<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-07-16T18:49:32+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[மகாநதி சீரியல் நடிகை ஷதிகாவின் லேட்டஸ்ட் கலக்கல் போட்டோஸ்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/serial-actress-shathiga-latest-insta-photos-1783691747"></link>
            <id>https://cineulagam.com/article/serial-actress-shathiga-latest-insta-photos-1783691747</id>
            <summary type="text">மகாநதிசமீபத்தில் சின்னத்திரை ரசிகர்களுக்கு சோகத்தை கொடுத்த ஒரு செய்தி என்றால் அது விஜய் டிவியில் ஒளிபரப்பான மகாநதி சீரியல் முடியப்போகும் விஷயம் தான்.&amp;...</summary>
            <content type="html"><![CDATA[<h2>மகாநதி</h2><p>சமீபத்தில் சின்னத்திரை ரசிகர்களுக்கு சோகத்தை கொடுத்த ஒரு செய்தி என்றால் அது விஜய் டிவியில் ஒளிபரப்பான மகாநதி சீரியல் முடியப்போகும் விஷயம் தான்.&nbsp;</p><p>கடந்த சில வாரங்களுக்கு முன்பு மகாநதி சீரியலும் முடிந்துவிட்டது, ஆனால் இந்த சீரியல் ரசிகர்கள் தொடரின் நிறைய காட்சிகளை பதிவு செய்து நிறைய விஷயங்கள் பகிர்ந்த வண்ணம் இருக்கின்றனர்.</p><p>இந்த மகாநதி சீரியலில் ராகினி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் தான் நடிகை ஷதிகா.</p><p>இவர் தனது இன்ஸ்டாவில் வெளியிட்ட சில கூல் புகைப்படங்களை காண்போம்.</p><p><br></p>]]></content>
            <updated>2026-07-16T18:40:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜெலென்ஸ்கியின் நடவடிக்கையால் மக்கள் அதிருப்தி., உக்ரைனில் வெடித்துள்ள போராட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/zelensky-ousts-defence-minister-ukraine-protests-1784226951"></link>
            <id>https://news.lankasri.com/article/zelensky-ousts-defence-minister-ukraine-protests-1784226951</id>
            <summary type="text">உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, பிரபலமான பாதுகாப்புத் துறை அமைச்சர் மிகைலோ ஃபெடரோவை திடீரென பதவியிலிருந்து நீக்கியது பெரும் அதிர்ச்சியை ஏற்படு...</summary>
            <content type="html"><![CDATA[<p>உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, பிரபலமான பாதுகாப்புத் துறை அமைச்சர் மிகைலோ ஃபெடரோவை திடீரென பதவியிலிருந்து நீக்கியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
</p><p>
இந்த முடிவு, உக்ரைன் நாடு முழுவதும் போராட்டங்களையும், அரசியல் அதிருப்தியையும் தூண்டியுள்ளது.</p><p>
</p><p></p><p>தலைநகர் கீவ் உட்பட பல இடங்களில் இளைஞர்கள் தெருக்களில் திரண்டு “Hands off Fedorov”, “Stop sabotaging victory” எனும் பதாகைகளை ஏந்தி, “Shame” எனக் கோஷமிட்டனர்.
</p><p>
மக்கள், ரஷ்யாவிற்கு எதிரான போரில் முக்கிய பங்கு வகித்த ஃபெடரோவை பதவி நீக்கம் செய்தது “பெரும் தவறு” எனக் கண்டனம் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/68fb749e-c132-4ff6-b8f2-4aba6bc1463d/26-6a592489798a7.webp' /></p><p>ஜெலென்ஸ்கி, பாதுகாப்புத் துறை அமைச்சராக மேஜர் ஜெனரல் யெவ்ஹெனீ க்மாராவை இடைக்காலமாக நியமித்துள்ளார். அவர் தொழில்நுட்ப அடிப்படையிலான போர் நடவடிக்கைகளில் அனுபவம் பெற்றவர் என ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
</p><p>
ஃபெடரோவ், ஜனவரி மாதத்தில் பதவி ஏற்றார். ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகள், தரவுகளை பயன்படுத்தி முன்னணி போரின் செயல்திறனை மேம்படுத்துதல், “Army of Drones” எனும் திட்டம், ரஷ்யாவிற்கு எதிரான சைபர் தாக்குதல்கள் போன்ற பல புதுமையான முயற்சிகளை மேற்கொண்டார். இதனால் அவர் மக்களிடையே பெரும் ஆதரவை பெற்றிருந்தார்.
</p><p></p><p>அவர் நீக்கப்பட்டதால், உக்ரைன் இராணுவத்தில் மனோபலம் குறையும் அபாயம் இருப்பதாக விமர்சகர்கள் எச்சரிக்கின்றனர். பலர் இதை ஜெலென்ஸ்கியின் மிகப்பெரிய அரசியல் தவறாகக் கூறுகின்றனர்.</p><p>ஃபெடரோவ், “நான் தொடர்ந்து நாட்டுக்காக போராடுவேன். புதுமை, வேகம், ஒழுங்கமைப்பு மூலம் எதிரியை தோற்கடிப்பேன்” எனக் கூறியுள்ளார்.
</p><p>
இந்த முடிவு, உக்ரைன் அரசியல் நிலைத்தன்மைக்கும், ரஷ்யாவிற்கும் எதிரான போராட்டத்திற்கும் புதிய சவாலாகக் கருதப்படுகிறது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-16T18:34:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[வாழ்க்கை வாட்டி வதைத்தாலும் அசராத இரும்பு மனம் கொண்ட டாப் 3 ராசிகள்! உங்க ராசி என்ன?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/which-zodiac-sign-are-mentally-strong-person-1784217627"></link>
            <id>https://manithan.com/article/which-zodiac-sign-are-mentally-strong-person-1784217627</id>
            <summary type="text">பொதுவாகவே வாழ்க்கையில் ஒரு காலகட்டம் மகிழ்ச்சியும், அமைதியும் நிறைந்ததாக இருந்தால், இன்னொரு காலம் துன்பமும் சவால்களும் நிறைந்தாக இருக்கும்.

மகிழ்ச்...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொதுவாகவே வாழ்க்கையில் ஒரு காலகட்டம் மகிழ்ச்சியும், அமைதியும் நிறைந்ததாக இருந்தால், இன்னொரு காலம் துன்பமும் சவால்களும் நிறைந்தாக இருக்கும்.
</p><p>
மகிழ்ச்சியை ஏற்றுக்கொள்ளும் அனைவராலும் துன்பங்களையும் பிரச்சினைகளையும் தாங்கிக்கொண்டு வாழ்க்கையில் போராடி வெற்றிபெற முடிவதில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/531e1694-1988-4591-9331-5441f8793ae8/26-6a5908aa2b1d0.webp' /></p><p>
</p><p>
ஆனால் ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் இந்த 3 ராசிகளில் பிறந்தவர்கள் வாழ்க்கை எவ்வளவு பிரச்சினைகளை கொடுத்தாலும், திரும்பும் திசையெல்லாம் சவால்களை கொடுத்து வாட்டி வதைத்ததாலும், முகத்தில் புன்னகையுடன் அசால்ட்டாக சமாளிக்கும் இரும்பு மனம் கொண்டவர்களாக இருப்பார்களாம். </p><p>

அப்படிபட்ட அசாத்திய தன்னம்பிக்கை மற்றும் வலிய மனம் படைத்த ராசியினர் யார் யார் எனவும் அவர்களின் தனித்துவ குணங்கள் தொடர்பிலும் இந்த பதிவில் பார்க்கலாம்.</p><p></p><h2>ரிஷபம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/581377c1-512e-4469-8a24-f4add289a2b3/26-6a5908aaccffa.webp' /></p><p>ரிஷப ராசியில் பிறந்தவர்கள் லட்சிய வாதிகளாக இருப்பார்கள். சூழ்நிலைகள் குறித்து கவலைப்படாமல் தங்களின் இலக்கை நோக்கி முன்னேறும் குணம் இவர்களிடம் நிச்சயம் இருக்கும்.&nbsp;&nbsp;</p><p>இவர்கள் வாழ்க்கையில் பிரச்சினைக்கும் சவல்களுக்கும் பஞ்சமே இருக்காது. ஆனாலும் இவர்களின் முகத்தில் எப்போதும் புன்னகை நிச்சயம் இருக்கும். தங்களின் கஷ்டங்களை யாரிடமும் சொல்லிக்கொள்ள இவர்கள் விரும்பவே மாட்டார்கள்.</p><p>வாழ்க்கையில் பல பிரச்சினைகள் இருந்தாலும், நேர்த்தியாக உடை&nbsp; அணிந்து பார்ப்பதற்கு&nbsp; சினிமா பிரபலம் போல் காட்சியளிப்பார்கள். இவர்களுக்கு பிரச்சினைகளை சமாளித்து வெற்றிப்பெறுவதில் கில்லாடிகளாக இருப்பார்கள்.</p><h2>துலாம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a0e4be19-6c5f-469d-b8b0-d81b3675a53b/26-6a5908ab7a575.webp' /></p><p>துலா ராசியில் பிறந்தவர்களின் மனம் ஒரு இரும்பு கோட்டை போல் வலிமையாக இருக்கும். இவர்கள் மற்றவர்களின் கருத்துக்களை காதில் வாங்கிக்கொண்டு கவலைப்டும் குணம் அற்றவர்களாக இருப்பார்கள். </p><p>

இவர்கள் கடினமான சூழ்நிலையிலும் தங்களின் தன்னம்பிக்கை,தைரியத்தை கைவிடுவது கிடையாது. யாராலும் இவர்களின் மனவலிமையை குறைக்க முடியாது.
</p><p>
பாதிப்பைத் தழுவுவது மீள்தன்மையை அதிகரிக்கும் என்ற கோட்பாடு இவர்களின் தாராக மந்திரமாக இருக்கும். இவர்கள் வாழ்க்கையில் எவ்வளவு பிரச்சினை வந்தாலும், நிதானத்துடன் கையாளும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.</p><h2>சிம்மம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/28d7ce0a-156c-4b04-a560-425f5ecac517/26-6a5908ac2f9b8.webp' /></p><p></p><p>சூரியனால் ஆளப்படும் சிம்ம ராசியினர் பிறப்பிலேயே உறுதியான மனமும் தலைமைத்துவ குணங்களும் கொண்டவர்களாக இருப்பார்கள்.</p><p>இவர்கள் வாழ்க்கையில் ஆயிரம் பிரச்சினைகள் இருந்தலும் பார்ப்பவர்கள் கண்களுக்கு எப்போதும் வசீகரமாக தோற்றமளிப்பார்கள்.</p><p>இவர்களை அவமதித்தவர்கள் முன்னிலையில் சிறப்பாக வாழ்ந்து காட்டும் வரையில் ஓயவே மாட்டார்கள். எவ்வளவு பெரிய சவாலையும் புன்னகையுடன் எதிர்கொள்ளும் ஒரு அசாத்திய தைரியம் இவர்களிடம் இருக்கும்.</p><p><b>இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).&nbsp;&nbsp;</b></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b>&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-16T18:25:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[மாத்தளை மனிதப் புதைகுழி மர்மம்..! சித்திரவதை தடயங்களுடன் மீட்கப்பட்ட 155 எலும்புக்கூடுகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/matale-mass-grave-issue-gotabaya-rajapaksa-1784222292"></link>
            <id>https://tamilwin.com/article/matale-mass-grave-issue-gotabaya-rajapaksa-1784222292</id>
            <summary type="text">2012-ஆம் ஆண்டு மாத்தளை மருத்துவமனை வளாகத்தில் கண்டெடுக்கப்பட்ட மனிதப் புதைகுழி (Mass Grave) தொடர்பான விடயங்கள் தற்போது பேசுபொருளாகியுள்ளன.

