<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-07-15T20:35:07+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவிற்கு தொடர் பதிலடி வழங்கப்படும்...! ஈரான் பகிரங்க எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/iran-rejects-talks-vows-retaliation-to-us-1784135779"></link>
            <id>https://ibctamil.com/article/iran-rejects-talks-vows-retaliation-to-us-1784135779</id>
            <summary type="text">அமெரிக்காவின் தாக்குதல்களுக்கு ஈரான் தொடர்ந்து உறுதியான முறையில் பதிலடி கொடுக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு பேச்சுவார்த்தை நடத்தும் திட்டம...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவின் தாக்குதல்களுக்கு ஈரான் தொடர்ந்து உறுதியான முறையில் பதிலடி கொடுக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
</p><p>
அத்தோடு பேச்சுவார்த்தை நடத்தும் திட்டம் எதுவும் இல்லை எனவும் ஈரான் தெரிவித்துள்ளது.
</p><p>
ஈரானிய வெளியுறவு அமைச்சகத்தின் ஊடகப் பேச்சாளர் எஸ்மாயில் பகாய் (Esmaeil Baghaei) இதனை தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p></p><h2>நாட்டின் பாதுகாப்பு</h2><p>சர்வதேச ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
</p><p>
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “தற்போது எங்களிடம் பேச்சுவார்த்தைக்கான எந்த திட்டமும் இல்லை.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d278991e-ee41-4e8c-9f7b-c7fa8b83bb3b/26-6a57ce9b0b501.webp' /></p><p>நாட்டின் பாதுகாப்பில் மட்டுமே நாங்கள் கவனம் செலுத்தி வருகிறோம்.
</p><p>
அமெரிக்கா தனது கடமைகளை மீறினால் ஈரான் எந்தவொரு ஒப்பந்தத்திற்கும் கட்டுப்படாது.
</p><p>
இது ஒரு கொள்கை, இதனை நாங்கள் தொடர்ந்து பின்பற்றுவோம் ஆரம்பத்திலிருந்தே போர்நிறுத்தத்தை அமெரிக்கா உதாசீனப்படுத்தி வருவதாக ஈரான் நம்புகின்றது” என தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-15T20:34:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[சூரியப் பெயர்ச்சியால் ஜாக்பாட் அடிக்கப்போகும் ராசிகள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/which-zodiac-signs-get-wealth-and-success-2026-1784143692"></link>
            <id>https://ibctamil.com/article/which-zodiac-signs-get-wealth-and-success-2026-1784143692</id>
            <summary type="text">ஜூலை மாதத்தில் பல முக்கிய கிரக மாற்றங்கள் நிகழவுள்ளன.இதில் குறிப்பாக கிரகங்களின் ராஜாவான சூரியன் ஜூலை 16 அன்று கடக ராசிக்குள் நுழைகிறார்.

தன்னம்பிக...</summary>
            <content type="html"><![CDATA[<p></p><p>ஜூலை மாதத்தில் பல முக்கிய கிரக மாற்றங்கள் நிகழவுள்ளன.</p><p>இதில் குறிப்பாக கிரகங்களின் ராஜாவான சூரியன் ஜூலை 16 அன்று கடக ராசிக்குள் நுழைகிறார்.
</p><p>
தன்னம்பிக்கை மற்றும் தலைமைத்துவத்தின் அதிபதியான சூரியன், உணர்வுகளின் ராசியான கடகத்தில் நுழைவது ஜோதிட ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்தது. </p><p>இந்த சூரியப் பெயர்ச்சி அனைத்து ராசிகளையும் பாதித்தாலும் சில குறிப்பிட்ட ராசிக்காரர்களுக்கு கூடுதல் நன்மைகளையும், அதிர்ஷ்டத்தையும் தரவுள்ளது. அவர்கள் யார் என்று இந்த பதிவில் காண்போம்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>மேஷம்</td><td><ol><li>மேஷ ராசிக்காரர்கள் சூரியனின் இந்த ராசி மாற்றத்தால் மகத்தான நன்மைகளை அடையலாம். </li><li>இந்த காலகட்டத்தில் அவர்கள் எதிர்பார்த்ததை விட சிறந்த வருமானத்தை ஈட்ட முடியும்.</li><li> வியாபாரிகள் இந்த காலகட்டத்தில் சிறப்பான வாய்ப்புகளைப் பெறலாம்.</li><li> மற்ற துறைகளில் வேலை செய்பவர்களும் நல்ல சம்பளத்துடன் வேலை பெறலாம்.</li><li> அதேபோல, சுயமாக சம்பாதிக்கும் பல வழிகள் அவர்களுக்கு முன்னால்வரும்.
</li><li>
சொந்த தொழில் தொடங்க வேண்டமென்ற நீண்ட நாள் ஆசை நிறைவேறும் அதன் மூலம் பல்வேறு நிதி நன்மைகளை அடைய முடியும். புதிய வேலை தேடுபவவர்களுக்கு இப்பொது நல்ல வாய்ப்பு கிடைக்கும். </li><li>அவர்கள் வளர்ச்சியைக் கண்டு மற்றவர்கள் பொறாமைப்படும் அளவிற்கு அவர்களின் சூழல் மாறும்.</li></ol></td></tr><tr><td>கடகம் </td><td><ol><li>கடக ராசிக்குள் சூரியன் நுழைவது அவர்களுக்கு நேர்மறையான பலன்களை அளிக்கப்போகிறது.</li><li> சூரியனின் ஆற்றல் அவர்களின் நம்பிக்கையையும் முடிவெடுக்கும் திறனையும் அதிகரிக்கும் இது லாபகரமான வாய்ப்புகளைப் பெற அவர்களுக்கு உதவுகிறது.</li><li>பதவி உயர்வு, புதிய வேலை வாய்ப்பு அல்லது லாபகரமான வணிக ஒப்பந்தம் என எதுவாக இருந்தாலும் இந்த போக்குவரத்து மேஷ ராசிக்காரர்களுக்கு ஆதாயங்களை உறுதியளிக்கிறது. </li><li>நீண்ட கால முதலீடுகளைத் திட்டமிடவும் நேர்மறையான கண்ணோட்டத்தை பராமரிக்கவும் இந்த நேரத்தைப் பயன்படுத்திக் கொள்வது வாழ்க்கையில் முன்னேற உதவும்.

&nbsp;&nbsp;</li></ol></td></tr><tr><td>சிம்மம்</td><td><ol><li>சிம்ம ராசியின் அதிபதியாக சூரியன் இருப்பதால் இந்த காலகட்டத்தில் அவர்கள் அதிகபட்ச நன்மைகளை அடையப்போகிறார்கள். </li><li>இந்த நேரத்தில் அவர்கள் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறுவார்கள் மேலும் இதனால் சிறந்த பலன்களை எதிர்பார்க்கலாம். </li><li>இந்த காலகட்டத்தில் அவர்கள் வெளிநாடுகளுக்குப் பயணம் செய்யலாம். </li><li>உங்கள் நீண்டகாலமாக நிலுவையில் உள்ள பணிகள் இப்போது முடிக்கப்படலாம் மற்றும் உங்கள் பணியிடத்தில் புதிய பொறுப்புகளைப் பெறலாம்.</li><li>உங்கள் திட்டங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும் மேலும் உங்கள் வாழ்க்கையை புதிய உயரத்திற்கு கொண்டு செல்ல முடியும்.</li><li>இந்த காலம் சிம்ம ராசிக்காரர்களின் வியாபாரத்திற்கு சாதகமாக இருக்கும் மேலும் உங்கள் வாழ்க்கைத் துணையுடனான உறவுகள் வலுவடையும் இதனால் வாழ்க்கையில் நிம்மதி நிறைந்திருக்கும்.

&nbsp;&nbsp;</li></ol></td></tr></tbody></table><br><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p>]]></content>
            <updated>2026-07-15T20:32:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[குவைத்தை நோக்கி அடுத்தடுத்து ஏவப்பட்ட 21 ட்ரோன்கள்.. இலக்கு வைக்கப்பட்ட அதிமுக்கிய தளங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/kuwait-intercepted-4-missiles-21-drones-from-iran-1784147022"></link>
            <id>https://tamilwin.com/article/kuwait-intercepted-4-missiles-21-drones-from-iran-1784147022</id>
            <summary type="text">குவைத்தின் முக்கிய இடங்களை இலக்கு வைத்து ஈரானிலிருந்து&amp;nbsp;21 ஆளில்லா ட்ரோன்கள் ஏவப்பட்டுள்ளன.&amp;nbsp;4 குரூஸ் ஏவுகணைகள் மற்றும் 21 ஆளில்லா ட்ரோன்களை த...</summary>
            <content type="html"><![CDATA[<p>குவைத்தின் முக்கிய இடங்களை இலக்கு வைத்து ஈரானிலிருந்து&nbsp;21 ஆளில்லா ட்ரோன்கள் ஏவப்பட்டுள்ளன.&nbsp;</p><p>4 குரூஸ் ஏவுகணைகள் மற்றும் 21 ஆளில்லா ட்ரோன்களை தங்களது ஆயுதப் படைகள் இடைமறித்து அழித்துள்ளதாக குவைத் பாதுகாப்பு அமைச்சின் ஊடகப் பேச்சாளர் தற்போது அறிவித்துள்ளார்.</p><p></p><h2>அதிமுக்கிய உள்கட்டமைப்புகள்..&nbsp;&nbsp;</h2><p>
இத்தாக்குதல்கள் தொடர்பாகஅவர், மேலும், "ஈரானின் இந்த வான்வழித் தாக்குதல்கள் குவைத்தின் முக்கிய மற்றும் அதிமுக்கிய உள்கட்டமைப்புகளை இலக்கு வைத்து நடத்தப்பட்டன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/194187b9-4156-4d92-8e3b-55987342736f/26-6a57ec50946fe.webp' /></p><p> இதனால் சில பொதுச் சொத்துகளுக்குச் சேதம் ஏற்பட்டுள்ள போதிலும், உயிர்ச்சேதங்கள் எதுவும் பதிவாகவில்லை" என்று குறிப்பிட்டுள்ளார்.</p><p>அதேவேளை, பிராந்தியத்தில் உள்ள பஹ்ரைன், குவைத் மற்றும் ஜோர்தான் ஆகிய நாடுகளில் அமைந்துள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள் மீது தாம் தாக்குதல்களை நடத்தியதாக ஈரான் முன்னதாக உத்தியோகபூர்வமாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-15T20:23:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரான் மனித உரிமைகள் அமைப்பின் அதிர்ச்சி அறிக்கை: அதிகரித்த மரணதண்டனைகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/iran-increases-executions-of-political-prisoners-1784140000"></link>
            <id>https://ibctamil.com/article/iran-increases-executions-of-political-prisoners-1784140000</id>
            <summary type="text">
ஈரானிய அரசாங்கம் அரசியல் கைதிகளுக்கு மரணதண்டனை நிறைவேற்றுவதை கணிசமாக அதிகரித்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கில் நிலவி வரும் மோ...</summary>
            <content type="html"><![CDATA[<p>
ஈரானிய அரசாங்கம் அரசியல் கைதிகளுக்கு மரணதண்டனை நிறைவேற்றுவதை கணிசமாக அதிகரித்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
</p><p>
மத்திய கிழக்கில் நிலவி வரும் மோதல் மற்றும் பதற்றமான சூழ்நிலையைப் பயன்படுத்தி இவ்வாறு இடம்பெறுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
</p><p>

