<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-08-08T06:45:10+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ் பல்கலைக்கழக மாணவியின் மரணத்தால் கதறும் உறவுகள் ; துயரை ஏற்படுத்திய காரணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/jaffna-university-student-s-death-shocks-family-1786171329"></link>
            <id>https://jvpnews.com/article/jaffna-university-student-s-death-shocks-family-1786171329</id>
            <summary type="text">யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இராமநாதன் நுண்கலை பீடத்தின் இசைத்துறை மாணவி ஒருவர் நேற்று முன்தினம் (06) இரவு உயிரிழந்துள்ளார். 

 

கண்டி மாவட்டத்தைச் சே...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இராமநாதன் நுண்கலை பீடத்தின் இசைத்துறை மாணவி ஒருவர் நேற்று முன்தினம் (06) இரவு உயிரிழந்துள்ளார். </p><p>

 

கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவியே இவ்வாறு உயிரிழந்தவராவார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a42b7888-fe2a-4b5e-8093-e893f4025f1b/26-6a76cfc32762b.webp' /></p><p>
</p><p>
 

இது குறித்து மேலும் தெரியவருவதாவது:</p><p>

 

குறித்த மாணவி யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இராமநாதன் நுண்கலை பீடத்தில் கல்வி கற்று வந்தார்.
</p><p>
 

இந்நிலையில், புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த இம்மாணவி கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.</p><p> 

 

இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் வைத்தியசாலையிலேயே உயிரிழந்துள்ளார்.</p><p>

 

இச்சம்பவம் அனைவர் மத்தியிலும் ஆழ்ந்த துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. கற்ற சமூகத்தில் ஏற்படும் தொடர்ச்சியான இழப்புகள் ஈடு செய்ய முடியாத பாரிய இழப்புகளாகவே பார்க்கப்படுகின்றன.</p>]]></content>
            <updated>2026-08-08T06:42:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[இதெல்லாம் வெறும் ட்ராமா! மோகன் சர்மா முதியோர் இல்ல நாடகம் குறித்து குட்டி பத்மினி பரபரப்பு பேட்டி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/actor-mohan-sharma-old-age-home-drama-revealed-1786167789"></link>
            <id>https://manithan.com/article/actor-mohan-sharma-old-age-home-drama-revealed-1786167789</id>
            <summary type="text">kutty padmini slams actor mohan-sharma : 70, 80-களில் மலையாளத் திரையுலகில் வெளியான பிரபலமான ‘சட்டகாரி’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி, பின்னர் 20-க்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>kutty padmini slams actor mohan-sharma : 70, 80-களில் மலையாளத் திரையுலகில் வெளியான பிரபலமான ‘சட்டகாரி’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி, பின்னர் 20-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து, தயாரித்து, இயக்கி, ஒரு காலத்தில் புகழிலும் பணத்திலும் உச்சத்தில் இருந்தவர் மூத்த நடிகர் மோகன் சர்மா.ஆனால், சமீபத்தில் அவர் அளித்த பேட்டி திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது.</p><p>

“ஒரு காலத்தில் போயஸ் கார்டனில் வாழ்ந்த எனது வாழ்க்கை இன்று இப்படி ஆகிவிட்டது. உடல்நிலை சரியில்லாமல், மாத்திரை வாங்கக்கூட பணமில்லாத நிலையில் முதியோர் இல்லத்தில் தங்கியிருக்கிறேன்” என்று அவர் கண்ணீருடன் பேசிய காணொளி இணையத்தில் வைரலாகி நெட்டிசன்களின் அனுதாபத்தை பெற்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a48a7585-adb8-417f-a3d7-490d27763b2b/26-6a76cf724663a.webp' /></p><h2>உண்மையை உடைத்த&nbsp; குட்டி பத்மினி&nbsp;</h2><p>
இந்தப் பேட்டிக்கு பதிலளிக்கும் விதமாக, நடிகை குட்டி பத்மினி வெளியிட்ட வீடியோவில் பல்வேறு பரபரப்பான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
</p><p><b>குட்டி பத்மினி குறிப்பிடுகையில்,&nbsp;</b></p><p>மோகன் சர்மா தனது பேட்டியில், தென்னிந்திய பிலிம் சேம்பர் தனக்கு எந்த உதவியும் செய்யவில்லை என்று கூறியுள்ளார். ஆனால், தனது தகவலின்படி, கடந்த ஆண்டுதான் பிலிம் சேம்பர் சார்பில் அவருக்கு ரூ.2 லட்சம் உதவித்தொகை வழங்கப்பட்டதாக குட்டி பத்மினி தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/96f56873-16c0-45d6-9a7e-b02b948cf373/26-6a76cf72eb08d.webp' /></p><p>
“பணத்தையும் பெற்றுக்கொண்டு, யாருமே எனக்கு உதவவில்லை என்று எப்படி சொல்ல முடிகிறது?” என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.</p><p>

“போயஸ் கார்டன் வீடு யாருடைய பணத்தில் வாங்கப்பட்டது?”
மோகன் சர்மா தனது பழைய வாழ்க்கையை நினைவுகூரும்போது குறிப்பிட்டதாகக் கூறப்படும் போயஸ் கார்டன் வீடு குறித்தும் குட்டி பத்மினி பல்வேறு தகவல்களை தெரிவித்துள்ளார்.</p><p>
நடிகை லஷ்மியை மோகன் சர்மா திருமணம் செய்து வாழ்ந்த காலகட்டத்தில், அந்த வீட்டை வாங்குவதற்காக லஷ்மி தனது சொந்த பணத்தில் இருந்து ரூ.5 லட்சம் கொடுத்ததாகவும், ஆனால் அந்த வீடு தனது பெயரில் வாங்கப்பட்டதாகவும் குட்டி பத்மினி குற்றம்சாட்டியுள்ளார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/25cb7d1b-d1c4-497e-9ef4-839ebde76e71/26-6a76cf739d3a7.webp' /></p><p></p><p>
“வெயில், மழை பாராமல் உழைத்து சம்பாதித்த பணத்தை லஷ்மி கொடுத்தார். ஆனால் அந்தப் பணத்தில் வாங்கப்பட்ட வீட்டை தனது பெயரில் பதிவு செய்துகொண்டார்” என குட்டிபத்மினி தெரிவித்துள்ளார்.</p><h2>
மூன்று திருமணங்கள்</h2><p>மேலும், இந்த விஷயம் பல ஆண்டுகளுக்குப் பிறகுதான் லஷ்மிக்கு தெரியவந்ததாகவும் குட்டி பத்மினி தெரிவித்துள்ளார்.</p><p>

மேலும், லஷ்மி இதுவரை மோகன் சர்மாவைப் பற்றி பகிரங்கமாக தவறாகப் பேசியதில்லை என்றும், அதே நேரத்தில் மோகன் சர்மா தனது வாழ்க்கை பாதிக்கப்பட்டதற்கு லஷ்மியே காரணம் என பேசியதாகவும் அவர் கூறியுள்ளார்.</p><p>
லஷ்மியைப் பிரிந்த பின்னர் மோகன் சர்மா இரண்டாவது திருமணம் செய்துகொண்டு, பின்னர் விவாகரத்து பெற்றதாகவும், அதன் பிறகு சாந்தி என்ற பரதநாட்டியக் கலைஞரை மூன்றாவதாக திருமணம் செய்துகொண்டதாகவும் குட்டி பத்மினி தெரிவித்துள்ளார்.
</p><p>
மூன்றாவது மனைவியான சாந்தியிடமும் குடும்ப வன்முறை மற்றும் பணம் தொடர்பான பிரச்சினைகள் இருந்ததாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். இதன் காரணமாக சாந்தியும் அவரைப் பிரிந்து சென்றதாக அவர் கூறுகிறார்.

இவ்வாறு மூன்று பெண்களின் வாழ்க்கையிலும் பிரச்சினைகளை ஏற்படுத்தியதாக மோகன் சர்மா மீது குட்டி பத்மினி பல்வேறு&nbsp; குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/922ff9b3-4eb4-4560-ba30-a04ad49d5ea0/26-6a76cf745220f.webp' /></p><h2><span style="color: inherit; font-size: 1.75rem;">இது முற்றிலும் பொய்...&nbsp;</span></h2><p>
</p><p>“சாப்பாட்டுக்கே வழியில்லை, மருந்து வாங்கக்கூட பணமில்லை என்று சொல்கிறார். ஆனால் அவர் அணிந்திருக்கும் செருப்பின் விலை ரூ.6,000” என்று கூறியுள்ள குட்டி பத்மினி, “இது எப்படி சாத்தியம்?” என கேள்வி எழுப்பியுள்ளார்.</p><p>

தொடர்ந்து, மோகன் சர்மா கூறியதாக வெளியான தகவல்களை “நாடகம்” மற்றும் “அண்டப் புளுகு” என கடுமையாக விமர்சித்த அவர், மூன்று பெண்களின் வாழ்க்கையைப் பாதித்ததாகக் கூறப்படும் செயல்களுக்கு ஒருநாள் அவர் பதில் சொல்ல வேண்டியிருக்கும் என்றும் ஆவேசமாக தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/61dc8c2e-3bd0-4aa7-9519-bd4ec538084c/26-6a76cf750689d.webp' /></p><p></p><p> </p><p>மேலும் தமிஜழக முதலமைச்சர் விஜயிடம் உதவி கேட்டடிருப்பதும் மக்களின் கவனத்தை ஈர்க்கத்தான், அனதாபத்தை பெறத்தான் விஜய் விதவி செய்தாலும் காலம் கடந்தபின் அவரையும் குறை கூறுார் என&nbsp;மோகன் சர்மா குறித்து பல குற்றச்சாட்டுககளை முன்வைத்து பேசியுள்ளார் .குட்டி பத்மினியின்&nbsp; இந்த பேட்டி இணையத்தில் படு வைரலாகி வருகின்றது.</p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW&nbsp;</a></u></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-08T06:41:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[திடீர் மாற்றம் - தங்கம் வாங்கவுள்ளோருக்கு முக்கிய அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/gold-price-today-in-world-gold-market-1786171021"></link>
            <id>https://ibctamil.com/article/gold-price-today-in-world-gold-market-1786171021</id>
            <summary type="text">சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை மாற்றங்களுக்கு ஏற்ப, உள்நாட்டு தங்க விலைகளிலும் தொடர்ந்து ஏற்ற, இறக்கங்கள் பதிவாகி வருவதாக நகை வியாபாரிகள் தெரிவிக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை மாற்றங்களுக்கு ஏற்ப, உள்நாட்டு தங்க விலைகளிலும் தொடர்ந்து ஏற்ற, இறக்கங்கள் பதிவாகி வருவதாக நகை வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.</p><p>சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை, நேற்றைய விலையுடன் ஒப்பிடுகையில் இன்று சற்று வீழ்ச்சியடைந்துள்ளது.
</p><p>நேற்று ஒரே நாளில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 98 அமெரிக்க டொலர்களால் அதிகரித்து, 4,355 அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியிருந்தது.</p><p></p><h2>தங்கத்தின் விலை&nbsp;</h2><p>
</p><p>இந்த நிலையில், இன்று ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4,342 அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6532c918-da00-4bc4-805a-ad0433e82e20/26-6a76cf6a48614.webp' /></p><p>
இதன்படி, நேற்றைய விலையுடன் ஒப்பிடுகையில் இன்று ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 13 அமெரிக்க டொலர்களால் குறைந்துள்ளது.
</p><p>
இதேவேளை, சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் வெள்ளியின் விலையும் இன்று சற்று வீழ்ச்சியடைந்துள்ளது.</p><p>

அதன்படி, இன்று ஒரு அவுன்ஸ் வெள்ளி 63.58 அமெரிக்க டொலர்களாக விற்பனை செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-08T06:40:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[எட்மண்டனில் கொல்லப்பட்ட இந்தியருக்கு நகர மேயர் இரங்கல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/edmonton-mayor-condolence-for-indian-dies-robbery-1786171228"></link>
            <id>https://canadamirror.com/article/edmonton-mayor-condolence-for-indian-dies-robbery-1786171228</id>
            <summary type="text">கனடாவின் எட்மண்டன் நகரில் இந்தியர் ஒருவர் கொல்லப்பட்ட நிலையில், நகர மேயர் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.


