<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-08-30T10:16:48+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[செவ்வாய்–புதன் உருவாக்கும் லாப திருஷ்டி யோகம்: செப்டம்பர் 01முதல் இந்த ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை உறுதி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/mercury-mars-forms-labha-drishti-yoga-who-get-luck-1788081388"></link>
            <id>https://manithan.com/article/mercury-mars-forms-labha-drishti-yoga-who-get-luck-1788081388</id>
            <summary type="text">ஆகஸ்ட் மாதம் முடிந்து செப்டம்பர் மாதம் தொடங்க உள்ளது. இந்த மாதத்தில் பல முக்கிய கிரக மாற்றங்கள் நடைபெறுவதால், ஜோதிட ரீதியாக செப்டம்பர் மாதம் முக்கியமா...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஆகஸ்ட் மாதம் முடிந்து செப்டம்பர் மாதம் தொடங்க உள்ளது. இந்த மாதத்தில் பல முக்கிய கிரக மாற்றங்கள் நடைபெறுவதால், ஜோதிட ரீதியாக செப்டம்பர் மாதம் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. இந்த கிரக மாற்றங்களின் மூலம் சில சக்திவாய்ந்த ராஜயோகங்களும் உருவாக உள்ளன.
</p><p>
செப்டம்பர் 1ஆம் தேதி செவ்வாய் மற்றும் புதன் இணைந்து லாப திருஷ்டி யோகத்தை உருவாக்க உள்ளன. ஜோதிட சாஸ்திரப்படி, இரண்டு கிரகங்கள் ஒன்றுக்கொன்று 60 டிகிரி கோணத்தில் அமைந்தால் லாப திருஷ்டி யோகம் உருவாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/596011e3-661d-4337-91d6-7b9cc8eae2af/26-6a94005b3050e.webp' /></p><p></p><p> இது சக்திவாய்ந்த பஞ்ச யோகங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

செவ்வாய்-புதன் இணைவால் உருவாகும் இந்த யோகத்தின் பலன்கள் அனைத்து ராசிக்காரர்களுக்கும் கிடைத்தாலும், சில ராசிக்காரர்கள் கூடுதல் அதிர்ஷ்டத்தையும் நன்மைகளையும் அனுபவிக்க உள்ளனர். அந்த ராசிகள் எவை என்பதை இந்தப் பதிவில் தெரிந்து கொள்ளலாம்.</p><h2>மேஷம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f2c44e6f-0ed5-439b-986a-7712cbaa4bd9/26-6a94005be07f3.webp' /></p><p>
செவ்வாயால் ஆளப்படும் மேஷ ராசிக்காரர்கள் இந்த யோகத்தால் சிறப்பான பலன்களை அனுபவிக்கப்போகிறார்கள். பொருளாதார ரீதியாக இது சிறப்பான காலமாக இருக்கும்.</p><p> கடந்த காலத்தில் தடைப்பட்ட வேலைகளை மீண்டும் வெற்றிகரமாகத் தொடங்கலாம். பணியில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்க வாய்ப்புள்ளது.&nbsp;</p><p>அவை சவாலாக இருந்தாலும், திறமையை நிரூபிக்கும் வாய்ப்பாக அமையும்.

புதிய முதலீடுகளை மேற்கொள்ள இது ஏற்ற காலம். கிடைக்கும் வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி லாபம் பெறலாம்.&nbsp;</p><h2><span style="color: inherit; font-size: 1.75rem;">மிதுனம்</span></h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4f0fb856-22b0-46de-b32f-70ca02d6c936/26-6a94005c94741.webp' /></p><p>மிதுன ராசிக்காரர்கள் இந்த யோகத்தால் எதிர்பாராத நன்மைகளைப் பெறப்போகிறார்கள். சமூகத்தில் அங்கீகாரமும் மரியாதையும் அதிகரிக்கும். </p><p>நீண்டகாலமாக இருந்து வந்த நிதிச் சிக்கல்கள் முடிவுக்கு வருவதுடன், பல ஆசைகளும் நிறைவேறும்.

திருமண வாழ்க்கையில் அன்பும் பரஸ்பர பாசமும் அதிகரிக்கும். வாழ்க்கைத்துணை மூலம் நல்ல செய்தி தேடி வரும்.</p><p> உடல் மற்றும் மன ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். நண்பர்களுடன் வெளியூர் செல்லும் வாய்ப்புகள் உருவாகும். வியாபாரிகளுக்கு பெரிய லாபம் கிடைக்கும்.</p><h2>
கன்னி</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/734b1e85-b7e2-4578-9d1a-a9b01cbbe54f/26-6a94005d46002.webp' /></p><p></p><h2>
</h2><p>கன்னி ராசிக்காரர்களுக்கு இது வெற்றிகள் குவியும் காலமாக இருக்கும். நிதி நிலை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும். </p><p>லாப திருஷ்டி யோகம் நிதி ஸ்திரத்தன்மையையும் சமூக அந்தஸ்தையும் அதிகரிக்கக்கூடும்.

புதிய கார் அல்லது வீடு வாங்க நினைப்பவர்களுக்கு இது ஏற்ற காலம். </p><p>திருமணமானவர்களின் உறவில் அன்பும் புரிதலும் அதிகரிக்கும். நிதி நிலை மேம்படுவதுடன், மன நிம்மதியும் அதிகரிக்கும். ஒட்டுமொத்தமாக, இந்த யோகம் வாழ்க்கையில் வெற்றி, ஸ்திரத்தன்மை மற்றும் மகிழ்ச்சியைத் தரும்.</p><p><b>இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;&nbsp;</b></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b>&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-30T10:08:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kiyas Shafe</name>
            </author>
            <title type="text"><![CDATA[கந்தளாய் பகுதியில் போதைப்பொருளுடன் இருவர் கைது: பொலிஸார் விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/2-men-arrested-in-kandalaksha-1788082353"></link>
            <id>https://tamilwin.com/article/2-men-arrested-in-kandalaksha-1788082353</id>
            <summary type="text">கந்தளாயில் - அக்போபுர பகுதியில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை
நடவடிக்கையின் போது, 10 இலட்சம் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான போதைப்பொருளுடன் இர...</summary>
            <content type="html"><![CDATA[<p>கந்தளாயில் - அக்போபுர பகுதியில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை
நடவடிக்கையின் போது, 10 இலட்சம் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான போதைப்பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>குறித்த கைது நடவடிக்கையானது நேற்று (29.08.2026) மாலை மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p><h2>போதைப்பொருள் கைப்பற்றல்</h2><p>

கந்தளாயிலிருந்து கபரணைக்கு கொண்டு செல்லத்தயாராக இருந்த நிலையில் சுமார் 60 கிராம் அளவிலான போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
</p><p>
கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் சீனிபுர பகுதியைச் சேர்ந்த 33 வயதுடையவர்
எனவும், மற்றையவர் கபரண திகம்பத்த பகுதியைச் சேர்ந்த 33 வயதுடையவர் எனவும்
அக்போபுர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7126373b-4f53-4ef7-9da6-fbc90b07868d/26-6a93faf882377.webp' /></p><p>குறித்த சந்தேகநபர்களிடமிருந்து மோட்டார் சைக்கிள் ஒன்றும்
பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது. </p><p>கைது செய்யப்பட்ட இருவரும் இன்று (30) நீதிமன்றத்தில்
முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.
</p><p>இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்போபுர பொலிஸார் முன்னெடுத்து
வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-30T09:59:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[&quot;நீதிக்கான நீள்பயணம்&quot;யாழில் ஆரம்பமானது சர்வதேச மாநாடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/journey-to-justice-international-conferencejaffna-1788083735"></link>
            <id>https://ibctamil.com/article/journey-to-justice-international-conferencejaffna-1788083735</id>
            <summary type="text">சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தில் &quot;நீதிக்கான நீள்பயணம்&quot; எனும் தலைப்பில் யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கத்தில் மாபெரும் சர்வதேச மாநாடு ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தில் "நீதிக்கான நீள்பயணம்" எனும் தலைப்பில் யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கத்தில் மாபெரும் சர்வதேச மாநாடு ஆரம்பமாகியுள்ளது.</p><p>

மாநாட்டுக்கு முன்னதாக இன்று காலை யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்திற்கு முன்பாக அமைந்துள்ள உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலை நினைவுத் தூபியிலிருந்து கவனயீர்ப்பு பேரணி ஆரம்பிக்கப்பட்டு, தந்தை செல்வா கலையரங்கை அடைந்து, நீதிக்கான நீள் பயணம் என்ற சர்வதேச மாநாடு ஆரம்பிக்கப்பட்டது.
</p><p>
வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் மாநாட்டில் சர்வதேச ராஜதந்திரிகள், பல்கலைக்கழக மாணவர்கள், அரசியல் கட்சிகள், பொது அமைப்புகள், மதத்தலைவர்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்துகொண்டுள்ளனர்.&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/LO_hGxp6zE0" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-30T09:56:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வைத்திய நிபுணர்கள் கோரும் அனைத்து மருந்துகளையும் வழங்க முடியாது! சுகாதார அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/cannot-provide-all-requested-medicines-1788076894"></link>
            <id>https://tamilwin.com/article/cannot-provide-all-requested-medicines-1788076894</id>
            <summary type="text">வைத்திய நிபுணர்கள் கோரும் அனைத்து மருந்துகளையும் அரசாங்கத்தால் வழங்க முடியாது என சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்....</summary>
            <content type="html"><![CDATA[<p>வைத்திய நிபுணர்கள் கோரும் அனைத்து மருந்துகளையும் அரசாங்கத்தால் வழங்க முடியாது என சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
</p><p>
அரசாங்க வைத்தியசாலைகளில் ஒரு சில மருந்து பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக வெளியாகும் செய்திகள் குறித்து அவரிடம் வினவிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.</p><p>இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,&nbsp;</p><h2>நிதி மோசடியால் ஏற்பட்டுள்ள பாதிப்பு</h2><p>
</p><p>பெரும்பான்மையாக பயன்படுத்தப்படும் மிக முக்கியமான மருந்துகளுக்கு அரசாங்கம் நிதி ஒதுக்கும். அதே போன்று நாட்டின் பொருளாதாரம் வலுப்பெற்றவுடன் வைத்தியர்களால் கோரப்படும் மருந்துகள் மற்றும் அறுவை சிகிச்சை உபகரணங்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/728ba637-63c0-498d-b356-f4455df7531c/26-6a93f48296d33.webp' /></p><p>மருந்துகள் வழங்குவதில் ஏதேனும் தாமதம் ஏற்பட்டால், பிராந்திய நிறுவனங்களின் பிரதானிகள் மருந்துகள் மற்றும் அறுவை சிகிச்சை உபகரணங்களை கொள்முதல் செய்வதற்கான ஒரு முறை உருவாக்கப்பட்டுள்ளது. </p><p>சம்பந்தப்பட்ட நிபுணர் கோரிக்கை விடுத்த பிறகு, மருந்து கலவையாளரின் ஒப்புதலுடன் வைத்தியசாலை பணிப்பாளர் அதை மருந்து வழங்கல் பிரிவிடம் சமர்ப்பிக்கலாம்.</p><p>

