<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-08-20T03:33:53+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Kowshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கல்முனை ஆதார வைத்தியசாலை தாதியர்களின் சீருடைச் சர்ச்சை விவகாரம் : அவசர சந்திப்பை நடத்திய தமிழ் எம்.பிக்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/kalmunai-hospital-nurses-uniform-dispute-resolved-1787193825"></link>
            <id>https://tamilwin.com/article/kalmunai-hospital-nurses-uniform-dispute-resolved-1787193825</id>
            <summary type="text">சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவுடன் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவசர சந்திப்பொன்றை நடத்தியுள்ளனர். 
இந்த சந்திப்பானது நேற்றைய தினம்(19.08.2026) இ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவுடன் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவசர சந்திப்பொன்றை நடத்தியுள்ளனர். </p><p>
இந்த சந்திப்பானது நேற்றைய தினம்(19.08.2026) இடம்பெற்றுள்ளது.</p><h2>சுகாதார அமைச்சருடனான சந்திப்பு</h2><p>இதன்போது இலங்கை தமிழரசுக் கட்சியின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் க.கோடீஸ்வரன், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான வைத்தியர் இ.சிறிநாத் மற்றும் ஞா.சிறிநேசன் ஆகியோரும் கலந்துகொண்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3b5e2375-fd89-4e58-a616-604f97baa20f/26-6a866c6a095e4.webp' /></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-20T03:24:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நடைபயணமாக அழைத்து வரும் ஷிரான் பாசிக்கின் உயிருக்கு ஆபத்து! நீதிமன்றம் பொலிஸாருக்கு பிறப்பித்த உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/shiran-basik-ccid-sri-lanka-court-1787184715"></link>
            <id>https://tamilwin.com/article/shiran-basik-ccid-sri-lanka-court-1787184715</id>
            <summary type="text">போதைப்பொருள் கடத்தலில் கோட் பாதர் என போற்றப்பட்ட ஷிரான் பாசிக் டுபாயில் இருந்து அனுப்பப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்டு 90 நாள் தடுப்பு காவலில் வைக்கப...</summary>
            <content type="html"><![CDATA[<p>போதைப்பொருள் கடத்தலில் கோட் பாதர் என போற்றப்பட்ட ஷிரான் பாசிக் டுபாயில் இருந்து அனுப்பப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்டு 90 நாள் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
</p><p>அதன்படி அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தற்போது அவர் மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார். மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவு நாரஹேன்பிட்டி பொலிஸ் நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ளது. </p><p>அந்த வகையில் ஷிரான் பாசிக் நாரஹேன்பிட்டி பொலிஸ் நிலையத்திலேயே தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
</p><p></p><h2>நீதிபதி பிறப்பித்த உத்தரவு</h2><p>ஷிரான் பாசிக்கின் சட்டத்தரணி வசந்த பிடிகல நீதிமன்றில் இவ்வாறு கூறியுள்ளார், தனது கட்சிக்காரர் தினமும் காலையில் நாரஹேன்பிட்டி பொலிஸ் நிலையத்திலிருந்து மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு பொலிஸார் நடைபயணமாக அழைத்துச் செல்வதாகத் தெரிவித்தார். </p><p>இந்நிலைமை மிகவும் ஆபத்தானது. இதனால் அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடும் என்பதால் உடனடியாக அவருக்கு பாதுகாப்பு வழங்குமாறு கோரிக்கை விடுத்தார்.
</p><p>இதற்கமைய, கொழும்பு மேலதிக நீதவான் அசங்க போதரமக உடனடியாக பொலிஸாருக்கு உத்தரவிட்டு, ஷிரான் பாசிக்கின் பாதுகாப்பை பலப்படுத்துமாறு பணித்தார். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/13d16f9f-a035-460b-8cc6-e62d279fe5e5/26-6a86464dd6692.webp' /></p><p>ஏனெனில் அவரது பாதுகாப்புக்கான முழுப் பொறுப்பும் பொலிஸாரையே சாரும். இதனால் நாரஹேன்பிட்டி பொலிஸாருக்கும் மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளருக்கும் இந்த நபரின் பாதுகாப்பை அதிகரிக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
</p><p>ஏனெனில்,ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் கொல்லப்பட்டால் அது மிகவும் தீவிரமான பிரச்சினையாகிவிடும். இவர் ஈடுபட்டுள்ள கடத்தல் சம்பவங்களுக்குப் பின்னால் பல தரப்பினர் தொடர்பில் உள்ளனர்.</p><p>இவருக்குப் பின்னால் அல்ல, இவர்களுக்கு மேலிருந்து இயங்குபவர்கள் 'வெள்ளைக் கொலர்' குற்றவாளிகள் என்றே சமூகத்தில் பார்க்கப்படுகிறார்கள். </p><p>அறக்கட்டளைகளை நடத்தும் பல்வேறு அரசசார்பற்ற நிறுவனங்களில் உள்ள, கருப்புப் பணத்தை வெள்ளையாக்கும், அரசியலுடன் தொடர்புடைய, கலைத் துறையுடன் தொடர்புடைய, ஊடகத் துறையுடன் தொடர்புடைய சமூகத்தில் நல்ல முகத்தைக் காட்டும் பலரே இத்தகைய கடத்தல்களில் கருப்புப் பணத்தை வெள்ளையாக்கி வருகின்றனர். </p><p>எனவே, அவர்களை அடையாளம் காண்பதற்கான வாய்ப்பு மிக விரைவில் அழிக்கப்படும் சூழல் உள்ளது.
</p><h2><span style="color: inherit; font-size: 1.75rem;">உயிருக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து</span></h2><p>மாகந்துரே மதுஷ் உதாரணத்தை எடுத்துக்கொண்டால், அவர் அரசியல்வாதிகள் உட்பட பலரின் பெயர்களை வெளிப்படுத்தத் தயாராக இருந்ததாகக் கூறப்பட்டது. </p><p>ஆனால் அந்தத் தகவல்களுக்கு என்ன நடந்தது என எவருக்கும் தெரியாது. 
இவ்வாறான ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களால் தனியாகச் செயற்பட முடியாது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aa9c2b9a-12df-45d8-b918-2cdb0c9fad16/26-6a8672286e22c.webp' /></p><p> </p><p>இவர்கள் இந்த நாட்டில் செயற்பட வேண்டுமாயின் பொலிஸாரின் பாதுகாப்புத் தேவைப்படுகிறது. பாதுகாப்புப் படைகளின் பாதுகாப்புத் தேவைப்படுகிறது. </p><p>அரசியல்வாதிகளின் பாதுகாப்பும் ஆசீர்வாதமும் தேவைப்படுகிறது.சில மதஸ்தானங்களின் பாதுகாப்பும் இவர்களுக்கு கிடைத்துள்ளது. </p><p>எனவே, மேல்மட்டத்தில் உள்ள இவர்கள் தம்மைப் பற்றிய தகவல்கள் வெளியாகிவிடும் என்ற பயத்தில் இவ்வாறான சந்தர்ப்பங்களில் இந்த நபர்களை அழித்துவிட உடனடியாகச் செயற்படுகிறார்கள்.
</p><p>தற்போது கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள பாசிக் தொடர்பிலும் இவ்வாறானதொரு ஆபத்தான நிலைமை காணப்படலாம். பொலிஸார் குறிப்பிடுவது போல் இவர் அனைவரையும் விட சக்திவாய்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஆவார்.</p><p>இந்த விடயத்தை கருத்தில் கொண்டே நீதவான் நாரஹேன்பிட்டி பொலிஸ் நிலையத்திற்கும் கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கும் இவரது பாதுகாப்பு தொடர்பில் மிகுந்த பொறுப்புடன் செயற்படுமாறு உத்தரவிட்டுள்ளார்.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-20T03:17:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிளிநொச்சியில் விடுதலைப் புலிகளின் பயிற்சி முகாம் : பொலிஸ் தரப்பு வெளியிட்ட தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/police-reject-of-l-t-t-e-camp-bomb-factory-pallai-1787194187"></link>
            <id>https://tamilwin.com/article/police-reject-of-l-t-t-e-camp-bomb-factory-pallai-1787194187</id>
            <summary type="text">கிளிநொச்சி - பளை பகுதியில் விடுதலைப் புலிகளின் பயிற்சி முகாமும், வெடிகுண்டு தயாரிக்கும் ஆலையும் இயங்கி வருவதாக சமூக ஊடகங்களில் பரவி வரும் கூற்றுக்கள் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிளிநொச்சி - பளை பகுதியில் விடுதலைப் புலிகளின் பயிற்சி முகாமும், வெடிகுண்டு தயாரிக்கும் ஆலையும் இயங்கி வருவதாக சமூக ஊடகங்களில் பரவி வரும் கூற்றுக்கள் பொய்யானவை மற்றும் ஆதாரமற்றவை என இலங்கை பொலிஸ் நிராகரித்துள்ளது.
</p><p>
 

பளை பகுதியில் வனப்பகுதியை அழித்து மூன்று மாடிக் கட்டிடம் ஒன்று கட்டப்பட்டு, அது விடுதலைப் புலிகளின் பயிற்சி முகாமாகவும், வெடிகுண்டுகள் தயாரிக்கும் மையமாகவும் பயன்படுத்தப்பட்டு வருவதாக ஒருவர் சமூக ஊடகங்களில் காணொளி ஒன்றில் கூறியதை அடுத்து இந்த விசாரணை தொடங்கப்பட்டது.</p><p>
</p><h2>போர் பயிற்சி மையமாக இயக்கப்பட்டதற்கு</h2><p>
 

காணொளியில் காட்டப்பட்ட இடம், கிளிநொச்சி பொலிஸ் பிரிவின் கீழ் வரும் அக்கராயன்குளம் பொலிஸ் பிரிவிற்குள், கண்ணகிபுரம் மேற்கு, முக்கம்பன் பகுதியில் உள்ளதாக அடையாளம் காணப்பட்டதாக பொலிஸாாார் தெரிவித்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b9f3689c-2708-4e00-96f0-98e789be61fa/26-6a866eab28499.webp' /></p><p>

 

அதனைத் தொடர்ந்து, கிளிநொச்சி மாவட்டத்தின் சிரேஷ்ட பொலிஸ் கண்காணிப்பாளராலும், பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவாலும் விசாரணைகள் தொடங்கப்பட்டன.
</p><p>
 

விசாரணையின் முடிவுகளின்படி, அந்த இடத்தில் வெடிபொருட்கள், சட்டவிரோதப் பொருட்கள் அல்லது குண்டுகள் தயாரிக்கப்பட்டதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று பொலிஸ் தெரிவித்துள்ளது.</p><p>

 

விடுதலைப் புலிகள் அல்லது வேறு ஏதேனும் பயங்கரவாத அல்லது தீவிரவாத அமைப்பை ஊக்குவிக்கும் செயல்பாடுகளுக்கோ, அல்லது அந்த இடம் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கான போர் பயிற்சி மையமாக இயக்கப்பட்டதற்கோ எந்த ஆதாரமும் அதிகாரிகளுக்குக் கிடைக்கவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.</p><h2>சரிபார்க்கப்படாத தகவல்&nbsp;</h2><p>

