<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-09-01T07:46:43+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[முன்னாள் அமைச்சர் பிரியங்கர ஜயரத்னவிற்கு 7 ஆண்டுகள் கடூழிய சிறை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/priyankara-jayaratna-sentencsed-1788248507"></link>
            <id>https://tamilwin.com/article/priyankara-jayaratna-sentencsed-1788248507</id>
            <summary type="text">முன்னாள் அமைச்சர் பிரியங்கர ஜயரத்னவிற்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மொஹமட் மிஹாயில் இன்று&amp;nbsp; தீர்ப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் அமைச்சர் பிரியங்கர ஜயரத்னவிற்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மொஹமட் மிஹாயில் இன்று&nbsp; தீர்ப்பளித்துள்ளார்.&nbsp;</p><p>தனது அரசியல் ஆதரவாளர்களுக்கு உணவு வழங்குவதற்காக 'ஸ்ரீலங்கன் கேட்டரிங்'&nbsp; நிறுவனத்திற்குச் சொந்தமான 330,000 ரூபா பணத்தைப் பயன்படுத்தி அரசாங்கத்திற்கு நஷ்டம் ஏற்படுத்திய குற்றச்சாட்டில் இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p>
பிரதிவாதிக்கு எதிரான இரண்டு குற்றச்சாட்டுகளுக்கும் தலா 7 ஆண்டுகள் வீதம் 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதுடன், அத்தண்டனையை ஏககாலத்தில் (ஒரே நேரத்தில்) அனுபவிக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
</p><p>மேலும், இரண்டு குற்றச்சாட்டுகளுக்கும் தலா ஒரு இலட்சம் ரூபா வீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.</p><p> அபராதத்தைச் செலுத்தத் தவறினால் ஒவ்வொரு குற்றச்சாட்டிற்கும் மேலதிகமாக 6 மாதங்கள் வீதம் கடுங்காவல் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் நீதிபதி அறிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/df863170-484d-48b8-a078-8d9ef6575847/26-6a9682c7728ab.webp' /></p><p>
2014ஆம் ஆண்டு சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சராகப் பணியாற்றிய காலத்தில், ஸ்ரீலங்கன் கேட்டரிங் நிறுவனத்திற்குச் சொந்தமான 330,000 ரூபா பணத்தை மாறவில பகுதியிலுள்ள 'கம்பட கேட்டரர்ஸ்' எனும் தனியார் நிறுவனத்திற்குச் செலுத்துமாறு அந்நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரிக்கு அழுத்தம் கொடுத்து அரசாங்கத்திற்கு நஷ்டம் ஏற்படுத்தியதாக லஞ்ச அல்லது ஊழல் பற்றிய சாட்டல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவினால் இவருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டிருந்தது.
</p><p>இவ்வழக்கில் எதிர்த்தரப்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி ஷவேந்திர பெர்னாண்டோ, தனது கட்சிக்காரர் மற்றும் அவரது மனைவி நோயுற்றிருப்பதாகவும், பிள்ளைகள் வெளிநாட்டில் வசிப்பதாகவும் தெரிவித்து தண்டனையைக் குறைக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தார். </p><p>எனினும், லஞ்ச ஊழல் சட்டத்தின்கீழ் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதையடுத்து மேல் நீதிமன்ற நீதிபதியினால் இத்தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-01T07:46:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்த 4 உடல்நலப் பிரச்சனைகள் இருந்தா பாலை கிட்டவே எடுக்காதீங்க! மருத்துவ விளக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/people-who-should-never-drink-milk-1788245313"></link>
            <id>https://manithan.com/article/people-who-should-never-drink-milk-1788245313</id>
            <summary type="text">தினமும் பால் குடித்தால் உடலுக்கு நல்ல பலம் கிடைக்கும் என்ற&amp;nbsp; வார்த்தையை பெருமபாலானவர்கள் சிறு வயதிலிருந்தே கேட்டு வளர்ந்திருக்கிறோம். குழந்தைகளின்...</summary>
            <content type="html"><![CDATA[<p>தினமும் பால் குடித்தால் உடலுக்கு நல்ல பலம் கிடைக்கும் என்ற&nbsp; வார்த்தையை பெருமபாலானவர்கள் சிறு வயதிலிருந்தே கேட்டு வளர்ந்திருக்கிறோம். </p><p>குழந்தைகளின் வளர்ச்சிக்கு பால் அவசியம் என்றும், அதில் அதிக அளவு கால்சியம் மற்றும் புரதம் இருப்பதால் தினசரி உணவில் பால் இடம்பெற வேண்டும் என்றும் பெரியவர்கள் தொடர்ந்து அறிவுறுத்தி வந்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/041703df-a710-4e14-bb79-c3eb9a36bf00/26-6a96824ce74f0.webp' /></p><p>
</p><p>
உண்மையில், பால் பல முக்கியமான ஊட்டச்சத்துக்களை வழங்கும் உணவாகும். கால்சியம், புரதம், பாஸ்பரஸ், மெக்னீசியம் மற்றும் வைட்டமின் பி12 போன்ற சத்துக்கள் பாலில் காணப்படுகின்றன. குறிப்பாக சைவ உணவு முறையைப் பின்பற்றுபவர்களுக்கு வைட்டமின் பி12 கிடைப்பதற்கான முக்கிய உணவுகளில் ஒன்றாக பால் இருக்கிறது. </p><p>ஆனால் இங்கு கவனிக்க வேண்டிய ஒரு முக்கியமான விஷயம் இருக்கிறது. ஒரு உணவு சத்தானது என்பதாலேயே அது அனைவரது உடலுக்கும் ஒரே விதமாகப் பொருந்திவிடாது. பால் இதற்கு ஒரு சிறந்த உதாரணம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b1585211-b8c0-4e3b-8173-2ed134d3f0ba/26-6a96824d9a8f0.webp' /></p><p></p><p>
பாலில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் பிரச்சனைக்குக் காரணமாக இருப்பதில்லை. சிலருடைய உடல், பாலில் உள்ள குறிப்பிட்ட கூறுகளைச் சரியாகச் செரிக்கவோ அல்லது சகித்துக்கொள்ளவோ முடியாததே பிரச்சனைக்கு காரணமாகிறது.</p><p>இதனால், சிலருக்கு பால் நன்மையைவிட அசௌகரியத்தையே ஏற்படுத்தக்கூடும். அந்தவகையில் யாரெல்லாம் பால் எடுத்துக்கொள்ளும் முன்னர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பது குறித்து இந்த பதிவில் விரிவாக பார்கலாம்.&nbsp;&nbsp;</p><p><b>லாக்டோஸ் சகிப்புத்தன்மை இல்லாதவர்கள்</b></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c8992074-c965-4b6e-9218-69c9cd3c66fd/26-6a96824e4fac3.webp' /><b></b></p><p>
பால் குடித்த சில மணி நேரங்களுக்குப் பிறகு வயிறு உப்புசம், வாயுத்தொல்லை, வயிற்று வலி அல்லது வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறதா? அப்படியானால், உங்களுக்கு லாக்டோஸ் சகிப்புத்தன்மை குறைபாடு இருக்கிறதா என்பதைப் பரிசோதித்துப் பார்ப்பது அவசியம்.
</p><p>
பாலில் இயற்கையாகக் காணப்படும் சர்க்கரைதான் லாக்டோஸ். இதைச் செரிக்க உடலுக்கு லாக்டேஸ் என்ற நொதி தேவைப்படுகிறது. சிலரிடம் இந்த நொதி போதுமான அளவில் இல்லாததால், பால் குடித்த பிறகு செரிமானப் பிரச்சனைகள் ஏற்படலாம்.</p><p>

இதுபோன்ற அறிகுறிகள் அடிக்கடி ஏற்பட்டால், “பால் எனக்கு ஒத்துக்கொள்ளவில்லை” என்று நினைத்து தானாகவே அனைத்து பால் பொருட்களையும் முற்றிலுமாகத் தவிர்ப்பதற்குப் பதிலாக, மருத்துவர் அல்லது உணவியல் நிபுணரிடம் ஆலோசனை பெறுவது நல்லது.
</p><p><b>
பால் ஒவ்வாமை</b></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/74fc52d0-a8b5-4dd3-a2a4-799801f2983d/26-6a96824f05818.webp' /><b></b></p><p><b> </b></p><p>பால் குடித்த பிறகு ஏற்படும் எல்லா பிரச்சனைகளும் லாக்டோஸ் காரணமாக இருக்க வேண்டிய அவசியமில்லை. சிலருக்கு பால் புரதங்களுக்கு ஒவ்வாமை இருக்கலாம்.
</p><p>
பாலில் உள்ள கேசின் அல்லது வே புரதங்களை உடலின் நோயெதிர்ப்பு மண்டலம் தீங்கு விளைவிப்பதாகக் கருதி எதிர்வினையாற்றும்போது பால் ஒவ்வாமை ஏற்படலாம்.</p><p>இதனால் தோலில் தடிப்புகள், வீக்கம், வாந்தி, வயிற்று வலி போன்ற அறிகுறிகள் தோன்றக்கூடும்.

குறிப்பாக பால் அருந்திய பிறகு கடுமையான ஒவ்வாமை அறிகுறிகள் தோன்றினால் அதை சாதாரண செரிமானப் பிரச்சனை என்று நினைத்து அலட்சியப்படுத்தக் கூடாது. உடனடியாக மருத்துவ உதவியை நாடுவது அவசியம்.
</p><p><b>
நெஞ்செரிச்சல் இருப்பவர்கள்</b></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/803fa224-08aa-490d-922d-5490dc464ed5/26-6a96824fb811e.webp' /><b></b></p><p>அமிலத்தன்மை, நெஞ்செரிச்சல் போன்ற பிரச்சனைகள் இருப்பவர்கள் அதிக கொழுப்பு கொண்ட பாலை அதிகமாக அருந்துவதைத் தவிர்ப்பது நல்லது. சிலருக்கு பால், குறிப்பாக இரவு உறங்குவதற்கு முன்பு அதிகமாக அருந்தும்போது, வயிற்றில் கனமான உணர்வு அல்லது நெஞ்செரிச்சல் போன்ற அசௌகரியங்களை அதிகரிக்கக்கூடும்.
</p><p>
எனவே, “பால் ஆரோக்கியமானது என்பதால் எவ்வளவு வேண்டுமானாலும் குடிக்கலாம்” என்ற அணுகுமுறை சரியானதல்ல. </p><p>ஒருவருடைய உடல்நிலை, வயது, உணவுமுறை மற்றும் செரிமானத் திறன் ஆகியவற்றைப் பொறுத்து பாலின் அளவும் தாக்கமும் மாறுபடலாம்.
</p><p><b>
முகப்பரு பிரச்சினை உள்ளவர்கள்</b></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aa671e5b-22b8-43f2-990e-f5a9d46edf69/26-6a9682506ce07.webp' /><b></b></p><p>பால் மற்றும் பால் பொருட்களை எடுத்துக்கொண்ட பிறகு சிலருக்கு முகப்பரு அதிகரிப்பதைப் பார்க்க முடிகிறது. சில ஆய்வுகளிலும் பால் பொருட்களுக்கும் முகப்பருவுக்கும் இடையே தொடர்பு இருக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது.</p><p>

எனினும், இது அனைவருக்கும் பொருந்தும் என்று கூற முடியாது. உங்களுக்கு பால் அல்லது குறிப்பிட்ட பால் பொருட்களை எடுத்துக்கொண்ட பிறகு முகப்பரு தொடர்ந்து அதிகரிப்பதை கவனித்தால், உங்கள் உணவுப் பழக்கத்தையும் அறிகுறிகளையும் மருத்துவரின் ஆலோசனையுடன் மதிப்பீடு செய்துக்கொள்வது சிறந்தது.&nbsp;</p><p></p><h2><span style="color: inherit; font-size: 1.75rem;">பாலை முற்றிலும் தவிர்க்க வேண்டுமா?</span></h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/270317f1-e62d-4c18-afe1-c0933bb930c7/26-6a96825121d76.webp' /></p><p>பால் சத்தான உணவு என்பதில் சந்தேகமில்லை. ஆனால் “சத்து நிறைந்தது” என்பதும் “அனைவருக்கும் ஏற்றது” என்பதும் ஒன்றல்ல. சிலருக்கு பால் சிறந்த ஊட்டச்சத்து ஆதாரமாக இருக்கலாம். மற்றவர்களுக்கு அதே பால் செரிமான அல்லது ஒவ்வாமை தொடர்பான பிரச்சனைகளை ஏற்படுத்தலாம்.</p><p>

