<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-07-18T03:39:56+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் விவகாரம் : ஜனாதிபதி தலைமையில் உயர்மட்டச் சந்திப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/negombo-prison-conflict-high-level-meeting-anura-1784344163"></link>
            <id>https://tamilwin.com/article/negombo-prison-conflict-high-level-meeting-anura-1784344163</id>
            <summary type="text">ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கும் சிறைச்சாலைகள் திணைக்களத்தின்
அதிகாரிகளுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று(17) பிற்பகல் ஜனாதிபதி
அலுவலகத்தில் நடை...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கும் சிறைச்சாலைகள் திணைக்களத்தின்
அதிகாரிகளுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று(17) பிற்பகல் ஜனாதிபதி
அலுவலகத்தில் நடை பெற்றது.
</p><p>
தற்போது சிறைச்சாலைக் கட்டமைப்பில் எழுந்துள்ள பிரச்சினைகள் மற்றும் இந்தப்
பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு எடுக்கப்பட வேண்டிய அவசர நடவடிக்கைகள் குறித்து
இதன்போது கலந்துரையாடப்பட்டது.
</p><p></p><h2>பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடுவதற்கு&nbsp;</h2><p>
அண்மையில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதல் சம்பவம் குறித்தும்
இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டதுடன், இவ்வாறான சம்பவங்கள் மீண்டும்
இடம்பெறாமல் இருப்பதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும்
கலந்துரையாடப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a5d64c1b-4fe8-4f78-8dc5-d4f0a3c4c210/26-6a5af2b3399e9.webp' /></p><p>மேலும், சிறைச்சாலை அதிகாரிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் அவர்களின்
நலன்புரி விடயங்கள் குறித்தும் இதன்போது ஜனாதிபதி விசேட கவனம் செலுத்தினார்.
</p><p>
ஜனாதிபதி ஒருவருடன் நேரடியாகத் தமது பிரச்சினைகள் குறித்துக்
கலந்துரையாடுவதற்கு கிடைத்த முதலாவது சந்தர்ப்பம் இதுவெனச் சுட்டிக்காட்டிய
சிறைச்சாலை அதிகாரிகள், அதற்காக ஜனாதிபதிக்குத் தமது நன்றியைத் தெரிவித்தனர்.
</p><p>
நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, தொழில்
அமைச்சரும் நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சருமான அனில் ஜயந்த
பெர்னாண்டோ, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரோஷன் கமகே, நீதி மற்றும்
தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் செயலாளர் அயேஷா ஜினசேன, சிறைச்சாலைகள் ஆணையாளர்
நாயகம் பிரசாத் ஹேமந்த குமார, சிறைச்சாலைகள் ஆணையாளர் (புனர்வாழ்வு) எஸ்.கே.
பல்லெதென்ன, சிறைச்சாலைகள் ஆணையாளர் (செயற்பாடுகள் மற்றும் புலனாய்வு) ஏ.சி.
கஜநாயக்க உள்ளிட்ட சிறைச்சாலைத் திணைக்கள அதிகாரிகள் பலர் இந்த நிகழ்வில்
கலந்துகொண்டனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-18T03:39:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மர்ம முடிச்சுக்களுடன் சி. டி. விக்ரமரத்னவின் மரணம் - துப்பாக்கி கொடுத்த அதிகாரி பரபரப்பு வாக்குமூலம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/details-revealed-on-cd-wickramaratne-s-death-1784341488"></link>
            <id>https://ibctamil.com/article/details-revealed-on-cd-wickramaratne-s-death-1784341488</id>
            <summary type="text">முன்னாள் காவல்துறை மா அதிபர் சி. டி. விக்ரமரத்ன, மாலபே தலாஹேனவில் உள்ள தனது வீட்டில் வைத்து துப்பாக்கியால் சுட்டு உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் தொடர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் காவல்துறை மா அதிபர் சி. டி. விக்ரமரத்ன, மாலபே தலாஹேனவில் உள்ள தனது வீட்டில் வைத்து துப்பாக்கியால் சுட்டு உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் தொடர்பில் மேலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளது.</p><p>முன்னாள் காவல்துறை மா அதிபரின் பாதுகாப்பிற்காக இரண்டு காவல்துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருந்தனர். அந்தச் சம்பவத்தின் போது அவர்களில் ஒருவர் கடமையில் இருந்தார்.</p><p>

</p><p>
</p><p>
விக்ரமரத்ன தன்னைத்தானே சுட்டுக்கொள்ளப் பயன்படுத்திய கைத்துப்பாக்கி, காவல்துறை திணைக்களத்தால் அவரது பாதுகாப்பு அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டது என்றும் தெரிவிக்கப்படுகின்றது.</p><h2>அதிகாரி வாக்குமூலம்</h2><p>இவ்வாறான பின்னணியில், முன்னாள் காவல்துறைமா அதிபர் சி. டி. விக்ரமரத்னவின் பாதுகாப்பு காவல்துறை அதிகாரி வாக்குமூலம் அளித்துள்ளார்.</p><p>உடற்பயிற்சி செய்வதற்காக தனது அறையை விட்டு வெளியே வந்த அவர், அங்கிருந்த தனது பாதுகாப்பு அதிகாரியிடம் கைத்துப்பாக்கியைக் கேட்டுப் பெற்று தன்னை தானே துப்பாக்கியால் சுட்டதாக பாதுகாப்பு அதிகாரி காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார்.
</p><p>
“நேற்று காலை 7.00 மணியளவில், சர், உடற்பயிற்சி செய்யத் தயாராகி அறையை விட்டு வெளியே வந்து, எந்த துப்பாக்கியை பயன்படுத்துகிறாய் என என்னிடம் கேட்டார். </p><p>நான் எனது கைத்துப்பாக்கியின் மேகசினை கழற்றிவிட்டு அவரிடம் கொடுத்தேன். அந்த மேகசினையும் என்னிடம் கேட்டு வாங்கிக்கொண்டார். </p><p>அதன் பின்னர் ஒரு தண்ணீர் போத்தல் எடுத்து வருமாறு என்னிடம் கூறினார். நான் அதை எடுக்க சமையலறைப் பகுதிக்குச் சென்றபோது, வெடிப்பு சத்தம் கேட்டது. </p><p>நான் ஓடி வந்து பார்த்தபோது, துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் கீழே விழுந்து கிடந்தார்” என முன்னாள் காவல்துறைமா அதிபர் சி. டி. விக்ரமரத்னவின் பாதுகாப்பு காவல்துறை அதிகாரி வாக்குமூலம் அளித்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-07-18T03:38:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Fathima</name>
            </author>
            <title type="text"><![CDATA[எஜமானை காப்பாற்றி நல்ல பாம்புடன் சண்டை: உயிரை விட்ட நாய்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/dog-sacrifices-life-fighting-a-snake-1784345717"></link>
            <id>https://ibctamilnadu.com/article/dog-sacrifices-life-fighting-a-snake-1784345717</id>
            <summary type="text">தமிழகத்தில் எஜமானின் குடும்பத்தினரை காப்பாற்ற உயிரை விட்ட நாயின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கன்னியாகுமரியின் தக்கலை அருகே பிரம்மபுரம் பகுதிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழகத்தில் எஜமானின் குடும்பத்தினரை காப்பாற்ற உயிரை விட்ட நாயின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><p>கன்னியாகுமரியின் தக்கலை அருகே பிரம்மபுரம் பகுதியில் வசித்து வருபவர் விகேஷ்(வயது 35), திருவனந்தபுரத்தில் பணியாற்றி வருகிறார்.
</p><p>
இவரது மனைவி காயத்ரி, 2 குழந்தைகள் இருக்கின்றனர், இவர்களுடன் காயத்ரியின் தாயாரும் உடன் இருக்கிறார்.