கனடாவில் ஆல்பர்ட்டா மாகாணத்தி...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் எட்மண்டன் நகரில் இந்தியர் ஒருவர் கொல்லப்பட்ட நிலையில், நகர மேயர் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.</p><p>


கனடாவில் ஆல்பர்ட்டா மாகாணத்திலுள்ள எட்மண்டன் நகரில், கொள்ளை முயற்சி ஒன்றின்போது இந்தியர் ஒருவர் கொல்லப்பட்டார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/78887311-9ebc-4ac5-bee4-df5ec21808d8/26-6a76cf5d4a594.webp' /></p><p>

எட்மண்டனில் மதுபான விடுதி ஒன்றை நடத்திவரும் சுக்ஜீத் சிங் ரந்தாவா (48) என்பவர், புதன்கிழமை இரவு தனது விடுதியை மூடிக்கொண்டிருந்திருக்கிறார்.</p><p>

அப்போது அங்கு வந்த இளைஞர் ஒருவர் சிங் கடையில் கொள்ளையடிக்க முயன்றபோது, அவரை சிங் தடுக்க, அந்த நபர் சிங்கை தாக்கியுள்ளார்.
</p><p>
தகவலறிந்த பொலிசார் சம்பவ இடத்துக்கு வந்தபோது, சிங் படுகாயமடைந்த நிலையில் கிடந்துள்ளார்.
</p><p>
முதலுதவி சிகிச்சைக்குப் பின் சிங்கை அவர்கள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல, அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
</p><p>
இந்த சம்பவம் தொடர்பில், நிக்கோலஸ் (Nicholas Butler-Chowace, 22) என்னும் கனேடியரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
</p><p>

சுக்ஜீத் சிங் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள எட்மண்டன் நகர மேயரான ஆண்ட்ரூ நாக், இதுபோன்ற அர்த்தமற்ற வன்முறைச் செயல்கள் நம் சமூகத்தின் ஒட்டுமொத்த கட்டமைப்பையே பாதிக்கின்றன என்று கூறியுள்ளார்.
</p><p>
ஒவ்வொரு எட்மண்டன்வாசிக்கும் நம் நகரில் பாதுகாப்பாக உணர உரிமை உண்டு என்று கூறியுள்ள அவர், தன் சமூகத்துக்கு சேவை செய்யும் போதும், தம் கடமையை ஆற்றும்போதும், யாரும் அபாயத்தை எதிர்கொள்ளக்கூடாது என்றும் கூறியுள்ளார்.</p><p>

வரும் புதன்கிழமை சுக்ஜீத் சிங்குக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-08T06:40:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் கொள்ளை முயற்சியின்போது கொல்லப்பட்ட இந்தியர்: நகர மேயர் இரங்கல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/edmonton-mayor-condolence-indian-death-in-robbery-1786170748"></link>
            <id>https://news.lankasri.com/article/edmonton-mayor-condolence-indian-death-in-robbery-1786170748</id>
            <summary type="text">கனடாவின் எட்மண்டன் நகரில் இந்தியர் ஒருவர் கொல்லப்பட்ட நிலையில், நகர மேயர் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.


கனடாவில் ஆல்பர்ட்டா மாகாணத்தி...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் எட்மண்டன் நகரில் இந்தியர் ஒருவர் கொல்லப்பட்ட நிலையில், நகர மேயர் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
</p><p>

கனடாவில் ஆல்பர்ட்டா மாகாணத்திலுள்ள எட்மண்டன் நகரில், கொள்ளை முயற்சி ஒன்றின்போது இந்தியர் ஒருவர் கொல்லப்பட்டார்.</p><h3>

கொள்ளை முயற்சியின்போது கொல்லப்பட்ட இந்தியர்
</h3><p>
எட்மண்டனில் மதுபான விடுதி ஒன்றை நடத்திவரும் சுக்ஜீத் சிங் ரந்தாவா (48) என்பவர், புதன்கிழமை இரவு தனது விடுதியை மூடிக்கொண்டிருந்திருக்கிறார்.&nbsp;</p><p><iframe src="https://www.facebook.com/plugins/post.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2FVoteBhullar%2Fposts%2Fpfbid03852M3ayajQk4fu7bDhftgZtoVdm7yzB9EEi4SB26e8DN2s32gsSwZDXQGUvxrGPsl&show_text=true&width=500" width="500" height="628" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share"></iframe></p><p>
அப்போது அங்கு வந்த இளைஞர் ஒருவர் சிங் கடையில் கொள்ளையடிக்க முயன்றபோது, அவரை சிங் தடுக்க, அந்த நபர் சிங்கை தாக்கியுள்ளார்.
</p><p>
தகவலறிந்த பொலிசார் சம்பவ இடத்துக்கு வந்தபோது, சிங் படுகாயமடைந்த நிலையில் கிடந்துள்ளார்.
</p><p>
முதலுதவி சிகிச்சைக்குப் பின் சிங்கை அவர்கள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல, அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
</p><p>
இந்த சம்பவம் தொடர்பில், நிக்கோலஸ் (Nicholas Butler-Chowace, 22) என்னும் கனேடியரை பொலிசார் கைது செய்துள்ளனர்.&nbsp;</p><p></p><p>
நகர மேயர் இரங்கல்

சுக்ஜீத் சிங் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள எட்மண்டன் நகர மேயரான ஆண்ட்ரூ நாக், இதுபோன்ற அர்த்தமற்ற வன்முறைச் செயல்கள் நம் சமூகத்தின் ஒட்டுமொத்த கட்டமைப்பையே பாதிக்கின்றன என்று கூறியுள்ளார்.
</p><p>
ஒவ்வொரு எட்மண்டன்வாசிக்கும் நம் நகரில் பாதுகாப்பாக உணர உரிமை உண்டு என்று கூறியுள்ள அவர், தன் சமூகத்துக்கு சேவை செய்யும்போதும், தம் கடமையை ஆற்றும்போதும், யாரும் அபாயத்தை எதிர்கொள்ளக்கூடாது என்றும் கூறியுள்ளார்.
</p><p>
வரும் புதன்கிழமை சுக்ஜீத் சிங்குக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-08T06:34:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[LPL இறுதிப் போட்டியில் Jaffna Kings - இரசிகர்களுக்கு இலவச அனுமதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/2026-lanka-premier-league-lpl-cricket-final-match-1786163497"></link>
            <id>https://ibctamil.com/article/2026-lanka-premier-league-lpl-cricket-final-match-1786163497</id>
            <summary type="text"> புதிய இணைப்புகொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் இன்று (8) நடைபெறவுள்ள லங்கா பிரீமியர் லீக் (LPL) கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியைப் பார்ப்பதற்கு, ...</summary>
            <content type="html"><![CDATA[<h2> புதிய இணைப்பு</h2><p>கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் இன்று (8) நடைபெறவுள்ள லங்கா பிரீமியர் லீக் (LPL) கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியைப் பார்ப்பதற்கு, ரசிகர்களுக்கு இலவசமாக மைதானத்திற்குள் நுழைவதற்கான வாய்ப்பை வழங்க இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தீர்மானித்துள்ளது.
</p><p>
 

மைதானத்தின் 'C' Upper மற்றும் Lower, 'D' Upper மற்றும் Lower ஆகிய பகுதிகள் இதற்காக ஒதுக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
</p><p>
 

இறுதிப் போட்டிக்கு கோல் கெலன்ட்ஸ் (Galle Gallants) மற்றும் ஜஃப்னா கிங்ஸ் (Jaffna Kings) ஆகிய அணிகள் தகுதி பெற்றுள்ளதுடன், இப்போட்டி இரவு 7.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.</p><h2>முதலாம் இணைப்பு</h2><p>ஜஃப்னா கிங்ஸ் (Jaffna Kings) அணிக்கும் கோல் கெலன்ட்ஸ் (Galle Gallants) அணிக்கும் இடையிலான லங்கா பிரீமியர் லீக் (LPL) கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி நடைபெறவுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/541acb66-b150-474b-a62d-bf40aa31142d/26-6a76cdce79f22.webp' /></p><p> </p><p>தொடரின் இறுதிப் போட்டியானது கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் இன்று (8) இரவு நடைபெறவுள்ளது.</p><p>லீக் சுற்றின் அனைத்துப் போட்டிகளின் முடிவிலும் இவ்விரு அணிகளும் புள்ளிப்பட்டியலின் முதல் (ஜஃப்னா) மற்றும் இரண்டாம் இடங்களைப் பிடித்திருந்தன.</p><p></p><p>
</p><h2>ஆட்ட நிர்ணயக் குற்றச்சாட்டில் கைது</h2><p>
 

இதற்கமைய, இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது தகுதிப் போட்டியில் (Qualifier 1) திரில் வெற்றி பெற்ற ஜஃப்னா கிங்ஸ் அணி, இறுதிப் போட்டிக்கு நேரடியாகத் தகுதி பெற்றது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4689e219-1215-44a2-9c28-a8e51bd5cb7a/26-6a76b5af5f54d.webp' /></p><p>இருப்பினும், வெளியேற்றப் போட்டியில் வெற்றி பெற்று வந்த கொழும்பு கெப்ஸ் அணியை இரண்டாவது தகுதிப் போட்டியில் வீழ்த்திய கோல் கெலன்ட்ஸ் அணி, மீண்டும் இறுதிப் போட்டியில் விளையாடும் வாய்ப்பைப் பெற்றுக்கொண்டது.
</p><p>
 

