<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-09-20T21:25:19+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[6 மாத குழந்தையை கவ்வி இழுத்துச் சென்ற நாய் ; உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/dog-snatched-and-dragged-away-a-six-month-old-baby-1789939358"></link>
            <id>https://jvpnews.com/article/dog-snatched-and-dragged-away-a-six-month-old-baby-1789939358</id>
            <summary type="text">இந்தியாவின் ஹரியானா மாநிலம் சோனிபட்டில், அத்தை கையில் இருந்த 6 மாத குழந்தையை பிட்புல் நாய் திடீரெனத் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியாவின் ஹரியானா மாநிலம் சோனிபட்டில், அத்தை கையில் இருந்த 6 மாத குழந்தையை பிட்புல் நாய் திடீரெனத் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><p> </p><p></p><p>இந்தச் சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகளும் வெளியாகியுள்ளன.

சோனிபட்டின் சிக்கா காலனியில், குழந்தையின் அத்தை அவரைத் தூக்கிக்கொண்டு சாலையில் சென்றுகொண்டிருந்தபோது, திடீரென பாய்ந்து வந்த பிட்புல் நாய் இருவரையும் தாக்கியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
நாய் பாய்ந்ததில் நிலைதடுமாறிய பெண் கீழே விழுந்ததுடன், அவரது கையில் இருந்த குழந்தையும் சாலையில் விழுந்துள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/78548dd8-b955-4f37-b3e6-64ee2b0f9f3c/26-6ab04ea058e6b.webp' /></p><p>அப்போது குழந்தையை நாய் கவ்வியதாகவும், குழந்தையை மீட்பதற்காக அப்பெண்ணும் அங்கிருந்த சிலரும் முயற்சித்த போதிலும், நாய் குழந்தையை விடாமல் கடித்து இழுத்துச் சென்றதாகவும் கூறப்படுகிறது.</p><p>

இந்த அதிர்ச்சி சம்பவம் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.</p><p>

நாய் தாக்குதலில் பலத்த காயமடைந்த குழந்தை உடனடியாக மீட்கப்பட்டு, ரோத்தக் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.</p><p> அங்கு குழந்தைக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், அதன் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><p>

பொதுமக்கள் நடமாடும் பகுதியில் பிட்புல் போன்ற நாய் எவ்வாறு கட்டுப்பாடின்றி சுற்றித்திரிய முடிந்தது என்றும், நாயின் உரிமையாளர் பாதுகாப்பு விதிமுறைகளை முறையாகப் பின்பற்றினாரா என்றும் கேள்விகள் எழுந்துள்ளன.
</p><p>
இதுவரை குழந்தையின் குடும்பத்தினர் பொலிஸில் முறைப்பாடு எதுவும் அளிக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. </p><p>சம்பவம் தொடர்பாக மேலதிக தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-20T21:22:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ்.கீரிமலையில் 300 டிப்பர் கழிவுகள் ; கொட்டும் மழையிலும் மக்கள் போராட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/300-tipper-loads-of-waste-at-keerimalai-jaffna-1789937487"></link>
            <id>https://jvpnews.com/article/300-tipper-loads-of-waste-at-keerimalai-jaffna-1789937487</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் கீரிமலை பகுதியில் வலி.தெற்கு பிரதேச சபையினரால் கட்டுப்பாடின்றி கொட்டப்பட்ட கழிவுகளை மீள அள்ள வேண்டும் என கொட்டும் மழைக்குள் போராட்டம் முன்...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் கீரிமலை பகுதியில் வலி.தெற்கு பிரதேச சபையினரால் கட்டுப்பாடின்றி கொட்டப்பட்ட கழிவுகளை மீள அள்ள வேண்டும் என கொட்டும் மழைக்குள் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.</p><p> </p><p></p><p>கீரிமலையில் குப்பை கொட்டப்பட்ட இடத்திற்கு அருகாமையில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மாலை குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. </p><p>

வலி. வடக்கின் ஆளுகைக்கு உட்பட்ட கீரிமலை பகுதியில் வலி. தெற்கு பிரதேச சபையின் இலத்திரனியல் கழிவுகள் , பிளாஸ்ரிக் கழிவுகள் , மருத்துவ கழிவுகள் உள்ளிட்ட சுமார் 300 டிப்பர் கழிவுகள் கொட்டப்பட்டுள்ளன.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/73d38ef4-f7f6-46df-a830-26bc33c99738/26-6ab047515077c.webp' /></p><p>அவற்றினை மீள அள்ள வேண்டும் என கடந்த 2 மாதங்களுக்கு மேலாக அப்பகுதி மக்கள் தொடர்ச்சியாக குரல் கொடுத்து வருகின்றனர். </p><p>

இதேவேளை தெல்லிப்பழை பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கொட்டப்பட்ட கழிவுகள் மாத இறுதிக்குள் மீள அள்ளப்பட வேண்டும் என தீர்மானிக்கப்பட்டு , அது தொடர்பில் ஒருங்கிணைப்பு குழு தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் ச. சிறிபவானந்தராசா , வலி. வடக்கு தவிசாளர் சோ. சுகிர்தனுக்கு உத்தரவிட்டுள்ளார். </p><p>

அத்துடன் உள்ளூராட்சி ஆணையாளர் ச, சுதர்சனும் கழிவுகளை மீள அள்ள வேண்டும் என பணித்துள்ளார். </p><p>

இவ்வாறான நிலையில் , கடந்த வெள்ளிக்கிழமை தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலையின் மருந்தேற்றும் ஊசிகள் , இரத்தம் தேய்ந்த பஞ்சுகள் உள்ளிட்ட ஆபத்தான மருத்துவ கழிவுகள் அப்பகுதியில் கொட்டப்பட்டுள்ளன. 

இந்நிலையே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது</p><p></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/75889ae0-d2f5-4b65-a478-5a81572b1cb8/26-6ab047509695d.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/73d38ef4-f7f6-46df-a830-26bc33c99738/26-6ab047515077c.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a4c3a43d-aca0-4959-bedd-32e0bf897d6f/26-6ab047520905f.webp' /></p>]]></content>
            <updated>2026-09-20T20:51:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[போதைப்பொருள் கடத்திய படகு மீது அமெரிக்கா தாக்குதல்: 4 பேர் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/us-attacks-on-drug-smuggling-boat-4-dead-1789937079"></link>
            <id>https://news.lankasri.com/article/us-attacks-on-drug-smuggling-boat-4-dead-1789937079</id>
            <summary type="text">US Attacks on Drug Smuggling Boat 4 Dead: &amp;nbsp;போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட படகு மீது அமெரிக்க ராணுவம் நடத்திய தாக்குதலில் 4 பேர் வரை கொல்லப்பட்டுள...</summary>
            <content type="html"><![CDATA[<p>US Attacks on Drug Smuggling Boat 4 Dead: &nbsp;போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட படகு மீது அமெரிக்க ராணுவம் நடத்திய தாக்குதலில் 4 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர்.</p><h2> போதைப்பொருள் கடத்தல் படகு மீது தாக்குதல்</h2><p>வெனிசுலா, மெக்சிகோ போன்ற பல்வேறு நாடுகளில் இருந்து அமெரிக்காவிற்கு போதைப் பொருளானது கடத்தப்பட்டு வருகிறது.</p><p> இந்த போதைப்பொருள் கடத்தல் கும்பலை கட்டுப்படுத்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அமெரிக்க ராணுவத்தின் தாக்குதல் நடவடிக்கைகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.</p><p> டிரம்பின் இந்த உத்தரவின் பேரில் அமெரிக்க கடற்படை இராணுவத்தினர்&nbsp; பசிபிக் மற்றும் கரீபியன் ஆகிய கடல் வழியாக போதைப் பொருள் கடத்தும் படகுகள் மீது தீவிரமான தாக்குதலை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a06f7fcd-f477-43ba-b048-8826f613ffad/26-6ab045b93c9a2.webp' /></p><p></p><p> இவ்வாறு நடத்தப்படும் தாக்குதல்களில் போதைப்பொருள் கடத்தல் கும்பலை சேர்ந்த பலர் இதுவரை கொல்லப்பட்டுள்ளனர்.</p><h2> கடத்தல் கும்பலை சேர்ந்த 4 பேர் பலி</h2><p>
இந்நிலையில் நேற்று கரீபியன் கடல் வழியாக சிறிய படகில் போதை பொருள் கடத்தி வந்த கும்பல் மீது அமெரிக்க ராணுவத்தினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.</p><p> இந்த தாக்குதலில் படகில் இருந்த 4 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர்.</p><p> பசிபிக் மற்றும் கரீபியன் கடல் பிராந்தியத்தில் போதைப்பொருள் கடத்தி வந்ததாக இதுவரை 69 தாக்குதல்களை அமெரிக்கா ராணுவம் நடத்தியுள்ளது.</p><p> இந்த தாக்குதலில் போதைப்பொருள் கும்பலை சேர்ந்த 231 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர்.</p><p><br></p>]]></content>
            <updated>2026-09-20T20:44:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[அனோஜனை விடுதலை செய்யக் கோரி நாடளாவிய ரீதியில் மெழுகுவர்த்திப் போராட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/saudi-arabia-anojan-issue-updates-tamil-1789909411"></link>
            <id>https://tamilwin.com/article/saudi-arabia-anojan-issue-updates-tamil-1789909411</id>
            <summary type="text">சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜனை விடுதலை செய்யக் கோரி திருகோணமலை மாவட்ட இளைஞர்கள் மெழுகுவர்த்தி ஏற்றி கவனயீர்ப்பு போராட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜனை விடுதலை செய்யக் கோரி திருகோணமலை மாவட்ட இளைஞர்கள் மெழுகுவர்த்தி ஏற்றி கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
</p><p>
இந்த போராட்டமானது, நேற்று(20.09.2026) திருகோணமலை - கடற்கரை பகுதியில் உள்ள காந்தி உருவச்சிலைக்கு பின்னால் இடம்பெற்றுள்ளது. </p><p>