 

இருப்பினும், அந்த இடத்தில் சட்டவிரோதமாக காடுகளை அழித்தல் மற்றும் சொத்துக்களை சட்டவிரோதமாகக் கையகப்படுத்துதல் தொடர்பான தகவல்களை இந்த விசாரணை வெளிப்படுத்தியுள்ளது.</p><p> அந்த விவகாரங்கள் குறித்த மேலதிக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/21fe888f-8632-4cf6-ad34-cad25457232f/26-6a866eac2090e.webp' /></p><p>
 

இதற்கிடையில், இந்தக் குற்றச்சாட்டுகளை முன்வைத்துப் பரப்பியதாகக் கூறப்படும் நபர், ஆகஸ்ட் 18 அன்று பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.
</p><p>
 

பொரலஸ்கமுவ, பெல்லன்விலவைச் சேர்ந்த 46 வயதான சந்தேக நபர், சரிபார்க்கப்படாத தகவலை ஒரு காணொளி மற்றும் ஊடக சந்திப்பின் மூலம் பரப்பியதாகக் கூறப்படுவதாக பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.
</p><p>
 

அவர் நேற்று (19) கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு, செப்டம்பர் 2ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டார்.</p><p>

 

கிளிநொச்சி சிரேஷ்ட பொலிஸ் கண்காணிப்பாளர் மற்றும் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் மேலதிக விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p></p><p></p><p>

</p>]]></content>
            <updated>2026-08-20T03:12:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/veteran-actress-sowcar-janaki-admitted-in-hospital-1787195155"></link>
            <id>https://cineulagam.com/article/veteran-actress-sowcar-janaki-admitted-in-hospital-1787195155</id>
            <summary type="text">பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி அவர்கள் உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நடிகை சௌகார் ஜானகி 

...</summary>
            <content type="html"><![CDATA[<p>பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி அவர்கள் உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p><p></p><h2>

நடிகை சௌகார் ஜானகி</h2><p> 

1950-களில் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமான சௌகார் ஜானகி, தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் என பல்வேறு மொழிகளில் நடித்து முன்னணி நட்சத்திரமாக உயர்ந்தார். எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி கணேசன் என பல உச்ச நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்துள்ளார்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d0986e24-1d43-450e-ab51-538831efff9e/26-6a866f16b0642.webp' /></p><p>மேலும், அவர் 400-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. திரையுலகில் இவருடைய பங்களிப்பிற்காக கடந்த 2022-ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
</p><h2>
மருத்துவமனையில் அனுமதி
</h2><p>
94 வயதாகும் நடிகை <a href="https://www.youtube.com/watch?v=i8aqKqr9hNA&amp;t=35s" target="_blank">சௌகார் ஜானகி</a> சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். நேற்று இரவு உடல்நல குறைவு ஏற்பட்டுள்ளது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a0e981c6-07b5-4a39-8701-22294802798d/26-6a866f1608803.webp' /></p><p>இதையடுத்து, அவர் அங்குள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-20T03:06:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானுக்கு உதவும் நாட்டுகளுக்கு கடும் தண்டனை - ட்ரம்ப் எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/trump-threatens-country-who-helping-iran-1787193008"></link>
            <id>https://ibctamil.com/article/trump-threatens-country-who-helping-iran-1787193008</id>
            <summary type="text">ஈரானுக்கு உதவும் அல்லது அதனுடன் வர்த்தகம் செய்யும் எந்தவொரு நாட்டுக்கும் கடும் தண்டனை வழங்கப்படும் என&amp;nbsp;அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானுக்கு உதவும் அல்லது அதனுடன் வர்த்தகம் செய்யும் எந்தவொரு நாட்டுக்கும் கடும் தண்டனை வழங்கப்படும் என&nbsp;அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.</p><p>நவம்பர் மாதத் தேர்தல்கள் மிக வேகமாக நெருங்கி வரும் நிலையில், இந்தப் போர் தொடர்பில் ட்ரம்ப் உள்நாட்டிலும் அரசியல் ரீதியான விமர்சனங்களைச் சந்தித்து வருகிறார்.</p><p>குறித்த விடயத்தை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது ட்ரூத் சமூக ஊடக தளத்தில் தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>பாரிய பொருளாதார விளைவு</h2><p>ஈரானுக்கு எந்த வகையிலாவது உயிர்நாடியாகச் செயல்படுவதற்குத் தமது நிதி நிறுவனங்கள், வணிகங்கள், விமான நிலையங்கள் அல்லது அரசாங்க நிறுவனங்களை அனுமதிக்கும் எந்தவொரு நாடும் பாரிய பொருளாதார விளைவுகளைச் சந்திக்கும் என்பதையும் நான் அறிவிக்கிறேன்&nbsp;என்றும் குறிப்பிட்டுள்ளார்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a76c0271-e5b2-4d55-8781-12c5f080b2ba/26-6a866973ba3a5.webp' /></p><p>குறித்த நாடுகள் என்ன மாதிரியான தண்டனையை எதிர்கொள்ளும் என்பதை அவர் குறிப்பிடவில்லை, மேலும் ஈரான் தவிர வேறு எந்த நாடும் அவரால் பெயரிடப்படவில்லை. </p><p>

