<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-08-10T03:09:29+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹோர்முஸ் நீரிணை திறப்பு: ஈரான் விதிக்கும் புதிய நிபந்தனைகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/iran-sets-conditions-for-opening-strait-of-hormuz-1786328424"></link>
            <id>https://ibctamil.com/article/iran-sets-conditions-for-opening-strait-of-hormuz-1786328424</id>
            <summary type="text">ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கு அமெரிக்கா நட்டஈடு வழங்க வேண்டும் மற்றும் கடற்படை முற்றுகையை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் உள்ளிட்ட பல நிபந்தனை...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கு அமெரிக்கா நட்டஈடு வழங்க வேண்டும் மற்றும் கடற்படை முற்றுகையை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் உள்ளிட்ட பல நிபந்தனைகளை ஈரான் விதித்துள்ளது.</p><p>ஹோர்முஸ் நீரிணை ஊடாக புதிய கடற்போக்குவரத்து பாதைகளை தீர்மானிப்பதற்காக ஓமானுடன் இறுதி உடன்படிக்கைக்கு வரத் தயாராக இருப்பதாக ஈரான் தெரிவித்துள்ளது.&nbsp;</p><p>இருப்பினும், தான் ஈரானுடன் தீவிரமாக தலையிடாமல், அவர்களின் பொருளாதார அழுத்தத்தை கவனித்து வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.&nbsp;&nbsp;</p><p></p><h2>சரியாக நிறைவேற்றவில்லை</h2><p>ஹோர்முஸ் நீரிணையில் (Strait of Hormuz) புதிய போக்குவரத்துப் பாதைகளைத் திறப்பது தொடர்பாக ஓமான் (Muscat) மற்றும் ஈரானுக்கு (Tehran) இடையிலான பேச்சுவார்த்தைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0a6d7104-3a6e-455f-86b6-0a9e7d82d441/26-6a7938009067c.webp' /></p><p>

குறித்த விடயத்தை கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகப் விரிவுரையாளர் ரொக்சேன் ஃபர்மான்ஃபார்மையன் (Roxane Farmanfarmaian) . சர்வதேச ஊடகமொன்றிற்கு வழங்கிய நேர்காணல் ஒன்றிலே தெரிவித்துள்ளார்.</p><p>அமெரிக்கா தனது ஒப்பந்தப் பொறுப்புகளைச் சரியாக நிறைவேற்றவில்லை என ஈரான் கருதுதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">நீரிணை திறக்கப்பட மாட்டாது</span></p><p>ஓமானுடன் எட்டப்படும் உடன்படிக்கை மூலம் புதிய கடற்பாதை தீர்மானிக்கப்படும் போதிலும், அமெரிக்கா தனது கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை நீரிணை திறக்கப்பட மாட்டாது என&nbsp; ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி தெரிவித்துள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c81570d3-7918-41d1-97c8-ff9d33871f44/26-6a7937ffd9c56.webp' /></p><p>ஜூன் மாதம் எட்டப்பட்ட இடைக்கால ஒப்பந்தத்தை அமெரிக்கா மீறியுள்ளதால் நேரடிப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட மாட்டாது என்றும், மத்தியஸ்தர்கள் மூலமாக மட்டுமே செய்திகள் பரிமாறப்படுவதாகவும் அவர் கூறினார்.&nbsp;</p><p>இழப்பீடு வழங்குதல், தடைகளை நீக்குதல் மற்றும் இராஜதந்திர அச்சுறுத்தல்களை நிறுத்துதல் உள்ளிட்ட நிபந்தனைகளை அமெரிக்கா நிறைவேற்ற வேண்டும் என ஈரான் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.&nbsp; &nbsp; &nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-10T03:05:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[தெஹிவளை துப்பாக்கிச்சூடு: கைதான 23 வயது இளைஞர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/23-year-old-arrest-attempted-shooting-in-dehiwala-1786329218"></link>
            <id>https://tamilwin.com/article/23-year-old-arrest-attempted-shooting-in-dehiwala-1786329218</id>
            <summary type="text">தெஹிவளை பகுதியில் துப்பாக்கியால் நிகழ்த்தப்பட்ட கொலை முயற்சியில், துப்பாக்கிச் சூடு நடத்தியதாக சந்தேகிக்கப்படும் 23 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>தெஹிவளை பகுதியில் துப்பாக்கியால் நிகழ்த்தப்பட்ட கொலை முயற்சியில், துப்பாக்கிச் சூடு நடத்தியதாக சந்தேகிக்கப்படும் 23 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>

 

அத்துருகிரிய பொலிஸ் பிரிவின் ஹபரகட பகுதியில் உள்ள ஜெயவர்தனபுர சிறப்பு அதிரடிப்படை முகாமைச் சேர்ந்த அதிகாரிகள் குழுவினரால், சந்தேக நபர் நேற்று (10.08.2026) கைது செய்யப்பட்டுள்ளார்.</p><h2>பொலிஸ் நிலையத்தில் ஒப்படைப்பு</h2><p>

 

2026 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 4 ஆம் திகதி தெஹிவளை பொலிஸ் பிரிவின் கடவத்த வீதிப் பகுதியில் ஒருவரைச் சுட முயன்ற சம்பவத்தில் சந்தேக நபர் ஈடுபட்டதாகக் கூறப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b5e8f759-33e8-42c1-9eeb-a2c4d3f40317/26-6a793c9b7eede.webp' /></p><p>சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக தெஹிவளை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
</p><p>
 

பொலிஸாரின் தகவல்படி, சந்தேக நபர் ஹோமாகமவைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
</p><p>
 

தெஹிவலா பொலிஸார் இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-10T02:52:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜனாதிபதி அநுரவின் அதிரடி அறிவிப்பு! உண்மையை அம்பலப்படுத்தினால் விடுதலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/suspects-who-aid-in-bribery-cases-will-be-released-1786327630"></link>
            <id>https://tamilwin.com/article/suspects-who-aid-in-bribery-cases-will-be-released-1786327630</id>
            <summary type="text">இலஞ்ச - ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகத்திற்கு புதிய அதிகாரம் வழங்கும் சட்ட திருத்தம் ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது. 

இலஞ்ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலஞ்ச - ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகத்திற்கு புதிய அதிகாரம் வழங்கும் சட்ட திருத்தம் ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது. </p><p>

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுடன் தொடர்புடைய ஒருவர், அந்த குற்றச்சாட்டு தொடர்பாக தமக்குத் தெரிந்த அனைத்து உண்மைகளையும் வெளிப்படுத்தினால் அவருக்கு எதிராக வழக்குத் தொடராதிருப்பதற்கு அல்லது வழக்குகளை மீளப் பெறுவதற்கு அதிகாரம் வழங்கப்படவுள்ளது. </p><p>

இந்தத் திருத்தமானது, 2023 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க ஊழல் தடுப்புச் சட்டத்தைத் திருத்துவதற்காக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் பணிப்புரைக்கமைய வெளியிடப்பட்டுள்ள சட்டமூலத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><h2><b>
 விசாரணை ஆணைக்குழு</b></h2><p>திருத்தங்களுக்கமைய, இதுவரை மேல்நீதிமன்ற வழக்குகள் தொடர்பாக மட்டுமே காணப்பட்ட அதிகாரம் விரிவுபடுத்தப்பட்டு, நீதவான் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகளையும் மீளப் பெறுவதற்கு பணிப்பாளர் நாயகத்திற்கு அதிகாரம் கிடைக்கும். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/04921074-3974-4a86-a40e-d6d45f0e8a31/26-6a7938852d7b5.webp' /></p><p>அத்துடன், ஊழல் மூலம் பெறப்பட்ட அல்லது ஊழல் மூலம் வேறு வழிகளில் மாற்றப்பட்ட சொத்துகளின் மதிப்பினை அறவிட்டுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும். </p><p>

மேலும், ஊழல் மூலம் பெறப்பட்ட பதவிகள், சலுகைகள், நன்மைகள் அல்லது பிற இலாபங்கள் என்பவற்றை குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்படும் நாளிலிருந்து சட்டவிரோதமானவையாக கருதுவதற்கும் இத்திருத்தங்கள் மூலம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.</p><p> 

