<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-08-30T11:16:04+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஒலிபெருக்கிகளை பயன்படுத்த கட்டுப்பாடு ; காத்திருக்கும் சட்ட நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/restrictions-imposed-on-loudspeaker-use-1788088259"></link>
            <id>https://jvpnews.com/article/restrictions-imposed-on-loudspeaker-use-1788088259</id>
            <summary type="text">பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைக்கும் அமைதிக்கும் பாதிப்பு ஏற்படும் வகையில் ஒலிப்பெருக்கி மற்றும் ஒலிபெருக்கிச் சாதனங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாற...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைக்கும் அமைதிக்கும் பாதிப்பு ஏற்படும் வகையில் ஒலிப்பெருக்கி மற்றும் ஒலிபெருக்கிச் சாதனங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு பொலிஸார்&nbsp; வேண்டுகோள் விடுத்துள்ளனர்.</p><p style="text-align: justify; ">

ஒலி மாசுபாடானது குழந்தைகள், மாணவர்கள், முதியவர்கள் மற்றும் நோயாளிகளுக்குப் பெரும் சுகாதார மற்றும் மன ரீதியான பாதிப்புகளை ஏற்படுத்துவது கண்டறியப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2b8efb59-5c80-4232-9da9-8bf1a0a28439/26-6a940fc543cbf.webp' /></p><h2 style="text-align: justify; ">அனுமதிப்பத்திரம்</h2><p style="text-align: justify; ">

உயர் நீதிமன்றத்தின் 38/2005 இலக்க கட்டளை மற்றும் தண்டனைச் சட்டக்கோவையின் 261 ஆம் பிரிவின் கீழ், பொதுமக்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் ஒலிபெருக்கிப் பயன்பாடானது பொது தொல்லையாகக் கருதப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p style="text-align: justify; ">
இதன்படி, இரவு 10 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரையான காலப்பகுதியில் ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட மாட்டாது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
அனுமதிப்பத்திரம் பெறப்பட்டிருப்பினும், திங்கள் முதல் வியாழன் வரையிலான நாட்களில் இரவு 10 மணி வரையிலும், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் நள்ளிரவு ஒரு மணி வரையிலும், ஞாயிற்றுக்கிழமைகளில் நள்ளிரவு 12.30 வரையிலும் மட்டுமே ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்த அனுமதி வழங்கப்படும்.</p><p style="text-align: justify; ">

எனினும், விசேட சட்டரீதியான அனுமதிகள் வழங்கப்பட்ட குறிப்பிட்ட மத அல்லது விசேட நிகழ்வுகளுக்கு இந்தக் கட்டுப்பாடுகளிலிருந்து விலக்களிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">

அனுமதி பெறப்பட்டிருந்தாலும் ஒலி குறிப்பிட்ட எல்லைக்குள்ளேயே இருக்க வேண்டும் என்றும், மீறுபவர்களின் ஒலிபெருக்கிச் சாதனங்களைக் கைப்பற்றிச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; ">

சட்டவிரோத ஒலி மாசுபாடு தொடர்பில் 118 அல்லது 119 ஆகிய அவசர இலக்கங்களுக்குத் தொடர்பு கொண்டு அறிவிக்க முடியும் என காவல்துறை தெரிவித்துள்ளது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-30T11:11:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழ் மக்களின் நம்பிக்கைக்கு சர்வதேச சுயாதீன பங்களிப்பே ஒரே பதில்! கனகரஞ்சனி யோகராசா திட்டவட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/special-speech-by-kanakaranjani-yogarasa-1788088171"></link>
            <id>https://ibctamil.com/article/special-speech-by-kanakaranjani-yogarasa-1788088171</id>
            <summary type="text">வலிந்து காணாமலாக்கப்பட்டடோருக்கான நீதித்தேடலில் காணாமல் போனார் அலுவலகம் மட்டும் போதாது என்றும், சரியான நீதிப்பொறிமுறை ஒன்றையே தாங்கள் கோருவதாகவும், வட...</summary>
            <content type="html"><![CDATA[<p>வலிந்து காணாமலாக்கப்பட்டடோருக்கான நீதித்தேடலில் காணாமல் போனார் அலுவலகம் மட்டும் போதாது என்றும், சரியான நீதிப்பொறிமுறை ஒன்றையே தாங்கள் கோருவதாகவும், வடக்கு, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத் தலைவி கனகரஞ்சனி யோகராசா சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>
 வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளினால் இன்று (30) ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற சர்வதேச மாநாட்டில் கருத்து வெளியிடுகையிலேயே இதனை கூறினார்.</p><p>


 இலங்கையில் காணாமலாக்கப்பட்டடோருக்கான விவகாரத்தில் பல்வேறு ஆணைக்குழுக்களும் நிறுவனங்களும் உறுவாக்கப்பட்ட போதிலும் எமது உறவுகளின் அடிப்படை கோரிக்கை இதுவரையில் எந்த விதத்திலும் நிறைவேற்றவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.</p><p></p><h2>நம்பிக்கை இழந்த மக்கள்</h2><p>
</p><p>
ஒரு நிறுவனத்தின் சுயாதீனம் செய்தித்திறன் மீதே மக்கள் இன்று நம்பிக்கை இழந்துள்ளனர் என்றும் அந்த நம்பிக்கையை உறுவாக்குவதற்கு சர்வதேச சுயாதீன பங்களிப்பு மிக அவசியம் எனவும் கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9757fe7f-cfe0-4e9f-958a-ce3f2b92443e/26-6a940f6cca1c4.webp' /></p><p>இதன் பொருள் இலங்கைக்கு எதிரான பாதுகாப்பு மிக்க சுயாதீன சர்வதேச விசாரணை வேண்டும் என்பதே ஆகும் எனவும் கூறியுள்ளார்.</p><p></p><p><b>00.11.00 - கனகரஞ்சனி யோகராசா உரை</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/uNgBlT2fVUk" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-30T11:09:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுவிட்சர்லாந்தில் இசை நிகழ்ச்சியில் அரங்கேறிய சம்பவம் ; இளம்பெண் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/incident-unfolds-at-music-event-in-switzerland-1788087479"></link>
            <id>https://canadamirror.com/article/incident-unfolds-at-music-event-in-switzerland-1788087479</id>
            <summary type="text">வடக்கு சுவிட்சர்லாந்தில் இரவு நேர இசை நிகழ்ச்சியொன்றில் இடம்பெற்ற கொடூரத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 22 வயது இளம்பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்...</summary>
            <content type="html"><![CDATA[<p>வடக்கு சுவிட்சர்லாந்தில் இரவு நேர இசை நிகழ்ச்சியொன்றில் இடம்பெற்ற கொடூரத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 22 வயது இளம்பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், மேலும் 05 பேர் பலத்த காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
</p><p>
சுரிச் நகருக்கு அருகில் உள்ள ஆராவ் எனும் நகரில் அமைந்துள்ள குதிரைப் பந்தய மைதானத்தில், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை அந்நாட்டு நேரப்படி அதிகாலை 2:30 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fccece70-6460-419a-922c-0b7d93efd3da/26-6a940cb956e40.webp' /></p><p>
</p><p>
உயிரிழந்த 22 வயது பெண்ணைத் தவிர, 24 முதல் 27 வயதுக்குட்பட்ட 4 ஆண்கள் மற்றும் ஒரு பெண் உட்பட 05 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். </p><p>இவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


நிகழ்ச்சியில் இசை அமைத்துக்கொண்டிருந்த 'டேக்கிபோ' என்ற சுவிஸ் டிஜே , இந்த தாக்குதலில் தனது நெருங்கிய நண்பரை இழந்துவிட்டதாக சமூக ஊடகங்களில் உருக்கமாகப் பதிவிட்டுள்ளார்.</p><p>சமூக மேம்பாட்டுத் திட்டங்களில் பங்கேற்றல்

துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டுத் தப்பிச் சென்ற நபர் யார்? அவரது பின்னணி அல்லது தாக்குதலுக்கான காரணம் என்ன என்பது குறித்து இதுவரை எந்தத் தகவலும் வெளியாகவில்லை.
</p><p>
கொலையாளியைக் கைது செய்வதற்காகச் சுவிஸ் பொலிஸார் அப்பகுதி முழுவதையும் தீவிரக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து தேடுதல் வேட்டையை ஆரம்பித்துள்ளனர்.</p><p>

நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களான ஆர்காவ் ரேசிங் கிளப் இந்த சம்பவத்திற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளதோடு, உடனடியாக விரைந்து வந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்ட அவசரக்காலச் சேவையினருக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-08-30T10:58:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shan</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் அரசியலை பலவீனப்படுகிறதா கனேடிய நீதிமன்ற தீர்ப்பு..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/does-canadian-court-ruling-weaken-tamil-politics-1788087078"></link>
            <id>https://tamilwin.com/article/does-canadian-court-ruling-weaken-tamil-politics-1788087078</id>
            <summary type="text">கனடா நீதிமன்ற தீர்ப்பை முன்னிறுத்தி தமிழர் அரசியல் போராட்டத்தை
பலவீனப்படுத்த முயற்சிக்கக் கூடாது என
சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடா நீதிமன்ற தீர்ப்பை முன்னிறுத்தி தமிழர் அரசியல் போராட்டத்தை
பலவீனப்படுத்த முயற்சிக்கக் கூடாது என
சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய
அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா. சத்திவேல் தெரிவித்துள்ளார்.
</p><p>
அவர், இன்று(30.08.2026) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு
குறிப்பிட்டுள்ளார். </p><p> 

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

நீதிக்கான நீள் பயணம் எனும் தொனிப் பொருளில் இனப்படுகொலையின் ஒர் அங்கமான
வலிந்து காணாமலாக்கப்பட்டோர் விடயமாக தமிழர் தாயகத்தில் சர்வதேச மாநாடு நடக்க
இருக்கையில், கனடாவில் நீதிமன்றம் ஒன்றில் இலங்கையில் இனப்படுகொலை நிகழவில்லை
என தீர்ப்பு வழங்கியதாக சமூக ஊடகங்களில் வந்துள்ள செய்தியை தொடர்ந்து பௌத்த
அரசுக்கும் அதன் காவலாளிகளுக்கும் மகிழ்வை கொடுக்கலாம். 

