<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-07-14T01:56:01+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கோட்டாபய ராஜபக்ச -சலேவை பாதுகாத்த நீதவான்! இரகசிய செயற்பாடுகளும் அம்பலம்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/easter-attack-suresh-sally-gotabaya-1783991108"></link>
            <id>https://tamilwin.com/article/easter-attack-suresh-sally-gotabaya-1783991108</id>
            <summary type="text">உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் விசாரணைகளில் CID பல விசேடமான தகவல்களை அம்பலப்படுத்தியுள்ளது.ஆனால் சில முக்கிய தகவல்கள் கோட்டை நீதவான் நீதிமன்ற நீதி...</summary>
            <content type="html"><![CDATA[<p>உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் விசாரணைகளில் CID பல விசேடமான தகவல்களை அம்பலப்படுத்தியுள்ளது.ஆனால் சில முக்கிய தகவல்கள் கோட்டை நீதவான் நீதிமன்ற நீதிபதியால் சுரேஷ் சலே தரப்புக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.</p><p>அத்தோடு, இராணுவ புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த மற்றும் அதனுடன் தொடர்புடைய மேலும் ஏழு பேர் மிகவும் இரகசியமான வாக்குமூலங்களை CID யிடம் வழங்கியுள்ளனர். </p><p>உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் சம்பவத்திற்கு சுரேஷ் சலே நேரடியாகவே தொடர்புடையவர் என்று அவர்கள் தெளிவாகக் கூறியுள்ளனர்.
</p><h2>
</h2><p></p><h2>ஏழு பேரின் இரகசிய வாக்குமூலம்</h2><p>அதாவது சுரேஷ் சலேயைச் சுற்றி இருந்த அவரது தீவிர ஆதரவாளர்களான ஏழு பேர் தான் இந்தச் சாட்சியங்களை வழங்கியுள்ளனர். </p><p>அதற்கு மேலதிகமாக, இந்த ஏழு சாட்சிகளும் கொழும்பு கோட்டை நீதவானிடம் தனிப்பட்ட முறையில், இரகசியமாக வாக்குமூலங்களை வழங்கியுள்ளனர்.
</p><p>உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் வழக்கு ஆரம்பக் கட்டத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, அப்போது கோட்டை நீதவானாகச் செயல்பட்டவர் தான் இசுரு நெத்திகுமார. </p><p>அப்போது அவர் முன்னிலையில்தான்,ஏழு பேரும் மிகவும் இரகசியமான வாக்கு மூலங்களை வழங்கியுள்ளனர். பொதுவாக, ஒரு நீதவான் முன்னிலையில் இவ்வாறானதொரு வாக்குமூலம் மிகவும் இரகசியமாகவே வழங்கப்படும். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bf1ddd3d-952b-4397-aefa-1c42cf508070/26-6a558b477a0d0.webp' /></p><p>அவ்வாறான வாக்குமூலங்கள் பகிரங்க நீதிமன்றத்தில் பெறப்படுவதில்லை. நீதவானின் உத்தியோகபூர்வ அறையினுள் (Chamber) மிகவும் இரகசியமாகவே பெறப்படும். </p><p>அப்பொழுது, அந்த இரகசிய வாக்குமூலத்தை வழங்கும்போது அங்கு நீதவான், நீதிமன்ற சுருக்கெழுத்தாளர் மற்றும் தட்டச்சாளர் ஆகிய மூவர் மட்டும்தான் சம்பந்தப்படுவார்கள். </p><p>அதற்கு மேலதிகமாக, இரகசிய வாக்குமூலத்தை வழங்கும் நபர்கள் மட்டும்தான் சம்பந்தப்படுவார்கள். அந்த ஏழு நபர்களும் கூட தனித்தனியாகத்தான் அழைக்கப்படுவார்கள், ஒன்றாக அல்ல. </p><h2>&nbsp;பார்க்க முடியாக வாக்குமூலம்</h2><p>அவ்வாறு வாக்குமூலங்கள் பெறப்பட்ட பிறகு, அதனை எதிர்த்தரப்போ அல்லது வழக்காளித்தரப்போ எந்தவொரு தரப்பினரும் பார்ப்பதற்கு வாய்ப்பில்லை. </p><p>அதன் பிறகு நீதவான் அந்த வாக்குமூலங்களைப் பெற்ற பின்னர் அதை தனித்தனியாக முத்திரையிட்டு (Seal) அவற்றை நீதவானின் தனிப்பட்ட பாதுகாப்புப் பெட்டகத்தில் (Safe) வைப்பார். </p><p>அதை எந்தவொரு நபரும் பெற்றுக்கொள்ள முடியாது. அதனைப் பெற்றுக்கொள்ளக்கூடிய வாய்ப்பு ஏதேனும் ஒரு சட்டப் பிரச்சினை ஏற்படும்போது, அந்த வழக்குடன் தொடர்புடைய சட்டரீதியான ஒரு தீர்மானமிக்க கட்டத்தில்தான் கிடைக்கும். </p><p>அவ்வாறு இல்லாமல் நீதிமன்றத்தில் இருக்கும் அந்தப் பெட்டகத்தில் முத்திரையிடப்பட்டுள்ள வாக்குமூலங்களை எடுப்பதற்கோ அல்லது பார்ப்பதற்கோ எந்தவொரு நபருக்கும் உரிமை இல்லை. நீதவானுக்குக் கூட உரிமை இல்லை.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b2bd3d16-5d11-437d-aed9-67420bdb0cb3/26-6a558b46c849c.webp' /></p><p>ஒருவேளை கோட்டை நீதவான் நீதிமன்றத்திலிருந்து இந்த வழக்கு வேறு ஒரு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டால், அப்போது கோட்டை நீதவான் நீதிமன்றப் பெட்டகத்தில் உள்ள அந்த இரகசிய வாக்குமூலங்களை வழக்கை விசாரிக்கும் அடுத்த நீதிமன்ற நீதிபதியின் பெட்டகத்திற்கு மாற்ற முடியும். </p><p>அது தவிர வேறு எந்தவொரு தரப்பினருக்கும் இந்த இரகசிய வாக்குமூலங்களைக் கொடுப்பதற்கோ அல்லது எடுப்பதற்கோ முடியாது.
ஆனால் நீதவான் இசுரு நெத்திகுமார குறித்த இரகசிய வாக்குமூலங்கள் அனைத்தையும் சுரேஷ் சலேயின் சட்டத்தரணியான அசித சிறிவர்தனவிற்கு வழங்கியுள்ளார்.
</p><p>இவ்வாறானதொரு சூழ்நிலையில், உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் வழக்குக்குக் கூட தற்போது பாரதூரமான ஒரு பிரச்சினை எழுந்துள்ளது. </p><p>ஏனென்றால், இரகசிய வாக்குமூலங்களை எதிர்த்தரப்பிடம் ஒப்படைத்ததன் மூலம், இப்போது இந்த வழக்கில் இரகசிய வாக்குமூலங்களை வழங்கியது யார்? அந்த வாக்குமூலங்களில் என்ன உள்ளடக்கப்பட்டுள்ளது? அவை அனைத்தும் தற்போது கோட்டாபய ராஜபக்சவின் கைக்கு சென்றுள்ளது. </p><p>
இந்த விபரங்கள் அம்பலமான பின்னர், இசுரு நெத்திகுமார நீதிச் சேவை ஆணைக்குழுவிற்கு (JSC) மாற்றப்பட்டார். இவ்வாறு மாற்றிய உடனே, ராஜபக்ச குழுவும், அதேபோன்று 'ப்ரீ லோயர்ஸ்' (Free Lawyers) என்று சொல்லப்படும் ஜனாதிபதி சட்டத்தரணி மைத்ரி குணரத்ன உள்ளிட்ட இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் மற்றும் எதிர்க்கட்சியினர் ஊடகங்களில் அதற்கு எதிராக பாரிய குரல் எழுப்பினர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-14T01:33:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[பெரும் துயரை ஏற்படுத்திய இளம் ஆசிரியரின் மரணம் ; அதிகாலையில் நடந்தேறிய சம்பவம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/young-teacher-s-death-leaves-community-in-grief-1783987423"></link>
            <id>https://jvpnews.com/article/young-teacher-s-death-leaves-community-in-grief-1783987423</id>
            <summary type="text">இப்பலோகம - கலாவெ வீதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தொன்றில் பாடசாலை ஆசிரியர் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று (13) அதிகாலை கலாவெ பகுதியிலிருந்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>இப்பலோகம - கலாவெ வீதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தொன்றில் பாடசாலை ஆசிரியர் ஒருவர் உயிரிழந்துள்ளார். </p><p>நேற்று (13) அதிகாலை கலாவெ பகுதியிலிருந்து இப்பலோகம நோக்கி இருவர் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போது, வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் வீதியை விட்டு விலகி அருகிலிருந்த மரத்துடன் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/60d2c22d-c10e-44fd-bcbd-c6c099da5585/26-6a557ce184a50.webp' /></p><h2>மேலதிக விசாரணை</h2><p> </p><p>

விபத்தில் மோட்டார் சைக்கிளை செலுத்தியவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றைய நபர் காயமடைந்து தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p><p> 

இவ்வாறு உயிரிழந்தவர் 29 வயதுடைய பாடசாலை ஆசிரியர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p> </p><p>

சம்பவம் தொடர்பாக இப்பலோகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-14T01:28:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ்ப்பாணப் பல்கலைக்கழக போராசியர் தொடர்பான வழக்கு ; நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/jaffna-university-professor-case-update-1783992452"></link>
            <id>https://jvpnews.com/article/jaffna-university-professor-case-update-1783992452</id>
            <summary type="text">யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் ஊடகக் கற்கைகள் துறை பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரகுராம் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் அவதூறுகளை பரப்பியவர்களின் பதிவுகளை...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் ஊடகக் கற்கைகள் துறை பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரகுராம் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் அவதூறுகளை பரப்பியவர்களின் பதிவுகளை அகற்றுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
</p><p style="text-align: justify; ">
அத்துடன், பேராசிரியர் தொடர்பாக எந்த அவதூறு பதிவுகளையும் செய்ய கூடாது எனவும் இடைக்கால கட்டளை வழங்கி பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

மேலும் குறித்த வழக்கின் எதிர்மனுதாரர் ஒருவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்வதற்கும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/99b82c7a-9fa0-4e6b-a3d2-ae85235b79e8/26-6a559085af6b3.webp' /></p><h2 style="text-align: justify; ">&nbsp;வழக்குத் தாக்கல்&nbsp;</h2><p>
</p><p style="text-align: justify; ">
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் ஊடகக் கற்கைகள் துறை பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரகுராம் மீது சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பினர் மற்றும் அதற்கு உடந்தையாக இருந்தனர் என்ற குற்றச்சாட்டில் 14 எதிர் மனுதாரர்களுக்கு நிகழ்நிலை காப்புச் சட்டத்தின் கீழ் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.</p><p style="text-align: justify; ">

குறித்த வழக்கு இன்று பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றத்தில் நீதிவான் இந்துகா சிவலிங்கம் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.
</p><p style="text-align: justify; ">
இதன்போது முதலாம், மூன்றாம், நான்காம், ஐந்தாம், ஆறாம் எதிர் மனுதாரர்கள் சமூக வலைத்தளங்களில் பேராசிரியர் ரகுராம் தொடர்பாக அவதூறான மற்றும் தடை செய்யப்பட்ட கூற்றுக்கள் பதிவு செய்தமையை ஏற்றுக்கொண்ட மன்று இதுவரைக்கும் அவ்வாறு போடப்பட்டிருந்த பதிவுகளை அகற்றுவதோடு, இது சம்பந்தப்பட்ட எந்த விடயத்தையும் எந்த ஒரு சமூக வலைத்தளங்களில் பதிவு செய்யக்கூடாது என இடைக்கால கட்டளையிட்டது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">

இந்த நிபந்தனைக்குட்பட்ட இடைக்கால கட்டளையை, இறுதி கட்டளையாக ஆக்குவதா இல்லையா என்பதை தீர்மானிப்பதற்காக, விசாரணைகள் தொடர்ந்து நடைபெறுவதோடு, ஒன்று தொடக்கம் 13 வரையான எதிர்மனுதாரர்களுக்கு இரண்டு கிழமைகளுக்குள் அழைப்பாணையை அனுப்புமாறு மன்று உத்தரவிட்டது.
</p><p style="text-align: justify; ">
எதிர்மனுதாரர்கள் அனைவருமே இரண்டு வாரங்களுக்குள் காரணங்காட்டுதல்களுக்காக மன்றில் முன்னிலையாகி, தங்களுடைய சமர்ப்பணங்களை முன்வைக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.

