<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-09-05T23:52:30+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாமலை காட்டிக்கொடுத்த நபருக்கு உயிரச்சுறுத்தல் - வெளிநாடுகளில் இருந்து தொடரும் விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-arrest-case-updates-1788651523"></link>
            <id>https://tamilwin.com/article/namal-arrest-case-updates-1788651523</id>
            <summary type="text">நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தற்போது கொழும்பு மெகசின் சிறைச்சாலையில் எதிர்வரும் 18ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

ஏர்பஸ் (Ai...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தற்போது கொழும்பு மெகசின் சிறைச்சாலையில் எதிர்வரும் 18ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.</p><p>

ஏர்பஸ் (Airbus) விமான கொள்வனவு தொடர்பான ஊழல் வழக்கில், 8 லட்சம் அமெரிக்க டொலர்கள் நாமல் ராஜபக்சவிற்கு கமிஷன் தொகையாக வழங்கப்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில் அவர் கைது செய்ப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
</p><p>
இந்த வழக்கு நிமல் பெரேரா என்பவரின் வாக்குமூலத்தின் அடிப்படையில் அமைந்துள்ளது.
</p><p>
அவர் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக அஞ்சி அவுஸ்திரேலியாவிலிருந்து விசாரணை அதிகாரிகளிடம் சாட்சியம் அளித்துள்ளார்.

அவர் அவுஸ்திரேலிய சட்டத்தின் கீழ் சத்தியப் பிரமாண அறிக்கையையும் வழங்கியுள்ளார்.</p><p>

இந்த விசாரணை இலங்கை அதிகாரிகளால் மட்டுமல்லாது, பிரான்ஸ், சிங்கப்பூர், அமெரிக்கா மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளின் ஒத்துழைப்புடன் நடைபெறுவதாக அரசு தரப்பு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.</p><p>


சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு வந்த பணத்தில் இருந்து, 100 மில்லியன் ரூபாய் நாமல் ராஜபக்சவுக்கு வழங்கப்பட்டதாக நிமல் பெரேரா குற்றம் சாட்டியுள்ளார்.</p><p>

நாமல் ராஜபக்சவுக்கு எதிராக வாக்குமூலம் அளித்த பிறகு, தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக அவர் அஞ்சுவதால் தான் இலங்கை வரத் தயங்குகிறார் என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இந்த விடயங்கள் தொடர்பில் முழுமையாக பேசுகின்றது NewsInsightTamil நிகழ்ச்சி..</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/RFwKvZNB2Yo" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-05T23:45:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஐரோப்பிய நிலத்தில் ஏவப்பட்ட முதல் செயற்கைக்கோள் - வரலாறு படைத்த ஜேர்மன் ரொக்கெட்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/german-rocket-makes-first-eu-orbital-launch-1788651477"></link>
            <id>https://news.lankasri.com/article/german-rocket-makes-first-eu-orbital-launch-1788651477</id>
            <summary type="text">German rocket makes first EU orbital launch: முதல் செயற்கைக்கோளை வெற்றிகரமாக ஏவி ஜேர்மனி வரலாறு படைத்துள்ளது.


வரலாறு படைத்த ஜேர்மனி ஜேர்மனியின் த...</summary>
            <content type="html"><![CDATA[<p>German rocket makes first EU orbital launch: முதல் செயற்கைக்கோளை வெற்றிகரமாக ஏவி ஜேர்மனி வரலாறு படைத்துள்ளது.
</p><h2>

வரலாறு படைத்த ஜேர்மனி </h2><p>ஜேர்மனியின் தனியார் விண்வெளி நிறுவனம் Isar Aerospace, தனது Spectrum ரொக்கெட்டை நோர்வேயின் Andoya Spaceport-இல் இருந்து 2026 செப்டம்பர் 5 அன்று வெற்றிகரமாக விண்வெளிக்கு அனுப்பியது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4787aa85-e99f-4e56-8006-da094d9435bf/26-6a9ca7d75c9bd.webp' /></p><p>இது ஐரோப்பிய நிலத்தில் இருந்து நடந்த முதல் orbital launch ஆகும். இதன் மூலம், ஐரோப்பா தனது செயற்கைக்கோள் ஏவுதல் திறனில் புதிய அத்தியாயத்தை தொடங்கியுள்ளது.
</p><p>
இந்த ரொக்கெட், ஐந்து CubeSats மற்றும் ஒரு அறிவியல் பரிசோதனையை எடுத்துச் சென்றது. TU Berlin, University of Maribor, NTNU Norway போன்ற பல்கலைக்கழகங்கள் உருவாக்கிய செயற்கைக்கோள்கள் இதில் அடங்கும். </p><p>European Space Agency-யின் Boost! திட்டத்தின் கீழ் இந்த முயற்சி நடைபெற்றது.
</p><p></p><h2>இரண்டாவது முயற்சி&nbsp;வெற்றி </h2><p>2025-இல் நடந்த முதல் முயற்சி தோல்வியடைந்தது. புறப்பட்ட ஒரு நிமிடத்திற்குள் ரொக்கெட் கட்டுப்பாட்டை இழந்து கடலில் விழுந்தது. ஆனால், Isar Aerospace அந்த பிழைகளை சரிசெய்து, 2026-இல் இரண்டாவது முயற்சியில் வெற்றி பெற்றது.
</p><p>
இந்த வெற்றியால், ஐரோப்பா SpaceX மற்றும் பிற வெளிநாட்டு நிறுவனங்களின் மீது வைத்திருந்த சார்பை குறைக்க முடியும். Isar Aerospace நிறுவனம், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான செயற்கைக்கோள்களை சுற்றுவட்ட பாதைக்கு அனுப்பும் திறனை பெற்றுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6855e1c2-5e40-4e0a-bdbc-e80a719daf7e/26-6a9ca7d818f36.webp' /></p><p>
நிறுவனத்தின் CEO Daniel Metzler கூறியதாவது: “விண்வெளிக்கு அணுகுதல் என்பது தேசிய பாதுகாப்புக்கும், தொழில்துறைக்கும் மிகப்பெரிய சவாலாக உள்ளது. இந்த வெற்றி, ஐரோப்பாவுக்கு தன்னாட்சி வழங்கும்” என்று தெரிவித்தார்.
</p><p>
இந்த முயற்சி, ஐரோப்பிய விண்வெளி துறைக்கு புதிய வாய்ப்புகளைத் திறக்கிறது. பிரித்தானியா, சுவீடன் போன்ற நாடுகளும் விரைவில் தங்கள் சொந்த spaceports-இல் இருந்து செயற்கைக்கோள் ஏவுதலை தொடங்க திட்டமிட்டுள்ளன.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><br>]]></content>
            <updated>2026-09-05T23:34:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[பசிபிக் பெருங்கடலில் மூன்று சக்திவாய்ந்த சூறாவளிகள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/name-of-hurricanes-forming-in-the-pacific-ocean-1788651136"></link>
            <id>https://ibctamil.com/article/name-of-hurricanes-forming-in-the-pacific-ocean-1788651136</id>
            <summary type="text">தற்போது உருவாகிவரும், எல் நினோ காலநிலை மாற்றத்தின் தாக்கத்தால் பசிபிக் பெருங்கடலில் ஒரே நேரத்தில் மூன்று வெப்பமண்டல சூறாவளிகள் உறுவாகியுள்ளமை சர்வதேசத...</summary>
            <content type="html"><![CDATA[<p>தற்போது உருவாகிவரும், எல் நினோ காலநிலை மாற்றத்தின் தாக்கத்தால் பசிபிக் பெருங்கடலில் ஒரே நேரத்தில் மூன்று வெப்பமண்டல சூறாவளிகள் உறுவாகியுள்ளமை சர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது.</p><p>லோவெல் (Lowell), கரினா (Karina) மற்றும் மரி (Marie) என பெயரிடப்பட்ட மூன்று சூறாவளிகளும் தற்போது பசிபிக் பகுதியில் உறுவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>இதன்படி நாசாவின் செயற்கைக்கோள் அவதானிப்புகளும் ஒரே நேரத்தில் மூன்று வெப்பமண்டல சூறாவளிகள் பசிபிக் பகுதியில் காணப்பட்டதை உறுதிப்படுத்தியுள்ளன.</p><p></p><h2>&nbsp;ஹவாய் தீவுகள்</h2><p>இந்த மூன்றில் லோவெல் சூறாவளியே ஹவாய் தீவுகளுக்கு அதிக அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடியதாக கணிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c6897b1e-85f4-4e8c-a148-15c6aab3c5be/26-6a9ca6834718b.webp' /></p><p> </p><p>அதன் பாதை ஹவாயின் மேற்குப் பகுதிகளை நோக்கி திரும்பக்கூடும் என முன்னறிவிப்புகள் தெரிவிக்கின்றன. </p><p>இருப்பினும், சூறாவளி நேரடியாக நிலப்பரப்பைத் தாக்குமா என்பது இன்னும் உறுதியாக தெரியவில்லை.</p><p>லோவெல் சூறாவளி ஒரு கட்டத்தில் மணிக்கு 160 மைல் (சுமார் 257 கி.மீ.) வேகத்திலான காற்றுடன் Category 5 வலிமையை எட்டியதாகவும், பின்னர் அதன் வலிமையில் மாற்றங்கள் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>ஆபத்தான நீரோட்டங்கள்</h2><p> </p><p>ஹவாயில் கடுமையான அலைகளுக்கு எச்சரிக்கை
சூறாவளியின் நேரடி தாக்கம் குறித்த நிச்சயமற்ற நிலை தொடர்ந்தாலும், ஹவாய் தீவுகளில் கடுமையான கடல் அலைகள் மற்றும் ஆபத்தான நீரோட்டங்கள் தொடர்பில் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.</p><p>

