<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-08-04T21:36:41+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[துரத்தித் துரத்தி தாக்கிய ரஷ்ய ட்ரோன்..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/russian-drone-chases-and-attacks-street-vendor-1785868144"></link>
            <id>https://tamilwin.com/article/russian-drone-chases-and-attacks-street-vendor-1785868144</id>
            <summary type="text">தெற்கு உக்ரைன் நகரமான கெர்சனில் தெரு வியாபாரி ஒருவரை ரஷ்ய ட்ரோன் துரத்திச்
சென்று தாக்கிய காணொளி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந...</summary>
            <content type="html"><![CDATA[<p>தெற்கு உக்ரைன் நகரமான கெர்சனில் தெரு வியாபாரி ஒருவரை ரஷ்ய ட்ரோன் துரத்திச்
சென்று தாக்கிய காணொளி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
</p><p>
இந்த கொடூர சம்பவத்தை சுட்டிக்காட்டி ரஷ்யா போர்க் குற்றத்தில் ஈடுபட்டுள்ளதாக
உக்ரைன் கடுமையாக குற்றம் சாட்டியுள்ளது.</p><p></p><h2>ரஷ்ய ட்ரோன் தாக்குதல்</h2><p>

உக்ரைன் பொலிஸார் வெளியிட்ட அந்த காணொளியில், விற்பனைக்காக பயன்படுத்தப்படும்
வாகனம் ஒன்றின் அருகே நின்றிருந்த 50 வயதுடைய நபரை ரஷ்ய ட்ரோன் துரத்துவதும்,
அவர் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள வாகனத்திற்கு பின்னால் மறைந்தபோது அது
வெடித்துச் சிதறுவதும் பதிவாகியுள்ளது.
</p><p>
இந்த தாக்குதலில் அந்த வியாபாரி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியபோதிலும், குண்டு
சிதறல்களால் காயமடைந்துள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2a5917ea-07be-4ced-aad0-d9756781ed71/26-6a7230fa0d67d.webp' /></p><p>இந்த தாக்குதலுக்கு உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி மற்றும்
வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்ட்ரி சிபிஹா ஆகியோர் கடும் கண்டனம்
தெரிவித்துள்ளனர்.
</p><p>
பொதுமக்களை பயமுறுத்துவதற்காகவே ரஷ்யா இத்தகைய ட்ரோன் தாக்குதல்களை
திட்டமிட்டு நடத்தி வருவதாகவும், ட்ரோனை இயக்கிய நபருக்கு அவர் தாக்குவது ஒரு
சாதாரண பொதுமக்கள் என்பது தெளிவாகத் தெரிந்தே இச்செயலில் ஈடுபட்டுள்ளதாகவும்
உக்ரைன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-04T21:34:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[காசாவில் 112 பேருக்கு கூட்டாக இறுதிச் சடங்கு: இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீட்கப்பட்ட உடல்கள் அடக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/mass-funeral-for-112-in-gaza-1785877038"></link>
            <id>https://ibctamil.com/article/mass-funeral-for-112-in-gaza-1785877038</id>
            <summary type="text">காசா போரின்போது 2023 ஆம் ஆண்டு இடம்பெற்ற மிகக் கொடூரமான இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களில் ஒன்றில் உயிரிழந்த 112 பேரின் உடல்கள் மீட்கப்பட்டதைத் தொடர்ந்...</summary>
            <content type="html"><![CDATA[<p>காசா போரின்போது 2023 ஆம் ஆண்டு இடம்பெற்ற மிகக் கொடூரமான இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களில் ஒன்றில் உயிரிழந்த 112 பேரின் உடல்கள் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர்களுக்கான கூட்டுத் இறுதிச் சடங்கு செவ்வாய்க்கிழமை மத்திய காசாவின் டெயிர் அல்-பலா நகரில் நடைபெற்றுள்ளது.</p><p>இதில் உயிரிழந்தவர்களில் 40 குழந்தைகளும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>இஸ்ரேலின் தொடர்ச்சியான தாக்குதல்கள் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக அவர்களது உடல்களை மீட்க முடியாத நிலை காணப்பட்டது.</p><p></p><h2>நடைமுறைக்கு வந்த போர்நிறுத்தம் </h2><p> </p><p>கடந்த ஒக்டோபரில் போர்நிறுத்தம் நடைமுறைக்கு வந்த பின்னர் தாக்குதல்களின் தீவிரம் குறைந்ததையடுத்து, மீட்புப் பணிகள் மீண்டும் முன்னெடுக்கப்பட்டன.
</p><p>
பாலஸ்தீனக் கொடிகளால் போர்த்தப்பட்ட 100-க்கும் மேற்பட்ட சவப்பெட்டிகள் வரிசையாக வைக்கப்பட்ட நிலையில், நூற்றுக்கணக்கான பொதுமக்கள் இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளதை மத்திய கிழக்கு ஊடகங்கள் வெளிப்படுத்தியிருந்தன.</p><p>பின்னர் இடிந்த கட்டிடங்கள் மற்றும் போரால் சிதைந்த வீதிகள் வழியாக உடல்கள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு அருகிலுள்ள மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளன.</p><p>
2023 ஆம் ஆண்டு நவம்பர் 22 ஆம் திகதி காசா நகரில் அமைந்திருந்த குடியிருப்பு வளாகம் மீது இஸ்ரேலிய போர் விமானங்கள் நடத்திய தாக்குதலில் 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.</p><p></p><h2>112 பேரின்&nbsp;&nbsp;உடல்ககள்</h2><p> </p><p>அப்போது சம்பவ இடத்திலிருந்தவர்கள் வெறும் கைகளாலும் எளிய கருவிகளாலும் இடிபாடுகளை அகற்றி சுமார் 40 உடல்களை மட்டுமே மீட்டிருந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9ed5b3ba-173a-4f5c-85dd-057fca7d43db/26-6a725374583b3.webp' /></p><p>
</p><p>
கடந்த வார இறுதியில் காசா சிவில் பாதுகாப்புப் படையினர் இடிந்த கட்டிடத்தின் இடிபாடுகளை அகற்றி, மேலும் 112 பேரின் உடல் எச்சங்களை மீட்டனர். இவர்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளும் அடங்குவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். </p><p>அதேவேளை, அந்தத் தாக்குதலுக்குப் பின்னரும் 157 பேர் வரை காணாமல் போயுள்ளதாக காசா சிவில் பாதுகாப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
</p><p>
ஒக்டோபரில் அமலுக்கு வந்த போர்நிறுத்த ஒப்பந்தத்திற்குப் பின்னரும் காசா மீது இஸ்ரேலின் தாக்குதல்கள் முற்றிலும் நிறுத்தப்படவில்லை. </p><p>எனினும், தாக்குதல்களின் தீவிரம் ஓரளவு குறைந்ததன் காரணமாக, இடிபாடுகளுக்குள் புதைந்திருக்கும் ஆயிரக்கணக்கானோரின் உடல் எச்சங்களைத் தேடும் மீட்புப் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-04T21:34:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தோல்வியடைந்த ட்ரம்பின் போர் நிறுத்த முயற்சிகள் ; மாறிமாறி நடத்தப்பட்ட தாக்குதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/trump-s-ceasefire-efforts-end-in-failure-1785878602"></link>
            <id>https://canadamirror.com/article/trump-s-ceasefire-efforts-end-in-failure-1785878602</id>
            <summary type="text">உக்ரைன் , ரஷ்யா போர் 4 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.

இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப...</summary>
            <content type="html"><![CDATA[<p>உக்ரைன் , ரஷ்யா போர் 4 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.
</p><p>
இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆயுதம் உள்ளிட்ட உதவிகளை வழங்கி வருகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ae61f4ae-65cf-4900-8623-410a6ad2d86d/26-6a72584c53a01.webp' /></p><p> போர் நிறுத்த முயற்சிகளை அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் மேற்கொண்டார். ஆனால் முயற்சி தோல்வியடைந்த நிலையில் போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

</p><p>
இந்நிலையில், உக்ரைன் மற்றும் ரஷ்யா நேற்று மாறிமாறி ஏவுகணை, டிரோன் மூலம் தாக்குதல் நடத்தின. ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடத்தப்பட்ட உக்ரைன் ஏவுகணை தாக்குதலில் 5 பேர் உயிரிழந்தனர். </p><p>அதேபோல், உக்ரைனின் சுமி நகர் மீது ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் 4 பேர் உயிரிழந்தனர்.</p><p> இதன் மூலம் இரு தரப்பு மோதலில் மொத்தம் 9 பேர் உயிரிழந்தனர். அதேபோல், 5க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.</p>]]></content>
            <updated>2026-08-04T21:23:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறுவர் உரிமைகள் சட்டத்தை வரையறுக்க அமைச்சரவை அனுமதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/cabinet-approves-child-rights-law-framework-1785877297"></link>
            <id>https://jvpnews.com/article/cabinet-approves-child-rights-law-framework-1785877297</id>
            <summary type="text">நாட்டில் சிறுவர்களின் உரிமைகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் ‘சிறுவர் உரிமைகள் சட்டம்’ என்ற புதிய சட்டமூலத்தைத் தயாரிக்கும் பணிகளை துரிதப்படுத்த அமைச...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">நாட்டில் சிறுவர்களின் உரிமைகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் ‘சிறுவர் உரிமைகள் சட்டம்’ என்ற புதிய சட்டமூலத்தைத் தயாரிக்கும் பணிகளை துரிதப்படுத்த அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.</p><p style="text-align: justify; ">



ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர் உரிமைகள் சமவாயத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து உரிமைகளையும் உள்ளடக்கும் வகையில் புதிய சட்டம் இயற்ற வேண்டிய தேவை அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d12aa713-392b-4119-9a6b-5b06b182d9df/26-6a72533375a32.webp' /></p><h2 style="text-align: justify; ">அமைச்சரவை அனுமதி</h2><p style="text-align: justify; ">



இதற்காக 2024ஆம் ஆண்டு பெப்ரவரி 19ஆம் திகதி அமைச்சரவை வழங்கிய அனுமதியின் அடிப்படையில் சட்ட வரைவாளர் சட்டமூலத்தைத் தயாரிக்கும் பணிகளை ஆரம்பித்திருந்தார்.
</p><p style="text-align: justify; ">


மேலும், ஆரம்பத்தில் ‘சிறுவர் உரிமைகள் தொடர்பான கூட்டிணைப்புச் சட்டம்’ எனப் பெயரிடப்பட்டிருந்த சட்டமூலத்தின் பெயரை ‘சிறுவர் உரிமைகள் சட்டம்’ என மாற்றவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">



மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சரால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அமைவாக, கருத்தாக்கப் பத்திரத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள புதிய விடயங்களையும் இணைத்து சட்டமூலத்தை விரைவாகத் தயாரிக்க சட்ட வரைவாளருக்கு ஆலோசனை வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.&nbsp;&nbsp;</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-04T21:01:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிள்ளையான் விவகாரத்தில் சிக்கிய பிரித்தானிய 'பாயிஸ்'! வெளியான அதிர்ச்சி அறிக்கை..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/remand-ordered-3-individuals-including-pillayan-1785867710"></link>
            <id>https://tamilwin.com/article/remand-ordered-3-individuals-including-pillayan-1785867710</id>
            <summary type="text">பிள்ளையான் (சிவனேசதுரை சந்திரகாந்தன்) உட்பட மூவருக்கு எதிரான விளக்கமறியல் எதிர்வரும் 18ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

காத்தான்குடியைச் சேர்ந்த ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிள்ளையான் (சிவனேசதுரை சந்திரகாந்தன்) உட்பட மூவருக்கு எதிரான விளக்கமறியல் எதிர்வரும் 18ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.</p><p>

காத்தான்குடியைச் சேர்ந்த 'பொலீஸ் பாயிஸ்' (முகமது பாயிஸ்) என்பவருக்கு எதிராகத் திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதோடு, சர்வதேச பிடியாணைக்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.</p><p>

'பொலிஸ் பாயிஸ்' என்பவர் பல்வேறு கொலைகள் மற்றும் சமூகங்களுக்கு இடையே மோதல்களைத் தூண்டிய சம்பவங்களில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
</p><p>
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் மற்றும் காத்தான்குடி பிரதேச செயலாளர் பலீல் உள்ளிட்டோரின் படுகொலைகளுடன் இவருக்குத் தொடர்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p>

'ஈமானிய நெஞ்சங்கள்' எனப்படும் தீவிரவாத அமைப்புடன் இணைந்து மட்டக்களப்பு மாவட்டத்தில் பல வன்முறைகளை முன்னெடுத்ததாகச் சொல்லப்படுகிறது .


