<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-07-11T10:52:23+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Rusath</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரபல நகைக்கடையில் சூட்சுமமாக தங்கநகை திருடிய பெண் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/woman-arrested-for-stealing-gold-jewelry-1783765239"></link>
            <id>https://ibctamil.com/article/woman-arrested-for-stealing-gold-jewelry-1783765239</id>
            <summary type="text">மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி நகரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற நகைக் கடை ஒன்றில் மிகவும்
சூட்சுமமான முறையில் தங்கக் காப்பு ஒன்றை களவாடிய பெண்ணை களுவாஞ்...</summary>
            <content type="html"><![CDATA[<p>மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி நகரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற நகைக் கடை ஒன்றில் மிகவும்
சூட்சுமமான முறையில் தங்கக் காப்பு ஒன்றை களவாடிய பெண்ணை களுவாஞ்சிகுடி
காவல்துறையினர் வெள்ளிக்கிழமை(10.07.2026) கையும் மெய்யுமாகப் பிடித்துள்ளனர்.
</p><p>


இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது</p><p>
</p><h2>சூட்சுமமாக களவாடப்பட்ட தங்க காப்பு</h2><p>களுவாஞ்சிகுடியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற நகைக் கடை ஒன்றில் கடந்த
2026.06.04 அன்று தங்க நகை கொள்வனவு செய்வதற்கு குறித்த பெண் சென்றுள்ளார். அப்போது
அங்கிருந்த ஒன்றரைப் பவுண் நிறையுடைய தங்க காப்பு ஒன்றை மிகவும் சூட்சுமமான
முறையில் அப்பெண் களவாடிச் சென்றுள்ளார். இச்சம்பவம் தொடர்பில் குறித்த நகைக்
கடை உரிமையாளர் களுவாஞ்சிகுடி காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7d14d441-d6f5-4911-9348-e4d0c7d637cc/26-6a521df54c037.webp' /></p><p>இந்நிலையில் காவல்துறைக்கு கிடைக்கப் பெற்ற தகவல்களின் அடிப்படையில்
வெள்ளிக்கிழமை களுவாஞ்சிக்குடி வைத்தியசாலையின் முன்னால் வைத்து குறித்த பெண்ணை&nbsp; கைது செய்துள்ளனர்.</p><p></p><p> </p><h2>காவல்துறையின் அறிவிப்பு</h2><p>கைது செய்யப்பட்ட பெண்ணிடமிருந்து தங்க காப்பு
ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது. இவ்வாறு கைது செய்யப்பட்ட பெண்ணையும், தங்க
நகையையும் நீதிமன்றில் காவல்துறையினர் முன்னிலைப்படுத்தியுள்ளதாக தெரிவித்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/83689dd5-b105-4aaf-abe5-e0ea9db4818b/26-6a521df6038d4.webp' /></p><p>


இவ்வாறு கைது செய்யப்பட்ட பெண் 45 வயதுடை அம்பாறை பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.
</p><p>


அறிமுகமில்லாதவர்களிடம் பழகும்போதும், தூரப் பிரதேசங்களிலிருந்து வரும்
நபர்களிடம் கொடுக்கல் வாங்கல்கள், மற்றும் வியாபாரங்களில் ஈடுபடும்போதும்,
வியாபாரிகளும், இப்பகுதி பொதுமக்களும், மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறு
களுவாஞ்சிக்குடி காவல் நிலையப் பொறுப்பதிகாரி சுபாஸ் ஆரியரத்ன வேண்டுகோள்
விடுக்கின்றார்.&nbsp;&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-11T10:42:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[வாகன இறக்குமதி குறித்து வெளியான முக்கிய தகவல் ; காத்திருக்கும் சிக்கல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/key-update-on-vehicle-imports-released-1783766470"></link>
            <id>https://jvpnews.com/article/key-update-on-vehicle-imports-released-1783766470</id>
            <summary type="text">&amp;nbsp;வாகன இறக்குமதிக்கு கட்டுப்பாடுகளை விதிப்பது சந்தையில் கடுமையான சிக்கல்களை ஏற்படுத்தும் அபாயம் உள்ளதாக பொருளாதார ஆய்வாளர் தனநாத் பெர்னாண்டோ தெரிவ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">&nbsp;வாகன இறக்குமதிக்கு கட்டுப்பாடுகளை விதிப்பது சந்தையில் கடுமையான சிக்கல்களை ஏற்படுத்தும் அபாயம் உள்ளதாக பொருளாதார ஆய்வாளர் தனநாத் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.</p><p style="text-align: justify; ">



நாட்டின் வாகனத் தேவை தற்போது பெருமளவில் பூர்த்தியாகியுள்ளதால், கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இம்முறை வாகன இறக்குமதியால் கிடைக்கும் வரி வருமானம் குறையக்கூடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p style="text-align: justify; margin-left: 25px;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b5c31c73-afc0-45ab-b048-62959db4efa0/26-6a521dc7f2899.webp' /></p><h2 style="text-align: justify; margin-left: 25px;">இறக்குமதி கொள்கை</h2><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">


எதிர்வரும் ஓகஸ்ட் 15ஆம் திகதிக்குப் பின்னர் வாகன இறக்குமதி கொள்கையை நீட்டிப்பது தொடர்பாக அரசாங்கம் எடுக்கும் தீர்மானம் முக்கியமானதாக இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">


மேலும், அதிக இறக்குமதி வரிகளை தொடர்ச்சியாக விதிப்பதை விட, அரச செலவினங்களை திறம்பட முகாமைத்துவம் செய்து பொருளாதார சீர்திருத்தங்களை விரைவுபடுத்துவதன் மூலம் நாட்டின் வரி வருவாயையும் பொருளாதார வளர்ச்சியையும் மேம்படுத்த முடியும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-07-11T10:41:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[இருநூறு நீர்கொழும்பு சிறை கைதிகள் மீது கொலைக் குற்றச்சாட்டு பதிவு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/murder-cases-against-two-hundred-inmates-negombo-1783764997"></link>
            <id>https://ibctamil.com/article/murder-cases-against-two-hundred-inmates-negombo-1783764997</id>
            <summary type="text">
நீர்கொழும்பு சிறையில் எட்டு அதிகாரிகள் கொடூரமாகக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக, சுமார் இருநூறு கைதிகள் மீது கொலைக் குற்றச்சாட்டு பதிவு செய்யப்படும் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>
நீர்கொழும்பு சிறையில் எட்டு அதிகாரிகள் கொடூரமாகக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக, சுமார் இருநூறு கைதிகள் மீது கொலைக் குற்றச்சாட்டு பதிவு செய்யப்படும் என காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.</p><p>

கடந்த 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் நீர்கொழும்பு சிறையில் நடந்த வன்முறைச் சம்பவங்களில், ஒரு சிறைக்காவலர் உட்பட எட்டு அதிகாரிகள் கொல்லப்பட்டனர். </p><p>

இதனால், இந்த மோதலில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளதுடன், சுமார் நூறு பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p><p></p><h2>ஆயுதங்கள்</h2><p>

குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நடத்திய விசாரணைகளின்படி, 'சுரேஷ்' மற்றும் 'பூருமூனா' உட்பட 13 முக்கிய குற்றவாளிகளால் இந்தக் குற்றம் நிகழ்த்தப்பட்டது தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8ec5316a-43c9-4c91-b65a-b9649a36fcf0/26-6a521d6ba3b74.webp' /></p><p>
</p><p>
இதேவேளை, சந்தேக நபர்களைச் சரியாக அடையாளம் காண சிறையின் பாதுகாப்பு கமரா காட்சிகள் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும், பல விசாரணைக் குழுக்கள் ஏற்கனவே ஆதாரங்களைச் சேகரித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
மேலும், கைதிகள் துப்பாக்கிகளையும் கொடிய ஆயுதங்களையும் எவ்வாறு பெற்றனர் என்பதில் காவல்துறை சிறப்பு கவனம் செலுத்தியுள்ளது.</p><h2>சிறை அமைப்பின் பாதுகாப்பு</h2><p> 

நீர்கொழும்பு சிறையின் ஆயுதக் கிடங்கின் பாதுகாப்பு குறித்தும் தனி விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக குற்றப்பிரிவு பொறுப்பாளர் வந்தன கொடிதுவக்கு தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3ea512fa-7087-4cb6-a1bb-befc3bc61192/26-6a521d6c56926.webp' /></p><p>

இந்த நிலையில், கடல் மார்க்கமாக நாட்டிற்குள் கடத்தி வரப்பட்ட சுமார் 10,804 துப்பாக்கிகள் சமீபத்தில் பாதுகாப்புப் படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக அவர் தொடர்ந்தும் சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>
இதன்படி, தற்போது, ​நாட்டில் உள்ள 16 சிறைகளில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.</p><p>

மேலும், இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, நீதி அமைச்சகமும் சிறைச்சாலை திணைக்களமும் சிறை அமைப்பில் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...! </h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-11T10:39:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[பலத்த வெடிச்சத்தங்கள்: கீவ் மீது பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் 121 ட்ரோன்களை வீசிய ரஷ்யா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/russia-air-strike-with-121-drones-on-ukraine-1783766076"></link>
            <id>https://news.lankasri.com/article/russia-air-strike-with-121-drones-on-ukraine-1783766076</id>
            <summary type="text">ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் உக்ரைனில் பலரை காயமடைந்தனர். பாலிஸ்டிக் ஏவுகணைகள் 

உக்ரைனின் கீவ் நகரில் வான் பாதுகாப்பிற்கான ஏவுகணைகள், வெடிமருந்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் உக்ரைனில் பலரை காயமடைந்தனர். </p><h2>பாலிஸ்டிக் ஏவுகணைகள்</h2><p> 

உக்ரைனின் கீவ் நகரில் வான் பாதுகாப்பிற்கான ஏவுகணைகள், வெடிமருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக கூறப்படுகிறது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/93d370f5-2375-4baa-885d-4372c9151c93/26-6a521dbf99e40.webp' /></p><p>

இந்த சூழலில் கீவ் மீது சனிக்கிழமை அதிகாலையில் ரஷ்யா பாலிஸ்டிக் ஏவுகணைகளைக் கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளது.</p><p>

இந்தத் தாக்குதலில் குறைந்தது 10 பேர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வான்வழித் தாக்குதல் எச்சரிக்கை விடுக்கப்படுவதற்கு முன்பே, அதிகாலை நேரத்தில் பலத்த வெடிசத்தங்கள் கேட்டதாக ஊடகவியலாளர் ஒருவர் கூறினார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/37b09f78-998f-47ee-b8ea-bfa9dcc0e0ca/26-6a521dc061625.webp' /></p><p>

