<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-09-15T16:28:48+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[இது நல்லா இருக்கே.. தனுஷ் - தமிழரசன் பச்சமுத்து இணையும் பட டைட்டில்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/is-this-the-title-of-dhanush56-1789489236"></link>
            <id>https://cineulagam.com/article/is-this-the-title-of-dhanush56-1789489236</id>
            <summary type="text">தனுஷ் அடுத்து லப்பர் பந்து பட புகழ் இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஒரு படம் நடிக்க இருக்கிறார்.அந்த படத்தை தனுஷ்56 என தற்காலிகமாக அழைத்து வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>தனுஷ் அடுத்து லப்பர் பந்து பட புகழ் இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஒரு படம் நடிக்க இருக்கிறார்.</p><p>அந்த படத்தை தனுஷ்56 என தற்காலிகமாக அழைத்து வருகிறார்கள். இந்த படத்தின் ஷூட்டிங் விரைவில் மதுரையில் தொடங்க இருக்கிறது.</p><p>இன்னும் ஒரு சில தினங்களில் படத்தின் பூஜை நடைபெற இருப்பதாக தகவல் வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/195930ad-81ca-437d-8f34-6e69b4bbfc9f/26-6aa970576cb68.webp' /></p><h2>டைட்டில் </h2><p>
இந்நிலையில் இந்த படத்தின் டைட்டில் என்ன என்பது பற்றி ஒரு தகவல் கசிந்து இருக்கிறது. அந்த படத்திற்கு "படையல்" என டைட்டில் வைத்திருப்பதாக ட்விட்டரில் ஒரு நபர் பதிவிட, அந்த டைட்டில் நன்றாக இருக்கிறதே என இயக்குனர் ரிப்ளை செய்திருக்கிறார்.
</p><p><b>"படையல் நல்லா இருக்கே.. நான் ஏன் யோசிக்காமல் போனேன்.. சரி ஓகே பேசாம 'எ தமிழரசன் பச்சமுத்து படையல்'-ன்னு போட்டு விடுறேன். நன்றி"</b> என அந்த நபருக்கு தமிழரசன் பச்சமுத்து பதில் அளித்து இருக்கிறார். அவரது பதிவு இதோ.</p><p>&nbsp;</p><p>
</p><p>
</p>]]></content>
            <updated>2026-09-15T16:20:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[தெஹிவளை குண்டுத் தாக்குதல்: சந்தேக நபர் வெளியிட்ட பகீர் தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/mistakenly-bombed-to-another-house-1789487955"></link>
            <id>https://tamilwin.com/article/mistakenly-bombed-to-another-house-1789487955</id>
            <summary type="text">&amp;nbsp;தெஹிவளை பகுதியில் இரு சிறுவர்கள் உயிரிழக்கக் காரணமான கைக்குண்டுத் தாக்குதலில், ஒரே ஒரு சுவர் இடைவெளியால் தவறான வீடு இலக்கு வைக்கப்பட்டதாகக் கைது...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;தெஹிவளை பகுதியில் இரு சிறுவர்கள் உயிரிழக்கக் காரணமான கைக்குண்டுத் தாக்குதலில், ஒரே ஒரு சுவர் இடைவெளியால் தவறான வீடு இலக்கு வைக்கப்பட்டதாகக் கைது செய்யப்பட்ட முக்கிய சந்தேக நபர் காவல்துறையினரிடம் திடுக்கிடும் வாக்குமூலம் அளித்துள்ளார்.
</p><p>கடந்த செப்டம்பர் 11 ஆம் திகதி அதிகாலை, தெஹிவளை சிறிசங்கபோ மாவத்தையில் உள்ள வீடு ஒன்றின் மீது வீசப்பட்ட கைக்குண்டு வெடித்ததில் 11 மற்றும் 17 வயதுடைய இரு சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
</p><p>இத்தாக்குதலில் படுகாயமடைந்த அவர்களின் தந்தையின் ஒரு கால் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a8a54136-e5c4-4e19-8dbc-d28949e8a0f9/26-6aa96b55987bd.webp' /></p><p> </p><p>
தாக்குதலுக்குத் திட்டமிடப்பட்ட வீடும், தாக்குதலுக்கு உள்ளான வீடும் ஒரே ஒரு சுவரால் மட்டுமே பிரிக்கப்பட்டிருந்ததால், தவறுதலாக இக்குடும்பத்தின் மீது குண்டு வீசப்பட்டதாகக் கைதான நபர் ஒப்புக்கொண்டுள்ளார்.
</p><p>பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த 'கொஸ் மல்லி' என்ற தனது உறவினர் மற்றும் போதிய வத்த பகுதியைச் சேர்ந்த 'அவிஷ்கா' ஆகியோரின் தூண்டுதலின் பேரிலேயே இத்தாக்குதலை நடத்தியதாகச் சந்தேக நபர் தெரிவித்துள்ளார்.</p><p> 
தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட முச்சக்கர வண்டியின் நிறத்தை மாற்றுவதற்காகக் கேரேஜ் ஒன்றிற்கு எடுத்துச் செல்லப்பட்டதைக் காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.</p><p> 
வாகனத்தைக் கேரேஜில் ஒப்படைத்த நபர் மற்றும் கேரேஜ் உரிமையாளர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>
செப்டம்பர் 10 இரவு 9 மணியளவில், களுபோவில சரணங்கர வீதியைச் சேர்ந்த ஹிருத்ம ஷாஷ்மிக என்ற 'ஹிரு மல்லி' மற்றும் தாக்குதலை நடத்திய மதுஷ்க ரேணுக பெர்னாண்டோ என்ற 'மது' ஆகியோர் அந்த முச்சக்கர வண்டியை எடுத்துச் சென்றதாகக் கைது செய்யப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர். </p><p>
மேலும், ஆகஸ்ட் 1 ஆம் திகதி இரத்மலானை கண்டவல வீதியில் 'ஜதுங்க பிரியந்த' என்பவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்திலும் 'மது' என்பவரே துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் என்பதும் விசாரணையில் அம்பலமாகியுள்ளது. </p><p>
தற்போது தாக்குதலை நடத்திய நபர் மற்றும் முச்சக்கர வண்டி சாரதி ஆகிய இருவரை மேல் மாகாண தெற்கு குற்றப்பிரிவு காவல்துறையினர் தடுப்புக் காவலில் வைத்து விசாரித்து வருகின்றனர். 
இவர்கள் இருவரும் விரைவில் நீதிமன்ற அடையாள அணிவகுப்பில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-15T16:10:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் ஜோதிடரிடம் வாழ்நாள் சேமிப்பு முழுவதையும் இழந்த பெண்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/woman-devastated-after-losing-96k-in-1789481669"></link>
            <id>https://canadamirror.com/article/woman-devastated-after-losing-96k-in-1789481669</id>
            <summary type="text">&amp;nbsp;கனடாவின் டொராண்டோ நகரைச் சேர்ந்த பெண் ஒருவர், தான் கடுமையான உடல்நலப் பாதிப்பிலும் குடும்ப உறுப்பினர்களின் இழப்பிலும் தவித்த தருணத்தைப் பயன்படுத்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கனடாவின் டொராண்டோ நகரைச் சேர்ந்த பெண் ஒருவர், தான் கடுமையான உடல்நலப் பாதிப்பிலும் குடும்ப உறுப்பினர்களின் இழப்பிலும் தவித்த தருணத்தைப் பயன்படுத்தி, ஜோதிடர் ஒருவர் தன்னிடம் இருந்து சுமார் 96,000 டாலர்களை ஏமாற்றிவிட்டதாக வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
</p><p>தன் அடையாளத்தை வெளிப்படுத்த விரும்பாத அந்தப் பெண், தன்னை 'நேன்சி' என்ற பெயரில் ஊடகத்திடம் தனது துயரத்தைப் பகிர்ந்துள்ளார்.
</p><p>இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, கடுமையான இடுப்பு வலியால் அவதிப்பட்டு வந்த நேன்சி, அதே காலகட்டத்தில் தனது தந்தை மற்றும் சகோதரரை அடுத்தடுத்து இழந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c3c8cbb6-aed5-4504-b8c5-e986bb822035/26-6aa952c7685b1.webp' /></p><p> </p><p>
இதனால் கடும் மன உளைச்சலில் இருந்தபோது, இன்ஸ்டாகிராமில் வெறும் 30 கட்டணத்தில் ஜோதிடம் பார்க்கப்படும் என்ற விளம்பரத்தைப் பார்த்து அந்த ஜோதிடரை அணுகியுள்ளார்.</p><p>
ஜோதிடத்தைச் சந்தித்தபோது, நேன்சியைச் சுற்றிப் பொல்லாத ஆவிகளும், கடுமையான பில்லி சூனியமும் இருப்பதாக அச்சமூட்டப்பட்டுள்ளது.
</p><p>இந்தச் சூனியத்தினால் விரைவில் நீங்கள் முடங்கி, சக்கர நாற்காலியில் அமர நேரிடும்; இறுதியில் உயிரிழப்பீர்கள்" என்று ஜோதிடர் அச்சுறுத்தியுள்ளார்.</p><p>
ஒரு துர்சக்தியை பிளாஸ்டிக் பாட்டிலில் அடைத்து ஏரியில் புதைக்க 25,000 டொலர் வேண்டும் எனக் கேட்டுப் பெற்றுள்ளார்.
</p><p>அதன் பின்னர் மேலும் 7 துர்சக்திகள் இருப்பதாகக் கூறி, சிறுகச் சிறுக நேன்சியின் வாழ்நாள் சேமிப்பான மொத்தம் 96,000 டெலாலர்களை பறித்துள்ளார்.</p><p>
தனது சேமிப்பு முழுவதையும் கொடுத்த பிறகும் நேன்சியின் உடல்நலத்திலோ பிரச்சினைகளிலோ எந்த மாற்றமும் ஏற்படவில்லை.</p><p> "இறுதியில் எதுவுமே நடக்கவில்லை. நான் மிகப்பெரிய முட்டாள்தனம் செய்துவிட்டேன். தினமும் அழுதுகொண்டிருக்கிறேன்" என நேன்சி கதறியுள்ளார்.
</p><p>இத்தகைய ஜோதிட மோசடிகள் பயம், அச்சுறுத்தல் மற்றும் உணர்ச்சிப்பூர்வமான சூழ்ச்சிகளை அடிப்படையாகக் கொண்டவை என கனடா மோசடி எதிர்ப்பு மையம் எச்சரித்துள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-15T16:07:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[மேல் மாகாண போக்குவரத்து அதிகார சபையின் முன்னாள் தலைவர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/former-western-province-transport-chief-arrested-1789488271"></link>
            <id>https://jvpnews.com/article/former-western-province-transport-chief-arrested-1789488271</id>
            <summary type="text">மேல் மாகாண வீதி மற்றும் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் முன்னாள் தலைவரான பிரசன்ன சஞ்சீவ, இலஞ்ச அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளைப் புலனாய்வு செய...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">மேல் மாகாண வீதி மற்றும் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் முன்னாள் தலைவரான பிரசன்ன சஞ்சீவ, இலஞ்ச அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p style="text-align: justify;">
 

