாய்வு கண்டறிந்துள்ளது.</p><h2>உறுதிப்படுத்தும் அறிக்கை</h2><p>
</p><p>ஆனால், முற்றிலும் உண்மையற்ற இந்தக் குற்றச்சாட்டுகளை இன்ஃபான்டினோ உறுதியாக மறுப்பதாக, தற்போதைய ஃபிஃபா தலைவரின் செய்தித் தொடர்பாளர் அந்தப் பத்திரிகையிடம் கூறியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/51e4c70b-1417-4e6d-ab70-db9b5b229f7c/26-6a76c2ed6e565.webp' /></p><p> </p><p>இதனிடையே, இன்ஃபான்டினோ 2009 முதல் 2016 வரை பொதுச் செயலாளராகப் பணியாற்றிய UEFA, சம்பந்தப்பட்ட நபருக்குப் பணிவிலகல் தொகையொன்று வழங்கப்பட்டதை உறுதிப்படுத்தும் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது.
</p><p>உலகக் கிண்ணம் தொடருக்கான பங்குகளைத் தனியார் முதலீட்டாளர்களுக்கு விற்கும் திட்டத்தைக் கைவிட்டதைத் தொடர்ந்து, ஃபிஃபா தலைவராகத் தனது எதிர்காலத்தைத் தக்கவைக்க இன்ஃபான்டினோ போராடி வரும் சூழலில் இந்தக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.</p><p></p><p> </p><p>ஐரோப்பிய கால்பந்து நிர்வாக அமைப்பில் பணியாற்றிய காலத்தில், திருமணமானவரான இன்ஃபான்டினோவுடன் தொடர்பு வைத்திருந்ததாகக் கூறப்படும் பெண்ணுக்கு, UEFA ஆறு இலக்கத் தொகையை வழங்கியதாக டெலிகிராப் செய்தி வெளியிட்டுள்ளது. </p><p>ஆனால் இந்த குற்றச்சாட்டுகளை இன்ஃபான்டினோ உறுதியாக மறுத்துள்ளதாக தெரிவித்துள்ள அவரது செய்தித்தொடர்பாளர், இன்ஃபான்டினோவின் நடத்தை குறித்து UEFA அல்லது FIFA-வில் உள்ள எந்தவொரு ஊழியரும் இதுவரை புகார் அளித்ததில்லை; ஏனெனில், அவர் சம்பந்தப்பட்ட அத்தகைய சம்பவம் எதுவும் ஒருபோதும் நிகழ்ந்ததில்லை என்றும் வாதிட்டுள்ளார்.</p><h2>கூடுதல் நெருக்கடி</h2><p> </p><p>இருப்பினும், குறிப்பிட்ட அந்தப் பெண்ணுக்கு ஒரு தொகை வழங்கப்பட்டதை உறுதிப்படுத்திய UEFA, உள்ளூர் கல்லூரி ஒன்றில் அவர் எம்பிஏ (MBA) படிப்பை முடிப்பதற்கான கட்டணங்களை அந்தத் தொகை உள்ளடக்கியிருந்தது என்றும் தெரிவித்துள்ளது. </p><p> 
உலகக் கிண்ணத்திற்கான தனியார் முதலீட்டுத் திட்டம் தொடர்பாக ஃபிஃபா தலைவர் பதவியிலிருந்து விலகுமாறு கோரிக்கைகளை எதிர்கொண்டுள்ள இன்ஃபான்டினோவின் மீது, இந்தக் குற்றச்சாட்டுகள் கூடுதல் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9c69ce65-5ea6-4497-87a1-2d165a8c056c/26-6a76c2ee1fa33.webp' /></p><p> </p><p>இன்ஃபான்டினோ 2000-ஆம் ஆண்டில் UEFA-வில் இணைந்து, 2009-ஆம் வருடம் அதன் பொதுச் செயலாளரானார்; பின்னர் 2016-ஆம் வருடம் ஃபிஃபா தலைவராக நியமிக்கப்பட்டார். </p><p>இதனிடையே, இன்ஃபான்டினோவின் திட்டங்கள் கைவிடப்பட்ட போதிலும், சில நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்படவில்லை என்று கூறி, ஐரோப்பிய அணிகள் ஃபிஃபா நிகழ்வுகளைப் புறக்கணிக்கப் போவதாக அச்சுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-08T05:45:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ். அழகை உலகிற்கு காட்டும் கலாச்சார உணவுத்திருவிழா - பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/cultural-food-festival-in-jaffna-1786167686"></link>
            <id>https://tamilwin.com/article/cultural-food-festival-in-jaffna-1786167686</id>
            <summary type="text">வட மாகாணத்தின் வளமான கலாசாரப் பாரம்பரியம், தனித்துவமான உணவுப் பாரம்பரியம் மற்றும் கலை மரபுகளை உள்நாட்டு மற்றும் சர்வதேச சுற்றுலாவிகளுக்கு
அறிமுகப்படு...</summary>
            <content type="html"><![CDATA[<p>வட மாகாணத்தின் வளமான கலாசாரப் பாரம்பரியம், தனித்துவமான உணவுப் பாரம்பரியம் மற்றும் கலை மரபுகளை உள்நாட்டு மற்றும் சர்வதேச சுற்றுலாவிகளுக்கு
அறிமுகப்படுத்தும் நோக்கில், வட மாகாண சுற்றுலாப் பணியகத்தின் ஏற்பாட்டில்
“யாழ்ப்பாணத்துக்கு வருகை தாருங்கள் 2026 - கலாசார மற்றும் உணவுத் திருவிழா” நிகழ்வு இடம்பெறவுள்ளது.</p><p> 

இந்த நிகழ்வு, எதிர்வரும் 15ஆம் திகதி முதல் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு நடைபெறவுள்ளது. </p><p>
 
ஆகஸ்ட் 15ஆம் திகதி முதல், யாழ்ப்பாணத்தின்
வரலாற்றுச் சிறப்புமிக்க முற்றவெளி பண்ணை மைதானத்தில் நடைபெறவுள்ள இந்தப்
பிரமாண்ட விழா, வட மாகாண சுற்றுலாத்துறையை சர்வதேச அரங்கில் மேலும்
வலுப்படுத்தும் நோக்கத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளதுடன், யாழ்ப்பாணத்தின்
தனித்துவமான அடையாளங்களை உலகுக்கு எடுத்துச் செல்லும் முக்கிய முயற்சியாகவும்
அமையவுள்ளது.</p><h2>

யாழ்ப்பாண அழகை உலகிற்கு காட்டும் கொண்டாட்டம்</h2><p>
இந்த நிகழ்வு தொடர்பில் கருத்துத் தெரிவித்த வட மாகாண சுற்றுலாப் பணியகத்தின்
தலைவர் ஜே.விவேகானந்தன், 

 யாழ்ப்பாணத்தின் தொன்மைமிக்க கலாசாரப்
பாரம்பரியம், உலகப் புகழ்பெற்ற சுவைமிகு உணவுகள் மற்றும் கலை மரபுகளை
உள்நாட்டு மற்றும் சர்வதேச சுற்றுலாவிகளுக்கு அறிமுகப்படுத்தும் நோக்கிலேயே
இந்தத் திருவிழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/eb8809b4-f6b0-4a68-88db-ecc6d8a6874e/26-6a76c204ad0d9.webp' /></p><p> 

பண்ணை கடற்கரையையும் யாழ்ப்பாணக்
கோட்டையையும் அண்மித்த இயற்கை எழில் சூழ்ந்த முற்றவெளி பண்ணை மைதானத்தில்
நடைபெறும் இந்த விழா, வட மாகாண சுற்றுலாத்துறையின் வளர்ச்சிப் பயணத்தில் ஒரு
முக்கிய மைல்கல்லாக அமையும். </p><p>

வட மாகாணத்தின் சுற்றுலா, கலாசாரம், கைவினை,
பாரம்பரிய உணவுகள் மற்றும் உள்ளூர் பொருளாதாரத்தை ஒரே மேடையில் உலகிற்கு
வெளிப்படுத்தும் அரிய வாய்ப்பாகவும் இந்த நிகழ்வு அமையும் என்றார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a474c6c6-338d-442c-bfad-f67af55fca14/26-6a76c20575074.webp' /></p><p>
</p><p>
மூன்று நாட்கள் நடைபெறவுள்ள இந்தத் திருவிழாவில் வட மாகாணத்தின் பாரம்பரிய
உணவுக் கண்காட்சி, கைவினைப் பொருட்கள் காட்சி மற்றும் விற்பனை, கலாசார மற்றும்
நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகள், இசை நிகழ்ச்சிகள், பாரம்பரிய விளையாட்டுகள்,
உள்ளூர் உற்பத்தியாளர்களின் கண்காட்சிகள் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்கள்
இடம்பெறவுள்ளன.
</p><p>
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள், முதலீட்டாளர்கள், தொழில்
முனைவோர் மற்றும் பொதுமக்கள் என அனைவரையும் இந்தப் பெருவிழாவில்
கலந்துகொள்ளுமாறு வட மாகாண சுற்றுலாப் பணியகம் அழைப்பு விடுத்துள்ளது.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-08T05:43:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பிய இலங்கையர் அதிரடி கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sri-lankan-arrested-after-returning-from-abroad-1786167796"></link>
            <id>https://jvpnews.com/article/sri-lankan-arrested-after-returning-from-abroad-1786167796</id>
            <summary type="text">சட்டவிரோதமான முறையில் இலங்கைக்குக் கொண்டுவரப்பட்ட சுமார் 60 இலட்சம் ரூபாய் மதிப்பிலான வெளிநாட்டுத் தயாரிப்பு சிகரெட்டுகளுடன், கட்டுநாயக்க விமான நிலையத...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">சட்டவிரோதமான முறையில் இலங்கைக்குக் கொண்டுவரப்பட்ட சுமார் 60 இலட்சம் ரூபாய் மதிப்பிலான வெளிநாட்டுத் தயாரிப்பு சிகரெட்டுகளுடன், கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து அவற்றை வெளியே எடுத்துச் செல்ல முயன்ற இலங்கை விமானப் பயணி ஒருவர் இன்று (08) அதிகாலை விமான நிலையப் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p style="text-align: justify; ">
மினுவாங்கொடை, திவுலபிட்டிய பகுதியைச் சேர்ந்த 30 வயதுடையவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a356a7e1-17ac-43f9-b73c-695b8eb956ba/26-6a76c1f57783c.webp' /></p><h2 style="text-align: justify; ">மேலதிக விசாரணை</h2><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
குறித்த நபர் இன்று (08) அதிகாலை 04:00 மணியளவில் துபாயிலிருந்து ஃபிளை துபாய் (Flydubai) விமான சேவைக்குச் சொந்தமான FZ-569 எண் கொண்ட விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
</p><p style="text-align: justify; ">அவர் கொண்டு வந்த இரண்டு பயணப் பைகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இந்தச் சிகரெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. </p><p style="text-align: justify; ">இங்கிலாந்தில் தயாரிக்கப்பட்டதும், இதுவரை கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைப்பற்றப்படாததுமான "டாப் கன்" (Top Gun) வகையைச் சேர்ந்த 40,000 சிகரெட்டுகளும் (200 சிகரெட் கார்ட்டன்கள்) இவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">

