<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-08-24T00:42:43+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்க நீதிமன்றம் அதிரடி ; ரத்து செய்யப்பட்ட ட்ரம்ப் அரசின் தீர்மானம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/us-court-overturns-trump-decision-1787532003"></link>
            <id>https://canadamirror.com/article/us-court-overturns-trump-decision-1787532003</id>
            <summary type="text">ஆப்கானிஸ்தான், ஈரான், ரஷ்யா மற்றும் சோமாலியா உள்ளிட்ட 75 நாடுகளில் இருந்து வரும் மக்களுக்கு குடியேற்ற விசா வழங்க தடைவிதித்த டொனால்ட் ட்ரம்ப் அரசின் உத...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஆப்கானிஸ்தான், ஈரான், ரஷ்யா மற்றும் சோமாலியா உள்ளிட்ட 75 நாடுகளில் இருந்து வரும் மக்களுக்கு குடியேற்ற விசா வழங்க தடைவிதித்த டொனால்ட் ட்ரம்ப் அரசின் உத்தரவை அமெரிக்க கூட்டாட்சி நீதிமன்ற நீதிபதி ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார் </p><p>

இக்கொள்கை சட்டத்திற்கு முரணானது எனக்கூறி கூட்டாட்சி நீதிமன்ற நீதிபதி&nbsp; ரத்து செய்து உத்தரவிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d246fb8c-e2ad-417a-95a7-ce51f65496ab/26-6a8b92e5bafe7.webp' /></p><p>

“சட்டப்பூர்வமாக எந்தவொரு அடிப்படையும் இல்லாதபோது, தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு விசாக்களை மறுக்கக் கட்டாயப்படுத்துவதன் மூலம், குடிவரவு மற்றும் குடியுரிமைச் சட்டத்தை மீறும்” கொள்கையை வெளியிட்டு, வெளியுறவுத்துறைச் செயலர் மார்கோ ரூபியோ தனது அதிகார வரம்பை மீறியுள்ளார்,” என்றும் நீதிபதி குறிப்பிட்டார்.

</p><p>தூதரக அதிகாரிகளுக்கே அதிகாரம்
சட்டத்தில் வகுக்கப்பட்டுள்ள குறிப்பிட்ட மற்றும் விரிவான அளவுகோல்களை மதிப்பாய்வு செய்வதன் அடிப்படையில், ஒரு குடியேறி விசாவுக்குத் தகுதியானவரா என்பதைத் தீர்மானிக்கும் பிரத்யேக அதிகாரம் தூதரக அதிகாரிகளுக்கே உள்ளது என்றும் குறிப்பிட்டார்.</p><p>

இரண்டு குடியேற்ற உரிமை அமைப்புகளுடன் சேர்ந்து, 11 பேர் தாக்கல் செய்த மனுமீது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
</p><p>இந்த விசா தடை கொள்கை கடந்த ஜனவரி மாதம் ட்ரம்ப் நிர்வாகத்தால் கொண்டு வரப்பட்டது. </p><p>ஆப்கானிஸ்தான், பிரேசில், எகிப்து, ஈராக், நைஜீரியா, சோமாலியா, ரஷ்யா, ஈரான் மற்றும் தாய்லாந்து உள்ளிட்ட உலகளவில் சுமார் 75 நாடுகள் இதனால் பாதிக்கப்பட்டன. </p><p>
இந்த நாடுகளில் இருந்து அமெரிக்காவிற்கு குடியேறுபவர்கள், அங்குள்ள அரசு நலத்திட்ட உதவிகளைப் பயன்படுத்தி “அந்நாட்டிற்கு பொதுச்சுமையாக” மாற அதிக வாய்ப்புள்ளது என்று ட்ரம்ப் நிர்வாகம் குறிப்பிட்டிருந்தது.</p>]]></content>
            <updated>2026-08-24T00:40:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[300,000 இராணுவ வீரர்களை திரட்ட ரஷ்யா திட்டம்! கவலையில் ஜெலென்ஸ்கி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/russia-to-mobilize-300-000-more-soldiers-for-war-1787529422"></link>
            <id>https://ibctamil.com/article/russia-to-mobilize-300-000-more-soldiers-for-war-1787529422</id>
            <summary type="text">

ரஷ்யாவில் செப்டம்பர் நடுப்பகுதியில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு, போருக்காக மேலும் 3,00,000 வீரர்களைத் திரட்ட மொஸ்கோ திட்டமிட்டுள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>

ரஷ்யாவில் செப்டம்பர் நடுப்பகுதியில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு, போருக்காக மேலும் 3,00,000 வீரர்களைத் திரட்ட மொஸ்கோ திட்டமிட்டுள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். </p><p>

கிழக்கு உக்ரைனின் தொழில்மயமான டொன்பாஸ் பிராந்தியத்தின் எஞ்சிய பகுதிகளைக் கைப்பற்றும் நோக்கில் ரஷ்யப் படைகள் தீவிரமாக முன்னேறி வருகின்றன.
</p><p>
மொத்தம் 5,00,000 துருப்புக்களைத் திரட்டும் இலக்கை எட்டுவதற்காக, 2027 ஆம் ஆண்டிலும் ரஷ்யா மேலும் பலரை ராணுவத்தில் சேர்க்கக்கூடும் என்றும் ஜெலென்ஸ்கி கூறியுள்ளார்.</p><p></p><h2>ரஷ்யாவின் திட்டம்</h2><p> </p><p>

தலைநகர் அல்லது முக்கிய நகரங்களைத் தவிர்த்து, ரஷ்யாவின் தூரத்திலுள்ள தொலைதூரப் பகுதிகளை இலக்கு வைத்து இந்த ஆட்சேர்ப்பு நடைபெறும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5121ee78-e4db-4ab0-b549-fffd8cad3f2a/26-6a8b8ca2bbe0f.webp' /></p><p> </p><p>

இந்நிலையில், கொஸ்டியான்டினிவ்கா போன்ற மூலோபாய நகரத்தைச் சுற்றி கடுமையான சண்டை நடந்து வரும் நிலையில், உக்ரைனின் கோட்டை நகரங்களுக்குள் நுழைய முயன்று ரஷ்யா பெரும் எண்ணிக்கையிலான வீரர்களை இழந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p><h5><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table></h5><p>

</p>]]></content>
            <updated>2026-08-24T00:25:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் மூன்று வர்த்தக நிலையங்களுக்கு எதிராக பல இலட்சம் ரூபாய் அபராதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/jaffna-shops-fined-millions-over-violations-1787531121"></link>
            <id>https://jvpnews.com/article/jaffna-shops-fined-millions-over-violations-1787531121</id>
            <summary type="text">நிர்ணயிக்கப்பட்ட மற்றும் அச்சிடப்பட்ட விலையை விட அதிக விலைக்குப் பொருட்களை விற்பனை செய்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மூன்று வர்த்தக நிலையங்களுக்கு, யாழ்ப்...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">நிர்ணயிக்கப்பட்ட மற்றும் அச்சிடப்பட்ட விலையை விட அதிக விலைக்குப் பொருட்களை விற்பனை செய்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மூன்று வர்த்தக நிலையங்களுக்கு, யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் மொத்தம் 668,000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது.
</p><p style="text-align: justify;">
நுகர்வோர் விவகார அதிகாரசபையின் அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனைகளைத் தொடர்ந்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9179da6b-2e2b-4bc3-a64d-e0963ab43cca/26-6a8b8f73c157f.webp' /></p><h2 style="text-align: justify;">அபராதம்&nbsp;</h2><p>
</p><p style="text-align: justify; ">
120 ரூபாய் அதிகபட்ச சில்லறை விலை கொண்ட ஒரு லீட்டர் குடிநீர் போத்தலை 200 ரூபாய்க்கு விற்பனை செய்த யாழ்ப்பாணத்திலுள்ள உணவகம் மற்றும் மதுபான விற்பனையகம் ஒன்றுக்கு 300,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
</p><p style="text-align: justify;">
அச்சிடப்பட்ட சில்லறை விலையை விட அதிக விலைக்கு சோடா போத்தலை விற்பனை செய்த மற்றொரு உணவகத்திற்கு 100,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;">