திருகோணமலையில் இடம்பெற்ற இந்த கவனயீர்ப்பு நிகழ்வில் இளைஞர்கள்
மெழுகுவர்த்திகளை ஏந்தியவாறும் இரு நிமிட மௌன அஞ்சலியுன் சிவராசா அனோஜனுக்கு
மனிதாபிமான அடிப்படையில் மன்னிப்பு வழங்கி, அவரை விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f4caafbe-0e84-4f1d-b775-23f997f347f2/26-6ab034b771121.webp' /></p><p>
</p><p>
இலங்கை அரசாங்கம் குறித்த விடயத்தில் தலையிட்டு, சவூதி அரேபிய அரசாங்கத்துடன்
உரிய ராஜதந்திர மட்டத்திலான பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து சிவராசா அனோஜனின்
உயிரைக் காப்பாற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர்கள்
வலியுறுத்தினர்.
</p><p>
இந்த கவனயீர்ப்பில் சிவராசா அனோஜனின் குடும்பத்தினருக்கு ஆதரவு தெரிவிக்கும்
வகையிலும், அவரின் விடுதலைக்காக பொதுமக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும்
இளைஞர்கள் பங்கேற்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c5990e4a-bfb1-4a53-8d65-eba72db7ecdc/26-6ab034b8673b3.webp' /></p><p><b><i>மேலதிக தகவல் - ரொசான்</i></b></p><h2>யாழ்ப்பாணம்&nbsp;</h2><p>சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படும் இலங்கைப் பிரஜையான சிவராசா அனோஜனை விடுதலை செய்யக் கோரி, நாளை (21) மாலை 5 மணிக்கு யாழ்ப்பாணத்தில் மெழுகுவர்த்திப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
</p><p>
யாழ்ப்பாணம் பண்ணை பகுதியில் நடைபெறவுள்ள இந்தப் போராட்டத்தை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பொது அமைப்புகள் ஏற்பாடு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/NaZHCffaXtk" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><h2>மெழுகுவர்த்திப் போராட்டம்</h2><p>
</p><p>
சிவராசா அனோஜனுக்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனையை குறைத்து, அவரை விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு வலியுறுத்தும் வகையில் இந்தப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/77821797-d74f-424a-a7e0-180eefb09cd2/26-6aafdc1030ec4.webp' /></p><p>
</p><p>
பொதுமக்கள் இந்த மெழுகுவர்த்திப் போராட்டத்தில் கலந்துகொண்டு அனோஜனுக்கான ஆதரவை வெளிப்படுத்துமாறு ஏற்பாட்டாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9a6e5fdd-e0dc-45fa-bbb7-389dc45e56d6/26-6aafdc1106713.webp' /></p>]]></content>
            <updated>2026-09-20T20:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[குவைத்திலிருந்து நாடு கடத்தப்பட்ட 20 இலங்கையர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/20-sri-lankans-deported-from-kuwait-1789935893"></link>
            <id>https://jvpnews.com/article/20-sri-lankans-deported-from-kuwait-1789935893</id>
            <summary type="text">குவைத்தில் செல்லுபடியாகும் விசா இன்றி சட்டவிரோதமாகத் தங்கியிருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 20 இலங்கையர்கள் ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>குவைத்தில் செல்லுபடியாகும் விசா இன்றி சட்டவிரோதமாகத் தங்கியிருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 20 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டு இன்று (20) அதிகாலை இலங்கை வந்தடைந்துள்ளனர்.</p><p></p><p>

இவர்கள் ஆரம்பத்தில் வீட்டு வேலை உள்ளிட்ட பல்வேறு வேலைவாய்ப்புகளுக்காக குவைத்துக்குச் சென்றிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
எனினும், ஒப்பந்தம் செய்யப்பட்ட பணியிடங்களில் இருந்து விலகி, வேறு இடங்களில் சட்டவிரோதமாக வேலை செய்து வந்ததாகக் கூறப்படும் நிலையில், அவர்கள் குவைத் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c6119e8f-52c9-4b66-9210-e6bfd480a80f/26-6ab041172f621.webp' /></p><p>இதனைத் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த குறித்த 20 பேரும், சட்ட நடவடிக்கைகளின் பின்னர் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
</p><p>
அவர்கள் ஜசீரா ஏர்வேஸ் J9-551 விமானம் மூலம் குவைத் நகரிலிருந்து பயணித்து, இன்று அதிகாலை 3.10 மணியளவில் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
</p><p>
நாடு திரும்பியவர்களுக்கு தேவையான மேலதிக உதவிகளை வழங்கும் வகையில், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
</p><p>
அதற்கமைய, அவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்வதற்கு தேவையான நிதியுதவி மற்றும் போக்குவரத்து வசதிகள் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-20T20:25:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[6,000mAh பற்றரி திறன்.,Lava Bold N4 Pro இந்தியாவில் அறிமுகம்: சிறப்பு அம்சங்கள் என்னென்ன?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/lava-bold-n4-pro-launched-in-india-1789935829"></link>
            <id>https://news.lankasri.com/article/lava-bold-n4-pro-launched-in-india-1789935829</id>
            <summary type="text">Lava Bold N4 Pro Launched in India: Price and Specs: 6,000mAh பற்றரி திறனுடன் லாவா போல்ட் என்4 புரோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது. Lava B...</summary>
            <content type="html"><![CDATA[<p>Lava Bold N4 Pro Launched in India: Price and Specs: 6,000mAh பற்றரி திறனுடன் லாவா போல்ட் என்4 புரோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது.</p><h2> Lava Bold N4 Pro அறிமுகம்</h2><p>இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் Lava நிறுவனத்தின்&nbsp; Bold N4 Pro ஸ்மார்ட்போன் அறிமுகமாகி கவனம் பெற்று வருகிறது.</p><p> பட்ஜெட் விலையில் அறிமுகமாகியுள்ள இந்த ஸ்மார்ட்போன், செப்டம்பர் 26ம் திகதி முதல் இந்திய சந்தைகளில் விற்பனையை தொடங்குகிறது.</p><p></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b44168cf-50ef-44ad-aa7e-5bfa4424b9f0/26-6ab040d6c7087.webp' /></p><h2> Lava Bold N4 Pro சிறப்பம்சங்கள்</h2><p>Lava Bold N4 Pro ஸ்மார்ட்போன் சிறப்பான&nbsp; மற்றும் துடிப்பான&nbsp; 6.75 இன்ச் ஹெச்டி+ எல்சிடி திரையை கொண்டுள்ளது.</p><p> Unisoc T8200 சிப்செட் மற்றும் ஆண்ட்ராய்டு 16 இயங்குதளத்தை இந்த ஸ்மார்ட்போன் ஆனது கொண்டுள்ளது.</p><p>6 ஜிபி ரேம், 128 ஜிபி ஸ்டோரேஜ் வசதிகளை கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போனில் 5ஜி நெட்வொர்க், யுஎஸ்பி டைப்-சி போர்ட் மற்றும் 18 வாட்ஸ் சார்ஜிங் சப்போர்ட் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளது.</p><p>குறிப்பாக Lava Bold N4 Pro ஸ்மார்ட்போனில் 6,000mAh பற்றரி திறன் கொடுக்கப்பட்டுள்ளது.</p><p> மேலும் 8 மெகாபிக்சல் முன்பக்க கேமரா, 50 மெகாபிக்சல் பின்பக்க பிரதான கேமராக்கள் கொடுக்கப்பட்டுள்ளது.</p><p> இந்த Lava Bold N4 Pro ஸ்மார்ட்போனின் விலையானது இந்திய சந்தையில் ரூ.13,999-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-20T20:24:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலஞ்சம் பெற்றமைக்காகவே நாமல் ராஜபக்ச கைது..! அரசு மீதான விமர்சனங்களுக்கு சுசில் ரணசிங்க பதிலடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/susil-back-at-criticisms-of-the-government-1789935383"></link>
            <id>https://tamilwin.com/article/susil-back-at-criticisms-of-the-government-1789935383</id>
            <summary type="text">இலஞ்சம் பெற்ற குற்றத்துக்காகவே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய
அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்‌ஷ கைது செய்யப்பட்டு
விளக்கமறியலி...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலஞ்சம் பெற்ற குற்றத்துக்காகவே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய
அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்‌ஷ கைது செய்யப்பட்டு
விளக்கமறியலில் வைக்கப்பட்டதை எவ்வாறு அரசியல் பழிவாங்கலாக குறிப்பிட முடியும் என வீடமைப்பு மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் சுசில் ரணசிங்க கேள்வி
எழுப்பியுள்ளார்.
</p><p>

பொலன்னறுவையில் நேற்று(20.09.2026) இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.</p><h2> 


எயார்பஸ் கொள்வனவு விவகாரம்</h2><p>

அவர் மேலும் தெரிவிக்கையில்,</p><p> 

எயார்பஸ் கொள்வனவு விவகாரத்தில் வெளிநாட்டு நிறுவனத்திடம் நாமல் ராஜபக்ஷ
இலஞ்சம் பெற்றார் என்று நல்லாட்சி அரசின் காலத்தில்தான் வழக்குத் தாக்கல்
செய்யப்பட்டது. எனினும், அன்றைய ஆட்சியாளர்கள் அது குறித்து எவ்வித
நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e2551312-b68f-4ad9-bf38-58f52015cbf0/26-6ab03f4a48147.webp' /></p><p>
</p><p>
தற்போது அந்தக் குற்றச்சாட்டின் அடிப்படையில் இலஞ்ச, ஊழல் ஆணைக்குழு
விசாரணைகளை மேற்கொண்டு உரிய சட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ள நிலையில், இதனை
ரணில் தரப்பினரும் சஜித் தரப்பினரும் அரசியல் பழிவாங்கல் எனக் கூறுவதில் எந்த
நியாயமும் இல்லை.
</p><p>
அரசமைப்பின் 22ஆவது திருத்தம் தொடர்பான தனது வியாக்கியானத் தீர்வை
உயர்நீதிமன்றம் சபாநாயகருக்கு அனுப்பி வைத்துள்ளது. 

