<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-07-14T05:27:21+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[பேராசிரியர் ரகுராம் மீதான அவதூறு கூற்றுகளை அகற்ற வேண்டும்! நீதிமன்றம் அதிரடி உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/defamatory-statement-against-professor-raghuram-1783950083"></link>
            <id>https://ibctamil.com/article/defamatory-statement-against-professor-raghuram-1783950083</id>
            <summary type="text">யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் துறை பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரகுராம் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் அவதூறுகளை பரப்பியவர்களின் பதிவுகளை அகற்ற...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் துறை பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரகுராம் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் அவதூறுகளை பரப்பியவர்களின் பதிவுகளை அகற்றுவதுடன், பேராசிரியர் ரகுராம் தொடர்பாக எந்த அவதூறு பதிவுகளையும் செய்ய கூடாது என இடைக்கால கட்டளையொன்றை பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.</p><p>இந்த வழக்கு விசாரணையில் எதிர்மனுதாரர் ஒருவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்வதற்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.</p><p>யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் துறை பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரகுராம் மீது சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பினர் மற்றும் அதற்கு உடந்தையாக இருந்தனர்
என்ற குற்றச்சாட்டில் 14 எதிர் மனுதாரர்களுக்கு நிகழ்நிலை காப்புச் சட்டத்தின் கீழ் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.</p><p>

</p><h2>தடை செய்யப்பட்ட கூற்றுக்கள்&nbsp;</h2><p>
குறித்த வழக்கு பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றத்தில் நீதிவான் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டபோது முதலாம், மூன்றாம்,நான்காம்,ஐந்தாம், ஆறாம் எதிர் மனுதாரர்கள் சமூக வலைத்தளங்களில் பேராசிரியர் ரகுராம் தொடர்பாக அவதூறான மற்றும் தடை செய்யப்பட்ட கூற்றுக்கள் பதிவு செய்தமையை ஏற்றுக்கொண்ட மன்று இதுவரை அவ்வாறு போடப்பட்டிருந்த பதிவுகளை அகற்றுவதோடு, இது சம்பந்தப்பட்ட எந்த விடயத்தையும் எந்த ஒரு சமூக வலைத்தளங்களில் பதிவு செய்யக்கூடாது என இடைக்கால கட்டளையிட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cfc0cfc9-447c-4088-bea6-dae96164b803/26-6a54eb0519b1b.webp' /> </p><p>

இந்த நிபந்தனைக்குட்பட்ட இடைக்கால கட்டளையை, இறுதி கட்டளையாக ஆக்குவதா இல்லையா என்பதை தீர்மானிப்பதற்காக, விசாரணைகள் தொடர்ந்து நடைபெறுவதோடு, ஒன்று தொடக்கம் 13 வரையான எதிர்மனுதாரர்களுக்கு
இரண்டு கிழமைகளுக்குள் அழைப்பாணையை அனுப்புமாறு மன்று உத்தரவிட்டது.
</p><p>
எதிர்மனுதாரர்கள் அனைவருமே இரண்டு வாரங்களுக்குள் காரணங்காட்டுதல்களுக்காக மன்றுக்கு முனிலையாகி தங்களுடைய சமர்ப்பணங்களை முன்வைக்குமாறும் எதிர் மனுதாரர்கள் இதனை செய்யாவிட்டால் இந்த விடயத்தில் அவர்கள் குற்றவாளிகளாக கருதப்பட்டு மன்றினால் தீர்ப்பளிக்கப்படும் எனவும் அறிவுறுத்தப்பட்டது.
</p><p>
எதிர் மனுதாரர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவு செய்த கருத்துக்கள் முகத்தோற்றத்தின் அடிப்படையில அவதூறு மற்றும் தடை செய்யப்பட்ட கூற்றுக்களாக இருப்பதோடு, அது தொடர்பான விசாரணைகளுக்காகவும்
காரணங்காட்டுதலுக்காகவும் ஜூலை 27ம் திகதிக்கு வழக்கை மன்று திகதியிட்டுள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-14T05:25:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கதிர்காம பாதயாத்திரை ; ஒரே வாரத்தில் மூன்றாவது யாத்திரிகர் திடீர் மரணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/kataragama-pada-yatra-third-pilgrim-dies-1784005880"></link>
            <id>https://jvpnews.com/article/kataragama-pada-yatra-third-pilgrim-dies-1784005880</id>
            <summary type="text">&amp;nbsp; கதிர்காம பாதயாத்திரையில் ஈடுபட்டிருந்த மேலும் ஒரு யாத்திரிகர், திங்கட்கிழமை (13) அன்று காலை திடீரென உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது.

...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; கதிர்காம பாதயாத்திரையில் ஈடுபட்டிருந்த மேலும் ஒரு யாத்திரிகர், திங்கட்கிழமை (13) அன்று காலை திடீரென உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது.

இந்தச் சம்பவம் குமுக்கனுக்கும் நாவலடிக்கும் இடைப்பட்ட 'கஜபா வெட்டை' எனும் பகுதியில் இடம்பெற்றுள்ளது. </p><p>

சம்பவத்தில் ஏறாவூர், களுவன்கேணியைச் சேர்ந்த பிரதி அதிபர் கே. பாக்கியராசா (வயது 52) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cb992652-ca1a-4dd6-aa06-80e16b04473f/26-6a55c4fa42edb.webp' /></p><p>
மாரடைப்பு காரணமாகவே இவர் உயிரிழந்திருக்கலாம் என ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. இவரது உடல் தற்போது பாணமை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.</p><p> 

