<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-07-31T20:33:20+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[சமீபத்திய நாட்களில் கிடைத்த ஒரே ஒரு நல்ல செய்தி! ஐ.நா வெளியிட்ட தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/the-only-good-news-in-recent-days-un-opinion-1785527269"></link>
            <id>https://ibctamil.com/article/the-only-good-news-in-recent-days-un-opinion-1785527269</id>
            <summary type="text">

ஹமாஸ் அமைப்பினர் ஆயுதங்களைக் கைவிடவும், காசாவிலிருந்து இஸ்ரேல் தனது படைகளைத் திரும்பப் பெறவும் எட்டப்பட்டுள்ள ஒப்பந்தமே சமீபத்திய நாட்களில் கிடைத்...</summary>
            <content type="html"><![CDATA[<p>

ஹமாஸ் அமைப்பினர் ஆயுதங்களைக் கைவிடவும், காசாவிலிருந்து இஸ்ரேல் தனது படைகளைத் திரும்பப் பெறவும் எட்டப்பட்டுள்ள ஒப்பந்தமே சமீபத்திய நாட்களில் கிடைத்த ஒரே நல்ல செய்தி என்று ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அந்தோனியோ குட்டெரெஸ் தெரிவித்துள்ளார்.
</p><p>
சிரியா, ஜோர்தான் மற்றும் சைப்ரஸ் நாடுகளுக்கான தனது சமீபத்திய பயணங்கள் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், மத்திய கிழக்கு பிராந்தியத்தால் இனி மற்றொரு போரைத் தாங்க முடியாது என்று சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p>

இதன்படி, மத்திய கிழக்கின் அனைத்து முனைகளிலும் மோதல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்பதை குட்டெரெஸ் உறுதியாக வலியுறுத்தியுள்ளார்.</p><p></p><h2>ஒப்புக்கொள்ளப்பட்ட ஒப்பந்தம்</h2><p>
</p><p>
மேலும், ஒப்புக்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் ஆகிய இரு தரப்பும் விரைவாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5b6f2f9b-b640-4a0c-8dac-cff80c78c3e8/26-6a6d001e58f9f.webp' /></p><p>

இந்த இலக்குகளைச் செயல்படுத்துவதற்கான வழிவரைபடம் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், எந்தவித கேள்விகளோ, சந்தேகங்களோ அல்லது அதைச் சீர்குலைக்கும் முயற்சிகளோ இன்றி அந்த வழிமுறை முழுமையாகப் பின்பற்றப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table><p>
</p>]]></content>
            <updated>2026-07-31T20:10:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தென் ஆப்பிரிக்காவில் பேருந்து கவிழ்ந்து விபத்து; 11 பேர் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/11-killed-as-bus-overturns-in-south-africa-1785528442"></link>
            <id>https://canadamirror.com/article/11-killed-as-bus-overturns-in-south-africa-1785528442</id>
            <summary type="text">தென் ஆப்பிரிக்காவின் மத்திய ஃப்ரீ ஸ்டேட் மாகாணத்தில் உள்ள என்1 நெடுஞ்சாலையில்&amp;nbsp; பேருந்து கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில், ஐந்து குழந்தைகள் உட்பட பதினொ...</summary>
            <content type="html"><![CDATA[<p>தென் ஆப்பிரிக்காவின் மத்திய ஃப்ரீ ஸ்டேட் மாகாணத்தில் உள்ள என்1 நெடுஞ்சாலையில்&nbsp; பேருந்து கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில், ஐந்து குழந்தைகள் உட்பட பதினொரு பேர் உயிரிழந்தனர்.</p><p> மேலும், பலர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p><br></p><p>

</p><p>தென் ஆப்பிரிக்காவின் ட்ராம்ப்ஸ்பர்க்கிற்கு வடக்கே சுமார் 24 கி.மீ தொலைவில், ஈடன்பர்க் செல்லும் வழியில் நேற்று இரவு 9.30 மணியளவில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
</p><p>
அந்த பேருந்தில் சுமார் 60 பயணிகள் பயணம் செய்துள்ளனர். இந்நிலையில், பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி உள்ளது.
</p><p>
இதில், பேருந்திற்கு வெளியே 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரவில் அனுமதிக்கப்பட்டுளதாக துறை செய்தித் தொடர்பாளர் மோண்ட்லி மவாம்பி கூறினார்.</p><p>