எனவே, பால் குடித்த பிறகு தொடர்ந்து வயிற்று உப்புசம், வாயுத்தொல்லை, வயிற்றுப்போக்கு, வாந்தி, தோல் தடிப்பு, வீக்கம் அல்லது முகப்பரு போன்ற மாற்றங்கள் ஏற்பட்டால், அதை சாதாரணமாக எடுத்துக்கொள்ளாமல் காரணத்தைக் கண்டறிவது அவசியம்.
</p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://chat.whatsapp.com/KPaiG8NNYogL3W9EipSjKP" target="_blank">FOLLOW NOW</a></u></b>&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-01T07:45:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாள வெள்ளத்தில் நெகிழ்ச்சி ; பாதுகாப்பாக மீட்கப்பட்ட ஒன்றரை மாத குழந்தை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/one-month-baby-rescued-safely-from-nepal-floods-1788248703"></link>
            <id>https://jvpnews.com/article/one-month-baby-rescued-safely-from-nepal-floods-1788248703</id>
            <summary type="text">நேபாள பெரு வெள்ளத்தில் சிக்கிய ஒன்றரை மாதக் குழந்தை பத்திரமாக மீட்கப்பட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திபெத்-நேபாள எல்லையில் பெரும் பனி...</summary>
            <content type="html"><![CDATA[<p>நேபாள பெரு வெள்ளத்தில் சிக்கிய ஒன்றரை மாதக் குழந்தை பத்திரமாக மீட்கப்பட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
</p><p>
திபெத்-நேபாள எல்லையில் பெரும் பனிப்பாறைச் சரிவால் லெண்டே நதியில் ஆகஸ்ட் 26-ஆம் திகதி ஏற்பட்ட பெருவெள்ளம், நேபாளத்தின் போடே கோஷி நதியில் சீறிப்பாய்ந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cf43a2f7-e04d-4868-aadf-4f0a4f788547/26-6a968280a6e4c.webp' /></p><p> சகதியுடன் பல அடி உயரத்துக்கு பெருக்கெடுத்த வெள்ளத்தில் கரையோர கிராமங்கள், சிறு நகரங்கள் அடியோடு அழிந்தன. </p><p>வீடுகள், கட்டடங்கள், வாகனங்கள், பாலங்கள், சாலைகள், நீா்மின் நிலையங்கள், இதர உள்கட்டமைப்புகள் அடித்துச் செல்லப்பட்டன.</p><p>ரசுவா, நுவாகோட், சித்வன், நவல்பராசி, கோா்கா, தனாஹு ஆகிய மாவட்டங்களில் கரையோரப் பகுதிகளைப் புரட்டிப் போட்ட இந்தப் பெருவெள்ளத்தில் உயிரிழந்தோா் எண்ணிக்கை 939-ஆக உயா்ந்துள்ளது. </p><p>வெள்ளத்தில் சிக்கி 85 பாதுகாப்பு அதிகாரிகள், 320 வெளிநாட்டவா் உள்பட 4,250 போ் மாயமாகினா்.
</p><p>
இதனிடையே, பெரு வெள்ளத்தில் சிக்கி, அதிருஷ்டவசமாக உயிருடன் தப்பிய ஒன்றரை மாதக் குழந்தையை மீட்புப் படையினர் பத்திரமாக மீட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
</p><p>
பத்திரமாக மீட்கப்பட்ட ஒன்றரை மாதக் குழந்தையை, ரசுவா தாங்கே முகாமில் மீட்புப் படையினர் சேர்த்துள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-09-01T07:45:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் தங்கம் வாங்க காத்திருப்போருக்கான தகவல் - இன்று பதிவாகியுள்ள நிலவரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/gold-price-today-in-sri-lanka-1788239934"></link>
            <id>https://tamilwin.com/article/gold-price-today-in-sri-lanka-1788239934</id>
            <summary type="text">நேற்றுடன் ஒப்பிடுகையில், இன்று இதுவரை தங்கத்தின் விலையில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை என அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அந்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நேற்றுடன் ஒப்பிடுகையில், இன்று இதுவரை தங்கத்தின் விலையில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை என அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
</p><p>
அந்தவகையில், தற்போதைய தங்க விலை நிலவரப்படி,

24 கரட் தங்கம் பவுண் ஒன்று 377,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.
</p><p>
22 கரட் தங்கம் பவுண் ஒன்று 347,000 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.&nbsp;</p><h2>முதலாம் இணைப்பு</h2><p>உலக சந்தையில் தங்கத்தின் விலை இன்று (01.09.2026) சற்று சரிந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p>

மத்திய கிழக்கில் நிலவும் பதற்றமான சூழல் மற்றும் இவ்வாரம் வெளியிடப்படவுள்ள முக்கிய அமெரிக்க தொழிலாளர் சந்தை தரவுகள் மீது வர்த்தகர்கள் கவனம் செலுத்துவது இதற்கு காரணம் என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b6fb3d68-52d0-4c57-a3ae-d76e8b003bd9/26-6a96682620ec9.webp' />&nbsp; &nbsp;</p><p>
</p><p>
அதன்படி, ஒரு அவுன்ஸ் உடனடி தங்கத்தின் விலை 0.3% குறைந்து, 4,437.10 அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளது.</p><h2>தங்க விலையின் மீதான அழுத்தம்</h2><p>
</p><p>இதற்கிடையில், ஈரான் மீது மேலும் தாக்குதல்கள் நடத்தப்படலாம் என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.</p><p>இதன் விளைவாக, மத்திய கிழக்கில் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளதுடன், தொடர்ந்து இரண்டாவது நாளாக எண்ணெய் விலைகளும் உயர்ந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.</p><p>
குறிப்பாக, அதிகரித்து வரும் வட்டி விகிதங்கள் தங்கத்தின் விலைகள் மீது அழுத்தத்தை ஏற்படுத்துகின்றன என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.&nbsp;</p><p></p><p></p><p><b>YOU MAY LIKE THIS VIDEO</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/WOyADF1TYBM" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p>]]></content>
            <updated>2026-09-01T07:40:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Fathima</name>
            </author>
            <title type="text"><![CDATA[8 துண்டுகளாக வெட்டப்பட்ட பெண்ணின் சடலம்: போலிசார் தீவிர விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/woman-body-in-water-tank-salem-1788248290"></link>
            <id>https://ibctamilnadu.com/article/woman-body-in-water-tank-salem-1788248290</id>
            <summary type="text">சேலத்தில் துண்டு துண்டாக வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்ட பெண்ணின் அடையாளம் கண்டறியப்பட்ட நிலையில் சமையல்காரர் செல்லதுரை என்பவரிடம் போலிசார் விசாரணை மேற்...</summary>
            <content type="html"><![CDATA[<p>சேலத்தில் துண்டு துண்டாக வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்ட பெண்ணின் அடையாளம் கண்டறியப்பட்ட நிலையில் சமையல்காரர் செல்லதுரை என்பவரிடம் போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p>

சேலத்தின் அரிசிபாளையம் குணபாலா ராமசாமி தெரு பகுதியில் உள்ள வீட்டில் பெண்ணின் சடலம் 8 துண்டுகளாக வெட்டப்பட்டு தண்ணீர் தொட்டியில் இருந்து மீட்கப்பட்டது.
</p><p>
நேற்று காலை 8 மணியளவில் பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட நிலையில் பிற்பகலில் அருகில் இருந்த 2 இளைஞர்கள் மற்றும் சமையல்காரரிடம் போலிசார் விசாரணை மேற்கொண்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3691ff7b-a137-4851-b443-2ee3ad244391/26-6a9680e4424a1.webp' /><br></p><p>
</p><p>
மாலை கொலை செய்யப்பட்ட பெண்ணின் பெயர் தங்கமணி என்பதும் சேலம் மேட்டுப்பட்டி தாதனூர் பகுதியை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.</p><p>

விசாரணையில் கடந்த சில ஆண்டுகளாக தங்கமணி சேலம் அஸ்தம்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வீட்டு வேலை செய்து வந்ததும், மாயமாகுவதற்கு முன்னதாக மருத்துவர் ஒருவரின் வீட்டில் வேலை செய்து வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
</p><p>
கடந்த 28ம் தேதி முதல் மனைவியை காணவில்லை என தங்கமணியின் கணவர் ஜீவானந்தம் போலிசில் புகார் அளித்திருந்தார்.
</p><p>
விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட சமையல்காரரின் தங்கை தங்கமணியின் தோழி என்பதும் தற்போது அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு உள்ளது.
</p><p>
இதனைதொடர்ந்து குறித்த சமையல்காரரிடம் போலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.<br></p>]]></content>
            <updated>2026-09-01T07:38:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[22வது திருத்தம் : சட்டத்தரணிகள் கோரிக்கையை நிராகரித்த உயர்நீதிமன்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/petitions-22nd-amendment-to-be-considered-today-1788233562"></link>
            <id>https://ibctamil.com/article/petitions-22nd-amendment-to-be-considered-today-1788233562</id>
            <summary type="text">புதிய இணைப்பு22வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்திற்கு எதிரான மனுக்களை முழு உயர்நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்...</summary>
            <content type="html"><![CDATA[<p></p><h2>புதிய இணைப்பு</h2><p>22வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்திற்கு எதிரான மனுக்களை முழு உயர்நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என ஜனாதிபதி சட்டத்தரணி எம். ஏ. சுமந்திரன் உள்ளிட்ட சட்டத்தரணிகள் முன்வைத்த கோரிக்கையை உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது.</p><p>

 

இன்று (01) பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன தலைமையிலான 5 பேர் கொண்ட நீதிபதிகள் அமர்வு முன்னிலையில் இம்மனுக்கள் அழைக்கப்பட்டபோதே இக்கோரிக்கை முன்வைக்கப்பட்டது. </p><p>ஜனாதிபதி சட்டத்தரணிகளான சாலிய பீரிஸ், அலி சப்ரி உள்ளிட்ட பலரும் இதற்கு ஆதரவு தெரிவித்த போதும், சட்டமா அதிபர் சார்பில் முன்னலையான சொலிசிட்டர் ஜெனரல் விராஜ் தயாரத்ன, அரசியலமைப்பின் 132(3) உறுப்புரையின்படி நீதிபதிகள் அமர்வின் அமைப்பைத் தீர்மானிக்கும் அதிகாரம் பிரதம நீதியரசருக்கு மட்டுமே உரித்தானது என வாதிட்டார்.
</p><p>
 

அனைத்துத் தரப்புச் சமர்ப்பணங்களையும் பரிசீலிப்பதற்காக 15 நிமிடங்கள் விசாரணையை ஒத்திவைத்த உயர்நீதிமன்றம், பின்னர் மனுதாரர்களின் கோரிக்கையை நிராகரித்து உத்தரவிட்டது.</p><h2>மூன்றாம் இணைப்பு</h2><p>அரசாங்கத்தினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 22வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்திற்கு எதிரான மனுக்களைப் பரிசீலிக்கும் நடவடிக்கைகளை உயர்நீதிமன்றத்தின் 501 ஆம் இலக்க நீதிமன்ற அரங்கிற்கு மாற்றுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
</p><p>
 

