<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-09-04T01:45:38+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை அதிகாரிகளால் தேடப்பட்டு வந்த இருவர் அபுதாபியிலிருந்து நாடு கடத்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/two-deportees-abu-dhabi-brought-back-to-sri-lanka-1788484985"></link>
            <id>https://tamilwin.com/article/two-deportees-abu-dhabi-brought-back-to-sri-lanka-1788484985</id>
            <summary type="text">இலங்கை பொலிஸாரால் தேடப்பட்டு வந்த இரு சந்தேகநபர்கள், அபுதாபியில் இருந்து நாடு கடத்தப்பட்டுள்ளனர்.நேற்று (03) கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நி...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை பொலிஸாரால் தேடப்பட்டு வந்த இரு சந்தேகநபர்கள், அபுதாபியில் இருந்து நாடு கடத்தப்பட்டுள்ளனர்.</p><p>நேற்று (03) கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.</p><p>போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத துப்பாக்கிகளை வைத்திருந்தமை உள்ளிட்ட குற்றச்செயல்கள் தொடர்பில் நீண்ட காலமாக தேடப்பட்டு வந்துள்ளனர்.</p><h2>கையடக்க தொலைபேசிகளில் சிக்கிய காணொளி</h2><p>
</p><p>இரு சந்தேகநபர்களும் ஐக்கிய அரபு இராச்சியத்தின் பாதுகாப்புப் பிரிவினரின் காவலில் இருந்தபோது, ஈரான் நடத்திய தாக்குதல்களில் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் ஆளில்லா வானூர்திகள் மற்றும் ஏவுகணைகள் தொடர்பான காணொளிகளை தமது கையடக்கத் தொலைபேசிகளில் வைத்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9ee6cc27-157a-4ca9-9b51-28575b4aadaa/26-6a9a2100af27c.webp' />&nbsp;</p><p>
</p><p>
நாடு கடத்தப்பட்ட இரு சந்தேகநபர்களும் 36 மற்றும் 37 வயதுடையவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>இவர்களிடம் மேலதிக வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டதையடுத்து, இருவரும் மேலதிக விசாரணைகளுக்காக பயங்கரவாத விசாரணைப் பிரிவு மற்றும் கொழும்பு தெற்கு பிரிவின் குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-04T01:38:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[முன்னாள் மனைவிக்கு நபர் செய்த மோசமான செயல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ex-husband-arrested-for-leaking-photos-1788485292"></link>
            <id>https://tamilwin.com/article/ex-husband-arrested-for-leaking-photos-1788485292</id>
            <summary type="text">கண்டியில் பெண்ணொருவரின் தகாத புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பரப்பிய சந்தேகநபர் ஒருவர், கைது செய்யப்பட்டுள்ளார். குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கண்டியில் பெண்ணொருவரின் தகாத புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பரப்பிய சந்தேகநபர் ஒருவர், கைது செய்யப்பட்டுள்ளார். </p><p>குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கணினி குற்ற விசாரணைப் பிரிவின் கண்டி உப அலுவலக அதிகாரிகளினால் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். </p><p>கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது, சந்தேகநபர் நேற்று கினிகத்தேனை பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p> </p><h2><b>பொலிஸார்&nbsp;விசாரணை</b></h2><p>கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 36 வயதுடைய கினிகத்தேனை பகுதியைச் சேர்ந்தவராகும்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8b0923f9-ae30-4483-aad5-f8404310bf25/26-6a9a20376b004.webp' /></p><p>சந்தேகநபர் முறைப்பாட்டாளருடன் திருமணம் செய்திருந்தார். எனினும் சட்டப்பூர்வமாக பிரிந்திருந்த நிலையில் இந்த மோசமான செயலில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p> இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைக் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-09-04T01:35:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பில் அதிகாலையில் பரபரப்பு - பெண்கள் மீது துப்பாக்கி சூடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/woman-injured-in-early-shooting-in-colpetty-1788484217"></link>
            <id>https://tamilwin.com/article/woman-injured-in-early-shooting-in-colpetty-1788484217</id>
            <summary type="text">கொழும்பு - கொள்ளுப்பிட்டியின் 6 வது ஒழுங்கை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் பெண் உட்பட இருவர் காயமடைந்துள்ளனர்.

இன்று அதிகாலை சு...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு - கொள்ளுப்பிட்டியின் 6 வது ஒழுங்கை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் பெண் உட்பட இருவர் காயமடைந்துள்ளனர்.
</p><p>
இன்று அதிகாலை சுமார் 3 மணியளவில் அந்த பகுதியில் அமைந்துள்ள தொடர்மாடிக் குடியிருப்புத் தொகுதியிலேயே இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
</p><p>
அடுக்குமாடிக் குடியிருப்பு வளாகத்தின் மேல் தளத்தில் இருந்த நபர் ஒருவர், வெளியே இருந்த இரண்டு பெண்களை நோக்கித் துப்பாக்கியால் சுட்டுள்ளார்.</p><p>
</p><h2><b>
துப்பாக்கி சூடு</b></h2><p>துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயமடைந்து சிகிச்சைக்காக கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b5e0266b-93c9-4a97-a0c7-a527bd40c2f2/26-6a9a1deda8785.webp' /></p><p>இந்தத் துப்பாக்கிச் சூடு தனிப்பட்ட காரணத்திற்காக நடத்தப்பட்டதாகவும், சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
</p><p>
இந்தச் சம்பவம் குறித்து கொழும்புப்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-09-04T01:25:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[எல்லை தாண்டிய மீன்படி! 09 இந்திய கடற்றொழிலாளர்கள் நிபந்தனை அடிப்படையில் விடுதலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/9-indian-fishermen-released-on-conditions-1788484670"></link>
            <id>https://ibctamil.com/article/9-indian-fishermen-released-on-conditions-1788484670</id>
            <summary type="text">இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட நிலையில் கடந்த ஜூலை மாதம் 22 ஆம் திகதி தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து கடற்படையினரால் கைது...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட நிலையில் கடந்த ஜூலை மாதம் 22 ஆம் திகதி தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து கடற்படையினரால் கைது செய்யப்பட்டு தொடர்ச்சியாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 09 இந்திய கடற்றொழிலாளர்களையும் விடுதலை செய்ய மன்னார் மேலதிக நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.</p><p>

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்த நிலையில் தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து இந்திய இழுவைப் படகு ஒன்றுடன் 9 இந்திய கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்கள் தலைமன்னார் கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.</p><p>
தலைமன்னார் கடற்படையினர் விசாரணைகளின் பின்னர் மன்னார் மாவட்ட கடற்தொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.</p><p></p><h2>நீதிமன்ற உத்தரவு</h2><p>
</p><p>
கடற்தொழில் திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளின் பின்னர் மன்னார் நீதிமன்றத்தில் முற்படுத்திய நிலையில் குறித்த 9 கடற்றொழிலாளர்களும் தொடர்ச்சியாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b862d3fb-6dfb-4d2a-ab88-133535d5c2ed/26-6a9a1c4043829.webp' /></p><p>
</p><p>
இந்த நிலையில் குறித்த 9 கடற்றொழிலாளர்களும் நேற்றையதினம் வியாழக்கிழமை (03) மன்னார் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டனர்.
</p><p>
இதன் போது விசாரணைகளை மேற்கொண்ட மேலதிக நீதிவான், 1 ஆம் மற்றும் 2 ஆம் குற்றச்சாட்டுக்களுக்கு 12 மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 10 வருட சிறை தண்டனையும், 3 ஆவது குற்றச்சாட்டுக்கு நபர் ஒருவருக்கு 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் குற்றப் பணமும் செலுத்த உத்தரவிட்டார்.</p><p>
</p><p>
மேலும் ஏற்கனவே இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்ட கடற்றொழிலாளர் ஒருவருக்கு இரண்டாவது முறையாக இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடித்த குற்றச்சாட்டுக்காக 25 ஆயிரம் ரூபாய் குற்றப்பணம் செலுத்தப்பட்ட நிலையில் மேலதிகமாக 2 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் செலுத்த நீதிமன்றம் உத்தரவிட்டது.
</p><p>
இந்த நிலையில் குறித்த 9 கடற்றொழிலாளர்களும் நிபந்தனையின் அடிப்படையில் மன்னார் நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-04T01:23:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பகுதியை உலுக்கிய துயரம் ; பாம்பின் விஷம் பட்ட நாவல் பழத்தால் பறிபோன சிறுவனின் உயிர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/boy-dies-after-eating-snake-poisoned-jamun-fruit-1788480955"></link>
            <id>https://jvpnews.com/article/boy-dies-after-eating-snake-poisoned-jamun-fruit-1788480955</id>
            <summary type="text">நிலத்தில் வீழ்ந்து கிடந்த பாம்பின் விஷம் பட்டதாக சந்தேகிக்கப்படும் நாவல் பழத்தை உண்ட 11 வயதுடைய சிறுவன் ஒருவர் உயிரிழந்த பரிதாபகரமான சம்பவம் நேற்று (0...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">நிலத்தில் வீழ்ந்து கிடந்த பாம்பின் விஷம் பட்டதாக சந்தேகிக்கப்படும் நாவல் பழத்தை உண்ட 11 வயதுடைய சிறுவன் ஒருவர் உயிரிழந்த பரிதாபகரமான சம்பவம் நேற்று (03) மாலை மட்டு வெல்லாவெளி பொலிஸ் பிரிவிலுள்ள பாலையடிவட்டை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக வெல்லாவெளி பொலிசார் தெரிவித்தனர்.
</p><p style="text-align: justify; ">

பாலையடிவட்டை வைத்தியசாலை வீதியைச் சேர்ந்த 11 வயதுடைய 37-ஆம் கிராமம் நவகிரி வித்யாலயத்தில் 6ம் ஆண்டில் கல்வி கற்று வந்த சிறுவனே இவ்வாறு பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/113d3016-3c97-4cf7-80d8-0c38a19d6844/26-6a9a0dbca725d.webp' /></p><h2 style="text-align: justify; ">பாம்பின் விஷம் பட்ட நாவற்பழம்</h2><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
குறித்த சிறுவனின் வீட்டிற்கு முன்னால் நின்ற நாவற்பழ மரத்தில் இருந்து நிலத்தில் வீழ்ந்து கிடந்த நாவற்பழத்தை சம்பவ தினமான நேற்று மாலை எடுத்து உண்டுள்ள நிலையில் சிறிது நேரத்தில் சிறுவன் மயங்கி வீழ்ந்ததையடுத்து அவரை உடனடியாக களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நிலையில் அவன் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாகவும் பாம்பின் விஷம் பட்ட நாவற்பழத்தை உண்டதால் உயிரிழந்துள்ளதாக பொலிசாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
இதனையடுத்து சடலத்தை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கான நடவடிக்கையை முன்னெடுத்து வருவதாக பொலிசார் தெரிவித்தனர்.