இவர்கள் சிஞ்சான் என்ற 2 வயது நாய் ஒன்றை செல்லமாக வளர்த்து வருகின்றனர்.</p><p>

நேற்று முன்தினம் மாலை காயத்ரியின் தாயார் இரவு உணவு சமைப்பதற்காக பொருட்களை எடுத்துக்கொண்டிருந்தார், அப்போது அந்த இடத்தில் 7 அடி நீளமுள்ள நல்ல பாம்பு படமெடுத்து நின்றது.
</p><p>
இதைப்பார்த்து அவர் கூச்சலிட வீட்டில் அனைவரும் வந்து விட்டனர், சிஞ்சான் ஓடி வந்து பாம்பை கவ்வி பிடிக்க முயன்றது.
</p><p>
பாம்பு சிஞ்சானை கடிக்க சண்டையில் பாம்பை இரண்டு துண்டாக்கிவிட்டது, சிறிது நேரத்தில் சிஞ்சான் மயங்கி இறந்துவிட்டது.
</p><p>
எஜமான் குடும்பத்தினரை காப்பாற்றுவதற்காக உயிரை விட்ட சிஞ்சானின் செயல் நெகிழ்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.<br></p>]]></content>
            <updated>2026-07-18T03:37:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[சீனாவில் ஏற்பட்ட திடீர் நிலச்சரிவு: 8 பேர் உயிரிழப்பு, டஜன் கணக்கானோர் மாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/china-landslides-8-dead-several-missing-1784345745"></link>
            <id>https://news.lankasri.com/article/china-landslides-8-dead-several-missing-1784345745</id>
            <summary type="text">சீனாவில் ஏற்பட்ட திடீர் நிலச்சரிவில் இதுவரை 8 பேர் வரை உயிரிழந்துள்ளனர். சீனாவில் நிலச்சரிவுவெள்ளிக்கிழமை தென்மேற்கு சீனாவின் சோங்கிங் நகரின் பெங்ஷுய்...</summary>
            <content type="html"><![CDATA[<p>சீனாவில் ஏற்பட்ட திடீர் நிலச்சரிவில் இதுவரை 8 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.</p><h2> சீனாவில் நிலச்சரிவு</h2><p>வெள்ளிக்கிழமை தென்மேற்கு சீனாவின் சோங்கிங் நகரின் பெங்ஷுய் மாவட்டத்தில் உள்ளூர் நேரப்படி காலை 9.10 மணியளவில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.</p><p> இந்த நிலச்சரிவில் 8 பேர் வரை உயிரிழந்துள்ளனர். 34 பேர் வரை காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1e924613-eb7f-47f4-bfa1-50d9f3dec1df/26-6a5af49260a66.webp' /></p><p> நிலச்சரிவில் சிக்கிக்கொண்ட 18 பேர் மீட்கப்பட்டதாகவும், அதில் 8 பேர் உயிரிழந்து விட்டதாகவும் மாவட்ட தலைவர் ரென் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.</p><p> இந்த கோர சம்பவத்தை தொடர்ந்து சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் விரிவான ஆய்வுகளை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டுள்ளார்.</p><p></p><h2> மீட்பு பணிகள் தீவிரம்</h2><p>நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில் 800க்கும் மேற்பட்ட மீட்பு படையினர் தீவிர பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருப்பதாக அங்குள்ள ஊடகம் தகவல் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8fc51f00-d48c-43e8-9a18-ee061a003525/26-6a5af4931070b.webp' /></p><p> மேலும் மலையடிவாரத்தில் அமைந்திருந்த வீடுகள் மற்றும் வணிக கடைகள் மண் மற்றும் பாறை சரிவில் மூடியிருப்பதை CCTV வெளியிட்ட காட்சிகளில் பார்க்க முடிகிறது.</p><p> மீட்பு மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் 50 மில்லியன் யுவான் தொகையை இயற்கை பேரிடர் நிவாரண நிதியாக அரசு ஒதுக்கியுள்ளது என்று நிதி மற்றும் அவசரகால மேலாண்மை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-18T03:35:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பு மாநகரசபை ஊழல் விசாரணை ; ரோசி சேனாநாயக்க வாக்குமூலம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/rosy-gives-statement-in-corruption-probe-1784345118"></link>
            <id>https://jvpnews.com/article/rosy-gives-statement-in-corruption-probe-1784345118</id>
            <summary type="text">கொழும்பு மாநகரசபையில் இடம்பெற்றுள்ளதாக கருதப்படும் ஊழல் மற்றும் மோசடிகள் தொடர்பில் தேடிப்பார்ப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழுவில் கெ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">கொழும்பு மாநகரசபையில் இடம்பெற்றுள்ளதாக கருதப்படும் ஊழல் மற்றும் மோசடிகள் தொடர்பில் தேடிப்பார்ப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழுவில் கொழும்பு மாநகரசபையின் முன்னாள் மேயர் ராேசி சேனாநாயக்க வெள்ளிக்கிழமை வாக்குமூலம் வழங்கியிருந்தார். </p><p style="text-align: justify; ">ஆணைக்குழுவின் செயலாளரால் விடுக்கப்பட்ட உத்தியோகபூர்வ அறிவித்தலுக்கு அமையவே அவர் சமூகமளித்திருந்தார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6dd2b917-6d2f-4826-b4b0-a37502bdbfb3/26-6a5af220179ff.webp' /></p><h2 style="text-align: justify; ">வர்த்தமானி அறிவித்தல்</h2><p style="text-align: justify; "> 

2022 ஆம் ஆண்டு நாட்டில் நிலவிய கடுமையான பொருளாதார நெருக்கடியின் போது, கொழும்பில் உள்ள குறைந்த வருமானம் பெறும் மற்றும் தேவையுடைய மக்களுக்கு சதொச மூலம் அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்காக வழங்கப்பட்ட வவுச்சர்களை விநியோகித்ததில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி மோசடி தொடர்பில் வாக்குமூலம் ஒன்றை பெற்றுக்கொள்ளவே இவ்வாறு அவர் அழைக்கப்பட்டிருந்தார்.
</p><p style="text-align: justify; ">
விசாரணை முடிவடைந்த பின்னர் அவர் வெளியில் வந்து இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், தொற்றுநோய் மற்றும் பொருளாதார நெருக்கடியின் போது, நாங்கள் சதொச மூலம் ஏழை மக்களுக்கு உணவு வவுச்சர்களை வழங்கினோம்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">அந்த வேலைத்திட்டம் குறித்து அவர்களுக்கு இருந்த கேள்விகளுக்குப் பதிலளிப்பதற்காகவே என்னை அழைத்திருந்தனர் என்றார்.</p><p style="text-align: justify; ">