இன்று (01) குறித்த மனுக்கள் விசாரணைக்காக 502 ஆம் இலக்க நீதிமன்ற அரங்கில் அழைக்கப்பட்டிருந்த நிலையில் அங்கு போதிய இடவசதி இன்மையால் 501 ஆம் இலக்க அரங்கிற்கு மாற்றுமாறு ஜனாதிபதி சட்டத்தரணி எம். ஏ. சுமந்திரன் உள்ளிட்ட சட்டத்தரணிகள் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.
</p><p>இந்தநிலையில் அந்த கோரிக்கையைக் பரிசீலித்த 5 பேர் கொண்ட நீதிபதிகள் அமர்வு இந்தத் தீர்மானத்தை எட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><h2>இரண்டாம் இணைப்பு</h2><p>அரசாங்கம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ள அரசியலமைப்பின் 22வது திருத்த சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான பரிசீலனையை உயர்நீதிமன்றம் ஆரம்பித்துள்ளது.
</p><p>
பிரதம நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேன, நீதியரசர்களான அசேல வெங்கப்புலி, அர்ஜுன ஒபேசேகர, சம்பத் அபேகோன் மற்றும் கிஹான் குலதுங்க ஆகியோரைக் கொண்ட ஐவரடங்கிய நீதியரசர்கள் குழாமின் முன்னிலையில் இந்த மனுக்கள் பரிசீலிக்கப்படுகின்றன.
</p><p>
குறித்த சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி 67 மனுக்களும், நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நீதித்துறை திருத்தச் சட்டமூலத்தை எதிர்த்து 5 மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><h2>முதலாம் இணைப்பு</h2><p>இலங்கையின் 22வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அனைத்து மனுக்களும் இன்று (01) பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.
</p><p>
 

பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன தலைமையிலான 5 பேர் கொண்ட நீதிபதிகள் அமர்வு முன்னிலையில் இன்று காலை 10 மணி முதல் இந்த மனுக்கள் உயர்நீதிமன்றத்தில் பரிசீலிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
 

22வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் கடந்த 18 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதை அடுத்து, அதற்கு எதிராக மனுக்களைத் தாக்கல் செய்வதற்குச் சந்தர்ப்பம் அளிக்கப்பட்டிருந்தது.</p><p></p><h2>40க்கும் மேற்பட்ட மனுக்கள்&nbsp;</h2><p>
</p><p>
 

நேற்று (31) வரை அதற்குச் சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருந்த நிலையில், 40க்கும் மேற்பட்ட ஆதரவு மற்றும் எதிர்ப்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c5a2d099-88bf-458a-8d93-1580a4af1406/26-6a964b3cd15ba.webp' /></p><p> </p><p>இந்தச் சட்டமூலத்தின் மூலம் நீதிமன்றத்தின் சுயாதீனத்திற்கும் சட்டத்தின் ஆட்சிகளுக்கும் பாதிப்பு ஏற்படுவதாகச் சுட்டிக்காட்டியும், அரசியலமைப்பு துஷ்பிரயோகம் செய்யப்படுவதாகத் தெரிவித்தும், இச்சட்டம் அரசியலமைப்பிற்கு முரணானது என்பதால் இதனை நிறைவேற்றுவதற்கு மக்கள் தீர்ப்பிற்கு (சர்வஜன வாக்கெடுப்பு) உத்தரவிடுமாறு கோரியும் குறித்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.</p><p>

 

அதற்கமைய, குறித்த மனுக்களைப் பரிசீலிப்பதற்காகப் பிரதம நீதியரசரால் 5 பேர் கொண்ட நீதிபதிகள் அமர்வு அறிவிக்கப்பட்ட நிலையில் பிரதம நீதியரசருக்கு மேலதிகமாக அசேல வெங்கப்புலி, அர்ஜுன ஒபேசேகர, சம்பத் அபேகோன் மற்றும் கிஹான் குலதுங்க ஆகிய நீதியரசர்கள் பெயரிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/IEDdInNGtNY" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p><p></p>]]></content>
            <updated>2026-09-01T07:36:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தனியார் வகுப்பிற்கு சென்ற மூன்று மாணவிகள் மாயம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/three-schoolgirls-tuition-classes-gone-missing-1788238899"></link>
            <id>https://jvpnews.com/article/three-schoolgirls-tuition-classes-gone-missing-1788238899</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;பலாங்கொடை- பின்னவல எல்லராவ, பிரதேசத்தை சேர்ந்த மூன்று மாணவிகள் காணாமல் போயுள்ளதாக நேற்று திங்கட்கிழமை (31) பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;பலாங்கொடை- பின்னவல எல்லராவ, பிரதேசத்தை சேர்ந்த மூன்று மாணவிகள் காணாமல் போயுள்ளதாக நேற்று திங்கட்கிழமை (31) பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.</p><p>


தனியார் வகுப்புகளுக்கு சென்ற மாணவிகளே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.

இவர்கள் பலாங்கொடையில் பிரபல பாடசாலை மாணவிகள் ஆவார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/14d90a26-c1a5-4a19-a4bc-d1e42242f339/26-6a965c34efdcc.webp' /></p><h2>&nbsp; பொலிஸார் மேலதிக விசாரணை</h2><p> </p><p>கெளசல்யா, சர்மிளா, சதுனி ஆகிய மாணவர்களே இவ்வாறு காணாமல் போயுள்ளதுடன், மூவருக்கும் 17 வயது என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.</p><p></p><p>

இவர்களைப் பற்றி தகவல் தெரிந்தால் பலாங்கொடை பொலிஸ் நிலையம் 0452287222 அல்லது பெற்றோர்களுக்கு 0767070913, 0771658788 என்ற இலக்கங்களுக்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.</p><p>

இதேவேளை, இச்சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளில் பலாங்கொடை பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.&nbsp;&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-09-01T07:36:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Farook Sihan</name>
            </author>
            <title type="text"><![CDATA[தலைக்கவசமின்றி பயணித்தவர்களுக்கு எதிராக வழக்கு; போக்குவரத்து பிரிவினர் அதிரடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/case-against-those-travelling-without-helmets-1788246680"></link>
            <id>https://tamilwin.com/article/case-against-those-travelling-without-helmets-1788246680</id>
            <summary type="text">சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் போக்குவரத்துச் சட்டங்களை
மீறிச் செயற்பட்டமை மற்றும் பாதுகாப்புத் தலைக்கவசம் அணியாமல்
மோட்டார் சைக்கிள...</summary>
            <content type="html"><![CDATA[<p>சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் போக்குவரத்துச் சட்டங்களை
மீறிச் செயற்பட்டமை மற்றும் பாதுகாப்புத் தலைக்கவசம் அணியாமல்
மோட்டார் சைக்கிள்களைச் செலுத்தியமை தொடர்பில் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட
திடீர் சுற்றிவளைப்பின் போது 10 மோட்டார் சைக்கிள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
</p><p>
சம்மாந்துறை பொலிஸ் நிலையப் போக்குவரத்துப் பிரிவு பொலிஸாரினால் நேற்று (31.08.2026)
இத்திடீர் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.</p><h2>சோதனை</h2><p>
</p><p>
அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ் அத்தியட்சகர் சுஜித் வேதமுல்லவின்
மேற்பார்வையில், சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி பிரியந்த பண்டார கஸ்தூரி ஆராச்சியின்
ஆலோசனைக்கு அமைவாக இச்சோதனை நடத்தப்பட்டது. </p><p>மேலும் கல்முனை பிராந்திய உதவிப்
பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே.இப்னு அசாரின் நெறிப்படுத்தலில், சம்மாந்துறை
பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி டபிள்யூ.ஏ.என். நிசாந்த பிரதீப் குமாரவின் நேரடி
வழிகாட்டலில் பொலிஸ் குழுவினர் இக்கள நடவடிக்கையில் ஈடுபட்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2b3cbbac-9b35-4659-a8f0-0c2ec95ec060/26-6a96805b64d51.webp' /></p><h2>சட்ட நடவடிக்கை</h2><p>

இதன்போது, பிரதான வீதிகளில் ஹெல்மட் அணியாமல் அபாயகரமாக வாகனங்களைச்
செலுத்தியவர்கள் மற்றும் வீதிப் போக்குவரத்து விதிமுறைகளைப் பேணாத சாரதிகள்
அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கைகள்
எடுக்கப்பட்டதுடன், 10 மோட்டார் சைக்கிள்களும் பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச்
செல்லப்பட்டுப் பறிமுதல் செய்யப்பட்டன.
</p><p>
பொதுமக்களின் வீதிப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் இத்தகைய திடீர்
சோதனைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் எனக் குறிப்பிட்ட சம்மாந்துறை
பொலிஸார், போக்குவரத்து விதிகளை மீறிச் செல்பவர்கள் மற்றும் தலைக்கவசமின்றி
வாகனம் செலுத்துவோருக்கு எதிராகத் தட்டச்சு முறையில் நீதிமன்ற நடவடிக்கைகள்
கடுமையாக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-01T07:36:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[காணமல் போன மூன்று மாணவிகள் திருகோணமலையில்; காட்டிக்கொடுத்த காணொளி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/missing-schoolgirls-found-in-trincomalee-video-led-1788248326"></link>
            <id>https://jvpnews.com/article/missing-schoolgirls-found-in-trincomalee-video-led-1788248326</id>
            <summary type="text">&amp;nbsp; இரத்தினபுரி பலாங்கொடையில் காணாமல்போன 3 மாணவிகள் திருகோணமலையில் மீட்பு முயற்சி பேருந்து நிலையத்தில் இருந்த காட்சி வெளியாகியுள்ளது.


பலாங்கொட...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; இரத்தினபுரி பலாங்கொடையில் காணாமல்போன 3 மாணவிகள் திருகோணமலையில் மீட்பு முயற்சி பேருந்து நிலையத்தில் இருந்த காட்சி வெளியாகியுள்ளது.</p><p>


பலாங்கொடை, பின்னவல - எல்லராவ பிரதேசத்தைச் சேர்ந்த 17 வயதுடைய கௌசல்யா, சர்மிளா மற்றும் சதுனி ஆகிய 3 பாடசாலை மாணவிகள் நேற்று (31.08.2026) தனியார் வகுப்புக்குச் சென்ற நிலையில் காணாமல் போயிருந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5dda028f-a585-4d1e-9c93-32e9573cd41c/26-6a9681081597a.webp' /></p><h2>காட்டிக்கொடுத்த காணொளி&nbsp;&nbsp;</h2><p> 

இது குறித்து மாணவிகளின் பெற்றோர்களால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில், குறித்த மூன்று மாணவிகளும் கண்டி ஊடாக திருகோணமலை சென்றடைந்து, அங்குள்ள பேருந்து தரிப்பிடத்தில் அமர்ந்திருக்கும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.</p><p>]</p><p>
</p><p>
மாணவிகள் திருகோணமலை பொலிஸ் நிலையத்தைத் தாண்டி இறங்கி, பின்னர் முச்சக்கர வண்டியில் சென்றதாகவும், பேருந்து நிலையத்தில் அவர்கள் இருப்பதை இனங்கண்ட நபர் ஒருவர் தங்களுக்கு தகவல் வழங்கியதாகவும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். </p><p>

 இதனையடுத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-01T07:35:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாட்டிலிருந்த தாய்! வீடொன்றில் பல நாட்களாக சிறுமிக்கு நேர்ந்த கொடுமை - சிக்கிய இளைஞன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/20-year-old-man-arrested-abusing-13-year-old-girl-1788245653"></link>
            <id>https://tamilwin.com/article/20-year-old-man-arrested-abusing-13-year-old-girl-1788245653</id>
            <summary type="text">புத்தளத்தில் 13 வயது சிறுமியை தவறான நடத்தைக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவரை மாதம்பே பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பிங்கிரிய, ஹிருவெல்பொல...</summary>
            <content type="html"><![CDATA[<p>புத்தளத்தில் 13 வயது சிறுமியை தவறான நடத்தைக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவரை மாதம்பே பொலிஸார் கைது செய்துள்ளனர்.
</p><p>
பிங்கிரிய, ஹிருவெல்பொல பிரதேசத்தை சேர்ந்த 20 வயதுடைய இளைஞரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>