ஒரு கிலோகிராம் பொன்னி சம்பா அரிசிக்கான அதிகபட்ச சில்லறை விலையான 255 ரூபாயை விட அதிக விலைக்கு விற்பனை செய்த வர்த்தகர் ஒருவருக்கு 268,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
</p><p style="text-align: justify;">&nbsp;வர்த்தக அத்துமீறல்கள் தொடர்பில் 1977 என்ற உடனடி தொலைபேசி இலக்கத்தின் ஊடாக வேலை நேரங்களில் அறிவிக்க முடியும் என்றும் நுகர்வோர் விவகார அதிகாரசபை அறிவித்துள்ளது.</p><p style="text-align: justify;"></p>]]></content>
            <updated>2026-08-24T00:25:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[உயரும் சர்க்கரை விலை... அமைச்சர் சொன்ன விளக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/sugar-prices-are-rising-1787530941"></link>
            <id>https://news.lankasri.com/article/sugar-prices-are-rising-1787530941</id>
            <summary type="text">Sugar production had declined due to red rot disease and El Nino: சிவப்பு அழுகல் நோய் மற்றும் எல் நினோ சூழ்நிலைகள் காரணமாக சர்க்கரை உற்பத்தி சரிந்து, ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Sugar production had declined due to red rot disease and El Nino: சிவப்பு அழுகல் நோய் மற்றும் எல் நினோ சூழ்நிலைகள் காரணமாக சர்க்கரை உற்பத்தி சரிந்து, விவசாய உற்பத்தி பாதிப்பு.
</p><p>பண்டிகைக் காலத்தை முன்னிட்டு சர்க்கரை கிடைப்பது மற்றும் சில்லறை விலைகள் உயர்வது குறித்த கவலைகளைத் தீர்க்கும் வகையில், கச்சா சர்க்கரையை தற்காலிகமாக இறக்குமதி செய்வது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை இந்திய அரசு எடுத்து வருவதாக ஒன்றிய அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/622fdc26-25fc-4257-b974-0d760890a6a3/26-6a8b8ec04e9e6.webp' /></p><p>
</p><p>சிவப்பு அழுகல் நோய் மற்றும் எல் நினோ நிலைமைகள் காரணமாக சர்க்கரை உற்பத்தி குறைந்துள்ளதாகவும், இது இந்தியாவிலும் உலக அளவிலும் விவசாய உற்பத்தியைப் பாதித்துள்ளதாகவும் பிரல்ஹாத் ஜோஷி கூறினார். </p><p>செய்தியாளர்கள் சந்திப்பின்போது பேசிய அமைச்சர், இது குறித்து நாங்கள் மிகவும் கவலைப்படுகிறோம், அதனால்தான் உடனடியாகப் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். இந்தியாவின் தேவை சுமார் 280 லட்சம் டன்கள், ஆனால் இன்றுவரை... நம்மிடம் 20 முதல் 25 லட்சம் டன்களுக்கும் அதிகமான உபரி சர்க்கரை உள்ளது என்றார்.</p><p></p><p>
</p><p>சமீபத்தில் சில்லறை சர்க்கரை விலையில் ஏற்பட்ட உயர்விற்கு மத்தியில் இந்த உறுதி வழங்கப்பட்டுள்ளது. சில்லறை சர்க்கரை விலையானது ஜூலை 20 அன்று ஒரு கிலோவுக்கு ரூ.48.18-லிருந்து ஆகஸ்ட் 20 அன்று ஒரு கிலோவுக்கு ரூ.55.70 ஆக உயர்ந்துள்ளதாகவும், இந்த உயர்வுக்குப் பல்வேறு காரணிகளின் கலவையே காரணம் என்றும் நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகம் வெள்ளிக்கிழமை அன்று தெரிவித்துள்ளது.</p><p> இதற்கிடையில், விவசாயிகள் வழங்கும் கரும்புக்கு அவர்களுக்கு உரிய நேரத்தில் பணம் வழங்கப்படவில்லை என்று காங்கிரஸ் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரந்தீப் சிங் சுர்ஜேவாலா தெரிவித்தார். மேலும், முன்னர் சர்க்கரையை ஏற்றுமதி செய்து வந்த இந்தியா, தற்போது முதன்முறையாக அதை இறக்குமதி செய்வதாக அவர் மேலும் சாட்டினார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-24T00:19:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[மோசடியில் தொடர்ந்து சிக்கும் நாமல் - 6 மணிநேரம் சி.ஐ.டி விசாரணையில் நடந்தது என்ன...!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/reason-behind-the-namal-s-investigation-1787494281"></link>
            <id>https://tamilwin.com/article/reason-behind-the-namal-s-investigation-1787494281</id>
            <summary type="text">ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச, நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜராகி 6 மணி நேரம் வாக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச, நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜராகி 6 மணி நேரம் வாக்குமூலம் வழங்கியதன் பின்னணி தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.</p><p> கடற்கரை ஓரத்தில் அமைந்துள்ள தங்காலை பே ஹோட்டல் கொள்வனவு தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைக்காக நாமல் அழைக்கப்பட்டிருந்தார்.
</p><p>
ராஜபக்ச குடும்பத்துடன் தொடர்புடைய CSN தொலைக்காட்சி ஊடாகப் ஈட்டப்பட்ட பணத்தை கொண்டே இந்த ஹோட்டல் வர்த்தகப் பரிமாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.</p><p> </p><h2><b>

வாக்குமூலம் பதிவு </b></h2><p>இதனடிப்படையிலேயே இந்த விசாரணைகள் இடம்பெற்றுள்ளன. வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதன் பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கிருந்து சென்றுள்ளார். </p><p>அத்துடன் நாமலுக்கு எதிராகப் புதிய குற்றச்சாட்டுகள் எதுவும் முன்வைக்கப்படவில்லை. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/74269162-f58b-44a6-9f60-c9ec104d4e02/26-6a8b2bf985a63.webp' /></p><p>முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகனான நாமல் ராஜபக்ச, இதற்கு முன்பும் பல்வேறு நிதி முறைகேடுகள் தொடர்பாக விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். </p><p>

Krish Lanka நிறுவனத்தால் ரக்பி விளையாட்டு மேம்பாட்டிற்காக வழங்கப்பட்ட 70 மில்லியன் ரூபாய் நிதியைத் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படுகின்றது. </p><p>

இந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் 2025ஆம் ஆண்டு ஜனவரியில் சட்டமா அதிபரால் அவருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. </p><p>மேலும் NR Consultancy நிறுவனத்துடன் தொடர்புடைய 15 மில்லியன் ரூபாய் பணமோசடி பரிமாற்றம் குறித்தும் விசாரணைகள் நடத்தப்பட்டன. </p><p>எவ்வாறாயினும், Gowers Corporation நிறுவனத்துடன் தொடர்புடைய மற்றொரு பணமோசடி வழக்கில் 2023ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கொழும்பு மேல்நீதிமன்றத்தால் நாமல் ராஜபக்ச குற்றச்சாட்டுகளில் இருந்து விடுதலை செய்யப்பட்டார். </p><p>அவரது சட்டத் தகுதிகள் மற்றும் இலங்கை சட்டக் கல்லூரியில் இணைந்து கொள்வது தொடர்பிலும் குற்றப் புலனாய்வு திணைக்களம் அண்மையில் விசாரணை ஒன்றை ஆரம்பித்திருந்தது. </p><p> எனினும் அந்த குற்றச்சாட்டுகளை நாமல் வன்மையாக மறுத்துள்ளார். இந்த புதிய அழைப்பு முற்றிலும் தங்காலை பே ஹோட்டல் பரிமாற்றம் தொடர்பான விசாரணைக்கு மட்டுமே என தகவல்கள் வெளியாகி உள்ளன. </p>]]></content>
            <updated>2026-08-24T00:13:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[உசைன் போல்ட் சாதனையை முறியடித்த சீனாவின் அதிவேக ரோபோ]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/china-s-superfast-robot-breaks-usain-bolt-s-record-1787530023"></link>
            <id>https://canadamirror.com/article/china-s-superfast-robot-breaks-usain-bolt-s-record-1787530023</id>
            <summary type="text">ஜமைக்காவின் புகழ்பெற்ற ஓட்டப்பந்தய வீரா் உசைன் போல்ட் படைத்திருந்த 100 மீட்டா் ஓட்டப்பந்தய உலக சாதனையை, சீனாவைச் சோ்ந்த மனித உருவ ரோபோ ஒன்று முறியடித...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜமைக்காவின் புகழ்பெற்ற ஓட்டப்பந்தய வீரா் உசைன் போல்ட் படைத்திருந்த 100 மீட்டா் ஓட்டப்பந்தய உலக சாதனையை, சீனாவைச் சோ்ந்த மனித உருவ ரோபோ ஒன்று முறியடித்துள்ளது.
</p><p>
கடந்த 2009-ஆம் ஆண்டு, பொ்லினில் நடந்த உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் உசைன் போல்ட் 100 மீட்டா் தூரத்தை 9.58 விநாடிகளில் கடந்ததே மனிதா்களின் உலக சாதனையாக இருந்து வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ff1416c3-1df6-4fcb-8db6-7d87a28e5360/26-6a8b8b29a4b6e.webp' /></p><p> இந்நிலையில், சீன ஸ்மாா்ட்போன் தயாரிப்பு நிறுவனமான ‘ஹானா்’ உருவாக்கியுள்ள இந்த மனித உருவ ரோபோ, வெறும் 9.32 விநாடிகளில் 100 மீட்டா் தூரத்தைக் கடந்துள்ளது.