கொழும்பு மாநகர சபையில் கடந்த 15 வருட காலத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடி செயற்பாடுகளால் அரசாங்கத்தின் சொத்துக்களுக்கும் வருமானத்திற்கும் ஏற்பட்ட பாரிய நஷ்டங்கள் குறித்து விசாரணை நடத்துவதற்காக, ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவினால் இந்த விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு நியமிக்கப்பட்டது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
1948 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க விசாரணை ஆணைக்குழுக்கள் சட்டத்தின் பிரகாரம், 2025 டிசம்பர் 30 ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் மூலம் இது ஸ்தாபிக்கப்பட்டது. </p><p style="text-align: justify; ">கொழும்பு 3. காலி வீதியில் அமைந்துள்ள இந்த ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ சேவைக்காலம் கடந்த ஜூன் மாதம் 29ஆம் திகதியுடன் நிறைவடைய இருந்த போதும் விசாரணை நடவடிக்கைகளை மேலும் விரிவாக்குவதற்காக அதன் சேவைக்காலத்தை இந்த வருடம் டிசம்பர் 31 ஆம் திகதி நீடிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-18T03:25:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜனனி,சக்தி எடுத்த ஷாக்கிங் முடிவு, தடுக்க நினைக்கும் ராவணன்... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/ethirneechal-thodargiradhu-serial-promo-18-july-1784344343"></link>
            <id>https://cineulagam.com/article/ethirneechal-thodargiradhu-serial-promo-18-july-1784344343</id>
            <summary type="text">எதிர்நீச்சல் தொடர்கிறதுசன் தொலைக்காட்சியில் என்னடா கதை என ரசிகர்கள் புலம்பும் அளவிற்கு&amp;nbsp;எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் ஒளிபரப்பாகிறது.இயக்குனர் எ...</summary>
            <content type="html"><![CDATA[<h2>எதிர்நீச்சல் தொடர்கிறது</h2><p>சன் தொலைக்காட்சியில் என்னடா கதை என ரசிகர்கள் புலம்பும் அளவிற்கு&nbsp;எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் ஒளிபரப்பாகிறது.</p><p>இயக்குனர் எப்படிபட்ட கருவோடு இந்த சீரியலை உருவாக்க தொடங்கினார் என்பதை மறந்துவிட்டாரா என ரசிகர்கள் தினமும் புலம்பி வருகிறார்கள். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/425e0839-55b8-4923-a3a8-50db1ed3f603/26-6a5af1316b2ef.webp' /></p><p>நியாயத்திற்காக போராடும் ஜனனியை நாளுக்கு நாள் டம்மியாக்கி, வில்லத்தனம் செய்யும் குணசேகரன், ராவணன் ஆகியோரின் கை ஓங்கியபடி கதையை அமைத்த வண்ணம் உள்ளார்.&nbsp;</p><p>குணசேகரன் வீட்டிற்கு வந்த ராவணன் ஒவ்வொரு நாளும் ஒரு பிளான் போட்டு வீட்டை தனது கைக்குள் வைத்து வருகிறார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/80042adf-4c14-4b12-b6f3-81a329ef102d/26-6a5af132337a1.webp' /></p><h2>புரொமோ</h2><p>கடைசி எபிசோடில், வீட்டில் கதிர்-ஞானம் ஆரம்பிக்கும் புதிய தொழிலுக்கான பூஜை நடக்கிறது. அதில் விசாலாட்சி கலந்துகொள்ள மருமகள்கள் கேட்டுக் கொண்டதால் பூஜை செய்து மகன்களை வாழ்த்தினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5cc6635c-782f-4152-b6d4-ee1d416d7835/26-6a5af13087663.webp' /></p><p>இப்போது இன்று ஒளிபரப்பாக போகும் எபிசோடின் புரொமோ வந்துள்ளது. அதில், விசாலாட்சி நந்தினி-ரேணுகாவிடம் நாங்கள் 3 பேரும் வெளியே போகிறோம் என கூறி ஷாக் கொடுக்கிறார்.</p><p>பின் ராவணனுக்கு இந்த விஷயம் தெரியவர அவர்களை வெளியே போக விடாமல் தடுக்க வேண்டும் என குணசேகரனுக்கு ஐடியா கொடுக்கிறார். இதோ புரொமோ,</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/dQr0jUkBrX8" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-07-18T03:21:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[போரில் உயிரிழந்த வீரர்களின் உடலை பரிமாறிக் கொண்ட உக்ரைன் -ரஷ்யா: இதுவரை தெரியவராத உண்மை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/ukraine-and-russia-exchange-dead-soldiers-body-1784278170"></link>
            <id>https://news.lankasri.com/article/ukraine-and-russia-exchange-dead-soldiers-body-1784278170</id>
            <summary type="text">போரில் உயிரிழந்த வீரர்களின் உடலை உக்ரைன் ரஷ்யா ஆகிய இரு நாடுகளும் பரிமாற்றம் செய்து கொண்டுள்ளனர். வீரர்களின் உடல் பரிமாற்றம்உக்ரைன் ரஷ்யா இடையிலான போர...</summary>
            <content type="html"><![CDATA[<p>போரில் உயிரிழந்த வீரர்களின் உடலை உக்ரைன் ரஷ்யா ஆகிய இரு நாடுகளும் பரிமாற்றம் செய்து கொண்டுள்ளனர்.</p><h2> வீரர்களின் உடல் பரிமாற்றம்</h2><p>உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கைகள்&nbsp; நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.</p><p>இந்த போர் நடவடிக்கையில் உயிரிழந்த வீரர்களின் உடல்களை இருநாடுகளும் அவ்வப்போது பரிமாறிக் கொள்ளும் நிலையில், தற்போது மீண்டும் ஒருமுறை போர்க்களத்தில் உயிரிழந்த வீரர்களின் உடல்களை இருநாடுகளும் முறைப்படி பரிமாறிக் கொண்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c26c8114-4a92-479f-992e-992dd5f72f00/26-6a59ec9c0fb34.webp' /></p><p> இந்த பரிமாற்றத்தில் கிட்டத்தட்ட 501 வீரர்களின் உடல்களை மீட்டு இருப்பதாக உக்ரைனிய அரசு தரப்பு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.</p><p> அதே நேரத்தில் 31 வீரர்களின் உடல்களை உக்ரைனிடம் இருந்து பெற்று இருப்பதாக ரஷ்ய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளது.</p><p></p><p> 2025ம் ஆண்டு தொடக்கத்தில் இருந்து இருநாடுகளும் திரும்ப பெறும் உடல்களின் எண்ணிக்கையில் மிகப்பெரிய மாற்றம் காணப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cab62840-53f4-467e-b15b-0f123a6d8f68/26-6a59ec9cb25a8.webp' /></p><p> உக்ரைனிய அரசு இந்த ஆண்டு மட்டும் கிட்டத்தட்ட 21,000 வீரர்களின் உடல்களை ரஷ்யாவிடம் இருந்து மீட்டுள்ளது.</p><p> ஆனால், இந்த ஆண்டில் ரஷ்யா சுமார் 600 உடல்களை மட்டுமே திரும்ப பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.</p><p> கடந்த 2022ம் ஆண்டு பிப்ரவரியில் தொடங்கிய போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை. அதே வேளையில் இருநாடுகளும் தங்கள் தரப்பு உயிரிழப்புகள் குறித்த எந்தவொரு அதிகாரப்பூர்வமான தகவல்களையும் இதுவரை வெளியிடாமல் ரகசியமாகவே வைத்துள்ளனர்.</p><p>இதனால் இந்த போரில் ஏற்பட்டுள்ள உண்மையான உயிர் சேதம் குறித்த எந்தவொரு தகவலும் வெளிப்படையாக கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-18T03:20:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[செம்மணியில் மீட்கப்பட்ட மோதிரம் - விரையும் ஐரோப்பியத் தூதுவர் குழு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/european-delegation-visit-chemmani-mass-grave-1784342697"></link>
            <id>https://ibctamil.com/article/european-delegation-visit-chemmani-mass-grave-1784342697</id>
            <summary type="text">யாழ்ப்பாணம், செம்மணிப் பகுதியில் உள்ள மனிதப் புதைகுழியைப் பார்வையிட நான்கு
ஐரோப்பிய நாடுகளினதும் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தினதும் தூதுவர்கள் குழு
வர...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம், செம்மணிப் பகுதியில் உள்ள மனிதப் புதைகுழியைப் பார்வையிட நான்கு
ஐரோப்பிய நாடுகளினதும் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தினதும் தூதுவர்கள் குழு
வருகை தரவுள்ளது.
</p><p>
இந்த மாதம் 22 ஆம் திகதி புதன்கிழமை பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, நெதர்லாந்து
மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றின் தூதுவர்களே செம்மணி மனிதப்
புதைகுழியைப் பார்வையிடுவர் எனத் தெரியவருகின்றது.
</p><p>யாழ்ப்பாணத்துக்கு எதிர்வரும் 21 ஆம் திகதி வருகை தரும் மேற்படி குழுவினர், 22
ஆம் திகதி செம்மணி மனிதப் புதைகுழியைப் பார்வையிடுவதற்கு யாழ்ப்பாணம் நீதிவான்
நீதிமன்றத்தின் அனுமதி கோரி விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>சேதமடைந்த மோதிரம்</h2><p>மேற்படி குழுவினர் யாழ்ப்பாணத்தில் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள்
மற்றும் சிவில் செயற்பாட்டாளர்களையும் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளனர்
எனவும் அறியமுடிகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/93b78f1f-1ad8-435b-b835-485c1e5a627a/26-6a5aebc356510.webp' /></p><p>இதேநேரம், செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை 56 நாட்கள் முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், 35ஆவது நாளான&nbsp;நேற்று வெள்ளிக்கிழமை புதிதாக 11 என்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.</p><p>இதன்போது சேதமடைந்த மோதிரம் ஒன்றும் விரல் எலும்புடனான செப்பிலான மோதிரம் ஒன்றும் குவியலாக இரண்டு தொகுதி என்புகூடுகளும் அடையாளம் காணப்பட்டுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-18T03:19:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[மண்மேடு சரிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/one-dead-after-earth-embankment-collapse-1784344142"></link>
            <id>https://jvpnews.com/article/one-dead-after-earth-embankment-collapse-1784344142</id>
            <summary type="text">அலவத்துகொட, படுகொட பகுதியில் மண்மேடு ஒன்று சரிந்து விழுந்ததில் நபர் ஒருவர் நேற்று (17) உயிரிழந்துள்ளார். 

வீடொன்றை அமைப்பதற்காக வெட்டப்பட்டிருந்த ந...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">அலவத்துகொட, படுகொட பகுதியில் மண்மேடு ஒன்று சரிந்து விழுந்ததில் நபர் ஒருவர் நேற்று (17) உயிரிழந்துள்ளார். </p><p style="text-align: justify; ">

வீடொன்றை அமைப்பதற்காக வெட்டப்பட்டிருந்த நிலப்பகுதியில், அடித்தளத்திற்காக குழி தோண்டிக்கொண்டிருந்த போது இந்த மண்மேடு சரிந்து விழுந்துள்ளதாக இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/08eaabe9-b3c9-4ee4-841a-f50bf20d2a43/26-6a5aee503acbd.webp' /></p><h2 style="text-align: justify; ">மேலதிக விசாரணை</h2><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

அனர்த்தத்தின் பின்னர் அவர் அங்கிருந்து மீட்கப்பட்டு அகுரணை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும், கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்துள்ளார்.</p><p style="text-align: justify; "> 

இவ்வாறு உயிரிழந்தவர் அலவத்துகொட பகுதியைச் சேர்ந்த 49 வயதுடையவர் ஆவார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> 

சடலம் கண்டி வைத்தியசாலையின் பிரேத அறையில வைக்கப்பட்டுள்ளதுடன், அலவத்துகொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-18T03:09:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[சாவகச்சேரியின் புதிய பிரதி நகரபிதா தெரிவு 28ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/new-deputy-mayor-of-chavakachcheri-postponed-28th-1784342638"></link>
            <id>https://tamilwin.com/article/new-deputy-mayor-of-chavakachcheri-postponed-28th-1784342638</id>
            <summary type="text">யாழ்.சாவகச்சேரி நகர சபையின் பிரதி நகர பிதா கிஷோரை அந்தப் பதவியில் இருந்து
விலக்கி வடக்கு மாகாண ஆளுநர் வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராகத்
த...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்.சாவகச்சேரி நகர சபையின் பிரதி நகர பிதா கிஷோரை அந்தப் பதவியில் இருந்து
விலக்கி வடக்கு மாகாண ஆளுநர் வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராகத்
தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு மீதான விசாரணை வடக்கு மாகாண ஆளுநர் மற்றும்
எதிர்மனுதாரர்களின் பதில் மனு தாமதமாகின்ற காரணத்தால் எதிர்வரும் 24ஆம்
திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
</p><p>
தங்கள் தரப்பு பதில் மனு தாக்கல் செய்கின்றமை காலதாமதமாகின்ற காரணத்தால் புதிய
பிரதி நகர பிதாவைத் தெரிவு செய்வதற்கு வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்ட 21 ஆம்
திகதியை 28 ஆம் திகதிக்குத் தாங்கள் ஒத்திவைப்பதற்கு எதிர் மனுதாரர் தரப்பு நேற்று(17) நீதிமன்றத்தில் பொறுப்பேற்றுக் கொண்டது.</p><p></p><h2>மனு தாக்கல் செய்வதற்கு</h2><p>முன்னதாக இந்த வழக்கின் விசாரணை நேற்று யாழ்.மேல் நீதிமன்றத்தில் நடைபெறுவதாக
இருந்தது. </p><p>ஆயினும் எதிர்மனுதாரர் தரப்பில் முன்னிலையான அரச சட்டத்தரணி தங்கள்
தரப்பில் பதில் மனு தாக்கல் செய்வதற்கு சில ஆவணங்களைப் பெற வேண்டி இருப்பதால்
இன்னும் கால அவகாசம் வேண்டும் என்று கோரினார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/042c5f96-71f7-4339-9417-3ad4538c3a96/26-6a5aea0c90e7b.webp' /></p><p>
அதற்கு நீதிமன்றம் அனுமதி அளித்து எதிர்வரும் 23ஆம் திகதிக்கு முன்னர் பதில்
மனுவைத் தாக்கல் செய்யும்படியும், 24ஆம் திகதி மனு மீதான விசாரணை நடைபெறும்
என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.</p><p>

யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி சி.சதீஸ்கரன் முன்னிலையில் இந்த வழக்கு நேற்று எடுத்துக்கொள்ளப்பட்ட போது விசாரணைக்கு இந்தத் திகதி நிர்ணயிக்கப்பட்டது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-18T02:57:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[மகனின் திருமண வாழ்க்கையால் விரக்தி ; மார்பில் சுட்டு உயிர் மாய்த்த முன்னாள் பொலிஸ் மா அதிபர் ; வெளிவந்த பகீர் தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/police-chief-death-shocking-updates-1784343385"></link>
            <id>https://jvpnews.com/article/police-chief-death-shocking-updates-1784343385</id>
            <summary type="text">முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன மாலபேயில் உள்ள அவரது வீட்டில் நேற்று (17) தன்னை தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டார்.

