<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-08-25T16:34:13+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் கோர விபத்து: ஒருவர் உயிரிழப்பு; மூவர் வைத்தியசாலையில் அனுமதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/one-person-killed-in-two-vehicle-crash-1787668004"></link>
            <id>https://canadamirror.com/article/one-person-killed-in-two-vehicle-crash-1787668004</id>
            <summary type="text">கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் உள்ள சட்பரி பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றொருவர் படுகாயமடைந்துள்ளார்.
இந்த விபத்து...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் உள்ள சட்பரி பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றொருவர் படுகாயமடைந்துள்ளார்.</p><p>
இந்த விபத்து ஆகஸ்ட் 22ஆம் திகதி மாலை 4 மணியளவில், நொட்ரே டேம் பகுதியில் இடம்பெற்றதாக சட்பரி பொலிஸார் ஆகஸ்ட் 24ஆம் திகதி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
</p><p>நெட்ரே டேம் மற்றும் லாசேல் போல்வொர்ட் சந்திப்புக்கு வடக்கே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1a3d99f5-a08c-49ac-a80d-27a497d82fda/26-6a8da6262b795.webp' /></p><p>
பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின்படி, தெற்கு நோக்கிப் பயணித்த வாகனம் ஒன்று திடீரென வடக்கு நோக்கிய பாதைக்குள் நுழைந்து, எதிரே வந்த மற்றொரு வாகனத்துடன் மோதியுள்ளது.</p><p>
தெற்கு நோக்கிப் பயணித்த வாகனத்தின் சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>அதே வாகனத்தில் பயணித்த இளம் பயணி ஒருவர் பலத்த காயங்களுடன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
</p><p>மேலும், வடக்கு நோக்கிப் பயணித்த வாகனத்தில் இருந்த சாரதியும் பயணியும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உயிருக்கு ஆபத்தில்லாத காயங்கள் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>
விபத்து தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.</p><p>
இந்த விபத்தை நேரில் பார்த்தவர்கள் அல்லது தங்களது வாகனத்தின் டாஷ்கேம் காட்சிகளை வைத்திருப்பவர்கள், 705-675-9171 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக சட்பரி பொலிஸாரைத் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-25T16:30:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்த 3 ராசி பெண்கள் பிடிவாதத்தால் நினைத்ததை சாதிப்பதில் கில்லாடிகளாம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/which-women-zodiacs-are-very-stubborn-1787672974"></link>
            <id>https://manithan.com/article/which-women-zodiacs-are-very-stubborn-1787672974</id>
            <summary type="text">who very stubborn according to astrology : ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில், ஒருவர் பிறக்கும் ராசி மற்றும் நட்சத்திரம் அவர்களின் வாழ்க்கை முறை, ஆளுமை,...</summary>
            <content type="html"><![CDATA[<p>who very stubborn according to astrology : ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில், ஒருவர் பிறக்கும் ராசி மற்றும் நட்சத்திரம் அவர்களின் வாழ்க்கை முறை, ஆளுமை, சிந்தனைப் போக்கு மற்றும் சில தனிப்பட்ட குணாதிசயங்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருப்பதாக ஜோதிடத்தில் குறிப்பிடப்படுகிறது. </p><p>ஒருவரின் பிறப்பு ராசி மற்றும் நட்சத்திரத்தை அடிப்படையாகக் கொண்டு அவர்களின் இயல்பான குணங்கள் மற்றும் தனித்துவமான ஆளுமைப் பண்புகளைப் பற்றி அறிந்துகொள்ள முடியும் என்றும் நம்பப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fc45ce70-b3e7-4b18-89a8-81e571d7ddbc/26-6a8dbe84716c0.webp' /></p><p>
</p><p>
அந்த வகையில், குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்த பெண்கள் இயல்பிலேயே அதிகளவு பிடிவாத குணம் கொண்டவர்களாக இருப்பார்கள் என ஜோதிடக் கருத்துகள் கூறுகின்றன. </p><p>அவர்கள் ஒரு விஷயத்தை மனதில் தீர்மானித்துவிட்டால், அதை எளிதில் கைவிடாமல், எத்தகைய தடைகள் அல்லது சவால்கள் எதிர்ப்பட்டாலும் தொடர்ந்து முயற்சி செய்து, தாங்கள் நினைத்த இலக்கை அடையும் வரை ஓயாமல் செயல்படுவார்கள்.
</p><p>அந்த வகையில், பிடிவாத குணத்துடன் தாங்கள் நினைத்ததை எப்படியாவது சாதித்து முடிக்கும் பெண் ராசியினர் யார் யார் என்பதை இந்தப் பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.</p><h2>மேஷம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7c946c7b-5dad-4ccd-8b2a-c1feb15922c7/26-6a8dbe852b556.webp' /></p><p></p><h2>
</h2><p>மேஷ ராசியில் பிறந்தவர்கள் செவ்வாயின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் என்பதால், இயல்பாகவே அதிக கோபம் மற்றும் பிடிவாத குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். </p><p>எதையும் தைரியமாக எதிர்கொள்ளும் மனப்பான்மையும், தாங்கள் நினைத்ததை சாதித்தே தீர வேண்டும் என்ற உறுதியும் இவர்களிடம் அதிகமாக காணப்படும்.</p><p>

இவர்கள் கோபம் கொள்ளும் போது மிகவும் கடுமையாகவும், சில நேரங்களில் கொடூரமாகவும் நடந்து கொள்வார்கள். இருப்பினும், இவர்களின் கோபமும் பிடிவாதமும் பெரும்பாலும் தாங்கள் சரி என்று நம்பும் விஷயங்களுக்காக மட்டுமே வெளிப்படும். இவர்களின்&nbsp; பிடிவாத குணம் அவர்களுக்கு ஒரு பலமாகவும் அமையும்.&nbsp;</p><h2>
சிம்மம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bb12cb7b-c78b-4f00-a419-209a05ea22ac/26-6a8dbe85d9419.webp' /></p><p>
சிம்ம ராசியில் பிறந்த பெண்கள் சூரியனின் ஆதிக்கத்தில் இருப்பதால், இவர்களிடம் எல்லை மீறிய பிடிவாதமும் கோபமும் நிச்சயம் காணப்படும். </p><p>அதே நேரத்தில், தன்னம்பிக்கை, துணிச்சல் மற்றும் தலைமைத்துவ குணங்களும் இவர்களிடம் அதிகமாக இருக்கும்.

இவர்கள் சிறந்த தலைமைத்துவ பண்புகளைக் கொண்டவர்களாகவும், எந்தவொரு சூழ்நிலையிலும் தங்களால் முடிந்தவரை கடினமாக உழைக்கக் கூடியவர்களாகவும் இருப்பார்கள். </p><p>வாழ்க்கையில் எப்போதும் முன்னேற்றம் அடைய வேண்டும் என்ற எண்ணத்தில் மிகவும் உறுதியுடன் செயல்படுவார்கள்.

தாங்கள் நினைத்த இலக்கை அடையும் வரை ஓயாமல் முயற்சி செய்வது இவர்களின் முக்கியமான குணமாகும். </p><h2>விருச்சிகம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ae8dddf9-f4de-4933-8a8e-392fb3ff2a04/26-6a8dbe868b5c2.webp' /></p><p></p><h2>
</h2><p>விருச்சிக ராசியில் பிறந்த பெண்களும் செவ்வாயின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் என்பதால், சின்னச் சின்ன விஷயங்களுக்குக்கூட அதிகமாக கோபம் கொள்ளும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.</p><p>அதேபோல், தாங்கள் நினைத்ததை சாதிப்பதில் மிகவும் பிடிவாதமாகவும் உறுதியுடனும் செயல்படுவார்கள்.

இவர்களின் கோபமே சில நேரங்களில் இவர்களுக்கு மிகப்பெரிய எதிரியாக மாறிவிடும். </p><p>கோபத்தின் வேகத்தில் எடுக்கும் சில முடிவுகள் பின்னாளில் வருத்தத்தை ஏற்படுத்தக்கூடும். குறிப்பாக, இவர்களின் கோபத்தால் சில முக்கியமான உறவுகளையும் இவர்கள் இழக்க நேரிடலாம்.