பலர் அரசு சாட்சிகளாக மாறியுள்ளது இந்த விசாரணைகளுக்குப் பெரும் வலு சேர்த்துள்ளது.</p><p>

இந்த விடயங்கள் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி...</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/wyDBgwtC3Hc" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-04T20:59:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[நடிகர் பிரதீப் ராவத் காலமானார்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/pradeep-rawat-dies-at-74-after-cancer-battle-1785876140"></link>
            <id>https://tamilwin.com/article/pradeep-rawat-dies-at-74-after-cancer-battle-1785876140</id>
            <summary type="text">பல திரைப்படங்களில் வில்லனாக நடித்துப் புகழ்பெற்ற நடிகர் பிரதீப் ராவத், ரத்தப் புற்றுநோய் காரணமாக 74 வயதில் காலமானார். 



கடந்த ஐந்து ஆண்டுகளாகப் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பல திரைப்படங்களில் வில்லனாக நடித்துப் புகழ்பெற்ற நடிகர் பிரதீப் ராவத், ரத்தப் புற்றுநோய் காரணமாக 74 வயதில் காலமானார்.</p><p> 



கடந்த ஐந்து ஆண்டுகளாகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த பிரதீப் ராவத், தொடர் சிகிச்சைக்குப் பின் அதிலிருந்து மீண்டு வந்திருந்தார்.</p><p></p><h2>நடிகர் பிரதீப் ராவத்</h2><p> 

ஆனால், சில மாதங்களுக்கு முன்பு அவருக்கு மீண்டும் நோய் பாதிப்பு தீவிரமடைந்ததை அடுத்து, கடந்த இரண்டு மாதங்களாக மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார். </p><p>


இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று (4) மாலை அவர் உயிரிழந்ததாக அவரது மேலாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f809285f-1a69-43af-8e2c-81cf35a08071/26-6a725133b3e62.webp' /></p><p> </p><p>

அவரது இறுதிச்சடங்குகள் புதன்கிழமை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>

பிரதீப் ராவத்தின் மறைவு குறித்து பிரபலங்கள் பலரும் தங்கள் சமூக வலைத்தளப் பக்கத்தில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.</p><p></p><h2>வில்லன் கதாபாத்திரங்கள்</h2><p>&nbsp;1952-ஆம் ஆண்டு ஜனவரி 21-ஆம் திகதி பிறந்த பிரதீப் ராவத், பி.ஆர்.சோப்ராவின் 'மகாபாரதம்' தொடரில் அஸ்வத்தாமனாக நடித்துத் தனது திரைப் பயணத்தைத் தொடங்கினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/419f27fc-7c94-49ff-9ed8-7f694bc8a97c/26-6a72513465119.webp' /></p><p>

'லகான்' படத்தில் தேவா சிங் சோதி என்ற கதாபாத்திரத்திலும், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா நடித்த 'கஜினி' திரைப்படத்தில் இரட்டை வேடத்திலும் நடித்துத் தமிழ், இந்தி திரையுலகில் பெரும் புகழ்பெற்றார்.
</p><p>
பின்னர் அஜித் நடித்த ‘வீரம்’ படத்திலும் வில்லனாக நடித்திருந்தார். 

மேலும் தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் போஜ்புரி மொழிப் படங்களிலும் வில்லன் கதாபாத்திரங்களில் அவர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-04T20:53:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆப்பிளின் App Store தேடல் முடிவுகளில் இருந்து மாயமான டெலிகிராம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/telegram-disappears-from-apple-s-app-store-1785876474"></link>
            <id>https://ibctamil.com/article/telegram-disappears-from-apple-s-app-store-1785876474</id>
            <summary type="text">உலகம் முழுவதும் ஆப்பிளின் ஆப் ஸ்டோர் தேடல் முடிவுகளில் இருந்து டெலிகிராம்(Telegram) செயலி திடீரென மறைந்துள்ளதால், ஐபோன் மற்றும் ஐபேட் பயனர்கள் அதனைத் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>உலகம் முழுவதும் ஆப்பிளின் ஆப் ஸ்டோர் தேடல் முடிவுகளில் இருந்து டெலிகிராம்(Telegram) செயலி திடீரென மறைந்துள்ளதால், ஐபோன் மற்றும் ஐபேட் பயனர்கள் அதனைத் தேடவோ, புதிதாகப் பதிவிறக்கம் செய்யவோ முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.</p><p>

