<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-09-14T02:22:44+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[தென்னிலங்கையில் பரபரப்பை ஏற்படுத்திய ஆபத்தான நபர் - பேருந்து பாய்ந்து உயிரை மாய்ப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/man-dies-jumping-in-front-of-a-bus-1789351886"></link>
            <id>https://tamilwin.com/article/man-dies-jumping-in-front-of-a-bus-1789351886</id>
            <summary type="text">காலி, பூஸ்ஸ சந்தியில் பேருந்து ஒன்றில் பாய்ந்து ஒருவர் உயிரை மாய்த்துள்ளதாக மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

போதைப்பொருள் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>காலி, பூஸ்ஸ சந்தியில் பேருந்து ஒன்றில் பாய்ந்து ஒருவர் உயிரை மாய்த்துள்ளதாக மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
</p><p>
போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகள் தொடர்பில் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையில் உள்ள நபர் ஒருவர், முன்தினம் மதியம் இவ்வாறு உயிரை மாய்த்துள்ளார்.</p><p>

இவ்வாறு உயிரிழந்தவர் பூஸ்ஸ ருபில்வத்தையை சேர்ந்த 44 வயதுடைய தியாதுர பிரசன்ன என்ற வெவதெணியே சுட்டா என அடையாளம் காணப்பட்டுள்ளார்.</p><p>
</p><h2><b>
போதைப்பொருள் கடத்தல்காரர் </b></h2><p>பொலிஸ் விசாரணைகளுக்கமைய, இவர் ஒரு போதைப்பொருள் கடத்தல்காரர் என தெரியவந்துள்ளது.

அத்துடன், அவருக்கு எதிராக இராணுவ வீரர் ஒருவரை கொலை செய்தமை, இரட்டைக் கொலைக்கு உதவி மற்றும் உடந்தையாக இருந்தமை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகள் தொடர்பில் வழக்குகள் நிலுவையில் உள்ளமை தெரியவந்துள்ளது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/66109294-b142-4ad1-98fc-8f4f02ae32cb/26-6aa759187f56f.webp' /></p><p>குறித்த கொலை வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் நாட்களில் வழங்கப்படவிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
கொலைக் குற்றச்சாட்டுக்கு தான் குற்றவாளியாகத் தீர்ப்பளிக்கப்படலாம் என்ற மனவேதனையின் காரணமாகவே இவர் இவ்வாறு பேருந்தில் பாய்ந்து உயிரை மாய்த்திருக்கலாம் என பொலிஸார் சந்திக்கின்றனர்.
</p><p>
இவர் முதலில் முச்சக்கர வண்டியில் பூஸ்ஸ ரயில் நிலையத்திற்கு வந்து, ரயில் வருகிறதா என பதற்றத்துடன் விசாரித்துள்ளார். 

அங்கு ரயில் தாமதமாகும் என்பதை அறிந்துள்ளார். </p><p>அதன் பின்னர் முச்சக்கர வண்டியில் காலி வீதிக்கு வந்து, தனது கையடக்கத் தொலைபேசியை முச்சக்கர வண்டி ஓட்டுநரிடம் கொடுத்துவிட்டு, திடீரென கொழும்பில் இருந்து காலி நோக்கி வந்த தனியார் பேருந்து ஒன்றின் பாய்ந்துள்ளார்.
</p><p>
பொலிஸாரால் பேருந்தின் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சடலம் கராப்பிட்டிய மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
</p><p>
 பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்</p>]]></content>
            <updated>2026-09-14T02:17:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[தீவிரமடையும் ஷிரந்திக்கு எதிரான சிரிலிய நிதி முறைகேடுகள் விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/investigat-into-financial-irregularities-siriliya-1789351436"></link>
            <id>https://ibctamil.com/article/investigat-into-financial-irregularities-siriliya-1789351436</id>
            <summary type="text">விளையாட்டு அமைச்சுக்கு தேவையான பேருந்துகளை இறக்குமதி செய்வதாகக் கூறி, பல கோடி ரூபாய் பெறுமதியான வரிச்சலுகையுடன் இறக்குமதி செய்யப்பட்ட இரண்டு சொகுசு பே...</summary>
            <content type="html"><![CDATA[<p>விளையாட்டு அமைச்சுக்கு தேவையான பேருந்துகளை இறக்குமதி செய்வதாகக் கூறி, பல கோடி ரூபாய் பெறுமதியான வரிச்சலுகையுடன் இறக்குமதி செய்யப்பட்ட இரண்டு சொகுசு பேருந்துகள் குறித்து குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளது.</p><p>முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்சவின் கீழ் நடத்தப்படும் கார்ல்டன் முன்பள்ளிக்கு வழங்கியதாகக் கூறப்படும் இந்த&nbsp;ஊழல் மற்றும் நிதி முறைகேடுகளை மையப்படுத்தியே விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.</p><p>
இதுவரை முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில், குற்றச்சாட்டுகள் தொடர்பில் வழக்குத் தொடருவதற்கு போதுமான ஆதாரங்கள் இருப்பதாக சட்டமா அதிபர் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளதாகவும், அதனடிப்படையில் பொலிஸ் நிதிக் குற்ற விசாரணைப் பிரிவும் முறையான விசாரணையை ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>100 மில்லியன் ரூபாய் தொகை</h2><p>
</p><p>
இதேவேளை, சிரிலிய சவிய அல்லது சிரிலிய அறக்கட்டளை, ஜனாதிபதி அலுவலகத்தின் கீழ் இயங்கும் பெண்கள் அமைப்பு எனக் காட்டி இந்த நிதி முறைகேடு மேற்கொள்ளப்பட்டதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ce73a813-0e85-4235-8270-ee45f4fa9ecf/26-6aa7560f66af3.webp' /></p><p>

இதுதொடர்பில் முன்னாள் ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் ஜனாதிபதி செயலகத்தின் முன்னாள் மேலதிக செயலாளர் ஒருவரும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
மேலும், மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்த காலத்தில் தேசிய சேமிப்பு வங்கியிலிருந்து வழங்கப்பட்ட 100 மில்லியன் ரூபாய் தொகை சிரிலிய அறக்கட்டளையால் முறைகேடாக பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பிலும் நிதிக் குற்ற விசாரணைப் பிரிவு தனியான விசாரணையை ஆரம்பித்துள்ளது.</p><p>
கொழும்பு ரிஜ்வே ஆதார சிறுவர் வைத்தியசாலைக்கு CT ஸ்கேன் இயந்திரமொன்றை வழங்குவதற்காக நிதி தேவைப்படுவதாக சிரிலிய அறக்கட்டளை முன்வைத்த கடிதத்தின் அடிப்படையில், உரிய முறையில் விசாரணை மேற்கொள்ளாமல் அப்போதைய தேசிய சேமிப்பு வங்கியின் தலைவரின் வாய்மொழி உத்தரவின் பேரில் அந்தப் பணம் வழங்கப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
அத்துடன், அந்த நிதியில் CT ஸ்கேன் இயந்திரம் கொள்வனவு செய்யப்பட்டதாகக் காட்டி, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மகன் ஒருவரின் பிறந்தநாளை முன்னிட்டு அந்த இயந்திரம் வைத்தியசாலைக்கு வழங்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p></p><h2>சட்டமா அதிபரின் ஆலோசனை</h2><p>
</p><p>
எனினும், குறித்த CT ஸ்கேன் இயந்திரம் உண்மையில் சீன அரசாங்கத்தினால் இலங்கை அரசாங்கத்திற்கு வழங்கப்பட்ட திருப்பிச் செலுத்த வேண்டிய கடன் நிதியைப் பயன்படுத்தியே பெறப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f3753c31-6301-403d-a78d-40761d396b0c/26-6aa7560eb116a.webp' /></p><p>
</p><p>
இதுதொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனையும் பெறப்பட்டுள்ள நிலையில், சிரிலிய அறக்கட்டளையின் தலைவரான ஷிரந்தி ராஜபக்ச உள்ளிட்ட பணிப்பாளர் சபை உறுப்பினர்கள், தேசிய சேமிப்பு வங்கியின் முன்னாள் தலைவர் பிரதீப் காரியவசம் உள்ளிட்ட பொறுப்புக்கூற வேண்டியவர்களிடம் வாக்குமூலங்களைப் பெற்று, விசாரணைகளை நிறைவு செய்து நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்க நிதிக் குற்ற விசாரணைப் பிரிவு நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
தேசிய சேமிப்பு வங்கியின் முன்னாள் தலைவர் காரியவசம் உள்ளிட்டோரிடம் இதுவரை பெறப்பட்ட வாக்குமூலங்கள் சட்டமா அதிபர் திணைக்களத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
</p><p>
அந்த வாக்குமூலங்களை சட்டமா அதிபர் திணைக்களத்தின் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் உள்ளிட்ட அதிகாரிகள் குழு தற்போது ஆய்வு செய்து வருவதாகவும், அதன் அடிப்படையில் அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகள் தொடர்பில் தீர்மானிக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-14T02:04:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[மாகாணசபைத் தேர்தலை நெருக்கடிக்குள் தள்ளிய சஜித் பிரேமதாச தரப்பின் ஆட்சி காலம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/provincial-council-election-in-crisis-1789348855"></link>
            <id>https://ibctamil.com/article/provincial-council-election-in-crisis-1789348855</id>
            <summary type="text">எதிர்க்கட்சித தலைவர் சஜித் பிரேமதாச அமைச்சு பதவி வகித்த நல்லாட்சி அரசாங்கம் தான் 2017 ஆம் ஆண்டு, மாகாணசபைத் தேர்தலை நெருக்கடிக்குள்ளாக்கும் சட்டத்தை உ...</summary>
            <content type="html"><![CDATA[<p>எதிர்க்கட்சித தலைவர் சஜித் பிரேமதாச அமைச்சு பதவி வகித்த நல்லாட்சி அரசாங்கம் தான் 2017 ஆம் ஆண்டு, மாகாணசபைத் தேர்தலை நெருக்கடிக்குள்ளாக்கும் சட்டத்தை உருவாக்கியது என பிரதி அமைச்சர் மகிந்த ஜயசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>
இந்த விடயம் குறித்து நேற்று(13.09.2026) ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர், </p><p>


“பழைய தேர்தல் முறைமை குறித்து 2017 ஆம் ஆண்டு குற்றச்சாட்டுக்களை முன்வைத்த எதிர்க்கட்சியினர் இன்று அதே தேர்தல் முறைமையின் கீழ் மாகாணசபைத் தேர்தலை நடத்த வேண்டும் என்று குறிப்பிடுகிறார்கள்.
</p><p></p><h2>பழையத் தேர்தல் முறைமை</h2><p>
மாகாணசபைத் தேர்தல் முறைமையில் காணப்படும் சட்ட சிக்கலுக்கு தீர்வு காணப்பட்டவுடன் தேர்தல் நடத்தப்படும்

அரசாங்கத்துக்கு எதிராக மக்களை ஒன்றுத்திரட்டுவதாக குறிப்பிட்டுக் கொண்டு பொதுஜன பெரமுன அநுராதபுரத்தில் கூட்டத்தை நடத்தினார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d96802ed-7cbd-4104-98d2-b2a3dade03fb/26-6aa74bf9f07fc.webp' /></p><p> </p><p>

அந்த மேடையில் சகல ஊழல்வாதிகளும் ஒன்றிணைந்தார்கள். கடந்த காலங்களில் ராஜபக்‌ஷர்களுடன் முரண்பட்டுக் கொண்டிருந்த விமல் வீரவன்ச, உதய கம்மன்பில ஆகியோர் மீண்டும் மகிந்தவை தஞ்சமடைந்துள்ளார்கள்.
</p><p>
இவர்களின் அரசியல் கலாசாரம் இதுவே. சந்தர்ப்பவாத அரசியலில் ஈடுபடுவார்கள்.

