<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-07-28T13:45:21+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டுக்கு பெருமை; சர்வதேச விண்வெளிப் பயிற்சிக்குத் தேர்வான இலங்கை மாணவி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sri-lankan-student-selected-space-training-1785245706"></link>
            <id>https://jvpnews.com/article/sri-lankan-student-selected-space-training-1785245706</id>
            <summary type="text">எதிர்கால டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் STEM (அறிவியல்,தொழில்நுட்பம்,பொறியியல்,கணிதம்) கல்வியை ஊக்குவிக்கும் தேசிய நடவடிக்கையின் மற்றொரு முக்கிய மைல்...</summary>
            <content type="html"><![CDATA[<p>எதிர்கால டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் STEM (அறிவியல்,தொழில்நுட்பம்,பொறியியல்,கணிதம்) கல்வியை ஊக்குவிக்கும் தேசிய நடவடிக்கையின் மற்றொரு முக்கிய மைல்கல்லைக் குறிக்கும் வகையில், இலங்கையைச் சேர்ந்த 200 மாணவர்கள் தற்போது STEM கல்வித் திட்டத்தின் கீழ் தீவிரமாகப் பயிற்சி பெற்று வருகின்றனர்.
</p><p>
இத்திட்டத்தின் ஒரு விசேட நிகழ்வாக, மிகவும் கடுமையான தேர்வு முறைக்குப் பிறகு, 18 வயதான செனீசா குணவர்தன (Seneesa Gunawardena) 'ShakthiSAT International Mission' சர்வதேச விண்வெளித் திட்டத்தில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e1aeb262-d3e4-4a34-84a8-7002de96a41b/26-6a68b00bb531e.webp' /></p><h2>அதிகாரப்பூர்வ இராஜதந்திர சந்திப்புகள்</h2><p>
</p><p>
இந்த அதிகாரப்பூர்வத் திட்டம் எதிர்வரும் ஆகஸ்ட் 22 முதல் 31 வரை இந்தியாவின் கெளதம புத்த பல்கலைக்கழகத்தில் (Gautam Buddha University) நடைபெறவுள்ளதுடன், இதற்கான பயணம் ஆகஸ்ட் 21 முதல் 31 வரை புதுடெல்லியை மையமாகக் கொண்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.</p><p></p><p>

இப்பயணத்தின் போது, இந்தியப் பிரதமரும் இந்தியக் குடியரசுத் தலைவரும் கலந்துகொள்ளும் அதிகாரப்பூர்வ இராஜதந்திர சந்திப்புகள் மற்றும் அரசு நிகழ்ச்சிகள் சிலவற்றில் பிரதிநிதியாகச் செனீசாவும் கலந்துகொள்ளவுள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-28T13:35:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை: நீலகிரிக்கு கனமழை எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/tamil-nadu-2-days-weather-forecast-1785245018"></link>
            <id>https://ibctamilnadu.com/article/tamil-nadu-2-days-weather-forecast-1785245018</id>
            <summary type="text">தமிழக கடலோரப் பகுதிகளின் கீழ்மட்ட வளிமண்டலத்தில் பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுவதால், மாநிலத்தின் பல பகுதிகளில் அடுத்த இரண்டு நாட்களுக்கு ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழக கடலோரப் பகுதிகளின் கீழ்மட்ட வளிமண்டலத்தில் பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுவதால், மாநிலத்தின் பல பகுதிகளில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.</p><p>
இன்று (28.07.2026) மற்றும் நாளை (29.07.2026) மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யக்கூடும்.</p><p></p><p> மேலும், தமிழகத்தின் பிற பகுதிகள், புதுவை மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.</p><h2>நீலகிரிக்கு கனமழை எச்சரிக்கை</h2><p>
வரும் 30.07.2026 அன்று நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழை பெய்யக்கூடும் என்றும், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மிதமான மழை தொடரும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/654c3527-8afe-4f41-89d1-960f2cda5a36/26-6a68afdb770d6.webp' /></p><p>சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று மற்றும் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.</p><p>அதிகபட்ச வெப்பநிலை 38–39 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 29–30 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகக்கூடும்.
</p><p>
மேலும், ஆகஸ்ட் 1 வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்காலில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றம் இருக்காது. </p><p>இருப்பினும், ஜூலை 31 வரை சில இடங்களில் வெப்பநிலை இயல்பைவிட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-07-28T13:34:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அவுஸ்திரேலியாவில் ரயிலில் இலங்கை தமிழ் இளைஞர் அட்டகாசம்; கிடைத்த தண்டனை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/lankan-tamil-attacked-train-passenger-australia-1785236812"></link>
            <id>https://jvpnews.com/article/lankan-tamil-attacked-train-passenger-australia-1785236812</id>
            <summary type="text">&amp;nbsp;அவுஸ்திரேலியாவில் பிரிஸ்பேன் ரயில் ஒன்றில், தமக்கு அறிமுகமில்லாத ஒருவரின் தலையில் கண்ணாடிப் போத்தால் தாக்கிய இலங்கை தமிழ் இளைஞர் ஒருவருக்கு, மூ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;அவுஸ்திரேலியாவில் பிரிஸ்பேன் ரயில் ஒன்றில், தமக்கு அறிமுகமில்லாத ஒருவரின் தலையில் கண்ணாடிப் போத்தால் தாக்கிய இலங்கை தமிழ் இளைஞர் ஒருவருக்கு, மூன்று மாதங்களுக்கும் குறைவான சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
</p><p>
சிறுவயதிலேயே அவுஸ்திரேலியாவுக்குக் குடியேற அனுமதிக்கப்பட்ட இலங்கை தமிழ் இளைஞர் 22 வயதான சரணீஸ் சிவகுமார் (Saranees Sivakumar) மற்றும் அவருடன் குற்றத்தில் ஈடுபட்ட பாட்லி மாஹ்வினி (Baddeley Mawhinney) ஆகியோர் ஏப்ரல் 25 அன்று கிளீவ்லேண்ட் வழித்தட ரயிலில் கொடூரமான தாக்குதலை நடத்தியது சிசிடிவி (CCTV) கமராவில் பதிவாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fb7c3b30-a2fb-41d8-9ab7-bfcfd5d003ad/26-6a688d4d87e99.webp' /></p><p></p><h2>&nbsp;கொடூரமான தாக்குதலை நடத்திய&nbsp;சரணீஸ் சிவகுமார்</h2><p>
</p><p>
தாக்குதலில் தனது பங்கிற்காக மாவின்னிக்கு ஏற்கனவே 10 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்த நிலையில், கலவரத்தில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்ட சிவகுமார், திங்களன்று காவலில் இருந்து காணொளிக் காட்சி மூலம் கிளீவ்லேண்ட் நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலையானார்.
</p><p>
தனியாகப் பயணம் செய்து கொண்டிருந்த பாதிக்கப்பட்ட நபரை சிவகுமாரும் மாஹினியும் அணுகிப் பேசத் தொடங்கியதாகவும், ஆனால் அந்தச் சந்திப்பு விரைவில் வன்முறையாக மாறியதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.</p><p></p><p>
</p><p>
அவ்விருவரும் அந்த நபரின் தலை மற்றும் முகத்தில் பலமுறை குத்தியதுடன், மூடிக் கொண்டிருந்த ரயில் கதவுகள் வழியாக அவரை இழுத்துச் சென்று அவர் வெளியேறுவதைத் தடுத்த பின்னர் மற்றொரு பெட்டிக்குச் சென்றனர்.
</p><p>

 அவர்கள் விரைவில் திரும்பி வந்து அந்த நபரின் பையைப் பறிக்க முயன்ற போது சிவகுமார் ஒரு கண்ணாடிப் போத்தலால் அந்த நபரின் தலையில் தாக்கியதில் அவருக்கு ரத்தக் கசிவு ஏற்பட்டது.</p><p>

இந்தத் தாக்குதலால் பாதிக்கப்பட்ட நபர் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானதாகவும், அதனால் அவர் குயின்ஸ்லாந்தை விட்டு வெளியேறிவிட்டதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.</p><p></p><p>
</p><p>
தாக்க முற்பட்டவர்களிடமிருந்து தன்னைப் பாதுகாத்துக்கொள்ளவே அவ்வாறு செய்ததாக சிவகுமார் நீதிமன்றத்தில் வாதிட்டார். எனினும் இந்தத் தாக்குதலுக்காக சிவகுமாருக்கு எட்டு மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது,

ஏற்கனவே 89 நாட்கள் சிறைக்காவலில் இருந்ததால், அவர் கண்காணிப்புடன் கூடிய நிபந்தனையில் விடுவிக்கப்பட்டார்.
</p><p>
அதேசமயம் சிவகுமார் கடந்த ஆண்டு ஆஸ்திரேலியக் குடிமகனாக மாறியதாகவும், வேலை தேடி மெல்போர்னிலிருந்து பிரிஸ்பேனுக்குச் சென்ற அவர், வீடின்றியும் வேலையின்றியும் இருந்ததாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-28T13:33:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[விளம்பரத்துக்காக குளிக்கும் வீடியோவை பகிர்ந்த ஃபரினா அசாத்!! விளாசும் நெட்டிசன்கள்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/actress-farina-azad-new-bathing-video-fans-trolls-1785239184"></link>
            <id>https://viduppu.com/article/actress-farina-azad-new-bathing-video-fans-trolls-1785239184</id>
            <summary type="text">ஃபரினா அசாத்விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற பாரதி கண்ணம்மா சீரியலில் வில்லி வெண்பா ரோலில் நடித்தவர் தான் ஃபர...</summary>
            <content type="html"><![CDATA[<h2>ஃபரினா அசாத்</h2><p>விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற பாரதி கண்ணம்மா சீரியலில் வில்லி வெண்பா ரோலில் நடித்தவர் தான் ஃபரினா அசாத்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/87ae1932-9a62-4d55-88be-509b6039dd1b/26-6a689692bfd6f.webp' /></p><p> தொகுப்பாளராகவும் பணியாற்றிய வெண்பா, ஒருசில நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். விளம்பரங்களிலும் நடித்து வரும் ஃபரீனா, பாடி வாஷ் விளம்பரத்திற்காக குளிக்கும் வீடியோவை பகிர்ந்துள்ளார். </p><p>விளம்பரத்திற்காக இப்படியா செய்வது என்று ஃபரீனா அசாத்தை நெட்டிசன்கள் விமர்சித்து வருகிறார்கள்.</p><p><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/reel/DbSoHv4JomW/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/reel/DbSoHv4JomW/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/reel/DbSoHv4JomW/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by farina azad (@farina_azad_official)</a></p></div></blockquote> <script async src="//www.instagram.com/embed.js"></script></p>]]></content>
            <updated>2026-07-28T13:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரசு சார்பில் மளிகை கடைகள், 30 சதவீத தள்ளுபடி - நியூயார்க்கில் தொடங்க உள்ள மம்தானி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/newyork-to-open-grocery-shops-with-30cent-discount-1785245143"></link>
            <id>https://news.lankasri.com/article/newyork-to-open-grocery-shops-with-30cent-discount-1785245143</id>
            <summary type="text">நியூயார்க்கில் அரசு சார்பில் 5 மளிகை கடைகள் அமைக்கப்படும் என மேயர் மம்தானி அறிவித்துள்ளார். 