சம்பவத்தையடுத்து விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்ட சந்தேகநபர் தற்போது பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
</p><p style="text-align: justify; ">
இவரைக் எதிர் வரும் ஓகஸ்ட் மாதம் 19 ஆம் திகதி நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளதுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.&nbsp;</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-08T05:43:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பகுதியில் இளைஞனின் வாழ்வை பறித்த சம்பவம் ; ஸ்தலத்திலேயே பிரிந்த உயிர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/incident-claims-young-man-s-life-1786167233"></link>
            <id>https://jvpnews.com/article/incident-claims-young-man-s-life-1786167233</id>
            <summary type="text">வவுனியா – புளியங்குளம் பரசங்குளம் பகுதியில் நேற்று (07) இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


கூலர் ரக வாகனம்...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">வவுனியா – புளியங்குளம் பரசங்குளம் பகுதியில் நேற்று (07) இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p style="text-align: justify; ">

கூலர் ரக வாகனம் டிப்பர் வாகனத்துடன் பின்பகுதியில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/89d996c6-8d5a-4db2-8007-d0f8c6e86eb1/26-6a76bfc34bac6.webp' /></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; "> 

விபத்தில் கூலர் வாகனத்தில் பயணம் செய்துகொண்டிருந்த இளைஞர் ஒருவர் படுகாயங்களுக்குள்ளாகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

மேலும், விபத்து தொடர்பாக புளியங்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-08T05:33:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ளோருக்கான விசேட அறிவித்தல்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/special-notice-to-candidates-for-the-a-level-exam-1786164747"></link>
            <id>https://ibctamil.com/article/special-notice-to-candidates-for-the-a-level-exam-1786164747</id>
            <summary type="text">2026 ஆம் அண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை ஓகஸ்ட் 10 ஆம் திகதி ஆரம்பமாகி செப்டம்பர் 05 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாக&amp;nbsp; பரீட்சைகள் ஆண...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026 ஆம் அண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை ஓகஸ்ட் 10 ஆம் திகதி ஆரம்பமாகி செப்டம்பர் 05 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாக&nbsp; பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார்.</p><p> நாடளாவிய ரீதியில் 2,532 மத்திய நிலையங்களில் பரீட்சை நடைபெறுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக&nbsp;அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.</p><p>விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கருத்து தெரிவிக்கும் போதே பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்த விடயங்களை குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>அனுமதி அட்டைகளைப் பெற்றுக்கொள்ளலாம்</h2><p>அவர் மேலும் தெரிவிக்கையில், இம்முறை உயர்தரப் பரீட்சைக்காக பாடசாலை விண்ணப்பதாரர்கள் 264,496 பேரும், தனியார் விண்ணப்பதாரர்கள் 107,814 பேரும் அடங்கலாக மொத்தம் 372,310 விண்ணப்பதாரர்கள் தோற்றவுள்ளனர்.
</p><p>
 

பாடசாலை விண்ணப்பதாரர்களின் பரீட்சை அனுமதி அட்டைகள் அந்தந்த அதிபர்களுக்கும், தனியார் விண்ணப்பதாரர்களின் அனுமதி அட்டைகள் அவர்களின் முகவரிகளுக்கும் தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d240386f-4ae5-4168-bb28-d36af513ef92/26-6a76bdde647dc.webp' /></p><p>

 

பரீட்சை மண்டபத்திற்குள் நுழைவதற்கு முன்னர் அனுமதி அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ள தங்களது கையொப்பத்தை முறைப்படி சான்றொப்பம் செய்து கொள்வது கட்டாயமாகும்.</p><p>அனுமதி அட்டை தொலைந்து போயிருந்தால், பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் இருந்து அதை மீண்டும் பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும்.</p><p>
 

பரீட்சையின் போது ஆளடையாளத்தை உறுதிப்படுத்துவதற்கு தேசிய அடையாள அட்டை, செல்லுபடியாகும் சாரதி அனுமதிப்பத்திரம் அல்லது செல்லுபடியாகும் கடவுச்சீட்டு ஆகியவற்றை மட்டுமே பயன்படுத்த முடியும்.</p><p></p><h2>முற்றாகத் தடை விதிக்கப்பட்டுள்ள விடயங்கள்</h2><p>
</p><p>
 

தேசிய அடையாள அட்டை தொலைந்துபோயிருந்தால், தற்காலிக அடையாள அட்டையாக தபால் அடையாள அட்டைக்கு பயன்படுத்தப்படும் இரண்டு புகைப்படங்களை பாடசாலை விண்ணப்பதாரர்கள் அதிபர் மூலமும், தனியார் விண்ணப்பதாரர்கள் கிராம உத்தியோகத்தர் மூலமும் சான்றொப்பம் செய்து வைத்திருக்க வேண்டும்.
</p><p>
 

பரீட்சை கால அட்டவணையை தீவிரமாகக் கவனத்திற் கொண்டு, பரீட்சை தொடங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னதாகவே பரீட்சை நிலையங்களுக்கு வருமாறு பரீட்சைத் திணைக்களம் மாணவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/81965329-5252-4a48-98d2-ddee47969f68/26-6a76bdddb1def.webp' /></p><p>
</p><p>கையடக்கத் தொலைபேசிகள், ஸ்மார்ட் கடிகாரங்கள், குறிப்புகள் அல்லது புளூடூத் உள்ளிட்ட எந்தவொரு இலத்திரனியல் சாதனங்களையும் பரீட்சை மண்டபத்திற்குள் கொண்டு வர முற்றாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
</p><p>
 

பரீட்சை விதிகளுக்கு அமைவாகச் செயற்பட்டு பரீட்சை மோசடிகளில் ஈடுபடுவதைத் தவிர்ப்பதுடன், கடந்த ஆண்டுகளில் பரீட்சை மோசடிகள் காரணமாக பல மாணவர்களின் முடிவுகள் இடைநிறுத்தப்பட வேண்டியிருந்தது.</p><p>ஏதேனும் அவசர அனர்த்த நிலைமைகள் ஏற்ப்பட்டால், அதற்குத் தேவையான வசதிகளைச் செய்து கொடுக்கவும் பரீட்சைத் திணைக்களம் தயார் நிலையில் இருக்கின்றது” என அவர் மேலும் தெரிவித்தார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-08T05:32:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[க.பொ.த உயர்தரப் பரீட்சை எழுதவுள்ள மாணவர்களுக்கு வெளியான அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/special-announcement-for-a-l-students-1786164477"></link>
            <id>https://tamilwin.com/article/special-announcement-for-a-l-students-1786164477</id>
            <summary type="text">நாடு முழுவதும் ஆகஸ்ட் 10ஆம் திகதி தொடங்கி செப்டெம்பர் 5ஆம் திகதி வரை 2,532 மையங்களில் நடைபெறவுள்ள கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சையை நடத்துவதற்கான அனை...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடு முழுவதும் ஆகஸ்ட் 10ஆம் திகதி தொடங்கி செப்டெம்பர் 5ஆம் திகதி வரை 2,532 மையங்களில் நடைபெறவுள்ள கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சையை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக, பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார்.
</p><p>
இந்த ஆண்டு பரீட்கையில் 264,496 பாடசாலை பரீட்சாத்திகளும், 107,814 தனிப்பட்ட&nbsp;பரீட்சாத்திகளும் உட்பட மொத்தம் 372,310 மாணவர்கள் பங்கேற்க உள்ளனர்.</p><h2>அனுமதிச் சீட்டு தொலைந்துவிட்டால்</h2><p>

பாடசாலை விண்ணப்பதாரர்களின் அனுமதிச் சீட்டுகள் சம்பந்தப்பட்ட பாடசாலை அதிபர்களுக்கு அஞ்சல் மூலமாகவும், தனிப்பட்ட&nbsp; விண்ணப்பதாரர்களின் அனுமதிச் சீட்டுகள் அவர்களது முகவரிகளுக்கும் அஞ்சல் மூலமாகவும் அனுப்பப்பட்டுள்ளன என்று தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c91c13af-0e7b-4ef6-a225-b37b00d503c8/26-6a76bca591b27.webp' /></p><p>

அனுமதிச் சீட்டு தொலைந்துவிட்டால், அதைத் பரீட்சைத் திணைக்களத்தின் அதிகாரபூர்வ இணையதளத்திலிருந்து மீண்டும் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்றும் கூறினார்.</p><p>

பரீட்சையின்போது அடையாளத்தைச் சரிபார்க்க தேசிய அடையாள அட்டை, செல்லுபடியாகும் சாரதி அனுமதிப் பத்திரம் அல்லது செல்லுபடியாகும் கடவுச்சீட்டு ஆகியவற்றை மட்டுமே பயன்படுத்த முடியும் என்றும்&nbsp; தெரிவித்துள்ளார்.</p><p>பரீட்சை அட்டவணையை உன்னிப்பாகக் கவனித்து, பரீட்சை தொடங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பே பரீட்சை மையங்களுக்கு வருமாறு மாணவர்களுக்குத் பரீட்சைத் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. </p><h2>எந்தவொரு அவசர சூழ்நிலையிலும்</h2><p>மேலும், கைபேசிகள், ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள், நோட்டுகள் அல்லது புளூடூத் உள்ளிட்ட எந்தவொரு மின்னணு சாதனத்தையும் பரீட்சை அறைக்குள் கொண்டு வருவது முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7bfe63e1-1115-4cbb-9fb5-84d76095988c/26-6a76bca651dbb.webp' /></p><p>

கடந்த ஆண்டுகளில் நடந்த பரீட்சை மோசடி காரணமாகப் பல மாணவர்களின் பரீட்சை முடிவுகள் நிறுத்திவைக்கப்பட வேண்டியிருந்தது என்று தேர்வு ஆணையர் ஜெனரல் தெரிவித்தார்.</p><p>