இதற்கிடையில், ரஷ்யா 6 பாலிஸ்டிக் ஏவுகணைகள், 6 குரூஸ் ஏவுகணைகள் மற்றும் 121 ட்ரோன்களை ஏவியதாக உக்ரைனின் விமானப்படை தெரிவித்துள்ளது.&nbsp; &nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4c8265cd-3cf9-4a61-9f01-860ac36944d0/26-6a521dc1129e9.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-11T10:39:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கைக்கான வாகன இறக்குமதி கட்டுப்பாடுகளால் ஏற்பட்டுள்ள சிக்கல்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/restrictions-on-vehicle-imports-to-sri-lanka-1783763224"></link>
            <id>https://ibctamil.com/article/restrictions-on-vehicle-imports-to-sri-lanka-1783763224</id>
            <summary type="text">இலங்கைக்கு வாகனம் இறக்குமதி செய்வதற்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் குறித்து&amp;nbsp;பொருளாதார ஆய்வாளர் தனநாத் பெர்னாண்டோ கருத்து வெளியிட்டுள்ளார்.அத...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கைக்கு வாகனம் இறக்குமதி செய்வதற்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் குறித்து&nbsp;பொருளாதார ஆய்வாளர் தனநாத் பெர்னாண்டோ கருத்து வெளியிட்டுள்ளார்.</p><p>அதன்படி, வாகன இறக்குமதிக்கு கட்டுப்பாடுகளை விதிப்பதன் மூலம் சந்தையில் கடுமையான சிக்கல்கள் உருவாகும் அபாயம் உள்ளதாக தெரிவித்துள்ளார்.</p><p>நாட்டின் வாகனத் தேவை தற்போது ஓரளவிற்குப் பூர்த்தியாகியுள்ளதால், கடந்த ஆண்டை விட இம்முறை வாகன இறக்குமதியின் மூலம் கிடைக்கும் வரி வருமானம் வீழ்ச்சியடையும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கை</h2><p>இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 15 ஆம் திகதிக்குப் பிறகு வாகன இறக்குமதி கொள்கையை நீட்டிப்பதா? இல்லையா? என்பது குறித்து அரசாங்கம் எடுக்கவிருக்கும் தீர்மானம் இதில் மிக முக்கியமானது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/781b8364-7b82-426c-bf22-450f4f8a56f6/26-6a521c24f1ee4.webp' /></p><p>

சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கைகளின்படி மேலதிக கூடுதல் கட்டணங்களை விதிக்க முடியாது என்றாலும், அரசாங்கம் இந்த கூடுதல் கட்டணங்களை நீக்கினால் மீண்டும் சந்தையில் ஒருவித அதிர்வு ஏற்பட வாய்ப்புள்ளது.</p><p>

கடந்த காலங்களில் இருந்த வாகனங்களுக்கான கடும் தேவை தற்போது பெரும்பாலும் பூர்த்தியாகியுள்ளதாலும், இறக்குமதியாளர்கள் தேவையான அளவு வாகனங்களை இறக்குமதி செய்துள்ளதாலும் வாகனப் பதிவுகள் படிப்படியாகக் குறைந்து வருகின்றன. இதன் விளைவாக, வாகன இறக்குமதி வரி வருமானம் கடந்த ஆண்டின் நிலையை எட்டாது.</p><p></p><h2>&nbsp;வரிகளை அறவிடுதல்&nbsp;</h2><p>

தற்போது வாகனங்களுக்கு 150 சதவீதம் மற்றும் 200 சதவீதம் போன்ற மிக அதிக இறக்குமதி வரி விதிக்கப்படுவதால், தொடர்ந்து இத்தகைய வரிகளை விதிப்பது நியாயமற்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/69fa63c0-4ce7-49bd-bd75-1c93c727a8ea/26-6a521c25c2873.webp' /></p><p> அரசாங்கம் ஒரே தரப்பினரிடமிருந்து தொடர்ந்து வரிகளை அறவிட்டு அவர்களைச் சிரமத்திற்கு உள்ளாக்காமல், அரச செலவினங்களைச் சரியாக முகாமைத்துவம் செய்ய வேண்டும். </p><p>பொருளாதார வளர்ச்சிக்கான அத்தியாவசிய சீர்திருத்தங்களை விரைவுபடுத்துவதன் மூலம் வரி வருவாயை ஓரளவிற்கு அதிகரிக்க முடியும், இதன் மூலம் நாட்டின் பொருளாதாரம் முன்னோக்கிச் செல்லும் என்ற வலுவான சமிக்ஞையைச் சந்தைக்கு வழங்க முடியும்“ என அவர் மேலும் தெரிவித்தார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-11T10:37:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Manchu</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாட்டில் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் ஹன்சிகா... உடன் இருக்கும் ஆண் நண்பர் யார்?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/hansika-tour-to-russia-play-with-friend-who-is-he-1783764714"></link>
            <id>https://manithan.com/article/hansika-tour-to-russia-play-with-friend-who-is-he-1783764714</id>
            <summary type="text">நடிகை ஹன்சிகா விவாகரத்துக்கு பின்பு வெளிநாட்டில் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.நடிகை ஹன்சிகாதமிழ் சினிமாவில்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நடிகை ஹன்சிகா விவாகரத்துக்கு பின்பு வெளிநாட்டில் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.</p><h2>நடிகை ஹன்சிகா</h2><p>தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம்வரும் ஹன்சிகா, சிம்புவைக் காதலிப்பதாக கூறப்பட்ட நிலையில் இருவரும் பிரிந்துவிட்டதாகவும் கூறப்பட்டது.</p><p>பின்பு தனது தோழியை விவாகரத்து செய்து பிரிந்த சோஹேல் என்பவரைக் காதலித்து கடந்த 2022ம் ஆண்டு டிசம்பர் மாதம் திருமணம் செய்தார். இவர்களின் திருமண வீடியோவும் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் வெளியானது.</p><p>பின்பு இருவருக்கும் கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்தனர். மேலும் கணவர் தனக்கு இழைத்த கொடுமைகளையும் ஹன்சிகா கூறியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7421a3e1-00c6-44b2-9c62-e99f4762ba63/26-6a521ba893b00.webp' /></p><p></p><h2>வெளிநாட்டில் ஹன்சிகா</h2><p>தற்போது பழைய வாழ்க்கையிலிருந்து மீண்டு வெளிவருவதற்கு, அவ்வப்போது வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்று வரும் நிலையில், தற்போது ரஷ்யாவிற்கு சென்றுள்ளார்.</p><p>அங்கு சென்று சில புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டும் வந்துள்ளார். ஹன்சிகா வெளியிட்ட புகைப்படத்தில் ஆண் நண்பர் ஒருவர் துள்ளிக் குதிப்பது போன்று காணப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/84c481bc-d3df-488c-b072-d2f07c997100/26-6a521ba9e9a28.webp' /></p><p>குறித்த நபர் யார் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. மேலும் ஹன்சிகா இப்புகைப்படத்துடன் Privet என்ற கேப்ஷனையும் கொடுத்துள்ளார்.</p><p>இதற்கு அர்த்தத்தை தேடிய நெட்டிசன்கள் கடைசியில் அதன் அர்த்தத்தினையும் கண்டுபிடித்தனர். ஆம் ரஷ்ய மொழியில் Privet என்றால் Hi என்று அர்த்தமாம்.</p><p>ஹன்சிகா இரண்டாவது திருமணம் செய்து கொள்வாரா? சிறு வயது முதலே குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்துவரும் இவர் எப்பொழுதும் நன்றாக இருப்பார் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5a073c66-d7b4-447d-b01f-ce1971ece44d/26-6a521baa9aa4c.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td><i>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன்<a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள் <a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"><b>FOLLOW NOW</b></a>&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;&nbsp;<br></i></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-11T10:32:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் அதிகரிக்கும் டெங்கு மரணங்கள்! 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட நோயாளிகள் பதிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/dengue-deaths-in-sri-lanka-rise-to-47-1783757621"></link>
            <id>https://ibctamil.com/article/dengue-deaths-in-sri-lanka-rise-to-47-1783757621</id>
            <summary type="text">இலங்கையில் டெங்கு நோயின் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் 47 மரணங்கள் பதிவாகி உள்ளதாக&amp;nbsp;தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் டெங்கு நோயின் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் 47 மரணங்கள் பதிவாகி உள்ளதாக&nbsp;தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.</p><p>அத்துடன் இந்த ஆண்டில் இதுவரை நாடு முழுவதும் 67,174 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p> </p><p>ஜூலை மாதத்தின் முதல் 09 நாட்களில் மட்டும் 10,685 நோயாளிகள் பதிவாகியுள்ளதாக டெங்கு ஒழிப்புப் பிரிவின் பதில் பணிப்பாளர் வைத்தியர் கபில கன்னங்கர தெரிவித்தார்.</p><p></p><h3><b>டெங்கு ஒழிப்பு</b></h3><p>அத்துடன் நேற்று (10) ஒரே நாளில் மட்டும் சுமார் 1,110 நோயாளிகள் பதிவாகியுள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b210e3ef-10f0-4d40-95c7-da3c81fd52a4/26-6a52152cdf5fb.webp' />&nbsp;</p><p> டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் நாட்டின் பல முக்கிய வைத்தியசாலைகளின் கொள்ளளவு தற்போது உச்சத்தை எட்டியுள்ளது.</p><p>புதிய நோயாளிகளை அனுமதித்து சிகிச்சை வழங்குவதிலும் சிரமங்கள் உருவாகியுள்ளதுடன், மருத்துவர்களும் அதிக பணிச்சுமையை எதிர்கொண்டு வருகின்றனர்.</p><p> </p><p>மேலும் அவசர சிகிச்சைப் பிரிவுகள் மற்றும் உள்நோயாளர் விடுதிகளில் கடும் இடநெருக்கடி ஏற்பட்டுள்ளதாக&nbsp;கபில கன்னங்கர தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-11T10:27:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜுன் மாதத்தில் அந்நியச் செலாவணி வரத்து குறைவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/decline-in-foreign-exchange-inflows-in-june-1783762737"></link>
            <id>https://tamilwin.com/article/decline-in-foreign-exchange-inflows-in-june-1783762737</id>
            <summary type="text">கடந்த ஜுன் மாதத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் சுற்றுலாத்துறை மூலம் இலங்கைக்கான அந்நியச் செலாவணி வரத்து பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளது.

கடந்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கடந்த ஜுன் மாதத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் சுற்றுலாத்துறை மூலம் இலங்கைக்கான அந்நியச் செலாவணி வரத்து பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளது.
</p><p>
கடந்த ஜூன் மாதத்தில் வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கை தொழிலாளர்கள் அனுப்பிய மொத்த அந்நியச் செலாவணி 695 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என்று தெரியவந்துள்ளது.</p><p>மத்திய வங்கியின் புதிய புள்ளிவிவரங்களின்படி, கடந்த மே மாதத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் மூலம் 847 மில்லியன் டொலர் கிடைத்திருந்த நிலையில், ஜூன் மாதத்தில் அது 152 மில்லியன் டொலர்களால் குறைந்துள்ளது.</p><p></p><h2>வீழ்ச்சி</h2><p>
</p><p>
2026 ஜனவரி முதல் ஜூன் வரையிலான ஆறு மாத காலப்பகுதியில் புலம்பெயர் தொழிலாளர்கள் மூலம் இலங்கைக்கு கிடைத்த மொத்த வருவாய் 4.6 பில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது.
</p><p>
கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில், இது 23.2 சதவீத அதிகரிப்பு என மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/31cf1266-195b-471e-b07f-bacd751a5f50/26-6a52104193a98.webp' /></p><p>

மேலும், 2026 ஜூன் மாதத்தில் சுற்றுலாத்துறை மூலம் இலங்கை 151.1 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தைப் பெற்றுள்ளது.</p><p>

2025 ஜூன் மாதத்தில் சுற்றுலாத்துறை வருமானத்தை 169.5 மில்லியன் டொலராக இருந்த நிலையில், இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் சுற்றுலா வருமானத்திலும் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-11T10:27:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீர்கொழும்பு சிறை யுவதியின் இதயத்தை உருக்கும் உண்மைக் கதை; காதலனை நம்பியதால் கைநழுவிய மருத்துவ கனவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/story-of-a-young-woman-in-negombo-prison-1783761791"></link>
            <id>https://jvpnews.com/article/story-of-a-young-woman-in-negombo-prison-1783761791</id>
            <summary type="text">&amp;nbsp; நீர்கொழும்பு சிறைச்சாலையின் கூரையின் மீது நடைபெற்ற போராட்டத்தின் போது எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பெரும் பேசுபொருளான நிலையில் ய...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; நீர்கொழும்பு சிறைச்சாலையின் கூரையின் மீது நடைபெற்ற போராட்டத்தின் போது எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பெரும் பேசுபொருளான நிலையில் யுவதி சிறை சென்றதன் பின்னனி கதை வெளிவந்துள்ளது.
</p><p>
மருத்துவராகி மக்களௌக்கு சேவை செய்யவேண்டிய யுவதி, காதலனை நம்பியதால் இன்று மப்பி எண்ணி கொண்டிருக்கின்றார்.

