<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-08-31T06:08:19+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜீ தமிழில் ஹிட்டாக ஓடும் சீரியல் முடிவுக்கு வரப்போகிறது... எந்த தொடர் தெரியுமா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/zee-tamizh-hit-serial-coming-to-an-end-soon-1788149937"></link>
            <id>https://cineulagam.com/article/zee-tamizh-hit-serial-coming-to-an-end-soon-1788149937</id>
            <summary type="text">ஜீ தமிழ்இந்தியாவில் உலகம் முழுவதும் பல மொழிகளில் தரமான பொழுதுபோக்கு விஷயங்களை ஒளிபரப்பும் முன்னணி ஊடகங்களில் ஒன்றாக உள்ளது ஜீ தமிழ். 
சீரியல்கள் மூலம...</summary>
            <content type="html"><![CDATA[<h2>ஜீ தமிழ்</h2><p>இந்தியாவில் உலகம் முழுவதும் பல மொழிகளில் தரமான பொழுதுபோக்கு விஷயங்களை ஒளிபரப்பும் முன்னணி ஊடகங்களில் ஒன்றாக உள்ளது ஜீ தமிழ். </p><p>
சீரியல்கள் மூலம் சன் டிவியும், ரியாலிட்டி ஷோக்கள் மூலம் விஜய் டிவியும் கெத்து காட்டிவரும் நிலையில் ஜீ தமிழ் இரண்டிலும் கலக்க துவங்கியது. 
சரிகமப, டான்ஸ் ஜோடி டான்ஸ் போன்ற நிகழ்ச்சிகள் எல்லாம் மக்களிடம் செம பேமஸ். </p><p>அதேபோல் கார்த்திகை தீபம், வீரா, இதயம் 2, திருமாங்கல்யம், சின்னஞ்சிறு கிளியே என நிறைய சீரியல்கள் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f6a8844f-0bfa-4ec7-ac2e-971b415d2551/26-6a950786795b1.webp' /></p><h2>கிளைமேக்ஸ்</h2><p>
தற்போது ஹிட்டாக ஒளிபரப்பாகி வரும் ஒரு சீரியல் முடிவுக்கு வரப்போகும் செய்தி வெளியாகியுள்ளது. </p><p>அதாவது கடந்த 2024ம் ஆண்டு வைஷ்ணவி மற்றும் அருண் புதிய ஜோடி இணைய வீரா என்ற சீரியல் ஒளிபரப்பாகி வந்தது.
இந்த ஜோடிக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு இருக்கிறது. </p><p>முதல் பாகம் முடிவடைந்து இரண்டாம் பாகம் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வந்தது. விரைவில் வீரா சீரியல் முடிவுக்கு வரப்போவதாக தகவல்கள் வெளியாக ரசிகர்கள் வருத்தப்படுகின்றனர்.</p><p><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/p/Dcq712hzwY0/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/p/Dcq712hzwY0/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/p/Dcq712hzwY0/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by Tamil Tellywood (@tamiltellywood)</a></p></div></blockquote> <script async src="//www.instagram.com/embed.js"></script></p>]]></content>
            <updated>2026-08-31T06:00:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[மகளிர் ஆசிய கிண்ணம்; தாய்லாந்தை வீழ்த்திய இந்தியா - தீப்தி சர்மா உலக சாதனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/deepti-sharma-record-as-highest-wicket-taker-it20-1788155878"></link>
            <id>https://news.lankasri.com/article/deepti-sharma-record-as-highest-wicket-taker-it20-1788155878</id>
            <summary type="text">மகளிர் ஆசிய கிண்ண போட்டியில், இந்தியா தாய்லாந்தை வீழ்த்தியுள்ளது. 

தாய்லாந்தை வீழ்த்திய இந்தியா 

2026 மகளிர் ஆசிய கிண்ணம் கடந்த ஆகஸ்ட் 28 ஆம் தி...</summary>
            <content type="html"><![CDATA[<p>மகளிர் ஆசிய கிண்ண போட்டியில், இந்தியா தாய்லாந்தை வீழ்த்தியுள்ளது. </p><h3>

தாய்லாந்தை வீழ்த்திய இந்தியா</h3><p> 

2026 மகளிர் ஆசிய கிண்ணம் கடந்த ஆகஸ்ட் 28 ஆம் திகதி தொடங்கி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d41ae6b0-c65c-48b0-b44a-60a6bbdbd2ee/26-6a9517e81e85e.webp' /></p><p>

நேற்று நடைபெற்ற இந்தியா மற்றும் தாய்லாந்து அணிகளுக்கு இடையேயான போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற தாய்லாந்து முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. </p><p>

முதலில் துடுப்பாட்டம் ஆடிய இந்திய மகளிர் அணி, 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 159 ஓட்டங்கள் குவித்தது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/51b4b5d6-be2b-40ec-91d2-55db94cfaf72/26-6a9517e8d6829.webp' /></p><p>

அதிகபட்சமாக இந்தியா தரப்பில் சஃபாலி வர்மா 64 ஓட்டங்கள் குவித்தார். தாய்லாந்து தரப்பில் சுலீபோர்ன் லாவோமி 4 விக்கெட்களை கைப்பற்றினார். </p><p>

160 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய தாய்லாந்து மகளிர் அணி, 16.1 ஓவர்களில் 65 ஓட்டங்கள் மட்டுமே குவித்து அனைத்து விக்கெட்களையும் இழந்து ஆல் அவுட் ஆனது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/311f7354-0b99-4e07-b5dc-b921710a4864/26-6a9517e98a701.webp' /></p><p>

இதன் மூலம், 94 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்திய மகளிர் அணி வெற்றி பெற்றது. </p><h3> 

தீப்தி சர்மா உலக சாதனை </h3><p>

1.1 ஓவர்கள் வீசி ஓட்டங்கள் எதுவும் வழங்காமல், 3 விக்கெட்களை கைப்பற்றிய தீப்தி சர்மா புதிய சாதனையை படைத்துள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7e70201b-5776-4aec-8f6e-d0f66d19b9e0/26-6a9517e765acf.webp' /></p><p>

இதன் மூலம், சர்வதேச மகளிர் டி20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீராங்கனை என்ற உலக சாதனையை தீப்தி சர்மா படைத்துள்ளார்.&nbsp;</p><p></p><p>

முன்னதாக, தாய்லாந்து வீராங்கனை புத்தாவோங் 170 ஓட்டங்களுடன் முதலிடத்தில் இருந்த நிலையில், 171 விக்கெட்களை கைப்பற்றி முதலிடம் பிடித்துள்ளார். </p><p>

மேலும், ஹர்மன்பிரீத் கவுர், ஸ்மிருதி மந்தனாவுக்குப் பிறகு, 150 சர்வதேச T20 போட்டிகளில் விளையாடிய 3வது இந்திய வீராங்கனை என்ற பெருமையை தீப்தி ஷர்மா பெற்றுள்ளார்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-31T06:00:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலகின் 3-வது அதிக பொது விடுமுறைகளைக் கொண்ட நாடாக இலங்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/sri-lanka-ranks-third-1788155971"></link>
            <id>https://canadamirror.com/article/sri-lanka-ranks-third-1788155971</id>
            <summary type="text">உலகிலேயே அதிக பொது விடுமுறை நாட்களைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை 3-வது இடத்தைப் பிடித்துள்ளது.
அமெரிக்காவின் &#039;பியூ ஆராய்ச்சி மையம்&#039; (Pew Resea...</summary>
            <content type="html"><![CDATA[<p>உலகிலேயே அதிக பொது விடுமுறை நாட்களைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை 3-வது இடத்தைப் பிடித்துள்ளது.
</p><p>அமெரிக்காவின் 'பியூ ஆராய்ச்சி மையம்' (Pew Research Center) வெளியிட்டுள்ள புதிய பகுப்பாய்வு அறிக்கையின்படி இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/db02cdb5-aea2-48d2-95f8-0376d6d9cf05/26-6a95184461861.webp' /></p><p>மியான்மர் முதலிடத்தையும், பங்களாதேஷ் இரண்டாம் இடத்தையும் வகிக்கின்றன.
</p><p>ஐக்கிய நாடுகள் சபையில் உள்ள 190 உறுப்பு நாடுகளில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், உலகளாவிய சராசரி விடுமுறை நாட்களின் எண்ணிக்கை 13 ஆகும். ஆனால், 2026-ஆம் ஆண்டில் இலங்கையில் 25 நாட்கள் பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளன.
</p><p>•	மியான்மர்: 30 நாட்கள் (முதலிடம்)
</p><p>•	பங்களாதேஷ்: 29 நாட்கள் (இரண்டாமிடம்)
</p><p>•	இலங்கை: 25 நாட்கள் (மூன்றாமிடம்)
</p><p>கம்போடியா, ஈரான் மற்றும் லெபனான் ஆகிய நாடுகளும் 20-க்கும் மேற்பட்ட விடுமுறை நாட்களைக் கொண்டுள்ளன.
</p><p>சுவிட்சர்லாந்தில் 1 தேசிய விடுமுறை மட்டுமே உள்ளது (மாநில அளவில் குறைந்தது 8 விடுமுறைகள் உண்டு). போஸ்னியா மற்றும் ஹெர்ஸகோவினாவில் 4 நாட்களும், உருகுவேயில் 5 நாட்களும் மட்டுமே பொது விடுமுறைகளாக உள்ளன.
</p><p>இலங்கையில் பெரும்பாலான மக்கள் பௌத்த மதத்தைப் பின்பற்றுவதால், சந்திர சுழற்சியின் அடிப்படையில் ஒவ்வொரு பௌர்ணமி தினத்தையும்&nbsp; அரசு பொது விடுமுறையாக அறிவிப்பதே இந்த அதிக எண்ணிக்கைக்கு முதன்மை காரணமாகும். </p><p>
பிற பௌத்த நாடுகள் விசாகப் பண்டிகைக்கு மட்டும் விடுமுறை அளிக்கும் வேளையில், இலங்கை ஒவ்வொரு பௌர்ணமிக்கும் விடுமுறை அளிக்கும் தனித்துவத்தைக் கொண்டுள்ளது.
</p><p>அத்துடன், உலகளவில் கொண்டாடப்படும் கிறிஸ்துமஸ், பெரிய வெள்ளி, ரம்ஸான் (ஈத் அல்-ஃபித்ர்), பக்ரீத் (ஈத் அல்-அதா), தீபாவளி மற்றும் விசாகப் பண்டிகை போன்ற பல்வேறு மதப் பண்டிகைகளும் இலங்கையில் பொது விடுமுறைகளாகப் பின்பற்றப்படுகின்றன.
</p><p>இலங்கையின் 1971-ஆம் ஆண்டின் 29-ஆம் இலக்க விடுமுறைச் சட்டத்தின் கீழ், அரச நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் 2027-ஆம் ஆண்டிற்கான விடுமுறைப் பட்டியல் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.
</p><p>2027-ஆம் ஆண்டிலும் மொத்தம் 25 பொது மற்றும் வங்கி விடுமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
</p><p>அவற்றில் 9 விடுமுறை நாட்கள் வெள்ளி அல்லது திங்கட்கிழமைகளில் வருவதால், மக்களுக்கு 9 நீண்ட வாரயிறுதி வாய்ப்புகள் கிடைக்கின்றன.</p><p>
ஜனவரி மாதத்தில் ஜனவரி 15 மற்றும் 22 ஆகிய திகதிகளில் இருமுறை நீண்ட வாரயிறுதி அமைகிறது. மார்ச், மே, ஜூன், ஆகஸ்ட், அக்டோபர் மற்றும் டிசம்பர் மாதங்களிலும் இவ்வாய்ப்பு உள்ளது.</p><p>
மே மாதத்தில் ஹஜ் பண்டிகை திங்கட்கிழமையிலும், வெசாகப் பண்டிகை புதன் மற்றும் வியாழக்கிழமைகளிலும் வருவதால், அந்த வாரத்தில் 2 நாட்கள் மட்டுமே வேலை நாட்களாக இருக்கும்.
</p><p>எனினும், மே தினம் மற்றும் கிறிஸ்துமஸ் உட்பட 6 விடுமுறைகள் சனி அல்லது ஞாயிற்றுக்கிழமைகளில் வருவது குறிப்பிடத்தக்கது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-31T05:59:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[திடீரென இடிந்துவீழ்ந்த கொழும்பு நீதிமன்ற கட்டடத்தின் பகுதி! வழக்கு விசாரணகள் ஒத்திவைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/colombo-district-court-announced-closed-today-1788154970"></link>
            <id>https://tamilwin.com/article/colombo-district-court-announced-closed-today-1788154970</id>
            <summary type="text">கொழும்பு மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள கட்டடத்தின் ஒரு பகுதி நேற்றிரவு திடீரென இடிந்து விழுந்துள்ளது.