டெலிகிராமின் அதிகாரப்பூர்வ ஆப் ஸ்டோர் பக்கத்தை அணுக முயற்சிக்கும் போது, "Page Not Found" (பக்கம் காணப்படவில்லை) என்ற பிழைச் செய்தி காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
இந்த விவகாரம் தொடர்பாக ஆப்பிள் நிறுவனமோ, டெலிகிராம் நிறுவனமோ இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ விளக்கத்தையும் வெளியிடவில்லை. </p><p></p><h2>மீண்டும் நிறுவ முடியாத நிலை</h2><p>மேலும், டெலிகிராமின் தலைமை நிர்வாக அதிகாரி பாவெல் துரோவ் தரப்பிலிருந்தும் இதுகுறித்து எந்தக் கருத்தும் வெளியிடப்படவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/413d0541-af35-4318-abc4-bb15f03e1159/26-6a724ffc3ead6.webp' /></p><p>
</p><p>
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்த நிலை ஏற்பட்டதா அல்லது ஆப் ஸ்டோர் கொள்கை தொடர்பான நடவடிக்கையின் விளைவாக செயலி நீக்கப்பட்டதா என்பது இதுவரை தெளிவாகத் தெரியவில்லை.
</p><p>
இந்நிலையில், ஏற்கனவே தங்களது ஐபோன் அல்லது ஐபேட்டில் டெலிகிராம் செயலியை நிறுவியுள்ள பயனர்கள் வழக்கம்போல் அதனைப் பயன்படுத்த முடியும். </p><p>எனினும், செயலியை நீக்காமல் இருக்குமாறு தொழில்நுட்ப வட்டாரங்கள் அறிவுறுத்தியுள்ளன. ஏனெனில், தற்போதைய சூழலில் ஆப் ஸ்டோர் மூலம் அதை மீண்டும் நிறுவ முடியாத நிலை காணப்படுகிறது.</p><p></p><h2>iOS பதிப்பிற்கான புதிய புதுப்பிப்பு</h2><p>
</p><p>
புதிய ஐபோன் அல்லது ஐபேட் சாதனங்களைப் பயன்படுத்தத் தொடங்கும் பயனர்களும் டெலிகிராம் செயலியை அதிகாரப்பூர்வமாக நிறுவ முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ed1aebee-8b53-485a-b626-bda3b257ae11/26-6a724ffce751d.webp' /></p><p> </p><p>மேலும், இந்தப் பிரச்சினை தீர்க்கப்படும் வரை iOS பதிப்பிற்கான புதிய புதுப்பிப்புகள், பிழைத் திருத்தங்கள், செயல்திறன் மேம்பாடுகள் மற்றும் பாதுகாப்பு புதுப்பிப்புகளும் கிடைக்காமல் போகலாம் என தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
அதேவேளை, டெலிகிராமின் இணையப் பதிப்பு, விண்டோஸ் மற்றும் மேக்ஓஎஸ் டெஸ்க்டாப் செயலிகள், ஆண்ட்ராய்டு செயலி ஆகியவை வழக்கம்போல செயல்பட்டு வருகின்றன.
</p><p>
ஆப் ஸ்டோரில் இருந்து டெலிகிராம் திடீரென மறைந்ததைத் தொடர்ந்து, உலகம் முழுவதும் பயனர்கள் சமூக ஊடகங்களில் தங்களது அதிருப்தி மற்றும் குழப்பத்தை வெளிப்படுத்தி, இது தொடர்பான திரைப் பதிவுகளையும் (Screenshots) பகிர்ந்து வருகின்றனர்.
</p><p>
வேகம், பாதுகாப்பு மற்றும் பல்வேறு சாதனங்களில் ஒரே நேரத்தில் பயன்படுத்தும் வசதி ஆகியவற்றால் பிரபலமான டெலிகிராம், உலகளவில் 1 பில்லியனுக்கும் அதிகமான செயலில் உள்ள பயனர்களைக் கொண்டதுடன், அதிகம் பதிவிறக்கம் செய்யப்படும் குறுந்தகவல் செயலிகளில் முன்னணி இடத்தை வகித்து வருகிறது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-04T20:48:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களுக்கு மூன்று வருடங்களுக்குப் பிறகு இறுதிச்சடங்கு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/mass-funeral-held-in-gaza-1785875973"></link>
            <id>https://news.lankasri.com/article/mass-funeral-held-in-gaza-1785875973</id>
            <summary type="text">2023-ல் இஸ்ரேலியத் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களுக்கான கூட்டு இறுதிச் சடங்கு காஸாவில் நடைபெற்றது.
2023-ஆம் வருடத்தில் காஸா போரின்போது இஸ்ரேல் நடத்திய ...</summary>
            <content type="html"><![CDATA[<p>2023-ல் இஸ்ரேலியத் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களுக்கான கூட்டு இறுதிச் சடங்கு காஸாவில் நடைபெற்றது.
</p><p>2023-ஆம் வருடத்தில் காஸா போரின்போது இஸ்ரேல் நடத்திய மிகக் கொடூரமானத் தாக்குதல்களில் ஒன்றில் கொல்லப்பட்ட 40 சிறார்கள் உட்பட 112 பேரின் கூட்டு இறுதிச் சடங்கிற்காக, செவ்வாய்க்கிழமையன்று மத்திய காஸாவில் மக்கள் திரண்டனர்.</p><h2>நூற்றுக்கணக்கான மக்கள்</h2><p>
</p><p>அக்டோபர் மாத போர்நிறுத்தத்திற்குப் பிறகு இஸ்ரேலின் தாக்குதல்களின் உக்கிரம் குறைந்திருந்தாலும் முழுமையாக நின்றுவிடாத நிலையில், தொடர்ந்து முன்னெடுக்கப்படும் தாக்குதல்கள் காரணமாக இதுவரை அவர்களின் உடல்களை மீட்க முடியவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dc9e7103-546b-4a5e-aa09-9cb2f141f45d/26-6a724e09c6b68.webp' /></p><p> </p><p>டெய்ர் அல்-பலாவில், தரையில் வரிசையாக வைக்கப்பட்டிருந்த, பாலஸ்தீனக் கொடிகளால் போர்த்தப்பட்ட 100-க்கும் மேற்பட்ட சவப்பெட்டிகளைச் சுற்றி நூற்றுக்கணக்கான மக்கள் கூடினர். </p><p>அருகிலுள்ள கல்லறையில் அடக்கம் செய்வதற்காக, இடிபாடுகள் நிறைந்த தெருக்கள் மற்றும் சிதைந்த கட்டிடங்களுக்கு இடையே சடலங்களை எடுத்துச் செல்வதற்கு முன்னதாக, துயருற்ற மக்கள் மரணமடைந்தவர்களுக்காகப் பிரார்த்தனை செய்தனர். </p><p>2023-ஆம் ஆண்டு நவம்பர் 22-அன்று காஸா நகரில் இஸ்ரேலிய போர் விமானங்கள் ஒரு குடியிருப்புத் தொகுதியைத் தகர்த்தபோது கொல்லப்பட்ட 300-க்கும் மேற்பட்டோரில் இவர்களும் அடங்குவர்.</p><p></p><p> </p><p>குண்டுவீச்சில் சிதைந்திருந்த
 இடிபாடுகளைத் தங்கள் வெறும் கைகள் மற்றும் எளிய கருவிகளைக் கொண்டு தோண்டிய அங்கிருந்தவர்களால், சுமார் 40 பேரின் உடல்களை மட்டுமே மீட்க முடிந்தது. </p><p>கடந்த வார இறுதியில், காஸாவின் சிவில் பாதுகாப்புப் படையினர் தரைமட்டமான அடுக்குமாடி குடியிருப்புக் கட்டிட இடிபாடுகளைத் தோண்டி, பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட மேலும் 112 பேர்களின் உடல்களை மீட்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a879ee1c-31f0-42f6-8ae7-07f7f7514a7c/26-6a724e091ecda.webp' /></p><h2>இனப்படுகொலை</h2><p> </p><p>இன்னும் 157 பேர் காணாமல் போயுள்ளதாகவே அங்குள்ள எஞ்சிய மக்கள் தெரிவிக்கின்றனர். காஸா மீது இஸ்ரேல் நடத்தி வரும் குண்டுவீச்சை நிறுத்தாத போதிலும், அக்டோபர் மாதம் ஏற்படுத்தப்பட்ட போர்நிறுத்தம், </p><p>அப்பகுதி முழுவதும் ஆயிரக்கணக்கான உடல்கள் இன்னும் புதையுண்டு கிடக்கும் இடிபாடுகளுக்கு இடையே மீட்புப் பணியாளர்கள் தேடுதல் மற்றும் அகழ்வுப் பணிகளை மேற்கொள்ள வழிவகுத்துள்ளது. </p><p>குறைந்தது 7,400 பேர் இடிபாடுகளுக்கு அடியில் இன்னும் புதையுண்டு கிடப்பதாக அவர்களது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். உண்மையான எண்ணிக்கை இதைவிடப் பல ஆயிரங்கள் அதிகமாக இருக்கக்கூடும்; சில தாக்குதல்களில் முழு குடும்பங்களுமே கொல்லப்பட்டதால், அவர்கள் குறித்துத் தகவல் தெரிவிக்க உறவினர்கள் யாரும் எஞ்சியிருக்கவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f5fb25af-168a-4a9b-9284-4963ebdfef04/26-6a724e086c4f3.webp' /></p><p> </p><p>காஸாவில் இஸ்ரேல் இனப்படுகொலை செய்ததாக ஐ.நா ஆணையம், மனித உரிமைகள் கண்காணிப்பகம் மற்றும் அம்னெஸ்டி இன்டர்நேஷனல் ஆகியவை கண்டறிந்துள்ளன. </p><p>அக்டோபர் மாத போர்நிறுத்த ஒப்பந்தத்தின் இரண்டாம் கட்டத்தை உறுதிப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஒரு ஒப்பந்தம் அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், வார இறுதியில் இஸ்ரேலியத் தாக்குதல்களில் குறைந்தது 26 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். </p><p>அக்டோபர் 7, 2023 முதல் காஸாவில் இஸ்ரேல் தாக்குதலால் 73,000-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்; இதில் அக்டோபர் மாத போர்நிறுத்தத்திற்குப் பிறகு கொல்லப்பட்ட 1,250-க்கும் மேற்பட்டோரும் அடங்குவர். </p><p>காஸா முனைப் பகுதியின் பெரும்பகுதி இஸ்ரேல் குண்டுவீச்சால் தரைமட்டமாக்கப்பட்டுள்ளது; அங்குள்ள 20 லட்சம் மக்களில் பெரும்பாலோர் இடம்பெயர்ந்து, சுகாதாரமற்ற, நெரிசல் மிகுந்த கூடார முகாம்களில் மனிதாபிமான நெருக்கடிக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-04T20:37:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[மியன்மாருடன் மீண்டும் பேச்சுவார்த்தை: தாய்லாந்து பிரதமர் வலியுறுத்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/thai-prime-minister-urges-talks-with-myanmar-1785869193"></link>
            <id>https://tamilwin.com/article/thai-prime-minister-urges-talks-with-myanmar-1785869193</id>
            <summary type="text">மியன்மாருடன் &quot;கணக்கிடப்பட்ட மறுகட்ட பேச்சுவார்த்தை&quot; அவசியமானது என
தாய்லாந்து பிரதமர் அனுதின் சர்ன்விரகுல் வலியுறுத்தியுள்ளார்.

​பிராந்திய அமைதியை ...</summary>
            <content type="html"><![CDATA[<p>மியன்மாருடன் "கணக்கிடப்பட்ட மறுகட்ட பேச்சுவார்த்தை" அவசியமானது என
தாய்லாந்து பிரதமர் அனுதின் சர்ன்விரகுல் வலியுறுத்தியுள்ளார்.

​</p><p>பிராந்திய அமைதியை நிலைநாட்டவும், மியன்மாரின் தற்போதைய கள
நிலவரத்தைக் கருத்தில் கொண்டு உதவிகளை வழங்கவும் பேச்சுவார்த்தைக் கதவுகள்
திறந்திருக்க வேண்டும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>மியன்மாருடனான பேச்சுவார்த்தை</h2><p>
</p><p>
ஆசியான் அமைப்பின் 'ஐந்து அம்சக் கொள்கை' வழிகாட்டுதலின் படியே இந்த அணுகுமுறை
மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

