<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-07-12T05:44:18+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[30 வினாடிகளில் 195 முறை முத்தம்: கின்னஸ் சாதனை படைத்த பிரேசிலில் காதல் ஜோடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/brazil-couple-world-record-195-kisses-in-30-sec-1783834682"></link>
            <id>https://news.lankasri.com/article/brazil-couple-world-record-195-kisses-in-30-sec-1783834682</id>
            <summary type="text">பிரேசிலில் காதல் ஜோடி ஒருவர் வெறும் 30 வினாடிகளில் 195 முறை முத்தம் கொடுத்து புதிய கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளனர். பிரேசில் தம்பதியின் புதிய உலக சாதன...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரேசிலில் காதல் ஜோடி ஒருவர் வெறும் 30 வினாடிகளில் 195 முறை முத்தம் கொடுத்து புதிய கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளனர்.</p><h2> பிரேசில் தம்பதியின் புதிய உலக சாதனை</h2><p>
பிரேசிலின் சாவோ பாலோ நகரை சேர்ந்த ரெனாடோ மற்றும் நையாரா என்ற தம்பதி வெறும் 30 வினாடிகளில் 195 முறை ஒருவருக்கொருவர் முத்தமிட்டு கொண்டு புதிய சாதனை படைத்துள்ளனர்.</p><p> இருவரும் மருத்துவத் துறையில் பணிபுரியும் நிலையில், ரெனாடோவுக்கு ADHD எனப்படும் கனக்குறைவு மற்றும் மிகையான செயல்பாட்டு குறைப்பாடு பாதிப்பு உள்ளது.</p><p><iframe src="https://www.facebook.com/plugins/video.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2Freel%2F27482790734720982%2F&show_text=0&width=267" width="267" height="476" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share" allowFullScreen="true"></iframe></p><p></p><p> இந்த குறைப்பாட்டை முறையான பயிற்சிகளின் மூலம் கட்டுப்படுத்தலாம் என்பதை நிரூபிக்கவே இந்த முத்தம் கொடுக்கும் முயற்சியை மேற்கொண்டதாக தம்பதியினர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.</p><h2>தம்பதியின் உறவு பிரிதல்</h2><p>முத்தம் கொடுக்கும் இந்த சாதனையை புரியும் போது தம்பதியின் ஒருங்கிணைந்த நகர்வும் வேகமும் பார்பதற்கு மிகவும் சீரானதாக இருந்தது. அதுவே தம்பதியை இந்த சாதனையை படைக்க வைத்துள்ளது.</p><p> சாதனைக்கு பிறகு ரெனாட்டோ இது தொடர்பான தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6b4cb707-b01e-4ad8-b76e-5447cb01af6e/26-6a53283bbd211.webp' /></p><p> மேலும் இந்த சாதனை தங்களுடைய வலுவான உறவின் புரிதலையும், ஒருங்கிணைப்பையும் காட்டுவதாக உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.</p><p> ரெனாடோ மற்றும் நையாரா தம்பதியின் இந்த முயற்சி தற்போது கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.</p><p> அத்துடன் இருவரும் முத்தம் கொடுத்துக் கொள்ளும் வீடியோ காட்சி தற்போது வைரலாகி வருகிறது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p>&nbsp;<br></p>]]></content>
            <updated>2026-07-12T05:38:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[திருகோணமலையில் குடும்பத்தினருடன் சென்ற 11 வயது சிறுவன் பரிதாப பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/trincomalee-boy-11-dies-during-family-trip-1783834504"></link>
            <id>https://jvpnews.com/article/trincomalee-boy-11-dies-during-family-trip-1783834504</id>
            <summary type="text">மூதூர் - மஹாவலி கங்கை ஆற்றில் நேற்று (10) குடும்பத்தினருடன் சென்ற சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.&amp;nbsp;

...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">மூதூர் - மஹாவலி கங்கை ஆற்றில் நேற்று (10) குடும்பத்தினருடன் சென்ற சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.&nbsp;</p><p style="text-align: justify; ">



இவ்வாறு உயிரிழந்த சிறுவன் மூதூர் -கங்குவேலி கிராமத்தைச் சேர்ந்த&nbsp; 11 வயதுவர் என தெரியவருகிறது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/301b4077-dd64-4721-9a74-01504b08d69a/26-6a532789846f3.webp' /></p><h2 style="text-align: justify; ">&nbsp;மரண விசாரணை</h2><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">


சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,&nbsp; </p><p style="text-align: justify; ">குறித்த சிறுவன் குடும்பத்தினருடன் சமையலுக்கு சென்ற வேளை ஆற்றில் இறங்கிய போது நீரில் மூழ்கியுள்ளார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">


அவரை காப்பாற்றுவதற்கு குடும்பத்தினர் முயற்சித்தபோது பலனளிக்காத நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது.
</p><p style="text-align: justify; ">


உயிரிழந்த சிறுவனின் சடலம் அவரின் வீட்டில் வைக்கப்பட்டுள்ளதுடன் மரண விசாரணைகளை மூதூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.&nbsp;</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-07-12T05:36:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[சண்டே ஸ்பெஷல்: ஆந்திரா ஸ்டைலில் அசத்தல் மெஜஸ்டிக் சிக்கன் ரெசிபி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/restaurant-style-chicken-majestic-recipe-in-tamil-1783832100"></link>
            <id>https://manithan.com/article/restaurant-style-chicken-majestic-recipe-in-tamil-1783832100</id>
            <summary type="text">ஞாயிற்றுக்கிழமை வந்தாலே பல வீடுகளில் அசைவ விருந்து என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. குறிப்பாக, சிக்கன் இல்லாமல் சண்டே மதிய உணவு முழுமையடையாது எ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஞாயிற்றுக்கிழமை வந்தாலே பல வீடுகளில் அசைவ விருந்து என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. குறிப்பாக, சிக்கன் இல்லாமல் சண்டே மதிய உணவு முழுமையடையாது என்பதே பலரின் எண்ணம்.</p><p> இன்றுவீட்டிலும் சிக்கன் வாங்கி சமைக்கத் திட்டமிட்டுள்ளீர்களா? அதே பழக்கமான சிக்கன் குழம்பு, வறுவல் அல்லது 65 போன்ற உணவுகளைச் செய்வதற்குப் பதிலாக, குடும்பத்தினரை ஆச்சரியப்படுத்தும் வகையில் வித்தியாசமான மற்றும் சுவைமிக்க ஒரு சிக்கன் சைடு டிஷ் செய்து கொடுக்க விரும்புகிறீர்களா?</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3e9954bd-51be-4742-94a7-679188cb2087/26-6a532784d2ed4.webp' /></p><p>

அப்படியானால், ஆந்திராவின் பிரபலமான மெஜஸ்டிக் சிக்கன் (Chicken Majestic) ரெசிபியை கண்டிப்பாக முயற்சி செய்து பாருங்கள். </p><p>சாதம், பிரியாணி, ஃபிரைடு ரைஸ், நான், ரொட்டி போன்ற பல உணவுகளுக்கும் சிறந்த சைடு டிஷ்ஷாக இது அமையும். ஒருமுறை செய்து பார்த்தால், உங்கள் வீட்டிலும் அடிக்கடி செய்ய விரும்பும் சிறப்பு சிக்கன் ரெசிபிகளில் இதுவும் ஒன்றாக மாறிவிடும். இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையில் அனைவருக்கும் பிடிக்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4d3327bb-43e4-4f52-a2a1-0450b820ef6c/26-6a5327858b46b.webp' /></p><h2>தேவையான பொருட்கள்
</h2><p>எலும்பில்லாத சிக்கன் – ½ கிலோ</p><p>
மோர் – ½ கப்
</p><p>உப்பு – தேவையான அளவு</p><p>
இஞ்சி-பூண்டு விழுது – 1 ஸ்பூன்
</p><p>மிளகுத்தூள் – ½ ஸ்பூன்
</p><p>முட்டை – 1 (நன்றாக அடித்தது)
</p><p>சோளமாவு – 3 ஸ்பூன்</p><p>
பூண்டு – 1 ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)</p><p>
இஞ்சி – 1 ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
</p><p>பச்சை மிளகாய் – 2 (நீளவாக்கில் கீறியது)</p><p>
வர மிளகாய் – 2
</p><p>கறிவேப்பிலை – 1 கொத்து
</p><p>காஷ்மீரி மிளகாய்த்தூள் – 1 ஸ்பூன்</p><p>
மஞ்சள்தூள் – ¼ ஸ்பூன்</p><p>
கரம் மசாலாத்தூள் – ½ ஸ்பூன்
</p><p>கெட்டியான தயிர் – 2 ஸ்பூன்
</p><p>சோயா சாஸ் – 1 ஸ்பூன்</p><p>
புதினா இலை – 2 ஸ்பூன் (நறுக்கியது)
</p><p>கொத்தமல்லி இலை – 1 ஸ்பூன் (நறுக்கியது)</p><p>
எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5331297c-aed8-4ede-988c-5242e977ca9c/26-6a53278642cae.webp' /></p><h2>
செய்முறை</h2><p>

முதலில், எலும்பில்லாத சிக்கனை மெல்லிய நீளமான துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் மோர் மற்றும் தேவையான அளவு உப்பை சேர்த்து நன்றாகக் கலக்கவும். </p><p>அதில் சிக்கன் துண்டுகளைச் சேர்த்து குறைந்தது 2 மணி நேரம் குளிர்சாதனப் பெட்டியில் ஊறவைக்கவும். அதிக சுவை வேண்டுமெனில், இரவு முழுவதும் ஊறவைத்து மறுநாள் பயன்படுத்தலாம்.
</p><p>
பின்னர் சிக்கனிலிருந்து மோரைக் முழுமையாக வடித்து, வேறொரு பாத்திரத்தில் மாற்றவும். அதனுடன் இஞ்சி-பூண்டு விழுது, மிளகுத்தூள், அடித்த முட்டை மற்றும் சோளமாவு சேர்த்து, அனைத்து துண்டுகளிலும் நன்றாகப் படுமாறு கலக்கவும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2fd1c9e2-2133-43a7-86a7-ee9a8d31720b/26-6a532786e7faf.webp' /></p><p>ஒரு ஆழமான வாணலியில் எண்ணெயை நன்றாகக் காயவைத்து, தீயை மிதமான அளவிற்கு குறைக்கவும். சிக்கன் துண்டுகளைச் சிறிது சிறிதாகப் போட்டு, எல்லாப் பக்கங்களும் பொன்னிறமாகும் வரை பொரித்தெடுக்கவும். பொரித்த சிக்கனை தனியாக எடுத்து வைக்கவும்.</p><p>
இப்போது மற்றொரு வாணலியில் ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், நறுக்கிய இஞ்சி மற்றும் பூண்டை சேர்த்து சுமார் 30 விநாடிகள் வதக்கவும்.
</p><p>
அதன்பின் கீறிய பச்சை மிளகாய், வர மிளகாய் மற்றும் கறிவேப்பிலையைச் சேர்த்து மேலும் 30 விநாடிகள் வதக்கவும்.