முந்தைய சுகாதார அமைச்சர் மற்றும் அதிகாரிகளால் செய்யப்பட்ட கடுமையான நிதி மோசடியால் சுகாதார அமைச்சு கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. </p><p>அதன் காரணமாகவே இவ்வாறான நிலைமை ஏற்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-30T09:51:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுவிட்சர்லாந்தில் இரவு நிகழ்ச்சி ஒன்றில் துப்பாக்கிச் சூடு... ஒருவர் மரணம், பலர் காயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/swiss-rave-kills-woman-injures-five-1788083320"></link>
            <id>https://news.lankasri.com/article/swiss-rave-kills-woman-injures-five-1788083320</id>
            <summary type="text">Shooting at rave party in Switzerland: சுவிட்சர்லாந்தில் இரவு நேரம் நடந்த நடனம் மற்றும் இசை நிகழ்ச்சியில் துப்பாக்கிச் சூடு.
வடக்கு சுவிட்சர்லாந்தில்...</summary>
            <content type="html"><![CDATA[<p>Shooting at rave party in Switzerland: சுவிட்சர்லாந்தில் இரவு நேரம் நடந்த நடனம் மற்றும் இசை நிகழ்ச்சியில் துப்பாக்கிச் சூடு.
</p><p>வடக்கு சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற இரவு நேர இசை மற்றும் நடன விருந்து ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டதாகவும், ஐந்து பேர் காயமடைந்ததாகவும் உள்ளூர் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><h2>ஆராவர் ரேவ்</h2><p> </p><p>
தாக்குதல் நடத்திய நபரை இதுவரை அடையாளம் காணப்படாத நிலையில், தீவிரமாகத் தேடி வருவதாகவும் பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/61ec3bdd-3018-413e-907c-290c2a77f347/26-6a93fc7a3585c.webp' /></p><p> சூரிச்சின் மேற்கே உள்ள ஆராவ் நகரில் இந்தச் சம்பவம் நடந்ததை அடுத்து, காவல்துறை பெரிய அளவில் களமிறங்கியுள்ளது. 'ஆராவர் ரேவ்' (Aarauer Rave) நிகழ்வின் ஒரு பகுதியாக நடந்த இந்த நிகழ்ச்சியின்போது, அதிகாலை 3 மணிக்கு முன்னதாக துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக சுவிஸ் நாளிதழான 'பிளிக்' (Blick) தனது இணையதளத்தில் செய்தி வெளியிட்டுள்ளது. </p><p>சனிக்கிழமை பிற்பகல் 3 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2 மணி வரை நடைபெற்ற வருடாந்திர டெக்னோ பார்ட்டியில் சுமார் 3,500 பேர் கலந்துகொண்டனர்.</p><p></p><p> </p><p>அந்த நிகழ்ச்சி நடைபெற்ற பந்தய மைதானத்தில்தான் துப்பாக்கிச் சூடு சம்பவம் நிகழ்ந்ததாகக் காவல் துறை செய்தித் தொடர்பாளர் வனேசா ரம்போல்ட் அந்தப் பத்திரிகையிடம் கூறியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>மேலும், பெரும் மக்கள் கூட்டத்திற்குள் பலமுறை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது என்றே ரம்போல்ட் குறிப்பிட்டுள்ளார். மரணமடைந்தவர் 22 வயது பெண் என்றே தெரிய வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9004856c-025a-49d9-80a7-eb2cd3f9fa46/26-6a93fc7adc7c4.webp' /></p><p> </p><p>ஆராவ் நகரம், சூரிச்சிலிருந்து மேற்கே சுமார் 46 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது மற்றும் இங்கு ஏறத்தாழ 23,000 மக்கள் வசிக்கின்றனர். மட்டுமின்றி, இது ஜேர்மனியுடனான எல்லையிலிருந்து 25 மைல்களுக்கும் குறைவான தூரத்தில் உள்ளது. </p><p>ஐரோப்பாவிலேயே அதிக துப்பாக்கி உரிமையாளர் விகிதங்களைக் கொண்ட நாடுகளில் சுவிட்சர்லாந்தும் ஒன்றாகும். இருப்பினும், வன்முறைத் துப்பாக்கிச் சூடுகள் அரிதாகவே நிகழ்கின்றன, மேலும் சமீபத்திய ஆண்டுகளில் கடுமையான கட்டுப்பாடுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-30T09:46:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாக்ஸ் ஆபிஸ்: விஸ்வநாத் &amp; சன்ஸ் திரைப்படம் உலகளவில் 16 நாட்களில் செய்துள்ள வசூல்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/vishwanath-and-sons-16-days-box-office-1788082052"></link>
            <id>https://cineulagam.com/article/vishwanath-and-sons-16-days-box-office-1788082052</id>
            <summary type="text">விஸ்வநாத் &amp;amp; சன்ஸ் திரைப்படம் வெளிவந்து 16 நாட்கள் ஆகிவிட்ட நிலையில், இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

விஸ...</summary>
            <content type="html"><![CDATA[<p>விஸ்வநாத் &amp; சன்ஸ் திரைப்படம் வெளிவந்து 16 நாட்கள் ஆகிவிட்ட நிலையில், இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
</p><h2>
விஸ்வநாத் &amp; சன்ஸ்
</h2><p>
தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களில் ஒருவரான சூர்யா நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 14-ஆம் தேதி வெளியான திரைப்படம் விஸ்வநாத் &amp; சன்ஸ். இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்து இளைஞர்களின் மனதை கொள்ளையடித்தார் நடிகை மமிதா பைஜூ.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/96cbde90-9497-42ee-a2bb-39a4e3c48e01/26-6a93f788cacb3.webp' /></p><p>பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளியான இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்கள் கிடைத்தன. ஆனாலும், பாக்ஸ் ஆபிஸில் நல்ல வரவேற்பை பெற்றது.
</p><h2>
பாக்ஸ் ஆபிஸ்</h2><p>

தயாரிப்பு நிறுவனங்கள் தங்களின் படம் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த அறிவிப்பை வெளியிடுவார்கள். அந்த வகையில், விஸ்வநாத் &amp; சன்ஸ் திரைப்படம் 16 நாட்களில் உலகளவில் எவ்வளவு வசூலித்துள்ளது என்பது குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/03e89461-65ce-45f2-bf7d-a2625e2be67d/26-6a93f7881ba1f.webp' /></p><p>அதன்படி, 16 நாட்களில் விஸ்வநாத் &amp; சன்ஸ் உலகளவில் ரூ. 240 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது என அப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-30T09:40:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரமாண்டமாக உருவாகியுள்ள ‘போராட்டம்’ – Trailer வெளியீட்டுக்கு இன்னும் சில நாட்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/porattam-movie-trailer-1788082196"></link>
            <id>https://tamilwin.com/article/porattam-movie-trailer-1788082196</id>
            <summary type="text">ஐபிசி தமிழ் நிறுவனத்தின் பிரமாண்ட தயாரிப்பில் உருவாகியுள்ள ‘போராட்டம்’ திரைப்படத்தின் முன்னோட்டம்( Trailer) எதிர்வரும் செப்டெம்பர் 2ஆம்திகதி வெளியாகவு...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஐபிசி தமிழ் நிறுவனத்தின் பிரமாண்ட தயாரிப்பில் உருவாகியுள்ள ‘போராட்டம்’ திரைப்படத்தின் முன்னோட்டம்( Trailer) எதிர்வரும் செப்டெம்பர் 2ஆம்திகதி வெளியாகவுள்ளது.
</p><p>
ஈழத்து கலைஞர்களை முன்னிலைப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம் எதிர்வரும் ஒக்டோபர் 2ஆம் திகதி வெளியாகவுள்ளது.


இந்த திரைப்படத்தை ராஜ் சிவராஜ் இயக்கியுள்ளதுடன், பூவன் மதீசன் இசையமைத்துள்ளார்.</p><h2>போராட்டம்</h2><p>
</p><p>

திரைப்படத்தை தயாரிப்பாளர் மற்றும் தொழிலதிபரான ஐபிசி கந்தையா பாஸ்கரன் தயாரித்துள்ளார். 

