<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-07-12T11:59:11+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[புனர்வாழ்வு அளிக்கப்பட்டவர்களுக்கு தவறான நண்பர்களின் சகவாசத்தால் காத்திருக்கும் சிக்கல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/bad-company-puts-rehabilitated-people-at-risk-1783857474"></link>
            <id>https://jvpnews.com/article/bad-company-puts-rehabilitated-people-at-risk-1783857474</id>
            <summary type="text">புனர்வாழ்வு அளிக்கப்பட்டு சமூகத்துடன் மீண்டும் இணைக்கப்பட்டவர்களில் 47 சதவீதத்தினர், தவறான நண்பர்களின் சகவாசம் மற்றும் காதல் தோல்வி உள்ளிட்ட பல்வேறு க...</summary>
            <content type="html"><![CDATA[<p>புனர்வாழ்வு அளிக்கப்பட்டு சமூகத்துடன் மீண்டும் இணைக்கப்பட்டவர்களில் 47 சதவீதத்தினர், தவறான நண்பர்களின் சகவாசம் மற்றும் காதல் தோல்வி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மீண்டும் போதைப்பொருள் பழக்கத்திற்கு ஆளாகியுள்ளனர் என்று போதைப்பொருள் மறுவாழ்வு பணியகத்தின் தலைமை பணிப்பாளர் நாயகம் பிரிகேடியர் எம்.எஸ்.அமித் தெரிவித்துள்ளார்.
</p><p>
கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை (12) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/23c43fa8-d97e-4e81-a271-d6df905e2456/26-6a53814395667.webp' /></p><h2>&nbsp;புனர்வாழ்வு</h2><p> </p><p>&nbsp;போதைப்பொருள் மறுவாழ்வுப் பணியகம் மற்றும் அபாயகரமான மருந்துப் பொருட்கள் கட்டுப்பாட்டு வாரியம் இணைந்து நடத்திய அண்மை ஆய்வின்படி, புனர்வாழ்வு பெற்றுச் சென்றவர்கள் மீண்டும் போதைப்பொருள் பயன்படுத்தியதற்கான காரணங்களை பகுப்பாய்வு செய்தபோது பல முக்கிய விடயங்கள் கண்டறியப்பட்டுள்ளன. </p><p>அதன்படி, 47 சதவீத புனர்வாழ்வு முடித்தவர்கள் தங்களின் பழைய நண்பர்களுடன் மீண்டும் தொடர்பு கொண்டதாலேயே மீண்டும் போதைப்பழக்கத்துக்கு அடிமையாக பிரதான காரணமாக உள்ளது.
</p><p>
மேலும், அவர்கள் வாழும் சமூகச் சூழலின் தாக்கம், காரணமாக 24.5 சதவீதமானோர், குடும்பத்தினரின் முறையான அரவணைப்பும் கவனமும் கிடைக்காததால் 23 சதவீத பேரும், தாங்கள் வேலை செய்யும் இடங்களில் உள்ள சூழல் காரணமாக 22 சதவீத பேரும், காதல் தொடர்பான பிரச்சினைகள் மற்றும் இதர காரணங்களால் 4 சதவீதமானவர்கள் மீண்டும் போதைப்பாதையைத் தேர்ந்தெடுத்துக்கின்றனர்.
</p><p>

இந்த ஆய்வின் மற்றொரு முக்கிய கண்டுபிடிப்பாக, பெரும்பாலானவர்கள் தங்களின் 11 முதல் 13 வயதுக்கு இடைப்பட்ட பள்ளிப் பருவத்திலேயே முதன்முதலில் புகையிலை, சிகரெட் மற்றும் பீடி போன்றவற்றுக்கு அடிமையாகி, பின்னரே கடுமையான போதைப்பொருட்களுக்கு மாறியுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. </p><p>&nbsp;புனர்வாழ்வு மையங்களில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களில் 76 சதவீத பேர் கல்விப் பொதுத்தராதர சாதாரண தரம் வரை அல்லது அதற்கும் குறைவாகப் படித்தவர்களாவர். மாறாக, உயர் தரம் வரை கல்வி கற்றவர்களில் போதைப்பொருள் பயன்படுத்தியவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக, அதாவது 13 சதவீத ஆக மட்டுமே உள்ளது. </p><p>இதன் காரணமாக, பிள்ளைகளை சாதாரண தரத்துடன் நிறுத்திவிடாமல், அவர்களை உயர் கல்வி நோக்கி ஊக்குவித்து வழிநடத்த வேண்டிய பெரும் பொறுப்பு பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் சமூகத்துக்கும் உண்டு.
</p><p>
இளம் தலைமுறையினரை இந்த போதையிடமிருந்து பாதுகாக்கும் நோக்கில், கடந்த ஆண்டில் மட்டும் சுமார் 20 இலட்சம் பேரைச் சென்றடையும் வகையில் 1,050 விழிப்புணர்வுத் திட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.</p><p> நடப்பு ஆண்டில் டிசம்பர் 31 ஆம் திகதிக்கு 1,278 விழிப்புணர்வு திட்டங்களை நடத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, தற்போது வரை 660 திட்டங்கள் வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டுள்ளதுடன், அதன் மூலம் சுமார் 62,000 பேர் விழிப்புணர்வு பெற்றுள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-07-12T11:58:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கத்தாரின் முன்னாள் அமீர் ஷேக் ஹமத் பின் கலீஃபா அல் தானி காலமானார்: 4 நாட்கள் அரசுமுறை துக்கம் அனுசரிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/former-qatar-sheikh-hamad-bin-khalifa-al-thani-1783856469"></link>
            <id>https://tamilwin.com/article/former-qatar-sheikh-hamad-bin-khalifa-al-thani-1783856469</id>
            <summary type="text">நவீன கத்தாரின் சிற்பியாகக் கருதப்படும் அந்நாட்டின் முன்னாள் அமீரும், &#039;தந்தை
அமீர்&#039; என்று போற்றப்படுபவருமான ஷேக் ஹமத் பின் கலீஃபா அல் தானி&amp;nbsp; 74&amp;nb...</summary>
            <content type="html"><![CDATA[<p>நவீன கத்தாரின் சிற்பியாகக் கருதப்படும் அந்நாட்டின் முன்னாள் அமீரும், 'தந்தை
அமீர்' என்று போற்றப்படுபவருமான ஷேக் ஹமத் பின் கலீஃபா அல் தானி&nbsp; 74&nbsp;வயதில் இன்று(12) ஞாயிற்றுக்கிழமை காலமானார்.
</p><p>
இத்தகவலை கத்தாரின் அரச நீதிமன்றமான அமிரி திவான் அதிகாரப்பூர்வமாக
அறிவித்துள்ளது.</p><p></p><h2>&nbsp;அரசுமுறை துக்கம்&nbsp;</h2><p>

அவரது மறைவையொட்டி கத்தாரில் திங்கட்கிழமை முதல் நான்கு நாட்களுக்கு அரசுமுறை
துக்கம் அனுசரிக்கப்படும் என்றும், அரசு நிறுவனங்கள் மற்றும் பொதுத்துறை
அமைப்புகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு, தேசியக் கொடிகள் அரைக்கம்பத்தில்
பறக்கவிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
1995 முதல் 2013 வரை கத்தாரை ஆட்சி செய்த ஷேக் ஹமத், எரிபொருள் வளம் மிக்க
அந்த வளைகுடா நாட்டை உலக அரங்கில் ஒரு முக்கிய சக்தியாக மாற்றிய
பெருமைக்குரியவர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cf910b57-d055-47ab-86e3-08c3dc4496be/26-6a5380ca5a978.webp' /></p><p>

இவரது ஆட்சிக் காலத்தில் கத்தார் பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும்
அசுர வளர்ச்சி கண்டது.</p><p>

உலகின் மிகப்பெரிய திரவ இயற்கை எரிவாயு (LNG) ஏற்றுமதி நாடாக கத்தாரை
உயர்த்தியதில் இவரது தொலைநோக்கு பார்வை முக்கியப் பங்கு வகித்தது.</p><p></p><h2>முன்னாள் அமீர்</h2><p>
</p><p>
மேலும், 1996-ல் சர்வதேச அளவில் புகழ்பெற்ற 'அல் ஜசீரா' செய்தி ஊடகத்தைத்
தொடங்கியதும் இவரது காலத்தில்தான்.

