<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-09-16T21:17:50+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்க ராணுவ தளங்களை தரைமட்டமாக்கிய ஈரான்: வெளியான புதிய புகைப்படங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/new-photos-reveals-iran-strike-damage-to-us-camps-1789586380"></link>
            <id>https://news.lankasri.com/article/new-photos-reveals-iran-strike-damage-to-us-camps-1789586380</id>
            <summary type="text">New Photos Reveals Iran Strike Damage to US Camps: மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்திய புகைப்படங்கள் வெளியாகியுள...</summary>
            <content type="html"><![CDATA[<p>New Photos Reveals Iran Strike Damage to US Camps: மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்திய புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.</p><h2> அமெரிக்க ராணுவ தளம் மீது தாக்குதல்</h2><p>
மத்திய கிழக்கில் அமைந்துள்ள அமெரிக்கா ராணுவ முகாம்களை குறிவைத்து ஈரானிய புரட்சிகர காவல் படையினர் வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளனர்.</p><p> இந்நிலையில் ஈரானின் இந்த தாக்குதலால் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய சேதங்களையும் விளக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.</p><p> இந்த புகைப்படங்களை அமெரிக்க செய்தி நிறுவனமான CBC அதன் கூட்டாளியான BBC நிறுவனத்திற்கு வழங்கியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ed8a51ea-1f2b-49b5-8cfe-d84fe3ecb20a/26-6aaaebcd6e613.webp' /></p><p> பாதிக்கப்பட்ட முகாம்களில் உள்ள அமெரிக்க வீரர்களால் இந்த புகைப்படங்கள் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.</p><p> அதன்படி, சவுதி அரேபியா மற்றும் குவைத் ஆகிய நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் கடுமையாக சேதமடைந்து இருப்பதை பார்க்க முடிகிறது.</p><p></p><p> குறிப்பாக சவுதி அரேபியாவில் உள்ள பிரின்ஸ் சுல்தான் விமானப்படை தளத்தில் நிலை நிறுத்தப்பட்டிருந்த போயிங் E-3 சென்டரி(Boeing E-3 Sentry) என்ற ராணுவ விமானம் ஈரானின் வான்வழித் தாக்குதலில் இரண்டாக பிளந்து வால் பகுதி முற்றிலுமாக நொறுங்கி போயுள்ளது.</p><p> மேலும் இந்த தாக்குதலில் ராணுவ வீரர்களின் குடியிருப்பு அமைப்புகளும், பல முக்கிய கட்டிடங்களும் தரைமட்டமாக்கப்பட்டு இருப்பது புகைப்படங்களில் பார்க்க முடிகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b48f9be7-35ff-4e38-85a2-7d1a5cdb9b8d/26-6aaaebce25d85.webp' /></p><p> இந்த புகைப்படங்களை வெளியிட்ட BBC, இந்த புகைப்படங்களின் நம்பகத்தன்மையை சுயாதீனமாக உறுதிப்படுத்த முடியவில்லை என்று தெரிவித்துள்ளது.</p><p> இருப்பினும், மத்திய கிழக்கில் ஈரான் நடத்திய தாக்குதலில் அமெரிக்கா முகாம்களில் உள்ள பல கட்டிடங்கள் சேதமடைந்து இருப்பதாக பெண்டகன் சமீபத்திய அறிக்கையில் உறுதிப்படுத்தியுள்ளது.</p><p><br></p>]]></content>
            <updated>2026-09-16T21:17:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கோட்டாபய ராஜபக்சவின் 'மிக்' விமான கமிஷன் பணத்திற்கு நடந்தது என்ன! அதிர்ச்சிக்குள்ளாக்கும் தகவல்...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/gotabaya-rajapaksa-udayanga-weeratunga-mig-1789559561"></link>
            <id>https://tamilwin.com/article/gotabaya-rajapaksa-udayanga-weeratunga-mig-1789559561</id>
            <summary type="text">&amp;nbsp;&#039;மிக்&#039; விமானக் கொடுக்கல் வாங்கலில் நடந்த ஊழல் மோசடி தொடர்பில் தற்போது விசாரணைகள் நடைபெற்றும் வரும் நிலையில் கோட்டாபய ராஜபக்ச நிதிக் குற்றப் புலன...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;'மிக்' விமானக் கொடுக்கல் வாங்கலில் நடந்த ஊழல் மோசடி தொடர்பில் தற்போது விசாரணைகள் நடைபெற்றும் வரும் நிலையில் கோட்டாபய ராஜபக்ச நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் பல மணிநேர வொக்குமூலம் ஒன்றை அளித்துள்ளார்.</p><p>இந்தக் கொடுக்கல் வாங்கலின் பின்னணியில் மறைந்துள்ள கமிஷன் பணம் யாருடைய கணக்குகளில் வைப்பிலிடப்பட்டது? எங்கே சென்றது?
'டி.எஸ். அலையன்ஸ்' (DS Alliance) நிறுவனம் ஒரு போலி நிறுவனமாக உருவாக்கப்பட்டு அதன் கீழ் இயங்கிய 'பெலிமிசா' (Bellimissa) நிறுவனத்திற்கு இலங்கையின் விமானப்படை 15.66 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியை அனுப்பியுள்ளது.
</p><h2>
</h2><p></p><h2>கொடுக்கல் வாங்கல் எப்படி நடந்தது</h2><p>அதில் குறிப்பிட்ட கொடுக்கல் வாங்கலுக்காக உண்மையாகவே செலவிடப்பட்டுள்ளது 7.83 மில்லியன் டொலர்கள் மட்டுமே.
அப்படியானால் எஞ்சிய பணம் எங்கே சென்றது? யாருடைய கணக்கில் வைப்பிலிடப்பட்டது?
மேலும் இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்ட விதம் விசாரணைகள் நிறுத்தப்பட்ட விதம் என அனைத்தும் இதில் அடங்கியுள்ளன.
</p><p>இந்தக் கொள்முதல் கொடுக்கல் வாங்கலானது குளிர் அறைகளில் இருந்த சில நபர்களின் பாக்கெட்டுகளை நிரப்பி அவர்களின் சுகபோகத்திற்காகவே தீர்மானிக்கப்பட்ட ஒரு கொடுக்கல் வாங்கலா? </p><p>
இந்தக் கொடுக்கல் வாங்கலானது உண்மையிலேயே இலங்கை விமானப்படையின் தாக்குதல் படைப்பிரிவை வலுப்படுத்தும் நோக்கத்திலா செய்யப்பட்டது? அல்லது ஒரு குறிப்பிட்ட குழுவினரின் பைகளை நிரப்பும் நோக்கத்திலா செய்யப்பட்டது? எனும் கேள்வி எழுகிறது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6d646032-44b9-4263-bd4a-e36548308477/26-6aaa830b491f4.webp' /></p><p>2019 ஆம் ஆண்டு ஜனாதிபதியாகப் பதவியேற்ற கோட்டாபய ராஜபக்ச இந்த மிக் விமானக் கொடுக்கல் வாங்கல் விசாரணையை நிறுத்தினார். அவ்வாறு நிறுத்துவதற்கு முன்னர் இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய புலனாய்வாளர்களுக்கு இந்தக் கொடுக்கல் வாங்கல் பற்றிய சில முக்கிய தடயங்களைக் கண்டுபிடிக்க முடிந்துள்ளது.
</p><p>இந்த 'டி.எஸ். அலையன்ஸ்' எனும் நிறுவனத்தின் உரிமையாளரான லீ குடும்பத்தினரால் சிங்கப்பூரில் பராமரிக்கப்பட்டு வந்த ஒரு வங்கிப் கணக்கிலிருந்து குறைந்தபட்சம் 4,39,000 டொலர்கள் பணம் இலங்கையின் கொமர்ஷல் வங்கியின் கம்பஹா கிளையில் வைப்பிலிடப்பட்டுள்ளது.
</p><p>கம்பஹா கிளையில் லெலும் துமிந்த மான்னப்பெரும எனும் கழிவுநீர் பொறியியலாளர் ஒருவரின் கணக்கில் வைப்பிலிடப்பட்டுள்ளது. கழிவுநீர் பொறியியலாளர் ஒருவரின் கணக்கில் இவ்வளவு பாரிய தொகையா யார் இந்த லெலும் துமிந்த?.
</p><p> சிங்கப்பூர் 'டி.எஸ். அலையன்ஸ்' நிறுவனம் தங்களது கணக்கொன்றின் மூலமாகவே இலங்கையின் கம்பஹா கொமர்ஷல் வங்கி கிளைக்கு இந்தப் பணத்தை அனுப்புகிறது.&nbsp;</p><h2>டுபாயில் வாங்கப்பட்ட சொத்து</h2><p>இந்த லெலும் துமிந்த மான்னப்பெரும என்பவர் உதயங்க வீரதுங்கவின் சகோதரியை திருமணம் செய்துள்ளார். உறவுமுறையின் படிஇ இந்தப் பணம் வைப்பிலிடப்பட்ட நபர் உதயங்க வீரதுங்கவின் மைத்துனர் ஆவார்.
</p><p>இந்த மான்னப்பெரும என்பவரின் வங்கிப் கணக்கில் வீழ்ந்த பணத்திற்கும் மிக் கொடுக்கல் வாங்கலுக்கும் நேரடித் தொடர்பு இருக்கிறதா இல்லையா என்பதைக் கண்டறிய புலனாய்வாளர்களால் முடியாமல் போகிறது.
</p><p>ஆனால் மிக் கொடுக்கல் வாங்கலுடன் தொடர்புடைய 'டி.எஸ். அலையன்ஸ்' நிறுவனத்தின் கணக்கிலிருந்தே பணம் வந்துள்ளது என்பது உறுதியாகிறது. இந்த மான்னப்பெரும என்பவர் இந்தப் பணத்திலிருந்து 324,971.6 டொலர்களை
ஐக்கிய அரபு இராஜியத்தின் டுபாய் நகரில் சொத்து விற்பனை செய்யும் 'டார்கெட் எஸ்டாப்ளிஷ்மென்ட்' (Target Establishment) எனும் நிறுவனத்திற்குச் செலுத்தியுள்ளார். </p><p>
ஐக்கிய அரபு இராஜியத்தின அஜ்மான் நகரில் உள்ள 'கோல்ட் கிரஸ்ட் வியூஸ் 2' (Goldcrest Views 2) எனும் சொகுசு வீட்டுத் தொகுதியின் 'பென்ட் ஹவுஸ்' (Penthouse) அடுக்குமாடி குடியிருப்பு இலக்கம் 3403 ஐக் கொள்முதல் செய்வதற்காகவே இந்தப் பணம் செலுத்தப்பட்டுள்ளது என்பது தெரியவருகிறது. </p><p>2018 ஆம் ஆண்டு இந்த வீட்டிலிருந்து டுபாய் பொலிஸாரால் உக்ரைனுக்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க கைது செய்யப்படுகிறார்.இந்த பிரம்மாண்டமான கமிஷன் தொகையில் மிகச்சிறிய ஒரு பகுதிக்கு என்ன நடந்தது என்பது பற்றிய தகவல்களாகவே இவை கிடைத்துள்ளதாக நம்புகின்றனர். </p><p>
இந்த கமிஷன் தொகையில் கணிசமான ஒரு பகுதி லத்வியாவில் (Latvia) உள்ள வங்கிக் கணக்கொன்றில் வைப்பு செய்யப்பட்டுள்ளது என்ற விடயமும், அதற்கு மேலதிகமாக நியூசிலாந்து, பனாமா, உக்ரைன், ஹொங்கொங், சிங்கப்பூர் மற்றும் பிரிட்டிஷ் வெர்ஜின் தீவுகள் (British Virgin Islands) ஆகிய நாடுகளிலுள்ள பல வங்கிக் கணக்குகளிலும் வைப்பு செய்யப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
</p><p></p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-16T21:15:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[டப்ளினில் நாடாளுமன்ற உறுப்பினர் மீது தாக்குதல்: முகத்தில் குத்திவிட்டு தப்பி ஓடிய நபர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/dublin-traffic-assault-mb-michael-recovers-1789593076"></link>
            <id>https://news.lankasri.com/article/dublin-traffic-assault-mb-michael-recovers-1789593076</id>
            <summary type="text"> Dublin Traffic Assault MB Michael Healy Rea Recovers: அயர்லாந்தின் டப்ளின் நகரில் போக்குவரத்து நெரிசலில் சிக்கி கொண்ட எம்.பி ஒருவர் மீது தாக்குதல் நட...</summary>
            <content type="html"><![CDATA[<p> Dublin Traffic Assault MB Michael Healy Rea Recovers: அயர்லாந்தின் டப்ளின் நகரில் போக்குவரத்து நெரிசலில் சிக்கி கொண்ட எம்.பி ஒருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><h2> நாடாளுமன்ற உறுப்பினர் மீது தாக்குதல்</h2><p>அயர்லாந்தின் டப்ளின் நகரில் புதன்கிழமை மாலை போக்குவரத்து நெரிசலில் சிக்கிக்கொண்ட சுயேச்சை அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினருமான மைக்கேல் ஹூலி ரே(Michael Healy-Rae) மீது திடீர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.</p><p> பரபரப்பான நகரின் மையப் பகுதியில் உள்ள கார்க் சாலையில் எம்.பி ஹீலி-ரே போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொண்டு நின்ற போது, அந்த வழியாக வந்த மர்ம நபர் ஒருவர் திடீரென ஹீலி-ரே காரின் ஆருகே வந்து முகத்தில் குத்தியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/55835ab2-08d8-4728-8c3a-e246ab6266cf/26-6aab05f646b88.webp' /></p><p></p><p> நாடாளுமன்ற உறுப்பினரான மைக்கேல் ஹூலி ரே, லென்ஸ்டர் ஹவுஸில் நடந்த அன்றாட பணிகளை நிறைவு செய்துவிட்டு திரும்பிய போது இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.</p><p> செயிண்ட் வின்சென்ட் பல்கலைக்கழக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மைக்கேல் ஹீலி தற்போது உயிருக்கு ஆபத்து இல்லாத காயங்களுக்கான சிகிச்சை பெற்று வருகிறார்.</p><p> இந்த சம்பவம் தொடர்பாக தற்போது கெவின் ஸ்ட்ரீட் காவல் நிலையம் விசாரணையை தொடங்கி நடத்தி வருகின்றனர்.</p><p><br></p>]]></content>
            <updated>2026-09-16T21:11:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிரித்தபடி நீதிமன்றத்திற்கு வந்த நாமலிற்கு காத்திருந்த அதிர்ச்சி - அர்ச்சுனாவின் முடிவை பகிரங்கப்படுத்திய உதய கம்மன்பில]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/udaya-gammanpila-made-arjuna-s-decision-public-1789592707"></link>
            <id>https://tamilwin.com/article/udaya-gammanpila-made-arjuna-s-decision-public-1789592707</id>
            <summary type="text">நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, தமிழீழக் கோரிக்கையை எதிர்ப்பதால் அவர் தங்களது மேடைகளில் இருப்பதில் எந்தவொரு தவறும் இல்லை என பிவிதுரு ஹெல உற...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, தமிழீழக் கோரிக்கையை எதிர்ப்பதால் அவர் தங்களது மேடைகளில் இருப்பதில் எந்தவொரு தவறும் இல்லை என பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
</p><p>
தற்போது அர்ச்சுனா நடந்துகொள்வது போன்றுதான் அன்று சுமந்திரன் நடந்துகொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
அதேபோன்று, சிகிச்சைக்காக ஷிரந்தி ராஜபக்ச சிங்கப்பூர் செல்வதற்காக விமான நிலையம் சென்றபோது, அவருக்கு 24ஆம் திகதி விசாரணைக்கு வருமாறு அழைப்பு விடுத்து கடிதம் ஒன்றும் கையளிக்கப்பட்டுள்ளது.</p><p>

