<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-08-30T13:26:27+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[முல்லைத்தீவு குருந்தூர் ரஜமஹா விகாரைக்கு மீண்டும் பொலிஸ் பாதுகாப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/police-security-restored-at-kurundoor-vihara-1788096142"></link>
            <id>https://jvpnews.com/article/police-security-restored-at-kurundoor-vihara-1788096142</id>
            <summary type="text">முல்லைத்தீவு குருந்தூர் ரஜமஹா விகாரை வளாகத்திலிருந்து அகற்றப்பட்டிருந்த பொலிஸ் பாதுகாப்பை மீண்டும் வழங்குவதற்குப் புத்தசாசன, சமய மற்றும் கலாசார விவகார...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">முல்லைத்தீவு குருந்தூர் ரஜமஹா விகாரை வளாகத்திலிருந்து அகற்றப்பட்டிருந்த பொலிஸ் பாதுகாப்பை மீண்டும் வழங்குவதற்குப் புத்தசாசன, சமய மற்றும் கலாசார விவகார அமைச்சு தீர்மானித்துள்ளது. </p><p style="text-align: justify; ">

விகாரையில் அகற்றப்பட்ட பொலிஸ் பாதுகாப்பை மீண்டும் வழங்குமாறு கோரி, விகாராதிபதி கல்கமுவே சந்தபோதி தேரரினால் அமைச்சுக்கு அனுப்பப்பட்ட கடிதத்திற்குப் பதிலளிக்கும் வகையிலேயே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/629c8904-38f8-4c9a-8db9-62718c59a8b7/26-6a942e8f7e6f0.webp' /></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

இந்தக் கோரிக்கைக்குப் பதிலளிக்கும் வகையில், விகாரைக்குத் தேவையான பொலிஸ் பாதுகாப்பை மீண்டும் வழங்குவதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் எனப் விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனவி, விகாராதிபதி தேரருக்கு அறிவித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.</p>]]></content>
            <updated>2026-08-30T13:22:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஒரு விமானத்தில் இலங்கைக்கு வந்து சேர்ந்த 200 ஜப்பானிய சுற்றுலா பயணிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/200-japanese-tourists-depart-for-sri-lanka-1788093880"></link>
            <id>https://ibctamil.com/article/200-japanese-tourists-depart-for-sri-lanka-1788093880</id>
            <summary type="text">200 ஜப்பானிய சுற்றுலாப் பயணிகள் அடங்கிய குழு ஒன்று, சிறிலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் ஒரே விமானத்தில் இன்று இலங்கைக்குப் புறப்பட்டது. இது இலங்கைக்கும்...</summary>
            <content type="html"><![CDATA[<p>200 ஜப்பானிய சுற்றுலாப் பயணிகள் அடங்கிய குழு ஒன்று, சிறிலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் ஒரே விமானத்தில் இன்று இலங்கைக்குப் புறப்பட்டது. இது இலங்கைக்கும் ஜப்பானுக்கும் இடையிலான சுற்றுலா உறவுகளுக்கு ஒரு குறிப்பிடத்தக்க ஊக்கத்தை அளிக்கிறது.</p><p>

லிட்டில் ஜப்பான் குழுமத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்தக் குழு, நரிட்டா சர்வதேச விமான நிலையத்திலிருந்து சிறிலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் UL455 விமானத்தில் இலங்கைக்குப் பயணம் செய்தது.</p><h2>சிகிரியா எனும் பண்டைய நகரம்&nbsp;</h2><p>&nbsp;ஜப்பானுக்கான இலங்கைத் தூதர், பேராசிரியர் பிவித்துரு ஜனக் குமாரசிங்க, வர்த்தக முதல் செயலாளர் சந்துன் சமீராவுடன் இணைந்து, அவர்கள் புறப்படுவதற்கு முன்பு விமான நிலையத்தில் சுற்றுலாப் பயணிகளைச் சந்தித்து வழியனுப்பி வைத்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ba5b48c9-3352-472c-b340-c950cc63e157/26-6a942e3764239.webp' /></p><p>
</p><p>
இலங்கையில் தங்கியிருக்கும் போது, ​​இந்தப் பயணிகள் சிகிரியா எனும் பண்டைய நகரம் உட்பட நாட்டின் பல முக்கிய சுற்றுலாத் தலங்களைச் சுற்றிப் பார்ப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p> மேலும், இந்தக் குழுவினர் இலங்கையின் பாரம்பரிய ஆயுர்வேத சிகிச்சைகள் மற்றும் ஆரோக்கிய சேவைகளையும் அனுபவிப்பார்கள்.

ஜப்பானில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் ஆதரவு மற்றும் உதவியுடன் லிட்டில் ஜப்பான் குழுமத்தால் இந்தப் பயணம் ஏற்பாடு செய்யப்பட்டது.</p><p></p><p>
</p><p>
</p><h2>இலங்கை-ஜப்பான் சுற்றுலா உறவுகளில்&nbsp; ஊக்கமளிக்கும் முன்னேற்றம்</h2><p>விமான நிலையத்தில் குழுவினரிடம் பேசிய தூதர் குமாரசிங்க, சுற்றுலாப் பயணிகளை வரவேற்றதோடு, இலங்கையைத் தங்கள் விடுமுறைத் தலமாகத் தேர்ந்தெடுத்ததற்காக அவர்களுக்கு நன்றி தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/916544cb-a0c8-4cbf-9516-72f0ac0cdc00/26-6a942e3601b1f.webp' /></p><p> </p><p>அவர்களுக்குப் பாதுகாப்பான பயணத்தையும், இனிமையான மற்றும் மறக்க முடியாத தங்குதலையும் அவர் வாழ்த்தினார்.&nbsp;</p><p>இலங்கை-ஜப்பான் சுற்றுலா உறவுகளில் ஒரு ஊக்கமளிக்கும் முன்னேற்றம் என்றும், இலங்கைக்கு ஒன்றாகப் பயணம் செய்யும் ஜப்பானிய சுற்றுலாப் பயணிகளின் மிகப்பெரிய ஒழுங்கமைக்கப்பட்ட குழுக்களில் இதுவும் ஒன்று என்றும் தூதர் கூறினார்.
</p><p>
</p><h2>மறக்க முடியாத இடமாக மேம்படுத்தும் முயற்சி</h2><p>ஜப்பானியப் பயணிகளிடையே அதிகரித்து வரும் ஆர்வமும், இலங்கையின் சுற்றுலாத் துறை மற்றும் பிற பங்குதாரர்களின் தொடர்ச்சியான முயற்சிகளும் இணைந்து, இரு நாடுகளுக்கும் இடையிலான சுற்றுலாப் பரிமாற்றங்களை வலுப்படுத்த உதவும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aa85466c-ba54-4352-88cc-03791ababc99/26-6a942e36b2cac.webp' /></p><p>
</p><p>
இந்தப் பயணம், இலங்கைக்கும் ஜப்பானுக்கும் இடையே வளர்ந்து வரும் மக்கள் தொடர்பைப் பிரதிபலிக்கிறது என்றும், ஜப்பானியப் பயணிகளுக்கு இலங்கையை ஒரு பாதுகாப்பான, கவர்ச்சிகரமான மற்றும் மறக்க முடியாத இடமாக மேம்படுத்தும் முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதில் தனது உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்துவதாகவும் தூதரகம் கூறியது.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-30T13:21:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[வட சைப்ரஸ் கடற்பகுதியில் 270 பேருடன் பயணித்த படகு கவிழ்ந்து விபத்து: ஒருவர் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/boat-carrying-270-people-capsizes-off-northern-1788095712"></link>
            <id>https://tamilwin.com/article/boat-carrying-270-people-capsizes-off-northern-1788095712</id>
            <summary type="text">வட சைப்ரஸ் கடற்பகுதியில் சுமார் 270 பேருடன் பயணித்த படகு ஒன்று கவிழ்ந்து
விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளி...</summary>
            <content type="html"><![CDATA[<p>வட சைப்ரஸ் கடற்பகுதியில் சுமார் 270 பேருடன் பயணித்த படகு ஒன்று கவிழ்ந்து
விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p>

வட சைப்ரஸின் கிரினியா துறைமுகத்திலிருந்து துருக்கியின் தசுசு துறைமுகம்
நோக்கி பயணித்த தனியார் சொகுசு படகு ஒன்றே, துறைமுகத்திலிருந்து புறப்பட்ட
சிறிது நேரத்திலேயே எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கத் தொடங்கியுள்ளது.</p><h2>


படகு கவிழ்ந்து விபத்து</h2><p>
குறிப்பிட்ட படகில் 259 பயணிகளும் 8 பணியாளர்களும் அடங்கலாக மொத்தம் 267 பேர்
பயணித்துள்ளதாக வட சைப்ரஸ் போக்குவரத்து அமைச்சர் எர்ஹான் அரிக்லி
தெரிவித்துள்ளார்.</p><p>

கடலில் கவிழ்ந்த படகின் மீது சிவப்பு நிற உயிர் பாதுகாப்பு அங்கிகளை அணிந்தவாறு பயணிகள் அமர்ந்திருக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cf75a91b-1505-43ed-a2b9-a98c869ee7ed/26-6a942d376d095.webp' /></p><p>
</p><p>
சம்பவ இடத்திற்கு விரைந்த கடலோரப் காவல்படையினரும் மீட்புக் குழுவினரும்
படகிலிருந்தவர்களை மீட்கும் நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

மீட்கப்பட்ட பயணிகள் அனைவரும் சிகிச்சைக்காக கிரினியா துறைமுகத்திற்கு கொண்டு
செல்லப்பட்டு, அங்கிருந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.</p><p>

விபத்துக்கான துல்லியமான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்பதுடன், மீட்புப்
பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-30T13:16:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாராலும் தோற்கடிக்கவே முடியாத 3 ராசியினர்! இவர்களிடம் வம்பு வச்சிக்காதீங்க]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/zodiac-sign-who-are-unbeatable-1788094134"></link>
            <id>https://manithan.com/article/zodiac-sign-who-are-unbeatable-1788094134</id>
            <summary type="text">ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில், ஒருவரின் பிறப்பு ராசியும் நட்சத்திரமும் அவர்களின் வாழ்க்கைப் பயணத்தில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நம்பப்பட...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில், ஒருவரின் பிறப்பு ராசியும் நட்சத்திரமும் அவர்களின் வாழ்க்கைப் பயணத்தில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிறது.
</p><p>
எதிர்கால முன்னேற்றம், பொருளாதார நிலை, தொழில் வாய்ப்புகள், தனித்திறமைகள், உடல் அமைப்பு, மனப்பாங்கு, குணநலன்கள் மற்றும் சமூக ஆளுமை என பல அம்சங்களில் ராசி மற்றும் நட்சத்திரத்தின் தாக்கம் இருப்பதாகக் கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/66936507-8b18-482f-8179-bb6657ba8b0d/26-6a942bee05769.webp' /></p><p>

அந்த வகையில், சில குறிப்பிட்ட ராசிகளில் பிறந்தவர்கள் அபாரமான அறிவாற்றல், தன்னம்பிக்கை, மன உறுதி மற்றும் எந்தச் சவாலையும் எதிர்கொள்ளும் துணிச்சல் கொண்டவர்களாகத் திகழ்வார்கள்.</p><p> இவர்களை&nbsp; தோற்கடிப்பதும், மன உறுதியை உடைப்பதும் மிகவும் கடினம்.அப்படிப்பட்ட அபூர்வமான ஆளுமை, அசைக்க முடியாத மனவலிமை மற்றும் சிறப்பான திறமைகளுடன் பிறந்த ராசியினர் யார் யார் என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.</p><h2>விருச்சிகம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5b58c274-1239-4b6c-a032-2f0527d3bae6/26-6a942beeb2088.webp' /></p><p></p><h2>
</h2><p>விருச்சிக ராசியில் பிறந்தவர்கள் மர்மமான இயல்பு, கவர்ச்சியான ஆளுமை மற்றும் அசாத்திய துணிச்சலுக்கு பெயர் பெற்றவர்கள். </p><p>வாழ்க்கையில் எத்தனை தடைகள் வந்தாலும், அவற்றை தைரியமாக எதிர்கொண்டு சாதிக்கும் மனஉறுதி இவர்களிடம் இருக்கும்.

தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தவும், தவறுகளை தட்டிக்கேட்கவும், எதிர்ப்புகளை எதிர்கொள்ளவும் ஒருபோதும் தயங்கமாட்டார்கள். </p><p>மாற்றத்தை ஏற்றுக்கொண்டு சூழ்நிலைக்கு ஏற்ப தங்களை மாற்றிக்கொள்ளும் திறனும் இவர்களுக்கு உண்டு. அதனால் இவர்களை எளிதில் தோற்கடிப்பது மிகவும் கடினம்.</p><h2>ரிஷபம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4e37b696-2220-4445-a65b-6fdb9b17b5a7/26-6a942bef64f5a.webp' /></p><p>
சுக்கிரனால் ஆளப்படும் ரிஷப ராசியினர் வலிமையான ஆளுமை, தலைமைத்துவ குணம் மற்றும் தன்னம்பிக்கை கொண்டவர்களாக இருப்பார்கள். </p><p>தாங்கள் செல்லும் இடங்களில் தனித்துவமான தாக்கத்தை ஏற்படுத்துவதுடன், மற்றவர்களை ஈர்க்கும் காந்த ஆற்றலும் இவர்களிடம் இருக்கும்.
</p><p>
எத்தனை முறை வாழ்க்கையில் விழுந்தாலும், மீண்டும் அதே நம்பிக்கையுடன் எழுந்து நிற்கும் மனவலிமை இவர்களுடைய மிகப்பெரிய பலமாகும். விடாமுயற்சியுடன் செயல்படுவதால் இவர்களை எளிதில் தோற்கடிக்க முடியாது.
</p><h2>மகரம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/109ebae3-71e7-4308-82d4-5cff778a726b/26-6a942bf01b50b.webp' /></p><p></p><h2>
</h2><p>மகர ராசியில் பிறந்தவர்கள் சிறந்த அறிவாற்றல் மற்றும் நிதானமான சிந்தனை கொண்டவர்கள். எந்த விஷயத்தையும் பல கோணங்களில் ஆராய்ந்து, மற்றவர்கள் கவனிக்காத விஷயங்களையும் கூர்ந்து கவனிக்கும் திறன் இவர்களிடம் இருக்கும்.</p><p>

