<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-08-03T01:30:42+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[4 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/earth-slip-warning-for-4-districts-1785719045"></link>
            <id>https://tamilwin.com/article/earth-slip-warning-for-4-districts-1785719045</id>
            <summary type="text">நான்கு மாவட்டங்களுக்கு செல்லுபடியாகும் வகையில் மண்சரிவு குறித்த முன்எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் இது தொ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நான்கு மாவட்டங்களுக்கு செல்லுபடியாகும் வகையில் மண்சரிவு குறித்த முன்எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. </p><p>
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் இது தொடர்பான எச்சரிக்கையை அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது.
</p><p>இந்த அறிவிப்பு நேற்று (02) இரவு 11:00 மணிக்கு வெளியிடப்பட்டதுடன், இன்று (03) இரவு 11:00 மணி வரை செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f84750fd-a997-457e-be4c-07f56d5bbc4d/26-6a6fef15992cf.webp' /></p><p>
</p><p>சில பிரதேச செயலகப் பிரிவுகள் மற்றும் அவற்றின் சுற்றியுள்ள பகுதிகளுக்கு இரண்டாம் கட்ட மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p><p>கண்டி மாவட்டத்தில் பச்பாகே கோரளே மற்றும் கங்க இஹள கோரளே ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும், கேகாலை மாவட்டத்தின் யட்டியாந்தோட்டை பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும், நுவரெலியா மாவட்டத்தில் அம்பகமுவ மற்றும் நோர்வூட் பிரதேச செயலகப்பிரிவுகளுக்கும் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p><p>
கீழ்கண்ட பிரதேச செயலகப் பிரிவுகள் மற்றும் அவற்றின் சுற்றியுள்ள பகுதிகளுக்கு முதலாம் கட்ட மண்சரிவு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.</p><p> கேகாலை மாவட்டத்தின் அரநாயக்க மற்றும் தெஹியோவிற்ற&nbsp; பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் நுவரெலியா மாவட்டத்தின்&nbsp; நுவரெலியா, தலவாக்கலை, கொத்மலை கிழக்கு மற்றும் கொத்மலை பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் மேற்கு
இரத்தினபுரி மாவட்டத்தின் நிவித்திகலை மற்றும் இரத்தினபுரி பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் முதலாம் கட்ட மண்சரிவு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-03T01:30:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[பூச நட்சத்திரத்தில் அமரும் புதன் பகவான்; இந்த ராசிகளுக்குஅதிர்ஷ்டம் காத்திருக்கு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/mercury-enters-pushya-star-brings-fortune-1785720242"></link>
            <id>https://jvpnews.com/article/mercury-enters-pushya-star-brings-fortune-1785720242</id>
            <summary type="text">ஜோதிட சாஸ்திரத்தில் ஜாதகத்தில் புதன் பகவான் வலுவாக இருந்தால் அவர்கள் ராஜ வாழ்க்கை வாழக்கூடிய அமைப்பு உண்டாகும்.

அந்த வகையில், 2026 ஆகஸ்ட் 8ஆம் தேதி...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜோதிட சாஸ்திரத்தில் ஜாதகத்தில் புதன் பகவான் வலுவாக இருந்தால் அவர்கள் ராஜ வாழ்க்கை வாழக்கூடிய அமைப்பு உண்டாகும்.

அந்த வகையில், 2026 ஆகஸ்ட் 8ஆம் தேதி புதன் கிரகம் புனர்பூசம் நட்சத்திரத்திலிருந்து பூச நட்சத்திரத்திற்கு இடம் மாறுகிறார். </p><p>இந்த மாற்றத்தால் ஒரு சில ராசிகளுக்கு மிகப்பெரிய அளவில் நற்பலன்களை கொடுக்கப் போகிறது. அவை எந்த ராசிகள் என்று பார்ப்போம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bb3d508a-b95a-42d1-b090-2eafbb09488d/26-6a6fedb4276d6.webp' /></p><p><b>


மிதுனம்:
</b>மிதுன ராசியின் அதிபதி புதன் பகவானார். ஆதலால் இந்த பெயர்ச்சி மிதுன ராசிக்காரர்களுக்கு மிகப்பெரிய அளவில் நற்பலன்களை கொடுக்கப் போகிறது. நீண்ட நாட்கள் பாதியில் நின்ற வேலை இவர்களுக்கு நல்ல முடிவை கொடுக்க போகிறது. எழுத்தாளர்களுக்கு நிறைய வாய்ப்புகள் தேடி வரக்கூடிய காலமாகும்.</p><p></p><p>
</p><p><b>
கன்னி:
</b>பூச நட்சத்திரத்தில் புதன் பகவானுடைய சஞ்சாரம் கன்னி ராசிக்கு நிறைய புதிய வாய்ப்புகளை வழங்கப்போகிறது. நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்து வந்த அரசு வேலைகள் நல்ல முன்னேற்றத்தை தரும்.

வேலை மாற்றம் செய்ய வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு நற்செய்தி தேடி வரும். பழைய முதலீடுகள் நல்ல லாபத்தை கொடுக்கும்.</p><p></p><p> </p><p><b>துலாம்:
</b>துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த புதன் பகவானுடைய பூச நட்சத்திர பெயர்ச்சியானது இவர்களுக்கு உயர்ந்த செல்வாக்கை அளிக்க போகிறது.

வேலை செய்யும் இடங்களில் இருந்து வந்த பிரச்சனைகள் விலகும். வேலை செய்யும் இடங்களில் உங்களுடைய கருத்துக்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-03T01:28:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[மூதூரில் பொறியியல் பீட மாணவன் கோர விபத்தில் பலி ; வெளிநாடு செல்லவிருந்த இளைஞனுக்கு நேர்ந்த கதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/engineering-student-killed-in-tragic-crash-1785717911"></link>
            <id>https://jvpnews.com/article/engineering-student-killed-in-tragic-crash-1785717911</id>
            <summary type="text">மூதூர் பொலிஸ் பிரிவிலுள்ள ஜின்னாநகர் (59ஆம் கட்டை) பகுதியில் ரிப்பர் வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித...</summary>
            <content type="html"><![CDATA[<p>மூதூர் பொலிஸ் பிரிவிலுள்ள ஜின்னாநகர் (59ஆம் கட்டை) பகுதியில் ரிப்பர் வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.
</p><p>



திருகோணமலை -மட்டக்களப்பு பிரதான வீதியில் ஞாயிற்றுக்கிழமை (02) மாலை இவ்விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/839260a4-1601-4d3e-9728-cc29ef82be65/26-6a6fe4992d548.webp' /></p><h2>சரணடைந்த&nbsp; சாரதி</h2><p>
விபத்தில் மூதூர் -கிளிவெட்டி கிராமத்தைச் சேர்ந்த பொறியியல் பீட முதலாம் வருட மாணவன், மற்றொருவர் பிரான்ஸ் செல்லத் தயாராக இருந்த 19வயது&nbsp; இளைஞரும்&nbsp; உயிரிழந்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/21563cee-3c4c-49f8-9f1d-8fdb3bb529e7/26-6a6fe499d8a99.webp' /></p><p>
</p><p>


ரிப்பர் வாகனச் சாரதி மூதூர் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.</p><p></p><p> </p><p>உயிரிழந்த இரண்டு இளைஞர்களின் சடலங்களும் மூதூர் தள வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.</p><p>சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-03T01:28:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[மேலதிக வகுப்புகளுக்குச் செல்லும் மாணவிகளுக்கு தொந்தரவு ; இளைஞர்களுக்கு பொலிஸார் செய்த சம்பவம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/schoolgirls-harassed-on-way-to-tuition-classes-1785717059"></link>
            <id>https://jvpnews.com/article/schoolgirls-harassed-on-way-to-tuition-classes-1785717059</id>
            <summary type="text">மேலதிக வகுப்புகளுக்குச் செல்லும் மாணவிகளை மோட்டார் சைக்கிள்களில் பின்தொடர்ந்து தொந்தரவு செய்தமை மற்றும் தலைக்கவசம் அணியாமல் போக்குவரத்து விதிகளை மீறிப...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">மேலதிக வகுப்புகளுக்குச் செல்லும் மாணவிகளை மோட்டார் சைக்கிள்களில் பின்தொடர்ந்து தொந்தரவு செய்தமை மற்றும் தலைக்கவசம் அணியாமல் போக்குவரத்து விதிகளை மீறிப் பயணித்தமை தொடர்பாகப் பல இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 8 மோட்டார் சைக்கிள்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.</p><p style="text-align: justify; ">

பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள நபர்கள் சம்மாந்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9e44621f-ecf3-43a4-8351-89a72e2b1ec7/26-6a6fe14524f1c.webp' /></p><h2 style="text-align: justify; ">அதிரடி நடவடிக்கை</h2><p>
</p><p style="text-align: justify; ">
கிழக்கு மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர் மற்றும் அம்பாறை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோரின் வழிகாட்டலின் கீழ், இந்த விசேட அதிரடி நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
</p><p style="text-align: justify; ">
பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட காணொளிகள் மற்றும் புகைப்பட ஆதாரங்களின் அடிப்படையில் இந்தக்கைது நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
இச்சம்பவம் தொடர்பில் கருத்து தெரிவித்த சம்மாந்துறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, </p><p style="text-align: justify; ">பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் அல்லது சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடும் நபர்கள் தொடர்பான காணொளி மற்றும் புகைப்பட ஆதாரங்களை பொதுமக்கள் உடனடியாகப் பொலிஸாருக்கு அனுப்பி வைக்க வேண்டும். </p><p style="text-align: justify; ">தவறு செய்பவர்கள் எவராக இருந்தாலும் பாரபட்சமின்றிச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