நோர்வேயின் ஒஸ்லோவைத் தளமாகக் கொண்டு இயங்கும் ஈரான் மனித உரிமைகள் என்ற தன்னார்வ அமைப்பு இதனை தெரிவித்துள்ளது.
</p><p></p><h2>போராட்டக்காரர்கள்&nbsp;</h2><p>ஈரானுக்கு உள்ளேயும் வெளியேயும் உறுப்பினர்களைக் கொண்டுள்ள இந்த அமைப்பின் தரவுகளின்படி, ஈரான் அரசு இந்த ஆண்டில் மட்டும் இதுவரை குறைந்தது 47 அரசியல் கைதிகளுக்கு மரணதண்டனையை நிறைவேற்றியுள்ளது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8a0e4e52-b087-46e3-8538-58141f7a7ae7/26-6a57d9817d763.webp' /></p><p>

கடந்த ஆண்டு இதே காலப்பகுதியில் இந்த எண்ணிக்கை 16 ஆக மட்டுமே இருந்த நிலையில் தற்போது இது மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><p>கடந்த ஆண்டின் இறுதியில் ஈரான் முழுவதும் வெடித்த பரவலான போராட்டங்களின் போது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், போராட்டக்காரர்கள் மீது வன்முறையான அடக்குமுறைகளைக் கையாள வேண்டாம் என ஈரானியத் தலைமைக்கு எச்சரிக்கை விடுத்திருந்தார்.
</p><p></p><h2>அரசியல் மாற்றங்கள்</h2><p>அத்துடன் போராட்டக்காரர்களின் மீட்புக்கு அமெரிக்கா உறுதுணையாக நிற்கும் என்றும் அவர் உறுதியளித்திருந்தார்.&nbsp; &nbsp;</p><p>எனினும், அமெரிக்கா - ஈரான் இடையேயான மோதல் போக்கு நீடித்ததாலும் அதன் விளைவாக உலகளாவிய பொருளாதார பாதிப்புகள் மோசமடைந்ததாலும், வெள்ளை மாளிகையின் கடுமையான தொனி காலப்போக்கில் மென்மையடைந்தது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6cf1bd4d-c9ff-4f9a-9566-00f3b91d201d/26-6a57d98280fa6.webp' /></p><p>இதன் காரணமாக, ஈரான் அதிருப்தியாளர்களுக்கான அமெரிக்காவின் ஆதரவு குறையத் தொடங்கியது. </p><p>

இத்தகைய உலகளாவிய புவிசார் அரசியல் மாற்றங்களுக்கு மத்தியிலேயே ஈரானில் மரணதண்டனைகள் தற்போது தீவிரப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-15T20:19:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொங்கோவில் தீவிரமடையும் எபோலா: ஆயிரக்கணக்கானோர் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ebola-intensifies-in-congo-infections-surpass-2000-1784142692"></link>
            <id>https://tamilwin.com/article/ebola-intensifies-in-congo-infections-surpass-2000-1784142692</id>
            <summary type="text">மத்திய ஆப்பிரிக்க நாடான கொங்கோ ஜனநாயகக் குடியரசில் எபோலா வைரஸ்
பாதிப்பு தீவிரமடைந்து வரும் நிலையில், அங்கு பதிவான ஒட்டுமொத்த எபோலா
பாதிப்புகளின் எண்...</summary>
            <content type="html"><![CDATA[<p>மத்திய ஆப்பிரிக்க நாடான கொங்கோ ஜனநாயகக் குடியரசில் எபோலா வைரஸ்
பாதிப்பு தீவிரமடைந்து வரும் நிலையில், அங்கு பதிவான ஒட்டுமொத்த எபோலா
பாதிப்புகளின் எண்ணிக்கை 2,011 ஆக உயர்ந்துள்ளது.
</p><p>
அதே நேரத்தில், தங்களுக்குரிய ஊதியம் வழங்கப்படாததை எதிர்த்து அந்த நாட்டின்
சுகாதாரப் பணியாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் அங்கு
தடுப்புப் பணிகள் பெரும் தேக்கத்தைச் சந்தித்துள்ளன.
</p><p>
கொங்கோவின் இத்துரி (Ituri) மாகாணத்தில் பரவி வரும் எபோலா தொற்றால் இதுவரை
2,011 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 754 ஆக அதிகரித்துள்ளது.</p><p></p><h2>உயிரிழப்புகள்</h2><p>
</p><p>
எனினும், அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட இந்த எண்ணிக்கையை விட உண்மையான
உயிரிழப்புகள் 2 முதல் 4 மடங்கு வரை அதிகமாக இருக்கலாம் என்று உலக சுகாதார
அமைப்பு (WHO) எச்சரித்துள்ளது.
</p><p>
வரலாற்றிலேயே மிக வேகமாகப் பரவி வரும் மூன்றாவது பெரிய எபோலா அலை இதுவென
எல்லைகளற்ற மருத்துவர்கள் (MSF) அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/11282cfd-b43e-4ccc-802f-a00759697265/26-6a57db66270ca.webp' /></p><p>
</p><p>
இந்த இக்கட்டான சூழ்நிலையிலும், தங்களுக்குச் சேர வேண்டிய ஊதியம் பல மாதங்களாக
வழங்கப்படவில்லை எனக் கூறி இத்துரி மாகாணத்தின் புனியா (Bunia) மற்றும்
ரவாம்பரா (Rwampara) பொது மருத்துவமனை ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில்
ஈடுபட்டுள்ளனர்.</p><p>

தொற்று பரவத் தொடங்கியது முதல் மிகக் கடினமான சூழ்நிலைகளிலும், போதிய
பாதுகாப்பு உபகரணங்கள் இன்றியும் உழைத்த தங்களுக்கு எவ்வித ஊதியமும்
வழங்கப்படவில்லை எனப் போராட்டக்காரர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-15T20:15:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரான் மீது மீண்டும் சரமாரி தாக்குதல்கள்.. அமெரிக்க இராணுவம் வெளியிட்டுள்ள தகவல்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/us-launches-fresh-strikes-on-iran-1784146283"></link>
            <id>https://tamilwin.com/article/us-launches-fresh-strikes-on-iran-1784146283</id>
            <summary type="text">ஈரான் மீதான தனது இரண்டாவது அலை தாக்குதல்களைத் தீவிரமாகத் தொடங்கியுள்ளதாக அமெரிக்க இராணுவம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.ஹோர்முஸ் நீரிணை&amp;nbsp;  இதுத...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரான் மீதான தனது இரண்டாவது அலை தாக்குதல்களைத் தீவிரமாகத் தொடங்கியுள்ளதாக அமெரிக்க இராணுவம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.</p><h2>ஹோர்முஸ் நீரிணை&nbsp;</h2><p> </p><p> இதுதொடர்பாக அமெரிக்க மத்திய கட்டளைப் பணியகம் தனது அதிகாரப்பூர்வ X சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.&nbsp;</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">At 3 p.m. ET, U.S. forces launched operations for a second wave of strikes today against Iran. The strikes are targeting Iranian military capabilities used to threaten vessels freely transiting through the Strait of Hormuz, an international waterway vital to global commerce. The…</p>&mdash; U.S. Central Command (@CENTCOM) <a href="https://x.com/CENTCOM/status/2077471657456025781?ref_src=twsrc%5Etfw">July 15, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>அதன்படி, "சர்வதேச கடல் வர்த்தகப் பாதையான ஹோர்முஸ் நீரிணை வழியாகச் சுதந்திரமாகப் பயணிக்கும் கப்பல்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் ஈரான் பயன்படுத்தி வரும் இராணுவக் கட்டமைப்புகள் மற்றும் இலக்குகளைக் குறிவைத்தே இந்தத் தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன" என்று குறிப்பிட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p></p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-15T20:11:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[தீவிரமடைந்து வரும் காட்டுத்தீ.. அமெரிக்க மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/wild-fire-warning-for-7-districts-in-usa-1784145951"></link>
            <id>https://tamilwin.com/article/wild-fire-warning-for-7-districts-in-usa-1784145951</id>
            <summary type="text">அமெரிக்காவில் ஏழு மாகாணங்களில் காட்டுத்தீப் புகை அபாயகரமான நிலையை எட்டியுள்ளதால், மக்கள் வீட்டுக்குள்ளேயே இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.&amp;nbsp;க...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவில் ஏழு மாகாணங்களில் காட்டுத்தீப் புகை அபாயகரமான நிலையை எட்டியுள்ளதால், மக்கள் வீட்டுக்குள்ளேயே இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.</p><h2>&nbsp;காற்றின் தர எச்சரிக்கைகள்</h2><p>
</p><p>
கனடாவில் ஏற்பட்ட பெரும் காட்டுத்தீயிலிருந்து வரும் புகை தெற்கு நோக்கி நகர்வதால், கனெக்டிகட், இல்லினாய்ஸ், இந்தியானா, மிச்சிகன், நியூ ஜெர்சி, நியூயார்க் மற்றும் விஸ்கான்சின் ஆகிய மாகாணங்களில் காற்றின் தர எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/472255dc-2991-4d26-9810-ab9605ad413d/26-6a57e8218feda.webp' /></p><p>
</p><p>