சில கடற்கரைகளில் 12 அடி வரை உயரமான அலைகள் உருவாகக்கூடும் என முன்னறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சில பகுதிகளில் அலை உயரம் 14 அடியை எட்டக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>மேலும், கனமழை, திடீர் வெள்ளம், கடல் நீர் உள்வருதல் மற்றும் பலத்த காற்று உள்ளிட்ட அபாயங்கள் குறித்தும் அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-05T23:32:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாமலை காப்பாற்ற சென்று சிக்கலில் மாட்டிய உதய கம்மன்பில! மகனை சந்தித்த பின் தடுமாறிய மகிந்த]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/gammanpila-lands-trouble-trying-to-rescue-namal-1788634276"></link>
            <id>https://tamilwin.com/article/gammanpila-lands-trouble-trying-to-rescue-namal-1788634276</id>
            <summary type="text">ஏர்பஸ் (Airbus) விமான கொள்வனவு தொடர்பான ஊழல் வழக்கில், 8 லட்சம் அமெரிக்க டொலர்கள் நாமல் ராஜபக்சவிற்கு கமிஷன் தொகையாக வழங்கப்பட்டதாகக் குற்றம் சாட்டப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஏர்பஸ் (Airbus) விமான கொள்வனவு தொடர்பான ஊழல் வழக்கில், 8 லட்சம் அமெரிக்க டொலர்கள் நாமல் ராஜபக்சவிற்கு கமிஷன் தொகையாக வழங்கப்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில் அவர் கைது செய்ப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
</p><p>
இந்தநிலையில், நாமல் ராஜபக்சவை பாதுகாப்பதற்காகப் பேசிய உதய கம்மன்பில, அந்தப் பணம் அலுவலக மேசையில் வைக்கப்பட்டதாகக் கூறியது, அவர் மீதுள்ள குற்றச்சாட்டை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. </p><p>8 லட்சம் அமெரிக்க டொலர்கள் நாமல் ராஜபக்சவின் அலுவலகத்திற்குச் சென்றதாகவும், அவர் அங்கு இல்லாதபோது மேசையில் வைக்கப்பட்டதாகவும் உதய கம்மன்பில வெளிப்படையாகக் கூறியது, பணம் நாமல் ராஜபக்சவின் வசம் சென்றதை உறுதிப்படுத்தும் ஆதாரமாக மாறிவிட்டது.</p><p>

இந்த வழக்கில் உதய கம்மன்பிலவின் இந்த கூற்று முக்கியமானதாக பார்க்கப்படுகின்றது.

ஒரு வழக்கறிஞராக உதய கம்மன்பில இவ்வாறான வாக்குமூலங்களை வழங்குவது, நாமல் ராஜபக்ஷவின் தரப்பு வாதத்தையே பலவீனப்படுத்துவதாக விமர்சிக்கப்படுகிறது.&nbsp; &nbsp; </p><p>மேலும், நாமல் ராஜபக்சவின் கைதுக்கு எதிராக ஊடக சந்திப்புகளை நடத்தி, சட்டவிரோதமான முறையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக விமர்சித்தார்.</p><p>


அத்துடன் ஆதாரங்கள் இல்லாமல் பெயர்களைக் குறிப்பிட்டு கைது செய்யும் தற்போதைய முறையை அவர் கடுமையாகச் சாடியுள்ளார்.
</p><p>

இந்தநிலையில், சிறையில் உள்ள தனது மகனைச் சந்தித்த பிறகு மகிந்த ராஜபக்ச ஊடகவியலாளர்களைச் சந்தித்தபோது, அவர் மிகுந்த மன உளைச்சலுடனும், பதற்றத்துடனும் காணப்பட்டார். </p><p>பேசும்போது அவரது வார்த்தைகள் தடுமாறியதாகவும், சொற்கள் வெளிப்பட சிரமப்பட்டதையும் அவதானிக்க முடிந்தது.

இந்தவிடயங்கள் தொடர்பில் விரிவாக பேசுகின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி..&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/aUuUMhWwpcs" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-05T23:25:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Malaivanjan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நானுஓயா கிளாஸ்சோ நீர்வீழ்ச்சியில் சோகம்! நீரில் மூழ்கி இரு இளைஞர்கள் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/two-youths-drowned-nanu-oya-s-glasso-waterfall-1788649420"></link>
            <id>https://tamilwin.com/article/two-youths-drowned-nanu-oya-s-glasso-waterfall-1788649420</id>
            <summary type="text">நுவரெலியா – நானுஓயா கிளாஸ்சோ நீர்வீழ்ச்சி அமைந்துள்ள பகுதியில் ஆற்றில்
குளிக்கச் சென்ற இரு இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் சடலங்களாக
மீட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நுவரெலியா – நானுஓயா கிளாஸ்சோ நீர்வீழ்ச்சி அமைந்துள்ள பகுதியில் ஆற்றில்
குளிக்கச் சென்ற இரு இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் சடலங்களாக
மீட்கப்பட்டுள்ளனர்.</p><p>

இந்த துயரச் சம்பவம் நானுஓயா கிளாஸ்சோ நீர்வீழ்ச்சி பகுதியில் நேற்று(5) இடம்பெற்றுள்ளது.</p><h2>இரு இளைஞர்கள்</h2><p>
</p><p>
நண்பர்களுடன் குறித்த பகுதிக்கு சென்றிருந்ததாகக் கூறப்படும் இரு இளைஞர்களும்
ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த சந்தர்ப்பத்திலேயே நீரில் மூழ்கியுள்ளதாக
ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
</p><p>
சம்பவத்தை தொடர்ந்து அப்பகுதியில் இருந்தவர்கள் மற்றும் மீட்புப் பணியாளர்கள்
மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் பின்னர், இரு இளைஞர்களும் சடலங்களாக
மீட்கப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2a85d6ea-2d27-476e-9576-8872db878d7c/26-6a9ca1c5023f9.webp' /></p><p>உயிரிழந்தவர்கள், 24 வயதுடைய பெருமாள் திவாகர் மற்றும் 23
வயதுடைய அன்பழகன் நிக்சன்

என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
</p><p>
நீரில் மூழ்கியதற்கான காரணம் மற்றும் சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்களை
கண்டறியும் வகையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p><h2>மேலதிக விசாரணை</h2><p>

