<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-09-16T14:15:33+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழீழம் வேண்டாம் ;அர்ச்சுனா எம்பி எம்முடன் இருப்பதில் தவறு இல்லை ; உதய கம்மன்பில]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/udaya-gammanpila-comment-archuna-mp-1789563867"></link>
            <id>https://jvpnews.com/article/udaya-gammanpila-comment-archuna-mp-1789563867</id>
            <summary type="text">&amp;nbsp; நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா, தமிழீழக் கோரிக்கையை எதிர்ப்பதால் அவர் தங்களது மேடைகளில் இருப்பதில் எந்தவொரு தவறும் இல்லை என பிவிதுரு ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா, தமிழீழக் கோரிக்கையை எதிர்ப்பதால் அவர் தங்களது மேடைகளில் இருப்பதில் எந்தவொரு தவறும் இல்லை என பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
</p><p>
ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.&nbsp; &nbsp;இதன்போது அவர்&nbsp; மேலும்&nbsp; கூறுகையில்,</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3c65eaf4-241b-42b4-b250-a82de9217744/26-6aaa93dd3d756.webp' /></p><h2>தங்களது மேடைகளில் வைத்திருப்பது அவசியம்</h2><p>அண்மையில் அனுராதபுரத்தில் இடம்பெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மக்கள் பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா, தான் புலிகளை ஆதரித்த ஒருவராக இருந்தபோதிலும், தமிழீழம் அமையப் பெறுவதை ஒருபோதும் விரும்பவில்லை எனத் தெரிவித்திருந்தார்.</p><p></p><p>

அத்துடன், சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் அனைவரும் ஒற்றுமையாக ஒன்றாக வாழ வேண்டும் என்பதே தனது விருப்பம் என்றும் அர்ச்சுனா குறிப்பிட்டிருந்தார்.
</p><p>
எனவே, தமிழீழத்தை விரும்பிய யாழ்ப்பாணத்திலிருந்து தெரிவான நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர், தற்போது தங்களது மேடையில் ஏறி, ஒருபோதும் ஈழம் கேட்க மாட்டேன் என்றும் மக்களின் ஒற்றுமையே முக்கியம் என்றும் கூறும் போது அவரை ஆதரிக்க வேண்டும்.</p><p></p><p>

அவ்வாறான எண்ணம் கொண்டவர்களைத் தொடர்ந்து தங்களது மேடைகளில் வைத்திருப்பது அவசியம் ” என்று பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில சுட்டிக்காட்டினார்.</p>]]></content>
            <updated>2026-09-16T14:01:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[போர்க்குற்றம் : வெளிநாடொன்றின் முன்னாள் ஜனாதிபதிக்கு விதிக்கப்பட்டது 25 வருட சிறை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/former-kosovo-president-sentenced-war-crimes-1789565321"></link>
            <id>https://ibctamil.com/article/former-kosovo-president-sentenced-war-crimes-1789565321</id>
            <summary type="text">சேர்பியாவிலிருந்து சுதந்திரம் பெறுவதற்கான போரின்போது போர் குற்றங்களை இழைத்ததாக, கொசோவோவின் முன்னாள் ஜனாதிபதி ஹாஷிம் தாச்சி மீது சுமத்தப்பட்ட நான்கு கு...</summary>
            <content type="html"><![CDATA[<p>சேர்பியாவிலிருந்து சுதந்திரம் பெறுவதற்கான போரின்போது போர் குற்றங்களை இழைத்ததாக, கொசோவோவின் முன்னாள் ஜனாதிபதி ஹாஷிம் தாச்சி மீது சுமத்தப்பட்ட நான்கு குற்றச்சாட்டுகளில் அவர் குற்றவாளி என கொசோவோ போர் குற்றங்கள் தீர்ப்பாயம் அறிவித்துள்ளது.</p><p>1990-களில் சேர்பியாவிலிருந்து அப்பகுதி வன்முறை வழியில் பிரிந்தபோது, ​​இன ரீதியாக அல்பேனியர்களுக்கான 'கொசோவோ விடுதலைப் படையின்' (KLA) உயர்மட்டத் தளபதியாக இருந்து கொலை, சித்திரவதை மற்றும் சட்டவிரோதக் காவல் வைப்பு உள்ளிட்ட குற்றங்களை இழைத்ததற்காக, 58 வயதான தாச்சிக்கு இன்று புதன்கிழமை அன்று 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.</p><h2>தாச்சி குற்றவாளி</h2><p>நெதர்லாந்தின் ஹேக் நகரில் உள்ள 'கொசோவோ சிறப்பு மன்றம்' (KSC), மோதலின் போது KLA அமைப்பால் 96 அரசியல் எதிரிகள் மற்றும் சேர்பியப் பாதுகாப்புப் படைகளுக்கு உடந்தையாக இருந்ததாகக் கருதப்பட்டவர்கள் கொல்லப்பட்ட விவகாரத்தில் தாச்சி குற்றவாளி என்று கூறியது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/588176bd-f46d-49c5-9b94-a7be17809ef5/26-6aaa9dbfb677a.webp' /></p><p>எனினும் தாச்சி தன் மீதான அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் மறுதலித்தார்.

சூட் மற்றும் டை அணிந்திருந்த அவர், தலைமை நீதிபதி சார்லஸ் ஸ்மித் தண்டனை விவரங்களை வாசித்தபோது அமைதியாக நின்றிருந்தார்.
</p><p>
KLA அமைப்பின் முன்னாள் மூத்த தளபதிகள் மூவருக்கும் பல்வேறு குற்றச்சாட்டுகளுக்காகத் தண்டனைகள் விதிக்கப்பட்டன.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> WHATSAPP CHANNE</a>L இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p>you may like this</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/Z8NywXpZrYo" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-09-16T13:46:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிக்பாஸ் பேச்சால் வெடித்த சர்ச்சை… விஜய் சேதுபதிக்கு ஆதரவாக களமிறங்கிய சீனு ராமசாமி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/director-seenu-ramasamy-post-for-vijay-sethupathi-1789565053"></link>
            <id>https://manithan.com/article/director-seenu-ramasamy-post-for-vijay-sethupathi-1789565053</id>
            <summary type="text">பிக்பாஸ் நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி பேசிய கருத்துகள் அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவரை தனிப்பட்ட முறையில் விமர்சிக்க வேண்டாம் என இயக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிக்பாஸ் நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி பேசிய கருத்துகள் அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவரை தனிப்பட்ட முறையில் விமர்சிக்க வேண்டாம் என இயக்குநர் சீனு ராமசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.</p><h2>&nbsp;விஜய் சேதுபதி சர்ச்சை கருத்து&nbsp;</h2><p>
</p><p>
கமல்ஹாசனைத் தொடர்ந்து கடந்த சில ஆண்டுகளாக பிக்பாஸ் நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். தற்போது நடைபெற்று வரும் 10வது சீசனையும் அவரே தொகுத்து வழங்குகிறார்.

சமீபத்திய நிகழ்ச்சியில் போட்டியாளருக்கு அறிவுரை வழங்கிய விஜய் சேதுபதி, தலைமைத்துவம், வாக்குறுதிகள், பொறுப்பு உள்ளிட்டவை குறித்து பேசிய கருத்துகள் சமூக வலைதளங்களில் வைரலானது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/376c92bb-3e12-492e-ae8b-e45616a2a93b/26-6aaa9cd86e5cd.webp' /></p><p></p><p> </p><p>இதனைத் தொடர்ந்து, அவர் தமிழக அரசியலை மறைமுகமாக விமர்சித்ததாக சிலர் கருத்து தெரிவித்து வந்தனர். இதனால் விஜய் சேதுபதிக்கு எதிராகவும் விமர்சனங்கள் எழுந்தன.</p><h2><span style="color: inherit; font-size: 1.75rem;">இயக்குநர் சீனு ராமசாமி பதிவு&nbsp;</span></h2><p>இந்நிலையில், இயக்குநர் சீனு ராமசாமி தனது எக்ஸ் பதிவில், விஜய் சேதுபதியை நீண்ட காலமாக அறிந்திருப்பதாகவும், அவர் மறைந்திருந்து தாக்கும் குணம் கொண்டவர் அல்ல என்றும் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bc269f43-d227-4e19-a0ee-56c964861b9b/26-6aaa9cd924edf.webp' /></p><p>
</p><p>
மேலும், பொழுதுபோக்கு நிகழ்ச்சியில் இடம்பெற்ற ஒரு வசனத்தை வைத்து இவ்வளவு தீவிரமாக எதிர்வினையாற்றுவதும், அதனை அடிப்படையாகக் கொண்டு விஜய் சேதுபதியை தனிப்பட்ட முறையில் தாக்குவதும் வருத்தமளிப்பதாக தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dc531c08-1985-4027-bc1a-2a8c8121368c/26-6aaa9cd9cd12f.webp' /></p><p></p><p>

