<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-07-15T02:45:51+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாமல் ராஜபக்சவின் கடிதத்துக்கு பதிலளிக்காத சஜித்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-rajapaksa-sajith-1784081201"></link>
            <id>https://tamilwin.com/article/namal-rajapaksa-sajith-1784081201</id>
            <summary type="text">நாமல் ராஜபக்ச, சஜித் பிரேமதாசவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி, எதிர்க்கட்சியின் அனைத்துக் குழுக்களும் ஒன்றிணைய வேண்டும் என வலியுறுத்தியிருந்த போதிலும், அந்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாமல் ராஜபக்ச, சஜித் பிரேமதாசவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி, எதிர்க்கட்சியின் அனைத்துக் குழுக்களும் ஒன்றிணைய வேண்டும் என வலியுறுத்தியிருந்த போதிலும், அந்தக் கடிதத்திற்கு இதுவரை எந்தப் பதிலும் அளிக்கப்படவில்லை எனத் தெரியவந்துள்ளது.
</p><p>
கடந்த 7ஆம் திகதி நாமல் ராஜபக்சவினால் அனுப்பப்பட்ட அக்கடிதத்தில், “உயர் நீதிமன்ற நீதியரசர்களின் பதவிக்காலத்தை தன்னிச்சையான முறையில் நீடிக்க முயற்சிப்பதன் மூலம் சட்டத்தின் ஆட்சியை சீர்குலைப்பதற்கு எதிராக, ஜனநாயகத்தை மதிக்கும் அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டியதன் அவசியம்” குறித்து சஜித் பிரேமதாசவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. </p><p></p><h2>ஏன் பதிலளிக்கவில்லை</h2><p>இதற்கு உடனடியாக தலையிட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் அந்த கடிதத்தின் தலைப்பில் குறிப்பிட்டுள்ளவாறு, நாடாளுமன்றத்தில் கூட இது குறித்து எந்தவொரு வலியுறுத்தலும் செய்யப்படவில்லை என அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
</p><p>
நாமல் ராஜபக்ச இவ்வாறு சஜித் பிரேமதாசவுக்கு நேரடியாகக் கடிதம் அனுப்புவதற்கு முன்னர், சிதறிப்போயுள்ள எதிர்க்கட்சியின் பல குழுக்கள் பல்வேறு பேச்சுவார்த்தைகளை நடத்தி கூட்டணி அமைக்க முயற்சித்தன. </p><p>அந்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைந்த நிலையிலேயே, தலைமைத்துவ மட்டத்தில் நாமல் ராஜபக்சவினால் இவ்வாறானதொரு உத்தியோகபூர்வ அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f769b19c-1c01-44fe-aa3c-51af24795d2c/26-6a56eb333056c.webp' /></p><p>இந்த உத்தியோகபூர்வ கடிதத்திற்கு எந்தவொரு பதிலும் அளிக்காமல் இருப்பது, சஜித் பிரேமதாசவினால் நாமல் ராஜபக்சவுக்கு விடுக்கப்பட்ட ஒரு ஏளனமான செயல் என அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
</p><p>
கடந்த அரசாங்கக் காலங்களில் இடம்பெற்ற நிதி மோசடிகள் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகள் நடத்தப்பட்டு, நீதிமன்ற நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ள பின்னணியிலேயே நாமல் ராஜபக்ச, சஜித் பிரேமதாசவுக்கு இக்கடிதத்தை அனுப்பியுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-15T02:35:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மீட்க்கப்பட்ட 271 used தோட்டாக்கள் - நீர்கொழும்பு சிறைக்கு நடந்தது இதுதான்! திக்திக் நிமிடங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/cid-reveals-sparked-negombo-prison-unrest-1784080988"></link>
            <id>https://ibctamil.com/article/cid-reveals-sparked-negombo-prison-unrest-1784080988</id>
            <summary type="text">நீர்கொழும்பு சிறைச்சாலைக்குள் நடந்த கொடூர வன்முறைக்கு கத்துவெல்லகம சுரேஷ் என்ற கைதியின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டமையே காரணமாக இருக்கலாம் என தெரிவிக்கப...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீர்கொழும்பு சிறைச்சாலைக்குள் நடந்த கொடூர வன்முறைக்கு கத்துவெல்லகம சுரேஷ் என்ற கைதியின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டமையே காரணமாக இருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது. </p><p>

நீதிமன்றத்தில் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் (CID) சமர்ப்பித்த தகவல்களின்படி, ஜூலை 5ஆம் திகதி நீர்கொழும்பு சிறைச்சாலையின் A1 வார்டில் இருந்த கத்துவெல்லகம சுரேஷ் என்ற கைதி, உடற்பயிற்சிக்காக வழங்கப்படும் 30 நிமிடங்களை விட மேலதிக நேரம் கோரியுள்ளார்.
</p><p>

இதற்கு அனுமதி மறுக்கப்பட்டதால் அவர் சிறைச்சாலை அதிகாரியை திட்டி அச்சுறுத்தியுள்ளார். மறுநாள் காலை, அவர் A2 வார்டு கைதிகள் மீது தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.
</p><h2>
 வன்முறை பரவக் காரணம்</h2><p>
இதுவே வன்முறை பரவக் காரணமாக அமைந்ததாகவும், நீதிமன்றத்தில் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் தகவல்களை வழங்கியுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4d972cea-cc84-40c6-8870-47e2bc4d4afe/26-6a56f1d3b2459.webp' /></p><p>

மேலும், இதன் பின்னணியில், கைதிகள் சிறைச்சாலையின் மருந்தகம் மற்றும் நிர்வாகக் கட்டிடத்தை சேதப்படுத்தியுள்ளனர். சிறைச்சாலை அதிகாரிகள் நிலைமையைக் கட்டுப்படுத்த முடியாததால் பொலிஸாரின் உதவியை நாடியுள்ளனர்.
</p><p>
கொழும்பில் இருந்து சிறைச்சாலை அவசரக்கால அதிரடிப் படையினர் வரவழைக்கப்பட்ட நிலையில், கைதிகள் கூரைகளின் மீது ஏறி வன்முறையில் ஈடுபட்டுள்ளனர்.
</p><p>
மறுநாள் காலை உணவை வழங்கச் சென்ற அதிகாரிகள் மீது கைதிகள் கற்கள், மரத்தடிகள் மற்றும் இரும்புக்கம்பிகளால் தாக்கியுள்ளனர். </p><p>நீர்கொழும்பு சிறைச்சாலை அதிகாரிகள் தப்பிச் சென்ற நிலையில், கொழும்பில் இருந்து சென்ற அதிகாரிகள் உள்ளே சிக்கிக்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது. </p><h2>

 CCTV பதிவுகள்
</h2><p>கைதிகள் சிறைச்சாலையின் ஆயுதக் களஞ்சியத்தின் ஒரு பகுதியைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து, அதிகாரிகளை நோக்கி துப்பாக்கியையும் நீட்டியுள்ளனர். இதனை தொடர்ந்து விசேட அதிரடிப்படையினர் (STF) கண்ணீர்ப்புகைத் தாக்குதல் நடத்தியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1101acef-812e-4fc3-87c9-9b4221a8feed/26-6a56f1d571930.webp' /></p><p>


அது பலனளிக்காததால் வான்நோக்கி எச்சரிக்கை துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். பின்னர், சிறைச்சாலையின் நுழைவாயில் பகுதி ஊடாக துப்பாக்கிச் சூடு நடத்தி, உள்ளே சிக்கியிருந்த அதிகாரிகளை மீட்டுள்ளனர்.
</p><p>
சிறைச்சாலைக்குள் இருந்து ஒரு F-58 ரக துப்பாக்கி, ஒரு மெகசின் மற்றும் 271 பயன்படுத்தப்பட்ட தோட்டாக்கள் மீட்கப்பட்டன.</p><h2>தடயவியல் சோதனை</h2><p> </p><p>அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டிருந்த 60 துப்பாக்கிகள் தடயவியல் சோதனைக்காகப் பெறப்பட்டுள்ளன என நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b47b3332-eff8-46ef-bf97-8743db2bb6dc/26-6a56f1d488196.webp' /></p><p>இதற்கிடையில், சிறைச்சாலையின் CCTV பதிவுகள் மொரட்டுவை பல்கலைக்கழக கணினி தடயவியல் ஆய்வகத்திற்கு அனுப்பப்படவுள்ளதாகவும் 40 சிஐடி அதிகாரிகள் அடங்கிய 3 குழுக்கள் விசாரணைகளை நடத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> 

இதுவரை 136 சிறைச்சாலை அதிகாரிகள், 141 கைதிகள் மற்றும் 9 STF அதிகாரிகளிடம் வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளன. </p><h2>கைதிகள் பற்றிய அறிக்கை</h2><p>கொலைக்குற்றம், துப்பாக்கிகள் கட்டளைச் சட்டம் மற்றும் பொதுச் சொத்துச் சட்டம் ஆகியவற்றின் கீழ் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றன.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/06949c3c-ecb8-4907-b477-81b12ec33206/26-6a56f1d62d42e.webp' /></p><p>இந்நிலையில், நீர்கொழும்பு சிறைச்சாலையில் இருந்த அனைத்து கைதிகள் பற்றிய அறிக்கையை சமர்ப்பிக்குமாறு சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்திற்கு நீர்கொழும்பு நீதவான் ஷாலனி பெரேரா உத்தரவிட்டுள்ளார்.</p><p> 