சட்டத்தின் பிடியில் சிக்கி, தங்கள் உரிமைக்காக கூரையின் மீது ஏறியிருந்த இளம் பெண்களில் ஒருவரின் முகம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4a14beb5-b98f-4c1a-a5e2-d4d71f838941/26-6a520b80a425a.webp' /></p><h2>இதயத்தை உருக்கும்&nbsp; வேதனையான&nbsp; வாழ்க்கைக் கதை&nbsp;</h2><p>
</p><p>
"இவ்வளவு அழகான ஒரு பெண் ஏன் இப்படிப்பட்ட இடத்தில் இருக்கிறார்?" என்ற கேள்வி பலரின் மனதிலும் எழுந்தது.

 சமூக ஊடகங்களில் அந்த யுவதி தொடர்பில் பலரும் பேசிக்கொண்டிருந்தபோது, அந்த புன்னகையின் பின்னால் இதயத்தை உருக்கும் அளவுக்கு வேதனையான ஒரு வாழ்க்கைக் கதை மறைந்திருந்தது.</p><p></p><p>

 அவரின் வாழ்க்கையை ஆராய்ந்த சகோதர மொழி பத்திரிகையாளர் நாலிந்த தனரஞ்சன் ,&nbsp;இந்த சோகமான சம்பவத்தை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தார். அவர் பகிர்ந்த விவரங்களின்படி, </p><p>அந்த கைதி ஒரு காலத்தில் பதுளையைச் சேர்ந்த, பிரகாசமான எதிர்காலம் கொண்ட, நம்பிக்கைக்குரிய மாணவர் தலைவராகவும் திறமையான வலைப்பந்து வீராங்கனையாகவும் இருந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a4e2bc9a-5b71-4324-b587-b15eb5bf7ba8/26-6a520b81598a3.webp' /></p><p>
</p><p>
அவர் தனது உயர் மட்டத் தேர்வுகளை முடித்து, நெகம்போவில் உள்ள தனது அத்தையின் வீட்டில் தங்கியிருந்தபோது அவரது வாழ்க்கை மாறியதாகக் கூறப்படுகிறது. அந்தக் காலகட்டத்தில், வாட்ஸ்அப் மூலம் சந்தித்த தனது காதலன் மீது அவர் முழு நம்பிக்கை வைத்திருந்தார்.
</p><p>
அவரது வேண்டுகோளின் பேரில், ஒரு பார்சலைக் கொண்டு செல்ல அவர் ஒப்புக்கொண்டார். அந்த சம்பவத்தின்படி, அந்தப் பார்சலில் சட்டவிரோத போதைப்பொருள் இருந்தது அவருக்குத் தெரியாது. கிடைத்த தகவலின் பேரில், காவல்துறையினர் அந்த பார்சலை இடைமறித்து, அவரை சம்பவ இடத்திலேயே கைது செய்தனர்.</p><p></p><p>
</p><p>
அவர் சிறையில் இருந்தபோது இந்த சோகம் மேலும் ஆழமானது. தேசிய தேர்வு முடிவுகள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டபோது, அந்த இளம் பெண் மருத்துவ பீடத்தில் சேர்வதற்கான தகுதியைப் பெற்றிருப்பதை அறிந்ததாகக் கூறப்படுகிறது.
</p><p>
ஒரு மதிப்புமிக்க தொழில் வாழ்க்கைக்கு வழிவகுத்திருக்க வேண்டிய ஒரு மைல்கல், அதற்குப் பதிலாக ஒரே ஒரு முடிவால் சிதைக்கப்பட்ட எதிர்காலத்தின் வேதனையான நினைவூட்டலாக மாறியது.</p><p></p><p>

நெகம்போ சிறைச்சாலையில் வைரலான இந்தக் கதை, ஏமாற்றும் ஆன்லைன் உறவுகளின் ஆபத்துகள் குறித்த ஓர் எச்சரிக்கையாக மாறியுள்ளது. குற்றக் குழுக்கள், சந்தேகப்படாத மக்களைத் தூதுவர்களாகப் பயன்படுத்த, உணர்வுப்பூர்வமான பிணைப்புகளை அதிகளவில் சுரண்டுகின்றன என்று சட்ட அமலாக்க அதிகாரிகளும் சமூக ஆர்வலர்களும் எச்சரிக்கின்றனர்.</p><p>அறியாமலேயே நடந்த இந்தச் சம்பவம், காவல்துறைக்கு கிடைத்த தகவலால் முடிவுக்கு வந்தது.

கைது செய்யப்பட்ட அவர் இன்று நீர்கொழும்பு சிறையில், தனது உரிமைகளுக்காக மற்ற கைதிகளுடன் கூரையின் மீது நின்று குரல் கொடுக்கிறார்.

மருத்துவராக வேண்டும் என்ற கனவு கண்ட கண்கள், இன்று சிறைச்சாலையின் வானத்தை நோக்கி கண்ணீருடன் நிற்கின்றன என அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content>
            <updated>2026-07-11T10:27:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறகடிக்க ஆசை சீரியலில் கனகாவாக நடித்து வரும் நடிகை ஐஷுவின் புகைப்படங்கள்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/siragadikka-aasai-serial-kanaga-recent-photos-1783749560"></link>
            <id>https://cineulagam.com/article/siragadikka-aasai-serial-kanaga-recent-photos-1783749560</id>
            <summary type="text">சிறகடிக்க ஆசை சீரியலில் தற்போது மனோஜ், கனகா என்பவரை இரண்டாம் திருமணம் செய்துகொண்டார். கனகா என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் நடிகை ஐஷு. இவர...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிறகடிக்க ஆசை சீரியலில் தற்போது மனோஜ், கனகா என்பவரை இரண்டாம் திருமணம் செய்துகொண்டார். கனகா என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் நடிகை ஐஷு. இவர் இன்ஸ்டாகிராமில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் நபர் ஆவார். இந்த நிலையில், நடிகை ஐஷு சமீபத்தில் எடுத்துக்கொண்ட அவருடைய புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. இதோ பாருங்க:</p>]]></content>
            <updated>2026-07-11T10:20:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடைக்குள் புகுந்து பெண்ணை பிணைக்கைதியாக பிடித்த சந்தேக நபர்: ஜேர்மனியில் இரவில் நடந்த பரபரப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/berlin-supermarket-hostage-situation-resolved-1783764908"></link>
            <id>https://news.lankasri.com/article/berlin-supermarket-hostage-situation-resolved-1783764908</id>
            <summary type="text">ஜேர்மனியில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றுக்குள் புகுந்த மர்ம நபர் அங்கிருந்த பெண் ஊழியரை பிணைக் கைதியாக பிடித்து வைத்திருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜேர்மனியில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றுக்குள் புகுந்த மர்ம நபர் அங்கிருந்த பெண் ஊழியரை பிணைக் கைதியாக பிடித்து வைத்திருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.</p><h2>பிணைக் கைதியாக பிடிக்கப்பட்ட பெண்</h2><p>வெள்ளிக்கிழமை இரவு 10 மணியளவில் தலைநகர் பெர்லினில் உள்ள மரியன் ஃபெல்டே பகுதியில் அமைந்துள்ள Rewe என்ற சூப்பர் மார்க்கெட்டுக்குள் நுழைந்த மர்ம நபர் ஒருவர் உயிர் பறிக்கும் ஆயுதத்தை காட்டி அங்கிருந்த பெண் ஊழியர் ஒருவரை பிணைக் கைதியாக பிடித்துக் கொண்டார்.</p><p> இதனையடுத்து தகவலறிந்து வந்த பொலிஸார் மற்றும் அதிரடி மீட்பு படையினர் சூப்பர் மார்க்கெட்டை சுற்றி பாதுகாப்பு வளையம் அமைத்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1f849ad9-deb4-4ff0-9837-71736cb7efca/26-6a5217ae1bfc6.webp' /></p><p> இந்த சம்பவத்தின் போது சூப்பர் மார்க்கெட் இருந்து தப்பியோடி வந்த 22 வயது நபர் ஒருவர் வழங்கிய தகவலில், சந்தேக நபர் மிகப்பெரிய கத்தியை வைத்து இருந்ததாகவும், அதிர்ஷ்டவசமாக தான் தப்பித்து கொண்டதாகவும், ஆனால் தன்னுடைய சக ஊழியர் அவரிடம் சிக்கிக் கொண்டு விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.</p><p> சமூக வலைதளங்களில் இது தொடர்பாக வெளியான காட்சிகளில், பொலிஸார் அப்பகுதி முழுவதையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து இருப்பதையும், அவசர கால வாகனங்கள் குவிக்கப்பட்டு, அதிகாரி ஒருவர் ஏணியை பயன்படுத்தி அந்த கடைக்குள் எட்டிப் பார்ப்பதும் பதிவாகி இருந்தது.</p><p></p><p> இரவு முழுவதும் நீடித்த இந்த சூழ்நிலைக்கு பிறகு, பொலிஸார் சந்தேக நபருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இறுதியில் அதிரடியாக கடைக்குள் புகுந்து சந்தேக நபரை பொலிஸார் கைது செய்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d74ee69d-88aa-42ec-bddf-a8a15ce0fbb7/26-6a5217aec21a0.webp' /></p><p> மேலும் பிணைக் கைதியாக பிடித்து வைக்கப்பட்டிருந்த பெண்ணும் எந்தவொரு ஆபத்துமின்றி மீட்கப்பட்டார்.</p><h2> பொலிஸார் விசாரணை</h2><p> சந்தேக நபரின் இந்த செயலுக்கான காரணம் குறித்து இன்னும் எந்தவொரு அதிகாரப்பூர்வ விவரங்களும் வெளியாகவில்லை.</p><p>அதைப்போல பாதிக்கப்பட்ட பெண்ணுக்கும், கைது செய்யப்பட்ட சந்தேக நபருக்கு ஏதேனும் காயங்கள் ஏற்பட்டுள்ளதா என்றும் பொலிஸார் இன்னும் உறுதிப்படுத்தவில்லை.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-11T10:15:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[திமுக - அதிமுக கூட்டணி நியாயமானவை- டிடிவி தினகரன் பதில்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/will-dmk-and-aiadmk-unite-ttv-dhinakaran-1783764485"></link>
            <id>https://ibctamilnadu.com/article/will-dmk-and-aiadmk-unite-ttv-dhinakaran-1783764485</id>
            <summary type="text">மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் பல்வேறு அரசியல் கேள்விகளுக்கு பதிலளித்தார்.