</p><p style="text-align: justify; ">இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லாவெளி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-04T01:21:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாள அனர்த்தத்தை முன்பே கணித்த கிறிஸ்தவ பாதிரியார்; வைரலாகும் வீடியோ]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/priest-who-predicted-nepal-disaster-1788475887"></link>
            <id>https://canadamirror.com/article/priest-who-predicted-nepal-disaster-1788475887</id>
            <summary type="text">நேபாளம் வெள்ளத்தால் பாதிக்கப்படும் எனப் பேரிடருக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பே கிறிஸ்தவ பாதிரியார் ஒருவர் கணித்துள்ள விடியோ இணையத்தில் வைரலாகி வருகிறத...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">நேபாளம் வெள்ளத்தால் பாதிக்கப்படும் எனப் பேரிடருக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பே கிறிஸ்தவ பாதிரியார் ஒருவர் கணித்துள்ள விடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.</p><p style="text-align: justify; ">



திபெத்தில் ஏற்பட்ட பனிப்பாறை வெடிப்பால், நேபாளத்தின் வடக்கு ரசுவா மாவட்டத்தில் உள்ள போடே கோஷி ஆற்றில் கடந்த ஒகஸ்ட் 26 ஆம் திகதி மாபெரும் வெள்ளம் ஏற்பட்டு அங்குள்ள கட்டமைப்புகள் மற்றும் கட்டடங்கள் அடித்துச் செல்லப்பட்டன.</p><p style="text-align: justify; "><br></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
இந்தப் பேரிடரில், இதுவரை 1,200-க்கும் அதிகமானோர் பலியாகியுள்ள நிலையில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டினர் உட்பட சுமார் 4,200 பேர் காணாமல் போனதாகத் தெரிவிக்கப்படுகிறது.
</p><p style="text-align: justify; ">


 

 

இந்த நிலையில்,&nbsp; யூடியூப் பக்கத்தில் கிறிஸ்தவ பாதிரியார் ஒருவர் கடந்த ஜூன் மாதம் வெளியிட்ட விடியோவில், நேபாளம் வெள்ளத்தால் பாதிக்கப்படப் போவதாகக் கணித்துக் கூறியுள்ளார்.
</p><p style="text-align: justify; ">


இதுபற்றி, கடந்த ஜூன் 12 ஆம் திகதி அவர் வெளியிட்டுள்ள விடியோவில்,



“இன்று ஜூன் 12 2026. நேபாளத்தில் ஒரு பெரிய காட்டுத் தீ எரிவதை நான் பார்க்கிறேன். நேபாளத்தின் வனப்பகுதிகள் குறித்து எச்சரிக்கையாக இருக்கவும்.</p><p style="text-align: justify; "> நேபாளத்தைத் தாக்கும் நிலநடுக்கங்களை நான் பார்க்கிறேன். இந்த நிலநடுக்கம் 7 முதல் 8 ரிச்டர் அளவில் சக்திவாய்ந்தவையாக இருக்கும். இதனால், சிலர் பலியாவதையும் நான் பார்க்கிறேன்.</p><p style="text-align: justify; ">

நான் வெள்ளத்தைப் பார்க்கிறேன், தண்ணீரைப் பார்க்கிறேன் நேபாளத்தின் வீடுகள் நீரில் மூழ்கியுள்ளன. நேபாளத்துக்காகப் பிரார்த்தனை செய்யுங்கள்” எனக் கூறியுள்ளார்.
</p><p style="text-align: justify; ">


இந்தப் பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள நேபாளத்துக்கு இந்தியா உள்ளிட்ட நாடுகள் உதவிக்கரம் நீட்டி வரும் நிலையில், வெள்ளம் ஏற்படுவதை முன்கூட்டியே கணித்த பாதிரியாரின் விடியோ இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-09-04T01:20:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடக ராசிக்குள் நுழையும் கேது ; 18 வருஷத்திற்கு பிறகு மிகப்பெரிய அதிர்ஷ்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/kethu-peyarchi-bring-luck-for-3-zodiac-1788484695"></link>
            <id>https://jvpnews.com/article/kethu-peyarchi-bring-luck-for-3-zodiac-1788484695</id>
            <summary type="text">வேதஜோதிட சாஸ்திரப்படி கேது பகவான் தான் ஒருவருக்கு ஞானமும், அருளும் வழங்கக்கூடியவர். மேலும், ஒருவருக்கு ஆன்மீகத்தில் முன்னேற்றம் மற்றும் திடீர் அதிர்ஷ்...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">வேதஜோதிட சாஸ்திரப்படி கேது பகவான் தான் ஒருவருக்கு ஞானமும், அருளும் வழங்கக்கூடியவர். மேலும், ஒருவருக்கு ஆன்மீகத்தில் முன்னேற்றம் மற்றும் திடீர் அதிர்ஷ்டம் வாழ்க்கையில் உயர்ந்த முன்னேற்றம் ஆகியவைற்றை வழங்கக்கூடியவர் கேது பகவான்.
</p><p style="text-align: justify; ">
அந்த வகையில், கேது பகவான் 2026 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் திகதி கடக ராசிக்குள் நுழைகிறார். இந்த நிகழ்வு 2028 ஆம் ஆண்டு வரை உள்ளது. அதாவது கடகத்தில் கேது பகவான் சுமார் 18 மாதம் இருக்கப்போகிறார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6e429a91-b997-4cf9-a649-4bfbd3264723/26-6a9a1c58614ef.webp' /></p><h2 style="text-align: justify; ">எந்த ராசியினர்&nbsp;</h2><p style="text-align: justify; ">


இதனால் சில ராசிகளுக்கு வாழ்க்கையில்&nbsp; அதிர்ஷ்டமும், திடீர் வாய்ப்புகள் தேட வரப்போகிறது.&nbsp;</p><p style="text-align: justify; "><b>
ரிஷபம்:</b>
ரிஷப ராசிக்கு கேதுவின் இந்த மாற்றம் இவர்களுக்கு மனதில் தைரியமும், தன்னம்பிக்கையும், தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றம் கொண்டு வந்து சேர்க்கும்.

இந்த காலகட்டங்களில் எதிர்பாராத வாய்ப்புகளும், எதிர்பார்த்த விஷயங்களும் தடை இன்றி நடக்கும். மேலும், பூர்வீக தொடர்பான தடைகள் எல்லாம் இவர்களுக்கு விலகி செல்லும்.</p><p style="text-align: justify; "><b>துலாம்:</b> துலாம் ராசிக்கு இந்த காலகட்டம் இவர்களுக்கு சமுதாயத்தில் நல்ல மதிப்பும் பெயரும் புகழும் கிடைக்கபோகின்றது. வேலையில் முன்னேற்றம் மற்றும் பதவி உயர்வு பெறவேண்டும் என்று நினைப்பவருக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும். கலை துறையில் இருப்பவர்களுக்கு பொற்காலம் தேடி வரப்போகிறது. இருப்பினும் வேலையில் உயர் அதிகாரிகளிடம் கவனமாக பேசுவது அவசியம்.&nbsp;</p><p>
</p><p style="text-align: justify; "><b>
கன்னி:
</b>கன்னி ராசிக்கு இந்த காலகட்டம் இவர்களுக்கு திருமணம் தொடர்பான விஷயங்களில் இருந்து வந்த மனக்கசப்புகளை போக்கப்போகிறது.

தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றமும் புதிய தொழில் தொடங்கும் வாய்ப்புகளும் தேடி வரப்போகிறது. இருப்பினும் பொருளாதார தொடர்பான விஷயங்களில் மிகவும் நிதானமாக கையாள்வது அவசியம்.</p><p style="text-align: justify; "><br></p>]]></content>
            <updated>2026-09-04T01:18:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[தங்கத்தை வாங்கி தொடர்ந்து சேமிக்கும் சீனா., விற்கும் நிலையில் ரஷ்யா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/china-leads-global-gold-buying-in-july-1788476098"></link>
            <id>https://news.lankasri.com/article/china-leads-global-gold-buying-in-july-1788476098</id>
            <summary type="text">China leads global gold buying in July: சீனா தொடர்ந்து தங்கத்தை வாங்கி கையிருப்பை அதிகரித்துவருகிறது.

 சீன&amp;nbsp;மத்திய வங்கிஉலகின் பல மத்திய வங்கிக...</summary>
            <content type="html"><![CDATA[<p>China leads global gold buying in July: சீனா தொடர்ந்து தங்கத்தை வாங்கி கையிருப்பை அதிகரித்துவருகிறது.
</p><h2>
 சீன&nbsp;மத்திய வங்கி</h2><p>உலகின் பல மத்திய வங்கிகள், குறிப்பாக சீனாவின் People’s Bank of China (PBoC), ஜூலை மாதத்திலும் தொடர்ந்து தங்கத்தை வாங்கியுள்ளதாக World Gold Council (WGC) தெரிவித்துள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5ce3ee1a-9169-4634-9300-9bf9454d0fec/26-6a99fac3bc987.webp' /></p><h2>&nbsp;20 டன் தங்கம்</h2><p>ஜூலையில் மொத்தமாக 23 டன் தங்கம் வாங்கப்பட்டதாக அறிக்கை கூறுகிறது. அதில் சீனா மட்டும் 20 டன் தங்கம் வாங்கியுள்ளது.
</p><p>
மே 2026 முதல் சீனாவின் தங்க வாங்கும் நடவடிக்கை வேகமடைந்துள்ளது. தொடர்ந்து 21 மாதங்களாக சீனா தங்கத்தை தனது கையிருப்பில் சேர்த்துக் கொண்டிருக்கிறது.
</p><p>
தற்போது, சீனாவின் தங்க கையிருப்பு 2,366 டன்களாக உயர்ந்துள்ளது. இது உலகளவில் ஆறாவது பெரிய கையிருப்பு ஆகும்.</p><p></p><h2>மற்ற நாடுகள்</h2><p>

போலந்து 8 டன் தங்கம் வாங்கி, இந்த ஆண்டில் மொத்தமாக 90 டன் சேர்த்துள்ளது. போலந்து தனது இலக்கான 700 டன் கையிருப்பை அடைய முயற்சிக்கிறது.
</p><p>
மற்ற நாடுகளில், கசகஸ்தான், மலேசியா, போலிவியா ஆகியவை தலா 1 டன் தங்கம் வாங்கியுள்ளன. கசகஸ்தான் தனது மொத்த கையிருப்பில் 75 சதவீதம் தங்கமாக வைத்துள்ளது.
</p><p></p><h2>தொடர்ந்து தங்கத்தை விற்பனை செய்து வரும் ரஷ்யா </h2><p>ஆனால், ரஷ்யா தொடர்ந்து தங்கத்தை விற்பனை செய்து வருகிறது. ஜூலையில் 6 டன் தங்கத்தை விற்றுள்ளது. இதுவரை 2026-இல் 50 டன் தங்கத்தை விற்றுள்ளது. ரஷ்யாவின் மொத்த கையிருப்பு 2,277 டன்களாக குறைந்துள்ளது. </p><p>துருக்கி மற்றும் உஸ்பெகிஸ்தான் தலா 1 டன் தங்கத்தை விற்றுள்ளன.

உலகளாவிய அரசியல் மற்றும் பொருளாதார சூழ்நிலைகள் தங்க சந்தையை பாதித்துள்ளன. </p><p>2024 முதல் மத்திய வங்கிகளின் தங்க வாங்குதல் தங்க விலையை உயர்த்தியது. ஆனால், ஈரான் போருக்குப் பிறகு தங்கத்தின் விலை 20 சதவீதம் குறைந்துள்ளது.
</p><p>
ஜூலை மாத இறுதியில் தங்கம் ஒரு அவுன்ஸ் 4,444 டொலர் விலையில் விற்பனையாகியது. அமெரிக்கா-ஈரான் மோதல், வட்டி விகித உயர்வு, மற்றும் எரிசக்தி பொருட்களில் முதலீடு ஆகியவை தங்க விலையை பாதித்துள்ளன.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-04T01:07:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாள பேரழிவு: 2015 நிலநடுக்கத்தை விட அதிக உயிரிழப்பு ஏற்படும் அச்சம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/nepal-flood-toll-may-exceed-2015-quake-1788484069"></link>
            <id>https://news.lankasri.com/article/nepal-flood-toll-may-exceed-2015-quake-1788484069</id>
            <summary type="text">Nepal flood toll may exceed 2015 earthquake: நேபாளத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை குறித்து அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ளது.