ஆனால் பௌத்த தர்மம் தமது தண்டனை தீர்ப்பை எப்போதோ எழுதிவிட்டது. </p><p>அதனை தெற்கு உணரும் நாளிலேயே நாடு உண்மையான விடுதலை மகிழ்வை காணும் என்பதையும் குறிப்பிடுகின்றோம்.
</p><h2>
கனடா நீதிமன்றத்தின் தீர்ப்பு</h2><p>

கனடா நீதிமன்றத்தின் தீர்ப்பு கடந்த வருடம் (2025) மார்ச் மாதம்
வழங்கப்பட்டதாக செய்தி வந்துள்ள நிலையில், அது ஒரு வருடம் கடந்து இலங்கைக்கு
செய்தியானது ஏன்? செய்தியாக்கப்பட்டதன் பின்னணி என்ன? அதன் அரசியல் இலக்கு
என்ன? இடங்கையில் அடுத்த ஜனாதிபதிக்கான போட்டி கனடாவில் ஆரம்பித்து விட்டதா?
போன்ற கேள்விகளுக்கு காலம் பதில் சொல்லும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/28e4e5de-c865-44ff-80d8-384a6427bda7/26-6a940b8c5ed86.webp' /></p><p>
</p><p>
இலங்கையில் இடப்படுகொலை நிகழ்ந்தது என்பதை நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் தனது
தீர்ப்பினை இறுதியாக 2022 ஜெர்மன் நாட்டில் பேர்லினில் கூடிய போது அறிவித்தது.
</p><p>
அதற்கு முன்னர் இது முதலாவதாக 2010 டப்லினிலும் தொடர்ந்து பிரீமனிலும் கூடி
தனது முடிவுகளை அறிவித்த நிலையிலேயே மூன்றாவது தடவையாக ஜெர்மனியில் நடந்த
தீர்ப்பாயத்தின் போது இந்தியா உட்பட மேற்குலக நாடுகளையும் குற்றவாளி நாடுகளாக
அடையாளப்படுத்தியது.</p><p>

இதற்கு முன் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை 2013 மார்ச் 27ஆம் திகதியும், 2015
செப்டம்பர் 16ஆம் திகதியும் இலங்கையில் நடந்தது இனப்படுகொலை தான் என தீர்மானம்
நிறைவேற்றியதை நாம் மறந்து விடக்கூடாது. 

அத்தோடு இலங்கையின் வட மாகாண சபை 2015 பெப்ரவரி 10ஆம் திகதி அத்தகைய தீர்மானத்தை நிறைவேற்றியதையும் நாம் அறிவோம்.
</p><h2>

தமிழ்நாடு சட்டமன்ற பேரவை</h2><p>


தமிழ்நாடு சட்டமன்ற பேரவை, இலங்கை வடமாகாண சபை என்பன அரசியல் சார்ந்த ஒன்றாக
இருந்தாலும் நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் உலகில் புகழ்பெற்ற இடதுசாரி சட்ட
வல்லுநர்களால் சாட்சியங்கள் முறையாக ஆராயப்பட்டு விசாரிக்கப்பட்டு வழங்கிய
தீர்ப்பாகும், அது ஒடுக்கப்படும் மக்கள் இனங்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட
தீர்ப்பாகவே உள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/52c9639c-ece5-47a4-a01f-e1163d6ab4d4/26-6a940b8d245f8.webp' /></p><p>
</p><p>
இலங்கையில் இனப்படுகொலை நிகழ்ந்தது என ஆணித்தரமாக தெற்கில் கூறும் அரசியல்
செயல்பாட்டாளர்களுக்கு எதிராக பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் இலங்கை அரசு
விசாரணை நடாத்த உள்ள நிலையில் அதற்கு முகம் கொடுக்கவும், தமிழர் தாயக மக்களை
தேசிய அரசியலில் ஒருமுகப்படுத்தவும் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை, வட மாகாண சபை
மற்றும் நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் வழங்கிய முடிவுகளை மக்கள் மையப்படுத்த
வேண்டிய பாரிய பொறுப்பு தமிழ் தேசிய அரசியல் களத்தில் இருக்கும் தமிழ் அரசியல்
தலைமைகளுக்கும் சிவில் சமூகத்திற்கும் உள்ளது.</p><p>

கனடா நீதிமன்ற தீர்ப்பினை கையில் எடுத்து இலங்கை சிங்கள பௌத்த பேரனவாதம்
சிலிர்த்துள்ள நிலையில் அதற்கு முகம் கொடுக்கவும் தமிழர் தேசம் தம்மை அரசியல்
ரீதியில் பலப்படுத்தவும் நமது அரசியல் இலக்கை அடைய முடியும் போராட்டத்தை
வலுப்படுத்தவும் வேண்டும்.</p><p>

இல்லையெனின், அடுத்த முள்ளிவாய்க்காலை நோக்கி பயணிப்பவர்களாக இருப்போம் என்பதை மீண்டும் நினைவு கொள்வோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.&nbsp; &nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-30T10:53:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[மனைவியை கோடரியால் தாக்கி கொன்ற கணவன் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/husband-arrested-for-attacking-wife-with-axe-1788086495"></link>
            <id>https://ibctamil.com/article/husband-arrested-for-attacking-wife-with-axe-1788086495</id>
            <summary type="text">&amp;nbsp;நுவரெலியா, பொரலந்த வினாயகபுரம் பிரதேசத்தில் ஏற்பட்ட குடும்பத் தகராறு முற்றியதில் மனைவியின் தலையில் கோடாரியால் தாக்கி அவரைக் கொலை செய்த கணவன் காவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;நுவரெலியா, பொரலந்த வினாயகபுரம் பிரதேசத்தில் ஏற்பட்ட குடும்பத் தகராறு முற்றியதில் மனைவியின் தலையில் கோடாரியால் தாக்கி அவரைக் கொலை செய்த கணவன் காவல்துறையில் சரணடைந்துள்ளார். </p><p>இவ்வாறு கணவனின் தாக்குதலில் உயிரிழந்தவர் அதே பிரதேசத்தைச் சேர்ந்த 43 வயதுடைய சித்ராதேவி என்ற மனைவியாவார்.</p><h2>குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு</h2><p>
</p><p>





குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாகவே தான் மனைவியின் தலையில் கோடாரியால் தாக்கி இந்த காயங்களை ஏற்படுத்தியதாக சந்தேகநபர் காவல்துறையிடம் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/57809b54-a5de-4fce-8ff6-c0636722f430/26-6a940b420c6a4.webp' /></p><p> </p><p>தாக்குதலில் படுகாயமடைந்த பெண்ணை பிரதேசவாசிகள் உடனடியாக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும், அவர் அங்கு உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.</p><p></p><p>

</p><h2>நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில்&nbsp;பிரேத பரிசோதனை</h2><p>உயிரிழந்த பெண்ணின் சடலம் தொடர்பான பிரேத பரிசோதனைக்காக சடலம் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 32 வயதுடைய சந்தேகநபரான கணவன் நுவரெலியா நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/42e6cb0b-43ee-40b7-827e-5c1910074f65/26-6a940b42c0d44.webp' /></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-30T10:52:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டத்தில் கவனம் பெற்ற ஆடைகளும் - கைக்கடிகாரங்களும்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/international-day-of-the-victims-of-enforce-1788084756"></link>
            <id>https://ibctamil.com/article/international-day-of-the-victims-of-enforce-1788084756</id>
            <summary type="text">வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளின் நினைவாக குடும்பத்தினரால் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள ஆடைகள், கைக்கடிகாரங்கள், அவர்கள் பயன்படுத்திய தனிப்பட்ட ...</summary>
            <content type="html"><![CDATA[<p>வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளின் நினைவாக குடும்பத்தினரால் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள ஆடைகள், கைக்கடிகாரங்கள், அவர்கள் பயன்படுத்திய தனிப்பட்ட பொருட்கள் மற்றும் சம்பவங்களுடன் தொடர்புடைய வரலாற்று ஆவணங்கள் என்பன இன்றைய போராட்டத்தில் அனைவரது கவனத்தையும் பெற்றுள்ளன.&nbsp;</p><p>குறித்த வரலாற்று ஆவணங்கள் அடங்கிய உணர்வுபூர்வமான நினைவுப் பொருட்காட்சியும் மாநாட்டு வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாக அங்கிருக்கும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.&nbsp;</p><p>சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு, வடக்கு - கிழக்கு
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் நீதிக்கான நீள் பயணம் எனும் தொனிப்பொருளிலான சர்வதேச மாநாடு இன்று (30.08.2026)
யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.&nbsp;</p><p></p><h2>வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர்</h2><p>இந்த மாநாடு யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் இன்று காலை 9.00 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டது. 