புதியவர்களை ஊக்குவிப்பது, பல்வேறு இயக்குநர்களுடன் பணியாற்றுவது, சிக்கலில் இருந்த திரைப்படங்களுக்கு உதவுவது உள்ளிட்ட விஜய் சேதுபதியின் பல்வேறு செயல்பாடுகளையும் சுட்டிக்காட்டிய சீனு ராமசாமி, அவசரப்பட்டு அவரை தனிப்பட்ட முறையில் விமர்சிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக்கொண்டுள்ளார்.குறித்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">அனைவருக்கும் அன்பான வணக்கம்.  விஜய் சேதுபதியை உள்ளும் புறமும் நன்கறிவேன். எதையும் நேர்பட கண்கள் பார்த்து சொல்லக் கூடிய மனிதன்; மறைந்திருந்து தாக்கும் குணம் கொண்ட மனிதன் அல்ல.  உண்மையில் தமிழக சட்டசபை நிகழ்ச்சிகளை மக்கள் அதிகமாக பார்க்கிறார்கள். மற்ற ஓடிடி, சினிமா, இணையதள செயல்பாடுகள் எல்லாம் சட்டசபை காலங்களிலே மந்தமாகிவிட்டது, இதுதான் உண்மை.   பிக்பாஸ் நிகழ்ச்சியை கொஞ்சம் அரசியல் சாயம் பூசி விட்டால் மக்களின் கவனத்தை பெற்று விடலாம் என்று அதை நடத்துபவர்கள் நினைத்திருக்கலாம்.   ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சியில் சொல்லப்படும் ஒரு வசனத்தை எடுத்துக் கொண்டு இவ்வளவு சீரியஸாக ரியாக்ட் பண்ண வேண்டிய அவசியம் இல்லை என்று நான் நினைக்கிறேன். அதை வைத்து அவரைத் தனிப்பட்ட முறையில் தாக்குவது என்பது மிகவும் வருத்தமாக இருக்கிறது.  இன்று இந்தியா முழுக்க நன்கறிந்த பெருமைக்குரிய கலைஞன் சேது.  புதியவர்களை ஊக்கப்படுத்த பல படங்களில் கெஸ்ட் ரோல் நடித்தவர்,  தனக்குப் பிடித்த பெரிய நடிகர்களின் படங்களிலே இமேஜ் பார்க்காமல் வில்லனாகவும் நடித்தவர்,   நிறைய புதிய இயக்குனர்களோடு பயணித்தவர்,   100 மூத்த திரைத் தொழிலாளர்களுக்கு 100 சவரன் தங்கம் தந்தவர்,  பல படங்கள் சிக்கலில் இருந்தபோது தன் சம்பளத்தை விட்டுக்கொடுத்து உதவியவர்.  முன்பின் தெரியாத பலருக்கும் நன்மைகள் செய்த மனிதன் விஜய் சேதுபதி. ஆகவே அவசரப்பட்டு தனிப்பட்ட முறையில் அவரை யாரும் தாக்க வேண்டாம் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.  🙏🙏  அன்பன்   சீனு ராமசாமி</p>&mdash; Seenu Ramasamy (@seenuramasamy) <a href="https://x.com/seenuramasamy/status/2100055025481593018?ref_src=twsrc%5Etfw">September 16, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b></td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-16T13:45:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[விஜய்–அஜித் சாதனையை முறியடித்த சூர்யா–ஜோதிகா! வெறும் 17 மணிநேரத்தில் 5.75 கோடி பார்வைகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/suriya-jyothika-video-overtakes-ajith-vijay-video-1789558574"></link>
            <id>https://manithan.com/article/suriya-jyothika-video-overtakes-ajith-vijay-video-1789558574</id>
            <summary type="text">சூர்யா -ஜோதிகா தங்களது 20-ஆவது திருமண நாளை கொண்டாடிய தருணங்களைப் பதிவு செய்த காணொளி, சமூக வலைத்தளங்களில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வருகிறது.

காண...</summary>
            <content type="html"><![CDATA[<p>சூர்யா -ஜோதிகா தங்களது 20-ஆவது திருமண நாளை கொண்டாடிய தருணங்களைப் பதிவு செய்த காணொளி, சமூக வலைத்தளங்களில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வருகிறது.

காணொளி வெளியான 17 மணிநேரங்களிலேயே 57.5 மில்லியன் பார்வைகளையும், 4.2 மில்லியன் லைக்குகளையும் குவித்துள்ளது. </p><p>திருமண வாழ்க்கையின் முக்கியமான மைல்கல்லை கொண்டாடும் இந்த காணொளி, ரசிகர்கள் மத்தியில் மட்டுமல்லாமல் சமூக வலைத்தளங்களிலும் வேகமாகப் பரவி வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3271b8e5-97b1-49bf-bb14-44a3e47c9584/26-6aaa83ebd2a78.webp' /></p><h2>5.75 கோடி பார்வைகள்</h2><p>
</p><p>
இதனிடையே, சமீபத்தில் நடிகர்கள் விஜய் மற்றும் அஜித் லண்டனில் சந்தித்துக்கொண்ட காணொளி சமூக வலைத்தளங்களில் மிகுந்த கவனத்தைப் பெற்றிருந்தது. இரு முன்னணி நட்சத்திரங்களும் ஒரே இடத்தில் சந்தித்துக்கொண்ட அந்த அரிய தருணத்தைப் பார்க்க ரசிகர்கள் ஆர்வம் காட்டியதால், அந்தக் காணொளியும் மிகப்பெரிய அளவில் வைரலானது.</p><p>

இந்நிலையில், விஜய்–அஜித் சந்திப்பு காணொளி பெற்றிருந்த பார்வை எண்ணிக்கையை, சூர்யா–ஜோதிகாவின் 20-ஆவது திருமண நாள் காணொளி வெளியான குறுகிய காலத்திலேயே முறியடித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/675f4c85-31b2-4f8a-9808-d928da3f51d5/26-6aaa83ec8c418.webp' /></p><p>விஜய்–அஜித் சந்திப்பு காணொளி இதுவரையில் 26.3 மில்லியன் பார்வைகளையும்,&nbsp; 2.3 மில்லியன் லைக்குககைளையும் பெற்றுள்ளது.</p><p>

திரையுலகில் நட்சத்திர ஜோடியாக மட்டுமல்லாமல், நீண்டகாலமாக ரசிகர்களின் அன்பைப் பெற்றுவரும் தம்பதியாக இருக்கும் சூர்யா–ஜோதிகா, தங்களது 20 ஆண்டுகால திருமண வாழ்க்கையை நினைவுகூர்ந்து பகிர்ந்த இந்தக் காணொளி இணையத்தில் அசுர வேகத்தில் லைக்குகளை அள்ளி வருகின்றது.</p><p>
விஜய்–அஜித் சந்திப்பு ஏற்படுத்திய பரபரப்புக்கு அடுத்ததாக, சூர்யா–ஜோதிகாவின் 20-ஆவது திருமண நாள் காணொளி புதிய சாதனையுடன் கவனம் ஈர்த்திருப்பது குறிப்பிடத்தக்கது.</p><p><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/reel/DdUFAt2yiyO/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/reel/DdUFAt2yiyO/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/reel/DdUFAt2yiyO/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by Jyotika (@jyotika)</a></p></div></blockquote> <script async src="//www.instagram.com/embed.js"></script></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-16T13:44:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[எங்களுக்கான நீதியை எங்களுக்குத் தாருங்கள்..ஜெனீவாவில் திரண்ட நூற்றுக்கணக்கான தமிழர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/tamils-protest-in-switzerland-1789562593"></link>
            <id>https://tamilwin.com/article/tamils-protest-in-switzerland-1789562593</id>
            <summary type="text">முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 17ஆவது ஆண்டு நினைவேந்தல் காலத்தை முன்னிட்டு, தமிழர்களுக்கான நீதியை வலியுறுத்தி சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் கவனயீர்ப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 17ஆவது ஆண்டு நினைவேந்தல் காலத்தை முன்னிட்டு, தமிழர்களுக்கான நீதியை வலியுறுத்தி சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
</p><p>
“எங்களுக்கான நீதியை எங்களுக்குத் தாருங்கள்” என்ற கோரிக்கையை முன்வைத்து, ஐக்கிய நாடுகள் சபை அலுவலகத்திற்கு அருகிலுள்ள ஈகைப்பேரொளி முருகதாசன் திடலில் இந்தப் போராட்டம் இடம்பெற்றது.</p><h2>நூற்றுக்கணக்கான தமிழர்கள்&nbsp;</h2><p> </p><p>

இதில் நூற்றுக்கணக்கான தமிழர்கள் கலந்துகொண்டனர்.</p><p>

2026 செப்டெம்பர் 14ஆம் திகதி பிற்பகல் 2.30 மணியளவில் ஜெனீவா தொடருந்து நிலையத்திற்கு அருகிலுள்ள பூங்காவில் இருந்து கவனயீர்ப்புப் பேரணி ஆரம்பமானது.

பேரணியில் பங்கேற்றவர்கள் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவரின் படத்தையும் பல்வேறு பதாதைகளையும் ஏந்தியவாறு சென்றனர்.</p><p> 

செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான காட்சிப்படுத்தலும் பேரணியில் இடம்பெற்றிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/559238d5-c8a7-47cb-a5b8-0e75276c3e64/26-6aaa9c0b39e34.webp' /></p><p>
</p><p>
தமிழ் மக்களுக்கு எதிராக இடம்பெற்றதாகக் கூறப்படும் இனப்படுகொலை தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், தமிழீழத்திற்கான சர்வசன வாக்கெடுப்பு ஐக்கிய நாடுகள் சபையின் கண்காணிப்பில் நடத்தப்பட வேண்டும் என்றும் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.</p><p>

“மக்கள் புரட்சி வெடிக்கட்டும், சுதந்திர தமிழீழம் மலரட்டும்” உள்ளிட்ட கோஷங்களை எழுப்பியவாறு போராட்டக்காரர்கள் ஐக்கிய நாடுகள் சபை அலுவலகத்திற்கு அருகிலுள்ள ஈகைப்பேரொளி முருகதாசன் திடலை சென்றடைந்தனர்.

அங்கு பொதுச்சுடர் ஏற்றப்பட்டதுடன், தேசியக் கொடியேற்றும் நிகழ்வும் இடம்பெற்றது. </p><p>

தொடர்ந்து தியாக தீபம் லெப்டினன்ட் கேணல் திலீபன் மற்றும் ஈகைப்பேரொளிகளின் நினைவாக ஈகைச்சுடர்கள் ஏற்றப்பட்டன.</p><h2>ஈழத்தமிழர்களின் வரலாறு</h2><p>
</p><p>
இதன்போது மலர்மாலை அணிவித்தல், அகவணக்கம் மற்றும் மலர்வணக்கம் ஆகிய நிகழ்வுகளும் இடம்பெற்றதுடன், பங்கேற்பாளர்கள் உறுதிமொழியும் எடுத்துக்கொண்டனர்.</p><p>

புலம்பெயர் நாடுகளில் பிறந்து வளர்ந்த தமிழ் இளையோர்களும் போராட்டத்தில் குறிப்பிடத்தக்க வகையில் பங்கேற்றனர்.</p><p> அவர்கள் தங்களது வாழிட நாடுகளின் மொழிகளில் உரையாற்றியதுடன், ஒன்றுகூடலுக்கான பிரகடனத்தையும் வாசித்தனர்.