​</p><p>மியன்மார் இராணுவ ஆட்சிக் குழுவின் தலைவரும் தற்போதைய ஜனாதிபதியுமான மின் ஆங்
லைங்கை, தாய்லாந்து பிரதமர் அனுதின் சந்திக்கவுள்ள நிலையில் இந்த கருத்து
வெளியாகியுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a5a44071-fe5c-4800-b95a-c2c4499d2df3/26-6a72354db0229.webp' /></p><p>அதேவேளையில், மியன்மாரின் முன்னாள் தலைவி ஆங் சான் சூகி சர்வதேச செஞ்சிலுவைச்
சங்கப் பிரதிநிதியைச் சந்தித்துப் பேசியதாகவும், அவர் நல்ல ஆரோக்கியத்துடன்
இருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
</p><p>
இ​ராணுவ ஆட்சியாளர்களை மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அழைப்பது அவர்களுக்கு
சட்டப்பூர்வ அங்கீகாரத்தை அளித்துவிடும் என்று அரசியல் வல்லுநர்கள்
எச்சரித்துள்ளபோதிலும், பிராந்திய ஒற்றுமையைப் பேண இந்த நெகிழ்வுத்தன்மை
அவசியம் என தாய்லாந்து பிரதமர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-04T20:32:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பகுதியில் சுற்றிவளைக்கப்பட்ட வீடு ; அதிரடி கைதான இளைஞன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/youth-arrested-after-house-surrounded-by-police-1785875332"></link>
            <id>https://jvpnews.com/article/youth-arrested-after-house-surrounded-by-police-1785875332</id>
            <summary type="text">சாய்ந்தமருது பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமான முறையில் விற்பனைக்காகவும் பயன்பாட்டுக்காகவும் மறைத்து வைக்கப்பட்டிருந்த 500 போதை மாத்திரைக...</summary>
            <content type="html"><![CDATA[<p>சாய்ந்தமருது பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமான முறையில் விற்பனைக்காகவும் பயன்பாட்டுக்காகவும் மறைத்து வைக்கப்பட்டிருந்த 500 போதை மாத்திரைகளுடன் 32 வயதுடைய சந்தேக நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலொன்றின் அடிப்படையில், சாய்ந்தமருது பொலிஸ் நிலைய பதில் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தலைமையில் அமைக்கப்பட்ட மூவர் அடங்கிய பொலிஸ் குழுவினர் திங்கட்கிழமை (3) மாலை குறித்த இளைஞரின் வீட்டைச் சோதனையிட்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/957c83a4-e63a-4f45-98e0-248889282146/26-6a724b860eb8b.webp' /></p><h2>தீவிர விசாரணை</h2><p>
</p><p>
இதன்போதே, மருத்துவப் பரிந்துரைகள் ஏதுமின்றி சட்டவிரோதமாகப் பாதுகாத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 500 போதை மாத்திரைகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டதுடன், சந்தேக நபரும் அதே இடத்தில் கைது செய்யப்பட்டார்.
</p><p>
மேலும் சந்தேக நபரிடம் சாய்ந்தமருது பொலிஸார் தீவிர விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.</p><p></p><p>
</p><p>
விசாரணைகளின் பின்னர் சந்தேக நபரைச் சான்றுகளுடன் கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் எடுத்து வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-04T20:29:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் சுற்றுலா சென்ற இருவர் வனப்பகுதியில் சடலமாக மீட்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/two-people-found-dead-near-lake-east-1785859674"></link>
            <id>https://canadamirror.com/article/two-people-found-dead-near-lake-east-1785859674</id>
            <summary type="text">கனடாவின் வடக்குப் பகுதியான ஒன்டாரியோவில் முகாம் அமைத்துத் தங்குவதற்காகச் சென்று வீடு திரும்பாத இருவர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக ஒன்டாரியோ மாகாண...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் வடக்குப் பகுதியான ஒன்டாரியோவில் முகாம் அமைத்துத் தங்குவதற்காகச் சென்று வீடு திரும்பாத இருவர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக ஒன்டாரியோ மாகாணக் காவல்துறை தெரிவித்து உள்ளது.</p><p> 
கபுஸ்காசிங் கருக்குக் கிழக்கே அமைந்துள்ள குவெனெட் ஏரிக்கு அருகே இந்த இரண்டு திடீர் மரணங்களும் நிகழ்ந்துள்ளன.
</p><p> இந்தச் சம்பவத்தில் ஏதேனும் சதிச் செயல் அல்லது குற்றப் பின்னணி உள்ளதா என்பது குறித்து காவல்துறை இதுவரை அதிகாரப்பூர்வமாக எதுவும் தெரிவிக்கவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/73f542f9-d970-4099-a48c-a4bc6bdf4f6b/26-6a720e5c67884.webp' /></p><p> </p><p>
சுற்றுலா சென்ற இருவர் வீடு திரும்பவில்லை என்று ஆகஸ்ட் 1-ஆம் திகதி காவல்துறைக்கு அழைப்பு வந்தது.</p><p> இதையடுத்து அவசரக்கால மீட்புக் குழு, மோப்பநாய் படை, காவல்துறை விமானப் பிரிவு மற்றும் இயற்கை வளங்கள் அமைச்சகம் இணைந்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டன. </p><p>
தேடுதலின் முடிவில், ஆகஸ்ட் 2-ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இருவரின் உடல்களும் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டன. 
உயிரிழந்தவர்களின் அடையாளங்களை காவல்துறை இன்னும் வெளியிடவில்லை. </p><p>"இது ஒரு தனிமைப்படுத்தப்பட்ட சம்பவம் என்றும், பொதுமக்களின் பாதுகாப்புக்கு எந்தப் அச்சுறுத்தலும் இல்லை" என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.</p><p> 
உயிரிழப்பிற்கான காரணம் குறித்து தற்போது கருத்து தெரிவிக்க முடியாது என்றும், இது தொடர்பான கூடுதல் தகவல்கள் விசாரணக்குப் பின்னரே வெளியாகும் என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.</p><p> 
ஜூலை 30 முதல் ஆகஸ்ட் 2 வரை குவெனெட் ஏரிப் பகுதிக்கு அருகில் இருந்தவர்கள் யாரேனும் சந்தேகத்திற்கிடமான நிகழ்வுகளைக் கண்டிருந்தாலோ, அல்லது அது தொடர்பான வீடியோ காட்சிகள் மற்றும் கேமரா பதிவுகள் வைத்திருந்தாலோ உடனடியாகக் காவல்துறையைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.</p><p> 
இந்தச் சம்பவம் குறித்து முதன்மை மரண விசாரணை அதிகாரி அலுவலகத்துடன் இணைந்து குற்றப்பிரிவு காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-04T20:17:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்திய திரைப்பட நடிகர் பிரதீப் ராவத் காலமானார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/actor-pradeep-rawat-passes-away-1785874346"></link>
            <id>https://ibctamil.com/article/actor-pradeep-rawat-passes-away-1785874346</id>
            <summary type="text">இந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழித் திரைப்படங்களில் வில்லன் கதாபாத்திரங்களின் மூலம் ரசிகர்களிடையே தனித்துவமான இடத்தைப் பெற்ற மூத்த நடிகர் ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழித் திரைப்படங்களில் வில்லன் கதாபாத்திரங்களின் மூலம் ரசிகர்களிடையே தனித்துவமான இடத்தைப் பெற்ற மூத்த நடிகர் பிரதீப் ராவத் (74) ரத்தப் புற்றுநோய் காரணமாக நேற்று மாலை மும்பையில் காலமானார்.
</p><p>
நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் புற்றுநோயிலிருந்து மீண்டிருந்த அவருக்கு, கடந்த ஒன்றரை மாதங்களாக நோய் மீண்டும் தீவிரமடைந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><p> இதையடுத்து மும்பையிலுள்ள கோகிலாபென் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், உடல்நிலை மோசமடைந்து உயிரிழந்தார்.
</p><p></p><h2>இரங்கலைத் தெரிவித்து வரும் ரசிகர்கள்&nbsp;</h2><p>அவரது இறுதிச் சடங்குகள் இன்று மாலை மும்பையில் நடைபெறவுள்ளதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1f54686c-e923-4277-a02e-ce7021fbaf36/26-6a7247fb47846.webp' /></p><p>
</p><p>
பி.ஆர். சோப்ராவின் புகழ்பெற்ற 'மகாபாரதம்' தொலைக்காட்சி தொடரில் அஸ்வத்தாமன் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தனது கலைப் பயணத்தைத் தொடங்கிய பிரதீப் ராவத், பின்னர் இந்தித் திரைப்படமான 'லகான்' மூலம் பரவலாக அறியப்பட்டார்.
</p><p>
தமிழில் நடிகர் சூர்யா நடித்த 'கஜினி' திரைப்படத்தில் வலுவான வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த அவர், அதே படத்தின் இந்தி மறுஉருவாக்கத்திலும் அமீர் கானுக்கு எதிராக வில்லனாக நடித்திருந்தார்.</p><p> இந்தி, தமிழ், தெலுங்கு மட்டுமன்றி கன்னடம், மலையாளம், போஜ்புரி மற்றும் நேபாளி மொழித் திரைப்படங்களிலும் நடித்துள்ள பிரதீப் ராவத்தின் மறைவுக்கு இந்தியத் திரையுலக பிரபலங்கள், கலைஞர்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-04T20:12:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[கைதிகளை வீட்டுக்காவலில் தடுத்து வைக்கும் திட்டம் ; கிடைக்கப்பெற்ற அனுமதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sri-lanka-plans-home-detention-for-inmates-1785874071"></link>
            <id>https://jvpnews.com/article/sri-lanka-plans-home-detention-for-inmates-1785874071</id>
            <summary type="text">சிறைச்சாலை நெரிசலுக்கு மாற்று வழிமுறையாக வீட்டுக் காவலில் தடுத்து வைக்கும் யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில்...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">சிறைச்சாலை நெரிசலுக்கு மாற்று வழிமுறையாக வீட்டுக் காவலில் தடுத்து வைக்கும் யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
</p><p style="text-align: justify; ">
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று (4) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டபோது அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ மேற்கண்ட அறிவிப்பை வெளியிட்டார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3f12de89-37bc-4ec7-8ee6-e5efe655377f/26-6a7246990cf02.webp' /></p><h2 style="text-align: justify; ">சட்ட ஏற்பாடுகள்&nbsp;</h2><p>
</p><p style="text-align: justify; ">
குறித்த அறிவிப்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,</p><p style="text-align: justify; ">

தடுப்புக் காவலில் வைத்தல் அல்லது சிறைப்படுத்தல் போன்றவற்றுக்கு மாற்று வழிமுறையாக பொருத்தமான வழக்கு நடவடிக்கைகளில் சந்தேக நபர்களை வீட்டுக்காவலில் வைப்பதற்கான சட்ட ஏற்பாடுகளை அறிமுகப்படுத்துவதற்காக அப்போதைய அமைச்சரவையால் வழங்கப்பட்டுள்ள கொள்கை ரீதியான அங்கீகாரத்தின் பிரகாரம் சட்டமூலம் ஒன்றைத் தயாரிக்குமாறு செயன்முறையை சட்டவரைஞர் ஆரம்பித்துள்ளார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">


அதற்கமைய, சட்டவரைஞரால் தயாரிக்கப்பட்டுள்ள சட்டமூலத்தை மேலும் மீளாய்வு செய்வதற்காக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் அவர்களால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள முன்மொழிவுகளுக்கு 2025.06.23 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. </p><p style="text-align: justify; ">

அதற்கமைய, சட்டவரைஞரால் தயாரிக்கப்பட்டுள்ள சட்டமூலத்துக்கு மேலும் உட்சேர்க்கப்படவேண்டிய ஏற்பாடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், குறித்த ஏற்பாடுகளை உட்சேர்த்து இச்சட்டமூலத்தைத் தயாரிக்கும் பணிகளைத் துரிதமாகப் பூர்த்தி செய்யுமாறு சட்டவரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்காக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது என்றார்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-04T20:07:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[பேச்சுரிமையை முடக்குவதாக ட்ரம்ப் மீது குற்றச்சாட்டு: 75 நீதிமன்ற தீர்ப்புகளில் அதிர்ச்சித் தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/75-court-rulings-accuse-trump-curbing-free-speech-1785871432"></link>
            <id>https://tamilwin.com/article/75-court-rulings-accuse-trump-curbing-free-speech-1785871432</id>
            <summary type="text">பேச்சுரிமையைப் பாதுகாப்பதாகக் கூறி பதவியேற்ற அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட்
ட்ரம்பின் நிர்வாகம், அதற்கு மாறாக மக்களின் பேச்சுரிமையைப் பறிக்கும் வகையில்
...</summary>
            <content type="html"><![CDATA[<p>பேச்சுரிமையைப் பாதுகாப்பதாகக் கூறி பதவியேற்ற அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட்
ட்ரம்பின் நிர்வாகம், அதற்கு மாறாக மக்களின் பேச்சுரிமையைப் பறிக்கும் வகையில்
செயல்பட்டுள்ளதாக அமெரிக்க நீதிமன்றங்களின் தொடர் தீர்ப்புகள்
மூலம் தெரியவந்துள்ளது.</p><p>

ட்ரம்ப் இரண்டாவது முறையாகப் பொறுப்பேற்றது முதல், முதலாம் அரசியலமைப்புத்
திருத்த உரிமைகளான பேச்சுரிமை, மத சுதந்திரம் மற்றும் பத்திரிகை சுதந்திரத்தை
அவரது நிர்வாகம் மீறியதாக 75 கூட்டாட்சி நீதிமன்றத் தீர்ப்புகள் உறுதி
செய்துள்ளன.</p><p></p><h2>வழக்குகளின் தீர்ப்புகள்</h2><p>

பலஸ்தீன ஆதரவுப் போராட்டக்காரர்கள், பல்கலைக்கழகங்களுக்கான நிதியுதவி இரத்து,
சட்ட நிறுவனங்கள் மீதான பழிவாங்கும் நடவடிக்கைகள் மற்றும் எதிர்ப்பாளர்கள்
மீதான கெடுபிடிகள் தொடர்பாகத் தொடரப்பட்ட வழக்குகளிலேயே இந்தத் தீர்ப்புகள்
வழங்கப்பட்டுள்ளன.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a7465916-663d-4f99-b99b-2bb47460af0d/26-6a723e764999a.webp' /></p><p>இதில் பெரும்பாலான தீர்ப்புகள் ஜனநாயகக் கட்சி ஜனாதிபதிகளால் நியமிக்கப்பட்ட
நீதிபதிகளால் வழங்கப்பட்டவை என்றாலும், குடியரசுக் கட்சியினரால்
நியமிக்கப்பட்ட நீதிபதிகளும் 10 வழக்குகளில் ட்ரம்ப் அரசுக்கு எதிராகவே
தீர்ப்பளித்துள்ளனர்.
</p><p>
எனினும், நீதிமன்றங்களின் இந்தத் தீர்ப்புகளை "அரசியல் செயல்பாடுடையவை" என
விமர்சித்துள்ள வெள்ளை மாளிகை, தீர்ப்புகளை எதிர்த்து மேல்முறையீடு செய்துவருகிறது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-04T20:06:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டை விட்டு தப்பியோடிய முன்னாள் ஜனாதிபதியின் மகனும் அவர் மனைவியும்..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/former-president-son-fled-the-country-and-his-wife-1785873297"></link>
            <id>https://tamilwin.com/article/former-president-son-fled-the-country-and-his-wife-1785873297</id>
            <summary type="text">முன்னாள் ஜனாதிபதி ஒருவரின் மகன் அவரது மனைவியுடன் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

