<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-08-02T04:42:58+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[தீவிரமடையும் தென்மேற்கு பருவமழை! பல பகுதிகளில் பலத்த மழை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/weather-alert-in-sri-lanka-1785643403"></link>
            <id>https://tamilwin.com/article/weather-alert-in-sri-lanka-1785643403</id>
            <summary type="text">நாட்டில் தற்போது நிலவும் தென்மேற்கு பருவமழை காரணமாக, நாட்டின் பல பகுதிகளில் மழை நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.&amp;nbsp;

வளிமண...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டில் தற்போது நிலவும் தென்மேற்கு பருவமழை காரணமாக, நாட்டின் பல பகுதிகளில் மழை நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.&nbsp;</p><p>

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>பலத்த மழை பெய்ய வாய்ப்பு</h2><p></p><p>
</p><p>
இதன்படி இன்று (02.08.2026) சப்ரகமுவ மாகாணத்திலும், கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களின் சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.
</p><p>
மேலும் ஊவா மாகாணத்திலும், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களிலும் பிற்பகல் 2 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
</p><p>இதேவேளை நாட்டின் ஏனைய பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-02T04:39:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரான் மீதான தாக்குதல்களை இடைநிறுத்த ட்ரம்ப் தீர்மானம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/trump-s-decision-to-suspend-attacks-on-iran-1785645542"></link>
            <id>https://canadamirror.com/article/trump-s-decision-to-suspend-attacks-on-iran-1785645542</id>
            <summary type="text">ஈரானின் அணுசக்தி இலக்குகளைக் கட்டுப்படுத்தி, ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கான உடன்படிக்கை விரைவில் எட்டப்படும் வரை, ஈரான் மீதான புதிய தாக்குதலை...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானின் அணுசக்தி இலக்குகளைக் கட்டுப்படுத்தி, ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கான உடன்படிக்கை விரைவில் எட்டப்படும் வரை, ஈரான் மீதான புதிய தாக்குதலைத் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.</p><p> 

நீரிணையை உடனடியாக, முழுமையாக மீண்டும் திறப்பதற்கும், ஈரானின் அணுசக்தி அச்சுறுத்தலுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கும் வழிவகுக்கும் உடன்படிக்கை ஒன்றை கொண்டுவர ஈரானும் பிற மத்திய கிழக்கு நாடுகளும் அவகாசம் கோரியதாக ட்ரம்ப் தனது 'டிரூத்' சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e3704af1-e7d8-45dd-9ee2-e078ee768ae0/26-6a6ec9e80310d.webp' /></p><p>இந்தக் கோரிக்கையின் அடிப்படையில், உலகின் எதிர்கால நலன் கருதியும், அதேபோன்று வளமான மற்றும் வெற்றிகரமான ஈரானின் இருப்புக்காகவும், விரைவாக உடன்படிக்கை ஒன்றை எட்ட முடியும் என்ற நிபந்தனைக்கு உட்பட்டு, தாக்குதலை ரத்து செய்ய தாம் சம்மதித்துள்ளேன் என்றும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். </p><p>

ஈரானிய இலக்குகள் மீது புதிய தாக்குதல்களை நடத்துவது தொடர்பான ட்ரம்பின் அச்சுறுத்தல்களை அமெரிக்கப் படைகள் முன்னெடுத்தால், அதற்கு தீர்க்கமான முறையில் பதிலடி கொடுக்கப்படும் என்றும் ஈரான் தெரிவித்துள்ளது. </p><p>

பல முக்கிய உட்கட்டமைப்புகள் மீது ஈரானினால் ஏவப்பட்ட ட்ரோன்களை அழித்துள்ளதாக குவைத் இராணுவம் அறிவித்த சில மணித்தியாலங்களிலேயே, துருக்கி, பாகிஸ்தான் மற்றும் சவூதி உயர் அதிகாரிகளுடன் சனிக்கிழமை ஈரான் வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அராக்சி நடத்திய தனித்தனி தொலைபேசி உரையாடல்களின் போது இக்கருத்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.</p><p> 

எந்தவொரு ஆக்கிரமிப்புக்கும் ஈரான் தீர்க்கமாக பதிலளிக்கும் எனக் கூறிய அராக்சி, அமெரிக்காவின் பிராந்திய நிலைகுலைவு நடவடிக்கைகள் மற்றும் பிராந்திய பாதுகாப்பின்மை அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறுகளின் விளைவுகள் குறித்தும் விவாதித்ததாக அராக்சியின் டெலிகிராம் கணக்கில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-02T04:39:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Fathima</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழகத்துக்கு 25,000 கன அடி நீர் திறப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/water-released-to-tamil-nadu-1785645255"></link>
            <id>https://ibctamilnadu.com/article/water-released-to-tamil-nadu-1785645255</id>
            <summary type="text">கனமழையால் கர்நாடகா அணைகள் நிரம்பி வருவதால் தமிழ்நாட்டுக்கு திறக்கப்படும் நீரின் அளவு விநாடிக்கு 25,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