2012 நவம...</summary>
            <content type="html"><![CDATA[<p>2012-ஆம் ஆண்டு மாத்தளை மருத்துவமனை வளாகத்தில் கண்டெடுக்கப்பட்ட மனிதப் புதைகுழி (Mass Grave) தொடர்பான விடயங்கள் தற்போது பேசுபொருளாகியுள்ளன.
</p><p>
2012 நவம்பரில் மருத்துவமனை கட்டுமானப் பணியின் போது, 1988-89 காலப்பகுதியைச் சேர்ந்ததாகக் கருதப்படும் சுமார் 154-155 மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டன.
</p><p>
எலும்புக்கூடுகளில் கம்பி, ஆணி மற்றும் சங்கிலிகள் கட்டப்பட்டிருந்த அடையாளங்கள் இருந்தன, இவை கொடூரமான சித்திரவதைகளுக்குப் பின் கொல்லப்பட்டதற்கான சான்றுகளாகச் சுட்டிக்காட்டப்படுகின்றன.
</p><p>
அந்த காலகட்டத்தில் மாத்தளை பகுதியில் பாதுகாப்புக்கு பொறுப்பாக இருந்தவர்கள் குறித்தும், அரசு பயங்கரவாதம் குறித்தும் தற்போதைய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க 2013ல் அவருடைய கருத்துக்களை முன்வைத்திருந்தார்.
</p><p>
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், நீதி கோரி நீதிமன்றத்தில் மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர்.</p><p>

குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) மூலம் மீண்டும் விசாரணை நடத்தப்பட வேண்டும் மற்றும் அனைத்து எலும்புக்கூடுகளுக்கும் டிஎன்ஏ (DNA) பரிசோதனை செய்யப்பட வேண்டும் என்பது முக்கிய கோரிக்கையாக உள்ளது.
</p><p>
இந்த மனித புதைக்குழி கண்டுபிடிக்கப்பட்ட இடத்தில் தான் அன்று இராணுவ முகாம் இருந்துள்ளதாக நீதிமன்றத்திற்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
மாத்தளை மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைக்குழி சம்பவம் நடந்த காலப்பகுதியில் 1988 மே முதலாம் திகதி முதல் 1990 ஜனவரி வரை மாத்தளை லெப்டினன்ட் கேர்ணல் கோட்டாபய ராஜபக்ச தான் மாவட்ட இராணுவ ஒருங்கிணைப்பு அதிகாரியாகக் கடமையாற்றியுள்ளார்.
</p><p>
இந்த விடயங்கள் தொடர்பாக விரிவாக ஆராய்கின்றது லங்காசிறியின் Newsinsights நிகழ்ச்சி...</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/NUF5sRazdJY" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-16T18:17:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொங்கோ காடுகளில் கண்டறியப்பட்ட புதிய குரங்கு இனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/monkey-with-orange-lips-forests-of-the-congo-1784225357"></link>
            <id>https://tamilwin.com/article/monkey-with-orange-lips-forests-of-the-congo-1784225357</id>
            <summary type="text">மத்திய ஆபிரிக்க நாடான கொங்கோ ஜனநாயகக் குடியரசின் லோமாமி தேசிய பூங்காவில், செம்மஞ்சள் நிற உதடுகளையும் கருப்பு முகத்தையும் கொண்ட முற்றிலும் புதிய குரங்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>மத்திய ஆபிரிக்க நாடான கொங்கோ ஜனநாயகக் குடியரசின் லோமாமி தேசிய பூங்காவில், செம்மஞ்சள் நிற உதடுகளையும் கருப்பு முகத்தையும் கொண்ட முற்றிலும் புதிய குரங்கு
இனம் ஒன்றை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
</p><p>
உள்ளூர் மக்களால் 'லிக்வேலி' என்று அழைக்கப்படும் இந்த இனம், அடர்ந்த
காடுகளில் மரங்களின் உச்சியில் வசிக்கும் ஒரு இரகசிய வகை உயிரினமாகும்.</p><p></p><h2>புதிய குரங்கு இனம்</h2><p>
</p><p>
ஆபிரிக்காவில் கடந்த 75 ஆண்டுகளில் கண்டறியப்பட்ட ஐந்தாவது புதிய குரங்கு
இனமாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4aaeff69-3d4d-4db3-907e-9cddc6ed6cdf/26-6a591e5017bdb.webp' /></p><p>
</p><p>
அத்துடன், இதன் தனித்துவமான குரல் மற்றும் மரபணு சோதனைகள் மூலம் இது புதிய
இனம் என்பது அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-16T18:09:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்கா - ஈரான் மோதல்..! சவூதி எல்லையில் உள்ள பாகிஸ்தான் இராணுவத்தினருக்குப் பதற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/us-iran-conflict-tension-pakistan-troop-saudi-1784223638"></link>
            <id>https://tamilwin.com/article/us-iran-conflict-tension-pakistan-troop-saudi-1784223638</id>
            <summary type="text">யேமனின் ஹூதி கிளர்ச்சியாளர்கள் சவுதி அரேபியா மீது நடத்திய ஏவுகணைத்
தாக்குதல்கள் பாகிஸ்தான் அரசுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

சவூதி அரேப...</summary>
            <content type="html"><![CDATA[<p>யேமனின் ஹூதி கிளர்ச்சியாளர்கள் சவுதி அரேபியா மீது நடத்திய ஏவுகணைத்
தாக்குதல்கள் பாகிஸ்தான் அரசுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.</p><p>

சவூதி அரேபியாவுடன் பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தம் செய்துள்ள பாகிஸ்தான், அங்கு
ஆயிரக்கணக்கான இராணுவ வீரர்களை நிறுத்தியுள்ளது.</p><h2>இராணுவத்தினருக்குப் பதற்றம்</h2><p>
</p><p>
இந்தத் தாக்குதல்களால் மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்தால், அமெரிக்கா -
ஈரான் மோதலில் சவுதி அரேபியாவுக்கு ஆதரவாகப் பாகிஸ்தானும் இராணுவ ரீதியாகப்
போருக்குள் இழுக்கப்படலாம் என்ற அச்சம் இஸ்லாமாபாத்தில் எழுந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6b816c2c-6a26-4257-a713-25c527fe64a7/26-6a591c87cea4c.webp' /></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-16T18:01:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாட்டு தொழிலாளர்களின் ஓய்வூதியத் திட்டம் குறித்து ஜனாதிபதியின் புதிய அறிவுறுத்தல்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/president-s-instructions-pension-foreign-workers-1784224306"></link>
            <id>https://jvpnews.com/article/president-s-instructions-pension-foreign-workers-1784224306</id>
            <summary type="text">வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கை ஊழியர்களுக்காக முன்மொழியப்பட்டுள்ள பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் காணப்படும் சிக்கல்களை விரைவாகத் தீர்த்து, அதனை எ...</summary>
            <content type="html"><![CDATA[<p>வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கை ஊழியர்களுக்காக முன்மொழியப்பட்டுள்ள பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் காணப்படும் சிக்கல்களை விரைவாகத் தீர்த்து, அதனை எதிர்வரும் 2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளில் உள்ளடக்குமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.</p><p>
</p><p></p><p>வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சுக்களுக்கு 2026 ஆம் ஆண்டுக்காக ஒதுக்கப்பட்ட வரவு செலவுத் திட்ட நிதியின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பான மீளாய்வு மற்றும் 2027 வரவு செலவுத் திட்டத்திற்கு முன்னதான கலந்துரையாடல் நேற்று (16) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3abe9254-c557-444c-b040-84f447d3e18c/26-6a591a343eb29.webp' /></p><p>இந்தக் கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி குறித்த அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.
</p><p>
நாட்டுக்கு அந்நியச் செலாவணியை ஈட்டித்தரும் முக்கிய துறைகளில் ஒன்றாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு துறை விளங்குவதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, வெளிநாடுகளில் பணிபுரியும் ஊழியர்களின் எதிர்கால பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் முறையான ஓய்வூதியத் திட்டமொன்று அவசியம் எனத் தெரிவித்தார்.
</p><p>
அத்துடன், குறித்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை தாமதமின்றி முன்னெடுக்குமாறும் அவர் அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கினார்.</p><p>

இதன்போது, சுற்றுலாத்துறை தொடர்பான திட்டங்களை மாவட்ட மட்டத்தில் சிறப்பாக நடைமுறைப்படுத்துவதற்காக, அவற்றுக்கான நிதி ஒதுக்கீடுகளை மாவட்ட செயலாளர்களுக்கு நேரடியாக வழங்குவது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.</p><p>

இதன் மூலம் மாவட்ட அபிவிருத்திக் குழுக்கள் மற்றும் சுற்றுலா குழுக்களின் ஒருங்கிணைப்புடன் திட்டங்களை விரைவாக முன்னெடுக்க முடியும் என ஜனாதிபதி தெரிவித்தார்.</p><p>

மேலும், சிகிரியா, கலேவெல மற்றும் திருகோணமலை பகுதிகளை மையமாகக் கொண்டு வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் முன்மொழியப்பட்டுள்ள அபிவிருத்தித் திட்டங்களை சுற்றுலா அமைச்சு மற்றும் தொல்பொருள் திணைக்களத்துடன் இணைந்து செயல்படுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/affe9873-e035-4cba-8dc3-a6e719dbccef/26-6a591a34e6707.webp' /></p><p>ஒவ்வொரு நிறுவனமும் தனித்தனியாக செயல்படுவதற்குப் பதிலாக ஒருங்கிணைந்த திட்டத்தின் கீழ் செயற்படுவதன் மூலம் காலதாமதத்தையும் வள விரயத்தையும் குறைக்க முடியும் என ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
</p><p>
திட்டங்களை நடைமுறைப்படுத்தும் போது கொள்முதல் நடவடிக்கைகளில் ஏற்படும் தாமதங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டதுடன், அடுத்த ஆண்டு ஜனவரி முதல் வாரத்திலிருந்தே கொள்முதல் நடவடிக்கைகளை ஆரம்பிக்கக்கூடிய வகையில் நிதி அமைச்சினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய நடைமுறையை பின்பற்றுமாறும் அறிவுறுத்தப்பட்டது.
</p><p>
சுற்றுலா அமைச்சின் கீழ் காணப்படும் நிர்மாணத் துறை போன்ற தனித்துவமான கொள்முதல் தேவைகளுக்காக விசேட தலையீடுகளை மேற்கொண்டு செயல்முறைகளை விரைவுபடுத்தவும் இதன்போது இணக்கம் காணப்பட்டது.
</p><p>
இலங்கையின் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கில் எதிர்காலத்தில் நடத்தப்படவுள்ள ஆசிய ஒளிபரப்பாளர்கள் மாநாடு உள்ளிட்ட திட்டங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.</p><p>
</p><p></p><p>அத்துடன், தூதரக சேவைகளை மேலும் வினைத்திறனாக்குவதற்காக டிஜிட்டல் அமைச்சுடன் இணைந்து புதிய திட்டங்களை உருவாக்குவது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.</p><p>