இது தொடர்பான விசாரணைகளை லாகுகலை பிரதேச பிரதம பொதுச் சுகாதார பரிசோதகர் எஸ். புனிதராஜன் நேரில் சென்று பார்வையிட்டார்.</p><p></p><p>
</p><p>
இதேவேளை, கடந்த ஞாயிற்றுக்கிழமை காரைதீவைச் சேர்ந்த நடராஜா அருள்குமார் என்ற யாத்திரிகர் உயிரிழந்திருந்த நிலையில் , கடந்த 8ஆம் திகதி வவுனியாவைச் சேர்ந்த ஒருவர் பொத்துவில், குண்டுமடு பகுதியில் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந் நிலையில் கதிர்காம பாதயாத்திரையின் போது இடம்பெற்றுள்ள மூன்றாவது மரணம் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-14T05:10:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை நீடிக்கும் விவகாரம் : எதிர்தரப்பு எம்.பியின் அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/extend-supreme-court-judges-retirement-age-1784001996"></link>
            <id>https://ibctamil.com/article/extend-supreme-court-judges-retirement-age-1784001996</id>
            <summary type="text">உயர் நீதிமன்ற மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை நீடிப்பது குறித்து&amp;nbsp;ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜ...</summary>
            <content type="html"><![CDATA[<p>உயர் நீதிமன்ற மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை நீடிப்பது குறித்து&nbsp;ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா கருத்து வெளியிட்டுள்ளார்.</p><p>அதன்படி, நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை நீடிப்பது குறித்த முன்மொழிவை இந்த ஆண்டு இறுதிக்குள் நடைமுறைப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக ஊடகமொன்றின் நிகழ்ச்சியில் கருத்து வெளியிட்ட போது அவர் தெரிவித்துள்ளார்.</p><p>அத்துடன் இவ்வாறான திருத்தத்தை மேற்கொள்வதற்காக இதுவரை எந்தவொரு தரப்பினராலும் கோரிக்கை விடுக்கப்படாத பின்னணியில், அரசாங்கம் முன்னெடுக்கும் இந்த வேலைத்திட்டத்தின் பின்னணியில் கடுமையான பிரச்சினை உள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.</p><p></p><h2>&nbsp;சட்டத்தரணிகள் சங்கம்&nbsp;</h2><p>தொடர்ந்தும் தெரிவிக்கையில், "இலங்கையின் உயர் நீதிமன்ற மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்குமாறு பிரதம நீதியரசர் கோரவில்லை. உயர்நீதிமன்ற நீதியரசர்களோ அல்லது மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களோ கோரிக்கை விடுக்கவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6053f2c8-7c69-493b-894a-fa7ef2abb028/26-6a55c29c6c71e.webp' /></p><p> </p><p>இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கோரவில்லை. அத்துடன் மேல் நீதிமன்ற நீதிபதிகள் சங்கம் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. இலங்கை சட்டத்தரணிகள் சங்கமும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. </p><p>அதேபோல், நாடாளுமன்றத்தில் இதுவரை எவரும் இவ்வாறானதொரு திருத்தத்தை மேற்கொள்வதற்கான அடிப்படை என்ன என்பதை முன்வைக்கவில்லை. நாடாளுமன்றத்தின் எந்தவொரு குழுவிலும் இந்த யோசனை விவாதிக்கப்படவில்லை.</p><p></p><h2>அரசாங்கத்தின் செயற்பாடு</h2><p> </p><p>அப்படியானால், யார் இவ்வாறானதொரு முன்மொழிவைக் கொண்டு வருகிறார்கள், யாரும் இல்லை. அதாவது இதன் பின்னணியில் மறைமுக நோக்கம் உள்ளது. தனிப்பட்ட மட்டத்திலான குழுவொன்றின் ஊடாகத் தயாரிக்கப்பட்ட வரைவு எமக்குக் கிடைத்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b04368d6-a338-4e8d-a5b1-7ce19e47dd62/26-6a55c29d6cb90.webp' /></p><p> </p><p>அரசாங்கம் நிச்சயமாக இதனைச் செய்யும். நீதிமன்றத்தின் அதிகார சமநிலையை தங்களது அரசியல் தேவைகளுக்கு ஏற்ப மாற்றியமைப்பதற்காகவே இதனைச் செய்கிறார்கள் என்ற விடயத்தை நாம் இப்போது உறுதியாக அறிவோம்.</p><p> டிசம்பர் மாதத்தின் முதல் வாரத்திற்குள் இந்தத் திருத்தத்தை நிறைவேற்ற வேண்டும் என்ற இலக்கும் உள்ளது. எனவே இதில் பெரும் மர்மம் நிலவுகிறது." என தெரிவித்தார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-14T05:05:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இன்னொரு பிரச்சனையை ஜனனி பக்கம் திருப்பிவிட்ட ராவணன்... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/ethirneechal-thodargiradhu-serial-special-promo-1784004015"></link>
            <id>https://cineulagam.com/article/ethirneechal-thodargiradhu-serial-special-promo-1784004015</id>
            <summary type="text">எதிர்நீச்சல் தொடர்கிறதுஜனனி என்ற கதாபாத்திரத்தை எடுத்தால் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் வில்லன்களின் கதையாகவே இருக்கும்.ஒரு வில்லனே இன்னும் அழியவில்...</summary>
            <content type="html"><![CDATA[<h2>எதிர்நீச்சல் தொடர்கிறது</h2><p>ஜனனி என்ற கதாபாத்திரத்தை எடுத்தால் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் வில்லன்களின் கதையாகவே இருக்கும்.</p><p>ஒரு வில்லனே இன்னும் அழியவில்லை, அவரை கொடூரமான வில்லனை இறக்கி இயக்குனர் மக்களுக்கு Villainsm பற்றி நன்றாக காட்டி வருகிறார். ஆனால் சீரியல் குழுவினர் சொன்னது போல பெண் எழுச்சி பற்றிய ஒரு கதையும் இல்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/20070874-ac28-4e22-a466-12bbfb684a50/26-6a55bdb29f796.webp' /></p><p>ராவணன் மீது ஜனனிக்கு சந்தேகம் இருந்தாலும் இப்போது மதிவதனி வீட்டிற்கு சென்ற பிறகு அவர் மீது கடும் கோபத்தில் உள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dc0a7f32-e2c5-4eec-acd8-2273e3e2ad2c/26-6a55bdb1efb5a.webp' /></p><h2>புரொமோ</h2><p>இன்றைய எபிசோட் புரொமோவில், மதிவதனி வீட்டிற்கு வந்த ராவணன் நான் குணசேகரனுக்கு உதவி செய்வதால் உனக்கு என்ன பிரச்சனை என கேட்க ஜனனி உதவி செய்பவன் எதற்கு எல்லாம் மறைக்கனும் என கேள்வி எழுப்புகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/68cb2fdc-f87f-42fa-bb14-4a926a593466/26-6a55bdb14b116.webp' /></p><p>அவர் விட்டிற்கு வருவதற்குள் ராவணன் வீட்டிற்கு வந்து என் மனைவியுடன் விவாகரத்து நடந்துவிட்டது, மதிவதனி என் மனைவி. அவள் என் குழந்தையை பார்க்க விடவில்லை, அதற்கு ஜனனியும் ஆதரவாக இருக்கிறார் என கூறுகிறார்.</p><p>இதைக்கேட்டதும் வீட்டிற்கு வந்த ஜனனியிடன் சண்டை போடுகிறார்கள் குணசேகரன் மற்றும் கதிர்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/RUu4NtCT7xw" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-07-14T05:00:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜூலை 16 உருவாகும் பரிவர்த்தன யோகம்: இந்த ராசிகளின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போவது உறுதி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/sun-moon-parivarthan-yog-on-16-july-who-get-luck-1784003853"></link>
            <id>https://manithan.com/article/sun-moon-parivarthan-yog-on-16-july-who-get-luck-1784003853</id>
            <summary type="text">ஜோதிடத்தின் படி, ஜூலை மாதம் மிகவும் சிறப்பான மாதமாகக் கருதப்படுகிறது. காரணம், இந்த மாதத்தில் பல கிரகங்களின் நிலைகளில் மாற்றங்கள் ஏற்பட்டு, பல்வேறு யோக...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜோதிடத்தின் படி, ஜூலை மாதம் மிகவும் சிறப்பான மாதமாகக் கருதப்படுகிறது. காரணம், இந்த மாதத்தில் பல கிரகங்களின் நிலைகளில் மாற்றங்கள் ஏற்பட்டு, பல்வேறு யோகங்கள் உருவாகின்றன. இந்த யோகங்களின் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரை உள்ள அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும்</p><p>அந்த வகையில், ஜூலை 16 மிகவும் முக்கியமான நாளாகக் கருதப்படுகிறது. ஏனெனில், அன்று சூரியனும் சந்திரனும் தங்களது ராசிகளை மாற்றுகின்றன. சூரியன் கடக ராசிக்கும், சந்திரன் சிம்ம ராசிக்கும் பெயர்வதால், ராசி பரிவர்த்தன யோகம் உருவாகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2e2d1d66-4504-4670-a0cd-99360a40965a/26-6a55c22c70e5b.webp' /></p><p> </p><p>இது கிரகங்களின் தனித்துவமான நிலைமையால் உருவாகும் சிறப்பு யோகமாகக் கருதப்படுகிறது.

இந்த பரிவர்த்தன யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளி்ன வாழ்விலும் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தினாலும், தொழில் மற்றும், பொருளாதார ரீதியில் உச்சகட்ட பலனை பெறப்போகும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில்&nbsp; பார்க்கலாம்.</p><p></p><h2>மேஷம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/28a367f6-6c6e-4cc6-92e7-8c350dd51ab1/26-6a55c22d21475.webp' /></p><p>

சூரியன்–சந்திரன் பரிவர்த்தன யோகத்தின் தாக்கத்தால் மேஷ ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமான காலகட்டம் உருவாக உள்ளது. நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த முன்னேற்ற வாய்ப்புகள் இப்போது கைகூடும். </p><p>குறிப்பாக கல்வி மற்றும் போட்டித் தேர்வுகளில் பங்கேற்றவர்கள் தங்களின் கடின உழைப்புக்கு ஏற்ற நல்ல முடிவுகளைப் பெறும் வாய்ப்பு அதிகம். தொழில் புரிவோருக்கு நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.</p><p>
புதிய தொழில் அல்லது வியாபாரத்தை தொடங்க நினைப்பவர்கள் இந்த நேரத்தில் தைரியமாக முயற்சி மேற்கொண்டால் வெற்றி பெறலாம். பணியிடத்திலும் புதிய பொறுப்புகள் மற்றும் வளர்ச்சிக்கான வாய்ப்புகள் கிடைக்கக்கூடும். </p><h2>கடகம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2b98251a-cccc-450f-8f86-f1da62b66840/26-6a55c22dc7725.webp' /></p><p>
சூரியன்–சந்திரன் பரிவர்த்தன யோகம் கடக ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமான பல மாற்றங்களை ஏற்படுத்தும். தன்னம்பிக்கை மற்றும் செயல்திறன் அதிகரிப்பதால் எந்த காரியத்தையும் உற்சாகமாக செய்து முடிக்க முடியும்.</p><p>இதுவரை எடுத்த கடின உழைப்புக்கு ஏற்ற பலன்கள் கிடைக்கத் தொடங்கும்.

நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு, வருமானம் அதிகரிக்கும்.மாணவர்கள் கல்வியில் சிறப்பாக செயல்பட்டு பாராட்டுகளைப் பெறலாம்.</p><p> குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்து, உறவினர்களின், குறிப்பாக உடன்பிறந்தவர்களின் ஆதரவு கிடைக்கும்.மனதில் தெளிவும் உற்சாகமும் பிறக்கும்.</p><h2>

துலாம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d1e7d65f-20f0-4ef6-b38b-e1937df6bc8d/26-6a55c22e761dd.webp' /></p><p>[AA8SF2K ]</p><p>சூரியன்–சந்திரன் பரிவர்த்தன யோகத்தின் அருளால் துலாம் ராசிக்காரர்களுக்கு தொழில் மற்றும் பணியிடத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்படும்.</p><p>நீண்ட காலமாக மேற்கொண்ட உழைப்புக்கான அங்கீகாரமும் பலனும் இந்த காலத்தில் கிடைக்கக்கூடும். பணியாற்றுபவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு அல்லது புதிய பொறுப்புகள் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.</p><p>
வேலைப்பளு குறைவதால் மன அழுத்தமும் குறைந்து, புத்துணர்ச்சியுடன் செயல்பட முடியும். போட்டித் தேர்வுகள் மற்றும் போட்டி சார்ந்த முயற்சிகளில் வெற்றி பெறும் வாய்ப்புகள் அதிகரிக்கும். திருமண&nbsp; வாழ்க்கையில் அன்பும் புரிதலும் அதிகரிக்கும்.</p><p><b>இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. ( மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;&nbsp;</b></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b>&nbsp; &nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-14T05:00:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA['ஐஸ் வைத்திருந்தவருக்கு மன்னார் மேல் நீதிமன்றம் ஆயுள் தண்டனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/life-imprisonment-for-person-found-with-ice-drug-1784005293"></link>
            <id>https://jvpnews.com/article/life-imprisonment-for-person-found-with-ice-drug-1784005293</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;ஐஸ்&#039; போதைப்பொருளைத் தன்வசம் வைத்திருந்து விற்பனை செய்த குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட நபருக்கு, கடந்த 01.07.2026 அன்று,&amp;nbsp; மன்ன...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;ஐஸ்' போதைப்பொருளைத் தன்வசம் வைத்திருந்து விற்பனை செய்த குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட நபருக்கு, கடந்த 01.07.2026 அன்று,&nbsp; மன்னார் மேல் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
</p><p>
கடந்த 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 14 ஆம் திகதி, 5 கிராமுக்கும் அதிகமான 'ஐஸ்' போதைப்பொருளைத் தம்வசம் வைத்திருந்தமை மற்றும் அதனை விற்பனை செய்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் குறித்த நபர் கைது செய்யப்பட்டிருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8841afbd-6096-4753-bece-a51477920707/26-6a55c2ae7b694.webp' /></p><p>

மன்னார் மேல் நீதிமன்றில் இடம்பெற்று வந்த இவ்வழக்கின் விசாரணைகளின் போது, குற்றவாளிக்கு எதிரான சாட்சியங்களையும் சான்றுகளையும் அரச சட்டவாதிகளான தேவ விதுரன் மற்றும் ஆறுமுகம் தனுஷன் ஆகியோர் நெறிப்படுத்தி நீதிமன்றத்தின் முன் சமர்ப்பித்தனர். </p><p>

அரசு தரப்பால் முன்வைக்கப்பட்ட ஆதாரங்கள் அனைத்தும், குற்றவாளியின் மீதான குற்றச்சாட்டுகளைச் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிப்பதாக அமைந்திருந்தன.</p><p></p><p>

வழக்கின் அனைத்துப் பரிமாணங்களையும் சமர்ப்பிக்கப்பட்ட சான்றுகளையும் மிக ஆழமாக ஆராய்ந்த மன்னார் மேல் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ. ஆனந்தராஜா, குற்றச்சாட்டுகள் அனைத்தும் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதை உறுதிசெய்தார். 