இதேவேளை, ஜஃப்னா கிங்ஸ் (Jaffna Kings) அணியை, இந்தியாவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சஹீர் கான் மற்றும் தொழிலதிபர் நாகேந்திர சித்தௌதம் ஆகியோரை இணை உரிமையாளர்களாகக் கொண்ட Anchor Sports AB நிறுவனம் தனதாக்கிக் கொண்டுள்ளது.</p><p>அணியின் இணை உரிமையாளர் மன்ஜோத் கல்ரா ஆட்ட நிர்ணயக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, இலங்கை கிரிக்கெட் சபை மற்றும் IPG நிறுவனத்தின் தற்காலிக நிர்வாகத்தில் இருந்த இந்த அணி, தற்போது மீண்டும் நிலையான உரிமையாளர்களின் கீழ் வந்துள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-08T06:34:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[விஸ்வநாத் &amp; சன்ஸ் திரைப்படத்தின் ப்ரீ புக்கிங் கலெக்ஷன் எவ்வளவு தெரியுமா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/vishwanath-and-sons-movie-pre-booking-details-1786169675"></link>
            <id>https://cineulagam.com/article/vishwanath-and-sons-movie-pre-booking-details-1786169675</id>
            <summary type="text">விஸ்வநாத் &amp;amp; சன்ஸ்சூர்யா நடிப்பில் கடைசியாக வெளியான கருப்பு திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட். அப்பட வெற்றியின் சந்தோஷத்தில் இருப்பவர் தனது அடுத்தப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<h2>விஸ்வநாத் &amp; சன்ஸ்</h2><p>சூர்யா நடிப்பில் கடைசியாக வெளியான கருப்பு திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட். </p><p>அப்பட வெற்றியின் சந்தோஷத்தில் இருப்பவர் தனது அடுத்தப்பட ரிலீஸிற்கு தயாராகிவிட்டார். சூர்யா நடிப்பில் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படம் தயாராகியுள்ளது, இப்படத்தின் டிரைலர் நேற்று (ஆகஸ்ட் 7) வெளியாகி இருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2542a941-c9cb-4eb1-8382-05d4b09d76c7/26-6a76cf9927f1d.webp' /></p><p>
</p><p>இந்த டிரைலரில் சூர்யா சிறுவயதில் துப்பாக்கி சுடும் பயிற்சி பெற்று ஒலிம்பிக்கில் பதக்கம் பெறுகிறார். பணக்காரரான சஞ்சய் விஸ்வநாத் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். </p><p>அவரது குழந்தைக்கு எலும்பு தொடர்பான சிகிச்சைக்கு வெளிநாடு செல்கிறார், அங்கு மமிதா பைஜு குழந்தையின் சிகிச்சைக்கு ஒத்துழைப்பது போன்று காட்டப்படுகிறது. </p><p>பின்னர் சூர்யாவை காதலிக்கும் மமிதா பைஜு சூர்யாவை காதலிக்க அவரைவிட்டு பிரிய முடியாமல் தவிப்பது போன்ற காட்சிகள் டிரெய்லரின் இடம்பெற்றுள்ளன.</p><h2>ப்ரீ புக்கிங்</h2><p>
லக்கி பாஸ்கர் பட இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா, மமிதா பைஜு, ராதிகா உள்ளிட்ட பலர் நடித்துள்ள விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படம் வரும் ஆகஸ்ட் 14ம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகிறது. </p><p>இப்படம் ப்ரீ புக்கிங்கில் மட்டுமே ரூ. 15 லட்சம் கலெக்ஷன் செய்திருப்பதாக கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/53f1c9d7-15a8-4fbc-9bf4-c0a1c1e76561/26-6a76d0130ad24.webp' /></p>]]></content>
            <updated>2026-08-08T06:30:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தியாவின் தங்க நகரம் என்று அழைக்கப்படும் அதிசய நகரம்.., எது தெரியுமா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/which-city-is-called-as-the-golden-city-of-india-1786170181"></link>
            <id>https://news.lankasri.com/article/which-city-is-called-as-the-golden-city-of-india-1786170181</id>
            <summary type="text">இந்தியாவில் ஒவ்வொரு நகரத்திற்கும் தனித்துவமான பெயர்களும், சிறப்புகளும் உள்ளன.

அந்த வகையில் ராஜஸ்தானின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள ஜெய்சல்மர் நகர...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியாவில் ஒவ்வொரு நகரத்திற்கும் தனித்துவமான பெயர்களும், சிறப்புகளும் உள்ளன.</p><p>

அந்த வகையில் ராஜஸ்தானின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள ஜெய்சல்மர் நகரம் இந்தியாவின் தங்க நகரம் என்று அழைக்கப்படுகிறது.
</p><p>
ஜெய்சல்மர் நகரில் உள்ள பெரும்பாலான வரலாற்றுச் சிறப்புமிக்க கட்டிடங்கள் மஞ்சள் நிற மணற்கற்களால் கட்டப்பட்டுள்ளன.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2174ff12-6653-4dc2-aee6-abb218d7c37f/26-6a76cccf489bf.webp' /></p><p>சூரிய ஒளி இந்தக் கட்டிடங்கள் மீது படும்போது, அவை தங்க நிறத்தில் ஜொலிப்பது போல் காட்சியளிக்கின்ற காரணமாகவே ஜெய்சல்மருக்கு தங்க நகரம் என்ற பெயர் வந்தது.&nbsp;</p><p>ஜெய்சல்மரின் முக்கிய அடையாளமாக இருப்பது ஜெய்சல்மர் கோட்டை. இது சோனார் கிலா அல்லது தங்கக் கோட்டை என்றும் அழைக்கப்படுகிறது.
</p><p>
கி.பி. 1156ஆம் ஆண்டு ராஜபுத்திர மன்னர் ராவல் ஜெய்சால் இந்தக் கோட்டையை கட்டினார். அப்போது இது அவரது ராஜ்ஜியத்தின் முக்கிய மையமாக இருந்தது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/35e529be-2b77-4b8b-98f5-02f95f6f5b3e/26-6a76ccd031ed1.webp' /></p><p>இந்தக் கோட்டையின் மற்றொரு சிறப்பு, இது வெறும் வரலாற்றுச் சின்னமாக மட்டும் இல்லாமல் இன்றும் மக்கள் வசிக்கும் பகுதியாக இருப்பதுதான்.&nbsp;&nbsp;</p><p>பழங்காலத்தில் ஜெய்சல்மர் முக்கியமான வணிக நகரமாகவும் இருந்தது. </p><p>

இந்தியாவையும் மேற்கத்திய பகுதிகளையும் இணைக்கும் முக்கிய வணிகப் பாதைகளுக்கு அருகில் இந்த நகரம் அமைந்திருந்ததால், ஏராளமான வணிகர்கள் இங்கு வந்து சென்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9b43e9f4-335c-48f4-8dc1-c96062ff8c03/26-6a76ccd0df779.webp' /></p><p>

இதன் மூலம் ஜெய்சல்மர் வணிகம் மட்டுமின்றி, கலாச்சாரம் மற்றும் கட்டிடக்கலையிலும் சிறந்து விளங்கியது.
</p><p>
இன்றும் ஜெய்சல்மர் தனது பழமையான கட்டிடங்கள், நாட்டுப்புற இசை, கைவினைப் பொருட்கள், திருவிழாக்கள் மற்றும் பாலைவன வாழ்க்கை முறைக்காக பிரபலமாக உள்ளது.
</p><p>
அதன் தங்க நிறக் கட்டிடங்களும் வரலாற்றுச் சிறப்புகளும் ஏராளமான சுற்றுலாப் பயணிகளை ஈர்த்து வருகின்றன.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-08T06:30:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[விடுக்கப்பட்ட சிவப்பு எச்சரிக்கை ; வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/red-alert-issued-meteorology-department-warning-1786170585"></link>
            <id>https://jvpnews.com/article/red-alert-issued-meteorology-department-warning-1786170585</id>
            <summary type="text">சிலாபத்திலிருந்து கல்பிட்டி ஊடாக மன்னார் வரையிலான மற்றும் மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலான கடற்பகுதிகளுக்கு பலத்த காற்று மற்று...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">சிலாபத்திலிருந்து கல்பிட்டி ஊடாக மன்னார் வரையிலான மற்றும் மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலான கடற்பகுதிகளுக்கு பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் நிலை குறித்த "சிவப்பு" மட்ட எச்சரிக்கையை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
</p><p style="text-align: justify;">
சனிக்கிழமை (08) வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை அறிவித்தல், ஞாயிற்றுக்கிழமை (09) காலை 8.30 மணி வரை அமலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/221bfaf2-8d9d-4b30-8485-b95bd1cfc900/26-6a76ccdae48b6.webp' /></p><h2 style="text-align: justify;">&nbsp;வானிலை முன்னறிவிப்பு</h2><p style="text-align: justify; ">

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையின்படி, சிலாபத்திலிருந்து கல்பட்டி ஊடாக மன்னார் வரையிலான மற்றும் மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலான கடற்பகுதிகள் அவ்வப்போது மணிக்கு 60 முதல் 70 கிலோமீற்றர் வரையிலான வேகத்தில் பலத்த காற்ற வீசுவதுடன் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும்.
</p><p style="text-align: justify;">
எனவே, மறுஅறிவித்தல் வரும் வரை இந்தச் கடற்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என கடற்படை மற்றும் மீனவ சமூகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;">
</p><p style="text-align: justify;">
இதேவேளை, மட்டக்களப்பிலிருந்து திருகோணமலை மற்றும் காங்கேசந்துறை ஊடாக மன்னார் வரையிலான, மற்றும் சிலாபத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக மாத்தறை வரையிலான கடற்பகுதிகள் அவ்வப்போது மணிக்கு 50 முதல் 60 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசுவதுடன் கொந்தளிப்பாகக் காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify;">

எனவே, மேற்கூறிய கடற்பகுதிகளில் மீன்பிடி மற்றும் கடற்படை நடவடிக்கைகளில் ஈடுபடும் கடற்படையினரும் மீனவ சமூகத்தினரும் அவதானத்துடன் இருக்குமாறும், இது தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களத்தால் வெளியிடப்படும் எதிர்கால வானிலை முன்னறிவிப்புகளைக் உன்னிப்பாகக் கவனிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.</p><p style="text-align: justify;"></p>]]></content>
            <updated>2026-08-08T06:29:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[போலியானது என சந்தேகத்திற்கு உட்படுத்தப்பட்ட இலங்கை கடவுச்சீட்டு! முன்னாள் எம்.பிக்கு பிரிட்டனில் ஏற்பட்ட சிக்கல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-lankan-passports-are-being-rejected-1786166774"></link>
            <id>https://tamilwin.com/article/sri-lankan-passports-are-being-rejected-1786166774</id>
            <summary type="text">இலங்கையால் வழங்கப்பட்ட பல்வேறு குறைபாடுகள் மற்றும் தரம் குறைந்த கடவுச்சீட்டுகள் காரணமாக, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் பிரிட்டனில் தடுத்து வைக...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையால் வழங்கப்பட்ட பல்வேறு குறைபாடுகள் மற்றும் தரம் குறைந்த கடவுச்சீட்டுகள் காரணமாக, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் பிரிட்டனில் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
</p><p>
நாடாளுமன்றத்தில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.</p><h2>

கடவுச்சீட்டை சரிபார்க்கும் நடவடிக்கை</h2><p>

அவர் மேலும் தெரிவிக்கையில், கடவுச்சீட்டை சரியாகப் படிக்க முடியாததால் அது போலியானது எனச் சந்தேகப்பட்டு, பிரிட்டன் குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகள் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர்.

முன்னர் 64 பக்கங்களைக் கொண்டிருந்த கடவுச்சீட்டு தற்போது 48 பக்கங்களாகக் குறைக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4d842a60-a529-4348-a021-eefb9fabdd39/26-6a76c9ddbf383.webp' /></p><p>ஆனால் அதற்காக வசூலிக்கப்படும் 6000 ரூபா கட்டணத்தில் எந்த மாற்றமும் இல்லை. புதிய கடவுச்சீட்டுகளில் குறிப்புப் பக்கங்களோ அல்லது நீட்டிப்புப் பக்கங்களோ இல்லை. அச்சிடும் தரம் மிகவும் குறைவாக உள்ளது.</p><p>

குறிப்பாக குடிவரவு முத்திரையைப் பதிக்கும்போது, ​​மை மறுபக்கம் கசிவது போன்ற பிரச்சினைகள் காரணமாக சில நாடுகள் இந்த அனுமதிகளை நிராகரித்து வருகின்றன என குறிப்பிட்டுள்ளார்.
</p><h2>
தரத்தில் எந்தப் பிரச்சினையும் இல்லை
</h2><p>இதற்கு பொதுப் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால பதிலளிக்கையில், அனுமதிகளின் தரத்தில் எந்தப் பிரச்சினையும் இல்லை. சர்வதேச தரநிலைகளுக்கு இணங்க பக்கங்களின் எண்ணிக்கையைக் குறைப்பது, உலகின் பிற நாடுகளால் பின்பற்றப்படும் ஒரு முறையாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/521d996e-1f31-4039-9e1d-9a4b6791b6a0/26-6a76c9de834df.webp' /></p><p>
</p><p>
இருப்பினும், ஐந்து மில்லியன் கடவுச்சீட்டுகளைப் பெறுவதற்கான டெண்டர் தொடர்பாக ஒரு நீதிமன்ற நடவடிக்கை நிலுவையில் உள்ளது. மின்னணு கடவுச்சீட்டு முறையை அறிமுகப்படுத்துவதில் எழுந்துள்ள சிக்கல்களைத் தீர்க்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-08T06:21:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[10 அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கான விலை குறைப்பு! இன்று முதல் நடைமுறை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/reduces-prices-of-10-essential-food-items-1786168095"></link>
            <id>https://tamilwin.com/article/reduces-prices-of-10-essential-food-items-1786168095</id>
            <summary type="text">இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் லங்கா சதோசா, 10 அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளைக் குறைப்பதாக அறிவித்துள்ளது.