குறித்த சிறுமியின் தாய் கடந்த மாதம் 01 ஆம் திகதி வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பிய நிலையில், அவர் வழங்கிய முறைப்பாட்டின் பேரில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.</p><h2>சிறுமிக்கு மேலதிக வைத்திய பரிசோதனை</h2><p>

தாய் வெளிநாட்டில் இருந்த காலத்தில், சிறுமி தனது பாட்டி, சித்தி மற்றும் சகோதர சகோதரிகளுடன் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a1cecb61-6b68-4eb4-aa9a-924ccddaaf5e/26-6a967ffeef5e5.webp' /></p><p>
</p><p>
இதன்போது அதே வீட்டில் வசித்து வந்த குறித்த இளைஞன், யாரும் இல்லாத சந்தர்ப்பங்களில் சிறுமியை தொடர்ச்சியாக தவறான நடத்தைக்கு உட்படுத்தியதாக சிறுமி, நாடு திரும்பிய தனது தாயிடம் தெரிவித்த நிலையில், முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.</p><p> 

இதனையடுத்து பாதிக்கப்பட்ட சிறுமி மேலதிக வைத்தியப் பரிசோதனைக்காக சிலாபம் பொது வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியிடம் முன்னிலைபடுத்தப்பட்டுள்ளார்.
</p><p>
இதற்கமைய, கைது செய்யப்பட்ட சந்தேகநபரை சிலாபம் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p>&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-09-01T07:34:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுபாஷ் சந்திராவின் ரூ 22,000 கோடி கடன் ரத்து: இடைக்காலத் தடை விதித்த 5 பேர் கொண்ட அமர்வு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/subhash-chandra-repayment-plan-1788248059"></link>
            <id>https://news.lankasri.com/article/subhash-chandra-repayment-plan-1788248059</id>
            <summary type="text">5-member bench stays Subhash Chandra&#039;s repayment plan: சுபாஷ் சந்திராவின் கடன் திருப்பிச் செலுத்தும் திட்டத்திற்கு 5 பேர் கொண்ட அமர்வு இடைக்காலத் தடை....</summary>
            <content type="html"><![CDATA[<p>5-member bench stays Subhash Chandra's repayment plan: சுபாஷ் சந்திராவின் கடன் திருப்பிச் செலுத்தும் திட்டத்திற்கு 5 பேர் கொண்ட அமர்வு இடைக்காலத் தடை.
</p><p>ஜீ என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சுபாஷ் சந்திரா முன்வைத்த ரூ. 6.5 கோடி கடன் திருப்பிச் செலுத்தும் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்த முந்தைய உத்தரவுக்கு, தேசிய நிறுவனச் சட்டத் தீர்ப்பாயத்தின் ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட அமர்வு இடைக்காலத் தடை விதித்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/024ce577-4d4c-44f9-b94d-ee2377273f23/26-6a967ffd7623a.webp' /></p><p> </p><p>முடிவை நிர்ணயிக்கும் நடுவர் (tie-breaker judge) தெரிவித்த கருத்து பெரும்பான்மை கருத்து அல்ல என்றும், அது வழக்கின் இறுதி உத்தரவு அல்ல என்றும் NCLT அமர்வு கூறியுள்ளது. </p><p>

ஜீ என்டர்டெயின்மென்ட் எண்டர்பிரைசஸ் லிமிடெட் நிறுவனத்தின் கௌரவத் தலைவரான சுபாஷ் சந்திரா, ஒப்புக்கொண்ட ரூ.22,007 கோடி கடனுக்கு சமர்ப்பித்த ரூ.6.5 கோடி திருப்பிச் செலுத்தும் திட்டத்திற்கு ஒப்புதல் அளிப்பதில், </p><p>தேசிய நிறுவனச் சட்டத் தீர்ப்பாயத்தின் (NCLT) டெல்லி அமர்வின் மூன்று உறுப்பினர்களிடையே ஏற்பட்ட இழுபறிக்குப் பிறகு, இந்த வழக்கை செப்டம்பர் 1 அன்று விசாரிப்பதற்காக, தீர்ப்பாயம் திங்களன்று ஐந்து பேர் கொண்ட அமர்வை அமைத்தது.</p><p> இந்த அமர்வில் நீதித்துறை உறுப்பினர்களான அனுபிந்தர் சிங் கிரேவால், பச்சு வெங்கட் பலராம் தாஸ் மற்றும் மகேந்திர கண்டேல்வால் ஆகியோரும், தொழில்நுட்ப உறுப்பினர்களான அதுல் சதுர்வேதி மற்றும் ரவீந்திர சதுர்வேதி ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.</p><p></p><p> </p><p>இந்த விவகாரத்தில் பெரும்பான்மைக் கருத்து எதுவும் எழவில்லை என்றும், அதனால் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என்றும் தீர்ப்பாயத்தின் அசல் அமர்வு கூறியது. </p><p>கனரா வங்கி, ஆக்சிஸ் வங்கி, எச்டிஎஃப்சி வங்கி மற்றும் எல்ஐசி ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட் ஆகியவை சந்திராவின் திருப்பிச் செலுத்தும் திட்டத்திற்கு எதிராக வாக்களித்ததோடு, அதனைத் தீர்ப்பாயம் நிராகரிக்க வேண்டும் என்றும் கோரியிருந்தன. </p><p>அத்திட்டத்தின் கீழ் முன்மொழியப்பட்ட மதிப்பானது, சந்திராவின் சொத்து மதிப்பில் வெறும் 0.028 சதவீதம் மட்டுமே என்றும் அவர்கள் தெரிவித்தனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-01T07:32:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[இரண்டு வாரங்கள் கடந்தும் வெற்றி நடை போட்டு வரும் 'மொத ராத்திரி' திரைப்படம்.. பாக்ஸ் ஆபிஸ் வசூல் விவரம் இதோ]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/modha-rathiri-movie-worldwide-box-office-1788247651"></link>
            <id>https://cineulagam.com/article/modha-rathiri-movie-worldwide-box-office-1788247651</id>
            <summary type="text">கடந்த ஆகஸ்ட் 21-ஆம் தேதி வெளியான &#039;மொத ராத்திரி&#039; திரைப்படத்தின் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. மொத ராத்திரி

வித்தியாசமான கதைக்களத்தில் வெளிவந்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கடந்த ஆகஸ்ட் 21-ஆம் தேதி வெளியான 'மொத ராத்திரி' திரைப்படத்தின் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.</p><p> </p><p></p><h2>மொத ராத்திரி
</h2><p>
வித்தியாசமான கதைக்களத்தில் வெளிவந்து அனைவரின் கவனத்தையும் சமீபத்தில் ஈர்த்த திரைப்படம் 'மொத ராத்திரி'. இப்படத்தை அறிமுக இயக்குநர் ராஜா கருப்பசாமி இயக்கியுள்ளார்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dc24c5cb-c450-47ef-ba1c-619905a1cc1d/26-6a967e66ea7ae.webp' /></p><p>இப்படத்தில் ரிஷிகாந்த், அனிஷ்மா அனில்குமார், வெங்கடேஷ், சேத்தன், அப்துல் ஆகியோர் நடித்துள்ளனர். சுவாரஸ்யமான திரைக்கதை, நகைச்சுவை மற்றும் எமோஷனல் காட்சிகள் என இப்படம் ரசிகர்களிடையே பாராட்டுகளை பெற்று வருகிறது.</p><h2>
பாக்ஸ் ஆபிஸ்
</h2><p>
விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வரவேற்பை பெற்றுள்ள '<a href="https://www.youtube.com/watch?v=YaakvqfCUsk" target="_blank">மொத ராத்திரி</a>' திரைப்படம், இதுவரை 11 நாட்களை பாக்ஸ் ஆபிஸில் கடந்துள்ளது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c750f23c-2511-4e43-9a69-258837eb800c/26-6a967e67a9d92.webp' /></p><p>இந்நிலையில், உலகளவில் 11 நாட்களில் இப்படம் செய்துள்ள வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. 

அதன்படி, 'மொத ராத்திரி' திரைப்படம் 11 நாட்களில் உலகளவில் ரூ. 4.5 கோடி வசூல் செய்துள்ளது. இது இப்படத்திற்கு பாக்ஸ் ஆபிஸில் கிடைத்துள்ள குட் பிக்கப் ஆகும். இனி வரும் நாட்களில் எவ்வளவு வசூல் செய்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.</p>]]></content>
            <updated>2026-09-01T07:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தனியார் வகுப்பிற்குச் சென்ற 3 மாணவிகள் மாயம் - பொதுமக்களிடம் காவல்துறை அவசர கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/three-schoolgirls-reported-missing-in-balangoda-1788246936"></link>
            <id>https://ibctamil.com/article/three-schoolgirls-reported-missing-in-balangoda-1788246936</id>
            <summary type="text">பலாங்கொடை, பின்னவல, எல்லாராவ பிரதேசத்தில் வசித்து வரும் 17 வயதுடைய மூன்று பாடசாலை மாணவிகள் காணாமல் போயுள்ளதாக பலாங்கொடை காவல்துறையில் முறைப்பாடு செய்ய...</summary>
            <content type="html"><![CDATA[<p>பலாங்கொடை, பின்னவல, எல்லாராவ பிரதேசத்தில் வசித்து வரும் 17 வயதுடைய மூன்று பாடசாலை மாணவிகள் காணாமல் போயுள்ளதாக பலாங்கொடை காவல்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
</p><p>


காணாமல் போன மூன்று மாணவிகளும் பலாங்கொடை பிரதேசத்தில் உள்ள முன்னணி பாடசாலை ஒன்றில் கல்வி கற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>



பெற்றோரின் தகவலின்படி, குறித்த மாணவிகள் நேற்று (31) மேலதிக வகுப்புக்குச் செல்வதாகக் கூறி வீட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளதுடன், இதுவரை வீடு திரும்பவில்லை என்று தெரிவித்துள்ளனர்.</p><p></p><h2>மேலதிக விசாரணை</h2><p>
</p><p>


காணாமல் போன மாணவிகள் தொடர்பில் ஏதேனும் தகவல் கிடைத்தால் உடனடியாக பின்வரும் தொலைபேசி இலக்கங்களுக்குத் தெரிவிக்குமாறு பலாங்கொடை காவல்துறையினரும் மாணவிகளின் பெற்றோரும் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/41d95d21-0bed-49fe-8c85-3d5bf2e6c876/26-6a967df1069b6.webp' /></p><p>



பலாங்கொடை காவல் நிலையம்: 045-2287222



பெற்றோரின் தொலைபேசி இலக்கங்கள்: 076-7070913 / 077-1658788</p><p>



இச்சம்பவம் தொடர்பில் பலாங்கொடை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-01T07:26:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கன்டெய்னர் போதைப்பொருள்; மேலும் மூவர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/colombo-port-container-drug-case-3-more-arrested-1788247722"></link>
            <id>https://jvpnews.com/article/colombo-port-container-drug-case-3-more-arrested-1788247722</id>
            <summary type="text">&amp;nbsp; கன்டெய்னர் ஒன்றிற்குள் மறைத்து வைக்கப்பட்டு கடத்தப்பட்ட பாரியளவு &#039;ஐஸ்&#039; (கிரிஸ்டல் மெத்தபெட்டமின்) போதைப்பொருள் தொடர்பில், பாகிஸ்தானியர்கள் இருவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; <a href="https://jvpnews.com/article/420-kg-ice-drug-seized-container-businessman-1788180486" target="_blank">கன்டெய்னர் ஒன்றிற்குள் </a>மறைத்து வைக்கப்பட்டு கடத்தப்பட்ட பாரியளவு 'ஐஸ்' (கிரிஸ்டல் மெத்தபெட்டமின்) போதைப்பொருள் தொடர்பில், பாகிஸ்தானியர்கள் இருவர் உட்பட மேலும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p>
மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இந்தக் கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

