<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-08-18T01:27:43+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாடளாவிய ரீதியில் மதுபானசாலைகளுக்கு பூட்டு...! வெளியான அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/liquor-shops-closed-for-kandy-perahera-1787015079"></link>
            <id>https://ibctamil.com/article/liquor-shops-closed-for-kandy-perahera-1787015079</id>
            <summary type="text">இன்று முதல் 28 ஆம் திகதி வரை 11 நாட்களுக்கு மூடப்படவுள்ள பல மதுபானக் கடைகள் தொடர்பில் கலால் திணைக்கள அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளது. 

இன்று (18-08-2...</summary>
            <content type="html"><![CDATA[<p>இன்று முதல் 28 ஆம் திகதி வரை 11 நாட்களுக்கு மூடப்படவுள்ள பல மதுபானக் கடைகள் தொடர்பில் கலால் திணைக்கள அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளது.</p><p> 

இன்று (18-08-2026) முதல் கண்டி எசல பெரஹேராவின் முதல் கும்பல் பெரஹேரா வீதிகளில் வலம் வரவுள்ளது.</p><p>

இந்த நிலையில் பெரஹேரா முடியும் நாள் (28-08-2026) வரை மதுக்கடைகளை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கலால் திணைக்களம் அறிவித்துள்ளது.</p><p>
</p><p></p><h2>பிரதான சாலை</h2><p>எனவே, கண்டி கடவத்த சதாரா மற்றும் கங்காவத்த கோரள பிரதேச செயலகப் பகுதிகளில் உள்ள அனைத்து மதுக்கடைகளையும் மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8277efbe-6210-4ca6-9de0-96c61506710f/26-6a83afa9d9b47.webp' /></p><p>மேலும், குண்டசாலை பிரதேச செயலகத்தின் நத்தாரம்போத்த கிராம அலுவலர் கோட்டத்தில், பிரதான சாலையை ஒட்டியுள்ள எரிபொருள் நிலையம் வரையிலான அனைத்து மதுக்கடைகளும் மூடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-18T01:04:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டில் கொட்டி தீர்க்கப்போகும் கனமழை...! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/heavy-rain-with-lightning-thunder-weather-report-1787014659"></link>
            <id>https://ibctamil.com/article/heavy-rain-with-lightning-thunder-weather-report-1787014659</id>
            <summary type="text">சப்ரகமுவ மாகாணங்களிலும் அத்துடன் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும்.வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (18-08-2026) விடுத்...</summary>
            <content type="html"><![CDATA[<p>சப்ரகமுவ மாகாணங்களிலும் அத்துடன் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும்.</p><p>வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (18-08-2026) விடுத்துள்ள அறிக்கையில் மேற்படி விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p>இதனடிப்படையில் மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்.






</p><p></p><h2>பனிமூட்டமான நிலை</h2><p>ஊவா மாகாணத்தின் சில இடங்களிலும் அத்துடன் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் சில இடங்களிலும் பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/eaa44ee8-876f-465f-947b-00dfebbcbe33/26-6a83ae04e6e7d.webp' />&nbsp;&nbsp;</p><p>மத்திய மலைப் பிராந்தியத்தின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் அத்துடன் திருகோணமலை மாவட்டத்திலும் மணித்தியாலத்திற்கு சுமார் 30 - 40 km வேகத்தில் அடிக்கடி பலத்த காற்று வீசக் கூடும்.</p><p>இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-18T00:57:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[குருபகவானின் நட்சத்திர பெயர்ச்சியால் ராஜவாழ்க்கை வாழப்போகும் ராசிக்காரர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/guru-bhagavan-natchathira-peyarchi-raja-vaalkai-1787009857"></link>
            <id>https://jvpnews.com/article/guru-bhagavan-natchathira-peyarchi-raja-vaalkai-1787009857</id>
            <summary type="text">ஜோதிட சாஸ்திரத்தின் படி, குரு பகவான் 2026-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 19-ஆம் திகதி ஆயில்ய நட்சத்திரத்திற்குள் பிரவேசித்து, அக்டோபர் 31-ஆம் திகதி வரை அங்கேயே சஞ்ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜோதிட சாஸ்திரத்தின் படி, குரு பகவான் 2026-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 19-ஆம் திகதி ஆயில்ய நட்சத்திரத்திற்குள் பிரவேசித்து, அக்டோபர் 31-ஆம் திகதி வரை அங்கேயே சஞ்சரிப்பார் புதனின் ஆதிக்கத்திற்கு உட்பட்ட ஒரு நட்சத்திரத்தின் வழியாக குரு பகவான் பயணிப்பதால், இந்த நட்சத்திரப் பெயர்ச்சி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f6e9a036-93e0-4de2-9336-f7f68877ba92/26-6a839b4daaca1.webp' /></p><p>இந்த கிரக மாற்றம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் மாற்றத்தை ஏற்படுத்தும். இருப்பினும், சில ராசிக்காரர்கள் இந்த நேரத்தில் சாதகமான முன்னேற்றங்களை அடையப்போகிறார்கள். அவர்கள் எந்தெந்த ராசிக்காரர்கள் என்று இந்த பதிவில் நாம் இங்கு பார்ப்போம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e78bf976-2158-4c8b-8aa5-4459bbeac8ce/26-6a839b4e5b4fd.webp' /></p><h3>மிதுனம்</h3><p>மிதுன ராசிக்காரர்களுக்கு, ஆயில்ய நட்சத்திரத்திற்குள் குரு பகவான் நுழைவது தொழில் மற்றும் நிதி நிலையில் சாதகமான மாற்றங்களை ஏற்படுத்தும். இந்த கிரக மாற்றத்தால் வேலையில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகளோ அல்லது பதவி உயர்வுக்கான வாய்ப்புகளோ கிடைக்கக்கூடும். இந்த பெயர்ச்சியால் உங்கள் தன்னம்பிக்கை உச்சத்தைத் தொடப்போகிறது. </p><p>ஒரு புதிய விஷயத்தைக் கற்றுக்கொள்ளவோ அல்லது நீங்கள் நீண்ட காலமாகத் தள்ளிப்போட்டு வந்த ஒரு ஆக்கப்பூர்வமான திட்டத்தைத் தொடங்கவோ இது ஒரு மிகச் சிறந்த காலமாகும்.