கர்நாடகாவின்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனமழையால் கர்நாடகா அணைகள் நிரம்பி வருவதால் தமிழ்நாட்டுக்கு திறக்கப்படும் நீரின் அளவு விநாடிக்கு 25,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
</p><p>
கர்நாடகாவின் கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துக்கொண்டிருப்பதால் அணையின் பாதுகாப்பு கருதி தமிழகத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
</p><p>
நேற்று இரவு முதல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்துக்குள் செவ்வாய்கிழமை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
</p><p>
விநாடிக்கு 25,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e03ea45f-f2c4-497c-8046-e1d18f1313b4/26-6a6ec940af7ef.webp' /><br></p>]]></content>
            <updated>2026-08-02T04:36:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் நடைமுறைக்கு வரும் தடை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/scholarship-exam-tution-classes-banned-1785643860"></link>
            <id>https://tamilwin.com/article/scholarship-exam-tution-classes-banned-1785643860</id>
            <summary type="text">தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான மேலதிக வகுப்புக்கள் எதிர்வரும் 5ஆம் திகதி நள்ளிரவுக்குள் முதல் முடிவுறுத்தப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.&amp;...</summary>
            <content type="html"><![CDATA[<p>தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான மேலதிக வகுப்புக்கள் எதிர்வரும் 5ஆம் திகதி நள்ளிரவுக்குள் முதல் முடிவுறுத்தப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.&nbsp;</p><p>புலமைப்பரிசில் பரீட்சைக்கான மேலதிக வகுப்புக்களு 5ஆம் திகதி நள்ளிரவு முதல் தடை விதிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.&nbsp;&nbsp;</p><p></p><h2>நடைமுறைக்கு வரும் தடை&nbsp;</h2><p>இதன்படி, புலமைப்பரிசில் பரீட்சைக்கான பயிற்சி வகுப்புக்கள், கருத்தரங்குகள், விரிவுரைகள் உள்ளிட்டவை 5ஆம் திகதி நள்ளிரவுக்கு முதல் முடிவுறுத்தப்பட&nbsp; வேண்டும்.&nbsp;</p><p>குறிப்பிட்ட காலத்தில்,&nbsp; புலமைப்பரிசில் பரீட்சைக்கான&nbsp; மாதிரி வினாக்களைக் கொண்ட வினாத்தாள்களை அச்சிடுவதும் விநியோகிப்பதும் தடை செய்யப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bba90d4d-f858-4665-a3fd-52b0ee61bf67/26-6a6ec8457e1b6.webp' />&nbsp;&nbsp;</p><p>அத்துடன், சுவரொட்டிகள், துண்டுப் பிரசுரங்கள் மற்றும் இணைய இணைப்புக்களின் ஊடான கல்வி நடவடிக்கைகள் உள்ளிட்டவையும் தடை செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது,&nbsp;</p><p>எதிர்வரும் 9ஆம் திகதி நாடளாவிய ரீதியில் உள்ள 2,723 பரீட்சை நிலையங்களில் புலமைப்பரிசில் பரீட்சை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-02T04:32:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Tony</name>
            </author>
            <title type="text"><![CDATA[சாய் பல்லவியை விட சைட் ஆர்டிஸ்ட் நல்லாருக்காங்க, ரசிகர்கள் தாக்குதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/sai-pallavi-getting-troll-for-sita-role-1785636920"></link>
            <id>https://viduppu.com/article/sai-pallavi-getting-troll-for-sita-role-1785636920</id>
            <summary type="text">சாய் பல்லவி இந்திய சினிமாவின் முக்கிய நடிகை ஆகிவிட்டார். ஆம், இவர் தற்போது தமிழ், தெலுங்கு தாண்டி ஹிந்தியிலும் கால் பதித்து விட்டார். அமீர்கான் மகனுக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>சாய் பல்லவி இந்திய சினிமாவின் முக்கிய நடிகை ஆகிவிட்டார். ஆம், இவர் தற்போது தமிழ், தெலுங்கு தாண்டி ஹிந்தியிலும் கால் பதித்து விட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ba4fa238-3bbf-4610-8b7f-24cc34472a96/26-6a6ea83b80878.webp' /></p><p> </p><p>அமீர்கான் மகனுக்கு ஜோடியாக இவர் ஏக் தீன் என்ற படத்தில் நடித்தார், அதை தொடர்ந்து தற்போது ராமாயணம் படத்தில் சீதாவாக நடித்துள்ளார், இந்த படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வந்தது.</p><p>இதில் இவர் சீதாவாக வரும் போது அருகில் ஒரு ஜுனியர் ஆர்டிஸ்ட் பெண் இன்னும் அழகாக இருக்கிறார், அவரை சீதாவாக நடிக்க வைத்திருக்கலாம் என்பது போல் பல மோசமான கமெண்ட்ஸுகளை ஒரு சில ரசிகர்கள் கூறி வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9c8b21b2-13d8-4b71-ab26-409a73bd5932/26-6a6ea83c35459.webp' /></p><p> இதற்கு பல ரசிகர்கள் கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். சாய் பல்லவி மிக சிறந்த நடிகை, இப்படி நடிப்பை பார்க்காமல் அழகை வைத்து பேசுவது என்பது தவறு என பதிலடி தந்து வருகின்றனர்.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">This lady completely stole the spotlight and overshadowed Sai Pallavi in that moment 👀🔥<a href="https://x.com/hashtag/SaiPallavi?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#SaiPallavi</a> <a href="https://x.com/hashtag/KollywoodWire?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#KollywoodWire</a> <a href="https://t.co/GssPuEWGH6">pic.twitter.com/GssPuEWGH6</a></p>&mdash; Kollywood Wire (@KollywoodWire) <a href="https://x.com/KollywoodWire/status/2083286045576266125?ref_src=twsrc%5Etfw">July 31, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p>]]></content>
            <updated>2026-08-02T04:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[மஹர சிறைச்சாலைக் கலவரத்தினால் ஏற்பட்ட சேதம் குறித்து வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/mahara-prison-unrest-damage-caused-in-prison-1785643509"></link>
            <id>https://ibctamil.com/article/mahara-prison-unrest-damage-caused-in-prison-1785643509</id>
            <summary type="text">மஹர சிறைச்சாலையில் நேற்று (01) பிற்பகல் ஏற்பட்ட கலவரத்தினால் குறித்த வளாகத்தில் ஏற்பட்டுள்ள சேத விபரங்கள் குறித்து&amp;nbsp;சிறைச்சாலைகள் திணைக்களத்தின் ஊ...</summary>
            <content type="html"><![CDATA[<p>மஹர சிறைச்சாலையில் நேற்று (01) பிற்பகல் ஏற்பட்ட கலவரத்தினால் குறித்த வளாகத்தில் ஏற்பட்டுள்ள சேத விபரங்கள் குறித்து&nbsp;சிறைச்சாலைகள் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் ஏ.சீ. கஜநாயக்க கருத்து தெரிவித்துள்ளார்.</p><p>அதன்படி,&nbsp;சிறைச்சாலையின் சமையலறை, புனர்வாழ்வுக் கட்டிடம் மற்றும் அலுவலகம், தலைமை சிறைக்கட்டுப்பாட்டாளர் அலுவலகம் மற்றும் சிறைச்சாலை வைத்தியசாலை என்பன சேதமாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.</p><p>இன்று (02) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இந்த விடயங்களைத் தெரிவித்தார்.&nbsp;</p><p></p><h2>விசாரணைகள் முன்னெடுக்கப்படும்</h2><p>இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், மஹர சிறைச்சாலையினுள் ஏற்பட்ட பதற்றநிலை தொடர்பாக உடனடியாக விசாரணைகள் ஆரம்பிக்கப்படும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/62e9bf14-40c6-47c4-9292-3210d20800bb/26-6a6ec654e1dcb.webp' /></p><p>கவலரத்தினால் சிறைச்சாலையின் சமையலறை, புனர்வாழ்வுக் கட்டிடம் மற்றும் அலுவலகம், தலைமை சிறைக்கட்டுப்பாட்டாளர் அலுவலகம் மற்றும் சிறைச்சாலை வைத்தியசாலை என்பன சேதமாகியுள்ளது.</p><p>குறித்த பதற்றமான சூழ்நிலைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை, அது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படும்“ என சிறைச்சாலைகள் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-02T04:29:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[என்னை பார்த்தால் உங்களுக்கு எப்படி தோன்றுகிறது? நடிகை அனுபமா பரமேஸ்வரன் பேச்சு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/anupama-parameswaran-talk-about-emotional-posts-1785644661"></link>
            <id>https://cineulagam.com/article/anupama-parameswaran-talk-about-emotional-posts-1785644661</id>
            <summary type="text">அனுபமா பரமேஸ்வரன்இளைஞர்களின் மனம் கவர்ந்த நடிகைகளில் ஒருவர் அனுபமா பரமேஸ்வரன். மலையாளத்தில் வெளியான பிரேமம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர், தனுஷி...</summary>
            <content type="html"><![CDATA[<h2>அனுபமா பரமேஸ்வரன்</h2><p>இளைஞர்களின் மனம் கவர்ந்த நடிகைகளில் ஒருவர் அனுபமா பரமேஸ்வரன். மலையாளத்தில் வெளியான பிரேமம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர், தனுஷின் கொடி படத்தின் மூலம் தமிழில் என்ட்ரி தந்தார்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ba705485-44ab-4459-b17a-11b7df683af9/26-6a6ec67936a1d.webp' /></p><p>இதன்பின் சைரன், தள்ளிபோகாதே, டிராகன், பைசன், லாக் டவுன் உள்ளிட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அடுத்ததாக இவர் நடிப்பில் 'கிரேசி கல்யாணம்' எனும் திரைப்படம் வெளிவரவுள்ளது.</p><h2>நடிகை ஓபன் டாக்</h2><p>
</p><p>
இந்நிலையில், இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் நடிகை <a href="https://www.youtube.com/watch?v=ePbAQJMqL0g" target="_blank">அனுபமா </a>பரமேஸ்வரன் பேசியது இணையத்தில் வைரலாகி வருகிறது.</p><p>

அவர் கூறியதாவது, "நான் மிகவும் சிறப்பாக இருக்கிறேன், என்னை பார்த்தால் உங்களுக்கு எப்படி தோன்றுகிறது? ஆம் அது உண்மைதான். நான் ஒரு கடினமான ஆண்டை கடந்து வந்தேன். அதிலிருந்து மீண்டு வந்ததால்தான், இன்று என்னால் இவ்வளவு வெளிப்படையாகவும், மகிழ்ச்சியாகவும் பேச முடிகிறது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0dc84bd5-f119-469a-8af3-181a81b61a72/26-6a6ec67879d1c.webp' /></p><p>நான் இப்போது என் வாழ்வில் மிகவும் அமைதியான மற்றும் நல்லதொரு மனநிலையில் இருக்கிறேன். 'கிரேசி கல்யாணம்' படப்பிடிப்பின் போது நான் இதே மனநிலையில் இருந்திருந்தால் படம் இன்னும் சிறப்பாக கிரேசியாக வந்திருக்கும். ஆனால், இப்போது நான் அந்த நிலையில் இல்லை. இப்போது நான் மிகவும் நன்றாக உள்ளேன்" என்றார்.</p><p></p><p>மேலும் பேசிய அவர், "இது எனது சொந்த சமூக வலைதள கணக்கு, அதில் என்ன பதிவிட வேண்டும் என்பதை நான் தான் தீர்மானிக்க வேண்டும். நான் எதையும் வேண்டுமென்றே வெளிப்படுத்தவில்லை. மாறாக ஒரு பெண்ணாக எனது வாழ்வில் ஏற்பட்ட மாற்றங்களையும், ட்ரான்சிஷன் (transition) மட்டும் பகிர்துகொண்டேன். அதற்காக நான் பெருமைப்படுகிறேன். என் வாழ்க்கையை பற்றியோ என்னைப்பற்றியோ வெளியில் உள்ளவர்களுக்கு என்ன தெரியும்?" என கூறினார்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/786179f7-0154-490a-b8a5-58694b59d975/26-6a6ec679dd41d.webp' /></p><p> </p><p>

சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அனுபமா பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். இவருக்கு பிரேக்கப் ஆகிவிட்டது என நெட்டிசன்கள் இடையே கிசுகிசுக்கப்பட்டது. அதுகுறித்து தான் மனம் திறந்து பேசியுள்ளார் என தற்போது கூறப்படுகிறது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-02T04:20:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[இங்கிலாந்து முழுவதும் பேருந்துகளில் சிறார்களுக்கு... தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய மாற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/england-bus-fares-changing-1785644467"></link>
            <id>https://news.lankasri.com/article/england-bus-fares-changing-1785644467</id>
            <summary type="text">இங்கிலாந்து முழுவதும் பேருந்துகளில் சிறார்களுக்கு கட்டணமில்லா சேவை வழங்கப்படுகிறது. ஆகஸ்ட் 1 முதல் இத்திட்டத்தைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.இலவசப் பயணம்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இங்கிலாந்து முழுவதும் பேருந்துகளில் சிறார்களுக்கு கட்டணமில்லா சேவை வழங்கப்படுகிறது. ஆகஸ்ட் 1 முதல் இத்திட்டத்தைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.</p><h2>இலவசப் பயணம்</h2><p>
</p><p>பொதுவாக, ஆண்டு முழுவதும் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளும், அரசு ஓய்வூதியம் பெறும் வயதை (66) எட்டிய பெரியவர்களும் உள்ளூர் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம்;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/febd4d21-3d7c-480f-b126-10f81dab84f0/26-6a6ec8f995142.webp' /></p><p> </p><p>அதேவேளையில், லண்டனுக்கு வெளியே 5 முதல் 15 வயதுக்குட்பட்டவர்கள் 2 பவுண்டுகள் அல்லது அதற்கும் குறைவான கட்டணத்தைச் செலுத்த வேண்டும். </p><p>ஆனால், ஆகஸ்ட் 1 முதல் இம்மாத இறுதி வரை, இத்திட்டத்தில் பங்கேற்கும் பேருந்துகளில் 15 வயது வரையிலான அனைத்துக் குழந்தைகளும் வரம்பற்ற இலவசப் பயணத்தை மேற்கொள்ள முடியும். </p><p>இங்கிலாந்தில் உள்ள குடும்பங்களை வெகுவாகப் பாதித்து வரும் வாழ்க்கைச் செலவு நெருக்கடியைக் குறைப்பதற்காக மேற்கொள்ளப்படும் 100 மில்லியன் பவுண்டு மதிப்பிலான மிகப்பெரிய அளவிலான முயற்சியின் ஒரு பகுதியாகவே, மே மாதத்தில் அரசாங்கத்தால் இந்த இலவசப் பயணத் திட்டம் அறிவிக்கப்பட்டது.</p><p></p><p> </p><p>இதில் மிகச் சிறந்த விடயம் என்னவென்றால், இதைப் பயன்படுத்திக்கொள்ள எந்தவிதப் பதிவும் தேவையில்லை; 15 வயது வரையிலான அனைத்துக் குழந்தைகளும் உடனடியாக இதில் ஈடுபடத் தொடங்கலாம். </p><p>இந்தத் திட்டமானது, மேற்கு இங்கிலாந்து முழுவதும் ஏற்கனவே நடைமுறையில் உள்ள ஒரு திட்டத்தைப் போன்றது. 'கிட்ஸ் கோ ஃப்ரீ' (Kids Go Free) என்ற இந்த முன்முயற்சியானது, கிறிஸ்துமஸ் மற்றும் ஈஸ்டர் உள்ளிட்ட பாடசாலை விடுமுறை நாட்களில், </p><p>பாத் &amp; நார்த் ஈஸ்ட் சோமர்செட், பிரிஸ்டல், நார்த் சோமர்செட் மற்றும் சவுத் க்ளௌசெஸ்டர் ஆகிய பகுதிகளில் குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்க அனுமதிக்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/16eb8077-c759-4ed3-85da-7131e2d1811c/26-6a6ec8f7ed013.webp' /></p><p> </p><p>மேற்கு இங்கிலாந்தின் லேபர் கட்சி மேயரான ஹெலன் காட்வின் (Helen Godwin) இது தொடர்பில் தெரிவிக்கையில், Kids Go Free திட்டம் இதுவரை 1.4 மில்லியன் இலவசப் பயணங்களை வழங்கியுள்ளது என்றார்.</p><h2>2 பவுண்டுகளாக மாற்றம்</h2><p> </p><p>இந்த நிலையில், ஒரு பயணத்திற்கு 1.50 பவுண்டுகள் கட்டணம் செலுத்தி வாரந்தோறும் சென்று வரும் இரண்டு குழந்தைகளைக் கொண்ட ஒரு குடும்பத்திற்கு, இந்த இலவச பேருந்துத் திட்டத்தின் மூலம் தோராயமாக 27 பவுண்டுகள் சேமிக்க முடியும் என்று அரசாங்கம் மதிப்பிட்டுள்ளது. </p><p>ஒரு குழந்தை எத்தனை முறை வேண்டுமானாலும் பயணம் மேற்கொள்ளலாம் என்பதுடன், எந்த வரம்பும் இருக்காது என்றும் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். </p><p>நாடு முழுவதும் பயணக் கட்டணங்கள் மாறுபட்டாலும், இங்கிலாந்தில் சராசரி பேருந்துக் கட்டணம் பொதுவாக 3 பவுண்டுகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது; இருப்பினும், 2027 ஜனவரியில் இது 2 பவுண்டுகளாக மாற்றப்படவுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/354f68e6-1117-4168-9297-5a798ccd02df/26-6a6ec8f8e2fca.webp' /></p><p> </p><p>லண்டனுக்கு வெளியே, பெரும்பாலான தனிப் பயணச் சீட்டுகளின் விலை 1.50 பவுண்டுகள் முதல் 2 பவுண்டுகள் வரை இருக்கும். ஆகஸ்ட் மாதம் ஒவ்வொரு குழந்தைக்கும் இலவசப் பேருந்துப் பயணம் என்பது, </p><p>பெற்றோர்கள் வெளியூர் பயணங்களைத் திட்டமிடவும், அன்புக்குரியவர்களைச் சந்திக்கவும், விடுமுறையை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ளவும் வழிவகுக்கும் என்று கூறியுள்ள போக்குவரத்துச் செயலாளர் ஹைடி அலெக்சாண்டர், </p><p>குடும்பங்களுக்கு ஏற்படும் கூடுதல் நிதிச் சுமையைக் குறைப்பதற்கு இந்த முயற்சி இன்றியமையாதது எனவும் குறிப்பிட்டுள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-02T04:19:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் பட்டாசு வெடித்து இளைஞர் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/youth-dies-in-firecracker-explosion-in-jaffna-1785643314"></link>
            <id>https://tamilwin.com/article/youth-dies-in-firecracker-explosion-in-jaffna-1785643314</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் - குருநகர் 5 மாடி குடியிருப்பு பகுதியில் இன்று (02) அதிகாலை பட்டாசு வெடித்ததில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

இந்த சம்பவம் இன்று அதி...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் - குருநகர் 5 மாடி குடியிருப்பு பகுதியில் இன்று (02) அதிகாலை பட்டாசு வெடித்ததில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.</p><p> 

இந்த சம்பவம் இன்று அதிகாலை சுமார் 2.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தொிவிக்கப்படுகின்றது.</p><p></p><h2>பொலிஸார் விசாரணை</h2><p> </p><p>மடுமாதா ஆலய யாத்திரைக்காக புறப்படும் வேளையில் பட்டாசுகள் கொளுத்தப்பட்ட நிலையில், அவற்றில் ஒரு பட்டாசு வெடிக்காமல் இருந்த நிலையில், அதனை மீண்டும் வெடிக்க செய்வதற்கு குறித்த இளைஞர் முற்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/944c6d32-f82a-4633-a32b-df4e022e6973/26-6a6ec3481a7d2.webp' /></p><p>

இதன்போது அந்த பட்டாசு திடீரென வெடித்ததில் அவர் பலத்த காயமடைந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. </p><p>

இந்த சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.</p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-02T04:11:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[மஹர சிறைச்சாலை சம்பவத்தின் பின்னணி குறித்து அமைச்சர் விளக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/justice-misniter-explains-about-mahara-prison-1785643810"></link>
            <id>https://tamilwin.com/article/justice-misniter-explains-about-mahara-prison-1785643810</id>
            <summary type="text">மஹர சிறைச்சாலை சம்பவத்தின் பிரதான பின்னணி போதைப் பொருள் கட்டுப்படுத்தல் நடவடிக்கைகள் என நீதி அமைச்சரும் சட்டத்தரணியுமான ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளா...</summary>
            <content type="html"><![CDATA[<p>மஹர சிறைச்சாலை சம்பவத்தின் பிரதான பின்னணி போதைப் பொருள் கட்டுப்படுத்தல் நடவடிக்கைகள் என நீதி அமைச்சரும் சட்டத்தரணியுமான ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.</p><p>
நேற்றைய தினம் மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலையானது, அண்மையில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் நடந்த சம்பவத்திலிருந்து முற்றிலும் வேறுபட்டது என என குறிப்பிட்டுள்ளார்.
</p><p>நீர்கொழும்பில் இடம்பெற்ற சம்பவம் கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலாகும். ஆனால், நேற்றைய தினம் மஹர சிறைச்சாலையில் இடம்பெற்றது கைதிகளுக்கும் சிறைச்சாலை நிர்வாகத்திற்கும் இடையிலான மோதலாகும் என தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/decfda42-e872-4c5e-afbc-a95e85df3a44/26-6a6ec323ed054.webp' /></p><p>
</p><p>சிறைச்சாலைக்குள் போதைப்பொருள் கொண்டு செல்லப்படுவதை முற்றாகக் கட்டுப்படுத்தியமையே நேற்றைய மோதலுக்கு பிரதான காரணமாகும். போதைப்பொருளுக்கு அடிமையான கைதிகளே இந்த மோதலைத் தொடங்கியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>
சிறைச்சாலையில் சதிமுயற்சி நடவடிக்கைகள் சில இடம்பெற்றுள்ளன. நேற்று இரவு கைதிகள் சிலர் பல இடங்களில் சிறைச்சாலையை உடைத்துக்கொண்டு வெளியே தப்பியோட முயற்சித்துள்ளனர். எனினும், அந்த முயற்சிகள் அனைத்தும் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
</p><p>தற்போது சிறைச்சாலையின் பாதுகாப்பை உறுதிசெய்வதற்காக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-02T04:10:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொடூர தாக்குதல் வரிசையின் பின்னணி அடுத்து கோட்டாபய ராஜபக்ச! சிக்கவுள்ள பல சூத்திரதாரிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/gotabaya-rajapaksa-against-easter-bomp-blast-1785638276"></link>
            <id>https://tamilwin.com/article/gotabaya-rajapaksa-against-easter-bomp-blast-1785638276</id>
            <summary type="text">உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற கொடூர தாக்குதலின் பின்னணியில் ஆட்சியை தன்வசப்படுத்திய கோட்டாபய ராஜபக்ச அடுத்த சட்ட நடவடிக்கைகளுக்கு தயாராக இருக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற கொடூர தாக்குதலின் பின்னணியில் ஆட்சியை தன்வசப்படுத்திய கோட்டாபய ராஜபக்ச அடுத்த சட்ட நடவடிக்கைகளுக்கு தயாராக இருக்க வேண்டும் என இலங்கை தொழிலாளர் மக்கள் முன்னணியின் தலைவர் சமீர பெரேரா தெரிவித்துள்ளார்.</p><p>