மீட்கப்பட்ட இரு சடலங்களும் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட பொது
வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/db1f62a9-65dd-4185-af04-d05eb346ff31/26-6a9ca1c5d2408.webp' /></p><p>
</p><p>
இதேவேளை, மலைநாட்டுப் பகுதிகளில் காணப்படும் நீர்வீழ்ச்சிகள் மற்றும் ஆறுகளில்
மழைக்காலங்களில் நீரின் வேகம் திடீரென அதிகரிக்கக்கூடிய நிலையில், பொதுமக்கள்
மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
</p><p>
குறிப்பாக, நீரின் ஆழம் மற்றும் நீரோட்டத்தின் வேகம் குறித்து அறியாமல் ஆறுகள்
மற்றும் நீர்வீழ்ச்சிகளில் குளிப்பதை தவிர்க்குமாறும் கோரிக்கை
விடுக்கப்பட்டுள்ளது.
</p><p>
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நானுஓயா பொலிஸார் முன்னெடுத்து
வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-05T23:12:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கைக் கடற்பரப்பில் நோர்வே ஆராய்ச்சிக் கப்பல்! கடற்றொழில் அமைச்சர் வெளிப்படை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/norwegian-research-vessel-in-sri-lankan-waters-1788632700"></link>
            <id>https://ibctamil.com/article/norwegian-research-vessel-in-sri-lankan-waters-1788632700</id>
            <summary type="text">அண்மையில் நோர்வே நாட்டுக்கு சொந்தமான ஆராய்ச்சி கப்பல், இலங்கையின் கடல் பிராந்தியத்தில் முக்கிய நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டதாக கடற்றொழில் அமைச்சர் இரா. ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>அண்மையில் நோர்வே நாட்டுக்கு சொந்தமான ஆராய்ச்சி கப்பல், இலங்கையின் கடல் பிராந்தியத்தில் முக்கிய நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டதாக கடற்றொழில் அமைச்சர் இரா. சந்திரசேகர் தெரிவித்தார்.
</p><p>
இந்த ஆராய்ச்சியின் அறிக்கை குறித்து அவரால் வெளிப்படுத்தப்பட்ட கருத்துக்கள், இலங்கையின் கடற்கரையை அண்டிய மக்களுக்கு சவாலாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
</p><p>
இலங்கையில் கரையோரத்தை அண்டிய பெரும்பாலான தொழிலாளர்கள் கடற்றொழிலை தனது ஜீவனோபாயமாக கொண்டுள்ள நிலையில் தற்போது மீன்களின் இருப்பு பாதிப்பு நிலையை அடைந்துள்ளதாக இந்த ஆய்வறிக்கையில் வெளிப்படுத்தப்பட்டதாக அவரால் விளக்கப்படுத்தப்பட்டது.
</p><p>
மேலும் எல் நினோவின் தாக்கமும் எதிர்காலத்தில் இலங்கையின் மீன் வளத்தில் தாக்கத்தை செலுத்தும் காரணியாக மாறக்கூடும் எனவும் கூறப்படுகிறது.
</p><p>
லங்காசிறி ஊடகத்தின் நாட்டு நடப்பு நிகழ்ச்சியின் 300 அத்தியாயத்தில் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு கருத்து வெளியிட்ட கடற்றொழில் அமைச்சர் இரா.சந்திரசேகரின் கருத்துக்கள், இந்த விடயத்தின் பாரதூரங்களை பின்வருமாறு தெளிவுப்படுத்தியிருந்தன...&nbsp;</p><p><iframe width="1337" height="752" src="https://www.youtube.com/embed/VNz7RtIWc54" title="🔴Special LIVE:நாட்டு நடப்பு 300 வது Episode சிறப்பு நேரலை | Naattu Nadappu" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share" referrerpolicy="strict-origin-when-cross-origin" allowfullscreen></iframe></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-05T23:10:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாள வெள்ளம்- 10 நாட்களுக்குப் பின் சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளி உயிருடன் மீட்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/nepal-floods-worker-trapped-tunnel-10-days-rescued-1788648693"></link>
            <id>https://tamilwin.com/article/nepal-floods-worker-trapped-tunnel-10-days-rescued-1788648693</id>
            <summary type="text">நேபாளத்தில் வெள்ளப் பெருக்கு மற்றும் நிலச்சரிவு காரணமாக உயிரிழப்புகள்
அதிகரித்து வரும் நிலையில், மீட்புப் படையினர் தீவிர மீட்புப் பணியில்
ஈடுபட்டு வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நேபாளத்தில் வெள்ளப் பெருக்கு மற்றும் நிலச்சரிவு காரணமாக உயிரிழப்புகள்
அதிகரித்து வரும் நிலையில், மீட்புப் படையினர் தீவிர மீட்புப் பணியில்
ஈடுபட்டு வருகின்றனர்.

​</p><p>இந்த நிலையில் திரிசூலி நீர்மின் திட்ட சுரங்கப்பாதையில் கடந்த 10 நாட்களாகக்
குடிதண்ணீர் கூட இன்றிச் சிக்கியிருந்த 'லுஹைடாவ்' என்ற சீனத் தொழிலாளியை
நேபாள இராணுவமும் தென் கொரிய பேரிடர் மீட்புக் குழுவும் இணைந்து உயிருடன்
மீட்டுள்ளன.

​</p><h2>சிக்கிய தொழிலாளி&nbsp;</h2><p>இதேவேளை நுவாகோட் பகுதியில் இடிந்த வீட்டின் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த
சந்திரிகா ஸ்ரேஸ்தா (64) என்ற நபரும் உயிருடன் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக உலங்குவானூர்தி மூலம் காத்மாண்டுவிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
​</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0ca3c5c8-d593-4474-8bb5-937766bfc2dd/26-6a9c9f0d1af86.webp' /></p><p>அத்துடன் இதேபோல நேற்றைய தினமும் சுரங்கப் பகுதியில் இருந்து இருவர்
பத்திரமாக மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-05T23:00:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹாட் லுக்கில் பிரியங்கா மோகன்.. லேட்டஸ்ட் போட்டோஷூட்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/priyanka-mohan-new-photoshoot-1788648562"></link>
            <id>https://cineulagam.com/article/priyanka-mohan-new-photoshoot-1788648562</id>
            <summary type="text">நடிகை பிரியங்கா மோகன் தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோயின்களில் ஒருவர். ஹோம்லியாக நடித்து தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

 தற்போது ஹாட் உடையில...</summary>
            <content type="html"><![CDATA[<p>நடிகை பிரியங்கா மோகன் தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோயின்களில் ஒருவர். ஹோம்லியாக நடித்து தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

 தற்போது ஹாட் உடையில் எடுத்த போட்டோஷூட் ஸ்டில்களை பிரியங்கா வெளியிட்டு இருக்கிறார்.

அந்த புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இதோ பாருங்க.</p>]]></content>
            <updated>2026-09-05T22:49:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிக் பாஸ் 10 நுழைந்த போட்டியாளர்கள் முழுலிஸ்ட்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/bigg-boss-10-launch-full-contestants-list-1788648442"></link>
            <id>https://cineulagam.com/article/bigg-boss-10-launch-full-contestants-list-1788648442</id>
            <summary type="text">பிக் பாஸ் 10 நுழைந்த போட்டியாளர்கள் முழுலிஸ்ட்லட்சுமி பிரியா - சீரியல் நடிகை
ஷத்திகா - சீரியல் நடிகை
ப்ரித்விநாத் - மாடல்
ஜாவித் - மாடல்
அஸ்மிதா -...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிக் பாஸ் 10 நுழைந்த போட்டியாளர்கள் முழுலிஸ்ட்</p><ul><li>லட்சுமி பிரியா - சீரியல் நடிகை</li><li>
ஷத்திகா - சீரியல் நடிகை
</li><li>ப்ரித்விநாத் - மாடல்
</li><li>ஜாவித் - மாடல்
</li><li>அஸ்மிதா - மேக்கப் ஆர்ட்டிஸ்ட்</li><li>
முத்தழகி - நடிகை
</li><li>அவினாஷ் - சீரியல் நடிகர்</li><li>ராகவ் ரகுநாதன் - சீரியல் நடிகர்</li><li>குமரன் - பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகர்
</li><li>சாந்தினி தமிழரசன் - திரைப்பட நடிகை&nbsp;</li><li>வினோத் பாபு - சீரியல் நடிகர்</li><li>பிளாக் பாண்டி - சினிமா காமெடியன்</li><li>முனியம்மா</li><li>ஜேசன்</li></ul><h2>