ஈரானின் மீது உலகம் இதுவரை கண்டிராத வகையில் பொருளாதாரத் தனிமைப்படுத்தலை அமெரிக்கா விதிக்கும் என திறைசேரி செயலாளர் ஸ்காட் பெசென்ட் தெரிவித்து சுமார் ஒரு வாரத்தின் பின்னர் ஜனாதிபதியின் இந்தக் கருத்துக்கள் வெளியாகியுள்ளன.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/FJQcrzobjUcEaJJsEVOWpF" target="_blank">WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p><p> </p>]]></content>
            <updated>2026-08-20T02:41:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறுவர்கள் தொடர்பில் பெற்றோருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/heat-warning-for-kids-1787193636"></link>
            <id>https://tamilwin.com/article/heat-warning-for-kids-1787193636</id>
            <summary type="text">நாட்டில் நிலவும் அதிக வெப்பமான வானிலை காரணமாக குழந்தைகளை சுற்றுலாப் பயணங்கள் மற்றும் யாத்திரைப் பயணங்களுக்கு அழைத்துச் செல்வதைத் தவிர்க்குமாறு பெற்றோர...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டில் நிலவும் அதிக வெப்பமான வானிலை காரணமாக குழந்தைகளை சுற்றுலாப் பயணங்கள் மற்றும் யாத்திரைப் பயணங்களுக்கு அழைத்துச் செல்வதைத் தவிர்க்குமாறு பெற்றோருக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
</p><p>பொரளை லேடி ரிட்ஜ்வே குழந்தைகள் மருத்துவமனையின் குழந்தை நல மருத்துவ நிபுணர் டொக்டர் தீபால் பெரேரா இந்த அறிவுறுத்தலை வழங்கியுள்ளார்.</p><h2>நோய் நிலைமைகள்</h2><p>
</p><p>அவ்வாறு அழைத்துச் செல்வதன் மூலம் குழந்தைகள் வெப்ப அதிர்ச்சி, மயக்கம் மற்றும் வலிப்பு போன்ற ஆபத்தான பாதிப்புகளுக்கு ஆளாகக்கூடும் என அவர் எச்சரித்துள்ளார். இந்நாட்களில் குழந்தைகள் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்கள் விரைவாக நீரிழப்புக்கு ஆளாகும் அபாயம் உள்ளது.</p><p> எனவே, பெற்றோர்கள் குழந்தைகளின் உடல் எடைக்கு ஏற்ப தேவையான அளவு நீரைக் குடிக்க வழங்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். பெரியவர்கள் ஒரு நாளைக்கு குறைந்தது 3 லீட்டர் நீராவது பருக வேண்டும் என தெரிவித்துள்ளார்.</p><p>சிறுவர்கள் வீட்டை விட்டு வெளியே செல்லும்போது குறைந்தது 2 தண்ணீர் போத்தல்களையாவது உடன் எடுத்துச் செல்ல வேண்டும். மேலும், சிறுவர்கள் நாளொன்றுக்கு குறைந்தபட்சம் அரை மணி நேரமாவது தண்ணீரில் இறங்கி குளிப்பது அவர்களின் உடலைக் குளிர்ச்சியாக வைத்திருக்க உதவும் என அறிவுறுத்தியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/09b35acf-883f-4961-a183-892fab60cc30/26-6a866925b042e.webp' /></p><p>செயற்கை சுவையூட்டிகள் மற்றும் அதிக சர்க்கரை நிறைந்த பானங்களை சிறுவர்களுக்கு வழங்குவதைத் தவிர்த்து, தோடம்பழம், எலுமிச்சை, இளநீர், கஞ்சி, சூப் மற்றும் தர்பூசணி சாறு போன்ற இயற்கை திரவ உணவுகளை வழங்க வேண்டும்.
</p><p>நீண்டகாலமாகப் போதுமான அளவு தண்ணீர் குடிக்காமல் இருப்பது சிறுநீரக நோய்கள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகளை கணிசமாக அதிகரிக்கும் என்று மருத்துவ ரீதியாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
</p><p>பாடசாலை விடுமுறைக் காலத்தில் சிறுவர்களை மொபைல் போன்களைப் பயன்படுத்தி நேரத்தைக் கழிக்க விடாமல், அவர்களைப் பல்வேறு உடற்பயிற்சிகள் மற்றும் விளையாட்டுச் செயல்பாடுகளில் ஈடுபடுத்துவது மிகவும் முக்கியம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-20T02:40:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடா மீதான வரி விதிப்பு அச்சுறுத்தலை இடைநிறுத்திய ட்ரம்ப்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/trump-pauses-canada-tariffs-threat-1787173073"></link>
            <id>https://news.lankasri.com/article/trump-pauses-canada-tariffs-threat-1787173073</id>
            <summary type="text">Canada has temporarily avoided 50% US tariff: கடுமையான 50 சதவீத அமெரிக்க இறக்குமதி வரியிலிருந்து கனடா தற்காலிகமாகத் தப்பியுள்ளது.
ட்ரம்ப் நிர்வாக அதி...</summary>
            <content type="html"><![CDATA[<p>Canada has temporarily avoided 50% US tariff: கடுமையான 50 சதவீத அமெரிக்க இறக்குமதி வரியிலிருந்து கனடா தற்காலிகமாகத் தப்பியுள்ளது.
</p><p>ட்ரம்ப் நிர்வாக அதிகாரிகளுடன் எட்டப்பட்ட ஒப்பந்தத்தின் ஊடாக, 20 பில்லியன் டொலர் மதிப்பிலான சரக்குகளைப் பாதிக்கக்கூடிய ஒரு கட்டண உயர்வு நடைமுறையில் இருந்து கனடா தப்பியுள்ளது.</p><h2>கணிசமான முன்னேற்றம்</h2><p>கனடாவும் அமெரிக்காவும், ஆவணங்கள் இறுதி செய்யப்படுவதற்கு உட்பட்டு, ஒரு ஒப்பந்தம் செய்துகொண்டதன் அடிப்படையில், மூன்று நாட்களுக்கு சுங்க வரிகளை நிறுத்தி வைத்திருப்பதாக டொனால்ட் ட்ரம்ப் செவ்வாய்க்கிழமை இரவு சமூக ஊடகங்களில் பதிவிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/30a3412f-5a64-4bc5-a3f2-112f75d52474/26-6a8618d33b199.webp' /></p><p> </p><p>ட்ரம்பின் அறிவிப்பிற்குப் பிறகு, கனடா பிரதமர் மார்க் கார்னி, வர்த்தக ஒப்பந்தத்தை நோக்கி கணிசமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அறிவிப்பு வந்துள்ளதாகவும், ஆனால் இன்னும் அதிக பணிகள் தேவைப்படுவதாகவும் கூறினார். </p><p>ட்ரம்பின் இந்த வரிகள், ஒயின் மற்றும் ஹொக்கி மட்டைகள் உள்ளிட்ட பல்வேறு கனடிய ஏற்றுமதிகளைப் பாதித்திருக்கும். இதனிடையே, அதே சமூக ஊடகப் பதிவில், சர்ச்சைக்குரிய கீஸ்டோன் எக்ஸ்எல் குழாய்வழித் திட்டம் மீண்டும் உயிர்ப்பிக்கப்படலாம் என்று ட்ரம்ப் கூறினார். </p><p>ஆனால், அது குறித்த மேலதிக விவரங்களை அவர் அளிக்கவில்லை அல்லது அது சுங்கவரி ஒப்பந்தத்துடன் தொடர்புடையதா என்பதையும் அவர் குறிப்பிடவில்லை. </p><p>கனடாவின் மேற்குப் பகுதி தார் மணல் படிவங்களிலிருந்து அமெரிக்க சுத்திகரிப்பு நிலையங்களுக்கு எண்ணெயைக் கொண்டு வருவதற்காக 2008-ல் முன்மொழியப்பட்ட கீஸ்டோன் எக்ஸ்எல் திட்டமானது,</p><p></p><p> 1,200-மைல் தொலைவுள்ள அத்திட்டத்தின் அமெரிக்கப் பகுதிக்குத் தேவையான ஒரு முக்கிய அனுமதியை ஜோ பைடன் நிர்வாகம் ரத்து செய்ததைத் தொடர்ந்து, அதன் உரிமையாளரான டிசி எனர்ஜி நிறுவனத்தால் 2021-ல் நிறுத்தப்பட்டது. </p><p>அமெரிக்க நில உரிமையாளர்கள், அமெரிக்கப் பூர்வகுடி மக்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் எதிர்ப்புகளுக்கு மத்தியில் ஜோ பைடன் நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது. இது அமெரிக்க-கனடா உறவுகளில் ஒரு பதட்டமான சூழலாக உருவெடுத்தது. </p><p>இரு நாடுகளுக்கும் இடையே கடந்த ஆண்டு நிலவிய சர்ச்சைகளுக்கு மத்தியில், செவ்வாய்க்கிழமை கடைசி நேரத்தில் இந்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது.</p><p> பதிலுக்குப் பதில் விதிக்கப்பட்ட வரிகள் மற்றும் கனடாவை அமெரிக்காவின் ஒரு மாகாணமாக மாற்றுவது குறித்து ட்ரம்ப் பயன்படுத்திய இணையவழித் தாக்குதல்கள் ஆகியவற்றால், இந்த நீண்டகாலக் கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளது.</p><h2>50 சதவீத வரி</h2><p> </p><p>பிப்ரவரி 2025-ல், எல்லை தாண்டிய சட்டவிரோத குடியேற்றம் மற்றும் போதைப்பொருள் கடத்தலைக் கட்டுப்படுத்துவதில் போதுமான முன்னேற்றம் இல்லை எனக் காரணம் காட்டி, ட்ரம்ப் நிர்வாகம் கனடா மீது 25 சதவீத வரியை விதித்தது. </p><p>இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, அமெரிக்காவின் நடவடிக்கைகளை தேவையற்றவை மற்றும் நியாயமற்றவை என்று கூறி, கனடா ஒரு எதிர் வரியை அறிவித்தது. </p><p>அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட கார்கள், மதுபானம் மற்றும் பால் பொருட்களுக்கு எதிரான பாகுபாட்டிற்கு கனடாவைப் பொறுப்பேற்கச் செய்வதே இதன் நோக்கம் என்று கூறி, ட்ரம்ப் நிர்வாகம் 50 சதவீத வரியை அறிவித்தபோது, ​​2026 ஜூலையில் பதற்றம் மேலும் அதிகரித்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/93d1299c-0463-4652-ba0a-4136caf810a9/26-6a8618d3df890.webp' /></p><p> </p><p>இதனிடையே, சமீபத்திய நாட்களில், இரு நாடுகளின் உயர்மட்ட அதிகாரிகளும் தீவிரமான மற்றும் நுட்பமான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருந்தனர் என்று பிரதமர் கார்னி திங்களன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார். </p><p>வரலாற்று ரீதியாக, கனடாவும் அமெரிக்காவும் வலுவான வர்த்தகப் பங்காளிகளாக இருந்து வருகின்றன. அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதியின் அலுவலகத் தரவுகளின் அடிப்படையில், 2024-ல் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் சுமார் 909 பில்லியன் டொலராக மதிப்பிடப்பட்டுள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-20T02:25:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையர்களுக்கு அமெரிக்க விசாவில் கெடுபிடி அதிகரிப்பு...! வெளியான அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/us-embassy-warns-about-visa-applications-1787190148"></link>
            <id>https://ibctamil.com/article/us-embassy-warns-about-visa-applications-1787190148</id>
            <summary type="text">மக்கள் சுற்றுலா விசாவிற்கு விண்ணப்பிப்பது குறித்து இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகம் முக்கிய அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.குழந்தைக்கு அமெரிக்கக் குடிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>மக்கள் சுற்றுலா விசாவிற்கு விண்ணப்பிப்பது குறித்து இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகம் முக்கிய அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.</p><p>குழந்தைக்கு அமெரிக்கக் குடியுரிமையைப் பெற்றுக்கொடுக்கும் முதன்மை நோக்கத்துடன், அமெரிக்காவில் குழந்தையைப் பிரசவிப்பதற்காகச் சுற்றுலா விசாவுக்கு விண்ணப்பித்தால், அந்த விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என தூதரகம் எச்சரித்துள்ளது.
</p><p>
அமெரிக்கத் தூதரகம் வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ அறிவிப்பில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p></p><h2>சுற்றுலா விசா விண்ணப்பங்கள்</h2><p>அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, ஒருவர் அமெரிக்காவுக்குப் பயணம் செய்வதன் பிரதான நோக்கம், அங்கு குழந்தையைப் பிரசவித்து அந்தக் குழந்தைக்கு அமெரிக்கக் குடியுரிமையைப் பெற்றுக்கொடுப்பதே என அமெரிக்கக் கொன்சியூலர் (Consular) அதிகாரிகள் கருதினால், விண்ணப்பதாரிகளின் சுற்றுலா விசா விண்ணப்பங்கள் உடனடியாக நிராகரிக்கப்படும்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ff47b590-1833-4afb-8b62-bade95fcec64/26-6a865eab3d672.webp' /></p><p>இவ்வாறான நோக்கங்களுக்காகச் சுற்றுலா விசாவைப் பயன்படுத்துவது அமெரிக்க சட்ட திட்டங்களின் கீழ் அனுமதிக்கப்பட்டதொன்றல்ல எனவும்&nbsp;தூதரகம் தெரிவித்துள்ளது.</p><p>இத்தகைய விசா விண்ணப்பங்களை அமெரிக்கக் கொன்சியூலர் அதிகாரிகள் நிராகரிப்பார்கள் எனவும் இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகம் தெளிவுபடுத்தியுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-20T02:21:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[வர்த்தகர்களுக்கு நுகர்வோர் விவகார அதிகாரசபை எச்சரிக்கை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/caa-warns-about-undocumented-goods-1787191767"></link>
            <id>https://tamilwin.com/article/caa-warns-about-undocumented-goods-1787191767</id>
            <summary type="text">விற்பனை செய்ய, சேமித்து வைக்க அல்லது விநியோகிக்க வைத்திருக்கும் பொருட்களின் உற்பத்தி மூலத்தை உறுதிப்படுத்தக்கூடிய சரியான ஆவணங்கள் அல்லது ரசீதுகளை வர்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>விற்பனை செய்ய, சேமித்து வைக்க அல்லது விநியோகிக்க வைத்திருக்கும் பொருட்களின் உற்பத்தி மூலத்தை உறுதிப்படுத்தக்கூடிய சரியான ஆவணங்கள் அல்லது ரசீதுகளை வர்த்தகர்கள் கட்டாயமாக வைத்திருக்க வேண்டும் என்று நுகர்வோர் விவகார அதிகாரசபை அறிவித்துள்ளது.</p><p>
நுகர்வோர் விவகார அதிகாரசபையால் வெளியிடப்பட்ட இலக்கம் 83 இன் கீழ் உத்தரவுப்படி, உற்பத்தியாளர்கள், களஞ்சிய உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் அனைத்து வர்த்தகர்களுக்கும் 2022 ஏப்ரல் 27 ஆம் திகதி முதல் இந்த விதிமுறை அமலில் உள்ளது.
</p><p>விநியோகஸ்தரின் பெயர் மற்றும் முகவரி, கொள்முதல் செய்யப்பட்ட திகதி மற்றும் கொள்முதல் விலை, பொருளின் வகை, அளவு மற்றும் தொகுதி எண் என்பனவற்றை தெரிந்து கொள்ளக் கூடிய ஆவணங்களை பேண வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9b6cd509-e47a-4cf6-99b6-872aedc6a2b6/26-6a8661d8ea256.webp' /></p><p>
</p><p>"பொருட்கள் உள்ளன, ஆனால் யாரிடம் வாங்கப்பட்டது என்று கூற முடியாது" என்ற நிலை வியாபாரத்திற்கு மிகப்பெரிய ஆபத்தாகும் என்று அதிகாரசபை சுட்டிக்காட்டியுள்ளது.</p><p>
முக்கியமாக இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களுக்கு உரிய ரசீது இல்லாதபோது விநியோக முறையைக் கண்டறிவது கடினமாகிறது. சந்தைப் பரிசோதனைகள் மற்றும் சோதனைகளின் போது இந்த ஆவணங்கள் சரிபார்க்கப்படும். </p><p>சட்டத்தை மீறுபவர்களின் பொருட்கள் சான்றுகளாகப் பறிமுதல் செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
</p><p>சரியான ஆவணங்களைப் பேணி, பொறுப்புடன் வியாபாரம் செய்யும் நேர்மையான வர்த்தகர்களைப் பாதுகாப்பதே இந்த சட்டத்தைச் நடைமுறைப்படுத்துவதன் முதன்மை நோக்கமாகும் என அதிகாரசபை தெளிவுபடுத்தியுள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-20T02:09:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[புலமைப்பரிசில் பரீட்சை முடிவு - பரீட்சைகள் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/scholarship-exam-paper-marking-begins-today-1787188847"></link>
            <id>https://ibctamil.com/article/scholarship-exam-paper-marking-begins-today-1787188847</id>
            <summary type="text">புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகளை ஒரு மாதத்திற்குள் வெளியிட எதிர்பார்ப்பதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.அதற்கமைய தரம் ஐந்து புலமைப்பரிசில் பர...</summary>
            <content type="html"><![CDATA[<p>புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகளை ஒரு மாதத்திற்குள் வெளியிட எதிர்பார்ப்பதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p>அதற்கமைய தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் இன்று (20) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.</p><p>குநித்த விடயத்தை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா லியனகே தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள்</h2><p>இதற்கமைவாக எதிர்வரும் 25 ஆம் திகதி வரை இந்த விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக இந்திகா லியனகே குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d3e28398-e08b-4ddb-8bc4-106c65712d51/26-6a86592e02786.webp' /></p><p>இம்முறை தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையானது கடந்த 09 ஆம் திகதி நாடு முழுவதும் 2,723 பரீட்சை நிலையங்களில் நடைபெற்றது.&nbsp;இதில் மொத்தம் 294,089 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றியுள்ளனர்.</p><p>