நேற்றைய தினம்(16.09.2026) நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட நாமல், சிரித்த முகத்துடன் சிறைக்குச் சென்றுள்ளார். </p><p>அவருக்கு ஆதரவாக பேசியவர்கள் இன்று, அனுர செய்வது சரி என்பது போன்று பேசி சென்றுள்ளனர்.</p><p>

இந்த விடயம் தொடர்பில் பல்தரப்பட்ட விடயங்களை உங்கள் பார்வைக்கு கொண்டுவருகின்றது நாட்டு நடப்பு நிகழ்ச்சி,&nbsp;&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/gonNxxDYl88" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-16T21:06:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Erimalai</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் இரண்டாவது நாளாக அனுஷ்டிக்கப்பட்ட தியாக தீபம் திலீபனின் நினைவு தினம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/commemoration-day-of-thileepan-1789591392"></link>
            <id>https://tamilwin.com/article/commemoration-day-of-thileepan-1789591392</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் - வடமராட்சி பருத்தித்துறை பகுதியில் தியாக தீபம் திலீபனின் 
39 வது ஆண்டின் நினைவு தினம் இரண்டாம் நாளாக அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. 

இந்த நி...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் - வடமராட்சி பருத்தித்துறை பகுதியில் தியாக தீபம் திலீபனின் 
39 வது ஆண்டின் நினைவு தினம் இரண்டாம் நாளாக அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. </p><p>

இந்த நிகழ்வு நேற்று(16.09.2026) காலை 9 மணியளவில் நடைபெற்றுள்ளது. </p><h2>


மலர் அஞ்சலி</h2><p>
பருத்தித்துறை பகுதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவு
தூவியில் பருத்தித்துறை நகர சபை உறுப்பினர் ஜெயானந்தம் ஜெயகோபி தலைமையில் ஒழுங்கமைக்கப்பட்ட நிகழ்வு, அக வணக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7f18e84e-85cb-42a1-8814-996d11116d70/26-6aaaffa8f0002.webp' /></p><p>

இதனைத் தொடர்ந்து, பருத்தித்துறை நகர சபை
உறுப்பினர் நிரஞ்சன் ஈகைச் சுடரினை ஏற்றிவைக்க, பருத்தித்துறை நகர பிதா
வின்சென்ட் டீ போல் டக்ளஸ் போல் மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தியுள்ளார்.</p><p>

மேலும், ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைவர் வேந்தன் மலர் அஞ்சலி செலுத்தியுள்ளார். 

இந்த நினைவேந்தல் நிகழ்வில் சமூக பிரதிநிதிகள், உள்ளூராட்சி சபை
உறுப்பினர்கள், அரசியல் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் கலந்துக் கொண்டுள்ளதுடன், மலர் அஞ்சலியும் செலுத்தப்பட்டுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/802cfc6b-b6f2-4993-b6bd-9e1e10680cff/26-6aaaffaa12397.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a6375a44-d585-437f-b50c-d33784b9cd0a/26-6aaaffaadedd7.webp' /></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-16T20:44:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kumar</name>
            </author>
            <title type="text"><![CDATA[வைத்தியசாலையில் இருந்து வீடு திரும்பிய கர்ப்பிணி பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/pregnant-woman-dies-in-batticaloa-1789590774"></link>
            <id>https://tamilwin.com/article/pregnant-woman-dies-in-batticaloa-1789590774</id>
            <summary type="text">மட்டக்களப்பு - வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கூழாவடி தும்பாலை
பாலத்திற்கு அருகில் இடம்பெற்ற கோர விபத்தில் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்...</summary>
            <content type="html"><![CDATA[<p>மட்டக்களப்பு - வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கூழாவடி தும்பாலை
பாலத்திற்கு அருகில் இடம்பெற்ற கோர விபத்தில் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். </p><p>

இந்த சம்பவம் நேற்று(16.09.2026) இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> 

கூழாவடி தும்பாலை பாலத்திற்கு அருகில் பாரிய விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளதுடன், சிலர் படுகாயமடைந்துள்ளனர். </p><h2>

சிலர் படுகாயம்</h2><p>

35ஆம் கிராமத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களே இத்துயரச்
சம்பவத்தில் சிக்கியுள்ளனர். </p><p>

களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் மகப்பேற்றுச்
சிகிச்சை பெற்றுவிட்டு, தமது சொந்த முச்சக்கர வண்டியில் மீண்டும் வீடு
திரும்பிக் கொண்டிருந்த போதே விபத்து நேர்ந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4404d68d-cfda-44f7-aa7d-a61f2da93307/26-6aaafd83558da.webp' /></p><p> </p><h2>