‘போராட்டம்’ திரைப்படத்தின் மூலம் பாஸ்கரன் றீகன் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.</p><p>

போராட்டம்’ திரைப்படத்திற்கு U சான்றிதழ் கிடைத்திருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/01dbd2e7-0591-45bf-88aa-2bb00e835aa3/26-6a93f9dcab12a.webp' /></p><p>
ஈழ சினிமாவில் இதுவரை வெளியாகியுள்ள திரைப்படங்களில் நீளமான திரைப்படமாக ‘போராட்டம்’ உருவாக்கப்பட்டுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.</p><p>

ஈழ சினிமாவில் புதிய திருப்புமுனையை ஏற்படுத்தும் முயற்சியாக உருவாகியுள்ள இந்த திரைப்படம் இலங்கையில் மட்டுமன்றி புலம்பெயர் நாடுகளிலும் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
</p><p>

‘போராட்டம்’ திரைப்படம் ஐபிசி தமிழின் தயாரிப்பில் வெளியாகும் நான்காவது முழுநீள திரைப்படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.</p><p>

ஈழத்து கலைஞர்களின் பங்களிப்புடன் உருவாகியுள்ள ‘போராட்டம்’ திரைப்படம் எதிர்வரும் ஒக்டோபர் 2ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-30T09:37:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[03 நாட்களுக்குப் பின் மண்ணுக்குள் கேட்ட அழுகுரல் ; நேபாள பேரழிவில் 6 வயது சிறுமிக்கு நடந்த சம்பவம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/6-year-old-girl-dies-in-nepal-disaster-1788072282"></link>
            <id>https://jvpnews.com/article/6-year-old-girl-dies-in-nepal-disaster-1788072282</id>
            <summary type="text">நேபாளத்தில் ஏற்பட்ட பயங்கர வெள்ளம், சேறு மற்றும் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த 6 வயது சிறுமி மூன்று நாட்களுக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">நேபாளத்தில் ஏற்பட்ட பயங்கர வெள்ளம், சேறு மற்றும் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த 6 வயது சிறுமி மூன்று நாட்களுக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. </p><p style="text-align: justify; ">ராசுவா மாவட்டத்தின் திமுரே கிராமத்தில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8687c614-329e-4347-918e-33b0b15cd391/26-6a93d15b86352.webp' /></p><h2 style="text-align: justify; ">மீட்புப் படை</h2><p style="text-align: justify; "><br></p><p>
</p><p style="text-align: justify; "> 
போதே கோஷி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் அந்தப் பகுதி முழுவதும் சேறும் சகதியும் நிறைந்திருந்தது. </p><p style="text-align: justify; ">வெள்ளத்தில் சிக்கியவர்களை தேடும் பணியில் ஈடுபட்டிருந்த ஆயுத காவல் படையினர், மண்ணுக்கு அடியில் இருந்து மெல்லிய அழுகுரல் கேட்பதை கவனித்தனர்.</p><p style="text-align: justify; "> உடனடியாக அந்த இடத்தில் தோண்டத் தொடங்கிய அவர்கள், மண்ணுக்குள் சிக்கியிருந்த சிறுமியை பத்திரமாக வெளியே கொண்டு வந்தனர்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
 
முதலில் திமுரே எல்லை பாதுகாப்பு முகாமில் சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் உடல்நிலை மோசமடைந்ததால் மேல் சிகிச்சைக்காக காத்மாண்டுவுக்கு அழைத்து செல்ல முடிவு செய்யப்பட்டது.</p><p style="text-align: justify; "> மோசமான வானிலை காரணமாக ஹெலிகாப்டர் பயணம் தாமதமானாலும், வானிலை சீரானதும் சிறுமி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; "> 
சிறுமியின் பெயர் மணிஷா மகர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது குடும்பத்தினரை அதிகாரிகள் தீவிரமாக தேடி வருகின்றனர். </p><p style="text-align: justify; ">இந்த மீட்பு வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி, மீட்புப் படையினரின் அர்ப்பணிப்புக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.</p>]]></content>
            <updated>2026-08-30T09:34:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் நீதிக்கான நீள் பயணம் ; உறவுகளுக்கான உணர்வுபூர்வ பேரணி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/jaffna-march-for-justice-emotional-rally-1788082453"></link>
            <id>https://jvpnews.com/article/jaffna-march-for-justice-emotional-rally-1788082453</id>
            <summary type="text">சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு, &quot;நீதிக்கான நீள் பயணம்&quot; எனும் தொனிப்பொருளில் யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்புப் பேரணி ஒன்று இன்று ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு, "நீதிக்கான நீள் பயணம்" எனும் தொனிப்பொருளில் யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்புப் பேரணி ஒன்று இன்று (30) நடைபெற்றது.
</p><p style="text-align: justify; ">
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் பங்கேற்புடன் இடம்பெற்ற இந்தப் பேரணி, யாழ்ப்பாணம் உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு நினைவிடத்தில் சுடரேற்றி அஞ்சலி செலுத்தியதைத் தொடர்ந்து ஆரம்பமானது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0a4b2736-7362-4c23-a3b1-4ff38a818ba2/26-6a93f916815e7.webp' /></p><h2 style="text-align: justify; ">பேரணி</h2><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
காணாமல் ஆக்கப்பட்டோரின் நிழற்படங்கள் தாங்கிய விசேட வாகனம் பேரணியின் முன்னிலையில் செல்ல, உறவினர்கள் தமது அன்புக்குரியவர்களின் நிழற்படங்களை ஏந்தியவாறு பேரணியில் பங்கேற்றனர்.
</p><p style="text-align: justify; ">
பல ஆண்டுகளாகக் காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கு உண்மை மற்றும் நீதி கிடைக்க வேண்டும் என்பதை வலியுறுத்திப் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் இதில் கலந்துகொண்டனர்.
</p><p style="text-align: justify; ">
உலகளவில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான சம்பவங்கள் அதிகம் பதிவாகியுள்ள நாடுகளில் இலங்கையும் ஒன்றாகக் கருதப்படும் நிலையில், தமக்கான நீதி இன்னும் கிடைக்கப்பெறவில்லை என காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் இதன்போது சுட்டிக்காட்டினர்.
</p><p style="text-align: justify; ">
யாழ்ப்பாண நகரின் ஊடாகச் சென்ற பேரணி, தந்தை செல்வா கலையரங்கைச் சென்றடைந்தது. அதனைத் தொடர்ந்து அங்கு சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்ட மாநாட்டு நிகழ்வுகள் ஆரம்பமாகின.</p>]]></content>
            <updated>2026-08-30T09:34:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sudaron</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பகுதியில் தீச்சட்டி ஏந்தி போராட்டத்தில் குதித்த மக்கள் - அடையாளம் தெரியாத நபரால் ஏற்பட்ட குழப்பம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/protest-in-kilinochchi-1788073852"></link>
            <id>https://tamilwin.com/article/protest-in-kilinochchi-1788073852</id>
            <summary type="text">புதிய இணைப்புசர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான இன்று(30) வடக்கு - கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற போராட்டமான...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான இன்று(30) வடக்கு - கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற போராட்டமானது, பிள்ளையார் ஆலயத்தில் ஆரம்பமாகி,&nbsp; காளி கோவில் வரை சென்று நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p>இதற்கிடையில், போராட்டத்தின் நடுவில் ஒருவர் போராட்டத்தை குழப்பும் வகையில் நடந்து கொண்டதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.&nbsp;&nbsp;</p><p><b><i>மேலதிக தகவல்&nbsp; - எரிமலை</i></b></p><h2>முதலாம் இணைப்பு</h2><p>சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான இன்று(30) வடக்கு - கிழக்கு வலிந்து காணாமல்
ஆக்கப்பட்டோர் சங்கத்தின் ஏற்பாட்டில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. </p><p>

இந்த போராட்டத்தை தொடர்ந்து, ஆவண நூல் வெளியீடும் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> 

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான அனுஷ்டிக்கப்படும் இன்றைய நாளில் கிளிநொச்சி 
155ஆம் கட்டை காளி கோயில் முன்பாக குறித்த போராட்டம் ஆரம்பமாகியுள்ளது. </p><h2>

 தீச்சட்டியை ஏந்தியவாறு போராட்டம்</h2><p>இதன்போது, இதுவரை காலமும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளால் கையளிக்கப்பட்ட மனுக்கள் 
உள்ளடங்கிய ஆவண நூல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6b89685e-1e53-4298-be87-1a88b7418a21/26-6a93d7ed77f88.webp' /></p><p> 

இதனைத் தொடர்ந்து, தீச்சட்டிகளை ஏந்தியவாறு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

போராட்டக்களத்தில், ஓ எம் பி அலுவலகம் வேண்டாம், இழப்பீடும் வேண்டாம் காணாமல்
ஆக்கப்பட்டோருக்கு நீதி வேண்டும், சர்வதேசமே நீதியை பெற்றுத்தா உள்ளிட்ட பல்வேறு கோஷங்கள் போராட்டக்காரர்களால் எழுப்பப்பட்டிருந்தன.</p><p>