கடந்த காலங்களில் இவர்கள் தமது சுய நல தேவைகளுக்காகவே அரசியல் செய்தார்கள். </p><p>தற்போது மீண்டும் தமது சுயநல தேவைகளுக்காக மீண்டும் ஒன்றிணைந்துள்ளார்கள்.
</p><p>
முறையற்ற மற்றும் மோசடியான பழையத் தேர்தல் முறைமையின் கீழ் மாகாணசபைத் தேர்தலை நடத்தினால் முறையற்ற அரச நிர்வாகமே தோற்றம் பெறும். தேர்தல் முறைமைக்கு முரண்பாடற்ற வகையில் தீர்வு காணப்படும்” என்றார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-14T01:21:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீண்ட தூர ஜெட் விமானத்திற்கு உரிமையாளரான முதல் இலங்கையர்- தாய்நாட்டுக்கு விஜயம் !]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/gulfstream-g-v-jet-plane-lankan-owner-visited-1789348561"></link>
            <id>https://tamilwin.com/article/gulfstream-g-v-jet-plane-lankan-owner-visited-1789348561</id>
            <summary type="text">சொந்தமாக நீண்ட தூர சொகுசு ஜெட் விமானத்திற்கு உரிமையாளரான முதல் இலங்கையரான கலாநிதி ரோஷ் ஜலகே தாய்நாட்டுக்கு விஜயம் செய்துள்ளார்.
அவர், தனது சொந்த ஜெட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>சொந்தமாக நீண்ட தூர சொகுசு ஜெட் விமானத்திற்கு உரிமையாளரான முதல் இலங்கையரான கலாநிதி ரோஷ் ஜலகே தாய்நாட்டுக்கு விஜயம் செய்துள்ளார்.
</p><p>அவர், தனது சொந்த ஜெட் விமானத்தில் இரத்மலானை விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.</p><p>கல்கிஸை புனித தோமஸ் கல்லூரியின் பழைய மாணவரான இவர், தற்போது ஆஸ்திரேலியாவில் சுகாதாரத் துறை சார்ந்த பல வணிகங்களை நடத்தி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/73e3a46d-8121-4c3b-9226-1f260f856f45/26-6aa74ad378530.webp' /></p><p>
</p><p>இவர் இலங்கையைச் சேர்ந்த பில்லியனாதிபதி என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் இலங்கைக்கு வருகை தந்த 'Gulfstream G-V' ரக ஜெட் விமானமானது 12,000 கிலோமீட்டர் தூரம் வரை தொடர்ச்சியாகப் பறக்கும் திறன் கொண்டதாகும்.</p><p>
இலங்கையின் முதலாவது தனியார் ஜெட் விமானமான, 1980களில் தொழிலதிபர் உப்பாலி விஜேவர்தனவினால் கொள்வனவு செய்யப்பட்ட 'Learjet 35 A' விமானத்தால் சுமார் 4,000 கிலோமீட்டர் தூரம் மட்டுமே பறக்க முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.</p><p>
உலகின் மிகப் பெரும் செல்வந்தர்கள் பலர் இவ்வாறு சொந்தமாக ஜெட் விமானங்களை வைத்துள்ளார்கள் என்பதுடன் அவர்கள் அந்த ஜெட்களிலேயே தங்களது பயணங்களை மேற்கொள்கின்றார்கள்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-14T01:16:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவில் ரகசிய நீதிமன்ற நடவடிக்கை மூலம் ஆப்கானிஸ்தான் பெண் நாடுகடத்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/afghan-woman-deportede-us-following-secret-court-1789335648"></link>
            <id>https://canadamirror.com/article/afghan-woman-deportede-us-following-secret-court-1789335648</id>
            <summary type="text">அமெரிக்காவில் சட்டப்பூர்வ நிரந்தர வசிப்பிட உரிமையைக் கொண்டிருந்த 47 வயதுடைய ஆப்கானிஸ்தானிய பெண் ஒருவரை, அந்த நாட்டின் இரகசிய நீதிமன்ற நடவடிக்கைகளின் ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவில் சட்டப்பூர்வ நிரந்தர வசிப்பிட உரிமையைக் கொண்டிருந்த 47 வயதுடைய ஆப்கானிஸ்தானிய பெண் ஒருவரை, அந்த நாட்டின் இரகசிய நீதிமன்ற நடவடிக்கைகளின் மூலம் நாடுகடத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p>அமெரிக்காவில் 1996ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட 'அந்நிய பயங்கரவாத அகற்றும் நீதிமன்றம்' (Alien Terrorist Removal Court - ATRC) அதன் வரலாற்றில் முதன்முறையாக ஒரு வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டு நாடுகடத்தல் உத்தரவைப் பிறப்பித்துள்ளமை இதுவே முதல்முறையாகும் என தெரிவிக்கப்படுகிறது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9f44eb9b-f88c-4422-b4d8-3dba5837665c/26-6aa7186281413.webp' /></p><p>தேசிய பாதுகாப்பு தொடர்பான இரகசிய ஆதாரங்களின் அடிப்படையில் பயங்கரவாதக் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் அமெரிக்கக் குடியுரிமை பெறாத நபர்களுக்கு எதிராகவே இந்த விசேட நீதிமன்றம் பயன்படுத்தப்படுகிறது.
</p><p>
டெக்சாஸ் மாநிலத்தின் ஃபோர்ட் வொர்த் நகரில் வசித்து வந்த நஸீரா ஹாஜி சாதா என்ற இந்த பெண் மீது எந்தவொரு குற்றவியல் வழக்கும் நேரடியாகப் பதிவு செய்யப்படவில்லை.</p><p>

இருப்பினும், 2024ஆம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நாளில் தீவிரவாத அமைப்பின் தூண்டுதலால் துப்பாக்கிச் சூடு நடத்தத் திட்டமிட்ட குற்றத்துக்காக இவரது மகனும் மருமகனும் தண்டிக்கப்பட்டனர்.
</p><p>
இந்த நிலையில், குடும்பத்தினரை தீவிரவாதப் பாதைக்கு வழிநடத்திய "குடும்பத் தலைமைப் பெண்" என அரச தரப்பு சட்டத்தரணிகள் இவர் மீது குற்றஞ்சாட்டினர்.
</p><p>
அரசாங்கத்துடன் நீண்ட சட்டப் போராட்டம் நடத்துவதற்குப் பதிலாக, அமெரிக்காவை விட்டு வெளியேற நஸீரா ஹாஜி சாதா சம்மதம் தெரிவித்ததாக அமெரிக்க நீதித் திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p>

அதேசமயம், இந்த நீதிமன்ற நடவடிக்கைகள் அமெரிக்க அரசியலமைப்பு வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளை மீறுவதாக நஸீரா சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
</p><p>
குற்றம் சாட்டப்பட்டவருக்கோ அல்லது அவரது சட்டத்தரணிகளுக்கோ, எதிரான ஆதாரங்களைக்கூடக் காண்பிக்காமல் ரகசியமாக நடத்தப்படும் இந்த நீதிமன்ற முறைமை, அரசியலமைப்புக்கு முரணானது என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
</p><p>
இருப்பினும், இந்த நடவடிக்கை நாட்டின் தேசிய பாதுகாப்புக்கும் சட்டத்தின் ஆட்சிக்கும் கிடைத்துள்ள வெற்றி என அமெரிக்க சட்டமா அதிபர் டோட் பிளான்ச் (Todd Blanche) தெரிவித்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-09-14T01:09:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[மஹிந்தவின் கூட்டத்தில் சிக்கிய இரகசிய வீடியோ ; அநுரவின் மிரட்டலால் கலக்கத்தில்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/secret-video-from-mahinda-s-meeting-exposed-1789340974"></link>
            <id>https://jvpnews.com/article/secret-video-from-mahinda-s-meeting-exposed-1789340974</id>
            <summary type="text">அனுராதபுரத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நடத்திய அரசாங்க எதிர்ப்பு பேரணியில் பங்கேற்ற சில ஆதரவாளர்கள் மதுபோதையில் இருந்ததாகவும், அவர்களுக்கு உணவுப் பொட...</summary>
            <content type="html"><![CDATA[<p>அனுராதபுரத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நடத்திய அரசாங்க எதிர்ப்பு பேரணியில் பங்கேற்ற சில ஆதரவாளர்கள் மதுபோதையில் இருந்ததாகவும், அவர்களுக்கு உணவுப் பொட்டலங்களுடன் மதுபானம் வழங்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.</p><p></p><p> பேரணி நிறைவடைந்த பின்னர் மதுபோதையில் இருப்பதாகக் கூறப்படும் சிலரின் காணொளிகளும் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன.
</p><p>
இந்நிலையில், பேரணியில் கலந்துகொண்ட முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கையில் வைத்திருந்ததாகக் கூறப்படும் தங்க நிற கோல் அல்லது செங்கோல் போன்ற பொருள் மீண்டும் கவனம் பெற்றுள்ளது.</p><p>