இது தவிர, மாகாண அரச சேவையின் அதிகாரிகளும் பொலிஸ் அதிகாரிகளும் நிரந்தர அல்லது தற்காலிக அடிப்படையில் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழுவில் இணைக்கப்படுவதற்கான ஏற்பாடுகளும் இத்திருத்தங்களில் உள்ளடக்கப்பட்டுள்ளன.</p>]]></content>
            <updated>2026-08-10T02:41:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[உயர்தரப் பரீட்சார்த்திகளுக்காக விசேட தொலைபேசி இலக்கங்கள் அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/special-phone-nos-for-al-exam-students-1786328223"></link>
            <id>https://tamilwin.com/article/special-phone-nos-for-al-exam-students-1786328223</id>
            <summary type="text">&amp;nbsp;கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் பரீட்சார்த்திகள் சீரற்ற வானிலையினால் பாதிப்புக்களை எதிர்நோக்கினால் அறிவிப்பதற்கு அவசர இலக்கங...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் பரீட்சார்த்திகள் சீரற்ற வானிலையினால் பாதிப்புக்களை எதிர்நோக்கினால் அறிவிப்பதற்கு அவசர இலக்கங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
</p><p>தற்போது நிலவும் சீரற்ற வானிலை காரணமாக உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு ஏதேனும் தடைகள் அல்லது பாதிப்புகள் ஏற்படும் பட்சத்தில், உடனடியாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அவசர அழைப்பு இலக்கங்களையோ அல்லது பரீட்சைகள் திணைக்களத்தையோ தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
</p><p>சீரற்ற வானிலையால் உயர்தரப் பரீட்சைக்கு ஏற்படக்கூடிய இடையூறுகளைத் தவிர்க்கும் நோக்கில் பரீட்சை நடைபெறும் காலப்பகுதியில் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையமும் பரீட்சைகள் திணைக்களமும் இணைந்து விசேட கூட்டு வேலைத்திட்டம் ஒன்றைச் செயற்படுத்தி வருகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/feeb5f11-f67d-49d9-a470-9d70fa9730b4/26-6a7935507f609.webp' /></p><p>பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் மற்றும் பரீட்சைக் கடமைகளில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு அனர்த்தங்கள் காரணமாக ஏற்படும் தடைகளை நீக்கி, விரைவாகச் செயற்படுவதற்காக இந்த ஒருங்கிணைப்பு முறைமை பலப்படுத்தப்பட்டுள்ளது.</p><p>அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலைய அவசர இலக்கம்: 117
</p><p>விசேட கூட்டு அவசர செயற்பாட்டு அறை: 0113 668119, 0113 668026, 0113 668032, 0113 668087, 076 3 117 117
</p><p>பரீட்சைகள் திணைக்கள அவசர இலக்கம்: 1911
</p><p>அனர்த்தங்கள் காரணமாகப் பரீட்சைக்குச் செல்வதில் சிரமங்களை எதிர்கொள்ளும் மாணவர்கள் மேற்கண்ட இலக்கங்களுக்கு உடனடியாகத் தொடர்புகொண்டு தேவையான உதவிகளையும் ஒருங்கிணைப்புகளையும் பெற்றுக்கொள்ள முடியும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம், பரீட்சார்த்திகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.&nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-08-10T02:20:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாடு முழுவதும் இன்று முன்னெடுக்கப்படவுள்ள தொழிற்சங்க நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/grama-niladhari-sick-leave-campaign-from-today-1786326805"></link>
            <id>https://tamilwin.com/article/grama-niladhari-sick-leave-campaign-from-today-1786326805</id>
            <summary type="text">பயணக் கொடுப்பனவை உயர்த்தாமை உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து கிராம உத்தியோகத்தர்கள் இன்றும் (10) நாளையும் (11) நோய் விடுப்புப் பதிவு செய்து சேவையில்...</summary>
            <content type="html"><![CDATA[<p>பயணக் கொடுப்பனவை உயர்த்தாமை உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து கிராம உத்தியோகத்தர்கள் இன்றும் (10) நாளையும் (11) நோய் விடுப்புப் பதிவு செய்து சேவையில் ஈடுபடாதிருக்க தீர்மானித்துள்ளனர்.</p><p> 

கொழும்பில் நேற்று (09.08.2026) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே கிராம உத்தியோகத்தர் தொழிற்சங்க கூட்டமைப்பின் தலைவர் நந்தன ரணசிங்க இதனைத் தெரிவித்துள்ளார். </p><h2>எரிபொருளுக்குச் சமமான கொடுப்பனவு</h2><p>கிராம உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்படும் 600 ரூபாய் பயணக் கொடுப்பனவு கடந்த 8 வருடங்களாக உயர்த்தப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/747f02ad-a45f-4d2f-9929-b5a307fb7dc1/26-6a79334733501.webp' /></p><p>

2024ஆம் ஆண்டில் குறித்த கொடுப்பனவுக்குப் பதிலாக 20 லீட்டர் எரிபொருளுக்குச் சமமான கொடுப்பனவை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்திருந்தது. </p><p>

இருப்பினும் இதுவரை அது வழங்கப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றும் (10) நாளையும் (11) நோய் விடுப்புப் பதிவு செய்து தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக நந்தன ரணசிங்க தெரிவித்துள்ளார்.</p><p> 

இதற்கமைய இந்த தொழிற்சங்க நடவடிக்கை நாடு முழுவதும் முன்னெடுக்கப்படவுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-10T02:11:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[முற்றிலும் தடை: உயர்தரப் பரீட்சை இன்று ஆரம்பம் - மானவர்களுக்கு முக்கிய அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/2026-gce-advanced-level-examination-begins-today-1786327241"></link>
            <id>https://ibctamil.com/article/2026-gce-advanced-level-examination-begins-today-1786327241</id>
            <summary type="text">உயர்தரப் பரீட்சை ஆரம்பமாவதற்கு ஒரு மணித்தியாலத்திற்கு முன்னர் அனைத்துப் பரீட்சார்த்திகளும் பரீட்சை நிலையங்களுக்கு வருகை தர வேண்டும் என பரீட்சை திணைக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>உயர்தரப் பரீட்சை ஆரம்பமாவதற்கு ஒரு மணித்தியாலத்திற்கு முன்னர் அனைத்துப் பரீட்சார்த்திகளும் பரீட்சை நிலையங்களுக்கு வருகை தர வேண்டும் என பரீட்சை திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது.</p><p>குறித்த விடயத்தை பரீட்சை ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி தெரிவித்துள்ளார்.</p><p>2026 கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை இன்றிலிருந்து (10) ஆரம்பமாகி செப்டம்பர் 05 ஆம் திகதி வரை நாடு முழுவதிலும் உள்ள 2,532 பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ளது.</p><p></p><h2>முற்றிலும் தடை</h2><p>

இம்முறை பரீட்சைக்காக 264,496 பாடசாலைப் பரீட்சார்த்திகளும் 107,814 தனிப்பட்ட பரீட்சார்த்திகளும் அடங்கலாக மொத்தம் 372,310 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a083e0e2-4b44-4fd5-8d81-f278e8eaef99/26-6a793283ac67a.webp' /></p><p>கைத்தொலைபேசிகள், ஸ்மார்ட் கடிகாரங்கள், குறிப்புகள் அல்லது புளூடூத் உள்ளிட்ட எந்தவொரு மின்னணு சாதனங்களையும் பரீட்சை மண்டபத்திற்குள் கொண்டு வருவது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.</p><p>

பரீட்சை விதிமுறைகளுக்கு அமைய செயற்பட்டு பரீட்சை மோசடிகளை தவிர்குமாறும், கடந்த வருடங்களிலும் பரீட்சை மோசடிகள் காரணமாக பல மாணவர்களின் பெறுபேறுகள் இடைநிறுத்தப்பட்டதாகவும் பரீட்சை ஆணையாளர் நாயகம் சுட்டிக்காட்டினார்.</p><p> 

மேலும்&nbsp; ஏதேனும் அவசர அனர்த்த நிலைமை ஏற்பட்டால் அதற்குத் தேவையான வசதிகளைச் செய்து கொடுக்க பரீட்சைத் திணைக்களம் ஆயத்தமாக உள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-10T02:08:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[மலேசியாவில் ஆடம்பர மாளிக்கைக்குள் சிக்கிய இலங்கையில் தேடப்படும் குற்றக்கும்பல் - தப்பியோடிய கஞ்சிபானை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/kanjipani-s-friends-coming-to-sri-lanka-today-1786326578"></link>
            <id>https://tamilwin.com/article/kanjipani-s-friends-coming-to-sri-lanka-today-1786326578</id>
            <summary type="text">மலேசியாவில் கைது செய்யப்பட்ட, பாதாள உலகத் தலைவர் கஞ்சிபானி இம்ரானின் நெருங்கிய நண்பர்களான ரத்மலானை சைமா உள்ளிட்ட மூன்று பாதாள உலக குற்றவாளிகள் இன்று இ...</summary>
            <content type="html"><![CDATA[<p>மலேசியாவில் கைது செய்யப்பட்ட, பாதாள உலகத் தலைவர் கஞ்சிபானி இம்ரானின் நெருங்கிய நண்பர்களான ரத்மலானை சைமா உள்ளிட்ட மூன்று பாதாள உலக குற்றவாளிகள் இன்று இலங்கைக்கு அழைத்து வரப்படவுள்ளனர். </p><p>

மலேசிய பொலிஸார் மற்றும் சர்வதேச பொலிஸார் ஆகியவற்றின் உதவியுடன், உதவி பொலிஸ் அத்தியட்சகர் ரோஹன் ஒலுகல தலைமையிலான பொலிஸ் குழுவினராலே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். </p><p>