டெண்டர் நடைமுறைகளுக்குப் புறம்பாக பயணிகள் போக்குவரத்து அனுமதிகளை வழங்கி அரசுக்கு 4,160,000 ரூபா இழப்பை ஏற்படுத்திய குற்றச்சாட்டின்கீழ் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/35475656-3b18-4ed0-9fa4-03eff4ba0c73/26-6aa96c90c1398.webp' /></p><h2 style="text-align: justify; ">இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு</h2><p style="text-align: justify; ">மேல் மாகாண வீதி மற்றும் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை சட்ட மீறலாக, உரிய டெண்டர் முறையைத் தவிர்த்து குறித்த அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; ">
 

இதன் மூலம் வெளித் தரப்பினருக்கு பயனளித்து, 'ஊழல்' எனும் குற்றத்தைச் செய்துள்ளார் என்ற சந்தேகத்தின் பேரில் பிரசன்ன சஞ்சீவ இன்று (15) காலை 9.50 மணியளவில் கைது செய்யப்பட்டார்</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இன்று கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.&nbsp;&nbsp;</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-15T16:04:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் : பெண்கைதிகள் தொடர்பில் நீதிமன்றின் உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/female-inmates-suspected-in-negombo-prison-clash-1789477855"></link>
            <id>https://ibctamil.com/article/female-inmates-suspected-in-negombo-prison-clash-1789477855</id>
            <summary type="text">நீர்கொழும்பு சிறையில் நடந்த மோதலின் போது பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட 25 பெண் கைதிகளை, வரும் 17ஆம் திகதி நீதிமன்றத்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீர்கொழும்பு சிறையில் நடந்த மோதலின் போது பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட 25 பெண் கைதிகளை, வரும் 17ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு நீர்கொழும்பு பிரதம நீதவான் ஷிலானி பெரேரா இன்று குற்றப் புலனாய்வுத் துறைக்கு உத்தரவிட்டார்.
</p><p>
சந்தேக எண்கள் 61 முதல் 81 வரை பெயரிடப்பட்ட சந்தேக நபர்களின் அடையாள அணிவகுப்பிற்காக வழக்கு விசாரணைக்கு அழைக்கப்பட்டபோது நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.</p><h2>பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் பெண் சந்தேக நபர்கள் மீது வழக்கு&nbsp;</h2><p>&nbsp;அன்றைய தினம் அடையாள அணிவகுப்பிற்காக 25 பெண் சந்தேக நபர்களையும் முற்படுத்துமாறு நீதவான்&nbsp; உத்தரவிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/109a8f7e-aef8-4625-92f2-caa60ca29784/26-6aa9493d2650f.webp' /></p><p>

பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் பெண் சந்தேக நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து, வழக்கு முடியும் வரை அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு குற்றப் புலனாய்வுத் துறை கோரியது.</p><p></p><p>
</p><p>
</p><h2>சந்தேக நபர்களாக 106 பேர்</h2><p>அதன்படி, இதுவரை 106 சந்தேக நபர்கள் பெயரிடப்பட்டுள்ளனர், அவர்களில் 81 பேர் ஆண்கள் மற்றும் 25 பேர் பெண்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்,மேலும் 81 சந்தேக நபர்கள் அடையாள அணிவகுப்பிற்காக முற்படுத்தப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6eb1d520-766a-486f-942f-5ebe3bb0a850/26-6aa9493dd1c09.webp' /></p><p>

நீர்கொழும்பு தலைமை நீதவான் ஷீலானி பெரேரா முன்னிலையில் இன்று நடைபெற்ற அடையாள அணிவகுப்பில், 30 சந்தேக நபர்கள் (சந்தேக எண்கள் 31 முதல் 60 வரை) முற்படுத்தப்பட்டு, சாட்சிகளாக ஆஜரான சிறை அதிகாரிகளால் அடையாளம் காணப்பட்டனர்.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-15T16:00:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை தொடர்பில் தொடர்ந்தும் முதலிடம் வகிக்கும் இந்தியா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/tourist-arrivals-exceed-16-million-so-far-1789486687"></link>
            <id>https://ibctamil.com/article/tourist-arrivals-exceed-16-million-so-far-1789486687</id>
            <summary type="text">இவ்ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 16 இலட்சத்தைக் கடந்துள்ளது.

 

சுற்றுலா அபிவிருத்தி அதிக...</summary>
            <content type="html"><![CDATA[<p>இவ்ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 16 இலட்சத்தைக் கடந்துள்ளது.

 

சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி, ஜனவரி 01 ஆம் திகதி முதல் செப்டம்பர் 14 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் 1,609,759 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.&nbsp;</p><p>இவ்வாண்டில் இதுவரை அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்தே வருகை தந்துள்ளதுடன், அவர்களின் எண்ணிக்கை 408,024 ஆகும்.</p><h2>முதலிடத்தில் இந்தியா</h2><p>செப்டம்பர் மாதத்தின் முதல் 14 நாட்களில் அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்தே வருகை தந்துள்ளதுடன், அதற்கமைய இந்தியாவிலிருந்து 22,541 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2b8193ee-f953-403c-94c5-78c5b6ace360/26-6aa96b85727f4.webp' /></p><p>அத்துடன், செப்டம்பர் 01 ஆம் திகதி முதல் 14 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் 74,637 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை குறிப்பிட்டுள்ளது.</p><p></p><h2>&nbsp;இதர நாடுகளில் இருந்து வந்தவர்கள்</h2><p>

 

இதற்கு மேலதிகமாக, ஐக்கிய இராச்சியத்திலிருந்து 155,798 பேரும், சீனாவிலிருந்து 105,294 பேரும், ஜெர்மனியிலிருந்து 94,007 சுற்றுலாப் பயணிகளும் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a7b0463a-cbaa-4101-9690-00abe878a3d1/26-6aa96b8626d84.webp' /></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-15T16:00:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[நோர்வேயில் முக்கிய அமைச்சு பதவியை பொறுப்பேற்றுள்ள ஈழத்தமிழ் பெண் - அநுர அரசாங்கம் வாழ்த்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/kamzy-gunaratnam-appointed-transport-minister-1789484262"></link>
            <id>https://tamilwin.com/article/kamzy-gunaratnam-appointed-transport-minister-1789484262</id>
            <summary type="text">நோர்வேயின் புதிய போக்குவரத்து அமைச்சராக ஈழத்தமிழ் பெண் கம்சி குணரத்னம் பொறுப்பேற்றுள்ள நிலையில், இலங்கை அரசாங்கம் வாழ்த்து தெரிவித்துள்ளது. 

வெளிந...</summary>
            <content type="html"><![CDATA[<p>நோர்வேயின் புதிய போக்குவரத்து அமைச்சராக ஈழத்தமிழ் பெண் கம்சி குணரத்னம் பொறுப்பேற்றுள்ள நிலையில், இலங்கை அரசாங்கம் வாழ்த்து தெரிவித்துள்ளது.</p><p> 

வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் தனது சமூக வலைத்தளத்தில் வாழ்த்தினை தெரிவித்துள்ளார்.</p><p> 

“<i><b>நோர்வேயின் போக்குவரத்து அமைச்சராக பதவியேற்றுள்ள அமைச்சர் கம்சி குணரத்தினத்திற்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். பகிரப்பட்ட பாரம்பரியத்தைக் கொண்ட நோர்வே வாழ் இலங்கைச் சமூகத்தினருக்கு பெருமைக்குரிய தருணம் இதுவாகும். அமைச்சர் கம்சி குணரத்னம் தனது அமைச்சு பதவியை வெற்றிகரமான முன்னெடுக்க வாழ்த்துகிறேன்</b></i>” என அமைச்சர் தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Heartiest congratulations to Minister Kamzy Gunaratnam on taking oaths as the Minister of Transport of Norway. A proud moment for Sri Lankan community in Norway given the shared heritage. I wish Minister Gunaratnam every success in leading her Ministry.</p>&mdash; Vijitha Herath (@HMVijithaHerath) <a href="https://x.com/HMVijithaHerath/status/2098377957895225542?ref_src=twsrc%5Etfw">September 11, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><h2><b>முதலாவது தமிழ்&nbsp;பெண்</b></h2><p>

யாழ்ப்பாணத்தை பின்புலமாக கொண்ட 38 வயதான கம்சி குணரத்னம், நோர்வேயில் அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட முதலாவது தமிழ் பெண்ணாகும். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b76f8fff-057d-4be3-8f5d-3976bcf16d81/26-6aa9630584a9a.webp' /></p><p>கடந்த 11ஆம் திகதி தனது அமைச்சினை பொறுப்பெற்றுக் கொண்ட நிலையில், தமிழ் மக்களின் வாழ்த்தினை பெற்று வருகிறார்.</p><p> 

போக்குவரத்து அமைச்சர் என்ற முறையில், பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்து கொள்கைகள், அத்துடன் அஞ்சல் சேவைகள் தொடர்பான பொறுப்புகளுக்கு இவர் தலைமை தாங்குவார்.
</p><p>
1988ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் கம்சாயினி குணரத்னம் என்ற பெயரில் பிறந்த இவர், யுத்த சூழ்நிலை காரணமாக சிறு வயதில் பெற்றோருடன் நோர்வேக்கு சென்றிருந்தார்.</p><p> </p><h3><b>

பிரதான அமைச்சு பதவி</b></h3><p>தனது 19 வயது முதல் தொழிலாளர் கட்சியின் மூலம் அரசியல் பயணத்தை ஆரம்பித்த கம்சி, சமகாலத்தில் பிரதான அமைச்சு பதவியை பொறுப்பேற்றுள்ளார். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/17ce473e-195f-4d51-8a97-825bb5037c46/26-6aa96306382ba.webp' /></p><p>ஒஸ்லோவின் நகர சபை உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டு, பின்னர் ஒஸ்லோவின் துணை மேயர், நாடாளுமன்ற உறுப்பினர் என படிப்படியாக அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். </p><p>

இலங்கையில் போர் காரணமாக காணாமல் போனவர்கள், மனித உரிமை மீறல்கள் மற்றும் செம்மணி மனித புதைகுழி தொடர்பில் நோர்வே நாடாளுமன்றத்தில் கம்சி குணரட்னம் கேள்வி எழுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 
</p>]]></content>
            <updated>2026-09-15T15:57:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிக்பாஸ் 10 பரபரப்பாகும் நிலையில்… கம்ருதீன் -பாரு வீடியோவுக்கு குவியும் லைக்குகள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/bb-kamurudin-celebrates-his-birthday-with-vj-paru-1789486171"></link>
            <id>https://manithan.com/article/bb-kamurudin-celebrates-his-birthday-with-vj-paru-1789486171</id>
            <summary type="text">ரியாலிட்டி ஷோக்களுக்கு பெயர் பெற்ற விஜய் தொலைக்காட்சியில் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்ற நிகழ்ச்சியாக பிக்பாஸ் திகழ்கிறது.