சிங்கள மொழிமூலப் பரீட்சைக்கு 220,366 மாணவர்களும், தமிழ் மொழிமூலப் பரீட்சைக்கு 73,723 மாணவர்களும் தோற்றியுள்ளனர்.</p><p> 

புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகளை ஒரு மாதத்திற்குள் வெளியிட எதிர்பார்ப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா லியனகே தெரிவித்துள்ளார்.</p><p> 

இதேவேளை, கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளையும் செப்டெம்பர் மூன்றாம் திகதி முதல் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/FJQcrzobjUcEaJJsEVOWpF" target="_blank">WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-20T02:00:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[22ம் திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் 37 மனுக்கள் தாக்கல்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/37-petitions-againgts-22nd-ammendment-1787190383"></link>
            <id>https://tamilwin.com/article/37-petitions-againgts-22nd-ammendment-1787190383</id>
            <summary type="text">&amp;nbsp;உச்சநீதிமன்ற மற்றும் மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பது உட்பட பல்வேறு சரத்துக்களை உள்ளடக்கிய 22 ஆவது அரசியலமைப்பு...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;உச்சநீதிமன்ற மற்றும் மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பது உட்பட பல்வேறு சரத்துக்களை உள்ளடக்கிய 22 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் உட்பட 37 தரப்பினரால் உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.</p><p>
இச்சட்டமூலமானது நீதிமன்றத்தின் சுதந்திரத்திற்கும் சட்டத்தின் ஆட்சிக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதாக மனுதாரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
</p><p>முன்மொழியப்பட்டுள்ள 22 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் நிறைவேற்றப்பட வேண்டுமாயின், அதனை சர்வஜன வாக்கெடுப்பிற்கு உட்படுத்துமாறு உத்தரவிடுமாறு மனுதாரர்கள் கோரியுள்ளனர்.</p><p>
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் சார்பில் உதவிச் செயலாளர் லக்கித வாகிஸ்தஆரச்சி மற்றும் பொருளாளர் பசிந்து சில்வா, ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் சர்வஜன பலய கட்சிகள், முன்னிலை சோசலிசக் கட்சியின் பிரசாரச் செயலாளர் துமிந்த நாகமுவ, பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில, சுயாதீன சட்டத்தரணிகள் அமைப்பின் தலைவர் சட்டத்தரணி மைத்திரி குணரத்ன, சட்டத்தரணி அருண லக்ஸிறி, மிலிந்த ராஜபக்ஷ, கலாநிதி பாக்யசோதி சரவணமுத்து, மனித உரிமைகள் ஆணையாளர் அம்பிகா சத்குணநாதன், ஊடகவியலாளர் சுனில் ஜயசேகர ஆகியோர் சட்டமா அதிபரை பிரதிவாதியாகக் குறிப்பிட்டு தாக்கல் செய்யப்பட்டுள்ள இம்மனுக்களில் மனுதாரர்களாக இணைந்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7534fdc8-96ad-482c-8abf-33b0246ac8e7/26-6a865c7152c36.webp' /></p><p>உச்சநீதிமன்ற நீதிபதி ஒருவரின் ஓய்வுபெறும் வயதை 67 ஆக உயர்த்துவதற்கு இச்சட்டமூலத்தின் 2 ஆம் பந்தியில் முன்மொழியப்பட்டுள்ளது.
</p><p>மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி ஒருவரின் ஓய்வுபெறும் வயதை 65 ஆக உயர்த்தவும், நீதிபதிகளின் எண்ணிக்கையை 25 ஆக அதிகரிக்கவும் சட்டமூலத்தில் சரத்துக்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
</p><p>இச்சட்டமூலத்தின் பிரதான நோக்கம் முழு நீதிமன்ற அமைப்பின் கட்டமைப்பையும் மாற்றுவதாகும் என்றும், இது சர்வதேச சட்டங்கள், சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச உடன்படிக்கை மற்றும் ஐநா சாசனத்தின் விதிகளை மீறுவதாகவும் மனுதாரர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.</p><p>
எனவே, அரசியலமைப்பிற்கு முரணான இச்சட்டமூலத்தை நிறைவேற்ற மக்களாணை அவசியம் என உத்தரவிடுமாறு கோரப்பட்டுள்ளதாக தெற்கு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-20T01:50:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[பொகவந்தலாவ - கியூ தோட்டம் புனித ஆரோக்கிய மாதா ஆலயத்தின் ஜூபிலி பெருவிழா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/bogawantalawa-kew-church-jubilee-festival-1787190359"></link>
            <id>https://tamilwin.com/article/bogawantalawa-kew-church-jubilee-festival-1787190359</id>
            <summary type="text">பொகவந்தலாவ - கியூ தோட்டம், புனித ஆரோக்கிய மாதா ஆலயத்தின் 25ஆவது ஆண்டு வெள்ளி விழா எதிர்வரும் 29ஆம் திகதி பக்திப்பூர்வமாக கொண்டாடப்படவுள்ளது.

கண்டி ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொகவந்தலாவ - கியூ தோட்டம், புனித ஆரோக்கிய மாதா ஆலயத்தின் 25ஆவது ஆண்டு வெள்ளி விழா எதிர்வரும் 29ஆம் திகதி பக்திப்பூர்வமாக கொண்டாடப்படவுள்ளது.
</p><p>
கண்டி மறை மாவட்ட ஆயர், வணக்கத்திற்குரிய வெலன்ஸ் மெண்டிஸ் ஆண்டகையின் தலைமையில் இந்த ஜூபிலி விழா கொண்டாடப்படவுள்ளது.</p><h2>ஜூபிலி&nbsp; பெருவிழா</h2><p> </p><p>


எதிர்வரும் 22ஆம் திகதி பொகவந்தலாவ பங்கின் பங்குத் தந்தை டொஸ்மின் ராஜ் தலைமையில் கொடியேற்றத்துடன் ஜூபிலி பெருவிழா ஆரம்பமாகும்.</p><p> 

தொடர்ந்து ஏழு நாட்கள் நவநாள் ஆராதனைகள் இடம்பெற்று 29ஆம் திகதி மறைமாவட்ட ஆயர் வெலன்ஸ் மெண்டிஸ் ஆண்டகையினால் ஜூபிலி விழா திருப்பலி ஒப்புக் கொடுக்கப்படும்.</p><p></p><p>


நவநாள் ஆராதனைகள் மற்றும் திருப்பலிகள், பொகவந்தலாவ பங்கின் பங்குத் தந்தை அருட்பணி டொஸ்மின்ராஜ், அருட்தந்தைகளான, அந்தனி பெர்னாண்டோ, எட்வின் ரொட்றிகோ, டக்ளஸ், ஸ்டீபன், எண்டன் கவஸ்கர், இயேசுதாசன், சிவந்த ரொட்றிகோ ஆகியோரால் ஒப்புக்கொடுக்கப்படும்.&nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-08-20T01:46:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணி ஆரம்பம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/grade-5-scholarship-exam-2026-1787189330"></link>
            <id>https://tamilwin.com/article/grade-5-scholarship-exam-2026-1787189330</id>
            <summary type="text">தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைக்கான விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் இன்று முதல் ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. 

இதன்படி, விடை...</summary>
            <content type="html"><![CDATA[<p>தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைக்கான விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் இன்று முதல் ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. </p><p>

இதன்படி, விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் எதிர்வரும் 25ஆம் திகதி வரை நாடைபெறும் என்று பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் இந்திக லியனகே தெரிவித்துள்ளார்.</p><h2>பரீட்சை பெறுபேறுகள்</h2><p>


இந்த வருடம் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை நாடு முழுவதிலும் உள்ள 2,723 பரீட்சை நிலையங்களில் கடந்த 9ஆம் திகதி இடம்பெற்றது. </p><p> 