சிறப்புப் பாதுகாப்புடன் அழைத்து வரப்படும் இந்த 3 குற்றவாளிகளும் மேலதிக விசாரணைகளுக்காக குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக பொலிஸ் தலைமையக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.</p><p> </p><h2><b>

கைது செய்யும் நடவடிக்கை</b></h2><p>உதவி பொலிஸ் அத்தியட்சகர் ரோஹன் ஒலுகல தலைமையிலான குழுவினர் கஞ்சிபானி இம்ரானை கைது செய்யும் நடவடிக்கையை பாதியிலேயே நிறுத்திவிட்டு நாடு திரும்பியுள்ளனர். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/916d8c72-2f87-4031-b10b-8cfeb88bad84/26-6a79306ff2b58.webp' /></p><p>இருந்த போதிலும், மலேசிய பொலிஸாரும் இன்டர்போல் அமைப்பும் இக்குற்றவாளியைக் கைது செய்வதற்கான தொடர்ச்சியான விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக அங்கிருந்து கிடைக்கும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. </p><p>பாதாள உலகத் தலைவர் கஞ்சிபானி இம்ரான் தற்போது மலேசியாவிலிருந்து தப்பியோட முடியாதவாறு முற்றுகையிடப்பட்டுள்ளார்.</p><p> 

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அவர் கைது செய்யப்படுவார் என அந்த வட்டாரங்கள் மேலும் குறிப்பிட்டுள்ளன. விசாரணை அதிகாரிகளின் தகவலுக்கமைய, மலேசியாவில் கைது செய்யப்பட்ட ரத்மலானை சைமா, கஞ்சிபானி இம்ரானின் போதைப்பொருள் வலையமைப்பு மற்றும் பெரும்பாலான பாதாள உலக நடவடிக்கைகளை முன்னெடுத்துச் சென்றுள்ளார். </p><p>

செல்வந்தராகக் கூறப்படும் ரத்மலானை சைமாவுக்கு தாய்லாந்தில் ஐந்து மாடி ஆடம்பர ஹோட்டல் உட்பட பல வணிக நிறுவனங்கள் உள்ளமையும் தெரியவந்துள்ளது.</p><p> </p><h3><b>போதைப்பொருள் வலையமைப்பு</b></h3><p>இந்த சொத்துக்கள் அனைத்தும் சைமாவினால் கஞ்சிபானி இம்ரானின் போதைப்பொருள் வலையமைப்பை இயக்கியதன் மூலமே கொள்வனவு செய்யப்பட்டுள்ளதென தெரியவந்துள்ளது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5f774d04-9f0b-4207-a6dc-a6ebb3c147b2/26-6a79315728cb7.webp' /></p><p>சைமா கைது செய்யப்பட்டுள்ளமை கஞ்சிபானி இம்ரானுக்கு பெரிய அடியாகக் கருதப்படுவதோடு, மலேசியாவில் அவரது நடவடிக்கைகள் தற்போது வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

மலேசியாவில் பதுங்கியிருக்கும் கஞ்சிபானி இம்ரானைக் கைது செய்வதற்காக ரோஹன் ஒலுகல மற்றும் சட்டப் பிரிவின் உதவி பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி வசந்த பிட்டியகும்புற ஆகிய இருவரும் சில வாரங்களுக்கு முன்பு மலேசியாவுக்குச் சென்றிருந்தனர்.</p><p> 

மலேசியாவிலுள்ள இலங்கை தூதரகத்தின் ஊடாக அந்நாட்டு பொலிஸார் மற்றும் இன்டர்போல் அமைப்பினது உதவியைப் பெற்ற உதவி ரோஹன் ஒலுகல, கஞ்சிபானி இம்ரானைக் கைது செய்வதற்கான பல நடவடிக்கைகளை முன்னெடுத்தார். </p><p>

கஞ்சிபானி கைது செய்யப்படுவதற்கு முன்னர், ரத்மலானை சைமாவைக் பிடிக்க விசாரணை அதிகாரிகள் வெற்றிகரமாகச் செயற்பட்டனர். </p><p>சைமா சிக்கிய செய்தி கசிந்தவுடன், கஞ்சிபானி இம்ரான் தான் பதுங்கியிருந்த இடங்களை மாற்றிக்கொண்டு வேறு இடத்திற்குச் சென்று இரகசியமாகத் தலைமறைவாகியுள்ளார். </p>]]></content>
            <updated>2026-08-10T02:04:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டின் 33 சிறைச்சாலைகளுக்கும் ஸ்கேனர் இயந்திரங்கள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/scanners-will-be-fixed-for-jails-1786326416"></link>
            <id>https://tamilwin.com/article/scanners-will-be-fixed-for-jails-1786326416</id>
            <summary type="text">நாடளாவிய ரீதியில் இயங்கி வரும் 33 சிறைச்சாலைகளுக்கும் ஸ்கேனர் இயந்திரங்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடளாவிய ரீதியில் இயங்கி வரும் 33 சிறைச்சாலைகளுக்கும் ஸ்கேனர் இயந்திரங்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார தெரிவித்துள்ளார்.</p><p>
இதற்கான நிதி ஒதுக்கீடுகளை மேற்கொள்வதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.</p><p>
இந்த இயந்திரங்கள் சிறைச்சாலைகளில் நிறுவப்பட்டதன் பின்னர், கைதிகளுக்குக் கொண்டு வரப்படும் உணவு உள்ளிட்ட அனைத்துப் பொருட்களும் ஸ்கேனர் இயந்திரங்கள் மூலமாகப் பரிசோதிக்கப்பட்ட பின்னரே அனுமதிக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9936cef3-5f2d-4bfe-b807-591b87afb199/26-6a792d91aec31.webp' /></p><p>
</p><p>இந்த ஸ்கேனர் இயந்திரங்கள் பொருத்தப்படுவதன் மூலம், தற்போது முன்னெடுக்கப்படும் உடற்பரிசோதனைகளை நவீன முறையில் செய்ய முடியும் எனவும், இதன் மூலம் சிறைச்சாலை அதிகாரிகள் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் தவிர்க்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>சிறைச்சாலைச் சுவர்களுக்கு வெளியே இருந்து உள்ளே எறியப்படும் சட்டவிரோதப் பொதிகளைத் தடுப்பதற்கு, சிறைச்சாலை நிர்வாகத்துடன் இணைந்து புதிய பாதுகாப்புத் திட்டத்தை மேலும் வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் ஹர்ஷண மேலும் குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-10T01:47:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரோஹண விஜேவீரவின் குடும்பத்திற்கு முன்னாள் ஜனாதிபதி பிரேமதாச செய்த அநியாயங்கள் : மகன் வெளியிட்ட தகவல்கள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/rohana-wijeweera-ranasinghe-premadasa-1786325377"></link>
            <id>https://tamilwin.com/article/rohana-wijeweera-ranasinghe-premadasa-1786325377</id>
            <summary type="text">ஜே.வி.பியின் முன்னாள் தலைவர் ரோஹண விஜேவீரவின் குடும்பத்தினரை 48 நாடுகள் அழைத்துச் சென்று சகல வசதிகளையும் வழங்க முன்வந்தபோதும் முன்னாள் ஜனாதிபதி பிரேமத...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜே.வி.பியின் முன்னாள் தலைவர் ரோஹண விஜேவீரவின் குடும்பத்தினரை 48 நாடுகள் அழைத்துச் சென்று சகல வசதிகளையும் வழங்க முன்வந்தபோதும் முன்னாள் ஜனாதிபதி பிரேமதாச தனது நிறைவேற்றதிகாரத்தை பயன்படுத்தி அவை அனைத்தையும் தடுத்ததாக ரோஹண விஜேவீரவின் மகன் உவிந்து விஜேவீர தெரிவித்துள்ளார்.
</p><p>வலையொளி தளமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே இதனை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்துரையாற்றிய அவர், நாங்கள் கணேமுல்ல முகாமில் இருந்தபோது அம்மாவும் எம்மீது அன்புகாட்டியவர்களும் அப்பாவின் ஆதரவாளர்களும் எங்களை வெளிநாடுகளுக்கு அழைத்துச் செல்ல நிறைய முயற்சி செய்தார்கள். </p><p>பல வெளிநாட்டுத் தூதரகங்கள் இதில் தலையிட்டன. எனக்குத் தெரிந்தவரையில் 13 நாடுகள் இலங்கை அரசாங்கத்திடம் எங்களை ஒப்படைக்குமாறு கேட்டிருந்ததாகப் பின்னர் எங்களுக்குத் தெரியவந்தது.</p><h2>பிரேமதாசவின் அதிகார அழுத்தம்</h2><p>எங்களுக்கு முழுப் பாதுகாப்பையும் கல்வியையும் வழங்குவதாக தெரிவித்திருந்தனர். அரசியல் புகலிடம் வழங்கப்பட்டால் ஓய்வூதியம் கூட வழங்குவார்கள். </p><p>அப்படி முழுமையான பாதுகாப்புடன் 13 நாடுகள் எங்களைக் கேட்டிருந்தன. 43க்கும் மேற்பட்ட நாடுகள் விசாரித்திருந்ததாகவும் சுமார் 48 நாடுகள் வரை விசாரித்து 13 நாடுகள் எங்களை ஏற்றுக் கொள்ளச் சம்மதம் தெரிவித்திருந்ததாகவும் சொல்லப்பட்டது. </p><p>ஆனால் ஜனாதிபதி பிரேமதாச எங்களைப்போக அனுமதிக்கவில்லை. தனது அதிகாரமிக்க தன்னிச்சையான முடிவினால் எங்களைத் தடுத்து வைத்திருந்தார்.
அந்த நேரத்தில் அம்மாவின் அண்ணன் ஒருவர் இருந்தார். டாக்டர் சந்திராபானு என்று. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/61e89765-091e-497e-9fd6-dcda8a36eb3f/26-6a792983e84f0.webp' /></p><p>அவரும் ஒரு சர்ச்சைக்குரிய நபர். அவரும் எங்களை விடுவிப்பதற்காக வந்தார். அந்த நேரத்தில் சர்வதேச அளவில் அரசாங்கத்திற்கு வந்த முக்கிய அழுத்தம் கல்வி தொடர்பானது. </p><p>அதாவது கல்வி என்பது எவராலும் மறுக்க முடியாத அடிப்படை உரிமை. அதனால் இந்த குடும்பத்தின் குழந்தைகளுக்குக் கல்வி இல்லை என்பதால் இவர்களை முகாமில் இருந்து விடுவித்து வெளிநாடு செல்ல அனுமதிக்குமாறு கேட்டார்கள். </p><p>அதற்கு ஜனாதிபதி பிரேமதாச சம்மதிக்கவில்லை.
அப்போது கணேமுல்ல என்பது கொழும்புக்கு மிக அருகில் உள்ளது. அதனால் கணேமுல்ல முகாமிற்கு முன்னால் மனித உரிமைகள் அமைப்புகள் அடிக்கடி வரும். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bd946995-f1ca-46b9-9779-c33423adf0c3/26-6a7929849c97d.webp' /></p><p>தூதரக அதிகாரிகள் வருவார்கள். அப்பாவின் ஆதரவாளர்கள் வருவார்கள். அதுவும் அவர்களுக்கு ஒரு தொல்லையாக மாறியது. அதனால் தமிழீழ விடுதலைப் புலிகளின் மோதல்கள் நிலவிய திருகோணமலைப் பகுதிக்கு எங்களை அனுப்ப ஜனாதிபதி தீர்மானித்தார். </p><p>அந்தக் காலக்கட்டத்தில் எனக்கு அப்போது இரண்டு அல்லது மூன்று வயது இருக்கும் என குறிப்பிட்டிருந்தார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-10T01:32:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[இன்று ஆரம்பமாகும் 2026 உயர்தரப் பரீட்சை..! மாணவர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/2026-advanced-level-examination-1786324043"></link>
            <id>https://tamilwin.com/article/2026-advanced-level-examination-1786324043</id>
            <summary type="text">2026 கல்விப் பொது தராதர உயர்தரப் பரீட்சை (G.C.E. A/L) இன்று (10) ஆரம்பமாகிறது. 

