<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-09-10T20:28:12+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[வணிக வளாகத்தின் மீது ரஷ்யா நடத்திய ட்ரோன் தாக்குதல்: நால்வர் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/russian-drone-hits-shopping-center-in-pavlohrad-1789071973"></link>
            <id>https://news.lankasri.com/article/russian-drone-hits-shopping-center-in-pavlohrad-1789071973</id>
            <summary type="text">உக்ரைனின் வணிக வளாகத்தை குறிவைத்து ரஷ்யா நடத்திய வான்வழித் தாக்குதலில்&amp;nbsp; 4 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர். வணிக வளாகம் மீது ட்ரோன் தாக்குதல்
உக்ரைனி...</summary>
            <content type="html"><![CDATA[<p>உக்ரைனின் வணிக வளாகத்தை குறிவைத்து ரஷ்யா நடத்திய வான்வழித் தாக்குதலில்&nbsp; 4 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர்.</p><h2> வணிக வளாகம் மீது ட்ரோன் தாக்குதல்</h2><p>
உக்ரைனின் ட்னிப்ரோபெட்ரோவ்ஸ்க்(Dnipropetrovsk) பிராந்தியத்தின் பாவ்லோஹ்ராட்(Pavlohrad) நகரில் அமைந்துள்ள வணிக வளாகத்தை குறிவைத்து ரஷ்யா ட்ரோன் தாக்குதலை நடத்தியுள்ளது.</p><p> இந்த தாக்குதலில் குறைந்தது 4 பேர் கொல்லப்பட்டதுடன், 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2166ca43-de07-4ac7-af9f-705dfdab350e/26-6aa31267428aa.webp' /></p><p> பகல் நேரத்தில் மக்கள் அதிக அளவு நடமாடும் இடத்தில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டு இருப்பதாக உக்ரைனின் உள்துறை அமைச்சர் இவான் விஹிவ்ஸ்கி தகவல் தெரிவித்துள்ளார்.</p><p>இந்த தாக்குதலில் அப்பகுதியில் உள்ள கடைகளும், வாகனங்களும் சேதமடைந்துள்ளன.</p><p></p><p> உக்ரைன் அவசரகால சேவையினர் வெளியிட்ட காட்சிகளில், தீயணைப்பு துறையினர் அடர் புகைக்கு மத்தியில் தீப்பற்றி எரியும் வாகனங்களை அணைப்பதை பார்க்க முடிகிறது.</p><h2> ஜெலென்ஸ்கி கண்டனம்</h2><p>ரஷ்யாவின் இந்த அத்துமீறிய தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி இரங்கல் தெரிவித்துள்ளார்.</p><p> அத்துடன் வணிக வளாகத்திற்கு அருகில் நின்றுகொண்டிருந்த பொதுமக்கள் மீது ரஷ்யா திட்டமிட்டு இந்த தாக்குதலை நடத்தி இருப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.</p><p> இதற்கிடையில் ரஷ்யாவின் சோச்சி நகரில் உள்ள சுற்றுலாத் தலத்தில் உக்ரைனின் கடல்சார் ட்ரோன்கள் நடத்திய தாக்குதலில் 28 பேர் காயமடைந்ததுடன் 3 பேர் வரை கொல்லப்பட்டு இருப்பதாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-10T20:26:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[மோகா துறைமுக நகரை கைப்பற்றிய ஹூதி படையினர்: செங்கடலில் வீழ்ந்த சவுதி ஆதரவு படை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/houthi-s-capture-red-sea-port-of-mokha-1789070506"></link>
            <id>https://news.lankasri.com/article/houthi-s-capture-red-sea-port-of-mokha-1789070506</id>
            <summary type="text">Houthi’s Capture Red Sea Port of Mokha: செங்கடல் துறைமுக நகரான மோகாவை ஹூதி கிளர்ச்சியாளர்கள் படை கைப்பற்றியுள்ளனர். மோகாவை கைப்பற்றிய&amp;nbsp;ஹூதிகள்
ஏம...</summary>
            <content type="html"><![CDATA[<p>Houthi’s Capture Red Sea Port of Mokha: செங்கடல் துறைமுக நகரான மோகாவை ஹூதி கிளர்ச்சியாளர்கள் படை கைப்பற்றியுள்ளனர்.</p><h2> மோகாவை கைப்பற்றிய&nbsp;ஹூதிகள்</h2><p>
ஏமனின் தென்மேற்கு பகுதியில் கடந்த ஒரு வார காலமாக ஈரானின் ஆதரவு பெற்ற ஹூதி(Houthi)&nbsp;கிளர்ச்சியாளர்கள் படையினருக்கும் சவுதி ஆதரவு பெற்ற அரசு படையினருக்கும் இடையே கடுமையான மோதல் நடைபெற்று வருகிறது.</p><p> ஒரு வார கால மோதலில் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கான மக்கள் அகதிகளாக தங்களது இருப்பிடங்களை விட்டு வெளியேறியுள்ளனர்.</p><p></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bec8e6c8-7e03-42b2-92e2-1c9cbe1e9bbb/26-6aa30cac5cfc1.webp' /></p><p> இந்நிலையில் இந்த மோதலின் முக்கிய திருப்புமுனையாக ஹூதி படையினர் செங்கடலில் உள்ள துறைமுக நகரான மோகாவை(Mokha) கைப்பற்றியுள்ளனர்.</p><p> மோகா துறைமுகம் கைப்பற்றப்பட்டதை அடுத்து, ஆசியா மற்றும் ஐரோப்பாவை இணைக்கும் கடல்வழி வர்த்தக பாதையின் தெற்கு நுழைவு வாயிலான பாப் அல்-மந்தப் ஜலசந்தியில் இருந்து ஈரானிய ஆதரவு பெற்ற ஹூதி படையினர் வெறும் 46 மைல்கள் தொலைவில் மட்டுமே உள்ளனர்.</p><p> இதற்கிடையில் சர்வதேச கப்பல் போக்குவரத்திற்கு எந்தவொரு தடையையும் நாங்கள் ஏற்படுத்தவில்லை என்று ஹூதி தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.</p><p> இருப்பினும் சவுதி அரேபியாவுக்கு சொந்தமான கப்பல்களை குறிவைத்து தாக்கும் நடவடிக்கை தொடரும் என்றும் எச்சரித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/80959e20-ac0b-4596-882e-c81162c7c34d/26-6aa30cad12a4c.webp' /></p><h2> பொருளாதார சந்தையில் ஏற்பட்டுள்ள தாக்கம்</h2><p>ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டதை அடுத்து, எண்ணெய் ஏற்றுமதிக்கு சவுதி அரேபியா பெருமளவு செங்கடல் வழியை நம்பியிருந்தது.</p><p>ஆனால் தற்போது செங்கடலில் உள்ள முக்கிய துறைமுகமான மோகா ஹூதி படையினரிடம் வீழ்ந்துள்ளது. இதனால் சர்வதேச எண்ணெய் விலையில் பெரும் உயர்வு ஏற்பட்டுள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-10T20:26:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாமலின் மேடையேறும் பிரபலங்கள் யார்..! நடுக்கத்தில் பிக்குமார்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-12th-meeting-in-anuradhapura-namal-in-prison-1789070223"></link>
            <id>https://tamilwin.com/article/namal-12th-meeting-in-anuradhapura-namal-in-prison-1789070223</id>
            <summary type="text">நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டதை தொடர்ந்து இலங்கை அரசியல் களம் சூடுபடித்துள்ளது.&amp;nbsp;இந்நிலையில், எதிர்வரும் 12ஆம் திகதி, நாமல்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டதை தொடர்ந்து இலங்கை அரசியல் களம் சூடுபடித்துள்ளது.&nbsp;</p><p>இந்நிலையில், எதிர்வரும் 12ஆம் திகதி, நாமல் ராஜபக்ச தலைமையில் அனுராதபுரத்தில் இடம்பெறவிருந்த, பொதுஜன பெரமுனவின் கட்சி கூட்டத்தை சீர்குலைக்கும் வகையில் அரசாங்கம் அவரை கைது செய்ததாக நாமலின் ஆதரவாளர்கள் குற்றம் சுமத்தினர்.&nbsp;</p><p>அதேநேரம், நாமல் ராஜபக்ச சிறையில் அடைக்கப்பட்டிருந்தாலும் குறித்த கூட்டம் ஒழுங்கமைக்கப்பட்டவாறு இடம்பெறும் என அக்கட்சி அறிவித்தது.&nbsp;</p><p>அத்துடன், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, நாமலுக்கு பதிலாக அக்கூட்டத்தில் கலந்து கொள்வார் எனவும் தெரிவிக்கப்பட்டது.&nbsp;</p><p>இவ்வாறிருக்கையில் தென்னிலங்கை அரசியல் களத்தில் அரசின் அதிரடி நடவடிக்கையால் அச்சம் ஏற்பட்டுள்ளது என்றே சொல்லலாம்.&nbsp;</p><p>நாட்டில் இடம்பெற்ற பல முக்கிய அரசியல் நகர்வுகள் குறித்து ஆராய்கின்றது நாட்டு நடப்பு நிகழ்ச்சி,&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/iAgQBFo2_cc" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-10T20:11:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[சீன துறைமுகத்தில் சரக்கு கப்பல் தீப்பிடித்ததில் 20 பேர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/20-killed-in-cargo-ship-fire-at-chinese-port-1789070998"></link>
            <id>https://canadamirror.com/article/20-killed-in-cargo-ship-fire-at-chinese-port-1789070998</id>
            <summary type="text">சீன துறைமுகத்தில் சரக்கு கப்பல் தீப்பிடித்ததில் சிக்கி 20 பேர் பலியாகி உள்ளனர்.