இந்த நிலையில், போராட்டத்தில் சர்வதேச மன்னிப்பு சபையின் பிரதிநிதி,
நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின்
உறவினர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/29e4faf7-1a7c-4127-8270-3136f9720ee6/26-6a93d7ee4f516.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e7032f05-4814-4444-9775-9cb8c0f50c68/26-6a93d7ef27c24.webp' /></p><p></p><p></p><p></p><p><b>YOU MAY LIKE THIS VIDEO..</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/UU565u-hlBQ" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-30T09:31:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[நான் செய்த தவறால் தான் மனைவியுடன் விவாகரத்து..யாரும் இல்ல!! ஜெயிலர் விநாயகன் ஓபன்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/jailer-actor-vinayakan-reveals-why-he-divorced-1788015922"></link>
            <id>https://viduppu.com/article/jailer-actor-vinayakan-reveals-why-he-divorced-1788015922</id>
            <summary type="text">விநாயகன்மலையாள சினிமாவில் தன்னுடைய நடிப்புத்திறமையால் டாப் நடிகராகவும் வில்லனாகவும் திகழ்ந்து வருபவர் தான் நடிகர் விநாயகன். ஜெயிலர் படத்தில் வில்லன் ர...</summary>
            <content type="html"><![CDATA[<h2>விநாயகன்</h2><p>மலையாள சினிமாவில் தன்னுடைய நடிப்புத்திறமையால் டாப் நடிகராகவும் வில்லனாகவும் திகழ்ந்து வருபவர் தான் நடிகர் விநாயகன். ஜெயிலர் படத்தில் வில்லன் ரோலில் நடித்து மிரட்டிய அவர், பல சர்ச்சைகளிலும் சிக்கி வருகிறார். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/831944c9-7865-4114-983a-4a7312124951/26-6a92f5349ecb4.webp' /></p><p>கடந்த 2025 ஜனவரி மாதம் கொச்சி கலூரிலுள்ள அவரின் அடுக்குமாடி குடியிருப்பின் பால்கனியில் நின்றபடி வேட்டியை அவிழ்த்து ஆபாச போஸ் கொடுத்தது வரை பல சர்ச்சைகளை செய்து வந்தார். இந்நிலையில் அவர் அளித்த பேட்டியொன்றில் தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பேசியுள்ளார். </p><h2>நான் செய்த தவறால்</h2><p>அதில், எனக்கு ஒரு மனைவி இருந்தாள், ஆனால் இப்போது நாங்கள் பிரிந்துவிட்டோம், எங்களுக்கு குழந்தைகள் இல்லை, சண்டைகள் எதுவும் இல்லை, ஆனால் எங்களால் சேர்ந்து வாழ முடியவில்லை. </p><p>நான் மனம் திறந்து பேச வேண்டிய ஒரே நபர் என் மனைவிதான், இப்போது அப்படி யாரும் எனக்கு இல்லை. என் தவறால்தான் என் மனைவி என்னைவிட்டுப் பிரிந்துவிட்டார். என்னால் இதைத்தாங்கிக் கொள்ள முடியவில்லை. நான் தனியாக, நொறுங்கிப் போயிருக்கிறேன். என்னால் வெளியே செல்லவும் முடியவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5359ea70-fa23-4627-b2d1-45ec4cfd53ef/26-6a92f53553256.webp' /></p><p> </p><p>அது என் பிரச்சனை, அவளுடையது இல்லை. அவள் இன்னும் என் எல்லாப் பொருட்களையும் பார்த்துக் கொள்கிறாள். பிரிந்து செல்வதே நல்லது என்று எனக்கு தோன்றியது, இல்லை என்றால் என் மனைவிக்கு பிரச்சனையாகிவிடும். நான் அவரின் நிம்மதியை கெடுக்கப் போவதில்லை, அவரின் வாழ்க்கையை அவர் வாழட்டும், இதுதான் அவருக்கும் எனக்கும் நல்லது.</p><p> ஒன்றாக வாழ முடியாத நிலையின்போது, பரஸ்பர சம்மதத்துடன் பிரிய முடிவெடுத்தோம், என்றாலும் என் மனைவியிடம் மட்டுமே என்னுடைய மனக்குமுறல்களை காட்ட முடியும், அவரிடம் இருந்து ஏற்பட்ட அந்நியப்படுதல் தனிப்பட்ட வாழ்க்கையில் மிகவும் இருண்ட காலக்கட்டத்திற்கு என்னைத் தள்ளியது என்று வேதனையுடன் தெரிவித்துள்ளார் விநாயகன்.</p>]]></content>
            <updated>2026-08-30T09:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Fathima</name>
            </author>
            <title type="text"><![CDATA[என்னை கொன்றுவிடுவார்கள்: மருத்துவமனையில் கதறிய கர்ப்பிணி பெண்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/pregnant-woman-dies-with-baby-after-delivery-1788081953"></link>
            <id>https://ibctamilnadu.com/article/pregnant-woman-dies-with-baby-after-delivery-1788081953</id>
            <summary type="text">என்னை கொன்றுவிடுவார்கள் என கதறிய நிறைமாத கர்ப்பிணி பெண் குழந்தை பிறந்தபின்னர் உயிரிழந்த சம்பவம் நடந்துள்ளது.மத்திய பிரதேசத்தின் ஹட்வா பகுதியை சேர்ந்தவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>என்னை கொன்றுவிடுவார்கள் என கதறிய நிறைமாத கர்ப்பிணி பெண் குழந்தை பிறந்தபின்னர் உயிரிழந்த சம்பவம் நடந்துள்ளது.</p><p>மத்திய பிரதேசத்தின் ஹட்வா பகுதியை சேர்ந்தவர் கல்பனா(வயது 25), நிறைமாத கர்ப்பிணியான கல்பனா சஞ்சய் காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கடந்த 25ம் தேதி அனுமதிக்கப்பட்டார்.</p><p>

குழந்தையை பிரசுவித்த பின்னர் கல்பனாவும், குழந்தையும் பரிதாபமாக உயிரிழந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f0765a2f-071d-40c4-a0b0-48de3ff0663b/26-6a93f79ab2d63.webp' /><br></p><p>
</p><p>
இதற்கு முன்னதாக எடுக்கப்பட்ட வீடியோவில், நான் பிழைக்கமாட்டேன், என்னை காப்பாற்றுங்கள், உயிருக்கு ஆபத்து என அவர் கூறுவதும், மிகுந்த மன உளைச்சலுடன் இருப்பதும் அவரை ஊழியர்கள் சமாதானம் செய்வதும் போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
</p><p>
தொடர்ந்து தன்னுடைய உறவினர்கள் தொடர்பு கொள்ள முயற்சிப்பதும், அழுதுகொண்டே தனக்கு முறையான சிகிச்சை அளிக்கவில்லை என குடும்பத்தினரிடம் கூறுவதும் பதிவாகியுள்ளது.</p><p>

இந்நிலையில் கல்பனாவின் தந்தை, எனது ஒரே மகள் கல்பனா, அவள் இப்போது இல்லை, இதற்கு காரணமானவர்கள் மீது காவல்துறை FIR பதிவு செய்ய வேண்டும், மருத்துவர்கள், ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.
</p><p>
மருத்துவ நெறிமுறைகளின் படியே கல்பனாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும், எந்தவித அலட்சியமும் இல்லை என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.<br></p>]]></content>
            <updated>2026-08-30T09:28:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[பெனால்டியில் கோல் அடித்த ஜேர்மனியின் நட்சத்திர வீரர்: கனேடிய கிளப் அணி அபார வெற்றி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/thomas-muller-goal-in-penalty-vancouver-win-1788082082"></link>
            <id>https://news.lankasri.com/article/thomas-muller-goal-in-penalty-vancouver-win-1788082082</id>
            <summary type="text">Thomas muller goal in penalty vancouver win: MLS போட்டியில் வான்கூவர் ஒயிட்கேப்ஸ் அணி 3-0 என்ற கோல் கணக்கில் ஸ்போர்ட்டிங் கேசி அணியை வீழ்த்தியது.

க...</summary>
            <content type="html"><![CDATA[<p>Thomas muller goal in penalty vancouver win: MLS போட்டியில் வான்கூவர் ஒயிட்கேப்ஸ் அணி 3-0 என்ற கோல் கணக்கில் ஸ்போர்ட்டிங் கேசி அணியை வீழ்த்தியது.</p><p>

கான்சாஸ் சிட்டியில் நடந்த MLS போட்டியில், வான்கூவர் ஒயிட்கேப்ஸ் 3-0 என்ற கோல் கணக்கில் ஸ்போர்ட்டிங் கேசி அணியை வீழ்த்தியது.&nbsp;</p><h2>பெனால்டி&nbsp;கோல் </h2><p>
வான்கூவர் ஒயிட்கேப்ஸ் மற்றும் ஸ்போர்ட்டிங் அணிகளுக்கு இடையிலான MLS போட்டி கான்சாஸ் சிட்டியின் Children's Mercy Park மைதானத்தில் நடந்தது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7e707a4e-7efb-480b-bb48-630ecc98fb8c/26-6a93f9b7396cb.webp' /></p><p></p><p>
ஆட்டத்தின் 40வது நிமிடத்தில் வான்கூவர் ஒயிட்கேப்ஸ் அணிக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பை, நட்சத்திர வீரர் தாமஸ் முல்லர் (Thomas Muller) சரியாக பயன்படுத்தி கோலாக மாற்றினார்.
</p><p>
அடுத்த 8 நிமிடங்களில் பிரையன் ஒயிட் (Brian White) கோல் அடித்தார். அதற்கு பதில் கோல் அடிக்க ஸ்போர்ட்டிங் அணி திணறியது. </p><p>90வது நிமிடத்தில் வான்கூவர் ஒயிட்கேப்ஸின் ரயான் எல்லோமி கோல் அடிக்க, வான்கூவர் ஒயிட்கேப்ஸ் 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f2d679cf-81ee-44e5-a270-b1d987528ad1/26-6a93f9b81cea1.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6597e928-8bcf-488d-989b-2e5509fc80e7/26-6a93f7a58423c.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/325bdc9a-d30e-48f1-b276-4d901bb6674e/26-6a93f9b8c5ec4.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-30T09:25:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வடக்கில் அனுமதியின்றி கட்டப்படும் கட்டிடம் - தடுத்து நிறுத்த மக்கள் கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/building-being-without-permission-in-the-north-1788081698"></link>
            <id>https://tamilwin.com/article/building-being-without-permission-in-the-north-1788081698</id>
            <summary type="text">வலி. தெற்கு சுன்னாகம் பிரதேச சபையின் உரிய அனுமதியின்றி கந்தரோடை விகாரைக்
காணிக்குள் பௌத்த மத்திய நிலையம் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டு வருவதாக
குற்றச்ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>வலி. தெற்கு சுன்னாகம் பிரதேச சபையின் உரிய அனுமதியின்றி கந்தரோடை விகாரைக்
காணிக்குள் பௌத்த மத்திய நிலையம் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டு வருவதாக
குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.</p><p>