மாநாட்டு அமர்வுகள் ஆரம்பமாவதற்கு முன்னதாக, யாழ். உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டுப் படுகொலை நினைவுத் தூபியில் சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9419dcbf-574a-4b9d-b9a0-20c0bb566396/26-6a94070a88eca.webp' /></p><p>அதனைத் தொடர்ந்து அங்கிருந்து ஆரம்பமாகும் கவனயீர்ப்புப் பேரணி தந்தை செல்வா கலையரங்கைச் சென்றடைந்த பின்னர் மாநாட்டு நிகழ்வுகள் ஆரம்பமாகின.&nbsp;</p><p>இந்நிகழ்வில் வெளிநாட்டு தூதரகங்களின் பிரதிநிதிகள், வடக்கு மற்றும் கிழக்கு
மாகாணங்களைச் சேர்ந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்ப உறுப்பினர்கள்,
மனித உரிமை மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், அரசியல் பிரதிநிதிகள்,
மதத் தலைவர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்ட பலர்
கலந்துகொண்டனர்.&nbsp;</p><p>வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுக்கான நீதி, உண்மை மற்றும்
பொறுப்புக்கூறலை வலியுறுத்தும் வகையில் இந்த சர்வதேச மாநாடு முக்கியத்துவம்
பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-30T10:51:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் நீதிக்கு உரித்துடையவர்களே]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/the-relatives-of-the-victims-of-enforced-1788086586"></link>
            <id>https://ibctamil.com/article/the-relatives-of-the-victims-of-enforced-1788086586</id>
            <summary type="text">வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் குடும்பங்கள் உண்மை மற்றும் நீதி ஆகிய இரண்டுக்கும் உரித்துடையவர்களாவர் என சர்வதேச மன்னிப்புச்சபையின் தெற்காசியப்பிராந்திய...</summary>
            <content type="html"><![CDATA[<p>வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் குடும்பங்கள் உண்மை மற்றும் நீதி ஆகிய இரண்டுக்கும் உரித்துடையவர்களாவர் என சர்வதேச மன்னிப்புச்சபையின் தெற்காசியப்பிராந்தியப் பணிப்பாளர் ஸ்மிரிதி சிங் தெரிவித்துள்ளார்.</p><p>


வலிந்து காணாமலாக்கப்படல்களுக்கு நீதி கோரிய சர்வதேச மாநாட்டில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இலங்கையில் பொறுப்புக்கூறலின் ஆழமான தோல்வியைப் பிரதிபலிக்கிறது எனவும் அவர் தெரிவித்தார்.
</p><p>

மேலும், அரசாங்கம் நல்லிணக்கம் பற்றிப் பேசுகின்ற போதிலும், அரசாங்கத்தின் நோக்கத்துக்கும் செயலுக்கும் இடையில் பெரும் இடைவெளி காணப்படுகிறது எனவும் கூறினார்.
</p><p>

இவ்விடயத்தில் முன்னைய அரசாங்கங்களில் இருந்து மாறுபட்ட அணுகுமுறையைக் கையாள்வதற்கான வாய்ப்பும், கடப்பாடும் தற்போதைய அரசாங்கத்துக்கு இருக்கிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p><b>ஸ்மிரிதி சிங் உரை - 01.07.00</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/uNgBlT2fVUk" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b> WHATSAPP</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-30T10:48:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாளத்தில் 1643 குழந்தைகளின் உயிரை பேராபத்தில் இருந்து காப்பாற்றிய ஆசிரியர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/nepal-headmaster-saves-1643-children-life-in-flood-1788086836"></link>
            <id>https://news.lankasri.com/article/nepal-headmaster-saves-1643-children-life-in-flood-1788086836</id>
            <summary type="text">Nepal Headmaster saves 1643 children life in flood: நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவில் 1,600-க்கும் மேற்பட்ட குழந்தைகளின் உயிரை ஆசிரியர...</summary>
            <content type="html"><![CDATA[<p>Nepal Headmaster saves 1643 children life in flood: நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவில் 1,600-க்கும் மேற்பட்ட குழந்தைகளின் உயிரை ஆசிரியர் ஒருவர் காப்பாற்றினார்.</p><p>
நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் பாடசாலை ஒன்று அடித்துச் செல்லப்பட்ட நிலையில், ஆசிரியர் ஒருவர் 1,600-க்கும் மேற்பட்ட குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றினார்.&nbsp;</p><h2>பாடசாலையின் முதல்வர்</h2><p>
நேபாளத்தின் வடக்கு-மத்திய பகுதியில் உள்ள திரிசூலி பள்ளத்தாக்கில் அமைந்துள்ள திரிபுவன் திரிசூலி மேல்நிலை பாடசாலையின் முதல்வராக பணியாற்றுபவர் இராஜேந்திர தவாடி.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/81978766-d361-4340-a957-51d7e11dc501/26-6a940d4bc7873.webp' /></p><p></p><p>

அப்பகுதியில் ஆற்றின் மேல் பகுதியில் ஐந்து மைல் தொலைவில் உள்ள கிராமம் ஒன்று வெள்ளப்பெருக்கிற்கு இரையானதாக, நண்பர் ஒருவர் மூலம் தவாடிக்கு தகவல் கிடைத்துள்ளது.
</p><p>
அத்துடன் ஆற்றில் இருந்து 200 அடி உயரத்தில் அமைந்திருந்த பாடசாலைக்கு நோக்கி, வெள்ள நீர் வேகமாக உயர்ந்து வருவதாக பெற்றோரும் அவருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். </p><p>

அச்சமயம் 900 குழந்தைகள் ஏற்கனவே பாடசாலைக்கு வந்திருந்தனர். மேலும், 700 குழந்தைகள் நடந்தும், பேருந்திலும் பாடசாலைக்கு வந்து கொண்டிருந்தனர்.&nbsp;</p><h2>1,643 குழந்தைகள்</h2><p>
அப்போது தனது பாடசாலை ஆபத்தான நிலையில் இருப்பதை உணர்ந்த முதல்வர் தவாடி, உடனடியாக பாடசாலை பேருந்து சாரதிகளை தொடர்புகொண்டு திரும்பிச் செல்லுமாறு கூறியிருக்கிறார்.
</p><p>
பின்னர் பாடசாலையில் குழந்தைகளை கவனிக்கத் தொடங்கிய அவர், மாணவர்களை நடந்தே குன்றின் மீது செல்லுமாறு அனுப்பியிருக்கிறார். </p><p>அவரும் அவர்களுடன் பின்தொடர்ந்து சென்றுள்ளார். 

இவ்வாறு 1,643 குழந்தைகள் மற்றும் ஊழியர்கள் சிலரை துரிதமாக செயல்பட்டு அவர் காப்பாற்றியிருக்கிறார்.&nbsp; &nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6b422f3d-cc44-4762-95d1-e2d66a4195a0/26-6a940d4cadd50.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-30T10:44:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் அதிரடி கைதான அரசியல்வாதி ; அரச அதிகாரியின் வீட்டில் நடந்த சம்பவம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/politician-arrested-in-jaffna-1788084928"></link>
            <id>https://jvpnews.com/article/politician-arrested-in-jaffna-1788084928</id>
            <summary type="text">நெல்லியடிப் பகுதியில் ஓய்வுபெற்ற அரச அதிகாரி ஒருவரின் வீட்டின் பாதுகாப்புக் கமராவுக்கு சேதம் விளைவித்த சம்பவம் தொடர்பில் தேசிய மக்கள் சக்தியின் வடமராட...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">நெல்லியடிப் பகுதியில் ஓய்வுபெற்ற அரச அதிகாரி ஒருவரின் வீட்டின் பாதுகாப்புக் கமராவுக்கு சேதம் விளைவித்த சம்பவம் தொடர்பில் தேசிய மக்கள் சக்தியின் வடமராட்சி பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் நெல்லியடி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p style="text-align: justify;">

இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட ஓய்வுபெற்ற அரச அதிகாரி நெல்லிஅடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bfcb63b3-2c17-4a7b-bbb2-af3aa9e345f9/26-6a94089abf82b.webp' /></p><p style="text-align: justify; ">முறைப்பாட்டையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள் இக் கைது நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
கைது செய்யப்பட்டவரை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணைகளை மேற்கொண்ட பின்னர், பொலிஸ் பிணையில் விடுவித்துள்ளதுடன், நாளை திங்கட்கிழமை (31) நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அவருக்குப் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-30T10:35:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆற்றுப்பகுதியில் அழுகிய நிலையில் கிடந்த மனித தலை ; தீவிரமாகும் விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/decayed-human-head-found-in-river-area-1788086062"></link>
            <id>https://jvpnews.com/article/decayed-human-head-found-in-river-area-1788086062</id>
            <summary type="text">மொரட்டுமுல்லை, மேல் இத்பெத்த, குரே பகுதியில் மனித தலை ஒன்று காணப்படுவதாக மொரட்டுமுல்லை பொலிஸாருக்கு 119 அவசர தொலைபேசி இலக்கம் ஊடாகத் தகவல் கிடைத்துள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">மொரட்டுமுல்லை, மேல் இத்பெத்த, குரே பகுதியில் மனித தலை ஒன்று காணப்படுவதாக மொரட்டுமுல்லை பொலிஸாருக்கு 119 அவசர தொலைபேசி இலக்கம் ஊடாகத் தகவல் கிடைத்துள்ளது.</p><p style="text-align: justify; ">


உடலிலிருந்து துண்டிக்கப்பட்ட நிலையில் காணப்பட்ட தலை, தச்சர் பட்டறை ஒன்றின் பின்புறமாக உள்ள ஆற்றுப் பகுதிக்கு அருகில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளதாக மொரட்டுமுல்லை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தினேஷ் ஹெட்டியாரச்சி தெரிவித்தார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/685ac326-02c2-47f0-80c5-be7d93f5c0de/26-6a94072f7d305.webp' /></p><h2 style="text-align: justify; ">மேலதிக விசாரணை</h2><p style="text-align: justify; ">

இன்று ஞாயிற்றுக்கிழமை (30) காலை 8 மணியளவில் குறித்த தச்சர் பட்டறையின் உரிமையாளர் இத் தலையைக் கண்டு பொலிஸாருக்குத் தகவல் வழங்கியுள்ளார்.
</p><p style="text-align: justify; ">
இதனைத் தொடர்ந்து மொரட்டுமுல்லை பொலிஸ் உத்தியோகத்தர்கள், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் கல்கிஸ்ஸ குற்றவியல் தடயவியல் ஆய்வக அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வருகை தந்து களப் பரிசோதனைகளை மேற்கொண்டனர்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
அத்துடன், மொரட்டுவை நீதவான் நீதிமன்றத்தின் பதில் நீதவான் சட்டத்தரணி சந்தமாலி சம்பவ இடத்திற்கு வருகை தந்து பார்வையிட்டார்.