சீனாவிலுள்ள துறைமுகத்திற்கு லைபீரிய நாட்டு கொடியுடன் கூடிய ஓசன் மெல...</summary>
            <content type="html"><![CDATA[<p>சீன துறைமுகத்தில் சரக்கு கப்பல் தீப்பிடித்ததில் சிக்கி 20 பேர் பலியாகி உள்ளனர்.</p><p>

சீனாவிலுள்ள துறைமுகத்திற்கு லைபீரிய நாட்டு கொடியுடன் கூடிய ஓசன் மெலோடி என்ற பெயரிட்ட சரக்கு கப்பல் ஒன்று வந்து நிறுத்தப்பட்டு உள்ளது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c1404984-846b-4d68-bede-c5f601dd7d82/26-6aa30e97a959a.webp' /></p><p>கப்பலில் மொத்தம் 42 பேர் இருந்தனர்.
</p><p>
இந்த நிலையில், அந்த கப்பல் திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. இந்த சம்பவத்தில் சிக்கி 20 பேர் பலியாகி உள்ளனர். </p><p>எனினும், கப்பலில் இருந்து 12 பேர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு விட்டனர். மீதமுள்ள நபர்களை காணவில்லை. அவர்களை தேடும் பணி நடந்து வருகிறது.</p>]]></content>
            <updated>2026-09-10T20:10:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[இரவில் உறங்க செல்வதற்கு முன் ஏலக்காயை மென்று சாப்பிட்டால் உடலுக்கு இத்தனை நன்மைகளா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/what-are-the-benefits-of-chewing-cardamom-1789070100"></link>
            <id>https://jvpnews.com/article/what-are-the-benefits-of-chewing-cardamom-1789070100</id>
            <summary type="text">தினமும் இரவில் படுக்கும் முன் ஒன்று அல்லது இரண்டு ஏலக்காயை மென்று சாப்பிடுவதும், வெதுவெதுப்பான நீரைக் குடிப்பதும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், அழற்சி எதிர்ப்பு...</summary>
            <content type="html"><![CDATA[<p>தினமும் இரவில் படுக்கும் முன் ஒன்று அல்லது இரண்டு ஏலக்காயை மென்று சாப்பிடுவதும், வெதுவெதுப்பான நீரைக் குடிப்பதும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், அழற்சி எதிர்ப்பு பண்புகள் மற்றும் இயற்கையான நறுமண எண்ணெய்கள் ஆகியவை உடலுக்கு எதிர்பாராத ஆரோக்கிய நன்மைகளை அளிக்கும்.</p><p>அத்துடன் இரவில் ஏலக்காயை சாப்பிடுவதால் ஏற்படும் 3 முக்கிய நன்மைகள் எவையென நாம் இங்கு பார்ப்போம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c1c41df7-5847-4797-8eae-116b02c6e0b8/26-6aa30b16500d0.webp' /></p><h4>சிறந்த செரிமானம்</h4><p>இரவு நேரத்தில் பலரைத் துன்புறுத்தும் முக்கியப் பிரச்சனை சாப்பிட்ட உணவைச் சரியாக ஜீரணிக்க முடியாமல், வயிறு வீங்குவது. இரவில் படுக்கும் முன் 1-2 ஏலக்காய்களை மென்று சாப்பிடுவது, உமிழ்நீர் மற்றும் செரிமான சாறுகளின் சுரப்பை அதிகரிக்கிறது. இது இரவில் உண்ணும் உணவை எளிதில் ஜீரணிக்க உதவுகிறது மற்றும் காலையில் மலச்சிக்கல், வாயு மற்றும் நெஞ்செரிச்சல் போன்ற பிரச்சனைகளைத் தடுக்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8cd66d5f-7c1a-425a-a3d7-862f8e669a0a/26-6aa30b1704387.webp' /></p><h4>நிம்மதியான உறக்கம் மற்றும் நரம்புத் தளர்வு</h4><p>ஏலக்காயில் உள்ள இயற்கையான நறுமணச் சேர்மங்கள் நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்துகின்றன. மன அழுத்தம் மற்றும் பதட்டத்தைக் குறைத்து மூளையைத் தளர்த்துவதன் மூலம், தூக்கமின்மையால் அவதிப்படுபவர்கள் ஆழ்ந்த, அமைதியான உறக்கத்தைப் பெற இது உதவுகிறது. விலையுயர்ந்த மருந்துகளை நாடுவதை விடுத்து, சமையலறையில் எளிதில் கிடைக்கும் ஏலக்காயை அன்றாடப் பழக்கமாகக் கொள்வதன் மூலமும், தரமான உறக்கத்தைப் பெறுவதன் மூலமும் நீங்கள் ஆரோக்கியமான செரிமான அமைப்பைப் பராமரிக்கலாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9fdcad3a-86c8-4e6a-a156-c36085d7aa9a/26-6aa30b17ab3ea.webp' /></p><h4>வாய் துர்நாற்றம்</h4><p>ஏலக்காயின் பாக்டீரியா எதிர்ப்புப் பண்புகள் வாயில் உள்ள பாக்டீரியாக்களைக் கொன்று, காலையில் ஏற்படும் வாய் துர்நாற்றத்தைத் தடுக்கின்றன. மேலும், அவை இரவில் சுவாசப் பாதையில் தேங்கும் சளியை அகற்ற உதவுவதால் தொண்டை வலி மற்றும் குறட்டை போன்ற பிரச்சனைகளைக் குறைக்கின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/07294a7a-421a-4746-9b1e-91549e0fabc7/26-6aa30b1860adc.webp' /></p>]]></content>
            <updated>2026-09-10T19:55:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[பேசுபொருளாகும் 1980களின் ரெட்ரோ புகைப்படங்கள்.. விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/80s-trending-chatgpt-edits-users-are-warned-1789066120"></link>
            <id>https://tamilwin.com/article/80s-trending-chatgpt-edits-users-are-warned-1789066120</id>
            <summary type="text">ChatGPT AI தொழில்நுட்பத்தில் 1980களின் ரெட்ரோ பாணி புகைப்பட மாற்றங்கள் வைரலாகி வரும் வேளையில், பயனர்கள் தங்கள் புகைப்படங்களை பதிவேற்றும் முன் தரவு தனி...</summary>
            <content type="html"><![CDATA[<p>ChatGPT AI தொழில்நுட்பத்தில் 1980களின் ரெட்ரோ பாணி புகைப்பட மாற்றங்கள் வைரலாகி வரும் வேளையில், பயனர்கள் தங்கள் புகைப்படங்களை பதிவேற்றும் முன் தரவு தனியுரிமை குறித்த விழிப்புணர்வை பெறுவது அவசியம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p>நாம் பகிரும் புகைப்படங்கள் தனிப்பட்ட தரவுகளாகக் கருதப்படுவதோடு, அவை எடுக்கப்பட்ட இடம், நேரம் மற்றும் சாதனத்தின் பெயர் போன்ற நுட்பமான எக்சிஃப் (EXIF) தகவல்களையும் கொண்டிருக்கின்றன. </p><p>ChatGPTஇல் ஒரு புகைப்படத்தைப் பதிவேற்றும்போது, அதன் நகல் OpenAI அமைப்புகளில் சேமிக்கப்பட்டு, பயனரின் கணக்கு வரலாற்றின் பகுதியாக மாறுகிறது.</p><h2>சேகரிக்கப்படும் தகவல்கள்..&nbsp;</h2><p> </p><p>பயனர் அந்த உரையாடலை நீக்கினாலும், சட்ட மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக இந்தத் தரவுகள் சுமார் 30 நாட்கள் வரை OpenAI சேவையகங்களில் தக்கவைக்கப்படலாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a92edf9e-ef75-4c50-a095-08924d0940de/26-6aa304747b32f.webp' /></p><p> </p><p>வணிகக் கணக்குகளுடன் ஒப்பிடும்போது, சாதாரணத் தனிநபர் கணக்குகளின் தரவுக் கொள்கைகள் மாறுபடுகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.</p><p>