வர்த்தகம், வணிகம், உணவுப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் லங்கா சதோசா, 10 அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளைக் குறைப்பதாக அறிவித்துள்ளது.
</p><p>
வர்த்தகம், வணிகம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சகம் பிறப்பித்த அறிவுறுத்தல்களைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக, அரசுக்குச் சொந்தமான சில்லறை விற்பனை நிறுவனம் தெரிவித்துள்ளது.
</p><h2>திருத்தப்பட்ட விலை விவரங்கள்&nbsp;</h2><p>
அதன்படி, நுகர்வோர் நாடு முழுவதும் உள்ள அனைத்து லங்கா சதோசா விற்பனை நிலையங்களிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட அத்தியாவசியப் பொருட்களைக் குறைந்த விலையில் வாங்கிக்கொள்ள முடியும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f7f771e5-b276-413d-be6f-3b1b0562beb5/26-6a76c9cf07c43.webp' /></p><p>
</p><p>
திருத்தப்பட்ட விலை விவரங்கள் அடங்கிய அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.</p><p>இதன்படி, பூண்டு கிலோவின் விலை ரூ.699 இலிருந்து ரூ.649 ஆகவும், பெரிய வெங்காயம் ரூ.259 இலிருந்து ரூ.224 ஆகவும், உருளைக்கிழங்கு ரூ.259 இலிருந்து ரூ.239 ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது.</p><p>மேலும் பச்சை அரிசி, வெள்ளைப் பச்சை அரிசி, பாசிப்பயறு, சிவப்பு பச்சை அரிசி, உள்ளூர் வெள்ளை நாடு அரிசி, கடலை மற்றும் உளுந்து உள்ளிட்ட பொருட்களின் விலைகளும் குறைக்கப்பட்டுள்ளன.
</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-08T06:17:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெயிலில் இருந்து காத்துக்கொள்ள நாயிறைச்சி சூப் ; வடகொரியாவில் வினோதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/north-korea-suggests-dog-soup-to-beat-heat-1786169646"></link>
            <id>https://canadamirror.com/article/north-korea-suggests-dog-soup-to-beat-heat-1786169646</id>
            <summary type="text">வடகொரியாவில் கடும் வெப்பம் நிலவி வரும் நிலையில், வெயிலில் இருந்து தற்காத்துக்கொள்ள நாயிறைச்சி சூப் உள்ளிட்ட பாரம்பரிய உணவுகளை உட்கொள்ளுமாறு அந்நாட்டு ...</summary>
            <content type="html"><![CDATA[<p>வடகொரியாவில் கடும் வெப்பம் நிலவி வரும் நிலையில், வெயிலில் இருந்து தற்காத்துக்கொள்ள நாயிறைச்சி சூப் உள்ளிட்ட பாரம்பரிய உணவுகளை உட்கொள்ளுமாறு அந்நாட்டு அரசு ஊடகம் பரிந்துரைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.&nbsp;</p><p>


கொரிய தீபகற்பம் முழுவதும் வரலாறு காணாத வெப்பநிலை பதிவாகி வரும் நிலையில், வடகொரியாவில் தற்போது 98 பாரன்ஹீட் வரை வெப்பநிலை பதிவாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bf35822a-a233-49a0-b4fa-747f6663cf70/26-6a76c92fd2830.webp' /></p><p>
</p><p>


இந்த நிலையில், தர்பூசணி, வெள்ளரிக்காய் உள்ளிட்ட நீர்ச்சத்து நிறைந்த உணவுகளுடன் நாயிறைச்சி சூப், மீன் சூப் மற்றும் கோழி இறைச்சிச் சாறு போன்றவற்றை உட்கொள்வதன் மூலம் உடல் வெப்பத்தைத் தணிக்க முடியும் என வடகொரிய அரசு ஊடகம் பரிந்துரைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
</p><p>


நாயிறைச்சி சூப் கோடைக்காலத்தின் பாரம்பரிய உணவு எனக் குறிப்பிடப்பட்டுள்ளதுடன், அதனை ஆதரிக்கும் வகையில் அந்நாட்டில் உள்ள பழமொழி ஒன்றும் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.
</p><p>


மேலும், இந்த ஆண்டு தொடக்கத்தில் நாயிறைச்சியைக் கொண்டு பல்வேறு உணவுகளைத் தயாரிக்கும் போட்டி நடத்தப்பட்டதாகவும் அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.
</p><p>


கடும் வெப்பத்தால் மக்கள் அவதியுற்று வரும் நிலையில், நாயிறைச்சி சூப்பை வெயிலை சமாளிப்பதற்கான உணவாக வடகொரிய அரசு ஊடகம் பரிந்துரைத்திருப்பது சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-08T06:14:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[செயலிழந்த துப்பாக்கிகள் - மீட்கப்படாத ஆயுதங்கள்! சிறைச்சாலைகளின் பாதுகாப்பில் பாரிய அச்சுறுத்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/audit-reveals-ammunition-deficit-in-sl-prisons-1786165500"></link>
            <id>https://ibctamil.com/article/audit-reveals-ammunition-deficit-in-sl-prisons-1786165500</id>
            <summary type="text">நாட்டின் ஒன்பது சிறைச்சாலைகளில் உள்ள பல்வேறு வகையான துப்பாக்கிகளுக்குப் பயன்படுத்தப்படும் 2,327 தோட்டாக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ள போதிலும்,...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டின் ஒன்பது சிறைச்சாலைகளில் உள்ள பல்வேறு வகையான துப்பாக்கிகளுக்குப் பயன்படுத்தப்படும் 2,327 தோட்டாக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ள போதிலும், அவை குறித்து முறையான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
 தேசிய தணிக்கை அலுவலகம் (National Audit Office) வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இந்தநிலையில் அங்குணகொலபெலஸ்ஸ, பூஸ்ஸ, போகம்பரை, களுத்துறை, அனுராதபுரம், கொழும்பு மகசின், மொனராகலை, வட்டரக்க மற்றும் வாரியப்பொல ஆகிய 9 சிறைச்சாலைகளிலேயே இவ்வாறு 2,327 தோட்டாக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் காணப்படுகின்றன.</p><p>
</p><p></p><h2>பாதுகாப்பு உபகரணங்கள்&nbsp;</h2><p>மேற்படி 9 சிறைச்சாலைகளிலும் உள்ள 191 துப்பாக்கிகள் பழுதுபார்க்கப்பட வேண்டிய நிலையில் (Unserviceable) உள்ளதாக அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/649028cf-fa35-47de-beeb-65bebf734d5f/26-6a76c19d07826.webp' /></p><p>அத்தோடு 27 சிறைச்சாலைகளில் இருந்து பெறப்பட்ட தகவல்களின்படி, 1,038 பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் ஆயுதங்கள் பயன்படுத்த முடியாத நிலையை அடைந்துள்ளதால், சிறைச்சாலைகளில் அவற்றுக்குக் கடுமையான பற்றாக்குறை நிலவுகிறது.
</p><p>

9 சிறைச்சாலைகளில் இருந்த 62 துப்பாக்கிகள், 50 மெகசின்கள் (Magazines) மற்றும் 1,278 தோட்டாக்கள் பல்வேறு விசாரணை நடவடிக்கைகளுக்காக நீதிமன்றங்கள் மற்றும் காவல் நிலையங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.</p><p>
</p><p></p><h2>கடுமையான தடைகள்&nbsp;</h2><p>அவை ஒப்படைக்கப்பட்டு 3 ஆண்டுகள் முதல் 31 ஆண்டுகள் வரையிலான நீண்ட காலம் கடந்துள்ள போதிலும், இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வரை அவை முறையான நடைமுறைகளின் கீழ் மீண்டும் சிறைச்சாலை நிர்வாகத்தால் பொறுப்பேற்கப்படவில்லை.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6792c9da-6cbf-47f5-9167-507b70d31a56/26-6a76c19db7ad2.webp' /></p><p>இதனடிப்படையில் சிறைச்சாலைகளில் திடீரென வெடிக்கும் கலவரங்கள் மற்றும் அசாதாரண சூழ்நிலைகளின் போது அவற்றை எதிர்கொள்வதில் சிறை அதிகாரிகளுக்குப் பாரிய நடைமுறைச் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன.
</p><p>
மேலும் நீதிமன்றக் கடமைகள், விசேட மருத்துவமனைப் பாதுகாப்பு மற்றும் சிறைச்சாலைகளின் பொதுப் பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்வதில் கடுமையான தடைகள் உருவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-08T06:10:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழக எம்.பிக்கள் கூட்டம் - முதல்வர் விஜய் அழைப்பை புறக்கணித்த எதிர்க்கட்சிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/dmk-admk-boycott-cm-vijay-mp-s-meet-delimitation-1786168685"></link>
            <id>https://news.lankasri.com/article/dmk-admk-boycott-cm-vijay-mp-s-meet-delimitation-1786168685</id>
            <summary type="text">தொகுதி மறுவரையறை குறித்து கலந்தாலோசிக்க முதல்வர் விஜய் தமிழக எம்.பிக்களுக்கு அழைப்பு விடுத்த நிலையில், திமுக அதிமுக உள்ளிட்ட கட்சிகள் இந்த கூட்டத்தை ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>தொகுதி மறுவரையறை குறித்து கலந்தாலோசிக்க முதல்வர் விஜய் தமிழக எம்.பிக்களுக்கு அழைப்பு விடுத்த நிலையில், திமுக அதிமுக உள்ளிட்ட கட்சிகள் இந்த கூட்டத்தை புறக்கணிக்கின்றன.</p><h3>

தமிழக எம்.பிக்கள் கூட்டம்</h3><p>

மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு, தொகுதி மறுவரையறைச் சட்டத் திருத்தத்தை கொண்டு வரும் முயற்சியில் தீவிரமாக உள்ளது.</p><p> 

இதற்கு தமிழ்நாட்டில் பாஜக தவிர்த்து பெரும்பாலான கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், இதனால் தமிழ்நாட்டிற்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து கலந்தாலோசிக்க தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தமிழ்நாடு எம்.பிக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/47eb9d76-e942-48f9-b708-b52b3ceaa430/26-6a76c56eaa451.webp' /></p><p>

இதற்கான கலந்தாய்வுக் கூட்டம் இன்று சென்னை, சேப்பாக்கம், கலைவாணர் அரங்கத்தின் கூட்டரங்கில் நடத்திட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.</p><p> 