இந்தப் பரீட்சை செப்டம்பர் 5ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் 2,532 பர...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026 கல்விப் பொது தராதர உயர்தரப் பரீட்சை (G.C.E. A/L) இன்று (10) ஆரம்பமாகிறது. </p><p>

இந்தப் பரீட்சை செப்டம்பர் 5ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் 2,532 பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ளது.</p><p></p><h2>&nbsp;உயர்தரப் பரீட்சை</h2><p>

இம்முறை பரீட்சைக்கு பாடசாலை பரீட்சார்த்திகள் 264,496 பேரும், தனிப்பட்ட பரீட்சார்த்திகள் 107,814 பேரும் உள்ளடங்கலாக மொத்தம் 372,310 பேர் தோற்றவுள்ளனர்.</p><p>

பரீட்சை ஆரம்பிப்பதற்கு குறைந்தது ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக அனைத்து பரீட்சார்த்திகளும் பரீட்சை நிலையங்களுக்கு வருகை தர வேண்டும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/96c36e97-7fae-4c0c-a962-89a18e74f175/26-6a7925aa88959.webp' /></p><p>

அதேவேளை, கையடக்கத் தொலைபேசிகள், ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள், குறிப்புகள், புளூடூத் சாதனங்கள் உள்ளிட்ட எந்தவொரு மின்னணு சாதனத்தையும் பரீட்சை மண்டபத்திற்குள் கொண்டு வருவது முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளது.</p><p></p><h2>பரீட்சை மோசடி</h2><p>
</p><p>
பரீட்சை விதிமுறைகளை முறையாகப் பின்பற்றி, பரீட்சை மோசடிகளில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவுறுத்தியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/66601b92-1488-439c-bffd-38e7e503af0d/26-6a7925ab4625d.webp' /></p><p> </p><p>

கடந்த ஆண்டுகளிலும் பரீட்சை மோசடிகள் காரணமாக பல மாணவர்களின் பெறுபேறுகளை இடைநிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
</p><p>
ஏதேனும் அவசர அனர்த்த நிலைமை ஏற்பட்டால், அதற்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க பரீட்சைகள் திணைக்களம் தயாராக இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-10T01:23:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[ராஜபக்சக்களை நெருங்கும் பேராபத்து....! அரசிற்கு வலுக்கும் அழுத்தம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/govt-under-pressure-over-rajapaksa-probe-1786324607"></link>
            <id>https://ibctamil.com/article/govt-under-pressure-over-rajapaksa-probe-1786324607</id>
            <summary type="text">முன்னாள் அமைச்சர்கள் மற்றும் உயரதிகாரிகள் மீதான விசாரணைகளைத் தற்போதைய அரசாங்கம் முடுக்கிவிட்டுள்ள நிலையில், கடந்த கால ஊழல்களின் குறியீடாக மக்களாலும் எ...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் அமைச்சர்கள் மற்றும் உயரதிகாரிகள் மீதான விசாரணைகளைத் தற்போதைய அரசாங்கம் முடுக்கிவிட்டுள்ள நிலையில், கடந்த கால ஊழல்களின் குறியீடாக மக்களாலும் எதிர்க்கட்சிகளாலும் பார்க்கப்படும் ராஜபக்ச குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால், அரசாங்கம் தன் அரசியல் முகத்தையும் மக்கள் நம்பிக்கையையும் இழக்க நேரிடும் என்ற அழுத்தம் அரசுக்கு உள்ளது.</p><p>

இந்த நிலையில் ராஜபக்ச ஆதரவாளர்களும் சிறிலங்கா பொதுஜன பெரமுன (SLPP) தரப்பினரும், இந்த நகர்வுகளைத் தங்களின் அரசியல் செல்வாக்கை முற்றிலும் அழிப்பதற்காக எடுக்கப்படும் அரசியல் பழிவாங்கல் என்றே சித்தரிக்கின்றனர்.
</p><p>
நாட்டின் தற்போதைய பொருளாதாரச் சவால்கள் மற்றும் நிர்வாகச் சிக்கல்களிலிருந்து மக்களின் கவனத்தைத் திசைதிருப்பவே, முன்னாள் ஆட்சியாளர்களைக் கைது செய்யும் படலத்தை அரசு கையில் எடுக்கிறது என்ற விமர்சனமும் முன்வைக்கப்படுகிறது.
</p><p>
இவ்வாறு போரை முடிவுக்குக் கொண்டுவந்த தலைவர் என்ற பிம்பம் கொண்ட மகிந்தவை நேரடியாக நெருங்குவது, தென்னிலங்கையில் அவருக்கு மீண்டும் ஒரு அனுதாப அலையை உருவாக்கக்கூடும் என்ற அரசியல் அச்சமும் இங்கு நிலவுகிறது.</p><p>

இவ்வாறான பின்னணியில் தற்போதைய அரசாங்கம், வெறும் கைதுகளோடு நின்றுவிடாமல், நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகளைச் சட்டப்பூர்வமாக நிரூபித்துத் தண்டனை பெற்றுத் தருமா அல்லது இது வழக்கமான அரசியல் நாடகமாக முடியுமா என்பதே விமர்சகர்களின் முதன்மைக் கேள்வியாக உருவெடுத்துள்ளது.</p><p>