இந்தநிலையில், பரீட்சை முடிவுகள் ஒரு மாதத்திற்குள் வெளியிடப்படும் என பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8d9dc458-5f6d-49b9-9502-3dcfd8b54073/26-6a865853b7661.webp' /></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-20T01:42:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[2026ஆம் ஆண்டின் FIFA போட்டி ; நடுவராக ஈழத்தமிழரான அனோஜன் கனகசிங்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/anojan-kanakasingham-an-eelam-tamil-fifa-match-1787160697"></link>
            <id>https://canadamirror.com/article/anojan-kanakasingham-an-eelam-tamil-fifa-match-1787160697</id>
            <summary type="text">சுவிற்சர்லாந்தில் நடைபெற்ற FC Basel – FC Barcelona அணிகளுக்கிடையிலான போட்டியில் நடுவராகப் பணியாற்றிய அனோஜென் கனகசிங்கம், 2026ஆம் ஆண்டில் FIFA சர்வதேச ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சுவிற்சர்லாந்தில் நடைபெற்ற FC Basel – FC Barcelona அணிகளுக்கிடையிலான போட்டியில் நடுவராகப் பணியாற்றிய அனோஜென் கனகசிங்கம், 2026ஆம் ஆண்டில் FIFA சர்வதேச நடுவர் அந்தஸ்தைப் பெற்ற பின்னர் சர்வதேச அரங்கில் தனது பயணத்தை மேலும் உயர்த்தியுள்ளார்.
</p><p>
ஸ்பெயினின் முன்னணி கால்பந்து அணியான FC Barcelona பங்கேற்ற இந்தப் போட்டியில் உலகின் இளம் நட்சத்திர வீரர்களில் ஒருவரான லமீன் யமாலும் களமிறங்கியிருந்த நிலையில், போட்டியை நிர்வகிக்கும் பொறுப்பு அனோஜென் கனகசிங்கத்துக்கு வழங்கப்பட்டது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9347b045-2cd0-4177-98e6-e4e23ae55370/26-6a85e87b53386.webp' /></p><p>சுவிற்சர்லாந்து கால்பந்து சம்மேளனத்தின் அதிகாரப்பூர்வ பதிவின்படி, 1994ஆம் ஆண்டு பிறந்த அனோஜென் கனகசிங்கம், SC Ittigen கழகத்தைச் சேர்ந்தவர். </p><p>2026ஆம் ஆண்டுக்கான FIFA நடுவர்கள் பட்டியலில் அவர் இணைக்கப்பட்டுள்ளார். சுவிற்சர்லாந்தின் Super League போட்டிகளில் 2022ஆம் ஆண்டு முதல் நடுவராகப் பணியாற்றி வந்த அவர், அதுவரை நாட்டின் உயர்மட்டப் பிரிவில் 34 போட்டிகளை நிர்வகித்திருந்தார்.
</p><p>
சர்வதேச அரங்கிலும் அவரது முன்னேற்றம் குறிப்பிடத்தக்கதாக உள்ளது. 2026 ஜூலை 16ஆம் தேதி நடைபெற்ற UEFA Europa League தகுதிச்சுற்றுப் போட்டியில் NK Aluminij மற்றும் FC Sheriff Tiraspol அணிகள் மோதிய ஆட்டத்திற்கு அனோஜென் கனகசிங்கமே பிரதான நடுவராக நியமிக்கப்பட்டிருந்தார்.</p><p>&nbsp;ஈழத்தமிழ் பின்னணியைக் கொண்ட அனோஜென் கனகசிங்கம், சுவிற்சர்லாந்தின் உயர்மட்ட கால்பந்திலிருந்து ஐரோப்பிய மற்றும் தற்போது FIFA சர்வதேச அரங்கிற்கு முன்னேறியிருப்பது, தமிழ் சமூகத்திற்கும் சுவிற்சர்லாந்தில் வாழும் தமிழர்களுக்கும் பெருமைக்குரிய சாதனையாக அமைந்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-20T01:40:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் ஆரம்பம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/scholarship-examination-answer-sheet-evaluation-1787189581"></link>
            <id>https://jvpnews.com/article/scholarship-examination-answer-sheet-evaluation-1787189581</id>
            <summary type="text">அண்மையில் நடைபெற்ற 2026 ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் இன்று (20) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இல...</summary>
            <content type="html"><![CDATA[<p>அண்மையில் நடைபெற்ற 2026 ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் இன்று (20) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இலங்கை பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p>இதற்கமைவாக எதிர்வரும் 25 ஆம் திகதி வரை இந்த விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா லியனகே குறிப்பிட்டுள்ளார்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/806bb031-3987-4582-8680-ed9ce352cb80/26-6a86594e81943.webp' /></p><p>இம்முறை தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையானது கடந்த 09 ஆம் திகதி நாடு முழுவதும் 2,723 பரீட்சை நிலையங்களில் நடைபெற்றது. </p><p>

புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகளை ஒரு மாதத்திற்குள் வெளியிட எதிர்பார்ப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா லியனகே தெரிவித்துள்ளார். </p><p>

இதேவேளை, கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளையும் செப்டெம்பர் மூன்றாம் திகதி முதல் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-20T01:33:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[20 கோடி ரூபா பெறுமதியான 'ஐஸ்' போதைப்பொருளுடன் சந்தேகநபர் கைது!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/kudu-slindus-assistant-arrested-1787189425"></link>
            <id>https://tamilwin.com/article/kudu-slindus-assistant-arrested-1787189425</id>
            <summary type="text">பண்டாரகம - மஸ்வில பகுதியில் உள்ள வீடொன்றில் இயங்கிவந்த ரகசிய போதைப்பொருள் களஞ்சியசாலையை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் அதிரடியாகச் சோதனையிட்டு, சுமார் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பண்டாரகம - மஸ்வில பகுதியில் உள்ள வீடொன்றில் இயங்கிவந்த ரகசிய போதைப்பொருள் களஞ்சியசாலையை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் அதிரடியாகச் சோதனையிட்டு, சுமார் 20 கோடி ரூபாய் பெறுமதியான 'ஐஸ்' போதைப்பொருளுடன் 22 வயதுடைய சந்தேகநபர் ஒருவரைக் கைது செய்துள்ளனர்.
</p><p>பொலிஸ் விசேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரி பிரதிப் பொலிஸ் மா அதிபர் சமன் சில்வாவின் மேற்பார்வையில், தலைமையக புலனாய்வுப் பிரிவின் பொலிஸ் அத்தியட்சகர் கொடிதுவக்கவின் வழிகாட்டலில் இந்தச் சோதனை முன்னெடுக்கப்பட்டது.</p><p>
கைது செய்யப்பட்ட 22 வயதுடைய நபர், பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான 'குடு சலிது'வின் போதைப்பொருள் வலைப்பின்னலின் முக்கிய உறுப்பினராவார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ff18db2d-11c3-47e4-8ed9-9aa49e10287d/26-6a8658b368b05.webp' /></p><p> </p><p>இவர் கடந்த இரண்டு வருடங்களாக மலேசியாவில் வசித்துவிட்டு அண்மையிலேயே இலங்கை திரும்பியுள்ளார்.
'குடு சலிந்து'வின் பிரதான கூட்டாளியான 'ரவிஷ்க' என்பவருடன் நேரடியாகத் தொடர்பிலிருந்தே இவர் இந்த களஞ்சியசாலையை நிர்வகித்து வந்துள்ளார். </p><p>டுபாயில் இருக்கும் ரவிஷ்க கொடுக்கும் கட்டளைகளுக்கு ஏற்ப, குறிப்பிட்ட நபர்களுக்கு இவர் போதைப்பொருளை விநியோகித்து வந்துள்ளார்.
</p><p>கைப்பற்றப்பட்ட ஐஸ் போதைப்பொருள் தொகுதி மற்றும் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-20T01:30:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[19 சுவிட்சர்லாந்திலிருந்து இலங்கை திரும்புவோருக்கு நடக்கும் அநீதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/19-injustice-fac-sri-lankans-returning-switzerland-1787188251"></link>
            <id>https://jvpnews.com/article/19-injustice-fac-sri-lankans-returning-switzerland-1787188251</id>
            <summary type="text">சுவிட்சர்லாந்தில் முதியோர் ஓய்வூதியத் திட்டம் தொடர்பில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய நடைமுறையைத் தொடர்ந்து, சுவிட்சர்லாந்தில் வாழ்ந்து பின்னர் இலங்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>சுவிட்சர்லாந்தில் முதியோர் ஓய்வூதியத் திட்டம் தொடர்பில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய நடைமுறையைத் தொடர்ந்து, சுவிட்சர்லாந்தில் வாழ்ந்து பின்னர் இலங்கைக்குத் திரும்பிச் செல்ல விரும்பும் இலங்கையர்களுக்கு மாதாந்திர AHV ஓய்வூதியத் தொகையை பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு வழங்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

சுவிட்சர்லாந்தில் பணியாற்றி, அந்நாட்டின் சமூகப் பாதுகாப்பு மற்றும் முதியோர் ஓய்வூதியக் காப்புறுதி திட்டத்தில் பங்களிப்பு செலுத்தியுள்ள தகுதியுடையவர்களுக்கு இந்தத் திட்டம் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1f087114-a888-4c2e-8542-e0c6e7a98313/26-6a86541d93567.webp' /></p><p>

சுவிட்சர்லாந்திலிருந்து நிரந்தரமாக இலங்கைக்குச் செல்ல விரும்பும் இலங்கைப் பிரஜைகள், குறிப்பிட்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டு மாதாந்திர AHV ஓய்வூதியத்தைப் பெற்றுக்கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இந்த நடைமுறை குறிப்பாக சுவிட்சர்லாந்தில் வாழ்ந்து, ஓய்வுபெறும் வயதை அடைந்த பின்னர் இலங்கைக்குத் திரும்ப விரும்பும் இலங்கைப் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கு பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p>19 சுவிட்சர்லாந்திலிருந்து இலங்கை திரும்புவோருக்கு நடக்கும் அநீதி தொடர்பிலும் மேலும் பல விடயங்களை உள்ளடக்கிய காணொளியை நாம் இங்கு காணலாம்.......</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/kZclS8M97G8" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-08-20T01:10:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டில் கொட்டி தீர்க்கப்போகும் கனமழை...! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/heavy-rain-with-lightning-thunder-weather-report-1787185500"></link>
            <id>https://ibctamil.com/article/heavy-rain-with-lightning-thunder-weather-report-1787185500</id>
            <summary type="text">சப்ரகமுவ, மேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும்.வளிமண்டலவியல் திணைக்களம் இன்ற...</summary>
            <content type="html"><![CDATA[<p>சப்ரகமுவ, மேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும்.</p><p>வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (18-08-2026) விடுத்துள்ள அறிக்கையில் மேற்படி விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p>இதனடிப்படையில் வடமேல் மாகாணத்தில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்.
</p><p>







</p><p></p><h2>பனிமூட்டமான நிலை</h2><p>மத்திய மலைப் பிராந்தியத்தின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் அத்துடன் திருகோணமலை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் மணித்தியாலத்திற்கு சுமார் 30 - 40 km வேகத்தில் அடிக்கடி பலத்த காற்று வீசக் கூடும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6e7b1662-4b0e-4921-a1e6-22ad229db481/26-6a86495e9dc6e.webp' />&nbsp;&nbsp;</p><p>கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் அத்துடன் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் பகல் வேளையில் அதிகரித்த வெப்பநிலையை மனித உடலினால் உணரக்கூடியதாக இருக்கும்.</p><p>இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-20T01:06:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாடு மீண்டும் வங்குரோத்து நிலை ஏற்படுமா? வெளிநாட்டு கையிருப்பு குறித்து அரசாங்கம் விளக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/will-country-go-bankrupt-again-foreign-reserves-1787187099"></link>
            <id>https://jvpnews.com/article/will-country-go-bankrupt-again-foreign-reserves-1787187099</id>
            <summary type="text">நடப்பு அரசாங்கம், எதிர்பார்த்ததை விட விரைவாக வெளிநாட்டுச் செலாவணி கையிருப்பைக் கட்டியெழுப்பியுள்ளதாக நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் அனில் ஜயந்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நடப்பு அரசாங்கம், எதிர்பார்த்ததை விட விரைவாக வெளிநாட்டுச் செலாவணி கையிருப்பைக் கட்டியெழுப்பியுள்ளதாக நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் அனில் ஜயந்த தெரிவித்துள்ளார்.</p><p>