இருப்பினும், இவர்களிடம் இருக்கும் பிடிவாதமும் விடாமுயற்சியும் வாழ்க்கையில் பல வெற்றிகளை பெற்றுத் தரும்.&nbsp;</p><p><b>இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).</b></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-25T16:11:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[ட்ரம்பின் வர்த்தகப் போர்... திருப்பியடித்த கார்னி: 700 அமெரிக்கப் பொருட்கள் மீது வரி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/canada-to-impose-tariffs-on-1787674412"></link>
            <id>https://news.lankasri.com/article/canada-to-impose-tariffs-on-1787674412</id>
            <summary type="text">Canada announced retaliatory tariffs on 700 US goods: 20 பில்லியன் டொலர் மதிப்பிலான 700 அமெரிக்கப் பொருட்கள் மீது கனடா கூடுதல் வரிகளை அறிவித்தது.
கனட...</summary>
            <content type="html"><![CDATA[<p>Canada announced retaliatory tariffs on 700 US goods: 20 பில்லியன் டொலர் மதிப்பிலான 700 அமெரிக்கப் பொருட்கள் மீது கனடா கூடுதல் வரிகளை அறிவித்தது.
</p><p>கனடா செவ்வாய்க்கிழமையன்று, 20 பில்லியன் டொலர் மதிப்பிலான 700 அமெரிக்கப் பொருட்கள் மீது 15 முதல் 50 சதவீதம் வரையிலான கூடுதல் வரிகளை விதிப்பதாக அறிவித்துள்ளது.</p><h2>சுமார் 700 வகை</h2><p>
</p><p>சனிக்கிழமையன்றே கனடாவுக்கு எதிரான அமெரிக்காவின் வரிகள் நடைமுறைக்கு வந்துவிட்ட நிலையில், கனடா அறிவித்துள்ள வரிகள் செப்டம்பர் 8 முதல் அமுல்படுத்தப்படும். </p><p>கனடா விதிக்கும் இறக்குமதி வரிகள் அமெரிக்காவின் வரி விகிதங்களுக்கு இணையாக இருக்கும் என்றும், அவை எஃகு, பால் மற்றும் மின்னணுவியல் ஆகிய துறைகளைப் பாதிக்கும் என்றும் கனடிய அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர். </p><p>வெளியாகியுள்ள தகவலின் அடிப்படையில், அழகுசாதனப் பொருட்கள் முதல் ஸ்மார்ட்போன்கள் மற்றும் சமையலறை உபகரணங்கள் வரை, சுமார் 700 வகையான அமெரிக்கப் பொருட்களைப் பாதிக்கும் வகையிலான சமமான மதிப்பிலான பதிலடி வரி விதிப்புத் திட்டத்தை ஃபெடரல் அரசு வகுத்து வருகிறது.</p><p> 27.6 பில்லியன் டொலர் மதிப்பிலான அமெரிக்க இறக்குமதிப் பொருட்கள் மீது, அப்பொருட்களைப் பொறுத்து 15 சதவீதம், 25 சதவீதம் மற்றும் 50 சதவீதம் என்ற விகிதங்களில் சுங்க வரிகள் விதிக்கப்படும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1de0a6b8-efae-40b0-927d-aa488d6446a4/26-6a8dbf2e31818.webp' /></p><p> </p><p>இந்த வரிகள் செப்டம்பர் 8 முதல் அமுலுக்கு வரும். நிதி அமைச்சர் ஃபிரான்சுவா-ஃபிலிப் ஷாம்பேன், தொழில் துறை அமைச்சர் மெலனி ஜோலி, வேலைவாய்ப்பு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் பாட்டி ஹஜ்டு மற்றும் தெற்கு ஒன்ராறியோவிற்கான ஃபெடரல் மேம்பாட்டு முகமைக்கு பொறுப்பான அமைச்சர் இவான் சாலமன் ஆகியோர் ஒருங்கிணைந்து செவ்வாய்க்கிழமை ஒட்டாவாவில் இந்த அறிவிப்பை வெளியிட்டனர். </p><p>பல வாரங்களாக நடைபெற்ற தீவிர பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகும், கனடாவும் அமெரிக்காவும் ஒரு இறுதி நேர வர்த்தக ஒப்பந்தத்தை எட்டத் தவறியதால், பல பில்லியன் டொலர் மதிப்பிலான கனடியப் பொருட்கள் மீது 50 சதவீத இறக்குமதி வரிகளை விதிக்கும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் புதிய நடவடிக்கை வெள்ளிக்கிழமை இரவு நடைமுறைக்கு வந்தது. </p><p>வரிகளுக்கு உட்பட்ட பொருட்களில் கனடா-அமெரிக்கா-மெக்ஸிகோ ஒப்பந்தத்தின் (CUSMA) கீழ் அடங்கும் பொருட்களும் கூட இடம்பெற்றுள்ளன. அமெரிக்க மதுபானங்கள் மீதான மாகாண அளவிலான தடை உள்ளிட்ட, பாகுபாடு காட்டுவதாக அமெரிக்கர்களால் விவரிக்கப்படும் வர்த்தகக் கொள்கைகள் காரணமாக, 1930-ஆம் ஆண்டின் சுங்கவரிச் சட்டத்தின் (Tariff Act) பிரிவு 338-இன் கீழ் புதிய சுங்கவரிகளை விதிப்பதாக ட்ரம்ப் நிர்வாகம் தெரிவித்துள்ளது.</p><p></p><p> </p><p>இந்த நிலையில், கனடியப் பொருட்கள் மீது அமெரிக்கா விதித்துள்ள வரிகளுக்கு இணையாக அமையும் வகையிலேயே இந்த வரி விதிக்கப்படவுள்ள பொருட்களின் பட்டியல் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும், ஒவ்வொரு பொருளின் மீதான வரி விகிதமும் அதே பொருட்களுக்கான அமெரிக்க வரி விகிதத்திற்கு ஏற்ப நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் அரசு அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் தெரிவித்தனர். </p><p>உதாரணமாக, அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் எஃகு மற்றும் அலுமினியம் மீதான வரிகள் தற்போது 25 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாக உயரும்; அதேபோல, தளபாடங்கள் மற்றும் ஆடைகள் மீதான வரிகளும் உயர்த்தப்படும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a11895c3-371b-4338-b7b3-9b793bb630e9/26-6a8dbf2ed8f76.webp' /></p><p> </p><p>50 சதவிகிதம் வரி விதிக்கப்படும் மற்ற குறிப்பிடத்தக்க பொருட்கள் பின்வருமாறு:

வாசனைத் திரவியங்கள் மற்றும் ஒப்பனைப் பொருட்கள், ஸ்மார்ட்போன்கள், பால் பொருட்கள், மேசை மற்றும் சமையலறைப் பொருட்கள், ஒட்டுப்பலகைப் பொருட்கள், காகிதப் பொருட்கள், தேன், கரும்புப்பாகு மற்றும் மால்ட் சாறு, கதவுகள், ஜன்னல்கள் மற்றும் சட்டங்கள், கத்தி, முள் கரண்டி வகைகள் இதில் அடங்கும். </p><p>
25 சதவீத இறக்குமதி வரி விதிக்கப்படும் பொருட்களின் பட்டியலில் பின்வருவன அடங்கும்:

பல்வேறு வகையான கடல் உணவுப் பொருட்கள், பெரிய அளவிலான சமையலறை உபகரணங்கள், சீஸ் மற்றும் தயிர் சார்ந்த பொருட்கள், தரைவிரிப்புகள் மற்றும் ஜவுளிப் பொருட்கள். அதே சமயம், 15 சதவீத வரி விதிக்கப்படும் பொருட்களின் குறுகிய பட்டியலில் குளிரூட்டும் இயந்திரங்களும் அடங்கும்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-25T16:11:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[குக் வித் கோமாளி 7 டைட்டில் வின்னர் இவர் தான்! பைனல் ரிசல்ட் இதோ]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/cooku-with-comali-7-finale-title-winner-1787674037"></link>
            <id>https://cineulagam.com/article/cooku-with-comali-7-finale-title-winner-1787674037</id>
            <summary type="text">விஜய் டிவியின் முன்னணி ஷோக்களில் ஒன்றாக இருந்து வருகிறது குக் வித் கோமாளி. கடந்த பல வருடங்களாகவே இந்த நிகழ்ச்சி பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வந்திருக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>விஜய் டிவியின் முன்னணி ஷோக்களில் ஒன்றாக இருந்து வருகிறது குக் வித் கோமாளி. கடந்த பல வருடங்களாகவே இந்த நிகழ்ச்சி பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.</p><p>இந்த வருடம் போட்டி முறையில் சில மாற்றங்களை செய்து இருந்தனர். போட்டியாளர்கள் ஜோடிகளாக இந்த வருடம் கலந்து கொண்டு இருக்கின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c503885c-0a75-4914-8f12-410e3de25672/26-6a8dbdb7351ae.webp' /></p><p>
</p><h2>பைனல் </h2><p>இந்நிலையில் தற்போது குக் வித் கோமாளி 7வது சீசனின் பைனல் ஷூட்டிங் நடந்து முடிந்து இருக்கிறது. அதில் சம்யுக்தா மற்றும் அனிருதா ஸ்ரீகாந்த் ஆகியோர் வின்னர் என அறிவிக்கப்பட்டிருக்கின்றனர்.
</p><p>மேலும் ரன்னராக ஷபானா அறிவிக்கப்பட்டு இருக்கிறார்.
&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/971991ee-1e3a-4744-a97d-94ea474ec444/26-6a8dbe1c5f74f.webp' /></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-25T16:08:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழ் தலைமைகள் மக்களுக்கு செய்தது என்ன..! கனடா உயர்ஸ்தானிகரை வியக்க வைத்த ஈழத்தமிழன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/senthil-kumaran-medical-assistance-to-sri-lanka-1787674001"></link>
            <id>https://tamilwin.com/article/senthil-kumaran-medical-assistance-to-sri-lanka-1787674001</id>
            <summary type="text">தமிழர் பகுதிகளில் வாழும் மக்கள் முள் கம்பியின் மீது நிற்பதைப் போன்ற நெருக்கடியான சூழ்நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கும் நிலையில், அவர்களுக்கு உதவுவதற்கு...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழர் பகுதிகளில் வாழும் மக்கள் முள் கம்பியின் மீது நிற்பதைப் போன்ற நெருக்கடியான சூழ்நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கும் நிலையில், அவர்களுக்கு உதவுவதற்கு எந்தவொரு தமிழ் தலைமையும் முன்வரவில்லை என கனடாவில் வசிக்கும் சமூக சேவையாளரான செந்தில் குமரன் (மின்னல் செந்தில்) குற்றம் சுமத்தியுள்ளார்.
</p><p>
லங்காசிறி ஊடகத்தின் “நேருக்கு நேர்” நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
அவர் மேலும் தெரிவிக்கையில்,
</p><p>
மலையக மக்கள் போதிய மருத்துவ வசதிகளின்றி பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். சுமார் நான்கு மணி நேரம் பேருந்தில் பயணித்து மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டிய நிலை காணப்படுகிறது. அவர்களுக்கு என்னால் முடிந்த உதவிகளை வழங்குவதற்காக சுகாதார அமைச்சிடம் கோரிக்கை முன்வைத்துள்ளேன்.</p><p>