நியூயார்க் அரசு சார்பில் மளிகை கடை

நியூயார்க் மேயர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நியூயார்க்கில் அரசு சார்பில் 5 மளிகை கடைகள் அமைக்கப்படும் என மேயர் மம்தானி அறிவித்துள்ளார். </p><h3>

நியூயார்க் அரசு சார்பில் மளிகை கடை
</h3><p>
நியூயார்க் மேயர் தேர்தலுக்கான பிரச்சாரத்தில் அரசு சார்பில் மளிகை கடைகள் அமைக்கப்படும், மலிவு விலையில் உணவுகள் வழங்கப்படும் உள்ளிட்ட வாக்குறுதிகளை மம்தானி வழங்கினார். </p><p>

அதன்படி, இன்று நியூயார்க் அரசு சார்பில் 5 மளிகை கடைகள் அமைக்கப்படும் என மேயர் மம்தானி அறிவித்துள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5c01c115-9c5a-424f-9f67-100204893003/26-6a68add891559.webp' /></p><p>
முதல் மளிகைக் கடை 2027ஆம் ஆண்டின் இறுதிக்குள் பிராங்க்ஸில் உள்ள ஹன்ட்ஸ் பாயின்ட்டில் திறக்கப்படும் என தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p></p><p>

கிழக்கு ஹார்லமில் உள்ள லா மார்குவேட்டா உட்பட, 5 கடைகளும் ஒவ்வொரு பெருநகரத்திற்கும் ஒன்று என தனது முதல் பதவிக்காலத்தின் இறுதிக்குள் திறக்கப்படும் என தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p>

இந்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்காக, NYCEDC உடன் இணைந்து 70 மில்லியன் டொலர்களை ஒதுக்கியுள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/974fe25d-11a6-46cc-86e4-0a09ecd2eda7/26-6a68add94f19e.webp' /></p><p>

காய்கறிகள், பழங்கள், ரொட்டி, முட்டை, இறைச்சி, கடல் உணவுகள் மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்கள் 30 சதவீத தள்ளுபடியில் விற்கப்படும் எனவும், தள்ளுபடி விலைகள், ஒவ்வொரு மாதத் தொடக்கத்திலும் நிர்ணயிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">At our five-borough municipal grocery stores, New Yorkers will get a 30% discount on eggs, milk, chicken, fresh produce and other everyday essentials.<br><br>In the wealthiest city in the richest country in the world, no one should have to wonder how they’ll afford the food they need… <a href="https://t.co/zbNVS735bg">pic.twitter.com/zbNVS735bg</a></p>&mdash; Mayor Zohran Kwame Mamdani (@NYCMayor) <a href="https://x.com/NYCMayor/status/2081847809696059888?ref_src=twsrc%5Etfw">July 27, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>&nbsp;</p><p>

இந்த கடைகளை நிர்வகிப்பதற்கு மளிகைக் கடை நடத்துனர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. கடையின் வாடகை, பராமரிப்பு மற்றும் சொத்து வரிகளுக்கான செலவுகளை நியூயார்க் அரசு ஏற்கும்.&nbsp;</p><p></p><p>

விலைவாசி உயர்வு மற்றும் உயர்ந்து வரும் இதர செலவுகள் காரணமாக நியூயார்க் நகரவாசிகள் மாளிகைப்பொருட்கள் வாங்க சிரமப்படுவதாக தெரிவித்துள்ள மம்தானி, அரசு மளிகை கடைகளில் வாங்குவதன் மூலம், வாடிக்கையாளர்கள் ஆண்டுக்கு 1000 டொலர் சேமிக்க முடியும் என தெரிவித்துள்ளார்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-28T13:27:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiva</name>
            </author>
            <title type="text"><![CDATA[வாகனங்கள் மீது மோதிவிட்டு தப்பிச் சென்ற வாகனம் - சிசிடிவியில் சிக்கிய காட்சிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/vehicle-that-hit-and-fled-vehicles-1785244178"></link>
            <id>https://tamilwin.com/article/vehicle-that-hit-and-fled-vehicles-1785244178</id>
            <summary type="text">தலவாக்கலை - நுவரெலியா பிரதான வீதியில் லிந்துலை நகர் பகுதியில்,&amp;nbsp;வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பல வாகனங்கள் மீது கப் வாகனம் ஒன்று மோதிவி...</summary>
            <content type="html"><![CDATA[<p>தலவாக்கலை - நுவரெலியா பிரதான வீதியில் லிந்துலை நகர் பகுதியில்,&nbsp;வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பல வாகனங்கள் மீது கப் வாகனம் ஒன்று மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்றுள்ளது.</p><p>குறித்த சம்பவம் இன்று (28.07.2026)
அதிகாலை சுமார் 4:30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.&nbsp;</p><p></p><p>இந்த விபத்தில் வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த கார், சிறிய ரக வான்
மற்றும் இரண்டு மோட்டார்சைக்கிள்கள் கடுமையாக சேதமடைந்துள்ளன.</p><h2>சிசிடிவி காட்சிகள் பதிவு</h2><p>
</p><p>விபத்தை ஏற்படுத்திய கப் வாகனம் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் செல்லும்
காட்சிகள் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கண்காணிப்புக்
கமராக்களில் பதிவாகியுள்ளன.</p><p></p><p>
</p><p>
இந்தக் காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு, தப்பிச் சென்ற கப் வாகனத்தையும் அதன்
சாரதியையும் அடையாளம் காணும் நடவடிக்கைகளைப் பொலிஸார்
தீவிரப்படுத்தியுள்ளதோடு, மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-28T13:25:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[சரித் அபேசிங்கவிற்கு விளக்கமறியல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/charith-abeysinghe-remanded-fail-bail-conditions-1785243664"></link>
            <id>https://tamilwin.com/article/charith-abeysinghe-remanded-fail-bail-conditions-1785243664</id>
            <summary type="text">நீதிமன்றம் விதித்த பிணை நிபந்தனைகளை நிறைவேற்றத் தவறியதால், முன்னாள் தேசிய மக்கள் சக்தி ஹொரணை அமைப்பாளர் சரித் அபேசிங்க மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீதிமன்றம் விதித்த பிணை நிபந்தனைகளை நிறைவேற்றத் தவறியதால், முன்னாள் தேசிய மக்கள் சக்தி ஹொரணை அமைப்பாளர் சரித் அபேசிங்க மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.</p><p>

முன்னதாக, போதைப்பொருள் கடத்தல்காரர் என சந்தேகிக்கப்படும் “ஹரக் கட்டாவின்” மனைவியிடமிருந்து 120 மில்லியன் ரூபா இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ரகிதா ராஜபக்ச மற்றும் சரித் அபேசிங்க உள்ளிட்ட மூன்று சந்தேக நபர்களுக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிணை வழங்கியது.
</p><p></p><h2>பிணை நிபந்தனை</h2><p>ரகித ராஜபக்சவும் மற்றொரு சந்தேக நபரும் தங்களது பிணை நிபந்தனைகளை நிறைவேற்றிய பின்னர், அவர்களை விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c214f3cc-0f2a-46bd-882d-3550810c83b5/26-6a68ac8bbbb9e.webp' /></p><p>
இருப்பினும், பிணை நிபந்தனைகளை பூர்த்தி செய்ய முடியாததால் சரித் அபேசிங்க மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-28T13:22:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் Project Bay operation ; இந்திய வம்சாவளியினர் உட்பட 19 பேர் அதிரடியாக கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/project-bay-operation-19-indian-origion-arrested-1785223031"></link>
            <id>https://canadamirror.com/article/project-bay-operation-19-indian-origion-arrested-1785223031</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;கனடாவில் &#039;புரஜெக்ட் பே&#039; என்ற பெயரில் பொலிஸார் நடத்திய தீவிர தேடுதல் நடவடிக்கையில் , சுமார் 1,039 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் மற்றும் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;கனடாவில் 'புரஜெக்ட் பே' என்ற பெயரில் பொலிஸார் நடத்திய தீவிர தேடுதல் நடவடிக்கையில் , சுமார் 1,039 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் மற்றும் 17 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டதுடன், இந்திய வம்சாவளியினர் உட்பட 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது.
</p><p>


அமெரிக்க எல்லையிலிருந்து கனடாவிற்குள் சரக்கு லொரிகள் மூலமாக கொக்கைன், மெத்தம்பெட்டமைன் மற்றும் ஓப்பியம் உள்ளிட்ட ஆபத்தான போதை மருந்துகள் கடத்தப்படுவதாகக் கனடா பொலிஸாருக்கு இரகசியத் தகவல் கிடைத்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1782996e-fadb-4765-a93d-00dd7409266a/26-6a68577915acd.webp' /></p><p>
</p><p>


இதனைத் தொடர்ந்து, கனடா பொலிஸார் அமெரிக்கா மற்றும் கனடா எல்லைப் பகுதிகளில் 'புரஜெக்ட் பே' என்ற சிறப்புச் சோதனையைத் ஆரம்பித்துள்ளது.</p><p>



ஒன்டாரியோ மாகாணத்தில் உள்ள 22 இடங்கள் உட்பட விண்ட்சர், லசலே, கொரூனா, பிராம்ப்டன், மார்க்கம் மற்றும் கலேடன் ஆகிய பகுதிகளில் தீவிர சோதனை நடத்தப்பட்டுள்ளது.</p><p>



இந்தச் சோதனையின் முடிவில் 1.7 தொன் எடையுள்ள போதை மருந்துகள் 17 துப்பாக்கிகள்

ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன. இதன் சர்வதேச சந்தை மதிப்பு இந்திய ரூபாயில் ரூ.1,039 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.



கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானோர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-28T13:21:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரான்ஸ் Paris கத்திக்குத்து தாக்குதலில் மூன்று பெண்கள் காயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/3-women-injured-in-a-stabbing-attack-paris-france-1785244952"></link>
            <id>https://canadamirror.com/article/3-women-injured-in-a-stabbing-attack-paris-france-1785244952</id>
            <summary type="text">&amp;nbsp; பிரான்ஸ் தலைநகர் பரிசின் Porte de Clichy பகுதியில் ஜூலை மாதம் 27ம் திகதி திங்கட்கிழமை இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் 19, 24 மற்றும் 36 வயத...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; பிரான்ஸ் தலைநகர் பரிசின் Porte de Clichy பகுதியில் ஜூலை மாதம் 27ம் திகதி திங்கட்கிழமை இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் 19, 24 மற்றும் 36 வயதுடைய மூன்று பெண்கள் காயமடைந்துள்ளனர்.
</p><p>
 அவர்களில் இருவர் முதுகுப் பகுதி மற்றும் வயிற்றுப் பகுதியில் கடுமையாகக் காயமடைந்து அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எனினும், அவர்களின் உயிருக்கு உடனடி ஆபத்து இல்லை என உள்துறை அமைச்சர் Laurent Nuñez தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b024d18f-9d14-4060-b5b5-66655020c68f/26-6a68ad1a636fa.webp' /></p><h2>உயிருக்கு ஆபத்து இல்லை&nbsp;</h2><p> </p><p>

மூன்றாவது பெண் லேசான காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.

தாக்குதல் நடத்தியதாக சந்தேகிக்கப்படும் 31 வயதுடைய நபர், பணியில் இல்லாத காவல்துறை அதிகாரி ஒருவரின் துரித நடவடிக்கையால் சம்பவ இடத்திலேயே கைது செய்யப்பட்டார். </p><p>

அவருக்கு எதிராக கொலை முயற்சி குற்றச்சாட்டின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளதாக அரசு வழக்கறிஞர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

 சம்பவத்தைத் தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
</p><p>
இந்த தாக்குதலுக்கான நோக்கம் குறித்து தற்போது எந்தத் தீர்மானத்தையும் எடுக்க முடியாது என்றும், கைது செய்யப்பட்ட நபர் தொடர்பற்ற மற்றும் குழப்பமான கருத்துகளை வெளியிட்டு வருவதாகவும் அமைச்சர் Laurent Nuñez கூறியுள்ளார். </p><p>

இதுவரை இந்தச் சம்பவம் பயங்கரவாத தாக்குதலாகக் கருதப்படவில்லை என்றும், சம்பவத்தின் உண்மையான பின்னணி குறித்து அதிகாரிகள் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-07-28T13:20:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[24 ஆண்டுகளில் முதல்முறையாக..பாகிஸ்தானை வீழ்த்தி வரலாறு படைத்த இலங்கை மகளிர் படை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/chamari-52-and-sri-lanka-win-series-vs-pakistan-1785235789"></link>
            <id>https://news.lankasri.com/article/chamari-52-and-sri-lanka-win-series-vs-pakistan-1785235789</id>
            <summary type="text">பாகிஸ்தான் மகளிர் அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இலங்கை ஒருநாள் தொடரை கைப்பற்றியது.

ஃபாத்திமா சனாஇலங்கை மற்றும் பாகிஸ்தான் மகளிர் அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பாகிஸ்தான் மகளிர் அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இலங்கை ஒருநாள் தொடரை கைப்பற்றியது.
</p><h2>
ஃபாத்திமா சனா</h2><p>இலங்கை மற்றும் பாகிஸ்தான் மகளிர் அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி ஹம்பன்டோடாவில் நடந்தது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/af8ed354-a51f-4010-8c93-74afd9bb2f05/26-6a688a2f829b0.webp' />&nbsp;</p><p></p><p>
முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி 187 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது. குல் ஃபெரோஸா 40 ஓட்டங்களும், முனீபா அலி 34 ஓட்டங்களும் எடுத்தனர். </p><p>

இலங்கை அணித்தலைவர் சமரி அதப்பத்து, சேத்தனா விமுக்தி மற்றும் கவிஷா தில்ஹரி தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.</p><p>

பின்னர் களமிறங்கிய இலங்கை அணியில் விஷ்மி குணரத்னே 12 ஓட்டங்களில் வெளியேறிய, அணித்தலைவர் சமரி அதப்பத்து அதிரடி ஆட்டத்தில் மிரட்டினார்.
</p><p>
</p><h2>சமரி அதப்பத்து</h2><p>சமரி அதப்பத்து (Chamari Athapaththu) 38 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளுடன் 52 ஓட்டங்கள் விளாசி ஆட்டமிழந்தார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/05e715a1-20ac-4c58-bffc-39227941d1e0/26-6a688a304513a.webp' /></p><p> 

அடுத்து கைகோர்த்த ஹர்ஷிதா மற்றும் ஹாசினி வலுவாக கூட்டணி அமைத்து இலங்கையை வெற்றி பெற வைத்தனர். </p><p>

இலங்கை அணி 37.2 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 191 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்று, ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.&nbsp;</p><p>பாகிஸ்தானுடனான இருதரப்பு தொடரை 24 ஆண்டுகளில் முதல் முறையாக இலங்கை அணி வென்றுள்ளது.
&nbsp;</p><p>

ஹர்ஷிதா சமரவிக்ரமா (Harshitha Samarawickrama) 71 ஓட்டங்களும், ஹாசினி பெரேரா (Hasini Perera) 50 ஓட்டங்களும் எடுத்தனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5e64762f-c0e1-4836-8758-09c585572831/26-6a688a30e9e94.webp' />&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4edd5798-5dce-47f1-8630-e0930dd62952/26-6a68ab86929b9.webp' />&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a12c3b56-1498-4047-88b0-ea1e63d7ece3/26-6a68ac0aa0a69.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-28T13:16:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ். மண்டைதீவு மனிதப் புதைகுழி வழக்கு - நீதிமன்றத்தின் உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/mandaitivu-mass-grave-case-postponed-1785243691"></link>
            <id>https://ibctamil.com/article/mandaitivu-mass-grave-case-postponed-1785243691</id>
            <summary type="text">மண்டைதீவு படுகொலையின் வழக்கு விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில்
மீண்டும் எதிர்வரும் செப்ரெம்பர் 22 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>மண்டைதீவு படுகொலையின் வழக்கு விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில்
மீண்டும் எதிர்வரும் செப்ரெம்பர் 22 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.</p><p>

மண்டைதீவு புதைகுழி தொடர்பான வழக்கின் விசாரணை இன்று (28) ஊர்காவற்றுறை நீதிமன்றில்
நீதிவான் அனீபா ரஜீவ் முன்னிலையில் எடுக்கப்பட்டபோது யாழ் மாவட்ட
குற்றத்தடுப்பு காவல்துறையினரால் மேலதிக சான்றுகள் சமர்ப்பிக்கப்பட்டது.
</p><p>
குறித்த வழக்கின் வழக்காளிகள் சார்பில் சட்டத்தரணி செபமாலைமுத்து
கிருஸ்ரபெலினாவுடன்
காணாமல் போனோர் அலுவலகத்தின் சட்டத்தரணி பூர்ணி மரியநாயகம், அதன் பிராந்திய
இணைப்பாளர் த.செல்வக்குமார், வேலணை பிரதேச சபையின் உறுப்பினரும் தீவக
முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான சுவாமிநாதன் பிரகலாதன் மற்றும் பிரதேச
சபையின் உறுப்பினர் அனுஷிய ஜெயகாந்த் ஆகியோர் இன்று குறித்த வழக்கு சார்பில்
நீதிமன்றில் முன்னிலையாகி இருந்தனர்.</p><p></p><p>
</p><h2>காவல்துறை பாதுகாப்பு</h2><p>
முற்பகல் 10 மணிக்கு விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்ட குறித்த வழக்கு வாதப்
பிரதிவாதங்களின் பின் பிற்பகல் 2.30 மணிவரை ஒத்திவைக்கபட்டது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d217774b-5f29-4657-9d54-f1116167b9e7/26-6a68aac037f73.webp' /></p><p>பிற்பகல் 2.30 மணிக்கு மீண்டும் விசாரணைக்காக எடுக்கப்பட்ட குறித்த வழக்கின்
போது வழக்காளிகளின் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகளால் குறித்த விடையம் தொடர்பிக்
அடையாளப்படுத்தப்பட்ட இடத்திற்கி
காவல்துறை பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும்,
அடையாளப்படுத்தப்பட்ட குறித்த காணியின் உரித்து யாருடையது என்பதை உறுதி செய்து
அறிக்கை பெற்றுக் கொள்ளவேண்டும் என்று, கிராம சேவகர், பிரதேச செயலர்,
பிரதேசத்தின் தவிசாளர், வழக்கின் சார்பானவர்கள் , சட்ட விசாரணை அதிகாதி,
பொலிசார், பிரதேச முக்கியஸ்தர்களுடன் கலந்துரையாடல் நடத்த ஆவன செய்யுமாறு
நீதிமன்றில் கோரிக்கை முன்வைத்தனர்.
</p><p>
அத்துடன் சட்டவிசாரணை அதிகாரியின் அறிக்கை கிடைத்ததும் அகழ்வுக்கான
நிதிதிரட்டலுக்கு துறைசார் அமைச்சிடம் கோரிக்கை விடுத்து நிதி பெற்றுக்கொள்ள
ஏற்பாடு செய்யப்படும் என்றும் சுட்டிக்காடியிருந்தனர்.</p><p></p><p>
</p><h2>நீதிமன்றத்தில் விசாரணை</h2><p>
முன்வைக்கப்பட்ட வியாக்கியானங்களை அடுத்து குறித்த வழக்கு வரும் செப்ரெம்பர்
22 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/966d71fd-8df1-4416-92d5-0d138833efce/26-6a68aac0e28aa.webp' /></p><p>
</p><p>
முன்பதாக கடந்த வருடம் செப்டம்பர் மாதம் 04 ஆம் திகதியன்று குறித்த
சம்பவத்தில் தனது மகனை பறிகொடுத்த 81 வயதுடைய ஸ்ரிபன் மரில்டா என்பவர் மற்றும்
வேலணை பிரதேச சபையின் உறுப்பினரும் தீவக முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான
சுவாமிநாதன் பிரகலாதன் ஆகியோரால் ஊர்காவற்றுறை காவல் நிலையத்தில் முறைப்பாடு
செய்யப்பட்டது.
</p><p>
இன்நிலையில் இந்த வழக்கு கடந்த 17.09.2025 அன்று ஊர்காவற்துறை நீதிவான்
நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-28T13:14:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ். நாவற்குழி பகுதியில் கோர விபத்து - குடும்பஸ்தர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/road-accident-kills-femily-men-in-jaffna-1785242012"></link>
            <id>https://ibctamil.com/article/road-accident-kills-femily-men-in-jaffna-1785242012</id>
            <summary type="text">யாழ்ப்பாணம், நாவற்குழி பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நாவற்குழி பகுதியை சேர்ந்த கிறிஸ்துராஜா ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம், நாவற்குழி பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
</p><p>நாவற்குழி பகுதியை சேர்ந்த கிறிஸ்துராஜா மென்சூலின் (வயது 44) என்பவரே உயிரிழந்துள்ளார்.</p><p>
</p><p>நாவற்குழி பகுதியில் உள்ள பேருந்து நிலையம் ஒன்றில், இரவு பேருந்துக்காக வீதியில் காத்திருந்த
வேளை, அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் படுகாயம் அடைந்துள்ளார்.</p><h2>காவல்துறையினர் விசாரணை</h2><p>
</p><p>படுகாயமடைந்தவரை சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2d9f6da5-2d5d-4a1d-b651-0a39fb64f2da/26-6a68a47ea3c16.webp' /></p><p>
சம்பவம் தொடர்பில், சாவகச்சேரி காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.</p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-28T13:14:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[120 மில்லியன் ரூபாய் இலஞ்சம் ; SJB சரித் அபேசிங்க மீண்டும் சிறையில்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sjb-charith-abeysinghe-back-in-prison-1785244533"></link>
            <id>https://jvpnews.com/article/sjb-charith-abeysinghe-back-in-prison-1785244533</id>
            <summary type="text">&amp;nbsp; ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் ஹொரணை அமைப்பாளர் சரித் அபேசிங்க, நீதிமன்றம் விதித்த பிணை நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யத் தவறியதைத் தொடர்ந்து மீ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் ஹொரணை அமைப்பாளர் சரித் அபேசிங்க, நீதிமன்றம் விதித்த பிணை நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யத் தவறியதைத் தொடர்ந்து மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.</p><p>