இந்த வாரம் நடைபெறவுள்ள நாடாளுமன்ற அமர்வின்போது அது உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும்.
</p><p>
இந்தத் திருத்தம் மீதான இரு நாள் விவாதமும் இந்த வாரம் நாடாளுமன்றத்தில்
நடைபெறவுள்ள நிலையில், நீதிமன்றத்தின் தீர்மானத்துக்கு அமைவாகவே 22ஆவது
திருத்தத்தை நிறைவேற்றுவோம் என்றார்.&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-20T20:17:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[19 ஆண்டுகளுக்கு பிறகு AI உதவியுடன் கொலையாளியை கைது செய்த தமிழ்நாடு பொலிஸார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/tn-police-use-ai-to-arrest-absconding-accused-1789934402"></link>
            <id>https://news.lankasri.com/article/tn-police-use-ai-to-arrest-absconding-accused-1789934402</id>
            <summary type="text">TN Police Use AI to Arrest 19 years absconding Accused: கடந்த 2007ம் ஆண்டு நடைபெற்ற கொலை வழக்கில் தலைமறைவான நபரை நவீன AI உதவியுடன் கிட்டத்தட்ட 19 ஆண்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>TN Police Use AI to Arrest 19 years absconding Accused: கடந்த 2007ம் ஆண்டு நடைபெற்ற கொலை வழக்கில் தலைமறைவான நபரை நவீன AI உதவியுடன் கிட்டத்தட்ட 19 ஆண்டுகளுக்குப் பிறகு கைது செய்து பொலிஸார் அசத்தியுள்ளனர்.</p><h2> தலைமறைவான குற்றவாளி
</h2><p>2007ம் ஆண்டு சென்னை திருவொற்றியூர் பகுதியில் பாண்டியமணி என்பவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் திருவொற்றியூர் காலடிப்பேட்டையைச் சேர்ந்த ஷேக் அப்துல்லா(அப்போது வயது 20) உட்பட 5 பேரை பொலிஸார் கைது செய்தனர்.</p><p> பின்னர் ஜாமீனில் வெளியே வந்த ஷேக் அப்துல்லா பொலிஸாரின் கண்களுக்கு சிக்காமல் தலைமறைவானார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/42e92f89-be3c-48b5-831e-2d669987228a/26-6ab03b43991c3.webp' /></p><p> இந்நிலையில் நீண்ட நாட்களாக தலைமறைவாக உள்ள குற்றவாளிகளை விரைந்து பிடிக்க சென்னை காவல் ஆணையர் உத்தரவிட்ட நிலையில் தனிப்படை பொலிஸார் 2007ம் ஆண்டு ஷேக் அப்துல்லா கைது செய்யப்பட்ட போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை வைத்து அவரை மீண்டும் கைது செய்துள்ளனர்.</p><h2>AI உதவியுடன் அசத்திய பொலிஸார்</h2><p>கிட்டத்தட்ட 19 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் அவர் தற்போது எப்படி இருப்பார் என்பதை ஊகிக்க, பொலிஸார் நவீன ஏஐ உருவ அமைப்பு தொழில்நுட்பத்தை பயன்படுத்தியுள்ளனர்.</p><p>தொழில்நுட்ப உதவியுடன் தற்போது 39 வயதில் இருக்கும் ஷேக் அப்துல்லாவின் உருவ தோற்றத்தை பொலிஸார் இறுதி செய்தனர்.</p><p> இதையடுத்து அந்த புகைப்படங்களை வைத்து சமூக வலைதள கணக்குகள் மற்றும் அவர் முன்பு வசித்த பகுதியில் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.</p><p> இறுதியில் 39 வயதான ஷேக் அப்துல்லா திருமுல்லைவாயில் சோழம்பேடு மெயின் ரோடு பகுதியில் தன்னுடைய குடும்பத்தினருடன் வாழ்ந்து வருவது கண்டுபிடிக்கப்பட்டது.</p><p> பிறகு திருமுல்லைவாயல் பகுதியில் முகாமிட்ட தனிப்படை பொலிஸார் நேற்று முன்தினம் ஷேக் அப்துல்லாவை சுற்றி வளைத்து கைது செய்தனர். </p><p>&nbsp;பின்னர் உடனடியாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ஷேக் அப்துல்லா, நீதிமன்ற உத்தரவின் பேரில் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.</p><p> நவீன AI தொழில்நுட்பத்தின் உதவியுடன் 19 ஆண்டுகளுக்கு முன்பு தலைமறைவான குற்றவாளியை பொலிஸார் கைது செய்து இருப்பது பாராட்டுதலை பெற்று வருகிறது.<br></p>]]></content>
            <updated>2026-09-20T20:00:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரஷ்ய தலைநகர் மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/ukraine-drone-attack-on-russian-capital-1789934397"></link>
            <id>https://canadamirror.com/article/ukraine-drone-attack-on-russian-capital-1789934397</id>
            <summary type="text">ரஷ்யாவின் நாடாளுமன்றத் தேர்தல் இறுதி நாளான இன்று (20), உக்ரைன், மாஸ்கோ மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளை நோக்கி மிகப்பெரிய ட்ரோன் தாக்குதலை நடத்தியத...</summary>
            <content type="html"><![CDATA[<p>ரஷ்யாவின் நாடாளுமன்றத் தேர்தல் இறுதி நாளான இன்று (20), உக்ரைன், மாஸ்கோ மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளை நோக்கி மிகப்பெரிய ட்ரோன் தாக்குதலை நடத்தியதாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். </p><p>



மாஸ்கோ மேயர் செர்கெய் சோபியானின் கூற்றுப்படி, தலைநகரை நோக்கி வந்த நூற்றுக்கணக்கான ட்ரோன்கள் இடைமறிக்கப்பட்டுள்ளன. </p><p>இந்தத் தாக்குதலில் மாஸ்கோ பிராந்தியத்தில் இருவர் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ecd336cb-6589-446b-a1a2-e4525b50acce/26-6ab03b3ea9793.webp' /></p><p>தாக்குதலின் போது மாஸ்கோவிலுள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் ஒன்றும் சேதமடைந்ததாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். </p><p>



மேலும், ரஷ்யாவின் ஆக்கிரமிப்பில் உள்ள கெர்சன் பகுதியில் தேர்தல் அதிகாரி ஒருவரும் உட்பட மேலும் இருவர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p> தாக்குதல் தேர்தலை சீர்குலைக்கும் நோக்கத்துடன் நடத்தப்பட்டதாக ரஷ்ய தரப்பு குற்றம்சாட்டியுள்ளது. </p><p>



இதேவேளை, 2022ஆம் ஆண்டு உக்ரைன் மீதான முழுமையான போர் தொடங்கிய பின்னர் நடைபெறும் முதல் ரஷ்ய நாடாளுமன்றத் தேர்தல் இதுவாகும். </p><p>மூன்று நாட்களாக நடைபெற்று வரும் வாக்குப்பதிவில் ஞாயிற்றுக்கிழமை மதியம் வரை வாக்குப்பதிவு 50 சதவீதத்தை கடந்ததாக ரஷ்ய தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 



தேர்தல் முடிவுகள் ஞாயிற்றுக்கிழமை இரவு அல்லது திங்கட்கிழமை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p>]]></content>
            <updated>2026-09-20T20:00:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொங்கோவில் தீவிரமடையும் எபோலா தொற்று - சுகாதாரத் தொழிலாளர்களை இலக்கு வைத்து புதிய தீட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ebola-outbreak-intensifies-in-congo-1789932157"></link>
            <id>https://tamilwin.com/article/ebola-outbreak-intensifies-in-congo-1789932157</id>
            <summary type="text">கொங்கோ ஜனநாயகக் குடியரசில் மிக வேகமாகப் பரவி வரும் எபோலா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கில், அங்குள்ள சுகாதாரத் தொழிலாளர்களுக்குத் தடுப்பூசி வழங...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொங்கோ ஜனநாயகக் குடியரசில் மிக வேகமாகப் பரவி வரும் எபோலா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கில், அங்குள்ள சுகாதாரத் தொழிலாளர்களுக்குத் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
</p><p>
இந்த நடவடிக்கை நேற்றுமுன் தினம்(19.09.2026) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2> 

தடுப்பூசி வழங்கும் திட்டம்</h2><p>

வடகிழக்கு கொங்கோவின் இதுரி மாகாணத்தின் தலைநகரான புனியாவில் இந்தத் தடுப்பூசி வழங்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டதாக மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் கெபி கசோங்கோ முலும்பா தெரிவித்துள்ளார்.</p><p>

எபோலா தொற்றைக் கட்டுப்படுத்தும் களப்பணியில் நேரடியாக ஈடுபட்டுள்ள சுகாதாரத்
தொழிலாளர்கள் அதிக ஆபத்தை எதிர்கொள்வதால் அவர்களுக்கு முன்னுரிமை
அளிக்கப்பட்டு வருகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d2eda280-342e-478c-afbe-b75a2f9abb01/26-6ab0330a9280d.webp' /></p><p>
</p><p>
உலக சுகாதார நிறுவனம் (WHO) மற்றும் எல்லையற்ற மருத்துவர்கள் அமைப்பு (MSF)
ஆகியவற்றின் ஆதரவுடன் முன்னெடுக்கப்படும் இந்த திட்டத்தின் கீழ், சுமார் 50,000
முன்னணிச் சுகாதாரப் பணியாளர்களுக்கு “எர்வேபோ” தடுப்பூசி வழங்கப்படவுள்ளன.</p><h2>