கடந்த நாட்களில் அவர் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி ஒருவரின் மகன் அவரது மனைவியுடன் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
</p><p>
கடந்த நாட்களில் அவர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக குறிப்பிடப்பட்டது.
</p><p>
இந்தநிலையில்,முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகன் தஹாம் சிறிசேனவும் மற்றும் அவரது மனைவியும் நாட்டை விட்டு தப்பிச் சென்றதாக புலனாய்வு ஊடகவியலாளர் கீர்த்தி ரத்நாயக்க சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.</p><p>

தஹாம் சிறிசேன மற்றும் அவரது மனைவியின் குடும்பத்தினருக்கு எதிராக 500 கோடி ரூபாய்க்கும் அதிகமான வரி மோசடி தொடர்பான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
</p><p>
தஹாம் திருமணம் செய்துகொண்ட குடும்பத்தின் வணிக நிறுவனமான எல்காடோ (Elcato), ஆரம்பத்தில் நுழைவாயில்கள் (gates) தயாரிக்கும் நிறுவனமாக இருந்து, பின்னர் வாகன இறக்குமதி தொழிலில் ஈடுபட்டு முறைகேடுகளில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
</p><p>
இந்த வழக்கு விசாரணையின் ஒரு பகுதியாக, அகில ரவிநக வீரரத்ன மற்றும் அஸ்வினி டயஸ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், குடும்ப உறுப்பினர்களுக்கு வெளிநாட்டு பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
</p><p>

இந்த விடயங்கள் தொடர்பில் ஆராய்கின்றது NewsInsightTamil நிகழ்ச்சி..</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/BCAwXNr7v-g" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-04T20:02:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[வட கொரியா பற்றிய அவதூறு ; அமெரிக்காவுக்கு கடும் கண்டனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/north-korea-slams-us-over-defamation-claims-1785872933"></link>
            <id>https://canadamirror.com/article/north-korea-slams-us-over-defamation-claims-1785872933</id>
            <summary type="text">வட கொரியாவின் ஐடி ஊழியர்களைப் பற்றித் தவறாகப் பேசி அந்நாட்டின் பிம்பத்தை அமெரிக்கா கெடுப்பதாக வட கொரியா குற்றம் சாட்டியுள்ளது.

வட கொரியா தனது அணு ஆ...</summary>
            <content type="html"><![CDATA[<p>வட கொரியாவின் ஐடி ஊழியர்களைப் பற்றித் தவறாகப் பேசி அந்நாட்டின் பிம்பத்தை அமெரிக்கா கெடுப்பதாக வட கொரியா குற்றம் சாட்டியுள்ளது.
</p><p>
வட கொரியா தனது அணு ஆயுதம் மற்றும் ஏவுகணைத் திட்டங்களுக்கு நிதி திரட்ட, அவர்களின் திறமையான ஐடி ஊழியர்களை போலி அடையாளங்களுடன் வெளிநாட்டு நிறுவனங்களில் பணியாற்ற பயன்படுத்துவதாக அமெரிக்கா, ஆசியா மற்றும் ஐரோப்பாவைச் சேர்ந்த 10 நட்பு நாடுகள் இணைந்து கூட்டறிக்கை வெளியிட்டன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b3cf5387-5ed5-4dbb-a1dd-4d28be35f05c/26-6a7242278482f.webp' /></p><p>
</p><p>
அதில், வட கொரிய ஐடி ஊழியர்கள் வருமானத்தைப் பெற இணையதளங்களில் பிற நாட்டுக் குடிமக்களைப் போன்று அடையாளப்படுத்திக் கொண்டு, அந்த வருமானத்தை தங்களது நாட்டு அரசுக்கு வழங்குவதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.
</p><p>
மேலும், வட கொரிய ஊழியர்கள் தங்கள் உண்மையான அடையாளங்களை மறைக்க செயற்கை நுண்ணறிவு கருவிகளைப் பயன்படுத்துவதாகவும் அதில் எச்சரிக்கப்பட்டது.</p><p>

வடகொரியா மீது சர்வதேச அளவில் பல தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனால், நாட்டின் திட்டங்களுக்கு நிதி திரட்ட சைபர் குற்றங்கள், கிரிப்டோகரன்சி மற்றும் பணமோசடி நடவடிக்கைகளில் அந்நாடு பரவலாக ஈடுபடுவதாகக் குற்றச்சாட்டுகள் உள்ளன.</p><p>


இந்த நிலையில், அமெரிக்க உள்ளிட்ட நாடுகள் இணைந்து வெளியிட்ட கூட்டறிக்கைக்கு வடகொரியா எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. </p><p>அந்நாட்டின் செய்தி நிறுவனம் வெளியிட்ட மறுப்புச் செய்தியில், “எங்கள் நாட்டின் மீதான பிம்பத்தைக் கெடுக்கும் தீய நோக்கத்துடன் வைக்கப்பட்ட வழக்கமான அரசியல் குற்றச்சாட்டு இது. </p><p>இணைய வெளி தொடர்பான முக்கிய வளங்களை தங்களின் கட்டுப்பாட்டில் வைத்துள்ள அமெரிக்கா, பிற நாடுகளிடம் இருந்து சைபர் அச்சுறுத்தல்கள் வருவதாகக் கூறுவது மிகவும் முரணானது.
</p><p>
இறையாண்மை கொண்ட நாடுகளுக்கு அழுத்தம் கொடுத்து தனது சட்டவிரோதக் கொள்கைகளை நியாயப்படுத்துவதற்கான அமெரிக்காவின் சாக்குபோக்கு மட்டுமே இது” எனத் தெரிவித்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-04T19:49:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>H. A. Roshan</name>
            </author>
            <title type="text"><![CDATA[டெங்கு கட்டுப்பாட்டு முயற்சிகளுக்கு ஆதரவு கரம் நீட்டிய இந்தியா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/india-s-support-for-dengue-control-efforts-1785867155"></link>
            <id>https://tamilwin.com/article/india-s-support-for-dengue-control-efforts-1785867155</id>
            <summary type="text">இந்தியாவின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, டெங்கு
பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக 500
லிட்டர் தொழில்நுட்ப மலத்தியோனை (Technical Malathion) இலங்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியாவின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, டெங்கு
பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக 500
லிட்டர் தொழில்நுட்ப மலத்தியோனை (Technical Malathion) இலங்கை சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவிடம்
கையளித்துள்ளார்.</p><p>

இந்த நிகழ்வானது நேற்று(03.08.2026) இடம்பெற்றுள்ளது.</p><p></p><h2>இந்திய நிறுவனமான UPL Limited&nbsp;</h2><p>
</p><p>
இலங்கை அரசாங்கத்தின் கோரிக்கையைத் தொடர்ந்து, இந்திய அரசாங்கமும் இந்திய
மக்களும் வழங்கிய அன்பளிப்பாக இந்த மருந்து இலங்கை அரசாங்கத்திற்கும்
மக்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.</p><p> 

இந்திய நிறுவனமான UPL Limited இந்த மருந்தை
வழங்கியதுடன், கோரிக்கை விடுக்கப்பட்டு வெறும் இரண்டு வாரங்களுக்குள் கொழும்பை
வந்தடைந்துள்ளது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9f600fd9-4de1-40ee-afbd-5e999bf2d0d2/26-6a722ce2bf284.webp' /></p><p>நெருக்கடி காலங்களில் முதன்முதலில் உதவி வழங்கும் நாடாக இந்தியா
தொடர்ந்து செயல்படுவதை இது மீண்டும் எடுத்துக்காட்டுகிறது.
</p><p>
2026 ஆம் ஆண்டில் இதுவரை இலங்கையில் சுமார் 86,000 டெங்கு நோய்த்தொற்றுகள்
பதிவாகியுள்ளன.

 இதில் மேற்கு மாகாணம் அதிகளவில் பாதிக்கப்பட்ட பகுதிகளில்
ஒன்றாகும்.</p><p></p><h2>தொழில்நுட்ப மலத்தியோன்</h2><p> இந்த தொழில்நுட்ப மலத்தியோன், டெங்கு பரவலைக்
கட்டுப்படுத்துவதற்காக இலங்கை சுகாதார அதிகாரிகள் மேற்கொண்டு வரும் பரவலான
புகைமூட்டல் (Fogging) மற்றும் தெளிப்பு (Spraying) நடவடிக்கைகளுக்கு உதவியாக
அமையும்.
</p><p>
நிகழ்வில் உரையாற்றிய உயர்ஸ்தானிகர், இலங்கை அரசாங்கத்தின் முன்னுரிமைகள்
மற்றும் தேவைகளுக்கு ஏற்ப தொடர்ந்து ஆதரவு வழங்குவதற்கான இந்தியாவின்
உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/570b04e2-88fb-4488-bd10-56e6d11c50e2/26-6a722ce1e814a.webp' /></p><p>மேலும், இந்த மருந்துத் தொகுதியை
விரைவாக வழங்குவதற்கு ஒத்துழைப்பும் ஆதரவும் வழங்கிய இலங்கை சுகாதார
அமைச்சுக்கும் சம்பந்தப்பட்ட அனைத்து இலங்கை அதிகாரிகளுக்கும் தனது நன்றியைத்
தெரிவித்துள்ளார்.
</p><p>
மேலும், இந்தியாவின் "Neighbourhood
First" (அயல்நாடுகள் முதன்மை) கொள்கையின் கீழ் இலங்கைக்கு தொடர்ந்து வழங்கி
வரும் உறுதியான ஆதரவை இது பிரதிபலிக்கிறது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-04T19:40:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஷேக் ஹசீனாவின் இணையவழி உரை! இந்தியா மீது அதிருப்தியடைந்துள்ள பங்களாதேஷ்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/ban-unhappy-with-hasinas-online-speech-against-ind-1785871849"></link>
            <id>https://ibctamil.com/article/ban-unhappy-with-hasinas-online-speech-against-ind-1785871849</id>
            <summary type="text">தப்பியோடியுள்ள முன்னாள் பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா இந்திய நிலப்பரப்பைப் பயன்படுத்தி அரசியல் அறிக்கைகள் வெளியிடவோ அல்லது பங்களாதேஷில் அமைதிக்கேடு வி...</summary>
            <content type="html"><![CDATA[<p>தப்பியோடியுள்ள முன்னாள் பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா இந்திய நிலப்பரப்பைப் பயன்படுத்தி அரசியல் அறிக்கைகள் வெளியிடவோ அல்லது பங்களாதேஷில் அமைதிக்கேடு விளைவிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடவோ இடமளிக்கக்கூடாது என அந்நாடு அறிவித்துள்ளது.</p><p>முன்னாள் பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா, பங்களாதேஷில் ஆட்சி மாற்றத்துக்கு வழிவகுத்த மக்கள் எழுச்சியின் இரண்டாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு இணையவழியில் உரையாற்றவுள்ள நிகழ்வு குறித்து எழுந்துள்ள சர்ச்சைக்கு இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.</p><p>இந்நிலையில் குறித்த நிகழ்வை ஏற்பாடு செய்வதில் இந்திய அரசுக்கு எவ்வித தொடர்பும் இல்லை என இந்தியா தெரிவித்துள்ளது.</p><p></p><h2>அரசின் ஆதரவு இல்லை</h2><p>
</p><p>
இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பில், “இந்த நிகழ்வை இந்திய அரசு ஏற்பாடு செய்யவோ ஆதரிக்கவோ இல்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7510c7e7-a4a2-4368-bc24-1d949f5e3b44/26-6a723dec2fdb3.webp' /></p><p> </p><p>இது தனியார் ஊடக நிறுவனம் ஒன்றினால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வாகும். அங்கு முன்வைக்கப்படும் கருத்துகளுக்கு அரசின் ஆதரவு இல்லை” எனக் கூறியுள்ளதாக இந்திய தரப்புகள் விளக்கியுள்ளன.</p><p>
2024 ஆம் ஆண்டு மாணவர் தலைமையிலான போராட்டங்களால் ஷேக் ஹசீனாவின் அரசு பதவியிலிருந்து அகற்றப்பட்டதைத் தொடர்ந்து, அவர் புதுடெல்லியில் சுய விருப்ப நாடுகடத்தல் வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்.</p><p> 2025 ஆம் ஆண்டு, போராட்டங்களை அடக்கிய விதம் தொடர்பாக மனிதகுலத்திற்கு எதிரான குற்றச்சாட்டில் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், அந்தத் தீர்ப்பை அவர் சட்டரீதியாக செல்லுபடியாகாதது என நிராகரித்துள்ளார்.
</p><p>
78 வயதான ஷேக் ஹசீனா, டாக்காவை விட்டு வெளியேறிய பின்னர் முதன்முறையாக புதன்கிழமை காணொளி வாயிலாக பொதுமக்கள் முன்னிலையில் உரையாற்றவுள்ளார்.</p><p></p><h2>தடைசெய்யப்பட்ட அவாமி லீக் கட்சி</h2><p> தெற்காசிய வெளிநாட்டு செய்தியாளர்கள் கழகம் (Foreign Correspondents’ Club of South Asia) ஏற்பாடு செய்துள்ள இந்நிகழ்வில் அவரது மகன் சஜீப் வாசெட் ஜோயும், பல்வேறு பேச்சாளர்களும் பங்கேற்கவுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/22518d6b-e7b0-4d16-b511-452a4519d400/26-6a723decdad74.webp' /></p><p>
</p><p>
இந்நிலையில், ஷேக் ஹசீனாவின் திட்டமிடப்பட்ட உரை தொடர்பாக இந்தியாவின் நிலைப்பாட்டை விளக்குமாறு பங்களாதேஷ் அரசு கோரியிருந்தது. </p><p>மேலும், தடைசெய்யப்பட்ட அவாமி லீக் கட்சியின் தலைவர்கள் இந்திய மண்ணைப் பயன்படுத்தி அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட அனுமதிப்பது இருநாட்டு உறவுகளை பாதிக்கக்கூடும் என்றும் எச்சரித்திருந்தது.
</p><p>
பங்களாதேஷ் பிரதமர் தாரிக் ரஹ்மானின் ஆலோசகர் எம். ஹுமாயூன் கபீர், டாக்காவில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரை சந்தித்து இது தொடர்பாக அதிகாரப்பூர்வ எதிர்ப்பை வெளியிட்டார்.</p><p>

