<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-08-01T04:47:07+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலகின் பரபரப்பான போக்குவரத்துப் பாதைக்கு குறி - ஏமனின் ஹூதியின் அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/yemen-s-houthis-deny-plans-to-impose-fees-on-ships-1785557429"></link>
            <id>https://ibctamil.com/article/yemen-s-houthis-deny-plans-to-impose-fees-on-ships-1785557429</id>
            <summary type="text">செங்கடலை ஏடன் வளைகுடாவுடன் இணைக்கும் பாபுல் மந்தபு நீரிணையில் வர்த்தகக் கப்பல்களுக்குக் கட்டணம் விதிக்கத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுவதை ஏமனின் ஹூதி ...</summary>
            <content type="html"><![CDATA[<p>செங்கடலை ஏடன் வளைகுடாவுடன் இணைக்கும் பாபுல் மந்தபு நீரிணையில் வர்த்தகக் கப்பல்களுக்குக் கட்டணம் விதிக்கத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுவதை ஏமனின் ஹூதி இயக்கத்தின் கடல்சார் ஒருங்கிணைப்பு அமைப்பு மறுத்துள்ளது.</p><p>அத்தகைய முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை என்றும் அந்த முக்கியத்துவம் வாய்ந்த நீர்வழிப்பாதையின் வழியான போக்குவரத்து தொடர்ந்து இலவசமாகவே உள்ளது என்றும் அதன் அறிக்கையில் கூறியுள்ளது.</p><p>தெற்கு செங்கடல் வழியாகச் செல்லும் கப்பல்களுக்குக் கட்டணம் விதிப்பது குறித்து ஈரான் ஆதரவு ஹூதிகள் பரிசீலித்து வருவதாக பிராந்திய வட்டாரங்களை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டதைத் தொடர்ந்து இந்த அறிக்கை வந்துள்ளது.</p><p></p><h2>கட்டணங்கள் குறித்த முன்மொழிவு</h2><p>ஜூலை மாதம் ஹூத்தி அதிகாரிகள் தெஹ்ரானுக்கு மேற்கொண்ட பயணத்தின் போது, ​​கட்டணங்கள் குறித்த முன்மொழிவு ஈரானிய அதிகாரிகளுடன் விவாதிக்கப்பட்டது என்றும், இருப்பினும் அதனைச் செயல்படுத்துவதற்கான காலக்கெடு எதுவும் முடிவு செய்யப்படவில்லை என்றும் ராய்ட்டர்ஸ் அறிக்கையில் உள்ள வட்டாரங்கள் தெரிவித்திருந்தன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1f9276c0-6c4e-40ea-a3fd-e66e2ad6f983/26-6a6d788723d5f.webp' /></p><p>ஹூதி அமைப்பால் நடத்தப்படும் மனிதாபிமான நடவடிக்கைகளுக்கான ஒருங்கிணைப்பு மையம் தங்களது "பாதுகாப்பான போக்குவரத்துச் சேவை ஒரு தன்னார்வ மற்றும் கட்டணமில்லா சேவையாகும்" என்று தெரிவித்துள்ளது.</p><p>"அங்கீகரிக்கப்படாத நபர்களுக்கோ அல்லது நிறுவனங்களுக்கோ எந்தவொரு கட்டணத்தையும் செலுத்தவோ அல்லது எந்தவொரு தகவலையும் வழங்கவோ வேண்டாம்&nbsp; என மையம் வலியுறுத்தியுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-01T04:39:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாடொன்றில் பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/magnitude-4-7-quake-strikes-near-italy-s-naples-1785556924"></link>
            <id>https://ibctamil.com/article/magnitude-4-7-quake-strikes-near-italy-s-naples-1785556924</id>
            <summary type="text">தெற்கு இத்தாலிய நகரமான நேபிள்ஸுக்கு அருகிலுள்ள கேம்பி ஃபிளெக்ரே பகுதியில் 4.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய...</summary>
            <content type="html"><![CDATA[<p>தெற்கு இத்தாலிய நகரமான நேபிள்ஸுக்கு அருகிலுள்ள கேம்பி ஃபிளெக்ரே பகுதியில் 4.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p> வெள்ளிக்கிழமை (31) மாலை 7:46 மணிக்கு பதிவான இந்த நிலநடுக்கத்தின் மையப்புள்ளி, நேபிள்ஸுக்கு மேற்கே உள்ள கேம்பி ஃபிளெக்ரே பகுதியில் சுமார் 3 கிலோ மீற்றர் ஆழத்தில் இருந்ததாக இத்தாலியின் தேசிய புவி இயற்பியல் மற்றும் எரிமலை ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.</p><p>இந்த நிலநடுக்கத்தினால் நேபிள்ஸ் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள கட்டிடங்களுக்கு சிறிய சேதங்கள் ஏற்பட்டதாகவும், ஆனால் மக்களுக்கு உதவவோ அல்லது அவர்களை மீட்கவோ தங்களது குழுவினருக்கு உடனடியாக எந்த கோரிக்கைகளும் வரவில்லை என்று&nbsp;இத்தாலிய தீயணைப்பு பிரிவு குறிப்பிட்டுள்ளது.</p><p></p><h2>முன்னெச்சரிக்கை நடவடிக்கை</h2><p>அத்துடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உள்ளூர் தொடருந்து மற்றும் மெட்ரோ சேவைகள் நிறுத்தப்பட்டதாக உள்ளூர் அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a1856c42-423f-4212-a644-566f89d911d9/26-6a6d771f207b1.webp' /></p><p>
அப்பகுதியில் இதுவரை பதிவான மிகவும் சக்திவாய்ந்த நிலநடுக்கங்களில் இதுவும் ஒன்றாகும் என்றும், நில அதிர்வுகள் ஏற்பட்டபோது சில பகுதிகளில் மக்கள் வீதிகளுக்கு ஓடிவந்ததாகவும் இத்தாலிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
</p><p>
மேற்கு நேபிள்ஸின் பெரும் பகுதியை உள்ளடக்கிய, மக்கள் அடர்த்தியாக வாழும் எரிமலைப் பள்ளமான கம்பி ஃபிளெக்ரேயில், சமீபத்திய ஆண்டுகளில் நில அதிர்வுகள் அதிகரித்து வருவதாகவும் இது அரசாங்கத்தின் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-01T04:39:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈஸ்டர் தாக்குதல் வழக்கில் நடந்த அதிரடி திருப்பம்! பூஜித் ஜயசுந்தர மற்றும் ஹேமசிறி தொடர்பில் வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/pujith-and-hemasiri-to-welikada-prison-1785548122"></link>
            <id>https://tamilwin.com/article/pujith-and-hemasiri-to-welikada-prison-1785548122</id>
            <summary type="text">மரண தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோரை வெலிக்கடை சிறையில்...</summary>
            <content type="html"><![CDATA[<p>மரண தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோரை வெலிக்கடை சிறையில் வைத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.</p><p>உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக புலனாய்வு தகவல்கள் கிடைத்திருந்தபோதிலும், அதனைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்காமை, கடமை தவறியமை மற்றும் கொலைக்கு உடந்தையாக இருந்தமை ஆகிய குற்றச்சாட்டுகளில் முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோருக்கு கொழும்பு நிரந்தர நீதாய மேல்நீதிமன்ற அமர்வின் பெரும்பான்மை நீதிபதிகளால் நேற்று (31) மரண தண்டனை விதிக்கப்பட்டது.</p><p></p><h2>கைதிகளாக பதிவு</h2><p>தீர்ப்பு வழங்கப்பட்டதை தொடர்ந்து, அவர்கள் இருவரும் நீதிமன்றத்தில் இருந்து சிறைச்சாலைக்கு அழைத்துச்செல்லப்பட்டு இருவரும் வெலிக்கடை சிறையில் கைதிகளாக பதிவு செய்யப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3cd801a2-e1fd-47ab-8b44-0f859d3d68a5/26-6a6d7834244dd.webp' /></p><p>இதனையடுத்து கைதிகளுக்கு பரிந்துரைக்கப்பட்ட ஆடைகள் இருவருக்கும் வழங்கப்பட்டதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p>2019 ஏப்ரல் 21 அன்று மூன்று தேவாலயங்கள் மற்றும் மூன்று சொகுசு விருந்தங்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த தற்கொலைத் தாக்குதல்களில் வெளிநாட்டவர்கள் உட்பட 260 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுடன் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர்.
</p><p>இது தொடர்பில் முன்கூட்டியே உளவுத்துறை எச்சரிக்கைகள் கிடைத்தபோதிலும், தங்களது அதிகாரப்பூர்வ பொறுப்புகளை நிறைவேற்றத் தவறியமை, கடமை வீழ்ச்சி, கொலை மற்றும் கொலை முயற்சிக்கு உடந்தையாக இருந்தமை ஆகிய குற்றச்சாட்டுகளில் இருவரும் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டு இந்த தீர்ப்பு வழஙக்ப்பட்டுள்ளது.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-01T04:38:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[கீழே விழுந்த நடிகை ராஷ்மிகா மந்தனா! மருத்துவர்கள் சொன்ன அதிர்ச்சியூட்டும் தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/rashmika-mandanna-suffered-a-major-hip-injury-1785559106"></link>
            <id>https://viduppu.com/article/rashmika-mandanna-suffered-a-major-hip-injury-1785559106</id>
            <summary type="text">பான்-இந்தியன் ஸ்டாராக ஜொலித்துக்கொண்டிருக்கிறார் நடிகை ராஷ்மிகா மந்தனா. இந்திய சினிமாவில் அதிக வசூல் செய்த கதாநாயகிகளில் இவரும் இடம்பிடித்துள்ளார். கட...</summary>
            <content type="html"><![CDATA[<p>பான்-இந்தியன் ஸ்டாராக ஜொலித்துக்கொண்டிருக்கிறார் நடிகை ராஷ்மிகா மந்தனா. இந்திய சினிமாவில் அதிக வசூல் செய்த கதாநாயகிகளில் இவரும் இடம்பிடித்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன் தனது நீண்ட நாள் காதலரான விஜய் தேவரகொண்டாவை திருமணம் செய்துகொண்டார்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f601c5c0-ce8e-4ae0-af6e-b0379348587e/26-6a6d784ce160f.webp' /></p><p>திருமணத்திற்கு பிறகும் பிஸியாக நடித்து வரும் ராஷ்மிகா நடிப்பில், சமீபத்தில் வெளிவந்த காக்டெய்ல் 2 திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு ரசிகர்களிடையே வரவேற்பை பெறவில்லை. அடுத்ததாக இவர் நடிப்பில் Mysaa மற்றும் ரணபலி ஆகிய திரைப்படங்கள் உருவாகி வருகின்றன. இந்த இரண்டு திரைப்படங்களின் மீதும் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்ப்பை வைத்துள்ளனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9be2fcd4-ab98-4c48-9325-3c47c0f3e3c3/26-6a6d784d9580d.webp' /></p><p>இந்நிலையில், ஒரு படத்திற்காக ராஷ்மிகா நடனமாடிக்கொண்டிருந்தபோது திடீரென கீழே விழுந்துள்ளார். அப்போது, அவரது தொடை மற்றும் இடுப்புப் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது. அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு தசைநார் கிழிந்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றும் இன்னும் 6 வார காலத்திற்கு ஓய்வெடுத்து சிகிச்சை பெற வேண்டும் என தெரிவித்து உள்ளனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/92d1113b-1d13-4277-aaf2-517cb2dbfec7/26-6a6d784e4a640.webp' /></p><p>அதனால் ராஷ்மிகா நடிக்க வேண்டிய அனைத்து படங்களின் படப்பிடிப்புகளும் தற்போது தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-01T04:38:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[அன்று லட்சங்களில், இன்று கோடிகளில்.. நடிகை கயாடு லோஹர் வாங்கும் சம்பளம்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/actress-kayadu-lohar-salary-1785558147"></link>
            <id>https://cineulagam.com/article/actress-kayadu-lohar-salary-1785558147</id>
            <summary type="text">கயாடு லோஹர்கன்னடத்தில் வெளியான முகில்பேட் (Mugilpete) எனும் திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார் நடிகை கயாடு லோஹர். பத்தொன்பதாம் நூற்றாண்டு (...</summary>
            <content type="html"><![CDATA[<h2>கயாடு லோஹர்</h2><p>கன்னடத்தில் வெளியான முகில்பேட் (Mugilpete) எனும் திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார் நடிகை கயாடு லோஹர். பத்தொன்பதாம் நூற்றாண்டு (Pathonpatham Noottandu), அல்லூரி, இ பிரேம் யு, ஒரு ஜாதி ஜாதகம் என பல்வேறு மொழிகளில் நடித்துள்ளார்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d8b7505e-464c-4f77-b20f-e9b3e9ec36a3/26-6a6d7486a9b15.webp' /></p><p>இவர் எப்போது தமிழில் நடிக்கப்போகிறார் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான <a href="https://www.youtube.com/watch?v=SuqP9H7JW8c" target="_blank">டிராகன் </a>திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். முதல் தமிழ் திரைப்படமே மக்கள் மத்தியில் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/92dad752-40e1-411d-bae7-6e2e174128e4/26-6a6d7485db0b5.webp' /></p><p>இதன்பின், ஃபங்கி (Funky), பள்ளிச்சம்பட்டி, இதயம் முரளி என தொடர்ந்து பிஸியாக நடித்து வருகிறார். அடுத்ததாக இம்மார்ட்டல், I'm Game, தி பாரடைஸ், மஞ்சணத்தி, சூர்யா 48 என பல திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார்.</p><h2>சம்பளம்&nbsp;</h2><p> </p><p>