புகைப்படங்கள் மட்டுமன்றி பயனரின் IP முகவரி, சாதன விவரங்கள், இருப்பிடம் மற்றும் உரையாடல் பழக்கவழக்கங்கள் போன்ற பிற தகவல்களும் சேகரிக்கப்படுவதால், AI மூலம் ஒரு நபரின் முழுமையான சுயவிவரத்தை ஊகிக்க முடியும்.</p><p>[</p><p> </p><p>எனவே, மற்றவர்களின் அனுமதி இன்றி அவர்களின் படங்களையோ அல்லது குழந்தைகளின் புகைப்படங்களையோ பதிவேற்றுவதைத் தவிர்க்க வேண்டும்.</p><p> மேலும், தனிப்பட்ட ஆவணங்கள் உள்ள படங்களைப் பகிர்வதைத் தவிர்ப்பதுடன், AI மாடல் பயிற்சிக்காக உங்கள் தரவுகள் பயன்படுத்தப்படுவதைத் தடுக்க அமைப்புகளில் (Settings) 'Data Controls' விருப்பத்தை முடக்குவது பாதுகாப்பானது.</p><p>இந்த ட்ரெண்டுகள் சில நாட்களில் மறைந்துவிட்டாலும், நாம் வழங்கும் தரவுகள் இணைய அமைப்புகளில் நீண்ட காலம் நிலைத்திருக்கும் என்பதை உணர்ந்து எச்சரிக்கையுடன் செயல்படுவது அவசியம் என வலியுறுத்தப்படுகின்றது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-10T19:32:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிம்பிள் உடை, விதவிதமான போஸில் நடிகை ரைசா வில்சன் வெளியிட்ட போட்டோஸ்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/actress-raiza-wilson-cool-photoshoot-1789027535"></link>
            <id>https://cineulagam.com/article/actress-raiza-wilson-cool-photoshoot-1789027535</id>
            <summary type="text">ரைசா வில்சன்பிக்பாஸ் 10வது சீசன் பிரம்மாண்டத்தின் உச்சமாக துவங்கி ஒளிபரப்பாகி வருகிறது.நிகழ்ச்சி முடிந்து சில நாட்களிலேயே வீட்டைவிட்டு வெளியேறிவிட்டார...</summary>
            <content type="html"><![CDATA[<h2>ரைசா வில்சன்</h2><p>பிக்பாஸ் 10வது சீசன் பிரம்மாண்டத்தின் உச்சமாக துவங்கி ஒளிபரப்பாகி வருகிறது.</p><p>நிகழ்ச்சி முடிந்து சில நாட்களிலேயே வீட்டைவிட்டு வெளியேறிவிட்டார் பிளாக் பாண்டி, காரணம் மருத்துவர்கள் அவரது உடல்நிலை சரியில்லை என்பதால் வெளியே அனுப்ப கூறியுள்ளனர்.</p><p>இந்த பிக்பாஸ் முதல் சீசன் மூலம் தமிழ் மக்களிடம் பிரபலமானவர் தான் நடிகை ரைசா வில்சன். அவர் தனது இன்ஸ்டாவில் வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோஸ் இதோ,</p><p><br></p>]]></content>
            <updated>2026-09-10T19:30:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[சரக்கு கப்பலில் பற்றிய பயங்கர தீ: சீன துறைமுகத்தில் 20 பேர் பலி, 5 பேரை காணவில்லை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/cargo-ship-fire-at-china-s-qingdao-port-20-dead-1789068169"></link>
            <id>https://news.lankasri.com/article/cargo-ship-fire-at-china-s-qingdao-port-20-dead-1789068169</id>
            <summary type="text">Cargo Ship Fire at china’s Qingdao Port, 20 Dead: சீன துறைமுகத்தில் நிலை நிறுத்தப்பட்டிருந்த சரக்கு கப்பலில் ஏற்பட்ட கோர விபத்தில் 20 பேர் வரை பலியாகி...</summary>
            <content type="html"><![CDATA[<p>Cargo Ship Fire at china’s Qingdao Port, 20 Dead: சீன துறைமுகத்தில் நிலை நிறுத்தப்பட்டிருந்த சரக்கு கப்பலில் ஏற்பட்ட கோர விபத்தில் 20 பேர் வரை பலியாகியுள்ளனர்.</p><h2> சரக்கு கப்பலில் தீ விபத்து</h2><p>வடகிழக்கு சீனாவின் முக்கிய துறைமுக நகரான சிங்டாவ்வில்(Qingdao) பழுதுபார்க்கும் பணிக்காக துறைமுகத்தில் நிலை நிறுத்தப்பட்டிருந்த சரக்கு கப்பலில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் குறைந்தது 20 பேர் உயிரிழந்துள்ளனர்.</p><p> அத்துடன் 5 பேர் காணாமல் போயிருப்பதாகவும் அந்நாட்டு அரசு ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளது.</p><p> கடந்த ஆகஸ்ட் 31ம் திகதி முதல் ஓஷன் மெலடி(Ocean Melody) என்ற பெயர் கொண்ட இந்த லைபீரிய(Liberian) கொடிய ஏந்திய கப்பலானது சிங்டாவ் துறைமுகத்தில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d4f0ed28-14b2-4cf4-93db-c44d46bcef56/26-6aa3038ae1d28.webp' /></p><p> விபத்துக்குள்ளான இந்த கப்பலில் மொத்தம் 42 பேர் வரை இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.</p><p></p><h2>மீட்பு பணிகள் தீவிரம்</h2><p>கடந்த வியாழக்கிழமை காலை 11 மணிக்கு தொடங்கிய தீயானது இன்று மதியம் 2.30 மணிக்கு முற்றிலுமாக அணைக்கப்பட்டுள்ளது.</p><p>இந்த சம்பவத்தில் அவசர கால மீட்பு படையினர் 12 பேர் பத்திரமாக மீட்டுள்ளனர். 5 பேர் வரை தீவிரமான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/826ef271-4dc5-4838-940f-a0fb1bc79da5/26-6aa3038b93e7b.webp' /></p><p> இந்நிலையில், கப்பலில் ஏற்பட்ட தீ விபத்திற்கான காரணத்தை விரைவாக கண்டறியவும், தீ விபத்துக்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் உத்தரவிட்டுள்ளார்.</p><p> விபத்து ஏற்பட்ட இந்த துறைமுகம் சீனாவின் மாநில கப்பல் கட்டும் கார்ப்பரேஷன் நிறுவனத்தினால்(CSSC) நிர்வகிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-10T19:23:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[போதைப்பொருள் மூலம் ஈட்டப்பட்ட பல கோடி பெறுமதியான சொத்துக்கள் முடக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/assets-crores-amassed-through-narcotics-frozen-1789067839"></link>
            <id>https://jvpnews.com/article/assets-crores-amassed-through-narcotics-frozen-1789067839</id>
            <summary type="text">போதைப்பொருள் கடத்தல் மூலம் சட்டவிரோதமாகச் ஈட்டப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 10 கோடி ரூபாய்க்கும் அதிக பெறுமதியான சொத்துக்களை முடக்குவதற்குச் சட்டவிரோத ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>போதைப்பொருள் கடத்தல் மூலம் சட்டவிரோதமாகச் ஈட்டப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 10 கோடி ரூபாய்க்கும் அதிக பெறுமதியான சொத்துக்களை முடக்குவதற்குச் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது.</p><p> </p><p></p><h3>மேலதிக விசாரணை</h3><p>2020 ஆம் ஆண்டு மே மாதம் 14 ஆம் திகதி பேலியகொடை பொலிஸாரால் ஜீப் வண்டியொன்றில் ஹெரோயின் கடத்திச் சென்ற 7 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதுடன், அவர்கள் தொடர்பாகப் பணச்சலவை தடுப்புச் சட்டத்தின் கீழ் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினராலும் விசாரணையொன்று ஆரம்பிக்கப்பட்டிருந்தது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f2851cf0-4562-4564-866e-53d4a6961e7a/26-6aa30240eb61e.webp' /></p><p>அந்த விசாரணைகளில், பேலியகொடை பகுதியைச் சேர்ந்த சந்தேகநபர் ஒருவர் போதைப்பொருள் கடத்தல் மூலம் கிடைத்த பணத்தைப் பயன்படுத்திச் சொத்துக்களைக் கொள்முதல் செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. </p><p>