சந்தேகத்திற்கிடமான கன்டெய்னர் ஒன்றைச் பரிசோதித்தபோது கண்டெடுக்கப்பட்ட 463 கிலோகிராம் 'ஐஸ்' போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/24c2e4d1-f466-4351-b81d-ce10e615350c/26-6a967eabbd70c.webp' /></p><p>இதையடுத்து, இந்தக் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

கைப்பற்றப்பட்ட 'ஐஸ்' போதைப்பொருளின் பெறுமதி 1500 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-01T07:25:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாளத்தில் பனிச்சரிவுக்கு காரணம் என்ன? வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்திரன் விளக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/weatherman-explains-reason-for-nepal-glacier-slide-1788247285"></link>
            <id>https://news.lankasri.com/article/weatherman-explains-reason-for-nepal-glacier-slide-1788247285</id>
            <summary type="text">delta weatherman hemachandran explains reason behind nepal glacier slide: நேபாளத்தில் பனிச்சரிவால் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கிற்கு என்ன காரணம் என வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>delta weatherman hemachandran explains reason behind nepal glacier slide: நேபாளத்தில் பனிச்சரிவால் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கிற்கு என்ன காரணம் என வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்திரன் விளக்கமளித்துள்ளார்.</p><h3> 

நேபாளத்தில் பனிச்சரிவுக்கு காரணம் என்ன? </h3><p>

சீன மற்றும் நேபாள எல்லையில் கடந்த ஆகஸ்ட் 26 ஆம் திகதி பனிச்சரிவு காரணமாக ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 900 ஐ கடந்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aab2c338-3cc5-4a73-bc1f-a058ccdeaa2b/26-6a967cf77deb5.webp' /></p><p> 

சுமார் 4,462 பேர் மாயமாகியுள்ளதாக நேபாள அரசு தெரிவித்துள்ளது. இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p> 

இதற்கான மீட்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், நீர்மின் நிலைய சுரங்கங்களில் சுமார் 900 பணியாளர்கள் சிக்கியுள்ளதாவும், அவர்களை மீட்க முயற்சி நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.</p><p> 

முதலில் நிலநடுக்கம் காரணமாக இந்த வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதாக கூறப்பட்ட நிலையில், பனிச்சரிவு காரணமாகவே, பனிப்பாறைகள் உருகி, ஆற்றில் நீர்வரத்து பாரிய அளவில் அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><p>

வெள்ளப்பெருக்கில் நீர் மட்டுமில்லாமல், சேறுகள், வீடு, பாறைகள் அடித்து வரப்பட்டுள்ளதால் மீட்புப்பணியில் சிரமம் ஏற்பட்டுள்ளது. </p><p>

வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வருவதன் காரணமாகவே இந்த பனிப்பாறை சரிவு நிகழ்ந்துள்ளதாக வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். </p><p>

இந்நிலையில் இந்த வெள்ளப்பெருக்கு குறித்து விரிவாக பேசிய டெல்டா வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்திரன், நேபாளத்தில் ஏற்பட்ட பெரும் வெள்ளத்திற்கு காரணம் என்ன? இமயமலையில் ஏற்பட்ட பனிப்பாறை வெடிப்பு எதனால் நடந்தது? இந்தியாவில் இது போன்ற நிகழ்வுகள் ஏற்பட வாய்ப்புள்ளதா?எதிர்வரும் காலங்களில் ஏற்படக்கூடிய பேராபத்துகள் என்னென்ன என்பது குறித்தும் பேசியுள்ளார். </p><p>

மேலதிக தகவல்களுக்கு வீடியோவை காண்க</p><p>&nbsp;<iframe frameborder="0" src="//www.youtube.com/embed/LTUXPhqZuUQ?start=13" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-01T07:21:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடா இடைத்தேர்தல்கள்: பிரதமர் மார்க் கார்னி கட்சி அமோக வெற்றி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/carney-liberal-party-sweeps-all-3-byelections-1788243776"></link>
            <id>https://news.lankasri.com/article/carney-liberal-party-sweeps-all-3-byelections-1788243776</id>
            <summary type="text">Liberal party sweeps all three byelections: கனடா இடைத்தேர்தல்கள் மூன்றிலும் லிபரல் கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது.


திங்கட்கிழமை நடைபெற்ற மூன்று இட...</summary>
            <content type="html"><![CDATA[<p>Liberal party sweeps all three byelections: கனடா இடைத்தேர்தல்கள் மூன்றிலும் லிபரல் கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது.</p><p>


திங்கட்கிழமை நடைபெற்ற மூன்று இடைத்தேர்தல்களிலும் பிரதமர் மார்க் கார்னியின் லிபரல் கட்சி, முழுமையான வெற்றியைப் பதிவுசெய்துள்ளது.
</p><h3>
பிரதமர் மார்க் கார்னி கட்சி அமோக வெற்றி
</h3><p>
திங்கட்கிழமையன்று, ஒன்ராறியோ, கியூபெக் மற்றும் பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள மூன்று தொகுதிகளில் இடைத்தேர்தல்கள் நடைபெற்ற நிலையில், மூன்றிலுமே பிரதமர் மார்க் கார்னியின் லிபரல் கட்சி வேட்பாளர்களே வெற்றி பெற்றுள்ளார்கள்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8dcfc344-8432-4e49-8b7c-3b416556ea15/26-6a966f423c4ec.webp' /></p><p>
தேர்தலில், லிபரல் கோட்டைகளான ஒன்ராறியோவின் Beaches–East York தொகுதியையும், பிரிட்டிஷ் கொலம்பியாவின் North Vancouver–Capilano தொகுதியையும் லேபர் கட்சி தக்கவைத்துக்கொண்டுள்ளதுடன், பியர் பொய்லியேவின் கன்சர்வேடிவ் கட்சியிடமிருந்து கியூபெக்கின் Chicoutimi–Le Fjord தொகுதியையும் கைப்பற்றியுள்ளது.
</p><p>
விடயம் என்னவென்றால், கடந்த சில மாதங்களில் நிகழ்ந்த தொடர் ராஜினாமாக்களுக்குப் பிறகு, திங்கட்கிழமை இரவு நிலவரப்படி, ஆளும் லிபரல் கட்சி 170 இருக்கைகளைக் கொண்டிருந்தது.&nbsp;</p><p></p><p>
இந்நிலையில், தற்போது இந்த மூன்று தொகுதிகளில் கிடைத்துள்ள வெற்றியால் லிபரல் கட்சிக்கு 173 இருக்கைகள் கிடைத்துள்ளன.

173 இருக்கைகள் என்பது, நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பெறத் தேவையானதை விட ஒரு இடம் கூடுதலாகும்.
</p><p>
ஆக, இந்தப் பெரும்பான்மையுடன், லிபரல் கட்சியினர் எதிர்க்கட்சியால் கவிழ்க்கப்படும் அபாயம் இன்றி 2029 வரை ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-01T07:20:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கலிபோர்னியாவில் இரு இந்திய இளம் பெண்கள் கொலை; திடீரென வில்லியாக மாறிய நண்பி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/two-young-kerala-women-murdered-in-california-1788240930"></link>
            <id>https://canadamirror.com/article/two-young-kerala-women-murdered-in-california-1788240930</id>
            <summary type="text">&amp;nbsp; அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள மில்பிடாஸ் நகரில் இரு இந்திய இளம் பெண்கள் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம், அமெரிக்க வாழ் புலம்பெ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள மில்பிடாஸ் நகரில் இரு இந்திய இளம் பெண்கள் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம், அமெரிக்க வாழ் புலம்பெயர் சமூகத்தினரை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
</p><p>
திருச்சூர் பாணஞ்சேரி, மண்ணுத்தி, முடிக்கோடு தெக்கூட்டு வீட்டைச் சேர்ந்த ஹரிதாஸ் மற்றும் சுஷ்மா தம்பதியரின் மகள் அஞ்சனா மற்றும் கோட்டயம் சிங்கவனம் பகுதியைச் சேர்ந்த ஆன் ஆகிய இருவருமே இந்தக் கொடூர சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/65df686a-bb5f-4b14-a14a-4e9c34f9c582/26-6a96642384b51.webp' /></p><h2>திடீரென&nbsp; வில்லியாக மாறிய&nbsp; நண்பி</h2><p>

இவர்கள் இருவருக்கும் நெருங்கிய தோழியும், அதே அடுக்குமாடிக் குடியிருப்பு வளாகத்தில் வசித்து வந்தவருமான அனிலா என்ற பெண், இந்தக் கொலைகளைச் செய்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் தற்போது போலீஸ் காவலில் உள்ளார்.</p><p>

ஒரே அடுக்குமாடிக் குடியிருப்பு வளாகத்தில் வசித்து வந்த இந்த மூன்று குடும்பங்களுக்கும் இடையே மிகவும் நெருக்கமான நட்பு இருந்ததாக கூறப்படுகிறது. 
ஆசிரியையாக பணியாற்றி வந்த அஞ்சனா கடந்த எட்டு ஆண்டுகளாக கலிபோர்னியாவில் வசித்து வந்தார். மென்பொருள் பொறியாளரான தனது கணவர் விஜீஷ் மற்றும் ஆறு வயது மகள் வாமிகாவுடன் அஞ்சனா வசித்து வந்தார்.
</p><p>
சமீபத்தில் நடைபெற்ற ஓணம் கொண்டாட்டங்களிலும், அஞ்சனா உள்ளிட்ட மூவரும் தங்களது நண்பர்களுடன் ஒன்றாகக் கலந்து கொண்டதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.</p><p>

ஆகஸ்ட் 28ஆம் தேதி, வெள்ளிக்கிழமை மதியம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்திய இந்தக் கொலைச் சம்பவங்கள் அரங்கேறின. 
 
வேலை முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த அஞ்சனாவின் கணவர் விஜீஷ், சம்பவ இடத்திலிருந்து நிற்காமல் வேகமாகச் சென்ற அனிலாவின் நீல நிற காரைக் கவனித்துள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த விஜீஷ் உடனடியாக ஆனின் கணவர் ஜேக்கப்பை தொலைபேசியில் தொடர்புகொண்டு தகவலை தெரிவித்துள்ளார்.

ஜேக்கப், ஆனுக்கு தொலைபேசியில் தொடர்புகொள்ள முயன்றும் முடியவில்லை. </p><p>இதையடுத்து அவர் குடியிருப்புக்குச் சென்று பார்த்தபோது, ஆன் ரத்த வெள்ளத்தில் கிடப்பதைக் கண்டுள்ளார்.
அதேநேரத்தில், விபத்து குறித்த தகவலை அறிந்து விஜீஷ் சம்பவ இடத்துக்கு வந்து சேரும் முன்பே அஞ்சனாவும் உயிரிழந்திருந்தார்.</p><p>

இந்த சம்பவங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, அஞ்சனா மற்றும் விஜீஷின் ஆறு வயது மகள் வாமிகா வீட்டின் அறைக்குள் இருந்ததாக கூறப்படுகிறது.

சம்பவத்திற்குப் பிறகு, நீல நிற எஸ்.யு.வி. கார் ஒன்று அதிவேகமாக அங்கிருந்து சென்றதைப் பார்த்ததாக நேரில் பார்த்தவர்களும் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
</p><p>
இதையடுத்து போலீசார் நடத்திய தேடுதல் நடவடிக்கையில், அருகிலுள்ள ஒரு பார்க்கிங் பகுதியில் பலத்த சேதமடைந்த நிலையில் அந்த வாகனம் கண்டுபிடிக்கப்பட்டது. </p><p>தொடர்ந்து அனிலாவையும் போலீசார் காவலில் எடுத்தனர்.