நேபாளம் மற்றும் திப...</summary>
            <content type="html"><![CDATA[<p>Nepal flood toll may exceed 2015 earthquake: நேபாளத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை குறித்து அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ளது.
</p><p>
நேபாளம் மற்றும் திபெத்தில் ஏற்பட்ட வெள்ளப் பேரழிவு, 2015-இல் நடந்த கோர்கா நிலநடுக்கத்தை விட அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தும் அபாயம் இருப்பதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3d31ef31-eb9a-44a0-bfca-ef9b6bd2c319/26-6a9a1a62681b5.webp' /></p><p>நேபாளத்தின் Trishuli Bazaar பகுதியில், ஹைட்ரோபவர் திட்டங்கள் அமைந்துள்ள இடங்களில் வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக சுரங்கங்கள் சேறும் மணலும் நிரம்பி, நூற்றுக்கணக்கானோர் சிக்கியுள்ளனர். </p><p>ஆகஸ்ட் 31-ஆம் திகதி கடைசியாக உயிருடன் மீட்கப்பட்டனர்.</p><p>
</p><p></p><p>நேபாள தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்ததாவது:

செப்டம்பர் 3-ஆம் திகதி வரை 1,259 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் 5,083 பேர் காணாமல் போயுள்ளனர். மொத்தம் 6,342 பேர் உயிரிழந்திருக்கலாம் அல்லது காணாமல் போயிருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது.</p><p>

சீனாவின் திபெத் பகுதியில் 21 பேர் உயிரிழந்ததாகவும், 541 பேர் காணாமல் போயுள்ளதாகவும் அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. </p><p>இதனால், நேபாளம் மற்றும் திபெத் சேர்த்து 1,280 பேர் உயிரிழப்பு, 5,624 பேர் காணாமல் போனதாக அதிகாரப்பூர்வ எண்ணிக்கை உள்ளது.

ஆனால், திபெத் பகுதியில் நிலைமை குறித்து தனிப்பட்ட மதிப்பீடு செய்வது கடினம். </p><p></p><p>Reporters Without Borders அமைப்பு, “திபெத் தகவல் கருப்பு துளை (information black hole)” எனக் குறிப்பிட்டுள்ளது.
</p><p>
Independent Power Producers’ Association of Nepal அமைப்பின் செயலாளர் Bijay M Bhattarai கூறியதாவது: “அதிகாரப்பூர்வ பதிவுகள், சுற்றுலா விசா பட்டியல், நிறுவன ஊழியர் பதிவுகள் ஆகியவற்றின் அடிப்படையில் மட்டுமே உயிரிழப்பு கணக்கிடப்படுகிறது. ஆனால், ஆற்றங்கரையில் வசிக்கும் குடிசை மக்கள், சட்டவிரோத மணல் சுரங்கத் தொழிலாளர்கள், தற்காலிக வாகன ஓட்டிகள் போன்றவர்கள் இதில் சேர்க்கப்படவில்லை.”
</p><p>
இதனால், உண்மையான உயிரிழப்பு எண்ணிக்கை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டதை விட அதிகமாக இருக்கக்கூடும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.</p><p>

2015-இல் நேபாளத்தில் ஏற்பட்ட கோர்கா நிலநடுக்கத்தில் 8,800 பேர் உயிரிழந்தனர். தற்போதைய வெள்ளப் பேரழிவு அதனை விட அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-04T01:06:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[உச்சம் கொடுக்கவுள்ள சூரியன்! வடக்கு, கிழக்கை சுட்டெரிக்கப்போகும் வெயில்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/today-weather-alert-sri-lanka-1788483489"></link>
            <id>https://ibctamil.com/article/today-weather-alert-sri-lanka-1788483489</id>
            <summary type="text">சூரியனின் தெற்கு நோக்கிய நகர்வின் காரணமாக இன்று மதியம் சுமார் 12.09 மணியளவில் நிட்டம்புவ, அல்கம, மல்வானை, அரநாயக, மீககஹிவுல மற்றும் பனங்காடு போன்ற இடங...</summary>
            <content type="html"><![CDATA[<p>சூரியனின் தெற்கு நோக்கிய நகர்வின் காரணமாக இன்று மதியம் சுமார் 12.09 மணியளவில் நிட்டம்புவ, அல்கம, மல்வானை, அரநாயக, மீககஹிவுல மற்றும் பனங்காடு போன்ற இடங்களுக்கு மேலாக சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.</p><p>

கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் இன்று பகல் வேளையில் அதிகரித்த வெப்பநிலையை மனித உடலினால் உணரக்கூடியதாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><h2>பலத்த மழை&nbsp;</h2><p>
இதேவேளை, கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் பல இடங்களிலும் அத்துடன் பொலனறுவை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். சில இடங்களில் 50 mm இலும் கூடிய ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் எனவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bf3f9cb7-e4f6-49b6-bbcb-5bb7ec2d044e/26-6a9a19099246a.webp' /></p><p>
சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.
</p><p>
இடியுடன் கூடிய மழை பெய்கின்ற வேளைகளில் பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-04T01:04:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் அதிகாலையில் பெண்கள் மீது துப்பாக்கிசூடு ; தீவிரமாகும் விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/gun-attack-on-women-in-sri-lanka-at-dawn-1788483831"></link>
            <id>https://jvpnews.com/article/gun-attack-on-women-in-sri-lanka-at-dawn-1788483831</id>
            <summary type="text">கொள்ளுப்பிட்டி 6ஆவது ஒழுங்கையில் அமைந்துள்ள வீடமைப்புத் தொகுதியொன்றில் இன்று (04) அதிகாலை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. 

இந்த ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">கொள்ளுப்பிட்டி 6ஆவது ஒழுங்கையில் அமைந்துள்ள வீடமைப்புத் தொகுதியொன்றில் இன்று (04) அதிகாலை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. </p><p style="text-align: justify; ">

இந்த துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.&nbsp; &nbsp;</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fad76f21-4dca-4138-bec0-d89ecc7cd46c/26-6a9a18f8bf4ec.webp' /></p><h2 style="text-align: justify; ">&nbsp;துப்பாக்கிச் சூடு&nbsp;</h2><p style="text-align: justify; ">இன்று அதிகாலை 3 மணியளவில் இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
</p><p style="text-align: justify; ">
கொள்ளுப்பிட்டியில் 6வது தெருவில் அமைந்துள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு வளாகத்தின் மேல் மாடியில் இருந்த நபர் ஒருவர், வெளியே இருந்த இரண்டு பெண்களை நோக்கி துப்பாக்கிச்சூட்டை மேற்கொண்டுள்ளார்.</p><p style="text-align: justify; ">
துப்பாக்கிச் சூட்டில்&nbsp; பெண் காயமடைந்ததாகவும், அவர் சிகிச்சைக்காக கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">தனிப்பட்ட காரணங்களுக்காக இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p style="text-align: justify; "> 

