<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-08-07T23:44:19+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[MNP சேவை தொடர்பில் வெளியான செய்திகளுக்கு அரசாங்கம் விளக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/government-clarifies-news-regarding-mnp-service-1786146159"></link>
            <id>https://jvpnews.com/article/government-clarifies-news-regarding-mnp-service-1786146159</id>
            <summary type="text">தொலைபேசி எண் பெயர்வுத்திறன் (MNP) சேவை வரும் செப்டம்பர் மாதத்தில் ஆரம்பிக்கப்படாது என அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ளது.
நாடாளுமன்றத்தில் டிஜிட்டல் பொரு...</summary>
            <content type="html"><![CDATA[<p>தொலைபேசி எண் பெயர்வுத்திறன் (MNP) சேவை வரும் செப்டம்பர் மாதத்தில் ஆரம்பிக்கப்படாது என அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ளது.</p><p>
</p><p></p><p>நாடாளுமன்றத்தில் டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன தெரிவித்த கருத்துக்கள் தொடர்பாக வெளியாகிய ஊடக அறிக்கைகளைத் திருத்தியமைக்கும் வகையிலேயே அரசாங்கம் இந்த விளக்கத்தை அளித்துள்ளது.</p><p>
</p><p></p><p>தற்போது காணப்படும் சிக்கல்களுக்குத் தீர்வு கண்டு, இச்சேவையைத் திறம்படச் செயல்படுத்துவதற்காக இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு (TRCSL), அமைச்சு மற்றும் தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்களுக்கு இடையே கலந்துரையாடல்கள் நடைபெற்று வருவதாக மட்டுமே பிரதி அமைச்சர் குறிப்பிட்டதாக அரசாங்கம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
தொலைத்தொடர்புத் துறையின் பங்குதாரர்கள் செப்டம்பர் மாத இறுதிக்குள் ஒரு இறுதி உடன்பாட்டிற்கு வரத் தவறினால், இலங்கை தொலைத்தொடர்புச் சட்டம் மற்றும் தொடர்புடைய உரிம நிபந்தனைகளின் கீழ் ஒழுங்குமுறை உத்தரவொன்றைப் பிறப்பிக்க TRCSL நடவடிக்கை எடுக்கும் என்றே பிரதி அமைச்சர் சுட்டிக்காட்டியிருந்தார்.</p><p>

எனவே, 'செப்டம்பர் மாத இறுதி' என்பது தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ஒரு உடன்பாட்டிற்கு வருவதற்கு வழங்கப்பட்ட காலக்கெடுவே தவிர, அது MNP சேவையின் அதிகாரப்பூர்வ தொடக்கத் திகதி அல்ல என அந்த அறிக்கை வலியுறுத்தியுள்ளது.
</p><p>
நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாக்கும் அதேவேளையில், இந்தச் சேவையை கூடிய விரைவில் அறிமுகப்படுத்துவதில் அரசாங்கம் உறுதியாக இருப்பதாகவும், இதன் அதிகாரப்பூர்வ தொடக்கத் திகதி உரிய நேரத்தில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-07T23:42:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட 19 வயது இளைஞன் ; பொலிஸார் தீவிர விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/19-year-old-youth-found-dead-in-jaffna-home-1786121241"></link>
            <id>https://jvpnews.com/article/19-year-old-youth-found-dead-in-jaffna-home-1786121241</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் நாரந்தனை பகுதியில் இளைஞர் ஒருவர் வீட்டினுள் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் நாரந்தனை பகுதியில் இளைஞர் ஒருவர் வீட்டினுள் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><p>
</p><p></p><p>உயிரிழந்த இளைஞனின் தாயாரும் சகோதரியும் தற்போது யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் வசித்து வருகின்றனர். </p><p>அதேவேளை, நாரந்தனையில் அமைந்துள்ள குடும்ப வீட்டில் அவரது தந்தை மட்டுமே தனியாக வசித்து வந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
சம்பவம் இடம்பெற்ற நாளில், தந்தை வேலை நிமித்தமாக வீட்டை விட்டு வெளியே சென்றிருந்ததாகவும், வேறொரு இடத்தில் வசித்து வந்த இளைஞன் அவ்வப்போது வந்து செல்லும் அந்த வீட்டிற்கு வந்திருந்ததாகவும் ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f1b234ed-fdad-40ce-8da1-01ce7e5e7c62/26-6a760c1b52cf9.webp' /></p><p>இந்நிலையில், இன்று காலை அப்பகுதி வழியாக ஆடுகளை மேய்ப்பதற்காகச் சென்ற நபர் ஒருவர் வீட்டிற்குள் இளைஞன் தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். </p><p>இதையடுத்து அவர் உடனடியாக ஊர்காவற்துறை பொலிஸாருக்கு தகவல் வழங்கினார்.
</p><p>
தகவலையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் முதற்கட்ட விசாரணைகளை மேற்கொண்டனர். </p><p>மேலும், மரணத்திற்கான காரணத்தை உறுதிப்படுத்தும் நோக்கில் உடற்கூற்றுப் பரிசோதனை மேற்கொள்ள இளைஞனின் சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.</p><p>

இந்த மரணம் தொடர்பான சூழ்நிலைகள் குறித்து ஊர்காவற்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர். </p><p>உடற்கூற்றுப் பரிசோதனை அறிக்கையும் விசாரணை முடிவுகளும் வெளியாகிய பின்னரே மரணத்திற்கான துல்லியமான காரணம் உறுதிப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-07T23:36:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - அரசை கடுமையாக சாடிய எதிர்கட்சித் தலைவர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/threat-national-security-sajith-criticize-1786143879"></link>
            <id>https://tamilwin.com/article/threat-national-security-sajith-criticize-1786143879</id>
            <summary type="text">நாட்டின் பல்வேறு சிறைச்சாலைகளில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் பாதுகாப்பற்ற
சூழ்நிலைகள் மற்றும் கலவரங்கள் நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு
விடுக்கப்பட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டின் பல்வேறு சிறைச்சாலைகளில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் பாதுகாப்பற்ற
சூழ்நிலைகள் மற்றும் கலவரங்கள் நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு
விடுக்கப்பட்டுள்ள நேரடி அச்சுறுத்தலாகும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித்
பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.</p><p>

நாடாளுமன்றத்தில் நேற்று(07.08.2026) நடைபெற்ற விசேட கூற்றொன்றை முன்வைத்து
உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>தேசிய பாதுகாப்புக்கு&nbsp;அச்சுறுத்தல்</h2><p>
</p><p>
அவர் மேலும் தெரிவிக்கயைில், "யார் எவ்வாறான கருத்துகளைத் தெரிவித்தாலும், தற்போதைய சிறைச்சாலை மோதல்களும்
அசம்பாவிதங்களும் தேசிய பாதுகாப்புக்குப் பாரிய அச்சுறுத்தலாகும்.</p><p>