இக்கூட்டத்திற்கான அழைப்பிதழ் டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தின் மூலம் தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைத்து மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது” என தமிழ்நாடு அரசு தெரிவித்திருந்தது.&nbsp;</p><p></p><h3>

திமுக எதிர்ப்பு </h3><p>


இந்த கூட்டத்தை அரசியல் நாடகம் என விமர்சித்துள்ள திமுக எம்.பி கனிமொழி, இந்த கூட்டத்தை திமுக எம்.பிக்கள் புறக்கணிப்பார்கள் என தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c6bd9014-84df-4250-ba75-d7068906a92d/26-6a76c56f599de.webp' /></p><p>

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், "DelimitationBill: தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவத்தைக் காப்பதிலும் FairDelimitation என்பதிலும் எங்கள் தலைவர் திரு. மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுகழகம் தனது முந்தைய நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறது.</p><p>

இப்போதைய நாடாளுமன்றக் கூட்டத்தொடரில், தொகுதி மறுவரையறை சட்டத்தை ஒன்றிய அரசு நிறைவேற்றப் போவதாக எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. திருத்தப்பட்ட சட்டமுன்வடிவு இன்னும் கையில் கிடைக்கப்பெறவும் இல்லை.</p><p>

இந்த விவகாரத்தில், தமிழ்நாட்டின் நிலைப்பாட்டை ஏற்கெனவே நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத் தீர்மானங்களில் தெரிவித்துவிட்டோம். அதனை ஒருமனதாக நிறைவேற்றிய கட்சிகளுக்கும் அதே நிலைப்பாட்டில் உள்ளபோது, முதலமைச்சர் கூட்டும் கூட்டத்துக்கான தேவை என்ன? முந்தைய நிலைப்பாட்டில் இருந்து அந்தக் கட்சிகளை மாற்ற வேண்டும் என்றா?</p><p>
CauveryIssueக்காகப் போராட்டங்கள் நடைபெற்றுவரும் நிலையில், MekedatuDam-க்கு எதிராக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டாமல், காவிரி பிரச்சினையைத் திசைத்திருப்ப த.வெ.க. அரசு நடத்தும் நாடகம்தான் இன்றைய அனைத்துக் கட்சிக் கூட்டம். எனவே, தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளின் ஒருமித்த கோரிக்கையை நிராகரித்துள்ள த.வெ.க. அரசின் இன்றைய கூட்டத்தில், திராவிட முன்னேற்றக் கழகம் பங்கேற்காது.&nbsp;</p><p><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr"><a href="https://x.com/hashtag/DelimitationBill?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#DelimitationBill</a>: தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவத்தைக் காப்பதிலும் <a href="https://x.com/hashtag/FairDelimitation?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#FairDelimitation</a> என்பதிலும் எங்கள் தலைவர் திரு.<a href="https://x.com/mkstalin?ref_src=twsrc%5Etfw">@mkstalin</a> தலைமையிலான தி.மு.கழகம் தனது முந்தைய நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறது.<br><br>இப்போதைய நாடாளுமன்றக் கூட்டத்தொடரில், தொகுதி மறுவரையறை சட்டத்தை ஒன்றிய அரசு…</p>&mdash; Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) <a href="https://x.com/KanimozhiDMK/status/2085957308509814952?ref_src=twsrc%5Etfw">August 8, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>

உழவர்கள் மேல் உண்மையான அக்கறை இருந்தால், மேகதாது அணைக்கு எதிராகச் சட்டமன்றத்தில் நாம் நிறைவேற்றிய தீர்மானத்தை தமிழ்நாட்டின் MPக்களுடன் இணைந்து ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சரை நேரில் சந்தித்து வழங்கிடத் தமிழ்நாடு அரசின் பிரதிநிதிகளை அனுப்ப முதலமைச்சர் தயாரா?" என தெரிவித்துள்ளார்.</p><h3> 

எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பு</h3><p> 

அதிமுகவும் இந்த கூட்டத்தை புறக்கணிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. </p><p>

இதே போல், நாடாளுமன்ற தொடர் இருப்பதால் தேமுதிக மாநிலங்களவை எம்பி சுதீஷ் கலந்து கொள்ள இயலாது என தெரிவித்துள்ளார்.</p><p> இதே போல் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸும் புறக்கணிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. </p><p>

கமல்ஹாசன் எம்பி அமெரிக்காவில் உள்ளதால் அவரால் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள இயலாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>

விசிக தலைவர் திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் ஆகியோர் திமுக அதிமுக இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளவேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-08T06:08:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கட்டுநாயக்கவில் சட்டவிரோத சிகரெட் பொதியுடன் கைதான நபர்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/man-arrested-in-katunayake-illicit-cigarettes-1786165668"></link>
            <id>https://ibctamil.com/article/man-arrested-in-katunayake-illicit-cigarettes-1786165668</id>
            <summary type="text">சட்டவிரோதமான வெளிநாட்டுத் தயாரிப்பு சிகரெட்டுகளுடன் கட்டுநாயக்காவில் கைது செய்யப்பட்ட நபர் ஒருவர் காவல்துறை பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.

...</summary>
            <content type="html"><![CDATA[<p>சட்டவிரோதமான வெளிநாட்டுத் தயாரிப்பு சிகரெட்டுகளுடன் கட்டுநாயக்காவில் கைது செய்யப்பட்ட நபர் ஒருவர் காவல்துறை பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.
</p><p>
இந்தநிலையில் 19ஆம் திகதி நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அறிவுருத்தப்பட்டுள்ளது.
</p><p>

கைது செய்யப்பட்ட நபர் மினுவாங்கொட, திவுலபிட்டியவைச் சேர்ந்த 30 வயதுடையவர் ஆவார்.</p><p></p><h2>சிகரெட் பொதியுடன் ஒருவர் கைது</h2><p>
</p><p>
இது குறித்து மேலும் தெரியவருகையில், சட்டவிரோதமான வெளிநாட்டுத் தயாரிப்பு சிகரெட்டுகளை நாட்டிற்குள் கொண்டு வந்த ஒரு நபரை இலங்கையின் விமான நிலைய காவல்துறை போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் குழு கைது செய்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e6673c5c-018c-4736-96b4-f943349c2104/26-6a76c5f4666de.webp' /></p><p>குறித்த நடவடிக்கை இன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. </p><p>

அந்த நபர் எடுத்துச் சென்ற இரண்டு பயணப் பைகளில் இருந்து, இங்கிலாந்தில் தயாரிக்கப்பட்ட 40,000 'டாப் கன்' சிகரெட்டுகள் அடங்கிய 200 சிகரெட் அட்டைப் பெட்டிகளை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
</p><p>
இந்தநிலையில் தற்போது பிணையில் செல்ல அவர் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், வரும் 19ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாக அறிவுருத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-08T06:02:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டிலுள்ள சிறைச்சாலைகளில் ஏற்படவுள்ள மாற்றம் ; உருவாகும் விசேட கட்டமைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/major-changes-coming-to-sri-lanka-s-prisons-1786168816"></link>
            <id>https://jvpnews.com/article/major-changes-coming-to-sri-lanka-s-prisons-1786168816</id>
            <summary type="text">ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற முக்கிய கலந்துரையாடலின் பின்னர், நாட்டின் சிறைச்சாலைகளில் கைதிகளின் பாதுகாப்பு மற்றும் நலன் உறுதி செய்வதற்காக ஒருங்கிணைந்...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற முக்கிய கலந்துரையாடலின் பின்னர், நாட்டின் சிறைச்சாலைகளில் கைதிகளின் பாதுகாப்பு மற்றும் நலன் உறுதி செய்வதற்காக ஒருங்கிணைந்த விசேட பாதுகாப்பு கட்டமைப்பு அமைக்கப்படவுள்ளதாக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.</p><p style="text-align: justify; "> 



நாட்டிலுள்ள 33 சிறைச்சாலைகளையும் உள்ளடக்கிய வகையில் உருவாக்கப்படவுள்ள இந்த புதிய பாதுகாப்பு கட்டமைப்பில், சிறைச்சாலைகள் திணைக்களம், பொலிஸ், விசேட அதிரடிப்படை மற்றும் தேவையான சந்தர்ப்பங்களில் முப்படையினரின் பங்களிப்புடன் கூடிய விசேட விரைவுச் செயற்பாட்டு அலகு அமைக்கப்படும் என அமைச்சர் குறிப்பிட்டார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ac9ec8be-6347-4e2a-b1f8-e71f5d863572/26-6a76c5f1e2f7d.webp' /></p><h3 style="text-align: justify; ">பாதுகாப்பு வழிமுறைகள்</h3><p style="text-align: justify; "> 

மேலும், பாதுகாப்பிற்கு அப்பாற்பட்டு கைதிகளின் நலன் மற்றும் இரசாயன பகுப்பாய்வாளர் அறிக்கைகள் தாமதமாவதைத் தடுத்தல் உள்ளிட்ட ஏனைய அத்தியாவசிய தேவைகளும் இதன் மூலம் கவனத்தில் கொள்ளப்படும்.
</p><p style="text-align: justify; ">
அத்துடன், சிறைச்சாலையில் இடம்பெற்ற கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய 61 சந்தேகநபர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்த நீதி அமைச்சர், சிறைச்சாலைகளுக்குள் சதித்திட்டங்கள் மூலம் முன்னெடுக்கப்படும் குற்றச் செயல்களைத் தடுக்க எவ்வித வாய்ப்பும் வழங்கப்படமாட்டாது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">&nbsp;இவ்வாறான சம்பவங்களுடன் தொடர்பில்லாத சாதாரண கைதிகளுக்குத் தேவையான நிவாரணங்கள் வழங்கப்படும் என்றும் வலியுறுத்தினார். </p><p style="text-align: justify; ">

சிறைச்சாலை அமைப்பில் நிலவும் பிரச்சினைகள் குறித்து ஆராய்ந்து, தீர்மானிக்கப்பட்ட புதிய கமிஷன்கள் மற்றும் பாதுகாப்பு வழிமுறைகளை 33 சிறைச்சாலைகளிலும் நடைமுறைப்படுத்தும் பணிகள் அடுத்த வாரம் முதல் ஆரம்பிக்கப்படவுள்ளன.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-08T06:00:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[விவாகரத்து வழக்கு..விஜய்யிடம் மன்னிப்பு கேட்டாரா சங்கீதா!! திடீர் வாபஸ் வாங்கியது ஏன்?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/sangeetha-closes-3-cases-against-cm-vijay-divorce-1786168452"></link>
            <id>https://viduppu.com/article/sangeetha-closes-3-cases-against-cm-vijay-divorce-1786168452</id>
            <summary type="text">விஜய்-சங்கீதாபிரபலங்களின் திருமண செய்திகளும், விவாகரத்து செய்திகளும் அதிகம் வந்துகொண்டே தான் இருக்கின்றன.

அப்படி ரசிகர்கள் எதிர்ப்பார்க்காத பிரபலத்...</summary>
            <content type="html"><![CDATA[<h2>விஜய்-சங்கீதா</h2><p>பிரபலங்களின் திருமண செய்திகளும், விவாகரத்து செய்திகளும் அதிகம் வந்துகொண்டே தான் இருக்கின்றன.