எதிர் மனுதாரர்கள் இதனை செய்யாவிட்டால் இந்த விடயத்தில் குற்றவாளிகளாக அவர்கள் கருதப்பட்டு மன்றினால் தீர்ப்பளிக்கப்படும் எனவும் அறிவுறுத்தப்பட்டது.
</p><p style="text-align: justify; ">
எதிர் மனுதாரர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவு செய்த கருத்துக்கள் முகத்தோற்றத்தின் அடிப்படையில அவதூறு மற்றும் தடை செய்யப்பட்ட கூற்றுக்களாக இருப்பதோடு, அது தொடர்பான விசாரணைகளுக்காகவும் காரணங்காட்டுதலுக்காகவும், எதிர்வரும் 27 ஆம் திகதிக்கு வழக்கை ஒத்திவைத்து நீதவான் உத்தரவிட்டார்.</p><p style="text-align: justify; "></p><p>
</p><p style="text-align: justify; ">
இதேவேளை மனுதாரருடைய சட்டத்தரணி முன்வைத்த வாதத்தில் மூன்றாவது எதிர்மனுதாரரான பெண் ஒருவர், சில நாட்களுக்கு முன் தனது சொந்த முகப்புத்தகத் தளத்தில் நீதவான் நீதிமன்றினையும், நீதவானையும் அவதூறு செய்யும் விதத்தில் பதிவிட்டிருந்தமையை நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றார்.
</p><p style="text-align: justify; ">
குறித்த எதிர் மனுதாரரின் பதிவு நீதிமன்ற அவமதிப்பு என்பதுடன் நீதவானின் இறையாண்மையை பாதிப்பதாகவும் கருதிய மன்று, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்கை பதிவு செய்ய உத்தரவிட்டார்.

மேலும் மனுதாரரின் சட்டத்தரணி குற்றவியல் சட்டத்தின் கீழ் பிறிதொரு வழக்கை தாக்கல் செய்ய முடியும் எனவும் அறிவுறுத்தினார்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-07-14T01:27:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தாக்குதல்களால் அதிரும் மத்தியக்கிழக்கு ; எண்ணெய் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/iran-attacks-oil-tankers-in-gulf-waters-1783991979"></link>
            <id>https://canadamirror.com/article/iran-attacks-oil-tankers-in-gulf-waters-1783991979</id>
            <summary type="text">ஹோர்முஸ் நீரிணையில் ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திற்கு சொந்தமான இரண்டு எண்ணெய் போக்குவரத்து கப்பல்கள் மீது ஈரான் நடத்திய குரூஸ் ஏவுகணைத் தாக்குதலில், இந்திய...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹோர்முஸ் நீரிணையில் ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திற்கு சொந்தமான இரண்டு எண்ணெய் போக்குவரத்து கப்பல்கள் மீது ஈரான் நடத்திய குரூஸ் ஏவுகணைத் தாக்குதலில், இந்திய ஊழியர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் எண்மர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. </p><p>

காயமடைந்த எண்மரில் நால்வரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும், அவர்களில் அறுவர் இந்தியப் பிரஜைகள் என்பதுடன் இருவர் உக்ரைன் பிரஜைகள் எனவும் ஐக்கிய அரபு இராஜ்ஜியம் குறிப்பிட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4f516864-476b-4216-bcc2-3a77ff99ac54/26-6a558eacbc18f.webp' /></p><p> </p><p>

'மொம்பாசா' (Mombasa) மற்றும் 'அல் பஹியா' (Al Bahia) ஆகிய இரு கப்பல்களும் ஓமான் கடல் எல்லையிலுள்ள ஹோர்முஸ் நீரிணையின் தெற்குப் பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த போதே இந்தத் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது. </p><p>

உயிரிழந்த ஊழியர் 'மொம்பாசா' கப்பலில் இருந்தவர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இந்தத் தாக்குதல் காரணமாக இரு கப்பல்களிலும் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதுடன், கப்பல்களுக்குப் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. </p><p>

எவ்வாறாயினும், ஐக்கிய அரபு இராஜ்ஜியம் இதனை ஒரு "வெட்கக்கேடான தாக்குதல்" எனப் பலமாகக் கண்டித்துள்ளதுடன், இந்தச் சூழ்நிலைக்கு எதிராகப் பதிலடி கொடுப்பதற்கான முழுமையான உரிமை தமக்கு உண்டு என்றும் கூறியுள்ளது.</p><p> 

எந்தவொரு அச்சுறுத்தலையும் எதிர்கொள்ள ஐக்கிய அரபு இராஜ்ஜியம் முழுத் தயார் நிலையில் இருப்பதாகவும், நாட்டின் பாதுகாப்பை சீர்குலைக்க மேற்கொள்ளப்படும் எந்தவொரு முயற்சிக்கும் கடுமையான பதிலடி கொடுப்பதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாகவும் ஐக்கிய அரபு இராஜ்ஜியம் மேலும் தெரிவித்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-14T01:19:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் ; மேலும் இரு அதிகாரிகள் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/two-officers-killed-in-negombo-prison-clash-1783991124"></link>
            <id>https://jvpnews.com/article/two-officers-killed-in-negombo-prison-clash-1783991124</id>
            <summary type="text">நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலில் படுகாயமடைந்து கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 2 சிறைச்சாலை அதிகாரிகள் உயிரிழந்த...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify;">நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலில் படுகாயமடைந்து கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 2 சிறைச்சாலை அதிகாரிகள் உயிரிழந்துள்ளனர்.
</p><p style="text-align: justify;">
இதன்படி குறித்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 31 ஆக உயர்ந்துள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ac80c9ad-6203-4768-8a37-a829812ec3c2/26-6a558d06d24d0.webp' /></p><h2 style="text-align: justify; ">சிறைச்சாலை மோதல்</h2><p>
</p><p style="text-align: justify; ">
சம்பவத்தில் 25 மற்றும் 39 வயதுடைய சிறைச்சாலை அதிகாரிகளே சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக&nbsp; தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; ">இதன்படி, நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் உயிரிழந்த சிறைச்சாலை அதிகாரிகளின் எண்ணிக்கை பத்தாக உயர்ந்துள்ளது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> 

கடந்த ஜூலை மாதம் 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலில் 21 சிறைக்கைதிகளும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். </p><p style="text-align: justify; ">

இதற்கமைய, பதிவாகியுள்ள மொத்த மரணங்களின் எண்ணிக்கை 31 ஆக உயர்ந்துள்ளது.</p><p style="text-align: justify; ">

குறித்த மோதலில் காயமடைந்த மேலும் சில சிறைக்கைதிகளும் அதிகாரிகளும் கொழும்பு தேசிய வைத்தியசாலையிலும் நீர்கொழும்பு வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்று வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;"><br></p><p style="text-align: justify;"><br></p>]]></content>
            <updated>2026-07-14T01:12:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Manchu</name>
            </author>
            <title type="text"><![CDATA[போதும் இனி பொறுக்க முடியாது... விட்டா தலை மீது ஏறி மிதித்துவிட்டு போவார்கள்; குஷ்பு ஆதங்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/khushbu-sundar-defends-family-against-trolls-1783949175"></link>
            <id>https://manithan.com/article/khushbu-sundar-defends-family-against-trolls-1783949175</id>
            <summary type="text">யாரோ ஒருவர் எனது பிள்ளைகளை தனது 2 நிமிட மலிவான விளம்பரத்திற்காகப் பயன்படுத்துவதையோ, அவமதிப்பதையோ என்னால் வேடிக்கை பார்க்க முடியாது என்று நடிகை குஷ்பு ...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாரோ ஒருவர் எனது பிள்ளைகளை தனது 2 நிமிட மலிவான விளம்பரத்திற்காகப் பயன்படுத்துவதையோ, அவமதிப்பதையோ என்னால் வேடிக்கை பார்க்க முடியாது என்று நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார்.</p><p>கடந்த ஜூன் 25-ஆம் தேதி குஷ்பூவின் மூத்த மகள் அவந்திகா சுந்தர் - ஷ்ரவன் ஸ்ரீனிவாசன் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. இதில் சிரஞ்சீவி, நாகார்ஜுனா, வெங்கடேஷ், அனில் கபூர், த்ரிஷா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் கலந்துகொண்டனர். இந்தத் திருமணத்தில் பழம்பெரும் இயக்குனர் கே. பாக்யராஜ் கலந்துகொண்டார். துரதிர்ஷ்டவசமாக, அடுத்த இரண்டு நாட்களில் அவர் மாரடைப்பால் காலமானார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/da09f367-460c-42ee-9383-2ed55389be11/26-6a552a6d44793.webp' /></p><p>
ஒட்டுமொத்த திரையுலகமும் பாக்யராஜின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துக் கொண்டிருந்த நேரத்தில், குஷ்பூ தொடர்ந்து தனது மகளின் திருமணப் புகைப்படங்களைப் பகிர்ந்து வந்ததாக ஒரு தரப்பினர் விமர்சித்தனர். இதற்கு அப்போதே பதிலடி கொடுத்த குஷ்பூ, "என் மகளுக்குத் திருமணமாகி 48 மணி நேரம் கூட ஆகவில்லை, மகிழ்ச்சியாக இருக்க எனக்கு உரிமை உண்டு. பிடிக்காதவர்கள் என்னை அன்ஃபாலோ செய்துவிட்டுப் போகலாம்" எனக் குறிப்பிட்டிருந்தார்.
</p><p>
இந்நிலையில், நடிகை குஷ்பு தனது மகள்கள் மற்றும் குடும்பத்தை குறிவைத்து சமூக வலைதளத்தில் வரும் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இணையத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், “இது என் குடும்பம். அன்பு, நம்பிக்கை மற்றும் புரிதலால் உருவாக்கப்பட்டது. நாங்கள் இன்று இருக்கும் இடத்திற்கு வர எங்கள் எலும்புகள் தேய உழைத்திருக்கிறோம், வியர்வையும் ரத்தமும் சிந்தியிருக்கிறோம். என் குழந்தைகளை ஒரு நாளும் பிரபலங்களின் பிள்ளைகள் என்ற கர்வத்தோடு நாங்கள் வளர்க்கவில்லை.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/30f7077f-0691-41ec-a699-aee2f7985a4b/26-6a552a6de6bc1.webp' /></p><p></p><p>
ஒரு தாயாக, யாரோ ஒருவர் எனது பிள்ளைகளை தனது 2 நிமிட மலிவான விளம்பரத்திற்காகப் பயன்படுத்துவதையோ, அவமதிப்பதையோ என்னால் வேடிக்கை பார்க்க முடியாது. பணத்திற்காக எங்களைப் பற்றி பேசும் யூடியூபர்களுக்கான தெளிவான எச்சரிக்கை இது. போதும், இனி பொறுக்க முடியாது. எந்தவொரு தாயிடமும் விளையாடாதீர்கள். தன் குட்டிகளைக் காப்பாற்ற பாய்ந்து கொல்லும் காயம்பட்ட புலிதான் ஒரு தாய் என்பதை நினைவில் கொள்ளுங்கள். 