அத்துடன், மற்ற சிறைகளுக்கு மாற்றப்பட்ட கைதிகளிடமும் வாக்குமூலங்களைப் பெறுமாறு சிஐடிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-15T02:35:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[சினிமால பணம் சம்பாதிக்கலாம்..அவமானங்கள் தான் அதிகம்!! நடிகை விசித்ரா ஓபன் டாக்...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/actress-vichithra-opens-up-cinema-industry-1784036638"></link>
            <id>https://viduppu.com/article/actress-vichithra-opens-up-cinema-industry-1784036638</id>
            <summary type="text">தமிழ் சினிமவில் 90ஸ் காலத்தில் மடிப்பு அம்சாவாக நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் தான் நடிகை விசித்ரா. பல ஆண்டுகளுக்கு பின் பிக்பாஸ் மற்றும் குக் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழ் சினிமவில் 90ஸ் காலத்தில் மடிப்பு அம்சாவாக நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் தான் நடிகை விசித்ரா. பல ஆண்டுகளுக்கு பின் பிக்பாஸ் மற்றும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிகளில் கலந்து அனைவரது அன்பையும் பெற்றார் விசித்ரா. சமீபத்தில் அவர் அளித்த பேட்டியொன்றில், சினிமா என்பது மிக வேகமாக, நிறையப் பணம் சம்பாதிப்பதற்கான ஒரு களம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2238b3ca-0d1d-4350-ba14-69acd8f79e92/26-6a563d2179e85.webp' /></p><p> </p><h2>சினிமால பணம் சம்பாதிக்கலாம்</h2><p>அதில் புகழும், பணமும் கிடைக்கும், ஆனால் அங்கே உண்மையான அன்பும், கருணையும் கிடைக்குமா? என்றால் கிடையாது. அதுவும் புதுமுகமாக சினிமாவுக்குள் நுழையும்போது, அங்கே அன்பை எதிர்பார்க்கவே முடியாது. ஆரம்பத்தில் அவமானங்கள், கேலி கிண்டல்கள், அலட்சியங்கள் மட்டும்தான் அதிகம் பார்க்க வேண்டியிருக்கும். </p><p>ஆனால் ஒரேவொரு, ஹிட் படம் கொடுத்துவிட்டால் போதும், உங்களுக்கு என்று ஒரு மார்க்கெட் வந்திவிட்டால், உங்களை அவமதித்த அத்தனை பேரும் புகழ்வார்கள், அதுதான் சினிமா. சினிமாத்துறையை பொறுத்தவரை இங்கு நிரந்தரமான நண்பனும் கிடையாது, நிரந்தரமான எதிரியும் கிடையாது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/317b3a75-6f27-4934-b8dd-7c70694f04e7/26-6a563d20ca135.webp' /></p><p> </p><p>அதனால் தான் சினிமாவில் எப்போதும் ஒரு குறிப்பிட்ட எல்லையில் இருக்க வேண்டும். நம்மிடம் மிகவும் பாசமாக பழகுகிறார்களே என்று நெருங்கிவிடக் கூடாது. </p><p>அதேபோல், எதிரியாக்கி ஒதுக்கவும் கூடாது. ஏனென்றால், காலம் எப்போது வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் மாறும். நான் எப்போதுமே சினிமா நபர்களிடம் ஒரு குறிப்பிட்ட தூரத்தை கடைப்பிடிப்பேன். யாரிடமும் அளவுக்கதிகமாக நெருங்கிப்பழக மாட்டேன். </p><p>அந்த எல்லையை நான் சரியாக வைத்திருந்ததால்தான், இன்று என் வாழ்க்கையை நான் எந்த குழப்பமும் இல்லாமல் மிகுந்த சந்தோஷத்தோடு நிம்மதியாக வாழ்ந்து கொண்டு இருக்கிறேன் என்று நடிகை விசித்ரா தெரிவித்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-07-15T02:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Manchu</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜுலை மாதத்தில் இறுதியில் சுக்கிரன் பெயர்ச்சி.... அதிர்ஷ்டத்தினை பெறும் 4 ராசியினர் இவர்கள் தானாம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/venus-transit-4-lucky-zodiac-signs-1784033366"></link>
            <id>https://manithan.com/article/venus-transit-4-lucky-zodiac-signs-1784033366</id>
            <summary type="text">சுக்கிரன் பெயர்ச்சி காரணமாக அதிர்ஷ்டத்தில் நனையும் 4 ராசியினரைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.சுக்கிரன் பெயர்ச்சிஅழகு, ஆடம்பரம், காதல், செ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சுக்கிரன் பெயர்ச்சி காரணமாக அதிர்ஷ்டத்தில் நனையும் 4 ராசியினரைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.</p><h2>சுக்கிரன் பெயர்ச்சி</h2><p>அழகு, ஆடம்பரம், காதல், செல்வம், செழிப்பு இவற்றிற்கு காரணமாக இருக்கும் சுக்கிரன் மாதம் ஒருமுறை தனது ராசியை மாற்றுவதுடன், அவ்வப்போது நட்சத்திரத்தினை மாற்றுவார்.</p><p>சுக்கிரனின் நிலையில் மாற்றம் ஏற்படும் போது அனைத்து ராசியினர் வாழ்க்கையிலும் அதன் தாக்கம் ஏற்படும். தற்போது சுக்கிரன் சிம்ம ராசியில் பயணித்து வரும் நிலையில், ஜுலை 29ல் உத்திரம் நட்சத்திரத்திற்கு நுழையவுள்ளார்.</p><p>குறித்த நட்சத்திரத்தில் ஆகஸ்ட் 11ம் தேதி வரை இருக்கின்றார். உத்திரம் நட்சத்திரத்தின் அதிபதி சூரியன் என்பதால், குறித்த நட்சத்திரத்தில் சூரியன் செல்வதால் சில ராசியினருக்கு அதிர்ஷ்டமாக இருக்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/609074ff-9fda-44fe-b228-63deede7e8db/26-6a56eb3ecd62d.webp' /></p><p></p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">ரிஷபம்</span><br></p><p> </p><p>சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியினால் ரிஷப ராசியினர் நல்ல பலனை பெறுவதுடன், வியாபாரிகளுக்கும் நல்ல லாபம் கிடைக்கும்.</p><p>பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதுடன், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். முக்கியமான முடிவுகள் வாழ்வில் நல்ல மாற்றத்தினை ஏற்படுத்தும். நீண்ட காலமாக சந்தித்து வந்த பணப்பிரச்சனை தீர்வதுடன், குடும்பத்தினரின் முழு ஆதரவும் கிடைக்குமாம். மன அழுத்தம் குறைந்து, மன அமைதியும் அதிகரிக்கும்..</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/948d2795-9329-4978-8b5a-9bfbd661d377/26-6a56eb3f7faca.webp' /></p><p>

</p><h2>மிதுனம் </h2><p>சுக்கிரன் பெயர்ச்சியினால் மிதுன ராசியினரின் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படுவதுடன், நீண்ட காலமாக தடைபட்ட வேலையும் வெற்றியாக முடியும்.</p><p>தன்னம்பிக்கை அதிகரிப்பதுடன், திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். சமூகத்தில் மதிப்பு, மரியாதை அதிகரிப்பதுடன், புதிய வீடு, வாகனம் வாங்குவதற்கு வாய்ப்புகளும் கிடைக்கும்</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0a244ed2-1a05-4186-9095-c940da5c0038/26-6a56eb402ede8.webp' /></p><p></p><p>

</p><h2>சிம்மம் </h2><p>சிம்ம ராசியினருக்கு இந்த சுக்கிரன் பெயர்ச்சி சிறப்பாக இருக்குமாம். தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைப்பதுடன், திருமணம் ஆகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும்.</p><p>செய்யும் வேலைகள் அனைத்தும் வெற்றியில் முடியும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிப்பதுடன், பணிபுரிபவர்களுக்கு அலுவலகத்தில் சம்பள மற்றும் பதவி உயர்வு கிடைக்கும்.</p><p>புதிய வழிகளிலிலிருந்து பணம் தேடி வருவதுடன், நிதி நிலையில் நல்ல உயர்வும் ஏற்படும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a5d162cf-4318-44b3-bdc6-2f809f864caa/26-6a56eb40daf5f.webp' /><br></p><h2>மகரம் </h2><p>மகர ராசியினருக்கு சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி நிதி ரீதியான நல்ல பலனை அளிப்பதுடன், முன்னேற்றமும் ஏற்படும். தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகமாகும்.</p><p>வருமானத்தில் உயர்வு, ஏற்கனவே செய்த முதலீடுகளில் நல்ல லாபம் கிடைக்கும். தொழில் ரீதியாக சிறப்பான பலனை பெற முடியும்.&nbsp;</p><p>காதல் வாழ்க்கை இனிமையாக இருப்பதுடன், மகிழ்ச்சி, செழிப்பு, முன்னேற்றம் ஆகியவை கிடைக்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0afd81e3-8119-4604-80e4-a9bb0e5b3824/26-6a56eb418a6a5.webp' /></p><p><i><b>இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. ( மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).</b></i>&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;&nbsp;<br></p><table class="table table-bordered"><tbody><tr><td><i>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன்<a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள் <a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"><b>FOLLOW NOW</b></a>&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;</i><br></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-15T02:07:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வளைகுடாவில் வெடித்த போர்: நிறுத்த சொல்லும் வரை ஈரானை தாக்குங்கள் - டிரம்பின் உத்தரவால் பதற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/trump-says-strikes-continue-until-i-say-enough-1784079785"></link>
            <id>https://ibctamil.com/article/trump-says-strikes-continue-until-i-say-enough-1784079785</id>
            <summary type="text">நான் போதும் என்று சொல்லும் வரை ஈரான் மீதான தாக்குதல்கள் தொடரும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அத்துடன் மின் உற்பத்தி நிலையங...</summary>
            <content type="html"><![CDATA[<p>நான் போதும் என்று சொல்லும் வரை ஈரான் மீதான தாக்குதல்கள் தொடரும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.</p><p>
அத்துடன் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் பாலங்களே தமது இலக்குகள் என்றும் அமெரிக்க ஜனாதிபதி கூறியுள்ளார்.</p><p>செவ்வாயன்று ஃபாக்ஸ் நியூஸுக்கு அளித்த பேட்டி ஒன்றில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2> வணிகக் கப்பல்கள் மீது தாக்குதல்</h2><p>"அவர்கள் பேச்சுவார்த்தை மேசைக்கு வரும் வரை, நாங்கள் அவர்களின் மின் உற்பத்தி நிலையங்களைச் செயலிழக்கச் செய்வதுடன் அவர்களின் எல்லாப் பாலங்களையும் தகர்ப்போம் என்றும் அவர் மேலும் எச்சரித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/195a60f3-09ad-46cd-a2b8-534b5a805834/26-6a56e7e1a16d7.webp' /></p><p>இதேவேளை, கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ஈரான் படைகள் ஏழு வணிகக் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக அமெரிக்க மத்திய கட்டளை மையத்தின் தளபதி அட்மிரல் பிராட் கூப்பர் தெரிவித்துள்ளார்.
</p><p>மேலும், அண்டை வளைகுடா நாடுகளை நோக்கி ஈரான் பல ஏவுகணைகளையும் ஆளில்லா ட்ரோன்களையும் ஏவியுள்ளதாகத் தெரிவித்த அட்மிரல் கூப்பர், பொதுமக்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் இத்தகைய செயல்களுக்கு ஈரான் பொறுப்பேற்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.</p><p></p><h2>அமெரிக்காவின் குற்றங்கள்</h2><p>இந்தநிலையில் அமெரிக்காவின் குற்றங்கள் தொடரும் வரை ஆக்கிரமிப்பாளருக்கு எதிரான பழிவாங்கலும் தண்டனையும் தொடரும் என இஸ்லாமிய புரட்சிகர காவல் படை எச்சரித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d8828f6c-c1b7-4a41-9224-ca7e54a6d539/26-6a56e8d2227b2.webp' /></p><p>இந்தத் தாக்குதல்கள் மீண்டும் தொடரப்பட்டால் அவை மேலும் பல ஆச்சரியமூட்டும் பதிலடித் தாக்குதல்களை சந்திக்க நேரிடும் எனவும்&nbsp;புரட்சிகர காவல் படை&nbsp;தெரிவித்துள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-15T02:06:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் உயிரிழந்த கோடீஸ்வர பெண் - சடலத்திற்கு போட்டி போடும் தரப்பினால் சர்ச்சை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/4-groups-wait-for-a-women-s-body-1784080082"></link>
            <id>https://tamilwin.com/article/4-groups-wait-for-a-women-s-body-1784080082</id>
            <summary type="text">தவுலகல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிரிவவுல பிரதேசத்தில், உயிரிழந்த பெண்ணின் உடல் சுமார் ஒரு மாதமாக பேராதனை போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>தவுலகல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிரிவவுல பிரதேசத்தில், உயிரிழந்த பெண்ணின் உடல் சுமார் ஒரு மாதமாக பேராதனை போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளததாக தெரிவிக்கப்படுகின்றது.
</p><p>
பல சொத்துகளுக்கு உரிமையாளரான 75 வயதுடைய பெண், உயிரிழந்ததையடுத்து, அவரது உடலை பெற்றுக்கொள்வதில் நான்கு தரப்பினரிடையே முறுகல் நிலை ஏற்பட்டுள்ளமை இதற்கு காரணமாகும்.
</p><p>
உயிரிழந்தவரின் இறுதிச் சடங்குகளை முன்னெடுப்பதற்காக முன்வந்த நான்கு தரப்பினராலும் தமக்கு சட்டபூர்வமான உரிமை உள்ளதை உறுதிப்படுத்த முடியாமல் போயுள்ளது.</p><p>
</p><h2><b>
கோடீஸ்வர பெண் </b></h2><p>நீதிமன்ற உத்தரவு கிடைக்கும் வரை உடலை எந்த தரப்பினருக்கும் கையளிக்கப் போவதில்லை என மரண விசாரணை அதிகாரி சேனக கருணாரத்ன தீர்மானித்துள்ளார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/397260a9-5830-4238-b3bc-5230eb0f6db6/26-6a56eae5a888a.webp' /></p><p>குறித்த பெண்ணுக்கு சொந்தமான 2 மாடி வீட்டின் மேல் தளத்தில், சுமார் 16 வருடங்களாக தம்பதி ஒன்று தங்கள் பிள்ளைகளுடன் வசித்து வந்துள்ளனர். 

அவர்கள் உயிரிழந்த பெண்ணை மிகவும் அன்புடன் கவனித்து வந்துள்ளனர். அத்துடன், 14 வருடங்களாக அவரிடம் வாடகைப்பணத்தையும் பெற்றுக்கொள்ளவில்லை.</p><p>

உயிரிழந்த பெண் சுகவீனமுற்று பேராதனை போதனா வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்றபோது, அவரது அனைத்து தேவைகளையும் அந்த குடும்பமே நிறைவேற்றியுள்ளமை விசாரணையின் போது தெரியவந்துள்ளது.</p><p>

இந்தக் குடும்பத்தினர் உடலை பொறுப்பேற்று இறுதிச் சடங்குகளை மேற்கொள்ள முன்வந்தபோது, உயிரிழந்த பெண்ணின் நெருங்கிய உறவினர்கள் என கூறி மேலும் மூவர் முன்வந்துள்ளனர்.</p><h3><b> 

பிரேத பரிசோதனை</b></h3><p>அவர்களில் உயிரிழந்த பெண்ணின் சகோதரியின் மகன், மற்றொரு உறவினர் மற்றும் கணவர் என்று கூறிக்கொள்ளும் நபர் ஒருவரும் அடங்குவர்.