தென்னிந்திய சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக இருக்கும் கயாடு லோஹர், 2021-ஆம் ஆண்டு வெளியான தனது முதல் படத்திற்காக ரூ. 1 லட்சம் முதல் ரூ. 5 லட்சம் வரை சம்பளம் வாங்கியதாக கூறப்படுகிறது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/abe8a2c3-ba0f-4a05-bbe6-f923ff0bebe3/26-6a6d74875e694.webp' /></p><p>அன்று லட்சங்களில் சம்பளம் வாங்கி வந்த கயாடு லோஹர், இன்று கோடிகளில் சம்பளம் வாங்கி வருகிறார்.

ஆம், தெலுங்கு திரையுலகில் முன்னணி ஹீரோவான நானியுடன் இணைந்து 'தி பாரடைஸ்' திரைப்படத்தில் கயாடு லோஹர் நடித்து வருகிறார். இப்படம் செப்டம்பர் மாதம் வெளியாகவுள்ளது.</p><p> </p><p></p><p>இந்த நிலையில், இப்படத்தில் கதாநாயகியாக நடிக்க ரூ. 1.5 கோடி முதல் ரூ. 2 கோடி வரை கயாடு லோஹர் சம்பளம் வாங்கியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/534907f8-053e-4ebc-9e82-fbac481fd8b4/26-6a6d74c1e586d.webp' /></p><p>இது, நடிகை கயாடு லோஹரின் திறமைக்கு கிடைத்த வெற்றியாக பார்க்கப்படுகிறது. மேலும், இனி அடுத்தடுத்த பல வெற்றிகளை கொடுத்து மிகப்பெரிய நட்சத்திரமாக இந்திய சினிமாவில் தனி இடத்தை பிடிப்பார் என ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.</p>]]></content>
            <updated>2026-08-01T04:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள காணிகளை விடுவிப்பதற்கு விரைவில் நடவடிக்கை - பாதுகாப்பு பிரதியமைச்சர் தெரிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/immediate-action-to-release-lands-1785555851"></link>
            <id>https://tamilwin.com/article/immediate-action-to-release-lands-1785555851</id>
            <summary type="text">முல்லைத்தீவு மாவட்டத்தின் வட்டுவாகல், கேப்பாபிலவு மற்றும் கிளிநொச்சி
மாவட்டத்தின் சில காணிகளை விரைவில் விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என பாது...</summary>
            <content type="html"><![CDATA[<p>முல்லைத்தீவு மாவட்டத்தின் வட்டுவாகல், கேப்பாபிலவு மற்றும் கிளிநொச்சி
மாவட்டத்தின் சில காணிகளை விரைவில் விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என பாதுகாப்பு பிரதியமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகர தெரிவித்துள்ளார்.</p><p>

முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் இராணுவப் பயன்பாட்டில் உள்ள
காணிகளைச் சிவில் நிறுவனங்கள் மற்றும் பொதுமக்களுக்கு விடுவிப்பதற்கான
சாத்தியக்கூறுகள் தொடர்பான விசேட கலந்துரையாடல், முல்லைத்தீவு மாவட்டச்
செயலகத்தில் நேற்று(31.07.2026) நடைபெற்றபோதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>காணிகளை விடுவிக்க நடவடிக்கை</h2><p>
</p><p>மேலும் தெரிவிக்கையில், தேசியப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காகவே நாட்டின் 25 மாவட்டங்களிலும்
முப்படையினரின் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. </p><p>நாட்டில் ஏற்படும் அசாதாரண
மற்றும் இடர் நிலைமைகளின் போது பொலிஸாருடன் இணைந்து முப்படையினர்
களப்பணியாற்றுகின்றனர்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cce12875-4d09-4914-b23c-38c4ed2b9c78/26-6a6d7254e1e9a.webp' /></p><p>
போர் நிறைவுற்ற 2009 ஆம் ஆண்டிலிருந்து 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை
9,480 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன. எமது அரசாங்கம் ஆட்சிப்
பொறுப்பேற்ற பின்னர், இந்த ஆண்டு ஜூன் மாதம் வரை 615 ஏக்கர் காணிகள்
விடுவிக்கப்பட்டுள்ளன.</p><p> தொடர்ந்தும் கலந்துரையாடல்கள் மூலம் மக்களின் காணிகளை
விடுவிக்க நடவடிக்கை எடுப்போம், எனத் தெரிவித்துள்ளார்.</p><p>திருவிழாக் காலங்களில் கனகாம்பிகைக்குள முகாம் அமைந்துள்ள வீதியைப் பொதுமக்கள்
பயன்படுத்த அனுமதிக்குமாறு முன்வைக்கப்பட்ட கோரிக்கையையும் பிரதியமைச்சர்
ஏற்றுக்கொண்டார். </p><p>மேலும், அப்பகுதியில் இராணுவக் கட்டடத்துடன் உள்ள காணியை
விடுவிப்பதற்கு இராணுவத்தினரால் 8.5 மில்லியன் ரூபா கோரப்பட்டுள்ள நிலையில்,
கோயில் நிர்வாகத்தால் அத்தொகையைச் செலுத்த முடியாதிருப்பதை மாவட்டச் செயலாளர்
சுட்டிக்காட்டியதையடுத்து, அதனை மீள்பரிசீலனை செய்யவும் பிரதியமைச்சர் இணக்கம்
தெரிவித்தார்.</p><p></p><h2>காணி உரிமையாளர்கள் சார்பில்</h2><p>கடந்த மே மாதம் பாதுகாப்பு பிரதியமைச்சரால் பார்வையிடப்பட்ட இயக்கச்சியிலுள்ள
காணியை இன்னும் 3 மாதங்களுக்குள் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என
இராணுவத்தினர் இதன்போது தெரிவித்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5a9dd1be-10bd-4a1a-9716-3f853705512e/26-6a6d7255ebe35.webp' /></p><p>