</p><p style="text-align: justify; ">
மீட்கப்பட்ட மனித தலை பெரிதும் அழுகிய நிலையில் மிருகங்களால் கடிக்கப்பட்டவாறு காணப்படுவதாகவும், சம்பவம் தொடர்பில் மொரட்டுமுல்லை பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-30T10:34:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[உண்மையை அறியாமல் எவரும் உயிரிழக்கக்கூடாது! யாழில் ஐ. நா பணிக்குழு உறுப்பினர் எடுத்துரைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/comment-from-a-member-united-nations-working-group-1788085959"></link>
            <id>https://ibctamil.com/article/comment-from-a-member-united-nations-working-group-1788085959</id>
            <summary type="text">வலிந்து காணாமலாக்கப்படல்கள் தொடர்பில் முறையான நம்பகமான ஆதாரங்கள் உள்ள போதிலும், அவற்றை அரச அதிகாரிகள் மறுப்பதை நாம் வலுவாக எதிர்க்கிறோம் என வலிந்து கா...</summary>
            <content type="html"><![CDATA[<p>வலிந்து காணாமலாக்கப்படல்கள் தொடர்பில் முறையான நம்பகமான ஆதாரங்கள் உள்ள போதிலும், அவற்றை அரச அதிகாரிகள் மறுப்பதை நாம் வலுவாக எதிர்க்கிறோம் என வலிந்து காணாமலாக்கபடலகள் தொடர்பான ஐக்கிய நாடுகள் பணிக்குழுவின் உறுப்பினர் அனா லொரெனா டெல்கடில்லோ பேர்ஸ் தெரிவித்துள்ளார்.</p><p>
வலிந்து காணாமலாக்கப்படல்களால் பாதிக்கப்பட்டோருக்கான சர்வதேச தினத்தை முன்னிட்டு, வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளினால் இன்று (30) ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் முதன்முறையாக ஏற்பாடு செய்யப்பட்ட சர்வதேச மாநாட்டில் அவர் ஆற்றிய சிறப்புரையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.</p><p>

அவர் மேலும் தெரிவிக்கையில்,</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/LO_hGxp6zE0" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><h2>மீள்நிகழாமைக்கான பயணம்</h2><p>
</p><p>“உண்மை, நீதி, மீள்நிகழாமைக்கான பயணத்தில் பெரும் எண்ணிக்கையான தாய்மார் பதிலை அறியாமலேயே உயிரிழந்துவிட்டனர் .</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/04358945-9bb0-418b-89d6-ed20105ad234/26-6a940722b5270.webp' /></p><p>இனிவருங்காலங்களில் உண்மையை அறியாமல் எவரும் உயிரிழக்கக்கூடாது.

வலிந்து காணாமலாக்கப்படல்கள் தொடர்பில் அரசாங்கம் முறையான சுயாதீன விசாரணைகளை முன்னெடுத்து, உண்மை மற்றும் நீதியை நிலைநாட்ட வேண்டும்.


அச்செயன்முறைக்கு அவசியமான தொழில்நுட்ப ரீதியான ஒத்துழைப்புக்களை வழங்குவதற்கு நாம் தயாராக இருக்கிறோம்” என்றார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-30T10:33:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>H. A. Roshan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடும் வறட்சியால் திருகோணமலையின் தம்பலகாமம் பகுதி மக்கள் கடும் பாதிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/people-in-trincomalee-severely-affected-by-drought-1788083218"></link>
            <id>https://tamilwin.com/article/people-in-trincomalee-severely-affected-by-drought-1788083218</id>
            <summary type="text">திருகோணமலை - தம்பலகாமம் பகுதியில் நிலவும் கடும் வரட்சி காரணமாக,
கல்மெடியாவ பகுதியில் அமைந்துள்ள இரு குளங்கள் வறண்டு காணப்படுவதாக அந்தப் பகுதி மக்கள் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>திருகோணமலை - தம்பலகாமம் பகுதியில் நிலவும் கடும் வரட்சி காரணமாக,
கல்மெடியாவ பகுதியில் அமைந்துள்ள இரு குளங்கள் வறண்டு காணப்படுவதாக அந்தப் பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.</p><p>அத்துடன் எல் நினோ தாக்கத்தினால் ஏற்பட்டுள்ள வறட்சியான காலநிலை காரணமாக பிரதேசத்தில்
நீர்நிலைகள் படிப்படியாக வற்றிவரும் நிலையில், கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டுள்ள
விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்பாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி
வருவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.</p><h2>கடுமையான வறட்சி</h2><p>அவர்கள் மேலும் தெரிவிக்கையில், குளங்களில் போதியளவு நீர் இல்லாததால் கால்நடைகளுக்கான குடிநீரைப்
பெற்றுக்கொள்வதிலும், அவற்றை பராமரிப்பதிலும் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cb3237bf-8f53-4505-9b46-e666a04f622b/26-6a93ff029af12.webp' /></p><p>குறிப்பாக மாடுகள், ஆடுகள் உள்ளிட்ட கால்நடைகளுக்கு
தேவையான நீர் மற்றும் மேய்ச்சல் நிலங்கள் பற்றாக்குறையாகி வருவதால், கால்நடை
வளர்ப்பாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், வறட்சி நிலை தொடரும் பட்சத்தில் நிலைமை மேலும் மோசமடையக்கூடும்.</p><p>

எங்களின் வாழ்வாதாரம் கால் நடை வளர்ப்பே காணப்படுகிறது. எனவே, பாதிக்கப்பட்ட கால்நடை வளர்ப்பாளர்களுக்கு அவசரமாக குடிநீர் வசதி
மற்றும் கால்நடைகளுக்கான நீர், உள்ளிட்ட அத்தியாவசிய உதவிகளை வழங்க
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை
விடுத்துள்ளனர்.</p><p></p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-30T10:32:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thevanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[காணாமலாக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது..! அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை - அமைச்சர் சரோஜா போல்ராஜ் அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/government-action-regard-disappeared-s-relatives-1788083709"></link>
            <id>https://tamilwin.com/article/government-action-regard-disappeared-s-relatives-1788083709</id>
            <summary type="text">காணாமலாக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதை அறிந்து கொள்வதற்கான நடவடிக்கையை அரசாங்கம் மேற்கொண்டு வருவதாக அமைச்சர் சறோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித...</summary>
            <content type="html"><![CDATA[<p>காணாமலாக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதை அறிந்து கொள்வதற்கான நடவடிக்கையை அரசாங்கம் மேற்கொண்டு வருவதாக அமைச்சர் சறோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்துள்ளார். </p><p>

தேசிய மக்கள் சக்தியின் கண்டாவளை பிரதேசத்திற்கான மக்கள் அலுவலகம் திறப்பு விழா இன்று (30.08.2026) நடைபெற்றது. </p><p>

இந்த நிகழ்வில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
</p><p>
இதன்போது, வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் தொடர்பில் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் பதிலளிக்கையில், நாங்கள் உண்மையாகவே இந்த மக்களுக்கான எங்களுடைய அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7cb61529-d380-43c7-9598-5baa21599b39/26-6a9405f07f855.webp' /></p><h2>தொடர்ந்து போராடும் உறவுகள்</h2><p>

நடந்திருக்கின்ற இந்த அசௌகரியங்கள் அனைத்துக்கும் மத்தியிலும் தங்களுடைய உயிர் உறவுகளைத் தேடி பெண்கள், தாய்மார் மற்றும் உறவினர்கள் போராடிக்கொண்டிருக்கிறார்கள்.
</p><p>
அவர்களை வலுப்படுத்துவதற்கும், அவர்களுக்கான உண்மை நீதி என்ன, என்ன நடந்தது என்பதை அறிந்து கொள்வதற்கும் எங்கள் அரசாங்கம் எப்போதுமே இங்கு மட்டுமல்லாமல் இலங்கை முழுவதும் நடவடிக்கைகளை எடுத்துக்கொண்டுதான் இருக்கின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dbf5f907-250e-4210-beb4-64d4d3e5b9cb/26-6a9405f192bb7.webp' /></p><h2>சட்டத்துறை அமைச்சரின் விஜயம்</h2><p> </p><p>

சட்டத்துறை அமைச்சரும் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு, இந்த பிரதேசத்திற்கு விஜயம் செய்து அவர்களைக் கண்டு அவர்களுடன் ஆலோசித்திருந்தார். </p><p>