 தொடர்ந்து, குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை வழங்கி நீதிபதி தீர்ப்பை அறிவித்தார்</p>]]></content>
            <updated>2026-07-14T05:00:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[வத்தளையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/man-s-death-body-recovered-in-wattala-1784002775"></link>
            <id>https://tamilwin.com/article/man-s-death-body-recovered-in-wattala-1784002775</id>
            <summary type="text">வத்தளை, ஹுனுப்பிட்டிய தொடருந்து நிலையத்துக்கு அருகிலுள்ள புதர்க்காடு
ஒன்றிலிருந்து அடையாளம் காணப்படாத ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.குறித்த சட...</summary>
            <content type="html"><![CDATA[<p>வத்தளை, ஹுனுப்பிட்டிய தொடருந்து நிலையத்துக்கு அருகிலுள்ள புதர்க்காடு
ஒன்றிலிருந்து அடையாளம் காணப்படாத ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.</p><p>குறித்த சடலமானது நேற்று(13.07.2026) மாலை&nbsp;கிரிபத்கொட பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>பொலிஸார் மேலதிக விசாரணை</h2><p>
அந்தப் பகுதியில் சடலம் ஒன்று கிடப்பதாகக் கிடைத்த தகவலைத் தொடர்ந்து சம்பவ
இடத்துக்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.</p><p>
சடலம் அழுகிய நிலையில் காணப்படுவதால், இந்த மரணம் சுமார் மூன்று நாள்களுக்கு
முன்னரே நிகழ்ந்திருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6d6ab3e8-0a42-42f0-847f-b857ec5a2f30/26-6a55bc493df48.webp' /></p><p>
</p><p>
உயிரிழந்த நபர் தொடருந்தில் பயணிக்கும்போது தவறி விழுந்திருக்கலாம் அல்லது
விபத்துக்குள்ளாகியிருக்கலாம் என்று பொலிஸார் ஆரம்பகட்ட விசாரணைகளின்
அடிப்படையில் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.</p><p>சம்பவ இடத்துக்கு வருகை தந்த தடயவியல் சோதனை அதிகாரிகள் விசாரணைகளை
மேற்கொண்டுள்ளனர். </p><p>பின்னர், நீதிவான் விசாரணைகளைத் தொடர்ந்து சடலம் பிரேத
பரிசோதனைக்காக ராகம வைத்தியசாலையின் பிரேத அறைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
</p><p>
இந்தச் சம்பவம் தொடர்பில் கிரிபத்கொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து
வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-14T04:54:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வானுர்தி பயணப்பாதையை மாற்றியமைத்த விமானி! 'I'm bored கவனம் ஈர்த்த வாசகம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/pilot-writes-flight-path-i-m-bored-sky-during-1784004630"></link>
            <id>https://canadamirror.com/article/pilot-writes-flight-path-i-m-bored-sky-during-1784004630</id>
            <summary type="text">&amp;nbsp; லிவர்பூல் நகருக்கு அருகில் பறந்த விமானி ஒருவர், தனது வானுர்தி பயணப்பாதையை மாற்றியமைத்து வானில் &#039;I&#039;m bored&#039; என்ற வாசகத்தை உருவாக்கியுள்ளார். இந்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; லிவர்பூல் நகருக்கு அருகில் பறந்த விமானி ஒருவர், தனது வானுர்தி பயணப்பாதையை மாற்றியமைத்து வானில் 'I'm bored' என்ற வாசகத்தை உருவாக்கியுள்ளார். இந்தச் செயல் சமூக வலைதளங்களில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.
</p><p>
இந்தச் சம்பவம் குறித்துத் தொடர்புடைய வானுர்திப் போக்குவரத்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வானுர்திப் பாதுகாப்பு விதிமுறைகள் மற்றும் பயணத்தின் போது இத்தகைய செயல்களில் ஈடுபடுவது குறித்த பல்வேறு தரப்பு விமர்சனங்கள் எழுந்துள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/524c91ca-bd1d-4af1-bc25-7847116ef645/26-6a55c01818843.webp' /></p><p>

விமானி தனது பயணப்பாதையை வேண்டுமென்றே மாற்றியமைத்ததற்கான காரணம் மற்றும் அவரது பாதுகாப்பு விதிகள் மீறல் குறித்து விரிவான ஆய்வுகளை காவல்துறை மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் மேற்கொண்டு வருவதாகத் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.</p>]]></content>
            <updated>2026-07-14T04:49:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஐரோப்பாவை வாட்டி வதைத்த ஜூன் மாத வெப்ப அலை: பத்தாயிரத்திற்கும் அதிகமானோர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/june-heatwave-hits-europe-1784003377"></link>
            <id>https://tamilwin.com/article/june-heatwave-hits-europe-1784003377</id>
            <summary type="text">மேற்கு ஐரோப்பாவை உலுக்கிய கடுமையான வெப்ப அலையின் காரணமாக, ஐரோப்பிய
நாடுகளில் 10,000க்கும் அதிகமான உபரி மரணங்கள் பதிவாகியுள்ளதாக அதிகாரப்பூர்வ
புள்ளி...</summary>
            <content type="html"><![CDATA[<p>மேற்கு ஐரோப்பாவை உலுக்கிய கடுமையான வெப்ப அலையின் காரணமாக, ஐரோப்பிய
நாடுகளில் 10,000க்கும் அதிகமான உபரி மரணங்கள் பதிவாகியுள்ளதாக அதிகாரப்பூர்வ
புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
</p><p>
உலக சுகாதார அமைப்பு (WHO) மற்றும் ஐரோப்பிய நோய் தடுப்பு மற்றும்
கட்டுப்பாட்டு மையத்தின் ஆதரவுடன் செயல்படும் 'யூரோமோமோ' என்ற அமைப்பு
வெளியிட்டுள்ள தரவுகளின்படி, ஜூன் 22 முதல் 28 வரையிலான ஒரே வாரத்தில் மட்டும்
10,650 உபரி மரணங்கள் பதிவாகியுள்ளன.</p><p></p><h2>தீவிரமான வெப்ப அலைகள்</h2><p>

இதில் உயிரிழந்தவர்களில் 9,000-க்கும் மேற்பட்டோர் 65 வயது மற்றும் அதற்கு
மேற்பட்ட முதியவர்கள் ஆவர்.
</p><p>
தீவிரமான வெப்ப அலைகள் மனிதர்களுக்கு வெப்ப பக்கவாதம், இதய நோய் மற்றும்
சுவாசப் பிரச்சினைகளைத் தீவிரப்படுத்தி மரணத்தை ஏற்படுத்துகின்றன.</p><p></p><p>
</p><p>
இந்த காலகட்டத்தில் கொவிட் - 19 போன்ற வேறு எந்த முக்கிய நோய் பாதிப்புகளும்
இல்லாததால், இந்த மரணங்களுக்குக் கடுமையான வெப்பமே முதன்மைக் காரணம் என
விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.</p><h2><span style="color: inherit; font-size: 1.75rem;">கடுமையான பாதிப்பு</span></h2><p>
</p><p>
ஐரோப்பாவின் 27 நாடுகளின் இறப்பு புள்ளிவிவரங்களின் அடிப்படையில் இந்த
அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/618b3609-718d-46b0-9b1d-7424a78729da/26-6a55bf666956b.webp' />&nbsp;&nbsp;</p><p>
</p><p>
இந்த ஜூன் மாத வெப்ப அலையானது பிரான்ஸ், ஸ்பெயின், பிரித்தானியா மற்றும்
பெல்ஜியம் ஆகிய நாடுகளில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியதுடன், மின்சார
விநியோகத் தடை, பாடசாலைகள் மூடல் போன்ற அசாதாரண சூழலையும் உருவாக்கியது.
</p><p>
குறிப்பாகப் பிரான்ஸ் மற்றும் பெல்ஜியம் ஆகிய இரு நாடுகள் மட்டுமே ஜூன் இறுதி
வாரத்தில் மிக அதிகப்படியான மரணங்களைப் பதிவு செய்துள்ளன.

