<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-08-03T10:45:34+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Bavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[தொல்லியல் ஊடாக தமிழ் மக்களின் பூர்வீக நிலங்கள் பறிமுதல் - சிறிநாத் எம்.பி பகிரங்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/lands-of-the-tamil-people-through-archaeology-1785750461"></link>
            <id>https://tamilwin.com/article/lands-of-the-tamil-people-through-archaeology-1785750461</id>
            <summary type="text">வடக்கு கிழக்கில் தொல்லியல் ஊடாக சட்டரீதியானது என கூறப்படுகின்ற வகையில் திட்டமிட்ட
முறையில் தமிழ் மக்களின் பூர்வீக நிலங்களை பறித்தெடுத்து அவர்களின் வா...</summary>
            <content type="html"><![CDATA[<p>வடக்கு கிழக்கில் தொல்லியல் ஊடாக சட்டரீதியானது என கூறப்படுகின்ற வகையில் திட்டமிட்ட
முறையில் தமிழ் மக்களின் பூர்வீக நிலங்களை பறித்தெடுத்து அவர்களின் வாழ்வாதார
நிலங்களை சிதைப்பதற்கான நடவடிக்கையை மிக நுட்பமான முறையில் இந்த அரசு செய்து
வருகிறது என நாடாளுமன்ற உறுப்பினர் இளையதம்பி சிறிநாத் தெரிவித்துள்ளார்.
</p><p>
மட்டக்களப்பில் உள்ள அவரது காரியாலயத்தில் இன்று (03)
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>மக்களின் பொருளாதார நிலைமை</h2><p>

மிக முக்கியமாக சமகால அரசு பல வாக்குறுதிகளை தந்திருந்தது இருந்தபோதும் தமிழ்
மக்களுக்கு அரசியல் உரிமை சம்மந்தமாக இந்த அரசு ஆட்சியை பொறுப்பேற்று
ஒன்றரை வருடம் ஆகியும் இது சம்பந்தமாக எந்த நடவடிக்கைகள் எடுக்கப்படாத ஒரு
நெருக்கடியான சூழ்நிலை இருக்கிறது&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/30df54b4-f2e9-47e7-8988-d980dbcbd2a2/26-6a706dfad7e92.webp' /></p><p>இவ்வாறான சந்தர்ப்பத்தில் தமிழ் மக்களின் வாழ்வாதார பொருளாதார நிலைமைகளை
மேம்படுத்துவதற்கு பல விடயங்கள் கூட இன்று பாரியளவில் கொண்டு செல்லப்படாமல்
இருக்கிறது.
</p><p>
மட்டக்களப்பு மாவட்டத்தில் மிக அண்மையில் மாவட்ட அபிவிருத்திக்குழு
கூட்டத்தில் பல விடயங்கள் முன்வைக்கின்ற முக்கியமாக கித்துள் முந்தனை ஆறு நீர்
பாசன திட்டம் சம்பந்தமாக மாவட்டத்தில் அடிப்படையாக விவசாயம் பொருளாதாரத்தையும்
அதோடு மீன்பிடி வெள்ள தடுப்பு நடவடிக்கை எதிர்கால குடிநீர் தேவைகொண்டு செல்ல
வேண்டிய திட்டம் ஒதுக்கப்பட்ட ஆய்வுகளுக்கான நிதியில் ஒரு வீதம்
பயன்படுத்தப்பட்டதாக அறிக்கை காட்டப்பட்டது.</p><p>இது மிக மனவருத்தமான விடயம் அது மட்டுமல்ல அது சம்மந்தமாக கேள்வி எழுப்பி
இருந்தோம் அதற்கு உரிய தீர்வுகள் முன்வைக்கப்படவில்லை.</p><h2>&nbsp;தமிழ் மக்களின் பாரிய வாக்குகள்</h2><p>கடல்சார் அபிவிருத்தியை கொண்டுவருவதற்கு களுவங்கேணி பகுதியில் ஒரு மீன்
பதப்படுத்தும் தொழிற்சாலை கோரியிருந்தோம் அதற்கான நிதி ஆரம்ப காலங்களில்
கொடுக்கப்படுவதாக உறுதியளிக்கப்பட்டிருந்தும் எமக்கு அறிவிக்கப்படாமல் பிரதேச
அபிவிருத்தி கூட்டங்களில் உறுதிமொழி அளித்தனர்.</p><p> அதனை வேறு தேவைக்கு
மாற்றப்பட்டதாக கடந்த மாவட்ட அபிவிருத்தி குழுவில் கூறப்பட்டது

இவ்வாறு மேய்ச்சல் தரை, விவசாயம், மீன்பிடித்துறை போன்றவற்றை அபிவிருத்தி
செய்வதற்கான எந்த ஒரு சிறந்த திட்டமிடல் முறைமையும் இல்லாது தமிழ் மக்கள் மீது
பல நெருக்கடிகளை கொண்டு வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dd7ba15a-e7cd-432f-809e-cef76fa40634/26-6a706dfbcb3fb.webp' /></p><p>ஆகவே இவ்வாறான விடயங்களை அரசு மிக பொறுப்பான முறையில் தமிழ் மக்கள் நம்பிக்கை
கொள்ளக் கூடிய வகையில் கையாள வேண்டும் தென்னிலங்கையில் இருக்கின்ற இனவாத
சக்திகளுக்கு பயந்தே அதனை கைவிட்டு தற்போது துணிச்சலாக பல சந்தர்ப்பங்களில்
நடவடிக்கை எடுப்பதை காணக்கூடியதாக இருக்கின்றது.</p><p>
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல விசாரணைகளை முன்னெடுத்து பல பேரை கைது
செய்வதுடன் போதைப்பொருள் பாதாள குழுக்கள் சம்பந்தப்பட்ட விடயங்கள் ஊழல்
மற்றும் இலஞ்சம் விடயங்களை முன்னெடுத்து செல்கின்ற இந்த அரசாங்கத்துக்கு ஏன்
தென்னிலங்கையில் இருக்கும் இந்த இனவாத சக்தி சக்திகளுக்கு பயந்து கொண்டு இந்த
விடயங்களை மெதுவாக மந்தமாக கையாளுகின்றதா?

அல்லது அரசுக்கும் அடிப்படையாக தமிழ் தேசியம் சார்ந்த விடயங்கள் வளர்ந்து
விடக் கூடாது என்ற எண்ணம் இருக்கிறதா? என சந்தேகத்துடன் பார்க்க வேண்டிய
நிலைமை இருக்கின்றது.</p><p>எனவே இதனை நீக்க வேண்டிய பொறுப்பு தேர்தல் காலங்களில்
தமிழ் மக்களின் பாரிய வாக்குகளை பெற்றுக் கொண்ட தேசிய மக்கள் சக்தி அரசுக்கும்
இருக்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.</p><p> </p><p></p>]]></content>
            <updated>2026-08-03T10:37:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Bavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மட்டக்களப்பு அமிர்தகழி மாமாங்கேஸ்வரர் ஆலய மகோற்சவப் பெருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/batticaloa-sri-mamangeswarar-temple-flag-hoisting-1785751449"></link>
            <id>https://ibctamil.com/article/batticaloa-sri-mamangeswarar-temple-flag-hoisting-1785751449</id>
            <summary type="text">வரலாற்றுச் சிறப்புமிக்க மட்டக்களப்பு அமிர்தகழி மாமாங்கேஸ்வரர் ஆலய மகோற்சவப்
பெருவிழா இன்று (03) திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

மூர்த்தி, தலம்,...</summary>
            <content type="html"><![CDATA[<p>வரலாற்றுச் சிறப்புமிக்க மட்டக்களப்பு அமிர்தகழி மாமாங்கேஸ்வரர் ஆலய மகோற்சவப்
பெருவிழா இன்று (03) திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.</p><p>

மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றும் ஒருங்கே அமைந்த ஆலயமான அமிர்தகழி
மாமாங்கப் பிள்ளையார் ஆலய உற்சவப் பெருவிழாவின் துவசாரோகண உற்சவம் இன்று
நடைபெறுகிறது.</p><p>

மூலமூர்த்திக்கும் பரிவார மூர்த்திகளுக்கும் நடைபெற்ற சிறப்புப் பூஜை
வழிபாடுகளை அடுத்து, வசந்த மண்டபத்திலிருந்து எம்பெருமான் சர்வ
அலங்காரங்களுடன் கொடிஸ்தம்பம் அமையப்பெற்றுள்ள இடத்திற்கு எழுந்தருளினார்.</p><p></p><h2>சிறப்பாக நடைபெற்ற கொடியேற்றம்</h2><p>

பின்னர் கொடிஸ்தம்பத்திற்குச் சிறப்பு அபிஷேக பூஜைகளை சிவாச்சாரிய பெருமக்கள்
நடத்தி வைத்த நிலையில் மங்கள வாத்தியங்கள் முழங்க, வேத தேவாரப் பாராயணங்கள் இடம்பெற, பக்தர்களின்
அரோகரா கோஷத்துடன் கொடியேற்றம் சிறப்பாக நடந்தேறியது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8175ad3a-4bab-4dab-9936-117b31da069e/26-6a706c95d7935.webp' /></p><p>