சிக்கலான சூழ்நிலைகளையும் நம்பிக்கை, திறமை மற்றும் தன்னம்பிக்கையுடன் கையாள்வார்கள். இவர்களின் நிதானமும் விடாமுயற்சியும் எதிரிகளை திணறடிக்கும். </p><p>எவ்வளவு காலம் எடுத்தாலும், முயற்சியை கைவிடாமல் இறுதியில் வெற்றியை தங்களுடையதாக மாற்றிக்கொள்வார்கள்.</p><p><b>இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).</b></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://chat.whatsapp.com/KPaiG8NNYogL3W9EipSjKP" target="_blank">FOLLOW NOW</a></u></b>&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-30T13:12:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepachelvan</name>
            </author>
            <title type="text"><![CDATA[காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான போராட்டத்தை ஒடுக்குகிறதா அரசு?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/is-the-government-suppressing-the-protest-1788094534"></link>
            <id>https://ibctamil.com/article/is-the-government-suppressing-the-protest-1788094534</id>
            <summary type="text">காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் அரசு நிகழ்வொன்றை நடத்தியது. அதே மாவட்ட செயலகத்தின் வாசலுக்கு வெளி...</summary>
            <content type="html"><![CDATA[<p>காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் அரசு நிகழ்வொன்றை நடத்தியது. அதே மாவட்ட செயலகத்தின் வாசலுக்கு வெளியே, தமது பிள்ளைகளையும் உறவுகளையும் தேடிக்கொண்டிருக்கும் தாய்மார்கள் நீதிகேட்டு நிற்கிறார்கள். </p><p>அவர்களைப் காவல்துறையினர் இழுத்துச் சென்று வெளியேற்றுகின்றனர். </p><p>உள்ளே இருந்த நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, வெளியே நடைபெறும் அந்தப் போராட்டத்தைத் தனது கையடக்கத் தொலைபேசியில் பார்த்துக்கொண்டிருக்கும் காட்சி சமூக ஊடகங்களில் பரவுகிறது.
</p><p>
இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டோரின் பிரச்சினையைவிட, இந்தக் காட்சி வேறு எதையும் இவ்வளவு தெளிவாகச் சொல்ல முடியாது.</p><p></p><h2>நீதிக்காக நின்ற தாய்மார்கள்</h2><p>ஒருபுறம் காணாமல் ஆக்கப்பட்டோருக்காக அரசு நிகழ்வு நடத்துகிறது. மறுபுறம் காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்கள் அதே அரச நிறுவனத்தின் முன்பாக நீதிகேட்டு நிற்பதற்கே இடமளிக்கப்படவில்லை. அரசு ஏற்பாடு செய்யும் நிகழ்வுக்குள் அழைக்கப்படுபவர்கள் ஒருவகை பிரதிநிதிகளாக இருக்கின்றனர். </p><p>வெளியேற்றப்படும் தாய்மார்கள் இன்னொரு உண்மையின் பிரதிநிதிகளாக இருக்கின்றனர். அந்த இரண்டுக்கும் இடையிலான இடைவெளியே இலங்கையின் காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினையின் அரசியல் உண்மையாகும்.</p><p>

மட்டக்களப்பு, திருகோணமலை, வவுனியா உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து இடைக்கால நிவாரணமாக இரண்டு இலட்சம் ரூபாய் பெற்றவர்களில் தெரிவுசெய்யப்பட்ட சுமார் 400 பேர் நிகழ்வில் பங்கேற்பதற்காக பஸ்கள் மூலம் அழைத்துவரப்படவிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. </p><p>நிவாரணம் வழங்குவது பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அவசியமான உதவியாக இருக்கலாம். ஆனால் நிவாரணத்தை நீதிக்கு மாற்றாகப் பயன்படுத்த முடியாது. காணாமல் போன ஒருவரின் குடும்பத்துக்கு வழங்கப்படும் பணம், அந்த நபருக்கு என்ன நடந்தது என்ற கேள்விக்குப் பதிலாகாது.</p><h2>தாய்மார்கள் வீதியில் நிற்பது ஏன்?
</h2><p>
இதனால்தான் பல ஆண்டுகளாகத் தாய்மார்கள் வீதியில் நிற்கிறார்கள். அவர்கள் அரசாங்கத்திடம் பணம் கேட்டு நிற்கவில்லை. தங்களது உறவினர்களின் பெயரில் இன்னொரு ஆவணம் கேட்டு நிற்கவில்லை. </p><p>தங்கள் பிள்ளைகள் எவ்வாறு காணாமல் போனார்கள், யாருடைய பொறுப்பில் அவர்கள் காணாமல் போனார்கள், அவர்கள் உயிருடன் உள்ளார்களா, இல்லையா என்பதற்கான உண்மையைத் தேடுகின்றனர். அந்த உண்மைக்குப் பின்னால் பொறுப்புக்கூறல் இருக்க வேண்டும் என்பதையே கோருகின்றனர்.&nbsp;</p><p>இந்தக் கோரிக்கையைப் புரிந்துகொள்ளாமல் காணாமல் ஆக்கப்பட்டோரின் பிரச்சினையை நிவாரணத் திட்டமாகச் சுருக்குவது, பல தசாப்தங்களாக நீடிக்கும் ஒரு அரசியல் மற்றும் மனித உரிமைப் பிரச்சினையை நிர்வாக நடவடிக்கையாகக் குறைத்துவிடுவதாகும்.
</p><p>
யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்துக்கு முன்பாக நடந்த சம்பவம் இதனால்தான் முக்கியம் பெறுகிறது. </p><p>நீதிக்காகக் காத்திருக்கும் குடும்பங்களுக்கும் அரசாங்கத்துக்கும் இடையிலான நம்பிக்கையின் இடைவெளி இன்னமும் நிரம்பவில்லை என்பதை அது வெளிப்படுத்துகிறது. அத்துடன் நீதிக்காகக் காத்திருக்கும் மக்களின் குரலைக் கேட்பதற்குப் பதிலாக, அவர்களின் போராட்டத்தை வெளியிலிருந்து கண்காணிக்கும் அரசியல் அணுகுமுறையும் எதன் வெளிப்பாடாகிறது?</p><h2>கண்டனத்துக்குள்ளான அரசாங்கம்</h2><p>இந்தச் சம்பவத்துக்கு தமிழ்த் தேசிய அரசியல் பிரதிநிதிகள் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளனர். எம்.ஏ. சுமந்திரன், தர்மலிங்கம் சித்தார்த்தன், நடராஜர் காண்டீபன் உள்ளிட்டோர் தாய்மார்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டமையையும், காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்களின் நீண்டகாலக் கோரிக்கைகள் புறக்கணிக்கப்படுவதையும் சுட்டிக்காட்டியுள்ளனர். </p><p>குறிப்பாக, கடந்த கால மீறல்கள் தொடர்பில் உள்ளகப் பொறிமுறைகள் மீது பாதிக்கப்பட்ட மக்களுக்கு நம்பிக்கை இல்லாத நிலையில் சர்வதேச நீதிப் பொறிமுறையின் அவசியம் மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளது.</p><h2>&nbsp;ஆகஸ்ட் 30 ஏன் முக்கியமானது?
</h2><p>
ஆகஸ்ட் 30ஆம் நாள் உருவான வரலாறும் இதே கேள்வியையே முன்னிறுத்துகிறது. வலிந்து காணாமல் ஆக்கப்படுதல் பல நாடுகளில் அரசியல் அடக்குமுறையின் கருவியாகப் பயன்படுத்தப்பட்ட பின்னணியில், ஐக்கிய நாடுகள் பொதுச்சபை 2010 டிசம்பர் 21ஆம் நாள் 65/209 தீர்மானத்தின் மூலம் ஆகஸ்ட் 30ஆம் நாளை வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச நாளாக அறிவித்தது. 2011ஆம் ஆண்டு முதல் இந்த நாள் உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.
</p><p>&nbsp;இந்த நாளின் நோக்கம் காணாமல் போனவர்களை நினைவுகூர்வது மட்டுமல்ல.</p><p> காணாமல் ஆக்கப்படுதல் மீண்டும் நிகழாமல் தடுப்பதும், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு உண்மையை அறியும் உரிமையை உறுதிப்படுத்துவதும், குற்றங்களுக்குப் பொறுப்பானவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதும் இதன் அடிப்படை நோக்கங்களாகும்.
</p><p>
இலங்கையில் இந்த நாளின் முக்கியத்துவம் அதனால் இன்னும் அதிகமாகிறது. யுத்தத்தின் இறுதிக்காலம் உள்ளிட்ட பல்வேறு காலகட்டங்களில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறித்து குடும்பங்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றன. வடக்கு, கிழக்கு மட்டுமன்றி தென்னிலங்கையிலும் காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்கள் உள்ளன. தலைமுறைகள் மாறிவிட்டன. ஆனால் பல குடும்பங்களில் காத்திருப்பு முடியவில்லை.</p><p>இந்த நீண்டகாலக் காத்திருப்புக்கு இலங்கை பல்வேறு நிறுவனங்களை உருவாக்கி பதிலளிக்க முயன்றுள்ளது. காணாமல் போனோர் பற்றிய அலுவலகம் உருவாக்கப்பட்டது. சட்டங்களும் இயற்றப்பட்டன. </p><p>சர்வதேச உடன்படிக்கைகளும் ஏற்றுக்கொள்ளப்பட்டன. ஆனால் ஒரு நிறுவனம் இருப்பது மட்டும் ஒரு குடும்பத்துக்கு நீதி கிடைத்ததற்கான அடையாளமாகாது. விசாரணையின் முடிவு என்ன? உண்மை என்ன? பொறுப்பானவர்கள் யார்? அவர்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? என்பவையே முக்கியமான கேள்விகள்.</p><h2>சர்வதேச விசாரணை ஏன்?
</h2><p>
இந்தக் கேள்விகளுக்கு நீண்டகாலமாகத் தெளிவான பதில் இல்லாததே உள்ளகப் பொறிமுறைகள் மீதான நம்பிக்கையைச் சிதைத்துள்ளது.

அதனால்தான் சர்வதேச விசாரணைக்கான கோரிக்கை தொடர்ந்து எழுகிறது. </p><p>இது இலங்கையைத் தண்டிப்பதற்கான கோரிக்கையாக அல்ல; இலங்கையால் இதுவரை தீர்க்கப்படாத ஒரு பிரச்சினைக்கு சுயாதீனமான விசாரணை தேவை என்பதற்கான கோரிக்கையாகப் பார்க்கப்பட வேண்டும். </p><p>காணாமல் ஆக்கப்பட்டோரின் நிலை, அதற்கான சூழ்நிலைகள், பொறுப்புடையவர்கள், கட்டளைப் பொறுப்பு, ஆதாரங்கள் மற்றும் சாட்சிகளின் பாதுகாப்பு ஆகியவை சுயாதீனமான சர்வதேசப் பொறிமுறையால் ஆராயப்பட வேண்டும்.

ஆகஸ்ட் 30 அன்று யாழ்ப்பாணத்தில் நிகழ்ந்த முரண்பாடு இந்தக் கோரிக்கையை மேலும் வலுப்படுத்துகிறது.</p><p> காணாமல் ஆக்கப்பட்டோருக்காக நிகழ்வு நடத்தும் அரசாங்கமே, அவர்களுக்காக நீதிகேட்டு நிற்கும் தாய்மார்களை வெளியேற்றும் நிலையில் இருக்குமானால், அந்த அரசாங்கத்திடம் மட்டும் நீதியை எதிர்பார்க்க முடியுமா என்ற கேள்வி எழுவது இயல்பானது.</p><p>காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்கள் அரசின் அனுதாபத்தை மாத்திரம் எதிர்பார்க்கவில்லை. அவர்களுக்கு அரசின் அறிக்கைகளும் மாத்திரம் தேவையில்லை. அவர்களுக்கு முடிவு தேவை. உண்மை எங்கே இருக்கிறது என்பதற்கும் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்பதற்கும் பதில் வேண்டும். </p><p>அவர்களுக்கு என்ன நடந்தது என்பதற்கான விசாரணை தேவை. அதற்குப் பொறுப்பானவர்கள் யார் என்பதற்கான நீதியும் தேவை. ஆகஸ்ட் 30 இந்தக் கேள்விகளை மீண்டும் உலகத்தின் முன் கொண்டுவருகிறது.</p><p> யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தின் வாசலுக்கு வெளியே இழுத்துச் செல்லப்பட்ட தாய்மார்கள், இந்தக் கேள்விகள் இன்னும் முடிவுக்கு வரவில்லை என்பதை உலகுக்குக் காட்டியுள்ளனர்.</p><p>

அவர்களின் போராட்டத்தை வெளியேற்றலாம். அவர்களின் குரலைத் தடுக்கலாம். ஆனால் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உண்மையை அதனால் மறைத்துவிட முடியாது. </p><p>இலங்கை அரசு நினைவு நிகழ்வுகளை நடத்துவதைக் காட்டிலும், காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்களின் கேள்விகளுக்கு பதிலளிப்பதே இந்த நாளுக்குச் செய்யக்கூடிய உண்மையான மரியாதையாகும்.</p><p> அந்தப் பதில் உள்நாட்டில் கிடைக்காதவரை, சர்வதேச விசாரணை மூலம் நீதியைத் தேடுவது பாதிக்கப்பட்ட மக்களின் நியாயமான உரிமையாகவே தொடரும்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p><p>
</p>]]></content>
            <updated>2026-08-30T13:11:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாளத்தை உலுக்கிய வெள்ளம் ; சாதுரியத்தால் 1,643 உயிர்களை காப்பாற்றிய ஆசிரியர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/teacher-saves-1-643-lives-amid-nepal-floods-1788095386"></link>
            <id>https://canadamirror.com/article/teacher-saves-1-643-lives-amid-nepal-floods-1788095386</id>
            <summary type="text">நேபாள - திபெத் எல்லையில் லெண்டே கோலா ஆற்றில் பனிப்பாறைகள் உடைந்து விழுந்து பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரை உயிர...</summary>
            <content type="html"><![CDATA[<p>நேபாள - திபெத் எல்லையில் லெண்டே கோலா ஆற்றில் பனிப்பாறைகள் உடைந்து விழுந்து பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 734 ஆக உயர்ந்துள்ளது.

திபெத்தில் 16 பேர் உயிரிழந்துள்ளனர்.</p><p> எல்லையின் இருபுறமும் காணாமல் போன 2000த்திற்கும் மேற்பட்டோரை தேடும் பணியும் 5வது நாளாக தொடர்ந்து வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aae72f71-7957-4542-9a89-7c2dd7717a5a/26-6a942b9bcedb5.webp' /></p><p>

</p><p>இந்நிலையில் வெள்ள நேரத்தில் பதட்டமடையால், நிதானமாக செயல்பட்டு 1,643 குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றிய நேபாள பள்ளியின் தலைமை ஆசிரியர் ஒருவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.
</p><p>
நேபாளத்தின் திரிசூலி பள்ளத்தாக்கில் உள்ள திரிபுவன் திரிசூலி மேல்நிலைப் பள்ளியின் முதல்வர் ராஜேந்திர தவாடிக்கு புதன்கிழமை காலை 9:20 மணிக்கு அவரது நண்பர் ஒருவர் வெள்ளம் தொடர்பான செய்தியை தெரிவித்துள்ளார்.</p><p>


10 நிமிட இடைவெளி
வெள்ளப்பெருக்கு தொடர்பாக அவருக்கு தகவல் கிடைத்தப்போது பள்ளியில் 900 குழந்தைகள் இருந்துள்ளனர். மேலும் 700-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பள்ளிப் பேருந்துகளிலும், நடந்தும் பள்ளிக்கு வந்து கொண்டிருந்தனர்.
</p><p>
தனக்குக் கிடைத்த 10 நிமிட இடைவெளியில், உடனடியாகப் பள்ளியின் அவசர எச்சரிக்கை மணியை ஒலிக்கச் செய்து ஆசிரியர்கள் உடனடியாக வகுப்பறைகளைக் காலி செய்யுமாறு உத்தரவிட்டார்.</p><p>

மேலும் பள்ளிப் பேருந்து ஓட்டுநர்களுக்கு போன் செய்து, “இங்கு வராதீர்கள், பேருந்தை அப்படியே உயரமான பகுதிக்குத் திருப்புங்கள். வரும் வழியில் பாலங்கள் இருந்தால் அதைக் கடக்க வேண்டாம்” என்றும் எச்சரித்துள்ளார்.
</p><p>
பள்ளியில் இருந்த குழந்தைகள் அனைவரும் தப்பி மலைப்பகுதிகளுக்கு சென்றனர். பயத்தால் ஒரு குழந்தைக்கு மட்டும் ஃபிக்ஸ் வந்துள்ளது. </p><p>அக்குழந்தை மட்டும் இருசக்கர வாகனம் மூலம் மலை உச்சிக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.


