<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-08-11T22:23:27+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[மொஜ்தாபா கமேனியின் உடல்நிலை குறித்து ஈரான் விளக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/iran-explains-mojtaba-khamenei-s-health-condition-1786486854"></link>
            <id>https://canadamirror.com/article/iran-explains-mojtaba-khamenei-s-health-condition-1786486854</id>
            <summary type="text">ஈரானின் உச்சத் தலைவர் மொஜ்தாபா கமேனியின் உடல்நிலை குறித்து பரவி வரும் தகவல்களை ஈரான் மறுத்துள்ளது.

மொஜ்தாபா கமேனி முழுமையான மற்றும் ஆரோக்கியமான உடல...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானின் உச்சத் தலைவர் மொஜ்தாபா கமேனியின் உடல்நிலை குறித்து பரவி வரும் தகவல்களை ஈரான் மறுத்துள்ளது.

மொஜ்தாபா கமேனி முழுமையான மற்றும் ஆரோக்கியமான உடல் நலத்துடன் இருப்பதாக ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் தெரிவித்துள்ளார்.
</p><p>
மொஜ்தாபா கமேனியுடன் சுமார் 7 முதல் 8 மணி நேரம் நீடித்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற பின்னரே ஜனாதிபதி இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/20d1b98e-ba78-4564-b228-77cfc9909dd6/26-6a7ba047b9900.webp' /></p><p>

பல மணி நேரம் தொடர்ந்து அமர்ந்து விரிவாக ஆலோசனை நடத்தக்கூடிய ஒருவருக்கு குறிப்பிடத்தக்க உடல்நலப் பிரச்சினை இருப்பதாகக் கூற முடியாது என பெசெஷ்கியான் தெரிவித்துள்ளார். </p><p>இதன் மூலம் இஸ்ரேலிய ஊடகங்களில் வெளியாகியிருந்த மொஜ்தாபா கமேனியின் உடல்நிலை தொடர்பான தகவல்களுக்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.</p><p><br></p>]]></content>
            <updated>2026-08-11T22:21:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரசாங்கத்தின் சர்வாதிகாரப் பயணம் ; ‘தினன தகுண’ அமைப்பு கடும் குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/the-government-s-dictatorship-a-daily-accusation-1786486374"></link>
            <id>https://jvpnews.com/article/the-government-s-dictatorship-a-daily-accusation-1786486374</id>
            <summary type="text">இலங்கையின் ஜனநாயகக் கட்டமைப்பு வேகமாக வீழ்ச்சியடைந்து வருவது தொடர்பில் &#039;தினன தகுண&#039; அமைப்பு தனது ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளது.
அரசாங்கம் தனது பொருளாத...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் ஜனநாயகக் கட்டமைப்பு வேகமாக வீழ்ச்சியடைந்து வருவது தொடர்பில் 'தினன தகுண' அமைப்பு தனது ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளது.</p><p>
</p><p></p><p>அரசாங்கம் தனது பொருளாதாரத் தோல்விகளை மறைப்பதற்கும், அரசியல் விமர்சனங்களை முடக்குவதற்கும் ஊழலுக்கு எதிரான அலையை ஒரு கருவியாகப் பயன்படுத்தி வருவதாக அந்த அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
</p><p>
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசத்தை அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்ய முற்பட்டமை இதற்குச் சிறந்த அண்மைய உதாரணமாக கூறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/faac22ba-e3c1-439e-a84b-28c81541b192/26-6a7b9e6875707.webp' /></p><p>குடிமைசார் சட்டத்தின் கீழ் நடவடிக்கைகள் எடுக்க வாய்ப்பிருந்தும், அரசாங்கத்தின் ஏவலாளராகச் செயற்பட்டு காவல்துறையினர் அவரை குற்றவியல் சட்டத்தின் கீழ் தண்டிக்க முயன்றுள்ளதாக அந்த அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.
</p><p>
அநுரகுமார திசாநாயக்க ஆட்சி பீடமேறி 18 மாதங்கள் நிறைவடையும் நிலையில், மக்களின் எதிர்பார்ப்புகள் முற்றாகப் பொய்ப்பிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அந்த 0வமைப்பு, உண்மையான வருமான வீழ்ச்சி, வறுமை அதிகரிப்பு மற்றும் மறைமுக வரிகளால் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.</p><p>

அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தம், குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழு போன்றவற்றை அரசியல் எதிரிகளைப் பயமுறுத்தும் கருவிகளாக அரசாங்கம் பயன்படுத்தி வருவதாகவும், இது ஜனநாயகத்தை காவல்துறை ராஜ்யத்தை நோக்கித் தள்ளும் ஆபத்தான நடவடிக்கை என்றும் 'தினன தகுண' அமைப்பு எச்சரித்துள்ளது.
</p><p>
எனவே, அரசாங்கத்தின் இந்த சர்வாதிகாரப் பயணத்துக்கு எதிராகக் குரலெழுப்புமாறும், நூற்றாண்டு காலமாகப் பாதுகாக்கப்பட்ட ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்க முன்வருமாறும் 'தினன தகுண' அமைப்பு ஊடகவியலாளர்களிடமும் பொதுமக்களிடமும் கோரிக்கை விடுத்துள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-11T22:13:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பகுதியில் 14 வயது மகள் மாயம் ; பொலிஸ் நடவடிக்கை குறித்து பெற்றோர் குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/daughter-goes-missing-parents-allege-police-action-1786475291"></link>
            <id>https://jvpnews.com/article/daughter-goes-missing-parents-allege-police-action-1786475291</id>
            <summary type="text">மட்டக்களப்பு ஆயித்தியமலை பகுதியில் தனியார் கல்வி நிலையத்துக்குச் செல்வதாகக் கூறிச் சென்ற 14 வயது சிறுமி ஒருவர் கடந்த 2ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளத...</summary>
            <content type="html"><![CDATA[<p>மட்டக்களப்பு ஆயித்தியமலை பகுதியில் தனியார் கல்வி நிலையத்துக்குச் செல்வதாகக் கூறிச் சென்ற 14 வயது சிறுமி ஒருவர் கடந்த 2ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக பெற்றோர் தெரிவித்துள்ளனர்.</p><p>
</p><p></p><p>ஆயித்தியமலையைச் சேர்ந்த அல்போன்ஸ் ஜெசிக்கா (வயது 14) என்ற சிறுமியே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>சம்பவத்தன்று வழமைபோன்று பாடசாலைக்குச் சென்ற சிறுமி, பின்னர் பிற்பகல் 2 மணியளவில் தனியார் கல்வி நிலையத்துக்குச் செல்வதாகக் கூறி வீட்டிலிருந்து சென்றுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/40daf2bb-7091-4fd8-a007-0671c273e125/26-6a7b731d942dc.webp' /></p><p>

எனினும், மாலை 6 மணியாகியும் சிறுமி வீடு திரும்பாத நிலையில், பெற்றோர் 119 என்ற அவசர காவல்துறை தொலைபேசி இலக்கத்திற்கு தகவல் வழங்கியுள்ளனர்.</p><p>

இதனைத் தொடர்ந்து, மறுநாள் ஆயித்தியமலை காவல் நிலையத்திற்குச் சென்று முறைப்பாடு பதிவு செய்ததாக பெற்றோர் தெரிவித்துள்ளனர்.</p><p>

எனினும், முறைப்பாடு செய்யப்பட்டு பல நாட்கள் கடந்துள்ள போதிலும், தமது மகளை கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கைகள் இதுவரை உரிய முறையில் முன்னெடுக்கப்படவில்லை என பெற்றோர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
</p><p>
இந்நிலையில், சிறுமி காணாமல் போனமை தொடர்பில் மட்டக்களப்பிலுள்ள மனித உரிமைகள் நிலையத்திற்கும் தகவல் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
காணாமல் போன சிறுமி தொடர்பில் தகவல்கள் தெரிந்தவர்கள் அருகிலுள்ள காவல் நிலையத்திற்கோ அல்லது சிறுமியின் குடும்பத்தினருக்கோ தகவல் வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-11T22:01:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[தென்னிலங்கை மீனவர்களால் முல்லைத்தீவு மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு ; ரவிகரன் எம்.பி ஆவேசம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/southern-sri-lankan-mullaitivu-fishermen-affected-1786485337"></link>
            <id>https://jvpnews.com/article/southern-sri-lankan-mullaitivu-fishermen-affected-1786485337</id>
            <summary type="text">முல்லைத்தீவு கடற்பரப்பில் வெளிமாவட்ட மீனவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் மீன்பிடி அனுமதிகளை உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும், அங்கு இடம்பெற்று வரும் சட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>முல்லைத்தீவு கடற்பரப்பில் வெளிமாவட்ட மீனவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் மீன்பிடி அனுமதிகளை உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும், அங்கு இடம்பெற்று வரும் சட்டவிரோதக் கடற்றொழில் நடவடிக்கைகளைக் கடுமையாகக் கட்டுப்படுத்த வேண்டும் எனவும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார்.</p><p></p><p>

முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற நடப்பாண்டிற்கான இரண்டாவது கடற்றொழில்சார் அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலேயே அவர் இக்கோரிக்கையை முன்வைத்தார். </p><p>இக்கூட்டத்தில் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் கடற்றொழில் நீரியல்வளத் திணைக்கள பணிப்பாளர் நாயகம் ஆகியோர் கலந்துகொண்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3b15506e-96e8-4d6e-acf7-de4f0c6db9ed/26-6a7b9a5ad58bc.webp' /></p><p>

முல்லைத்தீவு கடற்பரப்பில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் சட்டவிரோத மீன்பிடி முறைகள் தொடர்பில், அப்பகுதி மீனவர்களால் பெறப்பட்ட தெளிவான புகைப்பட ஆதாரங்களை நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன், நேரடியாகவே கடற்றொழில் அமைச்சரிடம் கையளித்து உடனடி நடவடிக்கை கோரினார்.
</p><p>
கூட்டத்தில் தொடர்ந்து உரையாற்றிய ரவிகரன் எம்.பி, கடற்றொழில் நீரியல்வளத் திணைக்களப் பணிப்பாளர் நாயகத்தால் வெளிமாவட்ட மீனவர்களுக்கு வழங்கப்படும் அனுமதிகளே இச்சட்டவிரோதச் செயல்களுக்கு வழிவகுப்பதாகக் குற்றம்சாட்டினார்.</p><p>