இந்தப் பொருள் தொடர்பாக சமூக ஊடகங்களிலும் அரசியல் வட்டாரங்களிலும் பல்வேறு கருத்துகள் நிலவி வருகின்றன. சில தரப்பினர் இதனை அதிர்ஷ்டம் மற்றும் பாதுகாப்புடன் தொடர்புடைய பொருளாகவும், ஜோதிட ஆலோசனைகளின் அடிப்படையில் பயன்படுத்தப்படுவதாகவும் கூறுகின்றனர்.
</p><p>
மேலும், மகிந்த ராஜபக்சவின் ஜோதிட நம்பிக்கை, அவர் அணியும் மோதிரங்கள் மற்றும் தாயத்துக்கள் தொடர்பான விவாதங்களும் இதனுடன் இணைத்து சமூக ஊடகங்களில் மீண்டும் பேசப்பட்டு வருகின்றன.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/3crJrhXAriQ" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-09-14T01:09:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[புதிய கண்ணீர் புகைக் குண்டுகளைக் கொள்வனவு செய்யும் பொலிஸார் !]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/new-tear-gas-will-be-purchased-soon-says-police-1789347928"></link>
            <id>https://tamilwin.com/article/new-tear-gas-will-be-purchased-soon-says-police-1789347928</id>
            <summary type="text">புதிய கண்ணீர் புகைக் குண்டுகளை கொள்வனவு செய்ய பொலிஸார் தீர்மானித்துள்ளனர்.
தற்போது கையிருப்பில் உள்ள கண்ணீர் புகைக் குண்டுகளைப் பரிசோதிக்க உள்ளதாகத் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>புதிய கண்ணீர் புகைக் குண்டுகளை கொள்வனவு செய்ய பொலிஸார் தீர்மானித்துள்ளனர்.
தற்போது கையிருப்பில் உள்ள கண்ணீர் புகைக் குண்டுகளைப் பரிசோதிக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.</p><p>
இவ்வாறு பரிசோதித்து பயன்பாட்டிற்கு உதவாத குண்டுகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப அடுத்த ஆண்டிற்காகப் புதிய கண்ணீர் புகைக் குண்டுகளை இறக்குமதி செய்ய விலை மனுக்கள் கோரப்படவுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.</p><p>
கண்ணீர் புகைக் குண்டுகள் பயன்படுத்தப்படாமல் நீண்ட காலம் சேமித்து வைக்கப்பட்டால், அவை காலாவதியாகிச் செயலிழந்துவிடும் என தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/75ee8fee-3f94-4d40-bf18-14cbb9270a22/26-6aa74859d78ef.webp' /></p><p>
இதன் காரணமாகவே தற்போது கையிருப்பில் உள்ள கண்ணீர் புகைக் குண்டுகள் இவ்வாறு பரிசோதிக்கப்பட்டு வருவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-14T01:05:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[ராஜபக்ச - ரணில் இடையே வரலாறு படைக்கும் ஒரு போட்டி...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/historic-contest-between-rajapaksa-and-ranil-1789342614"></link>
            <id>https://ibctamil.com/article/historic-contest-between-rajapaksa-and-ranil-1789342614</id>
            <summary type="text">மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக பதவியேற்று ஒரு வருடம் நிறைவடைவதற்கு முன்னரே மிக் விமானக் கொள்வனவில் சுமார் 7 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி மோசடி இடம்பெற்றத...</summary>
            <content type="html"><![CDATA[<p>மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக பதவியேற்று ஒரு வருடம் நிறைவடைவதற்கு முன்னரே மிக் விமானக் கொள்வனவில் சுமார் 7 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி மோசடி இடம்பெற்றதாகவும், அதன் பின்னர் அவரது ஆட்சியின் இரண்டாவது பதவிக்காலத்தில் ஏர்பஸ் கொடுக்கல் வாங்கலில் பல மில்லியன் டொலர் பெறுமதியான நிதி மோசடிகள் இடம்பெற்றதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
</p><p>
அதேபோன்று, ரணில் - மைத்திரி கூட்டாட்சி அரசாங்கம் பதவியேற்று 45 நாட்கள் நிறைவடைவதற்கு முன்னரே மத்திய வங்கி பிணைமுறி மோசடி இடம்பெற்றதாகவும் குற்றச்சாட்டுகள் தெரிவிக்கின்றன.
</p><p>
ராஜபக்ச மற்றும் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட பல்வேறு ஆட்சிக் காலங்களில், ஒருவரையொருவர் பாதுகாத்துக்கொண்டு குறித்த நிதிக் குற்றங்கள் மூடி மறைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.</p><p></p><h2>நிதி மோசடி திட்டம்</h2><p>
</p><p>
எனினும், தற்போது இந்த நிதிக் குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணைகளும் நீதிமன்ற நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aad394e0-0f58-484f-a8f2-ce1e31436e62/26-6aa7342c792b0.webp' /></p><p>
மிக் விமானக் கொள்வனவில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி மோசடி தொடர்பான தகவல்களை வெளிப்படுத்திய ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க கொலை செய்யப்பட்டதாகவும் குறிப்பிடப்படுகிறது.</p><p>

இதேவேளை, ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸிற்காக ஏர்பஸ் விமானங்களை கொள்வனவு செய்வதற்காக 2,300 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான ஒப்பந்தம் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று 2013ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்டிருந்தது.
</p><p>
அந்தக் கொடுக்கல் வாங்கலின் ஊடாக 1,000 மில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான நிதி மோசடியை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டிருந்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
</p><p>
பின்னர், ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவி வகித்த காலத்தில், குறித்த கொடுக்கல் வாங்கலை இரத்துச் செய்வதற்கான நடவடிக்கை எனக் கூறி, 200 மில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான இழப்பீட்டை செலுத்தியதன் ஊடாக நிதிக் குற்றமொன்று இடம்பெற்றதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.</p><p></p><h2>ராஜீவ ஜயவீர கொலை</h2><p>
</p><p>
இந்த விவகாரம் தொடர்பான தகவல்களை வெளிப்படுத்திய ஊடகவியலாளர் ராஜீவ ஜயவீர, டொரிங்டன் சதுக்கத்தில் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/01dceaf8-8ef7-4390-92dc-02ee502034d5/26-6aa7342bbaa5c.webp' /></p><p>
</p><p>
அதேவேளை, குறித்த தகவல்கள் தொடர்பில் வாக்குமூலம் வழங்கியிருந்த கபில சந்திரசேனவும் மர்மமான முறையில் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p>

இவ்வாறான பின்னணியில், கடந்த கால ஆட்சிகளில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பாரிய நிதிக் குற்றங்கள் தொடர்பான விசாரணைகள் மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகள் தற்போது எந்த நிலையில் உள்ளன என்பது தொடர்பில் பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.</p>]]></content>
            <updated>2026-09-14T01:04:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[உள்ளகப் பொறிமுறையை நம்பி ஆதாரங்களை இழக்க முடியாது! கஜேந்திரகுமார் எம்.பி. எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/inquiry-into-justice-for-the-tamil-people-1789347817"></link>
            <id>https://ibctamil.com/article/inquiry-into-justice-for-the-tamil-people-1789347817</id>
            <summary type="text">தமிழினப் படுகொலைக்குக் கண்ணுக்கு முன்னால் கைகளாலே பிடிக்கக்கூடிய ஆதாரங்கள்
செம்மணியில் கிடைத்திருக்கும் இந்தச் சந்தர்ப்பத்தில், அதனை விசாரிப்பதற்கு
...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழினப் படுகொலைக்குக் கண்ணுக்கு முன்னால் கைகளாலே பிடிக்கக்கூடிய ஆதாரங்கள்
செம்மணியில் கிடைத்திருக்கும் இந்தச் சந்தர்ப்பத்தில், அதனை விசாரிப்பதற்கு
மீண்டும் அந்த அரசிடமே அனுமதித்தால், அது எமது இனப்படுகொலைக்கான மிகச்சிறந்த
ஆதாரங்களை நாமே இழப்பதற்குச் சமமாகிவிடும்" என தமிழ்த் தேசியப்
பேரவையின் தலைவரும் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.</p><p>

தமிழ்த் தேசியப் பேரவையின் ஏற்பாட்டில் செம்மணி மனிதப் படுகொலைக்குச் சர்வதேச
நீதி கோரி யாழ்ப்பாணத்தில் நேற்று முன்னெடுக்கப்பட்ட மாபெரும் பேரணியின்
இறுதியில், நல்லூர் கிட்டு பூங்காவில் 'தமிழ் மக்களின் நீதிக்கான குரல்' எனும்
தொனிப்பொருளில் உள்ளகப் பொறிமுறைகளை முற்றாக நிராகரிக்கும் வகையிலும், சர்வதேச
விசாரணையை ஐ.நா. பொறுப்பேற்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் பிரகடனக்
கூட்டம் நடைபெற்றது.</p><p> அதில் உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில் தெரிவித்ததாவது,</p><p></p><h2>போர் முடிந்து 17 வருடங்கள்</h2><p>

"போர் முடிந்து 17 வருடங்களுக்குப் பிற்பாடும் கூட, சர்வதேச சமூகம்
தமிழினத்துக்கு நடைபெற்றுள்ள இன அழிப்பை பகிரங்கமாக ஏற்றுக்கொள்வதற்குத்
தயங்குகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/159c05e8-3101-4633-8932-2f6f97213e4e/26-6aa747ea74ffc.webp' /></p><p> </p><p>கனடா, பிரித்தானியா போன்ற ஒரு சில நாடுகளின் தலைவர்களைத் தவிர,
ஏனையோர் உத்தியோகபூர்வமாக இந்த இனப்படுகொலை என்ற விடயத்தை ஏற்றுக்கொள்வதைத்
தவிர்த்து வருகின்றனர்.
</p><p>
இத்தகையதொரு சூழலில்தான் செம்மணி படுகொலை சார்ந்த ஆதாரங்களும் சாட்சியங்களும்
வெளிவர ஆரம்பித்துள்ளன. </p><p>1996 ஆம் ஆண்டு கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலை
வழக்கில், இராணுவச் சிப்பாய்கள் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்ட
நிலையில்தான், செம்மணியில் கிட்டத்தட்ட 600 இற்கும் அதிகமான உடல்கள்
புதைக்கப்பட்ட உண்மையை அவர்கள் வெளிப்படுத்தினார்கள். </p><p>ஆனால், அப்போதும் கூட
அந்த உண்மைகளை மூடிமறைப்பதற்கே அரசு முயன்றது.

செம்மணியில் புது மண் கொட்டப்பட்டு, அந்தப் பிரதேசம் பல மாதங்களுக்குச் செல்ல
முடியாதவாறு இரவிரவாகச் சுத்தப்படுத்தப்பட்டது. குறிப்பிட்ட சில உடல்கள்
மீட்கப்பட்ட பின்னர் அந்த விசாரணை முடக்கப்பட்டது” என்றார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-14T01:03:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆசியக் கிண்ணத்தை பெற மறுத்த இந்திய மகளிர் அணி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/indian-women-s-team-refused-to-accept-the-asia-cup-1789347550"></link>
            <id>https://jvpnews.com/article/indian-women-s-team-refused-to-accept-the-asia-cup-1789347550</id>
            <summary type="text">துபாயில் நடைபெற்ற மகளிர் ஆசியக் கிண்ண இறுதிப் போட்டியில் இலங்கையை வீழ்த்தி சம்பியன் பட்டம் வென்ற இந்திய மகளிர் அணி, ஆசிய கிரிக்கெட் பேரவைத் தலைவர் மொஹ...</summary>
            <content type="html"><![CDATA[<p>துபாயில் நடைபெற்ற மகளிர் ஆசியக் கிண்ண இறுதிப் போட்டியில் இலங்கையை வீழ்த்தி சம்பியன் பட்டம் வென்ற இந்திய மகளிர் அணி, ஆசிய கிரிக்கெட் பேரவைத் தலைவர் மொஹ்சின் நக்வியிடமிருந்து சம்பியன் கிண்ணத்தைப் பெற்றுக்கொள்ள மறுத்துள்ளது.</p><p>
</p><p></p><p>பரிசளிப்பு விழாவில் மொஹ்சின் நக்வி உள்ளிட்ட அதிகாரிகள் மேடையில் காத்திருந்தபோதிலும், இந்திய அணியின் வீராங்கனைகள் கிண்ணத்தைப் பெற்றுக்கொள்வதற்காக மேடைக்கு வரவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/56bf7206-19bf-43ca-9fa9-4be0f0295606/26-6aa746e15b840.webp' /></p><p>
</p><p>
அதேவேளை, இறுதிப் போட்டியில் தோல்வியடைந்த இலங்கை அணி பரிசளிப்பு விழாவில் கலந்துகொண்டு, இரண்டாம் இடத்திற்கான காசோலையைப் பெற்றுக்கொண்டது.</p><p>