பெரிய அளவிலான வர்த்தகப் பொருள் (போதைப்பொருள்) கடத்தல்காரரான "ஹரக் கட்டா" என்பவரின் மனைவியிடமிருந்து 120 மில்லியன் ரூபாய் இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சட்டத்தரணி ரகித ராஜபக்ச மற்றும் சரித் அபேசிங்க உள்ளிட்ட மூன்று சந்தேக நபர்களுக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் திங்கட்கிழமை முன்னதாக பிணை வழங்கியிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6a300cdb-f81a-4a45-b438-368f7e2e2e17/26-6a68ab77171fe.webp' /></p><p>
</p><p>


சட்டத்தரணி ரகித ராஜபக்ச மற்றும் மற்றொரு சந்தேக நபர் ஆகியோர் தங்களது பிணை நிபந்தனைகளைப் பூர்த்தி செய்ததைத் தொடர்ந்து நீதிமன்றம் அவர்களை விடுதலை செய்ய உத்தரவிட்டது.



எனினும், பிணைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாத காரணத்தினால் அபேசிங்க மீண்டும் பொலிஸ் காவலுக்கு அனுப்பப்பட்டார்.</p>]]></content>
            <updated>2026-07-28T13:13:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுகாதார உதவியாளர் ஆட்சேர்ப்பு நடவடிக்கை குறித்து ஆளுநர் வெளியிட்ட தகவல்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/recruitment-process-for-health-assistants-1785243181"></link>
            <id>https://tamilwin.com/article/recruitment-process-for-health-assistants-1785243181</id>
            <summary type="text">வடக்கு மாகாண சுகாதாரத் துறையின் எதிர்கால சேவைத் தரத்தை நிர்ணயிக்கும்
சுகாதார உதவியாளர் ஆட்சேர்ப்பு நடவடிக்கையானது, எவ்வித அழுத்தங்களுக்கும்
இடமளிக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>வடக்கு மாகாண சுகாதாரத் துறையின் எதிர்கால சேவைத் தரத்தை நிர்ணயிக்கும்
சுகாதார உதவியாளர் ஆட்சேர்ப்பு நடவடிக்கையானது, எவ்வித அழுத்தங்களுக்கும்
இடமளிக்காமல் அதியுயர் நேர்மை, வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வுடன்
நிறைவேற்றப்பட வேண்டியது அவசியமாகும், என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன்
தெரிவித்தார்.</p><p>

வடக்கு மாகாண சுகாதார உதவியாளர் நியமனத்துக்காக நியமிக்கப்பட்டுள்ள நேர்முகத்
தேர்வுக் குழு உறுப்பினர்களுடனான விசேட கலந்துரையாடல், ஆளுநர் செயலகத்தில்
இன்று (28) நடைபெற்றது.</p><p> இதன்போது குழு
உறுப்பினர்களுக்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்கும்போதே ஆளுநர் மேற்கண்டவாறு
தெரிவித்தார்.</p><p></p><h2>வழக்கு</h2><p>ஆளுநர்
மேலும் குறிப்பிட்டதாவது, 2019ஆம் ஆண்டில் நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டும் கடமையைப் பொறுப்பேற்க
அனுமதிக்கப்படாத சுகாதார உதவியாளர்கள் நீதிமன்றத்தில் வழக்குத்
தொடுத்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b6a403de-79f4-45bb-b1f4-ba34bd6b242b/26-6a68a9c203c93.webp' /></p><p> இந்தப் பின்னணியையும், பொதுமக்களின் தீவிர அவதானிப்பிலும்
இந்த விடயம் இருப்பதை அனைவரும் மனதில் கொள்ள வேண்டும்.
</p><p>
300 வெற்றிடங்களுக்காக சுமார் 3,550 விண்ணப்பதாரிகள் அழைக்கப்பட்டுள்ளனர்.
இதில் எழுத்துப் பரீட்சை எதுவும் இடம்பெறவில்லை என்பதால், நேர்முகத் தேர்வில்
வழங்கப்படும் ஒவ்வொரு புள்ளியும் இறுதித் தெரிவை நேரடியாகப் பாதிக்கும்.</p><p></p><h2>எழுத்துப் பரீட்சை</h2><p> எனவே,
நீங்கள் வழங்கும் ஒவ்வொரு புள்ளிக்கும் தெளிவான, நியாயமான மற்றும்
ஆதாரபூர்வமான காரணம் இருக்க வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/765bcae2-119b-4c31-a9bc-94e99118ba1d/26-6a68a9c2d3aeb.webp' /></p><p>இதேவேளை, எதிர்காலத்தில் சுகாதார உதவியாளர்களுக்கான சேவைப்பிரமாணக் குறிப்பு
கட்டாயம் மாற்றியமைக்கப்பட்டு, இவ்வாறான ஆட்சேர்ப்புகளின்போது எழுத்துப்
பரீட்சையும் உள்வாங்கப்பட வேண்டும் என ஆளுநர் இதன்போது விசேடமாகக்
குறிப்பிட்டார்.</p><p>வடக்கு மாகாண அரச சேவையின் நம்பகத்தன்மையையும் கௌரவத்தையும் பாதுகாக்கும்
வகையில் சகலரும் நேர்மையாகச் செயற்பட வேண்டும் என ஆளுநர் மீளவும்
வலியுறுத்தினார்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-28T13:08:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[கல்லீரலை அமைதியாக பாதிக்கும் ஹெபடைடிஸ்! ஆரம்பத்திலேயே கண்டறிய உதவும் முக்கிய அறிகுறிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/world-hepatitis-day-2026-early-warning-symptoms-1785242098"></link>
            <id>https://manithan.com/article/world-hepatitis-day-2026-early-warning-symptoms-1785242098</id>
            <summary type="text">தற்போது பலரும் அடிக்கடி அதிகப்படியான உடல் சோர்வை அனுபவித்து வருகின்றனர். இதற்கு பரபரப்பான வாழ்க்கை முறை, அதிகமான பணிச்சுமை, மன அழுத்தம், போதிய தூக்கமி...</summary>
            <content type="html"><![CDATA[<p>தற்போது பலரும் அடிக்கடி அதிகப்படியான உடல் சோர்வை அனுபவித்து வருகின்றனர். இதற்கு பரபரப்பான வாழ்க்கை முறை, அதிகமான பணிச்சுமை, மன அழுத்தம், போதிய தூக்கமின்மை, சீரற்ற உணவுப் பழக்கம் போன்றவை முக்கிய காரணங்களாகக் கூறப்படுகின்றன. </p><p>பொதுவாக இத்தகைய காரணங்களால் ஏற்படும் உடல் சோர்வு, போதுமான ஓய்வு எடுத்த பிறகோ அல்லது வாழ்க்கை முறையில் சிறிய மாற்றங்களை மேற்கொண்ட பிறகோ குறைந்து விடும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d2e6db00-003a-46bd-8892-6f8b8fa72242/26-6a68a8bca4a2b.webp' /></p><p></p><p>

ஆனால், எவ்வளவு நேரம் ஓய்வெடுத்தாலும் உடல் சோர்வு நீங்காமல் தொடர்ந்து இருந்தால், அதை சாதாரண பிரச்சனையாகக் கருதக் கூடாது. </p><p>அது உடலில் மறைந்திருக்கும் தீவிரமான உடல்நலக் கோளாறின் ஆரம்ப அறிகுறியாக இருக்கலாம். குறிப்பாக, அது ஹெபடைடிஸ் (Hepatitis) எனப்படும் கல்லீரல் நோயின் அறிகுறியாகவும் இருக்கக்கூடும்.</p><p>

ஹெபடைடிஸ் என்பது உடலின் மிகப்பெரிய மற்றும் முக்கியமான உறுப்புகளில் ஒன்றான கல்லீரலில் ஏற்படும் அழற்சி ஆகும். இந்த நோய் ஆரம்ப நிலையில் பெரும்பாலும் வெளிப்படையான அறிகுறிகள் இல்லாமல் அமைதியாக கல்லீரலை பாதிக்கத் தொடங்குகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cfbaf996-8a01-4580-ac6f-b606b08f937f/26-6a68a8bd54e4b.webp' /></p><p> இதனால் பலருக்கு நோய் இருப்பதே தெரியாமல் போகும். ஆனால், நோய் தீவிரமடையும் போது கல்லீரல் கடுமையாக சேதமடைந்து பல்வேறு உடல்நலப் பிரச்சனைகளையும் வெளிப்படையான அறிகுறிகளையும் ஏற்படுத்தக்கூடும்.</p><p>