"தென்னிலங்கையைச் சேர்ந்த மீனவர் ஒருவருக்கு முள்ளிவாய்க்கால் பகுதியில் மீன்பிடிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. </p><p>ஆனால், அவர் சாலைப் பகுதியில் ஐந்து படகுகளைப் பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டு வருவதாக உள்ளூர் மீனவர்கள் புகார் தெரிவித்துள்ளனர். </p><p>இத்தகைய வெளிமாவட்ட ஊடுருவல்களால் முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த பாரம்பரிய மீனவர்கள் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து கடுமையாகப் பாதிக்கப்படுகின்றனர்" என அவர் சுட்டிக்காட்டினார்.
</p><p>
எனவே, கடற்றொழில் நீரியல்வளத் திணைக்களம் வெளிமாவட்ட மீனவர்களுக்கு வழங்கும் அனுமதிகளை உடனடியாக ரத்து செய்வதோடு, முல்லைத்தீவு கடற்பகுதியின் வளங்களைப் பாதுகாக்கவும் உள்ளூர் மீனவர்களின் உரிமைகளை உறுதிப்படுத்தவும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என அவர் உறுதியாகத் தெரிவித்தார்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-11T21:55:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரொனால்டோ - ஜார்ஜினா திருமணம்: 5 குழந்தைகள் முன்னிலையில் கோலாகலமாக நிறைவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/ronaldo-georgina-wedding-in-portugal-1786484792"></link>
            <id>https://news.lankasri.com/article/ronaldo-georgina-wedding-in-portugal-1786484792</id>
            <summary type="text">போர்ச்சுக்கலில் ரொனால்டோ மற்றும் ஜார்ஜினா ரோட்ரிக்ஸ் திருமணம் கோலாகலமாக நிறைவடைந்துள்ளது. ரொனால்டோ - ஜார்ஜினா&amp;nbsp;திருமணம்
கால்பந்து உலகின் புகழ்பெற...</summary>
            <content type="html"><![CDATA[<p>போர்ச்சுக்கலில் ரொனால்டோ மற்றும் ஜார்ஜினா ரோட்ரிக்ஸ் திருமணம் கோலாகலமாக நிறைவடைந்துள்ளது.</p><h2> ரொனால்டோ - ஜார்ஜினா&nbsp;திருமணம்</h2><p>
கால்பந்து உலகின் புகழ்பெற்ற ஜாம்பவான் வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ தன்னுடைய நீண்ட நாள் காதலியான&nbsp; ஜார்ஜினா ரோட்ரிக்ஸை அதிகாரப்பூர்வமாக திருமணம் செய்து கொண்டுள்ளார்.</p><p> திருமணத்திற்கு பிறகு, தங்களுடைய திருமண மோதிரத்துடன் கூடிய புகைப்படத்தை சமூக ஊடகத்தில் பகிர்ந்து இந்த மகிழ்ச்சியான திருமண செய்தியை உறுதிப்படுத்தியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/90364054-9e2c-4f75-a99b-0545c0c57a85/26-6a7b983b475c3.webp' /></p><h2> போர்ச்சுக்கலில் நடைபெற்ற திருமணம்</h2><p>போர்ச்சுக்கல் நாட்டின் காஸ்காய்ஸ் நகரில் தங்களது 5 குழந்தைகள் சூழ மிகவும் ரகசியமாக இந்த திருமணத்தை ரொனால்டோ - ஜார்ஜினா&nbsp;ஜோடி செய்து கொண்டுள்ளனர்.</p><p> கடந்த ஆண்டு ரொனால்டோ உடன் நடைபெற்ற திருமணம் நிச்சயதார்த்தம் குறித்து ரோட்ரிக்ஸ் கருத்து தெரிவித்து இருந்தார்.</p><p> அதில், “ஆம் நான் சம்மதிக்கிறேன், இந்த மற்றும் அனைத்து பிறவிகளிலும்” என்று மறைமுகமாக சமூக வலைதளத்தில் குறிப்பிட்டு இருந்தார்.</p><p></p><h2>தசாப்த கால காதல்</h2><p>32 வயது ரோட்ரிக்ஸும், 41 வயது ரொனால்ட்டோவும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு மாட்ரிட் நகரில் சந்தித்துக் கொண்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/eec2ea04-947c-47ba-b1d4-f9c4852346d7/26-6a7b983a95b6f.webp' /></p><p> ரொனால்டோ ரியல் மாட்ரிட் அணிக்காக விளையாடிய போது, ரோட்ரிக்ஸ் அங்குள்ள Gucci அங்காடியில் விற்பனை உதவியாளராக பணியாற்றி வந்துள்ளார்.</p><p> மேலும், ரோட்ரிக்ஸ் மாடலாகவும் தன்னுடைய தனி முத்திரையை பதித்துள்ளார்.</p><p>ரொனால்டோ - ஜியார்ஜினா தம்பதிக்கு கிறிஸ்டியானோ ஜூனியர், ஈவா மரியா, மாட்டீயோ, அலானா, பெல்லா என்ற 5 குழந்தைகள் உள்ளனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p>&nbsp;<br></p>]]></content>
            <updated>2026-08-11T21:46:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஐபோன் பயனர்களின் வட்ஸ்அப் கணக்குகளை முடக்கும் புதிய இணையவழி தாக்குதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/new-cyberattack-freezes-iphone-whatsapp-account-1786484137"></link>
            <id>https://jvpnews.com/article/new-cyberattack-freezes-iphone-whatsapp-account-1786484137</id>
            <summary type="text">இலங்கையிலுள்ள ஐபோன் பயனர்களின் வட்ஸ்அப் (WhatsApp) கணக்குகளை இலக்குவைத்து &#039;ஸீரோ க்ளிக்&#039; (Zero-click) வகையிலான புதிய இணையவழி தாக்குதலொன்று மேற்கொள்ளப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையிலுள்ள ஐபோன் பயனர்களின் வட்ஸ்அப் (WhatsApp) கணக்குகளை இலக்குவைத்து 'ஸீரோ க்ளிக்' (Zero-click) வகையிலான புதிய இணையவழி தாக்குதலொன்று மேற்கொள்ளப்பட்டு வருவதாகச் இலங்கை கணினி அவசர பதிலளிப்பு குழுவுக்கு (SLCERT) முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.</p><p>
</p><p></p><p>பாதிக்கப்பட்ட நபர் எந்தவொரு போலி இணைப்புகளையும் (Links) சொடுக்காத நிலையிலும் அல்லது QR குறியீடுகளை ஸ்கேன் செய்யாத நிலையிலும், அவர்களின் வட்ஸ்அப் கணக்குகளை இணைய ஊடுருவிகள் (Hackers) தங்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும் வகையில் இந்தத் தாக்குதல் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b64bd223-5adf-4898-992a-479da2d3daad/26-6a7b95aae5639.webp' /></p><p>

பழைய iOS பதிப்புகளில் இயங்கும் ஐபோன்களே இந்தத் தாக்குதலினால் அதிகளவில் பாதிக்கப்படுவதாகவும், இலங்கையின் ஊடகவியலாளர்கள் மற்றும் வர்த்தகச் சமூகத்தைச் சேர்ந்த பலர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
</p><p>
இவ்வாறு ஊடுருவப்பட்ட வட்ஸ்அப் கணக்குகள் மூலம் மற்றவர்களுக்குப் பணமனுப்புமாறு கோரி போலிச் செய்திகள் அனுப்பப்பட்டு வருகின்றன.
</p><p>
iOS 16.7.12 க்கும் பழைய பதிப்புகளைப் பயன்படுத்தும் ஐபோன் பயனர்களே இதனால் அதிகளவில் பாதிக்கப்படுவதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
</p><p>
எனவே, இந்த அபாயத்திலிருந்து தப்பிக்க ஐபோன் பயனர்கள் உடனடியாகத் தமது தொலைபேசிகளின் iOS பதிப்பையும், வட்ஸ்அப் செயலியையும் அண்மைய பதிப்புக்கு புதுப்பிக்குமாறு (Update) இணையப் பாதுகாப்பு நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
</p><p>
அத்துடன், வட்ஸ்அப் கணக்குகளில் இருபடிச் சரிபார்ப்பு (Two-Step Verification) மற்றும் 'செட் லாக்' (Chat Lock) ஆகிய பாதுகாப்பு அம்சங்களை உடனடியாகச் செயற்படுத்துமாறும், தெரிந்த நபர்களிடம் இருந்து பணக் கோரிக்கைகள் வந்தால் தொலைபேசி அழைப்பு மூலம் அதனை உறுதிப்படுத்துமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-11T21:35:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Erimalai</name>
            </author>
            <title type="text"><![CDATA[மாகாண சபை தமிழ் மக்களுக்கு தீர்வு அல்ல! மணிவண்ணன் சுட்டிக்காட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/provincial-council-solution-for-the-tamil-people-1786479754"></link>
            <id>https://tamilwin.com/article/provincial-council-solution-for-the-tamil-people-1786479754</id>
            <summary type="text">மாகாண சபை தமிழ் மக்களுக்கு தீர்வு அல்ல, சமஸ்டி தீர்வே எமது நிலைப்பாடு
என்று சட்டத்தரணியும், முன்னாள் யாழ்ப்பாணம் மாநகர முதல்வரும், தமிழ்
மக்கள் கூட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>மாகாண சபை தமிழ் மக்களுக்கு தீர்வு அல்ல, சமஸ்டி தீர்வே எமது நிலைப்பாடு
என்று சட்டத்தரணியும், முன்னாள் யாழ்ப்பாணம் மாநகர முதல்வரும், தமிழ்
மக்கள் கூட்டணியின் துணைப் பொதுச் செயலாளருமான விஸ்வலிங்கம் மணிவண்ணன்
தெரிவித்துள்ளார்.
</p><p>வடமராட்சியில் ஊடகவியலாளர்கள் மாகாண சபை தேர்தல் தொடர்பில் எழுப்பிய
கேள்விக்கு பதில் அளிக்கும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.</p><p>


