<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-08-08T11:40:31+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆகஸ்ட் 11ல் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: தொழில் நிலையில் அதிர்ஷ்டம் பெறும் 3 ராசிகள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/jupiter-moon-creates-gajkesari-rajyog-who-get-luck-1786187770"></link>
            <id>https://manithan.com/article/jupiter-moon-creates-gajkesari-rajyog-who-get-luck-1786187770</id>
            <summary type="text">ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில்,&amp;nbsp; மனதின் காரகனாகக் கருதப்படுபவர் சந்திரன். இவர் ஒரு ராசியில் சுமார் 2½ நாட்கள் மட்டுமே இருப்பதால், அடிக்கடி ராசி...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில்,&nbsp; மனதின் காரகனாகக் கருதப்படுபவர் சந்திரன். இவர் ஒரு ராசியில் சுமார் 2½ நாட்கள் மட்டுமே இருப்பதால், அடிக்கடி ராசியை மாற்றி, மற்ற கிரகங்களுடன் இணைந்து சுப, அசுப யோகங்களை உருவாக்கி 12 ராசிகளின் வாழ்ககையிலும் தாக்கத்தை ஏற்படுத்துவார்.</p><p>
அந்த வகையில், ஆகஸ்ட் 11ஆம் தேதி சந்திரன் கடக ராசிக்குள் நுழைகிறார். ஏற்கனவே கடகத்தில் குரு பகவான் பயணித்து வருவதால், சந்திரன்–குரு சேர்க்கையால் கஜகேசரி ராஜயோகம் உருவாகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/af9550ea-acba-4cbf-b41f-9c22a8f081e4/26-6a77150326af5.webp' /></p><p></p><p>அத்துடன் சூரியன் மற்றும் புதனும் கடகத்தில் இருப்பதால் சதுர்கிரக யோகம், புதாதித்ய ராஜயோகம், ஹன்ஸ் ராஜயோகம் உள்ளிட்ட பல சுபயோகங்களும் உருவாகின்றன.</p><p>குறிப்பாக இந்த கஜகேசரி ராஜயோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் இருந்தாலும், இந்த 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமான பலன்கள் கிடைக்கவுள்ளதாக கணிக்ப்பட்டுள்ளது. அப்படி அதிகளவில் சாதக பலன்களை பெறப்போகும் ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.</p><h2>கடகம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1d93f1fd-a791-49bb-b2ad-6ab46e1b44ff/26-6a771503cd8d9.webp' /></p><p>கடக ராசிக்காரர்களுக்கு இந்தக் காலகட்டம் பல வகையிலும் சாதகமானதாக அமையப் போகிறது. கடக ராசியின் முதல் வீட்டில் குரு மற்றும் சந்திரன் இணைவதால் கஜகேசரி ராஜயோகம் உருவாகிறது. </p><p>இந்த யோகம் உங்களின் தன்னம்பிக்கையை அதிகரிப்பதுடன், வாழ்க்கையில் புதிய நம்பிக்கையையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தும்.

பல நாட்களாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த நல்ல செய்திகள் ஒன்றன்பின் ஒன்றாக கிடைக்க வாய்ப்புள்ளது. </p><p>குறிப்பாக பணிபுரிபவர்களுக்கு இந்தக் காலம் மிகவும் சிறப்பாக அமையும். அலுவலகத்தில் உங்கள் திறமை மற்றும் உழைப்புக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கலாம். வருமானத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படுவதோடு, பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கவும் வாய்ப்புள்ளது.</p><h2>கன்னி</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/202c7ad7-8ee5-48fd-9138-f3b50472e265/26-6a7715047df54.webp' /></p><p></p><h2>
</h2><p>கன்னி ராசிக்காரர்களுக்கு இந்தக் காலம் மிகவும் மங்களகரமானதாக அமையப் போகிறது. கன்னி ராசியின் 11-வது வீட்டில் குரு-சந்திர சேர்க்கை ஏற்படுவதால் கஜகேசரி ராஜயோகம் உருவாகிறது. </p><p>இதன் மூலம் பொருளாதாரம், தொழில் மற்றும் சமூக வாழ்க்கையில் சாதகமான மாற்றங்களை எதிர்பார்க்கலாம்.

குறிப்பாக நிதி நிலைமை வழக்கத்தைவிட சிறப்பாக இருக்கும். </p><p>நீண்ட காலமாக சிக்கித் தவித்த பணம் எதிர்பாராத நேரத்தில் கைக்கு வந்து சேரும் வாய்ப்பு உள்ளது. இதனால் பொருளாதார நெருக்கடிகள் ஓரளவு குறைந்து, மனதில் நிம்மதி ஏற்படும்.வியாபாரிகளுக்கும் இந்தக் காலம் லாபகரமானதாக இருக்கும்.</p><h2>மீனம்
</h2><p>மீன ராசிக்காரர்களுக்கும் இந்தக் காலகட்டம் மிகவும் சிறப்பான பலன்களை வழங்கக்கூடியதாக உள்ளது. மீன ராசியின் 5-வது வீட்டில் குரு மற்றும் சந்திரன் இணைவதால் கஜகேசரி ராஜயோகம் உருவாகிறது. </p><p>இதன் காரணமாக அதிர்ஷ்டத்தின் ஆதரவு பல்வேறு விஷயங்களில் கிடைக்கக்கூடும்.

குறிப்பாக வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கலாம். நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த வேலை வாய்ப்பு கிடைப்பதற்கான சூழல் உருவாகும். </p><p>ஏற்கனவே பணியில் இருப்பவர்களுக்கும் வேலையில் மாற்றம், புதிய பொறுப்பு அல்லது எதிர்பாராத முன்னேற்றம் ஏற்படலாம். உங்கள் திறமை வெளிப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்.

நிதி நிலையிலும் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.</p><p><b>இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;</b></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்<b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"> FOLLOW NOW</a></u>&nbsp;</b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-08T11:39:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[துடக்கம் (மலையாளம்): திரை விமர்சனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/thudakkam-movie-review-1786189053"></link>
            <id>https://cineulagam.com/article/thudakkam-movie-review-1786189053</id>
            <summary type="text">மோகன்லாலின் மகளான விஸ்மயா கதாநாயகியாக அறிமுகமாகியிருக்கும் துடக்கம் திரைப்படம் அவருக்கு நல்ல தொடக்கத்தை தந்ததா என்று பார்ப்போம் வாங்க.கதைக்களம் மீனு (...</summary>
            <content type="html"><![CDATA[<p>மோகன்லாலின் மகளான விஸ்மயா கதாநாயகியாக அறிமுகமாகியிருக்கும் துடக்கம் திரைப்படம் அவருக்கு நல்ல தொடக்கத்தை தந்ததா என்று பார்ப்போம் வாங்க.</p><h2>கதைக்களம் </h2><p>மீனு (விஸ்மயா) தனது மாற்றுத்திறனாளி அப்பா ரவி (சாய் குமார்) உடன் இடுக்கியில் வசித்து வருகிறார். </p><p>
கிராம நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வரும் ரவியிடம் இருவர் தங்களுக்கு சாதகமாக ஒரு வேலையை செய்துகொடுக்க நிர்பந்திக்கின்றனர். </p><p>
ஆனால், அவரோ அதற்கு மறுப்பு தெரிவிக்க; நாங்கள் என்ன செய்கிறோம் என்று பார் என எச்சரித்துவிட்டு செல்கின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a328a3f1-5c23-4992-8359-5017cdbecc6b/26-6a7714fe9777c.webp' /></p><p> </p><p>
இந்த சூழலில் பணத்திற்காக கொலை செய்வதுடன், போதையிலும் குற்றச்செயலில் ஈடுபடும் நபர் இடுக்கிக்கு வருகிறார். </p><p>
அதே சமயம் பேங்க் தேர்வு எழுத செல்வதாகக் கூறி செல்லும் மீனு இரவு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. கடைசியாக அவர் தன் அப்பாவிடம் போனில் பேசும்போது யாரோ தொந்தரவு செய்திருக்கிறார்கள்; அப்போது போன்கால் கட் ஆகிவிடுகிறது.
</p><p>இதனால் பயந்துபோன அப்பா ரவி போலீசில் புகார் அளிக்க தேடுதல் தொடங்கப்படுகிறது. அதன் பின்னர் என்ன ஆனது என்பதே மீதிக்கதை.
</p><h2>படம் பற்றிய அலசல் </h2><p>
ஓம் ஷாந்தி ஓஷானா, 2018 ஆகிய படங்களைக் கொடுத்த ஜூட் ஆன்டனி ஜோஸப் எழுதி இயக்கியிருக்கும் படம்தான் இந்த துடக்கம்.
</p><p>முதல் பாதியை பரபரப்பான த்ரில்லர் மோடில் கொண்டு செல்லும் இயக்குநர், இரண்டாம் பாதியை அப்படியே வேறு தளத்தில் கொண்டுசென்றுள்ளார்.
</p><p>காணாமல்போன இளம்பெண் என்ன ஆனாள் என்ற கேள்விக்கான விடையை, அட இவ்வளவுதானா என்று நாம் கேட்பதுபோல்தான் கொடுக்கிருக்கிறார்.
</p><p>அத்துடன் போலீஸ் விசாரணையில் எங்கும் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்யாதது ஏன் என்ற கேள்வியும் இயல்பாக எழுகிறது.
</p><p>இரண்டாம் பாதியில் இப்படித்தான் திரைக்கதை நகரப் போகிறது என எளிதாக நம்மால் யூகிக்க முடிகிறது. கிளைமேக்ஸ் திருப்திகரமான ஒன்றுதான்.
</p><p>நடிகர்களைப் பொறுத்தவரை மீனு என்ற கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்க்கும் விதமாக விஸ்மயா நடித்துள்ளார். ஆக்ஷன் காட்சிகளில் மிரட்டியிருக்கிறார்.
</p><p>ஆஷிஷ் ஜோ ஆன்டனி தான் வரும் ஒவ்வொரு காட்சியிலும் பார்வையிலேயே மிரட்டுகிறார். வசனமே பேசாமல் பயமுறுத்துகிறார். ஸ்டண்ட் சில்வாவை அவர் அடிக்கும்போது, 'யோவ் அவரு ஃபைட் மாஸ்டர்யா' என்று நமக்கு சொல்ல தோன்றுகிறது. </p><p>
ரவி எனும் அப்பா கதாபாத்திரத்தை சாய் குமார் நிறைவாக செய்துள்ளார். மனோஜ் கே.ஜெயன், மியா ஜார்ஜ் போன்ற நடிகர்களுக்கு பெரிய வேலை இல்லை.
</p><p>ஒரு காட்சியில் வந்தாலும் வசனம் மற்றும் ஆக்ஷ்னில் மோகன்லால் அட்டகாசம் செய்துள்ளார். </p><p>
ஜேக்ஸ் பிஜோயின் பின்னணி இசை மிரட்டல்; ஜோமோன் டி.ஜான், அகில் ஜார்ஜ் மற்றும் சுதீப் எலமோனின் கேமரா ஒர்க் அருமை. </p><h2>
க்ளாப்ஸ் </h2><p>விஸ்மயா மோகன்லால் </p><p>
ஆக்ஷன் காட்சிகள்</p><p> 

முதல் பாதி</p><p> 

கிளைமேக்ஸ் 
&nbsp;&nbsp;</p><h2>பல்ப்ஸ்</h2><p>முதல் பாதியில் இருந்து திரைக்கதை வேறு தளத்திற்கு மாறுவது </p><p>
லாஜிக் மீறல்கள் </p><p>மொத்தத்தில் குறைகள் இருந்தாலும் இந்த துடக்கத்தை கமர்ஷியலுக்காக ஒருமுறை பார்க்கலாம்.
</p><h2>
ரேட்டிங்: 2.5/5&nbsp;</h2>]]></content>
            <updated>2026-08-08T11:38:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[100 நாட்களைக் கடந்த செம்மணி மனித புதைகுழி அகழ்வு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/chemmani-mass-grave-over-500-skeleton-found-1786184575"></link>
            <id>https://ibctamil.com/article/chemmani-mass-grave-over-500-skeleton-found-1786184575</id>
            <summary type="text">செம்மணி மனித புதைகுழியில் 100 ஆவது நாளை கடந்து 101 ஆவது நாள் அகழ்வு பணிகள் முன்னெடுப்படடுள்ளன.