ஹெபடைடிஸ் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 28 ஆம் தேதி உலக ஹெபடைடிஸ் தினம் (World Hepatitis Day) அனுசரிக்கப்படுகிறது.</p><p> இந்த நாளின் மூலம், நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவதன் அவசியம், தடுப்பூசி, பரிசோதனை மற்றும் சரியான சிகிச்சையின் முக்கியத்துவம் குறித்து உலகளவில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0ebf8340-4831-4b97-b083-2f1d9da96651/26-6a68a8be09cd4.webp' /></p><p> எனவே, உலக ஹெபடைடிஸ் தினத்தை முன்னிட்டு, ஒருபோதும் அலட்சியப்படுத்தக் கூடாத ஹெபடைடிஸின்&nbsp; ஆரம்பகால அறிகுறிகள் குறித்து விரிவாகப் பார்ப்போம்.</p><h2>முக்கியமான எச்சரிக்கை அறிகுறிகள்</h2><p><b>உடல் சோர்வு</b>: போதுமான ஓய்வுக்குப் பிறகும் காரணமின்றி தொடர்ந்து சோர்வாக இருந்தால், அது கல்லீரல் அழற்சியின் அறிகுறியாக இருக்கலாம்.
</p><p><b>
பசியின்மை:</b> திடீரென உணவின் மீது விருப்பம் குறைவது, ஹெபடைடிஸால் செரிமானம் மற்றும் வளர்சிதை மாற்றம் பாதிக்கப்படுவதால் ஏற்படலாம்.
</p><p><b>
குமட்டல் மற்றும் வாந்தி:</b> உணவு சாப்பிட்ட பிறகு அடிக்கடி குமட்டல் அல்லது வாந்தி ஏற்பட்டால், கல்லீரல் செயல்பாடு பாதிக்கப்பட்டிருக்கலாம்.
</p><p><b>
அடர் நிற சிறுநீர்: </b>போதுமான தண்ணீர் குடித்தும் சிறுநீர் அடர் நிறத்தில் இருந்தாலோ, கண்கள் மற்றும் தோல் மஞ்சள் நிறமாக மாறினாலோ, உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.
</p><p><b>
வலது மேல் வயிற்று வலி:</b> வலது விலா எலும்புக்குக் கீழே தொடர்ந்து வலி அல்லது அசௌகரியம் இருந்தால், அது கல்லீரல் அழற்சியின் அறிகுறியாக இருக்கலாம்.</p><p><b>

சரும அரிப்பு:</b> காரணமின்றி, குறிப்பாக இரவு நேரங்களில் அதிகமாக சரும அரிப்பு ஏற்பட்டால், அது கல்லீரல் பிரச்சினையைக் குறிக்கலாம்.
</p><p><b>
காய்ச்சல் மற்றும் உடல்வலி:</b> லேசான காய்ச்சல், தசை வலி, தலைவலி மற்றும் உடல் சோர்வு போன்றவை ஆரம்பகால வைரஸ் ஹெபடைடிஸின் அறிகுறிகளாக இருக்கலாம்.
</p><p><b>
எளிதில் இரத்தக்கசிவு அல்லது காயம்</b>: அடிக்கடி சிராய்ப்பு, ஈறுகளில் இரத்தக்கசிவு போன்றவை ஏற்பட்டால், கல்லீரல் இரத்தம் உறைய தேவையான புரதங்களை போதுமான அளவில் உற்பத்தி செய்யாததன் அறிகுறியாக இருக்கலாம். மேற்கூறிய அறிகுறிகள் இருந்தால் அதனை அலட்சியப்படுத்தாது அவசியம் முறையாக மருத்து பரிசோதனை மேற்கொள்ள வேண்டியது அவசியம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9c5b226c-0b48-47ab-a04f-09bcb61e6dc1/26-6a68a8beaf155.webp' /></p><p></p><p><b>யாருக்கெல்லாம் ஹெபடைடிஸ் வருவதற்கான அபாயம் அதிகம்?</b></p><p>&nbsp;பாதுகாப்பற்ற பாலியல் தொடர்பில் ஈடுபடுபவர்கள்.
</p><p>அளவுக்கு அதிகமாக மது அருந்துபவர்கள்.</p><p>
உடல் பருமன் அல்லது கொழுப்பு கல்லீரல் (Fatty Liver) நோய் உள்ளவர்கள்.
</p><p>ஊசிகள் அல்லது சிரிஞ்சுகளை மற்றவர்களுடன் பகிர்ந்து பயன்படுத்துபவர்கள்.
</p><p>சுகாதார வசதிகள் குறைவாக உள்ள பகுதிகளுக்குப்&nbsp; அடிக்கடி பயணம் செய்பவர்கள்.</p><p>
ஹெபடைடிஸ் தொற்று உள்ளவரின் இரத்தம் அல்லது உடல் திரவங்களுடன் பாதுகாப்பின்றி தொடர்பு கொள்பவர்கள். ஆகியோருக்கு&nbsp;ஹெபடைடிஸ் வருவதற்கான வாய்ப்பு சற்று அதிகம்.</p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b></td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-28T13:04:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[அநுரவுக்கு யாழ்ப்பாணச் சட்டத்தரணிகள் சங்கம் அவசரக் கடிதம்...!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/jba-urges-president-to-drop-judge-age-amendment-1785241672"></link>
            <id>https://ibctamil.com/article/jba-urges-president-to-drop-judge-age-amendment-1785241672</id>
            <summary type="text">உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்தும் அரசியலமைப்புத் திருத்த முடிவைக் கைவிடுமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் யாழ்ப்பாணச் சட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்தும் அரசியலமைப்புத் திருத்த முடிவைக் கைவிடுமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் யாழ்ப்பாணச் சட்டத்தரணிகள் சங்கம் கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளது.
</p><p>
அனைத்து நீதிபதிகளுக்கும் பொருந்தும் வகையிலும், புதிய அரசியலமைப்பின் ஒரு பகுதியாகவும் கொண்டுவரப்பட்டால் மட்டுமே ஓய்வுபெறும் வயதை உயர்த்துவதை ஏற்க முடியும் என கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
</p><p>
இந்த அவசரத் திருத்தம் நீதித்துறைக்கு நிறைவேற்று அதிகாரம் அளிக்கும் சலுகையாகவோ அல்லது தலையீடாகவோ பார்க்கப்பட்டு, நீதித்துறையின் சுயாதீனத்தையும் பொதுமக்கள் நம்பிக்கையையும் பாதிக்கும் எனச் சங்கம் கவலை தெரிவித்துள்ளது.
</p><p>
 குறுகிய நோக்கம் கொண்ட இத்தகைய சீர்திருத்தங்கள் ஜனநாயகக் கொள்கைகள், சட்டத்தின் ஆட்சி மற்றும் அரசியலமைப்பு மீதான மரியாதையைப் பலவீனப்படுத்தும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.</p><p>

எனவே, நீதித்துறைச் சுதந்திரத்தைப் பாதுகாக்கும் பொருட்டு முன்மொழியப்பட்டுள்ள இந்தத் திருத்த முயற்சியை ஜனாதிபதி உடனடியாக மறுபரிசீலனை செய்து கைவிட வேண்டுமெனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-28T12:58:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[வேலையின்போது திடீர் தலைவலி: அடுத்த நொடி 3 பிள்ளைகளின் தாய் மரணம்..அவுஸ்திரேலியாவில் துயரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/42-year-old-woman-suddenly-dropped-dead-australia-1785243235"></link>
            <id>https://news.lankasri.com/article/42-year-old-woman-suddenly-dropped-dead-australia-1785243235</id>
            <summary type="text">அவுஸ்திரேலியாவில் பெண்ணொருவர் வேலையின்போது உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

42 வயது பெண்அவுஸ்திரேலியாவின் சிட்னியைச் சேர்ந்த மூன்று பிள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p>அவுஸ்திரேலியாவில் பெண்ணொருவர் வேலையின்போது உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><h2>

42 வயது பெண்</h2><p>அவுஸ்திரேலியாவின் சிட்னியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாய் எல்லெனி ஜமால் (42). இவர் Creative Director-ஆக பணியாற்றி வந்தார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/98808f69-9e1a-4b1c-ad69-21c0920a9a9e/26-6a68a764c2aa0.webp' />&nbsp;</p><p></p><p>

Camilla, Rockmans போன்ற ஃபேஷன் பிராண்டுகளின் விளம்பர பிரச்சாரங்களில் பணியாற்றிய எல்லெனி வழக்கம்போல் வேலைக்கு சென்றுள்ளார். </p><p>

அங்கு திடீரென அவருக்கு தலைவலி ஏற்பட சரிந்து விழுந்துள்ளார். தன்னை அழைத்து செல்லுமாறு முன்னதாக கணவரை அவர் அழைத்திருந்தார். அலுவலகத்திற்கு வந்த அவர் தனது மனைவிக்கு முதலுதவி அளித்தார்.</p><h2> மூளைச்சாவு </h2><p>பின்னர் எல்லெனி ஜமால் சிட்னி மருத்துவமனைக்கு அவசரமாக கொண்டு செல்லப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் எல்லெனி மூளைச்சாவு அடைந்துவிட்டதாக அறிவித்தனர்.</p><p>

இதனையடுத்து தனது கணவரின் இஸ்லாமிய நம்பிக்கையின்படி, லக்கேம்பா மசூதியில் இறுதிச் சடங்கு நடைபெற்றது.</p><p>பின்னர், ஞாயிற்றுக்கிழமை ரூக்வுட் கல்லறையில் எல்லெனி ஜமால் உடனடியாக அடக்கம் செய்யப்பட்டார்.&nbsp; &nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9bd33edd-1276-4fee-a28b-ffc34d655f0c/26-6a68a763e8a70.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-28T12:56:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மீயுயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்தும் திட்டத்தைக் கைவிடுமாறு கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/abandon-plan-to-raise-supreme-court-judge-1785240874"></link>
            <id>https://tamilwin.com/article/abandon-plan-to-raise-supreme-court-judge-1785240874</id>
            <summary type="text">மீயுயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்தும் நோக்கில் அரசியலமைப்புத் திருத்தத்தைக் கொண்டு வரும் அமைச்சரவையின் முடிவை மறுபரிசீலனை செய்து க...</summary>
            <content type="html"><![CDATA[<p>மீயுயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்தும் நோக்கில் அரசியலமைப்புத் திருத்தத்தைக் கொண்டு வரும் அமைச்சரவையின் முடிவை மறுபரிசீலனை செய்து கைவிடுமாறு கோரி, யாழ்ப்பாணச் சட்டத்தரணிகள் சங்கம் ஜனாதிபதிக்கு அநுர குமார திசாநாயக்கவுக்கு கடிதம் எழுதியுள்ளது.
</p><p>
மீயுயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்தும் வகையில் அரசியலமைப்புத் திருத்தம் ஒன்றைக் கொண்டுவர அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் குறித்து யாழ்ப்பாணச் சட்டத்தரணிகள் சங்கம் தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளது.</p><p> இது தொடர்பில் ஜனாதிபதிக்கு, யாழ்ப்பாணச் சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் மற்றும் செயலாளர் ஒப்பமிட்டு இன்றைய தினம் (28.07.2026) கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>நீதித்துறை</h2><p>
</p><p>
கீழ் நீதிமன்றங்களில் பணியாற்றும் நீதிபதிகள் உட்பட அனைத்து நீதிபதிகளுக்கும் பொருந்தும் வகையிலும், புதிய அரசியலமைப்பை உருவாக்கும் ஒரு விரிவான முயற்சியின் பகுதியாகவும் இருக்கும் பட்சத்தில், நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்துவதற்கு கொள்கை அளவில் யாழ்ப்பாணச் சட்டத்தரணிகள் சங்கம் எதிரப்பைக் கொண்டிருக்கவில்லை என அந்தக் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bef9615d-f03f-4e05-8e10-2309cec78758/26-6a68a24fb8f24.webp' /></p><p>