அப்படி ரசிகர்கள் எதிர்ப்பார்க்காத பிரபலத்தின் விவாகரத்து செய்திகளில் ஒன்று தான் விஜய்-சங்கீதா பிரிவு. இவர்கள் இருவரின் விவாகரத்து செய்ய முடிவு எடுத்த செய்தி கடந்த வருடம் வெளியாக ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களும் ஷாக் ஆனார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0c89e4a8-346f-49a8-99e4-589988c5e54a/26-6a76c48645fcd.webp' /></p><p> </p><p>நேற்று ஆகஸ்ட் 7 தேதி விஜய்-சங்கீதாவின் விவாகரத்து வழக்கு நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு வந்துள்ளது. விஜய் சட்டசபையில் இருப்பதால் கலந்துகொள்ளவில்லை, ஆனால் வீடியோ காலில் சங்கீதா நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார். </p><p>விசாரணையில் சங்கீதா விவாகரத்து வழக்கு உட்பட 3 வழக்குகளை வாபஸ் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்குகள் முடிவுக்கு வந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/067d4665-2e38-4200-9352-bbdafce0a2f8/26-6a76c486ef574.webp' /></p><h2>விஜய்யிடம் மன்னிப்பு</h2><p> இந்நிலையில் விஜய்க்கு எதிராக வழக்கு தொடர்ந்த சங்கீதா, தனது கணவருக்கு எதிராக தவறான வழக்குகளை தொடுத்துவிட்டேன் என்று மன்னிப்பு கேட்டுள்ளதாகவும், அந்த வழக்கை நேரில் பார்த்ததாக பெண் வழக்கறிஞர் ஒருவர் பேட்டியளித்துள்ளார்.</p><p> லண்டனில் இருக்கும் சங்கீதா சென்னைக்கு வந்து மீண்டும் விஜய்யுடன் வாழ்வாரா? குழந்தைகளின் எதிர்காலம் கருதி சங்கீதா முடிவெடுப்பாரா? அல்லது விஜய் - சங்கீதா இருவரும் விரைவில் மியூச்சுவல் டைவர்ஸ் செய்யப்போகிறார்களா என்று பல கேள்விகள் எழுந்து வருகிறது.</p><p><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="ta" dir="ltr">கோர்ட்டில் தளபதி விஜய் சங்கீதா விவாகரத்து வழக்கில் இன்று நடந்ததை நேரில் பார்த்த வக்கீல் <a href="https://t.co/VxengscJf1">pic.twitter.com/VxengscJf1</a></p>&mdash; Anshitha🫶💖🍉 (@Anshithaprincey) <a href="https://x.com/Anshithaprincey/status/2085729191283265614?ref_src=twsrc%5Etfw">August 7, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p>]]></content>
            <updated>2026-08-08T06:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[றீச்சாவின் மாபெரும் உணவுத் திருவிழா - அக்க்ஷய பாத்திரத்தில் கை நனைக்க உங்களுக்கும் வாய்ப்பு..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/reecha-farms-food-festival-1786168360"></link>
            <id>https://tamilwin.com/article/reecha-farms-food-festival-1786168360</id>
            <summary type="text">கிளிநொச்சி - பச்சிலைப்பள்ளி பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள றீச்சாவில் நடைபெறவுள்ள மாபெரும் உணவுத் திருவிழா நேற்று(07.08.2026) கோலாகலமாக ஆரம...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிளிநொச்சி - பச்சிலைப்பள்ளி பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள றீச்சாவில் நடைபெறவுள்ள மாபெரும் உணவுத் திருவிழா நேற்று(07.08.2026) கோலாகலமாக ஆரம்பமாகியுள்ளது.
</p><p>
இந்த மாபெரும் உணவுத் திருவிழா நேற்று 07.08.2026 முதல் ஆரம்பமாகி, 8 ,9 மற்றும் 10ஆம் திகதிகள் உட்பட நான்கு நாட்கள் மாலை 6 மணி முதல் 10 வரை&nbsp; நடைபெறவுள்ளது.
</p><h2>
நீங்களும் இணைந்து கொள்ளலாம்... </h2><p>

இந்த உணவுத் திருவிழாவில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் மக்கள் கலந்துக் கொள்ளவுள்ளதுடன், 
சுற்றுலாப் பயணிகளும் இணைந்து கொள்வார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f6e8315c-7663-4230-8058-689ac5725c91/26-6a76c4e0be08b.webp' /></p><p>அத்துடன், உணவுத் திருவிழாவை முன்னிட்டு றீச்சாவில் இசை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.</p><p>
மேலும், றீச்சாவின் உணவுத் திருவிழாவிற்கு <b>QICK FOOD </b>அனுசரணை வழங்குவதுடன், லங்காசிறி, தமிழ்வின் மற்றும் ஐபிசி தமிழ் ஆகிய ஊடகங்கள் இணைந்து இந்நிகழ்வை சிறப்பித்து கொண்டிருக்கின்றன.</p><p>உணவு திருவிழாவில் நீங்களும் ஒரு ஆளாக இருக்க வேண்டும் என்றால் 077 7772354 என்ற இலக்கத்திற்கு தொடர்புக் கொண்டு உங்களுடைய டிக்கெட்டுக்களை பெற்றுக் கொள்ளும் அதே சமயத்தில், அக்க்ஷய பாத்திரத்தில் நீங்களும் ஒரு நபராக இருந்து உணவை சுவைக்கலாம்.&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-08T05:56:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ். பல்கலைக்கழக இசைத்துறை மாணவி நிரோஷினி உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/jaffna-university-student-death-in-colombo-1786165527"></link>
            <id>https://ibctamil.com/article/jaffna-university-student-death-in-colombo-1786165527</id>
            <summary type="text">​யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இசைத்துறை பீட மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார்.கண்டி மாவட்டத்தை சேர்ந்த நிரோஷினி (வயது 27) என்ற மாணவியே
இவ்வாறு உயிரிழந்துள்ளார...</summary>
            <content type="html"><![CDATA[<p>​யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இசைத்துறை பீட மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார்.</p><p>கண்டி மாவட்டத்தை சேர்ந்த நிரோஷினி (வயது 27) என்ற மாணவியே
இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
</p><p>மேலும் தெரியவருகையில்,

குறித்த மாணவி யாழ்ப்பாண பல்கலைக்கழக இசைத்துறை பீடத்தில் கல்வி கற்று
வருகின்றார்.</p><p></p><p>
</p><h2>சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு</h2><p>
இந்நிலையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குறித்த மாணவி கொழும்பு
வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a1adaed6-652d-4133-9fbd-cc40aeb689bb/26-6a76bb56ecd23.webp' /></p><p> இருப்பினும் சிகிச்சை பலனின்றி
மாணவி வைத்தியசாலையிலேயே உயிரிழந்துள்ளார்.
</p><p>
இந்த சம்பவமானது அனைவர் மத்தியிலும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. கற்ற
சமூகத்தின் தொடர்ச்சியான இழப்புகள் பாரிய இழப்புகளாகவே பார்க்கப்படுகிறது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-08T05:54:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[கார்த்திக்கை தடுக்க நடக்கும் அதிரடி சதி... கடைசி நேரத்தில் மாயமான பாஸ்போர்ட்! - கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/zee-tamizh-karthigai-deepam-serial-episode-1786168779"></link>
            <id>https://cineulagam.com/article/zee-tamizh-karthigai-deepam-serial-episode-1786168779</id>
            <summary type="text">கார்த்திகை தீபம்தமிழ் சின்னத்திரையில் Zee தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீ...</summary>
            <content type="html"><![CDATA[<h2>கார்த்திகை தீபம்</h2><p>தமிழ் சின்னத்திரையில் Zee தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். </p><p>நேற்றைய எபிசோடில் கார்த்திக் எப்படியாவது ஏர்போர்ட்டை அடைய வேண்டும் என்ற பதற்றத்துடன் வேகமாக சென்றுகொண்டிருந்தார். அந்த பரபரப்பு இன்று இன்னும் அதிகரிக்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d9ab0d48-ef97-4a1b-a84c-06f8bf78f504/26-6a76c5cd36cfd.webp' /></p><p> கார்த்திக்கின் பயணத்தை தடுக்க எதிரிகள் தீட்டும் திட்டங்களும், ரேவதியை அதிர்ச்சியில் ஆழ்த்தும் சம்பவமும் கதையை விறுவிறுப்பாக்குகின்றன.

இன்றைய எபிசோடில், ரேவதி ஏர்போர்ட்டுக்குள் செல்லும்போது எதிரே வந்த ஒருவரின் ட்ராலி மீது எதிர்பாராத விதமாக மோதுகிறார். இதனால் அவரது காலில் காயம் ஏற்பட, அங்கிருந்தவர்கள் உடனடியாக முதலுதவி அளிக்கின்றனர். </p><p>அப்போது சிலர், பயணத்திற்கு கிளம்பும் நேரத்தில் இப்படி நடப்பது அபசகுனம் என்று பேச, அதை கேட்டு கோபமடைந்த சாமுண்டீஸ்வரி, "உங்க வேலையை மட்டும் பாருங்க!" என்று கடுமையாக பதிலடி கொடுக்கிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f86f000e-56dc-438a-84d0-8cfc2d8838c2/26-6a76c5cddecd3.webp' /></p><p>
</p><p>
மறுபக்கம், கார்த்திக் ஏர்போர்ட்டை அடைவதை எப்படியாவது தாமதப்படுத்த வேண்டும் என்று முடிவு செய்த சந்திரகலா, சிவனாண்டி மற்றும் முத்துவேலுக்கு ரகசிய தகவல் தெரிவிக்கிறார். இதையடுத்து அவர்கள் பல்வேறு தடைகளை உருவாக்க முயற்சிக்கின்றனர். ஆனால், அனைத்தையும் தாண்டி கார்த்திக் ஏர்போர்ட்டை நோக்கி முன்னேறிக் கொண்டே இருப்பது எதிரிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
</p><p>
இதற்கிடையில், விமானம் புறப்பட உள்ளதாக அறிவிப்பு ஒலிக்க, ரேவதி உள்ளே செல்ல தயாராகிறார். ஆனால் அப்போது அவருக்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருக்கிறது. அவரது பாஸ்போர்ட் கைவசம் இல்லை என்பது தெரியவர, பதற்றத்தில் பாஸ்போர்ட் மாயமாகிவிட்டதாக கூறுகிறார். இதைக் கேட்டு சாமுண்டீஸ்வரியும் சந்திரகலாவும் அதிர்ச்சியில் உறைந்து போகிறார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/89870d6e-774f-471b-94b0-295f69bb3cfd/26-6a76c5ce8fe0f.webp' /></p><p>
</p><p>
அந்த நொடியில் சந்திரகலாவுக்கு ஒரு முக்கியமான விஷயம் ஞாபகத்திற்கு வருகிறது. ரேவதியின் பர்ஸை எடுத்தபோது பாஸ்போர்ட் கீழே விழுந்ததை நினைவுபடுத்திக் கொண்ட அவர், அதை தேடி எடுத்து வருவதாக கூறி அவசரமாக காரை நோக்கி ஓடுகிறார்.
</p><p>
கடைசி நேரத்தில் பாஸ்போர்ட் கிடைக்குமா? கார்த்திக் சரியான நேரத்தில் ஏர்போர்ட்டை அடைவாரா? அல்லது அவருக்கு எதிராக நடக்கும் சதி வெற்றி பெறுமா? என்ற பல பரபரப்பான கேள்விகளுடன் இன்றைய எபிசோட் ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.
</p><p>
இந்த விறுவிறுப்பான திருப்பங்களுக்கு விடை காண, கார்த்திகை தீபம் சீரியலை இன்று இரவு 9 மணிக்கு Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத் தவறாதீர்கள்!&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-08T05:50:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Fathima</name>
            </author>
            <title type="text"><![CDATA[இது நாடகம்.. திமுக பங்கேற்காது: கனிமொழி எம்.பி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/kanimozhi-mp-statement-tvk-1786168029"></link>
            <id>https://ibctamilnadu.com/article/kanimozhi-mp-statement-tvk-1786168029</id>
            <summary type="text">தமிழக அரசின் சார்பில் பிரதிநிதிகளை அனுப்ப தமிழக முதல்வர் தயாரா? என்று கனிமொழி எம்பி கேள்வி எழுப்பியுள்ளார்.கனிமொழி எம்பி வெளியிட்டுள்ள அறிக்கையில், தொ...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழக அரசின் சார்பில் பிரதிநிதிகளை அனுப்ப தமிழக முதல்வர் தயாரா? என்று கனிமொழி எம்பி கேள்வி எழுப்பியுள்ளார்.<br></p><p>கனிமொழி எம்பி வெளியிட்டுள்ள அறிக்கையில், தொகுதி மறுவரையறை எனும் ஆபத்தை முதன்முதலில் எடுத்துரைத்து எச்சரித்தவர் எங்கள் தலைவர் மு.க.ஸ்டாலின்தான். </p><p>தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளையும் அழைத்து கூட்டம் நடத்தி, தமிழகத்தின் கோரிக்கைகளைத் தீர்மானங்களாக நிறைவேற்றினார். </p><p>அதன் தொடர்ச்சியாக, இந்தியாவில் உள்ள பல்வேறு மாநில முதல்வர்கள் மற்றும் கட்சித் தலைவர்களை அழைத்து நியாயமான தொகுதி மறுவரையறைக்கான கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டத்தையும் சென்னையில் நடத்திக் காட்டினார்.</p><p>

