<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-07-17T04:29:20+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இளம் குடும்பஸ்தரின் உயிரை பறித்த தகராறு ; மனைவியின் அண்ணன் அரங்கேற்றிய சம்பவம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/dispute-claims-life-of-young-family-man-1784262215"></link>
            <id>https://jvpnews.com/article/dispute-claims-life-of-young-family-man-1784262215</id>
            <summary type="text">அனுராதபுரம், இராஜாங்கனை பிரதேசத்தில் ஏற்பட்ட காணித் தகராறு காரணமாக, இளம் குடும்பஸ்தர் ஒருவர் நேற்று&amp;nbsp; வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இராஜாங...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">அனுராதபுரம், இராஜாங்கனை பிரதேசத்தில் ஏற்பட்ட காணித் தகராறு காரணமாக, இளம் குடும்பஸ்தர் ஒருவர் நேற்று&nbsp; வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
</p><p style="text-align: justify; ">இராஜாங்கனை பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதுடைய, ஒரு பிள்ளையின் தந்தையே இந்தச் சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aacc20fe-4a0a-47cb-b42f-2bf1d63bf6fa/26-6a59ae4876189.webp' /></p><h2 style="text-align: justify; ">&nbsp;படுகொலை</h2><p style="text-align: justify; ">



உறவினர்களுக்கிடையே ஏற்பட்ட காணித் தகராறே இந்த மோதலுக்கும், அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற படுகொலைக்கும் காரணம் என்று ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
</p><p style="text-align: justify; ">


இந்தக் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரான 35 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">


இவர் உயிரிழந்தவரின் மனைவியின் மூத்த சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.</p><p style="text-align: justify; ">மூன்று பிள்ளைகளின் தந்தையான மேற்படி சந்தேகநபர், மோதலின் போது கூரிய ஆயுதத்தால் தாக்கியதில் அவரின் மைத்துனர் உயிரிழந்துள்ளார்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-07-17T04:23:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையின் டிஜிட்டல் அடையாள அட்டைத்திட்டம் தயார் : இந்திய உயர்ஸ்தானிகர் அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sri-lanka-s-digital-identity-card-project-is-ready-1784260718"></link>
            <id>https://ibctamil.com/article/sri-lanka-s-digital-identity-card-project-is-ready-1784260718</id>
            <summary type="text">இந்தியாவின் நிதியுதவியுடன் இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் தனித்துவமான டிஜிட்டல் அடையாள அட்டைத் திட்டம் தற்போது ஆரம்பிக்கப்படத் தயாராக உள்ளதாக...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியாவின் நிதியுதவியுடன் இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் தனித்துவமான டிஜிட்டல் அடையாள அட்டைத் திட்டம் தற்போது ஆரம்பிக்கப்படத் தயாராக உள்ளதாகவும், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா தெரிவித்துள்ளார்.</p><p>குறித்த திட்டத்திற்கான உத்தியோகபூர்வ அறிவிப்புக்கு முன்னர் இன்னும் சில சிறிய நடைமுறைகள் மட்டுமே எஞ்சியுள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p>கொழும்பில் நேற்று (16) நடைபெற்ற 'திஷா வழிகாட்டல் திட்டம் 2026' ஆரம்ப விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.</p><p></p><h2>டிஜிட்டல் அரச சேவைகள்</h2><p>

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஒவ்வொரு குடிமகனுக்கும் சரிபார்க்கப்பட்ட, நம்பகமான டிஜிட்டல் அடையாளம் கிடைக்கும் போது, நாட்டின் அடிப்படை அமைப்பில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும். சமூக உள்ளடக்கம் என்பது வெறும் கொள்கை இலக்காக மட்டும் நின்றுவிடாமல், அது நடைமுறை யதார்த்தமாக மாறும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4f34f88e-b4ec-4201-a3f6-dd1ff33b9d26/26-6a59acdad434f.webp' /></p><p> இலங்கையின் புத்தாக்கப் பொருளாதாரத்திற்கு இதுவே அடித்தளமாக அமையப் போகிறது. இதன் மூலமே நிதியியல் தொழில்நுட்பம், மின்-வணிகம் மற்றும் டிஜிட்டல் அரச சேவைகளை சாத்தியமாக்க முடியும்.
</p><p>செயற்கை நுண்ணறிவு துறையில் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நெருக்கமான ஒத்துழைப்பின் அவசியமாகும். இந்தத் தொழில்நுட்பம் மிக வேகமாக வணிகங்களை மாற்றியமைத்து வருவதோடு சிறிய குழுக்கள் கூட பெரிய நிறுவனங்களுடன் போட்டியிடும் ஆற்றலை வழங்குகின்றது.” என தெரிவித்தார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-17T04:23:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[கருப்பான முகத்தை உடனடியாக பொலிவாக்க உதவும் மஞ்சள்.., எப்படி பயன்படுத்துவது?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/homemade-turmeric-remedies-to-get-a-glowing-skin-1784261426"></link>
            <id>https://news.lankasri.com/article/homemade-turmeric-remedies-to-get-a-glowing-skin-1784261426</id>
            <summary type="text">பொதுவாக அனைவரும் முகத்தினை பொலிவாக வைத்துக்கொள்ள தான் விரும்புவார்கள்.

இருப்பினும் சூரிய கதிர்வீச்சால் பிக்மண்டேஷன், கரும்புள்ளிகள் போன்ற பாதிப்புக...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொதுவாக அனைவரும் முகத்தினை பொலிவாக வைத்துக்கொள்ள தான் விரும்புவார்கள்.
</p><p>
இருப்பினும் சூரிய கதிர்வீச்சால் பிக்மண்டேஷன், கரும்புள்ளிகள் போன்ற பாதிப்புகளால் நமது உடல் கருப்பாக மாறிவிடுகின்றன.</p><p>

மஞ்சள் தூள் முகத்திற்கு எண்ணற்ற நன்மைகளைத் தருகிறது.</p><p> </p><p></p><p>இது கிருமி நாசினி, பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்ட ஒரு அதிசய மூலிகையாகும்.&nbsp; </p><p>இது சருமத்தில் உள்ள கரும்புள்ளிகள், பருக்கள், மற்றும் சுருக்கங்களைக் குறைத்து முகத்தை பொலிவாக்க உதவுகிறது.</p><p>

அந்தவகையில், முகப்பொலிவை அதிகரிக்க மஞ்சளை எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.&nbsp;</p><h2>1. தேவையான பொருட்கள்
</h2><ul><li>
மஞ்சள்- 1 ஸ்பூன் </li><li>
அரிசி மாவு- 1 ஸ்பூன்</li><li> 
பால்- 5 ஸ்பூன் </li><li>
தேன்- 2 ஸ்பூன்</li></ul><h2>எப்படி பயன்படுத்துவது?
</h2><p>
முதலில் ஒரு கிண்ணத்தில் அரிசி மாவு, மஞ்சள் தூள், தேன் மற்றும் சிறிது பால் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.</p><p> 

பின்பு அதை முகத்தில் தடவி, 15-20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/130ecb87-acb7-420c-afc9-18a7cf9e9968/26-6a59ac593a476.webp' /></p><p>அதன் பின் வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். </p><p>

இந்த பேஸ்பேக்கை வாரத்திற்கு ஒருமுறை பயன்படுத்தி வந்தால், முகம் பொலிவாக இருக்கும்.
</p><h2>
2. தேவையான பொருட்கள்</h2><ul><li> 

மஞ்சள்- 1 ஸ்பூன் </li><li>
கடலை மாவு- 1 ஸ்பூன்</li><li> 
தயிர்- 3 ஸ்பூன் </li></ul><h2>

எப்படி பயன்படுத்துவது?
</h2><p>
முதலில் ஒரு கிண்ணத்தில் கடலை மாவை எடுத்து, அத்துடன் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.</p><p> 

பின் அதில் தயிர் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.</p><p></p><p> 

அடுத்து அதை முகம் மற்றும் கழுத்தில் தடவி, 15-20 நிமிடம் ஊறவைத்து பிறகு குளிர்ந்த நீரால் மென்மையாக தேய்த்து கழுவ வேண்டும்.</p><p> 