சுமார் 4 பரப்பு விஸ்தீரனம் உள்ள கந்தரோடை விகாரை காணியில் இரண்டு
வருடங்களுக்கு முன்பு குறித்த பௌத்த மத்திய நிலையம் அமைப்பதற்கான ஏற்பாடுகள்
இடம்பெற்றது.
</p><h2>



சட்டவிரோதமாக அமைக்கப்படும் மண்டபம்</h2><p>
அந்த காலப்பகுதியில் பிரதேச சபை அனுமதியின்றி கட்டப்படும் கட்டடத்தை
நிறுத்துமாறு அறிவித்தல் ஒட்டியிருந்த நிலையில் குறித்த கட்டுமானங்கள்
நிறுத்தப்பட்டிருந்தது.
</p><p>
இந்த நிலையில் மீண்டும் குறித்த பௌத்த மத்திய நிலையக் கட்டுமானம் வெளியார்
பார்க்காத வகையில் உயரமாக மறைப்புச் செய்யப்பட்டு மீண்டும் கட்டுமான
பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e74ff103-60c0-4c13-87f2-ca0a84f36c55/26-6a93f66eaa96f.webp' /></p><p>
சாதாரண மக்களின் கட்டுமானங்கள் அனுமதியின்றி அமைக்கப்படும் போது அதனை
நீதிமன்றம் மூலம் அகற்றும் பிரதேச சபைகள் இந்த தியான மண்டபம் உரிய
அனுமதிகள் பெறப்படாது அமைக்கப்பட்டு வருவதை கண்டும் காணாமல் இருக்கின்றதா என்ற
கேள்வியும் எழுந்துள்ளது. </p><h2>

உள்ளூராட்சி மன்ற உறுப்பினர் விசனம்</h2><p>
உள்ளூராட்சி மன்ற அதிகாரங்களை
சவாலுக்கு உட்படுத்தும் வகையில் குறித்த பௌத்த கட்டுமானம் அமைக்கப்பட்டு
வருகின்ற நிலையில், வடமாகாண ஆளுநர் இந்த விடயம் தொடர்பில் கவனம் செலுத்த
வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.</p><p>

இந்த விடயம் தொடர்பில் பிரதேச சபையை தவிசாளரை தொடர்பு கொள்ள
முயற்சித்தபோது, தொடர்பு கொள்ள முடியாத நிலையில் உறுப்பினர் ச ஒருவரை தொடர்பு
கொண்டு கேட்ட போது, </p><p>

“ குறித்த சட்ட விரோத கட்டுமானம் தொடர்பில் ஏற்கனவே சபை நிறுத்துமாறு
அறிவுறுத்தல் ஒட்டிய நிலையில் நிறுத்தப்பட்டிருந்தது.

ஆனால் மீண்டும் குறித்த கட்டுமானம் இடம்பெற்று வருகின்ற நிலையில் சபையில் இது
தொடர்பில் பேசி இருக்கிறோம்.

உள்ளூராட்சி சட்ட அதிகாரங்களுக்கு உட்பட்டு கட்டுமானம் தொடர்பில் உரிய
நடைமுறைகளை பின்பற்றி அனுமதிக்கு சமர்ப்பிக்காமல் கட்டுமானம் தொடருமானால்
நீதிமன்றத்தை நாடுவதற்கு சபை தீர்மானித்துள்ளது" என்றார்.&nbsp;&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-30T09:23:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[தப்பிச் சென்ற குற்றவாளிகளுக்கு எதிராக பொலிஸாரின் அதிரடி நகர்வு..! 6,000 மில்லியன் சொத்துக்கள் முடக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/66-suspects-involved-in-organized-crime-1788076816"></link>
            <id>https://tamilwin.com/article/66-suspects-involved-in-organized-crime-1788076816</id>
            <summary type="text">ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் தொடர்பான குற்றச்சாட்டுகளின் கீழ் வெளிநாடுகளில் தலைமறைவாகியிருந்த 66 சந்தேகநபர்கள் 2024 ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் தொடர்பான குற்றச்சாட்டுகளின் கீழ் வெளிநாடுகளில் தலைமறைவாகியிருந்த 66 சந்தேகநபர்கள் 2024 செப்டெம்பர் 21ஆம் திகதி முதல் இதுவரை இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
இதேவேளை, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் தொடர்பான 113 விசாரணைகளுடன் தொடர்புடைய சுமார் 6,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான சொத்துக்கள் இந்தக் காலப்பகுதியில் முடக்கப்பட்டுள்ளன.</p><h2>சிவப்பு அறிவித்தல்கள்</h2><p>
</p><p>
இதன்படி, 102 சந்தேகநபர்களுக்குச் சொந்தமான 5,423 மில்லியன் ரூபாய் பெறுமதியான சொத்துக்கள் போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடையவை எனவும், மூன்று ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளுக்குச் சொந்தமான 209 மில்லியன் ரூபாய் பெறுமதியான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

மேலும், பிரமிட் மோசடி, சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் வெடிபொருட்கள் தொடர்பான குற்றங்களுடன் தொடர்புடைய எட்டு சந்தேகநபர்களுக்குச் சொந்தமான 367 மில்லியன் ரூபாய் பெறுமதியான சொத்துக்களும் முடக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/906fc762-a5a2-4671-9c2c-de2ba6b09781/26-6a93f53ac4a8a.webp' /></p><p>
</p><p>
முடக்கப்பட்ட சொத்துக்களில் 2 கிலோ 140 கிராம் தங்கம், 136 ஏக்கர் காணிகள், 55 வீடுகள் மற்றும் 142 வாகனங்கள் அடங்குவதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
</p><p>
2024 செப்டெம்பர் 21ஆம் திகதிக்குப் பின்னர் நாட்டுக்கு அழைத்து வரப்பட்ட 66 சந்தேகநபர்களில் 28 பேருக்கு சர்வதேச சிவப்பு அறிவித்தல்கள் (Red Notices) பிறப்பிக்கப்பட்டிருந்தன. ஏனைய 38 சந்தேகநபர்கள் சிவப்பு அறிவித்தல்கள் இன்றி நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.</p><h2>&nbsp;பொலிஸ் அறிக்கைகள்</h2><p>
</p><p>
இதேவேளை, 2024 செப்டெம்பர் மாதத்திற்குப் பின்னர் சந்தேகநபர்களை நாட்டுக்கு அழைத்து வருவதற்காக இன்டர்போல் ஊடாக 110 புதிய சிவப்பு அறிவித்தல்கள் பெறப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
மேலும், கடந்த ஒகஸ்ட் 18ஆம் திகதி வரையில் இலங்கை பொலிஸாரால் பெறப்பட்டு நடைமுறையில் உள்ள மொத்த சிவப்பு அறிவித்தல்களின் எண்ணிக்கை 236 ஆகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/90ea3074-906a-4c7e-a0ff-4d8e3ec62645/26-6a93f53b8bffb.webp' /></p><p>
</p><p>
 அவற்றில் 96 சிவப்பு அறிவித்தல்கள் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்களுக்காக பெறப்பட்டுள்ளன.</p><p>

தலைமறைவாகியுள்ள சந்தேகநபர்களில் 35 பேர் தங்கியுள்ள நாடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.</p><p> 