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில ஆகியோர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கொழும்பில் வெளியிட்ட கருத்துக்களுக்கு பதிலளிக்கும் வகையிலேயே இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fa2f1c80-a6ca-4230-a6c9-ebe1747705e5/26-6a864f9ce35f3.webp' /></p><p>
"இலங்கை தற்போது 6 பில்லியன் அமெரிக்க டொலர்களையே கையிருப்பாகக் கொண்டுள்ளது. 2028 ஆம் ஆண்டு வெளிநாட்டுக் கடன்களைத் திருப்பிச் செலுத்தும்போது இந்த கையிருப்பு 15 பில்லியன்களாக இருக்க வேண்டும்.</p><p>எனவே அரசாங்கம் இன்னும் 9 பில்லியன் டொலர்களை கையிருப்பாகக் கொண்டுவர வேண்டும்; இல்லையேல் நாடு மீண்டும் வங்குரோத்து நிலைக்குச் செல்லும்" என்று ரணிலும் கம்மன்பிலவும் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.
</p><p>
எனினும் இதனை மறுத்து, இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பு மற்றும் பொருளாதாரம் குறித்து நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் அனில் ஜயந்த கருத்து தெரிவித்துள்ளார்.</p><p>

பொருளாதார நடவடிக்கைகளுக்கு ஆதரவளித்தல், கடன்களைத் திருப்பிச் செலுத்துதல் மற்றும் இறக்குமதித் தடைகளைத் தளர்த்துதல் ஆகியவற்றுடன், இலங்கை தனது வெளிநாட்டுச் செலாவணி கையிருப்பை எதிர்பார்த்ததை விட விரைவாகக் கட்டியெழுப்ப முடிந்துள்ளதாக பிரதி அமைச்சர் அனில் ஜயந்த குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
இலங்கை அரசாங்கத்தின் பொருளாதார நடவடிக்கைகளால் ஏற்பட்ட முன்னேற்றத்தின் காரணமாக, ஆரம்பத்தில் சர்வதேச நாணய நிதியத்தால் (IMF) கணிக்கப்பட்ட கையிருப்பு இலக்குகளை விடவும் சிறப்பான முன்னேற்றத்தை அடைய முடிந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
</p><p>
2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் வாகன இறக்குமதிக்கு எவ்வித ஏற்பாடுகளும் செய்யப்படவில்லை. எனினும் பொருளாதார மீட்சிக்கு ஆதரவளிப்பதற்காக அரசாங்கம் பின்னர் அந்தத் தடைகளைத் தளர்த்த முடிவு செய்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>
இதன்படி, தற்போது சுமார் 3.5 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான நாணயக் கடிதங்கள் (Letters of Credit - LC) திறக்கப்பட்டுள்ளன. அந்த வாகன இறக்குமதிகள் அனுமதிக்கப்பட்டிராவிட்டால், இலங்கையின் கையிருப்பு மேலும் 3.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் அதிகமாக இருந்திருக்கும்.
</p><p>
இருப்பினும், வெளிநாட்டு கையிருப்பைச் சுமார் 6.6 பில்லியன் அமெரிக்க டொலர்களாகப் பராமரிக்க அரசாங்கத்தினால் முடிந்துள்ளது.
</p><p>
இந்த நிலையில், வெளிநாட்டு கையிருப்பு நிலையை மீண்டும் கட்டியெழுப்பும் அதேவேளையில், இலங்கை தனது வெளிநாட்டுக் கடமைகளைத் தொடர்ந்து நிறைவேற்றி வருவதாகவும் பிரதி அமைச்சர் எடுத்துரைத்தார்.</p><p>
</p><p></p><p>எரிபொருள் இறக்குமதியும் நாட்டின் வெளிநாட்டுச் செலாவணி கையிருப்பு மீது தொடர்ந்து அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. எரிபொருள் இறக்குமதிக்காகக் கணிசமான அளவு கையிருப்பு வெளியேறுகிறது; இவை தவிர்க்க முடியாத செலவுகளாகும்.</p><p>

இதன் காரணமாக, பொருளாதாரச் செயல்திறனை அளவிடும் ஒரே அளவுகோலாக மட்டும் பார்க்காமல், வெளிநாட்டு கையிருப்புகளை முதன்மையாக ஒரு பாதுகாப்பு அரணாகப் பார்க்க வேண்டும் என அனில் ஜயந்த வலியுறுத்தியுள்ளார்.
</p><p>
பொருளாதாரச் செயற்பாடுகளை உயிர்ப்புடன் வைத்திருக்கும் அதேவேளையில், வளர்ச்சியைக் குன்றச் செய்யாமல் இந்த பாதுகாப்பு அரணை அரசாங்கம் கட்டியெழுப்பி வருகிறது என்றும் பிரதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
நிகர வெளிநாட்டு கையிருப்பின் வளர்ச்சியே இலங்கையின் முக்கிய இலக்காக உள்ளது. இதன்படி, விவேகமான மத்திய வங்கி முகாமை மற்றும் நிதித்துறை ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்ட நடவடிக்கைகள் மூலம் இந்த இலக்கில் முன்னேற்றம் அடையப்பட்டுள்ளதாகவும் நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் அனில் ஜயந்த தெரிவித்துள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-20T00:51:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[தேர்தலுக்கு முன்னரே முதலமைச்சரானாரா அர்ச்சுனா எம்.பி! தனது இறுதி நாடாளுமன்ற வாரத்தில் முஸ்லிம் மக்களுக்காக எடுத்துள்ள முடிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/archuna-mp-become-the-cm-before-the-elections-1787184291"></link>
            <id>https://tamilwin.com/article/archuna-mp-become-the-cm-before-the-elections-1787184291</id>
            <summary type="text">நான் வடக்கு மாகாணசபையை பொறுப்பேற்றவுடன் முஸ்லிம் மக்களுக்காக குடியேற்ற ஒதுக்கப்பட்ட பொம்மைவெளி, காக்கைக்தீவு போன்ற பகுதிகளை அபிவிருத்தி செய்வதே எனது ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>நான் வடக்கு மாகாணசபையை பொறுப்பேற்றவுடன் முஸ்லிம் மக்களுக்காக குடியேற்ற ஒதுக்கப்பட்ட பொம்மைவெளி, காக்கைக்தீவு போன்ற பகுதிகளை அபிவிருத்தி செய்வதே எனது முதல் பணி என நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.</p><p> 

நாடாளுமன்றத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற அமர்வின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
</p><p>
தொடர்ந்தும் தெரிவிக்கையில், </p><p>

கிழக்கு மாகாணத்தில் உள்ள முஸ்லம் மக்களின் அடிப்படை உரிமை தொடர்பில் இங்கு பேசவேண்டியுள்ளது.</p><h2>கருணாவுடன் இருந்த சுகுணன்</h2><p> </p><p>

ஒரு இனத்தை இன்னொரு இனம் அடக்கினால், அந்த அடக்கும் இனத்தில் இருந்து ஒருவன் அதற்கு எதிராக கதைக்காது விட்டால் இந்த நாட்டில் இருந்து இனவாதத்தை ஒழிக்க முடியாது.</p><p>

அந்த வகையில் எனது இறுதி வார நாடாளுமன்ற அமர்வில எனது சகோதர இனத்துக்காக நான் கதைப்பதில் மகிழ்ச்சியடைகின்றேன்.</p><p>

கல்முனை வடக்கு வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் சுகுணன் மிக மோசமான ஒரு இனவாதி. முதலில் கருணாவுடன் இருந்து பின்னர் ரணிலுடன் இருந்தவர். இப்போது வரை அவர் அரசியல் செய்கின்றார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/37955e02-b862-46ee-8fb2-8855c2db6446/26-6a864da48fcec.webp' /></p><p>
</p><p>

என்னுடைய இனத்திற்கு எந்தவொரு முஸ்லிம் நபராவது ஒருகாலத்தில் உதவி செய்திருந்தால் எனது பாராளுமன்ற கடைசி கிழமைகளில் செஞ்சோற்றுக் கடனை செய்துவிட்டுபோகவே இந்த சில நிமிடங்களை பயன்படுத்துகின்றேன். </p><p>

1995 இல் தமிழ் பெண்கள் பொட்டுகள் போட்டுகொண்டு ரூபவாஹினியில் செய்திவாசிக்க முடியாது என சந்திரிகா அரசு சட்டம் கொண்டுவந்தது. அப்போது அமைச்சராக இருந்த அஷ்ரப் அதற்கு எதிராக போராடினார்.
</p><p>
என்னுடைய இனத்தில் இருந்து உங்களுடைய இனத்திற்கு கல்லெறியப்படுமாக இருந்தால் அந்தக்கற்களை எங்களுடைய இதயம் தாங்கிக்கொள்ளும்.
</p><p>

வடக்கில் பொம்மை வெளி,காக்கைதீவு பகுதிகள் தான் சுகாதாரத்தில் மிக மோசமாக சீரழிந்த நிலையில் இருக்கும் பகுதிகள். கடந்த காலத்தில் முஸ்லிம் மக்களை யாழ்ப்பாணத்தில் மீள்குடியேற்ற இந்தப்பகுதிகளைத்தான் தெரிவு செய்தார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0ddd6160-6326-4165-9e1b-d124e6793e64/26-6a864da3d84ab.webp' /></p><p> நான் வடக்கு மாகாண சபையை என்று பொறுப்பேற்கின்றேனோ ஒரு தமிழனாக சொல்கின்றேன் முதல் முதலில் அபிவிருத்தி செய்வது பொம்மை வெளி,காக்கைதீவு பகுதிகளைத்தான்.
என்னுடைய நகமும் சதையுமான முஸ்லிம் மக்களுக்காக ஒரு சிறப்புப் பிரேரணை நாடாளுமன்றத்தில் கொண்டு வருகின்றேன்.</p><p>