இந்த பெயர்ச்சியால் உங்கள் உடன்பிறப்புகள் மற்றும் உறவினர்களுடனான உறவுகள் மிகவும் இணக்கமானதாக மாறும். மேலும், உங்களுக்குப் பயன் தரக்கூடிய குறுகிய பயணங்களை மேற்கொள்ளும் வாய்ப்பும் உங்களுக்குக் கிடைக்கலாம். உங்கள் தைரியத்தையும், தன்னம்பிக்கையையும் பயன்படுத்துங்கள், தற்போதைய சூழலில் அதுவே உங்கள் மிகச்சிறந்த சொத்தாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/71ab6d3b-302d-4334-a31c-308d95779a05/26-6a839b4fb4015.webp' /></p><h3>கன்னி
</h3><p>குரு பகவான் ஆயில்ய நட்சத்திரத்தில் நுழைவது கன்னி ராசியினருக்கு, குறிப்பாக வருமானம் மற்றும் தொழில் சார்ந்த விஷயங்களில் சாதகமான பலன்களைக் கொடுக்கும். இந்த காலகட்டத்தில் பணியிடத்தில் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு சிறந்த அங்கீகாரம் கிடைக்கலாம். அதேவேளையில், சில புதிய பொறுப்புகள் வழங்கப்படலாம். வேலை மாற்றத்தை விரும்பும் நபர்களுக்குச் சிறந்த வாய்ப்புகள் அமையக்கூடும்.
</p><p>
நீண்டகாலமாக நிலுவையில் உள்ள பணிகளை இப்போது வெற்றிகரமாக முடிக்க முடியும், மேலும் பல்வேறு முதலீடுகளிலிருந்து பெரிய அளவில் சம்பாதிக்க முடியும். வியாபாரிகள் தங்கள் தொழிலை புதிய இடங்களில் விரிவுபடுத்தலாம். நிதி நிலைமை சீராக இருக்கும் மற்றும் செலவுகளை சீராக சமாளிக்க முடியும். பல்வேறு ஒப்பந்தங்கள் மற்றும் திட்டங்களிலிருந்து அவர்கள் அதிக லாபம் ஈட்டலாம். ஆரோக்கியம் நிலையானதாக இருக்கும், இது சாதகமான பலன்களைத் தரும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/18453439-91a0-4cba-ae7d-c91ba26fc22d/26-6a839b4f0dc72.webp' /></p><h3>மீனம்
</h3><p>குரு பகவான் ஆயில்ய நட்சத்திரத்திற்குப் பெயர்ச்சி அடைவது மீன ராசிக்காரர்களுக்கு தொழில் மற்றும் கல்விக்குச் சாதகமான ஒரு காலகட்டமாகக் கருதப்படுகிறது. அவர்களின் அனைத்து முயற்சிகளும் இப்போது வெற்றியைக் கொடுக்கும். வாழ்க்கையில் மகிழ்ச்சியும், அமைதியும் நிறைந்திருக்கும். வாழ்க்கையில் சிறந்த மாற்றங்களை அனுபவிக்கப் போகிறார்கள். தொழிலதிபர்களுக்கு இது சிறந்த நேரம். அவர்கள் புதிய ஒப்பந்தங்கள் மூலம் பெரிய லாபத்தை ஈட்டலாம். இதுவரை நிலவி வந்த ஆரோக்கிய பிரச்சினைகள் இப்போது முடிவுக்கு வர வாய்ப்புள்ளது.</p><p>இந்த காலகட்டத்தில் அவர்கள் வாழ்வின் அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் அடைவார்கள், மேலும் அவர்கள் கடின உழைப்பிற்கான பலனை இரட்டிப்பாகப் பெறுவார்கள். அவர்கள் குடும்பத்தினரின் ஆரோக்கியம் அனைத்தும் பாதுகாப்பாக இருக்கும். திருமணம் செய்து கொள்ள நினைப்பவர்களுக்கு, இது மிகவும் சாதகமான நேரம். எதிரிகளை வீழ்த்தி வெற்றிக்கொடி நாட்ட இது சரியான காலமாக இருக்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d6c8dd44-0ff2-4afa-8862-b0c50e239167/26-6a839b50666f0.webp' /></p>]]></content>
            <updated>2026-08-18T00:52:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[நள்ளிரவில் கணவனின் திடீர் வருகை ; பலாக்காய் விழுந்ததால் வெட்டவெளிச்சமான கள்ளக்காதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/fake-love-exposed-fall-tree-husband-sudden-arrival-1786999223"></link>
            <id>https://jvpnews.com/article/fake-love-exposed-fall-tree-husband-sudden-arrival-1786999223</id>
            <summary type="text">ஊவா மாகாணத்தைச் சேர்ந்த கிராமமொன்றில், எதிர்பாராத வகையில் பலாக்காய் ஒன்று கீழே விழுந்ததன் மூலம் மனைவியின் கள்ளக்காதல் அம்பலமான சம்பவம் இடம்பெற்றுள்ளது...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஊவா மாகாணத்தைச் சேர்ந்த கிராமமொன்றில், எதிர்பாராத வகையில் பலாக்காய் ஒன்று கீழே விழுந்ததன் மூலம் மனைவியின் கள்ளக்காதல் அம்பலமான சம்பவம் இடம்பெற்றுள்ளது.</p><p>
</p><p></p><p>இரண்டு பிள்ளைகளின் தந்தையான 36 வயதுடைய குறித்த நபர், கொழும்பிலுள்ள கட்டுமான நிறுவனமொன்றில் பணியாற்றி வருவதுடன், மாதத்திற்கு ஒருமுறை மாதச் சம்பளத்தைப் பெற்றுக்கொண்டு தனது கிராமத்திற்குச் செல்வது வழக்கமாக இருந்துள்ளது.
</p><p>
அவரது மனைவியும் இரண்டு பிள்ளைகளும் வீட்டில் வசித்து வந்துள்ளனர். மனைவியின் நடத்தை தொடர்பில் பல்வேறு வதந்திகள் கேள்விப்பட்டிருந்தபோதிலும், அதனை உறுதிப்படுத்தும் ஆதாரங்கள் இல்லாததால் அவர் மனைவி மீது சந்தேகம் கொள்ளவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ddf19818-a344-44b3-a7a0-823ca9fa93c7/26-6a8371b8e6377.webp' /></p><p>இந்நிலையில், நிறுவனத்தின் தலைவருடன் ஊவா மாகாணத்தில் இடம்பெற்ற உறவினர் ஒருவரின் இறுதிச் சடங்கில் கலந்துகொண்ட அவர், எதிர்பாராத விதமாக இரவு நேரத்தில் தனது கிராமத்திற்குத் திரும்பியுள்ளார்.
</p><p>
கையடக்கத் தொலைபேசியின் மின்கலன் தீர்ந்திருந்ததால், தான் வீட்டிற்கு வருவது தொடர்பில் மனைவிக்கு முன்கூட்டியே அறிவிக்கவும் அவரால் முடியவில்லை.
</p><p>
இரவு சுமார் 11.30 மணியளவில் வீட்டிற்கு வந்த அவர், கதவைத் தட்டியபோது மனைவி கதவைத் திறப்பதற்கு சிறிது நேரம் எடுத்துக்கொண்டதுடன், வீட்டின் பின்பக்கக் கதவு திறக்கப்படும் சத்தமும் கேட்டதாகக் கூறப்படுகிறது.
</p><p>
இதனால் சந்தேகமடைந்த அவர் வீட்டின் பின்புறத்திற்குச் சென்று பார்த்தபோது, அங்கிருந்து சத்தம் கேட்டுள்ளது.

மின்கல விளக்கை எடுத்துக்கொண்டு தேடியபோது, வீட்டின் பின்புறம் இருந்த பலா மரத்தின் மீது ஒருவர் பதுங்கியிருப்பதை கண்டு அவர் அதிர்ச்சியடைந்துள்ளார்.
</p><p>
அந்த நேரத்தில் மரத்திலிருந்து சில பலாக்காய்கள் கீழே விழுந்த சத்தமும் கேட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><p>

உடனடியாக அருகில் வசித்த மனைவியின் சகோதரர்களை அழைத்த அவர், மரத்தில் திருடன் ஒருவர் பதுங்கியிருப்பதாகக் கூறி அவர்களை அழைத்துள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/adf44f4f-66a8-4e8a-b902-4a2839a7d9e4/26-6a8371b99d1c6.webp' /></p><p>அங்கு வந்த உறவினர்கள் மரத்தில் இருந்த நபரை கீழே இறக்கி விசாரித்தபோது, அவர் அருகிலுள்ள கிராமத்தைச் சேர்ந்த 39 வயதுடைய, மூன்று பிள்ளைகளின் தந்தை என்பது தெரியவந்துள்ளது.

மேலும், குறித்த நபர் வீட்டின் உரிமையாளரின் மனைவியுடன் நெருக்கமான தொடர்பில் இருந்தவர் எனவும் தெரியவந்ததாகக் கூறப்படுகிறது.</p><p>

இதனையடுத்து, கணவன் தனது மனைவியை அந்த நபருடன் அனுப்பி வைக்க முடிவு செய்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
தனது இரு பிள்ளைகளையும் தானே கவனித்துக்கொள்வதாகவும், மனைவியும் குறித்த நபரும் உடனடியாக வீட்டைவிட்டு வெளியேற வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.</p><p>

மனைவியின் சகோதரர்களும் குறித்த முடிவுக்கு ஆதரவு தெரிவித்ததுடன், இரு பிள்ளைகளையும் தாங்கள் கவனித்துக்கொள்வதாகவும் தெரிவித்துள்ளனர்.
</p><p>
இதன் பின்னர், குறித்த நபர் கொழும்பில் தொடர்ந்தும் பணியாற்றுவதைத் தவிர்த்து, தனது இரு பிள்ளைகளையும் தானே பாதுகாத்து வளர்க்க முடிவு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-18T00:52:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[ChatGPT-ஐப் பயன்படுத்திய பின், தாய், சகோதரனைக் கொன்ற 17 வயது இளைஞர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/youth-kills-mother-brother-after-using-chatgpt-1786999828"></link>
            <id>https://canadamirror.com/article/youth-kills-mother-brother-after-using-chatgpt-1786999828</id>
            <summary type="text">அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் மாநிலம் ஆக்டன் நகரில், 17 வயது சிறுவன் ஒருவர் தனது தாயையும் 14 வயது தம்பியையும் கொன்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