இதற்கமைய, மஹர, கடவத்தை பகுதியில் 19.90 பேர்ச்சஸ் காணியில் அமைக்கப்பட்டுள்ள இருமாடி வீடு மற்றும் சிங்காரமுல்ல, களனி பகுதியில் 18 பேர்ச்சஸ் காணியில் அமைக்கப்பட்டுள்ள இருமாடி வீடு தொடர்பிலும் விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளன. </p><p>

இந்த இரண்டு சொத்துக்களின் தோராயமான பெறுமதி தலா 500 இலட்சம் ரூபாவாகும் என்பதுடன், இதன் மொத்தத் தோராய பெறுமதி 10 கோடி ரூபாய்க்கும் அதிகமானதாகும்.</p><p> 

விசாரணைகளின்படி, போதைப்பொருள் கடத்தல் மூலம் சட்டவிரோதமாக ஈட்டப்பட்ட பணத்தில் இச்சொத்துக்கள் வாங்கப்பட்டதாகக் கருதப்படுவதால், பணச்சலவை தடுப்புச் சட்டத்திற்கு அமைவாக 2026 செப்டெம்பர் 10 ஆம் திகதி முதல் 14 நாட்களுக்கு அவற்றை முடக்குவதற்கான உத்தரவுகள் பெறப்பட்டுள்ளன. </p><p>

சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.&nbsp;&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-09-10T19:17:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[இனவாத விசமிக்கு மைத்திரிபால கொடுத்த பொதுமன்னிப்பு செல்லாது..! நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/general-amnesty-granted-maithripala-agitator-1789062957"></link>
            <id>https://tamilwin.com/article/general-amnesty-granted-maithripala-agitator-1789062957</id>
            <summary type="text">நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டின் பேரில் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு, முன்னாள் ஜனாதிபதி...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டின் பேரில் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு, முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன வழங்கிய பொது மன்னிப்பு செல்லாது என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
</p><p>
காணாமல் போன பத்திரிகையாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா எக்னெலிகொட மற்றும் பலர் தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மனுக்களை உயர் நீதிமன்றம் பரிசீலித்த பின்னர், இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது.&nbsp;</p><p>கடந்த 2018ஆம் ஆண்டு மேன்முறையீட்டு நீதிமன்றம் நீதிமன்ற அவமதிப்புக் குற்றத்திற்காக ஞானசார தேரருக்கு ஆறு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது.</p><p>இருப்பினும், முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவருக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கினார்.&nbsp;</p><p>இந்நிலையில், குறித்த பொதுமன்னிப்பு செல்லாது என உயர்நீதிமன்றம் விதித்துள்ள அதிரடி தீர்ப்பு பேசுபொருளாகியுள்ளது.&nbsp;</p><p>இது தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது நியூஸ் இன்சைக்ட் நிகழ்ச்சி,&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/qBdszQyKhuU" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-10T19:10:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[பேஸ்புக் விருந்துகள் குறித்து புலனாய்வுத் தகவல்களைப் பெற விசேட திட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/special-initiative-gather-intelligence-facebook-1789066630"></link>
            <id>https://jvpnews.com/article/special-initiative-gather-intelligence-facebook-1789066630</id>
            <summary type="text">பேஸ்புக் மூலம் ஏற்பாடு செய்யப்படும் விருந்துகள் மற்றும் அவை நடைபெறும் இடங்கள் தொடர்பான புலனாய்வுத் தகவல்களைப் பெறுவதற்காக விசேட திட்டமொன்றை பொலிஸ் மா ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பேஸ்புக் மூலம் ஏற்பாடு செய்யப்படும் விருந்துகள் மற்றும் அவை நடைபெறும் இடங்கள் தொடர்பான புலனாய்வுத் தகவல்களைப் பெறுவதற்காக விசேட திட்டமொன்றை பொலிஸ் மா அதிபர் ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p> </p><p></p><p>இத்திட்டத்தின் பலனாக, சில நாட்களுக்கு முன்னர் தெல்தெனிய பொலிஸ் பிரிவில் நடைபெற்ற பேஸ்புக் விருந்ததொன்றில் பங்கேற்ற 41 இளைஞர், யுவதிகளைக் கைது செய்ய முடிந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு. வூட்லர் குறிப்பிட்டார்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8f2ec1fa-013e-43ca-a915-6f6759d63b94/26-6aa2fd87c6c4f.webp' /></p><p>எதிர்காலத்திலும் இவ்வாறான இடங்கள் தொடர்பாகத் தொடர்ச்சியாக புலனாய்வுத் தகவல்களைப் பெறும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.</p><p> 

