<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-08-31T21:55:29+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலக பொருளாதாரத்திற்கு செயற்கை நுண்ணறிவால் அச்சுறுத்தல்: இங்கிலாந்து வங்கி எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/ai-poses-global-economic-threats-1788212704"></link>
            <id>https://news.lankasri.com/article/ai-poses-global-economic-threats-1788212704</id>
            <summary type="text">AI Poses Global Economic Threats: உலகளாவிய பொருளாதாரத்திற்கு செயற்கை நுண்ணறிவு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் ஒன்று என இங்கிலாந்து வங்கி ஆளுநர் எச்சரித்துள...</summary>
            <content type="html"><![CDATA[<p>AI Poses Global Economic Threats: உலகளாவிய பொருளாதாரத்திற்கு செயற்கை நுண்ணறிவு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் ஒன்று என இங்கிலாந்து வங்கி ஆளுநர் எச்சரித்துள்ளார்.</p><h2> இங்கிலாந்து வங்கி ஆளுநர் எச்சரிக்கை</h2><p>
வேகமாக வளர்ந்து வரும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமானது, சர்வதேச பொருளாதாரத்தில் மந்த நிலையை ஏற்படுத்தும் என்று இங்கிலாந்து வங்கியின் ஆளுநர் ஆண்ட்ரூ பெய்லி கடுமையாக எச்சரித்துள்ளார்.</p><p> அமெரிக்காவில் நடைபெற்ற ஜி20 நாடுகளின் நிதி அமைச்சர்கள் மாநாட்டில், எதிர்காலத்தில் சர்வதேச பொருளாதாரத்தில் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் கடுமையான திருத்தங்கள் குறித்து&nbsp; இங்கிலாந்து வங்கி ஆளுநர் ஆண்ட்ரூ பெய்லி கடிதம் வாயிலாக சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bed1675e-431c-41ad-adba-a3aaad663e50/26-6a95f5e285624.webp' /></p><p></p><p> அதில், வேகமாக வளரும் செயற்கை நுண்ணறிவு நிறுவனங்கள் திடீரென வீழ்ச்சியடைந்தால் அது உலக பொருளாதாரத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும், நிதி நெருக்கடியை உருவாக்கும் என்றும் எச்சரித்துள்ளார்.</p><p> இங்கிலாந்து மத்திய வங்கி கடந்த ஜூலையில் உலக அளவிலான சர்வதேச நிதி ஸ்திரத்தன்மை குறித்து கவலை தெரிவித்து இருந்ததை தொடர்ந்து இந்த புதிய எச்சரிக்கை வந்துள்ளது.</p><p> தொழில்நுட்ப வளர்ச்சியால், பங்குச் சந்தை குமிழ்கள், சைபர் பாதுகாப்பு அபாயங்கள், மற்றும் நிறுவனங்களின் கடன் சுமை ஆகியவை 3 முக்கிய ஆபத்துகள் நிதி ஸ்திரத்தன்மைக்கு இருப்பதாக மத்திய வங்கி குறிப்பிட்டிருந்தது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"> WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-31T21:45:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவுக்கு உதவும் அண்டை நாடுகளுக்கு ஈரானின் இறுதி எச்சரிக்கை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/iran-warns-regional-countries-that-helping-america-1788211511"></link>
            <id>https://ibctamil.com/article/iran-warns-regional-countries-that-helping-america-1788211511</id>
            <summary type="text">அமெரிக்கப் படைகள் தனது நாட்டின் மீது தாக்குதல் நடத்த பிராந்திய நாடுகளின் மண்ணையோ அல்லது ராணுவத் தளங்களையோ பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது என்று அண்டை நா...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்கப் படைகள் தனது நாட்டின் மீது தாக்குதல் நடத்த பிராந்திய நாடுகளின் மண்ணையோ அல்லது ராணுவத் தளங்களையோ பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது என்று அண்டை நாடுகளுக்கு ஈரானின் ராணுவம் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
</p><p>
 மீறி அனுமதித்தால், கடும் பதிலடியை சந்திக்க நேரிடும் என்றும் தெரிவித்துள்ளது.</p><p>

அண்டை நாடுகளின் தேசிய இறையாண்மையை மதிப்பதாகக் குறிப்பிட்டுள்ள ஈரான் ராணுவம், எந்தவொரு ஆக்கிரமிப்பையும் தங்களால் சகித்துக் கொள்ள முடியாது என்றும், அதற்கு மிகக் கடுமையான முறையில் பதிலடி கொடுக்கப்படும் என்றும் கூறியுள்ளது.</p><p></p><h2>ஈரான் ஆயுதப்படைகளின் உறுதி</h2><p>அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கு உதவி செய்பவர்கள் யாராக இருந்தாலும், ஈரானின் ஆயுதப்படைகளான&nbsp; புரட்சிகர காவல் படை மற்றும் ராணுவம் இணைந்து, தாக்குதலுக்குக் காரணமான இடங்களை துல்லியமாக இலக்கு வைக்கும் என்றும் எச்சரித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a221be4b-6745-44c0-b5fb-b803ae65c386/26-6a95f54cb5184.webp' /></p><p>
</p><p>அதன்போது தனது இறுதி எச்சரிக்கையை விடுத்துள்ள ஈரான், "எங்கள் ஆயுதப்படைகளின் உறுதியையும், எங்கள் மக்களின் சகிப்புத்தன்மையையும் மீண்டும் மீண்டும் சோதித்துப் பார்க்காதீர்கள்" எனத் தெரிவித்து உள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-31T21:42:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுவிட்சர்லாந்து இசை நிகழ்ச்சியில் துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேகநபர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/suspect-arrest-in-shooting-at-swiss-music-concert-1788207149"></link>
            <id>https://tamilwin.com/article/suspect-arrest-in-shooting-at-swiss-music-concert-1788207149</id>
            <summary type="text">&amp;nbsp;சுவிட்சர்லாந்தின் ஆராவ் நகரில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சி ஒன்றில் நடத்தப்பட்ட
துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய 43 வயதான சுவிஸ் நாட்டவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;சுவிட்சர்லாந்தின் ஆராவ் நகரில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சி ஒன்றில் நடத்தப்பட்ட
துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய 43 வயதான சுவிஸ் நாட்டவர்
ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
</p><p>
சூரிச் நகருக்கு மேற்கே அமைந்துள்ள குதிரைப் பந்தய திடலில் இடம்பெற்ற இசை
நிகழ்ச்சியின் போது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில், 22 வயதான
இத்தாலியப் பெண் ஒருவர் உயிரிழந்ததுடன் மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.</p><h2>பொலிஸ்&nbsp;விசாரணை</h2><p>
</p><p>
சம்பவத்தைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட 24 மணி நேர தீவிர தேடுதலின் பின்னரே
சந்தேகநபர் நேற்று(31) அதிகாலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e078085d-a79e-467b-8505-b2cfca1efa1a/26-6a95e2386ffeb.webp' /></p><p>