மாமாங்கேஸ்வரரின் கொடியேற்றத்தைக் காண்பதற்காக நாட்டின் பல்வேறு
பகுதிகளிலிருந்தும் பெருந்திரளான பக்தர்கள் வருகை தந்திருந்தனர்.
</p><p>
அமிர்தகழி மாமாங்கேஸ்வரரின் தீர்த்த உற்சவப் பெருவிழா ஆடி அமாவாசை தினத்தன்று
(12) திகதி நடைபெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-03T10:33:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[மின்சார கட்டண திருத்தம் தொடர்பில் வெளியான அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/announcement-regarding-electricity-tariff-changes-1785752524"></link>
            <id>https://tamilwin.com/article/announcement-regarding-electricity-tariff-changes-1785752524</id>
            <summary type="text">2026 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டிற்கு மின்சார கட்டணங்களில் எந்த திருத்தமும் மேற்கொள்ளப்படமாட்டாது என இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளத...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டிற்கு மின்சார கட்டணங்களில் எந்த திருத்தமும் மேற்கொள்ளப்படமாட்டாது என இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.</p><p>தேசிய அமைப்பு செயல்பாட்டு நிறுவனம் (NSO) சமர்ப்பித்த மின்சார விநியோக செலவு அறிக்கையை மீளாய்வு செய்த பின்னரே ஆணைக்குழு இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.</p><p>&nbsp;</p><h2>இரண்டாவது காலாண்டில் நடைமுறை</h2><p>அதன்படி, நடப்பு காலாண்டில் மின்சார விநியோகத்திற்கான செலவு 0.3 சதவீதம் மட்டுமே அதிகரித்துள்ளதால், கட்டணத் திருத்தம் அவசியமில்லை என அறிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/894e266f-3e4a-4d16-a3c2-d37eec1ae573/26-6a706e3ecf23f.webp' />&nbsp;</p><p>
</p><p>
இதற்கமைய, கடந்த இரண்டாவது காலாண்டில் நடைமுறையில் இருந்த மின்சாரக் கட்டண முறைமையே தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-03T10:32:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA['தி ஒடிசி' உலகளவில் 900 மில்லியன் டாலர்களுக்கும் மேல் வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/the-odyssey-movie-17-days-box-office-collection-1785752172"></link>
            <id>https://cineulagam.com/article/the-odyssey-movie-17-days-box-office-collection-1785752172</id>
            <summary type="text">இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் உருவான &#039;தி ஒடிசி&#039; திரைப்படம் உலகளவில் 17 நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் உருவான 'தி ஒடிசி' திரைப்படம் உலகளவில் 17 நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதைப்பற்றி பார்க்கலாம் வாங்க.&nbsp;</p><p></p><h2>தி ஒடிசி</h2><p>உலகப்புகழ் பெற்ற இயக்குநர்களில் ஒருவர் கிறிஸ்டோபர் நோலன், இவரது இயக்கத்தில் Interstellar, Inception, The Dark Knight, Dunkirk என பல ஆகச்சிறந்த படைப்புகள் வெளியாகியுள்ளன.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/485d8387-0593-460c-a667-f1a934ddc40a/26-6a706a705bc5c.webp' /></p><p>இதையடுத்து இவர் இயக்கத்தில் உருவாகி கடந்த ஜூலை 17-ஆம் தேதி வெளிவந்த திரைப்படம்தான் 'தி <a href="https://www.youtube.com/watch?v=eq3GR1b8t-U" target="_blank">ஒடிசி</a>'. இப்படத்தில் டாம் ஹொலண்ட், மேட் டாமன், Anne Hathaway, ஜென்டயா ஆகியோர் நடித்துள்ளனர்.</p><h2>வசூல்&nbsp;</h2><p>
</p><p>
பிரம்மாண்டமான பொருட்செலவில் எடுக்கப்பட்ட இப்படம் முதல் நாளில் இருந்தே வசூலை வாரிக்குவித்து வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c6349ce9-89d3-4330-a88a-58ed4073b6a9/26-6a706a6fa8281.webp' /></p><p>

இந்நிலையில், 250 மில்லியன் டாலர் பட்ஜெட்டில் உருவான 'தி ஒடிசி' 17 நாட்களில் உலகளவில் 911 மில்லியன் டாலர் வசூல் செய்துள்ளது. இதன் இந்திய மதிப்பு ரூ. 8,600 கோடிக்கும் மேல் ஆகும்.</p>]]></content>
            <updated>2026-08-03T10:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[களு கங்கை நீர்மட்டம் உயர்வு: இரத்தினபுரி மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள வெள்ள அபாய எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/kalu-ganga-water-level-rises-1785752492"></link>
            <id>https://tamilwin.com/article/kalu-ganga-water-level-rises-1785752492</id>
            <summary type="text">நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக களு கங்கையின் நீர்மட்டம் உயர்ந்து, வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் இருப்பதாக நீர்ப்பாசனத் திணைக்களம் எச்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக களு கங்கையின் நீர்மட்டம் உயர்ந்து, வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் இருப்பதாக நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
</p><p>
களு கங்கையைச் சுற்றியுள்ள பகுதிகளில் பராமரிக்கப்பட்டு வரும் நீரியல் அளவீட்டு நிலையங்களில் பதிவாகியுள்ள நீர்மட்டத் தரவுகளைப் பகுப்பாய்வு செய்ததன் அடிப்படையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p>
</p><p>
இதன்படி, களு கங்கையைச் சுற்றியுள்ள தாழ்நிலப் பகுதிகளில் அடுத்த சில மணிநேரங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.</p><h2>பொதுமக்கள் கவனத்திற்கு..&nbsp;</h2><p>

இரத்தினபுரி மாவட்டத்தின் பெல்மடுல்ல, நிவித்திகலை, இரத்தினபுரி, குருவிட்ட, அயகம, எலபாத்த உள்ளிட்ட பகுதிகளுக்கு இந்த வெள்ள அபாயம் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/91cfa037-6e38-4188-84de-7e3023972835/26-6a706c79dfa8e.webp' /></p><p>
</p><p>
எனவே, இரத்தினபுரி மாவட்டத்தில் வசிக்கும் பொதுமக்களும், சாரதிகளும் மிகுந்த அவதானத்துடனும் எச்சரிக்கையுடனும் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
</p><p>
அத்துடன், நிலைமையை கருத்திற்கொண்டு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகளிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-03T10:25:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அடுத்து சிக்கப்போகும் முன்னாள் ஜனாதிபதியின் செல்லப்பிள்ளை; குற்றப்பத்திரிகை தாக்கல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/charge-sheet-filed-against-yoshitha-karannagoda-1785740586"></link>
            <id>https://jvpnews.com/article/charge-sheet-filed-against-yoshitha-karannagoda-1785740586</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;ஊழல் குற்றச்சாட்டு ஒன்று தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் புதல்வர் யோஷித ராஜபக்ஸ மற்றும் முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;ஊழல் குற்றச்சாட்டு ஒன்று தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் புதல்வர் யோஷித ராஜபக்ஸ மற்றும் முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட ஆகியோருக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

​</p><p>2006 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 1 ஆம் திகதிக்கும் 2007 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 8 ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலத்தில் இலங்கை கடற்படையின் தளபதியாகக் கடமையாற்றியபோது,</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/694046d6-21e8-463b-b57a-7b3cc744f7e4/26-6a703d2c6f2f3.webp' /></p><p></p><h2>யோஷித ராஜபக்ஸவிற்கும் எதிராகக் குற்றச்சாட்டுகள்</h2><p> </p><p>யோஷித ராஜபக்ஸ என்ற பிரதிவாதி பிரித்தானியாவின் அரச கடற்படைப் பயிற்சிப் கல்லூரியின் 'Royal Navy Young Officers Course' பாடநெறிக்குச் செல்வதற்கு முறையற்ற விதத்தில் சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்து அரசாங்கத்திற்கு நஷ்டத்தை ஏற்படுத்தியதாகக் குற்றம் சுமத்தி, முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொடவிற்கு எதிராகக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.</p><p></p><p> </p><p>

இதனூடாக முறையற்ற இலாபத்தைப் பெற்றுக் கொண்டமை தொடர்பில் பிரதிவாதியான யோஷித ராஜபக்ஸவிற்கும் எதிராகக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. 

​ பிரதிவாதிகளுக்கு எதிராக ஆணைக்குழுவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளின் எண்ணிக்கை 08 ஆகும்.</p><p>. 

​இக்குற்றப்பத்திரிகைகள் தற்போது கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன், அதனை பிரதிவாதிகளிடம் கையளிக்க எதிர்காலத்தில் நீதிமன்றத்தினால் அழைப்பாணை பிறப்பிக்கப்படவுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-03T10:18:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[48 மணித்தியாலங்களில் பெருவெள்ள நிலைமை; சிவப்பு எச்சரிக்கை விடுப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/flood-within-48-hours-red-alert-mahaweli-river-1785752169"></link>
            <id>https://jvpnews.com/article/flood-within-48-hours-red-alert-mahaweli-river-1785752169</id>
            <summary type="text">மத்திய மாகாணத்தில் நிலவும் சீரற்ற காலனிலை காரணமாக மகாவலி கங்கையை அண்டிய தாழ்நிலப் பகுதிகளுக்கு அடுத்த 48 மணித்தியாலங்களில் பெருவெள்ள நிலைமை ஏற்படுவது ...</summary>
            <content type="html"><![CDATA[<p>மத்திய மாகாணத்தில் நிலவும் சீரற்ற காலனிலை காரணமாக மகாவலி கங்கையை அண்டிய தாழ்நிலப் பகுதிகளுக்கு அடுத்த 48 மணித்தியாலங்களில் பெருவெள்ள நிலைமை ஏற்படுவது குறித்த சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

​</p><p>இந்த அறிவித்தல் ஒகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி பிற்பகல் 1.00 மணி வரை செல்லுபடியாகும் என நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது. 