உண்மையாகவே எங்கள் அரசாங்கம் இவ்வாறான நிலைகளைக் கண்டறிந்து, நடந்திருக்கின்ற விடயங்களைப் பற்றி தேவையான பரிசோதனைகளையும் விசாரணைகளையும் நடத்திக் கொண்டு வருகின்றது என தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dcc15d8e-2973-43b0-8a67-3a1a07a65ede/26-6a9405f2697a6.webp' /></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-30T10:30:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தியாவிடம் இருந்து பெட்ரோல் இறக்குமதியைத் தீவிரப்படுத்தும் ரஷ்யா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/india-petrol-supplier-to-russia-1788081408"></link>
            <id>https://news.lankasri.com/article/india-petrol-supplier-to-russia-1788081408</id>
            <summary type="text">India emerges as key petrol supplier to Russia: ரஷ்யாவின் முக்கிய பெட்ரோலிய விநியோக நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது.
இந்தியா கடந்த இரண்டு மாதங்களில் க...</summary>
            <content type="html"><![CDATA[<p><b>I</b>ndia emerges as key petrol supplier to Russia: ரஷ்யாவின் முக்கிய பெட்ரோலிய விநியோக நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது.
</p><p>இந்தியா கடந்த இரண்டு மாதங்களில் கிட்டத்தட்ட 10 லட்சம் பீப்பாய் பெட்ரோலை ஏற்றுமதி செய்து, ரஷ்யாவிற்கு பெட்ரோலை வழங்கும் ஒரு முக்கிய நாடாக உருவெடுத்துள்ளது.</p><h2>குஜராத்தில் நயாரா எனர்ஜி</h2><p>
</p><p>ரஷ்ய சுத்திகரிப்பு நிலையங்கள் மீது உக்ரைன் நடத்திய தொடர்ச்சியான ட்ரோன் தாக்குதல்களைத் தொடர்ந்து, புடின் நிர்வாகம் வெளிநாட்டுச் சந்தைகளை நாடும் நிலை ஏற்பட்டுள்ளது. </p><p>சுத்திகரிப்பு ஆலைகளில் ஏற்பட்ட இடையூறுகளால் உள்நாட்டு எரிபொருள் பற்றாக்குறை அதிகரித்ததன் விளைவாக, ரஷ்யாவின் கடல்வழி பெட்ரோல் இறக்குமதி ஆகஸ்ட் மாதத்தில் ஒரு நாளைக்கு சுமார் 125,000 பீப்பாய்கள் என்ற சாதனை அளவை எட்டியது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/82b44f69-72a8-4862-9c8f-e68a67d0c36f/26-6a93f502f3b2e.webp' /></p><p> </p><p>இது அந்த மாதத்திற்கான மதிப்பிடப்பட்ட 470,000 டன்களுக்குச் சமமாகும். இந்தியா மட்டுமின்றி துருக்கி மற்றும் மொராக்கோ ஆகிய நாடுகளில் இருந்தும் ரஷ்யா பெட்ரோல் இறக்குமதியை முன்னெடுத்து வருகிறது. </p><p>இந்தியாவின் விநியோகத்தில் பெரும்பகுதி, ரஷ்யாவின் முன்னணி எண்ணெய் நிறுவனமான ரோஸ்நெஃப்ட் (Rosneft) நிறுவனத்திற்குப் பகுதி உரிமையுள்ள, குஜராத்தில் உள்ள நயாரா எனர்ஜியின் வதினார் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து பெறப்பட்டது.</p><p></p><p> </p><p>2022-ஆம் ஆண்டு முதல் ரஷ்ய கச்சா எண்ணெய் கொள்முதலை இந்தியா கணிசமாக அதிகரித்துள்ளது. பிப்ரவரியில் நாளொன்றுக்கு சுமார் 1 மில்லியன் பீப்பாய்களாக இருந்த ரஷ்ய எண்ணெய் இறக்குமதி, ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் நாளொன்றுக்கு 2.6 மில்லியன் பீப்பாய்களுக்கும் அதிகமாக உயர்ந்தது; இது நாட்டின் மொத்த கச்சா எண்ணெய் இறக்குமதியில் பாதிக்கும் மேற்பட்ட பங்கைக் கொண்டுள்ளது. </p><p>இதன் விளைவாக, இந்தியாவிலிருந்து ரஷ்யாவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்ட பெட்ரோலில் சில, ரஷ்ய கச்சா எண்ணெயைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்பட்டிருக்கலாம் என்றே தெரிய வருகிறது. </p><p>உலகின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் ஏற்றுமதியாளர்களில் ஒன்றான ரஷ்யா, உக்ரேனிய ட்ரோன் தாக்குதல்களால் எரிசக்தி உள்கட்டமைப்பு சேதமடைந்ததாலும், சுத்திகரிப்பு ஆலை செயல்பாடுகள் தடைபட்டதாலும், பெட்ரோலை இறக்குமதி செய்ய நிர்பந்திக்கப்பட்டுள்ளது. </p><p>வெளியாகியுள்ள தகவலின் அடிப்படையில், ரஷ்யாவின் உள்நாட்டு எரிபொருள் உற்பத்தி 70 சதவீதம் வரை சரிந்துள்ளது. ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் ரஷ்யாவின் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது 32 தாக்குதல்கள் நடத்தப்பட்டன; இது சராசரியாக இரண்டு நாட்களுக்கு ஒரு தாக்குதல் என்ற விகிதத்தில் அமைந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/38415a62-401d-4c0a-b6f8-f527b54ef248/26-6a93f5024a375.webp' /></p><p> </p><p>இந்த இடையூறு ரஷ்யாவின் எரிபொருள் ஏற்றுமதியையும் பாதித்துள்ளது. பெட்ரோல் உற்பத்தியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் அல்லாதோர் ஆகிய இரு தரப்பினருக்குமான பெட்ரோல் ஏற்றுமதித் தடையை 2027 ஜனவரி இறுதி வரை ரஷ்யா நீட்டித்துள்ளது; அதேவேளையில், டீசல் ஏற்றுமதி மீதான கட்டுப்பாடுகள் 2026 செப்டம்பர் 1 வரை நீட்டிக்கப்பட்டுள்ளன. </p><p>ஆகஸ்ட் மாதத்தில் ரஷ்யா இறக்குமதி செய்த பெட்ரோலில் சுமார் 55 சதவீதம், அதாவது ஏறக்குறைய 2,60,000 டன்கள், தடைகளுக்கு உட்பட்ட கப்பல்கள் மூலம் வந்தடைந்தது. </p><p>ஆகஸ்ட் மாதத்தில் ரஷ்யாவின் மொத்த பெட்ரோல் இறக்குமதியில் சுமார் 40 சதவீதம் கப்பல்களுக்கு இடையேயான பரிமாற்றங்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0aae2af4-4875-4acd-aa0a-9d60c56b809c/26-6a93f503aa70f.webp' /></p><p> </p><p>இவற்றில் பெரும்பாலானவை, கப்பல்கள் தங்களின் தானியங்கி அடையாள அமைப்பு (AIS) சமிக்ஞைகளை அணைத்துவிட்டு நடத்தப்பட்டன. இதற்கிடையில், ஏற்றுமதி கட்டுப்பாடுகள், சுத்திகரிப்பு நிலைய சேதம் மற்றும் எரிபொருள் முனையங்களில் ஏற்பட்ட இடையூறுகள் காரணமாக ரஷ்யாவின் டீசல் மற்றும் கேஸ்-ஆயில் ஏற்றுமதி தொடர்ந்து நெருக்கடிக்குள்ளானது. </p><p>ஆகஸ்ட் 25 வரையிலான காலகட்டத்தில், கடல் வழியாக மேற்கொள்ளப்பட்ட டீசல் மற்றும் கேஸ் ஆயில் ஏற்றுமதி நாளொன்றுக்கு சுமார் 1,50,000 பீப்பாய்களாக இருந்தது; இது முந்தைய மாதத்துடன் ஒப்பிடுகையில் ஏறக்குறைய மாற்றமின்றி இருந்தாலும், முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தை விட நாளொன்றுக்கு சுமார் 6,10,000 பீப்பாய்கள் குறைவாகும்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-30T10:30:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாக்ஸ் ஆபிஸ்: ஒன்ஸ் மோர் திரைப்படத்தின் 2 நாள் வசூல் விவரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/once-more-movie-2-days-box-office-1788085530"></link>
            <id>https://cineulagam.com/article/once-more-movie-2-days-box-office-1788085530</id>
            <summary type="text">கடந்த 28-ஆம் தேதி வெளியான ஒன்ஸ் மோர் திரைப்படத்தின் 2 நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

ஒன்ஸ் மோர்

தமிழ் சினிமாவில் வில்லனாக அறிமுகமாகி ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கடந்த 28-ஆம் தேதி வெளியான ஒன்ஸ் மோர் திரைப்படத்தின் 2 நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.</p><p></p><p>
</p><h2>
ஒன்ஸ் மோர்</h2><p>

தமிழ் சினிமாவில் வில்லனாக அறிமுகமாகி இன்று ஹீரோவாக கலக்கிக்கொண்டிருக்கிறார் அர்ஜுன் தாஸ். இவர் நடிப்பில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று திரையரங்குகளில் வெளியான திரைப்படம் ஒன்ஸ் மோர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a8ac7826-7562-40ff-a8ef-e283b5005853/26-6a94051d80b79.webp' /></p><p>இப்படத்தில் அதிதி ஷங்கர் கதாநாயகியாக நடிக்க, அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இப்படத்தை இயக்கியுள்ளார். குட் நைட், லவ்வர், டூரிஸ்ட் பேமிலி போன்ற திரைப்படங்களை தயாரித்த Million Dollar Studios நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7bd7b493-b793-44f1-8682-0040f56c2411/26-6a94051ee9955.webp' /></p><p>

பெரிதும் எதிர்பார்ப்புடன் கடந்த 28-ஆம் தேதி வெளியான <a href="https://www.youtube.com/watch?v=l_jk8JWbHbI" target="_blank">ஒன்ஸ் மோர்</a> திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. இதனால் கலவையான விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது.</p><h2>