2004இல் கத்தாரின் முதல் நிரந்தர அரசியலமைப்பை இயற்றியதுடன், உள்ளாட்சித்
தேர்தல்களில் பெண்கள் வாக்களிக்கவும், போட்டியிடவும் இவர் உரிமை வழங்கினார்.
</p><p>
கடந்த 2012-ல் கத்தாரில் நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க ஆண்கள் ஃபிஃபா
உலகக் கிண்ணம் 2012 கால்பந்து தொடரை வெற்றிகரமாக நடத்திய பெருமையும் இவரையே
சாரும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6788bb3f-c2cf-4c5e-8e16-090ee415656b/26-6a5380cb09c00.webp' /></p><p>
</p><p>
2013-ஆம் ஆண்டு வளைகுடா நாடுகளின் பாரம்பரிய வழக்கங்களுக்கு மாறாக, தனது
அதிகாரத்தை தனது மகனான தற்போதைய அமீர் ஷேக் தமீம் பின் ஹமத் அல் தானியிடம்
இவர் தானாக முன்வந்து ஒப்படைத்தார்.
</p><p>
ஷேக் ஹமத்தின் மறைவுக்கு எகிப்து ஜனாதிபதி அப்தெல் ஃபத்தா அல்-சிசி,
பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி மற்றும் ஐக்கிய அரபு அமீரக அதிபர் முகமது
பின் சயீத் அல் நஹ்யான் உள்ளிட்ட பல்வேறு உலகத் தலைவர்கள் தங்களது ஆழ்ந்த
இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-12T11:56:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தியாவின் அமைதியான கிராமம்.., எந்த மாவட்டத்தில் உள்ளது தெரியுமா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/which-village-is-the-silent-village-of-india-1783856763"></link>
            <id>https://news.lankasri.com/article/which-village-is-the-silent-village-of-india-1783856763</id>
            <summary type="text">பொதுவாக, இந்தியாவில் மட்டுமே கிட்டத்தட்ட 6.50 லட்சத்திற்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.

இந்தியாவின் கிராமங்கள் பெரும்பாலும் அவற்றின் இயற்கை அழகு, த...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொதுவாக, இந்தியாவில் மட்டுமே கிட்டத்தட்ட 6.50 லட்சத்திற்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.
</p><p>
இந்தியாவின் கிராமங்கள் பெரும்பாலும் அவற்றின் இயற்கை அழகு, திருவிழாக்கள், மக்களின் உரையாடல்களுக்காக போற்றப்படுகின்றன.
</p><p>
அந்தவகையில், இந்தியாவின் மௌன கிராமம் என்று அழைக்கப்படும் கிராமம் குறித்து பார்க்கலாம்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ed4e94c3-6967-45b9-9e83-780eba47b3b9/26-6a537e8417cc2.webp' /></p><p>அதன்படி, ஜம்மு-காஷ்மீரின் டோடா மாவட்டத்தில் உள்ள தட்காய் கிராமம், இந்தியாவின் அமைதியான கிராமம் என்று அழைக்கப்படுகிறது.&nbsp;&nbsp;</p><p>இந்த கிராமத்தில் வசிக்கும் பெரும்பாலானோர் காது கேளாதவர்கள் அல்லது பேசும் திறன் குறைபாடு கொண்டவர்கள் என்பதால் அங்கு எப்போதும் அமைதியான சூழல் நிலவுகிறது.
</p><p> 
பாதர்வாஹ் பகுதியில் இருந்து சுமார் 105 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள இந்த கிராமம், மலைகள் மற்றும் பசுமையான இயற்கை காட்சிகளால் சூழப்பட்டுள்ளது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5efa695d-1156-46db-b5cf-c6ca39e14f49/26-6a537e84b9e42.webp' /></p><p>இந்த தட்காய் கிராமத்தில் சுமார் 105 குடும்பங்கள் வசித்து வருகின்றன.&nbsp;&nbsp;</p><p>அவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் பிறப்பிலிருந்தே செவித்திறன் அல்லது பேச்சுத் திறன் குறைபாடுடன் வாழ்ந்து வருகின்றனர்.
</p><p>
இதனால், கிராம மக்கள் ஒருவருடன் ஒருவர் சைகை மொழி மூலம் மட்டுமே தொடர்பு கொள்கின்றனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a7379902-d32b-4464-8bed-226f435066df/26-6a537f52e0c23.webp' /></p><p>குழந்தைகள் விளையாடும் சத்தம் அல்லது சாதாரண உரையாடல்களின் ஒலி கூட இங்கு கேட்பது மிகவும் அரிது.</p><p>

1901ஆம் ஆண்டிலேயே இந்த நிலை குறித்த பதிவுகள் இருப்பதாக கூறப்படுகிறது.&nbsp;&nbsp;</p><p>பல தலைமுறைகளாக இந்த குறைபாடு தொடர்வதற்கு மரபணு மாற்றமே முக்கிய காரணமாக இருக்கலாம் என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/13a66737-340f-4a58-8950-f7499c12d5af/26-6a537f5230920.webp' /></p><p>இருப்பினும், சிலர் இதை உள்ளூர் நம்பிக்கைகள் மற்றும் சாபங்களுடன் தொடர்புபடுத்தியும் நம்புகின்றனர்.
</p><p>
இந்த சூழலை கருத்தில் கொண்டு, இந்திய ராணுவத்தின் ராஷ்ட்ரிய ரைஃபிள்ஸ் பிரிவு இந்த கிராமத்தைத் தத்தெடுத்து பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. </p><p>

குழந்தைகளுக்கான சிறப்புக் கல்வி, சைகை மொழி பயிற்சி, மருத்துவ உதவி மற்றும் அத்தியாவசிய வசதிகள் வழங்கப்பட்டு வருகின்றன.</p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp; உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-12T11:50:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீதி அமைச்சருக்கு எதிரான பிரேரணை சபையில் நிச்சயம் தோற்கடிக்கப்படும்! ஆளுங்கட்சி எம்.பி.நம்பிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/motion-against-justice-minister-certainly-defeated-1783855241"></link>
            <id>https://tamilwin.com/article/motion-against-justice-minister-certainly-defeated-1783855241</id>
            <summary type="text">நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளால்
கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை, நாடாளுமன்றத்தில் நிச்சயம்
தோற்கடிக்கப்படும...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளால்
கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை, நாடாளுமன்றத்தில் நிச்சயம்
தோற்கடிக்கப்படும் என்று ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தேவானந்த சுரவீர
தெரிவித்தார்.</p><p>

இது குறித்து ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,</p><p>

"நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தை அடிப்படையாகக்
கொண்டு, நீதி அமைச்சருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லாப்
பிரேரணையை முன்னெடுக்கின்றன. இது முற்றிலும் அர்த்தமற்ற ஒரு நடவடிக்கையாகும்.</p><p></p><h2>நீதி அமைச்சருக்கு எதிரான பிரேரணை</h2><p>
</p><p>இதற்கு முன்னரும் எதிர்க்கட்சிகள் இவ்வாறான பிரேரணைகளைக் கொண்டு வந்தபோதும்,
விவாதங்களின் போது அவர்களால் தர்க்க ரீதியான கருத்துகளை முன்வைக்க
முடியவில்லை. அந்த வரிசையில், இந்தப் பிரேரணையும் தோல்வியிலேயே முடியும்" என குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/885103c4-ddc5-41fb-bfc5-d04b75e141cd/26-6a537a429d6e4.webp' /></p><p>

நீர்கொழும்பு சிறைக் கலவரத்தின் பின்னணி மற்றும் அது தொடர்பான காரணங்கள்
குறித்து தற்போது தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றும்,
சட்டத்தின் பிரகாரம் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் மேலும்
சுட்டிக்காட்டினார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-12T11:31:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[டித்வா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கான இழப்பீடு : வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/compensation-paid-to-all-farmers-affected-ditwah-1783854030"></link>
            <id>https://ibctamil.com/article/compensation-paid-to-all-farmers-affected-ditwah-1783854030</id>
            <summary type="text">2025 ஆம் ஆண்டு இலங்கையில் ஏற்பட்ட டித்வா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கான இழப்பீடு தொடர்பில் அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது.அதன்படி, பாதிக்கப்பட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>2025 ஆம் ஆண்டு இலங்கையில் ஏற்பட்ட டித்வா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கான இழப்பீடு தொடர்பில் அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது.</p><p>அதன்படி, பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் இழப்பீடு முழுமையாக வழங்கப்பட்டுள்ளதாக விவசாய அபிவிருத்தி திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p>அந்தவகையில், 59,245 ஹெக்டேர் பரப்பளவை உள்ளடக்கிய 112,442 விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கப்பட்டதாக விவசாய அபிவிருத்தி ஆணையாளர் நாயகம் தம்மிக ரணதுங்க தெரிவித்தார்.</p><p></p><h2>சிறு போகத்திற்கான உர மானியம்</h2><p>

இழப்பீடு வழங்குவதற்காக மொத்தம் 8.886 பில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/78af2bd2-a35b-400f-a778-22078bbb1806/26-6a53777f7c1b9.webp' /></p><p>
இதற்கிடையில் சிறு போகத்திற்கான உர மானியத்தை 95 சதவீதமான விவசாயிகள் பெற்றுள்ளதாக விவசாய அபிவிருத்தி திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.</p><p>

அதன்படி, 449,750 ஹெக்டேர் பயிர்ச்செய்கை நிலத்தை உள்ளடக்கிய 667,460 விவசாயிகள் உர மானியத்தைப் பெற்றுள்ள நிலையில் உர மானியத் திட்டத்திற்கான மொத்த செலவினம்13.492 பில்லியன் ரூபாயாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-12T11:29:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[ட்ரம்பின் நெருங்கிய கூட்டாளி திடீர் மரணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/us-senator-lindsey-graham-dies-1783855558"></link>
            <id>https://ibctamil.com/article/us-senator-lindsey-graham-dies-1783855558</id>
            <summary type="text">அமெரிக்க குடியரசுக் கட்சி செனட்டர் லிண்ட்சே கிரஹாம் காலமானார்.