தீயை மிதமாக வைத்து காஷ்மீரி மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் மற்றும் கரம் மசாலாத்தூளைச் சேர்த்து, மசாலாவின் பச்சை வாசனை போகும் வரை சுமார் 30 விநாடிகள் கிளறவும்.
</p><p>
அதன்பிறகு கெட்டியான தயிரைச் சேர்த்து மசாலாவுடன் நன்றாகக் கலக்கி, 2 நிமிடங்கள் மிதமான தீயில் வேகவிடவும். பின்னர் சோயா சாஸை சேர்த்து மீண்டும் நன்றாகக் கலக்கவும்.
</p><p>
இப்போது தீயை சற்று அதிகரித்து, பொரித்த சிக்கன் துண்டுகளைச் சேர்த்து 3–4 நிமிடங்கள் மசாலாவுடன் நன்றாகப் பிரட்டி வதக்கவும்.</p><p>

இறுதியாக நறுக்கிய புதினா மற்றும் கொத்தமல்லி இலைகளைத் தூவி, மேலும் ஒரு நிமிடம் கிளறிவிட்டு இறக்கினால்.

சுவையான, ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சிக்கன் மெஜஸ்டிக் தயார்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW&nbsp;</a></u></b> &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-12T05:35:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்கத் தளங்களை இலக்கு வைத்து ஈரான் தாக்குதல் : கத்தார் விடுத்த பாதுகாப்பு எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/iran-missiles-qatar-raises-security-threat-level-1783832520"></link>
            <id>https://ibctamil.com/article/iran-missiles-qatar-raises-security-threat-level-1783832520</id>
            <summary type="text">ஐக்கிய அரபு இராச்சியம் மீது ஈரான் ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.எனினும் ஈரானிலிருந்து வரு...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஐக்கிய அரபு இராச்சியம் மீது ஈரான் ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p>எனினும் ஈரானிலிருந்து வரும் ஏவுகணைகளையும் ஆளில்லா விமானங்களையும் தனது வான் பாதுகாப்பு அமைப்புகள் இடைமறித்து வருவதாக ஐக்கிய அரபு அமீரகம் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் தெரிவித்தது.</p><p>கத்தாரின் உள்துறை அமைச்சகம் இன்று காலை இரண்டாவது முறையாக நாட்டின் பாதுகாப்பு அச்சுறுத்தல் அளவை உயர் நிலைக்கு உயர்த்தியுள்ளதுடன், குடியிருப்பாளர்கள் தங்கள் வீடுகளுக்குள் அல்லது பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறு வலியுறுத்தியுள்ளது.</p><p></p><h2>பாதுகாப்பு எச்சரிக்கை&nbsp;</h2><p>அதே நேரத்தில், கத்தார் மற்றும் பஹ்ரைன் தங்கள் பாதுகாப்பு எச்சரிக்கை நிலைகளை உயர்த்தி, குடியிருப்பாளர்களைப் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு வலியுறுத்தின.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c1d5644c-e75b-45a2-8904-9276d1036577/26-6a53258c915f9.webp' /></p><p>அண்டை நாடான கத்தாரில், பாதுகாப்பு அச்சுறுத்தல் நிலை அதிகமாக இருப்பதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்ததுடன், மக்கள் தங்கள் வீடுகளுக்குள் அல்லது பிற பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறு வலியுறுத்தியது.</p><p> மேலும், குடியிருப்பாளர்கள் அதிகாரப்பூர்வ பாதுகாப்பு அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறும், தேவையற்ற நடமாட்டத்தைத் தவிர்க்குமாறும் அது கேட்டுக்கொண்டது.
</p><p>
வான்வழித் தாக்குதல் எச்சரிக்கை ஒலிப்பான்கள் இயக்கப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் அமைதியாக இருக்குமாறு பஹ்ரைனின் உள்துறை அமைச்சகம் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-12T05:33:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாண்டியன் காலில் விழுந்து கதறி அழுது செந்தில்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் புரோமோ]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/senthil-apologized-to-pandian-in-pandian-stores-1783833024"></link>
            <id>https://cineulagam.com/article/senthil-apologized-to-pandian-in-pandian-stores-1783833024</id>
            <summary type="text">பாண்டியன் ஸ்டோர்ஸ்விஜய் டிவியில் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் செந்தில் லஞ்சம் வாங்கியதை அறிந்து பாண்டியன் ...</summary>
            <content type="html"><![CDATA[<h2>பாண்டியன் ஸ்டோர்ஸ்</h2><p>விஜய் டிவியில் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் செந்தில் லஞ்சம் வாங்கியதை அறிந்து பாண்டியன் கடும் கோபமடைந்தார். எப்படி உன்னால் லஞ்சம் வாங்க முடிந்தது? உன்னை அப்படியா நான் வளர்த்தேன் என செந்திலை அடித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2abdcce6-4a66-4911-a4e4-da54e35f7e48/26-6a5321c3c6914.webp' /></p><p>

இதன்பின், வாங்கிய லஞ்ச பணத்தையெல்லாம் நல்ல வழியில் செலவு செய்துவிட்டு திரும்ப வீட்டிற்கு வா, இல்லையென்றால் வீட்டு பக்கமே வராதே என பாண்டியன் கூறிவிட்டார்.</p><h2>கதறி அழுது செந்தில்</h2><p> </p><p>

இந்த நிலையில், வரும் வாரம் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடக்கவிருப்பது குறித்து புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. இதில், தான் லஞ்சமாக வாங்கிய பணத்தை நல்ல விஷயங்களுக்காக செலவு செய்கிறார் செந்தில். 

பணத்தை முழுவதுமாக செலவு செய்துவிட்டு, பாண்டியனிடம் வந்து கதறி அழுது காலில் விழுகிறார். பாண்டியனும் செந்திலை மன்னித்துவிடுகிறார்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/44c489c4-56b1-4346-8c55-21e2f46108d9/26-6a5321c31dd4a.webp' /></p><p>மேலும், "இந்த விஷயத்தில் மனதளவில் காயப்பட்டது மீனா தான், மீனாவிடம் மன்னிப்பு கேள்" என்று பாண்டியன் கூறுகிறார். 

செந்தில் செய்த தவறை மன்னித்து மீனா அவரை ஏற்றுக்கொள்வாரா என்பதை வரும் வாரம் பாண்டியன் ஸ்டோர்ஸ் எபிசோடில் பொறுத்திருந்து பார்ப்போம்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/5o2JGYNIGKc" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-07-12T05:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[கால்பந்து போட்டிக்கு இடையே வெடித்த மோதல் ; விரைந்து செயற்பட்ட இலங்கை பொலிஸார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/clash-erupts-during-football-match-1783833686"></link>
            <id>https://jvpnews.com/article/clash-erupts-during-football-match-1783833686</id>
            <summary type="text">ஹட்டன் லீக் மேயர் கிண்ணம்&#039; கால்பந்து தொடரின் இரண்டாவது சுற்றுப் போட்டியின் போது மோதல் ஒன்று இடம்பெற்றுள்ளது. 

ஹட்டன் டன்பார் மைதானத்தில் நேற்று (11...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">ஹட்டன் லீக் மேயர் கிண்ணம்' கால்பந்து தொடரின் இரண்டாவது சுற்றுப் போட்டியின் போது மோதல் ஒன்று இடம்பெற்றுள்ளது. </p><p style="text-align: justify; ">

ஹட்டன் டன்பார் மைதானத்தில் நேற்று (11) நடைபெற்ற 'யங் மேட்ஸ்' மற்றும் 'நோர்வூட் சன்ரைஸ்' அணிகளுக்கு இடையிலான போட்டியின் போதே இந்த மோதல் ஏற்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3d9fdffa-fb0e-451b-b0d9-a28c89acc895/26-6a5324580f96f.webp' /></p><h2 style="text-align: justify; ">முறைப்பாடு</h2><p style="text-align: justify; "> 

போட்டி முடிவதற்கு 7 நிமிடங்கள் எஞ்சியிருந்த நிலையில், இந்த மோதல் ஆரம்பமானதாக தெரிவிக்கப்படுகிறது. </p><p style="text-align: justify; ">

அந்த நேரத்தில் 'யங் மேட்ஸ்' அணி 3 கோல்களையும், 'நோர்வூட் சன்ரைஸ்' அணி ஒரு கோலையும் பெற்றிருந்தன.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

போட்டியின் விறுவிறுப்பு அதிகரித்த நிலையில், மைதானத்திற்குள் நுழைந்த பார்வையாளர்கள் மோதலில் ஈடுபட்டனர். </p><p style="text-align: justify; ">

சம்பவம் குறித்து ஹட்டன் பொலிஸாருக்குக் கிடைத்த முறைப்பாட்டிற்கமைய, உடனடியாகச் செயற்பட்ட அதிகாரிகள் மைதானத்திற்குச் சென்று நிலமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.&nbsp;</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-07-12T05:21:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[சொதப்பிய மெஸ்ஸி: கடைசி நிமிடங்களில் மேஜிக்..சுவிஸை வீழ்த்தி அர்ஜென்டினா அரையிறுதிக்கு முன்னேற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/argentina-beat-swiss-by-3-1-goal-in-fifa-2026-1783833259"></link>
            <id>https://news.lankasri.com/article/argentina-beat-swiss-by-3-1-goal-in-fifa-2026-1783833259</id>
            <summary type="text">FIFA காலிறுதிப் போட்டியில் அர்ஜென்டினா அணி 3-1 என்ற கோல் கணக்கில் சுவிட்சர்லாந்தை வீழ்த்தியது.&amp;nbsp;அலிஸ்டர் கோல்&amp;nbsp;
கான்சாஸ் சிட்டியில் நடந்த கால...</summary>
            <content type="html"><![CDATA[<p>FIFA காலிறுதிப் போட்டியில் அர்ஜென்டினா அணி 3-1 என்ற கோல் கணக்கில் சுவிட்சர்லாந்தை வீழ்த்தியது.&nbsp;</p><h2>அலிஸ்டர் கோல்&nbsp;</h2><p>
கான்சாஸ் சிட்டியில் நடந்த காலிறுதிப் போட்டியில் அர்ஜென்டினா மற்றும் சுவிட்சர்லாந்து அணிகள் மோதின.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a81726e5-daaf-4e47-94d6-5c9775cfd7a4/26-6a5325d8487e4.webp' />&nbsp;</p><p></p><p>
ஆட்டத்தின் 10வது நிமிடத்தில் அர்ஜென்டினாவின் அலிஸ்டர் கோல் அடித்தார். அதன் பின்னர் 67வது நிமிடத்தில் சுவிஸின் Dan Ndoye கோல் அடித்தார். </p><p>