சம்மாந்துறையை ஒழுக்கமும் சட்டமும் நிலவும் பாதுகாப்பான சமூகமாக மாற்றுவதே எமது நோக்கமாகும்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">இளைஞர்கள் போக்குவரத்து விதிகளை மதித்து நடக்க வேண்டும். பெண்களுக்கு இடையூறு விளைவிக்கும் செயல்கள் கடுமையாகக் கருதப்படும்."
</p><p style="text-align: justify; ">
மேலும், பெற்றோர்கள் தமது பிள்ளைகளின் வாகனப் பயன்பாடு, நண்பர்கள் வட்டம் மற்றும் அன்றாட நடவடிக்கைகள் குறித்து விழிப்புடனும் கூடுதல் கவனத்துடனும் இருக்குமாறும் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-03T01:27:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இரண்டு நாட்களில் முதல் பிரசவம் ; தாய்க்கும் சேய்க்கும் நடந்தேறிய துயரம் ; ஆபத்தாக மாறும் நிலைமை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/mother-and-baby-die-of-dengue-1785715165"></link>
            <id>https://jvpnews.com/article/mother-and-baby-die-of-dengue-1785715165</id>
            <summary type="text">முதலாவது மகப்பேறுக்கு இன்னும் இரண்டு நாட்களே எஞ்சியிருந்த நிலையில், பிறக்காத தனது பிஞ்சுக் குழந்தையுடன் தாயும் பரிதாபமாக உயிரிழந்த துயரச் சம்பவம் வாத்...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">முதலாவது மகப்பேறுக்கு இன்னும் இரண்டு நாட்களே எஞ்சியிருந்த நிலையில், பிறக்காத தனது பிஞ்சுக் குழந்தையுடன் தாயும் பரிதாபமாக உயிரிழந்த துயரச் சம்பவம் வாத்துவ பகுதியில் பதிவாகியுள்ளது.
</p><p style="text-align: justify;">
வாதுவையைச் சேர்ந்த 34 வயதான&nbsp; பெண்ணே இவ்வாறு உயிரிழந்தவராவார்.</p><p style="text-align: justify;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ab2312bd-8cfc-45f0-b4d4-f380320e0337/26-6a6fd9df27e97.webp' /></p><h2 style="text-align: justify;">&nbsp;தீவிர சிகிச்சை</h2><p>
</p><p style="text-align: justify;">
குறித்த பெண்ணுக்கு கடந்த 24ஆம் திகதி லேசான காய்ச்சல் ஏற்பட்ட நிலையில், வலி நிவாரணி மாத்திரைகளை உட்கொண்டதன் மூலம் காய்ச்சல் தணிந்துள்ளது.</p><p style="text-align: justify;">

எனினும், மலச்சிக்கல் உபாதை காரணமாகவே அவர் தனியார் மருத்துவமனையொன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார். </p><p style="text-align: justify; ">ஆரம்பம் முதலே குறித்த தனியார் மருத்துவமனையிலேயே சிகிச்சை பெற்று வந்த நிலையில், அறுவை சிகிச்சை மூலம் குழந்தையைப் பிரசவிப்பதற்கான பரிசோதனைகளின் போதே அவர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தமை உறுதி செய்யப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "></p><p>
</p><p style="text-align: justify;">
எனினும், குறித்த தனியார் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் இடவசதி இல்லாத காரணத்தினால், உறவினர்கள் அவரை அரச மகப்பேறு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
</p><p style="text-align: justify;">
அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், நிலைமை மிகவும் தீவிரமடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;"> </p><p style="text-align: justify;">தீவிர சிகிச்சைப் பிரிவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த போதிலும், கடந்த 28ஆம் திகதி குழந்தையும், 29ஆம் திகதி மாலையில் தாயும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.</p><p style="text-align: justify;">

இறப்பு தொடர்பில் திறந்த முடிவு வழங்கப்பட்டுள்ளதுடன், உயிரிழப்பதற்கு முன்னர் அவருக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டிருந்தமை இரத்தப் பரிசோதனையில் உறுதியாகியுள்ளது.</p><p style="text-align: justify;"></p>]]></content>
            <updated>2026-08-03T01:27:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[மனைவியை கொன்று வீடியோ எடுத்து மாமனார்-மாமியாருக்கு அனுப்பிய கணவர் ; இறுதியில் நடந்த சம்பவம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/husband-kills-wife-sends-video-to-in-laws-1785700305"></link>
            <id>https://jvpnews.com/article/husband-kills-wife-sends-video-to-in-laws-1785700305</id>
            <summary type="text">கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம் பேலூர் தாலுகாவிற்கு உட்பட்ட கேசகோடு கிராமத்தை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் மனைவியை கொன்று கணவர் தற்கொலை செய்...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம் பேலூர் தாலுகாவிற்கு உட்பட்ட கேசகோடு கிராமத்தை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் மனைவியை கொன்று கணவர் தற்கொலை செய்து வீடியோ எடுத்து மாமனார்-மாமியாருக்கு அனுப்பிய சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது.
</p><p style="text-align: justify; ">
கடந்த சில நாட்களாக மனைவியின் நடத்தையில் மனைவிக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால், அவர்கள் 2 பேருக்கும் இடையே கடந்த சில நாட்களாகவே வாக்குவாதம் ஏற்பட்டு, குடும்பத்தகராறு ஆனது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5c515c25-6949-43e9-ab3c-2730f4911b02/26-6a6f9fd3126b5.webp' /></p><h3 style="text-align: justify; ">&nbsp;தீவிர விசாரணை</h3><p>
</p><p style="text-align: justify; ">


இந்நிலையில், சம்பவத்தன்று மனைவியுடன் காரில் புறப்பட்ட கணவர், வழியிலேயே மனைவியுடன் மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். </p><p style="text-align: justify; ">பின்னர், அவரை காரில் வைத்து கொலை செய்தார். கொலை செய்வதை வீடியோ எடுத்ததாக கூறப்படுகிறது. பின்னர்,&nbsp; கேசகோடு கிராமத்துக்கு சென்ற ரகு, தனது மாமனார், மாமியார் மற்றும் உறவினர்களுக்கு செல்போனில் வீடியோ அழைப்பு மூலம் தொடர்பு கொண்டு மனைவியை கொன்றுவிட்டதாக தெரிவித்துள்ளார்.
</p><p style="text-align: justify; ">
மேலும் கொலை வீடியோவையும் அவர்களுக்கு அனுப்பினார். தானும் தற்கொலை செய்து கொள்வதாக கூறிவிட்டு இணைப்பை தொடர்பை துண்டித்துள்ளார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">இதனால், அதிர்ச்சி அடைந்த அவர்கள் ரகுவை தொடர்பு கொள்ள முயற்சி செய்தனர். ஆனால், அவர் அழைப்பை எடுத்து பேசவில்லை.
</p><p style="text-align: justify; ">

இதையடுத்து, கேசகோடு கிராமத்தின் எல்லையில் சாலையோ ரத்தில் இருந்த மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். பொலிஸார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">

 இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
</p><p style="text-align: justify; ">
இதற்கிடையில், தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு வீடியோ அழைப்பில் பேசியது தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.</p><p style="text-align: justify; "> இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-03T01:27:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[வீதி விதிமீறல்களில் ஈடுபடும் சாரதிகளுக்கு சிக்கல் ; சட்ட நடவடிக்கை நிச்சயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/trouble-for-drivers-breaking-traffic-rules-1785707913"></link>
            <id>https://jvpnews.com/article/trouble-for-drivers-breaking-traffic-rules-1785707913</id>
            <summary type="text">மோட்டார் வாகன விபத்துக்களைத் தடுப்பதற்கும் சாரதிகளால் மேற்கொள்ளப்படும் விதிமீறல்களைக் கண்டறிவதற்கும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் கூடிய நவீன க...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">மோட்டார் வாகன விபத்துக்களைத் தடுப்பதற்கும் சாரதிகளால் மேற்கொள்ளப்படும் விதிமீறல்களைக் கண்டறிவதற்கும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் கூடிய நவீன கேமரா அமைப்பைப் பொருத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று வீதிப்போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதிப் பாதுக்காப்பு பிரிவுப் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மனோஜ் ரணகல தெரிவித்துள்ளார்.</p><p style="text-align: justify; ">

இது குறித்து ஞாயிற்றுக்கிழமை (02) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ef0050c4-6ae8-46d5-b843-e63560cdb1c4/26-6a6fbd8b2f8f6.webp' /></p><h2 style="text-align: justify; ">&nbsp;புதிய கண்காணிப்பு நடைமுறை</h2><p style="text-align: justify; "> அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்த புதிய கண்காணிப்பு நடைமுறையின் கீழ் வாகனங்களைச் செலுத்தும் போது தொலைபேசியில் பேசுவது அல்லது குறுஞ்செய்தி அனுப்புவது போன்ற ஆபத்தான செயல்களில் ஈடுபடும் சாரதிகள் இந்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப கேமராக்கள் மூலம் துல்லியமாக அடையாளம் காணப்பட்டு படம் பிடிக்கப்படுவார்கள்.</p><p style="text-align: justify; ">

வழக்கமான கேமராக்களைப் போலன்றி, செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் மூலம் வீதி விதிமீறல்கள் உடனடியாகப் படம்பிடிக்கப்பட்டு சான்றுகளுடன் சேமிக்கப்படுவதால், தவறிழைக்கும் சாரதிகள் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிக்க முடியாது.</p><p style="text-align: justify; ">

இத்திட்டம் முதற்கட்டமாக கொழும்பு மாநகர எல்லைக்குட்பட்ட அதிமுக்கியத்துவம் வாய்ந்த 9 பிரதான சந்திப்புகள் மற்றும் வீதிகளில் ஆரம்பிக்கப்படவுள்ளது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">இதன் மூலம் கொழும்பு நகரில் இடம்பெறும் அதிகளவிலான போக்குவரத்து விதிமீறல்கள் மற்றும் விபத்துக்களை வெகுவாகக் குறைக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p style="text-align: justify; ">