வெளிநாட்டு ஊடக அறிக்கைகளின்படி, அவர் இறந்தபோது அவருக்கு 71 வயது.

திடீர் உடல்நலக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்க குடியரசுக் கட்சி செனட்டர் லிண்ட்சே கிரஹாம் காலமானார்.

வெளிநாட்டு ஊடக அறிக்கைகளின்படி, அவர் இறந்தபோது அவருக்கு 71 வயது.</p><p>

திடீர் உடல்நலக்குறைவே அவரது மரணத்திற்குக் காரணம் என்று லிண்ட்சே கிரஹாமின் அலுவலகம் அறிவித்துள்ளது.
</p><p>
தென் கரோலினா மாநிலத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி, இவர் 2002-ல் செனட் சபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.</p><h2>ட்ரம்பின் நெருங்கிய கூட்டாளி</h2><p>&nbsp;வெளிநாட்டு ஊடக அறிக்கைகளின்படி, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நெருங்கிய கூட்டாளியான இவர், வோஷிங்டனில் வெளியுறவுக் கொள்கை குறித்த ஒரு சக்திவாய்ந்த குரலாக விளங்கினார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fbc46ab5-743f-43d7-8623-3bfb1fb86a4c/26-6a5379c75300e.webp' /></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-12T11:26:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[கத்தாரின் முன்னாள் அமீர் ஷேக் ஹமத் பின் கலீபா அல் தானி காலமானார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/former-qatar-emir-sheikh-hamad-passes-away-1783853025"></link>
            <id>https://canadamirror.com/article/former-qatar-emir-sheikh-hamad-passes-away-1783853025</id>
            <summary type="text">கத்தார் நாட்டை அதன் நாடோடி பின்னணியில் இருந்து உலகளவில் ஒரு சக்திவாய்ந்த பிராந்திய வல்லரசாக மாற்றியமைத்த அந்நாட்டின் முன்னாள் அமீரும், &#039;தந்தை அமீர்&#039; எ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கத்தார் நாட்டை அதன் நாடோடி பின்னணியில் இருந்து உலகளவில் ஒரு சக்திவாய்ந்த பிராந்திய வல்லரசாக மாற்றியமைத்த அந்நாட்டின் முன்னாள் அமீரும், 'தந்தை அமீர்' என்று போற்றப்படுபவருமான ஷேக் ஹமத் பின் கலீபா அல் தானி தனது 74 ஆவது வயதில் காலமானார். </p><p>

இத்தகவலை நாட்டின் மிக உயர்ந்த அரசாங்க அமைப்பான அமிரி திவான் இன்று (12) ஞாயிற்றுக்கிழமை காலை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fd0d8372-7396-47d4-bf74-a8dcff9ec178/26-6a536fe3132de.webp' /></p><p>
</p><p>
"அமிரி திவான் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை தந்தை அமீர் ஷேக் ஹமத் பின் கலீபா அல்-தானியின் மறைவை அறிவிக்கிறது.</p><p> எல்லாம் வல்ல அல்லாஹ் அவரது ஆன்மாவுக்குக் கருணை காட்டட்டும், மேலும் அவர் தனது தாயகத்திற்காகவும் தேசத்திற்காகவும் சாதித்தவற்றுக்குச் சிறந்த நற்பலன்களை வழங்கட்டும்" என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
ஷேக் ஹமத் 1995 ஆம் ஆண்டு முதல் 2013 ஆம் ஆண்டு வரை கத்தாரை ஆட்சி செய்துள்ளார்.

வளைகுடா அரபு நாடுகளின் பாரம்பரிய அரண்மனை வழக்கங்களுக்கு மாறாக, வாரிசுரிமைச் சீராக நடப்பதை உறுதி செய்வதற்காக 2013 ஜூன் மாதத்தில் அவர் தனது அதிகாரத்தைத் தனது மகனும் தற்போதைய அமீருமான ஷேக் தமீமிடம் தானாகவே முன்வந்து ஒப்படைத்துள்ளார்.
</p><p>

முன்னதாக 1995 ஆம் ஆண்டில், இரத்தம் சிந்தாத ஒரு உள்நாட்டுப் புரட்சி மூலமாகத் தனது தந்தையை ஆட்சியிலிருந்து அகற்றிவிட்டு இவர் கத்தாரின் அமீராகப் பொறுப்பேற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
</p><p>
ஷேக் ஹமத் தனது 18 ஆண்டுகால ஆட்சியில் கத்தாரின் சர்வதேச அந்தஸ்தை மிக உன்னதமான நிலைக்கு உயர்த்தினார்:&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-12T11:25:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரூ.28 கோடி சொத்தை நண்பருக்கு எழுதி வைத்த 19 வயது சிறுவன்: முடிவுக்கான பின்னணி காரணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/shanghai-teen-bequeathing-20-m-yuan-to-his-friend-1783855535"></link>
            <id>https://news.lankasri.com/article/shanghai-teen-bequeathing-20-m-yuan-to-his-friend-1783855535</id>
            <summary type="text">சீனாவில் 19 வயது மாணவர் தனது 20 மில்லியன் யுவான் சொத்தை நண்பருக்கு உயில் எழுதி வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நண்பருக்கு ரூ.28 கோடி சொத்தை ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சீனாவில் 19 வயது மாணவர் தனது 20 மில்லியன் யுவான் சொத்தை நண்பருக்கு உயில் எழுதி வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><h2> நண்பருக்கு ரூ.28 கோடி சொத்தை எழுதி வைத்த மாணவர்</h2><p>சீனாவின் ஷாங்காய் நகரை சேர்ந்த லீ என்ற 19 வயது மாணவர் தன்னுடைய ஒட்டுமொத்த சொத்தான 20 மில்லியன் யுவானை(இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.28 கோடி) தன்னுடைய நீண்ட கால நண்பருக்கு உயில் எழுதி வைத்த சம்பவம் சமூக ஊடகங்களில் மிகப் பெரிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><p> ஷாங்காயில் உள்ள உயில் பதிவு மையத்தில் மாணவர் லீ தன்னுடைய உயிலை அதிகாரப்பூர்வமாக பதிவு செய்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/810fbe08-abd8-41ca-b047-6e80b8effe9f/26-6a5379b0e0f56.webp' /></p><p> பெற்றோர் இருவரும் விவாகரத்து பெற்று மறுமணம் செய்து கொண்ட நிலையில், அவர்கள் இருவரும் அன்பளிப்பாக வழங்கிய வீடு மற்றும் பல கோடி மதிப்புள்ள சொத்துகளை மாணவர் லீ தன்னுடைய நீண்ட கால நண்பருக்கு எழுதி வைத்துள்ளார்.</p><p></p><h2> மாணவர் லீ-யின் இந்த முடிவுக்கான காரணம்</h2><p>
லீ-க்கு தீவிர சாகச விளையாட்டுகளில் அதிக ஆர்வம் இருப்பதால் ஏதேனும் விபத்தில் உயிரிழந்து விட்டால் அவரது சொத்துக்கள் தான் விரும்பும் நபருக்கு செல்ல வேண்டும் என்று விரும்பி இந்த முடிவை எடுத்துள்ளார்.</p><p> மேலும் தன்னுடைய பெற்றோர்களின் தற்போதைய துணைகளை அந்நியர்களாகவே கருதுவதாகவும், எனவே அவர்கள் இந்த சொத்தை அனுபவிப்பதை நான் விரும்பவில்லை என்றும் லீ வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.</p><p> பொதுவாக வாரிசு அடிப்படையில் குழந்தையின் சொத்துக்கள் அவரது பெற்றோர்களுக்கே திரும்பி செல்லும் நிலையில், சீனாவின் வாரிசுரிமைச் சட்டப்படி திருமணமாகாத மற்றும் குழந்தைகள் இல்லாத லீ-யின் சொத்துக்கள் அவரது உறவு அல்லாத பிற நபருக்கு உயில் எழுத அனுமதிக்கிறது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-12T11:25:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் இப்படியும் ஒரு சம்பவம் ; மிகுந்த அவதானம் மக்களே ; தீவிரமாகும் விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/shocking-incident-in-jaffna-public-alert-issued-1783837299"></link>
            <id>https://jvpnews.com/article/shocking-incident-in-jaffna-public-alert-issued-1783837299</id>
            <summary type="text">யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை பகுதியில் வியாபாரத்துக்குச் சென்ற முதியவர் ஒருவரிடம் தாக்குதல் நடத்தி பணம் பறித்துச் சென்ற சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசார...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை பகுதியில் வியாபாரத்துக்குச் சென்ற முதியவர் ஒருவரிடம் தாக்குதல் நடத்தி பணம் பறித்துச் சென்ற சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
</p><p style="text-align: justify; ">


சக்கரத்தை பகுதியில் இருந்து நவாலி நோக்கி வியாபாரத்துக்காக பயணித்துக் கொண்டிருந்த முதியவரை, மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் வழிமறித்ததாக தெரிவிக்கப்படுகிறது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4c95cf1e-9d08-4440-bb2b-5eebe7462422/26-6a533274a1e68.webp' /></p><h2 style="text-align: justify; ">மேலதிக விசாரணை</h2><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">


இடம் கேட்பது போல் நடித்து முதியவரை ஏமாற்றிய அவர்கள், பின்னர் அவரைத் தாக்கி, வியாபாரத்திற்காக வைத்திருந்த பணத்தை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.</p><p style="text-align: justify; ">