மேலும், வாகனத்தின் அடியில் சிக்கியிருந்த குழந்தைகளை மீட்புக் குழுவினர் மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
</p><p>
விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.</p>]]></content>
            <updated>2026-07-31T20:07:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் இந்திய மாணவருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை:]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/indian-man-whod-been-studying-in-canada-sentenced-1785505943"></link>
            <id>https://canadamirror.com/article/indian-man-whod-been-studying-in-canada-sentenced-1785505943</id>
            <summary type="text">&amp;nbsp;முதியவர்களை இலக்கு வைத்து பல மில்லியன் டொலர் பணமோசடியில் ஈடுபட்ட இந்திய இளைஞருக்கு அமெரிக்க நீதிமன்றம் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது.
கன...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;முதியவர்களை இலக்கு வைத்து பல மில்லியன் டொலர் பணமோசடியில் ஈடுபட்ட இந்திய இளைஞருக்கு அமெரிக்க நீதிமன்றம் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது.
</p><p>கனடாவிற்கு மாணவர் விசா மூலம் வந்து கல்லூரியில் படித்து வந்த ரோஷன் ஷா என்ற இந்தியப் பிரஜை, அமெரிக்காவில் முதியவர்களை இலக்காகக் கொண்டு நடத்தப்பட்ட பிரம்மாண்ட பணமோசடி வழக்கில் குற்றவாளியாகக் காணப்பட்டுள்ளார்.
</p><p>அமெரிக்காவின் விஸ்கான்சின் கிழக்கு மாவட்ட வழக்கறிஞர் அலுவலகம் வெளியிட்ட தகவலின்படி, சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனை சதித்திட்டத்தில் ஈடுபட்டதற்காக இவருக்கு நீதிபதி 48 மாத சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/30810a8d-7463-4044-8ab6-2c6a949f28d2/26-6a6ca898e46c8.webp' /></p><p>
கனடாவில் படித்து வந்த ரோஷன் ஷா, மோசடி மூலம் கிடைத்த பணத்தையும் தங்கத்தையும் சேகரிப்பதற்காக சுற்றுலா விசா மூலம் அமெரிக்காவிற்குள் நுழைந்துள்ளார்.</p><p>
இந்தியாவில் உள்ள இவரது நண்பர்கள் அமெரிக்காவில் உள்ள முதியவர்களைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு, அவர்களின் அடையாள அட்டைகள் குற்றச் செயல்களுக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளதாகப் பயமுறுத்தியுள்ளனர்.
</p><p>பாதுகாப்பிற்காகத் தங்களது பணம் அல்லது தங்கத்தைப் போலி கூட்டாட்சி முகவரிடம் ஒப்படைக்க வேண்டும் எனப் பாதிக்கப்பட்டவர்களை நம்ப வைத்துள்ளனர். </p><p>
இந்த போலி முகவராகவே ரோஷன் ஷா நேரில் சென்று பணத்தைச் சேகரித்துள்ளார்.
அமெரிக்காவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள 15 முதியவர்களிடம் இருந்து மொத்தம் 3.7 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கும் அதிகமான பணம் மற்றும் தங்கத்தை ரோஷன் ஷா திரட்டியமை விசாரணையில் தெரியவந்துள்ளது.</p><p>
விஸ்கான்சினில் உள்ள நியூ பெர்லின் பகுதியில் மீண்டும் ஒரு மோசடிப் பணத்தைச் சேகரிக்க முயன்றபோது, அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை மற்றும் உள்ளூர் காவல்துறையினரால் இவர் கைது செய்யப்பட்டார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-31T19:56:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை வரலாற்றை புரட்டிப் போட்ட நீதிமன்ற தீர்ப்பு..! ஈஸ்டர் தாக்குதல் வழக்கில் நடந்த அதிரடி திருப்பம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/easter-attack-court-order-today-1785519190"></link>
            <id>https://tamilwin.com/article/easter-attack-court-order-today-1785519190</id>
            <summary type="text">முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுதந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோருக்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.&amp;...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுதந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோருக்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.&nbsp;</p><p>இலங்கை வரலாற்றிலேயே, மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள முதல் முன்னாள் பொலிஸ் அதிகாரி மற்றும் பாதுகாப்பு அதிகாரியாக இருவரும் பதிவாகியுள்ளனர்.&nbsp;</p><p>உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் வழக்கில் குற்றவாளிகளாக இவர்கள் இருவரும் அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர்.&nbsp;</p><p>முன்னதாக&nbsp;2022ஆம் ஆண்டில், மூன்று நீதிபதிகள் கொண்ட உயர் நீதிமன்ற அமர்வு, இருவரையும் குற்றமற்றவர்கள் என விடுவித்துத் தீர்ப்பளித்தது. </p><p>அதனை தொடர்ந்து, இதற்கு எதிராக அரசு தலைமை சட்டத்தரணி தாக்கல் செய்த மேல்முறையீடு தொடர்பான உயர் நீதிமன்றத்தின் உத்தரவின்படி, இந்த வழக்கில் எதிர் தரப்பின் சாட்சியங்கள் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டமையே இதற்கு ஆரம்பமாகும்.&nbsp;</p><p>இவ்விடயம் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி,&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/tNtQzCV29AI" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-31T19:53:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஸ்பெயினுடனான ஷெங்கன் விதியை இடைநீக்கம் செய்த இத்தாலி: பிரான்சுடன் கூட்டு ஒப்பந்தம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/italy-suspends-schengen-visa-rules-for-spain-1785526967"></link>
            <id>https://news.lankasri.com/article/italy-suspends-schengen-visa-rules-for-spain-1785526967</id>
            <summary type="text">ஸ்பெயின் உடனான ஷெங்கன் விதிகளை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக இத்தாலி அறிவித்துள்ளது. அதிருப்தியை வெளிப்படுத்திய ஸ்பெயின்வியாழக்கிழமையன்று மொராக்கோவில்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஸ்பெயின் உடனான ஷெங்கன் விதிகளை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக இத்தாலி அறிவித்துள்ளது.</p><h2> அதிருப்தியை வெளிப்படுத்திய ஸ்பெயின்</h2><p>வியாழக்கிழமையன்று மொராக்கோவில் இருந்து கிட்டத்தட்ட 500000 மக்கள் ஸ்பெயினின் சியூட்டா(Ceuta) பகுதிக்குள் ஒரே நேரத்தில் முயன்றனர். இது ஐரோப்பிய நாடுகளுக்கு இடையே மிகப்பெரிய அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியிருந்தது.</p><p> இதையடுத்து ஐரோப்பிய ஒன்றியத்தின் விசா இல்லாத ஷெங்கன் பயண மண்டலத்திலிருந்து ஸ்பெயினை இடைநீக்கம் செய்ய வேண்டும் என இத்தாலியப் பிரதமர் ஜார்ஜியா மெலோனி கோரிக்கை விடுத்து இருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aea8b839-1087-4c45-9577-1b84fb77fe7b/26-6a6cfab9a15c2.webp' /></p><p>இது தொடர்பாக சமூக வலைதளத்தில் மெலோனி வெளியிட்ட தகவலில், ஷெங்கன்(Schengen)&nbsp; பயண மண்டலத்திலிருந்து ஸ்பெயினை இடைநீக்கம் செய்து தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகார அமைப்புகளை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம், மேலும் இது தொடர்பாக எந்தவொரு நடவடிக்கையும் எடுக்க தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டு இருந்தார்.</p><p> அத்துடன் சியூட்டா நகரத்தில் இருந்து வெளிவரும் காட்சிகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக உள்ளது என்றும் மெலோனி தெரிவித்து இருந்தார்.</p><h2> ஷெங்கன் விதியை இடைநீக்கம் செய்த இத்தாலி</h2><p>
இந்நிலையில் முக்கிய கொள்கை மாற்றமாக, ஸ்பெயின் உடனான விசா மற்றும் கடவுச் சீட்டு இல்லாத ஷெங்கன் பயண முறையை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக இத்தாலி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b9abf213-1189-4701-b4cd-bf0047616d88/26-6a6cfab8ee6b8.webp' /></p><p> சியூட்டா நகரத்தில் நடந்த நிகழ்வே இந்த அதிரடி நடவடிக்கைக்கான முக்கிய காரணம் என்று இத்தாலிய உள்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.</p><p> இந்த இடைக்கால தடை தவிர இத்தாலி - பிரான்ஸ் எல்லையில் பாதுகாப்பை பலப்படுத்தும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p><p> மேலும் எல்லையில் சோதனைகளை தீவிரப்படுத்த பிரான்ஸ் அரசுடன் கூட்டு ஒப்பந்தமும் செய்யப்பட்டு இருப்பதாக உள்துறை அமைச்சகம் தகவலை உறுதிப்படுத்தியுள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-31T19:43:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஸ்பெயினுடனான தனது ஷெங்கன் தடையற்ற பயண ஒப்பந்தத்தை இடைநிறுத்திய இத்தாலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/italy-suspends-schengen-free-travel-spain-1785526341"></link>
            <id>https://tamilwin.com/article/italy-suspends-schengen-free-travel-spain-1785526341</id>
            <summary type="text">சியூட்டாவிற்குள் பெருமளவில் மக்கள் எல்லையைக் கடந்து வருவதைத் தொடர்ந்து, ஐரோப்பிய ஒன்றியத்தின் எல்லைகளற்ற ஷெங்கன் திட்டத்தின் கீழ் ஸ்பெயினுடனான தனது எல...</summary>
            <content type="html"><![CDATA[<p>சியூட்டாவிற்குள் பெருமளவில் மக்கள் எல்லையைக் கடந்து வருவதைத் தொடர்ந்து, ஐரோப்பிய ஒன்றியத்தின் எல்லைகளற்ற ஷெங்கன் திட்டத்தின் கீழ் ஸ்பெயினுடனான தனது எல்லை ஏற்பாடுகளை இடைநிறுத்துவதாக இத்தாலி அறிவித்துள்ளது.</p><h2>பாரிஸுடன் உடன்பாடு</h2><p>
</p><p>
இத்தாலிக்கு ஸ்பெயினுடன் தரைவழி எல்லை இல்லை என்றாலும், இந்த நடவடிக்கை இரு நாடுகளுக்கும் இடையே விமானம் அல்லது படகு மூலம் பயணம் செய்பவர்களைப் பாதிக்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4dbc400f-471e-4127-bb10-9986167062ee/26-6a6cfabdc7cf5.webp' /></p><p>
</p><p>
பிராங்கோ - இத்தாலிய தரைவழி எல்லையில் கட்டுப்பாடுகளை வலுப்படுத்த பாரிஸுடன் உடன்பாடு எட்டியுள்ளதாகவும் இத்தாலியின் உள்துறை அமைச்சகம் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-31T19:42:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[பல் வைத்தியருக்கும் தாய்க்கும் அரங்கேறிய கொடூரம் ; உடன் பிறந்தவர்களே செய்த அதிர்ச்சிப் பின்னணி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/entist-and-mother-killed-in-brutal-attack-1785526950"></link>
            <id>https://jvpnews.com/article/entist-and-mother-killed-in-brutal-attack-1785526950</id>
            <summary type="text">சென்னை அண்ணா நகரில் நடந்துள்ள இரட்டை கொலை சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சொத்து தகராறில் பல் டாக்டரும், அவரது தாயாரும் கொடூரமாக கொல்லப் ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">சென்னை அண்ணா நகரில் நடந்துள்ள இரட்டை கொலை சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சொத்து தகராறில் பல் டாக்டரும், அவரது தாயாரும் கொடூரமாக கொல்லப் பட்டுள்ளனர்.</p><p style="text-align: justify;">

சென்னை அண்ணா நகர் கிழக்கு 1-வது அவென்யூவில் 3 மகன்களுடன் பெண்ணொருவர் ஒரே வீட்டில் இருந்துள்ளார்.</p><p style="text-align: justify;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bfd35b68-db2e-4184-90fc-80ca15ad903b/26-6a6cfaae65d15.webp' /></p><h2 style="text-align: justify;">சொத்து தகராறு</h2><p style="text-align: justify;">

இந்த நிலையில் குறித்த பெண்ணின் இளைய மகனான பல் வைத்தியருக்கும் அவரது அண்ணன்களுக்கும் இடையே நீண்ட நாட்களாக சொத்து தகராறு இருந்து வந்துள்ளது.
</p><p style="text-align: justify;">
இது தொடர்பாக நேற்று இரவு வீட்டில் வைத்து சொத்து தொடர்பாக இவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது. அண்ணன்கள் இருவரும் சேர்ந்து சரமாரியாக தாக்கி தாய், தம்பியை அடித்து கொன்றுவிட்டு இருவரும் நாடகம் ஆடியுள்ளனர்.
</p><p style="text-align: justify;">
தாயும், தம்பியும் வீட்டில் தவறி விழுந்து உயிரிழந்துவிட்டனர் என்று அக்கம் பக்கத்தினரை நம்ப வைத்தனர்.

