<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-08-27T04:22:20+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ். பலாலி சர்வதேச விமான நிலையம் - NPP அமைச்சரின் அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/jaffna-international-airport-and-port-development-1787801590"></link>
            <id>https://ibctamil.com/article/jaffna-international-airport-and-port-development-1787801590</id>
            <summary type="text">யாழில் சர்வதேச விமான நிலையம் மற்றும் துறைமுகத்துக்கு இந்தியா நிதி உதவி
வழங்கினாலும் எந்த அபிவிருத்தியை எப்போதும் மேற்கொள்வது என்பது தொடர்பில்
அரசாங்...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழில் சர்வதேச விமான நிலையம் மற்றும் துறைமுகத்துக்கு இந்தியா நிதி உதவி
வழங்கினாலும் எந்த அபிவிருத்தியை எப்போதும் மேற்கொள்வது என்பது தொடர்பில்
அரசாங்கமே முடிவெடுக்கும் என நெடுஞ்சாலைகள் மற்றும் போக்குவரத்து அமைச்சர்
விமல் ராட்நாயக்க தெரிவித்தார்.
</p><p>ஊடகவியலாளர் சந்திப்பின் போது காங்கேசன்துறை முகம்
மற்றும் விமான நிலைய அபிவிருத்தி தொடர்பில் நிதி கிடைத்தும் அரசாங்கமே அதனை
அபிவிருத்தி செய்ய பின்னிக்கிறது என&nbsp;ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கே அவர் இவ்வாறு
பதிலளித்தார்.
</p><p>அவர் மேலும் தெரிவிக்கையில், விமான நிலைய அபிவிருத்திக்காக இந்தியா ஒரு தொகை
பணத்தை வழங்கியிருக்கிறது.</p><p></p><h2>அரசாங்கம் முறையான திட்டமிடல்</h2><p> அந்த நிதி முழுமையான அபிவிருத்திக்கு போதாது எஞ்சிய
தொகையை கடன் வாங்க வேண்டியுள்ளது.

அபிவிருத்தி தொடர்பில் அரசாங்கம் என்ற வகையில் கரிசனையுடன் இருக்கிறோம் ஆனால்
எந்த அபிவிருத்தியை எங்கு மேற்கொள்ள வேண்டும் என்பது தொடர்பில் அரசாங்கமே
முடிவு செய்யும்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ff90430a-e4b4-4eeb-94a1-d0bda28e247d/26-6a8fb2c425985.webp' /></p><p>மத்தள விமான நிலையத்தை கடந்த கால அரசாங்கம் முறையான திட்டமிடல் என்று
கட்டியதன் காரணமாக அரசாங்கத்திற்கு பாரிய நஷ்டம் ஏற்பட்டு வருகிறது.
</p><p>
அவ்வாறான ஒரு நஷ்டமான அபிவிருத்தியை எமது அரசாங்கம் மேற்கொள்ளாது அபிவிருத்தி
தொடர்பில் யார் நீதி வழங்கினாலும் அரசாங்கமே இறுதி முடிவை எடுக்கும் என
தெரிவித்தார்.
</p><p>
குறித்த ஊடக சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் கருணை நாதன் இளங்குமரன்
மற்றும் கடற் தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் ஆகியோரும் கலந்து
கொண்டனர்.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-27T04:12:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பில் வெளிச்சத்துக்கு வந்த மருந்து மோசடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/pharmaceutical-fraud-uncovered-in-colombo-1787803732"></link>
            <id>https://jvpnews.com/article/pharmaceutical-fraud-uncovered-in-colombo-1787803732</id>
            <summary type="text">கொழும்பு மருதானையில் வைத்தியரின் பரிந்துரையின்றி போதைப்பொருளுக்கு பயன்படுத்தப்படும் மாத்திரைகள் விற்பனை செய்யப்பட்டு வந்ததாகக் கண்டறியப்பட்டதையடுத்து,...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு மருதானையில் வைத்தியரின் பரிந்துரையின்றி போதைப்பொருளுக்கு பயன்படுத்தப்படும் மாத்திரைகள் விற்பனை செய்யப்பட்டு வந்ததாகக் கண்டறியப்பட்டதையடுத்து, மருந்தகம் ஒன்று அதிகாரிகளால் முற்றுகையிடப்பட்டுள்ளது.</p><p>
</p><p></p><p>தேசிய ஒளடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபை அதிகாரிகளும் மருதானை பொலிஸாரும் இணைந்து மேற்கொண்ட சோதனையின்போது, நரம்பியல் நோயாளிகளுக்கு வழங்கப்படும் வலி நிவாரணி மருந்துகள் போதைப்பொருளுக்கு அடிமையானவர்களுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்யத் தயாராக வைக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6a966964-5317-4862-9fa8-9fbaa10e2838/26-6a8fb855b4969.webp' /></p><p>மேலும், அரச வைத்தியசாலைகளுக்கு மருத்துவ விநியோகப் பிரிவினால் வழங்கப்படும், தனியார் மருந்தகங்களில் விற்பனை செய்வதற்கு சட்டத்தால் தடைசெய்யப்பட்ட 8 வகையான மருந்துகளும் அங்கு கைப்பற்றப்பட்டுள்ளன.</p><p>
உரிய தகுதிகள் இல்லாத ஒருவரால் இந்த மருந்தகம் நடத்தப்பட்டு வந்ததாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p>

மேல் மாகாண புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
அதேவேளை, அரச வைத்தியசாலைகளுக்காக வழங்கப்படும் தடைசெய்யப்பட்ட மருந்துகள் குறித்த மருந்தகத்திற்கு எவ்வாறு கிடைத்தன என்பது தொடர்பில் சுகாதார அமைச்சு துரித விசாரணையை ஆரம்பித்துள்ளது.&nbsp;&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-27T04:08:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடமை நேரங்களில் சமூக வலைத்தளப் பயன்பாடு தொடர்பில் தொடருந்து ஊழியர்களுக்கு விசேட சுற்றுநிருபம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/special-circular-for-railway-employees-1787802971"></link>
            <id>https://jvpnews.com/article/special-circular-for-railway-employees-1787802971</id>
            <summary type="text">கடமை நேரங்களின் போது சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவது மற்றும் தொடருந்து இயக்க நடவடிக்கைகள் தொடர்பான உணர்திறன் வாய்ந்த தகவல்களைச் சமூக வலைத்தளங்களில்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கடமை நேரங்களின் போது சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவது மற்றும் தொடருந்து இயக்க நடவடிக்கைகள் தொடர்பான உணர்திறன் வாய்ந்த தகவல்களைச் சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதைத் தடுப்பது தொடர்பில் தொடருந்து திணைக்களம் விசேட சுற்றுநிருபம் ஒன்றை வெளியிட்டுள்ளது.</p><p>
</p><p></p><p>சுற்றுநிருபத்தின் அறிவுறுத்தல்களை மீறிச் செயற்படும் அதிகாரிகளுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தொடருந்து பொது முகாமையாளரின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்ட குறித்த சுற்றுநிருபத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6fe83cc1-83a6-48a2-b2eb-e0a290ed5d91/26-6a8fb55c9a9c9.webp' /></p><p>தொடருந்து திணைக்களத்தின் சில அதிகாரிகளும் ஊழியர்களும் கடமை நேரங்களிலும் அதற்குத் தொடர்புடைய சந்தர்ப்பங்களிலும் சமூக வலைத்தளங்கள் ஊடாக உணர்திறன் வாய்ந்த தகவல்களை வெளிப்படுத்தும் போக்கு அவதானிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இவ்வாறு உணர்திறன் வாய்ந்த தகவல்களைச் சமூக வலைத்தளங்கள் மூலம் பகிரங்கப்படுத்துவதன் மூலம் தொடருந்து சேவையின் நம்பகத்தன்மை, பயணிகள் பாதுகாப்பு மற்றும் நிறுவன ஒழுக்கம் ஆகியவை கடுமையாகப் பாதிக்கப்படுவதால் இந்தச் சுற்றுநிருபம் வெளியிடப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
</p><p>
அத்துடன், தொடருந்து பொது முகாமையாளர், தொடருந்து திணைக்கள உத்தியோகப்பூர்வ ஊடகப் பேச்சாளர் மற்றும் தகவல் அதிகாரி ஆகியோருக்கு மட்டுமே தொடருந்து திணைக்களத்தின் உத்தியோகப்பூர்வ தகவல்களை வெளித்தரப்பினருக்கோ அல்லது ஊடகங்களுக்கோ வழங்குவதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இந்தப் புதிய சுற்றுநிருபத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது</p><p></p>]]></content>
            <updated>2026-08-27T03:56:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாளத்தில் உள்ள இலங்கையர்களுக்கு அவசர அறிவித்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/emergency-notice-to-sri-lankans-in-nepal-1787802128"></link>
            <id>https://jvpnews.com/article/emergency-notice-to-sri-lankans-in-nepal-1787802128</id>
            <summary type="text">நேபாளத்தில் நிலவும் அவசரகால நிலைமை குறித்து மிகவும் அவதானத்துடனும் பாதுகாப்பாகவும் இருக்குமாறு அங்குள்ள இலங்கையர்களுக்கு காத்மாண்டுவில் உள்ள இலங்கைத் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நேபாளத்தில் நிலவும் அவசரகால நிலைமை குறித்து மிகவும் அவதானத்துடனும் பாதுகாப்பாகவும் இருக்குமாறு அங்குள்ள இலங்கையர்களுக்கு காத்மாண்டுவில் உள்ள இலங்கைத் தூதரகம் அறிவித்துள்ளது.</p><p></p><p> 

குறிப்பாக, அபாயகரமான மாவட்டங்களில் அல்லது அதற்கு அருகில் வசிக்கும் இலங்கையர்களைப் பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/20894b2d-9c7d-4f9b-8528-ec65c5418eb3/26-6a8fb2114253a.webp' /></p><p> 

ஏதேனும் இலங்கையருக்கு அவசர உதவி அல்லது ஒருங்கிணைப்புத் தேவைப்பட்டால், காத்மாண்டுவில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் 24 மணி நேரமும் செயற்படும் +977 9851048653 என்ற தொலைபேசி இலக்கத்தினூடாகவோ அல்லது Slemb.kathmandu@mfa.gov.lk என்ற மின்னஞ்சல் ஊடாகவோ உதவியைப் பெற்றுக்கொள்ள முடியும்.</p><p> 