விக்ரமரத்ன தனது தனி...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன மாலபேயில் உள்ள அவரது வீட்டில் நேற்று (17) தன்னை தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டார்.
</p><p style="text-align: justify; ">
விக்ரமரத்ன தனது தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரியின் துப்பாக்கியால் தனது மார்பில் சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/327447eb-c391-442a-a507-45dc97ce98df/26-6a5aeb5b9229e.webp' /></p><h2 style="text-align: justify; ">தனிப்பட்ட காரணம்</h2><p> </p><p style="text-align: justify; ">

தனிப்பட்ட காரணம் நிமித்தம் அவர் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதுடன், இந்த சம்பவம் தொடர்பாக இரண்டு பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன. </p><p style="text-align: justify; ">

மாலபே, தலாஹேன பகுதியில் அமைந்துள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் வீட்டில் நேற்று காலை 6.15 மணியளவில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.</p><p style="text-align: justify; "> 

காலை உடற்பயிற்சிக்காக செல்வதற்கு முன்னர் வீட்டிற்கு வெளியே வந்த விக்ரமரத்ன, அங்கிருந்த நாற்காலி ஒன்றில் அமர்ந்திருந்ததாகக் கூறப்படுகிறது.</p><p style="text-align: justify; "> 

அதன் பின்னர், தனது தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரியை அழைத்து அவரது பிஸ்டல் ரக துப்பாக்கியை விக்ரமரத்ன கேட்டுப் பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.</p><p style="text-align: justify; "> 

அந்த சந்தர்ப்பத்தில் அவர் சம்பந்தப்பட்ட அதிகாரியிடம், "துப்பாக்கியைக் கொண்டு வாருங்கள். அது புதியதா? அல்லது பழையதா? என்று பார்க்க வேண்டும்" எனக் கூறியுள்ளார்.</p><p style="text-align: justify; "> 

அதன் பின்னர், தனக்கு ஒரு தண்ணீர் போத்தலை எடுத்து வருமாறு கூறி, விக்ரமரத்ன தனது தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரியை வீட்டிற்குள் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. </p><p style="text-align: justify; ">

அவர் சென்ற பின்னர், விக்ரமரத்ன அந்த துப்பாக்கியால் தனது மார்பில் சுட்டுக் கொண்டுள்ளதாக தகவல்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர். 

உடனடியாக செயற்பட்ட வீட்டிலிருந்தவர்கள், அவரை விரைவாக கொழும்பு கிழக்கு வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். </p><p style="text-align: justify; ">

வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போதே அவர் உயிரிழந்திருந்ததாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன. </p><p style="text-align: justify; ">விக்ரமரத்னவின் மகனின் மனைவி, பிரிந்து செல்வதற்காக விவாகரத்து வழக்குத் தாக்கல் செய்திருந்ததாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையில், அந்த மகனின் மனைவி தான் குடும்ப வன்முறைக்கு ஆளானதாகக் கூறி சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தில் புகார் அளித்திருந்தார்.</p><p style="text-align: justify; ">

அங்கு சிறுவர் மற்றும் மகளிர் பணியகம் இந்த சம்பவம் தொடர்பாக மேற்கொண்ட விசாரணைகள் குறித்து விக்ரமரத்ன மிகுந்த மனவேதனையில் இருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. </p><p style="text-align: justify; ">

தான் பொலிஸ் மா அதிபர் பதவியை வகித்த பொலிஸ் திணைக்களத்தின் பணியகம், தனது மகனின் பிரச்சினையில் நடந்துகொண்ட விதம் குறித்து, உயிரிழந்த முன்னாள் பொலிஸ்மா அதிபர் தனது நெருங்கிய நண்பர்கள் சிலரிடம் மிகுந்த கவலையுடன் பேசியிருந்ததாகவும் கூறப்படுகிறது. </p><p style="text-align: justify; ">

விக்ரமரத்னவின் வீட்டிற்குச் சென்ற கடுவலை நீதவான் அருண இந்திரஜித் புத்ததாச, சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டார். 

அதேபோல், பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவும் விக்ரமரத்னவின் வீட்டிற்குச் சென்று நிலைமைகளை பார்வையிட்டார்.</p>]]></content>
            <updated>2026-07-18T02:56:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Manchu</name>
            </author>
            <title type="text"><![CDATA[நடிகை குஷ்புவின் புதிய ஸ்டைல்... மாமியாரான பின்பும் இப்படியா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/actress-kushboo-latest-new-style-photos-viral-1784294268"></link>
            <id>https://manithan.com/article/actress-kushboo-latest-new-style-photos-viral-1784294268</id>
            <summary type="text">நடிகை குஷ்பு மகளுக்கு திருமணம் செய்து வைத்த நிலையில் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.நடிகை குஷ்புதமிழ் சி...</summary>
            <content type="html"><![CDATA[<p>நடிகை குஷ்பு மகளுக்கு திருமணம் செய்து வைத்த நிலையில் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.</p><h2>நடிகை குஷ்பு</h2><p>தமிழ் சினிமாவில் வருஷம் 16 படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார் தான் நடிகை குஷ்பு. பின்பு பிரபுடன் நடித்த சின்னதம்பி திரைப்படம் மிகப்பெரிய திருப்பு முனையாக அமைந்தது.<br></p><p>பாலிவுட்டிலிருந்து தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி பல முன்னணி நடிகர்களுடன் நடித்து அசத்தியுள்ளார். தனது நடிப்பில் ஏகப்பட்ட சூப்பர்ஹிட் படங்களில் நடித்துள்ளார்.</p><p>முறைமாமன் படத்தில் நடித்த போது, அப்படத்தின் இயக்குனரான சுந்தர்.சி-யை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அவந்திகா, அனந்திகா என்று இரண்டு மகள்கள் உள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1d8b68f8-d388-4fa8-9699-3df090394292/26-6a5aeb770c870.webp' /></p><h2>மகளின் திருமணம்</h2><p>கடந்த மாதம் மூத்தமகள் அவந்திகாவிற்கும், ஷ்ரவன் சீனிவாசனுக்கும் திருமணம் நடைபெற்ற நிலையில், தற்போது மருமகனுக்கு மாமியாராக மாறியுள்ளார்.</p><p>எப்பொழுதும் கொழுகொழுவென இருந்து வந்த குஷ்பு தற்போது உடல்எடையைக் குறைத்து இளம்நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் வகையில் காணப்படுகின்றார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/80f24a54-33af-4ded-80bc-77346fb0089c/26-6a5aeb762198f.webp' /></p><p>இந்நிலையில் தற்போது புகைப்படம் ஒன்றினை பதிவிட்டுள்ளார். கருப்பு நிற உடையில், தலையில் கருப்பு நிற மங்கி கேப் அணிந்து ஒரு காலை தூக்கி மடித்து இளைஞர்கள் நிற்பது போன்று கெத்தாக போஸ் கொடுத்துள்ளார். இதனை அவதானித்த ரசிகர்கள் மாமியாராகிய பின்பும் குறையாத குஷ்புவின் ஸ்டைல் என்று கருத்தக்களை பதிவிட்டு வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ede54a19-b06b-43e9-90c3-cd49f43b4789/26-6a5ae86784e73.webp' /></p>]]></content>
            <updated>2026-07-18T02:43:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[முன்னாள் பொலிஸ் மா அதிபர் மரணம் - அருகிலிருந்த பாதுகாப்பு அதிகாரி பரபரப்பு வாக்குமூலம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/information-about-the-suicide-of-the-former-igp-1784338831"></link>
            <id>https://tamilwin.com/article/information-about-the-suicide-of-the-former-igp-1784338831</id>
            <summary type="text">முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி. டி. விக்ரமரத்ன, மாலபே தலாஹேனவில் உள்ள தனது வீட்டில் வைத்து துப்பாக்கியால் சுட்டு உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் தொடர்பில...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி. டி. விக்ரமரத்ன, மாலபே தலாஹேனவில் உள்ள தனது வீட்டில் வைத்து துப்பாக்கியால் சுட்டு உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் தொடர்பில் மேலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளது.
</p><p>
உடற்பயிற்சி செய்வதற்காக தனது அறையை விட்டு வெளியே வந்த அவர், அங்கிருந்த தனது பாதுகாப்பு அதிகாரியிடம் கைத்துப்பாக்கியைக் கேட்டுப் பெற்று தன்னை தானே துப்பாக்கியால் சுட்டதாக பாதுகாப்பு அதிகாரி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
</p><p>
“<b><i>நேற்று காலை 7.00 மணியளவில், சார், உடற்பயிற்சி செய்யத் தயாராகி அறையை விட்டு வெளியே வந்து, எந்த துப்பாக்கியை பயன்படுத்துகிறாய் என என்னிடம் கேட்டார். நான் எனது கைத்துப்பாக்கியின் மேகசினை கழற்றிவிட்டு அவரிடம் கொடுத்தேன். அந்த மேகசினையும் என்னிடம் கேட்டு வாங்கிக்கொண்டார். அதன் பின்னர் ஒரு தண்ணீர் போத்தல் எடுத்து வருமாறு என்னிடம் கூறினார். நான் அதை எடுக்க சமையலறைப் பகுதிக்குச் சென்றபோது, வெடிப்பு சத்தம் கேட்டது. நான் ஓடி வந்து பார்த்தபோது, துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் கீழே விழுந்து கிடந்தார்</i></b>” என முன்னாள் பொலிஸ்மா அதிபர் சி. டி. விக்ரமரத்னவின் பாதுகாப்பு பொலிஸ் அதிகாரி வாக்குமூலம் அளித்துள்ளார்.</p><p></p><p> </p><h2><b>