3 ஆயிரம் பேர் உயிரிழப்பு</h2><p>
தற்போது பரவி வரும் “புண்டிக்புயோ” வகை எபோலா வைரஸுக்கு எதிராகப்
அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகள் எதுவும் இதுவரை கண்டுபிடிக்கப்படாத நிலையில்,
பொதுவான ஜைர் எபோலா வைரஸைக் கட்டுப்படுத்தப் பயன்படுத்தப்படும் எர்வேபோ
தடுப்பூசி, பரிசோதனை அடிப்படையில் இவர்களுக்கு வழங்கப்படுகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/95672997-dcdb-41ed-9427-7621206eac81/26-6ab0330b659a1.webp' /></p><p>

இதன் செயல்திறன் குறித்து சுமார் 20,000 பேரிடம் ஓராண்டு காலம்
கண்காணிக்கப்படவுள்ளன.
</p><p>
கடந்த மே மாதம் முதல் பரவத் தொடங்கிய இந்த எபோலா தொற்றினால் இதுவரை 7,541 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், குறைந்தது 3,639 பேர் உயிரிழந்துள்ளனர்.</p><p>

மேலும் 1,823 பேர் வரை சிகிச்சையின் பின்னர் குணமடைந்துள்ளதாக உள்ளூர்
அதிகாரிகளின் தரவுகள் தெரிவிக்கின்றன.&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-20T20:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[அனோஜன் வழக்கில் வெளியான புதிய தகவல் ; குடும்பத்திடம் வெளியான அதிர்ச்சித் தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/death-penalty-for-anojan-shocking-news-revealed-1789920775"></link>
            <id>https://jvpnews.com/article/death-penalty-for-anojan-shocking-news-revealed-1789920775</id>
            <summary type="text">சவுதி அரேபியாவில் கைது செய்யப்பட்டுள்ள அனோஜனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனை அவர் தனது குடும்பத்தினரிடம் தொலைபேசி மூலம் தெரிவித்துள்ளதா...</summary>
            <content type="html"><![CDATA[<p>சவுதி அரேபியாவில் கைது செய்யப்பட்டுள்ள அனோஜனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனை அவர் தனது குடும்பத்தினரிடம் தொலைபேசி மூலம் தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p>
</p><p></p><p>இன்று (20) காலை 10.30 மணியளவில் அனோஜனின் குடும்பத்தினரை சந்தித்தபோது, அவரது தம்பி ஹம்சிதனுக்கு சவுதி அரேபியாவிலிருந்து அனோஜன் தொலைபேசி அழைப்பை மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இதன்போது, அனோஜனுடன் சுமார் 10 நிமிடங்கள் உரையாடியதாகவும், ஜூன் 30ஆம் திகதி அவர் கைது செய்யப்படுவதற்கு முன்னர் அவருடன் இறுதியாக உரையாடியிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c68fb67f-33e7-4a95-9acb-486efc3c842d/26-6ab0060915506.webp' /></p><p>அனோஜன் மீது முதலில் சைபர் குற்றச்சாட்டு தொடர்பான வழக்கு தொடரப்பட்டதாகவும், அந்த வழக்கில் 5 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 3 மில்லியன் சவுதி ரியால் அபராதமும் விதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
</p><p>
இதனைத் தொடர்ந்து, இலங்கை அரசாங்கத்தின் ஊடாக அவரது தண்டனையை குறைப்பதற்கான மேன்முறையீட்டு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>

இந்நிலையில், தமக்கு வழங்கப்பட்ட தண்டனை போதுமானதாக இல்லை எனக் கூறி வழக்குத் தொடர்ந்த சவுதி தரப்பும் மேன்முறையீடு செய்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

அதன்போது, நபியை அவமதித்தல் மற்றும் அந்த உள்ளடக்கத்தை பலரிடம் பரப்பியமை உள்ளிட்ட மேலும் சில குற்றச்சாட்டுகள் வழக்கில் இணைக்கப்பட்டு, வழக்கு வேறு கோணத்தில் மீண்டும் பதிவு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
இதன் பின்னர் அனோஜனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதாகவும், இந்தத் தீர்ப்பு தொடர்பாக அவருக்கு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் குடும்பத்தினருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/05e68323-0f69-4eef-9fee-c866fd324252/26-6ab00609bf886.webp' /></p><p>
</p><p>
மேலும், தனது குடும்பத்தினருடன் தொடர்புகொண்டு நிலைமையைத் தெரிவிக்கும் வாய்ப்பும் அவருக்கு வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
தனது தண்டனை தொடர்பிலும், அது தொடர்பாக ஏற்பட்டுள்ள சில தவறான புரிதல்கள் குறித்தும் அனோஜன் விளக்கமளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
எதிர்வரும் 7ஆம் திகதி வரை அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறையிலிருந்து தொலைபேசி மூலம் தொடர்புகொள்ளும் வாய்ப்பு அவருக்கு இருப்பதாகவும் கூறப்படுகிறது.</p><p>

இந்நிலையில், அனோஜனின் விடுதலைக்காக உரிய சட்ட மற்றும் இராஜதந்திர நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக அவரை ஆதரிப்பவர்கள் தெரிவித்துள்ளனர்.
</p><p>
அனோஜனின் வழக்கு தொடர்பான மேலதிக நடவடிக்கைகள் மற்றும் அவரின் விடுதலைக்காக முன்னெடுக்கப்படும் முயற்சிகள் குறித்து தொடர்ந்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-20T19:57:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[தென்கொரியா - அமெரிக்கா இராணுவப் பயிற்சிகளுக்கு மத்தியில் வடகொரியா ஏவுகணை சோதனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/northkorea-missile-test-korea-us-military-exercise-1789933896"></link>
            <id>https://ibctamil.com/article/northkorea-missile-test-korea-us-military-exercise-1789933896</id>
            <summary type="text">வடகொரியா ஞாயிற்றுக்கிழமை தனது கிழக்குக் கடற்கரைக்கு அப்பால் இரண்டு ஏவுகணைகளை ஏவி சோதனை நடத்தியுள்ளதாக தென்கொரிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது....</summary>
            <content type="html"><![CDATA[<p>வடகொரியா ஞாயிற்றுக்கிழமை தனது கிழக்குக் கடற்கரைக்கு அப்பால் இரண்டு ஏவுகணைகளை ஏவி சோதனை நடத்தியுள்ளதாக தென்கொரிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
</p><p>
சுமார் ஒரு வார காலத்திற்குள் வடகொரியா மேற்கொண்டுள்ள இரண்டாவது ஏவுகணைச் சோதனை இதுவாகும். </p><p>அமெரிக்கா மற்றும் தென்கொரியா மேற்கொண்டு வரும் தொடர்ச்சியான இராணுவப் பயிற்சிகளே கொரிய தீபகற்பத்தில் பதற்றத்தை அதிகரித்து வருவதாக வடகொரியா குற்றஞ்சாட்டியிருந்த நிலையில், இந்த ஏவுகணைச் சோதனைகள் இடம்பெற்றுள்ளன.</p><p></p><h2>பாலிஸ்டிக் ஏவுகணை என அடையாளம்</h2><p>
</p><p>
ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் கிழக்குக் கடலை நோக்கி குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணை ஒன்றை வடகொரியா ஏவியதாக தென்கொரிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2725bf53-6333-4b1e-a625-2753a9fb94af/26-6ab039496d4e5.webp' /></p><p> </p><p>அதனைத் தொடர்ந்து சுமார் மூன்று மணி நேரத்திற்குப் பின்னர் அதேபோன்ற மற்றொரு ஏவுகணையும் ஏவப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

முதல் ஏவுகணை ஏவப்பட்டதை தென்கொரிய கூட்டு இராணுவத் தலைமைத்துவம், வொன்சான் பகுதியில் இருந்து பிற்பகல் சுமார் 3 மணியளவில் கண்டறிந்துள்ளது. </p><p>அந்த ஆயுதம் பாலிஸ்டிக் ஏவுகணை என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
ஜப்பான் பாதுகாப்பு அமைச்சகமும் அந்த ஏவுகணை பாலிஸ்டிக் ஏவுகணையாக இருக்கலாம் என தெரிவித்துள்ளது.</p><p></p><h2>அமெரிக்கா மற்றும் தென்கொரியா</h2><p> </p><p>ஜப்பானின் பொது ஒலிபரப்பு நிறுவன தகவலின்படி, அந்த ஏவுகணை ஜப்பானின் பிரத்யேக பொருளாதார மண்டலத்திற்கு வெளியே கடலில் விழுந்துள்ளது.</p><p>

450 கிலோமீற்றர் பயணம்
தென்கொரிய இராணுவத்தின் தகவலின்படி, முதல் ஏவுகணை சுமார் 450 கிலோமீற்றர் தூரம் பயணித்துள்ளது. </p><p>அது வடகொரியாவின் Hwasong-11 ஏவுகணைத் தொடரைச் சேர்ந்ததாக இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இதனைத் தொடர்ந்து, வொன்சான் பகுதியில் இருந்து மாலை சுமார் 5.50 மணியளவில் மற்றொரு குறுகிய தூர ஏவுகணை ஏவப்பட்டதாக தென்கொரிய இராணுவம் தெரிவித்துள்ளது.
</p><p>
இரண்டாவது ஏவுகணை 600 கிலோமீற்றருக்கும் அதிகமான தூரம் பயணித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