“தடைசெய்யப்பட்ட அமைப்புகளுடன் தொடர்புடையவர்கள், குறிப்பாக தப்பியோடியுள்ள ஷேக் ஹசீனா, இந்திய நிலப்பரப்பைப் பயன்படுத்தி அரசியல் அறிக்கைகள் வெளியிடவோ அல்லது பங்களாதேஷில் அமைதிக்கேடு விளைவிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடவோ இடமளிக்கக்கூடாது என்பதில் இந்தியா ஒத்துழைக்க வேண்டும் என பங்களாதேஷ் எதிர்பார்க்கிறது” என்று அவர் தெரிவித்துள்ளார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-04T19:30:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[கீழே தவறி விழுந்த 16 வயது மாணவிக்கு பிரசவம் ; சிசுவுக்கு நேர்ந்த கதி ; காதலன் மாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/16-year-old-gives-birth-after-fall-1785871666"></link>
            <id>https://jvpnews.com/article/16-year-old-gives-birth-after-fall-1785871666</id>
            <summary type="text">&amp;nbsp;கீழே தவறி விழுந்த 10-ம் வகுப்பு மாணவிக்கு பிரசவம் ஏற்பட்டு வயிற்றில் இருந்த சிசு இறந்துள்ளதுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.&amp;nbsp;அந்த மாணவியை கர்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">&nbsp;கீழே தவறி விழுந்த 10-ம் வகுப்பு மாணவிக்கு பிரசவம் ஏற்பட்டு வயிற்றில் இருந்த சிசு இறந்துள்ளதுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p style="text-align: justify;">அந்த மாணவியை கர்ப்பமாக்கிய காதலன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a993d927-4ff2-4c11-915f-69a0cffb3277/26-6a723d341c819.webp' /></p><h2 style="text-align: justify; ">வழக்குப்பதிவு</h2><p>
</p><p style="text-align: justify;">

விருதுநகர் மாவட்டம் ஒரு கிராமத்தை சேர்ந்த 16 வயது சிறுமி தனது பாட்டி வீட்டில் வசித்து வந்ததுடள் மாணவிக்கு இன்ஸ்டாகிராம் மூலம் 25 வயது இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மாணவி கர்ப்பம் அடைந்துள்ளார்.</p><p style="text-align: justify;">சம்பவத்தன்று பள்ளியில் இருந்து மாணவி வீடு திரும்பியபோது திடீரென நிலை தடுமாறி கீழே விழுந்ததில் மாணவியின் வயிற்றில் கடும் வலி ஏற்பட்டுள்ளது.</p><p style="text-align: justify;"> இதனை தொடர்ந்து மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது அவர் கர்ப்பமாக இருந்தது தெரியவந்துள்ளது.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;"> </p><p style="text-align: justify; ">இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் மாணவியை வீட்டுக்கு அழைத்து வந்த நிலையில் வீட்டில் வைத்து மாணவிக்கு பிரசவம் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. </p><p style="text-align: justify; ">

இதை தொடர்ந்து வீட்டில் உள்ளவர்கள் மாணவியையும், சிசுவையும் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் சிசு உயிரிழந்தமை பரிசோதனையில் தெரிய வந்துள்ளது. </p><p style="text-align: justify; ">

மாணவியின் காதலன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.&nbsp;</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-04T19:27:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ். பலாலி விமான நிலையத்தின் அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடலில் சலசலப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/development-of-jaffna-palaly-airport-1785864847"></link>
            <id>https://tamilwin.com/article/development-of-jaffna-palaly-airport-1785864847</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் - பலாலி விமான நிலையத்தின் அபிவிருத்தி திட்டத்திற்காக சுவீகரிக்கப்பட்ட காணிகளின் உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பிலான கலந்துரையா...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் - பலாலி விமான நிலையத்தின் அபிவிருத்தி திட்டத்திற்காக சுவீகரிக்கப்பட்ட காணிகளின் உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பிலான கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றுள்ளது.
</p><p>
இந்த கலந்துரையாடலானது இன்று(04.07.2026) வலிகாமம் - வடக்கு, தெல்லிப்பழை பிரதேச செயலகத்தில்
இடம்பெற்றுள்ளது.</p><p></p><h2>காணி உரிமையாளர்கள்</h2><p>

வலிகாமம் - வடக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பலாலி மேற்கு, மயிலிட்டி வடக்கு, தென்மயிலை மற்றும் குரும்பசிட்டி ஆகிய நான்கு கிராம சேவகர்
பிரிவுகளில், 1986ஆம் ஆண்டு பலாலி விமான நிலைய விரிவாக்கத்திற்காக வர்த்தமானி
அறிவித்தல் மூலம் சுவீகரிக்கப்பட்ட 267 ஏக்கர் காணிகளின் 436 காணி
உரிமையாளர்கள் கலந்துரையாடலுக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.
</p><p>
இதன்போது, வலி. வடக்கில் இன்னும் காணிகளை மீளப் பெறாத காணி உரிமையாளர்களும்
பிரதேச செயலகத்திற்கு வருகைத்தந்திருந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/46eaf33e-8390-498f-9401-e13024450271/26-6a72252e68d60.webp' /></p><p> 

அவர்கள் கூட்ட மண்டபத்திற்குள்
அனுமதிக்கப்படாத நிலையில், மாவட்ட அரசாங்க அதிபருடன் பேச்சுவார்த்தை
நடத்தியதையடுத்து கூட்டம் முடிந்ததும் உங்களோடு கலந்துரையாடுவதாக அரசாங்க அதிபர்
தெரிவித்திருந்தார் ஆனால் அந்த சந்திப்பு இடம் பெறவில்லை.
</p><p>
1986ஆம் ஆண்டு சுவீகரிக்கப்பட்ட காணிகளுக்கு 2022ஆம் ஆண்டின் மதிப்பீட்டின்
அடிப்படையில் இழப்பீடு வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p> 

தொடர்ந்து,
இழப்பீடு வழங்குவதற்கான சத்தியக்கடதாசியில் கையொப்பமிடுமாறு காணி
உரிமையாளர்களிடம் கோரப்பட்டுள்ளது. எனினும், ஒவ்வொரு காணிக்கும் நிர்ணயிக்கப்பட்ட மதிப்பீட்டு விபரங்கள்
வழங்கப்படாத நிலையில் சத்தியக் கடதாசியில் கையொப்பமிட முடியாது என காணி
உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.</p><p></p><h2>மீளக் குடியேற்ற நடவடிக்கை</h2><p>

மேலும், சத்தியக்கடதாசியின் உள்ளடக்கம்
தெளிவற்றதாக இருப்பதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியதால் கூட்டத்தில்
பரபரப்பும் குழப்பநிலையும் ஏற்பட்டுள்ளது.
</p><p>
குழப்பநிலை தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, கூட்ட மண்டபத்திற்குள் பொலிஸார்
வரவழைக்கப்பட்டுள்ளனர். பின்னர் அதிகாரிகள் மற்றும் மக்களுக்கிடையே இடம்பெற்ற
கலந்துரையாடலை அடுத்து , காணி உரிமையாளர்கள் தரப்பில் ஏழு பேர் கொண்ட
குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5ea1fdeb-7195-4ee6-adad-9fbac7d41718/26-6a72252f362e2.webp' /></p><p>அவர்களின் ஆலோசனைக்கு அமைவாக சத்தியக்கடதாசியில்
திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, அவை காணி மதிப்பீட்டுத் திணைக்களத்திற்கு
அனுப்பப்பட்டதையடுத்து மீண்டும் காணி உரிமையாளர்களை அழைப்பது என
தீர்மானிக்கப்பட்டுள்ளது. எனினும், சில காணி உரிமையாளர்கள் இழப்பீடு பெறுவதில் இணக்கம் தெரிவிக்காமல்
கூட்டத்திலிருந்து வெளியேறியுள்ளனர்.</p><p> 

அவர்கள், தங்களுக்கு இழப்பீடு மட்டும்
வழங்காமல், காணிகளை மீள வழங்கி மீளக் குடியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்
என்றும், அதன் பின்னரே விமான நிலையத் தேவைக்காக காணிகளை வழங்குவது குறித்து
பரிசீலிக்க முடியும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.</p><p>