இந்த சம்பவம், கடந்த 2025ஆம் ஆண்டு நடைபெற்ற ஆடவர் ஆசியக் கிண்ண இறுதிப் போட்டியை நினைவுபடுத்தியுள்ளது. </p><p>அப்போதும் சம்பியன் பட்டம் வென்ற இந்திய ஆடவர் அணி, மொஹ்சின் நக்வியிடமிருந்து கிண்ணத்தைப் பெற்றுக்கொள்ள மறுத்திருந்தது.
</p><p>
மொஹ்சின் நக்வி ஆசிய கிரிக்கெட் பேரவை மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் தலைவராக இருப்பதுடன், பாகிஸ்தானின் உள்துறை அமைச்சராகவும் பதவி வகித்து வருகிறார்.
</p><p>
இந்தியா–பாகிஸ்தான் இடையிலான தொடர்ச்சியான அரசியல் பதற்றங்களின் பின்னணியில், நக்வியிடமிருந்து கிண்ணத்தைப் பெற இந்திய அணி விரும்பவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-14T01:00:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாகிஸ்தான் அமைச்சரிடம் இருந்து வெற்றி கோப்பை வாங்க மறுத்த இந்திய அணி: வைரல் வீடியோ]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/india-refuse-to-accept-the-trophy-from-naqvi-1789347125"></link>
            <id>https://news.lankasri.com/article/india-refuse-to-accept-the-trophy-from-naqvi-1789347125</id>
            <summary type="text">New Message
Recipients
India Refuse to accept the trophy from Mohsin Naqvi: &amp;nbsp;2026 மகளிர் ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி 8வது முறையாக சாம்பியன் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>New Message
Recipients
India Refuse to accept the trophy from Mohsin Naqvi: &nbsp;2026 மகளிர் ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி 8வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற நிலையில், பாகிஸ்தான் அமைச்சரிடம் இருந்து வெற்றி கோப்பை பெற இந்திய அணி மறுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><h3> 8 வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா</h3><p>
துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற 2026 மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கை மற்றும் இந்தியாவின் மகளிர் அணிகள் மோதின.</p><p><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr">India, Indiaaaaaaaa..... 🇮🇳<br><br>Heartiest congratulations to our Indian Women’s Cricket Team on winning the Women’s Asia Cup 2026. This remarkable triumph reflects the team’s hard work, determination and belief.<br><br>Your performance has made the entire nation proud. Wishing the… <a href="https://t.co/hJv1Qipmrc">pic.twitter.com/hJv1Qipmrc</a></p>&mdash; Smriti Z Irani (@smritiirani) <a href="https://x.com/smritiirani/status/2099198592443678927?ref_src=twsrc%5Etfw">September 13, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p> &nbsp; முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் ஸ்மிருதி மந்தனா(59) மற்றும் ஷஃபாலி வர்மா(68) ஆகியோரின் அதிரடியான பேட்டிங்கால் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 183 ஓட்டங்கள்
குவித்தது.</p><p>ஆனால் 184 ஓட்டங்கள் குவித்தால் வெற்றி என்ற சற்று கடினமான இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணியில் வீராங்கனைகள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்து திணறினர்.</p><p>இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 10 விக்கெட்டுகளையும் இழந்து வெறும் 111 ஓட்டங்கள் மட்டுமே குவித்தது.</p><p><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr">No trophy from Pakistan’s Interior Minister <a href="https://x.com/MohsinnaqviC42?ref_src=twsrc%5Etfw">@MohsinnaqviC42</a> who unfortunately also holds position of <a href="https://x.com/ACCMedia1?ref_src=twsrc%5Etfw">@ACCMedia1</a> Chief. Period. ✋🇮🇳<br><br>After dominating Sri Lanka to win the Asia Cup, the Indian Women’s Team stood their ground and refused the trophy presentation from Mohsin Naqvi.… <a href="https://t.co/Mlgjb01ro3">pic.twitter.com/Mlgjb01ro3</a></p>&mdash; Shivank Mishra (@shivank_8mishra) <a href="https://x.com/shivank_8mishra/status/2099210990277829024?ref_src=twsrc%5Etfw">September 13, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>இதன் மூலம் 2026 மகளிர் ஆசிய கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கையை வீழ்த்தி இந்திய மகளிர் அணி 8 வது முறையாக ஆசிய கோப்பையை கைப்பற்றியுள்ளது.</p><h3> பரிசு வழங்கும் விழாவில் பரபரப்பு</h3><p>[WVLXDZQ ][</p><p>

இரவு 11.20 மணிக்கு போட்டி நிறைவடைந்தாலும், நீண்ட தாமதத்திற்கு பிறகே நள்ளிரவு 12.05 மணிக்கு பரிசு வழங்கும் விழா தொடங்கப்பட்டது.</p><p> அப்போது போட்டியில் இரண்டாம் இடம் பிடித்த இலங்கை அணி அதற்கான காசோலை மற்றும் பதக்கங்களை வாங்கிக் கொண்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8f158f7f-fe8c-4128-875c-b1a6685d9292/26-6aa745379dfdd.webp' /></p><p> ஆனால் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு கோப்பை வழங்கும் நிகழ்வு திடீரென நிறுத்தப்பட்டு விழா நிறைவடைந்தது./</p><p> இதையடுத்து தெரியவந்த தகவலில், ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவரும், பாகிஸ்தான் உள்துறை அமைச்சருமான மொஹ்சின் நக்வி-யிடம் இருந்து இந்திய மகளிர் அணியினர் தங்களது வெற்றிக் கோப்பையை வாங்க மறுத்தது தெரியவந்துள்ளது.</p><p><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr">HOW WAS YOUR SUNDAY, NEIGHBORS? 😂<br><br>2025 – Indian men’s team refused to take the Asia Cup trophy from Mohsin Naqvi’s hands.<br><br>2026 – Indian women’s team refused to take the Asia Cup trophy from Mohsin Naqvi’s hands.<br><br>What a terrible Sunday for India! 😂 <a href="https://t.co/ljGTo8NsRz">pic.twitter.com/ljGTo8NsRz</a> <a href="https://t.co/dm5FFxwayx">https://t.co/dm5FFxwayx</a></p>&mdash; Talha Nawaz (@TalhaDigital007) <a href="https://x.com/TalhaDigital007/status/2099212188665930194?ref_src=twsrc%5Etfw">September 13, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p> இந்நிலையில் பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் மொஹ்சின் நக்வி-யிடம்(Mohsin Naqvi) இருந்து பிசிசிஐ-யின் உத்தரவிற்கு ஏற்பவே இந்திய அணி கோப்பையை வாங்க மறுத்ததாக இந்திய அணியின் பயிற்சியாளர் அமோல் முஜூம்தார் உறுதிப்படுத்தியுள்ளார்.</p><p> அமைச்சர் நக்வி மைதானத்தை விட்டு வெளியேறிய பிறகு, பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா மற்றும் செயலாளர் தேவஜித் சைகியா ஆகியோர் வீரர்களை பாராட்டி, அவர்களுக்கு கௌரவங்களை வழங்கினர்.</p><p> இந்திய அணி கோப்பையை வாங்க மறுத்ததை அடுத்து பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் நக்வி மைதானத்தை விட்டு அவசர அவசரமாக வெளியேறும் காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-14T00:52:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[பேரணி ஒருபக்கம்… நீதிமன்ற திகதி மறுபக்கம்! கிண்டல் செய்த நளிந்த ஜயதிஸ்ஸ]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/nalinda-about-slpf-1789345669"></link>
            <id>https://tamilwin.com/article/nalinda-about-slpf-1789345669</id>
            <summary type="text">ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு வரும் மக்கள்
பேரணிகள் மற்றும் அரசியல் கூட்டங்கள் அரசுக்கோ அல்லது தேசிய மக்கள் சக்திக்கோ
எந்தவி...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு வரும் மக்கள்
பேரணிகள் மற்றும் அரசியல் கூட்டங்கள் அரசுக்கோ அல்லது தேசிய மக்கள் சக்திக்கோ
எந்தவிதமான அரசியல் சவாலையும் ஏற்படுத்தாது&nbsp;என்று சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார் .</p><p>அதேவேளை, கூட்டங்களுக்கான
திகதிகளை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினர் விரைவில் குறித்து கொள்வது நல்லது.
ஏனெனில் அக்கட்சியினரில் பல பேருக்கு நீதிமன்றத்தில் திகதி வழங்கப்பட்டுள்ளன என்றும் குறிப்பிட்டார்.</p><h2>&nbsp;அரசியல் நகர்வுகள்</h2><p>

அரசின் ஆரோக்கியமான இலங்கை என்ற திட்டத்தின் கீழ் இரத்தினபுரி மாவட்டத்தில்
நேற்று ஞாயிற்றுக்கிழமை ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வு மையத்துக்கான ஆரம்ப
நிகழ்வில் கலந்து கொண்டதன் பின்னர், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தற்போதைய
அரசியல் நகர்வுகள் குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு
பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3321af79-037a-4e7d-b13c-12d503a43a7c/26-6aa7444161764.webp' /></p><p>
</p><p>
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

"கடந்த காலங்களில் பல்வேறு கருத்து வேறுபாடுகளுடன் வெவ்வேறு கட்சிகளாகவும்
குழுக்களாகவும் பிரிந்து அரசியல் செய்து வந்தவர்கள், தற்போது தங்களின்
இருப்பைத் தக்கவைத்துக்கொள்வதற்காக ஒரே மேடையில் ஒன்று கூடி வருகின்றார்கள்.</p><p>
இத்தகைய பேரணிகள் நடப்பதன் மூலம், இந்தப் பழைய அரசியல்வாதிகள் அனைவரும் ஒரே
கொள்கைகளை உடையவர்கள் என்பதை நாட்டு மக்கள் மிகத் தெளிவாக அடையாளம் கண்டுகொள்ள
ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது.</p><h2>நளிந்த கிண்டல்</h2><p>