மாகாண சபை தேர்தல் ஒத்திவைக்கப்பட முடியாது. உடனடியாக நடத்தப்பட வேண்டும்.
2018 ஆம் ஆண்டு வடக்கு மாகாண சபை பதவியை இழந்திருந்தது.</p><p></p><h2>மாகாண சபை தேர்தல்கள்&nbsp;</h2><p>2017 கிழக்கு மாகாண
சபை பதவியை இழந்திருந்தது
கிட்ட தட்ட 6 ஆண்டுகளுக்கு மேலாக மாகாண சபை தேர்தல் நடத்தாமல் அரசாங்கங்கள்
வேண்டுமென்றே இழுத்தடிப்பு செய்து வருகிறது. அவர்களைப் பொறுத்தவரையில் இந்த
நாடு ஒற்றை ஆட்சிக்குள்ள இருக்க வேண்டும்.</p><p> இந்த நாட்டிலே அதிகாரம் சற்று கூட
பகிரக்கூடாது. அதிலும் விசேஷமாக தமிழ் மக்கள் தங்களுடைய எந்தவொரு
பிராந்தியத்தின் மீது தங்களுடைய ஆளுமையை அல்லது தங்களுடைய ஆட்சியை
செயற்படுத்த கூடாது என்பதில் அவர்கள் மிகத் தெளிவாக இருக்கிறார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6fb58efe-8edb-4ebf-b5bf-48b0726f23b5/26-6a7b944654d38.webp' /></p><p> </p><p>அந்த
அடிப்படையில் தான் இந்த மாகாண சபை தேர்தல்கள் மாறி மாறி வந்த எல்லா
அரசாங்கங்களாலும் இழுத்தடிப்பு செய்யப்படுகிறது.
</p><p>
2018 ஆம் ஆண்டிலேயே ஆட்சியில் இருந்தது மைத்திரிபால சிறிசேன ரணில்
விக்ரமசிங்க தலைமையிலான கூட்டாட்சி. அந்த அரசாங்கம் வேண்டுமென்று செய்த
சதியினாலே இந்த தேர்தல் பொறிமுறையை இல்லாமல் செய்து இன்று இந்த தேர்தல்
நடைபெறாமல் இருக்கிறது.</p><p> ஆகவே என்னைப் பொறுத்தமட்டில் 13வது திருத்தச்
சட்டத்தில் எதுவுமே இல்லை என்பதை நான் 100 வீதம் ஏற்றுக் கொள்கிறேன்.
13-வது திருத்தச் சட்டம் எங்களுக்கு தீர்வு இல்லை என்பதையும் நான் 100 வீதம்
ஏற்றுக் கொள்கிறேன் எனக் குறிப்பிட்டார்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-11T21:29:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[முத்துராஜவெல முனையத்தில் புதிய எரிபொருள் சேமிப்புத் தொட்டிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/new-fuel-storage-tanks-at-muthurajwela-terminal-1786483389"></link>
            <id>https://jvpnews.com/article/new-fuel-storage-tanks-at-muthurajwela-terminal-1786483389</id>
            <summary type="text">முத்துராஜவெல முனையத்தில் புதிய எரிபொருள் சேமிப்புத் தொட்டிகளை நிர்மாணிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
அதன்படி, இலங்கை கனிம எண்ணெய் மொத்த சேம...</summary>
            <content type="html"><![CDATA[<p>முத்துராஜவெல முனையத்தில் புதிய எரிபொருள் சேமிப்புத் தொட்டிகளை நிர்மாணிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.</p><p>
</p><p></p><p>அதன்படி, இலங்கை கனிம எண்ணெய் மொத்த சேமிப்பு முனைய நிறுவனத்தின் நிதியைப் பயன்படுத்தி, 15,000 கனமீற்றர் கொள்ளளவு கொண்ட இரண்டு தொட்டிகளும், 10,000 கனமீற்றர் கொள்ளளவு கொண்ட ஒரு தொட்டியும் நிர்மாணிக்கப்படவுள்ளன.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aeba6ff3-e055-4ea7-836a-aa9c9785eff7/26-6a7b92bf3b868.webp' /></p><p>இந்தத் திட்டத்திற்கு 2025 ஜூன் 2ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில், திட்டத்தை நடைமுறைப்படுத்தும்போது சுற்றாடல், சட்டம் உள்ளிட்ட தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் குறித்து சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடி தீர்மானங்களை மேற்கொள்ளுமாறு ,அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><p>

இதன்படி, மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் பரிந்துரைகள் மற்றும் நிபந்தனைகள் கொள்முதல் ஒப்பந்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும், வனவிலங்கு மற்றும் தாவரங்கள் பாதுகாப்பு கட்டளைச்சட்டத்தின் விதிகளுக்கு அமைவாகவே இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் வலுசக்தி மற்றும் சுற்றாடல் அமைச்சர்கள் அமைச்சரவைக்கு தெரிவித்துள்ளனர்.
</p><p>
இதன்படி, ஒப்பந்தத்தின் பெறுமதி சேர்க்கப்பட்ட வரி இன்றி 3.04 மில்லியன் அமெரிக்க டொலர் மற்றும் 2,796.14 மில்லியன் இலங்கை ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இந்தத் திட்டத்தின் மூலம் முத்துராஜவெல முனையத்தின் எரிபொருள் சேமிப்புத் திறனை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.</p><p></p>]]></content>
            <updated>2026-08-11T21:23:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[யூடியூப் கிரியேட்டர்களுக்கு புதிய அதிர்ச்சி ; பணமீட்டல் தகுதி இருமடங்கு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/new-shock-youtube-creators-cashback-eligibility-1786482574"></link>
            <id>https://jvpnews.com/article/new-shock-youtube-creators-cashback-eligibility-1786482574</id>
            <summary type="text">யூடியூப் தளத்தில் புதிய சேனல்கள் தொடங்கிப் பணமீட்டுவதற்கான (Monetization) தகுதி வரம்புகளைக் கடுமையாக்கி, யூடியூப் நிறுவனம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள...</summary>
            <content type="html"><![CDATA[<p>யூடியூப் தளத்தில் புதிய சேனல்கள் தொடங்கிப் பணமீட்டுவதற்கான (Monetization) தகுதி வரம்புகளைக் கடுமையாக்கி, யூடியூப் நிறுவனம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.</p><p></p><p>

இந்த அதிரடி மாற்றங்கள் கிரியேட்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
</p><p>
யூடியூப் கூட்டாளர் திட்டமான YouTube Partner Program (YPP)-இல் இணைந்து பணமீட்டுவதற்கான தகுதி விதிகளில் முக்கிய மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a1a962d5-c8c8-4024-82c2-83151bdb708d/26-6a7b8f9009510.webp' /></p><p>இதன்படி, யூடியூப் மூலம் விளம்பர வருவாய் உள்ளிட்ட பணமீட்டும் வசதிகளைப் பெற விரும்பும் சேனல்கள் இனி பின்வரும் தகுதிகளைப் பூர்த்தி செய்ய வேண்டும்.</p><p>

பின்தொடர்பவர்கள்: குறைந்தபட்சம் 1,000 பின்தொடர்பவர்களை கொண்டிருக்க வேண்டும்.
</p><p>
பார்வை நேரம்: கடந்த 12 மாதங்களில் பதிவேற்றப்பட்ட நீண்ட வடிவிலான காணொளிகளுக்குக் கிடைத்த மொத்த பார்வை நேரம் 4,000 மணிநேரத்திலிருந்து 8,000 மணிநேரமாக உயர்த்தப்பட்டுள்ளது.
</p><p>
YouTube Shorts: Shorts மூலம் தகுதி பெற விரும்பும் சேனல்கள், கடந்த 90 நாட்களில் 10 மில்லியன் பார்வைகள் என்ற வரம்புக்கு பதிலாக 20 மில்லியன் பார்வைகளைப் பெற்றிருக்க வேண்டும்.
</p><p>
இந்த புதிய தகுதி வரம்புகள் 2027ஆம் ஆண்டு பெப்ரவரி 1ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இதன் மூலம், YouTube Partner Program-இல் இணைந்து பணம் ஈட்ட விரும்பும் புதிய மற்றும் வளர்ந்து வரும் உள்ளடக்க உருவாக்குநர்கள், முன்பைவிட அதிகமான பார்வை நேரம் அல்லது Shorts பார்வைகளைப் பெற்றிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-11T21:09:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[மகிந்தவுக்காக உயிரை கொடுப்பேன்.! நாமலின் மக்கள் சந்திப்பில் வெடித்த சர்ச்சை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/public-meeting-attended-by-namal-rajapaksa-1786480669"></link>
            <id>https://tamilwin.com/article/public-meeting-attended-by-namal-rajapaksa-1786480669</id>
            <summary type="text">நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கலந்துகொண்ட மக்கள் சந்திப்பு ஒன்றில் பங்கேற்ற நபர் ஒருவர், நாமல் ராஜபக்சவின் தந்தையைப் பற்றி மிகவும் உணர்ச்சிவசப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கலந்துகொண்ட மக்கள் சந்திப்பு ஒன்றில் பங்கேற்ற நபர் ஒருவர், நாமல் ராஜபக்சவின் தந்தையைப் பற்றி மிகவும் உணர்ச்சிவசப்பட்டு கருத்து தெரிவித்துள்ளார்.
</p><p>
அதாவது, மகிந்த ராஜபக்ச சொன்னால் தான் உயிரையும் கொடுக்கத் தயார் என்று கூறினார்.</p><p> 

குறித்த காணொளிகள் சமூகவலைத்தளங்களில் மிகவும் சர்ச்சையாக மாறியுள்ளது.
</p><p>

இத்தகைய தீவிர விசுவாசமான கருத்துக்கள் தற்போதைய சமூக மற்றும் அரசியல் சூழலுக்கு தேவையற்றவை என்றும், இத்தகைய உணர்ச்சிவசப்பட்ட பேச்சுகள் சிக்கலானவை என்றும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
</p><p>

இதேவேளை நாட்டில் பல அபிவிருத்தி நடவடிக்கைகள் மற்றும் அரசியல் நடவடிக்கைகளுக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தயாராகி வருகின்றார்.</p><p>