இந்த பேஸ்பேக் சருமத்தில் உள்ள அழுக்குகளையும், இறந்த செல்களையும் நீக்கி, முகத்தை பொலிவோடு வைத்துக் கொள்ள உதவும்.&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-17T04:15:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பகுதியில் பெற்ற மகளை பல முறை வன்புணர்ந்த தந்தைக்கு நேர்ந்த கதி ; இறுதியில் நீதிபதி கூறிய விடயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/father-faces-charges-over-daughter-abuse-case-1784258306"></link>
            <id>https://jvpnews.com/article/father-faces-charges-over-daughter-abuse-case-1784258306</id>
            <summary type="text">வவுனியா கனகராயன்குளம் பகுதியில் தனது 14 வயது மகளை 2013 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் தொடர்ச்சியாக பலமுறை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றச்சாட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">வவுனியா கனகராயன்குளம் பகுதியில் தனது 14 வயது மகளை 2013 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் தொடர்ச்சியாக பலமுறை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில், 47 வயதுடைய தந்தைக்கு வவுனியா மேல் நீதிமன்றம் 45 ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனை விதித்துள்ளது.
</p><p style="text-align: justify; ">


இந்த வழக்கில் நேற்று (16) தீர்ப்பளித்த வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி, பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மொத்தமாக 12 இலட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும், நீதிமன்றத்திற்கு ஒரு இலட்சம் ரூபாய் அபராதம் செலுத்தவும் உத்தரவிட்டார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/637ff3cf-0f8e-45ba-b8c1-41fc62759e23/26-6a599f0460d62.webp' /></p><h2 style="text-align: justify; ">பாலியல் வன்புணர்வு</h2><p>
</p><p style="text-align: justify; ">


குறித்த சம்பவம் தொடர்பாக சிறுமியின் தந்தையை பொலிஸார் கைது செய்து, வவுனியா நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியதைத் தொடர்ந்து, சட்டமா அதிபர் திணைக்களம் 2022 ஆம் ஆண்டு வவுனியா மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தது.
</p><p style="text-align: justify; ">


வழக்கு விசாரணைகளின் போது, எதிரிக்கு எதிராக சுமத்தப்பட்ட நான்கு பாலியல் வன்புணர்வு குற்றச்சாட்டுகளும் சந்தேகத்திற்கு அப்பாற்பட்ட வகையில் நிரூபிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றம் தெரிவித்தது.
</p><p style="text-align: justify; ">


இதையடுத்து, இரண்டு தனித்தனி வழக்குகளில் நிரூபிக்கப்பட்ட நான்கு குற்றச்சாட்டுகளுக்காக மொத்தம் 45 ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது</p><p style="text-align: justify; margin-left: 25px;"></p><p style="text-align: justify; "> 



மேலும், ஒவ்வொரு குற்றச்சாட்டிற்கும் தலா 3 இலட்சம் ரூபாய் வீதம் மொத்தம் 12 இலட்சம் ரூபாயை பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீடாக வழங்கவும், 

ஒவ்வொரு குற்றச்சாட்டிற்கும் 25 ஆயிரம் ரூபாய் வீதம் மொத்தம் ஒரு இலட்சம் ரூபாயை நீதிமன்ற அபராதமாக செலுத்தவும் உத்தரவிடப்பட்டது.</p><p style="text-align: justify; ">&nbsp;தீர்ப்பளிக்கும் போது கருத்து தெரிவித்த நீதிபதி, பாதுகாக்க வேண்டிய இயற்கை பாதுகாவலரான தந்தையே இவ்வாறான கடுமையான குற்றத்தை புரிந்துள்ளதால், எந்தவித கருணையும் காட்டாமல் அதிகபட்ச தண்டனை விதிக்கப்பட்டதாக குறிப்பிட்டார்.&nbsp;&nbsp;</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-07-17T04:14:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் மோசமடையும் நிலைமை ; அச்சத்தை ஏற்படுத்தும் நோயாளர் எண்ணிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/dengue-becomes-major-threat-in-sri-lanka-1784261671"></link>
            <id>https://jvpnews.com/article/dengue-becomes-major-threat-in-sri-lanka-1784261671</id>
            <summary type="text">நாட்டில் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 73,455 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">நாட்டில் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 73,455 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
</p><p style="text-align: justify; ">

நேற்று (16) வியாழக்கிழமை வரையான தரவுகளின்படி, டெங்கு நோயினால் 50 பேர் உயிரிழந்துள்ளதுடன், நேற்றைய தினம் மாத்திரம் 1,025 புதிய நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6b3c2c0f-cb0c-4864-8623-175518f98e6b/26-6a59ac2898232.webp' /></p><h2 style="text-align: justify; ">டெங்கு நோயாளர்கள்</h2><p style="text-align: justify; ">

அதிகளவான டெங்கு நோயாளர்கள் மேற்கு மாகாணத்திலேயே பதிவாகியுள்ள நிலையில், அங்கு 38,700 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
</p><p style="text-align: justify; ">
மேற்கு மாகாணத்தில் கம்பஹா மாவட்டத்தில் 15,341 பேரும், கொழும்பு மாவட்டத்தில் 14,625 பேரும் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
மேலும், ஜூலை மாதத்தின் முதல் 16 நாட்களில் மட்டும் 18,076 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், இந்த ஆண்டில் அதிகளவான மாதாந்த டெங்கு நோயாளர்கள் ஜூன் மாதத்தில் 21,538 ஆக பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-07-17T04:14:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Fathima</name>
            </author>
            <title type="text"><![CDATA[உயிருக்கு போராடிய மகன்: ஜாலியாக செல்போன் பார்த்த அம்மா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/female-looks-cell-phone-while-lying-next-to-son-1784261051"></link>
            <id>https://ibctamilnadu.com/article/female-looks-cell-phone-while-lying-next-to-son-1784261051</id>
            <summary type="text">கர்நாடகாவில் கணவரை கொன்றுவிட்டு உயிருக்கு போராடிய மகனின் அருகில் செல்போன் பார்த்துக்கொண்டிருந்த பெண்ணின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கர்நாடகாவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கர்நாடகாவில் கணவரை கொன்றுவிட்டு உயிருக்கு போராடிய மகனின் அருகில் செல்போன் பார்த்துக்கொண்டிருந்த பெண்ணின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><p>கர்நாடகாவின் தார்வார் டவுன் பல்கலைகழக சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் கிரண்- பிரியா தம்பதியினர் வசித்து வருகின்றனர், இருவருமே மருத்துவர்கள். </p><p>இவர்களுக்கு நிகித் (வயது 10) என்ற மகன் இருக்கிறார்.

சம்பவ தினத்தன்று மாலை உறவினர்கள் பிரியாவை தொடர்பு கொண்ட போது கிரண் உறங்கிக்கொண்டிருப்பதாக தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cfaa58ba-f155-4a87-8844-7b06ca3028a9/26-6a59aa56a2cb7.webp' /><br></p><p> </p><p>அடுத்தடுத்த முறை அவர்கள் தொடர்பு கொண்ட போது இருவருமே அழைப்பு எடுக்கவில்லை, இதனால் பதறிப்போன உறவினர்கள் வீட்டிற்கு வந்த போது கிரண் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார்.</p><p>

பக்கத்துஅறையில் நிகித் உயிருக்கு போராடிக்கொண்டிருக்க பிரியா செல்போன் பார்த்துக்கொண்டிருந்தார்.
</p><p>
உடனடியாக நிகித்தை மீட்ட உறவினர்கள் மருத்துவமனையில் அனுமதித்தனர், தகவல்அறிந்து விரைந்து வந்த போலிசார் பிரியாவிடம் விசாரணை நடத்தியதில் தெளிவான பதில்கள் எதையும் கூறவில்லை.</p><p>