சிறைச்சாலைகளில் இடம்பெறும் தொடர் அசம்பாவிதங்களைக் அடிப்படையாகக் கொண்டே நீதி
மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷ நாணயக்காரவுக்கு எதிராக நாங்கள்
நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டுவந்தோம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7672ad0e-ca8d-42bf-aeb4-c9acd8fdbd39/26-6a7667c857c1f.webp' /></p><p> </p><p>எனினும், அந்த வாக்கெடுப்பில்
அமைச்சருக்கு ஆதரவாக 152 வாக்குகளும், எதிராக 36 வாக்குகளும் அளிக்கப்பட்டு
அரசு தன் வெற்றியைத் துள்ளிக் குதித்துக் கொண்டாடியது.
</p><p>
ஆனால், அந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை தோற்கடிக்கப்பட்ட பின்னர் மஹர
சிறைச்சாலையிலும், தொடர்ந்து கொழும்பு மகசின் சிறைச்சாலையிலும், தற்போது
குருவிட்ட மற்றும் பல்லன்சேன சிறைச்சாலைகளிலும் அடுத்தடுத்துப் பிரச்சினைகள்
வெடித்துள்ளன.
</p><p>
எனவே, இந்த விவகாரத்தில் அரசு எவ்வித அலட்சியமுமின்றி உடனடியாகக் கடுமையான
நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்" என தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-07T23:33:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[கால்பந்து போட்டிக்கு சில மணி நேரங்களுக்கு முன்பு.,மைதானத்தை தாக்கிய ரஷ்ய ஏவுகணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/russian-missile-hits-odesa-stadium-before-match-1786143689"></link>
            <id>https://news.lankasri.com/article/russian-missile-hits-odesa-stadium-before-match-1786143689</id>
            <summary type="text">ஓடேசா கால்பந்து மைதானம் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. கால்பந்து மைதானம் மீது ரஷ்யா தாக்குதல்உக்ரைனின் ஓடேசா(Odesa) நகரில் அமைந்துள்ள செர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஓடேசா கால்பந்து மைதானம் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது.</p><h2> கால்பந்து மைதானம் மீது ரஷ்யா தாக்குதல்</h2><p>உக்ரைனின் ஓடேசா(Odesa) நகரில் அமைந்துள்ள செர்னோமோரெட்ஸ் மைதானம்(Chornomorets Stadium) மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது.</p><p> மைதானத்தில் உக்ரைன் பிரீமியர் லீக் கால்பந்து போட்டிகள் தொடங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு ரஷ்யா இந்த ஏவுகணை தாக்குதலை நடத்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5f36b0d4-9094-49ca-bdfb-790376fcef23/26-6a7663cb0afda.webp' /></p><p>இதில் குறைந்தது ஒருவர் காயமடைந்து இருப்பதுடன், மைதானம் பலத்த சேதம் அடைந்துள்ளது.</p><h2> மைதானத்தில் ஏற்பட்டுள்ள சேதம்</h2><p>34,000 பேர் அமர்ந்து பார்க்கக்கூடிய செர்னோமோரெட்ஸ் மைதானத்தின் கூரை பெருமளவு சேதமடைந்துள்ளது.</p><p></p><p> மைதானத்தில் உள்ள கண்ணாடிகள் மற்றும் பார்வையாளர்கள் மாடங்கள் பலத்த சேதமடைந்து இருப்பதாக அவசரகால சேவைப் பிரிவு தகவல் தெரிவித்துள்ளது.</p><p>இந்த சம்பவத்தில் சிதறிய வெடிகுண்டு சில்லுகளால் 29 வயதுடைய பெண் ஒருவர் காயமடைந்து இருப்பதை ஓடேசா ஆளுநர் ஒலெக் கிப்பர் உறுதிப்படுத்தியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5865d822-21ca-4731-866b-f6a68e586d7d/26-6a7663cbb4d97.webp' /></p><p>சேதத்தின் அளவை மதிப்பிடுவதற்காக உள்ளூர் அதிகாரிகளும், அவசர கால மீட்பு படையினரும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.</p><h2>போட்டிகள் ஒத்திவைக்கப்படுமா?</h2><p>செர்னோமோரெட்ஸ் மைதானத்தில் நாளை உக்ரைன் பிரீமியர் லீக்கின் இரண்டாவது சுற்று ஆட்டம் நடைபெற இருந்தது.</p><p> நாளை மதியம் 1 மணிக்கு இந்த மைதானத்தில் செர்னோமோரெட்ஸ் மற்றும் கோலோஸ் அணிகள் மோத இருந்தன.</p><p> இந்த தாக்குதலை அடுத்து இந்த போட்டி ஒத்திவைக்கப்படுமா? அல்லது வேறு இடத்திற்கு மாற்றப்படுமா? அல்லது ரத்து செய்யப்படுமா? என்று இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் இல்லை.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-07T23:01:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரஷ்யா மீது புதிய பொருளாதாரத் தடை! அமெரிக்க செனட் சபை ஒப்புதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/us-senate-passes-russia-sanctions-bill-1786141844"></link>
            <id>https://ibctamil.com/article/us-senate-passes-russia-sanctions-bill-1786141844</id>
            <summary type="text">
ரஷ்யா மீது புதிய பொருளாதாரத் தடைகளை விதிக்கும் சட்டமூலத்திற்கு அமெரிக்க செனட் சபை ஒப்புதல் அளித்து, அதனைப் பிரதிநிதிகள் சபையின் பரிசீலனைக்கு அனுப்பி...</summary>
            <content type="html"><![CDATA[<p>
ரஷ்யா மீது புதிய பொருளாதாரத் தடைகளை விதிக்கும் சட்டமூலத்திற்கு அமெரிக்க செனட் சபை ஒப்புதல் அளித்து, அதனைப் பிரதிநிதிகள் சபையின் பரிசீலனைக்கு அனுப்பி வைத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
</p><p>
மறைந்த செனட்டர் லிண்ட்சே ஓ. கிரஹாமின் பெயரிலான ரஷ்யா மீது தடை விதிக்கும் சட்டமூலம் 2026 (H.R. 5334), செனட் சபையில் 86-11 என்ற பெரும்பான்மை வாக்குகள் வித்தியாசத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
இதற்கு எதிராக 10 ஜனநாயகக் கட்சி செனட்டர்களும், குடியரசுக் கட்சியைச் சேர்ந்த ராண்ட் போல் என மொத்தம் 11 செனட்டர்கள் வாக்களித்துள்ளதுடன், மூன்று குடியரசுக் கட்சி செனட்டர்கள் இந்த வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை என்றும் தெரியவருகிறது.</p><p></p><h2>கிரஹாமின் சட்டமூலம் </h2><p>
</p><p>
கடந்த மாதம் காலமான செனட்டர் கிரஹாமின் முதன்மையான சட்ட ஆக்க முன்னுரிமைகளில் ஒன்றாக இந்த சட்டமூலம் இருந்ததாக கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ae76184c-3f40-4555-86ac-bfefdf994dc7/26-6a76633514a19.webp' /></p><p>
அவரது இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக அமெரிக்கா சென்றிருந்த உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, பல அமெரிக்க செனட்டர்களையும் சந்தித்துப் பேசியிருந்தார்.
</p><p>
இந்தச் சட்டமூலம் முழுமையாகச் சட்டமாக்கப்படும் பட்சத்தில், ரஷ்யா மற்றும் உக்ரைன் போருக்கு ஆதரவளிக்கும் நபர்கள் மீது முதன்மை மற்றும் இரண்டாம் நிலைத் தடைகள் விதிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.</p><h2>ரஷ்யாவுக்கு எதிராக வரி</h2><p>
</p><p>
இந்தத் தடைகள் ரஷ்ய அதிகாரிகள், தொழிலதிபர்கள், அவர்களது குடும்ப உறுப்பினர்கள், வெளிநாட்டவர்கள், மற்றும் ரஷ்ய வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களைக் இலக்கு வைக்கும் எனவும் குறிப்பிடப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d3be2a64-ae50-4a8a-9819-03d49ba1746b/26-6a766335c5a77.webp' /></p><p>மேலும், ரஷ்யாவிடமிருந்து அதிகளவில் கச்சா எண்ணெய் அல்லது எரிவாயுவைக் கொள்முதல் செய்யும் நாடுகளின் இறக்குமதிப் பொருட்கள் மீது இலக்கு வைக்கப்பட்ட வரிகளை விதிக்க இச்சட்டம் அமெரிக்க ஜனாதிபதிக்கான அதிகாரத்தை வழங்கும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-07T22:59:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[இத்தாலி - ஸ்பெயின் உறவில் விரிசல்: இத்தாலிய குடிமக்களுக்கு புதிய எல்லை கட்டுப்பாடுகள் அமுல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/spain-implement-new-border-controls-for-italy-1786142244"></link>
            <id>https://news.lankasri.com/article/spain-implement-new-border-controls-for-italy-1786142244</id>
            <summary type="text">இத்தாலி மக்களுக்கு தற்காலிக எல்லை கட்டுப்பாடுகளை ஸ்பெயின் அரசு&amp;nbsp; அறிவித்துள்ளது. இத்தாலி - ஸ்பெயின் உறவில் விரிசல்சியூட்டா விவகாரம் இத்தாலி - ஸ்பெ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இத்தாலி மக்களுக்கு தற்காலிக எல்லை கட்டுப்பாடுகளை ஸ்பெயின் அரசு&nbsp; அறிவித்துள்ளது.</p><h2> இத்தாலி - ஸ்பெயின் உறவில் விரிசல்</h2><p>சியூட்டா விவகாரம் இத்தாலி - ஸ்பெயின் இடையே இராஜதந்திர விரிசலை ஏற்படுத்திய நிலையில், இத்தாலிய மக்களுக்கு தற்காலிக எல்லை கட்டுப்பாடுகளை ஸ்பெயின் அரசு விதித்துள்ளது.</p><p> இந்த எல்லை கட்டுப்பாடானது ஆகஸ்ட் 8ம் திகதி நள்ளிரவு முதல் செப்டம்பர் 7ம் திகதி நள்ளிரவு வரை அமுலில் இருக்கும் என்று அந்நாட்டு உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0ad578da-f970-4828-bb4d-2be698cbe987/26-6a765e262d631.webp' /></p><p> &nbsp;ஸ்பெயினின் 2 நாட்கள் கெடுவை இத்தாலி திட்டவட்டமாக மறுத்ததை அடுத்து ஸ்பெயினின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.</p><p> மேலும் இது இரு நாடுகளுக்கும் இடையே இராஜதந்திர அளவில் பதற்றம் ஏற்பட்டுள்ளதை உறுதிப்படுத்தியுள்ளது.</p><p></p><h2> ஸ்பெயின் விடுத்த எச்சரிக்கை</h2><p>
&nbsp;கடந்த வாரம் ஸ்பெயின் எல்லை மாகாணமான சியூட்டாவிற்குள் மொராக்கோவில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் அத்துமீறி நுழைந்ததை அடுத்து ஸ்பெயினில் இருந்து வரும் பயணிகளுக்கு எல்லை சோதனைகளை அமல்படுத்தி இத்தாலிய பிரதமர் ஜார்ஜியா மெலோனி உத்தரவிட்டு இருந்தார்.</p><p> இந்த நடவடிக்கை ஸ்பெயின் மக்களுக்கு எதிரானது என்று ஸ்பெயின் அரசு கண்டித்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/95a338b9-e9e1-4e74-8024-e7e6c895ba07/26-6a765e26de7b9.webp' /></p><p> அத்துடன் இத்தாலி தன்னுடைய புதிய எல்லை கட்டுப்பாடுகளை உடனடியாக நீக்காவிட்டால், இத்தாலிய பயணிகளுக்கு எதிராக அதே போன்ற சோதனை கட்டுப்பாடுகளை ஸ்பெயின் விதிக்கும் என்று அந்நாட்டு அரசு கடுமையாக எச்சரித்துள்ளது.
</p><p>
மேலும் அத்துடன் ஆகஸ்ட் 9ம் திகதிக்குள் இத்தாலிய அரசு இந்த நடவடிக்கையை கைவிட வேண்டும் என்றும் ஸ்பெயின் கெடு விதித்து இருந்தது ஆனால் அதனை இத்தாலி திட்டவட்டமாக மறுத்துவிட்டது.</p><p> இதனை தொடர்ந்தே ஸ்பெயின் நாட்டின் புதிய&nbsp; தற்காலிக எல்லைக் கட்டுப்பாட்டு அறிவிப்பு வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-07T22:55:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[குறையாத மவுசு.. நஸ்ரியாவின் கியூட் புகைப்படங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/nazriya-cute-photos-with-camera-1786142879"></link>
            <id>https://viduppu.com/article/nazriya-cute-photos-with-camera-1786142879</id>
            <summary type="text">நடிகை நஸ்ரியாவுக்கு தற்போது 31 வயது ஆகிறது. கெரியரில் முக்கிய நேரத்தில் அவர் நடிகர் பஹத் பாசிலை திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்டார். 