இதேவேளை வீதி விபத்துக்களைக் கட்டுபடுத்தும் நோக்கில், வாகனங்களின் வேகத்தை கண்டறிவதற்காக புதிதாக 50 வேகமானி கருவிகளை இறக்குமதி செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
இதற்கு முன்னர் போக்குவரத்துப் பொலிஸாரால் 45 வேகமானி கருவிகள் மட்டுமே பயன்பாட்டில் ஈடுபடுத்தப்பட்டிருந்த நிலையில், தற்போது மேலும் 50 கருவிகள் சேர்க்கப்படுகின்றன. </p><p style="text-align: justify; ">45 இத்தகைய கருவிகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படவுள்ள இந்த கருவிகளில் ஒன்றின் விலை சுமார் 33 இலட்சம் ரூபாவாகும் என்றார்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-03T01:27:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[வட மாகாணத்தில் கட்டாக்காலி நாய்கள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள முக்கிய நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/action-taken-on-stray-dogs-in-northern-province-1785698720"></link>
            <id>https://jvpnews.com/article/action-taken-on-stray-dogs-in-northern-province-1785698720</id>
            <summary type="text">வட மாகாணத்தில் வீதியோரங்களில் பெருகிவரும் கட்டாக்காலி நாய்களால் ஏற்படும் விபத்துகள் மற்றும் பல்வேறு சுகாதாரச் சீர்கேடுகளுக்குத் தீர்வுகாணும் நோக்கில் ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">வட மாகாணத்தில் வீதியோரங்களில் பெருகிவரும் கட்டாக்காலி நாய்களால் ஏற்படும் விபத்துகள் மற்றும் பல்வேறு சுகாதாரச் சீர்கேடுகளுக்குத் தீர்வுகாணும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட விசேட கருத்தடைச் செயற்றிட்டத்தில் இந்த ஆண்டு 7,606 நாய்களுக்குக் கருத்தடை சிகிச்சை செய்வதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
</p><p style="text-align: justify;">

வடக்கு மாகாண விவசாய அமைச்சின் கீழான கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களமும், உள்ளூராட்சி அமைச்சின் கீழான உள்ளூராட்சித் திணைக்களமும் இணைந்து இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துகின்றன.</p><p style="text-align: justify;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f9d7d98d-9ea8-4484-93e6-896e5c16d0fc/26-6a6f99a218f61.webp' /></p><h2 style="text-align: justify;">கருத்தடை</h2><p>
</p><p style="text-align: justify;">
இத்திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்காக இந்த ஆண்டு 15 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன், மாவட்ட ரீதியாகப் பின்வரும் எண்ணிக்கையான நாய்களுக்குக் கருத்தடை செய்யப்படவுள்ளது</p><p style="text-align: justify;"> 

யாழ். மாநகர சபை - 120 நாய்கள் ஏனைய யாழ். மாவட்ட உள்ளூராட்சி சபைகள் - 5,216 நாய்கள், கிளிநொச்சி மாவட்டம் (கரைச்சி தவிர்ந்த) - 350 நாய்கள்,&nbsp; முல்லைத்தீவு மாவட்டம் - 750 நாய்கள்,

வவுனியா மாவட்டம் (மாநகர சபை உள்ளடங்கலாக) - 1,170 நாய்களுக்குக் கருத்தடை செய்யப்படவுள்ளது</p><p style="text-align: justify; ">இச்செயற்றிட்டத்தின் முதற்கட்டமாக, வவுனியா மாவட்டத்தில் இதுவரை 72 நாய்களுக்கான கருத்தடை சத்திரசிகிச்சைகள் வெற்றிகரமாக நிறைவுறுத்தப்பட்டுள்ளன.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify;">அதனைத் தொடர்ந்து, ஏனைய மாவட்டங்களிலும் இத்திட்டத்தை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.</p><p style="text-align: justify;">
இதற்கமைவாக, நாளைய தினம் திங்கட்கிழமை யாழ்ப்பாண மாநகர சபையிலும், நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்றுப் பிரதேச சபையிலும், எதிர்வரும் 23ஆம் திகதி வவுனியா மாநகர சபையிலும் இத்திட்டம் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;"> </p><p style="text-align: justify;"> 

அமைச்சரவை மட்டத்தில் அங்கீகரிக்கப்பட்டுள்ள புதிய 'விலங்கு நலச் சட்டத்தின்' ஏற்பாடுகளுக்கு அமைவாக, விலங்குகளின் உரிமைகள் மற்றும் நலன்களுக்கு அதியுயர் முன்னுரிமை வழங்கப்படுகின்றது.</p><p style="text-align: justify;">

விலங்குகளின் நலனைக் காப்பதன் ஊடாக ஆரோக்கியமானதொரு சமூகத்தை உருவாக்கும் நோக்கில் முன்னெடுக்கப்படும் இத்திட்டத்துக்கு, அனைத்துப் பொதுமக்களும் உரிய தரப்பினரும் பூரண ஒத்துழைப்பை வழங்க முன்வர வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகன் கோரியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-03T01:26:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பகுதியில் பெண் பொலிஸ் உயரதிகாரி செய்த செயல் ; அதிரடி காட்டிய அதிகாரிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/woman-police-officer-s-act-stuns-tamil-area-1785712122"></link>
            <id>https://jvpnews.com/article/woman-police-officer-s-act-stuns-tamil-area-1785712122</id>
            <summary type="text">இங்கினியாகல காவல் நிலையத்துக்கு பல்வேறு சேவைகள் ஊடாக வருமானமாகப் பெறப்பட்ட சுமார் 290,000 ரூபாய் பணத்தை மோசடி செய்த குற்றச்சாட்டில், அதே காவல் நிலையத்...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">இங்கினியாகல காவல் நிலையத்துக்கு பல்வேறு சேவைகள் ஊடாக வருமானமாகப் பெறப்பட்ட சுமார் 290,000 ரூபாய் பணத்தை மோசடி செய்த குற்றச்சாட்டில், அதே காவல் நிலையத்தில் கடமையாற்றிய பெண் பொலிஸ் சார்ஜண்ட் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p style="text-align: justify; ">
அம்பாறை பொலிஸ் விசேட குற்ற விசாரணைப் பிரிவினரால் இந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4fa5eca5-bbd6-429c-82e6-f5bb7750e474/26-6a6fcdfc34799.webp' /></p><h2 style="text-align: justify; ">நிதி முறைக்கேடு&nbsp;</h2><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
அம்பாறை பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தினால் மேற்கொள்ளப்பட்ட உள்வாரி கணக்காய்வு பரிசோதனையின் போதே இந்த நிதி முறைக்கேடு கண்டறியப்பட்டுள்ளது.
</p><p style="text-align: justify; ">
ஒலிபெருக்கி அனுமதிப்பத்திரங்கள் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் மூலம் பெறப்படும் வருமானப் பணத்தை, அம்பாறை பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தின் உத்தியோகபூர்வ கணக்கில் முறையாக வைப்பிலிட வேண்டும்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
எனினும், சந்தேகநபரான பெண் பொலிஸ் சார்ஜண்ட் காவல் நிலையத்துக்குப் பெறப்பட்ட அந்த பணத்தைச் வைப்பிலிடாது தவறியுள்ளமை கணக்காய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளதாகக் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-03T01:07:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[ட்ரம்ப் சொல்வது பொய் ; ஈரான் கொடுத்த பதிலடி ; எதற்கும் நாங்கள் தயார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/iran-rejects-trump-s-claims-as-false-1785719124"></link>
            <id>https://canadamirror.com/article/iran-rejects-trump-s-claims-as-false-1785719124</id>
            <summary type="text">ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க எந்த ஒப்பந்தமும் போடப்படவில்லை எனத் தெரிவித்துள்ள ஈரான், தாக்குதலை நிறுத்த வேண்டும் என்று அமெரிக்காவிடம் வேண்டுகோள் ஏதும் வை...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க எந்த ஒப்பந்தமும் போடப்படவில்லை எனத் தெரிவித்துள்ள ஈரான், தாக்குதலை நிறுத்த வேண்டும் என்று அமெரிக்காவிடம் வேண்டுகோள் ஏதும் வைக்கவில்லை எனத் தெரிவித்துள்ளது.</p><p>


கடந்த ஜூன் மாதம் ஈரான் - அமெரிக்கா இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது. எனினும் ஓமன் கடற்பகுதியில் வந்த வணிக கப்பல்கள் மீது ஈரான் ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தியதால், அந்த ஒப்பந்தத்தை அதிபர் ட்ரம்ப் ரத்து செய்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bc491acf-6a88-4bf6-b23f-75a05003ebaf/26-6a6fe98ee699d.webp' /></p><p> </p><p>ஈரான் மீது மீண்டும் வான்வழி தாக்குதல்களையும் தீவிரப்படுத்தினார்.அதற்கு பதிலடி தரும் வகையில், வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை ஈரான் குறிவைத்து தாக்கியது.
</p><p>

கடந்த வாரம் ஜோர்டானில் உள்ள அமெரிக்க ராணுவத் தளத்தின் மீது தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து, ஈரான் மீது மிக கடுமையான தாக்குதல் நடத்தப்படும் என ட்ரம்ப் எச்சரித்திருந்தார். </p><p>அமெரிக்கா மீண்டும் தாக்குதலை தீவிரப்படுத்தினால், வளைகுடாவில் மேலும் பதற்றம் அதிகரிக்கும் என சவுதி அரேபிய பட்டத்து இளவரசர் முஹம்மது பின் சல்மான் கவலை தெரிவித்தார்.
</p><p>

அமெரிக்க அதிபர் ட்ரம்புடன் தொலைபேசியில் பேசிய அவர், ஈரானின் எரிபொருள் உள்கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தினால், பதிலுக்கு வளைகுடா நாடுகளில் உள்ள எரிபொருள் உள்கட்டமைப்புகளுக்கு ஈரான் குறிவைக்கும் என எச்சரித்ததாக கூறப்படுகிறது. </p><p>தவிர, ஈரானுடனான போரை முடிவுக்கு கொண்டு வர வளைகுடா நாடுகள் மத்தியஸ்தம் நடத்தி, புதிய அமைதி ஒப்பந்தத்தை ஏற்படுத்தப் போவதாக அமெரிக்காவிடம் தெரிவித்தன.
</p><p>

இதையடுத்து, ஈரான் மீதான தாக்குதலை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
</p><p>இதுகுறித்து சமூக வலைதளத்தில் அவர் கூறியதாவது:
உலக நாடுகளின் நலன் கருதியும், ஈரானின் எதிர்கால வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டும் புதிய தாக்குதல்களை ரத்து செய்ய ஒப்புக்கொண்டுள்ளேன். </p><p>ஈரானுடன் அமைதி ஒப்பந்தம் மேற்கொள்ளும் பணியில், அமெரிக்காவுடன் இணைந்து செயல்பட இஸ்ரேலும் ஒப்புக்கொண்டுள்ளது.இவ்வாறு அதில் கூறியுள்ளார்.