இதுபற்றி தகவல் கிடைத்ததும், பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். முகம் மற்றும் பல இடங்களில் காயங்கள் இருந்தது.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;">இதைத் தொடர்ந்து சகோதரர்களான இருவரிடமும் பொலிஸார் அதிரடி விசாரணையில் ஈடுபட்டனர்.</p><p style="text-align: justify;">
இதில் இருவரும் தாயையும், தம்பியையும் சொத்து தகராறில் அடித்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர்.
</p><p style="text-align: justify;">

இதைத் தொடர்ந்து அவர்களை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு இந்த இரட்டை கொலை சம்பவம் அண்ணாநகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.</p><p style="text-align: justify;"></p>]]></content>
            <updated>2026-07-31T19:42:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[பேச்சுவார்த்தைக்கு வரும் வரை கடும் தாக்குதல்! ஈரானுக்கு ட்ரம்பின் பேரிடியான அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/trump-announces-continued-attacks-on-iran-1785525349"></link>
            <id>https://ibctamil.com/article/trump-announces-continued-attacks-on-iran-1785525349</id>
            <summary type="text">

ஈரான் மீண்டும் பேச்சுவார்த்தை மேசைக்கு திரும்பும் வரை தாக்குதல்களை தொடரப்போவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அந்நாட்டின் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>

ஈரான் மீண்டும் பேச்சுவார்த்தை மேசைக்கு திரும்பும் வரை தாக்குதல்களை தொடரப்போவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.</p><p>
அந்நாட்டின் அமைச்சரவைக் கூட்டத்தின் போது இது குறித்துப் பேசிய ட்ரம்ப், ஈரானைத் தொடர்ந்து கடுமையாகத் தாக்குவோம் என்றும், தாங்க முடியாத ஒரு கட்டத்தில் அவர்களே இறங்கி வருவார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
இந்த மோதல் தொடங்கி ஐந்து மாதங்கள் கடந்துள்ள நிலையிலும், கடந்த ஜூன் மாதம் எட்டப்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தம் சில வாரங்களிலேயே முறிந்தது.</p><p></p><h2>தீவிர&nbsp;தாக்குதல்</h2><p>
</p><p>
இந்நிலையில், மின் நிலையங்கள் மற்றும் பாலங்கள் போன்ற ஈரானின் முக்கிய உள்கட்டமைப்புகளை இலக்கு வைத்து தாக்குதல்களை தீவிரப்படுத்தப் போவதாக ட்ரம்ப் தொடர்ச்சியாக எச்சரித்து வருகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8a9ca6b2-cd74-47f9-88a1-e0c6ac0922e2/26-6a6cfa048a927.webp' /></p><p><i>Image Credit:&nbsp;Reuters</i></p><p> </p><p>

அமெரிக்க மத்திய கட்டளையகத்தின் தகவல்படி, புதன்கிழமை இரவு மிகக் கடுமையான வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்ட போதிலும், வெள்ளிக்கிழமை புதிதாக எந்த தாக்குதல்களும் பதிவாகவில்லை என்றே கூறப்படுகிறது.</p><h2>குறையும் ட்ரம்பின் அமெரிக்க ஆதரவு</h2><p>
</p><p>
இவ்வாறானதொரு பின்னணியில், ஈரான் உடனான இந்தப் போர் அமெரிக்க மக்களிடையே பெரும் எதிர்ப்பை கிளப்பி வருவதாக சர்வதேச வட்டராங்கள் தெரிவிக்கின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dddaca8c-480e-4177-81d2-f260861043e6/26-6a6cfa057616f.webp' /></p><p><i>Image Credit:&nbsp;Spectrum News</i></p><p>

அந்தவகையில், எரிபொருள் விலை உயர்வு உள்ளிட்ட கடுமையான பொருளாதார பாதிப்புகளையும் குறித்த போர் ஏற்படுத்தியுள்ளதால், அதனை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர ட்ரம்பிற்கு அரசியல் ரீதியாக கடும் அழுத்தம் கொடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
</p><p>
தற்போதைய நிலையில், இந்த விவகாரத்தில் ட்ரம்பின் செயல்பாடுகளுக்கு 28 சதவீத அமெரிக்கர்கள் மட்டுமே ஆதரவு தெரிவித்து வருவதாக சர்வதேச ஊடகங்கள் கூறுகின்றன.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-31T19:41:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[குளவி கொட்டுக்கு உள்ளான ஒருவர் பலி ; வைத்தியசாலையில் ஐவர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/erson-dies-after-wasp-sting-1785524609"></link>
            <id>https://jvpnews.com/article/erson-dies-after-wasp-sting-1785524609</id>
            <summary type="text">லிந்துலை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பாமஸ்டன் தோட்டத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த தொழிலாளர்கள் குழுவொன்று குளவி கொட்டுக்கு உள்ளாகியதில் ஒருவர் உயிரிழந்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>லிந்துலை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பாமஸ்டன் தோட்டத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த தொழிலாளர்கள் குழுவொன்று குளவி கொட்டுக்கு உள்ளாகியதில் ஒருவர் உயிரிழந்தார்.</p><p>நேற்று&nbsp; காலை 10.00 மணிளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1b9a9ae1-8b66-46dd-852a-5e3faaea7906/26-6a6cf182a0b5e.webp' /></p><p> </p><p>

சம்பவத்தில் 61 வயதுடைய நபர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 5 பேர் லிந்துலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.</p><p></p><p> </p><p>

எனினும், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஏனையவர்களில் பலத்த காயமடைந்தவர்கள் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-31T19:03:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[தீவிரமடையும் காவேரி நீர் விவகாரம்.. தமிழ்நாட்டு முதலமைச்சர் விஜய்க்கு கர்நாடகாவிலிருந்து வந்த அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/cm-vijay-should-not-come-karnataka-dk-shivakumar-1785523333"></link>
            <id>https://tamilwin.com/article/cm-vijay-should-not-come-karnataka-dk-shivakumar-1785523333</id>
            <summary type="text">தமிழ்நாட்டு முதலமைச்சர் ஜோசப் விஜய் இப்போதைக்கு கர்நாடகாவிற்கு வர வேண்டாம் என கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளதாக இந்திய செய்திகள் வெ...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழ்நாட்டு முதலமைச்சர் ஜோசப் விஜய் இப்போதைக்கு கர்நாடகாவிற்கு வர வேண்டாம் என கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளதாக இந்திய செய்திகள் வெளியாகியுள்ளன.</p><p>
காவேரி நீர் திறப்பு மற்றும் காவேரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவது குறித்து தமிழ்நாடு மற்றும் கர்நாடகா இடையே பதற்றம் அதிகரித்துள்ளது.</p><p>