இந்த வியடங்கள் மற்றும் நாட்டில் இடம்பெற்ற பல முக்கிய விடயங்களை பற்றி பேசுகின்றது நாட்டு நடப்பு நிகழ்ச்சி...</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/sUqdox2fSjw" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-08-11T20:41:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைக்க புதிய திட்டம் ; ஜனாதிபதி முக்கிய நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/new-scheme-farmers-prices-president-major-step-1786480771"></link>
            <id>https://jvpnews.com/article/new-scheme-farmers-prices-president-major-step-1786480771</id>
            <summary type="text">விவசாயிகளிடமிருந்து நெல்லை நியாயமான விலையில் கொள்வனவு செய்வதற்காக சிறு மற்றும் நடுத்தர அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு கடன் வழங்கும் திட்டம் தொடர்பில் ஜனா...</summary>
            <content type="html"><![CDATA[<p>விவசாயிகளிடமிருந்து நெல்லை நியாயமான விலையில் கொள்வனவு செய்வதற்காக சிறு மற்றும் நடுத்தர அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு கடன் வழங்கும் திட்டம் தொடர்பில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் விசேட கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.</p><p>
</p><p></p><p>ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (11) நடைபெற்ற இந்தச் சந்திப்பில், நெல் கொள்வனவில் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் வங்கிக் கடன் பெறுவதில் உள்ள சிரமங்கள் குறித்து ஆலை உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
</p><p>
இதன்படி, மாவட்டச் செயலாளர்கள் ஊடாக சிறு மற்றும் நடுத்தர வர்த்தகர்களுக்கு நெல் கொள்வனவுக்கான கடன் வழங்கும் திட்டம் குறித்து கலந்துரையாடப்பட்டு வருவதாக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8297dbf4-d198-4d85-9f59-5833eafd85c7/26-6a7b888513e41.webp' /></p><p>இந்தத் திட்டத்தின் கீழ் விவசாயிகளிடமிருந்து ஒரு கிலோகிராம் நெல்லை குறைந்தபட்சம் ரூ.120க்கு கொள்வனவு செய்ய வேண்டும். ஒரு விவசாயியிடமிருந்து ஹெக்டயருக்கு அதிகபட்சம் 4,000 கிலோகிராம் நெல் கொள்வனவு செய்ய அனுமதிக்கப்படும்.
</p><p>
கொள்வனவு செய்யப்படும் நெல் மற்றும் விவசாயிகள் தொடர்பான முறையான ஆவணங்களைப் பேணுவதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
</p><p>
அரிசியை விற்பனை செய்த பின்னர் பெற்ற கடனை அரசாங்கத்திடம் மீளச் செலுத்த வேண்டும் எனவும், திட்டத்தை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தும் ஆலை உரிமையாளர்களுக்கு எதிர்வரும் போகங்களிலும் இத்தகைய சலுகைகளை வழங்க அரசாங்கம் எதிர்பார்ப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இந்தத் திட்டம் மூலம் விவசாயிகளுக்கு நியாயமான விலையை உறுதி செய்வதுடன், செயலிழந்துள்ள சிறு மற்றும் நடுத்தர நெல் ஆலைகளை மீண்டும் செயற்படுத்த முடியும் என ஆலை உரிமையாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-11T20:39:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய பயங்கர தாக்குதல்: 12 பேர் வரை உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/russia-attacks-ukraine-overnight-12-man-killed-1786480703"></link>
            <id>https://news.lankasri.com/article/russia-attacks-ukraine-overnight-12-man-killed-1786480703</id>
            <summary type="text">உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய வான்வழித் தாக்குதலில் குறைந்தது 12 பேர் பலியாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல்
நள்ளிரவில் உ...</summary>
            <content type="html"><![CDATA[<p>உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய வான்வழித் தாக்குதலில் குறைந்தது 12 பேர் பலியாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2> உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல்</h2><p>
நள்ளிரவில் உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய வான்வழித் தாக்குதலில் குறைந்தது 12 பேர் வரை உயிரிழந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p> இந்த தாக்குதலில் வட கொரிய ஏவுகணைகளை ரஷ்யா பயன்படுத்தி இருப்பதாக உக்ரைன் குற்றஞ்சாட்டியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/480030ec-00d6-41f4-b182-0a3a496cbff4/26-6a7b8840ab417.webp' /></p><p> மாஸ்கோ மற்றும் வடகொரியா இடையே ராணுவ ஒத்துழைப்பு அதிகரித்து வருவதாகவும், ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கைகளுக்கு ஆயுதங்களையும், வீரர்களையும் வடகொரியா வழங்கி வருவதாக உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி எச்சரிக்கை விடுத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.</p><p></p><h2>உக்ரைனில் ஏற்பட்ட பாதிப்பு</h2><p>ஜபோரிஜியாவின் தென்கிழக்குப் பகுதியில் நடந்த தாக்குதலில் 6 பேர் வரை கொல்லப்பட்டனர். மற்றும் 19 பேர் வரை காயமடைந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2a65ec2c-4aeb-4b63-b5dc-3f240e8e95f7/26-6a7b88415e679.webp' /></p><p> மேலும் டொனெட்ஸ்க் மற்றும் டனிபரோபெட்ரோவ்ஸ்க் ஆகிய பகுதியில் நடந்த தாக்குதலில் 6 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர்.</p><p> தலைநகர் கீவ் மற்றும் அங்குள்ள தொற்று நோய் மருத்துவமனை ஆகியவை மீதும் நேரடி தாக்குதலை ரஷ்யா நடத்தியுள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-11T20:38:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[“4413ஆம் ஆண்டுக்குச் சென்று வந்தேன்” ; டைம் டிராவலர் எனக் கூறும் நபரின் அதிர்ச்சி தகவல்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/about-a-person-who-claims-to-be-a-time-traveler-1786466750"></link>
            <id>https://canadamirror.com/article/about-a-person-who-claims-to-be-a-time-traveler-1786466750</id>
            <summary type="text">“டைம் டிராவல் செய்து கி.பி. 4413ஆம் ஆண்டுக்குச் சென்று திரும்பி வந்தேன்” என்று தன்னைத்தானே கூறிக்கொள்ளும் பிரிட்டனைச் சேர்ந்த லூயிஸ் வாக்கர் என்பவரின்...</summary>
            <content type="html"><![CDATA[<p>“டைம் டிராவல் செய்து கி.பி. 4413ஆம் ஆண்டுக்குச் சென்று திரும்பி வந்தேன்” என்று தன்னைத்தானே கூறிக்கொள்ளும் பிரிட்டனைச் சேர்ந்த லூயிஸ் வாக்கர் என்பவரின் நேர்காணல் ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.</p><p>

செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட அதிநவீன தொழில்நுட்பங்கள் மனிதகுலத்தின் எதிர்காலத்தை எவ்வாறு மாற்றும் என்ற அச்சம் உலகம் முழுவதும் நிலவி வரும் நிலையில், வாக்கர் வெளியிட்டதாகக் கூறப்படும் எதிர்காலம் குறித்த தகவல்கள் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e24b7cf2-86a2-4129-b2e8-416db24c4247/26-6a7b51c04a511.webp' /></p><p>வாக்கரின் கூற்றுப்படி, 1977ஆம் ஆண்டு பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகத்தில் பணியாற்றியபோது, ரகசியமாக உருவாக்கப்பட்ட கால இயந்திரம் ஒன்றைச் சோதனை செய்வதற்காக தன்னைத் தேர்வு செய்ததாகத் தெரிவித்துள்ளார்.
</p><p>
அந்த இயந்திரம் வெற்றிகரமாக செயல்படுவதற்கான வாய்ப்பு 50 சதவீதம் மட்டுமே இருப்பதாக விஞ்ஞானிகள் எச்சரித்த போதிலும், சோதனையில் பங்கேற்க தனக்கு பெரும் தொகை வழங்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
</p><p>
முதலில் தன்னை சுமார் 600 ஆண்டுகள் எதிர்காலத்துக்கு அனுப்ப திட்டமிடப்பட்டிருந்ததாகவும், ஆனால் எதிர்பாராத விதமாக தான் கி.பி. 4413ஆம் ஆண்டில் விழித்தெழுந்ததாகவும் வாக்கர் தெரிவித்துள்ளார்.</p><p>4413ஆம் ஆண்டில் கண்விழித்தபோது, ஆள் அரவமற்ற மருத்துவமனை ஒன்றில் இருந்ததாகக் கூறும் வாக்கர், அங்கிருந்து வெளியே வந்தபோது கண்ட காட்சிகள் தன்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியதாக தெரிவித்துள்ளார்.
</p><p>
தனது தலைக்கு மேலே கார்கள் பறந்து கொண்டிருந்ததாகவும், தெருக்கள் முழுவதும் ரோபோக்கள் காணப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும், மனிதர்களை மிகவும் குறைவாகவே காண முடிந்ததாகவும், பெரும்பாலான இடங்களில் ரோபோக்களே காணப்பட்டதாகவும் தனது நேர்காணலில் தெரிவித்துள்ளார்.</p><p>வாக்கர் கூறியுள்ள மற்றொரு அதிர்ச்சித் தகவலின்படி, 2028ஆம் ஆண்டில் டைம் டிராவல் தொழில்நுட்பம் பொதுமக்களுக்கும் கிடைக்கும் நிலை உருவாகும் என அவர் தெரிவித்துள்ளார்.</p><p>

இதன் மூலம் எதிர்காலத்தில் ஏராளமானோர் காலப்பயணம் மேற்கொள்ளும் சூழல் உருவாகும் என்றும் அவர் கூறியுள்ளார்.

ஆனால், அவரது கூற்றுகளில் மிகவும் அதிர்ச்சியூட்டும் பகுதி மனிதகுலத்தின் எதிர்காலம் குறித்த எச்சரிக்கையாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0fbb226e-3198-4146-9198-8906072faf3d/26-6a7b51c1072cc.webp' /></p><p>தொழில்நுட்ப வளர்ச்சி தொடர்ந்து அதிகரித்து, பல்வேறு தொழில்நுட்பங்கள் ஒன்றிணையும் நிலையில், காலப்போக்கில் மனித இனம் அழியும் அபாயம் இருப்பதாக வாக்கர் எச்சரித்துள்ளார்.
</p><p>
அதன் விளைவாக, எதிர்காலத்தில் மனிதர்களுக்குப் பதிலாக ரோபோக்கள் ஆதிக்கம் செலுத்தும் உலக நாகரிகம் உருவாகக்கூடும் என்றும் அவர் கூறியுள்ளார்.
</p><p>
இந்தக் கூற்று, ஏற்கனவே செயற்கை நுண்ணறிவு மற்றும் ரோபோட்டிக்ஸ் வளர்ச்சி குறித்து கவலை தெரிவித்து வரும் பலரிடையே மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><p>எனினும், வாக்கரின் இந்தக் கூற்றுகளை உறுதிப்படுத்த இதுவரை எந்தவொரு நம்பகமான ஆதாரமும் வெளியாகவில்லை.
</p><p>
குறிப்பாக, 1977ஆம் ஆண்டிலேயே பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகத்தின் ரகசியத் திட்டத்தின் கீழ் கால இயந்திரம் உருவாக்கப்பட்டதாகவும், அதில் தான் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாகவும் அவர் கூறுவது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.</p><p>