மனிதர்களால் ஏற்படும் பருவநிலை மாற்றமே இத்தகைய தீவிர வெப்ப அலைகளுக்குக்
காரணம் என்றும், இது போன்ற தீவிர வானிலை நிகழ்வுகள் வரும் காலங்களில் மேலும்
அதிகரிக்கக்கூடும் என்றும் சுற்றுச்சூழல் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-14T04:47:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[14 வயது பாடசாலை மாணவன் மாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/14-year-old-schoolboy-missing-1784002966"></link>
            <id>https://ibctamil.com/article/14-year-old-schoolboy-missing-1784002966</id>
            <summary type="text">ஆற்றில் மூழ்கி பாடசாலை மாணவன் ஒருவர் காணாமல் போயுள்ளதாக லிந்துலை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.குறித்த சம்பவம் லிந்துலை காவல்துறை பிரிவிற்குட்பட்ட ஆ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஆற்றில் மூழ்கி பாடசாலை மாணவன் ஒருவர் காணாமல் போயுள்ளதாக லிந்துலை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p>குறித்த சம்பவம் லிந்துலை காவல்துறை பிரிவிற்குட்பட்ட ஆக்ரா ஓயா பகுதியில் இடம்பெற்றுள்ளது</p><p> 

இவ்வாறு காணாமல் போயுள்ளவர் லிந்துலை பகுதியைச் சேர்ந்த 14 வயதுடைய சிறுவன் என தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><h2>சிறுவனைத் தேடும் பணி</h2><p> 

காணாமல் போன சிறுவன் மேலும் சில நண்பர்களுடன் இணைந்து, மீன் தொட்டிக்குத் தேவையான கற்களை சேகரிப்பதற்காகச் சென்றிருந்த போதே ஆக்ரா ஓயாவில் விழுந்து இவ்வாறு நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f4d34e4c-2d79-4fee-8d27-d6a29c1758ce/26-6a55bd1436a70.webp' /></p><p>காவல்துறை கடற்படை பிரிவின் நுவரெலியா பிரிவினரும் பிரதேசவாசிகளும் இணைந்து காணாமல் போன சிறுவனைத் தேடும் பணிகளில் ஈடுபட்டுள்ளன.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL இ</a>ல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-14T04:45:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சவுதி அரேபியா விமான நிலையம் மீது தாக்குதல்; மீண்டும் அதிரும் மத்திய கிழக்கு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/attack-on-saudi-arabian-airport-1784004053"></link>
            <id>https://jvpnews.com/article/attack-on-saudi-arabian-airport-1784004053</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;யேமனின் ஹூதி கிளர்ச்சியாளர்கள் சவுதி அரேபியாவின் அபா (Abha) சர்வதேச விமான நிலையத்தை இலக்கு வைத்து பெலிஸ்டிக் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்கு...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;யேமனின் ஹூதி கிளர்ச்சியாளர்கள் சவுதி அரேபியாவின் அபா (Abha) சர்வதேச விமான நிலையத்தை இலக்கு வைத்து பெலிஸ்டிக் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. </p><p>

யேமனின் சனா சர்வதேச விமான நிலையத்தின் மீது சவுதி அரேபியா நடத்திய வான்வழித் தாக்குதல்களுக்குப் பழிவாங்கும் நடவடிக்கைாகவே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஹூதி கிளர்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0c9a2172-1218-42e1-8555-b1341446a8ae/26-6a55bdd6e41ab.webp' /></p><h2>சவுதி அரேபியா&nbsp; வான்வழித் தாக்குதல்</h2><p> </p><p>

இதனுடன், சவுதி அரேபியாவிற்கும் ஈரானிய ஆதரவு பெற்ற இந்த ஆயுதக் குழுவிற்கும் இடையில் நான்கு வருடங்களாக நிலவி வந்த போர்நிறுத்த உடன்பாடு முறிவடைந்துள்ளது.</p><p> 

அபா (Abha) என்பது யேமன் எல்லைக்கு அருகில் அமைந்துள்ள மலைப்பாங்கான தெற்கு பிராந்தியத்தின் தலைநகரமாகும், மேலும் பல சவுதி குடிமக்கள் அங்கு சுற்றுலா மேற்கொள்கின்றனர்.</p><p></p><p> 

கடந்த 2022 மார்ச் மாதத்தில் சவுதியின் எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீது ஹூதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதல்களின் பின்னர் எட்டப்பட்ட போர்நிறுத்த உடன்பாட்டுக்கு பிறகு சவுதி அரேபியாவுக்கு எதிராக நடத்தப்பட்டதாக ஹூதி அமைப்பினர் பொறுப்பேற்றுக் கொண்ட முதலாவது தாக்குதல் இதுவாகும்.</p>]]></content>
            <updated>2026-07-14T04:40:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[தென்னிலங்கையில் படுகொலை செய்யப்பட்ட இளம் பெண் - விசாரணையில் வெளியான பல திடுக்கிடும் தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/young-lady-dead-boy-friend-arrested-1784001849"></link>
            <id>https://tamilwin.com/article/young-lady-dead-boy-friend-arrested-1784001849</id>
            <summary type="text">பாணந்துறை வடக்கு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள வாடகை வீடு ஒன்றில் இளம் பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்ட நிலையில் பல தகவல்கள் வெளியாகியு...</summary>
            <content type="html"><![CDATA[<p>பாணந்துறை வடக்கு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள வாடகை வீடு ஒன்றில் இளம் பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்ட நிலையில் பல தகவல்கள் வெளியாகியுள்ளது.
</p><p>
இந்தச் சம்பவத்தில் நதுனி சஹஷ்ரி என்ற இளம்பெண்ணே படுகொலை செய்யப்பட்டுள்ளார். </p><p>உயிரிழந்த பெண் அந்த வீட்டில், திருமணம் செய்து கொள்ளாமல் 27 வயதுடைய இளைஞர் ஒருவருடன் வாழ்ந்து வந்துள்ளார் என தெரியவந்துள்ளது.
</p><p>
பாணந்துறையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் சமையல் உதவியாளராகப் பணியாற்றிய இளைஞன், சம்பவத்தின் பின்னர் தலைமறைவாகியிருந்தார். இந்த நிலையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.</p><p>
</p><h2><b> 
இளம் பெண்&nbsp;படுகொலை </b></h2><p>சம்பவம் நடந்த இரவு, தான் பணிபுரிந்த இடத்திலிருந்து சுமார் நான்கரை கிலோமீட்டர் தூரம் நடந்து வந்ததாக சந்தேக நபர் பொலிஸாரிடம் கூறியுள்ளார். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3162d0a6-5ba6-4102-a2dc-e0d4034a7fe7/26-6a55bd477b9d2.webp' /></p><p>இரவு 11.15 மணியளவில் பணம் தொடர்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.</p><p>இதன்போது தங்கை மற்றும் தாயாரையும் மிகவும் மோசமான முறையால் திட்டியதாலும் ஏற்பட்ட கடும் கோபத்தில், கத்தியால் அவர் நதுனியின் நெஞ்சில் குத்தியும், கழுத்தை அறுத்தும் கொலை செய்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
கொலையின் பின்னர் தானும் உயிரை மாய்த்துக் முயன்று தோல்வியடைந்ததால், வீட்டில் இருந்த திரவத்தை அருந்தியுள்ளார்.</p><p> பின்னர் ஆடைகளை மாற்றிக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

மொரட்டுவ ரயில் நிலையத்திற்கு சென்ற சந்தேக நபர், கொழும்பிலிருந்து களுத்துறை நோக்கிச் சென்ற ரயிலின் முன்னால் பாய்ந்து உயிரை மாய்க்க முயன்றுள்ளார்.
</p><p> 
இதில் அவரது வலது கால் மற்றும் விலா எலும்புகள் உடைந்து பலத்த காயமடைந்தார். பொதுமக்களால் பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். </p><p>

2 நாட்கள் தேடுதலுக்கு பின்னர் தேசிய வைத்தியசாலையிலிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸார் அவரை கைது செய்தனர். மாளிகாகந்த நீதவான் வைத்தியசாலைக்குச் சென்று சந்தேக நபரைப் பார்வையிட்டார். </p><p>அவர் தற்போது கடுமையான காயங்களுடன் உயிருக்குப் போராடி வருகிறார்.
</p><h3><b>
பணம் பறிக்கும் மோசடி</b></h3><p>இதேவேளை, நதுனியும் அவரது தாயாரும் நீண்டகாலமாக இளைஞர்களை காதலிப்பதாக நடித்து, பணம் பறிக்கும் மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b9710f4b-316a-42c6-8070-d4b33a8678fc/26-6a55bd482f5d6.webp' /></p><p>இந்தச் சம்பவம் குறித்து அறிந்த வவுனியாவை சேர்ந்த நபர் ஒருவர், இந்தத் தாயும் மகளும் சேர்ந்து தம்மிடம் 15 லட்சம் ரூபாவை மோசடி செய்ததாக பாணந்துறை வடக்கு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடம் தெரிவித்துள்ளார். </p><p>நதுனி இதற்கு முன்னர் விமானி ஒருவருடனும் நிச்சயதார்த்தம் செய்திருந்தமை தெரியவந்துள்ளது.

சந்தேக நபருடன் வசிக்கும்போதே, நதுனி மற்றொரு சமையல் கலைஞருடன் நெருக்கமாக இருந்துள்ளார்.</p><p> அவரிடமிருந்தும் சுமார் 10 லட்சம் ரூபாவை தாய் மற்றும் மகள் சேர்ந்து மோசடி செய்துள்ளனர். நதுனியின் தாயார், மகளின் பாதுகாப்பில் அக்கறை கொண்ட ஒரு பாசமான தாயாக நடித்து, இளைஞர்களை ஏமாற்றி வந்துள்ளார்.
</p><p>
தாயின் தவறான வழிகாட்டலால் உயிரிழந்த நதுனியின் சடலத்தை அவரது தாயாரே பொறுப்பேற்றுக்கொண்டார். சந்தேக நபரான இளைஞர் தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.</p>]]></content>
            <updated>2026-07-14T04:39:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[விஷ்ணு விஷாலின் கெரியர் பெஸ்ட் திரைப்படம்.. வசூல் சாதனை படைத்துள்ள கட்டா குஸ்தி 2]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/vishnu-career-best-movie-gatta-kusthi-2-collection-1784003711"></link>
            <id>https://cineulagam.com/article/vishnu-career-best-movie-gatta-kusthi-2-collection-1784003711</id>
            <summary type="text">கட்டா குஸ்தி 2தமிழ் சினிமாவில் தனக்கென்று தனி இடத்தை உருவாக்கியுள்ளவர் விஷ்ணு விஷால். இவர் நடிப்பில் வெளிவந்த வெண்ணிலா கபடி குழு, ராட்சசன், குள்ளநரி க...</summary>
            <content type="html"><![CDATA[<h2>கட்டா குஸ்தி 2</h2><p>தமிழ் சினிமாவில் தனக்கென்று தனி இடத்தை உருவாக்கியுள்ளவர் விஷ்ணு விஷால். இவர் நடிப்பில் வெளிவந்த வெண்ணிலா கபடி குழு, ராட்சசன், குள்ளநரி கூட்டம், முண்டாசுப்பட்டி, இன்று நேற்று நாளை, கட்டா குஸ்தி போன்ற திரைப்படங்களை நம்மால் மறக்கவே முடியாது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ff3d2c85-c1df-498b-b11e-e85f8468d349/26-6a55bc8262685.webp' /></p><p>இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்து பிளாக்பஸ்டர் ஆகியுள்ள திரைப்படம் <a href="https://www.youtube.com/watch?v=YShtISBHAYE" target="_blank">கட்டா </a>குஸ்தி 2. இப்படத்தை இயக்குநர் செல்லா அய்யாவு இயக்க, வேல்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. நடிகை ஐஸ்வர்யா லட்சுமி இப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1bbceca0-12c9-4d72-94ec-6d66707bcf9c/26-6a55bc831f2d5.webp' /></p><p></p><p> 