&nbsp;&nbsp;</p><p>நமக்காக இன்றைக்கு நாமே குரல் கொடுக்கவில்லை என்றால், இந்த முட்டாள்கள் நம் தலைமேல் ஏறி மிதித்துவிட்டுப் போய்விடுவார்கள். அவர்களுக்குத் தெரியாத ஒன்று என்னவென்றால், நமக்குள்ளே இருக்கும் இந்த வலிமை காசு கொடுத்து வாங்கப்பட்டது அல்ல, நாங்களாகவே கஷ்டப்பட்டு சம்பாதித்தது. வெளியில் இருக்கும் ஒவ்வொரு பெண்ணும் உங்களுக்காக நீங்களே எழுந்து நில்லுங்கள். மற்றவர்கள் உங்களை அவமதிக்க ஒருபோதும் அனுமதிக்காதீர்கள். எப்போதும் என்னோடு இருக்கும் உங்களுக்கு நன்றி ராதிகா சரத்குமார்" என்று குறிப்பிட்டுள்ளார்.&nbsp; &nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e437b4c2-af4d-4420-9db5-273b1cf7b418/26-6a552a6e929ba.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td><i>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் <a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள் <a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"><b>FOLLOW NOW&nbsp; &nbsp;</b></a> &nbsp;&nbsp;</i><br></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-14T01:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீர்கொழும்பு சிறை கலவரம்...! மேலும் இரண்டு சிறை அதிகாரிகள் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/negombo-prison-clash-death-toll-rises-to-31-1783990627"></link>
            <id>https://ibctamil.com/article/negombo-prison-clash-death-toll-rises-to-31-1783990627</id>
            <summary type="text">நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் காயமடைந்து கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் இரண்டு சிறை அதிகாரிகள் உயிரிழந்துள்ளனர்.மேலும் த...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் காயமடைந்து கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் இரண்டு சிறை அதிகாரிகள் உயிரிழந்துள்ளனர்.</p><p>மேலும் தெரியவருகையில் நேற்று (13-07-2026) ஒருவரும் மற்றும் இன்று காலை (14-07-2026) ஒருவரும் உயிரிழந்தாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். </p><p>

உயிரிழந்தவர்கள் 25 மற்றும் 39 வயதுடைய இரண்டு சிறைத்துறை அதிகாரிகள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>சிறை அதிகாரிகள்&nbsp;</h2><p>இதனடிப்படையில், நீர்கொழும்பு சிறை மோதலில் உயிரிழந்த சிறை அதிகாரிகளின் எண்ணிக்கை பத்தாக அதிகரித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/81c93be5-0d3a-46fa-94bf-dd47f338d518/26-6a5589654be62.webp' /></p><p>ஜூலை 5 மற்றும் 6 ஆகிய திகதிகளில் நடைபெற்ற சிறைக்கலவரங்களில் மேலும் 21 கைதிகள் உயிரிழந்ததாகவும் இதன்மூலம் மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 31ஆக உயர்ந்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். </p><p>

மோதலில் காயமடைந்த மற்ற சிறைக் கைதிகளும் அதிகாரிகளும் கொழும்பு தேசிய மருத்துவமனையிலும் நீர்கொழும்பு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-14T00:57:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[பதவியேற்ற ஓராண்டுக்குள் பதவியை துறந்தார் உக்ரைன் பிரதமர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/ukraine-pm-resigns-within-one-year-in-office-1783989951"></link>
            <id>https://canadamirror.com/article/ukraine-pm-resigns-within-one-year-in-office-1783989951</id>
            <summary type="text">உக்ரைன் பிரதமா் யூலியா ஸ்விரிடென்கோ, பதவியேற்ற ஓராண்டுக்குள் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளாா்.

ரஷ்யாவுடன் 4 ஆண்டுகளுக்கு மேல் போா் நீடித்து வரும் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>உக்ரைன் பிரதமா் யூலியா ஸ்விரிடென்கோ, பதவியேற்ற ஓராண்டுக்குள் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளாா்.
</p><p>
ரஷ்யாவுடன் 4 ஆண்டுகளுக்கு மேல் போா் நீடித்து வரும் சூழலில், நாட்டின் ஆட்சி நிா்வாகத்தை சீரமைக்கும் நோக்கில் அமைச்சரவையில் அதிரடி மாற்றங்களை மேற்கொள்ள இருப்பதாக ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அறிவித்ததைத் தொடா்ந்து இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6e92d1e1-edb7-47ba-9367-ed4d0154c9af/26-6a5586c12b4da.webp' /></p><p>

</p><p>கடந்த ஆண்டு ஜூலை மாதம், உக்ரைனின் பொருளாதார அமைச்சராக இருந்த யூலியா ஸ்விரிடென்கோ, அமெரிக்காவுடனான முக்கியக் கனிம வள ஒப்பந்தத்தை வெற்றிகரமாக முடித்ததைத் தொடா்ந்து நாட்டின் பிரதமராக நியமிக்கப்பட்டாா்.
</p><p>
இந்நிலையில், ஓராண்டுக்குள் ராஜிநாமாவை அறிவித்துள்ள அவா் இதுகுறித்து வெளியிட்ட சமூக ஊடகப் பதிவில், ‘உக்ரைன் வரலாற்றின் மிகக் கடினமான காலகட்டத்தில் அரசை வழிநடத்தியதைப் பெருமையாகக் கருதுகிறேன்.</p><p> நாட்டின் இறையாண்மையைப் பாதுகாக்கவும், நீதியான அமைதியை நிலைநாட்டவும் தொடா்ந்து பாடுபடத் தயாராக இருக்கிறேன்’ எனக் குறிப்பிட்டாா்.
</p><p>
பதவிய விலகிய யூலியா ஸ்விரிடென்கோவுக்கு, சா்வதேச முக்கியத்துவம் வாய்ந்த நட்பு நாடுகளுடனான உறவை வலுப்படுத்தும் புதிய மற்றும் உயரிய பொறுப்பு வழங்கப்பட உள்ளதாக ஸெலென்ஸ்கி தெரிவித்தாா். </p><p>இந்த அரசு மறுசீரமைப்பின் ஒரு பகுதியாக, வெளியுறவுக் கொள்கையின் முக்கியப் பிரிவுகள் மற்றும் நாட்டின் சட்ட அமலாக்கத் துறையின் உயா்நிலைப் பதவிகளிலும் மாற்றங்கள் செய்யப்படும் என்றும் ஸெலென்ஸ்கி கூறியுள்ளாா். ரஷ்யாவுடன் போா் தொடங்கியதில் இருந்து உக்ரைன் அரசு மேற்கொள்ளும் 4-ஆவது பெரிய மறுசீரமைப்பு இதுவாகும்.</p><p>புதிய வியூகங்கள் மற்றும் அனுபவமிக்க நபா்கள் மூலம் நாட்டின் நிா்வாகத்துக்கு கூடுதல் வேகம் கிடைக்கும் என்று அதிபா் தரப்பில் நம்பப்படுகிறது.

இதனிடையே, ரஷியாவில் கடுமையான எரிபொருள் பற்றாக்குறை ஏற்படுவதற்கு காரணமாக இருந்த, அந்நாட்டின் எரிபொருள் கட்டமைப்புகள் மீதான ட்ரோன் தாக்குதல்களை உக்ரைன் தொடா்ந்து தீவிரப்படுத்தி வருகிறது.</p>]]></content>
            <updated>2026-07-14T00:45:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டில் கொட்டி தீர்க்கப்போகும் கனமழை...! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/department-of-meteorology-weather-forecast-1783989724"></link>
            <id>https://ibctamil.com/article/department-of-meteorology-weather-forecast-1783989724</id>
            <summary type="text">சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சிறிதளவு மழை பெய்யக்கூடும்.வளிமண்டலவியல் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சிறிதளவு மழை பெய்யக்கூடும்.</p><p>வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (14-07-2026) விடுத்துள்ள அறிக்கையில் மேற்படி விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இதனடிப்படையில் அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மொனராகலை போன்ற மாவட்டங்களில் தொடர்ந்தும் பகல் வேளையில் அதிகரித்த வெப்பநிலை காணப்படுகின்றது.


 


</p><p> 
</p><p></p><h2>பனிமூட்டமான நிலை</h2><p>நாட்டின் ஏனைய பிராந்தியங்களில் வறட்சியான வானிலை நிலவக்கூடும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b6496b3f-8582-4deb-8e14-7ea3fb1de5f4/26-6a5585ddbeaeb.webp' /></p><p>மத்திய மலைப் பிராந்தியத்தின் மேற்கு சரிவுகளிலும், வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் மொனராகலை, ஹம்பாந்தோட்டை, திருகோணமலை மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் மணித்தியாலத்திற்கு சுமார் 40 - 50 km வேகத்தில் அடிக்கடி பலத்த காற்று வீசக் கூடும்.&nbsp;</p><p>இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-14T00:42:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாதாள உலக குழுக்களுடன் தொடர்புபடுத்தி நாமல் மீது அவதூறு: CID-யில் முறைப்பாடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/complaint-filed-over-defamation-against-namal-1783988832"></link>
            <id>https://ibctamil.com/article/complaint-filed-over-defamation-against-namal-1783988832</id>
            <summary type="text">நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கும் பாதாள உலகக் குழுக்களுக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு இருப்பதாகச் சமூக ஊடகங்களிலும் நாடாளுமன்றத்திலும் திட...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கும் பாதாள உலகக் குழுக்களுக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு இருப்பதாகச் சமூக ஊடகங்களிலும் நாடாளுமன்றத்திலும் திட்டமிட்ட வகையில் அவதூறு பரப்பப்படுவதாகச் சுட்டிக்காட்டி முறைப்பாடு ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது.</p><p>

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் செயற்பாட்டாளர் பசன் கஸ்தூரி இந்த முறைப்பாட்டைக் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்வைத்துள்ளார்.</p><p>

இதையடுத்து ஊடகங்களுக்கு அவர் கருத்துத் தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p></p><h2>புலிகள் அமைப்பு</h2><p>இதன்போது மேலும் தெரிவித்த அவர், “மகிந்த ராஜபக்ச மற்றும் நாமல் ராஜபக்ச ஆகியோரை பாதாள உலகக் குழுக்களுடன் தொடர்புபடுத்தி அரசுக்குச் சார்பான தரப்புகளும் மற்றும் பிரிவினைவாதக் கருத்துக்களைப் பரப்பும் விடுதலைப் புலிகள் சார்புக் குழுக்களும் திட்டமிட்ட பொய்ப் பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றன.
</p><p>
போதைப்பொருள் மற்றும் பாதாள உலகக் குற்றச் செயல்களில் ஈடுபட்ட வரலாற்றைக் கொண்ட தரப்பினரே இன்று ராஜபக்சக்களுக்குச் சேறுபூச முயற்சிக்கின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/213d4169-2d4d-4c34-aaa0-0c48de471cd3/26-6a5584bd384de.webp' /></p><p>

மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்திலேயே பாதாள உலகக் குழுக்களும் விடுதலைப் புலிகள் அமைப்பின் பயங்கரவாதமும் இந்நாட்டில் முழுமையாக அடக்கப்பட்டன என்பது மறுக்க முடியாத உண்மை.
</p><p>
போதைப்பொருள் ஒழிப்புப் பற்றிப் பேசும் தற்போதைய அரசின் முக்கிய உறுப்பினர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் அண்மைக்காலமாக போதைப்பொருள் விவகாரங்களில் சிக்கியுள்ளனர். </p><p>இது குறித்து அரசு பதில் கூற வேண்டும் முகநூல் போலிக் கணக்குகள் மூலமோ அல்லது நாடாளுமன்ற வரப்பிரசாதங்களுக்குப் பின்னால் ஒளிந்துகொண்டோ கூச்சலிடாமல் தைரியமிருந்தால் இந்த ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை நிரூபித்துக் காட்டுமாறு சவால் விடுக்கின்றோம்” எனத் தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-14T00:37:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீர்கொழும்பு சிறையில் நடந்த பயங்கர மோதல்.. உயிரிழப்பு எண்ணிக்கையில் அதிகரிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/negombo-prison-riot-death-toll-31-1783988663"></link>
            <id>https://tamilwin.com/article/negombo-prison-riot-death-toll-31-1783988663</id>
            <summary type="text">நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் காயமடைந்து கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் இரண்டு சிறை அதிகாரிகள் உயிரிழந்தனர்.
குறித்த இர...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் காயமடைந்து கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் இரண்டு சிறை அதிகாரிகள் உயிரிழந்தனர்.
</p><p>குறித்த இரண்டு சிறை அதிகாரிகளில் நேற்று (13) ஒருவரும் இன்று காலை (14) ஒருவரும் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.&nbsp;</p><p>

உயிரிழந்தவர்கள் 25 மற்றும் 39 வயதுடைய இரண்டு சிறைத்துறை அதிகாரிகள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>சிறைக்கலவரம்&nbsp;</h2><p>

அதன்படி, நீர்கொழும்பு சிறை மோதலில் உயிரிழந்த சிறை அதிகாரிகளின் எண்ணிக்கை பத்தாக அதிகரித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b692a96b-d58c-4caf-be49-522e87edae70/26-6a5586f5759d4.webp' /></p><p>
</p><p>
ஜூலை 5 மற்றும் 6 ஆகிய திகதிகளில் நடைபெற்ற சிறைக்கலவரங்களில் மேலும் 21 கைதிகள் உயிரிழந்ததாகவும், இதன்மூலம் மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 31ஆக உயர்ந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.&nbsp;</p><p>
மோதலில் காயமடைந்த மற்ற சிறைக் கைதிகளும் அதிகாரிகளும் கொழும்பு தேசிய மருத்துவமனையிலும் நீர்கொழும்பு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-14T00:27:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[மூன்றாவது இரவு தாக்குதலைத் தொடங்கிய அமெரிக்கா... ஹார்முஸ் முற்றுகை அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/third-night-of-strikes-on-iran-1783988918"></link>
            <id>https://news.lankasri.com/article/third-night-of-strikes-on-iran-1783988918</id>
            <summary type="text">ஈரான் மீது கடல்வழி முற்றுகையை மீண்டும் அமுல்படுத்தப்போவதாக டொனால்ட் ட்ரம்ப் அறிவித்த சில மணிநேரங்களிலேயே, அமெரிக்கா தொடர்ந்து மூன்றாவது இரவாக அந்நாட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரான் மீது கடல்வழி முற்றுகையை மீண்டும் அமுல்படுத்தப்போவதாக டொனால்ட் ட்ரம்ப் அறிவித்த சில மணிநேரங்களிலேயே, அமெரிக்கா தொடர்ந்து மூன்றாவது இரவாக அந்நாட்டின் மீது தாக்குதல்களை நடத்தியுள்ளது.</p><h2>கடுமையாகத் தாக்குவோம்</h2><p>
</p><p>அத்துடன், ஈரான் அறிவித்திருந்த கட்டணம் வசூலிக்கும் திட்டத்தை, இனி அமெரிக்கா முன்னெடுத்து, பாதுகாப்பான பயணத்திற்காகக் கப்பல்களிடம் கட்டணம் வசூலிக்கப்படும் எனவும் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b51054d1-41c4-41d3-b660-d3cf18fd55aa/26-6a55836816e80.webp' /></p><p> </p><p>இந்த நிலையில், தற்போது முன்னெடுக்கப்படும் இந்தத் தாக்குதலானது ஈரானியப் படைகளுக்குக் கடுமையான இழப்பை ஏற்படுத்தும் என்றும் ஹார்முஸ் நீரிணையில் அப்பாவிப் பொதுமக்கள் மற்றும் வணிகக் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தும் அவர்களின் திறனைக் குறைக்கும் என்றும் வளைகுடாவில் உள்ள அமெரிக்க இராணுவத்தின் மத்திய கட்டளை மையம் தெரிவித்துள்ளது. </p><p>இதனிடையே, இன்று இரவு அவர்களை மிகக் கடுமையாகத் தாக்குவோம், நாளையும் அவர்களைக் கடுமையாகத் தாக்குவோம், அதைப்பற்றி அவர்களால் ஒன்றும் செய்ய முடியாது என்று ட்ரம்ப் கூறியிருந்தார்.
</p><p>பிப்ரவரி 28 அன்று ஈரான் மீதான போருக்கு முன்னதாக இருந்தது போலவே, ஹார்முஸ் நீரிணை எவ்விதக் கட்டணமும் இன்றி அனைவருக்கும் திறந்திருக்க வேண்டும் என்று அமெரிக்கா இதுவரை கூறி வந்துள்ளது.</p><p></p><p> </p><p>அமெரிக்காவோ அல்லது ஈரானோ கட்டணம் வசூலிக்க முயற்சிப்பது, கப்பல் போக்குவரத்து சுதந்திரம் குறித்த உலகளாவிய நெறிமுறைகளை மீறுவதோடு, அப்பிராந்தியத்தையும் தாண்டி மேலும் பொருளாதாரச் சீர்குலைவை ஏற்படுத்தவும் வாய்ப்புள்ளது. </p><p>இந்த நிலையில், ஈரான் மீது மீண்டும் தாக்குதலை அமெரிக்கா தொடங்கியதை அடுத்து, சர்வதேச அளவுகோலாகக் கருதப்படும் ப்ரெண்ட் கச்சா எண்ணெயின் விலை திங்களன்று 7.8 சதவீதம் உயர்ந்து ஒரு பீப்பாய்க்கு 81.92 டொலராக இருந்தது; இருப்பினும், இது போரின் உச்சக்கட்டத்தில் எட்டப்பட்ட 120 டொலர் விலையை விட மிகவும் குறைவாகவே உள்ளது.
</p><p>முன்னதாக திங்களன்று, ஹார்முஸ் நீரிணை வழியாகக் கொண்டு செல்லப்படும் அனைத்து சரக்குகள் மீதும் 20 சதவீத சுங்க வரியை அமெரிக்கா கோரும் என்று ட்ரம்ப் கூறியிருந்தார்.</p><h2>தடை இருக்காது</h2><p> </p><p>மட்டுமின்றி, இனிவரும் காலங்களில் ஹார்முஸ் நீரிணையின் பாதுகாவலராக அமெரிக்கா அறியப்பட வேண்டும் என்றும் கூறியிருந்தார். இஸ்ரேல் ஆதரவுடன் ஈரானுக்கு எதிரான போர் தொடங்கியதில் இருந்து, ​​அடிக்கடி வெற்றி பெற்றதாகக் கூறுவது உட்பட, ஒப்பந்தமொன்றை மேற்கொள்ள ஈரான் கெஞ்சுவதாகவும் ட்ரம்ப் பலவிதமான தற்பெருமைகளையும் அச்சுறுத்தல்களையும் முன்வைத்துள்ளார்; அடிப்படையில், இவை எதும் உண்மை அல்ல என்பதும் வெறும் வாய்ச்சவடால் என்றே தெரிய வந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b30ce64e-ebac-4772-97b3-a0d96df0d223/26-6a558368da076.webp' /></p><p> </p><p>இதனிடையே, அமெரிக்கக் கடற்படையின் தலைமையிலான கூட்டு கடல்சார் தகவல் மையம் திங்கள்கிழமை மாலை வெளியிட்ட அறிவிப்பில், ஈரான் மீதான முற்றுகையை, அனைத்துத் துறைமுகங்கள், எண்ணெய் முனையங்கள் மற்றும் கடலோரப் பகுதிகளை உள்ளடக்கிய வகையில், செவ்வாய்க்கிழமை இரவு முதல் அமெரிக்கா அமுல்படுத்தத் தொடங்கும் என்று தெரிவித்தது. </p><p>மட்டுமின்றி, ஈரான் அல்லாத இடங்களுக்குச் செல்லும் அல்லது அங்கிருந்து வரும் ஹார்முஸ் நீரிணை வழியான நடுநிலையான போக்குவரத்திற்குத் தடை இருக்காது என்றும் அந்த மையம் தெரிவித்தது. ஆனால், நடைமுறையில் அமெரிக்காவின் கடற்படை இதைச் செய்வது எவ்வளவு எளிதாக இருக்கும் என்பது தெளிவாக இல்லை.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-14T00:27:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீர்கொழும்பு சிறையில் மருத்துவ மாணவி ; வைரலான உருக்கமான கதையின் பொய் அம்பலமானது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/medical-student-s-story-at-negombo-prison-1783988570"></link>
            <id>https://jvpnews.com/article/medical-student-s-story-at-negombo-prison-1783988570</id>
            <summary type="text">நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் ஏற்பட்ட மோதல் சம்பவத்தின் போது, சிறைச்சாலை கூரையின் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்ட பெண் கைதி ஒருவரை மையப்படுத்தி...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify;"><a href="https://jvpnews.com/article/story-of-a-young-woman-in-negombo-prison-1783761791" target="_blank">நீர்கொழும்பு சிறைச்சாலை</a>யில் அண்மையில் ஏற்பட்ட மோதல் சம்பவத்தின் போது, சிறைச்சாலை கூரையின் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்ட பெண் கைதி ஒருவரை மையப்படுத்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் உருக்கமான பின்னணிக் கதை முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என 'உண்மைக் கண்டறியும் அமைப்பினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது,</p><p style="text-align: justify;">
கடந்த ஜூலை 5 மற்றும் 6ஆம் திகதிகளில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகளிடையே ஏற்பட்ட பயங்கர மோதலில் 29 பேர் உயிரிழந்ததுடன், நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.</p><p style="text-align: justify;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6341aa4b-1cde-42f6-977b-ed2f02ee31ce/26-6a55815bdf0b8.webp' /></p><h2 style="text-align: justify;">பெண் கைதி</h2><p> </p><p style="text-align: justify;">