வெளியேற்றப்பட்ட போட்டியாளர்கள்</h2><ul><li>

பிரஷாந்த் - விமர்சகர்
</li><li>அக்ஷிதா - சீரியல் நடிகை</li><li>
கவிதா மோகன் - யோகா மாஸ்டர்
</li><li>ஷப்னம் - சீரியல் நடிகை</li><li>மாளவிகா - மாடல்</li><li><br></li></ul>]]></content>
            <updated>2026-09-05T22:47:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிக் பாஸ் வாய்ப்பை நிராகரித்தது ஏன்.. ஜாய் கிரீஸில்டா விளக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/joy-crizildaa-reveal-why-she-rejected-bigg-boss-10-1788648289"></link>
            <id>https://cineulagam.com/article/joy-crizildaa-reveal-why-she-rejected-bigg-boss-10-1788648289</id>
            <summary type="text">பிக் பாஸ் வாய்ப்பை நிராகரித்தது ஏன்.. ஜாய் கிரீஸில்டா விளக்கம்...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிக் பாஸ் வாய்ப்பை நிராகரித்தது ஏன்.. ஜாய் கிரீஸில்டா விளக்கம்</p>]]></content>
            <updated>2026-09-05T22:44:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவில் விமானத்தில் அட்டகாசம் செய்த பயணி ; இருக்கையுடன் டேப் போட்டு கட்டி வைத்த சக பயணிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/passenger-causes-a-scene-on-a-flight-in-the-us-1788646117"></link>
            <id>https://canadamirror.com/article/passenger-causes-a-scene-on-a-flight-in-the-us-1788646117</id>
            <summary type="text">அமெரிக்காவில், விமானத்தில் ஒழுங்கீனமாக நடந்துகொண்ட 67 வயதுடைய பயணி ஒருவர் சக பயணிகளால் இருக்கையுடன் டக்ட் டேப் மூலம் கட்டுப்படுத்தப்பட்ட சம்பவம் பரபரப...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவில், விமானத்தில் ஒழுங்கீனமாக நடந்துகொண்ட 67 வயதுடைய பயணி ஒருவர் சக பயணிகளால் இருக்கையுடன் டக்ட் டேப் மூலம் கட்டுப்படுத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
</p><p>
அமெரிக்கன் ஏர்லைன்ஸின் AA618 விமானம் கடந்த வியாழக்கிழமை டெக்சாஸின் டல்லாஸிலிருந்து நியூவர்க்கை நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்தபோது இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d581c9e8-412d-487a-8291-49b088d0017d/26-6a9c92e78ddd5.webp' /></p><p> </p><p>விமானத்தில் ஏற்பட்ட குழப்பத்தைத் தொடர்ந்து, பயணியின் கைகள் ஜிப் டைகளால் கட்டப்பட்டதுடன், அவர் இருக்கையுடன் டக்ட் டேப் மூலம் கட்டுப்படுத்தப்பட்டதாக மேரிலாந்து போக்குவரத்து ஆணைய காவல்துறை தெரிவித்துள்ளது.
</p><p>
அரிசோனாவைச் சேர்ந்த 67 வயதான ஆர்தர் லண்டீன் என்பவரே இவ்வாறு கட்டுப்படுத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். </p><p>சம்பவத்துக்கான முழுமையான காரணங்கள் ஆரம்பத்தில் வெளியிடப்படவில்லை என்றாலும், விமானத்தில் அவரது நடத்தை கடுமையாக இருந்ததாக பயணிகள் தெரிவித்துள்ளனர்.</p><p>

நிலைமை கட்டுக்கடங்கியதைத் தொடர்ந்து விமானம் அதன் பயணப் பாதையை மாற்றி, இரவு சுமார் 10.15 மணியளவில் Baltimore/Washington International Airport (BWI) விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. அங்கு காவல்துறையினர் விமானத்தில் ஏறி அவரை கைது செய்தனர்.
</p><p>
சம்பவம் தொடர்பாக Federal Aviation Administration (FAA) விசாரணை நடத்தி வருவதுடன், FBI-யும் விசாரணையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>பயணியை அகற்றிய பின்னர் விமானம் தனது இறுதி இலக்கான நியூவர்க்கை நோக்கி தொடர்ந்து பயணித்தது.
</p><p>
இந்த சம்பவம் தொடர்பான காணொளிகள் மற்றும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வரும் நிலையில், விமானப் பயணங்களின்போது கட்டுப்பாடற்ற பயணிகளால் ஏற்படும் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் குறித்தும் மீண்டும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-05T22:08:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[டைமண்ட் லீக் இறுதிப் போட்டியிலும் ருமேஷ் தரங்க வெற்றி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/rumesh-tharanga-wins-diamond-league-final-1788644964"></link>
            <id>https://jvpnews.com/article/rumesh-tharanga-wins-diamond-league-final-1788644964</id>
            <summary type="text">பெல்ஜியத்தின் பிரஸ்ஸல்ஸ் நகரில் நடைபெற்ற டைமண்ட் லீக் இறுதிப் போட்டியின் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் இலங்கையின் நட்சத்திர வீரர் ருமேஷ் தரங்க ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>பெல்ஜியத்தின் பிரஸ்ஸல்ஸ் நகரில் நடைபெற்ற டைமண்ட் லீக் இறுதிப் போட்டியின் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் இலங்கையின் நட்சத்திர வீரர் ருமேஷ் தரங்க முதலிடத்தை பெற்றுள்ளார்.</p><p> </p><p></p><p>இதில் அவர் 89.04 மீற்றர் தூரத்திற்கு ஈட்டியை எறிந்து இந்த திறமையை வெளிப்படுத்தினார்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/89e0c778-c110-46e2-9fd1-f87a8d325750/26-6a9c8e669fe89.webp' /></p><p>இப்போட்டியின் இரண்டாம் இடத்தை போலந்தின் டேவிட் வேக்னர் 87.47 மீற்றர் தூரத்திற்கு ஈட்டியை எறிந்து பெற்றுக்கொண்டார்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-05T21:49:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையர்களுக்கு புதிய வெளிநாட்டு வேலைவாய்ப்புகள்! பல நாடுகளில் விசேட திட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/announcement-of-new-overseas-job-opportunities-1788641859"></link>
            <id>https://tamilwin.com/article/announcement-of-new-overseas-job-opportunities-1788641859</id>
            <summary type="text">இலங்கைத் தொழிலாளர்களுக்காக ஜப்பான், தென் கொரியா, இஸ்ரேல் மற்றும் மத்திய
கிழக்கு நாடுகள் உள்ளிட்ட பல நாடுகளில் புதிய வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை
வழங்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கைத் தொழிலாளர்களுக்காக ஜப்பான், தென் கொரியா, இஸ்ரேல் மற்றும் மத்திய
கிழக்கு நாடுகள் உள்ளிட்ட பல நாடுகளில் புதிய வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை
வழங்கும் விசேட திட்டத்தை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவகம் (SLFEA)
அறிமுகப்படுத்தியுள்ளது.
</p><p>
இந்த நிலையில் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் நடைபெற்ற ஊடக
சந்திப்பில் பேசிய நிறுவகத்தின் தலைவர் லால் ஹெட்டியாராச்சி,</p><h2>இலங்கைத் தொழிலாளர்கள்</h2><p> கட்டுமானத் துறை,
திறன் மற்றும் தொழில்நுட்பத் துறைகள், சுகாதாரம், தகவல் தொழில்நுட்பம் (IT),
பொறியியல், போக்குவரத்து, விவசாயம், ஆடை உற்பத்தி மற்றும் பிற துறைகளுக்கான
ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் ஏற்கனவே தொடங்கிவிட்டதாகத் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4b20fd3b-3de9-4667-aab4-8d1c12938536/26-6a9c868012b37.webp' /></p><p>அத்துடன் திறன் வாய்ந்த, ஓரளவு திறன் வாய்ந்த மற்றும் தொழில்முறைத்
தொழிலாளர்கள் அனைவரும் இந்த வாய்ப்புகளுக்கு ஒப்பீட்டளவில் குறைந்த
கட்டணத்தில் விண்ணப்பிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
குறிப்பாக, பாடசாலைக் கல்வியை முடித்தவர்கள் தேவையான ஜப்பானிய மொழித் திறனைக்
கொண்டிருந்தால், ஜப்பானில் உள்ள லொரி ஓட்டுநர் பணிகளுக்கு விண்ணப்பிக்கத்
தகுதி பெறுவார்கள் என்றும் தலைவர் குறிப்பிட்டார்.</p><h2>வெளிநாட்டு வேலைவாய்ப்புகள்</h2><p>

இதேவேளை சர்வதேச தொழிலாளர் சந்தையில் இலங்கையின் இருப்பை வலுப்படுத்துவதும்,
திறமையான தொழிலாளர்களுக்குச் சிறந்த வாய்ப்புகளைப் பெற்றுத் தருவதுமே இதன்
பிரதான நோக்கமாகும் என்றும் அவர் இதன்போது தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7fa819e1-2589-4ba7-af55-a04377e50d58/26-6a9c8680c368f.webp' /></p><p>
</p><p>
மேலும், வெளிநாடு செல்லும் தொழிலாளர்கள் சந்தை விலையை விடக் குறைந்த
கட்டணத்தில் விமான டிக்கெட்டுகளைப் பெறுவதற்காக, முகமையின் சார்பில் விசேட
விமான டிக்கெட் விற்பனை மையம் ஒன்றும் நிறுவப்பட்டுள்ளது.
</p><p>
இதற்கமைய இவ்வாய்ப்புகளைப் பெற விரும்புவோர் மேலதிக தகவல்களைப் பெறவும்
நேரடியாக விண்ணப்பிக்கவும் நிறுவகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான
www.slfea.lk-ஐப் பயன்படுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-05T21:45:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானியாவில் 4,000 பணியாளர்களை பணிநீக்கம் செய்யவுள்ள Tata JLR நிறுவனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/tata-jlr-to-cut-4000-uk-jobs-amid-tariffs-1788644785"></link>
            <id>https://news.lankasri.com/article/tata-jlr-to-cut-4000-uk-jobs-amid-tariffs-1788644785</id>
            <summary type="text">Tata JLR to Cut 4,000 UK Jobs Amid Tariffs: பிரித்தானியாவில் 4,000 பணியாளர்களை பணிநீக்கம் செய்ய டாடா JLR திட்டமிட்டுள்ளது.