மகப்பேற்றுச் சிகிச்சை பெற்றுவிட்டு வீடு திரும்பிய பெண்</h2><p>

கூழாவடி தும்பாலை பாலத்திற்கு அருகில் முச்சக்கர வண்டி பயணித்துக்
கொண்டிருந்தபோது, பாலையடி வட்டை பகுதியிலிருந்து அதிவேகமாக வந்த கனரக டிப்பர்
வாகனம் மோதி விபத்துக்குள்ளானது.
</p><p>
இந்த விபத்தில் கடுமையாகக் காயமடைந்த பெண், உடனடியாகக் களுவாஞ்சிகுடி
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4f241acd-e9f5-437c-bc47-aa6e8b20c43e/26-6aaafd8441dee.webp' /></p><p>
</p><p>
அத்துடன் முச்சக்கர வண்டியில் பயணித்த ஏனையவர்களும் காயமடைந்துள்ளதுடன்,
முச்சக்கர வண்டியும் முற்றாகச் சேதமடைந்துள்ளது.
</p><p>
விபத்துடன் தொடர்புடைய இரு வாகனங்களும் வெல்லாவெளி பொலிஸ் நிலையத்தில் தடுத்து
வைக்கப்பட்டுள்ளதுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-16T20:35:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[இஸ்ரேலின் தாக்குதலில் பலியான ஹமாஸின் முக்கிய தளபதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/hamas-commander-killed-in-khan-younis-1789581117"></link>
            <id>https://ibctamil.com/article/hamas-commander-killed-in-khan-younis-1789581117</id>
            <summary type="text">2023 அக்டோபர் 7ஆம் திகதி இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் பங்கேற்று, பீரங்கி படையினரை கடத்துவதில் ஈடுபட்டதாகக் கூறப்படும் ஹமாஸ் அமைப்பின் தளபதி ஒர...</summary>
            <content type="html"><![CDATA[<p>2023 அக்டோபர் 7ஆம் திகதி இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் பங்கேற்று, பீரங்கி படையினரை கடத்துவதில் ஈடுபட்டதாகக் கூறப்படும் ஹமாஸ் அமைப்பின் தளபதி ஒருவர் இஸ்ரேல் தாக்குதலில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.&nbsp;</p><p>கடந்த வாரம் தெற்கு காசா பகுதியில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் அவர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை (IDF) தெரிவித்துள்ளது.</p><p>இந்த தாக்குதலில் ஜிஹாத் சமீஹ் மஹ்மூத் இஸ்மாயில் என்பவரே கொல்லப்பட்டதாக IDF கூறியுள்ளது.</p><p></p><h2>&nbsp;இஸ்ரேல் இராணுவம்&nbsp;</h2><p> </p><p>அவர் ஹமாஸின் நுக்பா (Nukhba) சிறப்புப் படையில் குழுத் தளபதியாக செயல்பட்டதாக இஸ்ரேல் இராணுவம் அடையாளம் கண்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f8bdcc93-47cc-4384-afb0-908ddbda1d51/26-6aaaed59ae116.webp' /></p><p>
</p><p>
2023 அக்டோபர் 7ஆம் திகதி இஸ்ரேலுக்குள் ஊடுருவிய இஸ்மாயில், நிரிம் சமூகத்திற்கு அருகே எல்லைப் பகுதியில் நிலைநிறுத்தப்பட்டிருந்த ஒரு பீரங்கி படைக் குழுவுடன் நடைபெற்ற மோதலில் பங்கேற்றதாக IDF தெரிவித்துள்ளது.
</p><p>
அந்த படைக் குழுவில், தளபதி ஓமர் மாக்சிம் நியூட்ரா, (21), தளபதி

சார்ஜென்ட் ஷகெட் டஹான், (19), ஓட்டுநர்

சார்ஜென்ட் நிம்ரோட் கோஹென், (19), துப்பாக்கி இயக்குநர்

சார்ஜென்ட் ஓஸ் டேனியல், ஆகியோர் இருந்ததாக கூறப்படுகிறது.</p><p>

நியூட்ரா மற்றும் டேனியலின் உடல்களை கடத்திச் சென்றதிலும், கோஹெனை உயிருடன் காசாவுக்கு கடத்திச் சென்றதிலும் இஸ்மாயில் பங்கேற்றதாக IDF கூறுகிறது.</p><p></p><h2>&nbsp;இராணுவத்தினருக்கு எதிரான தாக்குதல்</h2><p> </p><p>டஹான் அந்த மோதலில் கொல்லப்பட்டதுடன், அவரது உடலும் தனியாக காசாவுக்கு எடுத்துச் செல்லப்பட்டதாக இராணுவம் தெரிவித்துள்ளது. </p><p>இதன்படி போரின்போது, காசா பகுதியில் இஸ்ரேல் இராணுவத்தினருக்கு எதிரான தாக்குதல்களை நடத்துவதில் இஸ்மாயில் ஈடுபட்டதாக IDF தெரிவித்துள்ளது.</p><p>

சமீபத்தில், போர் நிறுத்தத்தை “முறையாக மீறும் வகையில்” இஸ்ரேல் இராணுவத்தினர் மற்றும் பொதுமக்களுக்கு எதிரான தாக்குதல்களை முன்னெடுப்பதில் அவர் ஈடுபட்டதாகவும், அவர் ஏற்படுத்திய அச்சுறுத்தலை அகற்றுவதற்காக தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் IDF தெரிவித்துள்ளது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-16T20:29:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெள்ளையர்களுக்கு எதிரான பாகுபாடு குற்றச்சாட்டு: தென்னாப்பிரிக்க அதிகாரிகளுக்கு அமெரிக்கா பயணக் கட்டுப்பாடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/us-travel-restrictions-on-south-african-officials-1789590438"></link>
            <id>https://ibctamil.com/article/us-travel-restrictions-on-south-african-officials-1789590438</id>
            <summary type="text">வெள்ளையர்கள் மற்றும் பிற சிறுபான்மை இனத்தவர்களுக்கு எதிரான பாகுபாட்டை ஊக்குவிக்கும் கொள்கைகளை ஆதரிப்பதாகக் குற்றம்சாட்டப்படும் தென்னாப்பிரிக்க அதிகாரி...</summary>
            <content type="html"><![CDATA[<p>வெள்ளையர்கள் மற்றும் பிற சிறுபான்மை இனத்தவர்களுக்கு எதிரான பாகுபாட்டை ஊக்குவிக்கும் கொள்கைகளை ஆதரிப்பதாகக் குற்றம்சாட்டப்படும் தென்னாப்பிரிக்க அதிகாரிகளுக்கு விசா மற்றும் பயணக் கட்டுப்பாடுகளை விதிக்க அமெரிக்கா நடவடிக்கை எடுத்துள்ளது.
</p><p>
அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ வெளியிட்ட அறிவிப்பின்படி, </p><p>''இன அடிப்படையிலான பாகுபாடு, இழப்பீடு வழங்காமல் நிலம் பறிமுதல் செய்வதற்கு அனுமதிக்கும் கொள்கைகள் அல்லது சிறுபான்மை இனத்தவர்களுக்கு எதிரான வன்முறையைத் தூண்டும் நடவடிக்கைகளில் பொறுப்பு கொண்டதாகக் கருதப்படும் வெளிநாட்டு நபர்களின் அமெரிக்க விசாக்கள் ரத்து செய்யப்படலாம்.</p><p></p><h2>புதிய விசா விண்ணப்பங்கள்</h2><p> அல்லது அவர்களின் புதிய விசா விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படலாம்" என கூறியுள்ளார்.</p><p>

தென்னாப்பிரிக்காவின் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் (ANC) தலைமையிலான அரசாங்கம் வெள்ளையர்களுக்கு எதிராக பாகுபாடு காட்டுவதாக அமெரிக்க நிர்வாகம் குற்றம்சாட்டி வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/78183592-d1d5-4603-8025-46bc0dc35cb5/26-6aaafba815ffb.webp' /></p><p> </p><p>குறிப்பாக, தென்னாப்பிரிக்காவின் ஆஃப்ரிகானர் சிறுபான்மையினர் தொடர்பான கொள்கைகள் குறித்து அமெரிக்கா கவலை தெரிவித்துள்ளது.</p><p>எனினும் அமெரிக்காவின் குற்றச்சாட்டுகளை தென்னாப்பிரிக்க அரசு நிராகரித்துள்ளது. </p><p>அந்நாட்டின் வெளியுறவு அமைச்சகம், அமெரிக்காவின் புதிய விசா கட்டுப்பாடுகள் குறித்து கவலை தெரிவித்ததுடன், தென்னாப்பிரிக்காவின் உள்நாட்டு கொள்கைகள் சில தரப்பினரால் தவறாக சித்தரிக்கப்படுவதாகக் கூறியுள்ளது.
</p><p>
அமெரிக்கா தனது நிலைப்பாட்டுக்கு ஆதாரமாக, சில சூழ்நிலைகளில் பயன்படுத்தப்படாத தனியார் நிலங்களை இழப்பீடு இல்லாமல் அரசால் கையகப்படுத்த அனுமதிக்கும் தென்னாப்பிரிக்க சட்டம், கருப்பின மக்களுக்கான சம வாய்ப்புகளை அதிகரிக்கும் முன்னுரிமைக் கொள்கைகள் மற்றும் வெள்ளை விவசாயிகள் தொடர்பான சில வன்முறைச் சம்பவங்களைச் சுட்டிக்காட்டியுள்ளது.
</p><p>
எனினும், பயணக் கட்டுப்பாடுகளுக்கு உட்படுத்தப்படவுள்ள அதிகாரிகளின் பெயர்களை அமெரிக்கா இதுவரை வெளியிடவில்லை.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">ள IBC தமிழ் WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-16T20:27:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[இடைத்தேர்தல் களத்தில் ட்ரம்ப்: கருத்துக்கணிப்பில் பின்னடைவை சந்திக்கும் மைக்கேல் வொட்லி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/trump-in-the-midterm-elections-1789590201"></link>
            <id>https://tamilwin.com/article/trump-in-the-midterm-elections-1789590201</id>
            <summary type="text">அமெரிக்காவில் எதிர்வரும் நவம்பர் 3ஆம் திகதி நடைபெறவுள்ள இடைத்தேர்தலை
முன்னிட்டு, வட கரோலினா மாநிலத்தில் குடியரசுக் கட்சி வேட்பாளர் மைக்கேல்
வொட்லிக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவில் எதிர்வரும் நவம்பர் 3ஆம் திகதி நடைபெறவுள்ள இடைத்தேர்தலை
முன்னிட்டு, வட கரோலினா மாநிலத்தில் குடியரசுக் கட்சி வேட்பாளர் மைக்கேல்
வொட்லிக்கு ஆதரவாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தீவிர பிரச்சார
நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றார்.
</p><p>
குடியரசுக் கட்சியின் தேசிய இடைத்தேர்தல் மாநாட்டிற்குப் பின்னர் ட்ரம்ப் பிரசாரம் செய்யும் முதல் நபர் இவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> 


வட கரோலினா செனட் சபைக்கான போட்டியில், ஜனநாயகக் கட்சியின் முன்னாள் ஆளுநர்
ரோய் கூப்பருக்கு எதிராகப் போட்டியிடும் மைக்கேல் வொட்லி,
கருத்துக்கணிப்புகளில் பின்னடைவைச் சந்தித்து வரும் நிலையிலேயே ட்ரம்ப்
அவருக்கு ஆதரவாகக் களம் இறங்கியுள்ளார்.
</p><h2>
இடைதேர்தலுக்காக களம் இறங்கிய ட்ரம்ப்</h2><p>

எரிபொருள் விலை உயர்வு மற்றும் பொருளாதார நெருக்கடிகள் காரணமாகக் கட்சிசாரா
வாக்காளர்களின் ஆதரவு சரிவடைந்து வருவதாகக் சுட்டிக்காட்டப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/79e585e7-0e74-4e50-90d9-f32a21cb429c/26-6aaafb0382134.webp' /></p><p>
</p><p>
இந்த மாநிலத்தில் சுமார் 40 சதவீதமான வாக்காளர்கள் எந்தவொரு கட்சியையும்
சாராதவர்களாக உள்ள நிலையில், அவர்களின் ஆதரவைப் பெறுவதே தேர்தலில் வெற்றி
பெறுவதற்குத் தீர்மானமிக்க காரணியாக அமையும் என அரசியல் ஆய்வாளர்கள்
தெரிவிக்கின்றனர்.</p><p>