ஆனால், இதனை மறுத்துள்ள ஈரான், அமெரிக்கா உடன் எந்த ஒப்பந்தமும் ஏற்படவில்லை எனத் தெரிவித்துள்ளது.</p><p> மேலும், அமெரிக்காவின் தாக்குதல்கள் தொடரும் வரை ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டு தான் இருக்கும். </p><p>போரை நிறுத்தி வைக்க வேண்டும் என ஈரான் சொன்னதாக டிரம்ப் கூறுவது பொய்யைத் தவிர வேறு ஒன்றும் இல்லை. எதனையும் சமாளிக்க ஈரானிய படைகள் தயாராக உள்ளன எனத் தெரிவித்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-03T01:06:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பச்சை தேயிலைக் கொழுந்து உற்பத்தி 50 சதவீதத்தால் வீழ்ச்சி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/tea-export-tea-eatate-1785717519"></link>
            <id>https://tamilwin.com/article/tea-export-tea-eatate-1785717519</id>
            <summary type="text">பச்சை தேயிலைக் கொழுந்து உற்பத்தி 50 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது. மேலும் கொழுந்து பற்றாக்குறையினால் தேயிலை தூள் உற்பத்தியும் பாதியளவால் குறைவடைந்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>பச்சை தேயிலைக் கொழுந்து உற்பத்தி 50 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது. மேலும் கொழுந்து பற்றாக்குறையினால் தேயிலை தூள் உற்பத்தியும் பாதியளவால் குறைவடைந்துள்ளதால் அந்நியச் செலாவணி சுமார் 40 சதவீதம் நாட்டிற்கு இழக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தேசிய தேயிலை தோட்ட உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.</p><h2>

</h2><p></p><h2>மாதாந்த ஏற்றுமதி</h2><p>மாதாந்தம் தேயிலை ஏற்றுமதி மூலம் 110 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஈட்டப்பட்ட போதிலும் ஏற்பட்டுள்ள கொழுந்து பற்றாக்குறையினால் 50 மில்லியன் டொலர் வரை நாட்டிற்கு இழக்கப்படும் அபாயம் உள்ளதாக சிரேஷ்ட தேயிலை ஆலோசகரும் தேசிய தேயிலை தோட்ட உரிமையாளர்களின் சங்கத்தின் தலைவருமான சமன் கீகனகே தெரிவித்துள்ளார்.
</p><p>
கடுமையான வறட்சி மற்றும் உரப் பற்றாக்குறை காரணமாக பச்சை தேயிலைக் கொழுந்து உற்பத்தி 50 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளதாக அவர் தெரிவித்தார். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a5666a7c-ffde-4cbf-8448-3a279aff2eb9/26-6a6fe3118000b.webp' /></p><p>ஒரு பருவத்தில் ஒரு மரத்தில் இருந்து 03 கிலோகிராம் தேயிலைக் கொழுந்து அறுவடை பெறப்பட்ட போதிலும் அந்த அளவு பாதியளவாகக் குறைந்துள்ளதாகவும் ஒரு ஏக்கரில் இருந்து கிடைக்கப்பெறும் 400 கிலோகிராம் பச்சைத் தேயிலைக் கொழுந்து அறுவடை 200 கிலோகிராம் வரை வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-03T00:41:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[நிலை தடுமாறும் ட்ரம்ப்! மீண்டும் ஈரானுடன் பேச்சுவார்த்தை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/trump-said-peace-talks-with-iran-resume-1785716403"></link>
            <id>https://ibctamil.com/article/trump-said-peace-talks-with-iran-resume-1785716403</id>
            <summary type="text">ஈரானுடனான அமைதிப் பேச்சுவார்த்தைகள் இன்று திங்கட்கிழமை(03) மீண்டும் தொடங்கும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

ஈரான் மீதா...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானுடனான அமைதிப் பேச்சுவார்த்தைகள் இன்று திங்கட்கிழமை(03) மீண்டும் தொடங்கும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.</p><p>

ஈரான் மீதான பெரும் தாக்குதலை ரத்து செய்ததாகக் கூறியதைத் தொடர்ந்து அவரின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
</p><p>
ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், “தாக்குதல் உருவாவதை அவர்கள் கண்டதால், அதன் தீவிரத்தை அவர்கள் அறிந்திருந்தனர். இப்போது நாங்கள் அவர்களுடன் பேச்சுவார்த்தை வடிவில் பேசிக்கொண்டிருக்கிறோம்.அது நாளை மதியம் தொடங்குகிறது, என்ன நடக்கிறது என்று பார்ப்போம்" என்று கூறியுள்ளார்.</p><p></p><h2>மறுத்துள்ள ஈரான்</h2><p>

சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், கத்தார் போன்ற நட்பு நாடுகளும் ஈரானும் திட்டமிடப்பட்ட தாக்குதலை ரத்து செய்யுமாறு தன்னிடம் கேட்டுக்கொண்டதாக ட்ரம்ப் முன்னதாக தெரிவித்திருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a3184660-5960-4672-9b34-1989cf1d4e27/26-6a6fe0d749aac.webp' /></p><p>
</p><p>
எனினும், திட்டமிடப்பட்ட தாக்குதல்களை நிறுத்துமாறு ட்ரம்பிடம் தாங்கள் கோரிக்கை விடுக்கவில்லை என ஈரானிய அரசு ஊடகங்கள் மறுத்துள்ளன. </p><p>

ஈரானின் அரை-அரசு செய்தி நிறுவனம் “முட்டாள் ட்ரம்புக்கு சக்தி தீர்ந்துவிட்டது” என விமர்சித்துப் பதிவிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-03T00:29:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரான்சுக்கு செல்ல தயாராக இருந்த இலங்கை இளைஞர்: திருகோணமலை சாலையில் நேர்ந்த பயங்கரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/2-youngster-died-in-trincomalee-accident-1785715385"></link>
            <id>https://news.lankasri.com/article/2-youngster-died-in-trincomalee-accident-1785715385</id>
            <summary type="text">பிரான்சுக்கு செல்ல தயாராக இருந்த இளைஞர் இலங்கையில் சாலை விபத்தில் உயிரிழந்து இருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சாலை விபத்துஇலங்கையின் திருகோண...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரான்சுக்கு செல்ல தயாராக இருந்த இளைஞர் இலங்கையில் சாலை விபத்தில் உயிரிழந்து இருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><h2> சாலை விபத்து</h2><p>இலங்கையின் திருகோணமலை - மூதூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தோப்பூர் - ஜின்னாநகர், 59 ஆம் கட்டை பகுதியில் நேற்று (02ம் திகதி) மாலை ஏற்பட்ட மோசமான மோட்டார் சைக்கிள் விபத்தில் இரண்டு இளைஞர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.</p><p> திருகோணமலை - மட்டக்களப்பு பிரதான வீதியில் ரிப்பர் வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் இந்த கோர விபத்தானது நிகழ்ந்து இருப்பதாக மூதூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/31dcb410-8b32-4944-995a-7c9e193143a8/26-6a6fdabadcc1e.webp' /></p><p> இந்த சாலை விபத்தில் உயிரிழந்தவர்கள் மூதூர் - கிளிவெட்டி பகுதியைச் சேர்ந்த தமிழ் செல்வன் தனேஸ் (21) மற்றும் அருணவன் செல்வரெத்தினம் (19) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.</p><p></p><p> இவர்களில் ஒருவர் பல்கலைக்கழக மாணவர் என்றும், மற்றொருவர் பிரான்ஸ் நாட்டிற்கு செல்ல தயாராகி கொண்டிருந்தவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>சாலை விபத்தை தொடர்ந்து ரிப்பர் வாகனத்தின் சாரதி மூதூர் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a2810ba5-bcc6-42c9-bf26-6ae0b5e422e0/26-6a6fdabb91105.webp' /></p><p> உயிரிழந்த இரண்டு இளைஞரின் உடலும் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இந்த விபத்து தொடர்பான கூடுதல் விசாரணைகளை மூதூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-03T00:25:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[திடீரென அதிகரித்த மகாவலி கங்கையின் நீர்மட்டம்.. விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/water-level-mahaweli-ganga-increased-flood-warning-1785713431"></link>
            <id>https://tamilwin.com/article/water-level-mahaweli-ganga-increased-flood-warning-1785713431</id>
            <summary type="text">புதிய இணைப்பு&amp;nbsp;அடுத்த 24 மணி நேரத்திற்குள் மகாவலி ஆற்றங்கரையோரம் உள்ள பல தாழ்வான பகுதிகளில் வெள்ள அபாயம் இருப்பதாக நீர்ப்பாசனத் திணைக்களம் ஒரு அறி...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு&nbsp;</h2><p>அடுத்த 24 மணி நேரத்திற்குள் மகாவலி ஆற்றங்கரையோரம் உள்ள பல தாழ்வான பகுதிகளில் வெள்ள அபாயம் இருப்பதாக நீர்ப்பாசனத் திணைக்களம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
</p><p>
இந்த எச்சரிக்கை அறிக்கை இன்று (03) முதல் நாளை (04) நள்ளிரவு 12.30 மணி வரை செல்லுபடியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

அதன்படி, இந்த அறிக்கையில் மகாவலி ஆற்றுப் படுகையில் உள்ள உடுநுவர, உடபாலத்த, யதிநுவர, கங்கைஹல கோரள, பஸ்பாகே கோரள மற்றும் கங்காவத்த கோரள ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்குச் சொந்தமான தாழ்வான பகுதிகளுக்குப் பொருந்தும்.
</p><p>
எனவே, மகாவலி ஆற்றங்கரையோரம் மற்றும் அப்பகுதிகளில் உள்ள தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் மிகுந்த விழிப்புடன் இருக்குமாறும், ஏற்படக்கூடிய வெள்ளப்பெருக்கிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறும் நீர்ப்பாசனத் திணைக்களம் கேட்டுக்கொள்கிறது.</p><p>