இந்த பதற்றமான சூழ்நிலையின் போது, சில கைதிகள் சிறைச்சாலையின் கூரையின் மேல் ஏறி கைதிகள் உரிமைக்காகப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.</p><p style="text-align: justify;">


இதன்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களில் இருந்த ஒரு பெண் கைதியின் தோற்றத்தை அடிப்படையாக வைத்து, சமூக வலைத்தளங்களில் ஒரு சோகமான கதை வேகமாகப் பரப்பப்பட்டது.
</p><p style="text-align: justify;">
இந்தச் செய்தி சமூக வலைத்தளங்களில் பெரும் அதிர்வலைகளையும் அனுதாபத்தையும் ஏற்படுத்திய நிலையில், 'உண்மைக்கண்டறியும் அமைப்பொன்று இது குறித்து விரிவான விசாரணைகளை முன்னெடுத்தது.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;">


இந்தக் கதையைத் தனது பேஸ்புக் பக்கத்தில் முதன்முதலில் பதிவிட்ட நபர் "இது ஒரு உண்மைக் கதை அல்ல, பேஸ்புக் பக்கங்களில் பொழுதுபோக்கிற்காகவும், சமூகத்தின் கவனத்தை ஈர்ப்பதற்காகவும் நானே கற்பனையாக உருவாக்கிய கதை" என்பதை ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
</p><p style="text-align: justify;">

அத்துடன், சிறைச்சாலைத் தரப்பினரிடம் இது குறித்து வினவிய போது, கைதிகளின் தனிப்பட்ட விபரங்களை வெளியிட முடியாது எனத் தெரிவித்துள்ளனர்.
</p><p style="text-align: justify;">
எனவே, நீர்கொழும்பு சிறைக்கூரையின் மேல் போராடிய பெண் கைதி ஒரு வைத்திய மாணவி என்றும், காதலனால் ஏமாற்றப்பட்டு சிறை சென்றவர் என்றும் பரவும் செய்திகள் அனைத்தும் பேஸ்புக் பயனர் ஒருவரால் உருவாக்கப்பட்ட முற்றிலும் கற்பனையான வதந்தி என்பது உறுதியாகியுள்ளது.</p><p style="text-align: justify;"></p>]]></content>
            <updated>2026-07-14T00:22:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையிலுள்ள ஆண்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/hiv-risk-higher-among-men-in-sri-lanka-ministry-1783978096"></link>
            <id>https://ibctamil.com/article/hiv-risk-higher-among-men-in-sri-lanka-ministry-1783978096</id>
            <summary type="text">இலங்கையில் பெண்களை விட ஆண்களிடையே எச்.ஐ.வி பரவும் அபாயம் அதிகமாக இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இது தொடர்பான புள்ளிவிவரங்களையும் தகவல்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் பெண்களை விட ஆண்களிடையே எச்.ஐ.வி பரவும் அபாயம் அதிகமாக இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
</p><p>
இது தொடர்பான புள்ளிவிவரங்களையும் தகவல்களையும் சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது.
</p><p>
ஆண்களிடையே பாதுகாப்பற்ற ஓரினச்சேர்க்கை உறவுகள் அதிகரித்ததே இந்த அபாயம் வேகமாக அதிகரிப்பதற்கு முக்கிய காரணம் என சுகாதார அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.</p><p>
</p><p></p><h2>நோயாளிகளின் எண்ணிக்கை</h2><p>ஆண்டுதோறும் பதிவாகும் நோயாளிகளின் எண்ணிக்கை பொதுவாக படிப்படியாக அதிகரித்து வந்தாலும் குறிப்பாக 2023, 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளுக்கான சமீபத்திய தரவுகளைப் அவதானிக்கும் போது பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d0d465a8-7f3c-4683-9635-dcc950d940ec/26-6a5561a71a4d6.webp' /></p><p>குறிப்பாக கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் ஆண்களிடையே அதிக எண்ணிக்கையிலான எச்.ஐ.வி தொற்றுகள் பதிவாகியுள்ளதாகவும் இந்த மாவட்டங்களின் அதிக மக்கள்தொகை மற்றும் அடிக்கடி நிகழும் இடம்பெயர்வு ஆகியவை இதற்குக் காரணங்கள் என்றும் சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-13T23:58:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thileepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வவுனியாவில் மலசலகூடத்துடன் இணைந்த குளியறைக்குள் கோழி இறைச்சி விற்பனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/chicken-meat-sold-bathroom-toilet-vavuniya-1783986217"></link>
            <id>https://tamilwin.com/article/chicken-meat-sold-bathroom-toilet-vavuniya-1783986217</id>
            <summary type="text">வவுனியா, வைரவபுளியங்குளம் பகுதியில் மலசல கூடத்துடன் இணைந்த குளியலறைப்
பகுதியில் வைத்து கோழி இறைச்சி உரிக்கப்பட்டு விற்பனை செய்யும் சம்பவம் நீண்ட
நாட...</summary>
            <content type="html"><![CDATA[<p>வவுனியா, வைரவபுளியங்குளம் பகுதியில் மலசல கூடத்துடன் இணைந்த குளியலறைப்
பகுதியில் வைத்து கோழி இறைச்சி உரிக்கப்பட்டு விற்பனை செய்யும் சம்பவம் நீண்ட
நாட்களாக இடம்பெற்றமை தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
</p><p>
வவுனியா, வைரவபுளியங்குளம், தொடருந்து வீதியில் கதிரேசு வீதிக்கு திரும்பும்
சந்தியில் உள்ள கோழி இறைச்சி விற்பனை கடை ஒன்றிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.&nbsp;</p><p>அக்கடைக்குரிய கோழிகள்
மலசலகூடம் மற்றும் அதனுடன் இணைந்த பகுதிகளில் வைக்கப்பட்டு, அப்பகுதியில் வைத்து உரிக்கப்பட்டு சுகாதார சீர்கேட்டுடன் கடையில் இறைச்சியாக
நீண்டகாலமாக விற்பனை செய்யப்படடு வந்துள்ளது.</p><p></p><h2>பொதுமக்களின் கோரிக்கை&nbsp;</h2><p>
</p><p>
இது தொடர்பில் பொது சுகாதார பரிசோதகர்கள் கடந்த காலங்களில் எந்தவித
நடவடிக்கையும் எடுக்காத நிலையில் இவ்விற்பனை நிலையம் இயங்கி வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8ace3063-89b3-4c13-8098-12e30a7bbe2c/26-6a557b41053e5.webp' /></p><p>இந்நிலையில், விசேட டெங்கு ஒழிப்பு
நடவடிக்கையின் போது கிராம அபிவிருத்திச் சங்கத்தினர் மற்றும் பொலிஸார் இணைந்து
டெங்கு ஒழிப்பு வேலைத் திட்டத்தை முன்னெடுத்த போது சுகாதார சீர்கேட்டுடன்
குறித்த கோழி இறைச்சிக் கடை இயங்கி வைத்தமை தெரிய வந்துள்ளது.
</p><p>குறித்த இறைச்சிக்கடை தொடர்பில் சுகாதார
பரிசோதகர்கள் உடனடியாக நடவடிக்கை எடுத்து நீதிமன்றத்தின் ஊடாக சட்ட நடடிக்கை
எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரியுள்ளனர்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-13T23:56:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ்ப்பாணம் சிறைச்சாலையின் மேல் வட்டமிட்ட ட்ரோன்! ஒருவர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/man-arrested-for-flying-drone-over-jaffna-prison-1783986709"></link>
            <id>https://ibctamil.com/article/man-arrested-for-flying-drone-over-jaffna-prison-1783986709</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் சிறைச்சாலையின் மேலே ட்ரோனைப் பறக்கவிட்ட நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் சிறைச்சாலையின் மேலே நேற்று (13-07-2026) மாலை 5...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் சிறைச்சாலையின் மேலே ட்ரோனைப் பறக்கவிட்ட நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
யாழ்ப்பாணம் சிறைச்சாலையின் மேலே நேற்று (13-07-2026) மாலை 5 மணியளவில் அடையாளம் காணப்படாத ட்ரோன் ஒன்று சில நிமிடங்கள் வட்டமிட்டுள்ளது.</p><p>

இந்த நிலையில், ட்ரோனை அவதானிப்பதற்குள் அது அங்கிருந்து அகன்றதால் பெரும் பரபரப்பு நிலவியுள்ளது.</p><p>
</p><p></p><h2>கண்காணிக்க அனுமதி&nbsp;</h2><p>இதேநேரம், இந்த ட்ரோனை இயக்கியவர்கள் தொடர்பில் கண்டறியுமாறு சிறைச்சாலை நிர்வாகத்தால் உடனடியாக யாழ்ப்பாணம் காவல்துறையினரின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டதோடு சிறைப் பாதுகாப்பும் உஷார் செய்யப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1b0bb23b-4ede-47b2-8ea6-e392b5cee61c/26-6a557a16aeb30.webp' /></p><p>இதன்பின்பு இடம்பெற்ற தேடுதலின்போது வீதி அபிவிருத்தி அதிகார சபையால் அமைக்கப்படும் பாலங்கள் தொடர்பில் கண்காணிப்பதற்காக அனுமதிக்கப்பட்ட ட்ரோன் அது எனக் கண்டறியப்பட்டுள்ளது.</p><p>

பாலங்களைக் கண்காணிக்க அனுமதி பெறப்பட்டபோதும் சிறைச்சாலையின் மேலால் இயக்கியமைக்காக ட்ரோனை இயக்கியவர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-13T23:52:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[காபி அதிகமாக குடித்தால் இவ்வளவு பிரச்சினைகள் வருமா? அவசியம் தெரிஞ்சுக்கோங்க]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/too-much-coffee-health-risks-you-should-know-1783985629"></link>
            <id>https://jvpnews.com/article/too-much-coffee-health-risks-you-should-know-1783985629</id>
            <summary type="text">காலை எழுந்தவுடன் ஒரு கப் காபி குடிப்பது பலரின் அன்றாட பழக்கமாகிவிட்டது. காபியில் உள்ள கஃபீன் சோர்வை குறைத்து, புத்துணர்ச்சி அளித்து, கவனத்தை அதிகரிக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">காலை எழுந்தவுடன் ஒரு கப் காபி குடிப்பது பலரின் அன்றாட பழக்கமாகிவிட்டது. காபியில் உள்ள கஃபீன் சோர்வை குறைத்து, புத்துணர்ச்சி அளித்து, கவனத்தை அதிகரிக்கிறது. </p><p style="text-align: justify; ">ஆனால், அளவுக்கு மீறி காபி அருந்துவது உடல்நலத்திற்கு பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/411af053-c082-40fb-bcd3-c11d1a38f3d3/26-6a5575df311d6.webp' /></p><p>