இரண்டாவது ஏவுகணையும் பாலிஸ்டிக் ஏவுகணை என்பது உறுதிப்படுத்தப்பட்டால், சுமார் மூன்று மணி நேரத்திற்குள் வடகொரியா தொடர்ச்சியாக இரண்டு பாலிஸ்டிக் ஏவுகணைச் சோதனைகளை நடத்தியதாக அது அமையும்.
</p><p>
அமெரிக்கா மற்றும் தென்கொரியா இடையிலான இராணுவ ஒத்துழைப்பு மற்றும் பயிற்சிகள் தொடர்பாக வடகொரியா தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்து வரும் நிலையில், புதிய ஏவுகணைச் சோதனைகள் கொரிய தீபகற்பத்தின் பாதுகாப்பு நிலைமை தொடர்பான கவலையை மேலும் அதிகரித்துள்ளன.</p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-20T19:52:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[சவுதியில் தமிழருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை: இந்திய பிரதமர் மோடிக்கு இலங்கை எம்.பி கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/tamil-man-sentenced-to-death-in-saudi-1789932834"></link>
            <id>https://news.lankasri.com/article/tamil-man-sentenced-to-death-in-saudi-1789932834</id>
            <summary type="text">Tamil man Sentenced to Death in Saudi Sri Lanka MP Urges Indian PM Modi to Rescue: சவுதியில் மரண தண்டனை விதிக்கப்பட்ட தமிழரை இந்திய பிரதமர் மோடி மீட்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>Tamil man Sentenced to Death in Saudi Sri Lanka MP Urges Indian PM Modi to Rescue: சவுதியில் மரண தண்டனை விதிக்கப்பட்ட தமிழரை இந்திய பிரதமர் மோடி மீட்க வேண்டும் என்று இலங்கை எம்.பி கோரிக்கை விடுத்துள்ளார்.</p><h2> சமூக வலைதளத்தில் கருத்தை பதிவிட்ட இலங்கை தமிழ் இளைஞர்</h2><p>இலங்கை யாழ்ப்பாணத்தை சேர்ந்த இந்துக்கள் கதிர்காமம் முருகன் கோயிலுக்கு புனித பாதயாத்திரை மேற்கொண்டுள்ளனர். </p><p>&nbsp;அப்போது அவர்களுடன் சுப்பிரமணியம் என்ற பெயர் கொண்ட நாயும் சென்றுள்ளது. அந்த நாயை முஸ்லிம் இளைஞர் ஒருவர் மிதிப்பது போன்ற வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.</p><p> பலரும் அந்த வீடியோவின் கமெண்டில் தங்களது கண்டன கருத்துக்களை பதிவிட்டு வந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4f5f4ae4-f7d0-42d1-9d23-9f132941fb23/26-6ab03523e8667.webp' /></p><p> சவுதி அரேபியாவில் பணியாற்றி வரும் இலங்கையை சேர்ந்த தமிழ் இளைஞரான அனோஜன் சிவராசாவும் அந்த வீடியோவின் கமெண்டில் நபிகள் நாயகம் குறித்து அவதூறான விமர்சனத்தை பகிர்ந்துள்ளார்.</p><p></p><p> இதையடுத்து சவுதி பொலிஸாரால் கைது செய்யப்பட்ட அனோஜனுக்கு, அந்நாட்டு நீதிமன்றம் 5 ஆண்டுகள் சிறையும், ரூ.7.55 கோடி அபராதமும் விதித்தது.</p><p> இதனை எதிர்த்து அனோஜன் மேல்முறையீடு செய்த நிலையில், அவருக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><h2> இந்திய பிரதமர் மோடி தலையிட வேண்டும்</h2><p>இந்நிலையில் சவுதியில் மரண தண்டனை விதிக்கப்பட்ட தமிழரை இந்திய பிரதமர் மோடி மீட்க வேண்டும் என்று இலங்கையின் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் எம்.பி. யுமான&nbsp; எம்.பி மனோ கணேசன் கோரிக்கை வைத்துள்ளார்.</p><p>[Q51ZQE
]</p><p> இது தொடர்பாக சமூக வலைதளத்தில் நேற்று அவர் வெளியிட்ட பதிவில், இந்திய பிரதமர் மோடியும், சவுதி அரேபிய பட்டத்து இளவரசர் சல்மானும் மிக நெருங்கிய நட்பு கொண்டவர்கள்.</p><p> எனவே இலங்கை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தனிப்பட்ட முறையில் இந்திய பிரதமர் மோடியுடன் இலங்கை தமிழ் இளைஞரான அனோஜன் தொடர்பில் பேச வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.</p><p> மேலும் இளைஞர் அனோஜன் சிவராசாவை மீட்க வேண்டும் என்றும் அதில் தெரிவித்துள்ளார்.<br></p>]]></content>
            <updated>2026-09-20T19:34:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sudaron</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிளிநொச்சியில் பூர்வீக காணிகளில் இருந்து மக்களை வெளியேற்ற முயற்சி - வனஜீவராசிகள் திணைக்களம் மீது புதிய குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/new-allegation-against-the-department-of-wildlife-1789931232"></link>
            <id>https://tamilwin.com/article/new-allegation-against-the-department-of-wildlife-1789931232</id>
            <summary type="text">கிளிநொச்சி - பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கோவில் வயல் கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட பகுதியில், பிரிட்டிஷ் காலத்தில் இருந்து பரம்பர...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிளிநொச்சி - பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கோவில் வயல் கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட பகுதியில், பிரிட்டிஷ் காலத்தில் இருந்து பரம்பரையாக வாழ்ந்து வரும் மக்களை அவர்களுடைய காணிகளில் இருந்து வெளியேற்றும் முயற்சியில் வனஜீவராசிகள் திணைக்களம் ஈடுபட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
</p><p>
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
</p><p>
பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பிரிட்டிஷ் காலத்தில் இருந்து மக்கள் வாழ்ந்து வருவதுடன், அவர்களின் வாழ்வாதாரங்களுக்காக விவசாய நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
</p><h2>
காணி உரிமத்துடன் போராடும் மக்கள்</h2><p>
அதற்கான காணி ஆவணங்களையும் அப்பகுதி மக்கள் தம்வசம் வைத்துள்ளனர்.

இந்த நிலையில், அப்பகுதி மக்கள் 1991ஆம் ஆண்டில் ஆனையிறவில் முன்னெடுக்கப்பட்ட ஆகாயக் கடல் வழி இராணுவ நடவடிக்கை காரணமாக முற்றுமுழுதாக இடம்பெயர்ந்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/249b1ff4-f092-4e00-9ff6-7033ead813d1/26-6ab02f349d270.webp' /></p><p>
</p><p>
சுமார் 35 வருடங்களுக்குப் பின்னர், மீண்டும் அப்பகுதிகளில் மக்கள் குடியேறியுள்ளனர்.

தற்போது வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் குறித்த காணிகளை ஆக்கிரமிக்கும் நோக்கில் செயற்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><h2>
மக்களை அச்சுறுத்தும் திணைக்கள அதிகாரிகள்</h2><p>
தலைமுறை தலைமுறையாக பூர்வீகமாக வாழ்ந்த இந்த நிலங்களில் இருந்து இவர்களை வெளியேற்றும் நோக்கில் குறித்த அதிகாரிகள் தொடர்ச்சியான செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/69d334eb-d1ff-4016-af02-d5975a33f2a6/26-6ab02f359757e.webp' /></p><p>
</p><p>
நேற்றுமுன்தினம் (19) குறித்த பகுதிக்கு சிவில் உடையில் சென்ற வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள், அந்தக் காணிகளில் இருந்து மக்களை உடனடியாக வெளியேறுமாறும் அச்சுறுத்தியுள்ளனர்.</p><p>

அவர்கள் குறித்த மக்கள் மீது தாக்குதல் மேற்கொண்டதாகவும் அப்பகுதி மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-20T19:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[செங்கடல் பிராந்திய போரில் இத்தாலி! மறுக்கும் அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/italy-in-the-red-sea-region-conflict-1789932090"></link>
            <id>https://ibctamil.com/article/italy-in-the-red-sea-region-conflict-1789932090</id>
            <summary type="text">செங்கடல் பிராந்தியத்தில் இத்தாலி எந்தவொரு போரிலும் ஈடுபடவில்லை என அந்நாட்டு
வெளிவிவகார அமைச்சர் அந்தோனியோ தாஜானி தெரிவித்துள்ளார்.

இருப்பினும், அந...</summary>
            <content type="html"><![CDATA[<p>செங்கடல் பிராந்தியத்தில் இத்தாலி எந்தவொரு போரிலும் ஈடுபடவில்லை என அந்நாட்டு
வெளிவிவகார அமைச்சர் அந்தோனியோ தாஜானி தெரிவித்துள்ளார்.</p><p>

இருப்பினும், அந்த முக்கிய கடல் வழியில் வர்த்தகக் கப்பல்களைப் பாதுகாக்கும்
ஐரோப்பிய ஒன்றியத்தின் கடற்படை நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்துமாறு அவர்
கோரிக்கை விடுத்துள்ளார்.
</p><p>
அண்மையில் இடம்பெற்ற தாக்குதலில் இத்தாலியப் போர் விமானம் ஒன்று சேதமடைந்ததாக
வெளியான செய்திகள் மற்றும் இத்தாலியுடன் தாங்கள் போரில் ஈடுபடவில்லை என்ற ஹவுதி
அமைப்பினரின் அறிக்கைகள் குறித்து இத்தாலிய நாளிதழ் ஒன்றுக்கு வழங்கிய
நேர்காணலிலேயே அவர் இதனைத் தெளிவுபடுத்தியுள்ளார்.</p><p></p><h2>கடற்படை நடவடிக்கை</h2><p>
</p><p>
சவூதி அரேபியாவிலுள்ள தாயிஃப் (Taif) விமானப் படைத்தளத்தின் மீது ஹவுதி
அமைப்பினர் நடத்திய தாக்குதலில், தரையிறக்கப்பட்டிருந்த இத்தாலியின் F-2000
(Eurofighter) ரகப் போர் விமானம் ஒன்று சேதமடைந்ததாகத் தெரிவிக்கப்படும்
நிலையிலேயே வெளிவிவகார அமைச்சரின் இந்தக் கருத்து வெளியாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5db79708-f102-452c-b0dc-225ad57856f9/26-6ab0323bca97c.webp' /></p><p>