</p><p>
‘லைட்னிங்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த அதிவேக ரோபோ, பெய்ஜிங்கில் சனிக்கிழமை தொடங்கிய 2-ஆவது உலக மனித உருவ ரோபோ விளையாட்டுப் போட்டிக்கான முன்னோட்ட சோதனையின்போது விநாடிக்கு 14.5 மீட்டா் என்ற அதிகபட்ச வேகத்தை எட்டி, இச்சாதனையைப் படைத்துள்ளது.
</p><p>
முன்னதாக, கடந்த ஏப்ரலில் நடைபெற்ற பெய்ஜிங் அரை மாரத்தான்(21 கி.மீ) ஓட்டப் பந்தயத்திலும் இந்த ‘லைட்னிங்’ ரோபோ பங்கேற்று, 50 நிமிடங்கள் மற்றும் 26 விநாடிகளில் இலக்கை அடைந்து வெற்றி பெற்றது.</p><p>

அந்த அரை மாரத்தான் போட்டியின்போது 169 செ.மீ. உயரமும், 95 செ.மீ. நீளமுள்ள கால்களையும் கொண்டிருந்த இந்த ரோபோவின் கால்கள், தற்போது உலக மனித உருவ ரோபோ விளையாட்டுப் போட்டிக்காக ஆராய்ச்சியாளா்களால் மேலும் 10 செ.மீ. நீட்டிக்கப்பட்டு, 1.05 மீட்டராக மேம்படுத்தப்பட்டுள்ளது.
</p><p><br></p>]]></content>
            <updated>2026-08-24T00:07:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரூபாவைப் பாதுகாக்கும் இலங்கை அரசாங்கத்தின் திட்டம்! குறையும் கையிருப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/low-foreign-reserves-1787528239"></link>
            <id>https://tamilwin.com/article/low-foreign-reserves-1787528239</id>
            <summary type="text">&amp;nbsp;சர்வதேச நாணய நிதியம் கூறியதை விட இலங்கை அரசாங்கத்திடம் வெளிநாட்டுக் கையிருப்பு குறைவாகவே உள்ளது என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;சர்வதேச நாணய நிதியம் கூறியதை விட இலங்கை அரசாங்கத்திடம் வெளிநாட்டுக் கையிருப்பு குறைவாகவே உள்ளது என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
</p><p>
கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.</p><p>

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,</p><p> 

சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தத்தின் படி இந்த வருடத்தில் நாட்டின் மொத்த வெளிநாட்டுக் கையிருப்பு 8.8 பில்லியன் அமெரிக்க டொலராக இருக்க வேண்டும். எனினும், தற்போது 6.5 பில்லியன் டொலர்களே கையிறுப்பில் உள்ளது.</p><h2>கையிருப்பு</h2><p> </p><p>

இந்தநிலையில், மாதத்திற்கு 250 முதல் 300 மில்லியன் டொலர் வரை சேமிப்பது இலகுவானதல்ல.

2024 ஆம் ஆண்டு ஆட்சிமாற்றத்தின்போது வெளிநாட்டு கையிருப்பு 6100 மில்லியன் டொலராக இருந்தது.</p><p> அதன் பின்னர் சர்வதேச நாணய நிதியத்தின் வெளிநாட்டு கையிருப்பு அதிகரிப்புக்காக மூன்று காலாண்டுக்கான நிதி ஒத்துழைப்பு வழங்கியது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cae29a83-2648-4645-b95c-ac83f7fb5fce/26-6a8b867631d8e.webp' /></p><p>
</p><p>
இந்த ஒத்துழைப்புக்கு அமைய வெளிநாட்டு கையிருப்பு குறைந்தது 7,100 மில்லியன் டொலராக இருந்திருக்க வேண்டும். ஆனால் அதற்கு பதிலாக இன்று 6591 மில்லியன் டொலரே கையிருப்பில் உள்ளது.</p><p> சர்வதேச நாணய நிதியம் கூறியதை விட வெளிநாட்டு கையிருப்பு குறைவாக உள்ளது.

எனவே இது குறித்து அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன.</p><p>கையிருப்பைக் கொண்டு ரூபாயின் மதிப்பைப் பாதுகாக்க இந்த டொலர்களைப் பயன்படுத்துகிறார்கள்.&nbsp; கையிருப்பைப் பாதுகாக்கும் வேலைத்திட்டத்தை முன்னெடுக்குமாறு அரசாங்கத்தைக் கேட்டுக்கொள்கிறோம். இறுதியில் இந்தச் சுமை அரசாங்கத்தின் மீதே விழும் என குறிப்பிட்டுள்ளார்.&nbsp; &nbsp; &nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-23T23:47:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் போலி மருத்துவர்கள் இருவருக்கு நீதிமன்றின் அதிரடி உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/two-fake-doctors-receive-suspended-prison-1787527923"></link>
            <id>https://jvpnews.com/article/two-fake-doctors-receive-suspended-prison-1787527923</id>
            <summary type="text">நீண்டகாலமாக மருத்துவர்கள் என தங்களை அடையாளம் காட்டி நோயாளர்களுக்கு சிகிச்சையளித்து மோசடியில் ஈடுபட்டு வந்த இருவரக்கு 5 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்பட்ட 6...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">நீண்டகாலமாக மருத்துவர்கள் என தங்களை அடையாளம் காட்டி நோயாளர்களுக்கு சிகிச்சையளித்து மோசடியில் ஈடுபட்டு வந்த இருவரக்கு 5 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்பட்ட 6 மாத கால சிறைத்தண்டனை விதித்து, களுத்துறை மேலதிக நீதிவான்&nbsp; உத்தரவிட்டுள்ளார்.</p><p style="text-align: justify;">

அத்துடன், குற்றம் சாட்டப்பட்ட இருவருக்கும் தலா 50,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.</p><p style="text-align: justify;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aa07c6ac-ef29-4628-959e-b629283ed6d1/26-6a8b8516a2ec9.webp' /></p><h2 style="text-align: justify;">விசேட நடவடிக்கை</h2><p>
</p><p style="text-align: justify;">
பேருவளை மற்றும் கல்முனை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த இருவருக்கே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; ">
அளுத்கம, தர்கா நகர் பகுதியில் சிகிச்சை நிலையங்களை நடத்திச் சென்ற இவர்கள், களுத்துறை தேசிய சுகாதார விஞ்ஞான நிறுவகத்தினால் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போதே கைது செய்யப்பட்டனர்.</p><p style="text-align: justify; "></p><p>
</p><p style="text-align: justify; ">
இவர்கள் இலங்கை மருத்துவ பேரவையில் (SLMC) பதிவு செய்யப்படாமல் சட்டவிரோதமாக மருத்துவத் தொழிலில் ஈடுபட்டு வந்தமை இதன்போது தெரியவந்தது.</p><p>
</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-23T23:41:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[நடிகை நயன்தாரா வாங்கிய முதல் சம்பளம்! இவ்வளவு தானா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/nayanthara-first-salary-before-becoming-heroine-1787527805"></link>
            <id>https://cineulagam.com/article/nayanthara-first-salary-before-becoming-heroine-1787527805</id>
            <summary type="text">நடிகை நயன்தாரா தற்போது தமிழ் சினிமாவில் டாப் ஹீரோயின்களில் ஒருவர். தெலுங்கு, ஹிந்தியிலும் அவர் படங்கள் நடித்து வருகிறார்.

முதல் சம்பளம் 

சமீபத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>நடிகை நயன்தாரா தற்போது தமிழ் சினிமாவில் டாப் ஹீரோயின்களில் ஒருவர். தெலுங்கு, ஹிந்தியிலும் அவர் படங்கள் நடித்து வருகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/463b96cd-8701-40bf-853c-c5a99e9c2e10/26-6a8b827ea6cb0.webp' /></p><p>
</p><h2>
முதல் சம்பளம் </h2><p>