​</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4b2d48bb-2bf7-43a5-a11a-74584ee76d1b/26-6a706a6bce9e7.webp' /></p><h2>&nbsp;ஒகஸ்ட்&nbsp; 5 ஆம் திகதி&nbsp;வரை செல்லுபடியாகும் </h2><p> </p><p>மகாவலி கங்கையின் மேல் நீரேந்துப் பகுதிகளில் கடந்த சில மணித்தியாலங்களில் பெய்த மழைவீழ்ச்சி, மேலும் மழை பெய்யக்கூடும் என்ற முன்னறிவிப்பு மற்றும் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் திறக்கப்படக்கூடிய அபாயம் என்பவற்றைக் கருத்திற்கொண்டு&nbsp;சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.​</p><p></p><p>அதன்படி, மகாவலி கங்கை வடிநிலத்தின் உடுநுவர, உடபலாத, யடிநுவர, தொலுவ, கொத்மலை, பஸ்பாகே, கங்க இஹல கோரள, பஸ்பாகே கோரள, கங்கவட்ட கோரள, ஹாரிஸ்பத்துவ மற்றும் பாததும்புர ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்குட்பட்ட மகாவலி கங்கையை அண்டிய தாழ்நிலப் பகுதிகளுக்கே இந்தப் பெருவெள்ள அபாய அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. 

​</p><p></p><p>அத்துடன், அப்பகுதிகளில் மகாவலி கங்கைக்கு அண்மித்த தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் இது தொடர்பில் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
</p><p>
மேலும் , ஏற்படக்கூடிய வெள்ள நிலைமையிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் நீர்ப்பாசனத் திணைக்களம் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-03T10:14:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாகிஸ்தானில் தீவிரவாத எதிர்ப்பு பேரணி மீது தற்கொலைத் தாக்குதல் : பலர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/suicide-bomber-targets-rally-in-pakistan-1785751085"></link>
            <id>https://ibctamil.com/article/suicide-bomber-targets-rally-in-pakistan-1785751085</id>
            <summary type="text">வடமேற்கு பாகிஸ்தானில் தீவிரவாத எதிர்ப்புப் பேரணியில் பங்கேற்ற போராட்டக்காரர்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் குறைந்தது 14 பேர் கொல்ல...</summary>
            <content type="html"><![CDATA[<p>வடமேற்கு பாகிஸ்தானில் தீவிரவாத எதிர்ப்புப் பேரணியில் பங்கேற்ற போராட்டக்காரர்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் குறைந்தது 14 பேர் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
</p><p>
கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள ஸ்வாட் பள்ளத்தாக்கு நகரமான கபலில் இந்தத் தாக்குதல் நடந்தது. அங்கு, ஒரு காவல் நிலையத்திற்கு அருகே கூடியிருந்த போராட்டக்காரர்கள், தீவிரவாத எதிர்ப்பு முழக்கங்களை எழுப்பி அமைதியான வாழ்வைக் கோரினர்.</p><h2>தற்கொலைதாரி உட்பட 14 பேர் பலி</h2><p>பலியானவர்களில் ஐந்து காவல்துறை அதிகாரிகளும் எட்டு பொதுமக்களும் அடங்குவர் என்று ஒரு காவல்துறை அதிகாரி தெரிவித்தார். மேலும், உயிரிழந்த 14-வது நபர் தற்கொலைத் தாக்குதல் நடத்தியவர் என்று நம்பப்படுவதாகவும் அவர் கூறினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/30d327b5-315b-4bab-9501-e243bab0655f/26-6a706dadab202.webp' /></p><p>இந்தத் தாக்குதலில் மேலும் குறைந்தது 18 பேர் காயமடைந்தனர். தாக்குதல் நடத்தியவருக்கு உதவியிருக்கக்கூடியவர்களை கைது செய்ய காவல்துறை ஒரு நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது.</p><p>&nbsp; &nbsp;இந்தக் கொடூரச் சம்பவத்திற்குச் சற்று முன்பு, தீவிரவாதிகளுக்கு எதிராக உறுதியான நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் தவறிவிட்டதாகப் பேரணியில் பேசியவர்கள் குற்றம் சாட்டியதாக நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.</p><p></p><h2>&nbsp;எல்லைப் பகுதிகளில் கடுமையாக அதிகரித்துள்ள&nbsp;தீவிரவாதம் </h2><p>
</p><p>
சமீபத்திய மாதங்களில் நாட்டின் எல்லைப் பகுதிகளில் தீவிரவாதம் கடுமையாக அதிகரித்துள்ளது. இது முக்கியமாக இராணுவம் மற்றும் காவல்துறையைக் குறிவைக்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cbfa2729-7245-4a30-b7db-70e2bb035d27/26-6a706dae98042.webp' /></p><p>

இதற்குப் பதிலளிக்கும் விதமாக, தீவிரவாதிகளின் இருப்பைக் கண்டித்து, அப்பகுதி மக்கள் தலிபான்களுக்கு எதிரான பேரணிகளைத் தொடர்ச்சியாக ஏற்பாடு செய்துள்ளனர்.
</p><p>
சுவாத் பள்ளத்தாக்கு ஒரு காலத்தில், ஷரியா அல்லது இஸ்லாமியச் சட்டத்தின் கடுமையான சட்டத்தை திணித்த இஸ்லாமியத் தீவிரவாதிகளின் கோட்டையாக இருந்தது.</p><p>

பின்னர் 2007-ல், பாகிஸ்தான் இராணுவம் ஒரு பெரிய நடவடிக்கையை மேற்கொண்டு அவர்களை வெளியேற்றி, அரசாங்கக் கட்டுப்பாட்டை மீட்டெடுத்தது.
</p><p>
இருப்பினும், தீவிரவாதிகள் அந்தப் பள்ளத்தாக்கில் மீண்டும் தலைதூக்கியுள்ளனர். இது, பாகிஸ்தானிய தலிபான்கள் அப்பகுதியில் மீண்டும் காலூன்ற முயல்கிறார்கள் என்ற அச்சத்தைத் தோற்றுவித்துள்ளது.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-03T10:13:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நடுவானில் விமானத்திற்கு எதிரே திடீரென தோன்றிய பறக்கும் தட்டு; விமானி அதிர்ச்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/pilot-spots-flying-saucer-near-london-gatwick-1785741617"></link>
            <id>https://canadamirror.com/article/pilot-spots-flying-saucer-near-london-gatwick-1785741617</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;இங்கிலாந்தில் நடுவானில் விமானம் வந்தபோது, 300 அடி தொலைவில் பறக்கும் தட்டு நெருங்கி விமானிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



 லண்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;இங்கிலாந்தில் நடுவானில் விமானம் வந்தபோது, 300 அடி தொலைவில் பறக்கும் தட்டு நெருங்கி விமானிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><p>



 லண்டன் நகரில் கேட்விக் விமான நிலையத்தில் எயார்பஸ் ஏ319 என்ற பயணிகள் விமானம் தரையிறங்க வேண்டி இருந்தது. இதற்காக கேட்விக் பகுதிக்கு தெற்கே 7 மைல்கள் தொலைவில், சசெக்ஸ் கவுன்டி பகுதியில் ஹேங்கிராஸ் அருகே நடுவானில் பறந்து வந்து கொண்டிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d9377229-cd5a-4269-abb1-6d94091857f4/26-6a704133588aa.webp' /></p><h2>திடீரென மர்ம பொருள்</h2><p>
</p><p>


விமானம் தரையிறங்க சில நிமிடங்கள் இருக்கும்போது, அந்த சம்பவம் நடந்தது. திடீரென மர்ம பொருள் ஒன்று மெதுவாக மேலே எழும்பி வந்தது. </p><p>

விமானிக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில், விமானத்தின் வலது இறக்கை பகுதியருகே வட்ட வடிவிலான அந்த பறக்கும் தட்டு 100 முதல் 300 அடி இடைவெளியில் விமானத்திற்கு மிக நெருங்கிய தொலைவில் வந்துள்ளது.
</p><p>


தூரத்திலேயே விமானி அதனை கவனித்து விட்டார். வேறு திசைக்கு செல்வதற்கு ஏற்ப விமானமும், முன்பே திசை திருப்பப்பட்டு விட்டது. இதனால், பெரிய அளவில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. </p><p>எனினும், விமானம் தரையிறங்கியதும் இதுபற்றி உயரதிகாரிகளுக்கு விமானி தகவல் தெரிவித்து உள்ளார்.


அது ஒரு வட்ட தட்டு அல்லது பறக்கும் தட்டு அல்லது டிரோனாக இருக்க கூடும் என அதிகாரிகளிடம் கூறியுள்ளார்.</p><p> அது, விமானத்திற்கு எதிர் திசையில் மிக நெருக்கத்தில், விமானத்தின் மட்டத்திற்கு இணையாக அதே மட்டத்தில் வந்தது. வலது இறக்கை பகுதியில் கடந்து சென்றது என கூறியுள்ளார்.
</p><p>


அந்த தட்டின் வெளிப்புற விளிம்பு பகுதிகளில் கருப்பு நிறத்தில் அடையாளங்கள் இருந்தன. அது நவீன டிரோனாக இருக்க கூடும். ஆனால், அதன் சரியான அடையாளமோ அல்லது எந்த பகுதியில் இருந்து வந்தது என்றோ தெரியவில்லை என கூறியுள்ளார்.</p><p>


 
இது தொடர்பில் எனினும் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டு உள்ளனர். இதுபற்றி இங்கிலாந்தின் எயார்பிராக்ஸ் என்ற தனியார் அமைப்பு தீவிர கவனம் கொண்டு நிலைமையை பற்றி கண்காணித்து, தீர விசாரித்து வருகிறது.</p>]]></content>
            <updated>2026-08-03T10:01:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[சீரியல் நடிகை ரேஷ்மாவின் ரீசெண்ட் போட்டோஷூட்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/actress-reshma-muralidaran-recent-black-dress-pics-1785751792"></link>
            <id>https://viduppu.com/article/actress-reshma-muralidaran-recent-black-dress-pics-1785751792</id>
            <summary type="text">ரேஷ்மா முரளிதரன்ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற சீரியல் தான் பூவே உனக்காக. இந்த சீரியலில் முக்கிய ரோலில் ...</summary>
            <content type="html"><![CDATA[<h2>ரேஷ்மா முரளிதரன்</h2><p>ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற சீரியல் தான் பூவே உனக்காக. இந்த சீரியலில் முக்கிய ரோலில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை ரேஷ்மா முரளிதரன்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b17e0e42-832f-4ecf-bea5-e67f857fcbdf/26-6a7068fdd8608.webp' /></p><p>
4 ஆண்டுகள் ஒளிப்பரப்பாகிய இந்த சீரியலுக்குப்பின் அபி டைலர், நெஞ்சத்தை கிள்ளாதே, கிழக்கு வாசலே, செல்லமே செல்லமே போன்ற சீரியல்களில் நடித்து வந்தார்.</p><p> கடந்த 2021ல் சீரியல் நடிகர் மதன் பாண்டியனை காதலித்து திருமணம் செய்து கொண்டார் ரேஷ்மா.