பல வரு...</summary>
            <content type="html"><![CDATA[<p>நடிகை நஸ்ரியாவுக்கு தற்போது 31 வயது ஆகிறது. கெரியரில் முக்கிய நேரத்தில் அவர் நடிகர் பஹத் பாசிலை திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்டார். </p><p>

பல வருட இடைவெளிக்கு பிறகு தற்போது அவர் மீண்டும் படங்கள் நடித்து வருகிறார்.
</p><p>
நஸ்ரியா தற்போது படங்கள் நடிப்பது குறைவு என்றாலும் அவரது பாப்புலாரிட்டி குறையவே இல்லை. அவர் இன்ஸ்டாவில் வெளியிடும் போட்டோக்களுக்கு லட்சக்கணக்கில் லைக்குகள் குவிகிறது.
</p><p>
அவருக்கு இன்ஸ்டாவில் 8.4 மில்லியன் ரசிகர்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.&nbsp;அவரது லேட்டஸ்ட் புகைப்படங்களை பாருங்க.

</p>]]></content>
            <updated>2026-08-07T22:48:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[நஸ்ரியாவின் கியூட் புகைப்படங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/nazriya-cute-latest-photos-1786142788"></link>
            <id>https://cineulagam.com/article/nazriya-cute-latest-photos-1786142788</id>
            <summary type="text">நடிகை நஸ்ரியா தற்போது படங்கள் நடிப்பது குறைவு தான் என்றாலும் அவருக்கு இருக்கும் ரசிகர்கள் கூட்டம் அப்படியே தான் இருக்கிறது. இன்ஸ்டாவில் மட்டும் அவருக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நடிகை நஸ்ரியா தற்போது படங்கள் நடிப்பது குறைவு தான் என்றாலும் அவருக்கு இருக்கும் ரசிகர்கள் கூட்டம் அப்படியே தான் இருக்கிறது. இன்ஸ்டாவில் மட்டும் அவருக்கு 84 லட்சம் ரசிகர்கள் இருக்கிறார்கள்.</p><p>தற்போது கையில் கேமரா உடன் நஸ்ரியா கியூட் ஆக போஸ் கொடுத்த லேட்டஸ்ட் ஸ்டில்களை வெளியிட்டு இருக்கிறார்.</p>]]></content>
            <updated>2026-08-07T22:46:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாட்டில் பூஜா ஹெக்டே.. அழகிய புகைப்படங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/pooja-hegde-in-budapest-see-photos-1786142611"></link>
            <id>https://cineulagam.com/article/pooja-hegde-in-budapest-see-photos-1786142611</id>
            <summary type="text">வெளிநாட்டில் பூஜா ஹெக்டே.. அழகிய புகைப்படங்கள்&amp;nbsp;</summary>
            <content type="html"><![CDATA[<p>வெளிநாட்டில் பூஜா ஹெக்டே.. அழகிய புகைப்படங்கள்&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-07T22:43:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[வேற லெவல் கவர்ச்சி உடையில் நடிகை ராகுல் ப்ரீத்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/rakul-preet-sizzling-glam-photos-1786142481"></link>
            <id>https://cineulagam.com/article/rakul-preet-sizzling-glam-photos-1786142481</id>
            <summary type="text">நடிகை ராகுல் ப்ரீத் தமிழ், தெலுங்கு சினிமாவை தாண்டி ஹிந்தியிலும் நடித்து வருகிறார்....</summary>
            <content type="html"><![CDATA[<p>நடிகை ராகுல் ப்ரீத் தமிழ், தெலுங்கு சினிமாவை தாண்டி ஹிந்தியிலும் நடித்து வருகிறார்.</p>]]></content>
            <updated>2026-08-07T22:41:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஸ்காட்லாந்தில் கொடூர பாலியல் குற்றவாளி தப்பியோட்டம்: தேடுதல் வேட்டையில் காவல்துறையினர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/serious-offender-hunt-underway-in-scotland-1786129909"></link>
            <id>https://news.lankasri.com/article/serious-offender-hunt-underway-in-scotland-1786129909</id>
            <summary type="text">ஸ்காட்லாந்து கொடூர குற்றவாளி தப்பியோடியதை அடுத்து அவரை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டை தொடங்கியுள்ளது. தப்பியோடிய கொடூர குற்றவாளிசிறுவர்கள் மீதான பாலியல்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஸ்காட்லாந்து கொடூர குற்றவாளி தப்பியோடியதை அடுத்து அவரை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டை தொடங்கியுள்ளது.</p><h2> தப்பியோடிய கொடூர குற்றவாளி</h2><p>சிறுவர்கள் மீதான பாலியல் துஷ்பிரயோக குற்ற வழக்கில் தண்டனை பெற்றவரும், மனநல காப்பகத்தில் பல ஆண்டுகளாக அடைக்கப்பட்டவருமான கிளிஃபோர்ட் லியான்ஸ்(Clifford Lyons) பாதுகாப்பு அதிகாரிகளிடம் இருந்து தப்பியோடியுள்ளார்.</p><p> பெர்த் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள மருத்துவமனைக்கு பாதுகாப்புகளுடன் அழைத்து செய்யப்பட்ட கிளிஃபோர்ட் லியான்ஸ் யாரும் எதிர்பாராத வகையில் பாதுகாப்பாளர்களின் கண்ணில் படாமல் தப்பியோடியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8bef75d5-ce32-4669-817f-c10997cf6947/26-6a762df6e7b49.webp' /></p><p>கிளிஃபோர்ட் லியான்ஸ் என்ற இவர் கிளிஃபோர்ட் டொப்பி(Clifford Dobbie) என்றும் அழைக்கப்படுகிறார். </p><p>கிளிஃபோர்ட் லியான்ஸ் தப்பியோடியதை அடுத்து அப்பகுதி மிகுந்த பரபரப்புடன் காணப்பட்டது.</p><p> இதையடுத்து, அவரை பிடிக்க தேடுதல் வேட்டை ஒன்றை காவல்துறை முன்னெடுத்து வருகிறது. அதிகாரிகள் பொதுமக்களுக்கு அவசர அறிவிப்பு ஒன்றையும் வெளியிட்டுள்ளனர்.</p><p> அதில், கிளிஃபோர்ட் லியான்ஸை பொதுமக்கள் யாரும் பார்த்தால் அவரின் அருகில் செல்ல வேண்டாம் என்றும் உடனடியாக ஸ்காட்லாந்து காவல் துறையினருக்கு தகவல் அளிக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர்.</p><p> &nbsp;காஸ்டேர்ஸ் மாநில மருத்துவமனை மற்றும் கிளாஸ்கோ ரோவன் பேங்க் கிளினிக் ஆகியவற்றில் உள்ள உயர் பாதுகாப்பு மனநல மையங்களில் கிளிஃபோர்ட் லியான்ஸ் கடந்த பல ஆண்டுகளாக அடைத்து வைக்கப்பட்டிருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/75769faf-39de-42d2-a59e-dbbe960620cb/26-6a762df79a827.webp' /></p><p> 1990ம் ஆண்டு 12 வயது சிறுவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்து இந்த வழக்கில் ஜாமீனில் வெளியே இருந்த போது 10 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார்.</p><p>இதில் அவரது குற்றம் நிரூபிக்கப்பட்டதை அடுத்து&nbsp; குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டார்.</p><p></p><h2> கிளிஃபோர்ட் லியான்ஸ் அடையாளங்கள்</h2><p>கிளிஃபோர்ட் லியான்ஸ் 5 அடி 3 அங்குலம் உயரம் கொண்டவர் என்றும் வழுக்கைத் தலை, நீல நிறக் கண்கள் கொண்டவர்.</p><p> வலது கையில் இரண்டு நீல நிற புலிகள் போன்ற கண்கள் மற்றும் இடது கையில் ரேஞ்சர்ஸ் கால்பந்து அணியின் சின்னம் ஆகியவை பச்சை குத்தப்பட்டு(Tattoos) இருக்கும்.</p><p> மேலும், நீல நிற கிழிந்த ஜீன்ஸ் பேண்ட். நீல நிற கோல்ஃப் சட்டை அத்துடன் லேசான நீல நிற ஸ்வெட்டர், கருப்பு நிற தொப்பி ஆகியவற்றை அணிந்து இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-07T22:37:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிளிநொச்சியில் சட்டவிரோதமாக வெட்டப்பட்ட மரங்கள் - பொதுமக்கள் முன்வைத்த குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/illegally-cut-trees-allegations-made-by-the-public-1786132734"></link>
            <id>https://tamilwin.com/article/illegally-cut-trees-allegations-made-by-the-public-1786132734</id>
            <summary type="text">கிளிநொச்சி - கரைச்சி பகுதியில் அரச
காணியில் உள்ள பெறுமதியான தேக்கு மரங்கள் அனுமதியின்றி
வெட்டப்பட்ட சம்பவத்தை மறைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளத...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிளிநொச்சி - கரைச்சி பகுதியில் அரச
காணியில் உள்ள பெறுமதியான தேக்கு மரங்கள் அனுமதியின்றி
வெட்டப்பட்ட சம்பவத்தை மறைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொதுமக்களால்
குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
</p><p>
இந்தச்
சம்பவம் சுமார் மூன்று வாரங்களுக்கு முன்னர் இடம்பெற்றுள்ளதாக
தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><h2>திருடப்பட்ட தேக்கு மரங்கள்</h2><p> </p><p>நீண்டகாலமாக தென்னிந்திய திருச்சபையின் பயன்பாட்டில்
இருந்து வந்ததாக கூறப்படும் அந்தக் காணியில் சுமார் இரண்டு இலட்சம்
ரூபாய்க்கும் அதிக பெறுமதியுடைய மூன்று தேக்கு மரங்கள் அடியோடு
வெட்டப்பட்டுள்ளதுடன், சம்பவத்தின் தடயங்களை அழிக்கவும் முயற்சிகள்
மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
</p><p>
இந்த விடயம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார், கரைச்சி பிரதேச செயலாளர், கிராம
உத்தியோகத்தர் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறைப்பாடுகள்
செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9e81f919-6bc4-4254-8603-0599a193ebb7/26-6a763bb78f361.webp' /></p><p>மேலும், தென்னிந்திய திருச்சபையின் பேராயரின் அறிவுறுத்தலின் பேரில் குறித்த
மரங்கள் வெட்டப்பட்டு, அவற்றை விற்பனை செய்வதற்காக தரகர்களுடன்
பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.</p><p>அதேவேளை ஏழை மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக அரச சார்பற்ற நிறுவனமொன்றின் உதவியுடன் முன்னெடுக்கப்பட்ட திட்டத்திற்காக பயன்படுத்தப்பட வேண்டிய மரங்கள், விற்பனை செய்யவதற்கு முயற்சிக்கப்பட்டதாகவும் குற்றம் சுமத்தப்படுகிறது.</p><p></p><h2>விசாரணை முன்னெடுப்பு</h2><p>