காட்டுத்தீயினால் ஏற்படும் புகையில் 'PM2.5' என்று அழைக்கப்படும் மிக நுண்ணிய துகள்கள் (fine particulate matter) உள்ளன என்றும், நச்சுத்தன்மை வாய்ந்த சேர்மங்களின் மிகச்சிறிய துகள்களைக் கொண்ட இவை மனித திசுக்களுக்குள் ஊடுருவி சுவாசப் பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடியவை என்றும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
</p><p>


மேலும், சில பகுதிகளில் காற்றின் தரம், பாதிக்கப்படக்கூடிய குழுக்களுக்கு ஆரோக்கியமற்றது என்பதிலிருந்து மிகவும் ஆரோக்கியமற்றது என்பது வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-15T20:05:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தியாவில் எத்தனோல் கலந்த பெற்றோலால் வாகன ஓட்டிகள் அதிருப்தி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/motorists-unhappy-ethanol-blended-petrol-in-india-1784145620"></link>
            <id>https://tamilwin.com/article/motorists-unhappy-ethanol-blended-petrol-in-india-1784145620</id>
            <summary type="text">இந்தியாவில் பெற்றோலுடன் 20 சதவீத எத்தனோல் கலக்கப்பட்டு விற்பனை செய்யப்படும்
E20 பெற்றோல் கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், இதனால் மைலேஜ் குறைவதாகவும்
...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியாவில் பெற்றோலுடன் 20 சதவீத எத்தனோல் கலக்கப்பட்டு விற்பனை செய்யப்படும்
E20 பெற்றோல் கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், இதனால் மைலேஜ் குறைவதாகவும்
வாகனங்களின் என்ஜின்கள் பாதிக்கப்படுவதாகவும் கூறி வாகன சாரதிகள் பெரும்
அதிருப்தி அடைந்துள்ளனர்.
</p><p>
மத்திய அரசின் தேசிய உயிரி எரிபொருள் கொள்கையின் கீழ், பெற்றோலில் 20 சதவீத
எத்தனோல் கலக்கும் இலக்கு 2030ஆம் ஆண்டிலிருந்து 2025ஆம் ஆண்டிற்குள்
முன்கூட்டியே மாற்றப்பட்டு, நாடு முழுவதும் உள்ள அனைத்து எரிபொருள்
நிலையங்களிலும் E20 பெட்ரோல் மட்டுமே தற்போது விநியோகிக்கப்படுகிறது.</p><p></p><h2>ஏற்பட்டுள்ள பிரச்சினை&nbsp;</h2><p>
</p><p>
ஆனால், இந்த விரைவான மாற்றம் வாகன சாரதிகளுக்குப் பெரும் சிரமத்தை
ஏற்படுத்தியுள்ளது.

E20 பெற்றோல் பயன்படுத்திய பிறகு தங்களது கார்களின் மைலேஜ் 10 சதவீதத்திற்கும்
மேல் குறைந்துள்ளதாக வாகன உரிமையாளர்கள் முறைப்பாடு தெரிவிக்கின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/530c76a7-a976-4645-b59d-078afdc8d27e/26-6a57e6d705349.webp' /></p><p>

மேலும், வாகனத்தின் வேகம் குறைவதோடு, மேடான பகுதிகளில் பயணிக்கும் போதும் ஏசி
(AC) இயங்கும் போதும் காரின் இயக்கம் மந்தமாக இருப்பதாகக் கூறுகின்றனர்.</p><p>

எத்தனோல் சாதாரண பெற்றோலை விடக் குறைந்த ஆற்றலையே உருவாக்குகிறது என்பதால்
மைலேஜ் குறைவது தவிர்க்க முடியாதது என்பதை நிபுணர்களும் ஒப்புக்கொள்கின்றனர்.</p><p>

அதோடு, 2023ஆம் ஆண்டுக்குப் பிறகு தயாரிக்கப்பட்ட வாகனங்கள் E20 எரிபொருளுக்கு
ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டுள்ளன என்றாலும், அதற்கு முன்பு வாங்கிய
இலட்சக்கணக்கான பழைய வாகனங்களின் என்ஜின்களில் உள்ள இறப்பர் குழாய்கள்,
கேஸ்கெட்டுகள் மற்றும் சீல் ஆகியவற்றைப் பெற்றோலுடன் கலந்திருக்கும் எத்தனோல்
அரித்துச் சிதைத்துவிடும் என்ற அச்சமும் தற்போது நிலவுகிறது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-15T20:00:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்... 7 மாகாண மக்களுக்கு அரசாங்கம் அறிவுறுத்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/wildfire-smoke-hazardous-levels-1784143459"></link>
            <id>https://news.lankasri.com/article/wildfire-smoke-hazardous-levels-1784143459</id>
            <summary type="text">அமெரிக்காவில் ஏழு மாகாணங்களில் காட்டுத்தீப் புகை அபாயகரமான நிலையை எட்டியுள்ளதால், மக்கள் வீட்டுக்குள்ளேயே இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.அபாயகரம...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவில் ஏழு மாகாணங்களில் காட்டுத்தீப் புகை அபாயகரமான நிலையை எட்டியுள்ளதால், மக்கள் வீட்டுக்குள்ளேயே இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.</p><h2>அபாயகரமான</h2><p>
</p><p>கனடாவில் ஏற்பட்ட பெரும் காட்டுத்தீயிலிருந்து வரும் புகை தெற்கு நோக்கி நகர்வதால், கனெக்டிகட், இல்லினாய்ஸ், இந்தியானா, மிச்சிகன், நியூ ஜெர்சி, நியூயார்க் மற்றும் விஸ்கான்சின் ஆகிய மாகாணங்களில் காற்றின் தர எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d944afea-30fe-490e-a371-9e1c6d69d150/26-6a57e04f2a9c5.webp' /></p><p> </p><p>காட்டுத்தீயினால் ஏற்படும் புகையில் 'PM2.5' என்று அழைக்கப்படும் மிக நுண்ணிய துகள்கள் (fine particulate matter) உள்ளன என்றும், நச்சுத்தன்மை வாய்ந்த சேர்மங்களின் மிகச்சிறிய துகள்களைக் கொண்ட இவை மனித திசுக்களுக்குள் ஊடுருவி சுவாசப் பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடியவை என்றும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். </p><p>மேலும், சில பகுதிகளில் காற்றின் தரம், பாதிக்கப்படக்கூடிய குழுக்களுக்கு ஆரோக்கியமற்றது என்பதிலிருந்து மிகவும் ஆரோக்கியமற்றது என்பது வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p></p><p> </p><p>மேலும், இந்த நிலைமைகள் சுருக்கமாக EPA-வின் மிக உயர்ந்த அபாயகரமான பிரிவை எட்டக்கூடும் என்றும் வானிலை ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.</p><p> இதனிடையே, பெரும்பாலான காற்றுத் தர எச்சரிக்கைகள் புதன்கிழமை நள்ளிரவு வரை அமுலில் இருக்கும்; அதேவேளையில், மிச்சிகன் மற்றும் விஸ்கான்சின் மாகாணங்கள் வியாழக்கிழமை வரையிலும் ஆபத்தான காட்டுத்தீப் புகையை எதிர்கொள்ளக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. </p><p>இந்த நிலையில், வெளியே செலவிடும் நேரத்தைக் குறைத்துக்கொள்ளவும், கடுமையான உடற்பயிற்சிகளைத் தவிர்க்கவும், முடிந்தவரை ஜன்னல்களை மூடி வைக்குமாறு சுகாதார அதிகாரிகள் பொதுமக்களை வலியுறுத்துகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/623fb78a-9950-4476-af65-78a19509728d/26-6a57e04fedd08.webp' /></p><h2>800-க்கும் மேற்பட்ட</h2><p> </p><p>ஆஸ்துமா, இதய நோய் மற்றும் பிற சுவாசப் பிரச்சினைகள் உள்ளவர்கள், முதியவர்கள் மற்றும் சிறார்கள் ஆகியோர் அதிக ஆபத்துக்குள்ளாகக்கூடியவர்களாகக் கருதப்படுகிறார்கள்.
பல மாகாணங்கள், அதிக செயல்திறன் கொண்ட வடிகட்டிகளுடன் ஏர் கண்டிஷனர்களை இயக்கவும், இருமல், மூச்சுத்திணறல், மார்பு இறுக்கம் மற்றும் கண் எரிச்சல் உள்ளிட்ட அறிகுறிகளைக் கவனிக்கவும் குடியிருப்பாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளன. </p><p>கனடாவில் நூற்றுக்கணக்கான இடங்களில் எரிந்து கொண்டிருக்கும் காட்டுத்தீயிலிருந்து எழும் புகை, அமெரிக்காவின் பரந்த பகுதிகளுக்குத் தொடர்ந்து பரவி வரும் நிலையில் இந்த எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/57585664-ce5e-4084-b516-154c9a2bb6ef/26-6a57e0509d154.webp' /></p><p> </p><p>இந்தக் கோடைக்காலத்தில் கனடா முழுவதும், குறிப்பாக வடமேற்குப் பிரதேசங்கள், சஸ்காச்சுவான், மனிடோபா, ஒன்ராறியோ மற்றும் கியூபெக் ஆகிய பகுதிகளில் 800-க்கும் மேற்பட்ட காட்டுத்தீகள் தீவிரமாக எரிந்து வருகின்றன. </p><p>PM2.5 என்பது காற்று மாசுபாட்டின் மிக ஆபத்தான வகைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது; ஏனெனில், இதில் உள்ள மிகச்சிறிய துகள்கள் உடலின் இயற்கையான பாதுகாப்பு அமைப்புகளைத் தாண்டிச் சென்று, நுரையீரலின் ஆழமான பகுதிகளில் தங்கும் அளவுக்குச் சிறியவை. </p><p>இதன் வெளிப்பாடு இருமல், மூச்சிரைப்பு, மூச்சுத்திணறல், மார்பு இறுக்கம் மற்றும் கண்கள், மூக்கு, தொண்டையில் எரிச்சல் ஆகியவற்றைத் தூண்டக்கூடும், அதே சமயம் நீண்டகால வெளிப்பாடு மிகவும் கடுமையான இருதய மற்றும் சுவாசப் பிரச்சனைகளுடன் தொடர்புடையதாகக் கண்டறியப்பட்டுள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-15T19:22:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுரேஷ் சலேயின் மனைவி - பிள்ளைகள் எங்கே! அரசியல்வாதிகள் தலைமறைவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sursh-sallay-cid-investigation-crime-politicians-1784141399"></link>
            <id>https://tamilwin.com/article/sursh-sallay-cid-investigation-crime-politicians-1784141399</id>
            <summary type="text">ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் மற்றும் பல்வேறு முக்கிய குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள சுரேஷ் சலேவிடம் சிஐடி முன்னெடுக்கும் விசாரணைகள் தீவிரமட...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் மற்றும் பல்வேறு முக்கிய குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள சுரேஷ் சலேவிடம் சிஐடி முன்னெடுக்கும் விசாரணைகள் தீவிரமடைந்துள்ளன.&nbsp;</p><p>அவர், சிஐடியில் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்ட போது அண்மையில் அவரின் குடும்பத்தினர் அதிகாரிகள் மீது பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வந்தனர்.&nbsp;</p><p>&nbsp;சுரேஷ் சலே உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட நிலையில், அவரின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் அதிகார்கள் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவரின் மனைவி ஊடக பரப்பில் கோரிக்கைகளை முன்வைத்து வந்தார்.&nbsp;</p><p>சலேவின் தாய் மற்றும் மகன் உட்பட அவரின் குடும்பத்தினர், ஊடகங்களுக்கு முன்னிலையில் விசாரணைகளை முன்னெடுக்கும் அதிகாரிகள் தொடர்பில் பகிரங்க குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வந்நதனர்.&nbsp;</p><p>இந்நிலையில், சமீப காலமாக அவர்களில் யாரும் பெரிதாக எவ்வித வெளிப்பாடுகளையும் முன்வைத்து வருவதில்லை. அவர்கள் எங்கே இருக்கின்றார்கள் என்னும் கேள்வி எழும் அளவுக்கு அமைதியாக உள்ளனர்.&nbsp;</p><p>இதற்கான காரணம் தான் என்ன? இது தொடர்பில் பல முக்கிய தகவல்களை ஆராய்கின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி,&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/vjdt-johuV8" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-15T19:10:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் அத்துமீறல் ; மோப்ப நாயுடன் பொலிஸார் விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/woman-sleeping-at-home-molested-police-inves-dog-1784142377"></link>
            <id>https://jvpnews.com/article/woman-sleeping-at-home-molested-police-inves-dog-1784142377</id>
            <summary type="text">களுத்துறை மில்லனிய, ரத்தேகொட பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்று இரவு அத்துமீறி நுழைந்த அடையாளம் தெரியாத நபர், வீட்டின் உரிமையாளரான பெண்ணிடம் அநாகரிகமாக ...</summary>
            <content type="html"><![CDATA[<p>களுத்துறை மில்லனிய, ரத்தேகொட பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்று இரவு அத்துமீறி நுழைந்த அடையாளம் தெரியாத நபர், வீட்டின் உரிமையாளரான பெண்ணிடம் அநாகரிகமாக நடந்துகொண்டுவிட்டு தப்பிச் சென்ற சம்பவம் தொடர்பில் மில்லனிய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.</p><p></p><p>