உயிரிழந்த பெண் திருமணம் செய்யாதவர் என்பது தெரியவந்தது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ae0bd03a-17ee-4154-b8ae-781ce94a7983/26-6a56eae657419.webp' /></p><p>இதனையடுத்து, கணவர் என்று கூறிக் கொள்ளும் நபர் சமர்ப்பித்த திருமணப் பதிவை ஆய்வு செய்ததில், அதில் குறிப்பிடப்பட்ட பெயர் உயிரிழந்த பெண்ணின் சகோதரியினுடையது என்பது தெரியவந்துள்ளது.
</p><p>
அதற்கமைய, உயிரிழந்த பெண்ணின் உடலை யாருக்கு ஒப்படைப்பது என்பதில் கடுமையான சிக்கல் நிலை எழுந்துள்ளது. 

இதனால், பிரேத பரிசோதனையும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை. </p><p>நீதிமன்றத்திற்கு விடயங்களை முன்வைத்து, உரிமை தொடர்பான சிக்கலை தீர்த்துக்கொண்டு வருமாறு பொலிஸாருக்கு மரண விசாரணை அதிகாரி அறிவித்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-07-15T02:05:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பில் மனைவிக்காக கணவன் செய்த மோசமான செயல் - விசாரணையில் அதிர்ச்சித் தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/couple-arrested-for-selling-drugs-1784077879"></link>
            <id>https://tamilwin.com/article/couple-arrested-for-selling-drugs-1784077879</id>
            <summary type="text">
கொழும்பின் புறநகர் பகுதியான மாதம்பிட்டியில் மனைவியை சட்டத்தரணியாக்குவதற்கு தேவையான பணத்தைப் பெற்றுக்கொள்வதற்காக போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட கணவர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>
கொழும்பின் புறநகர் பகுதியான மாதம்பிட்டியில் மனைவியை சட்டத்தரணியாக்குவதற்கு தேவையான பணத்தைப் பெற்றுக்கொள்வதற்காக போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட கணவர் மற்றும் அவரது மனைவியான&nbsp; ஆசிரியை ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p>
குறித்த தம்பதி சுமார் 2 கோடி ரூபா பெறுமதியான ஐஸ் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
சர்வதேச பாடசாலை ஒன்றில் ஆசிரியையாக பணிபுரியும் 25 வயதுடைய மனைவி மற்றும் அவரது கணவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p></p><p>
</p><h2><b>
தம்பதி கைது</b></h2><p>சந்தேகநபரிடம் இருந்து 1 கிலோ 06 கிராம் 350 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளும், ஆசிரியையான மனைவியிடம் இருந்து 149 கிராம் 150 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
</p><p>வான் ஒன்றின் முன்பக்கத்தில் வைத்து போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு, மாதம்பிட்டி பகுதியில் விநியோகிப்பதாக மாதம்பிட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு தகவல் கிடைத்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3aa4f3fc-c032-4724-b563-48521865f816/26-6a56e07d50f1f.webp' />&nbsp;&nbsp;</p><p>
அதற்கமைய சந்தேகநபரான தம்பதியினர் மாதம்பிட்டி பகுதியில் உள்ள மதஸ்தலம் ஒன்றுக்கு அருகில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
</p><p>
குறித்த வானில் இருந்த தம்பதியினரை சோதனையிட்டபோது அவர்களிடம் இந்த போதைப்பொருள் கண்டுகிடிக்கப்பட்டுள்ளது.</p><p>

அவர்களிடம் மேற்கொண்ட விசாரணைகளின் போது, இவை வத்தளை பகுதியில் இருந்து கொண்டு வரப்பட்டதாகத் தெரிவித்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-15T02:00:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[திறைசேரியின் மின்னஞ்சல் சேமிப்பு தொகுதி (Email Server) ஆபத்தான நிலையில்! கோப் (COPF) குழுவில் அம்பலமான இரகசியம்...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/cope-committee-to-harsha-de-silva-1784079088"></link>
            <id>https://tamilwin.com/article/cope-committee-to-harsha-de-silva-1784079088</id>
            <summary type="text">திறைசேரியின் அனைத்து இரகசிய மற்றும் முக்கியமான அரச தகவல்கள் பரிமாறப்படும் மின்னஞ்சல் சேமிப்பு தொகுதி (Email Server), எந்தவொரு பராமரிப்பும் அல்லது பாது...</summary>
            <content type="html"><![CDATA[<p>திறைசேரியின் அனைத்து இரகசிய மற்றும் முக்கியமான அரச தகவல்கள் பரிமாறப்படும் மின்னஞ்சல் சேமிப்பு தொகுதி (Email Server), எந்தவொரு பராமரிப்பும் அல்லது பாதுகாப்பு புதுப்பித்தலும் (Update) இன்றி 2019ஆம் ஆண்டிலிருந்து முற்றிலும் பாதுகாப்பற்ற முறையில் பேணப்பட்டு வந்துள்ளமை அரசாங்க நிதி பற்றிய குழுவின் (COPF) அண்மைய கூட்டத்தில் தெரியவந்துள்ளது.
</p><p>

2.5 மில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாட்டுக் கடனைச் செலுத்துவதில் இடம்பெற்ற பெருமளவிலான நிதி மோசடி குறித்து விசாரணை செய்வதற்காகக் கூட்டப்பட்ட விசேட குழு அமர்வின் போது, </p><p>அதன் தலைவர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா மற்றும் அங்கு வருகை தந்திருந்த அதிகாரிகளுக்கு இடையே நடைபெற்ற நீண்ட விசாரணைக்கு மத்தியில், நாட்டின் சைபர் பாதுகாப்பில் ஏற்பட்டுள்ள பெரும் வீழ்ச்சி இவ்வாறு வெளிச்சத்திற்கு வந்தது.
</p><h2>

</h2><p></p><h2>மிகவும் பழமையான அமைப்பு</h2><p>இங்கு குழுவின் முன்னிலையில் சாட்சியமளித்த இலங்கை கணினி அவசர தயார்நிலை அமைப்பின் (CERT) அதிகாரிகள், திறைசேரியினால் தற்போது கூட பயன்படுத்தப்பட்டு வருவது 2016ஆம் ஆண்டில் தயாரிக்கப்பட்ட ஒரு அமைப்பாகும் (Server system) என்பதை ஏற்றுக் கொண்டுள்ளனர்.
</p><p>
அதன் உத்தியோகபூர்வ சேவைக்காலம் 2019ஆம் ஆண்டுடன் நிறைவடைந்துள்ளதுடன், அன்றிலிருந்து இன்றுவரை அதற்காக எவ்வித பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை என்றும், வருடாந்த பாதுகாப்பு தணிக்கை (Annual Security Audit) எதுவும் செய்யப்படவில்லை என்றும் நிதிக்குழுவின் கேள்விகளுக்கு பதிலளித்துள்ளனர்.
</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/13ad4de8-a2ad-4261-bf3f-12333b0a1c87/26-6a56e2f23a625.webp' /></p><p>2019 ஆம் ஆண்டுடன் காலாவதியான இந்த அமைப்பை எந்தவொரு சேவைப் பராமரிப்போ (service) அல்லது இக்காலப்பகுதிக்குரிய புதுப்பித்தலோ (update) இல்லாத ஒரு சேவையகத்தின் (server) மூலமாகவே திறைசேரியின் இந்த அனைத்து இரகசிய ஆவணங்களும் அனுப்பப்பட்டன? யார் வேண்டுமானாலும் மிக எளிதாக ஊடுருவக்கூடியதாகவும் இருந்துள்ளது.
</p><p>
கொடுக்கல் வாங்கல்களில் பணச் சலவை (Money laundering) அபாயம் இருப்பதாக அமெரிக்காவின் பெடரல் ரிசர்வ் வங்கி (Federal Reserve Bank), சிட்டி வங்கி (Citi Bank) என்பன இலங்கை மத்திய வங்கி ஊடாக திறைசேரிக்கு முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்திருந்தமை இக்குழுவில் வெளிப்பட்டது. </p><p>எனினும், திறைசேரியின் கீழ்மட்ட அதிகாரிகளினால் அந்த பாரதூரமான எச்சரிக்கைகள் குறித்து உயர் நிர்வாகத்திற்கோ அல்லது நிதிச் செயலாளருக்கோ அறிக்கை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதும் குழுவின் முன்னிலையில் தெரிவிக்கப்பட்டது.
</p><p>

அதிகாரிகளினால் இப்பிரச்சினை குறித்து உயர் மட்டத்திற்கு அறிக்கை செய்யப்படாமல், தங்களது மட்டத்திலேயே தீர்மானங்களை மேற்கொண்டு, மீண்டும் ஒருமுறை அந்த மோசடியான கணக்குகளுக்கே பணத்தை அனுப்புவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என நிதி அமைச்சின் செயலாளர் குழுவின் முன்னிலையில் தெரிவித்திருந்தார்.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-15T01:42:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[மீண்டும் போர்க்களமாகும் ஹோர்முஸ் நீரிணை ; ஈரான் மீது புதிதாக தாக்குதல்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/fresh-iran-strikes-as-naval-blockade-returns-1784076403"></link>
            <id>https://canadamirror.com/article/fresh-iran-strikes-as-naval-blockade-returns-1784076403</id>
            <summary type="text">கடந்த ஜூன் மாதம் மேற்கொள்ளப்பட்ட இடைக்காலப் போர் நிறுத்த ஒப்பந்தம் முறிவடைந்ததைத் தொடர்ந்து, ஈரான் மீதான தனது இராணுவ நடவடிக்கைகளை அமெரிக்கா தீவிரப்படு...</summary>
            <content type="html"><![CDATA[<p>கடந்த ஜூன் மாதம் மேற்கொள்ளப்பட்ட இடைக்காலப் போர் நிறுத்த ஒப்பந்தம் முறிவடைந்ததைத் தொடர்ந்து, ஈரான் மீதான தனது இராணுவ நடவடிக்கைகளை அமெரிக்கா தீவிரப்படுத்தியுள்ளது.</p><p>

ஈரானின் துறைமுகங்கள் மற்றும் கரையோரப் பகுதிகளை மையமாகக் கொண்டு, அமெரிக்காவின் கடற்படை முடக்கத்தை மீண்டும் அமுல்படுத்துவதாக அமெரிக்க மத்திய கட்டளை மையம் (CENTCOM) அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கை ஜூலை 14 மாலை 4 மணி முதல் (அமெரிக்க நேரம்) அமுலுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5594c689-dd06-4108-98c9-39525bde141e/26-6a56d874e055c.webp' /></p><p>
இதற்காக மத்திய கிழக்குக் கடல் பிராந்தியத்தில் 20க்கும் மேற்பட்ட அமெரிக்கப் போர்க்கப்பல்களும், நூற்றுக்கணக்கான போர் விமானங்களும் களமிறக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க மத்திய கட்டளை மையம் தெரிவித்துள்ளது.</p><p>இதனிடையே, ஹோர்முஸ் நீரிணை ஊடாகச் செல்லும் வணிகக் கப்பல்கள் மீதான ஈரானின் தாக்குதல் திறன்களை வலுவிழக்கச் செய்யும் நோக்கில், அமெரிக்கா ஈரானின் தென்பகுதிகளில் வான்வழித் தாக்குதல்களைத் தொடர்கிறது.</p><p>
அமெரிக்காவின் தாக்குதல்கள் காரணமாக, ஈரானின் தெற்குத் துறைமுக நகரங்களான பண்டர் அப்பாஸ் (Bandar Abbas), சிரிக் (Sirik) மற்றும் கேஷ்ம் (Qeshm) தீவு ஆகிய பகுதிகளில் பலத்த வெடிப்புச் சத்தங்கள் கேட்டதாக ஈரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
</p><p>
முன்னதாக, அமெரிக்காவின் நடவடிக்கைகளுக்குப் பதிலடியாக, குவைட் மற்றும் பஹ்ரைனில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள் மீது ஈரான் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது. </p><p>"அமெரிக்காவின் இத்தகைய விரோதப் போக்குகள் தொடருமானால், இந்த பகுதியிலிருந்து ஒரு துளி எண்ணெய் அல்லது எரிவாயு கூட ஏற்றுமதி செய்யப்படாது என்று ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படை கடுமையாக எச்சரித்துள்ளது.
</p><p>
ஹோர்முஸ் நீரிணையில் வணிகக் கப்பல்களுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்துவதாகத் தெரிவித்துள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரானைத் தவிர மற்ற அனைத்து நாடுகளின் கப்பல்களுக்கும் இந்த நீரிணை திறந்திருக்கும் என்று உறுதிபடத் தெரிவித்துள்ளார். </p><p>முன்னதாக, கப்பல்களிடம் 20% வரி வசூலிக்கும் திட்டத்தை முன்வைத்த அவர், தற்போது அதற்குப் பதிலாக வளைகுடா நாடுகளுடன் புதிய வர்த்தக ஒப்பந்தங்களை மேற்கொள்ளவிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.</p><p>