இறுதியாக வெள்ளம் பள்ளிக் கட்டிடங்களை அடித்துச் சென்றபோது, குழந்தைகள் அனைவரும் பாதுகாப்பாக மலை உச்சியில் இருந்த ஒரு மரத்தின் அடியில் இருந்தனர்.</p><p>3 மாடிகள் கொண்ட வலுவான கான்கிரீட் பள்ளி கட்டடம் ஆற்றிலிருந்து 60 மீட்டர் உயரத்தில், கிராமத்தை கிழக்குக் கரையுடன் இணைக்கும் எஃகுப் பாலத்தின் அதே மட்டத்தில் இருந்துள்ளது.
</p><p>
பேரிடர் காலத்தில் சொந்த உயிரைப் பற்றிக் கவலைப்படாமல், ஆயிரக்கணக்கான குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றிய ராஜேந்திர தவாடிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.</p>]]></content>
            <updated>2026-08-30T13:10:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[எங்கள் நிலங்கள் எங்களுடையதுதானே… அது எப்படி உங்களுடையதாகும்.. 11ஆவது வாரமாகவும் பலாலி மக்களின் போராட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/palaly-people-s-protest-enters-11th-week-1788094353"></link>
            <id>https://tamilwin.com/article/palaly-people-s-protest-enters-11th-week-1788094353</id>
            <summary type="text">வலிகாமம் வடக்கு பலாலி காணி இழந்த மக்கள் இன்று(30) 11ஆவது வாரமாகவும் தமது தொடர் அமைதிவழிப் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

பலாலி பகுதியில் இராணுவப் பயன்...</summary>
            <content type="html"><![CDATA[<p>வலிகாமம் வடக்கு பலாலி காணி இழந்த மக்கள் இன்று(30) 11ஆவது வாரமாகவும் தமது தொடர் அமைதிவழிப் போராட்டத்தை முன்னெடுத்தனர்.
</p><p>
பலாலி பகுதியில் இராணுவப் பயன்பாட்டில் உள்ள தமது பூர்வீகக் காணிகளை மீளப்பெற்று, தமது சொந்த இடங்களில் மீள்குடியேறுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி, காணி உரிமையாளர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட மக்கள் இந்தப் போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.</p><h2>பலாலி மக்களின் போராட்டம்</h2><p>

பலாலி சந்தியை அண்மித்த பகுதியில் இடம்பெற்ற போராட்டத்தில் கலந்துகொண்ட மக்கள், தமது பூர்வீக நிலங்களை நீண்டகாலமாக இழந்து, சொந்த ஊரிலேயே அகதிகளாக வாழ வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக கவலை வெளியிட்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0a4211ac-03b5-4499-956d-4344e3931ee6/26-6a942a5c2e562.webp' /></p><p>

“எங்கள் நிலங்கள் எங்களுடையதுதானே; அதை எப்படி உங்களுடையதாக மாற்ற முடியும்?”, “எங்கள் பூர்வீக நிலங்களை எங்களிடம் ஒப்படை”, “மக்களின் நிலம் மக்களிடம் ஒப்படைக்கப்படும் என்ற வாக்குறுதி எங்கே?”, “வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள்” உள்ளிட்ட கோஷங்களை எழுப்பியவாறு மக்கள் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
</p><p>
மேலும், தேர்தல் காலங்களில் மக்களின் காணிகள் மீள வழங்கப்படும் எனக் கூறி ஆதரவைப் பெற்ற அரசியல்வாதிகள், ஆட்சிக்கு வந்த பின்னர் காணி இழந்த மக்களின் பிரச்சினையை மறந்து செயற்படுவதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றஞ்சாட்டினர்.</p><h2>தொடர் போராட்டம்</h2><p>
</p><p>
பல தசாப்தங்களாக தமது காணிகளை இழந்து வாழ்ந்து வரும் நிலையில், பல்வேறு அரசாங்கங்கள் மாறினாலும் தமது அடிப்படைப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கவில்லை எனவும் அவர்கள் தெரிவித்தனர்.
</p><p>
தமது பூர்வீக நிலங்களை விடுவிப்பது வெறுமனே காணி உரிமை தொடர்பான பிரச்சினை அல்ல என்றும், அது தமது வாழ்வுரிமை, வாழ்வாதாரம் மற்றும் எதிர்கால சந்ததிகளின் உரிமையுடன் தொடர்புடையது என்றும் போராட்டத்தில் கலந்துகொண்ட மக்கள் வலியுறுத்தினர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/199976ff-7026-4b75-a71d-0187834cd340/26-6a942a5d095ae.webp' /></p><p>

அரசாங்கம் மக்களின் காணிகளை விடுவிப்பது தொடர்பில் தெளிவான காலக்கெடுவுடன் கூடிய செயற்றிட்டத்தை முன்வைக்க வேண்டும் எனவும், இராணுவம் உள்ளிட்ட அரச நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் உள்ள பொதுமக்களின் காணிகளை உரிய உரிமையாளர்களிடம் விரைவாகக் கையளிக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
</p><p>
தமது கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு கிடைக்கும் வரை போராட்டத்தை தொடரப் போவதாகவும் காணி இழந்த பலாலி மக்கள் தெரிவித்துள்ளனர்.</p><p>

இந்நிலையில், 11ஆவது வாரமாகவும் இடம்பெற்றுள்ள இந்த தொடர் போராட்டம், பலாலி மக்களின் காணி உரிமைப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு வழங்க வேண்டியதன் அவசியத்தை மீண்டும் அரசாங்கத்தின் கவனத்துக்கு கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-30T13:04:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[உயரும் கடல் அலைகள் ; வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/meteorology-department-issues-warning-1788092904"></link>
            <id>https://jvpnews.com/article/meteorology-department-issues-warning-1788092904</id>
            <summary type="text">புத்தளத்திலிருந்து கொழும்பு, காலி மற்றும் மாத்தறை ஊடாக பொத்துவில் வரையிலான கடற்பகுதிகளில் கடல் அலைகளின் உயரம் அதிகரிக்கும் சாத்தியக்கூறுகள் நிலவுவதாக ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">புத்தளத்திலிருந்து கொழும்பு, காலி மற்றும் மாத்தறை ஊடாக பொத்துவில் வரையிலான கடற்பகுதிகளில் கடல் அலைகளின் உயரம் அதிகரிக்கும் சாத்தியக்கூறுகள் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.</p><p style="text-align: justify; ">
இதற்கமைய, குறித்த கடற்பகுதிகளில் கடல் அலைகள் சுமார் 2.0 முதல் 3.0 மீட்டர் வரை உயரக்கூடும்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/85e9c463-171d-4724-af0d-cbe0ce0afaa6/26-6a9421e97eb34.webp' /></p><h2 style="text-align: justify; ">எச்சரிக்கை</h2><p style="text-align: justify; ">இதன் காரணமாகச் சிலாபத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக மாத்தறை வரையிலான கடலோரப் பகுதிகளில் கடல் அலைகள் கரைக்கு வரக்கூடிய சாத்தியக்கூறுகளும் காணப்படுகின்றன.</p><p style="text-align: justify; ">

எனவே, இக் கடற்பகுதிகளில் மீன்பிடி மற்றும் கடற்பயணங்களில் ஈடுபடும் சமூகத்தினரும், கடலோரப் பகுதிகளில் வாழும் மக்களும் இது குறித்து எச்சரிக்கையுடனும் அவதானத்துடனும் செயற்படுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
</p><p style="text-align: justify; ">

இதேவேளை, கிழக்கு மாகாணம் மற்றும் பொலன்னறுவை, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கு அதிக வெப்பமான வானிலை தொடர்பான எச்சரிக்கை அறிவித்தலும் விடுக்கப்பட்டுள்ளது.
</p><p style="text-align: justify; ">
குறித்த பகுதிகளில் பகல் வேளையில் மனித உடலால் உணரப்படும் வெப்பச் சுட்டெண் கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய மட்டத்தில் காணப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p style="text-align: justify; ">
இந்த எச்சரிக்கை அறிவித்தல்கள் அனைத்தும் நாளை திங்கட்கிழமை (31) ஆம் திகதிக்காகச் செல்லுபடியாகும் வகையில் விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-08-30T13:00:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thevanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ் பேருந்து சாரதிகளுக்கு புதிய எச்சரிக்கை - மீறினால் நடவடிக்கை..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/new-warning-to-jaffna-bus-drivers-1788094360"></link>
            <id>https://tamilwin.com/article/new-warning-to-jaffna-bus-drivers-1788094360</id>
            <summary type="text">&amp;nbsp;வடக்கு மாகாணத்தில் பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை ஏற்றிச் செல்லும்
பேருந்துகள் அனைத்தும் “சிசுசெரிய”சேவையின் கீழ் பதிவு செய்யப்பட்டு, உர...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;வடக்கு மாகாணத்தில் பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை ஏற்றிச் செல்லும்
பேருந்துகள் அனைத்தும் “சிசுசெரிய”சேவையின் கீழ் பதிவு செய்யப்பட்டு, உரிய
அனுமதிகளுடன் மட்டுமே பாடசாலை போக்குவரத்துச் சேவையில் ஈடுபட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p> 

அத்துடன், பதிவு
செய்யப்படாமலும் உரிய தகுதிகளைப் பூர்த்தி செய்யாமலும் இவ்வாறான சேவையில்
ஈடுபடும் பேருந்துகளுக்கு எதிராக முன்னறிவிப்பின்றி சட்ட நடவடிக்கை
கடுமையாக்கப்படும் என வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின்
தலைவர் பொறியியலாளர் சூ.விமலேஸ்வரன் எச்சரிக்கை விடுத்துள்ளார். </p><h2>

சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை</h2><p>
வடக்கு மாகாணத்தில் பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான
போக்குவரத்துச் சேவையில் ஈடுபடும் பேருந்துகள், வீதிப் பயணிகள் போக்குவரத்து
அதிகாரசபையில் முறையாகப் பதிவு செய்யப்படுவது கட்டாயமாகும். </p><p>

எனினும், உரிய அனுமதியோ அல்லது பதிவோ இன்றி, “சிசுசெரிய” சேவையின் கீழ் இடம்பெறாமல் சில
பேருந்துகள் தொடர்ந்தும் பாடசாலை போக்குவரத்துச் சேவையில் ஈடுபட்டு வருவது
கண்டறியப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b59b0c19-a1fd-46b1-a349-6031f76df633/26-6a9427fea36cf.webp' /></p><p>
</p><p>

இத்தகைய பேருந்து உரிமையாளர்கள் மற்றும் சேவை வழங்குநர்களுக்கு கடந்த ஐந்து
மாதங்களாக நேரடியாக எச்சரிக்கைகளும் தேவையான அறிவுறுத்தல்களும்
வழங்கப்பட்டுள்ளன. </p><h2>


தகுதிகளை பெற செய்ய வேண்டியவை..</h2><p>

இருந்தபோதிலும், இதுவரை உரிய பதிவுகளை மேற்கொள்ளாத மற்றும்
நிர்ணயிக்கப்பட்ட தகுதிகளைப் பூர்த்தி செய்யாத தரப்பினர் தொடர்ந்து பாடசாலை
சேவையில் ஈடுபட்டால், அவர்களுக்கு எதிராக அதிகாரசபையால் உடனடியாக சட்ட
நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. </p><p>

எனவே, பாடசாலை மாணவர்களையும் ஆசிரியர்களையும் ஏற்றிச் செல்லும் பேருந்து
சேவைகளை நடத்தும் அனைத்து தரப்பினரும் நடைமுறையில் உள்ள விதிமுறைகளுக்கு
அமைவாக தங்களைப் பதிவு செய்து, தேவையான தகுதிகள் மற்றும் அனுமதிகளைப்
பெற்றுக்கொள்ளுமாறு வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின்
தலைவர் கேட்டுக்கொண்டார்.&nbsp; &nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-30T12:54:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மன்னாரில் இடம்பெற்ற 1999ஆம் ஆண்டு மடு உறவுகள் கால்பந்தாட்ட போட்டி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/commemorative-football-event-1788091574"></link>
            <id>https://ibctamil.com/article/commemorative-football-event-1788091574</id>
            <summary type="text">1999ஆம் ஆண்டு மடுக்கோவிலில் இடம்பெற்ற&amp;nbsp; குண்டுத்தாக்குதலில் உயிரிழந்த உறவுகளை நினைவுகூறும் “&amp;nbsp;1999ஆம் ஆண்டு மடு உறவுகள் கால்பந்தாட்ட போட்டி இன...</summary>
            <content type="html"><![CDATA[<p>1999ஆம் ஆண்டு மடுக்கோவிலில் இடம்பெற்ற&nbsp; குண்டுத்தாக்குதலில் உயிரிழந்த உறவுகளை நினைவுகூறும் “&nbsp;1999ஆம் ஆண்டு மடு உறவுகள் கால்பந்தாட்ட போட்டி இன்று&nbsp;தட்சனாமருதமடு&nbsp;ஐக்கிய விளையாட்டுக் கழக மைதானத்தில் இன்று இடம்பெற்றது.</p><p>இளம் தலைமுறையினரிடையே விளையாட்டுத் திறனை ஊக்குவிக்கும் வகையிலும், கடந்த கால வடுக்களை நினைவுகூறும் வகையிலும், இந்த கால்பந்தாட்டத் தொடர் ஆண்டுதோறும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.</p><p>அந்த வகையில் இவ்வாண்டும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள போட்டியில் பல்வேறு அணிகள் பங்கேற்று தங்களது திறமையை வெளிப்படுத்தினர்.</p><p></p><h2>நினைவேந்தல் கால்பந்தாட்ட நிகழ்வு</h2><p>
</p><p>இந்த போட்டியின் பிரதான விருந்தினர்களாக ஐ.பி.சி தமிழ் ஊடக நிறுவனத்தின் தலைவர் பாஸ்கரன் கந்தையா கலந்துக்கொண்ட நிலையில் கௌரவ விருந்தினர்களும் நிகழ்வில் கலந்து கொண்டு வீரர்களை உற்சாகப்படுத்தியிருந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bad5629a-c173-4700-93d4-d9fe21031a1a/26-6a9427571e5fe.webp' /></p><p>இந்த கால்பந்தாட்டப் போட்டி இன்று (30.08.2026) பிற்பகல் 3.00 மணிக்கு ஆரம்பமாகியது.</p><p>இதன்படி போட்டியில் வெற்றிப்பெற்ற அணிக்கு கேடையங்களும் சிறப்பு பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-30T12:52:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[கல்வி முறையில் பல நெருக்கடிகள்! மீண்டும் சிந்திக்க வேண்டும் - ஜோசப் ஸ்டாலின் சாடல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/josep-starlin-statment-about-education-1788091062"></link>
            <id>https://tamilwin.com/article/josep-starlin-statment-about-education-1788091062</id>
            <summary type="text">தற்போதைய கல்வி முறையில் பல நடைமுறை நெருக்கடிகள் காணப்படுகின்ற நிலையில், பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்காத சீர்திருத்தங்களை கொண்டு வருவதாயின் அது குறித...</summary>
            <content type="html"><![CDATA[<p>தற்போதைய கல்வி முறையில் பல நடைமுறை நெருக்கடிகள் காணப்படுகின்ற நிலையில், பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்காத சீர்திருத்தங்களை கொண்டு வருவதாயின் அது குறித்து மீண்டும் சிந்திக்க வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். </p><p>

அடுத்த ஆண்டு முதல் புதிய கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கத்திடம் இதுவரை முறையான தயார்நிலை இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். </p><p>

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

அடுத்த ஆண்டு முதல் முதலாம் மற்றும் 6 ஆம் தரங்களுக்கு புதிய கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த அரசாங்கம் தற்போது திட்டமிட்டுள்ளது. எனினும், அதற்கான முறையான வேலைத்திட்டம் எதுவும் நடைமுறைப்படுத்தப்படவில்லை.</p><h2>ஆசிரியர்களுக்குப் பயிற்சியளிக்கும் செயற்பாடு</h2><p>
</p><p>
இந்த சீர்திருத்தங்கள் அடுத்த வருடம் கொண்டுவரப்பட்டாலும், 1ஆம் மற்றும் 6ஆம் தரங்களுக்கான சீர்திருத்தங்கள் எப்படியும் அடுத்த வருடம் வரவுள்ளன. 