கொழும்பில் சனிக்கிழமை (01) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,</p><p></p><h2>உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரிகள்&nbsp;</h2><p>
</p><p>
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் இருந்த சூத்திரதாரிகள் எவரும் சட்டத்தின் பிடியில் இருந்து தப்ப முடியாது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b471b052-5321-4125-b43d-b5872692edeb/26-6a6ec0bab42e6.webp' /></p><p>
</p><p>
நேற்றிரவு ஆரம்பமான தொடர் கைது நடவடிக்கைகள் மற்றும் சட்ட நடவடிக்கைகளில் சிக்க இன்னும் பலர் வரிசையில் இருப்பதாகவும், இவர்களுக்கான தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
</p><p>
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய அனைத்துத் தரப்பினருக்கும் எதிராகத் பாரபட்சமின்றிச் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். 

கடமை தவறியமை மற்றும் சதித்திட்டத்துக்கு உடந்தையாக இருந்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் முன்னாள் அரச அதிகாரிகள், இராணுவ மற்றும் பொலிஸ் பிரதானிகள் மற்றும் அரசியல் அதிகாரத்தில் இருந்தவர்கள் அத்தனை பேரும் பொறுப்புக்கூற வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p>

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பொறுப்பிலிருந்து முன்னாள் ஜனாதிபதிகளான மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்ரமசிங்க, கோட்டாபய ராஜபக்ச, அப்போதைய பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ, முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர, அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானி நிலந்த ஜயவர்தன, பிரதான புலனாய்வு அதிகாரி சுரேஷ் சலே, தேசபந்து தென்னகோன் மற்றும் அசாத் மௌலானா உள்ளிட்ட எந்தவொரு தரப்பும் தப்பிக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.</p><h2>கடுமையான சட்ட நடவடிக்கை</h2><p> </p><p>

 உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடத்தப்பட்ட தாக்குதலின் பின்னர் ஆட்சியைத் தன்வசப்படுத்திய கோட்டாபய ராஜபக்ச இந்த தாக்குதலின் பிரதான சந்தேகநபர்களில் ஒருவரான சுரேஷ் சலேவை அரச புலனாய்வுப் பிரிவின் தலைவராக்கி, அனைத்து புலனாய்வு அமைப்புகளையும் அவரது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f17ddcbb-c6dd-45f8-bfa0-58241f14dc51/26-6a6ec0bb628bc.webp' /></p><p> </p><p>

இதன் மூலம் ஆதாரங்களை அழிப்பதற்கும், ஷானி அபேசேகர போன்ற நேர்மையான புலனாய்வு அதிகாரிகளைப் பழிவாங்குவதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.</p><p>கடந்த வாரம் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் மூலம், சதித்திட்டம் ஒன்றுக்கு துணையாகச் செயற்படும் எந்தவொரு அரச அதிகாரிக்கும் கிடைக்கும் அதிகபட்ச தண்டனை என்னவென்பது தெளிவாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது. அந்த தீர்ப்பை நாங்கள் கௌரவிக்கின்றோம்.&nbsp;&nbsp;</p><p> </p><p>

இந்த சம்பவங்களின் பின்னணியில் இருந்த இராணுவ மற்றும் அரசியல் சூத்திரதாரிகள் அனைவரும் எதிர்வரும் காலங்களில் சட்டத்தின் முன் தண்டனையைப் பெறுவது உறுதி. அதிலிருந்து எவராலும் தப்ப முடியாது என்றும், அநுர குமார தலைமையிலான தற்போதைய அரசாங்கத்தில் குற்றவாளிகளுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் கோரியுள்ளார்.</p><p>புலனாய்வு தகவல் கிடைத்தும் உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலைத் தடுக்கத் தவறியதன் மூலம், கடமையைச் செய்யத் தவறியமை மற்றும் கொலைக்கு உடந்தையாக இருந்தமை ஆகிய குற்றச்சாட்டுகளில் குற்றவாளியாகக் காணப்பட்டு முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிரி பெர்னாண்டோ ஆகியோருக்கு (31) திகதி&nbsp;கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்தமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-02T04:00:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[நெருங்கும் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை : வெளியான முக்கிய அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/ban-on-extra-classes-for-grade-5-students-1785639714"></link>
            <id>https://ibctamil.com/article/ban-on-extra-classes-for-grade-5-students-1785639714</id>
            <summary type="text">2026ஆம் ஆண்டிற்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் 9ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் பரீட்சைகள் திணைக்களம் முக்கிய அறிவிப்பு ஒன்றை விடுத்து...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026ஆம் ஆண்டிற்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் 9ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் பரீட்சைகள் திணைக்களம் முக்கிய அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளது.</p><p>அதன்படி, புலமைப்பரிசில் பரீட்சைக்கான மேலதிக வகுப்புகள், பாடநெறி விரிவுரைகள், கருத்தரங்குகள் மற்றும் பயிற்சி வகுப்புகளை நடத்துவதற்கு எதிர்வரும் 05ஆம் திகதி நள்ளிரவுடன் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

இதற்கமைய, பரீட்சை நடவடிக்கைகள் நிறைவடையும் வரை இத்தடை நடைமுறையில் இருக்கும் என அந்த திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.</p><p></p><h2>&nbsp;2,723 பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ளது</h2><p> </p><p>

இக்காலப்பகுதியில், ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கான எதிர்பார்க்கப்படும் வினாக்கள் அடங்கிய வினாத்தாள்களை அச்சிடுவதோ அல்லது விநியோகிப்பதோ கூடாது என வலியுறுத்தகப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c30859b2-213a-4e3a-8a2c-bf9f83392b6f/26-6a6ebebdd8d29.webp' /></p><p>

மேலும், பரீட்சை வினாத்தாள்களுக்குரிய வினாக்கள் அல்லது அதற்கு நிகரான வினாக்களை வழங்குவதாகக் கூறி சுவரொட்டிகள், பதாகைகள், துண்டுப் பிரசுரங்கள், இலத்திரனியல் அல்லது அச்சு ஊடகங்கள் வாயிலாக விளம்பரப்படுத்துவது அல்லது அவ்வாறானவற்றைத் தம்வசம் வைத்திருப்பது முற்றாகத் தடைசெய்யப்பட்டுள்ளது. </p><p>இதேவேளை 2026ஆம் ஆண்டிற்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் 09ஆம் திகதி நாடளாவிய ரீதியில் உள்ள 2,723 பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-02T03:56:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[10 நாட்களில் உலகளவில் ஜனநாயகன் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/jananayagan-movie-10-days-box-office-1785642655"></link>
            <id>https://cineulagam.com/article/jananayagan-movie-10-days-box-office-1785642655</id>
            <summary type="text">ஜனநாயகன்&amp;nbsp;தமிழ் சினிமாவின் வசூல் நாயகனாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வந்த விஜய், தற்போது முதலமைச்சர் ஆகிவிட்டார். கடந்த 2024-ஆம் ஆண்டு அரசியலில் கள...</summary>
            <content type="html"><![CDATA[<h2>ஜனநாயகன்&nbsp;</h2><p>தமிழ் சினிமாவின் வசூல் நாயகனாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வந்த விஜய், தற்போது முதலமைச்சர் ஆகிவிட்டார். கடந்த 2024-ஆம் ஆண்டு அரசியலில் களமிறங்கிய இவர், முழுமையாக சினிமாவிலிருந்து விலகுவதாக கூறி, ஜனநாயகன் தனது கடைசி படம் என்பதையும் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4a9578de-e419-46b7-ad71-917c7273860e/26-6a6ebea27da10.webp' /></p><p></p><p>இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் உருவான இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பாபி தியோல், பிரகாஷ் ராஜ் ஆகியோர் நடித்துள்ளனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். கடந்த ஜனவரி மாதமே இப்படம் வெளியாகவிருந்த நிலையில், சென்சார் பிரச்சனை காரணமாக வெளியாகவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/39e96372-c7f1-415d-a337-e93aeb43a04d/26-6a6ebea3330a0.webp' /></p><p> 

6 மாதங்கள் பல போராட்டங்கள் மற்றும் பல தடைகளை கடந்து கடந்த மாதம் திரைக்கு வந்தது ஜனநாயகன். விஜய்யின் கடைசி திரைப்படம் என்பதால் வழக்கத்தை விட இரட்டிப்பு கொண்டாட்டம் இருந்தது. அதேபோல் கலவையான விமர்சனங்களும் இப்படத்தின் மீது எழுந்தன.</p><h2>வசூல்&nbsp;</h2><p> </p><p>