சுற்றுலாத்துறை அமைச்சின் கீழ் உள்ள வளங்கள் மற்றும் காணிகள் தொடர்பான முழுமையான அறிக்கைகள் கடந்த காலங்களில் முறையாகத் தயாரிக்கப்படவில்லை என சுட்டிக்காட்டப்பட்டதுடன், அதற்கான அறிக்கையை விரைவாகத் தயாரிக்குமாறும் ஜனாதிபதி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
</p><p>
2030 ஆம் ஆண்டளவில் இலங்கையின் சுற்றுலாத்துறைக்கு சுமார் 8 இலட்சம் மனித வளம் தேவைப்படும் எனவும் இதன்போது தெரிவிக்கப்பட்டது. </p><p>அதற்கமைய, ஹோட்டல் பாடசாலைகள் ஊடாக வழங்கப்படும் பயிற்சிப் பாடநெறிகளை மேலும் விரிவுபடுத்துவதற்கான திட்டங்கள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-16T17:51:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Manchu</name>
            </author>
            <title type="text"><![CDATA[காரசாரமான நெத்திலி மீன் தொக்கு செய்வது எப்படி?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/tasty-nethili-meen-thokku-recipe-in-tamil-1784220029"></link>
            <id>https://manithan.com/article/tasty-nethili-meen-thokku-recipe-in-tamil-1784220029</id>
            <summary type="text">நெத்திலி மீன் என்றாலும் சரி, கருவாடு என்றாலும் சரி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவது வழக்கம். மேலும் இதில் அதிக முள்ளும் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நெத்திலி மீன் என்றாலும் சரி, கருவாடு என்றாலும் சரி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவது வழக்கம். மேலும் இதில் அதிக முள்ளும் இருக்காது என்பது ஒரு ப்ளஸ்...</p><p>மீன் சாப்பிட யாருக்கு தான் பிடிக்காது, மீனில் பல சுவையான மீன் வகைகள் உண்டு. அதிலும் சிறியதாக இருக்கும் நெத்திலி மீன் என்றால் சொல்லவா வேண்டும், சிறியதாக இருந்தாலும் அதன் சுவை அலாதி தான். நெத்திலி மீன் என்றாலும் சரி, கருவாடு என்றாலும் சரி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவது வழக்கம். மேலும் இதில் அதிக முள்ளும் இருக்காது என்பது ஒரு ப்ளஸ்.</p><p>அந்தவகையில் நெத்திலி மீன் கொண்டு செய்யப்படும் தொக்கு அவ்வளவு ருசியாக இருக்கும். இந்த நெத்திலி மீன் தொக்கை சாம்பார், ரசம் ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிட்டால் அவ்வளவு அருமையாக இருக்கும்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fff32047-61ed-4259-acb3-14bb3d3ee093/26-6a590e4650eb8.webp' /></p><h2>தேவையான பொருட்கள் :</h2><p>நெத்திலி மீன்
புளி கரைசல் - 4 டேபிள் ஸ்பூன்<br>பூண்டு பற்கள் - 2
<br>மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
<br>மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
<br>கொத்தமல்லி தூள் - 1 டேபிள் ஸ்பூன்
<br>வெந்தயம் - 1 டீஸ்பூன்<br>&nbsp;எண்ணெய் - தேவையான அளவு
<br>கறிவேப்பிலை - சிறிதளவு
<br>உப்பு - தேவையான அளவு</p><h3>அரைக்க தேவையானவை :</h3><p>சின்ன வெங்காயம் - 20 முதல் 25
<br>பழுத்த தக்காளி - 2<br>&nbsp;பச்சை மிளகாய் - 2
<br>பூண்டு பற்கள் - 10<br>&nbsp;மிளகு - 1 டீஸ்பூன்&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1c2a018a-933e-4362-8410-e2f334e9c54f/26-6a590e47028e6.webp' /></p><h2>செய்முறை</h2><p>அரைப்பதற்கு கொடுத்துள்ள சின்ன வெங்காயம், பழுத்த தக்காளி, பச்சை மிளகாய், பூண்டு மற்றும் மிளகு ஆகியவற்றை மிக்ஸி ஜாரில் போட்டு மென்மையாக அரைத்து எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.</p><p>தற்போது அடுப்பில் கடாய் வைத்து 1/4 கப் எண்ணெய் ஊற்றி சூடானதும் மிதமான தீயில் வெந்தயம் மற்றும் பூண்டு பற்கள் சேர்த்து வதக்கவும்.
பின்னர் அதில் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து அதன் பச்சை வாசனை போகும்வரை வதக்கி பின்பு அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், கொத்தமல்லி தூள் மற்றும் தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கவும்.</p><p>மசாலாவில் இருந்து எண்ணெய் தனியாக பிரியும் வரை வதக்கிய பின்னர் அதில் புளி கரைசலை ஊற்றி கிளறி சமைக்கவும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ca77b4bf-76c9-4039-bac6-cb94dacd2778/26-6a590e47a7482.webp' /></p><p>மசாலாக்கள் கெட்டியாக தொக்கு பதத்திற்கு மாறியவுடன் அதில் நன்றாக அலசிய நெத்திலி மீனை சேர்த்து கலந்து வேகவிடவும்.
பின்னர் அதில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி கடாயை மூடி வைத்து 5-8 நிமிடங்களுக்கு வேக வைக்க வேண்டும்.</p><p>மீன் நன்கு மென்மையாக வெந்து தொக்கு பதத்திற்கு மாறியவுடன் அதில் சிறிதளவு கறிவேப்பிலையை சேர்த்து மிதமான தீயில் பிரட்டி எண்ணெய் தனியாக பிரியும் வரை வேக வைத்து இறக்கினால் சுவையான நெத்திலி மீன் தொக்கு சாப்பிட ரெடி...</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><i>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன்<a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்<a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"><b> FOLLOW NOW</b></a>&nbsp;&nbsp;</i><br></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-16T17:45:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிகப்புநிற ஆடையில் அனன்யா பாண்டேவின் கிளாமர் கிளிக்ஸ்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/actress-ananya-panday-recent-red-dress-photos-1784205925"></link>
            <id>https://viduppu.com/article/actress-ananya-panday-recent-red-dress-photos-1784205925</id>
            <summary type="text">அனன்யா பாண்டே2019ல் வெளியான Student of the Year 2 படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றவர் தான் நடிகை அனன்யா பாண்டே.

இப்படத்தை த...</summary>
            <content type="html"><![CDATA[<h2>அனன்யா பாண்டே</h2><p>2019ல் வெளியான Student of the Year 2 படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றவர் தான் நடிகை அனன்யா பாண்டே.
</p><p>
இப்படத்தை தொடர்ந்து இந்தி, தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் தான் நடித்து வரும் Call Me Bae Season 2 என்ற அமேசான் பிரைம் வெப் தொடர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
</p><p>
தற்போது, சிகப்புநிற கிளாமர் ஆடையணிந்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.</p><p><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/p/DarlrhoiMLR/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/p/DarlrhoiMLR/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/p/DarlrhoiMLR/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by Ananya 🌙 (@ananyapanday)</a></p></div></blockquote> <script async src="//www.instagram.com/embed.js"></script></p>]]></content>
            <updated>2026-07-16T17:45:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[SK-வ நேர்ல பாத்துட்டு மிதந்தேன் 🔥 Gopi &amp; Pari Interview]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/gopi-and-pari-interview-about-anbae-dayanaa-1784191730"></link>
            <id>https://cineulagam.com/article/gopi-and-pari-interview-about-anbae-dayanaa-1784191730</id>
            <summary type="text">அன்பே டயானாஇந்த வாரம் தமிழ் சினிமாவில் வெளியாகப்போகும் புதிய படங்களில் ஒன்று தான் அன்பே டயானா.&amp;nbsp;இதில் மிகவும் பிரபலமான கலைஞர்கள் நடிக்க யூடியூப் ப...</summary>
            <content type="html"><![CDATA[<h2>அன்பே டயானா</h2><p>இந்த வாரம் தமிழ் சினிமாவில் வெளியாகப்போகும் புதிய படங்களில் ஒன்று தான் அன்பே டயானா.&nbsp;</p><p>இதில் மிகவும் பிரபலமான கலைஞர்கள் நடிக்க யூடியூப் பிரபலம் கோபியும் சூப்பரான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பரி இளவழகன் இயக்கி நடித்துள்ள இப்படத்தில் நாயகியாக ரம்யா ரங்கநாதன் நடித்துள்ளார்.</p><p>மேலும்&nbsp;சேத்தன், நடிகை ரோஜா, பரிதாபங்கள் கோபி, செல் முருகன் என பலர் நடித்துள்ளனர். இப்படம் குறித்து இயக்குனர் பரி மற்றும் பரிதாபங்கள் கோபி கொடுத்துள்ள பேட்டியை காண்போம்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/DnFqKpgDGk8" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-07-16T17:40:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[புதிய விசா விதிமுறைகளை அறிவித்தது அமெரிக்கா...!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/us-change-foreign-students-journalists-visa-rules-1784220504"></link>
            <id>https://ibctamil.com/article/us-change-foreign-students-journalists-visa-rules-1784220504</id>
            <summary type="text">புதிய விசா விதிமுறைகளை அமெரிக்கா அறிவித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதனடிப்படையில் வெளிநாட்டு மாணவர்கள், பரிமாற்ற வருகையாளர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>புதிய விசா விதிமுறைகளை அமெரிக்கா அறிவித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
</p><p>
இதனடிப்படையில் வெளிநாட்டு மாணவர்கள், பரிமாற்ற வருகையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் தங்கியிருப்பதற்கான நிலையான கால அவகாசங்களை விதிக்கும் புதிய விசா விதிமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.
</p><p>
இதன் மூலம் தற்போது நடைமுறையிலுள்ள நிலைக்கால அளவு (Duration of status) முறைமை மாற்றியமைக்கப்படவுள்ளது.</p><p>
</p><p></p><h2>உள்நாட்டுப் பாதுகாப்பு</h2><p>அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் திணைக்களம் (DHS) இது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.</p><p>

குறித்த அறிவிப்பின்படி, சர்வதேச மாணவர்களுக்கான F விசாக்கள், பரிமாற்ற வருகையாளர்களுக்கான J விசாக்கள் மற்றும் வெளிநாட்டு ஊடகவியலாளர்களுக்கான I விசாக்கள் இனி ஒரு கல்வித் திட்டம் அல்லது வேலைவாய்ப்பு காலம் முழுவதும் செல்லுபடியாகாது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9cb5a0b4-8903-4334-83d0-7a4d892cdc9f/26-6a59155a593f6.webp' /></p><p>அதற்குப் பதிலாக பெரும்பாலான மாணவர்கள் மற்றும் பரிமாற்ற வருகையாளர் விசாக்கள் அதிகபட்சமாக நான்கு ஆண்டுகள் வரை தங்குவதற்கு அனுமதிக்கும்.</p><p>

அதே சமயம் வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் பொதுவாக 240 நாட்கள் வரை தங்குவதற்கு அனுமதிக்கப்படுவார்கள்.
</p><p>
ஊடகவியலாளர் விசா வைத்திருக்கும் சீனப் பிரஜைகளுக்கு இக்காலம் 90 நாட்களாகக் குறைக்கப்படும்.</p><p>
</p><p></p><h2>சட்டவிரோத குடியேற்றங்கள்</h2><p>அனுமதிக்கப்பட்ட காலத்தைத் தாண்டியும் அமெரிக்காவில் தங்கியிருக்க விரும்பும் விசா வைத்திருப்பவர்கள், உள்நாட்டுப் பாதுகாப்புத் திணைக்களத்திடம் (DHS) கால நீடிப்புக்கு விண்ணப்பிக்க வேண்டும் அல்லது நாட்டை விட்டு வெளியேறி மீண்டும் நாட்டிற்குள் நுழைவதற்கான அனுமதியைப் பெற வேண்டும்.</p><p>

இந்த விதியானது காங்கிரஸின் (நாடாளுமன்றம்) மறுஆய்வுக்கு உட்பட்டு ஃபெடரல் பதிவேட்டில் (Federal Register) வெளியிடப்பட்ட 60 நாட்களுக்குப் பிறகு நடைமுறைக்கு வர அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/608da296-6880-4e7d-a8d1-940e440c4c3d/26-6a59155b091db.webp' /></p><p>அமெரிக்காவிற்குள் நுழையும் மாணவர்கள், பரிமாற்ற வருகையாளர்கள் மற்றும் வெளிநாட்டு ஊடகவியலாளர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ள நிலையில், குடியேற்றமற்ற விசா வைத்திருப்பவர்கள் மீதான கண்காணிப்பை மேம்படுத்துவதே இந்த மாற்றங்களின் நோக்கம் என்று உள்நாட்டுப் பாதுகாப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p>

2025 ஜனவரியில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் பதவியேற்றது முதல், சட்டப்பூர்வ மற்றும் சட்டவிரோத குடியேற்றங்கள் ஆகிய இரண்டின் மீதும் கடுமையான கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்தி வரும் நிலையில், நிர்வாகத்தின் பரந்த குடியேற்றக் கொள்கையின் ஒரு பகுதியாகவே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p>]]></content>
            <updated>2026-07-16T17:35:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சட்டத்தைக் காக்க வேண்டியவர்களே இப்படியா... பெண் பொலிஸுக்கு ஆண் பொலிஸ் பாலியல் தொல்லை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/on-duty-female-police-officer-sexual-harassment-1784198893"></link>
            <id>https://jvpnews.com/article/on-duty-female-police-officer-sexual-harassment-1784198893</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;இசை நிகழ்ச்சி ஒன்றில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலர் ஒருவருக்கு, சக காவலர் ஒருவரின் மடியில் அமர்ந்து அந்த பெண் காவலருக்கு...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;இசை நிகழ்ச்சி ஒன்றில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலர் ஒருவருக்கு, சக காவலர் ஒருவரின் மடியில் அமர்ந்து அந்த பெண் காவலருக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம்&nbsp; அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><p>

 தம்புள்ளை 'கம் உதாவா' மைதானத்தில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியின் போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக&nbsp; தெரியவருகின்றது. சம்பவம்&nbsp; தொடர்பில்&nbsp; மேலும்&nbsp; தெரியவருகையில்,&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/04da5904-f5b7-4a7f-9023-3c3b65672287/26-6a58b6ef50235.webp' /></p><p></p><h2>மது போதையில் வந்த மற்றுமொரு காவலர் பாலியல் தொல்லை</h2><p>
பாதுகாப்புப் பணியின் போது, அந்த பெண் காவலர் அமர்ந்திருந்தபோது, மது போதையில் வந்த மற்றுமொரு காவலர், பெண் காவலரின் மடியில் வலுக்கட்டாயமாக அமர்ந்து அவரைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியுள்ளார்.</p><p></p><p>

 இச்சம்பவம் குறித்து தம்புள்ளை பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில், குறித்த நபர் மகுலுகஸ்வெவ பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த காவலர் என்பது தெரியவந்தது.