அதன்படி, 18 சந்தேகநபர்கள் ஐக்கிய அரபு இராச்சியத்திலும், 11 பேர் இந்தியாவிலும் தலைமறைவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
மேலும், ஐக்கிய இராச்சியம், பிரான்ஸ், ரஷ்யா, கனடா மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளில் தலா ஒரு சந்தேகநபர் வீதம் தலைமறைவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-30T09:19:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தியாவிடம் இருந்து பெட்ரோல் இறக்குமதியைத் தீவிரப்படுத்தும் ரஷ்யா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/india-petrol-supplier-to-russia-1788081408"></link>
            <id>https://news.lankasri.com/article/india-petrol-supplier-to-russia-1788081408</id>
            <summary type="text">India emerges as key petrol supplier to Russia: ரஷ்யாவின் முக்கிய பெட்ரோலிய விநியோக நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது.
இந்தியா கடந்த இரண்டு மாதங்களில் க...</summary>
            <content type="html"><![CDATA[<p><b>I</b>ndia emerges as key petrol supplier to Russia: ரஷ்யாவின் முக்கிய பெட்ரோலிய விநியோக நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது.
</p><p>இந்தியா கடந்த இரண்டு மாதங்களில் கிட்டத்தட்ட 10 லட்சம் பீப்பாய் பெட்ரோலை ஏற்றுமதி செய்து, ரஷ்யாவிற்கு பெட்ரோலை வழங்கும் ஒரு முக்கிய நாடாக உருவெடுத்துள்ளது.</p><h2>குஜராத்தில் நயாரா எனர்ஜி</h2><p>
</p><p>ரஷ்ய சுத்திகரிப்பு நிலையங்கள் மீது உக்ரைன் நடத்திய தொடர்ச்சியான ட்ரோன் தாக்குதல்களைத் தொடர்ந்து, புடின் நிர்வாகம் வெளிநாட்டுச் சந்தைகளை நாடும் நிலை ஏற்பட்டுள்ளது. </p><p>சுத்திகரிப்பு ஆலைகளில் ஏற்பட்ட இடையூறுகளால் உள்நாட்டு எரிபொருள் பற்றாக்குறை அதிகரித்ததன் விளைவாக, ரஷ்யாவின் கடல்வழி பெட்ரோல் இறக்குமதி ஆகஸ்ட் மாதத்தில் ஒரு நாளைக்கு சுமார் 125,000 பீப்பாய்கள் என்ற சாதனை அளவை எட்டியது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/82b44f69-72a8-4862-9c8f-e68a67d0c36f/26-6a93f502f3b2e.webp' /></p><p> </p><p>இது அந்த மாதத்திற்கான மதிப்பிடப்பட்ட 470,000 டன்களுக்குச் சமமாகும். இந்தியா மட்டுமின்றி துருக்கி மற்றும் மொராக்கோ ஆகிய நாடுகளில் இருந்தும் ரஷ்யா பெட்ரோல் இறக்குமதியை முன்னெடுத்து வருகிறது. </p><p>இந்தியாவின் விநியோகத்தில் பெரும்பகுதி, ரஷ்யாவின் முன்னணி எண்ணெய் நிறுவனமான ரோஸ்நெஃப்ட் (Rosneft) நிறுவனத்திற்குப் பகுதி உரிமையுள்ள, குஜராத்தில் உள்ள நயாரா எனர்ஜியின் வதினார் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து பெறப்பட்டது.</p><p></p><p> </p><p>2022-ஆம் ஆண்டு முதல் ரஷ்ய கச்சா எண்ணெய் கொள்முதலை இந்தியா கணிசமாக அதிகரித்துள்ளது. பிப்ரவரியில் நாளொன்றுக்கு சுமார் 1 மில்லியன் பீப்பாய்களாக இருந்த ரஷ்ய எண்ணெய் இறக்குமதி, ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் நாளொன்றுக்கு 2.6 மில்லியன் பீப்பாய்களுக்கும் அதிகமாக உயர்ந்தது; இது நாட்டின் மொத்த கச்சா எண்ணெய் இறக்குமதியில் பாதிக்கும் மேற்பட்ட பங்கைக் கொண்டுள்ளது. </p><p>இதன் விளைவாக, இந்தியாவிலிருந்து ரஷ்யாவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்ட பெட்ரோலில் சில, ரஷ்ய கச்சா எண்ணெயைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்பட்டிருக்கலாம் என்றே தெரிய வருகிறது. </p><p>உலகின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் ஏற்றுமதியாளர்களில் ஒன்றான ரஷ்யா, உக்ரேனிய ட்ரோன் தாக்குதல்களால் எரிசக்தி உள்கட்டமைப்பு சேதமடைந்ததாலும், சுத்திகரிப்பு ஆலை செயல்பாடுகள் தடைபட்டதாலும், பெட்ரோலை இறக்குமதி செய்ய நிர்பந்திக்கப்பட்டுள்ளது. </p><p>வெளியாகியுள்ள தகவலின் அடிப்படையில், ரஷ்யாவின் உள்நாட்டு எரிபொருள் உற்பத்தி 70 சதவீதம் வரை சரிந்துள்ளது. ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் ரஷ்யாவின் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது 32 தாக்குதல்கள் நடத்தப்பட்டன; இது சராசரியாக இரண்டு நாட்களுக்கு ஒரு தாக்குதல் என்ற விகிதத்தில் அமைந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/38415a62-401d-4c0a-b6f8-f527b54ef248/26-6a93f5024a375.webp' /></p><p> </p><p>இந்த இடையூறு ரஷ்யாவின் எரிபொருள் ஏற்றுமதியையும் பாதித்துள்ளது. பெட்ரோல் உற்பத்தியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் அல்லாதோர் ஆகிய இரு தரப்பினருக்குமான பெட்ரோல் ஏற்றுமதித் தடையை 2027 ஜனவரி இறுதி வரை ரஷ்யா நீட்டித்துள்ளது; அதேவேளையில், டீசல் ஏற்றுமதி மீதான கட்டுப்பாடுகள் 2026 செப்டம்பர் 1 வரை நீட்டிக்கப்பட்டுள்ளன. </p><p>ஆகஸ்ட் மாதத்தில் ரஷ்யா இறக்குமதி செய்த பெட்ரோலில் சுமார் 55 சதவீதம், அதாவது ஏறக்குறைய 2,60,000 டன்கள், தடைகளுக்கு உட்பட்ட கப்பல்கள் மூலம் வந்தடைந்தது. </p><p>ஆகஸ்ட் மாதத்தில் ரஷ்யாவின் மொத்த பெட்ரோல் இறக்குமதியில் சுமார் 40 சதவீதம் கப்பல்களுக்கு இடையேயான பரிமாற்றங்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0aae2af4-4875-4acd-aa0a-9d60c56b809c/26-6a93f503aa70f.webp' /></p><p> </p><p>இவற்றில் பெரும்பாலானவை, கப்பல்கள் தங்களின் தானியங்கி அடையாள அமைப்பு (AIS) சமிக்ஞைகளை அணைத்துவிட்டு நடத்தப்பட்டன. இதற்கிடையில், ஏற்றுமதி கட்டுப்பாடுகள், சுத்திகரிப்பு நிலைய சேதம் மற்றும் எரிபொருள் முனையங்களில் ஏற்பட்ட இடையூறுகள் காரணமாக ரஷ்யாவின் டீசல் மற்றும் கேஸ்-ஆயில் ஏற்றுமதி தொடர்ந்து நெருக்கடிக்குள்ளானது. </p><p>ஆகஸ்ட் 25 வரையிலான காலகட்டத்தில், கடல் வழியாக மேற்கொள்ளப்பட்ட டீசல் மற்றும் கேஸ் ஆயில் ஏற்றுமதி நாளொன்றுக்கு சுமார் 1,50,000 பீப்பாய்களாக இருந்தது; இது முந்தைய மாதத்துடன் ஒப்பிடுகையில் ஏறக்குறைய மாற்றமின்றி இருந்தாலும், முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தை விட நாளொன்றுக்கு சுமார் 6,10,000 பீப்பாய்கள் குறைவாகும்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-30T09:14:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[சாய்ந்தமருதில் இறைச்சிக் கடைகள், உணவகங்களில் சுகாதாரப் பரிசோதனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/health-checks-conducted-meat-shops-and-restaurants-1788081054"></link>
            <id>https://jvpnews.com/article/health-checks-conducted-meat-shops-and-restaurants-1788081054</id>
            <summary type="text">சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட ஆட்டிறைச்சிக் கடைகள், இறைச்சி விற்பனை நிலையங்கள் மற்றும் தெருவோர கடைகள், உணவகங்களில் வெள்ளிக்கிழ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட ஆட்டிறைச்சிக் கடைகள், இறைச்சி விற்பனை நிலையங்கள் மற்றும் தெருவோர கடைகள், உணவகங்களில் வெள்ளிக்கிழமை (29) விசேட சுகாதாரப் பரிசோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.</p><p style="text-align: justify; ">


சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜே. மதன் தலைமையில் நடைபெற்ற இப்பரிசோதனை நடவடிக்கையில் பொது சுகாதாரப் பரிசோதகர்களும் கலந்து கொண்டனர்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/584a9c33-aa43-4c97-9e7a-fc4cd95f1953/26-6a93f3a01e12f.webp' /></p><h2 style="text-align: justify; ">மருத்துவப் பரிசோதனை</h2><p style="text-align: justify; ">

இதன்போது, இறைச்சி விற்பனை நிலையங்கள் மற்றும் உணவகங்களில் சுகாதார நடைமுறைகள், உணவுப் பொருட்களின் பாதுகாப்பு, தூய்மை மற்றும் பணியாளர்களின் மருத்துவப் பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் விரிவாக பரிசோதிக்கப்பட்டன.</p><p style="text-align: justify; ">