மேலும், எந்தவொரு அவசர சூழ்நிலையிலும் தேவையான வசதிகளை வழங்கத் பரீட்சைத் திணைக்களம் தயாராக உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-08T05:30:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறைச்சாலைகளில் அடுத்தடுத்து பதற்றமான சூழ்நிலை - பின்னணி குறித்து வெளியான புலனாய்வு தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/organized-team-behind-the-prison-riot-1786153725"></link>
            <id>https://tamilwin.com/article/organized-team-behind-the-prison-riot-1786153725</id>
            <summary type="text">நாடு முழுவதும் பல சிறைச்சாலைகளில் ஏற்பட்டுள்ள மோதல்கள் மற்றும் பதற்றமான சூழ்நிலைகளின் பின்னணியில் பாரிய சதித்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருவதாக ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடு முழுவதும் பல சிறைச்சாலைகளில் ஏற்பட்டுள்ள மோதல்கள் மற்றும் பதற்றமான சூழ்நிலைகளின் பின்னணியில் பாரிய சதித்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருவதாக புலனாய்வுப் பிரிவினர் தகவல்களை வெளிப்படுத்தியுள்ளனர்.
</p><p>
நாட்டின் ஐந்து சிறைச்சாலைகளில் கலவரங்கள் வெடிக்கக்கூடும் எனப் புலனாய்வுப் பிரிவினர் ஏற்கனவே எச்சரித்திருந்தனர்.</p><p> 

எச்சரிக்கை விடுக்கப்பட்ட சில நாட்களில் கொழும்பு மெகசின், குருவிட்ட மற்றும் நீர்கொழும்பு பல்லன்சேனை ஆகிய சிறைச்சாலைகளில் ஒரே நேரத்தில் வன்முறை சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.</p><p> </p><h2><b>

கைதிகள் பலி
</b></h2><p>இந்த அமைதியற்ற சூழ்நிலை காரணமாக மூன்று கைதிகள் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cbe349fc-550a-45fb-a30f-10fb81354dd1/26-6a768e34dd1a3.webp' /></p><p>கொழும்பு மெகசின் சிறைச்சாலையின் மதிலுக்கு வெளியில் இருந்து அடையாளம் தெரியாத நபர்களால் வீசப்பட்ட ஹெரோயின் போதைப்பொருள் பொதியொன்றை சிறைச்சாலை அதிகாரிகள் பொறுப்பேற்றதையடுத்து, கைதிகளுக்கு இடையே முதன்முதலில் பதற்றம் ஆரம்பமானது.</p><p>அது அடுத்த நாளும் தொடர்ந்தது.

அடுத்து குருவிட்ட சிறைச்சாலையிலும் கைதிகளுக்கு இடையே கடும் பதற்ற நிலை ஏற்பட்டது.</p><h3><b> சிறைச்சாலைக்கு இடமாற்றம் </b></h3><p>ஆத்திரமடைந்த கைதிகள் அங்கிருந்த மருத்துவமனை மற்றும் பல கட்டடங்கள் மீது தாக்குதல் நடத்தி பலத்த சேதங்களை ஏற்படுத்தினர்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a5143927-9676-4837-9a0e-4f2549c6037d/26-6a768e3593f68.webp' /></p><p>நீர்கொழும்பு சிறைச்சாலையில் இருந்து குருவிட்ட சிறைச்சாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்ட ஆயிரம் பேருக்கும் அதிகமான கைதிகளுக்கு இடவசதிகள் போதாது எனக் கூறி ஆரம்பிக்கப்பட்ட ஆர்ப்பாட்டமே இந்த மோதலுக்கு முக்கிய காரணமாக அமைந்தது.</p><p> 
 
நீர்கொழும்பு பல்லன்சேனை சிறைச்சாலையிலும் காலை உணவு வழங்குவதற்காகச் சிறைக் கூண்டுகளிலிருந்து வெளியே அழைத்துச் செல்லப்பட்ட போது, போதைப்பொருள் தகராறைக் அடிப்படையாகக் கொண்டு அமைதியின்மை ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content>
            <updated>2026-08-08T05:30:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[pattani masala : உடல் எடை குறைக்க உதவும் கேரளா ஸ்டைல் பச்சை பட்டாணி கிரேவி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/heathy-and-tasty-kerala-style-pattani-masala-1786163104"></link>
            <id>https://manithan.com/article/heathy-and-tasty-kerala-style-pattani-masala-1786163104</id>
            <summary type="text">pattani masala heath benefits : பொதுவாக எல்லா காலங்களிலும் கிடைக்கக்கூடிய பச்சை பட்டாணியில் கார்போஹைட்ரேட் அதிகமாக இருந்தாலும், கலோரிகள் குறைவாகவே உள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>pattani masala heath benefits : பொதுவாக எல்லா காலங்களிலும் கிடைக்கக்கூடிய பச்சை பட்டாணியில் கார்போஹைட்ரேட் அதிகமாக இருந்தாலும், கலோரிகள் குறைவாகவே உள்ளன. மேலும், நார்ச்சத்து, புரோட்டீன், விட்டமின் ஏ, கே, மாங்கனீஸ், இரும்புச்சத்து, போலேட், தயமின் போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.</p><p>

இதில் அதிகளவு நார்ச்சத்து இருப்பதால், செரிமானத்தை மேம்படுத்தி குடல் ஆரோக்கியத்திற்கு உதவுவதுடன், மலச்சிக்கலையும் குறைக்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9a2bf60f-4e5a-48e1-b7b7-caee4b06662b/26-6a76bd43435d3.webp' /></p><p> </p><p>குறைந்த கலோரிகள் மற்றும் அதிக நார்ச்சத்து காரணமாக உடல் எடையை குறைக்க விரும்புவோருக்கும் இது சிறந்த உணவாகும்.
</p><p>
மேலும், பச்சை பட்டாணியில் உள்ள நியாசின் மற்றும் ஆன்டிஆக்ஸிஜென்டுகள் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், இரத்தக் குழாய்களில் கொழுப்பு சேர்வதைத் தடுக்கவும் உதவுகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a9f12d22-8cf3-4d83-99f1-2101319abe55/26-6a76bd43e8826.webp' /></p><p>
</p><p>
இத்தனை ஆரோக்கிய நன்மைகள் கொண்ட பச்சை பட்டாணியை வைத்து, அனைவரும் விரும்பி சாப்பிடும் சுவையான கேரளா ஸ்டைல் பட்டாணி கிரேவி செய்வது எப்படி என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.</p><h2>தேவையான பொருட்கள்</h2><p>2 கப் பச்சை பட்டாணி</p><p>
2 பெரிய வெங்காயம், நறுக்கியது</p><p>
2 தக்காளி, நறுக்கியது</p><p>
2 பல் பூண்டு
</p><p>1 இன்ச் இஞ்சி
</p><p>2 ஸ்பூன் மல்லி விதைகள்</p><p>
5 வர மிளகாய்</p><p>
1 கப் தேங்காய்ப்பால்</p><p>
3 ஸ்பூன் தேங்காய் எண்ணெய்
</p><p>தேவையான அளவு உப்பு
</p><p>தேவையான அளவு தண்ணீர்
</p><p>சிறிதளவு கொத்தமல்லி இலை, நறுக்கியது</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8e77d004-66ca-4c2d-ad50-0e99556f31af/26-6a76bd4499d8d.webp' /></p><p></p><p>
</p><h2>செய்முறை</h2><p>
முதலில் பட்டாணியை இரவு முழுவதும் தண்ணீரில் ஊறவைத்து, மறுநாள் நன்றாக வேகவைத்து வைத்துக் கொள்ளவும்.
</p><p>பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து சூடாக்கி, அதில் மல்லி விதைகள் மற்றும் வர மிளகாயைச் சேர்த்து நல்ல மணம் வரும் வரை வறுக்கவும். பின்னர் அதை ஆறவைத்து, பொடியாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.</p><p>

அதே பாத்திரத்தில் 1 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் ஊற்றி, நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/57e8b93f-3e45-4ff9-898e-40551384d853/26-6a76bd454b18b.webp' /></p><p>பிறகு நறுக்கிய தக்காளி, இஞ்சி மற்றும் பூண்டு சேர்த்து, தக்காளி நன்றாக குழையும் வரை வதக்கவும்.இந்தக் கலவையை ஆறவைத்து, மிக்ஸியில் போட்டு மென்மையான விழுதாக அரைத்துக் கொள்ளவும்.</p><p>
இப்போது அதே கடாயில் மீதமுள்ள 2 ஸ்பூன் தேங்காய் எண்ணெயை ஊற்றி, அரைத்து வைத்துள்ள மசாலா விழுதைச் சேர்க்கவும்.மசாலா நன்றாக வதங்கியதும், முன்பு அரைத்து வைத்துள்ள மல்லி விதை–வர மிளகாய் பொடியைச் சேர்க்கவும்.</p><p>

மசாலாவிலிருந்து நல்ல மணம் வரும் வரை சுமார் 5 நிமிடங்கள் மிதமான தீயில் வதக்கவும்.

பின்னர் வேகவைத்த பட்டாணி, தேவையான அளவு உப்பு மற்றும் சுமார் 1 கப் தண்ணீர் சேர்த்து நன்றாகக் கலந்து, பட்டாணி மென்மையாகும் வரை கொதிக்கவிடவும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d17e73ec-8d10-4f3a-bbae-2c2ff53614b6/26-6a76bd45ef2d0.webp' /></p><p></p><p>
பட்டாணி நன்றாக வெந்ததும் தேங்காய்ப்பாலைச் சேர்க்கவும். தேங்காய்ப்பால் சேர்த்த பிறகு தீயைக் குறைத்து, குழம்பை மெதுவாகக் கொதிக்கவிடவும். </p><p>அதிகமாகக் கொதிக்கவிடாமல், தேவையான பதம் வந்ததும் அடுப்பை அணைக்கவும்.

இறுதியாக நறுக்கிய கொத்தமல்லி இலையைத் தூவி இறக்கினால், அவ்வளவு தான் சுவையான கேரளா ஸ்டைல் பட்டாணி மசாலா தயார். சாதம், சப்பாத்தி, அப்பம் அல்லது பரோட்டாவுக்கு இந்த ரெசிபி பக்காவாக பொருந்தும்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b>&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-08T05:23:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ். பல்கலைக்கழக மாணவிக்கு நேர்ந்த கதி - துயரத்தில் குடும்பத்தினர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/jaffna-university-student-dies-1786166423"></link>
            <id>https://tamilwin.com/article/jaffna-university-student-dies-1786166423</id>
            <summary type="text">யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இசைத்துறையில் பயிலும் மாணவியொருவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்றுமுன்தினம்(06....</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இசைத்துறையில் பயிலும் மாணவியொருவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.</p><p>
இந்த சம்பவம் நேற்றுமுன்தினம்(06.08.2026) இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><h2>

27 வயதில் உயிரிழப்பு</h2><p>
இவ்வாறு உயிரிழந்த மாணவி, யாழ்ப்பாணம் பல்கலைக்கழத்தில் பயிலும் நிரோஷினி என்றும் அவருக்கு தற்போது 27 வயது என்றும் தெரியவந்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8edc93e2-50a2-4c09-8e8e-494bfb1553ae/26-6a76bcc835bc4.webp' /></p><p> </p><p>

இந்த நிலையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குறித்த மாணவி கொழும்பு
வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி
மாணவி வைத்தியசாலையிலேயே உயிரிழந்துள்ளார்.</p><p>

இந்த சம்பவமானது அனைவர் மத்தியிலும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. 