பாக்ஸ் ஆபிஸ்
</h2><p>
இந்நிலையில், ஒன்ஸ் மோர் திரைப்படம் உலகளவில் 2 நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் 2 நாட்களில் ரூ. 1.5 கோடி வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் எவ்வளவு வசூல் செய்யும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f0074741-eb0c-44bc-a54f-74aaca8d0afc/26-6a94051e38a24.webp' /></p>]]></content>
            <updated>2026-08-30T10:25:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் அரச உத்தியோகத்தரின் வீடு மீது தாக்குதல் : தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/attack-on-a-house-in-jaffna-npp-member-arrested-1788084932"></link>
            <id>https://ibctamil.com/article/attack-on-a-house-in-jaffna-npp-member-arrested-1788084932</id>
            <summary type="text">நெல்லியடியில் உள்ள அரச உத்தியோகத்தரின் வீடொன்றின் மீது தாக்குதல் மேற்கொண்டு ,
அங்கிருந்த கண்காணிப்பு கமராக்களை சேதமாக்கிய குற்றச்சாட்டில் தேசிய மக்கள...</summary>
            <content type="html"><![CDATA[<p>நெல்லியடியில் உள்ள அரச உத்தியோகத்தரின் வீடொன்றின் மீது தாக்குதல் மேற்கொண்டு ,
அங்கிருந்த கண்காணிப்பு கமராக்களை சேதமாக்கிய குற்றச்சாட்டில் தேசிய மக்கள்
சக்தியின் உள்ளூராட்சி உறுப்பினர் உள்ளிட்ட கும்பல் ஒன்று கைது செய்யப்பட்டு
காவல்துறை பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.</p><p>நெல்லியடி பகுதியில் உள்ள ஓய்வுபெற்ற அரச உத்தியோகஸ்தர் ஒருவரின் வீட்டின்
மீது கல்லெறிந்து தாக்குதல் நடாத்தி , வீட்டு வளாகத்தில்
பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கமராக்களையும் குறித்த உள்ளூராட்சி
உறுப்பினர் தலைமையிலான கும்பல் சேதப்படுத்தி உள்ளது.</p><p>

</p><h2>அரசியல் அழுத்தம் காரணம்…!</h2><p>இது தொடர்பில் வீட்டார் நெல்லியடி காவல் நிலையத்திற்கு தொலைபேசி ஊடாக
அறிவித்ததை அடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் கும்பலை மடக்கி
பிடித்து கைது செய்து காவல் நிலையம் கொண்டு சென்று விசாரணைகளின் பின்னர்
காவல்துறை பிணையில் விடுவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3223e8a1-633c-4334-98f5-0d796f121a78/26-6a9402c647e81.webp' /></p><p>

குறித்த நபரை காவல்துறை பிணையில் விடுவிக்க அரசியல் அழுத்தங்களும், காவல்துறை உயர்
அதிகாரிகளின் அழுத்தங்களும் தான் காரணம் என தெரிவிக்கப்படுகிறது.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p><p>&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-30T10:25:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[பயன்படுத்த முடியாத நிலைக்கு சிதைந்துள்ள வாகனங்கள்! வெளியான முக்கிய அறிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/vehicles-held-in-customs-custody-for-8-years-1788074369"></link>
            <id>https://tamilwin.com/article/vehicles-held-in-customs-custody-for-8-years-1788074369</id>
            <summary type="text">கடந்த 8 ஆண்டுகளாக சுங்கத்துறையின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த பெரும்பாலான வாகனங்கள் தற்போது பயன்படுத்த முடியாத நிலைக்கு சிதைந்துள்ளதாக தணிக்கை அறிக...</summary>
            <content type="html"><![CDATA[<p>கடந்த 8 ஆண்டுகளாக சுங்கத்துறையின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த பெரும்பாலான வாகனங்கள் தற்போது பயன்படுத்த முடியாத நிலைக்கு சிதைந்துள்ளதாக தணிக்கை அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.</p><p>

2025 ஆம் ஆண்டுக்கான சுங்கத்துறையின் வருடாந்திர செயல்திறன் அறிக்கையில் இந்த விடயம் தெரியவந்துள்ளது. </p><p>

மட்டக்குளி மற்றும் ருஹுனுபுர துறைமுக பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த பல வாகனங்கள் சிதைந்து அழிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.</p><h2>சிதைந்துள்ள வாகனங்கள்</h2><p>

அதன்படி, சுங்கத்துறையால் காவலில் எடுக்கப்பட்ட 329 வாகனங்கள் மட்டக்குளி பகுதியில் ஒரு தனியார் நிறுவனத்திடமிருந்து பெறப்பட்ட நிலத்திலும், மேலும் 108 வாகனங்கள் ருஹுனுபுர துறைமுகப் பகுதியிலும் வைக்கப்பட்டிருந்தன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c4fa3e69-a4ba-4a12-8cdc-6732a11aac18/26-6a9402a21acca.webp' /></p><p>

மேலும், இந்த வாகனங்களில் பெரும்பாலானவை முற்றங்களில் நிறுத்தப்பட்டிருந்ததால் தற்போது சிதைந்து பயன்படுத்த முடியாத நிலைக்கு சென்றுள்ளதாக அறிக்கைகள் சுட்டிக்காட்டியுள்ளன.
</p><p>
இதன் காரணமாக, சம்பந்தப்பட்ட வாகனங்களை ஏலம் விடுவதன் மூலம் கூட நியாயமான தொகையை ஈட்டுவது சாத்தியமற்றது என்றும் தெரிவித்துள்ளது.</p><p>

சுங்கத்துறை அவசரச் சட்டத்தின் 109 ஆம் பிரிவின்படி சுங்கத்துறை செயல்படாததாலேயே இந்த நிலை ஏற்பட்டுள்ளது என்றும் அந்த அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.&nbsp; &nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-30T10:15:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[செவ்வாய்–புதன் உருவாக்கும் லாப திருஷ்டி யோகம்: செப்டம்பர் 01முதல் இந்த ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை உறுதி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/mercury-mars-forms-labha-drishti-yoga-who-get-luck-1788081388"></link>
            <id>https://manithan.com/article/mercury-mars-forms-labha-drishti-yoga-who-get-luck-1788081388</id>
            <summary type="text">ஆகஸ்ட் மாதம் முடிந்து செப்டம்பர் மாதம் தொடங்க உள்ளது. இந்த மாதத்தில் பல முக்கிய கிரக மாற்றங்கள் நடைபெறுவதால், ஜோதிட ரீதியாக செப்டம்பர் மாதம் முக்கியமா...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஆகஸ்ட் மாதம் முடிந்து செப்டம்பர் மாதம் தொடங்க உள்ளது. இந்த மாதத்தில் பல முக்கிய கிரக மாற்றங்கள் நடைபெறுவதால், ஜோதிட ரீதியாக செப்டம்பர் மாதம் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. இந்த கிரக மாற்றங்களின் மூலம் சில சக்திவாய்ந்த ராஜயோகங்களும் உருவாக உள்ளன.
</p><p>
செப்டம்பர் 1ஆம் தேதி செவ்வாய் மற்றும் புதன் இணைந்து லாப திருஷ்டி யோகத்தை உருவாக்க உள்ளன. ஜோதிட சாஸ்திரப்படி, இரண்டு கிரகங்கள் ஒன்றுக்கொன்று 60 டிகிரி கோணத்தில் அமைந்தால் லாப திருஷ்டி யோகம் உருவாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/596011e3-661d-4337-91d6-7b9cc8eae2af/26-6a94005b3050e.webp' /></p><p></p><p> இது சக்திவாய்ந்த பஞ்ச யோகங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

செவ்வாய்-புதன் இணைவால் உருவாகும் இந்த யோகத்தின் பலன்கள் அனைத்து ராசிக்காரர்களுக்கும் கிடைத்தாலும், சில ராசிக்காரர்கள் கூடுதல் அதிர்ஷ்டத்தையும் நன்மைகளையும் அனுபவிக்க உள்ளனர். அந்த ராசிகள் எவை என்பதை இந்தப் பதிவில் தெரிந்து கொள்ளலாம்.</p><h2>மேஷம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f2c44e6f-0ed5-439b-986a-7712cbaa4bd9/26-6a94005be07f3.webp' /></p><p>
செவ்வாயால் ஆளப்படும் மேஷ ராசிக்காரர்கள் இந்த யோகத்தால் சிறப்பான பலன்களை அனுபவிக்கப்போகிறார்கள். பொருளாதார ரீதியாக இது சிறப்பான காலமாக இருக்கும்.</p><p> கடந்த காலத்தில் தடைப்பட்ட வேலைகளை மீண்டும் வெற்றிகரமாகத் தொடங்கலாம். பணியில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்க வாய்ப்புள்ளது.&nbsp;</p><p>அவை சவாலாக இருந்தாலும், திறமையை நிரூபிக்கும் வாய்ப்பாக அமையும்.

புதிய முதலீடுகளை மேற்கொள்ள இது ஏற்ற காலம். கிடைக்கும் வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி லாபம் பெறலாம்.&nbsp;</p><h2><span style="color: inherit; font-size: 1.75rem;">மிதுனம்</span></h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4f0fb856-22b0-46de-b32f-70ca02d6c936/26-6a94005c94741.webp' /></p><p>மிதுன ராசிக்காரர்கள் இந்த யோகத்தால் எதிர்பாராத நன்மைகளைப் பெறப்போகிறார்கள். சமூகத்தில் அங்கீகாரமும் மரியாதையும் அதிகரிக்கும். </p><p>நீண்டகாலமாக இருந்து வந்த நிதிச் சிக்கல்கள் முடிவுக்கு வருவதுடன், பல ஆசைகளும் நிறைவேறும்.