அரசாங்கத்தில் இடம்பெறும் விடயங்களை மக்கள் புரிந்துகொண்டு, அதன் பின்னர் தங்களது முடிவுகளை எடுப்பது சிறந்தது. ஏனெனில், இலங்கையில் வாழும் எமது தாய் உறவுகளுக்கு பல்வேறு விதமான உதவிகளை வழங்குவதற்கு புலம்பெயர் தமிழர்கள் தயாராக உள்ளனர். அவர்களுடன் இணைந்து பயணிப்பது அவசியம்.
</p><p>
இதுவரையில் 200க்கும் மேற்பட்டோருக்கு நான் வழங்கியுள்ள மருத்துவ உதவிகள் அவர்களது வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன” என்றார்.
</p><p>
இதேவேளை, இலங்கையில் வாழும் மக்கள் போதிய மருத்துவ வசதிகளின்றி எதிர்கொள்ளும் சிரமங்கள் மற்றும் தமிழ் தலைவர்களால் மேற்கொள்ளப்படுவதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பிலும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p>

இது தொடர்பான மேலதிக தகவல்களை காணொளியில் தொடர்ந்து காணலாம்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/A8S2Fxo6eOQ" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-25T16:07:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[முச்சக்கர வண்டி சாரதிக்கான குறைந்தபட்ச வயதில் மாற்றம் ; அமைச்சரின் முக்கிய தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/minimum-age-for-three-wheeler-drivers-1787673719"></link>
            <id>https://jvpnews.com/article/minimum-age-for-three-wheeler-drivers-1787673719</id>
            <summary type="text">&amp;nbsp;முச்சக்கர வண்டிகளை ஓட்டுநர்களுக்கான குறைந்தபட்ச வயதை 40 ஆக அதிகரிப்பது தொடர்பான எந்தவொரு முன்மொழிவையும் அரசாங்கம் இதுவரை பரிசீலிக்கவில்லை என அமை...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">&nbsp;முச்சக்கர வண்டிகளை ஓட்டுநர்களுக்கான குறைந்தபட்ச வயதை 40 ஆக அதிகரிப்பது தொடர்பான எந்தவொரு முன்மொழிவையும் அரசாங்கம் இதுவரை பரிசீலிக்கவில்லை என அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
</p><p style="text-align: justify; ">
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/950970b4-f9c6-407a-83de-d9f4bdb888c3/26-6a8dbc792b19d.webp' /></p><h2 style="text-align: justify; ">தொழிற்கல்வி</h2><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
பாடசாலைக் கல்வியை இடைநடுவில் கைவிட்டவர்கள் அல்லது கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய பின்னர் மேலதிக கல்வியைத் தொடராதவர்களுக்கு தொழிற்கல்வி மற்றும் பயிற்சிகளை வழங்குவது தொடர்பில் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களிடமிருந்து பல்வேறு முன்மொழிவுகள் கிடைத்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.</p><p style="text-align: justify; ">

அவற்றில் சில முன்மொழிவுகள் ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும், ஏனைய முன்மொழிவுகள் தொடர்பில் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
இந்த நிலையில், முச்சக்கர வண்டி ஓட்டுநர்களுக்கான குறைந்தபட்ச வயதை 40 ஆக அதிகரிப்பது தொடர்பில் அரசாங்கம் இதுவரை எந்தவொரு முடிவையும் எடுக்கவில்லை.</p><p style="text-align: justify; ">

அரசாங்கம் உரிய பரிசீலனைகளை மேற்கொண்டதன் பின்னர், நடைமுறைப்படுத்த வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் இறுதி முடிவு எடுக்கப்படும் என அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-25T16:02:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானில் அதிகரிக்கும் மரண தண்டனைகள்! ட்ரம்ப் கடும் கண்டனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/rising-death-sentences-in-iran-1787673122"></link>
            <id>https://ibctamil.com/article/rising-death-sentences-in-iran-1787673122</id>
            <summary type="text">மத்திய கிழக்கு போர் தொடங்குவதற்கு முன்பு, இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடந்த மாபெரும் போராட்டங்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் நபர்களுக்கு ஈரானில் அதிகரித்...</summary>
            <content type="html"><![CDATA[<p>மத்திய கிழக்கு போர் தொடங்குவதற்கு முன்பு, இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடந்த மாபெரும் போராட்டங்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் நபர்களுக்கு ஈரானில் அதிகரித்து வரும் மரணதண்டனைகளுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்&nbsp; கண்டனம் தெரிவித்துள்ளார்.</p><p>தோல்வியடைந்து வரும் ஈரான் இஸ்லாமியக் குடியரசு, தனது இராணுவத்தின் பெரும்பகுதிக்கு ஊதியம் வழங்காமல் இருப்பதுடன், போராட்டக்காரர்கள் போராட்டத்தில் ஈடுபடாதபோதும், முன்னெப்போதும் இல்லாத அளவில் அவர்களைக் கொன்று வருகிறது என்றும் அவர் கண்டன அறிக்கையில் தெரிவித்துள்ளார்.</p><p>இது ஒரு மாபெரும் மனிதாபிமான நெருக்கடி, என்றும் இதை இப்போதே தடுத்து நிறுத்த வேண்டும், எனவும் மேலும் கூறியுள்ளார்.</p><p></p><h2>அதிகரித்து வருகின்ற&nbsp;மரணதண்டனை</h2><p>பெப்ரவரி 28 அன்று போர் தொடங்கியதிலிருந்து மரணதண்டனைகள் சீராக அதிகரித்து வருகின்றன எனவும் அவர் விளக்கியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0af4e085-65b0-47ab-a335-b365108b598e/26-6a8dba244b013.webp' /></p><p>
ஈரானில் மாபெரும் போராட்டங்கள் வன்முறையாக அடக்கப்பட்ட சில வாரங்களுக்குப் பிறகு, போரைத் துவங்கிய அமெரிக்க - இஸ்ரேலிய கூட்டுத் தாக்குதல்கள் நடைபெற்றதில் இருந்து இன்றும் நிறைவடைய போர் தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-25T15:52:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரத்மலானை விமான நிலையத்தில் விபத்துக்குள்ளான விமானம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/plane-crashes-at-ratmalana-airport-1787668741"></link>
            <id>https://ibctamil.com/article/plane-crashes-at-ratmalana-airport-1787668741</id>
            <summary type="text">கொழும்பு -&amp;nbsp; ரத்மலானையில்&amp;nbsp;செஸ்னா 152 ரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.குறித்த விபத்து இன்று (25) இடம்பெற்றுள்ளத...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு -&nbsp; ரத்மலானையில்&nbsp;செஸ்னா 152 ரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>குறித்த விபத்து இன்று (25) இடம்பெற்றுள்ளதாக&nbsp;ரத்மலானை விமான நிலைய வட்டாரங்கள் தெரிவிக்கிள்றன.</p><p>ரத்மலானை விமான நிலையத்தில் தரையிறங்கும்போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் இகு ஒரு பயிற்சி விமானம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>ரத்மலானை விமான நிலையம்</h2><p>குறித்த விமானம் ரத்மலானை விமான நிலையத்தில் இயங்கும் விமானப் பயிற்சிப் பாடசாலை ஒன்றுக்குச் சொந்தமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/824e520e-29e5-41d5-ba1a-10cb6f0610fa/26-6a8da907b79ea.webp' /></p><p>இந்நிலையில் இந்த விபத்தில் எவருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-25T15:39:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆசிரியர்களுக்கு வெளியான முக்கிய தகவல் ; கோரப்பட்ட விண்ணப்பங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/important-notice-for-all-teachers-1787672237"></link>
            <id>https://jvpnews.com/article/important-notice-for-all-teachers-1787672237</id>
            <summary type="text">இலங்கை ஆசிரியர் சேவையின் உத்தியோகத்தர்களுக்காக நடத்தப்படவுள்ள 2026 ஆம் ஆண்டிற்கான III ஆம் கட்ட வினைத்திறன்காண் தடைத்தாண்டல் பரீட்சைக்கான விண்ணப்பங்கள்...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">இலங்கை ஆசிரியர் சேவையின் உத்தியோகத்தர்களுக்காக நடத்தப்படவுள்ள 2026 ஆம் ஆண்டிற்கான III ஆம் கட்ட வினைத்திறன்காண் தடைத்தாண்டல் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.</p><p style="text-align: justify; "> 

2026 டிசம்பர் மாதத்தில் நடத்தப்படவுள்ள இந்தப் பரீட்சைக்காக இன்று (25) முதல் செப்டம்பர் 14 ஆம் திகதி வரை இணையவழியில் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க முடியும்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bf3cff23-da60-4400-abe3-0800a986bc4e/26-6a8db79629eba.webp' /></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

நாட்டின் தேசிய மற்றும் மாகாணப் பாடசாலைகளில் கடமையாற்றும் இலங்கை ஆசிரியர் சேவையின் உத்தியோகத்தர்கள், இலங்கை பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் ஊடாக விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