அவர் பேசியதாவது..,

பாஜகவை எதி...</summary>
            <content type="html"><![CDATA[<p>மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் பல்வேறு அரசியல் கேள்விகளுக்கு பதிலளித்தார்.
</p><h2>
அவர் பேசியதாவது..,
</h2><p>
பாஜகவை எதிர்ப்பதற்காக தவெகவும் திமுகவும் ஒரே அணியில் வர வேண்டும் என்ற திருமாவளவனின் கருத்தை அரசியல் கருத்தாகவே பார்க்கிறேன் என்றார்.</p><p>

திமுக - அதிமுக கூட்டணி சாத்தியமா என்ற கேள்விக்கு அரசியல் சூழ்நிலை யாரை வேண்டுமானாலும் ஒன்றிணைக்கும் என்று கூறினார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1ab3311c-e309-4291-b89e-967e7c604536/26-6a521607967f8.webp' /></p><p>இதுபோன்ற நிகழ்வுகள் கடந்த காலங்களிலும் நடந்துள்ளதாகவும், அண்ணாவும் ராஜாஜியும் இணைந்தது அதற்கு உதாரணம் என்றும் தெரிவித்தார்.
</p><p>
திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளை தன் பக்கம் இழுத்து அமைச்சரவையில் இடமளித்து தவெக கூட்டணியில் வைத்துக்கொள்வது நியாயம் என்றால், மற்ற கூட்டணிகளும் நியாயமானவையே என்றார்.&nbsp;</p><p>மேலும், இந்தத் தேர்தலில் தவெக வெற்றி பெற்றதை வலுவான அரசியல் சக்தியாக கருதினால், அவரை எதிர்கொள்ள மற்ற கட்சிகள் வியூகம் வகுப்பதில் எந்தத் தவறும் இல்லை என்றும் டிடிவி தினகரன் தெரிவித்தார்.</p><p><br></p>]]></content>
            <updated>2026-07-11T10:14:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாம்பு பண்ணையில் புகுந்த வெள்ளம் ; தப்பியோடிய ராஜநாகங்கள் ; பிடித்து சென்ற மக்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/flood-hits-snake-farm-in-china-1783764683"></link>
            <id>https://jvpnews.com/article/flood-hits-snake-farm-in-china-1783764683</id>
            <summary type="text">சீனாவின் குவாங்சி (Guangxi) பிராந்தியத்தில் பெய்து வரும் மிகக் கடுமையான மழையினால் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்குக்கு மத்தியில், பண்ணைகளில் இருந்து தப்பி...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify;">சீனாவின் குவாங்சி (Guangxi) பிராந்தியத்தில் பெய்து வரும் மிகக் கடுமையான மழையினால் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்குக்கு மத்தியில், பண்ணைகளில் இருந்து தப்பியோடிய நூற்றுக்கணக்கான விஷப் பாம்புகள் குடியிருப்புப் பகுதிகளை ஆக்கிரமித்துள்ளதால் பெரும் பீதி ஏற்பட்டுள்ளது.
</p><p style="text-align: justify;">
பாரம்பரிய மருத்துவத் தேவைகளுக்காகச் சுமார் 30 மில்லியன் பாம்புகள் வளர்க்கப்படும் சீனாவின் மிகப்பெரிய பாம்பு வளர்ப்பு மையமான குவாங்சியில், தற்போதைய வெள்ளத்தினால் கோப்ரா (Cobra) உள்ளிட்ட 900க்கும் மேற்பட்ட கொடிய விஷமுள்ள பாம்புகள் பண்ணைகளில் இருந்து தப்பியோடி வெள்ள நீரில் மிதந்து வருவதாக சீன ஊடகங்கள் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளன.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dfe2c7b1-85d3-4a1b-9422-bb711c7c1c77/26-6a5216cca71c8.webp' /></p><h2 style="text-align: justify; ">&nbsp;6 பேர் பலி&nbsp;</h2><p>
</p><p style="text-align: justify;">
வெள்ளத்தினால் பல கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ள நிலையில், பாம்புகளைப் பிடிப்பதற்காக விசேட மீட்புக் குழுவினர் களமிறக்கப்பட்டுள்ளனர்.
</p><p style="text-align: justify;">
அத்துடன், பாம்புக்கடிக்குள்ளாகுபவர்களுக்கு உடனடி சிகிச்சை அளிப்பதற்காகத் தற்காலிக மருத்துவ முகாம்களும் அமைக்கப்பட்டுள்ளன.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;">

இந்த பயங்கர புயல் மற்றும் வெள்ளப் பெருக்கினால் அணைகள் உடைந்ததில் இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளதுடன், 1,30,000க்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
</p><p style="text-align: justify;">
மேலும், வெள்ளப் பாதிப்பினால் பன்றிப் பண்ணைகள், மல்லிகைத் தோட்டங்கள் மற்றும் மர உற்பத்திப் பிரிவுகள் கடுமையாகச் சேதமடைந்துள்ளதுடன், உள்ளூர் மிருகக்காட்சி சாலை ஒன்றிலிருந்து வரிக்குதிரைகள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட விலங்குகளும் தப்பியோடியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p style="text-align: justify;"></p>]]></content>
            <updated>2026-07-11T10:14:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அவசரகாலக் கடன் மோசடி - தனிப்பட்ட விவரங்களை திருடி மிரட்டும் கும்பல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/emergency-loan-scam-1783764550"></link>
            <id>https://tamilwin.com/article/emergency-loan-scam-1783764550</id>
            <summary type="text">அவசரகாலக் கடன்களைப் பெறுவதற்காக எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்றும், இதுபோன்ற செய்திகளில் வழங்கப்படும் இணைப்புகளைப் பதிவிறக்கம் செய்ய வேண்டாம் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அவசரகாலக் கடன்களைப் பெறுவதற்காக எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்றும், இதுபோன்ற செய்திகளில் வழங்கப்படும் இணைப்புகளைப் பதிவிறக்கம் செய்ய வேண்டாம் என்றும் கணினி அவசரகால உதவி மன்றம் பொதுமக்களை எச்சரித்துள்ளது. </p><p>

மேலும், எந்தவொரு நபரோ அல்லது நிறுவனமோ உங்கள் தனிப்பட்ட தகவல்களைப் பெற்றுவிட்டதாக நீங்கள் உணர்ந்தால், 101 என்ற எண்ணிற்கு அழைத்து, சம்பவம் தொடர்பில் தெரிவிக்க முடியும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
</p><p>
அவசரகாலக் கடன்களைப் பெற்றுத் தருவதாகக் கூறும் செய்திகள் தற்போது சமூக ஊடகங்களில் பரவலாகப் பரவி வருகின்றன.</p><p></p><h2>

கடன் தருவதாக மோசடி</h2><p>
சில நிறுவனங்கள் ரூ. 5,000 முதல் ரூ. 1,50,000 வரையிலான அவசரகாலக் கடன்களை வழங்கத் தயாராக இருப்பதாக இந்தச் செய்திகள் வெளியாகியுள்ளன.

அத்துடன், அதிலும் சில நிறுவனங்கள் ரூ. 5,00,000 வரை கடன்களை வழங்கத் தயாராக இருப்பதாகவும் விளம்பரப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். </p><p>

"இந்தக் கடன்களைப் பெற எந்த ஆவணங்களும் தேவையில்லை. சாட்சியாளர் தேவையில்லை." என நிபந்தனைகள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகின்றன. 

இது போன்ற மோசடி நிறுவனங்கள் உங்கள் தனிப்பட்ட தரவுகளைத் திருட முயற்சிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7a5e84cb-c0e1-4886-a2f2-ad296b27ce76/26-6a5216d1d07d9.webp' /></p><p> 

கடன் பெற எந்த ஆவணங்களும் தேவையில்லை என்றபோதிலும், கடன் விண்ணப்பதாரரை அந்த நிறுவனங்கள் அனுப்பிய இணைப்பைக் கிளிக் செய்து தகவல்களை உள்ளிடுமாறு கேட்டு, அவர்கள் இதனைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.
</p><p>
அவர்கள் அந்த இணைப்பைக் கிளிக் செய்தவுடன், மோசடிக்காரர்களின் இலக்காகி விடுகிறார்கள். அவர்கள் அந்த இணைப்பு வழியாக ஒரு ரிமோட் அட்மினிஸ்ட்ரேட்டிவ் டூல் (RAT) என்ற கருவியை அனுப்புகிறார்கள்.
</p><p>
அந்த RAT மொபைல் ஃபோனுக்குள் நுழைந்தவுடன், அது ஃபோனைத் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துவிடுகிறது.
</p><h2>

தனிப்பட்ட விவரங்களை திருடும் கும்பல்</h2><p>
இந்த நிலையில், இதன் மூலம் அவர்களால் மொபைல் ஃபோனில் உள்ள புகைப்படங்கள், லேபிள்கள், நண்பர்கள் பற்றிய தகவல்கள் மற்றும் தொலைபேசி எண்கள் உட்பட அனைத்துத் தகவல்களையும் அணுக முடிகிறது.
</p><p>
சில சமயங்களில், ஒரு .apk செயலி நுழைந்தால், நிலைமை இன்னும் மோசமாகலாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/27fb4432-6ff5-4335-ad63-4e49a95213df/26-6a5216d2ab5c0.webp' /></p><p>
</p><p>
கடன் வழங்கிய பிறகு, மோசடிக்காரர்கள் அவர்களை மேலும் கடன் வாங்க ஊக்குவிக்கிறார்கள், மேலும் கடன் தொகை திருப்பிச் செலுத்த முடியாத அளவிற்கு அதிகரிக்கும் போது, ​​அவர்கள் மோசடிக்காரர்களின் வலையில் சிக்கத் தொடங்குகிறார்கள்.</p><p>

செலுத்த வேண்டிய வட்டியும், பூர்த்தி செய்ய வேண்டிய நிபந்தனைகளும் கடுமையாக உள்ளன, மேலும் இந்த நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யாத கடன் வாங்குபவர்கள் பல்வேறு முறைகேடுகளைச் சந்திக்க நேரலாம் எனக் கூறப்பட்டுள்ளது.&nbsp; &nbsp; &nbsp; </p><p>&nbsp; &nbsp;</p><p></p><p> &nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-11T10:11:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[புதுக் காதலியுடன் நடனமாடும் கனடாவின் முன்னாள் பிரதமர் ட்ரூடோ: வைரல் வீடியோ]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/justin-trudeau-dance-with-katy-perry-her-new-song-1783762305"></link>
            <id>https://news.lankasri.com/article/justin-trudeau-dance-with-katy-perry-her-new-song-1783762305</id>
            <summary type="text">கனடாவின் முன்னாள் பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோவும், பிரபல அமெரிக்க பாடகியான கேற்றி பெர்ரியும் காதலிக்கும் விடயம் உலகம் அறிந்ததே.