மேலும், ஒரு ஜனநாயக நாட்டில் எந்தவொரு அரசியல் கட்சிக்கும் சுதந்திரமாக
கூட்டங்களை நடத்தவும், பிரசாரங்களை முன்னெடுக்கவும் முழு உரிமையுள்ளது.
உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் பிரதேச சபைகளுக்குச் சொந்தமான மைதானங்களை
ஒதுக்கிக் கொடுப்பதுடன், அவர்களுக்குத் தேவையான பொலிஸ் பாதுகாப்பையும் அரசு
எவ்வித பாகுபாடுமின்றி வழங்கி வருகின்றது.
</p><p>
எதிர்க்கட்சியினர் தங்களின் அரசியல் சுறுசுறுப்பைக் காட்டுவதற்காக
நாடாளுமன்றத்திலோ அல்லது வெளியிலோ இவ்வாறான கூட்டங்களை நடத்துவது இயல்பான ஒரு
விடயம் மட்டுமே.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/49075537-b1e2-4f03-9538-146f2cd80a16/26-6aa744424e89f.webp' /></p><p>
</p><p>கடந்த காலங்களில் நடைபெற்ற தேர்தல்களில் நாட்டு மக்கள் இந்த பழைய அரசியல்
சக்திகளை முற்றாக நிராகரித்து, தேசிய மக்கள் சக்திக்கு மிக வலுவான மக்கள்
ஆணையை வழங்கியுள்ளனர்.</p><p> எனவே இவ்வாறான பேரணிகள் மக்கள் மத்தியில் எந்த
மாற்றத்தையும் ஏற்படுத்தப்போவதில்லை. அரசியல் நடவடிக்கைகளுக்கு மத்தியில்
சுகாதாரத்துறை, கல்வி மற்றும் போக்குவரத்து உள்ளிட்ட அனைத்து அத்தியாவசியத்
துறைகளிலும் அரசின் அபிவிருத்திப் பணிகள் தடங்கலின்றி மிக தீவிரமாக
முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-14T00:51:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[உக்ரைன் ட்ரோன் தாக்குதல் எதிரொலி ; இந்தியாவிடம் இருந்து எரிபொருள் வாங்கும் ரஷியா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/ukraine-drone-attack-russia-buying-fuel-from-india-1789346311"></link>
            <id>https://canadamirror.com/article/ukraine-drone-attack-russia-buying-fuel-from-india-1789346311</id>
            <summary type="text">உக்ரைனின் ட்ரோன் தாக்குதல்களால் ரஷ்யாவின் எண்ணெய் சுத்திகரிப்பு திறன் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஆகஸ்ட் மாதத்தில் இந்தியாவில் இருந்து 1.72 லட்சம் டன்...</summary>
            <content type="html"><![CDATA[<p>உக்ரைனின் ட்ரோன் தாக்குதல்களால் ரஷ்யாவின் எண்ணெய் சுத்திகரிப்பு திறன் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஆகஸ்ட் மாதத்தில் இந்தியாவில் இருந்து 1.72 லட்சம் டன் வரை சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளை ரஷ்யா இறக்குமதி செய்துள்ளதாக எரிசக்தி மற்றும் தூய்மையான காற்று ஆராய்ச்சி மையம் (CREA) தெரிவித்துள்ளது.
</p><p>
இதில், ரஷ்ய கச்சா எண்ணெயில் இருந்து இந்தியாவில் சுத்திகரிக்கப்பட்ட 1.20 லட்சம் டன் பெற்றோல் அடங்கும். இதன் மதிப்பு சுமார் 7.8 கோடி யூரோக்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b557e878-c42f-43c4-b8ef-b4c4eef452a5/26-6aa7420920b50.webp' /></p><p>ரஷ்யாவின் எரிபொருள் இறக்குமதி முந்தைய மாதத்தைவிட 7 மடங்கும், 2025ஆம் ஆண்டு முழுவதும் இறக்குமதி செய்த அளவைவிட 3 மடங்கும் அதிகரித்துள்ளது.
</p><p>
ரஷ்ய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் எரிசக்தி கட்டமைப்புகள் மீதான உக்ரைனின் தொடர் ட்ரோன் தாக்குதல்களால் உள்நாட்டு எரிபொருள் உற்பத்தி குறைந்ததே இந்த இறக்குமதி அதிகரிப்புக்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.
</p><p>
அதேவேளை, ஆகஸ்ட் மாதத்தில் ரஷ்யாவின் கடல் வழி எண்ணெய் ஏற்றுமதி 21% குறைந்ததுடன், நோவோரொஸிஸ்க் துறைமுகத்தில் கச்சா எண்ணெய் ஏற்றுமதி 58% குறைந்துள்ளது. </p><p>துவாப்சே துறைமுகத்திலும் மூன்று மாதங்களாக எண்ணெய் ஏற்றுமதி நடைபெறவில்லை.
</p><p>
எனினும், உலகளாவிய எரிசக்தி விலைகள் உயர்ந்ததால் ரஷ்யாவுக்கு ஓரளவு சாதகமான நிலை ஏற்பட்டுள்ளது. </p><p>ஆகஸ்டில் ரஷியாவின் யூரல்ஸ் கச்சா எண்ணெயின் சராசரி விலை ஒரு பீப்பாய்க்கு 69.90 அமெரிக்க டாலராக உயர்ந்தது.</p>]]></content>
            <updated>2026-09-14T00:39:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[அனுராதபுர பேரணியில் சிக்கிய இரகசிய காணொளிகள்! மகிந்தவை காப்பாற்றும் மர்ம தாயத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/anuradhapura-rally-mahinda-1789333208"></link>
            <id>https://tamilwin.com/article/anuradhapura-rally-mahinda-1789333208</id>
            <summary type="text">அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அனுராதபுரத்தில் பொதுஜன பெரமுன கட்சியினரால் நடத்தப்பட்ட பேரணிக்கு வந்த ஆதரவாளர்களில் பலர் மது போதையில் இருந்ததாகவு...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அனுராதபுரத்தில் பொதுஜன பெரமுன கட்சியினரால் நடத்தப்பட்ட பேரணிக்கு வந்த ஆதரவாளர்களில் பலர் மது போதையில் இருந்ததாகவும், அவர்களுக்கு உணவுப் பொட்டலங்கள் மற்றும் மது வழங்கப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
</p><p>
மேலும், பேரணி முடிந்த பின்னர் பலர் மதுபோதையில் இருக்கும் விதத்தில் பல காணொளிகள் வெளியாகியுள்ளன.</p><p>


இந்தநிலையில்,
அனுராதபுரத்தில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) பேரணியில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கலந்துகொண்ட நிலையில், அவர் கையில் வைத்திருந்ததாகக் கூறப்படும் மர்மமான கோல் தொடர்பில் மீண்டும் கவனம் திரும்பியுள்ளது.
</p><p>
பொது நிகழ்வுகளில் மகிந்த ராஜபக்ச கையில் வைத்திருக்கும் இந்தப் பொருள், தங்க முலாம் பூசப்பட்ட கோல் அல்லது செங்கோல் போன்ற வடிவத்தில் காணப்படுவதாகக் கூறப்படுகிறது.

இந்தப் பொருள் தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் சமூக ஊடகங்களிலும் அரசியல் வட்டாரங்களிலும் நீண்டகாலமாக நிலவி வருகின்றன. </p><p>

குறிப்பாக, இது அதிர்ஷ்டம் மற்றும் பாதுகாப்பை வழங்கும் பொருளாகவும், ஜோதிட ஆலோசனைகளின் அடிப்படையில் பயன்படுத்தப்படுவதாகவும் சில தரப்பினரால் கூறப்படுகிறது.
</p><p>
மேலும், மகிந்த ராஜபக்ச ஜோதிடத்தின் மீது அதிக நம்பிக்கை கொண்டிருந்ததாகவும், அரசியல் முடிவுகள் உள்ளிட்ட முக்கிய விடயங்களில் ஜோதிடர்களின் ஆலோசனையைப் பெற்றதாகவும் பல ஆண்டுகளாக செய்திகள் வெளியாகியுள்ளன.
</p><p>
அவரது கைகளில் காணப்படும் பல்வேறு மோதிரங்கள், தாயத்துக்கள் உள்ளிட்டவையும் இதனுடன் தொடர்புபடுத்தப்பட்டு பேசப்பட்டுள்ளன.
</p><p>
இந்த விடயங்கள் தொடர்பில் பேசுகின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி&nbsp; ...&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/3crJrhXAriQ" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-14T00:33:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலக தடகள ஈட்டி எறிதல் இறுதிப் போட்டியில் இலங்கைக்கு தங்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/gold-for-sri-lanka-in-the-javelin-throw-final-1789345827"></link>
            <id>https://ibctamil.com/article/gold-for-sri-lanka-in-the-javelin-throw-final-1789345827</id>
            <summary type="text">இலங்கை ஈட்டி எறிதல் வீரர் ருமேஷ் பதிரகே, தனது சிறப்பான முன்னேற்றத்தை வெளிப்படுத்தி, Budapest 26 உலக தடகள Ultimate Championship போட்டியில் ஆடவர் ஈட்டி ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை ஈட்டி எறிதல் வீரர் ருமேஷ் பதிரகே, தனது சிறப்பான முன்னேற்றத்தை வெளிப்படுத்தி, Budapest 26 உலக தடகள Ultimate Championship போட்டியில் ஆடவர் ஈட்டி எறிதல் பிரிவில் சம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.
</p><p>
ஞாயிற்றுக்கிழமை (13) நடைபெற்ற போட்டியில், மூன்றாவது சுற்றில் 87.11 மீற்றர் தூரம் எறிந்து முன்னிலை பெற்ற ருமேஷ் பதிரகே, இறுதிச் சுற்றில் தனது சிறந்த முயற்சியாக 91.09 மீற்றர் தூரத்தை பதிவு செய்து தங்கப் பதக்கத்தை உறுதி செய்தார்.
</p><p>
இரண்டு முறை உலக சம்பியனான ஆண்டர்சன் பீட்டர்ஸ் 86.18 மீற்றர் தூரத்துடன் இரண்டாவது இடத்தைப் பிடித்தார்.</p><p></p><h2>அதிரடியான முன்னேற்றம்</h2><p>
</p><p>
ஐரோப்பிய சம்பியனான ஜூலியன் வெபர், முதல் சுற்றில் முன்னிலை வகித்திருந்த போதிலும், 85.89 மீற்றர் தூரத்துடன் மூன்றாவது இடத்தைப் பிடித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6eebdf02-f10d-47cb-962e-4e2be81ed60b/26-6aa74025b3960.webp' /></p><p>
</p><p>
இதன் மூலம் ருமேஷ் பதிரகே தனது அதிரடியான முன்னேற்றம் நிறைந்த பருவத்தை உலகத் தரத்திலான வெற்றியுடன் நிறைவு செய்துள்ளார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-14T00:30:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரஷ்யாவின் டீசல் கட்டமைப்புகளை தாக்க வேண்டாம் ; ஜெலன்ஸ்கிக்கு டிரம்ப் கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/diesel-infrastructure-zelenskyy-trump-request-1789345438"></link>
            <id>https://canadamirror.com/article/diesel-infrastructure-zelenskyy-trump-request-1789345438</id>
            <summary type="text">பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளதால், ரஷ்யாவின் டீசல் கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்துவதை நிறுத்த வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வலியுறுத்...</summary>
            <content type="html"><![CDATA[<p>பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளதால், ரஷ்யாவின் டீசல் கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்துவதை நிறுத்த வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வலியுறுத்தி உள்ளார்.</p><p>கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் - ரஷ்யா இடையே நான்கு ஆண்டுகளுக்கு மேல் போர் நடக்கிறது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f95a3cc3-72c7-4ece-8ca2-308618d3f3fd/26-6aa73ea0155d9.webp' /></p><p>ரஷ்யாவின் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களை குறிவைத்து, சமீப காலமாக, உக்ரைன் வான்வழி தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், ரஷ்யாவின் எண்ணெய் சுத்திகரிப்பு திறன் முடங்கி உள்ளது. </p><p>இதனால், எரிபொருள் ஏற்றுமதிக்கு ரஷ்யா கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதனால், சில நாடுகளில் டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
</p><p>

இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கூறியதாவது: உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஒன்றை செய்ய வேண்டும். </p><p>ரஷ்யாவின் டீசல் எரிபொருள் கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்துவதை நிறுத்த வேண்டும். இலக்குகளை குறிவைத்து தாக்கலாம். </p><p>ஆனால், டீசல் எரிபொருள் மீது தாக்குதல் நடத்தக்கூடாது. அவர் டீசலுக்கு தட்டுப்பாட்டை ஏற்படுத்துகிறார். இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content>
            <updated>2026-09-14T00:24:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரிட்டனில் இருந்து பிரிய மூன்று நாடுகள் ஒன்றிணைவு ; இன்று முக்கிய பிரகடனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/alliance-of-three-nations-break-away-from-britain-1789344731"></link>
            <id>https://canadamirror.com/article/alliance-of-three-nations-break-away-from-britain-1789344731</id>
            <summary type="text">பிரிட்டனின் அரசியலமைப்பின் கீழ் செயல்படும் ஸ்காட்லாந்து, வேல்ஸ் மற்றும் வடக்கு அயர்லாந்து நாடுகளின் தலைவர்கள், பிரிட்டனில் இருந்து பிரிந்து செல்லும் ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரிட்டனின் அரசியலமைப்பின் கீழ் செயல்படும் ஸ்காட்லாந்து, வேல்ஸ் மற்றும் வடக்கு அயர்லாந்து நாடுகளின் தலைவர்கள், பிரிட்டனில் இருந்து பிரிந்து செல்லும் பிரகடனத்தை இன்று கூட்டாக வெளியிட உள்ளனர்.&nbsp;</p><p>ஐரோப்பிய நாடான பிரிட்டனின் ஸ்காட்லாந்து, வேல்ஸ், வடக்கு அயர்லாந்து ஆகியவை தனி நாடுகளாக வகைப் படுத்தப்பட்டாலும், அவை பிரிட்டன் அரசியலமைப்பின் கீழ் வருகின்றன.