செங்கடல் மற்றும் பாப் அல்-மந்தேப் நீரிணை ஊடாகப் பயணிக்கும் வர்த்தகக்
கப்பல்களை ஹவுதி தாக்குதல்களிலிருந்து பாதுகாப்பதற்காகவே ஐரோப்பிய ஒன்றியத்தின்
'அஸ்பைட்ஸ்' பாதுகாப்புக் கடற்படை நடவடிக்கை உருவாக்கப்பட்டது.
</p><p>
இந்நீரிணைப் பகுதியில் நிலைமை மோசமடைந்து வரும் பின்னணியில், இத்தாலி
தொடர்ந்தும் இந்த நடவடிக்கைக்கு ஆதரவளிக்கும் எனக் குறிப்பிட்ட அமைச்சர்,
இத்திட்டத்தைப் புதுப்பித்து வலுப்படுத்துமாறும் வலியுறுத்தியுள்ளார்.</p><p>

இத்தாலியின் ஒட்டுமொத்த கடல்சார் வர்த்தகப் போக்குவரத்தில் 40 சதவீதமானவையும்,
ஆசிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களில் 60 சதவீதமானவையும்
செங்கடல் வழியாகவே கடந்து செல்வதால், இந்தப் பிராந்தியத்தில் தமது நாட்டிற்கு
பலமான மூலோபாய நலன் உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-20T19:21:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவில் உருவாகிறது புதிய ‘AI Force’ ; ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/ai-force-organization-opposition-in-the-ai-sector-1789931626"></link>
            <id>https://canadamirror.com/article/ai-force-organization-opposition-in-the-ai-sector-1789931626</id>
            <summary type="text">செயற்கை நுண்ணறிவு (AI) துறையைப் பாதுகாக்கும் நோக்கில் ‘AI FORCE’ என்ற புதிய அமைப்பை உருவாக்க உள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளா...</summary>
            <content type="html"><![CDATA[<p>செயற்கை நுண்ணறிவு (AI) துறையைப் பாதுகாக்கும் நோக்கில் ‘AI FORCE’ என்ற புதிய அமைப்பை உருவாக்க உள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
</p><p>
இந்த அமைப்பை வழிநடத்துவதற்காக ‘AI CZAR’ எனப்படும் சிறப்புப் பொறுப்பாளர் ஒருவர் விரைவில் நியமிக்கப்படுவார் என்றும் அவர் அறிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/30d6318c-6bbc-4231-8352-b04f43e3830b/26-6ab0306c5dd5c.webp' /></p><p>

எதிர்காலத்தில் அமெரிக்காவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) சுமார் 25 சதவீதம் வரை AI துறை பங்களிக்கக்கூடும் என ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
மேலும், அமெரிக்காவின் AI வளர்ச்சியைக் கட்டுப்படுத்தி தடுக்கும் நோக்கில் எதிர்த்தரப்பினர் சதி செய்து வருவதாகக் குற்றஞ்சாட்டியுள்ள அவர், அவ்வாறான முயற்சிகளை தாம் முறியடிப்பேன் என்றும் தெரிவித்துள்ளார்.
</p><p>
அமெரிக்காவின் தொழில்நுட்ப முன்னேற்றத்தில் AI துறைக்கு முக்கியத்துவம் அளித்து வரும் நிலையில், இந்த புதிய அமைப்பு தொடர்பான மேலதிக விபரங்கள் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p>]]></content>
            <updated>2026-09-20T19:13:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரை மணி நேரம் அநுர மனோவுடன் கதைத்தது என்ன..! அனோஜனின் தற்போதைய நிலைப்பாடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/discussed-with-anura-mano-for-half-an-hour-1789923176"></link>
            <id>https://tamilwin.com/article/discussed-with-anura-mano-for-half-an-hour-1789923176</id>
            <summary type="text">அனோஜனின் தற்போதைய நிலைப்பாடு தொடர்பில் இலங்கை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவுடன் தொலைபேசியில் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டதாக ஐக்கிய மக்கள் சக்தி கட...</summary>
            <content type="html"><![CDATA[<p>அனோஜனின் தற்போதைய நிலைப்பாடு தொடர்பில் இலங்கை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவுடன் தொலைபேசியில் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டதாக ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.</p><p>

லங்காசிறி ஊடகம் வழங்கும் “ஊடறுப்பு” நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
அவர் மேலும் தெரிவிக்கையில்,
</p><p>
அநுர குமார திஸாநாயக்கவுடன் வழக்கமாக அரை மணி நேரம் உரையாடுவது வழக்கம். அனோஜனின் நிலைப்பாட்டையும் எடுத்துரைத்துள்ளேன்.
</p><p>
விரைவில் சவூதி அரேபிய அரசாங்கத்துடன் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டு, அவரது தண்டனையைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதையும் ஜனாதிபதிக்கு வலியுறுத்தினேன்.</p><p>

ஊழல்வாதிகளை அநுர அரசாங்கம் தேடித் தேடி கைது செய்வது பாராட்டுக்குரியது. என்றாலும், அநுர அரசாங்கத்திலும் ஊழல்வாதிகள் இருக்கிறார்கள். அவர்களுக்கும் தகுந்த தண்டனை வழங்கினால் நன்றாக இருக்கும் என்றார்.&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/BhMshQ0voX8" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-20T19:12:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[இதுவரை இல்லாத மிகப்பெரிய தாக்குதல்! ரஷ்யா மீது ஒரே இரவில் ஏவப்பட்ட 1000 ட்ரோன்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/1000-drones-launched-at-russia-overnight-1789928215"></link>
            <id>https://ibctamil.com/article/1000-drones-launched-at-russia-overnight-1789928215</id>
            <summary type="text">ரஷ்யாவில் நாடாளுமன்றத் தேர்தலின் மூன்றாவது மற்றும் இறுதி நாள் நிறைவடைந்து கொண்டிருந்த நிலையில், ஒரே இரவில் ரஷ்யா மீது 1,000-க்கும் மேற்பட்ட ட்ரோன்களை ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ரஷ்யாவில் நாடாளுமன்றத் தேர்தலின் மூன்றாவது மற்றும் இறுதி நாள் நிறைவடைந்து கொண்டிருந்த நிலையில், ஒரே இரவில் ரஷ்யா மீது 1,000-க்கும் மேற்பட்ட ட்ரோன்களை உக்ரைன் ஏவியதாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
</p><p>
அவற்றில் நூற்றுக்கணக்கான ட்ரோன்கள் தலைநகர் மொஸ்கோவை நோக்கி ஏவப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>மொஸ்கோமீது நடத்தப்பட்ட இந்த ட்ரோன் தாக்குதலை இதுவரை இடம்பெற்றுள்ள மிகப்பெரிய ட்ரோன் தாக்குதல் என மொஸ்கோ மேயர் வர்ணித்துள்ளார்.</p><p></p><h2>மொஸ்கோவைச் சுற்றியுள்ள பிராந்தியங்கள்</h2><p>
</p><p>
இந்த தாக்குதலில் மொஸ்கோஎண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் உள்ளிட்ட சில இடங்கள் சேதமடைந்துள்ளதாகவும், குடியிருப்பு கட்டடம் ஒன்றும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/16cda424-ce0f-4c15-b1aa-2e256a007dd1/26-6ab0250b8d100.webp' /></p><p> </p><p>மொஸ்கோ நகருக்கு எரிபொருள் உள்ளிட்டவற்றை வழங்கும் முக்கிய நிலையங்களில் ஒன்றாக இந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் காணப்படுகிறது.</p><p>மொஸ்கோவைச் சுற்றியுள்ள பிராந்தியங்களில் இடம்பெற்ற தாக்குதல்களில் இருவர் உயிரிழந்ததுடன், மேலும் 20 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>இது குறித்து உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி சமூக ஊடகத்தில் வெளியிட்ட பதிவில், இந்த தாக்குதலில் பல்வேறு ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டதாக தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>Pelican ஏவுகணைகள்</h2><p>
</p><p>
உக்ரைனில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட Flamingo மற்றும் Pelican ஏவுகணைகளும் பயன்படுத்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/665c894c-9ddc-4a18-961c-8c1081d0211d/26-6ab0250c4a599.webp' /></p><p> </p><p>ரஷ்யாவின் எண்ணெய் மற்றும் தளவாட வசதிகளை இலக்காகக் கொண்டு இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.</p><p>

ரஷ்யாவின் பொருளாதாரத்தின் மீது அழுத்தத்தை ஏற்படுத்துவதே இதன் நோக்கம் எனக் குறிப்பிட்ட அவர், இந்த வசதிகள் மூலம் கிடைக்கும் வருவாய் ரஷ்யாவின் போர் நடவடிக்கைகளுக்கு நிதியளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-20T19:06:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆபத்தான கழிவுகளை கொட்டாதே! கீரிமலையில் கொட்டும் மழையிலும் போராட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/protest-in-keerimalai-despite-pouring-rain-1789931062"></link>
            <id>https://ibctamil.com/article/protest-in-keerimalai-despite-pouring-rain-1789931062</id>
            <summary type="text">கீரிமலை பகுதியில் வலி.தெற்கு பிரதேச சபையினரால் கட்டுப்பாடின்றி கொட்டப்பட்ட
கழிவுகளை மீள அள்ள வேண்டும் என கொட்டும் மழைக்குள் போராட்டம்
முன்னெடுக்கப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>கீரிமலை பகுதியில் வலி.தெற்கு பிரதேச சபையினரால் கட்டுப்பாடின்றி கொட்டப்பட்ட
கழிவுகளை மீள அள்ள வேண்டும் என கொட்டும் மழைக்குள் போராட்டம்
முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><p>
கீரிமலையில் குப்பை கொட்டப்பட்ட இடத்திற்கு அருகாமையில் இன்றைய தினம்
ஞாயிற்றுக்கிழமை மாலை குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
</p><p>
வலி. வடக்கின் ஆளுகைக்கு உட்பட்ட கீரிமலை பகுதியில் வலி. தெற்கு பிரதேச
சபையின் இலத்திரனியல் கழிவுகள் , பிளாஸ்ரிக் கழிவுகள் , மருத்துவ கழிவுகள்
உள்ளிட்ட சுமார் 300 டிப்பர் கழிவுகள் கொட்டப்பட்டுள்ளன.</p><p></p><h2>2 மாதங்களுக்கு மேலாக&nbsp;மக்கள் குரல்</h2><p>
</p><p>
அவற்றினை மீள அள்ள வேண்டும் என கடந்த 2 மாதங்களுக்கு மேலாக அப்பகுதி மக்கள்
தொடர்ச்சியாக குரல் கொடுத்து வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/faf8bc43-01eb-463c-a78e-34bd3d038c98/26-6ab02e37d0149.webp' /></p><p>
</p><p>
இதேவேளை தெல்லிப்பழை பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கொட்டப்பட்ட
கழிவுகள் மாத இறுதிக்குள் மீள அள்ளப்பட வேண்டும் என தீர்மானிக்கப்பட்டு , அது
தொடர்பில் ஒருங்கிணைப்பு குழு தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் ச.
சிறிபவானந்தராசா , வலி. வடக்கு தவிசாளர் சோ. சுகிர்தனுக்கு உத்தரவிட்டுள்ளார்.</p><p>