மேலும், சத்தியக்கடதாசியில் தெளிவின்மை காணப்பட்டமை மக்களிடையே
நம்பிக்கையின்மையையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியதாக காணி உரிமையாளர்கள்
தெரிவித்துள்ளனர்.&nbsp;&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-04T19:15:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரான்ஸ் கடற்படையினரின் அதிரடி: ஆங்கிலக் கால்வாயில் தீப்பற்றி எரிந்த படகு- 157 அகதிகள் மீட்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/french-coast-guard-operation-157-refugees-rescued-1785868702"></link>
            <id>https://tamilwin.com/article/french-coast-guard-operation-157-refugees-rescued-1785868702</id>
            <summary type="text">பிரான்ஸ் நாட்டின் பொலோன்-சுர்-மெர் துறைமுகத்திற்கு அருகில் ஆங்கிலக்
கால்வாய் பகுதியில் அகதிகளை ஏற்றிச்சென்ற படகு ஒன்று செவ்வாய்க்கிழமை
எதிர்பாராதவித...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரான்ஸ் நாட்டின் பொலோன்-சுர்-மெர் துறைமுகத்திற்கு அருகில் ஆங்கிலக்
கால்வாய் பகுதியில் அகதிகளை ஏற்றிச்சென்ற படகு ஒன்று செவ்வாய்க்கிழமை
எதிர்பாராதவிதமாக தீப்பற்றி எரிந்தது.
</p><p>
தகவலறிந்து உடனடியாகச் செயல்பட்ட பிரான்ஸ் கடற்கரை காவல்படை, மூன்று மீட்புக்
கப்பல்களை அனுப்பி படகில் இருந்த 157 பேரையும் பாதுகாப்பாக மீட்டுள்ளது.</p><p></p><p>
</p><h2>சட்டவிரோத மனித கடத்தல்காரர்கள்</h2><p>
அண்மைக்காலமாக ஆபத்தான இந்த கடல் வழியைப் பயன்படுத்தி பிரித்தானியாவுக்குள்
நுழைய முயலும் அகதிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.</p><p>

சட்டவிரோத மனித கடத்தல்காரர்கள் தகுதியற்ற சிறிய படகுகளில் அளவுக்கு அதிகமான
மக்களை ஏற்றிச் செல்வதால் இத்தகைய கொடூர விபத்துகள் தொடர்ந்து நிகழ்கின்றன.
கடந்த வாரம் கூட இதேபோன்று சிறிய படகில் கால்வாயைக் கடக்க முயன்ற மூன்று பேர்
உயிரிழந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bcbf63ab-34d3-48cd-879f-c35d62ce6124/26-6a723a0098831.webp' /></p><p>
இந்த விபத்து குறித்து கவலை தெரிவித்துள்ள பிரித்தானிய அரசு செய்தித்
தொடர்பாளர், "இந்த சம்பவம் சிறிய படகுகள் மூலம் கடல் கடப்பதில் உள்ள பயங்கர
ஆபத்தை உணர்த்துகிறது.

இத்தகைய ஆபத்தான பயணங்களைத் தடுக்க பிரான்ஸ் மற்றும் சர்வதேச பங்காளிகளுடன்
இணைந்து தீவிரமாகச் செயல்பட்டு வருகிறோம்" என்று தெரிவித்துள்ளார்.</p><p>

2015-16 காலகட்டத்தில் ஏற்பட்ட அகதிகள் நெருக்கடிக்குப் பிறகு ஐரோப்பாவில்
குடியேற்றம் மிகப்பெரிய அரசியல் விவாதமாக உருவெடுத்துள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-04T19:14:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[இஸ்ரேலால் வெடிக்கவிருக்கும் அடுத்த அச்சுறுத்தல்... எச்சரிக்கும் ஜோர்தான்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/muslim-religious-site-israeli-takeover-1785870580"></link>
            <id>https://news.lankasri.com/article/muslim-religious-site-israeli-takeover-1785870580</id>
            <summary type="text">ஜெருசலேமில் உள்ள மிக முக்கியமான முஸ்லிம் மதத் தலத்தை, இஸ்ரேல் கைப்பற்றப்போவதாக ஜோர்தான் எச்சரிக்கை.
இஸ்ரேலின் அத்தகைய நடவடிக்கை ஒரு மத மோதலைத் தூண்டக...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜெருசலேமில் உள்ள மிக முக்கியமான முஸ்லிம் மதத் தலத்தை, இஸ்ரேல் கைப்பற்றப்போவதாக ஜோர்தான் எச்சரிக்கை.
</p><p>இஸ்ரேலின் அத்தகைய நடவடிக்கை ஒரு மத மோதலைத் தூண்டக்கூடும் என்ற அச்சத்தில், அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகளின் அமைச்சர்களின் அவசரக் கூட்டத்தை ஜோர்தான் கூட்டியுள்ளது.</p><h2>அத்துமீறி நுழைவது</h2><p>
</p><p>அல்-அக்ஸா மசூதி மற்றும் 'டோம் ஆஃப் தி ராக்' (Dome of the Rock) ஆகியவற்றைச் சுற்றியுள்ள வளாகத்தில், முஸ்லிம்கள் மட்டுமே வழிபடலாம் என்ற நடைமுறையை (status quo) உறுதிசெய்யும் ஒப்பந்தத்தை மீறி,</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2ae52bd9-b870-4145-8d45-e26a332051f1/26-6a7238f95cb3a.webp' /></p><p> </p><p>யூத மதத் தீவிரவாதிகள் அரசாங்கத்தின் ஆதரவுடன் அப்பகுதிக்குள் அத்துமீறி நுழைவது அதிகரித்து வருகிறது; புதன்கிழமையன்று நடைபெற்ற கூட்டமும், அது தொடர்பான ஜோர்தானின் எச்சரிக்கையும் இந்தச் சூழலிலேயே இடம்பெற்றுள்ளன.</p><p> ஜூலை 23 அன்று, மத அடிப்படைவாத வலதுசாரிப் பிரிவைச் சேர்ந்த 2,000-க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள், முக்கியமாக தேசியப் பாதுகாப்பு அமைச்சர் இடமார் பென்-க்விர் தலைமையிலான குடியேறிகள், யூதர்களால் 'டெம்பிள் மவுண்ட்' (Temple Mount) என்று அழைக்கப்படும் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்தனர். </p><p>நவீன வரலாற்றிலேயே மிக மோசமான அத்துமீறல் என்று ஜோர்தானிய அதிகாரிகளால் குறிப்பிடப்பட்டுள்ள அந்தச் சம்பவத்தில், யூதர்கள் அந்த வளாகம் முழுவதும் பிரார்த்தனைகளையும் சடங்குகளையும் மேற்கொண்டனர்.</p><p></p><p> </p><p>இந்த நிலையில், டெம்பிள் மவுண்ட் சிறப்பு காவல் பிரிவிற்காக மத அடிப்படைவாத யூதர்களை ஆள்சேர்ப்பு செய்யும் சமீபத்திய நடவடிக்கையால் ஜோர்தான் அரசாங்கம் கவலை அடைந்துள்ளதுடன், </p><p>செப்டம்பர் மாதத்தில் வரும் முக்கிய யூதப் பண்டிகைகளின் போது, ​​தீவிரவாத இஸ்ரேலியத் தலைவர்களால் பாரம்பரிய ஜோர்தானியப் பாதுகாப்பிற்கு மேலும் நேரடியான சவால்கள் எழக்கூடும் என்பதாலும் எதிர்கொள்ளத் தயாராகி வருகிறது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a5020ebd-ced7-4334-9c84-2548c0bc4726/26-6a7238f89d705.webp' /></p><p>இந்த ஆண்டு, பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் தீவிர வலதுசாரி கூட்டணி தனது இருப்பைத் தக்கவைத்துக்கொள்ளப் போராடும் தீவிரமான தேர்தல் பிரச்சாரத்திற்கு மத்தியிலேயே அந்த விடுமுறை நாட்கள் வருகின்றன. </p><p>இது ஒரு தொடர்ச்சியான மற்றும் ஆபத்தான அச்சுறுத்தல்; இதை எதிர்கொள்ள எங்களிடம் உள்ள அனைத்து வழிகளையும் நாங்கள் பயன்படுத்துவோம் என்று ஜோர்தான் வெளிவிவகார அமைச்சர் ஐமன் சஃபாடி கூறியுள்ளார். </p><p>மேலும், தற்போதைய நிலையை மாற்றியமைப்பது... பாலஸ்தீனம் மற்றும் ஜோர்தானைத் தாண்டி ஒட்டுமொத்த இஸ்லாமிய உலகிலும் எதிரொலிக்கக்கூடிய ஒரு மத மோதலைத் தூண்டிவிடக்கூடும் என்று நாங்கள் எச்சரிக்கிறோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். </p><p>இந்த நிலையில், அரபு லீக் நாடுகளைச் சேர்ந்த தனது சகாக்களுடன் துருக்கி, இந்தோனேசியா, மலேசியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் பிரதிநிதிகளையும் ஒன்றிணைத்து, புதன்கிழமையன்று நடைபெறவுள்ள அவசரக் கூட்டத்தை நடத்தவுள்ள சஃபாடி, இது ஒட்டுமொத்த சர்வதேச சமூகமும் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒரு விடயம் என்று கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5f4ac555-9fbb-4f5e-bd9c-817389e48fa8/26-6a7238f746048.webp' /></p><p> </p><p>ஜெருசலேம் தற்போது ஒரு வெடிமருந்து கிடங்கு போன்ற பதற்றமான சூழலில் உள்ளது. அல்-அக்ஸா வளாகத்தின் மீதான ஜோர்தானின் பொறுப்புரிமை ஒட்டோமான் காலத்திலிருந்தே இருந்து வருகிறது; அத்துடன், அந்நகரின் மதத் தலங்கள் தொடர்பான தற்போதைய நிலைப்பாடு 1878-ஆம் ஆண்டின் பெர்லின் உடன்படிக்கையில் உறுதிப்படுத்தப்பட்டதாகும். </p><p>ஜெருசலேமில் உள்ள கிறிஸ்தவ புனிதத் தலங்களையும் உள்ளடக்கும் வகையில் 20-ஆம் நூற்றாண்டில் ஹாஷிமைட் அரசின் மேற்பார்வை விரிவுபடுத்தப்பட்டது; மேலும் 1967-ஆம் ஆண்டுப் போருக்குப் பின்னரும், 1994-ஆம் ஆண்டு இஸ்ரேல்-ஜோர்தான் அமைதி ஒப்பந்தத்தின் மூலமும் அதன் பாதுகாவலர் பொறுப்பு மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டது.</p><h2>கடுமையாக அதிகரிக்கக்கூடும்</h2><p> </p><p>இரு உலகப் போர்களுக்கு இடைப்பட்ட காலத்தில், பிரித்தானிய நிர்வாகத்தின் கீழ் இருந்த பாலஸ்தீனப் பகுதியில் யூதத் தீவிரவாதிகள் மேற்கொண்ட அத்துமீறல்கள் கலவரங்களைத் தூண்டின; </p><p>அதேபோல, இஸ்ரேலின் பிரதமராகப் பொறுப்பேற்கவிருந்த வலதுசாரித் தலைவர் ஏரியல் ஷரோன் 2000-ஆம் ஆண்டில் அப்பகுதிக்கு மேற்கொண்ட பயணம், நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்த 'இரண்டாவது இன்டிஃபாடா' (Intifada) வன்முறைக்கு வித்திட்டது.</p><p> மேற்குக் கரையில் இஸ்ரேல் நடத்தி வரும் தீவிர இன அழிப்பு நடவடிக்கைகளின் தாக்கத்தால் ஜோர்தான் தனித்துவமான முறையில் பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4dcff15b-30e5-4c27-96f3-7597cff74b2e/26-6a7238f7ea46f.webp' /></p><p> </p><p>அக்டோபர் தேர்தல்கள் நெருங்கி வரும் நிலையில், இந்த நடவடிக்கைகள் மேலும் கடுமையாக அதிகரிக்கக்கூடும் என்று ஜோர்தான் அரசாங்கம் அஞ்சுகிறது.</p><p> தேர்தலுக்கு முந்தைய மூன்று மாதங்களில் வெற்றியை உறுதி செய்யும் பொருட்டு நெதன்யாகு அரசாங்கம் என்ன வேண்டுமானாலும் செய்யக்கூடும் என்பது குறித்து கவலை நிலவுகிறது; </p><p>ஏனெனில், தீவிரவாதக் கூறுகள் அப்பிராந்தியத்தின் புவியியல் அமைப்பை மாற்றியமைக்க முயன்று வருகின்றன, அம்மாற்றங்களை மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டுவருவது கடினமாக அமையக்கூடும்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-04T19:07:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜூலை மாத வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையில் சிறிய வீழ்ச்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/july-tourist-arrivals-see-slight-decline-1785869982"></link>
            <id>https://jvpnews.com/article/july-tourist-arrivals-see-slight-decline-1785869982</id>
            <summary type="text">கடந்த ஜூலை மாதத்தில் நாட்டிற்கு வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் சிறிய அளவிலான வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிர...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">கடந்த ஜூலை மாதத்தில் நாட்டிற்கு வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் சிறிய அளவிலான வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.</p><p style="text-align: justify; ">