குறிப்பாக, உணவகங்களில் பணிபுரியும் ஊழியர்களின் மருத்துவப் பரிசோதனைகள் முறையாக மேற்கொள்ளப்பட்டுள்ளனவா என்பதும் அதிகாரிகளால் பரிசோதிக்கப்பட்டது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
சுகாதார விதிமுறைகளை மீறியதாகக் கண்டறியப்பட்ட நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டதுடன், பொதுமக்களுக்கு பாதுகாப்பான உணவு மற்றும் சுகாதாரமான சேவைகளை வழங்குவதன் அவசியம் தொடர்பிலும் சம்பந்தப்பட்டவர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.</p><p style="text-align: justify; "> பாவனைக்கு பொருத்தமற்ற உணவுகளை அழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.</p><p style="text-align: justify; ">சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட உணவு விற்பனை நிலையங்களில் சுகாதாரத் தரத்தை உறுதிப்படுத்தும் வகையில் இவ்வாறான பரிசோதனைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-30T09:11:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பில் உடலற்ற அழுகிய நிலையில் மனிதத் தலை ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/human-head-was-found-in-moratumulla-1788079176"></link>
            <id>https://ibctamil.com/article/human-head-was-found-in-moratumulla-1788079176</id>
            <summary type="text">கொழும்பு மொரட்டுமுல்ல, இஹல இதிபெத்த குரே பகுதியில் உடலற்ற மனித தலை ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.இந்த சம்பவம் தொடர்பாக&amp;nbsp; 119 என்ற அவசர இலக்கத்திற்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு மொரட்டுமுல்ல, இஹல இதிபெத்த குரே பகுதியில் உடலற்ற மனித தலை ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.</p><p>இந்த சம்பவம் தொடர்பாக&nbsp; 119 என்ற அவசர இலக்கத்திற்கு கிடைத்த தகவலையடுத்து, மொரட்டுமுல்ல காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர்.&nbsp;</p><p>
இன்று (30.08.2026) காலை சுமார் 8 மணியளவில் மரவேலைப் பட்டறையின் உரிமையாளர் ஒருவர் குறித்த மனித தலையை அவதானித்து காவல்துறையினருக்கு தகவல் வழங்கியுள்ளார்.</p><p></p><h2>உடலற்ற மனிதத்தலை</h2><p> தலை, உடலிலிருந்து துண்டிக்கப்பட்ட நிலையில் மரவேலைப் பட்டறையின் பின்புறம், ஆற்றங்கரைக்கு அருகில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e22577d2-a4f5-4008-8efd-836ce0f8b91a/26-6a93f38c8e890.webp' /></p><p>சம்பவ இடத்திற்கு மொரட்டுமுல்ல காவல்துறையினர், காவல் விசேட அதிரடிப்படையினர் மற்றும் கல்கிஸ்ஸ குற்றப்புலனாய்வு அதிகாரிகள் சென்று விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.</p><p>மேலும் மொரட்டுவ நீதவான் நீதிமன்றத்தின் பதில் நீதவான் சட்டத்தரணியான திருமதி சந்தமாலி வருகை தந்து, சம்பவ இட ஆய்வு ஒன்றை நடத்தினார்.</p><p>ஆய்வின்படி மீட்கப்பட்ட மனித தலை மிகவும் அழுகிய நிலையில் காணப்பட்டதுடன், அதனை விலங்குகள் தின்று சேதப்படுத்தியிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இந்த நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மொரட்டுமுல்ல காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-30T09:07:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[நடிகை சைத்ரா அச்சரின் சமீபத்திய கிளாமர் போட்டோஷூட்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/actress-chaitra-achar-glamour-photoshoot-1788080511"></link>
            <id>https://cineulagam.com/article/actress-chaitra-achar-glamour-photoshoot-1788080511</id>
            <summary type="text">சாகராதாச்சே எல்லோ திரைப்படத்தின் மூலம் பிரபலமான சைத்ரா அச்சர், தமிழில் 3BHK படத்தின் மூலம் அறிமுகமானார். இதை தொடர்ந்து சசிகுமாருடன் இணைந்து மை லார்டு ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சாகராதாச்சே எல்லோ திரைப்படத்தின் மூலம் பிரபலமான சைத்ரா அச்சர், தமிழில் 3BHK படத்தின் மூலம் அறிமுகமானார். இதை தொடர்ந்து சசிகுமாருடன் இணைந்து மை லார்டு திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். </p><p>வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் ஒருவராக இருக்கும் சைத்ரா அச்சர், அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டோஷூட் புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். இந்நிலையில், தற்போது கருப்பு நிற உடையில் சமீபத்தில் எடுத்துக்கொண்ட கிளாமர் போட்டோஷூட்டை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். </p><p>இதோ அந்த புகைப்படங்கள்:</p>]]></content>
            <updated>2026-08-30T09:03:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[ட்ரம்ப் நிர்வாகத்திற்கு அதிரடி காட்டிய நீதிமன்றம் ; மாணவர்களை நாடுகடத்த முயற்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/court-delivers-blow-to-trump-1788079740"></link>
            <id>https://canadamirror.com/article/court-delivers-blow-to-trump-1788079740</id>
            <summary type="text">அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான நிர்வாகம், சர்வதேச மாணவர்களின் அரசியலமைப்பு உரிமைகளை மீறியுள்ளதாக அமெரிக்க கூட்டாட்சி நீதிமன்றம் தீர்ப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான நிர்வாகம், சர்வதேச மாணவர்களின் அரசியலமைப்பு உரிமைகளை மீறியுள்ளதாக அமெரிக்க கூட்டாட்சி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
</p><p>
காஸா மீதான இஸ்ரேலின் போரைக் விமர்சித்த சர்வதேச மாணவர்களின் விசாக்களை ரத்து செய்து, அவர்களை நாடுகடத்த முயன்றமை தொடர்பான வழக்கிலேயே இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/58dfbde7-0bcc-4502-ba63-abb4765ecaba/26-6a93ee82b0b32.webp' /></p><p>

கலிபோர்னியா மாவட்ட நீதிபதி நோயல் வைஸ் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளார்.</p><p>

90 பக்கங்களைக் கொண்ட தீர்ப்பில், அமெரிக்காவில் கருத்துச் சுதந்திரம் என்பது மக்களுக்குச் சொந்தமானது என்றும், அதனைப் பறிக்கும் அதிகாரம் அரசாங்கத்திற்கு இல்லை என்றும் நீதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p>
மேலும், அரசாங்கத்தையும் அதன் தலைவர்களையும் விமர்சித்து வெளிப்படையாகப் பேசுவது, நாட்டின் ஜனநாயகத்தின் ஆரோக்கியத்தை வெளிப்படுத்தும் முக்கிய அம்சம் என்றும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p>

கொலம்பியா பல்கலைக்கழகத்தின் பட்டதாரி மாணவரும், மாணவர் அமைப்புகளின் முக்கியப் பேச்சாளருமான மஹ்மூத் கலீல் 2025 மார்ச் மாதம் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, சர்வதேச மாணவர்களுக்கு எதிரான நிர்வாகத்தின் நடவடிக்கைகள் தீவிரமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
தன்னை நாடுகடத்துவதற்கு எதிராகத் தனியான வழக்கில் போராடி வரும் மஹ்மூத் கலீல், தற்போது வழங்கப்பட்டுள்ள நீதிமன்றத் தீர்ப்பை வரவேற்றுள்ளார்.</p>]]></content>
            <updated>2026-08-30T08:49:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[தங்க இறக்குமதி வரி 15% இல் இருந்து 6%-ஆக குறையுமா? மத்திய அரசு ஆலோசனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/gold-import-tax-cut-will-the-price-drop-1788077555"></link>
            <id>https://manithan.com/article/gold-import-tax-cut-will-the-price-drop-1788077555</id>
            <summary type="text">Tax Reduction: தங்கத்தின் இறக்குமதி வரியை தற்போதைய 15 சதவீதத்தில் இருந்து மீண்டும் 6 சதவீதமாகக் குறைப்பது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருவதாக தகவல்...</summary>
            <content type="html"><![CDATA[<p></p><p></p><p><b>Tax Reduction: </b>தங்கத்தின் இறக்குமதி வரியை தற்போதைய 15 சதவீதத்தில் இருந்து மீண்டும் 6 சதவீதமாகக் குறைப்பது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p> இறக்குமதி வரி உயர்வால் சட்டவிரோத தங்கக் கடத்தல் அதிகரித்துள்ளதாக நகைக்கடை உரிமையாளர்கள் மற்றும் தங்க வர்த்தகத் துறையினர் தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில், இந்த ஆலோசனை முக்கியத்துவம் பெற்றுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/42353d3d-f762-4b7c-9c54-065efc147045/26-6a93ed0a26f19.webp' /></p><p>கடந்த மே மாதத்தில் ஈரான்-அமெரிக்கா இடையிலான மோதல் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்தது.</p><p>இதன் தாக்கமாக இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பில் அழுத்தம் ஏற்படும் சூழல் உருவானது. இதையடுத்து, நாட்டின் அந்நியச் செலாவணி வெளியேற்றத்தை கட்டுப்படுத்தும் நோக்கில், அத்தியாவசியமற்ற தங்கக் கொள்முதலை குறைக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்தார்.&nbsp;</p><p>

இதன் தொடர்ச்சியாக, தங்கத்தின் இறக்குமதியை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக அதன் இறக்குமதி வரி 6 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக உயர்த்தப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/666fa9ff-260a-4215-abcb-1f15376ca5a9/26-6a93ed0acbd3c.webp' /></p><p> </p><p>வரி உயர்வின் நோக்கம் தங்க இறக்குமதியை குறைப்பதாக இருந்தாலும், அதனால் உள்நாட்டு சந்தையில் தங்கத்தின் விலை மேலும் அதிகரித்ததுடன், சட்டவிரோதமாக தங்கத்தை நாட்டுக்குள் கொண்டு வரும் கடத்தல் நடவடிக்கைகளும் அதிகரித்துள்ளதாக நகைக்கடை உரிமையாளர்கள் தரப்பில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.</p><h2>தங்கக் கடத்தலை கட்டுப்படுத்த புதிய நடவடிக்கை</h2><p>
</p><p>
இதனால், சட்டப்பூர்வமான தங்க இறக்குமதியை ஊக்குவிக்கும் வகையிலும், கடத்தலை கட்டுப்படுத்தும் வகையிலும் இறக்குமதி வரியை மீண்டும் குறைக்க வேண்டும் என நகைத் தொழில் துறையினர் மத்திய அரசிடம் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
</p><p>
இந்த கோரிக்கைகளைத் தொடர்ந்து, தங்கத்தின் இறக்குமதி வரியை தற்போதைய 15 சதவீதத்தில் இருந்து மீண்டும் 6 சதவீதமாகக் குறைப்பது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. </p><p>அவ்வாறு வரி குறைக்கப்பட்டால், தங்கத்தின் விலையில் குறிப்பிடத்தக்க அளவு மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ca8467d4-7026-4a23-904b-661f6c698af3/26-6a93ed0b80ff4.webp' /></p><p></p><p>

மேலும், மின்னணு சாதனங்கள் உள்ளிட்ட பல்வேறு தொழில்துறைகளில் வெள்ளி முக்கிய மூலப்பொருளாகப் பயன்படுத்தப்படுவதால், வெள்ளி மீதான இறக்குமதி வரியையும் குறைப்பது குறித்து மத்திய அரசு பரிசீலிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.</p><p>