தற்போதைய அபாயகரமான சூழ்நிலையைக் கருத்தில் க...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள கட்டடத்தின் ஒரு பகுதி நேற்றிரவு திடீரென இடிந்து விழுந்துள்ளது.
</p><p>
தற்போதைய அபாயகரமான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, இன்று கொழும்பு மாவட்ட நீதிமன்ற வளாகத்திற்குள் வாகனங்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு சட்டத்தரணிகள் சங்கத்தின் செயலாளர் லஹிரு வெல்கம தெரிவித்துள்ளார்.</p><h2>நீதிமன்ற நடவடிக்கைகள்</h2><p>
</p><p>
மேலும், இன்று(31) நீதிமன்ற நடவடிக்கைகள் நடைபெறாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d99f9319-ec39-4004-ad1c-465bb263b7aa/26-6a951849be295.webp' /></p><p>
</p><p>
கட்டடத்தின் கட்டமைப்பில் மேலும் உறுதியற்ற தன்மை ஏற்படும் அபாயம் இருப்பதால், யாரும் கட்டடத்திற்குள் நுழையக்கூடாது என்று கொழும்பு சட்டத்தரணிகள் சங்கம் கடுமையாக எச்சரித்துள்ளது.
</p><p>
அத்துடன் இன்று விசாரணைக்காக பட்டியடலிடப்பட்டிருந்த அனைத்து வழக்குகளின் விசாரணைகளும் 2026 செப்டம்பர் 30 அன்று நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p>இதற்கிடையில், இடைக்காலத் தடை உத்தரவுகளை நீடிப்பதற்கான கோரிக்கைகள் பதிவாளரிடம் விண்ணப்பிக்கப்பட்டால் ஏற்றுக்கொள்ளப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p>இதற்கேற்ப மேலதிக தகவல்கள் அறிவிக்கப்படும் என்று சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-31T05:59:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளுக்கு எங்கள் ஆட்சியில் கட்டாயம் நீதி கிடைக்கும்! நீதி அமைச்சர் உறுதிமொழி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/harshana-nanayakkara-statement-1788155452"></link>
            <id>https://tamilwin.com/article/harshana-nanayakkara-statement-1788155452</id>
            <summary type="text">சர்வதேச வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தினத்தையொட்டி வடக்கு - கிழக்கு
உறவுகள் நடத்திய போராட்டத்தையும், மாநாட்டையும் தாம் முழுமையாக மதிப்பதாக நீதி
மற்று...</summary>
            <content type="html"><![CDATA[<p>சர்வதேச வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தினத்தையொட்டி வடக்கு - கிழக்கு
உறவுகள் நடத்திய போராட்டத்தையும், மாநாட்டையும் தாம் முழுமையாக மதிப்பதாக நீதி
மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.
</p><p>
பாதிக்கப்பட்ட மக்களின் நீண்டகால வேதனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும்
வகையில் தமது அரசாங்கம் செயற்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.</p><h2>நீதி கட்டாயம்</h2><p>

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில், காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளுக்கு எமது ஆட்சியில் கட்டாயம் நீதியைப்
பெற்றுக் கொடுப்போம். </p><p>இத்தகைய கொடூரச் செயல்களுடன் தொடர்புடைய உண்மையான
குற்றவாளிகள் உரிய முறையில் அடையாளம் காணப்பட்டு, அவர்களுக்குத் தகுந்த தண்டனை
சட்டத்தின் மூலம் வழங்கியே தீருவோம் என்றார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ca5d40a0-5635-4e32-a153-a5713850084d/26-6a95163f9aff6.webp' /></p><p>
</p><p>
வடக்கு - கிழக்கு இணைந்த வலிந்து காணாமலாக்கப்பட்டோர் உறவுகளின் சங்கத்தின்
ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் "நீதிக்கான நீள் பயணம்" எனும் மாபெரும் சர்வதேச
மாநாடு நேற்று மிகவும் எழுச்சியுடன் நடைபெற்றது. </p><p>தந்தை செல்வா கலையரங்கில்
நடைபெற்ற இம்மாநாட்டில் சர்வதேச மன்னிப்புச் சபையின் தெற்காசிய பிராந்திய
இயக்குநர் ஸ்மிருதி சிங் மற்றும் ஐ.நா. நிபுணர் அனா லொரேனா டெல்கடில்லோ பெரெஸ்
உள்ளிட்ட சர்வதேசப் பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.</p><h2>அஞ்சலி நிகழ்வு</h2><p>
</p><p>
மாநாட்டுக்கு முன்னதாக, உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலை நினைவுத்
தூபியில் அஞ்சலி நிகழ்வு நடத்தப்பட்டது.
</p><p>
அதனைத் தொடர்ந்து அங்கிருந்து பேரணியாகத் தந்தை செல்வா கலையரங்கைச் சென்றடைந்த
பின்னரே மாநாடு ஆரம்பமானது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/062659ef-c198-416c-87a9-7df1f845ad71/26-6a95163ee1b2b.webp' /></p><p>

குறிப்பாக, மாநாட்டு மண்டபத்தில் காணாமலாக்கப்பட்டவர்களின் பயன்பாட்டுப்
பொருள்கள் மற்றும் அவர்கள் விரும்பிச் சேகரித்த நினைவுப் பொருள்கள்
காட்சிப்படுத்தப்பட்டிருந்தமை அனைவரையும் உணர்ச்சிவசப்பட வைத்தது.
</p><p>
இத்தகைய சர்வதேச அளவிலான கவனயீர்ப்புகளும் போராட்டங்களும் தொடரும் சூழலில்,
அரசாங்கம் மேற்படி உறுதிமொழியை வழங்கியுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-31T05:51:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் தப்பியோடிய 24 வருட சிறை தண்டனைக் கைதி - தீவிர தேடுதல் நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/24-year-prison-sentence-escapes-from-hospital-1788153412"></link>
            <id>https://ibctamil.com/article/24-year-prison-sentence-escapes-from-hospital-1788153412</id>
            <summary type="text">யாழ்ப்பாண மேல் நீதிமன்றினால் 24 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட கைதி
தப்பியோடியுள்ள நிலையால் அவரை மீள கைது செய்ய விசேட காவல்துறை குழு தீவிர
நடவடிக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாண மேல் நீதிமன்றினால் 24 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட கைதி
தப்பியோடியுள்ள நிலையால் அவரை மீள கைது செய்ய விசேட காவல்துறை குழு தீவிர
நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.</p><p>