எதற்காக கணவரை கொன்றார்? மகன் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் போது செல்போனில் மூழ்கியது ஏன்? மனநலம் எதுவும் பாதிக்கப்பட்டுள்ளாரா? என்ற கோணத்தில் விசாரணையை தொடங்கியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9e4a67be-9799-40bb-aec7-40f8b9a2b8ae/26-6a59aa5750d56.webp' /><br></p>]]></content>
            <updated>2026-07-17T04:07:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பொலிஸ் திணைக்களத்துக்கு விரைவில் 100 பொலிஸ் அதிகாரிகள் நியமனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/100-police-officers-appointed-police-dept-soon-1784260732"></link>
            <id>https://tamilwin.com/article/100-police-officers-appointed-police-dept-soon-1784260732</id>
            <summary type="text">இலங்கைப் பொலிஸ் திணைக்களத்துக்கு மிக விரைவில் நூறு சப்இன்ஸ்பெக்டர்கள் நியமிக்கப்படவுள்ள நிலையில் அவர்களுக்கான பயிற்சிகள் நிறைவடையும் கட்டத்தை எட்டியுள...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கைப் பொலிஸ் திணைக்களத்துக்கு மிக விரைவில் நூறு சப்இன்ஸ்பெக்டர்கள் நியமிக்கப்படவுள்ள நிலையில் அவர்களுக்கான பயிற்சிகள் நிறைவடையும் கட்டத்தை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
குறித்த சப் இன்ஸ்பெக்டர்களைத் தெரிவு செய்வதற்கான ஆரம்ப நடைமுறையின்போது 19 பேருக்கு 19 பேருக்கு சட்டவிரோதமாக மதிப்பெண்கள் வழங்கப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டுள்ளது.
</p><p></p><h2>பொலிஸ் பயிற்சிக் கல்லூரிகள்</h2><p>
கடந்த 2024இல் தேர்ந்தெடுக்கப்பட்ட 100 பேரில் 19 பேர் அவ்வாறு சட்டவிரோதமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதால், மறு தேர்வு முறையின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களே தற்போது பயிற்சியை நிறைவுசெய்யும் கட்டத்தில் உள்ளனர்..</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/82f45b80-2cdb-45c5-bc2e-cb0acb92abfb/26-6a59aa0156282.webp' /></p><p>

இலங்கையின் பல்வேறு பிரதேசங்களில் அமைந்துள்ள பொலிஸ் பயிற்சிக் கல்லூரிகளில் அவர்களுக்கான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-17T04:05:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிளாமரான உடையில் அய்யனார் துணை சீரியல் நடிகை ஸ்வாதியின் கலக்கல் போட்டோ ஷுட்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/ayyanar-thunai-actress-swathi-nair-photoshoot-1784257709"></link>
            <id>https://cineulagam.com/article/ayyanar-thunai-actress-swathi-nair-photoshoot-1784257709</id>
            <summary type="text">நடிகை ஸ்வாதிஅய்யனார் துணை, நல்ல கதையுடன் இந்த தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. இப்போது கதையில் நடேசன் செய்த வேலையால் குடும்பமே செம கோபத்தில் உள்ளனர்.கடன் க...</summary>
            <content type="html"><![CDATA[<h2>நடிகை ஸ்வாதி</h2><p>அய்யனார் துணை, நல்ல கதையுடன் இந்த தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. இப்போது கதையில் நடேசன் செய்த வேலையால் குடும்பமே செம கோபத்தில் உள்ளனர்.</p><p>கடன் காரன் வந்து வீட்டில் பிரச்சனை செய்ததால் டிவி வாங்கலாம் என இருந்த இருந்தவர்களுக்கு அந்த பணத்தை அவர்களிடம் கொடுத்துவிட்டனர். ஆனால் வீட்டில் நடந்த பிரச்சனைகளை எதுவும் யோசிக்காமல் ஜாலியாக இருக்கிறார் நடேசன்.</p><p>கதையில் ஒரே பிரச்சனையாக செல்ல அய்யனார் துணை சீரியல் நடிகை ஸ்வாதி லேட்டஸ்ட்டாக கலக்கல் போட்டோ ஷுட் நடத்தி வெளியிட்டுள்ளார். இதோ அந்த போட்டோஸ்,</p><p><br></p>]]></content>
            <updated>2026-07-17T04:00:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[பெண்களுக்கான சுகாதார துவாய்கள் குறித்து எடுக்கப்பட்ட தீர்மானம் ; மீறுவோருக்கு தடை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/new-decision-announced-on-women-s-sanitary-pads-1784260741"></link>
            <id>https://jvpnews.com/article/new-decision-announced-on-women-s-sanitary-pads-1784260741</id>
            <summary type="text">SLS தரச்சான்றிதழ் முத்திரை இல்லாத, உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பெண்களுக்கான சுகாதாரத் துவாய்களை உற்பத்தி செய்தல், பொதியிடல், விநியோகித்தல், எடுத...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">SLS தரச்சான்றிதழ் முத்திரை இல்லாத, உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பெண்களுக்கான சுகாதாரத் துவாய்களை உற்பத்தி செய்தல், பொதியிடல், விநியோகித்தல், எடுத்துச்செல்லல், களஞ்சியப்படுத்துதல் மற்றும் விற்பனை செய்தல் ஆகியவை எதிர்வரும் ஒக்டோபர் 8ஆம் திகதி முதல் தடைசெய்யப்படும் என நுகர்வோர் விவகார அதிகார சபை அறிவித்துள்ளது.</p><p style="text-align: justify; "> 2003ஆம் ஆண்டின் 9ஆம் இலக்க நுகர்வோர் விவகார அதிகார சபைச் சட்டத்தின் 12(2) பிரிவின் கீழ் அதற்குரிய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/44c63fcd-c436-47b0-816a-4958a02b3817/26-6a59a8873d958.webp' /></p><h2 style="text-align: justify; ">SLS தரச்சான்றிதழ்</h2><p style="text-align: justify; "> 

இலங்கை தரக்கட்டளைகள் நிறுவனத்தினால் (SLSI) வழங்கப்படும் SLS தரச்சான்றிதழ் முத்திரையைக் கொண்டிருந்தால் மட்டுமே அந்தத் தயாரிப்புகளை சந்தைக்கு வெளியிட முடியும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "> 

இந்த உத்தரவானது ஒருமுறை மாத்திரம் பயன்படுத்தக்கூடிய சுகாதாரத் துவாய்கள் மற்றும் ஒருமுறை மாத்திரம் பயன்படுத்தக்கூடிய மெல்லிய சுகாதாரத் அட்டைகள் ஆகியவற்றிற்குப் பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

மேலும், இறக்குமதி செய்யப்படும் சுகாதாரத் துவாய்கள் இலங்கை தரக்கட்டளைகள் நிறுவனத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் இறக்குமதி தரப்படுத்தல் மற்றும் தரக்கட்டுப்பாட்டு பரிசோதனை முறைமையின் கீழ் பரிசோதிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டிருக்காவிட்டால், அவற்றை இறக்குமதி செய்தல், விநியோகித்தல், களஞ்சியப்படுத்துதல் அல்லது விற்பனை செய்வதும் தடைசெய்யப்படும் என அதிகார சபை குறிப்பிட்டுள்ளது. </p><p style="text-align: justify; ">

இலங்கை தரக்கட்டளைகள் நிறுவனத்தினால் தொடர்புடைய தரநிலைகளில் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும் அனைத்து திருத்தங்களுக்கும் கூட இக்கட்டளை பொருந்தும் என நுகர்வோர் விவகார அதிகார சபை மேலும் அறிவித்துள்ளது.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-07-17T03:59:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[2025 உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/important-notice-who-sat-for-the-2025-gce-al-exam-1784258704"></link>
            <id>https://ibctamil.com/article/important-notice-who-sat-for-the-2025-gce-al-exam-1784258704</id>
            <summary type="text">2025ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களுக்கு&amp;nbsp;ஊழியர் நம்பிக்கை நிதியச் சபை (Employees’ Trust Fund Board) முக்கிய அறிவிப்பொன்ற...</summary>
            <content type="html"><![CDATA[<p>2025ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களுக்கு&nbsp;ஊழியர் நம்பிக்கை நிதியச் சபை (Employees’ Trust Fund Board) முக்கிய அறிவிப்பொன்றை விடுத்துள்ளது.</p><p>அதன்படி, குறித்த மாணவர்களுக்கான 'நிபுண சவிய' நிதி உதவித் திட்டத்திற்கு விண்ணப்பங்களைக் கோருவதற்கான காலஅவகாசம் எதிர்வரும் ஒக்டோபர் 30ஆம் திகதி முடிவடைவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