பிக்பாஸ் ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>ரியாலிட்டி ஷோக்களுக்கு பெயர் பெற்ற விஜய் தொலைக்காட்சியில் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்ற நிகழ்ச்சியாக பிக்பாஸ் திகழ்கிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 10வது சீசன் கடந்த செப்டம்பர் 6ஆம் தேதி 19 போட்டியாளர்களுடன் பிரம்மாண்டமாக தொடங்கியது. </p><p>நிகழ்ச்சி ஆரம்பித்த முதலே போட்டியாளர்களுக்கு இடையிலான போட்டி, கருத்து வேறுபாடுகள் மற்றும் சுவாரஸ்யமான சம்பவங்கள் என பிக்பாஸ் வீடு பரபரப்பாகவே காணப்படுகிறது.

இந்நிலையில், நிகழ்ச்சியில் அண்மையில் ஆனந்த் வைல்ட் கார்டு என்ட்ரியாக களமிறங்கியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f7fd8a88-400c-4a06-abb3-3d14cadabae0/26-6aa967fe34291.webp' /></p><p></p><p>ஏற்கெனவே விறுவிறுப்பாக நகர்ந்து கொண்டிருந்த நிகழ்ச்சியில் வைல்ட் கார்டு போட்டியாளரின் வருகை மேலும் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.</p><p>
பிக்பாஸ் 10வது சீசனில் இந்த முறை யார் வெற்றியாளராக உருவெடுக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2b6b47e2-d6af-42be-9d0e-8da9477ad586/26-6aa967fee2f03.webp' /></p><p>
</p><h2>வைரலாகும் கம்ருதீன் பிறந்தநாள் கொண்டாட்டம்&nbsp;</h2><p>இதற்கிடையில், கடந்த 9வது சீசனில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த போட்டியாளர்களில் ஒருவரான கம்ருதீனின் பிற்நத நாள் கொண்டாட்ட காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7a71b412-55b7-4df1-8759-9a64870fa0c9/26-6aa967ff9b30a.webp' /></p><p></p><p>

கடந்த சீசனில் சர்ச்சைக்குரிய வகையில் நடந்து கொண்டதாகக் கூறப்பட்ட நிலையில், கம்ருதீனுக்கு ரெட் கார்டு வழங்கப்பட்டு பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

இந்நிலையில், கம்ருதீன் தனது பிறந்தநாளை பார்வதி மற்றும் அவரது குடும்பத்தினருடன் இணைந்து கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். </p><p>இந்த பிறந்தநாள் கொண்டாட்டம் தொடர்பான காணொளியே தற்போது இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.

குறித்த காணொளியைப் பார்த்த ரசிகர்கள் கம்ருதீனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.&nbsp;</p><p><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/reel/DdRSuKnxms6/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/reel/DdRSuKnxms6/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/reel/DdRSuKnxms6/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by Paarudin✨ (@kamrupaaru_addictz)</a></p></div></blockquote> <script async src="//www.instagram.com/embed.js"></script></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்<a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"> </a><b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">&nbsp;&nbsp;</a></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-15T15:46:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[மகிந்தவின் வேலையை தொடரும் நாமல்! பிள்ளையான் - கருணாவைத் தொடர்ந்து அர்ச்சுனா..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/it-was-mahinda-rajapaksa-who-reformed-pillaiyan-1789459450"></link>
            <id>https://tamilwin.com/article/it-was-mahinda-rajapaksa-who-reformed-pillaiyan-1789459450</id>
            <summary type="text">
நாமல் ராஜபக்சவின் தந்தை மகிந்த ராஜபக்சதான், தடை செய்யப்பட்ட அமைப்பில் இருந்த பிள்ளையானையும், கருணாவையும் மாற்றினார். அதேபோல, அர்ச்சுனாவை நாமல் ராஜபக...</summary>
            <content type="html"><![CDATA[<p>
நாமல் ராஜபக்சவின் தந்தை மகிந்த ராஜபக்சதான், தடை செய்யப்பட்ட அமைப்பில் இருந்த பிள்ளையானையும், கருணாவையும் மாற்றினார். அதேபோல, அர்ச்சுனாவை நாமல் ராஜபக்ச மாற்றியுள்ளார் என்று பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இந்திக அனுருத்த தெரிவித்துள்ளார்.</p><p> 

இன்றையதினம்(15.09.2026) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
</p><p>
தொடர்ந்தும் தெரிவிக்கையில், </p><p>

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தடை செய்யப்பட்ட அமைப்பை பிரசாரம் செய்வது அவருக்கே நல்லதல்ல.</p><h2>அர்ச்சுனாவின் உறுதி மொழி&nbsp;</h2><p> 

ஏனெனில், தடை செய்யப்பட்ட அமைப்பொன்றின் சார்பாக அவர் நாடாளுமன்றத்தில் செயற்பட மாட்டேன் என்றும், அரசுக்கு எதிராக சதி செய்யமாட்டேன் என்றும்&nbsp; உறுதி செய்திருக்கின்றார்.</p><p>

அதையும் மீறி, தடை செய்யப்பட்ட அமைப்பொன்று தொடர்பில் அவர் பிரசாரம் செய்வாரெனில் அது அவருக்குத்தான் நல்லதல்ல.</p><p> 

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையில் அநுராதபுரத்தில் இடம்பெற்ற கூட்டத்தின்போது, அந்த மேடையில் இருந்தவன் என்ற வகையில், அர்ச்சுனா இராமநாதனின் அன்றைய முழு உரையிலும் நான் கண்டுகொண்ட விடயம், வடக்கையும் தெற்கையும் இணைப்பதற்கு அவர் ஒரு முயற்சி செய்து வருகின்றார் என்பது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8c4d5294-e75e-4f1b-b4db-6fc0395549d2/26-6aa9046a5b4fc.webp' /></p><p> 

தமிழ் மக்களும், சிங்கள மக்களும் சகோதரர்களைப் போல வாழ வேண்டும் என்பதற்காக, அதற்குரிய ஏதுவான ஒரு சூழலை உருவாக்குவதற்காக அர்ச்சுனா இராமநாதன் முயற்சி செய்து வருகின்றார்.</p><p>

இந்த நாட்டைப் பிரிக்க எண்ணுபவர்களுக்கு இந்த நடவடிக்கை கண்ணை குத்துகிறது போலும்.</p><p>

ஆனால், அர்ச்சுனாவின் கடந்த கால வரலாற்றையும், அவர் நாடாளுமன்றத்திற்கு வந்த விதத்தினையும் நோக்கும் போது, அவரின் இந்த திடீர் மாற்றத்திற்கு காரணம் என்ன என்ற கேள்வி எழும்.
</p><p>
நிச்சயமாக அவருடைய இந்த மாற்றத்திற்கு ஒரே காரணம், நாமல் ராஜபக்ச தான். வேறு யாரும் இல்லை.
அவர்தான் அர்ச்சுனாவை மாற்றியிருக்கின்றார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/89794755-dd61-4190-989e-d18612429dbe/26-6aa9046b230e7.webp' /></p><p>

அதேபோல, கருணாவையும், பிள்ளையானையும் மாற்றி அவர்களை அரசியலுக்குள் கொண்டு வந்து, அவர்களுடைய மக்களுக்கு அபிவிருத்தியைக் காட்டியது முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தான்.
</p><p>
ஆனால் ஒருபோதும் கருணாவோ, பிள்ளையானோ, ஆட்சி மாற்றத்தைக் கோரவோ, கிழக்கு மாகாணத்தைப் பிரித்து தனி மாகாணமாக அறிவிக்க வேண்டும் என்றோ கோரியதில்லை.
</p><p>
இப்போது அர்ச்சுனாவும் வடக்கை தனியாகப் பிரித்துத் தர வேண்டும் என்று கேட்கப் போவதில்லை. அந்த நிலையை எற்படுத்தியது நிச்சயமாக நாமல் ராஜபக்சதான். இது ஒரு பாரிய வெற்றி என குறிப்பிட்டுள்ளார்.<br></p>]]></content>
            <updated>2026-09-15T15:42:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>H. A. Roshan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மாரியம்மன் ஆலயத்திற்காக விறகு தேட சென்ற இளைஞர்களுக்கு நேர்ந்த கதி - 5 நாட்களுக்கு பின் வந்த தீர்ப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/41-youths-arrested-in-trincomalee-1789486736"></link>
            <id>https://tamilwin.com/article/41-youths-arrested-in-trincomalee-1789486736</id>
            <summary type="text">திருகோணமலை - தம்பலகாமம், சம்மாந்துறை மாரியம்மன் ஆலயத்தில்
நடைபெற இருக்கும் தீ மிதிப்பு பூஜைக்கு விறகு சேகரிப்பதற்காக சென்ற இளைஞர்கள் வனவிலங்கு பாதுகா...</summary>
            <content type="html"><![CDATA[<p>திருகோணமலை - தம்பலகாமம், சம்மாந்துறை மாரியம்மன் ஆலயத்தில்
நடைபெற இருக்கும் தீ மிதிப்பு பூஜைக்கு விறகு சேகரிப்பதற்காக சென்ற இளைஞர்கள் வனவிலங்கு பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p>
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,</p><p> 

சம்மாந்துறை மாரியம்மன் ஆலயத்தில்
நடைபெற இருக்கும் தீ மிதிப்பு பூஜைக்கு விறகு சேகரிப்பதற்காக 41 இளைஞர்கள் காட்டுப் பகுதிக்குள் சென்றுள்ளனர்.
</p><h2>
41 பேர் கைது</h2><p>
இதன்போது, வனவிலங்கு பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளால் 41 பேரும் கைது செய்யப்பட்டனர். 