கற்ற சமூகத்தின் தொடர்ச்சியான இழப்புகள் பாரிய இழப்புகளாகவே பார்க்கப்படுகின்றது.&nbsp;</p><p></p><p></p><p><b>YOU MAY LIKE THIS VIDEO</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/QzFSaLZZXIE" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p>]]></content>
            <updated>2026-08-08T05:21:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ். பல்கலைக்கழக இசைத்துறை மாணவி நிரோஷினி உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/jaffna-university-student-death-in-colombo-1786165527"></link>
            <id>https://ibctamil.com/article/jaffna-university-student-death-in-colombo-1786165527</id>
            <summary type="text">​யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இசைத்துறை பீட மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார்.கண்டி மாவட்டத்தை சேர்ந்த நிரோஷினி (வயது 27) என்ற மாணவியே
இவ்வாறு உயிரிழந்துள்ளார...</summary>
            <content type="html"><![CDATA[<p>​யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இசைத்துறை பீட மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார்.</p><p>கண்டி மாவட்டத்தை சேர்ந்த நிரோஷினி (வயது 27) என்ற மாணவியே
இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
</p><p>மேலும் தெரியவருகையில்,

குறித்த மாணவி யாழ்ப்பாண பல்கலைக்கழக இசைத்துறை பீடத்தில் கல்வி கற்று
வருகின்றார்.</p><p></p><p>
</p><h2>சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு</h2><p>
இந்நிலையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குறித்த மாணவி கொழும்பு
வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a1adaed6-652d-4133-9fbd-cc40aeb689bb/26-6a76bb56ecd23.webp' /></p><p> இருப்பினும் சிகிச்சை பலனின்றி
மாணவி வைத்தியசாலையிலேயே உயிரிழந்துள்ளார்.
</p><p>
இந்த சம்பவமானது அனைவர் மத்தியிலும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. கற்ற
சமூகத்தின் தொடர்ச்சியான இழப்புகள் பாரிய இழப்புகளாகவே பார்க்கப்படுகிறது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-08T05:18:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[துபாய் சொகுசு கப்பலில் ஜாலி பண்ணும் நடிகை யாஷிகா ஆனந்த்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/yashikaa-annand-recent-dubai-video-post-1786167264"></link>
            <id>https://viduppu.com/article/yashikaa-annand-recent-dubai-video-post-1786167264</id>
            <summary type="text">யாஷிகா ஆனந்த்இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் தான் நடிகை யாஷிகா ஆனந்த். பிக்பாஸ் நிக...</summary>
            <content type="html"><![CDATA[<h2>யாஷிகா ஆனந்த்</h2><p>இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் தான் நடிகை யாஷிகா ஆனந்த். பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்று அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்தார் யாஷிகா.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4aa723f2-970d-42f8-8366-36e34c4716c2/26-6a76bfe27d279.webp' /></p><p>

இதற்கிடையில் கார் விபத்தில் சிக்கி தன்னுடைய தோழியை இழந்து படுத்தப்படுகையில் இருந்தார். 4 மாதங்களுக்கு பின் மீண்டு வந்த யாஷிகா, மீண்டும் நடிக்க ஆரம்பித்தார்.</p><p>

இணையத்தில் ஆக்டிவாக இருந்து கிளாமர் பதிவுகளை பகிர்ந்து வரும் யாஷிகா, சமீபத்தில் 27 வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். தற்போது துபாய் சொகுசு கப்பலில் கிளாமர் ஆடையணிந்து ஜாலி பண்ணிய வீடியோவை பகிர்ந்துள்ளார்.</p><p><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/reel/DbvZC__TY_o/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/reel/DbvZC__TY_o/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/reel/DbvZC__TY_o/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by Yash 🔱⭐️🌙 (@yashikaaannand)</a></p></div></blockquote> <script async src="//www.instagram.com/embed.js"></script></p>]]></content>
            <updated>2026-08-08T05:15:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதிகரிக்கும் கட்டுப்பாடுகள்: கடத்தல் பாணியை மாற்றிய ஆட்கடத்தல்காரர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/smugglers-use-mega-dinghies-for-migrant-channels-1786166101"></link>
            <id>https://news.lankasri.com/article/smugglers-use-mega-dinghies-for-migrant-channels-1786166101</id>
            <summary type="text">பிரான்சிலிருந்து பிரித்தானியாவுக்குள் சிறுபடகுகள் மூலம் நுழையும் புலம்பெயர்ந்தோர் இப்போது பெரிய படகுகளை பயன்படுத்தத் துவங்கியுள்ளார்கள்.


பிரான்சி...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரான்சிலிருந்து பிரித்தானியாவுக்குள் சிறுபடகுகள் மூலம் நுழையும் புலம்பெயர்ந்தோர் இப்போது பெரிய படகுகளை பயன்படுத்தத் துவங்கியுள்ளார்கள்.</p><p>


பிரான்சிலிருந்து பிரித்தானியாவுக்குள் சட்ட விரோத புலம்பெயர்வோரை தடுத்து நிறுத்த இருதரப்பும் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டுவரும் நிலையில், ஆட்கடத்தல்காரர்களும் புதிய நடவடிக்கைகளை துவக்கியுள்ளார்கள்.</p><h3>

சிறுபடகுகள் மூலம் நுழையும் புலம்பெயர்ந்தோர்?
</h3><p>
பிரித்தானியாவைப் பொருத்தவரை, சட்ட விரோத புலம்பெயர்வோர் முன்பு லொறிகள் மூலம் பிரித்தானியாவுக்கு நுழைந்துவந்தார்கள்.&nbsp;</p><p>
அரசு கட்டுப்பாடுகளை கடுமையாக்கியதால், சிறுபடகுகள் மூலம் பிரித்தானியாவுக்குள் நுழையத் துவங்கினார்கள்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/228a1e60-f0e0-4385-9ce7-1949cdbeed50/26-6a76bb567f3ff.webp' /></p><p>
அப்படி ஆங்கிலக்கால்வாய் வழியாக சிறுபடகுகள் மூலம் பிரித்தானியாவுக்குள் நுழைவோரைத் தடுப்பதற்காக பிரித்தானியா பிரான்சுக்கு 662 மில்லியன் பவுண்டுகள் கொடுக்க முன்வர, பிரான்ஸ் தரப்பு கட்டுப்பாடுகளை கடுமையாக்கிவருகிறது.
</p><p>
விடயம் என்னவென்றால், ஆட்கடத்தல்காரர்களும் அதற்கு ஈடாக தங்கள் கடத்தல் பாணியை மாற்றிவருகிறார்கள்.&nbsp;</p><p></p><p>

ஆம், பிரான்சிலிருந்து பிரித்தானியாவுக்குள் நுழைய முயலும் புலம்பெயர்வோரைக் குறித்து குறிப்பிடும்போது, ’சிறுபடகுகளை தடுத்து நிறுத்துதல்’ என்றே அது குறிப்பிடப்படுகிறது.
</p><p>
ஆனால், இப்போது சிறுபடகுகள் அல்ல, பிரம்மாண்டமான பெரிய படகுகளை பயன்படுத்தத் துவங்கியுள்ளார்கள் ஆட்கடத்தல்காரர்கள்.</p><p>

அதற்கு ஆதாரமாக, செவ்வாய்க்கிழமையன்று, 173 புலம்பெயர்வோர் பயணித்த படகொன்றின் எஞ்சினில் தீப்பற்றிய விடயம் பெரும் பரபரப்பை உருவாக்கியது நினைவிருக்கலாம்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1d27a15a-3920-45ab-a3f1-e2bb85115233/26-6a76bb5745a31.webp' /></p><p>
ஆக, பிரான்சிலிருந்து சட்டவிரோதமாக புலம்பெயர்வோரை, சிறுபடகுகள் மூலம் கொஞ்சம் கொஞ்சம் பேராக ஆங்கிலக்கால்வாய் வழியாக அனுப்பிவந்த ஆட்கடத்தல்காரர்கள், இப்போது ஒரே நேரத்தில் நூறுக்கும் அதிகமானோர் பயணிக்கும் பெரிய படகுகளை பயன்படுத்தத் துவங்கியுள்ளார்கள்.</p><p>

அதுமட்டுமின்றி, வழக்கமாக புலம்பெயர்வோர் பிரான்சிலிருந்து புறப்படும் இடங்கள் மட்டுமின்றி, பிரான்ஸ் மற்றும் பெல்ஜியம் நாட்டு கடற்கரைகளில் வெவ்வேறு இடங்களிலிருந்து புலம்பெயர்வோரை படகுகள் மூலம் பிரித்தானியாவுக்கு அனுப்புவதும் தெரியவந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக டெய்லி மெயில் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-08T05:15:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவில் இந்திய மாணவனுக்கு நேர்ந்த துயரம் ; ஏரியில் மிதந்த சடலம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/tragedy-strikes-indian-student-in-the-us-1786165602"></link>
            <id>https://canadamirror.com/article/tragedy-strikes-indian-student-in-the-us-1786165602</id>
            <summary type="text">அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள புகழ்பெற்ற பிக் பைன் லேக்ஸ் மலைப்பகுதிக்கு தனியாக மலையேற்றத்திற்கு சென்ற 26 வயதுடைய இந்திய வம்சாவளி மாணவர் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள புகழ்பெற்ற பிக் பைன் லேக்ஸ் மலைப்பகுதிக்கு தனியாக மலையேற்றத்திற்கு சென்ற 26 வயதுடைய இந்திய வம்சாவளி மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.</p><p> அவரது உடல் அங்குள்ள ஏரி ஒன்றில் இருந்து சடலமாக&nbsp; மீட்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9f6eafe1-6207-476a-9dda-db7c4b0c8a3d/26-6a76b964266d5.webp' /></p><p>
</p><p>


கடந்த ஆகஸ்ட் 1-ஆம் திகதி, கலிபோர்னியாவின் சியரா நெவாடா பகுதியில் உள்ள பிக் பைன் லேக்ஸ் மலைப்பாதையில் குறித்த மாணவன் தனியாக மலையேற்றத்தில் ஈடுபட்டார்.</p><p>அன்று இரவு 8:30 மணியளவில் தனது குடும்பத்தினருக்கு ஜி.பி.எஸ் மூலம் தனது இருப்பிடத்தை கடைசியாக அனுப்பியுள்ளார். அதன் பிறகு, அவரிடமிருந்து எந்த தகவலும் இல்லை. </p><p>