4,000 பணியாளர்கள் பணிநீக...</summary>
            <content type="html"><![CDATA[<p>Tata JLR to Cut 4,000 UK Jobs Amid Tariffs: பிரித்தானியாவில் 4,000 பணியாளர்களை பணிநீக்கம் செய்ய டாடா JLR திட்டமிட்டுள்ளது.
</p><h2>
4,000 பணியாளர்கள் பணிநீக்கம் </h2><p>இந்தியாவின் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கீழ் செயல்படும் Jaguar Land Rover (JLR), அடுத்த இரண்டு ஆண்டுகளில் 4,000 பணியாளர்களை பிரித்தானியாவில் பணிநீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது.</p><p>விற்பனை குறைவு, அதிக செலவுகள் மற்றும் அமெரிக்காவின் புதிய வரி அழுத்தம் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1836d084-6761-4c9c-b6bf-294dcdd07b68/26-6a9c8db330665.webp' /></p><p>JLR தற்போது பிரித்தானியாவில் 34,000 பணியாளர்களை வேலைக்கு அமர்த்தியுள்ளது. West Midlands மற்றும் Halewood, Merseyside பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளில் பணிபுரியும் பணியாளர்கள் அதிகம் பாதிக்கப்பட உள்ளனர். மேலும், JLR-இன் செயல்பாடுகள் 120,000 வேலைகளை விநியோக சங்கிலியில் ஆதரிக்கின்றன.
</p><p>
2026 ஜூன் காலாண்டில் JLR வருவாய் 10 சதவீதம் குறைந்தது. லாபம் மூன்றில் இரண்டு பங்கு குறைந்து 109 மில்லியன்பவுண்டு ஆனது.
</p><p>
Tata Motors, JLR-ஐ நிதி ஒழுங்குமுறையில் வைக்க, 1.7 பில்லியன் பவுண்டு செலவுகளை குறைக்க திட்டமிட்டுள்ளது. Break-even point-ஐ 300,000 வாகனங்கள் வரை குறைக்க முயற்சி நடைபெறுகிறது.</p><p></p><h2>டிரம்ப்&nbsp;வரி </h2><p>அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், பிரித்தானியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கார்கள் மீது 10 சதவீதம் வரி விதித்துள்ளார். வட அமெரிக்கா, JLR விற்பனையின் 29 சதவீதம் பங்கைக் கொண்டுள்ளது. இதனால் JLR-க்கு பெரிய சவால் உருவாகியுள்ளது.</p><p>

JLR, சம்பளம் பெரும் (salaried) மற்றும் நிர்வாக (management) ஊழியர்களுக்கு தன்னார்வ பணிவிலகல் திட்டத்தை அறிவித்துள்ளது. பணியாளர்கள் மற்றும் தொழிற்சங்கங்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டு, விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளது.
</p><p></p><p>ஐரோப்பிய கார் நிறுவனங்கள் அனைத்தும் தற்போது விற்பனை குறைவு, அதிக செலவுகள் மற்றும் சீன கார் பிராண்டுகளின் போட்டி காரணமாக சிரமங்களை எதிர்கொள்கின்றன. Volkswagen கூட சமீபத்தில் 50,000 வேலைகளை குறைக்கும் restructuring திட்டத்தை அறிவித்துள்ளது.
</p><p>
பிரித்தானியாவில் Tata Group-இன் Tata Steel, Tata Consultancy Services, Agratas EV battery plant போன்றவை பெரிய முதலீடுகளை மேற்கொண்டு வருகின்றன. ஆனால் JLR-இன் வேலை இழப்பு, பிரித்தானியா ஆட்டோமொபைல் துறைக்கு பெரிய அதிர்ச்சியாகும்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-05T21:43:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[சட்டப்பேரவையில் தவெகவை தெறிக்கவிட்ட உதயநிதி ஸ்டாலின் ; திங்கட்கிழமைக்காக காத்திருக்கும் அரசியல் களம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/udhayanidhi-took-tvk-task-the-legislative-assembly-1788633076"></link>
            <id>https://jvpnews.com/article/udhayanidhi-took-tvk-task-the-legislative-assembly-1788633076</id>
            <summary type="text">தமிழக சட்டப்பேரவையில் ஆளும் கட்சியை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடுமையாக விமர்சித்த நிலையில், அவரது கருத்துகளுக்கு தவெக உறுப்பினர்கள் எதிர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழக சட்டப்பேரவையில் ஆளும் கட்சியை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடுமையாக விமர்சித்த நிலையில், அவரது கருத்துகளுக்கு தவெக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்த சம்பவம் அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாகியுள்ளது.</p><p>
</p><p></p><p>சட்டப்பேரவையில் பேசிய உதயநிதி ஸ்டாலின், தவெக ஆட்சிப் பொறுப்பேற்ற 116 நாட்களில் உயிரிழப்பு சம்பவங்கள் மற்றும் காவல் நிலைய மரணங்கள் இடம்பெற்றுள்ளதாகக் குற்றஞ்சாட்டினார்.</p><p> மேலும், தவெக நிர்வாகிகள் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும், அது தொடர்பாக முதலமைச்சர் விஜய் உரிய பதிலளிக்கவில்லை என்றும் அவர் விமர்சித்தார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8cd56e38-f01b-4744-9328-37e0e8424cea/26-6a9c5ff607762.webp' /></p><p>தொடர்ந்து, வரும் திங்கட்கிழமை முதலமைச்சர் பதிலளிக்க வேண்டிய நிலையில், “இன்னும் மூன்று நாட்கள் அவகாசம் உள்ளது; நன்றாகத் தயாராகி வரச் சொல்லுங்கள்” என உதயநிதி ஸ்டாலின் சபாநாயகரிடம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.</p><p>
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் குரல் எழுப்பியதாகவும், அந்த நேரத்தில் முதலமைச்சர் விஜய் அமைதியாக இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இதனிடையே, உதயநிதி ஸ்டாலினின் பேச்சு குறித்து திமுகவினர் சமூக வலைத்தளங்களில் பல்வேறு கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர். </p><p>குறிப்பாக, தவெக உறுப்பினர்களின் எதிர்ப்புக்கு மத்தியில் உதயநிதி அமைதியாகத் தண்ணீர் அருந்திய காட்சியை திமுக ஆதரவாளர்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
</p><p>
மறுபுறம், சட்டப்பேரவையில் எதிர்க்கட்சியின் விமர்சனங்களுக்கு முதலமைச்சர் விஜய் எவ்வாறு பதிலளிப்பார் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.</p><p>

இந்த நிலையில், எதிர்வரும் திங்கட்கிழமை முதலமைச்சர் விஜய், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்களின் குற்றச்சாட்டுகளுக்கு நேரடியாகப் பதிலளிப்பாரா அல்லது எதிர்க்கட்சிகளை விமர்சித்து பதிலளிப்பாரா என்பது அரசியல் வட்டாரங்களில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-05T21:43:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரான் போர் எதிரொலி ; அமெரிக்காவில் பெற்றோல் விலை வரலாறு காணாத உயர்வு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/petrol-prices-in-the-us-hit-an-all-time-high-1788632422"></link>
            <id>https://canadamirror.com/article/petrol-prices-in-the-us-hit-an-all-time-high-1788632422</id>
            <summary type="text">ஈரான் மீதான போரை தொடர்ந்து அதிகரித்து வரும் எரிசக்திச் செலவுகள் காரணமாக, அமெரிக்காவில் பெற்றோல் விலை ஒரு கலன் (அமெரிக்காவில் 3.78 லீற்றர்) 4 டொலரைத் த...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரான் மீதான போரை தொடர்ந்து அதிகரித்து வரும் எரிசக்திச் செலவுகள் காரணமாக, அமெரிக்காவில் பெற்றோல் விலை ஒரு கலன் (அமெரிக்காவில் 3.78 லீற்றர்) 4 டொலரைத் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>