இந்நிலையில், சமூக ஊடகம்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் முன்னாள் பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோவும், பிரபல அமெரிக்க பாடகியான கேற்றி பெர்ரியும் காதலிக்கும் விடயம் உலகம் அறிந்ததே.
</p><p>
இந்நிலையில், சமூக ஊடகம் ஒன்றில், ட்ரூடோவும் கேற்றி பெர்ரியும் நடனமாடும் வீடியோ ஒன்று வைரலாகியுள்ளது.</p><h3>

ட்ரூடோவும் கேற்றி பெர்ரியும் நடனமாடும் வீடியோ
</h3><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2f83a12e-d571-49ac-b9e2-741eb0f4f0ee/26-6a520d835ee55.webp' /></p><p>பாடகி கேற்றி பெர்ரி, ‘Watch It Burn’ என்னும் ஒரு மியூசிக் வீடியோவை வெளியிட்டுள்ளார்.</p><p><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/reel/Dand7ATjT-M/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/reel/Dand7ATjT-M/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/reel/Dand7ATjT-M/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by Firstpost (@firstpost)</a></p></div></blockquote> <script async src="//www.instagram.com/embed.js"></script></p><p>
இந்நிலையில், அந்த பாடலுக்கு கேற்றி பெர்ரி நடனமாடுவதைக் காட்டும் டிக் டோக் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
</p><p>
அந்த வீடியோவில், கேற்றி பெர்ரியின் காதலரும் கனடாவின் முன்னாள் பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோவும் தலை காட்டியுள்ளார். அந்த வீடியோ வைரலாகியுள்ளது.</p><p>

விடயம் என்னவென்றால், அந்த பாடல், தான் சமீபத்தில் சந்தித்த கடினமான காலகட்டங்களைக் குறித்து கேற்றி பெர்ரி பாடும் பாடலாகும்.&nbsp;</p><p></p><p>

அவற்றில் ஒன்று, கேற்றி பெர்ரி தன் காதலரான ஓர்லாண்டோ ப்ளூம் என்பவரை பிரிந்ததாகும்.</p><p>

அந்தப் பிரிவால் தனக்கு ஏற்பட்ட கோபம் போன்ற உணர்வுகளை அந்தப் பாடலில் வெளிப்படுத்தும் கேற்றி பெர்ரி, கடைசியாக தான் நடந்ததை மன்னிக்கவும் மறக்கவும் முயற்சி செய்யப்போவதாக கூறி பாடலை முடிப்பார்.
</p><p>
விடயம் என்னவென்றால், தன் முன்னாள் காதலரைப் பிரிந்ததால் ஏற்பட்ட கோபத்தைக் குறித்து கேற்றி பெர்ரி பாடும் பாடலில், இந்நாள் காதலரான ஜஸ்டின் ட்ரூடோ தலை காட்டியுள்ளது சற்று அபத்தமாக உள்ளதாக விமர்சனம் எழுந்துள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-11T10:10:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீதிச் சேவை சங்கத்தின் தலைவர் திடீர் விலகல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/judicial-service-association-president-resigns-sl-1783764415"></link>
            <id>https://jvpnews.com/article/judicial-service-association-president-resigns-sl-1783764415</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;நீதவான்கள் மற்றும் மாவட்ட நீதிபதிகளை உள்ளடக்கிய நீதிச் சேவை சங்கத்தின் தலைவர் பதவியிலிருந்து நீதவான் பசன் அமரசேன விலகியுள்ளதாகத் தெரிவிக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;நீதவான்கள் மற்றும் மாவட்ட நீதிபதிகளை உள்ளடக்கிய நீதிச் சேவை சங்கத்தின் தலைவர் பதவியிலிருந்து நீதவான் பசன் அமரசேன விலகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><p>

இன்று (11) நீதிச் சேவை சங்கத்தின் செயலாளரால் கூட்டப்பட்ட பொதுச் சபை கூட்டம் தொடர்பில் ஏற்பட்டுள்ள சர்ச்சையே இதற்கு காரணம் என தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/707033a0-37be-4a5e-8e1f-0cf7da3c4ceb/26-6a5215c09c78a.webp' /></p><p>
</p><p>
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீட்டிப்பது தொடர்பான விடயத்தை கலந்துரையாடுவதற்காகவும், உறுப்பினர்களின் கருத்துக்களைக் கேட்பதற்காகவும் சங்கத்தின் நிறைவேற்றுக் குழுவால் கடுவலை நீதவான் நீதிமன்ற வளாகத்தில் இன்று விசேட பொதுச் சபை கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தமையே இதற்கு காரணமாக அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.</p><p></p><p>
</p><p>
தனது பதவி விலகல் மற்றும் அதற்கான காரணங்கள் குறித்து நீதிச் சேவை சங்கத்தின் உறுப்பினர்களுக்குத் தலைவர் பசன் அமரசேன அனுப்பியதாகக் கூறப்படும் கடிதம் ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது.
</p><p>
இதற்கிடையில், தலைவரின் குற்றச்சாட்டுகளை மறுத்து, சங்கத்தின் செயலாளர் நீதிபதி சுரங்க முனசிங்க அனுப்பியதாகக் கூறப்படும் மற்றுமொரு கடிதமும் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது.
</p><p>
நிர்ணயிக்கப்பட்டபடி சங்கத்தின் விசேட பொதுச் சபை கூட்டம் இன்று நடைபெறும் என்று செயலாளர் தனது கடிதத்தின் மூலம் உறுப்பினர்களுக்கு அறிவித்திருந்தார்.</p>]]></content>
            <updated>2026-07-11T10:05:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடக ராசியில் சந்திரன்–குரு இணைவு: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையை மாற்றும் கஜகேசரி ராஜயோகம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/gajakesari-rajayoga-forms-on-july-14-who-get-luck-1783747489"></link>
            <id>https://manithan.com/article/gajakesari-rajayoga-forms-on-july-14-who-get-luck-1783747489</id>
            <summary type="text">ஜோதிட சாஸ்திரத்தின் படி, கிரகங்கள் குறிப்பிட்ட கால இடைவெளிக்குப் பிறகு தங்களின் ராசி மற்றும் நட்சத்திரங்களை தொடர்ந்து மாற்றிக்கொண்டே இருக்கும். இந்த க...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜோதிட சாஸ்திரத்தின் படி, கிரகங்கள் குறிப்பிட்ட கால இடைவெளிக்குப் பிறகு தங்களின் ராசி மற்றும் நட்சத்திரங்களை தொடர்ந்து மாற்றிக்கொண்டே இருக்கும். இந்த கிரகப் பெயர்ச்சிகளின் போது, சில சமயங்களில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கிரகங்கள் ஒன்றிணைந்து சக்திவாய்ந்த ராஜயோகங்களை உருவாக்குகின்றன. </p><p>இத்தகைய யோகங்கள் சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் அதிர்ஷ்டம், செல்வம், முன்னேற்றம் மற்றும் புதிய வாய்ப்புகளை ஏற்படுத்தும் என்று ஜோதிடத்தில் நம்பப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7e2fe340-d309-4284-879d-e8c946d00630/26-6a51d7f56711f.webp' /></p><p>
</p><p>
அந்த வகையில், ஜூலை மாதத்தில் பல முக்கியமான கிரகச் சேர்க்கைகள் நிகழவுள்ளன. அவற்றில் மிகவும் சிறப்பான ஒன்றாக, ஜூலை 14 அன்று கடக ராசியில் சந்திரன் மற்றும் குருபகவான் இணைவதால் சக்திவாய்ந்த கஜகேசரி ராஜயோகம் உருவாகிறது.</p><p>இதன் தாக்கமானது அனைத்து ராசிகளிலும் பிரதிபலித்ததாலும், தொழில் மற்றும், நிதி ரீதியில் உச்சகட்ட அதிர்ஷ்ட பலன்களை அனுபவிக்கப்போகும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.</p><p></p><h2>மேஷம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/17ed7903-0d9c-470b-a3ad-a0d7c2b5c170/26-6a51d7f614e28.webp' /></p><p>மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த குறுகிய கால ராஜயோகம் தொழிலில் நல்ல முன்னேற்றத்தை தரும். புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் உருவாகும்.</p><p>வேலை செய்பவர்களுக்கு அங்கீகாரமும் பதவி உயர்வுக்கான வாய்ப்பும் தானாகவே அமையும். தன்னம்பிக்கை அதிகரிக்கும், தொழிலில் இருந்த தடைகள் நீங்கும்.எதிர்பாராத பண வரவால் நிதி நிலை மேம்படும்.</p><p>குடும்பம் மற்றும் ஆரோக்கியம் தொடர்பான நீண்ட நாள் பிரச்சினைகள் குறையலாம். குடும்பத்தினரும் மேலதிகாரிகளும் ஆதரவாக இருப்பார்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு நல்ல லாபமும் புதிய வாய்ப்புகளும் கிடைக்கும்.
</p><h2>
கடகம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c116af29-5c9f-4ade-a6b8-a8991fe71cbe/26-6a51dea906b05.webp' /></p><p> கடக ராசிக்காரர்களுக்கு கடின உழைப்புக்கு நல்ல பலன் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் உருவாகி, வருமானம் அதிகரிக்கலாம். முக்கிய பொறுப்புகள் கிடைக்கும்.</p><p> பண நெருக்கடி குறைந்து, நிதி நிலை சீராகும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் அமையலாம். திருமணமானவர்களின் குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். </p><p>குழந்தைகள் முன்னேற்றம் அடைந்து சாதனைகள் படைக்கலாம். அதிர்ஷ்டம் அதிகரித்து, திடீர் பண ஆதாயங்களும் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
</p><h2>
சிம்மம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c1e3ad84-9ab6-4991-8c60-3bdb307b64bd/26-6a51dea9cd791.webp' /></p><p></p><p>சிம்ம ராசிக்காரர்களுக்கு நீண்ட நாட்களாக காத்திருந்த வாய்ப்புகள் கிடைக்கலாம். தொழிலில் வளர்ச்சி, நல்ல தொடர்புகள், அதிக தன்னம்பிக்கை மற்றும் குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும்.</p><p>வேலை செய்பவர்களுக்கு முன்னேற்றமும், மேலதிகாரிகளின் ஆதரவும் கிடைக்கும். இலக்குகளை எளிதாக அடைய முடியும். மனதில் தெளிவும் உற்சாகமும் பிறக்கும்.</p><p>பெற்றோர் மற்றும் குருவின் ஆதரவு கிடைக்கும். இந்த காலத்தில் நிதி நிலையில் இதுவரையில் இல்லாத அளவுக்கு அசுர வளர்ச்சி உண்டாகும்.</p><p><b>இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;</b> &nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b>&nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-11T10:00:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>H. A. Roshan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆசிரியர் ஆலோசகர்களின் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை வெளிப்படுத்திய இம்ரான் மஹ்ரூப் எம்.பி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/imran-mahroof-mp-statement-1783761602"></link>
            <id>https://tamilwin.com/article/imran-mahroof-mp-statement-1783761602</id>
            <summary type="text">ஆசிரியர் ஆலோசகர்கள்&amp;nbsp;பல்வேறு முறையற்ற நிர்வாகப் பிரச்சினைகளையும், தமக்கான தொழில்சார் அங்கீகாரக் குறைபாடுகளையும் எதிர்கொண்டு வருவதாக நாடாளுமன்ற உறு...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஆசிரியர் ஆலோசகர்கள்&nbsp;பல்வேறு முறையற்ற நிர்வாகப் பிரச்சினைகளையும், தமக்கான தொழில்சார் அங்கீகாரக் குறைபாடுகளையும் எதிர்கொண்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர்&nbsp;இம்ரான் மஹ்ரூப் தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p>நாடாளுமன்ற அமர்வில் நேற்றுமுன்தினம்(09.07.2026) உரையாற்றும் போது அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.&nbsp;</p><p>மேலும் தெரிவிக்கையில்,</p><p>
இலங்கையின் கல்வித் துறையில் பாடசாலைகளின் கல்வித் தரத்தை மேம்படுத்துவதிலும்,
ஆசிரியர்களுக்குப் புதிய கற்பித்தல் முறைகள் மற்றும் வழிகாட்டல்களை
வழங்குவதிலும் ஆசிரியர் ஆலோசகர்கள் மிக முக்கிய பங்காற்றுகின்றனர்.</p><p></p><p> </p><p>எனினும்,
நீண்டகாலமாக இந்தச் சேவையில் உள்ளவர்கள் பல்வேறு முறையற்ற நிர்வாகப்
பிரச்சினைகளையும், தமக்கான தொழில்சார் அங்கீகாரக் குறைபாடுகளையும் எதிர்கொண்டு
வருகின்றனர்.
</p><p>
1. 2182/36 (2020.07.01) ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலின் படி
உருவாக்கப்பட்டுள்ள இலங்கை ஆசிரியர் ஆலோசகர் சேவையைச் (SLTAS) சேர்ந்த
உத்தியோகத்தர்களின் சேவை தொடர்பாக பின்வரும் தகவல் வெளிப்படுத்தப்படல்
தொடர்பாக வர்த்தமானி 2182/36 இன்படி மொத்த ஆளணியினரின் எண்ணிக்கை 4471 ஆகும்.
தற்போது இச்சேவையிலுள்ள மொத்த ஆளணியினரின் எண்ணிக்கை எத்தனை? கிழக்கு
மாகாணத்திற்கு சிங்களம் தமிழ் மொழி உட்பட 466 இதில்
தற்போதுசேவையிலுள்ளவர்களின் எண்ணிக்கை எத்தனை?</p><p>