இதனிடையே, பிரித்தானிய பிரதமரின் இல்லத்திலிருந்து ஆரம்பித்து அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் ஊடாக ஐக்கிய நாடுகள் சபை நோக்கி முன்னெடுக்கப்பட்ட மனிதநேய ஈருருளிப் பயணத்தில் பங்கேற்ற செயற்பாட்டாளர்களும் நிகழ்வில் கலந்துகொண்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/49d7cea2-21a6-4d4b-ab30-70fbbf6d9e2b/26-6aaa9c0bf0cdd.webp' /></p><p>
</p><p>
தாங்கள் பயணித்த நாடுகளில் சந்தித்த அரசியல் பிரதிநிதிகளிடம் ஈழத்தமிழர்களின் வரலாறு, தற்போதைய நிலைமை மற்றும் தமிழர்களின் உரிமைகள் தொடர்பான கோரிக்கைகள் குறித்து எடுத்துரைத்ததாக அவர்கள் தெரிவித்தனர்.
</p><p>
தமிழ் மக்களுக்கு நீதியும் அரசியல் இறைமையும் கிடைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இறுதியில் தமிழீழ தேசியக் கொடி ஏற்றப்பட்டு, பாடல்கள் மற்றும் கோஷங்களுடன் கவனயீர்ப்புப் போராட்டம் நிறைவடைந்தது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-16T13:43:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[எந்தவொரு புதிய &quot;நாய் வரியையும்&quot; விதிக்கவில்லை; பரவும் வதந்தி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/no-new-dog-tax-imposed-story-is-a-lie-1789560888"></link>
            <id>https://jvpnews.com/article/no-new-dog-tax-imposed-story-is-a-lie-1789560888</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;&#039;கால்நடை மற்றும் விலங்கு நலக் கூட்டமைப்பு&#039; (Veterinary and Animal Welfare Alliance), புதிய &#039;வெறிநாய் நோய் கட்டுப்பாடு மற்றும் நாய் பதிவுச...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;'கால்நடை மற்றும் விலங்கு நலக் கூட்டமைப்பு' (Veterinary and Animal Welfare Alliance), புதிய 'வெறிநாய் நோய் கட்டுப்பாடு மற்றும் நாய் பதிவுச் சட்டம்' எந்தவொரு புதிய "நாய் வரியையும்" விதிக்கவில்லை என்றும், தெருநாய்களுக்கு உணவளிக்கும் நபர்களைச் சிறையில் அடைப்பதற்கான எந்தவொரு விதியும் இதில் இல்லை என்றும் தெரிவித்துள்ளது.</p><p> 

செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் பேசிய அக்கூட்டமைப்பின் நிர்வாக உறுப்பினரான டாக்டர் சமித் நானயக்கார, சமூக ஊடகங்கள் வாயிலாகப் பரப்பப்படும் தவறான தகவல்களால் பொதுமக்கள் தேவையற்ற அச்சத்திற்கு ஆளாகியிருப்பதாகக் குறிப்பிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4f684aa8-c0df-4aa8-b538-db10762c932c/26-6aaa883a92a67.webp' /></p><h2>பொதுமக்கள் தேவையற்ற அச்சம்</h2><p>

உள்ளூராட்சி அமைப்புகள் மூலம் நாய்களைப் பதிவு செய்யும் நடைமுறை ஏற்கனவே ஒரு சிறிய கட்டணத்தில் நடைபெற்று வருவதாகவும், இது இந்தச் சட்டத்தின் மூலம் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ஒன்றல்ல என்றும் அவர் சுட்டிக்காட்டினார். </p><p>

தற்போது இதற்காகக் கொழும்பு மாநகர சபைப் பகுதியில் 100 ரூபாயும், அனுராதபுரப் பகுதியில் 300 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.</p><p></p><p> </p><p>மக்கள் தங்கள் வேலைகளை விட்டுவிட்டு உள்ளூராட்சி அலுவலகங்களுக்குச் செல்ல வேண்டிய சிரமத்தைத் தவிர்க்கும் வகையில், கிராம மட்டத்தில் செயல்படுத்தப்படும் இலவச வெறிநாய் தடுப்பூசி முகாம்களுடன் இணைந்தே இந்தப் பதிவுகளை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது.</p><p>

தெருநாய் ஒன்றுக்கு ஒருமுறையோ அல்லது அவ்வப்போதோ உணவளிப்பது மட்டும் ஒருவரை அந்த விலங்கின் சட்டப்பூர்வ உரிமையாளராக மாற்றிவிடாது என்று டாக்டர் நானயக்கார மேலும் தெளிவுபடுத்தினார்.</p><p></p><p> </p><p>

இருப்பினும், ஒருவர் தொடர்ந்து ஒரு விலங்குக்கு உணவளித்து அதனுடன் ஒரு பிணைப்பை ஏற்படுத்திக்கொண்டால், அந்த நாயைப் பராமரிப்பதற்கும், அதற்குத் தேவையான வெறிநாய் தடுப்பூசிகளைச் செலுத்துவதற்கும் அவருக்கு ஒரு சமூகப் பொறுப்பு உள்ளது.
</p><p>
எந்தவொரு உரிமையாளரும் இல்லாத உண்மையான தெருநாய்களைப் பராமரிக்கும் பொறுப்பு தொடர்ந்து உள்ளூராட்சி அமைப்புகளிடமே உள்ளது. 

அவற்றிற்குத் தடுப்பூசி மற்றும் கருத்தடை சிகிச்சைகளை ஏற்பாடு செய்வது இந்த அமைப்புகளின் பணியாகும்.</p><p></p><p> மேலும், நாய்களைத் தன்னிச்சையாகக் கொல்வதற்கு எதிரான கடுமையான சட்ட விதிகளும் இந்த புதிய சட்டத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.</p>]]></content>
            <updated>2026-09-16T13:41:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கணவருடன் தவறான தொடர்பு; மனித மலத்தை வீசி பெண் மீது மனைவி தாக்குதல்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/affair-husband-florida-woman-throws-poop-wife-1789538549"></link>
            <id>https://canadamirror.com/article/affair-husband-florida-woman-throws-poop-wife-1789538549</id>
            <summary type="text">&amp;nbsp; அமெரிக்காவின் மியாமி பகுதியில் உள்ள ‘ராயல் கன்ட்ரி மொபைல் ஹோம்ஸ்’ பகுதியில் வசித்து வருபவர் 50 வயதான யிர்சி மச்சாடோ ரிவேரா . இவருடைய கணவருக்கும...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; அமெரிக்காவின் மியாமி பகுதியில் உள்ள ‘ராயல் கன்ட்ரி மொபைல் ஹோம்ஸ்’ பகுதியில் வசித்து வருபவர் 50 வயதான யிர்சி மச்சாடோ ரிவேரா . இவருடைய கணவருக்கும் பக்கத்து வீட்டில் வசிக்கும் பெண்ணுக்கும் இடையே தவறான தொடர்பு இருப்பதாக இவர் சந்தேகப்பட்டுள்ளார். </p><p>இதன் காரணமாக ஆத்திரமடைந்த மச்சாடோ ரிவேரா, சம்பவத்தன்று அந்தப் பெண்ணின் வீட்டிற்குச் சென்று கதவைத் தட்டியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/332e7d27-8b99-4c20-94a9-feba47d95c1f/26-6aaa30f6f1188.webp' /></p><h2>அத்துமீறல் மற்றும் தாக்குதல் குற்றச்சாட்டு</h2><p>
</p><p>
கதவைத் திறந்தவுடன் அண்டை வீட்டுப் பெண்ணைக் கடுமையாகத் திட்டிய மச்சாடோ ரிவேரா, அனுமதியின்றிப் பலவந்தமாக வீட்டிற்குள் நுழைந்துள்ளார். </p><p>தான் பழிவாங்கும் நோக்கத்தோடு மனிதக் கழிவுகளை ஒரு வாளியில் சேகரித்து வைத்துப் பாதிக்கப்பட்ட பெண்ணின் முகத்தில் வீசியதாக அவர் ஒப்புக்கொண்டுள்ளதாகக் காவல்துறை வாக்குமூலப் பதிவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இதற்கிடையே, காவல்துறையினரிடம் விசாரணைக்குப் பிறகு பேசிய மச்சாடோ ரிவேரா, தனது வீட்டில் கழிவறை பழுதாகியிருந்ததால் கழிவுப்பொருளை அப்புறப்படுத்த மட்டுமே சென்றதாகவும், அந்தப் பெண்ணுக்கும் தனக்கும் ஏற்பட்ட தகராறில் அவர் தன்னை மட்டையால் தாக்கியதாகவும் மாற்றுக்கதை கூறியுள்ளார்.</p><p>

எவ்வாறாயினும், அத்துமீறல் மற்றும் தாக்குதல் குற்றச்சாட்டுகளின் கீழ் மச்சாடோ ரிவேராவைக் கைது செய்துள்ள மயாமி-டேட் ஷெரிப் அலுவலக அதிகாரிகள், அவர் மீது உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-09-16T13:40:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தாயின் இறுதிச்சடங்கு ;முன்னாள் கிரிக்கெட் வீரர் அரவிந்த டி சில்வா மற்றும் மனைவிக்கு பிடியாணை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/court-issues-warrants-aravinda-de-silva-and-wife-1789561751"></link>
            <id>https://jvpnews.com/article/court-issues-warrants-aravinda-de-silva-and-wife-1789561751</id>
            <summary type="text">முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் அரவிந்த டி சில்வா மற்றும் அவரது மனைவி பிரியங்கா அனுஷ்கா விஜேநாயக்க ஆகியோரைக் கைது செய்வதற்கான பிடியாணையை&amp;nbsp; &amp;nbsp;...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் அரவிந்த டி சில்வா மற்றும் அவரது மனைவி பிரியங்கா அனுஷ்கா விஜேநாயக்க ஆகியோரைக் கைது செய்வதற்கான பிடியாணையை&nbsp; &nbsp; கொழும்பு கோட்டை நீதவான் பாசன் அமரசேன இன்று (16)&nbsp; பிறப்பித்தார்.</p><p>

முன்னாள் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேனவின் மனைவிக்கு எதிராக விசாரிக்கப்பட்டு வரும் ஒரு வழக்கில் அரவிந்த டி சில்வாவும் அவரது மனைவியும் ஜாமீன்தாரர்களாக ஆஜராகியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ca6d2220-c8e3-4f83-b7e2-d5cc96d3ed86/26-6aaa8b98a89da.webp' /></p><p></p><h2>நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியதால் பிடியாணை&nbsp;</h2><p>
</p><p>
 இன்று வழக்கு விசாரணைக்கு அழைக்கப்பட்டபோது அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியதால் இந்த பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்டன.</p><p></p><p>
</p><p>
 கபில சந்திரசேன&nbsp; அரவிந்த சில்வாவின் வீட்டில் இருந்தபோது உயிரிழந்தார். சிசிடிவி மற்றும் பிற ஆதாரங்கள் இல்லாதபோதிலும், மரணத்திற்கான காரணம் இன்னும் மர்மமாகவே உள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7665c5fb-d62c-425e-8896-1c4805c95c04/26-6aaa8b99856a5.webp' /></p><p>
இதற்கிடையில், அரவிந்த டி சில்வாவின் தாயார் திருமதி ராணி டி சில்வா 14ஆம் தேதி காலமானார். </p><p>