எவ்வாறாயினும், நேபாளத்தைப் பாதித்துள்ள வெள்ளம் மற்றும் மண்சரிவு நிலைமையினால் எந்தவொரு இலங்கையருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்பட்டதாக இதுவரை பதிவாகவில்லை என காத்மாண்டுவில் உள்ள இலங்கைத் தூதரகம் குறிப்பிட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-27T03:42:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[வரலாற்றுச் சிறப்புமிக்க செல்வச் சந்நிதி ஆலய தேர்த்திருவிழா - Live]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/selva-sannidhi-temple-charitable-festival-1787801178"></link>
            <id>https://tamilwin.com/article/selva-sannidhi-temple-charitable-festival-1787801178</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் - வடமராட்சி தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலய வருடாந்த உற்சவத்தின் தேர் திருவிழா இன்று(27.08.2026) நடைபெற்று வருகின்றது.
 இன்று (27...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் - வடமராட்சி தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலய வருடாந்த உற்சவத்தின் தேர் திருவிழா இன்று(27.08.2026) நடைபெற்று வருகின்றது.
</p><p> </p><p>இன்று (27) காலை முதல் விசேட பூசைகள் இடம்பெறுகின்றது.</p><h2>நாளை தீர்த்தத் திருவிழா&nbsp;</h2><p>செல்வச்சந்நிதி முருகன் ஆலய வருடாந்த மகோற்சவப் பெருவிழா கடந்த 13ஆம் திகதி அதிகாலை 1:45 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/8hRJ7eieL2I" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p>இன்று தேர்திருவிழா இடம்பெறுகின்ற நிலையில் நாளை (28) தீர்த்தத் திருவிழா இடம்பெறவுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-27T03:41:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[டாக்சிக் திரைப்படத்தின் முதல் நாள் வசூல்.. எவ்வளவு தெரியுமா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/toxic-movie-first-day-worldwide-box-office-1787800704"></link>
            <id>https://cineulagam.com/article/toxic-movie-first-day-worldwide-box-office-1787800704</id>
            <summary type="text">நேற்று வெளியான டாக்சிக் திரைப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

டாக்சிக்

நடிகர் யாஷ் இன்று பான்-இந்திய ஸ்டாராக ஜொலித்துக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நேற்று வெளியான டாக்சிக் திரைப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.</p><p></p><h2>

டாக்சிக்</h2><p>

நடிகர் யாஷ் இன்று பான்-இந்திய ஸ்டாராக ஜொலித்துக்கொண்டிருக்கிறார். கேஜிஎப் 2 திரைப்படத்தின் வெற்றிக்கு பின், 4 ஆண்டுகளுக்கு பிறகு யாஷ் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் <a href="https://www.youtube.com/watch?v=7TwkpFlc0dA" target="_blank">டாக்சிக்</a>. இப்படத்தை இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்கியுள்ளார்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/292f0f4f-0e6f-4587-8887-56b7f19d7afb/26-6a8fac83973cf.webp' /></p><p>இப்படத்தில் யாஷுடன் இணைந்து கியாரா அத்வானி, ருக்மிணி வசந்த், நயன்தாரா, ஹுமா குரேஷி, தாரா சுதாரியா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளியான டாக்சிக் திரைப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. சிலர் கடுமையான விமர்சனங்களையும் முன்வைத்து வருகிறார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9361daca-e312-437e-86b3-0bafdb27ca5b/26-6a8fac8449b48.webp' /></p><p>
</p><h2>
பாக்ஸ் ஆபிஸ்</h2><p>

இந்நிலையில், டாக்சிக் திரைப்படம் முதல் நாள் உலகளவில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, முதல் நாள் இப்படம் ரூ. 150 கோடிக்கும் மேல் உலகளவில் வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் எவ்வளவு வசூல் செய்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fa999ed8-f493-4c9f-bf8b-267be48e4efd/26-6a8fac850013c.webp' /></p>]]></content>
            <updated>2026-08-27T03:40:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[ட்ரம்பின் இளைய மகனுக்கு படுகொலை அச்சுறுத்தல் ; இரகசிய புலனாய்வு துறை விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/trump-s-youngest-son-secret-service-investigation-1787801649"></link>
            <id>https://canadamirror.com/article/trump-s-youngest-son-secret-service-investigation-1787801649</id>
            <summary type="text">அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் இளைய மகனான 20 வயதுடைய பரோன் ட்ரம்பை இலக்குவைத்து படுகொலைச் சதித்திட்டம் ஒன்று குறித்து ஈரானிய அரசுக்கு சொந்தமான த...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் இளைய மகனான 20 வயதுடைய பரோன் ட்ரம்பை இலக்குவைத்து படுகொலைச் சதித்திட்டம் ஒன்று குறித்து ஈரானிய அரசுக்கு சொந்தமான தொலைக்காட்சியில் காணொளி ஒளிபரப்பப்பட்டமை தொடர்பில் அமெரிக்க இரகசிய புலனாய்வு துறை தற்போது தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது.</p><p>குறித்த காணொளியில் பரோன் ட்ரம்ப் தொடர்ச்சியாகக் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், அவரைக் கொல்வதற்கு 10 மில்லியன் அமெரிக்க டொலர் வெகுமதி அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/260a4911-d570-4d57-a2aa-5f421809ac6a/26-6a8fb0325ab72.webp' /></p><p>பாதுகாக்கப்பட வேண்டிய நபர்களுக்கு விடுக்கப்படும் அனைத்து அச்சுறுத்தல்கள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்த இரகசிய புலனாய்வு துறையின் பேச்சாளர் நெய்ட் ஹெரிங், பாதுகாப்பு நடைமுறைகள் தொடர்பான தகவல்களைப் பகிரங்கப்படுத்த முடியாது எனக் குறிப்பிட்டார்.
</p><p>
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த பெப்ரவரி மாதம் ஆரம்பித்த போர் ஆறு மாதங்களாகத் தொடரும் நிலையில், அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான மோதல் நிலைமை மேலும் தீவிரமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-27T03:34:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாளப் பெருவெள்ளம்... பிரித்தானியச் சிறுமி உட்பட 400 வெளிநாட்டவர்கள் மாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/nepal-flash-flood-british-citizens-1787801788"></link>
            <id>https://news.lankasri.com/article/nepal-flash-flood-british-citizens-1787801788</id>
            <summary type="text">Nepal flash flood British citizens missing: நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் 13 வயது சிறுமி உட்பட பல பிரித்தானியக் குடிமக்கள் மாயம்.
நேபா...</summary>
            <content type="html"><![CDATA[<p>Nepal flash flood British citizens missing: நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் 13 வயது சிறுமி உட்பட பல பிரித்தானியக் குடிமக்கள் மாயம்.</p><p>
நேபாள-திபெத் எல்லையில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து 13 வயது சிறுமி உட்பட 33 பிரித்தானியக் குடிமக்கள் மாயமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3fe8b3b3-450c-4654-a72a-58060445ee19/26-6a8fb0be941d6.webp' /></p><p>
</p><p>புதன்கிழமை உள்ளூர் நேரப்படி காலை சுமார் 8:30 மணியளவில், போட்டே கோஷி ஆற்றின் திபெத்தியப் பகுதியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் மாயாமானதாகக் கூறப்படும் வெளிநாட்டவர்களில் 33 பிரித்தானியர்கள் என்றே தகவல் வெளியாகியுள்ளது.
</p><p>புதன்கிழமை, ஆல்பைன் ஈகோ ட்ரெக் என்ற சுற்றுலா நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலில், காணாமல் போன பிரித்தானியர்களில் 13 வயது சிறுமி ஒருவரும், இரண்டு ஐரிஷ் குடிமக்களும் அடங்குவதாகத் தெரிவித்தது. </p><p>மேலும், பயணப் பதிவுகளின்படி, காணாமல் போன பிரித்தானியக் குடிமக்களில் 65, 64 மற்றும் 52 வயதுடைய மூன்று ஆண்களும்; 44, 47, 51, 60, 63, 63 மற்றும் 65 வயதுடைய ஏழு பெண்களும் அடங்குவர். </p><p>நேபாளத்தில் வழிகாட்டியுடனான சுற்றுலாக்கள் மற்றும் பயணங்களை ஏற்பாடு செய்யும் அந்த நிறுவனம், தங்கள் நிறுவனத்தின் நேபாளத்தைச் சேர்ந்த நான்கு சுற்றுலா வழிகாட்டிகளும் (38, 35, 45 மற்றும் 29 வயதுடையவர்கள்) காணாமல் போயுள்ளதை உறுதிப்படுத்தியது. </p><p>மட்டுமின்றி, கைலாஷ் மலைக்கு ஒன்பது நாள் பயணமாகச் சென்றிருந்த அவர்கள், நேபாளத்திலிருந்து திபெத்திற்குள் நுழைந்துகொண்டிருந்தபோது, ​​திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் எல்லையில் சிக்கிக்கொண்டதாகவும் தெரிவித்துள்ளது.</p><p></p><p> </p><p>இதனிடையே, காணாமல் போனவர்களில் 100-க்கும் மேற்பட்டோர் எந்த நாட்டினர் என இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்று சுற்றுலா வாரியம் தெரிவித்துள்ளது. நேபாளத்தில் இதுவரை 157 உடல்கள் மீட்கப்பட்டதாகவும், 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது. </p><p>நேபாளம் மற்றும் திபெத் இடையிலான இமயமலை எல்லையில் மண் மற்றும் பாறைகளால் ஆன சுவர் ஒன்று ஆற்றில் சரிந்து விழுந்ததாகவும், இதனால் நேபாளப் பகுதியில் பேரழிவை ஏற்படுத்தும் வகையிலான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதாகவும் ராய்ட்டர்ஸ் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
</p><p>நேபாளத்தில் வீடுகள், சாலைகள் மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்புகள் சேதமடைந்தன; அதேவேளையில், எல்லைப் பகுதி நிலவழிப் பாதையில் ஏற்பட்ட நிலச்சரிவால் ஜிரோங் (Gyirong) மாவட்டத்தில் சிலர் காணாமல் போனதையடுத்து, திபெத் அதிகாரிகள் பெருமளவிலான உயிரிழப்புகள் ஏற்படக்கூடும் என்று அச்சம் தெரிவித்துள்ளனர். </p><p>இந்த நிலையில், நிலநடுக்கம் ஒன்று பனிச்சரிவைத் தூண்டிவிட்டு வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தியதாக ஆரம்பக்கட்டத் தகவல்கள் சுட்டிக்காட்டுவதாக நேபாள வெளிவிவகார அமைச்சர் ஷிசிர் கனால் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e4aad5f6-96f0-4649-933c-8d67dc844124/26-6a8fb0bf4afbb.webp' /></p><p> </p><p>இதனிடையே, நீர்மின் நிலையம் ஒன்றில் பணியாற்றி வந்த எட்டு தென் கொரியர்கள் காணாமல் போயுள்ளதாகவும், மேலும் 10 பேர் சிக்கிக்கொண்டுள்ளதாகவும் தென் கொரிய வெளிவிவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது. </p><p>நேபாளத்தின் ரசுவா மாவட்டம் மற்றும் போட்டே கோஷி, திரிசூலி ஆறுகளை ஒட்டியுள்ள பகுதிகளில் உள்ள சுற்றுலாப் பயணிகள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்குமாறும், பாதுகாப்பான இடங்களில் தங்குமாறும், தேவைப்பட்டால் உயரமான பகுதிகளுக்குச் செல்லுமாறும் உள்ளூர் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.</p><p> பார்வையாளர்கள் தங்கும் விடுதிகள் மற்றும் பயண முகவர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டனர். வரும் நாட்களில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குப் பயணம் செய்யத் திட்டமிட்டிருந்தவர்கள் தங்கள் பயணங்களை ஒத்திவைக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
</p><p>இதனிடையே, காத்மாண்டுவில் உள்ள பிரித்தானிய தூதரகம், பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களை உள்ளூர் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறு வலியுறுத்தியது.
</p><p>அவுஸ்திரேலியா, ஐரோப்பிய ஒன்றியம், பின்லாந்து, பிரான்ஸ், நார்வே மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளின் தூதரகங்கள் இணைந்து வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றில், </p><p>ராசுவா மற்றும் நுவாகோட் மாவட்டங்களிலும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் ஏற்பட்டுள்ள பேரழிவை ஏற்படுத்தும் வெள்ளப்பெருக்கு தங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும், ஆழ்ந்த துயரம் அடைந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-27T03:33:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[வரலாற்றுச் சிறப்புமிக்க செல்வச் சந்நிதியானின் இரதோற்சவம் இன்று!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/selva-sannithi-murugan-temple-car-festival-1787800125"></link>
            <id>https://ibctamil.com/article/selva-sannithi-murugan-temple-car-festival-1787800125</id>
            <summary type="text">ஈழத்தின் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றான யாழ்ப்பாணம் - வடமராட்சி தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலய வருடாந்த மகோற்சவ பெருவிழாவின் தேர் திருவிழா...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈழத்தின் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றான யாழ்ப்பாணம் - வடமராட்சி தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலய வருடாந்த மகோற்சவ பெருவிழாவின் தேர் திருவிழா இன்றாகும்.</p><p>அன்னதானக் கந்தன் என சிறப்பிக்கப்படும் முருகப்பெருமானுக்கு இன்று (27) காலை முதல் விசேட பூசைகள் இடம்பெறுகின்ற நிலையில் இதனைத் தொடர்ந்து முருகப்பெருமான தேரிலே எழுந்தருளுவார்.</p><p>அத்துடன் இன்றைய நாளில் ஏராளமான பக்த அடியார்கள் கலந்துகொண்டு தமது நேர்த்திக் கடன்களை நிறைவேற்றி வருகின்றனர்.</p><p>வரலாற்றுச் சிறப்புமிக்க&nbsp;செல்வச்சந்நிதி முருகன் ஆலய வருடாந்த மகோற்சவப் பெருவிழா கடந்த 13ஆம் திகதி&nbsp;அதிகாலை 1:45 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.</p><p>இந்தநிலையில் நேற்று (26) இரவு சப்பறத் திருவிழா மிகச்சிறப்பாக இடம்பெற்ற நிலையில் இன்று தேர்திருவிழா இடம்பெறுகின்ற நிலையில் நாளை (28) தீர்த்தத் திருவிழா இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/7aMXmy62Otc" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-27T03:33:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஒரு நைட்டுக்கு எவ்வளவுன்னு கேக்குறாங்க..அப்படிப்பட்ட பெண் கிடையாது!! நடிகை அனங்ஷா பிஸ்வாஸ்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/anangsha-biswas-opens-up-about-harassment-1787757843"></link>
            <id>https://viduppu.com/article/anangsha-biswas-opens-up-about-harassment-1787757843</id>
            <summary type="text">அனங்ஷா பிஸ்வாஸ்இயக்குநர் குர்மீத் சிங் இயக்கத்தில் பங்கஜ் திரிபாதி, அலி ஃபசல், திவ்யேந்து. ஜதேந்திர குமார், ரவி கிஷன், அபிஷேக் பானர்ஜி, ரசிகா துகல், ஸ...</summary>
            <content type="html"><![CDATA[<h2>அனங்ஷா பிஸ்வாஸ்</h2><p>இயக்குநர் குர்மீத் சிங் இயக்கத்தில் பங்கஜ் திரிபாதி, அலி ஃபசல், திவ்யேந்து. ஜதேந்திர குமார், ரவி கிஷன், அபிஷேக் பானர்ஜி, ரசிகா துகல், ஸ்வேதா திரிபாதி, ஸ்ரேயா பில்கோன்கர் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி அக்டோபர் 4 ஆம் தேதி ரிலீஸாகவுள்ள படம் தான் மிர்சாபூர். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8faded97-9a10-4124-aac2-e9da31b97b5c/26-6a8f0515b7628.webp' /></p><p>இப்படத்தில் சரினா என்ற முக்கிய ரோலில் நடித்துள்ளார் பிரபல நடிகை அனங்ஷா பிஸ்வாஸ். அவர் சமீபத்தில் சோசியல் மீடியாக்களில் வரும் ஆபாச குறுஞ்செய்திகள் குறித்து பேட்டியளித்துள்ளார்.</p><p> அதில், சினிமாவில் ஒரு நடிகை எப்படி நடிக்கிறாரோ, நிஜ வாழ்க்கையிலும் அவர் அப்படித்தான் இருப்பார் என்ற தவறான எண்ணத்தால் தொடர்ந்து சிலர் எனக்கு தொல்லை கொடுத்து வருகின்றனர். சிலர் சோசியல் மீடியாக்களில், ஒரு நைட்டுக்கு எவ்வளவு? என்றெல்லாம் கேட்டு கேவலமாக மெசேஜ் அனுப்புகிறார்கள். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/18535a2d-77a6-4fa5-bfeb-456cd595c057/26-6a8f05166b7b8.webp' /></p><p>அதைப்படிக்கும்போது எனக்கு பெரிய மன வேதனையாக இருக்கும். நான் அப்படிப்பட்ட பெண் கிடையாது. சினிமா என்பது வேறு, நிஜ வாழ்க்கை என்பது வேறு, திரையில் காட்டப்படுவது வெறும் கதாபாத்திரம் மட்டும். அது அந்தப் படத்தோடு முடிந்துவிடும். </p><p>அதற்காக நிஜ வாழ்க்கையிலும் ஒருவரால் அப்படியே வாழ முடியுமா? சினிமாவில் கவர்ச்சிக்காகவோ, விலைமாதாகவோ நடித்துவிட்டால், நிஜ வாழ்க்கையிலும் அப்பெண் அப்படித்தான் இருப்பார் என்று நீங்களாகவே எப்படி முடிவு செய்து கொள்கிறீர்கள் என்று வேதனையுடன் தெரிவித்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-08-27T03:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[வென்னப்புவவில் தொடருந்து மோதி ஒருவர் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/one-person-tragically-dies-hit-train-in-wennappuwa-1787800121"></link>
            <id>https://tamilwin.com/article/one-person-tragically-dies-hit-train-in-wennappuwa-1787800121</id>
            <summary type="text">வென்னப்புவ – வைக்கால் தொடருந்து கடவையில் நேற்று(26.08.2026) மாலை இடம்பெற்ற
கோர விபத்தில், சைக்கிளைத் தள்ளிக்கொண்டு தண்டவாளத்தைக் கடக்க முயன்ற நபர்
ஒ...</summary>
            <content type="html"><![CDATA[<p>வென்னப்புவ – வைக்கால் தொடருந்து கடவையில் நேற்று(26.08.2026) மாலை இடம்பெற்ற
கோர விபத்தில், சைக்கிளைத் தள்ளிக்கொண்டு தண்டவாளத்தைக் கடக்க முயன்ற நபர்
ஒருவர் தொடருந்து மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.</p><p>