பொலிஸார் தெரிவிப்பதன்படி, குறித்த பெண் வழக்கம்போல் தனது கணவருடன் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்துள்ளார். மனைவி ஒரு அறையிலும், கணவர் எதிர்புற அறையிலும் உறங்கியிருந்ததாக கூறப்படுகிறது.
</p><p>
இந்த நிலையில், சந்தேகநபர் வீட்டின் ஜன்னல் வழியாக உள்ளே நுழைந்து, பெண் உறங்கிக் கொண்டிருந்த அறைக்குச் சென்று அவரது உடலைத் தொட்டு எழுப்பியதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9d7b6aaf-f199-4db4-ba28-a3bb8cf78b70/26-6a57da2b0d340.webp' /></p><p>திடீரென ஏதோ அசாதாரணம் நிகழ்வதை உணர்ந்த பெண் விழித்தெழுந்து சந்தேகநபரை கண்டு உரக்கக் கூச்சலிட்டுள்ளார். </p><p>இதையடுத்து, சந்தேகநபர் அங்கிருந்து தப்பிச் செல்லும் முன், பெண் அணிந்திருந்த சேலையை இழுத்து எறிந்துவிட்டு தப்பியோடியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
சம்பவம் தொடர்பில் கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் மில்லனிய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன், தடயங்களைப் பின்தொடர்வதற்காக "ஷாகி" என்ற மோப்ப நாயும் சம்பவ இடத்திற்கு அழைக்கப்பட்டு மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p><p>

சந்தேகநபரை அடையாளம் கண்டு கைது செய்வதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-15T19:06:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[காலி சிறைச்சாலைக்குள் வீசப்பட்ட பார்சல்! தீவிரப்படுத்தப்பட்டுள்ள விசாரணைகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/drugs-thrown-into-galle-prison-hunt-for-duo-1784130715"></link>
            <id>https://ibctamil.com/article/drugs-thrown-into-galle-prison-hunt-for-duo-1784130715</id>
            <summary type="text">காலி சிறைச்சாலை வளாகத்திற்குள் சந்தேகத்திற்கிடமான பார்சல் ஒன்று வீசப்பட்டமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்தநிலையில் காலி சிறைச்சாலை...</summary>
            <content type="html"><![CDATA[<p>காலி சிறைச்சாலை வளாகத்திற்குள் சந்தேகத்திற்கிடமான பார்சல் ஒன்று வீசப்பட்டமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
</p><p>
இந்தநிலையில் காலி சிறைச்சாலையின் பின்புறம் அமைந்துள்ள காலி தொடருந்து நிலைய வளாகத்திற்கு (Galle Railway Yard) அருகில் இருந்து சிறைச்சாலை வளாகத்திற்குள் சந்தேகத்திற்கிடமான பார்சல் ஒன்றை வீசிவிட்டு தப்பியோடியதாக தெரிவிக்கப்படும் இருவரை கைது செய்வதற்கான விசாரணைகளை காவல்துறையினர் ஆரம்பித்துள்ளனர்.</p><p>

காவல்துறை விசேட பணியகத்திற்கு (Police Special Bureau) கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் காலி காவல்துறை தலைமையகத்துடன் இணைந்த அதிகாரிகள் இச்சம்பவம் குறித்து விரிவான விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.</p><p>
</p><p></p><h2>தடைசெய்யப்பட்ட பொருட்கள்</h2><p>அந்த இரு நபர்களால் வீசப்பட்ட சந்தேகத்திற்கிடமான பார்சலை மீட்ட காவல்துறையினர் அதனைப் பரிசோதித்த போது அதில் ஐஸ் (Ice) என அழைக்கப்படும் 2,180 மில்லிகிராம் கிரிஸ்டல் மெத்தம்பேட்டமைன் போதைப்பொருள், புகையிலை மற்றும் மொத்தம் 49 சிகரெட் லைட்டர்கள் (Cigarette lighters) இருந்தமை கண்டறியப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1af5e590-bca7-4ec7-babd-8688f325f67f/26-6a57bf478851d.webp' /></p><p>சிறைச்சாலை கைதிகளை சென்றடையும் நோக்கில் போதைப்பொருள் மற்றும் தடைசெய்யப்பட்ட பொருட்களைக் கொண்ட இந்த பார்சல் சிறைச்சாலை சுவருக்கு மேல் வீசுவதற்காகத் தயாரிக்கப்பட்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
</p><p>
இச்சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களை அடையாளம் கண்டு கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை காலி காவல்துறை தலைமையகத்தினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-15T18:47:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[15 ஆண்டுகளுக்கு பின் கொலை வழக்கில் இருவருக்கு மரண தண்டனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/two-sentenced-to-death-in-murder-case-15-years-1784140909"></link>
            <id>https://jvpnews.com/article/two-sentenced-to-death-in-murder-case-15-years-1784140909</id>
            <summary type="text">எல்பிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில், கடந்த 2011ஆம் ஆண்டில் ஹலம்பகே சந்துன் சம்பத் என்பவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய இர...</summary>
            <content type="html"><![CDATA[<p>எல்பிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில், கடந்த 2011ஆம் ஆண்டில் ஹலம்பகே சந்துன் சம்பத் என்பவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய இருவருக்கு பலபிட்டிய மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.</p><p></p><p> 

சுமார் 15 வருடங்களாக நீடித்த இந்த நீண்ட வழக்கு விசாரணையின் தீர்ப்பை நீதிபதி ருசிர வெலிவத்த இன்று (15) அறிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a15e9641-8868-4729-85b4-c62bdbac9aba/26-6a57d46f39724.webp' /></p><p>

முதலாம் எதிரியான வஹும்கபுரக திலக் புஷ்பகுமார மற்றும் இரண்டாம் எதிரியான வீரதுங்க சமிந்த ஆகிய இருவருக்கே இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்டது. </p><p>