இந்த மோதல்கள் காரணமாக உலகச் சந்தையில் மசகு எண்ணெய் விலையில் மீண்டும் ஏற்ற இறக்கங்கள் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-07-15T01:31:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பகுதியில் பிரபல பாடசாலைக்குள் நடந்த கொடூர சம்பவத்தால் பரபரப்பு ; மாணவர்கள் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/shocking-incident-rocks-popular-tamil-school-1784075452"></link>
            <id>https://jvpnews.com/article/shocking-incident-rocks-popular-tamil-school-1784075452</id>
            <summary type="text">முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பில் அமைந்துள்ள பிரபல பாடசாலையொன்றில் சக மாணவர்களை இரும்புக் கம்பியால் தாக்கிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட மூன்ற...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify;">முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பில் அமைந்துள்ள பிரபல பாடசாலையொன்றில் சக மாணவர்களை இரும்புக் கம்பியால் தாக்கிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட மூன்று மாணவர்களையும் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p style="text-align: justify;">


நேற்று பாடசாலை நேரத்தில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில், உயர்தர வகுப்பில் புதிதாக இணைந்திருந்த மூன்று மாணவர்கள் இரும்புக் கம்பியுடன் மற்றொரு வகுப்பறைக்குள் நுழைந்து அங்கு கல்வி கற்றுக்கொண்டிருந்த மாணவர்களை தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e487d026-9500-4aea-adf9-d6e361a667dc/26-6a56d4bdc1a1f.webp' /></p><h2 style="text-align: justify; ">விளக்கமறியல் உத்தரவு&nbsp;</h2><p style="text-align: justify; ">



இந்த தாக்குதலில் இரு மாணவர்கள் பலத்த காயமடைந்த நிலையில், அவர்கள் புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.</p><p style="text-align: justify; ">


சம்பவத்தைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட மாணவர்களின் குடும்பத்தினரும் உறவினர்களும் பாடசாலை வளாகத்தில் ஒன்றுகூடி எதிர்ப்பை வெளியிட்டதுடன், இது தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு முறைப்பாடு வழங்கப்பட்டது.</p><p style="text-align: justify; "></p><p>
</p><p style="text-align: justify; ">


இதனையடுத்து, சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று மாணவர்களையும் கைது செய்த புதுக்குடியிருப்பு பொலிஸார், அவர்களை நேற்று (14.07.2026) முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினர்.
</p><p style="text-align: justify; ">


வழக்கை விசாரணை செய்த நீதிமன்றம், கைது செய்யப்பட்ட மாணவர்களை 21.07.2026 வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டது.</p><p style="text-align: justify; ">



இதேவேளை, சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய சந்தேகநபர்களை அடையாளம் காணும் விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.&nbsp;&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-15T01:31:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[குருவின் நட்சத்திர மாற்றம் ; இந்த ராசியினர்அரியணையில் அமரப்போறாங்களாம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/jupiter-star-change-brings-luck-to-these-signs-1784079041"></link>
            <id>https://jvpnews.com/article/jupiter-star-change-brings-luck-to-these-signs-1784079041</id>
            <summary type="text">குரு பார்வை கோடி நன்மை என்று சொல்வார்கள். எப்பேற்பட்ட துயரமாக இருந்தாலும் குருவினுடைய பார்வை இருக்க நாம் அந்த துயரத்தில் இருந்து விடுபடலாம்.

அதேபோல...</summary>
            <content type="html"><![CDATA[<p>குரு பார்வை கோடி நன்மை என்று சொல்வார்கள். எப்பேற்பட்ட துயரமாக இருந்தாலும் குருவினுடைய பார்வை இருக்க நாம் அந்த துயரத்தில் இருந்து விடுபடலாம்.
</p><p>
அதேபோல், குரு பார்வை இருக்க பெயர், புகழ், பதவி, அந்தஸ்து என்ற உயர் செல்வாக்கினை நாம் அடையலாம். அந்த வகையில், ஜூலை 19ஆம் திகதி குரு பகவான் பூச நட்சத்திரத்தின் மூன்றாம் பாதத்திற்குள் செல்கிறார்.&nbsp; இந்த மாற்றத்தால் ஒரு சில ராசிகளுக்கு மிகப்பெரிய அளவில் நன்மை காத்திருக்கிறது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9b293ddf-9572-44d9-a01e-69307f9d0b4d/26-6a56e2c2d80b4.webp' /></p><p><b>

மேஷம்:</b>
மேஷ ராசிக்காரர்களுக்கு குருபகவான் உடைய இந்த பெயர்ச்சியானது பொருளாதாரத்தில் இவர்களுக்கு நிலையான தன்மையை கொடுக்கப்போகிறது. குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியை பெற போகிறார்கள்.

முடங்கி கிடந்த பணம் இவர்கள் கைகளுக்கு வந்து சேர போகிறது. எதிர்காலம் தொடர்பான முக்கிய முடிவுகளை எடுப்பார்கள். வெளிநாடுகளில் இவர்கள் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகள் உருவாகும்.</p><p><b>

கடகம்:
</b>இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த காலகட்டம் பொருளாதார நிலையானதாக இருக்கப்போகிறது. தொழில் செய்யக்கூடியவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.

புதிய வாடிக்கையாளர்களின் வருகையால் தொழிலை நீங்கள் வளர்ச்சி படுத்துவதற்கான வாய்ப்புகள் உருவாகும். மனதில் இருந்து வந்த குழப்பங்கள் விலகி புத்துணர்ச்சி அடையும். நேர்மறையான சிந்தனைகளால் எதையும் எளிதில் சாதித்து விடுவீர்கள்.

</p><p><b>

தனுசு:
</b>இவர்கள் இந்த காலகட்டங்களில் அமோகமான வாழ்க்கையை வாழ போகிறார்கள், மன ரீதியாக முடங்கி கிடந்த தனுசு ராசியினர் மீண்டும் எழுந்து போராடக் கூடிய தன்மையை வளர்த்துக் கொள்ளப் போகிறார்கள், கடின உழைப்பிற்கான அங்கீகாரம், இவர்களை அவதூறாக பேசியவர்கள், ஏளனமாக பார்த்தவர்கள் முன்பு வாழ்ந்து காட்டக்கூடிய அற்புதமான கால அமைப்பாகும்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-15T01:30:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீர்கொழும்பு சிறை வன்முறையின் பின்னணி அம்பலம் ; நீதிமன்றத்தில் CID வெளிப்படுத்திய விடயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/negombo-prison-violence-background-revealed-1784078479"></link>
            <id>https://jvpnews.com/article/negombo-prison-violence-background-revealed-1784078479</id>
            <summary type="text">நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் குறித்து விசாரணை நடத்துவதற்காக மூன்று குழுக்களாக 40 குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள்...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify;">நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் குறித்து விசாரணை நடத்துவதற்காக மூன்று குழுக்களாக 40 குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் களமிறக்கப்பட்டுள்ளதாக, நீர்கொழும்பு நீதவான் சிலனி பெரேரா முன்னிலையில் குற்றப்புலனாய்வு திணைக்களம் நேற்று (14) தெரிவித்துள்ளது.
</p><p style="text-align: justify;">
இந்த மோதலில் 31 பேர் உயிரிழந்ததுடன், மேலும் பலர் காயமடைந்தனர்.</p><p style="text-align: justify;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c653cd62-3e91-479f-95b9-1733883ed8f7/26-6a56e09102b93.webp' /></p><h2 style="text-align: justify;">விசாரணை</h2><p>
</p><p style="text-align: justify;">
நீதவான் முன்னிலையில் விசாரணைகளின் முன்னேற்றத்தை விளக்கிய குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் வணிகக் குற்றப் புலனாய்வுப் பிரிவு, இதுவரை 136 சிறைச்சாலை அதிகாரிகள், 141 கைதிகள் மற்றும் 9 விசேட அதிரடிப்படை வீரர்களிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டது.
</p><p style="text-align: justify;">
வன்முறை இடம்பெற்ற போது சிறைச்சாலைக்குள் 2,417 கைதிகளும், 166 சிறைச்சாலை ஊழியர்களும் இருந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.</p><p style="text-align: justify;">பதற்ற நிலைக்குக் காரணமான முதலாவது சம்பவம் கடந்த ஜூலை 05ஆம் திகதி நடந்துள்ளது. பொதுவாக கைதிகளுக்கு உடற்பயிற்சி செய்வதற்காக 30 நிமிடங்கள் ஒதுக்கப்படும்.</p><p style="text-align: justify;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/03101f88-cd09-49e7-81c5-dd43e81378e4/26-6a56e091b3826.webp' /></p><p style="text-align: justify;"> அன்றைய தினம் A(1) வார்டில் வைக்கப்பட்டிருந்த 'கட்டுவெல்லேகம சுரேஷ்' என்ற கைதி, தனக்கு உடற்பயிற்சி செய்ய கூடுதல் நேரம் தருமாறு கேட்டு சிறைச்சாலை அதிகாரி ஒருவரை தகாத வார்த்தைகளால் பேசி, கொலை மிரட்டல் விடுத்துள்ளார். </p><p style="text-align: justify;">



பின்னர் அன்றைய தினமே A(1) வார்டின் கதவு திறக்கப்பட்ட ஒரு சந்தர்ப்பத்தில், சுரேஷ் என்ற இந்த கைதி வார்டில் இருந்து வெளியே தப்பி ஓடி, 02ஆம் வார்டில் இருந்த கைதிகள் குழுவொன்றின் மீது தாக்குதல் நடத்தியுள்ளார். இதுவே பதற்ற நிலைக்குக் காரணமான ஆரம்ப சம்பவமாகும்.</p><p style="text-align: justify;"> இதன் போது ஆரம்பத்தில் இரண்டு கைதிகளும், பின்னர் மற்றுமொருவருமாக மொத்தம் மூன்று கைதிகள் உயிரிழந்துள்ளனர். மேலும் 36 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

இந்த மோதல் தீவிரமடைந்து கைதிகள் சிறைச்சாலையின் மருந்தகம் மற்றும் நிர்வாகக் கட்டிடத்திற்கு சேதம் விளைவித்துள்ளனர்.</p><p style="text-align: justify;"></p><p> </p><p style="text-align: justify;">சிறைச்சாலையின் நிர்வாகக் கட்டிடமும் கைதிகளின் கட்டுப்பாட்டுக்குள் சென்றுள்ளது. 5ஆம் திகதி மாலையிலேயே சிறைச்சாலை அதிகாரிகள் பொலிஸாருக்குத் தெரிவித்து பாதுகாப்பைக் கோரியுள்ளனர். </p><p style="text-align: justify;">



நீர்கொழும்பு தலைமையக பொலிஸ் அதிகாரிகள் வந்தபோதிலும், நிலைமையை முழுமையாகக் கட்டுப்படுத்த முடியாமல் போனதால், சிறைச்சாலை தலைமையகத்திலிருந்து அவசர தந்திரோபாயப் படையின் 89 அதிகாரிகள் நீர்கொழும்பு சிறைச்சாலைக்கு வரவழைக்கப்பட்டனர்.
</p><p style="text-align: justify;">


5ஆம் திகதி இரவும் கைதிகள் கூரை மீது ஏறி, குழுவாக இணைந்து வன்முறையில் ஈடுபட்டதற்கான சான்றுகள் கிடைத்துள்ளன. </p><p style="text-align: justify;">மறுநாள் காலையில் உணவு வழங்குவதற்காக சிறைச்சாலை அதிகாரிகள் உள்ளே சென்றபோது மீண்டும் பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. 'அதிகாரிகளை அடிக்கக் காத்திருக்கிறார்கள், நீங்கள் வெளியேறுங்கள்' என்று சில கைதிகள் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர்.</p><p style="text-align: justify;"></p><p> </p><p style="text-align: justify;">முற்பகல் 10.30 முதல் 10.50க்கு இடைப்பட்ட காலத்தில் இந்த பதற்றநிலை பெரும் மோதலாக மாறியது. 