இந்தப் பரீட்சை தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் கடந்த ஒகஸ்ட் 21 ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-25T15:37:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் 5 மில்லியன் லொத்தர் சீட்டு பரிசை வென்ற பெண்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/bc-woman-looking-forward-to-suite-on-a-cruise-1787667535"></link>
            <id>https://canadamirror.com/article/bc-woman-looking-forward-to-suite-on-a-cruise-1787667535</id>
            <summary type="text">கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், மளிகைப் பொருட்கள் வாங்கச் சென்றபோது தான் 5 மில்லியன் டொலர் லொட்டோ 6/49 ஜாக்பாட் பரிசை வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், மளிகைப் பொருட்கள் வாங்கச் சென்றபோது தான் 5 மில்லியன் டொலர் லொட்டோ 6/49 ஜாக்பாட் பரிசை வென்றிருப்பதை அறிந்து பெரும் அதிர்ச்சியடைந்துள்ளார்.
</p><p>ஜேன் டி. என்பவர் ஆகஸ்ட் 8ஆம் திகதி நடைபெற்ற லொட்டோ0 குலுக்கலில் கிளாசிக் ஜாக்பாட் பரிசை வென்றதாக பிரிட்டிஷ் கொலம்பியா லாட்டரி கழகம் திங்கட்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.</p><p>
எப்படி எதிர்வினையாற்றுவது என்றே எனக்குத் தெரியவில்லை. பணியாளர் என்னைவிட அதிக உற்சாகத்தில் இருந்தார் என ஜேன் டி. தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/33e2a9b5-59e6-4e6a-85e4-abcda8584785/26-6a8da45148b37.webp' /></p><p>
</p><p>தாம் வெற்றி பெற்ற செய்தியை அறிந்த பின்னர் காருக்குத் திரும்பிச் சென்று தனது கணவரிடம் கூறியபோது, அவர் முதலில் அதை நம்பவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
முதலில் அவர் என்னை நம்பவில்லை.</p><p> பின்னர் வெற்றிச் சீட்டின் சரிபார்ப்பு ரசீதைக் காட்டினேன். அதில் இருந்த பூஜ்ஜியங்களை அவர் எண்ணிப் பார்த்தார் என ஜேன் கூறியுள்ளார்.
</p><p>இந்த எதிர்பாராத பெரும் தொகை கிடைத்துள்ளதால், இனி தனது வாழ்க்கையில் “அதிக சுதந்திரத்துடன்” செயல்பட முடியும் என ஜேன் தெரிவித்துள்ளார்.
</p><p>தனது வீட்டில் சில புனரமைப்பு பணிகளை மேற்கொள்வதுடன், பணத்தின் ஒரு பகுதியை முதலீடு செய்யவும் அவர் திட்டமிட்டுள்ளார். </p><p>
அதேவேளை, தன்னை மகிழ்விக்கும் வகையில் சொகுசுக் கப்பல் பயணத்தின்போது ஒரு தனிப்பட்ட ஸ்யூட் அறையில் தங்கவும் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-25T15:16:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானியாவில் திரைப்பட பாணியில் சம்பவம்: பொலிஸார் கூறிய விடயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/man-dies-after-car-chase-in-warwickshire-uk-1787658602"></link>
            <id>https://news.lankasri.com/article/man-dies-after-car-chase-in-warwickshire-uk-1787658602</id>
            <summary type="text">Man dies after car chase in warwickshire uk: பிரித்தானியாவில் காவல்துறை துரத்தலைத் தொடர்ந்து கார் ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்தார்.

இங்கிலாந்தின் வார்வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Man dies after car chase in warwickshire uk: பிரித்தானியாவில் காவல்துறை துரத்தலைத் தொடர்ந்து கார் ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்தார்.
</p><p>
இங்கிலாந்தின் வார்விக்ஷயரில் காவல்துறை அதிகாரிகள் துரத்திச் சென்றபோது ஏற்பட்ட விபத்தில் நபர் ஒருவர் உயிரிழந்தார்.&nbsp;</p><h2>Audi காரினை விரட்டிச் சென்ற&nbsp;காவல்துறை</h2><p>

இங்கிலாந்தின் வார்விக்ஷயரில் உள்ள Stratford-upon-Avonயில் காவல்துறையினர் ஒரு கருப்பு Audi காரினை விரட்டிச் சென்றனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5ab9006a-b7c7-4f31-bc62-7e1ae0c66926/26-6a8d86222df60.webp' /></p><p></p><p> 

பர்மிங்காம் சாலையில் அந்த கார் நிற்க தவறியதைத் தொடர்ந்து காவல்துறையினர் இந்த துரத்தலை தொடங்கினர்.</p><p>

திரைப்படத்தை விஞ்சும்படியான இந்த துரத்தலின்போது, குறித்த Audi கார் மற்றொரு வெள்ளைநிற Ford Puma கார் மீது மோதியது.&nbsp;</p><h2>ஒருவர் மரணம், மூவர் படுகாயம்&nbsp;</h2><p>

இதில் Audi காரினை இயக்கிய ஆண் நபர் உயிரிழந்தார். மேலும், Ford காரின் சாரதி உட்பட மூவர் காயமடைந்தனர்.&nbsp;</p><p> 

இதனையடுத்து, இரண்டு ஆம்புலன்ஸ்கள் மற்றும் துணை மருத்துவ அதிகாரிகள் உட்பட இரண்டு வான்வழி ஆம்புலன்ஸ்களும் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டன.
</p><p>
இதற்கிடையில், துரத்தலின்போது மேலும் பல வாகனங்களும் சேதமடைய, காவல்துறையின் கண்காணிப்பு அமைப்பான Independent Office for Police Conduct இதுகுறித்து விசாரணையைத் தொடங்கியுள்ளது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9d9af39b-1a65-47e1-903b-e9ea082ea579/26-6a8d8622eec14.webp' /></p><p>இச்சம்பவம் குறித்து உயிரிழந்த நபர் மற்றும் அப்பெண்மணி ஆகியோரின் குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், காவல்துறை அதிகாரிகள் அவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்கி வருகின்றனர்.&nbsp;</p><h2>காவல்துறை&nbsp;</h2><p>

துரத்தல் நடவடிக்கையின்போது வேறு பல வாகனங்களும் சேதமடைந்ததாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.</p><p> காவல்துறையின் செயல்பாடுகளை கண்காணிக்கும் அமைப்பான சுயாதீன காவல்துறை நடத்தை அலுவலகத்திடம் (IOPC) ஒப்படைக்கப்பட்டுள்ளன. </p><p>

இதுகுறித்து கண்காணிப்பாளர் ஸ்டீவ் ஃபிளாவெல் கூறுகையில், "இந்த விபத்தில் பாதிக்கப்பட்ட அனைவரின் குடும்பத்தினருடனும் எங்கள் எண்ணங்கள் உள்ளன; இக்கடினமான சூழலில் அவர்களுக்குத் தேவையான சிறப்பு உதவிகளை நாங்கள் வழங்கி வருகிறோம்.

காவல்துறையின் நடவடிக்கையைத் தொடர்ந்து உயிரிழப்பு ஏற்பட்டதால், நாங்கள் கட்டாய நடைமுறையின்படி இந்த விவகாரத்தை 'சுயாதீன காவல்துறை நடத்தை அலுவலகத்திடம்' பரிந்துரைத்துள்ளோம்" என்றார்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b51b6433-28cc-4d95-a609-6434781082ee/26-6a8d8623a0c38.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-25T15:13:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை, இந்தியாவுக்கு மேல் புள்ளிப்பட்டியலில் வங்காளதேசம்: தலைவர் ஹபிபுல் பஷர் பெருமிதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/habibul-bashar-said-we-are-in-very-good-position-1787670301"></link>
            <id>https://news.lankasri.com/article/habibul-bashar-said-we-are-in-very-good-position-1787670301</id>
            <summary type="text">&amp;nbsp;மரியாதையுடனேயே நாங்கள் தாயகம் திரும்புகிறோம் என வங்காளதேசத் தேர்வுக்குழுத் தலைவர் தெரிவித்துள்ளார். 

வங்காளதேசத் தேர்வுக்குழுத் தலைவரான ஹபிபு...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;மரியாதையுடனேயே நாங்கள் தாயகம் திரும்புகிறோம் என வங்காளதேசத் தேர்வுக்குழுத் தலைவர் தெரிவித்துள்ளார்.</p><p> 

வங்காளதேசத் தேர்வுக்குழுத் தலைவரான ஹபிபுல் பஷர், அவுஸ்திரேலியாவில் இருந்து மரியாதையுடன் தாயகம் திரும்பியுள்ளதாக நம்புவதாக தெரிவித்துள்ளார்.&nbsp;</p><h2>வங்காளதேச அணி</h2><p>

அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடிய வங்காளதேச அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-1 என சமனில் முடித்தது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/034050a8-84d2-4388-b719-7589113865ab/26-6a8db075cb11e.webp' /></p><p></p><p>

இதன்மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் வங்காளதேச அணி நான்காவது இடத்தில் உள்ளது. </p><p>

இதுகுறித்து பேசிய வங்காளதேச தேர்வுக்குழுத் தலைவர் ஹபிபுல் பஷர் (Habibul Bashar), ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முதன்முறையாக தகுதிபெறும் வகையில் தங்கள் அணி நல்ல நிலையில் இருப்பதாக நம்புவதாக கூறுகிறார்.</p><h2>

ஹபிபுல் பஷர்</h2><p>மேலும் அவர் கூறுகையில், "எங்களுக்கு இன்னும் 5 மிக முக்கியமான டெஸ்ட் போட்டிகள் உள்ளன; எனவே, அடுத்து என்ன நடக்கிறது என்று பார்ப்போம். அவுஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டிகள் மட்டுமல்ல; பாகிஸ்தானுக்கு எதிரான முந்தைய டெஸ்ட் போட்டிகள் அல்லது அதற்கு முந்தைய போட்டிகளைப் பார்த்தால், நாங்கள் தொடர்ந்து டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்று வருகிறோம்.
</p><p>
ஒரு டெஸ்ட் அணியாக நாங்கள் மிக சிறந்த அணியாக மாறிவிட்டோம் என்று இப்போதே என்னால் கூற முடியாது. நாங்கள் இன்னும் வெகுதூரம் செல்ல வேண்டியுள்ளது என்றே நான் கருதுகிறேன். 