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் ரேஷ்மா, கருப்புநிற ஆடையணிந்து எடுத்த கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-08-03T10:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை சந்தித்து வாழ்த்து பெற்ற சமூகநீதித்துறை அமைச்சர் வன்னி அரசு..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/minister-vanni-arasu-meets-superstar-rajinikanth-1785748772"></link>
            <id>https://cineulagam.com/article/minister-vanni-arasu-meets-superstar-rajinikanth-1785748772</id>
            <summary type="text">தமிழ்நாட்டின் சமூகநீதித்துறை அமைச்சர் வன்னி அரசு, தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும் சூப்பர்ஸ்டாருமான ரஜினிகாந்தை சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார்.&amp;nbsp...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழ்நாட்டின் சமூகநீதித்துறை அமைச்சர் வன்னி அரசு, தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும் சூப்பர்ஸ்டாருமான ரஜினிகாந்தை சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார்.&nbsp;&nbsp;</p><h2>ரஜினிகாந்த்</h2><p>தமிழ் சினிமா மட்டுமின்றி இந்திய சினிமாவிலேயே உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக இருப்பவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த். இவர் எங்கு சென்றாலும் இவருக்கென்றே தனி மரியாதை கிடைக்கும்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/01822ace-413d-43ce-ba63-65511d2aee4f/26-6a705d278ffa2.webp' /></p><p>இவர் நடிப்பில் அடுத்து ஜெயிலர் 2 திரைப்படம் வெளியாகவுள்ளது. இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படம் அக்டோபர் 15-ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c2c5e020-5d1d-41a4-adab-76ea44e03086/26-6a705d2848734.webp' /></p><p> 

ஜெயிலர் 2-வை தொடர்ந்து இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் உருவாகி வரும் தர்மன் திரைப்படத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். இப்படத்தை கமல் ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கிறது. ராஷி கண்ணா, சிம்ரன் ஆகியோர் இப்படத்தில் நடிக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.</p><p></p><h2>அமைச்சர் வன்னி அரசு</h2><p> </p><p>

இந்நிலையில், இன்று சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை தமிழ்நாடு சமூகநீதித்துறை அமைச்சர் வன்னி அரசு அவர்கள் நேரில் சென்று சந்தித்து வாழ்த்துகளை பெற்றுள்ளார். அந்த இனிய தருணத்தில் எடுத்த புகைப்படங்களை தனது எக்ஸ் பக்கத்தில் மகிழ்ச்சியுடன் வன்னி அரசு பதிவு செய்திருக்கிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dca49bc2-ca69-4d90-8e90-51fadeaafe1e/26-6a705d28f2de6.webp' /></p><p>அவர் வெளியிட்டுள்ள பதிவில், "திரை உலகின் சூப்பர்ஸ்டார் திருமிகு. ரஜினிகாந்த் அவர்களை சந்தித்து இன்று வாழ்த்துகள் பெற்றேன். சமூகநீதித்துறை அமைச்சராக பதவி ஏற்றதும் சூப்பர் ஸ்டார் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற விரும்பினேன். இப்போதுதான் அதற்கான வாய்ப்பு கிடைத்தது. 'நிறைய மக்களுக்கு செய்யுங்கள் வாழ்த்துகள்' என வாழ்த்தி அனுப்பினார்" என பதிவிட்டுள்ளார்.</p><p>இதோ பாருங்க:</p><p><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr"><a href="https://x.com/hashtag/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#வாழ்த்து</a> <br>திரை உலகின் Super star திருமிகு.<a href="https://x.com/rajinikanth?ref_src=twsrc%5Etfw">@rajinikanth</a> அவர்களை சந்தித்து<br>இன்று வாழ்த்துகள் பெற்றேன்.<br>சமூகநீதித்துறை அமைச்சராக பதவி ஏற்றதும் சூப்பர் ஸ்டார் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற விரும்பினேன்.<br>இப்போது தான் அதற்கான வாய்ப்பு கிடைத்தது.<br>“நிறைய மக்களுக்கு செய்யுங்கள்… <a href="https://t.co/eeQpBvyhWn">pic.twitter.com/eeQpBvyhWn</a></p>&mdash; வன்னி அரசு (@VanniTamizhVCK) <a href="https://x.com/VanniTamizhVCK/status/2084171474424963097?ref_src=twsrc%5Etfw">August 3, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p> 
</p>]]></content>
            <updated>2026-08-03T10:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sudaron</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிளிநொச்சியில் கோர விபத்து : ஸ்தலத்திலேயே பெண் உயிரிழப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/accident-in-kilinochchi-woman-dies-on-the-spot-1785749620"></link>
            <id>https://ibctamil.com/article/accident-in-kilinochchi-woman-dies-on-the-spot-1785749620</id>
            <summary type="text">கிளிநொச்சி - இயக்கச்சி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.இயக்கச்சி சந்தியில் இருந்து கோவில் வயல் செல்லும் பி...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிளிநொச்சி - இயக்கச்சி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.</p><p>இயக்கச்சி சந்தியில் இருந்து கோவில் வயல் செல்லும் பிரதான வீதியில் இன்று (03) காலை குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.&nbsp;</p><p>மோட்டார் சைக்கிள் ஒன்றும் கயஸ் வாகனம்
ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.</p><p></p><h2>காவல்துறையினர் விசாரணை</h2><p>இந்த நிலையில் விபத்துச் சம்பவம் தொடர்பில் பளை காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6a0d2fe4-ae49-4b00-a094-b5425e8fe058/26-6a70668f380cb.webp' /></p><p>உயிரிழந்தவரின் சடலம் உடற்கூற்று பரிசோதனைகளுக்கா கிளிநொச்சி மாவட்ட பொது
வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-03T09:59:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[சூரியன் - ராகுவால் உருவான சடாஷ்டக யோகம்: இந்த ராசிக்காரர்கள் ஆகஸ்ட் 17 வரை கவனம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/shadashtak-yog-2026-who-have-to-be-careful-1785749918"></link>
            <id>https://manithan.com/article/shadashtak-yog-2026-who-have-to-be-careful-1785749918</id>
            <summary type="text">ஜோதிட சாஸ்திரத்தின்படி, இரண்டு கிரகங்கள் ஒன்றுக்கொன்று 6 மற்றும் 8-வது வீட்டில் அமைந்தால் அதனை &#039;சடாஷ்டக யோகம்&#039; என்று அழைக்கப்படுகிறது. இந்த யோகம் பொது...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜோதிட சாஸ்திரத்தின்படி, இரண்டு கிரகங்கள் ஒன்றுக்கொன்று 6 மற்றும் 8-வது வீட்டில் அமைந்தால் அதனை 'சடாஷ்டக யோகம்' என்று அழைக்கப்படுகிறது. </p><p>இந்த யோகம் பொதுவாக அசுபமான அமைப்பாகக் கருதப்படுவதுடன், வாழ்க்கையில் பல்வேறு சவால்கள் மற்றும் எதிர்பாராத சூழ்நிலைகளை உருவாக்கும் காலமாகவும் ஜோதிடத்தில் குறிப்பிடப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/391dc70e-4b2b-46b4-beb1-3beeb6197ba1/26-6a706644ee3cb.webp' /></p><p></p><p>கிரகங்களின் பெயர்ச்சி மற்றும் அவற்றின் பரஸ்பர நிலைகள் அனைத்து ராசிகளின் வாழ்க்கையிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என ஜோதிட நம்பிக்கை கூறுகிறது.</p><p>அந்த வகையில், ஜூலை 16, 2026 முதல் சூரியன் மற்றும் ராகு ஆகிய கிரகங்களின் அமைப்பால் 'சடாஷ்டக யோகம்' உருவாகியுள்ளது. இந்த யோகத்தின் தாக்கம் ஆகஸ்ட் 17, 2026 வரை, நீடிக்கும் அதன் தாக்கத்தால் பெருமளவில் பாதக விளைவுகளை சந்திக்கப்போகும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.</p><h2>ரிஷபம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/89ac6f2f-acef-4ce2-9121-b920112a995e/26-6a706645a6646.webp' /></p><h2>
</h2><p>ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்தக் காலகட்டத்தில் பணியிடத்தில் மேலதிகாரிகளுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. எனவே, எந்த விஷயத்திலும் உணர்ச்சிவசப்பட்டு பேசாமல், பொறுமையுடனும் நிதானத்துடனும் அணுகுவது நல்லது.</p><p> குறிப்பாக, வார்த்தைகளில் கடுமையைத் தவிர்ப்பது தேவையற்ற பிரச்சினைகளைத் தவிர்க்க உதவும். உங்கள் பணியில் முழு கவனத்தையும் செலுத்தினால் நல்ல பலன்களைப் பெறலாம். மேலும், முதலீடு, கடன், சொத்து வாங்குதல் போன்ற நிதி தொடர்பான முக்கிய முடிவுகளை அவசரமாக எடுக்காமல், அனைத்து அம்சங்களையும் ஆராய்ந்து முடிவு செய்வது நன்மை தரும்.
</p><h2>
மிதுனம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/02c0f063-0544-42dc-9587-a924fac7d588/26-6a7066467b9ca.webp' /></p><p>
மிதுன ராசிக்காரர்கள் தங்கள் தொழில் மற்றும் பணியில் முன்னேற்றத்தை அடைய தன்னம்பிக்கையுடனும் தைரியத்துடனும் செயல்பட வேண்டிய காலம் இது.</p><p> புதிய திட்டங்கள் அல்லது புதிய வாய்ப்புகள் உங்கள் வாழ்க்கையில் உருவாகக்கூடும். அவற்றை சரியாகப் பயன்படுத்தினால் வளர்ச்சிக்கான பாதை திறக்கும். </p><p>இருப்பினும், பெரிய முதலீடுகள் அல்லது முக்கிய முடிவுகளை எடுப்பதற்கு முன் அனைத்து சூழ்நிலைகளையும் நன்கு ஆராய்ந்து செயல்படுவது அவசியம். அவசரப்பட்டு எடுக்கும் முடிவுகள் எதிர்பாராத நிதி இழப்புகளையோ அல்லது சிரமங்களையோ ஏற்படுத்தக்கூடும்.எனவே, பொறுமையும் திட்டமிடலும் இந்தக் காலத்தில் மிகவும் முக்கியம்.</p><h2>
துலாம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/08d83e12-0bf4-4394-820f-e98ead3c55c1/26-6a7066472dd5e.webp' /></p><p></p><h2>
</h2><p>துலாம் ராசிக்காரர்களுக்கு இந்தக் காலகட்டம் சற்று சவாலானதாக இருக்கலாம். குடும்பத்தில் சிறிய கருத்து வேறுபாடுகள் அல்லது பதற்றமான சூழ்நிலைகள் உருவாக வாய்ப்புள்ளதால், அனைவரிடமும் அமைதியான அணுகுமுறையை கடைப்பிடிப்பது நல்லது. </p><p>பேசும்போது கோபம் அல்லது கடுமையான வார்த்தைகளை இந்த காலகட்டத்தில் தவிர்ப்பது சிறப்பு, அதிக நிதியை முதலீடு செய்யும் விடயங்களில் சற்று ஜாக்கிரதையாக இருக்கவேண்டியது அவசியம்.குறிப்பாக வாக்குவாதங்களை தவிர்து தங்களின் வேலையில் மாத்திரம் கவனம் செலுத்தினால் பாதிப்புகளை குறைத்துக்கொள்ளலாம்.</p><p><b>இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;</b></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்<b> <u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b></td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-03T09:58:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[டேட்டிங் ஆசை; ஒரே நாளில் ஒரு மாத சம்பளத்தை இழந்த இளைஞன்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/man-loses-a-month-salary-single-day-due-dating-app-1785751245"></link>
            <id>https://jvpnews.com/article/man-loses-a-month-salary-single-day-due-dating-app-1785751245</id>
            <summary type="text">&amp;nbsp; டெல்லியில் டேட்டிங் செயலி மூலம் இணையத்தில் அறிமுகமான&amp;nbsp;பெண்&amp;nbsp; ஒருவரை சந்தித்த இளைஞருக்கு முதல் நாளில் 20,500 ரூபாய் செலவான சம்பவம் சமூக ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; டெல்லியில் டேட்டிங் செயலி மூலம் இணையத்தில் அறிமுகமான&nbsp;பெண்&nbsp; ஒருவரை சந்தித்த இளைஞருக்கு முதல் நாளில் 20,500 ரூபாய் செலவான சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. </p><p>
 