வட்டுவாகல் மற்றும் கேப்பாபிலவு காணி உரிமையாளர்கள் சார்பில்
கலந்துகொண்டவர்கள் தமது கோரிக்கைகளை முன்வைத்தனர். </p><p>வட்டுவாகல் பகுதியில்
பொதுமக்களின் தனியார் காணிகளை விடுவிப்பதற்கு முன்பாக, அப்பகுதியில் கண்ணிவெடி
அகற்றும் பணிகளை நிறைவுசெய்து காணியை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனப்
பிரதியமைச்சர் உறுதி அளித்தார்.
</p><p>
கேப்பாபிலவில் உடனடியாக 6.5 ஏக்கர் காணியை விடுவிப்பதற்கான சாத்தியக்கூறுகள்
இருப்பதாகக் குறிப்பிட்ட பிரதியமைச்சர், எஞ்சிய காணிகளை விடுவிப்பது தொடர்பில்
மாவட்ட மட்டத்தில் குழுவொன்று அமைக்கப்பட்டு, கள நிலைமைகளை ஆராய்ந்து
தீர்மானம் எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.
</p><p>
இக்கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.திலகநாதன், வன்னிப் பிராந்தியக்
கட்டளைத் தளபதி, கிழக்கு கடற்படைத் தளபதி, பாதுகாப்பு அமைச்சின் சிரேஷ;ட
உதவிச் செயலாளர், மேலதிக மாவட்டச் செயலாளர், பிரதேச செயலாளர்கள், பாதுகாப்பு
அமைச்சின் உயர் அதிகாரிகள், பாதுகாப்புத் தரப்பினர் மற்றும் பொதுமக்கள் எனப்
பலரும் கலந்துகொண்டனர்.</p><p></p><p></p><p>
</p>]]></content>
            <updated>2026-08-01T04:28:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/warning-from-railway-station-owners-association-1785558421"></link>
            <id>https://jvpnews.com/article/warning-from-railway-station-owners-association-1785558421</id>
            <summary type="text">ரயில்வே திணைக்களத்தில் நிலவும் பிரச்சினைகளுக்கு அதிகாரிகள் உடனடியாகத் தீர்வு காணத் தவறினால், எதிர்காலத்தில் கடுமையான தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடவு...</summary>
            <content type="html"><![CDATA[<p>ரயில்வே திணைக்களத்தில் நிலவும் பிரச்சினைகளுக்கு அதிகாரிகள் உடனடியாகத் தீர்வு காணத் தவறினால், எதிர்காலத்தில் கடுமையான தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாக ரயில்வே நிலைய அதிபர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.</p><p>
</p><p></p><p>சார்பற்ற முறையில் பல பாரிய சமிக்ஞைக் கோளாறுகள் காணப்படுகின்ற பின்னணியில், தலவாக்கலை மற்றும் தலைமன்னார் பாதையில் பாதுகாப்பற்ற முறையில் ரயில்களை இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளதாகச் சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன தெரிவித்துள்ளார்.
</p><p>
கடந்த வாரம் முதல் இந்தப் பாதையில் ரயில் சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்ட போதிலும், இதுவரை உரிய சமிக்ஞை முறைமைகள் சீரமைக்கப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d11cebd4-2cb3-4723-b232-1ec2fcce2892/26-6a6d75969283c.webp' /></p><p>தற்போது மதவாச்சி முதல் தலைமன்னார் துறைமுகம் வரையிலான ஒற்றை ரயில் பாதையில் 'வழிகாட்டி முறைமையின்' கீழ் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. </p><p>பொதுவாக இவ்வாறான வழிகாட்டி முறைமையானது ஏதேனும் சமிக்ஞைக் கோளாறுகள் ஏற்படும் அவசர காலங்களில் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். </p><p>ஆனால் அதிகாரிகள் அதனை ஒரு நிரந்தர இயக்க முறைமையாகத் தொடர்ந்து பயன்படுத்தி வருவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.</p><p>


தலைமன்னார் பாதைக்கு மேலதிகமாக, மஹவ - அனுராதபுரம் பிரிவிலும் சமிக்ஞை தொடர்பான பிரச்சினைகள் இதுவரை தீர்க்கப்படவில்லை என்றும், அங்கேயும் தற்காலிக சமிக்ஞை முறைமைகளே பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் சுமேத சோமரத்ன குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
கோடிக்கணக்கான மக்கள் பணத்தைச் செலவழித்து புனரமைக்கப்பட்ட இந்த ரயில் பாதைகள் தற்போது சீரழியும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகச் சங்கத்தின் தலைவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>
ரயில் நிலையங்களில் நிலவும் இச்சமிக்ஞைக் கோளாறுகள் மற்றும் பணி தொடர்பான பிரச்சினைகளுக்கு அதிகாரிகள் துரித தீர்வை வழங்காவிட்டால் தொழிற்சங்க நடவடிக்கையில் இறங்கவுள்ளதுடன், இது தொடர்பில் அதிகாரிகளுக்கு ஏற்கனவே எழுத்துப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் ரயில்வே நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-01T04:27:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[காணியில் 63 வயது பெண்ணின் சடலம் மீட்பு - பொலிஸார் தீவிர விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/woman-s-body-found-on-land-in-weeraketiya-1785555974"></link>
            <id>https://tamilwin.com/article/woman-s-body-found-on-land-in-weeraketiya-1785555974</id>
            <summary type="text">











அம்பாந்தோட்டை - வீரகெட்டிய, புஹுல்ஹேன பகுதியில் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

சம்பவம் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>











அம்பாந்தோட்டை - வீரகெட்டிய, புஹுல்ஹேன பகுதியில் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். </p><p>

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், </p><p>

வீரகெட்டியவின் புஹுல்ஹேன பகுதியில் உள்ள ஒரு நிலத்தில் பெண் ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் இறந்த நிலையில் கிடப்பதாக 
வீரகெட்டிய பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.</p><p></p><p> </p><h2>

63 வயது பெண்ணின் சடலம் மீட்பு</h2><p>
இதனையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/feb17319-cfcd-46b3-b122-96772a27c8bf/26-6a6d73bf9c1c2.webp' /></p><p> </p><p>

சடலமாக மீட்கப்பட்ட பெண், விதரந்தெனிய பகுதியைச் சேர்ந்த 63 வயதுடையவர் என கண்டறியப்பட்டுள்ளார்.</p><p> 

மரணத்திற்கான காரணம் இன்னும் வெளியிடப்படவில்லை. </p><p>

மேலும், அவரது உடல் தங்கல்லே மருத்துவமனை பிரேச அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் வீரகெட்டிய பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-01T04:19:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீர்கொழும்பு மோட்டார் சைக்கிள் விபத்தில் புதிய திருப்பம் ; லொறி உரிமையாளரின் அதிர்ச்சி வாக்குமூலம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/new-twist-in-negombo-motorcycle-accident-1785557870"></link>
            <id>https://jvpnews.com/article/new-twist-in-negombo-motorcycle-accident-1785557870</id>
            <summary type="text">நீர்கொழும்பு – மினுவாங்கொட வீதியின் போலவல பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் உயிரிழந்த இரு இளைஞர்களும், வீதியில் மோட்டார் சைக்கிள் பந்தயத...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீர்கொழும்பு – மினுவாங்கொட வீதியின் போலவல பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் உயிரிழந்த இரு இளைஞர்களும், வீதியில் மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்டிருந்ததாக கன்டெய்னர் லொறியின் உரிமையாளர் குற்றம் சாட்டியுள்ளார்.</p><p>
</p><p></p><p>விபத்தின் போது குறித்த இளைஞர்கள் அதிக வேகத்தில் பயணித்ததாகவும், சுமார் மணிக்கு 160 முதல் 180 கிலோமீற்றர் வேகத்தில் வந்த மோட்டார் சைக்கிள் திடீரென தோன்றி டிரெய்லர் மீது மோதியதாகவும் லொறி உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
</p><p>
விபத்து தொடர்பில் கருத்து தெரிவித்த அவர், லொறியைத் திருப்பும் நடவடிக்கையின் போது வீதியில் எந்த வாகனமும் இருக்கவில்லை எனவும், உதவியாளர் ஒருவர் வீதிப் போக்குவரத்தை நிறுத்தி, பாதை பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்த பின்னரே டிரெய்லர் திருப்பப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/576a189e-e1da-4519-b7c0-998b39bbe87c/26-6a6d737046fb3.webp' /></p><p>