குறித்த அகழ்வு பணிகள் இன்றைய தினம் (08-08-2026) இடம்...</summary>
            <content type="html"><![CDATA[<p>செம்மணி மனித புதைகுழியில் 100 ஆவது நாளை கடந்து 101 ஆவது நாள் அகழ்வு பணிகள் முன்னெடுப்படடுள்ளன.
</p><p>
குறித்த அகழ்வு பணிகள் இன்றைய தினம் (08-08-2026) இடம்பெற்றுள்ளது. </p><p>

இதுவரையிலான 101 நாட்கள் முன்னெடுக்கப்பட்ட அகழ்வு பணியில் 515 என்புக்கூடுகள்
அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், 506 என்புக்கூடுகள் அகழ்ந்து
எடுக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>மனித புதைகுழி</h2><p>
செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை 56 நாட்கள்
முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், 47ஆவது நாளான நேற்றைய தினம் (07-08-2026) 08 என்பு கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளதுடன்
ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட05 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/337680b5-48db-44a6-ad95-f278627f5b04/26-6a77129e0cb30.webp' /></p><p>அதேவேளை எழுமாறாக தோண்டப்பட்ட சோதனைக்குழிகள் இரண்டில் ஒரு குழியில் இருந்து
மனித என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p>]]></content>
            <updated>2026-08-08T11:30:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறைச்சாலைகளில் அடுத்தடுத்து மோதல் ; உயிரிழந்த கைதிகளின் பிரேத பரிசோதனை தொடர்பில் வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/prison-clashes-erupt-across-sri-lanka-1786186185"></link>
            <id>https://jvpnews.com/article/prison-clashes-erupt-across-sri-lanka-1786186185</id>
            <summary type="text">நீர்கொழும்பு - தளுபொத, பல்லன்சேன சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தையடுத்து, நீர்கொழும்பு பிரதான நீதவான் ஷிலானி பெரேரா சிறைச்சாலையைப் பார்வையிட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீர்கொழும்பு - தளுபொத, பல்லன்சேன சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தையடுத்து, நீர்கொழும்பு பிரதான நீதவான் ஷிலானி பெரேரா சிறைச்சாலையைப் பார்வையிட்டுள்ளார்.
</p><p>
அத்துடன், நீர்கொழும்பு குற்ற விசாரணை அதிகாரிகள் சிறைச்சாலைக்குச் சென்று விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7e904911-53c8-4c5b-aafd-8b486f5a57e2/26-6a7709cb1d91b.webp' /></p><p>

இதேவேளை, புதிய மெகசின் சிறைச்சாலையில் உயிரிழந்த கைதியின் பிரேத பரிசோதனை இன்று இடம்பெறவுள்ளதுடன், குருவிட்ட சிறைச்சாலையில் உயிரிழந்த இரு கைதிகளின் பிரேத பரிசோதனைகள் நாளை மறுதினம் நடத்தப்படவுள்ளன.
</p><p>
அமைதியின்மை மற்றும் மோதல்கள் பதிவான குருவிட்ட மற்றும் பல்லன்சேன ஆகிய இரு சிறைச்சாலைகள் உட்பட நாட்டின் அனைத்துச் சிறைச்சாலைகளின் பாதுகாப்பும் தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
</p><p>
இதற்கமைய, பொலிஸார் , பொலிஸ்&nbsp; விசேட அதிரடிப்படையினர் மற்றும் முப்படையினர் தொடர்ந்தும் சிறைச்சாலைகளின் பாதுகாப்புக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-08-08T11:30:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[இராணுவத்தால் முடியாது... ஈரான் போரில் இருந்து வெளியேறும் வழி தேடும் ட்ரம்ப்பின் உயர்மட்டத் தளபதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/trump-general-looking-off-ramp-1786188675"></link>
            <id>https://news.lankasri.com/article/trump-general-looking-off-ramp-1786188675</id>
            <summary type="text">ஈரான் போரிலிருந்து வெளியேறுவதற்கான வழியை ட்ரம்ப்பின் உயர்மட்டத் தளபதி தேடிக்கொண்டிருக்கிறார்.
அமெரிக்க ராணுவத்தின் வாய்ப்புகள் குறைவாகவே உள்ள நிலையில...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரான் போரிலிருந்து வெளியேறுவதற்கான வழியை ட்ரம்ப்பின் உயர்மட்டத் தளபதி தேடிக்கொண்டிருக்கிறார்.
</p><p>அமெரிக்க ராணுவத்தின் வாய்ப்புகள் குறைவாகவே உள்ள நிலையில், ஈரானுடனான போரிலிருந்து வெளியேறுவதற்கான வழியை ட்ரம்ப்பின் உயர்மட்ட ராணுவத் தளபதி தேடுவதாகத் தகவல் கசிந்துள்ளது.</p><h2>எதிர்விளைவை ஏற்படுத்தும்</h2><p>
</p><p>கடந்த சில வாரங்களாகவே, ஈரான் போரிலிருந்து வெளியேறுவதற்கான வழியொன்றை அமெரிக்கா கண்டறிய வேண்டும் என்பதை, கூட்டுப் படைத் தளபதிகளின் தலைவரான ஜெனரல் டான் கெய்ன் (Gen. Dan Caine), ட்ரம்ப்பின் பிற உயர்மட்ட ஆலோசகர்களிடம் தனிப்பட்ட முறையில் தெளிவுபடுத்தியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f9e9bf44-9887-4168-8321-8e9a2d62efda/26-6a77138609e06.webp' /></p><p>
</p><p>ஈரானுடனான மோதலைத் தீவிரப்படுத்துவதற்கான ராணுவ நடவடிக்கைகள் எதிர்விளைவை ஏற்படுத்தக்கூடும் என்பதாலும், வான்வழித் தாக்குதல் திறனை மட்டும் கொண்டு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்த இலக்குகளை அடைவது சாத்தியமில்லை என்றும் தளபதிகள் மட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது.</p><p> ஈரானுடனானப் போர் ஒரு முக்கியத் திருப்பத்தை எட்டியுள்ளது என்ற கருத்தைக் கொண்டவர்களில் கேன் (Caine) மட்டுமே இல்லை. மோதலைத் தீவிரப்படுத்துவதற்கான ராணுவ நடவடிக்கைகள் குறித்த கவலைகளைப் பகிர்ந்துகொண்ட அவர், </p><p>போரிலிருந்து வெளியேறுவதற்கான வழியைக் கண்டறிவது குறித்தும் சிஐஏ (CIA) இயக்குனர் ஜான் ராட்க்ளிஃப், வெளிவிவகாரச் செயலாளர் மார்கோ ரூபியோ மற்றும் துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் உள்ளிட்ட அமைச்சரவையின் முக்கிய அதிகாரிகளுடன் விவாதித்துள்ளார்.</p><p></p><p>
</p><p>அமெரிக்காவின் உயர்மட்ட ராணுவத் தளபதி ஒருவரான Caine, ஜனாதிபதியுடனான சந்திப்புகளுக்கு முன்னதாக பல்வேறு அரசு அமைப்புகளுக்கு இடையிலான ஒருங்கிணைப்பை மேம்படுத்தவும், ட்ரம்பின் முக்கிய மற்றும் ஒத்த கருத்துடைய ஆலோசகர்களுடன் ஒருமித்த நிலைப்பாட்டை உறுதிப்படுத்தவும் அவர்களுடன் அண்மையில் தனியாகக் கலந்துரையாடியுள்ளார்.</p><h2>ராணுவத் தீர்வு ஏதுமில்லை</h2><p> </p><p>அமெரிக்கத் தரைப்படையினரை நேரடியாகக் களத்தில் இறக்குவதை உள்ளடக்காதவை உட்பட, தற்போதுள்ள ராணுவ நடவடிக்கைத் தெரிவுகளில் உள்ள வரம்புகள் மற்றும் இடர்பாடுகளைத் தெளிவுபடுத்துவதே இதன் நோக்கமாக இருந்துள்ளது. </p><p>ஈரானில் தரைப்படையைக் களமிறக்குவதில் ட்ரம்ப் தொடர்ந்து விருப்பமின்மையையே வெளிப்படுத்தி வந்துள்ளார்; அதற்குப் பதிலாக, வான்வழித் தாக்குதல்கள் மூலமாகவே அவர்களைத் தனது நிபந்தனைகளுக்கு உட்பட்ட ஒப்பந்தத்தை ஏற்க வைக்க முடியும் என்று அவர் கருதுவதையே இது உணர்த்துகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5ae1a4f0-de6e-4cab-aeaa-46f8adcbcda4/26-6a771386b0c90.webp' /></p><p> </p><p>ட்ரம்பின் அமைச்சரவையில் உள்ள Caine மற்றும் பிறர், அந்த முடிவு ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைவு என்றே தனிப்பட்ட முறையில் கருதுகின்றனர்; அதற்குப் பதிலாக, ஜனாதிபதியின் வரையறைகளுக்குள் பொருந்தக்கூடிய பிற வழிமுறைகளை உருவாக்க அவர்கள் முயன்று வருகின்றனர்.
</p><p>ஈரானின் ராணுவ வலிமை முற்றிலுமாகச் சிதைக்கப்பட்டுவிட்டதாக&nbsp;அமெரிக்கா தொடர்ச்சியாக அறிவித்து வந்தாலும், இந்த மோதல் தொடங்கி ஏறக்குறைய ஆறு மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், ஜனாதிபதி தானே முன்வந்து தொடங்கிய இந்த போரை முடிவுக்குக் கொண்டுவர எளிதான ராணுவத் தீர்வு ஏதுமில்லை என்று ட்ரம்ப்பின் மிக மூத்த தளபதி ஒருவர் தனிப்பட்ட முறையில் வாதிடுவது மிகவும் குறிப்பிடத்தக்கதாகும்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-08T11:29:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு : கடற்றொழிலாளர்களுக்கு எச்சரிக்கை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/strong-winds-warning-issued-to-fishermen-1786187442"></link>
            <id>https://ibctamil.com/article/strong-winds-warning-issued-to-fishermen-1786187442</id>
            <summary type="text">மாத்தறையிலிருந்து பொத்துவில் வரையிலும், சிலாபத்திலிருந்து கற்பிட்டி ஊடாக மன்னார் வரையிலும் உள்ள கடற்பரப்புகளில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>மாத்தறையிலிருந்து பொத்துவில் வரையிலும், சிலாபத்திலிருந்து கற்பிட்டி ஊடாக மன்னார் வரையிலும் உள்ள கடற்பரப்புகளில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சு அறிவுறுத்தியுள்ளது. </p><p>