இதனிடையே, குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்துதல் மற்றும் சட்டம் ஒழுங்கைப்
பேணுதல் ஆகிய விவகாரங்களை மையப்படுத்தியே ட்ரம்ப் மற்றும் வொட்லி ஆகியோர் தமது
தேர்தல் பிரச்சாரங்களை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-16T20:24:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை வீரர் ருமேஷ் தரங்காவின் தங்கப் பதக்க கனவு - உதவி கரம் நீட்டும் டெம்பிள் குழும நிறுவனங்களின் தலைவர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-lankan-athlete-rumesh-tharanga-dream-1789588415"></link>
            <id>https://tamilwin.com/article/sri-lankan-athlete-rumesh-tharanga-dream-1789588415</id>
            <summary type="text">இலங்கை ஈட்டி எறிதல் வீரர் ருமேஷ் தரங்கா இலங்கைக்காக ஒலிம்பிக் தங்கப் பதக்கம் வெல்லும் தனது இலக்கை அடையும் வரை, அவருக்கு கிட்டத்தட்ட ஒவ்வொரு ஆண்டும் உல...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை ஈட்டி எறிதல் வீரர் ருமேஷ் தரங்கா இலங்கைக்காக ஒலிம்பிக் தங்கப் பதக்கம் வெல்லும் தனது இலக்கை அடையும் வரை, அவருக்கு கிட்டத்தட்ட ஒவ்வொரு ஆண்டும் உலகத் தரம் வாய்ந்த ஈட்டிகளை வழங்குவதாக டெம்பிள் குழும நிறுவனங்களின் தலைவர் டட்லி சிறிசேன உறுதியளித்துள்ளார்.
</p><p>
இந்த விடயம் தொடர்பில் அவருடைய அதிகாரப்பூர்வ முகநூல் கணக்கிலேயே குறிப்பிட்டுள்ளார்.</p><p> 

ருமேஷ் தரங்காவின் பயிற்சியாளர் டோனி பிரசன்னாவுடன் இது தொடர்பில் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். </p><h2>


தங்கப் பதக்கம் பெறும் கனவு</h2><p>
மேற்படி பதிவின் படி, டெம்பிள் குழும நிறுவனங்களின் தலைவர் டட்லி சிறிசேன, விளையாட்டுத்துறை அமைச்சரின் தலையீட்டைத் தொடர்ந்து, அரசாங்கத்தால் ஏற்கனவே வழங்கப்பட்ட ஈட்டியுடன் கூடுதலாகத் தேவையான உபகரணங்களையும் வழங்குவதாக அவர் உறுதியளித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/de4e9ccd-e53f-4ed0-98d3-66114802bc3b/26-6aaaf458a0eee.webp' /></p><p>

இந்த உதவிக்கு ஈடாகத் தானோ அல்லது தனது டெம்பிள் குழும நிறுவனங்களோ எந்தவொரு விளம்பர ஆதரவையோ அல்லது வேறு எந்த வணிகப் பலனையோ எதிர்பார்க்கவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>
சமீப காலங்களில் இலங்கை தடகளக் களத்தில் இருந்து வெளிவந்த மிகச் சிறந்த நட்சத்திரங்களில் ஒருவராக ருமேஷ் தரங்காவை வர்ணித்த அவர், திறமையான விளையாட்டு வீரர்களை வளர்ப்பதும், சர்வதேச அளவில் அவர்களின் வளர்ச்சிக்கு ஆதரவளிப்பதும் உள்ளூர் வணிகர்களின் பொறுப்பாகும் என்றார்.</p><p> 

ரூமேஷின் ஒலிம்பிக் தங்கப் பதக்கக் கனவு நனவாகும் வரை தனது உறுதிப்பாடு மாறாது என்று கூறிய சிறிசேன, அந்த ஒலிம்பிக் கனவு நிறைவேறும் வரை ஒரு தேசமாக ரூமேஷுக்குப் பின்னால் நின்று அவருக்கு முழு ஆதரவையும் வழங்குவது அனைவரின் பொறுப்பு என்றும் வலியுறுத்தினார்.&nbsp; &nbsp;</p><p><iframe src="https://www.facebook.com/plugins/post.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2FconnectwithDudley%2Fposts%2Fpfbid0ya5BACGKABtamZrK4roJTWb2ea6nM5ddZqLABSBAWmvdQsFmwD24qqcXUFpeGGtel&show_text=true&width=500" width="500" height="751" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share"></iframe></p><p></p><p></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-16T19:56:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[சர்வதேச கடல் எல்லையில் இந்திய கப்பலுடன் மோதலில் ஈடுபட்ட பாகிஸ்தான் போர் கப்பல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/pak-warship-involved-collision-indian-ship-1789588462"></link>
            <id>https://ibctamil.com/article/pak-warship-involved-collision-indian-ship-1789588462</id>
            <summary type="text">இந்திய போர் கப்பலுடன் பாகிஸ்தான் போர் கப்பல் மோதலில் ஈடுபட்ட சம்பவத்திற்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்திய கப்பல் மீது ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்திய போர் கப்பலுடன் பாகிஸ்தான் போர் கப்பல் மோதலில் ஈடுபட்ட சம்பவத்திற்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது.
</p><p>
இந்திய கப்பல் மீது மோதிய பாகிஸ்தான் போர் கப்பல்
நேற்று மாலை வடக்கு அரபிக்கடலில் வழக்கமான கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த இந்திய கடற்படையின் முன்னணிப் போர்க்கப்பல் ஒன்றின் மீதே பாகிஸ்தான் கடற்படை கப்பல் ஒன்று மோதலில் ஈடுபட்டுள்ளது. </p><p>
சர்வதேச கடல் எல்லையில் நடந்த இந்த மோதல் சம்பவத்தில் எந்த சேதமும் ஏற்படவில்லை என்றாலும், பாகிஸ்தான் தூதரை அழைத்து இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.</p><p></p><h2>இந்தியா கண்டனம்</h2><p>


பாகிஸ்தான் தூதர் சாத் அகமது வர்ரைச் டெல்லியில் உள்ள இந்திய வெளியுறவு அமைச்சகத்திற்கு அழைத்து, பாகிஸ்தான் கடற்படைப் பிரிவுகளின் "ஏற்றுக்கொள்ள முடியாத மற்றும் தொழில்முறையற்ற நடத்தை" காரணமாக இந்த மோதல் ஏற்பட்டதாகக் கூறி இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/112159fa-34d8-43ea-8009-1211abb68267/26-6aaaf3efc3fbd.webp' /></p><p> 

இராணுவப் பயிற்சிகள், இராணுவ அணிவகுப்புகள் மற்றும் படை நகர்வுகள் குறித்த முன் அறிவிப்பு வழங்குவது தொடர்பான, இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான 1991 ஆம் ஆண்டு ஒப்பந்தத்தின் 10வது பிரிவை பாகிஸ்தானிய கடற்படை கப்பலின் செயல்பாடு நேரடியாக மீறியுள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.
</p><p>
மேலும், இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்கும் பொருட்டு, அனைத்து இராணுவப் பிரிவுகளும் உரிய கவனத்துடன் செயல்படவும், இரு தரப்புக்கும் இடையிலான தொடர்புடைய ஒப்பந்தங்களின் விதிகளை மதிக்கவும் வேண்டியதன் அவசியத்தை சம்பந்தப்பட்ட பாகிஸ்தான் அதிகாரிகளுக்குத் தெரிவிக்குமாறு பாகிஸ்தானின் தூதருக்கு அறிவுறுத்தப்பட்டது.</p><p>

மேலும், பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகத்திடம் இதேபோன்ற ஒரு கண்டனத்தைப் பதிவு செய்யுமாறு, இஸ்லாமாபாத்தில் உள்ள இந்தியத் தூதரகப் பொறுப்பாளருக்கும் வெளியுறவு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-16T19:54:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[காணாமல் ஆக்கப்பட்டோரின் சர்வதேச மாநாடு: இலங்கையில் தமிழர்களுக்கு இழைக்கப்படும் அநீதி அம்பலம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/international-conference-on-the-disappeared-1789587647"></link>
            <id>https://tamilwin.com/article/international-conference-on-the-disappeared-1789587647</id>
            <summary type="text">காணாமல் ஆக்கப்பட்டோரின் சர்வதேச மாநாட்டின் மூலமாக எமக்கு சிறீ லங்காவில்
இழைக்கப்படும் அநீதியின் உண்மை முகத்தை அம்பலப்படுத்தியிருக்கின்றோம். 

அத்து...</summary>
            <content type="html"><![CDATA[<p>காணாமல் ஆக்கப்பட்டோரின் சர்வதேச மாநாட்டின் மூலமாக எமக்கு சிறீ லங்காவில்
இழைக்கப்படும் அநீதியின் உண்மை முகத்தை அம்பலப்படுத்தியிருக்கின்றோம்.</p><p> 

அத்துடன், தமிழ் சமூகத்தை அழித்துவிட்டோம், தம் பிள்ளைகளைத் தேடியலையும் தாய்மார்களுக்குப்
பதில் சொல்லாமல் மெல்லமெல்ல சாட்சிய அழிப்பை செய்துவருகின்றோம் என
நினைத்துக்கொண்டிருந்த தரப்பினரின் முகத்தில் கரியைப் பூசியிருக்கின்றோம் என வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின்
உறவுகள் சங்கத்தின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். </p><p>

யாழ். ஊடக அமையத்தில் நேற்று(16.09.2026) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்கள். </p><h2>

காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி</h2><p>
அவர்கள் மேலும் தெரிவிக்கையில், </p><p>

இறுதிப் போர் வேளையிலும், அதற்கு முன்பும், அதற்குப் பின்பும் எமது பிள்ளைகள்
இராணுவத்திடம் கையளிக்கப்பட்ட நிலையிலும், இராணுவத்தால்
கைதுசெய்யப்பட்டநிலையிலும், இராணுவத்தாலும், அவர்களோடு சேர்ந்தியங்கிய துணை
ஆயுதக்குழுக்களாலும் கடத்திச் செல்லப்பட்ட நிலையிலும் காணாமலாக்கப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5dfbd2a6-7c42-4d2b-9342-9f025c08ed2f/26-6aaaf0e47e60e.webp' /></p><p>
</p><p>
அவ்வாறு காணாமலாக்கப்பட்ட நாள் தொட்டு தமது உறவுகளைத் தேடி வீதியில் இறங்கிய
ஒவ்வொரு தமிழ் தாய்மாரும், ஒவ்வொரு தமிழ் தந்தைமாரும், உறவினர்களும் இணைந்து,
வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தினை
ஆரம்பித்தோம்.
</p><p>
கடந்த 2017ஆம் ஆண்டு தொடக்கம் வடக்கு கிழக்கின் ஒவ்வொரு
மாவட்டத்திலும் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம்.
</p><h2>
இராணுவத்தினரின் அட்டகாசங்கள்</h2><p>
இந்த போராட்டங்களில், இராணுவத்திடம் கையளித்த எமது பிள்ளைகள் எங்கே? கடத்திச்
செல்லப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது? சிறீலங்காவின் நீதித் துறையில் எமக்கு
நம்பிக்கையில்லை, சர்வதேச விசாரணையே எமக்குத் தேவை, மீளநிகழாமையை
உறுதிப்படுத்த வேண்டும்.
</p><p>
மேலும், சிறீலங்காவை பொறுப்புக்கூறலை நோக்கி சர்வதேச நாடுகள்
அழுத்தம் பிரயோகிக்க வேண்டும், வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களைத்
தேடியறிவதற்கென சிறீலங்கா அரசு அமைக்கும் ஆணைக்குழுக்கள், நிறுவனங்கள் ஏமாற்று
நாடகங்கள் எனப் பல கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றோம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6f869632-b837-4165-966b-113c19df8bed/26-6aaaf0e54ee54.webp' /></p><p>
</p><p>