அத்துடன், அவர்கள் ஏற்றி சென்ற பெட்டியுடனான இரண்டு உழவு
இயந்திரங்களும் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7831240b-6f3e-47b1-aa89-a4bb93132e3b/26-6aa966c369de0.webp' /></p><p>
</p><p>
கைது செய்யப்பட்ட அனைவரும் கந்தளாய் நீதவான் நீதிமன்றினால் சொந்த பிணையில்
கடந்த வியாழக்கிழமை விடுவிக்கப்பட்ட நிலையில், இன்றயதினம் (15/09/2026) குறித்த
வழக்கில் சம்பந்தப்பட்ட இரண்டு உழவு இயந்திரங்களும் நீதவான் மன்றினால்
உரிமையாளர்களிடம் விடுவிக்கப்பட்டது.</p><p>பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் சட்டத்தரணி துஷ்யந்தன் மற்றும் சட்டத்தரணி நிருஷ்
ஆகியோர் முன்னிலையாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-15T15:40:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[புதிய விதிமுறைக்கு அனுமதி ; 20 ஆம் திகதி முதல் கட்டாயமாகும் நடைமுறை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/mandatory-procedure-effective-from-20th-1789486800"></link>
            <id>https://jvpnews.com/article/mandatory-procedure-effective-from-20th-1789486800</id>
            <summary type="text">அதிவேக வீதிகளில் பயணிக்கும் வாகனங்களின் அனைத்து இருக்கைகளிலும் பயணிக்கும் பயணிகள் வாகன ஆசன பட்டி அணிவதை வரும் செப்டம்பர் 20 ஆம் திகதி முதல் கட்டாயமாக்...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">அதிவேக வீதிகளில் பயணிக்கும் வாகனங்களின் அனைத்து இருக்கைகளிலும் பயணிக்கும் பயணிகள் வாகன ஆசன பட்டி அணிவதை வரும் செப்டம்பர் 20 ஆம் திகதி முதல் கட்டாயமாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; ">

 

வாகன உற்பத்தியாளரால் வாகன பட்டி பொருத்தப்படாத இருக்கைகளுக்கு அவற்றை பொருத்திக்கொள்வதற்காக வழங்கப்பட்டிருந்த அவகாசத்தை முடிவுக்குக் கொண்டுவரும் பொருட்டு வெளியிடப்பட்ட, 2026 ஜூன் 17 ஆம் திகதியிடப்பட்ட 2493/19 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் உத்தரவுகளுக்கு அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aba2651e-f655-43a5-af97-f7c2bc46ee1c/26-6aa966d238b4f.webp' /></p><h2 style="text-align: justify; ">வர்த்தமானி அறிவித்தல்</h2><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
 

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை ஆலோசனைக்குழு கூட்டத்தில் இது குறித்து விரிவாக ஆராயப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; ">

 

நாளாந்தம் அதிகரித்து வரும் வீதி விபத்துக்கள் மற்றும் மரணங்களின் எண்ணிக்கையைக் குறைப்பதற்காக 2011.08.03 ஆம் திகதி 1717/14 ஆம் இலக்க மோட்டார் வாகன (அதிவேக வீதிகள்) விதிகளைத் திருத்தி, 2025.09.25 ஆம் திகதி 2455/29 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தல் மூலம் ஆசன பட்டி அணிவது கட்டாயமாக்கப்பட்டது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
 

பின்னர் ஆசன பட்டிகளை பொருத்திக் கொள்வதற்காக 03 மாத கால அவகாசம் வழங்கப்பட்டதுடன், இந்தக் கால அவகாசம் 2025.12.25 அன்றுடன் நிறைவடைந்தது.
</p><p style="text-align: justify; ">
 

எனினும், பொதுமக்களின் கோரிக்கைகளை பரிசீலித்து அந்தக் காலம் 2026.03.20 முதல் 2026.06.19 வரை மீண்டும் நீட்டிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-15T15:40:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[10,000mAh பேட்டரியுடன் Redmi Note 17 Pro Series இந்தியாவில் அறிமுகம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/redmi-note-17-pro-series-india-launch-1789486722"></link>
            <id>https://news.lankasri.com/article/redmi-note-17-pro-series-india-launch-1789486722</id>
            <summary type="text">Redmi Note 17 Pro Series launched in India: இந்தியாவில் புதிய Redmi Note 17 Pro அறிமுகமானது.

Redmi Note 17 Pro Seriesசீனாவின் பிரபல சியோமி (Xiaomi)...</summary>
            <content type="html"><![CDATA[<p>Redmi Note 17 Pro Series launched in India: இந்தியாவில் புதிய Redmi Note 17 Pro அறிமுகமானது.
</p><h2>
Redmi Note 17 Pro Series</h2><p>சீனாவின் பிரபல சியோமி (Xiaomi) நிறுவனம் இந்தியாவில் தனது புதிய Redmi Note 17 Pro Series-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது.
</p><p>
இந்த வரிசையில் Redmi Note 17 Pro 5G மற்றும் Redmi Note 17 Pro Max 5G ஆகிய இரண்டு மாடல்கள் உள்ளன.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0b2b0e5f-9b87-42a9-912d-7fd31252adb8/26-6aa96684536f3.webp' /></p><h2>10,000mAh பேட்டரி&nbsp;</h2><p>புதிய ஸ்மார்ட்போன்களின் முக்கிய அம்சம் பேட்டரி திறன் ஆகும். Pro Max மாடலில் 10,000mAh பேட்டரி மற்றும் 100W HyperCharge வசதி வழங்கப்பட்டுள்ளது. Pro மாடலில் 9,000mAh பேட்டரி மற்றும் 67W சார்ஜிங் உள்ளது.
</p><p>
இரு மாடல்களிலும் 6.83-இன்ச் 1.5K AMOLED டிஸ்ப்ளே, 120Hz refresh rate, மற்றும் 3,500 nits peak brightness வழங்கப்பட்டுள்ளது.</p><p> கமெரா பகுதியில், இரு மாடல்களும் 50MP OIS main camera-ஐ கொண்டுள்ளன. Pro Max மாடலில் 32MP front camera, Pro மாடலில் 16MP front camera உள்ளது.</p><p></p><h2>

விலை</h2><p>
Redmi Note 17 Pro 5G (8GB+128GB) - ரூ.33,999
</p><p>
Redmi Note 17 Pro 5G (8GB+256GB) - ரூ.36,999
</p><p>
Redmi Note 17 Pro Max 5G (8GB+256GB) - ரூ.44,999
</p><p>
Redmi Note 17 Pro Max 5G (12GB+256GB) - ரூ.50,999
</p><p>
Redmi Note 17 Pro Max 5G செப்டம்பர் 23 முதல் விற்பனைக்கு வருகிறது. இரு மாடல்களும் mi.com, Amazon.in மற்றும் Xiaomi Retail வழியாக கிடைக்கும்.</p><p>

சியோமி, வாடிக்கையாளர்களுக்கு -ரூ.5,000 வரை instant bank discount, YouTube Premium Lite, Google One storage போன்ற கூடுதல் சலுகைகளையும் வழங்குகிறது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-15T15:35:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரச பல்கலைக்கழகங்களில் கடுமையான விரிவுரையாளர்கள் பற்றாக்குறை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/severe-shortage-of-lecturers-in-state-universities-1789484587"></link>
            <id>https://tamilwin.com/article/severe-shortage-of-lecturers-in-state-universities-1789484587</id>
            <summary type="text">இலங்கையின் அரச பல்கலைக்கழகங்களில் விரிவுரையாளர்கள் மற்றும் கல்விசார் ஊழியர்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், கல்வி மற்றும் நிர்வாக நடவடிக்கைகளில் ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் அரச பல்கலைக்கழகங்களில் விரிவுரையாளர்கள் மற்றும் கல்விசார் ஊழியர்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், கல்வி மற்றும் நிர்வாக நடவடிக்கைகளில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடுமென பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.</p><p>அத்துடன் பல்கலைக்கழக பாடநெறிகளுக்கான மாணவர்களை சேர்ப்பதிலும் கல்வி நடவடிக்கைகளை முன்னெடுப்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.</p><p>இதனால் 2025 உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை பல்கலைக்கழகங்களுக்கு சேர்ப்பதிலும் இந்தப் பற்றாக்குறை பாதிப்பை ஏற்படுத்தக்கூடுமென பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.</p><h2>அதிக வரி</h2><p>
</p><p>
பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பின் உதவிச் செயலாளர் பேராசிரியர் அருண வன்னிநாயக்க ஊடகங்களிற்கு கருத்துத் தெரிவிக்கும்பொது மேற்கண்ட விடயங்களைத் தெரிவித்துள்ளார்.
</p><p>
அவர் மேலும் தெரிவிக்கையில்,

குறைந்த சம்பளம், அதிக வரி மற்றும் குறைந்த சலுகைகள் காரணமாக அரச பல்கலைக்கழகங்களில் பணியாற்றும் கல்வியாளர்கள் வெளிநாடுகள் மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களை நோக்கிச் செல்கின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/20e5676c-91d3-4f4f-91aa-0aec7cf4c983/26-6aa961fda1c5e.webp' /></p><p>
</p><p>
இதனால் ஓய்வு பெறும் அல்லது பணியை விட்டு விலகும் விரிவுரையாளர்களின் இடங்களை நிரப்புவதிலும் பல்கலைக்கழகங்களுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது.
</p><p>
இதனைத் தீர்க்க கல்வியாளர்களின் அடிப்படை சம்பளத்தை குறைந்தது 50 சதவீதத்தால் அதிகரிக்க வேண்டும், வரிச்சுமையை குறைக்க வேண்டும் மற்றும் ஏனைய சலுகைகளை விரிவுப்படுத்த வேண்டும்.</p><h2>பல்கலைக்கழக முறைமை</h2><p>
</p><p>
இந்தக் கோரிக்கைகளை முன்வைத்து பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு கடந்த புதன்கிழமை ஒரு நாள் வேலைநிறுத்தத்திலும் ஈடுபட்டது.
</p><p>
இதேவேளை, புதிதாக 50 அரச பல்கலைக்கழகங்களை அமைக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ள நிலையில், முதலில் தற்போது உள்ள 17 அரச பல்கலைக்கழகங்களின் பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c76619e5-d481-402c-bb76-f7c6abeed73d/26-6aa961fe57ad5.webp' /></p><p>

மேலும் விரிவுரையாளர் நியமனம் தொடர்பிலான இழுப்பறி நிலை தொடருமானால் அரச பல்கலைக்கழக முறைமை பாதிக்கப்படலாம் என்றும், குறிப்பாக குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த உயர்கல்வி மாணவர்கள் அதிகமாக பாதிக்கப்படுவார்கள் என்றும் தொடர்ந்தும் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-15T15:19:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜப்பான் பாதுகாப்பு செலவுகளை 3.5 சதவீதம் GDP-யாக உயர்த்த திட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/japan-eyes-3-5-pct-gdp-defense-spending-shock-1789485560"></link>
            <id>https://news.lankasri.com/article/japan-eyes-3-5-pct-gdp-defense-spending-shock-1789485560</id>
            <summary type="text">Japan eyes 3.5 percent GDP defense spending: ஜப்பான் அரசு தனது பாதுகாப்பு செலவுகளை பெரிதும் உயர்த்தும் திட்டத்தில் ஈடுபட்டுள்ளது.&amp;nbsp;GDP-யில்&amp;nbsp;3...</summary>
            <content type="html"><![CDATA[<p>Japan eyes 3.5 percent GDP defense spending: ஜப்பான் அரசு தனது பாதுகாப்பு செலவுகளை பெரிதும் உயர்த்தும் திட்டத்தில் ஈடுபட்டுள்ளது.</p><h2>&nbsp;GDP-யில்&nbsp;3.5 சதவீதம்&nbsp;பாதுகாப்பு செலவு</h2><p>பிரதமர் சனே தகாயிச்சி தலைமையிலான அரசு, பாதுகாப்பு செலவுகளை மொத்த உள்நாட்டு உற்பத்தியின் (GDP) 3.5 சதவீதம் வரை உயர்த்தும் திட்டத்தை பரிசீலித்து வருகிறது. </p><p>இது அமெரிக்கா மற்றும் NATO கூட்டாளிகளின் தரத்துடன் ஒத்துப்போகும் முயற்சியாகக் கருதப்படுகிறது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/351565bb-a5ad-4ddc-94b4-eaf3d57708b3/26-6aa961f9dc9dc.webp' /></p><p>2022 வரை ஜப்பான் பாதுகாப்பு செலவுகளை GDP-யின் 1 சதவீதம் வரை மட்டுமே பயன்படுத்தியிருந்தது. ஆனால், 2026 மார்ச் மாதத்தில் முடிவடைந்த நிதியாண்டில், செலவுகள் 2 சதவீதம் GDP-க்கு உயர்த்தப்பட்டன. </p><p>இப்போது 3.5 சதவீதம் இலக்கு நிர்ணயிக்கப்படுவது, ஜப்பானின் பாதுகாப்பு கொள்கையில் மிகப்பெரிய மாற்றமாகும்.