யாழ்ப்பாணம் இளவாலை காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த 14 வயது
சிறுமியை கடந்த 2021ஆம் ஆண்டு தவறான முறைக்கு உட்படுத்திய
குற்றத்திற்காக 24 வருட சிறைத்தண்டனை&nbsp;வழங்கப்பட்டது.</p><p>அத்துடன் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு 5 இலட்ச
ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனவும், நஷ்ட ஈட்டை வழங்க தவறின் மேலும் 3
ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என யாழ்ப்பாண மேல் நீதிமன்ற
நீதிமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்து இருந்தது.</p><p></p><h2>வைத்தியசாலையில் அனுமதி</h2><p>
</p><p>
அந்நிலையில் மறுநாள் சனிக்கிழமை திடீர் சுகவீனம் என கூறி
கைதி சிறைக்காவலர்களின் பாதுகாப்புடன் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்ட நிலையில் மறுநாள் ஞாயிற்றுக்கிழமை மதியம் குறித்த கைதி
வைத்தியசாலையில் இருந்து தப்பி சென்றுள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e9e8e508-1f45-4913-ae58-7d5262b94abb/26-6a951113b4a41.webp' /></p><p>கைதி தப்பி சென்ற நிலையில், சிறைக்காவலர்கள் தேடுதல் நடவடிக்கையில்
ஈடுபட்டுள்ளதுடன் , யாழ்ப்பாண காவல்துறை விசேட குழுவினரும் தேடுதல் நடவடிக்கையில்
ஈடுபட்டுள்ளனர்
</p><p>
வெள்ளிக்கிழமை தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்ட நிலையில் , மறுநாள் சனிக்கிழமை
வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிப்பட்ட நிலையில் , மறுநாள்
ஞாயிற்றுக்கிழமை கைது தப்பி சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-31T05:48:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Bavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரசியல்வாதிகளே வாக்குகள் மட்டும் போதுமா! பாலமீன்மடு மக்களின் குமுறல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/water-shortage-1788150949"></link>
            <id>https://ibctamil.com/article/water-shortage-1788150949</id>
            <summary type="text">மட்டக்களப்பு பாலமீன்மடு கடற்றொழிலாளர் எழுச்சி கிராமத்தில்
வாழும் 30 குடும்பங்கள் மலசல கூடம், குடிநீர், மின்சாரம் இன்றி குப்பி
விளக்கில் கடந்த 20 வரு...</summary>
            <content type="html"><![CDATA[<p>மட்டக்களப்பு பாலமீன்மடு கடற்றொழிலாளர் எழுச்சி கிராமத்தில்
வாழும் 30 குடும்பங்கள் மலசல கூடம், குடிநீர், மின்சாரம் இன்றி குப்பி
விளக்கில் கடந்த 20 வருடத்துக்கு மேலாக சொல்லனா துன்பத்துக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றனர்.</p><p>ஓலை
குடிசைகளில் வாழ்ந்து வரும் குறித்த மக்களின் குறைகளை தீர்க்காத அரசியல்வாதிகள், அதிகாரிகளா தமிழ் மக்களுக்கு தீர்வு பெற்றுக் கொடுக்க போகின்றார்கள் என கேள்வி எழுப்புகின்றனர்.</p><p>&nbsp;2004 ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி
அனர்த்தினால் இந்த வீட்டுத்திட்டம் பாதிக்கப்பட்டதை அடுத்து ஒரு சிலருக்கு
மாற்று காணிகள் வழங்கப்பட்டு சுவிஸ் கிராமத்தில் குடியேற்றப்பட்டனர்.</p><p></p><h2>முன்னாள் போராளி&nbsp;நவராஜ் </h2><p>
அதன் பின்னர் 2006ம் ஆண்டு பாதிக்கப்பட்ட கடற்றொழிலாளர் கிராமத்தில் ஒரு சிலர்
குடியேறி தொடர்ந்து 30 குடும்பங்கள் இன்று வரையும் வாழ்ந்து வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5155c0c0-4877-4001-8534-788c15a6278b/26-6a9511fe37535.webp' /></p><p> </p><p>இவர்களுக்கான காணி ஆவணங்கள் இதுவரை வழங்கப்படவில்லை.</p><p> மலசலகூடம் , குடிநீர் ,
மின்சாரம் இன்றி ஒரு நகர் பகுதியில் மக்கள் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில்
வாழ்ந்து வருகின்ற முன்னாள் போராளியும் 2 பிள்ளைகளின் தந்தையும் மீனவருமான
அமர்தலிங்கம் நவராஜ் தெரிவிக்கையில்,
</p><p>''பாலமீன்மடு கிராமத்தை பூர்வீகமாக கொண்டு பிறந்த நான், விடுதலைப் புலிகள்
அமைப்பில் இருந்து செயற்பட்டு புனர்வாழ்வு பெற்று வந்த பின்னர் திருமணம்
முடித்து, இருப்பதற்கு சொந்தமாக காணி,வீடு,மலசலகூடம் இதுவரை கிடைக்கப்பெறவில்லை.</p><p>நாங்கள் பரல் வைத்து
கிணறு அமைத்து தண்ணீர் பெற்று வருகின்றோம்.</p><p>&nbsp;எனது பிள்ளைகள் மனைவி தொழு
நோய்க்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.
</p><p>
இவ்வாறு அடிப்படை வசதி இல்லாமல் இருக்கும் நிலையில் சில அரச சார்பற்ற
நிறுவனங்கள் மலசல கூடம் அமைத்து தருவதாக முன்வந்த போதிலும் பிரதேச செயலாளர்,
கிராம உத்தியோகத்தர் இது அரச காணி, கடல் பாதுகாப்பு வலையம் என தெரிவித்து
அனுமதிதர மறுத்து வருகின்றனர்.
</p><p>
இங்கு அரசாங்க அதிபர் காரியாலயத்துக்கு அருகிலுள்ள முழு அரச காணிகளையும் பெரிய
பணக்காரர்களுக்கு வழங்குகின்றன நாங்கள் ஏழைகள் காணி இல்லாமல் வீடு இல்லாமல்
வாழுகின்ற எங்களுக்கு ஒரு 10 பேச்; காணி தருமாறு அரசாங்கத்திடம்
கேட்டுக்கொள்கிறேன்'' என தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p></p><h2>55 வயதுடைய பெண்ணின் கருத்து </h2><p>
இந்த கிராமத்தை பூர்வீகமாக கொண்ட 55 வயதுடைய பெண் ஒருவர் கூறுகையில்,</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/714962ab-7224-4160-beb5-0cd0c12e5c6b/26-6a95154574da7.webp' /></p><p> நான் அடிப்படை
வசதி எதுவும் இன்றி பல்வேறு அசௌகரியங்கள் மத்தியில் நானும் கணவரும் வாழ்ந்து
வருகின்றோம்.</p><p> இங்கு முதல் பிரச்சினை 30 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றோம். இங்கு
இளம் யுவதிகள், வயது முதிர்ந்தோர் இருக்கின்றனர். அவர்களுக்கு மலசலகூடம்,
கிணறு, மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகள் இன்றி வாழ்ந்து வருகின்றனர். </p><p>பிரதேச
செயலாளர், கிராம உத்தியோகத்தர் எந்தவொரு கவனமும் எடுக்கிறார்கள் இல்லை.&nbsp; பெண்கள் காட்டுக்குள் மலசலம் கழிக்க செல்லும் போது அதை காணொளி எடுத்து
முகநூல்களில் பதிவிடுகின்றனர்.</p><p>இதை கேட்க ஒருவரும் இல்லை, தேர்தல் காலத்தில்
மட்டும் அரசியல்வாதிகள் வருவார்கள், 'எங்களுக்கு வாக்கு போடுங்க' அதை
செய்கின்றோம் இதை செய்கின்றோம் என்று தெரிவிப்பார்கள் இதுவரை எந்த அரசியல்வாதிகளும் எதுவும் செய்ததும் இல்லை வந்ததும் இல்லை.</p><p>எனவே எங்களின் அடிப்படை
உரிமையான மலசலம், குடிநீர், மின்சாரத்தை செய்து தருமாறு ஜனாதிபதியிடம்
கேட்கின்றோம்.</p><p>
அரச காணி என தெரிவித்து கொண்டு எங்களுக்கான ஆவணங்களை தரமறுக்கின்றதுடன்
பரலில் கிணறு அமைத்து கறல் குடிநீரை பெற்று வருவது கூட பொது சுகாதார
பரிசோதகர்கள் கூட வந்து எங்களை பார்ப்பதில்லை, ஆனால் தேர்தல் வந்தால் மட்டும்
எல்லோரும் வருகின்றனர்.
</p><p>
எங்களுக்கு பக்கத்தில் அரச காணி அதிகமாக இருக்கின்றது, அதை பணம் படைத்தவர்கள்
பிடித்து வேலிநாட்டி ஒரு வியாபாரமாக விற்பனை செய்து பிழைக்கின்றனர்.</p><p> கேட்டால்
அவர்களுக்கு உரிய காணி என பொய் சொல்கின்றனர் ஆனால் அது முழுக்க அரச காணி, இது
தொடர்பாக அரச அதிகாரிகளே, அரசியல்வாதிகளே எந்தவிதமான நடவடிக்கையும்
எடுப்பதில்லை.</p><p> இந்த கடற்றொழிலாளர் எழுச்சி கிராமாக அமைக்கப்பட்ட அந்த காணியில் உல்லாச விடுதி ஒன்று
நிர்மாணிப்பதற்காக 2014ம் ஆண்டு அப்போது இருந்த பிரதேச செயலாளர் ஒரு
தனிநபருக்கு குத்தகைக்கு வழங்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு அதற்கான அனுமதி
வழங்கப்பட்டு இருந்தது.</p><p>
இதன்போது பாலைமீன்மடுவில் உள்ள பொது நல அமைப்புகள் ஆலய நிர்வாகம் அதற்கு
எதிர்த்து அதை தடை செய்ய வேண்டும் என அப்போது இருந்த ஜனாதிபதியின்
கவனத்திற்கு கொண்டு வந்ததையடுத்து 2015ம் ஆண்டு அனுமதி வழங்கிய பிரதேச
செயலாளரால் அது இரத்து செய்யப்பட்டது.
</p><p>
இன்று அந்த மக்களுக்கு காணி ஆவணங்கள் வழங்காமல் இது அனர்த்த வலயமாக அதிகாரிகள்
சுட்டிக்காட்டுகின்றனர். </p><p>எனவே அந்த இடம் ஹோட்டல் கட்ட அப்போது அனர்த்த வலயம்
இல்லை அனுமதி வழங்குகிறார்கள் அந்த ஊரிலே பிறந்த காணி இல்லாத நாங்கள்
குடியிருப்பது அனர்த்த வலயமா?</p><p>

ஏழைகள் காணி இல்லை என 10 பேச் காணியை அடைத்தால் சட்டம் வெகு வேகமாக எங்கள் மீது
பாயும்.</p><p> அதே நேரத்தில் சண்டியர்களும் அரசியல் செல்வாக்கு உள்ளவர்கள் பணபலம்
படைத்தவர்கள் காணிகளை அடாத்தாக பிடித்து விற்பனை செய்யும் போது சட்டங்கள்
அவர்களுக்கு எதிராக பாய்வது மிகவும் குறைவு.</p><p> எனவே பணக்காரர்களுக்கு ஒரு
சட்டமும் ஏழைகளுக்கு ஒரு சட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது

எனவே நீண்ட காலமாக குடியிருக்கும் 30 குடும்பங்களுக்கு காணி
அனுமதிப்பத்திரங்கள் வழங்குங்கள் அல்லது மாற்றுக் காணிகளை வழங்குங்கள். இதில்
இருந்து யாரும் எழும்ப போவதில்லை'' என்றார்.</p><p></p><h2>65 வயது&nbsp;கடற்றொழிலாளர்</h2><p>கடற்றொழிலாளரான 65 வயதுடைய வைரமுத்து அமிர்தலிங்கம் தெரிவிக்கையில்,</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d37478d1-7626-4be6-88f3-72ce5982f51a/26-6a9515465ac6f.webp' /></p><p>"இந்த
கிராமத்துக்கு வந்து 10 வருடம் குடிப்பதற்கு குடி நீரை பெறுவதற்கு பணம் இல்லாத
காரணத்தால் நில மட்டத்தில் பரல் அமைத்து குடிநீர் பெற்று வருகின்றேன் இந்த
நிலையில் கிராம உத்தியோகத்தர் வந்து உங்களுக்கு காணிக்கு உறுதி இல்லை வேறு
இடத்தில் தருகிறேன் என தெரிவித்து ஒன்றும் தரவில்லை.</p><p> நாங்கள் இந்த ஓலை
குடிசையில் வாழ்ந்து கொண்டு வருகிறோம்

குடிநீர், மலசல கூடம் இல்லை இவ்வாறு அரசாங்கம் எங்களுக்கு செய்கிறது,</p><p> 2200 ரூபா
கியுபார் போட்டு 1200 ரூபாவை தந்தார்கள், பின்னர் 4 மாதத்தில் அதனையும்
நிறுத்தினர் நாங்கள் மிகவும் கஷ்டப்படுகிறோம் அரசாங்கம் யோசித்துக் கூட
பார்க்கிறார்கள் இல்லை.
</p><p>
நான் தோணியில் சென்று கஷ்டத்தின் மத்தியில் மீன் பிடித்து வருகின்றேன் இன்று
எனது வாழ்கையை பாருங்கள் உதவித்தொகை பணமும் இல்லாது தத்தளிக்கிறேன் மனைவி மலசலம்
கழிக்க போவது என்றால் நான் காட்டுக்கு கூட்டிச் சென்று நிற்க வேண்டியுள்ளது.</p><p> எனவே ஏதாவது நன்மையை செய்து உதவுங்கள், அரசாங்கம் உதவி செய்ய வேண்டும், 'இதைவிட
என்னத்தை சொல்லமுடியும்' கடற்கரையில் ஓலை மட்டையை நாட்டி மறைத்து கொண்டு
பெண்கள் மலம் கழிக்க வேண்டிய காலமாக உள்ளது என கண்ணீர் மல்க அவர் தெரிவித்தார்".</p><p></p><h2>கணவனை இழந்த&nbsp;ஒரு பிள்ளையின் தாய் </h2><p>
</p><p>
கணவனை இழந்த ஒரு பிள்ளையின் தாயார் தெரிவிக்கையில்,</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fe351c45-bc81-465e-8092-91e39ddfc00a/26-6a9511fedde77.webp' /></p><p>"ஓலைக்குடிசையில் கடந்த 12
வருடமாக நானும் எனது மகனும் வாழ்ந்து வருகின்றேன் நான் வீட்டு வேலைக்கு
சென்று வேலை செய்து வருகின்ற வருமானத்தில் வாழ்ந்து வருவதுடன் மலசல கூடம்
குடிநீர். மின்சாரம் இன்றி குப்பி விளக்கில் எனது மகன் கல்வி கற்று
க.பொ.த.சாதாரண தரத்தில் சித்தி பெற்று உயர் தரத்திற்கு சென்றுள்ளார்.</p><p>

இது வரை எங்களுக்கு எந்த விதமான உதவிகளும் கிடைக்கவில்லை,</p><p> வீட்டுக்கு ஆவணம் கூட
இதுவரை தரவில்லை உடைந்த ஓலைக்குடிசை கூட திருத்த முடியாது துன்பப்பட்டு
வாழ்ந்து வருகிறோம். எனவே அரசாங்கம் எங்களுக்கு உதவி செய்யவும்" என்றார்.</p><p>