நெருங்கிய நண்பர்களாகப் பழகி வந்த இந்த மூவருக்கிடையே திடீரென கொலைச் சம்பவம் நிகழும் அளவுக்கு என்ன காரணம் ஏற்பட்டது என்பது இதுவரை தெளிவாக தெரியவில்லை.
</p><p>காவலில் உள்ள அனிலாவிடம் அமெரிக்க போலீசார் தற்போது தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணையின் மூலம் கொலைக்கான உண்மையான காரணம் மற்றும் சம்பவத்தின் பின்னணி குறித்த கூடுதல் தகவல்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p>]]></content>
            <updated>2026-09-01T07:20:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொள்கலனில் பிடிப்பட்ட ஐஸ்: திடுக்கிட வைக்கும் பல தகவல்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/drugs-1788244147"></link>
            <id>https://tamilwin.com/article/drugs-1788244147</id>
            <summary type="text">கொழும்பு துறைமுகத்தின் கொள்கலன் முனையத்திலிருந்து கண்டுபிடிக்கப்பட்ட 463 கிலோகிராம் &#039;ஐஸ்&#039; போதை பொருள் இலங்கையை இலக்கு வைத்தே கொண்டுவரப்பட்டிருக்க வேண்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு துறைமுகத்தின் கொள்கலன் முனையத்திலிருந்து கண்டுபிடிக்கப்பட்ட 463 கிலோகிராம் 'ஐஸ்' போதை பொருள் இலங்கையை இலக்கு வைத்தே கொண்டுவரப்பட்டிருக்க வேண்டும் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். </p><p>பாகிஸ்தானிலிருந்து இலங்கைக்குத் துவாய்களுக்கு நடுவே மறைத்து இவை கொண்டுவரப்பட்டுள்ளன. இலங்கையில் இவற்றை வெளியிலெடுக்க முயன்றபோது சுங்கப் பிரிவு மற்றும் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரின் கடும் கண்காணிப்பு காரணமாக வெளியிலெடுக்க முடியாமல் போயிருக்கலாம். </p><p>இதனால் பிடிபட்டுவிடுவோம் என்ற பயத்தில் அவசர அவசரமாக நிறுவனங்களின் பெயர்களை மாற்றி கெமரூன் நாட்டிற்கு மறு ஏற்றுமதி செய்வது போல ஆவணங்களைத் தயாரித்திருக்கலாம்.</p><h2>பொலிஸார் சந்தேகம்</h2><p>
</p><p>எனவே இது பாகிஸ்தானிலிருந்து கெமரூன் செல்ல வந்த சரக்கு என்பதை நம்ப முடியாது. இது இலங்கைக்குக் கொண்டுவரப்பட்ட போதைப்பொருளாகவே இருக்கக் கூடும் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.</p><p>பாகிஸ்தானில் சமர்ப்பிக்கப்பட்ட மூல ஆவணங்களை பரிசீலித்தால் மட்டுமே இதன் பின்னணியில் உள்ள உண்மையான கடத்தல்காரர்கள் யார் என்பதைக் கண்டறிய முடியும்.
இன்னமும் இதன் எடையை அளவிடும் பணிகள் இடம்பெற்று வருகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bc9e6b56-eded-40cc-8102-79e3c9a658c1/26-6a96829d50ce3.webp' /></p><p> </p><p>சுமார் 463 கிலோகிராம் எடைகொண்ட 46 பொதிகள் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. எனினும் முழுமையாக அளவிட்ட பின்னரே இறுதி எடை தெரியவரும்.
எது எப்படியிருப்பினும்இ இது மிகவும் பாரதூரமான சம்பவமாகும். </p><p>காரணம் கடந்த காலத்தில் கடல் வழியாக இலங்கைக்கு ஐஸ் மற்றும் ஹெரோயின் போன்ற போதைப்பொருட்கள் பெருமளவில் கொண்டுவரப்படுவது தீவிரமாகக் கட்டுப்படுத்தப்பட்டிருந்தது. </p><p>அமெரிக்கா-ஈரான் பதற்றநிலை மற்றும் வெளிநாடுகளில் இருந்த முக்கிய குற்றவாளிகள் பலர் கைது செய்யப்பட்டமை போன்ற காரணங்களால் தெற்கு பகுதி ஊடாக இலங்கைக்குப் பெருமளவில் போதைப்பொருட்கள் வருவது நிறுத்தப்பட்டிருந்தது.</p><h2>இரகசியத் தகவல்</h2><p> </p><p>
ஆனால் மீண்டும் பழையபடி கொள்கலன்கள் மூலமாக நாட்டிற்குள் போதைப்பொருள் வருகிறதா என்ற சந்தேகம் எழுந்தது. அதற்கமையவே குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு இந்த இரண்டு கொள்கலன்கள் குறித்து இரகசியத் தகவல் கிடைத்தது.</p><p> பின்னர் கடந்த ஜூன் மாதமளவில் இந்தத் தகவல் போதைப்பொருள் தடுப்புப் பிரிவிற்கு வழங்கப்பட்டது. அதன்பின்னர் இந்த இரண்டு கொள்கலன்களும் பாதுகாப்பான இடத்தில் வைக்கப்பட்டிருந்தன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fc54570a-5e07-4768-ad01-75eeda34b866/26-6a9670b626d1e.webp' /></p><p>நீதிமன்ற உத்தரவைப் பெற்றே இவை திறக்கப்படவிருந்தன.
நீதிமன்றத்திற்கு விபரங்கள் அறிக்கையிடப்பட்டு பௌர்ணமி தினத்தை ஒட்டிய காலப்பகுதியில் இவற்றைத் திறக்கத் திட்டமிடப்பட்டிருந்தது. </p><p>இதனிடையே பொலிஸ் விசாரணைகளின் போது ஒருங்கிணைந்து செயல்படாமையின் விளைவுகளைச் சில நேரங்களில் சந்திக்க வேண்டியேற்படுகிறது. இந்த நிலையில் பொலிஸ் மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு மீண்டும் ஒரு தகவல் கிடைக்கிறது. </p><p>அவர் உடனடியாகச் செயற்பட்டு சம்பந்தப்பட்ட பிரிவுகளுக்குத் தெரிவித்து நீதிமன்ற உத்தரவைப் பெற்று நேற்று இந்த இரண்டு கொள்கலன்களையும் திறக்க நடவடிக்கை எடுத்துள்ளார்.</p><h2>விசாரணை</h2><p>
</p><p>ஆவணங்களைப் பரிசீலித்தபோது இந்தச் சரக்கு பாகிஸ்தானிலிருந்து இலங்கைக்கு வந்து இங்கிருந்து கெமரூன் (Cameroon) நாட்டிற்கு (மத்திய ஆப்பிரிக்க நாடு) மறு ஏற்றுமதி (Re-export) செய்யப்படவிருந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
</p><p>ஆனால் பாகிஸ்தானிலிருந்து கெமரூன் செல்வதற்கு இலங்கையினூடாக இவ்வளவு நீண்ட தூரம் சுற்றி அனுப்ப வேண்டிய&nbsp; அவசியம் என்ன, கெமரூன் நாட்டிற்கு தெற்காசியாவிலிருந்தா அல்லது பாகிஸ்தானிலிருந்தா ஐஸ் போதைப்பொருள் விநியோகிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1e342eaf-707d-43cc-b60f-2945af6e733a/26-6a96829e19443.webp' /></p><p>இது தொடர்பில் ஆராய்ந்து பார்த்தபோது கெமரூன் நாட்டிற்கு 'மெத்தாம்பெட்டமைன்' (ஐஸ்) போதைப்பொருள் முக்கியமாக அர்ஜென்டினா மற்றும் மெக்சிகோ போன்ற நாடுகளிலிருந்தே இறக்குமதி செய்யப்படுகிறது. </p><p>மேலும் கெமரூன் நாட்டிற்குள் இருக்கும் இரசாயனக் கூடங்களிலேயே ஐஸ் தயாரிக்கப்படுவதாகவும் தெரியவருகிறது. குறிப்பாக கெமரூனில் ஐஸ் போதைப்பொருளை விட 'கொக்கைன்' பயன்பாடே அதிகம். </p><p>அது கொலம்பியா - பெரு - பொலிவியா போன்ற நாடுகளிலிருந்து வருகிறது. ஆவணங்கள் தொடர்பான ஆழமான விசாரணையின் போதே முழுமையான விபரங்களை பெற்றுக் கொள்ள முடியும்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-01T07:18:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[குற்றப் புலனாய்வுப் திணைக்களத்திற்கு புதிய பணிப்பாளர் நியமனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/roshan-amarasinghe-new-director-of-the-cid-1788245795"></link>
            <id>https://tamilwin.com/article/roshan-amarasinghe-new-director-of-the-cid-1788245795</id>
            <summary type="text">குற்றப் புலனாய்வுப் திணைக்களத்திற்கு (CID) புதிய பணிப்பாளர் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி, குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பணிப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>குற்றப் புலனாய்வுப் திணைக்களத்திற்கு (CID) புதிய பணிப்பாளர் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>அதன்படி, குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளராக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் (SSP) ரொஷான் அமரசிங்க&nbsp; நியமிக்கப்பட்டுள்ளார்.</p><p>சேவைத் தேவைகளைக் கருத்திற் கொண்டு, பொலிஸ் மா அதிபரின் அறிவுறுத்தலுக்கு அமைய இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.</p><h2>நியமனம்</h2><p>
</p><p>
 

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் இயக்குநராகக் கடமையாற்றிய ஷானி அபேசேகர, பிரதிப் பொலிஸ் மா அதிபராக (DIG) தரமுயர்த்தப்பட்டதைத் தொடர்ந்து, பணிப்பாளர் பதவி வெற்றிடமாக இருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9e06c206-2aae-4eb2-810b-4b670da584b3/26-6a967b5f0f50a.webp' /></p><p>&nbsp;இருப்பினும், ஷானி அபேசேகர தொடர்ந்து குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபராகக் கடமையாற்றுவார் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-01T07:14:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வேலியே பயிரை மேய்ந்த கதை; மாணவி துஸ்பிரயோகம்; ஆசிரியரை பாதுகாத்த பாடசாலை சமூகம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/teacher-who-abused-a-female-student-at-school-1788246959"></link>
            <id>https://jvpnews.com/article/teacher-who-abused-a-female-student-at-school-1788246959</id>
            <summary type="text">&amp;nbsp; குருநாகலையில் உள்ள பிரதான பாடசாலை ஒன்றில், பதினான்கு வயது மாணவி ஒருவரைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில், பாடசாலையின் அறிவியல...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; குருநாகலையில் உள்ள பிரதான பாடசாலை ஒன்றில், பதினான்கு வயது மாணவி ஒருவரைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில், பாடசாலையின் அறிவியல் ஆசிரியர் ஞாயிற்றுக்கிழமை (30) கைது செய்யப்பட்டதாக குளுநாகல தலைமையகக் காவல் நிலையம் தெரிவித்துள்ளது.
</p><p>
கைது செய்யப்பட்டவர் அதே பாடசாலையில் அறிவியல் பாடம் கற்பிக்கும் 52 வயதுடைய இரண்டு குழந்தைகளின் தந்தை ஆவார். 
 