வரவிருக்கும் தொழிலாளர் தினம் கொண்டாடப்படும் வாரத்தில் பெற்றோல் விலை ஒரு கலன் 4.03 டொலராக இருக்கும் என கேஸ் பட்டி (GasBuddy) தரவுகள் கணித்துள்ளன.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0271a611-7742-49d3-ba02-91b0fa61bc54/26-6a9c5d67d82c8.webp' /></p><p>இது, கடந்த 2012 ஆம் ஆண்டில் பதிவான ஒரு கலனுக்கான 3.83 டொலர் என்ற முந்தைய சாதனையை விட மிக அதிகமாகும்.
</p><p>
அமெரிக்க தொழிலாளர் இயக்கத்தைக் கொண்டாடும் அதிகாரப்பூர்வ விடுமுறை தினமான தொழிலாளர் தினம் (Labour Day) திங்கட்கிழமை அனுஷ்டிக்கப்பட்வுள்ள நிலையில், இந்த நீண்ட வார இறுதியில் பலரும் பயணங்களை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர்.
</p><p>
GasBuddy தரவுகளின்படி, கடந்த வியாழக்கிழமை நிலவரப்படி நாட்டின் சராசரி பெற்றோல் விலை ஒரு கலனுக்கு சுமார் 4.13 டொலராக இருந்தது. </p><p>இது கடந்த ஆண்டின் சராசரியை விட சுமார் ஒரு டொலர் கூடுதலாகும்.</p><p>

4 டொலர் என்ற இந்த விலை எல்லையானது அமெரிக்க நுகர்வோருக்கு மிகவும் தாங்க முடியாத ஒரு புள்ளியாக (Pain Point) மாறியுள்ளதாக ஆய்வாளர்கள் ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளனர்.
</p><p>
அமெரிக்கா - ஈரான் இடையேயான மோதல் ஏழாவது மாதத்தில் அடியெடுத்து வைத்துள்ள நிலையில், அதிகரித்து வரும் எரிசக்திச் செலவுகள் எதிர்வரும் நவம்பர் இடைக்காலத் தேர்தலை எதிர்நோக்கியுள்ள டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்துக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ள முக்கியப் பிரச்சினையாக மாறியுள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-05T21:42:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாளத்தில் 10 நாட்களாக சுரங்கத்துக்குள் சிக்கியிருந்த சீனர் உயிருடன் மீட்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/rescued-alive-after-being-stranded-nepal-10-days-1788640207"></link>
            <id>https://jvpnews.com/article/rescued-alive-after-being-stranded-nepal-10-days-1788640207</id>
            <summary type="text">நேபாளத்தில் கடந்த மாதம் நிகழ்ந்த பாரிய வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவையடுத்து சுரங்கத்துக்குள் சிக்கியிருந்த சீன நாட்டைச் சேர்ந்த ஒருவர் 10 நாட்களுக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நேபாளத்தில் கடந்த மாதம் நிகழ்ந்த பாரிய வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவையடுத்து சுரங்கத்துக்குள் சிக்கியிருந்த சீன நாட்டைச் சேர்ந்த ஒருவர் 10 நாட்களுக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p></p><p>
</p><p>
இமாலய பள்ளத்தாக்குப் பகுதியில் கடந்த ஆகஸ்ட் 26 ஆம் திகதி நிகழ்ந்த பனிப்பாறை சரிவு வெள்ளப்பெருக்கு மற்றும் மண் சரிவு காரணமாக 1,300 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுடன், 5,600 க்கும் அதிகமானோர் காணாமல் போயுள்ளனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/934f1a94-e66e-4141-a9ab-98f14983b12b/26-6a9c7bd1a4e9c.webp' /></p><p>இதற்கிடையில், திரிசூலி நதிக்கரையில் அமைந்துள்ள நீர்த்தேக்கச் சுரங்கப்பாதையிலிருந்து சீன நபர் ஒருவர் மீட்கப்பட்டதாக நேபாள இராணுவம் தெரிவித்துள்ளது.
</p><p>
முன்னதாக இதே சுரங்கத்திலிருந்து நேற்று முன்தினம் இரண்டு நேபாளிகள் வியத்தகு முறையில் உயிருடன் மீட்கப்பட்டிருந்தனர்.</p><p>

ஆற்றின் மேல் பகுதியில் கடந்த ஆகஸ்ட் 26 ஆம் திகதி ஏற்பட்ட பனிப்பாறைச் சரிவு காரணமாக, ஆறு நீர்வழங்கல் திட்டங்களுடன் தொடர்புடைய சுரங்கப்பாதைகளில் குறைந்தது 900 பேர் வரை சிக்கியிருக்கலாம் என மீட்புப் பணியாளர்கள் நம்புகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-05T21:19:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரான் போருக்குப் பிறகு ட்ரம்பின் மிகப் பெரிய திட்டம்! மத்திய கிழக்கில் அடுத்த அதிரடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/trump-planning-something-much-bigger-middle-east-1788637650"></link>
            <id>https://tamilwin.com/article/trump-planning-something-much-bigger-middle-east-1788637650</id>
            <summary type="text">ஈரான் போர் முடிவடைந்த பின்னர் மத்திய கிழக்கிற்காக “மிகப் பெரிய திட்டம்” ஒன்றை உருவாக்கி வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரான் போர் முடிவடைந்த பின்னர் மத்திய கிழக்கிற்காக “மிகப் பெரிய திட்டம்” ஒன்றை உருவாக்கி வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
</p><p>
ஈரானை கட்டுப்படுத்துவதற்காக பிராந்திய நாடுகளை ஒன்றிணைப்பதும், இஸ்ரேலை அதன் அண்டை நாடுகளுடன் நெருக்கமான உறவுகளை ஏற்படுத்தச் செய்வதும் இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கங்களாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><h2>மிகப் பெரிய திட்டம்</h2><p>
இதற்காக அமெரிக்காவின் கூட்டணி நாடுகளை ஈரானுக்கு எதிரான பிராந்திய கூட்டமைப்பில் இணைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6419ffb5-2b6c-483d-af02-84c4878b859c/26-6a9c7472283a0.webp' /></p><p>

மேலும், காஸா உள்ளிட்ட பிராந்திய மோதல்களை முடிவுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளையும் அமெரிக்கா பரிசீலித்து வருகிறது.
</p><p>
ட்ரம்பின் காஸா திட்டத்தின் அடுத்த கட்டத்தை முன்னெடுப்பது, இஸ்ரேல்–சிரியா பாதுகாப்பு ஒப்பந்தத்தை ஏற்படுத்துவது மற்றும் இஸ்ரேல்–லெபனான் உடன்பாட்டை நடைமுறைப்படுத்துவது ஆகியவையும் இதில் அடங்கும்.
</p><h2>ஈரான் போர்&nbsp;</h2><p>
அத்துடன், Abraham Accords ஒப்பந்தத்தை விரிவுபடுத்தி, இஸ்ரேல்–சவுதி அரேபியா இடையே இராஜதந்திர உறவை ஏற்படுத்துவதற்கும் அமெரிக்கா முயற்சிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f8d81f73-ba31-4dc4-8088-e58bf8abc3ee/26-6a9c7472d56e3.webp' /></p><p>
</p><p>
இஸ்ரேலில் ஒக்டோபர் 27ஆம் திகதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் அது சவாலாக அமையலாம் என கூறப்படுகிறது.
</p><p>
எனினும், இஸ்ரேல் தேர்தல் முடிவுகளுக்காக காத்திருக்காமல் ட்ரம்ப் தனது திட்டத்தை முன்னெடுக்கலாம் என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p>

இந்தத் திட்டம் தற்போது உருவாக்கப்பட்டு வருவதுடன், முழுமையாக தயாராக இன்னும் சில வாரங்கள் தேவைப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-05T21:16:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[பசிபிக் பெருங்கடலில் ஒரே நேரத்தில் உருவான 3 சூறாவளிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/three-cyclones-formed-simultaneously-pacific-ocean-1788642801"></link>
            <id>https://canadamirror.com/article/three-cyclones-formed-simultaneously-pacific-ocean-1788642801</id>
            <summary type="text">உலகெங்கிலும் உள்ள பல நாடுகளை எல் நினோ காரணி பாதித்துள்ள பின்னணியில், அது உருவான பசிபிக் பெருங்கடலில் 11 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரே நேரத்தில் மூன்று சூறா...</summary>
            <content type="html"><![CDATA[<p>உலகெங்கிலும் உள்ள பல நாடுகளை எல் நினோ காரணி பாதித்துள்ள பின்னணியில், அது உருவான பசிபிக் பெருங்கடலில் 11 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரே நேரத்தில் மூன்று சூறாவளிகள் தீவிரமடைந்துள்ளன. </p><p>