பாதுகாப்பு அதிகாரி வாக்குமூலம்</b></h2><p>முன்னாள் பொலிஸ் மா அதிபரின் பாதுகாப்பிற்காக இரண்டு பொலிஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருந்தனர். அந்தச் சம்பவத்தின் போது அவர்களில் ஒருவர் கடமையில் இருந்தார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3152b12e-0349-4ff4-a713-e59bf4d18f3e/26-6a5addf9c46b6.webp' /></p><p>விக்ரமரத்ன தன்னைத்தானே சுட்டுக்கொள்ளப் பயன்படுத்திய கைத்துப்பாக்கி, பொலிஸ் திணைக்களத்தால் அவரது பாதுகாப்பு அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டதாகும்.
</p><p>
முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி. டி. விக்கிரமரத்ன, தனது உடற்பயிற்சிகளை மேற்கொள்வதற்காக, மாலபே தலாஹேனவில் உள்ள தனது வீட்டிலுள்ள அறையிலிருந்து நேற்று காலை 7 மணியளவில் வெளியே வந்துள்ளார்.
</p><p>
விக்ரமரத்ன வீட்டின் வரவேற்பறையில் இருந்த தனது பாதுகாப்பு அதிகாரியிடம் கைத்துப்பாக்கியைக் கேட்டுப் பெற்றுள்ளார். </p><p>பின்னர், அந்தப் பாதுகாப்பு அதிகாரியைத் தண்ணீர் கொண்டு வருமாறு கூறி அந்த இடத்திலிருந்து வெளியேற்றிவிட்டு, தான் பெற்றுக்கொண்ட கைத்துப்பாக்கியால் தனது மார்புப் பகுதியில் சுட்டுக்கொண்டுள்ளார்.
</p><p>
துப்பாக்கிச் சூட்டுச் சத்தத்தைக் கேட்டு ஓடி வந்த பாதுகாப்பு அதிகாரி, விக்கிரமரத்ன கீழே விழுந்து கிடப்பதைக் கண்டுள்ளார். </p><p>சம்பவம் இடம்பெற்ற போது மனைவியும் இளைய மகனும் வீட்டிலிருந்தனர். அவர்கள் உடனடியாக அவரை முல்லேரியா வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றனர்.
</p><p>
முன்னாள் பொலிஸ் மா அதிபர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படும் போதே உயிரிழந்துள்ளதாக&nbsp; வைத்தியசாலைத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
</p><p>
இந்தச் சம்பவம் குறித்து அறிந்தது உயர் அதிகாரிகள் விசாரணைகளைத் தொடங்கினர். சி. டி. விக்கிரமரத்ன உயிரை மாய்த்துக்கொள்ள பயன்படுத்திய கைத்துப்பாக்கி வீட்டின் வரவேற்பறையில் கிடந்த நிலையில் பொலிஸாரினால் கண்டெடுக்கப்பட்டது.</p><p></p><p>
</p><h3><b>
திருமண உறவில் விரிசல் </b></h3><p>விக்ரமரத்னவின் ஒரு மகனின் திருமண உறவில் ஏற்பட்ட விரிசல் காரணமாக அவர் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/57a2865b-287f-432f-ad55-c5681ba9efd3/26-6a5addfa74cfd.webp' /></p><p>ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் சில மாதங்களுக்கு முன்பு அவரிடம் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் வாக்குமூலம் பெற்றிருந்தது.

சி. டி. விக்ரமரத்ன ஏன் இவ்வாறானதொரு முடிவை எடுத்தார் என்பதற்கான காரணம் நேற்று மாலை வரை கண்டறியப்படவில்லை.
</p><p>
ஈஸ்டர் தாக்குதலில் சாரா ஜேஸ்மின் உயிரிழந்துவிட்டதாக டி.என்.ஏ. பரிசோதனைகள் மூலம் மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்துமாறு கடந்த அரசாங்கத்தின் முக்கியஸ்தர் ஒருவர் தமக்கு அழுத்தம் கொடுத்ததாக, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் அவர் அளித்த வாக்குமூலத்தில் குறிப்பிடப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
</p><p>
சாரா ஜேஸ்மின் சாய்ந்தமருது பகுதியில் குண்டுவெடிப்பில் உயிரிழந்தது ஆரம்ப கட்ட விசாரணைகளில் உறுதியாகாத நிலையில், மேற்கொள்ளப்பட்ட மூன்றாவது டி.என்.ஏ. பரிசோதனையில் அவர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது. </p><p>

குறித்த மூன்றாவது டி.என்.ஏ. பரிசோதனை, சி. டி. விக்ரமரத்ன பொலிஸ் மா அதிபராக இருந்த காலப்பகுதியிலேயே மேற்கொள்ளப்பட்டது.

அக்காலப்பகுதியில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பிரதி பொலிஸ் மா அதிபராக பிரசாத் ரணசிங்க கடமையாற்றினார். </p><p>கடந்த 2019 ஈஸ்டர் தாக்குதலுக்குப் பின்னர், அன்றைய பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர இடைநீக்கம் செய்யப்பட்டதையடுத்து, பதில் பொலிஸ் மா அதிபராகச் சந்தன விக்ரமரத்ன நியமிக்கப்பட்டார்.
</p><p>
2020 ஆம் ஆண்டு நவம்பர் 25 அன்று பொலிஸ் மா அதிபராக நிரந்தரமாக்கப்பட்ட அவர், 2023 ஆம் ஆண்டு நவம்பர் 25 வரை அந்தப் பதவியில் பணியாற்றினார்.
</p><p>
ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக இருந்த காலத்தில் அவருக்கு மூன்று முறை சேவை நீடிப்பு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-18T02:33:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[என்னோட ஆள் அஜித் தான்!! வெளிப்படையாக பேசிய நடிகை மீனா..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/meena-picks-ajith-as-the-most-handsome-hero-1784293993"></link>
            <id>https://viduppu.com/article/meena-picks-ajith-as-the-most-handsome-hero-1784293993</id>
            <summary type="text">மீனாதென்னிந்திய சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்து தற்போதும் நடித்து வருபவர் தான் நடிகை மீனா. சமீபத்தில் திரிஷ்யம் 3 படத்திலும் நடித்துள்ளார் மீனா. இண...</summary>
            <content type="html"><![CDATA[<h2>மீனா</h2><p>தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்து தற்போதும் நடித்து வருபவர் தான் நடிகை மீனா. சமீபத்தில் திரிஷ்யம் 3 படத்திலும் நடித்துள்ளார் மீனா. </p><p>இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் மீனா, தன்னுடைய தோழிகளும் நடிகைகளுடனும் சேர்ந்து அரட்டையடிப்பது வழக்கமாக வைத்து வருகிறார். அதிலும் அவர்களுடன் நகைச்சுவையான ரீல்ஸ் வீடியோக்களை பகிர்ந்தும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருவார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2e6b3ad0-9846-4d75-814b-6a0dbddf6c8e/26-6a5a2a6bb74e4.webp' /></p><p>சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் தொகுப்பாளினி மீனாவிடம், இந்த ஜெனரேஷனில் அழகான ஹீரோ யார்? என்ற கேள்வியை கேட்டுள்ளார். </p><p>அதற்கு மீனா, எனக்கு நியாபகத்துக்கு வரவில்லை, என்னுடைய ஆள் அஜித்தான் நியாபகத்துக்கு வருகிறார். இப்போதும் கூட அவர் செம்ம அழகாக இருக்கிறார் என்று கூறியது ரசிகர்கள் மத்தியில் அதிக கவனத்தை பெற்று வருகிறது.</p>]]></content>
            <updated>2026-07-18T02:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஃபிஃபா வரலாற்றில் முதல்முறை சாம்பியன்ஷிப் மோதிரங்கள் - இறுதிப் போட்டியில் பங்கேற்கும் டிரம்ப்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/world-cup-winners-receive-championship-rings-1784339355"></link>
            <id>https://ibctamil.com/article/world-cup-winners-receive-championship-rings-1784339355</id>
            <summary type="text">உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில், வெற்றி பெறும் அணிக்கு முதல் முறையாக &quot;சாம்பியன்ஷிப் மோதிரங்கள்&quot; வழங்கப்படவுள்ளதாக ஃபிஃபா அறிவித்துள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில், வெற்றி பெறும் அணிக்கு முதல் முறையாக "சாம்பியன்ஷிப் மோதிரங்கள்" வழங்கப்படவுள்ளதாக ஃபிஃபா அறிவித்துள்ளது.</p><p>திங்கட்கிழமை அதிகாலை நியூயார்க்கிலுள்ள மெட்லைஃப் மைதானத்தில் நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில், ஸ்பெயினும் அர்ஜென்டினாவும் மோதவுள்ளன.</p><p>அரையிறுதியில் பிரான்ஸை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய ஸ்பெயின் அணியும், இங்கிலாந்தை 2-1 என்ற கோல் கணக்கில் தோற்கடித்த அர்ஜென்டினா அணியும் மோதவுள்ளன.</p><p></p><h2>வரலாற்றில் முதன்முறையாக</h2><p>அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இறுதிப் போட்டியில் பங்கேற்று உலகக் கோப்பையை வழங்குவார் என வெள்ளை மாளிகை உறுதிப்படுத்தியுள்ளது.&nbsp;&nbsp;</p><p><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr">🚨 BREAKING! 🤯<br><br>The 2026 World Cup champions will receive exclusive championship rings for the first time in FIFA competition history. 💍<br><br>Inspired by North American sports tradition, 30 rings for the winners, 1,996 numbered limited-edition rings available for fans worldwide. ✨ <a href="https://t.co/rP49whydhp">pic.twitter.com/rP49whydhp</a></p>&mdash; Polymarket FC (@PolymarketFC) <a href="https://x.com/PolymarketFC/status/2077932342371389932?ref_src=twsrc%5Etfw">July 17, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>