மேலும், அவரது நேர்காணலில் முக அடையாளம் மறைக்கப்பட்டிருப்பதும் அவரது கூற்றுகளின் நம்பகத்தன்மை குறித்து கேள்விகளை ஏற்படுத்தியுள்ளது.
</p><p>
டைம் டிராவல் குறித்த கருத்துகள் அறிவியல் மற்றும் புனைகதை உலகில் நீண்டகாலமாக பேசப்பட்டு வந்தாலும், மனிதர்களை கடந்த காலத்திற்கோ எதிர்காலத்திற்கோ அனுப்பி மீண்டும் அழைத்து வரக்கூடிய இயந்திரம் உருவாக்கப்பட்டதாக இதுவரை நிரூபிக்கப்பட்ட அறிவியல் சான்றுகள் இல்லை.
</p><p>
இதனால், லூயிஸ் வாக்கரின் கூற்றுகளை உண்மையாக ஏற்றுக்கொள்வதற்கும், முழுமையாக நிராகரிப்பதற்கும் இடையே சமூக வலைத்தளங்களில் பல்வேறு விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.
</p><p>
எவ்வாறாயினும், கி.பி. 4413ஆம் ஆண்டில் இருந்து திரும்பி வந்ததாகக் கூறும் ஒருவர், மனிதகுலத்தின் எதிர்காலம் குறித்த நம்பிக்கையான செய்தியை விடுத்துச் செல்லாமல், மனிதர்கள் இல்லாத ரோபோக்களின் உலகம் குறித்த எச்சரிக்கையை வெளியிட்டிருப்பது இந்த நேர்காணலை மேலும் பரபரப்பாக்கியுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-11T20:26:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் வேலை தேடுவோருக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்...!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/canada-youth-unemployment-govt-announcement-1786474907"></link>
            <id>https://ibctamil.com/article/canada-youth-unemployment-govt-announcement-1786474907</id>
            <summary type="text">கனடாவில் இளைஞர்களிடையேயான வேலைவாய்ப்பின்மை விகிதம் தொடர்ந்து மூன்றாவது மாதமாக குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனடிய புள்ளிவிபரவியல் திணைக்களம...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவில் இளைஞர்களிடையேயான வேலைவாய்ப்பின்மை விகிதம் தொடர்ந்து மூன்றாவது மாதமாக குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
கனடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் இதனை தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இதனடிப்படையில் 15 முதல் 24 வயதுக்குட்பட்ட இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பின்மை விகிதம், கடந்த 2025 ஜூலையில் 14.6 சதவீதமாக இருந்த நிலையில் 2026 ஜூலை மாதத்தில் 12.6 சதவீதமாகக் குறைந்துள்ளது.</p><p>
</p><p></p><h2>பொருளாதார பயம்</h2><p>அதேபோல கோடைகாலப் பணிகளில் ஈடுபடும் மாணவர்களின் வேலைவாய்ப்பின்மை விகிதமும் 17.5 சதவீதத்திலிருந்து 15.1 சதவீதமாகச் சரிந்துள்ளது.</p><p>

இந்தநிலையில் அமெரிக்காவுடனான வர்த்தகப் போர் மற்றும் வரிகள் குறித்த ஆரம்பக்கட்ட பொருளாதார பயம் தணிந்துள்ளதால் வர்த்தக நிறுவனங்கள் மீண்டும் நம்பிக்கையுடன் இளைஞர்களைப் பணியில் அமர்த்தத் தொடங்கியுள்ளன.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d2d769ed-092e-4e53-be41-b4a72bc4c06d/26-6a7b824f982ff.webp' /></p><p>அத்தோடு கனடிய மத்திய வங்கி தனது கொள்கை வட்டி விகிதத்தை 2.25 சதவீதமாகக் குறைத்ததைத் தொடர்ந்து நாட்டின் பொருளாதாரத்தில் ஸ்திரத்தன்மை ஏற்பட்டு நுகர்வோர் செலவழிப்பது அதிகரித்துள்ளது.
</p><p>
மேலும் சுற்றுலாத் துறை, உணவகங்கள், சில்லறை வர்த்தகம் மற்றும் பொழுதுபோக்கு மையங்களில் கோடைகால வேலைவாய்ப்புகள் மீண்டும் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-11T20:17:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் வட்டி விகிதம் குறித்து மத்திய வங்கி ஆளுநர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/central-bank-governor-announcement-interest-rates-1786479305"></link>
            <id>https://jvpnews.com/article/central-bank-governor-announcement-interest-rates-1786479305</id>
            <summary type="text">மே மாதத்தில் மேற்கொண்ட பெரிய மற்றும் எதிர்பாராத வட்டி விகித அதிகரிப்பிற்குப் பின்னர், இந்த ஆண்டில் மேலும் வட்டி விகிதங்களை உயர்த்த வேண்டிய அவசியமில்லை...</summary>
            <content type="html"><![CDATA[<p>மே மாதத்தில் மேற்கொண்ட பெரிய மற்றும் எதிர்பாராத வட்டி விகித அதிகரிப்பிற்குப் பின்னர், இந்த ஆண்டில் மேலும் வட்டி விகிதங்களை உயர்த்த வேண்டிய அவசியமில்லை என இலங்கை மத்திய வங்கி கருதுவதாக மத்திய வங்கி ஆளுநர் பி. நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.</p><p> </p><p></p><p>பணவீக்கம் தற்போதைய மட்டங்களிலேயே உச்சத்தை எட்டி, அடுத்த ஆண்டில் 5 சதவீத இலக்கை நோக்கி மீண்டும் குறையும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். </p><p>

ஈரான் போரினால் தூண்டப்பட்ட பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்காக, மூன்று ஆண்டுகளுக்கும் மேலான காலத்தில் தனது முதல் அதிகரிப்பாக கடந்த மே மாதத்தில் 100 அடிப்படைப் புள்ளிகள் வட்டி உயர்வைக் கொண்டுவந்து மத்திய வங்கி சந்தைகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6368e111-1d8b-4f74-81e0-96bd1e5e4354/26-6a7b82cb879e9.webp' /></p><p>இந்த நடவடிக்கை சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவுடன் இடம்பெறும் மீட்சியில் அதன் அறிவுறுத்தலில் தெரிவு செய்யப்பட்ட ஆபத்தான வழிமுறையாக இருக்கலாம் என ஆய்வாளர்கள் தெரிவித்தனர். </p><p>

பணவீக்கம் 7 சதவீதமாக உயரும் என மத்திய வங்கி எதிர்பார்த்ததால், மே மாத வட்டி உயர்வு ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எடுக்கப்பட்டது என்றும், தற்போதைய பணவீக்கம் எதிர்பார்க்கப்பட்ட பாதையிலேயே உள்ளதாகவும் இலங்கை மத்திய வங்கி ஆளுநர் கூறினார். </p><p>

நாங்கள் எதிர்பார்த்ததிலிருந்து ஏதேனும் விலகல்கள் இருக்கிறதா என்பதை நாங்கள் கண்காணிக்க வேண்டும் என்று அவர் கூறினார். </p><p>

எதிர்காலத்தில் நிதியியல் கொள்கையை இறுக்குவது அல்லது தளர்த்துவது பற்றிய எந்தவொரு முடிவும், ஆரம்பத்தில் எதிர்பார்க்கப்பட்டதை விட வேறுபட்ட பாதை உருவாகிறதா என்பதன் அடிப்படையிலேயே அமையும். 

இதுவரை அப்படி எதுவும் நாங்கள் காணவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார். </p><p>

உயர்ந்து வரும் எரிசக்தி விலைகள் காரணமாக, இலங்கையின் முக்கிய பணவீக்கச் சுட்டெண் ஜூலை மாதத்தில் 7.3 சதவீதமாகப் பதிவாகியதுடன், இது கடந்த மூன்று ஆண்டுகளில் பதிவான மிகப்பெரிய அதிகரிப்பாகும். 

நவம்பர் மாதத்தில் பணவீக்க விகிதம் 8 சதவீதமாக உயரும் என சில ஆய்வாளர்கள் எதிர்பார்க்கின்றனர். </p><p>

மே மாத வட்டி அதிகரிப்பின் முழுமையான தாக்கம் பொருளாதாரத்தில் வெளிப்பட 12 முதல் 18 மாதங்கள் வரை ஆகும் என்றும், அடுத்த ஆண்டின் முதலரை பகுதியில் பணவீக்கம் மத்திய வங்கியின் 5 சதவீத இலக்கிற்கு மீண்டும் திரும்பும் வாய்ப்புள்ளதாகவும் ஆளுநர் வீரசிங்க கூறினார்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0b1a7aeb-0385-4e8f-9e88-b398396eebd3/26-6a7b82ccdf2af.webp' /></p><p>பொருளாதார வளர்ச்சியைப் பாதிக்காமல் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த விரும்பும் ஆளுநர் வீரசிங்கவின் இந்த சமீபத்திய கருத்துக்கள், மத்திய வங்கி அதன் நிதியியல் கொள்கையை குறைந்தது ஆண்டின் எஞ்சிய பகுதி வரை 8.75 சதவீதத்திலேயே நிலையாக வைத்திருக்கத் தயாராக இருப்பதை உணர்த்துகின்றன. </p><p>

மத்திய வங்கியின் அடுத்த வட்டி விகித அறிவிப்பு செப்டம்பர் 30 ஆம் திகதி வெளியாகும் என தெரிவிக்கப்படுகின்றது. </p><p>

பெப்ரவரி 28 அன்று தொடங்கிய ஈரான் மீதான அமெரிக்க - இஸ்ரேலியப் போர் காரணமாக முக்கிய எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு விநியோக வழிகள் தடைப்பட்டு, உலகளாவிய கச்சா எண்ணெய் விலைகள் உயர்ந்ததால் இலங்கை பாதிக்கப்பட்டுள்ளது. </p><p>

அரசாங்கத்தின் கணக்குகளில் ஏற்படும் பாதிப்பைக் குறைப்பதற்காக, அரசாங்கம் எரிபொருள் விலைகளை 35 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்த்தியுள்ளதுடன், ரேஷன் முறையை அறிமுகப்படுத்தி, புதன்கிழமைகளைப் பொது விடுமுறை நாளாகவும் அறிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c794f9ae-7b38-46c2-86ac-b83ca0f710be/26-6a7b82cc3a40b.webp' /></p>]]></content>
            <updated>2026-08-11T20:15:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளம் உயர்வு தொடர்பில் நளிந்த ஜயதிஸ்ஸ விளக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/nalinda-explains-regard-salary-increase-parliament-1786478039"></link>
            <id>https://jvpnews.com/article/nalinda-explains-regard-salary-increase-parliament-1786478039</id>
            <summary type="text">நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளத்தை எந்தவொரு வகையிலும் உயர்த்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை என்று அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதி...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளத்தை எந்தவொரு வகையிலும் உயர்த்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை என்று அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.</p><p> </p><p></p><p>இன்று (11) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். </p><p>நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அரச அதிகாரிகளுக்கும் அரசாங்கத்தினால் வழங்கப்படும் எரிபொருள் கொடுப்பனவை சுட்டிக்காட்டி, சில தரப்பினர் நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளம் உயர்த்தப்பட்டுள்ளதாகக் கூறி வருவதாக அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9effb580-4cac-442e-9f79-cb71bf4ea574/26-6a7b7dd903e51.webp' /></p><p>இருப்பினும், நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு எந்தவொரு வகையிலும் அரசாங்கம் சம்பள உயர்வு வழங்க நடவடிக்கை எடுக்கவில்லை என்று இன்றைய அமைச்சரவை சந்திப்பில் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.</p><p> நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளம் உயர்த்தப்படவில்லை. 50,000, 60,000, 100,000 என எந்தவொரு தொகையாலும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளம் உயர்த்தப்படவில்லை. </p><p>நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஏனைய அரச அதிகாரிகளுக்கும் வழங்கப்படும் குறித்தளவிலான எரிபொருள் அளவு உள்ளது. </p><p>