இந்த சம்பவம் தொடர்பான CCTV காட்சிகளில் இடம்பெற்ற விடயங்கள் தெளிவாகக் காணப்படுவதாகவும், இரவு நேரங்களில் குறித்த வீதியில் மோட்டார் சைக்கிள் பந்தயங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாக ஏற்கனவே பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டிருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
</p><p>
இதேவேளை, விபத்துக்குப் பின்னர் கன்டெய்னர் லொறிக்கு தீ வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பிலும் அவர் கருத்து வெளியிட்டுள்ளார். உள்ளூர்வாசிகள் வாகனத்துக்கு ஆதரவாக இருந்ததாகவும், வெளியிடங்களில் இருந்து வந்த சிலரே வாகனத்தை சேதப்படுத்தி பின்னர் தீ வைத்ததாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
</p><p>
மேலும், சம்பவ இடத்தில் பொலிஸ் அதிகாரிகள் இருந்த போதிலும், லொறி மீதான தாக்குதலைத் தடுக்க முடியவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
</p><p>
கடந்த ஜூலை 29 ஆம் திகதி நீர்கொழும்பு – மினுவாங்கொட வீதியின் போலவல பகுதியில் கன்டெய்னர் லொறியுடன் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதியதில் இரு இளைஞர்கள் உயிரிழந்தனர்.</p><p> பின்னர் குறித்த லொறி தீக்கிரையாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இதுவரை மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p><p></p>]]></content>
            <updated>2026-08-01T04:17:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலகக் கிண்ணத்திற்கான முதலீட்டுத் திட்டம்... இறுதியில் ஃபிஃபா எடுத்துள்ள முடிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/fifa-scraps-investment-plan-1785557971"></link>
            <id>https://news.lankasri.com/article/fifa-scraps-investment-plan-1785557971</id>
            <summary type="text">பரவலான கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து, உலகக் கிண்ணம் தொடரின் பங்குகளை விற்பனை செய்வதற்கான சர்ச்சைக்குரிய திட்டத்தைக் கைவிட்டுள்ளதாக ஃபிஃபா (FIFA) தலைவர் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பரவலான கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து, உலகக் கிண்ணம் தொடரின் பங்குகளை விற்பனை செய்வதற்கான சர்ச்சைக்குரிய திட்டத்தைக் கைவிட்டுள்ளதாக ஃபிஃபா (FIFA) தலைவர் ஜியானி இன்ஃபான்டினோ தெரிவித்துள்ளார்.</p><h2>முன்னெடுத்துச் செல்லப்படாது</h2><p>
</p><p>இந்தத் திட்டம், அதன் அசல் நோக்கத்திற்கு இனி உதவாத பிளவுகளை உருவாக்கியுள்ளது என்பது தெளிவாகிவிட்டது என்றும் இன்ஃபான்டினோ கூறியுள்ளார். இதன் விளைவாக, இந்த முன்மொழிவு முன்னெடுத்துச் செல்லப்படாது என்றும் ஃபிஃபா அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/818910e6-752d-4c5d-8cc8-b1c426c483b1/26-6a6d751c2dc3a.webp' /></p><p>ஆண்கள் மற்றும் மகளிர் உலகக் கிண்ணம் தொடர் உள்ளிட்ட போட்டிகளில் தனியார் முதலீட்டை அனுமதிக்கும் முன்மொழிவுக்கு ஆதரவளித்தால், 211 உறுப்புச் சங்கங்கள் ஒவ்வொன்றிற்கும் 40 மில்லியன் டொலர் நிதி வழங்குவதாக இன்ஃபான்டினோ முன்மொழிந்திருந்தார். </p><p>இந்த நிலையில், ஐரோப்பிய கால்பந்து அமைப்பான யூஈஎஃப்ஏ (UEFA)-வின் 55 உறுப்புச் சங்கங்கள், அந்தத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டால் உலகக் கிண்ணம் தொடரைப் புறக்கணிப்பது குறித்து வியாழக்கிழமையன்று வாக்களித்தன.</p><p></p><p> </p><p>இதனிடையே, அந்தத் திட்டம் குறித்து நிர்வாக அமைப்பையே ஏமாற்றப்பட்டுள்ளதாக ஃபிஃபாவின் தலைமைச் செயல்பாட்டு அதிகாரி கெவின் லாமூர் தெரிவித்தார். </p><p>மட்டுமின்றி, வட, மத்திய அமெரிக்கா மற்றும் கரீபியன் பகுதிகளில் கால்பந்தை நிர்வகித்து, சமீபத்திய உலகக் கிண்ணம் தொடரை நடத்திய கான்சாகாஃப் (Concacaf), அதன் உறுப்பினர்கள் இன்ஃபான்டினோவின் திட்டத்தை நிராகரித்ததாகக் கூறியது.</p><h2>எதிராக 136 நாடுகள்</h2><p> </p><p>ஆசிய கால்பந்து கூட்டமைப்பான AFCயும் UEFA மற்றும் Concacaf-ன் முடிவுகளுக்கு கட்டுப்படுவதாக அறிவித்தது. இந்த நிலையில், மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஃபிஃபா (FIFA) மாநாட்டில் நான்காவது முறையாகத் தலைவராகத் தெரிவு செய்யப்பட முயன்று வரும் 56 வயதான இன்ஃபான்டினோ, தற்போது கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளார். </p><p>இன்ஃபான்டினோவின் முதலீட்டுத் திட்டம் கைவிடப்பட்டதாக அறிவித்திருந்தாலும், ​​ஃபிஃபாவின் உறுப்புச் சங்கங்களில் பெரும்பான்மையினரின் ஆதரவு தனக்குத் தேவை என்பதை அவர் ஒப்புக்கொண்டார்; அதாவது, அதன் 211 உறுப்பினர்களில் 106 பேர் ஆதரவாக வாக்களிக்க வேண்டியிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5fc629c1-94b9-49a2-bab0-1d748cd447aa/26-6a6d751d2839e.webp' /></p><p> </p><p>AFCயும் கைவிட்டதால் தமது திட்டம் நிறைவேறாது என்பதை அவர் உணர்ந்துள்ளார் என்றே கூறப்படுகிறது. UEFA-விடம் 55 வாக்குகளும், CONCACAF-இடம் 35 வாக்குகளும், AFC-இடம் 46 வாக்குகளும் உள்ளன. </p><p>அனைத்து உறுப்புச் சங்கங்களும் தங்கள் நிர்வாக அமைப்பின் நிலைப்பாட்டை ஆதரித்திருந்தால், இன்ஃபான்டினோவின் திட்டத்திற்கு எதிராக 136 நாடுகள் வாக்களித்திருக்கும் நிலை ஏற்பட்டிருக்கும்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-01T04:17:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[காவல் நிலையத்தில் ஆஜராவதில் இருந்து 6 நாள் விலக்கு வேண்டும்- செந்தில் பாலாஜி மனு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/senthil-balaji-files-fresh-plea-for-six-day-relief-1785487377"></link>
            <id>https://ibctamilnadu.com/article/senthil-balaji-files-fresh-plea-for-six-day-relief-1785487377</id>
            <summary type="text">காவல் நிலையத்தில் ஆஜராவதில் இருந்து 6 நாள் விலக்கு வேண்டும் என செந்தில் பாலாஜி மனு தாக்கல் செய்துள்ளார்.

செந்தில் பாலாஜி மனு

முன்ஜாமின் நிபந்தனை...</summary>
            <content type="html"><![CDATA[<p>காவல் நிலையத்தில் ஆஜராவதில் இருந்து 6 நாள் விலக்கு வேண்டும் என செந்தில் பாலாஜி மனு தாக்கல் செய்துள்ளார்.
</p><h2>
செந்தில் பாலாஜி மனு
</h2><p>
முன்ஜாமின் நிபந்தனையின்படி திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஆஜராவதில் இருந்து 6 நாட்கள் விலக்கு அளிக்கக் கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி புதிய மனு தாக்கல் செய்துள்ளார்.
</p><p>
அந்த மனுவில், டாஸ்மாக் முறைகேடு வழக்கில் முன்ஜாமின் கோரி உச்சநீதிமன்றத்தை அணுக வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்த வேண்டியிருப்பதால், நேரில் ஆஜராக முடியாது என்று தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e19125de-c952-414d-bc7d-10938bf58005/26-6a6c6013e4f96.webp' /></p><p>இதுதொடர்பாக திருவல்லிக்கேணி போலீசாருக்கு கடிதமும் அனுப்பியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
மேலும், முன்ஜாமின் நிபந்தனைகளை தொடர்ந்து கடைப்பிடித்து வருவதாகவும், வரும் ஆகஸ்ட் 5ஆம் தேதி கண்டிப்பாக திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஆஜராகுவேன் என்றும் செந்தில் பாலாஜி மனுவில் உறுதியளித்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-08-01T04:14:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிம்மத்தில் பயணிக்கும் கேது: டிசம்பர் வரை இந்த ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை உறுதி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/ketu-in-leo-who-become-rich-before-december-1785483055"></link>
            <id>https://manithan.com/article/ketu-in-leo-who-become-rich-before-december-1785483055</id>
            <summary type="text">வேத ஜோதிடத்தில் கேது நிழல் கிரகமாகக் கருதப்படுகிறார். மற்ற கிரகங்களைப் போல நேர்கதியில் பயணிக்காமல், கேது எப்போதும் வக்ர கதியிலேயே நகர்வார். இவருக்கு ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>வேத ஜோதிடத்தில் கேது நிழல் கிரகமாகக் கருதப்படுகிறார். மற்ற கிரகங்களைப் போல நேர்கதியில் பயணிக்காமல், கேது எப்போதும் வக்ர கதியிலேயே நகர்வார். இவருக்கு சொந்த ராசி இல்லை.</p><p> ஒரு ராசியில் சுமார் 18 மாதங்கள் தங்கும் கேது, தற்போது சூரியனின் சிம்ம ராசியில் உள்ள மகம் நட்சத்திரத்தில் பயணித்து வருகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/86858999-fc74-41ae-8c13-f74be5eee1e5/26-6a6c5b45b47b8.webp' /></p><p> இந்த நிலை டிசம்பர் மாதம் வரை தொடரும்.

ஜோதிட நம்பிக்கைகளின்படி, கேது ஞானம், பற்றின்மை மற்றும் ஆன்மீகத்தின் அடையாளமாகக் கருதப்படுகிறார். </p><p>கேது ஒருவரை பௌதிக ஆசைகளிலிருந்து விலக்கி, மன அமைதியை நோக்கி அழைத்துச் செல்வதோடு, முற்பிறவி கர்ம பலன்களை வழங்குவார் என்றும் நம்பப்படுகிறது.மேலும், வாழ்வில் ஏற்படும் திடீர் மாற்றங்கள், எதிர்பாராத நிகழ்வுகள் மற்றும் சில திடீர் ஆதாயங்களுக்கு கேதுவின் தாக்கம் காரணமாக இருக்கும் என ஜோதிடம் கூறுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/71ff6eab-928c-4a7c-baf6-5ac4b34f3e39/26-6a6c5b467e7e4.webp' /></p><p> அந்த வகையில், சிம்ம ராசி மகம் நட்சத்திரத்தில் பயணிக்கும் கேதுவால் டிசம்பர் வரை எந்தெந்த ராசிக்காரர்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.</p><p></p><h2>மேஷம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ffab0eb6-d4d9-4d8b-b829-10562941cbc4/26-6a6c5b472e426.webp' /></p><h2>
</h2><p>மேஷ ராசிக்காரர்களுக்கு 5-ஆம் வீட்டில் இருக்கும் கேதுவின் தாக்கத்தால் டிசம்பர் வரை சாதகமான காலமாக இருக்கும். நிதி நிலைமை வழக்கத்தை விட மேம்படும் வாய்ப்பு உள்ளது. </p><p>புதிய வருமான வாய்ப்புகள் உருவாகலாம். நீண்ட நாட்களாக இருந்து வந்த நீதிமன்ற வழக்குகள் முடிவுக்கு வருவதற்கான வாய்ப்பும், பணியிடத்தில் ஏற்பட்ட பிரச்சனைகளில் இருந்து நிவாரணமும் கிடைக்கலாம். </p><p>வேலை மற்றும் தொழிலில் நல்ல மாற்றங்களை எதிர்பார்க்கலாம். குறிப்பாக தன்னம்பிக்கை அதிகரிக்கும் காலமாக அமையும்.</p><h2>

