<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-08-23T21:30:00+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[சாகரிகா தொடருந்து மோதி முச்சக்கரவண்டி சாரதி மரணம்! மக்கள் போராட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sagarika-train-accident-1787520522"></link>
            <id>https://tamilwin.com/article/sagarika-train-accident-1787520522</id>
            <summary type="text">கடற்கரை வீதி தொடருந்து பாதையின் அலுத்கம, விகாரை ஒன்றுக்கு அருகில் உள்ள தொடருந்து கடவையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் ஒருவர்
...</summary>
            <content type="html"><![CDATA[<p>கடற்கரை வீதி தொடருந்து பாதையின் அலுத்கம, விகாரை ஒன்றுக்கு அருகில் உள்ள தொடருந்து கடவையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் ஒருவர்
உயிரிழந்துள்ளார்.</p><p> அத்துடன் ஒருவர் பலத்த காயமடைந்துள்ளார்.
</p><p>
மருதானை தொடருந்து நிலையத்திலிருந்து புறப்பட்ட 'சாகரிகா' தொடருந்துடன்,&nbsp; முச்சக்கரவண்டி ஒன்று
மோதுண்டதிலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளது.</p><h2>பாதுகாப்பு கடவை</h2><p>

விபத்தில் முச்சக்கரவண்டி சாரதி உயிரிழந்துள்ளதுடன், காயமடைந்த மற்றைய நபர்
சிகிச்சைக்காக நாகொட வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
</p><p>
தொடருந்து கடவையில் சமிக்ஞைகள் மற்றும் எச்சரிக்கை ஒலிகள் மட்டுமே உள்ளன என்றும்,
பாதுகாப்புக் கடவை இல்லாத காரணத்தினாலேயே தொடர்ச்சியாக இவ்வாறான விபத்துகள்
இடம்பெறுகின்றன என்றும், அதிகாரிகள் அதற்கு எவ்வித தீர்வும் வழங்கவில்லை
என்றும் குற்றம் சாட்டிப் பிரதேச மக்கள் தொடருந்து பாதையை மறித்து நேற்றுப்
போராட்டத்தில் ஈடுபட்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b3300db9-d749-4cfd-aa87-7920f71f329d/26-6a8b660c385fd.webp' /></p><p>
</p><p>
இந்த எதிர்ப்பு நடவடிக்கை காரணமாகக் கடற்கரை வீதி தொடருந்து பாதையின்
போக்குவரத்தில் பாரிய இடையூறு ஏற்பட்டது.</p><p> பின்னர் பொலிஸார் தலையிட்டு, தொடருந்து திணைக்கள அதிகாரிகளுடன் தொடர்புகொண்டு தேவையான தீர்வுகளை வழங்குவதாக அளித்த
வாக்குறுதியின் பேரில் பிரதேச மக்கள் போராட்டத்தைக் கைவிட்டனர்.
</p><p>
அதன்பின்னர் அந்தப் பாதையில் தொடருந்து போக்குவரத்து வழமைக்குத் திரும்பியது.&nbsp;</p><p> </p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-23T21:28:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹோர்முஸ் நீரிணையில் விதிகளை மீறும் கப்பல்கள்! ஈரான் விடுத்துள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/iran-warns-ships-violating-rules-in-hormuz-1787519818"></link>
            <id>https://ibctamil.com/article/iran-warns-ships-violating-rules-in-hormuz-1787519818</id>
            <summary type="text">ஹோர்முஸ் நீரிணையை கடப்பதற்கான விதிமுறைகளை மீறும் கப்பல்கள் எதிர்காலத்தில் பயணக் கட்டுப்பாடுகளை எதிர்கொள்ள நேரிடும் என ஈரான் எச்சரித்துள்ளது.

ஈரானின...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹோர்முஸ் நீரிணையை கடப்பதற்கான விதிமுறைகளை மீறும் கப்பல்கள் எதிர்காலத்தில் பயணக் கட்டுப்பாடுகளை எதிர்கொள்ள நேரிடும் என ஈரான் எச்சரித்துள்ளது.</p><p>

ஈரானின் பெர்சியன் வளைகுடா நீரிணை அதிகாரசபை இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.
</p><p>
இதன்படி, ஈரான் விதித்துள்ள வழிமுறை கட்டுப்பாடுகளை மீறும் கப்பல்களுக்கு அபராதம் விதிக்கப்படலாம் அல்லது அவை பறிமுதல் மற்றும் சிறைபிடிக்கப்படலாம் என எக்ஸ் தளத்தில் PGSA வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p></p><h2>விதிமீறல் பட்டியல்</h2><p> </p><p>

மேலும், இத்தகைய தடைசெய்யப்பட்ட கப்பல்களுக்கு ஒத்துழைப்பு வழங்கும் ஏனைய கப்பல்களும் விதிமீறல் பட்டியலில் சேர்க்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4cfaef34-62ce-4c8e-babf-f6f3762f5460/26-6a8b65d9ed9ec.webp' /></p><p> </p><p> 

கப்பல் நிறுவனங்கள் மற்றும் சரக்கு உரிமையாளர்கள் தங்களது பெயர்களை இந்தப் பட்டியலில் இருந்து நீக்க வேண்டுமாயின் உரிய ஆவணங்களுடன் கோரிக்கை விடுக்க வேண்டும் என்றும், சிரமங்களைத் தவிர்க்க தமது இணையதளத்தில் உள்ள பட்டியலைச் சரிபார்த்து இதுபோன்ற கப்பல்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.&nbsp; &nbsp; &nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-23T21:27:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[உக்ரைன் மொத்தமாக துண்டாடப்படும்: கோரிக்கையை நிராகரித்த ஜெலென்ஸ்கி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/zelensky-rejects-elections-1787519892"></link>
            <id>https://news.lankasri.com/article/zelensky-rejects-elections-1787519892</id>
            <summary type="text">Zelensky Rejects Wartime Elections: உக்ரைன் துண்டாடப்படும் அபாயம், போர்க்காலத் தேர்தல்களை நிராகரித்த ஜெலென்ஸ்கி.
ரஷ்யாவின் படையெடுப்பை உக்ரைன் எதிர்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>Zelensky Rejects Wartime Elections: உக்ரைன் துண்டாடப்படும் அபாயம், போர்க்காலத் தேர்தல்களை நிராகரித்த ஜெலென்ஸ்கி.
</p><p>ரஷ்யாவின் படையெடுப்பை உக்ரைன் எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கும் வேளையில், தேர்தலை நடத்துவது மிகவும் ஆபத்தானது என்று எழுந்துள்ள கோரிக்கைகளுக்கு ஜனாதிபதி ஜெலென்ஸ்கி பதிலளித்துள்ளார்.</p><h2>ஒரு சுனாமியாக</h2><p>
</p><p>தேர்தலை முன்னெடுக்க வேண்டும் என்று அவரது முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் விடுத்த அழைப்பைத் தொடர்ந்தே ஜெலென்ஸ்கி பதிலளித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/079af538-bcd7-4113-ad98-7ae834e90f59/26-6a8b6396cfb7c.webp' /></p><p> இதுபோன்ற ஒரு போரின் சூழலில், தேர்தலை நடத்துவது மிகப்பெரிய ஆபத்து என்று நான் கருதுகிறேன். தற்போதைய நிலையில் தேர்தல் என்பது உக்ரைனைப் பிளவுபடுத்தக்கூடிய ஒரு சுனாமியாக அமையும் என்று ஜெலென்ஸ்கி கூறியுள்ளார். </p><p>ரஷ்யப் படைகளை எதிர்த்துப் போராடுவதில் நாடு கவனம் செலுத்தி வருவதால், ராணுவச் சட்டத்தின் கீழ் உக்ரைன் தேர்தல்களை நிறுத்தி வைத்துள்ளது; ஜெலென்ஸ்கியின் இந்த நடவடிக்கைக்கு அந்நாட்டு மக்களிடையே பரவலான ஆதரவு தொடர்ந்து உள்ளது. </p><p>நாட்டை அழிக்க நாம் விரும்பினால், போர்க்காலமான இச்சூழ்நிலையில் தேர்தல்களை நோக்கி நகரலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் மைக்கைலோ ஃபெடோரோவை ஜெலென்ஸ்கி பணிநீக்கம் செய்ததைத் தொடர்ந்து, ஆயிரக்கணக்கானோர் வீதிகளில் இறங்கிப் போராடும் சூழல் ஏற்பட்டது.</p><p></p><p> </p><p>பதவியிலிருந்து நீக்கப்பட்ட ஃபெடோரோவ் இந்த வாரம், தேர்தலை நடத்துவதற்கான வழியைக் கண்டறியுமாறு திடீரென அழைப்பு விடுத்தார் - ஆனால், அதற்கான செயல் திட்டத்தை அவர் முன்வைக்காததால், அவருடைய ஆதரவாளர்களில் சிலர்கூட அவரின் கோரிக்கையை ஆதரிக்க மறுத்தனர். </p><p>மட்டுமின்றி, ராணுவத்தினர், லட்சக்கணக்கான உக்ரேனிய அகதிகள் மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் வசிப்பவர்கள் எவ்வாறு வாக்களிப்பார்கள் என்பது உள்ளிட்ட பல்வேறு தடைகளையும், ரஷ்யாவிடமிருந்து வரும் தவறான தகவல் பரப்பும் அச்சுறுத்தல்களையும் நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். </p><p>மேலும், கீவ் சமூகவியல் நிறுவனத்தின் கருத்துக்கணிப்பு ஒன்றின்படி, போர் முடிவுக்கு வருவதற்கு முன்பே தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என்று 15 சதவீத உக்ரேனியர்கள் மட்டுமே விரும்புகின்றனர்.</p><h2>மரியாதையற்ற</h2><p> </p><p>இந்த நிலையில், செய்தியாளர் சந்திப்பின்போது ஜெலென்ஸ்கி தனது முன்னாள் அமைச்சரை நோக்கிப் பலமுறை கிண்டலான கருத்துகளைத் தெரிவித்தார்.</p><p> முன்னாள் அமைச்சர் சீர்திருத்தங்களை முன்னெடுக்க முயன்றார்; ஆனால், ராணுவத் தலைமை மற்றும் அவர்களின் பாரம்பரியமான பிடிவாதமான அணுகுமுறை ஆகியவற்றுடன் அவர் மோதலில் ஈடுபட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d2d63620-6405-4d41-9203-89433344af69/26-6a8b639791c53.webp' /></p><p> </p><p>தொடக்கத்தில் பொதுமக்கள் அவருக்கு ஆதரவளித்ததுடன், தலைமைத் தளபதி ஒலெக்சாண்டர் சிர்ஸ்கியைப் பதவியிலிருந்து நீக்குமாறும் வலியுறுத்தினர்.</p><p> மக்கள் போராட்டம் நடத்துவதற்கு உரிமை உண்டு என்று கூறிய ஜெலென்ஸ்கி, அதேவேளையில் ராணுவத்தினர் மீது மரியாதையற்ற மனப்பான்மையைக் கொண்டிருக்க வேண்டாம் என்றும் எச்சரித்தார். </p><p>இதனிடையே, தன்னை பலவீனப்படுத்திய ஒரு அரசியல் நெருக்கடிக்குப் பிறகு, பிளவுகளுக்கு எதிரான ஒரு அரணாகத் தன்னை முன்னிறுத்திக் கொள்ள ஜெலென்ஸ்கியால் முடிந்தது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-23T21:15:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவின் 250ஆவது ஆண்டு நிறைவு: வொஷிங்டன் வீதிகளில் முதன்முறையாக பிரம்மாண்டமான கார் பந்தயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/freedom-250-grand-prix-us-1787511383"></link>
            <id>https://tamilwin.com/article/freedom-250-grand-prix-us-1787511383</id>
            <summary type="text">அமெரிக்காவின் 250ஆவது ஆண்டு நிறைவு விழா கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக,
அந்நாட்டின் தலைநகரான வொஷிங்டன் வீதிகளில் முதன்முறையாக பிரம்மாண்டமான அதிவேக
கா...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவின் 250ஆவது ஆண்டு நிறைவு விழா கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக,
அந்நாட்டின் தலைநகரான வொஷிங்டன் வீதிகளில் முதன்முறையாக பிரம்மாண்டமான அதிவேக
கார் பந்தயம் ஒன்றை ஜனாதிபதி டொனால்ட் டரம்ப் ஏற்பாடு செய்துள்ளார்.</p><p>