அர்ஜ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் மாநிலம் ஆக்டன் நகரில், 17 வயது சிறுவன் ஒருவர் தனது தாயையும் 14 வயது தம்பியையும் கொன்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
</p><p>
அர்ஜுன் அரவிந்த் (17) மீது இரண்டு கொலைக் குற்றச்சாட்டுகள், குடும்ப உறுப்பினர்களுக்கு எதிரான தாக்குதல் மற்றும் வன்முறை தொடர்பான இரண்டு குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4b595cea-57e0-4af1-8aef-13ae0525a38a/26-6a837416c81c8.webp' /></p><p>செவ்வாய்க்கிழமை மாலை 6.40 மணியளவில் குடும்பத்தினரைத் தொடர்புகொள்ள முடியாததால், அர்ஜுனின் தந்தை காவல்துறைக்கு தகவல் அளித்தார். </p><p>வீட்டிற்கு வரவிருந்த ஆசிரியரும் குடும்பத்தினரைத் தொடர்புகொள்ள முடியவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்துக்குச் சென்ற காவல்துறையினர், வீட்டின் முதல் தளத்தில் 14 வயது சிறுவனின் உடலையும், அடித்தளத்தில் அவரது தாயின் உடலையும் கண்டெடுத்தனர்.
</p><p>
இதையடுத்து தலைமறைவான அர்ஜுனை காவல்துறையினர் தேடி வந்தனர். அவர் தனது தாயின் 2014ஆம் ஆண்டு பச்சை நிற ஹோண்டா அக்கார்டு காரில் சென்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர். </p><p>பின்னர் புதன்கிழமை காலை, வேறு ஒரு அலாரம் அழைப்பை விசாரிக்கச் சென்ற காவல்துறையினர் அர்ஜுனைக் கண்டுபிடித்தனர்.
</p><p>
குடும்பத்தினரைக் கொல்வது தொடர்பான கற்பனைகள் மற்றும் கருத்துகளை இணையத்திலும் ChatGPT-யிலும் தேடியது உள்ளிட்ட ஆபத்தான நடத்தைகளை சிறுவன் சமீபத்தில் வெளிப்படுத்தியதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/69bf8d88-7d07-4c10-a392-f1a44a7fe51f/26-6a83741610752.webp' /></p><p>உயிரிழந்தவர்களின் மரணத்திற்கான அதிகாரப்பூர்வ காரணத்தை முதன்மை மருத்துவப் பரிசோதகர் தீர்மானிக்க உள்ளார். இருவரும் அதிர்ச்சியால் பாதிக்கப்பட்டிருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், பயன்படுத்தப்பட்டதாகக் கருதப்படும் ஆயுதம் குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.
</p><p>
மேலும், வாகனத்தை அனுமதியின்றி பயன்படுத்தியமை மற்றும் மோட்டார் வாகனத் திருட்டு தொடர்பான குற்றச்சாட்டுகளும் அர்ஜுன் மீது சுமத்தப்பட்டுள்ளன.
</p><p>
அவர் வியாழக்கிழமை கான்கார்ட் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, கொலை மற்றும் தாக்குதல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள உள்ளார்.</p>]]></content>
            <updated>2026-08-18T00:52:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அவசர எச்சரிக்கை...!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sl-inflation-to-stay-low-if-oil-hits-80-1787014217"></link>
            <id>https://ibctamil.com/article/sl-inflation-to-stay-low-if-oil-hits-80-1787014217</id>
            <summary type="text">இந்த ஆண்டு இறுதி வரை கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு சுமார் 80 அமெரிக்க டொலர் அளவில் பராமரிக்கப்பட்டால், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த முடியும் என த...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்த ஆண்டு இறுதி வரை கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு சுமார் 80 அமெரிக்க டொலர் அளவில் பராமரிக்கப்பட்டால், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க இதனை தெரிவித்துள்ளார்.
</p><p>
அவுஸ்திரேலியாவில் ஒரு வெளிநாட்டு ஊடக நிறுவனத்திற்கு அளித்த நேர்காணலின் போது மத்திய வங்கி ஆளுநர் இந்தக் கருத்துக்களை முன்வைத்துள்ளார்.</p><p>
</p><p></p><h2>அதிக விலை</h2><p>இதில் மேலும் தெரிவித்த அவர் "இந்த ஆண்டு இறுதி வரை எண்ணெய் விலை சுமார் 80 அமெரிக்க டொலர் அளவில் நீடித்தால், நாம் நிலைமையைக் கட்டுப்படுத்த முடியும்.</p><p>இருப்பினும் ஏதேனும் எதிர்பாராத மாற்றம் ஏற்பட்டால், அது நிச்சயமாக ஒரு சவாலாக இருக்கும்.&nbsp;&nbsp;</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2613b05f-35fc-417c-9463-0b137ae6226e/26-6a83ac4c2a6e4.webp' /></p><p>இந்த ஆண்டின் இரண்டாம் பாதியிலும் அடுத்த ஆண்டிலும் இலங்கையின் பணவீக்கம் மத்திய வங்கியின் 5 வீத இலக்கை நோக்கி படிப்படியாகக் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.</p><p> 

மே மாதத்தில் மத்திய வங்கியால் அறிமுகப்படுத்தப்பட்ட பணவியல் கொள்கை நடவடிக்கைகள் மற்றும் இறக்குமதிகளைக் கட்டுப்படுத்த அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகள் ஆகியவை இந்த நிலைமை சாதகமாக மாறுவதற்குப் பங்களித்துள்ளன.
</p><p>
உலகளாவிய நிச்சயமற்ற தன்மைகள் தொடர்ந்தாலும், இறுக்கமான நிதி நிலைமைகளும் அதிக விலைகளும் இலங்கையின் பொருளாதார வளர்ச்சியில் பெரிய பாதகமான தாக்கத்தை ஏற்படுத்தாது" என தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;&nbsp;</h6></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-18T00:51:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[விரைவில் முடிவுக்கு வர உள்ள ஈஸ்டர் குண்டு தாக்குதல் தொடர்பான விசாரணைகள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/easter-attacks-suresh-sale-pillayan-cid-1786995183"></link>
            <id>https://tamilwin.com/article/easter-attacks-suresh-sale-pillayan-cid-1786995183</id>
            <summary type="text">ஈஸ்டர் குண்டு தாக்குதல் தொடர்பான விசாரணைகள் ஒவ்வொரு நாளும் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.இந்த வழக்கிலே பிரதிவாதிகளின் பிரதிவாதிகளின் சாட்சிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈஸ்டர் குண்டு தாக்குதல் தொடர்பான விசாரணைகள் ஒவ்வொரு நாளும் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>இந்த வழக்கிலே பிரதிவாதிகளின் பிரதிவாதிகளின் சாட்சிய விசாரணைகள் இன்று ஆரம்பமாகியுள்ளதாக கூறப்படுகின்றது.</p><p>மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் தான் விசாரணைகள் நடைபெற்று வருகின்றது.வழக்கின் முறைப்பாட்டு தரப்பு சாட்சி விசாரணை 547 நாட்கள் நடைபெற்று இருக்கின்றன.</p><p>அந்தக் காலப்பகுதியில் 309 பேரிடம் சாட்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.அத்துடன் பொருட்கள் தடவியல் அறிக்கைகளும் சாட்சியங்களாக இதுவரையில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.</p><p>மிக விரைவிலே இந்த வழக்கு முடிவுக்கு வர உள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.</p><p>இந்த விடயம் தொடர்பான விரிவான தகவல்களை&nbsp;நியூஸ் இன்சைட் நிகழ்ச்சியில் காணலாம்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/F1l_ko6A4l8" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-18T00:51:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[களைகட்டும் யாழ். உணவுத் திருவிழா ; மூன்றாவது நாளிலும் மக்கள் வெள்ளம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/weeding-jaffna-food-festival-crowd-flood-third-day-1787013776"></link>
            <id>https://jvpnews.com/article/weeding-jaffna-food-festival-crowd-flood-third-day-1787013776</id>
            <summary type="text">யாழ்ப்பாணத்தின் தனித்துவமான உணவு மற்றும் கலாசார பாரம்பரியத்தை உலகிற்கு அறிமுகப்படுத்தும் “யாழ்ப்பாணத்துக்கு வருகை தாருங்கள் 2026 – கலாசார மற்றும் உணவு...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணத்தின் தனித்துவமான உணவு மற்றும் கலாசார பாரம்பரியத்தை உலகிற்கு அறிமுகப்படுத்தும் “யாழ்ப்பாணத்துக்கு வருகை தாருங்கள் 2026 – கலாசார மற்றும் உணவுத் திருவிழா” முற்றவெளி மைதானத்தில் மூன்றாவது நாளாகவும் சிறப்பாக இடம்பெற்று வருகின்றது.</p><p>
</p><p></p><p>வட மாகாண சுற்றுலா அபிவிருத்திப் பணியகத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் இத்திருவிழாவில் பாரம்பரிய உணவுகள், கைவினைப் பொருட்கள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் இடம்பெறுகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5addf363-65f6-466d-8a70-36275077574a/26-6a83aa91ecd47.webp' /></p><p>