தங்கத்தின் இறக்குமதி வரி மீண்டும் 6 சதவீதமாகக் குறைக்கப்பட்டால், அதன் தாக்கம் சந்தை விலையிலும் பிரதிபலிக்கலாம். இதனால் ஒரு சவரன் தங்கத்தின் விலை சுமார் ரூ.10,000 வரை குறைய வாய்ப்புள்ளதாக சில நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8e9bc480-b53d-474d-a723-184e8de1c6d4/26-6a93ed0c31725.webp' /></p><p> </p>மேலும், மின்னணு சாதனத் தயாரிப்புகளுக்கு வெள்ளி முக்கியத் தேவையாக உள்ளதால், வெள்ளி மீதான வரியும் குறைக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.&nbsp;<p></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b></td></tr></tbody></table><p></p><p><br></p><p><br></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-30T08:47:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் அடுத்த ஆண்டு தொடக்கம் மின்சார தொடருந்து போக்குவரத்து! 80 பில்லியன் ரூபா ஒதுக்கீடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/electric-train-service-sri-lanka-80-billion-1788078791"></link>
            <id>https://tamilwin.com/article/electric-train-service-sri-lanka-80-billion-1788078791</id>
            <summary type="text">இலங்கையில் அடுத்த ஆண்டு தொடக்கம் மின்சார தொடருந்து போக்குவரத்தை அறிமுகப்படுத்த 80 பில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இலங்கைப் புகையிரத திண...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் அடுத்த ஆண்டு தொடக்கம் மின்சார தொடருந்து போக்குவரத்தை அறிமுகப்படுத்த 80 பில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.</p><p>

இலங்கைப் புகையிரத திணைக்களத்தின் பொதுமுகாமையாளர் அலுவலகம் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் இந்தத் தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><h2>80 பில்லியன்</h2><p>
</p><p>
அதில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இலங்கையின் பொதுப் போக்குவரத்து கட்டமைப்பை நவீனமயமாக்கும் நோக்கில், 80 பில்லியன் ரூபா மதிப்பீட்டில் மின்சார தொடருந்து சேவைத் திட்டத்தின் கட்டுமானப் பணிகள் அடுத்த ஆண்டு ஆரம்பிக்கப்படவுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a41d43af-b5cd-46f1-9c2c-400c6b55814b/26-6a93ed2e3fb5f.webp' /></p><p>
</p><p>
திட்டத்தின் ஆரம்பகட்ட பணிகள் கொழும்பு மருதானை தொடருந்து&nbsp; நிலையத்திலிருந்து ராகம, பாணந்துறை மற்றும் மலவத்த உள்ளிட்ட முக்கிய புறநகர் பகுதிகளை இணைக்கும் பிரதான பாதைகளில் முன்னெடுக்கப்படவுள்ளது.
</p><p>
இதனைத் தொடர்ந்து, திட்டம் நாட்டின் ஏனைய பிராந்தியங்களுக்கும் விரிவுபடுத்தப்படவுள்ளது.</p><p>

மின்சார தொடருந்து சேவை அறிமுகப்படுத்தப்படுவதன் மூலம், பயணிகளுக்கு விரைவான, திறமையான மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த பொதுப் போக்குவரத்து வசதியை வழங்குவதே அரசாங்கத்தின் நோக்கம் என்றும் புகையிரத திணைக்கள பொதுமுகாமையாளர் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-30T08:43:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yoosuf</name>
            </author>
            <title type="text"><![CDATA[கந்தளாயில் 10 இலட்சம் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான போதைப்பொருளுடன் இருவர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/one-person-arrested-with-drugs-1788078028"></link>
            <id>https://tamilwin.com/article/one-person-arrested-with-drugs-1788078028</id>
            <summary type="text">கந்தளாயில் - அக்போபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சீனிபுர முதலாம் பிரிவுக்கு
அண்மித்த பகுதியில் நேற்று (29.08.2026) மாலை மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை
நடவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கந்தளாயில் - அக்போபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சீனிபுர முதலாம் பிரிவுக்கு
அண்மித்த பகுதியில் நேற்று (29.08.2026) மாலை மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை
நடவடிக்கையின் போது, 10 இலட்சம் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான சுமார் 60 கிராம்
போதைப்பொருளுடன் இருவர் அக்போபுர பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p>
கந்தளாயிலிருந்து கபரணைக்கு கொண்டு செல்லத் தயாராக இருந்த நிலையில் குறித்த
போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><h2>கைதானவர்கள்</h2><p>

கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் சீனிபுர பகுதியைச் சேர்ந்த 33 வயதுடையவர்
எனவும், மற்றையவர் கபரண திகம்பத்த பகுதியை சேர்ந்த 33 வயதுடையவர் எனவும்
அக்போபுர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e8a42a3d-4052-4f00-bed5-19a7fdbe7435/26-6a93eda908cc9.webp' /></p><p>
</p><p>
மேலும், குறித்த சந்தேகநபர்களிடமிருந்து மோட்டார் சைக்கிள் ஒன்றும்
பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது.</p><p>
</p><p>
கைது செய்யப்பட்ட இருவரும் இன்று நீதிமன்றத்தில்
முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.
</p><p>
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்போபுர பொலிஸார் முன்னெடுத்து
வருகின்றமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-30T08:42:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீண்ட விடுமுறையின் பின் கொழும்பு திரும்புவோரின் கவனத்திற்கு ; சாரதிகளுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/colombo-returnees-urged-to-stay-alert-1788078778"></link>
            <id>https://jvpnews.com/article/colombo-returnees-urged-to-stay-alert-1788078778</id>
            <summary type="text">&amp;nbsp;நீண்ட விடுமுறை முடிவடைந்துள்ள நிலையில், வெளிமாவட்டங்களில் உள்ள பொதுமக்கள் மீண்டும் கொழும்பு திரும்புவதற்காக இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தொடர...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">&nbsp;நீண்ட விடுமுறை முடிவடைந்துள்ள நிலையில், வெளிமாவட்டங்களில் உள்ள பொதுமக்கள் மீண்டும் கொழும்பு திரும்புவதற்காக இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தொடருந்து திணைக்களம் ஆகியவை இன்று முதல் விசேட போக்குவரத்து சேவைகளை ஆரம்பித்துள்ளன.</p><p style="text-align: justify; ">

மாத்தறை, காலி மற்றும் கண்டி உள்ளிட்ட பல முக்கிய பகுதிகளில் இருந்து கொழும்பிற்கு திரும்பும் பயணிகளின் தேவையை கருத்திற் கொண்டு மேலதிக பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் சஜீவ கனகரத்ன தெரிவித்துள்ளார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f5151811-c8f1-4213-b869-87b3a54afd3f/26-6a93eabbc118e.webp' /></p><h2 style="text-align: justify; ">சட்ட நடவடிக்கை</h2><p>
</p><p style="text-align: justify; ">
இதற்கான விசேட ஏற்பாடுகள் குறித்து அனைத்து பிராந்திய அலுவலகங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
</p><p style="text-align: justify; ">
அதேவேளை, போதைப்பொருள் பயன்படுத்திய நிலையில் வாகனங்களை இயக்கும் பேருந்து சாரதிகளுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தலைவர் எச்சரித்துள்ளார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">

நீண்ட விடுமுறையின் தொடக்கத்தில் நடத்தப்பட்ட சோதனைகளில், கணிசமான எண்ணிக்கையிலான பேருந்து சாரதிகள் போதைப்பொருள் பயன்படுத்தியிருந்தது தெரியவந்ததை அடுத்து இந்த நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; ">
இதேவேளை, பயணிகளின் வசதிக்காக அநுராதபுரத்தில் இருந்து மாத்தறை வரை இன்று விசேட தொடருந்து சேவையும் இயக்கப்படுவதாக தொடருந்து ஊடகப் பேச்சாளர் அசாங்க சமரசிங்க தெரிவித்துள்ளார்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-30T08:33:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் மரத்தில் மோதி கார் விபத்து: 35 வயதுப் பெண் பலி; மகள் உட்பட 3 சிறுமிகள் காயம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/35-year-old-woman-killed-three-girls-injured-1788069118"></link>
            <id>https://canadamirror.com/article/35-year-old-woman-killed-three-girls-injured-1788069118</id>
            <summary type="text">கனடாவின் லவால் நகரில் இடம்பெற்ற கோரக் கார் விபத்தில் 35 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மூன்று சிறுமிகள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் லவால் நகரில் இடம்பெற்ற கோரக் கார் விபத்தில் 35 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மூன்று சிறுமிகள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
</p><p>லவாலின் 'செயிண்ட்-தொரோதே' பகுதியில் அமைந்துள்ள 'செயிண்ட்-மார்ட்டின் பூலேவார்ட் வெஸ்ட்' வீதியில் வெள்ளிக்கிழமை இரவு 10 மணியளவில் இக்கோர விபத்து நிகழ்ந்துள்ளது.</p><p>
ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் வீதியின் ஓரத்தில் இருந்த மரத்தின் மீது பலமாக மோதி விபத்துக்குள்ளானது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0a3de205-97d6-4b95-8195-df13513a924f/26-6a93c4ff69b08.webp' /></p><p>
காரைச் செலுத்திய 35 வயதுடைய பெண் படுகாயமடைந்து மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
</p><p>காரில் பயணித்த உயிரிழந்த பெண்ணின் மகள் மற்றும் அவரது இரண்டு தோழிகள் ஆகிய மூன்று சிறுமிகள் காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
</p><p> எனினும் அவர்களின் காயங்கள் உயிருக்கு ஆபத்தானவை அல்ல என தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>விபத்து ஏற்பட்டதற்கான பின்னணி மற்றும் சூழ்நிலைகள் குறித்து லவால் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-30T08:30:10+00:00</updated>
        </entry>
    </feed>