இதைத் தொடர்ந்து, ஹெலிகாப்டர்கள் மற்றும் மோப்ப நாய்களுடன் மீட்புக்குழுவினர் தேசிய வனப்பகுதியில் தேடுதல் வேட்டையில் இறங்கினர். </p><p>இரண்டு நாட்கள் தீவிரமாக தேடிய நிலையில், அங்குள்ள ஒரு ஏரியில் விக்ரம் முபாயி சடலமாக மிதப்பது கண்டுபிடிக்கப்பட்டது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-08T05:06:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[5 ஆம் வகுப்பு புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றும் மாணவர்களுக்கான விசேட அறிவிப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/2026-5th-grade-scholarship-examination-tomorrow-1786162188"></link>
            <id>https://ibctamil.com/article/2026-5th-grade-scholarship-examination-tomorrow-1786162188</id>
            <summary type="text">இந்த ஆண்டுக்கான 5 ஆம் வகுப்பு புலமைப்பரிசில் பரீட்சை இலங்கை முழுவதும் உள்ள 2,723 பரீட்சை மையங்களில் நாளை (09.08.2026) நடைபெறும் என பரீட்சை ஆணையாளர் நா...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்த ஆண்டுக்கான 5 ஆம் வகுப்பு புலமைப்பரிசில் பரீட்சை இலங்கை முழுவதும் உள்ள 2,723 பரீட்சை மையங்களில் நாளை (09.08.2026) நடைபெறும் என பரீட்சை ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார்.</p><p>

இவ்வாண்டு பரீட்சையில் மொத்தம் 294,089 "பரீட்சாத்திகள்" பங்கேற்கின்றனர். </p><p>இவர்களில் 220,366 "பரீட்சாத்திகள்" சிங்கள மொழிவழியிலும், 73,723 "பரீட்சாத்திகள்" தமிழ் மொழிவழியிலும் பதிவு செய்துள்ளனர்.</p><p></p><h2>5 ஆம் வகுப்பு புலமைப்பரிசில்&nbsp;</h2><p>
</p><p>மேலும் கருத்து தெரிவித்த அவர், பரீட்சை மையங்களுக்குள் பெற்றோரை அனுமதிக்கப்படுவதில்லை என்றும் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a1e731d7-2aa2-4b5c-9dfb-3891f78f2582/26-6a76b85d87363.webp' /></p><p>மாணவர்கள் தங்கள் மன ஒருமைப்பாட்டைப் பேணுவதற்கும், பரீட்சையை கவனத்துடன் எதிர்கொள்வதை எளிதாக்குவதற்கும், பரீட்சை தொடங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பே பரீட்சை மையங்களுக்கு வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.&nbsp;</p><p>

இரண்டாவது வினாத்தாள் முதலில் வழங்கப்பட்டு காலை 9.30 மணிக்குத் தொடங்கி 10.45 மணிக்கு முடிவடையும் எனத் திட்டமிடப்பட்டுள்ளது.</p><p> 

ஒரு சிறு இடைவேளைக்குப் பிறகு, காலை 11.15 மணி முதல் மதியம் 12.15 மணி வரை ஒரு மணி நேரத்திற்கு முதல் வினாத்தாள் வழங்கப்படும்.</p><p>

பரீட்சை எழுதும் அனைத்து மாணவர்களும் வினாத்தாளில் உள்ள அறிவுறுத்தல்களைக் கவனமாகப் படித்து, தங்களது பரீட்சை எண்ணைச் சரியாகக் குறிப்பிட்டு, வினாத்தாளிலேயே தெளிவான கையெழுத்தில் பதில்களை அளிக்க வேண்டும் என்று பரீட்சை ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார்.</p><p>

பரீட்சை ஆணையர் நாயகம், தேர்வர்கள் கைபேசிகள், ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள், குறிப்புகள் அல்லது வேறு எந்த மின்னணு சாதனங்களையும் பரீட்சை மண்டபத்திற்குள் கொண்டு வருவதைத் தவிர்க்குமாறு அவர் அறிவுறுத்தி உள்ளார்.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-08T05:05:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[தாய்லாந்தை உலுக்கிய சம்பவம்... 9 பேர்கள் ஆபத்தான நிலையில்: 8 பேர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/eight-killed-including-attacker-1786163337"></link>
            <id>https://news.lankasri.com/article/eight-killed-including-attacker-1786163337</id>
            <summary type="text">பேங்காக் அருகே பாடசாலையில் துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு முன், மாணவர் ஒருவர் தனது தாத்தா-பாட்டியை கொன்றுள்ளார்.
தாய்லாந்தைச் சேர்ந்த பதின்ம வயது இளை...</summary>
            <content type="html"><![CDATA[<p>பேங்காக் அருகே பாடசாலையில் துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு முன், மாணவர் ஒருவர் தனது தாத்தா-பாட்டியை கொன்றுள்ளார்.
</p><p>தாய்லாந்தைச் சேர்ந்த பதின்ம வயது இளைஞர் ஒருவர் தனது தாத்தா-பாட்டியை கொன்ற பிறகு, தனது பள்ளியில் துப்பாக்கிச் சூடு நடத்தி ஐந்து பேரைக் கொன்று, தானும் உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.</p><h2>ஆபத்தான நிலையில்</h2><p>
</p><p>துப்பாக்கி வன்முறையைக் கையாள்வதில் திணறிக்கொண்டிருக்கும் ஒரு நாட்டை உலுக்கியுள்ள இன்னொரு தாக்குதல் சம்பவம் இது என்றே கூறுகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/37444a61-6583-481a-a4b9-340785be4267/26-6a76b08bdc6e1.webp' /></p><p> பேங்காக் நகருக்கு வடமேற்கே அமைந்துள்ள புகழ்பெற்ற டெப்சிரின் நோந்தபுரி பாடசாலையில் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில், 14 வயதுடைய அந்த மாணவர் 30-க்கும் மேற்பட்டோரைப் காயப்படுத்தியுள்ளார். </p><p>இதில், ஒன்பது பேர் ஆபத்தான நிலையில் இருப்பதாக தாய்லாந்து சுகாதாரத் துறை தெரிவித்துள்ளதை அடுத்து, இறப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு. </p><p>தாக்குதலில் ஈடுபட்ட அந்த மாணவர் தனது தாத்தாவிற்குச் சொந்தமான துப்பாக்கியைக் கொண்டு குறைந்தது 26 முறை சுட்டதாக பொலிஸ் தரப்பில் தெரிவ்க்கப்பட்டுள்ளது; அவரிடம் மேலும் 34 தோட்டாக்கள் எஞ்சியிருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளனர்.</p><p></p><p> </p><p>பாடசாலையிலிருந்து வெளியேற்றப்பட்டபோது, ​​மாணவர்கள் வெறும் காலுறைகளுடன் ஓடும் காட்சிகள் அந்த இடத்திலிருந்து எடுக்கப்பட்ட படங்களில் பதிவாகியிருந்தன. </p><p>இதனிடையே, புதிய துப்பாக்கிக் கட்டுப்பாட்டுச் சட்டங்களைச் செயல்படுத்தப்போவதாக நாட்டின் தலைவர் உறுதியளித்த நிலையில், மதிய வேளையில், வழக்கமாக மாணவர்கள் விளையாடிக்கொண்டிருக்கும் விளையாட்டு மைதானம் அதிகாரிகள் மற்றும் ஊடகத்தினரால் நிறைந்திருந்தது.</p><h2>உலகளவில் 13-வது இடம்</h2><p> </p><p>தென்கிழக்கு ஆசியாவிலேயே தாய்லாந்தில்தான் பொதுமக்களிடையே துப்பாக்கி வைத்திருக்கும் விகிதம் மிக அதிகமாக உள்ளது. </p><p>மேலும், 2017-ஆம் ஆண்டில் சுவிட்சர்லாந்தை தளமாகக் கொண்ட 'ஸ்மால் ஆர்ம்ஸ் சர்வே' என்ற அமைப்பு, சிறு ரக துப்பாக்கிகளை வைத்திருப்பதில் தாய்லாந்தை உலகளவில் 13-வது இடத்தில் தரவரிசைப்படுத்தியது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a23080cb-48d8-4d06-91c3-9bd5febb3f6d/26-6a76b08cae1f0.webp' /></p><p> </p><p>சமீபத்திய வருடங்களில் தாய்லாந்தில் பாடசாலைகள் மற்றும் பாங்காக்கில் உள்ள ஒரு பெரிய வணிக வளாகம் ஆகியவற்றில் நடந்த சம்பவங்கள் உட்பட பல துப்பாக்கிச் சூடு தாக்குதல்கள் நிகழ்ந்துள்ளன; </p><p>இதில் 2022-ஆம் வருடம் நாட்டின் வடகிழக்குப் பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் 22 சிறார்கள் உட்பட 37 பேர் கொல்லப்பட்ட சம்பவமும் அடங்கும். </p><p>தாக்குதல் நடந்த இப்பாடசாலையானது, தாய்லாந்து அரச குடும்பத்தால் நிறுவப்பட்ட 'டெப்சிரின்' (Debsirin) கல்விக் குழுமத்தின் ஒரு பகுதியாகும். இதன் முன்னாள் மாணவர்களில் பிரதமர்கள், அறிஞர்கள் மற்றும் எழுத்தாளர்கள் ஆகியோர் அடங்குவர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-08T05:05:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டின் சில பகுதிகளில் பலத்த மழைவீழ்ச்சி பதிவாகும் சாத்தியம்! பொதுமக்களுக்கான விசேட அறிவுறுத்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/weather-alert-in-sri-lanka-1786160763"></link>
            <id>https://tamilwin.com/article/weather-alert-in-sri-lanka-1786160763</id>
            <summary type="text">சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. </p><p>

இன்றைய தினத்திற்கான (08.08.2026) காலநிலை தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் மேலும்,

நாட்டின் பல பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.</p><h2>இடியுடன் கூடிய மழை</h2><p> </p><p>