ஆனால், அதற்கான ஆசிரியர்களுக்குப் பயிற்சியளிக்கும் செயற்பாடு இன்னும் மந்தகதியிலேயே இடம்பெறுகின்றது.</p><p> இந்த சீர்திருத்தங்கள் தெளிவாக கோட்டாபய ராஜபக்ச அரசாங்கம் கொண்டுவந்த சீர்திருத்தங்களின் நீட்சியாகவே உள்ளன. 

நடைமுறைப்படுத்தப்படாமல் கைவிடப்பட்ட சீர்திருத்தங்களின் தொடர்ச்சியாகவே இது காணப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0f201c3c-63b7-4bfa-a51e-a1fb35f79eb0/26-6a942527c869e.webp' /></p><p> </p><p>அதேபோன்று, இந்த கல்வி சீர்திருத்தங்களுக்காக விசேட கொள்கைக் கட்டமைப்பொன்றை உருவாக்குமாறு கடந்த நாட்களில் ஜனாதிபதி தேசிய கல்வி ஆணைக்குழுவிடம் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் தேசிய கல்வி ஆணைக்குழு அதனைத் தயாரித்து முடித்துள்ளதா என்பது எமக்குத் தெரியாது.</p><h2>எந்தவொரு திட்டமும் இல்லை</h2><p> </p><p>அது இன்னும் மக்கள் மத்தியில் வரவுமில்லை, அதுபற்றிப் பேசப்படவுமில்லை. 

எந்தவொரு திட்டமுமின்றி கடந்த அரசாங்கங்கள் கொண்டுவந்த சீர்திருத்தங்களையே இவர்கள் முன்னெடுத்துச் செல்கின்றனர். அதற்கான எவ்வித தயார் நிலையும் இன்னும் தென்படவில்லை.</p><p> இது ஒரு பாரிய நெருக்கடியாக மாறியுள்ளது. 

தற்போதைய கல்வி முறையில் பல நடைமுறை நெருக்கடிகள் காணப்படுகின்ற நிலையில், பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்காத சீர்திருத்தங்களைக் கொண்டுவருவதாயின் அது குறித்து மீண்டும் சிந்திக்க வேண்டும் என்றார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-30T12:46:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[வடக்கு சைப்ரஸில் 270 பயணிகளுடன் சென்ற கப்பல் கவிழ்ந்து விபத்து ; மீட்பு பணிகள் தீவிரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/270-passengers-capsizes-in-northern-cypru-1788093840"></link>
            <id>https://canadamirror.com/article/270-passengers-capsizes-in-northern-cypru-1788093840</id>
            <summary type="text">வடக்கு சைப்ரஸில் 270 பயணிகளுடன் சென்ற கப்பல் கடலுக்கு நடுவே கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக துருக்கிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கைரேனியா கடற்கர...</summary>
            <content type="html"><![CDATA[<p>வடக்கு சைப்ரஸில் 270 பயணிகளுடன் சென்ற கப்பல் கடலுக்கு நடுவே கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக துருக்கிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
</p><p>
கைரேனியா கடற்கரையிலிருந்து துருக்கியின் தாசுசு துறைமுகத்திற்கு புறப்பட்ட சிறிது நேரத்திலேயே சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் கப்பல் கவிழ்ந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/337a053e-af3d-46d7-867f-4da23a79a795/26-6a9425919c965.webp' /></p><p>
</p><p>
கப்பல் கவிழ்ந்த உடனேயே துருக்கிய சைப்ரஸ் கடலோரக் காவல் படகுகள் மீட்புப் பணிக்காக சம்பவ இடத்திற்கு விரைந்தன. மேலும் ஒரு ஹெலிகாப்டரும் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.</p><p>


</p><p>இதில் 159 பயணிகள் மீட்கப்பட்டுள்ளதாகவும், மற்ற 99 பயணிகள் மற்றும் ஊழியர்கள் குறித்து இன்னும் தெரியவில்லை என்று கைரேனியா நகர மேயர் முராத் சென்குல் தெரிவித்துள்ளார்.
</p><p>
இப்பகுதியில் கடந்த சில நாட்களாகவே மோசமான வானிலை நிலவி வருவதால், இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.</p><p> மீட்புப் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன.</p>]]></content>
            <updated>2026-08-30T12:44:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் அனைத்து அரச நிறுவனங்களிலும் வந்துள்ள நடைமுறை! பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/avoid-the-use-of-single-use-plastic-water-bottles-1788090058"></link>
            <id>https://tamilwin.com/article/avoid-the-use-of-single-use-plastic-water-bottles-1788090058</id>
            <summary type="text">ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் தண்ணீர் போத்தல்களின் பயன்பாட்டைத் தவிர்க்குமாறு சுற்றாடல் அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.எதிர்கால சந்ததிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் தண்ணீர் போத்தல்களின் பயன்பாட்டைத் தவிர்க்குமாறு சுற்றாடல் அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.</p><p>எதிர்கால சந்ததியினருக்காக பசுமையான மற்றும் தூய்மையான சூழலை உருவாக்குவதற்காக இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.&nbsp;</p><p>
ஒரு சிறுபொழுது வசதிக்காகப் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் போத்தல்கள், அழியாமல் பல நூறு ஆண்டுகள் சூழலில் நிலைத்திருந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><h2>சூழலுக்கு உகந்த மாற்று வழி</h2><p>இது தொடர்பான அறிவிப்பில் மேலும், குறித்த போத்தல்களுக்கு மாற்றாக, மீண்டும் மீண்டும் பயன்படுத்தக்கூடிய கண்ணாடிப் போத்தல்கள் அல்லது சூழலுக்கு உகந்த மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
</p><p>
இதற்கமைய, அனைத்து அரச நிறுவனங்களிலும் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் தண்ணீர் போத்தல்களின் கொள்வனவு மற்றும் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் விசேட சுற்றுநிருபம், கடந்த மே மாதம் 31 ஆம் திகதி முதல் நாடு முழுவதும் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/55350194-65a8-481d-968b-5a4be35535f5/26-6a94198094e9d.webp' /></p><h2>விசேட திட்டங்கள் நடைமுறை</h2><p>
</p><p>
அத்துடன், திருத்தப்பட்ட சுற்றாடல் சட்டத்தின் ஊடாக, உற்பத்தியாளர்களின் இணக்கப்பாட்டுடன் பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைப்பதற்கான விசேட நாடளாவிய திட்டங்களை நடைமுறைப்படுத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
</p><p>
சட்டதிட்டங்களுக்கும் அப்பால், பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே செல்லும்போது மீண்டும் பயன்படுத்தக்கூடிய தண்ணீர் போத்தலை உடன் எடுத்துச் செல்வது போன்ற சிறிய அன்றாட பழக்கவழக்க மாற்றங்கள் மூலம் பிளாஸ்டிக் மாசுபாட்டைக் குறைக்க முடியும் என்றும் சுற்றாடல் அமைச்சு தெரிவித்துள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-30T12:42:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழ் உறவுகளுக்காக லண்டனில் வெடித்த போராட்டம் - மக்களின் முக்கிய கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/protest-in-london-1788093469"></link>
            <id>https://tamilwin.com/article/protest-in-london-1788093469</id>
            <summary type="text">சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான இன்று(30.08.2026) இலங்கையில் இடம்பெற்ற இன
அழிப்பு போரின் போது வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளுக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான இன்று(30.08.2026) இலங்கையில் இடம்பெற்ற இன
அழிப்பு போரின் போது வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளுக்கு நீதி கோரி தமிழர் பகுதிகளில் போராட்டங்கள் மற்றும் மாநாடு இடம்பெற்றன.</p><p>

இதனைத் தொடர்ந்து, லண்டனில் அமைந்துள்ள இலங்கை தூதரகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
</p><p>
“வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட எம் தமிழ் உறவுகளை தேடி” எனும் தொனிப்பொருளுடன்
சர்வதேச நீதியை வலியுறுத்தி இந்த மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. </p><p>

தமிழீழ சுயநிர்ணய அமைப்பு ஏற்பாடு செய்த குறித்த போராட்டத்தில்
புலம்பெயர்ந்து வாழும் பல நூற்றுக்கணக்கான தமிழ் மக்கள் உணர்வாளர்கள்
கலந்துகொண்டனர்.&nbsp; &nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-30T12:39:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[இறுதிப்போர் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம்! ஐ.நா அறிக்கையை நினைவுகூர்ந்த சிறீதரன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/evidence-for-the-final-war-allegations-1788092813"></link>
            <id>https://ibctamil.com/article/evidence-for-the-final-war-allegations-1788092813</id>
            <summary type="text">சர்வதேச சமூகத்திடம் காணமலாக்கப்பட்டோரின் உறவுகள் கோரும் ஒரே விடயம் உண்மையான நீதியை மட்டுமே என தமிழரசுக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிறீதரன் தெ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சர்வதேச சமூகத்திடம் காணமலாக்கப்பட்டோரின் உறவுகள் கோரும் ஒரே விடயம் உண்மையான நீதியை மட்டுமே என தமிழரசுக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிறீதரன் தெரிவித்துள்ளார்.
</p><p>
யாழில் இன்று இடம்பெற்ற நீதிக்கான நீள் பயணம் மாநாட்டில் கலந்துக்கொண்டு மேற்கண்ட விடயத்தை சுட்டிக்காட்டிய அவர், இந்த விவகாரம் குறித்து மேலும் பின்வருமாறு கருத்த வெளியிட்டார்.</p><p>

“இறுதி யுத்தத்தின் பின்னர் இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலை தொடர்பில ஆராய்ந்த மார்சுகி தருஸ்மன்,&nbsp;யாஸ்மின் சூக்கா,&nbsp;ஸ்டீவன் ராட்னர் உள்ளிட்ட மூன்று பேர் கொண்ட நிபுணர் குழு ”இங்கு நடந்தது மிகப்பெரிய மனித பேரவலம். இங்கு எழுபதாயிரத்துக்கும் மேற்பட்டோர் காணாமலாக்கப்பட்டும், கொல்லப்பட்டுள்ளனர்” என சுட்டிக்காட்டினர்.</p><p>(2010–2011 காலகட்டத்தில் இலங்கைக்கு வந்த ஐ.நா. நிபுணர் குழு. அது போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்றதாகக் கூறப்பட்ட மனித உரிமை மற்றும் சர்வதேச மனிதாபிமானச் சட்ட மீறல்கள் தொடர்பாக ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கி மூனுக்கு ஆலோசனை வழங்க நியமிக்கப்பட்ட மூவர் குழுவாகும்)</p><p></p><h2>சர்வதேச மனிதாபிமானச் சட்ட மீறல்கள்</h2><p>
</p><p>
மேலும், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் முன்னாள் தலைவர் நவநீதம் பிள்ளை, 2010 அம் ஆண்டு இலங்கையில் வைத்து இவை அனைத்துக்கும் நீதி வழங்கப்படும் என உறுதியளித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b7202a7e-07f5-42e4-a9f9-a5084f8ff9ea/26-6a94218e81c84.webp' /></p><p>
</p><p>
 நீதி கிடைக்கும் என்ற உறுதியான நம்பிக்கையோடே எமது தாய்மார்கள் இன்று வரை போராடுகின்றனர்.

இருந்தும் நீதிக்கான இடத்திற்கு எம்மால் இதுவரை போக முடியவில்லை.
</p><p>
இறுதி யுத்தம் நடைபெறும்போது எமது மக்கள் ஐ.நா அலுவலகம் முன்னால் இருந்து கைகூப்பி இங்கிருந்து செல்ல வேண்டாம் என அழுதார்கள்.
</p><p>
ஆனால் அவர்களை நாட்டில் இருப்பதற்கு இலங்கை அரசும் சர்வதேச சமூகமும் விடவில்லை. 