இவர்களுக்கு எதிராக தண்டனைச் சட்டக்கோவையின் 296வது பிரிவின் கீழ் இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்டது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-15T18:41:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[மேர்வின் சில்வா உள்ளிட்ட 6 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/chargesheet-filed-6-people-including-mervyn-silva-1784140462"></link>
            <id>https://jvpnews.com/article/chargesheet-filed-6-people-including-mervyn-silva-1784140462</id>
            <summary type="text">போலி ஆவணங்களைப் பயன்படுத்தி கிரிபத்கொடவிலுள்ள அரசிற்குச் சொந்தமான காணியொன்றை விற்க முயன்றதாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டின் கீழ், முன்னாள் அமைச்சர் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>போலி ஆவணங்களைப் பயன்படுத்தி கிரிபத்கொடவிலுள்ள அரசிற்குச் சொந்தமான காணியொன்றை விற்க முயன்றதாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டின் கீழ், முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா மற்றும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர உள்ளிட்ட ஆறு பேருக்கு எதிராக கம்பஹா மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/175ecc8d-9f5e-4b07-8369-b1498677ee1b/26-6a57d2b015c29.webp' /></p>]]></content>
            <updated>2026-07-15T18:34:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அடுத்த ஜனாதிபதி யார்! இலங்கை அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய புதிய கூட்டணிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/next-president-new-sri-lankan-politics-npp-anura-1784137351"></link>
            <id>https://tamilwin.com/article/next-president-new-sri-lankan-politics-npp-anura-1784137351</id>
            <summary type="text">இலங்கையின் அரசியல் நடவடிக்கை நாளுக்கு நாள் மாறிக்கொண்டு செல்வதுடன் பல புதிய அணிகளும், கூட்டணிகளும் உருவாகி வருகின்றன.இந்தநிலையிலே, அடுத்த ஜனாதிபதித்தே...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் அரசியல் நடவடிக்கை நாளுக்கு நாள் மாறிக்கொண்டு செல்வதுடன் பல புதிய அணிகளும், கூட்டணிகளும் உருவாகி வருகின்றன.</p><p>இந்தநிலையிலே, அடுத்த ஜனாதிபதித்தேர்தல் 2029 இல் நடைபெறவுள்ளது.இதனையடுத்து, அரசியல் கட்சிகள் தேர்தல் நடவடிக்கைகளுக்காக தயார்படுத்தலை முன்னெடுத்து வருகின்றன.</p><p>பல்வேறு தரப்புக்கள் தங்களது ஆதரவாளர்களை ஒன்றிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.உதாரணமாக நாமல் ராஜபக்ச மற்றும் திலித் ஜயவீர போன்றோர் மக்கள் சந்திப்பை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p>எதிர்வரும்&nbsp;ஜனாதிபதித்தேர்தலிலே பொது வேட்பாளர்களாக ரணில் விக்ரமசிங்க, சஜித் பிரேமதாஸ, நாமல் ராஜபக்ச, சம்பிக்க ரணவக்க, தயாசிறி ஜயசேகர போன்றோர் போட்டியிடவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.</p><p>அடுத்த ஜனாதிபதித்தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என்பதை திர்மானிப்பதில் தமிழ், முஸ்லிம் மற்றும் மலையக கட்சிகளின் ஆதரவு முக்கிய பங்காற்றும் எனக் கூறப்படுகின்றது.</p><p>இந்த விடயம் தொடர்பான விரிவான தகவல்களை நியூஸ் இன்சைட் நிகழ்ச்சியில் காணலாம்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/b746TCSqv10" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-15T18:34:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[லித்துவேனியா மீதான தாக்குதல் திட்டம் வெறும் கதை: குற்றச்சாட்டுகளை மறுத்தது ரஷ்யா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/russia-denies-lithuania-attack-plan-just-story-1784138996"></link>
            <id>https://tamilwin.com/article/russia-denies-lithuania-attack-plan-just-story-1784138996</id>
            <summary type="text">தங்கள் நாட்டின் உள்கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்த ரஷ்யா
திட்டமிட்டுள்ளதாக லித்துவேனியா சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகளை ரஷ்ய ஜனாதிபதி
மாளிகையான கிர...</summary>
            <content type="html"><![CDATA[<p>தங்கள் நாட்டின் உள்கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்த ரஷ்யா
திட்டமிட்டுள்ளதாக லித்துவேனியா சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகளை ரஷ்ய ஜனாதிபதி
மாளிகையான கிரெம்ளின் முற்றிலுமாக மறுத்துள்ளது.
</p><p>
ரஷ்யாவிற்கு எதிராக தங்களை இராணுவமயமாக்கிக் கொள்வதற்காகவே லித்துவேனியா
இத்தகைய ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைக் கூறி வருவதாக ரஷ்யா சாடியுள்ளது.</p><p></p><h2>முன்னெச்சரிக்கை நடவடிக்கை</h2><p>
</p><p>
முன்னதாகப் பேட்டியளித்த லித்துவேனியா ஜனாதிபதி கிட்டானஸ் நௌசேடா, தங்கள்
நாட்டின் உள்கட்டமைப்புகள் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தத் திட்டமிட்டுள்ளதாகத்
தங்களுக்கு உளவுத்துறைத் தகவல் கிடைத்துள்ளதாகவும், இதன் காரணமாக
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாட்டின் ஆற்றல் மற்றும் போக்குவரத்து
மையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/33976a57-9197-4e84-92ed-6ebde8a6f212/26-6a57d0bad9229.webp' /></p><p>
</p><p>
இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் செய்தியாளர்களிடம் பேசிய கிரெம்ளின்
செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ், "மக்களை மூளைச்சலவை செய்து, நாட்டை
மேலும் இராணுவமயமாக்குவதற்காகப் பரப்பப்படும் அச்சுறுத்தல் கதைகளின் சமீபத்திய
வடிவமே இதுவாகும்.</p><p>

இந்த நோக்கத்தை அடைவதற்காக, அவர்கள் மற்றொரு நாட்டை - இந்தச் சூழலில் எங்களது
நாட்டை - எதிரியாகக் காட்ட வேண்டியுள்ளது.
</p><p>
இந்த சாக்கைப் பயன்படுத்தி பால்டிக் நாடுகளில் நேட்டோ (NATO) அமைப்பின் இராணுவ
உள்கட்டமைப்புகளை அவர்கள் தொடர்ந்து விரிவுபடுத்தி வருகின்றனர்” என்று
குற்றம் சாட்டினார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-15T18:26:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[அடுத்த மூன்று நாட்களுக்கு கதி கலங்கப்போகிறது ஈரான் : ட்ரம்ப் உயர்மட்ட எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/trump-warns-severe-military-action-on-iran-1784139912"></link>
            <id>https://ibctamil.com/article/trump-warns-severe-military-action-on-iran-1784139912</id>
            <summary type="text">அமெரிக்க இராணுவம் அடுத்த மூன்று நாட்களுக்கு ஈரானை கடுமையாக தாக்கப்போவதாக ஜனாதிபதி ட்ரம்ப் இன்று (15)மேற்கொண்ட பேச்சுவார்த்தையை அமெரிக்க ஊடகங்கள் செய்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்க இராணுவம் அடுத்த மூன்று நாட்களுக்கு ஈரானை கடுமையாக தாக்கப்போவதாக ஜனாதிபதி ட்ரம்ப் இன்று (15)மேற்கொண்ட பேச்சுவார்த்தையை அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
</p><p>

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் உயர்மட்ட அளவிலான பேச்சுவார்த்தையை நடத்தினார். ஹோர்முஸ் நீரிணையில் வர்த்தகக் கப்பல் போக்குவரத்திற்கு அச்சுறுத்தல் விடுக்கும் ஈரானை பலவீனப்படுத்துவதே இதன் நோக்கம் என அவர் தெரிவித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.</p><h2>இராணுவ நடவடிக்கை தீவிரப்படுத்தப்படும்</h2><p>இந்த சந்திப்புக்கு முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த ட்ரம்ப், ஈரான் பேச்சுவார்த்தைக்கு மறுத்தால் வரும் நாட்களில் இராணுவ நடவடிக்கை தீவிரப்படுத்தப்படும் என்றும், தொடர்ந்து பரந்த அளவிலான தாக்குதல் நடத்தப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bab2c2ed-4aa3-4066-8c60-2e2112612dfc/26-6a57d089c3605.webp' /></p><p>
</p><p>


இதுகுறித்து மேலும் கூறிய அவர், “அடுத்த மூன்று நாட்களுக்கு அமெரிக்க இராணுவம் ஈரானைக் கடுமையாகத் தாக்கப் போகிறது.