இது குறித்தும் நடப்பு அரசியல் குறித்தும் கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் கணேசமூர்த்தி தெரிவித்த விரிவான கருத்துக்களுடன் வருகின்றது லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சி...</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/dhCViA6wjKI" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p></p><p></p><p>[F2H0YZZஸ</p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-10T01:20:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[மகிந்த - கோட்டாபய - பசிலுக்கு பெரும் அதிர்ச்சி..! நீதிமன்றத்தின் ஆபத்தான தீர்ப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/mahinda-brothers-trouble-dangerous-court-verdict-1786309718"></link>
            <id>https://tamilwin.com/article/mahinda-brothers-trouble-dangerous-court-verdict-1786309718</id>
            <summary type="text">ராஜபக்ச குடும்பத்தினருக்கு எதிரான நீதிமன்ற தீர்ப்பு மற்றும் அவர்களுக்கு எதிராக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள், அவர்களின் அரசியல் எதிர்காலத்தை கேள்வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ராஜபக்ச குடும்பத்தினருக்கு எதிரான நீதிமன்ற தீர்ப்பு மற்றும் அவர்களுக்கு எதிராக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள், அவர்களின் அரசியல் எதிர்காலத்தை கேள்விக்குள்ளாக்கியுள்ளதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல் விரிவுரையாளர் கலாநிதி கணேசமூர்த்தி தெரிவித்தார்.
</p><p>
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
</p><p>
மேலும் தெரிவித்த அவர்,
</p><p>
நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு இவர்கள் தான் காரணம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், உயர்மட்ட அரசியல்வாதிகள் சட்ட ரீதியான சிக்கல்களில் சிக்குவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம்.
</p><p>
இவர்களை சிறைக்கு அனுப்புவதற்கு பதிலாக, 'வீட்டுக்காவலில்' வைப்பதற்கான சட்ட நடைமுறைகளை அரசாங்கம் பரிசீலித்து வருகின்றது.
</p><p>
 இது இத்தகைய உயர் அரசியல்வாதிகளைப் பாதுகாப்பதற்கான ஒரு திட்டமிட்ட நடவடிக்கையாக இருக்கலாம் என குறிப்பிட்டார்.

இந்த விடயங்கள் தொடர்பில் ஆராய்கின்றது லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சி...</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/dhCViA6wjKI" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-10T01:18:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[விருது விழாவில் நடிகையிடம் அத்து மீறிய பெண்.. கடும் ஷாக் ஆன நடிகை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/woman-kisses-nikita-rawal-in-event-viral-video-1786324534"></link>
            <id>https://viduppu.com/article/woman-kisses-nikita-rawal-in-event-viral-video-1786324534</id>
            <summary type="text">நடிகைகள் பொது இடங்களுக்கு வந்தால் அவர்களை பார்க்க ஆண் ரசிகர்கள் கூட்டம் தான் அதிகம் கூடும். அதனால் கூட்டத்தை கட்டுப்படுத்த பவுன்சர்களை வைத்திருப்பார்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>நடிகைகள் பொது இடங்களுக்கு வந்தால் அவர்களை பார்க்க ஆண் ரசிகர்கள் கூட்டம் தான் அதிகம் கூடும். அதனால் கூட்டத்தை கட்டுப்படுத்த பவுன்சர்களை வைத்திருப்பார்கள்.</p><p>ஆனால் நடிகை ஒருவர் விருது விழா நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வரும்போது பெண் ஒருவரே அவரிடம் அத்துமீறிய வீடியோ பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d0442beb-c23d-4197-94d1-aeceb769e5fb/26-6a7926380c65a.webp' /></p><p>
</p><h2>நிகிதா ராவல்
</h2><p>Garam Masala புகழ் நடிகை நிகிதா ராவல் ஒரு விருது விழாவுக்கு கலந்துகொள்ள வந்தபோது ரெட் கார்ப்பெட்டில் போட்டோவுக்கு போஸ் கொடுத்தார். அப்போது ரசிகை ஒருவர் செல்பி எடுக்க வேண்டும் என அருகில் வந்தார்.</p><p>
அந்த பெண் திடீரென நடிகையை இழுத்து பிடித்து உதட்டில் முத்தமிட்டு இருக்கிறார். அதனால் நடிகை கடும் அதிர்ச்சி ஆகிவிட்டார். வீடியோ தற்போது வைரல் ஆகி இருக்கிறது.&nbsp;</p><p><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr">SHOCKING 😲 😱😭😲<a href="https://x.com/hashtag/NikitaRawal?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#NikitaRawal</a> Forcefully Kissesd by her Female FAN . Or just a PR Gimmick ? <a href="https://t.co/WJF8uuC4y5">pic.twitter.com/WJF8uuC4y5</a></p>&mdash; Manoz Kumar (@ManozTalks) <a href="https://x.com/ManozTalks/status/2086371921265041609?ref_src=twsrc%5Etfw">August 9, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p>]]></content>
            <updated>2026-08-10T01:15:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[நிகழ்ச்சிக்கு வந்த நடிகையிடம் மோசமாக நடந்த பெண்.. அதிர்ச்சி ஆன நடிகை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/girl-kisses-nikita-rawal-on-lips-shocking-video-1786324074"></link>
            <id>https://cineulagam.com/article/girl-kisses-nikita-rawal-on-lips-shocking-video-1786324074</id>
            <summary type="text">நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்த நடிகையிடம் ரெட் கார்ப்பெட்டில் பெண் ரசிகை ஒருவர் எல்லைமீறி உதட்டில் முத்தமிட்ட வீடியோ பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.நட...</summary>
            <content type="html"><![CDATA[<p>நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்த நடிகையிடம் ரெட் கார்ப்பெட்டில் பெண் ரசிகை ஒருவர் எல்லைமீறி உதட்டில் முத்தமிட்ட வீடியோ பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.</p><p>நடிகை நிகிதா ராவல் நிகழ்ச்சிக்கு வந்தபோது போட்டோகிராபர்களுக்கு போஸ் கொடுத்து கொண்டிருந்தார். அப்போது ரசிகை ஒருவர் அங்கே வந்து அவரிடம் பேசினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9c3253fe-2cdc-413e-9e69-58d3f04e71de/26-6a79246bbf843.webp' /></p><p>
</p><h2>உதட்டில் முத்தம்
</h2><p>அப்போது நடிகை&nbsp; கன்னம் மற்றும் உதட்டில் திடீரென அந்த பெண் முத்தம் கொடுத்ததால் நடிகை நிகிதா ராவல் கடும் அதிர்ச்சி ஆகிவிட்டார்.
</p><p>
அந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது.&nbsp;</p><p><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr">SHOCKING 😲 😱😭😲<a href="https://x.com/hashtag/NikitaRawal?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#NikitaRawal</a> Forcefully Kissesd by her Female FAN . Or just a PR Gimmick ? <a href="https://t.co/WJF8uuC4y5">pic.twitter.com/WJF8uuC4y5</a></p>&mdash; Manoz Kumar (@ManozTalks) <a href="https://x.com/ManozTalks/status/2086371921265041609?ref_src=twsrc%5Etfw">August 9, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p>]]></content>
            <updated>2026-08-10T01:07:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[பொலிஸ் மா அதிபர் குறித்த சர்ச்சைக்குரிய கருத்து! விசாரணைக்காக அழைக்கப்பட்ட சாகர காரியவசம்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/controversial-comment-regarding-igp-priyantha-1786322225"></link>
            <id>https://tamilwin.com/article/controversial-comment-regarding-igp-priyantha-1786322225</id>
            <summary type="text">பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தொடர்பாக வெளியிடப்பட்ட சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை அடிப்படையாகக் கொண்டு, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாள...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தொடர்பாக வெளியிடப்பட்ட சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை அடிப்படையாகக் கொண்டு, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளார்.</p><p>