இராணுவத்தின் உயிர் அச்சுறுத்தல்கள், விசாரணைகள், கண்காணிப்புகள், வயது முதிர்வு, நோய், வறுமை
போன்ற துயரங்களால் பாதிக்கப்பட்டபோதிலும் துவண்டுபோகாது - விட்டு விலகிவிடாது
எமது போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றோம். </p><p>

இந்த போராட்டமானது எமது
பிள்ளைகளுக்கு என்ன நடந்தது என்பதை அறிவதற்கு மட்டுமானதல்ல, இனிவரும்
காலங்களில் எமது பிள்ளைகளைப் போல இன்னொரு மகளோ, மகனோ கடத்திக்
காணாமலாக்கப்படக்கூடாது என்பதற்கான ஓர் அரணாகவே நாம் எல்லாத் துயரங்களையும்
தாங்கித் தெருவில் நிற்கின்றோம். </p><p>

இந்த மண்ணில் எம்மைப் போல இன்னொரு தாய் கலங்கி
நிற்கக்கூடாது என்பதற்காகவே மனவுறுதியோடு தொடர்ந்து போராடுகின்றோம் என்றார்கள்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-16T19:41:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதானியை பின்னுக்குத் தள்ளி ஆசியாவின் செல்வந்தரான டிக்டொக் நிறுவுனர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/tiktok-founder-overtakes-adani-richest-people-1789585049"></link>
            <id>https://tamilwin.com/article/tiktok-founder-overtakes-adani-richest-people-1789585049</id>
            <summary type="text">டிக்டொக் செயலியின் தாய் நிறுவனமான பைட்டான்ஸின் (ByteDance) நிறுவுனர் ஸாங் யிமிங் இந்திய செல்வந்தரான கௌதம் அதானியைப் பின்னுக்குத் தள்ளி ஆசியாவின் முதன்...</summary>
            <content type="html"><![CDATA[<p>டிக்டொக் செயலியின் தாய் நிறுவனமான பைட்டான்ஸின் (ByteDance) நிறுவுனர் ஸாங் யிமிங் இந்திய செல்வந்தரான கௌதம் அதானியைப் பின்னுக்குத் தள்ளி ஆசியாவின் முதன்மை செல்வந்தராக உருவெடுத்துள்ளார்.

</p><p>ங் யிமிங்கின் சொத்து மதிப்பு 105 பில்லியன் அமெரிக்க டொலர்களைக் கடந்துள்ளதைத் தொடர்ந்து அவர் இந்த முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
</p><h2>அமெரிக்காவில் டிக்டொக் செயலி&nbsp;</h2><p>
மார்ச் 2019 இல் ப்ளூம்பெர்க் இவரது சொத்துக்களைக் கணக்கிடத் தொடங்கிய போது 13 பில்லியன் டொலர்களாக இருந்த இவரது சொத்து மதிப்பு, தற்போது 8 மடங்குக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.
</p><p></p><p>
</p><p>

அமெரிக்காவில் டிக்டொக் செயலி தீவிர சோதனைகளையும் கட்டுப்பாடுகளையும் எதிர்கொண்ட போதிலும், ஸாங் யிமிங் செயற்கை நுண்ணறிவுத் துறையிலான தனது முதலீடுகளைத் தொடர்ந்து முன்னெடுத்து வந்தார்.</p><p>

மேலும், இந்த ஆண்டின் தொடக்கத்தில் டிக்டொக்கின் அமெரிக்க செயல்பாடுகளின் சில பகுதிகளை அமெரிக்க முதலீட்டாளர்களுக்கு பைட்டான்ஸ் மாற்றியமைத்ததைத் தொடர்ந்து, அந்தச் செயலியின் எதிர்காலம் குறித்த நிச்சயமற்ற நிலையும் தணிந்தது.
</p><p>
முன்னதாகச் சீனாவில் முதன்மை செல்வந்தராக திகழ்ந்த ஸாங் யிமிங், தற்போது ஆசியாவின் முன்னணி செல்வந்தராக மாறியுள்ளதுடன், ஆசிய செல்வந்தர்களின் சொத்து மதிப்பிலும் தரவரிசையிலும் செயற்கை நுண்ணறிவு மற்றும் நுகர்வோர் தொழில்நுட்பத் தளங்களின் ஆதிக்கம் அதிகரித்து வருவதை இந்த மாற்றம் வெளிப்படுத்தியுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-16T19:27:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[திருமணத்திற்கு முன் காதல் உறவு ; கர்ப்பமான இளம்பெண்ணுக்கு நேர்ந்த கதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/woman-dies-due-contraceptive-pill-before-marriage-1789581018"></link>
            <id>https://jvpnews.com/article/woman-dies-due-contraceptive-pill-before-marriage-1789581018</id>
            <summary type="text">இந்தியாவில் தெலுங்கானா மாநிலத்தில், காதலன் வழங்கியதாகக் கூறப்படும் கருத்தடை மாத்திரைகளை உட்கொண்ட பின்னர் ஏற்பட்ட உடல்நலக்குறைவால் 30 வயதுடைய இளம்பெண் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியாவில் தெலுங்கானா மாநிலத்தில், காதலன் வழங்கியதாகக் கூறப்படும் கருத்தடை மாத்திரைகளை உட்கொண்ட பின்னர் ஏற்பட்ட உடல்நலக்குறைவால் 30 வயதுடைய இளம்பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><p>
</p><p></p><p>ராஜமகேந்திரவரம் பகுதியைச் சேர்ந்த குறித்த இளம்பெண், ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவ ஆய்வகத்தில் பணியாற்றி வந்துள்ளார்.</p><h3>பொலிஸார் தீவிர விசாரணை</h3><p>

இதன்போது, கிருஷ்ணா மாவட்டத்தைச் சேர்ந்த நாகசாய் (26) என்ற இளைஞருடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டதாகவும், பின்னர் அது காதலாக மாறியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5b72d6e9-528b-4ec5-8bf4-c92498e7bdc6/26-6aaad6dc53213.webp' /></p><p>

நாகசாய்க்கு ஏற்கனவே திருமணமாகி பெண் குழந்தை இருந்த நிலையில், அந்த தகவலை மறைத்து குறித்த இளம்பெண்ணுடன் காதல் உறவில் இருந்ததாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது.
</p><p>
இந்நிலையில், சுமார் 5 மாதங்களுக்கு முன்னர் இருவரும் தனிமையில் சந்தித்ததாகவும், அதன் பின்னர் இளம்பெண் கர்ப்பமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இந்த விடயம் குடும்பத்தினருக்கு தெரியவந்தால் பிரச்சினை ஏற்படும் என இளம்பெண் கூறியதைத் தொடர்ந்து, நாகசாய் அவருக்கு கருத்தடை மாத்திரைகளை வழங்கியதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
</p><p>
அந்த மாத்திரைகளை உட்கொண்ட பின்னர் இளம்பெண்ணுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. </p><p>தொடர்ந்து கடுமையான வயிற்றுவலி மற்றும் வாந்தி ஏற்பட்ட நிலையில், அவரது உடல்நிலை மோசமடைந்துள்ளது.</p><p>
</p><h3>மேலதிக சிகிச்சை</h3><p>இதையடுத்து, அதிர்ச்சியடைந்த அவரது தோழிகள் அவரை நிஜாம்பேட்டை சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.</p><p>
</p><p></p><p>எனினும், அங்கு அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்ததால், மேலதிக சிகிச்சைக்காக ஆந்திரப் பிரதேசத்தின் காக்கிநாடா அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.</p><p>

அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இளம்பெண் உயிரிழந்துள்ளார்.
</p><p>
இதையடுத்து, இளம்பெண்ணின் உறவினர்கள் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
</p><p>
மருத்துவ ஆலோசனையின்றி இளம்பெண்ணுக்கு மருந்து வழங்கியதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டின் அடிப்படையில் தலைமறைவாக இருந்த நாகசாயை பொலிஸார் கைது செய்துள்ளனர்.</p><p>