தமிழ்நாட்டிற்கு, 3,500 கன அடி நீர் வீதம் 15 நாட்களுக்கு கர்நாடகா திறந்துவிட வேண்டும் என காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ள நிலையில், கர்நாடகா நீரை திறக்க மறுத்துள்ளது. </p><p>இந்நிலையில், தமிழ்நாட்டிற்கு நீர் திறக்க கூடாது என கர்நாடகாவில் உள்ள விவசாய அமைப்புகள் மற்றும் கன்னட அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன.</p><p></p><h2>இடம்பெறும் போராட்டங்கள்..&nbsp;</h2><p>இதனிடையே இந்த விவகாரம் தொடர்பாக தமிழ்நாட்டு முதலமைச்சர் ஜோசப் விஜய், கர்நாடகாவிற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார்.</p><p> </p><p>
இந்நிலையில், தற்போது உள்ள சூழலில் விஜய் இப்போதைக்கு கர்நாடகாவிற்கு வர வேண்டாம் என தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ecbfa3bf-bb71-4c42-9df5-b3421e94b6d6/26-6a6cf0a4a845a.webp' /></p><p>
</p><p>
கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் நீர்வள மற்றும் முக்கிய அதிகாரிகளுடன் இந்த விவகாரம் தொடர்பாக உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்.</p><p> இதன் பின்னர் பேசிய அவர், "இரண்டு மாநில தலைமைச் செயலாளர்களும் இது குறித்து விவாதித்துள்ளனர். தமிழ்நாடு முதலமைச்சரும் நானும் அவரவர் மாநில நலனில் அக்கறையுடன் உள்ளோம். </p><p>இரு மாநிலங்களுக்கும் சிக்கல் ஏற்படுத்தாத தீர்வை எட்ட முயற்சிக்கிறோம்.


போதிய நீர் இல்லை என்று கூறியும் தமிழ்நாட்டிற்கு நீர் திறக்க வேண்டும் என உத்தரவிட்டது வேதனை அளிக்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d40dafa6-8f24-41eb-b1eb-c335214f2128/26-6a6cf0a599890.webp' /></p><p> </p><p>தமிழகத்துக்கு தண்ணீர் தர முடியாத சூழல் உள்ளது. இந்த தீர்ப்பை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளோம்.

தமிழ்நாடு முதல்வர் விஜய் வரும்போது போராட்டம் நடந்தால் நன்றாக இருக்காது. </p><p>வேறொரு திகதியில் சந்திப்பு கூட்டத்தை நடத்தலாம் என விஜய்க்கு கோரிக்கை வைக்கிறேன். சிறிது காலம் காத்திருக்கலாம். உரிய நேரம் வரும்போது இருவரும் சந்தித்து ஆலோசிப்போம்" என தெரிவித்துள்ளார்.&nbsp; &nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-31T19:02:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானுக்கு எதிரான போர் வெற்றிகரமாக நடைபெறுகிறது – டிரம்ப்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/trump-says-war-going-well-1785516413"></link>
            <id>https://canadamirror.com/article/trump-says-war-going-well-1785516413</id>
            <summary type="text">&amp;nbsp;அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரானுக்கு எதிராக மேற்கொண்டு வரும் போர் வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் த...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரானுக்கு எதிராக மேற்கொண்டு வரும் போர் வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
</p><p>சர்வதேச ஊடகமொன்றுக்கு அளித்த பேட்டியில் அவர் இதனை கூறியுள்ளார்.
</p><p>எல்லாம் நன்றாகவே நடைபெற்று வருகிறது. தொடர்ந்து வெற்றி பெற்றுக் கொண்டே இருக்க வேண்டும். இறுதியில் ஏதோ ஒரு முடிவு ஏற்படும் என தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9a9fa9df-8449-4edb-8f45-2915fe50745e/26-6a6cd17eef473.webp' /></p><p>
</p><p>மேலும், எங்கள் படைகள் ஈரானை கடுமையாக தாக்கி வருகின்றன. அவர்களை முற்றிலும் தளர்ச்சியடையச் செய்து வருகிறோம். </p><p>நாங்கள் தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறோம். இறுதியில் அவர்கள் பின்வாங்குவதைத் தவிர வேறு வழியிருக்காது என டிரம்ப் கூறியுள்ளார்.</p><p>
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மேற்கொண்டு வரும் இராணுவ நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ள நிலையில், டிரம்பின் இந்த கருத்து மத்திய கிழக்கில் நிலவும் பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் வகையில் அமைந்துள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-31T19:00:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில், ஜோதிடர் என 8 லட்சம் டொலர் மோசடி செய்த நபர் இந்தியா தப்பியோட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/indian-man-who-posed-as-psychic-1785515890"></link>
            <id>https://canadamirror.com/article/indian-man-who-posed-as-psychic-1785515890</id>
            <summary type="text">இந்தியா தப்பியோட்டம்
கனடாவின் டொராண்டோவில் தன்னை ஆன்மீக சிகிச்சையாளர் மற்றும் ஜோதிடர் எனக் காட்டி, ஒருவரிடம் இருந்து சுமார் 800,000 கனேடிய டொலர் மோசட...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியா தப்பியோட்டம்
கனடாவின் டொராண்டோவில் தன்னை ஆன்மீக சிகிச்சையாளர் மற்றும் ஜோதிடர் எனக் காட்டி, ஒருவரிடம் இருந்து சுமார் 800,000 கனேடிய டொலர் மோசடி செய்ததாகக் கூறப்படும் இந்தியப் பிரஜைக்கு எதிராக நாடு முழுவதும் பிடி விராந்து பிறப்பிக்கப்பட்டுள்ளதாக டொராண்டோ காவல்துறை தெரிவித்துள்ளது.</p><p>
கங்காதர் பாபு என்பவர் மீது இந்த வழக்கில் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
 2024 ஏப்ரல் முதல் 2025 செப்டம்பர் வரை இந்த மோசடி இடம்பெற்றதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.</p><p>
விசாரணையின்படி, "பாபு" என்ற பெயரில் சேவையாற்றியதாகக் கூறப்படும் சந்தேகநபர், தன்னை ஆன்மீக சக்தி கொண்டவராகவும், எதிர்காலத்தை கணிக்கும் ஜோதிடராகவும், ஆன்மீக சிகிச்சையளிப்பவராகவும் அறிமுகப்படுத்தியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/133c6d93-1595-4152-901d-778eab4d3550/26-6a6ccf7430536.webp' /></p><p>
</p><p>பாதிக்கப்பட்டவரையும் அவரது குடும்பத்தினரையும் மரணம் அல்லது கடுமையான தீங்கு சூழும் என அச்சுறுத்தி, அதிலிருந்து காப்பாற்ற விசேட ஆன்மீக சடங்குகள் நடத்த வேண்டுமெனக் கூறி தொடர்ந்து பணம் பெற்றதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
</p><p>கங்காதர் பாபு மீது 5,000 டொலருக்கு மேற்பட்ட மோசடி, குற்றச்செயலில் கிடைத்த வருமானத்தை வைத்திருத்தல் மற்றும் நிதிச் சலவையில் ஈடுபடல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.</p><p>
சந்தேகநபர் தற்போது இந்தியாவுக்கு தப்பிச் சென்றிருக்கலாம் என டொராண்டோ காவல்துறை நம்புவதாக தெரிவிக்கப்படுகின்றது.
</p><p>கங்காதர் பாபு சுமார் 5 அடி 6 அங்குல உயரம், ஒல்லியான உடலமைப்பு, கருமையான சுருட்டை முடி, அடர் பழுப்பு நிறக் கண்கள், ஒழுங்காக வெட்டப்பட்ட தாடி மற்றும் முன்பற்களுக்கு இடையில் தெளிவான இடைவெளி கொண்டவராக விவரிக்கப்பட்டுள்ளார்.</p><p>இந்த நபரால் ஏமாற்றப்பட்டிருக்கக்கூடிய மேலும் பலர் இருக்கலாம் என காவல்துறை சந்தேகிப்பதுடன், வழக்குத் தொடர்பான தகவல்கள் இருப்பவர்கள் முன்வருமாறும் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-31T19:00:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[2 மணி நேரம் இடைவிடாமல் வான்வழித் தாக்குதல்: ஈரானுக்கு பதிலடி கொடுத்த அமெரிக்கா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/us-military-counter-strikes-iran-infrastructure-1785524057"></link>
            <id>https://news.lankasri.com/article/us-military-counter-strikes-iran-infrastructure-1785524057</id>
            <summary type="text">ஈரான் மீதான நீண்ட நேர தீவிர வான்வழித் தாக்குதலை வெற்றிகரமாக நிறைவு செய்து இருப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.அமெரிக்காவின் தீவிர வான்வழித் தாக்குதல்ஈர...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரான் மீதான நீண்ட நேர தீவிர வான்வழித் தாக்குதலை வெற்றிகரமாக நிறைவு செய்து இருப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.</p><h2>அமெரிக்காவின் தீவிர வான்வழித் தாக்குதல்</h2><p>ஈரானின் முக்கிய இலக்குகளை குறிவைத்து அமெரிக்க மத்திய கட்டளை பீடம் கிட்டத்தட்ட 2 மணி நேரம் விடாமல் தீவிர தாக்குதல் நடத்தி முடித்து இருப்பதாக அமெரிக்க மத்திய கட்டளைப் பீடம்(CENTCOM) தெரிவித்துள்ளது.</p><p>CENTCOM வெளியிட்ட அதிகாரப்பூர்வ தகவலில், அமெரிக்க ராணுவம் நடத்திய தாக்குதலில் ஈரானின் முக்கிய வியூக மையங்கள் வெற்றிகரமாக தகர்க்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0b81e468-9e15-4068-bc7c-369a8285fec7/26-6a6cef5ac2501.webp' /></p><p>அதில் முக்கியமாக இராணுவ கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையங்கள், அதிநவீன ஏவுகணை மற்றும் ட்ரோன் தயாரிப்பு மற்றும் சேமிப்பு வசதிகள், கடற்கரை கண்காணிப்பு மையங்கள் மற்றும் முக்கிய கடல்சார் பாதுகாப்பு திறன்கள் அழிக்கப்பட்டுள்ளன.</p><p></p><h2>தாக்குதலுக்கான பின்னணி</h2><p>செவ்வாய்க்கிழமை அமெரிக்க நிலைகளை குறிவைத்து ஈரான் நடத்திய திடீர் ஏவுகணை தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்த பதிலடி நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/52e64c48-69da-43b9-a0ad-ef04a7432d20/26-6a6cef5b72f9c.webp' /></p><p>மேலும் ஈரான் நடத்திய இந்த ஏவுகணை தாக்குதல்களை அமெரிக்க பாதுகாப்பு திறன்கள் வெற்றிகரமாக இடைமறித்து அழித்ததாகவும், இதனால் அமெரிக்க தளங்கள் மற்றும் சொத்துகளுக்கு எந்தவொரு சேதமும், உயிரிழப்புகளும் ஏற்படவில்லை என்று அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.</p><p> ஈரானிய படைகளின் தொடர்ச்சியான அச்சுறுத்தல்களை தடுத்து அமெரிக்க பணியாளர்கள் மற்றும் சொத்துக்களை பாதுகாக்க அமெரிக்கா உறுதியுடன் இருப்பதை இந்த நடவடிக்கைகள் வெளிக்காட்டுவதாக இராணுவ ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"> WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள். &nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-31T18:54:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரசுக்கு ஒத்தூதும் அதிகாரிகளின் சூழ்ச்சி! வலிவடக்கு மீள் குடியேற்ற அபிவிருத்திக்குழு எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/intrigue-of-officials-agree-with-government-1785522773"></link>
            <id>https://ibctamil.com/article/intrigue-of-officials-agree-with-government-1785522773</id>
            <summary type="text">
​மக்களின் கோரிக்கைக்கும் விருப்பங்களுக்கும் மாறாக, இராணுவத்தால் அபகரிக்கப்பட்டுள்ள பூர்வீக நிலங்களுக்கு நஷ்டஈடு வழங்கும் சதி முயற்சியை அரசின் ஏவுதலு...</summary>
            <content type="html"><![CDATA[<p>
​மக்களின் கோரிக்கைக்கும் விருப்பங்களுக்கும் மாறாக, இராணுவத்தால் அபகரிக்கப்பட்டுள்ள பூர்வீக நிலங்களுக்கு நஷ்டஈடு வழங்கும் சதி முயற்சியை அரசின் ஏவுதலுடன் சில அரச அதிகாரிகள் முன்னெடுத்து வருவதாக வலிவடக்கு மீள் குடியேற்ற அபிவிருத்திக்குழு கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளது.</p><p>இந்த சதி முயற்சியின் ஒரு கட்டமாக, எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 4 ஆம் திகதியன்று தெல்லிப்பழை பிரதேச செயலகத்தில் நஷ்ட ஈடு வழங்குவதற்கான கலந்துரையாடல் ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.</p><p>