இந்த முடிவு நிதி சந்தைகளில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. </p><p></p><p>காரணம், ஜப்பான் அரசு அதிக கடன் வெளியீடு செய்ய வேண்டியிருக்கும். ஏற்கனவே 10 ஆண்டு அரசுப் பத்திரங்களின் வட்டி விகிதம் 3 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. இது 1996-க்கு பிறகு மிக உயர்ந்த நிலையாகும்.

அமெரிக்கா, ஜப்பான் தனது பாதுகாப்பு திறனை அதிகரிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது. </p><p>தென் கொரியா 10 ஆண்டுகளில் 3.5 சதவீதம் GDP செலவுகளை பாதுகாப்பிற்காக ஒதுக்க திட்டமிட்டுள்ள நிலையில், ஜப்பானும் அதே பாதையில் செல்லும் வாய்ப்பு அதிகம்.

ஆனால், இந்த உயர்வு ஜப்பானின் பொருளாதாரத்திற்கு சுமையாக இருக்கும். தகாயிச்சி அரசு 2040-க்குள் 370 டிரில்லியன் யென் முதலீட்டை இலக்காகக் கொண்டுள்ளது. </p><p></p><p>அதே நேரத்தில் பாதுகாப்பு செலவுகள் அதிகரிப்பது, முதலீட்டாளர்களின் நம்பிக்கையை சோதிக்கும்.

ஜப்பான் ஏற்கனவே டோமஹாக் ஏவுகணைகள் போன்ற நீண்ட தூர தாக்குதல் திறன்களை மேம்படுத்தி வருகிறது. அடுத்த நிதியாண்டுக்கான பாதுகாப்பு அமைச்சகத்தின் பட்ஜெட் 8.9 டிரில்லியன் யென் எனக் கோரப்பட்டுள்ளது.
</p><p>
மொத்தத்தில், ஜப்பான் தனது பாதுகாப்பு திறனை வலுப்படுத்தும் முயற்சி, உலக அரசியல் மற்றும் நிதி சந்தைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-15T15:15:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[38 வயது நடிகை வேதிகாவின் ரீசெண்ட் போட்டோஸ்...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/38-age-actress-vedika-recent-simma-award-photos-1789478605"></link>
            <id>https://viduppu.com/article/38-age-actress-vedika-recent-simma-award-photos-1789478605</id>
            <summary type="text">வேதிகாதமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம்,கன்னட மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார் வேதிகா. இவர் பரதேசி என்ற திரைப்படம் மூலமாக திரையில் தோற்ற...</summary>
            <content type="html"><![CDATA[<h2>வேதிகா</h2><p>தமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம்,கன்னட மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார் வேதிகா. இவர் பரதேசி என்ற திரைப்படம் மூலமாக திரையில் தோற்றினர்.</p><p>

இதனை அடுத்து வேதிகா சில வெற்றி படங்களில் நடித்திருந்தாலும், பாலா இயக்கிய ‘பரதேசி’ திரைப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெற்றார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9813f7e7-983b-4bd5-b6bb-70fe977fa0b9/26-6aa946d2100fe.webp' /></p><p>
அதை தொடர்ந்து, யாக்ஷினி என்ற வெப் தொடரில் நடித்துள்ளார். மேலும் பேட்ட ராப், ஃபியர், கனா, கஜானா உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். சமீபத்தில் வெளியான ஆடு 3 படத்தில் சுல்தான் என்ற ஐட்டம் பாடலுக்கு குத்தாட்டம் போட்டு பலரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறார்.</p><p> இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் வேதிகா, 38 வயதிலும் குறையாத கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து வருவார். தற்போது மாடர்ன் லுக்கில் SIIMA விருது விழாவிற்கு சென்றுள்ளார். அங்கு எடுத்த அழகிய புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-09-15T15:15:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானுடனான போரில் 4 மாதங்களில் அமெரிக்காவிற்கு 33.4 பில்லியன் டொலர் இழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/trumps-iran-war-costs-33-4-bn-dollars-in-4-months-1789482914"></link>
            <id>https://news.lankasri.com/article/trumps-iran-war-costs-33-4-bn-dollars-in-4-months-1789482914</id>
            <summary type="text">Trumps Iran war costs 33.4 Bn dollars in 4 Months: ஈரானுடனான போரில் 4 மாதங்களில் அமெரிக்கா 33.4 பில்லியன் டொலர் செலவழித்துள்ளது.
33.4 பில்லியன் டொலர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>Trumps Iran war costs 33.4 Bn dollars in 4 Months: ஈரானுடனான போரில் 4 மாதங்களில் அமெரிக்கா 33.4 பில்லியன் டொலர் செலவழித்துள்ளது.
</p><h2>33.4 பில்லியன் டொலர்</h2><p>அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தலைமையில் நடந்த ஈரான் போரின் நான்கு மாத கால நடவடிக்கைகளில், அமெரிக்காவிற்கு 33.4 பில்லியன் டொலர் (இலங்கை பணமதிப்பில் சுமார் ரூ.1,10,11,980 கோடி) செலவாகியுள்ளதாக பெண்டகன் அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ed52595b-322c-48fe-a5e1-19d61f3be813/26-6aa957a4537cc.webp' /></p><p>இந்த நடவடிக்கை Operation Epic Fury என அழைக்கப்பட்டது. பெண்டகன் கணக்கீட்டின்படி, ஆயுதங்கள் மற்றும் குண்டுகள் வாங்குவதற்கே 22.3 பில்லியன் டொலர் செலவிடப்பட்டுள்ளது.</p><p></p><p> </p><h2>குறைபாடுகள் மற்றும் தடைகள்</h2><p>மேலும், போரின் போது இழந்த இராணுவ உபகரணங்களின் மதிப்பு 3.7 பில்லியன் டொலர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
</p><p>
இந்த செலவுகள், அமெரிக்க பாதுகாப்புத் துறையின் கையிருப்பு குறைவுகளை (strategic inventory shortfalls) வெளிப்படுத்தியுள்ளன. அதேசமயம், பாதுகாப்பு தொழிற்துறை உற்பத்தி தடைகளை வெளிப்படுத்தியதாகவும் அறிக்கை கூறுகிறது.
</p><p></p><p>இந்த அறிக்கை, 2026 பிப்ரவரி 28 முதல் ஜூன் 29 வரை நடந்த நடவடிக்கைகளை உள்ளடக்கியது. அமெரிக்கா-இஸ்ரேல் இணைந்த இராணுவ நடவடிக்கையாக நடந்த இந்த போர், ஹார்முஸ் நீரிணையில் நடந்த தாக்குதல்களையும், ட்ரோன்கள், போர் விமானங்கள், ஏவுகணைகள் ஆகியவற்றின் பயன்பாட்டையும் உள்ளடக்கியது.
</p><p>
மொத்த செலவுகளில் 7.4 பில்லியன் டொலர் பிற நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்பட்டதாகவும், ஆனால் போரின் போது சேதமடைந்த அடிப்படை கட்டமைப்புகளை (infrastructure) பழுது பார்க்கும் செலவுகள் இதில் சேர்க்கப்படவில்லை என்றும் அறிக்கை தெளிவுபடுத்துகிறது.
</p><p>
இந்தப் பெரும் இழப்புகளும் செலவுகளும், அமெரிக்காவின் பொருளாதாரத்திற்கும், உலக சந்தைகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் அபாயம் இருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.&nbsp;&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-15T15:07:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை பொருளாதாரம் 4.2 சதவீதம் வளர்ச்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sri-lanka-s-economy-grows-by-4-2-percent-1789477224"></link>
            <id>https://jvpnews.com/article/sri-lanka-s-economy-grows-by-4-2-percent-1789477224</id>
            <summary type="text">&amp;nbsp; 2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் இலங்கை பொருளாதாரம் 4.2 சதவீத நேர்மறையான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் த...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; 2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் இலங்கை பொருளாதாரம் 4.2 சதவீத நேர்மறையான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
</p><p>
 

 திணைக்களம் வெளியிட்டுள்ள புதிய தேசிய கணக்கு மதிப்பீடுகளின்படி, ஏப்ரல் 1 முதல் ஜூன் 30 வரையிலான காலப்பகுதியில் இந்த பொருளாதார வளர்ச்சி பதிவாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f3b6ffd6-aa0e-4dd0-841a-3eda16233cf0/26-6aa9416a2d738.webp' /></p><h2>&nbsp; முதல் காலாண்டில் 5.1 சதவீத பொருளாதார வளர்ச்சி</h2><p>
</p><p>
 

2026 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் 5.1 சதவீத பொருளாதார வளர்ச்சி பதிவாகியிருந்த நிலையில், அதற்கமைய இரண்டாம் காலாண்டில் பொருளாதார வளர்ச்சி வேகம் 4.2 சதவீதம் வரை குறைவடைந்துள்ளது.</p><p>

 

இரண்டாம் காலாண்டில் கைத்தொழில் துறை 7.3 சதவீத குறிப்பிடத்தக்க வளர்ச்சியைப் பதிவுசெய்துள்ள அதேவேளை, சேவைத் துறை 2.7 சதவீதத்தால் வளர்ச்சியடைந்துள்ளது.