ஆனால், நாங்கள் எங்களுக்கு என ஒரு தனி அடையாளத்தை உருவாக்கிக் கொள்ள முடிந்துள்ளது. </p><p>

அவுஸ்திரேலியா சுற்றுப்பயணத்தை முடித்துத் திரும்பும்போது வங்காளதேசம் எடுத்துச் செல்லும் விடயம் ஒன்று உள்ளது; அது நாங்கள் இங்கு வருவதற்கு முன்பே பேசிய ஒன்றுதான்.

அதாவது தாயகம் திரும்பும்போது ஒரு குறிப்பிட்ட அளவிலான மரியாதையை தக்கவைத்துக் கொண்டு திரும்ப வேண்டும் என்பதுதான் அது. 


அந்த மரியாதையுடனேயே நாங்கள் தாயகம் திரும்புகிறோம் என்று நான் நினைக்கிறேன்" என தெரிவித்தார்.&nbsp; &nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/14e660ce-ba29-483b-bd62-a7f3221191a8/26-6a8db16de1cae.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-25T15:12:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஒன்டாரியோ ஏரியின் பெயரை மாற்ற டிரம்ப் பரிசீலனை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/trump-threatens-to-change-name-of-lake-ontario-1787666752"></link>
            <id>https://canadamirror.com/article/trump-threatens-to-change-name-of-lake-ontario-1787666752</id>
            <summary type="text">அமெரிக்காவிற்கும் கனடாவிற்கும் இடையே வர்த்தகப் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், இரு நாடுகளுக்கும் இடையே எல்லைப் பகுதியாக உள்ள புகழ்பெற்ற &#039;ஒன்டாரியோ ஏ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவிற்கும் கனடாவிற்கும் இடையே வர்த்தகப் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், இரு நாடுகளுக்கும் இடையே எல்லைப் பகுதியாக உள்ள புகழ்பெற்ற 'ஒன்டாரியோ ஏரியின் பெயரை 'அமெரிக்கா ஏரி' என மாற்றப் பரிசீலித்து வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
</p><p>கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்துடன் இனி பெரிய அளவில் வர்த்தகம் மேற்கொள்ள மாட்டோம் என்பதால், ஒன்டாரியோ ஏரியின் பெயரை 'அமெரிக்கா ஏரி' என மாற்றுவது குறித்து அமெரிக்கா தீவிரமாக பரிசீலித்து வருகிறது என டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
</p><p>முன்னதாக மெக்சிகோ வளைகுடாவின் பெயரை 'அமெரிக்க வளைகுடா' என டிரம்ப் மாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/82f44eca-8f44-4ce7-a1bf-846bbdcaf0f6/26-6a8da14288628.webp' /></p><p>
</p><p>புத்தாண்டு முதல் கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்து கார்கள், டிரக்குகள், வாகன உதிரிபாகங்கள் மற்றும் உருக்குப் பொருட்கள் மீது 50 சதவீத வரி விதிக்கத் திட்டமிட்டுள்ளதாக டிரம்ப் அறிவித்துள்ளார்.</p><p>
இதற்குப் பதிலடியாக, கனடா தரப்பிலிருந்தும் அமெரிக்கப் பொருட்களுக்கு இணையான வரிகள் விதிக்கப்படும் என கனடா பிரதமர் மார்க் கார்னி அறிவித்துள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-25T15:07:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ட்ரம்ப் உத்தரவுக்கு எதிராக அமெரிக்க உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவு - அடுத்த மாதம் இடைத்தேர்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/high-court-order-against-trump-1787669885"></link>
            <id>https://tamilwin.com/article/high-court-order-against-trump-1787669885</id>
            <summary type="text">அமெரிக்காவில் எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள இடைத்தேர்தலை முன்னிட்டு, தபால் மூல வாக்களிப்பைக் கட்டுப்படுத்தும் வகையில் ட்ரம்பின் நிர்வாகம் பிறப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவில் எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள இடைத்தேர்தலை முன்னிட்டு, தபால் மூல வாக்களிப்பைக் கட்டுப்படுத்தும் வகையில் ட்ரம்பின் நிர்வாகம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக விதிக்கப்பட்டிருந்த தடையை அந்நாட்டின் உயர் நீதிமன்றம் நீக்கியுள்ளது.</p><p>

ட்ரம்பின் இந்த உத்தரவுக்கு எதிராக 23 மாநிலங்கள் தாக்கல் செய்திருந்த மனுவை
விசாரணைக்கு எடுத்துக்கொண்ட உயர்நீதிமன்றத்தின் ஒன்பது நீதிபதிகள் கொண்ட
அமர்வு, மாநிலங்கள் தாக்கல் செய்த சட்டப்பூர்வ கோரிக்கைகள் தற்போதைக்கு
முதிர்ச்சியற்றவை எனக் கூறி, 6-3 என்ற வாக்கு வித்தியாசத்தில் இத் தீர்ப்பினை வழங்கியுள்ளது.
</p><h2>
தபால் சேவை மூலம் வாக்களிப்பு</h2><p>

எனினும், தபால் சேவை மூலமான வாக்களிப்பு தொடர்பான வேறொரு வழக்கில்
பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவு இன்னும் நடைமுறையில் உள்ளதால், ட்ரம்பின்
முழுமையான திட்டமும் உடனடியாக நடைமுறைக்கு வருமா என்பதில் இன்னும் தெளிவற்ற நிலை
காணப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b4e4c07b-ff78-4aca-9079-65ceb31be778/26-6a8dae5d18fda.webp' /></p><p>

முன்னதாக, தபால் மூல வாக்களிப்பில் முறைகேடுகள் நடப்பதாகக் குற்றம்
சாட்டியிருந்த ட்ரம்ப் நிர்வாகம், தகுதியான வாக்காளர்களின் பட்டியலை
மாநிலங்களுக்கு அனுப்ப நடவடிக்கை எடுத்ததுடன், அங்கீகரிக்கப்பட்ட பட்டியலின்
அடிப்படையில் மட்டுமே தபால் வாக்குகளை விநியோகிக்க வேண்டும் என அஞ்சல் துறைக்கு உத்தரவிட்டிருந்தது.</p><p>

இந்த உத்தரவு தொடர்பில் எழுந்துள்ள சட்டரீதியான சவால்கள் முழுமையாக முடிவுக்கு வராத நிலையில், இடைத்தேர்தல் நெருங்கி வரும் வேளையில் இந்த தீர்ப்பு அமெரிக்க
அரசியல் களத்தில் புதிய விவாதங்களைத் தோற்றுவித்துள்ளது.&nbsp; &nbsp; &nbsp; &nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-25T15:02:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கோட்டாபயவின் பிரத்தியேக செயலாளரின் விளக்கமறியல் நீடிப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/remand-of-gotabaya-private-secretary-extended-1787661722"></link>
            <id>https://jvpnews.com/article/remand-of-gotabaya-private-secretary-extended-1787661722</id>
            <summary type="text">&amp;nbsp; முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னாள் பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டாரவின் விளக்கமறியல் காலம் செப்டம்பர் 9 ஆம் திகதி வரை நீடிக்கப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னாள் பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டாரவின் விளக்கமறியல் காலம் செப்டம்பர் 9 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
</p><p>
கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் இன்று (25) சுகீஸ்வர பண்டாரவின் பிணை கோரிக்கையை நிராகரித்து, அவரைத் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a7d07b62-bd78-4320-8ae3-15a3614a8401/26-6a8d8d9c4231c.webp' /></p><p>
அரசாங்க சம்பள விவகாரங்களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக, மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் (CCIB) சுகீஸ்வர பண்டார கடந்த ஜூன் 18 ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.
</p><p></p><p>
ஒரே நேரத்தில் இரண்டு வெவ்வேறு அரசாங்க நிறுவனங்களிடமிருந்து சம்பளம் பெற்றதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-25T15:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[டிரம்பின் வரி எச்சரிக்கைக்கு ஒன்டாரியோ முதல்வர் காரசாரமான பதிலடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/ontario-premier-says-trump-can-kiss-my-ass-1787666273"></link>
            <id>https://canadamirror.com/article/ontario-premier-says-trump-can-kiss-my-ass-1787666273</id>
            <summary type="text">&amp;nbsp;அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கார்கள் மற்றும் டிரக்குகள் மீது அடுத்த ஆண்டு முதல் 50 சதவீதம் வரி விதிக...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கார்கள் மற்றும் டிரக்குகள் மீது அடுத்த ஆண்டு முதல் 50 சதவீதம் வரி விதிக்கப்போவதாக அச்சுறுத்தியுள்ளார். </p><p>இதற்கு ஒன்டாரியோ மாகாண முதல்வர் டோக் ஃபோர்ட் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
நேர்காணல் ஒன்றில் பேசிய ஃபோர்ட், டிரம்பின் இந்த அச்சுறுத்தலைச் சற்றும் பொருட்படுத்தப்போவதில்லை என்று மிகக் கடுமையான வார்த்தைகளில் பதிலடி கொடுத்தார். </p><p>
டிரம்பின் பதிவுக்குப் பிறகு பேசிய ஃபோர்ட், கனடா அனைத்து வளங்களையும் பயன்படுத்தி டிரம்பை எதிர்த்துப் போராடும் என்றார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e9b9815b-f403-44d1-99a5-4f9b2e08d73b/26-6a8d9f63156ac.webp' /></p><p>அவர் ஒரு அடாவடிக்காரர், சர்வாதிகாரி மற்றும் தொழில் நஷ்டங்களின் ராஜா. அவருக்கு நான் பதிலளித்து அவரது வலையில் விழப்போவதில்லை. அவர் ஒரு தோல்வியாளர்" என்று ஃபோர்ட் சாடினார்.</p><p> 
கனடாவிலிருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதியாகும் கச்சா எண்ணெய், பொட்டாஷ், யுரேனியம் மற்றும் அரிதான உலோகங்களின் விலையை மூன்று மடங்காக உயர்த்த வேண்டும் அல்லது அவற்றை நிறுத்தி அமெரிக்காவிற்குச் செல்லும் எண்ணெய் விநியோகத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று ஆல்பர்ட்டா முதல்வர் டேனியல் ஸ்மித்திடம் வலியுறுத்தப்போவதாக ஃபோர்ட் கூறினார். </p><p>
அமெரிக்காவிற்கு விநியோகிக்கப்படும் மின்சாரத்தின் மீது ஏற்றுமதி வரியை உயர்த்த வேண்டும் என்றும், அனைத்து மாகாண முதல்வர்களும் இதில் ஒன்றாக இணைய வேண்டும் என போர்ட் கோரிக்கை விடுத்துள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-25T14:58:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நிகழ்வுகளில் மின்விளக்குகள் மற்றும் வாணவேடிக்கைகளை பயன்படுத்துவது குறித்து முக்கிய தீர்மானம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/resolution-on-the-use-of-flashlights-and-fireworks-1787667110"></link>
            <id>https://ibctamil.com/article/resolution-on-the-use-of-flashlights-and-fireworks-1787667110</id>
            <summary type="text">திருவிழாக்கள் மற்றும் பொது கொண்டாட்டங்களின்போது அதீத ஒளி கொண்ட
மின்விளக்குகள், வாணவேடிக்கைகள் உள்ளிட்டவற்றைப் பயன்படுத்துவதை
ஒழுங்குபடுத்துவதற்காக த...</summary>
            <content type="html"><![CDATA[<p>திருவிழாக்கள் மற்றும் பொது கொண்டாட்டங்களின்போது அதீத ஒளி கொண்ட
மின்விளக்குகள், வாணவேடிக்கைகள் உள்ளிட்டவற்றைப் பயன்படுத்துவதை
ஒழுங்குபடுத்துவதற்காக தேவையான சட்ட ஏற்பாடுகளை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. </p><p>வடக்கு மாகாணத்தின் உள்ளூராட்சி மன்றங்கள் ஊடாக
உடனடியாக நியமத்துணைவிதிகளை உருவாக்குவதற்கும், இதற்கு மேலதிகமாக மாகாணம்
மற்றும் தேசிய மட்டத்தில் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.</p><p>
கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இ.சந்திரசேகர் மற்றும்
வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் ஆகியோரின் இணைத் தலைமையில் இன்று
(25.08.2026) ஆளுநர் செயலகத்தில் நடைபெற்ற உயர்மட்டக்
கலந்துரையாடலிலேயே இத்தீர்மானம் எடுக்கப்பட்டது.</p><p></p><h2>முக்கிய எச்சரிக்கை</h2><p>
</p><p>
கடந்த 20ஆம் திகதி பண்டத்தரிப்பு, பிரான்பற்றுப் பகுதியில் அமைந்துள்ள முருகன்
கோயில் திருவிழாவின் போது அதீத ஒளி கொண்ட மின்விளக்குகள் மற்றும்
வானவேடிக்கைகளின் தாக்கத்தால் 500 இற்கும் அதிகமானோர் கண் பாதிப்புக்குள்ளான
சம்பவத்தைத் தொடர்ந்து, இவ்வாறான அசம்பாவிதங்கள் மீண்டும் இடம்பெறாத வகையில்
முன்னெடுக்க வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பில் இக்கலந்துரையாடல்
இடம்பெற்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dfbe8eed-e095-4861-a5b5-009d1bdd66ca/26-6a8da2a8214fe.webp' /></p><p>