இந்தச் சம்பவம் தொடர்பில் திருச்சபையுடன் தொடர்புடைய ஒருவரிடம் வினவியபோது,
மரங்கள் வெட்டப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளதாக உறுதிப்படுத்திய அவர், இது
தொடர்பில் திருச்சபையின் செயற்குழு உறுப்பினர் ஒருவரால் பொலிஸ் நிலையத்தில்
முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு
வருவதாகவும் தெரிவித்துள்ளார்.</p><p>

இதனிடையே, குறித்த திருச்சபையின் நிர்வாகம் மற்றும் நிதிப் பயன்பாடு
தொடர்பிலும் உறுப்பினர்கள் மத்தியில் பல்வேறு விமர்சனங்கள் நிலவி வருகின்றன.

அண்மையில், திருச்சபை மக்களின் காணிக்கை நிதியில் சொகுசு வாகனம் ஒன்று
கொள்வனவு செய்யப்பட்டதாகவும், அதற்கான நிதி உரிய நிதிக்குழுவின் அனுமதியின்றி
பயன்படுத்தப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/265ed449-b292-4c22-aee6-3671180c2344/26-6a763bb869201.webp' /></p><p>
</p><p>
மேற்படி குற்றச்சாட்டுகள் தொடர்பில் தென்னிந்திய திருச்சபையின் பேராயரின்
பதிலைப் பெற முயற்சிக்கப்பட்ட போதிலும், அவரைத் தொடர்புகொள்ள முடியவில்லை.
இதேவேளை, இந்த விவகாரத்தை பெரிதுபடுத்தாமல் கைவிடுமாறு சில தரப்பினரால்
பொலிஸாருக்கு அழுத்தம் வழங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
</p><p>
இந்த விவகாரம் தொடர்பில் முழுமையான, சுயாதீனமான மற்றும் வெளிப்படையான விசாரணைகள்
நடத்தப்பட்டு, உண்மைகள் வெளிக்கொணரப்பட வேண்டும் என்றும், சட்டவிரோதம்
இடம்பெற்றிருந்தால் அதில் தொடர்புடையவர்கள் மீது சட்ட
நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் பிரதேச மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-07T22:31:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ashik</name>
            </author>
            <title type="text"><![CDATA[மன்னாரில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு! பொலிஸார் தீவிர விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/body-of-a-man-recovered-from-a-scrub-jungle-area-1786139081"></link>
            <id>https://tamilwin.com/article/body-of-a-man-recovered-from-a-scrub-jungle-area-1786139081</id>
            <summary type="text">மன்னார் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பேசாலை பொலிஸ் பிரிவின் பேசாலை 8ஆம் வட்டாரம் பகுதியில் உள்ள பற்றைக்காட்டில் இருந்து நேற்று(07.08.2026) மதியம் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>மன்னார் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பேசாலை பொலிஸ் பிரிவின் பேசாலை 8ஆம் வட்டாரம் பகுதியில் உள்ள பற்றைக்காட்டில் இருந்து நேற்று(07.08.2026) மதியம் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.</p><p>

குறித்த பகுதியில் சடலம் கிடப்பதை அவதானித்த அப்பகுதி மக்கள், கிராம சேவையாளர் ஊடாக உடனடியாக பேசாலை பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.</p><p></p><h2>சடலம் மீட்பு</h2><p> தகவலையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் சடலத்தை மீட்டு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/16f26d41-5981-4fec-8831-a0f618da970c/26-6a76556334888.webp' /></p><p>

விசாரணைகளின் போது, உயிரிழந்தவர் பேசாலை 8ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த லோரன்ஸ் மோரிஸ் (41) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.</p><p>

உயிரிழந்தவர் இரண்டு பிள்ளைகளின் தந்தை என்பதுடன்,கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்ததாகவும், அவரது வீடு சடலம் மீட்கப்பட்ட இடத்திலிருந்து சிறிது தொலைவில் அமைந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.</p><p></p><h2>&nbsp;தீவிர விசாரணை</h2><p>

சம்பவ இடத்திற்கு வருகை தந்த குற்றத்தடுப்பு மற்றும் தடயவியல் பொலிஸாரும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/683fd824-28bd-4036-86ad-d7da8bc86bd5/26-6a765564188f8.webp' /></p><p>

மேலும், உயிரிழந்தவரின் கைப்பேசி நேற்று வியாழக்கிழமை (6) காலை 7.30 மணிக்குப் பின்னர் தொடர்புகொள்ள முடியவில்லை என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
</p><p>
இந்த மரணம் தொடர்பாக பேசாலை பொலிஸார் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-07T22:00:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாளை தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை ; பரீட்சைகள் திணைக்களம் முக்கிய அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/grade-5-scholarship-exam-tomorrow-1786139670"></link>
            <id>https://jvpnews.com/article/grade-5-scholarship-exam-tomorrow-1786139670</id>
            <summary type="text">2026 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை நாளை நடைபெறவுள்ளது.
நாடளாவிய ரீதியில் அமைந்துள்ள 2,723 பரீட்சை நிலையங்களில் புலமைப்பரிசில் பரீட்சை ...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை நாளை நடைபெறவுள்ளது.</p><p>
</p><p></p><p>நாடளாவிய ரீதியில் அமைந்துள்ள 2,723 பரீட்சை நிலையங்களில் புலமைப்பரிசில் பரீட்சை நடைபெறவுள்ளது

இதில் மொத்தம் 294,089 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளதாகப் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4312f763-aa01-416f-8c9e-7a42c786edfb/26-6a765418cddd5.webp' /></p><p>

இதேவேளை, 2026 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான அனைத்து மேலதிக வகுப்புகள், பாடநெறி சார்ந்த விரிவுரைகள், கருத்தரங்குகள் மற்றும் பயிலரங்களுக்கான தடை நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது.
</p><p>
இந்த தடையானது பரீட்சை நிறைவடையும் வரை தொடர்ந்து அமுலில் இருக்கும் எனப் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-07T21:54:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[சீனா உடனான நட்புறவில் விரிசல்! முக்கிய தூதரகத்தை மூடியது இஸ்ரேல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/israel-closes-its-embassy-in-china-1786137496"></link>
            <id>https://ibctamil.com/article/israel-closes-its-embassy-in-china-1786137496</id>
            <summary type="text">சீனாவுடனான ராஜதந்திர உறவுகளில் விரிசல் அதிகரித்து வரும் நிலையில், அந்நாட்டின் முக்கிய நகரொன்றில் இயங்கிவந்த தனது துணைத் தூதரகத்தை இஸ்ரேல் மூடியுள்ளதாக...</summary>
            <content type="html"><![CDATA[<p>சீனாவுடனான ராஜதந்திர உறவுகளில் விரிசல் அதிகரித்து வரும் நிலையில், அந்நாட்டின் முக்கிய நகரொன்றில் இயங்கிவந்த தனது துணைத் தூதரகத்தை இஸ்ரேல் மூடியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
</p><p>
ஹாங்காங் செய்தி ஊடகங்கள் வெளியிட்ட செய்தியின்படி, சீனாவிலுள்ள சிச்சுவான் மாகாணத்தின் செங்டு நகரத்தில் அமைந்திருந்த இஸ்ரேலிய துணைத் தூதரகமே இவ்வாறு செயல்பாடுகளை நிறுத்திக்கொண்டுள்ளது.