அடுத்த வாரம் அவர்களின் நிலைமை மிகவும் மோசமாகப் போகிறது.</p><p></p><h2>மின் உற்பத்தி நிலையங்கள் பாலங்கள் மீது தாக்குதல்&nbsp;</h2><p> </p><p>ஏனென்றால், அதற்கு அடுத்த வாரம் மின் உற்பத்தி நிலையங்கள் மீதும், அதற்கு அடுத்த வாரம் பாலங்கள் மீதும் தாக்குதல்கள் நடத்தப்படும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/27249836-58d5-4706-b932-f91b5b5165a1/26-6a57d08a75ff6.webp' /></p><p>
</p><p>
அவர்கள் பேச்சுவார்த்தைக்கு வராவிட்டால், நாங்கள் அவர்களுடைய அனைத்து மின் உற்பத்தி நிலையங்களையும், பாலங்களையும் தகர்த்துவிடுவோம்” என்று அவர் கூறினார்.&nbsp; &nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-15T18:25:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[சூரியன் - சந்திரன் ஒரே நாளில் நிகழும் அரிய ராசி மாற்றம்... இந்த ராசிகளுக்கு இனி பொற்காலம் தான்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/sun-and-moon-change-their-zodiacs-who-get-luck-1784118927"></link>
            <id>https://manithan.com/article/sun-and-moon-change-their-zodiacs-who-get-luck-1784118927</id>
            <summary type="text">ஜூலை மாதத்தில் பல முக்கியமான மற்றும் சக்திவாய்ந்த கிரகப் பெயர்ச்சிகள் நடைபெறவுள்ளன. அவற்றில் மிகவும் சிறப்பான ஜோதிட நிகழ்வாக, நாளைய தினம் ஜூலை 16, 202...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜூலை மாதத்தில் பல முக்கியமான மற்றும் சக்திவாய்ந்த கிரகப் பெயர்ச்சிகள் நடைபெறவுள்ளன. அவற்றில் மிகவும் சிறப்பான ஜோதிட நிகழ்வாக, நாளைய தினம் ஜூலை 16, 2026 சூரியனும் சந்திரனும் ஒரே நாளில் தங்களது ராசிகளை மாற்றுகின்றன. </p><p>சூரியன் மிதுன ராசியிலிருந்து சந்திரனால் ஆளப்படும் கடக ராசிக்கு பெயர்ச்சி அடைகிறது. அதே நேரத்தில், சந்திரன் கடக ராசியிலிருந்து சூரியனால் ஆளப்படும் சிம்ம ராசிக்கு பெயர்ச்சி அடைகிறது.அதாவது, சூரியன் சந்திரனின் ராசிக்கும், சந்திரன் சூரியனின் ராசிக்கும் ஒரே நாளில் மாறுவதால், இது மிகவும் அரிதான மற்றும் தனிச்சிறப்புமிக்க கிரக அமைப்பாகக் பார்க்கப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fb786367-eb28-47de-aff3-97ad1aaf05e2/26-6a5793025e7d6.webp' /></p><p></p><p>இந்த கிரக நகர்வு அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் ஏதோ ஒரு வகையில் தாக்கத்தை ஏற்படுத்தினாலும், தொழில், தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் நிதி நிலையில் உச்சகட்ட அதிர்ஷ்ட பலன்களை பெறப்போகும் ராசிகள் யார் யார் என்பது குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.</p><h2>மேஷம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/06ced644-3700-441e-9a04-0fd418388ead/26-6a579303131eb.webp' /></p><p>
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த அரிய கிரகச் சேர்க்கை கல்வி, தொழில் மற்றும் பொருளாதார வளர்ச்சியில் நல்ல முன்னேற்றத்தை ஏற்படுத்திக்கொடுக்கப்போகின்றது.</p><p>போட்டித் தேர்வுகளில் பங்கேற்கும் மாணவர்களுக்கு வெற்றி கிடைக்கும், புதிய தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு சாதகமான சூழல் தானாகவே அமையும். புதிய வழிகளில் பணம் வருவதற்கு அதிக வாய்ப்புள்ளது.</p><p>வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கலாம், பணியில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கலாம். பழைய முதலீடுகள் மூலம் பலன் கிடைக்கவும் வாய்ப்பு உள்ளது.மொத்தத்தில் இது மேஷ ராசிக்காரர்களுக்கு முன்னேற்றமும் வெற்றியும் தரும் பொற்காலமாக இருக்கும்.</p><h2>

கடகம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0edb3b89-5cce-40ff-81cb-4ab382450d44/26-6a579303b99af.webp' /></p><p></p><h2>
</h2><p>கடக ராசிக்காரர்களுக்கு இந்த கிரகப் பெயர்ச்சி சாதகமான பலன்களை ஏற்படுத்திக்கொடுக்கும். தன்னம்பிக்கையும் ஆற்றலும் அதிகரித்து, நிதி நிலை மேம்படும்.</p><p> கடந்த கால முயற்சிகளுக்கான பலன்கள் கிடைக்கத் தொடங்கலாம். மூத்தவர்களின் ஆலோசனைகள் கல்வி மற்றும் தொழில் வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும். </p><p>குடும்பம் மற்றும் பணியிடத்தில் ஆதரவு கிடைக்கும். காதல் வாழ்க்கை சிறப்பாக அமையவும், புதிய சொத்துக்கள் வாங்கும் வாய்ப்பும் உருவாகலாம். குறிப்பாக இந்த கிரக அமைப்பு தொழில் விடயத்தில் உச்சகட்ட சாதக பலன்களை ஏற்படுத்திக்கொடுக்கும்.</p><h2>

துலாம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e688f528-1372-49e8-971d-d5c72bc49e11/26-6a57930468c87.webp' /></p><h2>
</h2><p>துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த கிரகச் சேர்க்கை தொழில் வளர்ச்சி மற்றும் அங்கீகாரத்தைத் தரக்கூடும். கடின உழைப்புக்கு ஏற்ற பலன்கள், பதவி உயர்வு அல்லது நிதி ஆதாயங்கள் கிடைக்கும்.</p><p> நிலுவையில் இருந்த பணிகள் முடிவடையும். வியாபாரத்தில் லாபம் கிடைக்கலாம், குடும்பத்தில் அமைதி நிலவும். புதிய சொத்து வாங்கும் வாய்ப்பும், எதிர்பாராத வெற்றிகளும் கிடைக்கக்கூடிய காலமாக இது அமையலாம்.</p><p>நீண்ட கால கடன் தொல்லைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் அளவுக்கு பொருளாதாரத்தில் ஏற்றம் உண்டாகும். திருமண வாழ்க்கையில் இருந்துவந்த பிரச்சினைகள் நிவர்த்தியாகும்.</p><p><b>இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).&nbsp;&nbsp;</b></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b>&nbsp;</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-15T18:25:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[தேசிய அடையாள அட்டை இல்லையா? சாதாரண தர பரீட்சைக்கு விண்ணப்பிப்பதில் தடையில்லை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/don-t-have-national-identity-card-restriction-o-l-1784139808"></link>
            <id>https://jvpnews.com/article/don-t-have-national-identity-card-restriction-o-l-1784139808</id>
            <summary type="text">2026 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதரப் பத்திர (சாதாரண தர) பரீட்சைக்கு, தேசிய அடையாள அட்டை இல்லாவிட்டாலும் விண்ணப்பிக்க முடியும் என இலங்கை பரீட்சைக...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதரப் பத்திர (சாதாரண தர) பரீட்சைக்கு, தேசிய அடையாள அட்டை இல்லாவிட்டாலும் விண்ணப்பிக்க முடியும் என இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.</p><p></p><p> 

குறித்த பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரல் 03.07.2026 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டதுடன், எதிர்வரும் 23.07.2026 ஆம் திகதி வரை நிகழ்நிலை ஊடாக ஏற்றுக்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. </p><p>

இந்த காலப்பகுதியில் தேசிய அடையாள அட்டை இல்லாத பாடசாலை விண்ணப்பதாரிகளுக்கு விண்ணப்ப ஒழுங்குமுறைக்கான அறிவுறுத்தல்கள் பாடசாலை அதிபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதுள்ளது</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/be1145ad-8278-4fff-b072-52f92849b186/26-6a57d02345751.webp' /></p><p>அதேநேரம் தேசிய அடையாள அட்டை இல்லாத தனிப்பட்ட விண்ணப்பதாரிகள் தமது பாதுகாவலரின் தேசிய அடையாள அட்டை எண்ணைப் பயன்படுத்தி விண்ணப்பத்தினை சமர்ப்பிக்க முடியும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. </p><p>

அதற்கமைய தேசிய அடையாள அட்டை இல்லாத தனிப்பட்ட விண்ணப்பதாரிகள் உரிய இறுதித் திகதிக்கு முன்னர் தேசிய அடையாள அட்டையினை பெற்றுக்கொள்ளாமையானது பரீட்சைக்கு விண்ணப்பிப்பதற்கு விண்ணப்பம் செய்வதில் எவ்வித தடையுமில்லை என்பதை பரீட்சைகள் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது. </p><p>

எனவே சகல விண்ணப்பதாரிகளும் ஊடக வெளியீட்டுக்கமைய 23.07.2026 ஆம் திகதிக்கு முன்னர் பரீட்சைக்கான விண்ணப்பத்தினை விண்ணப்பிக்க முடியும். </p><p>

இதேவேளை எவ்வித காரணங்களுக்காகவும் விண்ணப்பத்திற்கான இறுதித்திகதி நீடிக்கப்பட மாட்டாது எனவும் இலங்கை பரீட்சைகள் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7c010187-0c0a-47c2-bdd4-592ba0aef80d/26-6a57d02290435.webp' /></p>]]></content>
            <updated>2026-07-15T18:23:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[சூடான் உள்நாட்டுப் போர்: கம் அரபிக் பசை வர்த்தகம் மூலம் நிதியுதவி - ஐ.நா. பகிரங்க எச்சரிக்கை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sudanese-civil-war-funde-gum-arabic-trade-1784137897"></link>
            <id>https://tamilwin.com/article/sudanese-civil-war-funde-gum-arabic-trade-1784137897</id>
            <summary type="text">சூடானில் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து நீடித்து வரும் உள்நாட்டுப் போருக்கு,
அங்கு உலகளவில் நடைபெறும் &#039;கம் அரபிக்&#039; எனப்படும் இயற்கைப் பசை வர்த்தகம் ஒரு
மு...</summary>
            <content type="html"><![CDATA[<p>சூடானில் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து நீடித்து வரும் உள்நாட்டுப் போருக்கு,
அங்கு உலகளவில் நடைபெறும் 'கம் அரபிக்' எனப்படும் இயற்கைப் பசை வர்த்தகம் ஒரு
முக்கிய நிதியாதாரமாக விளங்கி வருவதாக ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது.
</p><p>
உலகளாவிய சந்தையில் குளிர்பானங்கள், மருந்துப் பொருட்கள், சொக்லேட்டுகள்
மற்றும் அழகுசாதனப் பொருட்களில் நிலைநிறுத்தியாக மற்றும் அடர்த்தியாக்கியாக
இம்மூலப்பொருள் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.
</p><p>
உலகளவில் தேவைப்படும் இந்த கம் அரபிக் பசையின் ஒட்டுமொத்த உற்பத்தியில்
சுமார் 80 விழுக்காட்டை சூடான் நாடே பூர்த்தி செய்து வருகிறது.
</p><p>
சூடான் இராணுவத்திற்கும், துணை இராணுவப் பிரிவான விரைவு ஆதரவுப் படைக்கும்
(RSF) இடையே தொடரும் இந்த மோதலில், இரு தரப்புமே இந்த வர்த்தகத்தைக்
கட்டுப்படுத்தி தங்களின் இராணுவச் செயல்பாடுகளுக்கான நிதியைப் பெற்று
வருகின்றன.</p><p></p><h2>சர்வதேச சந்தைக்கு ஏற்றுமதி</h2><p>
</p><p>
குறிப்பாக, RSF அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் இருந்து
பெருமளவிலான கம் அரபிக் அண்டை நாடுகளுக்குக் கடத்தப்பட்டு, பின்னர்
அங்கிருந்து அந்த நாடுகளின் உள்ளூர் தயாரிப்புகள் போல போலியாக சர்வதேச
சந்தைக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5039149c-5a9a-4c03-9574-ee4db188a64b/26-6a57cbf25cc4f.webp' /></p><p>
</p><p>
இதனால் இந்த மூலப்பொருட்களின் அசல் உற்பத்தி நாட்டைத் துல்லியமாகக் கண்டறிவது
உலகளாவிய நிறுவனங்களுக்குப் பெரும் சவாலாக மாறியுள்ளது.</p><p>