இப்படத்தின் வெற்றியை படக்குழு சமீபத்தில் கொண்டாடினார்கள். ஹீரோ விஷ்ணு விஷாலுக்கு BMW கார், இயக்குநருக்கு தங்க செயின் பரிசாக வழங்கப்பட்டது. படக்குழுவினர் அனைவருக்கும் வெள்ளி நாணயம் பரிசாக வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
</p><h2>வசூல்&nbsp;</h2><p>
கட்டா குஸ்தி 2 திரைப்படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் குறித்து தொடர்ந்து ஒவ்வொரு நாளும் பார்த்து வருகிறோம். இந்த நிலையில், 11 நாட்களை கடந்திருக்கும் கட்டா குஸ்தி 2 திரைப்படம் இதுவரை ரூ. 45 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இதுவே நடிகர் விஷ்ணு விஷாலின் திரை வாழ்க்கையில் அதிக வசூல் செய்த திரைப்படமாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/98228653-039e-437c-876c-98c781b1b8ba/26-6a55bc83cf0b4.webp' /></p>]]></content>
            <updated>2026-07-14T04:35:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[விமான நிலையத்தில் 63 வயதான வெளிநாட்டு ஆச்சியால் அதிர்ந்த அதிகாரிகள்; மீட்கப்பட்ட ஆபத்தான பொருள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/filipino-woman-arrested-with-over-6kg-kush-at-bia-1784003656"></link>
            <id>https://jvpnews.com/article/filipino-woman-arrested-with-over-6kg-kush-at-bia-1784003656</id>
            <summary type="text">&amp;nbsp; கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக 6 கிலோ 180 கிராம் &#039;குஷ்&#039; போதைப்பொருளை நாட்டிற்குள் கொண்டுவர முயன்ற பிலிப்பைன்ஸ் நாட்டுப் பெண் ஒருவர் கை...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக 6 கிலோ 180 கிராம் 'குஷ்' போதைப்பொருளை நாட்டிற்குள் கொண்டுவர முயன்ற பிலிப்பைன்ஸ் நாட்டுப் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். </p><p>

இன்று (14) அதிகாலை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தின் விமான நிலைய பிரிவின் அதிகாரிகள் குழுவினால், கட்டுநாயக்க விமான நிலைய வருகை முனையத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, 60 மில்லியன் ரூபாய் பெறுமதியான குறித்த போதைப்பொருளுடன் 63 வயதுடைய பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7c731986-290b-485d-9a32-2c7d2cedc4b1/26-6a55bc4a43166.webp' /></p><h2>60 மில்லியன் ரூபாய் பெறுமதி</h2><p> 

சந்தேக நபரான பெண்ணிடம் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தின் விமான நிலைய பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது. </p><p>

இதேவேளை, நேற்று (13) காலை தொம்பே, பரன்கொட பகுதியில் 9 கிலோ 128 கிராம் 'ஐஸ்' போதைப்பொருளுடன் 23 வயதுடைய இளைஞர் ஒருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p></p><p> </p><p>

பொலிஸ் விசேட அதிரடிப்படையின் கோனஹேன முகாம் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட இந்த சோதனையின் போது, 03 மனித எதிர்ப்பு கண்ணிவெடிகள், அவற்றின் 03 பியூஸ் பாகங்கள், M16 ரக துப்பாக்கிகளுக்கு பயன்படுத்தப்படும் 20 தோட்டாக்கள், 05 வாள்கள், மின்னணு தராசு ஒன்று மற்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளன.</p>]]></content>
            <updated>2026-07-14T04:32:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரச ஊழியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/agrahara-insurance-database-of-govt-employees-1783998965"></link>
            <id>https://ibctamil.com/article/agrahara-insurance-database-of-govt-employees-1783998965</id>
            <summary type="text">அரச ஊழியர்களின் அக்ரஹார (Agrahara) காப்புறுதி தரவுத்தளத்தை புதுப்பிப்பது குறித்து தேசிய காப்புறுதி நம்பிக்கை நிதியத்தின் தலைவர் விஷாகா வனசிங்க முக்கிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரச ஊழியர்களின் அக்ரஹார (Agrahara) காப்புறுதி தரவுத்தளத்தை புதுப்பிப்பது குறித்து தேசிய காப்புறுதி நம்பிக்கை நிதியத்தின் தலைவர் விஷாகா வனசிங்க முக்கிய அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார்.</p><p>அதன்படி, அக்ரஹார காப்புறுதி தரவுத்தளத்தை புதுப்பிப்பதற்காக வழங்கப்பட்ட கால அவகாசம் ஜூலை 31 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ள நிலையில்&nbsp;அனைத்து அரச ஊழியர்களும் தங்களது விபரங்களை விரைவாக புதுப்பிக்குமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.</p><p>ஓய்வூதியத்திற்கு தகுதிபெற்ற அரச மற்றும் மாகாண அரச சேவையைச் சேர்ந்த சுமார் 9 இலட்சம் பேர் இக்காப்புறுதியின் நேரடிப் பயனாளிகளாக உள்ளதுடன் இவர்களின் குடும்ப உறுப்பினர்களையும் சேர்த்து சுமார் 30 இலட்சம் பேர் இதன் கீழ் பயன் பெறுகின்றனர் என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>6 இலட்சம் அரச ஊழியர்கள்</h2><p>இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், அக்ரஹார தரவுத்தளத்தை புதுப்பிக்கும் பணிகள் 2026 ஏப்ரல் மாதத்தில் ஆரம்பிக்கப்பட்டதுடன், இதுவரையில் சுமார் 6 இலட்சம் அரச ஊழியர்கள் தங்களது விபரங்களை புதுப்பிப்பு செய்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3b5e9b62-2650-460e-8429-2d9738eca6b6/26-6a55b1bc0ce39.webp' /></p><p> </p><p>

சுமார் 1,900 அரச நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் அக்ரஹார காப்புறுதியில் உறுப்பினர்களாக உள்ள நிலையில் அந்த நிறுவனங்களின் அக்ரஹார ஒருங்கிணைப்பு அதிகாரிகளைப் பெயரிட்டு அனுப்புமாறு எழுத்துப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.</p><p> இதுவரை அவ்வாறு அதிகாரிகளைப் பெயரிடாத நிறுவனங்கள் இதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.&nbsp;</p><p></p><h2>காப்புறுதிப் பயன்கள்</h2><p> அரச ஊழியர்கள் இந்த தரவுத்தளத்தில் உள்ளிடும் விபரங்களின் துல்லியத்தன்மையை அந்தந்த நிறுவனத்தின் அக்ரஹார விவகாரங்களுக்குப் பொறுப்பான அதிகாரியும் நிறுவனத் தலைவரும் உறுதிப்படுத்த வேண்டும். இதன் மூலமே இந்த தரவுத்தள திட்டத்தை வெற்றிகரமாக முன்னோக்கிக் கொண்டு செல்ல முடியும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/673b1359-f5d5-4f25-b727-0d6f6c9a4948/26-6a55b214244bd.webp' /></p><p> 

ஒவ்வொரு அரச நிறுவனமும் இதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும், எதிர்காலத்தில் இந்த தரவுத்தளத்தின் ஊடாக மட்டுமே காப்புறுதிப் பயன்களை வழங்க எதிர்பார்க்கின்றோம்” என அவர் மேலும் தெரிவித்தார்.</p><p></p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-14T04:12:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[மகப்பேறு அறுவை சிகிச்சை செய்த 100க்கும் அதிகமான மருத்துவர்கள் பணியிடை நீக்கம்: துருக்கி அரசு அதிரடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/turkey-suspended-100-doctors-for-caesarean-treatm-1784002344"></link>
            <id>https://news.lankasri.com/article/turkey-suspended-100-doctors-for-caesarean-treatm-1784002344</id>
            <summary type="text">துருக்கியில் மகப்பேறு அறுவை சிகிச்சை செய்த 100க்கும் மேற்பட்ட மருத்துவர்களை பணியிடை நீக்கம் செய்து அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. மருத்துவர்கள் பணிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>துருக்கியில் மகப்பேறு அறுவை சிகிச்சை செய்த 100க்கும் மேற்பட்ட மருத்துவர்களை பணியிடை நீக்கம் செய்து அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.</p><h2> மருத்துவர்கள் பணியிடை நீக்கம்</h2><p>துருக்கியில் பிரசவத்தின் போது அறுவை சிகிச்சைக்கான முறையான காரணங்கள் ஏதுவும் இல்லாமல் அதிகமான மகப்பேறு அறுவை சிகிச்சையை மேற்கொண்ட 100க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் தண்டிக்கப்பட்டுள்ளனர்.</p><p>இதன்படி, சம்பந்தப்பட்ட மருத்துவர்களுக்கு அபராதம், கட்டாய மறு பயிற்சி மற்றும் பணியிடை நீக்கம் செய்யப்படுவதாக உத்தரவிடப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2fbbaf5c-b257-4774-9b4a-7b01f7b23e40/26-6a55b729e1654.webp' /></p><p> கடந்த 2025ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தனியார் மருத்துவமனைகளில் எந்தவொரு முறையான காரணங்கள் இன்றி மகப்பேறு அறுவை சிகிச்சை செய்வதற்கு தடை விதித்து புதிய விதிகள் அறிமுகப்படுத்தப்பட்டு ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.</p><p> இந்நிலையில் தான் துருக்கிய அரசின் இந்த சமீபத்திய உத்தரவானது வெளியாகியுள்ளது.</p><p> துருக்கி அரசின் இந்த அதிரடி முடிவுக்கு காரணம், 2023ம் ஆண்டு வெளியான தரவுகளின் படி, துருக்கி தான் மகப்பேறு அறுவை சிகிச்சையின் விகிதங்களில் அதிகமாக இருந்தது.</p><p></p><p> ஒவ்வொரு 1000 பிரசவங்களில் 615 அறுவை சிகிச்சை மூலம் செய்யப்படுகிறது என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து நாட்டில் அறுவை சிகிச்சை எண்ணிக்கையை குறைக்கும் விதமாக அரசு தீவிர முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/98ce6c2e-4275-48f1-b75c-9adecc8cddea/26-6a55b72a9837d.webp' /></p><h2>மருத்துவர்கள் சங்கம் எதிர்ப்பு</h2><p>இந்நிலையில் துருக்கிய அரசின் மறு பயிற்சி உத்தரவுக்கு அந்நாட்டு மருத்துவ சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.</p><p> மேலும், சுகப் பிரசவத்திற்கு 12 மணி நேரம் வரை ஆகும் நிலையில், அறுவை சிகிச்சைக்கு 30 நிமிடங்கள் மட்டுமே தேவைப்படுகிறது.</p><p> அத்துடன் பிரசவ கால சிக்கல்கள் மற்றும் சட்ட பிரச்சினைகளில் இருந்து தவிர்க்கவே மருத்துவர்கள் அறுவை சிகிச்சை முறைகளை தேர்ந்தெடுப்பதாக தெரிவித்துள்ளனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p>&nbsp;<br></p>]]></content>
            <updated>2026-07-14T04:12:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Fathima</name>
            </author>
            <title type="text"><![CDATA[வியட்நாம் படகு விபத்து: தமிழகம் வந்தடைந்த உடல்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/vietnam-boat-crash-tamilnadu-updates-1784001971"></link>
            <id>https://ibctamilnadu.com/article/vietnam-boat-crash-tamilnadu-updates-1784001971</id>
            <summary type="text">வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த 10 தமிழர்களின் உடல்கள் தமிழகம் வந்தடைந்தன.