அண்மைக்காலமாக சீனாவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான பரஸ்பர உறவில் கசப்புணர்வு நிலவி வருகிறது.</p><p> குறிப்பாக, ஈரான் மற்றும் அரபு நாடுகளுடனான தனது உறவை வலுப்படுத்த சீனா முன்னெடுக்கும் முயற்சிகளே இஸ்ரேலின் இந்த தீர்மானத்துக்கு முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது.</p><p></p><h2>உறவு சீர்குலைந்தமைக்கு காரணம்</h2><p>
</p><p>
முன்னதாக, சீனாவிலுள்ள தனது தூதரகப் பிரிவு ஒன்றை மூடவுள்ளதாக இஸ்ரேலிய அரசு குறிப்பிட்டிருந்தபோதிலும், அதற்கான பின்னணி குறித்து எவ்வித தெளிவான விளக்கத்தையும் அளித்திருக்கவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/55e83607-2bb5-4f9b-9d21-9133ec27afea/26-6a764fa85ba43.webp' /></p><p> 

இதேவேளை, பெய்ஜிங்கிலுள்ள முதன்மைத் தூதரகம் தவிர்த்து ஷாங்காய், குவாங்சோ மற்றும் ஹாங்காங் ஆகிய இடங்களில் இஸ்ரேலின் ஏனைய துணைத் தூதரகங்கள் இன்னமும் இயங்கி வருகின்றன.
</p><p>
காஸா மோதலின் போது பாலஸ்தீன தரப்புக்கு சீனா ஆதரவு தெரிவித்தமையும், ஹமாஸ் நடத்திய தாக்குதல்களுக்கு சீனா உடனடியாகக் கண்டனம் தெரிவிக்கத் தவறியமையுமே இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு சீர்குலைந்தமைக்கு பிரதான காரணமாகும்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNE</a></b>L இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-07T21:39:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[சியூட்டா விவகாரம்: இத்தாலிக்கு கெடு விதித்த ஸ்பெயின்: பதிலடி நடவடிக்கை உறுதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/spain-italy-diplomatic-friction-over-ceuta-1786124101"></link>
            <id>https://news.lankasri.com/article/spain-italy-diplomatic-friction-over-ceuta-1786124101</id>
            <summary type="text">சியூட்டா தொடர்பான விவகாரத்தில் இத்தாலிக்கு ஸ்பெயின் அரசாங்கம் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது. சியூட்டா விவகாரம்
கடந்த வாரம் ஸ்பெயின் எல்லை மாகாணமா...</summary>
            <content type="html"><![CDATA[<p>சியூட்டா தொடர்பான விவகாரத்தில் இத்தாலிக்கு ஸ்பெயின் அரசாங்கம் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது.</p><h2> சியூட்டா விவகாரம்</h2><p>
கடந்த வாரம் ஸ்பெயின் எல்லை மாகாணமான சியூட்டாவிற்குள் மொராக்கோவில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் அத்துமீறி நுழைந்தனர்.</p><p> இது தொடர்பான காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலானதை தொடர்ந்து ஐரோப்பிய நாடுகளிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/53dfef55-7c2b-4b9a-ad4e-ffe074bc40b4/26-6a761746ab023.webp' /></p><p> இதையடுத்து ஸ்பெயினில் இருந்து வரும் பயணிகளுக்கு எல்லை சோதனைகளை அமல்படுத்தி இத்தாலிய பிரதமர் ஜார்ஜியா மெலோனி உத்தரவிட்டு இருந்தார்..</p><p> இந்த விவகாரம் ஸ்பெயின் மற்றும் இத்தாலி இடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.</p><p> ஸ்பெயினில் இருந்து வரும் மக்களை சோதனைக்கு உட்படுத்தப்படும் என்ற இத்தாலியின் முடிவு கண்டிக்கத்தக்கது என்று ஸ்பெயின் நேரடியாக குற்றஞ்சாட்டியது.</p><p> அத்துடன் இந்த நடவடிக்கை தேவையற்றது, மற்றும் ஐரோப்பிய யூனியனின் நலனுக்கு எதிரானது மற்றும் ஸ்பெயின் மக்களுக்கு எதிரானது என்று ஸ்பெயின் அரசு கண்டித்தது.</p><p></p><h2> இத்தாலிக்கு கெடு விதித்த ஸ்பெயின்</h2><p>
இந்நிலையில் இத்தாலி தன்னுடைய புதிய எல்லை கட்டுப்பாடுகளை உடனடியாக நீக்காவிட்டால், இத்தாலிய பயணிகளுக்கு எதிராக அதே போன்ற சோதனை கட்டுப்பாடுகளை ஸ்பெயின் விதிக்கும் என்று அந்நாட்டு அரசு கடுமையாக எச்சரித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5a27ffe9-b16d-4a29-8961-7ffe975cc779/26-6a7617475ef7f.webp' /></p><p> அத்துடன் ஆகஸ்ட் 9ம் திகதிக்குள் இத்தாலிய அரசு இந்த நடவடிக்கையை கைவிட வேண்டும் என்றும் ஸ்பெயின் கெடு விதித்துள்ளது.</p><p> இத்தாலி அரசு இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், ஸ்பெயின் நாட்டு மக்களின் நலன்களையும், கவுரவத்தையும் பாதுகாக்க அதற்கான தக்க நடவடிக்கையை ஸ்பெயின் அரசு முன்னெடுக்கும் என்று ஸ்பெயின் அரசு தன்னுடைய அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவித்துள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-07T21:36:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானியாவில் ஒரு வயது குழந்தை உயிரிழப்பு: பெற்றோர்கள் மீது குற்ற வழக்கு பதிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/parents-charged-over-1-year-old-son-in-st-helens-1786138481"></link>
            <id>https://news.lankasri.com/article/parents-charged-over-1-year-old-son-in-st-helens-1786138481</id>
            <summary type="text">பிரித்தானியாவில் ஒரு வயது குழந்தை உயிரிழந்த சம்பவத்தில் பெற்றோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பிரித்தானியாவின் செயின்ட் ஹெலன்ஸ் பகுதியை சேர்ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரித்தானியாவில் ஒரு வயது குழந்தை உயிரிழந்த சம்பவத்தில் பெற்றோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.</p><p> பிரித்தானியாவின் செயின்ட் ஹெலன்ஸ் பகுதியை சேர்ந்த ஒரு வயது குழந்தை மா எரோ ஜான்சன்(Maero Johnson) உயிரிழந்த சம்பவத்தில், குழந்தையின் பெற்றோர்கள் கிரிமினல் வழக்குகளை எதிர்கொள்கின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/71409ebb-2052-42bc-87cb-d60f8e0c5d07/26-6a764f7357f06.webp' /></p><p> குழந்தை உயிரிழந்த சம்பவத்தில் கிரிமினல் வழக்கை எதிர்&nbsp; கொள்ளும் தாய் மற்றும் தந்தையின் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.</p><p>மெர்சிசைடு காவல்துறை வெளியிட்ட அறிக்கையில், கைலி ஸ்மித்(25) மற்றும் ஆடம் &nbsp;ஜான்சன்(26) ஆகிய இருவரும் குழந்தை மா எரோ ஜான்சன் உயிரிழந்ததற்கு காரணமானவர்கள் அல்லது அனுமதித்தவர்கள் என்று குற்றஞ்சாட்டியுள்ளது.</p><p> கடந்த 2023ம் ஆண்டு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்ததை அடுத்து பெற்றோர்கள் மீது இந்த குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0655f35f-302a-4886-86bd-262220c8f3f4/26-6a764f7408d8c.webp' /></p><p>குழந்தையின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், இந்த உயிரிழப்பு ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் கீட்டோனிக் ஹைப்போகிளிசீமியா இருப்பது உறுதி செய்யப்பட்டது.</p><p> இதையடுத்து பெற்றோர் மீது குழந்தையை பராமரிக்க தவறியது மற்றும் கஞ்சா போன்ற போதைப் பொருளை வைத்திருந்தல் ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.</p><p>ஆகஸ்ட் 13ம் திகதி இந்த வழக்கு லிவர்பூல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வரவுள்ள நிலையில் பெற்றோர்கள் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-07T21:35:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேட்டோ நாடுகளை புடின் குறிவைக்கலாம் – அமெரிக்க உளவுத்துறை அதிர்ச்சி எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/putin-could-strike-nato-allies-to-test-1786136185"></link>
            <id>https://tamilwin.com/article/putin-could-strike-nato-allies-to-test-1786136185</id>
            <summary type="text">&amp;nbsp;அமெரிக்காவின் புதிய உளவுத்துறை மதிப்பீட்டின்படி, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் அடுத்த சில ஆண்டுகளில் நேட்டோ (NATO) கூட்டணியின் ஒற்றுமையை சோதிக...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;அமெரிக்காவின் புதிய உளவுத்துறை மதிப்பீட்டின்படி, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் அடுத்த சில ஆண்டுகளில் நேட்டோ (NATO) கூட்டணியின் ஒற்றுமையை சோதிக்கும் நோக்கில் அதன் உறுப்பினர் நாடுகளில் ஒன்றின் மீது வரையறுக்கப்பட்ட தாக்குதலை நடத்தக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது.</p><p>

முன்னதாக, உக்ரைன் போரில் ரஷ்யா முழுமையாக ஈடுபட்டிருப்பதால் நேட்டோவுடன் நேரடி மோதலை புதின் தவிர்ப்பார் என அமெரிக்க அதிகாரிகள் கருதினர்.</p><p></p><h2>ரஷ்யாவின் நோக்கம்</h2><p> ஆனால் தற்போது அந்த மதிப்பீடு மாறியுள்ளது.