கடகம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/87f342b9-0f03-4b67-8e74-2381c415d7a3/26-6a6c5b47d4a88.webp' /></p><h2>
</h2><p>கடக ராசிக்காரர்களுக்கு 2-ஆம் வீட்டில் இருக்கும் கேதுவின் காரணமாக வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் காணும் வாய்ப்பு உள்ளது. </p><p>பணியிடத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கலாம். வளர்ச்சிக்கான புதிய வாய்ப்புகள் உருவாகும். வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பாராத லாபம் கிடைக்கக்கூடும்.அனுபவமிக்கவர்களின் ஆலோசனைகளை ஏற்று செயல்பட்டால், சிறந்த முன்னேற்றத்தை அடைய முடியும்.</p><h2>
சிம்மம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aad4b823-bf82-42d3-a66d-1fe63eac5100/26-6a6c5b4884bac.webp' /></p><p>
கேதுவின் சாதகமான தாக்கத்தால் சிம்ம ராசிக்காரர்களுக்கு வேலை மற்றும் தொழிலில் நல்ல பலன்கள் கிடைக்கும். உங்களின் கடின உழைப்புக்கான அங்கீகாரம் கிடைக்கும். </p><p>சமூகத்தில் மதிப்பு மற்றும் மரியாதை அதிகரிக்கும். குடும்ப வாழ்க்கையில் சில ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும், உறவுகளைப் புரிந்துகொண்டு நடந்து கொள்வது நல்லது.</p><p>டிசம்பர் வரை அவசர முடிவுகளைத் தவிர்த்து, சிந்தித்து செயல்படுவது சிறப்பாக இருக்கும்.</p><h2>

விருச்சிகம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c27b410b-9da2-471a-88f2-5c8030da5876/26-6a6c5b493437a.webp' /></p><p></p><h2>
</h2><p>விருச்சிக ராசிக்காரர்களுக்கு கேதுவின் தாக்கத்தால் நிதி ரீதியாக சாதகமான சூழல் உருவாகும். நீண்ட காலமாக நிலுவையில் இருந்த பணம் திரும்ப கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. </p><p>பணம் தொடர்பான பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கலாம். ஏற்கனவே செய்த முதலீடுகளில் எதிர்பாராத லாபம் கிடைக்கும் வாய்ப்பும் உள்ளது.</p><p> இருப்பினும் முக்கியமான முடிவுகளை அவசரமாக எடுக்காமல், கவனமாக செயல்படுவது நல்லது. தொழிலில் படிப்படியாக முன்னேற்றம் காணலாம்.</p><p><b>இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;&nbsp;</b></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-01T04:08:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பகுதியில் இடம்பெற்ற கோர விபத்து ; மோட்டார் சைக்கிள் பயணி பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/fatal-accident-in-tamil-area-motorcycle-rider-dies-1785557104"></link>
            <id>https://canadamirror.com/article/fatal-accident-in-tamil-area-motorcycle-rider-dies-1785557104</id>
            <summary type="text">வவுனியா புளியங்குளம் சந்திப் பகுதியில் இன்று இடம்பெற்ற சாலை விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக புளியங்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.மேலதிக விசாரணைகொழ...</summary>
            <content type="html"><![CDATA[<p>வவுனியா புளியங்குளம் சந்திப் பகுதியில் இன்று இடம்பெற்ற சாலை விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக புளியங்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><h3>மேலதிக விசாரணை</h3><p>கொழும்பில் இருந்து முல்லைத்தீவு நோக்கிப் பயணித்த சொகுசு பேருந்து, யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/adeecbdd-550e-4bfc-a235-f8c5b4e14fd8/26-6a6d70717cd4d.webp' /></p><p>விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் படுகாயமடைந்த நிலையில், உடனடியாக புளியங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். </p><p>எனினும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>

உயிரிழந்த நபரின் அடையாளம் மற்றும் விபத்துக்கான காரணம் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p><p>

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புளியங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-08-01T04:07:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் இருந்து மனைவியுடன் தப்பியோடிய முன்னாள் ஜனாதிபதியின் மகன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/former-president-s-son-escaped-from-country-1785556185"></link>
            <id>https://tamilwin.com/article/former-president-s-son-escaped-from-country-1785556185</id>
            <summary type="text">முன்னாள் ஜனாதிபதி ஒருவரின் புதல்வர் தனது மனைவியுடன் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

கடந்த நாட்களில் அவர...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி ஒருவரின் புதல்வர் தனது மனைவியுடன் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. </p><p>

கடந்த நாட்களில் அவர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக குறிப்பிடப்படுகிறது. </p><p>

அதற்கமைய, குறித்த முன்னாள் ஜனாதிபதியின் புதல்வரும் அவரது மனைவியும் அவுஸ்திரேலியாவில் குடியேறியுள்ளதாக தெரியவந்துள்ளது.</p><p></p><p>
</p><h2><b>
பல குற்றச்சாட்டுகள் </b></h2><p>குறித்த ஜனாதிபதியின் ஆட்சிக்காலத்தில் அவரது புதல்வருக்கு எதிராக பல குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e88c6fb8-5e6e-47df-a4c6-9e2b93eea02c/26-6a6d6ed396756.webp' /></p><p>முன்னாள் ஜனாதிபதியின் மகனுக்கு எதிராக சமகால அநுர அரசாங்கம் விசாரணைகள் மேற்கொண்டு வருகிறது. </p><p>

இவ்வாறான நிலையில் நாட்டிலிருந்து அவர் தப்பிச் சென்றுள்ளதாக குறித்த ஊடகங்கள் கோடிட்டுக் காட்டியுள்ளன.</p><p></p><p></p><p> 
</p>]]></content>
            <updated>2026-08-01T03:59:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[2025 உயர்தரப் பரீட்சை : பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் வெளியானது!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/a-l-exam-2025-z-score-cut-off-marks-for-university-1785554768"></link>
            <id>https://ibctamil.com/article/a-l-exam-2025-z-score-cut-off-marks-for-university-1785554768</id>
            <summary type="text">2025/2026 கல்வியாண்டிற்கான பல்கலைக்கழக மாணவர் அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகளை&amp;nbsp;பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.&amp;nbsp;2025 ஆம் ஆண்டு...</summary>
            <content type="html"><![CDATA[<p>2025/2026 கல்வியாண்டிற்கான பல்கலைக்கழக மாணவர் அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகளை&nbsp;பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.&nbsp;</p><p>2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் இந்த வெட்டுப்புள்ளிகள் தயாரிக்கப்பட்டுள்ளன.</p><p>அதன்படி, பல்கலைக்கழகங்களில் உள்ள ஒவ்வொரு கற்கை நெறிக்கும் பிரவேசிப்பதற்காக மாவட்ட ரீதியாகத் தேவையான குறைந்தபட்ச வெட்டுப் புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளது.</p><p></p><h2>&nbsp;உயர்தரப் பரீட்சைப் பெறுபேறு</h2><p>இந்தநிலையில், பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பித்த மாணவர்கள், அரச பல்கலைக்கழகங்கள் வழங்கும் ஒவ்வொரு பட்டப்படிப்புக்கும் தேவைப்படும் குறைந்தபட்ச வெட்டுப்புள்ளிகளை இப்போது சரிபார்த்துக் கொள்ளலாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7d5e4c87-dee2-4e24-a9c1-304a1b22fb4d/26-6a6d6cf9a890f.webp' /></p><p>இதேவேளை, 2025 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் மொத்தம் 92,043 மாணவர்கள் அரச பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பித்துள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p>இந்த நிலையில் அரச பல்கலைக்கழகங்களில் மாணவர் அனுமதிக்காக 42,937 மாணவர்கள் தெரிவுசெய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றதாக&nbsp; பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் துணைத்தலைவர் முன்னர் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p>
</p><p>
 

 <a href="https://www.ugc.ac.lk/downloads/admissions/cutoff_2026/COP_2025_2026-ENGLISH_Final.pdf" target="_blank"><b>வெட்டுப் புள்ளிகள் குறித்த விபரத்தை இங்கே காணலாம்&nbsp;</b></a></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-01T03:57:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜனாதிபதி, அரசாங்கம் குறித்து அவதூறு பதிவுகள் ; காவல்துறை அதிகாரி கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/police-officer-arrested-facebook-post-president-1785556281"></link>
            <id>https://jvpnews.com/article/police-officer-arrested-facebook-post-president-1785556281</id>
            <summary type="text">ஜனாதிபதியையும் அரசாங்கத்தையும் அவமதிக்கும் வகையிலான பேஸ்புக் பதிவுகளை வெளியிட்டதாகவும், சமூக ஊடகங்களில் அதுபோன்ற உள்ளடக்கங்களில் ஈடுபட்டதாகவும் கூறப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜனாதிபதியையும் அரசாங்கத்தையும் அவமதிக்கும் வகையிலான பேஸ்புக் பதிவுகளை வெளியிட்டதாகவும், சமூக ஊடகங்களில் அதுபோன்ற உள்ளடக்கங்களில் ஈடுபட்டதாகவும் கூறப்படும் குற்றச்சாட்டுகளின் பேரில் காவல்துறை அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>
</p><p></p><p>மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தைச் சேர்ந்த அதிகாரிகளால் இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1df34f71-df41-402a-a87e-9a7265c2a988/26-6a6d6d3a9166a.webp' /></p><p>

கைது செய்யப்பட்ட நேரத்தில் சந்தேக நபர் எம்பிலிப்பிட்டியவில் உள்ள உதவி சிரேஷ்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பணியாற்றி வந்தார்.
</p><p>
சந்தேக நபர் இதற்கு முன்னர் பல ஆண்டுகளாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்புப் படையில் உறுப்பினராகப் பணியாற்றியுள்ளார் என்பது தெரிவித்துள்ளது.</p><p>

இந்தநிலையில், தண்டனைச் சட்டத்தின் விதிகளின் கீழ் சந்தேக நபர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-01T03:51:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[17 ஆண்டுகளின் பின்னர் தமிழ் அரசியல் கைதியொருவருக்கு பிணை - நிபந்தனைகளால் மீண்டும் சிறை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/tamil-political-prisoner-bail-after-17-years-1785555151"></link>
            <id>https://tamilwin.com/article/tamil-political-prisoner-bail-after-17-years-1785555151</id>
            <summary type="text">கடந்த 17 ஆண்டுகளாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் பிணை வழங்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கடந்த 17 ஆண்டுகளாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.</p><p>முன்னாள் இராணுவத்தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா மற்றும் முன்னாள்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோரை இலக்குவைத்துத் தாக்குதல் நடத்த உளவுத்தகவல்களை வழங்கினார் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.</p><p>&nbsp;</p><h2>சமூக ஆர்வலர்களிடையே மீண்டும் பலத்த விவாதம்</h2><p>கடந்த 17 ஆண்டுகளாக எவ்வித இறுதித் தீர்ப்புமின்றி விளக்கமறியலில்
வைக்கப்பட்டிருந்த செல்லையா பியூபாகரன் என்பவருக்கே நேற்று இவ்வாறு பிணை
அனுமதிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c76b6951-4d9b-4d48-808f-897e45ed23ea/26-6a6d6cd0c0b06.webp' />&nbsp;</p><p>