 

எப்படியிருப்பினும், விவசாயத் துறையில் 2.3 சதவீத பின்னடைவு பதிவாகியுள்ளது.</p><p></p><p>
</p><p>
 

கைத்தொழில் துறையின் வளர்ச்சிக்கு சுரங்க மற்றும் அகழ்வாராய்ச்சி தொழில், கட்டுமானத் துறை மற்றும் மின்சாரம் மற்றும் எரிசக்தி விநியோகத் துறைகளின் வளர்ச்சி முக்கிய காரணியாக அமைந்துள்ளது.
</p><p>
 

சேவைத் துறையில் தகவல் தொழில்நுட்ப சேவைகள் 10 சதவீதமும், காப்பீட்டு சேவைகள் 8 சதவீதமும் மற்றும் நிதிச் சேவைகள் 7.7 சதவீதமும் வளர்ச்சியடைந்துள்ளன.</p><p>

 

இதனிடையே, விவசாயத் துறையின் பின்னடைவுக்கு நன்னீர் மீன்பிடி நடவடிக்கைகள் மற்றும் நெல் சாகுபடி குறைவடைந்தமையே முக்கிய காரணம் என தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவிக்கிறது.</p><p></p><p>

 

2026 இரண்டாம் காலாண்டில் தற்போதைய சந்தை விலைகளின் கீழ் மொத்த உள்நாட்டு உற்பத்தி 8,254,176 மில்லியன் ரூபாவாக பதிவாகியுள்ளதுடன், இது 11.3 சதவீத வளர்ச்சியாகும்.</p><p>

 

மத்திய கிழக்கு நெருக்கடி நிலை மற்றும் கச்சா எண்ணெய் விநியோகத்தில் நிலவும் நிச்சயமற்ற தன்மை காரணமாக சுற்றுலாத் துறையில் சற்று மந்தநிலை காணப்பட்ட போதிலும், இறக்குமதி அளவுகளின் வளர்ச்சி காரணமாக உள்நாட்டு உற்பத்திகளுக்குத் தேவையான மூலப்பொருட்களைப் பெற்றுக்கொள்ள முடிந்தமை மற்றும் கட்டுமானத் துறையின் விரிவாக்கம் என்பன பொருளாதார வளர்ச்சிக்கு நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-15T15:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[உக்ரைன் மீது ரஷ்யா திடீர் ட்ரோன் தாக்குதல்: எாிபொருள் நிலையங்கள் இலக்கு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/russia-drone-attack-fuel-depots-targeted-1789482937"></link>
            <id>https://tamilwin.com/article/russia-drone-attack-fuel-depots-targeted-1789482937</id>
            <summary type="text">உக்ரைனின் தலைநகர் கிவ் மீது ரஷ்யப் படைகள் நடத்திய ட்ரோன் தாக்குதலில்
எாிபொருள் நிரப்பும் நிலையம் ஒன்றும் களஞ்சியசாலை வளாகம் ஒன்றும்
சேதமடைந்துள்ளது....</summary>
            <content type="html"><![CDATA[<p>உக்ரைனின் தலைநகர் கிவ் மீது ரஷ்யப் படைகள் நடத்திய ட்ரோன் தாக்குதலில்
எாிபொருள் நிரப்பும் நிலையம் ஒன்றும் களஞ்சியசாலை வளாகம் ஒன்றும்
சேதமடைந்துள்ளது.</p><p>அத்தோடு, குறித்த தாக்குதலில் ஒருவர் காயமடைந்துள்ளதாகத் தலைநகர் மேயர் விட்டாலி
க்ளிட்ச்கோ தெரிவித்துள்ளார்.
</p><p>
இரு நாடுகளும் ஒன்றின் சக்திவள மையங்கள் மீது மற்றையது தாக்குதல்
நடத்துவதில்லை என உடன்பாடு கண்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்
அறிவித்த அடுத்த நாளே இத்தாக்குதல் இடம்பெற்றுள்ளது.</p><h2>தாக்குதல்</h2><p>
</p><p>
அண்மைக்காலமாக உக்ரேனின் சக்திவள உள்கட்டமைப்புகளை இலக்குவைத்து வரும் ரஷ்யா,
தற்போது எாிபொருள் நிலையங்கள் மீதும் தனது தாக்குதல்களை விரிவுபடுத்தியுள்ளது.
</p><p>
இதேவேளை, உக்ரேனும் பதிலடித் தாக்குதலாக ரஷ்யாவின் தாகன்ரொக் பகுதியிலுள்ள
மின்-வணிகக் களஞ்சியசாலை மற்றும் சமாரா பிராந்தியத்திலுள்ள தொழிற்துறை வளாகம்
என்பனவற்றின் மீது ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/60a2f84e-5c99-4afc-91c5-f685d7c58ac9/26-6aa95c3ae7988.webp' /></p><p>

இந்தத் தாக்குதல்களைத் தொடர்ந்து நேட்டோ (NATO) உறுப்பு நாடுகளான போலந்து
மற்றும் லிதுவேனியா ஆகியன தமது வான்வெளியைப் பாதுகாக்கும் நோக்கில் போர்
விமானங்களை அவசரமாக இயக்கின.
</p><p>
இதில் லிதுவேனியாவில் வான்வெளியை அண்மித்த ட்ரோன் ஒன்றை நேட்டோ போர் விமானம்
சுட்டு வீழ்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-15T14:55:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[உணர்வுபூர்வமாக இடம்பெற்ற மந்துவில் படுகொலையின் 27 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/27th-commemoration-of-the-manduvil-massacre-1789480608"></link>
            <id>https://ibctamil.com/article/27th-commemoration-of-the-manduvil-massacre-1789480608</id>
            <summary type="text">முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு, மந்துவில் படுகொலையின் 27 ஆம் ஆண்டு
நினைவேந்தல் நிகழ்வு இன்று செப்டெம்பர் 15 உணர் வெழுச்சியுடன்
முன்னெடுக்கப்பட்டத...</summary>
            <content type="html"><![CDATA[<p>முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு, மந்துவில் படுகொலையின் 27 ஆம் ஆண்டு
நினைவேந்தல் நிகழ்வு இன்று செப்டெம்பர் 15 உணர் வெழுச்சியுடன்
முன்னெடுக்கப்பட்டது.
</p><p>
குறிப்பாக கடந்த 1999 ஆம் ஆண்டு செப்ரெம்பர் 15 ஆம் திகதியன்று மந்துவில்
சந்திப் பகுதியில் இலங்கை வான்படையினர் மேற்கொண்ட விமானத் தாக்குதலில் 24
அப்பாவி தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.
</p><p>
இவ்வாறு படுகொலை செய்யப்பட்ட அப்பாவித் தமிழ் மக்களின் 27 ஆம் ஆண்டு
நினைவேந்தல் நிகழ்வு உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்டது.</p><p></p><h2>நினைவேந்தல் நிகழ்வுகள்</h2><p>
வருடம் தோறும் பல்வேறு அமைப்புக்கள் பல்வேறு தரப்பினர் நினைவேந்தல் நிகழ்வை
முன்னெடுக்க இருந்த போதும் இம்முறை யாரும் குறித்த நினைவேந்தல் நிகழ்வை
முன்னெடுக்க முன்வராத நிலையில் இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் உறவுகளால் நினைவேந்தல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5567a31e-b432-43ad-b249-869f2e3487dd/26-6aa957b7a2d59.webp' /></p><p>

அந்தவகையில் குறித்த படுகொலை சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் உறவுகள்
பொதுச்சுடரை ஏற்றி, நிகழ்வேந்தல் நிகழ்வை ஆரம்பித்துவைத்தனர்.</p><p>
</p><p>
தொடர்ந்து குறித்த படுகொலைச் சம்பவத்தின்போது உயிர்நீத்தவர்களின் உறவுகள்
மலர்மாலை அணிவித்து, ஈகைச்சடேரேற்றி, மலர்தூவி, கண்ணீர் சொரிந்து
உணர்வெழுச்சியுடன் தமது அஞ்சலிகளைச் செலுத்தியிருந்தனர்.</p><p>
</p><p>
இருப்பினும் பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக வீடியோ புகைப்படம் எடுக்க
வேண்டாம் என மக்கள் கோரினர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-15T14:42:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆண்களை ஆட்டிப்படைக்கும் குணம் கொண்ட 4 ராசிப் பெண்கள்! உங்க ராசியும் இதுல இருக்கா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/which-zodiac-signs-women-are-always-harsh-to-men-1789479214"></link>
            <id>https://manithan.com/article/which-zodiac-signs-women-are-always-harsh-to-men-1789479214</id>
            <summary type="text">ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒருவருடைய பிறக்கும் ராசி மற்றும் நட்சத்திரமானது அவரின் தனிப்பட்ட ஆளுமை மற்றும் குணங்களுடன் மிக நெருங்கிய தொடர்பை கொண்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒருவருடைய பிறக்கும் ராசி மற்றும் நட்சத்திரமானது அவரின் தனிப்பட்ட ஆளுமை மற்றும் குணங்களுடன் மிக நெருங்கிய தொடர்பை கொண்டிருக்கும் என நம்பப்படுகின்றது.</p><p> 

அந்தவகையில், சில பெண்கள் மென்மையானவர்களாகவும், அக்கறையானவர்களாகவும் இருப்பார்கள், ஆனால் சில ராசிகளில் பிறந்த பெண்கள் குறிப்பாக ஆண்களிடம், அதிக உறுதியுடனும், கடுமையாகவும் நடந்துகொள்ளும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0f0b43a9-cf09-45e4-9984-e56d075a1877/26-6aa9569dd448d.webp' /></p><p></p><p>
</p><p>
அவர்களைப் பார்த்தாலே ஆண்கள் பயப்படும் அளவிற்கு நடந்து கொள்வார்கள். அப்படி ஆண்களை ஆட்டிப்படைக்கும் குணம் கொண்ட பெண் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.</p><h2>மேஷம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/eb41db2a-7af5-4806-9ac9-70390d5ac473/26-6aa9569e89d71.webp' /></p><h2>
</h2><p>மேஷ ராசிப் பெண்கள் செவ்வாயின் ஆதிக்கம் கொண்டவர்கள். துணிச்சல், தைரியம், உறுதி ஆகியவை இவர்களின் முக்கிய குணங்கள். </p><p>இயல்பாகவே சுதந்திரமாகச் செயல்படுவதுடன், மனதில் பட்டதை வெளிப்படையாகப் பேசுவார்கள். ஆண்களிடம் மரியாதையையும் நேர்மையையும் எதிர்பார்ப்பதால், சில நேரங்களில் கடுமையானவர்களாகத் தோன்றலாம்.</p><p> பலவீனம் அல்லது தயக்கத்தை விரும்பாத இவர்கள், தங்கள் கருத்துகளையும் விமர்சனங்களையும் நேரடியாகத் தெரிவிப்பார்கள். இவர்களின் கடினமான அணுகுமுறை, வழிநடத்த வேண்டும் என்ற விருப்பத்தையும் வலிமையையும் வெளிப்படுத்துகிறது.
</p><h2>
மகரம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0ad0298f-6019-49b3-af2f-9967bbd0f40f/26-6aa9569f3fa09.webp' /></p><h2>
</h2><p>சனிபகவானின் ஆதிக்கம் கொண்ட மகர ராசிப் பெண்கள் ஒழுக்கம், பொறுப்பு மற்றும் நடைமுறைச் சிந்தனை கொண்டவர்கள். </p><p>வாழ்க்கையை தீவிரமாக அணுகும் இவர்கள், தங்களைச் சுற்றியுள்ளவர்களிடமும் அதையே எதிர்பார்ப்பார்கள். தேவையற்ற பேச்சு மற்றும் விவாதங்களுக்கு இடமளிக்காமல், கண்டிப்புடனும் உறுதியுடனும் இருப்பார்கள். </p><p>உயர்ந்த எதிர்பார்ப்புகளும் வலுவான பொறுப்புணர்வும் இவர்களின் கடினமான குணத்திற்கு காரணமாகும். ஆண்கள் தங்களை மேம்படுத்திக்கொள்ள ஊக்கமளித்தாலும், எதிர்பார்ப்புகள் நிறைவேறாதபோது உணர்ச்சியற்றவர்களாகத் தோன்றலாம்.</p><h2>