கொழுப்பிட்டி பொலிசார் இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-04T01:03:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழ் இளைஞர்கள் கடத்தி கொல்லப்பட்ட வழக்கில் முன்னிலையான பெண் சட்டத்தரணிக்கு இந்த அரசிலும் பாரிய நெருக்கடி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/lawyer-achala-seneviratne-attorney-general-1788483145"></link>
            <id>https://tamilwin.com/article/lawyer-achala-seneviratne-attorney-general-1788483145</id>
            <summary type="text">&amp;nbsp;தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் பாதிக்கப்பட்ட தாய்மார்களுக்காக இலவசமாக வாதாடி வரும் சட்டத்தரணி அச்சலா செனவிரத்னவுக்கு எதிராக இ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் பாதிக்கப்பட்ட தாய்மார்களுக்காக இலவசமாக வாதாடி வரும் சட்டத்தரணி அச்சலா செனவிரத்னவுக்கு எதிராக இந்த அரசாங்கத்திலும் அவர் மீது வழக்குத் தொடரப்பட்டு, அவரைச் சிறையில் அடைத்து, பல்வேறு துன்புறுத்தல்களைச் செய்வதற்கான தீட்டப்பட்ட திட்டம் ஒன்று கசிந்துள்ளது.</p><p>
சட்டமா அதிபர் திணைக்களத்தின் தவறுகள் குறித்துத் துணிச்சலாக நேருக்கு நேர் பேச கூடிய ஒரு பெண் தான் சட்டத்தரணி அச்சலா செனவிரத்ன.</p><p>அவருக்கு எதிராக அவரை பாதுகாக்க வேண்டிய தரப்பே செயற்பட முற்படுகிறது. 
சூழ்ச்சிக்கு மேல் சூழ்ச்சி செய்கிறார்கள், ஒரு புறம் அரசாங்கத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்த, மறுபுறம் மக்களைக் கடும் விரக்திக்கு உள்ளாக்க. இதுவும் ஒரு வகையான 'டீப் ஸ்டேட்' (Deep State)ஆக இருக்கலாம். </p><h2>
</h2><p></p><h2>பழிவாங்க காத்திருக்கும் குழுக்கள்</h2><p>“டீப் ஸ்டேட்” என்பது அரசியல்வாதிகள் செய்யும் சூழ்ச்சிகளில் மட்டும் இயங்குவதில்லை. இவை பல்வேறு அரச நிறுவனங்களுக்குள், நீதிமன்றங்களுக்குள், பொலிஸ் திணைக்களத்திற்குள், சட்டமா அதிபர் திணைக்களத்திற்குள் என எந்தவொரு அரச நிறுவனத்திற்குள்ளும் இயங்க முடியும்.
</p><p>கோட்டாபய ராஜபக்ச பாதுகாப்பு செயலாளராக இருந்த காலத்தில் தமிழ் இளைஞர்களை கடத்தி கொலைசெய்த வசந்த கரன்னாகொட, ரவீந்திர விஜேகுணவர்தன போன்றவர்களைச் சட்டமா அதிபர் திணைக்களம் விடுவித்தது.</p><p>ரவீந்திர விஜேகுணவர்தனவிற்குத் தூதுவர் பதவி வழங்கி, மைத்திரிபால சிறிசேனவின் காலத்தில் பாகிஸ்தானிற்கு அனுப்பி வைத்திருந்த போது, கடந்த காலங்களில் அச்சலா தனது வழக்கில் ரவீந்திர விஜேகுணவர்தனவை ஒரு சந்தேக நபராகப் பெயரிடுமாறு கோரினார்.
</p><p>அவர் இன்று சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு எதிராகப் பேசி, எதிராக ஆர்ப்பாட்டம் செய்ததன் விளைவாக,இன்று கடும் வெறுப்புக்கு உள்ளாகியுள்ளார். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/689e707e-e749-49c6-b75a-632fdf092428/26-6a9a164b0c1f9.webp' /></p><p>இன்று அவரைச் சுற்றி வளைத்து, தாக்கத் தொடங்கியுள்ளார்கள். ஏனெனில் சமூக நீதி மற்றும் சட்டத்தைப் பற்றி அவர் பேசுவதால்.அவர் யாருடைய பணத்திற்கும் சோரம் போகாத ஒரு பெண்மணி. </p><p>
கோட்டாபய காலத்தில் எந்த நேரத்தில் துப்பாக்கிச் சூடு நடக்குமோ என்ற பயத்தில் வாழ்ந்த ஒரு பெண் சட்டத்தரணி.உயிருக்கும் மரணத்திற்கும் இடையில் வாழ்க்கையைக் கழித்த ஓர் இரும்புப் பெண்மணி. இன்று என்ன நடந்துள்ளது? அதை விட இன்று மோசமாகியுள்ளது. </p><p>தொழில்ரீதியாக அவருக்குப் பாதிப்பு ஏற்படும் வகையில் பல்வேறு குழுக்களைப் பயன்படுத்தி, முக்கியமாக அதற்கு ஏற்ற சில பொலிஸ் அதிகாரிகளைப் பயன்படுத்தி, மிகவும் கேவலமான முறையில் தாக்குதலுக்கு மேல் தாக்குதல் நடத்த, வழக்குகளில் சிக்க வைக்கக் கடுமையான முயற்சி நடக்கிறது.&nbsp;</p><p></p><p></p><p><br><br><b><i>You May Like THis Video..<br></i></b></p><p><b><i><br></i></b></p><p><b><i><br><br></i></b><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/jnKI70IglD4" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><i><br></i></b></p>]]></content>
            <updated>2026-09-04T00:56:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Bavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மட்டக்களப்பில் பாம்பின் விஷம் பட்ட நாவல் பழத்தை உண்ட சிறுவனுக்கு நேர்ந்த பரிதாபம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/boy-dies-after-eating-snake-poisoned-fruit-1788481513"></link>
            <id>https://ibctamil.com/article/boy-dies-after-eating-snake-poisoned-fruit-1788481513</id>
            <summary type="text">மட்டக்களப்பு, வெல்லாவெளியில் நிலத்தில் வீழ்ந்து கிடந்த பாம்பின் விஷம் பட்டதாக சந்தேகிக்கப்படும் நாவல்
பழத்தை உண்ட 11 வயதுடைய சிறுவன் ஒருவர் உயிரிழந்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>மட்டக்களப்பு, வெல்லாவெளியில் நிலத்தில் வீழ்ந்து கிடந்த பாம்பின் விஷம் பட்டதாக சந்தேகிக்கப்படும் நாவல்
பழத்தை உண்ட 11 வயதுடைய சிறுவன் ஒருவர் உயிரிழந்த பரிதாபகரமான சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.</p><p>மட்டு வெல்லாவெளி காவல்துறை&nbsp;பிரிவிலுள்ள பாலையடிவட்டை பிரதேசத்தில்&nbsp;நேற்று வியாழக்கிழமை (03) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p>பாலையடிவட்டை வைத்தியசாலை வீதியைச் சேர்ந்த 11 வயதுடைய 37-ஆம் கிராமம் நவகிரி
வித்யாலயத்தில் 6ம் ஆண்டில் கல்வி கற்று வந்த ரொ.சஞ்சீவ் என்ற சிறுவனே
இவ்வாறு உயிரிழந்துள்ளார்.</p><p></p><h2>மேலதிக விசாரணை</h2><p>
குறித்த சிறுவனின் வீட்டிற்கு முன்னால் நின்ற நாவற்பழ மரத்தில் இருந்து
நிலத்தில் வீழ்ந்து கிடந்த நாவற்பழத்தை சம்பவ தினமான நேற்று மாலை எடுத்து
உண்டுள்ள நிலையில் சிறிது நேரத்தில் சிறுவன் மயங்கி வீழ்ந்ததையடுத்து அவரை
உடனடியாக களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நிலையில் அவன்
ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f9477a83-840d-4d34-9d35-44e465dee214/26-6a9a16922445e.webp' /></p><p>இதன்படி, பாம்பின் விஷம் பட்ட நாவற்பழத்தை உண்டதால்
உயிரிழந்துள்ளதாக காவல்துறையினரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது</p><p>
இதனையடுத்து சடலத்தை பிரேத பரிசோதனைக்கு உட் படுத்துவதற்கான நடவடிக்கையை
முன்னெடுத்து வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
</p><p>
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லாவெளி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-04T00:53:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாரிஸில் 'சென்' நதிக்கரையில் பரபரப்பை கிளப்பிய மோதல் ; பிடிபட்ட ஆயுததாரி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/clash-sparks-tension-on-seine-riverbank-in-paris-1788483123"></link>
            <id>https://canadamirror.com/article/clash-sparks-tension-on-seine-riverbank-in-paris-1788483123</id>
            <summary type="text">பாரிஸின் 1-ஆவது வட்டாரத்தில் உள்ள &#039;சென்&#039; (Seine) நதிக்கரையில், கத்தி ஏந்திய ஒருவருக்கும் சுமார் பத்து பேர் கொண்ட குழுவொன்றுக்கும் இடையே நேற்று (03) இர...</summary>
            <content type="html"><![CDATA[<p>பாரிஸின் 1-ஆவது வட்டாரத்தில் உள்ள 'சென்' (Seine) நதிக்கரையில், கத்தி ஏந்திய ஒருவருக்கும் சுமார் பத்து பேர் கொண்ட குழுவொன்றுக்கும் இடையே நேற்று (03) இரவு பாரிய மோதலொன்று வெடித்துள்ளது.
</p><p>நேற்று அதிகாலை சுமார் 1 மணியளவில் நதிக்கரையிலுள்ள கடையொன்றின்&nbsp; வெளிப்புற இருக்கைப் பகுதியில்&nbsp; இந்த வன்முறைச் சம்பவம் அரங்கேறியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f5b1a5bc-fdde-47af-9484-46296f139c3d/26-6a9a163533ff4.webp' /></p><p> கதிரைகள் மற்றும் இரும்புக்கம்பிகளைக் கொண்டு இந்தத் தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டதாக நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
</p><p>இந்த வட்டகையில் மாதத்தில் பல தடவைகள், குறிப்பாக வார இறுதி நாட்களில் இவ்வாறான மோதல்கள் வழமையாக நடைபெறுவதாக அப்பகுதிப் பணியாளர்கள் தெரிவிக்கின்றனர். </p><p>ஆயினும், இம்முறை நபரொருவர் கத்தியுடன் காணப்பட்டமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><p>
ஆயுததாரியைக் கண்டதும் அச்சமடைந்த வாடிக்கையாளர்களும் சுற்றுலாப் பயணிகளும் சிற்றுண்டிச்சாலையின் உட்பகுதிக்குள் தஞ்சம் புகுந்துள்ளனர்.</p><p>இந்தச் சம்பவத்தின் போது அங்கிருந்த வாடிக்கையாளர்கள் சிலர் துணிச்சலாகச் செயற்பட்டு, குறித்த ஆயுததாரியை மடக்கிப் பிடித்துக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். </p><p>இதனையடுத்து அங்கு விரைந்த காவல்துறையினர் , கத்தி ஏந்திய அந்த நபரைக் கைது செய்துள்ளனர்&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-04T00:52:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[சலேவிற்கு எதிராக கருணாவின் வாக்குமூலம்: நீதிமன்றில் அம்பலமான திடுக்கிடும் தகவல்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/karuna-tells-about-sallay-1788457241"></link>
            <id>https://tamilwin.com/article/karuna-tells-about-sallay-1788457241</id>
            <summary type="text">தேசிய புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே தொடர்பில் கருணா பல திடுக்கிடும் தகவல்களை அம்பலப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உயிர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>தேசிய புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே தொடர்பில் கருணா பல திடுக்கிடும் தகவல்களை அம்பலப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
</p><p>
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலின் பின்னணியில் இருந்த சதித்திட்டம் குறித்த வழக்கு விசாரணைகள் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டபோது இந்த தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><h2>திடுக்கிடும் தகவல்கள்</h2><p>

உயிர்த்த ஞாயிறு விசாரணை தொடர்பாக முன்னாள் பிரதியமைச்சரும், தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதிகளில் ஓருவருமான விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா ) சிஐடியினருக்கு வழங்கிய மிக உணர்வுபூர்வமான வாக்குமூலத்தின் விபரங்கள் நேற்று நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d0707941-ee83-4b2a-92aa-c5d979e04cfe/26-6a99b11aacf4d.webp' /></p><p>
</p><p>
அதில், சுரேஷ் சலே இராணுவப் புலனாய்வுப் பிரிவில் இருந்த காலத்தில், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து பிரிந்து வந்த ஆயுதமேந்திய உறுப்பினர்களைத் தங்களது அரசியல் தேவைகளுக்காகப் பயன்படுத்திப் பல்வேறு சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டதாகக் கருணா அம்மான் தெரிவித்துள்ளார். </p><p>

மேலும், இல்லாத நபர்களின் பெயர்களைப் பட்டியலிட்டு, அவர்களுக்கு இராணுவப் புலனாய்வுப் பிரிவு மற்றும் அரச நிதியிலிருந்து சம்பளம் வழங்கப்பட்டதாகக் காட்டிப் பாரிய நிதி மோசடிகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் அம்பலப்படுத்தியுள்ளார்.
</p><p>
கருணா&nbsp; லண்டனுக்குச் செல்வதற்காகச் சிங்களப் பெயர் கொண்ட போலி கடவுச்சீட்டையும், அதற்கான விசா வசதிகளையும் சுரேஷ் சலேயே ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார் என குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
 கருணா லண்டன் சென்றடைந்த பின்னர், சுரேஷ் சலேயும் அங்கு சென்று, கருணாவின் இருப்பிடத்தை உறுதி செய்து கொண்டுள்ளார் என கருணா தெரிவித்துள்ளார். </p><p>

அதன் பின்னர், லண்டன் பொலிஸாருக்குக் கருணாவின் போலி கடவுச்சீட்டு விபரங்களை வழங்கி, அவரை அங்கு கைது செய்து சிறையிலடைக்க சுரேஷ் சலே திட்டமிட்டுச் செயல்பட்டதாகக் கருணா&nbsp; தனது வாக்குமூலத்தின் மூலம் திடுக்கிடும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார் என சிங்கள இணைய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.</p><h2>கருணாவின் வாக்குமூலம்</h2><p>
</p><p>
இதேவேளை, இந்த வழக்கின் மூன்றாவது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டுள்ள சுரேஷ் சலே, விசாரணைகளுக்கு முறையாக ஒத்துழைப்பு வழங்காமல் வேண்டுமென்றே தவிர்த்து வருவதாகச் சட்டமா அதிபர் திணைக்களம்; நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.</p><p>

கடந்த ஜூன் 5 ஆம் திகதி முதல் அவர் உணவை உட்கொள்ள மறுத்து, தனது உடல்நிலையை பலவீனப்படுத்த முயற்சிப்பதாகவும், இதன் காரணமாகக் கடந்த மூன்று மாதங்களாக அவரிடம் எவ்வித வாக்குமூலமும் பெற முடியாதுபோயுள்ளதாகவும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் குற்றஞ்சாட்டியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ccd5863b-091f-456f-b846-d4c339dc4875/26-6a9a16233d8ab.webp' /></p><p>
</p><p>
தற்போது விசேட அதிரடிப்படைப் பாதுகாப்பில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் சுரேஷ் சலேயை, மேலும் அங்கு தடுத்து வைத்து சிகிச்சை அளிக்க வேண்டுமா இல்லையா என்பது குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு வைத்தியசாலை பணிப்பாளருக்கு நீதவான் பசன் அமரசிங்க உத்தரவிட்டுள்ளார்.</p><p> 