பாதிக்கப்பட்ட அந்த பெண் காவலரும் அதே மகுலுகஸ்வெவ பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்தவர் என கூறப்படுகின்றது.</p><p> 

 கைது செய்யப்பட்ட காவலர், நீதிமன்ற மருத்துவரிடம் முன்னிலைப்படுத்தப்பட்டபோது, அவர் கடும் மது போதையில் இருந்தமை உறுதிப்படுத்தப்பட்டது.

சக பணியாளருக்கே இத்தகைய இழிவான செயலைச் செய்த அந்த காவலர் மீது தம்புள்ளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p><p> </p><p>சட்டத்தைக் காக்க வேண்டியவர்களே சட்டத்தை மீறும் இத்தகைய செயல்கள், பொலிஸ் திணைக்களத்தின் நற்பெயருக்குக் களங்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.&nbsp; &nbsp;</p><p>பாதுகாப்புப் பணியின் போது சக பெண் ஊழியருக்கு நேர்ந்த இந்த அவலம், சமூக வலைதளங்களிலும் பேசுபொருளாக மாறியுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-16T17:14:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[துபாய் மத்தியப் பகுதியில் அடுத்தடுத்து பலத்த வெடிச்சத்தம் ; காரணம் குறித்து தீவிர விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/a-series-of-loud-explosions-in-central-dubai-1784222032"></link>
            <id>https://canadamirror.com/article/a-series-of-loud-explosions-in-central-dubai-1784222032</id>
            <summary type="text">துபாயின் மத்திய (Central Dubai) பகுதியில் அடுத்தடுத்து பலத்த வெடிச்சத்தங்கள் கேட்கப்பட்டதாக ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம், அப்பகுதியில் இருந்த சாட்சிகளை...</summary>
            <content type="html"><![CDATA[<p>துபாயின் மத்திய (Central Dubai) பகுதியில் அடுத்தடுத்து பலத்த வெடிச்சத்தங்கள் கேட்கப்பட்டதாக ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம், அப்பகுதியில் இருந்த சாட்சிகளை மேற்கோள்காட்டி அவசரத் தகவல் வெளியிட்டுள்ளது.</p><p>

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்கனவே பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், இந்த வெடிச்சத்தங்கள் துபாய் நகரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/da305343-0df3-41e6-8fdc-6f9a1e4ff762/26-6a5911517d7f0.webp' /></p><p> </p><p>எனினும், வெடிச்சத்தங்களுக்கான துல்லியமான காரணம், உயிரிழப்புகள், காயமடைந்தோர் அல்லது சொத்துச் சேதம் தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.

பாதுகாப்புப் படையினரும், உள்ளூர் அதிகாரிகளும் சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். </p><p>சம்பவத்தின் பின்னணி மற்றும் பாதிப்புகள் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
</p><p>
இந்தச் சம்பவம், அமெரிக்கா–ஈரான் மோதல் மற்றும் அதனுடன் தொடர்புடைய பிராந்திய பாதுகாப்பு பதற்றம் அதிகரித்துள்ள சூழலில் இடம்பெற்றுள்ளது. </p><p>இருப்பினும், துபாயில் கேட்கப்பட்ட வெடிச்சத்தங்கள் எந்தச் சம்பவத்துடன் தொடர்புடையவை என்பது இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை</p>]]></content>
            <updated>2026-07-16T17:13:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானில் சவப்பெட்டிக்குள் கிடக்கும் ட்ரம்ப் :சர்வதேச அளவில் கவனம் பெற்ற பதாகை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/trump-shocking-banner-from-iran-1784219603"></link>
            <id>https://ibctamil.com/article/trump-shocking-banner-from-iran-1784219603</id>
            <summary type="text">ஈரானில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் சவப்பெட்டிக்குள் வைக்கப்பட்டுள்ளதைப்போன்ற பதாகை வைக்கப்பட்டுள்ளமை சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.



அமெரிக...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் சவப்பெட்டிக்குள் வைக்கப்பட்டுள்ளதைப்போன்ற பதாகை வைக்கப்பட்டுள்ளமை சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.
</p><p>


அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே கடந்த ஜூன் மாதம் கையெழுத்தான ஒப்பந்தத்தை ட்ரம்ப் ரத்து செய்ததுடன் மீண்டும் ஈரானின் முக்கிய நகரங்களைக் குறிவைத்து அமெரிக்க படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன.</p><h2>கமேனியின் கொலைக்கு நிச்சயம் பழிதீர்ப்போம்</h2><p>&nbsp;ஏற்கனவே, கமேனியின் கொலைக்கு நிச்சயம் பழிதீர்ப்போம் என ஈரானின் புதிய தலைமை மதகுரு மொஜ்தபா கமேனி அறிவித்திருந்தார். மேலும், கமேனியின் இறுதிச்சடங்கில் அமெரிக்கா மற்றும்ட்ரம்ப்புக்கு எதிரான முழக்கங்கள் எழுப்பப்பட்டன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7e327d2d-b30b-4844-bf97-0faa64eea7a0/26-6a59107eef0fd.webp' /></p><p>
</p><p>
இந்த நிலையில், ஈரானின் தலைநகர் தெஹ்ரானில் உள்ள இஸ்லாமியப் புரட்சி சதுக்கத்தில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பின் உடல் சவப்பெட்டிக்குள் வைக்கப்பட்டுள்ளதைப்போன்று சித்தரிக்கப்பட்ட மிகப்பெரிய பதாகை ஒன்று காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.</p><p></p><p>
</p><p>


</p><h2>சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ள பதாகை</h2><p>இந்தப் பதாகையின் புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருவதால், சர்வதேச அமைப்புகள் மற்றும் பல்வேறு நாடுகளின் கண்டனங்களை இந்தப் பதாகை பெற்றுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1cde5262-26b3-4698-8f5b-97bf999ff20a/26-6a59107e4c39e.webp' /></p><p></p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-16T17:10:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[தேர்தல் பாதுகாப்பு மற்றும் உளவுத்துறைத் தகவல்கள் குறித்து ட்ரம்ப் உரை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/us-president-trump-election-security-intelligence-1784220761"></link>
            <id>https://tamilwin.com/article/us-president-trump-election-security-intelligence-1784220761</id>
            <summary type="text">&amp;nbsp;அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தேர்தல் பாதுகாப்பு தொடர்பாக முக்கிய
உரையாற்றத் திட்டமிட்டுள்ளார்.

இந்த உரையின் போது, 2020 அமெரிக்கத் தேர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தேர்தல் பாதுகாப்பு தொடர்பாக முக்கிய
உரையாற்றத் திட்டமிட்டுள்ளார்.
</p><p>
இந்த உரையின் போது, 2020 அமெரிக்கத் தேர்தலில் சீனா தலையிட முயன்றது தொடர்பான
உளவுத்துறைத் தகவல்களை வெளியிடலாமா என்பது குறித்து வெள்ளை மாளிகை தீவிரமாக
ஆலோசித்து வருகிறது.</p><p></p><h2>தேர்தல் முறைகள்</h2><p>