ஏனைய பகுதிகளிலிருந்து புறப்படும் படகுகள் இந்த ஆபத்தான கடற்பரப்புகளுக்குள் நுழைய வேண்டாம் என்றும் அந்த அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.</p><p>இது குறித்து கடற்றொழில் அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில், நாட்டைச் சூழவுள்ள பல கடற்பரப்புகள் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (08) அறிவித்துள்ளது.</p><p></p><h2>கடல் கொந்தளிப்பாக காணப்படும்</h2><p> </p><p>

இதற்கமைய, மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளிலும், சிலாபத்திலிருந்து கற்பிட்டி ஊடாக மன்னார் வரையான கடற்பரப்புகளிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 70 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a2d946b2-0c21-41ae-bef4-07faa19a781e/26-6a771138e55e0.webp' /></p><p> </p><p>

இதன் காரணமாக அப்பகுதிகளின் கடல் கொந்தளிப்பாகவோ அல்லது மிகவும் கொந்தளிப்பாகவோ காணப்படக்கூடும் என்பதால், கரையோர மீன்பிடி நடவடிக்கைகளுக்கு அப்பகுதிகள் மிகவும் ஆபத்தானவை என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> 

இதேவேளை, வரவிருக்கும் வானிலை முன்னறிவிப்புகள் குறித்து தீவிர அவதானம் செலுத்தி, பாதுகாப்பு அறிவுறுத்தல்களைச் சரியாகப் பின்பற்றுமாறு அனைத்து கடற்றொழில் சமூகத்தினரிடமும் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சு கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-08T11:29:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[290 கிலோ போதைப்பொருளுடன் சிக்கிய இளைஞர்கள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/297-kg-drugs-destined-smuggling-sri-lanka-seized-1786187079"></link>
            <id>https://ibctamil.com/article/297-kg-drugs-destined-smuggling-sri-lanka-seized-1786187079</id>
            <summary type="text">தமிழகத்தில் இராமநாதபுரம் வழியாக ஒரு கோடி இந்திய ரூபா பெறுமதியான 290 கிலோ கிராம் கஞ்சாவை இலங்கைக்கு கடத்த முயன்ற இரு இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழகத்தில் இராமநாதபுரம் வழியாக ஒரு கோடி இந்திய ரூபா பெறுமதியான 290 கிலோ கிராம் கஞ்சாவை இலங்கைக்கு கடத்த முயன்ற இரு இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். </p><p>

இராமநாதபுரம் மாவட்டம் பிரப்பன்வலசை பகுதியில் இருந்து படகில் இலங்கைக்கு கஞ்சா கடத்த சிலர் திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.&nbsp;</p><p> 

இதனையடுத்து இராமேஸ்வரம் உட்கோட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் பிரப்பன்வலசை கடற்கரை அருகே நேற்று (07.08.2026)அதிகாலை 2:00 மணிக்கு கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.&nbsp;</p><p></p><h2>297 கிலோ (கஞ்சா) போதைப்பொருள்</h2><p>அப்போது அங்கு வந்த வான் ஒன்றை மடக்கி சோதனை செய்த போது 290 கிலோ கிராம் (கஞ்சா)&nbsp;போதைப்பொருள் பொதிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d109cbcf-ad65-49cd-bf23-60ddd57c63e3/26-6a77122841bf9.webp' /></p><p>

குறித்த கஞ்சா தொகை மதுரையில் இருந்து கடத்தி வரப்பட்டிருந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. </p><p>

பிரப்பன்வலசை கடற்கரை பகுதியில் காற்று குறைவாக வீசும் நேரத்தில் படகில் இந்த கஞ்சா தொகையை இலங்கைக்கு கடத்தி செல்ல முயன்றதும் தெரியவந்துள்ளது. </p><p>

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை காவல்துறை அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றனர்.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-08T11:26:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பவானி வீதி குறித்து மற்றுமோர் வழக்கை கண்டிப்புடன் தள்ளுபடி செய்த நீதிமன்றம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/case-regarding-bhavani-road-law-and-order-1786186587"></link>
            <id>https://tamilwin.com/article/case-regarding-bhavani-road-law-and-order-1786186587</id>
            <summary type="text">தையிட்டி திஸ்ஸ விகாரைக்காக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பவானி வீதியை
விடுவிப்பதற்குத் தடைபோடும் வகையில் பலாலி பொலிஸாரின் சார்பில் தெல்லிப்பழைப்
பொலிஸார் தொ...</summary>
            <content type="html"><![CDATA[<p>தையிட்டி திஸ்ஸ விகாரைக்காக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பவானி வீதியை
விடுவிப்பதற்குத் தடைபோடும் வகையில் பலாலி பொலிஸாரின் சார்பில் தெல்லிப்பழைப்
பொலிஸார் தொடர்ந்த மற்றொரு வழக்கை நீதிமன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.</p><p>

தையிட்டி திஸ்ஸ விகாரைக்காக ஆக்கிரமிக்கப்பட்ட பவானி வீதியை தவிசாளர்
சுகிர்தன் நிலஅளவைத் திணைக்களத்தினரிடம் அண்மையில் அடையாளம்
காட்டியிருந்தார். </p><p>இதையடுத்து, அந்த வீதியை விடுவிக்க வலி வடக்குப் பிரதேசபை
தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வந்தது.</p><p></p><h2>வழக்குத் தாக்கல்</h2><p> </p><p>இதற்கு எதிராகப் பலாலிப் பொலிஸார்
நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தநிலையில், அந்தவழக்கை விசாரித்த
நீதிமன்றம், ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரனின் சமர்ப்பணங்களைத் தொடர்ந்து,
'வலி வடக்கு பிரதேசசபை மேற்கொள்ளும் வீதி விடுவிப்பு முயற்சிகளை பொது
அமைதிக்குப் பங்கமான செயற்பாடு என்று கருதித் தடைபோட முடியாது' என
நேற்றுமுன்தினம் தீர்ப்பு வழங்கியிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3ce9c3d7-c340-4c51-9f42-2c603887c54e/26-6a770e9ab413d.webp' /></p><p>

இதனால் பிரதேசசபையால் எப்போது வேண்டுமானாலும் வீதியை விடுவிக்கும் நிலைமை
ஏற்பட்டிருந்தது. இவ்வாறான நிலையில், பவானி வீதியை விடுவிப்பதற்குத் தடை
விதிக்குமாறு அரசியலமைப்பின் 66ஆம் பிரிவின் கீழ் தெல்லிப்பழைப் பொலிஸார்
நேற்று வழக்குத் தாக்கல் செய்தனர். இந்த வழக்கை ஆராய்ந்த நீதிமன்றம் குறித்த
வழக்கை உடனடியாகத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.</p><p>

பவானி வீதி தொடர்பில் இதற்கு மேல் ஏதேனும் நடவடிக்கை எடுக்க வேண்டுமாயின் மேல்
நீதிமன்றத்துக்குச் செல்லுமாறும் பொலிஸாரிடம் நீதிமன்றம் கண்டிப்புடன்
கூறியுள்ளது.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-08T11:26:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[101ஆவது நாளாக தொடரும் அகழ்வு பணிகள்.. செம்மணியில் 515 என்புக்கூடுகள் அடையாளம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/chemmani-mass-graves-515-skeletons-found-1786187758"></link>
            <id>https://tamilwin.com/article/chemmani-mass-graves-515-skeletons-found-1786187758</id>
            <summary type="text">செம்மணி மனித புதைகுழியின் அகழ்வு பணிகள் 100ஆவது நாளை கடந்து இன்றைய தினம் (08.08.2026) 101ஆவது நாள் அகழ்வு பணிகள் முன்னெடுப்பட்டன.நீதிமன்ற அனுமதி

இத...</summary>
            <content type="html"><![CDATA[<p>செம்மணி மனித புதைகுழியின் அகழ்வு பணிகள் 100ஆவது நாளை கடந்து இன்றைய தினம் (08.08.2026) 101ஆவது நாள் அகழ்வு பணிகள் முன்னெடுப்பட்டன.</p><h2>நீதிமன்ற அனுமதி</h2><p>
</p><p>
இதுவரையிலான 101 நாட்கள் முன்னெடுக்கப்பட்ட அகழ்வு பணியில் 515 என்புக்கூடுகள்
அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், 506 என்புக்கூடுகள் அகழ்ந்து
எடுக்கப்பட்டுள்ளன.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/09c50ac2-9494-4987-84be-74e1869bb80f/26-6a7711c61ea83.webp' /></p><p>
</p><p>
செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை 56 நாட்கள்
முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.&nbsp;</p><p>இந்நிலையில், 47ஆவது நாளான நேற்றைய தினம் 08 என்புக்கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில்,
ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட 05 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.</p><p>

அதேவேளை, எழுமாறாக தோண்டப்பட்ட சோதனைக்குழிகள் இரண்டில் ஒரு குழியில் இருந்து
மனித என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-08T11:23:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ashik</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கைக்கு கடல் வழியாக கடத்த இருந்த கஞ்சா பறிமுதல்: கடத்தல்காரர்களின் சொத்து மற்றும் வங்கி கணக்குகள் முடக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/cannabis-being-smuggled-to-sri-lanka-by-sea-seized-1786186289"></link>
            <id>https://tamilwin.com/article/cannabis-being-smuggled-to-sri-lanka-by-sea-seized-1786186289</id>
            <summary type="text">இலங்கைக்கு கடத்த பிரப்பன் வலசை கடற்கரைக்கு வானில் கொண்டுவரப்பட்ட 297 கிலோகிராம் கஞ்சா இன்றைய தினம் (08.08.2026) பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.ராமநாதபுரம்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கைக்கு கடத்த பிரப்பன் வலசை கடற்கரைக்கு வானில் கொண்டுவரப்பட்ட 297 கிலோகிராம் கஞ்சா இன்றைய தினம் (08.08.2026) பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.</p><p>ராமநாதபுரம் மாவட்டத்தில் இந்த
ஆண்டு இதுவரை 670 கிலோகிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதோடு, கடத்தல்காரர்களின்
வங்கி கணக்குகள் முடக்கப்பட்டு உள்ளதாக மாவட்ட பொலிஸ் கண்காணிப்பாளர் சந்தீஷ்
தெரிவித்துள்ளார்.</p><p>
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் உட்கோட்ட குற்ற தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நின்று கொண்டிருந்த
வான் ஒன்றை சோதனை செய்தபோது அதில் 297 கிலோகிராம் நிறையுடைய கஞ்சா பொட்டலங்கள் இருந்தது
தெரியவந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4606070f-3eba-4f0a-99d3-8fb54563d0be/26-6a77112943b4e.webp' /></p><h2>விசாரணை முன்னெடுப்பு</h2><p>
</p><p>
இதையடுத்து வானுடன் கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்த பொலிஸார் அங்கு நின்று
கொண்டிருந்த கடத்தல் சம்பவத்தில் தொடர்புடைய ஆற்றங்கரை பகுதியைச் சேர்ந்த
தினேஷ் மற்றும் பிள்ளைமடம் பகுதியைச் சேர்ந்த களஞ்சீஸ்வரன் ஆகிய இருவரையும்
கைது செய்து ராமநாதபுரம் ஆயுதப்படை மைதானத்திற்கு அழைத்து வந்து விசாரணை
மேற்கொண்டனர்.
</p><p>
பொலிஸார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் கஞ்சா பொட்டலங்கள் அனைத்தும்
ஆந்திராவிலிருந்து கொண்டு வரப்பட்டதாகவும், இவை பிரப்பன்வலசை கடற்கரையில்
இருந்து கடல் வழியாக இலங்கைக்கு கடத்திச் செல்ல இருந்ததாகவும் தெரியவந்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d3411430-de15-4d51-ab17-f288ec4d2c22/26-6a77112a51b71.webp' /></p><p>
இந்த நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய முக்கிய சந்தேகநபரை தேடும் பணி&nbsp; தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா பொட்டலங்களை மாவட்ட பொலிஸ் கண்காணிப்பாளர் சந்தீஷ் பார்வையிட்டார்.</p><h2>கஞ்சா பறிமுதல்</h2><p>