கலந்துரையாடலின் ஆரம்பத்தில் கருத்துத் தெரிவித்த ஆளுநர், தொழில்நுட்பம்
வேகமாக வளர்ச்சியடைந்து வரும் நிலையில் புதிதுபுதிதாக அறிமுகமாகும்
மின்விளக்குகள், ஒளியமைப்புகள் மற்றும் பிற கருவிகளின் பயன்பாடு தொடர்பில்
உரிய பாதுகாப்பு ஒழுங்குமுறைகள் உருவாக்கப்பட வேண்டியதன் அவசியத்தைச்
சுட்டிக்காட்டினார். </p><p>பண்டத்தரிப்புச் சம்பவம், இத்தகைய ஒழுங்குமுறைகள்
இனிமேலும் தாமதிக்கப்படக் கூடாது என்பதற்கான முக்கிய எச்சரிக்கையாக
அமைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.</p><p>

இதன்போது கருத்துத் தெரிவித்த கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள்
அமைச்சர் இ.சந்திரசேகர், குறித்த சம்பவம் சமூகத்தில் பாரதூரமான தாக்கத்தை
ஏற்படுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டதுடன், எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள்
இடம்பெறாத வகையில் தேவையான ஒழுங்குமுறைகளை உருவாக்குவதற்கு நடவடிக்கை
எடுக்கப்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-25T14:50:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[அநுரவை எப்படி அழைக்க வேண்டும்..! சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த சுனில் ஹந்துனெத்தி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sunil-handunetti-statement-about-anura-1787667847"></link>
            <id>https://tamilwin.com/article/sunil-handunetti-statement-about-anura-1787667847</id>
            <summary type="text">அநுரகுமார திசாநாயக்கவை சேர் என அழைப்பதிலும், அவரை ஜனாதிபதி என்று அழைப்பதிலும் என்ன பிரச்சினை என அமைச்சர் சுனில் ஹந்துனெத்தி ஆவேசமாக வினவியுள்ளார். 
...</summary>
            <content type="html"><![CDATA[<p>அநுரகுமார திசாநாயக்கவை சேர் என அழைப்பதிலும், அவரை ஜனாதிபதி என்று அழைப்பதிலும் என்ன பிரச்சினை என அமைச்சர் சுனில் ஹந்துனெத்தி ஆவேசமாக வினவியுள்ளார்.</p><p> 

அத்துரலிய, திப்போட்டுவாவவில் நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் பொதுக் கூட்டத்தில் உரையாற்றியபோது அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.</p><p>

மேலும் தெரிவிக்கையில்,

இலங்கை தற்போது நல்ல இளைஞர்கள் குழுவால் ஆளப்படுகிறது என்பதை உலகின் ஏறக்குறைய அனைத்து நாடுகளும் அங்கீகரிக்கின்றன.</p><h2>என்ன பிரச்சினை?</h2><p> </p><p>

மகிந்த ராஜபக்ச ஜனாதிபதி நாற்காலியில் அமர்ந்திருந்தபோது, ​​நாம் அவரை ஜனாதிபதி என்று அழைத்தோம்; ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக இருந்த போது, ​​நாம் அவரை ஜனாதிபதி என்று அழைத்தோம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7312ca2a-f3cc-4087-9264-ddc1b1d4a38c/26-6a8daad16ae4f.webp' /></p><p> </p><p>

ஆனால் அநுரகுமார திசாநாயக்க ஜனாதிபதி நாற்காலியில் அமர்ந்துள்ள போது, ​​அவரை ஐயா என்று அழைப்பதிலும், ஜனாதிபதி என்று அழைப்பதிலும் என்ன பிரச்சினை? </p><p>

முன்பு போலல்லாமல், இலங்கையில் சில நல்லவர்கள் நாட்டை ஆண்டு கொண்டிருக்கிறார்கள். சில படித்தவர்கள் நாட்டை ஆண்டு கொண்டிருக்கிறார்கள். 

அது மட்டுமல்ல, இலங்கையில் இப்போது ஒழுக்கம் இருக்கிறது என சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-25T14:47:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[விடுதியொன்றில் மர்மான உயிரிழந்த நபர் - 5 நாட்களின் பின்னர் கண்டுபிடிக்கப்பட்ட சடலம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/body-of-person-who-died-in-hotel-recovered-1787666199"></link>
            <id>https://tamilwin.com/article/body-of-person-who-died-in-hotel-recovered-1787666199</id>
            <summary type="text">அம்பலங்கொட பகுதியிலுள்ள விடுதியில் மர்மமான முறையில் உயிரிழந்த நபரின் சடலம் இன்று(25.08.2026) மீட்கப்பட்டுள்ளது.

கண்டெடுக்கப்பட்ட சடலம் அம்பலங்கொட வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அம்பலங்கொட பகுதியிலுள்ள விடுதியில் மர்மமான முறையில் உயிரிழந்த நபரின் சடலம் இன்று(25.08.2026) மீட்கப்பட்டுள்ளது.</p><p>

கண்டெடுக்கப்பட்ட சடலம் அம்பலங்கொட விகாரையில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் தனியாகத் தங்கியிருந்த 67 வயதான ரோகன் அரியதிலகே என்பவருடையது எனத் தெரியவந்துள்ளது.
</p><p>
உயிரிழந்தவர் பெந்தோட்ட பகுதியில் உள்ள சுற்றுலா விடுதியில் சிற்றுண்டி தயாரிப்பாளராக பணிபுரிந்து வந்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.</p><p> </p><h2><b>

 சடலம் கண்டுபிடிப்பு</b></h2><p>இந்த நபரின் சடலம் கண்டெடுக்கப்பட்ட போது, ​​அது மிகவும் சிதைந்து, வீங்கி, துர்நாற்றம் வீசியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9e8e5257-b5b8-4ad2-b3dd-528328c76f1d/26-6a8da71160db6.webp' /></p><p>சுமார் 5 நாட்களுக்கு முன்பு இறந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக பொலிஸார் கூறியுள்ளனர். </p><p>