சம்பவம் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கமெராக்களில் பதிவாகியிருக்கலாம் என பாதிக்கப்பட்ட முதியவர் தெரிவித்துள்ளார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">



சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், சந்தேகநபர்களை அடையாளம் காணும் நோக்கில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-07-12T11:22:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[7 வருடங்களாக கோமாவில் கணவர் ; காலை கடித்து சரி பண்ணிய மனைவி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/wife-bites-husband-s-leg-ends-7-year-coma-1783854182"></link>
            <id>https://jvpnews.com/article/wife-bites-husband-s-leg-ends-7-year-coma-1783854182</id>
            <summary type="text">கணவனோ, மனைவியோ அல்லது வேறு உறவோ!.. உறவுகளில் ஒருவர் பல வருடங்கள் நோய்வாய் பட்டுவிட்டால் அவர்களை பராமரிப்பது என்பது கடினமான ஒன்று.  இந்நிலையில்தான் 7 வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கணவனோ, மனைவியோ அல்லது வேறு உறவோ!.. உறவுகளில் ஒருவர் பல வருடங்கள் நோய்வாய் பட்டுவிட்டால் அவர்களை பராமரிப்பது என்பது கடினமான ஒன்று. </p><p> இந்நிலையில்தான் 7 வருடங்களாக கோமாவில் இருந்த தனது கணவரை அவரின் மனைவி தனது அன்பால் இயல்பு நிலைக்கு கொண்டு வந்த சம்பவம் தெரிய வந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ebeb51fb-bfc6-4a41-b610-c996e312f7eb/26-6a53746793d92.webp' /></p><h2>நெகிழ்ச்சி சம்பவம்&nbsp;&nbsp;</h2><p>
</p><p>
அந்தப் பெண்ணின் பெயர் சாங் மெய். ஒரு குழந்தையை காப்பாற்ற முயற்சி செய்தபோது அவரின் கணவர் கீழே விழுந்ததில் அவரின் தலையில் அடிபட்டு கோமா நிலைக்கு சென்று விட்டார்.</p><p>கடந்த 7 வருடங்களாக தனது கணவரை வீட்டிலேயே வைத்து அவருக்கான பணிவிடைகளை சாங் மெய் செய்து வந்தார்.</p><p>


தினமும் கணவருடன் பேசுவது, கை கால்களை அசைத்து விடுவது, அவரின் கால் நரம்புகளை தூண்ட காலை பல்லால் மெதுவாக கடிப்பது என பல முயற்சிகளை செய்து வந்திருக்கிறார்.</p><p></p><p> </p><p>அவரின் 7 வருட முயற்சியின் வீண்போகவில்லை. தற்போது அவரின் கணவர் கோமாவில் இருந்து மீண்டு சுயநினைவை பெற்றிருக்கிறார். </p><p>சுயநினைவு வந்ததும் மனைவியை பார்த்து அவர் சொன்ன முதல் வார்த்தை ‘ஐ லவ் யூ’, இந்த சம்பவம் பலரையும் நெகிழ்ச்சி அடைய வைத்திருக்கிறது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-12T11:21:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் 68,000த்தை கடந்த டெங்கு நோயாளர்கள் எண்ணிக்கை ; அவதானம் மக்களே]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/dengue-cases-surpass-68-000-in-sri-lanka-1783855116"></link>
            <id>https://jvpnews.com/article/dengue-cases-surpass-68-000-in-sri-lanka-1783855116</id>
            <summary type="text">இந்த வருடத்தில் இதுவரை பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 68,000 ஐ கடந்துள்ளது. 

தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விட...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்த வருடத்தில் இதுவரை பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 68,000 ஐ கடந்துள்ளது. </p><p>

தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c46348c0-2f99-4700-b528-7b36e4a40ba4/26-6a53780d5b929.webp' /></p><h2>டெங்கு நோயாளர்கள்&nbsp;</h2><p> </p><p>

இந்த வருடத்தில் இதுவரை மொத்தம் 68,071 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். 

டெங்கு நோய் காரணமாக இதுவரை 47 பேர் உயிரிழந்துள்ளனர். </p><p>அதிகப்படியான நோயாளர்கள் கடந்த ஜூன் மாதத்தில் பதிவாகியுள்ளனர். அந்த எண்ணிக்கை 21,538 ஆகும். </p><p>

ஜூலை மாதத்தின் கடந்த 12 நாட்களில் மட்டும் 12,692 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.</p><p></p><p>

அதிகப்படியான நோயாளர்கள் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளனர். மேல் மாகாணத்தில் மாத்திரம் 35,823 நோயாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். </p><p>

தெற்கு மாகாணத்தில் 10,657 பேரும், சப்ரகமுவ மாகாணத்தில் 5,756 பேரும், கண்டி மாவட்டத்தில் 5,560 பேரும் என அதிகளவிலான நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-12T11:18:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[அநுர அரசின் 2027 பட்ஜெட் சமர்ப்பிப்பு திகதி அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/budget-2027-to-be-presented-on-november-12-1783853507"></link>
            <id>https://ibctamil.com/article/budget-2027-to-be-presented-on-november-12-1783853507</id>
            <summary type="text">2027 நிதியாண்டுக்கான நிதி ஒதுக்கீட்டு சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு, நவம்பர் 12 அன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளது.

நிதி அமைச்சகத்தி...</summary>
            <content type="html"><![CDATA[<p>2027 நிதியாண்டுக்கான நிதி ஒதுக்கீட்டு சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு, நவம்பர் 12 அன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளது.
</p><p>
நிதி அமைச்சகத்தின்படி, ஒவ்வொரு அமைச்சகத்திற்குமான செலவின மதிப்பீடுகளைக் கோடிட்டுக் காட்டும் நிதி ஒதுக்கீட்டு சட்டமூலத்தின் வரைவு, செப்டம்பர் 14 அன்று ஒப்புதலுக்காக அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படுவதன் மூலம் அதற்கான ஆயத்தப் பணிகள் தொடங்கும்.</p><h2>அரசாங்க வர்த்தமானியில்&nbsp;வெளியிடப்படும்</h2><p>அமைச்சரவையின் ஒப்புதலைத் தொடர்ந்து, இந்த சட்டமூலம் செப்டம்பர் 18 அன்று அரசாங்க வர்த்தமானியில் வெளியிடப்படவுள்ளது. பின்னர், ஒக்டோபர் 7 அன்று அதன் முதல் வாசிப்பிற்காக நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/565f4ffc-8c82-4fdc-bc3f-ee709cf225a0/26-6a53770b87296.webp' /></p><p>

மேலும், இரண்டாம் வாசிப்பு விவாதம் நவம்பர் 13 முதல் நவம்பர் 20 வரையிலும், குழு நிலை (மூன்றாம் வாசிப்பு) விவாதம் நவம்பர் 21 முதல் டிசம்பர் 14 வரையிலும் நடைபெறும் என நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-12T11:14:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[2050ஆம் ஆண்டுக்குள் புற்றுநோய் பாதிப்பு இரட்டிப்பாகும்- WHO எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/cancer-cases-to-double-by-2050-who-warns-1783853123"></link>
            <id>https://ibctamilnadu.com/article/cancer-cases-to-double-by-2050-who-warns-1783853123</id>
            <summary type="text">2050ஆம் ஆண்டுக்குள் உலகளாவிய புற்றுநோய் பாதிப்புகள் இருமடங்காக அதிகரிக்கலாம் என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

புற்றுநோய் பாதிப்புஆண்டுதோறும்...</summary>
            <content type="html"><![CDATA[<p>2050ஆம் ஆண்டுக்குள் உலகளாவிய புற்றுநோய் பாதிப்புகள் இருமடங்காக அதிகரிக்கலாம் என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.</p><p>
</p><h2>
புற்றுநோய் பாதிப்பு</h2><p>ஆண்டுதோறும் புதிதாக புற்றுநோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை சுமார் 3.5 கோடியாக அதிகரிக்கக்கூடும் என்று&nbsp; தெரிவித்துள்ளது.
</p><p>
புகையிலை பயன்பாடு, உடல் பருமன், உடற்பயிற்சி இல்லாமை, ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம், காற்று மாசுபாடு மற்றும் புகைபிடித்தல் ஆகியவை புற்றுநோய்க்கான முக்கிய காரணங்கள் என்று சொல்லப்படுகிறது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1829086f-382d-4513-a06c-212a06ab20d8/26-6a5370456c7a0.webp' /></p><p>தற்போது, உலகளவில் ஆண்டுதோறும் சுமார் 1 கோடி நபர்கள் புற்றுநோயால் உயிரிழக்கின்றனர்.</p><p>

இதய நோய்களுக்கு அடுத்தபடியாக அதிக உயிரிழப்பை ஏற்படுத்தும் நோயாகவும் புற்றுநோய் உள்ளது.</p><p>

இதுகுறித்து அப்பல்லோ அதீனா மகளிர் புற்றுநோய் மையத்தின் மார்பக புற்றுநோய் பிரிவு தலைவர் டாக்டர் புவன் சுக் பகிர்ந்துள்ளார்.</p><h2>அவர் கூறியதாவது.., </h2><p>