முதல் நாளிலிருந்து ஜனநாயகன் திரைப்படத்தின் வசூல் குறித்து நாம் பார்த்து வருகிறோம். இந்நிலையில், 10 நாட்களில் ஜனநாயகன் படம் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 10 நாட்களில் உலகளவில் இப்படம் ரூ. 275 கோடி வசூலித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6f96fa15-2d14-4c85-adfe-90f4ac1d34a0/26-6a6ebea3e0b16.webp' /></p>]]></content>
            <updated>2026-08-02T03:51:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[புதிய விலங்கு நலச் சட்டம் அறிமுகம்: தண்டனைகள் அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/new-animal-welfare-law-1785642613"></link>
            <id>https://tamilwin.com/article/new-animal-welfare-law-1785642613</id>
            <summary type="text">&amp;nbsp;இலங்கையில் விலங்குகளின் பாதுகாப்பு மற்றும் நலனை உறுதிசெய்யும் வகையில் புதிய விலங்கு நலச் சட்டம் வர்த்தமானி அறிவித்தல் மூலம் உத்தியோகபூர்வமாக வெள...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;இலங்கையில் விலங்குகளின் பாதுகாப்பு மற்றும் நலனை உறுதிசெய்யும் வகையில் புதிய விலங்கு நலச் சட்டம் வர்த்தமானி அறிவித்தல் மூலம் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.
</p><p>விவசாய, கால்நடை வளர்ப்பு, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சரின் வழிகாட்டலின் கீழ், விலங்குகள் மீதான கருணை, பராமரிப்பு, பாதுகாப்பு மற்றும் அவற்றின் நல்வாழ்வை பாதுகாக்கும் நோக்கில் இப்புதிய சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.</p><p>
மத அல்லது கலாச்சார நிகழ்வுகளுக்கு விலங்குகளைப் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டாலும், விலங்கின் கால்களில் முள் வளையங்கள் அணிவிப்பது, சங்கிலியால் கால்களை கட்டுவது மற்றும் கம்பிகளால் கட்டுவது போன்றவை முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளன.</p><p>
விலங்குகளை மிதமிஞ்சி நடக்க வைப்பது, அதிக சுமை ஏற்றுவது, சித்திரவதை செய்வது, வேதனையை ஏற்படுத்தும் வகையில் கயிறு அல்லது சங்கிலியால் கட்டிப்போடுவது ஆகியவை குற்றமாகும்.
</p><p>விலங்குகளை கொண்டு செல்லுதல், அடைத்து வைத்தல், விற்பனை செய்தல், குட்டிகளைப் பெருக்குதல், அவற்றுக்கான உணவு மற்றும் பாதுகாப்பு அளித்தல் போன்ற விவகாரங்களில் கடுமையான விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளன.
</p><p>விலங்குகளை கொடூரமாக நடத்துதல் அல்லது கொடூரமாகக் கொல்லுதல், கர்ப்பிணி விலங்குகளைக் கொல்லுதல், பொறிகளை வைத்து விலங்குகளைப் பிடித்தல், பறவைகளை சட்டவிரோதமாக கூண்டில் அடைத்து வைத்தல், நோயுற்ற விலங்குகளை பொது இடங்களில் இறக்க விடுதல், தகுதியற்ற நபர்கள் விலங்குகளுக்குச் சிகிச்சை அளித்தல், சட்டவிரோத வேட்டையாடுதல், 10 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு விலங்குகளை விற்பனை செய்தல் மற்றும் பொது இடங்களில் விலங்குகளை விற்பனை செய்தல் போன்றன சட்டவிரோதமான செயல்கள் என வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
இப்புதிய சட்ட விதிகளை மீறுவோருக்கு அபராதம், சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படும் வகையில் சட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.</p><p>
மேலும், விலங்குகளின் பாதுகாப்பைக் கண்காணிப்பதற்காக விலங்கு நல ஆலோசனைக் குழு ஒன்று அமைக்கப்படவுள்ளது. 
இதில் உத்தியோகபூர்வ உறுப்பினர்கள் 11 பேருடன், அமைச்சரினால் நியமிக்கப்படும் பிரதிநிதிகளும் இடம்பெறுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-02T03:50:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[மஹர சிறைச்சாலை பதற்றநிலை! பொலிஸ் ஊரடங்கு உத்தரவு தொடர்பில் சற்றுமுன்னர் வெளியான அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/curfew-ragama-police-station-area-1785636269"></link>
            <id>https://tamilwin.com/article/curfew-ragama-police-station-area-1785636269</id>
            <summary type="text">புதிய இணைப்புமஹர சிறைச்சாலையில் நேற்று ஏற்பட்ட கலவரம் தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், இருப்பினும் அமைதியை பேணுவதற்காக பொலிஸ் ஊர...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>மஹர சிறைச்சாலையில் நேற்று ஏற்பட்ட கலவரம் தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், இருப்பினும் அமைதியை பேணுவதற்காக பொலிஸ் ஊரடங்கு உத்தரவு தொடர்ந்தும் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், உதவிப்பொலிஸ் அத்தியாட்சகர் வூட்லர் தெரிவித்துள்ளார்.</p><p> 

இதற்கமைய, மூன்று கிராம சேவகப் பிரிவுகளில் பொலிஸ் ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ளதாகவும் கூறியுள்ளார்.
</p><p>
மேலும், முக்கிய பணிக்காக செல்பவர்கள் அருகிலுள்ள பொலிஸ் அதிகாரிகளுக்கு தகவல்களை தெரிவிக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.</p><p>

நாட்டில் அமைதியைப் பேணுவதற்காக இலங்கை பொலிஸ், பொலிஸ் சிறப்பு அதிரடிப்படை மற்றும் முப்படைகள் களமிறக்கப்பட்டுள்ளன என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.&nbsp;</p><h2>முதலாம் இணைப்பு</h2><p>மஹர சிறைச்சாலை பதற்றநிலை காரணமாக பொலிஸ் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள மக்களுக்கு முக்கிய அறிவிப்பொன்றினை பொலிஸ் திணைக்களம் விடுத்துள்ளது.</p><p>

மஹர சிறைச்சாலை வளாகத்தில் ஏற்பட்ட அமைதியின்மையை அடுத்து ராகம பொலிஸ் பிரிவில் நேற்று இரவு முதல் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.</p><p>&nbsp;</p><h2>மறு அறிவிப்பு வெளியாகும் வரை ஊரடங்கு உத்தரவு&nbsp;</h2><p>
</p><p>
மறு அறிவிப்பு வெளியாகும் வரையில் குறித்த பொலிஸ் ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a62aecf3-f6bd-40a9-adca-9fc0d8455372/26-6a6eac1a4760d.webp' /></p><p>

இதன்படி, மஹர சிறைச்சாலை வளாகத்தைச் சுற்றியுள்ள 246 கெண்டலியத்த வீதி - மேற்கு, 246 சி கெண்டலியத்த வீதி - வடக்கு மற்றும் 181 ஜி - தம்புவ ஆகிய கிராம சேவைப் பிரிவுகளுக்குள் மட்டும் பொலிஸ் ஊரடங்கு தொடர்ந்து நீடிக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

எனவே அப்பகுதிகளில் உள்ள மக்கள் வீடுகளை விட்டு வெளியேறக்கூடாது என்றும் அவசர தேவைகள் இருப்பின் அருகிலிருக்கும் பொலிஸ் பிரிவை தொடர்பு கொள்ளுமாறும் பொலிஸ் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p>மஹர சிறையில் நிலவிய பதற்றமான சூழல் தற்போது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
மேலும், அனைத்து கைதிகளையும் அவரவர் சிறை அறைகளுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-02T03:40:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டில் கொட்டி தீர்க்கப்போகும் கனமழை...! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/department-of-meteorology-weather-forecast-1785640786"></link>
            <id>https://ibctamil.com/article/department-of-meteorology-weather-forecast-1785640786</id>
            <summary type="text">சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும்.வளிமண்டலவியல் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும்.</p><p>வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (02-08-2026) விடுத்துள்ள அறிக்கையில் மேற்படி விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இதனடிப்படையில் சப்ரகமுவ மாகாணத்தின் சில இடங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி, மாத்தறை மற்றும் களுத்துறை மாவட்டங்களின் சில இடங்களிலும் 50 mm வரையிலான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்.