இது தொடர்பில் இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை வெளியிட்டுள்ள அறிக்கையில்,</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dcf6646c-5666-4c35-b961-992fdf2a492b/26-6a7236a001a94.webp' /></p><h2 style="text-align: justify; ">&nbsp;சுற்றுலாப் பயணிகள் வருகை&nbsp;</h2><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

ஜூலை மாதத்தில் மொத்தம் 1,96,845 சர்வதேச சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதுடன், இது கடந்த 2025 -ஆம் ஆண்டின் ஜூலை மாதத்துடன் ஒப்பிடுகையில் 1.7% குறைவு ஆகும்.</p><p style="text-align: justify; ">

நாட்டுக்கு அதிக சுற்றுலாப் பயணிகள் வருகை தந்த நாடுகளின் பட்டியலில் இந்தியாவே தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. ஜூலை மாதத்தில் மட்டும் இந்தியாவிலிருந்து 44,547 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். இது மொத்த வருகையில் 26% ஆகும்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">


இதேவேளை, நாட்டுக்கு அதிக சுற்றுலாப் பயணிகள் வருகை தந்த நாடுகளின் பட்டியலில் பிரித்தானியா இரண்டாம் இடத்தில் உள்ளது. இதன்படி, பிரித்தானியாவிலிருந்து 21,834 பயணிகள் வருகை தந்துள்ளனர்.</p><p style="text-align: justify; ">

அதேவேளை, கடந்த ஜனவரி 01 முதல் ஜூலை 31 வரையிலான 7 மாத காலப்பகுதியில் மொத்தம் 13,43,418 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-04T18:59:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹோர்முஸ் நீரிணையை மீளத் திறக்கும் முயற்சியில் முன்னேற்றம்! அமெரிக்கா - கட்டார் சுட்டிக்காட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/progress-in-efforts-to-reopen-the-strait-of-hormuz-1785869388"></link>
            <id>https://ibctamil.com/article/progress-in-efforts-to-reopen-the-strait-of-hormuz-1785869388</id>
            <summary type="text">அமெரிக்கா - ஈரான் போரைத் தொடர்ந்து ஏற்பட்ட பதற்ற நிலையைத் தணித்து, போர்நிறுத்தத்தை மீண்டும் நடைமுறைப்படுத்துவதற்கும், உலக வர்த்தகத்திற்கு முக்கியத்துவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்கா - ஈரான் போரைத் தொடர்ந்து ஏற்பட்ட பதற்ற நிலையைத் தணித்து, போர்நிறுத்தத்தை மீண்டும் நடைமுறைப்படுத்துவதற்கும், உலக வர்த்தகத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் கப்பல் போக்குவரத்திற்காகத் திறப்பதற்குமான பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க மற்றும் கட்டார் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p>

இந்த முன்னேற்றம் குறித்த தகவல்களைத் தொடர்ந்து, செவ்வாய்க்கிழமை சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சுமார் 2 சதவீதம் குறைந்தது. </p><p>எனினும், ஹோர்முஸ் நீரிணை தொடர்ந்து மூடப்பட்டுள்ளதுடன், ஓமான் கடற்கரைக்கு அண்மையில் பயணித்த சரக்கு கப்பல் ஒன்று அடையாளம் காணப்படாத ஏவுகணைத் தாக்குதலுக்கு உள்ளானதாக பிரித்தானியாவின் கடல்சார் பாதுகாப்பு அமைப்பு (UKMTO) தெரிவித்துள்ளது.
</p><p></p><h2>அமெரிக்காவுடன் நேரடி பேச்சுவார்த்தை</h2><p>
அமெரிக்க நிதி அமைச்சர் ஸ்காட் பெசன்ட், அமெரிக்காவும் ஈரானும் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருவதாகவும், ஹோர்முஸ் நீரிணையைத் திறந்து மோதலை இயல்பு நிலைக்கு கொண்டு வரும் ஒப்பந்தம் விரைவில் எட்டப்படலாம் என்றும் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dfd0205e-5626-45ce-b785-1fb221ce27cd/26-6a72344dcc85b.webp' /></p><p>
</p><p>
இதற்கு முன்னதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகக் கூறியிருந்தார்.</p><p> இருப்பினும், அமெரிக்காவுடன் நேரடி பேச்சுவார்த்தை எதுவும் நடைபெறவில்லை என ஈரான் மறுப்பு தெரிவித்துள்ளது.
</p><p>
போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீண்டும் நடைமுறைப்படுத்தவும், ஹோர்முஸ் நீரிணையை மீளத் திறக்கவும் கட்டார், பாகிஸ்தான் மற்றும் ஓமான் ஆகிய நாடுகள் மத்தியஸ்த முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றன.</p><p></p><h2>கச்சா எண்ணெய் போக்குவரத்து </h2><p> உலகின் சுமார் ஐந்தில் ஒரு பங்கு கச்சா எண்ணெய் மற்றும் திரவ இயற்கை எரிவாயு (LNG) போக்குவரத்து ஹோர்முஸ் நீரிணை வழியாக நடைபெறுவதால், இப்பகுதியின் நிலைமை உலக பொருளாதாரத்தில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும் எனக் கருதப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9b737966-a5b3-4f9a-81f4-b78afd620236/26-6a72344e861ea.webp' /></p><p>
</p><p>
கட்டார் வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் மாஜித் அல்-அன்சாரி, அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையில் வரைவு முன்மொழிவுகள் பரிமாறப்பட்டு வருவதாகவும், இராஜதந்திர முயற்சிகள் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை எட்டியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
</p><p>
இதேவேளை, பேச்சுவார்த்தையின் மையமாக ஓமான் மற்றும் ஈரான் இடையிலான தற்காலிக கப்பல் போக்குவரத்து ஏற்பாடு காணப்படுவதாகவும், ஹோர்முஸ் நீரிணை வழியாக பாதுகாப்பான கடல்சார் போக்குவரத்தை மீள ஆரம்பிப்பதே தற்போதைய பேச்சுவார்த்தைகளின் முக்கிய நோக்கமாக உள்ளதாகவும் பிராந்திய இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-04T18:50:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடா–அமெரிக்க எல்லையில் போதைப்பொருள்–துப்பாக்கி கடத்தல் சதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/us-officials-charge-3-akwesasne-residents-1785862272"></link>
            <id>https://canadamirror.com/article/us-officials-charge-3-akwesasne-residents-1785862272</id>
            <summary type="text">&amp;nbsp;கனடா–அமெரிக்க எல்லைப் பகுதியில் செயல்பட்டதாகக் கூறப்படும் சர்வதேச போதைப்பொருள் கடத்தல் வலையமைப்புடன் தொடர்புடையதாக, கனடா மற்றும் அமெரிக்காவின் இ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கனடா–அமெரிக்க எல்லைப் பகுதியில் செயல்பட்டதாகக் கூறப்படும் சர்வதேச போதைப்பொருள் கடத்தல் வலையமைப்புடன் தொடர்புடையதாக, கனடா மற்றும் அமெரிக்காவின் இரட்டை குடியுரிமை கொண்ட அக்வேசாஸ்னே பகுதியைச் சேர்ந்த மூவர் மீது அமெரிக்க அதிகாரிகள் குற்றச்சாட்டுகளை பதிவு செய்துள்ளனர்.</p><p>
அமெரிக்க அரசுத் தரப்பு வழக்கறிஞர் அலுவலகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, கடந்த வியாழக்கிழமை இந்த மூவரும் கைது செய்யப்பட்டனர். </p><p>
கனடா, அமெரிக்கா மற்றும் அக்வேசாஸ்னே பழங்குடியினர் காவல்துறையினர் இணைந்து மேற்கொண்ட விசாரணையில், கனடாவிலிருந்து அமெரிக்காவுக்கு மெத்தாம்பெட்டமைன் உள்ளிட்ட போதைப்பொருட்களை கடத்தியதாகக் கூறப்படும் வலையமைப்பு அடையாளம் காணப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9ee96177-8155-4a96-8dd2-e2f0f8965115/26-6a72188292c29.webp' /></p><p>
</p><p>மேலும், இந்தக் குழு போதைப்பொருளுக்கு மாற்றாக பல துப்பாக்கிகளைப் பெற திட்டமிட்டிருந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.</p><p>
47 வயது மற்றும் 38 வயதுடைய இருவர், போதைப்பொருளை விநியோகிக்கும் சதியில் ஈடுபட்டதாகவும், விநியோகிக்கும் நோக்கில் வைத்திருந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.
</p><p>குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவர்களுக்கு குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் முதல் ஆயுள் தண்டனை வரை சிறைத்தண்டனையும், அதிகபட்சமாக 10 மில்லியன் அமெரிக்க டொலர் அபராதமும் விதிக்கப்படலாம்.
81 வயதுடைய பெண் ஒருவர், போதைப்பொருளை விநியோகிக்கும் சதியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.</p><p> அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 40 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.
</p><p>அமெரிக்க துணை தலைமை அரசுத் தரப்பு வழக்கறிஞர் ஜான் ஏ. சார்கோன் III, கனடா மற்றும் அமெரிக்க சட்ட அமலாக்க அமைப்புகளுக்கிடையேயான முன்னெப்போதும் இல்லாத ஒத்துழைப்பை பாராட்டியுள்ளார்.
47 வயதுடைய சந்தேகநபர் கனடாவில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மற்ற இருவர் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-04T18:30:53+00:00</updated>
        </entry>
    </feed>