கடுமையான துர்நாற்றம் வீசியதை அடுத்து, உயிரிழந்த நபரின் அறைக்கு அடுத்த அறையில் தங்கியிருந்த ஒருவர் சென்று பார்த்தபோது, ​​சடலம் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். </p>]]></content>
            <updated>2026-08-25T14:42:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிவாஜிக்குப் பிறகு ரஜினியுடன் ஸ்ரேயா... தர்மன் படத்தில் நடிக்கிறாரா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/shriya-with-rajinikanth-in-dharman-shooting-photo-1787667458"></link>
            <id>https://manithan.com/article/shriya-with-rajinikanth-in-dharman-shooting-photo-1787667458</id>
            <summary type="text">நடிகை ஸ்ரேயா, சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துடன் எடுத்துக்கொண்ட செல்ஃபி புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள நிலையில், அந்தப் புகைப்படங்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நடிகை ஸ்ரேயா, சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துடன் எடுத்துக்கொண்ட செல்ஃபி புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள நிலையில், அந்தப் புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் கவனத்தை ஈர்த்து வருகின்றன. </p><p>குறிப்பாக, அவர் ரஜினிகாந்தின் நடிப்பில் உருவாகி வரும் தர்மன் திரைப்படத்தில் இணைந்துள்ளாரா என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f47f44b1-43eb-4846-9bef-ac336171215a/26-6a8da70955db3.webp' /></p><p>
</p><h2>
தர்மன் திரைப்படம்</h2><p>
இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில், ராஜ்கமல் நிறுவனம் தயாரிப்பில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம்&nbsp; தான் தர்மன். </p><p>நீண்ட இடைவெளிக்குப் பிறகு கமல் ஹாசன் – ரஜினிகாந்த் கூட்டணியில் இப்படம் உருவாகி வருவதாகக் கூறப்படுவதால், படம் குறித்த எதிர்பார்ப்பு ஏற்கனவே உச்சத்தில் உள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2303f1c0-8abb-4527-b2ae-212ab5308922/26-6a8da82351a9d.webp' /></p><p></p><p>
</p><p>
இப்படத்தில் ரஜினிகாந்துடன் நடிகைகள் சிம்ரன் மற்றும் ராஷி கண்ணா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p> </p><p>அதேபோல், தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான ராம் பொத்தினேனி இப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்றும் கூறப்படுகிறது. எனினும், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை.</p><p><b>

ரஜினியுடன் ஸ்ரேயா வெளியிட்ட செல்ஃபி
</b></p><p>இந்திய திரையுலகில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் ஸ்ரேயா. குறிப்பாக, சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து சிவாஜி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர்.
</p><p>
இந்த நிலையில், ரஜினிகாந்துடன் இணைந்து எடுத்துக்கொண்ட சில செல்ஃபி புகைப்படங்களை ஸ்ரேயா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்தப் புகைப்படங்களில் இருவரும் மிகவும் மகிழ்ச்சியாக காணப்படுவதுடன், அவை சமூக வலைத்தளங்களில் ரசிகர்களின் கவனத்தையும் வெகுவாக ஈர்த்துள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9bdad337-ac97-4793-9026-4a76f5fb1ee3/26-6a8da82285bf9.webp' /></p><p></p><p>

புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகத் தொடங்கியதும், ரசிகர்கள் மத்தியில், ஸ்ரேயா தர்மன் திரைப்படத்தில் ரஜினிகாந்துடன் இணைந்து நடிக்கிறாரா? அல்லது படப்பிடிப்பு தளத்தில் ரஜினியை சந்தித்தபோது இந்தப் புகைப்படங்களை எடுத்துக்கொண்டாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.</p><p>ஆனால் ஸ்ரேயா படத்தில் நடிக்கிறாரா என்பது குறித்து இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.&nbsp;</p><p><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/p/Dcc-n5GiyyU/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/p/Dcc-n5GiyyU/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/p/Dcc-n5GiyyU/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by Shriya Saran (@shriya_saran1109)</a></p></div></blockquote> <script async src="//www.instagram.com/embed.js"></script></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW&nbsp;</a></u></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-25T14:39:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[கெஹெல்பத்தரவின் கைப்பேசியில் நடிகைகள் - அரசியல்வாதிகளின் தகவல்கள்! ஆராயப்படும் பல வங்கிக் கணக்குகள் - வெளிவரும் பகீர் தகவல்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/politicians-contacts-in-kehelbaddara-phones-1787662910"></link>
            <id>https://tamilwin.com/article/politicians-contacts-in-kehelbaddara-phones-1787662910</id>
            <summary type="text">போதைப்பொருள் கடத்தல்காரர் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்குழு உறுப்பினர் என சந்தேகிக்கப்படும் கெஹெல்பத்தர பத்மேவிடமிருந்து கைப்பற்றப்பட்ட தொலைபேசிகள...</summary>
            <content type="html"><![CDATA[<p>போதைப்பொருள் கடத்தல்காரர் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்குழு உறுப்பினர் என சந்தேகிக்கப்படும் கெஹெல்பத்தர பத்மேவிடமிருந்து கைப்பற்றப்பட்ட தொலைபேசிகளிலிருந்து, ஏழு நடிகைகள், மாடல்கள் மற்றும் ஒன்பது அரசியல்வாதிகள் தொடர்பான தகவல்கள் கிடைத்துள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. </p><p>

சந்தேகநபரின் கையடக்க தொலைபேசியை ஆய்வு செய்தபோது, ​​ஒன்பது அரசியல்வாதிகள் சம்பந்தப்பட்ட புகைப்படங்கள் மற்றும் தொலைபேசி உரையாடல் பதிவுகள் கிடைத்துள்ளதாகவும், மேலும் ஏழு நடிகைகள், மாடல்கள் தொடர்பான தகவல்களும் வெளிவந்துள்ளதாகவும் CID கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.</p><h2>எட்டு கைபேசிகள் மீட்பு&nbsp;</h2><p> 

இது குறித்து மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருவதாக புலனாய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். 

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் தகவலின்படி, சந்தேகநபர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவரிடமிருந்து எட்டு கைபேசிகள் மீட்கப்பட்டன.</p><p></p><p> அந்த சாதனங்களில் இருந்த தரவுகள் அழிக்கப்பட்டிருந்த போதிலும், புலனாய்வாளர்களால் அவற்றை மீட்க முடிந்தது. 

மீட்கப்பட்டவைகளில் 8841 தொலைபேசி அழைப்புகளின் விவரங்கள், 326000க்கும் மேற்பட்ட புகைப்படங்கள், 1101 ஒலிப்பதிவுகள் மற்றும் 5039 காணொளிகள் ஆகியவை அடங்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. </p><p>

முக்கிய போதைப்பொருள் கடத்தல்காரர்கள் என சந்தேகிக்கப்படும் 20 பேர் தொடர்பான தகவல்களையும் புலனாய்வாளர்கள் அடையாளம் கண்டுள்ளனர். 

இத்தகவல்கள் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவிற்கு அனுப்பப்பட்டுள்ளன. அந்த கருவிகளில் 13 சிறை அதிகாரிகளுக்குச் சொந்தமான தொலைபேசி எண்களும் கண்டெடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7e444677-3207-4634-aee7-51f38c1e2af9/26-6a8d96d82facd.webp' /></p><h2>வங்கிக் கணக்குகள் ஆய்வு</h2><p> </p><p>இது குறித்து சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்கள் எனக் கூறப்படும் நபர்களுக்குச் சொந்தமான 19 கடவுச்சீட்டுகளின் புகைப்படங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும், புலனாய்வாளர்கள் 17 வங்கிக் கணக்குகளை ஆய்வு செய்து வருவதாகவும் குற்றப் புலனாய்வுத் துறை (CID) நீதிமன்றத்தில் மேலும் தெரிவித்தது.
</p><p>
புலனாய்வாளர்களின் கூற்றுப்படி, கெஹெல்பத்தர பத்மே 2021 மே மாதம் இலங்கையிலிருந்து சட்டப்பூர்வமாக வெளியேறியதிலிருந்து சுமார் 15 முறை 13 நாடுகளுக்குப் பயணம் செய்துள்ளார். 

ஐக்கிய அரபு அமீரகம், இந்தோனேசியா, ரஷ்யா, ஜப்பான், சிங்கப்பூர், மலேசியா மற்றும் லாவோஸ் ஆகியவை அந்த நாடுகளில் அடங்கும். 