எதிர்வரும் நவம்பர் மாத இடைக்காலத் தேர்தலுக்கு முன்னதாக, தேர்தல் முறைகள்
மற்றும் வாக்குப்பதிவு பாதுகாப்பு குறித்து ட்ரம்ப் தொடர்ந்து பல்வேறு
கருத்துகளைப் பேசி வரும் சூழலில் இந்த உரை நிகழ்த்தப்படவுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cafbd8c5-a00d-4e0d-9932-5ab855fcafe5/26-6a590e53b3476.webp' /></p><p>&nbsp;இதேவேளை, அமெரிக்கா போர்க்குற்றங்களில் ஈடுபடுவதாக ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி குற்றம் சாட்டியுள்ளார்.
</p><p>
ஈரான் மீதான தாக்குதலில் அமெரிக்கா இவ்வாறு போர்க் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-16T17:03:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[எண்ணெய்க்கும் அப்பால் மத்திய கிழக்கில் நடைபெறும் மோதலானது உரத்தில் தொடங்கி உணவை அடைந்து, ஃபாரெக்ஸ் வரையில் எவ்வாறு தொடர் தாக்கத்தை ஏற்படுத்துகிறது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/oil-how-conflict-middle-east-having-ripple-effect-1784221329"></link>
            <id>https://jvpnews.com/article/oil-how-conflict-middle-east-having-ripple-effect-1784221329</id>
            <summary type="text">Exness-இன் சிரேஷ்ட நிதிச் சந்தை மூலோபாய நிபுணரான இன்கி சோ
அவர்கள் எழுதிய சந்தைப் பகுப்பாய்வு.
மத்திய கிழக்கில் நடைபெறும் மோதலின் விளைவுகளைக்
கருத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a21e6669-b6b0-4671-954f-5e31ae0163ba/26-6a590e933f87a.webp' /></p><p><a href="https://www.exness.com/" target="_blank">Exness</a>-இன் சிரேஷ்ட நிதிச் சந்தை மூலோபாய நிபுணரான இன்கி சோ
அவர்கள் எழுதிய சந்தைப் பகுப்பாய்வு.
மத்திய கிழக்கில் நடைபெறும் மோதலின் விளைவுகளைக்
கருத்தில்கொண்டு சந்தைகள் விலைகளை நிர்ணயித்தபோது,
​​எண்ணெய் சார்ந்த விஷயங்கள் பற்றியே அதிக விவாதம் நடந்தது.
</p><p>இருப்பினும், ஹோர்முஸ் நீரிணை கச்சா எண்ணெயைவிட மேலும்
அதிகமானவற்றைக் கொண்டு செல்கிறது, மேலும் எரிசக்தி மீதான ஒரு
குறுகிய பார்வை, அந்தக் கட்டுப்பாட்டுப் பகுதியைச் சுற்றி உருவாகும்
பரந்த பேரியல் கண்ணோட்டத்தைக் கவனிக்கத் தவறுகிறது.
</p><p>நைதரசன் அடிப்படையிலான உரங்களுக்கும் அவற்றை உற்பத்தி
செய்வதற்கான மூலப்பொருளான இயற்கை எரிவாயுவுக்கும்
மிகப்பெரிய போக்குவரத்து வழித்தடங்களில் ஒன்றாகவும் இந்த
நீரிணை திகழ்கிறது. </p><p>உரச் சரக்குகளிலிருந்து உணவுப்பொருள்
விலையேற்றத்திற்கும், உணவுப்பொருள் விலையேற்றத்திலிருந்து DXY-
க்கும் ஏற்படும் பரிமாற்றத்தில்தான், சில்லறை மற்றும் பேரியல்
கண்ணோட்டத்தை மையமாகக் கொண்ட வர்த்தகர்களுக்கான
உண்மையான பேரியல் கதை மறைந்திருக்கிறது.</p><h4>கச்சா எண்ணெய்க்கு அப்பாற்பட்ட கட்டுப்பாட்டுப் பகுதி
</h4><p>உலகளாவிய உர வர்த்தகத்தில் ஏறத்தாழ 20% முதல் 30% வரை
ஹோர்முஸ் நீரிணை வழியாகத்தான் போக்குவரத்தைச் செய்கிறது.
இதில், உலகளாவிய யூரியா ஏற்றுமதிகளில் சுமார் 35%, நைதரசன்
அடிப்படையிலான உரங்களுக்கான முதன்மை மூலப்பொருளான கடல்
வழியாகச் செல்லும் LNG-இல் சுமார் 20% ஆகியவை அடங்கும்.
</p><p>சந்தையின் கவனத்தில் ஒரு சிறு பகுதியை மட்டுமே பெற்றாலும், அது&nbsp;யூரியாவையும் அமோனியாவையும் கச்சா எண்ணெய்க்கு இணையான
அபாயப் பிரிவில் வைக்கிறது.
</p><p>சவூதி அரேபியா, கத்தார், ஈரான், பஹ்ரைன், ஓமான் ஆகியவை இந்த
நீரிணை வழியாக ஏற்றுமதி செய்யும் முதன்மை நாடுகளாகும்.
இவற்றில், சவூதி அரேபியா மட்டும் உலகளாவிய அமோனியா
ஏற்றுமதியில் ஏறத்தாழ 16% பங்களிப்பை அளிக்கிறது. ஹோர்முஸைச்
சார்ந்துள்ள ஐந்து வளைகுடா நாடுகள் ஒன்றிணைந்து, உலகளாவிய உர
ஏற்றுமதியில் 8 முதல் 10 சதவீதம் வரை விநியோகம் செய்கின்றன.
</p><p>இது, இறக்குமதி செய்யும் 43 நாடுகள் வழியாக நடைபெறும் ஏறத்தாழ
13.5 பில்லியன் USD மதிப்பிலான வர்த்தகப் பரிமாற்றத்திற்குச்
சமமாகும்.
ஃபெப்ரவரி மாத இறுதியில் மோதல் தீவிரமடைந்ததிலிருந்து, நீரிணை
வழியாகச் செல்லும் போக்குவரத்தானது நெருக்கடிக்கு முந்தைய
காலத்தில் இருந்த அளவுகளைக் காட்டிலும் 95%-க்கும் மேலாகக்
குறைந்துள்ளது, மேலும் பிராந்திய யூரியா உற்பத்தி 55%-இலிருந்து 60%-
ஆகச் சரிந்துள்ளது.</p><h4>உரச் சரக்குகளிலிருந்து உணவு விலையேற்றம் வரை&nbsp;</h4><p>அதிக நைதரசன் தேவைப்படும் பயிர்களே முதலில் இந்த
நெருக்கடியால் முதலில் பாதிப்படைகின்றன. கோதுமை,
மக்காச்சோளம், அரிசி ஆகிய அனைத்தும் யூரியா மற்றும் அமோனியா
உள்ளீடுகளைப் பெருமளவில் சார்ந்துள்ளன, மேலும் இவற்றில் ஏற்படும்
எந்தவொரு பற்றாக்குறையும் பாவனையைக் குறைக்கும்படியோ
அல்லது சிறிய பரப்பளவில் பயிரிடும்படியோ விவசாயிகளைத்
தூண்டுகிறது. </p><p>இதன் விளைவாக, அடுத்த அறுவடைச் சுழற்சியில்
விளைச்சலில் ஏற்படும் மாற்றம் தாமதமாகவே வெளிப்படுகிறது; இது
நுகர்வோரைச் சென்றடைவதற்கு முன்பாகவே பண்டங்களின்
விலைகளில் எதிரொலிக்கிறது.</p><p>எண்கள் ஏற்கனவே மாறத் தொடங்கிவிட்டன. ஃபெப்ரவரி மற்றும் மார்ச்
2026-க்கு இடைப்பட்ட காலகட்டத்தில் யூரியாவின் விலை மாதந்தோறும்
சுமார் 46% உயர்ந்துள்ளது என்றும், சில அளவுகோல்கள் ஒரு மெற்றிக்
தொன்னுக்குச் சுமார் 700 USD-ஐ எட்டியது என்றும் உலக வங்கி
தெரிவித்துள்ளது. </p><p>பெஞ்ச்மார்க் எகிப்திய கிரானுலர் யூரியாவும் அதே
காலகட்டத்தில், ஒரு மெற்றிக் தொன்னுக்கு சுமார் 400 USD-இலிருந்து
490 USD-ஆக உயர்ந்தது. கோதுமை விலை 13 சதவீதம் உயர்ந்தது,
மேலும் உலகளாவிய தானிய விலைக் குறியீடு 7 சதவீதம்
அதிகரித்தது.
</p><p>உலகளவில் மிகப்பெரிய உர நிறுவனங்களில் ஒன்றான Yara, நெருக்கடி
தொடங்கியதிலிருந்து யூரியா விலை 60%-இலிருந்து 70% வரை
அதிகரித்துள்ளதாகவும், இதனால் ஆப்பிரிக்க இறக்குமதியாளர்கள்
அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது. </p><p>இந்த
அதிர்ச்சிகள், ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகள்
முழுவதிலும் உள்ள முக்கிய உணவு இறக்குமதியாளர்களின் பயிரிடும்
கால அட்டவணைகளுடன் நேரடியாகப் பொருந்துகின்றன.</p><h4>உணவு அதிர்ச்சி கடுமையாகத் தாக்கும் இடம்&nbsp;</h4><p>
உலகளாவிய உர வர்த்தகத்தில் ஏறக்குறைய மூன்றில் ஒரு பங்கு
பாதிக்கப்பட்டுள்ளது, மேலும் அந்த அதிர்ச்சியைத் தாங்கிக்கொள்ள
முடியாத பிராந்தியங்களே இறக்குமதியை அதிகம் சார்ந்துள்ளன.
தெற்காசியா மிகவும் பாதிப்புக்குள்ளான தொகுதியாகத் திகழ்கிறது.
</p><p>இதில் இந்தியா தனது உரத் தேவையில் சுமார் 20%-ஐ வளைகுடா
நாடுகளில் இருந்தும், பாகிஸ்தான் தனது நாட்டில் நைதரசனை
உற்பத்தி செய்யக் கத்தார் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் LNG-ஐ
ஏறக்குறைய முழுமையாகச் சார்ந்துள்ளது.
</p><p>சஹாராவை ஒட்டியுள்ள ஆப்பிரிக்கா மற்றும் வட ஆப்பிரிக்காவின்
சில பகுதிகளிலும் இதே போன்ற பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன, மேலும்
இந்தச் சந்தைகளில் பலவற்றில் 90%-க்கும் அதிகமான உரம் இறக்குமதி
செய்யப்படுகிறது. </p><p>சர்வதேச நாணய நிதியத்தின் கூற்றுப்படி, குறைந்த&nbsp;வருமானம் கொண்ட பொருளாதாரங்களில் குடும்பச் செலவினங்களில்
உணவுக்காக ஏறக்குறைய 36% செலவிடப்படுகிறது; வளர்ந்த
பொருளாதாரங்களில் இது சுமார் 9%-ஆக உள்ளது. </p><p>இதன்
காரணமாகவே, மிதமான உள்ளீட்டு அதிர்ச்சிகள் கூட மிகப் பெரிய
விலையேற்றப் பதிவுகளாக மாறுகின்றன.
இதன் பேரியல் விளைவு நமக்கு நன்கு பரிச்சயமான ஒன்றுதான்.
உணவுப்பொருள் விலையேற்றம் அதிகரிக்கும்போது, ​​மத்திய
வங்கிகள் பலவீனமான வளர்ச்சிக்கு ஏற்ப இறுக்கமான
கொள்கைகளைக் கையாளும் இக்கட்டான நிலையை
எதிர்கொள்கின்றன; இறக்குமதிச் செலவுகள் அதிகரிப்பதால் நடப்புக்
கணக்குகள் மோசமடைகின்றன.</p><p>மேலும், உள்ளூர் நாணயங்களின்
மீதான நம்பிக்கையும் சிதைகிறது. அதிக உணவு இறக்குமதி
விகிதங்கள் மற்றும் வரையறுக்கப்பட்ட நிதி இருப்புகளின் காரணமாக,
எகிப்து, பங்களாதேஷ், பாகிஸ்தான், நைஜீரியா, இலங்கை ஆகியவை
மிகவும் பாதிப்புக்குள்ளாகும் நாடுகளாகத் தனித்து நிற்கின்றன.</p><p>
"சந்தை இதை ஒரு கச்சா எண்ணெய் சார்ந்த விவகாரமாகப் பார்க்கிறது,
ஆனால், இந்தத் தடையினால் ஏற்படும் பாதிப்புகளில் உர விநியோகம்
தொடர்பான அம்சம் தான், பல அறுவடைச் சுழற்சிகளிலும் தொடர்ந்து
தீவிரமடையக்கூடிய ஒன்றாக உள்ளது," என்கிறார்.</p><p><a href="https://www.exness.com/" target="_blank">Exness </a>நிறுவனத்தின் நிதி உள்ளடக்கத் தலைவர்
மைக்கேல் ஸ்டார்க். "இரண்டாம் வரிசை விளைவுகள் வளர்ந்து வரும்
சந்தைத் தரவை அடையும் நேரத்தில், மறுவிலை நிர்ணயம் விரைவாக
நடக்கும் மற்றும் அது அந்த நாணயங்களுக்குச் சார்பாக இருக்காது."&nbsp;</p><h4>வயல்களிலிருந்து DXY-க்கு
</h4><p>இங்குதான் பகுப்பாய்வுச் சங்கிலியானது அந்நியச் செலாவணிச்
சந்தையுடன் மீண்டும் இணைகிறது. இறக்குமதி செய்யப்படும் பிரதான
பொருட்களைச் சார்ந்திருக்கும் வளரும் சந்தைகளில் உணவுப்பொருள்
விலையேற்றம் துரிதமையும்போது, ​​டொலரின் மீது மூன்று விதமான
தாக்கங்கள் ஒன்றிணைகின்றன. </p><p>கொள்கை ரீதியான நடவடிக்கைகள்
விலை மாற்றத்திற்குப் பின்னரே செயல்படுவதால், மூலதனம் USD

ஆதிக்கம் செலுத்தும் சொத்துகளை நோக்கிச் சுழல்கிறது, நடப்புக்
கணக்குப் பற்றாக்குறை விரிவடைகிறது, மற்றும் மத்திய வங்கியின்
நம்பகத்தன்மை அழுத்தத்திற்கு உள்ளாகிறது.&nbsp;கடந்தகாலப் போக்கு சீராக உள்ளது. </p><p>2007-2008 ஆம் ஆண்டில் கச்சாப்
பொருட்களால் ஏற்பட்ட உணவுப்பொருள் விலை மாற்றத்தின்போது,
​​FAO உணவு விலைக் குறியீடு சுமார் 57% உயர்ந்தது, மேலும்
இறக்குமதியைச் சார்ந்த பொருளாதாரங்கள் அந்தப் பாதிப்புகளைத்
தாங்கிக்கொண்டதால், டொலர் அவ்வப்போது பாதுகாப்பான
வலிமையைக் கண்டது. </p><p>2010-2011 காலகட்டச் சுழற்சியும் இது போன்ற
ஒரு போக்கைப் பின்பற்றியது; உணவுப் பொருட்களின் விலையில்
ஏற்பட்ட 40% உயர்வு, MENA முழுவதும் அரசியல் ஸ்திரமற்ற
தன்மையை ஊக்குவித்ததுடன், பாதுகாப்பான முதலீடுகளை நாடி
மக்கள் மீண்டும் USD சொத்துகளுக்குள் செல்லவும் வழிவகுத்தது.
தற்போதைய அமைப்பு அந்த வார்ப்புருவைப் பிரதிபலிக்கிறது. </p><p>ஃபெடரல்
ரிசர்வ் மேலும் வட்டி குறைப்புகளைச் சந்தைகள் விலக்கியதால், ஏப்ரல்
2026-இல் US நுகர்வோர் விலைக் குறியீடு -CPI 3.8%-ஆக உயர்ந்தது
மற்றும் டொலர் குறியீடு 98 மற்றும் 99-க்கு இடையில் நிலைபெற்றது.
</p><p>FAO எச்சரித்துள்ளபடி, இந்த ஆண்டின் இரண்டாம் பாதியில்
உணவுப்பொருள் விலையேற்றம் அதிகரித்தால், குறிப்பாக USDINR,