பேஸ்புக் விருந்துகள் என்ற போர்வையில் இளைஞர், யுவதிகள் போதைப்பொருள் கடத்தல்காரர்களின் வலையில் விழும் அபாயம் உள்ளதால், இவ்வாறான விருந்துகள் குறித்து அவதானத்துடன் செயல்படுமாறு அவர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்தார்.</p><p> 

இவ்வாறான விருந்துகள் சில சந்தர்ப்பங்களில் போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய நபர்களால் ஏற்பாடு செய்யப்படுவதாகவும், அவை வலையமைப்புச் குற்றங்கள் மற்றும் பணத்தை இலக்காகக் கொண்ட வியாபாரங்கள் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சுட்டிக்காட்டினார். </p><p>

அத்துடன், தமது பிள்ளைகளின் உரையாடல்கள், நடத்தைகள் மற்றும் பயணங்களில் ஏற்படும் மாற்றங்கள் குறித்துக் கவனம் செலுத்துமாறு அவர் பெற்றோர்களிடம் கேட்டுக்கொண்டார். </p><p>

இதேவேளை, போதைப்பொருள் பேரழிவு காரணமாக 2025 ஆம் ஆண்டில் 175 நபர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளதுடன், அவர்களில் 172 ஆண்களும் மூன்று பெண்களும் அடங்குவர் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார். </p><p>

2026 ஆம் ஆண்டில் இதுவரை போதைப்பொருள் தொடர்பில் 11 நபர்கள் உயிரிழந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.&nbsp;&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-09-10T18:57:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் லண்டனில் இருவர் கைது!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/two-arrested-in-london-over-iran-nsa-offences-1789055457"></link>
            <id>https://ibctamil.com/article/two-arrested-in-london-over-iran-nsa-offences-1789055457</id>
            <summary type="text">ஈரானுடன் தொடர்புடைய சந்தேகத்தில் லண்டனில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.ஈரானுடன் தொடர்புடைய சந்தேகத்திற்குரிய தேசிய பாதுகாப்புச் சட்ட மீறல்கள் குறித்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானுடன் தொடர்புடைய சந்தேகத்தில் லண்டனில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>ஈரானுடன் தொடர்புடைய சந்தேகத்திற்குரிய தேசிய பாதுகாப்புச் சட்ட மீறல்கள் குறித்த விசாரணையின் ஒரு பகுதியாக இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><p>சம்பவத்தில்&nbsp;60 வயதுடைய நபர் ஒருவரும் 42 வயதுடைய பெண் ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p></p><h2>விசேட விசாரணை</h2><p>லண்டன் மெட்ரோபொலிட்டன் காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட விசாரணைகளின் அடிப்படையில் இந்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7dcb2f8a-bd9c-4835-965a-ef9838a2a765/26-6aa2d87c1c811.webp' /></p><p>லண்டன் முழுவதும் உள்ள யூத மற்றும் ஈரானிய சமூகங்களுடன் தொடர்புடைய பல்வேறு இடங்களில் இவ்வருட தொடக்கத்தில் இடம்பெற்ற எந்தவொரு சம்பவங்களுடனோ அல்லது தாக்குதல்களுடனோ இந்த விசாரணைக்குத் தொடர்பில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>லண்டன் காவல்துறையினர் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-10T18:47:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[விரிவுரையாளர் இழிவுபடுத்தியதால் மனவுளைச்சல்...! மாணவி எடுத்த விபரீத முடிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/jaffna-student-hospitalized-after-lecturer-abuse-1789064888"></link>
            <id>https://ibctamil.com/article/jaffna-student-hospitalized-after-lecturer-abuse-1789064888</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரியில் கல்வி பயிலும் மாணவி ஒருவர், தவறான முடிவெடுத்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கோப்பாய் வைத்தியசாலைய...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரியில் கல்வி பயிலும் மாணவி ஒருவர், தவறான முடிவெடுத்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p><p>

கோப்பாய் வைத்தியசாலையில் குறித்த மாணவி அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
</p><p>
விரிவுரையாளரின் முறையற்ற நடத்தையால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாகத் தவறான முடிவெடுத்து ஆபத்தான நிலையில் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p><p>
</p><p></p><h2>கல்லூரியின் மன்றம்&nbsp;</h2><p>இச்சம்பவம் குறித்து குறித்த கல்லூரின் சக மாணவர்கள் மேலும் தெரிவித்துள்ளதாவது,
</p><p>
குறித்த மாணவி கல்லூரியின் மன்றம் ஒன்றில் செயலாளராகப் பணியாற்றி வருகிறார்.</p><p> 

இதன்போது, மன்றத்தின் தலைவரின் வழிகாட்டலுக்கு அமைய, வேறொரு மன்றத்திலிருந்து பொருள் ஒன்றை எடுத்துப் பயன்படுத்துவதற்காக அனுமதி கடிதம் கோரி சம்பந்தப்பட்ட விரிவுரையாளரை அணுகியுள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f5caa8f2-5402-41c2-998d-394678758e71/26-6aa2f75176c26.webp' /></p><p>அச்சமயத்தில், குறித்த விரிவுரையாளர் மாணவியை மிகத் தகாத வார்த்தைகளால் திட்டி, கடுமையான முறையில் இழிவுபடுத்தியதாகக் கூறப்படுகிறது.</p><p>