அவரது இறுதிச் சடங்குகள் இன்று நடைபெறவிருந்தன. இறுதிச் சடங்கு காரணமாக அவரால் இன்று நீதிமன்றத்தில் ஆஜராக முடியவில்லை என்று கூறப்படுகிறது.</p><p></p><p>
</p><p>இந்த&nbsp; நிலையிலேயே அரவிந்த டி சில்வா மற்றும் அவரது மனைவி பிரியங்கா அனுஷ்கா விஜேநாயக்க ஆகியோரைக் கைது செய்வதற்கான பிடியாணை பிறபிக்கப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-16T13:38:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நியூயார்க்கில் தண்டவாளத்தை கடக்க முயன்ற இந்திய பெண் உட்பட 2 பேர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/indian-woman-killed-in-new-york-train-accident-1789555184"></link>
            <id>https://canadamirror.com/article/indian-woman-killed-in-new-york-train-accident-1789555184</id>
            <summary type="text">&amp;nbsp; நியூயார்க்கில் ரயில் விபத்தில் இந்திய வம்சாவளி பெண் உட்பட 2 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மலாய்க்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; நியூயார்க்கில் ரயில் விபத்தில் இந்திய வம்சாவளி பெண் உட்பட 2 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது.
</p><p>
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மலாய்க்கா சித்ரே (24), அமெரிக்​கா​வின் நியூ ஜெர்​ஸி​யிலுள்ள டேடன் நகரில் வசித்து வந்​தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4d205646-1ebc-4b65-b5aa-32d370bfc5c0/26-6aaa721b27858.webp' /></p><p> </p><p>

இவரும், நேபாளத்​தைச் சேர்ந்த இவரது நண்​பர் நவம்கவுலும் இங்​குள்ள ரட்​கர்ஸ் பல்​கலைக்​கழகத்​தில் பட்​டப்​படிப்பு படித்​து​விட்டு அமெரிக்​கா​விலேயே தங்கி வேலை பார்த்து வந்​தனர்.
</p><p>
இந்​நிலை​யில் கடந்த ஞாயிற்​றுக்​கிழமை இரு​வரும் லோயர் மன்​ஹாட்​டன் சப்வே ரயில் நிலை​யத்​துக்கு சென்​றுள்​ளனர்.

 ரயில்வே தண்​ட​வாளத்​தைக் கடக்க முயன்​ற​போது இரு​வரும் அந்த வழியே வந்த ரயில் மோதி அதே இடத்​திலேயே இறந்​தனர்.</p><p> பின்​னர் அவர்களது உடல்​கள் மீட்​கப்​பட்டு மருத்​து​வ​மனை​யில் வைக்கப்பட்டுள்ளது

ரயில் தண்​ட​வாளத்​தில் நவம் கவுல் தவறி விழுந்​த​தாக​வும், இதைப் பார்த்த மலாய்க்கா சித்ரே அவரைக் காப்​பாற்​றச் சென்று விபத்​தில் சிக்​கிய​தாக​வும் நியூ​யார்க் போஸ்ட் பத்​திரிகை செய்தி வெளி​யிட்​டுள்​ளது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-16T13:37:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[மருத்துவ பட்டதாரிகள் தொடர்பில் கனடிய நீதிமன்றின் அதிரடி தீர்ப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/bc-rule-forcing-foreign-trained-doctors-1789546377"></link>
            <id>https://canadamirror.com/article/bc-rule-forcing-foreign-trained-doctors-1789546377</id>
            <summary type="text">&amp;nbsp;கனடாவிற்கு வெளியே மருத்துவக் கல்வியை முடித்த பட்டதாரிகள், பிரிட்டிஷ் கொலம்பியாவின் பின்தங்கிய அல்லது தொலைதூரப் பகுதிகளில் கட்டாயம் பணியாற்ற வேண்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கனடாவிற்கு வெளியே மருத்துவக் கல்வியை முடித்த பட்டதாரிகள், பிரிட்டிஷ் கொலம்பியாவின் பின்தங்கிய அல்லது தொலைதூரப் பகுதிகளில் கட்டாயம் பணியாற்ற வேண்டும் என்ற மாகாண அரசின் நிபந்தனை சட்டவிரோதமானது என பிரிட்டிஷ் கொலம்பியா உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
</p><p>வெளிநாட்டு மருத்துவக் கல்லூரிகளிலிருந்து மருத்துவப் பயிற்சிக்கு விண்ணப்பிப்போருக்கு இத்தகைய "சேவைத் திரும்பச் செலுத்தல்" நிபந்தனையை விதிக்க மாகாண சுகாதார அமைச்சுக்கு சட்டப்பூர்வ உரிமை இல்லை என நீதிபதி மெத்யூ கெர்ச்னர் தெரிவித்துள்ளார்.</p><p>
கனடிய மருத்துவக் கல்லூரிகளில் படித்த பட்டதாரிகளுக்கு இல்லாத இந்த நிபந்தனை, வெளிநாட்டுப் பட்டதாரிகளுக்கு மட்டும் கட்டாயமாக்கப்பட்டிருந்தது. 
இதனை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கிலேயே இத்தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d4b642e3-96b6-479e-88f1-54bc8ea25842/26-6aaa4f8b015be.webp' /></p><p>
</p><p>ஒருவர் எங்கு வாழ வேண்டும் என்பதைத் தீர்மானிப்பது அவருடைய அடிப்படைத் தனிப்பட்ட முடிவாகும். அரசின் தலையீடின்றி வாழும் தனிநபர் சுதந்திர உரிமையில் அரசாங்கம் தலையிட முடியாது என நீதிபதி மெத்யூ கெர்ச்னர் தெரிவித்துள்ளார்.
</p><p>ஒப்பந்தத்தை மீறிச் செயல்படும் மருத்துவப் பட்டதாரிகளுக்குக் கடுமையான நிதி அபராதங்கள் விதிக்கப்பட்டு வந்ததாக நீதிமன்றத் தீர்ப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
</p><p>பயிற்சி வாய்ப்பைப் பெறுவதற்காக வெளிநாட்டுப் பட்டதாரிகள் வேறு வழியின்றி இந்த நிபந்தனைகளுக்கு ஒப்புக்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படுவதாகவும் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.
</p><p>இந்த விவகாரத்தில் தேவையான சட்ட மாற்றங்களைச் செய்யுமாறு பிரிட்டிஷ் கொலம்பியா சுகாதார அமைச்சுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
</p><p>எனினும், இத்தீர்ப்பு கிராமப்புறங்களில் மருத்துவர்களின் இருப்பை உடனடியாகப் பாதிக்கக்கூடும் என்பதால், அமைச்சு இப் பிரச்சினையைச் சீர்செய்வதற்காக இத்தீர்ப்பின் அமலாக்கத்தை 60 நாட்களுக்கு ஒத்திவைப்பதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-16T13:36:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மன்னார் வைத்தியசாலை விரிவாக்கம்; ஜனாதிபதி அநுர குமார விஜயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/president-anura-kumara-visits-mannar-hospital-1789565846"></link>
            <id>https://jvpnews.com/article/president-anura-kumara-visits-mannar-hospital-1789565846</id>
            <summary type="text">&amp;nbsp; மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் திடீர் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு நிர்மாணப் பணிகள் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் திடீர் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு நிர்மாணப் பணிகள் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் இன்று (16) முற்பகல் ஆரம்பிக்கப்பட்டன.</p><p>


மன்னார் மக்களின் சுகாதார வசதிகளை மேலும் விரிவுபடுத்துவதற்காக, இந்திய அரசின் நிதியுதவியுடன் 600 மில்லியன் ரூபாய் செலவில் அனைத்து நவீன வசதிகளையும் கொண்டதாக இந்தப் பிரிவு நிர்மாணிக்கப்பட உள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d5c2a007-c879-414e-82c0-09b5097bffb2/26-6aaa9b9dc6960.webp' /></p><p> </p><p>நிர்மாணப்ணியானது 2028 ஆம் ஆண்டின் முதலாம் காலாண்டில் நிறைவு செய்யப்படவுள்ளது.



இத்திட்டம் நிறைவடைந்ததும், மன்னார் மக்கள் கொழும்பு உள்ளிட்ட பிரதான நகரங்களுக்குச் செல்லாமல் அவசர விபத்துகள் மற்றும் ஏனைய நிபுணத்துவ சுகாதார சேவைகளைப் பெற்றுக் கொள்ளக்கூடிய வசதி ஏற்படுத்தப்படும். </p><p>



இதனுடன் இணைந்ததாக, மன்னார் மாவட்ட வைத்தியசாலைக்குத் தேவையான வைத்திய உபகரணங்கள் மற்றும் ஊழியர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
</p><p>


அவசர சிகிச்சைப் பிரிவின் நிர்மாணப் பணிகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்ட ஜனாதிபதி, வைத்தியசாலை ஊழியர்களுடன் சிநேகபூர்வ உரையாடலிலும் ஈடுபட்டார்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-16T13:34:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வருமானத்தை குவிக்கும் இலங்கை சுங்கம்! 2 டிரில்லியன் வருவாய் வசூல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sri-lanka-customs-rules-in-revenue-2-trillion-1789565591"></link>
            <id>https://jvpnews.com/article/sri-lanka-customs-rules-in-revenue-2-trillion-1789565591</id>
            <summary type="text">&amp;nbsp; இலங்கை சுங்கத் திணைக்களம், தனது ஆண்டு வருவாய் செயல்திறனில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைப் பதிவுசெய்து, ரூ. 2 டிரில்லியன் வருவாய் வசூல் என்ற இல...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; இலங்கை சுங்கத் திணைக்களம், தனது ஆண்டு வருவாய் செயல்திறனில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைப் பதிவுசெய்து, ரூ. 2 டிரில்லியன் வருவாய் வசூல் என்ற இலக்கைத் தாண்டியுள்ளது. </p><p> 

நேற்று ரூ. 2 டிரில்லியன் என்ற வரம்பு கடக்கப்பட்டதாக சுங்கத் திணைக்களம் அறிவித்ததுடன், இந்தச் சாதனையைத் தனது துறைக்கு ஒரு முக்கிய மைல்கல் என்றும் விவரித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/91194c6e-5e3e-4c56-9c47-7ab0e4f5791a/26-6aaa9a9930ac5.webp' /></p><p>
</p><p>
இந்த அண்மைய வருவாய் புள்ளிவிவரம், அரசாங்க வருவாய் வசூலுக்கு சுங்கத் திணைக்களத்தின் பங்களிப்பைப் பிரதிபலிக்கிறது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-16T13:29:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பின்னணியில் புதிய திருப்பம் – புதைந்திருந்த மர்மங்களை கிளறும் விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/easter-attack-case-updates-1789564821"></link>
            <id>https://tamilwin.com/article/easter-attack-case-updates-1789564821</id>
            <summary type="text">2019ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளில் புதிய தகவல்கள் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ளன.