விழாவை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய வட மாகாண ஆளுநர் நா. வேதநாயகன், யாழ்ப்பாணத்தின் பாரம்பரிய உணவுகளின் சுவையை அனுபவிக்க உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை அழைத்ததுடன், இந்நிகழ்வு வடக்கின் சுற்றுலாத்துறையில் முதலீடுகளை ஊக்குவிக்கும் வாய்ப்பாகவும் அமைகிறது எனத் தெரிவித்தார்.</p><p>

விழாவில் றீ(ச்)ஷா நிறுவனத்தின் உரிமையாளர் கந்தையா பாஸ்கரன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். </p><p>பெருமளவான மக்கள் பங்கேற்றுள்ள இத்திருவிழா காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை நடைபெறுகிறது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-18T00:43:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறையில் வைத்தாவது நாமலை ஜனாதிபதியாக்குவோம்...! அநுர அரசாங்கத்திற்கு அதிரடி எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sri-lanka-political-tensions-rise-1787011238"></link>
            <id>https://ibctamil.com/article/sri-lanka-political-tensions-rise-1787011238</id>
            <summary type="text">நீதியரசர்களின் ஓய்வு வயதை நீடிப்பதற்கான தீர்மானத்தை தொடர்ந்து நாட்டில் தற்போது அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.

இதற்கிடையில், நாடாளுமன்ற உறுப்பினர் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீதியரசர்களின் ஓய்வு வயதை நீடிப்பதற்கான தீர்மானத்தை தொடர்ந்து நாட்டில் தற்போது அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.
</p><p>
இதற்கிடையில், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச சிறைக்கு சென்றாலும் கூட அவரை சிறையில் வைத்தே ஜனாதிபதி ஆக்குவோம் என அவர் தரப்பினர் அரசாங்கத்தை எச்சரித்து வருகின்றனர். </p><p>

இவ்வாறிருக்கையில், ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க பதவி விலகினால் அவரை கைது செய்யும் நிலை ஏற்படலாம் என எதிர்தரப்புக்களில் பல கருத்துக்களும் முன்வைக்கப்பட்டு வருகின்றன. </p><p>

அதேநேரம், கடற்றொழில் அமைச்சர், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் அவரின் குடும்பத்தினர் தொடர்பில் முன்வைத்துள்ள கருத்துக்கள் பேசுபொருளாகியுள்ளன. </p><p>

இவ்வாறு நாட்டில் இடம்பெற்ற பல முக்கிய அரசியல் நகர்வுகள் குறித்து விரிவாக ஆராய்கின்றது லங்காசிறியின் நாட்டு நடப்பு நிகழ்ச்சி...</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/ZXdAKNMU7LA" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-18T00:33:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை.. மத்திய வங்கி ஆளுநர் முன்வைத்துள்ள முக்கிய யோசனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/inflation-crude-oil-prices-maintained-at-around-1787012060"></link>
            <id>https://tamilwin.com/article/inflation-crude-oil-prices-maintained-at-around-1787012060</id>
            <summary type="text">இந்த ஆண்டு இறுதி வரை கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு சுமார் 80 அமெரிக்க டொலர் அளவில் பராமரிக்கப்பட்டால், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த முடியும் என்ற...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்த ஆண்டு இறுதி வரை கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு சுமார் 80 அமெரிக்க டொலர் அளவில் பராமரிக்கப்பட்டால், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த முடியும் என்று மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க கூறுகிறார்.
</p><p>அவுஸ்திரேலியாவில் ஒரு வெளிநாட்டு ஊடக நிறுவனத்திற்கு அளித்த நேர்காணலின் போது மத்திய வங்கி ஆளுநர் இந்தக் கருத்துக்களை முன்வைத்துள்ளார்.</p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">நிலைமையை கட்டுப்படுத்தலாம்..&nbsp;</span></p><p>
</p><p>இதன்போது அவர், "இந்த ஆண்டு இறுதி வரை எண்ணெய் விலை சுமார் 80 அமெரிக்க டொலர் அளவில் நீடித்தால், நாம் நிலைமையைக் கட்டுப்படுத்த முடியும். இருப்பினும், ஏதேனும் எதிர்பாராத மாற்றம் ஏற்பட்டால், அது நிச்சயமாக ஒரு சவாலாக இருக்கும்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6407947f-7ecf-475b-aad2-9f15e8d5a192/26-6a83a7c24a3c1.webp' /></p><p>இந்த ஆண்டின் இரண்டாம் பாதியிலும் அடுத்த ஆண்டிலும் இலங்கையின் பணவீக்கம் மத்திய வங்கியின் 5 வீத இலக்கை நோக்கி படிப்படியாகக் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.&nbsp;</p><p>
மே மாதத்தில் மத்திய வங்கியால் அறிமுகப்படுத்தப்பட்ட பணவியல் கொள்கை நடவடிக்கைகள் மற்றும் இறக்குமதிகளைக் கட்டுப்படுத்த அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகள் ஆகியவை இந்த நிலைமை சாதகமாக மாறுவதற்குப் பங்களித்துள்ளன.
</p><p>
உலகளாவிய நிச்சயமற்ற தன்மைகள் தொடர்ந்தாலும், இறுக்கமான நிதி நிலைமைகளும் அதிக விலைகளும் இலங்கையின் பொருளாதார வளர்ச்சியில் பெரிய பாதகமான தாக்கத்தை ஏற்படுத்தாது" என்று மத்திய வங்கி ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-18T00:32:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Farook Sihan</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டு...! சாய்ந்தமருது காவல்துறை உத்தியோகத்தர்கள் இருவர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/two-police-officers-arrested-for-bribes-1787013020"></link>
            <id>https://ibctamil.com/article/two-police-officers-arrested-for-bribes-1787013020</id>
            <summary type="text">&amp;nbsp;இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டிர் இரு காவல்துறை உத்தியோகத்தர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த கைது நடவடிக்கை நேற்றைய தினம் (17-08-2026) முன்ன...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டிர் இரு காவல்துறை உத்தியோகத்தர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p>
குறித்த கைது நடவடிக்கை நேற்றைய தினம் (17-08-2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
</p><p>
 இலஞ்ச ஊழல் விசாரணை
ஆணைக்குழுவின் அதிகாரிகளால் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p><p></p><h2>சட்ட நடவடிக்கை</h2><p>