கொழும்பிலிருந்து சிலாபம் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த தொடருந்து கடந்து
செல்வதற்காக, அந்த தொடருந்து கடவையின் பாதுகாப்பு கேட் முழுமையாக
மூடப்பட்டிருந்தது. </p><h2>பொலிஸார் மேலதிக விசாரணை</h2><p>எனினும், அந்த எச்சரிக்கையையும் பொருட்படுத்தாது, தனது
சைக்கிளைத் தள்ளிக்கொண்டு தண்டவாளத்தை அவசரமாகக் கடக்க ஒருவர் முற்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/031af470-2c0e-417b-ad76-f02310131054/26-6a8faddbbe92f.webp' /></p><p>

கண் இமைக்கும் நேரத்தில் வந்த தொடருந்தில் அவர் நேரடியாக மோதியதில், பலத்த
காயமடைந்து அந்த இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.</p><p>

விபத்தில் உயிரிழந்தவர் குளியாப்பிட்டி பஹல கழுகமுவ பகுதியைச் சேர்ந்த 55
வயதுடைய ரந்திலக பேடிகே கபில லால் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
</p><p>
இவர் வைக்கால் பகுதியில் வாடகை வீட்டில் தங்கியிருந்து வர்ணம் பூசும்
வேலைகளில் ஈடுபட்டு வந்தவர் என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
</p><p>
இந்த விபத்து தொடர்பில் வென்னப்புவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு
வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-27T03:24:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[இணையத்தில் விற்கப்படும் பெண்களின் புகைப்படங்கள் ; சமூக ஊடக மோசடி குறித்து எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/photos-women-being-sold-online-social-media-scams-1787800370"></link>
            <id>https://jvpnews.com/article/photos-women-being-sold-online-social-media-scams-1787800370</id>
            <summary type="text">பேஸ்புக் உள்ளிட்ட முன்னணி சமூக ஊடக வலைத்தளங்களில் பல்வேறு குழுக்களை உருவாக்கி, சிறுவர்கள் மற்றும் பெண்களின் ஆபாச காணொளிகள் மற்றும் தனிப்பட்ட புகைப்படங...</summary>
            <content type="html"><![CDATA[<p>பேஸ்புக் உள்ளிட்ட முன்னணி சமூக ஊடக வலைத்தளங்களில் பல்வேறு குழுக்களை உருவாக்கி, சிறுவர்கள் மற்றும் பெண்களின் ஆபாச காணொளிகள் மற்றும் தனிப்பட்ட புகைப்படங்களை பணத்திற்கு விற்கும் மற்றும் வாங்கும் இணைய மோசடி குறித்து தகவல்கள் வெளியாகி உள்ளதாக சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சு தெரிவித்துள்ளது.</p><p> 

இந்த நிலைமை தொடர்பில் அமைச்சின் முழுமையான கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும், பெண்கள் மற்றும் சிறுவர்கள் பாதிக்கப்படுவதைத் தடுப்பதற்குத் தேவையான துரித தலையீடுகளை மேற்கொண்டு வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/519a6fd3-5bf4-4469-9ff2-f690c6625def/26-6a8fab346905a.webp' /></p><p>மேற்கொள்ளப்பட்ட ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்த தகவல்கள் தொடர்பில் ஆராய்வதற்காக, இலங்கை பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்திற்கும், கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கும் இவ்விடயம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>