பல நோயாளிகளுக்கு புற்றுநோய் முற்றிய நிலையில்தான் கண்டறியப்படுகிறது.
</p><p>
புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிய பரிசோதனைகளை வலுப்படுத்த வேண்டும்.
</p><p>
மார்பக, கருப்பை வாய், வாய் மற்றும் பெருங்குடல் புற்றுநோய்களுக்கான பரிசோதனைகள் அனைவருக்கும் எளிதில் கிடைக்க வேண்டும்.&nbsp;</p><p>புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிவதை விட, அதைத் தடுப்பதே சிறந்த வழியாகும்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a521df00-4b01-4f0d-b1c6-3cdf8dc54007/26-6a5370461f6c8.webp' /></p><p>HPVக்கு எதிரான தடுப்பூசி கருப்பை வாய் புற்றுநோயைத் தடுக்க உதவும்.
அதேபோல்
ஹெபடைடிஸ்-பி தடுப்பூசி கல்லீரல் புற்றுநோய் அபாயத்தை குறைக்க உதவும்.</p><p>

நோய் கண்டறிந்தவுடன் அறுவை சிகிச்சை, கதிரியக்க சிகிச்சை உள்ளிட்ட சிகிச்சைகளை தாமதமின்றி மேற்கொள்ள வேண்டும்.</p><p>காப்பீட்டு வசதிகள், அரசின் ஆதரவு மற்றும் குறைந்த விலை மருந்துகள் நோயாளிகளின் உயிர்வாழும் வாய்ப்பை அதிகரிக்கும் என்று அவர் தெரிவித்தார்.</p>]]></content>
            <updated>2026-07-12T11:13:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[வேறொரு நாட்டிலுள்ள கடற்படைத் தளம்: செயல்பாட்டிற்கு கொண்டுவர ரஷ்யா திட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/russia-plan-to-run-commercial-logistics-hub-syria-1783854636"></link>
            <id>https://news.lankasri.com/article/russia-plan-to-run-commercial-logistics-hub-syria-1783854636</id>
            <summary type="text">சிரியாவில் உள்ள தனது கடற்படைத் தளத்தில், வணிக ரீதியான தளவாட மையத்தை செயல்பாட்டிற்கு கொண்டுவர ரஷ்யா திட்டமிட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.&amp;nbsp;சிரியாவில்...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிரியாவில் உள்ள தனது கடற்படைத் தளத்தில், வணிக ரீதியான தளவாட மையத்தை செயல்பாட்டிற்கு கொண்டுவர ரஷ்யா திட்டமிட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.&nbsp;</p><h2>சிரியாவில்&nbsp;கடற்படைத் தளம்</h2><p> 

2024ஆம் ஆண்டில் சிரியாவின் ஜனாதிபதியாக இருந்த பஷார் அல்-அசாத் பதவியில் அகற்றப்பட்டதன் மூலம், ரஷ்யா மத்திய கிழக்கில் தனக்கு இருந்த மிக நெருக்கமான கூட்டாளியை இழந்தது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f62076c0-28e0-444f-a261-711ed2237bd9/26-6a537a4c95672.webp' />&nbsp;</p><p></p><p>
என்றாலும், சிரியாவின் Tartus துறைமுகத்தில் ரஷ்யாவின் கடற்படைத் தளம் உள்ளது.
</p><p>
இங்குள்ள இரண்டு கப்பல் நிறுத்தங்களில் ஒன்றில் இந்த வணிக மையமும், மற்றொன்றில் ரஷ்யாவின் இராணுவ இருப்பும் தொடர்ந்து நீடிக்கும் என்று சிரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். </p><p>

அதாவது, ஜூலை மாதத்தின் மத்தியில் வணிக ரீதியான தளவாட மையத்தை செயல்பாட்டிற்கு கொண்டுவர ரஷ்யா திட்டமிட்டுள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர். </p><h2>


2,50,000 மெட்ரிக் டன்</h2><p>இந்த மையமானது, கோதுமை மற்றும் தானியங்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான ரஷ்யப் பொருட்களைக் கையாளும் என்றும், ஆரம்பகட்டமாக மாதத்திற்கு சுமார் 2,50,000 மெட்ரிக் டன் சரக்குகளைக் கையாள்வதை இலக்காகக் கொண்டுள்ளது என்றும் அந்த அதிகாரிகளில் ஒருவர் தெரிவித்தார். </p><p>

பொருளாதார வழிகள் மூலம் சிரியாவில் தனது செல்வாக்கை தக்கவைத்துக்கொள்ளவும், விரிவுபடுத்தவும் ரஷ்யா மேற்கொள்ளும் முயற்சிகளில் இத்திட்டம் முக்கியப் பங்கு வகிக்கிறது என்று அதிகாரிகள் கூறியதாக ஊடகம் ஒன்று தெரிவிக்கிறது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d640d12d-1a88-4a53-bd6e-5283d424f8c5/26-6a5376a9ede83.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-12T11:11:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலகில் அதிக போக்குவரத்து நெரிசல் கொண்ட நாடுகளின் பட்டியலில் முன்னணியில் இலங்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sri-lanka-ranked-third-most-traffic-in-the-world-1783852791"></link>
            <id>https://ibctamil.com/article/sri-lanka-ranked-third-most-traffic-in-the-world-1783852791</id>
            <summary type="text">
உலகில் அதிக போக்குவரத்து நெரிசல் உள்ள நாடுகளில் இலங்கை மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.

அத்தோடு, ஆசியாவில் அதிக போக்குவரத்து நெரிசல் உள்ள நாடுகள...</summary>
            <content type="html"><![CDATA[<p>
உலகில் அதிக போக்குவரத்து நெரிசல் உள்ள நாடுகளில் இலங்கை மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.
</p><p>
அத்தோடு, ஆசியாவில் அதிக போக்குவரத்து நெரிசல் உள்ள நாடுகளில் இலங்கை முதல் இடத்தைப் பிடித்துள்ளது.
</p><p>
வாழ்க்கைச் செலவு மற்றும் வாழ்க்கைத் தரம் குறித்த உலகின் மிகப்பெரிய தரவு சேகரிப்பான “நம்பியோ” இணையதளம், 2026 ஆம் ஆண்டின் இடைக்கால போக்குவரத்து குறியீட்டின் மூலம் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.</p><p></p><h2><span style="color: inherit; font-size: 1.75rem;">நெரிசல் குறைந்த நாடு</span></h2><p>
</p><p>
அந்த அறிக்கையின்படி, உலகில் அதிக போக்குவரத்து நெரிசல் உள்ள நாடாக நைஜீரியா பதிவாகியுள்ளதுடன், கொஸ்டரிகா இரண்டாவது இடமாக பதிவாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8712e3cc-0d7a-4d92-a365-1c0d486e4d18/26-6a5375b85b113.webp' /></p><p>
</p><p>
இதேவேளை, எஸ்தோனியா மிகக் குறைந்த போக்குவரத்து நெரிசல் உள்ள நாடாகவும், ஆஸ்திரியா மற்றும் பின்லாந்து ஆகியவையும் மிகக் குறைந்த போக்குவரத்து நெரிசல் உள்ள நாடுகளாகவும் பதிவாகியுள்ளன.</p><p>
</p><p>
இந்த நிலையில், ஒரு பயணத்தில் செலவழிக்கப்படும் நேரம் மற்றும் பயன்படுத்தப்படும் எரிபொருளின் அளவு ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு இந்த போக்குவரத்து நெரிசல் தரவுகள் தயாரிக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table><p>
</p>]]></content>
            <updated>2026-07-12T11:08:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[மறு அறிவிப்பு வரும் வரை அதிரடியாக மூடப்பட்ட ஹோர்முஸ் நீரிணை..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/us-iran-exchange-strikes-strait-of-hormuz-closed-1783852851"></link>
            <id>https://tamilwin.com/article/us-iran-exchange-strikes-strait-of-hormuz-closed-1783852851</id>
            <summary type="text">&#039;ஹோர்முஸ் நீரிணையை&#039; மறு அறிவிப்பு வரும் வரை முழுமையாக மூடுவதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை அதிரடியாக அறிவித்துள்ளது.