வியட்நாம் படகு விபத்து

தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா உட்பட தென் மாநிலங...</summary>
            <content type="html"><![CDATA[<p>வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த 10 தமிழர்களின் உடல்கள் தமிழகம் வந்தடைந்தன.
</p><h2>
வியட்நாம் படகு விபத்து
</h2><p>
தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா உட்பட தென் மாநிலங்களில் இருந்து வியட்நாமுக்கு சுற்றுலா சென்றனர்.</p><p>

கடந்த 11ம் தேதி படகு சவாரியில் ஈடுபட்டிருந்த போது, எதிர்பாராதவிதமாக படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 15 பேர் பலியாகினர், இவர்களில் 10 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள்.</p><p>

இவர்களில் பெரும்பாலானோர் செல்போன் நிறுவனத்தின் சார்பில் அவர்களது பணியை பாராட்டி சுற்றுலாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fde60191-7336-4f1b-9d0b-0ba884f277da/26-6a55b67934360.webp' /><br></p><p>
</p><h2>
தமிழகம் வந்தடைந்த உடல்கள்</h2><p>

உயிரிழந்தவர்களின் உடல்களை இந்தியா கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளை இந்திய தூதரகம் முன்னெடுத்தது.</p><p>

இந்நிலையில் 15 பேரின் உடல்களும் வியட்நாம் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் நேற்றிரவு மும்பை வந்தடைந்தது.
</p><p>
அங்கிருந்து 4 பேரின் உடல்கள் சென்னைக்கும், 6 பேரின் உடல்கள் கோவைக்கும் சென்றடைந்தது, ஆம்புலன்ஸ் மூலம் அவரவர்களின் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.&nbsp;&nbsp;<br></p>]]></content>
            <updated>2026-07-14T04:09:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பு கிங்ஸ்பரி ஹோட்டல் வளாகத்தால் அரசுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு - பின்னணியில் நடக்கும் மர்மம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/getting-lease-for-kingsbury-land-for-a-small-cost-1783999620"></link>
            <id>https://tamilwin.com/article/getting-lease-for-kingsbury-land-for-a-small-cost-1783999620</id>
            <summary type="text">
கொழும்பு கிங்ஸ்பரி ஹோட்டல் வளாகத்திற்காக, அரசாங்கத்திற்கு வருடாந்த குத்தகை பணமாக வெறும் 2.5 மில்லியன் ரூபா மட்டுமே இதுவரை செலுத்தப்பட்டு வருவதாக தெர...</summary>
            <content type="html"><![CDATA[<p>
கொழும்பு கிங்ஸ்பரி ஹோட்டல் வளாகத்திற்காக, அரசாங்கத்திற்கு வருடாந்த குத்தகை பணமாக வெறும் 2.5 மில்லியன் ரூபா மட்டுமே இதுவரை செலுத்தப்பட்டு வருவதாக தெரியவந்துள்ளது.
</p><p>
வர்த்தகர் தம்மிக பெரேராவிற்கு சொந்தமான கொழும்பு 01 இல் அமைந்துள்ள இந்த வளாகம் 5.5 ஏக்கர் நிலப்பரப்பைக் கொண்டதாகும்.
</p><p>
அதற்கமைய, ஒரு ஏக்கருக்காக மாதத்திற்கு வெறும் 38,000 ரூபாய் என்ற மிகக் குறைந்த தொகையே அறவிடப்படுகிறது.</p><p></p><p>
</p><h2><b>
கிங்ஸ்பரி ஹோட்டல் நிர்வாகம் </b></h2><p>முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ மேற்கொண்ட உடன்படிக்கைக்கு அமைய, 2026 ஆம் ஆண்டிலிருந்து இந்த குத்தகைப்பணத்தை 5 மில்லியன் ரூபாவாக அதிகரிக்க கிங்ஸ்பரி ஹோட்டல் நிர்வாகம் இணங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
</p><p>எனினும், அரசாங்க மதிப்பீட்டு திணைக்களத்தின் தரவுகளுக்கமைய, இந்த வளாகத்தின் உண்மையான வருடாந்த வாடகைக் பெறுமதி 325 மில்லியன் ரூபாயாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/738de6f2-d7d2-4103-825b-6d90a0ce57f5/26-6a55af251d00b.webp' />&nbsp;&nbsp;</p><p>
32 கோடி ரூபாவிற்கும் அதிகமான பணத்தை அரசாங்கத்திற்கு நஷ்டப்படுத்தி, இந்த குத்தகையை மீண்டும் 5 மில்லியன் ரூபாவாகவே வைத்திருப்பதற்கு ஜனாதிபதி செயலகத்தில் இரகசிய பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
</p><p>
கிங்ஸ்பரி ஹோட்டலில் உள்ள ரகசிய நுழைவாயில்களைக் கொண்ட அதிவேக அறையொன்றில், அமைச்சர்களுக்கும் அரச அதிகாரிகளுக்கும் இலஞ்சமாக சலுகைகளை வழங்கப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
</p><p>
மேலும், அரசாங்கத்திற்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தும் இந்த கொடுக்கல் வாங்கல் தற்போது வரை தொடர்ந்து கொண்டிருப்பதாகவும் அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-14T04:06:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் டெங்கு தொற்றுக்குள்ளான 70 ஆயிரம் பேர்! நாளுக்கு நாள் அதிகரிக்கும் எண்ணிக்கை..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/dengue-spread-warning-issued-1783999300"></link>
            <id>https://tamilwin.com/article/dengue-spread-warning-issued-1783999300</id>
            <summary type="text">நாட்டில் டெங்கு தொற்றாளர்களின் எண்ணிக்கை 70ஆயிரத்தை நெருங்கியுள்ளதாக தேசிய&amp;nbsp; டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.&amp;nbsp; நேற்று நள்ளிரவு ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டில் டெங்கு தொற்றாளர்களின் எண்ணிக்கை 70ஆயிரத்தை நெருங்கியுள்ளதாக தேசிய&nbsp; டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.&nbsp; </p><p>நேற்று நள்ளிரவு நிலவரப்படி, நாட்டில் டெங்கு தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை,&nbsp; 69951ஆக பதிவாகியுள்ளது.&nbsp;&nbsp;</p><p>இவர்களுள் மேல் மாகாணத்தில் அதிகளவான தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர். இதன்படி, மேல் மாகாணத்தில் மொத்தம்&nbsp; &nbsp;36,795 டெங்கு தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.</p><p></p><h2>மேல் மாகாணத்தில் அதிகளவான தொற்றாளர்கள்&nbsp;</h2><p>அத்துடன், தென் மாகாணத்தில், 10,955&nbsp; தொற்றாளர்களும், சபரகமுவ மாகாணத்தில் 5,878 தொற்றாளர்களும் பதிவாகியுள்ளனர்.&nbsp;</p><p>இதேவேளை, இதுவரையான நாட்களில் கம்பஹா மற்றும் கொழும்பு உள்ளிட்ட மாவட்டங்களில் மிக அதிகமாக டெங்கு தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6e1ec0a3-f998-49c2-9459-3179b0900728/26-6a55b4bd13124.webp' /></p><p>இதன்படி, கம்பஹா மாவட்டத்தில் 14,464 டெங்கு தொற்றாளர்களும், கொழும்பு மாவட்டத்தில், 14,004 டெங்கு தொற்றாளர்களும் பதிவாகியுள்ளனர்.</p><p>இதேவேளை வருடத்தின் இதுவரையான நாட்களில் கடந்த ஜூன் மாதம் மிக அதிகளவான டெங்கு தொற்றாளர்கள் நாட்டில் பதிவாகியுள்ளனர்.</p><p>21,538 டெங்கு தொற்றாளர்கள் ஜூன் மாதத்தில் பதிவாகியுள்ளதுடன்,&nbsp; ஜூலை மாதத்தின் இதுவரையான நாட்களில், 14,572 டெங்கு தொற்றாளர்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-14T04:02:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[தொலைக்காட்சியில் முதல் முறையாக ஒளிபரப்பாகும் பிரதீப் ரங்கநாதனின் திரைப்படம்.. புரோமோ வீடியோ இதோ]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/pradeep-ranganathan-lik-movie-zee-tamil-telecast-1784000750"></link>
            <id>https://cineulagam.com/article/pradeep-ranganathan-lik-movie-zee-tamil-telecast-1784000750</id>
            <summary type="text">பிரதீப் ரங்கநாதன்தமிழ் சினிமாவில் இளம் ஹீரோக்களில் வசூல் மன்னனாக வலம் வருபவர் பிரதீப் ரங்கநாதன். இவர் நடிப்பில் வெளிவந்த லவ் டுடே, டிராகன், டியூட் ஆகி...</summary>
            <content type="html"><![CDATA[<h2>பிரதீப் ரங்கநாதன்</h2><p>தமிழ் சினிமாவில் இளம் ஹீரோக்களில் வசூல் மன்னனாக வலம் வருபவர் பிரதீப் ரங்கநாதன். இவர் நடிப்பில் வெளிவந்த லவ் டுடே, டிராகன், டியூட் ஆகிய மூன்று திரைப்படங்களும் ரூ. 100 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளன.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/32545d7d-c611-4640-9138-e234c47d00fa/26-6a55b0f213ce0.webp' /></p><p>இதை தொடர்ந்து வெளிவந்த LiK (Love Insurance <a href="https://www.youtube.com/watch?v=bQ-qlHVaWLA&amp;t=1s" target="_blank">Kompany</a>) திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை முழுமையாக பூர்த்தி செய்யாத காரணத்தினால், ரூ. 100 கோடி என்கிற இலக்கை எட்டவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4dacb9c7-ae87-4778-99e8-c06aeecc9c17/26-6a55b0f159905.webp' /></p><p> 

இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவான இப்படத்தில் பிரதீப் ரங்கநாதனுடன் இணைந்து எஸ்.ஜே. சூர்யா, க்ரீத்தி ஷெட்டி, யோகி பாபு, சீமான், மாளவிகா என பலரும் நடித்திருந்தனர்.</p><p></p><h2>தொலைக்காட்சியில் LiK</h2><p> 

இந்த நிலையில், LiK திரைப்படம் வருகிற ஜூலை 19-ஆம் தேதி, பிற்பகல் 3.30 மணிக்கு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் முதல் முறையாக ஒளிபரப்பாகிறது. இதனை ஜீ தமிழ் அதிகாரப்பூர்வமாக புரோமோ வீடியோவுடன் அறிவித்துள்ளது.
</p><p>
இதோ பாருங்க:</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/lJUkYj7jYD8" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-07-14T04:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ் - கொழும்பு தொடருந்து பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/jaffna-kks-to-colombo-fort-train-time-table-today-1783999452"></link>
            <id>https://ibctamil.com/article/jaffna-kks-to-colombo-fort-train-time-table-today-1783999452</id>
            <summary type="text">கொழும்பில் இருந்து காங்கேசன்துறை நோக்கி பயணிக்கும் நகராந்தர கடுகதி தொடருந்து சேவை இன்று முதல் (14) முதல் வழமை போல் இயங்கும் என தொடருந்து திணைக்களம் அற...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பில் இருந்து காங்கேசன்துறை நோக்கி பயணிக்கும் நகராந்தர கடுகதி தொடருந்து சேவை இன்று முதல் (14) முதல் வழமை போல் இயங்கும் என தொடருந்து திணைக்களம் அறிவித்துள்ளது.</p><p>குறித்த தொடருந்து சேவையை வாரத்திற்கு நான்கு நாட்களுக்கு மாத்திரம் வரையறுப்பதற்கு தொடருந்து நிர்வாகம் இதற்கு முன்னர் எடுத்திருந்த தீர்மானத்தை மாற்றி, நாளை (14) முதல் அதனை வழமை போல் இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p> 

தொடருந்து இயந்திரத் தொகுதிகளில் தட்டுப்பாடு நிலவுவதாக கூறி, இதற்கு முன்னர் செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் இந்த தொடருந்து சேவையை நிறுத்துவதற்கு தொடருந்து நிர்வாகம் தீர்மானித்திருந்தது.</p><p></p><h2>நகராந்தர கடுகதி தொடருந்து&nbsp;</h2><p> 

எவ்வாறாயினும், இந்த கட்டுப்பாடுகள் காரணமாக வடக்கு தொடருந்து பாதையைப் பயன்படுத்தும் பயணிகள் பெரும் அசௌகரியங்களுக்கும் பாதிப்புகளுக்கும் உள்ளாவதாக தொடருந்து தொழிற்சங்கங்கள் நிர்வாகத்திற்கு சுட்டிக்காட்டியிருந்தன.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5fcbeb92-6551-42d5-8e05-98f3d2d681e7/26-6a55b480ea80a.webp' /></p><p>விடயங்களை கருத்திற்கொண்டு, இதற்கு முன்னர் ரத்து செய்யப்பட்டிருந்த செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளிலும் இந்த நகராந்தர கடுகதி தொடருந்து நாளை முதல் நடைமுறைக்கு வரும் வகையில் மீண்டும் சேவையில் ஈடுபடுத்துவதற்கு தொடருந்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். </p><p>

இதற்கமைய, பயணிகள் வழமை போன்று வார நாட்களில் எவ்வித தடையுமின்றி இந்த சேவையைப் பெற்றுக்கொள்ள முடியும்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-14T03:57:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலக அரங்கில் இலங்கைக்குக் கிடைத்த மற்றுமொரு பெருமை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/world-s-top-50-food-destinations-1784001252"></link>
            <id>https://tamilwin.com/article/world-s-top-50-food-destinations-1784001252</id>
            <summary type="text">உலகளாவிய உணவுச் சுற்றுலாத் துறையில் (Culinary Tourism) இலங்கை மற்றுமொரு மைல்கல்லை எட்டியுள்ளது. 
பிரபல சர்வதேச சுற்றுலா இதழான “டிராவல் அண்ட் டூர் வேர...</summary>
            <content type="html"><![CDATA[<p>உலகளாவிய உணவுச் சுற்றுலாத் துறையில் (Culinary Tourism) இலங்கை மற்றுமொரு மைல்கல்லை எட்டியுள்ளது. 
பிரபல சர்வதேச சுற்றுலா இதழான “டிராவல் அண்ட் டூர் வேர்ல்ட்” (Travel And Tour World - TTW) வெளியிட்டுள்ள 2026 ஆம் ஆண்டிற்கான "உலகின் தலைசிறந்த 50 உணவு நாடுகள்" பட்டியலில் இலங்கை பெருமையுடன் இடம்பிடித்துள்ளது.
</p><p>சர்வதேச அளவில் உலக நாடுகளின் சமையல் பாரம்பரியம், பிராந்திய உணவு வகைப்பாடு, வீதி உணவு கலாசாரம் , நளினமான உணவகங்கள், உள்நாட்டுப் பொருட்கள், நிலைத்தன்மை, பாரம்பரிய பானங்கள் மற்றும் கலாசார நம்பகத்தன்மை ஆகிய முக்கிய காரணிகளை அடிப்படையாகக் கொண்டு இந்தத் தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>உலகின் தலைசிறந்த 50 உணவு நாடுகள்</h2><p>
</p><p>இலங்கை உணவுகளின் தனித்துவமான சுவை, நறுமணமிக்க வாசனைப் பொருட்கள், புத்தம் புதிய கடல் உணவுகள் மற்றும் வெப்பமண்டல உணவுப் பொருட்கள் உலகளாவிய உணவுப் பிரியர்களைப் பெரிதும் கவர்ந்துள்ளதாக இந்த இதழ் சுட்டிக்காட்டியுள்ளது.</p><p>
</p><p>இலங்கை என்பது நறுமணமிக்க வாசனைப் பொருட்கள்மற்றும் பல நூற்றாண்டு கால கலாசார தாக்கங்கள் இணைந்து மறக்க முடியாத உணவு அனுபவங்களை வழங்கும் ஒரு துடிப்பான தேசமாகும். பரபரப்பான வீதி உணவுக் கடைகள் முதல் கடற்கரையோர நேர்த்தியான உணவகங்கள் வரை இங்கு பலதரப்பட்ட சுவைகளை அனுபவிக்க முடியும்" என புகழாரம் சூட்டப்பட்டுள்ளது.
</p><p>பாரம்பரிய சோறும் கறியும், ஆப்பம், கொத்து ரொட்டி, கடல் உணவு வகைகள் மற்றும் உள்நாட்டு இனிப்புப் பண்டங்கள் போன்றவை சர்வதேச அரங்கில் இலங்கையின் அடையாளத்தை மேலும் உயர்த்தியுள்ளன.
இலங்கையின் சமையல் கலையை முழுமையாக அனுபவிக்க விரும்பும் சுற்றுலாப் பயணிகள் கட்டாயம் செல்ல வேண்டிய 10 முக்கிய இடங்களையும் இந்த இதழ் பட்டியலிட்டுள்ளது:</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/308e7c62-cea4-4671-b517-b3dc3a996a63/26-6a55b2e635da8.webp' /></p><p>
1.	கொழும்பு: சோறும் கறியும், கொத்து ரொட்டி, ஆப்பம் மற்றும் புதிய கடல் உணவுகள்.
</p><p>2.	காலி: பிரசித்தி பெற்ற கடல் உணவுகள், இலங்கை கறிகள் மற்றும் காலணித்துவ காலத்து உணவகங்கள்.</p><p>
3.	கண்டி: பாரம்பரிய சோறும் கறியும் மற்றும் உள்நாட்டு பாரம்பரிய இனிப்பு வகைகள்.
</p><p>4.	நீர்கொழும்பு: கடல் உணவு கறிகள், சுடச்சுட வறுத்த மீன்கள் மற்றும் காயல் (Lagoon) உணவுச் சிறப்புகள்.
</p><p>5.	எல்ல: இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட பொருட்கள் மற்றும் மலையக உணவு அனுபவங்கள்.</p><p>
6.	யாழ்ப்பாணம்: உலகப் புகழ்பெற்ற நண்டுக்கறி, தோசை மற்றும் காரசாரமான தமிழ் பாரம்பரிய சுவைகள்.</p><p>
7.	மிரிஸ்ஸ: புத்தம் புதிய கடல் உணவுகள் மற்றும் கடற்கரையோர தளர்வான உணவு அனுபவம்.
</p><p>8.	நுவரெலியா: தேயிலை சார்ந்த உணவு வகைகள், பேஸ்ட்ரிகள் மற்றும் காலணித்துவ கால பாரம்பரிய உணவுகள்.</p><p>
9.	ஹிக்கடுவ: கடல் உணவுகள், இலங்கை கறிகள் மற்றும் துடிப்பான கடற்கரை உணவகங்கள்.
</p><p>10.	திருகோணமலை: புதிய கடல் உணவுகள் மற்றும் உண்மையான கடலோர உணவு கலாசாரம்.
</p><p>இந்த சர்வதேசப் பட்டியலில்&nbsp;இந்த வரிசையில் முதல் இடத்தை மெக்ஸிக்கோவும், இரண்டாம் இடத்தை இத்தாலியும் மூன்றாம் இடத்தை ஸ்பெய்னும் வகிக்கின்றன. </p><p>ஆசியா, ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்கா போன்ற உலகளாவிய பிராந்தியங்களின் முன்னணி உணவு நாடுகளுடன் இணைந்து இலங்கை இப்பட்டியலில் 50 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.</p><p>சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பில்லாத நிலையான உணவுப் பழக்கவழக்கங்கள் மற்றும் பாரம்பரிய சமையல் முறைகளைப் பாதுகாப்பதில் இலங்கை காட்டி வரும் அக்கறைக்குக் கிடைத்த சர்வதேச அங்கீகாரமாக இது பார்க்கப்படுகிறது.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-14T03:54:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[செக் வைத்த ஹவுதி - எழும்பும் புகை: சவுதி விமான நிலையம் மீது பயங்கரத் தாக்குதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/yemen-houthis-strikes-abha-airport-in-saudi-1783996468"></link>
            <id>https://ibctamil.com/article/yemen-houthis-strikes-abha-airport-in-saudi-1783996468</id>
            <summary type="text">சவுதி அரேபியாவின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள அபா (Abha) சர்வதேச விமான நிலையத்தை இலக்கு வைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி உள்ளனர்.ஹவுதி ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சவுதி அரேபியாவின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள அபா (Abha) சர்வதேச விமான நிலையத்தை இலக்கு வைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி உள்ளனர்.</p><p>ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடத்தியுள்ள பெலிஸ்டிக் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களால் மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளது.</p><p>முன்னதாக ஏமனில் ஹவுதி கட்டுப்பாட்டில் உள்ள சனா நகரில் அமைந்துள்ள சனா விமான நிலையம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.</p><p></p><h2> பதிலடி தாக்குதல்கள்</h2><p>ஏமனில் உள்ள சனா சர்வதேச விமான நிலையத்தைத் தாக்கிய சவூதி அரேபியாவின் வான்வழித் தாக்குதல்களுக்குப் பதிலடியாக, திங்களன்று இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக ஈரானிய ஆதரவு பெற்ற ஆயுதக் குழுவான ஹவுதி கிளர்ச்சியாளர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7b9a52eb-d120-42f9-8c8d-c1e17c7582fa/26-6a55a4fd658c8.webp' /></p><p>சனா சர்வதேச விமான நிலையத்தின் மீதான தாக்குதல்கள், ஒரு ஈரானிய விமானம் தரையிறங்குவதைத் தடுக்கும் நோக்கத்துடன் நடத்தப்பட்டதாக ஏமனில் உள்ள சர்வதேச அங்கீகாரம் பெற்ற அரசாங்கம் முன்னதாகத் தெரிவித்திருந்தது.</p><p>ஏமனில் நடந்த வான்வழித் தாக்குதல்கள் குறித்து கருத்து தெரிவிக்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு சவூதி அரேபிய அதிகாரிகள் உடனடியாக பதிலளிக்கவில்லை என சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது&nbsp;&nbsp;</p><p>அபா பகுதி சவுதி அரேபியாவின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகவும், யேமன் எல்லைக்கு அருகில் உள்ள மலைப்பாங்கான தெற்கு பிராந்தியத்தின் தலைநகராகவும் விளங்கும் நிலையில், இத்தாக்குதல் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-14T03:51:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Fathima</name>
            </author>
            <title type="text"><![CDATA[வரலாற்றிலேயே உச்சத்தை எட்டிய முட்டையின் விலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/egg-price-increased-in-namakkal-1784000610"></link>
            <id>https://ibctamilnadu.com/article/egg-price-increased-in-namakkal-1784000610</id>
            <summary type="text">நாமக்கலில் கோழிப்பண்ணை வரலாற்றிலேயே முட்டை கொள்முதல் விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