அமெரிக்காவின் புகழ்பெற்ற முக்கிய நினைவிடங்கள் மற்றும் வீதிகளை உள்ளடக்கி
நடத்தப்படும் இந்த 'Freedom 250 Grand Prix' கார் பந்தயத்தை சுமார் இரண்டு
இலட்சம் பார்வையாளர்கள் வரை நேரில் பார்வையிடுவார்கள் என
எதிர்பார்க்கப்படுகின்றது.</p><p>

வொஷிங்டனின் புகழ்பெற்ற 'பென்சில்வேனியா' வீதியில் கார்கள் மணிக்கு 185 மைல்
வேகத்தில் செல்லும் வகையில் போட்டிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.</p><h2>போட்டி ஆரம்பம்&nbsp;</h2><p>
</p><p>
இப்போட்டியை முன்னிட்டு இராணுவ விமானங்களின் அணிவகுப்பும் இடம்பெறவுள்ளதால்,
அங்குள்ள 'ரொனால்ட் ரீகன்' சர்வதேச விமான நிலையத்தின் வான்வழிப் போக்குவரத்து
மூன்று மணித்தியாலங்களுக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d8558e92-190c-4077-b74e-7b35a7495c56/26-6a8b60d092f6c.webp' /></p><p>
</p><p>
இலவசமாக பார்வையிட அனுமதிக்கப்பட்டுள்ள இப்போட்டியின் ஆரம்ப நிகழ்வில்
ஜனாதிபதி ட்ரம்ப் கலந்துகொண்டு போட்டியை முறைப்படி கொடியசைத்து ஆரம்பித்து
வைக்கவுள்ளார்.
</p><p>
சமீபத்திய கருத்துக்கணிப்புகளில் டிரம்பின் ஆதரவு நிலை குறைந்துள்ள
நிலையிலும், ஈரான் போர் சூழலுக்கு மத்தியிலும், தனது இரண்டாவது ஆட்சிக்காலத்தை
பிரம்மாண்டமாக வெளிப்படுத்தும் நோக்கில் அவர் தொடர்ச்சியாக இவ்வாறான
விளையாட்டு நிகழ்வுகளை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-23T21:06:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[பூஜை அறையில் நண்பனின் தலை ; பிரிந்த மனைவியுடன் சேர கணவன் செய்த கொடூரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/husband-s-cruel-act-to-reunite-with-estranged-wife-1787507361"></link>
            <id>https://jvpnews.com/article/husband-s-cruel-act-to-reunite-with-estranged-wife-1787507361</id>
            <summary type="text">பிரிந்து சென்ற தன் மனைவியுடன் சேர்வதற்காக கணவன் அவரின் நண்பரை கொலை செய்து நரபலி கொடுத்த சம்பவம் ஒடிசாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

ஒடிசா ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">பிரிந்து சென்ற தன் மனைவியுடன் சேர்வதற்காக கணவன் அவரின் நண்பரை கொலை செய்து நரபலி கொடுத்த சம்பவம் ஒடிசாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

</p><p style="text-align: justify;">ஒடிசா மாநிலம் பாலங்கீர் மாவட்டம் தேபதமுண்டா என்கிற கிராமத்தில் வசித்து வந்தவர் சந்தோஷ் கார்செல்(45). சில நாட்கள்&nbsp; முதல் இவரை காணவில்லை.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f44921db-97d1-42ce-bf03-9fec9dbf89ff/26-6a8b32a2a507a.webp' /></p><h2 style="text-align: justify; ">தீவிர விசாரணை</h2><p> </p><p style="text-align: justify; ">இந்நிலையில் அவரின் உடல் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் நேற்று ஒரு குளத்தில் கண்டெடுக்கப்பட்டது. இது தொடர்பாக பொலிஸ் விசாரணை செய்தனர்.</p><p style="text-align: justify;">

விசாரணையில் கடைசியாக சந்தோஷ் தனது நண்பருடன் சென்றது விசாரணையில் தெரியவந்தது.</p><p style="text-align: justify;"> எனவே நண்பரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் சந்தோஷை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.</p><p style="text-align: justify; ">&nbsp;தலை எங்கே என்று கேட்டபோது தனது வீட்டின் பூஜை அறையில் இருப்பதாக அவர் கூறினார். அதன்பின் அவரிடம் தீவிர விசாரணை நடத்தபோதுதான் உண்மை தெரியவந்தது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
3வருடங்களுக்கு முன்பு தனது மனைவி பிரிந்து சென்று விட்டார். அவருடன் மீண்டும் சேரவேண்டுமென்றால் நரபலி கொடுக்க வேண்டும் என ஒரு சாமியார் கூறினார்.</p><p style="text-align: justify;"> எனவேதான் எனது நண்பன் சந்தோஷை கொலை செய்து அவனுடைய தலையை பூஜை அறையில் வைத்திருக்கிறேன்.. உடலை குளத்தில் வீசி விட்டேன்’ என வாக்குமூலம் கொடுத்தார். </p><p style="text-align: justify;">அவரின் வீட்டில் இருந்த பூஜை அறையில் புதைக்கப்பட்டிருந்த சந்தோஷின் தலையை பொலிசார் தோண்டி எடுத்தனர்.&nbsp;</p><p style="text-align: justify;"></p>]]></content>
            <updated>2026-08-23T21:06:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[ராஜபக்ச குடும்பத்திற்கு எதிரான உயர் நீதிமன்றத்தின் அறிவிப்பு! நாமல் ஏற்றுக்கொள்ள வேண்டிய பகிரங்க உண்மை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/high-court-s-announcement-against-rajapaksa-family-1787509091"></link>
            <id>https://tamilwin.com/article/high-court-s-announcement-against-rajapaksa-family-1787509091</id>
            <summary type="text">பொருளாதார மீளெழுச்சி தொடர்பில் ஆலோசனை வழங்கும் நாமல் ராஜபக்ச, தனது குடும்பம்தான் நாட்டை வங்குரோத்து நிலைக்குத் தள்ளியது என்பதை பகிரங்கமாக ஏற்றுக் கொள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொருளாதார மீளெழுச்சி தொடர்பில் ஆலோசனை வழங்கும் நாமல் ராஜபக்ச, தனது குடும்பம்தான் நாட்டை வங்குரோத்து நிலைக்குத் தள்ளியது என்பதை பகிரங்கமாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். </p><p>

கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். </p><p>

தொடர்ந்தும் தெரிவிக்கையில், </p><p> 

பொருளாதாரம் பாதிக்கப்பட்டு விட்டது. நாட்டு மக்கள் பாதிக்கப்படுகின்றார்கள் என்று நாமல் ராஜபக்ச தற்போது முதலைக் கண்ணீர் வடிக்கின்றார்.</p><h2>நாமலின் ஆலோசனை&nbsp;</h2><p> </p><p> ஆனால், பொருளாதார பாதிப்புக்கான அடிப்படைக் காரணத்தை அவர் எவ்விடத்திலும் குறிப்பிடுவதில்லை. </p><p>

2022ஆம் ஆண்டு ராஜபக்ச குடும்பம் பொருளாதார ரீதியாக எடுத்த தவறான தீர்மானங்களினால் தான் நாடு வங்குரோத்து நிலையடைந்தது என்பதை உயர்நீதிமன்றம் ஏக மனதாக அறிவித்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6a62f03c-368e-4906-a574-dfbc4697a60c/26-6a8b3a31d60c8.webp' /></p><p> </p><p>

பொருளாதார பாதிப்பில் இருந்து மீள்வதற்குதான் சர்வதே நாணய நிதியத்தின் ஆதரவு பெற்றுக் கொள்ளப்பட்டது. </p><p> 

பொருளாதார மீட்சி குறித்து ஆலோசனை கூறும் நாமல் ராஜபக்ச அதற்கு காரணம் தனது குடும்பம் தான் என்பதை பகிரங்கமாக ஏற்றுக் கொள்ள வேண்டும்.
</p><p>
அரசாங்கத்தை வீழ்த்துவோம், மக்களை ஒன்றிணைப்போம் என்று ஜீ.எல்.பீரிஸ் வீட்டில் இரவிரவாக கூட்டம் நடத்தாமல் மக்களுக்கு மத்தியில் செல்லுங்கள் என குறிப்பிட்டுள்ளார்.&nbsp; &nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-23T21:04:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுற்றுலா வந்தவரின் உயிரை பறித்த பேருந்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/bus-claims-tourist-s-life-in-sri-lanka-1787517223"></link>
            <id>https://jvpnews.com/article/bus-claims-tourist-s-life-in-sri-lanka-1787517223</id>
            <summary type="text">&amp;nbsp;நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுவரெலியா வெலிமடை பிரதான வீதியின் ஹக்கல தாவரவியல் பூங்கா பகுதியில் வீதி ஓரத்தில் நடந்து சென்ற ஒருவர் மீது பேரு...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">&nbsp;நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுவரெலியா வெலிமடை பிரதான வீதியின் ஹக்கல தாவரவியல் பூங்கா பகுதியில் வீதி ஓரத்தில் நடந்து சென்ற ஒருவர் மீது பேருந்து மோதியதில் உயிரிழந்துள்ளார்.</p><p style="text-align: justify; ">



