<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-07-13T06:44:32+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ்ப்பாணத்தை சேர்ந்த தம்பதி சென்னையில் கைது!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/couple-from-jaffna-arrested-in-chennai-1783917215"></link>
            <id>https://jvpnews.com/article/couple-from-jaffna-arrested-in-chennai-1783917215</id>
            <summary type="text">&amp;nbsp; சென்னையில் முறையான குடியுரிமை ஆவணங்கள் இன்றி, போலி ஆவணங்களைப் பயன்படுத்தி வாக்காளர் அடையாள அட்டையைப் பெற்றுக் கொண்ட இலங்கைத் தம்பதியினர் கைது ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; சென்னையில் முறையான குடியுரிமை ஆவணங்கள் இன்றி, போலி ஆவணங்களைப் பயன்படுத்தி வாக்காளர் அடையாள அட்டையைப் பெற்றுக் கொண்ட இலங்கைத் தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.</p><p>

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஆண் ஒருவரும் (69) அவரது மனைவியும், கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக சென்னை, தியாகராயநகர் பகுதியில் வசித்து வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/083d9f21-b147-4622-b49c-874384ab923f/26-6a546aa0a5cee.webp' /></p><h2>போலியான முகவரி ஆதாரங்களைக் காட்டி வாக்காளர் பட்டியல்</h2><p>

 தம்பதிகள் இருவரும் இந்தியக் குடியுரிமைச் சான்றிதழ்கள் இன்றி, போலியான முகவரி ஆதாரங்களைக் காட்டி வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர்களைச் சேர்த்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது.
</p><p>
இந்த நிலையில், அண்மையில் நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலின் போது இவர்கள் வாக்களித்ததைக் கண்டுபிடித்த அதிகாரிகள், இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர்.</p><p></p><p>
</p><p>
விசாரணையின் முடிவில், இவர்கள் முறையான ஆவணங்கள் இன்றி வாக்காளர் அடையாள அட்டையைப் பெற்று, தேர்தலிலும் வாக்களித்தமை உறுதியானது.

 நேற்று முன்தினம் இருவரும் இலங்கை வருவதற்காக , சென்னை வானூர்தி நிலையம் சென்றபோது கைதாகியுள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-13T06:38:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையின் வயது முதிர்ந்த பெண் காலமானார் - 325 கொள்ளுப் பேரக்குழந்தைகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sri-lanka-s-oldest-living-woman-passes-away-at-114-1783923868"></link>
            <id>https://ibctamil.com/article/sri-lanka-s-oldest-living-woman-passes-away-at-114-1783923868</id>
            <summary type="text">இலங்கையின் மிக வயது முதிர்ந்த பெண்களில் ஒருவராக அறியப்பட்ட பஞ்சகே கலுமெனிகே ன்பவர் காலமானதாக தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.அவர் இன்று தனத...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் மிக வயது முதிர்ந்த பெண்களில் ஒருவராக அறியப்பட்ட பஞ்சகே கலுமெனிகே ன்பவர் காலமானதாக தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p>அவர் இன்று தனது 114ஆவது வயதில் உயிரிழந்துள்ளார்.</p><p>பஞ்சகே கலுமெனிகே அனுராதபுரம் மாவட்டத்தின் சங்கிலி கனதரவாவைச் சேர்ந்தவர்.</p><p></p><h2> 325 கொள்ளுப்பேரக்குழந்தை&nbsp;&nbsp;</h2><p>


1912ஆம் ஆண்டு ஜூலை 4ஆம் திகதி பிறந்த அவர், இந்த ஆண்டின் தொடக்கத்தில் தனது 114ஆவது பிறந்தநாளைக் கொண்டாடியிருந்தார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/50042a61-1acd-4f8a-b7bf-120c067191f6/26-6a548834c8d66.webp' /></p><p>அதன் பின்னர் கீழே விழுந்து காயமடைந்த கலுமெனிகே, அறுவை சிகிச்சை மேற்கொண்டார். சிகிச்சைக்குப் பிறகு சுமார் இரண்டு மாதங்கள் உயிர் வாழ்ந்த நிலையில், பின்னர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>



கலுமெனிகே, 12 பிள்ளைகள் மற்றும் 325 கொள்ளுப்பேரக்குழந்தைகளை உள்ளடக்கிய பெரிய குடும்பப் பரம்பரையை விட்டுச் சென்றுள்ளாரென்பதும் குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL இ</a>ல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-13T06:36:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[டொரொன்டோவிற்கு வெப்பம் மஞ்சள் எச்சரிக்கை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/second-heat-event-to-hit-toronto-southern-ontario-1783924556"></link>
            <id>https://canadamirror.com/article/second-heat-event-to-hit-toronto-southern-ontario-1783924556</id>
            <summary type="text">இந்த வாரத்தில் டொரொன்டோவில் கடும் வெப்பமான காலநிலை நிலவக்கூடும் என்பதால், டொரொன்டோ மற்றும் தெற்கு ஒன்டாரியோவின் ஏனைய பகுதிகளுக்கு கனடா சுற்றாடல் திணைக...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்த வாரத்தில் டொரொன்டோவில் கடும் வெப்பமான காலநிலை நிலவக்கூடும் என்பதால், டொரொன்டோ மற்றும் தெற்கு ஒன்டாரியோவின் ஏனைய பகுதிகளுக்கு கனடா சுற்றாடல் திணைக்களம் மஞ்சள் நிற வெப்ப எச்சரிக்கையை விடுத்துள்ளது.</p><p>
இவ் வாரத்தில் பகல் நேர வெப்பநிலை 30 பாகை செல்சியஸின் நடுப்பகுதியை எட்டக்கூடும் எனவும், காற்றில் உள்ள ஈரப்பதன் காரணமாக அது 45 பாகை செல்சியஸ் வரை உணரப்படலாம் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
</p><p>இந்த வெப்ப அலையானது திங்கட்கிழமை ஆரம்பமாகி, புதன் அல்லது வியாழக்கிழமை மாலை வரை நீடிக்கும் என கனடா சுற்றாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p></p><p> </p><p>
செவ்வாய்க்கிழமை இந்த வெப்ப அலையின் உச்சக்கட்ட நாளாக இருக்கும். சில பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை 36 பாகை செல்சியஸை நெருங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று தேசிய வானிலை நிறுவனம் தனது ஆலோசனைக் குறிப்பில் குறிப்பிட்டுள்ளது.
</p><p>இந்த வெப்ப அலையின் போது, ஒன்டாரியோ குடியிருப்பாளர்கள் 38 முதல் 45 வரையிலான ஈரப்பதன் மதிப்பை உணரக்கூடும். மேலும், இரவு நேரங்களிலும் வெப்பநிலை 20 பாகை செல்சியஸிற்குக் கீழ் குறையாது என்பதால், வெப்பத்திலிருந்து தப்பிப்பது கடினமாக இருக்கும்.
வெப்பம் மற்றும் ஈரப்பதன் மிக்க காற்று, காற்றின் தரத்தை மோசமடையச் செய்யலாம். </p><p>இதனால் காற்றின் தர ஆரோக்கிய குறியீடு அதிக ஆபத்துள்ள வகையை நெருங்கக்கூடும் எனவும் கனடா சுற்றாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
</p><p>உங்களையும் மற்றவர்களையும் பாதுகாத்துக் கொள்ள நடவடிக்கை எடுங்கள் - கடுமையான வெப்பம் அனைவரினதும் ஆரோக்கியத்தையும் பாதிக்கலாம். முதியவர்கள், தனியாக வசிப்பவர்கள் மற்றும் ஆபத்தில் உள்ள மற்றவர்களின் உடல்நலம் குறித்து நேரில் அல்லது தொலைபேசி மூலம் தினமும் பலமுறை விசாரித்துக்கொள்ளுங்கள். என அறிவுறுத்தப்பட்டுள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-13T06:36:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் தங்கத்தின் விலை சரிவு; இன்னும் குறையலாம்! நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/gold-prices-drop-in-sri-lanka-jewelry-delighted-1783924630"></link>
            <id>https://jvpnews.com/article/gold-prices-drop-in-sri-lanka-jewelry-delighted-1783924630</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;இலங்கையில் தங்கத்தின் விலையில் இன்று (13) மீண்டும் சரிவு பதிவாகியுள்ளது.

அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் வெளியிட்டுள்ள தகவலின்படி...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;இலங்கையில் தங்கத்தின் விலையில் இன்று (13) மீண்டும் சரிவு பதிவாகியுள்ளது.

அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் வெளியிட்டுள்ள தகவலின்படி, </p><p>நேற்று முன்தினம் (11) 24 கரட் தங்கம் ஒரு பவுண் 378,000 ரூபாயாக விற்பனையான நிலையில், இன்று அதன் விலை 2,000 ரூபாயால் குறைந்து 376,000 ரூபாயாக பதிவாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/002cda88-baae-4130-b091-c2afe099ed96/26-6a54879762f0b.webp' /></p><p>
</p><p>
அந்தவகையில், தற்போதைய தங்க விலை நிலவரப்படி,

24 கரட் தங்கம் பவுண் ஒன்று 376,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

22 கரட் தங்கம் பவுண் ஒன்று 346,000 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.</p><p>24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 47,000 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 43,250 ரூபாயாகவும், விற்பனை </p><p>இந் நிலையில்&nbsp; &nbsp;தங்கம் வாங்கத் திட்டமிட்டுள்ளோர், சந்தை விலை மாற்றங்களைத் தொடர்ந்து கவனித்து வாங்குவது சிறந்தது என நகை வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.</p>]]></content>
            <updated>2026-07-13T06:35:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[விமல் உட்பட ஆறு பேருக்கு எதிரான வழக்கு! நீதிமன்றின் உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/wimal-s-case-postponed-1783923410"></link>
            <id>https://ibctamil.com/article/wimal-s-case-postponed-1783923410</id>
            <summary type="text">
2016-ஆம் ஆண்டில் கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகம் முன்புள்ள சாலையை மறித்து பொதுமக்களுக்குத் தொந்தரவு ஏற்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>
2016-ஆம் ஆண்டில் கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகம் முன்புள்ள சாலையை மறித்து பொதுமக்களுக்குத் தொந்தரவு ஏற்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச மற்றும் ஆறு பேருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் மேலதிக விசாரணையை செப்டம்பர் 21-ஆம் திகதி அன்று அழைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
</p><p>
இந்த வழக்கு கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். பொதரகம முன்பு விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளது.</p><p>

வழக்கு விசாரணையின் போது விமல் வீரவன்ச நீதிமன்றில் முன்னிலையாகாத நிலையில், அவருக்காக முன்னிலையான சட்டத்தரணி, அவர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அது தொடர்பான மருத்துவ அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>வழக்கு பதிவு</h2><p>
</p><p>
அதன்படி, முன்வைக்கப்பட்ட உண்மைகளைக் கருத்தில் கொண்ட பிரதான நீதவான், இவ்வழக்கை செப்டம்பர் 21-ஆம் திகதி விசாரணைக்கு அழைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.</p><p><br></p><p>

அப்போதைய ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரான இளவரசர் ஸெய்த் அல் ஹுசைன், கொழும்பில் உள்ள ஐ.நா. அலுவலகத்தின் முன்பும், தும்முல்லா உள்ளிட்ட வீதிகளை மறித்தும் போராட்டத்தில் ஈடுபட்டதன் மூலம் பொதுமக்களுக்குத் துயரத்தை ஏற்படுத்தியதாகக் குற்றம் சாட்டி, 2016 பெப்ரவரி 6 அன்று குருந்துவத்தை காவல்நிலையத்தில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டது.
</p><p>
மேலும், ஜயந்த சமரவீர, வீரகுமார திசாநாயக்க, பியசிறி விஜேநாயக்க, ரோஜர் செனவிரத்ன மற்றும் முகமது முஸம்மில் ஆகிய சந்தேக நபர்களும் இவ்வழக்கில் சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-13T06:32:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[சொகுசு காரில் சிக்கிய இளம் தம்பதியினர் - மீட்கப்பட்ட ஆபத்தான பொருள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/young-couple-arrested-drugs-in-luxury-car-1783922866"></link>
            <id>https://tamilwin.com/article/young-couple-arrested-drugs-in-luxury-car-1783922866</id>
            <summary type="text">பொலன்னருவை பகுதியில், சொகுசு காரில் &#039;ஐஸ்&#039; போதைப்பொருளை கடத்தி வந்த இளம் தம்பதியினர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொலன்னருவை பகுதியில், சொகுசு காரில் 'ஐஸ்' போதைப்பொருளை கடத்தி வந்த இளம் தம்பதியினர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள், கந்தானை மற்றும் குளியாபிட்டிய பகுதிகளைச் சேர்ந்த 24 மற்றும் 22 வயதுடைய ஒரு இளைஞரும், ஒரு இளம் பெண்ணும் ஆவர்.</p><p></p><h2>இரகசிய தகவல்</h2><p>
</p><p>
இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில் பொலன்னருவ ஊழல் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகள் நடத்திய சோதனையின்போது இந்த தம்பதியினர் கைது செய்யப்பட்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/68c9c327-cfd3-4744-847e-ae255bf4110e/26-6a54856dd2088.webp' /></p><p>
</p><p>
சந்தேகத்திற்குரிய இளைஞரிடமிருந்து 27 கிராம் 'ஐஸ்' போதைப்பொருளும், பெண்ணிடமிருந்து 6,310 மில்லிகிராம் 'ஐஸ்' போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
இவர்கள் போதைப்பொருளை கடத்தியதாக சந்தேகிக்கப்படும் காரையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
</p><p>
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மற்றும் வழக்கு ஆவணங்கள் பொலன்னருவை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட உள்ளன.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-13T06:28:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலகளாவிய எல் நினோ மற்றும் காலநிலை மாற்றம் - இலங்கையில் ஏற்படப்போகும் பேரனர்த்தங்கள்..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/disaster-management-center-warning-regard-weather-1783917705"></link>
            <id>https://tamilwin.com/article/disaster-management-center-warning-regard-weather-1783917705</id>
            <summary type="text">உலகளாவிய ரீதியில் எல் நினோ மற்றும் காலநிலை மாற்றம் தொடர்பில் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ள நிலையில் எதிர்வரும் காலங்களில் தித்வா புயல் தாக்கம் போன்றே...</summary>
            <content type="html"><![CDATA[<p>உலகளாவிய ரீதியில் எல் நினோ மற்றும் காலநிலை மாற்றம் தொடர்பில் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ள நிலையில் எதிர்வரும் காலங்களில் தித்வா புயல் தாக்கம் போன்றே பேரனர்த்தங்களையும் எதிர்கொள்ள நேரிடும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் சம்பத் கொடுவேகொட தெரிவித்துள்ளார்.</p><p> 

எனினும் மத்திய நிலையங்களுக்கு சொந்தமான கருவிகளை பராமரிப்பதற்கு கூட கடந்த காலங்களில் போதுமான மானியம் ஒதுக்கப்படவில்லை, இவ்வாறான குறைபாடுகளுக்கு மத்தியில் எவ்வாறு அனர்த்தங்களை முகாமைத்துவம் செய்வது என அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.</p><p></p><p> </p><p>

நாடாளுமன்றத்தில் அண்மையில் இடம்பெற்ற கோப் குழு கூட்டத்தில் முன்னிலையாகி அவர் இந்த விடயங்களை முன்வைத்தார்.</p><h2>பதவிக்கான வெற்றிடங்கள்</h2><p> </p><p>

அவர் மேலும் தெரிவிக்கையில், தித்வா புயல் தாக்கம் ஏற்பட்ட போது அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தில் 188 பதவிக்கான வெற்றிடங்கள் காணப்பட்டன. 

தித்வா போன்ற ஒரு யானையை சிரட்டை போன்ற அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் எதிர்கொண்டது என்றே குறிப்பிட வேண்டும்.</p><p></p><p> </p><p>

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தில் 24 மணித்தியால சேவைக்கான அவசர தொலைபேசி கட்டமைப்பு காணப்படுகிறது. இந்த அவசர சேவையில் ஈடுபடுபவர்களுக்கு போதுமான வசதிகள் ஏதும் கிடையாது. 

அவர்கள் பல அசௌகரியங்களுக்கு மத்தியில் தான் 24 மணித்தியாலமும் சேவையில் ஈடுபடுகிறார்கள். </p><p>மாவட்ட மட்டத்தில் அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்பு அலகு ஒன்று உள்ளது.

அதில் எழுதுவினைஞர்கள் ஐந்து பேர், பிரதி பணிப்பாளர் ஒருவர், உதவியாளர் மற்றும் சாரதி ஒருவர் உள்ளார்கள்.இவர்கள் அனைவரும் மாலை 04.30 மணிக்கு பணியை முடித்து விட்டு வீட்டுக்குச் சென்றுவிடுவார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7a87e0ae-5b12-45e6-9a29-e0bb757b34ee/26-6a5484e17b3d7.webp' /></p><h2>சவால்</h2><p>
</p><p>
குறித்த மாவட்டத்தில் 04.30 மணிக்கு பிறகு ஏதேனும் இயற்கை அனர்த்தம் நிகழ்ந்தால் பணிப்பாளரை அழைப்பதற்கு நீண்ட நேரம் செல்கிறது. 

மாவட்ட மட்டத்திலான அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்பு அலகுடன் தொடர்புக் கொள்வது சவால்மிக்கதாக காணப்படுகிறது. </p><p>அதேபோல் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்துக்கு போதுமான ஆளனி வளங்கள் கிடையாது.