திருமண வாழ்க்கையில் அன்பும் பரஸ்பர பாசமும் அதிகரிக்கும். வாழ்க்கைத்துணை மூலம் நல்ல செய்தி தேடி வரும்.</p><p> உடல் மற்றும் மன ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். நண்பர்களுடன் வெளியூர் செல்லும் வாய்ப்புகள் உருவாகும். வியாபாரிகளுக்கு பெரிய லாபம் கிடைக்கும்.</p><h2>
கன்னி</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/734b1e85-b7e2-4578-9d1a-a9b01cbbe54f/26-6a94005d46002.webp' /></p><p></p><h2>
</h2><p>கன்னி ராசிக்காரர்களுக்கு இது வெற்றிகள் குவியும் காலமாக இருக்கும். நிதி நிலை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும். </p><p>லாப திருஷ்டி யோகம் நிதி ஸ்திரத்தன்மையையும் சமூக அந்தஸ்தையும் அதிகரிக்கக்கூடும்.

புதிய கார் அல்லது வீடு வாங்க நினைப்பவர்களுக்கு இது ஏற்ற காலம். </p><p>திருமணமானவர்களின் உறவில் அன்பும் புரிதலும் அதிகரிக்கும். நிதி நிலை மேம்படுவதுடன், மன நிம்மதியும் அதிகரிக்கும். ஒட்டுமொத்தமாக, இந்த யோகம் வாழ்க்கையில் வெற்றி, ஸ்திரத்தன்மை மற்றும் மகிழ்ச்சியைத் தரும்.</p><p><b>இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;&nbsp;</b></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b>&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-30T10:08:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kiyas Shafe</name>
            </author>
            <title type="text"><![CDATA[கந்தளாய் பகுதியில் போதைப்பொருளுடன் இருவர் கைது: பொலிஸார் விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/2-men-arrested-in-kandalaksha-1788082353"></link>
            <id>https://tamilwin.com/article/2-men-arrested-in-kandalaksha-1788082353</id>
            <summary type="text">கந்தளாயில் - அக்போபுர பகுதியில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை
நடவடிக்கையின் போது, 10 இலட்சம் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான போதைப்பொருளுடன் இர...</summary>
            <content type="html"><![CDATA[<p>கந்தளாயில் - அக்போபுர பகுதியில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை
நடவடிக்கையின் போது, 10 இலட்சம் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான போதைப்பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>குறித்த கைது நடவடிக்கையானது நேற்று (29.08.2026) மாலை மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p><h2>போதைப்பொருள் கைப்பற்றல்</h2><p>

கந்தளாயிலிருந்து கபரணைக்கு கொண்டு செல்லத்தயாராக இருந்த நிலையில் சுமார் 60 கிராம் அளவிலான போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
</p><p>
கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் சீனிபுர பகுதியைச் சேர்ந்த 33 வயதுடையவர்
எனவும், மற்றையவர் கபரண திகம்பத்த பகுதியைச் சேர்ந்த 33 வயதுடையவர் எனவும்
அக்போபுர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7126373b-4f53-4ef7-9da6-fbc90b07868d/26-6a93faf882377.webp' /></p><p>குறித்த சந்தேகநபர்களிடமிருந்து மோட்டார் சைக்கிள் ஒன்றும்
பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது. </p><p>கைது செய்யப்பட்ட இருவரும் இன்று (30) நீதிமன்றத்தில்
முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.
</p><p>இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்போபுர பொலிஸார் முன்னெடுத்து
வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-30T09:59:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[&quot;நீதிக்கான நீள்பயணம்&quot;யாழில் ஆரம்பமானது சர்வதேச மாநாடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/journey-to-justice-international-conferencejaffna-1788083735"></link>
            <id>https://ibctamil.com/article/journey-to-justice-international-conferencejaffna-1788083735</id>
            <summary type="text">சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தில் &quot;நீதிக்கான நீள்பயணம்&quot; எனும் தலைப்பில் யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கத்தில் மாபெரும் சர்வதேச மாநாடு ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தில் "நீதிக்கான நீள்பயணம்" எனும் தலைப்பில் யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கத்தில் மாபெரும் சர்வதேச மாநாடு ஆரம்பமாகியுள்ளது.</p><p>

மாநாட்டுக்கு முன்னதாக இன்று காலை யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்திற்கு முன்பாக அமைந்துள்ள உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலை நினைவுத் தூபியிலிருந்து கவனயீர்ப்பு பேரணி ஆரம்பிக்கப்பட்டு, தந்தை செல்வா கலையரங்கை அடைந்து, நீதிக்கான நீள் பயணம் என்ற சர்வதேச மாநாடு ஆரம்பிக்கப்பட்டது.
</p><p>
வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் மாநாட்டில் சர்வதேச ராஜதந்திரிகள், பல்கலைக்கழக மாணவர்கள், அரசியல் கட்சிகள், பொது அமைப்புகள், மதத்தலைவர்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்துகொண்டுள்ளனர்.&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/LO_hGxp6zE0" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-30T09:56:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வைத்திய நிபுணர்கள் கோரும் அனைத்து மருந்துகளையும் வழங்க முடியாது! சுகாதார அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/cannot-provide-all-requested-medicines-1788076894"></link>
            <id>https://tamilwin.com/article/cannot-provide-all-requested-medicines-1788076894</id>
            <summary type="text">வைத்திய நிபுணர்கள் கோரும் அனைத்து மருந்துகளையும் அரசாங்கத்தால் வழங்க முடியாது என சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்....</summary>
            <content type="html"><![CDATA[<p>வைத்திய நிபுணர்கள் கோரும் அனைத்து மருந்துகளையும் அரசாங்கத்தால் வழங்க முடியாது என சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
</p><p>
அரசாங்க வைத்தியசாலைகளில் ஒரு சில மருந்து பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக வெளியாகும் செய்திகள் குறித்து அவரிடம் வினவிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.</p><p>இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,&nbsp;</p><h2>நிதி மோசடியால் ஏற்பட்டுள்ள பாதிப்பு</h2><p>
</p><p>பெரும்பான்மையாக பயன்படுத்தப்படும் மிக முக்கியமான மருந்துகளுக்கு அரசாங்கம் நிதி ஒதுக்கும். அதே போன்று நாட்டின் பொருளாதாரம் வலுப்பெற்றவுடன் வைத்தியர்களால் கோரப்படும் மருந்துகள் மற்றும் அறுவை சிகிச்சை உபகரணங்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/728ba637-63c0-498d-b356-f4455df7531c/26-6a93f48296d33.webp' /></p><p>மருந்துகள் வழங்குவதில் ஏதேனும் தாமதம் ஏற்பட்டால், பிராந்திய நிறுவனங்களின் பிரதானிகள் மருந்துகள் மற்றும் அறுவை சிகிச்சை உபகரணங்களை கொள்முதல் செய்வதற்கான ஒரு முறை உருவாக்கப்பட்டுள்ளது. </p><p>சம்பந்தப்பட்ட நிபுணர் கோரிக்கை விடுத்த பிறகு, மருந்து கலவையாளரின் ஒப்புதலுடன் வைத்தியசாலை பணிப்பாளர் அதை மருந்து வழங்கல் பிரிவிடம் சமர்ப்பிக்கலாம்.</p><p>

முந்தைய சுகாதார அமைச்சர் மற்றும் அதிகாரிகளால் செய்யப்பட்ட கடுமையான நிதி மோசடியால் சுகாதார அமைச்சு கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. </p><p>அதன் காரணமாகவே இவ்வாறான நிலைமை ஏற்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-30T09:51:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுவிட்சர்லாந்தில் இரவு நிகழ்ச்சி ஒன்றில் துப்பாக்கிச் சூடு... ஒருவர் மரணம், பலர் காயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/swiss-rave-kills-woman-injures-five-1788083320"></link>
            <id>https://news.lankasri.com/article/swiss-rave-kills-woman-injures-five-1788083320</id>
            <summary type="text">Shooting at rave party in Switzerland: சுவிட்சர்லாந்தில் இரவு நேரம் நடந்த நடனம் மற்றும் இசை நிகழ்ச்சியில் துப்பாக்கிச் சூடு.
வடக்கு சுவிட்சர்லாந்தில்...</summary>
            <content type="html"><![CDATA[<p>Shooting at rave party in Switzerland: சுவிட்சர்லாந்தில் இரவு நேரம் நடந்த நடனம் மற்றும் இசை நிகழ்ச்சியில் துப்பாக்கிச் சூடு.
</p><p>வடக்கு சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற இரவு நேர இசை மற்றும் நடன விருந்து ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டதாகவும், ஐந்து பேர் காயமடைந்ததாகவும் உள்ளூர் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><h2>ஆராவர் ரேவ்</h2><p> </p><p>
தாக்குதல் நடத்திய நபரை இதுவரை அடையாளம் காணப்படாத நிலையில், தீவிரமாகத் தேடி வருவதாகவும் பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/61ec3bdd-3018-413e-907c-290c2a77f347/26-6a93fc7a3585c.webp' /></p><p> சூரிச்சின் மேற்கே உள்ள ஆராவ் நகரில் இந்தச் சம்பவம் நடந்ததை அடுத்து, காவல்துறை பெரிய அளவில் களமிறங்கியுள்ளது. 'ஆராவர் ரேவ்' (Aarauer Rave) நிகழ்வின் ஒரு பகுதியாக நடந்த இந்த நிகழ்ச்சியின்போது, அதிகாலை 3 மணிக்கு முன்னதாக துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக சுவிஸ் நாளிதழான 'பிளிக்' (Blick) தனது இணையதளத்தில் செய்தி வெளியிட்டுள்ளது. </p><p>சனிக்கிழமை பிற்பகல் 3 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2 மணி வரை நடைபெற்ற வருடாந்திர டெக்னோ பார்ட்டியில் சுமார் 3,500 பேர் கலந்துகொண்டனர்.</p><p></p><p> </p><p>அந்த நிகழ்ச்சி நடைபெற்ற பந்தய மைதானத்தில்தான் துப்பாக்கிச் சூடு சம்பவம் நிகழ்ந்ததாகக் காவல் துறை செய்தித் தொடர்பாளர் வனேசா ரம்போல்ட் அந்தப் பத்திரிகையிடம் கூறியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>மேலும், பெரும் மக்கள் கூட்டத்திற்குள் பலமுறை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது என்றே ரம்போல்ட் குறிப்பிட்டுள்ளார். மரணமடைந்தவர் 22 வயது பெண் என்றே தெரிய வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9004856c-025a-49d9-80a7-eb2cd3f9fa46/26-6a93fc7adc7c4.webp' /></p><p> </p><p>ஆராவ் நகரம், சூரிச்சிலிருந்து மேற்கே சுமார் 46 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது மற்றும் இங்கு ஏறத்தாழ 23,000 மக்கள் வசிக்கின்றனர். மட்டுமின்றி, இது ஜேர்மனியுடனான எல்லையிலிருந்து 25 மைல்களுக்கும் குறைவான தூரத்தில் உள்ளது. </p><p>ஐரோப்பாவிலேயே அதிக துப்பாக்கி உரிமையாளர் விகிதங்களைக் கொண்ட நாடுகளில் சுவிட்சர்லாந்தும் ஒன்றாகும். இருப்பினும், வன்முறைத் துப்பாக்கிச் சூடுகள் அரிதாகவே நிகழ்கின்றன, மேலும் சமீபத்திய ஆண்டுகளில் கடுமையான கட்டுப்பாடுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-30T09:46:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாக்ஸ் ஆபிஸ்: விஸ்வநாத் &amp; சன்ஸ் திரைப்படம் உலகளவில் 16 நாட்களில் செய்துள்ள வசூல்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/vishwanath-and-sons-16-days-box-office-1788082052"></link>
            <id>https://cineulagam.com/article/vishwanath-and-sons-16-days-box-office-1788082052</id>
            <summary type="text">விஸ்வநாத் &amp;amp; சன்ஸ் திரைப்படம் வெளிவந்து 16 நாட்கள் ஆகிவிட்ட நிலையில், இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