இந்த விபத்தில் இரத்தினபுரியில் இருந்து சுற்றுலா வருகை தந்த 46 வயதுடைய&nbsp; நபரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/52c5de94-f81f-4168-b2d9-5ed21bf8e14f/26-6a8b5929d257f.webp' /></p><p style="text-align: justify; ">



கண்டி பகுதியில் இருந்து&nbsp; நுவரெலியாவிக்கு சுற்றுலா வருகை தந்த பேருந்தில் தடையாளி இயங்காமை காரணமாக குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p>


விபத்துடன் தொடர்புடைய பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் நுவரெலியா

பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-23T21:00:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவின் புதிய பொருளாதாரத் தடை மிரட்டல்! ஈரான் அதிரடியாக வெளியிட்ட தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/iran-s-foreign-minister-dismissed-new-us-sanctions-1787516819"></link>
            <id>https://ibctamil.com/article/iran-s-foreign-minister-dismissed-new-us-sanctions-1787516819</id>
            <summary type="text">அமெரிக்காவின் புதிய பொருளாதாரத் தடைகள் குறித்த எச்சரிக்கையை, அந்நாட்டின் விரக்தியின் அடையாளம் என ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி விமர்சித்து...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவின் புதிய பொருளாதாரத் தடைகள் குறித்த எச்சரிக்கையை, அந்நாட்டின் விரக்தியின் அடையாளம் என ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி விமர்சித்துள்ளார்.
</p><p>
இத்தகைய நடவடிக்கைகள் ஈரானை வீழ்த்த முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
அமெரிக்க திறைசேரி செயலாளர் ஸ்காட் பெசென்ட், ஈரான் மீது வரலாற்றிலேயே மிகக் கடுமையான தடைகளை விதிக்கப்போவதாக அச்சுறுத்தியுள்ளதன் பின்னணியில் அராக்சியின் மேற்கண்ட கருத்துக்கள் வெளியாகியுள்ளன.</p><p></p><h2>புதிய முயற்சியும் தோல்வி</h2><p> </p><p> 

காணொளியொன்றில் பேசிய அராக்சி, அமெரிக்கத் தலைவர்கள் ராணுவ நடவடிக்கைகளில் இருந்து விலகி பழைய திட்டங்களையே மீண்டும் கொண்டு வருவது அவர்களின் விரக்தியையே காட்டுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2b3faec2-f447-4540-9bb1-2fd20864342e/26-6a8b5ad28356f.webp' /></p><p><i>Image Credit: Britannica</i></p><p>
</p><p>
அமெரிக்காவின் முந்தையத் தடைகள் மற்றும் ராணுவ நடவடிக்கைகள் தோல்வியடைந்தது போல இந்த புதிய முயற்சியும் தோல்வியடையும் என்றும் அவர் உறுதியாகத் தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-23T20:53:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ள பொதுச் சுகாதார பரிசோதகர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/public-health-inspectors-to-launch-union-action-1787516330"></link>
            <id>https://jvpnews.com/article/public-health-inspectors-to-launch-union-action-1787516330</id>
            <summary type="text">பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் இன்று (24) காலை 8.00 மணி முதல் நாடளாவிய ரீதியில் தொடர்ச்சியான தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடத் தீர்மானித்துள்ளது. ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் இன்று (24) காலை 8.00 மணி முதல் நாடளாவிய ரீதியில் தொடர்ச்சியான தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடத் தீர்மானித்துள்ளது. </p><p style="text-align: justify; ">



இதற்கமைய, சங்கத்தின் செயற்குழுத் தீர்மானத்திற்கு அமைய இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் நாடு முழுவதிலும் உள்ள அனைத்துப் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் மற்றும் நிர்வாகப் பொதுச் சுகாதார பரிசோதகர்களால் நிர்வாகத்திற்கு வழங்கப்படும் அனைத்து வகையான தரவுகள் மற்றும் அறிக்கைகளை வழங்குவதை முற்றாக இடைநிறுத்துதல்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/05ccc389-b0e1-4c3f-8fe0-f207bfd4027f/26-6a8b55ac6a305.webp' /></p><h2 style="text-align: justify; ">இடைநிறுத்துதல்.</h2><p style="text-align: justify; ">



இக்காலப்பகுதியில் கிடைக்கப்பெறாத எந்தவொரு தரவும் மீண்டும் ஒருபோதும் தரவு அமைப்புகளில் புதுப்பிக்கப்பட மாட்டாது எனவும் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் அழுத்தமாகக் குறிப்பிட்டுள்ளது.</p><p style="text-align: justify; "> 



இந்தத் தொழிற்சங்க நடவடிக்கை, கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் சுகாதார அலுவலகத்தில் இடம்பெறும் சட்டவிரோத செயல்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்தமையினால், பொதுச் சுகாதார பரிசோதகர் பி.எச். மிகஸ்தெனிய இடமாற்றம் செய்யப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் மேற்கொள்ளப்படுகின்றது.</p><p style="text-align: justify; ">



இந்த விவகாரம் குறித்து, ஏற்கனவே அதிகாரிகளுக்குத் தெரிவிக்கப்பட்ட போதிலும், சுகாதார அமைச்சு இதுவரை எவ்வித தீர்வையும் வழங்க நடவடிக்கை எடுக்கவில்லை என அச்சங்கம் தெரிவித்துள்ளது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">



எனவே, பி.எச்.மிகஸ்தெனியவின் தன்னிச்சையான இடமாற்றத்தை உடனடியாக இரத்து செய்து, அது குறித்து நியாயமான விசாரணையை நடத்துமாறு அவர்கள் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுக்கின்றனர். </p><p style="text-align: justify; ">



இதற்கு மேலதிகமாக, கொழும்பு துறைமுக சுகாதார அலுவலகம் மற்றும் கட்டுநாயக்க விமான நிலைய சுகாதார அலுவலகம் ஆகியவற்றின் பொதுச் சுகாதார பரிசோதகர்களுக்கான அங்கீகரிக்கப்பட்ட ஊழியர்களின் எண்ணிக்கையைக் குறைக்க மேற்கொள்ளப்படும் முயற்சியையும் தாம் கடுமையாகக் கண்டிப்பதாக தெரிவித்துள்ளனர். </p><p style="text-align: justify; ">



எவ்வாறாயினும், இந்த விடயங்கள் தொடர்பாக நியாயமான விசாரணைக்குத் தாம் பூரண ஒத்துழைப்பு வழங்கவும், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பேச்சுவார்த்தை நடத்தவும் தயார் நிலையில் இருப்பதாகவும் அச்சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-23T20:30:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[ட்ரம்பின் அறிவிப்பால் மீண்டும் பதற்றம்! வளைகுடா நாடுகளுக்கு ஈரானின் உச்சக்கட்ட எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/us-iran-war-new-updates-1787510409"></link>
            <id>https://tamilwin.com/article/us-iran-war-new-updates-1787510409</id>
            <summary type="text">அமெரிக்காவுக்கு உதவக் கூடாது என்று வளைகுடா நாடுகளுக்கு ஈரான் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது. 

ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் பொருளாதார தடைகள் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவுக்கு உதவக் கூடாது என்று வளைகுடா நாடுகளுக்கு ஈரான் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது. </p><p>

ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் பொருளாதார தடைகள் குறித்த அறிவிப்பின் எதிரொலியாக ஈரானிடம் இருந்து இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p><p> 

அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தில் ஈரான் மீது அமெரிக்கா போர் தொடுத்த நிலையில், அதற்கு பதிலடியை வழங்கும் பொருட்டு வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்களை இலக்கு வைத்து ஈரான் தாக்குதல் நடத்தியிருந்தது.</p><h2>ட்ரம்பின் அறிவிப்பு&nbsp;</h2><p> 

இந்தநிலையில், தற்போது ஈரான் மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையில் நடக்கும் பேச்சுவார்த்தையிலும் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை.</p><p> 

இதற்கிடையே ஈரான் மீது இதுவரை இல்லாத கடுமையான பொருளாதார தடைகளை விதிக்கப்போவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f52d585f-48b1-4bad-be6a-876b353c0a8f/26-6a8b401223363.webp' /></p><p>

இந்தநிலையில், ஈரானின் உயர்மட்ட தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலாளர் மொஹ்சென் ரெசாபி தெரிவிக்கையில்,</p><p> 

“அமெரிக்காவின் பொருளாதார அழுத்த தந்திரங்களுக்கு வளைகுடா நாடுகள் ஆதரவளிக்க வேண்டாம்.</p><p> ஈரானுக்கு எதிராக ட்ரம்ப் அறிவித்துள்ள பொருளாதாரப் போர் நடவடிக்கையில் அண்டை நாடுகள் இணைந்தால், ஹோர்முஸ் நீரிணைக்கு வெளியே உள்ள எண்ணை கப்பல் வழித்தடங்களை ஈரான் குறிவைக்கக்கூடும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cbde78ce-4606-4cd1-8171-5b517a3428f4/26-6a8b4012cac24.webp' /></p><p>


ட்ரம்ப் ஏதாவது செய்ய விரும்பினால், நாங்கள் ஒரு பெரும் அதிர்வை ஏற்படுத்தும் வகையில் பதிலடி கொடுப்போம்.</p><p>

ட்ரம்ப்பின் பொறுப்பற்ற செயல்பாடுகளும் ஈரான் மீதான தாக்குதல்களும் பல நாடுகளிடையே அணு ஆயுதங்களைப் பெறுவதற்கான விருப்பத்தை அதிகரித்துள்ளன.
</p><p>
ட்ரம்ப் அணுசக்தி பாதுகாப்பை ஏற்படுத்துவதற்குப் பதிலாக, அணு சக்தி பாதுகாப்பின்மையையே உருவாக்கி உள்ளார்” என குறிப்பிட்டுள்ளார்.&nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-08-23T20:25:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[புதிய கட்டத்திற்குள் செல்லும் ஈரானுடனான போர்! அமெரிக்க தரப்பு எடுத்துரைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/war-with-iran-enters-new-phase-us-says-1787515333"></link>
            <id>https://ibctamil.com/article/war-with-iran-enters-new-phase-us-says-1787515333</id>
            <summary type="text">ஈரானுடனான போர் ஒரு புதிய கட்டத்திற்குள் நுழையும் என்று எதிர்பார்ப்பதாக அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் மைக் ஜான்சன் தெரிவித்துள்ளார்.