உலகக் கோப்பை வரலாற்றில் முதன்முறையாக, தங்கப் பதக்கங்களுடன் வைரங்கள் பதிக்கப்பட்ட பிரத்யேக மோதிரங்களும் சாம்பியன் அணிக்கு வழங்கப்படவுள்ளன.</p><p>மொத்தம் 2,026 வரையறுக்கப்பட்ட பதிப்பு மோதிரங்களில், 30 மோதிரங்கள் சாம்பியன் அணி வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன. மீதமுள்ளவை ரசிகர்களுக்காக வெளியிடப்படவுள்ளன.</p><p></p><h2>பெரும் எதிர்பார்ப்பு</h2><p>மேலும், 39 வயதான லியோனல் மெஸ்ஸிக்கும், ஸ்பெயினின் இளம் நட்சத்திரம் லமின் யமாலுக்கும் இடையிலான முதல் சர்வதேச மோதலாகவும் இந்தப் போட்டி அமையவுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3a722cff-33c5-4bf4-b540-d5c11626437a/26-6a5ae14d9c545.webp' /></p><p> தொடர்ச்சியாக இரண்டாவது உலகக் கோப்பையை வெல்லும் இலக்குடன் அர்ஜென்டினாவும், புதிய சாம்பியனாக உருவெடுக்கும் நோக்கில் ஸ்பெயினும் களமிறங்குவதால், இறுதிப் போட்டி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-18T02:29:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சி.டி. விக்ரமரத்னவின் மரணம் தொடர்பில் இரண்டு பொலிஸ் குழுக்கள் விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/two-police-teams-investigate-c-d-wickramaratne-1784339937"></link>
            <id>https://tamilwin.com/article/two-police-teams-investigate-c-d-wickramaratne-1784339937</id>
            <summary type="text">முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் உயிரிழப்பு குறித்து மேல் மாகாண தெற்கு குற்றப் பிரிவும், மாலபே பொலிஸாரும் இணைந்து தனித்தனியாக விசாரணைகள...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் உயிரிழப்பு குறித்து மேல் மாகாண தெற்கு குற்றப் பிரிவும், மாலபே பொலிஸாரும் இணைந்து தனித்தனியாக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
</p><p>நேற்று காலை (17) மாலபே, தலாஹேன, பராக்கிரம வீதியில் உள்ள அவரது இல்லத்தில் துப்பாக்கிச் சூட்டினால் காயமடைந்ததைத் தொடர்ந்து, அவர் கொழும்பு கிழக்கு போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்திருந்தது.</p><p></p><h2>35வது பொலிஸ் மா அதிபர்</h2><p>

தற்போதைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அவரது சடலம் கொழும்பு கிழக்கு போதனா மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6cee36f8-dcb7-4b96-b350-bfd4e150ee30/26-6a5ae052698ba.webp' /></p><p>மேலும் இச்சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
</p><p>
சி.டி. விக்ரமரத்ன, 2020 நவம்பர் 27 முதல் 2023 நவம்பர் 23 வரை இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் 35ஆவது பொலிஸ் மா அதிபராகப் பணியாற்றினார்.
</p><p>
இந்நிலையில் நேற்று காலை தனது 63 வயது வயதில் துப்பாக்கிச் சூட்டினால் உயிரிழந்தார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-18T02:09:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் இடம்பெற்ற பெற்ற விபத்தில் 2 பேர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/serious-crash-west-of-edmonton-closes-roads-1784310782"></link>
            <id>https://canadamirror.com/article/serious-crash-west-of-edmonton-closes-roads-1784310782</id>
            <summary type="text">&amp;nbsp;ஆல்பெர்ட்டா&amp;nbsp; மாகாணம் எட்மண்டன் நகரின் மேற்குப் பகுதியில் வியாழக்கிழமை&amp;nbsp; அன்று மதியம் ஏற்பட்ட பயங்கர சாலை விபத்தில் ஸ்டோனி பிளெயின் பகுத...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;ஆல்பெர்ட்டா&nbsp; மாகாணம் எட்மண்டன் நகரின் மேற்குப் பகுதியில் வியாழக்கிழமை&nbsp; அன்று மதியம் ஏற்பட்ட பயங்கர சாலை விபத்தில் ஸ்டோனி பிளெயின் பகுதியைச் சேர்ந்த இருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.</p><p>
காவல்துறையினரின் முதற்கட்ட தகவல்படி, வியாழக்கிழமை நெடுஞ்சாலை 627 மற்றும் நெடுஞ்சாலை 60 சந்திப்பில்&nbsp; இந்த விபத்து நேர்ந்துள்ளது. </p><p>
அங்கு வந்த ஜீப் ரக வாகனம் ஒன்றும் பிக்கப் டிரக் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d2a699bd-d9ab-40ab-8679-951b5b07ce98/26-6a5a6bffe3059.webp' /></p><p>
இந்த விபத்தின் போது ஜீப்பில் பயணித்த 69 வயது முதியவர் மற்றும் 64 வயது பெண் ஆகிய இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
விபத்துக்குள்ளான பிக்கப் டிரக்கில் ஓட்டுநர் மட்டுமே இருந்துள்ளார். </p><p>பலத்த காயமடைந்த அவர் உடனடியாக மீட்கப்பட்டு, தீவிர சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
</p><p>விபத்து குறித்து தகவல் அறிந்ததும் கனடிய போலீசார் மற்றும் அவசரக் கால மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.</p><p> 
காவல்துறையினர் விசாரணையை மேற்கொண்டதைத் தொடர்ந்து, அப்பகுதியில் உள்ள சாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டு போக்குவரத்து திருப்பி விடப்பட்டது.
</p><p>இந்த கொடிய விபத்து எதனால் ஏற்பட்டது என்பது குறித்து புலனாய்வுத் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-18T01:28:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவுக்கு அனுப்புவதாக ஏமாற்றப்பட்ட யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஐவர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/foreign-job-scam-suspect-arrested-1784253725"></link>
            <id>https://tamilwin.com/article/foreign-job-scam-suspect-arrested-1784253725</id>
            <summary type="text">கனடா - லக்சம்பர்க் நாடுகளில் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை பெற்றுத் தருவதாக கூறி, யாழ்ப்பாணம், மல்லாகம் பகுதியை சேர்ந்த ஐவரிடம் சுமார் 8 மில்லியன் ரூபாய்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடா - லக்சம்பர்க் நாடுகளில் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை பெற்றுத் தருவதாக கூறி, யாழ்ப்பாணம், மல்லாகம் பகுதியை சேர்ந்த ஐவரிடம் சுமார் 8 மில்லியன் ரூபாய் பணம் மோசடி செய்யப்பட்டுள்ளது. </p><p>

பணத்தை மோசடி செய்த சந்தேகநபர் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p> 