எனினும், முன்மொழியப்பட்டுள்ள இந்த அரசியலமைப்புத் திருத்தமானது, நீதித்துறைக்கு நிறைவேற்று அதிகார அமைப்பால் வழங்கப்படும் ஒரு சலுகையாகவோ அல்லது நீதித்துறையின் செயல்பாடுகளில் தலையிடும் நடவடிக்கையாகவோ பார்க்கப்படும் சூழலை உருவாக்கக் கூடாது என்பதில் தாங்கள் தீவிர கவனம் செலுத்துவதாகச் சங்கம் குறிப்பிட்டுள்ளது.</p><p> நீதித்துறையின் சுயாதீனத்தையும், நீதித்துறை மீது பொதுமக்களுக்கு இருக்கும் நம்பிக்கையையும் பாதுகாப்பதற்கு இத்தகைய சந்தேகங்களுக்கு இடம் தராமல் இருப்பது இன்றியமையாததாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>சட்டத்தின் ஆட்சி</h2><p>

தற்போதைய அரசாங்கம் அரசியலமைப்பை முழுமையாக இரத்து செய்து, புதிய அரசியலமைப்பைக் கொண்டுவர முனையும் தருணத்தில் மட்டுமே ஓய்வுபெறும் வயதை உயர்த்தும் விடயத்தைப் பரிசீலிக்க முடியும் என யாழ்ப்பாணச் சட்டத்தரணிகள் சங்கம் கருதுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6d4e8155-df2e-430b-b2b1-08e14a130304/26-6a68a4298d8ee.webp' /></p><p> </p><p>குறுகிய அல்லது குறிப்பிட்ட நோக்கம் கருதிய அரசியலமைப்புச் சீர்திருத்தங்கள், அரசியலமைப்பு வாதத்திற்கான மரியாதையைக் குறைப்பதுடன், மக்களாட்சியின் நல்நெறிப் கொள்கைகள் மற்றும் சட்டத்தின் ஆட்சியையும் பலவீனப்படுத்தும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
</p><p>
எனவே, தற்போது முன்மொழியப்பட்டுள்ள அரசியலமைப்புத் திருத்தத்தைக் கொண்டுவரும் முயற்சிகளை ஜனாதிபதி மறுபரிசீலனை செய்து உடனடியாகக் கைவிட வேண்டும் என யாழ்ப்பாணச் சட்டத்தரணிகள் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-28T12:47:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மீண்டும் ஒத்திவைக்கப்பட்ட மண்டைதீவு படுகொலை வழக்கு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/mandaithivu-murder-case-adjourned-to-september-22-1785241059"></link>
            <id>https://tamilwin.com/article/mandaithivu-murder-case-adjourned-to-september-22-1785241059</id>
            <summary type="text">மண்டைதீவு படுகொலை&amp;nbsp; மற்றும் புதைகுழி வழக்கு&amp;nbsp;மீண்டும் எதிர்வரும் செப்ரெம்பர் 22 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இன்று(28.07.2026) ஊர்காவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>மண்டைதீவு படுகொலை&nbsp; மற்றும் புதைகுழி வழக்கு&nbsp;மீண்டும் எதிர்வரும் செப்ரெம்பர் 22 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.</p><p> இன்று(28.07.2026) ஊர்காவற்றுறை நீதிமன்றில் நீதிவான்
அனீபா ரஜீவ் முன்னிலையில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>குறித்த காணியின் உரித்து</h2><p>இதன்போது யாழ் மாவட்ட
குற்றத்தடுப்பு பொலிஸாரால் மேலதிக சான்றுகள் சமர்ப்பிக்கப்பட்டது.
</p><p>
குறித்த வழக்கின் வழக்காளிகள் சார்பில் சட்டத்தரணி செபமாலைமுத்து
கிருஸ்ரபெலினாவுடன்
காணாமல் போனோர் அலுவலகத்தின் சட்டத்தரணி பூர்ணி மரியநாயகம், அதன் பிராந்திய
இணைப்பாளர் த.செல்வக்குமார், வேலணை பிரதேச சபையின் உறுப்பினரும் தீவக
முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான சுவாமிநாதன் பிரகலாதன் மற்றும் பிரதேச
சபையின் உறுப்பினர் அனுஷிய ஜெயகாந்த் ஆகியோர் இன்று குறித்த வழக்கு சார்பில்
நீதிமன்றில் முன்னிலையாகி இருந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/28d1231b-6355-4975-bbd9-b4f27aaa679b/26-6a68a200df4da.webp' /></p><p>முற்பகல் 10 மணிக்கு விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்ட குறித்த வழக்கு வாதப்
பிரதிவாதங்களின் பின் பிற்பகல் 2.30 மணிவரை ஒத்திவைக்கபட்டது.
</p><p>
பிற்பகல் 2.30 மணிக்கு மீண்டும் விசாரணைக்காக எடுக்கப்பட்ட குறித்த வழக்கின்
போது வழக்காளிகளின் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகளால் குறித்த விடயம் தொடர்பில் அடையாளப்படுத்தப்பட்ட இடத்திற்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அடையாளப்படுத்தப்பட்ட குறித்த காணியின் உரித்து யாருடையது என்பதை உறுதி செய்து
அறிக்கை பெற்றுக் கொள்ளவேண்டும் என்று கிராம சேவகர், பிரதேச செயலர்,
பிரதேசத்தின் தவிசாளர், வழக்கின் சார்பானவர்கள் , சட்ட விசாரணை அதிகாதி,
பொலிசார், பிரதேச முக்கியஸ்தர்களுடன் கலந்துரையாடல் நடத்த ஆவன செய்யுமாறு
நீதிமன்றில் கோரிக்கை முன்வைத்தனர்.&nbsp;</p><h2>நீதிமன்றத்தில் விசாரணை</h2><p>அத்துடன் சட்டவிசாரணை அதிகாரியின் அறிக்கை கிடைத்ததும் அகழ்வுக்கான
நிதிதிரட்டலுக்கு துறைசார் அமைச்சிடம் கோரிக்கை விடுத்து நிதி பெற்றுக்கொள்ள
ஏற்பாடு செய்யப்படும் என்றும் சுட்டிக்காடியிருந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/83aac83b-b8cf-41cd-a71d-34d7f2eb66b5/26-6a68a201ca592.webp' /></p><p>

முன்வைக்கப்பட்ட வியாக்கியானங்களை அடுத்து குறித்த வழக்கு வரும் செப்ரெம்பர்
22ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.</p><p>

முன்பதாக கடந்த வருடம் செப்டம்பர் மாதம் 04 ஆம் திகதியன்று குறித்த
சம்பவத்தில் தனது மகனை பறிகொடுத்த 81 வயதுடைய ஸ்ரிபன் மரில்டா என்பவர் மற்றும்
வேலணை பிரதேச சபையின் உறுப்பினரும் தீவக முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான
சுவாமிநாதன் பிரகலாதன் ஆகியோரால் ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
செய்யப்பட்டது.</p><p>

இந்நிலையில் இந்த வழக்கு கடந்த 17.09.2025 அன்று ஊர்காவற்துறை நீதிவான்
நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-28T12:42:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[உத்திரம் நட்சத்திரத்தில் நுழையும் சுக்கிரன்: இந்த 4 ராசிகளுக்கு சவாலான காலமாக இருக்கும் ஜாக்கிரதை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/venus-transit-uthiram-nakshatra-who-get-bad-luck-1785221607"></link>
            <id>https://manithan.com/article/venus-transit-uthiram-nakshatra-who-get-bad-luck-1785221607</id>
            <summary type="text">வேத ஜோதிடத்தில் அசுரர்களின் குருவாக போற்றப்படும் கிரகம் சுக்கிரன். அழகு, ஆடம்பரம், காதல், செல்வம், செழிப்பு போன்றவற்றின் காரகனாக விளங்கும் சுக்கிரன், ...</summary>
            <content type="html"><![CDATA[<p>வேத ஜோதிடத்தில் அசுரர்களின் குருவாக போற்றப்படும் கிரகம் சுக்கிரன். அழகு, ஆடம்பரம், காதல், செல்வம், செழிப்பு போன்றவற்றின் காரகனாக விளங்கும் சுக்கிரன், மனிதர்களின் வாழ்க்கையில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும் கிரகங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறார்.
</p><p>
ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளின் அதிபதியான சுக்கிரன், மாதந்தோறும் தனது ராசியை மாற்றுவதோடு மட்டுமல்லாமல், குறிப்பிட்ட கால இடைவெளியில் நட்சத்திரத்தையும் மாற்றுவார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7e549fe3-0092-465e-ab3e-c3d17ead15cb/26-6a685c50ac3b5.webp' /></p><p> </p><p>தற்போது சூரியனின் ஆட்சி ராசியான சிம்மத்தில் பயணித்து வரும் சுக்கிரன், ஜூலை 29 ஆம் தேதி சூரியனுக்குரிய&nbsp; உத்திரம் நட்சத்திரத்திற்குள் நுழைய உள்ளார்.</p><p> ஜோதிடக் கணிப்புகளின்படி, சூரியனும் சுக்கிரனும் இயல்பில் பகைமை கொண்ட கிரகங்களாகக் கருதப்படுவதால், இந்த நட்சத்திர மாற்றம் குறிப்பிட்ட சில ராசிகளில் வாழ்வில் அதிக சவால்களையும் சிக்கல்களையும் ஏற்படுத்தும் என கணிக்கப்பட்டுள்ளது.</p><p>அந்தவகையில், சுக்கிரன் பெயர்ச்சி காலகட்டத்தில், ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய ராசிகள் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.</p><p></p><h2>மேஷம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5a523731-e234-4cfc-96a9-6378c93179f1/26-6a685c515e70f.webp' /></p><p>