விருச்சிகம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1a454085-4037-4477-85e5-4795a3a1ea95/26-6aa9569fe900d.webp' /></p><p>
விருச்சிக ராசிப் பெண்கள் செவ்வாய் மற்றும் புளூட்டோவின் ஆதிக்கம் கொண்டவர்கள். தீவிரமான குணமும் ஆழமான உணர்வுகளும் இவர்களிடம் காணப்படும். </p><p>ஆண்களிடம் கடுமையாக நடந்துகொள்வது பெரும்பாலும் அவர்களின் பாதுகாப்பு உணர்வு மற்றும் சந்தேக மனப்பான்மையிலிருந்து உருவாகிறது. </p><p>துரோகம் மற்றும் நேர்மையின்மையை ஒருபோதும் சகித்துக்கொள்ளாத இவர்கள், பிரச்சனைகளை நேரடியாக எதிர்கொள்வார்கள். இவர்களின் கடுமையான அணுகுமுறை, உண்மையில் தங்களின் பலவீனத்தைப் பாதுகாக்கும் ஒரு கவசமாக இருக்கலாம்.</p><h2>

தனுசு</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3e04805d-6068-4a67-831e-81d5b6205f11/26-6aa956a0a0702.webp' /></p><p></p><h2>
</h2><p>தனுசு ராசிப் பெண்கள் குருபகவானின் ஆதிக்கம் கொண்டவர்கள். நேர்மை மற்றும் வெளிப்படையான பேச்சு இவர்களின் முக்கிய குணங்கள்.</p><p> யாரையும் புண்படுத்தும் நோக்கம் இல்லாவிட்டாலும், இவர்களின் நேரடியான பேச்சு சில ஆண்களுக்கு கடுமையாகத் தோன்றலாம். </p><p>சுதந்திரத்தை அதிகம் மதிக்கும் இவர்கள், தங்களை கட்டுப்படுத்துவதையோ தங்கள் விருப்பப்படி மாற்ற முயற்சிப்பதையோ விரும்பமாட்டார்கள். ஏற்றுக்கொள்ள முடியாத செயல்களை தயக்கமின்றி வெளிப்படையாகச் சுட்டிக்காட்டும் குணம் இவர்களிடம் நிச்சயம் இருக்கும்.</p><p><b>இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;&nbsp;</b></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b></td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-15T14:31:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கட்டுப்பாட்டை மீறும் AI வேண்டாம்; மைட்ரோசாப்ட் சி.இ.ஓ அதிரடி கருத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/we-do-not-want-ai-out-of-control-microsoft-ceo-1789478216"></link>
            <id>https://jvpnews.com/article/we-do-not-want-ai-out-of-control-microsoft-ceo-1789478216</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;கட்டுப்பாட்டை மீறும் AI வேண்டாம் என மைட்ரோசாப்ட் சி.இ.ஓ&amp;nbsp; ( Satya Nadella ) அதிரடியாக கருத்து வெளியிட்டுள்ளார்.

 
 தற்போதைய காலகட...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;கட்டுப்பாட்டை மீறும் AI வேண்டாம் என மைட்ரோசாப்ட் சி.இ.ஓ&nbsp; ( Satya Nadella ) அதிரடியாக கருத்து வெளியிட்டுள்ளார்.
</p><p>
 
 தற்போதைய காலகட்டத்தில் செயற்கை நுண்ணறிவு (AI) மக்களிடம் பிரபலமாகி வருகிறது. AI-ஐ பயன்படுத்தி இல்லாததை இருப்பது போல காட்ட முடியும். 

 அப்படித்தான் தற்போது பல வீடியோக்களும், புகைப்படங்களும் சமூகவலைத்தளங்களில் சுற்றிக் கொண்டிருக்கிறது..

ஒருபக்கம் மென்பொருள் துறையில் AI வளர்ச்சியை கண்டு வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6f202c3a-9260-467e-b4c9-fe1321cb0db2/26-6aa9454a6b44b.webp' /></p><h2>மனிதர்களை விட வேகமாக செயலபடும்&nbsp; AI&nbsp;</h2><p> Software Coding-ஐ மனிதர்களை விட AI வேகமாக எழுதி விடுகிறது. இதனால் வரும் காலத்தில் Sofrtware துறையில் மனிதர்களுக்கான வேலைவாய்ப்புகள் வெகுவாக குறையும் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

AI வளர்ச்சி காலத்திற்கு தேவையான ஒன்று. ஆனாலும் இதன் வளர்ச்சியால் மனிதர்கள் பெருமளவு பாதிக்கப்படுவார்கள் என்கிற பொதுவான கருத்து நிலவுகிறது

 AI மனித குலத்திற்கு எதிரானது.</p><p> AI ரோபோக்கள் மனிதர்களுக்கு எதிராக மாறுவதற்கு வாய்ப்புண்டு என பலரும் கருகின்றார்கள்.

இந்நிலையில் இது தொடர்பாக கருத்து தெரிவித்த மைக்ரோசாப்ட் சி.இ.ஓ சத்ய நாதெல்லா ‘ ( Satya Nadella ) ,</p><p></p><p> மனிதகுலத்திற்கு உதவாத மனித கட்டுப்பாட்டில் இல்லாத AI தொழில்நுட்பத்தை உருவாக்குவது வீண் வேலை. Super Inteligence போன்று AI மாடல்கள் மனிதர்களின் முழு கட்டுப்பாட்டில் மட்டுமே இயங்க வேண்டும்.</p><p> அதன் வளர்ச்சி வேகத்தை குறைக்க வலியுறுத்திய பிற நிறுவனங்களின் அழைப்பை நான் வரவேற்கிறேன்.

Microsoft AI மாடல்களுக்கான புதிய நடத்தை விதிகளை நாளை மக்களின் கருத்துக்காக வெளியிடவிருக்கிறோம்.</p><p>]</p><p> 

அதேபோல், AI -யின் பயன்கள் சில நிறுவனங்களின் கைகளில் மட்டும் முடங்காமல் அனைத்து நாடுகளுக்கும் பரவலாக சென்றடைய வேண்டும்’ என அவர்&nbsp; ( Satya Nadella )&nbsp; கூறியிருக்கிறார்</p>]]></content>
            <updated>2026-09-15T14:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவிலிருந்து 111 பேர் நாடு கடத்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/cbsa-has-deported-amid-extortion-1789472113"></link>
            <id>https://canadamirror.com/article/cbsa-has-deported-amid-extortion-1789472113</id>
            <summary type="text">&amp;nbsp;கனடாவிலிருந்து 111 பேர் நாடு கடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கனடாவில் கப்பம் கோரல் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபட...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கனடாவிலிருந்து 111 பேர் நாடு கடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
</p><p>கனடாவில் கப்பம் கோரல் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் வெளிநாட்டுப் பிரஜைகளுக்கு எதிரான நாடு தழுவிய நடவடிக்கையின் ஒரு பகுதியாக, 111 பேர் நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளதாக கனடா எல்லைச் சேவைகள் முகவர் நிறுவனம் அறிவித்துள்ளது. </p><p>
கடந்த ஆண்டில் பிறப்பிக்கப்பட்ட 188 வெளியேற்ற உத்தரவுகளின் அடிப்படையில் இந்த நாடுகடத்தல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/31411d4b-d3c1-4f24-aae0-f6818fcf0d9a/26-6aa92d72b302d.webp' /></p><p>இவற்றில் பெரும்பாலான வெளியேற்றங்கள் பிரிட்டிஷ் கொலம்பியா மற்றும் டொராண்டோ பெரும்பாக பகுதியில் நிகழ்ந்துள்ளன.</p><p> 
குடிவரவு மற்றும் அகதிகள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கனடாவில் வசிக்கத் தகுதியற்றவர்களைக் கண்டறிந்து, விசாரித்து, வெளியேற்ற கனடா முழுவதிலும் உள்ள சட்ட அமலாக்கப் பங்காளிகளுடன் இணைந்து தீவிரமாகச் செயல்பட்டு வருவதாக கனடா எல்லைச் சேவைகள் முகவர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
</p><p>இத்திட்டம் ஆகஸ்ட் 2025-இல் பசிபிக் மற்றும் பிரெய்ரி பிராந்தியங்களில் தொடங்கப்பட்டு, மூன்று மாதங்களுக்குப் பின்னர் டொராண்டோ பகுதிக்கு விரிவாக்கப்பட்டது.</p><p>பசிபிக் பிராந்தியத்தில் 91 வெளியேற்ற உத்தரவுகள் – 58 பேர் நாடுகடத்தல், பிரெய்ரி பிராந்தியம் 47 வெளியேற்ற உத்தரவுகள் – 30 பேர் நாடுகடத்தல், கிரேட்டர் தொரண்டோ பகுதி 50 வெளியேற்ற உத்தரவுகள் – 23 பேர் நாடுகடத்தல் என விபரிக்கப்பட்டுள்ளது.</p><p>
கடந்த ஆண்டில் மட்டும் தீவிர குற்றச் செயல்கள், மனித உரிமை மீறல்கள், தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் கொண்ட 1,010 பேர் உட்பட மொத்தம் 23,160 தகுதியற்ற நபர்களை கனடா நாட்டை விட்டு வெளியேற்றியுள்ளது.</p><p> 
தற்போது எல்லை முகமையகத்தை விரிவாக்கம் செய்ய 2025 வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட 30.4 மில்லியன் டொலர் நிதி மூலம் மேலும் 1,000 புதிய அதிகாரிகளை நியமிக்கும் பணி நடைபெற்று வருகிறது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-15T14:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானின் தாக்குதலில் அமெரிக்காவிற்கு ஏற்பட்ட பேரிழப்பு : முதன்முதலில் பென்டகன் வெளியிட்ட அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/iran-war-has-led-to-pentagon-munitions-shortfall-1789480790"></link>
            <id>https://ibctamil.com/article/iran-war-has-led-to-pentagon-munitions-shortfall-1789480790</id>
            <summary type="text">&amp;nbsp;மத்திய கிழக்கில் ஈரான் நடத்திய தாக்குதல்கள் காரணமாக, 8 நாடுகளில் உள்ள அமெரிக்க இராணுவ தளங்கள் மற்றும் தூதரகங்கள் கடுமையான சேதங்களைச் சந்தித்துள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;மத்திய கிழக்கில் ஈரான் நடத்திய தாக்குதல்கள் காரணமாக, 8 நாடுகளில் உள்ள அமெரிக்க இராணுவ தளங்கள் மற்றும் தூதரகங்கள் கடுமையான சேதங்களைச் சந்தித்துள்ளதாக அமெரிக்க பாதுகாப்புத்துறையின் (பென்டகன்) அதிகாரபூர்வ கண்காணிப்பு அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.</p><p>இதன்படி குவைத், பஹ்ரைன், கத்தார், யுஏஇ, சவுதி அரேபியா, ஈராக், ஓமான், ஜோர்டான் ஆகிய 8 நாடுகளில் உள்ள அமெரிக்க இராணுவ தளங்களில் நூற்றுக்கணக்கான கட்டடங்கள் மற்றும் கட்டமைப்புகள் சேதம் அடைந்துள்ளன.</p><h2>விமானங்கள்,ட்ரோன்கள், எரிபொருள் சேமிப்பு கிடங்குகள் அழிப்பு</h2><p>அதுமட்டுமின்றி எரிபொருள் சேமிப்பு கிடங்குகள் சேதம் அடைந்து உள்ளன. அமெரிக்காவின் 12க்கும் மேற்பட்ட போர் விமானங்கள் மற்றும் ட்ரோன்கள் அழிக்கப்பட்டு உள்ளன.