 
இணையத்தில் அறிமுகமான பெண்ணை சந்திக்க சென்ற அந்த இளைஞர், குறிப்பிட்ட ஒரு பப்புக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டார். அங்கு மது அருந்தாத போதிலும், அந்த பெண் ஷாம்பெயின் மற்றும் ஹூக்கா என விலையுயர்ந்த பொருட்களை தாராளமாக ஆர்டர் செய்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cd759370-c1ce-4ce2-a71f-3bea745e551b/26-6a7066cf69f57.webp' /></p><h2>&nbsp;டேட்டிங் ஆப் மோசடி</h2><p> </p><p>
 
இறுதியில் பில் தொகை 20,500 ரூபாயை தாண்டியபோது, பில் வரும் நேரத்தில் அந்த பெண் கழிவறைக்கு சென்றுவிட்டதாக அவர் வேதனையுடன் தெரிவித்தார்.</p><p> பணத்தை இழந்ததை விட, தனது வருகையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி பில்லை கட்ட வைக்கும் இதுபோன்ற முறைகளை கையாண்டதுதான் தன்னை மிகவும் காயப்படுத்தியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p> 
இந்த பதிவைப் பார்த்த பல சமூக வலைதள பயனர்கள், இது டெல்லி-என்சிஆர் பகுதியில் பரவலாக அரங்கேறிவரும் ஒரு பிரபலமான "டேட்டிங் ஆப் மோசடி" என்று எச்சரித்துள்ளனர். </p><p>தெரியாத நபர்களை சந்திக்கும் போது பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும், இது போன்ற ஏமாற்று வேலைகளுக்கு பலியாக கூடாது என்றும் பலரும் அறிவுரைகளை வழங்கி வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-08-03T09:58:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானிய காவல்துறை அதிகாரிகளின் தகவல்கள் டார்க் வெப்பில் கசிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/uk-police-data-leak-100000-officers-exposed-1785750701"></link>
            <id>https://news.lankasri.com/article/uk-police-data-leak-100000-officers-exposed-1785750701</id>
            <summary type="text">UK Police Data Leaked: பிரித்தானிய காவல்துறை அதிகாரிகளின் தனிப்பட்ட தகவல்கள் டார்க் வெப்பில் கசிந்துள்ளது.பிரித்தானிய காவல்துறையின் சுமார் 1 லட்சம் அத...</summary>
            <content type="html"><![CDATA[<p><b>UK Police Data Leaked:</b> பிரித்தானிய காவல்துறை அதிகாரிகளின் தனிப்பட்ட தகவல்கள் டார்க் வெப்பில் கசிந்துள்ளது.</p><p>பிரித்தானிய காவல்துறையின் சுமார் 1 லட்சம் அதிகாரிகளின் பெயர் மற்றும் தொடர்பு விவரங்கள் டார்க் வெப்பில் வெளியானது.</p><p></p><p>
</p><p>
Police National Legal Database (PNLD) எனப்படும் முக்கிய சட்ட தரவுத்தளத்தில் நடந்த சைபர் தாக்குதலின் விளைவாக இந்த தகவல் கசிவு ஏற்பட்டுள்ளது.</p><p>

இந்த தாக்குதலுக்கு ExfilSquad எனப்படும் ஹேக்கர் குழு காரணமாக இருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். இதற்கு முன்பு, Department for Education (DfE) தரவுத்தளத்தில் இருந்து 6 லட்சத்துக்கும் மேற்பட்ட பதிவுகள் கசிந்திருந்தன.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e663574f-6a2b-4bd5-8522-c0a76c87f327/26-6a7064af61833.webp' /></p><p>இந்த சம்பவம், Ministry of Defense, Home Office, National Crime Agency (NCA), Crown Prosecution Service (CPS) போன்ற முக்கிய அமைப்புகளின் தரவுகளும் ஆபத்துக்குள்ளாகியுள்ளன என்பதை வெளிப்படுத்துகிறது.</p><p>