அத்துடன், சுரேஷ் சலே தனது கைத்தொலைபேசி மற்றும் கணினிகளின் கடவுச்சொற்களை வழங்க தொடர்ந்து மறுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது தடுப்புக் காவல் காலம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p>சலே தொடர்பில் கருணா அம்மான் நீதிமன்றில் குற்றம் சுமத்தியதாக சிங்கள இணைய தளத்தில் வெளியிடப்பட்ட தகவல்கள் தொடர்பில் கருணா தரப்பில் எவ்வித கருத்துக்களும் இதுவரையில் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p>YOU MAY LIKE THIS VIDEO</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/MGfXDBgbP70" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-09-04T00:51:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிளிநொச்சியில் 22 வயது இளைஞனின் உயிரை பறித்த சம்பவம் ; கதறும் உறவுகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/incident-claims-life-of-22-year-old-in-kilinochchi-1788482588"></link>
            <id>https://jvpnews.com/article/incident-claims-life-of-22-year-old-in-kilinochchi-1788482588</id>
            <summary type="text">உருத்திரபுரம் இந்துக் கல்லூரி பாடசாலைக்கு அண்மித்த பகுதியில் பயணித்த மோட்டார் சைக்கிள் வேக கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த பனை மரத்துடன் மோதி விபத...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">உருத்திரபுரம் இந்துக் கல்லூரி பாடசாலைக்கு அண்மித்த பகுதியில் பயணித்த மோட்டார் சைக்கிள் வேக கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த பனை மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானது.
</p><p style="text-align: justify; ">
விபத்தில் படுகாயம் அடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டியான இளைஞன் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/02734a6b-0143-47e1-91d3-4054d1c33f39/26-6a9a141dc5029.webp' /></p><p style="text-align: justify; ">கிளிநொச்சி உதயநகர் பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய&nbsp; இளைஞனே குறித்த விபத்தில் பரிதாபகரமான உயிரிழந்துள்ளார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">

விபத்து தொடர்பாக கிளிநொச்சி பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-04T00:43:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[இன்று கைது செய்யப்படுவாரா நாமல்..! பாதுகாப்புக்காக கொழும்பில் கூடப்போகும் ஆதரவாளர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-appear-ciaboc-over-srilankan-airlines-probe-1788472812"></link>
            <id>https://tamilwin.com/article/namal-appear-ciaboc-over-srilankan-airlines-probe-1788472812</id>
            <summary type="text">நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச இன்று(4) காலை 9 மணிக்கு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைக்கப்பட்டுள்ளார்.

 இதேவேளை, நாமல் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச இன்று(4) காலை 9 மணிக்கு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைக்கப்பட்டுள்ளார்.</p><p>

 இதேவேளை, நாமல் ராஜபக்ச
தனக்கு எதிராக 12-ஆம் திகதிக்கு முன்னர் கைது நடவடிக்கை எடுக்கப்படலாம் என முன்னதாகக் குறிப்பிட்டிருந்தார்.
</p><p>
இலங்கை விமான சேவை தொடர்பான மோசடி அல்லது அவுஸ்திரேலிய ஊடகமொன்று வெளியிட்ட ஊழல் குற்றச்சாட்டுகள் (அம்பாந்தோட்டை வைத்தியசாலை திட்டம்) தொடர்பாக விசாரணைகளுக்காக இவர் அழைக்கப்பட்டிருக்கலாம்&nbsp; என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p>

அவர் ஆணைக்குழுவில் முன்னிலையாகும்போது பதற்றமான சூழல் நிலவக்கூடும் என்றும், அவருடைய ஆதரவாளர்கள் கொழும்பில் கூடத் தயாராகி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p>

அவுஸ்திரேலிய ஊடகத்தின் Four Corners ஆவணப்படத்தில், அம்பாந்தோட்டை வைத்தியசாலை கட்டுமானத் திட்டத்தில் பெரும் நிதி முறைகேடுகள் இடம்பெற்றதாகக் குற்றம் சாட்டப்பட்டது.

 இதில் பல மில்லியன் டொலர் பணப்பரிமாற்றங்கள் முறையற்ற வகையில் இடம்பெற்றதாகக் கூறப்படுகிறது.</p><p>

 நிமல் பெரேரா (Nimal Perera) என்பவரிடமிருந்து 60 மில்லியன் ரூபாயைப் பெற்ற விவகாரம் தொடர்பாக நாமல் ராஜபக்ச மீது குற்றச்சாட்டுகள் உள்ளன.</p><p> ரக்பி போட்டித் தொடரை நடத்துவதற்காக இந்தப் பணம் பெறப்பட்டதாக அவர் கூறினாலும், அதில் முறைகேடுகள் நடந்ததாக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
</p><p>&nbsp;கடந்த காலங்களில் பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து அவர் நீதிமன்றத்தில் முன்னிலையாகி வந்துள்ளார்.</p><p>

நாமல் ராஜபக்ச இந்த அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் மறுத்து வருவதுடன், இவை அரசியல் பழிவாங்கும் நோக்கம் கொண்டவை என்றும் கூறி வருகிறார்.</p><p>

இன்று(4) இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் அவர் முன்னிலையாகவுள்ள சூழலில், இவை மீண்டும் பேசுபொருளாகியுள்ளன.</p><p>

இந்த விடயங்கள் தொடர்பான முழுமையான விடயங்களை எடுத்து வருகின்றது NewsInsightTamil நிகழ்ச்சி..&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/tmeEO-Dq2ww" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-04T00:40:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானின் ஆட்சி விரைவில் சரியும்! இஸ்ரேல் பிரதமர் பகிரங்க எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/netanyahu-said-iran-will-fall-soon-1788473568"></link>
            <id>https://ibctamil.com/article/netanyahu-said-iran-will-fall-soon-1788473568</id>
            <summary type="text">அமெரிக்கா மீண்டும் தாக்குதல்களைத் தொடங்கியுள்ள நிலையில், ஈரானின் ஆட்சி முன்னெப்போதையும் விட பலவீனமாக உள்ளது என்றும், அது விரைவில் வீழ்ந்துவிடும் என்று...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்கா மீண்டும் தாக்குதல்களைத் தொடங்கியுள்ள நிலையில், ஈரானின் ஆட்சி முன்னெப்போதையும் விட பலவீனமாக உள்ளது என்றும், அது விரைவில் வீழ்ந்துவிடும் என்றும் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
</p><p>
இஸ்ரேலிய இராணுவத் தலைவர்களுடனான நிகழ்வொன்றில் உரையாற்றிய அவர், ஈரானிய ஆட்சி தற்போது தள்ளாடிக் கொண்டிருப்பதாகவும், தனது பிழைப்பிற்காகப் போராடி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
மேலும், இந்த ஆட்சியை வீழ்த்தி அச்சுறுத்தலை ஒரேயடியாக அகற்றுவது சாத்தியமானது என்றும், அது கைக்கு எட்டும் தூரத்தில் உள்ளது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.</p><p></p><h2>பதிலடித் தாக்குதல்</h2><p>

ஈரானின் மதகுருமார்களால் நடத்தப்படும் அரசைப் பல தசாப்தங்களாகத் தனது நாட்டிற்கு அச்சுறுத்தலாக கருதி வந்த நெதன்யாகு, பெப்ரவரி மாத இறுதியில் அமெரிக்காவுடன் இணைந்து ஈரான் மீது கூட்டுத் தாக்குதலைத் தொடங்கினார்.இருப்பினும், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஏப்ரல் மாதம் திடீரென போர் நிறுத்தத்தை அறிவித்திருந்தார். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/465df1d2-19a3-436f-94e6-527d658fef37/26-6a9a1136d4586.webp' /></p><p>தற்போது அமெரிக்கா மேலும் பொருளாதார அழுத்தத்தை விதித்து தாக்குதல்களை மீண்டும் தொடங்கியுள்ளதால், ஈரான் வளைகுடா நாடுகள், ஜோர்டான் மற்றும் ஈராக்கின் குர்திஸ்தான் பகுதிகள் மீது பதிலடித் தாக்குதல் நடத்தியபோதிலும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தவில்லை.</p><h2>இஸ்ரேலின் இராணுவ வலிமை</h2><p>

ஈரான் இஸ்ரேலைத் தாக்காதது தற்செயலானது அல்ல என்றும், இஸ்ரேலின் இராணுவ வலிமையையும் உறுதியையும் அவர்கள் அறிந்துள்ளதாலேயே மற்ற நாடுகளைத் தாக்கும் ஈரான் தம்மைத் தாக்கத் தயங்குவதாகவும் நெதன்யாகு சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/02e3758f-07d9-4873-acf5-bc005bbe157c/26-6a9a1137ae076.webp' /></p><p><i>Image Credit: AFP</i></p><p>
</p><p>
எதிர்வரும் ஒக்டோபர் 27 பொதுத் தேர்தலுக்கு முன்னதாக, கருத்துக்கணிப்புகளில் நெதன்யாகு பின்தங்கியுள்ளதாகவும், ஈரான் விவகாரத்தில் அவர் தோல்வியடைந்துவிட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வரும் நிலையிலும் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> WHATSAPP CHANNEL </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-04T00:37:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Bavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறுவனின் உயிரைப் பறித்த நாவற்பழம் - மட்டக்களப்பில் சோகம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/boy-dies-eating-suspected-venom-tainted-fruit-1788481574"></link>
            <id>https://tamilwin.com/article/boy-dies-eating-suspected-venom-tainted-fruit-1788481574</id>
            <summary type="text">நிலத்தில் விழுந்து கிடந்த நாவற்பழத்தை உண்ட 11 வயது சிறுவன் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்த சம்பவம் மட்டக்களப்பு, வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலைய...</summary>
            <content type="html"><![CDATA[<p>நிலத்தில் விழுந்து கிடந்த நாவற்பழத்தை உண்ட 11 வயது சிறுவன் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்த சம்பவம் மட்டக்களப்பு, வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலையடிவட்டை பகுதியில் இடம்பெற்றுள்ளது.
</p><p>
குறித்த சம்பவமானது நேற்றையதினம் (03) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><h2>11 வயது
சிறுவன்</h2><p>
</p><p>
பாலையடிவட்டை வைத்தியசாலை வீதியைச் சேர்ந்த, 37ஆம் கிராமம் நவகிரி வித்தியாலயத்தில் 6ஆம் ஆண்டில் கல்வி பயின்று வந்த ரொ. சஞ்சீவ் என்ற 11 வயது சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/15fe789e-d689-42a0-b497-3350e173fcf8/26-6a9a1296dcb04.webp' /></p><p>