 உயிர்த்...</summary>
            <content type="html"><![CDATA[<p>2019ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளில் புதிய தகவல்கள் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ளன.
</p><p>
 உயிர்த்த தாக்குதலுடன் தொடர்புடைய விசாரணையில், இராணுவ மற்றும் அரச புலனாய்வுப் பிரிவுகளுக்கு தாக்குதல் தொடர்பான முன் தகவல்கள் கிடைத்திருந்தும், அவை உரிய பாதுகாப்புத் தரப்புகளுடன் பகிரப்படவில்லை என்ற தகவல்கள் கிடைத்துள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.</p><p>

இந்த விசாரணையின் ஒரு பகுதியாக முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மற்றும் மன்னாரைச் சேர்ந்த வர்த்தகர் அலாவுதீன் ஆகியோரின் தொடர்புகள் குறித்தும் விசாரணையாளர்கள் கவனம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

அலாவுதீன், உயிர்த்த தாக்குதலில் கொழும்பு ஷங்ரிலா ஹோட்டலில் தற்கொலைக் குண்டுத் தாக்குதலை மேற்கொண்ட இன்சாப் அஹமட்டின் மாமனார் என குறிப்பிடப்பட்டுள்ளார்.</p><p> 

அவரது படகுகள் மூலம் சஹ்ரான் ஹாஷிம் உள்ளிட்டோர் தாக்குதல்களுக்கு முன்னர் இந்தியாவுக்குச் சென்றனரா என்பது குறித்தும் விசாரணைகள் இடம்பெறுவதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
மேலும், கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்த காலத்தில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த அலாவுதீனின் மகள் பின்னர் விடுவிக்கப்பட்டது தொடர்பிலும் விசாரணையாளர்கள் தகவல்களை ஆராய்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

இதனிடையே, ரிஷாட் பதியுதீன் தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை அவர் ஏற்கனவே மறுத்துள்ளதுடன், ஈஸ்டர் தாக்குதலுடன் தனக்கு எந்தத் தொடர்பும் இல்லை என தெரிவித்துள்ளார்.</p><p>

 2022ஆம் ஆண்டில் ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடையதாக அவர்மீது முன்னெடுக்கப்பட்டிருந்த தனி வழக்கில், போதிய ஆதாரங்கள் இல்லை என சட்டமா அதிபர் அறிவித்ததைத் தொடர்ந்து அவர் விடுவிக்கப்பட்டிருந்தார்.
</p><p>
 இந்த விடயங்கள் தொடர்பில் விரிவாக பேசுகின்றது இன்றைய அதிர்வு நிகழ்ச்சி...</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/fw1BpKSyByI" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-16T13:28:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சர்வதேசக் கடல் பரப்பில் இந்திய-பாகிஸ்தான் மோதல்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/clash-between-indian-and-pakistani-naval-ships-1789565290"></link>
            <id>https://jvpnews.com/article/clash-between-indian-and-pakistani-naval-ships-1789565290</id>
            <summary type="text">&amp;nbsp; சர்வதேசக் கடல் பரப்பில் பாகிஸ்தான் கடற்படை கப்பலுடன் இந்தியக் கடற்படை கப்பல் ஒன்று மோதிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதைத் தொடர்ந்து...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; சர்வதேசக் கடல் பரப்பில் பாகிஸ்தான் கடற்படை கப்பலுடன் இந்தியக் கடற்படை கப்பல் ஒன்று மோதிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
</p><p>
அதைத் தொடர்ந்து, புது டெல்லியில் உள்ள பாகிஸ்தானின் தூதரகப் பொறுப்பாளரை இந்தியா வரவழைத்துத் தனது கடும் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளது.</p><p>

பாகிஸ்தான் கடற்படைப் பிரிவினரின் ஏற்றுக்கொள்ள முடியாத மற்றும் தொழில்முறைக்கு ஒவ்வாத செயல்பாடே இந்த மோதலுக்குக் காரணம் என்று இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/19a8c5bb-f17c-400e-a38f-53ea3f4c38cb/26-6aaa996c4c889.webp' /></p><h2>&nbsp;இந்தியக்&nbsp; கப்பலுக்கு எந்தவித சேதமும் ஏற்படவில்லை</h2><p> 

இந்த மோதலில் இந்தியக் கடற்படைக் கப்பலுக்கு எந்தவித சேதமும் ஏற்படவில்லை.

இருப்பினும், இராணுவப் பயிற்சிகள், ஒத்திகைகள் மற்றும் படைகளின் நடமாட்டம் குறித்த முன்கூட்டிய அறிவிப்பு தொடர்பான இந்தியா-பாகிஸ்தான் இடையிலான 1991-ஆம் ஆண்டு ஒப்பந்தத்தின் 10-வது பிரிவை, பாகிஸ்தான் கடற்படைக் கப்பலின் செயல் நேரடியாக மீறும் வகையில் இருந்ததாக இந்தியா கூறியது.</p><p></p><p> </p><p>இந்தியகலாச்சாரம்

விபத்துகளைத் தவிர்க்கும் நோக்கில், சர்வதேசக் கடற்பரப்பில் செயல்படும்போது இரு நாடுகளின் கடற்படைக் கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்கள் ஒன்றுக்கொன்று இடையே குறைந்தபட்சம் மூன்று கடல் மைல் இடைவெளியைப் பேண வேண்டும் என்று இந்த விதிமுறை வலியுறுத்துகிறது.</p><p>

கடந்த ஆண்டு நடைபெற்ற ‘ஆபரேஷன் சிந்தூர்’ (Operation Sindoor) நடவடிக்கையைத் தொடர்ந்து, இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதற்றம் உச்சத்தில் உள்ள நிலையில் இந்த நிகழ்வு ஏற்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-16T13:24:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பொதுமக்களை போலி வாக்குறுதிகளால் ஏமாற்றும் அரசாங்கம்! துமிந்த திசாநாயக்க விமர்சனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/npp-government-public-false-promises-duminda-1789564122"></link>
            <id>https://tamilwin.com/article/npp-government-public-false-promises-duminda-1789564122</id>
            <summary type="text">தற்போதைய அரசாங்கம் தொடர்ச்சியாக பொதுமக்களை போலியான வாக்குறுதிகளால் ஏமாற்றி, ஒருபோதும் நனவாகாத கனவுலகில் மிதக்க வைத்திருப்பதாக துமிந்த திசாநாயக்க விமர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>தற்போதைய அரசாங்கம் தொடர்ச்சியாக பொதுமக்களை போலியான வாக்குறுதிகளால் ஏமாற்றி, ஒருபோதும் நனவாகாத கனவுலகில் மிதக்க வைத்திருப்பதாக துமிந்த திசாநாயக்க விமர்சித்துள்ளார்.
</p><p>
முன்னாள் அமைச்சரும் சுதந்திரக் கட்சி முக்கியஸ்தருமான துமிந்த திசாநாயக்க, இன்று(16.9.2026) கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இந்தக் கருத்தை முன்வைத்துள்ளார்.</p><p>

அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், தற்போதைக்கு அரசாங்கம் இரண்டு வருட பூர்த்தியைக் கொண்டாடும் வகையில் பொதுமக்கள் பேரணிகளை நடத்தி வருகின்றது.

இதுவரைக்கும் இந்த அரசாங்கம் எதுவும் செய்யவில்லை.</p><h2>அரசாங்கத்தின் பேரணி</h2><p> </p><p>இனியாவது ஏதாவது செய்யுமா என்ற எதிர்பார்ப்புடனேயே அரசாங்கத்தின் பேரணிகளுக்கு பொதுமக்கள் வருகை தருகின்றனர். எனினும் ஏமாற்றத்துடனேயே திரும்புகின்றனர்.

இந்த அரசாங்கம் இதுவரை பொதுமக்களுக்கு எதுவுமே செய்யவில்லை.இனியும் செய்யப்போவதில்லை.
</p><p>
வெறுமனே போலி வாக்குறுதிகளை அள்ளி வீசி, பொதுமக்களை ஒருபோதும் நனவாகாத கனவுலகில் சஞ்சரிக்க வைப்பதே இந்த அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களின் செயற்பாடாகும்.</p><p>

ஜனாதிபதியாக முன்னர் பொய் கூறியது பரவாயில்லை. ஆனால் இப்போது ஜனாதிபதியான பின்னரும் பொய் கூறிக் கொண்டிருப்பதுதான் தவறானது.</p><h2>மொட்டுக் கட்சி</h2><p>
</p><p>
அதே போன்று அநுராதபுரத்தில் மொட்டுக் கட்சி நடத்திய கூட்டத்தைக் கொண்டு அக்கட்சி தம்பட்டம் அடித்துக் கொள்ளக் கூடாது. ஏனெனில் அநுராதபுரத்துக்கு எவரும் வரலாம், போகலாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/933fe539-8802-4308-aec7-0d62ce98ae38/26-6aaa98961ca6a.webp' /></p><p> </p><p>ஆனால் பொதுமக்கள் சிந்தித்தே வாக்களிப்பார்கள்.

இன்றைக்கு மொட்டுக் கட்சியில் வீரர்களாக தங்களை அடையாளப்படுத்திக் கொள்ள முயற்சிப்பவர்கள், மஹிந்தவுக்கு ஜனாதிபதியாக ஆரம்பத்தில் ஒத்துழைப்பு வழங்கியவர்கள் யார் என்பதை சற்று பின்னோக்கிப் பார்த்து அறிந்து கொள்வது நன்று என்றும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-16T13:24:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[3 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவில் நடைபெற உள்ள ஐபிஎல் ஏலம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/2027-ipl-auction-to-be-held-in-india-1789564947"></link>
            <id>https://news.lankasri.com/article/2027-ipl-auction-to-be-held-in-india-1789564947</id>
            <summary type="text">2027 ipl auction to be held in india: ஐபிஎல் ஏலத்தை 3 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவில் நடத்த ஐபிஎல் நிர்வாக குழு முன்வந்துள்ளது.