இது தொடர்பாகத் தேவையான அவசர நடவடிக்கைகளை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட பேரிடர் மேலாண்மைத் திணைக்களங்களும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன.
</p><p>
வரும் காலத்தில் மேலும் மழை பெய்ய வாய்ப்புள்ளதால், பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடனும் அதீத எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும் என நீர்ப்பாசனத் திணைக்களம் மேலும் வலியுறுத்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a54b07a2-8451-4809-a4ce-921a7ddae7b8/26-6a6fded586e75.webp' /></p><h2>முதலாம் இணைப்பு&nbsp;</h2><p>நாவலபிட்டி பகுதியில் தொடர்ந்து பலத்த மழை&nbsp;பெய்து வருகின்றது.&nbsp;</p><p>இதன் காரணமாக, மகாவலி கங்கையின் நீர்மட்டம் வெள்ள அபாய மட்டத்திற்கு மேல் தொடர்ந்தும் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p></p><h2>மக்கள் அவதானம்..&nbsp;</h2><p>எனவே, தாழ்நிலப் பகுதிகள் மற்றும் வெள்ளப் பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ள பகுதிகளில் வாழும் பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2baae454-a126-4c46-b8fa-4e389f0c4244/26-6a6fd4306153a.webp' /></p><p>அத்துடன், தேவையில்லாத பயணங்களைத் தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
</p><p>
மேலும், அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் வகையில் அதிகாரிகளால் வெளியிடப்படும் அவசரகால அறிவுறுத்தல்களைப் பின்பற்றி நடக்குமாறும் பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-03T00:21:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரச தரப்பில் நிலவும் நீண்ட தாமதங்கள்.. 15,000 கைதிகளுக்கு ஏற்பட்ட சிக்கல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/delay-15-000-drug-test-reports-prison-overcrowding-1785714812"></link>
            <id>https://tamilwin.com/article/delay-15-000-drug-test-reports-prison-overcrowding-1785714812</id>
            <summary type="text">நாடு முழுவதும் உள்ள 22 சிறைகளில், போதைப்பொருள் சோதனை அறிக்கைகள் கிடைப்பதில் ஏற்பட்ட நீண்ட தாமதங்கள் காரணமாக 15,117 சந்தேக நபர்கள் விடுதலை பெற முடியவில...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடு முழுவதும் உள்ள 22 சிறைகளில், போதைப்பொருள் சோதனை அறிக்கைகள் கிடைப்பதில் ஏற்பட்ட நீண்ட தாமதங்கள் காரணமாக 15,117 சந்தேக நபர்கள் விடுதலை பெற முடியவில்லை என்று தேசிய தணிக்கை அலுவலகம் தெரிவித்துள்ளது.</p><p> மேலும், நீதிமன்றங்களால் விதிக்கப்பட்ட சிறிய அபராதங்களைக் கூட செலுத்த முடியாததால், 28 சிறைகளில் உள்ள 1,940 கைதிகள் மேலும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p></p><h2>தொடரும் சிக்கல்..&nbsp;</h2><p>
</p><p>
சிறைச்சாலை அமைப்பில் நிலவும் கடுமையான நெரிசலுக்கு இந்தப் பிரச்சினைகளே முக்கிய காரணங்கள் என்று தேசிய தணிக்கை அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a6ff58dc-0d06-41fe-af50-72723c296eea/26-6a6fdae5da302.webp' /></p><p> போதைப்பொருள் பயன்பாடு, வைத்திருத்தல் மற்றும் விற்பனைக்காகக் கைது செய்யப்பட்ட கைதிகளை மற்ற கைதிகளிடமிருந்து பிரிக்கத் தவறியதையும் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளது.
</p><p>
போதைப்பொருள் குற்றவாளிகள் பாதாள உலகச் செயல்பாட்டாளர்களுடன் ஒன்றாகத் தடுத்து வைக்கப்படுவதால், சிறைகளுக்குள் பாதாள உலக நடவடிக்கைகள் அதிகரித்து, இது சமூகத்தில் ஒரு கடுமையான நெருக்கடியை உருவாக்க வழிவகுத்துள்ளது என்றும் அந்த அறிக்கை மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-03T00:06:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரஷ்யாவிற்குள் உக்ரைன் நடத்திய வேட்டை: 635 ட்ரோன்களை சுட்டு வீழ்த்திய ரஷ்யா: 8 பேர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/ukraine-massive-drone-attack-on-russia-8-dead-1785711589"></link>
            <id>https://news.lankasri.com/article/ukraine-massive-drone-attack-on-russia-8-dead-1785711589</id>
            <summary type="text">ரஷ்யாவின் உள்கட்டமைப்புகள் மீது உக்ரைன் நடத்திய அதிரடி ட்ரோன் தாக்குதலில் 8 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர். ரஷ்யா மீது உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதல்
...</summary>
            <content type="html"><![CDATA[<p>ரஷ்யாவின் உள்கட்டமைப்புகள் மீது உக்ரைன் நடத்திய அதிரடி ட்ரோன் தாக்குதலில் 8 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர்.</p><h2> ரஷ்யா மீது உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதல்</h2><p>
ஞாயிற்றுக்கிழமை ரஷ்யாவின் ஆழமான பகுதிகளை குறிவைத்து உக்ரைன் அதிரடியான ட்ரோன் தாக்குதலை நடத்தியுள்ளது.</p><p>இந்த தாக்குதலில் ரஷ்யாவின் ராணுவத்தின் நிலைகள், பொது மக்கள் குடியிருப்பு மற்றும் எரிசக்தி நிலையங்கள் குறிவைத்து தகர்க்கப்பட்டன.</p><p>உக்ரைனின் இந்த ட்ரோன் தாக்குதல் சம்பவத்தில் சிக்கி ரஷ்யாவில் இதுவரை 8 பேர் வரை கொல்லப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cea027b4-773a-4815-9fde-342780a06bc6/26-6a6fcbe6f320a.webp' /></p><p>எங்கல்ஸ் பகுதியின் குடியிருப்பு பகுதி மீது ட்ரோன் மோதியதில் 2 பேரும், சரடோவ் நகரின் அடுக்குமாடி குடியிருப்பு மீது ட்ரோன் மோதியதில் பலத்த சேதமும்&nbsp;ஏற்பட்டுள்ளது. மேலும் அங்கிருந்த எண்ணெய் ஆலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.</p><p>கிட்டத்தட்ட உக்ரைனில் இருந்து 1300 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இப்பகுதியில் உக்ரைன் நடத்திய தாக்குதலில் 3 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் இருவர் காயமடைந்துள்ளனர்.</p><p></p><p> பெல்கோரரோட் பகுதியில் ட்ரோன் தாக்கியதில் 3 பேர் கொல்லப்பட்டனர். 5 பேர் படுகாயமடைந்துள்ளனர்.</p><p>உக்ரைனிய படையின் இந்த ஒருங்கிணைந்த ட்ரோன் தாக்குதலை ரஷ்ய பாதுகாப்பு படைகள் முழுவீச்சில் தடுத்து நிறுத்தினர். ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகத்தின் தகவல்படி, கிட்டத்தட்ட 635 ட்ரோன்களை சுட்டு வீழ்த்தி உள்ளது.</p><h2>உறுதிப்படுத்திய ஜெலென்ஸ்கி</h2><p>இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி ரஷ்யா மீது நடத்தப்பட்ட பிரம்மாண்ட தாக்குதலை உறுதிப்படுத்தினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c23941f1-9db2-4f0c-8765-ec12deea2f59/26-6a6fcbe7a399e.webp' /></p><p> மேலும் சரடோவ் நகரில் அமைந்திருந்த எண்ணெய் உள்கட்டமைப்புகளையும், எங்கல்ஸில் உள்ள ரஷ்யாவின் ராணுவ தளத்தையும் உக்ரைனிய படைகள் வெற்றிகரமாக தாக்கி இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.</p><p>ரஷ்யாவின் தொடர் அத்துமீறலுக்கு உக்ரைனின் நேரடி பதிலடி தான் இந்த நடவடிக்கை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-03T00:04:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லை அதிகரிப்புக்கு சட்டமா அதிபர் வழங்கிய விளக்கம்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/attorney-general-department-1785714446"></link>
            <id>https://tamilwin.com/article/attorney-general-department-1785714446</id>
            <summary type="text">அரசியலமைப்பின் 22 ஆம் திருத்தம் ஊடாக நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லை அதிகரித்தல் மற்றும் அது தொடர்பான திருத்த மசோதா அரசியலமைப்புக்கு அமைவானது என சட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரசியலமைப்பின் 22 ஆம் திருத்தம் ஊடாக நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லை அதிகரித்தல் மற்றும் அது தொடர்பான திருத்த மசோதா அரசியலமைப்புக்கு அமைவானது என சட்டமா அதிபர் திணைக்களம் அனுமதியளித்துள்ளது.
</p><p>
அரசியலமைப்பு, நீதிமன்றங்கள் கட்டமைப்புச் சட்டம், அரசாங்க மற்றும் நீதித்துறை அதிகாரிகளின் ஓய்வூதியக் கட்டளைச் சட்டம் என்பவற்றில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன.
</p><p>
இத்திருத்தங்களின் மூலம் உயர்நீதிமன்றம், மேன்முறையீட்டு நீதிமன்றம், மேல்நீதிமன்றங்கள், மாவட்ட மற்றும் நீதவான் நீதிமன்றங்களின் நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை இரண்டு வருடங்களால் அதிகரிப்பதற்கும், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை 19 இலிருந்து 24 ஆகவும், மேல்நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை 110 இலிருந்து 120 ஆகவும் அதிகரிப்பதற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
</p><h2>
</h2><p></p><h2>கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள மாற்றம்</h2><p>அத்துடன், நீதித்துறை கட்டமைப்பில் பெரும் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. சிவில் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்குப் பதிலாக அத்தகைய இரு மேல்நீதிமன்றங்கள் நிறுவப்பட்டுள்ளன. </p><p>மேலும், மூன்று வணிக மேல்நீதிமன்றங்கள் ஐந்து வணிக மேல்நீதிமன்றங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், குற்றவியல் வழக்குகளை விசாரணை செய்வதற்காக எட்டு மேல்நீதிமன்றங்கள் பதினொன்றாக அதிகரிக்கப்பட்டுள்ளன.
</p><p>
குறிப்பாக முன்னாள் அமைச்சர்களின் உத்தியோகபூர்வ இல்லங்கள் நீதிமன்றங்களாக மாற்றப்பட்டுள்ளதுடன், கொழும்பு மேல்நீதிமன்றத்தின் இலக்கம் 06, 10, 11 ஆகிய அறைகளில் லஞ்ச ஊழல் வழக்குகள் தினமும் விசாரணை செய்யப்பட்டு வருகின்றன. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c7ede323-5787-47ef-9433-4bff593a0715/26-6a6fd710ca31d.webp' /></p><p>இதற்கு முன்னர் லஞ்ச ஊழல் வழக்குகள் ஒரேயொரு நீதிமன்றத்திலேயே விசாரணை செய்யப்பட்டு வந்தன.