சம்பவ தினமான நேற்று மாலை, சிறுவனின் வீட்டிற்கு முன்னால் இருந்த நாவல் மரத்திலிருந்து கீழே விழுந்து கிடந்த நாவற்பழம் ஒன்றை சிறுவன் எடுத்து உண்டுள்ளார்.
</p><p>
இதனையடுத்து சிறிது நேரத்தில் சிறுவன் மயங்கி விழுந்த நிலையில், உடனடியாக களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.</p><h2>ஆரம்பகட்ட விசாரணைகள்</h2><p>
</p><p>
எனினும், வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் முன்னரே சிறுவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
நிலத்தில் கிடந்த நாவற்பழத்தின் மீது பாம்பின் விஷம் பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாகவும், அது தொடர்பில் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c380020e-4cea-4b28-b24f-37cbca7ec364/26-6a9a1297b44ee.webp' /></p><p>
</p><p>
சிறுவனின் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லாவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-04T00:36:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[2.5 லட்சம் பாலஸ்தீனியர்களை வெளியேற்ற திட்டம் ; இஸ்ரேல் அமைச்சர் கருத்தால் சர்ச்சை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/israel-plan-to-expel-250-000-palestinians-1788482136"></link>
            <id>https://canadamirror.com/article/israel-plan-to-expel-250-000-palestinians-1788482136</id>
            <summary type="text">இஸ்ரேலின் தீவிர வலதுசாரி தேசிய பாதுகாப்பு அமைச்சர் இட்டாமர் பென் கிவிர், காசா பகுதியில் இருந்து பாலஸ்தீனியர்களை வெளியேற்றி வெளிநாடுகளுக்கு அனுப்பும் த...</summary>
            <content type="html"><![CDATA[<p>இஸ்ரேலின் தீவிர வலதுசாரி தேசிய பாதுகாப்பு அமைச்சர் இட்டாமர் பென் கிவிர், காசா பகுதியில் இருந்து பாலஸ்தீனியர்களை வெளியேற்றி வெளிநாடுகளுக்கு அனுப்பும் திட்டத்தை முன்வைத்தார்.</p><p>

கடும் போட்டி நிலவிய இஸ்ரேலிய தேர்தல்களுக்கு முன்னதாக பேசிய அவர், இந்த திட்டத்தின்படி முதல் ஆண்டில் காசாவில் இருந்து 250,000 பாலஸ்தீனியர்களும், அதனை தொடர்ந்து அடுத்த ஆறு ஆண்டுகளில் மீதமுள்ள சுமார் இரண்டு மில்லியன் மக்களும் வெளியேறுவார்கள் என்று கூறினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/220d085b-9dfb-428b-9cd1-e64f5f9b038b/26-6a9a125a3aebd.webp' /></p><p>

</p><p>
"இது யதார்த்தமானதுதான்," என்று கூறிய பென் கிவிர், அந்த நாடுகளின் பெயர்களைக் குறிப்பிடாமல், சில நாடுகள் காசா மக்களை ஏற்றுக்கொள்ள "தயாராக" இருப்பதாக கூறினார்.
</p><p>
"காசாவின் மக்கள் வெளியேறுவதை நாம் ஊக்குவிக்க வேண்டும்," என்று கூறிய அவர், இந்த திட்டம் பாலஸ்தீனியர்களை அவர்களின் நிலத்தை விட்டு வெளியேறும்படி கட்டாயப்படுத்துவதை குறிக்கவில்லை என்று தாம் நம்புவதாக மேலும் கூறினார்.
</p><p>
ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசத்தில் பொதுமக்களை வலுக்கட்டாயமாக இடம்பெயர செய்வது, ஜெனீவா உடன்படிக்கைகளின்படி ஒரு போர்க்குற்றமாகக் கருதப்படுகிறது.