இந்தியாவில் நடைபெற உ...</summary>
            <content type="html"><![CDATA[<p>2027 ipl auction to be held in india: ஐபிஎல் ஏலத்தை 3 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவில் நடத்த ஐபிஎல் நிர்வாக குழு முன்வந்துள்ளது.
</p><h3>
இந்தியாவில் நடைபெற உள்ள ஐபிஎல் ஏலம் </h3><p>

உலக அளவில் நடைபெறும் T20 கிரிக்கெட் போட்டிகளில் பிசிசிஐ நடத்தி வரும் ஐபிஎல் தொடர் மிகவும் பிரபலமானது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9f921aab-8065-4762-b9fd-41292cc695a2/26-6aaa9815200e1.webp' /></p><p>

வீரர்களை தேர்வு செய்ய ஒவ்வொரு 3 ஆண்டுகளுக்கு ஒரு மெகா ஏலமும், ஆண்டுக்கு ஒருமுறை மினி ஏலமும் நடைபெறும். </p><p>

கடைசியாக கடந்த 2023 ஆம் ஆண்டு இந்தியாவின் கொச்சியில் மினி ஏலம் நடைபெற்றது. அதன் பிறகு வெளிநாடுகளில் நடைபெற்று வந்தது.</p><p> 

2024 ஆம் ஆண்டு துபாயிலும், 2025 ஆம் ஆண்டு ஜெட்டாவிலும், 2026 ஆம் ஆண்டு அபுதாபியிலும் நடைபெற்றது.&nbsp;</p><p></p><p>
இந்நிலையில், 2027 ஆம் ஆண்டுக்கான மினி ஏலத்தை இந்தியாவில் நடத்த பிசிசிஐ முன்வந்துள்ளது. </p><p>

மினி ஏலத்திற்காக ஐபிஎல் அணிகள் வெளிநாடு செல்ல வேண்டி இருப்பதால் உள்ள பயண சுமையை கருத்தில் கொண்டு, இந்தியாவிலே நடத்த ஐபிஎல் நிர்வாக குழு பரிசீலித்துள்ளது. </p><p>

இந்தியாவில் அக்டோபர் முதல் டிசம்பர் வரை திருமண சீசன் என்பதால், அந்தக் காலகட்டத்தில் 5 நட்சத்திர ஹொட்டல்கள் கிடைப்பதைப் பொறுத்து ஏலம் நடைபெறும் நகரம் தேர்வு செய்யப்படும். இந்த ஏலத்திற்காக, பிசிசிஐக்கு ஓரிரு இரவுகளுக்கு 100க்கும் மேற்பட்ட அறைகள் தேவைப்படுகிறது.</p><p> 

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஐபிஎல் தலைவர் அருண் தூமல், "ஒவ்வொரு ஆண்டும், இதை இந்தியாவில் நடத்த நாங்கள் முயற்சிக்கிறோம், ஆனால் திருமணங்கள் அதிகமாக நடைபெறும் பருவம் என்பதால் எங்களுக்கு இடம் கிடைப்பதில்லை.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b3fa102d-be8c-48b2-be56-a93e582c2a4c/26-6aaa9815cbf0a.webp' /></p><p>
எனவே, இந்த ஆண்டு ஏலம் சிறியதாக இருக்கும் என்பதாலும், இடம் கிடைக்கும் என்ற நம்பிக்கையிலும், நிச்சயமாக இங்கே நடைபெற வேண்டும் என்று விரும்புகிறோம்" என தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p>

மேலும், பல்வேறு வீரர்கள் இம்பாக்ட் பிளேயர் விதி குறித்து அதிருப்தி தெரிவித்த நிலையில், அணிகளிடம் அது குறித்து கருத்து கேட்டுள்ள ஐபிஎல் நிர்வாகம் அந்த விதியை மறுபரிசீலனை செய்ய தயாராக உள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-16T13:23:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[மயக்கம் என்ன பட புகழ் நடிகை ரிச்சாவின் அழகிய குடும்ப புகைப்படங்கள்...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/actress-richa-gangopadhyay-family-photos-1789564334"></link>
            <id>https://cineulagam.com/article/actress-richa-gangopadhyay-family-photos-1789564334</id>
            <summary type="text">நடிகை ரிச்சாதமிழ் சினிமாவில் சில படங்களே நடித்து பிரபலமான நடிகைகளில் உள்ளனர், அதில் ஒருவர் தான் நடிகை ரிச்சா. தனுஷுடன் மயக்கம் என்ன படத்தில் நடித்து ம...</summary>
            <content type="html"><![CDATA[<h2>நடிகை ரிச்சா</h2><p>தமிழ் சினிமாவில் சில படங்களே நடித்து பிரபலமான நடிகைகளில் உள்ளனர், அதில் ஒருவர் தான் நடிகை ரிச்சா. </p><p>தனுஷுடன் மயக்கம் என்ன படத்தில் நடித்து மக்களின் கவனத்தை பெற்றார், சிறப்பான நடிப்பையும் வெளிப்படுத்தியிருப்பார். </p><p>அப்படத்தை தொடர்ந்து சிம்புவுடனும் நடித்தவர் அடுத்தடுத்து படங்கள் நடிப்பார் என்று பார்த்தால் சினிமா பக்கமே வரவில்லை.
திருமணம், குழந்தை என வெளிநாட்டில் செட்டில் ஆகிவிட்டார்.</p><p>தற்போது நடிகை ரிச்சா தனது குடும்பத்துடன் எடுத்த அழகிய புகைப்படங்களை காண்போம்.</p><p><br></p>]]></content>
            <updated>2026-09-16T13:21:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[பல வங்கிக் கணக்குகளை தாண்டி நாமலை சென்றடைந்த பெருமளவு பணம்.. அச்சத்தில் சாட்சியங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-rajapaksa-remanded-airbus-case-1789562638"></link>
            <id>https://tamilwin.com/article/namal-rajapaksa-remanded-airbus-case-1789562638</id>
            <summary type="text">சர்ச்சைக்குரிய எயார்பஸ் விமானக் கொள்முதல் ஊழல் தொடர்பான பணமோசடி வழக்கில் சந்தேகநபராகப் பெயரிடப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை வரும் செ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சர்ச்சைக்குரிய எயார்பஸ் விமானக் கொள்முதல் ஊழல் தொடர்பான பணமோசடி வழக்கில் சந்தேகநபராகப் பெயரிடப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை வரும் செப்டம்பர் 23 ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. </p><p>இதே பரிவர்த்தனை தொடர்பாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் தாக்கல் செய்யப்பட்ட மற்றொரு வழக்கின் கீழ் அவர் ஏற்கனவே செப்டெம்பர் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.</p><p>

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் (CID) நாமல் ராஜபக்ச மற்றும் மூன்று சந்தேகநபர்களுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட பணமோசடி வழக்கு கோட்டை நீதவான் பிரசன்ன அமரசேன முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, நாமல் ராஜபக்ச சிறைச்சாலை பேருந்தில் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார்.</p><p></p><h2>சத்தியக் கடதாசி..&nbsp;</h2><p> </p><p>இதன்போது, விசாரணைகளின் அறிக்கைகள் ஏற்கனவே சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், சந்தேகநபர்களுக்கு எதிராக விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டார நீதிமன்றத்திற்குத் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/077d94d1-d9ba-4931-9f6e-7913f346cf8d/26-6aaa96529e7dc.webp' /></p><p>
</p><p>
நீதிமன்றத்தில் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஜானக பண்டார சமர்ப்பித்த அறிக்கையின்படி, பிரான்ஸின் எயார்பஸ் நிறுவனம் மற்றும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் இடையே 16 விமானங்கள் கொள்முதல் செய்யப்பட்ட ஒப்பந்தத்தில் இடம்பெற்ற இலஞ்ச ஊழல் தொடர்பில் சிறையில் வைத்து சந்தேகநபரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.</p><p>இலஞ்ச ஊழல் சட்டத்தின் கீழ் தனி விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில், தற்போதைய வழக்கு பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. </p><p>புதிய ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் மூலம் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கும் பணமோசடி குறித்து விசாரிக்க அதிகாரம் கிடைத்துள்ளதால், குற்றப்புலனாய்வுத் திணைக்களம் மற்றும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு இணைந்து இந்த விசாரணையை நடத்தி வருகின்றன.
</p><p>தொழிலதிபர் நிமல் பெரேரா வழங்கிய சத்தியக்கடதாசியின் மூலம், இந்த பரிவர்த்தனைக்காக நாமல் ராஜபக்ச 800,000 அமெரிக்க டொலர்களை (சுமார் 100 மில்லியன் ரூபா) இலஞ்சமாகப் பெற்றுக் கொண்டமை தெரியவந்துள்ளதாக மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>பல வங்கிக் கணக்குகள்..&nbsp;</h2><p> </p><p>எயார்பஸ் நிறுவனம் வழங்கிய 1.454 மில்லியன் யூரோ இலஞ்சப் பணம், ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேனவின் மனைவி பிரியங்கா நியோமாலியின் சிங்கப்பூர் கணக்கிற்கு மாற்றப்பட்டு, பின்னர் நிமல் பெரேராவின் நிறுவன கணக்கிற்கு அனுப்பப்பட்டு, இறுதியாக நாமல் ராஜபக்சவைச் சென்றடைந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a03df8a6-46e1-4ed1-9d7e-058e6f382605/26-6aaa96537a237.webp' /></p><p> </p><p>மேலும், பிரியங்காவின் கணக்கிலிருந்து முன்னாள் அமைச்சர் சமல் ராஜபக்சவின் மகனான ஷமீந்திர ராஜபக்சவின் கணக்கிற்கு 160,400 யூரோ அனுப்பப்பட்டதும் கண்டறியப்பட்டுள்ளது.</p><p>

சர்வதேச உதவிகளுடன் நடத்தப்பட்ட தடயவியல் விசாரணையின் போது, நாமல் ராஜபக்சவிற்கும் எயார்பஸ் அதிகாரிகளுக்கும் இடையே பரிமாறப்பட்ட மின்னஞ்சல்களும் மீட்கப்பட்டுள்ளன. </p><p>முதலாவது சந்தேகநபர் உயிரிழந்துள்ள நிலையில், இரண்டாவது சந்தேகநபர் அவுஸ்திரேலியாவிலும், மூன்றாவது சந்தேகநபரான ஷமீந்திர ராஜபக்ச அமெரிக்காவிலும் தலைமறைவாக உள்ளனர். </p><p>மேலும், சாட்சிகள் உயிருக்கு பயந்து சாட்சியமளிக்க அஞ்சுகின்றனர் என்பதால் நாமலுக்கு பிணை வழங்க அரசு தரப்பு கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.
</p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-16T13:20:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஐரோப்பிய ஒன்றியத்தின் முதல் இணை உறுப்பினராக கனடாவிற்கு அழைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/canada-invited-as-eu-s-first-associate-member-1789564922"></link>
            <id>https://news.lankasri.com/article/canada-invited-as-eu-s-first-associate-member-1789564922</id>
            <summary type="text">Canada invited as EUs first associate member: கனடா ஐரோப்பிய ஒன்றியத்தின் முதல் இணை உறுப்பினராக அழைக்கப்படவுள்ளது.