இச்சம்பவம் குறித்துக் கல்லூரி நிர்வாகத்தின் கவனத்திற்கு உடனடியாகக் கொண்டு செல்லப்பட்ட போதிலும், நிர்வாகத் தரப்பிலிருந்து எவ்விதப் பொருத்தமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் குற்றம் சாட்டப்படுகிறது.
</p><p>
நிர்வாகத்தின் அலட்சியம் மற்றும் விரிவுரையாளரின் அநாகரீகமான பேச்சால் மன உளைச்சலுக்கு ஆளான அம்மாணவி, இறுதியில் இத்தகைய தவறான முடிவை எடுத்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-10T18:37:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[லண்டன் வீதியில் நடந்த கத்திக்குத்து: 4 பேர் வரை மருத்துவமனையில் அனுமதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/london-street-stabbing-4-hospitalised-1789059949"></link>
            <id>https://news.lankasri.com/article/london-street-stabbing-4-hospitalised-1789059949</id>
            <summary type="text">லண்டனின் முக்கிய வீதியில் நடந்த கத்திக்குத்து சம்பவத்தில் 4 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர்.லண்டனில் கத்திக்குத்து தாக்குதல்வியாழக்கிழமை மதியம் தென்கிழக...</summary>
            <content type="html"><![CDATA[<p>லண்டனின் முக்கிய வீதியில் நடந்த கத்திக்குத்து சம்பவத்தில் 4 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர்.</p><h2>லண்டனில் கத்திக்குத்து தாக்குதல்</h2><p>வியாழக்கிழமை மதியம் தென்கிழக்கு லண்டனின் பரபரப்பான வீதியில் நடந்த திடீர் கத்திக்குத்து தாக்குதலில் 4 பேர் வரை காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p><p>செப்டம்பர் 10ம் திகதி மதியம் 2 மணியளவில் ப்ராம்லி உயர் வீதியில் அரங்கேறிய கத்திக்குத்து சம்பவம் குறித்து அவசர சேவைகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.</p><p> இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், கத்திக்குத்து தாக்குதலில் படுகாயமடைந்த 4 பேரை மீட்டு உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.</p><p></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0ab0552a-5b1b-4985-b12b-72329fbb5a0e/26-6aa2e36f07ce5.webp' /></p><p> இந்த சம்பவத்தை தொடர்ந்து குறிப்பிட்ட இடத்திற்கு சிறப்பு பாராமெடிக் குழுவினர், ஆம்புலன்ஸ் குழுக்கள், வான்வழி ஆம்புலன்ஸ்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் என அனைவரும் வரவழைக்கப்பட்டனர்.</p><p>இந்த வன்முறை சம்பவத்தில் கிட்டத்தட்ட 7 சந்தேக நபர்களை பொலிஸார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-10T18:31:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[Heart Beat 3 வெப் தொடரின் லைவ் Shooting Spot BTS வீடியோ இதோ]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/heartbeat-3-live-shooting-bts-set-vlog-1789054871"></link>
            <id>https://cineulagam.com/article/heartbeat-3-live-shooting-bts-set-vlog-1789054871</id>
            <summary type="text">Heart Beat 3&amp;nbsp;ஹார்ட் பீட் இந்த பெயரை சொன்னதும் முன்பெல்லாம் இதயம் தான் நியாபகம் வரும். ஆனால் இப்போதெல்லாம் ரசிகர்களின் பேராவுடன் ஒளிபரப்பாகிய ஹார்...</summary>
            <content type="html"><![CDATA[<h2>Heart Beat 3&nbsp;</h2><p>ஹார்ட் பீட் இந்த பெயரை சொன்னதும் முன்பெல்லாம் இதயம் தான் நியாபகம் வரும். </p><p>ஆனால் இப்போதெல்லாம் ரசிகர்களின் பேராவுடன் ஒளிபரப்பாகிய ஹார்ட் பீட் வெப் தொடர் நியாபகம் வரும். முதல் சீசன், இரண்டாவது சீசன் என வெற்றிகரமாக ஓடிய இந்த வெப் தொடரின் 3வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.</p><p> தற்போது நமது சினிஉலகம் யூடியூப் சார்பாக ஹார்ட் பீட் 3 சீசனின் படப்பிடிப்பு தள வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. இதோ வீடியோ,</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/hs2LGkxpwCc" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-09-10T18:30:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[லண்டனில் ஈரானிய உளவுத் துறைக்கு உதவிய இருவர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/2-arrested-in-london-over-ties-to-iran-intel-1789065007"></link>
            <id>https://news.lankasri.com/article/2-arrested-in-london-over-ties-to-iran-intel-1789065007</id>
            <summary type="text">2 Arrested in London Over Ties to Iran Iran&#039;s intelligence: ஈரானிய உளவுத் துறைக்கு உதவியதாக பிரித்தானியாவில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஈரான...</summary>
            <content type="html"><![CDATA[<p>2 Arrested in London Over Ties to Iran Iran's intelligence: ஈரானிய உளவுத் துறைக்கு உதவியதாக பிரித்தானியாவில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><h2> ஈரானிய உளவுத் துறைக்கு உதவிய இருவர் கைது</h2><p>
ஈரானிய உளவுத்துறைக்கு உதவியதாக சந்தேகிக்கப்படும் குற்றச்சாட்டின் கீழ் லண்டனில் இரண்டு பேரை லண்டன் பெருநகர காவல்துறை அதிரடியாக கைது செய்துள்ளது.</p><p> தலைநகர் லண்டனில் நடத்தப்பட்டு வரும் தேசிய பாதுகாப்பு விசாரணையின் ஒரு பகுதியாக இந்த கைது நடவடிக்கையானது மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p><p> &nbsp;கைது செய்யப்பட்ட 42 வயது பெண்ணும், 60 வயது ஆணும் லண்டனில் வெவ்வேறு முகவரியில் வைத்து பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e6680259-4b81-425e-a7eb-621133b1f178/26-6aa2f730df52b.webp' /></p><p> இருவரும் வெளிநாட்டு உளவுத்துறைக்கு உதவுவதை தடை செய்யும் 2023ம் ஆண்டின் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் பிரிவு 3-யின் கீழ் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.</p><p></p><p> லண்டன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட இருவரும், அக்டோபர் மாதம் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படும் வரை தீவிரமான நிபந்தனைகளுடன் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.</p><p> இந்த நடவடிக்கையால் சமூகத்திற்கு எந்தவொரு உடனடி அச்சுறுத்தல்களும் இல்லை என்று லண்டன் பயங்கரவாத தடுப்பு பிரிவு தலைவர் ஹெலன் ஃபிளானகன் உறுதிப்படுத்தியுள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள். &nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-10T18:30:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[லண்டனில் தப்பியோடிய தமிழ் குடும்பஸ்தரை தேடும் பொலிஸார் ; பொதுமக்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/police-searching-tamil-family-man-who-fled-london-1789064582"></link>
            <id>https://jvpnews.com/article/police-searching-tamil-family-man-who-fled-london-1789064582</id>
            <summary type="text">லண்டனில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு ஆபத்தானவர் என பொலிஸாரால் அடையாளப்படுத்தப்பட்ட 46 வயதுடைய தமிழ் குடும்பஸ்தர் ஒருவர் மேற்கு லண்டனில் பராமரிப்பு ஊ...</summary>
            <content type="html"><![CDATA[<p>லண்டனில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு ஆபத்தானவர் என பொலிஸாரால் அடையாளப்படுத்தப்பட்ட 46 வயதுடைய தமிழ் குடும்பஸ்தர் ஒருவர் மேற்கு லண்டனில் பராமரிப்பு ஊழியர்களிடமிருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.</p><p></p><p>