2. ஏன் இதுவரை இச்சேவைக்கான போட்டிப்பரீட்சைகள் நடாத்தப்படவில்லை?
</p><p>
3. 10/2025 இன்படி பதவி நிலை உத்தியோகத்தர்கள் மட்டத்தலுள்ளடக்கப்பட்டுள்ளது.
இதனால் இவர்களுக்கான வரப்பிரசாதங்கள் என்ன ? இவர்களின் பதவிக்கான அடிப்படை
சம்பளம் மற்றும் சம்பள உயர்ச்சியின் முரண்பாடு தீர்க்கப்பட்டுள்ளதா?</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b45dce95-f065-459e-b2e4-4deb4219f2c6/26-6a5211e9e4fa5.webp' /></p><p>

4. முன்னோடி வேலைத்திட்டத்தின் படி பாடசாலை தரிசிப்பினை மேற்கொள்ளும்
இவர்களுக்கான போக்குவரத்து கொடுப்பனவு நாடுபூராக மாறுபட்டுக் காணப்படுகின்றமை
ஏன்?</p><p>

5. 10/2026 இன் படி இவர்களுக்கு மோட்டார் போக்குவரத்து கொடுப்பனவு தொடர்பாக
அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதா?
</p><p>
6. SLTAS-I இன் பின்னர் இச்சேவையைச்சேர்ந்தவர்கள் மூப்பு அடிப்படையில் கல்வி
நிருவாக சேவைப்பரீட்சைக்கு தோற்ற முடியுமா?
</p><p>
7. இவர்களுக்கான சம்பளம் தேசிய நிதி ஒதுக்கீட்டின்படி வழங்கப்படுகின்றதா
அல்லது மாகாண நிதியிலிருந்து வழங்கப்படுகின்றதா?
</p><p>
8. இவர்களுக்கான இடமாற்றம் வலயங்களுக்கிடையில் இடம்பெறுமா அல்லது வலயத்தின்
கோட்டங்களுக்கிடையில் இடம்பெறுமா?
</p><p>
9. ⁠SLTAS-II இல் 10 வருடங்களை பூர்த்தி செய்துள்ள உத்தியோகத்தர்களுக்கு
SLTAS-I கான பதவி உயர்வு இன்னும் ஏன் வழங்கப்படவில்லை?
</p><p>
10. இவர்களின் நிர்வாக செயற்பாடு மேற்கொள்ளப்படுவது மத்திய கல்வி அமைச்சா?
அல்லது மாகாண கல்வி அமைச்சா? ஆசிரியர் ஆலோசகர் சேவையிலுள்ள இந்தப் பிரச்சினைகள் காரணமாக ஒட்டுமொத்த
பாடசாலைக் கல்வி மேற்பார்வை மற்றும் வழிகாட்டல் நடவடிக்கைகள்
பாதிக்கப்படுகின்றன.</p><p> எனவே, கல்வி அமைச்சர் என்ற ரீதியில் தாங்கள் இதில்
உடனடியாகத் தலையிட்டு, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடி இது தொடர்பாக
சிறந்த தீர்வொன்றை வழங்குமாறு கல்வி அமைச்சரிடம் கேட்டுகொள்கின்றேன் என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-11T09:50:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[15 கோடி ஆண்டுகள் பழமையான 'பாம்பு கழுத்து' டைனோசர் இனம் ; தாய்லாந்தில் மீண்டும் அதிசயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/new-snake-neck-dinosaur-species-discovered-1783763263"></link>
            <id>https://canadamirror.com/article/new-snake-neck-dinosaur-species-discovered-1783763263</id>
            <summary type="text">தாய்லாந்து நாட்டின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ள கலாசின் மாகாணத்தில் சுமார் 15 கோடி ஆண்டுகள் பழமையான, புதிய வகை மாபெரும் டைனோசர் இனம் ஒன்றின் புதைபட...</summary>
            <content type="html"><![CDATA[<p>தாய்லாந்து நாட்டின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ள கலாசின் மாகாணத்தில் சுமார் 15 கோடி ஆண்டுகள் பழமையான, புதிய வகை மாபெரும் டைனோசர் இனம் ஒன்றின் புதைபடிவத்தை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். </p><p>இந்த புதிய இனத்திற்கு 'யுராகாசரஸ் கலாசினென்சிஸ்' எனப் பெயரிடப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c9b467d5-12b3-4b67-9e5d-65d64ffdb0f6/26-6a521141354df.webp' /></p><h2>சுவாரசியமான பின்னணி</h2><p> </p><p>கடந்த மே மாதம் தென்கிழக்கு ஆசியாவின் மிகப்பெரிய டைனோசரான 'நாகாடைட்டன்' கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, இந்த ஆண்டின் இரண்டாவது முக்கிய கண்டுபிடிப்பாக இது பார்க்கப்படுகிறது.</p><p>பொதுவாக ஒரு புதிய டைனோசர் இனத்தை உறுதி செய்ய பல எலும்புகள் தேவைப்படும். ஆனால், இந்த முறை 'Scientific Reports' என்ற அறிவியல் இதழில் வெளியான ஆய்வறிக்கையின்படி, டைனோசரின் கழுத்துக்குப் பின்புறம் இருக்கும் 'ஒரே ஒரு முதுகுத்தண்டு' எலும்பை வைத்து இந்த புதிய இனம் கண்டறியப்பட்டுள்ளது.
</p><p>
அந்த எலும்பில் உள்ள தனித்துவமான 'Y' வடிவ அமைப்பும், அதன் காற்று அறைகளும் இதுவரை உலகில் கண்டறியப்பட்ட எந்த டைனோசர் எலும்புடனும் ஒத்துப்போகவில்லை என்பதால் இது புதிய இனம் என விஞ்ஞானிகள் உறுதி செய்துள்ளனர்.

</p><p>
இந்த டைனோசரின் நீண்ட கழுத்தைக் குறிக்கும் வகையில், சமஸ்கிருத சொல்லான 'யுராகா' (Uraga - அதாவது பாம்பு/சர்ப்பம்) மற்றும் கிரேக்க சொல்லான 'சாரஸ்' (Saurus - பல்லி) ஆகியவற்றை இணைத்து 'யுராகாசரஸ்' எனப் பெயரிடப்பட்டுள்ளது