அன்று தமது உறவுகளை சர்வதேச சமூகம் கைவிட்டதன் காரணத்தினால் பலரை இழந்துள்ளோம்.
</p><p>
இந்த கொலைகளுக்கு காரணமாக இருந்தவரே அன்று ஜனாதிபதி ஆணைக்குழுவை நியமித்தார். அவர்கள் எங்கள் இழப்புக்களை நய்யாண்டி போக்கில் கையாண்டனர்.
</p><p>
அதுவே இன்று, எந்த ஒரு உள்ளக விசாரணை அலுவலகங்களையம் வேண்டாம் என்றும் சர்வதேச நீதி விசாரணையே அவசியம் எனவும் மக்கள் வலியுறுத்துகின்றனர்” என கூறினார்.&nbsp; &nbsp;</p><p><b>சிறீதரன் உரை - 01.30.00</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/uNgBlT2fVUk" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-30T12:30:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Fathima</name>
            </author>
            <title type="text"><![CDATA[பெரியார், அண்ணா, அம்பேத்கர் பெயர் நீக்கம்: இயக்குனர் அமீர் கண்டன பதிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/director-ameer-statement-1788092882"></link>
            <id>https://ibctamilnadu.com/article/director-ameer-statement-1788092882</id>
            <summary type="text">தமிழக அரசின் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை கொள்கை விளக்கக் குறிப்பேட்டில், இடஒதுக்கீடு மற்றும் சமூக நீதி வரலாற்றைக் கூறும் பகுதியில் இடம்பெற்றிருந்த மு...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழக அரசின் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை கொள்கை விளக்கக் குறிப்பேட்டில், இடஒதுக்கீடு மற்றும் சமூக நீதி வரலாற்றைக் கூறும் பகுதியில் இடம்பெற்றிருந்த முக்கியத் தலைவர்களின் பெயர்கள் விடுபட்டிருந்தன. </p><p>இதற்கு பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.</p><p>இயக்குனர் அமீர்</p><p>"பெரியார், அண்ணா, அம்பேத்கர் என்பது பெயர்கள் அல்ல... தமிழ்நாட்டின் அடையாளங்கள். அதை அழிக்கவோ மறைக்கவோ எந்த முகமூடியோடு வந்தாலும் அதை எதிர்க்க வேண்டியது தமிழர்களின் கடமையாகும்” என பதிவிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e99c8415-029b-4fb6-b2cf-df2d93519ae7/26-6a942224b762b.webp' /><br></p><h2>அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்</h2><p>செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் ராஜ்மோகன், “இடஒதுக்கீடு மானிய கோரிக்கையில் சமூக நீதித் தலைவர்களின் பெயர்களை திட்டமிட்டு நீக்கவில்லை. இதற்கு முந்தைய ஆட்சியில் நீக்கப்பட்டதா என்பதை ஆய்வு செய்தோம்.</p><p> அதன்படி திமுக ஆட்சியில் கடந்த 3 ஆண்டுகளாக நேரு, பெரியார், அம்பேத்கரின் பெயர்கள் இடஒதுக்கீடு திட்டத்தில் இடம்பெறாமல் இருந்தது. எப்படி நடந்தது என்பது தெரியவில்லை.
</p><p>
ஆனால் நாங்கள் வேண்டுமென்று சமூக நீதிதலைவர்களின் பெயர்களை நீக்கவில்லை. பெரியார், அம்பேத்கரை நாங்கள் கொள்கைத் தலைவர்களாக கொண்டிருக்கிறோம். அவர்களின் பெயர்கள் விரைவில் இடஒதுக்கீடு மானிய கோரிக்கையில் சேர்க்கப்படும் என தெரிவித்துள்ளார்.<br></p>]]></content>
            <updated>2026-08-30T12:29:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் - யாழில் கூடிய சர்வதேச பிரதிநிதிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/long-journey-for-justice-awareness-rally-in-jaffna-1788069111"></link>
            <id>https://tamilwin.com/article/long-journey-for-justice-awareness-rally-in-jaffna-1788069111</id>
            <summary type="text">புதிய இணைப்புவலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சர்வதேச தினத்தினை முன்னிட்டு, வடக்கு கிழக்கு
இணைந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினால் யாழ்ப்பாணத்...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சர்வதேச தினத்தினை முன்னிட்டு, வடக்கு கிழக்கு
இணைந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினால் யாழ்ப்பாணத்தில்
"நீதிக்கான நீள் பயணம்" எனும் சர்வதேச மாநாடு இடம்பெற்றுள்ளது.</p><p>

இந்த மாநாட்டில் சர்வதேச மன்னிப்புச் சபையின்
தெற்காசிய பிராந்திய இயக்குநர் ஸ்மிருதி சிங் மற்றும் வலிந்து காணாமல்
ஆக்கப்பட்டோர் தொடர்பான ஐ.நா. நிபுணர் அனா லொரேனா டெல்கடில்லோ பெரெஸ்
உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டுள்ளனர். </p><p>

மாநாடு இடம்பெற்ற மண்டபத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பாவனை
பொருட்கள், அவர்கள் விரும்பி சேகரித்த பொருட்கள், அவர்களின் நினைவாக இன்றும்
உறவுகளிடம் உள்ள பொருட்கள் என்பவற்றை காட்சிப்படுத்தப்பட்ட நிலையில், அவற்றையும் பார்வையிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/09f874b2-3625-4d57-9fa5-c50202e94dc2/26-6a942206e2ba1.webp' /></p><h2>இரண்டாம் இணைப்பு</h2><p>சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு, "நீதிக்கான
நீள்பயணம்" எனும் தொனிப்பொருளில் சர்வதேச மாநாடு தற்போது யாழ்ப்பாணம் தந்தை
செல்வா கலையரங்கில் நடைபெற்று வருகின்றது.&nbsp;</p><p>வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தின்
ஏற்பாட்டில் மாநாடு நடைபெற்று வருகின்றது.</p><p>இதில் நாடாளுமன்ற உறுப்பினர்கள்,
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், வலிந்து காணாமல்
ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், அரசியல் பிரதிநிதிகள் என பலர்
கலந்துகொண்டுள்ளனர்.</p><h2>முதலாம் இணைப்பு</h2><p>சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு, "நீதிக்கான நீள்
பயணம்" எனும் தொனிப்பொருளில் யாழ்ப்பாணத்தில் இன்று கவனயீர்ப்புப் பேரணி
நடைபெற்று வருகின்றது.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/ejyJXTi2tFs" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p>
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட
குடும்பங்களின் பங்கேற்புடன் நடைபெற்ற இந்த பேரணி, யாழ்ப்பாணம் உலகத்
தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலையில் உயிரிழந்தவர்களின் நினைவிடத்தில்
சுடரேற்றி அஞ்சலி செலுத்தியதைத் தொடர்ந்து ஆரம்பமானது.</p><p>
</p><p>
காணாமல் ஆக்கப்பட்டோரின் புகைப்படங்கள் பொறிக்கப்பட்ட விசேட வாகனம் பேரணியின்
முன்னிலையில் சென்றதுடன், உறவினர்கள் தமது அன்புக்குரியவர்களின் புகைப்படங்களை
ஏந்தியவாறு பேரணியில் பங்கேற்றனர்.</p><h2>உண்மை மற்றும் நீதியை வலியுறுத்தி பேரணி</h2><p>
</p><p>
பல ஆண்டுகளாக காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளைத் தேடி வரும் குடும்பங்கள்,
உண்மை மற்றும் நீதியை வலியுறுத்தி பேரணியில் கலந்துகொண்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/197f43f3-3b8c-4f3c-83ae-34df0549769a/26-6a93c66a82665.webp' /></p><p>

உலகளவில் அதிகளவான வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான சம்பவங்கள்
பதிவாகியுள்ள நாடுகளில் இலங்கை இரண்டாவது இடத்தில் உள்ளதாகக் கூறப்படும்
நிலையில், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் நீதி கோரிக்கை இதுவரை
நிறைவேற்றப்படவில்லை.
</p><p>
யாழ்ப்பாண நகரின் ஊடாக முன்னேறிய பேரணி, தந்தை செல்வா கலையரங்கைச்
சென்றடைந்தது. அங்கு சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை
முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட சர்வதேச மாநாட்டு நிகழ்வுகள் ஆரம்பமாகின.</p><p>

காணாமல் ஆக்கப்பட்டோரின் நிலை தொடர்பில் உண்மை வெளிப்படுத்தப்பட வேண்டும்
என்றும், அவர்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என்றும் பேரணியில் பங்கேற்ற
குடும்பங்கள் கோரிக்கை விடுத்தனர்.</p><p>வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தின்
ஏற்பாட்டில் நடைபெற்றுவரும் குறித்த மாநாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர்கள்,
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், வலிந்து காணாமல்
ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், அரசியல் பிரதிநிதிகள் என பலர்
கலந்துகொண்டுள்ளனர்.</p><p></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/UU565u-hlBQ" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-30T12:29:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiva</name>
            </author>
            <title type="text"><![CDATA[இனப்படுகொலையின் அச்சாணியாக வடிவமைக்கப்பட்ட சிங்கள பௌத்த தலைமைகள்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sinhala-buddhist-leaderships-designed-genocide-1788090486"></link>
            <id>https://tamilwin.com/article/sinhala-buddhist-leaderships-designed-genocide-1788090486</id>
            <summary type="text">ஒரு பௌத்தனே இலங்கை அரசின் தலைவனாக இருக்க வேண்டும் என்பது இலங்கை அரசியல் சாசனத்தில் வரையப்படவில்லைத்தான். ஆயினும் ஒரு பௌத்தம் மட்டுமே இலங்கை சிம்மாசனத்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஒரு பௌத்தனே இலங்கை அரசின் தலைவனாக இருக்க வேண்டும் என்பது இலங்கை அரசியல் சாசனத்தில் வரையப்படவில்லைத்தான். ஆயினும் ஒரு பௌத்தம் மட்டுமே இலங்கை சிம்மாசனத்தில் அமர முடியும் என்பது எழுதப்படாத சட்டமாகவுள்ளது. </p><p>ஆயினும் இலங்கை அரசியலில் 12ம் நூற்றாண்டில் ஒரு பௌத்தன் மாத்திரமே சிம்மாசனத்தில் அமரமுடியும் என்பதை சட்டமாக்கி கல்வெட்டாக பொறிக்கப்பட்டும் விட்டது.</p><h2>தமிழினப் படுகொலை</h2><p> </p><p>அது நவீன அரசியல் சாசனத்தில் எழுதப்படவில்லை ஆயினும் பௌத்த மகா சங்கத்தின் ஊடாகவும், பௌத்த தர்மத்தின் ஊடாகவும் சிங்கள பௌத்தர்களின் சமூகச் சட்டமாக நிலைபெற்றுவிட்டது.</p><p> அதுவே இன்றைய தமிழினப் படுகொலைக்கு காரணமாகவும் இருப்பதோடு அரசின் தலைவர்களே அதன் அச்சாணியாகவும், யார் எத்தகைய நல்மனம் கொண்டவராக இருப்பினும் இலங்கை சிம்மாசனத்தில் அமர்ந்தாதும் அவர்கள் இனப்படுகொலையின் பங்குதாரராகவும், அதனை வழிநடத்திச் செல்பவராகவுமே செயலாற்ற முடியும். </p><p>

இந்தப் பின்னணியை ஆழமாக வரலாற்று உணர்வோடும், வரலாற்றுப் போக்கிலும், வரலாற்று தத்துவவியல், மற்றும் சமூகவியல் மனப்பாங்கு ஆகிய முறைகளுக்குள்ளால் ஆராய்கின்றபோது இலங்கை அரசியலில் பௌத்தத்தின் செல்வாக்கினால் இனக்குரோதம் எத்தகைய ஆழமான தாக்கத்தை செலுத்துகிறது என்பதை உணர முடியும்.
</p><p>
இலங்கை சுதந்திரத்திற்கு பின்னர் பௌத்தன் அல்லாத யாரும் பிரதமமந்திரியாகவோ, ஜனாதிபதியாகவோ இலங்கை அரசுத் தலைவராக அமரவில்லை. அமரவும் முடியாது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/50b5c847-3e1a-4871-8a2f-13d8adefc71d/26-6a94214eb1e07.webp' /></p><p> </p><p>சிங்கள அரசியல் தலைவர்களை வரிசைப்படுத்தி பார்க்கின்றபோது ஆச்சரியமான அரசியல் அதிகார அவாவின் உச்சங்களை காணமுடியும். </p><p>அந்த அரசியல் அதிகார அவாவின் நிமித்தம் மதம் மாறியவர்களையும் காணமுடியும், மதத்தின் பெயரால் அவர்கள் மேற்கொண்ட அயோக்கியத்தனங்களையும் காணமுடியும், பார்வைக்கு பௌத்தனாகவும் சொந்த வாழ்க்கை முறையால் கிறிஸ்தவனாகவும், மேற்கத்திய கலாச்சாரத்தை வரித்துக் கொண்டவர்களாகவும் இருப்பதைக் காணமுடியும். </p><p>அரசியல் அதிகாரத்திற்காக பௌத்தராகவும், சிங்களவனாகவும், தமிழினம் எதிர்பாளனாகவும், இந்திய எதிர்பாளராகவும் தம்மை காட்டிக் கொண்டவர்களை காணமுடியும். </p><p>அதே நேரத்தில் இந்திய எதிர்ப்பை காட்டியவர்கள் இந்திய அரசியல் தலைவர்களுடன் குடும்ப உறவை அன்னியோன்னியமாக பேணியதையும் காணமுடியும்.</p><p>

இந்த வகையிலானதம் அனம் சார்ந்த போக்கு முற்றிலும் மாறான போக்கே தமிழ் அரசியல் தலைவர்களிடம் உண்டு.</p><h2>சிங்கள பௌத்த தலைமைகள்</h2><p> பெயரால் தமிழனாக வாழ்ந்து கொண்டு சிங்கள தேசத்தில் சிங்களவனாகவும், மேற்குலக கலாச்சாரத்தையே வாழ்க்கை முறையாக கொண்டவர்களாகவும், தேர்தலுக்கு வரும்போது வேட்டி சட்டை போட்டவர்களாகவும், அதே நேரத்தில் கிறிஸ்தவனாக வாழ்ந்து கொண்டு அரசியல் அதிகாரங்களை பெற்றுக்கொண்டு, சிங்கள தேசத்தில் ஆதரவையும் பெற்றுக் கொண்டு, தனது மரணக்கிரியை தமிழ் சைவம் முறைப்படி நடத்தப்பட வேண்டும் என்று முன்கூட்டியே கூறிய எஸ்.ஜே.வி செல்வநாயகத்தையும் அரசியல் தலைவராக நாம் கொண்டாடியிருக்கிறோம்.</p><p> இப்போதும் தமிழின அரசியல் பேசிக் கொண்டு வாழ்க்கை முறையால் சிங்கள தேசத்தில் வாழ்ந்து சிங்கள பௌத்த கலாச்சாரத்தில் திளைத்து, வீட்டில் தனது வாரிசுகளை சிங்கள பௌத்தத்தில் கலந்துவிட்டவர்களையும் தலைவராக ஏற்று அரசியல் தற்கொலை செய்ய இப்போதும் மானங்கெட்ட தமிழர்கள் தயாரகின்றனர். அதுவும் முடஇடாள்கள் கோளோச்சும் அன்னைய காலத்தில் நடந்தே தீரும். </p><p>“கொடுகுடி செற்கேளா“ என முனுமுனுத்து மனதை ஆற்றுப்படுத்திக்கொள்வோம்.