குறித்த நிதி உதவித் திட்டத்திற்கு விண்ணப்பிப்பதற்கு தகுதியுடைய மாணவர்கள் தமது விண்ணப்பங்களை இணையவழியில் மாத்திரம் சமர்ப்பிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>50,000 ரூபாய் நிதி உதவி</h2><p>
</p><p>
இது தொடர்பான மேலதிக விபரங்களைப் பெற்றுக்கொள்ளவும், விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கவும் <a href="https://etfb.lk/" target="_blank">www.etfb.lk</a> என்ற உத்தியோகபூர்வ இணையதளத்தைப் பார்வையிட முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5232fade-93b0-42f4-aa8d-703e7ad1c7be/26-6a59a3ffca024.webp' /></p><p>
</p><p>
அதற்கமைய தொழில் மற்றும் தொழிற்கல்வி ஆணைக்குழுவில் பதிவு செய்யப்பட்ட, தேசிய தொழில் தகைமை மட்டம் 3, 4 மற்றும் 5 ஆகியவற்றின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட 100 தெரிவுசெய்யப்பட்ட பாடநெறிகளில் ஒன்றைத் தொடர்வதற்கு, அதிகபட்சமாக 50,000 ரூபாய் வரை நிதி உதவி வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNE</a>L இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-17T03:45:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[மருத்துவமனையில் இருந்து தப்பியோடிய ஆபத்தான கைதி: மக்களுக்கு காவல்துறையினர் எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/high-risk-fugitive-escape-from-hospital-in-england-1784259861"></link>
            <id>https://news.lankasri.com/article/high-risk-fugitive-escape-from-hospital-in-england-1784259861</id>
            <summary type="text">பிரித்தானியாவில் மருத்துவமனையில் இருந்து ஆபத்தான கைதி ஒருவர் தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தப்பியோடிய ஆபத்தான கைதி
மான்செஸ்டர் மருத்...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரித்தானியாவில் மருத்துவமனையில் இருந்து ஆபத்தான கைதி ஒருவர் தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><h2> தப்பியோடிய ஆபத்தான கைதி</h2><p>
மான்செஸ்டர் மருத்துவமனையில் மர்வான் ஜும்மா என்ற 20 வயது கைதி சிகிச்சை பெற்று வந்த நிலையில், அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.</p><p> கைதி மர்வான் ஜும்மா-வை காவல்துறையினர் தீவிரமாக தேடி வரும் நிலையில், அவர் மிகவும் ஆபத்தானவர் என்றும் காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.</p><p> கடந்த செவ்வாய்க்கிழமை மருத்துவ சிகிச்சையில் இருந்தபோது தப்பித்த மர்வான் ஜும்மா, பெண்கள் மற்றும் காவலர்கள் மீது தாக்குதல் நடத்தி கடுமையான காயங்கள் ஏற்படுத்திய குற்றத்திற்காக சிறையில் அடைக்கப்பட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7ceeafe8-0e80-4f64-848d-4bd63d6007a2/26-6a59a516845d1.webp' /></p><p></p><h2> தேடுதல் வேட்டை தீவிரம்</h2><p>மர்வான் ஜும்மாவை தேடும் பணி இரண்டாவது நாளாக தீவிரமாக நடைபெற்று வருகிறது.</p><p> கிரேட்டர் மான்செஸ்டர் காவல்துறையின் சிறப்பு பிரிவினர் இந்த தேடுதலை தீவிரப்படுத்தி வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/caf7963c-e006-4d49-86fb-a124a4e61761/26-6a59a51734633.webp' /></p><p>தப்பியோடிய ஜும்மா கடைசியாக ராட்க்ளிஃப் பகுதியில் பார்க்கப்பட்டுள்ளார். மேலும் அவருக்கு பரி, ப்ரெஸ்ட்விச், க்ரம்சால் மற்றும் லண்டன் ஆகிய பகுதிகளில் தொடர்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> பொதுமக்கள் ஜும்மாவை பார்த்தால் அவரை பிடிக்கவோ அல்லது நெருங்கவோ வேண்டாம் என்று காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p>&nbsp;<br></p>]]></content>
            <updated>2026-07-17T03:44:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[சவப்பெட்டிக்குள் டொனால்ட் ட்ரம்ப் ; உலகை அதிர வைத்த ஈரான்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/iran-shocks-world-with-trump-coffin-display-1784259394"></link>
            <id>https://canadamirror.com/article/iran-shocks-world-with-trump-coffin-display-1784259394</id>
            <summary type="text">அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சவப்பெட்டிக்குள் வைக்கப்பட்டுள்ளதைப்போன்ற பதாகை ஈரானில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சவப்பெட்டிக்குள் வைக்கப்பட்டுள்ளதைப்போன்ற பதாகை ஈரானில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது.</p><p>அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே கடந்த ஜூன் மாதம் கையெழுத்தான ஒப்பந்தத்தை ஜனாதிபதி ட்ரம்ப் ரத்து செய்ததுடன் மீண்டும் ஈரானின் முக்கிய நகரங்களைக் குறிவைத்து அமெரிக்க படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0134cb20-414a-4291-9222-a63c893214bb/26-6a59a343ea1d3.webp' /></p><p>
ஏற்கெனவே, கமேனியின் கொலைக்கு நிச்சயம் பழித்தீர்ப்போம் என ஈரானின் புதிய தலைமை மதகுரு மோஜ்தபா கமேனி அறிவித்திருந்தார்.</p><p> மேலும், கமேனியின் இறுதிச்சடங்கில் அமெரிக்கா மற்றும் ஜனாதிபதி ட்ரம்ப்புக்கு எதிரான முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
</p><p>
இந்த நிலையில், ஈரானின் தலைநகர் தெஹ்ரானில் உள்ள இஸ்லாமியப் புரட்சி சதுக்கத்தில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பின் உடல் சவப்பெட்டிக்குள் வைக்கப்பட்டுள்ளதைப்போன்று சித்தரிக்கப்பட்ட மிகப்பெரிய பதாகை ஒன்று காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.


</p><p>
இந்தப் பதாகையின் புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருவதால், சர்வதேச அமைப்புகள் மற்றும் பல்வேறு நாடுகளின் கண்டனங்களை இந்தப் பதாகை பெற்றுள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-17T03:36:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடந்த ஆறு மாதங்களில் இலக்கை விட அதிக வருமானத்தை ஈட்டியுள்ள சுங்கத்துறை..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/tax-revenue-received-by-the-customs-department-1784258163"></link>
            <id>https://tamilwin.com/article/tax-revenue-received-by-the-customs-department-1784258163</id>
            <summary type="text">இலங்கை சுங்கத்திணைக்களம், 2026 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் 1,373 பில்லியன் ரூபாயை வரி வருமானமாக ஈட்டியுள்ளது.
முதல் ஆறு மாதங்களுக்கான வரி இலக்கை...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை சுங்கத்திணைக்களம், 2026 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் 1,373 பில்லியன் ரூபாயை வரி வருமானமாக ஈட்டியுள்ளது.</p><p>
முதல் ஆறு மாதங்களுக்கான வரி இலக்கை விட இது 22 சதவீதம் அதிகம் என்று அதன் ஊடகப் பேச்சாளர் சந்தன புஞ்சிஹேவா தெரிவித்தார்.</p><p></p><h2>அதிகரித்த வருவாய்&nbsp;</h2><p>

இலங்கை சுங்கத் திணைக்களம் முன்னதாக நிர்ணயித்துள்ள இந்த ஆண்டுக்கான வரி இலக்கு 2,206.9 பில்லியன் ரூபாயாகும்.</p><p>

அதன்படி, முதல் ஆறு மாதங்களுக்குள் 1,060 பில்லியன் ரூபாய் வரியாக வசூலிக்கப்பட்டிருக்க வேண்டும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/90506653-9054-4458-9c29-5a5fcec4febe/26-6a59a2ae0aa89.webp' /></p><p>