இதற்காக, காணிகளை இழந்து தவிக்கும் மற்றும் எக்காலத்திலும் நஷ்ட ஈடு கோராத மக்களுக்கே பிரத்தியேகமாக கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.</p><p></p><h2>போராட்டத்தை வலுவிழக்கச் செய்யும் சதி</h2><p>இவ்வாறு அழைக்கப்படும் மக்களிடம் ஏதோ ஒரு வகையில் சம்மதத்தைப் பெற்று, அவர்களின் பூர்வீகக் காணிகளை நிரந்தரமாகக் கபளீகரம் செய்யவே இன்றைய அரசும் அதன் அதிகாரிகளும் தீவிரமாக முயற்சிக்கின்றனர் என்று அக்குழு எச்சரித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f277c650-e4b4-4e18-8f7c-224e8b77df57/26-6a6ced9ddb29e.webp' /></p><p>இராணுவப் பிடிக்குள் இருக்கும் தமது சொந்த நிலங்களை நிபந்தனையின்றி விடுவிக்குமாறு கோரி மயிலிட்டி மக்கள் தொடர்ந்து 15 வாரங்களாகத் தொடர் அடையாளப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், மக்களின் இந்த நியாயமான போராட்டத்தை வலுவிழக்கச் செய்யும் சதி வேலைகளிலேயே அரசு இறங்கியுள்ளது.</p><p>

​எனினும், பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரும் ஒரே நிலைப்பாட்டில் உறுதியாக நின்று போராடினால் மட்டுமே எமது காணி நிலங்களை வெற்றிகரமாக மீட்டெடுக்க முடியும் என்று ஏற்பாட்டுக் குழுவினர் வலுவாக வலியுறுத்தியுள்ளனர்.</p><p>
மக்களின் காணிகளைச் சுவீகரிக்கத் துடிக்கும் அரசின் கோரிக்கைக்கு இணங்க, குறித்த கலந்துரையாடல் தினத்திற்கு முன்னர் எந்த வகையான நஷ்ட ஈடு, எந்தக் காலப்பகுதிக்குள் வழங்கப்படும் என்பது குறித்த தெளிவான உத்தரவாதத்தை அரசு எழுத்து மூலம் வழங்க வேண்டும் என வலியுறுத்த வேண்டும்.&nbsp;</p><p>

அரசின் சூழ்ச்சி வலையில் சிக்கி, நஷ்ட ஈட்டிற்காக எமது பூர்வீகச் சொத்துக்களை இழந்துவிடாமல் மக்கள் அனைவரும் விழிப்புணர்வுடன் செயற்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.</p><p></p><p>

</p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table><p>
</p>]]></content>
            <updated>2026-07-31T18:49:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[பல மில்லியன் பெறுமதியான சட்டவிரோதச் சொத்துக்கள் தொடர்பில் வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/major-update-on-illegal-assets-worth-millions-1785522997"></link>
            <id>https://jvpnews.com/article/major-update-on-illegal-assets-worth-millions-1785522997</id>
            <summary type="text">2024 ஆம் ஆண்டு முதல் 2026 ஆம் ஆண்டின் இதுவரையிலான காலப்பகுதியில் 3,811 மில்லியன் ரூபாய் பெறுமதியான சட்டவிரோதச் சொத்துக்களை அரசாங்கத்திற்குப் பொறுப்பேற...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">2024 ஆம் ஆண்டு முதல் 2026 ஆம் ஆண்டின் இதுவரையிலான காலப்பகுதியில் 3,811 மில்லியன் ரூபாய் பெறுமதியான சட்டவிரோதச் சொத்துக்களை அரசாங்கத்திற்குப் பொறுப்பேற்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவி பொலிஸ் அத்தியாட்சகர் எஃப்.யு. வுட்லர் தெரிவித்துள்ளார். </p><p style="text-align: justify; ">