 

நிலைமையைக் கட்டுப்படுத்த சிறைச்சாலை அவசர தந்திரோபாயப் படையினர் உள்ளே சென்றபோது, கைதிகள் திட்டமிட்டு கற்கள், தடிகள் மற்றும் உடற்பயிற்சி உபகரணங்களின் இரும்புப் பாகங்களைக் கொண்டு கொடூரமாகத் தாக்கியுள்ளனர்.</p><p style="text-align: justify;"> 



இந்த மோதலுக்கு மத்தியில் நீர்கொழும்பு சிறைச்சாலை அதிகாரிகள் வெளியேற முடிந்த போதிலும், சிறைச்சாலையின் கட்டமைப்பு குறித்து சரியான புரிதல் இல்லாததால் கொழும்பிலிருந்து சென்ற அதிகாரிகளால் வெளியே வர முடியாமல் போனது.



முதல் நாளில் பதற்றநிலை ஏற்பட்ட போது, சிறைச்சாலையின் ஆயுதக் கிடங்கின் ஒரு பகுதியிலிருந்த ஆயுதங்கள் அகற்றப்பட்டிருந்தன. </p><p style="text-align: justify;">ஆனால், மற்றுமொரு பகுதியிலிருந்த ஆயுதங்கள் மோதலின் போது கைதிகளின் கைகளுக்குச் சென்றுள்ளன. மோதலின் போது சிறைச்சாலையின் உள்பகுதியிலிருந்து அதிகாரிகளை நோக்கி துப்பாக்கி நீட்டப்பட்டுள்ளது. 



அந்தச் சந்தர்ப்பத்திலேயே விசேட அதிரடிப்படையினர் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசியுள்ளனர். அப்போதும் நிலைமை கட்டுக்குள் வராததால் அவர்கள் வானத்தை நோக்கிச் சுட்டுள்ளனர்.</p><p style="text-align: justify;"></p><p> </p><p style="text-align: justify;">அதற்கும் கைதிகள் கட்டுப்படாத போதே, அதிகாரி ஒருவர் சிறைச்சாலை வாயிலின் துவாரத்தினூடாக உள்ளே நோக்கிச் சுட்டுள்ளார். 



அதன் பின்னரே விசேட அதிரடிப்படையினர் உள்ளே நுழைந்தபோது கொழும்பிலிருந்து சென்ற அதிகாரிகள் தரையில் விழுந்து கிடப்பதைக் கண்டுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
</p><p style="text-align: justify;">


மோதலின்போது கைதிகள் சிறைச்சாலையின் நிர்வாகக் கட்டிடம் மற்றும் மருந்தகத்துக்கு சேதம் விளைவித்ததுடன், அதிகாரிகள் மீது கற்கள், தடிகள் மற்றும் இரும்புப் பொருட்களால் தாக்குதல் நடத்தியதாகவும் CID தெரிவித்துள்ளது.
</p><p style="text-align: justify;">


சம்பவம் தொடர்பாக சிறைச்சாலையின் CCTV காட்சிகள் அடங்கிய இரண்டு DVR சாதனங்கள் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், அவை தடய அறிவியல் பரிசோதனைக்காக மொரட்டுவ பல்கலைக்கழக கணினி தடய அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது.
</p><p style="text-align: justify;">


இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகள் கொலைக் குற்றச்சாட்டு, துப்பாக்கிகள் கட்டளைச் சட்டம் மற்றும் பொதுச் சொத்துக்கள் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் தொடரப்பட்டு வருவதாக CID தெரிவித்துள்ளது.</p><p style="text-align: justify;"></p><p>
</p><p style="text-align: justify;">


முன்வைக்கப்பட்ட விபரங்களை பரிசீலித்த நீர்கொழும்பு நீதவான் ஷிலனி பெரேரா, மோதல் நடந்த நேரத்தில் சிறைச்சாலையில் இருந்த அனைத்து கைதிகள் தொடர்பான அறிக்கையையும் சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டார்.</p><p style="text-align: justify;">அத்துடன், அந்த நேரத்தில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் இருந்து தற்போது வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ள அனைத்து கைதிகளிடமிருந்தும், சிறைச்சாலைகள் ஆணையாளர் ஜெனரலின் மேற்பார்வையின் கீழ் வாக்குமூலங்களை பதிவு செய்யுமாறு நீதவான் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு உத்தரவிட்டார்.
</p><p style="text-align: justify;">


இந்த வழக்கு எதிர்வரும் ஜூலை 16ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.



இந்நிலையில் நீர்கொழும்பு சிறைச்சாலைக்குள் ஏற்பட்ட மோதலைக் கட்டுப்படுத்துவதற்காக துப்பாக்கிச் சூடு நடத்திய சிறைச்சாலை அதிகாரி, பல்லேகல சிறைச்சாலைக்கு தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளரும் சிறைச்சாலைகள் ஆணையாளருமான ஏ.சி. கஜநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
</p><p style="text-align: justify;">
 

கடந்த ஜூலை 6ஆம் திகதி நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவத்தின் போது, கைதிகள் சிறைச்சாலையின் இறுதி மரக் கதவையும் உடைத்துக்கொண்டு வெளியே வர முயன்ற சந்தர்ப்பத்தில், சிறைச்சாலை அதிகாரி ஒருவரால் இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருந்தது.
</p><p style="text-align: justify;">
 

இந்தத் துப்பாக்கிச் சூடானது சிறைச்சாலை சட்டதிட்டங்களுக்கு உட்பட்டே நடத்தப்பட்டதா அல்லது அதிகார வரம்பை மீறிச் செயல்படப்பட்டுள்ளதா என்பதைக் கண்டறிவதற்காக தற்போது ஒரு விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 



இந்த கொடூரமான மோதல் காரணமாக, இதுவரை 10 சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட 31 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-15T01:21:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[இன்டர்போலின் கண்களில் மண்ணைத்தூவி குற்றச் செயல்களை தொடரும் பாதாள உலகக் குழுத் தலைவர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/kanjipani-hiding-and-making-troubles-1784078234"></link>
            <id>https://tamilwin.com/article/kanjipani-hiding-and-making-troubles-1784078234</id>
            <summary type="text">&amp;nbsp;பிரபல பாதாள உலகக் குழு தலைவரான கஞ்சிபானி இம்ரான், சர்வதேச பொலிஸாரான இன்டர்போலின் கண்களில் மண்ணைத்தூவி தொடர்ந்தும் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வர...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;பிரபல பாதாள உலகக் குழு தலைவரான கஞ்சிபானி இம்ரான், சர்வதேச பொலிஸாரான இன்டர்போலின் கண்களில் மண்ணைத்தூவி தொடர்ந்தும் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
</p><p>கஞ்சிபானி இம்ரான் கொலைகள் மற்றும் கொடூரமான மனிதநேயமற்ற பல குற்றச் செயல்களுடன் தொடர்புடைய, இலங்கையின் பாதாள உலகக் குழுவின் மிகக் கொடூரமான மற்றும் ஆபத்தான குற்றவாளிகளில் ஓருவராக அடையாளப்படுத்தப்பட்டுள்ளார்.
</p><p>சர்வதேச பொலிஸாரின் வலையிலிருந்தும் தப்பித்து, வெளிநாடு ஒன்றில் தலைமறைவாக இருந்து கொண்டு, இலங்கையில் அச்சுறுத்தலான பாதாள உலகக் குழுச் செயற்பாடுகளை இயக்கி வருவதாக புலனாய்வுப் பிரிவினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8cc94e88-b95e-4fde-b6f4-45eb3856f3e4/26-6a56df9c53820.webp' /></p><p>2019ஆம் ஆண்டு துபாயில் வைத்து கைது செய்யப்பட்டு இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டதன் பின்னர், அதிஉயர் பாதுகாப்பு சிறைச்சாலையில் வைக்கப்பட்டிருந்த கஞ்சிபானி இம்ரான், 2021ஆம் ஆண்டு பிணையில் விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து நாட்டிலிருந்து தப்பியோடினார்.</p><p> அன்றிலிருந்து போலி கடவுச்சீட்டுகளைப் பயன்படுத்தி பல்வேறு நாடுகளின் எல்லைகளைக் கடந்து நடமாடி வரும் கஞ்சிபானி இம்ரான், பல கொடூரமான கொலைகளின் பின்னணியில் இருக்கும் முக்கிய சூத்திரதாரியாக விளங்குவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.</p><p>
'கஞ்சிபானி இம்ரான்' வெறும் உள்நாட்டு பாதாள உலக குழு செயற்பாடுகளை மட்டும் மேற்கொள்ளவில்லை எனவும், தற்போது சர்வதேச பயங்கரவாத அமைப்புகள் மற்றும் சர்வதேச பாரிய மாஃபியா கும்பல்களுடன் கைகோர்த்துள்ளதாக&nbsp; புலனாய்வுத்துறை தகவல்கள் வெளிப்படுத்தியுள்ளன.</p><p> 
இலங்கையில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் பாதாள உலகச் செயற்பாடுகளை சர்வதேச தொழில்நுட்பங்கள் மற்றும் தொடர்புகளைப் பயன்படுத்தி இயக்கி வரும் கஞ்சிபானி இம்ரானினால் நாட்டின் அமைதி மற்றும் பாதுகாப்புக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் சாதாரணமானதொன்றல்ல என அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளதாக தெற்கு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.</p><p>
இந்தக் குற்றவாளியைக் கைது செய்வதற்காக இலங்கை பொலிஸார், சர்வதேச பொலிஸ் ஊடாக 2024 ஆகஸ்ட் 02 அன்று 'A-888' என்ற இலக்கத்தின் கீழ் 'சிவப்பு அறிவித்தல்' (Red Notice) ஒன்றைப் பிறப்பித்துள்ளனர். </p><p>
எனினும், தொடர்ச்சியாகத் தனது இருப்பிடங்களை மாற்றிக் கொண்டு, பாதுகாப்புப் பிரிவினரின் கண்களில் மண்ணைத் தூவி தலைமறைவாக உள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.</p><p>
இவ்வாறானதொரு கொடூரமான குற்றவாளி சுதந்திரமாக நடமாடுவது தேசியப் பாதுகாப்புக்கு நேரடி அச்சுறுத்தலாகும் எனவும் இந்த நபர் தொடர்பில் தகவல்கள் இருந்தால் குற்றப் புலனாய்வு பிரிவு அல்லது இன்டர்போலிற்கோ தகவல் வழங்க முடியும் என அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-07-15T01:17:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[பயங்கரவாதிகளுடனான மோதலில் ராணுவ வீரர்கள் 30 பேர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/30-soldiers-killed-in-clash-with-terrorists-1784077367"></link>
            <id>https://canadamirror.com/article/30-soldiers-killed-in-clash-with-terrorists-1784077367</id>
            <summary type="text">மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு மாலி. இந்நாட்டில் ஐ.எஸ்., அல்கொய்தா உள்பட பல்வேறு பயங்கரவாத அமைப்புகள், ஆயுதக்குழுக்கள் செயல்பட்டு வருகின்றன.
...</summary>
            <content type="html"><![CDATA[<p>மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு மாலி. இந்நாட்டில் ஐ.எஸ்., அல்கொய்தா உள்பட பல்வேறு பயங்கரவாத அமைப்புகள், ஆயுதக்குழுக்கள் செயல்பட்டு வருகின்றன.</p><p>

மாலியில் கடந்த 2021ம் ஆண்டு முதல் ராணுவ ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்நாட்டின் அதிபராக ராணுவ ஜெனரல் அசிமி கொமிடா செயல்பட்டு வருகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e93f9cfb-d393-4cce-9a8a-96ed61fbf24e/26-6a56dc395d73b.webp' /></p><p> </p><p>இதனிடையே, மாலி அரசுக்கு ரஷியா ஆதரவு அளித்து வருகிறது. அதேவேளை, ராணுவத்திற்கும் , கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே அவ்வப்போது மோதல் நடந்து வருகிறது.</p><p>

அதன்படி, கடந்த ஏப்ரல் மாதம் தலைநகர் பமாகோ உள்பட பல்வேறு நகரங்கள் மீது அல்கொய்தா உள்பட பயங்கரவாதிகளுடன் சேர்ந்து கிளர்ச்சியாளர்கள் திடீர் தாக்குதல் நடத்தினர்.</p><p>இதனை தொடர்ந்து கடந்த 4ம் தேதி வடக்கு நகரங்களான அக்லிஹல், அனிபிஸ், கொவா, ஹனிரொபா உள்ளிட்ட நகரங்கள் மீது தாக்குதலை பயங்கரவாதிகள் தீவிரப்படுத்தினர்.</p><p>

வடக்கு மாலியை தனிநாடாக மாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் அரசுக்கு எதிராக தாக்குதலை கிளர்ச்சியாளர்கள், பயங்கரவாதிகள் மேற்கொண்டுள்ளனர். </p><p>இந்த தாக்குதலை தொடர்ந்து கிளர்ச்சியாளர்கள், பயங்கரவாதிகள் மீது ராணுவம் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது.மேலும், பயங்கரவாதிகள் கட்டுப்பாட்டில் உள்ள நகரங்களையும் ராணுவம் மீட்டு வருகிறது.</p><p>
இந்நிலையில், மாலியின் வடக்கு நகரமான அனிபிசை பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்து ராணுவம் மீட்டுள்ளது. </p><p>இந்த மீட்பு நடவடிக்கையின் போது பயங்கரவாதிகளுக்கும், ராணுவத்திற்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. பயங்கரவாதிகளுடனான இந்த மோதலில் ராணுவ வீரர்கள் 30 பேர் உயிரிழந்தனர். மேலும், 50க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் படுகாயமடைந்தனர்.</p>]]></content>
            <updated>2026-07-15T01:02:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டில் கொட்டி தீர்க்கப்போகும் கனமழை...! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/heavy-rain-with-lightning-thunder-weather-report-1784077226"></link>
            <id>https://ibctamil.com/article/heavy-rain-with-lightning-thunder-weather-report-1784077226</id>
            <summary type="text">சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சிறிதளவு மழை பெய்யக்கூடும்.வளிமண்டலவியல் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சிறிதளவு மழை பெய்யக்கூடும்.</p><p>வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (13-07-2026) விடுத்துள்ள அறிக்கையில் மேற்படி விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p>இதனடிப்படையில் நாட்டின் ஏனைய பிராந்தியங்களில் வறட்சியான வானிலை நிலவக்கூடும்.