இவ்வாறு நகரில் இருந்து 6 கிலோமீட்டர் தூரத்தில் நகர்ப்புறத்தில் இருக்கும்
இந்த கடற்றொழிலாளர் எழுச்சி கிராம மக்களுக்கு அடிப்படை மனித உரிமை மீறல்
இடம்பெற்றுள்ளது எனவே இந்த மக்களின் அடிப்படையான குடிநீர், மலசல கூடம்,
மின்சாரம் போன்ற பிரச்சனைகளை தீர்த்து வைக்க வேண்டியது அரச அதிகாரிகள்,
மற்றும் அரசியல்வாதிகளின் கடைப்பாடு ஆகும். என்பதை சம்மந்தப்பட்டவர்கள்
கருத்தில் கொண்டு இந்த ஏழை மக்களின் சொல்லோன துன்பங்களுக்கான தீர்வை
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக பெற்றுக் கொடுக்க வேண்டும்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-31T05:46:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹார்முஸ் நீரிணையில் தாக்குதல் நடத்திய அமெரிக்கா... ஜோர்டான் மீது திருப்பியடித்த ஈரான்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/us-strikes-strait-of-hormuz-1788150472"></link>
            <id>https://news.lankasri.com/article/us-strikes-strait-of-hormuz-1788150472</id>
            <summary type="text">US attacked Larak Island to prevent launch of sea mines: கடல் கண்ணிவெடிகள் ஏவப்படுவதைத் தடுப்பதற்காக லராக் தீவில் தாக்குதல் நடத்தியதாக அமெரிக்கா.
ஹார...</summary>
            <content type="html"><![CDATA[<p>US attacked Larak Island to prevent launch of sea mines: கடல் கண்ணிவெடிகள் ஏவப்படுவதைத் தடுப்பதற்காக லராக் தீவில் தாக்குதல் நடத்தியதாக அமெரிக்கா.
</p><p>ஹார்முஸ் நீரிணையில் உள்ள ஒரு தீவு மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, ஜோர்டானில் உள்ள அமெரிக்க விமானப்படைத் தளங்கள் மீது ஈரான் பதிலடித் தாக்குதல்களை நடத்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6b7cdf89-26e4-45cd-8bcd-f3e78835fe9a/26-6a9502cae8a95.webp' /></p><p>
</p><p>சுமார் ஒரு மாத இடைவெளிக்குப் பிறகு, ஈரான் மீது மீண்டும் தாக்குதல் ஒன்றை அமெரிக்கா நடத்தியுள்ளது. கடல் கண்ணிவெடிகள் ஏவப்படுவதைத் தடுப்பதற்காகவே லராக் தீவில் தாக்குதல் நடத்தியதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. </p><p>ஹார்முஸ் நீரிணைப் பகுதிக்குள் கடல் கண்ணிவெடிகளை ஏவுவதற்கு இஸ்லாமியப் புரட்சிகரப் படைப் பிரிவினர் (IRGC) தயாராவது தெரிய வந்த நிலையில், தாக்குதல் நடத்தியதாகவும், இதில் இரண்டு ஏவுதளங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். </p><p>இதனிடையே, அமெரிக்காவின் தாக்குதலில் பல வீரர்களும் பொதுமக்களும் கொல்லப்பட்டும் காயமடைந்தும் உள்ளதாகவும், இதற்கு ஈரான் தரப்பிலிருந்து தண்டனை அளிக்கப்படும் என்றும் IRGC கூறியதாக அந்நாட்டு அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. </p><p>இதனையடுத்து, ஜோர்டானில் அமெரிக்காவால் இயக்கப்படும் கிங் ஹுசைன் மற்றும் அல்-அஸ்ராக் ஆகிய விமானப்படைத் தளங்களில் இருந்த தொழில்நுட்பக் கட்டமைப்பு, பராமரிப்பு வசதிகள் மற்றும் எதிரி நாட்டு போர் விமானங்களின் நிலைகளை IRGC குறிவைத்தது.</p><p></p><p> </p><p>அமெரிக்கா தனது தாக்குதலுக்கான விலையை பொருளாதார ரீதியாகவும் இராணுவ ரீதியாகவும் கொடுக்கும் என ஈரான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> அமெரிக்கா தரப்பில் இருந்து ட்ரோன் தாக்குதல் முன்னெடுத்துள்ளதாகவும், அமெரிக்காவின் mq-9 ட்ரோன் ஒன்றை ஹார்முஸ் நீரிணை மேலே தாக்கி அழித்ததாகவும் IRGC தெரிவித்துள்ளது. </p><p>இதனிடையே, ஞாயிற்றுக்கிழமை இரவு, ஜோர்டானில் உள்ள அமெரிக்கப் படைகள் மீது வந்த அனைத்து ஏவுகணைகளும் இடைமறிக்கப்பட்டுவிட்டதாகவும், இதுவரை குறிப்பிடத்தக்க பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை என்றும் ஒரு அமெரிக்க அதிகாரி கூறியதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/32d3e5a3-ad51-4575-9bbd-79e4139f4ce1/26-6a9502ca3aa8b.webp' /></p><p> </p><p>லராக் தீவு மீது தாக்குதல் நடந்த சில மணிநேரங்களுக்குப் பிறகு, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சமூக ஊடகப் பதிவு ஒன்றில், ஈரானின் எரிசக்தி மையமான கார்க் தீவு தரைமட்டமாகத் தகர்க்கப்பட்டு வருகிறது என்று குறிப்பிட்டுள்ளார். </p><p>ஆனால் வழக்கம்போல மேலதிக விவரங்கள் எதையும் அவர் அளிக்கவில்லை. ஹார்முஸ் நீரிணையின் சர்வதேசப் பகுதிகளில் இருந்த அனைத்து கண்ணிவெடிகளும் அகற்றப்பட்டன என்றும், </p><p>புதிதாகக் கண்ணிவெடிகளை வைக்கும் எந்தவொரு கப்பலோ அல்லது படகோ அழிக்கப்படும் என்று ஈரானிடம் தெரிவிக்கப்பட்டதாகவும் டொனால்ட் ட்ரம்ப் கடந்த வாரம் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-31T05:45:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் 24 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட கைதி தப்பியோட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/prisoner-sentenced-24-years-jail-escapes-in-jaffna-1788155211"></link>
            <id>https://jvpnews.com/article/prisoner-sentenced-24-years-jail-escapes-in-jaffna-1788155211</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;யாழ்ப்பாண மேல் நீதிமன்றினால் 24 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட கைதி தப்பியோடியுள்ள நிலையால் அவரை மீள கைது செய்ய விசேட பொலிஸ் குழு தீவிர ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;யாழ்ப்பாண மேல் நீதிமன்றினால் 24 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட கைதி தப்பியோடியுள்ள நிலையால் அவரை மீள கைது செய்ய விசேட பொலிஸ் குழு தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.</p><p>

யாழ்ப்பாணம் இளவாலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமியை கடந்த 2021ஆம் ஆண்டு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றத்திற்காக 24 வருட சிறைத்தண்டனையும் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு 5 இலட்ச ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனவும்&nbsp;தீர்ப்பளித்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ba1ef7ed-572c-47b2-a399-4305c88c2858/26-6a95154d3e28b.webp' /></p><h2>&nbsp;பாலியல் வன்புணர்வு</h2><p>நஷ்ட ஈட்டை வழங்க தவறின் மேலும் 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தது.
</p><p>
அந்நிலையில் மறுநாள் சனிக்கிழமை திடீர் சுகவீனம் என கூறி கைதி சிறைக்காவலர்களின் பாதுகாப்புடன் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மறுநாள் ஞாயிற்றுக்கிழமை மதியம் குறித்த கைதி வைத்தியசாலையில் இருந்து தப்பி சென்றுள்ளார்.
</p><p>
கைதி தப்பி சென்ற நிலையில் சிறைக்காவலர்கள் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதுடன் யாழ்ப்பாண பொலிஸ் விசேட குழுவினரும் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்
</p><p>
வெள்ளிக்கிழமை தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்ட நிலையில் மறுநாள் சனிக்கிழமை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிப்பட்ட நிலையில் மறுநாள் ஞாயிற்றுக்கிழமை கைது தப்பி சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-08-31T05:43:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Bavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மட்டக்களப்பில் 20 வருடமாக துன்பப்படும் மக்கள் : கண்டு கொள்ளாத அரசியல்வாதிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/people-batticaloa-have-been-suffering-for-20-years-1788152655"></link>
            <id>https://tamilwin.com/article/people-batticaloa-have-been-suffering-for-20-years-1788152655</id>
            <summary type="text">மட்டக்களப்பு நகரில் இருந்து 6 கிலோமீட்டர் தூரத்தில் கடற்கரையை அண்டிய
பகுதியில் கடந்த 2000ஆம் ஆண்டு மீனவர் எழுச்சி கிராமம் 50 வீட்டுத்திட்டம்
எனும் ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>மட்டக்களப்பு நகரில் இருந்து 6 கிலோமீட்டர் தூரத்தில் கடற்கரையை அண்டிய
பகுதியில் கடந்த 2000ஆம் ஆண்டு மீனவர் எழுச்சி கிராமம் 50 வீட்டுத்திட்டம்
எனும் பெயர் சூட்டப்பட்டு உருவாக்கி குடியேற்றப்பட்டு மக்களிடம்
கையளிக்கப்பட்டது. </p><p>இந்த நிலையில் 2004ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி
அனர்த்தினால் இந்த வீட்டுத்திட்டம் பாதிக்கப்பட்டதை அடுத்து ஒரு சிலருக்கு
மாற்று காணிகள் வழங்கப்பட்டு சுவிஸ் கிராமத்தில் குடியேற்றப்பட்டனர்.
</p><p>
அதன் பின்னர் 2006ம் ஆண்டு பாதிக்கப்பட்ட மீனவர் கிராமத்தில் ஒரு சிலர்
குடியேறி தொடர்ந்து 30 குடும்பங்கள் இன்று வரையும் வாழ்ந்து வருகின்றனர்.</p><h2>அடிப்படை வசதிகள் இன்றி&nbsp;</h2><p>இவர்களுக்கான காணி ஆவணங்கள் இதுவரை வழங்கப்படவில்லை. மலசலகூடம், குடிநீர்,
மின்சாரம் இன்றி ஒரு நகர் பகுதியில் மக்கள் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில்
வாழ்ந்து வருகின்ற முன்னாள் போராளியும் 2 பிள்ளைகளின் தந்தையும் கடற்றொழிலாளியுமான
அமர்தலிங்கம் நவராஜ் தெரிவிக்கையில்.
</p><p>
நான் பாலமீன்மடு கிராமத்தை பூர்வீகமாக கொண்டு பிறந்த நான் விடுதலைப் புலிகள்
அமைப்பில் இருந்து செயற்பட்டு புனர்வாழ்வு பெற்று வந்த பின்னர் திருமணம்
முடித்து நான் இருப்பதற்கு சொந்தமாக காணி, வீடு, மலசலகூடம் இல்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aef11231-6680-4412-b82f-463f11e80ee1/26-6a951257b4415.webp' /></p><p> பரல் வைத்து
கிணறு அமைத்து தண்ணீர் பெற்று வருகின்றோம். அத்துடன் எனது பிள்ளைகள் மனைவி தொழு
நோய்க்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.&nbsp;</p><p>இவ்வாறு அடிப்படை வசதி இல்லாமல் இருக்கும் நிலையில் சில அரச சார்பற்ற
நிறுவனங்கள் மலசல கூடம் அமைத்து தருவதாக முன்வந்த போதிலும் பிரதேச செயலாளர்,
கிராம உத்தியோகத்தர் இது அரச காணி, கடல் பாதுகாப்பு வலையம் என தெரிவித்து
அனுமதிதர மறுத்து வருகின்றனர்.</p><p>