“நான் பல ஆண்டுகளாக குற்றவாளிகளை கைது செய்துள்ளேன். எனது தனிப்பட்ட தகவல்கள் கசிந்திருப்பது மிகவும் ஆபத்தானது. இது எனது குடும்பத்திற்கும் பாதுகாப்பு சவாலை ஏற்படுத்தியுள்ளது” என அதிகாரி ஒருவர் கவலை தெரிவித்துள்ளார்.
</p><p></p><p>பணத்திற்காக இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக நிபுணர்கள் கருதுகின்றனர்.
</p><p>
ஹேக்கர்கள், “ஒருமுறை உங்கள் தரவு வெளியானால் அது எப்போதும் இணையத்தில் இருக்கும். வழக்குச் செலவுகளை விட எங்களுக்குக் கட்டணம் செலுத்துவது எளிது” என்று எச்சரித்துள்ளனர்.
</p><p>
பிரித்தானியாவில் தற்போது 1,45,550 காவலர்கள் பணியாற்றி வருகிறார்கள். அவர்களில் பெரும்பாலோர் இந்த தரவுத்தளத்தை பயன்படுத்தியிருப்பதால், இந்த கசிவு மிகப்பெரிய பாதுகாப்பு சவாலாக உள்ளது.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-03T09:58:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஏழு நிமிடங்களில் ரூ. 15 கோடி மதிப்பிலான பிட்காயிணைப் பறிகொடுத்த கனேடியர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/bitcoin-gone-in-7-minutes-1785751076"></link>
            <id>https://news.lankasri.com/article/bitcoin-gone-in-7-minutes-1785751076</id>
            <summary type="text">கனேடியருக்குச் சொந்தமான 1.6 மில்லியன் டொலர் மதிப்பிலான பிட்காயின் மாயம்கனேடியத் தொழிலதிபர் ஒருவருக்குச் சொந்தமான ரூ 15 கோடி மதிப்பிலான பிட்காயின்கள் ஏ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனேடியருக்குச் சொந்தமான 1.6 மில்லியன் டொலர் மதிப்பிலான பிட்காயின் மாயம்</p><p>கனேடியத் தொழிலதிபர் ஒருவருக்குச் சொந்தமான ரூ 15 கோடி மதிப்பிலான பிட்காயின்கள் ஏழே நிமிடங்களில் கொள்ளைப்போன சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.</p><h2>18.25245043 பிட்காயின்</h2><p>
</p><p>Coldcard வன்பொருள் வாலட்களுடன் (hardware wallets) தொடர்புடைய பாதுகாப்பு மீறல் ஒன்று கிரிப்டோகரன்சி சமூகத்தினரிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/55740950-3418-44ec-ba7e-97b21364a212/26-6a706626e29c5.webp' /></p><p> </p><p>இதில் சுமார் 1,367.05 பிட்காயின்கள் (BTC) திருடப்பட்டிருக்கலாம் என்று பிளாக்செயின் ஆய்வாளர்கள் மதிப்பிட்டுள்ளனர். பாதுகாப்பு மீறல் நடத்தியவர்கள், வாலட்டின் 'சீட் ஃப்ரரேஸ்' (seed phrase) உருவாக்கச் செயல்முறையில் இருந்த ஒரு குறைபாட்டைப் பயன்படுத்திக்கொண்டதாகக் கூறப்படுகிறது. </p><p>பலர் தங்களின் பிட்காயின் சேமிப்புகள் கொள்ளையிடப்பட்டுள்ளதை வெளிப்படுத்தி வருகின்றனர். அதில் ஒருவர் கனடிய தொழில்முனைவோரான ஜொனாதன் குட்மேன்.</p><p></p><p> </p><p>இவருக்குச் சொந்தமான 1.6 மில்லியன் டொலர் மதிப்பிலான 18.25245043 பிட்காயின்கள் கொள்ளையிடப்பட்டுள்ளது. இதன் இந்திய மதிப்பு ரூ 15 கோடி என்றே தெரிய வருகிறது. </p><p>குட்மேன் தெரிவிக்கையில், தனக்குச் சொந்தமான பிட்காயின் அனைத்தும் கோல்ட் ஸ்டோரேஜில் சேமிக்கப்பட்டிருந்ததால் அவை பாதுகாக்கப்படுவதாக நம்பியதாக கூறியுள்ளார்.</p><h2>வெறும் ஏழே நிமிடங்களில்</h2><p> </p><p>கோல்ட் ஸ்டோரேஜ் என்பது, பிரைவேட் கீகள் உருவாக்கப்பட்டு, ஒரு ஹார்டுவேர் வாலட்டில் ஆஃப்லைனில் வைக்கப்படும் ஒரு முறையாகும். ஆனால், பாதுகாப்பு மீறல் நடத்தியவர்கள் கோல்ட் ஸ்டோரேஜில் சேமிக்கப்பட்டிருந்ததையும் திருடியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6f782db4-6ac2-4055-98e4-15519382afbf/26-6a7066279c802.webp' /></p><p> </p><p>மேலும், வெறும் ஏழே நிமிடங்களில் தமக்குச் சொந்தமான பிட்காயின்கள் பறிபோனதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், குறிப்பிட்ட Coldcard சாதனங்களில் 'சீட் ஃபிரேஸ்களை' (seed phrases) உருவாக்கும் குறியீட்டில் உள்ள ஒரு சிக்கலை பாதுகாப்பு மீறல் நடத்தியவர்கள் பயன்படுத்திக்கொண்டதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். </p><p>கொள்ளைபோன பிட்காயின்கள் திரும்பக் கிடைக்கும் என்று எதிர்பார்க்காவிட்டாலும், காவல்துறை மற்றும் ஒன்ராறியோ பாதுகாப்பு ஆணையத்திடம் (Ontario Securities Commission) புகாரளிக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் குட்மேன் கூறியுள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-03T09:56:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலக நாடுகள் பலவற்றின் கவனம் ஈர்த்துவரும் ஜேர்மன் கப்பல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/germany-war-ship-attract-peoples-attention-1785750744"></link>
            <id>https://news.lankasri.com/article/germany-war-ship-attract-peoples-attention-1785750744</id>
            <summary type="text">ஜேர்மன் போர்ப்பயிற்சிக் கப்பல் ஒன்று உலக நாடுகள் பலவற்றின் கவனத்தை ஈர்த்துவருகிறது.

ஜேர்மன் போர்ப்பயிற்சிக் கப்பல் ஒன்று உலக நாடுகள் பலவற்றின் கவனத...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜேர்மன் போர்ப்பயிற்சிக் கப்பல் ஒன்று உலக நாடுகள் பலவற்றின் கவனத்தை ஈர்த்துவருகிறது.
</p><p>
ஜேர்மன் போர்ப்பயிற்சிக் கப்பல் ஒன்று உலக நாடுகள் பலவற்றின் கவனத்தை ஈர்த்துவரும் நிலையில், தற்போது அந்தக் கப்பல் கனடா வந்தடைந்துள்ளது.</p><h3>

கவனம் ஈர்த்துவரும் ஜேர்மன் கப்பல்</h3><p>

கனடாவின் நோவா ஸ்கொஷியா மாகாணத்திலுள்ள ஹாலிஃபாக்ஸ் நகரம் நிறுவப்பட்டதன் நினைவாக, ஒவ்வோராண்டும், ஆகத்து மாதத்தின் முதல் திங்கட்கிழமையில், Natal Day என்னும் தினம் கொண்டாடப்படுகிறது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2193f3bd-f02c-4ede-94af-fc252b69b411/26-6a7064d9cec58.webp' /></p><p>
இந்நிலையில், அன்று விடுமுறை தினம் என்பதால் வார இறுதியில் மக்கள் ஹாலிஃபாக்ஸ் துறைமுகத்தில் குவிந்துள்ளார்கள்.&nbsp;</p><p></p><p>
அவர்களுக்கு சுவாரஸ்யம் ஏற்படுத்தும் வகையில், பிரான்ஸ், ஸ்பெயின், பெர்முடா, பல அமெரிக்க நகரங்கள் உட்பட 60 நாடுகளைச் சுற்றிவந்துள்ள Gorch Fock என்னும் ஜேர்மன் கப்பல் ஹாலிஃபாக்ஸை வந்தடைய, மக்கள் அந்தக் கப்பலில் ஏறி அதை பார்வையிட்டுவருகிறார்கள்.
</p><p>
81 மீற்றர் நீளமுள்ள அந்த கப்பலில் 18,000க்கும் மேற்பட்ட கடற்படை வீரர்கள் பயிற்சி எடுத்துள்ளார்கள்.&nbsp;</p><p></p><p>
இம்முறை, ஏப்ரல் மாதம் 7ஆம் திகதி ஜேர்மனியின் Kiel நகரிலிருந்து புறப்பட்ட Gorch Fock கப்பல், தற்போது கனடாவை வந்தடைந்துள்ளது.
</p><p>
இது அக்கப்பல் மேற்கொள்ளும் 189ஆவதும், நீளமானதும் ஆன கடற்பயணம் என்பது குறிப்பிடத்தக்கது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-03T09:55:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அடுத்து 36 மணித்தியாலங்களுக்கு நாட்டில் கனமழை - பொதுமக்களுக்கு சிவப்பு எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/heavy-rain-expected-in-slanka-next-36-hour-1785750483"></link>
            <id>https://tamilwin.com/article/heavy-rain-expected-in-slanka-next-36-hour-1785750483</id>
            <summary type="text">அடுத்து 36 மணித்தியாலங்களுக்கு நாட்டில் பல பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பான அறிவிப்பு இன்று(03.08.2026) 3 ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அடுத்து 36 மணித்தியாலங்களுக்கு நாட்டில் பல பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. </p><p>

இது தொடர்பான அறிவிப்பு இன்று(03.08.2026) 3 மணியளவில் வெளியாகியுள்ளது. </p><p>


இதற்கமைய, மத்திய, சப்ரகமுவா, தென் மற்றும் மேல் மாகாணங்களுக்கு இன்று மாலை, இரவு என மழை தொடர்ச்சியாக கிடைக்கும் வாய்ப்புள்ளது.</p><p></p><p> </p><p>

அத்துடன், நாட்டில் உள்ள பல ஆறுகள் வெள்ள மட்டத்தை அடைந்துள்ள நிலையில், மகாவலி, களுகங்கை, களனி கங்கை போன்றன பல இடங்களில் பெருக்கெடுத்துள்ளன.</p><h2>பொதுமக்கள் கவனத்திற்கு..&nbsp;</h2><p> </p><p>

இதனால் ஆற்றங்கரையோரங்கள், நீர்த்தேக்கங்களின் மேலதிக நீர் வெளியேறும் பகுதிகள், மற்றும் தாழ்நிலப்பகுதி மக்கள் உடனடியாக அந்த இடங்களை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7dbe5037-7980-4a74-9290-b2a2ec92fbb0/26-6a70655606ed4.webp' /></p><p> </p><p>

இதன்படி, நுவரெலியா, கண்டி, கேகாலை, மாத்தளை மற்றும் குருநாகல் மாவட்டத்தின் சில பகுதிகளில் நிலச்சரிவு அபாயம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> 