இந்த அழைப்பு தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சாகர காரியவசம், தான் தெரிவிக்காத விடயங்களைத் திரித்து தவறான அர்த்தங்களை வழங்கி, அரசாங்கம் தன்னை அரசியல் ரீதியாக பழிவாங்க முயற்சிப்பதாக குற்றம்சாட்டினார்.</p><p></p><h2>விசாரணை</h2><p>
</p><p>
தான் கூறிய கருத்துகளைத் திரிபுபடுத்தி காண்பிப்பதன் மூலம் எதிர்க்கட்சியினரை ஒடுக்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும், இவ்வாறான அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் தான் ஒருபோதும் பின்வாங்கப் போவதில்லை என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
</p><p>
கடந்த காலங்களில் இதுபோன்ற அரசியல் பழிவாங்கல்களில் ஈடுபட்ட உலகத் தலைவர்களுக்கு இறுதியில் துரதிர்ஷ்டவசமான நிலையே ஏற்பட்டதாக சுட்டிக்காட்டிய அவர், தற்போதைய ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவும் அதே பாதையில் பயணிக்க முயற்சிப்பதாக குற்றம்சாட்டினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3f431daf-1d10-4335-bcb9-d0670ae482c6/26-6a791eb4ee185.webp' /></p><p>
</p><p>
அத்துடன், ஷானி அபேசேகரவை பிரதி பொலிஸ் மா அதிபர் பதவிக்கு நியமித்ததும் இந்த அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையின் ஒரு பகுதியாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
</p><p>
 நாட்டின் வரலாற்றில் எந்தவொரு அரசாங்கமும் இவ்வாறு எதேச்சதிகாரமாக செயற்பட்டதில்லை என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
</p><p>
அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைகள் குறித்து மக்கள் சரியான புரிதலுடன் இருப்பதாகவும், எதிர்காலத்தில் மக்கள் இதற்கு உரிய பதிலை வழங்குவார்கள் என்றும் சாகர காரியவசம் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-10T01:03:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[புலம்பெயர் தொழிலாளர்களின் பங்களிப்பு...! இலங்கைக்கு குவியும் டொலர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/remittances-to-sl-exceed-5-billion-in-2026-1786323070"></link>
            <id>https://ibctamil.com/article/remittances-to-sl-exceed-5-billion-in-2026-1786323070</id>
            <summary type="text">வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்களால் அனுப்பப்படும் பணப்பரிமாற்றம், இந்த ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் 5 பில்லியன் அமெரிக்க டொலர்களை கடந்துள்ளதாக தெ...</summary>
            <content type="html"><![CDATA[<p>வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்களால் அனுப்பப்படும் பணப்பரிமாற்றம், இந்த ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் 5 பில்லியன் அமெரிக்க டொலர்களை கடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
 இலங்கை மத்திய வங்கி இதனை தெரிவித்துள்ளது.
</p><p>
இதனடிப்படையில் கடந்த ஜனவரி மாதம் முதல் ஜூலை மாதம் வரையான காலப்பகுதியில் மொத்தமாக 5.3824 பில்லியன் அமெரிக்க டொலர்கள் நாட்டிற்கு கிடைத்துள்ளன.</p><p>
</p><p></p><h2>மில்லியன் டொலர்கள்&nbsp;</h2><p>கடந்த ஆண்டு இதே காலப்பகுதியில் 4.4352 பில்லியன் டொலர்கள் கிடைத்திருந்த நிலையில், இந்த ஆண்டு 947.2 மில்லியன் டொலர்கள் அதிகரித்துள்ளதாக மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a582e1c5-d378-4f5e-9092-71e421e4d834/26-6a7920805dfab.webp' /></p><p>இதேவேளை, கடந்த ஜூலை மாதத்தில் மாத்திரம் 777.6 மில்லியன் டொலர்கள் வெளிநாட்டு பணப்பரிமாற்றமாக கிடைத்துள்ளன.</p><p>

ஜூன் மாதத்தில் 697.3 மில்லியன் டொலர்கள் கிடைத்திருந்த நிலையில், ஜூலையில் பணப்பரிமாற்றம் மேலும் அதிகரித்துள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-10T00:56:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[சீரியல் நடிகை வைஷு சுந்தர் சேலையில் அழகிய போட்டோஷூட்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/vaishu-sundar-saree-photoshoot-1786322691"></link>
            <id>https://cineulagam.com/article/vaishu-sundar-saree-photoshoot-1786322691</id>
            <summary type="text">நடிகை வைஷு சுந்தர் சின்னத்திரையில் பிரபல நடிகைகளில் ஒருவர். அவரது கணவர் வெற்றி வசந்த் சிறகடிக்க ஆசை சீரியலில் ஹீரோவாக நடித்து வருகிறார்.வைஷு தற்போது வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நடிகை வைஷு சுந்தர் சின்னத்திரையில் பிரபல நடிகைகளில் ஒருவர். அவரது கணவர் வெற்றி வசந்த் சிறகடிக்க ஆசை சீரியலில் ஹீரோவாக நடித்து வருகிறார்.</p><p>வைஷு தற்போது விஜய் டிவியில் ஒண்ணா இருக்க கத்துக்கணும் என்ற புது சீரியலில் நடித்து வருகிறார்.</p><p>தற்போது அவர் சேலையில் அழகாக போஸ் கொடுத்து இருக்கும் ஸ்டில்களை வெளியிட்டு இருக்கிறார். இதோ பாருங்க.</p>]]></content>
            <updated>2026-08-10T00:52:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டில் கொட்டி தீர்க்கப்போகும் கனமழை...! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/heavy-rain-with-lightning-thunder-weather-report-1786322275"></link>
            <id>https://ibctamil.com/article/heavy-rain-with-lightning-thunder-weather-report-1786322275</id>
            <summary type="text">சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூட...</summary>
            <content type="html"><![CDATA[<p>சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.</p><p>வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (10-08-2026) விடுத்துள்ள அறிக்கையில் மேற்படி விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p>இதனடிப்படையில் ஊவா மாகாணத்தின் சில இடங்களிலும் அத்துடன் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களின் சில இடங்களிலும் பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது.



</p><p></p><h2>பனிமூட்டமான நிலை</h2><p>வடமேல் மாகாணத்தில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cfbb42d5-216a-48e0-b91b-b2baa0eb795d/26-6a791d650cf5f.webp' />&nbsp;&nbsp;</p><p>மத்திய, வடமத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் அத்துடன் திருகோணமலை மாவட்டத்திலும் மணித்தியாலத்திற்கு சுமார் 30 - 40 km வேகத்தில் அடிக்கடி ஓரளவு பலத்த காற்று வீசக் கூடும்.</p><p>இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-10T00:38:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[காவல்துறை மா அதிபர் தொடர்பான சர்ச்சையான கருத்து! சாகர காரியவசம் விசாரணைக்கு அழைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sagara-kariyawasam-summoned-for-inquiry-1786321230"></link>
            <id>https://ibctamil.com/article/sagara-kariyawasam-summoned-for-inquiry-1786321230</id>
            <summary type="text">
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளார்.

காவல்துறை மா அதிபர் (IGP) பிரியந்த வீரசூரிய தொடர்பாக ...</summary>
            <content type="html"><![CDATA[<p>
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளார்.
</p><p>
காவல்துறை மா அதிபர் (IGP) பிரியந்த வீரசூரிய தொடர்பாக தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை அடிப்படையாகக் கொண்டு அவர் இவ்வாறு விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
</p><p>
இந்த அழைப்பு குறித்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த காரியவசம், தான் கூறாத விஷயங்களுக்கு தவறான விளக்கம் அளித்து அரசாங்கம் தன்னை அரசியல் ரீதியாக பழிவாங்க முயல்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.</p><p>
</p><p></p><h2>வேலைத்திட்டம்&nbsp;</h2><p>தான் கூறிய கருத்துகளைத் திரித்து காட்டி, எதிர்க்கட்சியினரை ஒடுக்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், இத்தகைய மிரட்டல்களுக்குத் தான் பயந்து பின்வாங்கப்போவதில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
</p><p>
கடந்த காலத்தில் இத்தகைய அரசியல் பழிவாங்கல்களில் ஈடுபட்ட உலகத் தலைவர்கள் துரதிர்ஷ்டவசமான முடிவையே சந்தித்ததாகவும் தற்போதைய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவும் அதே பாதையில்தான் பயணிக்க முயற்சிக்கிறார் எனவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/09a10eb2-af34-4d89-8006-3796afa3c715/26-6a791ac4e6969.webp' /></p><p>ஷானி அபேசேகரவை பிரதி காவல்துறை மா அதிபராக (DIG) நியமித்ததும் இந்த அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையின் ஒரு பகுதியாகும் என்றும் நாட்டின் வரலாற்றில் எந்தவொரு அரசாங்கமும் இவ்வாறு தன்னிச்சையாகச் செயல்பட்டதில்லை என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>
அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை குறித்து மக்கள் சரியான புரிதலுடன் இருப்பதாகக் குறிப்பிட்ட சாகர காரியவசம், எதிர்காலத்தில் மக்கள் இதற்குச் சரியான பதிலடி கொடுப்பார்கள் என்றும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-10T00:34:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[நடிகை அபர்ணதி உச்சகட்ட கவர்ச்சி போட்டோஷூட்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/abarnathy-sizzling-glam-photoshoot-1786321704"></link>
            <id>https://cineulagam.com/article/abarnathy-sizzling-glam-photoshoot-1786321704</id>
            <summary type="text">நடிகை அபர்ணதி தமிழ் சினிமாவில் வேகமாக வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர். அவர் தொடர்ந்து வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார்.