அதன்படி, சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
</p><p>
குறித்த பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d4323414-fcaf-42a8-a2bc-4706b6a63ccb/26-6a76b8f542f24.webp' /></p><h2>பலத்த காற்று வீசக்கூடும்</h2><p>
</p><p>
வடமேல் மாகாணத்தில் அவ்வப்போது சில இடங்களில் மழை பெய்யக்கூடும். வடமத்திய, சப்ரகமுவ, தென், மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 40 முதல் 50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
மேலும், இடியுடன் கூடிய மழையின்போது ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களால் ஏற்படும் அனர்த்தங்களை தவிர்ப்பதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களிடம் வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-08T05:05:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய பிக்பாஸ் புகழ் சௌந்தர்யா... போட்டோஸ் இதோ]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/soundarya-nanjundan-birthday-celebration-photos-1786165256"></link>
            <id>https://cineulagam.com/article/soundarya-nanjundan-birthday-celebration-photos-1786165256</id>
            <summary type="text">சௌந்தர்யாதமிழில் விஜய் டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சிகளில் ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களால் பார்க்கப்பட்ட ஒரு நிகழ்ச்சியாக உள்ளது பிக்பாஸ்.&amp;nbsp;100 நாட்கள...</summary>
            <content type="html"><![CDATA[<h2>சௌந்தர்யா</h2><p>தமிழில் விஜய் டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சிகளில் ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களால் பார்க்கப்பட்ட ஒரு நிகழ்ச்சியாக உள்ளது பிக்பாஸ்.&nbsp;</p><p>100 நாட்கள் ஒரே வீட்டில் போட்டியாளர்கள் பலர் இடம்பெற அவர்களுக்குள் கடுமையான போட்டிகள் வைத்து அதில் டாப்பில் ஜெயிப்பவர்கள் பைனல் வர அவர்களில் ரசிகர்களால் யார் தேர்ந்தெடுக்கப்படுகிறாரோ அவரே வெற்றியாளராக அறிவிக்கப்படுகிறார்.&nbsp;</p><p>அப்படி ஒரு பிக்பாஸ் சீசனில் கலந்துகொண்டு தமிழக மக்களிடம் கவனம் பெற்றவர் தான் சௌந்தர்யா.&nbsp;</p><p>இவர் தனத இன்ஸ்டாவில் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்களை வெளியிட அவருக்கு ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகிறார்கள். இதோ அந்த போட்டோஸ்,</p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-08T05:04:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[LPL கிரிக்கெட் இறுதிப் போட்டியில் Jaffna Kings]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/2026-lanka-premier-league-lpl-cricket-final-match-1786163497"></link>
            <id>https://ibctamil.com/article/2026-lanka-premier-league-lpl-cricket-final-match-1786163497</id>
            <summary type="text">ஜஃப்னா கிங்ஸ் (Jaffna Kings) அணிக்கும் கோல் கெலன்ட்ஸ் (Galle Gallants) அணிக்கும் இடையிலான லங்கா பிரீமியர் லீக் (LPL) கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜஃப்னா கிங்ஸ் (Jaffna Kings) அணிக்கும் கோல் கெலன்ட்ஸ் (Galle Gallants) அணிக்கும் இடையிலான லங்கா பிரீமியர் லீக் (LPL) கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி நடைபெறவுள்ளது.</p><p> </p><p>தொடரின் இறுதிப் போட்டியானது கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் இன்று (8) இரவு நடைபெறவுள்ளது.</p><p>லீக் சுற்றின் அனைத்துப் போட்டிகளின் முடிவிலும் இவ்விரு அணிகளும் புள்ளிப்பட்டியலின் முதல் (ஜஃப்னா) மற்றும் இரண்டாம் இடங்களைப் பிடித்திருந்தன.</p><p></p><p>
</p><h2>ஆட்ட நிர்ணயக் குற்றச்சாட்டில் கைது</h2><p>
 

இதற்கமைய, இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது தகுதிப் போட்டியில் (Qualifier 1) திரில் வெற்றி பெற்ற ஜஃப்னா கிங்ஸ் அணி, இறுதிப் போட்டிக்கு நேரடியாகத் தகுதி பெற்றது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4689e219-1215-44a2-9c28-a8e51bd5cb7a/26-6a76b5af5f54d.webp' /></p><p>இருப்பினும், வெளியேற்றப் போட்டியில் வெற்றி பெற்று வந்த கொழும்பு கெப்ஸ் அணியை இரண்டாவது தகுதிப் போட்டியில் வீழ்த்திய கோல் கெலன்ட்ஸ் அணி, மீண்டும் இறுதிப் போட்டியில் விளையாடும் வாய்ப்பைப் பெற்றுக்கொண்டது.
</p><p>
 

இதேவேளை, ஜஃப்னா கிங்ஸ் (Jaffna Kings) அணியை, இந்தியாவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சஹீர் கான் மற்றும் தொழிலதிபர் நாகேந்திர சித்தௌதம் ஆகியோரை இணை உரிமையாளர்களாகக் கொண்ட Anchor Sports AB நிறுவனம் தனதாக்கிக் கொண்டுள்ளது.</p><p>அணியின் இணை உரிமையாளர் மன்ஜோத் கல்ரா ஆட்ட நிர்ணயக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, இலங்கை கிரிக்கெட் சபை மற்றும் IPG நிறுவனத்தின் தற்காலிக நிர்வாகத்தில் இருந்த இந்த அணி, தற்போது மீண்டும் நிலையான உரிமையாளர்களின் கீழ் வந்துள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-08T05:00:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[முடியை அடர்தியாக்க முருங்கை இலை.., எப்படி பயன்படுத்துவது?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/moringa-leaf-for-hair-growth-in-tamil-1786164902"></link>
            <id>https://news.lankasri.com/article/moringa-leaf-for-hair-growth-in-tamil-1786164902</id>
            <summary type="text">பெண்களின் தலைமுடி என்பது எப்பொழுதும் ஒரு தனி அழகுதான்.

ஆனால் முடி உதிர்தல், வறண்ட முடி போன்ற பிரச்சனைகள் காரணமாக முடி மெலிதாகி விடுகின்றன.

அந்தவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பெண்களின் தலைமுடி என்பது எப்பொழுதும் ஒரு தனி அழகுதான்.
</p><p>
ஆனால் முடி உதிர்தல், வறண்ட முடி போன்ற பிரச்சனைகள் காரணமாக முடி மெலிதாகி விடுகின்றன.
</p><p>
அந்தவகையில், முடியின் அடர்த்தியை அதிகரிக்க முருங்கை இலையை எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.</p><p></p><h2>

தேவையான பொருட்கள்</h2><ul><li>

முருங்கை இலை- 2 கைப்பிடி</li><li>
தண்ணீர்- சிறிதளவு</li></ul><h2>

எப்படி பயன்படுத்துவது?
</h2><p>
முதலில் முருங்கை இலையை நன்கு கழுவி உலரவைத்து எடுத்துக்கொள்ளவும்.</p><p>

பின்னர் இதனை ஒரு வாணலில் சேர்த்து மிதமான தீயில் வைத்து வறுத்து நன்கு அரைத்து எடுத்துக்கொள்ளவும்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/29c312c5-3fa7-43a1-acfb-41e7a926ebd6/26-6a76b6a8efeed.webp' /></p><p>அடுத்து அரைத்த பொடியுடன் தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து தலைமுடியில் உச்சந்தலை முதல் முடியின் நுனி வரை நன்கு தடவி மசாஜ் செய்ய வேண்டும்.</p><p>

பின் இதனை 20 நிமிடம் அப்படியே விட்டு பின் மென்மையான ஷாம்பு கொண்டு கூந்தலை அலசலாம்.
</p><p>
இதனை தொடர்ந்து வாரத்திற்கு 2 முறை பயன்படுத்தி வந்தால் கூந்தல் அடர்த்தியாக வளரும்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-08T04:56:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான முக்கிய அறிவித்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/important-notice-for-students-sitting-the-a-l-exam-1786164853"></link>
            <id>https://jvpnews.com/article/important-notice-for-students-sitting-the-a-l-exam-1786164853</id>
            <summary type="text">கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை ஓகஸ்ட் 10 ஆம் திகதி ஆரம்பமாகி செப்டம்பர் 05 ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் 2,532 மத்திய நிலையங்களில் நடைபெறுவதற...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை ஓகஸ்ட் 10 ஆம் திகதி ஆரம்பமாகி செப்டம்பர் 05 ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் 2,532 மத்திய நிலையங்களில் நடைபெறுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் தெரிவித்துள்ளார்.
</p><p style="text-align: justify; ">
 

இம்முறை பரீட்சைக்காக பாடசாலை விண்ணப்பதாரர்கள் 264,496 பேரும், தனியார் விண்ணப்பதாரர்கள் 107,814 பேரும் அடங்கலாக மொத்தம் 372,310 விண்ணப்பதாரர்கள் தோற்றவுள்ளனர்.</p><p style="text-align: justify;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/016f5edb-a472-48a1-b4f0-fae43266dbd2/26-6a76b6775d020.webp' /></p><h2 style="text-align: justify;">அனுமதி அட்டை</h2><p>
</p><p style="text-align: justify;">
 

பாடசாலை விண்ணப்பதாரர்களின் பரீட்சை அனுமதி அட்டைகள் அந்தந்த அதிபர்களுக்கும், தனியார் விண்ணப்பதாரர்களின் அனுமதி அட்டைகள் அவர்களின் முகவரிகளுக்கும் தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டார்.
</p><p style="text-align: justify;">
 

பரீட்சை மண்டபத்திற்குள் நுழைவதற்கு முன்னர் அனுமதி அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ள தங்களது கையொப்பத்தை முறைப்படி சான்றொப்பம் செய்து கொள்வது கட்டாயமாகும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
</p><p style="text-align: justify;">
 

அனுமதி அட்டை தொலைந்து போயிருந்தால், பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் இருந்து அதை மீண்டும் பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும்.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;">

 

பரீட்சையின் போது ஆளடையாளத்தை உறுதிப்படுத்துவதற்கு தேசிய அடையாள அட்டை, செல்லுபடியாகும் சாரதி அனுமதிப்பத்திரம் அல்லது செல்லுபடியாகும் கடவுச்சீட்டு ஆகியவற்றை மட்டுமே பயன்படுத்த முடியும்.</p><p style="text-align: justify;">
 

தேசிய அடையாள அட்டை தொலைந்துபோயிருந்தால், தற்காலிக அடையாள அட்டையாக தபால் அடையாள அட்டைக்கு பயன்படுத்தப்படும் இரண்டு புகைப்படங்களை பாடசாலை விண்ணப்பதாரர்கள் அதிபர் மூலமும், தனியார் விண்ணப்பதாரர்கள் கிராம உத்தியோகத்தர் மூலமும் சான்றொப்பம் செய்து வைத்திருக்க வேண்டும் என்றும் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.</p><p style="text-align: justify;">

 