</p><p>இது கண்டறியப்பட்ட இடத்தைக் சிறப்பிக்கும் வகையில் 'கலாசினென்சிஸ்' என்ற மாகாணப் பெயரும் இதனுடன் சேர்க்கப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-11T09:47:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜீ தமிழின் புதிய பிரம்மாண்ட தொடர் ‘சாமந்தி’ - ஜூலை 13 முதல் உங்கள் இல்லங்களில்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/zee-tamil-new-serial-chamanthi-1783745840"></link>
            <id>https://cineulagam.com/article/zee-tamil-new-serial-chamanthi-1783745840</id>
            <summary type="text">சாமந்திகுடும்பங்கள் கொண்டாடும் தரமான சீரியல்களை வழங்கி வரும் Zee தமிழ் தொலைக்காட்சி, அடுத்ததாக ‘சாமந்தி’ என்ற புத்தம் புதிய மெகா தொடரை ஒளிபரப்பவிருக்க...</summary>
            <content type="html"><![CDATA[<h2>சாமந்தி</h2><p>குடும்பங்கள் கொண்டாடும் தரமான சீரியல்களை வழங்கி வரும் Zee தமிழ் தொலைக்காட்சி, அடுத்ததாக ‘சாமந்தி’ என்ற புத்தம் புதிய மெகா தொடரை ஒளிபரப்பவிருக்கிறது. சின்னத்திரை ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகை ப்ரீத்தி ஷர்மா, சுர்ஜித் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்தத் தொடர், விறுவிறுப்பான குடும்பக் கதையாக உருவாகியுள்ளது. பாசம், காதல் மற்றும் எதிர்பாராத பல திருப்பங்களுடன் தயாராகியுள்ள ‘சாமந்தி’ தொடர், வரும் ஜூலை 13 முதல், திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8 மணிக்கு Zee தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b795a9bb-d314-4481-ac06-6ff669363817/26-6a51cd33b3210.webp' /></p><h2>கதையின் சுருக்கம்</h2><p>
ஒரு சாதாரண கிராமத்து பெண்ணான சாமந்தியின் அமைதியான வாழ்க்கையில், எதிர்பாராத ஒரு அசம்பாவிதம் நடக்கிறது. இதனால், அவள் தன் சொந்த ஊரை விட்டு வெளியேறி சென்னைக்கு வர வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. சென்னையில் ஒரு பெரிய செல்வாக்குமிக்க குடும்பத்தின் வீட்டிற்குள் நுழையும் சாமந்தி, அங்கே இருக்கும் சிக்கலான மனிதர்களையும், மறைக்கப்பட்ட உண்மைகளையும் எதிர்கொள்கிறாள். பல சவால்கள் குறுக்கிட்டாலும், அவளது துணிச்சலும் நேர்மையும் அவளது விதியை எப்படி மாற்றியமைக்கிறது என்பது தான் இத்தொடரின் முக்கியக் கதைக்களம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/504b5282-3f4d-480c-8b62-778a3bb3fd57/26-6a51cd3468974.webp' /></p><p>இதற்கிடையில், ஆடம்பர வாழ்க்கையின் மீது ஆசைப்படும் சாமந்தியின் அக்கா ரோஜா, இந்த வீட்டுக்குள் மருமகளாக நுழைகிறாள். அது அந்தப் பெரிய குடும்பத்திற்குள் பெரும் குழப்பங்களை ஏற்படுத்துகிறது. குடும்ப மோதல்களுக்கு இடையே, சாமந்தியின் வாழ்க்கையில் இந்த குடும்பத்தின் மற்றொரு வாரிசான அர்ஜுன் வருகிறான். அவனது அன்பும், உறுதுணையும் சாமந்தியின் பயணத்தில் ஒரு முக்கிய திருப்புமுனையாக அமைகிறது. இதனால் அடுத்து நடக்கப் போவது என்ன? என்ற அடுத்தடுத்த பல அதிரடியான திருப்பங்களுடன் இந்த சீரியல் கதைக்களம் உருவாக உள்ளது.</p><h2>நடிக்கும் நட்சத்திரங்கள்</h2><p>சாமந்தி கதாபாத்திரத்தில் ப்ரீத்தி ஷர்மாவும், அர்ஜுன் கதாபாத்திரத்தில் சுர்ஜித் குமாரும் இணைந்து நடிக்கிறார்கள். மேலும், மூத்த முன்னணி நடிகர்களான ஒய்.ஜி. மகேந்திரன், நளினி, மெட்டி ஒலி புகழ் விஷ்வா, பேரன்பு ஷமிதா, அப்சல் மற்றும் கீர்த்தனா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இதனால் ‘சாமந்தி’ சீரியல் ரசிகர்களை பெரிதும் கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/30cfac78-1dda-4ccd-8123-54f4157cf317/26-6a51cd351ed61.webp' /></p><p>வரும் ஜூலை 13 முதல், திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகவிருக்கும் ‘சாமந்தி’ புதிய மெகா தொடரை உங்கள் Zee தமிழில் காணத் தவறாதீர்கள்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-11T09:40:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[காதலியின் வீடியோவில் தலையைக் காட்டும் ட்ரூடோ: ஒரு வைரல் வீடியோ]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/justin-truade-cameo-katy-perry-dance-1783762700"></link>
            <id>https://canadamirror.com/article/justin-truade-cameo-katy-perry-dance-1783762700</id>
            <summary type="text">&amp;nbsp;கனடாவின் முன்னாள் பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோவும், பிரபல அமெரிக்க பாடகியான கேற்றி பெர்ரியும் காதலிக்கும் விடயம் உலகம் அறிந்ததே.

இந்நிலையில், சமூக...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கனடாவின் முன்னாள் பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோவும், பிரபல அமெரிக்க பாடகியான கேற்றி பெர்ரியும் காதலிக்கும் விடயம் உலகம் அறிந்ததே.
</p><p>
இந்நிலையில், சமூக ஊடகம் ஒன்றில், ட்ரூடோவும் கேற்றி பெர்ரியும் நடனமாடும் வீடியோ ஒன்று வைரலாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d18083f8-3ba4-455f-8374-7e40c0424764/26-6a520f0e4b3c3.webp' /></p><p>
</p><p>
பாடகி கேற்றி பெர்ரி, ‘Watch It Burn’ என்னும் ஒரு மியூசிக் வீடியோவை வெளியிட்டுள்ளார்.</p><p>

<blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/reel/Dand7ATjT-M/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/reel/Dand7ATjT-M/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/reel/Dand7ATjT-M/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by Firstpost (@firstpost)</a></p></div></blockquote> <script async src="//www.instagram.com/embed.js"></script></p><p>
இந்நிலையில், அந்த பாடலுக்கு கேற்றி பெர்ரி நடனமாடுவதைக் காட்டும் டிக் டோக் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
</p><p>
அந்த வீடியோவில், கேற்றி பெர்ரியின் காதலரும் கனடாவின் முன்னாள் பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோவும் தலை காட்டியுள்ளார். அந்த வீடியோ வைரலாகியுள்ளது.
</p><p>
விடயம் என்னவென்றால், அந்த பாடல், தான் சமீபத்தில் சந்தித்த கடினமான காலகட்டங்களைக் குறித்து கேற்றி பெர்ரி பாடும் பாடலாகும்.
</p><p>
அவற்றில் ஒன்று, கேற்றி பெர்ரி தன் காதலரான ஓர்லாண்டோ ப்ளூம் என்பவரை பிரிந்ததாகும்.
</p><p>
அந்தப் பிரிவால் தனக்கு ஏற்பட்ட கோபம் போன்ற உணர்வுகளை அந்தப் பாடலில் வெளிப்படுத்தும் கேற்றி பெர்ரி, கடைசியாக தான் நடந்ததை மன்னிக்கவும் மறக்கவும் முயற்சி செய்யப்போவதாக கூறி பாடலை முடிப்பார்.</p><p>
விடயம் என்னவென்றால், தன் முன்னாள் காதலரைப் பிரிந்ததால் ஏற்பட்ட கோபத்தைக் குறித்து கேற்றி பெர்ரி பாடும் பாடலில், இந்நாள் காதலரான ஜஸ்டின் ட்ரூடோ தலை காட்டியுள்ளது சற்று அபத்தமாக உள்ளதாக விமர்சனம் எழுந்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-11T09:38:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[கோர விபத்தில் இளைஞர் பலி - தாய் படுகாயம்.. தப்பியோடிய சாரதி வவுனியாவில் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/young-boy-dies-in-accident-mother-injured-1783735516"></link>
            <id>https://tamilwin.com/article/young-boy-dies-in-accident-mother-injured-1783735516</id>
            <summary type="text">
சிலாபம் - கொழும்பு பிரதான வீதியின் கட்டுனேரிய, லன்சிகம பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இந்த வாகன விபத்தை ஏற்படுத்தி தப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>
சிலாபம் - கொழும்பு பிரதான வீதியின் கட்டுனேரிய, லன்சிகம பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.</p><p>இந்த வாகன விபத்தை ஏற்படுத்தி தப்பிச்சென்ற டிப்பர் ரக லொறியையும், அதில் சூட்சுமமாக மறைந்திருந்த சாரதியையும், விபத்து இடம்பெற்று 48 மணிநேரத்திற்குள் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
</p><p>
82 பாதுகாப்பு கமெராக்களை ஆய்வு செய்து முன்னெடுக்கப்பட்ட நீண்ட விசாரணையின் பின்னர், மாரவில தலைமையக பொலிஸ் நிலைய போக்குவரத்துப் பிரிவு அதிகாரிகள் வவுனியாவில் வைத்து அவரை கைது செய்துள்ளனர்.</p><p>
</p><h2><b>
நேருக்கு நேர் மோதி விபத்து</b></h2><p>கடந்த 07 ஆம் திகதி இரவு 9.30 மணியளவில் மோட்டார் சைக்கிள் ஒன்றும், விபத்தை ஏற்படுத்தி தப்பிச்சென்ற டிப்பர் வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b027737d-21c1-4dbd-9f63-3c7b7d62f53c/26-6a51a75c1c0a2.webp' /></p><p>இதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த 19 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். </p><p>அத்துடன், அவருடன் பின்னால் பயணித்த அவரது தாயார் பலத்த காயங்களுடன் மாரவில ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
</p><p>
மேலதிக சிகிச்சைக்காக ராகம போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். </p><p>விபத்து இடம்பெற்றவுடன், டிப்பர் வாகனத்தை நிறுத்தாது அதன் சாரதி தப்பிச்சென்றுள்ளார்.
</p><p>
இந்த நிலையில், அந்த வாகனத்தை கைப்பற்ற விரிவான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டனர்.
</p><h3><b>
சாரதி கைது</b></h3><p>இந்த விபத்தில் உயிரிழந்தவர் கட்டுனேரிய பகுதியில் வசித்து வந்த ரித்ம பெர்னாண்டோ என அடையாளம் காணப்பட்டுள்ளார். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e7cd1af6-4118-4794-8f06-88fb40bb4bcc/26-6a51a75cbfc6f.webp' /></p><p>உயிரிழந்தவர் அந்த குடும்பத்தின் ஒரே ஆண் பிள்ளை என தெரியவந்துள்ளதுடன், அவரது தந்தையும் சில நாட்களுக்கு முன்னர் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் காயமடைந்து வீட்டிலேயே சிகிச்சை பெற்று வருகின்றார்.
</p><p>
விபத்தை ஏற்படுத்திய டிப்பர் வாகனத்தின் இலக்கத் தகடுகளில் இலக்கங்கள் தெளிவாக இருக்கவில்லை. </p><p>82 பாதுகாப்பு கமெராக்களை நீண்ட நேரம் ஆய்வு செய்து, பல பிரதான வீதிகள் மற்றும் குறுக்கு வீதிகளில் பயணித்த பாதையை அவதானித்து, வவுனியாவில் மறைந்திருந்த சாரதியை கைது செய்துள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-07-11T09:35:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலகின் டிஜிட்டல் ஹப்பாக மாறும் இந்தியா., கூகுள், அமேசான் பில்லியன்களில் முதலீடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/indias-data-centre-boom-attracts-billions-1783762443"></link>
            <id>https://news.lankasri.com/article/indias-data-centre-boom-attracts-billions-1783762443</id>
            <summary type="text">இந்தியா தற்போது உலகளவில் டேட்டா சென்டர் முதலீடுகளுக்கான முக்கிய தளமாக மாறியுள்ளது.செயற்கை நுண்ணறிவு (AI) பயன்பாடு அதிகரிப்பதும், அரசின் டேட்டா உள்ளூர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியா தற்போது உலகளவில் டேட்டா சென்டர் முதலீடுகளுக்கான முக்கிய தளமாக மாறியுள்ளது.</p><p>செயற்கை நுண்ணறிவு (AI) பயன்பாடு அதிகரிப்பதும், அரசின் டேட்டா உள்ளூர்மயமாக்கல் மற்றும் டிஜிட்டல் சுயாட்சி கொள்கைகளும், இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக உள்ளன.</p><p>சமீபத்திய பட்ஜெட்டில் 2047 வரை வரி சலுகை வழங்கப்பட்ட நிலையில், உலகளாவிய முதலீட்டாளர்கள், தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் தனியார் ஈக்விட்டி நிறுவனங்களை இந்தியாவை நோக்கி ஈர்க்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2e44bc0c-514d-4531-a1ce-78099fb36f0f/26-6a520e0d5c780.webp' /></p><p>தற்போது இந்தியா உலகின் 20 சதவீத டேட்டாவை தன்னகத்தே வைத்திருப்பதால், AI வேலைப்பளு, கிளவுட் பயன்பாடு மற்றும் அரசின் ஆதரவு கொள்கைகள் இணைந்து, இந்தியாவை வேகமாக வளர்ந்து வரும் டேட்டா சென்டர் சந்தையாக மாற்றியுள்ளன.
</p><p>
அமேசான், மைக்ரோசாஃப்ட், கூகுள் போன்ற மாபெரும் அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்கள், இந்தியாவில் டேட்டா சென்டர் திறனை விரிவுபடுத்த 57 பில்லியன் டொலர் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளன.</p><p>
</p><p></p><p>இதனுடன், உலகளாவிய தனியார் முதலீட்டு நிறுவனங்களும், உள்நாட்டு டேட்டா சென்டர் நிறுவனங்களில் பில்லியன் கணக்கில் முதலீடு செய்து வருகின்றன.
</p><p>
2030-க்குள் இந்திய டேட்டா சென்டர் துறையில் 25 பில்லியன் டொலர் முதலீடு வரக்கூடும் என மதிப்பிடப்படுகிறது.</p><p>