சம்பவம் தொடர்பில் ஆரம்பக்கட்ட விசாரணைகளை முன்னெடுத்துள்ள பொலிஸார்,
இந்தத் தாக்குதலைத் தனி நபர் ஒருவரே நடத்தியிருக்கலாம் எனக் கருதுவதுடன்,
தாக்குதலுக்கான பின்னணி மற்றும் காரணம் குறித்து மேலதிக விசாரணைகளை
முடுக்கிவிட்டுள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-31T21:27:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kowshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தூய கன்னிமரியாளின் பிறப்பு விழாவை முன்னிட்டு நெதர்லாந்தில் திருயாத்திரை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/netherlands-pilgrimage-marks-mary-s-nativity-feast-1788205803"></link>
            <id>https://tamilwin.com/article/netherlands-pilgrimage-marks-mary-s-nativity-feast-1788205803</id>
            <summary type="text">தூய கன்னிமரியாளின் பிறப்பு விழாவை முன்னிட்டு, நெதர்லாந்து தமிழ் கத்தோலிக்க ஆன்மீகப்பணியகம் முன்னெடுக்கும் 24ஆவது ஆண்டு தமிழர் திருயாத்திரை, நெதர்லாந்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>தூய கன்னிமரியாளின் பிறப்பு விழாவை முன்னிட்டு, நெதர்லாந்து தமிழ் கத்தோலிக்க ஆன்மீகப்பணியகம் முன்னெடுக்கும் 24ஆவது ஆண்டு தமிழர் திருயாத்திரை, நெதர்லாந்தில் அமைந்துளள சிறிய லூர்து அன்னை திருத்தலத்தை நோக்கி நடைபெறவுள்ளது.</p><p>இந்தப் புனித யாத்திரையானது எதிர்வரும் (06.09.2026)ஆம் திகதி அன்று இடம்பெறவுள்ளது.</p><h2>யாத்திரை தொடர்பான விபரம்</h2><p>
</p><p>குறித்த திருத்தலத்தின் முகவரி்: Kloosterstraat 1, 5865 AA Tienray, Netherlands&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b0aa33dc-3233-4d59-a62a-c40ff829efd3/26-6a95ddc3f35b1.webp' /></p><p>
நிகழ்ச்சி நிரல்:&nbsp; காலை 11.00 மணிக்கு திருநாள் திருப்பலி</p><p>&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;: தொடர்ந்து நற்கருணை ஆசீர்வாதம்</p><p>&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;: அதனைத் தொடர்ந்து அன்னையின் திருசொரூப பவனி </p><p>&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;: சிறிய லூர்து கெபியில் இறுதி ஆசியுடன் விழா நிறைவு
</p><p>
இந்தத் திருயாத்திரையில் அனைவரும் கலந்துகொண்டு இறை அருளைப் பெற்று, விழாவை சிறப்பிக்குமாறு அன்போடு அழைக்கப்படுகின்றனர்.</p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-31T21:27:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாளத்தில் சுரங்கப்பாதையில் சிக்கியுள்ள 600 உயிர்களை காப்பாற்ற போராடும் மீட்புக்குழுவினர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/nepal-rescuers-blast-hillside-search-families-1788209970"></link>
            <id>https://tamilwin.com/article/nepal-rescuers-blast-hillside-search-families-1788209970</id>
            <summary type="text">நேபாளத்தின் திரிசூலி ஆற்றுப் பகுதியில் அமைந்துள்ள திரிசூலி-3ஏ நீர்மின் திட்டச் சுரங்கப்பாதையில், சேறு மற்றும் சகதி நிறைந்த பகுதிக்குள் 600க்கும் மேற்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>நேபாளத்தின் திரிசூலி ஆற்றுப் பகுதியில் அமைந்துள்ள திரிசூலி-3ஏ நீர்மின் திட்டச் சுரங்கப்பாதையில், சேறு மற்றும் சகதி நிறைந்த பகுதிக்குள் 600க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சிக்கியுள்ள நிலையில், அவர்களை உயிரோடு மீட்கும் தீவிர நடவடிக்கைகளில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.</p><p> திங்கட்கிழமை வரை நீடித்த இந்த மீட்புப் பணியில், மலைப் பகுதியை வெடிவைத்துத் தகர்த்துச் சுரங்கத்தினுள் காற்றைச் செலுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.</p><p>

நேபாள-திபெத் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 939 ஆக உயர்ந்துள்ளதுடன், காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 3,925 ஆகப் பதிவாகியுள்ளது.</p><h2>மீட்புப் பணிகள்</h2><p> இதில் 592 பேர் வெளிநாட்டவர்கள் ஆவர். காணாமல் போனவர்களில் ஏழில் ஒருவர் நீர்மின் நிலையத் தொழிலாளி எனக் கருதப்படும் நிலையில், இதுவரை நீர்மின் நிலையங்களிலிருந்து 279 பேர் மீட்கப்பட்டுள்ளதாக நேபாளப் பிரதமர் பாலேந்திர ஷா தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/91c07fa2-c4a1-4f7f-ac41-b1f978d20595/26-6a95f0e45dc0c.webp' /></p><p>
</p><p>
நேபாள மற்றும் சீன இராணுவத்தின் கூட்டுத் தலைமையில், இந்தியா, கொரியா மற்றும் அவுஸ்திரேலிய நிபுணர்களின் பங்களிப்புடன் இந்த மீட்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. </p><p>சுரங்கத்திற்குள் பிராணவாயு அமைப்பு உள்ளதால் தங்கள் உறவினர்கள் உயிரோடு திரும்புவார்கள் என்ற நம்பிக்கையில் குடும்பத்தினர் காத்திருக்கின்றனர். அதேவேளை, தாமதமாகும் ஒவ்வொரு நிமிடமும் தங்களது நம்பிக்கை குறைந்து வருவதாக உறவினர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.</p><p> இதுவரை 11,379 பேர் ஒட்டுமொத்தமாக மீட்கப்பட்டுள்ள நிலையில், வெள்ளத்தால் 11 நீர்மின் திட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-31T21:26:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் தீவிரமெடுக்கும் வறட்சி ; பாதிக்கப்பட்டோருக்கு குடிநீர் விநியோகம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sri-lanka-faces-intensifying-drought-crisis-1788208701"></link>
            <id>https://jvpnews.com/article/sri-lanka-faces-intensifying-drought-crisis-1788208701</id>
            <summary type="text">நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள 25,647 குடும்பங்களைச் சேர்ந்த 81,929 பேருக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருவதாக தேசிய அனர்த்த...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள 25,647 குடும்பங்களைச் சேர்ந்த 81,929 பேருக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருவதாக தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையம் தெரிவித்துள்ளது.</p><p style="text-align: justify; ">

வறட்சியால் மொனராகலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/293f0220-50f6-4f1b-a025-5b79d6c256dc/26-6a95e63f3db3e.webp' /></p><h2 style="text-align: justify; ">குடிநீர் தட்டுப்பாடு&nbsp;</h2><p>
</p><p style="text-align: justify; ">
இதற்கு மேலதிகமாக அம்பாறை, பதுளை, பொலன்னறுவை, ஹம்பாந்தோட்டை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களிலும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; ">

எதிர்வரும் நாட்களில் நிலைமை மேலும் மோசமடையக்கூடும் என தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையம் எச்சரித்துள்ளது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">

வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் தமது தேவைகள் தொடர்பில் கிராம உத்தியோகத்தர் அல்லது பிரதேச செயலாளருக்கு அறிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-31T21:15:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானின் கண்ணிவெடிகளில் சிக்கிய பாரிய எண்ணெய் தாங்கி கப்பல்! மறுத்தது அமெரிக்கா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/centcom-denied-supertanker-hit-by-two-mines-1788208925"></link>
            <id>https://ibctamil.com/article/centcom-denied-supertanker-hit-by-two-mines-1788208925</id>
            <summary type="text">ஹோர்முஸ் நீரிணையில் ஒரு மிகப்பெரிய எண்ணெய் தாங்கி கப்பல் இரண்டு கண்ணிவெடிகளால் தாக்கப்பட்டதாக ஈரானின் புரட்சிகரப் பாதுகாப்புப் படை (IRGC) கூறிய குற்றச...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹோர்முஸ் நீரிணையில் ஒரு மிகப்பெரிய எண்ணெய் தாங்கி கப்பல் இரண்டு கண்ணிவெடிகளால் தாக்கப்பட்டதாக ஈரானின் புரட்சிகரப் பாதுகாப்புப் படை (IRGC) கூறிய குற்றச்சாட்டுகளை அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு (CENTCOM) திட்டவட்டமாக மறுத்துள்ளது.
</p><p>
அப்பகுதியில் எந்தவொரு கப்பலும் கண்ணிவெடிகளில் சிக்கவில்லை என்று CENTCOM தனது X பதிவில் தெளிவுபடுத்தியுள்ளது.</p><p></p><h2>IRGC - இன் முயற்சி</h2><p>
</p><p>“ஹோர்முஸ் நீரிணையில் எந்தவொரு கப்பலும் கண்ணிவெடிகளில் சிக்கவில்லை. பொய்ப் பிரச்சாரங்கள் மற்றும் தவறான தகவல்கள் மூலம் பிராந்திய வர்த்தகக் கப்பல் போக்குவரத்தை அச்சுறுத்துவதற்காக IRGC மேற்கொண்டுள்ள மற்றொரு முயற்சியே இது" என்று CENTCOM பதிவிட்டுள்ளது.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">🚫 CLAIM: Iran’s Islamic Revolutionary Guard Corps (IRGC) claims that a supertanker passing through the southern route of the Strait of Hormuz struck two mines and was brought to a complete stop. This is FALSE.<br><br>✅ FACT: No ships have hit mines in the Strait of Hormuz. This is… <a href="https://t.co/spkaogBx81">pic.twitter.com/spkaogBx81</a></p>&mdash; U.S. Central Command (@CENTCOM) <a href="https://x.com/CENTCOM/status/2094411076729262413?ref_src=twsrc%5Etfw">August 31, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>விதிமுறைகளை மீறிச் சென்ற எண்ணெய் தாங்கி கப்பல் ஒன்று இரண்டு கண்ணிவெடிகளால் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து, அது ஹோர்முஸ் நீரிணையில் முழுமையாக இயக்கமற்று நிறுத்தப்பட்டதாக IRGC திங்களன்று உரிமை கோரியிருந்ததமை குறிப்பிடத்தக்கது.</p><p>&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> WHATSAPP CHANNE</a></b>L இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-31T21:14:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[வடகொரிய ஜனாதிபதியின் அதிரடி ; பதவியிலிருந்து நீக்கப்பட்ட முக்கிய புள்ளி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/north-korean-president-s-move-1788209796"></link>
            <id>https://canadamirror.com/article/north-korean-president-s-move-1788209796</id>
            <summary type="text">வடகொரியாவில் அதன் தலைவர் கிம் ஜாங் அன் தலைமையில்&amp;nbsp; ஆட்சி நடந்து வருகிறது.&amp;nbsp;அந்த நாட்டின் முக்கியமான பொறுப்புகளில் ஒன்றான பாதுகாப்பு அமைச்சர் ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>வடகொரியாவில் அதன் தலைவர் கிம் ஜாங் அன் தலைமையில்&nbsp; ஆட்சி நடந்து வருகிறது.&nbsp;</p><p>அந்த நாட்டின் முக்கியமான பொறுப்புகளில் ஒன்றான பாதுகாப்பு அமைச்சர் பதவியில் இருந்த அவர் முன்னணி ராணுவ அதிகாரியும் அரசியல் தலைவராக செயல்பட்டுவந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2b3231c9-89f9-4ba6-8590-2810756a4091/26-6a95ea8617c1d.webp' /></p><p> </p><p>வடகொரியாவின் அதிநவீன ஏவுகணைகள், அணு ஆயுத திட்டங்கள் மற்றும் புதிய போர் ஆயுத அமைப்புகளை உருவாக்குவதில் முக்கிய பங்காற்றி பல லட்சம் வீரர்கள் கொண்ட மக்கள் ராணுவத்தை நிர்வகித்து வந்தார்.</p><p>&nbsp;வடகொரியாவில் ராணுவ தலைமையை மாற்றியமைக்கும் நடவடிக்கை யின் ஒரு பகுதியாக, அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் நோ குவாங் சோல், பதவியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். </p><p>இதன் அடிப்படையில், பாதுகாப்பு மந்திரியாக இருந்த நோ குவாங் சோல், பதவியில் இருந்து நீக்கப்பட்டு, வெடிமருந்து தொழில் துறையின் முதலாவது துணை இயக்குனராக பதவி இறக்கம் செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
கூட்டு போர்ப்பயிற்சி
அவருக்கு பதிலாக, கொரிய மக்கள் ராணுவத்தின் பொது அரசியல் பிரி வின் இயக்குனரான கிம் சோங் கி புதிய பாதுகாப்பு அமைச்சரக நியமிக்கப்பட்டுள்ளார். </p><p>மேலும், பாதுகாப்பு ஆலோசகரான பாக் ஜோங் சோன், மத்திய ராணுவ ஆணையத்தின் துணைத் தலைவராகவும், அரசியல் பிரிவு உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டுள்ளார் என கூறப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-31T20:56:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[கருப்பு நிறப் பைக்குள் கிடந்த மூதாட்டியின் சடலம்: பிரித்தானிய பூங்காவில் பரபரப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/woman-body-discovered-inside-black-bag-at-stanley-1788209262"></link>
            <id>https://news.lankasri.com/article/woman-body-discovered-inside-black-bag-at-stanley-1788209262</id>
            <summary type="text">Woman body discovered inside black bag at Liverpool: பிரித்தானியாவின் லிவர்பூல் பூங்காவில் மூதாட்டி ஒருவரின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்...</summary>
            <content type="html"><![CDATA[<p>Woman body discovered inside black bag at Liverpool: பிரித்தானியாவின் லிவர்பூல் பூங்காவில் மூதாட்டி ஒருவரின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><h2> பிளாஸ்டிக் பைக்குள் மூதாட்டியின் சடலம்</h2><p>
லிவர்பூல் நகரின் ஸ்டான்லி பூங்காவில் மூதாட்டி ஒருவரின் சடலம் கருப்பு நிற பிளாஸ்டிக் பைக்குள் திணிக்கப்பட்டிருந்து கண்டுபிடிக்கப்பட்டது.</p><p> வெள்ளிக்கிழமை மாலை சுமார் 5.25 மணிக்கு பொதுமக்களில் ஒருவர் அளித்த தகவலின் படி, அன்பீல்ட்(Anfield Stadium) மற்றும் எவர்டன் குட்டிசன்(Goodison Park) இடைப்பட்ட பகுதிக்கு அவசர சேவை பிரிவினர் விரைந்தனர்.</p><p> பின்னர் அப்பகுதியில் நடத்திய சோதனையில் பூங்காவின் சுற்றுச்சுவர் உள்ள தோட்டப் பகுதிக்கு அருகில் கருப்பு நிற பிளாஸ்டிக் பைக்குள் சடலம் ஒன்று இருப்பதை கண்டுபிடித்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c7bc9572-9602-407f-9242-71de60f46dab/26-6a95e870193bb.webp' /></p><p>இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மூதாட்டியின் அடையாளம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்று திங்கட்கிழமை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.</p><p>அத்துடன் பிரேத பரிசோதனைகளுக்கு பிறகும், விசாரணை காரணங்களுக்காக விவரங்களை ரகசியமாக வைத்து இருப்பதாக காவல்துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.</p><p> ஆனால், கைப்பற்றப்பட்ட உடல் தோராயமாக 70 வயதுடைய பெண் உடல் என்றும், சுமார் 5 அடி 2 அங்குலம் உயரமும் சிறிய உடலமைப்பும் கொண்டவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> மேலும் பல வாரங்களாக அந்த இடத்தில் வைக்கப்பட்டிருக்கலாம் என்று காவல்துறை அதிகாரிகள் நம்புகின்றனர்.</p><h2> பொலிஸார் வேண்டுகோள்</h2><p>காணாமல் போனவர்கள் குறித்த தரவு தளங்களில் உள்ள விவரங்களுடன் சரிபார்த்த போது கண்டெடுக்கப்பட்ட சடலத்துடன் பொருந்த கூடிய நபர் யாரும் இல்லை என்று அதிகாரி ரேச்சல் வில்சன் தெரிவித்துள்ளார்.</p><p> இந்நிலையில் மேல் குறிப்பிட்ட விவரங்களுடன் சமீபத்தில் காணாமல் போனவர்கள் குறித்த விவரங்கள் ஏதேனும் தெரிந்து இருந்தால் உடனடியாக பொலிஸாரிடம் தெரிவிக்குமாறு வலியுறுத்தியுள்ளனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி W<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">HATSAPP CHANNE</a>L இல் இணையுங்கள்<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-31T20:47:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவின் மிகப் பெரிய ட்ரோனை சுட்டு வீழத்திய ஈரான்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/irgc-claim-it-shot-down-a-us-mq-9-drone-1788206784"></link>
            <id>https://ibctamil.com/article/irgc-claim-it-shot-down-a-us-mq-9-drone-1788206784</id>
            <summary type="text">ஈரானின் புரட்சிகர காவல் படை (IRGC) ஹோர்மூஸ் நீரிணையின் கிழக்குப் பகுதியில் அமெரிக்காவின் MQ-9 ட்ரோனை தனது வான் பாதுகாப்பு அமைப்பு மூலம் சுட்டு வீழ்த்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானின் புரட்சிகர காவல் படை (IRGC) ஹோர்மூஸ் நீரிணையின் கிழக்குப் பகுதியில் அமெரிக்காவின் MQ-9 ட்ரோனை தனது வான் பாதுகாப்பு அமைப்பு மூலம் சுட்டு வீழ்த்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளது. </p><p>

புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட வான் பாதுகாப்பு அமைப்பைப் பயன்படுத்தி இந்த ட்ரோன் தகர்க்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><h2>உரிய பதிலடி&nbsp;</h2><p> 

முன்னதாக, ஜோர்டானில் உள்ள அமெரிக்கப் படைகள் மீதான ஈரானின் தாக்குதல்களுக்கு உரிய பதிலடி கொடுக்கப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்திருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/777f594b-eac9-4394-95c9-718baabcd19b/26-6a95e52b0de76.webp' /></p><p><i>Image Credit:&nbsp;defensenews</i></p><p>இதனைதொடர்ந்து, மேற்படி ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ள நிலையில், அதனை ஈரானின் புரட்சிகர காவல் படை முறியடித்துள்ளதாக கூறப்படுகிறது.</p><p>ஹோர்மூஸ் நீரிணையில் உள்ள லாராக் தீவு மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாக, ஜோர்டானில் உள்ள இரண்டு வான்படை தளங்கள் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) அமெரிக்கப் படைகள் அமைந்துள்ள ஒரு தளத்தின் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<i><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> WHATSAPP CHANNEL </a></i>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-31T20:34:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kowshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மூன்று முறை சீ.வி.கேவின் வீடு தேடி சென்ற தாய் வெளியிட்ட பகீர் தகவல்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/tamil-party-ignores-tamils-pain-public-slams-1788203330"></link>
            <id>https://tamilwin.com/article/tamil-party-ignores-tamils-pain-public-slams-1788203330</id>
            <summary type="text">இலங்கையின் படை தரப்பினரால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவகளுக்காக நீதி கோரி போராட்டமும் மகாநாடும் கடந்த ஆவணி மாதம் 30ஆம் திகதி தமிழர் பகுதிகளில் உணர்ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் படை தரப்பினரால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவகளுக்காக நீதி கோரி போராட்டமும் மகாநாடும் கடந்த ஆவணி மாதம் 30ஆம் திகதி தமிழர் பகுதிகளில் உணர்ச்சிபூர்வமாக முன்னெடுக்கப்பட்டிருந்தன.
</p><p>
இந்த நியாயவழி போராட்டத்திற்கு தங்களுக்கு அழைப்பு விடுக்கவில்லை என்று சிறுபிள்ளைதனமான காரணத்தை கூறி இலங்கை தமிழரசுக் கட்சி போராட்டம் மற்றும் மகா நாட்டை புறக்கணித்துள்ளது.</p><p>இது தொடர்பில் கட்சியின் பதில் தலைவர் சி. வி. கே. சிவஞானமும் பதில் செயலாளர் எம். ஏ. சுமந்திரனும் இணைந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.</p><p>
ஒட்டுமொத்த தமிழினத்தின் நீதிக்கான குரலை மழுங்கடிக்கும் வகையில் அமைந்திருந்த இந்த அறிக்கை மக்கள் மத்தியில் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><p>

கடந்த காலங்களில் காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் தொடர்பான போராட்டங்களுக்கு அரசு தரப்பில் பல தடைகள் விதிக்கப்பட்டன. </p><p>ஆனால் தற்பொழுது தமிழ் கட்சிகள் தரப்பே இவ்வாறான காரணங்களை கூறி தமிழர்களின் உணர்வுபூர்மான போராட்டங்களை புறக்கணிக்கின்றன.</p><p>இவ்வாறிருக்கையில், வடக்கு கிழக்கு காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் உபதலைவி அமலநாயகி, சி. வி. கே. சிவஞானத்தை சந்திக்க பலமுறை முயற்சித்தமை தொடர்பில் தகவல்களை வெளியிட்டுள்ளார்.&nbsp;</p><p> </p><p>

இது தொடர்பில் இன்னும் பல விடயங்களை செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சியின் ஊடாக விரிவாகப் பார்க்கலாம்..&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/adOL5hITeAk" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-31T20:24:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தாயுடன் சென்றவர்களுக்கு நேர்ந்த அவலம் ; சடலமாக மீட்கப்பட்ட இளைஞன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/tragedy-for-those-who-went-with-mother-1788207469"></link>
            <id>https://jvpnews.com/article/tragedy-for-those-who-went-with-mother-1788207469</id>
            <summary type="text">ஜா-எல, பமுனுகம எப்பாமுல்ல கடலில் மூழ்கி காணாமல் போயிருந்த 13 வயது சிறுவனின் சடலமும் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

 

நேற்று முன் தினம் (30) பிற்பகல் கு...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜா-எல, பமுனுகம எப்பாமுல்ல கடலில் மூழ்கி காணாமல் போயிருந்த 13 வயது சிறுவனின் சடலமும் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
</p><p>
 

நேற்று முன் தினம் (30) பிற்பகல் குறித்த கடற்கரை பகுதியில் பெண்ணொருவர் தனது மகள் மற்றும் மேலும் இரு சிறுவர்களுடன் இராட்சத அலையில் அடித்துச் செல்லப்பட்டு நீரில் மூழ்கி காணாமல் போயிருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/877ddefd-ada5-4a4c-ad5e-edcc91d054af/26-6a95e16e92a29.webp' /></p><p>இவ்வாறு கடலில் நீராடச் சென்று காணாமல் போனவர்களில் பெண்ணின் சடலமும் இரண்டு சிறுமிகளின் சடலங்களும் இன்று காலை கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.</p><p></p><p>
</p><p>
 

இவ்வாறு உயிரிழந்தவர்கள் 35 வயதுடைய பெண்ணொருவர், 04 மற்றும் 12 வயதுடைய இரு சிறுமிகள் மற்றும் 13 வயதுடைய சிறுவன் ஆவர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-31T20:19:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுவிஸில் இரவு பார்ட்டியில் நடந்த துப்பாக்கிச் சூடு: சந்தேக நபர் கைது செய்த பொலிஸார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/swiss-police-arrest-suspect-of-rave-shooting-1788200120"></link>
            <id>https://news.lankasri.com/article/swiss-police-arrest-suspect-of-rave-shooting-1788200120</id>
            <summary type="text">சுவிட்சர்லாந்தின் ஆராவ் நகரில் நகரில்&amp;nbsp; நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் தொடர்புடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சுவிஸ் நகரில் துப்பாக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>சுவிட்சர்லாந்தின் ஆராவ் நகரில் நகரில்&nbsp; நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் தொடர்புடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><h2> சுவிஸ் நகரில் துப்பாக்கிச்சூடு</h2><p>
வடக்கு சுவிட்சர்லாந்தில் சூரிச்சின் மேற்கே உள்ள ஆராவ் நகரில் இரவு நேர இசை மற்றும் நடன விருந்து ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டார். அத்துடன் 5 பேர் வரை காயமடைந்தனர்.</p><p>அதிகாலை 3 மணிக்கு முன்னதாக 'ஆராவர் ரேவ்' (Aarauer Rave) நிகழ்வின் ஒரு பகுதியாக நடந்த இந்த நிகழ்ச்சியின்போது துப்பாக்கிச் சூடு நடைபெற்றுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7e975aaa-5dc3-453d-9a0e-91053e4b3d0a/26-6a95c4ba1d333.webp' /></p><p> இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர் இத்தாலியை சேர்ந்த 22 வயது பெண் என்று தெரியவந்துள்ளது.</p><h2>சந்தேக நபர் கைது</h2><p>நிகழ்ச்சி அதிகாரப்பூர்வமாக நிறைவடைந்த பிறகும் சம்பவ இடத்தில் 100க்கும் மேற்பட்டோர் கூடியிருந்த போதே இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.</p><p> இந்நிலையில் ஜேர்மன் நாட்டு காவல்துறையின் உதவியுடன்&nbsp; நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில் சுவிட்சர்லாந்தை சேர்ந்த சந்தேக நபரை பொலிஸார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/46430c0f-6047-4f67-88a4-a497155602f7/26-6a95c4bac6476.webp' /></p><p> இந்த தாக்குதலை கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தனி ஆளாக நடத்தியதாக அதிகாரிகள் நம்புகின்றனர்.</p><p> எனினும் இந்த தாக்குதலுக்கான உண்மையான காரணம் குறித்து பொலிஸார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.</p><p> சம்பவம் நடைபெற்ற இடத்தில் அதிகாரிகள் இரண்டு வகையான குண்டுகளை கைப்பற்றியுள்ள நிலையில், தாக்குதல்தாரி கைத்துப்பாக்கி மற்றும் தாக்குதலுக்கு உரிய பெரிய ரக துப்பாக்கியை பயன்படுத்தி இருக்கலாம் என்று தடயவியல் அதிகாரிகள் கருதுகின்றனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-31T20:16:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[அர்ஜென்டினாவின் கால்பந்தாட்ட வீரர் லியோனல் மெஸ்ஸி ஓய்வை அறிவித்தார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/argentina-lionel-messi-announces-retirement-1788202966"></link>
            <id>https://jvpnews.com/article/argentina-lionel-messi-announces-retirement-1788202966</id>
            <summary type="text">அர்ஜென்டினாவின் நட்சத்திரக் கால்பந்தாட்ட வீரர் லியோனல் மெஸ்ஸி, சர்வதேச கால்பந்தாட்டத்தில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 