இங்கு அரசாங்க அதிபர் காரியாலயத்துக்கு அருகிலுள்ள முழு அரச காணிகளையும் பெரிய
பணக்காரர்களுக்கு வழங்குகின்றன.</p><p> நாங்கள் ஏழைகள் காணி இல்லாமல் வீடு இல்லாமல்
வாழுகின்ற எங்களுக்கு ஒரு 10 பேச் காணி தருமாறு அரசாங்கத்திடம்
கேட்டுக்கொள்கிறேன்.</p><p>இந்த கிராமத்தை பூர்வீகமாக கொண்ட 55 வயதுடைய பெண் கூறுகையில், நான் அடிப்படை
வசதி எதுவும் இன்றி பல்வேறு அசௌகரியங்கள் மத்தியில் நானும் கணவரும் வாழ்ந்து
வருகின்றேன்.</p><p>இங்கு முதல் பிரச்சினை 30 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றோம். இங்கு
இளம் யுவதிகள், வயது முதிர்ந்தோர் இருக்கின்றனர். அவர்களுக்கு மலசலகூடம்,
கிணறு, மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகள் இன்றி வாழ்ந்து வருகின்றனர். </p><h2>அரசாங்கம் உதவி செய்ய வேண்டும்</h2><p>தேர்தல் காலத்தில்
மட்டும் அரசியல்வாதிகள் வருவார்கள் எங்களுக்கு வாக்கு போடுங்க அதை
செய்கின்றோம். இதை செய்கின்றோம் என்று தெரிவிப்பார்கள் இதுவரை எந்த அரசியல்
வாதிகளும் எதுவும் செய்ததும் இல்லை வந்ததும் இல்லை. </p><p>எனவே எங்களின் அடிப்படை
உரிமையான மலசலம், குடிநீர், மின்சாரத்தை செய்து தருமாறு ஜனாதிபதியிடம்
கேட்கின்றோம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bad0119b-c27e-46ca-bd3e-83f6090af824/26-6a95125893d56.webp' /></p><p>எங்களுக்கு பக்கத்தில் அரச காணி அதிகமாக இருக்கின்றது. அதை பணம் படைத்தவர்கள்
பிடித்து வேலிநாட்டி ஒரு வியாபாரமாக விற்பனை செய்து பிழைக்கின்றனர்.</p><p>கேட்டால்
அவர்களுக்கு உரிய காணி என பொய் சொல்கின்றனர். எனவே நீண்ட காலமாக குடியிருக்கும் 30 குடும்பங்களுக்கு காணி
அனுமதிப்பத்திரங்கள் வழங்குங்கள் அல்லது மாற்றுக் காணிகளை வழங்குங்கள். இதில்
இருந்து யாரும் எழும்ப போவதில்லை என்றார்.</p><p>கடற்றொழிலாளியான 65 வயதுடைய வைரமுத்து அமிர்தலிங்கம் தெரிவிக்கையில், இந்த
கிராமத்துக்கு வந்து 10 வருடம் குடிப்பதற்கு குடி நீரை பெறுவதற்கு பணம் இல்லாத
காரணத்தால் நில மட்டத்தில் பரல் அமைத்து குடிநீர் பெற்று வருகின்றேன்.</p><p>இந்த
நிலையில் கிராம உத்தியோகத்தர் வந்து உங்களுக்கு காணிக்கு உறுதி இல்லை வேறு
இடத்தில் தருகிறேன் என தெரிவித்து ஒன்றும் தரவில்லை.</p><p>நாங்கள் இந்த ஓலை
குடிசையில் வாழ்ந்து கொண்டு வருகிறோம்.&nbsp; குடிநீர், மலசல கூடம் இல்லை இவ்வாறு அரசாங்கம் எங்களுக்கு செய்கிறது.</p><p>நான் தோணியில் சென்று கஷ்டத்தின் மத்தியில் மீன் பிடித்து வருகின்றேன். இன்று
எனது வாழ்கையை பாருங்கள் கியுபார் பணமும் இல்லாது தத்தளிக்கிறேன்.&nbsp;</p><p> எனவே ஏதாவது நன்மையை செய்து உதவுங்கள். அரசாங்கம் உதவி செய்ய வேண்டும் என கண்ணீர் மல்க அவர் தெரிவித்தார்.</p><h2>எந்தவிதமான உதவிகளும் கிடைக்காமல்</h2><p>கணவனை இழந்த ஒரு பிள்ளையின் தாயார் தெரிவிக்கையில், ஓலைக்குடிசையில் கடந்த 12
வருடமாக நானும் எனது மகனும் வாழ்ந்து வருகின்றோம்.</p><p>நான் வீட்டு வேலைக்கு
சென்று வேலை செய்து வருகின்ற வருமானத்தில் வாழ்ந்து வருவதுடன் மலசல கூடம்
குடிநீர். மின்சாரம் இன்றி குப்பி விளக்கில் எனது மகன் கல்வி கற்று
க.பொ.த.சாதாரண தரத்தில் சித்தி பெற்று உயர் தரத்திற்கு சென்றுள்ளார்.
</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/34877ec8-5cae-4850-82b9-fb5013c04ad2/26-6a9512596e745.webp' /></p><p>இதுவரை எங்களுக்கு எந்தவிதமான உதவிகளும் கிடைக்கவில்லை. வீட்டுக்கு ஆவணம் கூட
இதுவரை தரவில்லை.</p><p> உடைந்த ஓலைக்குடிசை கூட திருத்த முடியாது துன்பப்பட்டு
வாழ்ந்து வருகிறோம். எனவே அரசாங்கம் எங்களுக்கு உதவி செய்யவும் என்றார்.
</p><p>
இவ்வாறு நகரில் இருந்து 6 கிலோமீட்டர் தூரத்தில் நகர்ப்புறத்தில் இருக்கும்
இந்த மீனவர் எழுச்சி கிராம மக்களுக்கு அடிப்படை மனித உரிமை மீறல்
இடம்பெற்றுள்ளது </p><p>எனவே இந்த மக்களின் அடிப்படையான குடிநீர். மலசல கூடம்,
மின்சாரம் போன்ற பிரச்சினைகளை தீர்த்து வைக்க வேண்டியது அரச அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளின் கடப்பாடு ஆகும் என்பதை சம்மந்தப்பட்டவர்கள்
கருத்தில் கொண்டு இந்த ஏழை மக்களின் சொல்லோன துன்பங்களுக்கான தீர்வை
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக பெற்றுக் கொடுக்க வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/86d39f03-5208-465f-a483-ae315bf6c257/26-6a95142d71595.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3f411c6b-231c-47a1-b02c-f442380df14d/26-6a95142e4821a.webp' /></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-31T05:43:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹோர்முஸ் நீரிணையில் அமெரிக்க MQ-9 ட்ரோனை சுட்டு வீழ்த்திய ஈரான்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/iran-shoots-down-us-drone-over-hormuz-strait-1788153562"></link>
            <id>https://ibctamil.com/article/iran-shoots-down-us-drone-over-hormuz-strait-1788153562</id>
            <summary type="text">ஹோர்முஸ் நீரிணைப் பகுதிக்கு மேல் பறந்து கொண்டிருந்த அமெரிக்காவின் MQ-9 ரீப்பர் (MQ-9 Reaper) ட்ரோனை வான் பாதுகாப்பு ஏவுகணைகள் மூலம் சுட்டு வீழ்த்தியுள...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹோர்முஸ் நீரிணைப் பகுதிக்கு மேல் பறந்து கொண்டிருந்த அமெரிக்காவின் MQ-9 ரீப்பர் (MQ-9 Reaper) ட்ரோனை வான் பாதுகாப்பு ஏவுகணைகள் மூலம் சுட்டு வீழ்த்தியுள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளார்.</p><p>ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படை (IRGC) இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p>இந்தநிலையில் சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்க ட்ரோன் பாரசீக வளைகுடா கடற்பகுதியில் விழுந்து நொறுங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">வான் பாதுகாப்பு</span></p><p>ஈரானின் நவீன வான் பாதுகாப்பு அமைப்புகள் ஹோர்முஸ் நீரிணை வான்வெளியில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த நீண்ட தூர அமெரிக்க ட்ரோனைத் துல்லியமாக அடையாளம் கண்டு ஏவுகணைத் தாக்குதல் நடத்தி இவ்வாறு அழித்துள்ளன.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f3179777-b9e5-4423-89f6-65e7ac72c6e4/26-6a951289cccc7.webp' /></p><p>இந்தநிலையில் தாக்குதலுக்கு இலக்கான ட்ரோன் கட்டுப்பாட்டை இழந்து பாரசீக வளைகுடா நீரில் மூழ்கியுள்ளதாக IRGC பொது உறவுகள் அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது.</p><p>ஹோர்முஸ் நீரிணைப் பகுதியில் அமெரிக்கக் கடற்படைப் படைகளுக்கும் ஈரானியப் படைகளுக்கும் இடையே கடற்படைத் தடைகள் மற்றும் இராணுவ மோதல்கள் தீவிரமடைந்து வரும் சூழலில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-31T05:39:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[எரிபொருள் விலைகளில் மாற்றம்! அடுத்தடுத்து வெளியாகவுள்ள அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/september-month-fuel-price-change-1788153335"></link>
            <id>https://tamilwin.com/article/september-month-fuel-price-change-1788153335</id>
            <summary type="text">நேற்று (30) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் மற்றும் லங்கா ஐஓசி நிறுவனமும் எரிபொருட்களின் விலைகளை திருத்துவதற்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நேற்று (30) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் மற்றும் லங்கா ஐஓசி நிறுவனமும் எரிபொருட்களின் விலைகளை திருத்துவதற்கு தீர்மானித்துள்ளது. </p><p>

மாதாந்த எரிபொருள் விலைத் திருத்தத்திற்கு அமைய இந்த திருத்தம் நேற்று (30) நள்ளிரவு முதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p><h2>எரிபொருட்களின் விலைகளில் மாற்றம்</h2><p>
</p><p>
இதன்படி இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம், 414 ரூபாயாக காணப்பட்ட 92 ரக ஒக்டேன் பெட்ரோல் லீற்றரின் விலை 15 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 399 ரூபாவாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4c5847af-c66b-4e4a-a704-ddffb638744c/26-6a9512512de69.webp' /></p><p> </p><p>

அத்துடன் 495 ரூபாயாக நிலவிய ஒக்டேன் 95 ரக பெட்ரோல் லீற்றரின் விலை 20 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 475 ரூபாவாகும்.</p><p> 

ஏனைய எரிபொருட்களின் விலைகளில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் அறிவித்திருந்துள்ளது.</p><h2>லங்கா ஐஓசி நிறுவன விலை திருத்தம்</h2><p>
</p><p>
இந்த விலை திருத்தத்தினையடுத்து லங்கா ஐஓசி நிறுவனம், ஒரு லீற்றர் ஒக்டென் 92 பெட்ரோலின் விலை 15 ரூபாவினால் குறைத்து, அதன் புதிய விலை 399 ரூபாவாக நிர்ணயித்துள்ளது.
</p><p>
ஒக்டென் 95 பெட்ரோலின் விலை 20 ரூபாவால் குறைக்கப்பட்டு 475 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.</p><p>

ஏனைய எரிபொருள் வகைகளின் விலைகளில் மாற்றங்கள் எதுவும் செய்யப்படவில்லை என்றும் அறிவித்துள்ளது.</p><p>இதற்கமைய, பாடசாலை பேருந்து கட்டணம், முச்சக்கரவண்டி கட்டணம், எரிவாயு விலை போன்றவற்றில் அடுத்தடுத்து&nbsp; திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.</p><p>&nbsp;</p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-31T05:34:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Tony</name>
            </author>
            <title type="text"><![CDATA[வாய் வைத்து தண்ணீர் குடித்த கயாடு, உடனே அருகில் இருந்த நடிகை செய்த செயலை பாருங்க]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/kayadu-lohar-and-samyuktha-trending-video-1788150432"></link>
            <id>https://cineulagam.com/article/kayadu-lohar-and-samyuktha-trending-video-1788150432</id>
            <summary type="text">கயாடு லோஹர்&amp;nbsp;கயாடு தற்போது தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாகிவிட்டார். சூர்யா, நானி, துல்கர் சல்மான் என அனைத்து மொழி முன்னணி நடிகர்களுடனும் ...</summary>
            <content type="html"><![CDATA[<h2>கயாடு லோஹர்&nbsp;</h2><p>கயாடு தற்போது தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாகிவிட்டார். <a href="https://www.youtube.com/watch?v=JTHZCJ8Rhxg&amp;t=2s" target="_blank">சூர்யா</a>, நானி, துல்கர் சல்மான் என அனைத்து மொழி முன்னணி நடிகர்களுடனும் ஜோடியாக இவர் நடித்து வருகிறார்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6b85379e-e9f0-46dc-863a-6dc2f0593856/26-6a9502a366d50.webp' /></p><p>அதிலும் இவர் நடிப்பில் வெளியான ட்ராகன், இதயம் முரளி ஆகிய இரண்டு படங்களும் செம ஹிட் ஆக, இவரின் மார்க்கெட் நன்றாக உயர்ந்துள்ளது. இவர் துல்கருக்கு ஜோடியாக நடித்த ஐயம் கேம் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.</p><p></p><h2>&nbsp;நடிகை செய்த செயல்</h2><p> </p><p>

அப்போது நடிகை சம்யுக்தா நடிகர் கதிர், கயாடு எல்லோரும் நிற்க ஒரு தண்ணீர் பாட்டிலை எடுத்து எல்லோரும் ஒவ்வொரு வாய் குடித்தனர், பாட்டிலில் வாய் படாமல், ஆனால், கயாடு வாய் வைத்து குடிக்க, பிறகு எல்லோரும் இதை குடிக்க வேண்டுமே என ஒரு நொடி யோசித்து கயாடு மன்னிப்பு கேட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d0f1866e-b893-4f01-8b87-3c5e61f8727c/26-6a9502a41df21.webp' /></p><p>