இங்கே தென் இலங்கையின் சிங்கள பௌத்த அரசியலில் அரசியல் தலைவர்கள் எம் மதத்திற்கு போனாலென்ன? எந்த கலாச்சாரத்தை பின்பற்றினால் என்ன?, அவர்கள் மகாவம்சத்தின் தம்மதீபக் கோட்பாட்டை கைவிட்டதுகிடையாது. </p><p>அதனை மேலும் மேலும் பலப்படுத்தி அந்தக் கோட்பாட்டின் இலட்சியத்தை அடைவதற்கான அனைத்து வகையான அரசியல் முன்னெடுப்புக்களையும் தமது அரசியல் வாழ்க்கைக்காலம் முழுவதிலும் முன்னெடுத்து இருக்கிறார்கள் என்பது சிங்கள மக்களுக்கு அவர்களின் தலைவர்கள் பற்றி பெருமிதம் அடையக்கூடிய வரலாற்றுத் பெருமைதான். </p><p>எந்தச் சிங்களத் தலைவர்களும் சிங்கள பௌத்தத்திற்கு தீங்கிழைக்கக்கூடிய எந்த ஒரு அரசியல் முடிவையோ, செயற்பாட்டையோ எந்தச் சந்தர்ப்பத்திலும் முன்னெடுக்கவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ac5c0fb6-a085-44e6-8173-13bdcafae12e/26-6a94214f75789.webp' /></p><p> இலங்கையின் முன்னாள் பிரதமர் பண்டாரநாயக்கா கொலை வழக்கில் மரண தண்டனை வழங்கப்பட்ட சோமநாமதேரர் என்ற பௌத்த துறவி தனக்கு மரணதண்டனை வழங்கப்படுவதற்கு முன்னர் கிறிஸ்தவனாக மாறி பீட்டர் என்ற பெயருடன் தூக்கு கைக்கில் தொங்கி மரணித்தார்.</p><p> அவர் மரணத்திலும் கூட தான் பின்பற்றிய பௌத்த மதத்திற்கு அபகீர்த்தி ஏற்படக் கூடாது என்பதில் திடமாக இருந்துள்ளார் என்பதை தமிழ் அரசியல் தலைவர்களும், தமிழ் மக்களும் கருத்தில் கொள்ள வேண்டும்.
</p><p>
இலங்கை சிங்களத் தலைவர்களின் பரம்பரையினர் காலனிய ஆட்சிக்காலத்தில் அரச பதவி அதிகாரங்களை பெறுவதற்காக கிறிஸ்தவர்களாக மதம் மாறி பதவிகளை பெற்றுனார்.</p><p> அவர்கள் பௌத்தத்தின் வளர்ச்சிக்கும் சிங்கள மொழி வளர்ச்சிக்கும் பெரும்பணியாற்றினர். அவர்களின் வரிசுகள்தான் சுதந்திரத்திற்கு பின்னர் அரசியல் அதிகார பதவிகளை பெறுவதற்காக மீண்டும் பௌத்தர்களாக மாறி ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றினார்கள் அல்லது பெற்றுக்கொண்டார்கள். </p><p>இத்தகைய அரசியல் அதிகார அவா என்பது 12ம் நூற்றாண்டில் நிசங்கமல்லன் மன்னன் கையாண்ட political philosophical strategic ன் அரசியல் அதிகார தன்முனைப்புக்களின் ஒரு சுவாரசியமான வரலாற்றுத் தொடர்ச்சிதான். </p><p>சிங்களத் தலைவர்களின் செயற்பாடுகள் உண்மையில் நிசங்கமல்லனின் அதிகார-அரசியல் கோட்பாட்டு மூலோபாயத்தின்(Power-political theoretical strategy) தொடர்ச்சி” என்பதை நிரூபிப்பதாகவே சிங்களத் தலைவர்களின் வாழ்க்கை முறையும் அரசியல் முன்னெடுப்புக்களும் உள்ளன.</p><p>

இலங்கையின் சிம்மாசனத்தில் ஒரு பௌத்தன் மாத்திரமே அமர வேண்டும் என்ற எழுதப்பட்ட சட்டம் எப்போது ஆரம்பம் ஆகிறது என்றால் இப்போது நமக்கு கிடைக்கும் ஆதாரங்களின் அடிப்படையில் பொல்லனார்வை ராஜதானியில் கி.பி 1187-1196 ல் நிசங்கமல்லனின் ஆட்சிக் காலத்தில் நிறுவப்பட்ட பொலநறுவை வடக்கு வாயில் கல்வெட்டு (North Gate Slab Inscription), மற்றும் கல்பொத்த (Gal Pota) கல்வெட்டு ஆகியவை இரண்டும் அவரது அரசுரிமை, பௌத்தம், வம்ச உரிமை ஆகியவற்றை இணைத்துக் காட்டுகின்றன.</p><h2>&nbsp;ஜனாதிபதிகளின் தனிப்பட்ட சமய அடையாளம்</h2><p> </p><p>
1. “பௌத்தனே அரசனாக வேண்டும்”என்பதை வடக்கு வாயில் கல்வெட்டில், சோழர், கேரளர் முதலிய நாடுகளைச் சேர்ந்த பௌத்தரல்லாத இளவரசர்களை இலங்கை அரியணையில் அமர்த்தக் கூடாது என்று கூறப்பட்டுள்ளது. அதே கல்வெட்டு, அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்களே அரச பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்துகிறது. எனவே, “இலங்கையை ஆளுபவன் பௌத்தனாக இருக்க வேண்டும்” என்ற கருத்து நேரடிக் கல்வெட்டு ஆதாரமாகிறது.</p><p>
2. “தர்மத்தைப் பாதுகாப்பது அரசனின் கடமை”என்பதை நிசங்கமல்லனின் ஹதாதகே (Hatadage) கல்வெட்டு அதன் தொடக்கத்திலேயே“This Dhamma … should always be preserved.” என்று பௌத்த தர்மத்தைப் பாதுகாக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது.
</p><p>
 இங்கு “பௌத்தனே அரசனாக வேண்டும்“ என்பதம் “அரசன் பௌத்த சாசனத்தின் பாதுகாவலன்“ என்ற அரசியல்–மதக் கருத்து வெறும் பின்னாளில் உருவாக்கப்பட்ட விளக்கம் அல்ல அது நிசங்கமல்லனின் கல்வெட்டு மரபிலேயே உள்ளது என்பதே முக்கியமாக கவனிக்கத்தக்கது.</p><p> இவை இரண்டும் ஒரே அரசியல் அதிகார அமைப்பியலாக இணைக்கப்படுகின்றமை நிசங்கமல்லனின் political philosophy மற்றும் power politics கருத்தியல் வலுவடைகிறது தொடர்வதை காட்டுகிறது.

நிசங்கமல்லனின் கல்வெட்டுகளில் மூன்று கருத்துகள் ஒன்றோடொன்று இணைகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b7794d79-a53c-42c8-b511-b03017741964/26-6a94215049c1e.webp' /></p><p>
(1)யாருக்கு இலங்கை அரியணையில் உரிமை?
(2) பௌத்தரல்லாத சோழ/கேரள ஆட்சியாளர்கள் அரசனாகக் கூடாது.
(3) அரசனின் கடமைகளில் புத்த சாசனத்தைப் பாதுகாப்பது முக்கியமானது.
மேலும் கல்பொத்த கல்வெட்டில் நிசங்கமல்லன் தனது வம்ச உரிமையை விஜயன் மற்றும் கலிங்க வம்சத்துடன் இணைத்துக் காட்டுகிறார். அதே கல்வெட்டில் தர்மத்தைப் பாதுகாக்க வேண்டும் என்றும் கூறுகிறார்.</p><p>எனவே அவரது அரசியல் தர்க்கமானது கலிங்க வம்ச உரிமை என்பது பௌத்த அரசுரிமை, புத்த சாசனப் பாதுகாப்பு என்பவற்றால் இலங்கையின் அரியணைக்கான அரசியல் சட்டபூர்வத்தன்மை(legitimacy) வலியுறுத்துவதாக அமைந்த பௌத்தத்தை முன்னிலைப்படுத்தி ஆட்சி அதிகாரத்தை கைக்கொள்ளும் கல்வெட்டு ஆதாரமாகும்.
</p><p>
 முன்கூறிய நிசங்கமல்லனின் “strategic move” எப்படி தொடர்புபடுகிறது என்றால் அதற்கான ஒரு முக்கியமான ஆதாரமாக இந்திய அரசாங்கத்தின் Indira Gandhi National Centre for the Arts (IGNCA) வெளியிட்ட நிசங்கமல்லனின் இராமேஸ்வரம் கல்வெட்டு ஆய்வு அவரது கல்வெட்டுகளின் புகழுரைகள் வெறும் அரசனைப் புகழ்வதற்காக மட்டும் அல்லாமல், “Kalinga dynasty” இலங்கை ஆட்சியை உறுதிப்படுத்தும் அரசியல் பிரச்சாரமாகவும் செயல்பட்டதாக ஆய்வாளர் குறிப்பிடுகிறார்.</p><p> இதுவும் ஏற்கனவே குறிப்பிட்டநிசங்கமல்லனின் power politics / strategic legitimacy கோட்பாட்டிற்கான இன்னுமொர் வலுவான ஆதாரம்.
</p><p>
நிசங்கமல்லனின் கல்வெட்டுகள், இலங்கை அரியணை பௌத்த அரசரால் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும், அரசனின் முக்கியக் கடமைகளில் புத்த சாசனத்தைப் பாதுகாப்பதும் அடங்கும் என்றும் காட்டுகின்றன; </p><p>அதேவேளை, கலிங்க வம்சத்தின் இலங்கை அரசுரிமையையும் அவர் வலியுறுத்துகிறார் “அரசன் என்பவன் பௌத்த சாசனத்தின் பாதுகாவலன்” என்ற அரசியல் கோட்பாடு இன்றைய இலங்கை சிங்கள பௌத்த இனவாத அரசியலின் கட்டமைக்கட்ட இனப்படுகொலை அரசியல் செயல்முறைக்கு அத்திவாரம் இடப்பட்டுவிட்டது என்பதும், அதுவே கட்டமைக்கப்பட்ட தமிழின இனப்படுகொலையாக வளர்ச்சி அடைந்துள்ளது என்ற உண்மையும் புரியும்.
</p><p>

நிசங்கமல்லன் தன்னை ஒரு தீவிர பௌத்தனாக காட்டியதே தனது அரசியல் அதிகார நலன்களின் அடிப்படையில்த்தான். </p><p>அந்த அரசியல் அதிகார நலன் என்பது இலங்கை அரசாட்சி அதிகாரத்தை கைப்பற்றவும், அந்த ஆதிகாரத்தை தொடர்ந்து தக்கவைப்பதற்குமான அரசியல் தத்துவார்த்த மூலோபாயம் வியூகம் (political philosophy strategic move).</p><p> இதனை புரியாமல் மேலெழுந்தவாரியாக நிசங்கமல்லனின் பௌத்த மதப் படிமத்தை வெறும் “தீவிர பௌத்தமதப் பக்தி” என்று எடுத்துக்கொள்வது அவரது அரசியல் அதிகார நலன் உத்தியை மறைத்துவிடுவதாகவே அமையும். </p><p>அவர் பௌத்தத்தை தனது அரசியல் அதிகார அடைதலுக்கான கருவியாக பயன்படுத்தினார்.</p><p> ஆனால் அவர் காலவோட்டத்தில் பௌத்தத்திற்குள் அமிழ்ந்துபோனார். 

 அந்த அரசியல் போக்கிற்கு அமைவாகவே காலணி ஆட்சியின் முடிவுக்கு பின்னான சுதந்திர இலங்கையின் அனைத்து பிரதமர்கள் மற்றும் ஜனாதிபதிகளின் தனிப்பட்ட சமய அடையாளம், மற்றும் அவர்களின் பரம்பரையினர் சில நூற்றாண்டுகளின் முன்னர்தான் இலங்கைத்தீவில் குறியேறினர் என்பதையும் துல்லியமாக நிரூபிக்க முடியும். </p><p>குறிப்பாக சேனநாயக்கா, கொத்தலாவல, ஜெயயவர்த்தனா, பண்டாரநாயக்கா, ரணில் விக்ரமசிங்க, ரஜபக்சேக்கள் போன்ற தலைவர்களின் மத அடையாளம், குடும்பப் பின்னணி, அரசியல் அடையாளம் ஆகியவை ஒத்த தன்மையுடையவை என்ற கட்டமைப்பு ரீதியான வாதம்(structural argument) மிகவும் சுவாரசியமானதும் ஆச்சரியமானதுமான உண்மைதான்.</p><h2>&nbsp;அரசியல் அதிகார பதவி</h2><p> </p><p>ஆயினும் இந்த ஒத்த முறைமைக்குள் பலரும் புரிந்து கொள்ள முடியாத அரசியல் தத்துவார்த்த (political philosophy) உண்மைகள் பொதிந்துள்ளது என்பதுதான் இங்கே முக்கியமானது.
</p><p>
காலனித்துவத்திற்கு முந்தைய தேவநம்பிய தீசன் ஆட்சிக் காலத்தில் இருந்து சிங்கள இராச்சியத்தில் அரச அதிகாரத்தின் சட்டபூர்வத்தன்மைக்கு(legitimacy) பௌத்தம் முக்கிய ஆதாரமாக இருந்தது. </p><p>பின்னர் ஐரோப்பிய காலனித்துவ காலத்தில் உயர்கல்வியையும், அரசியல் அதிகாரத்தைப் பெறவும் கிறிஸ்த்தவராக இருக்கவேண்டும் என்ற நிர்பந்தம் ஏற்பட்டபோது உயர்குழத்து குடும்பங்கள் கிறிஸ்தவமயமாகி அரசியல் அதிகார பதவி, பட்டங்களை பெற்றன.</p><p> அதே உயர்குழம் சுதந்திரத்திற்குப் பின்னர் அரசியல் சட்டபூர்வத்தன்மை மீண்டும் பௌத்த மதத்திற்கு மாறி பௌத்த அடையாளத்துடன் இணைந்து அதிகார பீடத்தில் அமர்ந்தனர். இந்த மாற்றத்தை வரலாற்று ரீதியாக ஆராய்வதும் அறிவதும் விடுலைக்காக அதாவது அரசியல் அதிகாரத்தை மீட்கப்போராடும் ஈழத்தமிழர்களுக்கு நிச்சயமாக பயனுள்தாக அமையும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6b1defc1-a35a-498b-bef2-f351fd19f718/26-6a942150ed089.webp' /></p><p>
</p><p>
12ம் நூற்றாண்டின் நிசங்கமல்லனுடைய அரசியல் போக்குத்தான் காலனித்துவ காலத்தில் அரசியல் அதிகார அவா குணாம்சத்திலோ, அதிகார கையிருப்பிலோ வர்க்க அடிப்படையிலோ மறவில்லை. கற்புல அடையாள மாற்றம் அதவது பௌத்தத்திற்கு பதிலாக கிறிஸ்தவ அடையாளம் மட்டுமே மறியது் இதனை மஞ்சல் அடை அணிந்தவர் வெள்ளை ஆடை அணிந்ததான தோற்றப்பாட்டு மாற்றமேயன்றி ஆள் மற்றமல்ல என்பதே உண்மையாகும்.</p><p>

போர்த்துக்கேயர், டச்சுக்கார்ர், பிரித்தானியர் என்ற காலனித்துவ அரசுகள் பாரம்பரிய இலங்கை அரச அதிகார அமைப்பை உடைத்து அதிகார மையம்தை தாம் எடுத்திக்கொண்டாலும் மக்கள் மீது அரகார்ப் பிரயோக்கத்தை காலணித்துவத்தின் பெயரால் பழையா அதிகாரவர்க்கமே பிரயோகித்தது. </p><p>இதற்காகவே புதிய கல்வி, நிர்வாகம், சட்டம், நில உரிமை, வணிகம் ஆகியவற்றின் மூலம் ஒரு புதிய மேற்கத்திய கல்வியறிவு பெற்ற, கிறிஸ்தவத்தை ஏற்றுக்கொண்ட கிறிஸ்தவ உயர்குடியாக அவர்களே உருவானார்கள். அவர்களின் குடும்பங்கள் காலனித்துவ நிர்வாகத்தில் உயர்ந்த பதவிகளைப் பெற்றனர்.</p><p> இது “அரசியல் அதிகாரத்திற்காக மதமாற்றம்” என்ற ஒரு சாத்தியமான தந்திர விளக்கத்தைக் கொண்டிருக்கிறது.</p><p>