பின்னர் செய்தியாளிடம் பேசியவர், பிரப்பன்வலசை கடற்கரையில் 297 கிலோகிராம் கஞ்சா
பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்படுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில்
போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையில் மாவட்ட பொலிஸார் தீவிரமாக ஈடுபட்டு
வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ce8fa30a-ef0e-436f-8698-dcb382418cbf/26-6a77112b2b375.webp' /></p><p>
</p><p>
இந்த ஆண்டு இதுவரை ராமநாதபுரம் மாவட்டத்தில் 212 போதைப்பொருள் வழக்குகள் பதிவு
செய்யப்பட்டு 670 கிலோகிராம் கஞ்சா மற்றும் ஒரு கிலோகிராம் 800 கிராம் மெத்தப்பெட்டமன்
பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
</p><p>
மேலும் கைது செய்யப்பட்டவர்களின் வங்கிக் கணக்கு மற்றும் சொத்துக்கள்
முடக்கப்பட்டு வருவதுடன் போதைப் பொருள் கடத்தல் சம்பவங்களில் ஈடுபடுவோர் மீது
கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் எச்சரித்துள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e1fbf10e-31e0-4d2a-b8bd-9e53b755099d/26-6a77112bf36b4.webp' /></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-08T11:23:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிணை வழங்கப்பட்ட இரண்டு தமிழ் அரசியல் கைதிகள் இன்னமும் சிறையிலேயே உள்ளனர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/two-tamil-political-prisoners-are-still-in-prison-1786187214"></link>
            <id>https://ibctamil.com/article/two-tamil-political-prisoners-are-still-in-prison-1786187214</id>
            <summary type="text">தமிழ் அரசியல் கைதிகள் இருவருக்கு பிணை வழங்கப்பட்டு அவர்கள் விடுதலை
செய்யப்பட்டதான செய்தி ஒன்று அண்மையில் வெளிவந்தது. ஆனால் அவர்கள் இன்னமும்
சிறைக்கு...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழ் அரசியல் கைதிகள் இருவருக்கு பிணை வழங்கப்பட்டு அவர்கள் விடுதலை
செய்யப்பட்டதான செய்தி ஒன்று அண்மையில் வெளிவந்தது. ஆனால் அவர்கள் இன்னமும்
சிறைக்குள் தான் இருக்கின்றார்கள் என குரல் அற்றவர்களின் குரல் அமைப்பின் செயற்பாட்டாளரும் முன்னைநாள் அரசியல் கைதியுமான முருகையா கோமகன் தெரிவித்தார்.
</p><p>
 இருவருக்கு பிணை வழங்குவதற்கான மேன்முறையீட்டு வழக்கில் பிணை
வழங்கப்பட்டுள்ளது. ஆனால் ஒரு வழக்கிற்கான பிணையே வழங்கப்பட்டது. அவர்களுக்கு
எதிராக வேறு நீதிமன்றங்களில், வேறு வழக்குகள் நடந்துகொண்டு இருக்கின்றன.</p><h2>தொடர்ந்தும் சிறையிலேயே இருக்கின்றாகள்</h2><p>அந்தவகையில் அந்த வழக்குகளுக்கும் பிணை வழங்கப்பட்டால் மட்டுமே அவர்கள்
விடுதலை செய்யப்படுவார்கள். அந்த வழக்குகளுக்குரிய திகதிகள் எதிர்வரும் 10ஆம்
மாதமே உள்ளதால் அவர்கள் தொடர்ந்தும் சிறையிலேயே இருக்கின்றாகள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a02e5b19-1021-44a5-aeb4-45cdf1028c10/26-6a7711ac87ca6.webp' /></p><p> </p><p>எனவே அவர்கள்
இன்னமும் சிறையில் இருந்து விடுதலை செய்யப்படவில்லை என்றார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-08T11:23:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ் பல்கலைக்கழக மாணவியின் மரணத்தால் கதறும் உறவுகள் ; துயரை ஏற்படுத்திய காரணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/jaffna-university-student-s-death-shocks-family-1786171329"></link>
            <id>https://jvpnews.com/article/jaffna-university-student-s-death-shocks-family-1786171329</id>
            <summary type="text">யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இராமநாதன் நுண்கலை பீடத்தின் இசைத்துறை மாணவி ஒருவர் நேற்று முன்தினம் (06) இரவு உயிரிழந்துள்ளார். 

 

கண்டி மாவட்டத்தைச் சே...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இராமநாதன் நுண்கலை பீடத்தின் இசைத்துறை மாணவி ஒருவர் நேற்று முன்தினம் (06) இரவு உயிரிழந்துள்ளார். </p><p>

 

கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவியே இவ்வாறு உயிரிழந்தவராவார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a42b7888-fe2a-4b5e-8093-e893f4025f1b/26-6a76cfc32762b.webp' /></p><h2>புற்றுநோய்&nbsp;</h2><p>
</p><p>
 

இது குறித்து மேலும் தெரியவருவதாவது:</p><p>

 

குறித்த மாணவி யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இராமநாதன் நுண்கலை பீடத்தில் கல்வி கற்று வந்தார்.
</p><p>
 

இந்நிலையில், புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த இம்மாணவி கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.</p><p></p><p> 

 

இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் வைத்தியசாலையிலேயே உயிரிழந்துள்ளார்.</p><p>

 

இச்சம்பவம் அனைவர் மத்தியிலும் ஆழ்ந்த துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. கற்ற சமூகத்தில் ஏற்படும் தொடர்ச்சியான இழப்புகள் ஈடு செய்ய முடியாத பாரிய இழப்புகளாகவே பார்க்கப்படுகின்றன.</p>]]></content>
            <updated>2026-08-08T11:22:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[100 சதவீதம் வரி ; அமெரிக்க செனட் சபையில் நிறைவேறிய சட்டமூலம் ; உலகிற்கு காத்திருக்கும் சிக்கல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/us-senate-passes-bill-for-100-tariff-on-imports-1786188078"></link>
            <id>https://canadamirror.com/article/us-senate-passes-bill-for-100-tariff-on-imports-1786188078</id>
            <summary type="text">ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவை இறக்குமதி செய்யும் நாடுகளின் பொருட்களுக்கு 100 சதவீதம் வரை வரி விதிக்கும் சட்டமூலம் அமெரிக்க ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவை இறக்குமதி செய்யும் நாடுகளின் பொருட்களுக்கு 100 சதவீதம் வரை வரி விதிக்கும் சட்டமூலம் அமெரிக்க செனட் அவையில் (U.S. Senate) 86-11 என்ற பெரும்பான்மை வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.</p><p>

 

"லிண்ட்சே ஓ கிரஹாம் ரஷ்யா மற்றும் ஈரான் தடைகள் சட்டம் 2026" என அழைக்கப்படும் இந்தச் சட்டம், ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் மற்றும் எரிவாயுவை இறக்குமதி செய்யும் முக்கிய நாடுகளுக்கு 100 சதவீதம் வரை வரி விதிக்க வழிவகை செய்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/776d4507-4b10-4ce7-9286-ad411e2fb0d7/26-6a77113004af5.webp' /></p><p> </p><p>

 

இந்த நடவடிக்கை நிறைவேற்றப்பட்டால், சீனா மற்றும் இந்தியா உட்பட ரஷ்ய எரிபொருளை இறக்குமதி செய்யும் குறைந்தது ஐந்து முக்கிய நாடுகளைப் பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>

 

மேற்கத்திய தடைகளில் இருந்து தப்பிப்பதற்காகப் பயன்படுத்தப்படும் ரகசிய கடல்சார் விநியோக வலையமைப்புகளையும் இந்த சட்டமூலம் குறிவைக்கிறது.
</p><p>
 

செனட் சபையில் 86–11 என்ற வாக்குக் கணக்கில் இந்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது. இது அடுத்து பிரதிநிதிகள் சபைக்கு அனுப்பப்படும்.</p><p>பிரதிநிதிகள் சபையின் கோடைக்கால விடுமுறை காரணமாக, அங்கு ஓகஸ்ட் மாதத்திற்குப் பிறகு (செப்டம்பர் தொடக்கத்தில்) தான் வாக்கெடுப்பு நடைபெறும்.</p><p>

 

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் போர் நடவடிக்கைகளுக்குச் செல்லும் பணப்புழக்கத்தைத் தடுப்பதே இதன் முதன்மை நோக்கம் என அமெரிக்க அரசியல் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.</p><p> 

 

உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஸெலென்ஸ்கி இந்த நடவடிக்கையை வரவேற்று அமெரிக்க செனட் சபைக்கு தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-08-08T11:21:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கைக்கு கடத்த முயன்ற 290 கிலோ கஞ்சா பறிமுதல் ; இரு இளைஞர்கள் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/290kg-cannabis-seized-in-sri-lanka-smuggling-bid-1786187090"></link>
            <id>https://jvpnews.com/article/290kg-cannabis-seized-in-sri-lanka-smuggling-bid-1786187090</id>
            <summary type="text">தமிழகத்தில் இராமநாதபுரம் வழியாக ஒரு கோடி இந்திய ரூபா பெறுமதியான 290 கிலோ கிராம் கஞ்சாவை இலங்கைக்கு கடத்த முயன்ற இரு இளைஞர்களை பொலிஸார் கைது செய்துள்ளன...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழகத்தில் இராமநாதபுரம் வழியாக ஒரு கோடி இந்திய ரூபா பெறுமதியான 290 கிலோ கிராம் கஞ்சாவை இலங்கைக்கு கடத்த முயன்ற இரு இளைஞர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். </p><p>

இராமநாதபுரம் மாவட்டம் பிரப்பன்வலசை பகுதியில் இருந்து படகில் இலங்கைக்கு கஞ்சா கடத்த சிலர் திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/062e9403-b71a-4ac9-b0e1-de764c636e24/26-6a770d53db9dc.webp' /></p><p> </p><p>