முழு நாடுமே ஒன்றாக தேசிய செயல்பாட்டின் கீழ் இலங்கை பொலிஸாரின் பங்களிப்பு குறித்த அண்மைக்கால தகவல்களை அறிவிக்கும் விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் இன்று (31) கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/47e3f867-a2c4-4179-bcf0-43a8b6f67b67/26-6a6ceb36857be.webp' /></p><h2 style="text-align: justify; ">&nbsp;சட்டவிரோதச் சொத்துக்கள்</h2><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

இதன்படி, 2024 ஆம் ஆண்டில் 1,490 மில்லியன் ரூபாய் பெறுமதியான சட்டவிரோதச் சொத்துக்களை முடக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "> 

2025 ஆம் ஆண்டில் 1,549 மில்லியன் ரூபாய் பெறுமதியான சட்டவிரோதச் சொத்துக்களை அரசாங்கத்திற்குப் பொறுப்பேற்பதற்கான சட்ட நடவடிக்கைகள் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக ஊடகப் பேச்சாளர் வெளிப்படுத்தினார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> 

மேலும், 2026 ஆம் ஆண்டின் இதுவரையிலான கடந்த சில மாத காலப்பகுதியில் 772 மில்லியன் ரூபாய் பெறுமதியான சட்டவிரோதச் சொத்துக்களை அரசாங்கத்திற்குப் பொறுப்பேற்பதற்குத் தேவையான சட்ட நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-07-31T18:37:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் காணாமல் போன நபரைத் தேடும் காவல்துறை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/police-need-publics-help-locating-missing-alliston-1785515117"></link>
            <id>https://canadamirror.com/article/police-need-publics-help-locating-missing-alliston-1785515117</id>
            <summary type="text">&amp;nbsp;கனடாவில் உள்ள அலிஸ்டன் பகுதியைச் சேர்ந்த 30 வயது நபர் ஒருவர் காணாமல் போயுள்ள நிலையில், அவரைப் பற்றிய தகவல் அறிந்தால் காவல்துறைக்குத் தெரிவிக்கும...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கனடாவில் உள்ள அலிஸ்டன் பகுதியைச் சேர்ந்த 30 வயது நபர் ஒருவர் காணாமல் போயுள்ள நிலையில், அவரைப் பற்றிய தகவல் அறிந்தால் காவல்துறைக்குத் தெரிவிக்குமாறு நொட்டவாசாகா ஒன்ராறியோ மாகாணக் காவல்துறை பொதுமக்களிடம் உதவி கோரியுள்ளது.</p><p>
30 வயதான கோரி சிமான்ஸ்கி என்ற நபர், கடைசியாக ஜூலை 14 அன்று மாலை சுமார் 6:00 மணியளவில், அலிஸ்டனில் உள்ள விக்டோரியா வீதியில் இருந்தார் என தெரிவிக்கப்படுகின்றது.
</p><p>இவர், வெள்ளையினத்தைச் சேர்ந்தவர் எனவும் சுமார் 6 அடி உயரம், 230 பவுண்ட் (104 கிலோ) எடை கொண்டவர் எனவும், நடுத்தர உடல்வாகு, தோள்பட்டை வரை நீண்ட பொன்னிற தலைமுடி மற்றும் நீல நிற கண்களைக் கொண்டவர் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ca14a095-84d0-477e-a744-14931fd009f4/26-6a6ccc6eaf138.webp' /></p><p>
கோரியின் உடல்நிலை மற்றும் பாதுகாப்பு குறித்து அவரது குடும்பத்தினரும் காவல்துறையினரும் மிகுந்த கவலையடைந்துள்ளனர். </p><p>அப்பகுதியில் வசிப்பவராக இருந்தால், உங்கள் வீட்டு சிசிடிவி காட்சிகளை பார்த்து ஏதேனும் தகவல்கள் இருந்தால் பகிருமாறு கோரப்பட்டுள்ளது.</p><p>
கோரி சிமான்ஸ்கி குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தால், உடனடியாக 1-888-310-1122 என்ற எண்ணில் காவல்துறையைத் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-31T18:29:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[பேராறில் படுகொலை செய்யப்பட்ட 11 பொதுமக்கள்! 37 வது நினைவேந்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/37th-commemoration-of-the-peraru-massacre-1785521348"></link>
            <id>https://ibctamil.com/article/37th-commemoration-of-the-peraru-massacre-1785521348</id>
            <summary type="text">திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் -பேராறு கிராமத்தில் இடம்பெற்ற படுகொலைச்
சம்பவத்தின் 37 வது நினைவேந்தல் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை (31) இடம்பெற்றது....</summary>
            <content type="html"><![CDATA[<p>திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் -பேராறு கிராமத்தில் இடம்பெற்ற படுகொலைச்
சம்பவத்தின் 37 வது நினைவேந்தல் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை (31) இடம்பெற்றது.</p><p>

1990.07.31 அன்று இடம்பெற்ற இவ் படுகொலைச் சம்பவத்தில் 11 பொதுமக்கள் படுகொலை
செய்யப்பட்டிருந்தனர்.</p><p>

இப் படுகொலைக்கான நீதி இன்னும் கிடைக்கப்பெறவில்லை.</p><p>

இந்த நிலையில், குறித்த படுகொலையை நினைவு கூறும் வகையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரால்
விளக்கேற்றி, உயிரிழந்தவர்களின் புகைப்படங்களுக்கு மலர்தூவி, அஞ்சலியும்
செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-31T18:11:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இரு வேறு இடங்களில் கைதான இளைஞர்கள் ; சோதனையில் மீட்கப்பட்ட பொருட்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/two-young-men-arrested-in-separate-incidents-1785521440"></link>
            <id>https://jvpnews.com/article/two-young-men-arrested-in-separate-incidents-1785521440</id>
            <summary type="text">விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸாரால் நேற்று வியாழக்கிழமை (30) மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது ஹெரோயின் மற்றும் &#039;ஐஸ்&#039; போதைப்பொருட்களுடன் ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸாரால் நேற்று வியாழக்கிழமை (30) மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது ஹெரோயின் மற்றும் 'ஐஸ்' போதைப்பொருட்களுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p style="text-align: justify; ">யடவத்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வாலவெல பகுதியில் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aa89353d-7230-4640-8f26-1993b834506f/26-6a6ce5228d618.webp' /></p><h2 style="text-align: justify; ">&nbsp;மேலதிக விசாரணை</h2><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
இதன்போது 100 கிராம் 500 மில்லிகிராம் 'ஐஸ்' போதைப்பொருளுடன் தூல்லேவ பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டு யடவத்தை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
</p><p style="text-align: justify; ">&nbsp;கெப்பெட்டிபொல பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் தம்பவின்ன பகுதியில் மேற்கொண்ட வீதிச் சோதனையின் போது, 130 கிராம் 500 மில்லிகிராம் 'ஐஸ்' போதைப்பொருள் மற்றும் 52 கிராம் 200 மில்லிகிராம் ஹெரோயின் ஆகியவற்றை வைத்திருந்த குற்றச்சாட்டில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
கைது செய்யப்பட்டவர் வெலிமடை பகுதியைச் சேர்ந்த 31 வயதுடையவர் ஆவார்.
</p><p style="text-align: justify; ">

மேலும், இந்த சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளர்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-07-31T18:10:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[காத்தான்குடியில் இருந்து புறப்பட்ட கொலைக்குழு! 18 வருடங்களின் பின் விலகும் மர்மம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/new-information-tamil-nadu-manoharan-death-1785519717"></link>
            <id>https://ibctamil.com/article/new-information-tamil-nadu-manoharan-death-1785519717</id>
            <summary type="text">2008 ஆம் ஆண்டு இடம்பெற்ற தமிழ்நாடு மனோகரன் படுகொலை தொடர்பாக பல்வேறு புதிய தகவல்கள் வெளிவரத் தொடங்கியுள்ளன.