 


</p><p> 
</p><p></p><h2>பனிமூட்டமான நிலை</h2><p>கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் அத்துடன் கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் இன்று பகல் வேளையில் அதிகரித்த வெப்பநிலையை மனித உடலினால் உணரக்கூடியதாக இருக்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/37fc67d3-43bc-4212-ad13-3513039b9689/26-6a6ebd33bf2bc.webp' /></p><p>ஊவா மாகாணத்தின் சில இடங்களிலும் அத்துடன் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் சில இடங்களிலும் பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது.</p><p>இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-02T03:33:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Tony</name>
            </author>
            <title type="text"><![CDATA[படுதோல்வியை நோக்கி ஜனநாயகன், கடைசி படம் இப்படியா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/jananayagan-overseas-box-office-1785636594"></link>
            <id>https://viduppu.com/article/jananayagan-overseas-box-office-1785636594</id>
            <summary type="text">ஜனநாயகன் தமிழ் சினிமா வரலாற்றில் மிகப்பெரிய சாதனையை நிகழ்த்தும் என எதிர்பார்த்தார்கள். அவர்கள் நினைத்தது போலவே பொங்கலுக்கு இந்த படம் வருவதாக இருந்த போ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜனநாயகன் தமிழ் சினிமா வரலாற்றில் மிகப்பெரிய சாதனையை நிகழ்த்தும் என எதிர்பார்த்தார்கள். அவர்கள் நினைத்தது போலவே பொங்கலுக்கு இந்த படம் வருவதாக இருந்த போது உலகம் முழுவதும் முன்பதிவு வசூலே ரூ 100 கோடிகளுக்கு மேல் நடந்தது.</p><p> ஆனால், சென்ஸார் பிரச்சனைகளால் இந்த படம் பொங்கல் அன்று வெளிவராமல் தள்ளி போக, பல பிரச்சனைகளை தாண்டி இரண்டு வாரம் முன்பு ஜனநாயகன் ரிலிஸ் ஆனது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/de5b648c-ac87-4708-b99d-af9657a5e924/26-6a6ea6f57617c.webp' /></p><p> </p><p>முதல் 4 நாட்கள் இந்த படத்துக்கு நல்ல வரவேற்பு இருந்தது. அதிலும் ஓவர்சீஸில் இந்த படம் 7+ மில்லியன் டாலர் வசூல் செய்தது.</p><p> கண்டிப்பாக 15 மில்லியன் வசூல் செய்யும் என நினைத்த நிலையில் தற்போது வரை இந்த படம் வெறும் 8.5 மில்லியன் டாலர் தான் வசூல் செய்துள்ளது, இதனால் ஓவர்சீஸில் ஜனநாயகன் படுதோல்வியை சந்தித்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-02T03:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[இஸ்ரேலுடன் இணைந்து... ஈரான் தாக்குதல் தொடர்பில் அதிரடியான முடிவெடுத்த ட்ரம்ப்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/trump-cancelling-strikes-on-iran-1785640088"></link>
            <id>https://news.lankasri.com/article/trump-cancelling-strikes-on-iran-1785640088</id>
            <summary type="text">ஈரானுடன் விரைவாக ஒரு ஒப்பந்தத்தை மேற்கொள்ளும் நிபந்தனையின் பேரில், அந்த நாட்டின் மீதான தாக்குதல்களை ரத்து செய்துள்ளதாக டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானுடன் விரைவாக ஒரு ஒப்பந்தத்தை மேற்கொள்ளும் நிபந்தனையின் பேரில், அந்த நாட்டின் மீதான தாக்குதல்களை ரத்து செய்துள்ளதாக டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.</p><h2>விரைவாக ஒப்பந்தம்</h2><p>
</p><p>தனது ட்ரூத் சமூக ஊடகத்தில் இது தொடர்பில் பதிவிட்டுள்ள ஜனாதிபதி ட்ரம்ப், உலகின் எதிர்கால நலன் மற்றும் வெற்றிகரமான, செழிப்பான ஈரானின் நிலைத்தன்மை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு,</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a4f9f5cf-b192-4528-aa64-72261d05f078/26-6a6eb624b49d1.webp' /></p><p> </p><p>விரைவாக ஒரு ஒப்பந்தத்தை மேற்கொள்ள முடியும் என்ற நிபந்தனையின் அடிப்படையில், தாக்குதலை ரத்து செய்ய நான் ஒப்புக்கொண்டுள்ளேன் என குறிப்பிட்டுள்ளார். </p><p>இஸ்ரேலுடன் இணைந்து மிக மோசமானத் தாக்குதல் ஒன்றை திட்டமிட்டு வருவதாகவும், இதனால் ஈரான் தங்களிடம் கெஞ்சும் நிலை வரும் எனவும் தெரிவித்திருந்த ஜனாதிபதி ட்ரம்ப், தற்போது இஸ்ரேலுடன் இணைந்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறியுள்ளார்.</p><p></p><p> </p><p>சனிக்கிழமை இரவு ஈரான் மீது புதிய, உக்கிரமானத் தாக்குதல்களை நடத்த அமெரிக்கா திட்டமிட்டிருப்பதாக அமெரிக்க ஊடகங்களில் வெளியான செய்திகளுக்கு மத்தியில் ட்ரம்பிடம் இருந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. </p><p>
பிராந்தியத்தில் மீண்டும் பதற்றத்தை அதிகரிப்பதாக அமெரிக்கா மீது முன்னதாகக் குற்றஞ்சாட்டியிருந்த ஈரான், அமெரிக்காவுடன் ஒத்துழைக்கும் எந்தவொரு பிராந்திய நாடும் போரின் தீப்பிழம்புகளில் சிக்கிக்கொள்ளும் என்று கூறியிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/33b59a0b-2760-4e64-a07c-5fbd5eecd00f/26-6a6eb62665fba.webp' /></p><h2>எதிர்கொள்ள ஈரான் தயார்</h2><p> </p><p>ஆனால், ஓர் ஒப்பந்தத்தை எட்டுவதற்கு ஏதுவாகத் தாக்குதலை தள்ளிவைக்குமாறு ஈரான் மற்றும் மத்திய கிழக்கின் பிற நாடுகள் கேட்டுக்கொண்டதைத் தொடர்ந்தே, தாம் இந்த முடிவை எடுத்ததாக ட்ரம்ப் கூறியுள்ளார். </p><p>மேலும், எந்தவொரு ஒப்பந்தம் என்றாலும், அது ஹார்முஸ் நீரிணையை உடனடியாகவும் முழுமையாகவும் திறந்துவிடுதல் மற்றும் ஈரானின் அணுசக்தி அச்சுறுத்தலுக்கு முற்றுப்புள்ளி வைத்தல் ஆகியவை அடங்கும் என்றும் ட்ரம்ப் கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bd0161c1-703c-42c1-a347-5dace1d4e52a/26-6a6eb625b450d.webp' /></p><p> </p><p>அமெரிக்க அரசாங்கம் முன்னதாக, மத்திய கிழக்கு முழுவதும் உள்ள அமெரிக்கர்களை எச்சரிக்கையுடன் இருக்குமாறும், அப்பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்தால் அங்கிருந்து வெளியேறத் தயாராக இருக்குமாறும் வலியுறுத்தியிருந்தது. </p><p>அதேவேளை, ஈரானும் பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க ஆதரவு நாடுகளுக்கும் எச்சரிக்கை விடுத்திருந்ததுடன், ட்ரம்பின் தாக்குதல்களுக்கு பதிலடி உறுதி என்றும், எதிர்கொள்ள ஈரான் தயார் நிலையில் இருப்பதாகவும் தெரிவித்திருந்தது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-02T03:06:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[விஸ்வநாத் &amp; சன்ஸ் திரைப்படத்தின் முதல் விமர்சனம்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/viswanath-and-sons-movie-first-review-1785639800"></link>
            <id>https://cineulagam.com/article/viswanath-and-sons-movie-first-review-1785639800</id>
            <summary type="text">விஸ்வநாத் &amp;amp; சன்ஸ்கருப்பு திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து சூர்யா நடிப்பில் விஸ்வநாத் &amp;amp; சன்ஸ் வருகிற ஆகஸ்ட் 14-ஆம் தேதி வெளியாகிறது. ...</summary>
            <content type="html"><![CDATA[<h2>விஸ்வநாத் &amp; சன்ஸ்</h2><p>கருப்பு திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து சூர்யா நடிப்பில் விஸ்வநாத் &amp; சன்ஸ் வருகிற ஆகஸ்ட் 14-ஆம் தேதி வெளியாகிறது. இப்படத்தை தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கியுள்ளார். இவர் இயக்கத்தில் இதற்கு முன் வெளியான லக்கி பாஸ்கர் திரைப்படம் பிளாக்பஸ்டர் ஆனது குறிப்பிடத்தக்கது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4251785a-8436-4647-8621-7ab52919bc00/26-6a6eb37c4bb2a.webp' /></p><p>விஸ்வநாத் &amp; சன்ஸ் திரைப்படத்தில் ராதிகா சரத்குமார், ரவீனா டாண்டன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இதுவரை இப்படத்திலிருந்து வெளிவந்த பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. குறிப்பாக 'பட்டாம்பூச்சி' எனும் பாடல் உலகளவில் டிரெண்டாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/53368bd4-9070-45d7-abe2-3f23dc8888d6/26-6a6eb37ae7e34.webp' /></p><h2>முதல் விமர்சனம்</h2><p> 

விஸ்வநாத் &amp; சன்ஸ் திரைப்படம் வெளிவர இன்னும் 12 நாட்கள் உள்ள நிலையில், இப்படத்தின் முதல் விமர்சனம் வெளியாகியுள்ளது. வெளிநாட்டு விநியோகஸ்தர் ஒருவர் தனது (X) தள பக்கத்தில் இப்படம் எப்படி உள்ளது என்பது குறித்து விமர்சனத்தை தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7866b041-0b78-407a-b5e8-6d943943b82c/26-6a6eb37b9898a.webp' /></p><p> </p><p>