EU முதல் இணை உறுப்பினராக&amp;nbsp;கனட...</summary>
            <content type="html"><![CDATA[<p>Canada invited as EUs first associate member: கனடா ஐரோப்பிய ஒன்றியத்தின் முதல் இணை உறுப்பினராக அழைக்கப்படவுள்ளது.
</p><h2>
EU முதல் இணை உறுப்பினராக&nbsp;கனடா</h2><p>ஐரோப்பிய ஒன்றியம் (EU) தனது 27 உறுப்பினர் நாடுகளுக்குள், கனடாவை முதல் இணை உறுப்பினராக (Associate Member) அழைக்கத் தீர்மானித்துள்ளது.</p><p>

இந்த அறிவிப்பை ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர்லெயன், பிரான்ஸ் ஸ்ட்ராஸ்பர்க் நகரில் நடைபெற்ற ‘State of the Union’ உரையில் வெளியிட்டார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/efca419f-409f-4e69-ac39-accd5fafef28/26-6aaa97fbb1cc8.webp' /></p><p>கனடா பிரதமர் மார்க் கார்னி, இந்த உரையில் கலந்து கொண்டார். அவர், கனடா முழுமையான உறுப்பினராக விரும்பவில்லை என்றாலும், பாதுகாப்பு மற்றும் பொருளாதார கூட்டாண்மை குறித்து தனித்துவமான ஒப்பந்தத்தை விரும்புவதாக தெரிவித்தார்.
</p><p>
தற்போது, கனடா-அமெரிக்கா இடையே கடுமையான வர்த்தக போர் நடைபெற்று வருகிறது. அமெரிக்கா ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் விதித்த சுங்க வரிகளை, கனடா ‘டொலர்-க்கு டொலர்’ என்ற முறையில் எதிர்த்து வருகிறது. இதனால், கனடா தனது பொருளாதார பாதுகாப்பை உறுதிப்படுத்த, ஐரோப்பாவுடன் நெருக்கமான உறவைத் தேடுகிறது.
</p><p></p><h2>EU - கனடா&nbsp;உறவு புதிய நிலைக்கு முன்னேற்றம்</h2><p>ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் கனடா ஏற்கனவே CETA (Comprehensive Economic and Trade Agreement) என்ற சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தில் இணைந்துள்ளன. 2017-இல் அமுலுக்கு வந்த இந்த ஒப்பந்தம், 99 சதவீத சுங்க வரிகளை நீக்கியது. இப்போது, EU-Canada உறவு, “பொது வளமும் பொருளாதார பாதுகாப்பும்” என்ற புதிய நிலைக்கு முன்னேறுகிறது.</p><p>

உர்சுலா வான் டெர்லெயன், “கனடா மற்றும் ஐரோப்பா உலகைப் பார்க்கும் பார்வை ஒன்றே. AI, காலநிலை மாற்றம், ஆர்க்டிக் பாதுகாப்பு, மற்றும் புவியியல் அரசியல் போன்ற துறைகளில் இணைந்து செயல்படுவோம்” என்று தெரிவித்தார்.
</p><p></p><h2>EU-வை 40 நாடுகளாக விரிவாக்கும் திட்டம்</h2><p>பின்லாந்து ஜனாதிபதி அலெக்சாண்டர் ஸ்டப், EU-வை 40 நாடுகளுக்கு விரிவாக்கும் யோசனையை முன்வைத்துள்ளார். அதில் கனடா, பிரித்தானியா, துருக்கி, நோர்வே, ஐஸ்லாந்து ஆகியவை சாத்தியமான உறுப்பினர்களாகக் கருதப்படுகின்றன.
</p><p>
இந்த முடிவு, அமெரிக்கா மற்றும் சீனாவை சார்ந்திருப்பதை குறைத்து, ஜனநாயக நாடுகளுடன் வலுவான கூட்டாண்மையை உருவாக்கும் முயற்சியாக பார்க்கப்படுகிறது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p>&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-16T13:18:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[கையில் செல்போன் இருந்தால், பிரம்மாக்களா? திருந்தணும்!! நடிகை ஆலியா பட்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/who-speak-ill-of-actresses-should-change-alia-bhat-1789564089"></link>
            <id>https://viduppu.com/article/who-speak-ill-of-actresses-should-change-alia-bhat-1789564089</id>
            <summary type="text">ஆலியா பட்பாலிவுட் சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை ஆலியா பட், ரன்பீர் கபூரை திருமணம் செய்து ஒரு குழந்தைக்கு அம்மா ஆன பின்பும் நடிப்பில் ...</summary>
            <content type="html"><![CDATA[<h2>ஆலியா பட்</h2><p>பாலிவுட் சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை ஆலியா பட், ரன்பீர் கபூரை திருமணம் செய்து ஒரு குழந்தைக்கு அம்மா ஆன பின்பும் நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் ஆலியா பட் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் பேசிய விஷயம் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/45f1c465-000b-4cbf-abed-85d62c9a31af/26-6aaa94bb0f5be.webp' /></p><p> </p><p>அதில், கையில் செல்போன் இருந்தால், பிரம்மாக்கள் என்று சில நினைத்து விடுகிறார்கள். சினிமா பிரபலங்களை குறிப்பாக, நடிகைகளை பற்றி அவதூறாக பேசி ஆனந்தம் கொள்கிறார்கள்.</p><p> இதெல்லாம் எவ்வளவு மோசமான விஷயம் தெரியவில்லையா? தன் ரசிகர்களை மகிழ்விக்க நடிகைகள் பல கஷ்டங்களை தாங்கிக் கொள்கிறார்கள். அந்த நடிகைகளை கொண்டாட மனம் வரவில்லை என்றாலும் பரவாயில்லை, தவறாக பேசாமல் இருக்கலாமே? இனியாவது அப்படிப்பட்ட நபர்கள் திருந்த வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன் என்று ஆலியா பட் பேசியுள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-16T13:08:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரச சேவை வலைப்பந்தாட்ட தேசிய மட்டப் போட்டிகள் யாழில் ஆரம்பம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/public-service-netball-national-level-tournaments-1789564030"></link>
            <id>https://ibctamil.com/article/public-service-netball-national-level-tournaments-1789564030</id>
            <summary type="text">2026 அரச சேவை தேசிய மட்ட வலைப்பந்தாட்டப் போட்டிகள் இன்று புதன்கிழமை
மட்டுவில் வளர்மதி விளையாட்டுக் கழகத்தில் ஆரம்பமானது.

இலங்கை அரச சேவைகளை பிரதிந...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026 அரச சேவை தேசிய மட்ட வலைப்பந்தாட்டப் போட்டிகள் இன்று புதன்கிழமை
மட்டுவில் வளர்மதி விளையாட்டுக் கழகத்தில் ஆரம்பமானது</p><p>.

இலங்கை அரச சேவைகளை பிரதிநிதித்துவப்படுத்திய 20 பெண்கள்அணிகள் போட்டிகளில்
பங்கேற்றது

எதிர்வரும் 19ஆம் திகதி இறுதிப் போட்டியும் விருது வழங்கும் வைபவமும்
இடம்பெறும்
</p><p>
குறித நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ் மாவட்ட மேலதிக செயலாளர்
கைலாசப்பிள்ளை சிவகரன் , சிறப்பு விருந்தினர்களாக அரச சேவை வலைப்பந்துப்
போட்டியின் தலைவர்
 ரிக்ஷி நனயகரா,
மணிக் அமரசேஹரா
ஐக்கிய இராச்சிய இலங்கைப் பள்ளி வலைப்பந்து சங்கம் , சத்தியசோதி
பிரதேச செயலாளர்
சாவகச்சேரி,எஸ். இராஜமல்லிகை
வட மாகாண தொழிலாளர் அலுவலகம் ஆகியோர் கலந்து கொண்டனர்.&nbsp;</p><p></p><p><br><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-16T13:07:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[100 கிராமுக்கும் குறைவான போதைப்பொருளுடன் கைதானவர்கள் : நீதியமைச்சரின் அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/high-court-bail-drug-cases-involving-less-100g-1789560904"></link>
            <id>https://ibctamil.com/article/high-court-bail-drug-cases-involving-less-100g-1789560904</id>
            <summary type="text">100 கிராமுக்கும் குறைவான (மொத்த எடை) போதைப்பொருட்களுடன் கைது செய்யப்படும் சந்தேக நபர்கள் மீண்டும் உயர் நீதிமன்றத்தில் பிணை கோருவதற்கு அனுமதிக்கும் வகை...</summary>
            <content type="html"><![CDATA[<p>100 கிராமுக்கும் குறைவான (மொத்த எடை) போதைப்பொருட்களுடன் கைது செய்யப்படும் சந்தேக நபர்கள் மீண்டும் உயர் நீதிமன்றத்தில் பிணை கோருவதற்கு அனுமதிக்கும் வகையில் சட்டத்தை திருத்துவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டு வருவதாக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார நேற்று(15) தெரிவித்தார்.</p><p>தடயவியல்அறிக்கைகளைப் பெறுவதில் ஏற்படும் தாமதங்களால் சந்தேக நபர்கள் நீண்ட காலம் விளக்கமறியலில் வைக்கப்படும் நிலை உருவாகியுள்ளது. இதற்குத் தீர்வாகவே, நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்காகச் சமர்ப்பிக்கப்படவுள்ள இந்தத் திருத்தம் பரிசீலிக்கப்பட்டு வருவதாக அமைச்சர் கூறினார்.</p><h2>பாரதூரமான பிரச்சினையாக மாறியுள்ள&nbsp; தடயவியல் அறிக்கை</h2><p>&nbsp;பத்தரமுல்லையில் உள்ள அரச பகுப்பாய்வாளர் திணைக்களத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய அமைச்சர் நாணயக்கார, குறிப்பாக போதைப்பொருள் தொடர்பான வழக்குகளில் தடயவியல் அறிக்கைகளை வெளியிடுவதில் ஏற்படும் தாமதம் ஒரு பாரதூரமான பிரச்சினையாக மாறியுள்ளதாகக் குறிப்பிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8263ac93-6885-487d-9cfe-5dd42b7d0689/26-6aaa90dcd791e.webp' /></p><p>&nbsp; &nbsp; தற்போதைய அரசாங்கம் பதவியேற்றபோது, ​​அரச பகுப்பாய்வாளர் திணைக்களத்தில் 118 பணியிடங்கள் வெற்றிடமாக இருந்ததாகவும், இதனால் தடயவியல் அறிக்கைகளைத் திறம்பட வெளியிடுவதில் சிரமங்கள் ஏற்பட்டதாகவும் அவர் கூறினார்.</p><p>