சமீபத்திய பேட்டி ஒன்றில் நயன்தாராவின் முதல் சம்பளம் பற்றி கேட்கப்பட்டது. அதற்கு பதில் சொன்ன அவர் தான் ஒரு பேஷன் நிகழ்ச்சிக்கான மாடலிங் செய்ததற்கு 2000 - 3000 ரூபாய் சம்பளமாக கொடுத்த்தார்கள், அது தான் என் முதல் சம்பளம் என கூறி இருக்கிறார்.</p><p>தற்போது ஒரு படத்திற்கு 10 கோடி ரூபாய்க்கும் மேல் அவர் சம்பளமாக பெறுகிறார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-23T23:30:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹார்முஸ் நீரிணையில் சேவைக் கட்டணங்களை அறிவித்த ஈரான்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/iran-announces-service-fees-1787527699"></link>
            <id>https://news.lankasri.com/article/iran-announces-service-fees-1787527699</id>
            <summary type="text">Iran announces service fees: ஹார்முஸ் நீரிணையைக் கடக்கும் அங்கீகரிக்கப்பட்ட கப்பல்களுக்கான சேவைக் கட்டணங்களை ஈரான் அறிவித்துள்ளது.
ஹார்முஸ் நீரிணை வழ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Iran announces service fees: ஹார்முஸ் நீரிணையைக் கடக்கும் அங்கீகரிக்கப்பட்ட கப்பல்களுக்கான சேவைக் கட்டணங்களை ஈரான் அறிவித்துள்ளது.</p><p>
ஹார்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் அங்கீகரிக்கப்பட்ட நாடுகளின் கப்பல்கள் இனி சேவைக்கான கட்டணத்தைச் செலுத்த வேண்டும் என்று ஈரான் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8cb71b15-fb3a-4168-ac8d-e7634f21be9d/26-6a8b8216331b1.webp' /></p><p>
</p><p>இந்த முடிவின் வரம்பை விவரித்த ஈரானின் தேசிய பாதுகாப்பு ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர் எப்ராஹிம் ரெசாய், இந்தக் கட்டணங்கள் கடல்சார், சுற்றுச்சூழல் மற்றும் தளவாடங்கள் சார்ந்த பல்வேறு அம்சங்களை உள்ளடக்கியிருக்கும் என்று தெரிவித்தார். </p><p>அரசு ஒளிபரப்பு நிறுவனமான IRIB-ன் தகவல்படி, ஹார்முஸ் நீரிணையின் பாதுகாப்பு மற்றும் முன்னேற்றத்தை உறுதி செய்வதற்கான பிரிவு 3 உத்திசார் நடவடிக்கை திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
</p><p>ஹார்முஸ் நீரிணையின் பாதுகாப்பு மற்றும் முன்னேற்றத்தை உறுதி செய்வதற்கான உத்திசார் நடவடிக்கை திட்டத்தின் 3வது பிரிவுக்கு தேசிய பாதுகாப்பு ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது, அதன்படி ஹார்முஸ் நீரிணை வழியாகச் செல்ல அங்கீகரிக்கப்பட்ட நாடுகளின் கப்பல்கள், ஈரான் வழங்கும் சேவைகளுக்குக் கட்டணம் செலுத்த வேண்டும் என்று அவர் கூறினார்.</p><p></p><p> </p><p>வழிசெலுத்தல், சுற்றுச்சூழல் சார்ந்த சேவைகள், குறிப்பிட்ட நிபந்தனைகளின் கீழ் எரிபொருள் நிரப்புதல், காப்பீடு, பாதுகாப்பு மற்றும் நாங்கள் வழங்கும் பிற சேவைகளுக்குக் கட்டணம் வசூலிக்கப்படும் என்று அவர் மேலும் கூறினார். </p><p>கட்டணம் செலுத்தும் கட்டமைப்புகள் நெகிழ்வான நிதி விதிமுறைகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளன என்றும் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இந்தக் கட்டணங்கள் ரியால் அல்லது உலகின் எந்தப் பண மதிப்பிலும் செலுத்த முடியும் என்றே அரசு செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. </p><p>முன்னதாக, ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்பு மன்றத்தின் (SNSC) செயலாளர் மொஹ்சென் ரெஸாயி, சனிக்கிழமை (உள்ளூர் நேரம்) அன்று, ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், அமெரிக்கா தனது வாக்குறுதிகளை நிறைவேற்றி, அதன் நடத்தையை மாற்றிக்கொள்ளும் வரை ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டே இருக்கும் என்றும் அது மீண்டும் திறக்கப்படாது என்றும் கூறினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d7072c53-4a78-4e95-9581-d03d5f907f0b/26-6a8b8215810cf.webp' /></p><p> </p><p>மேலும், ஆயுதப்பற்றாக்குறையால் அமெரிக்கா தற்போது இராணுவ நடவடிக்கைகளைக் கைவிட்டுவிட்டதாகவும், ஈரானுக்கு எதிராகப் பொருளாதார அழுத்தத்தை நம்பியிருப்பதாகவும் ரெஸாயி மேலும் குற்றம் சாட்டினார். </p><p>மட்டுமின்றி, பொருளாதாரத் தடையானது ஈரானைச் சரணடைய வைக்கும் என்று இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பிடம் உறுதியளித்ததாகவும் அவர் கூறியுள்ளார். </p><p>மறுபுறம், ஹார்முஸ் நீரிணையை புதிய அமெரிக்கப் பகுதியாகக் காட்டும் படம் ஒன்றை பகிர்ந்ததன் மூலம், அந்த முக்கியமான நீர்வழிப் பாதையின் மீது அமெரிக்காவுக்குக் கட்டுப்பாடு உள்ளது என்ற தனது கூற்றை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் வலியுறுத்தினார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-23T23:25:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் வீடுபுகுந்து நடத்தப்பட்ட சம்பவம்; பெண்ணுடன் கைதான இருவருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/incident-reported-after-break-in-at-jaffna-home-1787520079"></link>
            <id>https://jvpnews.com/article/incident-reported-after-break-in-at-jaffna-home-1787520079</id>
            <summary type="text">யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளில் வீடுகளுக்குள் புகுந்து கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் பிரதான சந்தேகநபர் உட்பட மூவர் சாவகச்சேரி ...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளில் வீடுகளுக்குள் புகுந்து <a href="https://jvpnews.com/article/two-arrested-with-a-woman-in-jaffna-1787446280" target="_blank">கொள்ளைச் சம்பவங்களில்</a> ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் பிரதான சந்தேகநபர் உட்பட மூவர் சாவகச்சேரி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>கைதான சந்தேகநபர்கள் சாவகச்சேரி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், அவர்களை எதிர்வரும் செப்டெம்பர் 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ea060171-f577-47a4-be1b-e95f6d7361a3/26-6a8b6451275c0.webp' /></p><h2>விளக்கமறியல்&nbsp;உத்தரவு</h2><p>கைதான சந்தேகநபர்களிடம் இருந்து சுமார் ஒரு கோடியே 75 இலட்சம் ரூபாய் பெறுமதியான 43 பவுண் தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p> 

கடந்த மாதம் 9ஆம் திகதி சாவகச்சேரி நகரில் உள்ள நகைக்கடை உரிமையாளரின் வீட்டில் இருந்து 17 பவுண் தங்க நகைகள் திருடப்பட்டமை தொடர்பில் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.</p><p></p><p> </p><p>

இதனைத் தொடர்ந்து சிசிடிவி காணொளிகளின் உதவியுடன் பொலிஸார் முன்னெடுத்த விசாரணைகளில், கல்லுண்டாய் குடியேற்றத் திட்டத்தைச் சேர்ந்த பிரதான சந்தேகநபர் ஒருவர் யாழ்ப்பாணம் நகரில் வைத்து கைது செய்யப்பட்டார். </p><p>

அவரிடம் முன்னெடுக்கப்பட்ட மேலதிக விசாரணைகளில், கோப்பாய் பகுதியைச் சேர்ந்த ஒருவர் மற்றும் ஊர்காவற்றுறை பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் தொடர்பாகவும் தகவல்கள் கிடைத்தன.</p><p> 

ஊர்காவற்றுறையில் உள்ள வங்கி ஒன்றில் 43 பவுண் தங்க நகைகள் அடகு வைக்கப்பட்டிருந்தமை விசாரணைகளின் போது கண்டறியப்பட்டதுடன், அவை பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.</p><p></p><p> </p><p>

இந்நிலையில் இந்த கொள்ளைச் சம்பவத்திற்கு சந்தேகநபருக்கு உதவியதாகக் கூறப்படும் ஊர்காவற்றுறை பகுதியைச் சேர்ந்த பெண்ணையும் பொலிஸார் கைது செய்தனர். </p><p>

கைதான சந்தேகநபர்கள்&nbsp; சாவகச்சேரி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், அவர்களை எதிர்வரும் செப்டெம்பர் 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p></p><p> 

சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-08-23T23:05:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரியா பவானி ஷங்கர் கியூட் போட்டோஷூட்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/priya-bhavani-shankar-cute-photoshoot-1787525387"></link>
            <id>https://cineulagam.com/article/priya-bhavani-shankar-cute-photoshoot-1787525387</id>
            <summary type="text">நடிகை பிரியா பவானி ஷங்கர் தற்போது டிமான்டி காலனி 3 உள்ளிட்ட பல படங்களை அவர் கைவசம் வைத்து இருக்கிறார்.

அவர் காதலர் உடன் வெளிநாட்டில் செட்டில் ஆகிவி...</summary>
            <content type="html"><![CDATA[<p>நடிகை பிரியா பவானி ஷங்கர் தற்போது டிமான்டி காலனி 3 உள்ளிட்ட பல படங்களை அவர் கைவசம் வைத்து இருக்கிறார்.
</p><p>
அவர் காதலர் உடன் வெளிநாட்டில் செட்டில் ஆகிவிட்டார் என அடிக்கடி கிசுகிசுக்கள் வந்தாலும் அவர் சென்னைக்கு வந்து படங்களில் நடித்து வருகிறார்.
</p><p>

தற்போது மஞ்சள் நிற உடையில் அழகாக இருக்கும் அவரது லேட்டஸ்ட் புகைப்படங்களை பாருங்க.</p>]]></content>
            <updated>2026-08-23T22:49:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரக்யா ஜெய்ஷ்வால் வேற லெவல் ஹாட் போட்டோஷூட்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/pragya-jaiswal-sizzling-glamour-photoshoot-1787524928"></link>
            <id>https://cineulagam.com/article/pragya-jaiswal-sizzling-glamour-photoshoot-1787524928</id>
            <summary type="text">நடிகை பிரக்யா ஜெய்ஷ்வால் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் போது தாராள கவர்ச்சி உடையில் வந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