அமெரிக்க அதிகாரிகளின் கூற்றுப்படி, ரஷ்யாவின் நோக்கம் நிலப்பரப்பைக் கைப்பற்றுவது அல்ல; மாறாக, நேட்டோ கூட்டணியின் ஒற்றுமையிலும், அமெரிக்காவின் பாதுகாப்பு உறுதியிலும் பிளவை ஏற்படுத்துவதே முக்கிய நோக்கமாக இருக்கலாம்.</p><p>

அமெரிக்காவின் American Enterprise Institute-இன் மூத்த ஆய்வாளர் ஹெதர் கான்லி கூறுகையில்,</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c34c9763-6176-4e8a-9980-2c13a3033f89/26-6a764a0a3726f.webp' /></p><p>
"அப்படிப்பட்ட சூழ்நிலையில் அமெரிக்கா எப்படி பதிலளிக்கும் என்பதே மிகப்பெரிய கேள்வி. நேட்டோவின் நம்பகத்தன்மையை சவாலுக்கு உட்படுத்தி, அமெரிக்காவை அதன் கூட்டாளிகளிடமிருந்து பிரிப்பது ரஷ்யாவின் நீண்டகால இலக்காக இருந்து வருகிறது.</p><p>"




நேட்டோ நாடுகள் மீது சைபர் தாக்குதல்கள்
அடையாளம் தெரியாத ஆயுதக் குழுக்கள் மூலம் சிறிய எல்லைப் பகுதிகளை கைப்பற்றும் ரகசிய நடவடிக்கைகள்
நேட்டோவின் கிழக்கு எல்லையில் வரையறுக்கப்பட்ட இராணுவ ஊடுருவல்

இந்த வகை தாக்குதல்கள் 2026 இலையுதிர் காலம் முதல் 2029 வரை எந்த நேரத்திலும் நடைபெறக்கூடும் என மதிப்பிடப்பட்டுள்ளது.</p><p></p><h2>நேட்டோவின் பதில்&nbsp; எச்சரிக்கைகள்&nbsp;</h2><p>

Article 5 காரணமாக நேரடி போர் சாத்தியம் குறைவு

நேட்டோ ஒப்பந்தத்தின் Article 5-இன்படி, ஒரு உறுப்பினர் நாடு மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அது அனைத்து உறுப்பினர்களின் மீதான தாக்குதலாகக் கருதப்படும்.</p><p>

இதனால் நேரடி தரைப்படை தாக்குதல் நிகழும் வாய்ப்பு குறைவாக இருந்தாலும், சைபர் தாக்குதல் அல்லது மறைமுக (Hybrid) தாக்குதல்கள் சட்ட ரீதியாக சிக்கலான பகுதியாக இருப்பதால் அவை அதிகம் கவலை அளிக்கின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d9a031a9-d399-4a93-ac9f-995af39295ed/26-6a764a0adc4df.webp' /></p><p>
</p><p>
நேட்டோவின் பதில்

இந்த எச்சரிக்கைகள் குறித்து நேட்டோ செய்தித் தொடர்பாளர் கர்னல் மார்ட்டின் ஓ'டொனல் கூறியதாவது:

"எந்தவிதமான சூழ்நிலையையும் எதிர்கொள்ள நேட்டோ எப்போதும் தயாராக உள்ளது. </p><p>தேவையான நேரத்தில் தடுக்கவும், பாதுகாக்கவும் நாங்கள் முழுமையாக தயாராக இருக்கிறோம்."

இந்த உளவுத்துறை அறிக்கை வெளியாகும் நிலையில், உக்ரைனுக்கு தொடர்ந்து வழங்கப்பட்ட இராணுவ உதவி மற்றும் சமீபத்திய நடவடிக்கைகள் காரணமாக அமெரிக்காவின் சில முக்கிய ஏவுகணை கையிருப்புகள் குறைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p></p><h2>பற்றாக்குறையாக கூறப்படும் ஆயுதங்கள்</h2><p>

Precision Strike Missiles (PrSM)
ATACMS ஏவுகணைகள்
Stinger ஏவுகணைகள்
Patriot ஏவுகணை தடுப்பு அமைப்புகள்
SM-3
THAAD தடுப்பு அமைப்புகள்

ஆனால், அமெரிக்க பாதுகாப்புத் துறை (Pentagon) இந்த தகவல்களை மறுத்துள்ளது.

பென்டகன் செய்தித் தொடர்பாளர் ஷான் பார்னெல் கூறுகையில்,

"அமெரிக்க இராணுவத்திடம் தேவையான அனைத்து ஆயுதங்களும் போதுமான அளவில் உள்ளன. எங்கள் திறனை குறைத்து மதிப்பிடும் எந்த எதிரியும் அதன் விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9eda1b77-df78-4c8b-aee3-1c2e56f17545/26-6a764a0b8d658.webp' /></p><p>"

வாஷிங்டனில் அதிகரிக்கும் விவாதம்

இராணுவ நிபுணர்கள் கூறுவதாவது, தற்போது கையிருப்பு குறைந்துள்ளதாக கூறப்படும் இந்த ஏவுகணைகள், எதிர்காலத்தில் ரஷ்யாவுடன் மோதல் ஏற்பட்டால் மிகவும் அவசியமானவை.
</p><p>
மேலும், சீனாவுடனான சாத்தியமான மோதலையும் கருத்தில் கொண்டு, அமெரிக்காவின் ஆயுத கையிருப்பை பாதுகாப்பது குறித்து வாஷிங்டனில் தீவிர விவாதம் நடைபெற்று வருகிறது.</p>]]></content>
            <updated>2026-08-07T21:34:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Keethan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பெருந்தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சின் செயற்றிட்டங்கள் நம்பகத்தன்மை வாய்ந்தது - முல்லைத்தீவு அதிபர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/mullaitivu-chief-plantation-ministry-projects-1786130209"></link>
            <id>https://tamilwin.com/article/mullaitivu-chief-plantation-ministry-projects-1786130209</id>
            <summary type="text">தெங்கு உற்பத்தியாளர்களுக்கு பெருந்தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சின் முன்னெடுப்பு
நம்பிக்கையான எதிர்காலத்தினை ஏற்படுத்தியுள்ளது என முல்லைத்தீவு மாவட்ட
அர...</summary>
            <content type="html"><![CDATA[<p>தெங்கு உற்பத்தியாளர்களுக்கு பெருந்தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சின் முன்னெடுப்பு
நம்பிக்கையான எதிர்காலத்தினை ஏற்படுத்தியுள்ளது என முல்லைத்தீவு மாவட்ட
அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
</p><p>
நேற்று(07.08.2026) முல்லைத்தீவில் நடைபெற்ற தெங்கு உற்பத்தியாளர்களுக்கான மானியம் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>தென்னை உற்பத்தியாளர்கள்</h2><p>
</p><p>
அவர் மேலும் தெரிவிக்கையில், இன்று இந்த தென்னை உற்பத்தியாளர்கள் எதிர்நோக்குகின்ற பல பிரச்சினைகள் உள்ளன.

மக்களின் காணிகள் வனவளத்திணைக்களத்திடம் இருந்து விடுவிக்கும் காலம்
கிட்டியுள்ளது.</p><p>

குரங்கு, யானைகளால் ஏற்படும் தாக்கம் தெங்கு செய்கை விவசாயிகளை பாதிக்கின்றது.
காலநிலை மாற்றத்தினால் ஏற்பட்ட நோய்தாக்கம், வெள்ளை ஈ தாக்கம் என்பன தெங்கு
விவசாயிகளையும் தாக்கியுள்ளன.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ea9cbcbf-bfd0-43d9-a157-df77421a6661/26-6a76301deb88c.webp' /></p><p>இவ்வாறான தாக்கங்கள் இருந்தாலும் இன்று பெருந்தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சின்
முன்னெடுப்பு நம்பிக்கையான எதிர்காலத்தினை காட்டுகின்றது.