பிரபல...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானுடனான போர் ஒரு புதிய கட்டத்திற்குள் நுழையும் என்று எதிர்பார்ப்பதாக அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் மைக் ஜான்சன் தெரிவித்துள்ளார்.
</p><p>
பிரபல சர்வதேச ஊடகமொன்றுக்கு அளித்துள்ள நேர்காணல் ஒன்றின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
அதன்போது, “நாம் மிக விரைவில் ஒரு புதிய கட்டத்திற்குள் நுழையப் போகிறோம் என்று நினைக்கிறேன். அடுத்த கட்டத்தில் நமது நட்பு நாடுகள் உதவும் என்றும், இதை நாம் முடிவுக்குக் கொண்டுவருவோம் என்றும் நம்புகிறேன்," என்று கூறியுள்ளார்.</p><p></p><h3> ஈரானின் அணு ஆயுத முயற்சி</h3><p> </p><p>

இதேவேளை, முந்தைய அனைத்து நிர்வாகங்களின் முக்கிய இலக்காக இருந்த, ஈரான் அணு ஆயுதங்களை வைத்திருப்பதைத் தடுக்கும் நடவடிக்கையை ஜனாதிபதி ட்ரம்ப் வெற்றிகரமாகச் செய்து முடித்துள்ளதாகவும் மைக் ஜான்சன் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/675280a9-fc70-46eb-b3af-9c145492c438/26-6a8b54b67ef00.webp' /></p><p>
</p><p>
“நாம் பாம்பின் தலையை வெட்டிவிட்டோம் என்பது அனைவருக்கும் தெரியும். பேச்சுவார்த்தை மேசையின் மறுபுறத்தில் இருக்கும் ஈரானியர்களை நம்ப முடியாது என்பதுதான் இங்குள்ள மிகப்பெரிய சவாலாகும்,” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-23T20:14:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவுடன் இணைந்து செயல்பட்டால் இதுதான் நடக்கும் ; எச்சரிக்கும் ஈரான்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/iran-warns-this-happens-when-working-with-the-us-1787515474"></link>
            <id>https://canadamirror.com/article/iran-warns-this-happens-when-working-with-the-us-1787515474</id>
            <summary type="text">ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து கடந்த பெப்ரவரி 28ஆம் திகதி தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல், அரபு நாடுகள் மீது ஈரான் தாக்குதல...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து கடந்த பெப்ரவரி 28ஆம் திகதி தாக்குதல் நடத்தின. </p><p>இந்த தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல், அரபு நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இந்த மோதலால் மத்திய கிழக்கில் பதற்றமான சூழ்நிலை நிலவியது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4e7d066a-6c88-4da4-8be3-421948e8c7dd/26-6a8b52541c579.webp' /></p><p>
</p><p>அமெரிக்காவுடனான மோதலை தொடர்ந்து ஹோர்முஸ் நீரிணையை ஈரான் மூடியது. இதையடுத்து இரு தரப்பும் அமைதி பேச்சுவார்த்தை நடந்த இடைக்கால ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. </p><p>ஆனால், அந்த ஒப்பந்தம் எந்தவித முன்னேற்றமுமின்றி காலாவதியானது. அதேவேளை, ஹோர்முஸ் நீரிணையை தங்களுக்கு சொந்தம் என்று அமெரிக்காவும், ஈரானும் உரிமைகோரி வருகின்றன.</p><p>



இதனிடையே, ஈரான் மீது இதுவரை இல்லாத அளவில் பொருளாதார போர் தொடுத்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் அறிவித்துள்ளார்.</p><p> ஈரான் மீது பல்வேறு பொருளாதார தடைகளையும் அமெரிக்கா விதித்துள்ளது. மேலும், ஈரானின் துறைமுகங்களையும் அமெரிக்க கடற்படை முடக்கியுள்ளது. </p><p>இதனால் இரு நாடுகளுக்கும் இடையே மீண்டும் மோதல் ஏற்படும் சூழ்நிலை நிலவி வருகிறது.</p><p>



இந்நிலையில், தங்கள் நாட்டின் மீது அமெரிக்கா எடுத்து வரும் பொருளாதார ரீதியிலான தாக்குதல்களில் அண்டை நாடுகள் இணைந்தால் அவர்களும் எதிரி நாடுகளாக கருத்தப்படும் என்று ஈரான் அறிவித்துள்ளது.</p><p> மேலும், அந்த நாடுகள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்றும் ஈரான் மிரட்டல் விடுத்துள்ளது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-23T20:04:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[மதன மோதகம் தயாரிப்பு தொழிற்சாலை முற்றுகை ; மூவர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/three-arrested-over-madana-modakam-production-1787514567"></link>
            <id>https://jvpnews.com/article/three-arrested-over-madana-modakam-production-1787514567</id>
            <summary type="text">அம்பலாந்தோட்டை பொலிஸ் பிரிவில் கஞ்சா கலக்கப்பட்ட &#039;மதன மோதகம்&#039; தயாரிப்பு தொழிற்சாலை ஒன்று தங்காலைப் பிராந்திய நச்சு போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் நேற்...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">அம்பலாந்தோட்டை பொலிஸ் பிரிவில் கஞ்சா கலக்கப்பட்ட 'மதன மோதகம்' தயாரிப்பு தொழிற்சாலை ஒன்று தங்காலைப் பிராந்திய நச்சு போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் நேற்று சனிக்கிழமை (22) முற்றுகையிட்டுள்ளனர்.</p><p style="text-align: justify; ">


இச் சோதனையின் போது இரு ஆண்கள் மற்றும் ஒரு பெண் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/629e707b-bb1f-4609-8113-2b507dda8955/26-6a8b4ec9ad2cf.webp' /></p><h2 style="text-align: justify; ">மேலதிக நடவடிக்கை</h2><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
இதன் போது, 270 கிலோகிராம் 994 கிராம் எடையுடைய மதன மோதகம், உற்பத்திக்குத் தயாராக வைக்கப்பட்டிருந்த 100 கிலோகிராம் 500 கிராம் மதன மோதகக் கலவை, விற்பனைக்காகப் பொதி செய்யப்பட்ட 30 இலட்சம் ரூபா சந்தைப் பெறுமதியுடைய 11,133 மதன மோதகப் பொதிகள் மற்றும் 430 கிராம் கஞ்சா மற்றும் தயாரிப்புக்கு பயன்படுத்தப்பட்ட இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள் போன்றன கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
</p><p style="text-align: justify; ">
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் செவனகல மற்றும் கிராமப் பகுதிகளைச் சேர்ந்த 26, 36 மற்றும் 50 வயதுடையவர்களாவர்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">

இவர்கள் தயாரித்த போதைப்பொருட்களை நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் விநியோகித்து வந்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