தற்போது இந்த நாடுகளில், பிரிவினை ஆதரவு கொள்கை கொண்ட கட்சிகள் ஆட்சியில் உள்ளன.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3ab56f89-6452-4018-b0d0-7f109cc4691b/26-6aa73bdd28b61.webp' /></p><p>வேல்சில், பிளெய்ட் சிம்ரு கட்சி மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது.


ஸ்காட்லாந்தில், எஸ்.என்.பி., கட்சியும், வடக்கு அயர்லாந்தில், சின் பெயின் கட்சியும் முக்கிய அரசியல் சக்திகளாக உள்ளன.
</p><p>

இதனால், மூன்று நாடுகளின் தலைவர்களும் அரசியல் மாற்றம் தொடர்பாக ஒருங்கிணையும் சூழல் ஏற்பட்டுள்ளது. </p><p>வேல்ஸ் தலைநகர் கார்டிப் நகரில் இன்று நடக்கும் கூட்டத்தில், மூன்று நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.
</p><p>

அப்போது, பிரிட்டனில் இருந்து பிரிவது குறித்த பொது ஓட்டெடுப்பு நடத்தும் உரிமையை கோரும் கூட்டு பிரகடனத்தில், அவர்கள் கையெழுத்திட உள்ளதாக கூறப்படுகிறது. </p><p>இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆதரவு தெரிவித்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-09-14T00:13:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆசிய கோப்பை தொடரை வென்றும் பரிசை பெற மறுத்த இந்தியா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/india-refused-to-accept-the-asia-cup-trophy-1789344624"></link>
            <id>https://ibctamil.com/article/india-refused-to-accept-the-asia-cup-trophy-1789344624</id>
            <summary type="text">துபாயில் நடைபெற்ற மகளிர் ஆசியக் கிண்ண இறுதிப் போட்டியில் இலங்கையை வீழ்த்தி சம்பியன் பட்டம் வென்ற இந்திய மகளிர் அணி, ஆசிய கிரிக்கெட் பேரவையின் தலைவர் ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>துபாயில் நடைபெற்ற மகளிர் ஆசியக் கிண்ண இறுதிப் போட்டியில் இலங்கையை வீழ்த்தி சம்பியன் பட்டம் வென்ற இந்திய மகளிர் அணி, ஆசிய கிரிக்கெட் பேரவையின் தலைவர் மொஹ்சின் நக்வியிடமிருந்து சம்பியன் கிண்ணத்தைப் பெற மறுத்துள்ளது.
</p><p>
பரிசளிப்பு விழாவில் மொஹ்சின் நக்வி உள்ளிட்ட அதிகாரிகள் மேடையில் காத்திருந்த போதிலும், இந்திய அணியின் வீராங்கனைகள் கிண்ணத்தைப் பெற்றுக்கொள்வதற்காக முன்வரவில்லை.
</p><p>
எனினும், இலங்கை அணி பரிசளிப்பு விழாவில் கலந்துகொண்டு, இரண்டாம் இடத்திற்கான காசோலையைப் பெற்றுக்கொண்டது.</p><p></p><h2>சம்பியன் பட்டம்&nbsp;</h2><p>
</p><p>
இந்த சம்பவம், 2025ஆம் ஆண்டு நடைபெற்ற ஆடவர் ஆசியக் கிண்ண இறுதிப் போட்டியை நினைவுபடுத்தியுள்ளது. அப்போதும் சம்பியன் பட்டம் வென்ற இந்திய ஆடவர் அணி, மொஹ்சின் நக்வியிடமிருந்து கிண்ணத்தைப் பெற்றுக்கொள்ள மறுத்திருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/af690e5c-7f93-4037-9b30-d5bead9bacef/26-6aa73b722354f.webp' /></p><p>
</p><p>
மொஹ்சின் நக்வி, ஆசிய கிரிக்கெட் பேரவைத் தலைவர் மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் சபைத் தலைவர் பதவிகளுடன், பாகிஸ்தானின் உள்துறை அமைச்சராகவும் பதவி வகித்து வருகிறார்.
</p><p>
இந்தியா - பாகிஸ்தான் இடையிலான தொடர்ச்சியான அரசியல் பதற்றங்களுக்கு மத்தியில், நக்வியிடமிருந்து கிண்ணத்தைப் பெற்றுக்கொள்ள இந்திய அணி விரும்பவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-14T00:10:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[மீண்டும் அதே சம்பவம்! ஆசியக் கிண்ணத்தை வாங்க மறுத்த இந்திய மகளிர் அணி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/india-win-women-s-asia-cup-do-not-accept-trophy-1789344101"></link>
            <id>https://tamilwin.com/article/india-win-women-s-asia-cup-do-not-accept-trophy-1789344101</id>
            <summary type="text">துபாயில் நடைபெற்ற மகளிர் ஆசியக் கிண்ண இறுதிப் போட்டியில் இலங்கையை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது.

எனினும், வெற்றிக்குப் பின்னர் நடைபெற்ற...</summary>
            <content type="html"><![CDATA[<p>துபாயில் நடைபெற்ற மகளிர் ஆசியக் கிண்ண இறுதிப் போட்டியில் இலங்கையை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது.
</p><p>
எனினும், வெற்றிக்குப் பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு நிகழ்வில் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் (ACC) தலைவர் மொஹ்சின் நக்வியிடம் இருந்து கிண்ணத்தைப் பெற இந்திய வீராங்கனைகள் முன்வரவில்லை.</p><p></p><h2>மகளிர் ஆசியக் கிண்ண இறுதிப் போட்டி</h2><p>
</p><p>
இந்திய வீராங்கனைகள் மேடைக்கு வராத நிலையில், ACC தலைவர் மொஹ்சின் நக்வி உள்ளிட்ட அதிகாரிகள் சாம்பியன் அணியை எதிர்பார்த்து மேடையில் காத்திருந்தனர்.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">📸📸<br><br>A picture-perfect moment to cap off a successful and unbeaten <a href="https://x.com/hashtag/WomensAsiaCup?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#WomensAsiaCup</a> campaign 🏆<a href="https://x.com/hashtag/TeamIndia?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#TeamIndia</a> | <a href="https://x.com/hashtag/INDvSL?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#INDvSL</a> <a href="https://t.co/gzmoDKtUL9">pic.twitter.com/gzmoDKtUL9</a></p>&mdash; BCCI Women (@BCCIWomen) <a href="https://x.com/BCCIWomen/status/2099228570799513701?ref_src=twsrc%5Etfw">September 13, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>

மறுபுறம், இலங்கை வீராங்கனைகள் பரிசளிப்பு நிகழ்வில் கலந்துகொண்டு, இரண்டாம் இடத்திற்கான காசோலையைப் பெற்றுக்கொண்டனர்.</p><p>
இந்த சம்பவம் கடந்த 2025ஆம் ஆண்டு நடைபெற்ற ஆடவர் ஆசியக் கிண்ண இறுதிப் போட்டியை நினைவுபடுத்தியுள்ளது.</p><h2>இந்தியா–பாகிஸ்தான்&nbsp;</h2><p> </p><p>