இந்த மோசடிக் குழுக்களை சோதனையிட்டதில், போலி கணக்குகள் ஊடாக தமது நெருங்கியவர்கள் மற்றும் குடும்பப் பெண்களின் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை இவ்வாறு விற்பனை செய்ய முயற்சிப்பது தெரியவந்துள்ளது.</p><p> 

இந்தக் குழுக்களில் பெரும்பாலானவை வெளிநாடுகளில் இருந்து செயற்படுத்தப்படுவதும் கண்டறியப்பட்டுள்ளது. </p><p>

தமது குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் மற்றும் சிறுவர்கள் வீட்டிலேயே இவ்வாறு பாதுகாப்பற்ற நிலைக்கு தள்ளப்படும் அபாயம் உள்ளதால், பெற்றோர்கள் தமது பிள்ளைகளின் சமூக ஊடகப் பயன்பாடு மற்றும் அவர்கள் பழகும் நண்பர்கள் குறித்து மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு கோரப்பட்டுள்ளனர். </p><p>

ஒருவேளை குடும்ப உறுப்பினர் ஒருவர் இத்தகைய மோசடியில் பாதிக்கப்பட்டவராகவோ அல்லது இதற்கு அடிமையானவராகவோ காணப்பட்டால், உடனடியாக அவர்களை உளவியல் சமூக ஆலோசனைகளுக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. </p><p>

இதன்படி, இவ்வாறான சட்டவிரோதச் செயல்களிலிருந்து பாதுகாத்துக்கொள்ளவும், உரிய சட்ட உதவிகளைப் பெற்றுக்கொள்ளவும் சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சினால் 1938 மற்றும் 1929 ஆகிய கட்டணமில்லா உதவி தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. </p><p>

மேலும், இந்த அபாயகரமான நிலைமை குறித்துப் பயனர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, சமூக ஊடக ஆர்வலர்களும் தற்போது இணையத்தில் ஏராளமான கட்டுரைகள் மற்றும் காணொளிகளை வெளியிட்டு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-08-27T03:13:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிளிநொச்சியில் காரில் சென்ற குடும்பத்தை மோதிய தொடருந்து - 17 வயது சிறுமி பலி - இரு சிறுவர்கள் படுகாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/accident-at-kili-ariviyal-nagar-railway-crossing-1787798756"></link>
            <id>https://ibctamil.com/article/accident-at-kili-ariviyal-nagar-railway-crossing-1787798756</id>
            <summary type="text">கிளிநொச்சி - அறிவியல் நகர் தொடருந்து நிலையத்திற்கு அண்மையில் இடம்பெற்ற கோர விபத்தில் 17 வயதுடைய சிறுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். கொழும்பிலிரு...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிளிநொச்சி - அறிவியல் நகர் தொடருந்து நிலையத்திற்கு அண்மையில் இடம்பெற்ற கோர விபத்தில் 17 வயதுடைய சிறுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.</p><p> கொழும்பிலிருந்து காங்கேசன்துறை நோக்கிப் பயணித்த தொடருந்து, அறிவியல் நகர் தொடருந்துநிலையத்துக்கு அண்மையிலுள்ள கடவையில் சிறிய ரக&nbsp;கார் ஒன்றுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. </p><p>குறித்த காரில் தந்தை, தாய், இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் பயணித்துள்ளனர்.</p><p></p><h2>விசாரணை&nbsp;</h2><p> தொடருந்து காருடன் மோதியதில் 17 வயதுடைய சிறுமி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f35fd7b6-22a5-4f19-ba43-2eada5b84251/26-6a8fa93c42432.webp' /></p><p> மேலும், 16 வயதுடைய சிறுவனும் 9 வயதுடைய சிறுமியும் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். </p><p>விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p><h2>சமிக்ஞை முறையாக இயங்கவில்லை</h2><p>இதேவேளை, குறித்த தொடருந்து கடவையில் கடந்த சில நாட்களாக சமிக்ஞை விளக்குகள் மற்றும் எச்சரிக்கை அமைப்புகள் முறையாக இயங்கவில்லை என அப்பகுதி பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a7de3cad-b90a-4efe-ad62-bd86e6a433ca/26-6a8fa78792d47.webp' /></p><p>
விபத்து இடம்பெற்ற சந்தர்ப்பத்திலும் குறித்த தொடருந்து கடவையின் சமிக்ஞை முறையாக இயங்கவில்லை என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
</p><p>
தொடருந்து கடவையின் சமிக்ஞை அமைப்பு தொடர்பில் ஏற்கனவே பொதுமக்கள் மத்தியில் கவலை நிலவியதாகவும், இதுபோன்ற விபத்துகளைத் தடுக்கும் வகையில் குறித்த பகுதியில் பாதுகாப்பு நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p><p>You may like this</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/7aMXmy62Otc" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-27T03:03:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஷிரான் பாசிக்கின் விடுதலைக்காக 500 கோடி! கசிந்துள்ள தகவல்கள்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/drug-trafficker-shiran-basik-1787791704"></link>
            <id>https://tamilwin.com/article/drug-trafficker-shiran-basik-1787791704</id>
            <summary type="text">இலங்கைக்கு போதை பொருள் கடத்தலின் முக்கிய நபராக கருதப்படும் ஷிரான் பாசிக் அமைத்துள்ள போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பின் மூலங்களின்படி, அவரது விடுதலையை உ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கைக்கு போதை பொருள் கடத்தலின் முக்கிய நபராக கருதப்படும் ஷிரான் பாசிக் அமைத்துள்ள போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பின் மூலங்களின்படி, அவரது விடுதலையை உறுதி செய்வதற்கும், அவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் குறிப்பிட்டுள்ள விடயங்களை மாற்றுவதற்கும் சுமார் 5000 மில்லியன் ரூபாய் (500 கோடி) நிதி தயார் செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. </p><p>
இந்த மூலங்களின் தகவல்படி, கொழும்பு தரப்பில் இந்த பணத்தை நிர்வகிப்பதாகவும், புலனாய்வாளர்களை அந்த வலையமைப்புடன் தொடர்புபடுத்தும் துபாயை தளமாகக் கொண்டியங்கும் முகமது சித்தீக்கிற்கு கீழ் செயற்படுவோரே நிதி கையாளுபவர்களாவர்.</p><h2>நிதி வழங்கப்படும் மூலங்கள்</h2><p>அடையாளம் கண்டு கொள்வதற்காக அந்த மூலங்கள் குறியீட்டப் பெயரான "சாண்ட்ரா" என்ற ஒரு பெண்ணைப் பற்றி தெரிவித்துள்ளனர். </p><p>அவர் பாசிக்கின் நீண்டகால தொடர்பாளராகவும், இலங்கைக்கு அடிக்கடி பயணம் செய்பவராகவும் விவரிக்கப்படுகிறார். ஆரம்பக்கட்ட மூல தகவல்களின்படி அவரது வயது சுமார் 42 என்றும், அவர் திருமணம் ஆகாதவர் என தெரிவிக்கப்படுகிறது.</p><p>இருப்பினும் அவரது உண்மையான அடையாளம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. 
பொலிஸ் அதிகாரிகளுக்கு இலஞ்சம் கொடுப்பது மற்றும் பாசிக்கின் பொது பிம்பத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட சில ஊடகவியலாளர்களுக்கு அழுத்தம் கொடுப்பது. </p><p>மேலும் மூன்று ஜனாதிபதி சட்டத்தரணிகளிடம் கலந்துரையாடப்பட்டுள்ளது, மேலும் அவர்கள் எந்தவொரு கட்டணத்திற்கும் வழக்கை பொறுப்பேற்க தயாராக இருப்பதாகக் கூறப்படுகிறது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/24092ce1-7a92-4824-955a-68310798e613/26-6a8f895accc96.webp' /></p><p>இதில் "பிடிகல" என அடையாளம் காணப்பட்ட பொலிஸ் சட்டத்தரணி ஒருவருக்கு எதிராக அடிப்படை உரிமை மனுவை தாக்கல் செய்யும் நோக்கத்துடன் செய்யப்படுவதாகக் கூறப்படுகிறது .தற்போதைய நிதி போதுமானதாக இல்லை என்றால், துபாயில் இருந்து கூடுதல் பணத்தை அனுப்ப எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>மேற்கூறிய இலஞ்சக் குற்றச்சாட்டுகள் எதுவும் சுயாதீனமாக உறுதிப்படுத்தப்படவில்லை.இவை எதிர்தரப்பு மூலங்களுக்கு உட்படுத்தப்பட்டவை, மேலும் உறுதிப்படுத்தப்பட்ட உண்மைகளாக அல்லாமல்,எதிர்வு கூறப்படும் குற்றச்சாட்டுகளாகவே 
முன்வைக்கப்படுகின்றன.
</p><h2>
பாசிக் ஏற்கனவே ஒப்புக்கொண்டது என்ன</h2><p>
அண்மையில் தெரிவிக்கப்பட்ட விடயங்களின் படி, பாசிக் பொரலஸ்கமுவ பகுதியில் இரண்டு வீடுகளின் உரிமையை ஒப்புக்கொண்டுள்ளார்.
</p><p>அதேபோல், தெஹிவளை மற்றும் வெள்ளவத்தை கடலோரப் பகுதிகளில் உள்ள ஐந்து ஹோட்டல்களின் உரிமையை ஒப்புக்கொண்டுள்ளார், ஆனால் அவை அவரது சொந்த பெயரில் இல்லை நண்பர்களின் பெயர்கள் மூலமாகவே முதலீடு செய்ததாக அவர் கூறுகிறார்.
</p><p>கொழும்பு குற்றப் புலனாய்வுப் பணியகம் அவரது முழு சொத்து விவரங்களை தேடுவதை இன்னும் முடிக்கவில்லை. அவர் தற்போது புலனாய்வுக் குழுவால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறார், மேலும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகமும் அரச புலனாய்வு சேவையும் ஆதரவையும் தகவல்களையும் வழங்கி வருகின்றன.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-27T03:00:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Tony</name>
            </author>
            <title type="text"><![CDATA[கவின், நயன்தாரா நடித்த Hi படத்தின் முதல் விமர்சனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/hi-movie-first-review-1787797981"></link>
            <id>https://cineulagam.com/article/hi-movie-first-review-1787797981</id>
            <summary type="text">ஹாய்கவின், நயன்தாரா நடிப்பில், விஷ்ணு இயக்கத்தில் எல்லோரும் ஆவலுடன் எதிர்பார்த்த படம் ஹாய். இப்படம் நாளை உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. ஏற்கனவே இப்பட...</summary>
            <content type="html"><![CDATA[<h2>ஹாய்</h2><p>கவின், நயன்தாரா நடிப்பில், விஷ்ணு இயக்கத்தில் எல்லோரும் ஆவலுடன் எதிர்பார்த்த படம் ஹாய்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/947272b1-cc7c-43e6-9f53-af98688a2ae2/26-6a8fa1e182fd2.webp' /></p><p>இப்படம் நாளை உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. ஏற்கனவே இப்படத்தின் ட்ரைலர் பாடல்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b1e4223e-fafa-48fd-97df-7a15495dcb34/26-6a8fa1e0c771b.webp' /></p><p></p><p> 