சுக்கிரனின் நட்சத்திரப் பெயர்ச்சியால் மேஷ ராசிக்காரர்களுக்கு இந்தக் காலத்தில் செலவுகள் சற்று அதிகரிக்க வாய்ப்புள்ளது. </p><p>அதனால் பண விஷயங்களில் கூடுதல் கவனம் தேவை. தேவையில்லாத செலவுகளைக் கட்டுப்படுத்தினால் நிதி நெருக்கடியைத் தவிர்க்க முடியும். </p><p>அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படாமல் பார்த்துக்கொள்வது நல்லது. மேலும், இந்தக் காலத்தில் பெரிய அளவிலான பணப் பரிவர்த்தனைகளைத் தவிர்ப்பது பாதுகாப்பானதாக இருக்கும்.</p><h2>

மிதுனம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/eb624315-ab42-4fa0-a206-fc7a4e563d2c/26-6a685c520f13b.webp' /></p><p>

சுக்கிரனின் நட்சத்திரப் பெயர்ச்சியால் மிதுன ராசிக்காரர்கள் உடல்நலத்தில் கூடுதல் அக்கறை செலுத்த வேண்டிய காலம் இது. </p><p>குடும்பத்தினருடன் சிறிய விஷயங்களுக்குக் கூட மனக்கசப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதால், உறவுகளை கவனமாக கையாள வேண்டும்.</p><p> பேசும் வார்த்தைகளில் நிதானம் கடைப்பிடிப்பது பல பிரச்சனைகளைத் தவிர்க்க உதவும். புதிய முதலீடுகளை மேற்கொள்ள நினைத்தால், அனுபவமுள்ளவர்களின் ஆலோசனையைப் பெற்ற பிறகே முடிவு எடுப்பது நல்லது.
</p><h2>
சிம்மம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8f95bdea-7141-4ef4-a7ea-42d5dfdb0164/26-6a685c52b484b.webp' /></p><h2>
</h2><p>
சுக்கிரனின் நட்சத்திரப் பெயர்ச்சியால் சிம்ம ராசிக்காரர்கள் சில சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கலாம். குறிப்பாக அகங்காரம் அல்லது அதீத தன்னம்பிக்கை வேலைகளில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.</p><p> பணியிடத்தில் உயர் அதிகாரிகளுடன் நல்ல ஒத்துழைப்பை பேணுவது அவசியம். இல்லையெனில் தேவையற்ற சிரமங்கள் உருவாகலாம். </p><p>காதல் வாழ்க்கையிலும் தவறான புரிதல்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளதால், பேசும் ஒவ்வொரு வார்த்தையிலும் கவனம் செலுத்துவது நல்லது.
</p><h2>
விருச்சிகம்</h2><p>[55PFRN</p><p></p><p>

சுக்கிரனின் நட்சத்திரப் பெயர்ச்சியால் விருச்சிக ராசிக்காரர்களுக்கு தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பாராத ஏற்றத்தாழ்வுகள் ஏற்படலாம். </p><p>குறிப்பாக கூட்டுத் தொழில் செய்பவர்கள் கூடுதல் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். பணப் பரிவர்த்தனைகளில் மிகுந்த கவனம் அவசியம். </p><p>முடிந்தவரை முக்கியமான பரிவர்த்தனைகளை ஒத்திவைப்பது நல்லது. வேலை தொடர்பாக தேவையில்லாத பயணங்கள் மேற்கொள்ள வேண்டிய சூழல் உருவாகலாம். </p><p>அவை நிதி இழப்பையும் உடல் சோர்வையும் ஏற்படுத்தும் என்பதால், பயணங்களைத் திட்டமிட்டு மேற்கொள்வது சிறந்தது.</p><p><b>இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).&nbsp; &nbsp;</b></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-28T12:36:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆங்கிலக்கால்வாயில் பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் சந்தித்த அதிர்ச்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/uk-mp-shocks-french-warship-fires-in-channel-1785241996"></link>
            <id>https://news.lankasri.com/article/uk-mp-shocks-french-warship-fires-in-channel-1785241996</id>
            <summary type="text">ஆங்கிலக்கால்வாயில் பிபிசி ஊடகத்துக்கு பேட்டியளித்துக்கொண்டிருந்த பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் எதிர்பாராத அதிர்ச்சி ஒன்றை சந்திக்க நேர்ந்தத...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஆங்கிலக்கால்வாயில் பிபிசி ஊடகத்துக்கு பேட்டியளித்துக்கொண்டிருந்த பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் எதிர்பாராத அதிர்ச்சி ஒன்றை சந்திக்க நேர்ந்தது.
</p><h3>
நாடாளுமன்ற உறுப்பினர் சந்தித்த அதிர்ச்சி</h3><p>

பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினரான கிறிஸ் பிலிப், பிரித்தானியாவின் நிழல் உள்துறைச் செயலராகவும் உள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2e376aca-6203-4f18-8ea5-28c4c43d2609/26-6a68a18d7761e.webp' /></p><p>
இந்நிலையில், புலம்பெயர்வோர் ஆங்கிலக்கால்வாயைக் கடந்து பிரித்தானியாவுக்குள் நுழைவது தொடர்பில், ஆங்கிலக்கால்வாயில் படகொன்றில் பயணித்தவண்ணம் பிபிசி ஊடகத்துக்கு பேட்டியளித்துக்கொண்டிருந்திருக்கிறார் பிலிப்.
</p><p>
அப்போது, அவ்வழியாக பிரெஞ்சு கடற்படைக்கு சொந்தமான போர்க்கப்பல் ஒன்று சென்றுள்ளது.
</p><p>
சற்று நேரத்தில், யாரோ துப்பாக்கியால் சுடும் சத்தத்தை பிலிப்பும் அவரை பேட்டி எடுத்துக்கொண்டிருந்த பிபிசி ஊடகவியலாளரான மைக்கேல் கியோஹனும் கேட்டுள்ளார்கள்.&nbsp;</p><p></p><p>
 17 முறை துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டதாகவும், அந்த போர்க்கப்பலில் பிரெஞ்சு வீரர் ஒருவர் கடலை நோக்கி துப்பாக்கியை பிடித்துக்கொண்டு நிற்பதை தான் கவனித்ததாகவும், துப்பாக்கி சுடும் சத்தம் அங்கிருந்துதான் வந்ததாக தான் கருதுவதாகவும் கியோஹன் தெரிவித்துள்ளார்.</p><p>

இந்நிலையில், தாங்கள் புலம்பெயர்வோர் ஆங்கிலக்கால்வாயைக் கடந்து பிரித்தானியாவுக்குள் நுழைவது தொடர்பில் செய்தி சேகரிப்பதால், அதை நிறுத்துவதற்காக பிரான்ஸ் மேற்கொண்ட ஒரு மிரட்டல் தந்திரமாக அது இருக்கலாம் என்கிறார் பிலிப்.
</p><p>
அந்தப் பகுதியில் போர்ப்பயிற்சி எதுவும் நடக்கவில்லை என்பதை உறுதி செய்துகொண்டபின், அது தங்களை மிரட்டுவதற்காக அல்லது எச்சரிப்பதற்காகத்தான் இருக்கக்கூடும் என தான் நம்புவதாக பிலிப் தெரிவித்துள்ள நிலையில், அதையே கியோஹனும் கூறியுள்ளார்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-28T12:33:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ; வணிக வளாகத்தில் சிக்கிய மக்கள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/earthquake-japan-people-trapped-shopping-complex-1785238647"></link>
            <id>https://canadamirror.com/article/earthquake-japan-people-trapped-shopping-complex-1785238647</id>
            <summary type="text">&amp;nbsp; தென்மேற்கு ஜப்பானில் ஏற்பட்ட 7.1 ரிச்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, காஷிமா நகரில் உள்ள ஏயோன் மோல் வணிக வளாகத்திற்குள் பலர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; தென்மேற்கு ஜப்பானில் ஏற்பட்ட 7.1 ரிச்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, காஷிமா நகரில் உள்ள ஏயோன் மோல் வணிக வளாகத்திற்குள் பலர் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
</p><p>


நிலநடுக்கத்தைத் தொடர்ந்து குமாமோட்டோவில் உள்ள ஏயோன் மோலில் வெடிப்பு ஏற்பட்டதாகச் சில தகவல்கள் கூறுகின்றன.



இந்த நிலநடுக்கம் கியூஷு தீவின் உட்பகுதியில் மாலை 16:27 மணிக்கு ஏற்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6f6a017e-6e02-4336-8a84-c52676fef1af/26-6a68965bab0ac.webp' /></p><h2>150,000-க்கும் மேற்பட்ட மக்கள்&nbsp; வெளியேற&nbsp; அறிவுறுத்து</h2><p> இதன் மையம் 10 கி.மீட்டர் (6 மைல்) ஆழமற்ற பகுதியில் அமைந்துள்ளது.



இந்நிலையில், 150,000-க்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான முகாம்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
</p><p>


இதேவேளை, ந்நிலநடுக்கத்தைத் தொடர்ந்து விடுக்கப்பட்ட குறுகிய கால சுனாமி எச்சரிக்கை, ஒரு மணி நேரத்திற்குள் திரும்பப் பெறப்பட்டுள்ளது.



ஆழமற்ற மையப்பகுதி என்பதால் மேலும் வலுவான பின்அதிர்வுகள் ஏற்படக்கூடுமென அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.</p><p></p><p>



நாங்கள் இன்னும் காயங்கள் மற்றும் சொத்து சேதங்களின் முழு அளவை மதிப்பிட்டு வருகிறோம். எனினும், ஏற்கனவே பலருக்குக் காயங்கள் ஏற்பட்டுள்ளதாக எனக்குத் தகவல் கிடைத்துள்ளதென ஜப்பான் பிரதமர் சனே டகாயிச்சி ஊடகங்களுக்ககு கருத்து தெரிவித்துள்ளார்.</p><p>



அதேவேளை ஜப்பான், ஆண்டுக்குச் சுமார் 1,500 நிலநடுக்கங்களைச் சந்திக்கும் உலகின் மிக முக்கியமான நிலநடுக்கப் பகுதிகளில் ஒன்றாக உள்ளதென்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-07-28T12:31:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சமிந்த விஜேசிறியை கைவிடப்போவதில்லை; சஜித் பிரேமதாச சபதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sajith-premadasa-suprot-chaminda-wijesiri-1785241957"></link>
            <id>https://jvpnews.com/article/sajith-premadasa-suprot-chaminda-wijesiri-1785241957</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;எதிர்க்கட்சியும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச, சிரைதண்டனை விதிக்கப்பட்டுள்ள பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;எதிர்க்கட்சியும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச, சிரைதண்டனை விதிக்கப்பட்டுள்ள பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறியை கைவிடப்போவதில்லை என்றும், மேன்முறையீட்டு நடைமுறை மூலம் நீதி நிலைநாட்டப்படும் என்றும் உறுதியளித்துள்ளார்.
</p><p>
சமிந்த விஜேசிறிக்கு இறுதியில் நீதி கிடைக்கும் என நம்புவதாக ஊடகவியலாளர்களிடம் எதிர்கட்சி தலைவர் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8054a06d-0fc6-4443-928e-b64b5184d53e/26-6a68a1668115c.webp' /></p><h2>&nbsp;நீதி வழங்கும் நீதித்துறையை நாங்கள் நம்புகிறோம்</h2><p> 



 சமிந்த விஜேசிறி பதுளை மாவட்டத்திற்கும் ஐக்கிய மக்கள் சக்திக்கும் மட்டுமல்ல, இலங்கை மக்களுக்கும் ஒரு தூணாக திகழ்கிறார். அவர் தனது அரசியல் மற்றும் நாடாளுமன்றப் பணிகள் மூலம் குடிமக்களுக்காக அச்சமின்றி பல தீவிரமான பிரச்சினைகளை எழுப்பியுள்ளார்.</p><p> நாங்கள் அவருடன் நிற்பதுடன், நீதி வழங்கும் நீதித்துறையை நாங்கள் நம்புகிறோம்” என்று அவர் கூறினார்.