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, அண்மையில் கைதான போதைப்பொருள் சந்தேகநபர் ஒருவரை சட்ட நடவடிக்கைகளில் இருந்து
விடுவிப்பதற்கு உதவ நடவடிக்கை எடுப்பதாகக் கூறி 20 ஆயிரம் ரூபாவை இலஞ்சமாக குறித்த காவல்துறையினர் பெற்றுள்ளனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6071746c-95dc-4814-8d51-cefafc701d04/26-6a83a79ee926e.webp' /></p><p>சாய்ந்தமருது காவல் நிலையத்தில்
கடமையாற்றும் காவல்துறை சார்ஜன்ட் தர உத்தியோகத்தர் ஒருவரும், சாய்ந்தமருது
காவல் நிலையத்தில் கடமையாற்றி தற்போது பெரிய நீலாவணை காவல் நிலையத்தின்
பதில் பொறுப்பதிகாரியாக செயற்பட்டு வரும் காவல்துறை பரிசோதகர் (இன்ஸ்பெக்டர்)
ஒருவரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
</p><p>
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகள்
மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-18T00:32:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் உயர்தரப் பரீட்சை எழுதிக்கொண்டிருந்த மாணவன் உயிரிழப்பு ; மரணத்திற்கான காரணம் மர்மம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/student-dies-while-advanced-level-exams-jaffna-1787011866"></link>
            <id>https://jvpnews.com/article/student-dies-while-advanced-level-exams-jaffna-1787011866</id>
            <summary type="text">யாழ்ப்பாணத்தில் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய 19 வயதுடைய மாணவன் ஒருவர் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
அரசடி வீதி, கந்தர்ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணத்தில் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய 19 வயதுடைய மாணவன் ஒருவர் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.</p><p>
</p><p></p><p>அரசடி வீதி, கந்தர்மடம் பகுதியைச் சேர்ந்த குறித்த மாணவன், கடந்த 10ஆம் திகதி உயிரியல் பிரிவின் இரண்டாவது நாள் பரீட்சைக்குத் தோற்றியபோது திடீரென மயக்கமடைந்துள்ளார்.
</p><p>
இதையடுத்து அவரது பெற்றோர் வரவழைக்கப்பட்டு, மாணவன் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d5b85ad8-424f-4c2e-865d-d1f39ee03cc3/26-6a83a31c5bc7f.webp' /></p><p>சிகிச்சையின் பின்னர் அவர் வீடு திரும்பியுள்ளார். பின்னர் கடந்த 12ஆம் திகதியும் உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில் மீண்டும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளார்.</p><p>

இந்நிலையில், நேற்று (16) இரவு உணவு அருந்திய பின்னர் அவருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டுள்ளது. </p><p>உடனடியாக வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட போதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
</p><p>
மாணவனின் மரணம் தொடர்பான விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி வி. அன்ரலா மேற்கொண்டுள்ளார்.
</p><p>
உடற்கூற்று பரிசோதனையின் போதும் மரணத்திற்கான காரணம் உறுதியாக கண்டறியப்படாத நிலையில், மேலதிக பரிசோதனைகளுக்காக உடற்கூற்று மாதிரிகள் கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-18T00:11:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[மூடப்படவுள்ள பல மதுபானக் கடைகள்.. வெளியான அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/some-bars-to-be-closed-till-28th-1787010993"></link>
            <id>https://tamilwin.com/article/some-bars-to-be-closed-till-28th-1787010993</id>
            <summary type="text">இன்று முதல் 28ஆம் திகதி வரை 11 நாட்களுக்கு மூடப்படவுள்ள பல மதுபானக் கடைகள் தொடர்பில் கலால் திணைக்கள அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளது.&amp;nbsp;எடுக்கப்பட்டுள...</summary>
            <content type="html"><![CDATA[<p>இன்று முதல் 28ஆம் திகதி வரை 11 நாட்களுக்கு மூடப்படவுள்ள பல மதுபானக் கடைகள் தொடர்பில் கலால் திணைக்கள அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளது.&nbsp;</p><h2>எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை&nbsp;</h2><p>இன்று (18) முதல் கண்டி எசல பெரஹேராவின் முதல் கும்பல் பெரஹேரா வீதிகளில் வலம் வரவுள்ள நிலையில் பெரஹேரா முடியும் நாள் (28) வரை மதுக்கடைகளை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கலால் திணைக்களம் அறிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/16792a0d-0d58-4264-8997-133e82806eb4/26-6a83a1aa9e087.webp' /></p><p>
எனவே, கண்டி கடவத்த சதாரா மற்றும் கங்காவத்த கோரள பிரதேச செயலகப் பகுதிகளில் உள்ள அனைத்து மதுக்கடைகளையும் மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p>

மேலும், குண்டசாலை பிரதேச செயலகத்தின் நத்தாரம்போத்த கிராம அலுவலர் கோட்டத்தில், பிரதான சாலையை ஒட்டியுள்ள எரிபொருள் நிலையம் வரையிலான அனைத்து மதுக்கடைகளும் மூடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-18T00:08:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானுடன் பேச்சுவார்த்தை... ட்ரம்ப்பை வலியுறுத்தும் எர்டோகன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/erdogan-urges-trump-to-talks-1787011448"></link>
            <id>https://news.lankasri.com/article/erdogan-urges-trump-to-talks-1787011448</id>
            <summary type="text">Erdogan urges Trump to pursue talks: ஈரானுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளுமாறு ட்ரம்ப்பை எர்டோகன் வலியுறுத்தியுள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான பதற...</summary>
            <content type="html"><![CDATA[<p>Erdogan urges Trump to pursue talks: ஈரானுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளுமாறு ட்ரம்ப்பை எர்டோகன் வலியுறுத்தியுள்ளார்.
</p><p>இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றத்தைத் தணிக்க ஈரானுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளுமாறு, துருக்கிய ஜனாதிபதி தயீப் எர்டோகன் டொனால்ட் ட்ரம்ப்பை தொலைபேசி உரையாடலின்போது வலியுறுத்தியுள்ளார்.</p><h2>முடிவுக்குக் கொண்டுவருமாறு</h2><p>
</p><p>அமைதி முயற்சிகளுக்கு துருக்கியின் ஆதரவை வழங்குவதாகவும் எர்டோகன் அலுவலகம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது. நேட்டோ அமைப்பில் இரண்டாவது மிகப்பெரிய ராணுவத்தைக் கொண்டதும், </p><p>ஈரானுடன் எல்லையைப் பகிர்ந்துகொள்வதுமான துருக்கி, போரை முடிவுக்குக் கொண்டுவருமாறு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/895d025b-946f-4663-8c04-e25a48f9f762/26-6a83a17b1f155.webp' /></p><p> </p><p>அமெரிக்கா, ஈரான் மற்றும் பாகிஸ்தான், கத்தார் போன்ற மத்தியஸ்தர்களுடன் நெருங்கிய தொடர்பைப் பேணி வரும் துருக்கி, சம்பந்தப்பட்ட தரப்பினரிடையே ஒரு மத்தியஸ்தராகவும் செயல்பட்டு வருகிறது. </p><p>இந்த நிலையில், ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான பதற்றங்கள் குறித்து ராஜதந்திர வழிமுறைகளை முழுமையாகப் பயன்படுத்துவது மிகவும் முக்கியம் என்றும், பேச்சுவார்த்தைகள் தொடரும் என்று நம்புவதாகவும், அமைதி முயற்சிகளுக்குத் துருக்கி தொடர்ந்து ஆதரவளிக்கும் என்றும் ஜனாதிபதி அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் எர்டோகன் தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>தாக்குதல் சார்ந்ததாக</h2><p> </p><p>போரை நிரந்தரமாக முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தை முயற்சிகள் முடங்கியுள்ள நிலையில், தற்காலிகப் போர்நிறுத்த ஒப்பந்தத்தை நீட்டிக்க அமெரிக்கா மறுத்துவிட்டது; </p><p>இதனைத் தொடர்ந்து, ஈரான் தனது ராணுவ நிலைப்பாட்டை முழுமையான தாக்குதல் சார்ந்ததாக மாற்றிக்கொள்ளும் என்று அந்நாட்டின் மூத்த அதிகாரி ஒருவர் திங்களன்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்ததைத் தொடர்ந்து இந்தக் கோரிக்கை எழுந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8e48e1ef-92ea-4837-a429-c2d21fa4b3a7/26-6a83a17bc650f.webp' /></p><p> </p><p>ஹார்முஸ் நீரிணை வழியாக எண்ணெய் கப்பல்களின் போக்குவரத்தை மீண்டும் தொடங்குவதற்கான முயற்சிகளும் தேக்கமடைந்துள்ளன. </p><p>ஈரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதலை துருக்கி விமர்சித்துள்ளது; அதேவேளையில், வளைகுடா நாடுகள் மீது ஈரான் நடத்திய தாக்குதல்களைக் கண்டிப்பதோடு, முக்கியத்துவம் வாய்ந்த அந்த நீரிணையை மீண்டும் திறக்குமாறும் அது வலியுறுத்தியுள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-18T00:01:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆசனவாயில் 'ஐஸ்' போதைப்பொருளை மறைத்து வைத்திருந்த கைதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/prisoner-found-hiding-ice-drug-in-anus-1787010753"></link>
            <id>https://jvpnews.com/article/prisoner-found-hiding-ice-drug-in-anus-1787010753</id>
            <summary type="text">கண்டி பல்லேகலை - தும்பர சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதி ஒருவரிடமிருந்து 5,196 மில்லிகிராம் &#039;ஐஸ்&#039; போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கண்டி பல்லேகலை - தும்பர சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதி ஒருவரிடமிருந்து 5,196 மில்லிகிராம் 'ஐஸ்' போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p></p><p>குறித்த கைதி தனது ஆசனவாயில் போதைப்பொருளை மறைத்து வைத்திருந்தமை தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/18788e98-609c-4b88-a695-dc12408f0894/26-6a839ec3b001d.webp' /></p><p>இவர் ஏற்கனவே போதைப்பொருள் குற்றச்சாட்டு ஒன்று தொடர்பிலேயே சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p>