இதனையடுத்து இராமேஸ்வரம் உட்கோட்ட குற்றப்பிரிவு பொலிஸார் பிரப்பன்வலசை கடற்கரை அருகே நேற்று அதிகாலை 2:00 மணிக்கு கண்காணிப்பில் ஈடுபட்டனர். </p><p>

அப்போது அங்கு வந்த வேன் ஒன்றை மடக்கி சோதனை செய்த போது 290 கிலோ கிராம் கஞ்சா பொதிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. </p><p>

குறித்த கஞ்சா தொகை மதுரையில் இருந்து கடத்தி வரப்பட்டிருந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. </p><p>

பிரப்பன்வலசை கடற்கரை பகுதியில் காற்று குறைவாக வீசும் நேரத்தில் படகில் இந்த கஞ்சா தொகையை இலங்கைக்கு கடத்தி செல்ல முயன்றதும் தெரியவந்துள்ளது. </p><p>

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-08T11:15:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மனிதாபிமானத்துடன் பின்வாங்கிய விடயங்களை கோழைத்தனம் என நினைக்காதீர்! நாமலின் அச்சுறுத்தும் பேச்சு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-rajapaksa-aragalaya-in-sri-lanka-1786187244"></link>
            <id>https://tamilwin.com/article/namal-rajapaksa-aragalaya-in-sri-lanka-1786187244</id>
            <summary type="text">&amp;nbsp; நாம் எப்போதும் இந்த நாட்டு மக்களை சமூக பேரழிவுகளிலிருந்து மீட்கப் பணியாற்றியவர்கள். மக்களின் நலன் கருதியே சில விடயங்களில் நாம் ஓரடி பின்வாங்கின...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; நாம் எப்போதும் இந்த நாட்டு மக்களை சமூக பேரழிவுகளிலிருந்து மீட்கப் பணியாற்றியவர்கள். மக்களின் நலன் கருதியே சில விடயங்களில் நாம் ஓரடி பின்வாங்கினோம்.</p><p>அவை மனிதாபிமானத்துடன் எதிர்கொண்டவை கோழைத்தனமாகக் கருத வேண்டாம் என மொட்டுக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
</p><p>மொட்டுக் கட்சியின் பிரசாரக் கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே இதனை தெரிவித்துள்ளார். மேலும் கருத்து தெரிவித்த அவர்,</p><h2>
</h2><p></p><h2>பின்வாங்கிய சம்பவம்</h2><p>அரகலய போராட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச போராட்டக்காரர்களுக்கு கை வைக்கவில்லை. </p><p>கடந்த நாட்களில் இந்தியாவில் எதிர்கொண்ட விதத்தை நாம் சமூக ஊடகங்களில் பார்த்தோம். பங்களாதேஷ் -நேபாளம் எதிர்கொண்ட விதத்தைப் பார்த்தோம்.
நாம் அரகலய போராட்டத்தில் ஓரடி பின்வாங்கினோம்.</p><p>உயிர்களைப் பறித்து, பிள்ளைகளைக் கொன்று, அந்தப் உடல்கள் மீது அரசாங்கத்தைப் பாதுகாக்க முனையவில்லை செய்யவும் மாட்டோம். </p><p>நாம் மனிதாபிமானத்தோடு பிரச்சினையை எதிர்கொண்டதை கோழைத்தனமாகப் பார்க்க வேண்டாம். கோழைத்தனமாகக் கருத வேண்டாம்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4f31e8f9-7ae5-4681-8905-22739ce7c4f9/26-6a770dee79aba.webp' /></p><p>நாம் எப்போதும் இந்த நாட்டு மக்களை சமூக பேரழிவுகளிலிருந்து மீட்கப் பணியாற்றியவர்கள். பயங்கரவாதத்திலிருந்து மீட்டோம்.</p><p>கோவிட்-19 தொற்றுநோயின் போது, குறைந்தபட்ச உயிரிழப்புகளுடன் இந்த நாட்டு மக்களின் உயிர்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுத்தோம்.
</p><p>அரகலய போராட்டத்தின் போது இராணுவத்தையும் பொலிஸாரையும் பயன்படுத்தி, ஆயிரக்கணக்கானோரைக் படுகொலை செய்து அரசாங்கத்தைக் காப்பாற்ற முயற்சிக்கும் வாய்ப்பு இருந்தது. </p><p>நாம் அப்படிச் செய்திருந்தால் இன்று நாமல் ராஜபக்ச இங்கே நிற்கும் சூழ்நிலை இல்லாமல் போயிருக்கலாம். </p><p>
மக்களின் பக்கத்தில் நின்று, ஒரு சமூக பேரழிவிலிருந்து நாட்டின் இளைஞர்களை மீட்க நாம் ஓரடி பின்வாங்கியதை கோழைத்தனம் என்று அரசாங்கமும் அரசாங்கத்துடன் தொடர்புடையவர்களும் நினைத்தால், அவர்களுக்குத் தவறிவிட்டது என்பதையும் நினைவூட்ட விரும்புகின்றேன் என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-08T11:12:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[கேரளாவில் செம வசூல் செய்த டாப் 10 தமிழ் படங்களின் லிஸ்ட் இதோ...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/tamil-movies-top-10-bo-list-in-kerala-1786185337"></link>
            <id>https://cineulagam.com/article/tamil-movies-top-10-bo-list-in-kerala-1786185337</id>
            <summary type="text">டாப் 10தமிழ் சினிமா, காலத்திற்கு ஏற்ப மாறிக்கொண்டே வருகிறது. 80கள் ஒரு விதமாக இருந்தது, 90களில் புதுப்புது நடிகர்கள், இசையமைப்பாளர்கள், புது தொழில்நுட...</summary>
            <content type="html"><![CDATA[<h2>டாப் 10</h2><p>தமிழ் சினிமா, காலத்திற்கு ஏற்ப மாறிக்கொண்டே வருகிறது. 80கள் ஒரு விதமாக இருந்தது, 90களில் புதுப்புது நடிகர்கள், இசையமைப்பாளர்கள், புது தொழில்நுட்பம் என பல வந்தது. </p><p>20களில் எல்லாமே மாறிவிட்டது என்று தான் கூற வேண்டும். முன்பெல்லாம் நடிகர்களை பார்த்து மக்கள் திரையரங்கிற்கு படங்கள் பார்த்து சென்றவர், இப்போதும் அந்த டிரண்ட் இருந்தாலும் கதைக்காக திரையரங்கம் வருபவர்கள் தான் அதிகமாகியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4fd3fc15-e768-43c6-8ca9-ee5cdc0ca25d/26-6a77094ff347e.webp' /></p><p> </p><p>தமிழ் படங்களுக்கு தமிழகத்தை தாண்டி மற்ற மாநிலங்களிலும் அதிக வரவேற்பு உள்ளது. கேரளாவை எடுத்துக்கொண்டால் அது நடிகர் விஜய்யின் கோட்டை என்றே கூறலாம்.</p><p> மலையாள சினிமாவின் முன்னணி நடிகர்களான மம்முட்டி, மோகன்லாலை விட விஜய்க்கே அங்கு ரசிகர்கள் கூட்டம் அதிகம். </p><p>சரி இப்போது நாம் கேரளாவில் இதுவரை அதிக வசூல் செய்த டாப் 10 தமிழ் படங்களின் விவரத்தை காண்போம்.
</p><ol><li>லியோ- ரூ. 60 கோடி</li><li>
ஜெயிலர்- ரூ. 57.5 கோடி
</li><li>விக்ரம்- ரூ. 40 கோடி
</li><li>பொன்னியின் செல்வன் 1- ரூ. 25 கோடி</li><li>
பிகில்- ரூ. 19.6 கோடி</li><li>
ஐ- ரூ. 19.3 கோடி</li><li>
பொன்னியின் செல்வன் 2- ரூ. 19.1 கோடி</li><li>
மெர்சல்- ரூ. 19 கோடி
</li><li>2.0- ரூ. 19 கோடி
</li><li>வேட்டையன்- ரூ. 16.8 கோடி&nbsp;</li></ol>]]></content>
            <updated>2026-08-08T11:10:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[மூதூரில் இடம்பெற்ற 17 தொண்டாளர்கள் படுகொலை நினைவேந்தல்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/commemoration-17-aid-workers-killed-in-2006-muthur-1786186107"></link>
            <id>https://ibctamil.com/article/commemoration-17-aid-workers-killed-in-2006-muthur-1786186107</id>
            <summary type="text">2006 ஆம் ஆண்டு இடம்பெற்ற மூதூர் பட்டினிக்கு எதிரான சர்வதேச அமைப்பின்
(Action against hunger) தன்னார்வ தொண்டாளர்கள் 17 பேரின் படுகொலைச்
சம்பவத்தின் 2...</summary>
            <content type="html"><![CDATA[<p>2006 ஆம் ஆண்டு இடம்பெற்ற மூதூர் பட்டினிக்கு எதிரான சர்வதேச அமைப்பின்
(Action against hunger) தன்னார்வ தொண்டாளர்கள் 17 பேரின் படுகொலைச்
சம்பவத்தின் 20வது ஆண்டு நினைவேந்தல் மூதூரில் முன்னெடுக்கப்பட்டது.</p><p> உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் பொதுமக்களின் ஏற்பாட்டில் மூதூரிலுள்ள தனியார் மண்டபத்தில் இன்று (08) காலை இந்த நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.
</p><p>இந்நிகழ்வின் போது உயிரிழந்த 17 தன்னார்வ தொண்டு நிறுவன ஊழியர்களின்
உருவப்படத்திற்கு மலர்தூவி, தீபமேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.</p><h2>நினைவேந்தல் நிகழ்வு</h2><p>

அத்தோடு படுகொலை செய்யப்பட்ட இடத்திற்குச் சென்று மெழுகுவர்த்தி ஏற்றி
நினைவஞ்சலியும் செலுத்தப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/72370ca8-f866-4659-8abd-b1367ca71a93/26-6a770d666193f.webp' /></p><p>
</p><p>
இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான ஸ்ரீ நேசன், வைத்தியர் ஸ்ரீநாத் மற்றும் வேலன் சுவாமிகள், இந்து மத தலைவர்கள் பொதுமக்கள்
என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-08T11:04:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் இரவு நேரங்களில் மருத்துவர்களின் பரிதாப நிலை - கவலையில் அநுர அரசு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/doctors-sleeping-the-vehicles-1786169153"></link>
            <id>https://tamilwin.com/article/doctors-sleeping-the-vehicles-1786169153</id>
            <summary type="text">இலங்கையில பல பகுதிகளில் 50க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் இரவு நேரங்களில் தமது வாகனங்களிலேயே உறங்குகின்றமை தொடர்பில் தெரிய வந்துள்ளதாக சுகாதாரத்துறை வட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில பல பகுதிகளில் 50க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் இரவு நேரங்களில் தமது வாகனங்களிலேயே உறங்குகின்றமை தொடர்பில் தெரிய வந்துள்ளதாக சுகாதாரத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. </p><p>

தங்குமிடப் பிரச்சினைகள் காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. </p><p>