அந்த லீற்றர் அளவுக்கு அமைவாக அது ஒரு படியாகச் சேர்க்கப்படுகிறது. </p><p>இது பொதுவாக அந்த நேரத்தில் நிலவும் எரிபொருள் விலைக்கு ஏற்பவே கணக்கிடப்படுகிறது. </p><p>

ஆனால் 2026 மார்ச் மாதத்திற்குப் பிறகு எரிபொருள் விலை அதிகரிப்புடன் இந்த அளவைக் கணக்கிட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அரசு அதிகாரிகளுக்கும் வழங்கியிருந்தால் அது ஒரு பாரிய அதிகரிப்பாக இருக்கும்.</p><p> </p><p></p><p>எனவே 2026 மார்ச் 1 ஆம் திகதி நிலவிய எரிபொருள் விலையை அடிப்படையாகக் கொண்டே கணக்கீடுகள் செய்யப்பட்டன. </p><p>மார்ச், ஏப்ரல், மே, ஜூன் வரை நிலவிய எரிபொருள் விலைக்கு ஏற்ப நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அரச அதிகாரிகளுக்கும் கணக்கிட்டிருந்தால் இதை விட அதிக தொகை வழங்க வேண்டியிருக்கும். </p><p>

ஆனால் நாங்கள் மார்ச் 1 ஆம் திகதி நிலவிய விலையின் அடிப்படையில் கணக்கிட்டோம், அந்த சுற்றறிக்கையை நாங்கள் ஜூலை 1 ஆம் திகதியுடன் முடிவுக்குக் கொண்டுவந்தோம். 

ஜூலை 1 ஆம் திகதி முதல் கணக்கிடப்படுவது, அந்த நாளில் சந்தையில் நிலவும் விலைக்கு ஏற்பவே ஆகும்.</p><p> குறைந்தால் குறையும், அதிகரித்தால் அதிகரிக்கும். 

அதற்கமைய எரிபொருள் விலை அதிகரித்ததால் அந்த மேலதிக தொகை கணக்கிட்டுக் காட்டப்பட்டுள்ளது என்றார்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-11T19:54:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானியாவில் கோரமான சாலை விபத்து: சிறுமி பரிதாபமாக பலி: மற்றொருவர் காயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/collision-on-essex-a12-claims-young-1-dead-1786477924"></link>
            <id>https://news.lankasri.com/article/collision-on-essex-a12-claims-young-1-dead-1786477924</id>
            <summary type="text">பிரித்தானியாவின் எசெக்ஸ் நெடுஞ்சாலையில் நடந்த சாலை விபத்தில் சிறுமி ஒருவர் பலியாகியுள்ளார்.பிரித்தானியாவில் சாலை விபத்துஇங்கிலாந்தின் எசெக்ஸ் மாகாணத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரித்தானியாவின் எசெக்ஸ் நெடுஞ்சாலையில் நடந்த சாலை விபத்தில் சிறுமி ஒருவர் பலியாகியுள்ளார்.</p><h2>பிரித்தானியாவில் சாலை விபத்து</h2><p>இங்கிலாந்தின் எசெக்ஸ் மாகாணத்தில் உள்ள வடக்கு நோக்கிச் செல்லும் கொல்செஸ்டர் A12 சாலையில் நேற்று நடந்த கோர விபத்தில் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.</p><p> கார் மற்றும் கனரக லொறி இடையே நடந்த விபத்தில் மற்றொரு குழந்தை ஒன்றும் காயமடைந்து இருப்பதால் அப்பகுதி மக்கள் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><p> விபத்தை தொடர்ந்து அவசரகால குழுவினரும், விமான மருத்துவக் குழுவினரும் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.</p><p> சம்பவ இடத்தில் தீவிர மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், சிறுமி ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/27018d39-ed06-4b68-a582-daa4d51f3f40/26-6a7b7d661f63b.webp' /></p><p> காலில் ஏற்பட்ட காயம் காரணமாக மற்றொரு சிறுமி சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.</p><h2>காவல்துறை விசாரணை</h2><p>இந்த விபத்து தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்று எசெக்ஸ் காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது.</p><p> அதே நேரத்தில் இந்த விபத்து தொடர்பான டேஷ்காம் காட்சிகள் யாரேனும் வைத்திருந்தால் உடனடியாக காவல்துறையினருக்கு வழங்குமாறு பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-11T19:52:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் 33 வயது இளைஞன் உயிரிழப்பு ; உடற்கூற்றில் வெளியான அதிர்ச்சி தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/33-year-old-youth-dies-in-jaffna-revealed-anatomy-1786476639"></link>
            <id>https://jvpnews.com/article/33-year-old-youth-dies-in-jaffna-revealed-anatomy-1786476639</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் – கோப்பாய் தெற்கு பகுதியில் அதிகளவு போதைப்பொருள் பாவித்ததாகக் கூறப்படும் 33 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கோப்பாய் தெற்கு பகுதிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் – கோப்பாய் தெற்கு பகுதியில் அதிகளவு போதைப்பொருள் பாவித்ததாகக் கூறப்படும் 33 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கோப்பாய் தெற்கு பகுதியைச் சேர்ந்த கணேசலிங்கம் கஷ்மன் (வயது 33) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.</p><p>
</p><p></p><p>சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குறித்த இளைஞர் நேற்று (10) இரவு கோப்பாய் தெற்கு பகுதியில் உள்ள வாழைத்தோட்டம் ஒன்றுக்குள் மயக்கமடைந்த நிலையில் கிடந்துள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c77fdd4b-4259-4161-90a8-fcc02a58411a/26-6a7b7861594b1.webp' /></p><p>இதனைக் கண்ட அவரது நண்பர்கள் அவரை மீட்டு வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர். </p><p>எனினும், வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டபோது அவர் ஏற்கனவே உயிரிழந்திருந்ததாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
</p><p>
இதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட உடற்கூற்று பரிசோதனைகளின் அடிப்படையில், அதிகளவு போதைப்பொருள் பாவனை காரணமாக மரணம் ஏற்பட்டிருக்கலாம் என தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
சடலம் தொடர்பான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ. ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.

சாட்சியங்களை கோப்பாய் காவல்துறையினர் பதிவு செய்து, சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-11T19:30:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதிகாரிகளின் இடையூறுக்கு எதிராக யாழ். மாநகர சபை உறுப்பினர்கள் போராட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/jaffna-municipal-council-members-stage-boycott-1786474583"></link>
            <id>https://tamilwin.com/article/jaffna-municipal-council-members-stage-boycott-1786474583</id>
            <summary type="text">யாழ். மாநகர சபையின் மக்கள் பிரதிநிதிகளின் செயற்பாடுகளுக்கு மாநகர ஆணையாளர்
உள்ளிட்ட அரச அதிகாரிகள் தொடர்ச்சியாகப் பெரும் இடையூறுகளை ஏற்படுத்தி
வருவதா...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ். மாநகர சபையின் மக்கள் பிரதிநிதிகளின் செயற்பாடுகளுக்கு மாநகர ஆணையாளர்
உள்ளிட்ட அரச அதிகாரிகள் தொடர்ச்சியாகப் பெரும் இடையூறுகளை ஏற்படுத்தி
வருவதாகக் குற்றம் சாட்டி, மாநகர சபை உறுப்பினர்கள் இன்றையதினம் (11) அடையாளப்
பகிஷ்கரிப்புப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

​</p><p>45 உறுப்பினர்களைக் கொண்ட யாழ். மாநகர சபையைப் பிரதிநிதித்துவப்படுத்தும்
அனைத்துக் கட்சிகளின் கூட்டுப் பங்களிப்புடன் குறித்த அடையாளப் போராட்டம்
முன்னெடுக்கப்பட்டது.

​</p><h2>பகிஷ்கரிப்புப் போராட்டம்&nbsp;</h2><p>இந்தப் போராட்டத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சி, தேசிய மக்கள் சக்தி, ஈழ
மக்கள் ஜனநாயகக் கட்சி, தமிழ் தேசிய முன்னணி, ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி,
ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய கட்சிகளின் மக்கள்
பிரதிநிதிகள் கலந்துகொண்டு தமது எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.

​</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dbd56159-851f-4ac6-9977-cafe41ae20bd/26-6a7b7241dc92c.webp' /></p><p>இதன்போது அதிகாரிகளின் இந்த முறையற்ற செயற்பாடுகளினால், மக்களால் தெரிவு
செய்யப்பட்ட பிரதிநிதிகளால் மக்களின் அடிப்படை நலன்களை உரிய முறையில்
நிறைவேற்றவும், மக்களை சென்றடையவும் முடியாத இக்கட்டான சூழ்நிலை
ஏற்பட்டுள்ளதாக சபையின் உறுப்பினர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

​</p><p>மாநகர சபையின் ஊடாக மக்களுக்குச் சென்று சேர வேண்டிய அத்தியாவசிய சேவைகள்
மற்றும் அபிவிருத்திப் பணிகள் என்பனவற்றில் அதிகாரிகள் வேண்டுமென்றே தாமதங்கள்
ஏற்படுத்தி வருவதாகவும், மக்கள் பிரதிநிதிகளின் அதிகார வரம்புகளுக்குள்
தலையிட்டு முடக்க முற்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.</p><h2>தன்னிச்சையான செயற்பாடுகள்</h2><p>
</p><p>முன்னதாக, இன்றைய சபை அமர்வின்போது குறித்த அதிகாரிகளின் திட்டமிட்ட
இடையூறுகள் தொடர்பில் மக்கள் பிரதிநிதிகள் தீவிரமாக விவாதித்திருந்தனர்.

​</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c5c38b8b-f061-4740-90d8-ebc549f87f6c/26-6a7b7242b629f.webp' /></p><p>இதன்போது, அதிகாரிகளின் இத்தகைய தன்னிச்சையான செயற்பாடுகள் சபையின்
நற்பெயருக்கும் மக்களின் உரிமைகளுக்கும் எதிரானது என விவாதிக்கப்பட்டு, அது
தொடர்பான தீர்மானம் சபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டிருந்தது.