பாலசங்கர் நாராயணன் என்பவரே இவ்வாறு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
மேற்கு லண்டனின் சவுத்போல் (Southall) பகுதியில் வியாழக்கிழமை பிற்பகல் சுமார் 2.00 மணியளவில், பராமரிப்பு ஊழியர்களிடமிருந்து அவர் தப்பிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e8316388-df3e-4551-974d-3a7086e358fc/26-6aa2f587b2c6d.webp' /></p><p>அவர் தற்போது கிழக்கு, மத்திய அல்லது மேற்கு லண்டன் பகுதிகளில் நடமாடக்கூடும் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
</p><p>
பொதுமக்கள் அவரை நேரடியாக அணுகவோ அல்லது தடுத்து நிறுத்த முயற்சிக்கவோ வேண்டாம் எனவும், அவரைக் காணும் பட்சத்தில் உடனடியாக 999 என்ற அவசர உதவி எண்ணுக்கு தகவல் வழங்குமாறும் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
</p><p>
பாலசங்கர் நாராயணன் இதற்கு முன்னரும் பலமுறை பராமரிப்பாளர்களிடமிருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
2021 – ஒருமுறை தப்பிச் சென்றுள்ளார்.</p><p>
2023 – இரண்டு முறை தப்பிச் சென்றுள்ளார்.
</p><p>2024 – மீண்டும் ஒருமுறை தப்பிச் சென்றுள்ளார்.
</p><p>
இந்நிலையில், அவர் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடியவர் என பொலிஸார் எச்சரித்துள்ளதுடன், பொதுமக்கள் குறிப்பாக பெண்கள் மற்றும் சிறுமிகள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-10T18:23:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[மசகு எண்ணெயை அவசரமாக கொள்வனவு செய்யும் சீனா!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/china-refineries-scramble-for-non-iran-crude-1789059908"></link>
            <id>https://ibctamil.com/article/china-refineries-scramble-for-non-iran-crude-1789059908</id>
            <summary type="text">சீனாவின் சுயாதீன மசகு எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள், மேற்கு ஆப்ரிக்கா, கனடா மற்றும் தென் அமெரிக்க நாடுகளிலிருந்து மசகு எண்ணெயை அவசரமாகக் கொள்வனவு செய்ய...</summary>
            <content type="html"><![CDATA[<p>சீனாவின் சுயாதீன மசகு எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள், மேற்கு ஆப்ரிக்கா, கனடா மற்றும் தென் அமெரிக்க நாடுகளிலிருந்து மசகு எண்ணெயை அவசரமாகக் கொள்வனவு செய்ய முற்பட்டு வருகின்றன.</p><p>ஈரானிய மற்றும் ரஷ்ய விநியோகங்களில் ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p>அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையிலான இராணுவ மோதல்கள் தீவிரமடைந்துள்ளது.</p><p>
</p><p></p><h2>ஹோர்முஸ் நீரிணை</h2><p>இதனால், ஹோர்முஸ் நீரிணை வழியிலான எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டு, பிரெண்ட் ரக மசகு எண்ணெயின் விலை சர்வதேச சந்தையில் பீப்பாய் ஒன்றுக்கு 100 அமெரிக்க டொலர்களைத் தாண்டியுள்ளது.
</p><p>
இந்நிலையிலேயே சீன நிறுவனங்கள் மாற்று வழிகளில் எண்ணெயைக் கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றன.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2e6e8625-5b94-4fd8-a70b-d0f4e2eb2654/26-6aa2f16a8b024.webp' /></p><p>இதன் காரணமாக சிங்கப்பூரில் நடைபெற்று வரும் சர்வதேச ஆற்றல் மாநாட்டிற்கு சீன நிறுவனங்களின் பிரதிநிதிகள் பெருமளவில் சென்றுள்ளதுடன் சந்தையில் மசகு எண்ணெய்க்கான கூடுதல் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது.
</p><p>
அதேவேளை, சீனாவின் உள்நாட்டு எரிபொருள் தேவையை பூர்த்தி செய்யவும், ஆண்டின் இறுதிக்குள் தமக்கு ஒதுக்கப்பட்ட இறக்குமதி ஒதுக்கீட்டைப் பயன்படுத்தி முடிக்கவும் இத்தகைய அவசர கொள்வனவுகள் தீவிரமடைந்துள்ளதாக வர்த்தக வட்டாரங்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.&nbsp; &nbsp; &nbsp; &nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-10T18:05:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[செங்கடலின் முக்கிய கடற்கரை நகரை கைப்பற்றிய ஹவுதிக்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/houthis-capture-key-red-sea-coastal-city-1789063221"></link>
            <id>https://canadamirror.com/article/houthis-capture-key-red-sea-coastal-city-1789063221</id>
            <summary type="text">தெற்கு செங்கடலில் அமைந்துள்ள மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த ஸூக்கார் தீவின் (Zuqar Island) கட்டுப்பாட்டை ஹூதி கிளர்ச்சியாளர்கள் முழுமையாகக் கைப்பற்றிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>தெற்கு செங்கடலில் அமைந்துள்ள மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த ஸூக்கார் தீவின் (Zuqar Island) கட்டுப்பாட்டை ஹூதி கிளர்ச்சியாளர்கள் முழுமையாகக் கைப்பற்றியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/210b914e-fbf6-46fa-9b8e-c4a37e343c11/26-6aa2f036e176b.webp' /></p><p>

படகுகளில் வந்து மேற்கொண்ட ஏவுகணைத் தாக்குதல்கள் மற்றும் தரைவழித் தாக்குதலைத் தொடர்ந்து குறித்த தீவு ஹூதி கிளர்ச்சியாளர்களின் பிடிக்குள் வந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
இந்தக் கைப்பற்றலின் ஊடாக, செங்கடலின் கடல்சார் பிராந்தியத்தில் ஹூதி கிளர்ச்சியாளர்கள் தமது இராணுவ மற்றும் மூலோபாய பலத்தை மேலும் வலுப்படுத்திக் கொள்ள முற்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-10T18:00:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[மத்திய கிழக்கில் நிலவும் அமைதியற்ற சூழலால் உலகளாவிய எண்ணெய் விலை உயர்வு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/oil-prices-rise-unstable-situation-in-middle-east-1789061803"></link>
            <id>https://canadamirror.com/article/oil-prices-rise-unstable-situation-in-middle-east-1789061803</id>
            <summary type="text">மத்திய கிழக்கில் நிலவும் அமைதியற்ற சூழல் காரணமாகவும் உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள ஆபத்து நிலை காரணமாகவும், சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய...</summary>
            <content type="html"><![CDATA[<p>மத்திய கிழக்கில் நிலவும் அமைதியற்ற சூழல் காரணமாகவும் உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள ஆபத்து நிலை காரணமாகவும், சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை 105 அமெரிக்க டொலர்களை தாண்டியுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6228de5c-1cf4-45eb-8595-b81e9a406a36/26-6aa2eaad25497.webp' /></p><p>புளூம்பர்க் (Bloomberg) செய்திச் சேவை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, பிரெண்ட் (Brent) ரக மசகு எண்ணெய் ஒரு பீப்பாயின் விலை 4.25% (4.30 டொலர்) அதிகரித்து 105.51 டொலராக உயர்ந்துள்ளது.
</p><p>
அத்துடன், அமெரிக்காவின் NYMEX WTI ரக மசகு எண்ணெய் விலையும் 4.24% (4.07 டொலர்) அதிகரித்து 100.12 டொலரை எட்டியுள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-10T17:36:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ashik</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கைத் தமிழரை செருப்பால் அடிக்க முற்பட்ட இராமேஸ்வரம் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் ஆட்சியர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-lankan-tamils-in-rameshwaram-been-disrespected-1789061152"></link>
            <id>https://tamilwin.com/article/sri-lankan-tamils-in-rameshwaram-been-disrespected-1789061152</id>
            <summary type="text">இராமேஸ்வரத்தில் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் உள் சார் ஆட்சியர் கலை மன்னனிடம் விடுப்பு கேட்டு வந்த இலங்கைத் தமிழரை தகாத
வார்த்தையில் பேசி செருப்பா...</summary>
            <content type="html"><![CDATA[<p>இராமேஸ்வரத்தில் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் உள் சார் ஆட்சியர் கலை மன்னனிடம் விடுப்பு கேட்டு வந்த இலங்கைத் தமிழரை தகாத
வார்த்தையில் பேசி செருப்பால் அடிக்க முற்பட்ட சம்பவம் இன்று (10) பரபரப்பை
ஏற்படுத்தியுள்ளது.
</p><p>
இலங்கையில் ஏற்பட்ட உள்நாட்டு போர் மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக
தனுஷ்கோடி கடல் வழியாக தமிழகத்திற்குள் அகதிகளாக வந்த இலங்கை தமிழர்களை தமிழக
அரசு ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அடுத்த மண்டபம் இலங்கை தமிழர் மறுவாழ்வு
முகாமில் தங்க வைத்துள்ளனர்.
</p><p>
மண்டபம் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் 1500க்கும் மேற்பட்ட இலங்கை
தமிழர்கள் வசித்து வருகின்றனர்.</p><h2>&nbsp;மருத்துவ சிகிச்சை</h2><p>
</p><p>
இலங்கை தமிழர்கள் வெளியூர் மற்றும் வெளி மாவட்டங்களில் உள்ள உறவினர்களை
சந்திக்க செல்லவும், மருத்துவ சிகிச்சைக்கு செல்லும் போது மண்டபம் இலங்கை
தமிழர் மறுவாழ்வு முகாம் சார் ஆட்சியரிடம் விடுப்பு பெற வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c328e82b-66cb-4265-9f68-2a8d6834ba95/26-6aa2e97d7ac08.webp' /></p><p>