இதனால் இப்படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருப்பதால், தற்போது இந்த படத்தின் ஸ்பெஷல் ஸ்கிரீனிங் நேற்று சென்னையில் நடைபெற்றது.</p><h2>முதல் விமர்சனம்</h2><p> </p><p>

அப்போது அங்கு படத்தை பார்த்த எல்லோரும் புகழ்ந்து தள்ளியுள்ளனர்; குறிப்பாக கவின் மற்றும் நயன்தாராவின் கெமிஸ்ட்ரி மிக நன்றாக இருப்பதாக தங்கள் கருத்துக்களை பதிவு செய்துள்ளனர். </p><p>

இதோ அந்த விமர்சனம்:</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr"><a href="https://x.com/hashtag/HiMovie?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#HiMovie</a> is a beautiful, breezy and feel good entertainer that keeps things light, colourful and refreshing throughout. The film has a very pleasant vibe and its simple storytelling, fun moments and emotional portions come together to make it an superb family watch.<a href="https://x.com/hashtag/Kavin?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#Kavin</a> as… <a href="https://t.co/Xk4CTUamLi">pic.twitter.com/Xk4CTUamLi</a></p>&mdash; Vasu Cinemas (@vasutheatre) <a href="https://x.com/vasutheatre/status/2092594281634725897?ref_src=twsrc%5Etfw">August 26, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p>]]></content>
            <updated>2026-08-27T03:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாடுகளில் இருந்து செயற்படும் ஆபத்தான குழுக்கள் - விடுக்கப்பட்ட அவசர எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/private-photos-of-women-online-urgent-warning-1787797194"></link>
            <id>https://tamilwin.com/article/private-photos-of-women-online-urgent-warning-1787797194</id>
            <summary type="text">பேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடக வலைத்தளங்களில் பல்வேறு குழுக்களை உருவாக்கி, சிறுவர்கள் மற்றும் பெண்களின் ஆபாச காணொளிகள் மற்றும் தனிப்பட்ட புகைப்படங்களை பணத...</summary>
            <content type="html"><![CDATA[<p>பேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடக வலைத்தளங்களில் பல்வேறு குழுக்களை உருவாக்கி, சிறுவர்கள் மற்றும் பெண்களின் ஆபாச காணொளிகள் மற்றும் தனிப்பட்ட புகைப்படங்களை பணத்திற்கு விற்கும் மற்றும் வாங்கும் இணைய மோசடி குறித்து தகவல்கள் வெளியாகி உள்ளதாக சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சு தெரிவித்துள்ளது. </p><p>

இந்த நிலைமை தொடர்பில் அமைச்சின் முழுமையான கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும், பெண்கள் மற்றும் சிறுவர்கள் பாதிக்கப்படுவதைத் தடுப்பதற்குத் தேவையான துரித தலையீடுகளை மேற்கொண்டு வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்</h2><p>இந்த மோசடிக் குழுக்களை சோதனையிட்டதில், போலி கணக்குகள் ஊடாக தமது நெருங்கியவர்கள் மற்றும் குடும்பப் பெண்களின் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை இவ்வாறு விற்பனை செய்ய முயற்சிப்பது தெரியவந்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/49c897bf-9803-4fbd-bdcb-1486cb31b241/26-6a8fa3b9be9cf.webp' /></p><p>இந்தக் குழுக்களில் பெரும்பாலானவை வெளிநாடுகளில் இருந்து செயற்படுத்தப்படுவதும் கண்டறியப்பட்டுள்ளது. 

தமது குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் மற்றும் சிறுவர்கள் வீட்டிலேயே இவ்வாறு பாதுகாப்பற்ற நிலைக்கு தள்ளப்படும் அபாயம் உள்ளதால், பெற்றோர்கள் தமது பிள்ளைகளின் சமூக ஊடகப் பயன்பாடு மற்றும் அவர்கள் பழகும் நண்பர்கள் குறித்து மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு கோரப்பட்டுள்ளனர். </p><p>

ஒருவேளை குடும்ப உறுப்பினர் ஒருவர் இத்தகைய மோசடியில் பாதிக்கப்பட்டவராகவோ அல்லது இதற்கு அடிமையானவராகவோ காணப்பட்டால், உடனடியாக அவர்களை உளவியல் சமூக ஆலோசனைகளுக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. </p><p>

இதன்படி, இவ்வாறான சட்டவிரோதச் செயல்களிலிருந்து பாதுகாத்துக்கொள்ளவும், உரிய சட்ட உதவிகளைப் பெற்றுக்கொள்ளவும் சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சினால் 1938 மற்றும் 1929 ஆகிய கட்டணமில்லா உதவி தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. </p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-27T02:43:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாளத்தை புரட்டிப் போட்ட வெள்ளம்: ஈஷா சேர்ந்த 77 பேரைக் காணவில்லை - சத்குரு வெளியிட்ட பயங்கர காணொளி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/deadly-flash-flooding-hits-nepal-1787796029"></link>
            <id>https://ibctamil.com/article/deadly-flash-flooding-hits-nepal-1787796029</id>
            <summary type="text">நேபாளத்தில் கிராமங்களைச் சூறையாடி, பாலங்களையும் வீடுகளையும் அடித்துச் சென்ற வெள்ளத்தில் இதுவரை 160 பேர் உயிரிழந்துள்ளதாக நேபாள ஊடகங்கள் செய்தி வெளியிட...</summary>
            <content type="html"><![CDATA[<p>நேபாளத்தில் கிராமங்களைச் சூறையாடி, பாலங்களையும் வீடுகளையும் அடித்துச் சென்ற வெள்ளத்தில் இதுவரை 160 பேர் உயிரிழந்துள்ளதாக நேபாள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p>நூற்றுக்கணக்கானோரைக் காணவில்லை என்றும் 
157 உடல்கள் மீட்கப்பட்டதாகவும்இ அபாயகரமான பகுதிகளில் இருந்து மக்களை வெளியேற்றும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் நேபாள காவல்துறை புதன்கிழமை இரவு தெரிவித்துள்ளது.</p><p>திடீர் வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து சுமார் 403 சுற்றுலாப் பயணிகள் காணாமல் போனதாகவும் அவர்களில் 341 பேர் வெளிநாட்டினர் என்றும் நேபாள சுற்றுலா அமைச்சகம் தெரிவித்துள்ளது.</p><p></p><h2>யாத்ரீகர்கள் காணாமல் போயுள்ளனர்</h2><p>இதேவெளை நேபாளத்தில் ஏற்பட்ட பயங்கர திடீர் வெள்ளப்பெருக்கில் சத்குருவின் ஈஷா அறக்கட்டளையைச் சேர்ந்த குறைந்தது 77 யாத்ரீகர்கள் காணாமல் போயுள்ளனர்.&nbsp;</p><p><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr">A terrible and tragic flash flood has taken place at Gyirong in Tibet - China, and one of our Kailash groups was caught in it. While on their way back, they were at the immigration office when the flood occurred and the building and much of the town seems to have been flooded.… <a href="https://t.co/CqOBxsPlWo">pic.twitter.com/CqOBxsPlWo</a></p>&mdash; Sadhguru (@SadhguruJV) <a href="https://x.com/SadhguruJV/status/2092598413502316574?ref_src=twsrc%5Etfw">August 26, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>திபெத்தில் உள்ள கைலாஷ் மானசரோவரில் இருந்து திரும்பி வரும் வழியில் அந்தக் குழுவினர் குடிவரவு அலுவலகத்தில் இருந்ததாக அவா் தனது எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்துள்ளார்.</p><p>அவா்களது நிலை குறித்து அதிகாரபூா்வ தகவல் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை. இந்த யாத்திரையில் பங்கேற்ற 21 குழுக்களில் 495 போ் ஏற்கெனவே பாதுகாப்பாகத் திரும்பிவிட்டனா். தற்போது 743 போ் திபெத்திலும், 148 போ் நேபாளத்திலும் பாதுகாப்பாக உள்ளனா்&nbsp; என தெரிவித்துள்ளாா்.</p><p>அவர் வெளியிட்ட காணொளியில் திபெத்தின் கிரியோங் துறைமுகப் பகுதியில் சீறிப்பாயும் ஒரு பிரம்மாண்டமான அலை, குடிவரவு அலுவலகத்தின் மீது சரிந்து, பின்னர் ரசுவாவிற்குள் புகுந்து, போட் கோசி ஆற்றங்கரை நெடுகிலும் பேரழிவை ஏற்படுத்தியதைக் காட்டுகின்றன.</p><p></p><h2>மீட்பு மற்றும் சீரமைப்புப் பணி</h2><p>நேபாளத்தில் ஏற்பட்ட பயங்கரமான வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து நிகழ்ந்த துயரமான உயிரிழப்புகளை அறிந்து தாம் ஆழ்ந்த வேதனையடைவதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e4dd9130-0d19-4621-a7d1-14ea4655d3a4/26-6a8fa28c4bd2e.webp' /></p><p>ஜனாதிபதி தமது உத்தியோகப்பூர்வ எக்ஸ் கணக்கில் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மீட்பு மற்றும் சீரமைப்புப் பணிகளில் நேபாளத்திற்கு உதவ இலங்கை தயாராக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>

வெறும் 10 மாதங்களுக்கு முன்னர் ஏற்பட்ட ஒரு மோசமான புயலில் இருந்து இன்னும் மீண்டு வரும் ஒரு நாடு என்ற வகையில், நேபாள மக்களின் துயரத்தில் இலங்கையும் பங்குகொள்வதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். </p><p>