</p><p style="text-align: justify; ">சந்தேகநபர்களும் கைப்பற்றப்பட்ட பொருட்களும் மேலதிக நடவடிக்கைக்காக அம்பலாந்தோட்டை பொலிஸில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், இன்று ஞாயிற்றுக்கிழமை (23) ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-08-23T19:49:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[விரக்தியின் அறிகுறி... அமெரிக்காவின் புதிய தடை அச்சுறுத்தலைப் புறந்தள்ளிய ஈரான்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/iran-dismisses-new-us-sanctions-1787513778"></link>
            <id>https://news.lankasri.com/article/iran-dismisses-new-us-sanctions-1787513778</id>
            <summary type="text">Iran dismisses threat of new US sanctions: புதிய அமெரிக்கத் தடைகள் குறித்த அச்சுறுத்தலை, விரக்தியின் வெளிப்பாடு என்று ஈரான் நிராகரித்துள்ளது.
அமெரிக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>Iran dismisses threat of new US sanctions: புதிய அமெரிக்கத் தடைகள் குறித்த அச்சுறுத்தலை, விரக்தியின் வெளிப்பாடு என்று ஈரான் நிராகரித்துள்ளது.</p><p>
அமெரிக்காவின் புதிய தடைகள் குறித்த அச்சுறுத்தலை, விரக்தியின் வெளிப்பாடு என்று ஈரானின் வெளிவிவகார அமைச்சர் நிராகரித்துள்ளார்.</p><h2>மிகக் கடுமையான</h2><p>
எதிர்பார்க்கப்படும் புதிய நடவடிக்கைகள் ஈரானைத் தோற்கடிக்கத் தவறிவிடும் என்றும் அவர் பதிலளித்துள்ளார். திங்கள்கிழமை பிற்பகல் 2 மணிக்கு செய்தியாளர் சந்திப்பை நடத்தவுள்ள அமெரிக்க நிதியமைச்சர் ஸ்காட் பெசென்ட், ஈரான் மீது வரலாற்றிலேயே மிகக் கடுமையான தடைகளை விதிக்கப்போவதாக மிரட்டல் விடுத்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/61594246-0fae-4eda-972d-8a11b3a7d062/26-6a8b4bb4acab2.webp' /></p><p> </p><p>சர்வதேசத் தடைகளால் ஈரானின் பொருளாதாரம் ஏற்கனவே கடும் நெருக்கடியில் உள்ளது; பிப்ரவரி 28 அன்று அமெரிக்காவும் இஸ்ரேலும் தாக்குதல்களைத் தொடங்கியதிலிருந்து, அந்நாட்டின் உள்கட்டமைப்பு பலமுறை தாக்கப்பட்டுள்ளதுடன், வான்வழித் தாக்குதல்களில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். </p><p>ஆனால், கிட்டத்தட்ட ஆறு மாத காலப் போருக்குப் பிறகும் ஈரான் தனது நிலையில் உறுதியாக உள்ளது. உலகளாவிய எண்ணெய் ஏற்றுமதிக்கு இன்றியமையாததான ஹார்முஸ் நீரிணையில், அங்கீகரிக்கப்படாத எண்ணெய் கப்பல்கள் கடந்து செல்ல அனுமதிக்க மறுத்து, கப்பல் போக்குவரத்தை அது கிட்டத்தட்ட முடக்கியுள்ளது. </p><p>ஈரானின் இந்த நடவடிக்கைகள் உலகளாவிய எண்ணெய் விலைகளை உயர்த்தியுள்ளது. பதிலுக்கு அமெரிக்க இராணுவமும் ஈரானின் எண்ணெய் ஏற்றுமதியை முடக்கும் வகையில் கடற்படை முற்றுகையை ஏற்படுத்தியுள்ளது.</p><p></p><p> </p><p>இந்த நிலையில், காணொளி ஒன்றை வெளியிட்டுள்ள ஈரானிய வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அராக்சி, அவர்கள் (அமெரிக்கத் தலைவர்கள்) இராணுவ நடவடிக்கைகளிலிருந்து விலகிச் சென்ற நிலையில்... மீண்டும் அதே பழைய திட்டங்களைக் கையில் எடுப்பது, அவர்கள் எவ்வளவுக்கு எவ்வளவு விரக்தியில் உள்ளனர் என்பதைக் காட்டுகிறது என குறிப்பிட்டுள்ளார். </p><p>நீதி மற்றும் கண்ணியத்தின் அடிப்படையில் ஒரு தீர்வைக் காண, அமெரிக்கா ஈரானிடம் மரியாதையுடன் பேச வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், ஈரானியர்கள் ஒருபோதும் அஞ்சியதில்லை. </p><p>முற்றுகைகள் அல்லது பிற இராணுவ நடவடிக்கைகள் என அவர்கள் மேற்கொண்ட அனைத்து நடவடிக்கைகளும் தோல்வியடைந்துவிட்டன; அவர்களின் இந்தப்புதிய முயற்சியும் தோல்வியடையும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><h2>அவர்கள் தயாராக இல்லை</h2><p> </p><p>இதனிடையே, ஈரானுக்கு எந்த விதமான அவசர உதவியை வழங்கும் நாட்டிற்கும் எதிராகப் பொருளாதார விளைவுகள் ஏற்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார். மேலும், ஈரானில் இருந்து அனுப்பப்படும் எண்ணெயில் 80 சதவீதத்திற்கும் அதிகமானவற்றை வாங்கும் சீனா, இந்த விவகாரத்தில் அமெரிக்காவுடன் ஒத்துழைக்குமாறு பெசென்ட் வலியுறுத்தியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/de6887dd-8758-4df6-b073-779dd011093f/26-6a8b4bb55fc48.webp' /></p><p> </p><p>ஆனால், முறையான பேச்சுவார்த்தைகளில் தீர்வு காண வேண்டும் என சீனா வலியுறுத்தி வருகிறது. இதனிடையே, ஈரான் தரப்பில் மீண்டும் ஒப்பந்தத்திற்கு கெஞ்சுவதாக குறிப்பிட்ட டொனால்ட் ட்ரம்ப், ஆனால், சரியான ஒப்பந்தத்தைச் செய்துகொள்ள அவர்கள் தயாராக இல்லை என்பது என் கருத்து என்றும் ஈரானைப் பற்றி அவர் கூறியுள்ளார். </p><p>இந்த நிலையில், புதிய பிராந்தியப் பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை ஏற்படுத்துவது குறித்து அண்டை நாடுகளிடமிருந்து பல அழைப்புகளைத் தாங்கள் பெற்றுள்ளதாக, ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப் சனிக்கிழமையன்று தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9523d8db-e851-4429-af61-7767051ee87b/26-6a8b4bb6109bf.webp' /></p><p> </p><p>ஆனால்
எந்தெந்த நாடுகள் அவை என்பதை காலிபாஃப் தெரிவிக்கவில்லை. இஸ்ரேலுக்காக இப்பிராந்தியத்தில் உள்ள தனது நட்பு நாடுகளின் பாதுகாப்பை அமெரிக்கா ஆபத்துக்குள்ளாக்குவதாக அவர் குற்றம் சாட்டியதுடன், சுதந்திரமான மற்றும் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட பிராந்திய ஒழுங்கமைப்பே அமைதியையும் பாதுகாப்பையும் நிலைநாட்டும் என்றும் கூறினார். </p><p>ஈரானின் அணுசக்தித் திட்டத்தை முடக்குவது போன்ற, போரின் தொடக்கத்தில் ட்ரம்ப் நிர்ணயித்த இலக்குகளை அவரால் இன்னும் அடைய முடியவில்லை.</p><p> மட்டுமின்றி, போரைக் கைவிட்டு வெளியேறவும் ட்ரம்பால் முடியவில்லை. ஈரான் பிடிவாதமான நிலைப்பாட்டைக் கொண்டிருந்தாலும், ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியன் தூதரக ரீதியிலான தீர்வுக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-23T19:33:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[விமல், கம்மன்பில உட்பட ஆறு பேருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/wimal-gammanpila-six-referred-contempt-of-court-1787511262"></link>
            <id>https://ibctamil.com/article/wimal-gammanpila-six-referred-contempt-of-court-1787511262</id>
            <summary type="text">நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஆறு அரசியல் செயற்பாட்டாளர்கள் மீது மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்வதற்காக தகவல்கள் சமர்ப்பிக...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஆறு அரசியல் செயற்பாட்டாளர்கள் மீது மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்வதற்காக தகவல்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளில், முன்னாள் தேசிய புலனாய்வுப் பணிப்பாளர் சுரேஷ் சாலி கைது செய்யப்பட்டதை எதிர்த்து கடந்த ஜூலை 7 முதல் ஜூலை 15 வரை சத்தியாகிரகப் போராட்டம் ஒன்று நடத்தப்பட்டது. </p><p>

இந்தப் போராட்டத்தின் போது, நீதித்துறை செயல்பாடுகளை பகிரங்கமாக விமர்சித்து கருத்து வெளியிட்டதாக முன்னாள் அமைச்சர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில மற்றும் சுகீஸ்வர பண்டார, திலித் ஜயவீர, அசங்க நவரத்ன, சிரேஷ்ட விரிவுரையாளர் மகிந்த பத்திரன ஆகிய ஆறு பேருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.</p><p></p><h2>தொடரப்படும் வழக்கு</h2><p>

இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்ட குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர், கடந்த ஓகஸ்ட் 5 ஆம் திகதி கோட்டை நீதவான் பசன் அமரசேன முன்னிலையில் உண்மைகளை அறிக்கையாகச் சமர்ப்பித்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e8e7ad2c-820c-46ce-a7f7-7bffc31b56e2/26-6a8b43a64fee4.webp' /></p><p>
</p><p>
இதன்படி, அந்த ஆவணங்களைப் பரிசீலித்த நீதவான் நீதிமன்றம், குறித்த நபர்களின் கருத்துக்கள் முதல் பார்வையில் நீதித்துறை நடவடிக்கைகளை விமர்சிப்பதாக அமைந்திருப்பதை சுட்டிக்காட்டியுள்ளது.
</p><p>
இந்நிலையில், கோட்டை நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு அமைய, சம்பந்தப்பட்ட ஆறு பேருக்கும் எதிராக நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டுகளின் கீழ் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்வதற்காக தகவல்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-23T19:02:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டிற்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/tourist-arrival-numbers-released-for-sri-lanka-1787510910"></link>
            <id>https://jvpnews.com/article/tourist-arrival-numbers-released-for-sri-lanka-1787510910</id>
            <summary type="text">2026 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டிற்கு வருகை தந்த வௌிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 14 இலட்சத்து 50 ஆயிரத்தைக் கடந்துள்ளது. 

அ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">2026 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டிற்கு வருகை தந்த வௌிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 14 இலட்சத்து 50 ஆயிரத்தைக் கடந்துள்ளது. </p><p style="text-align: justify; ">

அதற்கமைய, ஜனவரி 01 ஆம் திகதி முதல் ஒகஸ்ட் 18 ஆம் திகதி வரை நாட்டிற்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1,468,980 ஆகப் பதிவாகியுள்ளதாகச் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ca432deb-5263-4ecd-9cab-6df916aaf83a/26-6a8b407fb8bff.webp' /></p><h2 style="text-align: justify; ">&nbsp;சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை</h2><p style="text-align: justify; "> 

இதனிடையே, ஒகஸ்ட் 01 ஆம் திகதி முதல் 18ஆம் திகதி வரை வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 125,562 எனவும் அந்த சபை குறிப்பிட்டுள்ளது. </p><p style="text-align: justify; ">

ஒகஸ்ட் மாதத்தில் இதுவரை வருகை தந்துள்ள சுற்றுலாப் பயணிகளில் அதிகளவானோர் இந்தியாவிலிருந்தே வருகை தந்துள்ளதுடன், அவர்களின் எண்ணிக்கை 27,884 ஆகும்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">இதனிடையே, ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்தே வருகை தந்துள்ளதுடன், அவ்வெண்ணிக்கை 366,114 ஆகும்.</p><p style="text-align: justify; "> 

மேலும், ஆண்டின் இதுவரையான காலத்தில் அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் பெப்ரவரி மாதத்திலேயே வருகை தந்துள்ளதுடன், அவ்வெண்ணிக்கை 279,328 ஆகப் பதிவாகியுள்ளது.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-23T19:00:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீதிபதியின் வருகை நுழைவாயிலில் இரகசியமாக நுழைந்த ஹேமரத்தன தேரர்! ஆரம்பமாகிறது அடுத்த விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/pallegama-hemarathana-thero-in-new-trouble-1787496981"></link>
            <id>https://ibctamil.com/article/pallegama-hemarathana-thero-in-new-trouble-1787496981</id>
            <summary type="text">அனுராதபுரத்தின் முன்னாள் அட்டமஸ்தானாதிபதி பல்லேகம ஹேமரத்தன தேரர், மேல் நீதிமன்ற வளாகத்திற்குள் நீதிபதி நுழையும் நுழைவாயிலின் ஊடாக எவ்வாறு நீதிமன்ற வளா...</summary>
            <content type="html"><![CDATA[<p>அனுராதபுரத்தின் முன்னாள் அட்டமஸ்தானாதிபதி பல்லேகம ஹேமரத்தன தேரர், மேல் நீதிமன்ற வளாகத்திற்குள் நீதிபதி நுழையும் நுழைவாயிலின் ஊடாக எவ்வாறு நீதிமன்ற வளாகத்திற்குள் வந்தார் என்பது குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.</p><p>