கைது செய்யப்பட்டுள்ள அவரிடம் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
</p><p>
இளம்பெண்ணின் உயிரிழப்புக்கான மருத்துவ காரணங்கள் உள்ளிட்ட சம்பவத்தின் முழுமையான பின்னணி தொடர்பில் விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-09-16T19:18:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[மின்சார ஸ்கூட்டர்கள் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/e-scooters-are-becoming-faster-amid-safety-1789569887"></link>
            <id>https://canadamirror.com/article/e-scooters-are-becoming-faster-amid-safety-1789569887</id>
            <summary type="text">மின்சார ஸ்கூட்டர்களின் பயன்பாட்டினால் ஏற்படும் ஆபத்துகள் அதிகரித்து வருவதாகக் கூறி, சர்வதேச அளவில் தீவிர பாதுகாப்பு கவலைகள் எழுப்பப்பட்டு வருகின்றன. ...</summary>
            <content type="html"><![CDATA[<p>மின்சார ஸ்கூட்டர்களின் பயன்பாட்டினால் ஏற்படும் ஆபத்துகள் அதிகரித்து வருவதாகக் கூறி, சர்வதேச அளவில் தீவிர பாதுகாப்பு கவலைகள் எழுப்பப்பட்டு வருகின்றன. </p><p>
அண்மைய புள்ளிவிவரங்களின்படி, மின்சார ஸ்கூட்டர்களைப் பயன்படுத்தும்போது காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 40 சதவீதம் அதிகரித்துள்ளது. </p><p>
இதில் பெரியவர்கள் மற்றும் குழந்தைகள் இருவருமே பாதிக்கப்படுகின்ற போதிலும், 15 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் தீவிர காயமடையும் சம்பவங்கள் கிட்டத்தட்ட மும்மடங்காக உயர்ந்துள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/03a36ce4-99d5-41f0-a321-5f6bdcd05859/26-6aaaab61175f8.webp' /></p><p> </p><p>
கனடிய சுகாதார தகவல் நிறுவனத்தின் தரவுகளின்படி, ஏப்ரல் 2025 முதல் மார்ச் 2026 வரையிலான காலகட்டத்தில் மின்சார ஸ்கூட்டர் விபத்துகள் தொடர்பாக 837 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். </p><p>
மேலும், 2025 ஆம் ஆண்டில் மின்சார ஸ்கூட்டர்கள் அல்லது இ-பைக்குகளைப் பயன்படுத்திய 10 குழந்தைகள் உயிரிழந்ததாகக் கனடிய குழந்தைகள் நல கண்காணிப்பு திட்டம் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.</p><p>
மறுபுறம், மின்சார ஸ்கூட்டர்களின் வேகம் கணிசமாக அதிகரித்து வருவதே விபத்துகளுக்கு முக்கியக் காரணம் என நுகர்வோர் அமைப்பான 'கான்ஸியூமர் ரிப்போர்ட்ஸ்' (Consumer Reports) நடத்திய ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. </p><p>
2022-இல் மணிக்கு 25 கி.மீ ஆக இருந்த ஸ்கூட்டர்களின் சராசரி வேகம், 2026-இல் மணிக்கு 32 கி.மீ ஆக உயர்ந்துள்ளது. தாம் சோதித்த 13 மின்சார ஸ்கூட்டர்களில் ஒன்றைக் கூடப் பயன்படுத்தப் பரிந்துரைக்கவில்லை என்று அவ்வமைப்பு தெரிவித்துள்ளது.</p><p> 
சோதனை ஓட்டத்தின்போதே இரண்டு அனுபவமிக்க ஆய்வாளர்கள் கட்டுப்பாட்டை இழந்து காயமடைந்தனர். பிரேக் பிடிக்கும் போது ஓட்டுநரின் உடல் எடை இயல்பாகவே முன்பக்க சக்கரத்திற்கு மாறுவதால், பின்பக்க சக்கரத்தின் பிடிமானம் குறைந்து வளைவுகளில் வாகனம் சறுக்கி விபத்து ஏற்படுவதாக வல்லுநர்கள் விளக்கமளிக்கின்றனர்.
</p><p>இந்த விபத்துகளில் இருந்து தப்பிக்கத் தலைக்கவசம் (Helmet), முழங்கால் மற்றும் மணிக்கட்டு கவசங்களை அணிவது மிகவும் அவசியமாகும். குறிப்பாக, மூளையில் ஏற்படும் தீவிர காயங்களைத் தடுக்க தலைக்கவசம் கட்டாயம் என மருத்துவர் ரோசன்ஃபீல்ட் வலியுறுத்துகிறார்.
</p><p> அதேபோல, 16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் மின்சார ஸ்கூட்டர்களை ஓட்டுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும், எந்த வயதினராக இருந்தாலும் வேகத்தைக் குறைத்து, ஹெட்போன் மற்றும் மொபைல் போன்களைத் தவிர்த்துச் செல்ல வேண்டும் என்றும் அறிவுறுத்தப்படுகிறது. </p><p>
ஒன்டாரியோ போன்ற இடங்களில் பொதுச் சாலைகள், நடைபாதைகள் மற்றும் சைக்கிள் பாதைகளில் மின்சார ஸ்கூட்டர்களை ஓட்ட சட்டப்படி அனுமதியில்லை என்ற போதிலும் பலர் அதை மீறி வருகின்றனர். எனவே, சட்டங்களை முறையாக நடைமுறைப்படுத்துவதே விபத்துகளைக் குறைக்க உதவும்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-16T19:18:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[காஸாவில் திடீரென இடிந்து விழுந்த 7 மாடிக் கட்டடம் ; 5 குழந்தைகள் உட்பட 20 பேர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/20-killed-after-residential-buildin-collapses-gaza-1789586265"></link>
            <id>https://canadamirror.com/article/20-killed-after-residential-buildin-collapses-gaza-1789586265</id>
            <summary type="text">காஸாவில் இஸ்ரேலின் போர்த் தாக்குதல்களால் சேதமடைந்த 7 மாடிக் குடியிருப்பு கட்டடம் திடீரென இடிந்து விழுந்ததில், 5 குழந்தைகள் உட்பட 20 பேர் உயிரிழந்துள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p>காஸாவில் இஸ்ரேலின் போர்த் தாக்குதல்களால் சேதமடைந்த 7 மாடிக் குடியிருப்பு கட்டடம் திடீரென இடிந்து விழுந்ததில், 5 குழந்தைகள் உட்பட 20 பேர் உயிரிழந்துள்ளனர்.</p><p>



இந்தச் சம்பவம் இன்று (16) அதிகாலை இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 14 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2f572298-fab5-438b-911a-2f178c8aa718/26-6aaaeb5b3f743.webp' /></p><p>இதேவேளை, கட்டடத்தின் இடிபாடுகளுக்குள் 100-க்கும் மேற்பட்டோர் சிக்கியுள்ளதாகவும், அவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் காஸாவின் பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
</p><p>


இடிபாடுகளில் சிக்கியவர்களைத் தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், உயிரிழந்தவர்களின் உடல்களும் மீட்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
</p><p>


போதிய மீட்பு உபகரணங்கள் இல்லாமை மற்றும் இஸ்ரேல் விதித்துள்ள கட்டுப்பாடுகள் காரணமாக மீட்புப் பணிகளை முன்னெடுப்பதில் கடும் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>


இஸ்ரேலின் தொடர்ச்சியான போர்த் தாக்குதல்களால் காஸாவில் நூற்றுக்கணக்கான கட்டடங்கள் சேதமடைந்துள்ள நிலையில், அடிப்படை வசதிகளின்றி சேதமடைந்த கட்டடங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருவதாகவும் கூறப்படுகிறது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-16T19:17:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொஸ் மல்லியின் மைத்துனர் கொலை வழக்கில் நால்வர் அதிரடி கைது - சிசிடிவியில் சிக்கிய முக்கிய ஆதாரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/four-arrested-in-murder-case-of-kos-malli-relative-1789585953"></link>
            <id>https://tamilwin.com/article/four-arrested-in-murder-case-of-kos-malli-relative-1789585953</id>
            <summary type="text">ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான கொஸ்மல்லியின் நெருங்கிய உறவினரான தமித் பிரசாத் பொன்சேகா என்ற “பூத கலுவா” வின் கொலை சம்பவம் தொடர்பாக மவுண்ட் லவினியா பிர...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான கொஸ்மல்லியின் நெருங்கிய உறவினரான தமித் பிரசாத் பொன்சேகா என்ற “பூத கலுவா” வின் கொலை சம்பவம் தொடர்பாக மவுண்ட் லவினியா பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவு நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். </p><p>

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், </p><p>

 மவுண்ட் லவினியா பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவால் கைது செய்யப்பட்ட நான்கு சந்தேக நபர்களிடம் இருந்து, ​​21 கிராமுக்கும் அதிகமான ஐஸ் போதைப்பொருள், 4 வாள்கள் உள்ளிட்ட பல கூர்மையான ஆயுதங்கள் மற்றும் 4 தொலைபேசிகள் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
</p><p>
கடந்த 7ஆம் திகதி அதிகாலை சுமார் 1.45 மணியளவில், தெஹிவளை- ஓபன் பிளேஸைச் சேர்ந்த 46 வயதான தமித் பிரசாத் பொன்சேகாவின் வீட்டிற்கு, முச்சக்கர வண்டியில் நான்கு பேர் கொண்ட கும்பல் ஒன்று புகுந்துள்ளது.</p><p> 

அதன் பின்னர், படுக்கையறையில், உறங்கிக் கொண்டிருந்த அவரை, கூர்மையான ஆயுதங்களால் தாக்கிக் கொலைச் செய்த நிலையில், சந்தேக நபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/41aadfe6-5335-4c9c-81c3-11b4aca64cd9/26-6aaaeaa1e007f.webp' /></p><p> </p><p>

இவ்வாறு உயிரிழந்தவர், பல ஆண்டுகளாக கொஸ் மல்லியுடன் துபாயில் தங்கியிருந்ததாகவும், அங்கு பக்கவாதம் ஏற்பட்டதைத் தொடர்ந்து சில வாரங்களுக்கு முன்பு இலங்கைக்கு திரும்பியதாகவும் பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.</p><h2> 

பிரதான சந்தேக நபர்கள் கைது</h2><p>
சம்பவத்தில் ஈடுபட்ட சந்தேக நபரின் புகைப்படம், பாதுகாப்பு கேமரா காட்சிகளைப் பயன்படுத்திப் பெறப்பட்டு, மேலதிக விசாரணைக்காக கொழும்பு குற்றப் பதிவேடுகள் பிரிவுக்கு அனுப்பப்பட்டுள்ளது. </p><p>

புகைப்படத்தில் உள்ள நபர், பல குற்றங்களில் ஈடுபட்டு வரும் அங்கலானா பகுதியைச் சேர்ந்த ஒருவரை 65 சதவீதம் ஒத்திருப்பதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b2033a0f-59bd-42a4-bbdd-71c8472d70d1/26-6aaaeaa2970eb.webp' /></p><p>
</p><p>
 அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது, ​​இந்தக் கொலையில் மேலும் நான்கு பேர் சம்பந்தப்பட்டிருந்ததாக பொலிஸாருக்கு தெரியவந்துள்ளது.

தெலவல வீட்டுவசதி வளாகத்தைச் சேர்ந்த “சஞ்சு” என்பவரும் இந்தக் குழுவில் அடங்குவதாகவும், இவர் தற்போது வெளிநாட்டில் இருக்கும் “சாண்டோ” என்ற பெரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரரின் பிரதான அடியாள் என்றும் கண்டறியப்பட்டுள்ளது. </p><h2>

வாகனங்கள் மற்றும் வாள்கள் பறிமுதல்</h2><p>
கைது செய்யப்பட்ட சந்தேக நபரின் வீட்டிற்குப் பின்னாலுள்ள காட்டில், குற்றக் கும்பலைச் சேர்ந்தவர்களால் செய்யப்பட்ட மூன்று பெரிய வாள்கள், ஒரு மிதிவண்டி கரப்பான் பூச்சி மற்றும் ஒரு கூர்மையான ஆயுதம் ஆகியவையும் கண்டெடுக்கப்பட்டன. </p><p>

மேலும், கொரலவெல்ல பகுதியைச் சேர்ந்த ஒருவரிடம் இருந்து ரூ. 100 கோடிக்கு வாடகைக்கு எடுக்கப்பட்ட ஒரு முச்சக்கர வண்டியில் போலி எண் தகடு பொருத்தப்பட்டிருந்ததும் விசாரணையின் போது தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7379fa03-46ba-41f0-8d4c-bec564facc70/26-6aaaeaa34afc9.webp' /></p><p> </p><p>

50,000 ரூபாய் மதிப்புள்ள முச்சக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், அந்த வாகனத்தை ஓட்டிச் சென்ற தெலவாலா பகுதியைச் சேர்ந்த நபரும் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
குற்றச் சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட முச்சக்கர வாகனத்தைக் கண்டுபிடிப்பதற்கும், இச்சம்பவத்தில் தொடர்புடையதாகக் கூறப்படும் மற்ற இரண்டு சந்தேக நபர்களைக் கைது செய்வதற்கும் பொலிஸார் தற்போது மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். </p><p>

இந்த முழுமையான விசாரணை நடவடிக்கையையும், மவுண்ட் லவினியா பிரதேச குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் பொறுப்பதிகாரியான தலைமை ஆய்வாளர் நிலந்த கமகே மற்றும் அவரது குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-16T19:15:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[சூடானில் தங்கச் சுரங்கம் விபத்துக்குள்ளானதில் 60 பேர் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/60-killed-in-gold-mine-accident-in-sudan-1789585881"></link>
            <id>https://canadamirror.com/article/60-killed-in-gold-mine-accident-in-sudan-1789585881</id>
            <summary type="text">ஆபிரிக்க நாடான சூடானில் தங்கச் சுரங்கம் இடிந்து விழுந்ததில் 60 சுரங்கத் தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.