எனினும் அந்தக் காலகட்டத்தில் 1,373 பில்லியன் ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது. இது எதிர்பார்க்கப்பட்ட வருவாயை விட 22 சதவீதம் அதிகமாகும்.
</p><p>
இந்த ஆண்டு மோட்டார் வாகனங்களின் எண்ணிக்கை குறையும் என்று எதிர்பார்க்கப்பட்ட போதிலும், அவ்வாறு நிகழவில்லை என்றும், வரி வருமானம் அதிகரித்துள்ளது என்றும் சுங்கத்திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் சந்தன புஞ்சிஹேவா மேலும் தெரிவித்துள்ளார்.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-17T03:36:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீர்கொழும்பு சிறைக் கலவரத்தில் கொல்லப்பட்டவர்கள் கைதிகள் அல்ல! வெளிவந்திருக்கும் திடுக்கிடும் தகவல்கள்....]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/negombo-prison-violence-1784258790"></link>
            <id>https://tamilwin.com/article/negombo-prison-violence-1784258790</id>
            <summary type="text">நீர்கொழும்பு சிறைக் கலவரத்தில் உயிரிழந்த 21 கைதிகளும் &#039;தண்டனை பெற்ற கைதிகள்&#039; என்றே ஊடகங்களாலும் அரசாங்கத் தரப்பாலும் தொடர்ந்து அடையாளப்படுத்தப்பட்டனர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீர்கொழும்பு சிறைக் கலவரத்தில் உயிரிழந்த 21 கைதிகளும் 'தண்டனை பெற்ற கைதிகள்' என்றே ஊடகங்களாலும் அரசாங்கத் தரப்பாலும் தொடர்ந்து அடையாளப்படுத்தப்பட்டனர். </p><p>
ஆனால், உயிரிழந்த 21 பேரும் சந்தேக நபர்கள் ஆவர்.
அதாவது, உயிரிழந்த அதிகாரிகளைத் தவிர ஏனைய 21 பேரும் சந்தேக நபர்கள் என தென்னிலங்கை ஆங்கில பத்திரிகையின் சிரேஷ்ட ஊடகவியலாளர் சமிந்தர பேர்டினென்டோ (Shamindra Ferdinando) கண்டுபிடித்துள்ளார்.
</p><h2>
</h2><p></p><h2>சிறைச்சாலைத் திணைக்களம் வழங்கிய&nbsp; தகவல்</h2><p>இவ்விடயம் தொடர்பில் அவர் இணையத்தளம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் குறிப்பிட்டுள்ளார்.மேலும் அவர் குறிப்பிட்ட விடயங்கள்.
</p><p>கைதிகளுக்கும் சந்தேக நபர்களுக்கும் இடையில் தெளிவான வேறுபாடு இருக்க வேண்டும். ஆனாலும் கைதிகள் என்ற வரையறைக்குள் தடுத்து வைத்திருப்பவர்களும் அடங்குகின்றனர்.</p><p>ஆனால் அரசாங்கம் இவர்களை சந்தேக நபர்கள் என்று ஏன் சொல்லவில்லை. இவர்கள் சந்தேக நபர்களா அல்லது தண்டனை கைதிகளா என்பது தொடர்பில் சிறைச்சாலை ஆவணங்களில் குறிப்பெடுக்கப்படும்.ஆனால் எவ்வித தகவலும் வெளியிடப்படவில்லை</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5521889e-affb-43ae-890a-0dc68d3e51a3/26-6a59a0e8859c9.webp' /></p><p>சிறைச்சாலைத் திணைக்களத்திலிருந்து கிடைத்த விசேட தகவல்கள் மூலம் நாம் இதை உறுதிப்படுத்திக் கொண்டோம்.
'சந்தேக நபர்' என்பவர் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட ஒருவர் அல்ல. </p><p>நீதிமன்ற விசாரணை செயல்முறையின் மூலம் அவர் குற்றவாளி என்று நிரூபிக்கப்படும் வரை, அவர் குற்றம் செய்யாத ஒரு நிரபராதியாகவே கருதப்படுவார். அதேபோல காயமடைந்தவர்களில் பெரும்பாலானோர் சந்தேக நபர்கள் தான்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-17T03:31:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[7 நாட்களில் இதயம் முரளி திரைப்படம் செய்துள்ள வசூல், எவ்வளவு தெரியுமா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/idhayam-murali-7-days-box-office-1784255797"></link>
            <id>https://cineulagam.com/article/idhayam-murali-7-days-box-office-1784255797</id>
            <summary type="text">இதயம் முரளிஅறிமுக இயக்குநர் ஆகாஷ் பாஸ்கரன் இயக்கத்தில் உருவாகி கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் இதயம் முரளி. இப்படத்தில் அதர்வா கதாநாயகனாக நடித்துள்ளார...</summary>
            <content type="html"><![CDATA[<h2>இதயம் முரளி</h2><p>அறிமுக இயக்குநர் ஆகாஷ் பாஸ்கரன் இயக்கத்தில் உருவாகி கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் இதயம் முரளி. இப்படத்தில் அதர்வா கதாநாயகனாக நடித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b9836a7c-07c4-4b27-b0dc-cfeabc0c1239/26-6a5995394e506.webp' /></p><p></p><p> 

இவருடன் இணைந்து கயாடு லோஹர், ப்ரீத்தி முகுந்தன், சுதாகர், பகத் பாசில், தமன், நிஹாரிகா, டிராவிட் என பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர். நடிப்பை தாண்டி இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.</p><h2>வசூல்&nbsp;</h2><p> </p><p>

காதல் கதைக்களத்தில் உருவான இப்படம் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளியானது. ஆனால், அந்த எதிர்பார்ப்பை இப்படம் முழுமையாக பூர்த்தி செய்யவில்லை. இதனால் கலவையான விமர்சனங்களை பெற்றது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ffadd6c2-3e87-422e-a279-704749603a02/26-6a5995389451a.webp' /></p><p>இந்த நிலையில், 7 நாட்களில் இதயம் முரளி திரைப்படம் செய்துள்ள <a href="https://www.youtube.com/watch?v=klMIspNiWSA" target="_blank">வசூல் </a>குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 7 நாட்களில் இப்படம் ரூ. 18.5 கோடி வசூலித்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-17T03:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[பழிவாங்க போடப்பட்ட பிளான்!! மேடையிலேயே சந்தானம் கொடுத்த பதிலடி..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/santhanams-throwback-school-story-1784208659"></link>
            <id>https://viduppu.com/article/santhanams-throwback-school-story-1784208659</id>
            <summary type="text">நடிகர் சந்தானம்காமெடி நடிகராக நடித்து பின் ஹீரோவாக நடிக்க ஆரம்பித்தவர் தான் நடிகர் சந்தானம். ஒருசில படங்கள் மட்டுமே வெற்றியை பெற்று வரும் நிலையில், டி...</summary>
            <content type="html"><![CDATA[<h2>நடிகர் சந்தானம்</h2><p>காமெடி நடிகராக நடித்து பின் ஹீரோவாக நடிக்க ஆரம்பித்தவர் தான் நடிகர் சந்தானம். ஒருசில படங்கள் மட்டுமே வெற்றியை பெற்று வரும் நிலையில், டிடி நெக்ஸ்ட் லெவல் படம் சுமார் ஹிட் கொடுத்தது. அவர் நடிப்பில் அடுத்தடுத்து 3 படங்கள் ரிலீஸாகவுள்ளது. சமீபத்தில் சந்தானம் அளித்த பேட்டியொன்றில் சில சம்பவங்களை பகிர்ந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7f6870cc-2562-420f-bd60-1873cff8d1d3/26-6a58dd161e77d.webp' /></p><p> </p><p>அதில், பள்ளியில் படிக்கும்போது நான் ரொம்பவும் அமர்க்களம் செய்வேன், கடைசி இருக்கை மாணவன் நான். ஒழுங்காக படிக்கமாட்டேன், எனவே என்னை பழிவாங்க, ஆண்டு விழாவில் பாடல் போட்டியில் என் பெயரையும் ஆசிரியர்கள் கொடுத்துவிட்டார்கள்.</p><p> நானோ முடியாது என்று சொன்னாலும் அவர்கள் கேட்கவில்லை. என்னுடைய குரல் நன்றாக இருக்காதுன்னு தெரிந்தும் அப்படி செய்தார்கள். விழாவுக்கு பெரிய பெரிய அதிகாரிகள் வந்தார்கள். நான் மேடைக்கு சென்று தேசிய கீதம் பாடினேன், எல்லோரும் எழுந்து நின்றார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a58bd657-7557-45e3-bccd-5c3705623094/26-6a58dd156cb07.webp' /></p><p> </p><p>பாடல் முடிந்தவுடன் உட்கார சென்றார்கள். மீண்டும் பாடினேன், அவர்கள் எழுந்து நின்றார்கள். இப்படி மொத்தம் 3 முறை நடந்தது. வந்தவர்கள் எல்லோரும் டென்ஷனாகிவிட்டார்கள். ஆசிரியர்கள் என்னை நைஸாக மேடையில் இருந்து அழைத்து சென்றுவிட்டார்கள் என்று பகிர்ந்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-07-17T03:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[விமான நிலையங்களின் செயற்பாடுகள் தொடர்பில் ஜனாதிபதி அநுரவின் பணிப்புரை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/president-anura-kumara-s-statement-1784258057"></link>
            <id>https://tamilwin.com/article/president-anura-kumara-s-statement-1784258057</id>
            <summary type="text">துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானச் சேவைகள் அமைச்சின் கீழ் உள்ள
நிறுவனங்களின் செயற்பாடுகள் மற்றும் அபிவிருத்தித் திட்டங்கள் குறித்த
மீளாய்வு கூட்டம்...</summary>
            <content type="html"><![CDATA[<p>துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானச் சேவைகள் அமைச்சின் கீழ் உள்ள
நிறுவனங்களின் செயற்பாடுகள் மற்றும் அபிவிருத்தித் திட்டங்கள் குறித்த
மீளாய்வு கூட்டம், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் நேற்று ஜனாதிபதி
அலுவலகத்தில் நடைபெற்றது.</p><p>