எல்லோரும் பரவாயில்லை என சொல்ல உடனே அருகில் இருந்த சம்யுக்தா பாட்டிலை வாங்கி துடைத்து கதிரிடம் கொடுத்தார். இந்த தருணம் தற்போது செம ட்ரெண்ட் ஆகி வருகிறது.</p><p><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="ta" dir="ltr">Samyukta Viswanath: Possessiveness at Peak over Kayadu Lohar <br><br>சைலண்ட் பொஸசிவ்னஸ் on full display! 👀 நாம விரும்புறவங்க முன்னாடிதான் இந்த மாதிரி குட்டி குட்டி பொறாமை வெளிப்படும். Kayadu &amp; Samyuktha... ஏதோ சீக்ரெட்டா சம்பவம் வெந்துட்டு இருக்கு போலயே! 🕵️‍♂️🔥 <a href="https://t.co/pqnubtzJea">pic.twitter.com/pqnubtzJea</a></p>&mdash; 🔥 Satz 🔥 (@thala_speaks) <a href="https://x.com/thala_speaks/status/2093977076193747334?ref_src=twsrc%5Etfw">August 30, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p>]]></content>
            <updated>2026-08-31T05:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Tony</name>
            </author>
            <title type="text"><![CDATA[பேன் இந்தியா ஸ்டார் யஷ்-க்கு இப்படி ஒரு நிலைமையா..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/yash-toxic-movie-box-office-1788145697"></link>
            <id>https://viduppu.com/article/yash-toxic-movie-box-office-1788145697</id>
            <summary type="text">பேன் இந்தியா பீவர் வந்து ஒட்டுமொத்த முன்னணி நடிகர்களும் பெரிய பட்ஜெட் படங்களில் நடித்து வருகின்றனர். அந்த வகையில் கே ஜி எப் ஹிட்டுக்கு பிறகு கீது மோகன...</summary>
            <content type="html"><![CDATA[<p>பேன் இந்தியா பீவர் வந்து ஒட்டுமொத்த முன்னணி நடிகர்களும் பெரிய பட்ஜெட் படங்களில் நடித்து வருகின்றனர். </p><p>அந்த வகையில் கே ஜி எப் ஹிட்டுக்கு பிறகு கீது மோகன் தாஸ் இயக்கத்தில் யஷ் நடித்த டாக்சிக் படம் கடந்த வாரம் வெளிவந்தது. இந்த படத்தின் மீது விண்ணை முட்டும் அளவிற்கு எதிர்பார்ப்பு இருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c320ebb3-c3d4-4814-b8e4-0ebfee054bcd/26-6a94f0241968a.webp' /></p><p> </p><p>ஆனால், படமோ எதிர்பார்த்தது போல் இல்லாமல், மிக மோசமாம விமர்சனங்கள் பெற்றது. இதனால் இப்படம் முதல் நாள் ரூ 150 கோடி வசூல் செய்ய, 5 நாள் முடிவில் வெறும் 250 கோடி தான் வசூல் செய்துள்ளது.</p><p> இப்படம் சுமார் 800 கோடி வசூல் செய்தால் தான் லாபம் என்ற நிலையில், தற்போது உள்ள நிலவரப்படி ரூ 350 கோடி தான் இறுதி வசூல் வரும் என தெரிகிறது. இதனால் யஷ்-ன் டாக்சிக் மிகப்பெரிய தோல்வி படமாக அமையும் என தெரிகிறது.</p>]]></content>
            <updated>2026-08-31T05:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வடக்கு சைப்ரஸ் கடற்பகுதியில் பயணிகள் படகு கவிழ்ந்து விபத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/passenger-boat-capsizes-coast-of-northern-cyprus-1788154156"></link>
            <id>https://canadamirror.com/article/passenger-boat-capsizes-coast-of-northern-cyprus-1788154156</id>
            <summary type="text">&amp;nbsp; வடக்கு சைப்ரஸ் கடற்பகுதியில் பயணிகள் படகு கவிழ்ந்ததில் குறைந்தது 8 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 18 பேர் காணாமல் போயுள்ளதாக அங்குள்ள அதிகாரிக...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; வடக்கு சைப்ரஸ் கடற்பகுதியில் பயணிகள் படகு கவிழ்ந்ததில் குறைந்தது 8 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 18 பேர் காணாமல் போயுள்ளதாக அங்குள்ள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
</p><p>


கைரேனியா கடற்கரை நகரிலிருந்து புறப்பட்ட குறித்த படகில் 259 பயணிகள் மற்றும் 8 பணியாளர்கள் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3b09ff2e-0904-4cef-a20d-5c2a9bd04e3c/26-6a95112da786f.webp' /></p><p>

மோசமான வானிலை மற்றும் கடும் அலைகள் காரணமாக படகுக்குள் நீர் புகுந்து அது கவிழ்ந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
</p><p>


பெரும்பாலான பயணிகள் மீட்கப்பட்டுள்ள நிலையில், காணாமல் போனவர்களைத் தேடும் பணிகள் துருக்கி அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. </p><p>



இச்சம்பவம் தொடர்பில் படகின் தளபதியும் 7 பணியாளர்களும் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-31T05:26:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலகமே அழிந்தாலும் வாழக்கூடிய உயிரினம் இதுதான்.. விஞ்ஞானிகள் சொல்லும் தகவல்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/cockroach-and-its-survival-secrets-1788086392"></link>
            <id>https://manithan.com/article/cockroach-and-its-survival-secrets-1788086392</id>
            <summary type="text">இந்த உலகத்தில் அணு வெடிப்பு நிலநடுக்கம் சுனாமி என எவ்வளவு பெரிய பேரழிவு வந்தாலும் அசராமல் பிழைத்துக் கொள்ளும் ஒரு உயிரினம் உள்ளது அது தான் கரப்பான் பூ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்த உலகத்தில் அணு வெடிப்பு நிலநடுக்கம் சுனாமி என எவ்வளவு பெரிய பேரழிவு வந்தாலும் அசராமல் பிழைத்துக் கொள்ளும் ஒரு உயிரினம் உள்ளது அது தான் கரப்பான் பூச்சி. </p><p>அதாவது, எந்த பிரச்சனைகளில் இருந்தும் தப்பித்து வாழக்கூடிய திறன் இருப்பதாக விஞ்ஞானிகள் சொல்கிறார்கள். டைனோசர்கள் பூமிக்கு வருவதற்கு பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பாகவே 32 ஆண்டுகளாக இவை பூமியில் வாழ்ந்து வருகின்றன. அதைப்பற்றி பார்ப்போம். </p><p>2026 ஆம் ஆண்டு புதிய தொடக்கத்திலிருந்து மத்திய கிழக்கு நாடுகளில் ஓர் பதற்றம், புயல், பூகம்பம் என இயற்கை பேரழிவுகள் அவ்வப்போது நடந்து வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/be5923fa-0e95-41af-9245-d51873a9b893/26-6a94087a11226.webp' /></p><p></p><p> அந்த வகையில், சில நாட்களுக்கு முன்பாக கூட நேபாளம் திபெத் எல்லையில் பனிப்பாறைகள் சரிந்து திடீர், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளப்பெருக்கால் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தது எல்லோரையும் சோகத்தில் ஆழ்த்திருக்கிறது. </p><h3>பேரழிவில் உயிர் வாழும் உயிரினம்:
</h3><p>நேபாளத்தில் கொத்துக்கொத்தாக உயிரிழந்த மனிதர்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து இந்த பகுதிகயில் மீட்டு பணிகள் இன்னும் நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் உலக அளவில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. </p><p>அந்த வகையில், போர் பனிமழைசரிவு, இயற்கை பேரழிவுகள் என இத்தனையும் தாண்டி இவ்வளவு காலம் சிறிய பூச்சி ஒன்று அழியாமல் பிழைத்து இருக்கின்றன என்றால் நம்ப முடிகிறதா? அதுதான் நம் அன்றாட வாழ்க்கையில் பயணிக்க கூடிய கரப்பான் பூச்சி.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fdcb9257-dc2b-4382-9923-0864aca79d3b/26-6a94087ac75b3.webp' /></p><h3> எதையும் செரிக்கும் வயிறு: </h3><p>கரப்பான் பூச்சிகள் உணவுகளை பற்றி கவலைப்படுவதே கிடையாது. சாதாரண உணவுகள் கிடைக்காத போதும் மர பட்டை, காகிதம், பசைகள், சோப்பு, முடி, தோல் பொருட்கள் துணி என எதை வேண்டுமானாலும் சாப்பிட்டு உயிர் வாழும். இவற்றின் வயிற்றில் இருக்கக்கூடிய சிறப்பு பாக்டீரியாக்கள் இந்த விசித்திர பொருட்களை செரித்து சத்துக்களாக மாற்றுகிறது. </p><p>அதனால் ஒரு சாதாரண கரப்பான் பூச்சி தண்ணீர் இல்லாமல் ஒரு வாரமும். உணவே இல்லாமல் ஒரு மாதத்திற்கு மேலாக உயிர் வாழ முடியும் என்று சொல்லப்படுகிறது. அதாவது, தகுந்த சூழலுக்கு ஏற்ப உடலின் வளர்ச்சிதை மாற்றத்தை குறைத்து ஆற்றலை சேமித்துக் கொள்ளும் என்று சொல்கிறார்கள்.</p><h3> தலை போனாலும் பிழைக்கும்:</h3><p> கரப்பான் பூச்சியை பொருத்தவரை தலை துண்டிக்கப்பட்ட பிறகும் கூட ஒரு கரப்பான் பூச்சியால் ஒரு வாரம் வரை உயிர் வாழ முடியும் என்று சொல்கிறார்கள். மனிதர்களைப் போல இவை மூக்கு அல்லது வாயால் மூச்சு விடுவதில்லை. </p><p>உடலில் பக்கவாட்டில் உள்ள சிறிய துளைகள் வழியாகவே ஆக்ஸிஜன் சுவாசிக்கின்றனர். இது தலை இல்லாததால் தண்ணீர் குடிக்க முடியாமல் ஏற்படக்கூடிய நீர் சத்து குறைபாட்டால் மட்டுமே இறுதியில் இறந்து போகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0433791d-b151-4cd3-80a9-43113b234bc6/26-6a94087b7cd33.webp' /></p><p></p><p> </p><h3>கதிர் வீச்சை தாங்கும் சக்தி: </h3><p>பூமியில் அணு ஆயுதப் போர் வந்தாலும் கூட கரப்பான் பூச்சி மட்டும் மிஞ்சும் என ஒரு பேச்சு உண்டு. அதாவது, இவை மனிதர்களை விட 15 மடங்கு அணுக்கதிர்வீச்சை தாங்கக்கூடிய சக்தி பெற்றதாம். இவற்றின் செல்லுலார் பிரிவு மிக மெதுவாக நடப்பதால் கதிர்வீழ்ச்சியால் இவற்றின் dna அவ்வளவு எளிதில் பாதிக்கப்படுவதில்லை.</p><h3> நெகிழும் உடல் அமைப்பு:</h3><p> இவற்றினுடைய வெளிச்சட்டகம் மிகவும் நெகிழ்வு தன்மை கொண்டது. இவை தன் உடலில் 25% வரை குறைத்துக் கொண்டு மிகவும் குறுகிய சந்துக்கள், சுவர்களின் விரிசல்களில் கூட லாபகமாக ஒளிந்து கொள்ளுமாம். நாம் தெளிக்கும் பூச்சிக்கொல்லி மருந்துகளை எதிர்த்து வாழும் வகையில் இவை தங்கள் மரபணுக்களை மிக வேகமாக மாற்றிக் கொள்கிறது. </p><p>அதைவிட, முக்கியமாக ஒரு தலைமுறை கொல்லும் விஷத்திற்கு அடுத்த தலைமுறைப் பூச்சிகள் எதிர்ப்பு திறனுடனே பிறக்கின்றனவாம். இயற்கையின் பரிணாம வளர்ச்சிக்கு மிகச்சிறந்த உதாரணம் இந்த கரப்பான் பூச்சி என்கிறார்கள். </p><p>மனிதர்கள் பூமிக்கு வருவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பாகவே வாழத் தொடங்கிய இந்த கரப்பான் பூச்சி மனித இனம் அழிந்த பிறகும் கூட பூமியில் தொடர்ந்து வாழ்ந்து வரும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கிறார்கள்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-31T05:25:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரதமர் ஹரிணி அமரசூரிய பூட்டானுக்கு விஜயம் !]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/pm-harini-departs-for-bhutan-1788151154"></link>
            <id>https://ibctamil.com/article/pm-harini-departs-for-bhutan-1788151154</id>
            <summary type="text">உலகளாவிய விழிப்புணர்வு உணவு முறைமைகள் உச்சிமாநாட்டில் (Global Conscious Food Systems Summit - GCFSS) பங்கேற்பதற்காக பிரதமர் ஹரிணி அமரசூரிய பூட்டானுக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>உலகளாவிய விழிப்புணர்வு உணவு முறைமைகள் உச்சிமாநாட்டில் (Global Conscious Food Systems Summit - GCFSS) பங்கேற்பதற்காக பிரதமர் ஹரிணி அமரசூரிய பூட்டானுக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.</p><p>அவர் இன்று (31) கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து பூட்டானுக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>நாளை (01) பூட்டானில் நடைபெறும் மாநாட்டின் தொடக்க அமர்வில் பிரதமர் பங்கேற்கவுள்ளதுடன், அங்கு "நெருக்கடிகளை எதிர்கொள்ள விழிப்புணர்வோடு எழுச்சி பெறுதல்" (Rising to the Moment: Igniting Consciousness to Address the Polycrisis) என்ற தலைப்பில் முதன்மை உரையாற்றவுள்ளார்.</p><p></p><h2>பலதரப்பினருடன் பேச்சுவார்த்தை</h2><p> 