சில மருத்துவர்கள் அவ்வாறு செயற்படுவது தொடர்பில் தனக்கும் தகவல்கள் கிடைத்துள்ளதாக&nbsp; சுகாதார பிரதி அமைச்சர் வைத்தியர் ஹன்சக விஜேமுனி குறிப்பிட்டுள்ளார்.</p><h2><b>அரசாங்கம் முன்னுரிமை</b></h2><p> 

இதுவொரு கவலையான நிலைமை என அவர் சுட்டிக்காட்டினார். மருத்துவர்களுக்கான விடுதி மற்றும் போக்குவரத்துப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அரசாங்கம் முன்னுரிமை வழங்கி வேலைத்திட்டமொன்றைச் செயற்படுத்தி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ac29f30c-8384-4b31-ac58-d264b5f25aba/26-6a770c31ba11f.webp' /></p><p>வசதிகளை மேம்படுத்துவது தொடர்பில் கிடைக்கப்பெற்றுள்ள சில யோசனைகள் தற்போது ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் பிரதி அமைச்சர் தெரிவித்தார். </p><p>

அனைத்து மருத்துவர்களும் சேவையாற்றுவதற்கு பொருத்தமான சுற்றுச்சூழலை ஏற்படுத்துவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும் எனவும் ஹன்சக விஜேமுனி மேலும் தெரிவித்துள்ளார்.</p><p> </p><h3><b>

சுகாதார அமைச்சு</b></h3><p>இதேவேளை கடந்த ஐந்து ஆண்டுகளில் 3,791 விசேட வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a057590a-c0c0-46f4-807a-4736da88983d/26-6a770c326c8e5.webp' /></p><p>இது தவிர, 1,491 மருத்துவர்கள் சம்பளமற்ற விடுப்பில் இருப்பதாகவும் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. </p>]]></content>
            <updated>2026-08-08T11:00:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஏற்கெனவே நிலைப்பாடு தெளிவாகிவிட்டது... கூட்டத்துக்கான தேவை என்ன? - கனிமொழி விமர்சனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/kanimozhi-asks-what-is-the-need-for-meeting-by-cm-1786181266"></link>
            <id>https://ibctamilnadu.com/article/kanimozhi-asks-what-is-the-need-for-meeting-by-cm-1786181266</id>
            <summary type="text">மத்திய அரசின் தொகுதி மறுவரையறை மசோதா தொடர்பாக தமிழ்நாட்டின் அரசியல் பிரதிநிதித்துவம் மற்றும் மாநில உரிமைகள் குறித்து விவாதிக்க முதலமைச்சர் ஜோசப் விஜய்...</summary>
            <content type="html"><![CDATA[<p>மத்திய அரசின் தொகுதி மறுவரையறை மசோதா தொடர்பாக தமிழ்நாட்டின் அரசியல் பிரதிநிதித்துவம் மற்றும் மாநில உரிமைகள் குறித்து விவாதிக்க முதலமைச்சர் ஜோசப் விஜய் அழைப்பு விடுத்திருந்த அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் கூட்டத்தை திமுகவும் அதிமுகவும் புறக்கணித்துள்ளன.
</p><p>
சென்னை சேப்பாக்கம் கலைவாணர் அரங்கத்தில் இன்று பிற்பகல் 3 மணிக்கு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த இந்தக் கூட்டத்தில் பங்கேற்க அனைத்துக் கட்சி எம்.பி.க்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d48a0d64-3209-4f72-9e06-ec1c9d28c860/26-6a76fa7e0ff01.webp' /></p><p>
</p><p>
இந்நிலையில், மேகதாது அணை விவகாரம் தொடர்பாகவும் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்த வேண்டும் என திமுக நிபந்தனை விதித்தது. </p><p>மேகதாது விவகாரத்தில் மவுனம் காத்துவிட்டு தொகுதி மறுவரையறை குறித்து மட்டும் கூட்டம் நடத்துவதை ஏற்க முடியாது என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் விமர்சித்திருந்தார்.

இதனிடையே, திமுகவும் கூட்டத்தை புறக்கணிப்பதாக அக்கட்சியின் எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.தவெக நடத்தும் அரசியல் நாடகத்தில் திமுக பங்கேற்காது என்றும் அவர் கூறியுள்ளார்.</p><h2>கனிமொழி எம்.பி பதிவு&nbsp;</h2><p><b>
கனிமொழி தனது எக்ஸ் பதிவில், </b></p><p>தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவத்தைப் பாதுகாப்பது மற்றும் நியாயமான தொகுதி மறுவரையறை தொடர்பாக திமுக ஏற்கெனவே எடுத்துள்ள நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை எனத் தெரிவித்துள்ளார்.</p><p> மேலும், தற்போதைய நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் தொகுதி மறுவரையறை சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்ற உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை என்றும், திருத்தப்பட்ட சட்டமுன்வடிவும் இன்னும் கிடைக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.</p><p>

இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கெனவே நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டங்களில் தமிழ்நாட்டின் நிலைப்பாடு தெளிவாகத் தெரிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், மீண்டும் ஒரு கூட்டம் நடத்த வேண்டிய அவசியம் என்ன என்றும் கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார்.
</p><p>
மேலும், காவிரி விவகாரம் தொடர்பாக போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், மேகதாது அணைக்கு எதிராக அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்தாமல், காவிரி பிரச்சினையைத் திசைதிருப்பும் நோக்கில் இன்றைய கூட்டம் நடத்தப்படுவதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். </p><p>மேகதாது அணைக்கு எதிராக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை தமிழ்நாட்டு எம்.பி.க்களுடன் இணைந்து மத்திய நீர்வளத்துறை அமைச்சரிடம் வழங்குவதற்கு மாநில அரசு தயாரா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.</p><p>

அதிமுகவும் கூட்டத்தில் பங்கேற்பது தொடர்பாக எந்த அறிவிப்பும் வெளியிடாத நிலையில், அக்கட்சியின் எம்.பி.க்கள் டெல்லியில் இருப்பதால் கூட்டத்தை புறக்கணிப்பது உறுதியாகியுள்ளது.</p><p>

இதனிடையே, திமுக மற்றும் அதிமுக கூட்டத்தை புறக்கணித்திருப்பது புதிய அரசியல் கூட்டணிக்கான தொடக்கமாக இருக்கலாம் என அமைச்சர் ராஜ்மோகன் விமர்சித்துள்ளார். </p><p>மாநில உரிமைகள் தொடர்பான பிரச்சினைகளில் இரு கட்சிகளுக்கும் அக்கறை இல்லை என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
</p><p>
மேலும், தொகுதி மறுவரையறை தொடர்பான கூட்டம் தற்போது தேவையில்லை என்றால், கடந்த ஆண்டு இதே விவகாரத்தில் கூட்டம் நடத்தியது ஏன் என அமைச்சர் அருண்ராஜ் கேள்வி எழுப்பியதுடன், திமுக பாஜக பக்கம் செல்லக் காத்திருப்பதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.</p>]]></content>
            <updated>2026-08-08T11:00:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் தலைக்கவசத்தால் சிக்கிய பலர் ; காத்திருக்கும் சட்ட நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/many-caught-in-sri-lanka-over-helmet-violations-1786185270"></link>
            <id>https://jvpnews.com/article/many-caught-in-sri-lanka-over-helmet-violations-1786185270</id>
            <summary type="text">நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட அதிரடிச் சோதனைகளின் போது மொத்தம் 431 தரமற்ற மோட்டார் சைக்கிள் தலைக்கவசங்கள் நுகர்வோர் விவகார அதிகாரசபையினால் பறிமுதல் ச...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட அதிரடிச் சோதனைகளின் போது மொத்தம் 431 தரமற்ற மோட்டார் சைக்கிள் தலைக்கவசங்கள் நுகர்வோர் விவகார அதிகாரசபையினால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
</p><p style="text-align: justify; ">

இந்தத் தரமற்ற தலைக்கவசங்களைப் பயன்படுத்திய நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரசபை தெரிவித்துள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/31a79350-cf1a-4e85-8b89-ea1eed9461b0/26-6a770637c331e.webp' /></p><h2 style="text-align: justify; ">அதிரடிச் சோதனை</h2><p>
</p><p style="text-align: justify; ">
இதேவேளை, 3,500 தரமற்ற தலைக்கவசங்களை உற்பத்தி செய்வதில் ஈடுபட்ட இரண்டு நிறுவனங்களுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபையின் தலைவர் ஹேமந்த சமரகோன் தெரிவித்துள்ளார்.
</p><p style="text-align: justify;">
வருடாந்தம் வீதிப் போக்குவரத்து விபத்துக்கள் காரணமாக 2,500 முதல் 2,700 வரையான நபர்கள் உயிரிழப்பதாக வீதிப் பாதுகாப்பு தொடர்பான தேசிய சபையின் தலைவர் மஞ்சுள குலரத்ன தெரிவித்துள்ளார்.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;">

இந்த உயிரிழப்புகளில் சுமார் 1,000 மரணங்கள் மோட்டார் சைக்கிள் விபத்துக்களினாலேயே ஏற்படுகின்றன என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.</p><p style="text-align: justify;"></p>]]></content>
            <updated>2026-08-08T10:50:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறைச்சாலைகளில் மோதல் : தமிழ் அரசியல் கைதிகளின் பாதுகாப்பு தொடர்பில் அச்சம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/fears-over-the-safety-of-tamil-political-prisoners-1786185959"></link>
            <id>https://ibctamil.com/article/fears-over-the-safety-of-tamil-political-prisoners-1786185959</id>
            <summary type="text">இலங்கை சிறைச்சாலைகளில் இடம்பெற்ற அசாதாரண சூழ்நிலைகளால் தமிழ் அரசியல்
கைதிகளின் பெற்றோர் மிகுந்த அச்சத்தின் மத்தியில், இன்றையதினம்(08) கொழும்பு
மகசின...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை சிறைச்சாலைகளில் இடம்பெற்ற அசாதாரண சூழ்நிலைகளால் தமிழ் அரசியல்
கைதிகளின் பெற்றோர் மிகுந்த அச்சத்தின் மத்தியில், இன்றையதினம்(08) கொழும்பு
மகசின் சிறைச்சாலை மற்றும் வெலிக்கடை சிறைச்சாலைகளுக்கு சென்று தமது பிள்ளைகளை
பார்வையிட்டனர். இதன்போது குரல் அற்றவர்களின் குரல் அமைப்பின்
செயற்பாட்டாளரும் முன்னைநாள் அரசியல் கைதியுமான முருகையா கோமகனும்
உடனிருந்தார்.</p><p>

இது குறித்து முருகையா கோமகன் கருத்து தெரிவிக்கையில்,</p><p>

தமிழ் அரசியல் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள புதிய மகசின் சிறைச்சாலையில்
அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டதைத் தொடர்ந்து அங்கே ஒரு மரணமும் சம்பவித்தது. அங்கே
தமிழ் அரசியல் கைதிகள் நால்வர் தடுத்து வைக்கப்பட்டுள்ளளனர். </p><h2>சிறைகளில் தமிழ் அரசியல் கைதிகள்</h2><p>அதேபோல வெலிக்கடை
சிறைச்சாலையிலும் தமிழ் அரசியல் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