சிறுமி ஒருவரை தகாத செயற்பாட்டுக்கு உட்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சந்தேகநபர் எவ்வாறு கடந்த 21ஆம் திகதி நீமிமன்றுக்கு வருகைத்தந்தார் என்பது தொடர்பான விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது. </p><p>

இது குறித்து அனுராதபுர பிரதான நீதவான் சியபத் சசிந்து விக்ரமதன, அனுராதபுர மேல் நீதிமன்ற வளாகத்தின் காவல்துறை பாதுகாப்புப் பிரிவின் பொறுப்பதிகாரிக்கு உத்தரவிட்டுள்ளார்.</p><p></p><h2>ஹேமரத்தன தேரருக்கு எதிராக&nbsp;&nbsp;வழக்கு </h2><p><span style="color: inherit;">தகாத செயற்பாட்டு சம்பவம் தொடர்பில் பல்லேகம ஹேமரத்தன தேரருக்கு எதிராக அனுராதபுர பிரதான நீதவான் நீதிமன்றில் உள்ள வழக்கு கடந்த 21ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.</span></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/13584407-d1c1-4539-902a-b1e3d07813c3/26-6a8b0a1734ded.webp' /></p><p>இதன்போது, சட்டத்தரணி சானக அபேவிக்ரம நீதிமன்றில் முன்வைத்த விசேட கருத்துக்களை கருத்திற்கொண்டே பிரதான நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-23T18:55:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரசாங்கத்தின் முக்கிய பிரிவொன்றின் உயர் அதிகாரிகளுக்கு இடமாற்றம்! வெளியாகியுள்ள அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/transfers-for-officers-govt-management-service-1787507833"></link>
            <id>https://ibctamil.com/article/transfers-for-officers-govt-management-service-1787507833</id>
            <summary type="text">அரசாங்கத்தின் முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சேவையின் உயர் அதிகாரிகளுக்கான 2027ஆம் ஆண்டிற்கான வருடாந்திர இடமாற்றங்களை நடைமுறைப்படுத்த பொது நிர்வாகம், ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரசாங்கத்தின் முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சேவையின் உயர் அதிகாரிகளுக்கான 2027ஆம் ஆண்டிற்கான வருடாந்திர இடமாற்றங்களை நடைமுறைப்படுத்த பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. </p><p>

18/2026 இலக்க பொது நிர்வாக சுற்றறிக்கைக்கு அமைவாக, இந்த இடமாற்றங்கள் 2027 ஜனவரி 1 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரவுள்ளன.</p><p></p><h2>

இடமாற்றங்களுக்கான தகுதிகள்
</h2><p>
இதன்படி, ஒரே பணியிடத்தில் 05 ஆண்டுகள் சேவையாற்றிய அலுவலர்கள் கட்டாய இடமாற்றத்திற்கு உட்படுத்தப்படுவதுடன், 02 ஆண்டுகள் சேவையாற்றிய அலுவலர்களும் இடமாற்றத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்களாவர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/16ce05d5-7e17-4446-bf57-77a83bd129b5/26-6a8b3e38d0a21.webp' /></p><p>
</p><p>
இதற்கான விண்ணப்பங்களை பொது நிர்வாகத்திற்கான முகாமைத்துவ தகவல் அமைப்பு (MIS) மூலம் நிகழ்நிலையில் மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.</p><p>

அத்துடன், அதிகாரிகள் தமது அடிப்படை தனிப்பட்ட விவரங்கள் மற்றும் முந்தைய சேவை நிலையங்களின் தகவல்களை கணினியில் துல்லியமாக புதுப்பிப்பது அவசியமாகும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
</p><h2>
மேல்முறையீடு செய்தல்</h2><p>

இதேவேளை, 2026 ஓகஸ்ட் 25 முதல் டிசம்பர் 31 வரையிலான காலப்பகுதியில் குறிப்பிட்ட சில இடமாற்ற கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/409c957c-d1d4-4a6c-a93a-f076fd9cb892/26-6a8b3e3985d51.webp' /></p><p> </p><p>