 

இது &quot;வேதனைய...</summary>
            <content type="html"><![CDATA[<p>அர்ஜென்டினாவின் நட்சத்திரக் கால்பந்தாட்ட வீரர் லியோனல் மெஸ்ஸி, சர்வதேச கால்பந்தாட்டத்தில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். </p><p>

 

இது "வேதனையான" ஒரு முடிவு என்றாலும், "அதற்கான நேரம் வந்துவிட்டது" என்பதைத் தான் புரிந்து கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d65c2e9c-f234-4722-8660-c0019aebbd26/26-6a95cfd7e1abb.webp' /></p><h2>இனி வழங்குவதற்கு எதுவும் இல்லை..</h2><p>

 

2022 ஆம் ஆண்டு கட்டாரில் நடைபெற்ற உலகக் கோப்பையில் அர்ஜென்டினா அணிக்குத் தலைமை தாங்கி சாம்பியன் பட்டம் வென்று கொடுத்த 39 வயதான மெஸ்ஸி, தனது நாட்டுக்காக 207 போட்டிகளில் விளையாடி 125 கோல்களை அடித்துள்ளார். </p><p>

 

இதன் மூலம் அர்ஜென்டினா அணியின் அதிக கோல்களை அடித்த வீரர் மற்றும் அதிக போட்டிகளில் விளையாடிய வீரர் என்ற பெருமையைப் பெறுகிறார்.</p><p></p><p>
</p><p>
 