அந்த சிறைச்சாலைகளில் தற்போது காவல்துறை மற்றும் இராணுவத்தினர் ஆகியோர்
பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/96b944e0-a14f-4ce5-95fe-212aaca248e1/26-6a7708e87e34b.webp' /></p><p> </p><p>இருப்பினும் அரசியல் கைதிகளின்
பாதுகாப்பு என்பது தொடர்ச்சியாக கேள்விக்குறியாகத்தான் உள்ளது. கடந்த
காலங்களில் அரசியல் கைதிகளுக்கு சிறைகளில் இடம்பெற்ற சம்பவங்களை
நினைக்கும்போது அச்சம் கொள்ள தோன்றுகிறது. பெற்றோரும் அங்கு உள்ள கைதிகளும்
அச்சமான சூழ்நிலையில் உள்ளார்கள்.</p><p>&nbsp;இந்த நிலையை கருத்தில் கொண்டு சிறையில் நீண்ட காலமாக இருக்கின்ற தமிழ் அரசியல்
கைதிகளை விடுதலை செய்ய வேண்டும். அதேவேளை அவர்களுடைய பாதுகாப்பு
உறுதிப்படுத்தப்பட வேண்டும்.</p><p></p><h2>அரசியல் கைதிககளின் கோரிக்கை</h2><p>
</p><p>
ஜனாதிபதி தேர்தல் பிரசார நடவடிக்கைகளின்போது, அரசியல் கைதிகளை விடுதலை
செய்வதாக வாக்குறுதிகள் வழங்கப்பட்டது. அத்துடன் தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூட
இந்த விடயம் குறிப்பிடப்பட்டது.இந்த விடயத்தை எம்மிடம் நினைவுபடுத்திய அரசியல் கைதிகள், இது குறித்து
ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டு செல்லுமாறும், தமது விடுதலையை
உறுதிப்படுத்துமாறும் கூறியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ac5e81ff-3780-4605-9b4e-78b3cc75fe84/26-6a7708e930ee1.webp' /></p><p>
எனவே இதனை கருத்தில் கொண்டு அரசாங்கமானது தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய
வேண்டும். அதேவேளை தமிழ் மக்களது வாக்குகளை பெற்று பதவிக்கு வந்தவர்கள்
வெறுமனே பார்வையாளர்களாக இருக்காமல் அவர்களது விடுதலைக்காக அரசுக்கு அழுத்தம்
கொடுக்க வேண்டும்.</p><p></p><h2>உறவுகளுடன் சேர்ந்து வாழ வழி செய்ய வேண்டும்</h2><p>
</p><p>
அரசியல் கைதிகள் தொடர்பான விடயத்தை கையாள்வதற்காக ஒரு குழுவொன்று
நியமிக்கப்பட்டது. அந்த குழுவின் அறிக்கைகள் ஏற்கனவே நீதி அமைச்சுக்கு
வழங்கப்பட்டது. ஆனால் அதற்குரிய நடவடிக்கை தாமதப்படுத்தப்படுகிறது.

அசம்பாவிதங்களை கட்டுப்படுத்துவதற்கு, அந்த குழு முன்வைத்த விடயங்களை விரைந்து
நடைமுறைப்படுத்தினால் ஆரோக்கியமானதாக இருக்கும். அந்த குழுவின் அறிக்கைக்குள்
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை உள்ளடக்கப்பட்டிருக்க வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/287200ce-336d-4619-ba1c-650852349fde/26-6a7708e9d5fc4.webp' /></p><p>
</p><p>
அதேவேளை ஏனைய குற்றச்சாட்டுகளின் கீழ் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள
ஏனைய கைதிகளை சிறைச்சாலை கட்டளை சட்டத்தின் ஊடாக புனர்வாழ்வுக்கு
உட்படுத்தியோ, அவர்களது நன்னடத்தை அடிப்படையிலேயோ விடுதலை செய்து, அவர்களும்
அவர்களது உறவுகளுடன் சேர்ந்து வாழ வழி செய்ய வேண்டும்.
</p><p>
அவர்கள் உளரீதியாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். குடும்பத்துடன் மீண்டும் சேர்ந்து
வாழ வேண்டும் என்ற எண்ணத்துடன் இருக்கின்றார்கள். நாங்களும் சிறையில்
வாடியவர்கள் என்ற ரீதியில் எமக்கு அதன் வேதனை தெரியும். எனவே அரசாங்கம் இது
குறித்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-08T10:46:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[11 கோடி ரூபாயை குப்பையில் வீசிய பெண் ; இறுதியில் காத்திருந்த ட்விஸ்ட்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/woman-throws-rs-110-million-in-trash-1786173364"></link>
            <id>https://canadamirror.com/article/woman-throws-rs-110-million-in-trash-1786173364</id>
            <summary type="text">உலகமெங்கும் உள்ள பெரும்பாலான மக்களுக்கு லாட்டரி சீட் வாங்கும் பழக்கம் இருக்கிறது. ஏனெனில் அதிர்ஷ்டம் நமக்கு அடித்து நாம் லட்சாதிபதியாகவோ, கோடீஸ்வரனாகவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>உலகமெங்கும் உள்ள பெரும்பாலான மக்களுக்கு லாட்டரி சீட் வாங்கும் பழக்கம் இருக்கிறது. ஏனெனில் அதிர்ஷ்டம் நமக்கு அடித்து நாம் லட்சாதிபதியாகவோ, கோடீஸ்வரனாகவோ மாறிவிடமாட்டோமோ என்கிற ஆசையும் எதிர்பார்ப்புமே இதற்கு காரணம்.</p><p> இந்நிலையில்தான், தெற்கு இத்தாலியில் 11 கோடி விழுந்த லாட்டரி சீட்டை ஒரு பெண் தெரியாமல் குப்பையில் விசிய சம்பவம் நடந்திருக்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b1f5552a-d7cc-4fc2-a879-c68c9167e4cc/26-6a76d7b59d13e.webp' /></p><p> </p><p>சமீபத்தில் ஒரு பெண் லாட்டரி சீட்டை வாங்கியிருக்கிறார். அதன்பின் தெரியாமல் அந்த லாட்டர் சீட்டை குப்பையில் போட்டுவிட்டார். </p><p>தினமும் வீட்டின் முன்பு குப்பை எடுத்து செல்பவர்கள் அதை எடுத்து சென்றுவிட்டனர்.
</p><p>
அவர் தூக்கி எறிந்த அந்த லாட்டரி சீட்டுக்கு 11 கோடி லாட்டரி விழுந்துவிட்டது. </p><p>குப்பைகளை எடுக்கும் நிறுவனத்தை தொடர்பு கொண்டு இரண்டு நாட்களாக தேடி அந்த லாட்டரி சீட்டை ஒரு வழியாக கண்டுபிடித்து விட்டார்கள். </p><p>தேடுவதற்கான மொத்த செலவையும் அந்த பெண் ஏற்றுக்கொள்வதாக கூறியிருக்கிறார்.</p>]]></content>
            <updated>2026-08-08T10:43:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[சீனா நோக்கி நகரும்... ஜப்பானைப் புரட்டிப் போட்ட டால்பின் புயல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/typhoon-dolphin-hits-japan-1786185655"></link>
            <id>https://news.lankasri.com/article/typhoon-dolphin-hits-japan-1786185655</id>
            <summary type="text">ஜப்பானின் தெற்குத் தீவான ஒகினாவாவைத் தாக்கிய டால்பின் புயல், தற்போது கிழக்கு சீனாவை நோக்கி நகர்கிறது.
ஜப்பானின் தெற்குத் தீவான ஒகினாவாவை டால்பின் புய...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜப்பானின் தெற்குத் தீவான ஒகினாவாவைத் தாக்கிய டால்பின் புயல், தற்போது கிழக்கு சீனாவை நோக்கி நகர்கிறது.
</p><p>ஜப்பானின் தெற்குத் தீவான ஒகினாவாவை டால்பின் புயல் தாக்கியதில், ஐந்து பேர் காயமடைந்தனர் மற்றும் 14,000 கட்டிடங்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது.</p><h2>விமானச் சேவைகள் ரத்து</h2><p> </p><p>
குறித்த புயலானது தற்போது கிழக்கு சீனாவை நோக்கி நகர்ந்து வருகிறது. இதனால், துறைமுகங்கள், பாடசாலைகள் மற்றும் சுற்றுலாத் தலங்களை அதிகாரிகள் மூடியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/708fb1da-32d5-4bc5-9ffc-8e0ebd8abc73/26-6a7707b9abe7a.webp' /></p><p> </p><p>ஜப்பானில் டால்பின் புயலால் ஒகினாவா தீவும், ககோஷிமா மாகாணத்தில் உள்ள அமாமி தீவும் முக்கியமாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளாகும். </p><p>ஐந்து முதியவர்கள் உயிருக்கு ஆபத்தில்லாத காயங்களுடன் தப்பியதாகவும், அவர்களில் மூவர் பலத்த காற்றின் காரணமாகக் கீழே விழுந்ததாக ஒகினாவா மாகாண நிர்வாகம் தெரிவித்துள்ளது. </p><p>டால்பின் புயல் காரணமாக ஒகினாவா, சீனா மற்றும் தைவானில் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஹொங்ஹொங்கின் சீன வெள்ளை டால்பினின் பெயரால் பெயரிடப்பட்ட இந்தப் புயல், கிழக்கு ஆசியாவில் வரலாறு காணாத வெப்ப அலை நிலவி வரும் வேளையில் உருவாகியுள்ளது.</p><p> ஜப்பானிய மிருகக்காட்சிசாலை ஒன்றில் மூன்று சிங்கங்கள் வெப்பத்தாக்குதல் காரணமாக மரணமடைந்ததாக சந்தேகிக்கப்படும் நிலையில், தென் கொரியாவில் நிலவிய கடும் வெப்பநிலையே 20-க்கும் மேற்பட்ட சிங்கங்களின் இறப்புக்குக் காரணமாகக் கூறப்படுகிறது.</p><p></p><p> ஜூலை 26 அன்று உருவான ஒரு வெப்பமண்டல காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்திலிருந்து உருவான டால்பின் புயல், பசிபிக் பெருங்கடலைக் கடந்து பல ஆயிரம் கிலோமீற்றர் பயணித்து, ​​மத்திய பசிபிக் பெருங்கடலின் திறந்த நீர்ப்பரப்பின் மீது மணிக்கு 30 மைல் வேகத்தில் நகர்ந்துகொண்டிருந்தது. </p><p>அதன் பயணத்தின்போது, ​​அது முதலில் வெப்பமண்டலப் புயலாகவும், பின்னர் தீவிர வெப்பமண்டலப் புயலாகவும் வலுவடைந்தது; அதன்பின் ஜூலை 28 அன்று அது ஒரு சூறாவளியாகவும், பின்னர் மிக வலிமையான சூறாவளியாகவும் உருவெடுத்தது. </p><p>சனிக்கிழமையன்று, கிரீன்விச் நேரம் அதிகாலை 03:00 மணி நிலவரப்படி, டால்பின் புயலானது ஒகினாவாவில் உள்ள குமே தீவிலிருந்து சுமார் 100 மைல் வடமேற்கே, மணிக்கு 9 மைல் வேகத்தில் வடமேற்கு நோக்கி நகர்ந்துகொண்டிருந்தது என்று ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. </p><p>அதன் அதிகபட்ச தொடர்ச்சியான காற்றின் வேகம் மணிக்கு 100 மைல் ஆகவும், திடீர் காற்று வீச்சுகள் மணிக்கு 134 மைல் வரையும் இருந்தன.</p><h2>மழையும் பலத்த காற்றும்</h2><p> </p><p>புயல் சீனாவின் கிழக்குக் கடற்கரையை நோக்கி தற்போது நகர்ந்து வருவதால், தேசிய அதிகாரிகள் மூன்றாம் நிலை அவசரக்கால நடவடிக்கையை அறிவித்துள்ளனர்; இது மிகக் குறைந்த அளவிலிருந்து இரண்டாவது நிலையாகும்.
</p><p>சீன தேசிய வானிலை ஆய்வு மையத்தின் தகவலின்படி, டால்பின் புயல் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் முதல் திங்கட்கிழமை அதிகாலை வரை, சீனாவின் கிழக்கு மற்றும் தெற்குக் கடற்கரைப் பகுதிகளில், பெரும்பாலும் ஜெஜியாங் மாகாணத்தின் ஷௌஷான் நகருக்கும் ஃபுஜியான் மாகாணத்தின் ஃபுடிங் நகருக்கும் இடையே கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. </p><p>ஷாங்காய் மற்றும் அண்டை மாகாணங்களின் சில பகுதிகள் உட்பட கிழக்குச் சீனாவின் பல பகுதிகளில், ஆகஸ்ட் 12-ஆம் திகதி வரை மழையும் பலத்த காற்றும் வீசக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/82cc0104-efca-485c-86a0-1536c37beaff/26-6a7707ba5d4a1.webp' /></p><p> </p><p>மேலும், கிழக்கு ஜெஜியாங் (Zhejiang) மாகாணத்தின் சில பகுதிகளில் 600 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை பெய்யக்கூடும். ஜெஜியாங் மாகாணம் தனது கடலோரப் பகுதி புயல் எச்சரிக்கையை மிக உயர்ந்த நிலைக்கு உயர்த்தியதுடன், துறைமுகச் செயல்பாடுகளை நிறுத்திவைத்தது மற்றும் 162 பயணிகள் படகுச் சேவைகளையும் இடைநிறுத்தியது.
</p><p>இதற்கிடையில், சூறாவளி காரணமாகத் தைவான் 63 சர்வதேச விமானச் சேவைகளை ரத்து செய்துள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. </p><p>வார இறுதியில் தீவின் வடக்குப் பகுதிகளில் பலத்த மழை பெய்யக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், சனிக்கிழமை நிலவரப்படி மக்கள் வெளியேற்றப்பட வேண்டும் என்று அதிகாரிகள் உத்தரவிடவில்லை.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-08T10:38:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை சிறைகளில் உள்ள இந்திய கடற்றொழிலாளர்களின் பாதுகாப்பு : விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/security-of-indian-fishermen-in-sri-lankan-prisons-1786182678"></link>
            <id>https://ibctamil.com/article/security-of-indian-fishermen-in-sri-lankan-prisons-1786182678</id>
            <summary type="text">இலங்கை சிறைகளில் உள்ள தமிழக கடற்றொழிலாளர்களின் உயிருக்கான உத்தரவாதங்களை இந்திய - இலங்கை அரசுகள் உறுதிப்படுத்த வேண்டும் என இந்திய தேசிய பாரம்பரிய கடற்ற...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை சிறைகளில் உள்ள தமிழக கடற்றொழிலாளர்களின் உயிருக்கான உத்தரவாதங்களை இந்திய - இலங்கை அரசுகள் உறுதிப்படுத்த வேண்டும் என இந்திய தேசிய பாரம்பரிய கடற்றொழிலாளர்கள் கூட்டமைப்பின் தலைவர் சே.நல்லதம்பி இந்திய வெளியுறவு துறை அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.</p><p>மின்னஞ்சல் ஊடாக அவர் முன்வைத்த கோரிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