கிழக்கில் இருந்து ஈரோசை சேர்ந்த ஒருவர் என்னைப்பற்றி ஏதோ கூறியுள்ளார். அவர் பெயர்கூட எனக்குத்தெரியாது. கிழக்கில் விடுதலைப்புலிகளினால் கொலைகள் நடந்தது என்றால் ஈரோஸ் மாதிரியான இந்தக்கட்டமைப்புக்கள்தான் முஸ்லிம் மக்களை வெட்டிக்கொன்றது. அது தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் கையில்போய் விழுந்தது. </p><p>அதேபோன்று முஸ்லிம்களில் ஒரு சிலர் செய்த கொலைகள்தான் ஒட்டுமொத்த முஸ்லிம்களையும் தமிழ் மக்களையும் இன்றுவரை பிரித்து வைத்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.&nbsp; &nbsp;</p><p>இதேவேளை, கடந்த பல நாடாளுமன்ற அமர்வுகளின் போது, தான் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகப் போவதாக தொடர்ச்சியாக அர்ச்சுனா இராமநாதன் எம்.பி அறிவித்து வருவதுடன்,&nbsp; எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடப் போவதாகவும் அறிவித்திருந்தார்.&nbsp;</p><p> இந்தநிலையில், மாகாண சபைத்&nbsp; தேர்தல் தொடர்பான உறுதியான முடிவு எதும் அரசாங்கத்தினால் அறிவிக்கப்படாத நிலையில், தேர்தல் நடைபெறுவதற்கு முன்னரே தன்னை வடக்கு மாகாண சபையின் முதலமைச்சராகவே பாவித்து&nbsp; சமகால நாடாளுமன்ற அமர்வுகளில் அர்ச்சுனா எம்.பி உரையாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-20T00:44:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஷிரான் பாசிக்கிடம் நடத்தப்பட்ட விசாரணை: திடுக்கிடும் தகவல்கள் அம்பலம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/shiran-basik-revels-more-informations-1787186414"></link>
            <id>https://tamilwin.com/article/shiran-basik-revels-more-informations-1787186414</id>
            <summary type="text">அண்மையில் கைதான, நாட்டின் முன்னணி போதைப்பொருள் கடத்தல்காரர்களில் ஓருவராக கருதப்படும் ஷிரான் பாசிக் என்பவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் பல திடுக்கி...</summary>
            <content type="html"><![CDATA[<p>அண்மையில் கைதான, நாட்டின் முன்னணி போதைப்பொருள் கடத்தல்காரர்களில் ஓருவராக கருதப்படும் ஷிரான் பாசிக் என்பவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p>
எதிர்க்கட்சியிலுள்ள இரு பலம்பொருந்திய அரசியல்வாதிகளின் தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காகத் தான் பெருந்தொகை பணத்தை செலவிட்டதாக ஷிரான் பாசிக் ஒப்புக்கொண்டுள்ளார். </p><p>
ஒரு அரசியல்வாதியின் பிரசாரத்திற்காக 50 பேருந்துகளை வழங்கியதுடன், பெருமளவு பணத்தையும் கையளித்துள்ளார்.</p><h2>வாக்குமூலம்&nbsp;</h2><p>இவருடன் பணப்பரிமாற்றம் செய்த அரசியல்வாதிகள் குறித்து மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் விசாரணைகளை முடுக்கிவிட்டுள்ளது.
இதில் ஒருவர் களுத்துறை பிரதேசத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துபவர் எனத் தெரியவந்துள்ளது.</p><p>தெஹிவளை - கல்கிஸ்சை கடற்கரை யோரத்தில் அமைந்துள்ள 5 சொகுசு ஹோட்டல்கள் தனக்குச் சொந்தமானவை என பாசிக் வெளிப்படுத்தியுள்ளார். அண்மையில் சர்ச்சையை ஏற்படுத்திய 'சோல் பீச்' ஹோட்டலும் இதில் அடங்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f76efb11-17dc-41eb-af01-4e1c5083e2bc/26-6a864cefdc53e.webp' />&nbsp;&nbsp;</p><p>
</p><p>பொரலஸ்கமுவ, தெஹிவளை, கல்கிஸ்சை, இரத்மலானை மற்றும் மொரட்டுவை ஆகிய பகுதிகளில் பல ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்புகளில் இவர் முதலீடு செய்துள்ளார்.</p><p>
போதைப்பொருள் வியாபாரம் மூலம் ஈட்டிய சட்டவிரோதப் பணத்தை சட்டப்பூர்வமான பணமாக மாற்றுவதற்காகவே இவர் இந்த வியாபாரங்களில் முதலீடு செய்துள்ளார்.
</p><p>கடற்கரையோர ஹோட்டல்களை பிற நபர்களின் பெயர்களிலேயே நடத்திவந்துள்ளார்.
கடற்கரையோரக் காணிகளின் ஏழை உரிமையாளர்களின் பெயர்களைப் பயன்படுத்தி, அங்கு ஹோட்டல்களைக் கட்டி நிர்வகித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2db209d3-b950-4477-94af-e856516084ac/26-6a8654a4e39ba.webp' /></p><p>
</p><p>அரசாங்கத்திற்குச் சொந்தமான காணிகளையும் சட்டவிரோதமாகக் கையகப்படுத்தி, ஹோட்டல்கள் மற்றும் கட்டிடங்களைக் கட்டியுள்ளமை அம்பலமாகியுள்ளது.</p><p>
கல்கிஸ்சை பகுதியைச் சேர்ந்த பிரபல பாதாள உலகக் குழு உறுப்பினர்களான அல்டோ தர்மே, படோவிட்ட அஸங்க மற்றும் சான்டோ ஆகியோர் தனது நெருங்கிய நண்பர்கள் எனவும், அவர்கள் அனைவரும் தனது போதைப்பொருள் வலைப்பின்னலுடன் தொடர்புடையவர்கள் எனவும் ஷிரான் பாசிக் மேலும் வாக்குமூலம் அளித்துள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-20T00:40:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஒரே நேரத்தில் 7 படங்கள்.. 66 வயதிலும் பிசியாக நடிக்கும் மோகன்லால்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/mohanlal-reveal-seven-upcoming-films-1787185370"></link>
            <id>https://cineulagam.com/article/mohanlal-reveal-seven-upcoming-films-1787185370</id>
            <summary type="text">நடிகர் மோகன்லால் மலையாள சினிமாவில் சூப்பர்ஸ்டார் ஆக வலம் வருகிறார். 66 வயதாகும் அவர் தற்போதும் பிசியாக படங்களில் நடித்து வருகிறார்.இளம் ஹீரோக்களுக்கு ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நடிகர் மோகன்லால் மலையாள சினிமாவில் சூப்பர்ஸ்டார் ஆக வலம் வருகிறார். 66 வயதாகும் அவர் தற்போதும் பிசியாக படங்களில் நடித்து வருகிறார்.</p><p>இளம் ஹீரோக்களுக்கு ஈடுகொடுக்கும் வகையில் அவர் நடித்து வரும் நிலையில் தற்போது ஒரு முக்கிய அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cc193b0b-531f-454f-b286-d069d590ed38/26-6a8648dc6f0dc.webp' /></p><p>
</p><h2>7 படங்கள்
</h2><p>தான் அடுத்து நடிக்கப்போகும் 7 படங்களின் இயக்குனர்கள் லிஸ்ட்டை மோகன்லால் வெளியிட்டு இருக்கிறார். அதனால் அவரது ரசிகர்கள் குஷியில் இருக்கிறார்கள்.
</p><ul><li>விஷ்ணு மோகன்</li><li>
அனூப் சத்யன்
</li><li>ப்ரியதர்ஷன்
</li><li>திலீஷ் போத்தன்</li><li>
சத்யன் அந்திகாட்
</li><li>ஜூட் ஆண்டனி ஜோசப்</li><li>
ஜீத்து ஜோசப்&nbsp;</li></ul><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Exciting stories, exciting journeys and some very special filmmakers.<br><br>Here’s a glimpse of my seven upcoming projects with:<br><br>• Vishnu Mohan<br>• Anoop Sathyan<br>• Priyadarshan<br>• Dileesh Pothan<br>• Sathyan Anthikad<br>• Jude Anthany Joseph<br>• Jeethu Joseph</p>&mdash; Mohanlal (@Mohanlal) <a href="https://x.com/Mohanlal/status/2089685636198596660?ref_src=twsrc%5Etfw">August 18, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p>]]></content>
            <updated>2026-08-20T00:38:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[புதன் சிம்ம ராசிக்கு செல்வதால் இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டக்கதவு மூடப்போகுதாம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/puthanaal-athirsta-kathavu-moda-pogum-rasikarargal-1787182672"></link>
            <id>https://jvpnews.com/article/puthanaal-athirsta-kathavu-moda-pogum-rasikarargal-1787182672</id>
            <summary type="text">நவகிரகங்களில் புதன் கிரகங்களின் இளவரசர் என்று அழைக்கப்படுகிறார்.&amp;nbsp;புதனின் இயக்கத்தில் ஏற்படும் மாற்றங்கள் ஜோதிடத்தில் மிகவும் முக்கியமானதாகும். தற...</summary>
            <content type="html"><![CDATA[<p>நவகிரகங்களில் புதன் கிரகங்களின் இளவரசர் என்று அழைக்கப்படுகிறார்.&nbsp;புதனின் இயக்கத்தில் ஏற்படும் மாற்றங்கள் ஜோதிடத்தில் மிகவும் முக்கியமானதாகும். தற்போது கடக ராசியில் இருக்கும் புதன் ஆகஸ்ட் 22 ஆம் திகதி சிம்ம ராசிக்குள் நுழையப்போகிறார்.</p><p>கிரகங்களின் ராஜாவான சூரியனால் ஆளப்படும் சிம்ம ராசிக்குள் புதன் நுழைவது மிகவும் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் மாற்றத்தை ஏற்படுத்தப்போகிறது.இந்த கிரக மாற்றத்தால் இழப்புகளையும், பின்னடைவுகளையும் சந்திக்கப் போகிறார்கள். அவர்கள் எந்தெந்த ராசிக்காரர்கள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e9836114-ca87-4a5a-8da2-4b36b5d8a502/26-6a863e51c32a0.webp' /></p><h3>மேஷம் </h3><p>மேஷ ராசிக்காரர்கள் இந்த கிரகப் பெயர்ச்சியால் துரதிர்ஷ்டத்தை அனுபவிக்கப்போகிறார்கள். இந்த கிரக மாற்றத்தால் அவர்கள் வாழ்க்கையில் பிரச்சினைகள் ஒன்றன் பின் ஒன்றாக அதிகரிக்கும். மேலும், அவர்கள் வாழ்க்கைத்துணையின் ஆரோக்கியம் அவர்களின் கவலையை அதிகரிக்கும். எதிரிகளின் வலிமை அதிகரிப்பதால் இந்த காலகட்டம் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும். செலவுகள் அதிகரிக்கும் மற்றும் வேலையில் பாதகமான மாற்றங்கள் ஏற்படும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ff7ed623-597c-4a00-a9ef-022db98c926d/26-6a863e5272fef.webp' /></p><h3>ரிஷபம்
</h3><p>ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த கிரக மாற்றம் அவ்வளவு சிறப்பானதாக இருக்காது. இந்த கிரக மாற்றத்தால் பெரும்பாலும் வாழ்க்கையில் மோசமான அனுபவங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. ஒரு முடிவை எடுப்பதற்கு முன் நிறைய சிந்திக்க வேண்டும். பண விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். ஆரோக்கிய விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1edca05f-3fb2-4f4c-8c29-d35e86cf42a9/26-6a863e532271d.webp' /></p><h3>விருச்சிகம்
</h3><p>விருச்சிக ராசிக்காரர்களுக்கு புதனின் இந்த ராசி மாற்றம் சாதகமான விளைவுகளை அளிக்கப்போவதில்லை. இந்த கிரக மாற்றத்தால் அவர்கள் வாழ்க்கையில் பல ஏற்ற தாழ்வுகள் இருக்கும். திருமண வாழ்க்கையில் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம், மேலும் வாழ்க்கைத்துணையுடன் ஏற்பட்ட கடந்த கால பிரச்சினைகள் மீண்டும் துளிர்விடும். இந்த காலகட்டத்தில் அவர்கள் அதிக பொறுமையை கடைபிடிக்க வேண்டும், மேலும் பல்வேறு விஷயங்களை தெளிவுடன் கையாள வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/385a2522-3a33-4bab-b4d1-18ba340f6107/26-6a863e53c5331.webp' /></p>]]></content>
            <updated>2026-08-20T00:34:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[கல்முனை மருத்துவமனை ஆடை விவகாரம் ; இனவாத மோதலாக மாற்ற வேண்டாம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/kalmunai-north-base-hospital-clothing-issue-1787184824"></link>
            <id>https://jvpnews.com/article/kalmunai-north-base-hospital-clothing-issue-1787184824</id>
            <summary type="text">அம்பாறை கல்முனை வடக்கு ஆதார மருத்துவமனையில் ஏற்பட்டுள்ள ஆடைப் பிரச்சினை தொடர்பில் அரசாங்கம் தமது நிலைப்பாட்டை நாடாளுமன்றில் வெளிப்படுத்தியுள்ளது.

ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>அம்பாறை கல்முனை வடக்கு ஆதார மருத்துவமனையில் ஏற்பட்டுள்ள ஆடைப் பிரச்சினை தொடர்பில் அரசாங்கம் தமது நிலைப்பாட்டை நாடாளுமன்றில் வெளிப்படுத்தியுள்ளது.

நாடாளுமன்றில் நேற்று இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் நிசாம் காரியப்பரால் கொண்டுவரப்பட்ட ஒத்திவைப்புவேளை விவாதத்தில் பங்கேற்ற சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ அரசாங்கத்தின் நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தினார்.
</p><p>
மக்கள் பிரதிநிதிகள் என்ற வகையில், இந்தச் சம்பவத்தை அனைவரும் மிகவும் நிதானத்துடனும் முதிர்ச்சியுடனும் பார்க்க வேண்டும் என்று அமைச்சர் இதன்போது குறிப்பிட்டார்.</p><p>

சமூக ஊடகங்களிலோ அல்லது வெளியிலோ வாக்கு வங்கியைக் குறிவைத்து வெளியிடப்படும் அறிக்கைகளையோ நடத்தைகளையோ அரசாங்கம் ஒருபோதும் அனுமதிக்காது என்றும் அவர் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e543aa8b-5761-4abf-820e-db9428c3d39f/26-6a864b2e70432.webp' /></p><p>

"பல இன மக்கள் வாழும், பல மதங்களைப் பின்பற்றும் மக்கள் வாழும், சிங்களம், தமிழ், ஆங்கிலம் போன்ற பல மொழிகளைப் பேசும் மக்கள் வாழும் நாடு இது என்பதை அனைவரும் ஏற்றுக்கொண்டிருக்கிறோம்.
</p><p>
எனவே, பல கலாசாரங்களைக் கொண்ட ஒரு நாடான இலங்கையில் அந்தந்த கலாசாரங்களுக்கு ஏற்ப உடைகள், உணவுகள் மற்றும் பல்வேறு வழிபாட்டு முறைகள் உள்ளன.</p><p> இவை அனைத்தின் சேர்க்கையும், ஒத்திசைவும், ஒற்றுமையும்தான் இலங்கை அரசாக நிலவுகிறது.</p><p>

இருப்பினும், இலங்கையின் அரசியல் வரலாற்றில், அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கும் அதைத் தக்கவைத்துக்கொள்வதற்கும் இனவாதப் பூச்சைப் பூசி ஆட்சி செய்தவர்களின் துரதிர்ஷ்டவசமான அனுபவங்கள் உள்ளன.
</p><p>
ஆனால், தேசிய மக்கள் சக்தி என்ற வகையில், மிகவும் கடினமான சூழ்நிலையிலும்கூட அதிகாரத்திற்கு வர இனவாதத்தைப் பயன்படுத்தவில்லை. </p><p>தேசிய மக்கள் சக்தி அதிகாரத்திற்கு வந்து சுமார் 11 மாதங்கள் ஆகின்ற நிலையில், இந்த நாட்டிலுள்ள இனவாதத்திற்கும் மத மோதல்களுக்கும் மீண்டும் இடமளிக்கவில்லை.</p><p>

இத்தகைய சிறிய சம்பவங்கள் நேர்ந்தாலும், தேவைப்பட்டால் சட்டத்தின் மூலமாகவும், விழிப்புணர்வின் மூலமாகவும், கலந்துரையாடல்கள் மூலமாகவும் தீர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.
</p><p>
எனவே, கல்முனை மருத்துவமனை விடயம், தேவையில்லாத மோதல் நிலையாக வளர்ந்துவிடக் கூடாது என்பதிலும், சிறிய இனவாத குழுக்களுக்குப் பந்தடிக்கும் வாய்ப்பாக இது மாறக்கூடாது என்பதிலும் அனைவரும் கவனமாக நடந்துகொண்டனர்" என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>
அரச சேவையில் சீருடை அணிந்து பணியாற்றும் ஊழியர்களும், ஆடை நடைமுறை அல்லது ஒழுங்குமுறை பின்பற்றப்படும் ஊழியர்களும் உள்ளனர்.
</p><p>
சுகாதாரத் துறையைக் கருத்தில் கொள்ளும்போது:

நோயாளிகளும் பொதுமக்களும் ஊழியர்களை எளிதாக அடையாளம் காண்பதற்காக,

மருத்துவமனைகளுக்கும் சுகாதார நிறுவனங்களுக்கும் வருகை தரும் பொதுமக்களின் சுகாதாரப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகச் சீருடைகள் பயன்படுத்தப்படுகின்றன.
</p><p>
சுகாதாரத் துறையில் சீருடைகளைத் தீர்மானிப்பது என்பது சாதாரணமான ஒன்றல்ல. நீண்டகாலக் கலந்துரையாடல்கள் மற்றும் சீருடைக் குழுவின் ஆலோசனைகளுக்குப் பிறகே, நோயாளி பராமரிப்பை எளிதாக்கவும் கிருமி பரவலைக் கட்டுப்படுத்தவும் ஏதுவாகச் சீருடைகள் தீர்மானிக்கப்படுகின்றன.
</p><p>
சுகாதார அமைச்சில் சீருடைக்கு உரிமையுள்ள ஊழியர்களுக்குச் சீருடைக் கொடுப்பனவுகளும் வழங்கப்படுகின்றன.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8ecbb182-f954-4355-8c10-1b799d0b3f2e/26-6a864b2dbb6fe.webp' /></p><p>இதன்படி, 2025 ஜனவரி 1 ஆம் திகதி முதல், செவிலியர்களுக்கு 30,000 ரூபாய், குடும்ப சுகாதார அதிகாரிகளுக்கு 28,000 ரூபாய், சுகாதாரப் பரிசோதகர்களுக்கு 30,000 ரூபாய் மற்றும் இளநிலை ஊழியர்களுக்கு 18,600 ரூபாய் எனச் சீருடைக் கொடுப்பனவுகள் வழங்கப்படுகின்றன.
</p><p>
இந்த நிலையில், கிழக்கு மாகாணத்தில் நோயாளிகளுக்கான சேவைகள் தொடர்ந்து கிடைக்கவும், சில குழுக்கள் இனவாத உணர்ச்சிகளைத் தூண்டுவதைத் தடுக்கவும் தற்காலிக அடிப்படையில் ஊழியர்களின் இடமாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.</p><p>

எனவே இந்த மோதல் பரவாமல் தடுக்க குறித்த நடவடிக்கை உதவியாக இருக்கும் என அரசாங்கம் நம்புவதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ குறிப்பிட்டுள்ளார்.</p><p>
</p><p>சீருடையில் ஏதேனும் மாற்றம் செய்வதாக இருந்தால், அதை அமைச்சின் சீருடைக் குழுவிற்குச் சமர்ப்பித்து ஒப்புதல் பெற வேண்டும். அதற்கான யோசனைகளைச் சமர்ப்பித்து, கலந்துரையாடி, சுற்றறிக்கையை மாற்றுவதற்கான வேலைத்திட்டத்தை ஆரம்பிக்க முடியும். அதற்கு நாடாளுமன்றத்திலும் சுதந்திரம் உள்ளது. </p><p>ஆனால், தற்போதைக்கு நடைமுறையிலுள்ள சுற்றறிக்கையின்படியே ஊழியர்கள் செயல்பட வேண்டும் என்றும் அமைச்சர் வலியுறுத்தினார்.

சமீபகாலமாக முஸ்லிம் யுவதிகள் சுகாதாரத் துறையில் இணைவதில் ஆர்வம் காட்டி வருவது மகிழ்ச்சியளிக்கிறது.
</p><p>
பாரம்பரிய ஆடைகள் தொடர்பான பிரச்சினைகளால் ஒருவர் அரச சேவையில் இணைவது கட்டுப்படுத்தப்படுவதை அரசாங்கம் ஆதரிக்கவில்லை. அதற்கான வாய்ப்புகளும் சுதந்திரமும் வழங்கப்பட வேண்டும்.
</p><p>
எதிர்காலத்தில் சிங்கள, தமிழ், முஸ்லிம் யாராக இருந்தாலும் சுகாதாரத் துறையில் இணைவதற்கும், அவர்களின் மத, கலாச்சார உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் தேவையான சீர்திருத்தங்கள் குறித்துக் கலந்துரையாட அரசாங்கம் தயாராக உள்ளது என்றும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-20T00:32:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜனனி அசோக் குமார் ஷார்ட் உடையில் ஹாட் போட்டோஷூட்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/janani-ashok-kumar-sizzling-in-short-dress-1787184112"></link>
            <id>https://cineulagam.com/article/janani-ashok-kumar-sizzling-in-short-dress-1787184112</id>
            <summary type="text">சீரியல் நடிகை ஜனனி அசோக் குமார் இன்ஸ்டாவில் தொடர்ந்து கவர்ச்சியான போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை ஈர்த்து வருகிறார்.அவர் விரைவில் தொடங்க இருக்கும் பி...</summary>
            <content type="html"><![CDATA[<p>சீரியல் நடிகை ஜனனி அசோக் குமார் இன்ஸ்டாவில் தொடர்ந்து கவர்ச்சியான போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை ஈர்த்து வருகிறார்.</p><p>அவர் விரைவில் தொடங்க இருக்கும் பிக் பாஸ் 10ம் சீசனில் போட்டியாளராக வரப்போவதாகவும் கூறப்படுகிறது.
</p><p>இந்நிலையில் ஜனனி ஷார்ட் உடையில் ஹாட் போஸ் கொடுத்திருக்கும் லேட்டஸ்ட் ஸ்டில்களை பாருங்க.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-20T00:19:26+00:00</updated>
        </entry>
    </feed>