இன்ஸ்டாவில் மட்டும் அவருக்கு...</summary>
            <content type="html"><![CDATA[<p>நடிகை பிரக்யா ஜெய்ஷ்வால் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் போது தாராள கவர்ச்சி உடையில் வந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
</p><p>
இன்ஸ்டாவில் மட்டும் அவருக்கு 2.8 மில்லியன் ரசிகர்கள் இருக்கிறார்கள். அவரது கவர்ச்சி போட்டோக்களுக்கு லட்சக்கணக்கில் லைக்குகள் குவிகிறது.
</p><p>
தற்போது பிரக்யா ஜெய்ஷ்வால் ஹாட் உடையில் போஸ் கொடுத்த லேட்டஸ்ட் ஸ்டில்களை பாருங்க.</p>]]></content>
            <updated>2026-08-23T22:45:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரான்சில் நீரில் மூழ்கி மரணமடைந்தவர்களின் எண்ணிக்கையில் திடீர் அதிகரிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/sharp-rise-in-drownings-1787525054"></link>
            <id>https://news.lankasri.com/article/sharp-rise-in-drownings-1787525054</id>
            <summary type="text">Sharp rise in drownings to heatwaves: வெப்ப அலைகளால் நீரில் மூழ்கி உயிரிழப்போர் எண்ணிக்கை பெருமளவு அதிகரிப்பு.
பிரான்சில் ஜூன் 19 முதல் 301 பேர்கள் ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>Sharp rise in drownings to heatwaves: வெப்ப அலைகளால் நீரில் மூழ்கி உயிரிழப்போர் எண்ணிக்கை பெருமளவு அதிகரிப்பு.</p><p>
பிரான்சில் ஜூன் 19 முதல் 301 பேர்கள் நீரில் மூழ்கி மரணமடைந்துள்ளதாக அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டை விட இறப்புகள் இவ்வளவு அதிகமாக இருப்பதற்கு, நீண்ட காலம் நீடித்த வெப்ப அலைகளே காரணம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/90a148ec-bcbc-4daa-84dc-17bd1522f35e/26-6a8b77c0d25b8.webp' /></p><p> </p><p>விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் மெரினா ஃபெராரி, பிரான்ஸ் இன்டர் வானொலியிடம், 2025-ஆம் ஆண்டை விட 14 சதவீதம் அதிகரித்துள்ள இந்த இறப்புகளின் எண்ணிக்கை ஒரு துயரமான இழப்பு என்று கூறினார். </p><p>பிரான்ஸ், ஸ்பெயின் மற்றும் இத்தாலி ஆகிய நாடுகள் வெப்ப அலைகளால் பாதிக்கப்பட்டுள்ளன. இதன் விளைவாக ஏற்பட்ட பெரும் காட்டுத்தீ, ஆயிரக்கணக்கான ஹெக்டேர் நிலத்தை எரித்து நாசமாக்கியுள்ளது. </p><p>மக்கள் தண்ணீருக்குள் செல்வதன் மூலம் ஆபத்தில் சிக்கிக்கொள்கிறார்கள் என்று அமைச்சர் ஃபெராரி கூறினார். மேலும், நீச்சலுக்கு அங்கீகரிக்கப்படாத அல்லது கண்காணிக்கப்படாத பகுதிகளில் பல உயிரிழப்பு விபத்துக்கள் நிகழ்ந்துள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார். </p><p>மேலும், நீச்சல் பகுதிகளை மேம்படுத்தவும், பாதுகாப்பை உறுதி செய்யவும் பிராந்திய அதிகாரிகளுடன் இணைந்து அரசாங்கம் செயல்பட்டு வருவதாக ஃபெராரி கூறியுள்ளார்.</p><p></p><p> </p><p>மட்டுமின்றி, ஆறுகள் மற்றும் கால்வாய்களில் ஆபத்துகளைக் கருத்தில் கொள்ளாமல் பலர் குளிர்ச்சியடைய முயல்வது குறித்து ஜூன் மாதத்தில் ஃபெராரி எச்சரித்தார். பருவநிலை மாற்றம் உலகெங்கிலும், குறிப்பாக ஐரோப்பாவில், வெப்பநிலையை அதிகரித்து வருகிறது. </p><p>கோப்பர்நிக்கஸ் காலநிலை சேவையின்படி, ஐரோப்பா மிக வேகமாக வெப்பமடையும் கண்டமாகும்; இது உலக சராசரியை விட இரண்டு மடங்கு வேகமாக வெப்பமடைகிறது. </p><p>ஜூன் மாதத்தில் நிலவிய வெப்ப அலையின்போது, ​​கரோன் (Garonne) ஆற்றின் நீரின் வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸைத் தாண்டியதால், தென்மேற்கு பிரான்சில் உள்ள ஒரு அணுமின் நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது. </p><p>பிரெஞ்சு சட்டங்களின்படி, கோல்ஃபெக் (Golfech) மின்நிலையத்தில் உள்ள அணு உலைகளைக் குளிர்விக்கப் பயன்படுத்தப்படும் நீர் அந்த வெப்பநிலையைத் தாண்டக்கூடாது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/97fd3d02-d6f3-4a11-9d62-d078a22fd408/26-6a8b77c1844f6.webp' /></p><p> </p><p>ஜூன் மாதத்தில் பாரிஸில் நிலவிய கடும் வெப்ப அலை காரணமாக, ஈபிள் கோபுரம் போன்ற சில நினைவுச் சின்னங்களும் முன்னதாகவே மூடப்பட முடிவு எடுக்கப்பட்டது. </p><p>வறண்ட வானிலை காரணமாக பிரான்ஸ் முழுவதும் காட்டுத்தீ பரவியது; இதில் நாட்டின் தென்மேற்குப் பகுதியில் உள்ள போர்டோ (Bordeaux) நகரத்தைச் சுற்றியுள்ள ஜிரோண்ட் (Gironde) பகுதி மிக மோசமாகப் பாதிக்கப்பட்டதுடன், ஜூலை மாத இறுதியில் 200,000-க்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறும் கட்டாயம் ஏற்பட்டது. </p><p>பொது சுகாதாரத் துறையினரின் தற்காலிகத் தரவுகளின்படி, மே மாத இறுதிக்கும் ஜூலை 22-க்கும் இடைப்பட்ட காலத்தில் பிரான்ஸில் 7,300 கூடுதல் மரணங்கள் பதிவாகியுள்ளன.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-23T22:41:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[நடிகை ஐஸ்வர்யா ராஜேஷா இப்படி.. வேற லெவல் கிளாமர் போட்டோஷூட்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/aishwarya-rajesh-glamour-photoshoot-1787524508"></link>
            <id>https://cineulagam.com/article/aishwarya-rajesh-glamour-photoshoot-1787524508</id>
            <summary type="text">நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ஹோம்லியாக நடித்து ரசிகர்களை கவர்ந்தவர். ஆனால் அவர் சமீப காலமாக கிளாமரான உடைகளில் புகைப்படங்கள் வெளியிட்டு வருகிறார். அது ரசிகர்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ஹோம்லியாக நடித்து ரசிகர்களை கவர்ந்தவர். ஆனால் அவர் சமீப காலமாக கிளாமரான உடைகளில் புகைப்படங்கள் வெளியிட்டு வருகிறார். அது ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தி வருகிறது.</p><p>ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது வேற லெவல் கிளாமர் உடையில் போட்டோஷூட் எடுத்திருக்கிறார்.</p><p>இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.</p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-23T22:40:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறந்த வழியில் பயணிக்கின்றது அநுர அரசு - போலியான வேடங்களுக்கு ஏமாறாதீர்கள்! பொன்சேகா எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/the-anura-government-is-on-the-right-track-1787524473"></link>
            <id>https://tamilwin.com/article/the-anura-government-is-on-the-right-track-1787524473</id>
            <summary type="text">நாட்டை வங்குரோத்து நிலைக்குத் தள்ளிய ஊழல்வாதிகள், தேசியம், பௌத்தம் மற்றும்
ஒற்றையாட்சிக்குப் பாதிப்பு என்று கூறிக்கொண்டு மீண்டும் அதிகாரத்தைக்
கைப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டை வங்குரோத்து நிலைக்குத் தள்ளிய ஊழல்வாதிகள், தேசியம், பௌத்தம் மற்றும்
ஒற்றையாட்சிக்குப் பாதிப்பு என்று கூறிக்கொண்டு மீண்டும் அதிகாரத்தைக்
கைப்பற்ற மக்கள் மத்தியில் செல்கின்றனர் என்றும், இவர்களின் போலியான
வேடங்களுக்கு மக்கள் மீண்டும் ஏமாந்துவிடக் கூடாது என்றும் முன்னாள்
அமைச்சரும் முன்னாள் இராணுவத் தளபதியுமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா
கேட்டுக்கொண்டார்.
</p><p>
இரத்தினபுரி பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில்
உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
</p><p>
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், </p><p>"2022 ஆம் ஆண்டு காலப்பகுதியில் நாட்டில் ஏற்பட்ட நெருக்கடி சிறந்ததே. அந்த
நெருக்கடியினால்தான் நாட்டை வங்குரோத்து நிலைக்குத் தள்ளியவர்கள் நாட்டை
விட்டுத் தப்பிச் சென்றார்கள், ஆட்சி மாற்றமும் ஏற்பட்டது. போராட்டத்தின்
பின்னர்தான் மக்கள் அரசியல் ரீதியில் சிந்தித்துச் சிறந்த அரசைத் தெரிவு
செய்தனர்.</p><h2>இது சிறந்த அரசாங்கம்&nbsp;</h2><p>
</p><p>
கடந்த காலங்களில் ஊழல்மிக்க அரசியல் கட்டமைப்பு காணப்பட்டது. அரசியல்வாதிகள்
பெருந்தொகையான அரச நிதியைக் கொள்ளையடித்துவிட்டு அதில் மிகவும் குறைந்த
நிதியையே மக்களுக்கு வழங்கினார்கள். தேசப்பற்றாளர்களைப் போன்று பேசினார்கள்.
</p><p>
புதிய அரசியல் கலாசாரம் தோற்றம் பெற்றாலும் மக்கள் இன்றும் அந்த ஊழல்மிக்க
பழைய அரசியல் கலாசாரத்தை நாடும் தன்மை காணப்படுகின்றது. அரசியல் அலைக்கு அமைய
வாக்களிக்கும் கலாசாரத்தில் இருந்து மக்கள் முதலில் மாற வேண்டும். </p><p>மக்கள்
அரசியல் அலைக்குப் பின்னால் செல்லும் போது ஊழல்வாதிகளும் படுகொலையாளிகளும்தான்
நாடாளுமன்றத்துக்குச் செல்வார்கள். கடந்த காலங்களில் அவ்வாறான நிலையே
காணப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b6c8a599-946b-411b-83d7-4b3382bb4211/26-6a8b76af5beb1.webp' /></p><p>
</p><p>
2024 ஆம் ஆண்டு நாட்டு மக்கள் தெரிவு செய்த சிறந்த அரசியல் கலாசாரத்தைப்
பாதுகாக்க வேண்டும். நாட்டில் தற்போது எதிர்க்கட்சித் தலைமைக்கு வெற்றிடம்
காணப்படுகின்றது. </p><p>கடந்த காலங்களில் சிதறிக்கிடந்த எதிர்க்கட்சியின்
உறுப்பினர்கள் சிறைச்சாலை செல்வதைத் தடுப்பதற்காகவே தற்போது
ஒன்றிணைந்துள்ளனர். இவர்கள் நாட்டுக்காக ஒன்றும் ஒன்றிணையவில்லை என்பதை மக்கள்
முதலில் விளங்கிக்கொள்ள வேண்டும்.
</p><p>
கடந்த கால ஆட்சியாளர்கள் கடன் பெற்று நாட்டை அபிவிருத்தி செய்வதாகக்
குறிப்பிட்டார்கள். ஆனால், அந்த அபிவிருத்திகளால் மக்களுக்கு ஏதும்
கிடைக்கவில்லை. கடன் பெற்றுத் தமது குடும்பத்தை வளப்படுத்தினார்கள்,
வெளிநாடுகளில் சொத்து சேர்த்தார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ea4e6c0c-7445-4e0d-8604-3f483841e00b/26-6a8b76aeaaf40.webp' /></p><p>அதனால், நாடு வங்குரோத்து நிலையடைந்தது.
இதன் தாக்கம் நடுத்தர மக்கள் மீது முழுமையாகச் சுமத்தப்பட்டது. அதன் தாக்கமே
இன்றளவும் தொடர்கின்றது.</p><p>
பொருளாதாரப் பாதிப்பில் இருந்து மீள்வதற்காகவே சர்வதேச நாணய நிதியத்தின்
ஒத்துழைப்பு பெறப்பட்டது. தற்போதைய அரசும் விரும்பியோ விரும்பாவிட்டோ நாணய
நிதியத்தின் செயற்றிட்டங்களை அமுல்படுத்த வேண்டிய நிலை காணப்படுகின்றது. அநுர அரசு சிறந்த முறையில்தான் செயற்படுகின்றது. </p><p>ஊழல், மோசடிகள் இல்லாமல்
சட்டத்தின் பிரகாரம் அரச அதிகாரிகள் செயற்படுகின்றார்கள். இதனால் ஊழல்வாதிகள்
அனைவரும் இன்று அரசுக்கு எதிராக ஒன்றிணைந்துள்ளனர். அரசுடன் நான் இணையப்
போவதில்லை; அரசியலில் ஒரு மாற்று சக்தியாகச் செயற்படுவேன்"&nbsp; என குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-23T22:39:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[டாக்சிக் பட விழாவுக்கு கிளாமராக வந்த ருக்மிணி வசநத்.. அழகிய ஸ்டில்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/rukmini-vasanth-glam-look-in-black-1787523834"></link>
            <id>https://cineulagam.com/article/rukmini-vasanth-glam-look-in-black-1787523834</id>
            <summary type="text">நடிகை ருக்மிணி வசந்த் தற்போது வேகமாக வளரும் ஹீரோயினாக இருக்கிறார். 