காணப்படும் வெற்றிடங்களுக்கு உடன் நியமனங்களை வழங்க வேண்டும். மத்திய நிலையங்களுக்கு சொந்தமான கருவிகளை பராமரிப்பதற்கு கூட கடந்த காலங்களில் போதுமான மானியம் ஒதுக்கப்படவில்லை. இவ்வாறான குறைபாடுகளுக்கு மத்தியில் எவ்வாறு அனர்த்தங்களை முகாமைத்துவம் செய்வது என்றார்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-13T06:26:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[வரலாற்றில் முதல்முறையாக நீதித்துறை அதளபாதாளத்தில் - திலித் ஜயவீர எம்.பி எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/first-time-in-history-the-judiciary-is-deep-abyss-1783922696"></link>
            <id>https://tamilwin.com/article/first-time-in-history-the-judiciary-is-deep-abyss-1783922696</id>
            <summary type="text">இலங்கையின் நீதித்துறையின் சுயாதீனத்தன்மையானது வரலாற்றில் என்றுமில்லாதவாறு
பலவீனமடைந்து, சீர்குலைந்துள்ளது என்று சர்வஜன அதிகாரம் கட்சியின் தலைவரும்
ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் நீதித்துறையின் சுயாதீனத்தன்மையானது வரலாற்றில் என்றுமில்லாதவாறு
பலவீனமடைந்து, சீர்குலைந்துள்ளது என்று சர்வஜன அதிகாரம் கட்சியின் தலைவரும்
நாடாளுமன்ற உறுப்பினருமான திலித் ஜயவீர தெரிவித்துள்ளார்.
</p><p>
சர்வஜன அதிகாரம் கட்சியின் மாத்தறை மாவட்ட அமைப்பாளர் உதார ஜயவீரவின் மாவட்ட
ஒருங்கிணைப்பு அலுவலகத்தை நேற்று(12.07.2026) திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு
உரையாற்றும் போதே இந்தக் கவலையை வெளியிட்டுள்ளார்.</p><p></p><h2>நிலவும் உண்மையான அரசியல் வெற்றிடம்</h2><p>"சர்வஜன அதிகாரம் கட்சியானது, நாட்டில் நிலவும் உண்மையான அரசியல் வெற்றிடத்தை
நிரப்பி, ஒட்டுமொத்த மக்களையும் ஒன்றிணைக்கும் நோக்கிலேயே ஆரம்பிக்கப்பட்டது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f2b8858f-6baa-4ad5-8c06-4cd2aed2e1f1/26-6a548458137a5.webp' /></p><p>அநியாயமாக இழக்கப்பட்ட நாட்டின் ஆற்றல்களையும் வளங்களையும் மீண்டும்
கட்டியெழுப்பி, நாட்டு மக்களுக்கு ஒரு சரியான திசையைக் காட்டுவதே எமது
பயணத்தின் இலக்காகும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p>நாட்டின் பொருளாதாரம் மாத்திரமல்லாது, சமூக, கலாசாரக் கட்டமைப்புகளும்
வீழ்ச்சியடைந்துள்ளது என்று சுட்டிக்காட்டிய திலித் ஜயவீர, நீதித்துறையின்
தற்போதைய நிலை குறித்தும் கருத்து தெரிவித்துள்ளார்.</p><h2>பொலிஸ் துறை மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பு</h2><p>நீதித்துறையின் சுயாதீனத்தன்மை சீர்குலைந்து போயுள்ளது. இது குறித்து
நீதித்துறையில் பணியாற்றும் சட்டத்தரணிகளும், நேர்மையான நீதிபதிகளும்
கொண்டுள்ள கருத்து மிகவும் தெளிவானது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1d662a84-d95a-451c-a811-58cf3555bd82/26-6a548458dca55.webp' /></p><p> அதேபோல், சட்டம் ஒழுங்கு, பொலிஸ் துறை
மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பு தொடர்பில் மக்கள் மத்தியில் நிலவும்
நம்பிக்கை மிக வேகமாகச் சீர்குலைந்து வருகின்ற ஒரு காலகட்டத்தையே நாம்
எதிர்கொண்டுள்ளோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
இந்த மோசமான சூழ்நிலையிலிருந்து நாட்டை மீட்டெடுக்க, நிலைமைகளைத் தெளிவாகப்
புரிந்துகொண்டு அனைத்துத் தரப்பினரும் ஒன்றுபட வேண்டியது அவசியம் என்றும் மேலும் வலியுறுத்தியுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-13T06:25:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[இயந்திர துப்பாக்கியின் கட்டுப்பாட்டை இழந்த ரஷ்ய வீரர்! உயிர் தப்பிய சக அதிகரிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/russian-soldier-loses-control-of-machine-gun-1783923101"></link>
            <id>https://ibctamil.com/article/russian-soldier-loses-control-of-machine-gun-1783923101</id>
            <summary type="text">ரஷ்ய இராணுவத்தின் பயிற்சி நடவடிக்கையொன்றின் போது, சக்திவாய்ந்த சுழல் இயந்திரத் துப்பாக்கியின் கட்டுப்பாட்டை சிப்பாய் ஒருவர் இழந்ததாகக் கூறப்படும் காணொ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ரஷ்ய இராணுவத்தின் பயிற்சி நடவடிக்கையொன்றின் போது, சக்திவாய்ந்த சுழல் இயந்திரத் துப்பாக்கியின் கட்டுப்பாட்டை சிப்பாய் ஒருவர் இழந்ததாகக் கூறப்படும் காணொளி சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.
</p><p>
அந்தக் காணொளியில், துப்பாக்கி கட்டுப்பாடின்றி சுழலத் தொடங்கியதுடன், தோட்டாக்கள் கணிக்க முடியாத வகையில் பல திசைகளிலும் பாய்வது காணொளியில் பதிவாகியுள்ளது.</p><p>இதனால் அருகில் இருந்த வீரர்கள் உடனடியாக பதுங்கி தப்பும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.</p><p></p><h2>இணையத்தில் வெளியாகியுள்ள தகவல்</h2><p>இந்த விடயம் குறித்து பிரித்தானிய ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில்,&nbsp;&nbsp;இணையத்தில் வெளியாகியுள்ள தகவல்களின்படி, அந்தப் பயிற்சியில் பயன்படுத்தப்பட்ட ஆயுதம் யாக் பி-12.7 (YakB-12.7) என்ற நான்கு குழல் சுழல் இயந்திரத் துப்பாக்கி எனக் கூறப்படுகிறது.</p><p><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr">𝐕𝐢𝐫𝐚𝐥 𝐅𝐨𝐨𝐭𝐚𝐠𝐞: A Russian military training exercise reportedly went awry after troops mounted a YakB-12.7 helicopter machine gun on a fixed stand, with the weapon appearing to spin out of control during the drill.<a href="https://x.com/hashtag/Russia?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#Russia</a><a href="https://x.com/hashtag/RussianArmy?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#RussianArmy</a><a href="https://x.com/hashtag/MilitaryTraining?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#MilitaryTraining</a><a href="https://x.com/hashtag/YakB127?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#YakB127</a> <a href="https://t.co/rwwpVsx9K0">pic.twitter.com/rwwpVsx9K0</a></p>&mdash; Daily Kishtwar Times (@kishtwartimes1) <a href="https://x.com/kishtwartimes1/status/2076331898272731239?ref_src=twsrc%5Etfw">July 12, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p> </p><p>இந்த ஆயுதம் முதலில் மில் மி-24 (Mi-24 Hind) தாக்குதல் ஹெலிகாப்டரில் பயன்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.</p><p>பொருத்தப்பட்ட இயந்திரத் துப்பாக்கியின் பின்னால் நின்றிருந்த சிப்பாய் சுடத் தொடங்கிய சில நொடிகளிலேயே, ஆயுதத்தின் பின்னுதைப்பு காரணமாக பொருத்தும் அமைப்பு செயலிழந்ததுள்ளது.</p><p> இதனைத் தொடர்ந்து துப்பாக்கி தனது தாங்கியைச் சுற்றி வேகமாகச் சுழல, அதை கட்டுப்படுத்த முயன்ற சிப்பாயும் அதனுடன் இழுக்கப்படுகிறார்.</p><p></p><h2>தூக்கி வீசப்பட்ட சிப்பாய்</h2><p>
</p><p>
சில நொடிகளில், அந்த சிப்பாய் அருகிலிருந்த தடுப்பின் மீது பலமாக வீசப்படுவதும், துப்பாக்கி தொடர்ந்து சுழன்றபடியே தோட்டாக்களைப் பாய்ச்சுவது போன்ற காட்சிகளும் பதிவாகியுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/22985b4b-87d3-4566-91cb-f61c98886d50/26-6a5484a2b8830.webp' /></p><p> </p><p>இதனால் அருகிலிருந்த மற்ற வீரர்கள் குனிந்து தப்பியோடும் நிலை ஏற்பட்டுள்ளது. பின்னர் மற்றொரு படைவீரர் விரைந்து சென்று சுழன்றுகொண்டிருந்த ஆயுதத்தின் இயக்கத்தை நிறுத்துகிறார்.</p><p>அதன்பின் துப்பாக்கிக் குழலைத் தொட முயன்ற அவர், அது அதிக வெப்பமடைந்திருந்ததை உணர்ந்து உடனடியாக கையைப் பின்வாங்கும் காட்சியும் காணொளியில் பதிவாகியுள்ளது.” என தெரிவித்துள்ளது.</p><p>அதேவேளை, இந்தச் சம்பவம் தொடர்பாக ரஷ்ய அதிகாரிகள் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ விளக்கத்தையும் வெளியிடவில்லை.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-13T06:24:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுகயீன விடுமுறை போராட்டத்தில் குதித்த வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/wildlife-dept-staff-stage-trade-union-action-1783921429"></link>
            <id>https://ibctamil.com/article/wildlife-dept-staff-stage-trade-union-action-1783921429</id>
            <summary type="text">வனஜீவராசிகள் திணைக்களத்தின் அனைத்து தொழிற்சங்க உறுப்பினர்களும் இன்று (13) சுகயீன விடுமுறை அறிவித்து தொழிற்சங்கப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.சிவில் ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>வனஜீவராசிகள் திணைக்களத்தின் அனைத்து தொழிற்சங்க உறுப்பினர்களும் இன்று (13) சுகயீன விடுமுறை அறிவித்து தொழிற்சங்கப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.</p><p>சிவில் பாதுகாப்பு அதிகாரிகளை வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்திற்கு உள்வாங்குவதற்கு அரசாங்கத்தின் நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே இப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.</p><p> 