அரசாங்கம் மற்றும் நேபாள மக்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதில் அனைத்து இலங்கை மக்களும் ஒன்றிணைந்துள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.</p><p><i><b>You may like this</b></i></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/7aMXmy62Otc" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-27T02:42:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[அடித்து கொடுமைப்படுத்திய அப்பா..விபச்சாரத்திற்கு சகோதரியை தள்ளிய மாமனார்!! நடிகை கங்கனா ஓபன்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/kangana-sharma-reveals-shocking-family-1787752817"></link>
            <id>https://viduppu.com/article/kangana-sharma-reveals-shocking-family-1787752817</id>
            <summary type="text">கங்கனா சர்மாபாலிவுட் சினிமாவில் பிரபல நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை கங்கனா சர்மா, தன்னுடைய வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் குறித்து பேட்டியொன்றில் பகிர...</summary>
            <content type="html"><![CDATA[<h2>கங்கனா சர்மா</h2><p>பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை கங்கனா சர்மா, தன்னுடைய வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் குறித்து பேட்டியொன்றில் பகிர்ந்துள்ளார். தனக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டபோது யோகேஷுக்கு ஏற்கனவே திருமணமாகியிருந்தது என்று பிரசவத்திற்கு பின் தான் தெரிந்து கொண்டேன்.</p><p> அதன்பின் அவர் தன் முதல் மனைவியை விவாகரத்து செய்தார் அதுமட்டுமில்லாமல், யோகேஷுக்கு மேலும் பல பெண்களுடன் தொடர்பு இருந்ததது, அதன்பின் தான் தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்து இறுதியில் யோகேஷிடமிருந்து விவாகரத்து பெற்றதாகவும் கங்கனா தெரிவித்துள்ளார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f629865e-b17d-4f74-a1c2-e648f40464b0/26-6a8ef1732c477.webp' /></p><p>
மேலும் பேசிய கங்கனா, என் அப்பா என்னையும் என் அம்மா, சகோதரியையும் மிகவும் கொடுமையாக அடிப்பார். என் சகோதரியின் திருமணத்திற்குப்பின் அந்த வீட்டில் விபச்சாரம் உள்ளிட்ட சட்டவிரோத செயல்கள் நடப்பது எங்களுக்கு தெரிய வந்தது. அப்போது எனக்கு 14 வயதுதான். ஒருமுறை என் சகோதரியுடன் அவரது கணவர் வீட்டுக்கு சென்றபோது இரவு நேரத்தில் கழிவறைக்கு செல்வதற்காக எழுந்தபோது என் சகோதரியின் வாயில் துணி வைக்கப்பட்டு, கைகள் கட்டப்பட்டிருப்பதை பார்த்தேன். அங்கு நடந்ததை பார்த்து நான் மிகவும் பயந்துவிட்டேன்.</p><p> என்னுடைய சகோதரியும் பயந்து என்னிடம் எப்படியாவது தன்னை அந்த வீட்டில் இருது அழைத்து செல்லும்படி கேட்டார். ஆனால் நான் மிகவும் சிறியவளாக இருந்ததால் என்ன செய்வது தெரியவில்லை. பின் என் சகோதரியின் மாமனார் என்னை வீட்டைச் சுற்றி பார்க்க அழைத்து சென்றார். கீழே ஒன்றுக்கும் மேற்பட்ட அறைகள் இருந்தது. அங்கிருந்து சிலர் வெளியே வந்துக் கொண்டிருந்தார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/90c2406b-8cdc-4c14-8f32-4836d19cab82/26-6a8ef173dbbc7.webp' /></p><p> இதைப்பார்த்து என் சகோதரி உடனடியாக என்னை அங்கிருந்து அழைத்துக் கொண்டு மேலே வந்துவிட்டார். அதன்பின் நாங்கள் வீட்டுக்கு திரும்பினோம். அந்த வீட்டுக்கு தான் மீண்டும் செல்ல மாட்டேன் என்று என் சகோதரி அப்பாவிடம் கூறினாலும் அப்பா அவரை அடித்தார். அவரது மூக்கில் இருந்து ரத்தம் வந்தது. திருமணமாகிவிட்டதால் அந்த வீட்டில் தான் இருக்க வேண்டும் என்று கூறி அனுப்பி வைத்தார். அதற்குப்பின் ஒரு வாரம் வரை என் சகோதரியை பற்றி எங்களுக்கு எந்த தகவலும் இல்லை என்பதால் தொலைபேசி மூலமாக தொடர்பு கொள்ள முயற்சித்தோம். </p><p>ஒருக்கட்டத்தில் என் சகோதரி அருகிலிருந்த வேறு வீடுகளின் வழியாக கடிதங்களை அனுப்பி, தன்னை எப்படியாவது காப்பாற்றும்படி கேடிருந்தார். பின் அப்பா அங்கு சென்று, என் சகோதரி மிகப்பெரிய மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்தார். அதன்பின் சுமார் ஒரு வருடம் வரை அவரால் படுக்கையைவிட்டு எழ முடியவில்லை. அவருக்கு போதை மாத்திரைகள் உள்ளிட்ட பல பொருட்கள் கொடுக்கப்பட்டதாக தெரிந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/00ce8989-551b-489e-90d9-d8f40d7f5449/26-6a8ef17493d1a.webp' /></p><p> </p><p>பின் விவாகரத்து வாங்கினாலும் மீண்டும் அவருக்கு ஒரு நபருடன் திருமணம் செய்து வைத்தார்கள். அந்த திருமணத்திற்கு என் சகோதரி தயாராக இல்லை, ஆனால் அப்பா அவரை கடுமையாக பேசி திருமணத்திற்கு சம்மதிக்க வைத்தார். திருமணத்திற்குப்பின் என் சகோதரி மிகவும் மோசமான அனுபவங்களை சந்தித்தார். உடல் ரீதியாக, நெருக்கத்தையே நினைத்தால் பயமாக இருக்கு, கொஞ்சம் கால அவகாசம் வேண்டும் என்றார். ஆனால் அவரது வாழ்க்கை அதன்பின்பும் மிகவும் மோசமான நிலைக்கு சென்றது.</p><p> சில வருடங்களுக்குள் அவரது உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டு, காசநோய், புற்றுநோய் உள்ளிட்ட நோய்கள் ஏற்பட்டதாக பின்னர் தெரிந்தது. ஒரு கட்டத்தில் அவருக்கு சரியாக பார்க்கக்கூட முடியாத நிலை ஏற்பட்டது. அவருக்கு என்னென்ன நடந்தது என்று முழுமையாக எங்களுக்கு தெரியாது. இன்றுவரை என் சகோதரியை என்னால் காப்பாற்ற முடியவில்லை, என்ற குற்ற உணர்ச்சி எனக்குள் இருக்கிறது என்று சகோதரியின் கஷ்டத்தை பகிர்ந்துள்ளார் நடிகை கங்கனா சர்மா.</p>]]></content>
            <updated>2026-08-27T02:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிற்பகல் 2மணிக்குப் பின்னர் வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/weather-changes-after-2-pm-1787795529"></link>
            <id>https://tamilwin.com/article/weather-changes-after-2-pm-1787795529</id>
            <summary type="text">நாட்டில் சில இடங்களில்&amp;nbsp;இன்றும் (27.08.2026) 50 மில்லிமீற்றருக்கும் அதிக அளவிலான மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டில் சில இடங்களில்&nbsp;இன்றும் (27.08.2026) 50 மில்லிமீற்றருக்கும் அதிக அளவிலான மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. </p><p>

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது. </p><h2>வறண்ட வானிலை நிலவும்</h2><p>

அம்பாறை, மொனராகலை, அம்பாந்தோட்டை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் சில இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ad679883-e05f-4dd4-b1e7-1bb92f87cb07/26-6a8f9acc2dc6d.webp' /></p><p>

நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக வறண்ட வானிலை நிலவும். </p><p>

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், திருகோணமலை, மொனராகலை, அம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணிக்கு (40-50) கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். </p><p>

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக வீசும் பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களைக் குறைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-27T02:03:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[நயன்தாரா vs கியாரா.. டாக்சிக் படத்தில் யாருக்கு சம்பளம் அதிகம் பாருங்க]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/nayanthara-salary-for-toxic-movie-1787750413"></link>
            <id>https://cineulagam.com/article/nayanthara-salary-for-toxic-movie-1787750413</id>
            <summary type="text">யாஷ் நடிப்பில் இன்று டாக்சிக் படம் திரைக்கு வந்து இருக்கிறது. படத்திற்கு விமர்சனங்களும் நெகடிவ் + கலவையாகவே வந்துகொண்டிருக்கிறது. அதனால் மிகப்பெரிய பட...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாஷ் நடிப்பில் இன்று டாக்சிக் படம் திரைக்கு வந்து இருக்கிறது. படத்திற்கு விமர்சனங்களும் நெகடிவ் + கலவையாகவே வந்துகொண்டிருக்கிறது. அதனால் மிகப்பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம் வசூலில் சாதனை படைக்குமா என்பது கேள்விக்குறியாகி இருக்கிறது.</p><p>இந்நிலையில் டாக்சிக் படத்தில் நடித்த எந்த நடிகைக்கு சம்பளம் அதிகம் என்கிற தகவல் வந்திருக்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/53305b74-27ed-4991-876e-4a924a238c18/26-6a8ee80ef183d.webp' /></p><p>
</p><h2>சம்பளம்</h2><p>டாக்சிக் படத்தில் நடித்த ஹிந்தி நடிகை கியாரா அத்வானிக்கு 15 கோடி ருபாய் சம்பளமாக தரப்பட்டுள்ளதாம்.
</p><p>அடுத்து கங்கா என்ற முக்கிய ரோலில் நடத்த நயந்தாராவுக்கு 12 கோடி ரூபாய் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. </p><p>
அவர் ஒரே ஒரு ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் மட்டுமே கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் கியாரா டாக்சிக் படத்தின் அனைத்து ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டிருந்தார்.
&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4e4cf053-8a87-428f-8b72-45a98494c5c9/26-6a8ee80fcea24.webp' /></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-27T01:59:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தியாவில் அகதிகளாக வாழும் தமிழர்கள் - யாழில் அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/govt-opens-legal-route-home-for-tamil-refugees-1787794913"></link>
            <id>https://ibctamil.com/article/govt-opens-legal-route-home-for-tamil-refugees-1787794913</id>
            <summary type="text">இந்தியாவில் அகதிகளாக வாழும் இலங்கைப் பிரஜைகள் எவ்வித விசாரணைகளுக்கோ அல்லது
கைதுகளுக்கோ உள்ளாகாமல், தாயகம் திரும்புவதற்கு தேவையான சட்டரீதியான தளர்வுகள...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியாவில் அகதிகளாக வாழும் இலங்கைப் பிரஜைகள் எவ்வித விசாரணைகளுக்கோ அல்லது
கைதுகளுக்கோ உள்ளாகாமல், தாயகம் திரும்புவதற்கு தேவையான சட்டரீதியான தளர்வுகள்
மேற்கொள்ளப்பட்டுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி
அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
</p><p>
யாழ்ப்பாணத்தில் உள்ள தேசிய மக்கள் சக்தியின் மாவட்ட அலுவலகத்தில் நேற்று (26.08.2026) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் இதனைத்
தெரிவித்தார்.</p><p>இச்சந்திப்பில், ஜனாதிபதியுடனான உயர்மட்டக் கலந்துரையாடலில் எட்டப்பட்ட
தீர்மானங்கள் உள்ளிட்ட மாவட்ட மட்டத்திலான முக்கிய விடயங்கள் தொடர்பில்
விளக்கமளிக்கப்பட்டது.</p><p></p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">தாயகம் திரும்புவதற்கு அனுமதி</span></p><p>அமைச்சர் மேலும் தெரிவித்ததாவது, யுத்த காலத்தில் முறைசாரா வழிகளில் நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் அகதிகளாக வாழ்ந்து வரும் இலங்கையர்கள், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் ஊடாக நாடு திரும்பியபோது வழங்கப்பட்டிருந்த சில விதிவிலக்குகள், அண்மையில் பலாலி விமான நிலையம் ஊடாக நாடு திரும்பிய சிலருக்கு வழங்கப்படாததன் காரணமாக கைதுச் சம்பவங்கள் இடம்பெற்றது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/da6d52ff-f548-47bc-9f9a-ed5c8581e4da/26-6a8f9786a68ac.webp' /></p><p>இதனையடுத்து, நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன்
மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால ஆகியோரின் தலையீட்டின்
மூலம் குறித்த நபர்கள் நீதிமன்ற நடவடிக்கைகளின் பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
</p><p>
இதனைத் தொடர்ந்து, இரண்டு வாரங்களுக்கு முன்னர் அமைச்சரவையில் முக்கிய
தீர்மானமொன்று மேற்கொள்ளப்பட்டது.</p><p></p><h2>தேவையான காணி</h2><p> அதன்படி உயிரைப் பாதுகாப்பதற்காக
முறைசாரா வழிகளில் நாட்டை விட்டு வெளியேறிய இலங்கைப் பிரஜைகள் அனைவரும் தற்போது
நாட்டின் எந்தவொரு சர்வதேச விமான நிலையத்தினூடாகவும் அச்சமின்றித் தாயகம்
திரும்புவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b64eb5bd-b307-4fea-99e4-24450df64670/26-6a8f978760b8d.webp' /></p><p>நாடு திரும்பும் இவ்வாறான நபர்கள் மீள்குடியேற்றம் செய்யப்படுவதற்கும், தேவையான
காணிகளைப் பெற்றுக்கொள்வதற்கும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர்களாக
செயற்படும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் ஊடாக தேவையான உதவிகள்
வழங்கப்படும்&nbsp;என்றார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-27T01:49:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவை உலுக்கிய சம்பவம் ; உறவினர்கள் 8 பேரை கொன்று இளைஞன் செய்த செயல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/us-shocked-as-youth-kills-8-relatives-1787787960"></link>
            <id>https://canadamirror.com/article/us-shocked-as-youth-kills-8-relatives-1787787960</id>
            <summary type="text">அமெரிக்காவில் உறவினர்கள் 8 பேரை கொன்று விட்டு இளைஞர் தற்கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