</p><p style="text-align: justify; "><b>தூக்கமின்மை மற்றும் மனஅழுத்தம்:
</b>காபியில் உள்ள கஃபீன் நரம்பு மண்டலத்தைத் தூண்டுகிறது. குறிப்பாக மாலை அல்லது இரவு நேரங்களில் அதிகமாக காபி குடித்தால் தூக்கம் வராமல் போகலாம். தொடர்ந்து தூக்கமின்மை ஏற்பட்டால் மனஅழுத்தம், பதட்டம், எரிச்சல் போன்ற பிரச்சனைகள் உருவாகும்.
</p><p style="text-align: justify; "><b>&nbsp;இதயத் துடிப்பு அதிகரிப்பு:
</b>அதிக அளவில் காபி அருந்துவது இதயத் துடிப்பை வேகப்படுத்தலாம். சிலருக்கு இதயப் படபடப்பு, ரத்த அழுத்த உயர்வு போன்ற பிரச்சனைகள் ஏற்படக்கூடும். ஏற்கனவே இதய நோய் அல்லது உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் காபி அருந்துவதில் கவனம் செலுத்த வேண்டும்.
</p><p style="text-align: justify; "><b>வயிறு மற்றும் செரிமானக் கோளாறுகள்:
</b>காபி வயிற்றில் அமிலச் சுரப்பை அதிகரிக்கிறது. இதனால் நெஞ்செரிச்சல், அமிலத்தன்மை, வயிற்று வலி, செரிமானக் கோளாறுகள் போன்றவை ஏற்படலாம். வெறும் வயிற்றில் காபி குடிப்பது இந்தப் பாதிப்புகளை மேலும் அதிகரிக்கலாம்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ca1d4186-8ec4-47ea-b89d-01a87ceb3492/26-6a5575dfdb754.webp' /></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; "><b>&nbsp;எலும்பு ஆரோக்கியம் பாதிப்பு:
</b>அளவுக்கு அதிகமாக காபி குடிப்பதால் உடலில் இருந்து கால்சியம் வெளியேறும் அளவு அதிகரிக்கலாம். நீண்ட காலத்தில் இது எலும்பு அடர்த்தியைக் குறைத்து, குறிப்பாக பெண்களுக்கு எலும்பு பலவீனம் மற்றும் எலும்பு முறிவு அபாயத்தை அதிகரிக்கலாம்.
</p><p style="text-align: justify; "><b>அடிமைத்தன்மை:
</b>தினமும் பல முறை காபி குடிக்கும் பழக்கம் கஃபீன் சார்புநிலையை உருவாக்கலாம். திடீரென காபியை நிறுத்தினால் தலைவலி, சோர்வு, கவனக்குறைவு, எரிச்சல் போன்ற அறிகுறிகள் தோன்றலாம்.
</p><p style="text-align: justify; "><b>கர்ப்பிணிப் பெண்களுக்கு கூடுதல் கவனம்:
</b>கர்ப்ப காலத்தில் அதிக கஃபீன் உட்கொள்வது கருவின் வளர்ச்சியை பாதிக்கும் அபாயத்தை அதிகரிக்கலாம். எனவே கர்ப்பிணிகள் மருத்துவரின் ஆலோசனைப்படி மட்டுப்படுத்தப்பட்ட அளவில் மட்டுமே காபி அருந்துவது நல்லது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d3c1e50c-fcdd-4ece-afee-7ee4c5111a40/26-6a5575e096271.webp' /></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; "><b>கவலை மற்றும் பதட்டம் அதிகரிப்பு:
</b>ஏற்கனவே கவலைக் கோளாறு உள்ளவர்களுக்கு அதிக கஃபீன் உட்கொள்வது பதட்டம், கைகள் நடுக்கம், வியர்வை, மன அமைதியின்மை போன்ற அறிகுறிகளை மோசமாக்கலாம்.</p><p style="text-align: justify; "><b>&nbsp;நீரிழப்பு ஏற்படும் வாய்ப்பு:</b>
காபி லேசான சிறுநீர் பெருக்கும் தன்மை கொண்டது. அதிக அளவில் காபி மட்டுமே குடித்து, போதுமான தண்ணீர் குடிக்காமல் இருந்தால் சிலருக்கு நீரிழப்பு ஏற்படும் வாய்ப்பு உள்ளது.
</p><p style="text-align: justify; ">பெரும்பாலான ஆரோக்கியமான பெரியவர்களுக்கு ஒரு நாளுக்கு 400 மில்லிகிராம் கஃபீன் (சுமார் 3–4 கப் சாதாரண காபி) வரை பொதுவாக பாதுகாப்பானதாகக் கருதப்படுகிறது. ஆனால் வயது, உடல்நிலை, கர்ப்பம், பயன்படுத்தும் மருந்துகள் போன்ற காரணிகளைப் பொறுத்து இந்த அளவு மாறுபடலாம்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-13T23:33:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ். பல்கலையின் முன்னாள் பேராசிரியர் ரகுராம் தொடர்ந்த வழக்கு - நீதிமன்று விடுத்த உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/case-filed-professor-raghuram-court-respondents-1783984545"></link>
            <id>https://tamilwin.com/article/case-filed-professor-raghuram-court-respondents-1783984545</id>
            <summary type="text">யாழ்ப்பாண பல்கலைக்கழக கழக முன்னாள் கலைப்பீடாதிபதி பேராசிரியர்
சிவசுப்பிரமணியம் தொடர்பில் சமூக ஊடகங்களில் அவதூறு பரப்பினார்கள் என
தொடரப்பட்ட வழக்கில்...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாண பல்கலைக்கழக கழக முன்னாள் கலைப்பீடாதிபதி பேராசிரியர்
சிவசுப்பிரமணியம் தொடர்பில் சமூக ஊடகங்களில் அவதூறு பரப்பினார்கள் என
தொடரப்பட்ட வழக்கில், எதிர்மனுதாரர்களின் அவதூறு கூற்றுகளை அகற்ற வேண்டும்
என நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.
</p><p>
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் முன்னாள் கலைப்பீடாதிபதியான சிவசுப்பிமணியம்
ரகுராம் தன்னை துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியதாக முன்னாள் பல்கலைக்கழக
மாணவியும் இரண்டு வருட காலமாக தற்காலிக உதவி விரிவுரையாளராகவும் கடமையாற்றிய
பெண் ஒருவர் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவிற்கு முறைப்பாடு செய்தனர்.&nbsp;</p><p>அதை அடுத்து, பல்கலைக்கழக மட்டத்தில் விசாரணை குழு அமைக்கப்பட்டு விசாரணைகள்
முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.</p><p></p><h2>முன்னெடுக்கப்படும் விசாரணைகள் </h2><p>
</p><p>இதற்கிடையில், முன்னாள் கலைப்பீடாதிபதி சிவசுப்ரமணியம் ரகுராம் குறித்த
முன்னாள் மாணவியுடன் உரையாடிய தொலைபேசி ஒலிப்பதிவு என சில ஒலிப்பதிவுகள்
டிக்டோக் தளம் மற்றும் முகநூல்களில் பகிரப்பட்டன. அதன் அடிப்படையில் சிலரால் முகநூல்களிலும் யூடியூப் தளத்திலும் கருத்துக்கள்
பகிரப்பட்டன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7c9d7f57-6029-47e3-bdd4-a0494d3f7946/26-6a55747ddc4dc.webp' /></p><p>
இந்நிலையிலையே, பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில், நிகழ்நிலை காப்பு
சட்டத்தின் பிரிவு 20இன் கீழ் யாழ்ப்பாண பல்கலைக்கழக முன்னாள் கலைப்பீடாதிபதி
சிவசுப்பிரமணியம் ரகுராமால் கடந்த முதலாம் திகதி, தன் மீது குற்றச்சாட்டை
முன்வைத்துள்ள மாணவி, அவரது நண்பியான முன்னாள் மாணவி, யாழ்ப்பாண பல்கலைக்கழக
துணைவேந்தர், ஆகியோருடன் இணைய இடையீட்டாளர்களாக யூடியூப், டிக்டொக்,
பேஸ்புக் ஆகியவை மனுதாரர் தொடர்பிலான தடை செய்யப்பட்ட கூற்றுக்களை
பிரசுரித்தமைக்கு எதிராக என 14 பேரை எதிர் மனு தரர்களாக குறிப்பிட்டு வழக்கு
பதிவு செய்யப்பட்டுள்ளது.</p><p>குறித்த வழக்கு நேற்றைய தினம் திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட
போது, முதலாம், மூன்றாம், நான்காம், ஐந்தாம், ஆறாம் எதிர் மனுதாரர்கள் சமூக
வலைத்தளங்களில் பேராசிரியர் ரகுராம் தொடர்பாக, பதிவிட்ட
அவதூறான பதிவுகளை அகற்றுவதோடு, இது சம்பந்தப்பட்ட எந்த விடயத்தையும் எந்த ஒரு
சமூக வலைத்தளங்களில் பதிவு செய்யக்கூடாது என இடைக்கால கட்டளையிட்டது.
</p><p>
அத்துடன் எதிர்மனுதாரர்களுக்கு அழைப்பாணை அனுப்ப கட்டளையிட்ட மன்று, எதிர்
மனுதரர்களின் காரணங்காட்டுதலுக்காக வழக்கு விசாரணையை எதிர்வரும் 27ஆம்
திகதிக்கு மன்று
திகதியிட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-13T23:29:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஏவுகணைகளிலிருந்து ஐரோப்பாவைப் பாதுகாக்க... அமைந்த 10 நாடுகள் கூட்டணி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/coalition-protect-europe-from-1783977410"></link>
            <id>https://news.lankasri.com/article/coalition-protect-europe-from-1783977410</id>
            <summary type="text">ஐரோப்பாவை பாலிஸ்டிக் ஏவுகணைகளிலிருந்து பாதுகாக்க ஒரு கூட்டணியை அமைப்பதாக உக்ரைனும் மேலும் ஒன்பது நாடுகளும் திங்களன்று அறிவித்துள்ளன.தற்காப்பு கட்டமைப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஐரோப்பாவை பாலிஸ்டிக் ஏவுகணைகளிலிருந்து பாதுகாக்க ஒரு கூட்டணியை அமைப்பதாக உக்ரைனும் மேலும் ஒன்பது நாடுகளும் திங்களன்று அறிவித்துள்ளன.</p><h2>தற்காப்பு கட்டமைப்பு</h2><p>
</p><p>நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக வல்லரசு ரஷ்யாவின் முழு அளவிலான படையெடுப்பை எதிர்த்துப் போராடி வரும் உக்ரைனின் அனுபவத்தைப் பயன்படுத்தவும் முடிவு.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c206f106-1bc2-441b-85ab-077dc8ce0c43/26-6a5558e3e136d.webp' /></p><p>ஐரோப்பாவிற்காக ஒரு பகிரப்பட்ட பாலிஸ்டிக் ஏவுகணை பாதுகாப்புத் திறனை உருவாக்குவதே எங்கள் இலக்கு என்று, பாரிஸில் உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கியுடன் நடந்த பேச்சுவார்த்தையின்போது அந்த 10 நாடுகளும் ஓர் அறிக்கையில் தெரிவித்தன. </p><p>தனது நாட்டைத் தாக்கிச் சிதைத்து, ஐரோப்பாவின் பிற பகுதிகள் மீது குறிவைத்து அச்சத்தை ஏற்படுத்தியுள்ள ரஷ்யாவின் ஏவுகணைத் தாக்குதல்களை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகளை உருவாக்குவதில் உதவுமாறு, ஜெலென்ஸ்கி இருபத்து நான்கு தலைவர்களிடம் கோரிக்கை வைத்திருந்தார். </p><p>இந்த நிலையில், குரூஸ் ஏவுகணைகள் அல்லது ட்ரோன்களைக் காட்டிலும் இடைமறித்துத் தடுப்பதற்கு மிகவும் கடினமான பாலிஸ்டிக் ஏவுகணைகளால் ஏற்படும் வளர்ந்து வரும் அச்சுறுத்தலைத் தாங்கள் அங்கீகரிப்பதாக ஜெலென்ஸ்கியும் டென்மார்க், பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, நார்வே, ஸ்பெயின், ஸ்வீடன் மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகளின் தலைவர்களும் தெரிவித்தனர்.</p><p></p><p> </p><p>மேலும், எதிர்கால ஏவுகணை அச்சுறுத்தல்களைத் தடுத்து முறியடிக்க, ஒருங்கிணைந்த ஏவுகணைத் தற்காப்பு கட்டமைப்பு வடிவிலான ஒரு விரிவான தீர்வு ஐரோப்பாவைப் பாதுகாப்பதற்கு அவசியமென நாங்கள் நம்புகிறோம் என்று அந்த அறிக்கையில் 10 தலைவர்களும் தெரிவித்துள்ளனர்.</p><h2>தனித்துவமான அனுபவம்</h2><p> </p><p>மட்டுமின்றி, ரஷ்யா தொடுத்த ஆக்கிரமிப்புப் போருக்கு எதிரான தற்காப்பு நடவடிக்கைகளின் மூலம் உக்ரைன் பெற்ற தனித்துவமான அனுபவத்தை நாங்கள் அங்கீகரிக்கிறோம் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர். </p><p>ஆனால், பாதுகாப்பு அமைப்பை நிறுவுவதற்கான காலக்கெடு எதுவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை; மேலும், இத்திட்டத்தில் பிற நாடுகளும் இணைய வாய்ப்புள்ளது என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ba4ff7b1-abdc-425a-a4d6-2287041d0c1b/26-6a5558e4ae87e.webp' /></p><p>