தெய்யந்தர, அங்குணுகொலபெலஸ்ஸ, பிபில, கல்கமுவ போன்ற 08 நீதவான் நீதிமன்றங்களுக்கு மாவட்ட அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளதுடன், </p><p>உத்தியோகத்தர் பற்றாக்குறை காரணமாக மூடப்பட்டிருந்த இரத்தினபுரி, கம்பஹா, அனுராதபுரம், அம்பாறை நீதிமன்றங்கள் மீள செயற்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. </p><p>புத்தளம், வெல்லவாய, ஹட்டன் மற்றும் வெலிசர ஆகிய பகுதிகளில் புதிய நீதிமன்றங்கள் நிறுவப்பட்டுள்ளன.

தற்போது அரச பகுப்பாய்வாளர் திணைக்களத்திற்குத் தேவையான உத்தியோகத்தர்கள் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டுள்ளதுடன், அதற்குத் தேவையான இயந்திர சாதனங்களை வழங்குவதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-02T23:52:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாகிஸ்தானில் சுய அழிப்பு படையினர் நடத்திய வெடிகுண்டு தாக்குதல்: 5 காவலர்கள் உட்பட 14 பேர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/pakistan-terror-bombing-kills-14-people-1785714316"></link>
            <id>https://news.lankasri.com/article/pakistan-terror-bombing-kills-14-people-1785714316</id>
            <summary type="text">பாகிஸ்தானின் வட மேற்கு பகுதியில் சுய அழிப்பு படையினர் நடத்திய தாக்குதலில் 14 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர். பாகிஸ்தானில் கோர தாக்குதல்ஞாயிற்றுக்கிழமை பா...</summary>
            <content type="html"><![CDATA[<p>பாகிஸ்தானின் வட மேற்கு பகுதியில் சுய அழிப்பு படையினர் நடத்திய தாக்குதலில் 14 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர்.</p><h2> பாகிஸ்தானில் கோர தாக்குதல்</h2><p>ஞாயிற்றுக்கிழமை பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் சுய அழிப்பு படையினர் நடத்திய தாக்குதல் 14 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர். 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.</p><p> இந்த தாக்குதலில் 5 காவல்துறை அதிகாரிகள் வரை உயிரிழந்து இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/412a757d-a945-4362-97cb-9e5f44479e70/26-6a6fd68e6de75.webp' /></p><p></p><p> கபல்(Kabal) பகுதியில் காவல் நிலையத்திற்கு அருகில் நடைபெற்ற போராட்ட கூட்டத்தை குறித்து இந்த மோசமான குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்த்தப்பட்டுள்ளது.</p><p> குண்டுவெடிப்பில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கையை கைபர் பக்துன்க்வா அவசரகால சேவையின் செய்தி தொடர்பாளர் பிலால் பைசி உறுதிப்படுத்தியுள்ளார்.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">🚨 Pakistan: A suicide bomber has exploded near a police station in Kabal, Swat valley of Khyber Pakhtunkhwa province. There was large public rally, ‘Aman Pasoon’ in the area when the bombing took place. Multiple casualties have been reported. <a href="https://t.co/QXIMj7czin">https://t.co/QXIMj7czin</a></p>&mdash; Asia Front (@asiafront0) <a href="https://x.com/asiafront0/status/2083935658276790464?ref_src=twsrc%5Etfw">August 2, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p>&nbsp;<br></p>]]></content>
            <updated>2026-08-02T23:45:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவில் துப்பாக்கி சூடு ; மூவர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/three-killed-in-us-shooting-1785713946"></link>
            <id>https://canadamirror.com/article/three-killed-in-us-shooting-1785713946</id>
            <summary type="text">அமெரிக்காவில் நடந்த துப்பாக்கி சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர்.

அமெரிக்காவின் இடஹோ மாகாணம் டுவின் பால்ஸ் நகரில் துரித உணவகம் செயல்பட்டு வருகிறது.&amp;nbsp...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவில் நடந்த துப்பாக்கி சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர்.
</p><p>
அமெரிக்காவின் இடஹோ மாகாணம் டுவின் பால்ஸ் நகரில் துரித உணவகம் செயல்பட்டு வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b3c27a0b-8436-4698-ac04-206f251973ac/26-6a6fd51ba9e83.webp' />&nbsp;</p><p>

</p><p>இந்த உணவகத்தில் நேற்று இரவு (அந்நாட்டு நேரப்படி) வாடிக்கையாளர்கள் உணவு சாப்பிட்டுக்கொண்டிருந்தனர். </p><p>அப்போது அங்கு துப்பாக்கியுடன் வந்த நபர் அங்கிருந்தவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தினர்.
</p><p>
இந்த துப்பாக்கி சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர். மேலும், 7 பேர் படுகாயமடைந்தனர். </p><p>தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார், துப்பாக்கி சூடு நடத்திய நபரை சுட்டுக்கொன்றனர்.</p><p> மேலும், இந்த துப்பாக்கி சூட்டிற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-08-02T23:39:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரஷ்ய விளையாட்டு மைதானத்தில் உக்ரைன் பயங்கர தாக்குதல்! சிறுமி பலி - பலர் படுகாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/ukraine-drone-attack-child-death-1785711201"></link>
            <id>https://ibctamil.com/article/ukraine-drone-attack-child-death-1785711201</id>
            <summary type="text">
ரஷ்ய எல்லைப் பகுதியான பெல்கோரோடில் உள்ள விளையாட்டு மைதானம் ஒன்றில் நடத்தப்பட்ட உக்ரேனிய ட்ரோன் தாக்குதலில் ஒரு சிறுமி உயிரிழந்ததுடன், இருவர் காயமடைந...</summary>
            <content type="html"><![CDATA[<p>
ரஷ்ய எல்லைப் பகுதியான பெல்கோரோடில் உள்ள விளையாட்டு மைதானம் ஒன்றில் நடத்தப்பட்ட உக்ரேனிய ட்ரோன் தாக்குதலில் ஒரு சிறுமி உயிரிழந்ததுடன், இருவர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
</p><p>
இச்சம்பவத்தை உயர்மட்ட ரஷ்ய அதிகாரி ஒருவர் மனிதாபிமானமற்ற பயங்கரவாதச் செயல் எனக் கண்டித்துள்ளார்.