இதனால் அமெரிக்கா மற்று...</summary>
            <content type="html"><![CDATA[<p>'ஹோர்முஸ் நீரிணையை' மறு அறிவிப்பு வரும் வரை முழுமையாக மூடுவதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை அதிரடியாக அறிவித்துள்ளது.</p><p>

இதனால் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நிலவி வந்த தற்காலிக போர்நிறுத்த ஒப்பந்தம் மீண்டும் கேள்விக்குறியாகியுள்ளது.</p><p></p><h2>ஹோர்முஸ் நீரிணை</h2><p>
</p><p>
ஹோர்முஸ் நீரிணையில் அனுமதிக்கப்படாத மாற்றுப் பாதையில் சென்ற சைப்ரஸ் நாட்டின் வணிகச் சரக்குக் கப்பல் ஒன்றை நோக்கி ஈரான் கடற்படை எச்சரிக்கைத் தாக்குதல் நடத்தியது.
</p><p>
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, "மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்காவின் தலையீடுகள் மற்றும் ஆக்கிரமிப்புகள் முழுமையாக முடியும் வரை ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டிருக்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/71a42cb6-c6b0-400d-a949-fc5d0a3080e7/26-6a5372e39caca.webp' /></p><p> 

இதன் வழியே எந்தவொரு வணிகக் கப்பல்களும் செல்ல அனுமதி இல்லை என ஈரான் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
</p><p>
ஈரான் வணிகக் கப்பலைத் தாக்கியதற்கும், கடல் எல்லையை மூடியதற்கும் பதிலடியாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தரவின் பேரில் அமெரிக்க இராணுவம் ஈரான் மீது வான்வழித் தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது.</p><p></p><h2>&nbsp;ஈரான் இராணுவம்</h2><p>
</p><p>
ஈரானின் பந்தர் அப்பாஸ், கியூஎஸ்எம் தீவு மற்றும் சிரிக் ஆகிய கடலோரப் பகுதிகளில் உள்ள ஈரானிய இராணுவத் தளங்கள் மற்றும் ஏவுகணைக் கிடங்குகளைக் குறிவைத்து அமெரிக்கா குண்டுகளை வீசி வருகிறது.
</p><p>
சர்வதேசக் கப்பல் போக்குவரத்தைச் சீர்குலைக்கும் ஈரானின் நடவடிக்கைக்கு அமெரிக்கா கடுமையான விலையைக் கொடுக்க வைக்கும் என்று அமெரிக்கப் பாதுகாப்புத் துறை எச்சரித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b3560438-5949-4336-a296-a2e83a37b7d4/26-6a5372e47e143.webp' /></p><p>
</p><p>
உலகளவில் பயன்படுத்தப்படும் கச்சா எண்ணெய் மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவில் ஐந்தில் ஒரு பங்கு (20%) இந்த ஹோர்முஸ் நீரிணை வழியாகவே கடத்தப்படுகிறது.</p><p>

இந்த எரிசக்திப் பாதை மூடப்பட்டுள்ளதால், உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் கடுமையாக உயர்ந்து உலகளாவிய பணவீக்கத்தை ஏற்படுத்தும் என்று பொருளாதார வல்லுநர்கள் எச்சரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-12T11:00:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[FIFA உலகக்கிண்ணத்தில் விளையாடியவர் 25 வயதில் அகால மரணம்! கால்பந்து உலகம் அதிர்ச்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/south-african-player-jayden-adams-died-at-25-1783849284"></link>
            <id>https://news.lankasri.com/article/south-african-player-jayden-adams-died-at-25-1783849284</id>
            <summary type="text">தென் ஆப்பிரிக்க கால்பந்து அணி வீரர் ஜேடன் ஆடம்ஸ் 25 வயதில் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.&amp;nbsp;ஜேடன் ஆடம்ஸ்
நடப்பு FIFA உலகக்கிண்ணப் போட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>தென் ஆப்பிரிக்க கால்பந்து அணி வீரர் ஜேடன் ஆடம்ஸ் 25 வயதில் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.&nbsp;</p><h2>ஜேடன் ஆடம்ஸ்</h2><p>
நடப்பு FIFA உலகக்கிண்ணப் போட்டித் தொடரில், தென் ஆப்பிரிக்க அணிக்காக விளையாடியவர் ஜேடன் ஆடம்ஸ் (Jayden Adams).&nbsp;</p><p></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/db2a062a-3adf-45ec-b793-e46676daf875/26-6a536251d5cb4.webp' /></p><p>

இவர் தனது 25 வயதில் திடீரென உயிரிழந்ததாக, தென் ஆப்பிரிக்க கால்பந்து வீரர்கள் சங்கம் சனிக்கிழமையன்று உறுதிப்படுத்தியது.&nbsp;</p><h2>நாட்டிற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு </h2><p>
இதுதொடர்பான பதிவில், "ஜேடன் சமீபத்தில்தான் FIFA உலகக்கிண்ணத்தில் தென் ஆப்பிரிக்காவை பிரதிநிதித்துவப்படுத்தினார். நாட்டின் நம்பிக்கையை பெருமை, தைரியம் மற்றும் சிறப்பான செயல்பாட்டுடன் அவர் சுமந்து நின்றார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2d6f6052-803e-4af4-b633-1336898653f9/26-6a5363c0c2346.webp' /></p><p>

அவரது மறைவு அவரது குடும்பத்தினர், சக வீரர்கள், கிளப் அணிகள், கால்பந்து சமூகம் மற்றும் ஒட்டுமொத்த நாட்டிற்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பாகும்.
</p><p>
ஆடம்ஸின் குடும்பத்தினர், மமெலோடி சன்டவுன்ஸ், Stellenbosch FC, Bafana Bafana மற்றும் அவரது வாழ்க்கையால் ஈர்க்கப்பட்ட அனைவருக்கும் எங்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/509bb629-8e62-4fac-a961-880467e57496/26-6a5362529c193.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/31aee0e7-1eec-40a0-9e7c-dca54c2061d5/26-6a5363c17f95b.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-12T10:55:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[டெங்கு நோய் அபாயம் : மூடப்பட்ட பல்கலைக்கழகம் நாளை மீண்டும் திறப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/visual-performing-arts-uni-to-reopen-tomorrow-1783851510"></link>
            <id>https://ibctamil.com/article/visual-performing-arts-uni-to-reopen-tomorrow-1783851510</id>
            <summary type="text">டெங்கு நோயின் பரவல் காரணமாக இரண்டு வாரங்களாக மூடப்பட்டிருந்த கொழும்பு கட்புல அரங்கேற்ற கலைகள் பல்கலைக்கழகம் மீண்டும் திறக்கப்படவுள்ளது.அதன்படி, குறித்...</summary>
            <content type="html"><![CDATA[<p>டெங்கு நோயின் பரவல் காரணமாக இரண்டு வாரங்களாக மூடப்பட்டிருந்த கொழும்பு கட்புல அரங்கேற்ற கலைகள் பல்கலைக்கழகம் மீண்டும் திறக்கப்படவுள்ளது.</p><p>அதன்படி, குறித்த பல்கலைக்கழகத்தை, நாளை (13) முதல் மீண்டும் திறக்க பல்கலைக்கழக நிர்வாகம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>

இதற்கமைய, 'கிளீன் சிறிலங்கா' வேலைத்திட்டத்திற்கு இணங்க, பல்கலைக்கழக வளாகத்தைச் சுத்தப்படுத்தும் மற்றும் புகைத்தல் நடவடிக்கைகள் இன்று மேற்கொள்ளப்பட்டுள்ளன.</p><p></p><h2>டெங்கு நோயாளர்கள்&nbsp;அடையாளம்</h2><p> </p><p>இதேவேளை இலங்கையில் இந்த ஆண்டில் இதுவரை 67,000க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர்களில் 47 பேர் உயிரிழந்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a44bfb92-d866-4cf5-af35-411b96c089d7/26-6a536f893dcb6.webp' /></p><p> 

தற்போதைய சூழ்நிலையில், நுளம்புகள் பெருகுவதற்கான இடங்களைப் பேணுபவர்களுக்கு எதிராகச் சட்டத்தை மிகத் தீவிரமாகச் செயற்படுத்தி வருவதாகப் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-12T10:54:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[நுரையீரலை தாக்கும் நிமோனியா! இந்த அறிகுறிகளை அலட்சியப்படுத்தாதீங்க]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/pneumonia-in-tamil-1649573563"></link>
            <id>https://manithan.com/article/pneumonia-in-tamil-1649573563</id>
            <summary type="text">நிமோனியா என்பது நுரையீரலில் ஏற்படும் கடுமையான தொற்று நோயாகும். இது ஒரு நுரையீரலையோ அல்லது இரு நுரையீரல்களையோ பாதிக்கலாம். நுரையீரலின் காற்றுப்பைகள் (அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நிமோனியா என்பது நுரையீரலில் ஏற்படும் கடுமையான தொற்று நோயாகும். இது ஒரு நுரையீரலையோ அல்லது இரு நுரையீரல்களையோ பாதிக்கலாம்.</p><p> நுரையீரலின் காற்றுப்பைகள் (அல்வியோலி) திரவம் அல்லது சீழால் நிரம்புவதால் சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டு, உடலுக்குத் தேவையான ஆக்ஸிஜன் அளவு குறையலாம்.