அத்துடன் பத்தரமுல்லையில் அமைந்துள்ள வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தின் பிரதான அலுவலகத்திற்கு முன்பாக இன்று பாரிய கண்டனப் போராட்டமொன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p></p><h2>&nbsp;சிவில் பாதுகாப்பு அதிகாரிகள்</h2><p>இது தொடர்பில் மேலும் கருத்துத் தெரிவித்த அகில இலங்கை வனஜீவராசிகள் கட்டுப்பாட்டு உத்தியோகத்தர்கள் சங்கத்தின் தலைவர் இந்திக பீரிஸ், 

வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் மிகவும் தன்னிச்சையான முறையில், வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தில் தற்போது கடமையாற்றும் அனைத்து அதிகாரிகளுக்கும் பாதகமான முறையில் சிவில் பாதுகாப்பு அதிகாரிகளைத் திணைக்களத்திற்குள் உள்வாங்க முயற்சிக்கிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f6b2f826-b573-4f12-a39f-30a97017567e/26-6a5482034d5b1.webp' /></p><p> 

நாங்கள் பணிப்பாளர் நாயகத்திடம், இந்த நியமனங்களுக்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல, ஆனால் இந்த நியமன முறையில் உள்ள குறைபாடுகள் தொடர்பில் எங்களுடன் கலந்துரையாட ஒரு சந்தர்ப்பம் வழங்குங்கள் எனக் கூறினோம்.</p><p> 

ஆயினும் அவரது தன்னிச்சையான முடிவுகள் காரணமாக, எங்களுடன் எவ்வித கலந்துரையாடலும் இன்றி, தவறான முறையில் இந்த நியமனங்களை மேற்கொள்கிறார்.</p><p></p><h2>பாரிய கண்டனப் போராட்டம்</h2><p> 

எமது கள உதவியாளர்கள், இரண்டாம் நிலை அதிகாரிகள் மாத்திரமன்றி, வனவிலங்கு கட்டுப்பாட்டாளர்கள், பிராந்திய உதவியாளர்கள், பிராந்திய காப்பாளர்கள் உள்ளிட்ட திணைக்களத்திலுள்ள அனைத்து அதிகாரிகளுக்கும் பாரிய பாதிப்பு ஏற்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e47ea2ca-abcf-4a25-8846-5e136cb47618/26-6a548274a2853.webp' /></p><p> 

13 ஆம் திகதிக்கு முன்னர் எமக்கு ஒரு கலந்துரையாடலை வழங்குங்கள் எனக் கோரியிருந்தோம். 

இதுவரை பணிப்பாளர் நாயகம் எமக்குக் கலந்துரையாடலை வழங்கவில்லை. இந்த நிலைமையை அவரே உருவாக்கினார். </p><p>அதனால், இன்று பத்தரமுல்லையிலுள்ள வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தின் பிரதான அலுவலகத்திற்கு முன்பாக பாரிய கண்டனப் போராட்டமொன்றை நாம் முன்னெடுக்கிறோம்“ என தெரிவித்தார்.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-13T06:21:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாமலிடம் ரணில் பேசிய ரகசியம் அம்பலம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-gota-ranil-meeting-discussion-1783910685"></link>
            <id>https://tamilwin.com/article/namal-gota-ranil-meeting-discussion-1783910685</id>
            <summary type="text">சமகால அரசியலில் வலுவான எதிர்க்கட்சி ஒன்றை ஏற்படுத்தி, அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் ராஜபக்ச தரப்பினால் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சமகால அரசியலில் வலுவான எதிர்க்கட்சி ஒன்றை ஏற்படுத்தி, அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் ராஜபக்ச தரப்பினால் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. </p><p>

இதற்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ரணில், நாமலின் சந்திப்பு தொடர்பான காணொளி வெளியாகி இருந்தது. </p><p>

பொது நிகழ்வு ஒன்றின் போது முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும், நாமல் ராஜபக்சவும் மிகவும் நெருக்கமாக கலந்துரையாடல் காணொளி பேசுபொருளாகியது.</p><p> </p><h2><b>

திருமண நிகழ்வு</b></h2><p>முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டாரவின் புதல்வரின் திருமண நிகழ்வு கடந்த புதன்கிழமை இரவு சினமன் லைப் ஹோட்டலில் இடம்பெற்றது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0f68f346-fdaa-487b-924b-f11d90a962f4/26-6a54825ce9296.webp' /></p><p>இந்த நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதிகளான மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்ரமசிங்க, கோட்டாபய ராஜபக்ச மற்றும் நாமல் ராஜபக்ச உள்ளிட்ட பல அரசியல்வாதிகள் கலந்து கொண்டனர்.
</p><p>
இதன்போது நாமல் ராஜபக்சவுடன் ரணில் விக்ரமசிங்கவும் கோட்டாபய ராஜபக்சவும் உரையாடும் விதத்தை பலரும் அவதானித்தனர்.</p><p> 

ரணிலுடன் பேசப்பட்ட விடயம் தொடர்பில் அங்கிருந்தவர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர். 

அதற்கு நாமல் பதிலளிக்கையில், தற்போதைய அரசியல் செயற்பாடு குறித்து ரணில் கேள்வி எழுப்பியிருந்தார். </p><p>கிராமத்திற்கு கிராமம் வேலைத்திட்டத்துடன் நாடு முழுவதும் சென்று கொண்டிருப்பதாக குறிப்பிட்டார். </p><p>

தனிப்பட்ட விடயங்களை குறித்து உரையாடியதுடன், விரைவில் நேரடியாக இணைந்து பணியாற்றுவோம் என ரணில் குறிப்பிட்டதாகவும் நாமல் தெரிவித்துள்ளார். </p>]]></content>
            <updated>2026-07-13T06:15:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தியாவில் இன்று தேசிய துக்க தினம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/passing-emir-qatar-national-day-of-mourning-india-1783923366"></link>
            <id>https://jvpnews.com/article/passing-emir-qatar-national-day-of-mourning-india-1783923366</id>
            <summary type="text">&amp;nbsp; வளைகுடா நாடான கட்டாரை உலகளாவிய பொருளாதார மற்றும் இராஜதந்திர சக்தியாக மாற்றிய பெருமைக்குரிய முன்னாள் அமீர் ஷேக் ஹமத் பின் கலீஃபா அல் தானியின் (S...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; வளைகுடா நாடான கட்டாரை உலகளாவிய பொருளாதார மற்றும் இராஜதந்திர சக்தியாக மாற்றிய பெருமைக்குரிய முன்னாள் அமீர் ஷேக் ஹமத் பின் கலீஃபா அல் தானியின் (Sheikh Hamad bin Khalifa Al Thani) மறைவையொட்டி, இன்று (13) இந்திய அரசு, தேசிய துக்க தினத்தை அறிவித்துள்ளது.
</p><p>
இந்திய வெளியுறவு அமைச்சு நேற்று (12) வெளியிட்ட அறிவிப்பில், துக்க தினமான இன்று இந்தியா முழுவதும் தேசியக் கொடி ஏற்றப்படும் அனைத்து அரச அலுவலகங்களிலும் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7e50b97f-7f31-4925-9f3a-325e3eaa28c2/26-6a5482a81fc7d.webp' /></p><h2>&nbsp;தேசியக் கொடி&nbsp;&nbsp;அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும்</h2><p>
</p><p>
மேலும், இன்று நடைபெறவிருந்த அனைத்து அரச சார்ந்த நிகழ்ச்சிகள் மற்றும் கேளிக்கை நிகழ்வுகள் அனைத்தும் இரத்துச் செய்யப்பட்டுள்ளன.