USDEGP, USDPKR மற்றும் USDZAR போன்ற ஜோடிகள் வழியாக, DXY அந்த
அழுத்தத்தின் மிகத் தெளிவான வெளிப்பாடாக அமைகிறது.
</p><p>ஸ்டார்க் குறிப்பிடுவது போல, “விநியோக மாற்றங்கள் தனித்தனியாக
இல்லாமல், அடுக்குகளாக இருக்கும் ஒரு சூழலில், டொலர் இருமடங்கு
பயனடைகிறது. முதலில், வளர்ந்து வரும் சந்தைகள் உணவு மற்றும்
எரிசக்தியை இறக்குமதி செய்ய வேண்டியிருப்பதால் நிதி வழங்கும்
நாணயமாகவும், பின்னர் விலையேற்றப் பதிவுகள் உயரும்போது அதே
பொருளாதாரங்களிலிருந்து வெளியேறும் மூலதனத்தை உள்வாங்கும்
பாதுகாப்பான புகலிடமாகவும் இது செயல்படுகிறது.”</p><h4>வர்த்தகர்கள் கவனிக்க வேண்டியவை
</h4><p>இந்த இயங்கமைவை மையமாகக் கொண்டு வர்த்தகர்கள் தங்களை
நிலைநிறுத்திக் கொள்ளும்போது, ​​ஆரம்பகட்டச் சமிக்ஞைகள்
பண்டங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் மத்திய வங்கித் தரவுகளின்
குறுக்குச் சந்திப்பில் அமைகின்றன. எண்ணெயின் மீது மட்டும் ஒரு
கண் வைத்திருப்பது, உணவு மற்றும் நாணயச் சந்தைகளில் மெதுவாக
நகரும் மறுவிலை நிர்ணயத்தை வர்த்தகர்கள் கடந்து செல்ல
வழிவகுக்கும், இது வரலாற்று ரீதியாகத் தாமதமாக வந்தாலும்
செறிவான தாக்கங்களாக வெளிப்படும். கவனிக்க வேண்டியவற்றை
இங்கே காண்க:</p><ul><li>யூரியா, அமோனியா, DAP ஆகியவற்றின் ஒப்பீட்டு
விலைகளில், எகிப்திய கிரானுலர் யூரியா மிகவும்
கண்காணிக்கப்படும் நைதரசன் ஒப்பீட்டு அளவாக உள்ளது.
</li><li>நீரிணை வழியாகப் போக்குவரத்தில் உள்ள எண்ணிக்கை
மற்றும் ஏற்றப்பட்ட கப்பல் சரக்கு உட்பட பாரசீக
வளைகுடாவிலிருந்து கப்பல் போக்குவரத்து மற்றும் கொள்கலன்
தரவுகள்.</li><li>உலக வங்கி மற்றும் FAO உணவுப் பண்டக் குறியீடுகள்,
குறிப்பாகத் தானியங்கள் மற்றும் பயிர் வகைகளின் துணைக்
குறியீடுகள்.</li><li>இந்தியா, பாகிஸ்தான், எகிப்து, நைஜீரியா ஆகிய நாடுகளின்
மத்திய வங்கி அறிக்கைகள்; இவற்றில் உணவுப் பொருட்களைச்
சார்ந்த நுகர்வோர் விலைக் குறியீட்டு எண் - CPI பதிவுகள்,
வழக்கத்திற்கு மாறான கொள்கை நகர்வுகளை மேற்கொள்ள
நிர்பந்திக்கக்கூடும்.</li><li>EM CPI வெளியீடுகளுக்குப் பிறகு, வளர்ந்து வரும் சந்தை
நாணயங்களுக்கு எதிரான DXY-இன் நடத்தை, இதில் எதிர்வினைச்
செயல்பாடு பெரும்பாலும் அடுத்த கட்டத்திற்கான சமிக்ஞையை
அளிக்கிறது.</li></ul><p>அந்நியச் செலாவணிக்குள்ளேயே, இறக்குமதியை அதிகம்
சார்ந்திருக்கும் வளரும் சந்தை நாணயங்கள், தங்கம் மற்றும் பரந்த DXY
ஆகியவற்றுக்கு எதிரான டொலர் ஜோடிகளில் இந்தக் கோட்பாட்டின்
மிகத் தெளிவான வெளிப்பாடுகளைக் காணலாம். கச்சா எண்ணெய்
தொடர்ந்து முக்கியத்துவம் வாய்ந்ததாகவே உள்ளது, ஆனால் பல
பாதைகளைக் கொண்ட ஒரு மாற்றத்தின் ஒரு பாதையை மட்டுமே
அது பதிவு செய்கிறது.</p><p>செயலாக்கம் பல பாதைகளைக் கொண்ட ஒரு மாற்றத்தைச் சந்திக்கும்
இடத்தில்
குறுகிய கால விநியோகமானது உற்பத்தித் திறனைக் காட்டிலும்
அரசியல் மற்றும் ஏற்பாட்டியல் அணுகலால் வடிவமைக்கப்படும்போது,
​​பாரம்பரிய விநியோக-தேவை மாதிரிகளைச் சார்ந்திருக்கும்
வர்த்தகர்கள் எதிர்பாராத விதமாகச் சிக்கலில் மாட்டிக்கொள்ளும்
அபாயத்தை எதிர்கொள்கின்றனர். அணுகல் நிலைமைகள் விரைவாக
நிலை மாறக்கூடும், மேலும் எண்ணெய் மற்றும் உணவுடன்
தொடர்புடைய நாணய ஜோடிகள் குறுகிய, சீரற்ற ஏற்ற
இறக்கங்களுடன் மறுவிலை நிர்ணயத்தைச் செய்யலாம், இதனால் ஒரு
மாற்றத்தைக் கண்டறிவதற்கும் அதன் மீது நடவடிக்கை எடுப்பதற்கும்
இடையில் மிகக் குறைந்த இடைவெளியே இருக்கும்.</p><p>ஒரு மாற்றத்தை விளங்கிக்கொள்வது ஒரு விஷயம் எனில்,
உண்மையான சந்தை நிலவரங்களின்படி செயல்படுவது முற்றிலும்
வேறொரு விஷயம். புவிசார் அரசியல் சமிக்ஞைகள், கச்சா
எண்ணெய்க்கான அபாயக் கட்டுப்பாட்டில் செயல்பாட்டு
நிலைத்தன்மையை ஒரு முக்கிய அங்கமாக ஆக்குகின்றன; மேலும்
இதே தர்க்கம், அதே தூண்டுதல்களுக்கு எதிர்வினையாற்றும் தங்கம்,
பண்டங்களுடன் இணைக்கப்பட்ட நாணயங்கள் மற்றும் வளர்ந்து வரும்
சந்தைக் குறுக்கு நாணய ஜோடிகளுக்கும் பொருந்தும்.</p><p>
இங்குதான் <a href="https://www.exness.com/" target="_blank">Exness</a> இந்த விவாதத்திற்குள் நுழைகிறது. பல பாதைகளைக்
கொண்ட மாற்றங்களை எதிர்கொள்ளும்போது, ​​CFD வர்த்தகர்கள் கச்சா
எண்ணெயை மட்டும் கண்காணிப்பதில்லை. இதே விநியோக நிலைமை
அனைத்துச் சொத்து வகைகளிலும் பரவி வருவதால், அவர்கள் தங்கம்,
DXY, பண்டங்களுடன் தொடர்புடைய நாணயங்கள் மற்றும் வளர்ந்து
வரும் சந்தை ஜோடிகளையும் கண்காணித்து வரலாம்.</p><p> ஒரே நேரத்தில்
பல சந்தைகள் மறுவிலை நிர்ணயத்தைச் செய்யும்போது, ​​வர்த்தகச்
செயல்பாட்டின் நிலைத்தன்மையும் பரவல் ஸ்திரத்தன்மையும் ஒரு
வர்த்தகர் தனது அபாயத்தைக் கையாளும் முறையின் ஒரு
பகுதியாகின்றன. வர்த்தகச் சூழல், நுழைவு அல்லது வெளியேறும்
புள்ளியில் தேவையற்ற தடைகளை ஏற்படுத்தினால், ஒரு துல்லியமான
பேரியல் கணிப்பு கூட அதன் மதிப்பை இழக்கக்கூடும்.</p><p><a href="https://www.exness.com/" target="_blank">Exness</a> Terminal இந்தப் பணிப்பாய்வுக்குப் பங்களிக்கிறது. எண்ணெய்
விலையேற்றத்திலிருந்து உணவு விலையேற்றத்திற்கும், பின்னர்
நாணய மதிப்புகளுக்கும் பரவும் ஒரு மாற்றத்தைப் பின்பற்றி வரும் CFD
வர்த்தகர்களுக்கு, தொடர்பில்லாத கருவிகளுக்கு இடையில் மாறாமல்,
தொடர்புடைய கருவிகளைக் கண்காணிக்கவும், விலை மாற்றங்களை
ஒப்பிடவும், வர்த்தகங்களை மேற்கொள்ளவும் மற்றும் திறந்த வணிக
வாய்ப்புகளை நிர்வகிக்கவும் ஒரு தெளிவான வழி தேவைப்படுகிறது.</p><p>
பதிவு செய்தல், வர்த்தகம் செய்தல், நிலை மேலாண்மை மற்றும்
கணக்குக் கட்டுப்பாடுகள் ஆகிய அனைத்தும் ஒரே இணைய மற்றும்மொபைல் சூழலில் இருப்பதால், சந்தை நிலவரங்கள் வேகமாக
மாறும்போது, ​​பகுப்பாய்விலிருந்து செயலுக்குச் செல்வதற்கான
மிகவும் கட்டுப்படுத்தப்பட்ட பாதையை<a href="https://www.exness.com/" target="_blank"> Exness</a> Terminal ஆதரிக்கிறது.
பரந்த நோக்கில் கூறப்பட்டுள்ள விஷயம் என்னவென்றால், விநியோக
மாற்றங்கள் ஒரே ஒரு சந்தைக்குள் மட்டும் அடங்கிவிடுவதில்லை.</p><p>
அவை பண்டங்கள், விளையேற்ற எதிர்பார்ப்புகள், மத்திய வங்கிக்
கொள்கை, FX ஆகியவற்றின் ஊடாகப் பயணிக்கின்றன. CFD
வர்த்தகர்களைப் பொறுத்தமட்டில், அந்தத் தொடர் சங்கிலியை
முன்கூட்டியே கண்டறிவது மட்டும் சவாலாக இல்லை. அந்த வர்த்தகச்
சங்கிலி நகரத் தொடங்கும்போது, ​​அவர்கள் ஒழுக்கத்துடன் செயல்பட
உதவும் ஒரு வர்த்தகச் சூழலை உருவாக்குவதே அந்தச் சவாலாகும்.</p>]]></content>
            <updated>2026-07-16T17:02:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Manchu</name>
            </author>
            <title type="text"><![CDATA[ராகு, கேதுவின் அரிய சேர்க்கை... 4 ராசிகளுக்கு இனி பொற்காலம் தானாம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/rahu-ketu-forms-these-zodiac-signs-growth-money-1784206363"></link>
            <id>https://manithan.com/article/rahu-ketu-forms-these-zodiac-signs-growth-money-1784206363</id>
            <summary type="text">ஜோதிட சாஸ்திரத்தில் அனைத்து கிரகங்களும் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு தங்களின் ராசி மற்றும் நட்சத்திரத்தை மாற்றுகின்றன. ஜூலை மாதத்தில் பல முக்கியமான...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜோதிட சாஸ்திரத்தில் அனைத்து கிரகங்களும் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு தங்களின் ராசி மற்றும் நட்சத்திரத்தை மாற்றுகின்றன. ஜூலை மாதத்தில் பல முக்கியமான கிரக மாற்றங்கள் நிகழப்போகின்றன. ஜூலை மாத மத்தியில் ஒரு அரிதான கிரக அமைப்பு உருவாகப்போகிறது. இந்த கிரகப் பெயர்ச்சியில் இதில் சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன் மற்றும் சனி ஆகிய ஏழு முக்கிய கிரகங்களும் ராகு மற்றும் கேதுவிற்கு இடைப்பட்ட பகுதியில் அமைகின்றன.</p><p>ஜூலை 19 அன்று சந்திரன் கன்னி ராசிக்கு மாறி இந்தக் கிரக அமைப்பை உடைக்கும் வரை இந்த நிலை நீடிக்கும். ராகு மற்றும் கேது எப்போதும் ஒன்றுக்கொன்று 180 டிகிரி இடைவெளியில் அமைந்திருக்கும். தற்போது ராகு கும்ப ராசியிலும், கேது சிம்ம ராசியிலும் உள்ளனர். அனைத்து முக்கிய கிரகங்களும் இவற்றுக்கு இடைப்பட்டப் பகுதிக்குள் அமைந்திருப்பதால், இது அரிதான கிரக வலை என்று குறிப்பிடப்படுகிறது. </p><p>ஜூலை 19 அன்று சந்திரன் கன்னி ராசிக்குள் நுழையும்போது இந்த அமைப்பு முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அரிதான கிரக அமைப்பு சில ராசிக்காரர்களுக்கு எதிர்மறையான பலன்களை அளிக்கப்போகிறது. அவர்கள் எந்தெந்த ராசிக்காரர்கள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cb785f46-27fd-4f0a-8d3e-823b04b10d20/26-6a590bc931f83.webp' /></p><h2>மிதுனம் </h2><p>மிதுன ராசிக்காரர்களுக்கு ஜூலை 19 வரை தனிப்பட்ட மற்றும் தொழில்முறை உறவுகளில் தகவல் தொடர்பு இடைவெளிகள், முடிவெடுப்பதில் குழப்பம் மற்றும் தவறான புரிதல்கள் ஏற்படக்கூடும். இந்த கிரக அமைப்பால் மிதுன ராசிக்காரர்கள் பல்வேறு வகையான பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். திருமண வாழ்க்கையில், அவர்கள் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும், மேலும் வாழ்க்கைத் துணையுடன் தவறான புரிதல்கள் ஏற்படக்கூடும்.</p><p>அவர்களுக்குகள் கருத்து வேறுபாடுகளும், வாக்குவாதங்களும் ஏற்படலாம். இதுபோன்ற சூழ்நிலையில், கொஞ்சம் பொறுமையாகவும் நிதானமாகவும் இருப்பதன் மூலம் பிரச்சினைகளைத் தீர்க்க முயற்சி செய்யுங்கள். உங்கள் குழந்தைகள் பற்றிய கவலைகள் அதிகரிக்கலாம். மொத்தத்தில் அவர்கள் தனிப்பட்ட மற்றும் தொழில்முறை வாழ்க்கையில் அதிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e46cb00d-d468-4175-aab2-f7ba6065d3ec/26-6a590b9ae3366.webp' /></p><h2>கடகம் </h2><p>கடக ராசிக்காரர்கள் இந்த அரிய கிரக சேர்க்கையால் எதிர்மறையான பலன்களை அனுபவிக்கப் போகிறார்கள். வாக்குவாதங்கள் உங்களுக்கு தீங்கு விளைவிக்கும் என்பதால் அவற்றைத் தவிர்க்கவும். சாலை விபத்துக்கள் ஏற்படும் அபாயம் அதிகம், எனவே வாகனம் ஓட்டும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உங்கள் திருமணத்தில் அமைதியைப் பேண உங்கள் துணையிடம் அன்பையும் பச்சாதாபத்தையும் காட்டுங்கள், இல்லையெனில் தற்காலிக பிரிவு ஏற்படலாம். அவர்களின் உணர்வுகளைப் புண்படுத்தாமல் கவனமாக இருங்கள். ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை அளிப்பது அனைத்தையும் விட மிக முக்கியம்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3aa90e3c-d3ca-4a9c-8a7a-162190084a8f/26-6a590b9b998c1.webp' /></p><p></p><h2>சிம்மம் </h2><p>கேது தற்போது சிம்ம ராசியில் இருப்பதால், சிம்ம ராசிக்காரர்கள் நிதி, உறவுகள் மற்றும் முடிவெடுப்பதில் நிச்சயமற்ற தன்மையை அனுபவிக்கக்கூடும். இந்த காலகட்டத்தில் நீங்கள் வேலையில் கவனத்துடன் இல்லாவிட்டால், பல விரும்பத்தகாத சம்பவங்கள் நிகழ வாய்ப்புகள் உள்ளது. உங்கள் சக ஊழியர்களுக்கு உதவி செய்ய முயற்சி செய்யுங்கள். பொறுமையாக இருந்து ஒவ்வொரு பணியையும் சரியாக முடிப்பது நல்லது.</p><p>அதேசமயம் திருமண உறவிலும் சில பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஒருவருக்கொருவர் சரியாக தொடர்பு கொள்வதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இல்லையெனில், சில கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். தொழிலில் சில நெருக்கடிகள் அதிகரிக்கலாம். எச்சரிக்கையாக இல்லாவிட்டால் இந்த காலகட்டத்தில் தனிப்பட்ட வாழ்கையிலும், தொழில் வாழ்க்கையிலும் பல பின்னடைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/07d2a8b6-83a4-47dd-9dbe-9132a0c8b1e0/26-6a590b9c4aaa1.webp' /></p><h2>கும்பம் </h2><p>ராகு தற்போது கும்ப ராசியில் இருப்பதால், கும்ப ராசிக்காரர்கள் தங்கள் தொழில் சார்ந்த முடிவுகள் மற்றும் பணியிட உறவுகளில் கவனத்துடன் இருக்க வேண்டும். வேலையில் அழுத்தம் அதிகரிப்பதால் அவர்கள் வேலையில் கடுமையான சிரமங்களை சந்திக்க நேரிடும். நிலை மோசமாகும் போது, அவர்கள் வேலையை இழக்கக் கூட வாய்ப்புள்ளது. அவர்கள் தங்களின் தற்போதைய வேலையில் அதிருப்தியை சந்திக்கலாம், இதன் விளைவாக, அவர்கள் வேலையை மாற்றுவது குறித்து பரிசீலிக்கலாம்.