நிமோனியா வருவதற்கான காரணங்கள்
வைரஸ், பாக்டீரியா மற்றும் பூஞ்சை தொற்றுகள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0e8bfafd-6620-4156-8c6c-21b840341e7a/26-6a53701c3a1ed.webp' /></p><p>பாதிக்கப்பட்டவர் இருமுதல் அல்லது தும்முதல் மூலம் பரவும் கிருமிகள்.
அசுத்தமான சூழல் மற்றும் மாசுபட்ட பொருட்கள்.
வென்டிலேட்டர் சிகிச்சை பெறுபவர்களுக்கு தொற்று ஏற்படும் அபாயம் அதிகம். இந்த நோயின் முக்கிய அறிகுறிகள் மற்றும் சிகிச்சை குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.</p><h2>முக்கிய அறிகுறிகள்
</h2><p>சுவாசிக்கும்போது அல்லது இருமும்போது மார்பு வலி</p><p>
சளியுடன் இருமல்
</p><p>காய்ச்சல் மற்றும் அதிக வியர்வை
</p><p>மூச்சுத்திணறல்
சோர்வு மற்றும் பசியின்மை</p><p>
குமட்டல், வாந்தி அல்லது வயிற்றுப்போக்கு</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3e15639d-a43b-48ae-be1e-00f03ab85736/26-6a53701cde994.webp' /></p><p><b>யாருக்கு அதிக ஆபத்து?</b></p><p>2 வயதுக்குட்பட்ட குழந்தைகள்
65 வயதுக்கு மேற்பட்டவர்கள்
கீமோதெரபி சிகிச்சை பெறுபவர்கள்
நுரையீரல் நோய் உள்ளவர்கள்
நோய் எதிர்ப்பு சக்தி குறைவானவர்கள் அல்லது நீண்டகால மருந்துகள் எடுத்துக்கொள்பவர்கள்</p><p>
இவர்களுக்கு இரண்டு அல்லது மூன்று அறிகுறிகள் இருந்தால்கூட உடனடியாக மருத்துவரை அணுகுவது அவசியம்.</p><p>[W3JBDD ]</p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">எப்படி கண்டறிவது?</span></p><p>
ரத்தப் பரிசோதனை
மார்பு எக்ஸ்-ரே
சளி மாதிரி பரிசோதனை
கடுமையான நிலைகளில் ப்ரோன்கோஸ்கோபி (Bronchoscopy) பரிசோதனை.</p><p><b>வீட்டில் செய்யக்கூடிய பராமரிப்பு
</b></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/51245d3a-b8f6-4e37-9a70-ab670fae9a22/26-6a5371473844b.webp' /></p><p></p><p><b></b></p><p>
மருத்துவரின் சிகிச்சைக்கு துணையாக மட்டுமே பின்வரும் முறைகளைப் பயன்படுத்தலாம்:
</p><p>
தினமும் பூண்டு சாப்பிடடுவது நிவாரணம் கொடுக்கும்.</p><p>சூடான பாலில் மஞ்சள் தூள் கலந்து குடிக்கலாம்.</p><p>
வெதுவெதுப்பான நீரில் தேன் கலந்து பருகலாம்.
</p><p>கற்பூர எண்ணெய் மற்றும் நல்லெண்ணெய் கலந்து நெஞ்சில் தடவலாம்.
</p><p>ஆப்பிள், கீரை, கேரட், பீட்ரூட் போன்ற சத்தான உணவுகளை தினசரி உணவில் அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம்.</p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்<b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"> FOLLOW NOW</a></u></b>&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-12T10:50:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[திருமணத்திற்கு அணிந்திருந்த ஆடையுடன் போட்டோஷூட்.. நடிகை அவந்திகா வெளியிட்ட புகைப்படங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/actress-avantika-mishra-lehenga-photoshoot-1783852870"></link>
            <id>https://cineulagam.com/article/actress-avantika-mishra-lehenga-photoshoot-1783852870</id>
            <summary type="text">என்ன சொல்ல போகிறாய், டி பிளாக், எமக்கு தொழில் ரொமான்ஸ் ஆகிய தமிழ் திரைப்படங்களில் நடித்தவர் நடிகை அவந்திகா. இவருடைய சகோதரருக்கு சமீபத்தில் திருமணம் நட...</summary>
            <content type="html"><![CDATA[<p>என்ன சொல்ல போகிறாய், டி பிளாக், எமக்கு தொழில் ரொமான்ஸ் ஆகிய தமிழ் திரைப்படங்களில் நடித்தவர் நடிகை அவந்திகா. இவருடைய சகோதரருக்கு சமீபத்தில் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்திற்காக நடிகை அவந்திகா மஞ்சள் நிற லெஹங்கா உடையில் தயாராகியுள்ளார்.</p><p>அந்த ஆடையில் எடுத்துக்கொண்ட போட்டோஷூட் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரே பதிவிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்:&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-12T10:50:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[மாபெரும் வெற்றிபெற்றுள்ள கட்டா குஸ்தி 2.. உலகளவில் இதுவரை செய்துள்ள வசூல்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/gatta-kusthi-2-worldwide-box-office-1783853331"></link>
            <id>https://viduppu.com/article/gatta-kusthi-2-worldwide-box-office-1783853331</id>
            <summary type="text">கடந்த வாரம் வெளிவந்த கட்டா குஸ்தி 2 திரைப்படத்தின் வசூல் குறித்து தொடர்ந்து முதல் நாளிலிருந்தே பார்த்து வருகிறோம். 

அந்த வகையில், தற்போது 9 நாட்களி...</summary>
            <content type="html"><![CDATA[<p>கடந்த வாரம் வெளிவந்த கட்டா குஸ்தி 2 திரைப்படத்தின் வசூல் குறித்து தொடர்ந்து முதல் நாளிலிருந்தே பார்த்து வருகிறோம். </p><p>

அந்த வகையில், தற்போது 9 நாட்களில் இப்படம் உலகளவில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0c52e8b5-b335-439f-a95d-eb0fba081cc1/26-6a537116bdad2.webp' /></p><p>
</p><p>
அதன்படி, ரசிகர்களின் பேராதாவோடு திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் கட்டா குஸ்தி 2 திரைப்படம் உலகளவில் 9 நாட்களில் ரூ. 37 கோடி வரை வசூல் செய்துள்ளது. </p><p>

இனி வரும் நாட்களில் எவ்வளவு வசூல் செய்யும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.</p>]]></content>
            <updated>2026-07-12T10:49:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Manchu</name>
            </author>
            <title type="text"><![CDATA[Sunday Special: அட்டகாசமான ஆட்டுக் குடல் குழம்பு.. இப்படி செய்து பாருங்க]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/how-to-make-healthy-kudal-kulambu-recipe-1783843071"></link>
            <id>https://manithan.com/article/how-to-make-healthy-kudal-kulambu-recipe-1783843071</id>
            <summary type="text">இன்றைய ஸ்பெஷலாக ஆட்டுக்குடல் குழம்பு எவ்வாறு செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.பொதுவாக வாரத்தின் இறுதி நாட்களில் அசைவ உணவுகள் தான் பெரு...</summary>
            <content type="html"><![CDATA[<p>இன்றைய ஸ்பெஷலாக ஆட்டுக்குடல் குழம்பு எவ்வாறு செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.</p><p>பொதுவாக வாரத்தின் இறுதி நாட்களில் அசைவ உணவுகள் தான் பெரும்பாலான வீடுகளில் சமைப்பது வழக்கமாக இருக்கும். மட்டன், சிக்கன், மீன் வகைகள் என்று சமைத்தால் அசைவ பிரியர்களுக்கு கொண்டாட்டமாகவே இருக்கும்.</p><p>இந்நிலையல் இட்லி, சாதம் இவற்றிற்கு ஏற்ற வகையில் குடல் குழம்பு எ்வவாறு செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e39f981c-3390-4eb2-94a0-2892bea04de6/26-6a534ba407245.webp' /></p><h2>தேவையான பொருட்கள்</h2><p>&nbsp;தண்ணீர் - 2 லிட்டர் <br>உப்பு - 2 டீஸ்பூன்&nbsp;<br>&nbsp;மஞ்சள் தூள் - 2 டீஸ்பூன்&nbsp;<br>&nbsp;சுத்தம் செய்த ஆட்டு குடல் - 1 கிலோ </p><h4>வறுத்து அரைப்பதற்கு... </h4><p>&nbsp;எண்ணெய் - 2 டீஸ்பூன்&nbsp;<br>&nbsp;பட்டை - 2 துண்டு&nbsp;<br>&nbsp;கிராம்பு - 6&nbsp;<br>&nbsp;அன்னாசிப்பூ - 1&nbsp;<br>&nbsp;கல்பாசி - சிறிது <br>மிளகு - 2 டீஸ்பூன்<br>&nbsp;சோம்பு - 1 டீஸ்பூன்<br>&nbsp;சீரகம் - 1 டீஸ்பூன் <br>சின்ன வெங்காயம் - 8<br>கறிவேப்பிலை - சிறிது <br>துருவிய தேங்காய் - 1 கப் </p><h4>குழம்பு தாளிப்பதற்கு.. </h4><p>எண்ணெய் - 3 டீஸ்பூன் <br>கடுகு - 1 டீஸ்பூன் <br>சின்ன வெங்காயம் - 2 கப் (பொடியாக நறுக்கியது) <br>கறிவேப்பிலை - 1 கொத்து&nbsp;<br>&nbsp;பச்சை மிளகாய் - 2 <br>இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்&nbsp;<br>&nbsp;தக்காளி - 2 (நறுக்கியது) <br>உப்பு - சுவைக்கேற்ப <br>குழம்பு மிளகாய் தூள் - 5 டேபிள் ஸ்பூன் <br>மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்&nbsp;<br>&nbsp;அரைத்த தேங்காய் விழுது&nbsp;<br>&nbsp;தண்ணீர் - தேவையான அளவு&nbsp;<br>&nbsp;சுத்தம் செய்த குடல் <br>கொத்தமல்லி - சிறிது&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f9ab12f1-accb-45b2-9c25-3f159d8cbca5/26-6a534ba4aa212.webp' /></p><h2>செய்முறை</h2><p>முதலில் ஆட்டுக்குடலை சுடுதண்ணீர் போட்டு நன்றாக சுத்தம் செய்து சிறுசிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும்.&nbsp;</p><p> </p><p>பாத்திரம் ஒன்றில் தண்ணீர் சேர்த்து அதில் உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து அடுப்பில் வைத்து, தண்ணீர் கொதித்தும் குடலை சேர்த்து அடுப்பினை அணைத்துவிடவும்.</p><p>10 நிமிடம் கழித்து தண்ணீரை வடிகட்டிவிட்டு, குடலை தனியாக எடுத்து வைக்கவும். பின்பு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் சேர்த்து, பட்டை, கிராம்பு, அன்னாசிப்பூ, கல்பாசி, மிளகு, சோம்பு, சீரகம் சேர்த்து வதக்கவும்.</p><p>பின்பு நறுக்கிய சின்ன வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து, அடுப்பை அணைத்துவிட்டு அதில் துருவிய தேங்காய் சேர்த்து வதக்கி குளிர வைக்கவும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5ca662ca-7646-4b37-96dc-76009230c335/26-6a534ba55a05a.webp' /><br></p><p>மிக்ஸியில் வதக்கிய பொருட்களை சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும். குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய், கடுகு சேர்த்து தாளிக்கவும்.</p><p>வெங்காயம், கறிவேப்பிலை, பச்சைமிளகாய், சேர்த்து வதக்கவும். பின்பு இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கிய பின்பு தக்காளி மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும்.&nbsp;</p><p>பின்பு குழம்பு மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து கிளறி, அரைத்த தேங்காய் விழுதை சேர்த்து நன்றாக வதக்கவும். தேவையான அளவு தண்ணீர் சேர்த்து சுத்தம் செய்த குடலையும் சேர்த்து குக்கரை மூடி 6 விசில் போட்டு வேகவிடவும்.&nbsp;</p><p>கடைசியாக கொத்தமல்லி தூவி இறக்கினால் சுவையான குடல் குழம்பு தயார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><i>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் <a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள் <a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"><b>FOLLOW NOW</b></a>&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;&nbsp;</i><br></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-12T10:33:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவின் ரொரண்டோ தெரு திருவிழாவில் துப்பாக்கிசூடு : இருவர் ஸ்தலத்தில் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/toronto-street-festival-shooting-1783851666"></link>
            <id>https://ibctamil.com/article/toronto-street-festival-shooting-1783851666</id>
            <summary type="text">கனடாவின் ரொரண்டோ நகரில் நடைபெற்ற புகழ்பெற்ற வருடாந்திர கலாசார திருவிழாவான &quot;சல்சா ஆன் செயின்ட் கிளேர்&quot; தெரு விழாவில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் இ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் ரொரண்டோ நகரில் நடைபெற்ற புகழ்பெற்ற வருடாந்திர கலாசார திருவிழாவான "சல்சா ஆன் செயின்ட் கிளேர்" தெரு விழாவில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளனர்.நால்வர் படுகாயமடைந்தனர்.
</p><p>