</p><p>
பாலஸ்தீனியர்களை பொறுத்தவரை, அவர்களை அவர்களின் நிலத்தில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றும் எந்தவொரு முயற்சியும், 1948-இல் இஸ்ரேல் உருவாக்கப்பட்டபோது அவர்கள் பெருமளவில் இடம்பெயர்ந்த 'நக்ஃபா' அல்லது பேரழிவை நினைவூட்டும்.
</p><p>
பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் வலதுசாரி கூட்டணியில் முக்கிய அமைச்சராக உள்ள பென் கிவிர் தெரிவிக்கும் ஆத்திரமூட்டும் கருத்துக்கள், தொடர்ந்து சர்வதேச கண்டனத்தை ஈர்த்து வருகின்றன.
</p><p>
அடுத்த அரசாங்கம் அமையும்போது, ​​தனது வலதுசாரி ஜனரஞ்சக யூத சக்தி கட்சி "குடியேற்றப் பொறுப்புள்ள ஒரு அமைச்சகத்தை" கோரும் என்று பென் கிவிர் கூறினார். </p><p>மேலும், தனது திட்டம் "ஒன்றரை வருட உழைப்பின் விளைவு மற்றும்... உறுதியானது" என்றும் அவர் குறிப்பிட்டார்.</p>]]></content>
            <updated>2026-09-04T00:35:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[என்னது முத்துவின் காதலியா, போட்டோ பார்த்து ஷாக் ஆகும் ரவி.. சிறகடிக்க ஆசை லேட்டஸ்ட் புரொமோ]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/siragadikka-aasai-3rd-september-to-6th-september-1788449921"></link>
            <id>https://cineulagam.com/article/siragadikka-aasai-3rd-september-to-6th-september-1788449921</id>
            <summary type="text">சிறகடிக்க ஆசைசிறகடிக்க ஆசை, விஜய் தொலைக்காட்சியில் டிஆர்பியில் டாப்பில் ஒளிபரப்பாகி வரும் சீரியல். இன்றைய எபிசோட் கதையில், மீனா-ஸ்ருதி இருவரும் இரவு ய...</summary>
            <content type="html"><![CDATA[<h2>சிறகடிக்க ஆசை</h2><p>சிறகடிக்க ஆசை, விஜய் தொலைக்காட்சியில் டிஆர்பியில் டாப்பில் ஒளிபரப்பாகி வரும் சீரியல். </p><p>இன்றைய எபிசோட் கதையில், மீனா-ஸ்ருதி இருவரும் இரவு யாருக்கும் தெரியாமல் பிரியாணி சாப்பிட்டதால் அது ஒத்துக்கொள்ளாமல் வாந்தி எடுத்துள்ளனர். </p><p>இதனை தவறாக புரிந்துகொண்ட குடும்பத்தினர் இருவரும் கர்ப்பமாக இருக்கிறார்கள் என கொண்டாட கடைசியில் அவர்கள் பிரியாணி சாப்பிட்டதால் ஆனது என கூற முத்து-ரவி கவலைப்படுகிறார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8cffc724-e2ef-48ce-a499-aa2054da7814/26-6a9998eb535b6.webp' /></p><p>
</p><p>அடுத்து முத்துவின் தொழிலுக்கு பிரச்சனை கொடுக்கும் வகையில் ஒரு வில்லன் என்ட்ரி கொடுக்கிறார். அவர் என்னென்ன செய்யப்போகிறாரோ என்பதை பொறுத்திருந்து காண்போம்.</p><h2>புரொமோ
</h2><p>தற்போது சிறகடிக்க ஆசை சீரியலின் புதிய புரொமோ வெளியாகியுள்ளது. </p><p>அதில், மனோஜிற்கு வீட்டில் ஏதோ எடுக்கும் போது பணம் கிடைக்கிறது. முத்து-மீனாவிற்கு, அண்ணாமலையின் பழைய காதல் கடிதம் கிடைக்கிறது, அதை முத்து அனைவர் முன்பும் படிக்க ஆசைப்படுகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a015fb84-3315-4c03-b1cf-5a473563960e/26-6a9998ea829a5.webp' /></p><p> </p><p>இன்னொரு பக்கம், ரவி கப்போர்டில் தேடும் போது முத்து இளம் வயதில் ஒரு பெண்ணுடன் எடுத்த புகைப்படத்தை பார்த்து ஷாக் ஆகிறார். விரைவில் முத்துவின் பிளாஷ்பேக் கதை வரும் என தெரிகிறது, யார் அந்த பெண், காதலியா என்பதை பொறுத்திருந்து காண்போம்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/2twpuynC-38" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-09-04T00:30:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதல்: தமிழீழ விடுதலைப் புலிகள் வழங்கிய துல்லியமான தகவல்கள்!அதிர்ச்சியளிக்கும் வாக்குமூலம்... -]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/easter-attack-in-sri-lanka-army-intelligence-unit-1788480966"></link>
            <id>https://tamilwin.com/article/easter-attack-in-sri-lanka-army-intelligence-unit-1788480966</id>
            <summary type="text">உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலின் பின்னணியில் இருந்த சதித்திட்டம் குறித்த வழக்கு விசாரணைகள் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் நடைபெற்றும் வரும...</summary>
            <content type="html"><![CDATA[<p>உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலின் பின்னணியில் இருந்த சதித்திட்டம் குறித்த வழக்கு விசாரணைகள் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் நடைபெற்றும் வரும் நிலையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகள் இரகசியத் தகவல்கள் வழங்கியதாக எங்கும் வெளிவராத மயிர்க் கூச்செறியும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
</p><p>நேற்று முன்தினம் இந்தச் சம்பவத் தொடர்பில் இராணுவ புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் வழங்கிய விசேட வாக்குமூலத்தில் இதுவரை கேட்டிராத புலனாய்வுத் தகவல் பரிமாற்றங்கள் குறித்த விபரங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
</p><p>வழக்கு விசாரணைகள் நடைபெற்று வருவதால் அவர்களின் உண்மையான பெயர்களை வெளிப்படுத்தாமல் புனைப்பெயர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது ஒரு விசாரணையின்போது சாட்சிகளிடமிருந்து பெறப்பட்டு நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட தகவல்கள் மட்டுமே.</p><h2>
</h2><p></p><h2>தகவல் சேகரிக்கும் புலனாய்வு அதிகாரி</h2><p>இராணுவ புலனாய்வுப் பிரிவின் 1வது படைப்பிரிவைச் சேர்ந்த கோப்ரல் தர அதிகாரி ஒருவர் இந்த வாக்குமூலத்தை வழங்கியுள்ளார். </p><p>இந்தியாவின் சிறப்புப் பொலிஸ் பிரிவு அதிகாரி ஒருவர், இராணுவத் தகவல் வழங்கி (informer) ஒருவர் ஊடாக, தாக்குதலுக்கு முன்னர் சஹ்ரான் பற்றிய தகவல்களை எவ்வாறு வழங்கினார் என்பது பற்றிய புதிய தகவல்கள் இதில் அடங்கியுள்ளன.
</p><p>இந்தக் கோப்ரல் அதிகாரியை நாம் "பிரதீப்" எனக் குறிப்பிடுவோம். பிரதீப்பின் கடமை, தகவல் வழங்குபவர்களை இயக்கி புலனாய்வுத் தகவல்களைச் சேகரிப்பதாகும். </p><p>இதற்காக அவர் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தகவல் தொடர்பாளர்கள் அடங்கிய வலையமைப்பு ஒன்றை வைத்திருந்தார். 
2016 ஆம் ஆண்டு, இந்தியாவில் இருந்து இலங்கை வந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற்புலிகளின் முன்னாள் போராளி ஒருவரை பிரதீப் சந்திக்கிறார். </p><p>அவரை நாம் "சார்லஸ்" எனக் குறிப்பிடுவோம். சார்ல்ஸை பிரதீப் தனது தகவல் வழங்குபவராக மாற்றிக்கொண்டு, அவருக்கென தனி கோப்பு ஒன்றை பராமரிக்கத் தொடங்குகிறார்.
</p><p>சார்ல்ஸுக்கு இந்தியாவில் விரிவான தகவல் வலையமைப்பு இருந்தது. தமிழக பொலிஸின் சிறப்புப் பிரிவான 'Q' பிரிவின் பிரதானியான ஈஸ்வரமூர்த்தி என்பவருடன் சார்லஸுக்கு நெருங்கிய தொடர்பு இருந்தது. </p><p>
சார்ல்ஸ் மூலமாக, பிரதீப் இந்திய 'Q' பிரிவு பிரதானி ஈஸ்வரமூர்த்தியுடன் தொலைபேசியில் உரையாடும் வாய்ப்பைப் பெறுகிறார். இதன் மூலம் சட்டவிரோதமாக இந்தியாவிற்குத் தப்பிச் செல்லும் நபர்கள், முகாம்களில் உள்ள அகதிகள் மற்றும் இந்தியாவில் ஒளிந்துள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் பற்றிய தகவல்கள் பிரதீப்பிற்குப் கிடைக்கத் தொடங்குகின்றன.
</p><h2>இந்தியாவில் இருந்து வந்து முதல் தகவல்</h2><p>2018 ஆம் ஆண்டின் பிற்பகுதியில், 'Q' பிரிவு பிரதானி ஈஸ்வரமூர்த்தி, சார்லஸ் ஊடாக ஒரு முக்கிய எச்சரிக்கையை விடுக்கிறார்:
மட்டக்களப்பில் சஹ்ரான் மௌலவி என்பவர் தீவிரவாதக் கருத்துக்களைப் பரப்பி வருவதாகவும், அவரது காணொளிகள் வலையொளி தளத்தில் (YouTube) உள்ளதாகவும் கூறி அதற்கான இணைப்பை (link) வழங்குகிறார்.
</p><p>சஹ்ரான் மிகவும் ஆபத்தான தீவிரவாதி என்றும், எதிர்காலத்தில் அவராலும் அவரது குழுவினராலும் பெரும் அச்சுறுத்தல் ஏற்படலாம் என்றும் எச்சரிக்கிறார்.
ஐ.எஸ். (ISIS) அமைப்பின் பயிற்சி கையேடுகள், </p><p>குண்டு தயாரிக்கும் முறைகள் மற்றும் தற்கொலைத் தாக்குதல் பற்றிய தகவல்கள் அடங்கிய அரபு மொழிப் புத்தகம் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வாட்ஸ்அப் (WhatsApp) மூலம் பகிரப்பட்டு வருவதாகவும் தகவல் அளிக்கிறார்.
</p><p>இந்த எச்சரிக்கையைத் தொடர்ந்து, பிரதீப் தனது கட்டளை அதிகாரிக்கு விபரங்களை தெரிவிக்கிறார். பின்னர், சார்லஸின் தொலைபேசி ஊடாக பிரதீப்பின் கட்டளை அதிகாரியும், இந்திய 'Q' பிரிவு அதிகாரி ஈஸ்வரமூர்த்தியும் ஆங்கிலத்தில் நேரடியாகப் பேசுகின்றனர்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/15b2b0ab-d818-42dc-a5e5-70a05eb47d73/26-6a9a0dc927dbc.webp' /></p><p>இதன் தீவிரத்தை உணர்ந்த கட்டளை அதிகாரி, சஹ்ரான் குறித்து உடனடியாக ஒரு முழுமையான அறிக்கையைத் தயாரித்து இராணுவ புலனாய்வு இயக்குனருக்கு (Director of Military Intelligence) அனுப்புமாறு பிரதீப்பிற்கு உத்தரவிடுகிறார். </p><p>அதன்படி அறிக்கை தயாரிக்கப்பட்டு, அதிகாரியின் கையொப்பத்துடன் அனுப்பி வைக்கப்படுகிறது. 
அதேவேளை, தனது ஏனைய தகவல் தொடர்பாளர்கள் ஊடாகவும் இந்தச் சஹ்ரான் என்ற தீவிரவாதி குறித்துத் தேடிப் பார்த்தபோது, </p><p>மன்னாரில் உள்ள தனது மற்றொரு தகவல் தொடர்பாளர் மூலம் பிரதீப்பிற்கு ஒரு புலனாய்வுத் தகவல் கிடைக்கிறது. சஹ்ரான் கடல் வழியே இந்தியாவிற்குத் தப்பிச் சென்று மீண்டும் இலங்கைக்கு வந்துள்ளதாகவும், </p><p>அவர் இலங்கையிலிருந்து தப்பிச் செல்ல முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் என்ற அரசியல்வாதியின் உதவி கிடைத்துள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டது.
</p><p>இது குறித்து இராணுவ புலனாய்வு பிரிவுக்கு (DMI) அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டபோது, ரிஷாத் பதியுதீனின் பெயரை நேரடியாகக் குறிப்பிடாமல் "பலமிக்க அரசியல்வாதி ஒருவர்" என்றே குறிப்பிடப்பட்டிருந்தது. (இது நல்லாட்சி அரசாங்கத்தின் காலப்பகுதியில் நடந்ததாகக் கருதப்படுகிறது).
</p><h2>வவுணதீவு சம்பவத்தின் உண்மைத் தன்மை</h2><p>2018 நவம்பர் 30ஆம் திகதி மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் சோதனைச்சாவடியில் கடமையிலிருந்த இரண்டு பொலிஸார் படுகொலை செய்யப்பட்டு, அவர்களின் துப்பாக்கிகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
</p><p>இச்சம்பவம் நடந்த அன்றைய தினம் காலையிலேயே, தகவல் தொடர்பாளரான சார்லஸ் இராணுவ புலனாய்வு அதிகாரி பிரதீப்பைத் தொடர்புகொள்கிறார். </p><p>"நேற்று மட்டக்களப்பில் நடந்த சம்பவம் பற்றிக் கேள்விப்பட்டீர்களா?" என வினவுகிறார். அதற்கு, "தமிழக 'Q' பிரிவு பிரதானி ஈஸ்வரமூர்த்தி என்னிடம் இவ்வாறு கூறினார்; </p><p>இத்தாக்குதலை நாம் ஏற்கனவே பேசிவந்த சஹ்ரானின் குழுவினரே நடத்தியுள்ளனர்" எனச் சார்லஸ் தெரிவிக்கிறார்.
உடனடியாக, இராணுவ புலனாய்வு கோப்ரல் பிரதீப், சஹ்ரான் குறித்து ஏற்கனவே தயாரித்த அறிக்கையை எடுத்துக்கொண்டு முகாமின் சி.ஓ. (CO - Commanding Officer) இடம் சென்று காண்பிக்கிறார்.</p><p>அதற்கு சி.ஓ., "இது குறித்து மேலும் ஆராயுங்கள்" எனக் கூறிய போதிலும், மேலதிக விரிவான வழிகாட்டல்கள் எதையும் வழங்கவில்லை.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/29894d6f-036d-4834-9f36-2639d5a65830/26-6a9a0dc9e0815.webp' /></p><p>இதனைத் தொடர்ந்து, இராணுவ புலனாய்வு பிரிவின் மாதாந்த மறுஆய்வுக் கூட்டத்தில் 
வவுணதீவு சம்பவத்தை தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினர்களே செய்திருப்பார்கள் என இராணுவ புலனாய்வு பிரிவு சந்தேகித்ததால், பிரதீப்பின் கட்டளை அதிகாரி, </p><p>"இச்சம்பவம் சஹ்ரான் தரப்பால் அல்ல, தமிழீழ விடுதலைப்புலிகள் தரப்பாலேயே செய்யப்பட்டது என சந்தேகிக்கப்படுகிறது. 
இதை பிரதீப் தனது தகவல் வழங்கி சார்லஸிடம் கூறியபோது, சார்லஸ் அதனை மறுக்கிறார். </p><p>கடற்புலிகளின் முன்னாள் உறுப்பினரான சார்லஸ், "இதில் தேடுவதற்கு எதுவுமில்லை. தமிழீழ விடுதலைப் புலிகள் ஒருபோதும் பொலிஸாரை இப்படிக் கொடூரமான முறையில் கொல்ல மாட்டார்கள். </p><p>இவ்வாறான கொடூரமான படுகொலைகளை முஸ்லிம் தீவிரவாதிகளே செய்வார்கள்" எனத் தெரிவிக்கிறார். இந்தத் தகவலும் பிரதீப்பினால் தனது கட்டளை அதிகாரிக்குத் தெரிவிக்கப்பட்டது.
</p><p>தற்போது வெளிவந்துள்ள இந்த வாக்குமூலத்தின் மூலம், சஹ்ரான் குழுவே இத்தாக்குதலை நடத்தியது என்ற தகவல் இராணுவ புலனாய்வுப் பிரிவிற்கு முன்கூட்டியே கிடைத்திருந்த போதிலும், இராணுவ புலனாய்வுப் பிரிவு தகுந்த நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு மற்றொரு கோணத்தில் இங்கு உறுதிப்படுத்தப்படுகிறது.
</p><h2>குண்டு வெடிப்பின் பின்னர்</h2><p>குண்டு வெடித்த பின்னர் கோப்ரல் தனது முகாமில் உள்ள அதிகாரிகளுக்குத் தெரிவித்த கருத்து. அதாவது, சார்ல்ஸ் என்பவர் "உங்களுக்குத் தகவல் கூறியும் நீங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை, இப்போது குண்டுகள் வெடித்துள்ளன, சஹ்ரான் ஷாங்க்ரி-லா ஹோட்டலில் இறந்துவிட்டான், மற்றவர்களும் இறந்துவிட்டார்கள்" எனக் கூறியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
</p><p>அதன் பிறகு,இந்த அணியைச் சேர்ந்த மேலும் 10 பேர் மட்டக்களப்பு, சாய்ந்தமருதுப் பகுதியில் இருக்கிறார்கள். அவர்கள் இந்தியாவுக்குத் தப்பிச் செல்லத் தயாராக இருக்கிறார்கள் இந்த அனைத்துத் தகவல்களும் இந்தியாவின் தமிழ்நாடு காவல்துறையின் 'Q' பிரிவின் பிரதானியான ஈஸ்வரமூர்த்தி என்பவரிடமிருந்தே வந்ததாகப் பதிவாகியுள்ளது. </p><p>ஈஸ்வரமூர்த்தி தனக்குக் கூறியதாகவே சார்லஸ் இந்தத் தகவல்களைத் தெரிவிக்கிறார்.
இவ்வாறு இந்தியாவிலிருந்து ஈஸ்வரமூர்த்தி என்ற அதிகாரி, தனது தகவல் வழங்குநரான சார்லஸ் மூலமாக வழங்கிய தகவல்கள் 100% சரியானது என்பதை இந்த இராணுவக் கோப்ரல் இப்போது உறுதிப்படுத்தியுள்ளார். </p><p>"இவ்வளவு தகவல்கள் கிடைத்திருந்தும் அதைப் பயன்படுத்தத் தவறியதால் இந்தச் தொடர் சம்பவங்களைத் தடுத்துநிறுத்த முடியாமல் போனது குறித்து மிகுந்த வருத்தமடைகிறேன்" என்றும் அவர் கூறுகிறார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-04T00:24:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுவிட்சர்லாந்தில் பனிப்பாறைகள் உருகுவதை தடுக்க கம்பளி போர்வை - விஞ்ஞானிகள் புதிய முயற்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/swiss-wool-covers-aim-to-save-glaciers-1788481356"></link>
            <id>https://news.lankasri.com/article/swiss-wool-covers-aim-to-save-glaciers-1788481356</id>
            <summary type="text">Swiss wool covers to save glaciers: சுவிட்சர்லாந்தில் பனிப்பாறைகள் உருகுவதை தடுக்க விஞ்ஞானிகள் புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளனர்.