இந்த வளர்ச்சி, இந்தியாவை மத்திய கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவுக்கு 100 மில்லி விநாடி தூரத்தில் உள்ள டிஜிட்டல் ஹப்பாக மாற்றுகிறது.&nbsp;&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-11T09:32:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்த 4 நபர்களுடன் சண்டையிடால் வாழ்வில் நிம்மதியே இருக்காது! எச்சரிக்கும் சாணக்கிய நீதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/chanakya-niti-never-fight-with-these-persons-1783759855"></link>
            <id>https://manithan.com/article/chanakya-niti-never-fight-with-these-persons-1783759855</id>
            <summary type="text">பண்டைய இந்தியாவின் தலைசிறந்த அரசியல் ஆலோசகரும், பொருளாதார நிபுணருமான ஆச்சார்ய சாணக்கியர், தனது &#039;சாணக்கிய நீதி&#039; நூலில் வெற்றிகரமான வாழ்க்கை, செல்வ மேலா...</summary>
            <content type="html"><![CDATA[<p>பண்டைய இந்தியாவின் தலைசிறந்த அரசியல் ஆலோசகரும், பொருளாதார நிபுணருமான ஆச்சார்ய சாணக்கியர், தனது 'சாணக்கிய நீதி' நூலில் வெற்றிகரமான வாழ்க்கை, செல்வ மேலாண்மை மற்றும் நல்ல வாழ்க்கை நெறிகள் குறித்து பல அரிய கருத்துகளைப் பகிர்ந்துள்ளார்.
</p><p>
அவற்றில், கோபம் மனிதனை எவ்வாறு தவறான முடிவுகளுக்கு இட்டுச் செல்கிறது என்பதையும் அவர் எச்சரிக்கிறார். மேலும், அமைதியான மற்றும் பாதுகாப்பான வாழ்க்கை வாழ விரும்புபவர்கள், எந்தச் சூழ்நிலையிலும் நான்கு வகையான மனிதர்களுடன் சண்டையிடவோ, தேவையற்ற வாக்குவாதத்தில் ஈடுபடவோ கூடாது என்று சாணக்கியர் அறிவுறுத்தியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6d13b7e8-c970-4562-bd46-ef3a116d7712/26-6a520cf2adf1c.webp' /></p><p>
அப்படி அவர் குறிப்பிட்ட அந்த நான்கு வகை மனிதர்கள் யார்? ஏன் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுப்படுவதால் நமக்கு என்ன இழப்பு ஏற்படும் என்பது குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.</p><p></p><h2>குடும்ப உறுப்பினர்கள்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c53435ed-fe4d-46a0-a29d-a8d3f4bc80b6/26-6a520cf35c4f2.webp' /></p><p>

ஆச்சார்ய சாணக்கியர் தனது சாணக்கிய நீதி நூலில், ஒருவர் மகிழ்ச்சியாக வாழ வேண்டுமெனில் குடும்ப உறுப்பினர்களுடன் தேவையற்ற வாக்குவாதங்களைத் தவிர்க்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
</p><p>
வாழ்க்கையில் நாம் கஷ்டமான சூழ்நிலைகளை சந்திக்கும் போதும், நமக்கு உதவி தேவைப்படும் நேரங்களிலும் முதலில் நமக்காக நிற்பவர்கள் நமது குடும்பத்தினரே. </p><p>எனவே, நம்மை நேசிக்கும் குடும்ப உறுப்பினர்களுடன் அடிக்கடி சண்டையிட்டு வாழ்வில் மகிழ்ச்சியை அடைய முடியாது. அன்பும், புரிதலும் நிறைந்த உறவுகளே நிம்மதியான வாழ்க்கைக்கு அடிப்படையாகும் என்று சாணக்கியர் அறிவுறுத்துகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/21777453-a3be-4c7b-9b35-a89f7ab641b4/26-6a520cf40b39f.webp' /></p><p>
</p><h2>
ஆசிரியர் </h2><p>மற்றும் குரு

நமது வாழ்க்கையில் ஆசிரியர் மற்றும் குருவின் பங்கு மிகவும் முக்கியமானது. ஒரு குரு நம்மை அறியாமை என்னும் இருளிலிருந்து ஞானம் என்னும் ஒளிக்கு அழைத்துச் செல்கிறார்.
</p><p>
நமது திறமைகளையும், நல்ல பண்புகளையும் வளர்க்க வழிகாட்டுபவர் குரு. அதனால் எப்போதும் அவர்களை மதிக்க வேண்டும். அவர்களுடன் வாக்குவாதம் செய்வதையோ அல்லது அவர்களை அவமதிப்பதையோ தவிர்க்க வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/97a80a18-1cd0-4e3b-8574-81f3a60d6b26/26-6a520cf4b1094.webp' /></p><h2>

முட்டாள்களுடன் வாக்குவாதம் செய்யக்கூடாது</h2><p>

அறிவையும், சிந்திக்கும் திறனையும் பயன்படுத்தாமல் செயல்படுபவர்களுடன் தேவையற்ற விவாதங்களில் ஈடுபடக்கூடாது என்று சாணக்கியர் கூறுகிறார்.</p><p>

அத்தகையவர்களுடன் வாதிடுவது நமது நேரத்தையும் மன சக்தியையும் வீணாக்கும். அவர்களுடன் சண்டையிடுவதற்குப் பதிலாக, அவர்களுக்கு தேவையான நேரத்தில் உதவி செய்வதே சிறந்த அணுகுமுறையாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/126e5511-b070-4162-a72d-1e87eb701f87/26-6a520cf560087.webp' /></p><p></p><h2>நண்பர்களுடன் சண்டையைத் தவிர்க்க வேண்டும்</h2><p>

நண்பர்கள் நமது வாழ்க்கையில் முக்கியமான இடத்தைப் பிடித்தவர்கள். நாம் சிரமத்தில் இருக்கும் போது நமக்கு ஆதரவாக நிற்பவர்கள் உண்மையான நண்பர்களே.

எனவே, நண்பர்களுடன் சிறிய விஷயங்களுக்காக சண்டையிடுவதைத் தவிர்க்க வேண்டும். </p><p>அவர்கள் செய்யும் தவறுகளை பெரிதுபடுத்தாமல், அவர்களின் குறைகளை மன்னித்து உறவை பாதுகாக்க வேண்டும்.

ஒரு நல்ல நண்பரை இழப்பது என்பது, நம்மை நம்பிக்கையுடன் துணை நிற்கும் ஒருவரை இழப்பதற்கு சமம் என்று சாணக்கியர் எச்சரிக்கின்றார். இந்த நபர்களை பகைத்துக்கொண்டு ஒருவன் வாழ்வில் நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் வாழவே முடியாது.</p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW&nbsp;</a></u></b> &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-11T09:31:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[செவ்வாய் மீது விழும் சனி.., செல்வ செழிப்புடன் வாழப்போகும் 3 ராசிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/3-zodiac-get-money-due-to-sevvai-sani-transit-1783761945"></link>
            <id>https://news.lankasri.com/article/3-zodiac-get-money-due-to-sevvai-sani-transit-1783761945</id>
            <summary type="text">நவகிரகங்களின் தளபதியாக செவ்வாய் பகவான் விளங்கி வருகின்றார்.

அதேபோல், நவகிரகங்களின் நீதிமானாக விளங்கக்கூடிய சனிபகவான் செய்யும் செயலுக்கு ஏற்ப கர்ம ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>நவகிரகங்களின் தளபதியாக செவ்வாய் பகவான் விளங்கி வருகின்றார்.
</p><p>
அதேபோல், நவகிரகங்களின் நீதிமானாக விளங்கக்கூடிய சனிபகவான் செய்யும் செயலுக்கு ஏற்ப கர்ம பலன்களை கொடுக்கக்கூடியவர்.
</p><p>
இந்நிலையில், தற்போது சனி பகவான் மீன ராசியில் உள்ளார். அதே வேளையில் செவ்வாய் ரிஷப ராசியில் உள்ளார். </p><p>

மேலும், ஜூலை மாதத்தில் செவ்வாய் ரிஷப ராசியிலும், சனி மீன ராசியிலும் இருப்பதால், சனியின் 3 ஆம் பார்வை செவ்வாயின் மீது விழுகிறது. </p><p>

அந்தவகையில், செவ்வாய் மீது சனியின் மூன்றாம் பார்வை விழுவதால் குறிப்பிட்ட 3 ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர்.</p><p></p><h2>ரிஷபம் </h2><ul><li>

இக்காலம் அதிர்ஷ்டமானதாக இருக்கும். </li><li>
வேலை மற்றும் வியாபாரத்தில் வெற்றி கிடைக்கும். </li><li>
நிலுவையில் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடியும்.</li><li> 
திட்டங்கள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும்.</li></ul><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d5000b29-5fda-4ff6-bd9b-3e687770723c/26-6a520c1bd307c.webp' /></p><h2>

கன்னி </h2><ul><li>

இக்காலம் மிகவும் வரப்பிரசாதமாக இருக்கும்.</li><li> 
அலுவலகத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். </li><li>
வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும். </li><li>
நிதி ரீதியாக நல்ல முன்னேற்றம் ஏற்படும். </li><li>
தொழிலை விரிவுபடுத்தும் வாய்ப்பு கிடைக்கும். </li><li>
வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.</li></ul><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a1ea2e08-61fa-4530-82f7-565718459c57/26-6a520c1c82a99.webp' /></p><p>
</p><h2>
கும்பம் </h2><ul><li>

தொழிலில் நல்ல மாற்றங்கள் ஏற்படும்.</li><li> 
சிக்கியிருந்த பணம் கைக்கு வந்து சேரும். </li><li>
வருமானத்தில் எதிர்பாராத அளவில் உயர்வு ஏற்படும்.</li><li> 
புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும்.</li><li> 
முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும்.</li><li> 
தொழில் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். </li><li>
வியாபாரிகளுக்கு லாபத்தை அள்ளித் தரும்.&nbsp;&nbsp;</li></ul><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1e2213f3-c99e-4784-b947-10d4f0665c5b/26-6a520c1d3171a.webp' /></p><p>இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் 
ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. 
(லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).</p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp; உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p>&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-11T09:27:19+00:00</updated>
        </entry>
    </feed>