இப்பயணத்தின் போது பிரதமர், சர்வதேசத் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e6183409-94e1-4c2e-a44d-b4a71c650059/26-6a950e06497ce.webp' /></p><p>அத்துடன் நிலையான உணவு முறைமைகள், உணவுப் பாதுகாப்பு மற்றும் சமூகப் பங்களிப்பிற்கான ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்தும் கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-31T05:21:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடலில் மூழ்கிய பெண், இரண்டு சிறுமிகளின் சடலங்கள் மீட்பு - சிறுவனை தொடர்ந்து தேடும் பொலிஸார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/4-missing-in-the-sea-in-colombo-1788142852"></link>
            <id>https://tamilwin.com/article/4-missing-in-the-sea-in-colombo-1788142852</id>
            <summary type="text">எப்பமுல்லா, பமுனுகம கடற்கரையில் குளித்துக் கொண்டிருந்தபோது காணாமல் போன ஒரு பெண் மற்றும் இரண்டு சிறுமிகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித...</summary>
            <content type="html"><![CDATA[<p>எப்பமுல்லா, பமுனுகம கடற்கரையில் குளித்துக் கொண்டிருந்தபோது காணாமல் போன ஒரு பெண் மற்றும் இரண்டு சிறுமிகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
மேலும், நீரில் மூழ்கி காணாமல் போன 13 வயது சிறுவனைத் தேடும் பணிகள் நடைபெற்று வருகிறது. </p><p>

உயிரிழந்தவர்கள் 35 வயதுப் பெண் மற்றும் 4, 12 வயதுடைய இரண்டு சிறுமிகள் என தெரியவந்துள்ளது.</p><p><b>

முதல் இணைப்பு</b></p><p>கம்பஹா, பமுனுகம - எபாமுல்ல கடற்கரைப் பகுதியில் கடலில் குளித்துக் கொண்டிருந்தவர்களில் நால்வர் காணாமல் போயுள்ளனர்.</p><p> பெண், இரண்டு சிறுமிகள் மற்றும் சிறுவன் கடலில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக பமுனுபுகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p> இவ்வாறு காணாமல் போனவர்கள் 35 வயதுடைய பெண்ணொருவர், 4 வயதுடைய இரண்டு சிறுமிகள் மற்றும் 12 வயதுடைய சிறுவன் என தெரியவந்துள்ளது.</p><p> </p><h2><b>பொலிஸார் மேலதிக விசாரணை</b></h2><p>குறித்த நால்வரும் ஜா-எல பிரதேசத்தில் வசிப்பவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ff7b1ec7-8dc9-4c3b-ae18-04695229343c/26-6a94e62469f37.webp' /></p><p>காணாமல் போனவர்களைத் தேடும் பணியில் கடற்படையினரும் பொலிஸாரும் இணைந்து கூட்டு நடவடிக்கையொன்றை ஆரம்பித்துள்ளனர். </p><p>பமுனுகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p><p><br></p><p>
</p>]]></content>
            <updated>2026-08-31T05:21:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஏவுகணை தளங்கள் மீது அமெரிக்கப் படைகள் தாக்குதல் ; திருப்பி அடித்த ஈரான்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/us-forces-attack-missile-launch-sites-iran-1788153668"></link>
            <id>https://canadamirror.com/article/us-forces-attack-missile-launch-sites-iran-1788153668</id>
            <summary type="text">&amp;nbsp; ஈரானின் லராக் தீவில் உள்ள இரண்டு ஏவுகணை ஏவுதளங்கள் மீது அமெரிக்கப் படைகள் தாக்குதல் நடத்தியுள்ளன. 

ஜூலை மாத இறுதிக்குப் பின்னர் ஈரான் மீது அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; ஈரானின் லராக் தீவில் உள்ள இரண்டு ஏவுகணை ஏவுதளங்கள் மீது அமெரிக்கப் படைகள் தாக்குதல் நடத்தியுள்ளன. 

ஜூலை மாத இறுதிக்குப் பின்னர் ஈரான் மீது அமெரிக்கா மேற்கொண்ட முதல் இராணுவத் தாக்குதல் இதுவாகும்.</p><p>



ஹோர்முஸ் நீரிணையில் கடல் கண்ணிவெடிகளைப் பொருத்துவதற்கான ரொக்கெட்டுகளை ஏவ ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படையினர் தயாராகி வந்ததாகக் கண்டறியப்பட்டதையடுத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2838143f-f6fd-4340-a17f-2cf69569d54c/26-6a950f45e2218.webp' /></p><h2>அமெரிக்க இராணுவத் தளங்கள் மீது&nbsp; தாக்குதல்&nbsp;</h2><p>


ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற தாக்குதலில் இருவர் உயிரிழந்ததுடன், மேலும் இருவர் காயமடைந்ததாக ஈரான் தெரிவித்துள்ளது.</p><p> இதற்குப் பதிலடியாக ஜோர்டானிலுள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதாக ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.</p><p>


இதனிடையே, தமது வான்வெளிக்குள் நுழைந்த எட்டு ஏவுகணைகளை இடைமறித்ததாக ஜோர்டான் இராணுவம் அறிவித்துள்ளது.
</p><p>

லராக் தீவு ஹோர்முஸ் நீரிணைக்கு அருகில் அமைந்துள்ள நிலையில், உலகளாவிய எண்ணெய் மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு போக்குவரத்தில் சுமார் 20 சதவீதம் இந்த நீர்வழியூடாக இடம்பெறுவது குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-08-31T05:18:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரசாங்கத்தின் மீது நம்பிக்கை இழக்கும் பொது மக்கள்...!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/npp-government-popularity-drops-below-50-percent-1788148934"></link>
            <id>https://ibctamil.com/article/npp-government-popularity-drops-below-50-percent-1788148934</id>
            <summary type="text">இரு ஆண்டுகள் நிறைவடையும் தருவாயிலும் மக்கள் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறிய அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசின் மக்கள் செல்வாக்கு 50 சதவீதத்து...</summary>
            <content type="html"><![CDATA[<p>இரு ஆண்டுகள் நிறைவடையும் தருவாயிலும் மக்கள் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறிய அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசின் மக்கள் செல்வாக்கு 50 சதவீதத்துக்கும் குறைவாக வீழ்ச்சியடைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><p>ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க இதனை தெரிவித்துள்ளார்.
</p><p>
கண்டியில் நேற்று (30-08-2026) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.</p><p> </p><p>O5BXCQI
</p><h2>நாடாளுமன்ற தேர்தல்</h2><p>இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களின் போது அளிக்கப்பட்ட வாக்குறுதிகள், ஊழலற்ற நிர்வாகம், முறைமை மாற்றம் மற்றும் எரிபொருள், மின்சாரக் கட்டணக் குறைப்பு உள்ளிட்ட எந்தவொரு வாக்குறுதியையும் அரசால் நிறைவேற்ற முடியாமல் போயுள்ளது.</p><p>

சமீபத்திய வெரிடே ரிசர்ச் ஆய்வறிக்கையின்படி, அரசின் மீதான மக்களின் செல்வாக்கு 65 சதவீதத்திலிருந்து 50 சதவீதத்துக்கும் கீழ் சரிந்துள்ளதுடன் பொருளாதாரத்தைக் கையாள்வது குறித்த நம்பிக்கை 40 சதவீதத்துக்கும் கீழே வீழ்ச்சியடைந்துள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b61c027f-ec1d-4e56-bf5f-5afc0f059d90/26-6a9507b30f0ee.webp' /></p><p>நிலுவையிலுள்ள வழக்குகளை விரைவுபடுத்தவே 22 ஆவது அரசமைப்புத் திருத்தம் கொண்டுவரப்படுகின்றது என்று அரசு கூறுவது அப்பட்டமான பொய்.</p><p>

நாட்டின் நிலுவையிலுள்ள வழக்குகளில் 95 சதவீதத்துக்கும் அதிகமானவை நீதிவான் நீதிமன்றங்கள் மற்றும் மேல் நீதிமன்றங்களிலேயே உள்ளனவே தவிர உயர் நீதிமன்றத்திலோ அல்லது மேல்முறையீட்டு நீதிமன்றத்திலோ அல்ல.</p><p>தன் விருப்பத்துக்கு ஏற்ப இயங்கும் ஒரு நீதித்துறை அமைப்பை உருவாக்கவே அரசு முயல்கின்றது.</p><p>
</p><p></p><h2>பொருளாதாரப் பிரச்சினை</h2><p>இதற்கு எதிராக வரலாற்றிலேயே இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையிலான மனுக்கள் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
</p><p>
கடந்த காலத்தில் நீதித்துறையைக் கட்டுப்படுத்த முயன்ற எந்தவொரு அரசும் நீதிமன்றத்திடமிருந்து தக்க பதிலடியையே பெற்றுள்ளன என்ற வரலாற்றை இந்த அரசு நினைவில்கொள்ள வேண்டும்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2930c39a-8901-478c-9bf4-92f28c86718b/26-6a9507b3b88a5.webp' /></p><p>மக்களின் உண்மையான பொருளாதாரப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணத் தவறிய அரசு, மக்களின் கவனத்தைத் திசைதிருப்பவே இந்தத் திருத்தத்தைக் கொண்டுவந்துள்ளது.</p><p>

22 ஆவது திருத்தம் குறித்த ஊடகவியலாளர்களின் கேள்விக்குப் பதிலளிக்க முடியாமல் ஓடிய நீதி அமைச்சர், எங்களிடம் மூன்றில் இரண்டு பெரும்பான்மை உள்ளது அரசுடன் விளையாட வேண்டாம் என கூறி தனது அதிகார ஆணவத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
</p><p>
அதிகார மமதையில் இந்தத் திருத்தத்தைப் பலவந்தமாக நிறைவேற்ற முயன்றாலும் இறுதியில் மக்கள் முன்னிலையில் அரசால் தலைநிமிர்ந்து நிற்க முடியாது” என அவர் தெரிவித்துள்ளார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-31T05:15:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பமுனுகம கடலில் மூழ்கி பெண் மற்றும் இரண்டு சிறுமிகள் மரணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/woman-and-two-girls-drown-sea-at-pamunugama-1788153303"></link>
            <id>https://jvpnews.com/article/woman-and-two-girls-drown-sea-at-pamunugama-1788153303</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;கம்பஹா பமுனுகம, எபமுல்ல கடற்பகுதியில் குளித்துக் கொண்டிருந்தபோது காணாமல் போன 35 வயது பெண் மற்றும் இரண்டு சிறுமிகளின் சடலங்கள் மீட்கப்பட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;கம்பஹா பமுனுகம, எபமுல்ல கடற்பகுதியில் குளித்துக் கொண்டிருந்தபோது காணாமல் போன 35 வயது பெண் மற்றும் இரண்டு சிறுமிகளின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், 13 வயது சிறுவன் இன்னமும் காணாமல் போயுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>


பமுனுகம, எபமுல்ல கடற்பகுதியில் குளித்துக் கொண்டிருந்த போது, பலத்த கடல் அலையில் இழுத்துச் செல்லப்பட்டு பெண்ணொருவரும் மூன்று சிறுவர்களும் காணாமல் போயுள்ளதாக அறிவிக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9fa1ce0e-a265-4b4c-a8fd-eb737c3b63c2/26-6a950dd93e964.webp' /></p><p>
</p><p>


காணாமல் போனவர்கள் 35 வயதுடைய பெண், 4 மற்றும் 12 வயதுடைய இரு சிறுமிகள் மற்றும் 13 வயதுடைய சிறுவன் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.</p><p>



அதன்படி, 35 வயது பெண் மற்றும் 4, 12 வயதுடைய இரு சிறுமிகளின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதுடன், நீரில் மூழ்கி காணாமல்போன 13 வயது சிறுவனைத் தேடும் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-31T05:12:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kumar</name>
            </author>
            <title type="text"><![CDATA[புனர்வாழ்வு மையத்திற்காக தரப்பட்ட காணியில் கட்டடம் அமைத்துத் தருமாறு கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/drug-abusers-use-more-than-alcohol-abusers-1788150592"></link>
            <id>https://tamilwin.com/article/drug-abusers-use-more-than-alcohol-abusers-1788150592</id>
            <summary type="text">மது பாவனையாளர்களை போதைப்பொருள் பாவனையாளர்கள் அதிகமாக உள்ளதாக விமோசனா புனர்வாழ்வு இல்லத்தின் பணிப்பாளர் செல்விகா சகாதேவன் தெரிவித்துள்ளார். 