அரசாங்கம் மக்கள் மீதுகொண்டுள்ள அக்கறை ஈடுபாட்டிற்கு முன்னுதாரணமாக இந்த
நிகழ்வு அமைந்துள்ளது.
</p><p>

மாவட்டத்தில் சி.டி.ஓ மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான பற்றாக்குறை
காணப்படுகின்றது.

 தற்போதைய அரசாங்கம் ஆளணியினரை மீள சேர்க்கின்ற நடவடிக்கை
எடுத்துக்கொண்டிருக்கின்றார்கள்.</p><p> எதிர்காலத்தில் இந்த வெற்றிடங்கள்
நிரப்பப்படும் என்ற நம்பிகை இருக்கின்றது.


இந்த மக்கள் கடின உழைப்பாளிகள்
சிறந்த முறையில் அவர்களின் உற்பத்திகளை மேற்கொண்டு வருகின்றார்கள்
அரசாங்கத்தினால் செய்கின்ற இந்த உதவிகளை சிறந்த முறையில் நீங்கள் பயன்படுத்தி
எதிர்காலத்தினை சுவீட்சமாக மாற்றி அமைக்க வேண்டும் என 
குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-07T21:18:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாதுகாப்பு அளிக்கப்பட்டால் விசாரணையை எதிர்கொள்ளத் தயார்: சாகிப் அல் ஹசன் அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/shakib-ready-for-trial-if-security-assured-1786125650"></link>
            <id>https://tamilwin.com/article/shakib-ready-for-trial-if-security-assured-1786125650</id>
            <summary type="text">தனது உயிருக்கு உத்தரவாதம் வழங்கப்பட்டால், பங்களாதேஷிற்கு திரும்பி நீதிமன்ற விசாரணைகளை எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் க...</summary>
            <content type="html"><![CDATA[<p>தனது உயிருக்கு உத்தரவாதம் வழங்கப்பட்டால், பங்களாதேஷிற்கு திரும்பி நீதிமன்ற விசாரணைகளை எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் கிரிக்கெட் வீரருமான சாகிப் அல் ஹசன் தெரிவித்துள்ளார். </p><p>2024 ஆகஸ்டில் நடைபெற்ற மக்கள் எழுச்சியைத் தொடர்ந்து பிரதமர் ஷேக் ஹசீனாவின் ஆட்சி கவிழ்க்கப்பட்ட பின்னர், அவருக்கு எதிராக பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.&nbsp;</p><p></p><h2>வழக்கு நிலுவை</h2><p>
ஹசீனாவின் அவாமி லீக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த சாகிப் அல்
ஹசன், அதன்பின்னர் நாட்டில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள் காரணமாகக் கடந்த
இரண்டு வருடங்களாக அமெரிக்காவில் வசித்து வருகின்றார்.
</p><p>
அவர் மீது கொலை வழக்கும், ஊழல் தடுப்புப் பிரிவினரின் வழக்கும் நிலுவையில்
உள்ளன. இது குறித்து இலங்கையில் வைத்து சர்வதேச செய்திச் சேவையொன்றுக்குக்
கருத்துத் தெரிவித்துள்ள சாகிப், "நான் எந்தத் தவறும் செய்யவில்லை.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/baedbafb-779d-4da0-b0af-0e918b3ab3cd/26-6a761f7491d9a.webp' /></p><p>அரசாங்கம் எனது பாதுகாப்பை உறுதி செய்தால், நான் நாடு திரும்பி நீதிமன்ற
விசாரணையை எதிர்கொள்ளத் தயார்" எனத் தெரிவித்துள்ளார்.
</p><p>
மேலும், நாட்டின் தற்போதைய பிரதமர் தாரிக் ரஹ்மானுடன் பேச்சுவார்த்தை நடத்த விரும்புவதாகவும், சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு
பெறுவதற்கு முன்பாக தாய்நாட்டில் தனது விடைபெறும் போட்டியில் விளையாடவும்,
2027 ஒருநாள் உலகக் கிண்ணத் தொடரில் பங்கேற்கவும் விருப்பம் கொண்டுள்ளதாகவும்
சாகிப் அல் ஹசன் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-07T20:51:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரான் எவ்வித கட்டாயப்படுத்தலுக்கும் அடிபணியாது! பெசெஷ்கியன் அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/iran-will-not-bow-to-coercion-pezeshkian-1786134292"></link>
            <id>https://ibctamil.com/article/iran-will-not-bow-to-coercion-pezeshkian-1786134292</id>
            <summary type="text">
ஈரான் எவ்வித கட்டாயப்படுத்தலுக்கும் அடிபணியாது என அந்நாட்டின் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியன் அறிவித்துள்ளார்.

அத்தோடு, ஈரான் போரையோ அல்லது எல்லை விரி...</summary>
            <content type="html"><![CDATA[<p>
ஈரான் எவ்வித கட்டாயப்படுத்தலுக்கும் அடிபணியாது என அந்நாட்டின் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியன் அறிவித்துள்ளார்.
</p><p>
அத்தோடு, ஈரான் போரையோ அல்லது எல்லை விரிவாக்கத்தையோ விரும்பவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>
ஈரானின் ஐ.ஆர்.ஐ.பி அரச ஒளிபரப்புச் சேவை வெளியிட்ட அறிக்கையில், ஈரான் தனது தற்காப்புத் திறன்களையும் பாதுகாப்பையும் உறுதிசெய்வதற்காக மட்டுமே செயல்படுவதாக பெஷெஷ்கியன் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>ஈரானுக்கு எதிரான அழுத்தங்கள்</h2><p> 

ஈரானைக் குறிவைப்பதற்காக அமெரிக்கா வளைகுடா நாடுகளில் உள்ள இராணுவத் தளங்களைப் பயன்படுத்துவதாகவும், ஈரானுக்கும் அதன் பிராந்திய அண்டை நாடுகளுக்கும் இடையே பிளவை ஏற்படுத்த முயல்வதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/37da9224-d2b4-4c29-a238-8769c14ecea7/26-6a7644e3302ef.webp' /></p><p>
</p><p>
இருப்பினும், ஈரான் தனது அண்டை நாடுகளுடனான பல பிரச்சினைகளைத் தீர்த்துவிட்டதாகத் தெரிவித்த பெஷெஷ்கியன், ஈரானுக்கு எதிரான அழுத்தங்களும் அச்சுறுத்தல்களும் நிறுத்தப்பட்டால் பிராந்தியத்தில் பதற்றங்கள் நீடிப்பதற்கு எந்தவொரு காரணமும் இருக்காது என்று வலியுறுத்தியுள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-07T20:49:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை சிறை தகர்பின் பின்னணியில் பிரான்சில் தீட்டப்பட்ட சதி! திடுக்கிடும் இரகசியம் அம்பலம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-lanka-prisoners-riot-prison-attack-sri-lanka-1786127991"></link>
            <id>https://tamilwin.com/article/sri-lanka-prisoners-riot-prison-attack-sri-lanka-1786127991</id>
            <summary type="text">அண்மைக் காலங்களில் இலங்கையின் பல்வேறு சிறைச்சாலைகளில் (நீர்கொழும்பு, மகர, மேகசின், குருவிட்ட மற்றும் பல்லன்சேனை) இடம்பெற்று வரும் தொடர்ச்சியான கலவரங்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>அண்மைக் காலங்களில் இலங்கையின் பல்வேறு சிறைச்சாலைகளில் (நீர்கொழும்பு, மகர, மேகசின், குருவிட்ட மற்றும் பல்லன்சேனை) இடம்பெற்று வரும் தொடர்ச்சியான கலவரங்கள் மற்றும் சிறை உடைப்பு முயற்சிகள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.
</p><p>
சிறைச்சாலைகளில் நடக்கும் இந்தக் கலவரங்கள் தற்செயலானவை அல்ல; இவை வெளிநாட்டிலிருந்து, குறிப்பாக பிரான்சில் மறைந்திருக்கும் குடு சலிது (Kudu Salidu) என்பவரால் முன்னாள் ஜனாதிபதி ஒருவரின் உறவினருடன் இணைந்து திட்டமிடப்படுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p>

இலங்கையிலிருந்து தப்பியோடிய இவர், பிரான்சில் இருந்தபடியே இக்கலவரங்களை இயக்கி வருவதாகவும், சிறைச்சாலைகளில் உள்ளவர்களுக்குத் தேவையான நிதி உதவிகளை அவரது குடும்பத்தினருக்கு வழங்குவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
</p><p>
முன்னாள் ஜனாதிபதி மற்றும் பிற அரசியல் பிரமுகர்கள் மீது நிலுவையில் உள்ள வழக்குகளில் இருந்து கவனத்தைத் திசைதிருப்புவதே இந்தச் சூழ்ச்சிகளின் முக்கிய நோக்கமாகக் கருதப்படுகிறது.
</p><p>
 சிறைச்சாலைக்குள் அடைக்கப்பட்டுள்ள போதைப்பொருள் வர்த்தகர்கள் மற்றும் பாதாள உலகக் குழுவினர், அரசியல்வாதிகளின் தூண்டுதலின் பேரில் இந்தக் குழப்பங்களை ஏற்படுத்துகின்றனர்.
</p><p>
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால, இந்தச் சூழலைச் சீர்குலைவு முயற்சிகளாகக் குறிப்பிடுகிறார். </p><p>

 இந்தச் சூழலைக் கட்டுப்படுத்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் விசேட கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்படுகின்றன. 