அத்தோடு, வருடாந்திர இடமாற்ற உத்தரவுகளுக்கு எதிராக மேல்முறையீடு செய்ய விரும்பும் அதிகாரிகள், தமக்கு இடமாற்ற உத்தரவு கிடைக்கப்பெற்ற நாளிலிருந்து 14 நாட்களுக்குள் அதற்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
மேலும், அதிகாரிகளின் பணிக்காலம், தற்போதைய பணிநிலையம் மற்றும் கோரிக்கைகளைக் கருத்தில் கொண்டு இந்த இடமாற்ற செயல்முறை முன்னெடுக்கப்படவுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-23T18:39:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[இரண்டு உலகளாவிய அச்சுறுத்தல்கள்... உணவுப் பொருட்களின் விலை உயரும்: எச்சரிக்கும் JPMorgan]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/food-prices-predicted-to-surge-1787510091"></link>
            <id>https://news.lankasri.com/article/food-prices-predicted-to-surge-1787510091</id>
            <summary type="text">Americans could soon be hit by a grocery-price surge: விரைவில் மளிகைப் பொருட்களின் விலை உயர்வால் அமெரிக்கர்கள் பாதிக்கப்படலாம்.
இரண்டு உலகளாவிய அச்சு...</summary>
            <content type="html"><![CDATA[<p>Americans could soon be hit by a grocery-price surge: விரைவில் மளிகைப் பொருட்களின் விலை உயர்வால் அமெரிக்கர்கள் பாதிக்கப்படலாம்.
</p><p>இரண்டு உலகளாவிய அச்சுறுத்தல்கள் ஒன்றிணைந்து உலகின் உணவு விநியோகத்தை நெருக்குவதால், அமெரிக்கர்கள் விரைவில் மளிகைப் பொருட்களின் விலை உயர்வால் பாதிக்கப்படலாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/236ad929-e40b-4de7-a967-099ead09e789/26-6a8b3d4d87777.webp' /></p><p>
</p><p>உரத் தட்டுப்பாடுகள் சக்திவாய்ந்த எல் நினோவுடன் இணைவதால், 2027-ஆம் ஆண்டின் முதல் பாதியில் உலகளாவிய உணவுச் செலவுகள் ஐந்து சதவீதம் உயரக்கூடும் என்று ஜேபிமோர்கனின் புதிய பகுப்பாய்வு ஒன்று எச்சரித்துள்ளது. </p><p>உலகளவில் இறக்குமதி செய்யப்படும் அதிக நைட்ரஜன் கொண்ட விவசாய உரமான யூரியாவில் 36 சதவீதத்திற்கும் அதிகமானவற்றை வழங்கும் பாரசீக வளைகுடாப் பகுதியில் முதல் அச்சுறுத்தல் உருவாகி வருகிறது. </p><p>ஈரான மீதான போர் உர உற்பத்தியை மந்தமாக்கியுள்ளது; அத்துடன் ஹார்முஸ் நீரிணைப் பகுதியில் ஏற்பட்டுள்ள இடையூறுகள் ஏற்றுமதியைக் கட்டுப்படுத்தி, விலைகளை உயர்த்தியுள்ளன. </p><p>அந்தப் பற்றாக்குறைகள், சில மாதங்களுக்குள் அறுவடையைப் பாதிக்கத் தொடங்கக்கூடும்; இது முதலில் தென் அமெரிக்க மக்காச்சோளத்தையும், பின்னர் அமெரிக்கா மற்றும் பிற முக்கிய உற்பத்தியாளர்களின் கோதுமையையும், ஆசியா முழுவதிலுமுள்ள நெற்பயிர்களையும் பாதிக்கும் என்றே ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.</p><p></p><p> </p><p>அதே வேளை, எல் நினோ (El Niño) நிகழ்வானது உலகம் முழுவதும் மழைப்பொழிவு மற்றும் வெப்பநிலையில் மாற்றங்களை ஏற்படுத்தி, முக்கியமான விவசாயப் பகுதிகளை வறட்சி, வெள்ளம் மற்றும் கடும் வெப்பத்திற்கு ஆளாக்கக்கூடும். </p><p>வெப்பமண்டல உற்பத்தியாளர்கள், குறிப்பாக பிரேசில் மற்றும் இந்தியா, பெரும் ஆபத்தை எதிர்கொள்கின்றனர். ஏனெனில், அங்கு பாரசீக வளைகுடா உரங்களை அதிக அளவில் சார்ந்திருக்கும் நிலை, வரலாற்று ரீதியாக எல் நினோ பயிர் இழப்புகளால் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளுடன் ஒன்றுடன் ஒன்று பிணைந்துள்ளது. </p><p>இந்த நிலையில், அமெரிக்கா மிக மோசமான நேரடி விளைவுகளிலிருந்து தப்பினாலும், உலகளாவிய அளவில் விளைச்சல் குறைவதாலும் பயிர்கள், உரங்கள் மற்றும் இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வதாலும், அமெரிக்கர்கள் உணவுக்காக அதிக விலை கொடுக்க வேண்டிய நிலை ஏற்படலாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e0c8c4f2-ee0f-47eb-b23d-a39b8c3f7b19/26-6a8b3d4e3bd30.webp' /></p><p> </p><p>எடையின் அடிப்படையில் மிகவும் பரவலாகப் பயன்படுத்தப்படும் உரமான நைட்ரஜன், உலகின் மிக முக்கியமான மூன்று உணவுகளை உற்பத்தி செய்வதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. ஜேபிமோர்கனின் பகுப்பாய்வின் அடிப்படையில், உலகளாவிய நைட்ரஜன் உரத் தேவையில் பாதிக்கும் மேற்பட்டவை மக்காச்சோளம், கோதுமை மற்றும் அரிசி பயிர்களுக்கேத் தேவைப்படுகிறது. </p><p>அதே சமயம், வரலாற்று ரீதியாக மக்காச்சோள உற்பத்திச் செலவில் 21 சதவீதமும், கோதுமைக்கு 19 சதவீதமும் உரச் செலவாக இருந்து வந்துள்ளது. மிகவும் பொதுவான நைட்ரஜன் உரங்களில் ஒன்றான யூரியா, இயற்கை எரிவாயுவைப் பயன்படுத்தித் தயாரிக்கப்படுகிறது. </p><p>இதனைப் பொதுவாக விதைகள் நடப்படும் சமயத்தில் பயன்படுத்த வேண்டும். பயிர்கள் ஏற்கனவே விதைக்கப்பட்ட பிறகு உரம் வந்து சேர்ந்தால், விவசாயிகள் அதை மாதங்கள் கழித்து இட்டுவிட்டு அதே பலனை எதிர்பார்க்க முடியாது.</p><p></p><p> </p><p>தாமதமாக இடப்படும் உரங்கள் அம்மோனியா வாயுவாக மாறக்கூடும்; இதனால், அவை ஊட்டமளிக்க வேண்டிய தாவரங்களுக்கே பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. எண்ணெயைப் போலன்றி, நைட்ரஜன் உரமானது நிலையற்ற தன்மையுடனும் நச்சுத்தன்மை வாய்ந்த அம்மோனியாவாக மாறக்கூடியதாகவும் இருப்பதால், அதற்கென பரவலான உத்திசார் இருப்புகள் (strategic reserves) பராமரிக்கப்படுவதில்லை. </p><p>உரத்திற்கு பற்றாக்குறை ஏற்படும்போது 
விவசாயிகளுக்கு வேறு வழிகளே இல்லை: விளைச்சலைப் பாதுகாக்க அதிக விலை கொடுப்பது, குறைந்த உரத்தைப் பயன்படுத்தி சிறிய அறுவடையை ஏற்றுக்கொள்வது, அல்லது வேறு பயிருக்கு மாறுவது. இதில் ஒவ்வொரு தெரிவும் செலவுகளை அதிகரிக்கும் அல்லது உலகச் சந்தைகளுக்கு வரும் உணவு அளவைக் குறைக்கும் அபாயத்தைக் கொண்டுள்ளது. </p><p>முதல் பெரிய சோதனை தென் அமெரிக்காவில் வரக்கூடும், அங்கு செப்டம்பர் முதல் ஜனவரி வரை மக்காச்சோளம் பயிரிடப்படுகிறது. உலகின் முன்னணி விவசாய ஏற்றுமதியாளர்களில் ஒன்றான பிரேசில், பாரசீக வளைகுடாவிலிருந்து நைட்ரஜன் உரத்தை பெருமளவில் இறக்குமதி செய்யும் நாடாகவும் உள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7c805070-3537-44f3-ba96-30516a0d9e3e/26-6a8b3d4f96173.webp' /></p><p> அமெரிக்கா, ஐரோப்பா, சீனா, இந்தியா மற்றும் ரஷ்யாவில் செப்டம்பர் மாதம் முதல் பயிரிடப்படும் குளிர்கால கோதுமையும் பாதிக்கப்படலாம், அதே நேரத்தில் இந்தியா, வங்கதேசம், இந்தோனேசியா மற்றும் வியட்நாமில் உள்ள இலையுதிர் மற்றும் குளிர்கால நெல் பயிர்களும் இதேபோன்ற அபாயங்களை எதிர்கொள்கின்றன. </p><p>உர உற்பத்தி முழுத் திறனுக்குத் திரும்ப ஒன்று முதல் நான்கு ஆண்டுகள் ஆகலாம் என்றும், அதே சமயம் கடுமையாகச் சேதமடைந்த சில இயற்கை எரிவாயு ஆலைகள் மீண்டுவர மூன்று முதல் ஐந்து ஆண்டுகள் தேவைப்படலாம் என்றும் ஜேபிமோர்கன் மதிப்பிட்டுள்ளது. </p><p>உர ஆலைகளுக்கு எரிவாயு வழங்கும் இயற்கை எரிவாயு உள்கட்டமைப்பு செயல்படத் தொடங்கும் வரை, அவற்றை மீண்டும் இயக்க முடியாது. இது மேலும் ஒரு முட்டுக்கட்டையை உருவாக்குகிறது. </p><p>இதற்கிடையில், ஏற்கனவே உரம் பெறுவதற்குப் போராடி வரும் அதே நாடுகளுக்கு, எல் நினோ மேலும் கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தும் என அச்சுறுத்துகிறது. இது மழைப்பொழிவின் திசையை மாற்றலாம், வறட்சியை மோசமாக்கலாம், வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தலாம் மற்றும் காட்டுத்தீயைத் தீவிரப்படுத்தலாம்; இதன் விளைவுகள் பிராந்தியத்தைப் பொறுத்து வியத்தகு முறையில் மாறுபடும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4ee1a3ab-4fa0-4775-8a77-c6e52ba1869a/26-6a8b3d4ee4d02.webp' /></p><p> </p><p>வெப்பமண்டலப் பகுதிகளில் வேளாண் உற்பத்தியில் சராசரியாக 3.5 சதவீத சரிவும், மிதவெப்ப மண்டலப் பகுதிகளில் 2.4 சதவீத வளர்ச்சியும் ஏற்படுவதோடு கடந்தகால 'எல் நினோ' (El Niño) நிகழ்வுகள் தொடர்புடையதாக இருந்தன என்று அந்த அறிக்கை கண்டறிந்துள்ளது. </p><p>அமெரிக்கா மற்றும் இந்தியாவில் கிடைத்த அதிகப்படியான விளைச்சல் பிற இடங்களில் ஏற்பட்ட இழப்புகளை ஈடுசெய்ததால், உலகளாவிய கோதுமை விநியோகம் ஓரளவுக்கு நிலையாக இருந்தது; ஆனால் அரிசி மற்றும் கோகோ ஏற்றுமதி பெருமளவு சரிவைச் சந்தித்தது. </p><p>உற்பத்தி சரிந்ததால் உள்நாட்டு விநியோகத்தைப் பாதுகாப்பதற்காக இந்தியாவும் ஏற்றுமதிக்குக் கட்டுப்பாடுகளை விதித்தது; ஒரு நாட்டில் ஏற்படும் பயிர் இழப்புகள் மற்ற இடங்களில் உள்ள உணவுச் சந்தைகளை எவ்வளவு விரைவாகப் பாதிக்கக்கூடும் என்பதை இது எடுத்துக்காட்டுகிறது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-23T18:35:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தலதா மாளிகை பெரஹராவில் அடாவடித்தனம் செய்தவருக்கு பொலிஸாரின் அதிரடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/police-take-action-against-perahera-troublemaker-1787508700"></link>
            <id>https://jvpnews.com/article/police-take-action-against-perahera-troublemaker-1787508700</id>
            <summary type="text">கண்டி, ஶ்ரீ தலதா மாளிகைக்கு முன் பெரஹராவில் பாதுகாப்பு கடமையில் ஈடுப்படிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்களை தகாத வார்த்தைகளால் பேசி, அவர்களின் கடமைக்கு இடைய...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">கண்டி, ஶ்ரீ தலதா மாளிகைக்கு முன் பெரஹராவில் பாதுகாப்பு கடமையில் ஈடுப்படிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்களை தகாத வார்த்தைகளால் பேசி, அவர்களின் கடமைக்கு இடையூறு விளைவித்த நபரொருவர் இன்று ஞாயிற்றுக்கிழமை (23), கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p style="text-align: justify;">

கண்டி ஸ்ரீ தலதா மாளிகை வளாகத்திற்குள் நுழையும் பிரதான சோதனைச் சாவடிக்கு அருகிலேயே பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்துள்ளார்.</p><p style="text-align: justify;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/314101d8-e8a7-4bff-b1b7-46ff45b98dcb/26-6a8b37de4549c.webp' /></p><p>
</p><p style="text-align: justify;">
இதனை அடுத்து, குறித்த சந்தேகநபர் உடனடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify; ">&nbsp;அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-23T18:30:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[மாயமாக மறைந்த மகிந்தவுக்கு எதிரான 450 கோப்புகள்! 2 வருடங்களில் என்ன ஆனது..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/450-files-against-mahinda-missing-1787506237"></link>
            <id>https://tamilwin.com/article/450-files-against-mahinda-missing-1787506237</id>
            <summary type="text">கடந்த தேர்தல் காலத்தின்போது, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக 450 கோப்புகள் இருப்பதாக தெரிவித்து பிரசாரம் செய்த அரசாங்கம் தற்போது அதனை மற...</summary>
            <content type="html"><![CDATA[<p>கடந்த தேர்தல் காலத்தின்போது, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக 450 கோப்புகள் இருப்பதாக தெரிவித்து பிரசாரம் செய்த அரசாங்கம் தற்போது அதனை மறந்துவிட்டது என்று முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.</p><p> 

மக்கள் சந்திப்பொன்றின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.</p><h2>எங்கே மகிந்தவுக்கு எதிரான ஆதாரங்கள்&nbsp;</h2><p>
</p><p>
தொடர்ந்தும் தெரிவிக்கையில், </p><p>

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பெருந்தொகை இலஞ்சப் பணம் பெற்றதாகவும், அதனுடன் தொடர்புடைய காசோலைகளின் இலக்கங்கள் மற்றும் மகிந்தவுக்கு எதிராக 450 கோப்புகள் இருப்பதாக தெரிவித்து கடந்த தேர்தல் காலத்தில் இந்த அரசாங்கம் பிரசாரங்களை முன்வைத்து வந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/702baed3-3a69-491c-87d0-bc1f80ea1fed/26-6a8b3389bbbeb.webp' /></p><p> </p><p>

எனினும், ஆட்சிக்கு வந்து இரண்டு வருடங்களாகியுள்ள நிலையில் தற்போது அந்தப் போலி பிரசாரங்களையெல்லாம் இந்த அரசாங்கம் மறந்து விட்டது.
</p><p>
தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வர முன்னர் வெளியிட்ட எந்தவொரு அறிவிப்பையும் வாக்குறுதியையும் இதுவரை நிறைவேற்றவில்லை.
</p><p>
விவசாயிகளின் வாக்குகளால் ஆட்சிக்கு வந்த ஆட்சியாளர்கள், தற்போது விவசாயிகளை கசிப்பு குடிப்பவர்கள் என் கூறி அவமானப்படுத்துகின்றது என குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p>&nbsp;</p><p> 

</p>]]></content>
            <updated>2026-08-23T18:15:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[முச்சக்கர வண்டியை மோதித்தள்ளிய தொடருந்து! ஸ்தலத்திலேயே பலியான சாரதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/accident-involving-a-three-wheeler-and-a-train-1787506579"></link>
            <id>https://ibctamil.com/article/accident-involving-a-three-wheeler-and-a-train-1787506579</id>
            <summary type="text">மருதானையில் இருந்து புறப்பட்ட சாகரிகா தொடருந்தில் முச்சக்கர வண்டி ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்ததுடன் மற்றொருவர் பலத்த காயமடைந்துள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p>மருதானையில் இருந்து புறப்பட்ட சாகரிகா தொடருந்தில் முச்சக்கர வண்டி ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்ததுடன் மற்றொருவர் பலத்த காயமடைந்துள்ளார்.</p><p>