பின்னர் 19ம் நூற்றாண்டின் இறுதியிலிருந்து பௌத்த மறுமலர்ச்சி ஏற்பட்டது. இதன் மூலம் பௌத்த அடையாளம் மீண்டும் அரசியல் மற்றும் தேசிய அடையாளத்தின் முக்கிய கூறாகியது.</p><h2>&nbsp;தமிழ் அரசியல் பரப்பு</h2><p> இதுதான் சிங்களவர்களின் அதிகார அவா மிகவும் வலுவடைந்து கட்டமைப்பு ரீதியான இணைப்புத்(structural parallel) தன்மை வெளிப்படுத்துகிறது. சிங்கள மன்னர்கள் காலத்தில் பௌத்தம் -அரச அதிகார சட்டபூர்வத்தன்மை (legitimacy) என்று இருந்த நிர்பந்தம் காலனித்துவ காலத்தில் கிறிஸ்தவம்/மேற்கத்திய கல்வி - காலனித்துவ அதிகார பதவி நுழைவு என்ற வழியே பின்பற்றப்படுகிறது. </p><p>இதன் தொடர்ச்சி இலங்கை சுதந்திரத்திற்கு முன்னும் பின்னுமான கலத்தில் பௌத்த மறுமலர்ச்சி - பௌத்த சிங்களத் தேசிய அரசியல் சட்டபூர்வத்தன்மை மறுவடிவம் பெறுகிறது.
</p><p>
இதை “நிசங்கமல்லனின் மூலோயம் ஆயிரம் ஆண்டுகள் கழிந்தும் இடையறாது தொடர்ந்தது” என்று கூறுவது நிசங்கமல்லன் காலத்தில் தெளிவாகக் காணப்படும் அரச அதிகாரத்தையும் பௌத்த சட்டபூர்வத்தன்மையையும் இணைக்கும் அரசியல் கருத்து, பின்னாளில் உறங்குநிலையிலிருந்து முற்றிலும் அதே வடிவில் இலங்கையின் சுதந்திரத்திற்கு பின்னான அரசியல் கலாச்சாரத்தில் மீண்டும் வலுப்பெற்று நிறுவன அமைப்பு முறையாக(institutional pattern) நிலைத்தது விட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e20c5661-19ba-42d6-8db4-6ac27dadaa4d/26-6a9421519d5e3.webp' /></p><p>
</p><p>
அரசியல் மேடையில் ஆடை மாற்ற வேறுபாடே அன்றி ஆனால் ஆட்டம் பழையதே. காலனித்துவ காலத்தில் கிறிஸ்தவம் ஏற்றுக்கொண்ட இலங்கை உயர்குடும்பங்களின் வாரிசுகள் சுதந்திரத்திற்குப் பின்னர் பௌத்தர்களாக மாறியது என்ற கூற்றையும் குடும்பம் குடும்பமாக ஆதாரத்துடன் ஆராய்ந்தால் உண்மை பட்டவர்த்தனமாக தெரியவரும்.
</p><p>
நிசங்கமல்லன் வெளிப்படுத்திய “பௌத்தமதம் + அரச அதிகார சட்டபூர்வத் தன்மை + தீவின் அரச இறைமை” என்ற அரசியல் வடிவம், இலங்கையின் அரசியல் கலாச்சாரத்தில் நீண்டகால நிறுவனமயமான நினைவுகளாக(institutional memory) நிலைத்துள்ளது. காலனித்துவ காலத்தில் அது தற்காலிகமாக சவாலுக்கு உட்பட்டாலும், பௌத்த மறுமலர்ச்சி மற்றும் சுதந்திரத்திற்குப் பிந்தைய பெரும்பான்மை அரசியலின் வழியாக புதிய வடிவில் மீண்டும் அரசியல் சட்டபூர்வ தன்மையின் முக்கிய ஆதாரமாகியது.</p><p> இதுதான் சிங்கள பௌத்த அரசியல் தத்துவார்த்த நடைமுறையாக உருப்பெற்றிருக்கும் மிகவும் வலுவான வடிவம்.

ஆனால் தமிழ் அரசியல் பரப்பில் தாம் பின்பற்றிய மதத்திற்கும், தன்னை பின்தொடர்ந்த மக்களுக்கும் உண்மையா நடக்காத, விசுவாசம் இல்லாதவர்களை தலைவனாக ஏற்ற தமிழ் மக்கள் இப்போது வெட்கி தலை குனிகின்றனர். </p><p>“தமிழர்களை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்“ என்ற தலைவர்களுக்கு நாம் “தந்தை“ எனபட்டம் சூட்டியிருக்கிறோம். </p><p>எதையுமே தத்துவார்த்த அணுகுமுறைக்கூடாக பார்க்காமல் வெறும் கட்புலப் பார்வைக்கூடாக பார்த்து வீட்டில் பூச்சிகளாக பறந்து நெருப்பில் விழுந்து அழிந்து கொண்டிருக்கும் தமிழினம் தன்னை சுய பரிசீலனை செய்து அவசியம். </p><p>தமது கடந்தகால தலைமைகளின் தலைமைத்துவ ஆளுமையை பகுப்பாய்வு செய்வதன் மூலமே ஆளுமை மிக்க புதிய தலைமைத்துவ உருவாக்கத்திற்கான அகப் புறச் சூழலை தமிழ அரசியல் பரப்பில் ஏற்படுத்த முடியும் அதுவே நமக்கு உடனடி தேவையாகவும் உள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-30T12:29:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈபிடிபியும்,இராணுவமுமே பிள்ளைகளை கடத்தியது : மூன்று பிள்ளைகளின் வரவுக்காக ஏங்கும் தாயின் குமுறல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/mother-says-epdp-and-military-kidnapped-children-1788091703"></link>
            <id>https://ibctamil.com/article/mother-says-epdp-and-military-kidnapped-children-1788091703</id>
            <summary type="text">சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தில், மூன்று பிள்ளைகளின் புகைப்படத்தை
நெஞ்சோடு அணைத்தபடி பதிலுக்காக காத்திருக்கும் ஒரு தாயின் கண்ணீர் கதை இது.

...</summary>
            <content type="html"><![CDATA[<p>சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தில், மூன்று பிள்ளைகளின் புகைப்படத்தை
நெஞ்சோடு அணைத்தபடி பதிலுக்காக காத்திருக்கும் ஒரு தாயின் கண்ணீர் கதை இது.
</p><p>
“அன்று செய்தி பார்த்துக் கொண்டிருந்தார்கள்… துப்பாக்கிகளுடன் வந்தவர்கள்
அழைத்துச் சென்றார்கள். அதன் பிறகு என் பிள்ளைகளை நான் பார்க்கவே இல்லை…”</p><h2>தாயின் காத்திருப்பு மட்டும் இன்னும் முடிவடையவில்லை</h2><p>20 ஆண்டுகள் கடந்துவிட்டன.
ஆனால் அந்தத் தாயின் காத்திருப்பு மட்டும் இன்னும் முடிவடையவில்லை.

தனது மூன்று பிள்ளைகளின் புகைப்படங்களை கையில் ஏந்தியபடி, “என் பிள்ளைகள்
எங்கே? அவர்களுக்கு என்ன நடந்தது?” என்ற கேள்வியுடன் இன்றும் பதிலைத் தேடி
வருகிறார் அந்தத் தாய்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7328a4c0-867c-498e-b6d1-631afe18b277/26-6a94214d72b7a.webp' /></p><p>
</p><p>
தனது பிள்ளைகளை EPDP மற்றும் இராணுவத்தினரே அழைத்துச் சென்றதாக அவர்
குற்றஞ்சாட்டுகிறார். எனினும், அவர்களுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பில்
இதுவரை உறுதியான பதில் கிடைக்கவில்லை என அவர் தெரிவிக்கிறார்.</p><p></p><p>
</p><p>
</p><h2>எண்ணற்ற குடும்பங்களின் வலி</h2><p>ஆண்டுகள் கடந்தாலும், ஒரு தாயின் நம்பிக்கை மட்டும் மங்கவில்லை.
ஒருநாள் தனது பிள்ளைகள் பற்றிய உண்மை வெளிவரும் என்ற எதிர்பார்ப்புடன் அவர்
தொடர்ந்து காத்திருக்கிறார்.</p><p>
</p><p>
அவரது கைகளில் இருக்கும் அந்த மூன்று இளைஞர்களின் புகைப்படங்கள், ஒரு
குடும்பத்தின் நினைவுகள் மட்டுமல்ல; பதில் கிடைக்காமல் காத்திருக்கும் எண்ணற்ற
குடும்பங்களின் வலியையும் பிரதிபலிக்கின்றன.
</p><p>
“உண்மை வெளிவரும் வரை எங்கள் தேடல் நிற்காது…”

இது ஒரு தாயின் குரல் மட்டுமல்ல.
பல ஆண்டுகளாக பதிலை எதிர்பார்த்து காத்திருக்கும் குடும்பங்களின் மௌனக்
குரலும் கூட.&nbsp;&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-30T12:25:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Fathima</name>
            </author>
            <title type="text"><![CDATA[என்னை கொன்றுவிடுவார்கள்: மருத்துவமனையில் கதறிய கர்ப்பிணி பெண்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/pregnant-woman-dies-with-baby-after-delivery-1788081953"></link>
            <id>https://ibctamilnadu.com/article/pregnant-woman-dies-with-baby-after-delivery-1788081953</id>
            <summary type="text">என்னை கொன்றுவிடுவார்கள் என கதறிய நிறைமாத கர்ப்பிணி பெண் குழந்தை பிறந்தபின்னர் உயிரிழந்த சம்பவம் நடந்துள்ளது.மத்திய பிரதேசத்தின் ஹட்வா பகுதியை சேர்ந்தவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>என்னை கொன்றுவிடுவார்கள் என கதறிய நிறைமாத கர்ப்பிணி பெண் குழந்தை பிறந்தபின்னர் உயிரிழந்த சம்பவம் நடந்துள்ளது.</p><p>மத்திய பிரதேசத்தின் ஹட்வா பகுதியை சேர்ந்தவர் கல்பனா(வயது 25), நிறைமாத கர்ப்பிணியான கல்பனா சஞ்சய் காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கடந்த 25ம் தேதி அனுமதிக்கப்பட்டார்.</p><p>

குழந்தையை பிரசுவித்த பின்னர் கல்பனாவும், குழந்தையும் பரிதாபமாக உயிரிழந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f0765a2f-071d-40c4-a0b0-48de3ff0663b/26-6a93f79ab2d63.webp' /><br></p><p>
</p><p>
இதற்கு முன்னதாக எடுக்கப்பட்ட வீடியோவில், நான் பிழைக்கமாட்டேன், என்னை காப்பாற்றுங்கள், உயிருக்கு ஆபத்து என அவர் கூறுவதும், மிகுந்த மன உளைச்சலுடன் இருப்பதும் அவரை ஊழியர்கள் சமாதானம் செய்வதும் போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
</p><p>
தொடர்ந்து தன்னுடைய உறவினர்கள் தொடர்பு கொள்ள முயற்சிப்பதும், அழுதுகொண்டே தனக்கு முறையான சிகிச்சை அளிக்கவில்லை என குடும்பத்தினரிடம் கூறுவதும் பதிவாகியுள்ளது.</p><p>

இந்நிலையில் கல்பனாவின் தந்தை, எனது ஒரே மகள் கல்பனா, அவள் இப்போது இல்லை, இதற்கு காரணமானவர்கள் மீது காவல்துறை FIR பதிவு செய்ய வேண்டும், மருத்துவர்கள், ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.
</p><p>
மருத்துவ நெறிமுறைகளின் படியே கல்பனாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும், எந்தவித அலட்சியமும் இல்லை என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.<br></p>]]></content>
            <updated>2026-08-30T12:20:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹக்கல தாவரவியல் பூங்காவில் ஏற்படவுள்ள மாற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/changes-coming-to-hakgala-botanical-garden-1788091788"></link>
            <id>https://jvpnews.com/article/changes-coming-to-hakgala-botanical-garden-1788091788</id>
            <summary type="text">சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதிசெய்து சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கில், ஹக்கல தாவரவியல் பூங்காவை மையமாகக் கொண்டு பல புதிய அபிவிருத்தித் திட்டங்க...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதிசெய்து சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கில், ஹக்கல தாவரவியல் பூங்காவை மையமாகக் கொண்டு பல புதிய அபிவிருத்தித் திட்டங்களைச் செயற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. </p><p style="text-align: justify; ">

இதற்காக சுற்றுச்சூழல் பிரதி அமைச்சர் என்டன் ஜயகொடி தலைமையில் ஹக்கல தாவரவியல் பூங்காவில் விசேட கள விஜயமொன்றும் மேற்கொள்ளப்பட்டது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/11271297-85e2-4b35-8499-57df66018425/26-6a941d8d85b18.webp' /></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

இதன்போது பல முக்கிய அபிவிருத்தி யோசனைகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது. </p><p style="text-align: justify; ">

ஹக்கல பிரதேசத்திற்கு உரித்தான விசேட தாவர வகைகளைப் பாதுகாப்பதற்காக விசேட மையமொன்றையும், அது தொடர்பான ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்காக அடிப்படை ஆய்வகமொன்றையும் (Basic Laboratory) நிறுவுவதற்கும், அதற்கான திட்டங்களைத் தயாரிப்பதற்கும் முதற்கட்ட கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டுள்ளன.</p><p style="text-align: justify; "> 

மேலும், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையிலும், இயற்கை அழகைப் பாதுகாக்கும் வகையிலும் புதிய நடைபாதைகள் (Walking Trails) மற்றும் சிறிய பாதைகள் அடங்கிய புதிய சூழலியல் வலயமொன்றை நிறுவுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. </p><p style="text-align: justify; ">

அடையாளங்காணப்பட்ட அரிய மற்றும் உரித்தான தாவர வகைகளைப் பாதுகாப்பதற்காகப் பசுமைக்குடில்கள் நிர்மாணிக்கப்படவுள்ளதுடன், அத்தாவர மற்றும் விலங்கு இனங்கள் பற்றிய தகவல்களைக் கற்றறிவதற்குப் பொதுமக்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்குத் தேவையான வசதிகளும் செய்து கொடுக்கப்படும். </p><p style="text-align: justify; ">

இயற்கைச் சூழலுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில், இயற்கையின் அமைதியை அனுபவித்துச் சுதந்திரமாக நேரத்தைக் கழிக்கக்கூடிய 'பூஜ்ய உமிழ்வு' (Zero Emission) வலயமொன்றாக இந்த வளாகத்தை அபிவிருத்தி செய்யத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.</p><p style="text-align: justify; "> 

இயற்கைச் சூழலமைப்பிற்குப் பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் நிலையான சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதும், மலையகப் பல்லுயிர் பெருக்கத்தை எதிர்கால சந்ததியினருக்காகப் பாதுகாப்பதும் இந்த வேலைத்திட்டத்தின் முதன்மை நோக்கமாகும்.</p>]]></content>
            <updated>2026-08-30T12:19:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாளத்தில் 1643 குழந்தைகளின் உயிரை பேராபத்தில் இருந்து காப்பாற்றிய ஆசிரியர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/nepal-headmaster-saves-1643-children-life-in-flood-1788086836"></link>
            <id>https://news.lankasri.com/article/nepal-headmaster-saves-1643-children-life-in-flood-1788086836</id>
            <summary type="text">Nepal Headmaster saves 1643 children life in flood: நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவில் 1,600-க்கும் மேற்பட்ட குழந்தைகளின் உயிரை ஆசிரியர...</summary>
            <content type="html"><![CDATA[<p>Nepal Headmaster saves 1643 children life in flood: நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவில் 1,600-க்கும் மேற்பட்ட குழந்தைகளின் உயிரை ஆசிரியர் ஒருவர் காப்பாற்றினார்.</p><p>
நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் பாடசாலை ஒன்று அடித்துச் செல்லப்பட்ட நிலையில், ஆசிரியர் ஒருவர் 1,600-க்கும் மேற்பட்ட குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றினார்.&nbsp;</p><h2>பாடசாலையின் முதல்வர்</h2><p>
நேபாளத்தின் வடக்கு-மத்திய பகுதியில் உள்ள திரிசூலி பள்ளத்தாக்கில் அமைந்துள்ள திரிபுவன் திரிசூலி மேல்நிலை பாடசாலையின் முதல்வராக பணியாற்றுபவர் இராஜேந்திர தவாடி.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/81978766-d361-4340-a957-51d7e11dc501/26-6a940d4bc7873.webp' /></p><p></p><p>

அப்பகுதியில் ஆற்றின் மேல் பகுதியில் ஐந்து மைல் தொலைவில் உள்ள கிராமம் ஒன்று வெள்ளப்பெருக்கிற்கு இரையானதாக, நண்பர் ஒருவர் மூலம் தவாடிக்கு தகவல் கிடைத்துள்ளது.
</p><p>
அத்துடன் ஆற்றில் இருந்து 200 அடி உயரத்தில் அமைந்திருந்த பாடசாலைக்கு நோக்கி, வெள்ள நீர் வேகமாக உயர்ந்து வருவதாக பெற்றோரும் அவருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். </p><p>

அச்சமயம் 900 குழந்தைகள் ஏற்கனவே பாடசாலைக்கு வந்திருந்தனர். மேலும், 700 குழந்தைகள் நடந்தும், பேருந்திலும் பாடசாலைக்கு வந்து கொண்டிருந்தனர்.&nbsp;</p><h2>1,643 குழந்தைகள்</h2><p>
அப்போது தனது பாடசாலை ஆபத்தான நிலையில் இருப்பதை உணர்ந்த முதல்வர் தவாடி, உடனடியாக பாடசாலை பேருந்து சாரதிகளை தொடர்புகொண்டு திரும்பிச் செல்லுமாறு கூறியிருக்கிறார்.
</p><p>
பின்னர் பாடசாலையில் குழந்தைகளை கவனிக்கத் தொடங்கிய அவர், மாணவர்களை நடந்தே குன்றின் மீது செல்லுமாறு அனுப்பியிருக்கிறார். </p><p>அவரும் அவர்களுடன் பின்தொடர்ந்து சென்றுள்ளார். 