இந்த விடயங்கள் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி...</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/YuCqi6-ulDM" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-07T20:44:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரான் பயன்படுத்திய நாணய பரிமாற்ற நிறுவனங்களுக்கு தடை விதித்த அமெரிக்கா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/us-to-cut-off-iran-backed-financial-support-1786132083"></link>
            <id>https://ibctamil.com/article/us-to-cut-off-iran-backed-financial-support-1786132083</id>
            <summary type="text">
தடைகளைத் தவிர்ப்பதற்கும், நூற்றுக்கணக்கான மில்லியன் டொலர்களை இரகசியமாகப் பரிமாற்றுவதற்கும் ஈரான் பயன்படுத்தியதாகக் கூறப்படும் நாணயப் பரிமாற்ற நிறுவன...</summary>
            <content type="html"><![CDATA[<p>
தடைகளைத் தவிர்ப்பதற்கும், நூற்றுக்கணக்கான மில்லியன் டொலர்களை இரகசியமாகப் பரிமாற்றுவதற்கும் ஈரான் பயன்படுத்தியதாகக் கூறப்படும் நாணயப் பரிமாற்ற நிறுவனங்கள் மற்றும் போலி நிறுவனங்களின் சட்டவிரோத வலையமைப்பைக் கலைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அமெரிக்க அரசாங்கம் அறிவித்துள்ளது.</p><p>

பிராந்திய ஸ்திரமின்மையை உருவாக்கவும், பயங்கரவாதத்தை ஆதரிக்கவும், இராணுவத் திறன்களை மேம்படுத்தவும் ஈரான் பயன்படுத்தும் நிதியாதாரங்களைத் துண்டிக்கும் நோக்கில், ட்ரம்ப் நிர்வாகத்தின் அதிகபட்ச அழுத்தக் கொள்கையின் கீழ் அமெரிக்க திறைசேரி இந்நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>

இதன் ஒரு பகுதியாக, ஈரானின் புரட்சிகர காவல் படை (IRGC) மற்றும் அரச அமைப்புகளுக்குப் பயனளிக்கும் வகையில் நிதியைச் சட்டவிரோதமாகப் பணமாக்கிய குற்றச்சாட்டில், துபாயைத் தளமாகக் கொண்டு இயங்கும் ஷெல்பிட் (Shelbit) கிரிப்டோகரன்சி பரிமாற்ற நிறுவனம் மற்றும் அதன் நிறுவனரான ஈரானிய வெளிநாட்டவர் சியாவாஷ் கைவன்பூர் மீது அமெரிக்கா தடை விதித்துள்ளது.</p><p></p><h2>அமெரிக்க திறைசேரியின் அறிவிப்பு&nbsp;</h2><p>மேலும், முன்னர் தடைசெய்யப்பட்ட ஈரானிய டிஜிட்டல் சொத்து பரிமாற்றகங்கள் சார்ந்த மில்லியன் கணக்கான டொலர் மதிப்பிலான பரிவர்த்தனைகளைக் கையாண்ட குற்றச்சாட்டில், ஈரானைத் தளமாகக் கொண்ட அபான் டெதர் (Aban Tether) என்ற டிஜிட்டல் சொத்து பரிமாற்ற நிறுவனம் மீதும் தடை விதிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d1a75373-0b4e-4cc9-b090-c33737c8f61b/26-6a763a92b1b95.webp' /></p><p><i>Image Credit:&nbsp;Americas Quarterly</i></p><p>
இவற்றுடன், ஈரானிய வங்கிகள் சட்டவிரோதமாகப் பணத்தைப் பரிமாற உதவிய துபாயைச் சேர்ந்த மேலும் பல நாணயப் பரிமாற்ற நிறுவனங்கள் மீதும் தடைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.</p><p>

ஈரானிய ஆட்சியைத் தொடர்ந்து இயங்க வைக்கும் இத்தகைய சட்டவிரோத நிதி வலையமைப்புகளை அமெரிக்க திறைசேரி தொடர்ந்து வேட்டையாடி அழிக்கும் என அமெரிக்க திறைசேரி செயலாளர் ஸ்காட் பெசென்ட் வலியுறுத்தியுள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-07T20:09:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறைச்சாலை கலவரங்களால் நடுங்கும் அரசியல்வாதிகள்! அடுத்தடுத்து காத்திருக்கும் காட்சிகள்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-lanka-prisons-attack-updates-naatu-nadappu-1786132857"></link>
            <id>https://tamilwin.com/article/sri-lanka-prisons-attack-updates-naatu-nadappu-1786132857</id>
            <summary type="text">இலங்கையிலுள்ள சிறைச்சாலைகளில் சமீபகாலமாக இடம்பெறும் கலவரங்கள் மற்றும் குழப்பங்கள் மக்கள் மத்தியில் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

நிலுவையில் உள்ள வழக...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையிலுள்ள சிறைச்சாலைகளில் சமீபகாலமாக இடம்பெறும் கலவரங்கள் மற்றும் குழப்பங்கள் மக்கள் மத்தியில் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.</p><p>

நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவது மற்றும் நீதிமன்றத்தின் கடுமையான தீர்ப்புகள் சிறைச்சாலைச் சூழலில் பதற்றத்தை உருவாக்கியுள்ளன.
</p><p>
ஒகஸ்ட் 2, 2026 அன்று அனைத்து சிறைச்சாலைகளிலும் உடனடிச் சோதனைகளை மேற்கொள்ள அரசாங்கம் உத்தரவிட்டது. 

மகர சிறைச்சாலையில் இடம்பெற்ற சம்பவத்திற்குப் பிறகு, சிறைச்சாலைகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
</p><p>
 இது கைதிகள் மற்றும் நிர்வாகத்திற்கு இடையே ஒருவித அழுத்தத்தை ஏற்படுத்தியிருக்கலாம்

 சிறைகளில் உள்ள கைதிகள் மற்றும் வெளியில் இருக்கும் குற்றப் பின்னணி கொண்டவர்களுக்கும் இடையே உள்ள தொடர்புகள், சட்ட விரோத பணப் பரிமாற்றங்கள் தொடர்பான விசாரணைகள் ஆகியவை சிறைச்சாலைகளில் அசாதாரணமான சூழலை உருவாக்கியுள்ளன.
</p><p>

இந்த விடயங்கள் தொடர்பில் பேசுகின்றது நாட்டு நடப்பு நிகழ்ச்சி...</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/gJYEZdz4PfI" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-07T20:06:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தியாவில் மாற்று எரிபொருள்- வாகன விற்பனை தீவிரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/alternative-fuel-vehicle-sales-surge-in-india-1786120282"></link>
            <id>https://tamilwin.com/article/alternative-fuel-vehicle-sales-surge-in-india-1786120282</id>
            <summary type="text">இந்தியாவில் 20% எத்தனோல் கலந்த E20 பெட்ரோல் அறிமுகமானதைத் தொடர்ந்து, வாகன உரிமையாளர்கள் மத்தியில் ஏற்பட்ட குழப்பம் காரணமாக மின்சார, ஹைபிரிட் மற்றும் ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியாவில் 20% எத்தனோல் கலந்த E20 பெட்ரோல் அறிமுகமானதைத் தொடர்ந்து, வாகன உரிமையாளர்கள் மத்தியில் ஏற்பட்ட குழப்பம் காரணமாக மின்சார, ஹைபிரிட் மற்றும் சி.என்.ஜி. வாகனங்களின் விற்பனை கணிசமாக உயர்ந்துள்ளது. </p><p>

இந்திய வாகன விற்பனையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் தரவுகளின்படி, கடந்த ஜூலை மாதத்தில் விற்பனையான மொத்த பயணிகள் வாகனங்களில் 40.59% மாற்று எரிபொருள் வாகனங்களாக பதிவாகியுள்ளன.&nbsp;</p><p></p><h2>E20 பெட்ரோல் அறிமுகம்</h2><p>
இது பெட்ரோல் வாகனங்களின் விற்பனைப் பங்கான 41.68 சதவீதத்திற்கு மிகவும்
நெருக்கமான அளவாகும்.

முந்தைய E10 பெட்ரோலுக்குப் பதிலாக E20 பெட்ரோல் அறிமுகம் செய்யப்பட்டுள்ள
நிலையில், பழைய ரக வாகனங்களின் எஞ்சின் செயற்பாடு மற்றும் எரிபொருள் சிக்கனம்
பாதிக்கப்படுவதாகப் பயனாளர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/31f854f0-6547-41e1-b5cc-bc58594c36ae/26-6a7618da5221f.webp' /></p><p>இதன் காரணமாகப் புதிய பெட்ரோல் வாகனங்களை வாங்குவதைத் தவிர்க்கும் நுகர்வோர்,
மாற்று எரிபொருள் வாகனங்களை நோக்கி நகர்ந்து வருகின்றனர்.
</p><p>
இருப்பினும், E20 பெட்ரோல் தொடர்பாகப் பரவும் தவறான தகவல்களே இந்த
அச்சத்திற்குக் காரணம் என்றும், இது தொடர்பில் வாகன உற்பத்தியாளர்களும்
விற்பனையாளர்களும் வாடிக்கையாளர்களுக்குத் தெளிவான விழிப்புணர்வை ஏற்படுத்த
வேண்டும் என்றும் வாகன விற்பனையாளர்கள் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-07T19:43:00+00:00</updated>
        </entry>
    </feed>