எனினும், நீதிமன்றம் விதித்த கடுமையான பிணை நிபந்தனைகளை பூர்த்தி
செய்வதற்கு போதிய பிணையாளர்களோ அல்லது வசதிகளோ இல்லாத காரணத்தால், பிணை
உத்தரவு பிறப்பிக்கப்பட்ட போதிலும் அவர் மீண்டும் சிறைச்சாலையிலேயே
அடைக்கப்பட்டுள்ளார்.
</p><p>
நீண்ட காலமாக தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின்
மனித உரிமைகள் மற்றும் நீதித்துறை தாமதங்கள் குறித்து இந்த சம்பவம் சமூக
ஆர்வலர்களிடையே மீண்டும் பலத்த விவாதத்தை உருவாக்கியுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-01T03:49:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வரலாற்றை மாற்றிய மரண தண்டனை: மகிழ்ச்சியின் உச்சத்தில் மைத்திரி - பாதுகாப்புச் செயலாளரின் வாக்குமூலம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/hemasiri-fernando-also-sentenced-to-death-1785550346"></link>
            <id>https://ibctamil.com/article/hemasiri-fernando-also-sentenced-to-death-1785550346</id>
            <summary type="text">தனக்கு மரண தண்டனை விதிக்கப்படுவது தொடர்பில் இருவர் மகிழ்ச்சியடைவார்கள் என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ, நீதிபதியிடம் தெரிவித்ததாக...</summary>
            <content type="html"><![CDATA[<p>தனக்கு மரண தண்டனை விதிக்கப்படுவது தொடர்பில் இருவர் மகிழ்ச்சியடைவார்கள் என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ, நீதிபதியிடம் தெரிவித்ததாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. </p><p>முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவிற்கு மரண தண்டனை விதித்து கொழும்பு நிரந்தர மூவரடங்கிய மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள விவகாரம் நாட்டில் பாரிய அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.</p><p>2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாகக் கிடைத்த உளவுத்துறை எச்சரிக்கைகளைத் தடுத்து நிறுத்தத் தவறியமை மற்றும் அலட்சியமாகச் செயற்பட்டமை தொடர்பாகவே பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவுக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.</p><p></p><h2>அளவில்லா மகிழ்ச்சி</h2><p>தாக்குதல் நடைபெறக்கூடும் என முன்கூட்டியே உளவுத்துறை எச்சரிக்கைகள் கிடைத்தபோதிலும், தனது பதவியைப் பயன்படுத்தித் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கத் தவறிய குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a48b9b9d-8506-4d84-865f-bf7ccd9323a0/26-6a6d637d1914c.webp' /></p><p>இதன்போது அவர், இன்றைய இந்த தீர்ப்பானது உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலைச் சுற்றியுள்ள சதித்திட்டத்தின் இறுதி முடிவாகும்.
</p><p>
இந்தத் தீர்ப்பைக் கேட்டு இருவர் மட்டுமே அளவில்லா மகிழ்ச்சியடைவார்கள், ஒருவர் ஆரம்பத்திலிருந்தே சட்டமா அதிபர் திணைக்களத்தால் பாதுகாக்கப்பட்ட நிலந்த ஜெயவர்தன, மற்றவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன" என்று குறிப்பிட்டுள்ளார். </p><p>இதேவேளை குறித்த குற்றச்சாட்டு தொடர்பிலேயே முன்னாள் காவல்துறை மா அதிபர் பூஜித் ஜயசுசுந்தரவிற்கும் அதே நீதிமன்றம் இன்று (31) மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-01T03:44:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ்ப்பாணம்–பேருவளை கடற்பகுதிக்கு எச்சரிக்கை ; மீனவர்களே அவதானம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/warning-issued-jaffna-beruwala-sea-area-fishermen-1785555636"></link>
            <id>https://jvpnews.com/article/warning-issued-jaffna-beruwala-sea-area-fishermen-1785555636</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் முதல் பேருவளை வரை சிறிய படகுகள் கடலுக்குச் செல்வதை உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் தடை செய்ய மீன்பிடி மற்றும் நீரியல் வளத் திணைக்களம் ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் முதல் பேருவளை வரை சிறிய படகுகள் கடலுக்குச் செல்வதை உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் தடை செய்ய மீன்பிடி மற்றும் நீரியல் வளத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.</p><p> </p><p></p><p>ஏற்படக்கூடிய சீரற்ற வானிலை தொடர்பில் கணிக்கப்பட்ட நிலையிலேயே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. </p><p>

நாட்டின் மேற்கே இன்று (31) இரவு முதல் நிலவும் மழைக்கால நிலைமை மற்றும் காற்றின் வேகம் அதிகரிப்பதன் காரணமாக, நாட்டைச் சுற்றியுள்ள கடல் பகுதிகள் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் கணித்துள்ளது. </p><p>

இந்த அபாயகரமான நிலையைக் கருத்திற்கொண்டு, மீன்பிடி மற்றும் நீரியல் வளத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹவத்தவால் அனைத்து மீனவர் சமூகத்திற்கும் அவசர பாதுகாப்பு அறிவித்தல் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bf398a5c-0303-4611-a596-3c6cdb07d32a/26-6a6d6ab5775ba.webp' /></p><p>அதன்படி, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், புத்தளம், சிலாபம், நீர்கொழும்பு, கொழும்பு மற்றும் களுத்துறை (பேருவளை வரை) ஆகிய கடல் பகுதிகளில் கடற்கரையை ஒட்டிய பகுதிகளில் தொழிலில் ஈடுபடும் சிறிய மற்றும் ஒரு நாள் மீன்பிடிப் படகுகள் மறுஅறிவித்தல் வரை தொழிலுக்காகக் கடலுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.</p><p> 

குறிப்பாக இந்தப் பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 70 கிலோமீற்றர் வரை மிக உயர்வாக அதிகரிக்கக்கூடும் என்றும், அத்துடன் கடல் அலைகள் கொந்தளிப்பாக மாறுவது சிறிய படகுகளுக்கு கடும் அச்சுறுத்தலாக அமையக்கூடும் என்றும் பணிப்பாளர் நாயகம் வலியுறுத்தினார். </p><p>

தற்போது கடலுக்குச் சென்றுள்ள சிறிய மற்றும் ஒரு நாள் மீன்பிடிப் படகுகள் ஏதேனும் இருப்பின், அவை உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் பாதுகாப்பான கரைக்குத் திரும்புமாறு பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார். </p><p>

இரவு வேளையில் காற்றின் வேகம் மேலும் அதிகரிக்கக்கூடும் என்பதால், எக்காரணம் கொண்டும் தேவையற்ற ஆபத்துக்களை எதிர்கொள்ள வேண்டாம் எனத் தாம் மீனவர் சமூகத்திடம் கேட்டுக்கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.</p><p> 

நிலவும் வானிலை தொடர்பில் மீன்பிடி மற்றும் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்படும் மேலதிக அறிவித்தல்கள் குறித்து தொடர்ந்தும் அவதானத்துடன் இருக்குமாறும், தமது உயிர் மற்றும் சொத்துக்களின் பாதுகாப்பு குறித்துப் பொறுப்புடன் செயற்படுமாறும் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில் தெரிவித்தார். </p><p>

இதேவேளை, காங்கேசந்துறையிலிருந்து மன்னார், கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60-70 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. </p><p>

திருகோணமலையிலிருந்து முல்லைத்தீவு ஊடாக காங்கேசன்துறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-60 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8d18a0fb-cadf-4328-95a6-0fde44beeff4/26-6a6d6ab6275e5.webp' /></p><p>காங்கேசந்துறையிலிருந்து மன்னார், கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகள் அவ்வப்போது மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும் என எதிர்பார்க்கப் படுகின்றது.</p><p> 

கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் மறு அறிவித்தல் வரை மேற்குறிப்பிட்ட கடற்பரப்புகளில் நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப் படுகின்றார்கள். </p><p>

திருகோணமலையிலிருந்து முல்லைத்தீவு ஊடாக காங்கேசன்துறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும் என எதிர்பார்க்கப் படுகின்றது. </p><p>மேற்குறிப்பிட்ட கடற்பரப்புகளில் கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றார்கள்.</p><p> 

மன்னாரிலிருந்து கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் கடல் அலைகள் 2.5 – 3.0 மீற்றர் உயரம் வரை மேலெழும்பக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-01T03:40:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[மைத்திரியின் உத்தரவால் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் வழக்கில் இருவர் மட்டுமே கைது! ஹேமசிறியின் பரபரப்பு வாக்குமூலம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/ex-defense-secretary-hemasiri-s-statement-in-court-1785546634"></link>
            <id>https://ibctamil.com/article/ex-defense-secretary-hemasiri-s-statement-in-court-1785546634</id>
            <summary type="text">ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் வழக்கில் மரண தண்டனை விதிக்கப்படுவதற்கு முன்னர் நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்த முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் வழக்கில் மரண தண்டனை விதிக்கப்படுவதற்கு முன்னர் நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்த முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ, அப்போதைய அரச புலனாய்வு சேவையின் பணிப்பாளர் நிலந்த ஜயவர்தனவை ஈஸ்டர் தாக்குதலின் சதிகாரர்களில் ஒருவர் என குற்றம்சாட்டியுள்ளார்.</p><p>

நேற்றையதினம் ஜூலை 31ஆம் திகதி கொழும்பு நிரந்தர மூவரடங்கிய மேல் நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையின் போது ஹேமசிறி பெர்னாண்டோ இந்த பரபரப்பு வாக்குமூலத்தை அளித்துள்ளதாக கூறப்படுகிறது.</p><p>அத்தோடு, ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் மேலும் பலரை கைது செய்யுமாறு சட்டமா அதிபர் பரிந்துரைத்தபோது, அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன “காவல்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவையும், பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவையும் மட்டுமே கைது செய்யுங்கள்" என உத்தரவிட்டதாகவும் ஹேமசிறி நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>மரண தண்டனை</h2><p>