அலுத்கம, கணேகம புராண விகாரைக்கு அருகில் உள்ள தொடருந்து குறுக்குப்பாதையில் இன்று(23) பிற்பகல் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
</p><p>
இதன்போது, விபத்தில் முச்சக்கர வண்டியின் சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன், காயமடைந்த பயணி சிகிச்சைக்காக நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p><p></p><h2>போராட்டத்தில் ஈடுபட்ட&nbsp;பிரதேசவாசிகள் </h2><p>
</p><p>
அதனைதொடர்ந்து, குறித்த தொடருந்து குறுக்குப்பாதையில் எச்சரிக்கை மணிகளும் சமிக்ஞைகளும் மட்டுமே உள்ளதாகவும், பாதுகாப்பு தடுப்பு இல்லாததால் தொடர்ந்து விபத்துகள் நடப்பதாகவும் கூறி பிரதேசவாசிகள் கடலோர தொடருந்து பாதையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1e3372df-6e65-46fe-bc7e-69a1df62a28c/26-6a8b315fd1d4d.webp' /></p><p>
</p><p>
இதனால் தொடருந்து சேவைகள் தற்காலிகமாக தடைபட்ட நிலையில், காவல்துறையினர் தலையிட்டு தொடருந்து திணைக்கள அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.</p><p> 

அதன்படி, ஒரு வாரத்திற்குள் பிரச்சனைக்கு உரிய தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டு, கடலோர தொடருந்து சேவைகள் மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளதாக தெரிவருகிறது.</p><p>&nbsp;</p><p></p><h5><table class="table table-bordered"><tbody><tr><td><h5>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table></h5>]]></content>
            <updated>2026-08-23T17:45:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கைக்கு படையெடுத்துள்ள பெருந்தொகை சுற்றுலாப் பயணிகள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/tourist-arrivals-in-2026-1787505519"></link>
            <id>https://ibctamil.com/article/tourist-arrivals-in-2026-1787505519</id>
            <summary type="text">இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் (SLTDA) சமீபத்திய தகவல்களின்படி, இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்து இதுவரை 14.6 லட்சத்திற்கும் (1.46 மில்லியன்)...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் (SLTDA) சமீபத்திய தகவல்களின்படி, இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்து இதுவரை 14.6 லட்சத்திற்கும் (1.46 மில்லியன்) அதிகமான சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.</p><p> 

கடந்த ஜனவரி 1 முதல் ஓகஸ்ட் 18 வரையிலான காலப்பகுதியில் மொத்தம் 14,68,980 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக SLTDA தெரிவித்துள்ளது. இதில் ஓகஸ்ட் மாதத்தின் முதல் 18 நாட்களில் மட்டும் 1,25,562 சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர்.</p><p>
ஓகஸ்ட் மாதத்தில் அதிக சுற்றுலாப் பயணிகள் வருகை தந்த நாடுகளின் பட்டியலில் 27,884 வருகைகளுடன் இந்தியா முதலிடத்தில் உள்ளது. 13,980 சுற்றுலாப் பயணிகளுடன் பிரித்தானியா இரண்டாம் இடத்தையும், 8,776 வருகைகளுடன் பிரான்ஸ் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளன.</p><p></p><h2>அதிகபட்ச மாதாந்திர வருகை&nbsp;</h2><p>
இதேவேளை, இந்த ஆண்டில் இதுவரை இலங்கைக்கு அதிக சுற்றுலாப் பயணிகளை அனுப்பிய நாடாகவும் இந்தியாவே முன்னணியில் உள்ளது. இதுவரை இந்தியாவில் இருந்து 3,66,114 பயணிகள் வந்துள்ளனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/82d6fb96-4a1e-46d1-b9f9-38784f481020/26-6a8b2d61eff64.webp' /></p><p>

இதனைத் தொடர்ந்து பிரித்தானியாவில் இருந்து 1,44,381 பயணிகளும், சீனாவில் இருந்து 97,073 பயணிகளும் வருகை தந்துள்ளனர். மேலும், இந்த ஆண்டில் இதுவரை பதிவான மாதாந்திர வருகைகளில் பெப்ரவரி மாதத்திலேயே அதிகபட்சமாக 2,79,328 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.</p><p></p><p></p><h5><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table></h5>]]></content>
            <updated>2026-08-23T17:27:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[மோசடியில் தொடர்ந்து சிக்கும் நாமல் - 6 மணிநேரம் சி.ஐ.டி விசாரணையில் நடந்தது என்ன...!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/reason-behind-the-namal-s-investigation-1787494281"></link>
            <id>https://tamilwin.com/article/reason-behind-the-namal-s-investigation-1787494281</id>
            <summary type="text">ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச, நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜராகி 6 மணி நேரம் வாக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச, நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜராகி 6 மணி நேரம் வாக்குமூலம் வழங்கியதன் பின்னணி தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.</p><p> கடற்கரை ஓரத்தில் அமைந்துள்ள தங்காலை பே ஹோட்டல் கொள்வனவு தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைக்காக நாமல் அழைக்கப்பட்டிருந்தார்.
</p><p>
ராஜபக்ச குடும்பத்துடன் தொடர்புடைய CSN தொலைக்காட்சி ஊடாகப் ஈட்டப்பட்ட பணத்தை கொண்டே இந்த ஹோட்டல் வர்த்தகப் பரிமாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.</p><p> </p><h2><b>

வாக்குமூலம் பதிவு </b></h2><p>இதனடிப்படையிலேயே இந்த விசாரணைகள் இடம்பெற்றுள்ளன. வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதன் பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கிருந்து சென்றுள்ளார். </p><p>அத்துடன் நாமலுக்கு எதிராகப் புதிய குற்றச்சாட்டுகள் எதுவும் முன்வைக்கப்படவில்லை. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/74269162-f58b-44a6-9f60-c9ec104d4e02/26-6a8b2bf985a63.webp' /></p><p>முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகனான நாமல் ராஜபக்ச, இதற்கு முன்பும் பல்வேறு நிதி முறைகேடுகள் தொடர்பாக விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். </p><p>

Krish Lanka நிறுவனத்தால் ரக்பி விளையாட்டு மேம்பாட்டிற்காக வழங்கப்பட்ட 70 மில்லியன் ரூபாய் நிதியைத் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படுகின்றது. </p><p>

இந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் 2025ஆம் ஆண்டு ஜனவரியில் சட்டமா அதிபரால் அவருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. </p><p>மேலும் NR Consultancy நிறுவனத்துடன் தொடர்புடைய 15 மில்லியன் ரூபாய் பணமோசடி பரிமாற்றம் குறித்தும் விசாரணைகள் நடத்தப்பட்டன. </p><p>எவ்வாறாயினும், Gowers Corporation நிறுவனத்துடன் தொடர்புடைய மற்றொரு பணமோசடி வழக்கில் 2023ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கொழும்பு மேல்நீதிமன்றத்தால் நாமல் ராஜபக்ச குற்றச்சாட்டுகளில் இருந்து விடுதலை செய்யப்பட்டார். </p><p>அவரது சட்டத் தகுதிகள் மற்றும் இலங்கை சட்டக் கல்லூரியில் இணைந்து கொள்வது தொடர்பிலும் குற்றப் புலனாய்வு திணைக்களம் அண்மையில் விசாரணை ஒன்றை ஆரம்பித்திருந்தது. </p><p> எனினும் அந்த குற்றச்சாட்டுகளை நாமல் வன்மையாக மறுத்துள்ளார். இந்த புதிய அழைப்பு முற்றிலும் தங்காலை பே ஹோட்டல் பரிமாற்றம் தொடர்பான விசாரணைக்கு மட்டுமே என தகவல்கள் வெளியாகி உள்ளன. </p>]]></content>
            <updated>2026-08-23T17:21:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஒன்பது வளைவுப் பாலத்தில் வெடிப்பு ; சமூக ஊடக செய்தி தொடர்பில் வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/social-media-news-new-details-emerge-1787505203"></link>
            <id>https://jvpnews.com/article/social-media-news-new-details-emerge-1787505203</id>
            <summary type="text">எல்ல பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற &#039;ஒன்பது வளைவுப் பாலத்தில்&#039; புதிதாகப் பெரிய வெடிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் பாலம் எந்நேரமும் இடிந்து விழும் அப...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">எல்ல பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற 'ஒன்பது வளைவுப் பாலத்தில்' புதிதாகப் பெரிய வெடிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் பாலம் எந்நேரமும் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளதாகவும் சமூக வலைத்தளங்களில் பரவி வரும் காணொளி முற்றிலும் தவறானது எனக் கண்டறியப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; ">

சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வரும் காணொளி தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், அண்மைய நாட்களில் ஒன்பது வளைவுப் பாலத்தில் புதிய வெடிப்புகளோ அல்லது ஆபத்தான நிலைமையோ ஏற்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6a757119-8c44-407a-adff-483ebddbec15/26-6a8b2a3585f18.webp' /></p><h2 style="text-align: justify; ">பாலத்தில் நீர் கசிவு&nbsp;</h2><p style="text-align: justify; ">கடந்த 2025 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதத்தில் இப் பாலத்தில் நீர் கசிவு மற்றும் வெடிப்பு தொடர்பான தகவல்கள் பரவிய போது, தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் இலங்கை ரயில்வே திணைக்கள நிபுணர்கள் இணைந்து கள ஆய்வு மேற்கொண்டனர்.</p><p style="text-align: justify; ">&nbsp;அப்போது மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், பாலத்தின் கட்டமைப்பில் எந்தவிதமான வெடிப்புகளோ அல்லது ஆபத்தான குறைபாடுகளோ இல்லை என்பது தெளிவாகக் கண்டறியப்பட்டது.</p><p style="text-align: justify; margin-left: 25px;"></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">&nbsp;கடந்த ஆண்டு நிலவிய ஒரு செய்தியை மையமாக வைத்து, புதிதாக வெடிப்பு ஏற்பட்டுப் பாலம் ஆபத்தான நிலையில் இருப்பதாகச் சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் தகவல்கள் முற்றிலும் பொய்யானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-23T17:13:32+00:00</updated>
        </entry>
    </feed>