மேற்கு கோர்டோபன்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஆபிரிக்க நாடான சூடானில் தங்கச் சுரங்கம் இடிந்து விழுந்ததில் 60 சுரங்கத் தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>


மேற்கு கோர்டோபன் மாகாணத்தில் எல்-நஹூத் நகருக்கு அருகில் அமைந்துள்ள அல்-சாரா தங்கச் சுரங்கமே நேற்று திடீரென இடிந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் 60 பேர் உயிரிழந்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/87fa0b04-6752-49cb-9783-6041986bf874/26-6aaae9dab7f0f.webp' /></p><p>


விபத்தைத் தொடர்ந்து சக தொழிலாளர்கள் தங்களிடமிருந்த கருவிகளைப் பயன்படுத்தி, இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் இரவு முழுவதும் ஈடுபட்டுள்ளனர்.</p><p> எனினும், மேலும் பலர் காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.



பாறைகள் மற்றும் மண்ணை அகற்றுவதற்கு கனரக இயந்திரங்கள் தேவைப்படுவதாக அங்கிருந்து தப்பிய தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர். </p><p>இதனால் மீட்புப் பணிகள் சிரமமடைந்துள்ளதாகக் கூறப்படுகின்றது.



சுரங்கங்கள் மிகவும் நெருக்கமாக அமைக்கப்பட்டிருப்பதே இதுபோன்ற சுரங்க விபத்துகளுக்கு முக்கிய காரணமாக இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>மேலும், 2023ஆம் ஆண்டு முதல் சூடானில் நீடித்து வரும் உள்நாட்டுப் போர் மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக, வாழ்வாதாரத்துக்காக பலர் சுரங்கத் தொழிலில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகின்றது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-16T19:11:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[உங்கள் வேலைக்கு ஆபத்தா? ; AI பற்றி Sam Altman சொன்ன அந்த அதிர்ச்சி உண்மை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/is-your-job-at-risk-sam-altman-revealed-about-ai-1789585537"></link>
            <id>https://canadamirror.com/article/is-your-job-at-risk-sam-altman-revealed-about-ai-1789585537</id>
            <summary type="text">செயற்கை நுண்ணறிவான AI-யின் எதிர்கால வளர்ச்சி மற்றும் அது மனிதர்களின் பணிபுரியும் முறையில் ஏற்படுத்தவுள்ள மாற்றங்கள் குறித்து OpenAI நிறுவனத்தின் தலைமை...</summary>
            <content type="html"><![CDATA[<p>செயற்கை நுண்ணறிவான AI-யின் எதிர்கால வளர்ச்சி மற்றும் அது மனிதர்களின் பணிபுரியும் முறையில் ஏற்படுத்தவுள்ள மாற்றங்கள் குறித்து OpenAI நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சாம் ஆல்ட்மேன் (Sam Altman) முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.</p><p>அமெரிக்காவில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இந்தக் கருத்துகளைப் பகிர்ந்துள்ளார்.

கடந்த ஓராண்டில் AI மற்றும் தொழில்நுட்பத் துறையில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக சாம் ஆல்ட்மேன் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6e1875e0-09f9-4c57-9b1f-5c3edaa9a8d9/26-6aaae88321b9e.webp' /></p><p>

மனிதர்கள் கணினிகளுடன் நேரடியாக உரையாடும் நிலை தற்போது உருவாகியுள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், இது ஒரு திரைப்படத்திற்குள் இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்துவதாகவும், அறிவியல் புனைகதை நிஜமாக மாறியதைப் போன்ற தோற்றத்தைத் தருவதாகவும் தெரிவித்துள்ளார்.</p><p>

மேலும், சாதாரண உரையாடலுக்கு அப்பாற்பட்டு, கணினிகளைப் பயன்படுத்தும் விதத்தையும், மனிதர்கள் பணிபுரியும் முறையையும் முற்றிலும் மாற்றியமைக்கக்கூடிய “மூன்றாம் கட்டத்திற்குள்” தற்போது நுழைந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>

இணையம் ஆரம்பகாலத்தில் அறிமுகமானபோது மக்கள் அதனை எவ்வாறு படிப்படியாக ஏற்றுக்கொண்டார்களோ, அதேபோன்று தற்போதைய AI வளர்ச்சியையும் மக்கள் இயல்பாக ஏற்றுக்கொண்டு வருவதாக சாம் ஆல்ட்மேன் தெரிவித்துள்ளார்.
</p><p>
மனிதர்களின் பணிபுரியும் பழக்கவழக்கங்களில் இயல்பான மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு காலம் தேவைப்படுவதால், இந்த புதிய தொழில்நுட்பத்துடன் பழகுவதற்கும் மாற்றங்களை ஏற்றுக்கொள்வதற்கும் சிறிது காலம் எடுக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.
</p><p>
எனினும், இந்த ஆண்டின் இறுதிக்குள் பணிபுரியும் முறையில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்படக்கூடும் என்றும், மனிதர்கள் வேலை செய்வதற்கு முற்றிலும் புதியதொரு முறை உருவாகும் சாத்தியம் உள்ளதாகவும் சாம் ஆல்ட்மேன் தெரிவித்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-09-16T19:05:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[உக்ரைனில் சாலை விபத்தில் உயிரிழந்த பிரித்தானிய வீரர்: இறுதியில் உறுதி செய்யப்பட்ட அடையாளம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/british-soldier-who-died-in-ukraine-named-1789584889"></link>
            <id>https://news.lankasri.com/article/british-soldier-who-died-in-ukraine-named-1789584889</id>
            <summary type="text">British Soldier Who Died in Accident in Ukraine Named: உக்ரைனில் சாலை விபத்தில் உயிரிழந்த பிரித்தானிய இராணுவ வீரரின் பெயர் அடையாளம் காணப்பட்டுள்ளது. ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>British Soldier Who Died in Accident in Ukraine Named: உக்ரைனில் சாலை விபத்தில் உயிரிழந்த பிரித்தானிய இராணுவ வீரரின் பெயர் அடையாளம் காணப்பட்டுள்ளது.</p><h2> சாலை விபத்தில் உயிரிழந்த பிரித்தானிய வீரர்</h2><p>கடந்த வாரம் உக்ரைனில் பிரித்தானிய ராணுவ வீரர் ஒருவர் மோசமான சாலை விபத்தில் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டார்.</p><p> தற்போது, உயிரிழந்த பிரித்தானிய வீரர் மேஜர் பால் வில்க்ஸ்(Major Paul Wilks) என அதிகாரப்பூர்வமாக பாதுகாப்பு அமைச்சகம் அடையாளம் கண்டுள்ளது.</p><p> 40 வயதுடைய மேஜர் பால் வில்க்ஸ் சனிக்கிழமை அன்று போர் முனையில் இருந்து வெகு தொலைவில் உள்ள சாலையில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்து இருப்பது அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8d8eec61-2790-4709-a81f-7d92e13b9e3e/26-6aaae5fa9a5ea.webp' /></p><p> சாண்ட் ஹர்ஸ்ட் ராயல் ராணுவ அகாடமியில் பயிற்சி பெற்ற மேஜர் பால் வில்க்ஸ், உளவு பிரிவில் தனது பணியை கடந்த 2012ம் ஆண்டு தொடங்கினார்.</p><p> ஆப்கானிஸ்தான் போன்ற பல நாடுகளில் பால் வில்க்ஸ் தனது பணியை சிறப்பாக நிறைவு செய்துள்ளார்.</p><p> மேஜர் பால் வில்க்ஸ் சேவையை பாராட்டி இரண்டு பதக்கங்களையும் பெற்று பெருமை சேர்த்துள்ளார்.</p><p><br></p>]]></content>
            <updated>2026-09-16T18:55:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பு - மட்டக்குளிய பகுதியில் இன்று இடம்பெற்ற கோர விபத்தின் சிசிரிவி காட்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/cctv-footage-of-the-mattakkuliya-accident-1789584590"></link>
            <id>https://ibctamil.com/article/cctv-footage-of-the-mattakkuliya-accident-1789584590</id>
            <summary type="text">கொழும்பு - மட்டக்குளிய பகுதியில் இன்று இடம்பெற்ற கோர விபத்தின் சிசிரிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

குறித்த பகுதியில் பயணித்த மற்றுமொரு காரில் பொருத்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு - மட்டக்குளிய பகுதியில் இன்று இடம்பெற்ற கோர விபத்தின் சிசிரிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
</p><p>
குறித்த பகுதியில் பயணித்த மற்றுமொரு காரில் பொருத்தப்பட்டிருந்த கமராவிலேயே விபத்துசம்பவம் பதிவாகியுள்ளது.</p><p>

இதன்போது அதிவேகமாக வரும் காரானது முதலில் ஒரு மோட்டார் சைக்கில் மற்றும் முச்சக்கரவண்டியுடன் மோதுண்டு வருவதோடு, அந்த திசையில் திரும்பிய மற்றுமொரு முச்சக்கர வண்டியுடன் மோதவது காணொளியில் பதிவாகியுள்ளது.</p><p><iframe src="https://www.facebook.com/plugins/video.php?height=316&amp;href=https%3A%2F%2Fwww.facebook.com%2Freel%2F2119787948662021%2F&amp;show_text=false&amp;width=560&amp;t=0" width="560" height="316" style="border-width: medium; border-style: none; overflow: hidden;" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share"></iframe></p><p></p><h2>காவல்துறையின் நடவடிக்கை</h2><p>
</p><p>
இந்நிலையில் விபத்தை பார்வையிட வந்தவர்களை விலக்கி விட்டு சம்பவ இடத்தை காவல்துறையினர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f3ea4751-070a-4ace-b27c-98a22e724ad3/26-6aaae4d08bc3d.webp' /></p><p>
</p><p>
காரணம் கோபத்தில் சிலர் விபத்து ஏற்பட காரணமான வாகனத்தை தாக்கி எரிப்பதற்க்கு முயற்சித்ததாக கூறப்படுகிறது.</p><p>