பரீட்சை கால அட்டவணையை தீவிரமாகக் கவனத்திற் கொண்டு, பரீட்சை தொடங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னதாகவே பரீட்சை நிலையங்களுக்கு வருமாறு பரீட்சைத் திணைக்களம் மாணவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.</p><p style="text-align: justify;"></p>]]></content>
            <updated>2026-08-08T04:54:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறைகளை உலுக்கிய ஒரே நேரக் கலவரங்கள்....! உளவுத்துறை எச்சரித்த பாரிய சதி அம்பலம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/joint-security-set-up-over-prison-riots-in-sl-1786161869"></link>
            <id>https://ibctamil.com/article/joint-security-set-up-over-prison-riots-in-sl-1786161869</id>
            <summary type="text">நாட்டின் பல சிறைச்சாலைகளில் ஒரே நேரத்தில் வெடித்துள்ள மோதல்கள் மற்றும் அசாதாரண சூழ்நிலைகளுக்குப் பின்னணியில் ஒரு பாரிய ஒருங்கிணைக்கப்பட்ட சதித் திட்டம...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டின் பல சிறைச்சாலைகளில் ஒரே நேரத்தில் வெடித்துள்ள மோதல்கள் மற்றும் அசாதாரண சூழ்நிலைகளுக்குப் பின்னணியில் ஒரு பாரிய ஒருங்கிணைக்கப்பட்ட சதித் திட்டம் உள்ளதாக உளவுத்துறை தகவல்கள் தெரிவிப்பதாக தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
</p><p>
நாட்டிலுள்ள ஐந்து சிறைச்சாலைகளில் கலவரங்கள் வெடிக்கக்கூடும் என உளவுத்துறை எச்சரித்து சில நாட்களிலேயே, கொழும்பு நியூ மகசின், குருவிட்ட மற்றும் நீர்கொழும்பு பல்லன்சேன ஆகிய சிறைச்சாலைகளில் ஒரே நேரத்தில் இக்கலவரங்கள் வெடித்ததாக தெரிவிக்கப்படுகின்றது. </p><p>

இந்த வன்முறைச் சம்பவங்களில் இதுவரை 3 கைதிகள் உயிரிழந்துள்ளதுடன், பெருமளவிலானோர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p><p></p><h2>முக்கிய கைதிகள்</h2><p>
</p><p>இதனடிப்படையில் கொழும்பு நியூ மகசின் சிறைச்சாலையில் மதிலுக்கு மேலிருந்து வீசப்பட்ட ஹெரோயின் போதைப்பொருள் பொட்டலத்தைச் சிறை அதிகாரிகள் கைப்பற்றியதைத் தொடர்ந்து இரு கைதி குழுக்களுக்கு இடையே மோதல் தொடங்கியது.</p><p> 

பாதாள உலகக் குழுத் தலைவரான கொஸ்மல்லி என்பவரின் சகாக்கள் உட்பட 40 இற்கும் மேற்பட்ட கைதிகள் சிறைக் கதவை உடைத்துக் கொண்டு வெளியே வந்து, அதிகாரிகளை அச்சுறுத்தி வெளிவாயில் வழியாகத் தப்பியோட முயன்றனர்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9ff8caa1-058c-4bb3-9716-1b2cbfc388fd/26-6a76b5a53764a.webp' /></p><p>ஏற்பட்ட கடுமையான கலவரத்தில் ஹோமாகம ஹந்தயா என்பவரின் கூலிப்படைத் துப்பாக்கிதாரியான ஹோமாகம - கட்டுவனப் பகுதியைச் சேர்ந்த 35 வயதான முகமது அஸ்மான் ஷெரிப்டீன் என்ற கைதி உயிரிழந்தார்.</p><p> 

இச்சம்பவத்தில் காயமடைந்த 10 கைதிகள் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், கலவரத்திற்குத் தலைமை தாங்கிய முக்கிய கைதிகள் வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.</p><p>
</p><p></p><h2>போதிய வசதிகள்</h2><p>அதேவேளை, நீர்கொழும்பு சிறைச்சாலையிலிருந்து குருவிட்ட சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட 1,000 இற்கும் மேற்பட்ட கைதிகளுக்குப் போதிய வசதிகள் இல்லை எனக் கூறித் தொடங்கப்பட்ட ஆர்ப்பாட்டம் வன்முறையாக மாறியது.</p><p>

ஆத்திரமடைந்த கைதிகள் சிறைச்சாலை வைத்தியசாலை மற்றும் கட்டிடங்கள் மீது தாக்குதல் நடத்தி சேதத்தை ஏற்படுத்திய நிலையில், நிலமையைக் கட்டுப்படுத்த அதிகாரிகளும் காவல்துறையினரும் கண்ணீர்ப்புகைப் பிரயோகம் மற்றும் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2cfd7356-92e4-4ce9-a900-e911fb00cc20/26-6a76b5a3adc92.webp' /></p><p>இதில் காயமடைந்த 15 கைதிகளில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், மூவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
</p><p>
மேலும், நீர்கொழும்பு பல்லன்சேன திறந்தவெளிச் சிறைச்சாலையில் காலை உணவு வழங்குவதற்காகக் கைதிகள் வெளியில் அழைத்துவரப்பட்ட போது, போதைப்பொருள் தகராறு காரணமாக மோதல் வெடித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p></p><h2>கண்ணீர்ப்புகைப் பிரயோகம்</h2><p>

கைதிகள் கூரை மீதேறிப் போராட்டம் நடத்தியதுடன் பிரதான வாயில் அருகே வன்முறையில் ஈடுபட்ட நிலையில், காவல்துறையினர், விசேட அதிரடிப்படை (STF), கலகக் கட்டுப்பாட்டுப் பிரிவு மற்றும் விமானப்படை இணைந்து கண்ணீர்ப்புகைப் பிரயோகம் மேற்கொண்டு நிலமையைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர்.</p><p>

காயமடைந்த 28 கைதிகள் வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e2381eb0-1323-4bee-b153-eb434f0ac107/26-6a76b5a47a40f.webp' /></p><p>முன்னதாக நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் 31 பேரும், மஹர சிறைச்சாலை மோதலில் 2 கைதிகள் உயிரிழந்தும் 21 பேர் காயமடைந்தும் இருந்தனர். 

தற்போது நிலவும் அசாதாரண நிலமையைக் கருத்திற் கொண்டு காவல்துறை மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரியவின் தலைமையில் நாடு முழுவதிலும் உள்ள சிறைச்சாலைகளுக்குப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.</p><p> 

அத்துடன், ஜனாபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் நடைபெற்ற உயர் மட்டக் கூட்டத்தில், காவல்துறையினர், விசேட அதிரடிப்படை மற்றும் முப்படை இணைந்த கூட்டுப் பாதுகாப்பு வேலைத்திட்டத்தை (Joint Security Mechanism) எதிர்வரும் வாரத்தில் நடைமுறைப்படுத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-08T04:51:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[சர்ச்சையை ஏற்படுத்திய எம்.பிக்களின் சம்பள விவகாரம் : அரச தரப்பின் அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sl-parliament-members-fuel-allowance-increased-1786162054"></link>
            <id>https://ibctamil.com/article/sl-parliament-members-fuel-allowance-increased-1786162054</id>
            <summary type="text">நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பள விவகாரம் குறித்து பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் நிஷாந்த ஜயவீர தெளிவுபடுத்தியுள்ளார்.அதன்படி, நாடாளுமன்ற உறுப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பள விவகாரம் குறித்து பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் நிஷாந்த ஜயவீர தெளிவுபடுத்தியுள்ளார்.</p><p>அதன்படி, நாடாளுமன்ற உறுப்பினர்களின் அடிப்படை வேதனங்கள் உயர்த்தப்படவில்லை எனவும் மாறாக, தற்போதைய எரிபொருள் விலைகளுக்கு ஏற்ப எரிபொருள் கொடுப்பனவு திருத்தியமைக்கப்பட்டமையினால், அவர்களின் வருமானத்தில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.</p><p> நாடாளுமன்றத்தில் நேற்றைய தினம் (07) உரையாற்றிய போதே அவர் இந்த விடயங்களைக் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>எரிபொருள் கொடுப்பனவு</h2><p>அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டின் பொருளாதார நிலைமை சீரடைந்ததைத் தொடர்ந்து, தகுதிவாய்ந்த அரச அதிகாரிகளுக்கு வழங்கப்படும் எரிபொருள் கொடுப்பனவை அரசாங்கம் திருத்தியமைத்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/26b6a580-3d54-4ca5-b64f-24d65a11b6b5/26-6a76b2786794f.webp' /></p><p>இதன் காரணமாக, எரிபொருள் கொடுப்பனவைப் பெறும் அனைத்து அரச அதிகாரிகளின் மாதாந்தக் கொடுப்பனவிலும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
</p><p>
இதன் தொடர்ச்சியாகவே நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் திருத்தப்பட்ட எரிபொருள் கொடுப்பனவு மூலம் இந்த அதிகரிப்பு கிடைத்துள்ளது“ என்று அவர் தெரிவித்துள்ளார்.</p><p>இதேவேளை&nbsp;நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெறும் சம்பளத்தில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டு&nbsp;நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தனது மாதாந்த சம்பளப் பட்டியலை தனது அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ள விடயம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-08T04:47:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[குழந்தையின் பிறந்தநாள் விழாவில் துப்பாக்கிச்சூடு ; மூன்று சந்தேகநபர்கள் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/gunfire-at-birthday-party-three-suspects-arrested-1786164226"></link>
            <id>https://jvpnews.com/article/gunfire-at-birthday-party-three-suspects-arrested-1786164226</id>
            <summary type="text">வத்தளை, கதிரான பகுதியில் பிறந்தநாள் விழாவொன்றில் நபர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய துப்பாக்கித்தாரி உட்பட மேலும் மூன்று சந்தேகநப...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">வத்தளை, கதிரான பகுதியில் பிறந்தநாள் விழாவொன்றில் நபர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய துப்பாக்கித்தாரி உட்பட மேலும் மூன்று சந்தேகநபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
</p><p style="text-align: justify; ">
 

கடந்த ஜூலை 23 ஆம் திகதி இரவு கதிரான, பள்ளியவத்தை பகுதியில் உள்ள மண்டபம் ஒன்றில் நடைபெற்ற விழாவில் கலந்துகொண்டிருந்த நபர் ஒருவர் மீது காரில் வந்த குழுவினரால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/57749d68-99d7-4e43-a279-d5a528d6a1ed/26-6a76b403d75f6.webp' /></p><h2 style="text-align: justify; ">துப்பாக்கிச் சூடு</h2><p style="text-align: justify; ">

 

இச்சம்பவம் தொடர்பில் மேல் மாகாண வடக்கு குற்றப் பிரிவின் அதிகாரிகளால் பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகளின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர் நேற்றைய தினம் (7) இந்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p style="text-align: justify; ">
 

கைது செய்யப்பட்டவர்களில் துப்பாக்கிதாரியை தவிர, காரை ஓட்டிச் சென்ற சாரதியும், குற்றவாளிகள் தலைமறைவாக இருக்க உதவிய நபர் ஒருவரும் அடங்குவதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
</p><p style="text-align: justify; ">
 