கெஹல்பத்ர பத்மே இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டு, சர்வதேச நடவடிக்கையைத் தொடர்ந்து இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><p><b>YOU MAY LIKE THIS VIDEO</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/yjDbOIN7TvI" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p>]]></content>
            <updated>2026-08-25T14:38:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[தாய், தந்தையை இழந்த 18 குடும்பங்களுக்கு வீடமைப்புக்கான காசோலைகள் வழங்கி வைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/housing-project-for-18-families-in-kilinochchi-1787666404"></link>
            <id>https://ibctamil.com/article/housing-project-for-18-families-in-kilinochchi-1787666404</id>
            <summary type="text">தாய் மற்றும் தந்தையை இழந்து சிறுவர் இல்லங்களில் வாழ்ந்த குடும்பங்களுக்கு புதிய வீடுகளை அமைப்பதற்கான நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி, தாய் மற்ற...</summary>
            <content type="html"><![CDATA[<p>தாய் மற்றும் தந்தையை இழந்து சிறுவர் இல்லங்களில் வாழ்ந்த குடும்பங்களுக்கு புதிய வீடுகளை அமைப்பதற்கான நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது.
</p><p>
இதன்படி, தாய் மற்றும் தந்தையை இழந்த சிறுவர்களுக்காக அமைக்கப்பட்ட செஞ்சோலை சிறுவர் இல்லத்தைச் சேர்ந்த 18 குடும்பங்களுக்கு, கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கல்மடு நகர் கிராமத்தில் வீடுகளை அமைப்பதற்கான காசோலைகள் உத்தியோகபூர்வமாக வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
</p><p>
கிளிநொச்சி பரந்தன் பொதுநோக்கு மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில், நீதி அமைச்சர் ஹார்சன நாணயக்கார பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு பயனாளிகளுக்கான காசோலைகளை வழங்கி வைத்தார்.</p><p></p><h2>முக்கிய திட்டங்கள்&nbsp;</h2><p>
</p><p>
நீண்டகாலமாக பல்வேறு சவால்களுக்கு மத்தியில் வாழ்ந்து வந்த இந்தக் குடும்பங்களுக்கு சொந்த வீடு அமைப்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்தும் வகையில் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7fe44a1b-b3af-4791-83c5-dc74c6efb71b/26-6a8d9fe64e167.webp' /></p><p>
</p><p>
இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் கருணைநாதன் இளங்குமரன், அரசாங்க அதிபர் எஸ். முரளிதரன், கிளிநொச்சி மாவட்ட இணைப்பாளர், பிரதேச செயலக அதிகாரிகள், திணைக்களத் தலைவர்கள் மற்றும் பயனாளிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-25T14:35:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரான் தடைகள் மற்றும் கடன் பத்திர மீள் கொள்வனவு: அமெரிக்க டொலரின் மதிப்பு உயர்வு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/iran-sanctions-and-bond-buybacks-us-dollar-rises-1787666360"></link>
            <id>https://tamilwin.com/article/iran-sanctions-and-bond-buybacks-us-dollar-rises-1787666360</id>
            <summary type="text">&amp;nbsp;ஈரானுக்கு எதிரான தடைகளை அமெரிக்கா விரிவுபடுத்தியதைத் தொடர்ந்தும்,
நீண்டகாலக் கடன் பத்திரங்களின் வட்டி வீதங்களைக் குறைக்கும் நோக்கில் அமெரிக்க
...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;ஈரானுக்கு எதிரான தடைகளை அமெரிக்கா விரிவுபடுத்தியதைத் தொடர்ந்தும்,
நீண்டகாலக் கடன் பத்திரங்களின் வட்டி வீதங்களைக் குறைக்கும் நோக்கில் அமெரிக்க
திறைசேரி மீள் கொள்வனவுகளை அறிவித்துள்ளதைத் தொடர்ந்தும், உலகளாவிய நிதிச்
சந்தையில் அமெரிக்க டொலரின் மதிப்பு மீண்டும் வலுவடைந்துள்ளது.
</p><p>
ஈரானுடன் வணிகத் தொடர்புகளை வைத்திருக்கும் நாடுகள் உடனடியாக அத்தொடர்புகளைத்
துண்டிக்க வேண்டும் எனவும், தவறினால் டொலர் அடிப்படையிலான நிதி
அமைப்பிலிருந்து அவர்கள் நீக்கப்படுவர் எனவும் அமெரிக்கத் திறைசேரிச் செயலர்
ஸ்கொட் பெசென்ட் எச்சரித்துள்ளார்.&nbsp;</p><h2>டொலரின் மதிப்பு உயர்வு</h2><p>
இதன் காரணமாக, எதிர்காலத்தில் டொலரைப் பயன்படுத்த முடியாமல் போவதைத்
தவிர்க்கும் நோக்கில் பல நாடுகளும் முதலீட்டாளர்களும் டொலர்களைக் கொள்வனவு
செய்யத் தொடங்கியுள்ளமை டொலரின் எழுச்சிக்கு முக்கிய காரணியாக அமைந்துள்ளது.
</p><p>
அதேவேளை, கடன் பத்திரச் சந்தையில் ஏற்பட்டுள்ள அழுத்தங்களைக் குறைப்பதற்காக,
நீண்டகாலக் பிணைப் பத்திரங்களை மீளக் கொள்வனவு செய்யும் நடவடிக்கைகளை
இரட்டிப்பாக்க அமெரிக்கத் திறைசேரி தீர்மானித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1e1b3029-0307-4bfd-86e9-459618a4376e/26-6a8da18f0affe.webp' /></p><p> </p><p>இந்த நடவடிக்கை
அமெரிக்கக் கடன் பத்திரச் சந்தையில் தற்காலிக ஸ்திரத்தன்மையை
ஏற்படுத்தியுள்ளது.

இதன் காரணமாக, யூரோ மற்றும் கனேடிய டொலர் ஆகிய நாணயங்களுக்கு எதிரான அமெரிக்க
டொலரின் பெறுமதி அதிகரித்துள்ளது</p><p>அத்துடன் ஜப்பானிய யென்னுக்கு எதிராகவும் டொலர்
159.34 ஆக உயர்வடைந்துள்ளது.

அதேநேரம், டொலரின் வீழ்ச்சி குறித்த அச்சம் காரணமாக கிரிப்டோகரன்சி சந்தையில்
பிட்கொயின் (Bitcoin) மதிப்பு மீண்டும் எழுச்சி பெற்று 80,000 டொலர்களைக்
கடந்து சாதனை படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-25T14:30:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[4 மணிநேரம் காதலி கொடுத்த 3,400 முத்தம்; காதலனுக்கு வினையானது!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/boyfriend-fined-3400-kisses-given-car-girlfriend-1787663509"></link>
            <id>https://jvpnews.com/article/boyfriend-fined-3400-kisses-given-car-girlfriend-1787663509</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;இந்தியா -மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில், காதலியின் முத்த அடையாளங்களுடன் வலம் வந்த காரின் உரிமையாளருக்குப் போக்குவரத்துப் பொலிஸார் ரூ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;இந்தியா -மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில், காதலியின் முத்த அடையாளங்களுடன் வலம் வந்த காரின் உரிமையாளருக்குப் போக்குவரத்துப் பொலிஸார் ரூபா 5,500 அபராதம் விதித்த சம்பவம் இணையதளத்தில் வைரலாகி பேசுபொருளாகியுள்ளது. </p><p> 

வெளிநாடுகளில் நடக்கும் ஒரு ட்ரெண்டை பார்த்துவிட்டு, ஆதித்யா சிகர்வார் என்ற இளைஞரின் காதலி, அவரின் கார் முழுவதும் 3,400 லிப்ஸ்டிக் முத்த அடையாளங்களை பதித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9abc407e-4f04-4298-ae31-5efbc3a3003c/26-6a8d94972f39c.webp' /></p><h2>&nbsp;வீடியோக்கள், புகைப்படங்கள் இணையத்தில் வைரல்</h2><p> காதலிக்கு கார் முழுவதும் முத்தங்களை பதிக்க சுமார் 4 மணிநேரம் ஆனதாம். 

உடல் முழுவதும் முத்தம் பதிக்கப்பட்ட காரை எடுத்துக்கொண்டு ஆதித்யா வெளியே சென்றுள்ளார். </p><p>முத்த தடயங்களால் கார் சென்ற இடமெல்லாம் தனித்து தெரிந்துள்ளது. 

உடனே வீதியில் சென்ற பலர் அதனை வீடியோ, போட்டோக்கள் எடுத்து இணையத்தில் பதிவிட்டுள்ளனர்.</p><p></p><p> </p><p>இந்த கார் தொடர்பான வீடியோக்கள், புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக அதில் தெரிந்த வாகனப் பதிவு எண்ணைப் பயன்படுத்தி பொலிஸாரின் உரிமையாளரை கண்டறிந்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0a41edd7-6378-45cd-90d3-40c46281a0f2/26-6a8d9497dfab9.webp' /></p><p> 

மேலும் காரையும் பறிமுதல் செய்து, போக்குவரத்து விதிகளை மீறியதாக (மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ், வாகனத்தின் அசல் தோற்றத்தை மாற்றியமைத்ததற்காக) ஆதித்யாவிற்கு ரூபா 5,500 அபராதம் விதித்துள்ளனர்.</p><p></p><p>. 

தொடர்ந்து ஆதித்யா மன்னிப்புக்கோர காரை கொடுத்த பொலிஸார், லிப்ஸ்டிக் முத்த தடயங்களை அனைத்தையும் அவரை வைத்தே அழிக்கச் சொல்லியுள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-08-25T14:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்த அரசு உத்தேசம் - வெளியான அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/government-intend-hold-provincial-elections-1787667405"></link>
            <id>https://tamilwin.com/article/government-intend-hold-provincial-elections-1787667405</id>
            <summary type="text">மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்துவதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக
அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

அரசா...</summary>
            <content type="html"><![CDATA[<p>மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்துவதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக
அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
</p><p>
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று(25.08.2026) நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை
அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்
போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.</p><h2>மாகாண சபைத் தேர்தல்</h2><p>

இதன்போது, மாகாண சபை தேர்தல் நடத்தப்படாது என நாடாளுமன்ற உறுப்பினர் நிலந்தி
கொட்டஹச்சி சமீபத்தில் வெளியிட்ட கருத்துத் தொடர்பில் ஊடகவியலாளர்களால் கேள்வி
எழுப்பப்பட்டுள்ளது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1a2f1f57-bc54-46ae-b09a-ad17f381865e/26-6a8da535557f9.webp' /></p><p>அதற்கு அவர் பதிலளிக்கையில், மாகாண சபைத் தேர்தலை நடத்துவது குறித்து ஆராய்வதற்காக நாடாளுமன்றக் குழு
ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.
</p><p>
தேர்தலை நடத்துவதற்குத் தேவையான நிதி ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ளது.

சட்டக் கட்டமைப்பு மற்றும் எல்லை நிர்ணயப் பணிகள் நிறைவடைந்தவுடன் நிச்சயமாக
மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியும் என தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-25T14:27:46+00:00</updated>
        </entry>
    </feed>