இன்று இரவு வரை காத்திருக்காமல் பகல் பொழுதே பாதுகாப்பான இடங்களுக்கு செல்வது சிறந்தது என்றும் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.&nbsp; &nbsp; &nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-03T09:54:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[களனி ஆற்றின் தாழ்நில பகுதிகளில் கடுமையான வெள்ள அபாய எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/severe-flood-warning-low-lying-areas-kelani-river-1785750630"></link>
            <id>https://ibctamil.com/article/severe-flood-warning-low-lying-areas-kelani-river-1785750630</id>
            <summary type="text">அடுத்த 24 மணித்தியாலங்களுக்குள் களனி ஆற்றங்கரையோர தாழ்வான பகுதிகளில் கடுமையான வெள்ள நிலைமை உருவாகும் அபாயம் இருப்பதாக நீர்ப்பாசனத் திணைக்களம், எச்சரிக...</summary>
            <content type="html"><![CDATA[<p>அடுத்த 24 மணித்தியாலங்களுக்குள் களனி ஆற்றங்கரையோர தாழ்வான பகுதிகளில் கடுமையான வெள்ள நிலைமை உருவாகும் அபாயம் இருப்பதாக நீர்ப்பாசனத் திணைக்களம், எச்சரிக்கை விடுத்துள்ளது.</p><p>

களனி ஆற்றுப் படுகையின் மேல் மற்றும் நடுப்பகுதி நீர்ப்பிடிப்பு பிரதேசங்களில் பதிவான கனமழை காரணமாக, ஆற்றின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருவதாகவும், திணைக்களத்தின் நீர்மட்ட கண்காணிப்பு நிலையங்களின் தரவுகளின் அடிப்படையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

இந்த எச்சரிக்கை, தெஹியோவிட்ட, ருவன்வெல்ல மற்றும் யட்டியந்தோட்டை பிரதேச செயலாளர் பிரிவுகளுக்குட்பட்ட களனி ஆற்றுப் பள்ளத்தாக்கின் தாழ்வான பகுதிகளுக்கு பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
</p><p></p><h2>முன்னெச்சரிக்கை நடவடிக்கை</h2><p>
மேலும், தற்போதைய வானிலை முன்னறிவிப்புகளின்படி தொடர்ந்தும் பலத்த மழை பெய்யக்கூடும் என்பதால், ஆற்றின் நீர்மட்டம் திடீரென அதிகரிக்கும் அபாயம் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/25cf3ee4-6360-4e32-b946-9cf98a62ea08/26-6a7064688ab1e.webp' /></p><p>
</p><p>
இதனையடுத்து, குறித்த பகுதிகளில் வசிப்போர், ஆற்றைப் பயன்படுத்துவோர் மற்றும் அந்தப் பகுதிகள் வழியாகப் பயணிக்கும் வாகன ஓட்டிகள் மிகுந்த அவதானத்துடன் செயல்படுமாறும், அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறும் நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-03T09:50:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[அடுத்த 24 மணி நேரத்திற்குள் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும்! களனி கங்கையை அண்மித்த மக்களுக்கு எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/considerable-rainfall-mahaweli-kelani-kalu-ganga-1785722949"></link>
            <id>https://tamilwin.com/article/considerable-rainfall-mahaweli-kelani-kalu-ganga-1785722949</id>
            <summary type="text">புதிய இணைப்புஅடுத்த 24 மணி நேரத்திற்குள் களனி ஆற்றுப்பகுதியில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என நீர்ப்பாசனத்திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>அடுத்த 24 மணி நேரத்திற்குள் களனி ஆற்றுப்பகுதியில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என நீர்ப்பாசனத்திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.</p><p>

களனி ஆற்றுப்படுகையின் மேல் மற்றும் மத்திய பகுதிகளில் கனமழை பெய்துள்ளதாக அத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
எனவே மழை தொடர்வதால், தெஹியோவிட்ட, ருவன்வெல்ல மற்றும் யட்டியந்தோட்டை பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு உட்பட்ட களனி ஆற்றுப்பள்ளத்தாக்கின் தாழ்வான பகுதிகளில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என திணைக்களம் எச்சரித்துள்ளது.
</p><p>
இதன் காரணமாக, களனி ஆற்றில் நீர்மட்டம் உடனடியாக உயரக்கூடும். எனவே, தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களும், அப்பகுதிகள் வழியாகப் பயணிக்கும் வாகன சாரதிகளும் எச்சரிக்கையுடன் இருக்குமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.</p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">இரண்டாம் இணைப்பு</span></p><p>தற்போது நிலவும் மோசமான வானிலை காரணமாக, களனி ஆற்றுப் படுகைக்கு வெள்ள அபாய எச்சரிக்கை நிலை 01 விடுக்கப்பட்டுள்ளது.
</p><p>
இந்த அறிவிப்பு அடுத்த 48 மணி நேரத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.
</p><p>
அதன்படி, இந்த அறிவிப்பு 5 ஆம் திகதி காலை 11.30 மணி வரை செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
எனவே அப்பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் இந்த நிலைமை குறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.</p><p>

இதற்கிடையில், அப்பகுதிகள் வழியாகச்செல்லும், வீதிகளில் பயணிக்கும் சாரதிகள் எச்சரிக்கையுடன் வாகனங்களை செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.&nbsp;&nbsp;</p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">முதலாம் இணைப்பு</span></p><p>கடந்த 24 மணி நேரத்தில் மகாவலி, களனி மற்றும் களு ஆறுகளின் மேல் பகுதிகளில் குறிப்பிடத்தக்க மழை பெய்துள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
</p><p>
இதன் காரணமாக, ஆறுகளில் நீர்மட்டம் வேகமாக உயர்ந்துள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீரியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவப் பணிப்பாளராக பொறியியலாளர் எல். எஸ். சூரியபண்டார தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>அதிகமான மழையும் பதிவு</h2><p>
அதன்படி, மகாவலி ஆற்றின் மேல் பகுதிகளில் அமைந்துள்ள நாவலப்பிட்டிய, நானுஓயா மற்றும் வத்தளை போன்ற பகுதிகளில் சுமார் 200 மி.மீ மழையும், சில இடங்களில் 200 மி.மீ-க்கு அதிகமான மழையும் பதிவாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/33a4d9a8-60a2-4665-af65-6bc89e790b1d/26-6a6ffd2f897aa.webp' /></p><p>

இதன் காரணமாக, நாவலப்பிட்டிய மற்றும் பேராதெனியாவிற்கு இடையே மகாவலி ஆற்றின் அருகே வசிக்கும் மக்களுக்கு வெள்ள எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.</p><p>&nbsp;தற்போது நீர்மட்டம் வேகமாக உயராவிட்டாலும், இயல்பான உயர்வையே கண்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
</p><p>
வெள்ள நிலைமை பேரிடர் நிலை வரை மோசமடையாது என்று எதிர்பார்ப்பதாகவும், நேற்று இரவு சில இடங்களில் 70 மி.மீ-க்கு மேல் மழை பெய்ததால் நீர்மட்டம் திடீரென உயர்ந்ததில் இந்த நிலைமை காணப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
</p><p>தற்போது நீர்மட்டம் குறைந்து வந்தாலும், சில தாழ்வான பகுதிகள் நீரில் மூழ்கும் அபாயம் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.</p><p> மேலும், கலா ஓயா மற்றும் அத்தனகலு ஓயா&nbsp; பகுதிகளில் அதிக மழை பெய்யாததால், அப்பகுதிகளில் வெள்ள அபாயம் இல்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.</p><p>&nbsp;</p><p><b><i>you may like this video</i></b></p><p>&nbsp;<iframe frameborder="0" src="//www.youtube.com/embed/XROoBlpm-0s" width="640" height="360" class="note-video-clip"></iframe></p>]]></content>
            <updated>2026-08-03T09:48:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[மோசமடையும் வானிலை : பேராதனைப் பல்கலைக்கழகம் தற்காலிகமாக மூடல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/announcement-students-of-university-of-peradeniya-1785735082"></link>
            <id>https://tamilwin.com/article/announcement-students-of-university-of-peradeniya-1785735082</id>
            <summary type="text">புதிய இணைப்பு&amp;nbsp;நாட்டில் நிலவும் கடுமையான சீரற்ற வானிலை காரணமாக, பேராதனைப் பல்கலைக்கழகத்தின்
அனைத்து கல்வி நடவடிக்கைகளும் மறுஅறிவித்தல் வரை தற்கால...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு&nbsp;</h2><p>நாட்டில் நிலவும் கடுமையான சீரற்ற வானிலை காரணமாக, பேராதனைப் பல்கலைக்கழகத்தின்
அனைத்து கல்வி நடவடிக்கைகளும் மறுஅறிவித்தல் வரை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.</p><h2>முதலாம் இணைப்பு&nbsp;</h2><p>மகாவலி கங்கை பகுதியில் அமைந்துள்ள பேராதனைப் பல்கலைக்கழகத்தின் "சரசவி மெதுர" விடுதியின் கீழ் தளத்தில் தங்கியிருந்த மாணவர்கள், வெள்ளப் பெருக்கு காரணமாகப் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
</p><p>
ஏனைய மாணவர்களை எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக பேராதனைப் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.</p><p></p><p>தற்போது நிலவும் மோசமான வானிலை காரணமாக மகாவலி ஆற்றில் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் ஏற்படக்கூடிய வெள்ளப்பெருக்கு குறித்து விழிப்புடன் இருக்குமாறு, பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பிரதிவேந்தர் பேராசிரியர் தெரன்ஸ் மதுஜித் சிறப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/65d0dd1d-9b26-4f9e-b452-eb2bc3a7b318/26-6a7031433d26b.webp' /></p><p>
</p><p>
தற்போதைய அபாயகரமான சூழ்நிலையை எதிர்கொண்டு, ஏற்படக்கூடிய பேரழிவுகளைத் தடுப்பதற்காக, மகாவலி படுக்கையில் அமைந்துள்ள பல்கலைக்கழக விடுதிகளில் தங்கியிருக்கும் மாணவர்கள் மிகுந்த விழிப்புடன் இருக்க வேண்டும் என துணைவேந்தர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><h2>தாழ்வான பகுதிகளிலும் வசிக்கும் பொதுமக்கள்</h2><p>
நேற்று இரவு (02) முதல் அப்பகுதியில் பெய்து வரும் தொடர் கனமழையின் காரணமாக மகாவலி ஆற்றின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.</p><p> நீர்மட்டம் உயர்ந்ததன் காரணமாக, பேராதனைapy; உள்ள 'கறுப்புப் பாலம்' அருகே அமைந்துள்ள பாலம் சீரமைக்கும் தளமும் நீரில் மூழ்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e1ffdd79-bbb0-4543-a409-faa45699efae/26-6a703143eb99b.webp' /></p><p>இதற்கிடையில், அடுத்த 24 மணி நேரத்திற்குள் மகாவலி ஆற்றங்கரையோரம் உள்ள பல தாழ்வான பகுதிகளில் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.
</p><p>எனவே, மகாவலி ஆற்றங்கரையிலும், அப்பகுதிகளிலுள்ள தாழ்வான பகுதிகளிலும் வசிக்கும் பொதுமக்கள் ஏற்படக்கூடிய வெள்ளப்பெருக்கிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள விழிப்புடன் இருக்குமாறும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் நீர்ப்பாசனத் துறை கேட்டுக்கொண்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-03T09:48:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொத்மலை காமினி திஸாநாயக்க நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் திறப்பு! வினாடிக்கு சுமார் 250 கனஅடி நீர் வெளியேற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/kotmale-reservoir-water-release-begin-at-3-00-p-m-1785749628"></link>
            <id>https://ibctamil.com/article/kotmale-reservoir-water-release-begin-at-3-00-p-m-1785749628</id>
            <summary type="text">நீர்த்தேக்கத்தின் மேல் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக, கோட்மலை காமினி திசநாயக்க நீர்த்தேக்கத்தின் வழிந்தோடும் கதவுகள் படிப்படி...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீர்த்தேக்கத்தின் மேல் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக, கோட்மலை காமினி திசநாயக்க நீர்த்தேக்கத்தின் வழிந்தோடும் கதவுகள் படிப்படியாகத் திறக்கப்படும் என மகாவலி ஆணையம் அறிவித்துள்ளது.</p><p>