அமெரிக்காவின் மொன்டானா மாகாணத்தில் பில்லிங்ஸ் என்...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவில் உறவினர்கள் 8 பேரை கொன்று விட்டு இளைஞர் தற்கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.</p><p>

அமெரிக்காவின் மொன்டானா மாகாணத்தில் பில்லிங்ஸ் என்ற பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு விருந்து நடந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3288095d-eff0-4daa-8ae4-9f1000bc5b8b/26-6a8f7aba7e850.webp' /></p><p> </p><p>அப்போது 4 சிறுவர்கள் உள்பட உறவினர்கள் 8 பேரை துப்பாக்கியால் சுட்டு கொன்று விட்டு வாலிபர் தன்னையும் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.


</p><p>அவர்களில் 90 வயதுடைய பாட்டி முதல் 7 வயது கொண்ட சிறுமி வரை அடக்கம். </p><p>விருந்து நடக்க இருந்த வீடும் தீப்பிடித்து முற்றிலும் எரிந்துள்ளது.</p><p><br></p>]]></content>
            <updated>2026-08-27T01:32:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலகை உலுக்கிய பெரும் அனர்த்தம் ; 150 பேரை பலியான துயரம் ; நிலைக்குலைந்த நேபாளம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sudden-tragedy-death-toll-rises-to-150-1787791951"></link>
            <id>https://jvpnews.com/article/sudden-tragedy-death-toll-rises-to-150-1787791951</id>
            <summary type="text">நேபாள- திபெத் எல்லையைத் தாக்கிய திடீர் வெள்ளப்பெருக்கின் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 150 ஆக அதிகரித்துள்ளது. 

இந்த அனர்த்தத்தில் சிக்கி நேபாளத...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">நேபாள- திபெத் எல்லையைத் தாக்கிய <a href="https://jvpnews.com/article/floods-ravage-nepal-death-toll-surges-1787757888" target="_blank">திடீர் வெள்ளப்பெருக்கின்</a> காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 150 ஆக அதிகரித்துள்ளது. </p><p style="text-align: justify; ">

இந்த அனர்த்தத்தில் சிக்கி நேபாளத்தில் 500க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் காணாமல் போயுள்ளதாக அந்த நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/412b1069-336d-45b5-a086-1e78aa2487ef/26-6a8f8a516d5b2.webp' /></p><h2 style="text-align: justify; ">பலர் மாயம்&nbsp;</h2><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

காணாமல் போனவர்களில் இந்தியாவைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோரும், அமெரிக்காவைச் சேர்ந்த 54 பேரும், இங்கிலாந்தைச் சேர்ந்த 33 பேரும் மற்றும் நேபாளத்தைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோரும் அடங்குகின்றனர். </p><p style="text-align: justify; ">

இந்த அனர்த்தத்தில் திபெத்தில் குறைந்தது மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். 

அத்துடன் 265 பேரைக் காணவில்லை என சீன அரசு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> 

நிலநடுக்கம் காரணமாகவே வெள்ளம் ஏற்பட்டதாக அதிகாரிகள் முன்னதாக தெரிவித்தனர். எனினும் மண்சரிவு காரணமாகவே இந்த நில அதிர்வு ஏற்பட்டதாக கூறப்படுகின்றது.</p><p style="text-align: justify; "> 

இதன்காரணமாக அந்த பகுதியில் தங்கியிருந்த சுற்றுலாப் பயணிகளும், ஆன்மீக சுற்றுப்பயணம் மேற்கொண்டவர்களும் அதிகளவில் பாதிக்கப்பட்டனர்.</p><p style="text-align: justify; "> 

அதேநேரம் வௌ்ளம் காரணமாக பாரியளவில் உட்கட்டமைப்புகளும் சேதமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-27T01:32:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[50 ஆண்டுகளுக்கு பிறகு சந்திர கிரகணத்தில் வக்ரமடையும் சனி; இவர்களுக்கு இனி ஜாக்பாட்.!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/saturn-retrograde-during-lunar-eclipse-50-years-1787794233"></link>
            <id>https://jvpnews.com/article/saturn-retrograde-during-lunar-eclipse-50-years-1787794233</id>
            <summary type="text">இந்த ஆண்டின் இரண்டாவது மற்றும் கடைசி சந்திர கிரகணம் வருகிற செப்டம்பர் 07ஆம் திகதி நிகழவுள்ளது. இந்த அரிய வானியல் நிகழ்வு நடைபெறும் வேளையில் சந்திரன் க...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">இந்த ஆண்டின் இரண்டாவது மற்றும் கடைசி சந்திர கிரகணம் வருகிற செப்டம்பர் 07ஆம் திகதி நிகழவுள்ளது. இந்த அரிய வானியல் நிகழ்வு நடைபெறும் வேளையில் சந்திரன் கும்ப ராசியில் சஞ்சரிக்கிறார்.
</p><p style="text-align: justify; ">கும்ப ராசியின் அதிபதியாக இருப்பவர் சனி பகவான். இந்த சந்திர கிரகணத்தின் போது சனி பகவான் வக்ர நிலையில் இருப்பதுடன், மீன ராசியிலும் வக்ரமாக சஞ்சரிக்கிறார். இந்த கிரக அமைப்பு ஜோதிட ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/12fe88a5-6fb1-4eb9-a262-43714c359520/26-6a8f933aae28b.webp' /></p><h2 style="text-align: justify; ">எதிர்பாராத அதிர்ஷ்டம்</h2><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
குறிப்பாக, சுமார் 50 ஆண்டுகளுக்குப் பின்னர் சந்திர கிரகண நாளில் சனி பகவான் வக்ர நிலையில் இருப்பதால், சில ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத அதிர்ஷ்டமும், வாழ்க்கையில் பல்வேறு முன்னேற்றங்களும் கிடைக்கக்கூடும் என ஜோதிடத்தில் கூறப்படுகிறது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "><b>மிதுனம்:</b> சந்திர கிரகணத்தின் போது சனி வக்ர நிலையில் இருப்பதால், மிதுன ராசிக்காரர்கள் வேலை மற்றும் வணிகத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காண வாய்ப்புள்ளது. உங்கள் படைப்பாற்றலும் தலைமைத்துவ திறன்களும் அதிகரிக்கும். பணியிடத்தில் உங்கள் செயல்திறன் பாராட்டப்படுவதுடன், புதிய பொறுப்புகள் அல்லது பதவி உயர்வுக்கான வாய்ப்புகளும் கிடைக்கலாம். புதிய தொழில் தொடங்கும் எண்ணம் இருந்தால், அதற்கான முயற்சிகளில் சாதகமான பலன்களை எதிர்பார்க்கலாம். வணிகத்தில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு நிதி நிலை சிறப்பாக இருக்கும்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; "><b>விருச்சிகம்:</b> சந்திர கிரகணத்தின் போது சனி வக்ர நிலையில் இருப்பதால், விருச்சிக ராசிக்காரர்களுக்கு குழந்தைகள் தொடர்பான நல்ல செய்திகள் கிடைக்கும். குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடும் வாய்ப்பும் அமையும். உங்களின் படைப்பாற்றலை வெளிப்படுத்துவதற்கான புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வாழ்க்கையின் ஒவ்வொரு தருணத்தையும் மகிழ்ச்சியுடன் அனுபவிப்பீர்கள். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பணிகள் வெற்றிகரமாக முடிவடையும். எதிர்பாராத வகையில் திடீர் பணவரவு அல்லது நிதி நன்மைகள் கிடைக்கவும் வாய்ப்புள்ளது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "><b>மீனம்: </b>சந்திர கிரகணத்தின் போது சனி வக்ர நிலையில் இருப்பதால், மீன ராசிக்காரர்களுக்கு சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். உங்கள் செல்வாக்கும் உயர வாய்ப்புள்ளது. திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியும் புரிதலும் அதிகரிக்கும். திருமணமாகாதவர்களுக்கு தங்கள் வாழ்க்கைத் துணையை சந்திக்கும் வாய்ப்பு அமையும். ஏற்கனவே காதல் உறவில் இருப்பவர்களுக்கு, அந்த உறவு மேலும் ஆழமடையும். கூட்டுத் தொழிலில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.</p>]]></content>
            <updated>2026-08-27T01:30:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்த மண்ணில் புலிகள் கட்டிக்காத்த பண்பாட்டை பாடையில் ஏற்றுகிறதா புலம்பெயர் நிதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/diaspora-funding-a-way-to-preserve-the-culture-1787793116"></link>
            <id>https://ibctamil.com/article/diaspora-funding-a-way-to-preserve-the-culture-1787793116</id>
            <summary type="text">ஈழத்தமிழினத்தின் ஆதியான சைவப் பண்பாட்டு தொடர்ச்சியில் எப்போதுமே ஆலயங்கள் வெறுமனே வழிபாட்டுத் தலங்களாக மட்டுமன்றி, நமது சமூகத்தின் ஒழுக்க நெறிகளையும் ஆ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈழத்தமிழினத்தின் ஆதியான சைவப் பண்பாட்டு தொடர்ச்சியில் எப்போதுமே ஆலயங்கள் வெறுமனே வழிபாட்டுத் தலங்களாக மட்டுமன்றி, நமது சமூகத்தின் ஒழுக்க நெறிகளையும் ஆன்மீக விழுமியங்களையும் பாதுகாக்கும் சமூக வளர்ச்சி மையங்களாகவே விளங்கிவந்துள்ளது.</p><p>
ஆனால், மிக அண்மையக்காலமாக ஈழத்து சைவ ஆலயத் திருவிழாக்களில் மேலோங்கிவரும் கட்டுப்பாடற்ற ஆடம்பரங்களும், வணிகமயமாக்கலும், பண்பாட்டு விலகல்களும் சைவ சமய ஆன்மீகத்தின் அடிப்படையையே கேள்விக்குள்ளாக்கியுள்ளது. </p><p>அதேபோல மரபுசார்ந்த பக்தி நெறிகள் பின்னுக்குத் தள்ளப்பட்டு, தனியாரின் நிதியாதிக்கத்தைக் காட்டும் போட்டித் தளமாக ஆலயங்கள் மாறிவருவது சைவச் சமூகம் உடனடியாகக் கவனம் செலுத்த வேண்டிய ஒரு முக்கியமான எச்சரிக்கை குறியீடாக மாறியுள்ளது என்பதே இப்போதைய நிதர்சனமாகும் .</p><p></p><h3>
கடந்த காலக் கட்டுப்பாடுகளும் தற்போதைய கள யதார்த்தமும்</h3><p>