ஷேக் ஹமாத் பின் கலிஃபா அல் தானியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, </p><p>அவரை "கட்டார் நாட்டை உயர்ந்த வளர்ச்சி மற்றும் செழுமைக்கு அழைத்துச் சென்ற தொலைநோக்கு பார்வையாளர்" என்று புகழாரம் சூட்டியுள்ளார்.</p><p></p><p>
</p><p>
சமூக வலைதளத்தில் இது குறித்து பதிவிட்டுள்ள இந்திய பிரதமர், "கடந்த 2024 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் தான் கட்டாருக்குச் சென்றிருந்தபோது அவரைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.</p><p></p><p> </p><p>அவர் இந்தியாவின் உண்மையான நண்பராக எப்போதும் நினைவுகூரப்படுவார்" என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த துக்க தின நிகழ்வுகள் மூலம், கட்டாருடனான இந்தியாவின் நெருக்கமான மற்றும் வரலாற்று ரீதியான நட்புறவு மீண்டும் ஒருமுறை வெளிப்படுத்தப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-13T06:14:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுவிட்சர்லாந்துக்கு சுற்றுலா சென்ற இந்திய தம்பதி மாயம்: எழுந்துள்ள சந்தேகம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/hyderabad-couple-missing-in-swiss-abscond-doubt-1783923114"></link>
            <id>https://news.lankasri.com/article/hyderabad-couple-missing-in-swiss-abscond-doubt-1783923114</id>
            <summary type="text">சுவிட்சர்லாந்துக்கு சுற்றுலா சென்ற ஒரு இந்திய தம்பதி மாயமாகியுள்ள நிலையில், அவர்கள் குறித்து ஒரு சந்தேகம் எழுந்துள்ளதால், அது குறித்து பொலிசார் விசாரண...</summary>
            <content type="html"><![CDATA[<p>சுவிட்சர்லாந்துக்கு சுற்றுலா சென்ற ஒரு இந்திய தம்பதி மாயமாகியுள்ள நிலையில், அவர்கள் குறித்து ஒரு சந்தேகம் எழுந்துள்ளதால், அது குறித்து பொலிசார் விசாரணை ஒன்றைத் துவக்கியுள்ளார்கள்.</p><h3>

சுவிட்சர்லாந்துக்குச் சென்ற இந்திய தம்பதி மாயம்</h3><p>

இந்தியாவின் தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த பப்பா சந்திரசேகரும் (Pabba Chandrasekhar, 51) அவரது மனைவியான ஸ்வப்னாவும் (42), ஜூன் மாதம் 22ஆம் திகதி சுவிட்சர்லாந்துக்கு சுற்றுலா சென்றுள்ளனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c0041c72-eac4-4a3d-87f3-ca3c366aa1e9/26-6a5481ab7c47f.webp' /></p><p>
ஆனால், ஜூலை மாதம் 8ஆம் திகதி, அவர்கள் குடும்பத்தினருடனான தொலைபேசித் தொடர்பை நிறுத்தியுள்ளனர். </p><p>அவர்களுடைய மொபைல்கள் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளன.

ஆகவே, தன் பெற்றோரைக் காணவில்லை என தம்பதியரின் மகளான ஷ்ரேயா (23) பொலிசில் புகாரளித்துள்ளார்.&nbsp;</p><p></p><h3>
எழுந்துள்ள சந்தேகம்

விடயம் </h3><p>என்னவென்றால், தொழிலதிபரான சந்திரசேகரும் அவரது மனைவியும், 60க்கும் மேற்பட்டவர்களிடமிருந்து தனிப்பட்ட முறையிலும் தொழிலுக்காகவும், அதிக வட்டி கொடுப்பதாகக் கூறி சுமர் 50 கோடி ரூபாய் வாங்கியுள்ளனர்.</p><p>

ஆக, அவர்கள் பணத்தை வாங்கிக்கொண்டு தலைமறைவாகிவிட்டார்களோ என்னும் சந்தேகம் எழுந்துள்ளது.
</p><p>
ஆகவே, அவர்கள் எங்கிருக்கிறார்கள், உண்மையாகவே சுவிட்சர்லாந்துக்குதான் சென்றார்களா என்பதை அறிவதற்காக, அவர்களுடைய பயணத் திட்டம், பாஸ்போர்ட் பதிவுகள் மற்றும் பணப்பரிவர்த்தனை சரிபார்க்கும் முயற்சிகளில் அதிகாரிகள் இறங்கியுள்ளார்கள்.
</p><p>
தம்பதியரைக் குறித்து யாருக்காவது தெரியவந்தால் தங்களுக்குத் தகவல் கொடுக்குமாறும் பொலிசார் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்கள்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-13T06:12:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Fathima</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடல் அலைக்குள் சிக்கிய அனுஷ்கா: பத்திரமாக மீட்ட போலிசார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/anushka-rescued-in-chennai-marina-beach-1783912898"></link>
            <id>https://manithan.com/article/anushka-rescued-in-chennai-marina-beach-1783912898</id>
            <summary type="text">சென்னை மெரினாவில் கடல் அலையில் சிக்கி கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்ட உக்ரைன் நாட்டை சேர்ந்த இளம்பெண்ணான அனுஷ்காவை கடலோர காவல் படையின் மெரினா உயிர்கா...</summary>
            <content type="html"><![CDATA[<p>சென்னை மெரினாவில் கடல் அலையில் சிக்கி கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்ட உக்ரைன் நாட்டை சேர்ந்த இளம்பெண்ணான அனுஷ்காவை கடலோர காவல் படையின் மெரினா உயிர்காக்கும் குழுவினர் பத்திரமாக மீட்டனர்.</p><h2>கடல் அலையில் சிக்கினார்</h2><p>

உக்ரைனை சேர்ந்த அனுஷ்கா(வயது 24) இந்தியாவிற்கு சுற்றுலா வந்துள்ளார், இங்கே பல்வேறு மாநிலங்களை சுற்றிப்பார்த்துவிட்டு சென்னையில் வந்து தங்கியுள்ளார்.
</p><p>
மெரினா கடற்கரைக்கு சென்ற போது கடலில் குளித்துக் கொண்டிருந்தார், அப்போது ராட்சத அலை வந்ததும் அவர் அலையால் உள்ளே இழுக்கப்பட்டு சுமார் 100 மீற்றர் தூரம் வரை கடலுக்குள் சென்று தத்தளித்தார்.</p><h2>இளம்பெண்ணை மீட்ட குழுவினர்</h2><p>
</p><p>
அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் உடனடியாக மீட்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
</p><p>
உடனடியாக விரைந்து வந்த குழுவினர் கடலுக்குள் சென்று அனுஷ்காவை பத்திரமாக மீட்டனர்.</p><p>

தொடர்ந்து அவருக்கு முதலுதவி சிகிச்சை வழங்கப்பட்டு பத்திரமாக குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் போலிசார் அனுப்பி வைத்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4f738d3a-2bc0-4b44-ad63-e5cc380914ff/26-6a545a4c7032a.webp' /><br></p>]]></content>
            <updated>2026-07-13T06:10:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாஜக - திமுக கூட்டணி? உறுதிப்படுத்தும் முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/anitha-radhakrisnan-speech-sparks-dmk-bjp-alliance-1783922726"></link>
            <id>https://news.lankasri.com/article/anitha-radhakrisnan-speech-sparks-dmk-bjp-alliance-1783922726</id>
            <summary type="text">திமுக - பாஜக கூட்டணி அமைக்க உள்ளது என்பதை குறிக்கும் வகையில் முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசியுள்ளார்.

6 மாதத்தில் கவிழும் தவெக ஆட்சி? 
...</summary>
            <content type="html"><![CDATA[<p>திமுக - பாஜக கூட்டணி அமைக்க உள்ளது என்பதை குறிக்கும் வகையில் முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசியுள்ளார்.
</p><h3>
6 மாதத்தில் கவிழும் தவெக ஆட்சி?</h3><p> 

2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழகம் பிற கட்சிகளின் உதவியுடன் பெரும்பான்மை பெற்று ஆட்சியை கைப்பற்றியுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ba547c78-74d6-4017-ae40-c1a10a942d71/26-6a5480285539a.webp' /></p><p>

முன்னதாக திமுக - அதிமுக இணைந்து ஆட்சியமைக்க முயற்சித்ததாக திமுகவின் கூட்டணி கட்சிகள் மற்றும் அதிமுகவில் இருந்து விலகிய முன்னாள் அமைச்சர்கள் குற்றஞ்சாட்டினர். </p><p>

இதனைத்தொடர்ந்து, தவெக எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி ஆட்சியை கவிழ்க்க முயற்சித்தாக 8 பேரை தமிழ்நாடு காவல்துறை கைது செய்துள்ளது. </p><p>

இதில், திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பங்கு இருப்பதாக கூறி அவருக்கு சம்மன் அனுப்பட்டுள்ளது. </p><h3> 

பாஜக - திமுக கூட்டணி?
</h3><p>
இந்த சூழலில், தவெக ஆட்சி இன்னும் 6 மாதங்கள் தான் இருக்கும் எனவும், திமுக எம்பி மத்திய அமைச்சர் ஆவார் எனவும் முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசியுள்ளார். </p><p>

தூத்துக்குடியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், "இன்னும் எவ்வளவு காலத்திற்கு இந்த ஆட்சி இருக்கும். நான் குறிப்பிட்டு சொல்கிறேன் இன்னும் 6 மாத காலத்திற்குள் இந்த ஆட்சி போகவில்லை என்றால் பார்ப்போம்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cc9c4d73-75d5-48b3-abbe-f525ab2755da/26-6a548027a516f.webp' /></p><p>