அவர்கள் 26, 35 மற்றும் 36 வயதுடைய ஜிந்துப்பிட்டி, மாத்தளை மற்றும் கடுவெல ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p style="text-align: justify; ">

 

போதைப்பொருள் கடத்தல்காரராக கருதப்படும் மட்டக்குளியைச் சேர்ந்த 'குடு ரொஷான்' என்பவரைக் இலக்கு வைத்தே அன்றைய தினம் இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும், எனினும் இலக்கு தவறியதால் அவருக்கு அருகில் இருந்த நபர் மீது துப்பாக்கிச் சூடு பட்டு உயிரிழந்ததாகவும் பொலிஸார் முன்னர் தெரிவித்திருந்தனர்.</p><p style="text-align: justify; ">

 

இக்கொலைச் சம்பவம் தொடர்பில் இரு பெண்கள் உட்பட நால்வர் அண்மையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-08-08T04:43:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[புலமைப்பரிசில் பரீட்சை! மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கான அவசர அறிவுறுத்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/scolarship-exam-in-sri-lanka-1786162126"></link>
            <id>https://tamilwin.com/article/scolarship-exam-in-sri-lanka-1786162126</id>
            <summary type="text">தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை நாளை நடைபெறவுள்ள நிலையில் பெற்றோர்கள் பரீட்சை நிலையங்களுக்குள் நுழைவதற்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது என&amp;nbsp;பரீட்சைகள் ஆ...</summary>
            <content type="html"><![CDATA[<p>தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை நாளை நடைபெறவுள்ள நிலையில் பெற்றோர்கள் பரீட்சை நிலையங்களுக்குள் நுழைவதற்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது என&nbsp;பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார்.</p><p>அத்துடன் பரீட்சையை எதிர்கொள்வதற்கு ஏதுவாக, பரீட்சை தொடங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னதாகவே பரீட்சை நிலையங்களுக்கு வருமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.&nbsp;</p><h2>மேலதிக வகுப்புகளை நடத்தும் காலம்</h2><p>
</p><p>
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாடளாவிய ரீதியில் உள்ள 2723 பரீட்சை மத்திய நிலையங்களில் இம்முறை தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை நாளை (09.08.2026) நடைபெறவுள்ளது. இம்முறை பரீட்சைக்காக மொத்தம் 294089 விண்ணப்பதாரர்கள் தோற்றவுள்ளதுடன், அவர்களில் சிங்கள மொழியில் 220366 விண்ணப்பதாரர்களும், தமிழ் மொழியில் 73723 விண்ணப்பதாரர்களும் பதிவு செய்துள்ளனர்.</p><p>இப்பரீட்சைக்கான மேலதிக வகுப்புகளை நடத்தும் காலம் ஆகஸ்ட் 5ஆம் திகதி நள்ளிரவுடன் நிறைவடைந்துள்ளது. பரீட்சை முடியும் வரை அச்சு அல்லது மின்னணு ஊடகங்கள் வாயிலாக புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான விளம்பரப் பணிகளை மேற்கொள்வது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/457c3aff-8959-4697-b130-5800f4a63d03/26-6a76b2216bd2e.webp' /></p><p> </p><p>

பெற்றோர்கள் பரீட்சை நிலையங்களுக்குள் நுழைவதற்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது. மாணவர்களின் மன ஒருமைப்பாட்டைப் பேணி, கவனத்துடன் பரீட்சையை எதிர்கொள்வதற்கு ஏதுவாக, பரீட்சை தொடங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னதாகவே பரீட்சை நிலையங்களுக்கு வருமாறு பரீட்சைத் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
</p><p>
முதலாவதாக இரண்டாம் வினாத்தாள் வழங்கப்படும் என்பதுடன், அது காலை 9.30 மணிக்குத் தொடங்கி காலை 10.45 மணிக்கு நிறைவடையும்.</p><h2>அறிவுறுத்தல்</h2><p> 

அதன்பின் கிடைக்கும் சிறிய இடைவேளைக்குப் பிறகு, காலை 11.15 முதல் நண்பகல் 12.15 வரை ஒரு மணி நேர காலம் முதல் வினாத்தாளுக்காக ஒதுக்கப்படும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0360b0d4-0f9f-4b49-af44-3dec0164ef59/26-6a76b222242b6.webp' /></p><p>
</p><p>
பரீட்சைக்குத் தோற்றும் அனைத்து மாணவர்களும் வினாத்தாளில் உள்ள அறிவுறுத்தல்களை நன்றாக வாசித்து, தங்களது பரீட்சை இலக்கத்தை சரியாக குறிப்பிட்டு, தெளிவான கையெழுத்தில் வினாத்தாளிலேயே பதிலளிக்க வேண்டும் என்றும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
</p><p>
மேலும், கையடக்கத் தொலைபேசிகள், ஸ்மார்ட் கடிகாரங்கள், குறிப்புகள் அல்லது ஏனைய இலத்திரனியல் சாதனங்கள் எதையும் பரீட்சை மண்டபத்திற்குள் கொண்டு வரத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-08T04:43:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thileepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வவுனியாவில் கைது செய்யப்பட்ட சொகுசு பேருந்து உரிமையாளர் - நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/luxury-bus-owner-arrested-vavuniya-court-orders-1786161865"></link>
            <id>https://tamilwin.com/article/luxury-bus-owner-arrested-vavuniya-court-orders-1786161865</id>
            <summary type="text">வவுனியா, புளியங்குளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சொகுசு
பேருந்தின் உரிமையார் வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தால்
விடுவிக்கப்பட்டுள்ளார்.

கடந்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>வவுனியா, புளியங்குளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சொகுசு
பேருந்தின் உரிமையார் வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தால்
விடுவிக்கப்பட்டுள்ளார்.
</p><p>
கடந்த 31 ஆம் திகதி புளியங்குளம் பகுதியில் விபத்து ஏற்பட்டு ஒருவர் மரணமடைந்த
நிலையில் பேருந்து சாரதி கைது செய்யப்பட்டிருந்தார். </p><p>அதன் பின் குறித்த பேருந்து சேவையின் உரிமையாளர் புளியங்குளம் பொலிஸ் நிலையத்திற்கு வாக்குமூலம்
வழங்குவதற்காக கடந்த செவ்வாய்க்கிழமை அழைக்கப்பட்ட நிலையில் பொலிஸாரால் கைது
செய்யப்பட்டிருந்தார்.</p><h2>போக்குவரத்து நடவடிக்கைகளின் போது</h2><p>

இந்நிலையில் குறித்த பேருந்து உரிமையாளரை புதன்கிழமை (05.08.2026) வவுனியா மாவட்ட
நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய நிலையில அவர் நீதிமன்றத்தால்
விடுவிக்கப்பட்டதுடன், சாரதி தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/53ca0034-15a1-4db5-9dfd-1dd016b63c9c/26-6a76b3b0d08ca.webp' /></p><p>இச்சம்பவம் தொடர்பில் குறிதத சொகுசு பேரூந்தின உரிமையாளர்
வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது,

புளியங்குளததில் ஏற்பட்ட விபத்து சம்பவம் துர்திஸ்டவசமானது. ஏற்றுக் கொள்ள
முடியாத ஒன்று. </p><p>போக்குவரத்து நடவடிக்கைகளின் போது விபத்துக்கள் எதிர்பாரதவை.
இருந்த போதும் அன்றைய சம்பவம் எம்மால் ஏற்றுக் கொள்ளமுடியாதவை. </p><p>குறித்த
பேருந்து விபத்தால் மரணித்த குடும்பஸ்தரின் இழப்பை எம்மால் ஏற்றுக் கொள்ள
முடியாது. இதற்காக நாம் மனம் வருந்துவதுடன அவர்களின் குடும்பத்திற்கு எமது
ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்வதுடன், அவர்களுக்கான தேவையான சில
உதவிகளையும் நாம் செய்திருந்திருந்தோம்.</p><p>எனினும், விபத்தின் போது எமது சொகுசு பேரூந்தை செலுத்திய சாரதியின் தவறை எமது
பணிக்குழு கவனம் செலுத்த தவறியுள்ளனர்.</p><p> இந்த தவறுக்கு வருந்துவதுடன், நாம்
ஒன்று, இரண்டு வருடமல்ல. 30 வருடங்களுக்கு மேலாக பேருந்து சேவையில் ஈடுபட்டு
வருகின்றோம் . ஒரு நாள் கூட எமது பேரூந்தில் இருந்து எந்தவித சட்டவிரோதமான
எதுவித செயற்பாடுகளும், இதுவரையில் இடம்பெறவில்லை. </p><p>அவ்வளவு தூரம் மக்களுக்கான
சேவையை நாம் நிதானமாகவும், கவனமாகவும் முன்னெடுத்து வந்திருக்கின்றோம்.
</p><h2>பல ஆயிரக்கணக்கான பயணிகள்&nbsp;</h2><p>தினமும் பல ஆயிரக்கணக்கான பயணிகள் எமது
சேவையைப் பெறுகின்றார்கள். குறித்த சம்பவத்தை வைத்து என் மீதும், எமது சேவை மீதும் சிலர் சேறு பூசும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f9944ee0-dbf9-4490-8388-a5bba7efc34c/26-6a76b1b7070b9.webp' /></p><p>ஆனால் துரதிஸ்ட வசமாக இடம்பெற்ற குறித்த விபத்து தொடர்பில் அதற்கு பொறுப்பான
எனது நிறுவன உத்தியோகத்தர் கவனயின்மை தொடர்பில் மனம் வருந்துவதுடன், இவ்வாறான
சம்பவங்கள் இடம்பெறாத வகையில் எமது சேவையை உறுதிப்படுத்தி எதிர் காலத்தில்
முன்னெடுப்போம் எனத் தெரிவிப்பதுடன், எமது நிறுவனத்தின் மக்கள் சேவை இன்னும்
வீரியத்துடனும் பலத்துடனும மக்களது நம்பிக்கை குறையாத வகையில தொடரும். </p><p>எமது
சேவை மீது மக்கள் வைத்த நம்பிக்கை வீண் போகாது. அதற்கேற்ப எமது சேவை தொடரும்.</p><p>

இவ்விபத்துக்கு பின்னர் எமது நிறுவனத்தின் மீது கருசனை கொண்டு பலர்
நேரடியாகவும் தொலைபேசி வாயிலாகவும் முகநூல் மூலமும் தொடப்பு கொண்டு நிலமைகளை
விசாரித்து ஆலோசனைகள் வழங்கியிருந்தனர்.</p><p> அனைவருக்கும் எமது நன்றியை தெரிவிப்பதாகவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-08T04:42:38+00:00</updated>
        </entry>
    </feed>