அப்போதும் பட்டம் வென்ற இந்திய ஆடவர் அணியினர் மொஹ்சின் நக்வியிடம் இருந்து கிண்ணத்தைப் பெற மறுத்திருந்தனர்.</p><p><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr">Indian Women&#39;s Team refused to take Asia Cup Trophy from Mohsin Naqvi<br><br>Look at Mohsin Naqvi face 🤣🤡 <a href="https://t.co/zxAOnLxc6J">https://t.co/zxAOnLxc6J</a> <a href="https://t.co/SyaGMYMBzm">pic.twitter.com/SyaGMYMBzm</a></p>&mdash; Nafees (@Nafees_22) <a href="https://x.com/Nafees_22/status/2099218969647604176?ref_src=twsrc%5Etfw">September 13, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>
</p><p>
மொஹ்சின் நக்வி, ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவராகவும், பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் தலைவராகவும் இருப்பதுடன், பாகிஸ்தானின் உள்துறை அமைச்சராகவும் பதவி வகித்து வருகிறார்.
</p><p>
இந்தியா–பாகிஸ்தான் இடையிலான தொடர்ச்சியான அரசியல் பதற்றங்களுக்கு மத்தியில், பாகிஸ்தான் அரசாங்கத்தின் முக்கிய அமைச்சராக இருக்கும் நக்வியிடம் இருந்து கிண்ணத்தைப் பெற இந்திய அணி விரும்பாததே இந்த முடிவுக்குக் காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-14T00:10:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[விநாயகர் சதுர்த்தியில் இந்த பொருட்களை படைத்து வழிபட்டால் கேட்ட வரங்கள் கிடைக்குமாம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/items-required-for-vinayagar-chaturthi-varam-1789343574"></link>
            <id>https://jvpnews.com/article/items-required-for-vinayagar-chaturthi-varam-1789343574</id>
            <summary type="text">இந்து மதத்தின் முழுமுதற் கடவுளான விநாயகப் பெருமானின் அவதாரத்தைக் கொண்டாடும் விநாயகர் சதுர்த்தி விழா செப்டம்பர் 14 ஆம் திகதி கொண்டாடப்பட உள்ளது. இந்த ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்து மதத்தின் முழுமுதற் கடவுளான விநாயகப் பெருமானின் அவதாரத்தைக் கொண்டாடும் விநாயகர் சதுர்த்தி விழா செப்டம்பர் 14 ஆம் திகதி கொண்டாடப்பட உள்ளது. இந்த நாள் சுவையான நைவேத்தியங்கள் இல்லாமல் முழுமையடையாது. விநாயகருக்கு மிகவும் பிடித்த உணவென்றால் அது கொழுக்கட்டைதான் என்று நாம் நன்கு அறிவோம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/900f5ab1-df16-4d91-b495-7c6b26a2aa8d/26-6aa7375890950.webp' /></p><p>ஆனால் விநாயகரின் அருளை பெறுவதற்கு இந்த கொழுக்கட்டை மட்டுமே போதாது, அவருக்கு மிகவும் பிடித்த வேறுசில பொருட்களும் உள்ளன. இந்த பொருட்களை வைத்து விநாயகர் சதுர்த்தி அன்று விநாயகரை வழிபட்டால் உங்களின் அனைத்து ஆசைகளும் நிறைவேறும் என்று சாஸ்திரங்கள் கூறுகிறது. இந்த பதிவில் விநாயகருக்கு வைத்து வழிபட வேண்டிய புனித பொருட்கள் என்னென்ன என்று தெரிந்து கொள்ளலாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5b9456af-d5f3-416d-8a03-9ccaeb236533/26-6aa73757da90b.webp' /></p><h4>கொழுக்கட்டை
</h4><p>வட இந்தியாவில் மோதகம் என்று அழைக்கப்படும் கொழுக்கட்டை இல்லாமல் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்கள் நிறைவு பெறாது. இது விநாயகருக்கு மிகவும் பிடித்தமான இனிப்பு என்பதால், விநாயகர் சதுர்த்தியன்று அவருக்கு இது கட்டாயம் படைக்கப்பட வேண்டும். கொழுக்கட்டை என்பது அரிசி மாவினால் செய்யப்பட்டு, உள்ளே துருவிய தேங்காய் மற்றும் வெல்லம் நிரப்பப்பட்ட ஒரு இனிப்பு வகையாகும். விநாயகரை வழிபடும்போது மோதகம் இல்லாவிட்டால் அந்த வழிபாடு முழுமையடையாது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/21ed41d4-5a11-4843-8c27-44be07a01edc/26-6aa7375945711.webp' /></p><h4>அருகம்புல்
</h4><p>விநாயகருக்கு மிகவும் பிடித்த பொருட்களில் அருகம்புல் ஒன்றாகும். இது அடிப்படையில் வயல்வெளிகளில் தானாக வளரக்கூடிய, மூன்று கிளைகளைக் கொண்ட ஒரு வகை புல் ஆகும். விநாயகருக்கு ஏன் அருகம்புல் மிகவும் பிடித்தமானது என்பது குறித்து ஒரு சுவாரஸ்யமான கதை உள்ளது. ஒருமுறை, தேவர்களைத் துன்புறுத்தி வந்த 'அனலாசுரன்' என்ற தீய அரக்கனை விநாயகர் விழுங்கினார். ஆனால், அந்த அரக்கன் செரிக்காமல் போனதால் விநாயகர் கடுமையான வயிற்று எரிச்சலால் அவதிப்பட்டார். அப்போது சில முனிவர்கள் அவர் மீது அருகம் புற்களைத் தூவ, அவரது வயிற்று எரிச்சல் தணிந்து குளிர்ச்சி ஏற்பட்டது. அன்று முதல், இந்தப் புல் விநாயகருக்கு மிகவும் பிடித்தமானதாக மாறியது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6bf7d1e7-9afc-4a40-ba59-916bbd4db791/26-6aa73759ecabb.webp' /></p><h4>சாமந்திப் பூக்கள்
</h4><p>விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாட விநாயகர் சிலையை வீட்டிற்கு எடுத்து வரும் போது சிலையை அலங்கரிக்க சிவப்பு மற்றும் மஞ்சள் நிறச் சாமந்திப் பூக்களைப் பயன்படுத்து வேண்டும். விநாயகருக்குச் சாமந்திப் பூக்கள் மிகவும் பிடிக்கும். பெரும்பலான விநாயகர் கோவில்களில் அவருக்கு சாமந்திப் பூக்கள் மற்றும் அருகம்புல்லால் ஆன மாலைகளை அணிந்திருப்பதை நாம் காணலாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d22dfa76-fc0c-4d18-af61-ef792777637d/26-6aa7375aa2023.webp' /></p><h4>சங்கு
</h4><p>விநாயகருக்கு நான்கு கைகள் உள்ளன; அவற்றில் ஒன்றில் அவர் சங்கை ஏந்தியுள்ளார். பல இந்துப் பண்டிகைகள் சங்கு முழக்கத்துடனேயே தொடங்கப்படுகின்றன. விநாயகருக்கும் சங்கு நாதம் மிகவும் பிடிக்கும். விநாயகருக்கு ஆரத்தி எடுக்கும்போது பலர் தங்கள் வீடுகளில் சங்கு முழங்குகின்றனர். அந்தத் தீட்சண்யமான ஒலி தீய சக்திகளை விரட்டியடிக்கும் என்று நம்பப்படுகிறது. விநாயகர் சதுர்த்தி அன்று பூஜையின் போது சங்கொலியை எழுப்புவது நல்லது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ab083b32-33ec-4c3c-88ce-fbc8b8574594/26-6aa7375b534ac.webp' /></p><h4>தேங்காய், வாழைப்பழம்
</h4><p>தேங்காயும், வாழைப்பழமும் விநாயகருக்கு மிகவும் பிடித்தமான பொருட்களாகும். விநாயகர் யானை முகத்தானாக இருப்பதால் , அவருக்கு வாழைப்பழங்கள் மற்றும் வாழை மரத்தின் அனைத்துப் பாகங்கள் மீதும் மிகுந்த விருப்பம் உண்டு. பொதுவாக, அவரது திருவுருவச் சிலைகள் வாழை இலைகள் மற்றும் வாழைத் தண்டுகளால் சூழப்பட்டிருக்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4c8e98b1-8924-4470-94e0-98558366d307/26-6aa7375c0b123.webp' /></p><h4>எருக்கம் பூ
</h4><p>எருக்கம் மலர்கள் ஒருவரின் உடல் மற்றும் மனதிலிருந்து எதிர்மறை ஆற்றலை நீக்கும் ஆற்றல் உண்டு. விநாயகருக்கு எருக்குப் பூக்களால் ஆன மாலையைச் சாற்றி வழிபடுவது, பக்தர்களுக்கு நோயற்ற ஆரோக்கியமான வாழ்வை அருளும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ed4f2549-9abc-4e53-a16a-48338a23ffc7/26-6aa7375cc6579.webp' /></p>]]></content>
            <updated>2026-09-13T23:53:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[தெஹிவளை தாக்குதலின் பின்னணி! இறுதியில் உண்மை வெளிவரும்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/truth-behind-dehiwala-attack-will-be-revealed-1789341888"></link>
            <id>https://tamilwin.com/article/truth-behind-dehiwala-attack-will-be-revealed-1789341888</id>
            <summary type="text">கொழும்பு, தெஹிவளையில் நடத்தப்பட்ட கைக்குண்டுத் தாக்குதல் சம்பவமானது
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களின் அதிகரிப்பைக் காட்டுகின்றது என்ற
கருத்தைத் தா...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு, தெஹிவளையில் நடத்தப்பட்ட கைக்குண்டுத் தாக்குதல் சம்பவமானது
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களின் அதிகரிப்பைக் காட்டுகின்றது என்ற
கருத்தைத் தாம் முழுமையாக நிராகரிக்கின்றேன் என்று பொதுமக்கள் பாதுகாப்புப்
பிரதி அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்தார். </p><p>இந்த வார இறுதியினுள் இந்தச்
சம்பவத்தின் பின்னணியில் என்ன நடந்தது என்பதை அறிந்துகொள்ளலாம் என்றும் அவர்
சுட்டிக்காட்டினார்.</p><h2>தெஹிவளை தாக்குதல்&nbsp;</h2><p>
</p><p>
தெஹிவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஸ்ரீ சங்கபோ மாவத்தையில் அமைந்துள்ள
வீடொன்றின் மீது இனந்தெரியாத நபர் ஒருவர் மேற்கொண்ட கைக்குண்டுத் தாக்குதலில்
இரு சிறுவர்கள் பரிதாபகரமாக உயிரிழந்தமையுடன், அவர்களின் தந்தையும் காயமடைந்து
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4a8236a9-5f41-42c4-9fae-87c679b1d9bc/26-6aa732d7d85aa.webp' /></p><p>

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, கைக்குண்டுகளுடன் தொடர்புடைய ஒழுங்கமைக்கப்பட்ட
பாதாளக் குழுவினரின் செயற்பாடுகள் நாட்டில் அதிகரித்துள்ளனவா என
ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போதே பிரதி அமைச்சர்
மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.</p><p><span style="color: inherit;">அவர் மேலும் தெரிவிக்கையில்,</span></p><h2>தீவிர விசாரணை&nbsp;&nbsp;</h2><p><span style="color: inherit;">

"தெஹிவளையில் நடத்தப்பட்ட கைக்குண்டுத் தாக்குதல் சம்பவம் குறித்து விரிவான
விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</span></p><p>எனவே, இப்போதே உடனடியாக எந்தவொரு
முடிவுக்குவும் வந்துவிட முடியாது. அத்தோடு, இந்தச் சம்பவத்தைக் காரணம் காட்டி
நாட்டில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்கள் அதிகரித்துவிட்டன என்றும் கூற
முடியாது.

விசாரணைகளின் முழுமையான முடிவிலேயே சரியான தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2fa686b3-4d27-400f-8132-ba65e5b682c6/26-6aa732d8942db.webp' /></p><p>
</p><p>இந்த வார இறுதியினுள் இந்தச் சம்பவத்தின் பின்னணியில் என்ன நடந்தது என்பதை
அறிந்துகொள்ளலாம்.

இந்தச் சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகளை மேற்கொள்வதற்காக விசேட பொலிஸ்
விசாரணைக் குழு ஒன்றும் நியமிக்கப்பட்டுள்ளது. </p><p>இந்தக் குற்றச் செயலுக்கான
உண்மையான காரணம் விரைவில் வெளிக்கொணரப்படும் என குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-13T23:33:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[தீவிர அச்சத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் இலக்கு வைக்கப்பட்ட ஜோசப் பரராஜசிங்கம்! தேவாலயத்துக்குள் நடந்த துப்பாக்கிச்சூடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/mystery-surrounding-death-joseph-pararajasingam-1789338488"></link>
            <id>https://ibctamil.com/article/mystery-surrounding-death-joseph-pararajasingam-1789338488</id>
            <summary type="text">முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம், தேவாலயத்தில் நற்கருணை பெற்றுவிட்டு திரும்பியபோது சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான பல ஆண்டுகளுக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம், தேவாலயத்தில் நற்கருணை பெற்றுவிட்டு திரும்பியபோது சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான பல ஆண்டுகளுக்குப் பின்னரான புதிய தகவல்களை&nbsp;ஐ.பி.சி தமிழின் உண்மைகள் நிகழ்ச்சி வெளிப்படுத்தியுள்ளது.</p><p>
இந்தத் தாக்குதலில் பரராஜசிங்கத்தின் மனைவி உள்ளிட்ட மேலும் பலரும் காயமடைந்தனர். அவர்களில் ஒரு கத்தோலிக்க அருட்சகோதரியும் இரண்டு சிறுமிகளும் அடங்குகின்றனர். இதனால், இந்தத் தாக்குதல் எவ்வளவு கொடூரமானதாக இருந்தது என்பதும் வெளிப்படுகிறது.</p><p>
பரராஜசிங்கம் மீது தாக்குதல் நடத்துவதற்கு தேவாலயம் தேர்ந்தெடுக்கப்பட்டதன் பின்னணியில், உளவியல் ரீதியான அச்சத்தை ஏற்படுத்தும் நோக்கம் இருந்திருக்கலாம் என்ற சந்தேகங்கள் தற்போது வெளிப்படுகிறது.</p><p>
அவரை வேறு இடங்களிலும் இலக்கு வைப்பதற்கான வாய்ப்புகள் இருந்தபோதிலும், ஒரு வழிபாட்டுத் தலத்திற்குள் வைத்து தாக்குதல் நடத்தப்பட்டமை, எதிர்ப்புக் குரல் எழுப்புவோர் மத்தியில் தீவிர அச்சத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என்ற கேள்வியையும் எழுப்புகிறது.
</p><p>
இந்தப் படுகொலை பொதுவாக கருணா மற்றும் பிள்ளையான் சார்ந்த குழுக்களுடன் தொடர்புபடுத்தப்பட்டு வந்துள்ளது. எனினும், இந்தத் தாக்குதலின் பின்னணியில் இலங்கை இராணுவப் புலனாய்வுப் பிரிவு,&nbsp; மற்றும் கருணா குழு உள்ளிட்ட பல தரப்புகள் தொடர்புபட்டிருந்ததாகவும் சில தகவல்கள் தெரிவிப்பதாக கூறப்படுகிறது.</p><p>
இந்நிலையில், சம்பவம் தனது கண்முன்னேயே இடம்பெற்றதாகக் கூறும் புலனாய்வு ஊடகவியலாளர் நிராஜ் டேவிட், துப்பாக்கிச் சூட்டுக்குப் பின்னர் ஜோசப் பரராஜசிங்கத்தை தனது வாகனத்தில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதாகவும், தனது கைகளிலேயே அவர் உயிரிழந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
</p><p>
அவர் வெளியிட்டுள்ள இந்தத் தகவல்கள், ஜோசப் பரராஜசிங்கம் படுகொலையின் பின்னணியில் இதுவரை வெளிவராத பல கேள்விகளை மீண்டும் எழுப்புகின்றன.</p><p>இந்தக் கேள்விகளுக்கான பதில்களைத் தேடி, ஜோசப் பரராஜசிங்கம் படுகொலையின் பின்னணியை விரிவாக ஆராய்கிறது ஐ.பி.சி தமிழின் ‘உண்மைகள்’ நிகழ்ச்சி....</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/Mf5NlT3f33E" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-13T23:33:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[உயர்நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு! திடீரென தலைமறைவான ஞானசார தேரர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/gnanasara-thero-has-been-in-hiding-since-friday-1789340559"></link>
            <id>https://tamilwin.com/article/gnanasara-thero-has-been-in-hiding-since-friday-1789340559</id>
            <summary type="text">பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், கடந்த வெள்ளிக்கிழமை தொடக்கம் தலைமறைவாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.