இதன்போது துறைமுக மற்றும் விமான போக்குவரத்துத் துறைகளை நவீனமயமாக்கல் மற்றும்
நிதி முகாமைத்துவம் குறித்து ஜனாதிபதி முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கினார்.</p><p></p><h2>&nbsp;நவீனமயமாக்கல் பணிகள்&nbsp;</h2><p>
</p><p>
உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் இந்திய அரசாங்கத்தின் உதவியுடன்
முன்னெடுக்கப்படும் இலங்கை துறைமுக அபிவிருத்தித் திட்டங்கள், காங்கேசன்துறை
துறைமுக மறுசீரமைப்பு, கொழும்பு துறைமுக லொஜிஸ்டிக் பார்க் மற்றும் மேற்கு
முனையத்தின் இரண்டாம் கட்டப் பணிகள் குறித்து ஆராயப்பட்டது. </p><p>துறைமுக சேவைகளை
டிஜிட்டல் மயமாக்குவதன் மூலம் செயல்திறனை அதிகரிக்க வலியுறுத்தப்பட்டது.

2055ஆம் ஆண்டளவில் வருடாந்த பயணிகள் கொள்ளளவை 24.2 மில்லியனாக உயர்த்தும்
நோக்கில், கட்டுநாயக்க விமான நிலையத்தின் செயல்திறனை மேம்படுத்தும் இரண்டாம்
கட்டப் பணிகள் 2027ஆம் ஆண்டிற்குள் நிறைவு செய்யப்படவுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/18ae47c9-c023-4b14-bdf6-a198b437a9a7/26-6a599e10792cf.webp' /></p><p> </p><p>புதிய முனையங்களை
அமைத்தல் மற்றும் போக்குவரத்துச் சேவைகளை முறைப்படுத்துதல் குறித்து கவனம்
செலுத்தப்பட்டது.

ஹிகுராக்கொட உள்ளிட்ட உள்நாட்டு விமான நிலையங்களைச் சீரமைக்க, விமானப்படையுடன்
இணைந்து கூட்டு ஆய்வு ஒன்றை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி
பணிப்புரை வழங்கினார்.</p><p>

மத்தல விமான நிலையம் ஆண்டுக்கு சுமார் 4 பில்லியன் ரூபா நட்டத்தை
எதிர்கொள்வதாகச் சுட்டிக்காட்டப்பட்டது. </p><p>இந்த நட்டத்தைத் தவிர்க்க, புதிய
முதலீட்டு முன்மொழிவுகளைக் கோரியுள்ளதாகவும், 2027ஆம் ஆண்டளவில் அதனை
நடைமுறைப்படுத்த எதிர்பார்க்கப்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9746e2a2-f968-4345-a795-0cc407900c2e/26-6a599e114e03c.webp' /></p><p>
யாழ்ப்பாண விமான நிலைய முனைய நவீனமயமாக்கல் பணிகள் தற்போது
ஆரம்பிக்கப்பட்டுள்ளமையும் உறுதிப்படுத்தப்பட்டது.</p><p>

நிறுவனங்கள் தங்களின் சொந்த நிதி வலிமையைப் பயன்படுத்தி அபிவிருத்தித்
திட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என வலியுறுத்திய ஜனாதிபதி, மக்களின்
வரிப்பணத்திற்குச் சுமையாக அமையாத வகையில், திறைசேரிக்கு அதிகபட்ச பங்களிப்பை
வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்குத் தெளிவாக
அறிவுறுத்தினார்.</p><p>

இந்தக் கலந்துரையாடலில் இலங்கை துறைமுக அதிகார சபை, ஸ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ்
உள்ளிட்ட அமைச்சின் கீழ் உள்ள அனைத்து முக்கிய நிறுவனங்களின் பிரதானிகளும்
கலந்துகொண்டனர்.&nbsp;</p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-17T03:14:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[நிலக்கரி ஊழலினால் 8,400 மில்லியன் ரூபாய்க்கும் அதிக நட்டம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/8000-million-froud-in-coal-import-1784258049"></link>
            <id>https://tamilwin.com/article/8000-million-froud-in-coal-import-1784258049</id>
            <summary type="text">நிலக்கரி ஊழல்களினால் நாட்டுக்கு 8400 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான நட்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

2009 ஆம் ஆண்டு முதல் இலங்கைக்கு நி...</summary>
            <content type="html"><![CDATA[<p>நிலக்கரி ஊழல்களினால் நாட்டுக்கு 8400 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான நட்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>

2009 ஆம் ஆண்டு முதல் இலங்கைக்கு நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டதில் இடம்பெற்ற முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகளில், நாட்டின் பொருளாதாரத்தைப் பாதித்த பாரிய ஊழல் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.
</p><p>
11 போலி அறிக்கைகள் மற்றும் தர மோசடி நிலக்கரி ஏற்றப்பட்ட வெளிநாட்டுத் துறைமுகங்களிலிருந்து வழங்கப்பட்ட தரப்பரிசோதனை அறிக்கைகளில் பாரிய மோசடி இடம்பெற்றுள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/07610d2a-8f54-482a-8441-db1adf2937cc/26-6a599e031bd0c.webp' /></p><p> </p><p>

நிலக்கரி தரம் வாய்ந்தது எனத் தெரிவித்துச் சமர்ப்பிக்கப்பட்ட 15 அறிக்கைகளில் 11 அறிக்கைகளைச் சம்பந்தப்பட்ட துறைமுக அதிகாரிகள் தங்களுடையவை அல்ல என நிராகரித்துள்ளனர்.
</p><p>
இதன் மூலம், தரம் குறைந்த நிலக்கரியைத் தரம் கூடியதாகக் காட்டி இலங்கைக்கு அனுப்புவதற்காக யாரோ ஒரு தரப்பினர் இந்த போலி அறிக்கைகளை தயாரித்துள்ளமை குறித்துப் பலத்த சந்தேகம் எழுந்துள்ளது.
</p><p>
தரம் குறைந்த நிலக்கரியை இறக்குமதி செய்ததன் காரணமாக, முதல் 9 கப்பல்களில் மட்டும் இலங்கைக்குச் சுமார் 8,497 மில்லியன் நட்டம் ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.</p><p> 

3-வது கப்பலின் மூலம் 1,318 மில்லியன் ரூபாய் நட்டம், 6-வது கப்பலின் மூலம் 1,182 மில்லியன் ரூபாய் நட்டம் மற்றும் 9-வது கப்பலின் மூலம் 1,493 மில்லியன் ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பொறியியலாளர் சமீர அதிகாரிகே வழங்கிய அறிக்கையின் ஊடாக இந்த நிதியிழப்புகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.
</p><p>
மின்நிலையத்திற்கு ஏற்பட்டுள்ள ஆபத்து தரம் குறைந்த நிலக்கரியைப் பயன்படுத்தியமையால் லக்விஜய மின்நிலையத்தின் இயந்திரத் தொகுதிகளில் அளவுக்கு அதிகமான வெப்பம் உருவாகியுள்ளதாக நிபுணர்கள் சாட்சியமளித்துள்ளனர். </p><p>