​</p><p>குறித்த தீர்மானத்தை அடுத்து, அதிகாரிகளின் போக்கைக் கண்டிக்கும் வகையிலும்,
அரசாங்கத்தின் கவனத்திற்கு இந்த பிரச்சினையை கொண்டு செல்லும் நோக்க்குடனேயே
இன்றைய அடையாளப் பகிஷ்கரிப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
</p><p>இதே நேரம்
குறித்த விடயம் தொடர்பில் ஊடகங்கள் கருத்துக் கேட்டபோது,
ஊடகங்களை சந்திக்கவோ கருத்து கூறவோ தனக்கு அவசியம் இல்லை என மாநகரின் ஆணையாளர்
தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-08-11T19:04:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[95 பேருடன் கவிழ்ந்த பயணிகள் படகு: கரீபா ஏரியில் மீட்பு பணிகள் தீவிரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/vessel-carrying-95-capsizes-in-lake-kariba-1786474142"></link>
            <id>https://news.lankasri.com/article/vessel-carrying-95-capsizes-in-lake-kariba-1786474142</id>
            <summary type="text">ஜிம்பாப்வே நாட்டில் 95 பேருடன் சென்ற படகு கவிழ்ந்த நிலையில் மீட்பு பணிகள் தீவிரமடைந்துள்ளது. 95 பேருடன் கவிழ்ந்த படகு
ஜிம்பாப்வே நாட்டில் உள்ள கரீபா ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜிம்பாப்வே நாட்டில் 95 பேருடன் சென்ற படகு கவிழ்ந்த நிலையில் மீட்பு பணிகள் தீவிரமடைந்துள்ளது.</p><h2> 95 பேருடன் கவிழ்ந்த படகு</h2><p>
ஜிம்பாப்வே நாட்டில் உள்ள கரீபா ஏரியில் 95 பேருடன் சென்ற படகு கவிழ்ந்ததை அடுத்து மீட்பு பணிகள் தீவிரமடைந்துள்ளது.</p><p> 90 பயணிகள் மற்றும் 5 பணியாளர்கள் பயணம் செய்த இந்த படகு மாவட்ட மேம்பாட்டு நிதியத்திற்கு சொந்தமானது என தெரியவந்துள்ளது.</p><p> ஜாம்பியா மற்றும் ஜிம்பாப்வே நாடுகளுக்கு இடையே இந்த கரீபா ஏரி இயற்கையான எல்லையாக விளங்குகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9a639961-2f01-4192-b45e-91d2788fc9d1/26-6a7b6ea079801.webp' /></p><p></p><p> மீட்பு பணிகளில் ஜிம்பாப்வே தேசிய காவல்துறை தீவிரமாக செயல்பட்டு வரும் நிலையில், இதுவரை விபத்தில் காயமடைந்தவர்கள் மற்றும் உயிரிழந்தவர்கள் குறித்து எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளியிடப்படவில்லை.</p><p> மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதால், இது குறித்து முழுமையான தகவல் விரைவில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p>&nbsp;<br></p>]]></content>
            <updated>2026-08-11T18:50:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[சீனாவில் விண்ணில் ஏவப்பட்ட 85 வினாடிகளில் வெடித்து சிதறிய விண்கலம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/china-s-long-march-7a-rocket-explodes-1786472753"></link>
            <id>https://ibctamil.com/article/china-s-long-march-7a-rocket-explodes-1786472753</id>
            <summary type="text">சீனாவில் விண்ணில் செலுத்தப்பட்ட விண்கலம் ஒன்று ஏவப்பட்ட 85 வினாடிகளிலேயே வெடித்துச் சிதறியுள்ளது.

சீனாவின் ஹைனான் மாகாணத்தில் உள்ள வென்சாங் (Wencha...</summary>
            <content type="html"><![CDATA[<p>சீனாவில் விண்ணில் செலுத்தப்பட்ட விண்கலம் ஒன்று ஏவப்பட்ட 85 வினாடிகளிலேயே வெடித்துச் சிதறியுள்ளது.
</p><p>
சீனாவின் ஹைனான் மாகாணத்தில் உள்ள வென்சாங் (Wenchang) ஏவுதளத்திலிருந்து ஏவப்பட்ட லாங் மார்ச் 7A (Long March 7A) விண்கலமே இவ்வாறு வெடிப்புக்குள்ளாகியுள்ளது.
</p><p>
இந்த விண்கலம் மூலம் புவி ஒத்திசைவு சுற்றுப்பாதைக்குக் கொண்டு செல்ல திட்டமிடப்பட்டிருந்த சோங்ஜிங்-4பி (Zhongxing-4B / ChinaSat-4B) என்ற தொலைத்தொடர்பு செயற்கைக்கோள் முழுமையாக அழிந்துள்ளது.</p><p></p><h2>தொழில்நுட்பக் கோளாறு</h2><p>

உள்ளூர் நேரப்படி இரவு 8:02 மணிக்கு ஏவப்பட்ட இந்த விண்கலம், முதல் நிலை பிரிப்புக்கு (First-stage separation) முன்னரே வானில் ஒரு பெரிய தீப்பிழம்பாக வெடித்துச் சிதறியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/92d6adbf-044f-4260-ab50-e270b4bd3d9d/26-6a7b6e127e3a9.webp' /></p><p>

விண்கலம் பயணத்தின் போது அசாதாரண தொழில்நுட்பக் கோளாறு (flight anomaly) ஏற்பட்டதால் திட்டம் தோல்வியடைந்ததைச் சீனா உறுதி செய்துள்ளது.</p><p> 

விபத்துக்கான சரியான காரணம் குறித்து தீவிர விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p></p><h2>விண்வெளிப் பயணங்கள்&nbsp;</h2><p>லாங் மார்ச் 7A விண்கலம் கடந்த 2020 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டபோது அதன் முதல் பயணமும் தோல்வியில் முடிந்தது.</p><p><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr">China&#39;s Long March rocket launching an important military/civilian dual use satellite exploded during its launch from Hainan as curious kids were watching. A bad day for their scientists. Better luck next time. <a href="https://t.co/RTVvcfpzGH">pic.twitter.com/RTVvcfpzGH</a></p>&mdash; Aravind (@aravind) <a href="https://x.com/aravind/status/2086858619967156451?ref_src=twsrc%5Etfw">August 10, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p> 

அதன் பின்னர் தொடர்ச்சியாக வெற்றிகரமாக இயக்கப்பட்டு வந்த நிலையில், 2020-க்குப் பிறகு இந்த விண்கலம் சந்திக்கும் இரண்டாவது பெரிய தோல்வி இதுவாகும்.
</p><p>
சீன விண்வெளி நிலையத்திற்கு (Tiangong) சரக்குகளைக் கொண்டு செல்லும் லாங் மார்ச் விண்கலத்தின் தொழில்நுட்பங்களை இந்த விண்கலமும் பகிர்ந்து கொள்வதால் விபத்தின் காரணத்தைக் கண்டறியும் வரை சீனாவின் பிற விண்வெளிப் பயணங்கள் தாமதமாக வாய்ப்புள்ளதாகக் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-11T18:49:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[தவறான முடிவெடுத்து உயிரிழப்பதை தடுக்க துரித நடவடிக்கை: ஆளுநர் உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/immediate-action-to-prevent-suicides-governor-1786472539"></link>
            <id>https://tamilwin.com/article/immediate-action-to-prevent-suicides-governor-1786472539</id>
            <summary type="text">யாழ்ப்பாண மாவட்டத்தில் அண்மைக் காலமாக தவறான முடிவெடுத்து உயிரிழக்கும்
சம்பவங்கள் கவலைக்கிடமாக அதிகரித்து வருகின்ற நிலையில், அவற்றைத் தடுப்பதற்கான
து...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாண மாவட்டத்தில் அண்மைக் காலமாக தவறான முடிவெடுத்து உயிரிழக்கும்
சம்பவங்கள் கவலைக்கிடமாக அதிகரித்து வருகின்ற நிலையில், அவற்றைத் தடுப்பதற்கான
துரித நடவடிக்கைகளை உடனடியாக ஆரம்பிக்குமாறு&nbsp;வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் பணிப்புரை வழங்கினார்.</p><p>அத்துடன், அதற்கான ஒருங்கிணைந்த
கட்டமைப்புகளை மீளச் செயற்பாட்டு நிலைக்குக் கொண்டுவர விரைவான நடவடிக்கைகளை
மேற்கொள்ளுமாறும் ஆளுநர் குறிப்பிட்டார்.</p><p>வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இன்று (11.8.2026) மாலை நடைபெற்ற விசேட
உயர்மட்ட கலந்துரையாடலின் போதே ஆளுநர் இந்தப் பணிப்புரையை வழங்கினார்.</p><p></p><h2>உயிரிழப்புகள்</h2><p>
</p><p>
கலந்துரையாடலில், யாழ்ப்பாண மாவட்டத்தில் கடந்த மூன்று மாதங்களில் 80
உயிரிழப்புகள் பதிவாகியுள்ளமை தொடர்பில் ஆழ்ந்த கவலை வெளியிடப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3f0622a4-b266-45c9-8dc0-41c4391b2dc0/26-6a7b6b84a43c8.webp' /></p><p> தேசிய
மட்டத்தில் ஒரு இலட்சம் பேருக்கு 15 பேர் என்ற விகிதத்துடன் ஒப்பிடுகையில்,
யாழ்ப்பாண மாவட்டத்தில் ஒரு இலட்சம் பேருக்கு சுமார் 30 பேர் என்ற அளவில்
இவ்வாறான உயிரிழப்புகள் பதிவாகி வருவதாக மருத்துவ நிபுணர்கள்
சுட்டிக்காட்டினர்.</p><p> குறிப்பாக இளைஞர்கள் மற்றும் பெண்கள் மத்தியில் இந்தப்
போக்கு அதிகரித்து வருவதும் கவலைக்குரிய விடயமாகக் குறிப்பிடப்பட்டது.</p><p></p><h2>சுகாதாரத் துறை</h2><p>
</p><p>
மது பாவனைக்கு அடிமையாதல், குடும்ப வன்முறை, குடும்ப உறுப்பினர்களுக்கிடையிலான
தொடர்பாடல் குறைவு, பெற்றோர் – பிள்ளைகள் மற்றும் ஆசிரியர்கள் – மாணவர்கள்
இடையிலான நெருக்கம் குறைவடைதல், தனிமை, சமூக மற்றும் உளவியல் அழுத்தங்கள்
உள்ளிட்ட பல்வேறு காரணிகள் இந்நிலைக்கு செல்வாக்குச் செலுத்தி வருவதாக
மருத்துவ நிபுணர்கள் கலந்துரையாடலில் எடுத்துரைத்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/68da1147-614e-4a67-b343-e571c4337b8a/26-6a7b6ccfa117a.webp' /></p><p> </p><p>இந்தச் சவாலை
எதிர்கொள்வதற்கு சுகாதாரத் துறையின் முயற்சிகள் மட்டும் போதுமானதல்ல்
சமூகத்தின் அனைத்து தரப்பினரின் பங்களிப்பும் அவசியம் என்றும்
வலியுறுத்தப்பட்டது.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-11T18:41:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[மொஜ்தாபா கமேனியின் உடல்நிலை...! ஈரான் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/mojtaba-khamenei-in-good-health-pezeshkian-1786467806"></link>
            <id>https://ibctamil.com/article/mojtaba-khamenei-in-good-health-pezeshkian-1786467806</id>
            <summary type="text">ஈரானின் உச்சத் தலைவர் மொஜ்தாபா கமேனியின் உடல்நிலை குறித்து பரவி வரும் வதந்திகளை ஈரான் மறுத்துள்ளது.