அவர் வெளியிட்டுள்ள பதிவில், "விஸ்வநாத் &amp; சன்ஸ் சூர்யா அண்ணாவின் அடுத்த மக்கள் கொண்டாடும் படமாக அமையப்போகிறது. திரையரங்கை விட்டு வெளியே வரும் ஒவ்வொருவரும் மகிழ்ச்சியுடன் வருவீர்கள். 2026 அண்ணாவிற்கே சொந்தம்" என கூறியுள்ளார். இதன் மூலம் படம் சிறப்பாக வந்துள்ளது என தெரிகிறது.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr"><a href="https://x.com/hashtag/VishwanathAndSons?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#VishwanathAndSons</a> is Suriya na’s next crowd favourite. Every one of you is walking out of that theatre happy. 2026 belongs to anna ♥️♥️♥️</p>&mdash; vithurs (@vithurs_) <a href="https://x.com/vithurs_/status/2083578668551397382?ref_src=twsrc%5Etfw">August 1, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p>]]></content>
            <updated>2026-08-02T03:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமைச்சரின் பெயரில் பெரும் பணமோசடி - பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/scammers-deputy-minister-target-public-fake-calls-1785634276"></link>
            <id>https://tamilwin.com/article/scammers-deputy-minister-target-public-fake-calls-1785634276</id>
            <summary type="text">கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி பிரதி அமைச்சர் சத்துரங்க அபேசிங்கவின் பெயரில் இடம்பெறும் மோசடி தொடர்பில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக...</summary>
            <content type="html"><![CDATA[<p>கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி பிரதி அமைச்சர் சத்துரங்க அபேசிங்கவின் பெயரில் இடம்பெறும் மோசடி தொடர்பில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p><p>

பிரதி அமைச்சரை போல் ஆள்மாறாட்டம் செய்து மோசடி நடவடிக்கைகளில் ஈடுபடும் நபர்கள் குறித்து பொதுமக்கள் விளிப்புடன் இருக்குமாறு பிரதி அமைச்சர் சத்துரங்க அபேசிங்கவின் அலுவலகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.</p><p>&nbsp;</p><h2>சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவிக்குமாறு அறிவுறுத்தல்</h2><p>
இந்த அறிவிப்பின்படி, ஒரு தனிநபர் அல்லது குழு, பிரதி அமைச்சராக நடித்து தொலைபேசி அழைப்புகள் செய்து பணம் கோருவதோடு, பிற மோசடி நடவடிக்கைகளிலும் ஈடுபடுவதாக முறைப்பாடுகள் வந்துள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/852165c4-1c4f-4565-82e0-dba23e2d5d61/26-6a6eafb08a3c5.webp' /></p><p>

அத்தகைய நபர்களுக்கு எந்த பணத்தையும், தனிப்பட்ட தகவல்களையும், ஆவணங்களையும் வழங்க வேண்டாம் என்று பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.</p><p>

சந்தேகத்திற்கிடமான தொலைபேசி அழைப்புகள் அல்லது செய்திகளை பெறுபவர்கள் உடனடியாக அருகிலுள்ள பொலிஸ் நிலையம் அல்லது சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குத் தெரிவிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-02T02:56:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[நடிகை மிருணாள் தாகூரின் சொத்து மதிப்பு, சம்பளம், பிரம்மாண்ட வீடு.. முழு விவரம் இதோ]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/actress-mrunal-thakur-house-net-worth-salary-1785581415"></link>
            <id>https://cineulagam.com/article/actress-mrunal-thakur-house-net-worth-salary-1785581415</id>
            <summary type="text">மிருணாள் தாகூர்திரை பிரபலங்களின் வீடு, சொத்து மதிப்பு, சம்பள விவரம் உள்ளிட்ட தகவல்கள் அவ்வப்போது இணையத்தில் வெளிவருகின்றன.&amp;nbsp;அந்த வகையில், பான்-இந்...</summary>
            <content type="html"><![CDATA[<h2>மிருணாள் தாகூர்</h2><p>திரை பிரபலங்களின் வீடு, சொத்து மதிப்பு, சம்பள விவரம் உள்ளிட்ட தகவல்கள் அவ்வப்போது இணையத்தில் வெளிவருகின்றன.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d07d7c49-fe16-498c-a67a-57a49780253f/26-6a6dcf6a28189.webp' /></p><p>அந்த வகையில், பான்-இந்தியன் ஸ்டாராக வலம் வரும் நடிகை மிருணாள் தாகூரின் சொத்து விவரம், அவருடைய பிரம்மாண்ட வீட்டின் மதிப்பு மற்றும் சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதைப்பற்றி பார்க்கலாம் வாங்க.</p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">சொத்து மதிப்பு</span></p><p> 

முன்னணி இந்திய நடிகைகளில் ஒருவராக இருக்கும் <a href="https://www.youtube.com/watch?v=KjhhEvoeXzU" target="_blank">மிருணாள் </a>தாகூர் ஒரு திரைப்படத்தில் நடிக்க ரூ. 3 கோடி முதல் ரூ. 5 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறார். இதுவே விளம்பரங்களில் நடிக்க ரூ. 50 லட்சம் வரை சம்பளம் வாங்குவதாகவும் கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e1738c95-3791-4f68-8637-7a3f3d1c3561/26-6a6dcf6acf82f.webp' /></p><p>

இவரிடம் Toyota Fortuner மற்றும் Mercedes S450 4 Matic ஆகிய இரு கார்கள் உள்ளன. இதில் Toyota Fortuner காரின் விலை ரூ. 46 லட்சம் மற்றும் Mercedes S450 4 Matic காரின் விலை ரூ. 2.06 கோடி.</p><p> </p><p></p><p>மேலும், மும்பையில் நடிகை மிருணாள் தாகூருக்கு சொந்தமாக அபார்ட்மெண்ட் உள்ளது. இந்த வீட்டின் மதிப்பு ரூ. 10 கோடி என கூறப்படுகிறது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0bdc2214-3531-421c-ba3d-4ff4dd7e7e98/26-6a6dcf6b84731.webp' /></p><p>இறுதியாக, நடிகை மிருணாள் தாகூரின் மொத்த சொத்து மதிப்பு ரூ. 33 கோடி முதல் ரூ. 40 கோடி வரை இருக்கும் என தகவல் தெரிவிக்கப்படுகிறது. ஆனால், இவை அதிகாரப்பூர்வமான தகவல் அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-02T02:00:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட திடீர் மோதல்! சிறையிலிருந்து தப்பிக்க கைதிகள் முயற்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/prisoners-attempt-to-escape-from-mahara-jail-1785635556"></link>
            <id>https://tamilwin.com/article/prisoners-attempt-to-escape-from-mahara-jail-1785635556</id>
            <summary type="text">மஹர சிறைச்சாலையில் நேற்று ஏற்பட்ட மோதலின் எதிரொலியாக சிறைக்கைதிகளின் ஒரு பிரிவினர் தப்பியோடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

சிறைச்சா...</summary>
            <content type="html"><![CDATA[<p>மஹர சிறைச்சாலையில் நேற்று ஏற்பட்ட மோதலின் எதிரொலியாக சிறைக்கைதிகளின் ஒரு பிரிவினர் தப்பியோடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.</p><p>

சிறைச்சாலைக்குள் கைதிகள் கட்டுப்பாடில்லாமல் நடந்து கொள்வதாகவும் அங்குள்ள வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
</p><p>
மஹர சிறைச்சாலையைச் சுற்றியுள்ள சுவரை உடைக்க கைதிகள் முயற்சிப்பதாகவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.</p><p>&nbsp;</p><h2>சிறையிலிருந்து தப்பிக்க&nbsp;முயற்சி </h2><p>
</p><p>
இதற்கிடையில், கைதிகள் அடங்கிய மற்றொரு குழுவினர் 15 அடி உயரத்தகட்டை அகற்றிவிட்டு சிறையிலிருந்து தப்பிக்க முயன்று வருவதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6cd280f4-5bb5-402f-ad82-f51fe915516c/26-6a6ea3bfd32a2.webp' />&nbsp;</p><p>இதேவேளை, மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட திடீர் மோதல் மற்றும் பதற்றகரமான நிலைமையால் கைதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.</p><p> அத்துடன் 6 கைதிகள் காயமடைந்த நிலையில் ராகம போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.&nbsp;&nbsp;</p><p>இவ்வாறான பின்னணியில் நிலைமையை கட்டுப்படுத்த பொலிஸ் விசேட அதிரடிப்படையினர், இராணுவத்தினர் சிறைச்சாலை முன்பாகவும், சிறைச்சாலையை அண்மித்த பகுதிகளிலும் பாதுகாப்புக்காக அமர்த்தப்பட்டனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-02T01:56:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாஸ்கா கோடுகளுக்கு மேலே பறந்த விமானம் விபத்து! 13 பேர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/plane-crashes-over-nazca-lines-1785635317"></link>
            <id>https://ibctamil.com/article/plane-crashes-over-nazca-lines-1785635317</id>
            <summary type="text">பெருவில் உலகப் புகழ்பெற்ற தொல்லியல் பாரம்பரியப் பகுதியான நாஸ்கா கோடுகளுக்கு (Nazca Lines) மேலே பறந்துகொண்டிருந்த சுற்றுலா விமானம் ஒன்று விபத்துக்குள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p>பெருவில் உலகப் புகழ்பெற்ற தொல்லியல் பாரம்பரியப் பகுதியான நாஸ்கா கோடுகளுக்கு (Nazca Lines) மேலே பறந்துகொண்டிருந்த சுற்றுலா விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில், 13 பேரும் உயிரிழந்துள்ளதாக&nbsp;அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p>Cessna Caravan C-208 வகையைச் சேர்ந்த விமானமே இவ்வாறு&nbsp; விபத்துக்குள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>இதில் 11 சுற்றுலாப் பயணிகளும், 2 விமானிகளும் பயணித்திருந்தனர் என்றும் உயிரிழந்தவர்களில் 2 ஜெர்மனி, 2 ஸ்பெயின் மற்றும் 7 இத்தாலி நாட்டைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் அடங்குவதாக பெருவின் அரச செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.</p><p></p><h2>விபத்துக்கான காரணம்</h2><p> </p><p>இந்நிலையில் விபத்துக்கான காரணம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/700a2d71-84b8-40f6-b89d-a8eeacdb1b3e/26-6a6ea1f7d310c.webp' /></p><p>இதன்படி விமானம் பெருவின் பிஸ்கோ (Pisco) விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு, உள்ளூர் நேரப்படி பிற்பகல் 1.00 மணியளவில், புவெப்லோ வியெஹோ (Pueblo Viejo) பகுதியில் விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-02T01:49:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[பதற்றமான மஹர கலவரத்தின் பின்னரான தற்போதைய நிலை: எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/current-situation-after-the-tense-makara-riots-1785634319"></link>
            <id>https://ibctamil.com/article/current-situation-after-the-tense-makara-riots-1785634319</id>
            <summary type="text">மஹர சிறையில் ஏற்பட்ட கலவரத்தைக் கட்டுப்படுத்த தற்போது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைதிகளுக்கும் சிறை அதிகாரிகளுக்கும்...</summary>
            <content type="html"><![CDATA[<p>மஹர சிறையில் ஏற்பட்ட கலவரத்தைக் கட்டுப்படுத்த தற்போது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