யாஷ் உடன் டாக்சிக் படத்தில் அவர் நடித்துள்ள நிலையில் தற்போது படத்தின் ப்ரீ ரிலீ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நடிகை ருக்மிணி வசந்த் தற்போது வேகமாக வளரும் ஹீரோயினாக இருக்கிறார்.</p><p> 

யாஷ் உடன் டாக்சிக் படத்தில் அவர் நடித்துள்ள நிலையில் தற்போது படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சிக்கு அவர் கிளாமராக வந்திருக்கிறார்.</p><p>

அந்த உடையில் அவர் வெளியிட்ட ஸ்டில்களை பாருங்க.</p>]]></content>
            <updated>2026-08-23T22:24:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[நைஜீரியாவில் துப்பாக்கி முனையில் பொதுமக்கள் 60 பேரை கடத்திய பயங்கரவாதிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/terrorists-kidnap-60-civilians-at-gunpoint-1787522554"></link>
            <id>https://canadamirror.com/article/terrorists-kidnap-60-civilians-at-gunpoint-1787522554</id>
            <summary type="text">நைஜீரியாவில் பல்வேறு பயங்கரவாத அமைப்புகள், ஆயுதக்குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த பயங்கரவாத அமைப்புகளை சேர்ந்தவர்கள் அவ்வப்போது கிராமத்தினர், பள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p>நைஜீரியாவில் பல்வேறு பயங்கரவாத அமைப்புகள், ஆயுதக்குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. </p><p>இந்த பயங்கரவாத அமைப்புகளை சேர்ந்தவர்கள் அவ்வப்போது கிராமத்தினர், பள்ளிக்குழந்தைகளை கடத்தி செல்லும் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/95c469e2-5a19-4ac6-90f9-8f18b5dfc5f2/26-6a8b6dfd1ab8c.webp' /></p><p>

</p><p>நைஜீரியாவின் நைஜர் மாகாணம் டிகாரா மாவட்டம் கெபன்யா கிராமத்திற்குள் நேற்று முன் தினம் மதியம் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் புகுந்த பயங்கரவாதிகள் கிராமத்தினர் 60 பேரை துப்பாக்கி முனையில் கடத்தி சென்றனர்.
</p><p>
இதில் பெரும்பாலானோர் கிராமத்தில் உள்ள இஸ்லாமிய மத வழிபாட்டு தலத்தில் வழிபாடு செய்துகொண்டிருந்தவர்கள் ஆவார்.</p><p>

இந்த சம்பவம் குறித்து அறிந்த பாதுகாப்புப்படையினர் விரைந்து சென்று தீவிர தேடுதல் பணியில் ஈடுபடு வருகின்றனர். </p><p>கிராமத்தினரை கடத்தி சென்ற பயங்கரவாதிகள் யார்? என்பது குறித்தும் மீட்பு, தேடுதல் வேட்டையிலும் பாதுகாப்புப்படையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-08-23T22:02:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுற்றிவளைப்பில் சிக்கிய 1,000 கிலோவுக்கும் அதிகமான கஞ்சா ; இருவர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/over-1-000kg-of-cannabis-seized-in-raid-1787521582"></link>
            <id>https://jvpnews.com/article/over-1-000kg-of-cannabis-seized-in-raid-1787521582</id>
            <summary type="text">ஹம்பகமுவ பகுதியில் வலான மத்திய ஊழல் தடுப்புப் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட இரு வேறு சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போது பெருந்தொகையான கஞ்சா போதைப்பொருள...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">ஹம்பகமுவ பகுதியில் வலான மத்திய ஊழல் தடுப்புப் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட இரு வேறு சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போது பெருந்தொகையான கஞ்சா போதைப்பொருளுடன் சந்தேகநபரும், கஞ்சா பயிர்ச்செய்கையில் ஈடுபட்ட மற்றோரு சந்தேகநபரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
</p><p style="text-align: justify; ">
வலான மத்திய ஊழல் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய, சனிக்கிழமை (22) ஹம்பகமுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொமகல பகுதியில் இச்சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ca8b81a2-6bb2-42df-b83e-9bf81f1a5011/26-6a8b6a3057828.webp' /></p><h2 style="text-align: justify; ">மேலதிக விசாரணை</h2><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">இதன்போது, 1,044 கிலோகிராம் 180 கிராம் கஞ்சாவுடன் ஒரு சந்தேகநபரும், 54,096 கஞ்சாச் செடிகளுடன் மற்றுமொரு சந்தேகநபரும் கைது செய்யப்பட்டு ஹம்பகமுவ பொலிஸில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
</p><p style="text-align: justify; ">
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் எதம்பலாவ பகுதியைச் சேர்ந்த 30 மற்றும் 38 வயதுடையவர்கள் எனத் தெரியவந்துள்ளது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">இச்சம்பவம் தொடர்பில் ஹம்பேகமுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-23T22:00:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹோர்முஸ் நீரிணையில் விதிகளை மீறும் கப்பல்கள்! ஈரான் விடுத்துள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/iran-warns-ships-violating-rules-in-hormuz-1787519818"></link>
            <id>https://ibctamil.com/article/iran-warns-ships-violating-rules-in-hormuz-1787519818</id>
            <summary type="text">ஹோர்முஸ் நீரிணையை கடப்பதற்கான விதிமுறைகளை மீறும் கப்பல்கள் எதிர்காலத்தில் பயணக் கட்டுப்பாடுகளை எதிர்கொள்ள நேரிடும் என ஈரான் எச்சரித்துள்ளது.