இவ்வாறு 1,643 குழந்தைகள் மற்றும் ஊழியர்கள் சிலரை துரிதமாக செயல்பட்டு அவர் காப்பாற்றியிருக்கிறார்.&nbsp; &nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6b422f3d-cc44-4762-95d1-e2d66a4195a0/26-6a940d4cadd50.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-30T12:15:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[திருநங்கையாக மாறிய இந்திய கிரிக்கெட் வீரரின் மகன் : அவுஸ்திரேலியாவில் விளையாட அனுமதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/australia-approve-transgender-anaya-bangar-to-play-1788065858"></link>
            <id>https://manithan.com/article/australia-approve-transgender-anaya-bangar-to-play-1788065858</id>
            <summary type="text">trans cricketer anaya bangar to play in australia: திருநங்கையாக மாறிய அனயா பங்கர் கிரிக்கெட் விளையாட அவுஸ்திரேலியா&amp;nbsp; அனுமதி வழங்கியுள்ளது.அனயா பங்...</summary>
            <content type="html"><![CDATA[<p>trans cricketer anaya bangar to play in australia: திருநங்கையாக மாறிய அனயா பங்கர் கிரிக்கெட் விளையாட அவுஸ்திரேலியா&nbsp; அனுமதி வழங்கியுள்ளது.</p><h2>அனயா பங்கர்</h2><p>இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், அணியின் முன்னாள் பேட்டிங் பயிற்சியாளருமான சஞ்சய் பங்கரின் மகன் ஆர்யன் பங்கர், தற்போது அனயா பங்கர் என்ற பெயரில் திருநங்கை பெண்ணாக மகளிர் கிரிக்கெட்டில் விளையாடுவதற்கான புதிய பாதையைத் தேர்ந்தெடுத்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5654ddb1-a21d-492f-aa2b-adc3cda1b15f/26-6a93bd8717103.webp' /></p><p></p><p>
</p><p>
மகளிர் கிரிக்கெட்டில் விளையாடுவதற்காக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திடம் (BCCI) அனுமதி கோரியிருந்த நிலையில், அங்கிருந்து பதில் கிடைக்காததால் அவுஸ்திரேலிய கிரிக்கெட் அமைப்பை அவர் அணுகியுள்ளார்.</p><p> இதையடுத்து, அவுஸ்திரேலியாவில் நடைபெறும் உள்ளூர் மகளிர் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க அனயாவுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bd1066d8-3c5a-47a7-959c-be9ae8609830/26-6a93bd87bd400.webp' /></p><p>

கிரிக்கெட்டில் இருந்து பாலின மாற்றப் பயணம்
2001 முதல் 2004ஆம் ஆண்டு வரை இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாடிய சஞ்சய் பங்கரின் மகனான ஆர்யன், உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் மும்பை மற்றும் புதுச்சேரி அணிகளுக்காக விளையாடியுள்ளார்.
</p><p>
2023ஆம் ஆண்டு, தான் பெண்ணாக மாற விரும்புவதாக வெளிப்படையாக தெரிவித்த அவர், அதற்கான ஹார்மோன் சிகிச்சையை மேற்கொண்டார். தொடர்ந்து பாலின மாற்ற சிகிச்சைகளை மேற்கொண்டு, தனது பெயரையும் அனயா பங்கர் என மாற்றிக்கொண்டார்.</p><p>

இதையடுத்து மகளிர் கிரிக்கெட்டில் தனது கிரிக்கெட் பயணத்தைத் தொடரும் நோக்கில் அவர் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/20800c02-f590-4eea-b149-d3c957776424/26-6a93bd886e244.webp' /></p><p>

அவுஸ்திரேலியாவில் புதிய வாய்ப்பு
மகளிர் கிரிக்கெட்டில், குறிப்பாக அவுஸ்திரேலியாவின் பிரீமியர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதற்கு அனயா விருப்பம் தெரிவித்திருந்தார். </p><p>இதற்கான அனுமதியை அவுஸ்திரேலிய கிரிக்கெட் அமைப்பு தற்போது வழங்கியுள்ளது.

எனினும், சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடுவதற்கான தகுதி தொடர்பாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ICC) விதிமுறைகள் தொடர்ந்து அமலில் உள்ளன.
</p><p>
ஆண் பருவமடைதலை அடைந்த திருநங்கை பெண்கள், உயர்மட்ட மகளிர் சர்வதேச கிரிக்கெட்டில் பங்கேற்பதைத் தடுக்கும் விதிமுறைகளை ஐசிசி 2023ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தியது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bedfbd37-9168-4dbe-96fc-f40609ebb5f4/26-6a93bd891fb77.webp' /></p><p></p><p>
</p><p>
டெஸ்டோஸ்டிரோன் அளவு முக்கியம்
ஐசிசி விதிமுறைகளின்படி, உயர்மட்ட மகளிர் கிரிக்கெட்டில் விளையாடுவதற்குத் தகுதி பெற, சம்பந்தப்பட்ட வீராங்கனையின் இரத்தத்தில் உள்ள டெஸ்டோஸ்டிரோன் அளவு குறைந்தது 12 மாதங்களுக்கு 10 nmol/L-க்கும் குறைவாக இருக்க வேண்டும்.
</p><p>
அனயாவின் உயர்மட்ட கிரிக்கெட் தகுதி தொடர்பான முடிவு, அவரது டெஸ்டோஸ்டிரோன் பரிசோதனை முடிவுகளைப் பொறுத்தே அமையும்.

இதுகுறித்து கிரிக்கெட் அவுஸ்திரேலியாவின் நேர்மை பிரிவுத் தலைவர் ஜாக்கி பார்ட்ரிட்ஜ் கூறுகையில், 2027 மார்ச் மாதத்திற்குப் பின்னர் மேற்கொள்ளப்படும் டெஸ்டோஸ்டிரோன் பரிசோதனை முடிவுகளின் அடிப்படையிலேயே அனயாவின் உயர்மட்ட கிரிக்கெட் தகுதி தீர்மானிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
</p><p>
அதேவேளை, 2027 மார்ச் மாதம் வரை அவுஸ்திரேலியாவின் மாநிலங்கள் அல்லது பிராந்தியங்களில் நடைபெறும் பிரீமியர் கிரிக்கெட் போட்டிகளில் அனயா தொடர்ந்து பங்கேற்கத் தகுதியுடையவராக இருப்பார்.
</p><p>
இதன் மூலம், இந்திய உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடிய ஆர்யன் பங்கர், அனயா பங்கர் என்ற புதிய அடையாளத்துடன் மகளிர் கிரிக்கெட்டில் தனது அடுத்த அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.</p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW&nbsp;</a></u></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-30T12:11:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்க பொருட்களை புறக்கணிக்கும் கனடா இளைஞர்கள் ; ட்ரம்பின் வரியால் வந்த வினை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/canadian-youths-boycott-american-products-1788091318"></link>
            <id>https://canadamirror.com/article/canadian-youths-boycott-american-products-1788091318</id>
            <summary type="text">டிரம்ப்பின் வரிவிதிப்பு எதிரொலியாக அமெரிக்க பொருட்களை புறக்கணித்து கனடா இளைஞர்கள் எதிர்ப்பை காட்டி வருகின்றனர்.

கனடாவுக்கு எதிராக அமெரிக்க ஜனாதிபதி...</summary>
            <content type="html"><![CDATA[<p>டிரம்ப்பின் வரிவிதிப்பு எதிரொலியாக அமெரிக்க பொருட்களை புறக்கணித்து கனடா இளைஞர்கள் எதிர்ப்பை காட்டி வருகின்றனர்.
</p><p>
கனடாவுக்கு எதிராக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் கடுமையான வரிவிதிப்பை அறிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fdfb473c-307e-468b-8faa-ab075c73cf28/26-6a941bb812682.webp' /></p><p> </p><p>இதன்படி, கனடாவின் 2 ஆயிரம் கோடி அமெரிக்க டாலர் மதிப்பிலான சரக்குகளுக்கு 50 சதவீத வரி விதிக்கப்பட்டது.</p><p>&nbsp;இந்த இறக்குமதி வரி விதிப்புக்கு கனடா பிரதமர் மார்க் கர்னியின் அரசு கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. பதிலுக்கு கனடாவும், 15 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை அமெரிக்க பொருட்களுக்கு வரி விதித்து அதிரடி காட்டியது.
</p><p>
இந்த இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தக மோதல் அதிகரித்து காணப்படும் சூழலில், கனடா இளைஞர்கள் தங்களுடைய தேசப்பற்றை வெளிப்படுத்தும் வகையில், நடந்து கொள்கின்றனர்.


</p><p>
அவர்கள் அமெரிக்க தயாரிப்பு பொருட்களை நிராகரித்து வருகின்றனர். இதன்படி, அமெரிக்காவின் ஒயின் உள்ளிட்ட மதுபானங்கள் பல்வேறு மாகாணங்களில் உள்ள குடோன்களில் இருந்து நீக்கப்படுகின்றன.</p><p>

கனடாவில் வாடிக்கையாளர்களின் போக்கிலும் பெரும் மாற்றம் காணப்படுகிறது. இதுபற்றி மான்ட்ரியல் சூப்பர்மார்க்கெட் மேலாளரான பீட்டர் கியானோபோலிஸ் கூறும்போது, பொருட்கள் எங்கிருந்து வருகின்றன என வாடிக்கையாளர்கள் கேட்கின்றனர். </p><p>இந்த மனப்போக்கு அவர்களிடம் அதிகரித்து உள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-30T12:02:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[இங்கிலாந்து 208 ஓட்டங்களுக்கு ஆல்அவுட்: பாகிஸ்தானுக்கு இமாலய இலக்கு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/england-set-389-run-target-to-pakistan-in-2nd-test-1788090189"></link>
            <id>https://news.lankasri.com/article/england-set-389-run-target-to-pakistan-in-2nd-test-1788090189</id>
            <summary type="text">England set 389 target to pakistan: லார்ட்&#039;ஸ் டெஸ்டில் பாகிஸ்தான் அணிக்கு இங்கிலாந்து 389 ஓட்டங்கள் வெற்றி இலக்கு நிர்ணயித்துள்ளது.

லண்டன் லார்ட்&#039;ஸ...</summary>
            <content type="html"><![CDATA[<p>England set 389 target to pakistan: லார்ட்'ஸ் டெஸ்டில் பாகிஸ்தான் அணிக்கு இங்கிலாந்து 389 ஓட்டங்கள் வெற்றி இலக்கு நிர்ணயித்துள்ளது.
</p><p>
லண்டன் லார்ட்'ஸ் மைதானத்தில் நடந்து வரும் டெஸ்டில், இங்கிலாந்து அணி 208 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆக, பாகிஸ்தான் அணி இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியுள்ளது.&nbsp;</p><h2>இங்கிலாந்து அணி ஆல்அவுட்</h2><p>
இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் லண்டன் லார்ட்'ஸ் மைதானத்தில் நடந்து வருகிறது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/82ac62fe-97eb-4ede-8a2c-bdea73813e4b/26-6a94188f00b5a.webp' />&nbsp;</p><p></p><p>

இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் 290 ஓட்டங்களும், பாகிஸ்தான் 110 ஓட்டங்களும் எடுத்தன. 

பின்னர் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணி அடுத்தடுத்து 2 விக்கெட்டுகளை இழந்தது. </p><p> 

ஜோ ரூட் 24 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, எமிலியோ கே 31 ஓட்டங்கள் எடுத்து மொஹம்மது அப்பாஸ் பந்துவீச்சில் lbw ஆனார்.

அணியின் ஸ்கோர் 128 ஆக உயர்ந்தபோது ஹாரி புரூக் (34) ஆட்டமிழக்க, டேன் லாரன்ஸ் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/43e77e1c-0336-461f-9fd3-ad45f9a6e870/26-6a94188fd348d.webp' /></p><p>
ஜேமி ஸ்மித் மற்றும் கஸ் அட்கின்ஸன் தலா 7 ஓட்டங்களில் வெளியேறினர். டேன் லாரன்ஸ் (Dan Lawrence) 70 பந்துகளில் 2 சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 54 ஓட்டங்கள் எடுத்தார்.&nbsp;</p><h2>இமாலய இலக்கு</h2><p>
கடைசி விக்கெட்டான ஜோஷ் டங்கினை (12) பாகிஸ்தான் அணித்தலைவர் பாபர் அஸாம் ரன்அவுட் செய்ய, இங்கிலாந்து அணி 208 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8314644d-1f6b-407e-b517-f894588b451b/26-6a94189089ced.webp' /></p><p>

அபாரமாக பந்துவீசிய மொஹம்மது அப்பாஸ் 5 விக்கெட்டுகளும், குர்ரம் ஷஷாத் மற்றும் மொஹம்மது அலி தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். </p><p>

389 ஓட்டங்கள் என்ற இலக்கினை நோக்கி களமிறங்கியுள்ள பாகிஸ்தான் அணி 8 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்துள்ளது.&nbsp; &nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/79822600-6295-4bf3-ba55-7ee742976c83/26-6a9418913aa06.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-30T11:45:53+00:00</updated>
        </entry>
    </feed>