விஸ...</summary>
            <content type="html"><![CDATA[<p>விஸ்வநாத் &amp; சன்ஸ் திரைப்படம் வெளிவந்து 16 நாட்கள் ஆகிவிட்ட நிலையில், இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
</p><h2>
விஸ்வநாத் &amp; சன்ஸ்
</h2><p>
தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களில் ஒருவரான சூர்யா நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 14-ஆம் தேதி வெளியான திரைப்படம் விஸ்வநாத் &amp; சன்ஸ். இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்து இளைஞர்களின் மனதை கொள்ளையடித்தார் நடிகை மமிதா பைஜூ.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/96cbde90-9497-42ee-a2bb-39a4e3c48e01/26-6a93f788cacb3.webp' /></p><p>பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளியான இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்கள் கிடைத்தன. ஆனாலும், பாக்ஸ் ஆபிஸில் நல்ல வரவேற்பை பெற்றது.
</p><h2>
பாக்ஸ் ஆபிஸ்</h2><p>

தயாரிப்பு நிறுவனங்கள் தங்களின் படம் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த அறிவிப்பை வெளியிடுவார்கள். அந்த வகையில், விஸ்வநாத் &amp; சன்ஸ் திரைப்படம் 16 நாட்களில் உலகளவில் எவ்வளவு வசூலித்துள்ளது என்பது குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/03e89461-65ce-45f2-bf7d-a2625e2be67d/26-6a93f7881ba1f.webp' /></p><p>அதன்படி, 16 நாட்களில் விஸ்வநாத் &amp; சன்ஸ் உலகளவில் ரூ. 240 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது என அப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-30T09:40:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரமாண்டமாக உருவாகியுள்ள ‘போராட்டம்’ – Trailer வெளியீட்டுக்கு இன்னும் சில நாட்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/porattam-movie-trailer-1788082196"></link>
            <id>https://tamilwin.com/article/porattam-movie-trailer-1788082196</id>
            <summary type="text">ஐபிசி தமிழ் நிறுவனத்தின் பிரமாண்ட தயாரிப்பில் உருவாகியுள்ள ‘போராட்டம்’ திரைப்படத்தின் முன்னோட்டம்( Trailer) எதிர்வரும் செப்டெம்பர் 2ஆம்திகதி வெளியாகவு...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஐபிசி தமிழ் நிறுவனத்தின் பிரமாண்ட தயாரிப்பில் உருவாகியுள்ள ‘போராட்டம்’ திரைப்படத்தின் முன்னோட்டம்( Trailer) எதிர்வரும் செப்டெம்பர் 2ஆம்திகதி வெளியாகவுள்ளது.
</p><p>
ஈழத்து கலைஞர்களை முன்னிலைப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம் எதிர்வரும் ஒக்டோபர் 2ஆம் திகதி வெளியாகவுள்ளது.


இந்த திரைப்படத்தை ராஜ் சிவராஜ் இயக்கியுள்ளதுடன், பூவன் மதீசன் இசையமைத்துள்ளார்.</p><h2>போராட்டம்</h2><p>
</p><p>

திரைப்படத்தை தயாரிப்பாளர் மற்றும் தொழிலதிபரான ஐபிசி கந்தையா பாஸ்கரன் தயாரித்துள்ளார். 

‘போராட்டம்’ திரைப்படத்தின் மூலம் பாஸ்கரன் றீகன் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.</p><p>

போராட்டம்’ திரைப்படத்திற்கு U சான்றிதழ் கிடைத்திருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/01dbd2e7-0591-45bf-88aa-2bb00e835aa3/26-6a93f9dcab12a.webp' /></p><p>
ஈழ சினிமாவில் இதுவரை வெளியாகியுள்ள திரைப்படங்களில் நீளமான திரைப்படமாக ‘போராட்டம்’ உருவாக்கப்பட்டுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.</p><p>

ஈழ சினிமாவில் புதிய திருப்புமுனையை ஏற்படுத்தும் முயற்சியாக உருவாகியுள்ள இந்த திரைப்படம் இலங்கையில் மட்டுமன்றி புலம்பெயர் நாடுகளிலும் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
</p><p>

‘போராட்டம்’ திரைப்படம் ஐபிசி தமிழின் தயாரிப்பில் வெளியாகும் நான்காவது முழுநீள திரைப்படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.</p><p>

ஈழத்து கலைஞர்களின் பங்களிப்புடன் உருவாகியுள்ள ‘போராட்டம்’ திரைப்படம் எதிர்வரும் ஒக்டோபர் 2ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-30T09:37:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[03 நாட்களுக்குப் பின் மண்ணுக்குள் கேட்ட அழுகுரல் ; நேபாள பேரழிவில் 6 வயது சிறுமிக்கு நடந்த சம்பவம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/6-year-old-girl-dies-in-nepal-disaster-1788072282"></link>
            <id>https://jvpnews.com/article/6-year-old-girl-dies-in-nepal-disaster-1788072282</id>
            <summary type="text">நேபாளத்தில் ஏற்பட்ட பயங்கர வெள்ளம், சேறு மற்றும் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த 6 வயது சிறுமி மூன்று நாட்களுக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">நேபாளத்தில் ஏற்பட்ட பயங்கர வெள்ளம், சேறு மற்றும் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த 6 வயது சிறுமி மூன்று நாட்களுக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. </p><p style="text-align: justify; ">ராசுவா மாவட்டத்தின் திமுரே கிராமத்தில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8687c614-329e-4347-918e-33b0b15cd391/26-6a93d15b86352.webp' /></p><h2 style="text-align: justify; ">மீட்புப் படை</h2><p style="text-align: justify; "><br></p><p>
</p><p style="text-align: justify; "> 
போதே கோஷி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் அந்தப் பகுதி முழுவதும் சேறும் சகதியும் நிறைந்திருந்தது. </p><p style="text-align: justify; ">வெள்ளத்தில் சிக்கியவர்களை தேடும் பணியில் ஈடுபட்டிருந்த ஆயுத காவல் படையினர், மண்ணுக்கு அடியில் இருந்து மெல்லிய அழுகுரல் கேட்பதை கவனித்தனர்.</p><p style="text-align: justify; "> உடனடியாக அந்த இடத்தில் தோண்டத் தொடங்கிய அவர்கள், மண்ணுக்குள் சிக்கியிருந்த சிறுமியை பத்திரமாக வெளியே கொண்டு வந்தனர்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
 
முதலில் திமுரே எல்லை பாதுகாப்பு முகாமில் சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் உடல்நிலை மோசமடைந்ததால் மேல் சிகிச்சைக்காக காத்மாண்டுவுக்கு அழைத்து செல்ல முடிவு செய்யப்பட்டது.</p><p style="text-align: justify; "> மோசமான வானிலை காரணமாக ஹெலிகாப்டர் பயணம் தாமதமானாலும், வானிலை சீரானதும் சிறுமி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; "> 
சிறுமியின் பெயர் மணிஷா மகர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது குடும்பத்தினரை அதிகாரிகள் தீவிரமாக தேடி வருகின்றனர். </p><p style="text-align: justify; ">இந்த மீட்பு வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி, மீட்புப் படையினரின் அர்ப்பணிப்புக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.</p>]]></content>
            <updated>2026-08-30T09:34:49+00:00</updated>
        </entry>
    </feed>