இவ்விழாவில் ஏராளமான மக்கள் திரண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்த போது, இனந்தெரியாத நபர் ஒருவர் திடீரென துப்பாக்கியால் சரமாரியாக சுடத் தொடங்கினார். இதனால் அதிர்ச்சியடைந்த மக்கள் அலறியடித்துக்கொண்டு நாலாபுறமும் சிதறி ஓடினர்.
</p><p>


</p><h2>தப்பியோடிய துப்பாக்கிதாரி</h2><p>சம்பவத்தில் காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2dfc0777-602e-4ea7-8f9d-052b98d7e6aa/26-6a536ccaa40d2.webp' /></p><p>
</p><p>
துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் சம்பவ இடத்திலிருந்து தப்பியோடிவிட்டதால், அவரைப் பிடிக்க காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.</p><p></p><p>
</p><p>

</p><h2>பொதுமக்களுக்கு காவல்துறையின் அறிவிப்பு</h2><p>குற்றவாளி இன்னும் பிடிபடாததால், அப்பகுதி பொதுமக்கள் அனைவரும் மிகுந்த விழிப்புடனும் பாதுகாப்புடனும் இருக்குமாறு காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/bPsqucAwAqc" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p>
</p><p>


டொராண்டோவின் மிகவும் பிரபலமான வருடாந்திர கலாச்சாரக் கொண் டாட்டங்களில் ஒன்றாக சல்சா ஆன் செயின்ட் கிளேர் திருவிழா உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.&nbsp; &nbsp; &nbsp; &nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-12T10:31:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்பட்ட அனுமதி! கல்வி அமைச்சின் அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/students-to-wear-protective-clothing-to-school-1783847220"></link>
            <id>https://ibctamil.com/article/students-to-wear-protective-clothing-to-school-1783847220</id>
            <summary type="text">
நுளம்புகளிடம் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக, மாணவர்கள் பாடசாலை சீருடையுடன், கைகளையும் கால்களையும் மறைக்கும் பொருத்தமான ஆடைகளை அணிய அனுமத...</summary>
            <content type="html"><![CDATA[<p>
நுளம்புகளிடம் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக, மாணவர்கள் பாடசாலை சீருடையுடன், கைகளையும் கால்களையும் மறைக்கும் பொருத்தமான ஆடைகளை அணிய அனுமதிக்கப்படுவார்கள் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
</p><p>
தற்போதைய டெங்கு அபாயத்தைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும், அனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் இந்த நடவடிக்கைகள் குறித்துத் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்வின் செயலாளர் நாலக்க கலுவெவ தெரிவித்துள்ளார்.</p><p>

மாணவர்கள் தங்கள் உடலை மறைக்கும் ஆடைகளை அணிய அனுமதிப்பது, பாடசாலை மாணவர்களிடையே டெங்கு நோய் பரவுவதைக் குறைக்க உதவும் என்று எதிர்பார்க்கப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>சிறப்புத் திட்டங்கள்</h2><p>
</p><p>
அனைத்து அரசாங்க மற்றும் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளிலும் பெற்றோர்கள் மற்றும் முன்னாள் மாணவர்களின் பங்கேற்புடன், நுளம்புகள் இனப்பெருக்கம் செய்யும் இடங்களை ஒழித்தல் மற்றும் பாடசாலைகளை தூய்மைப்படுத்தும் சிறப்புத் திட்டங்களைத் தொடர்ந்து ஏற்பாடு செய்யுமாறு அதிபர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b27c911b-793d-48d4-8fcf-c0d1fbe2453f/26-6a536c6243f92.webp' /></p><p>

இதற்கிடையில், அதிக அபாயம் உள்ள 60 டெங்கு மண்டலங்களை உள்ளடக்கிய ஒரு சிறப்பு நுளம்பு ஒழிப்புத் திட்டம் நாளை தொடங்கும் என்று தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு அறிவித்துள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table><p>
</p>]]></content>
            <updated>2026-07-12T10:28:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரசாங்கத்தின் முக்கிய தீர்மானம் - மற்றுமொரு பதிவுக்கட்டணமும் சடுதியாக அதிகரிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/union-companies-also-increase-registration-fees-1783850647"></link>
            <id>https://tamilwin.com/article/union-companies-also-increase-registration-fees-1783850647</id>
            <summary type="text">நிறுவனங்கள் மற்றும் சங்கங்களுக்கான பதிவுக்கட்டணங்களை உயர்த்த அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

வர்த்தகம், வாணிபம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நிறுவனங்கள் மற்றும் சங்கங்களுக்கான பதிவுக்கட்டணங்களை உயர்த்த அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
</p><p>
வர்த்தகம், வாணிபம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க , இது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.</p><p></p><h2>நிறுவன பதிவு கட்டணம்</h2><p>

அதன்படி, முன்னர் ரூ. 4600 ஆக இருந்த ஒரு தனியார் வரையறுக்கப்பட்ட நிறுவனத்தை பதிவு செய்வதற்கான கட்டணம் ரூ. 5200 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6da6f3f3-8702-4d23-b0b6-482137d2cee3/26-6a536c11146ec.webp' /></p><p>
</p><p>இதனபடி, முன்னர் ரூ. 23,000 ஆக இருந்த அரச வரையறுக்கப்பட்ட நிறுவனத்தைப் பதிவு செய்வதற்கான கட்டணம் ரூ. 26,400 ஆகவும், முன்னர் ரூ. 17,250 ஆக இருந்த ஒரு வரம்பற்ற நிறுவனத்தை பதிவு செய்வதற்கான கட்டணம் ரூ. 19,800 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

மேலும், நிறுவனத்தின் பெயரை அங்கீகரிப்பதற்கான கட்டணம் ரூ. 2600 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.</p><p>இதற்கமைய, முன்னர் ரூ. 3450 ஆக இருந்த சங்கங்களைப் பதிவு செய்வதற்கான கட்டணம் ரூ. 19,800 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.</p><p> சங்கங்களின் அரசியலமைப்பைத் திருத்துவதற்கான கட்டணம் ரூ. 1725 லிருந்து ரூ. 1900 ஆக உயர்த்தப்பட்டுள்ள நிலையில், தற்போதைய கட்டணம் ரூ. 3900 ஆக உள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-12T10:27:33+00:00</updated>
        </entry>
    </feed>