இன்ஸ்டாகிராமில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேசிய அணிக்காகத் தனது முழு உழைப்பையும் வழங்கிவிட்டதாகவும், இனி "வழங்குவதற்கு எதுவும் இல்லை" என்றும் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-31T20:02:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kowshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கோவில் திருவிழாக்களில் கவர்ச்சி நடனங்களை நடாத்துவது சில புலம்பெயர் மக்களின் சதி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/diaspora-plot-behind-sexy-temple-dances-1788200948"></link>
            <id>https://tamilwin.com/article/diaspora-plot-behind-sexy-temple-dances-1788200948</id>
            <summary type="text">தமிழர் பகுதியில் நடைபெற்றிருந்த திருவிழா ஒன்றில் இந்தியாவிலிருந்து நடனக்கலைஞர்கள் அழைத்துவரப்பட்டு சில கவர்ச்சி நடனங்கள் இடம்பெற்றிருந்தமை சமூக வலைக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழர் பகுதியில் நடைபெற்றிருந்த திருவிழா ஒன்றில் இந்தியாவிலிருந்து நடனக்கலைஞர்கள் அழைத்துவரப்பட்டு சில கவர்ச்சி நடனங்கள் இடம்பெற்றிருந்தமை சமூக வலைக்களங்களில் காணக்கூடியதாக இருந்தது .
</p><p>
இந்த விடயம் தொடர்பில் எமது தலைமுறை கட்சியின் தலைவர் சிதம்பரம் கருணாநிதி லங்காசிறியின் நேருக்கு நேர் நேர்காணல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையில், இது புலம்பெயர் தமிழர்கள் செய்யும் ஒருவகையான சதியாகும் என குறிப்பிட்டுள்ளார்.</p><p>அவர் மேலும் தெரிவிக்கையில், ஒரு காலத்தில் வேங்கைகளால் வளர்க்கப்பட்ட மந்தைகள் தற்பொழுது நரிகளாலும் குள்ளநரிகளாலும் வளர்க்கப்படுகின்றனர். இவ்வாறானவர்களால் இந்த சமூகம் சீர்குழைக்கப்படுகிறது.
</p><p>
இது தொடர்பில் மக்கள் மிகவும் நிதானமாக செயற்பட வேண்டும். இவ்வாறானவர்கள் கண்டிப்பாக தண்டிக்கப்பட வேண்டும் என்பதுடன் குறித்த கோயில் நிர்வாகத்தினர் உடனடியாக நீக்கப்பட வேண்டும்.</p><p>கோயில்களிலும் தேவாலயங்களிலும் இவ்வாறான விடயங்கள் நடைபெறுவது என்பது பிழையான ஒரு விடயமாகும் என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p>இது குறித்து மேலதிக தகவல்களை&nbsp;நேருக்கு நேர் நேர்காணல் நிகழ்ச்சியின் ஊடாக&nbsp; விரிவாகப் பார்ப்போம்..</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/Z9FgzuDkV8o" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-31T19:55:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[காசாவில் கொல்லப்பட்ட ஹமாஸ் ஆயுதக் தளபதி: இஸ்ரேலிய ராணுவம் அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/idf-killed-hamas-weapons-commander-in-gaza-1788205318"></link>
            <id>https://news.lankasri.com/article/idf-killed-hamas-weapons-commander-in-gaza-1788205318</id>
            <summary type="text">IDF Killed Hamas Weapons commander in Gaza : காசா நகரில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஹமாஸின் ஆயுதத் தளபதி கொல்லப்பட்டதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. கொல்லப்பட...</summary>
            <content type="html"><![CDATA[<p>IDF Killed Hamas Weapons commander in Gaza : காசா நகரில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஹமாஸின் ஆயுதத் தளபதி கொல்லப்பட்டதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.</p><h2> கொல்லப்பட்ட ஹமாஸின் ராணுவ தளபதி</h2><p>
காசாவில் இஸ்ரேலிய ராணுவம் நடத்திய தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் ஆயுத விநியோகத் தளபதி அம்ர் முகமது ருஷ்டி சராக்(Amr Muhammad Rushdi Sarrag) கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய பாதுகாப்பு படை(IDF) திங்கட்கிழமை அறிவித்துள்ளது.</p><p> காசாவின் சப்ரா(Sabra) நகரில் திங்கட்கிழமை இஸ்ரேலிய படைகள் நடத்திய துல்லியமான தாக்குதலில் ஆயுத விநியோகத் தளபதி அம்ர் முகமது ருஷ்டி சராக் கொல்லப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b65d02e0-da21-4cd7-8e1c-36476fdd3262/26-6a95d90884859.webp' /></p><p> இந்த தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் ராணுவப் பிரிவை சேர்ந்த மற்றொரு பயங்கரவாதியும் தாக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2> இஸ்ரேலிய ராணுவம் விளக்கம்</h2><p>இது தொடர்பாக இஸ்ரேலிய பாதுகாப்பு படை வெளியிட்ட அறிவிப்பில், கொல்லப்பட்ட இந்த பயங்கரவாதிகள் இஸ்ரேலிய நாட்டு மக்கள் மீதும், இஸ்ரேலிய பாதுகாப்பு படையினர் மீதும் தாக்குதல் நடத்த சதி திட்டங்களை செய்து வந்ததாக தெரிவித்துள்ளனர்.</p><p> அத்துடன் போர் நிறுத்த விதிமுறைகளை மீறி ஹமாஸ் அமைப்பின் பலத்தை மீட்டெடுக்க தீவிரமாக முயற்சி செய்து வந்ததாக குற்றஞ்சாட்டியுள்ளனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்<br></td></tr></tbody></table><p>&nbsp;<br></p>]]></content>
            <updated>2026-08-31T19:42:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் தற்காலிக குடியேறிகளுக்கு அதிகரிக்கும் நெருக்கடி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/immigration-board-asks-feds-to-better-track-1788190776"></link>
            <id>https://canadamirror.com/article/immigration-board-asks-feds-to-better-track-1788190776</id>
            <summary type="text">கனடாவில் தற்காலிகமாகத் தங்கியுள்ள சர்வதேச மாணவர்கள் மற்றும் வெளிநாட்டுப் பணியாளர்களின் எண்ணிக்கையைக் குறைக்க அரசாங்கம் தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாக...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவில் தற்காலிகமாகத் தங்கியுள்ள சர்வதேச மாணவர்கள் மற்றும் வெளிநாட்டுப் பணியாளர்களின் எண்ணிக்கையைக் குறைக்க அரசாங்கம் தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
</p><p>இதனால், அங்குள்ள தற்காலிக குடியேறிகள் கடுமையான சவால்களையும் நிச்சயமற்ற எதிர்காலத்தையும் எதிர்நோக்கி வருகின்றனர்.</p><p>
வீட்டு வசதிப் பற்றாக்குறை மற்றும் பொதுச் சேவை நெருக்கடிகளைக் கட்டுப்படுத்த கனடா அரசு குடியேற்ற அளவைக் குறைத்து வருகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9b440253-d245-42f4-9324-42fffb3f0b5d/26-6a95a03996b84.webp' /></p><p>
</p><p>சீ.டி. ஹவ் இன்ஸ்டிடியூட் நிபுணர் குழு, தற்காலிக குடியேறிகளின் எண்ணிக்கையை மேலும் குறைக்க வேண்டும் எனவும், அவர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதைத் துல்லியமாகக் கண்காணிக்க வேண்டும் எனவும் பரிந்துரைத்துள்ளது.</p><p>
அரசாங்கத்தின் கடுமையான கட்டுப்பாடுகள் காரணமாக, கனடாவிற்கு வரும் புதிய மாணவர்கள் மற்றும் பணியாளர்களின் எண்ணிக்கை வரலாறு காணாத வகையில் சரிந்துள்ளது.
</p><p>2024ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் 1,24,930 புதிய சர்வதேச மாணவர்கள் கனடாவிற்கு வந்த நிலையில், 2026ஆம் ஆண்டின் அதே காலகட்டத்தில் அந்த எண்ணிக்கை 22,410 ஆகக் கடுமையாகக் குறைந்துள்ளது.
</p><p>2024 முதல் பாதியில் 2,44,985 ஆக இருந்த புதிய தற்காலிகப் பணியாளர்களின் சேர்க்கை, 2026 முதல் பாதியில் 98,130 ஆகச் சரிந்துள்ளது.
</p><p>2024 அக்டோபரில் நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 7 சதவீதத்திற்கும் அதிகமாக இருந்த தற்காலிக குடியேறிகளின் எண்ணிக்கையை, 2027ஆம் ஆண்டின் இறுதிக்குள் 5 சதவீதத்திற்குக் கீழ் குறைக்க அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.</p><p>
ஆனால், நிபுணர் பரிசா மஹ்பூபி இந்த 5 சதவீதத்தை அதிகபட்ச வரம்பாகவே கொள்ள வேண்டும் எனவும், வரலாற்றுச் சராசரியான 3 முதல் 4 சதவீதத்திற்கு இலக்கைக் குறைக்க வேண்டும் எனவும் கூறுகிறார்.
</p><p>கனடாவில் தற்காலிகமாக வாழும் 25 லட்சம் தற்காலிக குடிமக்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.</p><p>
ஒட்டுமொத்தமாக, கனடாவின் மாறிவரும் குடியேற்றக் கொள்கைகள், வேலைவாய்ப்புச் சந்தையில் நிலவும் மந்தநிலை மற்றும் கடுமையான விசா கட்டுப்பாடுகள் ஆகியவை கனடாவில் உள்ள தற்காலிக குடியேறிகளின் வாழ்க்கையை பெரும் சவாலுக்கு உள்ளாக்கியுள்ளன.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-31T19:30:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாளத்தை கதிகலங்க வைத்த அனர்த்தம் ; 8 மணி நேர போராட்டத்திற்கு பின் மீட்கப்பட்ட 50 கோடி தங்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/50-crore-gold-recovered-in-nepal-1788202579"></link>
            <id>https://jvpnews.com/article/50-crore-gold-recovered-in-nepal-1788202579</id>
            <summary type="text">சமீபத்தில் நேபாளத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அந்த நாடு பெரும் சேதத்தை சந்தித்தது. வீடுகளும், கட்டிடங்களும், கார் மற்றும் கனகர வாகனங்களும் நீரில் அட...</summary>
            <content type="html"><![CDATA[<p>சமீபத்தில் நேபாளத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அந்த நாடு பெரும் சேதத்தை சந்தித்தது. வீடுகளும், கட்டிடங்களும், கார் மற்றும் கனகர வாகனங்களும் நீரில் அடித்து செல்லப்பட்டன.</p><p> 500க்கும் மேற்பட்டோர் இறந்துவிட்ட நிலையில், 1500க்கும் மேற்பட்டோரை காணவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/069131b7-9910-4fbf-83ee-a04dfc7c8160/26-6a95ce54c5547.webp' /></p><h2>ஆவணங்கள் மீட்பு</h2><p>இந்நிலையில்தான் வெள்ளத்தில் சிக்கிய ஒரு வங்கியின் லாக்கரை மீட்பு படையினர் மீட்டுள்ளனர்.</p><p> நேபாளத்தில் நுவா கோட் மாவட்டத்திலுள்ள திரிசூலி துங்கே பகுதியில் உள்ள ஒரு வங்கி வெள்ளம் அதிகளவு சென்றதால் முழுமையாக தண்ணீரில் மூழ்கியது.
</p><p>
தற்போது வெள்ளம் சற்று தணிந்த நிலையில் 8 மணி நேர போராட்டத்திற்கு பின் வங்கியில் இருந்த லாக்கரை மீட்பு படையினர் மீட்டுள்ளனர்.</p><p></p><p> </p><p>அந்த லாக்கரில் பாதுகாப்பாக இருந்த 50 கோடி நேபாள ரூபாய் மதிப்பிலான தங்கம் மற்றும் சேர் படிந்த நிலையில் இருந்த 1.5 கோடி பணம், வெள்ளி மற்றும் முக்கிய ஆவணங்கள் மீட்கப்பட்டிருக்கிறது. </p><p>தற்போது அந்த லாக்கரில் இருந்த அனைத்தையும் பத்திரமாக வேறொரு பாதுகாப்பான் இடத்திற்கு வங்கி அதிகாரிகள் மாற்றியுள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-31T19:30:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[முன்னாள் இராணுவ அதிகாரி தாக்குதல்! வெளிநாட்டுத் தூதரக அதிகாரிக்கு எதிராக முறைப்பாடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/attack-on-former-military-officer-complaint-lodged-1788203082"></link>
            <id>https://ibctamil.com/article/attack-on-former-military-officer-complaint-lodged-1788203082</id>
            <summary type="text">




கொழும்பு அல்தாயர் அடுக்குமாடி குடியிருப்பில் இலங்கை முன்னாள் இராணுவ அதிகாரி ஒருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>