இதனை தடுக்கும் முகமாகவே காவவல்துறை பொது மக்கள் அனைவரையும் அந்த இடத்தில் இருந்து அகற்றியதாக தெரிவிக்கப்படுகிறது.&nbsp;&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-16T18:49:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[இன்று நள்ளிரவு முதல் தொடருந்து ஊழியர்கள் 48 மணி நேர அடையாள பணிப்புறக்கணிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/railway-employees-to-stage-48-hour-symbolic-strike-1789584524"></link>
            <id>https://jvpnews.com/article/railway-employees-to-stage-48-hour-symbolic-strike-1789584524</id>
            <summary type="text">பல கோரிக்கைகளை முன்வைத்து இன்று (16) நள்ளிரவு முதல் 48 மணி நேர அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக தொடருந்து தொழிற்சங்கங்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>பல கோரிக்கைகளை முன்வைத்து இன்று (16) நள்ளிரவு முதல் 48 மணி நேர அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக தொடருந்து தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.</p><p>
</p><p></p><p>பணிப்புறக்கணிப்பு போராட்டம் அதிகாரப்பூர்வமாக ஆரம்பமாவதற்கு முன்னரே, காங்கேசன்துறை மற்றும் திருகோணமலைக்கான இரவுநேர அஞ்சல் தொடருந்து (Night Mail) மற்றும் மாலை நேர விரைவுத் தொடருந்து சேவைகள் உள்ளிட்ட பல தொலைதூரச் சேவைகளை தொடருந்து திணைக்களம் இரத்து செய்துள்ளதாக இலங்கை தொடருந்து நிலைய அதிபர்கள் சங்கத்தின் செயலாளர் சுமேத சோமரத்ன தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2e1a0d37-25a6-452a-a064-83e393481bb6/26-6aaae48e20d43.webp' /></p><p>மேலும், சில தொடருந்து சேவைகள் இலக்கை அடைவதற்கு முன்னரே நிறுத்தப்பட்டதால் பயணிகள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

பணிப்புறக்கணிப்பு போராட்டம் குறித்து 14 நாட்களுக்கு முன்னரே அறிவித்தல் வழங்கப்பட்ட போதிலும், சம்பந்தப்பட்ட அமைச்சரோ அல்லது அதிகாரிகளோ இதுவரை பேச்சுவார்த்த நடத்தி தீர்வு காணத் தவறிவிட்டதாக தொடருந்து இயந்திர இயக்குநர்கள் சங்கத்தின் செயலாளர் எஸ்.ஆர்.சி.எம். சேனாநாயக்க குற்றம் சுமத்தியுள்ளார்.
</p><p>
அத்துடன், தொடருந்து பொது முகாமையாளர் தலைமைத்துவம் குறித்து கேள்வி எழுப்பிய அவர், திணைக்களத்தில் நாளாந்தம் இயங்கும் தொடருந்து சேவைகளின் எண்ணிக்கை 450 இலிருந்து 184 ஆகக் குறைந்துள்ளதாகத் தெரிவித்தார்.</p><p>

பருவகால பயணச்சீட்டு (Season tickets) விநியோகத்தில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் நிதி முறைகேடுகள் குறித்தும் அவர் சுட்டிக்காட்டினார்.</p><p>

தங்களது கோரிக்கைகளுக்கு உடனடியாகத் தீர்வு காணப்படாவிட்டால், எதிர்வரும் 48 மணித்தியாலங்களில் பயணிகள் கடும் சிரமங்களை எதிர்கொள்ள நேரிடும் என தொழிற்சங்கங்கள் எச்சரித்துள்ளன.</p><p></p>]]></content>
            <updated>2026-09-16T18:48:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[தென் சூடான் தேர்தலில் புதிய மாற்றம்: தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் பதவியிலிருந்து நீக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/new-change-in-south-sudan-election-1789581895"></link>
            <id>https://tamilwin.com/article/new-change-in-south-sudan-election-1789581895</id>
            <summary type="text">தென் சூடானில் எதிர்வரும் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க
தேர்தலுக்கு இன்னும் மூன்று மாதங்களே எஞ்சியுள்ள நிலையில், அந்நாட்டின்
தேர...</summary>
            <content type="html"><![CDATA[<p>தென் சூடானில் எதிர்வரும் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க
தேர்தலுக்கு இன்னும் மூன்று மாதங்களே எஞ்சியுள்ள நிலையில், அந்நாட்டின்
தேர்தல் ஆணைக்குழுத் தலைவர் மாற்றப்பட்டுள்ளார்.
</p><p>
அந்த நாட்டின் ஜனாதிபதி சல்வா கீர், தேர்தல் ஆணைக்குழுவின் தலைவராக இருந்த
அபேத்னெகோ அகோக் கச்சுவோலை உடனடியாகப் பதவியிலிருந்து நீக்கி, அவருக்குப்
பதிலாக ஆணைக்குழுவின் பொதுச்செயலாளராகப் பணியாற்றிய கேப்ரியல் போல் டெங்கை
புதிய தலைவராக நியமித்துள்ளார்.
</p><h2>
தலைவர் பதவியிலிருந்து நீக்கம்</h2><p>

இதற்கான அறிவிப்பு அரசாங்கத் தொலைக்காட்சி ஊடாக வெளியிடப்பட்ட போதிலும்,
இந்தத் திடீர் மாற்றத்திற்கான காரணங்கள் எதுவும் அதிகாரப்பூர்வமாக
அறிவிக்கப்படவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c8cf44c0-709c-4ede-bb1f-c663b2490d83/26-6aaae42f973c9.webp' /></p><p>
</p><p>
2011 ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்ற பின்னர் தென் சூடானில் நடத்தப்படும் முதலாவது
பொதுத் தேர்தல் இதுவாகும்.

டிசம்பர் 22 ஆம் திகதி ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்கள் நடைபெறவுள்ள
நிலையில், கடைசி நேரத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த நியமனம் வாக்காளர்களின்
நம்பிக்கையைக் குறைக்கக்கூடும் எனச் சிவில் சமூக அமைப்புகள் அச்சம்
வெளியிட்டுள்ளன.
</p><p>
அத்துடன், நியாயமான மற்றும் அமைதியான முறையிலான தேர்தலை நடத்துவதற்கான போதிய
சூழல் இன்னும் அங்கு உருவாகவில்லை என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள்
ஆணைக்குழுவும் சுட்டிக்காட்டியுள்ளது.&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-16T18:47:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பில் சற்றுமுன் இடம்பெற்ற பாரிய விபத்து ; சம்பவ இடத்திலேயே இருவர் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/accident-in-colombo-a-short-while-ago-two-dead-1789575355"></link>
            <id>https://jvpnews.com/article/accident-in-colombo-a-short-while-ago-two-dead-1789575355</id>
            <summary type="text">கொழும்பு – மட்டக்குளி பகுதியில் இன்று (16) இரவு இடம்பெற்ற பாரிய வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.முதலாம் இணைப்பு&amp;nbsp;விபத்து இடம்பெற்ற இடத்தில்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு – மட்டக்குளி பகுதியில் இன்று (16) இரவு இடம்பெற்ற பாரிய வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.</p><h4>முதலாம் இணைப்பு&nbsp;</h4><p>விபத்து இடம்பெற்ற இடத்தில் திரண்ட பொதுமக்களை பொலிஸார் அங்கிருந்து அகற்றி, சம்பவ இடத்தை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ee0fde52-b93d-4e36-89b9-ef6d5e1efbe0/26-6aaae1edc672f.webp' /></p><p>விபத்தை பார்வையிடுவதற்காக பெருமளவான மக்கள் சம்பவ இடத்தில் திரண்டிருந்த நிலையில், அவர்களில் சிலர் விபத்துக்கு காரணமானதாகக் கூறப்படும் வாகனத்தை தாக்கி தீ வைக்க முயன்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><p>
இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டதைத் தொடர்ந்து, நிலைமையை கட்டுக்குள் கொண்டுவரும் நோக்கில் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.</p><p>
</p><p></p><h3>மேலதிக விசாரணை</h3><p>கார், 3 முச்சக்கரவண்டிகள் மற்றும் 4 மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/71f794ad-580e-48e6-a53d-6ec5a9b208ac/26-6aaacad1058d0.webp' /></p><p>

விபத்தில் படுகாயமடைந்த இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
இதன்போது காயமடைந்த 6 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர்களில் இருவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் உறுதிப்படுத்தியுள்ளன.&nbsp;</p><p>விபத்தை ஏற்படுத்திய காரின் ஓட்டுநர் தற்போது காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/71f794ad-580e-48e6-a53d-6ec5a9b208ac/26-6aaacad1058d0.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/025d002f-7d4c-4453-a06b-62a0368805c6/26-6aaacad1ef725.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f01202cc-e0fb-49a1-a3d8-c6d5553e236e/26-6aaacad2aad4d.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f876a3ce-3ac3-4ea7-9c6f-20ee660ee26a/26-6aaacad360cbe.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a09ba8a2-42c0-4189-a1c0-fdc6d7abedde/26-6aaae1ed1acaf.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/382f8518-7d74-4167-8aef-58b4c24503f4/26-6aaae1ec619af.webp' /></p>]]></content>
            <updated>2026-09-16T18:37:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானியாவில் காணாமல் போன 3 வயது சிறுவன்: சோகத்தில் முடிந்த தேடுதல் வேட்டை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/missing-toddler-noah-woods-body-recovered-1789583556"></link>
            <id>https://news.lankasri.com/article/missing-toddler-noah-woods-body-recovered-1789583556</id>
            <summary type="text">Missing Toddler Noah Woods Body Recovered: பிரித்தானியாவில் காணாமல் போன 3 வயது சிறுவனின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. காணாமல் போன சிறுவன்பிரித்தானி...</summary>
            <content type="html"><![CDATA[<p>Missing Toddler Noah Woods Body Recovered: பிரித்தானியாவில் காணாமல் போன 3 வயது சிறுவனின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.</p><h2> காணாமல் போன சிறுவன்</h2><p>பிரித்தானியாவின் சஃபோல்க்(Suffolk) பகுதியில் 3 வயது சிறுவன் நோவா வுட்ஸ்(Noah Woods) காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டார்.</p><p> அவர் பிராந்தம்(Brantham) கிராமத்தில் உள்ள விளையாட்டு மையத்தில் இருந்து மதியம் 3 மணிக்கு ஓடிச் சென்றுள்ளார். அவர் கடைசியாக சந்து ஒன்றின் வழியாக வீட்டு வசதிப் பகுதி அருகே சுற்றித் திரிந்தது பார்க்கப்பட்டுள்ளது.</p><p> சிறுவன் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டதை அடுத்து நூற்றுக்கணக்கான உள்ளூர் தன்னார்வலர்கள், காவல்துறையினர், கடற்படையினர் இணைந்து சிறுவனை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கினர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/018dc496-ad7f-45c4-83b6-584610688277/26-6aaae0c6956c8.webp' /></p><p></p><p> இந்த பணியில் மீட்பு ஹெலிகாப்டர்களும் பயன்படுத்தப்பட்டது. இருப்பினும் பிராந்தம் கிராமத்தில் உள்ள டிகாய் குளத்தில்(Decoy Pond) சிறுவன் நோவா வுட்ஸ் சடலமாக கண்டெடுக்கப்பட்டு இருப்பதாக காவல்துறை கண்காணிப்பாளர் டாம் பியர்ஸ்(Tom Pearse) தகவல் தெரிவித்துள்ளார்.</p><p> அதிகாரப்பூர்வ அடையாளம் காணும் பரிசோதனை நடைபெறவில்லை. இருப்பினும் சிறுவனின் குடும்பத்தினருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> ஆரம்பக்கட்ட விசாரணையில் சந்தேகத்திற்குரிய சூழல் எதுவும் இல்லை என்று காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.</p><p> அதே நேரத்தில் இந்த சம்பவம் தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-09-16T18:32:48+00:00</updated>
        </entry>
    </feed>