சவுதி அரேபியா மற்றும் ஈராக்கில் அமெரிக்காவின் பல KC-135 ரக எரிபொருள் நிரப்பும் விமானங்கள் அழிக்கப்பட்டன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5a6b6045-ff59-41f9-b07e-a4d6a45cbda9/26-6aa95483df116.webp' /></p><p> துபாயில் உள்ள அமெரிக்க தூதரகம் ட்ரோன் தாக்குதலுக்கு உள்ளானது. மேலும், குவைத்தில் உள்ள அமெரிக்க தூதரகம் தற்காலிகமாக தனது செயல்பாடுகளை நிறுத்த வேண்டியிருந்தது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.</p><p></p><h2>முதலாவது அதிகாரபூர்வ பென்டகன் அறிக்கை&nbsp;</h2><p>
</p><p>

வளைகுடா பிராந்தியத்தில் அமெரிக்க படைகளின் உள்கட்டமைப்பை ஈரான் போர் எவ்வளவு தூரம் பாதித்துள்ளது என்பதைக் காட்டும் முதலாவது அதிகாரபூர்வ பென்டகன் அறிக்கை வெளியாகி இருக்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/01b90e7a-1f08-46d4-be87-a5b52271dde0/26-6aa95484972dd.webp' /></p><p> </p><p>இந்த பாதிப்புகளை தொடர்ந்து, மத்திய கிழக்கில் தங்கள் ராணுவ தளங்களின் எண்ணிக்கையைக் குறைப்பது, இடத்தை மாற்றி அமைப்பது குறித்து பென்டகன் ஆலோசித்து வருகிறது என தகவல் வெளியாகி உள்ளது.&nbsp; &nbsp; &nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p> &nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-15T14:22:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[உணர்வுபூர்வமாக இடம்பெற்ற மந்துவில் படுகொலையின் 27ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/27th-anniversary-commemoration-of-the-manduvil-1789481116"></link>
            <id>https://tamilwin.com/article/27th-anniversary-commemoration-of-the-manduvil-1789481116</id>
            <summary type="text">முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு, மந்துவில் படுகொலையின் 27 ஆம் ஆண்டு
நினைவேந்தல் நிகழ்வு இன்று(15) உணர்வெழுச்சியுடன்
முன்னெடுக்கப்பட்டது.

குறிப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு, மந்துவில் படுகொலையின் 27 ஆம் ஆண்டு
நினைவேந்தல் நிகழ்வு இன்று(15) உணர்வெழுச்சியுடன்
முன்னெடுக்கப்பட்டது.</p><p>

குறிப்பாக கடந்த 1999 ஆம் ஆண்டு செப்டெம்பர் 15 ஆம் திகதியன்று மந்துவில்
சந்திப் பகுதியில் இலங்கை வான்படையினர் மேற்கொண்ட விமானத் தாக்குதலில் 24
அப்பாவி தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.</p><h2>நினைவேந்தல் நிகழ்வு</h2><p>
</p><p>
இவ்வாறு படுகொலை செய்யப்பட்ட அப்பாவித் தமிழ் மக்களின் 27 ஆம் ஆண்டு
நினைவேந்தல் நிகழ்வு உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9bd02c08-5ca2-4084-8777-a3bc92238ec5/26-6aa95356cd002.webp' /></p><p>&nbsp; வருடம் தோறும் பல்வேறு அமைப்புக்கள் பல்வேறு தரப்பினர் நினைவேந்தல் நிகழ்வை
முன்னெடுக்க இருந்த போதும் இம்முறை யாரும் குறித்த நினைவேந்தல் நிகழ்வை
முன்னெடுக்க முன்வராத நிலையில் குறித்த படுகொலைச் சம்பவம் இடம்பெற்ற மந்துவில்
சந்தி வளாகத்தில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் உறவுகளால்
இந்த நினைவேந்தல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.</p><p>

அந்தவகையில் குறித்த படுகொலை சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் உறவுகள்
பொதுச்சுடரை ஏற்றி, நிகழ்வேந்தல் நிகழ்வை ஆரம்பித்துவைத்தனர்.</p><p>

தொடர்ந்து குறித்த படுகொலைச் சம்பவத்தின்போது உயிர்நீத்தவர்களின் உறவுகள்
மலர்மாலை அணிவித்து, ஈகைச்சடேரேற்றி, மலர்தூவி, கண்ணீர் சொரிந்து
உணர்வெழுச்சியுடன் தமது அஞ்சலிகளைச் செலுத்தியிருந்தனர்.

இருப்பினும் பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக வீடியோ புகைப்படம் எடுக்க
வேண்டாம் என மக்கள் கோரினர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-15T14:17:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[500 கோடி ரூபா கடத்தலை காட்டிக்கொடுத்த நபரை கொலை செய்ய முயற்சி - சிக்கிய முக்கிய புள்ளிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/muder-plan-failed-3-arrested-1789480226"></link>
            <id>https://tamilwin.com/article/muder-plan-failed-3-arrested-1789480226</id>
            <summary type="text">
கதிர்காமத்தில் 500 கோடி ரூபா பெறுமதியான ஐஸ் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைக்குத் தகவல் வழங்கிய நபரை கொலை செய்யத் திட்டமிட்ட குற்றக் கும்பலின் பிரதான...</summary>
            <content type="html"><![CDATA[<p>
கதிர்காமத்தில் 500 கோடி ரூபா பெறுமதியான ஐஸ் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைக்குத் தகவல் வழங்கிய நபரை கொலை செய்யத் திட்டமிட்ட குற்றக் கும்பலின் பிரதானி உள்ளிட்ட மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p>
செல்லக்கதிர்காமம் பகுதியில் வைத்து வலான மத்திய ஊழல் தடுப்புத் தாக்குதல் பிரிவினரால் குறித்த மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>

2025ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 29 ஆம் திகதி 325 கிலோகிராம் போதைப்பொருள், 8 சந்தேகநபர்கள் மற்றும் 6 வாகனங்களைக் கைப்பற்றுவதற்குக் காரணமாக இருந்த நபரை கொலை செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p><p>
</p><h2><b>
1.4 மில்லியன் ரூபாய் ஒப்பந்தம்</b></h2><p>இதற்காக அங்கொடை பிரியங்கர மற்றும் ரூபன் ஆகிய ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளால் 1.4 மில்லியன் ரூபாய் ஒப்பந்தம் வழங்கப்பட்டிருந்தமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fa9f5234-11e3-44de-85b7-b7265395a1ef/26-6aa950c131178.webp' /></p><p>கொலை ஒப்பந்தத்தின் பிரதான சந்தேகநபரான மதுக்க சாமர என்ற மதுவாவிடம் இருந்து 2 கத்திகள், 8 கிராம் ஹெரோயின் மற்றும் குற்றச் செயலுக்குப் பயன்படுத்தத் திட்டமிடப்பட்டிருந்த ஜீப் வாகனத்தின் போலியான இலக்கத் தகட்டுடன் தொடர்புடைய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
</p><p>
பிரதான சந்தேகநபருடன் இங்கிரிய பிரதேசத்தில் வசித்து வந்த நலின் என்ற நபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>

சந்தேக நபர் கைது செய்யப்படும்போது தனது மகனுக்கு எழுதிய உயிரை மாய்ப்புக்கான கடிதம் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தாக்குதலை நடத்தி தமது உயிரைப் பணயம் வைத்து இந்தக் கொலையை செய்வதற்கு அவர் திட்டமிட்டிருந்தமை தெரியவந்துள்ளது.</p><h3><b>

பல கொலை குற்றச்சாட்டுக்கள்</b></h3><p>பிரதான சந்தேகநபரான மதுவாவின் மைத்துனரான சுசாந்த என்ற நபரும் கைது செய்யப்பட்டுள்ளார். 
இந்த நபருக்கும் மதுவாவுக்கும் எதிராக வெல்லம்பிட்டிய பகுதியில் மேற்கொள்ளப்பட்ட மற்றுமொரு கொலைச் சம்பவம் தொடர்பில் அளுத்கடை இலக்கம் 02 நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையில் உள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5f0ce1d0-9da5-4f2f-9839-8d9747d7e295/26-6aa950c1e2283.webp' /></p><p>சந்தேகநபர்கள் ஜீப் வாகனத்தில் கிரிந்த பகுதியில் அமைந்துள்ள தகவல் வழங்கியவரின் வீட்டிற்கு சென்று, அவரை கடத்திச் சென்று கத்திகளால் வெட்டிப் படுகொலை செய்து வீதியில் வீசிவிட்டு, குறித்த ஜீப் வாகனத்திற்குத் தீயிட்டு அழிக்கவும் திட்டமிட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
கொலைத் திட்டம் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, குற்றச் செயலுக்காக பயன்படுத்தவிருந்த ஜீப் வாகனம் கடுவலை, ஹேவகம பகுதியில் மறைத்து வைக்கப்பட்டுள்ளது.</p><p>

இந்த நிலையில் கடந்த 08 ஆம் திகதி பொலிஸாரால் பொறுப்பேற்கப்பட்டு கிரிந்த பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-15T14:06:13+00:00</updated>
        </entry>
    </feed>