 

நீர்த்தேக்கத்தின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், கீழ்நிலைப் பகுதிகளில் ஏற்படக்கூடிய கடுமையான வெள்ளப்பெருக்கு அபாயத்தைக் குறைப்பதற்கும் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அதிகார அமைப்பு தெரிவித்தது.</p><p>

 

இன்று (03.08.2026) பிற்பகல் 3.00 மணிக்கு வழிந்தோடும் கதவுகள் மற்றும் வண்டல் மதகு திறக்கும் பணி தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.</p><p></p><h2>மகாவலி அதிகாரசபை</h2><p> இதன் மூலம் வினாடிக்கு சுமார் 250 கன அடி நீர் கொட்மலை ஓயாவில் திறந்துவிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2e10f424-a02e-42e2-b68d-828c761a3415/26-6a70636f096d3.webp' /></p><p>நுகவெல, ஆற்றங்கரை மற்றும் மாவத்தறை, அத்துடன் உலப்பனை முதல் கம்பளை, வெலிகல்ல, கெலிஓயா, பேராதனை, கட்டுகஸ்தோட்டை மற்றும் பொல்கொல்ல வரையான மகாவலி ஆற்றங்கரையில் உள்ள பகுதிகள்&nbsp; உயர்ந்து வரும் நீர்மட்டத்தால் பாதிக்கப்படக்கூடும் என மகாவலி அதிகாரசபை எச்சரித்துள்ளது.</p><p>
 

இந்தப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் விழிப்புடன் இருக்குமாறும், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-03T09:46:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rusath</name>
            </author>
            <title type="text"><![CDATA[மட்டக்களப்பில் பலத்த மழை! கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/heavy-rain-in-batti-fishermen-livelihoods-affected-1785748468"></link>
            <id>https://tamilwin.com/article/heavy-rain-in-batti-fishermen-livelihoods-affected-1785748468</id>
            <summary type="text">மட்டக்களப்பு மாவட்டத்தில் 47.8 மில்லி மீற்றர் மழை
வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக மாவட்ட வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.


இதன் காரணமாக மட்டக்களப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>மட்டக்களப்பு மாவட்டத்தில் 47.8 மில்லி மீற்றர் மழை
வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக மாவட்ட வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.</p><p>


இதன் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் கடற்றொழிலில் ஈடுபடும் கடற்றொழிலாளர்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது.</p><p>நேற்றையதினம்(2.8.2026) பிற்பகல் ஏற்பட்டுள்ள தளம்பல் நிலை காரணமாக கடல் சார் தொழிலாளர்கள் கடற்றொழிலுக்கு தொழிலுக்கு செல்லாத காரணத்தினால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>வாழ்வாதாரம் பாதிப்பு</h2><p>
</p><p>


இதேவேளை மட்டக்களப்பு மாவட்ட கரையோர பகுதிகளிலும் கடற்றொழிலாளர்கள் தங்களது மீன்பிடி
படகுகளை பாதுகாப்பான இடங்களுக்கு நகர்த்தி வைத்துள்ளதுடன் கடற்கரையில் கடலின்
நிலைமையைப் பற்றி அவதானித்த வண்ணம் உள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/910a0883-b151-40ff-818b-bf53be273a38/26-6a7062cd39141.webp' /></p><p>
</p><p>


எனினும் திங்கட்கிழமை காலை தொடக்கம் மட்டக்களப்பு மாவட்டத்தில் வானிலை மப்பும், மந்தாரமுமாகவுள்ளதையும் அவதானிக்க முடிகின்றது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-03T09:44:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Fathima</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரஜினிகாந்தை சந்தித்தார் அமைச்சர் வன்னியரசு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/vanniyarasu-meets-rajinikanth-1785750177"></link>
            <id>https://ibctamilnadu.com/article/vanniyarasu-meets-rajinikanth-1785750177</id>
            <summary type="text">நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து வாழ்த்து பெற்றார் சமூக நீதித்துறை அமைச்சர் வன்னியரசு.

இதுதொடர்பாக அவர் எக்ஸ் தள பக்கத்தில், திரையுலகின் சூப்பர் ஸ்டார்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து வாழ்த்து பெற்றார் சமூக நீதித்துறை அமைச்சர் வன்னியரசு.</p><p>

இதுதொடர்பாக அவர் எக்ஸ் தள பக்கத்தில், திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சந்தித்து வாழ்த்து பெற்றேன், சமூக நீதித்துறை அமைச்சராக பதவியேற்றதும் அவரை சந்தித்து வாழ்த்து பெற விரும்பினேன், இப்போது தான் அதற்கான வாய்ப்பு கிடைத்தது, நிறைய மக்களுக்கு செய்யுங்கள் வாழ்த்துகள் என வாழ்த்தி அனுப்பியதாக பதிவிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e34e8c87-bf15-4ae6-884b-ed9d4796b880/26-6a7062a330b47.webp' /><br></p>]]></content>
            <updated>2026-08-03T09:43:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹோர்முஸ் ஜலசந்தியில் புதிய பாதுகாப்புப் பாதை! ஈரான் - ஓமான் கூட்டு முயற்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/iran-oman-discuss-safe-hormuz-passage-1785746724"></link>
            <id>https://ibctamil.com/article/iran-oman-discuss-safe-hormuz-passage-1785746724</id>
            <summary type="text">ஈரான், ஓமானுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஈரானிய வெளியுறவு அமைச்சகத்தின் பேச்சாளர் இஸ்மாயில் பாகேய் (Esmaeil Baghaei) இ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரான், ஓமானுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>

ஈரானிய வெளியுறவு அமைச்சகத்தின் பேச்சாளர் இஸ்மாயில் பாகேய் (Esmaeil Baghaei) இதனை தெரிவித்துள்ளார்.
</p><p>
ஹோர்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) வழியாகச் செல்லும் கப்பல்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் தற்காலிக பாதுகாப்பான பாதையொன்றை அமைப்பது குறித்து
இப்பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>நேரடிப் பேச்சுவார்த்தை</h2><p>

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகக் கப்பல் போக்குவரத்தின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில், ஓமானுடன் கலந்தாலோசித்து மிக விரைவாகத் தற்காலிகப் பாதையொன்றை தீர்மானிப்பதே இந்த முயற்சியின் நோக்கமாகும் எனக் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a581d46d-5df3-40e8-86bb-7a97a9515a69/26-6a7061ba025f0.webp' /></p><p>

ஈரான் அமெரிக்காவுடன் எந்தவித நேரடிப் பேச்சுவார்த்தையிலும் ஈடுபடவில்லை என்பதை இஸ்மாயில் பாகேய் திட்டவட்டமாக வலியுறுத்தியுள்ளார்.</p><p>

இருப்பினும், ஈரானுக்கு எதிரான பாரிய தாக்குதலை நிறுத்தி வைத்துள்ளதாகக் கூறிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரானுடனான பேச்சுவார்த்தைகள் மீண்டும் தொடங்கும் என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p>]]></content>
            <updated>2026-08-03T09:39:54+00:00</updated>
        </entry>
    </feed>