</p><p>இதனிடையே, பரவலான எரிபொருள் தட்டுப்பாட்டை ஏற்படுத்திய சுத்திகரிப்பு நிலையங்கள், எண்ணெய்க் கப்பல்கள் மற்றும் முனையங்கள் மீதான உக்ரைனின் சமீபத்திய தொலைதூரத் தாக்குதல்களுக்குக் கடுமையான பதிலடி கொடுக்கப்போவதாக, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் திங்களன்று அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.</p><p>மேலும், அவர்கள் ரஷ்யப் பிரதேசத்தைத் தாக்க முயற்சிக்கும் ஒவ்வொரு இடத்திலும், நாங்கள் அதேபோல் பதிலடி கொடுப்போம், ஆனால் எங்கள் தாக்குதல்கள் பல மடங்கு சக்தி வாய்ந்ததாக இருக்கும் என்று புடின் கூறியுள்ளார். </p><p>இந்த நிலையில், ஐரோப்பிய வெளிவிவகார அமைச்சர்கள் பிரஸ்ஸல்ஸில் தனியாகச் சந்தித்து, உக்ரைனின் தேவைகள் மற்றும் ஐரோப்பியக் கண்டத்திற்கு ரஷ்யா விடுக்கும் அச்சுறுத்தல்கள் குறித்து விவாதித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/402ae082-d69c-4b3f-9b35-d920f527b604/26-6a5558e55f0ed.webp' /></p><p> </p><p>குளிர்காலத்திற்கு முன்னதாக, தனது வான் பாதுகாப்பு அமைப்புகளை மேம்படுத்துவதற்காக ஐரோப்பிய நாடுகளுடனான முயற்சிகளைத் துரிதப்படுத்த ஜெலென்ஸ்கி தீவிரமாக உள்ளார். </p><p>அக்குளிர்காலத்தில் உக்ரேனியர்களுக்கு மின்சாரம், வெப்பம் மற்றும் தண்ணீர் கிடைப்பதைத் தடுப்பதற்காக ரஷ்யா வழக்கமாகத் தனது தாக்குதல்களைத் தீவிரப்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-13T23:22:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரான் துறைமுகங்களில் அமெரிக்க கடற்படை முற்றுகை ; மீண்டும் தொடரும் பதற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/us-navy-tightens-blockade-near-iranian-ports-1783984606"></link>
            <id>https://canadamirror.com/article/us-navy-tightens-blockade-near-iranian-ports-1783984606</id>
            <summary type="text">ஈரான் துறைமுகங்கள் மற்றும் கரையோரப் பகுதிகளுக்குச் செல்லும் அல்லது அங்கிருந்து வரும் கப்பல்களைக் கட்டுப்படுத்தும் வகையில், அமெரிக்கா மீண்டும் கடற்படை ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரான் துறைமுகங்கள் மற்றும் கரையோரப் பகுதிகளுக்குச் செல்லும் அல்லது அங்கிருந்து வரும் கப்பல்களைக் கட்டுப்படுத்தும் வகையில், அமெரிக்கா மீண்டும் கடற்படை முற்றுகையை அமுல்படுத்த உள்ளதாக அமெரிக்க மத்திய கட்டளை மையம் (CENTCOM) உறுதிப்படுத்தியுள்ளது.
</p><p>
முற்றுகை விதிமுறைகளை மீறாத அனைத்து வணிக மற்றும் மனிதாபிமான உதவி வழங்கும் கப்பல்களின் போக்குவரத்திற்கு அமெரிக்க இராணுவம் தொடர்ந்து ஆதரவு அளிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/63543edb-9ee3-491e-81bc-922e3044a0ac/26-6a5571e067e0f.webp' /></p><p>
</p><p>
ஏற்கனவே கடந்த ஏப்ரல் 13 முதல் ஜூன் 18 வரை இந்த முற்றுகை அமுலில் இருந்தது.
</p><p>
அந்த இரண்டு மாத காலத்தில், சுமார் 140 கப்பல்கள் வழிகாட்டப்பட்டு, விதிமுறைகளை மீறிய 9 கப்பல்கள் முடக்கப்பட்டன. மேலும், 50க்கும் மேற்பட்ட மனிதாபிமான உதவி வழங்கும் கப்பல்கள் அனுமதிக்கப்பட்டன.</p><p>
ஈரான் மீதான இந்த இராணுவ மற்றும் பொருளாதார அழுத்தமானது, பிராந்தியத்தில் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளதாக சர்வதேச அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-07-13T23:16:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[எலான் மஸ்க் நெருக்கடியில்... சரியும் பங்கு விலை: குறையும் சொத்து மதிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/musk-net-worth-drops-1783984567"></link>
            <id>https://news.lankasri.com/article/musk-net-worth-drops-1783984567</id>
            <summary type="text">ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் பங்குகள் அவற்றின் ஆதாயங்களை இழந்து, பொதுப் பங்கு வெளியீட்டு விலையை நெருங்கிச் சரிந்ததால், எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு 900 ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் பங்குகள் அவற்றின் ஆதாயங்களை இழந்து, பொதுப் பங்கு வெளியீட்டு விலையை நெருங்கிச் சரிந்ததால், எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு 900 பில்லியன் டொலருக்கும் கீழே குறைந்தது.</p><h2>சமீபத்திய சரிவு</h2><p>
</p><p>திங்கட்கிழமை பிற்பகல் நிலவரப்படி, ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் பங்குகள் 4.45 சதவீதம் சரிந்து, அதன் 135 டொலர் ஐபிஓ விலையை நெருங்கி, 140 டொலருக்கு சற்றுக் குறைவாக இருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0622bfb3-b03b-4cc4-bc89-2def620cd065/26-6a5572c9d3e69.webp' /></p><p> </p><p>செயற்கை நுண்ணறிவு மற்றும் ராக்கெட் தொழில்நுட்ப நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸ், கடந்த மாதம் அமெரிக்கப் பங்குச் சந்தையில் 75 பில்லியன் டொலர் நிதியைத் திரட்டி அமோகமான அறிமுகத்தைக் கண்டது. </p><p>இந்த நிலையில், ஃபோர்ப்ஸின் நிகழ்நேரப் பில்லியனர்கள் பட்டியலில் உள்ள தரவுகளின்படி, ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனப் பங்கின் விலையில் ஏற்பட்ட சமீபத்திய சரிவு மஸ்க்கின் நிகர சொத்து மதிப்பில் சுமார் 37 பில்லியன் டொலரைக் குறைத்து, அவரது மொத்த சொத்து மதிப்பை 882.7 பில்லியன் டொலராக மாற்றியுள்ளது. </p><p>ஜூன் 12, 2026 அன்று பொதுப் பங்குச் சந்தையில் நுழைந்த பிறகு, ஸ்பேஸ்எக்ஸ் மிகப்பெரிய வளர்ச்சியைப் பதிவு செய்தது. சுமார் 1.8 டிரில்லியன் டொலர் மதிப்பீட்டுடன் அறிமுகமான இந்நிறுவனத்தின் மதிப்பு விரைவாக 2.7 டிரில்லியன் டொலருக்கும் அதிகமாக உயர்ந்தது; இதனால் சந்தை மதிப்பு அடிப்படையில் அமேசான் மற்றும் மைக்ரோசாஃப்ட் ஆகிய நிறுவனங்களை விடவும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் சிறிது காலம் அதிக மதிப்புடையதாகத் திகழ்ந்தது.</p><p></p><p> </p><p>டெஸ்லா மற்றும் எக்ஸ் ஆகிய நிறுவனங்களையும் வழிநடத்தும் மஸ்க், ஜூன் 16 அன்று உலகின் முதல் டிரில்லியன் டொலர் செல்வந்தராக உயர்ந்தார்; அன்று ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனப் பங்குகள் 225 டொலருக்கும் அதிகமாக உயர்ந்து சாதனை படைத்ததன் மூலம், அவரது மொத்த சொத்து மதிப்பு 1.45 டிரில்லியன் டொலராக அதிகரித்தது.</p><h2>பெரும்பாலும் நம்பிக்கை</h2><p> </p><p>அப்போதிலிருந்து ஸ்பேஸ்எக்ஸ் பங்கின் விலை 38 சதவீதத்திற்கும் அதிகமாகக் குறைந்துள்ளதால், அவரது சொத்து மதிப்பும் பெருமளவு சரிந்துள்ளது.</p><p> அவரது சொத்து மதிப்பு கணிசமாகக் குறைந்திருந்தாலும், உலகின் மிகப் பெரிய பணக்காரர் என்ற இடத்தைத் தொடர்ந்து மஸ்க் தக்கவைத்துள்ளார்; இவருக்கு அடுத்தபடியாக, முறையே 290.7 பில்லியன் மற்றும் 268.1 பில்லியன் டொலர் சொத்து மதிப்பைக் கொண்ட கூகுள் நிறுவனத்தின் இணை நிறுவனர்களான லாரி பேஜ் மற்றும் செர்ஜி பிரின் ஆகியோர் உள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/be56768d-1dd4-4a3f-bcd0-77ead61eb369/26-6a5572caca0ab.webp' /></p><p> </p><p>
சமீபத்திய வாரங்களில் ஸ்பேஸ்எக்ஸ் பங்குகளின் ஏற்றம் வேகம் குறைந்தபோதிலும், வால் ஸ்ட்ரீட் அந்தப் பங்கின் மீது பெரும்பாலும் நம்பிக்கையுடன் இருப்பதாக ஃபோர்ப்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. </p><p>ரேமண்ட் ஜேம்ஸ் 800 டொலர் என்ற விலை இலக்கை நிர்ணயித்துள்ளது; இது 10 டிரில்லியன் டொலருக்கும் அதிகமான சந்தை மதிப்பைக் குறிக்கிறது.</p><p> FactSet தரவுகளின்படி, ஸ்பேஸ்எக்ஸ் பங்குகளின் மதிப்பு சராசரியாக 236 டொலராக இருக்கும் என்று தரகர்கள் எதிர்பார்க்கின்றனர்; இதில் Arete Research 401 டொலர், Morgan Stanley 300 டொலர் மற்றும் Goldman Sachs 205 டொலர் ஆகிய இலக்கு விலைகளை நிர்ணயித்துள்ளன.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-13T23:14:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[புலிகளுடனான போரில் மக்கள் தாக்கப்பட்டது போல நீர்கொழும்பு சிறையில் தாக்கப்பட்ட கைதிகள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/negombo-prison-riot-intelligence-failure-1783983485"></link>
            <id>https://ibctamil.com/article/negombo-prison-riot-intelligence-failure-1783983485</id>
            <summary type="text">நீர்கொழும்பு சிறைச்சாலைத் தாக்குதலால் ஏற்பட்ட அழிவுகள் புலனாய்வுத்துறையின் தோல்வியால் என அரசியல் ஆய்வாளர் அரூஸ் தெரிவித்துள்ளார்.