90 நிமிடங்கள் வரை போட்டி 1-1 என சமனில் இருந்ததால், கூடுதலாக 9 நிமிடங்கள் வழங்கப்பட்டது. அதிலும் கோல் விழவில்லை என்பதால், மேலும் கூடுதல் நேரம் வழங்கப்பட்டது.
</p><p>
112வது நிமிடத்தில் அர்ஜென்டினா வீரர் ஜூலியன் ஆல்வரெஸும், 120+1வது நிமிடத்தில் மார்டினஸும் கோல்கள் அடித்தனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/96ae5967-9ec5-49e4-9d8a-f63a5e7269ab/26-6a5325d9aa702.webp' />&nbsp;</p><h2>அர்ஜென்டினா வெற்றி </h2><p> 

சுவிட்சர்லாந்து அணியால் மேற்கொண்டு கோல் அடிக்க முடியாததால், அர்ஜென்டினா 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.
</p><p>
இப்போட்டியில் பல வாய்ப்புகளை தவறவிட்ட மெஸ்ஸி ஒரு கோல் கூட அடிக்காதது அவரது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது.
</p><p>
வருகிற 16ஆம் திகதி அட்லாண்டாவில் நடைபெற அரையிறுதிப் போட்டியில் அர்ஜென்டினா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.&nbsp; &nbsp; &nbsp; &nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/04466287-4c7f-4fb1-86a1-26493c73e6e4/26-6a5325da58f2e.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ce9fe7ec-ab1f-42de-84cb-bd3ce53dce2c/26-6a5325d9056cb.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-12T05:12:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[வவுனியாவில் போலி நாணய தாள்கள் வைத்திருந்தவருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/vavuniya-court-orders-over-fake-currency-case-1783833044"></link>
            <id>https://jvpnews.com/article/vavuniya-court-orders-over-fake-currency-case-1783833044</id>
            <summary type="text">வவுனியாவில் 50,000 ரூபாய் பெறுமதியான போலி நாணய தாள்களை உடமையில் வைத்திருந்த நபருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி வவுனியா மேல் நீதிமன்றம் தீர்...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify;">வவுனியாவில் 50,000 ரூபாய் பெறுமதியான போலி நாணய தாள்களை உடமையில் வைத்திருந்த நபருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி வவுனியா மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. </p><p style="text-align: justify;">

வவுனியாவில் கடந்த 2011 ஆம் ஆண்டு மே மாதம் காலப் பகுதியில் 50,000 ரூபாய் போலி நாணய தாள்களினை உடைமையில் வைத்திருந்த நபருக்கு எதிராக வவுனியா மேல் நீதிமன்றில் நடத்தப்பட்ட மீள் விசாரணையின் போது குற்றவாளிக்கு எதிரான வழக்கு கடந்த வெள்ளிக்கிழமை தீர்ப்புக்காக திகதியிடப்பட்டு இருந்தது.</p><p style="text-align: justify;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7f4182c2-2f50-45b9-9b24-14066795f575/26-6a5321d5e0341.webp' /></p><p style="text-align: justify;"> 

இதன்போது சந்தேக நபருக்கு எதிரான முதலாம் குற்றசாட்டு சந்தேகத்துக்கு அப்பால் வழக்கு தொடுனர் தரப்பினரால் நிரூபிக்கப்பட்டுள்ளதாக வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி தெரிவித்து இருந்தார்.</p><p style="text-align: justify;"></p><p> </p><p style="text-align: justify;">

அதற்கு இணங்க குறித்த குற்றசாட்டிற்கு இரண்டு வருட கால சிறைத்தண்டனை மற்றும் ஒரு லட்சம் ரூபா அபராதம், அபராத தொகையினை செலுத்த தவறின் ஒரு ஆண்டு கால சிறைத்தண்டனை எனும் கட்டளை வழங்கி தீர்ப்பளித்தார். </p><p style="text-align: justify;"></p>]]></content>
            <updated>2026-07-12T05:10:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[முழு அரசு மரியாதையுடன் பாடகி எஸ்.ஜானகி உடல் அடக்கம்: கர்நாடக அரசு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/karnataka-gives-state-honours-for-late-s-janaki-1783831328"></link>
            <id>https://news.lankasri.com/article/karnataka-gives-state-honours-for-late-s-janaki-1783831328</id>
            <summary type="text">முழு அரசு மரியாதையுடன் பாடகி எஸ்.ஜானகி உடல் அடக்கம் செய்யப்படும் என்று கர்நாடக அரசு அறிவித்துள்ளது. பாடகி எஸ்.ஜானகி காலமானார்இந்திய திரையுலகில் 40 ஆயி...</summary>
            <content type="html"><![CDATA[<p>முழு அரசு மரியாதையுடன் பாடகி எஸ்.ஜானகி உடல் அடக்கம் செய்யப்படும் என்று கர்நாடக அரசு அறிவித்துள்ளது.</p><h2> பாடகி எஸ்.ஜானகி காலமானார்</h2><p>இந்திய திரையுலகில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ள பிரபல பாடகி எஸ்.ஜானகி தன்னுடைய 88வது வயதில் நேற்று காலமானார்.</p><p>தென்னிந்தியாவின் நைட்டிங்கேல், ஜானகியம்மா, கான கோகிலா மற்றும் இசை அரசி என்று புகழப்படும் பாடகி எஸ்.ஜானகி வயது மூப்பு காரணமாக இயற்கை எய்தியுள்ளார்.</p><p>தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி என 10க்கும் மேற்பட்ட மொழிகளில் பாடி 4 முறை தேசிய விருதுகளை பெற்றுள்ளார்.</p><p></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/eaed4981-7062-4490-bffe-a639b66297ce/26-6a531b21686e1.webp' /></p><h2> முழு அரசு மரியாதை</h2><p>பாடகி எஸ்.ஜானகியின் உடல் மைசூருவில் உள்ள மகாராஜா கல்லூரி மைதானத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.</p><p> பிற்பகல் 3 மணிக்கு அவரது பூத உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கனியனகுந்தி என்ற பகுதியில் இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டு முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட உள்ளது.</p><p> இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் அவரது குடும்பத்தினர் கவனித்து வருகின்றனர்.</p><p> பாடகி ஜானகியின் மறைவுக்கு பொதுமக்கள் ரசிகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-12T05:05:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[அனைத்து இன மக்களும் ஒற்றுமையுடன் செயற்பட வேண்டும்! ஜி.எல்.பீரிஸ் வலியுறுத்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/gl-peris-statement-about-sri-lanka-economy-1783832031"></link>
            <id>https://tamilwin.com/article/gl-peris-statement-about-sri-lanka-economy-1783832031</id>
            <summary type="text">இலங்கையை அபிவிருத்திப் பாதையில் முன்னோக்கிக் கொண்டு செல்ல வேண்டுமானால்,
அனைத்து இன மக்களும் ஒற்றுமையுடனும் ஒத்துழைப்புடனும் செயற்பட வேண்டும் என முன்ன...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையை அபிவிருத்திப் பாதையில் முன்னோக்கிக் கொண்டு செல்ல வேண்டுமானால்,
அனைத்து இன மக்களும் ஒற்றுமையுடனும் ஒத்துழைப்புடனும் செயற்பட வேண்டும் என முன்னாள் அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.</p><p>

கூட்டு எதிரணியின் அரசியல் பிரமுகர்கள் சர்வமதத் தலைவர்களைச் சந்தித்து
கலந்துரையாடி வரும் நிலையில், இது குறித்து ஊடகங்களுக்குக் கருத்துத்
தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.</p><p></p><h2>நல்லிணக்கம்&nbsp;</h2><p>
</p><p>இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், எமது நாட்டை முன்னேற்ற வேண்டுமாயின், இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கம் மிக
அவசியமானது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8e11a344-cce7-447e-bb67-501c51cb40e2/26-6a5320318ca0e.webp' />&nbsp; &nbsp;</p><p> நல்லிணக்கம் இல்லாத சூழலில் நாடு ஒருபோதும் முன்னேற்றத்தை
அடையாது.</p><p>எமக்கு இடையே நிலவும் அனைத்துப் பிரச்சினைகளையும் கலந்துரையாடல்கள்
மூலம் தீர்த்துக்கொண்டு, ஒற்றுமையாகச் செயற்பட முன்வர வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-12T05:04:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[இயற்கையாக முகத்தை பொலிவாக்க உதவும் பீட்ரூட்.., எப்படி பயன்படுத்துவது?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/how-to-use-beetroot-for-glowing-skin-in-tamil-1783832549"></link>
            <id>https://news.lankasri.com/article/how-to-use-beetroot-for-glowing-skin-in-tamil-1783832549</id>
            <summary type="text">பொதுவாக அனைவரும் முகத்தினை பொலிவாக வைத்துக்கொள்ள தான் விரும்புவார்கள்.