தமிழ்நாடு மனோகரன் மட்டக்களப்பு, ஆரியம்பத...</summary>
            <content type="html"><![CDATA[<p>2008 ஆம் ஆண்டு இடம்பெற்ற தமிழ்நாடு மனோகரன் படுகொலை தொடர்பாக பல்வேறு புதிய தகவல்கள் வெளிவரத் தொடங்கியுள்ளன.
</p><p>
தமிழ்நாடு மனோகரன் மட்டக்களப்பு, ஆரியம்பதியைச் சேர்ந்த தமிழரசு கட்சியின் தீவிர செயற்பாட்டாளர் ஒருவர் ஆவார்.
</p><p>
2008 நவம்பர் 13 அன்று, அவரது வீட்டில் புகுந்த ஆயுதக்குழு நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அவர் படுகாயமடைந்து, பின்னர் 2009 ஜனவரி 14 அன்று உயிரிழந்தார்.
</p><p>
கடந்த 18 ஆண்டுகளாக இந்தப் படுகொலைக்கு பிள்ளையான் தலைமையிலான TMVP அமைப்பே காரணம் என்று பரவலாக நம்பப்பட்டது.</p><p>ஆனால், அண்மைய சாட்சியங்களின் அடிப்படையில், இந்தப் படுகொலை காத்தான்குடியை மையமாகக் கொண்டு இயங்கிய ஒரு குழுவினாலேயே மேற்கொள்ளப்பட்டதாகத் தெரியவருகிறது.
</p><p>
இந்த கொலைக்கு ஆரியம்பதி மற்றும் காத்தான்குடி ஆகிய இரு பிரதேசங்களுக்கு இடையே நிலவிய நில ஆக்கிரமிப்புப் பிரச்சினைகள் மற்றும் மனோகரன் இதற்கு எதிராக முன்னெடுத்த போராட்டங்கள் முக்கியக் காரணங்களாகக் கருதப்படுகின்றன.
</p><p>
அந்த வகையில் இந்த படுகொலை தொடர்பில் வெளிவரதாக பல மர்மங்கள் தொடர்பில் விரிவாக எடுத்துரைக்கிறது ஐபிசி தமிழின் உண்மைகள் நிகழ்ச்சி,&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/UaGkXMiTPO0" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-31T17:49:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஸ்பெயினில் இருந்து மொராக்கோவிற்கு திரும்பிய 37,500 அகதிகள்: பலி எண்ணிக்கை 57 ஆக அதிகரிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/ceuta-crisis-37500-refugees-return-to-morocco-1785516053"></link>
            <id>https://news.lankasri.com/article/ceuta-crisis-37500-refugees-return-to-morocco-1785516053</id>
            <summary type="text">மொராக்கோவில் இருந்து ஆயிரக்கணக்கானோர் ஸ்பெயின் எல்லைப்புற நகரான சியூட்டாவிற்குள் நுழைந்து இருப்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஸ்பெயினுக்குள் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>மொராக்கோவில் இருந்து ஆயிரக்கணக்கானோர் ஸ்பெயின் எல்லைப்புற நகரான சியூட்டாவிற்குள் நுழைந்து இருப்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><h2> ஸ்பெயினுக்குள் நுழைந்த ஆயிரக்கணக்கான மொராக்கோ நாட்டினர்</h2><p>வடக்கு ஆப்பிரிக்காவில் உள்ள சிறிய ஸ்பெயின் ஆதிக்கப் பகுதியான சியூட்டாவின்(Ceuta) எல்லைப் பகுதிக்குள் வியாழக்கிழமை ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்தவர்கள் அத்துமீறி நுழைந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.</p><p> ஆயிரக்கணக்கானோரின் அத்துமீறிய நுழைவை தொடர்ந்து எல்லை பாதுகாப்பு முற்றிலும் சிதைப்பட்டு இருப்பதாகவும், உடனே அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டு எல்லை பாதுகாப்பிற்கு இராணுவத்தை அனுப்ப வேண்டும் எனவும் உள்ளூர் அதிகாரிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dc924ce5-96e7-4b1b-afa7-a85ba4880bf3/26-6a6cd0174126c.webp' /></p><p> ஸ்பெயின் உள்துறை அமைச்சகத்தின் தகவல் படி, சியூட்டாவிற்குள் நுழைந்தவர்களின் எண்ணிக்கை உச்சபட்சமாக 50,000ஐ கடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> இதில் (பெரும்பாலானோர் மொராக்கோவை சேர்ந்த இளைஞர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆவர்).
தாராஜல் எல்லை வழியாகவும், கடற்கரை வழியாகவும் சியூட்டாவிற்குள் நுழையும் இந்த மக்களில் சிலர் “விவா எஸ்பானா”(Viva España!) என்ற கோஷங்களை எழுப்பியும், சாலைகளில் நடனமாடியும் வரும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகியது.</p><p></p><h2> மொராக்கோவிற்கு திரும்பிய மக்கள்</h2><p>
இந்நிலையில் சியூட்டாவிற்குள் அத்துமீறி நுழைந்தவர்களில் 37,500க்கும் அதிகமானோர் மீண்டும் மொராக்கோவிற்கு திரும்பி சென்று விட்டதாக ஸ்பெயின் உள்துறை அமைச்சகம் தன்னுடைய அறிக்கையில் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a406a87d-6274-4d92-92a7-f1bea40a683d/26-6a6cd017e6a64.webp' /></p><p>ஒரே நேரத்தில் நிகழ்ந்த இந்த அதிகமான அகதிகள் இடம்பெயர்வில் கிட்டத்தட்ட 57 பேர் உயிரிழந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p> இந்த நெருக்கடியான சூழ்நிலை குறித்து ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சஞ்செஸ் தன்னுடைய கண்டனத்தை தெரிவித்துள்ளார்.</p><p> அத்துடன் இது ஸ்பெயின் இறையாண்மை மீது நடந்த மிகப்பெரிய தாக்குதல் மற்றும் மீறல் என்று குற்றம்சாட்டியுள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள். &nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-31T17:47:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[மொன்ட்ரியல் குடியிருப்பு பகுதியில் துப்பாக்கிச் சூடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/on-patrol-article-shots-fired-at-a-montreal-home-1785513529"></link>
            <id>https://canadamirror.com/article/on-patrol-article-shots-fired-at-a-montreal-home-1785513529</id>
            <summary type="text">கனடாவின் மொன்ட்ரியல் நகரில் உள்ள &#039;கோட்-தே-னேஜ்—நோத்ர-டாம்-தே-கிராஸ்&#039; பகுதியில் வெள்ளிக்கிழமை அதிகாலை வீடு ஒன்றைக் குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் மொன்ட்ரியல் நகரில் உள்ள 'கோட்-தே-னேஜ்—நோத்ர-டாம்-தே-கிராஸ்' பகுதியில் வெள்ளிக்கிழமை அதிகாலை வீடு ஒன்றைக் குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
</p><p>வெள்ளிக்கிழமை அதிகாலை 2:50 மணியளவில் பொன்சார்ட் அவென்யூ அருகே உள்ள மெரிடியன் அவென்யூவில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக மொன்ட்ரியல் காவல்துறையினருக்கு அவசர அழைப்பு (911) வந்துள்ளது.</p><p>
சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர், வீட்டின் முன்பகுதியில் பல துப்பாக்கிச் சூட்டுத் தழும்புகள் இருப்பதைக் கண்டறிந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e2233109-3118-4e13-8f84-3c00cd008af3/26-6a6cc63b34bfc.webp' /></p><p>
காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தடைந்த போது, வீட்டின் முன்பகுதியைக் குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதற்கான ஆதாரங்கள் கண்டறியப்பட்டன. </p><p>நபர் ஒருவர் வீட்டை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்படுகிறது.
காவல்துறையினர் வருவதற்கு முன்பாகவே துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டதால், இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.</p><p> 
மேலும், இந்தத் தாக்குதலில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனக் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது, மோப்ப நாய் படை உதவியுடன் தடயவியல் நிபுணர்கள் மற்றும் புலனாய்வாளர்கள் சம்பவ இடத்தில் சோதனைகளை மேற்கொண்டு தடயங்களைச் சேகரித்து வருகின்றனர். </p><p>
இந்தத் தாக்குதலுக்கான காரணம் குறித்து மொன்ட்ரியல் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-31T17:30:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பகுதியில் இரகசியத் தகவலால் வசமாக பிடிபட்ட இருவர் ; வீட்டிற்குள் அரங்கேறிய சம்பவம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/secret-tip-leads-to-arrest-of-two-suspects-1785518416"></link>
            <id>https://jvpnews.com/article/secret-tip-leads-to-arrest-of-two-suspects-1785518416</id>
            <summary type="text">தமன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மஹாநாகபுர பகுதியில், வீடொன்றினுள் புதையல் எடுக்கும் நோக்கில் அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்ட இரு சந்தேகநபர்கள் நேற்று வியாழக்கி...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">தமன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மஹாநாகபுர பகுதியில், வீடொன்றினுள் புதையல் எடுக்கும் நோக்கில் அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்ட இரு சந்தேகநபர்கள் நேற்று வியாழக்கிழமை (30) கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p style="text-align: justify; ">
தமன பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்களுக்குக் கிடைத்த ரகசியத் தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே, அகழ்வாராய்ச்சிக்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்களுடன் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/eb928892-167f-400a-9433-6dfa9441544d/26-6a6cd951d7229.webp' /></p><p style="text-align: justify; ">