சுவிட்சர்லாந்தின் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Swiss wool covers to save glaciers: சுவிட்சர்லாந்தில் பனிப்பாறைகள் உருகுவதை தடுக்க விஞ்ஞானிகள் புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளனர்.</p><p>

சுவிட்சர்லாந்தின் ஆல்ப்ஸ் மலையில் பனிப்பாறைகள் வேகமாக உருகி வருகின்றன. இதைத் தடுக்க, அந்நாட்டின் விஞ்ஞானிகள் ஒரு வித்தியாசமான முயற்சியை மேற்கொண்டுள்ளனர்.</p><p></p><h2>பனிப்பாறைகள் உருகுவதை தடுக்க கம்பளி போர்வை!</h2><p>பனிப்பாறைகளின் மேல் ஆட்டின் கம்பளி போர்வைகளை விரித்துவருகின்றனர்.</p><p>“Keep It Wool” எனப்படும் இந்த திட்டம், Tsanfleuron Glacier பகுதியில் நடைமுறைக்கு வந்துள்ளது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9e7de669-dc71-483b-a0d9-ec4a4b5acaa3/26-6a9a106826bc1.webp' /></p><p>University of Lausanne, Summit Foundation மற்றும் Swiss Glacier Monitoring Network ஆகியவை இணைந்து இந்த முயற்சியை மேற்கொண்டு வருகின்றன.</p><p>

முன்பு, பனிப்பாறைகளை பாதுகாக்க பிளாஸ்டிக் அடிப்படையிலான செயற்கை போர்வைகள் பயன்படுத்தப்பட்டன. அவை சூரிய ஒளியைத் தடுப்பதால் பனி உருகும் வேகம் குறைந்தது. ஆனால், அவை காலப்போக்கில் சிதைந்து, சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் மைக்ரோபிளாஸ்டிக் துகள்களை வெளியிடுகின்றன. </p><p>இதற்கு மாற்றாக, இயற்கையான, சிதைவடையும் ஆட்டின் கம்பளி பயன்படுத்தப்படுகிறது.
</p><p></p><h2>ஆய்வு&nbsp;</h2><p>ஜூன் 2026-இல், 100 சதுர மீட்டர் அளவிலான இரண்டு கம்பளி போர்வைகள் பனிப்பாறைகளின் மேல் பரப்பப்பட்டன. அதே அளவிலான செயற்கை போர்வையும் அருகில் அமைக்கப்பட்டு, ஒப்பீட்டு ஆய்வு செய்யப்பட்டது. ஆரம்ப முடிவுகள், கம்பளி போர்வைகள் செயற்கை போர்வைகளுக்கு இணையான பாதுகாப்பை வழங்கியதாகக் காட்டுகின்றன.
</p><p>
சுவிட்சர்லாந்தில் ஆட்டின் கம்பளி பெரும்பாலும் பயன்பாடின்றி வீணாகிறது. சுமார் 80 சதவீதம் கம்பளி வணிக மதிப்பில்லாமல் கைவிடப்படுகிறது. இந்த முயற்சி, அந்த உள்ளூர் வளத்தை பயனுள்ள முறையில் பயன்படுத்தும் வழியைத் திறக்கிறது.</p><p></p><p>
</p><h2>
விஞ்ஞானிகள் எச்சரிக்கை</h2><p> 

ஆனால், இந்த முயற்சி முழு பனிப்பாறைகளை காப்பாற்ற முடியாது என விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர். தற்போது, சுவிட்சர்லாந்தின் பனிப்பாறைகளில் 0.02 சதவீதம் மட்டுமே போர்வைகளால் மூடப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் சுமார் 1 பில்லியன் கன மீட்டர் பனி உருகுகிறது. போர்வைகள் மூலம் 3 லட்சம் கன மீட்டர் பனியை மட்டுமே காப்பாற்ற முடிகிறது.
</p><p>
இருப்பினும், இந்த முயற்சி, பருவநிலை மாற்றத்துக்கு எதிரான புதுமையான தீர்வுகளை ஆராய்வதில் முக்கியமான முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.&nbsp; &nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-04T00:24:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kumar</name>
            </author>
            <title type="text"><![CDATA[மயிலத்தமடு - மாதவனை பகுதியில் கண்டனப் போராட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/protest-in-the-mayilathamadu-madhavan-area-1788467670"></link>
            <id>https://tamilwin.com/article/protest-in-the-mayilathamadu-madhavan-area-1788467670</id>
            <summary type="text">மயிலத்தமடு - மாதவனை பகுதியில் சட்ட விரோத ஆக்கிரமிப்புகளை முன்னெடுத்துள்ளதாகவும் கால்நடைகள் மீதும் தாக்குதல்கள்
முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் தெரிவித்...</summary>
            <content type="html"><![CDATA[<p>மயிலத்தமடு - மாதவனை பகுதியில் சட்ட விரோத ஆக்கிரமிப்புகளை முன்னெடுத்துள்ளதாகவும் கால்நடைகள் மீதும் தாக்குதல்கள்
முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் தெரிவித்து செங்கலடி பிரதேச செயலகத்திற்கு
முன்பாக போராட்டம் ஒன்று&nbsp; முன்னெடுக்கப்பட்டது.</p><p>இந்தப் போராட்டமானது நேற்றைய தினம்(03.09.2026) நடைபெற்றுள்ளது.</p><h2>ஆராயப்பட்டுள்ள விடயங்கள்</h2><p>நேற்று ஏறாவூர்ப்பற்று பிரதேச அபிவிருத்திக்குழு கூட்டம் நடைபெறவிருந்த
நிலையில் கால்நடை பண்ணையாளர்கள் இந்த போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர். இந்தக் கூட்டமானது தேசிய மக்கள்
சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தலைமையில் இடம்பெற்றுள்ளது.</p><p>இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் , உள்ளுராட்சி மன்றங்களின் தலைவர்கள் அரச மற்றும்
அரசாங்க சார்பற்ற நிறுவனங்கள் திணைக்களங்களின் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டுள்ளனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cadc2069-032b-4947-b2b4-cb07ad92db99/26-6a99fc4d68445.webp' /></p><p>கல்வி, சுகாதாரம் மற்றும் வீடமைப்பு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்தல் தொடர்பாக
இங்கு ஆராயப்பட்டுள்ளதுடன் குறிப்பாக ஏறாவூபற்று பிரதேச எல்லைக்குள் இடம்பெறும் சட்ட விரோத மணல்
அகழ்வு தொடர்பாகவும் ஆராயப்பட்டுள்ளது.</p><p>அத்துடன் ஏறாவூர் நகர சபையால் கொட்டப்படும் குப்பைகள் மற்றும் விலங்கு கழிவுகளினால் மக்கள் பாதிப்படைகிற விடயம்
தொடர்பாகவும், விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்பாளர்கள் முன்வைத்த
பிரச்சினைகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.</p><p>மேலும் எதிர்வரும் மாரி மழைக்காலத்தில் பொதுமக்கள் எதிர்நோக்கும்
அசௌகரியங்களுக்கான முன் ஏற்பாடுகள் மற்றும் கஷ்டப் பிரதேசங்களுக்குச் செல்லும்
அரசாங்க ஊழியர்கள் மற்றும் பாடசாலை மாணவர்களின் போக்குவரத்து நடவடிக்கைகளை
சீரமைப்பது தொடர்பாகவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தேவையான அறிவுறுத்தல்கள்
வழங்கப்பட்டுள்ளன.&nbsp;</p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-04T00:08:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீதிமன்றத்தில் மாயமான குடு சலிந்துவின் வழக்கு ஆவணங்கள் : விசாரணைகள் தீவிரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/kudu-salindu-s-missing-case-files-1788479887"></link>
            <id>https://tamilwin.com/article/kudu-salindu-s-missing-case-files-1788479887</id>
            <summary type="text">“குடு சலிந்து” என அழைக்கப்படும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய சலிந்து மல்ஷித குணரத்னேவுக்கு எதிராக பாண...</summary>
            <content type="html"><![CDATA[<p>“குடு சலிந்து” என அழைக்கப்படும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய சலிந்து மல்ஷித குணரத்னேவுக்கு எதிராக பாணந்துறை நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த இரு தனித்தனி வழக்குகளின் ஆவணங்கள் காணாமல் போன சம்பவம் பெரும் பரபரப்ரப ஏற்படுத்தியது.</p><p>

இந்த விடயம் தொடர்பில், நீதிமன்ற ஊழியர்கள் 10 பேரிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><h2>காணாமல் போன வழக்கு ஆவணங்கள்</h2><p>
</p><p>
இவர்களுள் ஏழு பெண் அதிகாரிகளும் அடங்குவதாக பாணந்துறை பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஷான் டி சில்வா தெரிவித்துள்ளார்.</p><p>

காணாமல் போன வழக்கு ஆவணங்கள் தொடர்பில் பாணந்துறை நீதவான் நீதிமன்ற பதிவாளர் கடந்த செப்டெம்பர் 1ஆம் திகதி பாணந்துறை தெற்கு பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு செய்ததைத் தொடர்ந்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3e6f50ed-4a05-4038-adda-a276ac32166d/26-6a9a0b9a7b987.webp' /></p><p>
</p><p>
இதனையடுத்து, நீதிமன்றத்தில் ‘பி’ அறிக்கை மூலம் விடயங்கள் சமர்ப்பிக்கப்பட்டதுடன், மேலதிக விசாரணைகள் பாணந்துறை பிரிவின் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
</p><p>
காணாமல் போன ஆவணங்களில், குடு சலிந்துவின் உத்தரவின் பேரில் பாணந்துறை வடக்கு பகுதியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் கொலைச் சம்பவம் தொடர்பான வழக்கு ஆவணங்களும், குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்த வழக்கின் ஆவணங்களும் அடங்குகின்றன.
</p><p>
கடந்த ஒகஸ்ட் 28ஆம் திகதி நீதிமன்றத்தில் மொஷன் மூலம் அழைக்கப்பட்டிருந்த வழக்கு தொடர்பான அறிக்கையை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் கண்டுபிடிக்க முடியாததால், அந்த வழக்கு ஒகஸ்ட் 31ஆம் திகதி மீண்டும் அழைக்கப்படுவதற்காக ஒத்திவைக்கப்பட்டிருந்தது.</p><h2>பொலிஸ் விசாரணை</h2><p>

இதன்பின்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், குறித்த வழக்கு ஆவணங்கள் காணாமல் போயிருந்தமை தெரியவந்துள்ளது.
</p><p>
ஆரம்பகட்ட பொலிஸ் விசாரணைகளில், குறித்த ஆவணங்கள் பிரதிகளைப் பெற்றுக்கொள்வதற்காக அலுவலக உதவியாளர் ஒருவரிடம் ஒப்படைக்கப்பட்ட பின்னர், அவை ஆவணக் காப்பகத்தில் வைக்கப்பட்டிருந்ததாக தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ec3344c5-9e62-497c-91c3-e2855a4c0383/26-6a9a0b9b2fe93.webp' /></p><p>
</p><p>
எனினும், பின்னர் அந்த ஆவணங்கள் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>

இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியாக, நீதிமன்ற வளாகத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கெமரா காட்சிகளையும் எதிர்காலத்தில் பொலிஸார் பரிசோதிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><p></p><p><br><br><b><i>You May Like This Video..</i></b></p><p><br></p><p><b><i><br><br></i></b><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/jnKI70IglD4" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><i><br></i></b></p>]]></content>
            <updated>2026-09-04T00:06:57+00:00</updated>
        </entry>
    </feed>