ஒரு காலத்தில் யாழ்ப்பாண ஆலயத் திருவிழாக்களில் "சின்னமேளம்" என்ற பெயரில் இடம்பெற்ற சதிராட்டப் போட்டிகளும், உபயக்காரர்களின் போலிப் பெருமைகளும் கலாச்சார ரீதியான சிக்கல்களை உருவாக்கியிருந்தன. ஆனால் தொடர்ந்து வந்த காலங்களில், சமூக ஒழுக்க நெறிமுறைகளைப் பேணும் பொருட்டு ஆலயங்களில் இத்தகைய ஆடம்பரக் கலைகளுக்கும், திரையிசைப் பாடல்களுக்கும் முற்றாகத் தடை விதிக்கப்பட்டது.&nbsp;</p><p>

அதன் பின் ஆலயங்கள் ஆடம்பரங்களின்றியும், பக்தியை மட்டுமே முதன்மைப்படுத்தியும் இயங்கக்கூடிய சூழல் இயல்பாக உருவாக்கப்பட்டது.</p><p>
ஆனால், 2009 ஆம் ஆண்டிற்குப் பிந்தைய ஈழ நிலப்பரப்பின் கேட்பாரற்ற சூழலில், முறையான வழிநடத்தல் மற்றும் கட்டுப்பாட்டு அமைப்புகள் இல்லாத நிலையைப் பயன்படுத்தி, பல ஆலயங்களில் கட்டுப்பாடற்ற பண்பாட்டு மீறல்கள் மீண்டும் தலைதூக்கத் தொடங்கியுள்ளன.</p><h2>புலம்பெயர் பணமும் போலிப் பெருமிதப் போட்டியும்</h2><p>
நமது தயாக நிலப்பரப்பின் தற்போதைய சீரழிவுகளுக்கு முதன்மைக்காரணியாக அமைவது, ஆலய நிர்வாகங்களை அசைக்கும் கட்டுப்பாடற்ற பணப் புழக்கமாகும்./
 
குறிப்பாக, புலம்பெயர் தேசங்களிலிருந்து வரும் பெருந்தொகைப் பணம், பக்திக்காகப் பயன்படுத்தப்படுவதற்குப் பதிலாக, ஊர்ப் பெருமையையும் தனிநபர் செல்வாக்கையும் பறைசாற்றும் ஒரு கருவியாக மாற்றப்பட்டு வருகிறது.</p><p>

பல லட்சக்கணக்கில் பட்டுச் சாத்துதல், மாம்பழ ஏலம் என்ற பெயரில் கோடிகளைக் கரைத்தல், போட்டிபோட்டுக்கொண்டு மாலைகளைச் சாத்துதல் போன்றவை ஆன்மீகத்தின் பெயரால் நடக்கும் வணிகக் காட்சிகளாக மாறியுள்ளன.</p><p>

அதே போலவே மரபுசார்ந்த தென்னிலங்கை ஆட்டங்கள், கேரளா செண்டை மேளங்கள், திரையிசைப் பிரபலங்களை வரவழைத்துக் கச்சேரிகள் நடத்துதல் போன்ற நிகழ்வுகள், ஆலயங்களின் அமைதியையும் சைவ மரபின் புனிதத்தையும் முற்றாகச் சிதைத்து நிற்கிறது.</p><p>
நல்லூர் கந்தசுவாமி ஆலயம் போன்ற தளங்களில் இன்றளவும் இறுக்கமாகப் பேணப்படும் வழிபாட்டு ஒழுக்கமும் கட்டுப்பாடும், பிற கிராமிய மற்றும் நகர ஆலயங்களில் இல்லாமல் போவதற்குக் காரணம் தகுதியான மற்றும் பொறுப்புள்ள நிர்வாகக் கட்டமைப்பு இன்மையே ஆகும்.</p><h2>
ஆலயத் திருவிழாக்களில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய சீர்திருத்தங்கள்</h2><p>

ஈழத்து சைவ மரபைக் காப்பாற்றவும், ஆலயங்களை மீளவும் ஆன்மீக மையங்களாக மாற்றவும் உடனடியாகக் கீழ்க்காணும் கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.</p><ul><li>ஆடம்பரக் கலை நிகழ்ச்சிகளுக்கு முற்றுப்புள்ளி: சினிமாப் பாடல்கள், வணிகரீதியான குத்தாட்டங்கள், வேற்றுப் பண்பாட்டுக் கலைக் குழுக்களின் ஆடம்பரக் காட்சிகளுக்கு ஆலய வளாகத்திற்குள் முற்றாகத் தடை விதிக்கப்பட வேண்டும்.பண்ணிசை, தேவாரம், திருவாசகம் மற்றும் மரபுசார் கலைகளுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். ஏன் என்றால் ஆலயம் கேளிக்கை காட்டும் இடம் கிடையாது.</li><li>நிதிக்கட்டுப்பாடும் உச்சவரம்பும்: உபயக்காரர்கள் செய்யும் செலவுகளுக்கு ஆலய நிர்வாகங்கள் நல்லூரைப்போல தெளிவான உச்சவரம்பை நிர்ணயிக்க வேண்டும். தனிநபரின் பண பலம் ஆலய மரபுகளை மீறுவதற்கு அனுமதிக்கப்படக் கூடாது.</li><li>சமூகப் பயன்பாட்டிற்கு நிதியைத் திருப்புதல்: திருவிழாக்களில் வீணடிக்கப்படும் ஆடம்பரப் பணத்தைக் கொண்டு, வறிய மாணவர்களின் கல்வி வளர்ச்சி, மருத்துவ தேவைகள் மற்றும் சைவக் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் திட்டங்களை ஆலய நிர்வாகங்கள் முன்னெடுக்க வேண்டும்.</li><li>உயர்மட்டச் சைவ ஆதீனம் அல்லது தலைமைப் பீடத்தின் அவசியம்.</li></ul><p>
ஒவ்வொரு ஆலய நிர்வாகமும் தன்னிச்சையாகவும், எவ்விதக் கட்டுப்பாடின்றியும் செயல்படுவதே இத்தகைய கலாச்சார மீறல்களுக்கு அடிநாதமாகும். இதைக் கட்டுப்படுத்த, அனைத்துச் சைவ ஆலயங்களையும் ஒருங்கிணைத்து வழிநடத்தக்கூடிய ஓர் உயர்மட்ட சைவச் சபையோ அல்லது ஈழத்துச் சைவ ஆதீனம் போன்ற ஒரு தலைமைப் பீடமோ உருவாக்கப்படுவது காலத்தின் கட்டாயமாகும்.</p><p>

உண்மையில் ஆலயங்களின் கோபுர உயரத்திலோ, நாற்பது அடித் தேரின் பிரம்மாண்டத்திலோ சைவ சமயத்தின் பெருமை இல்லை என்பதையும் அங்கு பேணப்படும் ஆன்மீக ஒழுக்கத்திலும் அமைதியிலுமே சைவ சமயத்தின் ஆன்மா வாழ்கிறது என்பதனையும் உணரத்தலைப்பட வேண்டும்.&nbsp;</p><p>
ஊர்மக்களின் சுயவிழிப்புணர்வும், அனைத்து ஆலயங்களையும் கட்டுப்படுத்தக்கூடிய ஓர் ஒருமைப்படுத்தப்பட்ட சைவத் தலைமைப் பீடத்தின் எழுச்சியும் மட்டுமே ஈழத்து ஆலயங்களின் கைநழுவிப்போகும் புனிதத்தை மீட்டுத்தரும் என்ற காலத்தின் ஆகப்பெரிய உண்மையை சைவ சமயத்தார் உணரவேண்டும் .</p><p>

கடந்த நாட் களில் கிளிநொச்சி ஆலயங்களில் நடைபெற்ற அரைநிர்வாண ஆட்டங்கள் சைவசமயத்தையும் அதன் பண்பாட்டு ஒழுக்கத்தையும் சவப்பெட்டியில் வைத்து மூடியிருக்கிறது என்ற விடையம் 
புலம்பெயர் பணக்காரர்களுக்கு உணரத்தப்படவேண்டும்.&nbsp;</p><p>
இந்த மண்ணில் புலிகள் கட்டிக்காத்த பண்பாட்டை பாடையில் ஏற்றுகிறதா புலம்பெயர் நிதி என்ற கேள்வி சமூகத்தின் சகல மட்டங்களிலும் இன்று பெருங்கேள்வியாகி நிற்கிறது.&nbsp;</p><p></p><h5><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table></h5><p><br></p>]]></content>
            <updated>2026-08-27T01:25:22+00:00</updated>
        </entry>
    </feed>