முட்டையின் கொள்முதல் விலை அதிகரிக்கப்பட்டு இன்று 6.70 ரூபாயாக...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாமக்கலில் கோழிப்பண்ணை வரலாற்றிலேயே முட்டை கொள்முதல் விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
</p><p>
முட்டையின் கொள்முதல் விலை அதிகரிக்கப்பட்டு இன்று 6.70 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.</p><h2>

விலை அதிகரிப்பு ஏன்?
</h2><p>
தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்த முட்டையின் விலை வரலாற்றில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது.</p><p>

இதற்கு காரணமாக கோழிகளுக்கான தீவனமான சோளம், சோயா புண்ணாக்கு மற்றும் கருவாடு போன்றவற்றின் விலை அதிகரிப்பே என கூறப்படுகிறது.
</p><p>
இதனால் முட்டையின் உற்பத்தி செலவு அதிகரிப்பதால் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bf3aa383-e3eb-464c-a82c-fe41169277bd/26-6a55b1281a1c0.webp' /><br></p><h2>

உற்பத்தி சரிவு
</h2><p>
அத்துடன் கடுமையான வெயில் மற்றும் தீவன விலை அதிகரிப்பால் முட்டை உற்பத்தி திறனும் குறைந்துள்ளது.
</p><p>
இதற்கிடையே அரசின் சத்துணவுத்திட்டம், அண்டை மாநிலங்களில் முட்டைக்கான நுகர்வு அதிகரித்துள்ளது.
</p><p>
இதன்காரணமாகவே கொள்முதல் விலை அதிகரிக்கிறது, இதனால் பெருநகரங்களில் முட்டையின் விலை ரூ7.50 முதல் ரூ.8.50 வரை விற்பனை செய்யப்பட வாய்ப்புள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/828eef76-a065-435d-8275-13ea066d11aa/26-6a55b128bf0be.webp' /><br></p>]]></content>
            <updated>2026-07-14T03:47:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹவுதிகளின் பழிக்குப் பழி தாக்குதல்: சவுதி சர்வதேச விமான நிலையம் மீது ஏவுகணை தாக்குதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/houthis-attacked-saudi-international-airport-1784000490"></link>
            <id>https://news.lankasri.com/article/houthis-attacked-saudi-international-airport-1784000490</id>
            <summary type="text">சவுதி அரேபியாவின் சர்வதேச விமான நிலையம் மீது ஹவுதிகள் தாக்குதல் நடத்தி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏமன் விமான நிலையம் மீது தாக்குதல்
சமீபத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>சவுதி அரேபியாவின் சர்வதேச விமான நிலையம் மீது ஹவுதிகள் தாக்குதல் நடத்தி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><h2> ஏமன் விமான நிலையம் மீது தாக்குதல்</h2><p>
சமீபத்தில் ஏமனில் ஹவுதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள சனா நகரில் அமைந்துள்ள சனா விமான நிலையம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.</p><p> ஈரானிய விமானம் ஒன்று சனா விமான நிலையத்தில் தரையிறங்க முயற்சித்ததை அடுத்து தாக்குதல் நடத்தியதாக ஏமன் அரசு அறிவித்து இருந்தது. இதையடுத்து அந்த விமானம் ஹுதைதா விமான நிலையத்தில் தரையிறங்கியது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3d3fc8cf-fcb5-4153-b3ee-72dd1466baf5/26-6a55afebd2bb7.webp' /></p><p>ஆனால் இந்த தாக்குதலை சவுதி அரேபியா நடத்தியதாக ஹவுதி அமைப்பு குற்றச்சாட்டை முன்வைத்தது.</p><p></p><h2> ஹவுதிகளின் பழிக்குப் பழி தாக்குதல்</h2><p>இந்நிலையில், சனா விமான நிலையம் மீது தாக்குதல் நடத்தியதற்கு பழிக்குப் பழி வாங்கும் விதமாக சவுதியின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள அப்ஹா சர்வதேச விமான நிலையத்தின் மீது ஹவுதி படையினர் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலை முன்னெடுத்துள்ளனர்.</p><p> கடந்த 2022ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை முன்னெடுத்த போர்நிறுத்த உடன்படிக்கையின் பிறகு, சவுதி அரேபியா மீது ஹவுதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b522ae6c-02c6-498b-b7fa-6f27d90640aa/26-6a55afec82b64.webp' /></p><p> இந்த தாக்குதலை ஹவுதிகளின் செய்தி தொடர்பாளர் பிரிகேடியர் ஜெனரல் யஹ்யா சாரி உறுதிப்படுத்தியுள்ளார்.</p><p>டெலிகிராமில் இது தொடர்பாக அவர் வெளியிட்ட வீடியோவில், சனா விமான நிலையம் மீதான முற்றுகை நீங்கும் வரை, சவுதி அரேபியாவின் வான்வெளியை சர்வதேச சிவில் விமானங்கள் பயன்படுத்த வேண்டாம் என்று எச்சரித்துள்ளார்.</p><p> இதனிடையே ஹவுதிகள் நடத்திய தாக்குதலில், அப்ஹா சர்வதேச விமான நிலையத்தில் எந்தவொரு பாதிப்பும் ஏற்படவில்லை என முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது. &nbsp;&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-14T03:41:42+00:00</updated>
        </entry>
    </feed>