</p><p></p><h2>பனிமூட்டமான நிலை</h2><p>அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மொனராகலை போன்ற மாவட்டங்களில் வெப்பச் சுட்டெண் காரணமாக பகல் வேளையில் அதிகரித்த வெப்பநிலை மனித உடலினால் உணரக்கூடியதாக இருக்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1d43e66b-4f72-4bbd-a939-578b472ce1f3/26-6a56dbab64b8c.webp' />&nbsp;&nbsp;</p><p>மத்திய மலைப் பிராந்தியத்தின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் மொனராகலை, ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் மணித்தியாலத்திற்கு சுமார் 40 - 50 km வேகத்தில் அடிக்கடி பலத்த காற்று வீசக் கூடும்.</p><p>இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-15T01:00:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Manchu</name>
            </author>
            <title type="text"><![CDATA[வீட்டில் காய்கறியே இல்லையா? மீல் மேக்கரை வைத்து வெள்ளை சால்னா வைக்கலாம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/white-meal-maker-salna-recipe-in-tamil-1784049978"></link>
            <id>https://manithan.com/article/white-meal-maker-salna-recipe-in-tamil-1784049978</id>
            <summary type="text">சப்பாத்தி, பூரி இவற்றுடன் சாப்பிடுவதற்கு மீல் மேக்கர் வெள்ளை சால்னா எவ்வாறு செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.பொதுவாக காலை அல்லது மாலை ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>சப்பாத்தி, பூரி இவற்றுடன் சாப்பிடுவதற்கு மீல் மேக்கர் வெள்ளை சால்னா எவ்வாறு செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.</p><p>பொதுவாக காலை அல்லது மாலை நேர உணவிற்கு சப்பாத்தி செய்வது சில வீடுகளில் வழக்கமாக இருக்கின்றது. ஆனால் அதற்கு குருமா வைப்பதற்கு வீட்டில் காய்கறி வேண்டும் என்று நினைப்பதுண்டு.</p><p>தற்போது காய்கறி இல்லாத தருணத்தில் சப்பாத்தி, பூரி, புரோட்டா என அனைத்திற்கும் வைத்து சாப்பிடும் மீல் மேக்கர் வெள்ளை சால்னா எவ்வாறு செய்யலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bd164347-0210-4c38-8775-cfef3e42bffd/26-6a56e8e9218a2.webp' /></p><p></p><h3>தேவையான பொருட்கள்</h3><h4>ஊற வைப்பதற்கு</h4><p>மீல் மேக்கர் - 1 கப்<br>சுடுநீர் - தேவையான அளவு <br>புளிப்பில்லாத கெட்டி தயிர் - 1/2 கப் <br>மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்<br>எலுமிச்சை சாறு - 1/2 டீஸ்பூன்<br>உப்பு - சிறிது </p><h4>வதக்கி அரைப்பதற்கு</h4><p>எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன் <br>பூண்டு - 10 பல் <br>இஞ்சி - 1 பெரிய துண்டு <br>பச்சை மிளகாய் - 3 (நறுக்கியது) <br>பெரிய வெங்காயம் - 4 (நறுக்கியது)<br>முந்திரி - 10</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e50c0e2e-fc45-4e26-86c0-b6ce4727466a/26-6a56e8e871267.webp' /></p><p> </p><h4>தாளிப்பதற்கு</h4><p>வெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்<br>பட்டை - 1 துண்டு<br>கிராம்பு - 2 <br>ஏலக்காய் - 2 <br>பிரியாணி இலை - 1 <br>அரைத்த மசாலா <br>மிளகுத் தூள் - 1 டீஸ்பூன் <br>உப்பு - சுவைக்கேற்ப <br>தண்ணீர் - 1/2 கப் <br>ஊற வைத்த மீல் மேக்கர்<br>மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன்<br>கசூரி மெத்தி - சிறிது<br>சர்க்கரை - 1/2 டீஸ்பூன்<br>கொத்தமல்லி - சிறிது</p><p></p><p>

</p><h2>செய்முறை</h2><p>பாத்திரத்தில் மீல் மேக்கரை எடுத்துக்கொண்டு, அதில் சுடுதண்ணீர் சேர்த்து 5 நிமிடம் ஊற வைத்து, தண்ணீரை பிளிந்து தனியாக எடுத்து, அதனை சாதாரண தண்ணீரில் இரண்டு முறை கழுவி நன்றாக பிழிந்து எடுத்துக் கொள்ளவும்.</p><p>இதனுடன் ஊற வைப்பதற்கு கொடுத்த பொருட்களை சேர்த்து 10 நிமிடம் ஊற வைக்கவும். கடாய் ஒன்றினை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் சேர்த்து, வெங்காயம், பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.</p><p>இத்துடன் முந்திரியை சேர்த்து வதக்கி, ஆற வைத்த பின்பு மிக்ஸி ஜாரில் வதக்கிய பொருட்களை சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9bec91b3-f1fd-4b26-9e58-d39b36198f57/26-6a56e8e7a7a4f.webp' /></p><p>பின்பு ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் வெண்ணெய் சேர்த்து உருகியதும், பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை சேர்த்து தாளிக்க வேண்டும்.</p><p>இத்துடடன் அரைத்த மசாலா விழுது, மிளகு தூள், உப்பு மற்றும் தேவையான தண்ணீர் சேர்த்து 3 நிமிடம் வதக்க கொதிக்க வைக்கவும்.</p><p>இதில் ஊற வைத்த மீல் மேக்கரை சேர்த்து கொதிக்க விட்ட பின்பு மிளகுதூள், கஸ்தூரி மெத்தி, சர்க்கரை மற்றும் கொத்தமல்லி இவற்றினை சேர்த்து இறக்கினால் சுவையான வெள்ளை மீல் மேக்கர் சால்னா தயார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td><i>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் <a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள் <a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"><b>FOLLOW NOW</b></a>&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;&nbsp;</i><br></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-15T01:00:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரசியல் தலைமைகளுக்கான விசேட பிரமுகர் பாதுகாப்பு...! வெளியான அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/vip-security-provided-based-on-intel-reports-govt-1784076324"></link>
            <id>https://ibctamil.com/article/vip-security-provided-based-on-intel-reports-govt-1784076324</id>
            <summary type="text">இலங்கையில் அரசியல்வாதிகள் மற்றும் முக்கிய நபர்களுக்கு வழங்கப்படும் விசேட பிரமுகர் பாதுகாப்பு, அரச உளவுத்துறையின் அச்சுறுத்தல் மதிப்பீட்டு அறிக்கையின் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் அரசியல்வாதிகள் மற்றும் முக்கிய நபர்களுக்கு வழங்கப்படும் விசேட பிரமுகர் பாதுகாப்பு, அரச உளவுத்துறையின் அச்சுறுத்தல் மதிப்பீட்டு அறிக்கையின் பரிந்துரைகளுக்கு அமையவே வழங்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
அத்தோடு, அது தன்னிச்சையாக வழங்கப்படுவதில்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
</p><p>
அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இதனைத் தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p></p><h2>விசேட பாதுகாப்புகள்&nbsp;</h2><p>இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “அசோக ரன்வல, மொஹமட் ரிஸ்வி சாலி, சரத் குமார, அஜித் சாந்த, ருவன் விஜேவீர, திலங்க யோகமகே, சுனில் பியன்வல, தினேஷ் ஹேமமந்த, ரஞ்சித் மத்தும பண்டார, எச்.எம். தர்மசேன மற்றும் கலகொட அத்தே ஞானசார தேரர் ஆகிய 11 நபர்களுக்கும் எந்தவித விசேட பிரமுகர் பாதுகாப்பும் வழங்கப்படவில்லை என்பதை விசேட பாதுகாப்புப் பிரிவு, காவல்துறை மா அதிபருக்குத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ba5fef11-7f72-4fec-b815-024a1a2fa3d1/26-6a56d9c2981bf.webp' /></p><p>

அமைச்சரவை அமைச்சர்களாகிய எமக்கே கூட இத்தகைய விசேட பாதுகாப்புகள் வழங்கப்படவில்லை என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
</p><p>
தற்போது நடைமுறையில் உள்ள 2020 ஆம் ஆண்டின் 2398/26 இலக்க காவல்துறைச் சுற்றறிக்கைக்கு அமையவே பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.</p><p>
</p><p></p><h2>பாதுகாப்புத் தேவை&nbsp;</h2><p>பாதுகாப்புத் தேவை எனக் கோரி விண்ணப்பிக்கும் நபர்களுக்கு அரச உளவுச் சேவையினூடாக ஒரு விசேட அச்சுறுத்தல் மதிப்பீட்டு அறிக்கை கோரப்படும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2a011c07-91b6-4590-bca4-1518418c8617/26-6a56d9c3455b9.webp' /></p><p>