ஈரானின...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹோர்முஸ் நீரிணையை கடப்பதற்கான விதிமுறைகளை மீறும் கப்பல்கள் எதிர்காலத்தில் பயணக் கட்டுப்பாடுகளை எதிர்கொள்ள நேரிடும் என ஈரான் எச்சரித்துள்ளது.</p><p>

ஈரானின் பெர்சியன் வளைகுடா நீரிணை அதிகாரசபை இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.
</p><p>
இதன்படி, ஈரான் விதித்துள்ள வழிமுறை கட்டுப்பாடுகளை மீறும் கப்பல்களுக்கு அபராதம் விதிக்கப்படலாம் அல்லது அவை பறிமுதல் மற்றும் சிறைபிடிக்கப்படலாம் என எக்ஸ் தளத்தில் PGSA வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p></p><h2>விதிமீறல் பட்டியல்</h2><p> </p><p>

மேலும், இத்தகைய தடைசெய்யப்பட்ட கப்பல்களுக்கு ஒத்துழைப்பு வழங்கும் ஏனைய கப்பல்களும் விதிமீறல் பட்டியலில் சேர்க்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4cfaef34-62ce-4c8e-babf-f6f3762f5460/26-6a8b65d9ed9ec.webp' /></p><p> </p><p> 

கப்பல் நிறுவனங்கள் மற்றும் சரக்கு உரிமையாளர்கள் தங்களது பெயர்களை இந்தப் பட்டியலில் இருந்து நீக்க வேண்டுமாயின் உரிய ஆவணங்களுடன் கோரிக்கை விடுக்க வேண்டும் என்றும், சிரமங்களைத் தவிர்க்க தமது இணையதளத்தில் உள்ள பட்டியலைச் சரிபார்த்து இதுபோன்ற கப்பல்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.&nbsp; &nbsp; &nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-23T22:00:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[போலியான SLS முத்திரை ; 8,500 குடிநீர்ப் போத்தல்கள் பறிமுதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/fake-sls-mark-8-500-water-bottles-seized-1787519116"></link>
            <id>https://jvpnews.com/article/fake-sls-mark-8-500-water-bottles-seized-1787519116</id>
            <summary type="text">அவிசாவளையில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது, நுகர்வோர் விவகார அதிகார சபையினால் (CAA) போலியான SLS தரச் சான்றிதழ் முத்திரையைக் கொண்ட சுமார் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அவிசாவளையில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது, நுகர்வோர் விவகார அதிகார சபையினால் (CAA) போலியான SLS தரச் சான்றிதழ் முத்திரையைக் கொண்ட சுமார் 8,500 குடிநீர் போத்தல்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.</p><p>



ருவன்வெல்ல, அமிதிரிகல பகுதியில் அமைந்துள்ள உற்பத்தி நிலையத்தில் இந்தப் போத்தல்கள் தயாரிக்கப்பட்டு, அவிசாவளையில் உள்ள களஞ்சியசாலையொன்றில் சேமித்து வைக்கப்பட்டிருந்ததாக ஆரம்பக் கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d0aacf8c-efbd-492b-a2d4-43f4c01bb662/26-6a8b608e49d00.webp' /></p><h2>ஆரம்பக் கட்ட விசாரணை</h2><p>
</p><p>


அத்துடன், பல்வேறு அளவிலான குடிநீர்ப் போத்தல்களில் போலியான முறையில் SLS தரச் சான்றிதழ் முத்திரையும், 894 என்ற சான்றிதழ் இலக்கமும் இடப்பட்டிருந்ததை அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.</p><p>இந்தத் குடிநீர்த் தொகுதி இன்னும் சந்தைக்கு விநியோகிக்கப்படவில்லை. எனினும் விநியோகத்திற்காகத் தயார்ப்படுத்தப்பட்டிருந்ததாகவும் மேலதிக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p></p><p>



சுற்றிவளைப்பின்போது, சுமார் 8,500 போத்தல்களையும் சீல் வைத்து அதிகாரிகள் தம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுள்ளனர்.
</p><p>


மேலதிக விசாரணைகள் நிறைவடைந்த பின்னர், இதற்குப் பொறுப்பானவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-23T21:30:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[சாகரிகா தொடருந்து மோதி முச்சக்கரவண்டி சாரதி மரணம்! மக்கள் போராட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sagarika-train-accident-1787520522"></link>
            <id>https://tamilwin.com/article/sagarika-train-accident-1787520522</id>
            <summary type="text">கடற்கரை வீதி தொடருந்து பாதையின் அலுத்கம, விகாரை ஒன்றுக்கு அருகில் உள்ள தொடருந்து கடவையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் ஒருவர்
...</summary>
            <content type="html"><![CDATA[<p>கடற்கரை வீதி தொடருந்து பாதையின் அலுத்கம, விகாரை ஒன்றுக்கு அருகில் உள்ள தொடருந்து கடவையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் ஒருவர்
உயிரிழந்துள்ளார்.</p><p> அத்துடன் ஒருவர் பலத்த காயமடைந்துள்ளார்.
</p><p>
மருதானை தொடருந்து நிலையத்திலிருந்து புறப்பட்ட 'சாகரிகா' தொடருந்துடன்,&nbsp; முச்சக்கரவண்டி ஒன்று
மோதுண்டதிலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளது.</p><h2>பாதுகாப்பு கடவை</h2><p>

விபத்தில் முச்சக்கரவண்டி சாரதி உயிரிழந்துள்ளதுடன், காயமடைந்த மற்றைய நபர்
சிகிச்சைக்காக நாகொட வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
</p><p>
தொடருந்து கடவையில் சமிக்ஞைகள் மற்றும் எச்சரிக்கை ஒலிகள் மட்டுமே உள்ளன என்றும்,
பாதுகாப்புக் கடவை இல்லாத காரணத்தினாலேயே தொடர்ச்சியாக இவ்வாறான விபத்துகள்
இடம்பெறுகின்றன என்றும், அதிகாரிகள் அதற்கு எவ்வித தீர்வும் வழங்கவில்லை
என்றும் குற்றம் சாட்டிப் பிரதேச மக்கள் தொடருந்து பாதையை மறித்து நேற்றுப்
போராட்டத்தில் ஈடுபட்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b3300db9-d749-4cfd-aa87-7920f71f329d/26-6a8b660c385fd.webp' /></p><p>
</p><p>
இந்த எதிர்ப்பு நடவடிக்கை காரணமாகக் கடற்கரை வீதி தொடருந்து பாதையின்
போக்குவரத்தில் பாரிய இடையூறு ஏற்பட்டது.</p><p> பின்னர் பொலிஸார் தலையிட்டு, தொடருந்து திணைக்கள அதிகாரிகளுடன் தொடர்புகொண்டு தேவையான தீர்வுகளை வழங்குவதாக அளித்த
வாக்குறுதியின் பேரில் பிரதேச மக்கள் போராட்டத்தைக் கைவிட்டனர்.
</p><p>
அதன்பின்னர் அந்தப் பாதையில் தொடருந்து போக்குவரத்து வழமைக்குத் திரும்பியது.&nbsp;</p><p> </p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-23T21:28:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[உக்ரைன் மொத்தமாக துண்டாடப்படும்: கோரிக்கையை நிராகரித்த ஜெலென்ஸ்கி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/zelensky-rejects-elections-1787519892"></link>
            <id>https://news.lankasri.com/article/zelensky-rejects-elections-1787519892</id>
            <summary type="text">Zelensky Rejects Wartime Elections: உக்ரைன் துண்டாடப்படும் அபாயம், போர்க்காலத் தேர்தல்களை நிராகரித்த ஜெலென்ஸ்கி.
ரஷ்யாவின் படையெடுப்பை உக்ரைன் எதிர்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>Zelensky Rejects Wartime Elections: உக்ரைன் துண்டாடப்படும் அபாயம், போர்க்காலத் தேர்தல்களை நிராகரித்த ஜெலென்ஸ்கி.
</p><p>ரஷ்யாவின் படையெடுப்பை உக்ரைன் எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கும் வேளையில், தேர்தலை நடத்துவது மிகவும் ஆபத்தானது என்று எழுந்துள்ள கோரிக்கைகளுக்கு ஜனாதிபதி ஜெலென்ஸ்கி பதிலளித்துள்ளார்.</p><h2>ஒரு சுனாமியாக</h2><p>
</p><p>தேர்தலை முன்னெடுக்க வேண்டும் என்று அவரது முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் விடுத்த அழைப்பைத் தொடர்ந்தே ஜெலென்ஸ்கி பதிலளித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/079af538-bcd7-4113-ad98-7ae834e90f59/26-6a8b6396cfb7c.webp' /></p><p> இதுபோன்ற ஒரு போரின் சூழலில், தேர்தலை நடத்துவது மிகப்பெரிய ஆபத்து என்று நான் கருதுகிறேன். தற்போதைய நிலையில் தேர்தல் என்பது உக்ரைனைப் பிளவுபடுத்தக்கூடிய ஒரு சுனாமியாக அமையும் என்று ஜெலென்ஸ்கி கூறியுள்ளார். </p><p>ரஷ்யப் படைகளை எதிர்த்துப் போராடுவதில் நாடு கவனம் செலுத்தி வருவதால், ராணுவச் சட்டத்தின் கீழ் உக்ரைன் தேர்தல்களை நிறுத்தி வைத்துள்ளது; ஜெலென்ஸ்கியின் இந்த நடவடிக்கைக்கு அந்நாட்டு மக்களிடையே பரவலான ஆதரவு தொடர்ந்து உள்ளது. </p><p>நாட்டை அழிக்க நாம் விரும்பினால், போர்க்காலமான இச்சூழ்நிலையில் தேர்தல்களை நோக்கி நகரலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் மைக்கைலோ ஃபெடோரோவை ஜெலென்ஸ்கி பணிநீக்கம் செய்ததைத் தொடர்ந்து, ஆயிரக்கணக்கானோர் வீதிகளில் இறங்கிப் போராடும் சூழல் ஏற்பட்டது.</p><p></p><p> </p><p>பதவியிலிருந்து நீக்கப்பட்ட ஃபெடோரோவ் இந்த வாரம், தேர்தலை நடத்துவதற்கான வழியைக் கண்டறியுமாறு திடீரென அழைப்பு விடுத்தார் - ஆனால், அதற்கான செயல் திட்டத்தை அவர் முன்வைக்காததால், அவருடைய ஆதரவாளர்களில் சிலர்கூட அவரின் கோரிக்கையை ஆதரிக்க மறுத்தனர். </p><p>மட்டுமின்றி, ராணுவத்தினர், லட்சக்கணக்கான உக்ரேனிய அகதிகள் மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் வசிப்பவர்கள் எவ்வாறு வாக்களிப்பார்கள் என்பது உள்ளிட்ட பல்வேறு தடைகளையும், ரஷ்யாவிடமிருந்து வரும் தவறான தகவல் பரப்பும் அச்சுறுத்தல்களையும் நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். </p><p>மேலும், கீவ் சமூகவியல் நிறுவனத்தின் கருத்துக்கணிப்பு ஒன்றின்படி, போர் முடிவுக்கு வருவதற்கு முன்பே தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என்று 15 சதவீத உக்ரேனியர்கள் மட்டுமே விரும்புகின்றனர்.</p><h2>மரியாதையற்ற</h2><p> </p><p>இந்த நிலையில், செய்தியாளர் சந்திப்பின்போது ஜெலென்ஸ்கி தனது முன்னாள் அமைச்சரை நோக்கிப் பலமுறை கிண்டலான கருத்துகளைத் தெரிவித்தார்.</p><p> முன்னாள் அமைச்சர் சீர்திருத்தங்களை முன்னெடுக்க முயன்றார்; ஆனால், ராணுவத் தலைமை மற்றும் அவர்களின் பாரம்பரியமான பிடிவாதமான அணுகுமுறை ஆகியவற்றுடன் அவர் மோதலில் ஈடுபட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d2d63620-6405-4d41-9203-89433344af69/26-6a8b639791c53.webp' /></p><p> </p><p>தொடக்கத்தில் பொதுமக்கள் அவருக்கு ஆதரவளித்ததுடன், தலைமைத் தளபதி ஒலெக்சாண்டர் சிர்ஸ்கியைப் பதவியிலிருந்து நீக்குமாறும் வலியுறுத்தினர்.</p><p> மக்கள் போராட்டம் நடத்துவதற்கு உரிமை உண்டு என்று கூறிய ஜெலென்ஸ்கி, அதேவேளையில் ராணுவத்தினர் மீது மரியாதையற்ற மனப்பான்மையைக் கொண்டிருக்க வேண்டாம் என்றும் எச்சரித்தார். </p><p>இதனிடையே, தன்னை பலவீனப்படுத்திய ஒரு அரசியல் நெருக்கடிக்குப் பிறகு, பிளவுகளுக்கு எதிரான ஒரு அரணாகத் தன்னை முன்னிறுத்திக் கொள்ள ஜெலென்ஸ்கியால் முடிந்தது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-23T21:15:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவின் 250ஆவது ஆண்டு நிறைவு: வொஷிங்டன் வீதிகளில் முதன்முறையாக பிரம்மாண்டமான கார் பந்தயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/freedom-250-grand-prix-us-1787511383"></link>
            <id>https://tamilwin.com/article/freedom-250-grand-prix-us-1787511383</id>
            <summary type="text">அமெரிக்காவின் 250ஆவது ஆண்டு நிறைவு விழா கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக,
அந்நாட்டின் தலைநகரான வொஷிங்டன் வீதிகளில் முதன்முறையாக பிரம்மாண்டமான அதிவேக
கா...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவின் 250ஆவது ஆண்டு நிறைவு விழா கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக,
அந்நாட்டின் தலைநகரான வொஷிங்டன் வீதிகளில் முதன்முறையாக பிரம்மாண்டமான அதிவேக
கார் பந்தயம் ஒன்றை ஜனாதிபதி டொனால்ட் டரம்ப் ஏற்பாடு செய்துள்ளார்.</p><p>