இருப்பினும் சூரிய கதிர்வீச்சால் பிக்மண்டேஷன், கரும்புள்ளிகள் போன்ற பாதிப்புக...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொதுவாக அனைவரும் முகத்தினை பொலிவாக வைத்துக்கொள்ள தான் விரும்புவார்கள்.
</p><p>
இருப்பினும் சூரிய கதிர்வீச்சால் பிக்மண்டேஷன், கரும்புள்ளிகள் போன்ற பாதிப்புகளால் நமது உடல் கருப்பாக மாறிவிடுகின்றன.</p><p>

அதன்படி, பீட்ரூட்டை முகத்திற்குப் பயன்படுத்துவது சருமத்தை இயற்கையாக பளபளப்பாக்கவும், முகப்பருவை குறைக்கவும் உதவுகிறது.</p><p> </p><p></p><p>வைட்டமின் சி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளதால், இது கருவளையங்களை மறையச் செய்து முகம் பொலிவடைய உதவுகிறது.
</p><p>
அந்தவகையில், இயற்கையாக முகத்தை பொலிவாக்க பீட்ரூட்டை எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.</p><h3>

1. தேவையான பொருட்கள்</h3><ul><li> 

பீட்ரூட் ஜூஸ்- 5 ஸ்பூன் </li><li>
தயிர்- 1 ஸ்பூன் </li><li>
தேன்- 1 ஸ்பூன் </li></ul><h3>

எப்படி பயன்படுத்துவது?
</h3><p>
ஒரு கிண்ணத்தில் பீட்ரூட் ஜூஸை எடுத்து, அத்துடன் தயிர் மற்றும் தேனை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். </p><p>

பின்னர் அதை முகம் மற்றும் கழுத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/941f2094-3b3e-4654-9cfc-932f7b04c0c7/26-6a53205293e08.webp' /></p><p>பின்பு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். </p><p>

இந்த பேஸ்பேக் முகத்தில் உள்ள தழும்புகள், கரும்புள்ளிகள் போன்றவை குறையும்.
</p><h3>
2. தேவையான பொருட்கள்</h3><ul><li> 

பீட்ரூட் ஜூஸ்- 5 ஸ்பூன்</li><li> 
ஓட்ஸ் பொடி- 2 ஸ்பூன் </li><li>
சர்க்கரை- 1 ஸ்பூன்</li></ul><h3> 

எப்படி பயன்படுத்துவது?
</h3><p>
ஒரு கிண்ணத்தில் பீட்ரூட் ஜூஸை எடுத்து, அத்துடன் ஓட்ஸ் பொடி மற்றும் சர்க்கரையை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். </p><p>

பின்பு அதை முகத்தில் தடவி சிறிது நேரம் ஸ்க்ரப் செய்ய வேண்டும்.</p><p> </p><p></p><p>பிறகு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.</p><p> 

இந்த ஸ்க்ரக் சருமத்தில் உள்ள இறந்த செல்கள் மற்றும் சருமத்துளைகளில் உள்ள அடைப்புகளை நீக்குவதோடு, சருமத்தில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, சருமத்தை மென்மையாகவும், பட்டுப்போன்றும் வைத்துக் கொள்ள உதவும்.&nbsp;&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp; உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-12T05:04:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜனாதிபதி ஏன் பிரான்ஸ் செல்லவில்லை! வெளிவந்திருக்கும் காரணங்கள்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/president-delays-french-visit-amid-domestic-crises-1783831612"></link>
            <id>https://tamilwin.com/article/president-delays-french-visit-amid-domestic-crises-1783831612</id>
            <summary type="text">நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தின் தாக்கம் உள்ளிட்ட நாட்டில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலையை கருத்தில் கொண்டு இம்மாத இறுதியில் பிரான்ஸிற்கு உத்தி...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தின் தாக்கம் உள்ளிட்ட நாட்டில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலையை கருத்தில் கொண்டு இம்மாத இறுதியில் பிரான்ஸிற்கு உத்தியோகபூர்வ பயணம் மேற்கொள்ளவிருந்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, தனது விஜயத்தை இவ்வருட இறுதி வரை ஒத்திவைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
இது குறித்து பிரான்ஸ் அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், இவ்வருடத்தின் பிற்பகுதியில் புதிய திகதியொன்றை வழங்குமாறு கோரப்பட்டுள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
</p><h2>
</h2><p></p><h2>விஜயத்திற்கான அழைப்பு மற்றும் பின்னணி
</h2><p>கடந்த பெப்ரவரி மாதம் புதுடில்லியில் நடைபெற்ற ‘செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான தாக்கங்கள் குறித்த உச்சிமாநாட்டின்’ (AI Impact Summit) போது, </p><p>பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் மற்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ஆகியோர் சந்தித்த போதே இந்த பிரான்ஸ் விஜயத்திற்கான அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6ad1ff77-1e8a-490c-8138-08ea91bf3d02/26-6a531c3ec3e45.webp' /></p><p>GSP+ வரிச்சலுகை வசதியை நீடிப்பதற்காக பிரான்ஸின் ஆதரவைப் பெற்றுக்கொள்வது தொடர்பிலே திட்டமிடப்பட்டிருந்தது. தற்போதைய சலுகை டிசம்பர் 31ஆம் திகதியுடன் முடிவடைவதால், இலங்கை அடுத்த ஆண்டில் GSP+ வரிச்சலுகைகளுக்காக புதிய விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டியுள்ளது.
</p><p>
GSP+ வசதியானது தகுதிபெறும் வளரும் நாடுகளுக்கு ஐரோப்பிய ஒன்றிய சந்தைக்குள் பிரவேசிப்பதற்கு முன்னுரிமை வழங்குகிறது. எனினும், அதன் தொடர்ச்சியானது மனித உரிமைகள், தொழிலாளர் உரிமைகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நல்லாட்சி ஆகியவற்றை உள்ளடக்கிய 27 சர்வதேச உடன்படிக்கைகளை திறம்பட செயல்படுத்துவதைப் பொறுத்தே தீர்மானிக்கப்படுகிறது.
</p><h2>
புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்</h2><p>ஜனாதிபதியின் இந்த விஜயத்தின் போது பொருளாதாரம் மற்றும் நிதி மற்றும் பாதுகாப்புத் துறை ஒத்துழைப்பு தொடர்பான மூன்று புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் பிரான்ஸுடன் கையெழுத்திட அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.</p><p>

"விஜயத்திற்கு முன்னர், இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் உள்ளடக்கங்களை இறுதி செய்ய நாங்கள் விரும்புகிறோம்," என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
ஜனாதிபதியுடன் செல்லும் தூதுக்குழுவில் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் நிதியமைச்சின் பிரதி அமைச்சர் ஆகியோர் இடம்பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-12T04:54:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[வசமாக பிடிபட்ட இளம் பெண் ; சோதனையில் அம்பலமான விடயம் ; காட்டிக்கொடுத்த இரகசிய தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/young-woman-caught-shocking-discovery-made-1783832032"></link>
            <id>https://jvpnews.com/article/young-woman-caught-shocking-discovery-made-1783832032</id>
            <summary type="text">வத்தளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் பெருமளவு போதைப்பொருட்களுடன் 36 வயதுடைய பெண் ஒருவர் சனிக்கிழமை (11) கைது செய்யப்பட்டுள்ளார்.


பொலிஸ் போதைப...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">வத்தளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் பெருமளவு போதைப்பொருட்களுடன் 36 வயதுடைய பெண் ஒருவர் சனிக்கிழமை (11) கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p style="text-align: justify; ">

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் நடத்தப்பட்ட சோதனையின் போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e667965b-315d-43ac-9ce5-39e885c75ff1/26-6a531de15bde7.webp' /></p><h2 style="text-align: justify; ">மேலதிக விசாரணை</h2><p style="text-align: justify; "> 

சந்தேக நபரான பெண் மட்டக்குளிப் பகுதியைச் சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். </p><p style="text-align: justify; ">

கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து 1 கிலோகிராம் 140 கிராம் ஐஸ் போதைப்பொருளும், 538 கிராம் ஹெரோயின் போதைப்பொருளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> 