</p><p>கொழும்பு அல்தாயர் அடுக்குமாடி குடியிருப்பில் இலங்கை முன்னாள் இராணுவ அதிகாரி ஒருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக வெளிநாட்டுத் தூதரக அதிகாரி ஒருவர் மீது காவல் நிலையத்தில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இந்தச் சம்பவத்தின் சிசிரிவி காட்சிகளில், வரவேற்பறையில் அமர்ந்திருந்த முன்னாள் இராணுவ அதிகாரியிடம் தூதரக அதிகாரி வந்து வாக்குவாதத்தில் ஈடுபடுவது பதிவாகியுள்ளது.</p><p></p><h2>ராஜதந்திரப் பாதுகாப்பு&nbsp;</h2><p>
</p><p>
அதன்போது, சம்பந்தப்பட்ட தூதரக அதிகாரி முன்னாள் இராணுவ அதிகாரியை எச்சில் உமிழ்ந்து, உடல்ரீதியாகத் தாக்கியதும் அக்காணொளியில் தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bf491d7e-72f7-4423-9051-12dd3c54e670/26-6a95d513a910f.webp' /></p><p>

இவ்வாறானதொரு பின்னணியில், சம்பந்தப்பட்ட தூதரக அதிகாரிக்கு ராஜதந்திரப் பாதுகாப்பு இருப்பதாக கூறப்படுவதால் குறித்த முறைப்பாட்டை அதிகாரிகள் எவ்வாறு கையாள்வார்கள் என்ற கேள்விகள் எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<b> WHATSAPP CHANNEL</b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-31T19:25:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[செப்டெம்பர் 22இல் இறுதித் தீர்ப்பு..! வியப்பில் ஆழ்த்திய மைத்திரிக்கு வழங்கப்பட்ட அங்கீகாரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/maithri-pala-sirisena-crown-president-of-happy-era-1788203211"></link>
            <id>https://tamilwin.com/article/maithri-pala-sirisena-crown-president-of-happy-era-1788203211</id>
            <summary type="text">முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு “மகிழ்ச்சியான யுகத்தின் ஜனாதிபதி” என்ற கௌரவப் பட்டம் வழங்கப்பட்ட விடயம் அரசியல் பரபரப்பில் பேசுபொருளாகியுள...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு “மகிழ்ச்சியான யுகத்தின் ஜனாதிபதி” என்ற கௌரவப் பட்டம் வழங்கப்பட்ட விடயம் அரசியல் பரபரப்பில் பேசுபொருளாகியுள்ளது.&nbsp;</p><p>
கொழும்பிலுள்ள அலரி மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றிலேயே முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இந்த கௌரவம் அளிக்கப்பட்டுள்ளது.
</p><p>மகிழ்ச்சியான யுகத்தின் ஜனாதிபதி என அவர் கௌரவிக்கப்பட்டுள்ள நிலையில், அவரின் ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற பல கொடூர சம்பவங்கள் மற்றும் குற்றச் செயல்க்ள தொடர்பில் அரசியல் ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.&nbsp;</p><p>குறிப்பாக, பல உயிர்களை பறித்த உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்&nbsp;மைத்திரிபாலவின் ஆட்சிக்காலத்திலேயே நடந்தேறியது.&nbsp;</p><p>இது தொடர்பில் அவர் மீது பல குற்றச்சாட்டுக்களும் உள்ள நிலையில், இந்த தாக்குதல்கள் தொர்பிலான வழக்கு விசாரணையின் தீர்ப்பு எதிர்வரும் 22ஆம் திகதி வழங்கப்பட உள்ளது.</p><p>&nbsp;இவ்வாறிருக்கையில், அவருக்கு வழங்கப்பட்டுள்ள இந்த அங்கீகாரம் பல கேள்விகளை எழுப்புகின்றது எனலாம்.&nbsp;</p><p>நாட்டில் இடம்பெற்ற பல முக்கிய அரசியல் நகர்வுகள் குறித்து விரிவாக ஆராய்கின்றது நாட்டு நடப்பு நிகழ்ச்சி,&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/sgq8jMiHzoc" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-31T19:18:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பகுதியில் நாயிறைச்சி விற்பனை? பொதுமக்களுக்கு வெளியான அறிவித்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/dog-meat-sold-in-tamil-area-public-notice-issued-1788196771"></link>
            <id>https://jvpnews.com/article/dog-meat-sold-in-tamil-area-public-notice-issued-1788196771</id>
            <summary type="text">சாய்ந்தமருது பிரதேசத்தில் ‘நாயிறைச்சி விற்பனை செய்யப்பட்டதாக’ சமூக ஊடகங்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பரப்பப்பட்டு வரும் தகவல்களில் எவ்வித உண்மைத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">சாய்ந்தமருது பிரதேசத்தில் ‘நாயிறைச்சி விற்பனை செய்யப்பட்டதாக’ சமூக ஊடகங்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பரப்பப்பட்டு வரும் தகவல்களில் எவ்வித உண்மைத்தன்மையும் இல்லை எனச் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் தெளிவுபடுத்தியுள்ளது.
</p><p style="text-align: justify; ">
கடந்த 29ஆம் திகதி சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தின் கீழ் உள்ள பிரதான வீதிப் பகுதியில், சுகாதார வைத்திய அதிகாரியும் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களும் இணைந்து வழக்கமான உணவுப் பாதுகாப்புப் பரிசோதனைகளை மேற்கொண்டனர்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c5fe5334-0328-487f-a701-424611da2bdf/26-6a95b7a4cf9ac.webp' /></p><h2 style="text-align: justify; ">பரிசோதனை</h2><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
இதன்போது, அப்பகுதியிலுள்ள ஆட்டிறைச்சிக் கடையொன்றில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த ஆட்டிறைச்சி பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. </p><p style="text-align: justify; ">குறித்த இறைச்சியானது உரிய சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாமலும், அங்கீகரிக்கப்பட்ட கால்நடை வைத்தியரின் பரிசோதனைச் சான்றிதழைப் பெறாமலும் விற்பனை செய்யப்பட்டுள்ளது கண்டறியப்பட்டது.</p><p style="text-align: justify; ">

இதனையடுத்து, பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களால் குறித்த ஆட்டிறைச்சி உடனடியாகக் கையகப்படுத்தப்பட்டு, கடை உரிமையாளரின் அனுமதியுடன் அழிக்கப்பட்டதுடன், சுகாதார நடைமுறையைப் பின்பற்றாத கடை உரிமையாளருக்கு எதிராக நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
எனினும், இச்சம்பவத்தைத் தவறாகச் சித்தரித்து, சாய்ந்தமருது பகுதியில் நாயிறைச்சி விற்பனை செய்யப்பட்டதாகவும், அதனைப் பரிசோதகர்கள் பறிமுதல் செய்ததாகவும் சிலர் உள்நோக்கத்துடன் சமூக ஊடகங்களில் பொய்ப் பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p style="text-align: justify; ">

இது குறித்துச் சுட்டிக்காட்டியுள்ள சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம், பொதுமக்கள் மத்தியில் தேவையற்ற அச்சத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தும் நோக்கிலேயே இத்தகைய வதந்திகள் பரப்பப்படுவதாகத் தெரிவித்துள்ளது.
</p><p style="text-align: justify; ">
எனவே, பொதுமக்கள் இந்த உண்மைக்குப் புறம்பான தகவல்களை நம்பவோ அல்லது சமூக வலைத்தளங்களில் பகிரவோ வேண்டாம் என்றும், இது தொடர்பில் எவ்வித அச்சமும் கொள்ளத் தேவையில்லை என்றும் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் கேட்டுக்கொண்டுள்ளது</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">