அதன்பின்னர் சுமார் 70 பணியாளர்களை நியமிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், அறிக்கைகளைத் தயாரிப்பதை விரைவுபடுத்த அதிகாரிகள் இரவு 10.00 மணி வரை பணியாற்றி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.</p><p></p><p>
</p><p>
</p><h2>உயர் நீதிமன்றத்தில் பிணை கோரும் வசதி</h2><p>போதைப்பொருள் வழக்குகள் தொடர்பான தடயவியல் அறிக்கைகள் மூன்று மாதங்களுக்குள் வெளியிடப்படுவதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் கூறினார்.

2022 இல் இயற்றப்பட்ட சட்டத்தின் கீழ், 10 கிராமுக்கும் அதிகமான போதைப்பொருட்களுடன் கைது செய்யப்படும் சந்தேக நபர்கள் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் (Court of Appeal) பிணை கோர வேண்டியிருந்தது; இதனால் பிணை பெறுவதில் தாமதம் ஏற்பட்டதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f08e1356-02cd-44ee-bf14-c1407fbea60e/26-6aaa90dc2c757.webp' /></p><p>
</p><p>
கைது செய்யப்படும் நேரத்தில் போதைப்பொருட்களின் நிகர எடை 100 கிராமுக்கும் குறைவாக இருக்கும் பட்சத்தில், உயர் நீதிமன்றத்தில் பிணை கோரும் வசதியை இந்த முன்மொழியப்பட்ட திருத்தம் மீண்டும் கொண்டுவரும் என்று அவர் கூறினார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-16T12:51:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[தாயாரின் இறுதிச் சடங்கு இன்று! அரவிந்த டி சில்வாவிற்கு பிடியாணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/court-issues-arrest-warrants-for-aravinda-1789553977"></link>
            <id>https://ibctamil.com/article/court-issues-arrest-warrants-for-aravinda-1789553977</id>
            <summary type="text">கொழும்பு கோட்டை நீதவான் பாசன் அமரசேன, முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் அரவிந்த டி சில்வா மற்றும் அவரது மனைவி பிரியங்கா அனுஷ்கா விஜேநாயக்க ஆகியோருக்கு ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு கோட்டை நீதவான் பாசன் அமரசேன, முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் அரவிந்த டி சில்வா மற்றும் அவரது மனைவி பிரியங்கா அனுஷ்கா விஜேநாயக்க ஆகியோருக்கு இன்று (16) பிடியாணை பிறப்பித்துள்ளார்.
</p><p>
முன்னாள் சிறிலங்கன் ஏர்லைன்ஸ் தலைமைச் செயல் அதிகாரி கபில சந்திரசேனவின் மனைவி சம்பந்தப்பட்ட வழக்கில் ஜாமீன்தாரர்களாக முன்னிலையாகியிருந்த அரவிந்த டி சில்வாவும் அவரது மனைவியும் நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியதைத் தொடர்ந்து இந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.</p><h2>தாயாரின் இறுதிச்சடங்கில் பிடியாணை</h2><p>&nbsp; அரவிந்த டி சில்வாவின் தாயார் ராணி டி சில்வா செப்டம்பர் 14 ஆம் திகதி காலமானார். அவரது இறுதிச் சடங்குகள் மற்றும் தகனச் சடங்குகள் நடைபெறும் இன்றைய நாளில் நீதிமன்றம் பிடியாணையைப் பிறப்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e9f6d7c1-92f9-41ab-a195-e84582beebc5/26-6aaa6f7a43956.webp' /></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-16T12:41:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இணையவழி பாலியல் மிரட்டல் ; பொதுமக்களுக்கு எச்சரிக்கை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/online-harassment-in-sri-lanka-announcement-public-1789559282"></link>
            <id>https://jvpnews.com/article/online-harassment-in-sri-lanka-announcement-public-1789559282</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp; இலங்கை கணினி அவசரகால பதிலளிப்பு மன்றம் (SLCERT), &quot;பாலியல் மிரட்டல்&quot; (sextortion) எனப்படும் இணையக் குற்றம் குறித்து விழிப்புடன் இருக்குமா...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp; இலங்கை கணினி அவசரகால பதிலளிப்பு மன்றம் (SLCERT), "பாலியல் மிரட்டல்" (sextortion) எனப்படும் இணையக் குற்றம் குறித்து விழிப்புடன் இருக்குமாறு பொதுமக்களுக்கு ஒரு சிறப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. </p><p>

இதில், உணர்வுப்பூர்வமான அல்லது தனிப்பட்ட உள்ளடக்கங்களைக் கொண்ட புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை இணையத்தில் வெளியிடுவதாக அச்சுறுத்துவது அடங்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e721ddd2-50dc-4834-aaf7-36733e00f283/26-6aaa81f45197f.webp' /></p><p></p><h2>இணைய அச்சுறுத்தல்</h2><p>
</p><p>
சமூக ஊடக வலைப்பின்னல்கள், செய்திப் பரிமாற்ற செயலிகள், டேட்டிங் செயலிகள் அல்லது இணைய விளையாட்டுகள் வழியாக உருவாகும் இந்த இணைய அச்சுறுத்தல், யாரையும் குறிவைக்கும் அபாயத்தைக் கொண்டுள்ளது.</p><p></p><p> </p><p>இதில், குற்றவாளிகள் முதலில் பாதிக்கப்பட்டவர்களுடன் நட்பாக நம்பிக்கையை ஏற்படுத்தி, பின்னர் அவர்களின் உணர்வுப்பூர்வமான புகைப்படங்கள் அல்லது தரவுகளைப் பெற்று, அதன்பிறகு பணம், கூடுதல் புகைப்படங்கள் அல்லது பல்வேறு இதர சலுகைகளைக் கேட்டு அவர்களை அச்சுறுத்துகின்றனர்.</p><p></p><p>

நவீன உருவாக்க செயற்கை நுண்ணறிவு (Generative AI) தொழில்நுட்பத்தின் விரைவான முன்னேற்றத்தால், குற்றவாளிகள் தனிநபர்களை அச்சுறுத்துவதற்காக போலியான, வெளிப்படையான டீப்ஃபேக்குகளை (deepfakes) உருவாக்குவதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.
</p><p>
ஒருவர் இதுபோன்ற அச்சுறுத்தலை எதிர்கொண்டால், குற்றவாளிகளுடனான அனைத்துத் தொடர்புகளையும் உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும், அவர்களின் செய்திகள் மற்றும் அச்சுறுத்தல்களுக்கான ஆதாரங்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என்றும், சம்பந்தப்பட்ட கணக்குகளை முடக்குவதற்கு முன்பு உரிய உதவியை நாட வேண்டும் என்றும் SLCERT அறிவுறுத்துகிறது.</p><p></p><p>

இணையத்தில் தனிப்பட்ட அல்லது முக்கியமான தகவல்களைப் பகிரும்போது பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறும், அறிமுகமில்லாத நபர்களை எளிதில் நம்ப வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-16T12:32:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ashik</name>
            </author>
            <title type="text"><![CDATA[மன்னாரில் சட்டவிரோத கடற்றொழிலில் ஈடுபட்ட இரு சந்தேக நபர்கள் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/2-suspects-arrested-fish-caught-using-explosives-1789559770"></link>
            <id>https://tamilwin.com/article/2-suspects-arrested-fish-caught-using-explosives-1789559770</id>
            <summary type="text">மன்னார்- முழங்காவில் கடற்கரை பகுதியில் வெடி பொருட்களைப் பயன்படுத்தி பிடிக்கப்பட்ட மீன்களுடன் இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.இலங்கை கடற்படை...</summary>
            <content type="html"><![CDATA[<p>மன்னார்- முழங்காவில் கடற்கரை பகுதியில் வெடி பொருட்களைப் பயன்படுத்தி பிடிக்கப்பட்ட மீன்களுடன் இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>இலங்கை கடற்படையினரால் நேற்று (15) மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது சந்தேகநபர்கள் கெப் வாகனத்துடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>வடமத்திய கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் புவனேக நிறுவனத்திற்கு
கிடைத்த நம்பகமான தகவலின் அடிப்படையில், மேற்கொள்ளப்பட்ட இந்த விசேட தேடுதல்
நடவடிக்கையின் போது, முழங்காவில் கடற்கரை பகுதியில் சந்தேகத்திற்கிடமான கெப்
ஒன்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.</p><h2>சட்ட நடவடிக்கை</h2><p>

இதன்போது, வெடி பொருட்களைப் பயன்படுத்தி பிடிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும்
370 கிலோ கிராமிற்கும் அதிகமான மீன்களை ஏற்றிச் செல்வதற்கு தயாராக இருந்த,
மன்னார் பகுதியைச் சேர்ந்த 29 மற்றும் 48 வயதுடைய இரண்டு (02) சந்தேக
நபர்களுடன் அந்த கெப் வாகனமும் கைது செய்யப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/885439d4-e0b7-41db-9a1e-933367e31c16/26-6aaa8bd320d1f.webp' /></p><p>


மேலும், இந்த நடவடிக்கையின் மூலம் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள், கெப்
மற்றும் மீன் தொகை என்பன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கிளிநொச்சி மீன்பிடி
திணைக்கள அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-16T12:30:38+00:00</updated>
        </entry>
    </feed>