இந்த சூறாவளி நிலைமை காரணமாக ஏற்பட்ட கனமழை மற்றும் கடல் கொந்தளிப்பு காரணமாக ஹவாய் தீவுகளுக்கு அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/616a0b6f-104b-4c8c-afea-37845860fa93/26-6a9c85f31c230.webp' /></p><p>எல் நினோ தாக்கத்தின் மத்தியில் இந்த ஆண்டில் சீனாவைப் பாதித்த 7ஆவது சூறாவளியாகக் குறிப்பிடப்படும் 'சௌடெல்' (Soudelor) சூறாவளி அந்நாட்டிற்கு கடும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருவதாகக் தெரிவிக்கப்படுகிறது.</p><p> 

எல் நினோ காரணமாக கொலம்பியாவில் மழை குறைந்து வறட்சி நிலை ஏற்பட்டுள்ளதுடன், அங்குள்ள வீடுகளுக்கு பவுசர்கள் மூலம் நீர் விநியோகிக்க வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது. </p><p>

அத்துடன், கடந்த சில வாரங்களாக இந்தோனேசியா மற்றும் சுவிட்சர்லாந்தின் வனப்பகுதிகளில் நிலவிய வறட்சியான வானிலையுடன் கடுமையான காட்டுத்தீ பரவியது. </p><p>

உலகிற்கு இவ்வாறு பாதிப்பை ஏற்படுத்திய எல் நினோ நிலைமை, இலங்கையின் பல மாவட்டங்களில் கடுமையான வறட்சியை ஏற்படுத்தி பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><p> 

இதற்கமைய, நாட்டின் 7 மாவட்டங்களில் நிலவும் கடுமையான வறட்சியான வானிலை காரணமாக குடிநீரைப் பெற்றுக்கொள்ள முடியாமல் 35,000க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த 115,534 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-05T21:13:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலக அழகி பட்டத்தை வென்றார் டொமினிகன் குடியரசின் ஜோஹைரி மோலா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/johaury-mola-dominican-won-miss-world-title-1788641440"></link>
            <id>https://jvpnews.com/article/johaury-mola-dominican-won-miss-world-title-1788641440</id>
            <summary type="text">இம்முறை உலக அழகி பட்டத்தை டொமினிகன் குடியரசின் ஜோஹைரி மோலா (Joheirry Mola) இன்று (05) வென்றுள்ளார். 

கடந்த ஆண்டு உலக அழகி பட்டத்தை வென்ற தாய்லாந்தி...</summary>
            <content type="html"><![CDATA[<p>இம்முறை உலக அழகி பட்டத்தை டொமினிகன் குடியரசின் ஜோஹைரி மோலா (Joheirry Mola) இன்று (05) வென்றுள்ளார். </p><p>

கடந்த ஆண்டு உலக அழகி பட்டத்தை வென்ற தாய்லாந்தின் ஓபல் சுசாடா சுவாங்ஸ்ரீ (Opal Suchata Chuangsri) வெற்றியாளருக்குரிய கிரீடத்தைச் சூட்டியதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b3344c7f-033e-471b-8853-77a01dfeed30/26-6a9c80a1d72d6.webp' /></p><p>வியட்நாமில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் முறையே ஸ்பெயின் மற்றும் மலேசியாவைப் பிரதிநிதித்துவப்படுத்திய போட்டியாளர்கள் இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களைப் பெற்றுக்கொண்டனர். 

இப்போட்டித் தொடர் இம்முறை அதன் 73ஆவது பதிப்பாக நடைபெற்றது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-05T20:50:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kumar</name>
            </author>
            <title type="text"><![CDATA[5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் சாதனை! மட்டக்களப்பில் முதலிடம் பிடித்த மாணவன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/5-scholarship-examination-batticaloa-first-place-1788640703"></link>
            <id>https://tamilwin.com/article/5-scholarship-examination-batticaloa-first-place-1788640703</id>
            <summary type="text">வெளியாகியுள்ள ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் மட்டக்களப்பு புனித
மைக்கேல் கல்லூரி மாணவன் ஆனந்தநாயகம் அகர்வின் 175 புள்ளிகளைப்பெற்று
மட்டக்களப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>வெளியாகியுள்ள ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் மட்டக்களப்பு புனித
மைக்கேல் கல்லூரி மாணவன் ஆனந்தநாயகம் அகர்வின் 175 புள்ளிகளைப்பெற்று
மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலிடத்தினைப் பெற்றுள்ளார்.</p><p>
மட்டக்களப்பு அரசடியை சேர்ந்த ஒய்வுபெற்ற கலால் திணைக்கள உத்தியோகத்தர்
ஆனந்தநாயகம்-நளாயினி தம்பதியினரின் புதல்வரான அகர்வின் இந்த சாதனையினை
படைத்துள்ளார்.</p><h2>மாவட்டத்தில் முதலிடம்</h2><p>
</p><p>&nbsp;குறித்த மாணவனின் இல்லத்திற்கு சென்ற மட்டக்களப்பு வலய கல்வி
பணிப்பாளர் தி.ரவி தலைமையிலான குழுவினர் மாணவனுக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/48129911-77b9-4c30-8f56-171f49b21c04/26-6a9c7e848804d.webp' /></p><p>
இதன்போது மட்டக்களப்பு வலயத்தின் கல்வி பணிப்பாளர்,பிரதிக்கல்விப்பணிப்பாளர்
மற்றும் ஆசிரியர்கள்,உத்தியோகத்தர்களால் கௌரவிக்கப்பட்டார்.
</p><p>இந்த நிகழ்வில் வலயத்தின் பிரதிக்கல்வி பணிப்பாளர் திருமதி மகேந்திரகுமார்
மற்றும் மட்டக்களப்பு புனித மைக்கேல் கல்லூரி ஆசிரியர்,வலய கல்வி அலுவலகத்தின்
அதிகாரிகள்,பாடசாலையின் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-05T20:48:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவின் பாரிய போர்குற்றம்! தக்க பதிலடி விரைவில் என்கிறது ஈரான்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/americas-massive-war-crime-1788639291"></link>
            <id>https://ibctamil.com/article/americas-massive-war-crime-1788639291</id>
            <summary type="text">ஈரானிய வர்த்தகக் கப்பல்கள் மீதான அமெரிக்காவின் ஆக்கிரமிப்புத் தாக்குதலை ஈரான் வன்மையாகக் கண்டித்துள்ளதுடன், அச்செயலை போர்க்குற்றம் என்று குற்றம் சுமத்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானிய வர்த்தகக் கப்பல்கள் மீதான அமெரிக்காவின் ஆக்கிரமிப்புத் தாக்குதலை ஈரான் வன்மையாகக் கண்டித்துள்ளதுடன், அச்செயலை போர்க்குற்றம் என்று குற்றம் சுமத்தியுள்ளது.</p><p>ஈரான் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயம் சுட்டிக்காட்டியுள்ளது.</p><p>இந்தத் தாக்குதல்கள் அமெரிக்க இராணுவ ஆக்கிரமிப்பின் தொடர்ச்சி என்றும், ஈரான் மீதான ஒரு பரந்த கடல் முற்றுகை மற்றும் பொருளாதாரப் போரின் ஒரு பகுதி என்றும் அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.</p><p></p><h2>வர்த்தகக் கப்பல் போக்குவரத்து</h2><p>இவை ஐ.நா. சாசனத்தின் மீறல் மற்றும் சர்வதேச அமைதி, பாதுகாப்பு மற்றும் வர்த்தகக் கப்பல் போக்குவரத்திற்கு அச்சுறுத்தல் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d0f03ca9-8290-41e9-9b89-b8233cfb72b2/26-6a9c783d0114f.webp' /></p><p>இந்நிலையில் ஈரானின் உள்ள வியூக ஆய்வுகளுக்கான மையத்தின் பகுப்பாய்வாளரான அலி அக்பர் தாரேனி, ஈரானிய எண்ணெய் கப்பல்கள் மீதான அமெரிக்கத் தாக்குதல்கள் ஒரு பெரிய பிரச்சினை என்றும், அதற்கு பதிலளிக்காமல் விட்டுவிட ஈரானால் முடியாது என்றும் கூறியுள்ளார்.</p><p>இது ஈரானைக் கட்டாயப்படுத்தும் செயல் என்றும் அவரால் கூறப்பட்டுள்ளது. மேலும் கடுமையாகத் தாக்கிப் பதிலடி கொடுக்க இது ஈரானைத் தூண்டுகிறது எனவும் அவரால் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-05T20:16:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானின் கார்க் தீவு அருகே எண்ணெய் தாங்கி கப்பல் மீது அமெரிக்க ஏவுகணைத் தாக்குதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/us-missile-attack-oil-tanker-iran-kharg-island-1788638933"></link>
            <id>https://canadamirror.com/article/us-missile-attack-oil-tanker-iran-kharg-island-1788638933</id>
            <summary type="text">ஈரானின் கார்க் (Kharg) தீவுப் பகுதிக்கு அருகில் நின்றுகொண்டிருந்த எண்ணெய் தாங்கி கப்பல் ஒன்று ஏவுகணைத் தாக்குதலுக்குள்ளாகியுள்ளதாக ஈரானிய ஊடகங்கள் செய...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானின் கார்க் (Kharg) தீவுப் பகுதிக்கு அருகில் நின்றுகொண்டிருந்த எண்ணெய் தாங்கி கப்பல் ஒன்று ஏவுகணைத் தாக்குதலுக்குள்ளாகியுள்ளதாக ஈரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1eac0a48-e5ba-4ece-bef3-e3f437fc16ce/26-6a9c76d775bc7.webp' /></p><p>அந்தக் கப்பல் அமெரிக்காவின் நான்கு ஏவுகணைத் தாக்குதல்களுக்குள்ளாகியுள்ளதாகவும், தற்போது கப்பலில் உள்ளவர்கள் வெளியேற்றப்பட்டு வருவதாகவும் 'கபார் ஃபூரி' (Khabar Fouri) செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
</p><p>
ஈரானின் ஒட்டுமொத்த எண்ணெய் ஏற்றுமதியில் சுமார் 90 சதவீதப் பகுதிகள் இந்த கார்க் தீவு ஊடாகவே செயற்படுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-09-05T20:09:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானின் மூன்று எண்ணெய் கப்பல்களை தாக்கி அழித்த அமெரிக்கா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/us-destroys-3-iranian-oil-tankers-after-attack-1788638322"></link>
            <id>https://news.lankasri.com/article/us-destroys-3-iranian-oil-tankers-after-attack-1788638322</id>
            <summary type="text">US destroys 3 Iranian oil tankers: அமெரிக்கா மூன்று ஈரானிய எண்ணெய் கப்பல்களை தாக்கி அழித்தது.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்கா-ஈரான் இடையில...</summary>
            <content type="html"><![CDATA[<p>US destroys 3 Iranian oil tankers: அமெரிக்கா மூன்று ஈரானிய எண்ணெய் கப்பல்களை தாக்கி அழித்தது.
</p><p>
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்கா-ஈரான் இடையிலான பதற்றம் மீண்டும் தீவிரமடைந்துள்ளது. </p><p>கடந்த சனிக்கிழமை, ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படை (IRGC) இரண்டு அமெரிக்க கடற்படை கப்பல்களை குறிவைத்து பல ஏவுகணைகளை ஏவியது. ஆனால், அமெரிக்காவின் விமானக் கப்பல் மற்றும் guided-missile destroyer கப்பல்கள் அவற்றை தவிர்த்தன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e0574f2e-1bf6-41af-9778-7888615a0ad4/26-6a9c7474c7bf7.webp' /></p><p>
</p><h2>
அமெரிக்காவின் பதிலடி</h2><p>இதற்குப் பதிலடி நடவடிக்கையாக, அமெரிக்க மத்திய கட்டளை (US CENTCOM) மூன்று ஈரானிய எண்ணெய் டேங்கர்களை தாக்கி அழித்ததாக அறிவித்துள்ளது. </p><p>