இச்சம்பவம் தொடர்பில் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-07-12T04:53:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[Dhamaal 4: திரை விமர்சனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/dhamaal-4-movie-review-1783784305"></link>
            <id>https://cineulagam.com/article/dhamaal-4-movie-review-1783784305</id>
            <summary type="text">அஜய் தேவ்கன், ரித்தேஷ் தேஷ்முக், அர்ஷத் வர்ஷி, ஈஷா குப்தா நடிப்பில் வெளியாகியுள்ள தாமால் 4 இந்தி திரைப்படம் பார்வையாளர்களை கவர்ந்ததா என்று பார்ப்போம் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அஜய் தேவ்கன், ரித்தேஷ் தேஷ்முக், அர்ஷத் வர்ஷி, ஈஷா குப்தா நடிப்பில் வெளியாகியுள்ள தாமால் 4 இந்தி திரைப்படம் பார்வையாளர்களை கவர்ந்ததா என்று பார்ப்போம் வாங்க.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cc4cd861-d57f-46ef-90a2-7dd0a45b1e73/26-6a531c8d76a43.webp' /></p><h2>கதைக்களம் </h2><p>ஆலியாவை (ஈஷா குப்தா) காதலிக்கும் குட்டு ரஸ்தோகி (அஜய் தேவ்கன்) எப்படியாவது அவரது பிள்ளைகள் தன்னை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று போராடுகிறார். </p><p>
தனது சகா ஜானியுடன் (சஞ்சய் மிஷ்ரா) உடன் ஆலியாவின் வீட்டிற்கு செல்லும் குட்டுவை பேய்கள் மிரட்டுகின்றன.</p><p>பின்னர்தான் அது ஆலியாவின் மகள், மகனின் சேட்டைகள் என்று தெரிய வருகிறது. அதிலிருந்தே அவர்களது தன்னை பிடிக்கவில்லை என்று உணரும் குட்டு, காதலி ஆலியாவின் அறிவுறுத்தலின்படி அவர்களை சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்கிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fbc0b74a-8490-4441-acec-e297e57c3108/26-6a531c8e2fdd0.webp' /></p><p> </p><p>
அதே சமயம் பணக்கார பெண்ணை திருமணம் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கும் தேஷ்பந்து (ரித்தேஷ் தேஷ்முக்), கோவிலில் சந்திக்கும் பாரோவை (அஞ்சலி ஆனந்த்) பணக்காரவீட்டு பெண் என்று தவறுதலாக புரிந்துகொள்கிறார்.
</p><p>அவரிடம் காதலிப்பதாகக் கூறி திருமணமும் செய்துகொண்ட பின்தான், பாரோ ஒரு டிரைவரின் மகள் என்ற உண்மை தெரிய வருகிறது. </p><p>
இது ஒருபுறம் இருக்க, தனது சகோதரரின் வெகுளித்தனத்தால் கோபத்தில் வெளியேறிய மனைவி சஞ்ஜீதா (ரோஸி) உடன் சேர போராடுகிறார் ஆதித்யா (அர்ஷத் வர்ஷி).</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/48c136e0-334e-4d97-868a-6437edd68461/26-6a531c8edcef8.webp' /></p><p>ஒருவழியாக அவருடன் சேர்ந்து பயணிக்கும் வாய்ப்பு கிடைக்க, குட்டு மற்றும் தேஷ்பந்து, ஆதித்யா அனைவரும் ஒரே இடத்தில் சந்திக்க நேரிடுகிறது. </p><p>
அப்போது குட்டுவுக்கு மட்டுமே தெரிந்த புதையல் இரகசியம் ஆதித்யா, தேஷ்பந்துவுக்கு தெரிய வருகிறது. அதனால் தனித்தனியாக புதையலைத் தேடி அனைவரும் கிளம்ப, இறுதியில் யாருக்கு புதையல் கிடைத்தது என்பதே மீதிக்கதை.</p><p>
</p><h2>படம் பற்றிய அலசல் </h2><p>
அஜய் தேவ்கன் தயாரிப்பாளராகவும் இருந்து ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தை முந்தைய பாகங்களை இயக்கிய இந்திரா குமாரே இயக்கியுள்ளார்.
</p><p>புதையல் குறித்த விஷயங்களை ஆரம்ப காட்சியிலேயே காட்டிய இயக்குநர், அதன் பின்னர் வேறொரு தளத்தில் கதையைக் கொண்டு செல்கிறார்.
</p><p>குறிப்பாக ரித்தேஷின் கதை தனியாகவும், அஜய் தேவ்கனின் கதை பேய் படம் போலவும் செல்ல, அர்ஷத்தின் கதை வேறு தளத்தில் நகர்கிறது.</p><p>இதெல்லாம் முடிந்து எப்போது எல்லோரும் புதையலைத் தேடி செல்லப் போகிறார்கள் என்ற கேள்வியே நமக்கு எழுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2b3515d2-a9d4-4e32-964e-1d3763761c16/26-6a531cbf58ded.webp' /></p><p>அதிலும் இடைவேளை வரை மூவரின் கதைகளிலும் பெரிய சுவாரஸ்யம் இல்லை. அஜய் தேவ்கன், சஞ்சய் மிஷ்ராவின் கூட்டணி சிரிக்க வைக்க, அர்ஷத் மற்றும் ஜாவேத்தின் காமெடி ஓகே ரகம்.
</p><p>ஆனால் ரித்தேஷின் எபிசோடில் வரும் பாடி ஷேமிங் காமெடியை கண்டிப்பாக ஏற்றுக்கொள்ள முடியாது. </p><p>
ஆரம்பத்தில் கடற்கொள்ளையனாக வரும் ரவி கிஷன் பின்னர் என்ன ஆனார் என்றே தெரியவில்லை. </p><p>
இடைவேளை வரை ஏனோதானோ என பார்த்து பழகிய காட்சிகளில் படம் நகர்ந்து, அதன்பின்னர் புதையலைத் தேடியே செல்கிறார்கள்.
</p><p>அங்கும் பெரிய சோதனைகளை அவர்களை எதிர்கொள்ளவில்லை. எல்லாமே சிறுபிள்ளைத்தனமாகவே உள்ளன. ஒருவேளை குழந்தைகளை மட்டுமே வைத்து காமெடியை யோசித்துப்பார்க்கள் போலும்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/27929fde-a4ea-4f5a-a5c2-646436b2676c/26-6a531cc01ae50.webp' /></p><p>ஆங்காங்கே சிறு சிறு காமெடிகளைத் தவிர்த்து வேறு எங்கும் சுவாரஸ்யம் இல்லை; ஆனாலும் 5வது பாகம் உறுதி எனக் கூறி அதிர்ச்சி கொடுத்திருக்கிறது படக்குழு.
</p><p>கிராஃபிக்ஸ் பல இடங்களில் பிசுறுத்தட்ட, செட்கள் அப்பட்டமாக தெரிகின்றன. பாடல்கள் ஓகே ரகம். படத்தொகுப்பாளர் சஞ்சய் சங்க்லா இன்னும் கத்திரி போட்டிருக்கலாம்.
</p><h2>க்ளாப்ஸ் </h2><p>அஜய் தேவ்கன், சஞ்சய் மிஷ்ரா கூட்டணி </p><p>
சிறு சிறு காமெடிகள் </p><h2> 
பல்ப்ஸ் </h2><p>சொதப்பலான திரைக்கதை </p><p>
பார்த்து பழகிய காட்சிகள் </p><p>
க்ரிஞ்ச் காமெடிகள் </p><p>
மொத்தத்தில் இந்த தமால் 4 சோதனை மேல் சோதனை. </p><h2>
ரேட்டிங்: 2/5&nbsp;</h2>]]></content>
            <updated>2026-07-12T04:49:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீர்கொழும்பு சிறைக் கலவரத்தில் உயிரிழந்த அதிகாரிகளுக்கு 20 இலட்சம் ரூபாய் இழப்பீடு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/compensation-for-officers-killed-in-prison-clash-1783829457"></link>
            <id>https://ibctamil.com/article/compensation-for-officers-killed-in-prison-clash-1783829457</id>
            <summary type="text">நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்த சிறைச்சாலை அதிகாரிகளின் குடும்பங்களுக்கு 20 இலட்சம் ரூபாய்க்கும் அதிகமான தொகையை வழங்குவதற்கு த...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்த சிறைச்சாலை அதிகாரிகளின் குடும்பங்களுக்கு 20 இலட்சம் ரூபாய்க்கும் அதிகமான தொகையை வழங்குவதற்கு திணைக்களம் கவனம் செலுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p>சிறைச்சாலைகள் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் ஏ.சி. கஜநாயக்க&nbsp;குறித்த விடயத்தினை ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.</p><p>அவர் மேலும் தெரிவிக்கையில், சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்த சிறைச்சாலை அதிகாரிகளின் குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட 5 இலட்சம் ரூபாய் என்பது ஆரம்பக் கட்டக் கொடுப்பனவு மட்டுமே.</p><p></p><h2>வைத்தியசாலையில் சிகிச்சை பெறுகின்றனர்</h2><p>உயிரிழந்த அதிகாரிகளின் குடும்பங்களுக்கு 20 இலட்சம் ரூபாய்க்கும் அதிகமான தொகையை வழங்குவதற்கு திணைக்களம் கவனம் செலுத்தியுள்ளது.</p><p> அத்துடன், உயிரிழந்தவர்களின் அனைத்து இறுதிக்கிரியைகளும் சிறைச்சாலைகள் திணைக்களத்தின் செலவிலேயே மேற்கொள்ளப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cf94eee7-8392-473a-a619-e6989312bd2d/26-6a53193830f2f.webp' /></p><p> 

இதற்கிடையில், இந்த மோதலில் காயமடைந்த சிறைச்சாலை அதிகாரிகளுக்கு நட்டஈடு வழங்குவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. </p><p>

மோதலில் காயமடைந்த 7 அதிகாரிகள் தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் மூவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்” என தெரிவித்தார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-12T04:45:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[உண்மைகளை எதிர்கொள்ளத்தயார்! எதிர்க்கட்சிக்கு நீதி அமைச்சர் விடுத்துள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/tice-minister-warns-opposition-1783830789"></link>
            <id>https://tamilwin.com/article/tice-minister-warns-opposition-1783830789</id>
            <summary type="text">நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் சம்பவம் தொடர்பில் எதிர்க்கட்சி தனக்கு எதிராக
நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாப் பிரேரணையை முன்வைத்தால், அதனைத்
தவிடுபொ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் சம்பவம் தொடர்பில் எதிர்க்கட்சி தனக்கு எதிராக
நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாப் பிரேரணையை முன்வைத்தால், அதனைத்
தவிடுபொடியாக்கத் தயார் என்று நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார
தெரிவித்துள்ளார்.
</p><p>
நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற மோதல் சம்பவங்கள் மற்றும்
அதன் விளைவாக ஏற்பட்ட உயிரிழப்புகள் தொடர்பில், நீதி அமைச்சர் சட்டத்தரணி
ஹர்ஷன நாணயக்காரவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டுவர
எதிர்க்கட்சி தீர்மானித்துள்ளது.</p><p></p><h2>கைதிகள் குழுக்களுக்கிடையே மோதல்</h2><p>

சிறைச்சாலைக்குள் கைதிகள் குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதல்களைத் தடுப்பதிலும்,
சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் கைதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதிலும்
நீதி அமைச்சர் தனது தார்மீகப் பொறுப்பையும், அமைச்சுக்குரிய கடமைகளையும் சரிவர
நிறைவேற்றத் தவறிவிட்டார் என்று குற்றம் சாட்டியே எதிர்க்கட்சி இந்தப்
பிரேரணையை முன்வைக்கவுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b65529af-4689-4cb9-b2eb-422825c18adf/26-6a531ba9b953b.webp' />&nbsp;</p><p>
</p><p>
எதிர்க்கட்சியின் இந்த நடவடிக்கைகள் குறித்துப் பதிலளிக்கும் போதே நீதி
அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-</p><p>

"அரசைப் பலவீனப்படுத்தவும், அரசியல் ஆதாயம் தேடவும் சில தரப்பினர் இவ்வாறான
நம்பிக்கையில்லாப் பிரேரணைகளை முன்வைக்கின்றனர்.</p><h2>நம்பிக்கையில்லா பிரேரணை</h2><p> எனக்கு எதிராகக்
கொண்டுவரப்படும் எந்தவொரு நம்பிக்கையில்லாப் பிரேரணையும் நாடாளுமன்றத்தில்
தவிடுபொடியாகும். இவ்வாறான தந்திரங்கள் மூலம் அரசின் செயற்பாடுகளை ஒருபோதும்
முடக்க முடியாது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d8e67fcd-0d0a-4213-86cc-84e7177ac5ed/26-6a531baa67b05.webp' /></p><p>

சிறைச்சாலைகளில் நிலவும் பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு
உண்டு. அந்தப் பொறுப்பிலிருந்து நாங்கள் விலகிச் செல்லவில்லை. இவ்வாறான
விமர்சனங்கள் என்னை மேலும் வலுவான முடிவுகளை எடுப்பதற்கே தூண்டுகின்றன.
</p><p>உண்மைகளை எதிர்கொள்ளத் தயாராக இருக்கும் எனக்கு, இதுபோன்ற அரசியல் சவால்கள்
ஒரு பொருட்டல்ல." - என்றார்.</p><p>

எதிர்க்கட்சியின் குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ள நீதி அமைச்சர்,
சிறைச்சாலைத் துறை மற்றும் நீதி அமைச்சின் எதிர்காலத் திட்டங்கள் குறித்து
நாடாளுமன்றத்தில் விரிவான விளக்கங்களை வழங்கத் தயாராக இருப்பதாகவும் மேலும்
சுட்டிக்காட்டினார்.</p><p></p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-12T04:44:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பகுதியில் துயரை ஏற்படுத்திய ஆசிரியரின் மரணம் ; பாம்பு தீண்டியதில் நேர்ந்த அசம்பாவிதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/teacher-s-death-saddens-tamil-community-1783831381"></link>
            <id>https://jvpnews.com/article/teacher-s-death-saddens-tamil-community-1783831381</id>
            <summary type="text">மட்டக்களப்பு, கொக்கட்டிசோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பண்டாரியாவெளியில் ஆசிரியர் ஒருவர் நேற்று (11)&amp;nbsp; பாம்பு தீண்டியதில் உயிரிழந்துள்ளார். 