அதனடிப்படையில் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சின் செயலாளரின் தலைமையிலான விசேட குழுவின் பரிந்துரையின் பேரிலேயே பாதுகாப்பு அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள்.
</p><p>
மேலும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் முன்னாள் மக்கள் பிரதிநிதிகளுக்கு, தற்போது அவர்கள் நாடாளுமன்றத்தில் இல்லாவிட்டாலும் உளவுத்துறையின் அச்சுறுத்தல் விவரங்களின் அடிப்படையிலேயே பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p>]]></content>
            <updated>2026-07-15T00:52:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[கைதியின் கோரிக்கையால் ஏற்பட்ட விபரீதம்! மொரட்டுவ பல்கலைக்கழகத்திற்கு அனுப்பப்படும் சிசிடிவி காட்சிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/negombo-riot-cid-investigation-update-1784074376"></link>
            <id>https://tamilwin.com/article/negombo-riot-cid-investigation-update-1784074376</id>
            <summary type="text">நீர்கொழும்பு சிறைச்சாலைக்குள் நடந்த கொடூர வன்முறைக்கு கட்டுவெல்லகம சுரேஷ் என்ற கைதியின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டமையே காரணமாக இருக்கலாம் என தெரிவிக்கப...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீர்கொழும்பு சிறைச்சாலைக்குள் நடந்த கொடூர வன்முறைக்கு கட்டுவெல்லகம சுரேஷ் என்ற கைதியின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டமையே காரணமாக இருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.&nbsp;</p><p>நீதிமன்றத்தில் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் (CID) சமர்ப்பித்த தகவல்களின்படி, ஜூலை 5ஆம் திகதி நீர்கொழும்பு சிறைச்சாலையின் A1 வார்டில் இருந்த கட்டுவெல்லகம சுரேஷ் என்ற கைதி, உடற்பயிற்சிக்காக வழங்கப்படும் 30 நிமிடங்களை விட மேலதிக நேரம் கோரியுள்ளார்.</p><p> </p><p>இதற்கு அனுமதி மறுக்கப்பட்டதால் அவர் சிறைச்சாலை அதிகாரியை திட்டி அச்சுறுத்தியுள்ளார். மறுநாள் காலை, அவர் A2 வார்டு கைதிகள் மீது தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p></p><h2>&nbsp;உடற்பயிற்சி நேரம்..&nbsp;</h2><p>இதுவே வன்முறை பரவக் காரணமாக அமைந்ததாகவும், நீதிமன்றத்தில் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் தகவல்களை வழங்கியுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/50bec7af-9127-4a2e-8ac4-dc2d158aad57/26-6a56d7d89f970.webp' /></p><p>மேலும், இதன் பின்னணியில், கைதிகள் சிறைச்சாலையின் மருந்தகம் மற்றும் நிர்வாகக் கட்டிடத்தை சேதப்படுத்தியுள்ளனர். சிறைச்சாலை அதிகாரிகள் நிலைமையைக் கட்டுப்படுத்த முடியாததால் பொலிஸாரின் உதவியை நாடியுள்ளனர்.</p><p> கொழும்பில் இருந்து சிறைச்சாலை அவசரக்கால அதிரடிப் படையினர் வரவழைக்கப்பட்ட நிலையில், கைதிகள் கூரைகளின் மீது ஏறி வன்முறையில் ஈடுபட்டுள்ளனர்.
</p><p>
மறுநாள் காலை உணவை வழங்கச் சென்ற அதிகாரிகள் மீது கைதிகள் கற்கள், மரத்தடிகள் மற்றும் இரும்புக்கம்பிகளால் தாக்கியுள்ளனர். நீர்கொழும்பு சிறைச்சாலை அதிகாரிகள் தப்பிச் சென்ற நிலையில், கொழும்பில் இருந்து சென்ற அதிகாரிகள் உள்ளே சிக்கிக்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.&nbsp;</p><p></p><h2>&nbsp;CCTV பதிவுகள்</h2><p>கைதிகள் சிறைச்சாலையின் ஆயுதக் களஞ்சியத்தின் ஒரு பகுதியைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து, அதிகாரிகளை நோக்கி துப்பாக்கியையும் நீட்டியுள்ளனர். இதனை தொடர்ந்து விசேட அதிரடிப்படையினர் (STF) கண்ணீர்ப்புகைத் தாக்குதல் நடத்தியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4f51b65b-efd6-4e1e-8020-943c20c78cd8/26-6a56d85c0d432.webp' /></p><p> </p><p>அது பலனளிக்காததால் வான்நோக்கி எச்சரிக்கை துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். பின்னர், சிறைச்சாலையின் நுழைவாயில் பகுதி ஊடாக துப்பாக்கிச் சூடு நடத்தி, உள்ளே சிக்கியிருந்த அதிகாரிகளை மீட்டுள்ளனர். </p><p>சிறைச்சாலைக்குள் இருந்து ஒரு F-58 ரக துப்பாக்கி, ஒரு மெகசின் மற்றும் 271 பயன்படுத்தப்பட்ட தோட்டாக்கள் மீட்கப்பட்டன. அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டிருந்த 60 துப்பாக்கிகள் தடயவியல் சோதனைக்காகப் பெறப்பட்டுள்ளன என நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இதற்கிடையில், சிறைச்சாலையின் CCTV பதிவுகள் மொரட்டுவை பல்கலைக்கழக கணினி தடயவியல் ஆய்வகத்திற்கு அனுப்பப்படவுள்ளதாகவும் 40 சிஐடி அதிகாரிகள் அடங்கிய 3 குழுக்கள் விசாரணைகளை நடத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/593fa4d8-08e7-4723-b072-d36c5999ef9b/26-6a56d85cc383d.webp' /></p><p>இதுவரை 136 சிறைச்சாலை அதிகாரிகள், 141 கைதிகள் மற்றும் 9 STF அதிகாரிகளிடம் வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளன. கொலைக்குற்றம், துப்பாக்கிகள் கட்டளைச் சட்டம் மற்றும் பொதுச் சொத்துச் சட்டம் ஆகியவற்றின் கீழ் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றன.&nbsp;</p><p>இந்நிலையில், நீர்கொழும்பு சிறைச்சாலையில் இருந்த அனைத்து கைதிகள் பற்றிய அறிக்கையை சமர்ப்பிக்குமாறு சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்திற்கு நீர்கொழும்பு நீதவான் ஷாலனி பெரேரா உத்தரவிட்டுள்ளார்.&nbsp;</p><p>அத்துடன், மற்ற சிறைகளுக்கு மாற்றப்பட்ட கைதிகளிடமும் வாக்குமூலங்களைப் பெறுமாறு சிஐடிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-15T00:44:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹார்முஸை அடுத்து... செங்கடல் வழித்தடத்தை முடக்க திட்டமிடும் ஈரான்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/iran-eyes-choking-off-red-sea-1784075252"></link>
            <id>https://news.lankasri.com/article/iran-eyes-choking-off-red-sea-1784075252</id>
            <summary type="text">ஹார்முஸ் நீரிணை வழியாக கப்பல் போக்குவரத்தை முடக்கியுள்ள ஈரான், தற்போது தனது மிகவும் ஆபத்தான துருப்புச்சீட்டைப் பயன்படுத்தக்கூடும் என்று தகவல் கசிந்துள...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹார்முஸ் நீரிணை வழியாக கப்பல் போக்குவரத்தை முடக்கியுள்ள ஈரான், தற்போது தனது மிகவும் ஆபத்தான துருப்புச்சீட்டைப் பயன்படுத்தக்கூடும் என்று தகவல் கசிந்துள்ளது.</p><h2>அமெரிக்கா மீது அழுத்தம்</h2><p>
</p><p>செங்கடலுக்கான பாப் அல்-மண்டேப் நுழைவாயிலை மூடுவதற்கு யேமனின் ஹவுதி படைகளைப் பயன்படுத்துவதுடன், அமெரிக்காவுக்கு எதிராக ஒரு புதிய முனையைத் திறந்து, உலகின் மிக முக்கியமான இரண்டு எரிசக்திப் பாதைகளை ஆபத்துக்குள்ளாக்குதல் என்பதே ஈரானின் திட்டம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ae45e279-8d14-483f-adff-d880a8ad9363/26-6a56d50c84b43.webp' /></p><p> </p><p>ட்ரம்பின் மிரட்டலுக்கு இதுவரைப் பணியாத ஈரானுக்குள் அமெரிக்கத் தாக்குதல்கள் தீவிரமடைந்து வருவதாலும், அதனுடன் ஹவுதிகளின் தாக்குதல்களும் அதிகரித்து வருவதாலும், </p><p>ஈரான் இந்த மோதலை விரிவுபடுத்தி, வளைகுடாப் பகுதிக்கு அப்பால் உலகளாவிய வர்த்தகம் மற்றும் எரிசக்தி விநியோகத்திற்கான அச்சுறுத்தலை நீட்டிப்பதன் மூலம் அமெரிக்கா மீது அழுத்தத்தை அதிகரிக்க முயல்கிறது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். </p><p>ஹார்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் போக்குவரத்தைத் தடை செய்வதன் மூலம், ஈரான் தனது திட்டத்தின் வலிமையை ஏற்கனவே வெளிப்படுத்தியுள்ளது.</p><p>
தற்போது, ​​செங்கடலையும் ஏடன் வளைகுடாவையும் இணைக்கும் பாப் அல்-மண்டேபில் இரண்டாவது அழுத்தப் புள்ளியைத் திறக்க ஈரான் தயாராக இருப்பதாகத் தெரிகிறது; இந்த நீர்வழி வழியாகவே சவூதி எண்ணெய் ஏற்றுமதியும், உலகளாவிய கப்பல் போக்குவரத்தின் கணிசமான பங்கும் கடந்து செல்கின்றன.</p><p></p><p> </p><p>இதனிடையே, சவுதி அரேபியா ஏமன் மீதான தாக்குதலைத் தொடர்ந்தால் பாப் அல்-மண்டேப் நீரிணையை மூடுவதற்கு நாட்டின் ஆயுதப் படைகள் தயாராக இருப்பதாக ஏமன் நாட்டு மூத்த அதிகாரி ஒருவர் திங்களன்று எச்சரித்தார். </p><p>மேலும், ஏமன் மீது தாக்குதல் நடத்துமாறு சவுதி அரேபியாவை வாஷிங்டன் தூண்டிவிட்டுக்கொண்டிருந்தது; இத்தகைய தூண்டுதல் நடவடிக்கை ஒருபோதும் அமெரிக்காவின் நலனுக்கு உகந்ததாக இருக்காது என ஹவுதி எதிர்ப்பு இயக்கம் ஒன்று பதிலளித்துள்ளது.</p><h2>ஹவுதிகள் நிரூபித்துள்ளனர்</h2><p>
</p><p>வளைகுடாவிலிருந்து செங்கடல் வரை மோதல் பரவும் இக்கட்டான சூழல் உருவாகி வருவதால், வர்த்தகம் மற்றும் எரிசக்தி விநியோகத்திற்கு அதிகரித்து வரும் அச்சுறுத்தலானது, உலகின் மிக முக்கியமான இரண்டு எண்ணெய் போக்குவரத்துத் தடைகள் இந்த மோதலின் தீர்க்கமான போர்க்களமாக மாறுவதற்கு முன்பாக, பேச்சுவார்த்தைகளுக்குத் திரும்புமாறு அமெரிக்கா மற்றும் ஈரான் மீதான அழுத்தத்தையும் அதிகரிக்கக்கூடும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8f37a5de-57b2-4ff7-8186-7ef5e6e398c4/26-6a56d50d70a63.webp' /></p><p> </p><p>பாப் அல்-மண்டேப் வழியாக உலகளாவிய வர்த்தகத்தை முடக்க முடியும் என்பதை ஹவுதிகள் ஏற்கனவே நிரூபித்துள்ளனர். 2023 அக்டோபரில் காஸா போர் வெடித்த பிறகு, ஹவுதிகள், பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக இஸ்ரேலுடன் தொடர்புடைய கப்பல்களைக் குறிவைப்பதாகக் கூறி, செங்கடலில் வர்த்தகக் கப்பல்கள் மீது தாக்குதல்களைத் தொடுத்தது.
</p><p>இந்த நடவடிக்கை, முக்கிய கப்பல் நிறுவனங்களைத் தெற்கு ஆப்பிரிக்காவைச் சுற்றி தங்கள் கப்பல்களின் பாதைகளை மாற்றிவிடக் கட்டாயப்படுத்தியது, இதனால் போக்குவரத்துச் செலவுகள் அதிகரித்தன; மேலும் இது, கப்பல் போக்குவரத்தைப் பாதுகாப்பதற்காக அமெரிக்க மற்றும் பிரித்தானிய வான்வழித் தாக்குதல்களையும், ஒரு பன்னாட்டுக் கடற்படை நடவடிக்கையையும் தூண்டியது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-15T00:26:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[செம்மணி மனிதப் புதைகுழி: இன்று மீண்டும் ஆரம்பமாகும் அகழ்வுப் பணிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/jaffna-chemmani-mass-grave-excavation-resumes-1784074781"></link>
            <id>https://ibctamil.com/article/jaffna-chemmani-mass-grave-excavation-resumes-1784074781</id>
            <summary type="text">யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியில் முன்னெடுக்கப்பட்டு வரும் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் மூன்றாம் பகுதி இன்று புதன்கிழமை காலை மீண்டும் ஆரம்பம...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியில் முன்னெடுக்கப்பட்டு வரும் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் மூன்றாம் பகுதி இன்று புதன்கிழமை காலை மீண்டும் ஆரம்பமாகவுள்ளது.
</p><p>
யாழ். நீதிவான் நீதிமன்றத்தின் அனுமதியுடன் முன்னெடுக்கப்படும் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளுக்காக மொத்தம் 56 நாள்கள் ஒதுக்கப்பட்டிருந்தன.</p><p>

கடந்த 32 நாள்கள் அகழ்வுப் பணிகள் நிறைவடைந்த நிலையில், கடந்த ஜூன் 23ஆம் திகதியுடன் பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்தன.</p><p></p><h2>அகழ்வுப் பணி</h2><p>

இந்நிலையில், இன்று&nbsp;(15-07-2026) பணிகள் மீண்டும் தொடரவுள்ளன.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fd0ead51-7e6f-423f-b3fe-5fac456b7c84/26-6a56d21e9188f.webp' /></p><p>முதலாம் கட்ட அகழ்வுப் பணிகளானது கடந்த ஆண்டு மே 15ஆம் திகதி ஆரம்பமாகி, 9 நாள்கள் நடைபெற்ற அகழ்வுகளில் 19 மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டன.</p><p>

இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகளானது கடந்த ஆண்டு ஜூன் 26 முதல் செப்டம்பர் 3ஆம் திகதி வரை 45 நாள்கள் நடைபெற்ற அகழ்வுகளில், முதலாம் கட்டத்தில் கண்டெடுக்கப்பட்டவை உட்பட மொத்தம் 240 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டன.</p><p>
</p><p></p><h2>எலும்புக்கூடுகள் அடையாளம்&nbsp;</h2><p>மூன்றாம் கட்ட (முதலாம் மற்றும் இரண்டாம் பகுதி) அகழ்வுப் பணிகளானது கடந்த ஏப்ரல் 27 முதல் மே 9 வரை 12 நாள்களும், ஜூன் 1 முதல் ஜூன் 23 வரை 22 நாள்களும் பணிகள் இடம்பெற்றன.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fb25c867-a154-4609-8db2-2461308513ee/26-6a56d21f40cbe.webp' /></p><p>இதில் மே மாதம் மட்டும் 21 எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டன.
</p><p>
இதன்படி, இதுவரை மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப் பணிகளில் மொத்தம் 412 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அதில் 409 எலும்புக்கூடுகள் இதுவரை அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p>]]></content>
            <updated>2026-07-15T00:20:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[வீடொன்றிற்குள் புதையல் வேட்டை...! மூவர் கைது - தொடரும் விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/three-arrested-for-treasure-hunting-1784073976"></link>
            <id>https://ibctamil.com/article/three-arrested-for-treasure-hunting-1784073976</id>
            <summary type="text">வீடொன்றிற்குள் புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வீட்டின் உரிமையாளர், மற்றொரு பெண் மற்றும் ஒரு ஆண் ஆகியோரே இவ்வாறு கைத...</summary>
            <content type="html"><![CDATA[<p>வீடொன்றிற்குள் புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p>
வீட்டின் உரிமையாளர், மற்றொரு பெண் மற்றும் ஒரு ஆண் ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p>
குறித்த கைது நடவடிக்கை நேற்று (14-07-2026) முன்னெடுக்கப்பட்டுள்ளதாகத் தம்புத்தேகம காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p>
</p><p></p><h2>புலனாய்வு விசாரணை</h2><p>சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், தம்புத்தேகம, பிலிபேவ பகுதியில் உள்ள வயல்வெளியின் மத்தியில் அமைந்துள்ள காணி ஒன்றில் உள்ள வீட்டிலேயே இந்த புதையல் தோண்டும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><p>
அந்த வீட்டின் சமையலறையினுள் 4.5 x 5.5 அடி அளவிலும் சுமார் 20 அடி ஆழத்திலும் சுரங்கம் போன்ற குழி ஒன்று தோண்டப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0da99e97-f9c8-4c24-9341-56935f42878d/26-6a56d056cd0f1.webp' /></p><p>அதிலிருந்து எடுக்கப்பட்ட மண், வீட்டின் அறை ஒன்றிற்குள் இரகசியமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
</p><p>
காவல்துறையின் புலனாய்வு விசாரணைகளின்படி, கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபரான பெண்ணும் மற்றைய ஆணும் இந்த புதையல் தோண்டும் பணிக்காகப் பணம் செலவிட்டுள்ளனர்.</p><p>
</p><p></p><h2>முதற்கட்ட விசாரணை</h2><p>சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களிடமிருந்து நீர் மோட்டார், நீர் குழாய், கம்பி சுருள், மண்வெட்டி மற்றும் மண் தோண்டுவதற்கும் மண்ணை வெளியேற்றுவதற்கும் பயன்படுத்தப்படும் பல உபகரணங்கள் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.</p><p>இந்த புதையல் தோண்டும் பணிக்கான ஆலோசனைகளை வழங்கி அதனை வழிநடத்தியதாகக் கூறப்படும் முக்கிய சந்தேகநபர் கல்கமுவ, எஹெட்டுவெவ காவல் அதிகாரப் பிரிவில் வசிக்கும் ஒருவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவரையும் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p>
</p><p>
<img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c5c07fd9-4dc3-4481-9818-9f041109ed2b/26-6a56d0577dc13.webp' /></p><p>கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் முதற்கட்ட விசாரணைகளின் பின்னர் தம்புத்தேகம நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.
</p><p>
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைத் தம்புத்தேகம தீர்க்கப்படாத குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-15T00:12:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[வீட்டின் சமையலறைக்குள் இரகசியமாக அரங்கேறிய சம்பவம் ; பெண்ணுடன் கைதான ஆண்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/secret-incident-unfolds-inside-home-kitchen-1784074197"></link>
            <id>https://jvpnews.com/article/secret-incident-unfolds-inside-home-kitchen-1784074197</id>
            <summary type="text">வீடொன்றிற்குள் மிகவும் நுணுக்கமாகவும் இரகசியமாகவும் புதையல் தோண்டிக் கொண்டிருந்த மூன்று நபர்கள் நேற்று 14ஆம் திகதி மதியம் கைது செய்யப்பட்டுள்ளதாக தம்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">வீடொன்றிற்குள் மிகவும் நுணுக்கமாகவும் இரகசியமாகவும் புதையல் தோண்டிக் கொண்டிருந்த மூன்று நபர்கள் நேற்று 14ஆம் திகதி மதியம் கைது செய்யப்பட்டுள்ளதாக தம்புத்தேகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p style="text-align: justify; ">
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் அந்த வீட்டின் உரிமையாளர், மற்றொரு பெண் மற்றும் ஒரு ஆண் ஆகியோர் அடங்குவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/72164a5c-16e5-47f4-b7b8-197f384ec0d7/26-6a56cfd6a4edc.webp' /></p><h2 style="text-align: justify; ">புதையல் தோண்டும் நடவடிக்கை</h2><p style="text-align: justify; ">

தம்புத்தேகம, பிலிபேவ பகுதியில் உள்ள வயல்வெளியின் மத்தியில் அமைந்துள்ள காணி ஒன்றில் உள்ள வீட்டிலேயே இந்த புதையல் தோண்டும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
</p><p style="text-align: justify; ">
அந்த வீட்டின் சமையலறையினுள் 4.5 x 5.5 அடி அளவிலும், சுமார் 20 அடி ஆழத்திலும் சுரங்கம் போன்ற குழி ஒன்று தோண்டப்பட்டுள்ளது.
</p><p style="text-align: justify; ">
அதிலிருந்து எடுக்கப்பட்ட மண், வீட்டின் அறை ஒன்றிற்குள் இரகசியமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.'</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
பொலிஸாரின் புலனாய்வு விசாரணைகளின்படி, கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபரான பெண்ணும் மற்றைய ஆணும் இந்த புதையல் தோண்டும் பணிக்காக பணம் செலவிட்டுள்ளனர்.
</p><p style="text-align: justify; ">
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களிடமிருந்து நீர் மோட்டார், நீர் குழாய், கம்பி சுருள் , மண்வெட்டி மற்றும் மண் தோண்டுவதற்கும், மண்ணை வெளியேற்றுவதற்கும் பயன்படுத்தப்படும் பல உபகரணங்கள் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.</p><p style="text-align: justify; ">

இந்த புதையல் தோண்டும் பணிக்கான ஆலோசனைகளை வழங்கி, அதனை வழிநடத்தியதாகக் கூறப்படும் முக்கிய சந்தேகநபர் கல்கமுவ, எஹெட்டுவெவ காவல் அதிகாரப் பிரிவில் வசிக்கும் ஒருவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவரையும் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் முதற்கட்ட விசாரணைகளின் பின்னர் தம்புத்தேகம நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தபடவுள்ளனர்.
</p><p style="text-align: justify; ">
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தம்புத்தேகம தீர்க்கப்படாத குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-07-15T00:10:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவுக்கு போன ஐஸ்வர்யா ராஜேஷ்.. அங்கே என்ன செய்திருக்கிறார் பாருங்க]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/aishwarya-rajesh-trip-to-united-states-1784073705"></link>
            <id>https://cineulagam.com/article/aishwarya-rajesh-trip-to-united-states-1784073705</id>
            <summary type="text">நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது அமெரிக்காவுக்கு சென்று இருக்கிறார். 

விமானத்தில் சென்றது தொடங்கி அங்கே நண்பர்கள் உடன் எல்லா இடங்களையும் சுற்றி பார்த்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது அமெரிக்காவுக்கு சென்று இருக்கிறார். </p><p>

விமானத்தில் சென்றது தொடங்கி அங்கே நண்பர்கள் உடன் எல்லா இடங்களையும் சுற்றி பார்த்தது வரை அனைத்து புகைப்படங்களையும் ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்டுள்ளார்.
</p><p>
புகைப்படங்களை பாருங்க.</p>]]></content>
            <updated>2026-07-15T00:02:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் வெற்றிலை உண்போருக்கு வெளியான முக்கிய தகவல் ; இனி இவற்றுக்கு தடை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/important-update-for-betel-chewers-in-sri-lanka-1784073068"></link>
            <id>https://jvpnews.com/article/important-update-for-betel-chewers-in-sri-lanka-1784073068</id>
            <summary type="text">இலங்கையில் அதிகரித்து வரும் வாய் புற்றுநோய் பாதிப்புகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில், புகையிலை கலந்த வெற்றிலையை விற்பனை செய்வதைத் தடைசெய்ய நடவடிக்கை எட...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify;">இலங்கையில் அதிகரித்து வரும் வாய் புற்றுநோய் பாதிப்புகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில், புகையிலை கலந்த வெற்றிலையை விற்பனை செய்வதைத் தடைசெய்ய நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
</p><p style="text-align: justify; ">
இலங்கையில் பதிவாகும் புற்றுநோய் வகைகளில் வாய் புற்றுநோய் முன்னணியில் உள்ள நிலையில், இதனைத் தடுக்கும் முயற்சியாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் பொருளாளர் எம்.ஏ.சி.பிரசாத் தெரிவித்துள்ளார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1846b640-c687-41c9-8d9e-788d9bb968a7/26-6a56cb6e2b0c6.webp' /></p><h2 style="text-align: justify; ">வாய் புற்றுநோய்&nbsp;</h2><p style="text-align: justify; ">
புகையிலை கலந்த வெற்றிலையைப் பயன்படுத்துவது வாய் புற்றுநோய் ஏற்படுவதற்கான முக்கிய காரணமாக அடையாளம் காணப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; ">

இலங்கையின் தற்போதைய சட்டங்களின்படி, புகையிலை கலந்த வெற்றிலையை விற்பனை செய்தல், விநியோகித்தல், தம்வசம் வைத்திருத்தல் அல்லது விற்பனைக்காகக் காட்சிப்படுத்துதல் ஆகியவை தண்டனைக்குரிய குற்றமாகும்.</p><p style="text-align: justify; "></p><p>
</p><p style="text-align: justify;">
இந்தச் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கும், பொதுமக்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதற்கும் நாடளாவிய ரீதியில் உள்ள பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபடவுள்ளனர்.
</p><p style="text-align: justify;">
எனவே, பொதுமக்களும் வர்த்தகர்களும் இந்த விடயம் தொடர்பில் விழிப்புணர்வுடன் செயற்படுமாறும், சட்ட விரோதமான முறையில் புகையிலையை வெற்றிலையுடன் கலந்து விற்பனை செய்வதைத் தவிர்க்குமாறும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-14T23:51:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[நடிகை ராய் லட்சுமி லேட்டஸ்ட் ஹாட் ஸ்டில்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/raai-laxmi-sizzling-glamour-stills-1784072742"></link>
            <id>https://cineulagam.com/article/raai-laxmi-sizzling-glamour-stills-1784072742</id>
            <summary type="text">பல படங்களில் கவர்ச்சியாக நடித்து தமிழ் சினிமாவில் பிரபலமாக இருப்பவர் நடிகை ராய் லட்சுமி.

அவர் தற்போது இன்ஸ்டாக்ராமில் மட்டும் 8.3 லட்சம் ரசிகர்களை ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பல படங்களில் கவர்ச்சியாக நடித்து தமிழ் சினிமாவில் பிரபலமாக இருப்பவர் நடிகை ராய் லட்சுமி.

அவர் தற்போது இன்ஸ்டாக்ராமில் மட்டும் 8.3 லட்சம் ரசிகர்களை வைத்து இருக்கிறார்.
</p><p>
தற்போது செம ஹாட் உடையில் கவர்ச்சியாக அவர் போஸ் கொடுத்து இருக்கும் ஸ்டில்கள் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இதோ பாருங்க.</p>]]></content>
            <updated>2026-07-14T23:45:52+00:00</updated>
        </entry>
    </feed>