கைதிகளுக்கும் சிறை அதிகாரிகளுக்கும் இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக, மஹர சிறையில் நேற்று (01) பிற்பகல் பதற்றம் நிலவியது. இதில் ஏழு கைதிகள் காயமடைந்து ராகம போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p><p>இது குறித்து காவல்துறை வெளியிட்டுள்ள விசேட அறிக்கையில் அவர்களில் ஒருவர் உயிரிழந்தார் என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.</p><p></p><h2>படையினர் மீது கல்வீச்சு</h2><p>இந்நிலையில் நிலைமையைக் கட்டுப்படுத்த சிறப்பு அதிரடிப் படை, இராணுவம் மற்றும் காவல்துறையை களமிறக்குவதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f4e9b660-1f17-4423-a298-9805662774b2/26-6a6e9e11bc623.webp' /></p><p>இதன்போது கைதிகளைப் பார்க்க வந்திருந்த உறவினர்களும் உள்ளூர் மக்களும் பாதுகாப்புப் படையினர் மீது பல கற்களை வீசியதாகவும் தெரிவிக்கப்பட்டது.</p><p>இதற்கிடையில், பாதுகாப்புச் செயலாளர் சம்பத் துயகொந்த மற்றும் புதிய இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் நிலந்த பிரேமரத்ன ஆகியோரும்&nbsp; சிறையில் நிலவும் பதற்றமான சூழ்நிலையைக் கண்காணிப்பதற்காக நேற்று இரவு மஹாரா சிறை வளாகத்திற்கு சென்றிருந்தனர்.</p><p>
இந்தச் சம்பவம் தொடர்பாக, கலவரத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சை பெற்று வருவதாகவும், அமைச்சர் ஆனந்த விஜேபால பாதுகாப்புச் செயலாளர் மற்றும் காவல்துறை தலைமை ஆய்வாளருடன் இவ்விவகாரம் குறித்து விவாதித்ததாகவும், சிறைச்சாலைக்குத் தேவையான பாதுகாப்பை வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் நீதி அமைச்சரும் சட்டத்தரணியுமான ஹர்ஷனா நனயக்கார தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-02T01:32:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[தீவிர கண்காணிப்பின் கீழ் மஹர சிறைச்சாலை.. தற்போதைய நிலவரம் குறித்து வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/mahara-prison-riot-defense-ministry-cid-stf-1785632982"></link>
            <id>https://tamilwin.com/article/mahara-prison-riot-defense-ministry-cid-stf-1785632982</id>
            <summary type="text">மஹர சிறையில் ஏற்பட்ட கலவரத்தைக் கட்டுப்படுத்த அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.பொதுமக்கள் மத்தியில் அமைதி...</summary>
            <content type="html"><![CDATA[<p>மஹர சிறையில் ஏற்பட்ட கலவரத்தைக் கட்டுப்படுத்த அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>பொதுமக்கள் மத்தியில் அமைதியைப் பேணுவதற்காக, ராகம பொலிஸ் எல்லைக்குட்பட்ட மஹர சிறைச்சாலையைச் சுற்றியுள்ள மூன்று கிராம சேவகர் பிரிவுகளில் விதிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவானது தொடர்ந்தும் நடைமுறையில் உள்ளது.</p><p>

நேற்று (01) மதியம், கைதிகளுக்கும் சிறை அதிகாரிகளுக்கும் இடையே ஏற்பட்ட சர்ச்சைக்குரிய சூழ்நிலை காரணமாக, மஹர சிறையில் கலவரம் வெடித்தது.</p><p></p><h2>பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு&nbsp;</h2><p>இதன்போது, அங்கு, 7 கைதிகள் காயமடைந்து ராகம போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர், அவர்களில் ஒரு கைதி உயிரிழந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a4365699-3212-46e3-b584-0302100f4f4c/26-6a6e9eda635b3.webp' /></p><p>தொடர்ந்து, நிலைமையைக் கட்டுப்படுத்த நேற்றிரவு சிறப்பு அதிரடிப் படை, இராணுவம் மற்றும் பொலிஸாரை ஈடுபடுத்தவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. கலவரத்தைக் கண்காணிக்க விமானப்படையும் பெல் 412 விமானத்தையும் ஒரு ட்ரோனையும் ஈடுபடுத்தியது.</p><p>இந்நிலையில், நேற்று பகல், கைதிகள் தலைமைச் சிறை அதிகாரியின் அலுவலகத்திற்கு தீ வைத்ததாகத் தெரிவிக்கப்பட்டது.</p><p>
</p><p>
மேலும் நேற்று மதியம், கைதிகளைப் பார்க்க உறவினர்கள் மஹர சிறைக்கு சென்ற நிலையில், ஆனால் அவர்கள் சிறைக்குள் அனுமதிக்கப்படவில்லை.</p><p></p><h2>பதற்றநிலை&nbsp;</h2><p>
</p><p>
அதன்படி, உறவினர்கள் மஹர சிறைக்கு முன்பாகக் கூடியதாகவும் அங்கு அவர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையே பதற்றம் ஏற்பட்டதாகவும் அதன் காரணமாக நிலைமையைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3c213df6-61dd-4777-90eb-b36294f432c8/26-6a6e9edb2c6fc.webp' /></p><p>
சிறையிலிருந்து துப்பாக்கிச் சுடும் சத்தம் போன்ற சில ஒலிகளைக் கேட்ட பிறகு, கைதிகளைப் பார்க்க வந்த உறவினர்களும் உள்ளூர் மக்களும் பொலிஸார் தடுப்புகளை உடைத்துக்கொண்டு செல்ல முயன்றுள்ளனர். </p><p>பின்னர், பாதுகாப்புப் படையினரால் நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

இருப்பினும், கைதிகளைப் பார்க்க சென்ற சில உறவினர்களும் உள்ளூர் மக்களும் பாதுகாப்புப் படையினர் மீது கற்களை வீசியதாகவும் தெரிவிக்கப்பட்டது.
</p><p>
இதற்கிடையில், தற்போதைய சூழ்நிலையில், மஹர பகுதியில் உள்ள பல பொலிஸ் அதிகார வரம்புகளில் மறு அறிவிப்பு வரும் வரை பொலிஸார் ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்துள்ளனர்.&nbsp;</p><p></p><h2>தீவிர கண்காணிப்பு&nbsp;</h2><p>

அமைதியைப் பேணுவதற்காகவே இந்த நடவடிக்கை என்று பொலிஸார் தெரிவித்ததோடு, அதன்படி, A, 246/கண்டலியத்த பாலுவ - மேற்கு, 246/C கண்டலியத்த பாலுவ - வடக்கு மற்றும் 181/G தம்புவ ஆகிய கிராமப்புற சேவைப் பகுதிகளில் இந்த ஊரடங்கு தற்போது நடைமுறையில் உள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bd2b85a0-e9e2-4b82-b948-dbe592046d38/26-6a6e9edbd8b82.webp' /></p><p>

இதற்கிடையில், பதற்றமாக இருந்த மஹர சிறைச்சாலையின் நிலைமையைக் கண்காணிப்பதற்காக, பாதுகாப்புச் செயலாளர் சம்பத் துயகொந்த மற்றும் புதிய இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் நிலந்த பிரேமரத்ன ஆகியோரும் நேற்று இரவு சிறை வளாகத்தைப் பார்வையிட்டனர்.
</p><p>
இந்தச் சம்பவம் தொடர்பாக, கலவரத்தில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், அமைச்சர் ஆனந்த விஜேபால, பாதுகாப்புச் செயலாளர் மற்றும் பொலிஸ் மா அதிபர் ஆகியோருடன் கலந்தாலோசித்ததாகவும், சிறைச்சாலைக்குத் தேவையான பாதுகாப்பை வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் நீதி அமைச்சர், ஹர்ஷண நாணயக்கார தெரிவித்தார்.</p><p>

சிறைச்சாலையில் தீ விபத்து ஏற்பட்டதாகவும், நிலைமையைக் கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-02T01:25:06+00:00</updated>
        </entry>
    </feed>