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 35 மற்றும் 45 வயதுடைய மஹாநாகபுர மற்றும் வடிநாகல பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
மேலும், இந்த சம்பவம் தொடர்பாக தமன பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.&nbsp;</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-07-31T17:20:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[மிரிஸ்ஸவில் துப்பாக்கிச் சூடு! ஒருவர் படுகாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/shooting-in-mirissa-today-1785517524"></link>
            <id>https://ibctamil.com/article/shooting-in-mirissa-today-1785517524</id>
            <summary type="text">


மாத்தறை - மிரிஸ்ஸவில் இன்று (31) துப்பாக்கிச்சூட்டு சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
குறித்த துப்பாக்கிச் சூட்டில் 34 வயதுடைய நபர் ஒருவர் காயமடைந்து...</summary>
            <content type="html"><![CDATA[<p>


மாத்தறை - மிரிஸ்ஸவில் இன்று (31) துப்பாக்கிச்சூட்டு சம்பவமொன்று பதிவாகியுள்ளது.</p><p>
குறித்த துப்பாக்கிச் சூட்டில் 34 வயதுடைய நபர் ஒருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இரு நபர்களால் இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.</p><p></p><h2>மேலதிக விசாரணை</h2><p> 

இந்நிலையில், துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் மாத்தறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c3d53c1a-c7f1-44b9-8833-1eeac8906540/26-6a6cd876c26cf.webp' /></p><p> 

இதேவேளை, துப்பாக்கிச் சூட்டில் ரிவோல்வர் வகை துப்பாக்கி பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என காவல்துறை சந்தேகம் வெளியிட்டுள்ளது.
</p><p>
மேலும், துப்பாக்கிச் சூட்டிற்கான காரணம் இன்னும் வெளியாகாத நிலையில், காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-31T17:16:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[அல்ஜீரியாவில் ஆழமான பள்ளத்தாக்கில் கவிழ்ந்த பேருந்து: பறிப்போன 25 பேர் உயிர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/algeria-bus-crash-at-least-25-dead-1785517157"></link>
            <id>https://news.lankasri.com/article/algeria-bus-crash-at-least-25-dead-1785517157</id>
            <summary type="text">அல்ஜீரியாவில் பேருந்து கவிழ்ந்த கோர விபத்தில் 25 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.அல்ஜீரியாவில் பேருந்து விபத்துவெள்ளிக்கிழமை அல்ஜீரியாவில் பயணிகள் பேர...</summary>
            <content type="html"><![CDATA[<p>அல்ஜீரியாவில் பேருந்து கவிழ்ந்த கோர விபத்தில் 25 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.</p><h2>அல்ஜீரியாவில் பேருந்து விபத்து</h2><p>வெள்ளிக்கிழமை அல்ஜீரியாவில் பயணிகள் பேருந்து ஒன்று தன்னுடைய கட்டுப்பாட்டை இழந்து ஆழமான பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததில் குறைந்தது 25 பேர் பரிதாபமாக உயிரிழந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p> மேலும் 44 பேர் இந்த கோர பேருந்து விபத்தில் படுகாயமடைந்துள்ளனர்.</p><p></p><p>விபத்துக்குள்ளான பேருந்து செடிஃப் நகரில் இருந்து நாட்டின் தலைநகரான அல்ஜியர்ஸை நோக்கி சென்று கொண்டிருந்த போது இந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது.</p><p> விபத்து தொடர்பான தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக் குழுவினர் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fdb3bdf2-55b5-473d-8a0a-fd08e74e114a/26-6a6cd467172b3.webp' /></p><p>25 பேர் வரை உயிரிழந்ததை தொடர்ந்து அல்ஜீரிய ஜனாதிபதி அப்துல்மஜித் டெபூன் நாடு முழுவதும் 3 நாள் தேசிய துக்க தினமாக அறிவித்துள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள். &nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-31T17:06:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரிட்டிஷ் கொலம்பியாவில் தீவிரமடையும் காட்டுத்தீ!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/bc-firefighters-face-critical-days-as-dry-fuels-1785508468"></link>
            <id>https://canadamirror.com/article/bc-firefighters-face-critical-days-as-dry-fuels-1785508468</id>
            <summary type="text">&amp;nbsp;கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் வீசி வரும் பலத்த காற்று மற்றும் வறண்ட காலநிலை காரணமாக, காட்டுத்தீ மேலும் தீவிரமடைந்து மக்கள் வாழும் பக...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் வீசி வரும் பலத்த காற்று மற்றும் வறண்ட காலநிலை காரணமாக, காட்டுத்தீ மேலும் தீவிரமடைந்து மக்கள் வாழும் பகுதிகளை அச்சுறுத்தி வருகிறது.</p><p> 
மாகாணத்தைக் கடந்து செல்லும் குளிர்காற்று முகப்பு காரணமாக, மணிக்கு 30 முதல் 40 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. </p><p>
குறிப்பாக பிரிட்டிஷ் கொலம்பியாவின் தெற்குப் பகுதிகளில் நிலவும் கடுமையான வறட்சி காரணமாக, நிலப்பரப்புகள் மிக எளிதில் தீப்பற்றக்கூடிய நிலையில் உள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0584afbf-3d55-4a0b-b38f-c3bd74e19e99/26-6a6cb2762092c.webp' /></p><p> 
தென்மேற்கு திசையிலிருந்து வீசும் காற்று, பின்னர் வடமேற்கு திசையை நோக்கி மாறக்கூடும் என்பதால், தீயணைப்பு வீரர்களுக்கு அடுத்தடுத்த நாட்கள் மிகவும் சவாலானதாகவும் ஆபத்தானதாகவும் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>கிளிண்டன் பகுதிக்கு அருகே எரிந்து வரும் 'பேர் லேக்' காட்டுத்தீ, இதுவரை சுமார் 732 சதுர கிலோமீட்டர் பரப்பளவிற்குப் பரவி பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><p> இது மாகாணத்தில் உடனடியாகக் கவனிக்கப்பட வேண்டிய 4 முக்கியக் காட்டுத்தீப் பகுதிகளில் ஒன்றாகும். 
கிளிண்டனுக்கு வடகிழக்கே உள்ள கிரீன் லேக் பகுதி வாசஸ்கள், எந்த நேரத்திலும் உடனடியாக வெளியேறத் தயாராக இருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
</p><p>கிளிண்டன் கிராமப் பகுதியில் மின்சாரம் முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது.
தீயணைப்பு வீரர்கள் ஆங்காங்கே எரியும் தீயைக் கட்டுப்படுத்தப் போராடி வருவதால், மக்கள் எப்போது மீண்டும் தங்களது வீடுகளுக்குத் திரும்புவார்கள் என்பது குறித்துத் தெளிவான தகவல்கள் இல்லை.</p><p> 
கடுமையான காற்று மற்றும் வறண்ட வானிலை காரணமாகப் புதிய காட்டுத்தீச் சம்பவங்கள் உருவாகும் அபாயம் அதிகரித்துள்ளதால், பொதுமக்கள் அனைவரும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-31T17:00:44+00:00</updated>
        </entry>
    </feed>