கடந்த ஜூன் மாதத்தில் இந்தத் துஷ்பிரயோகம் நடந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/25f9e2a3-6ee4-4673-a16f-747939d90595/26-6a967bb11f90d.webp' /></p><h2>முன்பும் பாலியல் குற்றச்சாட்டில்&nbsp; சிக்கிய ஆசிரியர்</h2><p> </p><p>அதுபற்றி மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்ததை அடுத்து, அவர்கள் அது குறித்துப் பாடசாலை அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளனர். இருப்பினும், பாடசாலை அதிகாரிகள் சந்தேகத்திற்கிடமான ஆசிரியரைப் பாதுகாக்கும் கொள்கையைக் கடைப்பிடித்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.</p><p></p><p>
</p><p>
அதன் பின்னர், அது குறித்துக் குருநாகல் வலயக் கல்வி அலுவலகத்திற்கு வந்த புகாரின் பேரில் விசாரிக்கப்பட்டு, சந்தேக நபர் குருநாகல் பகுதியிலேயே அமைந்துள்ள மற்றொரு சிறிய பாடசாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.</p><p>

இந்தச் சம்பவம் பதிவாகி இரண்டு மாதங்களுக்கும் மேலாகியிருந்த போதிலும், தனது மகளுக்கு இழைக்கப்பட்ட துஷ்பிரயோகம் தொடர்பாகச் சந்தேகத்திற்கிடமான ஆசிரியருக்கு எதிராக அதிகாரிகள் எந்தக் சட்ட நடவடிக்கையும் எடுக்கவில்லை என மாணவியின் தந்தை, குருநாகல் தலைமையகக் காவல் நிலையத்தின் குழந்தைகள் மற்றும் பெண்கள் பணியகத்தில் கடந்த 25 ஆம் திகதி முறைப்பாடு அளித்துள்ளார்.</p><p></p><p> </p><p>

அதற்கமைய, விசாரணை நடத்திய காவல்துறையினர் சந்தேகத்திற்கிடமான ஆசிரியரைக் கைது செய்துள்ளனர்.
</p><p>
 அதேபவேளை கைதான ஆசிரியர் இதற்கு முன்னரும் குருநாகல் நகரில் உள்ள மற்றொரு பிரதான கலவன் பாடசாலையில் பணியாற்றியபோது, மாணவி ஒருவரைத் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டுக்கு ஆளானவர் என்பதும் , சம்பவம் வெளிச்சத்திற்கு வந்ததைத் தொடர்ந்து, அவர் இந்தப் பாடசாலைக்கு இடமாற்றம் பெற்று வந்துள்ளார் என விசாரணையில் தெரிய வந்ததாக கூறப்படுகின்றது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-01T07:13:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[நியூசிலாந்து உயர்ஸ்தானிகருக்கும் விளையாட்டுத்துறை அமைச்சருக்கும் இடையில் விசேட சந்திப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/newzealand-commissioner-sports-minister-meeting-1788245148"></link>
            <id>https://tamilwin.com/article/newzealand-commissioner-sports-minister-meeting-1788245148</id>
            <summary type="text">இலங்கைக்கான நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் டேவிட் பைனுக்கும், இளைஞர் விவகார
மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகேவுக்கும் இடையிலான விசேட
இ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கைக்கான நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் டேவிட் பைனுக்கும், இளைஞர் விவகார
மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகேவுக்கும் இடையிலான விசேட
இருதரப்பு சந்திப்பொன்று நேற்று(31) இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை
அமைச்சின் வளாகத்தில் நடைபெற்றது.</p><p>

இலங்கைக்கும் நியூசிலாந்துக்கும் இடையிலான முதலாவது வரலாற்றுச் சிறப்புமிக்க
கிரிக்கெட் போட்டி 1937 ஆம் ஆண்டு ஒக்டோபர் 17 ஆம் திகதி நடத்தப்பட்ட
நிலையில், இரு நாடுகளுக்கும் இடையிலான கிரிக்கெட் உறவு 100 ஆண்டுகளை
எட்டியுள்ளதை முன்னிட்டு, 2027 ஜனவரி மாதம் நியூசிலாந்தில் நடைபெறவுள்ள விசேட
நினைவுச் சின்ன கிரிக்கெட் தொடரை ஒழுங்கமைப்பது குறித்து விரிவாகக்
கலந்துரையாடப்பட்டது.
</p><h2>அரசாங்கத்தின் முழுமையான ஒத்துழைப்பு</h2><p>
வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தப் போட்டித் தொடரைப் பார்வையிடுவதற்கும் அதில்
கலந்து கொள்வதற்கும் நியூசிலாந்து உயர்ஸ்தானிகரினால் அமைச்சர் சுனில் குமார
கமகேவுக்கு உத்தியோகபூர்வ அழைப்பு விடுக்கப்பட்டது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c1b2bfc9-bfdc-43b9-8c17-a8697b416a62/26-6a967a807b8cd.webp' /></p><p>
இலங்கையின் ரக்பி விளையாட்டு வளர்ச்சி, இளைஞர் பரிமாற்றத் திட்டங்கள் மற்றும்
இளைஞர்களின் திறன்களை மேம்படுத்துதல் ஆகியவற்றுக்கு நியூசிலாந்து
அரசாங்கத்தின் முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாக உயர்ஸ்தானிகர் இதன்போது
உறுதியளித்தார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-01T07:12:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரணில் விக்ரமசிங்கவைச் சுற்றி தீவிரமடையும் அரசியல் - சட்டப் போராட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/political-legal-battle-intensifies-around-ranil-1788244504"></link>
            <id>https://ibctamil.com/article/political-legal-battle-intensifies-around-ranil-1788244504</id>
            <summary type="text">முன்மொழியப்பட்ட 22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள பல சிறப்பு தீர்மான மனுக்கள், இலங்கையின் அரசியலமைப்பு மற்றும் நீதி...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்மொழியப்பட்ட 22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள பல சிறப்பு தீர்மான மனுக்கள், இலங்கையின் அரசியலமைப்பு மற்றும் நீதித்துறையின் சுயாதீனம் தொடர்பான தீவிரமான விவாதத்தை உருவாக்கியுள்ளன.</p><p> இந்த சட்டப் போராட்டத்தின் பின்னணியில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் மற்றும் சட்டரீதியான நிலைப்பாடுகள் குறித்தும் பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.</p><p>

22ஆவது திருத்தம் நீதித்துறையின் ஓய்வுபெறும் வயது மற்றும் உயர் நீதிமன்றத்தின் கட்டமைப்பு உள்ளிட்ட விடயங்களில் மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும் என்ற நிலையில், இதற்கு எதிராக எதிர்க்கட்சிகள், சட்டத்தரணிகள் மற்றும் சிவில் சமூகத் தரப்புகள் சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><h2>ஐந்து தசாப்த அரசியல் பயணம்</h2><p>
</p><p>
இந்த விவகாரம் வெறும் அரசியலமைப்புச் சட்டத்தின் தொழில்நுட்பப் பிரச்சினையாக மட்டுமன்றி, இலங்கையின் அதிகாரப் பிரிவு, நீதித்துறையின் சுயாதீனம் மற்றும் அரசியல் அதிகாரத்தின் எதிர்காலம் தொடர்பான முக்கியமான சோதனையாகவும் பார்க்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/99d88978-8d64-4d1d-9b7e-0bf38f31b585/26-6a967a49b49ba.webp' /></p><p>ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் வாழ்க்கை ஐந்து தசாப்தங்களை நெருங்குகிறது. 1970களின் இறுதியில் தொடங்கிய அவரது அரசியல் பயணம், பல்வேறு அரசியல் நெருக்கடிகள், தேர்தல் தோல்விகள், கூட்டணி அரசுகள் மற்றும் அதிகார மாற்றங்களைக் கடந்து சென்றுள்ளது.
</p><p>
1988–1989 காலப்பகுதியில் இடம்பெற்ற இரண்டாவது ஜே.வி.பி. கிளர்ச்சியின் போது அரசாங்கத்தின் கிளர்ச்சி எதிர்ப்பு நடவடிக்கைகள் தொடர்பாக விக்ரமசிங்கவின் பங்கு குறித்து நீண்டகாலமாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. </p><p>குறிப்பாக, பத்தரமுல்லை பிரதேசத்தில் அமைந்திருந்ததாகக் கூறப்படும் ‘பட்டலந்த’ தடுப்பு மற்றும் விசாரணை மையம் தொடர்பான விவகாரம் பின்னர் ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைக்கும் உட்பட்டது.
</p><p>
இந்தக் காலப்பகுதியை ஆதரவாளர்கள் அரசை பாதுகாக்க மேற்கொள்ளப்பட்ட கடுமையான நடவடிக்கைகளின் காலமாகக் கருதினாலும், மனித உரிமை மீறல்கள் மற்றும் காணாமல் போனோர் தொடர்பான குற்றச்சாட்டுகளை முன்வைப்பவர்கள் இதனை இலங்கையின் இருண்ட அரசியல் அத்தியாயங்களில் ஒன்றாகக் குறிப்பிடுகின்றனர்.</p><p>மேலும், 2001ஆம் ஆண்டு பிரதமராக பதவியேற்ற விக்ரமசிங்க, விடுதலைப் புலிகள் அமைப்புடனான சமாதான முயற்சிகளுக்கு முன்னுரிமை வழங்கினார். 2002ஆம் ஆண்டு அரசாங்கத்துக்கும் விடுதலைப் புலிகள் அமைப்புக்கும் இடையில் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது.
</p><p>
அந்த முயற்சி நாட்டின் பொருளாதாரச் சூழலை மேம்படுத்தவும் சர்வதேச ஆதரவைப் பெறவும் உதவியதாக அவரது ஆதரவாளர்கள் வாதிட்டனர்.</p><p> அதேவேளை, தேசியவாத அரசியல் தரப்புகள் அந்த ஒப்பந்தத்தை கடுமையாக எதிர்த்தன. அது விடுதலைப் புலிகளுக்கு அரசியல் மற்றும் நிர்வாக ரீதியான இடத்தை வழங்கியதாக அவர்கள் விமர்சித்தனர்.</p><p></p><h2>நல்லாட்சியின் பரிசோதனை</h2><p>2015ஆம் ஆண்டு மைத்திரிபால சிறிசேன தலைமையிலான புதிய அரசியல் கூட்டணியுடன் விக்ரமசிங்க மீண்டும் அதிகாரத்தின் மையத்துக்கு வந்தார்.

மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாகவும் விக்ரமசிங்க பிரதமராகவும் இருந்த இந்தக் காலகட்டம் ‘நல்லாட்சி’ என அடையாளப்படுத்தப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cdea159c-3824-4ff7-b3a8-3fe3c1be3daf/26-6a967a4aa18fa.webp' /></p><p> </p><p>அரசியலமைப்பு சீர்திருத்தம், நிறுவனங்களின் சுயாதீனம் மற்றும் நிர்வாக வெளிப்படைத்தன்மை ஆகியவை முக்கிய இலக்குகளாக முன்வைக்கப்பட்டன.
</p><p>
ஆனால் இந்த ஆட்சி காலம் மத்திய வங்கி பிணைமுறி விவகாரம் உள்ளிட்ட சர்ச்சைகளாலும் அரசியல் மோதல்களாலும் பாதிக்கப்பட்டது.</p><p>

2018ஆம் ஆண்டு ஜனாதிபதி சிறிசேன, விக்ரமசிங்கவை பிரதமர் பதவியிலிருந்து நீக்கி மகிந்த ராஜபக்சவை அந்தப் பதவிக்கு நியமித்தபோது அரசியலமைப்பு நெருக்கடி உருவானது.</p><p> பின்னர் நீதித்துறை தலையீட்டின் மூலம் அந்த நடவடிக்கைகள் சவாலுக்கு உள்ளாக்கப்பட்டன. விக்ரமசிங்க மீண்டும் பிரதமர் பதவியைப் பெற்றார்.</p><p>2022ஆம் ஆண்டு இலங்கையின் அரசியல் வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத மாற்றம் ஏற்பட்டது.