பதுளை மேல் நீதிமன்றம் இன்று சமிந்த விஜேசிறிக்கு ஒன்றரை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்ததை அடுத்து இந்தக் கருத்துக்கள் வெளியாகியுள்ளன.</p><p> பொலிஸ் அதிகாரிகளைத் தடுத்து நிறுத்துதல், உடல்ரீதியான காயத்தை ஏற்படுத்தியமை மற்றும் குற்றவியல் மிரட்டல் விடுத்தமை ஆகிய குற்றங்களில் அவர் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்தது.</p><p>



2019 ஆம் ஆண்டு பண்டாரவளை வட்டாரத்திற்கு அருகில், பொலிஸ் ஜீப் ஒன்று நாடாளுமன்ற உறுப்பினரின் வாகனத்தை முந்திச் சென்றது தொடர்பான சம்பவமே இந்த வழக்கிற்குக் காரணமாகும். </p><p>அப்போது ஏற்பட்ட மோதல் முற்றியதால், பொலிஸ் அதிகாரிகள் தாக்கப்பட்டு மிரட்டப்பட்டதாக அரச தரப்பு வழக்குத் தொடுநர்கள் தெரிவித்தனர்.



நீதிமன்ற விசாரணை நடவடிக்கைகளைத் தொடர்ந்து, மேல் நீதிமன்றம் தனது தீர்ப்பை வழங்கி, விஜேசிறியைக் குற்றவாளியாக அறிவித்து சிறைத்தண்டனை விதித்தமை குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-07-28T12:30:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[நடிப்பை தாண்டி புதிய தொழில் தொடங்கியுள்ள நடிகை ராய் லட்சுமி....]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/actress-raai-lakshmi-started-her-new-business-1785231821"></link>
            <id>https://cineulagam.com/article/actress-raai-lakshmi-started-her-new-business-1785231821</id>
            <summary type="text">ராய் லட்சுமிநடிகை ராய் லட்சுமி, தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நாயகிகளின் லிஸ்டில் இருந்தவர். தொடர்ந்து வெற்றிப் படங்கள் கொடுத்து வந்தவர் மற்ற...</summary>
            <content type="html"><![CDATA[<h2>ராய் லட்சுமி</h2><p>நடிகை ராய் லட்சுமி, தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நாயகிகளின் லிஸ்டில் இருந்தவர். </p><p>தொடர்ந்து வெற்றிப் படங்கள் கொடுத்து வந்தவர் மற்ற மொழிகளிலும் படங்கள் நடித்தார், ஆனார் அவரால் சினிமாவில் பெரிய அளவில் சாதனை செய்ய முடியவில்லை. இன்ஸ்டாவில் மட்டும் மிகவும் ஆக்டீவாக இருந்து வந்த ராய் லட்சுமி இப்போது ஒரு குட் நியூஸ் கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/94693976-cc9b-480e-8933-45aaa53dae26/26-6a688dc906b1f.webp' /></p><h2>
புதிய தொழில்</h2><p>
நடிகைகள் சொந்த தொழில் துவங்குவது ஒன்றும் தமிழ் சினிமாவில் புதியது இல்லை. </p><p>ராய் லட்சுமி ஹவுஸ் பை லாரா நிறுவனத்தின் மூலம் La Ra செயலியைத் தயாரித்துள்ளார். சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற்ற விழாவில் இந்த புதிய டேட்டிங் மற்றும் நெட்வொர்க்கிங் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/46e018ba-12f6-4e85-a403-b1a0bab7357f/26-6a688dca09f43.webp' /></p><p> </p><p>தற்போது சோஷியல் மீடியா மற்றும் டேட்டிங் ஆப்-களில் போலி கணக்குகள் அதிகரித்துள்ள நிலையில், அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இந்த 'La Ra' செயலி உருவாக்கப்பட்டுள்ளது. </p><p>உண்மையான அன்பு, காதல், உண்மையான நட்பு மற்றும் நீண்டகால வாழ்க்கைத் துணையைத் தேடுபவர்களுக்கு இந்தச் செயலி மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-28T12:30:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[விஜய் - திரிஷா ரெண்டு பேரும் தனியா பேசமாட்டாங்க..குறைவுதான்!! லியோ பட நடிகை ஓபன்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/janani-reveals-what-vijay-and-trisha-talked-about-1785238644"></link>
            <id>https://viduppu.com/article/janani-reveals-what-vijay-and-trisha-talked-about-1785238644</id>
            <summary type="text">விஜய் - திரிஷாநடிகரும் தமிழக முதல்வருமான விஜய் நடிப்பில் கடந்த ஜூலை 23ஆம் தேதி ரிலீஸான படம் தான் ஜனநாயகன். எச் வினோத் இயக்கத்தில் பூஜா ஹெக்டே, மமிதா ப...</summary>
            <content type="html"><![CDATA[<h2>விஜய் - திரிஷா</h2><p>நடிகரும் தமிழக முதல்வருமான விஜய் நடிப்பில் கடந்த ஜூலை 23ஆம் தேதி ரிலீஸான படம் தான் ஜனநாயகன். எச் வினோத் இயக்கத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடித்து மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. படம் வெளியாகி 5 நாட்களாகிய நிலையில் உலகளவில் சுமார் ரூ. 222 கோடிக்கும் மேல் வசூலித்து வருகிறது. இது ஒரு பக்கம் இருக்க, ஜனநாயகன் படத்தை முதல்நாள் முதல் காட்சியை பார்க்க திரிஷா சென்றிருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/687b2b7b-6f6e-45dc-a9c7-152a3a4add58/26-6a6894763fcf9.webp' /></p><p> </p><p>சமீபத்தில் விஜய்யுடன் திருமண நிகழ்ச்சிக்கும் முதலமைச்சரான பின், பாக்யராஜ் மறைவுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்கு திரிஷா சென்றது பேசுபொருளானது. </p><p>இந்நிலையில், விஜய் - திரிஷா ஷூட்டிங் ஸ்பாட்டில் எப்படி இருப்பார்கள்? என்ன பேசுவார்கள் என்று லியோ படத்தில் நடித்த பிக்பாஸ் நடிகை ஜனனி சீக்ரெட் ஒன்றினை பகிர்ந்துள்ளார். </p><h2>நடிகை ஜனனி</h2><p>அதில், விஜய் - திரிஷா இருவரும் ஜாலியாக பேசுவாங்க. பெரும்பாலும் எனக்கு வர சீன்களுக்கு எல்லாம் நான் நோட் பண்ணி இருக்கறதுனால, நான் ஏதாவது சொன்னா சாருக்கு கொஞ்சம் புரிஞ்சிடும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/28ce2a5f-4826-46a5-b690-a77aec3f8a90/26-6a689476e6580.webp' /></p><p> </p><p>அப்போ திரிஷா மேம்-கு கொஞ்சம் புரியுறது கம்மியா இருக்கும். அப்போ அவங்க, என்ன சொன்னாங்கன்னு விஜய் சார்கிட்ட கேப்பாங்க. கேட்டா அவர் சொல்லுவாரு, அப்புறம் அவரு என்கிட்ட என்ன சொன்னேங்கிறதையும் சும்மா சொல்லுவாங்க. அப்போ ஸ்பாட்ல கொடுக்கிற ரியாக்ஷன் எல்லாம் க்யூட்டா இருக்கும். என்கிட்ட இப்போ கேட்டா, அந்த மாதிரி க்யூட் மொமண்ட்ஸ் தான் நிறைய இருக்கு.</p><p> விஜய் சார் - திரிஷா மேம் ரெண்டு பேரும் எப்போ செட்டுக்கு வந்தாலும் அந்த இடமே வேறமாதிரியான எனர்ஜியா மாறிடும். அவங்க ஹாய் அப்படின்னு சொல்லி பேசினாலே நமக்கு அந்த எனர்ஜி வந்துடும். சில டைம் நல்ல காமெடியாகவும் இருக்கும். விஜய் - திரிஷா ரெண்டு பேரும் தனிப்பட்ட முறையில் பேசி பார்த்தது இல்ல, எல்லாம் ஒன்னா இருக்கும்போது தான் பேசுவாங்க.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1e9f860f-1405-4eb1-9f2a-cc913d5f1ec1/26-6a689477a7a21.webp' /></p><p> </p><p>நாங்க செட்டா இருக்கும்போது செட்டாதான் கூட பேசுவாங்க, தனியா பேசுறது குறைவு. பட் ஏதாவது சார் சொன்னா எங்ககிட்ட கேப்பாங்க, இப்போ சார் என்கூட இருந்து பேசி ஏதாவது ஜாலியா பேசிட்டு இருந்தா, என்ன சார் சொன்னாரு, அந்த மாதிரி ஜாலியா கேப்பாங்க. அவங்கன்னு சீன் வரும்போது நடிச்சு, அந்த சீன் ரிலேட்டிவா ஏதாவது பேசுவாங்க.</p><p> கேம் செஷன்ஸ் ஏதாவது சூட்டிங் ஸ்பாட்டில் இருந்துச்சா என்ற கேள்விக்கு, அதுக்கெல்லாம் டைம் கிடைக்கல, ஏன்னா அப்படியே திரில் திரில்லாதான் போயிட்டு இருந்துச்சு என சிரிச்சிட்டே பதிலளித்தார் ஜனனி.</p>]]></content>
            <updated>2026-07-28T12:30:00+00:00</updated>
        </entry>
    </feed>