கழக தோழர்கள் எதற்கும் அஞ்ச வேண்டாம். 6 மாத காலத்திற்குள் தமிழ்நாடு முதலமைச்சராக அண்ணன் ஸ்டாலின் வருவார்கள். </p><p>

நம்முடைய இளந்தலைவர் உதயநிதி ஸ்டாலின் கட்சியை நடத்துவார்கள். நம்முடைய பாராளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா போன்றவர்கள் எல்லாம் டெல்லியில் அமைச்சர்களாக அமர்வார்கள்.
</p><p>
அப்படி ஒரு நிலை வரும்போது நீ சினிமாவில் என்ன தப்பு செய்தாய், வருமான வரித்துறையில் என்ன ஏமாற்றினாய் என அனைத்தும் வெளிவரும்" என தெரிவித்துள்ளார். </p><p>

திமுக எம்.பிக்கள் டெல்லியில் அமைச்சர் ஆவார்கள் என பேசியதன் மூலம், பாஜக உடன் கூட்டணி அமைக்க திமுக முயற்சித்து வருகிறதா கேள்வி எழுந்துள்ளது.</p><p> 

முன்னாள் அமைச்சர்கள் எ.வ.வேலு, செந்தில் பாலாஜி போன்றோர் மீதான வழக்குகளை தவெக அரசு தீவிரப்படுத்தி வருகிறது. </p><p>

காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் திமுக கூட்டணியில் இருந்து விலகிவிட்ட நிலையில், குறைந்தபட்ச செயல்திட்டத்துடன் பாஜக உடன் திமுக கூட்டணி அமைக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-13T06:06:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையின் மிக மூத்த வயதுடைய பெண் கலமானார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sri-lanka-s-oldest-woman-has-passed-away-114-age-1783922750"></link>
            <id>https://jvpnews.com/article/sri-lanka-s-oldest-woman-has-passed-away-114-age-1783922750</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;இலங்கையின் மிக மூத்த வயதுடைய பெண்களில் ஒருவராகப் பரவலாக அறியப்பட்ட, அனுராதபுரத்தைச் சேர்ந்த பஞ்சகே கலுமெனிக்கே (Punchage Kalumenike) தனது...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;இலங்கையின் மிக மூத்த வயதுடைய பெண்களில் ஒருவராகப் பரவலாக அறியப்பட்ட, அனுராதபுரத்தைச் சேர்ந்த பஞ்சகே கலுமெனிக்கே (Punchage Kalumenike) தனது 114 ஆவது வயதில் காலமானார்.
</p><p>
1912 ஆம் ஆண்டு ஜூலை 4-ஆம் திகதி பிறந்த கலுமெனிக்கே, இந்த ஆண்டின் முற்பகுதியில் தனது 114 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடினார்.

அதன் பின்னர் சிறிது காலத்திலேயே, அவர் கீழே விழுந்ததில் காயமடைந்து அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/51684204-389f-4bbe-b4ed-9823aa66bdcd/26-6a5480403073d.webp' /></p><p> </p><p>

அறுவை சிகிச்சைக்குப் பின்னர் இரண்டு மாதங்கள் உயிர்வாழ்ந்த போதிலும், இறுதியில் அவர் காலமானார்.

12 பிள்ளைகள் மற்றும் 325 கொள்ளுப் பேரக்குழந்தைகள் என ஒரு மிகப்பெரிய குடும்பப் பரம்பரையை கலுமெனிக்கே விட்டுச் சென்றுள்ளார்.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-13T06:04:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கர்தினால் மெல்கம் ரஞ்சித் மீது பாரதூரமான குற்றச்சாட்டு சுமத்தும் சாமர]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/chamara-accused-cardinal-1783922443"></link>
            <id>https://tamilwin.com/article/chamara-accused-cardinal-1783922443</id>
            <summary type="text">நாட்டின் தேசிய பாதுகாப்பு விவகாரங்களில் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தலையீடு செய்வதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பி...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டின் தேசிய பாதுகாப்பு விவகாரங்களில் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தலையீடு செய்வதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
</p><p>எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசாநாயக்க இந்த குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.
</p><p>இராணுவ தளபதி நியமன விவகாரம் மற்றும் குற்றப் புலனாய்வு திணைக்கள நடவடிக்கைகள் போன்றவற்றில் கர்தினால் முக்கிய தீர்மானங்களை எடுப்பதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4ff60680-c31b-4e9a-92e6-0a439f399781/26-6a547f0d1b16d.webp' /></p><p>
</p><p>தற்போதைய இராணுவ தளபதியின் பதவிக்காலம் நிறைவடைந்ததன் பின்னர் பெர்னாண்டோ ஒருவர் பதவி ஏற்பார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>இதன் ஊடாக பௌத்தர் அல்லாத ஒருவருக்கு இந்தப் பதவி வழங்கப்பட உள்ளதாக அவர் சூசகமாக சுட்டிக்காட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.</p><p>
இராணுவ தளபதியின் பதவிக்காலம் பூர்த்தி அடைந்தபோதிலும் மீண்டும் பதவி காலத்தை நீட்டித்துக் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
</p><p>தற்பொழுது பதவி வகிக்கும் இராணுவ தளபதியின் பதவிக்காலம் எதிர்வரும் 2027 ஆம் ஆண்டு ஜனவரி அல்லது பிப்ரவரி மாதம் வரையில் நீடிக்கப்படும் சாத்தியங்கள் உண்டு என அவர் தெரிவித்துள்ளார்.
</p><p>இராணுவத் தளபதி பதவியை வகிக்க காத்திருக்கும் அடுத்த பதவி நிலையில் இருக்கும் மேஜர் ஜெனரால் நிலந்த பிரேமரட்ன, மேஜர் ஜெனரல் உடுகம, மேஜர் ஜெனரல் ஜெனரல் நளின் பண்டாரநாயக்க போன்றவர்களை ராணுவ தளபதி பதவியை ஒரு நாளேனும் வகிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
</p><p>அவர்கள் நாட்டுக்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றியவர்கள் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இராணுவ தளபதி பதவிக்கு கிறிஸ்தவர் ஒருவர் நியமிக்கப்பட உள்ளதா அவர் தெரிவித்துள்ளார்.
</p><p>அண்மையில் அருட்தந்தையர்கள் மட்டக்களப்பிற்கு சென்று ராணுவத்தினரின் ஆடம்பர விடுதி ஒன்றில் தங்கி இருந்ததாகவும் இராணுவத்தினர் அவர்களுக்கு உணவு பானங்களை வழங்கியதாகவும் தெரிவித்துள்ளார்.</p><p>
மகாநாயக்க தேரர்களிடம் சென்று மூன்று மாதத்திற்கு ஒரு தடவை வணங்கி வந்தாலும் இராணுவ உயர் பதவி நியமனங்கள் மற்றும் புலனாய்வு பிரிவு நடவடிக்கைகள் என்பன கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகைக்கு தேவையான வகையில் இயக்கப்படுவதாக சாமர சம்பத் தசநாயக்க குற்றம் சுமத்தியுள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-13T06:00:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[Purple நிற கிளாமர் உடையில் நடிகை தர்ஷா குப்தா எடுத்த போட்டோ ஷுட்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/actress-dharsha-gupta-latest-photoshoot-1783919600"></link>
            <id>https://cineulagam.com/article/actress-dharsha-gupta-latest-photoshoot-1783919600</id>
            <summary type="text">தர்ஷா குப்தாவிஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் தர்ஷா குப்தா. அதற்கு முன் விஜய்யிலேயே ஒரு சீரியல் நடித்து வந்துள்ளா...</summary>
            <content type="html"><![CDATA[<h2>தர்ஷா குப்தா</h2><p>விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் தர்ஷா குப்தா. </p><p>அதற்கு முன் விஜய்யிலேயே ஒரு சீரியல் நடித்து வந்துள்ளார், ஆனால் பாதியிலேயே வெளியேறி இருக்கிறார். அதேபோல் வெள்ளித்திரையில் என்ட்ரி கொடுத்தவர் ஓ மை கோஸ்ட் படத்தில் முதன்முதலில் நடித்தார்.
</p><p>இப்போது தர்ஷா படங்கள், சீரியல்கள், ரியாலிட்டி போன்றவற்றை தாண்டி போட்டோ ஷுட்களில் தான் அதிக பிஸி. இப்போது இவர் Purple நிறத்தில் கிளாமராக எடுத்த போட்டோ ஷுட் புகைப்படங்கள் இதோ,&nbsp;</p><p><br></p>]]></content>
            <updated>2026-07-13T06:00:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் 12 வயது மாணவியின் ஸ்டார்ட்-அப் நிறுவனம்! 3 நாடுகளில் வாடிக்கையாளர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/a-12-year-old-mana-jampala-ai-start-up-in-canada-1783922438"></link>
            <id>https://canadamirror.com/article/a-12-year-old-mana-jampala-ai-start-up-in-canada-1783922438</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp; கனடாவில் 12 வயது மாணவி மனா ஜம்பாலா, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஒரு ஸ்டார்ட்-அப் நிறுவனத்தை தொடங்கி சாதனை படைத்துள்ளார...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp; கனடாவில் 12 வயது மாணவி மனா ஜம்பாலா, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஒரு ஸ்டார்ட்-அப் நிறுவனத்தை தொடங்கி சாதனை படைத்துள்ளார்.</p><p> 

ஏழாம் வகுப்பு படிக்கும் இவர், 'வோக்ஸா' என்ற நிறுவனத்தின் மூலம் கனடா, இந்தியா மற்றும் கம்போடியா ஆகிய நாடுகளில் உள்ள வணிகங்களுக்கு சேவைகளை வழங்கி வருகிறார்.
 