கடந்த 14 ஆம் திகதி கைது செய்யப்பட்ட சந்தேகநபர், கொலன்னாவ, வெல்லம்பிட்டி பகுதியைச் சேர்ந்த பாயிஸ் மொஹமட் நப்டிகா என்பவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.</p><p>
</p><h2><b>
 பொலிஸ் விசாரணை</b></h2><p>வெல்லம்பிட்டி பகுதியில் மறைந்திருந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/59fcf0c4-3330-40ab-835f-e906abc8b115/26-6a5a3d87c1c88.webp' /></p><p>இந்த நிலையில், நேற்று அவர் மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார். </p><p>சந்தேகநபரை தலா 5 லட்சம் ரூபா வீதம் இரண்டு சரீரப் பிணைகளில் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
</p><p>
சந்தேக நபருக்கு எதிராக மல்லாகம் பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாகவும் பொலிஸ் விசாரணைப் பிரிவினர் தெரிவித்தனர். </p>]]></content>
            <updated>2026-07-18T01:26:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[வீட்டில் இறக்கி விடுவதாக கூறி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/youth-sexually-assaults-student-giving-her-a-lift-1784334335"></link>
            <id>https://jvpnews.com/article/youth-sexually-assaults-student-giving-her-a-lift-1784334335</id>
            <summary type="text">இந்தியா ஆந்திரப் பிரதேசத்தின் திருப்பதி மாவட்டம், நாயுடுப்பேட்டை பகுதியில் பாடசாலை மாணவியை ஏமாற்றி வனப்பகுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியா ஆந்திரப் பிரதேசத்தின் திருப்பதி மாவட்டம், நாயுடுப்பேட்டை பகுதியில் பாடசாலை மாணவியை ஏமாற்றி வனப்பகுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><p></p><p>மாணவி ஒருவர் பாடசாலை முடிந்து வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது, விண்ணமாலா கிராமத்தைச் சேர்ந்த ராகேஷ் என்ற இளைஞர் தனது மோட்டார் சைக்கிளில் வீட்டில் இறக்கிவிடுவதாகக் கூறி அவரை ஏற்றிச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8ca93679-b81a-4cad-8947-d9e032bfc6e6/26-6a5ac8010836f.webp' /></p><p>ஆனால், மாணவியை வீட்டுக்கு அழைத்துச் செல்லாமல், பிரதவாடா கிராமம் அருகிலுள்ள வனப்பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார். </p><p>இதன்போது சந்தேகமடைந்த மாணவி, ஓடிக்கொண்டிருந்த மோட்டார் சைக்கிளிலிருந்து குதித்து தப்பிக்க முயன்றதாகவும், அதற்கு ஆத்திரமடைந்த சந்தேகநபர் அவரை கொலை செய்வதாக மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.
</p><p>
பின்னர், வனப்பகுதியில் மாணவியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. </p><p>அதன் பின்னர், மாணவியை மீண்டும் மோட்டார் சைக்கிளில் ஏற்றி அவரது வீட்டருகே இறக்கிவிட்டு சந்தேகநபர் தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவி நாயுடுப்பேட்டை காவல்துறையில் முறைப்பாடு செய்ததைத் தொடர்ந்து, வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது. </p><p>தலைமறைவாக உள்ள சந்தேகநபர் ராகேஷை கைது செய்வதற்காக பொலிஸார் தீவிர தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-18T01:26:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானின் IRGC கண்காணிப்பு கோபுரத்தை அழித்ததாக அமெரிக்கா அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/us-announces-iran-s-irgc-observation-tower-1784337827"></link>
            <id>https://canadamirror.com/article/us-announces-iran-s-irgc-observation-tower-1784337827</id>
            <summary type="text">ஈரானின் தென்கிழக்குக் கடலோரப் பகுதியில் அமைந்திருந்த இஸ்லாமிய புரட்சிகர காவல்படைக்கு (IRGC) சொந்தமான கண்காணிப்பு கோபுரம் ஒன்றை அழித்துள்ளதாக அமெரிக்க ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானின் தென்கிழக்குக் கடலோரப் பகுதியில் அமைந்திருந்த இஸ்லாமிய புரட்சிகர காவல்படைக்கு (IRGC) சொந்தமான கண்காணிப்பு கோபுரம் ஒன்றை அழித்துள்ளதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது.
</p><p>
அமெரிக்க மத்திய கட்டளையகம் (CENTCOM) வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, சபஹார் துறைமுக நகரில் அமைந்துள்ள சபஹார் ஷஹீத் கலந்தாரி துறைமுக கண்காணிப்பு கோபுரம் இலக்கு வைத்து தாக்கப்பட்டு அழிக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9bfbd3f4-9248-46ad-8145-1e26ab0b92d3/26-6a5ad5a4b9940.webp' /></p><p>இந்தத் தாக்குதலின் மூலம், ஹோர்முஸ் நீரிணையில் வணிகக் கப்பல்களை கண்காணித்து இலக்குவைப்பதற்கும், பொதுமக்களின் கப்பல் ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்துவதற்குமான IRGC-யின் திறன் பலவீனமடையும் என CENTCOM தெரிவித்துள்ளது.
</p><p>
மேலும், ஈரான் மீதான தற்போதைய அமெரிக்க கடற்படை முற்றுகையை (Naval Blockade) மீற முயற்சிக்கும் கப்பல்களைத் தவிர, பிராந்திய கடற்பரப்பில் பயணிக்கும் பிற கப்பல்களின் தடையற்ற கப்பற்போக்குவரத்து சுதந்திரத்தைப் பாதுகாப்பதே இந்த நடவடிக்கையின் நோக்கம் என்றும் அமெரிக்க இராணுவம் குறிப்பிட்டுள்ளது.
</p><p>
ஹோர்முஸ் நீரிணை மீதான ஈரானின் செல்வாக்கைக் கட்டுப்படுத்தும் அமெரிக்காவின் தொடர் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் கருதப்படுகிறது. இருப்பினும், இந்தத் தாக்குதல் தொடர்பாக ஈரான் தரப்பிலிருந்து இதுவரை அதிகாரப்பூர்வ பதில் எதுவும் வெளியாகவில்லை.</p>]]></content>
            <updated>2026-07-18T01:24:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹோர்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்து கடும் வீழ்ச்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/shipping-traffic-in-strait-of-hormuz-has-plummeted-1784337291"></link>
            <id>https://canadamirror.com/article/shipping-traffic-in-strait-of-hormuz-has-plummeted-1784337291</id>
            <summary type="text">உலகின் மிக முக்கியமான கடல்சார் வர்த்தக வழித்தடங்களில் ஒன்றான ஹோர்முஸ் நீரிணை வழியாக கடந்த 24 மணித்தியாலங்களில் ஆறு கப்பல்கள் மட்டுமே பயணித்துள்ளதாக சர...</summary>
            <content type="html"><![CDATA[<p>உலகின் மிக முக்கியமான கடல்சார் வர்த்தக வழித்தடங்களில் ஒன்றான ஹோர்முஸ் நீரிணை வழியாக கடந்த 24 மணித்தியாலங்களில் ஆறு கப்பல்கள் மட்டுமே பயணித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
</p><p>
வெளியான தகவல்களின்படி, இரண்டு சரக்குக் கப்பல்களும் ஒரு எண்ணெய் விநியோகக் கப்பலும் ஹோர்முஸ் நீரிணையை விட்டு வெளியேறியுள்ளன.</p><p> அதேவேளை, இரண்டு எண்ணெய் விநியோகக் கப்பல்களும் ஒரு சரக்குக் கப்பலும் அந்த நீரிணைக்குள் நுழைந்துள்ளன.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/97876249-cbab-4c00-9933-be1808980f4f/26-6a5ad38d219a8.webp' /></p><p>கடந்த சில நாட்களாக இந்த முக்கிய கடல்வழியில் கப்பல்களின் போக்குவரத்து குறைந்து வருவதாகவும், அண்மைய கடப்பு விகிதங்களுடன் இந்த புள்ளிவிவரங்கள் ஒத்துப்போவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
இதற்கிடையில், இந்த மாத தொடக்கத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஹோர்முஸ் நீரிணை வழியாகக் கொண்டு செல்லப்படும் அனைத்து சரக்குகளுக்கும் 20 சதவீத கட்டணம் (Fee) விதிக்கும் திட்டத்தை அறிவித்திருந்தார். </p><p>இந்த அறிவிப்பும் அப்பகுதியில் கப்பல் போக்குவரத்து மீது கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டுகின்றன.</p>]]></content>
            <updated>2026-07-18T01:15:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டில் கொட்டி தீர்க்கப்போகும் கனமழை...! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/heavy-rain-with-lightning-thunder-weather-report-1784336995"></link>
            <id>https://ibctamil.com/article/heavy-rain-with-lightning-thunder-weather-report-1784336995</id>
            <summary type="text">சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சிறிதளவு மழை பெய்யக்கூடும்.வளிமண்டலவியல் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சிறிதளவு மழை பெய்யக்கூடும்.</p><p>வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (18-07-2026) விடுத்துள்ள அறிக்கையில் மேற்படி விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p>இதனடிப்படையில் நாட்டின் ஏனைய பிராந்தியங்களில் வறட்சியான வானிலை நிலவக்கூடும்.