பண்டா...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">மட்டக்களப்பு, கொக்கட்டிசோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பண்டாரியாவெளியில் ஆசிரியர் ஒருவர் நேற்று (11)&nbsp; பாம்பு தீண்டியதில் உயிரிழந்துள்ளார்.</p><p style="text-align: justify; "> 

பண்டாரியாவெளியைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான 54 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f067d083-8359-44e2-9d57-cc03c0b3f8a9/26-6a531b5695fe7.webp' /></p><p style="text-align: justify; "> 

பண்டாரியா வெளியில் உள்ள தனது வீட்டில் இருந்து வயல் அறுவடை வேலைகளுக்காக சென்ற போது வயலில் இருந்த பாம்பு தீண்டியது. </p><p style="text-align: justify; ">

பின்னர் அவரை மகிழடித்தீவு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கொண்டு செல்லப்பட்டு சென்ற போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். </p><p style="text-align: justify; ">

இவரது சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இன்று (12) ஞாயிற்றுக்கிழமை பிரேத பரிசோதனை செய்யப்பட்ட பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப் படவுள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-12T04:43:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீதி அமைச்சரை நீக்கிவிட்டு விசாரணையை நடத்துங்கள்!- நளின் பண்டார எம்.பி. இடித்துரைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/negombo-prison-clash-updates-1783828370"></link>
            <id>https://tamilwin.com/article/negombo-prison-clash-updates-1783828370</id>
            <summary type="text">நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் விவகாரத்தில் அரசு மிகவும் பொறுப்பற்ற முறையில்
செயற்படுகின்றது என்று&amp;nbsp; ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற
உறுப்பினர...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் விவகாரத்தில் அரசு மிகவும் பொறுப்பற்ற முறையில்
செயற்படுகின்றது என்று&nbsp; ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற
உறுப்பினர் நளின் பண்டார குற்றம் சுமத்தியுள்ளார்.&nbsp;</p><p>நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவைப் பதவியிலிருந்து
நீக்காமல் இந்தச் சம்பவம் குறித்து ஒருபோதும் நியாயமான விசாரணையை முன்னெடுக்க
முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.</p><p>

கொழும்பில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைக்
கூறினார்.</p><p></p><h2>போகம்பரை சிறைச்சாலைக்கு எதிர்ப்பு</h2><p>

இந்த விவகாரம் குறித்து மேலும் கருத்து வெளியிட்ட நளின் பண்டார எம்.பி.,
</p><p>
"நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பாக நாம் தீவிர அவதானம்
செலுத்தியுள்ளோம். பொறுப்பற்ற முறையில் செயற்பட்ட நீதி அமைச்சருக்கு எதிராக
எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து நம்பிக்கையில்லாப் பிரேரணையை முன்வைக்கவுள்ளோம்.
எதிர்க்கட்சியில் இருந்தபோது விமர்சனங்களை முன்வைத்தவர்கள், இன்று ஆட்சிக்கு
வந்து அதே பொறுப்பற்ற தன்மையைக் கடைப்பிடிக்கின்றனர்" என்று குறிப்பிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b89f65f3-8d61-408b-afa0-7853199647e0/26-6a531a1f8db02.webp' /></p><p>
சிறைச்சாலை நெரிசலைக் குறைப்பதற்குப் பதிலாக, வரலாற்றுச் சிறப்புமிக்க
போகம்பரை சிறைச்சாலை வளாகத்தை மீண்டும் சிறைச்சாலையாக மாற்றுவதற்கு அரசு
எடுத்து வரும் தன்னிச்சையான நடவடிக்கைகளுக்கு அவர் தனது கடுமையான எதிர்ப்பைத்
தெரிவித்தார்.</p><p>
</p><p>
இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,
</p><p>
"போகம்பறை சிறைச்சாலை வளாகத்தை முதலீட்டுச் சபையின் கீழ் கொண்டு வந்து,
சுற்றுலா மற்றும் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் மாற்றியமைத்தோம். ஆனால்,
தற்போதைய அரசு மீண்டும் அதனைச் சிறைச்சாலையாக மாற்றுகின்றது.</p><p> ஒரு நாட்டின்
கொள்கை என்பது சிறைச்சாலையைக் குறைப்பதாகவே இருக்க வேண்டும். சிறைச்சாலைகள்
தேவையென்றால் வேறு பொருத்தமான இடங்களைக் கண்டறியலாம். வரலாற்று முக்கியத்துவம்
வாய்ந்த இடங்களை இவ்வாறு பயன்படுத்துவது தவறு"என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/70f4e3f0-8d4b-42f4-9e40-5860a962b667/26-6a531a205f3f2.webp' /></p><p>