அமெரிக்காவின் புகழ்பெற்ற முக்கிய நினைவிடங்கள் மற்றும் வீதிகளை உள்ளடக்கி
நடத்தப்படும் இந்த 'Freedom 250 Grand Prix' கார் பந்தயத்தை சுமார் இரண்டு
இலட்சம் பார்வையாளர்கள் வரை நேரில் பார்வையிடுவார்கள் என
எதிர்பார்க்கப்படுகின்றது.</p><p>

வொஷிங்டனின் புகழ்பெற்ற 'பென்சில்வேனியா' வீதியில் கார்கள் மணிக்கு 185 மைல்
வேகத்தில் செல்லும் வகையில் போட்டிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.</p><h2>போட்டி ஆரம்பம்&nbsp;</h2><p>
</p><p>
இப்போட்டியை முன்னிட்டு இராணுவ விமானங்களின் அணிவகுப்பும் இடம்பெறவுள்ளதால்,
அங்குள்ள 'ரொனால்ட் ரீகன்' சர்வதேச விமான நிலையத்தின் வான்வழிப் போக்குவரத்து
மூன்று மணித்தியாலங்களுக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d8558e92-190c-4077-b74e-7b35a7495c56/26-6a8b60d092f6c.webp' /></p><p>
</p><p>
இலவசமாக பார்வையிட அனுமதிக்கப்பட்டுள்ள இப்போட்டியின் ஆரம்ப நிகழ்வில்
ஜனாதிபதி ட்ரம்ப் கலந்துகொண்டு போட்டியை முறைப்படி கொடியசைத்து ஆரம்பித்து
வைக்கவுள்ளார்.
</p><p>
சமீபத்திய கருத்துக்கணிப்புகளில் டிரம்பின் ஆதரவு நிலை குறைந்துள்ள
நிலையிலும், ஈரான் போர் சூழலுக்கு மத்தியிலும், தனது இரண்டாவது ஆட்சிக்காலத்தை
பிரம்மாண்டமாக வெளிப்படுத்தும் நோக்கில் அவர் தொடர்ச்சியாக இவ்வாறான
விளையாட்டு நிகழ்வுகளை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-23T21:06:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[பூஜை அறையில் நண்பனின் தலை ; பிரிந்த மனைவியுடன் சேர கணவன் செய்த கொடூரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/husband-s-cruel-act-to-reunite-with-estranged-wife-1787507361"></link>
            <id>https://jvpnews.com/article/husband-s-cruel-act-to-reunite-with-estranged-wife-1787507361</id>
            <summary type="text">பிரிந்து சென்ற தன் மனைவியுடன் சேர்வதற்காக கணவன் அவரின் நண்பரை கொலை செய்து நரபலி கொடுத்த சம்பவம் ஒடிசாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

ஒடிசா ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">பிரிந்து சென்ற தன் மனைவியுடன் சேர்வதற்காக கணவன் அவரின் நண்பரை கொலை செய்து நரபலி கொடுத்த சம்பவம் ஒடிசாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

</p><p style="text-align: justify;">ஒடிசா மாநிலம் பாலங்கீர் மாவட்டம் தேபதமுண்டா என்கிற கிராமத்தில் வசித்து வந்தவர் சந்தோஷ் கார்செல்(45). சில நாட்கள்&nbsp; முதல் இவரை காணவில்லை.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f44921db-97d1-42ce-bf03-9fec9dbf89ff/26-6a8b32a2a507a.webp' /></p><h2 style="text-align: justify; ">தீவிர விசாரணை</h2><p> </p><p style="text-align: justify; ">இந்நிலையில் அவரின் உடல் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் நேற்று ஒரு குளத்தில் கண்டெடுக்கப்பட்டது. இது தொடர்பாக பொலிஸ் விசாரணை செய்தனர்.</p><p style="text-align: justify;">

விசாரணையில் கடைசியாக சந்தோஷ் தனது நண்பருடன் சென்றது விசாரணையில் தெரியவந்தது.</p><p style="text-align: justify;"> எனவே நண்பரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் சந்தோஷை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.</p><p style="text-align: justify; ">&nbsp;தலை எங்கே என்று கேட்டபோது தனது வீட்டின் பூஜை அறையில் இருப்பதாக அவர் கூறினார். அதன்பின் அவரிடம் தீவிர விசாரணை நடத்தபோதுதான் உண்மை தெரியவந்தது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
3வருடங்களுக்கு முன்பு தனது மனைவி பிரிந்து சென்று விட்டார். அவருடன் மீண்டும் சேரவேண்டுமென்றால் நரபலி கொடுக்க வேண்டும் என ஒரு சாமியார் கூறினார்.</p><p style="text-align: justify;"> எனவேதான் எனது நண்பன் சந்தோஷை கொலை செய்து அவனுடைய தலையை பூஜை அறையில் வைத்திருக்கிறேன்.. உடலை குளத்தில் வீசி விட்டேன்’ என வாக்குமூலம் கொடுத்தார். </p><p style="text-align: justify;">அவரின் வீட்டில் இருந்த பூஜை அறையில் புதைக்கப்பட்டிருந்த சந்தோஷின் தலையை பொலிசார் தோண்டி எடுத்தனர்.&nbsp;</p><p style="text-align: justify;"></p>]]></content>
            <updated>2026-08-23T21:06:14+00:00</updated>
        </entry>
    </feed>