</p><p></p><h2>பனிமூட்டமான நிலை</h2><p>கிழக்கு மாகாணத்திலும் அத்துடன் யாழ்ப்பாணம், வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் "வெப்பச் சுட்டெண்" காரணமாக மனித உடலினால் பகல் வேளையில் அதிகரித்த வெப்பநிலையை உணரக்கூடியதாக இருக்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c1335061-19b3-4f07-a3d4-cbd73917d100/26-6a5ad265454bb.webp' />&nbsp;&nbsp;</p><p>வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் மாத்தளை, ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் மணித்தியாலத்திற்கு சுமார் 40 - 50 km வேகத்தில் அடிக்கடி பலத்த காற்று வீசக் கூடும்.</p><p>இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-18T01:10:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Manchu</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுக்கிரன் மீது விழும் ராகுவின் பார்வை... ஆடி மாதத்தில் எதிர்பாராத நிதி ஆதாயத்தினை பெறும் 5 ராசிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/rahus-aspect-on-venus-lucky-zodiac-signs-1784294017"></link>
            <id>https://manithan.com/article/rahus-aspect-on-venus-lucky-zodiac-signs-1784294017</id>
            <summary type="text">சுக்கிரன் மீது விழும் ராகுவின் பார்வையால் ஆடி மாதத்தில் பணத்தை அள்ளும் ஐந்து ராசியினரைக் குறித்து தெரிந்து கொள்வோம்.சுக்கிரனின் பார்வைஆடி மாதம் ஆன்மீக...</summary>
            <content type="html"><![CDATA[<p>சுக்கிரன் மீது விழும் ராகுவின் பார்வையால் ஆடி மாதத்தில் பணத்தை அள்ளும் ஐந்து ராசியினரைக் குறித்து தெரிந்து கொள்வோம்.</p><h2>சுக்கிரனின் பார்வை</h2><p>ஆடி மாதம் ஆன்மீகத்திற்கு உகந்த மாதமாகவும், ஜோதிட ரீதியாக சிறப்பு வாய்ந்த மாதமாகவும் இருக்கின்றது. இந்த மாதத்தில் கிரகங்களின் நிலைகளாலும், அவற்றினால் உருவாகும் யோகமும் அனைத்து ராசியினருக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும்.</p><p>ஆடி மாதத்தில் கும்ப ராசியிலிருக்கும் ராகுவின் பார்வை சுக்கிரன் மீது விழுந்து சுக்கிரன் பலன் பெறுகின்றார். நவகிரகங்களில் சுக்கிரன் அழகு, ஆடம்பரம், காதல், செல்வம், செழிப்பு இவற்றிற்கு காரணியாவார்.</p><p>சுக்கின் மீது ராகுவின் பார்வை விழுவதால் எதிர்பாராத நிதி ஆதாயத்தினை சில ராசியினர் பெறுகின்றனர். அவ்வாறு தொழிலில் முன்னேற்றம், அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவையும் பெறும் ராசியினரை தெரிந்து கொள்வோம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f8315fe1-4914-44d7-8bd5-032de1b6ef73/26-6a5a41b4850a6.webp' /><br></p><h2>ரிஷபம் </h2><p>சுக்கிரன் மீது விழும் ராகுவின் பார்வையால் ரிஷப ராசியினர் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவை பெறுவதுடன், நீண்ட காலமாக தடைபட்ட வேலைகள் வெற்றியில் முடியும்.</p><p>தொழில் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைப்பதுடன், எதிர்பாராத பண வரையும் பெறுவீர்கள். குடும்பத்தில் கருத்து வேறுபாடு குறைந்து புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்பை பெறுவீர்கள்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/066645d6-a5c1-4bb4-83e8-f5b2a555d061/26-6a5a41b5352df.webp' /></p><h2>மிதுனம் </h2><p>மிதுன ராசியினருக்கு இந்த ஆடி மாதத்தில் முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புகள் தேடி வருவதுடன், வேலையை மாற்ற நினைப்பவர்களுக்கு நல்ல செய்தியும் கிடைக்கும்.</p><p>சமூகத்தில் மதிப்பு, மரியாதை அதிகரிப்பதுடன், வெளிநாடு செல்ல முயற்சி செய்யபவர்களுக்கு நல்ல முடிவு கிடைக்கும். ஆனாலும் எந்தவொரு முதலீடு செய்வதற்கு முன்பு நிதானமாக முடிவெடுப்பது சிறந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c2bec432-64ae-4b14-bb99-61e2dc349914/26-6a5a41b5d7bdd.webp' /><br></p><p></p><h2>சிம்மம் </h2><p>சிம்ம ராசியினருக்கு இந்த காலக்கட்டம் அதிர்ஷ்டமானதாகவும், பணிபுரிபவர்களுக்கு முழு ஆதரவு கிடைப்பதுடன், பதவி மற்றும் சம்பள உயர்வு கிடைக்கும்.</p><p>குடும்பத்தில் சுப நிழ்ச்சிகள் நடக்கும் வாய்புள்ளதுடன், திருமணமாகதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கவும் செய்யும். புதிய தொழில் தொடங்க நினைத்தால் அதற்கான வாய்ப்பும், நல்ல லாபமும் கிடைக்குமாம். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3fad1cc3-d09b-4c09-bb49-b095e1ba60ae/26-6a5a41b68d808.webp' /><br></p><h2>துலாம் </h2><p>துலாம் ராசியினருக்கு இந்த காலக்கட்டத்தில் நிதி நிலைமை வலுவடையுமாம். நீண்ட நாட்களாக வராமல் இருந்த பணம் கைக்கு வந்து சேரும்.</p><p>பணப்பிரச்சனை குறைந்து மனநிம்மதி கிடைப்பதுடன், தம்பதிகளுக்குள் இருக்கும் மனக்கசப்புகள் நீங்கும். கலை மற்றும் ஊடக துறையில் உள்ளவர்கள் புதிய உயரத்தினை அடையும் வாய்பபினை பெறுவார்கள். நண்பர்களின் முழு ஆதரவும் கிடைக்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/94f920ee-3bcd-48cb-9a3c-1d795b733125/26-6a5a41b73cbda.webp' /><br></p><h2>மகரம் </h2><p>மகர ராசியினருக்கு ஆடி மாதத்தில் எதிர்பாராத வளர்ச்சி கிடைக்கும். வேலை மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் கிடைப்பதுடன், வருமானத்தில் நல்ல உயர்வும் ஏற்படும்.</p><p>அதிகமான பணத்தை சேமிக்க முடியுமாம். குடும்பத்தில் உள்ள மனக்கசப்புகள் நீங்கி மகிழ்ச்சி அதிகரிக்கும். பயணங்களால் நிதி ஆதாயம் கிடைக்கும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் கிடைக்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/620d2545-605e-4900-ab5e-64f783a1d574/26-6a5a41b7e4803.webp' /></p><p><b>இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).</b>&nbsp; &nbsp; &nbsp;&nbsp;<br></p><table class="table table-bordered"><tbody><tr><td><i>&nbsp;சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் <a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள் <a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"><b>FOLLOW NOW&nbsp;&nbsp;</b></a><br></i></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-18T01:10:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் பாழடைந்த கட்டிடத்திலிருந்து பெருமளவிலான கஞ்சா மீட்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/14-5kg-ganja-seized-from-ruined-house-in-jaffna-1784336808"></link>
            <id>https://ibctamil.com/article/14-5kg-ganja-seized-from-ruined-house-in-jaffna-1784336808</id>
            <summary type="text">யாழில் பாழடைந்த கட்டிடம் ஒன்றிலிருந்து பெருமளவிலான கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

வடமராட்சி கிழக்கு பிரதேச செயலர் பிரி...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழில் பாழடைந்த கட்டிடம் ஒன்றிலிருந்து பெருமளவிலான கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
</p><p>
வடமராட்சி கிழக்கு பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட ஆழியவளைப் பகுதியில் இருந்த கட்டிடத்திலிருந்தே இவ்வாறு கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.
</p><p>
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, ஆழியவளைப் பகுதியில் பாழடைந்த கட்டிடம் ஒன்றில் பொதிகள் காணப்பட்டதைத் தொடர்ந்து, மக்களால் யாழ்ப்பாணம் சிறப்பு அதிரடிப்படையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>மருதங்கேணி காவல்துறையினர்</h2><p>

இதனடிப்படையில் அங்கு சென்றிருந்த யாழ்ப்பாணம் சிறப்பு அதிரடிப்படையினர் 14.5 கிலோகிராம் கஞ்சா பொதிகளைக் கைப்பற்றி, மருதங்கேணி காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/228a5957-ad0c-4187-b733-284c5a3835c6/26-6a5ad1aa28ab6.webp' /></p><p>இருப்பினும், குறித்த கஞ்சா பழுதடைந்த நிலையில் காணப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p>

இது தொடர்பான விசாரணைகளை மருதங்கேணி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-18T01:07:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானின் இராணுவத் திறனை குறிவைத்து அமெரிக்கா மீண்டும் தாக்குதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/us-strikes-again-targeting-iran-military-capabilit-1784336495"></link>
            <id>https://canadamirror.com/article/us-strikes-again-targeting-iran-military-capabilit-1784336495</id>
            <summary type="text">ஈரான் மீது அமெரிக்கா புதிய அலை வான்வழித் தாக்குதல்களைத் தொடங்கியுள்ளதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது.

அமெரிக்க மத்திய கட்டளையகம் எக்ஸ் தளத்தில...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரான் மீது அமெரிக்கா புதிய அலை வான்வழித் தாக்குதல்களைத் தொடங்கியுள்ளதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது.</p><p>

அமெரிக்க மத்திய கட்டளையகம் எக்ஸ் தளத்தில் இது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cfa828fd-f091-437e-9c8b-83f46a2fda9e/26-6a5ad07109244.webp' /></p><p>

இதனடிப்படையில், கிழக்கு நேரப்படி (ET) பிற்பகல் 3 மணி முதல் ஈரான் மீது ஒரு சுற்றுத் தாக்குதல்களைத் தொடங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>ஈரானிய இராணுவத் திறன்களைத் தொடர்ந்து பலவீனப்படுத்தும் நோக்கிலேயே இந்தத் தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இருப்பினும், இந்தத் தாக்குதல்களின் இலக்குகள் அல்லது அதன் விரிவான அளவு குறித்த மேலதிக விவரங்களை மத்திய கட்டளையகம் (CENTCOM) வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">CENTCOM launched a round of strikes against Iran at 3 p.m. ET today for the seventh consecutive night. The strikes are designed to continue degrading Iranian military capabilities at the Commander in Chief&#39;s direction.</p>&mdash; U.S. Central Command (@CENTCOM) <a href="https://x.com/CENTCOM/status/2078206333640233200?ref_src=twsrc%5Etfw">July 17, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p>]]></content>
            <updated>2026-07-18T01:01:52+00:00</updated>
        </entry>
    </feed>