இலங்கை கடற்பரப்பிற்குள் எல்லை தாண்டிய மீன்பிடியில் ஈடுபட்டதான
குற்றச்சாட்டுகளில் இலங்கையின் பல சிறைகளிலும் தமிழக கடற்றொழிலாளர்கள் தடுத்து
வைக்கப்பட்டுள்ளனர். </p><p>இதில் பலர் இராமேஸ்வரத்தை சேர்ந்த கடற்றொழிலாளர்கள். இது இலங்கை
சட்டதிட்டத்திற்கு உள்பட்ட விடயமாகினும் கடற்றொழிலாளர்கள் இந்திய கடற்றொழிலாளர்கள் என்பதனை
எவரும் மறுக்க முடியாது.</p><p></p><h2>நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற வன்முறை</h2><p>
</p><p>
கடந்த ஜூலை மாதத்தில் இலங்கை நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற
வன்முறையில் 30 பேர் உயிரிந்துள்ளதாக இலங்கை செய்திகள் தெரிவிக்கின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0a7d918f-c1bb-4ffe-a985-d5b0c8f4f294/26-6a7703c7b0a9b.webp' /></p><p> </p><p>அதன்
பின்பும் ஒன்றன் பின்பு ஒன்றாக இன்று பல சிறைகளிலும் வன்முறை பரவுவதாகவே
இலங்கை செய்திகள் உள்ளது.

தற்போது கொழும்பு மெகசின் சிறை, குருவிட்ட மற்றும் பல்லன்சேனை சிறைகளில் இந்த
வன்முறை வெடித்ததுள்ளது. இதில் 3 பேர் கொல்லப்பட்டுள்ளார்கள். </p><p>எனவே இலங்கை
சிறைகளில் பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவுகிறது.

வன்முறை இடம்பெறும் சிறைச்சாலைகளிலும் இந்திய கடற்றொழிலாளர்கள் இருக்கக்கூடும் என்ற
அச்சம் தமிழக கடற்றொழிலாளர் குடும்பங்களில் பரவுகின்றது. </p><p>எனவே இலங்கையில் உள்ள இந்திய
 கடற்றொழிலாளர்களின் பாதுகாப்புத் தொடர்பில் எமது ஐயத்தின் தன்மையை இலங்கை மற்றும்
இந்திய அரசுகள் புரிந்துகொண்டு எமது கடற்றொழிலாளர்களின் பாதுகாப்பில் விசேட கவனம்
செலுத்த வேண்டும்.</p><p></p><h2>இந்திய - இலங்கை அரசு</h2><p>
</p><p>
தமிழக கடற்றொழிலாளர்களின் பாதுகாப்பில் ஏதேனும் அசம்பாவிதம் நிகழ்ந்தால் அதற்கான
முழுப் பொறுப்பையும் இந்திய - இலங்கை அரசுகளே ஏற்க வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a1cea1da-0e23-4983-8c81-6073fff1276e/26-6a7703c87739e.webp' /></p><p> </p><p>ஏனெனில் இலங்கையில்
இன்று நாட்டில் உள்ள அனைத்து சிறைகளினதும் பாதுகாப்பை உடன் பலப்படுத்துமாறு
சிறைச்சாலை ஆணையாளர் தெரிவித்துள்ளார்.</p><p>

இந்நிலையில் நேற்று காற்றின் வேகத்தால் கரை ஒதுங்கிய தமிழக கடற்றொழிலாளர்கள் 11 பேர்
யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்கள். இதுபோன்று இலங்கை
உள்ள பல்வேறு சிறைகளில் இந்திய கடற்றொழிலாளர்கள் இருக்கிறார்கள்.
</p><p>
எனவே இந்த விடயத்தில் இந்திய அரசு உடனடியாக தலையிட்டு, இலங்கை சிறையில் உள்ள
இந்திய கடற்றொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என
குறிப்பிடப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-08T10:37:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரஷ்யாவிடமிருந்து எண்ணெய்: எரிவாயு இறக்குமதி செய்யும் நாடுகளுக்கு பேரிடி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/us-senate-passes-russia-sanctions-100-tariffs-1786174038"></link>
            <id>https://ibctamil.com/article/us-senate-passes-russia-sanctions-100-tariffs-1786174038</id>
            <summary type="text">ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவை இறக்குமதி செய்யும் நாடுகளின் பொருட்களுக்கு 100 சதவீதம் வரை வரி விதிக்க வழிவகுக்கும் சட்டமூலம்,...</summary>
            <content type="html"><![CDATA[<p>ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவை இறக்குமதி செய்யும் நாடுகளின் பொருட்களுக்கு 100 சதவீதம் வரை வரி விதிக்க வழிவகுக்கும் சட்டமூலம், அமெரிக்க செனட் சபையில் 86-11 என்ற பெரும்பான்மை வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.</p><p>
"லிண்ட்சே ஒ. கிரஹாம் ரஷ்யா மற்றும் ஈரான் தடைகள் சட்டம் 2026" என அழைக்கப்படும் இந்தச் சட்டமூலம், ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் மற்றும் எரிவாயுவை தொடர்ந்து இறக்குமதி செய்யும் முக்கிய நாடுகளுக்கு எதிராக கடுமையான வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்ள அமெரிக்காவுக்கு வழிவகை செய்கிறது.
</p><p>இந்தச் சட்டம் அமுலுக்கு வந்தால், சீனா மற்றும் இந்தியா உட்பட ரஷ்ய எரிபொருளை இறக்குமதி செய்யும் குறைந்தது ஐந்து முக்கிய நாடுகள் பாதிக்கப்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p></p><h2>100 சதவீதம் வரை வரி&nbsp;</h2><p>
</p><p>மேலும், மேற்கத்திய நாடுகளின் தடைகளைத் தவிர்ப்பதற்காக பயன்படுத்தப்படுவதாகக் கூறப்படும் ரகசிய கடல்சார் விநியோக வலையமைப்புகளையும் இந்தச் சட்டமூலம் குறிவைக்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/81ce5f83-085f-4ad5-bb25-164dd9a19582/26-6a770528de1ae.webp' /></p><p>

செனட் சபையில் 86-11 என்ற வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்டுள்ள இந்தச் சட்டமூலம், அடுத்த கட்டமாக அமெரிக்க பிரதிநிதிகள் சபைக்கு அனுப்பப்பட உள்ளது. </p><p>எனினும், பிரதிநிதிகள் சபையின் கோடைக்கால விடுமுறை காரணமாக, அங்கு இதற்கான வாக்கெடுப்பு ஆகஸ்ட் மாதத்திற்குப் பின்னர், செப்டம்பர் தொடக்கத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
</p><p>ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் போர் நடவடிக்கைகளுக்கு செல்லும் நிதிப் பாய்ச்சலைக் கட்டுப்படுத்துவதே இந்த
நடவடிக்கையின் முக்கிய நோக்கம் என அமெரிக்க அரசியல் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
</p><p>இதனிடையே, இந்தச் சட்டமூலத்தை உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஸெலென்ஸ்கி வரவேற்றுள்ளதுடன், அமெரிக்க செனட் சபைக்கு தனது நன்றியையும் தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-08T10:34:02+00:00</updated>
        </entry>
    </feed>