முன்பு ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நடிகை அபர்ணதி தமிழ் சினிமாவில் வேகமாக வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர். அவர் தொடர்ந்து வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார்.
</p><p>
முன்பு படங்களில் ஹோம்லியாக மட்டும் நடித்து வந்த அவர் தற்போது கவர்ச்சியாகவும் புகைப்படங்கள் வெளியிட தொடங்கி இருக்கிறார்.
</p><p>
உச்சகட்ட கவர்ச்சி உடையில் தற்போது நடிகை அபர்ணதி இருக்கும் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஸ்டில்கள் ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தி இருக்கிறது. அவரா இப்படி என ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-10T00:29:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வசீம் தாஜுதீன் கொலை தொடர்பில் இதுவரை ஊடகங்களில் குறிப்பிடப்படாத பல திடுக்கிடும் தகவல்கள்....]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/who-killed-wasim-thajudeen-namal-rajapaksa-1786321340"></link>
            <id>https://tamilwin.com/article/who-killed-wasim-thajudeen-namal-rajapaksa-1786321340</id>
            <summary type="text">ரக்பி விளையாட்டு வீரர் வசீம் தாஜுதீன் கொலை தொடர்பில் இதுவரை ஊடகங்களில் குறிப்பிடப்படாத பல தகவல்களை நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.குறித்த தகவல்களை தர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ரக்பி விளையாட்டு வீரர் வசீம் தாஜுதீன் கொலை தொடர்பில் இதுவரை ஊடகங்களில் குறிப்பிடப்படாத பல தகவல்களை நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.</p><p>குறித்த தகவல்களை தர்க்க ரீதியாக ஒப்புவித்து தனக்கும் இந்த சம்பவத்திற்கும் தொடர்பில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.வலையொளி தளமொன்றுக்கு வழங்கிய சிறப்பு கலந்துரையாடலிலேயே இதனை குறிப்பிட்டுள்ளார்.அதில் தெரிவிக்கப்பட்டுள்ள பல கருத்துக்கள்...
</p><p>தாஜுதீன் கொலை யோஷிதவில் தொடங்கியது. ஆனால், அந்த நேரத்தில் யோஷித இலங்கையில் இல்லை. பின்னர் அம்மா ஜனாதிபதி செயலகத்தில் இருந்து தொலைபேசி அழைப்பு எடுத்ததாக குறிப்பிட்டனர். </p><p>அவரும் கொழும்பில் இருக்கவில்லை. 
அதற்குப் பிறகு கொழும்பில் இருக்கும் குடும்பத்தினர் யார் என்று பார்த்தார்கள். மஹிந்த ராஜபக்சவின் பெயரை குறிப்பிட முடியாது. அதனால் என் பெயரைப் போட்டார்கள்.</p><h2>

</h2><p></p><h2>சோடிக்கப்பட்ட சிசிரிவி (CCTV) காட்சிகள்&nbsp;</h2><p>
2015 ஆம் ஆண்டில் எனக்கு நினைவிருக்கும் வகையில் ஊடகங்களில் பெரியளவில் பேசப்பட்ட ஒரு விடயம் தான் அம்மாவின் 'சிரிலிய சவிய' சமூக சேவை அமைப்பிற்குச் சொந்தமான ஒரு ஜீப் வண்டி ஒன்று தாஜுதீனின் காரை பின்தொடர்ந்ததாக வெளியான சிசிரிவி (CCTV) காட்சிகள் கிடைத்துள்ளதாக தெரிவித்தனர். </p><p>பின்னர் அந்த ஜீப் வண்டி கைப்பற்றப்பட்டதாகவும் அந்த ஜீப் வண்டியின் நிறம் பலமுறை மாற்றப்பட்டதாகவும் கூறப்பட்டது.
ஆனால் இதில் மிக முக்கியமான விடயம் என்னவென்றால், இந்த நாட்டின் ஒவ்வொரு சம்பவம் தொடர்பாகவும் சிசிரிவி காட்சிகள் குறித்து பல நாடுகளிடம் அறிக்கை கோரப்பட்டது.</p><p>சமீபத்திய வரலாற்றில் கடந்த 15 ஆண்டுகளாக அனைத்து சம்பவங்களின் சிசிரிவி காட்சிகளும் ஊடகங்களில் வெளியிடப்பட்டன.
இப்போது இந்தக் காட்சிகள் இருந்தால், யாரோ ஒருவர் பின்னால் துரத்திச் சென்றார் என்று தெளிவாக சிசிரிவி இருந்தால், அரசாங்கத்திற்கோ அல்லது பொலிஸாருக்கோ இந்தக் காட்சிகளைத் தெளிவாக ஊடகங்களுக்கு முன்வைக்க முடியும்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7e21a122-f33c-437a-8bba-6a06897c0013/26-6a7919bf0f102.webp' /></p><p>ஏன் செய்யவில்லை?
எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அதைச் செய்யவில்லை. சமூக ஊடகங்களில் இந்த விடயத்தைப் பேசும்போதும் கூட இந்த சிசிரிவி காட்சிகள் குறித்துக் குறிப்பிடப்படுவதில்லை.
</p><p>ஆதாரத்தை உருவாக்க வேண்டும் என்பதற்காக இறுதியில் தாஜுதீன் மோதிய வாகனம் வேறு ஒன்று என்றார்கள். ஆனால் இப்போது பின்னால் சென்ற வாகனம் பற்றிப் பேசுகிறார்கள். அப்படியானால் பின்னால் சென்ற வாகனத்தைத் தேடும்போது இது சிக்கவில்லையா?
</p><p>ஆனால் அன்று அந்தக் குற்றச்சாட்டுகளைச் சுமத்திய நபர் இன்று அப்படி எதுவும் நடக்கவில்லை என்று சொல்கிறார். அதாவது முதலில் குற்றச்சாட்டு சுமத்தியவர் இப்போது தான் சொன்னது பொய் என்று சொல்கிறார்.
</p><p>அந்த காலத்தில் அரசியல் மேடைகளில் குற்றச்சாட்டு சுமத்தியவர்கள் இன்று ஊடகச் சந்திப்புகளில் சொல்கிறார்கள், அவை அந்த காலத்தில் அரசியல் மேடைகளில் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் என்று. </p><p>ஏனென்றால் அவர்கள் இப்போது எதிர்க்கட்சியில் இருக்கிறார்கள்.
இதெல்லாம் அரசியலுக்காக சோடிக்கப்பட்ட காரணங்கள் என குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-10T00:28:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[சீனாவை புரட்டிப் போட்ட ‘டொல்பின்’ சூறாவளி ; 10 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் வெளியேற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/typhoon-dolphin-hits-china-more-1-million-people-1786313295"></link>
            <id>https://canadamirror.com/article/typhoon-dolphin-hits-china-more-1-million-people-1786313295</id>
            <summary type="text">மணிக்கு 162 கிலோமீற்றர் வேகத்தில் வீசிய பலத்த காற்று மற்றும் கனமழையுடன் &#039;டொல்பின்&#039; சூறாவளி, சீனாவின் கிழக்குக் கடற்கரையைத் தாக்கியுள்ளது.

1951 ஆம் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>மணிக்கு 162 கிலோமீற்றர் வேகத்தில் வீசிய பலத்த காற்று மற்றும் கனமழையுடன் 'டொல்பின்' சூறாவளி, சீனாவின் கிழக்குக் கடற்கரையைத் தாக்கியுள்ளது.</p><p>

1951 ஆம் ஆண்டிற்குப் பிறகு கிழக்கு சீனாவைப் பாதித்த மிகப்பெரிய சூறாவளி இதுவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் தாக்கம் சராசரியாக 12 நாட்கள் நீடிக்கும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ae0328c6-de92-4fe3-8011-2d7ed4e8aa46/26-6a78fa50c5021.webp' /></p><p>கிழக்கு சீனாவின் பல பகுதிகளில் 250 - 500 மில்லிமீற்றர் வரை பலத்த மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதுடன், சிறிய ஆறுகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ளப்பெருக்கு மற்றும் மலைப்பகுதிகளில் நிலச்சரிவு ஏற்படும் அபாயமும் அதிகரித்துள்ளது.</p><p>

கிழக்கு சீனா முழுவதும் பத்து இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், பல துறைமுகங்கள் மற்றும் வானூர்தி நிலையங்களின் சேவைகளைத் தற்காலிகமாக நிறுத்திவைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.
</p><p>
இதற்கிடையில், டொல்பின் சூறாவளியின் தாக்கம் பிலிப்பைன்ஸிலும் ஏற்பட்டுள்ளது.
</p><p>
கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக அந்த நாட்டில் 380,000 க்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-10T00:26:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[அடுக்குமாடி குடியிருப்பில் பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை ; சிசிடிவி ஆதாரத்தால் சிக்கிய காவலாளி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/woman-sexually-assaulted-in-apartment-building-1786317431"></link>
            <id>https://jvpnews.com/article/woman-sexually-assaulted-in-apartment-building-1786317431</id>
            <summary type="text">இந்தியாவில் குஜராத் மாநிலம் அகமதாபாத் மாவட்டத்தில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படும் கட்டிடக் காவல...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியாவில் குஜராத் மாநிலம் அகமதாபாத் மாவட்டத்தில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படும் கட்டிடக் காவலாளி ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p></p><h3>மேலதிக விசாரணை</h3><p>

குறித்த அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வந்த பெண் ஒருவர் நேற்று இரவு கட்டிடத்தின் மாடியில் நடைபயிற்சியில் ஈடுபடுவதற்காகச் சென்றுள்ளார். </p><p>இதன்போது, அவரை பின்தொடர்ந்து சென்றதாகக் கூறப்படும் கட்டிடக் காவலாளியான தரம் சிங், அப்பெண்ணை பலவந்தப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்ததாக காவல்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9e652c1b-d259-4193-92f8-1d5f69082732/26-6a790e88ed67c.webp' /></p><p>