இதில் M/T Downy மற்றும் M/T Stark 1 என்ற இரண்டு எண்ணெய் கப்பல்கள் கார்‌க் தீவின் அருகே அழிக்கப்பட்டன. மேலும், ஓமன் வளைகுடாவில் இருந்த மற்றொரு எண்ணெய் கப்பல் செயலிழக்கச் செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
</p><p></p><p>இந்த டேங்கர்கள் ஈரானின் பல பில்லியன் டொலர் மதிப்புள்ள “shadow network” எனப்படும் மறைமுக நிதி வலையமைப்பின் பகுதியாக இருந்ததாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது IRGC மற்றும் அதன் கூட்டாளிகளுக்கு நிதி உதவி வழங்குவதாக கூறப்படுகிறது.
</p><p>
US CENTCOM தளபதி அட்மிரல் பிராட் கூப்பர், “எங்கள் கப்பல்களை குறிவைத்தால், அதற்கும் அதிகமான பொருளாதாரச் செலவை ஈரானுக்கு ஏற்படுத்துவோம். தேவையானால், ஈரானின் எண்ணெய் கப்பல் படையை முழுமையாக அழிக்கவும் தயங்கமாட்டோம்” என்று எச்சரித்துள்ளார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3f991f2b-d7a7-483c-b3a4-472f867f408c/26-6a9c74758975e.webp' /></p><p>ஈரான், கார்‌க் தீவின் அருகே அமெரிக்கா தனது எண்ணெய் கப்பல்களை தாக்கியதாக குற்றம் சாட்டியுள்ளது. ஆனால், உயிரிழப்பு எதுவும் இல்லை என்றும், கப்பல் குழுவினர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக ஈரானின் தஸ்னிம் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
</p><p>
இந்த சம்பவம், அமெரிக்கா-ஈரான் இடையிலான நீண்டகால பதற்றத்தை மேலும் தீவிரப்படுத்தும் அபாயம் உள்ளதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். கார்‌க் தீவு, ஈரானின் எண்ணெய் ஏற்றுமதியின் 90 சதவீதத்திற்கும் மேற்பட்டவை நடைபெறும் முக்கிய மையமாக இருப்பதால், இந்த தாக்குதல் ஈரானின் பொருளாதாரத்துக்கு பெரிய சவாலாகும்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-05T19:55:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[மத்திய கிழக்கு பதற்றத்துக்கு மத்தியில் கட்டாரின் இராஜதந்திர முயற்சி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/qatar-diplomatic-effort-amid-middle-east-tensions-1788637859"></link>
            <id>https://ibctamil.com/article/qatar-diplomatic-effort-amid-middle-east-tensions-1788637859</id>
            <summary type="text">பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், மத்தியஸ்த நாடுகள் அமைதியைக் கடைப்பிடிக்க வலியுறுத்தியுள்ள நிலையில், கட்டாரின் பிரதமரும் வெளியுறவு அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், மத்தியஸ்த நாடுகள் அமைதியைக் கடைப்பிடிக்க வலியுறுத்தியுள்ள நிலையில், கட்டாரின் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான ஷேக் முகமது பின் அப்துல்ரஹ்மான் பின் ஜாசிம் அல் தானி விசேட பேச்சுவார்த்தை ஒன்றில் ஈடுபட்டுள்ளார்.</p><p>இன்று லெபனான் பிரதமர் நவாஃப் சலாமுடன் தொலைபேசியில் மத்தியக்கிழக்கு பதற்றம் குறித்து அவர் விவாதித்ததாக கூறப்படுகிறது.</p><p>இரு தலைவர்களும் இருதரப்பு உறவுகளை மறுஆய்வு செய்ததோடு, பிராந்தியம் முழுவதும் பதற்றத்தைத் தணிப்பதற்கும், பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை வலுப்படுத்துவதற்கும் மேற்கொள்ளப்படும் இராஜதந்திர முயற்சிகள் மற்றும் கூட்டு ஒருங்கிணைப்புக்கு சிறப்பு கவனம் செலுத்தியதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p></p><h2>பிராந்திய முன்னேற்றங்கள்</h2><p>சமீபத்திய பிராந்திய முன்னேற்றங்கள் குறித்தும் விவாதித்ததாக அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e40e4cc4-fc16-403a-b9c3-e70d13d027ff/26-6a9c72a5614c2.webp' /></p><p>

கடல்வழிப் போக்குவரத்தின் சுதந்திரத்தைப் பாதுகாப்பதையும், பிராந்தியத்தில் நீடித்த அமைதிக்கான ஒரு விரிவான உடன்படிக்கைக்கு வழிவகுப்பதையும் நோக்கமாகக் கொண்ட இராஜதந்திர முன்னெடுப்புகளுக்கு கட்டார் தனது ஆதரவைத் தெரிவிக்கும் என ஷேக் முகமது மீண்டும் உறுதிப்படுத்தினார்.
</p><p>மேலும், லெபனானின் ஸ்திரத்தன்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கு கத்தார் தனது உறுதியான ஆதரவை மீண்டும் வலியுறுத்தியதோடு, லெபனான் மக்களுடன் தனது தொடர்ச்சியான ஒற்றுமையையும் வெளிப்படுத்தினார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-05T19:51:20+00:00</updated>
        </entry>
    </feed>