அத்துடன் சிறைக்குள் இருக்கும் இந்த நபருக்கு 'ஐஸ்' போதைப்பொருள் எவ்வாறு கிடைத்தது என்பது குறித்து சிறைச்சாலை அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-17T23:52:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[இராணுவ முகாம்கள் - விகாரைகளுக்குள் புதைக்கப்பட்ட தமிழ் மக்கள்! ரவிகரன் எம்.பி சந்தேகம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/raviharan-suspects-mass-graves-in-camps-1787008768"></link>
            <id>https://ibctamil.com/article/raviharan-suspects-mass-graves-in-camps-1787008768</id>
            <summary type="text">வடக்கு, கிழக்கு தமிழர் தாயகப் பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இராணுவ முகாம்களுக்குள்ளும், எவ்வித நிலத் தொடர்புகளுமில்லாமல் அமைக்கப்பட்டுள்ள விகாரைகளுக்குள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p>வடக்கு, கிழக்கு தமிழர் தாயகப் பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இராணுவ முகாம்களுக்குள்ளும், எவ்வித நிலத் தொடர்புகளுமில்லாமல் அமைக்கப்பட்டுள்ள விகாரைகளுக்குள்ளும் கடந்த காலங்களில் தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டுள்ளதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் து.ரவிகரன் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.
</p><p>
செம்மணியில் நேற்று (17-08-2026) நீதியின் ஓலம் - 02 இறுதி நாள் மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணி இடம்பெற்றது.
</p><p>
இதில் பங்கேற்றுக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p></p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">நீதி விசாரணை</span></p><p>இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “செம்மணி படுகொலை உள்ளிட்ட ஈழத் தமிழர்கள் மீது திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட படுகொலைகளுக்கு பன்னாட்டு நீதி தேவை என்பதை வலியுறுத்தியே சிறார்கள், பெண்கள் மற்றும் முதியவர்கள் என பெருந்திரளானவர்கள் ஆர்ப்பட்டப் பேரணியினை முன்னெடுத்திருக்கின்றனர்.
</p><p>
ஈழத் தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட சகல படுகொலைகளுக்குமான சர்வதேச நீதி விசாரணை மேற்கொள்ளப்படவேண்டும் என்ற ஈழத் தமிழர்களின் கோரிக்கையினை தற்போதைய ஆட்சியாளர்களாவது ஏற்றுக்கொண்டு, குறித்த படுகொலைகளுக்குரிய சர்வதேச நீதி விசாரணையை மேற்கொள்வதற்கு ஒத்துழைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியே இவ்வாறான ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/30d95483-4b35-46b9-82d3-374c2e6301f1/26-6a839d1ab89c5.webp' /></p><p>

கடந்த ஆட்சியாளர்களின் காலத்தில் செம்மணிப் புதைகுழி விவகாரம் மூடி மறைக்கப்பட்ட வரலாறுகளும் உள்ளன.</p><p> அவ்வாறு செம்மணி புதைகுழி விவகாரத்தினை மூடிமறைத்த இனவாத ஆட்சியாளர்களும் சர்வதேச விசாரணைக்கு உட்படுத்தப்படவேண்டும்.

இது தொடர்பில் ஏற்கனவே நான் நாடாளுமன்றிலும் வலியுறுத்தியுள்ளேன். </p><p>

அத்தோடு தற்போது வடகிழக்கில் மக்களின் காணிகளை அபகரித்து அமைக்கப்பட்டுள்ள இராணுவ முகாம்களிலும் தமிழ் மக்கள் கொல்லப்பட்டு புதைக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகங்கள் எமக்கு எழுகின்றது” என குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-17T23:52:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரான் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும் ; டிரம்ப் கடும் எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/iran-must-surrender-unconditionally-trump-1787008718"></link>
            <id>https://canadamirror.com/article/iran-must-surrender-unconditionally-trump-1787008718</id>
            <summary type="text">அமெரிக்காவுடனான போரை முடிவுக்குக் கொண்டுவர ஈரான் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.

பாகிஸ்தான் மத...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவுடனான போரை முடிவுக்குக் கொண்டுவர ஈரான் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.
</p><p>
பாகிஸ்தான் மத்தியஸ்தத்தில் கடந்த ஜூன் மாதம் அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே இடைக்கால அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்படி, அனைத்து முனைகளிலும் ராணுவ நடவடிக்கைகளை நிறுத்த இரு நாடுகளும் ஒப்புக்கொண்டன. </p><p>எனினும், ஹோர்முஸ் நீரிணையின் கட்டுப்பாடு தொடர்பாக மீண்டும் ராணுவ மோதல்கள் ஏற்பட்டதைத் தொடர்ந்து அந்த ஒப்பந்தம் விரைவில் முறிந்தது.
</p><p>
ஒப்பந்தத்தின்படி, ஈரானின் அணுசக்தித் திட்டம் உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகளுக்கு 60 நாட்களுக்குள் இறுதித் தீர்வு காண இரு நாடுகளும் ஒப்புக்கொண்டிருந்தன.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/19a0a069-d565-43f4-a5b9-41a4329508a7/26-6a8396d049a65.webp' /></p><p>இந்த காலக்கெடு திங்கள்கிழமையுடன் நிறைவடைந்த நிலையில், இரு நாடுகளுக்கும் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தைகள் முடங்கியுள்ளன.</p><p>

இந்நிலையில், அமெரிக்க ஊடகமொன்றுக்கு அளித்த பேட்டியில் டிரம்ப், ஈரான் போரைத் தொடராமல் உடனடியாக வெள்ளைக் கொடியை ஏந்தி சரணடைய வேண்டும் எனத் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
</p><p>
மேலும், தனது ‘ட்ரூத் சோஷியல்’ பதிவில், எந்த வடிவத்திலும் ஈரான் அணு ஆயுதங்களை வைத்திருக்கக் கூடாது என்பதே அமெரிக்காவின் முதன்மையான நோக்கம் எனக் குறிப்பிட்டுள்ளார்.</p><p>இதனிடையே, ஹோர்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்து தொடர்பாக ஓமனும் ஈரானும் தனிப்பட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த விவகாரத்தில் ஓமன் தலையிட்டால், அந்நாட்டின் மீதும் குண்டுவீச்சு தாக்குதல் நடத்தப்படும் என டிரம்ப் எச்சரித்துள்ளதாக கூறப்படுகிறது.</p><p>மறுபுறம், அமெரிக்கா மீண்டும் ஒப்பந்தத்துக்குத் திரும்பும் வரை ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது என ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி தெரிவித்துள்ளார்.</p><p>