சம்பவத்தைத் தொடர்ந்து சந்தேகநபர் அங்கிருந்து தப்பிச் சென்றதுடன், தனது கைபேசியை அணைத்துவிட்டு தலைமறைவாகியதாக காவல்துறை தெரிவித்துள்ளது.</p><p>

இதனையடுத்து பாதிக்கப்பட்ட பெண் சம்பவம் தொடர்பில் காவல்துறையில் முறைப்பாடு செய்துள்ளார். </p><p>முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை ஆரம்பித்த காவல்துறையினர், சம்பந்தப்பட்ட அடுக்குமாடிக் குடியிருப்பில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கமராக்களின் (CCTV) பதிவுகள் உள்ளிட்ட ஆதாரங்களை ஆய்வு செய்துள்ளனர்.</p><p>

விசாரணைகளின் அடிப்படையில், ஹெபத்பூர் பகுதியில் பதுங்கியிருந்த தரம் சிங்கை இன்று காலை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.</p><p>

மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தேவையான மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இதேவேளை, தரம் சிங் குறித்த அடுக்குமாடிக் குடியிருப்பில் காவலாளியாக பணியில் இணைந்து நான்கு நாட்களே ஆகியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
</p><p>
அவரை காவலாளியாக பணியில் அமர்த்திய தனியார் பாதுகாப்பு நிறுவனத்தின் நிர்வாகத்தினரிடமும் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். </p><p>தரம் சிங்கின் பின்னணி, பணியில் இணைக்கப்பட்ட விதம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலும் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.</p><p>
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-10T00:26:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்தும் 22 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் சமர்ப்பிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/22nd-constitutional-amendment-age-of-judges-tabled-1786321506"></link>
            <id>https://jvpnews.com/article/22nd-constitutional-amendment-age-of-judges-tabled-1786321506</id>
            <summary type="text">உயர் நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயது வரம்பை அதிகரிக்கும் வகையில் முன்மொழியப்பட்டுள்ள 22 ஆவது அரசியலமைப்புத்...</summary>
            <content type="html"><![CDATA[<p>உயர் நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயது வரம்பை அதிகரிக்கும் வகையில் முன்மொழியப்பட்டுள்ள 22 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்தை ஆகஸ்ட் 18 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக அரச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.</p><p>
</p><p></p><p>மேல்நீதிமன்ற நீதிபதிகள், மாவட்ட நீதிபதிகள் மற்றும் நீதிவான்களின் ஓய்வுபெறும் வயது வரம்பில் மாற்றங்களை முன்மொழியும் நீதித்துறை அமைப்புகள் (திருத்தச்) சட்டமூலமும் அன்றைய தினமே சமர்ப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
</p><p>
முன்மொழியப்பட்டுள்ள 22 ஆவது திருத்தத்தின் கீழ், உயர்நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயது 67 ஆக அதிகரிக்கப்படவுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f8a44428-48fd-4855-bb5c-a95409107767/26-6a791a63c0c5a.webp' /></p><p>அதேவேளை, மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் 65 வயது வரை பணியாற்ற முடியும்.

அதேநேரம் பிரதம நீதியரசர் 67 வயதை அடைந்ததும் அல்லது பதவியில் 6 ஆண்டுகளை நிறைவு செய்ததும் ஓய்வு பெறுவார்.</p><p>
மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் எண்ணிக்கையை 19 இலிருந்து 24 ஆக அதிகரிப்பதற்கும் இந்தத் திருத்தம் முன்மொழிகிறது.
</p><p>
இதற்கிடையில், முன்மொழியப்பட்டுள்ள நீதித்துறை அமைப்புகள் சட்டத் திருத்தங்களின் மூலம் மேல்நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது 63 ஆகவும், மாவட்ட நீதிபதிகள் மற்றும் நீதிவான்களின் ஓய்வுபெறும் வயது 62 ஆகவும் உயர்த்தப்படும்.
</p><p>
மேல்நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை 120 ஆக உயர்த்தவும் முன்மொழியப்பட்டுள்ளது.
</p><p>
நீதிமன்ற நடவடிக்கைகளை விரைவுபடுத்துவதற்கும், தேங்கிக் கிடக்கும் வழக்குகளுக்குத் தீர்வு காண்பதற்கும், அனுபவமிக்க சிரேஷ்ட நீதிபதிகளை அதிகளவில் பயன்படுத்துவதற்கும் இந்தச் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படுவதாக அரசாங்கம் காரணம் கூறியுள்ளது.
</p><p>
அரச ஊடக அறிக்கையின்படி, இந்த இரண்டு சட்டமூலங்களினதும் முதல் வாசிப்பு ஆகஸ்ட் 18 ஆம் திகதிக்கு திட்டமிடப்பட்டுள்ளது.</p><p>

அவை சமர்ப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவற்றின் அரசியலமைப்புத் தன்மையை உயர் நீதிமன்றத்தில் சவாலுக்கு உட்படுத்துவதற்கு குடிமக்களுக்கும் அமைப்புகளுக்கும் 14 நாட்கள் அவகாசம் வழங்கப்படும்.</p><p>

முன்மொழியப்பட்டுள்ள அரசியலமைப்புத் திருத்தத்திற்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவைப்படும் என்பதுடன், நீதித்துறை அமைப்புகள் (திருத்தச்) சட்டமூலத்தை சாதாரண பெரும்பான்மையுடன் நிறைவேற்ற முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-10T00:25:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடத்தப்பட்ட ஜேர்மன் குடிமகன்: அல்ஜீரிய ராணுவம் எடுத்த அதிரடி நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/algerian-military-rescues-german-citizen-in-niger-1786296265"></link>
            <id>https://news.lankasri.com/article/algerian-military-rescues-german-citizen-in-niger-1786296265</id>
            <summary type="text">நைஜர் நாட்டு எல்லையில் கடத்தப்பட்ட ஜேர்மன் நாட்டவர் அல்ஜீரிய ராணுவத்தால் மீட்கப்பட்டுள்ளார்.கடத்தப்பட்ட ஜேர்மன் நாட்டவர்நைஜர் நாட்டின் எல்லை பகுதியில்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நைஜர் நாட்டு எல்லையில் கடத்தப்பட்ட ஜேர்மன் நாட்டவர் அல்ஜீரிய ராணுவத்தால் மீட்கப்பட்டுள்ளார்.</p><h2>கடத்தப்பட்ட ஜேர்மன் நாட்டவர்</h2><p>நைஜர் நாட்டின் எல்லை பகுதியில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு ஜேர்மன் நாட்டைச் சேர்ந்த நபர் ஒருவர் ஆயுதம் ஏந்திய குற்ற கும்பலால் வலுக்கட்டாயமாக கடத்தப்பட்டார்.</p><p> இந்நிலையில் அவர் அல்ஜீரிய ராணுவ படையால் வெற்றிகரமாக மீட்கப்பட்டுள்ளார்.</p><p> கடந்த வெள்ளிக்கிழமை அன்று கடத்தப்பட்ட ஜேர்மன் குடிமகன் செக்யூரிட்டி போர்சஸ் (பாதுகாப்பு படையினரால்) பாதுகாப்பாக மீட்கப்பட்டு தங்கள் கட்டுப்பாட்டில் இருப்பதாக அல்ஜீரிய பாதுகாப்பு அமைச்சகம் அதிகாரப்பூர்வ அறிக்கையில் உறுதிப்படுத்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f4b97439-1c37-4fb2-bb70-8e3efd4e678a/26-6a78b7caed5aa.webp' /></p><p> மீட்கப்பட்ட ஜேர்மன் குடிமகன் அல்ஜீரியாவின் தென்பகுதியான இன் குஸ்ஸாம் பகுதியில் இருந்து தலைநகருக்கு அருகிலுள்ள பூஃபாரிக்(Boufarik) ராணுவ தளத்திற்கு விமானம் மூலம் அழைத்து வரப்பட்டுள்ளார்.</p><p> மீட்கப்பட்ட ஜேர்மன் நாட்டவரின் உடல் நலம் தற்போது சீராக இருப்பதாகவும், உரிய நேரத்தில் ஜேர்மன் அதிகாரிகளிடம் அவர் ஒப்படைக்கப்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>கடத்தப்பட்ட ஜேர்மன் குடிமகன் எவ்வாறு மீட்கப்பட்டார் என்பது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ தகவல்களை அல்ஜீரிய அரசு இன்னும் வெளியிடவில்லை.</p><h2>ஜேர்மன் வெளியுறவு அமைச்சகம் வழங்கிய தகவல்</h2><p>ஜேர்மன் குடிமகன் கடத்தப்பட்ட விவகாரம் தங்களுக்கு தெரியும் என்றும், வெளிநாடுகளில் கடத்தப்படும் ஜேர்மன் குடிமக்கள் குறித்து எந்தவொரு கருத்தும் அரசாங்கம் தெரிவிப்பதில்லை என்ற கொள்கையை கடைபிடித்து வருவதாகவும் ஜேர்மன் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள். &nbsp;<br></td></tr></tbody></table><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-10T00:20:47+00:00</updated>
        </entry>
    </feed>