தனது ஒன்பதாவது வயதில் பைதான் நிரலாக்க மொழியை கற்றுக் கொண்ட மனா, 11 வயதிலேயே சொந்தமாக AI தயாரிப்புகளை உருவாக்க தொடங்கிவிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d11df3be-243b-4654-bdc9-79d215c2d0a7/26-6a547f084fb11.webp' /></p><h2>&nbsp;24 மணி நேரமும் செயல்படும் AI குரல்</h2><p>
</p><p>
 தனது தந்தை பணிபுரியும் இடத்தில் வாடிக்கையாளர்களின் அழைப்புகள் தவறவிடப்படுவதை கவனித்த மனா, அந்த சிக்கலுக்குத் தீர்வாக 24 மணி நேரமும் செயல்படும் AI குரல் உதவியாளரை உருவாக்கினார். </p><p>

இந்த சாதனம் வாடிக்கையாளர்களின் அழைப்புகளை ஏற்று, உணவகங்களில் ஆர்டர்களை பெறுதல் மற்றும் முன்பதிவு செய்தல் போன்ற பணிகளை செய்கிறது.
</p><p> 
 அதேசமயம் தொழில்நுட்ப உதவியாளர்களை பயன்படுத்தினாலும், குறியீட்டின் ஒவ்வொரு பகுதியையும் தானே சோதனை செய்து பிழைகளை திருத்தியதாகக் கூறும் மனா, தற்போது 'வோக்ஸா ஏஜென்ட்ஸ்' என்ற புதிய முயற்சியிலும் ஈடுபட்டுள்ளார்.</p>]]></content>
            <updated>2026-07-13T05:59:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையின் மிகவும் வயதான பெண்மணி காலமானார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-lanka-oldest-living-woman-passes-away-at-114-1783919679"></link>
            <id>https://tamilwin.com/article/sri-lanka-oldest-living-woman-passes-away-at-114-1783919679</id>
            <summary type="text">இலங்கையின் வாழும் மிகவும் வயதான பெண்களில் ஒருவராகப் பரவலாக அங்கீகரிக்கப்பட்டவரும், அனுராதபுரம் மாவட்டத்தின் சங்கிலி கனதரவாவைச் சேர்ந்தவருமான பஞ்சகே கல...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் வாழும் மிகவும் வயதான பெண்களில் ஒருவராகப் பரவலாக அங்கீகரிக்கப்பட்டவரும், அனுராதபுரம் மாவட்டத்தின் சங்கிலி கனதரவாவைச் சேர்ந்தவருமான பஞ்சகே கலுமெனிகே, தனது 114ஆவது வயதில் உயிரிழந்துள்ளார்.
</p><p>
1912ஆம் ஆண்டு ஜூலை 4 ஆம் திகதி பிறந்த கலுமெனிகே, இந்த ஆண்டின் தொடக்கத்தில் தனது 114ஆவது பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளார். </p><p></p><h2>அறுவை சிகிச்சையின் பின்&nbsp;</h2><p>

சிறிது காலத்திற்கு பின்னர், அவர் கீழே விழுந்து அறுவை சிகிச்சைக்கு உள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9401ac72-d42c-4dec-abbe-5b41e321eef4/26-6a5479c3145c1.webp' /></p><p>அறுவை சிகிச்சைக்குப் பின் இரண்டு மாதங்கள் உயிர் வாழ்ந்தபோதிலும், இறுதியில் அவர் உயிரிழந்துள்ளார்.
</p><p>
கலுமெனிகே , 12 பிள்ளைகளையும் 325 கொள்ளுப்பேரக்குழந்தைகளைக் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-13T05:56:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[களுத்துறை மாவட்ட செயலகத்தில் தீப்பரவல் - ஊழியர்கள் உடனடியாக வெளியேற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/fire-breaks-out-at-kalutara-district-secretariat-1783916491"></link>
            <id>https://tamilwin.com/article/fire-breaks-out-at-kalutara-district-secretariat-1783916491</id>
            <summary type="text">புதிய இணைப்புகளுத்துறை மாவட்ட செயலகத்தில் ஏற்பட்ட தீ விபத்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.ஐந்து மாடி கட்டிடத்தின் ...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>களுத்துறை மாவட்ட செயலகத்தில் ஏற்பட்ட தீ விபத்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>ஐந்து மாடி கட்டிடத்தின் தரைத்தளத்தில் உள்ள மின்சுற்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக&nbsp;களுத்துறை மாநகர சபை தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது.</p><p>அலுவலக அதிகாரிகள் உட்பட அனைத்து அலுவலக ஊழியர்களும் வெளியேற்றப்பட்டுள்ளதுடன், யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.</p><h2>முதலாம் இணைப்பு</h2><p>களுத்துறை மாவட்ட செயலகத்தில் இன்று தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தீயணைப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p>இன்று காலை (13)&nbsp;சுமார் 8.30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டதாகவும், மின்சார அமைப்பு சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>மின்சாரம் துண்டிப்பு</h2><p>
</p><p>


தீ விபத்து தொடர்பான தகவல் கிடைத்ததை தொடர்ந்து, தீயை கட்டுப்படுத்துவதற்காக தீயணைப்பு வாகனம் ஒன்று சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e03ef091-b633-45f2-b03e-bcf82d3cc9a9/26-6a546a2ba5165.webp' /></p><p>மின் கசிவு காரணமாக&nbsp;&nbsp;தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p>



தீயை முழுமையாகக் கட்டுப்படுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், சேத விபரங்கள் தொடர்பான மேலதிக தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை என தெரிவிக்கப்படுகிறது.</p><p>இந்த சம்பவத்தை தொடர்ந்து களுத்துறை மாவட்ட செயலகத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-13T05:56:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[சதம் விளாசிய வீராங்கனைகள்: அயர்லாந்திற்கு எதிரான தொடரை கைப்பற்றிய மேற்கிந்திய தீவுகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/women-west-indies-win-odi-series-vs-ireland-1783920643"></link>
            <id>https://news.lankasri.com/article/women-west-indies-win-odi-series-vs-ireland-1783920643</id>
            <summary type="text">மகளிர் அயர்லாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை மேற்கிந்திய தீவுகள் கைப்பற்றியது.&amp;nbsp;இரண்டாவது ஒருநாள் போட்டி 

மகளிர் மேற்கிந்திய தீவுகள் மற்றும் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>மகளிர் அயர்லாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை மேற்கிந்திய தீவுகள் கைப்பற்றியது.&nbsp;</p><h2>இரண்டாவது ஒருநாள் போட்டி</h2><p> 

மகளிர் மேற்கிந்திய தீவுகள் மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி ப்ரெடியில் நடந்தது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3bb3d407-8de4-42dc-b7a9-e6bb4ed478d4/26-6a547af9120ed.webp' /></p><p></p><p>

முதலில் ஆடிய அயர்லாந்து அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 241 ஓட்டங்கள் எடுத்தது. ஏமி ஹன்டர் 67 ஓட்டங்களும், ரெபெக்கா 57 ஓட்டங்களும் எடுத்தனர். </p><p>

பின்னர் ஆடிய மேற்கிந்திய தீவுகள் அணி 38.5 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 242 ஓட்டங்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.&nbsp;</p><h2>ஹேலே மேத்யூஸ்,&nbsp;ஸ்டாஃபானி&nbsp;சதம் </h2><p>
அணித்தலைவர் ஹேலே மேத்யூஸ் (Hayley Matthews) 94 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 14 பவுண்டரிகளுடன் 100 ஓட்டங்களும், ஸ்டாஃபானி டெய்லர் (Stafanie Taylor) 100 ஓட்டங்களும் குவித்தனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a992d783-a9ef-439e-b069-10f3fc875400/26-6a547af863632.webp' /></p><p>

இந்த வெற்றியின் மூலம் மேற்கிந்திய தீவுகள் அணி ஒருநாள் தொடரை கைப்பற்றியது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/290a8260-9d48-43d2-bbb4-96774072d4a9/26-6a547af7b2d04.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ef8a0940-504d-448f-a82b-62b0679aff3d/26-6a5478e4238b9.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p> 
</p>]]></content>
            <updated>2026-07-13T05:46:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[காரில் தலைக்கேரிய போதையில் 21 வயது அனிகா சுரேந்திரன்!! யார் கூட தெரியுமா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/21-age-actress-anikha-post-drink-wine-in-car-bali-1783921577"></link>
            <id>https://viduppu.com/article/21-age-actress-anikha-post-drink-wine-in-car-bali-1783921577</id>
            <summary type="text">அனிகா சுரேந்திரன்மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அடுத்தடுத்த படங்களில் நடித்து பலரது கவனத்தையும் ஈர்த்தவர் தான் நடிகை அனிகா சுரேந்தி...</summary>
            <content type="html"><![CDATA[<h2>அனிகா சுரேந்திரன்</h2><p>மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அடுத்தடுத்த படங்களில் நடித்து பலரது கவனத்தையும் ஈர்த்தவர் தான் நடிகை அனிகா சுரேந்திரன்.</p><p>