தகுதியான அரச அதிகாரிகளை முறையற்ற விதத்தில் இடமாற்றம் செய்வது ஒட்டுமொத்த அரச
பொறிமுறையையும் வீழ்ச்சியடையச் செய்கின்றது என்று சாடிய அவர், "சிறைச்சாலைகள்
ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனியவை நீக்கியமை நியாயமற்றது. அவரை மீண்டும்
பதவியில் அமர்த்துமாறு மனித உரிமைகள் ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளதையும் அரசு
கவனத்தில் கொள்ள வேண்டும். </p><p>மஹர சிறைச்சாலைச் சம்பவத்தின் போது இருந்தவாறே,
இப்போதும் ஜனாதிபதி தலையிட்டு நீதியை நிலைநாட்ட வேண்டும்"&nbsp; என்று வலியுறுத்தினார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-12T04:41:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[மற்றவர்களை நொடியில் ஈர்க்கும் டாப் 3 ராசியினர் இவர்கள் தான்... உங்க ராசியும் இதுவா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/which-zodiac-sings-are-easily-attract-others-1783781597"></link>
            <id>https://manithan.com/article/which-zodiac-sings-are-easily-attract-others-1783781597</id>
            <summary type="text">ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒருவர் பிறக்கும் ராசி மற்றும் நட்சத்திரமானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை மற்றும் விசேட ஆளுமைகளில் அதிக ஆதிக்த்தை கொண்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒருவர் பிறக்கும் ராசி மற்றும் நட்சத்திரமானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை மற்றும் விசேட ஆளுமைகளில் அதிக ஆதிக்த்தை கொண்டிருக்கும் என தொன்று தொட்டு நம்பப்படுகின்றது.</p><p>அந்த வகையில் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்கள் முதல் பார்வையிலே மற்றவர்களை ஈர்க்கும் வசீகரிக்கும் ஆற்றல் கொண்டவர்களாக இருப்பார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/382d6d85-2ff5-46e5-a9bb-9d2ce27ef678/26-6a52644dab1af.webp' /></p><p>இவர்களின் வெளிப்புற அழகு மட்டுமன்றி இவர்களின் குணமும் மிகவும் அழகாகவே இருக்கும்.அப்படி மற்றவர்களை&nbsp; தங்களின் ஈர்க்கும் காந்த ஆற்றலால் நொடியில் தன்வசப்படுத்தும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.&nbsp;</p><p></p><h2>சிம்மம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3169f2ae-d754-4380-b1e3-1ff417343439/26-6a52644e582f1.webp' /></p><p>சிம்ம ராசியில் பிறந்தவர்கள் மற்றவர்களை வசீகரிக்கும் காந்த புண்ணகையை நிச்சயம் பெற்றிருப்பார்கள். அதனால் அவர்கள் அனைவராலும் விரும்பப்படுகின்றார்கள்.</p><p>இவர்களின் வித்தியாசமான ஆளுமை மற்றும் உடல் அழகு ,அழகிய முடி, கவர்ச்சியான முகம் மற்றும் நம்பிக்கையான பேச்சி மற்றவர்களுக்கு இவர்கள் மீது இனம் புரியாத விருப்பை தூண்டுகின்றது.&nbsp;</p><p>ஆயிரம் போர் இருக்கும் கூட்டத்திலும் சிம்ம ராசியினர் தான் கவன ஈர்ப்பாளர்களாக இருப்பார்கள். இவர்கள் இருக்கும் இடத்தில் ஒரு பாசிட்டிவ் ஆற்றல் இருந்துக்கொண்டே இருக்கும்.</p><h2>மிதுனம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1e8e7c75-0f94-4ff3-9f31-4cbbf4dd22b8/26-6a52644f08aa4.webp' /></p><p>மிதுன ராசிக்காரர்கள் இயற்கையாகவே வசீகரிக்கும் அழகை பெற்றிருப்பார்கள்.&nbsp; அவர்களின் நடையும் இயல்பும் தனித்துவதானதாக இருக்கும்.&nbsp;</p><p>இவர்களிடம்&nbsp; மற்றவர்களை கவரும் குணமும்&nbsp; பேச்சாற்றலும் நிச்சயம் இருக்கும்.வசீகரமான தோற்றமும், சிரித்த முகமும் பார்ப்பவர்களை காரணமின்றி கவரும் வகையில் அமைந்திருக்கும்.&nbsp;</p><p>இவர்கள் மற்றவர்களிடம் பழகும் தனித்துவமான பாணியும் பெரும்பாலனவர்களுக்கு முதல் சந்திப்பிலேயே பிடித்துவிடுவதால், இந்த ராசியினர் அனைவருக்கும் பிடித்தவர்களாக இருப்பார்கள்.</p><h2>விருச்சிகம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9e2a963b-9e77-40b3-a980-73abe016d7c1/26-6a52644fabdfc.webp' /></p><p></p><p>பிறப்பிலேயே ரகசிய இயல்புக்கும் மர்மமான குணத்துக்கும் பெயர் பெற்ற இவர்கள் அனைவரையும் எளிதில் ஈர்க்கும் ஒரு வசீகர ஆற்றல் கொண்டவர்களாக இருப்பார்கள்.&nbsp;</p><p>பார்ப்பதற்கு இவர்கள் அமைதியாக இருந்தாலும், வெறும் பார்வையிலேயே மற்றவர்களின் மனங்களில் மறக்க முடியாத அளவுக்கு ஒரு வேதியல் மாற்றத்தை கொடுத்துவிடுவார்கள்.</p><p>இவர்களின் பார்வையில் இயல்பாகவே ஒரு காந்த ஆற்றல் நிச்சயம் இருக்கும். இந்த ராசியினர் மனதில் என்ன இருக்கின்றது என்பதை அறிந்துக்கொள்வதற்காகவே இவர்களை சுற்றி ஒரு கூட்டம் இருந்துக்கொண்டே இருக்கும்.</p><p><b>இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. ( மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).</b></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b>&nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-12T04:33:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[டொராண்டோவில் திட்டமிட்டு நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு: 3 சந்தேகநபர்களுக்கு பொலிஸார் வலைவீச்சு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/toronto-police-victim-in-targeted-triple-shooting-1783830051"></link>
            <id>https://canadamirror.com/article/toronto-police-victim-in-targeted-triple-shooting-1783830051</id>
            <summary type="text">கனடாவின் டொராண்டோ நகரில் உள்ள நோர்த் யார்க் பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 22 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் டொராண்டோ நகரில் உள்ள நோர்த் யார்க் பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 22 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.</p><p> 
இச்சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று சந்தேகநபர்களை டொராண்டோ பொலிஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.</p><p>
வெள்ளிக்கிழமை இரவு 11 மணியளவில் ஜேன் ஸ்ட்ரீட் மற்றும் ஷெப்பர்ட் அவென்யூ வெஸ்ட் பகுதியில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக பொலிஸாருக்கு பல அழைப்புகள் கிடைத்துள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2181a255-6f4c-402d-b9ed-3495f230f67e/26-6a531625964ca.webp' /></p><p>
</p><p>பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்தபோது, 20 மதிக்கத்தக்க மூன்று இளைஞர்கள் துப்பாக்கிக் குண்டு காயங்களுடன் கண்டறியப்பட்டனர்.</p><p> 
அவர்களில் 22 வயதுடைய அப்திஹமீம் ஆதன் என்ற இளைஞர் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 
இவர் 2026 ஆம் ஆண்டில் டொராண்டோவில் பதிவான 18 ஆவது கொலைச் சம்பவம் இதுவாகும்.
</p><p>காயமடைந்த மற்ற இரு இளைஞர்களும் பலத்த காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். தற்போது அவர்களின் நிலைமை சீராக உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>
இந்தத் துப்பாக்கிச் சூடானது திட்டமிட்டு நடத்தப்பட்ட ஒரு இலக்கு வைக்கப்பட்ட தாக்குதல் என முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸ் அதிகாரி சான்ட்ரா அர்ருடா தெரிவித்துள்ளார். </p><p>
எனினும், இதற்கான காரணம் என்ன என்பது குறித்து இன்னும் கண்டறியப்படவில்லை.
கருப்பு நிற ஆடைகள் மற்றும் முகமூடி அணிந்திருந்த மூன்று ஆண் சந்தேகநபர்கள், திருடப்பட்ட கருப்பு நிற ஹோண்டா சிவிக் காரில் சம்பவ இடத்திலிருந்து தப்பியோடியுள்ளனர்.</p><p> 
இந்த சந்தேகநபர்களின் கார் சனிக்கிழமை அதிகாலை 3 மணியளவில் பிராம்ப்டன் பகுதியில் தீப்பிடித்த நிலையில் கண்டறியப்பட்டுள்ளது. 
இக்கார் சில நாட்களுக்கு முன்பு நோர்த் யார்க் பகுதியில் திருடப்பட்ட ஒன்று என தெரிவிக்கப்படுகின்றது.</p><p>
சம்பவ இடத்தில் வசிக்கும் செவிலியர் ஒருவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், சுமார் 6 துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்கள் கேட்டதாகவும், பின்னர் உதவி கேட்டு அலறிய சத்தம் கேட்டு தான் வெளியே வந்து காயமடைந்தவர்களுக்கு உதவ முயன்றதாகவும் தெரிவித்துள்ளார்.
</p><p>இந்தக் கொடூரக் குற்றத்துடன் தொடர்புடையவர்களைக் கைது செய்ய பொலிஸார் அனைத்து வளங்களையும் பயன்படுத்தி தீவிர விசாரணைகளை முடுக்கிவிட்டுள்ளனர். </p><p>
சம்பவ இடத்தை கடந்து சென்ற வாகனங்களின் டேஷ்கேம் காட்சிகள் அல்லது தகவல்கள் ஏதேனும் இருந்தால், உடனடியாக தமக்கு வழங்கி உதவுமாறு டொராண்டோ பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-12T04:32:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[டொராண்டோ 'சல்சா' திருவிழாவில் துப்பாக்கிச் சூடு: இருவர் பலி, 6 பேர் காயம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/two-people-are-dead-as-salsa-festival-1783821589"></link>
            <id>https://canadamirror.com/article/two-people-are-dead-as-salsa-festival-1783821589</id>
            <summary type="text">கனடாவின் டொராண்டோ நகரில் நடைபெற்ற புகழ்பெற்ற ‘சல்சா ஆன் செயின்ட் கிளயர்’ வீதித் திருவிழாவில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இருவர் உயிர...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் டொராண்டோ நகரில் நடைபெற்ற புகழ்பெற்ற ‘சல்சா ஆன் செயின்ட் கிளயர்’ வீதித் திருவிழாவில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஆறு பேர் காயமடைந்துள்ளதாக டொராண்டோ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>செயின்ட் கிளெயர் அவென்யூ வெஸ்ட் மற்றும் ஆர்லிங்டன் அவென்யூ பகுதிக்கு அருகில் இந்த கொடூரச் சம்பவம் அரங்கேறியுள்ளது.
</p><p>சனிக்கிழமை இரவு 8:12 மணியளவில் துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து பொலிஸாருக்கு அழைப்பு கிடைத்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3d51d9a4-0a96-49d8-b281-83759f0c38cf/26-6a52f517c68e8.webp' /></p><p> </p><p>
சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், துப்பாக்கிக் குண்டு காயங்களுடன் ஐந்து பேரைக் கண்டறிந்தனர். அவர்களில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.
</p><p>விசாரணைகள் தொடர்ந்த நிலையில், இரவு 9:34 மணியளவில் காயமடைந்த ஆறாவது நபர் ஒருவரையும் பொலிஸார் கண்டறிந்துள்ளனர்.</p><p> எனினும், காயமடைந்தவர்களின் நிலைமை குறித்த உடனடி விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.
சம்பவ இடத்தை பொலிஸார் தற்போது தமது பாதுகாப்புக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். </p><p>எனினும், விசாரணைகள் தொடர்வதால் அப்பகுதியில் பெருமளவிலான பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் அந்தப் பகுதியைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
</p><p> துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் குறித்த விபரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. அவர் அப்பகுதியிலிருந்து தப்பியோடியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. </p><p>அங்கிருந்த பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் தகவல்களின் அடிப்படையில் பொலிஸார் தீவிர தேடுதல் வேட்டையை ஆரம்பித்துள்ளனர்.
</p><p>திருவிழாவில் மக்கள் மகிழ்ச்சியாக நடனமாடிக் கொண்டிருந்த போதே இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. </p><p>இதனால் அங்கு பெரும் பதற்றமும் பயமும் நிலவியதுடன், திருவிழா உடனடியாக நிறுத்தப்பட்டு மக்கள் வீடுகளுக்குப் போகுமாறு பொலிஸாரால் பணிக்கப்பட்டனர்.
'</p><p>சல்சா ஆன் செயின்ட் கிளெயர்' திருவிழா என்பது கனடாவின் முதன்மையான 'இலத்தீன் அமெரிக்க கலாசாரக் கொண்டாட்டம்' ஆகும். 
இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த வருடாந்த திருவிழாவில் ஒவ்வொரு வருடமும் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்துகொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.&nbsp; &nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-12T04:31:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[2 நாட்களில் இதயம் முரளி திரைப்படம் செய்துள்ள வசூல், எவ்வளவு தெரியுமா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/idhayam-murali-2-days-box-office-1783830263"></link>
            <id>https://cineulagam.com/article/idhayam-murali-2-days-box-office-1783830263</id>
            <summary type="text">இதயம் முரளிதமிழ் சினிமாவில் தனக்கென்று தனி இடத்தை பிடித்துள்ள நடிகர்களில் ஒருவர் அதர்வா. இவர் நடிப்பில் இந்த ஆண்டு பராசக்தி திரைப்படம் முதலில் வெளியான...</summary>
            <content type="html"><![CDATA[<h2>இதயம் முரளி</h2><p>தமிழ் சினிமாவில் தனக்கென்று தனி இடத்தை பிடித்துள்ள நடிகர்களில் ஒருவர் அதர்வா. இவர் நடிப்பில் இந்த ஆண்டு பராசக்தி திரைப்படம் முதலில் வெளியானது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d8d461a1-aabf-43af-b5d2-725512883863/26-6a5316fc24fa7.webp' /></p><p>அதை தொடர்ந்து இவர் ஹீரோவாக நடித்து வெளிவந்துள்ள திரைப்படம்தான் இதயம் முரளி. 