இந்தப் போர்ச் சூழலால், கம் அரபிக் உற்பத்தி மற்றும் சேகரிப்பில் ஈடுபடும்
உள்ளூர் விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் கடுமையான பாதுகாப்பு
அச்சுறுத்தல்களையும், கொள்ளைச் சம்பவங்களையும் எதிர்கொண்டு வருகின்றனர்.
</p><p>
இது குறித்துக் கவலை தெரிவித்துள்ள ஐ.நா மனித உரிமைகள் ஆணையத் தலைவர் வோல்கர்
துர்க், சர்வதேச நிறுவனங்கள் மோதலால் பாதிக்கப்பட்ட விநியோகச்
சங்கிலிகளிலிருந்து தங்களது மூலப்பொருட்களைப் பெறும்போது கூடுதல் பொறுப்புடன்
செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.</p><p>

நிறுவனங்கள் தங்களின் வர்த்தக நடைமுறைகள் மூலம் மறைமுகமாக இந்த வன்முறைக்கும்
மனித உரிமை மீறல்களுக்கும் நிதியுதவி அளிக்கவில்லை என்பதை உறுதி செய்ய முறையான
சரிபார்ப்புப் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர்
கேட்டுக்கொண்டுள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-15T18:05:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[பெர்லின் நபர் மீது 22 பிரிவுகளில் வழக்குகள் பதிவு: சிக்கிய காணொளிகளால் அதிர்ச்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/berlin-man-charged-with-1784138525"></link>
            <id>https://news.lankasri.com/article/berlin-man-charged-with-1784138525</id>
            <summary type="text">பெர்லினைச் சேர்ந்த ஒருவர், சுயநினைவற்ற பெண்களைப் பாலியல் வன்கொடுமை செய்து, அச்செயல்களை காணொளிப் பதிவு செய்ததாகக் கிட்டத்தட்ட இருபதுக்கும் மேற்பட்ட குற...</summary>
            <content type="html"><![CDATA[<p>பெர்லினைச் சேர்ந்த ஒருவர், சுயநினைவற்ற பெண்களைப் பாலியல் வன்கொடுமை செய்து, அச்செயல்களை காணொளிப் பதிவு செய்ததாகக் கிட்டத்தட்ட இருபதுக்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.</p><h2>மொத்தம் 58 பெண்கள்</h2><p>
</p><p>சிக்கியுள்ள காணொளி ஆதாரங்களின் அடிப்படையில், அந்த நபர் 60 பேர்களை வரை தாக்கியிருக்கலாம் என்று விசாரணை அதிகாரிகள் கருதுகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f487b7d9-08a4-4917-a552-c9717d3119e5/26-6a57cc95298c6.webp' /></p><p> சுயநினைவற்ற நிலையில் உள்ள பெண்களைக் குறிவைத்துத் தொடர்ச்சியாகப் பாலியல் வன்புணர்வு செய்து அதை ஒளிப்பதிவு செய்துகொண்டது தொடர்பான பல முக்கிய வழக்குகளில் சமீபத்திய ஒன்றாக, </p><p>14 பெண்களைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாக 68 வயதுடைய ஜேர்மானியர் ஒருவர் மீது 22 குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்துள்ளதாக பெர்லின் அரசுத் தரப்பு சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர். </p><p>மின்பணியாளரான அந்த நபர் மார்ச் மாதம் முதல் பொலிஸ் காவலில் உள்ளார்.
நிகழ்ந்த ஒவ்வொரு பாலியல் வன்புணர்வுச் சம்பவத்தையும் பதிவு செய்துள்ளதாகக் கருதப்படுவதால், பாதிக்கப்பட்டவர்களின் உருவத்தைப் பயன்படுத்தும் உரிமை மீறலுடனும் இந்த அனைத்துக் குற்றங்களும் தொடர்புடையதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக பெர்லின் அரசு சட்டத்தரணிகள் அலுவலகம் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.</p><p></p><p> </p><p>தொடர்ந்து நடைபெற்று வரும் விசாரணையில், மொத்தம் 58 பெண்களுக்கு எதிராகப் பல குற்றங்கள் இழைக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளதாக சட்டத்தரணிகள் அலுவலகம் தெரிவித்துள்ளது, மேலும், அவர்களில் 10 பெண்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை என்றும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. </p><p>மேலும், குற்றம் சாட்டப்பட்டவர், இணையவழி டேட்டிங் தளங்கள் மூலம் பெண்களை வரவழைத்து, மதுவுடன் பல்வேறு தூக்க மாத்திரைகளைக் கலந்து கொடுத்து அவர்களை மயக்கமடையச் செய்து, பின்னர் பாலியல் வன்புணர்வு செய்ததாக அரசுத் தரப்பு சட்டத்தரணிகள் தெரிவித்தனர். </p><p>இதனிடையே, தாக்குதலுக்கு உள்ளானதாகக் கருதப்படுபவர்களில், விசாரணை அதிகாரிகளிடம் ஏற்கனவே பேசியவர்கள், அந்தத் தாக்குதல்கள் குறித்துத் தங்களுக்கு எதுவும் நினைவில் இல்லை என்றும், அக்குற்றச் செயல்கள் தொடர்பான காணொளிகள் கண்டறியப்பட்ட பின்னரே அவை குறித்துத் தாங்கள் அறிந்துகொண்டதாகவும் கூறியுள்ளனர்.</p><h2>டிஜிட்டல் கோப்புகள்</h2><p> </p><p>தன் மீதான குற்றச்சாட்டுகளுக்குச் சந்தேகநபர் இன்னும் பதிலளிக்கவில்லை என்று அரசுத் தரப்பு சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.
லோயர் சாக்சனியைச் (Lower Saxony) சேர்ந்த காவல்துறை அதிகாரிகளிடமிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்தன. </p><p>2025-ஆம் ஆண்டின் தொடக்கத்தில், இறந்துபோன ஒரு நபர் மீதான இதே போன்ற குற்றச்சாட்டுகள் குறித்து லோயர் சாக்சனி காவல்துறை விசாரணை நடத்தி வந்தனர். அந்த நபர், பெர்லினைச் சேர்ந்த சந்தேக நபருடன் இணையவழி உரையாடல்கள் மூலம் தொடர்பில் இருந்ததாகக் கருதப்படுகிறது. </p><p>அந்தத் தகவலின் அடிப்படையில், ஜேர்மன் தலைநகரின் ஃபிரெட்ரிக்ஸ்ஃபெல்டே புறநகர்ப் பகுதியில் உள்ள அந்த நபரின் குடியிருப்பில் பொலிசார் சோதனை நடத்தினர்; அப்போது, ​​ஏராளமான டிஜிட்டல் கோப்புகளைக் கண்டெடுத்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2fca9854-3a84-4ac6-ba73-fb3ad36d27c3/26-6a57cc945e716.webp' /></p><p>
</p><p>2026-ஆம் ஆண்டில், ஒரு விசாரணை அதிகாரி பல பாலியல் வன்கொடுமைக் காணொளிகளைக் கண்டெடுத்தார், அவற்றில் பெர்லின் நபரே தாக்குதல் நடத்தியவர் என்று நம்பப்படுகிறது. </p><p>இந்த ஆண்டு மார்ச் மாதம் காவல்துறை மீண்டும் அவரது வீட்டில் சோதனை நடத்தி அவரைக் கைது செய்தது. போதை மருந்து கொடுக்கப்பட்ட பெண்கள் மீது கமெராவில் பதிவான தொடர் பாலியல் வன்கொடுமைகள் தொடர்பான, இந்த ஆண்டு பெர்லின் மற்றும் மியூனிக்கில் நடந்த இதே போன்ற வழக்குகளை இந்தக் குற்றச்சாட்டுகள் நினைவூட்டுகின்றன.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-15T18:00:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[பொலிஸ் அதிகாரியைச் சுட்டுவிட்டு தப்பிய சந்தேகநபர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/suspect-who-shot-and-escaped-after-shooting-police-1784138354"></link>
            <id>https://jvpnews.com/article/suspect-who-shot-and-escaped-after-shooting-police-1784138354</id>
            <summary type="text">கட்டுநாயக்க, தேவமொட்டாவ பகுதியில் இன்று (15) பிற்பகல் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். கடமை...</summary>
            <content type="html"><![CDATA[<p>கட்டுநாயக்க, தேவமொட்டாவ பகுதியில் இன்று (15) பிற்பகல் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p> </p><p></p><p>கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோத்தர் மீது அவரது கடமை நேர துப்பாக்கியால் துப்பாக்கி பிரயோகத்தை நடத்தி விட்டு சந்தேகநபர் தப்பிச் சென்றிருந்தார். </p><p>

அவரை கைது செய்வதற்காக பொலிஸார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்த நிலையில் இன்று மாலை வேளையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/07d350b8-cba9-4889-bd35-c401a05a1738/26-6a57ca73c3341.webp' /></p><p>அதேநேரம் இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் தொடர்ந்தும் நீர்கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றார். </p><p>

கைது செய்யப்பட்ட போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவர், அந்த பொலிஸ் உத்தியோகத்தரின் கடமைநேர துப்பாக்கியைப் பறித்து இந்தத் துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டுத் தப்பியோடியிருந்தார்.</p><p> 

கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் செயற்பட்ட இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள், மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரைப் பின்தொடர்ந்து சென்றுள்ளனர்.</p><p> 

இதன்போது தேவமொட்டாவ பகுதியில் வைத்து சந்தேகநபரை நிறுத்தி விசாரணை செய்த பின்னர், அவரைப் பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர். </p><p>