அமெரிக்கா, ஈரான் நிர்ணயித்துள்ள காலக்கெடுவுக்குள் ஒப்பந்தத்தின் அனைத்து விதிகளையும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும், இதுவே அடுத்தகட்ட பேச்சுவார்த்தைக்கான முன்நிபந்தனை என்றும் ஈரான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
ராஜதந்திர முயற்சிகள் தோல்வியடைந்தால், ஹோர்முஸ் நீரிணை தொடர்பான ஈரானின் கொள்கை தற்காப்பு நிலையிலிருந்து தாக்குதல் நிலைக்கு மாறும் என அந்நாட்டு மூத்த அதிகாரி ஒருவர் எச்சரித்துள்ளார்.
</p><p>
ஈரான் நிர்ணயித்துள்ள காலக்கெடு தொடர்பான விவரங்கள் மத்தியஸ்தர்கள் மூலம் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு விரைவில் தெரிவிக்கப்படும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.</p>]]></content>
            <updated>2026-08-17T23:18:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[உக்ரைனால் பயன்படுத்தப்படும் பிரித்தானிய ட்ரோன்கள்... மிரட்டல் விடுத்த ரஷ்யா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/russia-threatens-uk-with-1787008814"></link>
            <id>https://news.lankasri.com/article/russia-threatens-uk-with-1787008814</id>
            <summary type="text">Russia threatens UK with consequences: பிரித்தானியாவின் ட்ரோன்களை உக்ரைன் பயன்படுத்தியதைத் தொடர்ந்து, பின்விளைவுகள் ஏற்படும் என ரஷ்யா எச்சரித்துள்ளது....</summary>
            <content type="html"><![CDATA[<p>Russia threatens UK with consequences: பிரித்தானியாவின் ட்ரோன்களை உக்ரைன் பயன்படுத்தியதைத் தொடர்ந்து, பின்விளைவுகள் ஏற்படும் என ரஷ்யா எச்சரித்துள்ளது.
</p><p>ரஷ்யாவிற்கு எதிரான தாக்குதல்களில் உக்ரைன் முதல் முறையாக பிரித்தானிய தயாரிப்பு ட்ரோன்களைப் பயன்படுத்தியதைத் தொடர்ந்து, ரஷ்யா பதிலடி கொடுக்கப் போவதாக எச்சரித்துள்ளது.</p><h2>தீவிரப்படுத்தும் பிரித்தானியா</h2><p>
</p><p>கிழக்கு ஐரோப்பாவில் நடக்கும் போரில் பிரித்தானியா மேலும் தலையிட்டால், அது மிகப் பெரிய விலையைக் கொடுக்க நேரிடும் என்று லண்டனில் உள்ள ரஷ்ய தூதரகம் எச்சரித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6138c120-50a9-499f-aca4-d8091122216e/26-6a8397308f235.webp' /></p><p> </p><p>மேலும், 
அமைதிக்காகப் பாடுபடுவதாகப் பாசாங்குத்தனமாகக் கூறிக்கொண்டே, உக்ரைன் நெருக்கடியை வேண்டுமென்றே தீவிரப்படுத்துவதாக பிரித்தானியா மீது ரஷ்ய தூதரகம் குற்றம் சாட்டியுள்ளது. </p><p>பிரித்தானியா ரஷ்யாவை அடக்கி ஆளவும், பிறரின் கைகளைப் பயன்படுத்தி அதற்கு உச்சபட்ச சேதத்தை ஏற்படுத்தவும் முயலும் உக்ரேனிய நவ-நாஜிக்களின் இரத்தக்களரி குற்றங்களுக்கும் பயங்கரவாதத் தாக்குதல்களுக்கும் உடந்தையாகவும் துணைபோகும் ஒரு கருவியாகவும் செயல்படுகிறது என்றும் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளது. </p><p>பிரித்தானியாவின் செயல்களுக்குத் தவிர்க்க முடியாத பின்விளைவுகள் ஏற்படும், அதற்கு அந்த நாடு பதிலளிக்க வேண்டியிருக்கும். இந்த மோதலில் பிரித்தானியாவின் ஈடுபாடு எந்த அளவுக்கு ஆழமாகிறதோ, உக்ரைனின் பயங்கரவாதத்திற்கு அதன் ஆதரவு எந்த அளவுக்கு அதிகமாகிறதோ, அந்த அளவுக்கு அதற்கான விலையும் அதிகமாக இருக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளது.</p><p></p><p> </p><p>இரண்டு இங்கிலாந்து நிறுவனங்களால் தயாரிக்கப்பட்ட ட்ரோன்களை உக்ரைன், ரஷ்ய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களைத் தாக்கப் பயன்படுத்தியதாக வெளியான செய்திகளைத் தொடர்ந்து இந்தத் தலையீடு வந்துள்ளது. </p><p>வெளியாகியுள்ள தரவுகளின் அடிப்படையில், ரஷ்யாவின் இன்றியமையாத வளத்திற்கு எதிரான ஜெலென்ஸ்கியின் நடவடிக்கையானது 35 பில்லியன் பவுண்டுகளுக்கும் அதிகமான பொருளாதார சேதத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், நாட்டில் எரிபொருள் பற்றாக்குறைக்கும் வழிவகுத்துள்ளது.</p><h2>பறிமுதல் செய்வதாக</h2><p> </p><p>வெளியாகியுள்ள தகவலில், பாதுகாப்புத் துறையின் மாபெரும் நிறுவனமான BAE சிஸ்டம்ஸின் துணை நிறுவனமான காலன்-லென்ஸ் தயாரித்த நியான் ட்ரோன்களை உக்ரைன் பயன்படுத்தியுள்ளது. பாதுகாப்பு காரணங்களால் இன்னொரு ட்ரோன் தொடர்பில் தகவல் வெளியாகவில்லை.
</p><p>நியான் ட்ரோனின் பறக்கும் தூரம் 150 மைல்கள் என்பதால், அதனால் உக்ரைனுக்கு அருகிலுள்ள ரஷ்யாவின் சில பகுதிகளை மட்டுமே தாக்க முடியும்.</p><p> மாஸ்கோவிற்கு அருகிலுள்ள வோல்கோகிராட் மற்றும் யாரோஸ்லாவ்ல் ஆகிய இடங்களில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது ட்ரோன் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1f83a313-a9da-4101-a9f7-104057a4f5ce/26-6a83973140260.webp' /></p><p> </p><p>இதனிடையே, ரஷ்ய எண்ணெய் மீதான தடைகளைத் தவிர்க்க முயன்றுவரும் ரஷ்ய எண்ணெய்க் கப்பல்கள் மீது மேற்கத்திய நாடுகள் மேற்கொண்ட ஒடுக்குமுறையைத் தொடர்ந்து, புடின் கடந்த வாரம் பிரித்தானியாவின் கப்பல்களைப் பறிமுதல் செய்வதாக ஏற்கனவே அச்சுறுத்தியிருந்தார்.</p><p>
பிரித்தானியா, அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் ரஷ்யா மீதான தாக்குதல்களுக்குத் தங்கள் ஆயுதங்களைப் பயன்படுத்த அவ்வப்போது அனுமதி அளித்துள்ளன; இருப்பினும், ஆயுத இருப்பு குறைந்து வருவது மற்றும் இது மோதலைத் தீவிரப்படுத்தும் என்று டொனால்ட் ட்ரம்ப் கொண்டுள்ள அச்சம் ஆகியவற்றின் காரணமாக இத்தகைய அனுமதிகள் மறுக்கப்பட்டு வருகிறது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-17T23:17:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[அத்துருகிரியவில் துப்பாக்கிச் சூடு: டுபாய் கசுனின் உறவினர் வைத்தியசாலையில்...!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/man-shot-injured-in-athurugiriya-1787008325"></link>
            <id>https://ibctamil.com/article/man-shot-injured-in-athurugiriya-1787008325</id>
            <summary type="text">அத்துருகிரிய - ஹபரகட பகுதியில் துப்பாக்கி சூடு சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

குறித்த துப்பாக்கி சூடு நேற்று (17-08-2026) இரவு இடம்பெற்றுள்ளது.