</p><p>புதிய வேலைகளில் சேர்வதற்கான வாய்ப்புகள் அவர்களுக்கு கிடைக்கலாம். இருப்பினும், கும்ப ராசிக்காரர்களுக்கு இதனால் எந்தப் பயனும் இருக்காது. வியாபாரிகள் இந்த காலகட்டத்தில் ஏமாற்றங்களை சந்திக்கலாம், எதிர்பார்த்த லாபம் கிடைக்காமல் போகலாம். சக ஊழியர்கள் உங்கள் நட்பை அல்லது இரக்கக் குணத்தை தவறாக பயன்படுத்தலாம். இதன் விளைவாக அவர்களின் நற்பெயருக்கு தீங்கு விளைவிக்கலாம்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5d3cc7df-55d6-43bb-9ec8-9609858f6e7a/26-6a590b9cef8a1.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td><i>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன்<a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள் <a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"><b>FOLLOW NOW</b></a>&nbsp;&nbsp;</i><br></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-16T16:51:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[2027 முதல் இங்கிலாந்தில் பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் இது கட்டாயம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/england-to-screen-all-newborns-for-sma-2027-1784220726"></link>
            <id>https://news.lankasri.com/article/england-to-screen-all-newborns-for-sma-2027-1784220726</id>
            <summary type="text">இங்கிலாந்தில் பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் 2027 அக்டோபர் மாதம் முதல் Spinal Muscular Atrophy (SMA) எனப்படும் அரிதான தசை சிதைவுநோய்க்கான பரிசோதனை...</summary>
            <content type="html"><![CDATA[<p>இங்கிலாந்தில் பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் 2027 அக்டோபர் மாதம் முதல் Spinal Muscular Atrophy (SMA) எனப்படும் அரிதான தசை சிதைவுநோய்க்கான பரிசோதனை கட்டாயமாக நடைபெற உள்ளது.
</p><p>
சுகாதார மற்றும் சமூக பராமரிப்புத் துறை இந்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
</p><p></p><p>SMA நோய் குழந்தைகளின் தசைகளை பலவீனப்படுத்தி, உட்கார, தவழ, நடக்க முடியாமல், சுவாசிப்பதாலும், விழுங்குவதிலும் சிரமம் ஏற்படுத்துகிறது.</p><p>

சிகிச்சை இல்லாமல் விட்டால், இரண்டு ஆண்டுக்குள் உயிரிழக்கும் அபாயம் உள்ளது. இங்கிலாந்தில் வருடத்திற்கு சுமார் 48 குழந்தைகள் இந்த நோயால் பாதிக்கப்படுகின்றனர்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0527ccdd-74e4-44d5-9d30-0344c74f3240/26-6a590c38175cb.webp' /></p><p>புதிய திட்டத்தின் மூலம், குழந்தைகள் பிறந்த 5-ஆம் நாளில் எடுக்கப்படும் heel-prick test மூலம் SMA பரிசோதனை செய்யப்படும். இதுவரை 10 நோய்களுக்கு பயன்படுத்தப்பட்ட இந்த பரிசோதனை, இனி SMA-க்கும் பயன்படுத்தப்படும்.
</p><p>
முன்பு அறிவிக்கப்பட்ட பைலட் திட்டம் 72 சதவீத குழந்தைகளுக்கே பரிசோதனை செய்யும் வகையில் இருந்ததால், “postcode lottery” எனப்படும் சமத்துவமின்மைக்கு விமர்சனங்கள் எழுந்தன. அதனைத் தொடர்ந்து, அரசு அனைத்து குழந்தைகளுக்கும் பரிசோதனை செய்யும் வகையில் திட்டத்தை விரிவுபடுத்தியுள்ளது.
</p><p></p><p>SMA UK அமைப்பின் தலைவர் Giles Lomax, “இது குழந்தைகளின் எதிர்காலத்தை பாதுகாக்கும் மிகப்பெரிய முன்னேற்றம்” எனக் கூறியுள்ளார். </p><p>Muscular Dystrophy UK அமைப்பும் இதை “வரலாற்று சிறப்புமிக்க தருணம்” என வரவேற்றுள்ளது.
</p><p>
இந்த முடிவு SMA நோயால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நம்பிக்கையையும், எதிர்காலத்தில் ஆரோக்கியமான வாழ்க்கையையும் வழங்கும் என்று நம்பப்படுகிறது.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-16T16:50:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[உக்ரைன் ஜனாதிபதிக்கு எதிராக வெடித்த மக்கள் போராட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/protests-in-ukrainian-cities-against-zelensky-1784220599"></link>
            <id>https://tamilwin.com/article/protests-in-ukrainian-cities-against-zelensky-1784220599</id>
            <summary type="text">உக்ரைனின் பல்வேறு நகரங்களில் ஜனாதிபதிக்கு வொலொடிமிர் செலென்ஸ்கிக்கு எதிராக மக்கள் வீதிகளில் இறங்கிப் போராடங்களை ஆரம்பித்துள்ளனர்.
உக்ரைனில் மிகவும் ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>உக்ரைனின் பல்வேறு நகரங்களில் ஜனாதிபதிக்கு வொலொடிமிர் செலென்ஸ்கிக்கு எதிராக மக்கள் வீதிகளில் இறங்கிப் போராடங்களை ஆரம்பித்துள்ளனர்.
</p><p>உக்ரைனில் மிகவும் செல்வாக்கு பெற்ற பாதுகாப்பு அமைச்சராக விளங்கிய மிகைலோ பெடோரோவை ஜனாதிபதி செலென்ஷஸ்கீ திடீரென பதவியிலிருந்து நீக்கியுள்ளார்.</p><p></p><h2>மக்கள் போராட்டம்</h2><p>
</p><p>ரஷ்யாவுக்கு எதிரான போர் தீவிரமடைந்துள்ள சூழலில், ஜனாதிபதி செலென்ஸ்கீ எடுத்துள்ள இந்த முடிவு உக்ரைன் இராணுவம், சிவில் சமூகம் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/917f6458-73a6-4b70-af87-ced5515b6458/26-6a590bb99f7e0.webp' /></p><p>
</p><p>இன்று காலை முதலே தலைநகர் கீவ்வில் உள்ள இவான் பிராங்கோ சதுக்கத்தில் பெருமளவிலான இளைஞர்களும் பொதுமக்களும் திரண்டனர். 
ஜனாதிபதியின் இந்த நடவடிக்கைக்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில், "அவமானம்! அவமானம்!" என்று முழக்கமிட்டனர்.
</p><p>போராட்டக்காரர்கள் கைகளில் ஏந்தியிருந்த சுலோக அட்டைகளில் ஜனாதிபதியின் முடிவை விமர்சித்து பல கோஷங்கள் எழுதப்பட்டிருந்தன.
"பெடோரோவ் மீது கை வைக்காதே!", "வெற்றியை சீர்குலைப்பதை நிறுத்து!" மற்றும் "நீ என்ன செய்கிறாய், முட்டாளே?" போன் வாசகங்கள் எழுதப்பட்டிருந்தன.</p><p></p><h2>பெரும் அதிருப்தி</h2><p>
</p><p>ஜனாதிபதியின் இந்த முடிவு இராணுவ வீரர்களிடையேயும் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e8e3278a-7f64-4205-af2a-db5b681aecda/26-6a5918c01128d.webp' /></p><p>
</p><p>இராணுவத் தலைமைத் தளபதி ஒலெக்சாண்டர் சிர்ஸ்கிக்கும், பாதுகாப்பு அமைச்சர் பெடோரோவுக்கும் இடையிலான அதிகார மோதலில், ஜனாதிபதி செலென்ஸ்கீ, தளபதி சிர்ஸ்கிக்கு ஆதரவாகச் செயல்பட்டு பெடோரோவை நீக்கியுள்ளார் என்பதே மக்கள் கோபத்திற்கு முக்கியக் காரணமாகும்.</p><p>
மக்கள் வீதிக்கு வந்து தங்களது கருத்துக்களைத் தெரிவிப்பது சரியானதுதான். உக்ரைன் சமூகம் என்ன சொல்கிறது என்பதை நான் கேட்டுக்கொண்டுதான் இருக்கிறேன்" என ஜனாதிபதி செலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-16T16:50:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[சந்தா அப்பா சொன்ன ஷாக்கிங் விஷயம், சேரன் செய்யப்போவது என்ன... அய்யனார் துணை சீரியல் புரொமோ]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/ayyanar-thunai-16th-to-18th-july-2026-promo-1784203357"></link>
            <id>https://cineulagam.com/article/ayyanar-thunai-16th-to-18th-july-2026-promo-1784203357</id>
            <summary type="text">அய்யனார் துணைவீட்டில் அனைவரும் சம்பாதிக்கும் பணத்தை நிலாவிடம் கொடுத்து வீட்டு செலவு போக இருக்கும் பணத்தை சேமிக்கலாம், வீட்டிற்கு வேண்டியதை வாங்கலாம் எ...</summary>
            <content type="html"><![CDATA[<h2>அய்யனார் துணை</h2><p>வீட்டில் அனைவரும் சம்பாதிக்கும் பணத்தை நிலாவிடம் கொடுத்து வீட்டு செலவு போக இருக்கும் பணத்தை சேமிக்கலாம், வீட்டிற்கு வேண்டியதை வாங்கலாம் என அண்ணன்-தம்பிகள், நிலா பேசி முடிவு செய்தார்கள்.</p><p>அதுபோல் எல்லோரும் பணம் கொடுக்க வீட்டிற்கு தேவையான செலவு போக ரூ. 35 ஆயிரம் மீதம் இருந்தது, அந்த பணத்தில் வீட்டிற்கு டிவி வாங்கலாம் என முடிவு செய்து கிளம்பினார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/407f0e65-25e7-4e8e-8a71-8cb013fc0c5d/26-6a58c959ae49a.webp' /></p><p>அந்த நேரம் நடேசன் கடன் வாங்கியவர்கள் வீட்டின் முன் வந்து பிரச்சனை செய்கிறார்கள், அடிதடி என ஆகிறது. அந்த நேரத்தில் பிரச்சனையை சமாளிக்க நிலா டிவி வாங்க வைத்திருந்த பணத்தை கடன் கேட்டவர்களிடம் கொடுக்க சொல்கிறார், சேரனும் கொடுத்துவிடுகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/95cce10f-c274-437c-b4cf-a4c8b692f1a6/26-6a58c958d2f62.webp' /></p><p>நாளைய எபிசோடின் புரொமோவில், வீட்டிற்கு வந்த நடேசனிடம் சேரன் கோபமாக பேசுகிறார். இது உங்கள் வீடு என எப்போதும் சொல்லுவீங்களே நீங்களே இங்கே இருந்துக்கோங்க, நாங்கள் எங்கேயாவது போகிறோம் என்கிறார்.</p><h2>புரொமோ</h2><p>கதையில் நடேசன் பிரச்சனை இப்போது ஓடிக் கொண்டிருக்க அடுத்த பிரச்சனைக்கான கதைக்களம் வந்துவிட்டது. அதாவது சந்தாவை சந்திக்க சேரன் இராமேஸ்வரம் செல்கிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6dd62771-b22d-4da6-bb6d-5aa204ea75e5/26-6a58c85f7f0e0.webp' /></p><p>அந்த நேரம் சந்தா அப்பா வர சேரன் நீங்கள் சொன்னது போல் கண்டிப்பாக பணத்திற்கு ஏற்பாடு செய்துவிடுவேன் என்கிறார். ஆனால் சந்தா அப்பா என் பொண்ணுக்கும் உனக்கும் கண்டிப்பாக திருமணம் நடக்காது என கூற சேரன் செம ஷாக் ஆகிறார்.</p><p>இதோ புரொமோ,</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/xGCnHlr2Q0k" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-07-16T16:40:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பில் சற்றுமுன்னர் துப்பாக்கிச்சூடு...! ஒருவர் படுகாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/shooting-reported-in-kaduwela-a-short-while-ago-1784218428"></link>
            <id>https://ibctamil.com/article/shooting-reported-in-kaduwela-a-short-while-ago-1784218428</id>
            <summary type="text">கொழும்பில் சற்றுமுன்னர் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