இந்த வாக்குமூலத்தை தொடர்ந்து, கொழும்பு மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் பூஜித் ஜயசுந்தர மற்றும் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c1250cbf-e9c5-426b-aeb3-5623f042668b/26-6a6d4a2d51b73.webp' /></p><p>
பிரியந்த லியனகே, திலகரத்ன பண்டார ஆகிய பெரும்பான்மை நீதிபதிகள், புலனாய்வுத் தகவல் கிடைத்தும் தாக்குதலை தடுக்க நடவடிக்கை எடுக்காமை, கடமை தவறுதல் மற்றும் மனிதப் படுகொலைகளுக்கு உடந்தையாக இருந்தமை ஆகிய குற்றச்சாட்டுகளுக்கு இருவரும் குற்றவாளிகள் என தீர்ப்பளித்தனர். </p><p>

2019 ஏப்ரல் 21 ஈஸ்டர் ஞாயிறு தினத்தன்று நடத்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்புகளில் 268 பேர் உயிரிழந்தனர், 586 பேர் காயமடைந்தனர். தாக்குதலுக்கு முந்தைய நாள் மாலை நிலந்த ஜயவர்தன தாக்குதல் குறித்த புலனாய்வுத் தகவலை பூஜித் ஜயசுந்தர மற்றும் ஹேமசிறி பெர்னாண்டோவுக்கு வழங்கியிருந்தார் என்பது நீதிமன்றில் நிரூபணமானது.</p><p>

இவ்வாறானதொரு பின்னணியில், ஹேமசிறி பெர்னாண்டோவின் இந்த வாக்குமூலம் ஈஸ்டர் தாக்குதல் விசாரணையில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...! </h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-01T03:35:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடும் விரக்தியில் ட்ரம்ப்... ஈரான் போரில் இருந்து வெளியேறத் தீவிர ஆலோசனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/trump-seeks-exit-from-iran-war-1785555364"></link>
            <id>https://news.lankasri.com/article/trump-seeks-exit-from-iran-war-1785555364</id>
            <summary type="text">ஈரானுடனான மோதலை மீண்டும் தீவிரப்படுத்த இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கோரிக்கை வைத்துள்ள நிலையில், மோதலை நீட்டிப்பது பெரும் அபாயத்தில் முடியும் எ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானுடனான மோதலை மீண்டும் தீவிரப்படுத்த இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கோரிக்கை வைத்துள்ள நிலையில், மோதலை நீட்டிப்பது பெரும் அபாயத்தில் முடியும் என சவுதி அரேபியா தரப்பில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>மோதல் தணிய வேண்டும்</h2><p>
</p><p>ஓவல் அலுவலகத்தில் ஜனாதிபதி ட்ரம்ப்புடன் விவாதித்த இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஈரானுடனான பேச்சுவார்த்தை முன்னெடுப்புகள் பலனளிக்கும் என்பது குறித்துச் சந்தேகம் வெளியிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e902279d-376e-4e9a-8029-13a9f62055a9/26-6a6d6bca5b523.webp' /></p><p> </p><p>மேலும், பேச்சுவார்த்தைகளுக்குப் பதிலாக, முழு அளவிலான போரை மீண்டும் தொடங்குவது உட்பட, ஈரானின் மீது அழுத்தம் கொடுப்பதற்கான வழிகள் குறித்து இருவரும் விவாதித்துள்ளனர். </p><p>ஆனால், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் ஆகிய இருவரையும் நேரில் சந்தித்த சவுதி அரேபியாவின் பாதுகாப்பு அமைச்சர் காலித் பின் சல்மான், தமது சகோதரர் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானின் விருப்பத்தை இருவருடனும் விவாதித்துள்ளார். </p><p>அதில், ஈரான் தொடர்பான மோதல் தணிய வேண்டும் என்று சவுதி அரேபியா விரும்புகிறது என்றும், இம்மோதல் நீடிப்பது பெரும் அபாயங்களுக்கு காரணமாகும் என்றும் தெரிவித்துள்ளார்.</p><p></p><p> </p><p>ஆனால், தனது காலக்கெடுவையும் கடந்து நீண்டுவிட்ட ஒரு மோதலில் இருந்து வெளியேறுவதற்கான வழியை ட்ரம்ப் தீவிரமாகவே தேடும் வேளையில், அவர் எதிர்கொள்ளும் முரண்பட்ட சூழ்நிலைகளை இவை வலியுறுத்துவதாகவே அதிகாரிகள் தரப்பில் இருந்து தகவல் கசிந்துள்ளது. </p><p>போரை முடிவுக்குக் கொண்டுவருமாறு சக குடியரசுக் கட்சியினரிடமிருந்து அழுத்தம் அதிகரித்து வரும் நிலையில், அப்போர் உண்மையில் விரிவடைந்து வருவதாகவே தோன்றுகிறது; பிராந்தியத்தில் உள்ள ஏறக்குறைய அனைத்து நாடுகளும் இதில் இழுக்கப்பட்டுள்ளன.</p><p> போரை நிறுத்தும் ஒரு ஒப்பந்தத்திற்கு ஈரான் கெஞ்சுவதாக ட்ரம்ப் கூறி வந்தாலும், உண்மையில் ஜனாதிபதி ட்ரம்ப் இதில் இருந்து வெளியேற முடியாமல் கடும் விரக்தியில் இருப்பதாகவே அமெரிக்க அதிகாரிகள் தரப்பில் பேசுபொருளாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c6d4c3c4-b86a-4e34-9f2c-7990d947909a/26-6a6d6bc852600.webp' /></p><p> </p><p>மேலும், ஹார்முஸ் நீரிணை மீது தங்கள் ஆதிக்கத்தை வலுப்படுத்தவும், அமெரிக்கப் படைகள் மீது ஏவுகணைகளை வீசவும் ஈரான் நிர்வாகத்தின் முக்கியப் பிரமுகர்கள் முன்னெப்போதையும் விட அதிக உறுதியுடன் இருப்பதாகச் சில அமெரிக்க அதிகாரிகள் அஞ்சுகின்றனர். </p><p>தனது கோரிக்கைகளுக்கு ஈரான் பணிய மறுப்பதால் ட்ரம்ப் விரக்தியடைந்துள்ளார். இதன் விளைவாக, அவர் திரைமறைவில் ஆத்திரம் கொண்ட சந்திப்புகளையும், தனது நேச நாடுகளுடன் வசவுகள் நிறைந்த தொலைபேசி உரையாடல்களையும் நடத்தியுள்ளார் என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். </p><p>மேலும், அமைச்சரவைக் கூட்டத்தில் பேசிய ட்ரம்ப், ஈரான் போரில் வெற்றியுடன் வெளியேற வேண்டும் என்றும், பேச்சுவார்த்தைகளை மீண்டும் முன்னெடுப்பதே அதற்கான ஒரே வழி என்றும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.</p><h2>ட்ரம்பின் ஜனாதிபதி பதவியையே</h2><p> </p><p>உண்மையில், ஈரானிடமிருந்து தொடரும் அச்சுறுத்தல்களால், ட்ரம்ப் தனது சொந்தத் திட்டங்களையே மாற்றியமைக்கும் கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.மிக சமீபத்தில் துருக்கியிலிருந்து அவர் திரும்பும் பயணத்தின்போது ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானங்களை மாற்றியமைத்தது இதில் குறிப்பிடத்தக்கதாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f4a6e48c-7fde-45e8-b887-2a7a44f9fb11/26-6a6d6bc903ba4.webp' /></p><p> </p><p>ஈரானுக்கு பயந்து அமெரிக்க ஜனாதிபதி தனது பயணத் திட்டத்தையே மாற்றும் நிலை ஏற்பட்டது. மட்டுமின்றி, ஈரான் போர், ட்ரம்பின் ஜனாதிபதி பதவியையே முற்றிலுமாக விழுங்கிவிடும் என்று அவரது ஆதரவாளர்கள் பலர் தற்போது கவலைப்படுகிறார்கள். </p><p>அமெரிக்க மக்களில் வெறும் 23 சதவீதம் பேர்கள் மட்டுமே ஈரானுடனான ட்ரம்பின் போரை ஆதரிக்கின்றனர். இந்தப் மோதலின்போது ட்ரம்பை பெருமளவில் ஆதரித்து வந்தாலும், எரிபொருள் விலை உயர்வு இடைக்காலத் தேர்தல்களில் தங்கள் கட்சிக்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்று குடியரசுக் கட்சியினர் கவலை கொண்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bb72d4cd-5fb7-4f36-a3e0-72a234b9105d/26-6a6d6bc9a9343.webp' /></p><p> </p><p>இதை ட்ரம்பிடமும் அவர்கள் தனிப்பட்ட முறையில் தெரிவித்துள்ளனர். இதனிடையே, கத்தார் மற்றும் பாகிஸ்தான் உள்ளிட்ட மத்தியஸ்தர்கள் தூதரக ரீதியிலான பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்க அவசரமாக முயற்சித்து வரும் நிலையில், தீவிரமான பேச்சுவார்த்தைகள் நடைபெறுவதற்கான அறிகுறிகள் மிகக் குறைவாகவே உள்ளன. </p><p>மாறாக, ஈரானின் சக்திவாய்ந்த புரட்சிகரப் பாதுகாப்புப் படையினர் முடிவெடுக்கும் அதிகாரத்தை உறுதியாகத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாகவும், இதனால் அமெரிக்கா பேசி வந்த அரசியல் பிரமுகர்கள் வெறும் பெயரளவிலான தலைவர்களாக மட்டுமே நீடிப்பதாகவும் அதிகாரிகள் தரப்பு தற்போது அஞ்சுகிறது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-01T03:34:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[100 மில்லிமீற்றருக்கும் அதிக மழை சாத்தியம் ; வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/rainfall-100-mm-possible-meteorological-warns-1785555113"></link>
            <id>https://jvpnews.com/article/rainfall-100-mm-possible-meteorological-warns-1785555113</id>
            <summary type="text">இயங்குநிலை தென்மேற்குப் பருவப் பெயர்ச்சி காரணமாக, நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் தற்போது நிலவும் மழை மற்றும் காற்று நிலைமை இன்றும் (01) தொடரும் என வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இயங்குநிலை தென்மேற்குப் பருவப் பெயர்ச்சி காரணமாக, நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் தற்போது நிலவும் மழை மற்றும் காற்று நிலைமை இன்றும் (01) தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p></p><p>

திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள தினசரி வானிலை முன்னறிவிப்பின்படி, மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். </p><p>இப்பகுதிகளில் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பதிவாகும் சாத்தியமும் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6ca9d0cc-7e0b-4b02-98c2-b7276913aa22/26-6a6d68ab0c81a.webp' /></p><p>மேலும், மாத்தளை, அனுராதபுரம் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் சிறிய அளவிலான மழை பெய்யக்கூடும் என்றும், நாட்டின் ஏனைய பகுதிகளில் பெரும்பாலும் வறட்சியான வானிலையே நிலவும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
</p><p>
அதேவேளை, மேல், சப்ரகமுவ, தென், வடக்கு, வடமத்திய, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், மொனராகலை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணிக்கு 40 முதல் 50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என முன்னறிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இதனால், கனமழை மற்றும் பலத்த காற்று காரணமாக ஏற்படக்கூடிய பாதிப்புகளை கருத்தில் கொண்டு, பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு, வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிடும் மேலதிக அறிவிப்புகளை தொடர்ந்து அவதானிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-01T03:32:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கப்போகும் திருமணம்.. ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/marriage-episodes-upcoming-in-ayyanar-thunai-1785555144"></link>
            <id>https://cineulagam.com/article/marriage-episodes-upcoming-in-ayyanar-thunai-1785555144</id>
            <summary type="text">அய்யனார் துணைசின்னத்திரையில் அனைவரின் மனதையும் கவர்ந்த சீரியல்களில் ஒன்று அய்யனார் துணை. அதுவும் விஜய் தொலைக்காட்சியில் நம்பர் 1 இடத்தில் உள்ளது. ஆம்,...</summary>
            <content type="html"><![CDATA[<h2>அய்யனார் துணை</h2><p>சின்னத்திரையில் அனைவரின் மனதையும் கவர்ந்த சீரியல்களில் ஒன்று அய்யனார் துணை. அதுவும் விஜய் தொலைக்காட்சியில் நம்பர் 1 இடத்தில் உள்ளது. ஆம், TRP ரேட்டிங்கில் அய்யனார் துணை சீரியல் தான் விஜய் டிவியில் நம்பர் 1 இடத்தை பிடித்துள்ளது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/afa263a9-3d53-4bba-8be2-c92e35718b4c/26-6a6d68cb29de5.webp' /></p><p>இந்த சீரியலில் தற்போது, நிலாவை மகிழ்ச்சியாக வாழ வைக்க வேண்டும் என முடிவு செய்த சோழன், தனி குடித்தனம் செல்லலாம் என முடிவு எடுத்தார். ஆனால், இது நிலாவிற்கு கொஞ்சம் கூட பிடிக்கவில்லை. இதனால், வாடகை வீட்டிற்கு தந்தை அட்வான்ஸ் பணத்தை மீண்டும் வாங்கி வருமாறு கூறினார். பணத்தை வாங்குவதற்காக ஹவுஸ் ஓனர் காலில் விழுந்தார் சோழன். இதை அறிந்து நிலா மிகவும் கஷ்டப்பட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cf6064db-cb96-46f1-b5cc-c356f01a6707/26-6a6d68ccabbb2.webp' /></p><p>

ஒருவழியாக எப்படியோ அந்த பணத்தை சோழன் திரும்ப வாங்கி, நீண்ட நாட்களாக பல்லவன் கேட்டுக்கொண்டிருந்த புதிய டிவியை வாங்கிவிட்டார். இது குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் மகிழ்ச்சியை தந்தது.</p><h2>திருமணம்</h2><p> 

சோழன் - நிலாவை தொடர்ந்து அடுத்ததாக சேரன் - சந்தா திருமணத்தை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால், சந்தாவை சேரனுக்கு திருமணம் செய்து தரமாட்டேன் என அவரது தந்தை கூறிவிட்டார். இந்த பிரச்சனையை சேரன் எப்படி சமாளிக்கப் போகிறார் என நினைத்துக்கொண்டிருக்கும் வேளையில், அனைவரும் சர்ப்ரைஸ் தரும்படி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8f6110f5-51c7-4eec-95b0-3ea51b80e4f6/26-6a6d68cbda707.webp' /></p><p> 

அய்யனார் துணை சீரியலில் அடுத்ததாக நடக்கவிருப்பது, சேரன் - சந்தா திருமண நிகழ்வு தானாம். அதற்கான படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. விரைவில் சேரன் - சந்தா திருமண ப்ரோமோ வீடியோ வெளியாகும் என தகவல் தெரிவிக்கப்படுகிறது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-01T03:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு - களனி கங்கையின் ஆற்றுப்படுகையை பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/warning-of-minor-flooding-along-the-kelani-river-1785552542"></link>
            <id>https://tamilwin.com/article/warning-of-minor-flooding-along-the-kelani-river-1785552542</id>
            <summary type="text">தற்போது பெய்து வரும் பலத்த மழை காரணமாக&amp;nbsp;களனி கங்கை ஆற்றுப்படுகையின் மேல் மற்றும் மத்திய நீரேந்து பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்குள் பல பகுதிகள...</summary>
            <content type="html"><![CDATA[<p>தற்போது பெய்து வரும் பலத்த மழை காரணமாக&nbsp;களனி கங்கை ஆற்றுப்படுகையின் மேல் மற்றும் மத்திய நீரேந்து பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்குள் பல பகுதிகளில் சிறிய அளவிலான வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p>நீர்ப்பாசன திணைக்களத்தின் நீர்வியல் மற்றும் அனர்த்த முகாமைத்து பிரிவினால் இன்று (01) காலை 7.30 மணிக்கு வெள்ள அபாய எச்சரிக்கை அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p>இந்த அறிவித்தல் நாளை மறுதினம் (03) காலை 7.00 மணி வரை செல்லுபடியாகும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>&nbsp;</p><h2>ஆற்று நீர்மட்டம் உடனடியாக உயர வாய்ப்பு</h2><p>இதற்கமைய, தெஹியோவிட்ட, ருவன்வெல்ல மற்றும் சீதாவக்க ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்குட்பட்ட களனி கங்கையின் தாழ்நிலப் பகுதிகளில் இவ்வாறு சிறிய வெள்ள நிலைமை ஏற்படக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4358fc02-7063-4581-9124-356a43997a6d/26-6a6d65c250459.webp' /></p><p> </p><p>எதிர்காலத்திலும் அதிகளவு மழை பெய்யக்கூடும் என்பதால், ஆற்று நீர்மட்டம் உடனடியாக உயர வாய்ப்புள்ளதாக&nbsp;அறிவிக்கப்பட்டுள்ளது</p><p>

எனவே, அப்பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள், ஆற்றைப் பயன்படுத்துவோர் மற்றும் அப்பகுதிகள் ஊடாகப் பயணிக்கும் வாகன சாரதிகள் இந்த நிலைமை குறித்து மிகுந்த அவதானத்துடனும் விழிப்புடனும் செயற்படுமாறு நீர்ப்பாசன திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-01T03:19:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[அடுத்த 48 மணி நேரம் அவதானம் ; களனி கங்கை கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/flood-warning-for-people-along-banks-kelani-ganga-1785554219"></link>
            <id>https://jvpnews.com/article/flood-warning-for-people-along-banks-kelani-ganga-1785554219</id>
            <summary type="text">களனி கங்கை ஆற்றுப்படுகையின் மேல் மற்றும் மத்திய நீரேந்து பகுதிகளில் தற்போது பெய்து வரும் பலத்த மழை காரணமாக, அடுத்த 48 மணி நேரத்திற்குள் பல பகுதிகளில் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>களனி கங்கை ஆற்றுப்படுகையின் மேல் மற்றும் மத்திய நீரேந்து பகுதிகளில் தற்போது பெய்து வரும் பலத்த மழை காரணமாக, அடுத்த 48 மணி நேரத்திற்குள் பல பகுதிகளில் சிறிய அளவிலான வெள்ளப் பெருக்கு ஏற்படக்கூடும் என நீர்ப்பாசன திணைக்களம் அறிவித்துள்ளது.</p><p> </p><p></p><p>இதன்படி, நீர்ப்பாசன திணைக்களத்தின் நீர்வியல் மற்றும் அனர்த்த முகாமைத்து பிரிவினால் இன்று (01) காலை 7.30 மணிக்கு வெள்ள அபாய எச்சரிக்கை அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.</p><p> 

இந்த அறிவித்தல் நாளை மறுதினம் (03) காலை 7.00 மணி வரை செல்லுபடியாகும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fde756cc-ab6d-4885-b61d-07ee1ac6ae5a/26-6a6d652d348c9.webp' /></p><p> 

அதற்கமைய, தெஹியோவிட்ட, ருவன்வெல்ல மற்றும் சீதாவக்க ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்குட்பட்ட களனி கங்கையின் தாழ்நிலப் பகுதிகளில் இவ்வாறு சிறிய வெள்ள நிலைமை ஏற்படக்கூடும் என அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. </p><p>

தற்போதைய வானிலை முன்னறிவிப்புகளின்படி, எதிர்காலத்திலும் அதிகளவு மழை பெய்யக்கூடும் என்பதால், ஆற்று நீர்மட்டம் உடனடியாக உயர வாய்ப்புள்ளது. </p><p>

எனவே, அப்பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள், ஆற்றைப் பயன்படுத்துவோர் மற்றும் அப்பகுதிகள் ஊடாகப் பயணிக்கும் வாகன சாரதிகள் இந்த நிலைமை குறித்து மிகுந்த அவதானத்துடனும் விழிப்புடனும் செயற்படுமாறு நீர்ப்பாசன திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-01T03:18:03+00:00</updated>
        </entry>
    </feed>