உக்ரேனிய எல்லைக்கு அருகிலுள்ள பிரின்ட்செவ்கா கிராமத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தை ஒட்டிய பகுதியில் இந்த ட்ரோன் தாக்கியதாக கூறப்படுகிறது.
</p><p>
அதில், படுகாயமடைந்த 13 வயது சிறுமியை மருத்துவக் குழுவினரால் காப்பாற்ற முடியாமல் போனதாகவும், 7 மற்றும் 9 வயதுடைய மேலும் இரண்டு சிறுமிகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.</p><p></p><h2>பயங்கரவாதச் செயல்</h2><p>
</p><p>
விளையாட்டு மைதானத்திற்கு அருகே நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல் "கீவ் ஆட்சியின் மற்றொரு மனிதாபிமானமற்ற பயங்கரவாதச் செயல்" என்று ரஷ்ய அமைப்புகள் குற்றஞ்சாட்டியுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d23b2377-0025-417b-980c-58f2ac88b3a6/26-6a6fd296106fc.webp' /></p><p><i>Image Credit:&nbsp;NBC News</i></p><p>
</p><p>
இந்தச் சம்பவம் குறித்து கருத்து தெரிவிக்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகத்திடமிருந்து இந்த பதிலும் இதுவரை கிடைக்கவில்லை என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank" style=""> <b>WHATSAPP CHANNEL</b></a><b> </b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table><p>
</p>]]></content>
            <updated>2026-08-02T23:38:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[மட்டக்களப்பில் இடம்பெற்ற சமகால அரசியலும் போராளிகள் வகிபாகமும் மாநாடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-lankan-tamils-batticaloa-meeting-1785712311"></link>
            <id>https://tamilwin.com/article/sri-lankan-tamils-batticaloa-meeting-1785712311</id>
            <summary type="text">போராளிகள் நலம்புரி சங்கத்தின் ஏற்பாட்டில் சமகால அரசியலும் போராளிகள் வகிபாகமும் எனும் மாநாடு மட்டக்களப்பில் நேற்று இடம்பெற்றது.&amp;nbsp;இதன்போது வரலாற்றின...</summary>
            <content type="html"><![CDATA[<p>போராளிகள் நலம்புரி சங்கத்தின் ஏற்பாட்டில் சமகால அரசியலும் போராளிகள் வகிபாகமும் எனும் மாநாடு மட்டக்களப்பில் நேற்று இடம்பெற்றது.&nbsp;</p><p>இதன்போது வரலாற்றின் வேர்கள் எனும் கௌரவிப்பும் தமிழ்தேசிய விடுதலைப்போராட்ட காலத்தில் 2009, மே, 18,க்கு முன்னர் தமிழ்தேசியப்பணிகளை கொள்கை தவறாமல் ஆற்றியதற்காக தமிழ் ஆயுத கும்பல்களால் படுகொலைசெய்யப்பட்ட பற்றாளர்களுக்கும், அந்த காலங்களில் பல்வேறுபட்ட பணிகளை செய்தவர்கள், படைப்பாளிகள், கலைஞர்கள், போராளிக்கலைஞர்கள் என 25, தேசப்பற்றாளர்களுக்கான வரலாற்று வேர்கள் என்ற மகுடம் சூட்டி பாராட்டப்பட்டது.</p><p></p><h2>பலரின் பங்கேற்பு&nbsp;</h2><p>
இந்த நிகழ்வில் சிறப்பு அதிதிகளாக மட்டக்களப்பு நகரபிதா சிவம் பாக்கியன், இலங்கை தமிழ் அரசுக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறிதரன் யாழ்மாவட்டம், கவிந்திரன் கோடீஷ்வரன் அம்பாறைமாவட்டம், ஞானமுத்து ஶ்ரீநேசன் மட்டக்களப்பு மாவட்டம், வைத்தியர் இளையதம்பி ஶ்ரீநாத், மேனாள் பா.உறுப்பினர்களான பாக்கியசெல்வம் அரியநேத்திரன் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7275ea96-8ead-4c39-bbb8-a7b5216e1389/26-6a6fd08c70b20.webp' /></p><p>மேலும், சீனித்தம்பி யோகேஷ்வரன்,தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி மட்டக்களப்பு மாவட்ட தலைவர் த.சுரேஷ்,மேனாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் மார்கண்டு நடராசா, மட்டக்களப்பு மேற்கு பிரதேச சபை தவிசாளர் த. கோபாலபிள்ளை,
ஆன்மீகத்தலைவர்களான கொக்கட்டிச்சோலை ஶ்ரீதான்தோன்றீஷ்வரர ஆலய பிரதம குரு சிவசிறி சச்சிதானந்தக்குருக்கள், சிவஶ்ரீ வேலன்சுவாமி, மூத்த அருட்தந்தை ஜோசப்மேரி அடிகளார், அருட்தந்தை லூத் அடிகளார்,மேனாள் போராளிகள், தமிழ்தேசிய பற்றாளர்கள், ஊடகவியலாளர்கள் என நூறுக்கணக்கானவர்கள் கலந்து சிறப்பித்தனர்.
</p><p>இந்த மாநாட்டு நிகழ்வில் முக்கியமாக தியாச்சுடர் அன்னைபூபதி அரங்கம் என நிகழ்வு மேடையில் குறிப்பிட்டு தமிழ்தேச விடுதலைக்காக உழைத்து தமிழ் ஆயுதக்குழுக்களால் சுட்டுக்கொல்லப்பட்ட 
மாமனிதர்களான ஜோசப்பரராசசிங்கம் பா.உ, சந்திரநேரு மேனாள் பா.உ, ஊடகவியலார் தராகி சிவராம், நாட்டுப்பற்றாளர்களான் ஊடகவியலாளர் ஐ. நடேசன், மனித உரிமை செயல்பாட்டாளர் சந்திரா பெர்னான்டோ, அருட்தந்தையர்களான சுட்டுக்கொல்லப்பட்ட அமரிக்க துறவி அருட்தந்தை இயுனின் ஜே ஹபர், சவரிமுத்து செல்வராசா, மற்றும் கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர் தம்பையா ஆகிய ஒன்பது பேரின் படங்களும் விசேடமாக பார்வைக்காக வைத்து அஞ்சலி வணக்கம் செலுத்தப்பட்டது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-02T23:20:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[மஹர சிறைச்சாலை கலவரத்தை திட்டமிட்ட கைதிகள்.. அரசாங்கத்திற்கு காத்திருந்த அதிர்ச்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/clashes-mahara-prison-150-million-damage-1785689826"></link>
            <id>https://tamilwin.com/article/clashes-mahara-prison-150-million-damage-1785689826</id>
            <summary type="text">நேற்று (1) மஹர சிறையில் நடந்த மோதலால் சிறைக்கு ஏற்பட்ட சேதத்தின் மதிப்பு ரூபா 15 கோடிக்கும் அதிகமாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இச்சம்பவத்திற்கா...</summary>
            <content type="html"><![CDATA[<p>நேற்று (1) மஹர சிறையில் நடந்த மோதலால் சிறைக்கு ஏற்பட்ட சேதத்தின் மதிப்பு ரூபா 15 கோடிக்கும் அதிகமாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இச்சம்பவத்திற்கான காரணங்களைக் கண்டறிய தொடங்கப்பட்டுள்ள விசாரணைகளின் போது இத்தகவல் மதிப்பிடப்பட்டுள்ளது.&nbsp;</p><p>

சிறைக்கைதிகள், சிறையில் உள்ள பல பொருட்களைச் சேதப்படுத்தியுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. </p><p>மஹர சிறைக்குள் பல கட்டிடங்களின் ஓடுகள் உடைக்கப்பட்டு, கூரைகள் கடுமையாகச் சேதமடைந்துள்ளதாகவும், சிறை மறுவாழ்வுத் திட்டங்களில் தையலுக்குப் பயன்படுத்தப்படும் பல உபகரணங்களைச் சிறைக்கைதிகள் அழித்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.</p><p></p><h2>திட்டமிட்ட கைதிகள்..&nbsp;</h2><p>
</p><p>நேற்று நள்ளிரவு வரை சிறை வளாகத்திற்கு வெளியே இருந்து சிறைக்கைதிகள் கற்களை வீசி வந்தனர். கல் தாக்குதல்களால் சிறையைச் சுற்றியுள்ள பல வீடுகளும் சேதமடைந்துள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b41fe369-720f-4db0-bb66-702f346d4536/26-6a6f88aed1d72.webp' /></p><p>
சாத்தான், அசார், பெட்டா மற்றும் மற்றொரு கைதியால் இந்தக் கலவரம் திட்டமிடப்பட்டது என்று பொலிஸார் நடத்திய ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
</p><p>
கலவரத்தின் போது ஒழுங்கீனமாக நடந்து கொண்ட கைதிகளை இன்று பிற்பகல் அடையாளம் கண்டு, அவர்களில் 104 பேரை பூசா உட்பட 7 பிற சிறைகளுக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p>
4,100க்கும் மேற்பட்ட கைதிகளைக் கொண்ட மஹர சிறையில், நேற்று மாலை சுமார் 4 மணியளவில் கலவரம் வெடித்தது.</p><p> 13 மணி நேரத்திற்கும் மேலான போராட்டத்திற்குப் பிறகு, இன்று காலை சுமார் 6 மணியளவில் பாதுகாப்புப் படையினர் நிலைமையை முழுமையாகக் கட்டுப்படுத்தினர்.

இருப்பினும், இந்தக் கலவரத்தில் ஒரு கைதி உயிரிழந்தார் மற்றும் 9 கைதிகள் காயமடைந்தனர்.</p><p></p><h2>உயிரிழந்த கைதி..&nbsp;</h2><p> உயிரிழந்தவர், வத்தளை, ஹெண்டலாவைச் சேர்ந்த 33 வயது நபர் ஆவார். அவர் ஒரு மோட்டார் சைக்கிளைத் திருடியமை மற்றும் 20 கிராம் ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் பேரில் காவலில் வைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/14262489-7ba2-402c-83db-0a303508f4e6/26-6a6f88afc3814.webp' /></p><p>

சிறையில் போதைப்பொருள் கடத்தலைக் கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட கடுமையான நடவடிக்கைகளால், இப்போதெல்லாம் போதைப்பொருள் தட்டுப்பாடு நிலவுவதே இந்தக் கலவரத்திற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.
</p><p>
நேற்று காலை, நான்கு கைதிகள் ஒரு கூரையின் மீது ஏறி சிறை நிர்வாகத்திற்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, ​​ஒரு மூத்த சிறை அதிகாரி அங்கு சென்று இது குறித்து கைதிகளிடம் விசாரித்துள்ளார்.&nbsp;</p><p>