 </p>]]></content>
            <updated>2026-08-31T19:09:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்க பயணங்களை கணிசமாகக் குறைத்த கனடியர்கள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/canadians-are-keeping-travel-money-home-1788185258"></link>
            <id>https://canadamirror.com/article/canadians-are-keeping-travel-money-home-1788185258</id>
            <summary type="text">2026ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் கனடா பயணிகள் அமெரிக்காவிற்கான தங்கள் பயணங்களையும் செலவுகளையும் கணிசமாகக் குறைத்துள்ளதாக கனடிய புள்ளிவிபரவியல் திணைக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் கனடா பயணிகள் அமெரிக்காவிற்கான தங்கள் பயணங்களையும் செலவுகளையும் கணிசமாகக் குறைத்துள்ளதாக கனடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் வெளியிட்ட தேசிய சுற்றுலா சர்வே தரவுகள் தெரிவிக்கின்றன.
</p><p>2025ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களுடன் ஒப்பிடுகையில், 2026 ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலத்தில் கனடாவாசிகள் அமெரிக்காவிற்கு மேற்கொண்ட பயணங்களின் எண்ணிக்கை சுமார் 5 லட்சம் குறைந்துள்ளது.
</p><p>பயணங்களின் எண்ணிக்கை குறைந்ததால், அமெரிக்காவில் கனடாவாசிகள் செய்த செலவு சுமார் 800 மில்லியன் டொலர் வரை சரிவடைந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/00773107-b6ec-4d0c-9c05-274134e87139/26-6a958aabc6735.webp' /></p><p> </p><p>இதில் விமானக் கட்டணம் மற்றும் கனடாவில் பயணத்திற்காகச் செய்யப்பட்ட ஆரம்பச் செலவுகளும் அடங்கும்.</p><p>
அமெரிக்க பயணங்களைத் தவிர்த்து கனடாவாசிகள் தங்கள் சொந்த நாட்டின் சுற்றுலாத் துறையை ஆதரிக்கத் தொடங்கியுள்ளனர்.
</p><p>2025 முதல் காலாண்டில் 13.8 பில்லியன் டொலராக இருந்த கனடாவின் உள்நாட்டுச் சுற்றுலாச் செலவு, 2026 முதல் காலாண்டில் 14.5 பில்லியன் டொலராக அதிகரித்துள்ளது.
</p><p>இதேவேளை, கனடாவாசிகள் அமெரிக்கப் பயணத்தைக் குறைத்துக் கொண்டபோதிலும், அமெரிக்கர்களிடையே கனடாவிற்குச் செல்லும் ஆர்வம் குறையவில்லை.
</p><p>2026 ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலத்தில் அமெரிக்க சுற்றுலாப் பயணிகள் கனடாவில் சுமார் 3 பில்லியன் டொலர் செலவிட்டுள்ளனர்.
</p><p>இது முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தை விட சுமார் 500 மில்லியன் டொலர் அதிகமாகும்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-31T19:08:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[போரை தொடரவே விரும்புகிறார் புடின்: ஜெலென்ஸ்கி முன்வைத்த குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/putin-not-ready-for-peace-zelenskyy-stated-1788202914"></link>
            <id>https://news.lankasri.com/article/putin-not-ready-for-peace-zelenskyy-stated-1788202914</id>
            <summary type="text">Putin not ready for peace. Zelenskyy stated: ரஷ்ய ஜனாதிபதி புடின் போரை தொடரவே விரும்புகிறார் என்று உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி குற்றஞ்சாட்டியுள்ளார்....</summary>
            <content type="html"><![CDATA[<p>Putin not ready for peace. Zelenskyy stated: ரஷ்ய ஜனாதிபதி புடின் போரை தொடரவே விரும்புகிறார் என்று உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி குற்றஞ்சாட்டியுள்ளார்.</p><h2> போரை தொடர விரும்பும் புடின்</h2><p>உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி திங்கட்கிழமை தெரிவித்த கருத்தில், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தனிப்பட்ட முறையில் போரை தொடரவே விரும்புகிறார் என தெரிவித்துள்ளார்.</p><p>உக்ரைன் மற்றும் சர்வதேச கூட்டாளி நாடுகளின் உளவுத்துறை அறிக்கைகளும் இந்த தகவலை தான் உறுதிப்படுத்தியுள்ளது என்று தெரிவித்துள்ளார்.</p><p>இது தொடர்பாக உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி X தளத்தில் வெளியிட்ட பதிவில், ரஷ்ய தலைவர்களுக்கும்,, ரஷ்யாவில் வாழும் பொதுமக்களுக்கும் இடையே மிகப்பெரிய கருத்து வித்தியாசம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4aa30e6c-d80a-4a0d-8d49-3a2f702a5f7c/26-6a95cfa479b65.webp' /></p><p> ரஷ்ய பொதுமக்கள் பெரும்பாலானோர் போரை முடிவுக்கு கொண்டு வரவே விரும்புகின்றனர் என்று தெரிவித்துள்ளார்.</p><p> எனவே மாஸ்கோ தலைமையும், புடினின் மனநிலையும் போரை கைவிட்டு விட்டு அமைதியை நோக்கி திரும்ப வேண்டும் என்று ஜெலென்ஸ்கி வலியுறுத்தியுள்ளார்.</p><p> அமெரிக்கா அதிபரின் பிரதிநிதிகள் குறித்து நம்பிக்கை தெரிவித்த ஜெலென்ஸ்கி, செப்டம்பரில் அதற்கான குறிப்பிடத்தக்க ராஜதந்திர மாற்றங்கள் இருக்க கூடும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-31T19:02:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[களு கங்கையில் நீராடச் சென்ற 19 வயது இளைஞன் மாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/19-year-old-youth-missing-1788200748"></link>
            <id>https://jvpnews.com/article/19-year-old-youth-missing-1788200748</id>
            <summary type="text">ஹொரணை, நாரகல பாலத்திற்கு அருகில் களு கங்கையில் நீராடச் சென்ற மூன்று இளைஞர்களில் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.

 

இன்று (31) பிற்பகல் இ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹொரணை, நாரகல பாலத்திற்கு அருகில் களு கங்கையில் நீராடச் சென்ற மூன்று இளைஞர்களில் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.
</p><p>
 

இன்று (31) பிற்பகல் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதுடன், இவ்வாறு காணாமல் போனவர் 19 வயதுடைய இளைஞராவார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/890ee987-a263-4cd3-b0b4-fb5325ef34f2/26-6a95c72e2e464.webp' /></p><p>
</p><p>
 

காணாமல் போன இளைஞனைத் தேடும் விசேட தேடுதல் நடவடிக்கை தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.</p><p></p><p>

 

சம்பவம் தொடர்பில் ஹொரணை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-31T19:00:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[களுத்துறை துப்பாக்கிச் சூடு! பானந்துர நிலந்தவின் மைத்துனர் படுகொலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/shooting-in-payagala-1788196621"></link>
            <id>https://ibctamil.com/article/shooting-in-payagala-1788196621</id>
            <summary type="text">புதிய இணைப்புபாயாகலவில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.இந்த நிலையில், குறித்த நபர் தற்ப...</summary>
            <content type="html"><![CDATA[<h3>புதிய இணைப்பு</h3><p>பாயாகலவில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.</p><p>இந்த நிலையில், குறித்த நபர் தற்போது தடுப்பு காவலில் விசாரிக்கப்பட்டு வரும் பிரபல பாதாள உலக குற்றவாளி பானந்துர நிலந்தவின்&nbsp;மைத்துனரான டிலா என்பர் என தெரியவந்தள்ளது.</p><p>அத்தோடு, குறித்த துப்பாக்கிச் சூட்டை குடு சலிந்து என்ற பிரபல பாதாள உலக தலைவனின் குழுவினரே நடத்தியுள்ளதாகவும் இதன்போது “3எய்ட்“ ரக துப்பாக்கி பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.</p><h3>முதலாம் இணைப்பு</h3><p>களுத்துறை மாவட்டம் - பாயாகலவின்&nbsp;நைமுல்ல பம்பய பகுதியில் உள்ள ஒரு வீட்டின் முன்பாக துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.</p><p>குறித்த துப்பாக்கிச் சூட்டில்&nbsp;படுகாயமடைந்த ஒருவர் நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.</p><p>சற்று நேரத்திற்கு முன்பு இந்தத் துப்பாக்கிச் சூடு நடந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.</p><p></p><h2>மேலதிக விசாரணை</h2><p>துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் தெரியவராத நிலையில், சந்தேகநபர்களை கைது செய்ய்ய காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/14a64e12-08fc-4587-a8be-a516bcd11aa7/26-6a95b8d9346fa.webp' /></p><p></p><p>&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-31T18:57:53+00:00</updated>
        </entry>
    </feed>