இது மின்நிலையத்தின் நீண்டகாலப் பயன்பாட்டிற்கும் அதன் ஆயுட்காலத்திற்கும் பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதாகக் கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>

மேலும், 2 மில்லிமீட்டருக்கும் குறைவான நிலக்கரித் துகள்கள் மின் உற்பத்திக்குப் பயன்படாமல் வெறும் சாம்பலாகவே மாறி விடுவதாகவும், இது தேவையற்ற செலவுகளை உருவாக்குவதாகவும் லங்கா நிலக்கரி நிறுவனத்தின் தலைவர் பேராசிரியர் ஜயசேகர சுட்டிக்காட்டியுள்ளார் என இணைய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
</p><p>
விசாரணைக் குழு உயர்நீதிமன்ற நீதியரசர் கிஹான் குலதுங்க, மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் ஆதித்ய படபெந்திகே மற்றும் மேல்நீதிமன்ற நீதிதிபதி சஞ்சீவ சோமரத்ன ஆகியோர் அடங்கிய குழுவினரே இந்த விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p> 

நிலக்கரி கொள்வனவு தொடர்பான ஒட்டுமொத்தப் பிரசம்பாத நடைமுறைகளிலும் உள்ள குறைபாடுகள் மற்றும் இதில் தொடர்புடைய நபர்கள் குறித்து மேலதிக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-17T03:14:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Fathima</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழகத்தில் சுய கணக்கெடுப்பு தொடங்கியது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/self-enumeration-in-tamilnadu-begins-today-1784257808"></link>
            <id>https://ibctamilnadu.com/article/self-enumeration-in-tamilnadu-begins-today-1784257808</id>
            <summary type="text">இந்தியாவில் 16வது மக்கள் தொகை கணக்கெடுப்பின் ஒருபகுதியாக தமிழகத்தில் சுய கணக்கெடுப்பு இன்று தொடங்கியது.

இதுகுறித்து மக்கள் தொகை கணக்கெடுப்பு தமிழக ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியாவில் 16வது மக்கள் தொகை கணக்கெடுப்பின் ஒருபகுதியாக தமிழகத்தில் சுய கணக்கெடுப்பு இன்று தொடங்கியது.</p><p>

இதுகுறித்து மக்கள் தொகை கணக்கெடுப்பு தமிழக இயக்குனர் சுந்தரேஷ் பாபு கூறுகையில், மக்கள் தொகை கணக்கெடுப்பு வீட்டு பட்டியல் மற்றும் வீடு வசதி கணக்கெடுப்பு, மக்கள் தொகை கணக்கெடுப்பு என இரண்டு கட்டங்களாக நடைபெறும்.</p><p>

இன்று சுயகணக்கெடுப்பு தொடங்குகிறது, https://se.census.gov.in என்ற இணையதளத்தில் தங்களின் சுய விபரங்களை பதிவேற்றம் செய்யலாம், இம்மாத இறுதி வரை 31ம் தேதி வரை நடைபெறும்.
</p><p>
சுயகணக்கெடுப்பு பதிவேற்றத்துக்கு பின்னர் ஒரு அடையாள எண் உருவாக்கப்படும், அதனை பொதுமக்கள் பத்திரமாக வைத்திருக்க வேண்டும் என தெரிவித்தார்.
</p><p>
மேலும் 2027ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நாடு முழுவதும் ஒரே கட்டமாக மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் நடைபெறும் என்றும் இதனுடன் சாதிவாரி கணக்கெடுப்பு நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளார்.<br></p>]]></content>
            <updated>2026-07-17T03:12:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதிகாலையில் இடம்பெற்ற கோர விபத்து ; 20 பேர் படுகாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/early-morning-crash-injures-20-people-1784257379"></link>
            <id>https://jvpnews.com/article/early-morning-crash-injures-20-people-1784257379</id>
            <summary type="text">கொடகம - பொரளை பிரதான வீதியில் அத்துருகிரிய, கோவின்ன மாவத்தை அருகே வெள்ளிக்கிழமை (17) அதிகாலை இடம்பெற்ற பஸ் மற்றும் டிப்பர் ரக வாகன விபத்தில் சுமார் 20...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify;">கொடகம - பொரளை பிரதான வீதியில் அத்துருகிரிய, கோவின்ன மாவத்தை அருகே வெள்ளிக்கிழமை (17) அதிகாலை இடம்பெற்ற பஸ் மற்றும் டிப்பர் ரக வாகன விபத்தில் சுமார் 20 பேர் காயமடைந்துள்ளனர்.
</p><p style="text-align: justify;">

அதிகாலை 4.15 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தினால் குறித்த வீதியூடான போக்குவரத்து இரண்டு மணித்தியாலங்களுக்கும் மேலாக பாதிக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.</p><p style="text-align: justify;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/78a65f0d-70b3-4c28-a0e7-7ff4ab97671a/26-6a599b6537857.webp' /></p><h2 style="text-align: justify; ">மேலதிக விசாரணை</h2><p>
</p><p style="text-align: justify; ">
விபத்தில் காயமடைந்தவர்கள் ஒருவல மற்றும் ஹோமாகம ஆதார வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
</p><p style="text-align: justify; ">
இதேவேளை, விபத்துக்குள்ளான பஸ்ஸின் சாரதி வாகனத்திற்குள் சிக்கிய நிலையில், ஒரு மணித்தியாலத்திற்கும் மேலாக மேற்கொள்ளப்பட்ட மீட்பு நடவடிக்கைகளின் பின்னர் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p><p style="text-align: justify; "></p><p>
</p><p style="text-align: justify; ">
மோதலில் பஸ் மற்றும் டிப்பர் வாகனம் இரண்டும் பலத்த சேதமடைந்துள்ளன.
</p><p style="text-align: justify; ">
சம்பவம் தொடர்பில் அத்துருகிரிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-07-17T03:03:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜனநாயகன் முன்பதிவு வசூல்.. இதுவரை இத்தனை கோடியா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/jananayagan-movie-pre-booking-collection-report-1784254341"></link>
            <id>https://cineulagam.com/article/jananayagan-movie-pre-booking-collection-report-1784254341</id>
            <summary type="text">ஜனநாயகன்&amp;nbsp;தமிழ்நாட்டின் முதலமைச்சர் விஜய்யின் கடைசி படம் ஜனநாயகன் கடந்த ஜனவரி மாதம் வெளிவரவிருந்த நிலையில், சென்சார் பிரச்சனை காரணமாக வெளியாகவில்ல...</summary>
            <content type="html"><![CDATA[<h2>ஜனநாயகன்&nbsp;</h2><p>தமிழ்நாட்டின் முதலமைச்சர் விஜய்யின் கடைசி படம் ஜனநாயகன் கடந்த ஜனவரி மாதம் வெளிவரவிருந்த நிலையில், சென்சார் பிரச்சனை காரணமாக வெளியாகவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/da308741-c635-4907-b8ed-84b8f6a1bb3c/26-6a598f88426b5.webp' /></p><p></p><p>

கிட்டதட்ட 6 மாதங்களுக்கு பின் சென்சார் கிடைத்து ஜூலை 23-ஆம் தேதி வெளியாகிறது. விஜய்யின் கடைசி படம் என்பதால் இப்படத்தை கொண்டாட ரசிகர்கள் அனைவரும் ஆவலோடு காத்திருக்கிறார்கள். மேலும், டிக்கெட் டிமாண்ட் அதிகரித்து வருகிறது.</p><h2>முன்பதிவு&nbsp;வசூல் விவரம்&nbsp;</h2><p> </p><p>

இந்த நிலையில், வெளிநாடுகளில் <a href="https://www.youtube.com/watch?v=2mGyC8JXC3I" target="_blank">ஜனநாயகன் </a>திரைப்படத்தின் முன்பதிவு தொடங்கியுள்ளது. இதுவரை நடைபெற்ற முன்பதிவில் ரூ. 4.8 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/36d91313-8df7-49e8-8064-fd145f4450ec/26-6a598f88e9d0c.webp' /></p><p>கண்டிப்பாக முன்பதிவிலேயே மாபெரும் வசூல் சாதனையை ஜனநாயகன் படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p>]]></content>
            <updated>2026-07-17T03:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[நள்ளிரவில் அதிரவைத்த துப்பாக்கிச்சூடு ; 26 வயது இளைஞன் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/midnight-shooting-shocks-the-area-1784256919"></link>
            <id>https://jvpnews.com/article/midnight-shooting-shocks-the-area-1784256919</id>
            <summary type="text">நவகமுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வந்துரம்முல்ல பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் காயமடைந்த 26 வயதுடைய இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரி...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">நவகமுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வந்துரம்முல்ல பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் காயமடைந்த 26 வயதுடைய இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
</p><p style="text-align: justify; ">
வியாழக்கிழமை (16) இரவு இடம்பெற்ற இந்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த குறித்த நபர், ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2cb56cb7-6a86-4646-aad2-a7330ead48bb/26-6a59999e3ccca.webp' /></p><p style="text-align: justify; ">