இருப்பினும், அங்கிருந்த கைதிகள் சிறை அதிகாரிகள் மீது கற்களை வீசியுள்ளனர். இதனை தொடர்ந்து, ​​அதிகாரிகள் அந்த இடத்தை விட்டுச் சென்றுள்ளனர்.</p><p>சிறை மருத்துவமனையில் இருந்த மருந்துகள், சமையலறையில் இருந்த கூர்மையான ஆயுதங்கள், மற்றும் துப்பாக்கிக் கிடங்கில் இருந்த ஆயுதங்கள் மற்றும் உபகரணங்கள் ஆகியவற்றை அந்த இடங்களிலிருந்து பாதுகாப்பாக அகற்றுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.</p><p></p><h2>&nbsp;துப்பாக்கிச் சூடு&nbsp;</h2><p>
இதற்கிடையில், சுமார் 1,500 பிற கைதிகள், சிறையின் ஒரு பக்கத்தில் கட்டப்பட்டு வரும் சுவரை உடைத்துக்கொண்டு தப்பிக்க முயன்றதாகவும் அந்த முயற்சியை முறியடிப்பதற்காக சிறை அதிகாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் கூறப்படுகின்றது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5824defc-f9d0-41c5-9c4c-3009632289d7/26-6a6f88b082b81.webp' /></p><p>
இருப்பினும், அப்போது, ​​மற்றொரு குழுவினர் ஒரு சிறைக் கட்டிடத்திற்குத் தீ வைத்துள்ளனர். இதுகுறித்த அறிக்கைகள் மீதான முதற்கட்ட விசாரணையில், அவர்களில் ஒரு குழுவினர் பின்னர் போதைப்பொருட்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்த கட்டிடத்திற்குள் புகுந்து, சிறைக் கைதிகளின் வசம் இருந்த போதைப்பொருட்களைப் பயன்படுத்தியமை தெரியவந்தது.
</p><p>
இத்தகைய சூழலில், மற்றொரு கைதிகள் குழு, அந்தக் குழுவினர் அடைக்கப்பட்டிருந்த வார்டுகளுக்குச் சென்று, பூட்டுகளை உடைத்து, அந்த அறைகளிலிருந்து வெளியேற வழிவகுத்துள்ளனர்.
</p><p>
அவர்களில் ஒரு குழுவினர் அறைகளிலிருந்து வெளியே வந்துகொண்டிருந்தபோது, ​​மற்றொரு கைதிகள் குழுவினர் அவ்வாறு செய்ய மறுத்து, தாங்கள் தங்கியிருந்த அறைகளிலேயே இருந்துள்ள நிலையில், ​​கலவரத்தை ஏற்படுத்தி வந்த கைதிகள் வந்து அவர்களைத் தாக்கியதாகவும் கூறப்படுகிறது.</p>]]></content>
            <updated>2026-08-02T23:12:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kiyas Shafe</name>
            </author>
            <title type="text"><![CDATA[கோர விபத்தில் பலியான பல்கலைக்கழக மாணவன்.. பிரான்ஸ் செல்லவிருந்த இளைஞனுக்கு நேர்ந்த கதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/accident-in-trincomalee-uni-boy-died-youngman-died-1785711574"></link>
            <id>https://tamilwin.com/article/accident-in-trincomalee-uni-boy-died-youngman-died-1785711574</id>
            <summary type="text">திருகோணமலை - மூதூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தோப்பூர் - ஜின்னாநகர், 59ஆம் கட்டை பகுதியில் நேற்று (02) மாலை ஏற்பட்ட கோர விபத்தில் இரண்டு
இளைஞர்கள் உயிர...</summary>
            <content type="html"><![CDATA[<p>திருகோணமலை - மூதூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தோப்பூர் - ஜின்னாநகர், 59ஆம் கட்டை பகுதியில் நேற்று (02) மாலை ஏற்பட்ட கோர விபத்தில் இரண்டு
இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.
</p><p>
திருகோணமலை - மட்டக்களப்பு பிரதான வீதியில் ரிப்பர் வாகனத்துடன் மோட்டார்
சைக்கிள் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக மூதூர் பொலிஸார்
தெரிவித்துள்ளனர்.</p><p></p><h2>சரணடைந்த&nbsp;சாரதி </h2><p>

உயிரிழந்தவர்கள் மூதூர் - கிளிவெட்டி பகுதியைச் சேர்ந்த தமிழ் செல்வன் தனேஸ்
(21) மற்றும் அருணவன் செல்வரெத்தினம் (19) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4fe9260d-9fd7-4a01-b204-28b56d2c34d8/26-6a6fccec001ed.webp' /></p><p>

இவர்களில் ஒருவர் பல்கலைக்கழக மாணவரும், மற்றொருவர் பிரான்ஸ் செல்லத் தயாராக
இருந்த இளைஞரும் என தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
விபத்தையடுத்து ரிப்பர் வாகனத்தின் சாரதி மூதூர் பொலிஸ் நிலையத்தில்
சரணடைந்துள்ளார்.</p><p>

உயிரிழந்த இருவரின் சடலங்களும் மூதூர் தள வைத்தியசாலையின் பிரேத அறையில்
வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார்
மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-02T23:07:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வறண்டுபோன ஐரோப்பிய நதி., ஒற்றை அணு மின் நிலையத்தையும் மூடும் நாடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/hungary-shuts-nuclear-plant-amid-danube-drought-1785655426"></link>
            <id>https://news.lankasri.com/article/hungary-shuts-nuclear-plant-amid-danube-drought-1785655426</id>
            <summary type="text">ஐரோப்பிய நாடான ஹங்கேரி, தனது ஒரே அணு மின் நிலையமான பாக்ஸ் (Paks) அணு மின் நிலையத்தை மூடுவதாக அறிவித்துள்ளது.

கடந்த 44 ஆண்டுகளில் முதல் முறையாக முழு...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஐரோப்பிய நாடான ஹங்கேரி, தனது ஒரே அணு மின் நிலையமான பாக்ஸ் (Paks) அணு மின் நிலையத்தை மூடுவதாக அறிவித்துள்ளது.
</p><p>
கடந்த 44 ஆண்டுகளில் முதல் முறையாக முழுமையாக இந்த அணுமின் நிலையம் நிறுத்தம் செய்யப்படுகிறது.</p><p>

இந்த மின் நிலையம் நாட்டின் மின்சார தேவையின் அரைபங்கிற்கும் மேல் வழங்கி வருகிறது.

ஆனால், டானியூப் ஆற்றின் நீர்மட்டம் வரலாற்றிலேயே மிகக் குறைந்த நிலையில் சென்றதால், ரியாக்டர்களை குளிர்விக்க தேவையான நீர் கிடைக்கவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9b36250a-b765-4b18-9233-d2cd60c84508/26-6a6ef0845cb54.webp' /></p><p>

கடந்த வெள்ளிக்கிழமை உற்பத்தி 965 மெகாவாடாகக் குறைந்தது. பின்னர் இரவில் 240 மெகாவாட் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டது.

சாதாரணமாக 2,000 மெகாவாட் உற்பத்தி செய்யும் நிலையம் இப்போது இயங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.</p><p>டானியூப் ஆற்றின் நீர்மட்டம் -134 சென்டிமீற்றராக குறைந்துள்ளது. இது 2018-இல் பதிவான -98 செ.மீ. சாதனை அளவை விட மிகக் குறைவு. மேலும், நீர்மட்டம் -144 செ.மீ. வரை குறையக்கூடும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
</p><p></p><p>இந்த வறட்சி ஹங்கேரியில் 100-க்கும் மேற்பட்ட நகரங்கள் மற்றும் கிராமங்களில் நீர் பயன்பாட்டுக்கு கட்டுப்பாடுகளை ஏற்படுத்தியுள்ளது. தொழிற்சாலைகள் தங்களின் நீர் பயன்பாட்டை குறைக்குமாறு அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
</p><p>
இந்நிலையில், அண்டை நாடான ஸ்லோவாக்கியா ஹங்கேரிக்கு உதவ தாயாக இருப்பதாக அறிவித்துள்ளது.
</p><p>
ஐரோப்பா முழுவதும் கடந்த சில மாதங்களாக கடும் வெப்ப அலைகள் தாக்கியுள்ளன. விஞ்ஞானிகள் இதற்கு மனிதனால் உண்டான காலநிலை மாற்றமே காரணம் எனக் கூறுகின்றனர்.
</p><p></p><p>இந்தச் சம்பவம் ஹங்கேரியின் மின்சார உற்பத்தி மட்டுமல்லாமல், கப்பல் போக்குவரத்து, சுற்றுலா, வேளாண்மை மற்றும் தொழில்துறை துறைகளையும் பாதித்துள்ளது. </p><p>வறட்சி மற்றும் வெப்ப அலைகள் காரணமாக ஐரோப்பா முழுவதும் ஆற்றல் நெருக்கடி தீவிரமடைந்துள்ளது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-02T23:02:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[ட்ரம்பின் பொய்யை அம்பலப்படுத்திய ஈரான்! எந்தவொரு தாக்குதலுக்கும் தயார் என அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/iran-denies-trump-s-statement-ask-not-to-attack-1785704876"></link>
            <id>https://ibctamil.com/article/iran-denies-trump-s-statement-ask-not-to-attack-1785704876</id>
            <summary type="text">புதிய தாக்குதல்களைத் தவிர்க்குமாறு அமெரிக்காவை ஈரான் கேட்டுக்கொண்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ள கூற்றை ஈரான் திட்டவட்டமாக மறுத்துள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>புதிய தாக்குதல்களைத் தவிர்க்குமாறு அமெரிக்காவை ஈரான் கேட்டுக்கொண்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ள கூற்றை ஈரான் திட்டவட்டமாக மறுத்துள்ளது.
</p><p>
ஈரான் மீதான தாக்குதல்களுக்கு அமெரிக்கா தயாராக உள்ளதாகவும், புதிய தாக்குதல்களைத் தவிர்க்குமாறு ஈரானும் பிற மத்திய கிழக்கு நாடுகளும் தன்னிடம் கேட்டுக்கொண்டதாகவும் ட்ரம்ப் தெரிவித்திருந்தார்.
</p><p>
ஈரானுடன் எட்டப்பட்ட உடன்பாட்டின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.</p><p></p><h2>அச்சுறுத்தல்களுக்கு முற்றுப்புள்ளி</h2><p> </p><p>

அத்தோடு, ஹோர்முஸ் நீரிணையை உடனடியாகவும் முழுமையாகவும் திறந்து, அணுசக்தி தொடர்பான அச்சுறுத்தல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டதாகத் தனது 'ட்ரூத் சோஷியல்' சமூக ஊடகப் பதிவிலும் அவர் தெரிவித்திருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/749ec736-e183-4885-94c5-e8a546f0e92c/26-6a6fb4bede358.webp' /></p><p>
</p><p>
இந்த நிலையில், ட்ரம்ப்பின் இந்தக் கூற்றை மறுத்துள்ள ஈரான், அமெரிக்கா தனது தாக்குதல்களைத் தொடரும் வரை ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டே இருக்கும் என்றும் ட்ரம்ப் கூறியது மற்றொரு பொய்யே தவிர வேறொன்றுமில்லை என தெரிவித்துள்ளது.</p><h2>எந்தவொரு தாக்குதலுக்கும் தயார்</h2><p>
</p><p>
அதன்படி, ஈரானிய ஆயுதப் படைகள் உயர் எச்சரிக்கை நிலையில் உள்ளதாகவும் எந்தவொரு தாக்குதல் சூழலையும் எதிர்கொள்ளத் தயாராக இருக்கின்றன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/98229757-d6d5-4569-afb8-b38c19e924fa/26-6a6fb4bfd1650.webp' /></p><p>

போர் தொடங்கியதிலிருந்து ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டுள்ள நிலையில், தற்போதைய சூழலில் வணிகக் கப்பல்கள் இதன் வழியே கடந்து செல்வதற்கு ஈரானிடம் அனுமதி பெற்று, போக்குவரத்துக் கட்டணத்தையும் செலுத்த வேண்டிய நிலை காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-02T22:56:52+00:00</updated>
        </entry>
    </feed>