என்னை எறிந்தால், விஸ்வாசம் படங்களில் அஜித்தின் மகளாக நடித்த அனிகா, தெலுங்கில் தி கோஸ்ட் என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/82c7ab3f-f12f-4c62-a719-56634d080e55/26-6a547babc70e8.webp' /></p><p>
</p><p>

அதன்பின் புட்ட மொம்மா, ஓ மை டார்லிங், PT சார், நிலவுக்கு என் மேல் என்னடி கோபம், இந்ரா போன்ற படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார். </p><p>14 வயதில் போட்டோஷூட் பக்கம் சென்ற நடிகை அனிகா, கிளாமர் பக்கம் சென்று போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.</p><h3>பாலி தீவு</h3><p>
</p><p>
தற்போது 21 வயதாகும் அனிகா, பாலி தீவுக்கு சென்று, கையில் மது அருந்தியபடி எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து ஷாக் கொடுத்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-07-13T05:45:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீதி அமைச்சர் பதவி விலகி நாட்டு மக்களிடம் மன்னிப்புக்கோர வேண்டும்! அஜித் மான்னப்பெரும வலியுறுத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/justice-minister-should-apologize-ajith-manaperuma-1783919675"></link>
            <id>https://tamilwin.com/article/justice-minister-should-apologize-ajith-manaperuma-1783919675</id>
            <summary type="text">நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகளுக்கிடையில் இடம்பெற்ற மோதல் தொடர்பில்
ஆரம்பத்திலேயே நடவடிக்கை எடுக்க தவறியமைக்கு தார்மீக பொறுப்பேற்று, நீதி
அமைச்ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகளுக்கிடையில் இடம்பெற்ற மோதல் தொடர்பில்
ஆரம்பத்திலேயே நடவடிக்கை எடுக்க தவறியமைக்கு தார்மீக பொறுப்பேற்று, நீதி
அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார உடனடியாக பதவி விலகி நாட்டு
மக்களிடம் மன்னிப்புக்கேட்க வேண்டும் என்றும் ஐக்கிய தேசியக் கட்சியின்
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் மான்னப்பெரும வலியுறுத்தியுள்ளார்.
</p><p>
கம்பஹாவில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து
தெரிவிக்கும் போதே அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்தார்.</p><p></p><h2>நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்</h2><p>

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் சம்பவத்தில் 8 சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும்
21 கைதிகள் என மொத்தம் 29 பேர் உயிரிழந்துள்ளமை துரதிர்ஷ்டவசமானது என்று
குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d9f6f47a-2d83-46ed-bb8b-d7ff63a65316/26-6a547a9f5bb98.webp' /></p><p>மோதல் இடம்பெற்ற முதல் நாளிலேயே இரண்டு கைதிகள் மட்டுமே
உயிரிழந்திருந்தனர். அன்று சம்பவத்துடன் தொடர்புடையவர்களை அங்கிருந்து
அகற்றியிருந்தால், நிலைமை இவ்வளவு தூரம் மோசமடைந்திருக்காது. எமது சிறைச்சாலை
அதிகாரிகள் கொல்லப்பட்டிருக்க மாட்டார்கள்" என்றும் தெரிவித்துள்ளார்.</p><p>
விடயத்துக்குப் பொறுப்பான நீதி அமைச்சர், இந்தச் சம்பவம் குறித்து ஆரம்பத்தில்
எந்தத் தகவலும் இன்றி இருந்தார் என்றும், சமூக வலைத்தளங்களைப் பார்த்து
தகவல்களை அறிந்துகொள்வது போன்றே ஊடகங்களுக்கு பதிலளித்தார் என்றும் அவர்
குற்றம்சாட்டியுள்ளார்.</p><h2>சந்தேகநபர்களுக்கு&nbsp;நட்டஈடு </h2><p>

"பொறுப்புவாய்ந்த அமைச்சரிடமிருந்து இவ்வாறான பொறுப்பற்ற பதில்களை எவரும்
ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அவர் சரியாகச் செயற்பட்டிருந்தால் இந்த துயரத்தைத் தடுத்திருக்கலாம்" என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cefdea5b-2220-4ee9-bd73-6d46e6c40cf9/26-6a547aa008eff.webp' /></p><p>

உயிரிழந்த சிறைச்சாலை அதிகாரிகளின் குடும்பங்களுக்கு நட்டஈடு வழங்க அரசு
எடுத்த தீர்மானத்தை வரவேற்ற அஜித் மான்னப்பெரும, அதேநேரம் உயிரிழந்த கைதிகளின்
விடயத்திலும் அரசு கவனம் செலுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.</p><p>

சிறையில் இருந்த அனைவரும் குற்றவாளிகள் அல்லர், அவர்களில் சந்தேகநபர்களும்
அடங்குவர் என்பதால், அவர்களுக்காகவும் நட்டஈடு வழங்கப்பட வேண்டும் என்றும்
அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-13T05:42:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடா காட்டுப்பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட சுஸ்மிதா பாஸ்கரன்; காதலன் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/susmitha-bhaskaran-in-a-wooded-area-quebec-canada-1783921285"></link>
            <id>https://jvpnews.com/article/susmitha-bhaskaran-in-a-wooded-area-quebec-canada-1783921285</id>
            <summary type="text">&amp;nbsp; கனடாவின் கியூபெக்கின் லேவிஸ் பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் 51 வயதான சுஸ்மிதா பாஸ்கரன் என்ற பெண் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; கனடாவின் கியூபெக்கின் லேவிஸ் பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் 51 வயதான சுஸ்மிதா பாஸ்கரன் என்ற பெண் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. </p><p>சம்பவத்தில்&nbsp; பெண்ணின்&nbsp; &nbsp;முன்னாள் காதலரான 60 வயதுடைய மார்ட்டின் கேரியர் என்பவர்&nbsp; கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3d70a604-a5b1-402d-accf-87199487f422/26-6a547a866f863.webp' /></p><h2>இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட சுஸ்மிதா</h2><p> இந்தியாயாவை&nbsp; பூர்வீகமாகக் கொண்ட சுஸ்மிதா ஒரு பொறியியலாளர் ஆவார். உலக ஊக்கமருந்து எதிர்ப்பு முகமையில் பணியாற்றிய இவர் அமெரிக்காவில் வசித்த பிறகு சில ஆண்டுகளுக்கு முன்பு கியூபெக் நகரில் குடியேறினார்.</p><p>இதனையடுத்து&nbsp; ஞாயிற்றுக்கிழமை முதல் அவரைக் காணவில்லை என்று உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. சுஸ்மிதா மற்றும் மார்ட்டின் கேரியர் ஆகியோருக்கு இடையே கடந்த 2010-ம் ஆண்டுகளில் இருந்து நீண்ட காலமாக ஒரு மோசமான உறவு இருந்துள்ளதாக அவரது நண்பர்கள் தெரிவிக்கின்றனர்.</p><p></p><p> </p><p>இவர்கள் 2018-ஆம் ஆண்டு பிரிந்தாலும் சொத்து பிரச்சனை மற்றும் குடும்ப விவகாரங்கள் தொடர்பாக இருவருக்கும் இடையே நீதிமன்ற போராட்டங்கள் தொடர்ந்து நடந்து வந்துள்ளன.
</p><p>

2012-ஆம் ஆண்டு சுஸ்மிதா வீடு வாங்கிய போது கனேடிய குடியுரிமை இல்லாத காரணத்தால் மார்ட்டின் பெயரில் வீடு வாங்கப்பட்டது. ஆனால், 2019-ஆம் ஆண்டு அந்த வீட்டை விற்று அதன் முழு பணத்தையும் மார்ட்டின் தனக்கு சொந்தமாக்கிக் கொண்டார். </p><p>இது தொடர்பாக 2024-இல் நீதிமன்றம் மார்ட்டினுக்கு சுஸ்மிதாவுக்கு சுமார் 1 லட்சத்து 60 ஆயிரம் டாலர்களை திருப்பி செலுத்துமாறு உத்தரவிட்டது.

இந்த வழக்கு தொடர்பாக செவ்வாய்க்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மார்ட்டின் கேரியரை அரசு வழக்கறிஞர்கள் ஜாமீனில் விடக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர். </p><p>தற்போது சடலத்தை சிதைத்ததாக மட்டுமே வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் , அடுத்த கட்ட விசாரணையின் போது அவர் மீது கூடுதல் கடுமையான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட வாய்ப்புள்ளதாக&nbsp; கனேடிய ஊடகங்க்கள்&nbsp; தெரிவித்துள்ளன.</p>]]></content>
            <updated>2026-07-13T05:40:39+00:00</updated>
        </entry>
    </feed>