கைத்துப்பாக்கி ஒன்றைப் பயன்படுத்தியே இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p style="text-align: justify; ">

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இதுவரை அடையாளம் காணப்படாத நிலையில், அவர்களை கைது செய்வதற்காக நவகமுவ பொலிஸார் விசேட விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-07-17T02:55:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[2027 முதல் இங்கிலாந்தில் பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் இது கட்டாயம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/england-to-screen-all-newborns-for-sma-2027-1784220726"></link>
            <id>https://news.lankasri.com/article/england-to-screen-all-newborns-for-sma-2027-1784220726</id>
            <summary type="text">இங்கிலாந்தில் பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் 2027 அக்டோபர் மாதம் முதல் Spinal Muscular Atrophy (SMA) எனப்படும் அரிதான தசை சிதைவுநோய்க்கான பரிசோதனை...</summary>
            <content type="html"><![CDATA[<p>இங்கிலாந்தில் பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் 2027 அக்டோபர் மாதம் முதல் Spinal Muscular Atrophy (SMA) எனப்படும் அரிதான தசை சிதைவுநோய்க்கான பரிசோதனை கட்டாயமாக நடைபெற உள்ளது.
</p><p>
சுகாதார மற்றும் சமூக பராமரிப்புத் துறை இந்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
</p><p></p><p>SMA நோய் குழந்தைகளின் தசைகளை பலவீனப்படுத்தி, உட்கார, தவழ, நடக்க முடியாமல், சுவாசிப்பதாலும், விழுங்குவதிலும் சிரமம் ஏற்படுத்துகிறது.</p><p>

சிகிச்சை இல்லாமல் விட்டால், இரண்டு ஆண்டுக்குள் உயிரிழக்கும் அபாயம் உள்ளது. இங்கிலாந்தில் வருடத்திற்கு சுமார் 48 குழந்தைகள் இந்த நோயால் பாதிக்கப்படுகின்றனர்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0527ccdd-74e4-44d5-9d30-0344c74f3240/26-6a590c38175cb.webp' /></p><p>புதிய திட்டத்தின் மூலம், குழந்தைகள் பிறந்த 5-ஆம் நாளில் எடுக்கப்படும் heel-prick test மூலம் SMA பரிசோதனை செய்யப்படும். இதுவரை 10 நோய்களுக்கு பயன்படுத்தப்பட்ட இந்த பரிசோதனை, இனி SMA-க்கும் பயன்படுத்தப்படும்.
</p><p>
முன்பு அறிவிக்கப்பட்ட பைலட் திட்டம் 72 சதவீத குழந்தைகளுக்கே பரிசோதனை செய்யும் வகையில் இருந்ததால், “postcode lottery” எனப்படும் சமத்துவமின்மைக்கு விமர்சனங்கள் எழுந்தன. அதனைத் தொடர்ந்து, அரசு அனைத்து குழந்தைகளுக்கும் பரிசோதனை செய்யும் வகையில் திட்டத்தை விரிவுபடுத்தியுள்ளது.
</p><p></p><p>SMA UK அமைப்பின் தலைவர் Giles Lomax, “இது குழந்தைகளின் எதிர்காலத்தை பாதுகாக்கும் மிகப்பெரிய முன்னேற்றம்” எனக் கூறியுள்ளார். </p><p>Muscular Dystrophy UK அமைப்பும் இதை “வரலாற்று சிறப்புமிக்க தருணம்” என வரவேற்றுள்ளது.
</p><p>
இந்த முடிவு SMA நோயால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நம்பிக்கையையும், எதிர்காலத்தில் ஆரோக்கியமான வாழ்க்கையையும் வழங்கும் என்று நம்பப்படுகிறது.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-17T02:50:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் உயிரை மாய்த்த மற்றுமொரு உயரதிகாரி ; துப்பாக்கிச் சூட்டு காயத்துடன் மீட்கப்பட்ட உடல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/former-igp-c-d-wickramaratne-passes-away-1784256487"></link>
            <id>https://jvpnews.com/article/former-igp-c-d-wickramaratne-passes-away-1784256487</id>
            <summary type="text">முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி விக்ரமரத்ன உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.அத்துருகிரியாவில் உள்ள அவரது இல்லத்தில், துப்பாக்கிச் சூட்டு காயத்து...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி விக்ரமரத்ன உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p style="text-align: justify; ">அத்துருகிரியாவில் உள்ள அவரது இல்லத்தில், துப்பாக்கிச் சூட்டு காயத்துடன் அவரது உடல் மீட்கப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.&nbsp;</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/acf518e7-00f9-443e-adfc-7971b90066ee/26-6a5997e8d6495.webp' /></p><h2 style="text-align: justify; ">துப்பாக்கிச் சூடு&nbsp;</h2><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify;">துப்பாக்கிச் சூட்டு காயத்துடன் அவர் முல்லேரியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p style="text-align: justify;"> 

அவர் தமக்கு தாமே துப்பாக்கிச் சூட்டை ஏற்படுத்தி தற்கொலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.&nbsp; &nbsp; &nbsp;</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;">&nbsp;பொலிஸ் திணைக்களத்தில் சுமார் 30 வருடங்களுக்கும் மேலாக பணியாற்றிய சி. டி. விக்ரமரத்ன, இலங்கையின் 35ஆவது பொலிஸ் மாஅதிபராவார்.</p><p style="text-align: justify;">உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தையடுத்து, பொலிஸ் மா அதிபராக இருந்த பூஜித் ஜயசுந்தர கட்டாய விடுமுறையில் அனுப்பட்ட நிலையில் பதில் பொலிஸ் மா அதிபராக சி.டி.விக்ரமரத்ன நியமிக்கப்பட்டார்.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;"> 



</p><p style="text-align: justify;">



இந்நிலையில், 2023 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 25 ஆம் திகதியுடன் அவர் தமது கடமைகளில் இருந்து உத்தியோகப்பூர்வமாக ஓய்வுப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-07-17T02:48:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட முன்னாள் காவல்துறை மா அதிபர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/former-ig-of-police-c-d-wickramaratne-passed-away-1784255654"></link>
            <id>https://ibctamil.com/article/former-ig-of-police-c-d-wickramaratne-passed-away-1784255654</id>
            <summary type="text">முன்னாள் காவல்துறை மா அதிபர் சி.டி விக்ரமரத்ன&amp;nbsp;மர்மான முறையில் உயிரிழந்துள்ளார். 

அத்துருகிரியவில் உள்ள அவரது வீட்டில் அவரது சடலம் மீட்கப்பட்டு...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் காவல்துறை மா அதிபர் சி.டி விக்ரமரத்ன&nbsp;மர்மான முறையில் உயிரிழந்துள்ளார். </p><p>

அத்துருகிரியவில் உள்ள அவரது வீட்டில் அவரது சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p> </p><p>

துப்பாக்கி சூட்டு காயங்களுடன் அவரது சடலம் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p></p><p>
</p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">மேலதிக விசாரணை</span></p><h6>அவர் தவறான முடிவெடுத்து உயிர் மாய்த்திருக்கலாம் என காவல்துறை சந்தேகிக்கப்படுகின்றது.&nbsp; &nbsp; &nbsp;</h6><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dcf3b05a-fa1b-4d59-be99-97d03df0690e/26-6a5998cf23760.webp' /></p><p>மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.</p><p>30 ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கை காவல்துறையில் பணியாற்றிய விக்ரமரத்ன, இலங்கையின் 35-வது காவல்துறை மா அதிபராக பணியாற்றியமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-17T02:41:00+00:00</updated>
        </entry>
    </feed>