பொருளாதார நெருக்கடி மற்றும் ‘அரகலய’ போராட்டங்களின் பின்னணியில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலகிய பின்னர், நாடாளுமன்ற வாக்கெடுப்பின் மூலம் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.</p><p>

அப்போது அவர் ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் உறுப்பினராக நாடாளுமன்றத்தில் இருந்தார். இதனால், ஒரு தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளராக நேரடியாக மக்களின் வாக்கைப் பெறாமல் நாடாளுமன்றத்தின் மூலம் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டமை குறித்து அரசியல் விவாதம் எழுந்தது.
</p><p>
விக்ரமசிங்க அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவுடன் பொருளாதார மறுசீரமைப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்தது. பொருளாதாரத்தை நிலைப்படுத்தியமை அவரது ஆதரவாளர்களால் முக்கிய சாதனையாகக் குறிப்பிடப்படுகிறது.</p><p>எனினும், போராட்ட இயக்கத்தின் கோரிக்கைகள் மற்றும் பொதுமக்களின் எதிர்பார்ப்புகளிலிருந்து விலகி, அப்போதைய ஆளும் அரசியல் சக்திகளுடன் இணைந்து செயல்பட்டதாக அவர் மீது கடுமையான விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டன.</p><p></p><h2>புதிய சட்டப் போராட்டம்&nbsp;</h2><p>2024க்குப் பின்னர் விக்ரமசிங்க அரசியலிலிருந்து பின்வாங்கியிருந்தாலும், அரசியலமைப்பு மற்றும் நீதித்துறை தொடர்பான விவாதங்களில் அவரது பெயர் தொடர்ந்து இடம்பெறுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/41915769-f833-4827-95fb-2ee943f3e80b/26-6a967a4b589bd.webp' /></p><p>
</p><p>
முன்மொழியப்பட்ட 22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள், அரசியலமைப்பின் அடிப்படை விதிகள் மற்றும் மக்கள் இறையாண்மை தொடர்பான கேள்விகளை நீதிமன்றத்தின் முன் கொண்டு வந்துள்ளன.
</p><p>
இந்தத் திருத்தம் நீதிபதிகளின் பதவிக்காலம் மற்றும் ஓய்வுபெறும் வயது உள்ளிட்ட விடயங்களில் தாக்கத்தை ஏற்படுத்தும் என விமர்சகர்கள் கூறுகின்றனர்.</p><p> இதனால், நீதித்துறையின் சுயாதீனத்துக்கு ஏற்படக்கூடிய தாக்கம் குறித்தும் கவலைகள் எழுந்துள்ளன.</p><p>

சில அரசியல் விமர்சகர்கள், இந்தத் திருத்தத்திற்கு எதிரான விக்ரமசிங்கவின் நிலைப்பாடு அரசியலமைப்புக் கொள்கைகளில் மட்டுமே அடிப்படையைக் கொண்டதல்ல என்றும், எதிர்கால சட்ட மற்றும் அரசியல் சூழலில் தனக்கான பாதுகாப்பை உறுதி செய்யும் அரசியல் கணக்கீடாகவும் இருக்கலாம் என்றும் வாதிடுகின்றனர். </p><p>ஆனால் இத்தகைய கருத்துகள் அரசியல் விளக்கங்களாகவே பார்க்கப்பட வேண்டும். அவை நிரூபிக்கப்பட்ட உண்மைகள் எனக் கருத முடியாது.</p><p>இன்றைய சூழலில் முக்கியமான கேள்வி ஒன்றே: அரசியலமைப்பு தொடர்பான இந்தப் போராட்டத்தில் இறுதி தீர்மானம் அரசியல் சக்திகளின் கைகளிலா அல்லது நீதித்துறையின் சுயாதீனமான பரிசீலனையிலா இருக்கும்?
</p><p>
22ஆவது திருத்தம் தொடர்பான மனுக்கள் மீதான விசாரணை, நீதித்துறை அரசியலமைப்பின் பாதுகாவலராக எந்த அளவுக்கு சுயாதீனமாக செயல்படுகிறது என்பதற்கான முக்கியமான பரிசோதனையாக அமையக்கூடும்.
</p><p>
ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் வாழ்க்கை பலமுறை தோல்விக்குப் பின்னரும் அவர் மீண்டும் அதிகாரத்தின் மையத்துக்கு திரும்பியதற்காக தனித்துவமானதாகக் கருதப்படுகிறது. </p><p>அதே நேரத்தில், அவரது நீண்ட அரசியல் பயணம் பல்வேறு சர்ச்சைகளையும் கடுமையான விமர்சனங்களையும் உருவாக்கியுள்ளது.
</p><p>
அவரை ஆதரிப்பவர்கள் அவரை நெருக்கடிகளை சமாளிக்கக்கூடிய அனுபவமிக்க அரசியல்வாதியாக பார்க்கின்றனர். </p><p>விமர்சகர்கள், அவர் நிறுவனங்களை விட அதிகாரத்தின் தொடர்ச்சிக்கு முன்னுரிமை அளித்ததாக குற்றம்சாட்டுகின்றனர்.

எவ்வாறாயினும், 22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தைச் சுற்றியுள்ள தற்போதைய சட்டப் போராட்டம் ரணில் விக்ரமசிங்கைத் தாண்டிய ஒரு பெரிய கேள்வியை முன்வைக்கிறது.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-01T07:07:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் அதிகரிக்க போகிறதா மின் கட்டணங்கள்..! வெளிவந்துள்ள தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/insufficient-rainfall-lead-electricity-tariffs-1788242513"></link>
            <id>https://tamilwin.com/article/insufficient-rainfall-lead-electricity-tariffs-1788242513</id>
            <summary type="text">எதிர்வரும் நாட்களில் இலங்கையில் போதுமான மழை பெய்யாவிட்டால் மின்சாரக் கட்டணங்கள் அதிகரிக்கக்கூடும் என நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி. சானக எச்சரிக்கை விடு...</summary>
            <content type="html"><![CDATA[<p>எதிர்வரும் நாட்களில் இலங்கையில் போதுமான மழை பெய்யாவிட்டால் மின்சாரக் கட்டணங்கள் அதிகரிக்கக்கூடும் என நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி. சானக எச்சரிக்கை விடுத்துள்ளார். </p><p>

குறைக்கப்பட்ட நீர்மின் உற்பத்தி மற்றும் பிற மின் ஆதாரங்களைச் சார்ந்திருக்கும் நிலையை அதிகரித்து, மின்சார உற்பத்திச் செலவுகளைக் கூட்டக்கூடும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><h2>கட்டண உயர்வால் பாதிப்பு</h2><p> </p><p>

கூடுதலாக விதிக்கப்படும் எந்தவொரு கட்டண உயர்வும் பொதுமக்களையும், சுற்றுலாத்துறையையும் பாதிக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். </p><p>

தற்போது இலங்கையில் எல் நினோ தாக்கத்தால் வறண்ட வானிலை தொடர்ந்து நிலவி வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/42719194-6341-4620-a138-93aea6070711/26-6a9677588196e.webp' /></p><p> </p><p>இது நாட்டின் பல மாவட்டங்களில் குடிநீர் பற்றாக்குறை, விவசாய பாதிப்பு ஆகியவற்றை ஏற்படுத்தியுள்ளது.
</p><p>
எனினும் அக்டோபர் முதல் இரண்டாவது இடைப்பருவ மழைக்காலத்தில் சாதாரண அளவை விட அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளது என எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.</p><p>&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-09-01T07:03:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[மொட்டு கட்சியின் முன்னாள் மேயர் CCIB இல் விசாரணைக்கு முன்னிலை...!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/ex-mayor-ordered-to-statement-over-drug-kingpin-1788235603"></link>
            <id>https://ibctamil.com/article/ex-mayor-ordered-to-statement-over-drug-kingpin-1788235603</id>
            <summary type="text">🛑 புதிய இணைப்புதெஹிவளை - கல்கிசை மாநகரசபையின் முன்னாள் மேயர் தனசிரி அமரதுங்க, வாக்குமூலம் அளிப்பதற்காக மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தில் (CCIB) ச...</summary>
            <content type="html"><![CDATA[<h5><b><u>🛑 புதிய இணைப்பு</u></b></h5><p>தெஹிவளை - கல்கிசை மாநகரசபையின் முன்னாள் மேயர் தனசிரி அமரதுங்க, வாக்குமூலம் அளிப்பதற்காக மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தில் (CCIB) சற்றுமுன்னர் முன்னிலையாகியுள்ளார்.
</p><p>
தற்போது மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வரும் பெருமளவிலான போதைப்பொருள் கடத்தல்காரரான ஷிரான் பாசிக் (Shiran Basik) தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளுக்கு அமைவாகவே இந்த வாக்குமூலம் பதிவு செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><h5><b><u>🛑 முதலாம் இணைப்பு</u></b></h5><p>மொட்டு கட்சியின் தெஹிவளை - கல்கிசை முன்னாள் மேயர் தனசிரி அமரதுங்கவிற்கு மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தில் (CCIB) முன்னிலையாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.</p><p>பெரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரரான ஷிரான் பாசிக் (Shiran Basik) தொடர்பான விசாரணைகள் குறித்து வாக்குமூலம் வழங்குவதற்காக இவ்வாறு அவரை முன்னிலையாகுமாரு தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இதனடிப்படையில் இன்று (01-09-2026) அவரை&nbsp;CCIB இல் முன்னிலையாகுமாறு அறிவுருத்தப்பட்டுள்ளது.</p><p></p><h2>கடத்தல்காரர்களில் ஒருவர்</h2><p>

இலங்கைக்குப் பெருமளவில் போதைப்பொருட்களை விநியோகிக்கும் முக்கிய பாதாள உலகக் கடத்தல்காரர்களில் ஒருவரான ஷிரான் பாசிக், டுபாயில் கைது செய்யப்பட்டு கடந்த ஆகஸ்ட் 14 ஆம் திகதி இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்.
</p><p>தற்போது தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் பொறுப்பில் உள்ள சந்தேகநபரிடம் நடத்தப்பட்ட நீண்ட விசாரணைகளின் அடிப்படையில், முன்னாள் மேயரிடம் வாக்குமூலம் பெறத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/15d7ffe9-8f67-424f-a4b5-74e903ef2b6d/26-6a9656943ca12.webp' /></p><p>இதனடிப்படையில் இன்று காலை மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தில் முன்னிலையாகுமாறு முன்னாள் மேயர் தனசிரி அமரதுங்கவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் ரன்மல் கொடிதுவாக்குவின் நேரடி மேற்பார்வையின் கீழ் இந்த விசேட விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p>
</p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-01T07:03:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[சைந்தவி எப்போது எனக்கு ஸ்பெஷல்!! விவாகரத்தாகியும் ஜிவி பிரகாஷின் மரியாதை..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/gv-prakash-talks-about-saindhavi-after-divorce-1788246239"></link>
            <id>https://viduppu.com/article/gv-prakash-talks-about-saindhavi-after-divorce-1788246239</id>
            <summary type="text">ஜி வி பிரகாஷ் குமார்வெயில் படத்தின் மூலம் தன்னுடைய இசை பயணத்தை தொடங்கி தற்போது தேசிய விருது இசையமைப்பாளாராக திகழ்ந்து வருபவர் தான் ஜி வி பிரகாஷ் குமார...</summary>
            <content type="html"><![CDATA[<h2>ஜி வி பிரகாஷ் குமார்</h2><p>வெயில் படத்தின் மூலம் தன்னுடைய இசை பயணத்தை தொடங்கி தற்போது தேசிய விருது இசையமைப்பாளாராக திகழ்ந்து வருபவர் தான் ஜி வி பிரகாஷ் குமார். கடந்த 2024-ஆம் ஆண்டு தன்னுடைய மனைவி சைந்தவியை விவாகரத்து செய்து அதிர்ச்சி கொடுத்தார். </p><p>விவாகரத்து பெற்றாலும் மகளின் எதிர்காலத்திற்காக நண்பர்களாக இருந்து வருகிறார்கள். சமீபத்தில் ஜிவி பிரகாஷ் அளித்த பேட்டியில் சைந்தவி பற்றி பேசியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1b8086ec-a5a8-46a4-82f4-53364709820f/26-6a9678e114023.webp' /></p><p>அதில், சைந்தவியும், அன்வியும் என்னுடைய வாழ்க்கையில் ஸ்பெஷலானவர்கள். பள்ளியில் இருந்தே அவர் எனக்கு தோழி, காதலித்தோம், திருமணம் செய்தோம். </p><p>இப்போது விவாகரத்து பெற்றுவிட்டோம். அன்வியை இப்போது கோ பேரண்டிங் முறையில் நாங்கள் வளர்த்து வருகிறோம். நாங்கள் பிரிந்தாலும் சைந்தவியுடனான நட்பு முக்கியமானது என்று பேசியுள்ளார்.</p>]]></content>
            <updated>2026-09-01T07:00:00+00:00</updated>
        </entry>
    </feed>