 து...</summary>
            <content type="html"><![CDATA[<p>அத்துருகிரிய - ஹபரகட பகுதியில் துப்பாக்கி சூடு சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
</p><p>
குறித்த துப்பாக்கி சூடு நேற்று (17-08-2026) இரவு இடம்பெற்றுள்ளது.
</p><p>
 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் நபர் ஒருவர் காயமடைந்துள்ளார்.</p><p> </p><p></p><h2>துப்பாக்கிச் சூடு</h2><p>காயமடைந்தவர் தற்போது ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/90f11fa4-7b4d-4930-ba99-76a09cf9c5c8/26-6a839547eccd6.webp' /></p><p>துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானவர், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலின் உறுப்பினரான டுபாய் கசுனின் உறவினர் எனத் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-17T23:12:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தோனேஷியாவில் மீண்டும் நிலநடுக்கம் ; மக்கள் அச்சம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/another-earthquake-hits-indonesia-people-scared-1787007276"></link>
            <id>https://canadamirror.com/article/another-earthquake-hits-indonesia-people-scared-1787007276</id>
            <summary type="text">இந்தோனேஷியாவின் புளோரஸ் தீவில் அண்மையில் ஏற்பட்ட 7.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் பாதிப்புகள் முழுமையாக நீங்காத நிலையில், இன்று அதே பக...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தோனேஷியாவின் புளோரஸ் தீவில் அண்மையில் ஏற்பட்ட 7.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் பாதிப்புகள் முழுமையாக நீங்காத நிலையில், இன்று அதே பகுதியில் 5.9 ரிக்டர் அளவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
</p><p>
கிழக்கு நுசா தெங்காரா மாகாணத்தின் புளோரஸ் தீவுக்கு அருகே கடந்த 15ஆம் திகதி 7.7 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. </p><p>கடல்மட்டத்திலிருந்து சுமார் 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள் அருகிலுள்ள மாகாணங்களிலும் உணரப்பட்டன.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/46f71559-d931-4daf-8e83-4000d8fa5024/26-6a83912de113f.webp' /></p><p>இதையடுத்து அன்றைய தினம் மாலை வடக்கு சுமத்ரா பகுதியில் 6.8 ரிக்டர் அளவில் மற்றொரு நிலநடுக்கமும் ஏற்பட்டது.
</p><p>
புளோரஸ் தீவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் மங்கராய், கிழக்கு மங்கராய், சிக்கா, என்கடா மற்றும் எண்டே உள்ளிட்ட பகுதிகள் பெரும் பாதிப்பை சந்தித்தன.</p><p> இந்தப் பேரிடரில் இதுவரை 53 பேர் உயிரிழந்துள்ளதுடன், 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
</p><p>
இந்நிலையில், புளோரஸ் தீவில் இன்று மீண்டும் 5.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. </p><p>அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களால் தீவில் வசிக்கும் மக்கள் பீதியடைந்துள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-08-17T22:55:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் பதவி விலகல்! வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sl-tourism-chairman-buddhika-resigns-1787006405"></link>
            <id>https://ibctamil.com/article/sl-tourism-chairman-buddhika-resigns-1787006405</id>
            <summary type="text">இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் புத்திக ஹேவாவசம், தனது பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். 

இந்த விடயம் தொடர்பில் சுற்றுலா, ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் புத்திக ஹேவாவசம், தனது பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். </p><p>

இந்த விடயம் தொடர்பில் சுற்றுலா, வெளிநாட்டலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சருக்கு அவர் எழுத்துப்பூர்வமாக அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
</p><p>
தனிப்பட்ட மற்றும் தொழில்சார் காரணங்களினால் தான் பதவியிலிருந்து விலகுவதாகப் புத்திக புத்திக ஹேவாவசம் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p>

</p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-17T22:53:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஐஸ்வர்யா ராஜேஷ் ட்ரெண்டி போட்டோஷூட்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/aishwarya-rajesh-trendy-photoshoot-1787006985"></link>
            <id>https://cineulagam.com/article/aishwarya-rajesh-trendy-photoshoot-1787006985</id>
            <summary type="text">நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் சமீப காலமாக கிளாமர் ஆகவும் புகைப்படங்கள் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

தற்போது ட்ரெண்டி உடையில் அவர் போஸ் கொடுத்த ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் சமீப காலமாக கிளாமர் ஆகவும் புகைப்படங்கள் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.</p><p>

தற்போது ட்ரெண்டி உடையில் அவர் போஸ் கொடுத்த லேட்டஸ்ட் புகைப்படங்களை பாருங்க.
</p><p>
இது candid புகைப்படங்கள் என குறிப்பிட்டு இருக்கிறார் ஐஷ்வர்யா ராஜேஷ். ரசிகர்களை கவரும் ஸ்டில்கள் இதோ.</p>]]></content>
            <updated>2026-08-17T22:49:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[சூர்யா கெரியரில் புது சாதனை.. விஸ்வநாத் &amp; சன்ஸ் UKவில் 3 நாள் பிரமாண்ட வசூல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/vishwanath-sons-uk-huge-3-days-collection-1787006688"></link>
            <id>https://cineulagam.com/article/vishwanath-sons-uk-huge-3-days-collection-1787006688</id>
            <summary type="text">சூர்யாவின் விஸ்வநாத் &amp;amp; சன்ஸ் படம் தொடர்ந்து பாக்ஸ் ஆபிசில் நல்ல வசூலை குவித்து வருகிறது.

குறிப்பாக வெளிநாடுகளில் நல்ல வசூல் வருகிறது.UK மற்றும்...</summary>
            <content type="html"><![CDATA[<p>சூர்யாவின் விஸ்வநாத் &amp; சன்ஸ் படம் தொடர்ந்து பாக்ஸ் ஆபிசில் நல்ல வசூலை குவித்து வருகிறது.</p><p>

குறிப்பாக வெளிநாடுகளில் நல்ல வசூல் வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bad761d8-d7d6-495b-9a66-2ce410efd847/26-6a839ed0df7c5.webp' /></p><h2>UK மற்றும் Ireland</h2><p>UKவில் வெறும் மூன்று நாட்களில் £280K வசூலித்து புது சாதனை படைத்திருக்கிறது. இதை தயாரிப்பு நிறுவனமே அறிவித்து இருக்கிறது.
</p><p>
சூர்யா கெரியரில் இவ்வளவு வேகமாக மூன்று நாட்களில் இவ்வளவு வசூல் வந்திருப்பது இது தான் முதல் முறையாம்.


 &nbsp;</p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-17T22:44:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[நடிகை ராகுல் ப்ரீத் தாராள கிளாமர் போட்டோஷூட்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/rakul-preet-sizzling-glam-stills-1787006465"></link>
            <id>https://cineulagam.com/article/rakul-preet-sizzling-glam-stills-1787006465</id>
            <summary type="text">நடிகை ராகுல் ப்ரீத் தாராள கவர்ச்சி காட்டி ரசிகர்களை தொடர்ந்து கவர்ந்து வருகிறார். 35 வயதாகும் ராகுல் ப்ரீத் நிகழ்ச்சிகளுக்கு வரும்போது கவர்ச்சி உடையில...</summary>
            <content type="html"><![CDATA[<p>நடிகை ராகுல் ப்ரீத் தாராள கவர்ச்சி காட்டி ரசிகர்களை தொடர்ந்து கவர்ந்து வருகிறார். </p><p>35 வயதாகும் ராகுல் ப்ரீத் நிகழ்ச்சிகளுக்கு வரும்போது கவர்ச்சி உடையில் வரும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் அடிக்கடி வைரல் ஆகின்றன.
</p><p>
தற்போது வேற லெவல் கவர்ச்சி லுக்கில் ராகுல் போஸ் கொடுத்த ஸ்டில்களை பாருங்க.
</p>]]></content>
            <updated>2026-08-17T22:43:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[ட்ரெண்டி உடையில் பிந்து மாதவி - அழகிய போட்டோஷூட்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/bindu-madhavi-new-photoshoot-1787006219"></link>
            <id>https://cineulagam.com/article/bindu-madhavi-new-photoshoot-1787006219</id>
            <summary type="text">நடிகை பிந்து மாதவி தற்போது படங்கள் மட்டுமின்றி டிவி ஷோக்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். குறிப்பாக தெலுங்கு சின்னத்திரை நிகழ்ச்சிகளில் அவரை அதிகம் பா...</summary>
            <content type="html"><![CDATA[<p>நடிகை பிந்து மாதவி தற்போது படங்கள் மட்டுமின்றி டிவி ஷோக்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். குறிப்பாக தெலுங்கு சின்னத்திரை நிகழ்ச்சிகளில் அவரை அதிகம் பார்க்கலாம்.
</p><p>
தற்போது 40 வயதாகும் பிந்து மாதவி அழகிய லுக்கில் எடுத்த போட்டோஷூட் ஸ்டில்களை வெளியிட்டு இருக்கிறார்.&nbsp;</p><p>ரசிகர்களை கவரும் புகைப்படங்கள் இதோ.</p>]]></content>
            <updated>2026-08-17T22:37:05+00:00</updated>
        </entry>
    </feed>