அத்துடன...</summary>
            <content type="html"><![CDATA[<p>மது பாவனையாளர்களை போதைப்பொருள் பாவனையாளர்கள் அதிகமாக உள்ளதாக விமோசனா புனர்வாழ்வு இல்லத்தின் பணிப்பாளர் செல்விகா சகாதேவன் தெரிவித்துள்ளார். </p><p>

அத்துடன் இவர்களின் புனர்வாழ்விற்காக அரசாங்கத்தால் தரப்பட்ட காணியில் கட்டடமொன்றை அமைத்து தர வேண்டுமெனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். </p><p>

மட்டு. ஊடக அமையத்தில் நேற்றைய தினம் (30.08.2026) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.</p><h2>போதை பாவனையாளர்களுக்கான புனர்வாழ்வு</h2><p>
</p><p>
அவர் மேலும் தெரிவிக்கையில், இன்றைய காலகட்டத்திலே மது, போதைப்பொருள் பாவனை என்பது மிகவும் அதிகரித்து கொண்டு வருகிறது. நாடளாவிய ரீதியிலே நாங்கள் புனர்வாழ்வு சேவையைச் செய்து அதிகமான வெற்றியையும் கண்டிருக்கிறோம். </p><p>

தற்போது நாங்கள் ஒரு வாடகை இடத்திலேயே இந்தச் சேவையைச் செய்து வருகிறோம். எங்களிடம் குணமடைந்தவர்கள் இலங்கையில் அத்தனை மாவட்டங்களிலும் இருக்கிறார்கள். 

எனவே எங்களுக்கு அரசாங்கம் ஒரு ஏக்கர் காணியைத் தந்திருக்கிறார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f15d9d6b-10e0-4710-9224-491075a78ff9/26-6a950bd397302.webp' /></p><h2>கட்டடம் தேவை</h2><p> </p><p>அதில் நான் கட்டடம் ஒன்றை அமைத்து இந்தச் சேவையை மேலும் திறம்படச் செய்ய எண்ணியுள்ளேன். 

எனினும் இப்போது நான் வாடகைக்கு இருக்கும் இடத்தை உரிமையாளர்களுக்கு அந்தக் கட்டடம் தேவைப்படுவதால் நாங்கள் இன்னும் ஒரு இடத்திற்கு நகர வேண்டிய தேவை உள்ளதால், இன்னொரு இடத்தைக் கண்டுபிடித்து நாங்கள் செல்வது மிகவும் கடினமாக இருக்கிறது. </p><p>

ஆகவே அரசாங்கத்தால் எங்களுக்குத் தரப்பட்ட அந்தக் காணியில் எங்களுக்கு புதியதொரு கட்டடத்தை அமைத்துத் தந்தால் இலகுவாக இருக்கும். இதனை ஜனாதிபதிக்கும் சொல்ல விரும்புகிறேன் என தெரிவித்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-08-31T05:07:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நொடியில் மண்ணுக்குள் புதைந்த நேபாளம்: காணாமல் போன பிரித்தானியர்கள் தொடர்பில் தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/britons-peoples-missing-china-tibet-nepal-floods-1788149006"></link>
            <id>https://ibctamil.com/article/britons-peoples-missing-china-tibet-nepal-floods-1788149006</id>
            <summary type="text">நேபாளத்தில் ஏற்பட்ட பேரழிவுகரமான திடீர் வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து காணாமல் போனதாகக் கூறப்பட்ட 33 பிரித்தானிய குடிமக்களில் யாரும் மீட்கப்படவில்லை என்ற...</summary>
            <content type="html"><![CDATA[<p>நேபாளத்தில் ஏற்பட்ட பேரழிவுகரமான திடீர் வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து காணாமல் போனதாகக் கூறப்பட்ட 33 பிரித்தானிய குடிமக்களில் யாரும் மீட்கப்படவில்லை என்று அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.</p><p>பேரிடரில் காணாமல் போன ஆஸ்திரேலியர்களின் அதிகாரப்பூர்வ எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் சிறிதளவு அதிகரித்து வருகிறது. இன்று, 43 ஆஸ்திரேலியர்கள் காணாமல் போயிருப்பதாக தற்போது தெரிய வந்துள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.</p><p>"அந்த ஆஸ்திரேலியர்களைப் பத்திரமாகவும் நலமாகவும் மீட்க முடியும் என்ற நம்பிக்கையை நாங்கள் கைவிடவில்லை என்று வெளியுறவுத் துறை துணை அமைச்சர் மாட் திஸ்டில்வெயிட் ஏபிசி-யிடம் தெரிவித்தார்.</p><p></p><h2>தேடும் பணிகள்&nbsp;</h2><p>நேபாளத்தில் புதன்கிழமை ஏற்பட்ட பேரழிவில் குறைந்தது 794 பேர் உயிரிழந்ததாகவும், 2,500க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை என்றும் உள்ளூர் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a6364492-8513-45e6-81f2-2219c2cd60fb/26-6a950b90ab9d5.webp' /></p><p>ஞாயிற்றுக்கிழமை இரவு வெளியிட்ட ஒரு புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில், இதுவரை குறைந்தது 289 பேர் மீட்கப்பட்டுள்ளதாக நேபாள சுற்றுலா துறை தெரிவித்துள்ளது&nbsp;&nbsp;</p><p>மீட்கப்பட்டவர்களில் 180 இந்தியக் குடிமக்கள், 89 சீனர்கள், பல்கேரியா மற்றும் போர்ச்சுகலைச் சேர்ந்த தலா ஒருவர், இரண்டு அமெரிக்கர்கள் உட்பட ஐரோப்பாவைச் சேர்ந்த பலரும் அடங்குவர்.</p><p>"சிக்கித் தவிப்பவர்கள், காயமடைந்தவர்கள் மற்றும் பிற வழிகளில் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும், தேடும் வெளியேற்றும் மற்றும் உதவிப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன" என்று நேபாள சுற்றுலாத்துறை தெரிவித்துள்ளது.</p><p></p><h2>வெள்ள அபாயம்</h2><p> போதேகோஷி ஆற்றில் நீர்மட்டம் உயர்ந்துள்ளதால், வெள்ள அபாயம் ஏற்படக்கூடும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0048eb26-4735-4f31-b68f-6603b26389ad/26-6a950b916526a.webp' /></p><p> மேலும் குடியிருப்பாளர்களை மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-31T05:05:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாக்ஸ் ஆபிஸ்: 3 நாட்களில் 'ஹாய்' திரைப்படம் செய்துள்ள வசூல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/hi-movie-3-days-box-office-collection-1788149247"></link>
            <id>https://cineulagam.com/article/hi-movie-3-days-box-office-collection-1788149247</id>
            <summary type="text">கவின், நயன்தாரா நடிப்பில் கடந்த வாரம் வெளியான &#039;ஹாய்&#039; திரைப்படத்தின் 3 நாட்கள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.&#039;ஹாய்&#039;
ஒவ்வொரு வெள்ளிக...</summary>
            <content type="html"><![CDATA[<p>கவின், நயன்தாரா நடிப்பில் கடந்த வாரம் வெளியான 'ஹாய்' திரைப்படத்தின் 3 நாட்கள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.</p><p></p><h2>'ஹாய்'</h2><p>
ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் சினிமா ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுக்கும் வகையில் விதவிதமான கதைக்களத்தில் திரைப்படங்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில், கடந்த வாரம் காதல் கதைக்களத்தில் உருவாகி வெளிவந்த திரைப்படம்தான் 'ஹாய்'.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/589c3264-2ab7-45fa-b536-5a211ed061b7/26-6a94fe0306fcb.webp' /></p><p>

இப்படத்தை அறிமுக இயக்குநர் விஷ்ணு எடவன் இயக்க, <a href="https://www.youtube.com/watch?v=Dmq6sx89F9w" target="_blank">கவின் </a>மற்றும் நயன்தாரா முதல்முறையாக இணைந்து நடித்துள்ளனர். மேலும், ராதிகா சரத்குமார், பிரபு, பாக்யராஜ் ஆகியோர் நடித்துள்ளனர்.</p><h2> 

பாக்ஸ் ஆபிஸ்</h2><p>

ரசிகர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்ப்புடன் வெளியான 'ஹாய்' திரைப்படம் கலவையான விமர்சனங்களை சந்தித்துள்ளது. இருந்தும் ஓப்பனிங் வாரத்தில் பாக்ஸ் ஆபிஸில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e2fd7cfe-41e7-4a02-a78b-0a9483608509/26-6a94fe03b4bac.webp' /></p><p>

இந்நிலையில், 3 நாட்களை கடந்திருக்கும் 'ஹாய்' திரைப்படம் உலகளவில் இதுவரை செய்துள்ள வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் உலகளவில் 3 நாட்களில் ரூ. 7 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-31T05:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழக முதலமைச்சர் விஜய் பிரதமராக மாட்டார்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/tamil-nadu-cm-vijay-will-not-become-pm-vaiko-1788152530"></link>
            <id>https://jvpnews.com/article/tamil-nadu-cm-vijay-will-not-become-pm-vaiko-1788152530</id>
            <summary type="text">&amp;nbsp; தமிழக முதலமைச்சர் விஜய்க்கு பிரதமராக வேண்டும் என்ற எண்ணம் துளியும் இல்லை என ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.



திருநெல்வேல...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; தமிழக முதலமைச்சர் விஜய்க்கு பிரதமராக வேண்டும் என்ற எண்ணம் துளியும் இல்லை என ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.



திருநெல்வேலியில் செய்தியாளர்களை சந்தித்தபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். </p><p>அமைச்சர்கள் சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவிப்பதை தவிர்த்து பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்றும் வைகோ வலியுறுத்தியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d4537423-233c-4040-be82-c2fe94db92b2/26-6a950ad3c5a3e.webp' /></p><p>
</p><p>


அகில இந்திய அளவில் நடைபெறும் தேர்தலில் ராகுல் காந்தியே பிரதமர் வேட்பாளராக இருக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>



மேலும், காவிரி விவகாரத்தில் தமிழகத்தின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும், தொகுதி மறுவரையறை நடவடிக்கை ஜனநாயகத்திற்கு பேராபத்தை ஏற்படுத்தும் என்பதால் அதனை கைவிட வேண்டும் என்றும் வைகோ தெரிவித்துள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-31T04:59:16+00:00</updated>
        </entry>
    </feed>