அத்துடன் உள்ளூராட்சி ஆணையாளர் ச.சுதர்சனும் கழிவுகளை மீள அள்ள வேண்டும் என
பணித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7e314e13-91fc-4d08-a1b4-462702aa917e/26-6ab02e389ae12.webp' /></p><p>
</p><p>
இவ்வாறான நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை தெல்லிப்பழை புற்றுநோய்
வைத்தியசாலையின் மருந்தேற்றும் ஊசிகள், இரத்தம் தேய்ந்த பஞ்சுகள் உள்ளிட்ட
ஆபத்தான மருத்துவ கழிவுகள் அப்பகுதியில் கொட்டப்பட்டுள்ளன.

இந்நிலையே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-20T19:04:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இளவரசி டயானா நினைவு தினம் நெருங்கும் நிலையில் மன்னர் சார்லஸ் தொடர்பில் வெளியான சர்ச்சை பதிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/controversial-post-regarding-king-charles-1789930243"></link>
            <id>https://tamilwin.com/article/controversial-post-regarding-king-charles-1789930243</id>
            <summary type="text">இளவரசி டயானாவின் 30ஆவது ஆண்டு நினைவு தினத்தை முன்னர், மன்னர் மூன்றாம் சார்லஸ் தொடர்பில் சர்ச்சைக்குரிய செய்தியொன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றத...</summary>
            <content type="html"><![CDATA[<p>இளவரசி டயானாவின் 30ஆவது ஆண்டு நினைவு தினத்தை முன்னர், மன்னர் மூன்றாம் சார்லஸ் தொடர்பில் சர்ச்சைக்குரிய செய்தியொன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.
</p><p>
இந்த தகவலை, இளவரசி டயானாவின் தம்பியான சார்லஸ் ஸ்பென்சர் எழுதிய "ஸ்வான் சாங்: டயானா, மை சிஸ்டர்" என்ற புதிய புத்தகத்தில் உள்ள பல குறிப்புகளை அடிப்படையாக கொண்டு கண்டறியப்பட்டுள்ளதாக நேற்றுமுன்தினம்(19.09.2026) இங்கிலாந்து நாளிதழ் ஒன்று தெரிவித்துள்ளது.</p><p>

இதற்கமைய, இந்தப் புத்தகம் நாளைய தினம்(22.09.2026) அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><h2>


27 வயதில் வாரிசாக்கப்பட்ட ஸ்பென்சர்</h2><p>


ஏப்ரல் 1992ஆம் ஆண்டு நார்தாம்ப்டனில் உள்ள ஒரு தேவாலயத்தில், ஸ்பென்சர் மற்றும் இளவரசி டயானாவின் தந்தையின் இறுதிச் சடங்கின் போது, இந்த உணர்வற்ற சம்பவம் பதிவாகியுள்ளது.</p><p> 

அப்போது, 27 வயதான ஸ்பென்சர், தனது தந்தையின் உடல் தேவாலயத்திற்குள் கொண்டு செல்லப்பட்டபோது அழுது கொண்டிருந்தார். அந்த சமயத்தில், இளவரசர் சார்லஸ், "நீங்கள் உண்மையிலேயே அதிர்ஷ்டசாலி" என்று கூறினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/42008fce-a2c8-4509-863c-345534e2421b/26-6ab02b8ebb9d6.webp' /></p><p> </p><p>

ஸ்பென்சர் மீண்டும் அவரிடம் கேட்டபோது,“ ​​இவ்வளவு இளம் வயதில் பிரபு என்ற பட்டமும், அதனுடன் வரும் 13,000 ஏக்கர் (52.61 சதுர கிலோமீட்டர்) நிலமும் சொத்துக்களும் வழங்கப்பட்டது ஒரு பெரும் பாக்கியம்” என்று சார்லஸ் மீண்டும் வலியுறுத்தினார்.</p><p> 

இதன்போது, இளவரசர் சார்லஸ் ஒரு பிடிவாதமான குழந்தையைப் போன்று, தன்னுடைய கால்களைத் தரையில் தட்டி நடந்து சென்றதாகவும் ஸ்பென்சர் கூறுகிறார்.</p><h2>

 73 வயதில் அரியணை ஏறிய மன்னர் சார்லஸ்</h2><p>
அந்த காலத்தில், தனக்கு 43 வயதாகியும், தனக்குக் கீழ் 50 பேர் பணிபுரிந்தும் வந்தபோதிலும், தனது பெற்றோர் தன்னை ஒரு குழந்தையைப் போலவே நடத்துவதாக இளவரசர் சார்லஸ் முரண்பட்டதாகவும் கூறியதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3b7ba603-c8b3-4ac9-aead-0467991f907c/26-6ab02b8f71974.webp' /></p><p>
</p><p>
 இரண்டாம் எலிசபெத் மகாராணி 96 வயது வரை ஆட்சி செய்தார், மேலும் மன்னர் சார்லஸ் 2022 செப்டம்பரில் தனது 73 வயதில் பிரிட்டிஷ் அரியணை ஏறினார், இதன் மூலம் அரியணை ஏறிய மிக வயதான பிரிட்டிஷ் அரச குடும்ப உறுப்பினர் என்றும் அடையாளப்படுத்தபட்டார்.
</p><p>
1997ஆம் ஆண்டு, இளவரசி டயானாவின் மரணத்திற்கு பின்னர், நடந்த மற்றொரு சர்ச்சைக்குரிய சம்பவமும் முன்னர் வெளியிடப்பட்ட பகுதிகளில் சேர்க்கப்பட்டுள்ளது.&nbsp; &nbsp;</p><p></p><p></p><p>&nbsp;</p><p><br></p>]]></content>
            <updated>2026-09-20T19:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[சட்டவிரோத மீன்பிடித்தல்: கனடா நபருக்கு 4,500 டொலர் அபராதம்; மீன்பிடிக்கத் தடை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/ont-man-fined-4500-suspended-from-fishing-1789922994"></link>
            <id>https://canadamirror.com/article/ont-man-fined-4500-suspended-from-fishing-1789922994</id>
            <summary type="text">சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட குற்றத்திற்காக கனடாவின் தண்டர்பே நகரைச் சேர்ந்த பால் ஹர்டில் என்பவருக்கு 4,500 கனடிய டொலர் அபராதம் விதிக்கப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட குற்றத்திற்காக கனடாவின் தண்டர்பே நகரைச் சேர்ந்த பால் ஹர்டில் என்பவருக்கு 4,500 கனடிய டொலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதுடன், ஒன்ராறியோ மாகாணத்தில் மீன்பிடிக்க 5 ஆண்டுகளுக்குத் தடையும் விதிக்கப்பட்டுள்ளது.</p><p>
அணைக்கு கீழ்நோக்கிய 23 மீட்டருக்குள் சட்டவிரோதமாக மீன்பிடித்தது, தூண்டில் பயன்படுத்தாமல் வலை மூலம் 'ரெயின்போ டிரவுட்' மீன்களைப் பிடித்தது மற்றும் இயற்கை வள பாதுகாப்பு அதிகாரியிடம் தவறான வாக்குமூலம் அளித்தது ஆகிய மூன்று குற்றச்சாட்டுகளின் கீழ் இவர் குற்றவாளியாகக் காணப்பட்டார்.
</p><p>இயற்கை வள அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7d9902cb-526f-45aa-a26b-0ce742e145f0/26-6ab00eb3ee30f.webp' /></p><p>
</p><p> மே 1, 2025 அன்று சூனியா நகராட்சியில் உள்ள இஷ்கிபிபிள் க்ரீக் பகுதியில் சட்டவிரோதமாக மீன்பிடிக்கப்படுவதாகப் பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில் அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கினர்.
</p><p>ஹைவே 11/17 இல் பால் ஹர்டிலின் வாகனத்தை மறித்துச் சோதனையிட்ட அதிகாரிகள், அவர் அணைக்கு கீழ்நோக்கிய 23 மீட்டர் எல்லைக்குள் 'டிப் நெட்' வலையைப் பயன்படுத்தி மீன்களைப் பிடித்ததை உறுதி செய்தனர். 
மேலும், விசாரணையின் போது அவர் அதிகாரிகளுக்குப் பொய் தகவல்களைக் கூறி திசைதிருப்ப முயன்றதும் தெரியவந்தது.
</p><p>தண்டர்பே ஒன்ராறியோ நீதிமன்றத்தில், சமாதான நீதிபதி J. A. பெர்னார்ட் காரோன் முன்னிலையில் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டது.
</p><p>இலையுதிர் காலத்தில் சால்மன் மீன்களின் இடப்பெயர்வு காலம் தொடங்கவுள்ள நிலையில், இந்தச் சம்பவம் அனைத்து மீனவர்களுக்கும் ஒரு எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என பாதுகாப்பு அதிகாரி ரொன் ஆர்னல்ட் தெரிவித்துள்ளார்.
</p><p>இயற்கை வளங்கள் தொடர்பான சட்டவிரோதச் செயல்கள் குறித்து தகவல் தெரிவிக்க அமைச்சகத்தின் இலவச உதவி எண்ணான 1-877-847-7667 அல்லது 'க்ரைம் ஸ்டாப்பர்ஸ்' அமைப்பைத் தொடர்புகொள்ளலாம்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-20T18:58:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[அனோஜனை மீட்க அரசு முழு அளவில் செயற்படும் - பிமல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/government-will-act-fully-to-rescue-anojan-bimal-1789922689"></link>
            <id>https://jvpnews.com/article/government-will-act-fully-to-rescue-anojan-bimal-1789922689</id>
            <summary type="text">சவூதி அரேபியாவில் சட்ட நடவடிக்கைகளை எதிர்நோக்கியுள்ள இலங்கை இளைஞரான சிவராசா அனோஜனை மீட்டெடுப்பதற்கு அரசாங்கம் அதிகபட்ச தலையீட்டை செலுத்தியுள்ளதாக போக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>சவூதி அரேபியாவில் சட்ட நடவடிக்கைகளை எதிர்நோக்கியுள்ள இலங்கை இளைஞரான சிவராசா அனோஜனை மீட்டெடுப்பதற்கு அரசாங்கம் அதிகபட்ச தலையீட்டை செலுத்தியுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.</p><p></p><p> 

ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்வி பதிலளிக்கும் போதே, அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.</p><p> 

அவர் மேலும் தெரிவிக்கையில், நாங்கள் இந்த விடயம் தொடர்பில் அதிகபட்ச தலையீட்டை மேற்கொண்டு வருகிறோம் எனக் குறிப்பிட்டார்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/afe86027-14f1-42e1-b133-3f011e98238d/26-6ab00d82e7527.webp' /></p><p>வெளிவிவகார அமைச்சரும் வெளிவிவகார அமைச்சும் இதில் தலையிட்டு நடவடிக்கைகளை எடுத்துள்ளன. 

அதேபோன்று ஜனாதிபதி செயலகமும் இதில் தலையீடுகளை மேற்கொண்டு வருகிறது. </p><p>

நாங்கள் இதன் ஆரம்பக் கட்டத்திலேயே இருக்கிறோம், இதில் எவ்வித தாமதமும் ஏற்படவில்லை. </p><p>

எனினும், இவ்வாறான விடயங்களைக் கையாளும் போது குறிப்பிட்ட இராஜதந்திர நடைமுறைகளின்படியே செய்ய வேண்டும். </p><p>

ஏனெனில் அந்தந்த நாடுகளுக்கென சட்டதிட்டங்கள் காணப்படுகின்றன. </p><p>

இருப்பினும், அவரை மீட்டெடுப்பதற்கு நாங்கள் அதிகபட்சமாக தலையிட்டு நடவடிக்கை எடுப்போம் என தெரிவித்துள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-20T18:57:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[மனச்சோர்வை குறைக்க புதிய ‘Brain Stimulation Headset’ ; அமெரிக்காவில் புதிய சாதனம் அறிமுகம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/can-wearing-it-on-head-reduce-symptoms-depression-1789930591"></link>
            <id>https://canadamirror.com/article/can-wearing-it-on-head-reduce-symptoms-depression-1789930591</id>
            <summary type="text">மனச்சோர்வு அறிகுறிகளைக் குறைப்பதற்கான புதிய ‘Brain Stimulation Headset’ சாதனம் அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ஸ்வீடனைச் சேர்ந்த ‘Flow Ne...</summary>
            <content type="html"><![CDATA[<p>மனச்சோர்வு அறிகுறிகளைக் குறைப்பதற்கான புதிய ‘Brain Stimulation Headset’ சாதனம் அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
</p><p>
ஸ்வீடனைச் சேர்ந்த ‘Flow Neuroscience’ நிறுவனம் உருவாக்கியுள்ள இந்தச் சாதனம், நெற்றியில் அணிந்து சுமார் 30 நிமிடங்கள் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/32a10cc9-22c0-428d-84dd-1147009c2dbf/26-6ab02c609a163.webp' /></p><p>இந்தச் சாதனத்தின் மூலம் 10 வாரங்களுக்கு மேற்கொள்ளப்படும் சிகிச்சைக்கான கட்டணம் 2,200 அமெரிக்க டொலர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

174 பேரை உள்ளடக்கிய ஆய்வில், இந்தச் சாதனத்தைப் பயன்படுத்தி 10 வார சிகிச்சையை மேற்கொண்டவர்களில் 45 சதவீதம் பேருக்கு மனச்சோர்வு அறிகுறிகளில் குறைவு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தின் (FDA) அங்கீகாரம் பெற்றுள்ள இந்தச் சாதனத்தை, மருத்துவரின் பரிந்துரையுடன் மட்டுமே பயன்படுத்த முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-20T18:56:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[மறைந்த பிரித்தானிய இளவரசி டயானாவின் பழிவாங்கும் ஆடை: ஏலம் விட ஏற்பாடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/princess-diana-s-revenge-dress-set-to-go-auction-1789929820"></link>
            <id>https://news.lankasri.com/article/princess-diana-s-revenge-dress-set-to-go-auction-1789929820</id>
            <summary type="text">Princess Diana’s Revenge Dress Set to go Auction: &amp;nbsp;பிரித்தானிய இளவரசி டயானாவின் பழிவாங்கும் ஆடை மீண்டும் ஏலத்துக்கு வர இருப்பதாக தகவல் வெளியாகியு...</summary>
            <content type="html"><![CDATA[<p>Princess Diana’s Revenge Dress Set to go Auction: &nbsp;பிரித்தானிய இளவரசி டயானாவின் பழிவாங்கும் ஆடை மீண்டும் ஏலத்துக்கு வர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><h2> மீண்டும் ஏலத்திற்கு வரும் இளவரசி டயானாவின் ஆடை</h2><p>மறைந்த பிரித்தானிய இளவரசி டயானாவின் புகழ்பெற்ற “பழிவாங்கும் ஆடை”(Revence Dress) சுமார் 30 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.</p><p> லண்டனில் உள்ள சோதேபிஸ்(Sotheby’s) என்ற ஏல நிறுவனத்தினால் நடத்தப்படும் கண்காட்சியில் இந்த பழிவாங்கும் ஆடை வைக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0add9f7c-8abc-4acd-a833-95e67b591d11/26-6ab0295e36f3e.webp' /></p><p>லண்டனில் நேற்று தொடங்கப்பட்ட இந்த கண்காட்சி செப்டம்பர் 24ம் திகதி வரை நடைபெற உள்ளது.</p><p></p><p>லண்டனை தொடர்ந்து ஹாங்காங், ஜெனிவா போன்ற நகரங்களின் கண்காட்சிகளில் வைக்கப்பட்டு இறுதியாக 2026ம் டிசம்பர் 9ம் திகதி நியூயார்க் நகரில் நடைபெறும் ஏலத்தில் இளவரசி டயானாவின் ஆடை ஏலம் விடப்படவுள்ளது.</p><p> இப்போதைய பிரித்தானிய மன்னர் மற்றும் அப்போதைய இளவரசரான சார்லஸ் உடனான திருமணம் முறிவை சந்தித்த போது, இளவரசி டயானா சோகத்தில் மூழ்கி விடாமல், இந்த உலகத்திற்கு தன்னுடைய அழகையும், தைரியத்தை வெளிப்படுத்தும் விதமாக அணிந்த ஆடைகளை ஊடகங்கள் பழிவாங்கும் ஆடை என வர்ணித்தது குறிப்பிடத்தக்கது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3e1a6f65-0a40-4ab2-ad75-851c947bea89/26-6ab0295ee1307.webp' /></p>]]></content>
            <updated>2026-09-20T18:43:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹோர்முஸ் நீரிணையில் பதற்றம் ; கப்பல் போக்குவரத்துக்கு புதிய சிக்கலா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/tension-strait-of-hormuz-new-challenge-in-shipping-1789929550"></link>
            <id>https://canadamirror.com/article/tension-strait-of-hormuz-new-challenge-in-shipping-1789929550</id>
            <summary type="text">மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், ஈரான் மற்றும் ஓமானுக்கு இடையே அமைந்துள்ள ஹோர்முஸ் நீரிணையில் (Strait of Hormuz) கப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், ஈரான் மற்றும் ஓமானுக்கு இடையே அமைந்துள்ள ஹோர்முஸ் நீரிணையில் (Strait of Hormuz) கப்பல் போக்குவரத்து தொடர்ந்து தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது.</p><p>

உலகளாவிய எண்ணெய் வர்த்தகத்தில் முக்கியத்துவம் வாய்ந்த கடல் வழித்தடமாக ஹோர்முஸ் நீரிணை காணப்படுகிறது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ab608002-9ee8-4c0a-b27a-55f7af10c46f/26-6ab0284fed3d8.webp' /></p><p>இந்த நிலையில், மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதற்றம் காரணமாக, குறித்த கடல் வழித்தடத்தில் சர்வதேச கப்பல் போக்குவரத்து பாதிக்கப்படக்கூடும் என்ற கவலை உலக நாடுகள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
</p><p>
ஹோர்முஸ் நீரிணையில் ஏற்படும் எந்தவொரு குறிப்பிடத்தக்க இடையூறும் சர்வதேச எரிசக்தி விநியோகம் மற்றும் எண்ணெய் சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதால், அப்பகுதியில் நிலவும் நிலைமை சர்வதேச அளவில் உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டு வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p>]]></content>
            <updated>2026-09-20T18:39:18+00:00</updated>
        </entry>
    </feed>