சந்தேகநபரைப் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்வதற்குத் தயாராகிக் கொண்டிருந்த போது, ஒரு பொலிஸ் அதிகாரி சந்தேகநபர் வந்த மோட்டார் சைக்கிளை எடுத்து வருவதற்காகச் சென்றுள்ளார். </p><p>

அவ்வேளையில், மற்றைய அதிகாரியுடன் இருந்த சந்தேகநபர், உடனடியாகச் செயற்பட்டு அந்த உத்தியோகத்தரிடம் இருந்த கடமைநேர துப்பாக்கியைப் பறித்து, அவர் மீது துப்பாக்கிச் பிரயோகம் மேற்கொண்டுவிட்டு வேறொரு மோட்டார் சைக்கிளில் தப்பியோடியமை ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-15T17:59:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜப்பானில் வீட்டிற்குள் நுழைந்து உணவு தேடிய கரடி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/japan-family-finds-bear-in-kitchen-calls-police-1784133555"></link>
            <id>https://canadamirror.com/article/japan-family-finds-bear-in-kitchen-calls-police-1784133555</id>
            <summary type="text">&amp;nbsp;ஜப்பானின் வடக்கு பகுதியில் உள்ள வீடொன்றின் சமையலறைக்குள் கரடி ஒன்று நுழைந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் காவல் துறையினருக்குத் தகவல்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;ஜப்பானின் வடக்கு பகுதியில் உள்ள வீடொன்றின் சமையலறைக்குள் கரடி ஒன்று நுழைந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் காவல் துறையினருக்குத் தகவல் கொடுத்துள்ளனர். </p><p>
ஜப்பானில் அண்மைக்காலமாக கரடிகளின் தாக்குதலால் உயிரிழப்புகள் அதிகரித்து வரும் நிலையில், இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. </p><p>
ஜப்பானின் இவதே மாகாணத்திலுள்ள ஷிசுகுய்ஷி நகரில் கடந்த திங்கட்கிழமை இரவு இந்த அசாதாரண சம்பவம் நடந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d75970f5-64bf-4d47-adea-fb2af4e66155/26-6a57b7b50ffec.webp' /></p><p> 
வீட்டிற்குள் நுழைந்த கரடி ஒன்று, அங்கிருந்த குளிர்சாதனப் பெட்டியை எளிதாகத் திறந்து, அதிலிருந்த உணவுப் பொருட்களைத் தரையில் சிதறடித்துள்ளது.
</p><p> பின்னர், சமையலறைக்கு அருகில் இருந்த கதவு வழியாக வெளியேறிய அந்தக் கரடி, அங்கிருந்த குப்பைத் தொட்டியிலும் உணவைத் தேடிவிட்டுச் சென்றிருப்பதை அதன் கால்தடங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. </p><p>
ஷிசுகுய்ஷி நகரில் கடந்த ஜூலை 5 ஆம் திகதிக்குப் பின்னர், வீடுகளுக்குள் கரடிகள் புகுந்ததாகப் பதிவாகும் 5-வது சம்பவம் இதுவாகும். 
குளிர்கால உறக்கத்திலிருந்து வெளிவந்த பிறகு, கரடிகள் நகரங்களுக்குள் ஊடுருவுவது கணிசமாக அதிகரித்துள்ளது.</p><p>
ஜப்பானில் அண்மைக்காலமாக கரடித் தாக்குதல்கள் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளன.
ஜப்பானிய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் தரவுகளின்படி, கடந்த ஏப்ரல் 1 ஆம் திகதியிலிருந்து இதுவரை டோஹோகு பிராந்தியத்தில் மட்டும் கரடித் தாக்குதலால் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-15T17:31:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் மின்னணு சாதன மோசடியில் ஈடுபட்டவர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/police-make-arrest-in-milton-fake-agent-scam-1784132699"></link>
            <id>https://canadamirror.com/article/police-make-arrest-in-milton-fake-agent-scam-1784132699</id>
            <summary type="text">சாதனங்கள் மீட்பு
கனடாவில் மோசடியில் ஈடுபட்டு தொலைதொடர்பு நிறுவனங்களின் முகவர்கள் போல நடித்து, வாடிக்கையாளர்களை ஏமாற்றி போன்கள் மற்றும் மின்னணு சாதனங்...</summary>
            <content type="html"><![CDATA[<p>சாதனங்கள் மீட்பு
கனடாவில் மோசடியில் ஈடுபட்டு தொலைதொடர்பு நிறுவனங்களின் முகவர்கள் போல நடித்து, வாடிக்கையாளர்களை ஏமாற்றி போன்கள் மற்றும் மின்னணு சாதனங்களைப் பறித்து வந்த மோசடி கும்பலைச் சேர்ந்த ஒருவரை ஹால்டன் பிராந்திய காவல் துறையினர் கைது செய்துள்ளனர். </p><p>
அவரிடமிருந்து சுமார் 36,000 டாலருக்கும் அதிக மதிப்புள்ள 22 மின்னணு சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. </p><p>
மில்டன் பகுதியைத் தளமாகக் கொண்டு செயல்பட்ட இந்த மோசடி கும்பல், கனடாவின் பிரபல தொலைத்தொடர்பு நிறுவனங்களான Rogers, Bell, அல்லது Telus ஆகியவற்றின் பிரதிநிதிகள் போல வாடிக்கையாளர்களைத் தொடர்பு கொண்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3ec67bc3-62ec-4217-94ce-994f35aec614/26-6a57b45dc1966.webp' /></p><p> </p><p>
வாடிக்கையாளர்களைத் தொடர்பு கொள்ளும் மோசடி கும்பல், அவர்களுக்குப் புதிய ஐபோன் அல்லது மின்னணு சாதனங்கள் முற்றிலும் இலவசமாகக் கிடைக்கப் போவதாகக் கூறி நம்ப வைத்துள்ளனர்.
</p><p>வாடிக்கையாளர்களின் தற்போதைய கணக்கைப் (account) பயன்படுத்தி, புதிய போன் அல்லது சாதனங்களை வாங்குமாறு அவர்களை மூளைச்சலவை செய்து ஆர்டர் செய்ய வைக்கின்றனர்.</p><p>
வாடிக்கையாளர்களுக்கு அந்தப் புதிய சாதனம் டெலிவரி செய்யப்பட்டவுடன், மீண்டும் அவர்களைத் தொடர்பு கொள்ளும் மோசடி கும்பல், "ஆர்டரில் தவறு நடந்துவிட்டது, எனவே அந்தப் பெட்டியைப் பிரிக்காமல் எங்களது அஞ்சல் பெட்டிக்கு (PO Box) திருப்பி அனுப்புங்கள்" என்று கூறுகின்றனர்.
</p><p>அஞ்சல் பெட்டிக்கு வரும் அந்தப் புதிய சாதனங்களைச் சேகரிக்கும் மோசடி கும்பல், அவற்றை வெளிநாடுகளுக்கு அனுப்பி சட்டவிரோதமாக விற்றுப் பெரும் லாபம் சம்பாதிக்கிறது.
எனவே இந்த விடயம் தொடர்பில் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-15T17:31:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடிய நெடுஞ்சாலையில் பயங்கர விபத்து: இருவர் பலி, மூவர் காயம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/crash-closes-eb-express-lanes-of-hwy-401-1784132157"></link>
            <id>https://canadamirror.com/article/crash-closes-eb-express-lanes-of-hwy-401-1784132157</id>
            <summary type="text">கனடாவின் ஒன்டாரியோ மாகாணம், மிசிசாகா பகுதியில் உள்ள நெடுஞ்சாலை 401 இல் இடம்பெற்ற கொடூர வாகன விபத்தில் சிக்கி இருவர் உயிரிழந்துள்ளதாக ஒன்டாரியோ மாகாண க...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் ஒன்டாரியோ மாகாணம், மிசிசாகா பகுதியில் உள்ள நெடுஞ்சாலை 401 இல் இடம்பெற்ற கொடூர வாகன விபத்தில் சிக்கி இருவர் உயிரிழந்துள்ளதாக ஒன்டாரியோ மாகாண காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது.
</p><p>இன்று காலை 9 மணிக்குப் பிறகு, டிக்ஸி வீதிக்கு அருகிலுள்ள கிழக்கு நோக்கிய விரைவுப் பாதைகளில்இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.</p><p>
பின்னாலிருந்து வந்த வாகனம் ஒன்று மோதியதில், முன்னால் சென்ற வாகனத்தில் பயணித்த கேம்பிரிட்ஜ் பகுதியைச் சேர்ந்த 80 வயது முதியவர் மற்றும் 53 வயது பெண் ஆகிய இருவருமே சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/86eec105-cfc3-42f1-96e8-7d55ba3ba2b3/26-6a57b23f45462.webp' /></p><p>
</p><p>மேலும், இந்த விபத்தில் காயமடைந்த மற்ற மூவர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.</p><p>
விபத்தைத் தொடர்ந்து மிசிசாகா பகுதியில் உள்ள விரைவுப் பாதைகள் அனைத்தும் முழுமையாக மூடப்பட்டுள்ளன. </p><p>இதனால் அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
மிசிசாகா வீதிக்கும் டிக்ஸி வீதிக்கும் இடைப்பட்ட விரைவுப் பாதைகளுக்குள் எந்தவொரு வாகனமும் அனுமதிக்கப்படவில்லை.
</p><p>ஒரேயொரு கலெக்டர் பாதை மட்டுமே திறந்து விடப்பட்டுள்ளதால், வாகனங்கள் மிக மிக மெதுவாக ஊர்ந்து செல்கின்றன.</p><p>
மாலை 3 மணி வரை இந்த விரைவுப் பாதைகள் மூடப்பட்டிருக்கும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>இந்த விபத்து நடந்த பகுதியைத் தவிர்த்து, மாற்றுப் பாதைகளாக டெர்ரி வீதி, எக்லிண்டன் அவென்யூ அல்லது நெடுஞ்சாலை 407 ஆகியவற்றைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-15T17:29:50+00:00</updated>
        </entry>
    </feed>