அந்நாட்டு ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் (Masoud P...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானின் உச்சத் தலைவர் மொஜ்தாபா கமேனியின் உடல்நிலை குறித்து பரவி வரும் வதந்திகளை ஈரான் மறுத்துள்ளது.
</p><p>
அந்நாட்டு ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் (Masoud Pezeshkian) இது குறித்து கருத்து வெளியிட்டுள்ளார்.
</p><p>
இந்தநிலையில் மொஜ்தாபா கமேனி, முழுமையான மற்றும் ஆரோக்கியமான உடல் நலத்துடன் இருப்பதாக மசூத் பெசெஷ்கியான் தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி</h2><p>

மொஜ்தாபா காமேனியுடன் நடைபெற்ற 7 முதல் 8 மணி நேர நீண்ட ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு அவர் இதனை தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1dd1f1b6-f9aa-4756-9366-6b78f82a790e/26-6a7b62598dfe6.webp' /></p><p>மேலும் தெரிவித்த அவர், தொடர்ந்து பல மணிநேரம் அமர்ந்து விரிவாக ஆலோசிக்க முடிகிற ஒருவருக்கு எவ்வித உடல்நலக் குறைபாடும் இருக்க முடியாது என கூறி இஸ்ரேலிய ஊடகங்களில் வெளியான வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.</p><p></p><h2>முப்படைகளின் தலைமை</h2><p>


ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான போர் பதற்றம் நீடித்து வரும் சூழலில், ஈரானின் முப்படைகளின் தலைமைத் தளபதிகள், புரட்சிகர காவல் படை (IRGC) மற்றும் தேசிய பாதுகாப்புக் குழுவில் (SNSC) முக்கிய மூத்த தளபதிகள் புதிதாக நியமிக்கப்பட்டுப் பாதுகாப்புத் துறை முழுமையாக மறுசீரமைக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/52fce6c5-6a37-486c-9a4c-2f2d47dc97bc/26-6a7b625a4223e.webp' /></p><p>
</p><p>போரினால் ஏற்பட்ட சேதங்களுக்கு இரு நாடுகளும் பரஸ்பரம் இழப்பீடு கோரி வருகின்றன. 

அமெரிக்கத் தாக்குதல்களுக்கு இழப்பீடு வேண்டும் என ஈரான் கோரிய நிலையில், கடந்த காலப் பிராந்திய மோதல்களின் சேதங்களுக்கு ஈரானிடமிருந்து இழப்பீடு பெறப்படும் என வாஷிங்டன் தரப்பில் அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது.</p><p>
இந்தநிலையில் உள்நாட்டுப் பொருளாதாரம், பாதுகாப்பு நிலவரங்கள் மற்றும் அமெரிக்காவுடனான மோதலில் அடுத்தகட்ட ராணுவ உத்திகள் குறித்து உச்சத் தலைவருடன் விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளதாக ஈரானின் ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-11T18:36:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[வடகொரிய ஏவுகணைகளால் அதிரும் உக்ரைன்...! ரஷ்யா மீது பகிரங்க குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/zelenskyy-russia-uses-north-korea-missiles-1786464625"></link>
            <id>https://ibctamil.com/article/zelenskyy-russia-uses-north-korea-missiles-1786464625</id>
            <summary type="text">ரஷ்யா தனது போர்த் தேவைகளுக்காக வடகொரியாவிடமிருந்து கூடுதல் பாலிஸ்டிக் ஏவுகணைகளையும் படைகளையும் பெற்று உக்ரைன் மீது தீவிரத் தாக்குதல்களை நடத்தி வருவதாக...</summary>
            <content type="html"><![CDATA[<p>ரஷ்யா தனது போர்த் தேவைகளுக்காக வடகொரியாவிடமிருந்து கூடுதல் பாலிஸ்டிக் ஏவுகணைகளையும் படைகளையும் பெற்று உக்ரைன் மீது தீவிரத் தாக்குதல்களை நடத்தி வருவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
</p><p>
இந்த குற்றச்சாட்டை உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி (Volodymyr Zelenskyy) முன்வைத்துள்ளார்.</p><p>

உக்ரைனின் தென்கிழக்கு நகரான சபோரிஜியா (Zaporizhzhia) மற்றும் பிற பகுதிகள் மீது ரஷ்யா நடத்திய ஏவுகணை, ட்ரோன் மற்றும் வான்வழித் தாக்குதல்களில் பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர்.</p><p></p><h2>பாலிஸ்டிக் ஏவுகணை</h2><p> 

இதில் வடகொரியா வழங்கிய பாலிஸ்டிக் ஏவுகணைகளும் பயன்படுத்தப்பட்டுள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7ebe8fc3-71d5-4cb1-a300-0e4d513461c6/26-6a7b53e4986b7.webp' /></p><p>இந்தநிலையில் ரஷ்யா தனது நிலப்பரப்பில் மேலும் 30,000 முதல் 50,000 வரையிலான வடகொரிய துருப்புக்களை நிலைநிறுத்தத் திட்டமிட்டுள்ளதாகவும், பியாங்யாங்கிலிருந்து புதிய தொகுதி பாலிஸ்டிக் ஏவுகணைகளை ரஷ்யா பெற்றுள்ளதாகவும் ஜெலென்ஸ்கி குறிப்பிட்டுள்ளார்.</p><p>
</p><p></p><h2>பலவீனமான நிலை</h2><p>ரஷ்ய வரலாற்றிலேயே முதன்முறையாக வடகொரியாவின் ராணுவ மற்றும் தளவாட உதவிகள் இன்றி அவர்களால் போரைத் தொடர முடியாத பலவீனமான நிலைக்கு மாஸ்கோ தள்ளப்பட்டுள்ளதாக ஜெலென்ஸ்கி விமர்சித்துள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/75ef8df7-dfa3-4091-9d38-0fbc13c37818/26-6a7b53e3b461e.webp' /></p><p>உக்ரைன் போர்க்களத்தில் வடகொரிய ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டு, அவற்றின் குறைபாடுகள் சரிசெய்யப்பட்டு மேம்படுத்தப்படுவது எதிர்காலத்தில் ஜப்பான், தென் கொரியா மற்றும் பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட ஆசிய-பசிபிக் நாடுகளுக்குப் பெரும் அச்சுறுத்தலாக மாறும் என்று ஜெலென்ஸ்கி எச்சரித்துள்ளார்.</p><p>

ரஷ்யாவின் பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதல்களை முறியடிக்க உக்ரைனுக்குத் தேவையான பேட்ரியாட் (Patriot) வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்புகள் மற்றும் ஏவுகணை தடுப்பு உதவிகளை வழங்குமாறு மேற்கத்திய நாடுகள், ஜப்பான் மற்றும் தென் கொரியாவிடம் உக்ரைன் அவசரக் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-11T18:36:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மனிதகுலம் அழிந்து உலகம் ரோபோட்களால் நிறையும்: 4413-ஆம் ஆண்டிலிருந்து வந்த Time Traveler எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/time-traveler-warns-humanitys-end-in-4413-1786459786"></link>
            <id>https://news.lankasri.com/article/time-traveler-warns-humanitys-end-in-4413-1786459786</id>
            <summary type="text">Time traveler claiming to be from the year 4413: பிரித்தானியாவில் 4413-ஆம் ஆண்டிலிருந்து வந்த Time Traveler என ஒருவர் தன்னை கூறுகிறார்.

சமீபத்தில் ...</summary>
            <content type="html"><![CDATA[<p><b>Time traveler claiming to be from the year 4413: பிரித்தானியாவில் 4413-ஆம் ஆண்டிலிருந்து வந்த Time Traveler என ஒருவர் தன்னை கூறுகிறார்.</b></p><p>

சமீபத்தில் வெளிவந்த ஒரு விசித்திரமான பேட்டி உலகம் முழுவதும் கவனத்தை ஈர்த்துள்ளது.
</p><p>
லூயிஸ் வாக்கர் (Lewis Walker) என்ற நபர், தன்னை 4413-ஆம் ஆண்டிலிருந்து வந்த “Time Traveler” எனக் கூறியுள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8a7f5881-964a-4979-982a-345e2d30441f/26-6a7b368bc19e6.webp' /></p><p>அவரின் கூற்றுப்படி, 1977-இல் பிரித்தானியாவின் Ministry of Defence-இல் பணிபுரிந்தபோது, ரகசியமான Time Machine ஒன்றை சோதிக்க 2,50,000 பவுண்டு வழங்கப்பட்டது.

600 ஆண்டுகள் எதிர்காலத்திற்குச் செல்ல வேண்டும் என திட்டமிடப்பட்டிருந்ததாகவும், ஆனால் அவர் 4413-ஆம் ஆண்டில் விழித்தெழுந்ததாகக் கூறுகிறார்.</p><p></p><h2>2028-ஆம் ஆண்டிலிருந்து Time Travel பொதுமக்களுக்கு கிடைக்கும்</h2><p>அங்கு அவர் கண்ட காட்சிகள் அதிர்ச்சியூட்டும் வகையில் இருந்ததாகச் சொல்கிறார். வானில் பறக்கும் கார்கள்

ரோபோட்களால் நிரம்பிய தெருக்கள்

மிகக் குறைந்த மனிதர்கள்

அவர் சந்தித்த ஒருவர், 2028-ஆம் ஆண்டிலிருந்து Time Travel பொதுமக்களுக்கு கிடைக்கும் என தெரிவித்ததாகவும் கூறினார்.</p><h2>

எச்சரிக்கை</h2><p>மிகப் பெரிய எச்சரிக்கை

ஆனால், வாக்கர் மிகப் பெரிய எச்சரிக்கையொன்றை வழங்கினார். மனிதர்கள் தொழில்நுட்பத்துடன் இணைந்து, இறுதியில் “மனிதகுலம்” அழிந்து, ரோபோட்கள் மட்டுமே நிறைந்த உலகமாக மாறும் என கூறினார்.
</p><p>
</p><p>இந்தக் கூற்றுகள் உண்மையா, கற்பனையா என்பது தெரியவில்லை. ஆனால், மனிதர்கள் தொழில்நுட்பத்தில் அதிகமாக சார்ந்திருக்கும் எதிர்காலம் குறித்து சிந்திக்க வைக்கும் வகையில் இந்தக் கதை பரவுகிறது.&nbsp;&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-11T18:31:34+00:00</updated>
        </entry>
    </feed>