‘தமிழ்நாடு போராடும் தமிழ்நாடு வெல்லும்’ என்ற முழக்கத்தை முன்வைத்து ஒட்டுமொத்த மாநிலத்தையும் எங்கள் தலைவர் ஓரணியில் திரட்டிக் காட்டினார்.

அனைவரது எதிர்ப்பையும் மீறி, நாடாளுமன்றத்தில் இது தொடர்பான சட்ட முன்வரைவை பாஜக.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/44b28cd0-c1c3-4430-a2c6-064c1e9cc245/26-6a76c386d1168.webp' /><br></p><p> </p><p>கொண்டுவந்தபோது, சட்டமன்றத் தேர்தல் பரப்புரைப் பணிகளுக்கு இடையிலும் இதனை எதிர்த்துப் போராடினார். கருஞ்சட்டை அணிந்து, கருப்புக் கொடி ஏற்றி, சட்ட வரைவின் நகலைக் கொளுத்தினார். நாடாளுமன்றத்தில் தொகுதி மறுவரையறை மசோதா நிறைவேறாமல் தோல்வியடையச் செய்தார்.
</p><p>
தற்போதைய நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் தொகுதி மறுவரையறை சட்டத்தை ஒன்றிய அரசு நிறைவேற்றப் போவதாக எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. திருத்தப்பட்ட சட்ட முன்வடிவு குறித்து எந்தத் தகவலும் இல்லாத நிலையில் </p><p>- அது இன்னும் கையில் கிடைக்கப்பெறாத நிலையில், இதில் புதிதாக விவாதிக்கவும் எதுவும் இல்லை.

தமிழகத்தின் நிபந்தனைகளை ஏற்கனவே நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட பின்வரும் தீர்மானங்கள் வாயிலாகத் தெரிவித்து விட்டோம்:</p><p>

&gt;&gt; 1971-ஆம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையிலேயே நாடாளுமன்றத் தொகுதிகள் தொடர்ந்து வரையறுக்கப்படும் என்று கடந்த 2000-ஆம் ஆண்டில் அன்றைய பிரதமர் அவர்கள் உறுதி அளித்தவாறே, தற்போதும் இந்த வரையறை 2026-ல் இருந்து மேலும் 30 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படும் என்று ஒன்றிய அரசு உறுதி அளிக்க வேண்டும். மேலும், அரசமைப்பு சட்டத்தில் அதற்குரிய சட்டத் திருத்தமும் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட வேண்டும்.</p><p>


&gt;&gt; மேலும், நாடாளுமன்றத்தில் தற்போதைய உறுப்பினர்களின் எண்ணிக்கை உயர்த்தப்படும் பட்சத்தில், “1971-ஆம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில் தற்பொழுது நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மாநிலங்களுக்கிடையே எந்த விகிதத்தில் தொகுதிகளின் எண்ணிக்கை உள்ளனவோ, அதே விகிதத்தில் தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களின் தொகுதிகளின் எண்ணிக்கையை உயர்த்துவதற்குத் தேவையான அரசியல் சட்டத்திருத்தத்தை மேற்கொள்ள வேண்டும்.</p><p>

&gt;&gt; தொகுதி மறுசீரமைப்பின் காரணமாக, நாடாளுமன்றத்தில் தமிழகத்தின் தற்போதைய பிரதிநிதித்துவ சதவீதமான 7.18 என்பதை எக்காரணம் கொண்டும் ஒன்றிய அரசு மாற்றம் செய்யக் கூடாது.
</p><p>
&gt;&gt; தொகுதி மறுசீரமைப்புக்கு தமிழகம் எதிரானதாக இல்லை அதேசமயம் கடந்த ஐம்பதாண்டுகளாக சமூக, பொருளாதார நலத்திட்டங்களைச் சிறப்புற செயல்படுத்தியதற்கான தண்டனையாகத் தொகுதி மறுசீரமைப்பு அமைந்துவிடக் கூடாது எனவும் அனைத்துக் கட்சிக் கூட்டம் வலியுறுத்துகிறது.
</p><p>
அந்த நிலைப்பாட்டில் திராவிட முன்னேற்றக் கழகம் இப்போதும் உறுதியாக நிற்கிறது. அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு தீர்மானங்களை ஒருமனதாக நிறைவேற்றிய காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய தேசிய முஸ்லீம் லீக், விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் இப்போதும் அதே நிலைப்பாட்டிலேயே இருக்கும்போது இந்தக் கலந்தாய்வுக் கூட்டத்துக்கான தேவை என்ன? முந்தைய நிலைப்பாட்டில் இருந்து அவர்களை மாற்றுவதற்குத்தான் இந்த அனைத்துக் கட்சி எம்.பி.க்களின் கலந்தாய்வுக் கூட்டம் நடத்தப்படுகிறதா?
</p><p>தமிழகத்தின் உரிமைகளுக்கு எதிரான, நமது பிரதிநிதித்துவத்தைக் குறைக்கும் வகையிலான தொகுதி மறுவரையறையைத் திமுக நிச்சயம் எதிர்க்கும். அதில் எள்ளளவும் எங்களிடம் மாற்றம் இல்லை.
</p><p>
ஆனால், காவிரிப் பிரச்சினைக்காகத் தமிழகம் முழுவதும் தற்போது போராட்டம் நடைபெற்று வருகிறது. மேகேதாட்டு அணை தொடர்பான அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டுமென தமிழகத்தின் பல்வேறு கட்சிகளும் வலியுறுத்தி வருகிறார்கள். அனைவரும் கேட்கும் அந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்தாமல், அதுகுறித்து வாயும் திறக்காமல் தவெக அரசு கள்ள மவுனம் காக்கிறது. யாரும் கேட்காமலேயே அவசர அவசரமாகத் தொகுதி மறுவரையறைக்கான கலந்தாய்வுக் கூட்டத்தைத் தவெக அரசு தற்போது கூட்டியிருப்பது காவிரி பிரச்சினையில் இருந்து மக்களைத் திசைதிருப்பும் அரசியல் நாடகமேயன்றி வேறில்லை.
</p><p>
தொகுதி மறுவரையறைக் கலந்தாய்வுக் கூட்டத்தில் திமுக பங்கேற்க வேண்டுமென்றால் அதற்கு முன்பாக தமிழகத்தின் உயிர்ப்பிரச்சினையான மேகேதாட்டு அணை குறித்து அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டப்பட வேண்டும் என நிபந்தனை விதித்து எங்கள் கழகப் பொதுச் செயலாளர் துறை முருகன், நேற்று திமுக-வின் நிலைப்பாட்டை அறிக்கை வாயிலாகத் தெளிவுபடுத்திவிட்டார்.</p><p>எனவே, தமிழக அரசியல் கட்சிகளின் ஒருமித்த கோரிக்கையை நிராகரித்துள்ள தவெக அரசின் இன்றைய கூட்டத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் பங்கேற்காது.
</p><p>
தமிழகத்தின் காவிரி உரிமையிலும் டெல்டா உழவர்கள் மீதும் இந்த அரசுக்கு உண்மையாகவே அக்கறை இருக்கிறதென்றால், மேகேதாட்டு அணைக்கு எதிராகச் சட்டமன்றத்தில் நாம் நிறைவேற்றிய தீர்மானத்தை நமது நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் சென்று ஒன்றிய ஜல் சக்தி அமைச்சரிடம் நேரில் வழங்கிடத் தமிழக அரசின் பிரதிநிதிகள் முன்வர வேண்டும். தமிழக அரசின் சார்பில் பிரதிநிதிகளை அனுப்ப தமிழக முதல்வர் தயாரா? என்று கனிமொழி தெரிவித்துள்ளார்.<br></p>]]></content>
            <updated>2026-08-08T05:50:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[தனது காதலிக்கு UEFA பெருந்தொகை வழங்கியதாக எழுந்த குற்றச்சாட்டு: ஃபிஃபா தலைவர் மறுப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/uefa-paid-off-infantino-lover-1786168043"></link>
            <id>https://news.lankasri.com/article/uefa-paid-off-infantino-lover-1786168043</id>
            <summary type="text">கியானி இன்ஃபான்டினோ UEFA-வின் பொதுச் செயலாளராக இருந்தபோது அவரது காதலி என்று கூறப்படுபவருக்கு பணிவிலகல் தொகையொன்று வழங்கப்பட்டுள்ளது.
கியானி இன்ஃபான்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>கியானி இன்ஃபான்டினோ UEFA-வின் பொதுச் செயலாளராக இருந்தபோது அவரது காதலி என்று கூறப்படுபவருக்கு பணிவிலகல் தொகையொன்று வழங்கப்பட்டுள்ளது.
</p><p>கியானி இன்ஃபான்டினோ UEFA-வின் பொதுச் செயலாளராக இருந்தபோது, ​​அவரது காதலி என்று கூறப்படும் நபருக்கு அந்த அமைப்பு பணிநீக்க இழப்பீடு வழங்கியதாக டெய்லி டெலிகிராப் புலனாய்வு கண்டறிந்துள்ளது.</p><h2>உறுதிப்படுத்தும் அறிக்கை</h2><p>
</p><p>ஆனால், முற்றிலும் உண்மையற்ற இந்தக் குற்றச்சாட்டுகளை இன்ஃபான்டினோ உறுதியாக மறுப்பதாக, தற்போதைய ஃபிஃபா தலைவரின் செய்தித் தொடர்பாளர் அந்தப் பத்திரிகையிடம் கூறியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/51e4c70b-1417-4e6d-ab70-db9b5b229f7c/26-6a76c2ed6e565.webp' /></p><p> </p><p>இதனிடையே, இன்ஃபான்டினோ 2009 முதல் 2016 வரை பொதுச் செயலாளராகப் பணியாற்றிய UEFA, சம்பந்தப்பட்ட நபருக்குப் பணிவிலகல் தொகையொன்று வழங்கப்பட்டதை உறுதிப்படுத்தும் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது.
</p><p>உலகக் கிண்ணம் தொடருக்கான பங்குகளைத் தனியார் முதலீட்டாளர்களுக்கு விற்கும் திட்டத்தைக் கைவிட்டதைத் தொடர்ந்து, ஃபிஃபா தலைவராகத் தனது எதிர்காலத்தைத் தக்கவைக்க இன்ஃபான்டினோ போராடி வரும் சூழலில் இந்தக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.</p><p></p><p> </p><p>ஐரோப்பிய கால்பந்து நிர்வாக அமைப்பில் பணியாற்றிய காலத்தில், திருமணமானவரான இன்ஃபான்டினோவுடன் தொடர்பு வைத்திருந்ததாகக் கூறப்படும் பெண்ணுக்கு, UEFA ஆறு இலக்கத் தொகையை வழங்கியதாக டெலிகிராப் செய்தி வெளியிட்டுள்ளது. </p><p>ஆனால் இந்த குற்றச்சாட்டுகளை இன்ஃபான்டினோ உறுதியாக மறுத்துள்ளதாக தெரிவித்துள்ள அவரது செய்தித்தொடர்பாளர், இன்ஃபான்டினோவின் நடத்தை குறித்து UEFA அல்லது FIFA-வில் உள்ள எந்தவொரு ஊழியரும் இதுவரை புகார் அளித்ததில்லை; ஏனெனில், அவர் சம்பந்தப்பட்ட அத்தகைய சம்பவம் எதுவும் ஒருபோதும் நிகழ்ந்ததில்லை என்றும் வாதிட்டுள்ளார்.</p><h2>கூடுதல் நெருக்கடி</h2><p> </p><p>இருப்பினும், குறிப்பிட்ட அந்தப் பெண்ணுக்கு ஒரு தொகை வழங்கப்பட்டதை உறுதிப்படுத்திய UEFA, உள்ளூர் கல்லூரி ஒன்றில் அவர் எம்பிஏ (MBA) படிப்பை முடிப்பதற்கான கட்டணங்களை அந்தத் தொகை உள்ளடக்கியிருந்தது என்றும் தெரிவித்துள்ளது. </p><p> 
உலகக் கிண்ணத்திற்கான தனியார் முதலீட்டுத் திட்டம் தொடர்பாக ஃபிஃபா தலைவர் பதவியிலிருந்து விலகுமாறு கோரிக்கைகளை எதிர்கொண்டுள்ள இன்ஃபான்டினோவின் மீது, இந்தக் குற்றச்சாட்டுகள் கூடுதல் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9c69ce65-5ea6-4497-87a1-2d165a8c056c/26-6a76c2ee1fa33.webp' /></p><p> </p><p>இன்ஃபான்டினோ 2000-ஆம் ஆண்டில் UEFA-வில் இணைந்து, 2009-ஆம் வருடம் அதன் பொதுச் செயலாளரானார்; பின்னர் 2016-ஆம் வருடம் ஃபிஃபா தலைவராக நியமிக்கப்பட்டார். </p><p>இதனிடையே, இன்ஃபான்டினோவின் திட்டங்கள் கைவிடப்பட்ட போதிலும், சில நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்படவில்லை என்று கூறி, ஐரோப்பிய அணிகள் ஃபிஃபா நிகழ்வுகளைப் புறக்கணிக்கப் போவதாக அச்சுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-08T05:45:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ். அழகை உலகிற்கு காட்டும் கலாச்சார உணவுத்திருவிழா - பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/cultural-food-festival-in-jaffna-1786167686"></link>
            <id>https://tamilwin.com/article/cultural-food-festival-in-jaffna-1786167686</id>
            <summary type="text">வட மாகாணத்தின் வளமான கலாசாரப் பாரம்பரியம், தனித்துவமான உணவுப் பாரம்பரியம் மற்றும் கலை மரபுகளை உள்நாட்டு மற்றும் சர்வதேச சுற்றுலாவிகளுக்கு
அறிமுகப்படு...</summary>
            <content type="html"><![CDATA[<p>வட மாகாணத்தின் வளமான கலாசாரப் பாரம்பரியம், தனித்துவமான உணவுப் பாரம்பரியம் மற்றும் கலை மரபுகளை உள்நாட்டு மற்றும் சர்வதேச சுற்றுலாவிகளுக்கு
அறிமுகப்படுத்தும் நோக்கில், வட மாகாண சுற்றுலாப் பணியகத்தின் ஏற்பாட்டில்
“யாழ்ப்பாணத்துக்கு வருகை தாருங்கள் 2026 - கலாசார மற்றும் உணவுத் திருவிழா” நிகழ்வு இடம்பெறவுள்ளது.</p><p> 