பொதுபல சேனா (BBS) அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், கடந்த வெள்ளிக்கிழமை தொடக்கம் தலைமறைவாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.</p><p>

பொதுபல சேனா (BBS) அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டின் கீழ் கடந்த 2019-ஆம் ஆண்டில் ஆறுவருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தார்.
</p><h2>&nbsp;ஞானசார தேரர்</h2><p>
அவர் தனது சிறைவாழ்க்கையில் சுமார் ஒன்பது மாதங்களைப் பூர்த்தி செய்திருந்த நிலையில், 2019-ஆம் ஆண்டு மே மாதம் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவால் ஜனாதிபதி மன்னிப்பு வழங்கப்பட்டிருந்தது.
</p><p>
சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது முதல் பொதுமன்னிப்பு வழங்கப்படும் காலம் வரை ஞானசார தேரர், வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையில் காவியுடையில் சாதாரண விளக்கமறியல் கைதி போன்றே சகல வசதிகளுடன் காலம் கழித்திருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bdfc7893-b72a-49df-a53d-f1a93c7f40a1/26-6aa72f16ca6ac.webp' /></p><p>
</p><p>
அவ்வாறான நிலையில்தான் அவருக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டிருந்தது. அதற்கு எதிராக கடத்திச் செல்லப்பட்டு, காணாமல் போகச் செய்யப்பட்ட பிரபல ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா எக்னெலிகொட அடிப்படை மனித உரிமை மீறல் மனுவொன்றைத் தாக்கல் செய்திருந்தார்.
</p><p>
இந்நிலையில் குறித்த மனுவிசாரணையின் இறுதியில் உச்ச நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன வழங்கிய பொது மன்னிப்பு தன்னிச்சையானது என்றும், அது பொது நம்பிக்கையையும் இயற்கை நீதியின் கோட்பாடுகளையும் மீறுவதாகவும் தீர்ப்பளித்தது.</p><h2>&nbsp;தலைமறைவு</h2><p>

இந்நிலையில் தனக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி மன்னிப்பை உச்ச நீதிமன்றம் ரத்து செய்ததைத் தொடர்ந்து ஞானசார தேரர் தலைமறைவாகிவிட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. </p><p>அவரது தண்டனையின் மீதமுள்ள ஆறு ஆண்டுகளை அனுபவிப்பதற்காக அவரை மீண்டும் சிறைக்கு அழைத்துச் செல்லும் நடவடிக்கையின் ஒரு பகுதியாகஇ ராஜகிரிய, நாவலவில் உள்ள விகாரைக்கு சிறைச்சாலை அதிகாரிகள் கடந்த சனிக்கிழமை சென்றிருந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/92949f1d-1e20-4cb5-9923-f4ea4f50a0fe/26-6aa72f177ca3b.webp' /></p><p>

எனினும் ஞானசார தேரர் விகாரையில் இருந்து தலைமறைவாகியுள்ளதுடன், அவரது மெய்ப்பாதுகாவலர் உள்ளிட்ட எவருக்கும் அவரது இருப்பிடம் குறித்த தகவல்கள் தெரியவில்லை என்று கூறப்பட்டுள்ளது.
</p><p>
தனது தண்டனையில் ஒன்பது மாதங்களை மட்டுமே அனுபவித்திருந்த ஞானசார தேரர், தற்போது தனது அசல் ஆறு ஆண்டு தண்டனையின் பெரும்பகுதியை அனுபவிக்கும் நிலையை எதிர்கொள்கிறார்.</p><p> இந்நிலையில் தலைமறைவாக உள்ள அவரைத் தேடி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-13T23:17:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[டீசல் விலையை லீற்றருக்கு ரூ.170ஆக அதிகரிக்க வேண்டும்! அழுத்தம் தெரிவிக்கும் தனியார் நிறுவனங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/to-increase-the-diesel-price-to-rs-170-per-litre-1789340684"></link>
            <id>https://ibctamil.com/article/to-increase-the-diesel-price-to-rs-170-per-litre-1789340684</id>
            <summary type="text">செலவுகளை ஈடுகட்டும் வகையிலான எரிபொருள் விலை நிர்ணய பொறிமுறையை விரைவில் மீண்டும் நடைமுறைப்படுத்துமாறு இலங்கையில் எரிபொருள் விநியோகத்தில் ஈடுபட்டுள்ள தன...</summary>
            <content type="html"><![CDATA[<p>செலவுகளை ஈடுகட்டும் வகையிலான எரிபொருள் விலை நிர்ணய பொறிமுறையை விரைவில் மீண்டும் நடைமுறைப்படுத்துமாறு இலங்கையில் எரிபொருள் விநியோகத்தில் ஈடுபட்டுள்ள தனியார் நிறுவனங்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளன.</p><p>

உலக சந்தையில் எரிபொருள் விலைகள் வேகமாக அதிகரித்து வருவதுடன், கடல் போக்குவரத்துக் கட்டணங்களும் உயர்ந்துள்ள நிலையில் அவர்கள் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
</p><p>
தற்போதைய நிலைமையில் ஒரு லீற்றர் டீசலை விநியோகிக்கும் போது சுமார் 170 ரூபாய் நட்டத்தை எதிர்கொள்ள வேண்டியுள்ளதாக அந்த நிறுவனங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.</p><p></p><h2>தனியார் எரிபொருள் விநியோக நிறுவனங்கள்&nbsp;</h2><p>
</p><p>
இது தொடர்பில் எரிபொருள் விநியோகத்தில் ஈடுபட்டுள்ள தனியார் நிறுவனங்கள் ஒன்றிணைந்து, எரிசக்தி அமைச்சருக்கும் அமைச்சின் செயலாளருக்கும் நிலைமையை அறிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8cfa8471-eed6-46e1-a19b-284c1b4e3526/26-6aa72c105f6e9.webp' /></p><p>
</p><p>
முன்னதாக அரசாங்கத்தினால் ஒரு லீற்றர் டீசலுக்கு 100 ரூபாயும், ஒரு லீற்றர் பெட்ரோலுக்கு 20 ரூபாயும் வழங்கப்பட்டு வந்த மானியம் கடந்த ஜூலை மாதம் முதல் இடைநிறுத்தப்பட்டது.
</p><p>
இந்தத் தீர்மானத்தையடுத்து, எதிர்கால எரிபொருள் தொகுதிகளுக்கான கொள்வனவு உத்தரவுகளை மேற்கொள்ள தேவையான நிதியை திரட்டுவதில் கடுமையான நெருக்கடியை எதிர்கொண்டு வருவதாக தனியார் எரிபொருள் விநியோக நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
</p><p>
செலவுக்கு ஏற்ப எரிபொருள் விலைகளில் திருத்தம் மேற்கொள்ளப்படாவிட்டால், நிறுவனங்களுக்கு ஏற்படும் நட்டம் காரணமாக தொடர்ச்சியான எரிபொருள் விநியோகத்தைப் பேணுவது கடும் ஆபத்துக்குள்ளாகும் எனவும் அந்த நிறுவனங்கள் எச்சரித்துள்ளன.
</p><p>
இதேவேளை, தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு வழங்கப்படும் எரிபொருள் தொகைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.</p><p></p><h2>மத்திய கிழக்கில் நிலவும் மோதல்கள்&nbsp;</h2><p>
மேலும் சில தனியார் எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் டீசல் இல்லை என்ற அறிவித்தல் பலகைகள் தொங்கவிடப்பட்டுள்ளதை அறியமுடிகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9fcf2113-7ea3-4320-a6eb-3d1d792e2042/26-6aa72c0faacf3.webp' /></p><p>

இருப்பினும், இது குறித்து இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே.ராஜகருணா, எரிபொருள் கூட்டுத்தாபன (Ceypetco) எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் போதுமான அளவு எரிபொருள் கையிருப்பில் உள்ளதாக அவர் உறுதியளித்துள்ளார்.</p><p>இந்நிலையில் மத்திய கிழக்கில் நிலவும் மோதல்கள் காரணமாக எரிபொருள் இறக்குமதிக்கான செலவு அதிகரித்துள்ள நிலையில், தனியார் எரிபொருள் நிறுவனங்களுக்கான எரிபொருள் விலையை திருத்தியமைப்பது குறித்து அரசாங்கம் பரிசீலிக்கக்கூடும் என்று எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக முன்னதாக தெரிவித்திருந்தார்.</p><p>

தனியார் எரிபொருள் நிறுவனங்களுடன் எட்டப்பட்டுள்ள ஒப்பந்தங்களின்படி, இவ்வாறு எரிபொருள் விலையை திருத்தியமைப்பதில் எந்தவித சட்டத் தடைகளும் இல்லை என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td><br></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-13T23:05:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டின் பல பகுதிகளில் இன்றைய தினம் பதிவாகவுள்ள வெப்பநிலை தொடர்பில் வெளிவந்துள்ள அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/weather-alert-in-sri-lanka-1789303289"></link>
            <id>https://tamilwin.com/article/weather-alert-in-sri-lanka-1789303289</id>
            <summary type="text">இன்றைய தினம் (14.09.2026) பகல் வேளையில் வெப்பமான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. 

அதன்படி வடமத்திய மற்றும் கிழக...</summary>
            <content type="html"><![CDATA[<p>இன்றைய தினம் (14.09.2026) பகல் வேளையில் வெப்பமான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. </p><p>

அதன்படி வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட பல மாவட்டங்களில் இவ்வாறான நிலைமை காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>வெப்பச் சுட்டெண் அவதானம்</h2><p>நேற்று (13) மாலை 4 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை அறிவிப்பின்படி, </p><p>வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளிலும் பகல் வேளையில் வெப்பச் சுட்டெண் அவதானம் செலுத்தப்பட வேண்டிய'மட்டத்தில் காணப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/448f3467-22df-47be-9d26-2a538262983c/26-6aa6a6aa038d9.webp' /></p><p> </p><p>

இதற்கமைய, குறிப்பிட்ட பகுதிகளில் வாழும் பொதுமக்கள் இந்த அதிக வெப்பமான வானிலை நிலவுவதால் தேவையான சுகாதாரப் பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-13T23:03:30+00:00</updated>
        </entry>
    </feed>