லங்காசிறியின் ஊடற...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீர்கொழும்பு சிறைச்சாலைத் தாக்குதலால் ஏற்பட்ட அழிவுகள் புலனாய்வுத்துறையின் தோல்வியால் என அரசியல் ஆய்வாளர் அரூஸ் தெரிவித்துள்ளார்.</p><p>

லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
</p><p>
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் பொதுமக்களை எவ்வாறு இராணுவம் தாக்கியதோ அவ்வாறு கண்மூடித்தனமாகத் தாக்கியுள்ளனர்.
</p><p>
இதனால் தான் இவ்வளவு பேர் இந்த கலவரத்தில் இறந்துள்ளனர்” என அவர் தெரிவித்துள்ளார்.
</p><p>
மேலும், தாக்குதலின் பின்னணி, தற்போதைய அரசியல் களம் மற்றும் பலதரப்பட்ட விடயங்கள் தொடர்பில் அவர் தெரிவித்த கருத்துக்களுடன் வருகின்றது லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சி...</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/nVxJ9EwKYpI" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-13T22:59:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழ் பேசும் மக்களின் ஆறு கட்சிகள் பேரினவாதத்துக்கு எதிராக ஓரணியில்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/tamil-parties-united-for-tamil-people-1783983315"></link>
            <id>https://tamilwin.com/article/tamil-parties-united-for-tamil-people-1783983315</id>
            <summary type="text">நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் பேசும் மக்களின் ஆறு
கட்சிகள் பேரினவாதத்துக்கு எதிராக ஒன்றுபட்டு செயற்படுவதற்காக ஒரே மேடையில்
அணிதிர...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் பேசும் மக்களின் ஆறு
கட்சிகள் பேரினவாதத்துக்கு எதிராக ஒன்றுபட்டு செயற்படுவதற்காக ஒரே மேடையில்
அணிதிரண்டுள்ளன. </p><p>இது பற்றிய உத்தியோகபூர்வ அறிவிப்பை ஆறு கட்சிகளினதும்
தலைவர்கள் நேற்று மதியம் கொழும்பு - பம்பலப்பிட்டி ரேணுகா ஹோட்டலில் நடைபெற்ற
ஊடகவியலாளர் மாநாட்டில் ஒரே மேசையிலிருந்து வெளியிட்டனர்.</p><p>
</p><p>
இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாத் பதியுதீன் எம்.பி., அமீர் அலி,
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் எம்.பி., அதன் செயலாளர்
ஜனாதிபதி சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் எம்.பி., இலங்கைத் தொழிலாளர்
காங்கிரஸின் தலைவர் ஜீவன் தொண்டமான் எம்.பி., தமிழ் முற்போக்குக் கூட்டணியின்
தலைவர் மனோ கணேசன் எம்.பி., இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர்
ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின்
தலைவர்களில் ஒருவரான செல்வம் அடைக்கலநாதன் எம்.பி. மற்றும் அதன் உபதலைவர்
சுரேந்திரன் குருசாமி ஆகியோர் ஒரே மேடையில் இருந்து இந்த அறிவிப்பை நேற்று விடுத்தனர்.</p><p></p><h2>பொதுவான பிரச்சினைகள்&nbsp;</h2><p>

இதனையொட்டி ஆறு கட்சிகளும் ஒன்று சேர்ந்து தமிழ் பேசும் அரசியல் கட்சிகள்
பொதுவான விடயங்களில் இணைந்து செயற்பட பொது தளத்தை உருவாக்க இணக்கம் என்ற
தலைப்பில் இன்று வெளியிட்ட கூட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பவை
வருமாறு, "இன்று சந்தித்த தமிழ் பேசும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், தமது
சமூகங்கள் எதிர்கொள்ளும் பொதுவான பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடவும்,
கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளவும், இணக்கப்பாட்டை உருவாக்கவும் பொதுவான
தளமொன்றை உருவாக்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2fab9f02-8dad-419c-b04e-f17a9c27696c/26-6a556dc4eef4b.webp' /></p><p>
</p><p>
ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் தமது கொள்கை மற்றும் அரசியல் நிலைப்பாடுகளை
தனித்தனியாக பேணுவதற்கும் முன்வைப்பதற்கும் சுதந்திரம் இருப்பதை ஏற்றுக்கொண்ட
பிரதிநிதிகள், பொதுவான நலன்கள் காணப்படும் விடயங்களை அடையாளம் கண்டு,
சாத்தியமான சந்தர்ப்பங்களில் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான ஒரு
பொறிமுறையாக இந்த தளம் அமையும் எனத் தெரிவித்தனர். இதன்போது மூன்று முக்கிய விடயங்கள் தொடர்பில் இணக்கப்பாடு எட்டப்பட்டது.&nbsp;</p><p>அரசு தனது தேர்தல் விஞ்ஞாபனத்தின் ஊடாக புதிய அரசமைப்பை அறிமுகப்படுத்துவதாக
வழங்கிய உறுதிமொழியை பிரதிநிதிகள் சுட்டிக்காட்டினர்.
</p><p>
அந்த உறுதிமொழியை நிறைவேற்றுமாறு அரசிடம் ஒருமித்த கோரிக்கையொன்றை முன்வைக்கத்
தீர்மானிக்கப்பட்டதுடன், புதிய அரசமைப்பு நீதியும், சமத்துவமும், அர்த்தமுள்ள
அதிகாரப் பகிர்வும் உறுதி செய்யப்படும் வகையில் அதிகபட்ச அதிகாரப் பகிர்வை
உள்ளடக்கியதாக அமைய வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.</p><p></p><h2>மாகாண சபைத் தேர்தல்கள்&nbsp;</h2><p>மாகாண சபைத் தேர்தல்கள் ஒரு வருட காலத்துக்குள் நடத்தப்படும் என அரசு
தெரிவித்திருந்த போதிலும், தொடர்ச்சியாக இடம்பெறும் தாமதங்கள் குறித்து
பிரதிநிதிகள் கவலை வெளியிட்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/05c4861b-3a6f-4e86-a038-f19371fc2db4/26-6a556dc5a57a1.webp' /></p><p>
</p><p>
மேலும், ஜனநாயகப் பங்கேற்பையும் பிராந்திய பிரதிநிதித்துவத்தையும் உறுதி
செய்வதற்காக மாகாண சபைத் தேர்தல்களை மேலும் தாமதமின்றி நடத்துமாறு ஒருமித்த
கோரிக்கை முன்வைக்கப்பட்டது.</p><p>நாட்டின் மூன்று சமூகங்களையும் பாதிக்கும் தீவிரமான காணி தொடர்பான
பிரச்சினைகள் தொடர்ந்தும் காணப்படுவதாகப் பிரதிநிதிகள் ஏற்றுக்கொண்டனர்.</p><p>

இந்த நீண்டகால பிரச்சினைகளுக்கு பாதிக்கப்பட்ட சமூகங்களுடன் அர்த்தமுள்ள
கலந்துரையாடல்களை முன்னெடுத்து, நியாயமான மற்றும் நிலையான தீர்வுகளை வழங்க
வேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்பட்டது.
</p><p>
இந்த பொதுத் தளத்தின் ஊடாக தொடர்ச்சியான உரையாடல்களை முன்னெடுப்பதற்கான
உறுதிப்பாட்டை பிரதிநிதிகள் மீண்டும் தெரிவித்தமையுடன், இந்த விடயங்களில்
பொதுவான அணுகுமுறையொன்றை உருவாக்குவது நல்லிணக்கம், ஜனநாயக ஆட்சி மற்றும்
அனைத்து சமூகங்களினதும் உரிமைகளை பாதுகாப்பதற்கு பங்களிக்கும் என நம்பிக்கை
வெளியிட்டனர்" என்றுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-13T22:59:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஏன் எனக்கு குடும்பம் இல்லையா? நான் கொஞ்சம் ஒப்பனா பேசிடுவேன்.. நடிகர் அருள்நிதி Thug Life Interview]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/arulnithi-thug-life-interview-1783982727"></link>
            <id>https://cineulagam.com/article/arulnithi-thug-life-interview-1783982727</id>
            <summary type="text">நடிகர் அருள்நிதி உடன் exclusive interview இதோ. அவர் பல விஷயங்கள் பற்றி வெளிப்படையாக பேசி இருக்கும் முழு பேட்டியை பாருங்க.

அவர் நடித்த அருள்வான் படம...</summary>
            <content type="html"><![CDATA[<p>நடிகர் அருள்நிதி உடன் exclusive interview இதோ. அவர் பல விஷயங்கள் பற்றி வெளிப்படையாக பேசி இருக்கும் முழு பேட்டியை பாருங்க.
</p><p>
அவர் நடித்த அருள்வான் படம் எப்படி இருக்கிறது. அந்த படம் உருவான விதம் பற்றியும் பல விஷயங்களை அவர் பேசி இருக்கிறார். அந்த படத்தில் ரம்யா பாண்டியன், ஆரவ் உள்ளிட்டோரும் நடித்திருக்கின்றனர்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/EMhdkmb90zA" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-07-13T22:45:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[சென்னையில் புது வீடு வாங்கிய ஸ்ருதி ஹாசன்.. எப்படி இருக்கு பாருங்க]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/shruti-haasan-new-house-in-chennai-house-warming-1783982450"></link>
            <id>https://cineulagam.com/article/shruti-haasan-new-house-in-chennai-house-warming-1783982450</id>
            <summary type="text">ஸ்ருதி ஹாசன் தற்போது முக்கிய நடிகையாக தொடர்ந்து வலம் வருகிறார். நடிகை, பாடகி என பல திறமைகளை அவர் தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறார்.இந்நிலையில் ஸ்ருதி ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஸ்ருதி ஹாசன் தற்போது முக்கிய நடிகையாக தொடர்ந்து வலம் வருகிறார். நடிகை, பாடகி என பல திறமைகளை அவர் தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறார்.</p><p>இந்நிலையில் ஸ்ருதி ஹாசன் சென்னையில் புது வீடு வாங்கி இருக்கிறார். அதன் கிரஹப்ரவேசம் நேற்று நடைபெற்று இருக்கிறது.
</p><p>அவரது தோழிகள் மட்டுமே அவர் உடன் அந்த நிகழ்ச்சியில் இருக்கின்றனர். அந்த புகைப்படங்களை வெளியாகி இருக்கும் நிலையில் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-13T22:41:06+00:00</updated>
        </entry>
    </feed>