இந்த நிகழ்வு, எதிர்வரும் 15ஆம் திகதி முதல் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு நடைபெறவுள்ளது. </p><p>
 
ஆகஸ்ட் 15ஆம் திகதி முதல், யாழ்ப்பாணத்தின்
வரலாற்றுச் சிறப்புமிக்க முற்றவெளி பண்ணை மைதானத்தில் நடைபெறவுள்ள இந்தப்
பிரமாண்ட விழா, வட மாகாண சுற்றுலாத்துறையை சர்வதேச அரங்கில் மேலும்
வலுப்படுத்தும் நோக்கத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளதுடன், யாழ்ப்பாணத்தின்
தனித்துவமான அடையாளங்களை உலகுக்கு எடுத்துச் செல்லும் முக்கிய முயற்சியாகவும்
அமையவுள்ளது.</p><h2>

யாழ்ப்பாண அழகை உலகிற்கு காட்டும் கொண்டாட்டம்</h2><p>
இந்த நிகழ்வு தொடர்பில் கருத்துத் தெரிவித்த வட மாகாண சுற்றுலாப் பணியகத்தின்
தலைவர் ஜே.விவேகானந்தன், 

 யாழ்ப்பாணத்தின் தொன்மைமிக்க கலாசாரப்
பாரம்பரியம், உலகப் புகழ்பெற்ற சுவைமிகு உணவுகள் மற்றும் கலை மரபுகளை
உள்நாட்டு மற்றும் சர்வதேச சுற்றுலாவிகளுக்கு அறிமுகப்படுத்தும் நோக்கிலேயே
இந்தத் திருவிழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/eb8809b4-f6b0-4a68-88db-ecc6d8a6874e/26-6a76c204ad0d9.webp' /></p><p> 

பண்ணை கடற்கரையையும் யாழ்ப்பாணக்
கோட்டையையும் அண்மித்த இயற்கை எழில் சூழ்ந்த முற்றவெளி பண்ணை மைதானத்தில்
நடைபெறும் இந்த விழா, வட மாகாண சுற்றுலாத்துறையின் வளர்ச்சிப் பயணத்தில் ஒரு
முக்கிய மைல்கல்லாக அமையும். </p><p>

வட மாகாணத்தின் சுற்றுலா, கலாசாரம், கைவினை,
பாரம்பரிய உணவுகள் மற்றும் உள்ளூர் பொருளாதாரத்தை ஒரே மேடையில் உலகிற்கு
வெளிப்படுத்தும் அரிய வாய்ப்பாகவும் இந்த நிகழ்வு அமையும் என்றார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a474c6c6-338d-442c-bfad-f67af55fca14/26-6a76c20575074.webp' /></p><p>
</p><p>
மூன்று நாட்கள் நடைபெறவுள்ள இந்தத் திருவிழாவில் வட மாகாணத்தின் பாரம்பரிய
உணவுக் கண்காட்சி, கைவினைப் பொருட்கள் காட்சி மற்றும் விற்பனை, கலாசார மற்றும்
நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகள், இசை நிகழ்ச்சிகள், பாரம்பரிய விளையாட்டுகள்,
உள்ளூர் உற்பத்தியாளர்களின் கண்காட்சிகள் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்கள்
இடம்பெறவுள்ளன.
</p><p>
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள், முதலீட்டாளர்கள், தொழில்
முனைவோர் மற்றும் பொதுமக்கள் என அனைவரையும் இந்தப் பெருவிழாவில்
கலந்துகொள்ளுமாறு வட மாகாண சுற்றுலாப் பணியகம் அழைப்பு விடுத்துள்ளது.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-08T05:43:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பிய இலங்கையர் அதிரடி கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sri-lankan-arrested-after-returning-from-abroad-1786167796"></link>
            <id>https://jvpnews.com/article/sri-lankan-arrested-after-returning-from-abroad-1786167796</id>
            <summary type="text">சட்டவிரோதமான முறையில் இலங்கைக்குக் கொண்டுவரப்பட்ட சுமார் 60 இலட்சம் ரூபாய் மதிப்பிலான வெளிநாட்டுத் தயாரிப்பு சிகரெட்டுகளுடன், கட்டுநாயக்க விமான நிலையத...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">சட்டவிரோதமான முறையில் இலங்கைக்குக் கொண்டுவரப்பட்ட சுமார் 60 இலட்சம் ரூபாய் மதிப்பிலான வெளிநாட்டுத் தயாரிப்பு சிகரெட்டுகளுடன், கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து அவற்றை வெளியே எடுத்துச் செல்ல முயன்ற இலங்கை விமானப் பயணி ஒருவர் இன்று (08) அதிகாலை விமான நிலையப் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p style="text-align: justify; ">
மினுவாங்கொடை, திவுலபிட்டிய பகுதியைச் சேர்ந்த 30 வயதுடையவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a356a7e1-17ac-43f9-b73c-695b8eb956ba/26-6a76c1f57783c.webp' /></p><h2 style="text-align: justify; ">மேலதிக விசாரணை</h2><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
குறித்த நபர் இன்று (08) அதிகாலை 04:00 மணியளவில் துபாயிலிருந்து ஃபிளை துபாய் (Flydubai) விமான சேவைக்குச் சொந்தமான FZ-569 எண் கொண்ட விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
</p><p style="text-align: justify; ">அவர் கொண்டு வந்த இரண்டு பயணப் பைகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இந்தச் சிகரெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. </p><p style="text-align: justify; ">இங்கிலாந்தில் தயாரிக்கப்பட்டதும், இதுவரை கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைப்பற்றப்படாததுமான "டாப் கன்" (Top Gun) வகையைச் சேர்ந்த 40,000 சிகரெட்டுகளும் (200 சிகரெட் கார்ட்டன்கள்) இவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">

சம்பவத்தையடுத்து விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்ட சந்தேகநபர் தற்போது பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
</p><p style="text-align: justify; ">
இவரைக் எதிர் வரும் ஓகஸ்ட் மாதம் 19 ஆம் திகதி நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளதுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.&nbsp;</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-08T05:43:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பகுதியில் இளைஞனின் வாழ்வை பறித்த சம்பவம் ; ஸ்தலத்திலேயே பிரிந்த உயிர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/incident-claims-young-man-s-life-1786167233"></link>
            <id>https://jvpnews.com/article/incident-claims-young-man-s-life-1786167233</id>
            <summary type="text">வவுனியா – புளியங்குளம் பரசங்குளம் பகுதியில் நேற்று (07) இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


கூலர் ரக வாகனம்...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">வவுனியா – புளியங்குளம் பரசங்குளம் பகுதியில் நேற்று (07) இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p style="text-align: justify; ">

கூலர் ரக வாகனம் டிப்பர் வாகனத்துடன் பின்பகுதியில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/89d996c6-8d5a-4db2-8007-d0f8c6e86eb1/26-6a76bfc34bac6.webp' /></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; "> 

விபத்தில் கூலர் வாகனத்தில் பயணம் செய்துகொண்டிருந்த இளைஞர் ஒருவர் படுகாயங்களுக்குள்ளாகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

மேலும், விபத்து தொடர்பாக புளியங்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-08T05:33:57+00:00</updated>
        </entry>
    </feed>