கடுவலை - நவகமுவ வந்துராமுல்ல பகுதியில் இந்த துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுள...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பில் சற்றுமுன்னர் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.</p><p>

கடுவலை - நவகமுவ வந்துராமுல்ல பகுதியில் இந்த துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுள்ளது.
</p><p>
இந்தச் சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.</p><p></p><h2>மேலதிக விசாரணை</h2><p>சம்பவத்தில் காயமடைந்தவர் தற்போது நவகமுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சைப் பெற்று வருகின்றார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/107cf514-54e4-426d-876b-8568e1c9204b/26-6a590951f3595.webp' /></p><p>இந்தச் சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p>]]></content>
            <updated>2026-07-16T16:33:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்கா போர்க் குற்றங்களில் ஈடுபடுவதாக ஈரான் அதிரடி குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/us-committing-war-crimes-1784219484"></link>
            <id>https://tamilwin.com/article/us-committing-war-crimes-1784219484</id>
            <summary type="text">&amp;nbsp;அமெரிக்கா போர்க்குற்றங்களில் ஈடுபடுவதாக ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி குற்றம் சாட்டியுள்ளார். 
ஈரான் மீதான தாக்குதலில் அமெரிக்கா இவ்வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;அமெரிக்கா போர்க்குற்றங்களில் ஈடுபடுவதாக ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி குற்றம் சாட்டியுள்ளார். </p><p>
ஈரான் மீதான தாக்குதலில் அமெரிக்கா இவ்வாறு போர்க் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>முக்கிய உள்கட்டமைப்புகள் மீதான தாக்குதல்களும், பாலங்கள் மற்றும் மின் உற்பத்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்ற மிரட்டல்களும், "கொடிய குற்றங்களைச் செய்வதற்கான அமெரிக்க ஆளும் குழுவின் குற்றவியல் நோக்கத்தை" காட்டுவதாக அவர் குற்றம் சுதம்தியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/035132dd-923b-4ace-bbff-b420ab28510a/26-6a590762c4f38.webp' /></p><p>
</p><p>அமெரிக்காவின் இந்தத் தாக்குதல்கள் ஐக்கிய நாடுகள் சபையின் சாசனம் மற்றும் சர்வதேச சட்டத்தின் அடிப்படை கோட்பாடுகளை அப்பட்டமாக மீறும் செயலாகும் என அவர் தெரிவித்துள்ளார்.
</p><p>1949-ஆம் ஆண்டின் நான்கு ஜெனிவா ஒப்பந்தங்கள் உட்பட, சர்வதேச குற்றவியல் சட்டத்தின் அடிப்படை கோட்பாடுகளின்படி இவை "பாரதூரமான சர்வதேச குற்றங்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.</p><p>
"இத்தகைய குற்றங்களைச் செய்பவர்களை விசாரித்து தண்டிக்க அனைத்து அரசாங்கங்களுக்கும் கடமை உள்ளது என வலியுறுத்தியுள்ளார்.
</p><p>மேலும், அமெரிக்க அதிகாரிகளின் அர்த்தமற்ற பேச்சுக்கள் மற்றும் கொடூரமான மிரட்டல்களை அவர் சாடியுள்ளார்.</p><p>
ஈரானிய மக்கள் தங்களது சுதந்திரம், நியாயமான உரிமைகள் மற்றும் மனித கண்ணியத்தை விட்டுக்கொடுக்காமல் உறுதியாக இருப்பதன் காரணமாகவே இந்த விரோதப் போக்கு காட்டப்படுவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
</p><p>இறுதியாக, இதற்கு காரணமானவர்கள் "தங்கள் மேலதிகாரிகளின் உத்தரவின் பேரில் செயல்பட்டதாகக் கூறி, சட்டரீதியான பொறுப்பிலிருந்து தப்பிக்க முடியாது" எனவும் அவர் எச்சரித்துள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-16T16:33:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடுவலையில் சற்றுமுன் துப்பாக்கிச் சூடு! ஒருவர் படுகாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/shooting-incident-in-kaduwela-a-short-while-ago-1784218416"></link>
            <id>https://tamilwin.com/article/shooting-incident-in-kaduwela-a-short-while-ago-1784218416</id>
            <summary type="text">கடுவலை - நவகமுவ வந்துராமுல்ல பகுதியில் துப்பாக்கிச்சூடொன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கி சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளதாக...</summary>
            <content type="html"><![CDATA[<p>கடுவலை - நவகமுவ வந்துராமுல்ல பகுதியில் துப்பாக்கிச்சூடொன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>

துப்பாக்கி சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.</p><p></p><h2>துப்பாக்கிச் சூடு</h2><p>

இந்த துப்பாக்கிச் சூடு இன்று (16) இரவு நடத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0ed436a9-fff3-4585-9311-6b26c4c75d9f/26-6a59061bb4a65.webp' /></p><p>

சம்பவத்தில் காயமடைந்தவர் தற்போது நவகமுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றார் என பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
</p><p>

இந்த விடயம் தொடர்பான மேலதிக விசாரணையை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-16T16:26:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[எபோலா நோயிலிருந்து விடுபடும் உகாண்டா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/uganda-is-recovering-ebola-patient-recovered-home-1784218789"></link>
            <id>https://tamilwin.com/article/uganda-is-recovering-ebola-patient-recovered-home-1784218789</id>
            <summary type="text">உகாண்டாவில் எபோலா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்த கடைசி நோயாளியும் இன்று
குணமடைந்து மருத்துவமனையிலிருந்து விடுவிக்கப்பட்டார்.

இதன் மூலம், உகாண்டா...</summary>
            <content type="html"><![CDATA[<p>உகாண்டாவில் எபோலா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்த கடைசி நோயாளியும் இன்று
குணமடைந்து மருத்துவமனையிலிருந்து விடுவிக்கப்பட்டார்.
</p><p>
இதன் மூலம், உகாண்டா நாடு எபோலா வைரஸ் தொற்றிலிருந்து முற்றிலும் விடுபட்டதாக
அறிவிப்பதற்கான 42 நாட்கள் கவுண்ட் டவுன் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது
என்று அந்த நாட்டு சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
</p><p>
அண்டை நாடான கொங்கோ ஜனநாயகக் குடியரசில் எபோலா பாதிப்பு தீவிரமாக உள்ள
நிலையில், அங்கிருந்து உகாண்டாவுக்குப் பயணித்த 15 பேர் உட்பட மொத்தம் 20
பேருக்கு கடந்த மே மாதம் பாதியிலிருந்து இந்த அரிய வகை 'புந்திபூகியோ' எபோலா
தொற்று உறுதி செய்யப்பட்டது.</p><p></p><h2>புதிய பாதிப்புகள்</h2><p>
</p><p>
கொங்கோவில் தற்போதும் புதிய பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வரும் வேளையில்,
உகாண்டாவில் கடந்த ஜூன் 22ஆம் திகதிக்குப் பிறகு புதிய பாதிப்புகள் எதுவும்
கண்டறியப்படவில்லை.
</p><p>
இதுகுறித்து உகாண்டா சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள எக்ஸ் (X) பதிவில்,
"உகாண்டாவின் கடைசி எபோலா நோயாளியான காங்கோ நாட்டைச் சேர்ந்த நபர் முற்றிலும்
குணமடைந்து இன்று மருத்துவமனையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்" என்று
குறிப்பிட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7cd0921f-8b9a-4403-ad55-23f75998b867/26-6a5904a7c8897.webp' /></p><p>
</p><p>
அவர் கம்பாலாவில் உள்ள முலகோ தேசிய மருத்துவமனையின் தனிமைப்படுத்தப்பட்ட
பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார்.

உலக சுகாதார அமைப்பின் (WHO) வழிகாட்டுதலின்படி, எபோலா வைரஸின் அதிகபட்ச
தனிமைப்படுத்தல் காலம் (Incubation period) 21 நாட்களாகும்.</p><p>

இதனால், எவ்வித புதிய பாதிப்பும் இல்லாமல் அடுத்த 42 நாட்கள் கடந்தால் மட்டுமே
ஒரு நாடு எபோலா தொற்றிலிருந்து முற்றிலும் விடுபட்டதாக அதிகாரப்பூர்வமாக
அறிவிக்கப்படும்.

தற்போது உகாண்டா அந்த இலக்கை நோக்கி நகரத் தொடங்கியுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-16T16:24:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பு புறநகர் பகுதியில் சற்றுமுன் துப்பாக்கிச் சூடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/shooting-reported-in-colombo-suburbs-1784219044"></link>
            <id>https://jvpnews.com/article/shooting-reported-in-colombo-suburbs-1784219044</id>
            <summary type="text">கொழும்பு கடுவலை - நவகமுவ, வந்துராமுல்ல பகுதியில் இன்று (16) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார்.மேலதிக விசாரணை

காயமடைந்த ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு கடுவலை - நவகமுவ, வந்துராமுல்ல பகுதியில் இன்று (16) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார்.</p><p></p><h3>மேலதிக விசாரணை</h3><p>

காயமடைந்த நபர் உடனடியாக நவகமுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/99367a14-51d5-4ce8-a8b2-837e4006844d/26-6a5905a5b4a99.webp' /></p><p>துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் மற்றும் சம்பவத்தில் தொடர்புடைய சந்தேகநபர்கள் தொடர்பான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.
</p><p>
சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
</p><p>
இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்கள் கிடைக்கும் பட்சத்தில் செய்தி புதுப்பிக்கப்படும்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-16T16:24:14+00:00</updated>
        </entry>
    </feed>