இப்படத்தை அறிமுக இயக்குநர் ஆகாஷ் பாஸ்கரன் இயக்கி, தயாரித்திருந்தார். இப்படத்தில் ப்ரீத்தி முகுந்தன், கயாடு லோஹர், சுதாகர், பகத் பாசில், நட்ராஜ், டிராவிட், ரக்ஷன், நிஹாரிகா, ஏஞ்சலின் ஆகியோர் நடித்துள்ளனர்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/73febe57-d748-4d86-8f84-4c868d2ac3e0/26-6a5316faabcb4.webp' /></p><p></p><p>தமன் இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தது மட்டுமல்லாமல், இசையமைப்பாளராகவும் பட்டையை கிளப்பி இருந்தார். இப்படத்திற்கு மிகப்பெரிய பலமாக இவருடைய பாடல்களும், பின்னணி இசையும் அமைந்தன.</p><h2>வசூல்&nbsp;</h2><p> 

கடந்த 10-ஆம் தேதி திரைக்கு வந்த இதயம் முரளி திரைப்படம் கலவையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a5efca03-975f-47da-b767-45d653908995/26-6a5316fb6ad05.webp' /></p><p>இந்த நிலையில், 2 நாட்களில் இப்படம் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 2 நாட்களில் இதயம் முரளி திரைப்படம் உலகளவில் ரூ. 6 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-12T04:26:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[கருணா - டக்ளஸ் - தேசபந்து - ஞானசார தேரர் உள்ளிட்டோருக்கு சிறப்பு பாதுகாப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/publication-government-s-special-protection-list-1783820255"></link>
            <id>https://ibctamil.com/article/publication-government-s-special-protection-list-1783820255</id>
            <summary type="text">சட்ட முறைக்கு அமைவாக காவல்துறை பாதுகாப்புக்குத் தகுதியுள்ள பதவிகளுக்கு மேலதிகமாக 13 முக்கிய அரசியல்வாதிகளுக்கு&amp;nbsp; சிறப்பு பாதுகாப்பானது தற்போதைய அர...</summary>
            <content type="html"><![CDATA[<p>சட்ட முறைக்கு அமைவாக காவல்துறை பாதுகாப்புக்குத் தகுதியுள்ள பதவிகளுக்கு மேலதிகமாக 13 முக்கிய அரசியல்வாதிகளுக்கு&nbsp; சிறப்பு பாதுகாப்பானது தற்போதைய அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ளது.</p><p>தற்போதைய அரசாங்கம், கந்த காலங்களில் முக்கியப் பிரமுகர்களுக்குப் பாதுகாப்பு வழங்கி வந்த காவல்துறை அதிகாரிகளைப் பெருமளவில் நீக்கிய நிலையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><p>அதன்படி, எதிர்க்கட்சி உறுப்பினர்களில் கபீர் ஹாஷிம், எஸ். சிறீதரன், ரஞ்சித் மத்தும பண்டார, எச்.எல். தர்மசேன, உள்ளிட்ட எம். பிக்களுக்கு அத்தகைய பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>முக்கியப் பிரமுகர் பாதுகாப்பு</h2><p>மேலும், முன்னாள் சபாநாயகர் அசோக சப்புமல் ரன்வல, சட்டத்தரணி சரத் குமார, அஜித் சாந்த பிரியதர்ஷனா, ருவன் விஜேவீர, திலங்க யு. கமகே, சுனில் பியான்வல, மற்றும் தினேஷ் ஹேமந்தா ஆகியோருக்கு மட்டுமே ஆளும் கட்சியிலிருந்து முக்கியப் பிரமுகர் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/152adb0a-1068-45f5-80e6-af9acf7b1ff3/26-6a52efe14e931.webp' /></p><p>
</p><p>
மேலும், முன்னாள் சபாநாயகர் கரு ஜெயசூரிய, வினாயகமூர்த்தி முரளிதரன்மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோருக்கும் முக்கியப் பிரமுகர் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.</p><p>

மேலும், முன்னாள் காவல்துறைத் தலைவர்கள் என்.கே. இலங்கக்கூன், புஜித் ஜயசுந்தர, தேசபந்து தென்னக்கோன் மற்றும் முன்னாள் சிறைச்சாலைகள் ஆணையாளர் துஷார உபுல்தெனிய ஆகியோருக்கும் இந்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>ஞானசார தேரர்</h2><p>
</p><p>
பொதுபல பால சேனா கட்சியின் தேசிய அமைப்பாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கும் சிறப்பு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a7daf4ed-c78c-47a5-b7ca-78a2540290a1/26-6a52efe206a83.webp' /></p><p>இதற்கிடையில், குற்றத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகளின் பாதுகாப்பிற்காகவும் சிறப்பு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது என பொதுப் பாதுகாப்பு பிரதி அமைச்சரால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஓர் ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக மேட்படி விடயங்களை உள்ளடக்கி தென்னிலங்கையின் சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.</p><p>வி.பி.ஏ பாதுகாப்பு வழங்கப்பட்ட நபர்கள் யார் என்று எதிர்க்கட்சிப் நாடாளுமன்ற உறுப்பினர் கவிந்த ஜயவர்தன கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் அவர் இந்த ஆவணத்தை சமர்ப்பித்ததாக தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> IBC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-12T04:23:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இரகசிய தகவலில் கொழும்பில் சிக்கிய பெண் - மீட்கப்பட்ட பொருட்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/woman-arrested-in-colombo-with-drugs-1783829255"></link>
            <id>https://tamilwin.com/article/woman-arrested-in-colombo-with-drugs-1783829255</id>
            <summary type="text">வத்தளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் பெருமளவு போதைப்பொருட்களுடன்&amp;nbsp;பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று (11) பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு...</summary>
            <content type="html"><![CDATA[<p>வத்தளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் பெருமளவு போதைப்பொருட்களுடன்&nbsp;பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். </p><p>நேற்று (11) பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் நடத்தப்பட்ட சோதனையின் போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p></p><h2>பொலிஸார் விசாரணை</h2><p> 

சந்தேகநபரான பெண் மட்டக்குளிப் பகுதியைச் சேர்ந்த 36 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/125d6992-a71f-450c-b955-0cc7d554c03d/26-6a5313094e883.webp' /></p><p> </p><p>இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து 1 கிலோகிராம் 140 கிராம் ஐஸ் போதைப்பொருளும், 538 கிராம் ஹெரோயின் போதைப்பொருளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.</p><p> 

இச்சம்பவம் தொடர்பில் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p> </p><p></p>]]></content>
            <updated>2026-07-12T04:07:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹோர்முஸ் நீரிணையை மூடிய ஈரான் : புதிய தாக்குதல்களை ஆரம்பித்த அமெரிக்கா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/us-launches-strike-as-iran-closes-strait-of-hormuz-1783827145"></link>
            <id>https://ibctamil.com/article/us-launches-strike-as-iran-closes-strait-of-hormuz-1783827145</id>
            <summary type="text">ஹோர்முஸ் நீரிணை வழியாகச் சென்ற கப்பல் ஒன்றின் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, ஈரான் மீது புதிய கட்டத் தாக்குதல்களை தொடங்யுள்ளதாக அமெரிக்கா...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹோர்முஸ் நீரிணை வழியாகச் சென்ற கப்பல் ஒன்றின் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, ஈரான் மீது புதிய கட்டத் தாக்குதல்களை தொடங்யுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p>

அங்கீகரிக்கப்பட்ட பாதையில் இருந்து விலகிச் சென்றதாலும், அதன் கண்காணிப்பு அமைப்புகளை அணைத்துவிட்டுச் சென்றதாலும் ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படை அந்த கப்பலைத் தாக்கியுள்ளதாக அந்நாட்டு அரசு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.</p><p>அத்துடன் ஹோர்முஸ் நீரிணை மறு அறிவிப்பு வரும் வரை மூடப்படுவதாக ஈரான் அறிவித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><p></p><h2>அமெரிக்க மத்திய கட்டளை மையம்</h2><p>சைப்ரஸ் நாட்டைச் சேர்ந்த கப்பல் ஒன்றின் மீது ஈரான் "வெளிப்படையாகத் தாக்குதல்" நடத்தியதைத் தொடர்ந்து, "இந்த வாரத்தின் மூன்றாவது சுற்றுத் தாக்குதலை" நடத்தியுள்ளதாக அமெரிக்க மத்திய கட்டளை மையம் (Centcom) தெரிவித்துள்ளது.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">At 7:15 p.m. ET today, U.S. Central Command forces began launching the third round of strikes this week against Iran after Islamic Revolutionary Guard Corps forces blatantly attacked M/V GFS Galaxy, a Cyprus-flagged container ship transiting the Strait of Hormuz. A civilian crew…</p>&mdash; U.S. Central Command (@CENTCOM) <a href="https://x.com/CENTCOM/status/2076089130857951463?ref_src=twsrc%5Etfw">July 11, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p> 

இந்தத் தாக்குதலால் கப்பலின் இயந்திர அறை கடுமையாகப் பாதிக்கப்பட்டு, அது பயணத்தைத் தொடர முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும், ஒரு மாலுமி காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>&nbsp;</p><h2>ஈரானின் தவறான முடிவு</h2><p>அமெரிக்க பாதுகாப்புத் துறை செயலாளர் பீட் ஹெக்செத் தனது சமூக வலைதளப் பதிவில், வணிகக் கப்பல்கள் மீதான முந்தைய தாக்குதல்களுக்கு ஈரான் பொறுப்பேற்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டும், மீண்டும் அதே தவறைச் செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.</p><p>அத்துடன் ஈரான் தவறான முடிவை எடுத்துவிட்டது, அதற்கான விளைவை இப்போது சந்திக்கிறது என்றும் அவர் எச்சரித்துள்ளார்.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Iran made a poor choice. Now they pay. <a href="https://t.co/8m4fEfgrXv">https://t.co/8m4fEfgrXv</a></p>&mdash; Pete Hegseth (@PeteHegseth) <a href="https://x.com/PeteHegseth/status/2076091042693071025?ref_src=twsrc%5Etfw">July 11, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>முன்னதாக, ஒரு வணிகக் கப்பல் மீது எச்சரிக்கையாகக் கப்பல் ஏவுகணையைத் தாங்கள் ஏவியதாகவும், பலமுறை எச்சரித்தும் கேட்காததால் அந்த கப்பல் தடுத்து நிறுத்தப்பட்டதாகவும் ஈரான் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.</p><p> 

மேலும், ஹோர்முஸ் நீரிணையை மூடியதால் அமெரிக்கா மேற்கொள்ளும் எந்தவொரு "ஆக்கிரமிப்புக்கும்" கடும் பதிலடி கொடுக்கப்படும் என்றும், பிராந்தியத்தில் உள்ள அமெரிக்கத் தளங்கள் இலக்கு வைக்கப்படும் என்றும் ஈரான் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-12T03:59:54+00:00</updated>
        </entry>
    </feed>