அதன் அடிப்படையில் இலங்கை தமிழரான ஜெகன் என்பவர் சென்னையில் மருத்துவ
சிகிச்சைக்கு செல்வதற்காக மண்டபம் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் சார்
ஆட்சியரிடம் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு விண்ணப்பித்துள்ளார்.</p><p>
ஆனால் விடுப்பு அளிப்பதற்கு சார் ஆட்சியர் பணம் லஞ்சமாக கேட்டதாக கூறப்படுகின்றது.
</p><p>
பணம் அளிக்காததால் இலங்கைத் தமிழர் ஜெகனுக்கு விடுப்பு அளிக்காமல் இருந்து
வந்த நிலையில் இன்று மீண்டும் விடுப்பு விண்ணப்பம் குறித்து கேட்க சென்ற
ஜெகனை சார் ஆட்சியர் கலை மன்னன் தகாத வார்த்தையால் பேசி செருப்பால் அடிக்க
முயன்ற காணொளி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.&nbsp;</p><p>இந்நிலையில், இது தொடர்பில் பலரும் கடும் கண்டனங்களை வெளியிட்டு வருகின்றன.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-10T17:34:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[அனுராதபுரம் வீதியில் நோயாளர் காவு வண்டி கோர விபத்து! சாரதி பரிதாப உயிரிழப்பு- 6 பேர் படுகாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ambulance-accident-driver-tragically-killed-1789061136"></link>
            <id>https://tamilwin.com/article/ambulance-accident-driver-tragically-killed-1789061136</id>
            <summary type="text">குருநாகலிலிருந்து மீகலாவ மருத்துவமனைக்கு மருந்துகள் மற்றும் எழுதுபொருள்களை
ஏற்றிச் சென்ற&amp;nbsp; நோயாளர் காவு வண்டி ஒன்று, பாதெனிய - அனுராதபுரம் வீதியி...</summary>
            <content type="html"><![CDATA[<p>குருநாகலிலிருந்து மீகலாவ மருத்துவமனைக்கு மருந்துகள் மற்றும் எழுதுபொருள்களை
ஏற்றிச் சென்ற&nbsp; நோயாளர் காவு வண்டி ஒன்று, பாதெனிய - அனுராதபுரம் வீதியில் உள்ள
கத்தபஹுவ பகுதியில் லொறி ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.</p><p>குறித்த விபத்தானது இன்று(10.9.2026) பிற்பகல் 3:30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.</p><p>விபத்தில் நோயாளர் காவு வண்டி&nbsp; சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.</p><h2>&nbsp;மேலதிக விசாரணை</h2><p>
</p><p>நோயாளர் காவு வண்டியில் பயணித்த நால்வரும், லொறியில் இருந்த இருவரும்
படுகாயமடைந்த நிலையில் உடனடியாக மீட்கப்பட்டு அம்பன்பொல மற்றும் கல்கமுவ
மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b433d62e-80d2-4608-aa8f-2369a48d62e4/26-6aa2e8124592b.webp' /></p><p>
</p><p>
இந்தச் சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து
வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-10T17:25:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[ChatGPT-ல் 80s Retro புகைப்படங்கள் ; உங்கள் தனியுரிமைக்கு ஆபத்தா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/80s-retro-photos-on-chatgpt-risk-to-your-privacy-1789060326"></link>
            <id>https://jvpnews.com/article/80s-retro-photos-on-chatgpt-risk-to-your-privacy-1789060326</id>
            <summary type="text">AI தொழில்நுட்பத்தின் புதிய டிரெண்டாக உருவெடுத்துள்ள 80களின் Retro பாணி புகைப்படங்களை உருவாக்க, பயனர்கள் தங்களது புகைப்படங்களை ChatGPT உள்ளிட்ட AI சேவை...</summary>
            <content type="html"><![CDATA[<p>AI தொழில்நுட்பத்தின் புதிய டிரெண்டாக உருவெடுத்துள்ள 80களின் Retro பாணி புகைப்படங்களை உருவாக்க, பயனர்கள் தங்களது புகைப்படங்களை ChatGPT உள்ளிட்ட AI சேவைகளில் பதிவேற்றி வருகின்றனர்.</p><p> </p><p></p><p>இந்த டிரெண்ட் சமூக வலைத்தளங்களில் அதிக கவனம் பெற்றுள்ள நிலையில், புகைப்படங்களை AI சேவைகளில் பதிவேற்றும்போது தனியுரிமை தொடர்பான சில முக்கிய அம்சங்களை பயனர்கள் கவனிக்க வேண்டும் என எச்சரிக்கப்படுகிறது.
</p><p>
ஸ்மார்ட்போனில் எடுக்கப்படும் புகைப்படங்கள் வெறும் காட்சிப் பதிவுகள் மட்டுமல்ல.</p><p> சில புகைப்படக் கோப்புகளில் படம் எடுக்கப்பட்ட திகதி, நேரம், பயன்படுத்தப்பட்ட சாதனத்தின் தகவல் மற்றும் சில சந்தர்ப்பங்களில் இருப்பிடத் தகவல் உள்ளிட்ட metadata இடம்பெற்றிருக்கலாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/48acc394-3364-4911-a41f-6c567ecdb7eb/26-6aa2e4e86bee9.webp' /></p><p>

இதனால், ஒரு புகைப்படத்தை AI சேவையில் பதிவேற்றும்போது, அந்தப் புகைப்படம் தொடர்பான தரவுகள் எவ்வாறு கையாளப்படுகின்றன என்பதைப் புரிந்துகொள்வது முக்கியமானதாகிறது. </p><p>ghatGPT-ல் பதிவேற்றப்படும் புகைப்படங்கள், அந்த உரையாடல் மற்றும் கணக்கு அமைப்புகளுக்கு ஏற்ப சேவை அமைப்புகளில் கையாளப்படலாம். </p><p>தரவு எவ்வளவு காலம் வைத்திருக்கப்படுகிறது, அது AI மாடல் மேம்பாட்டிற்கு பயன்படுத்தப்படுகிறதா என்பவை பயன்படுத்தப்படும் சேவை மற்றும் பயனர் தேர்ந்தெடுத்த தனியுரிமை அமைப்புகளைப் பொறுத்து மாறுபடலாம்.
</p><p>
மேலும், பயனர் AI சேவையைப் பயன்படுத்தும்போது IP முகவரி, சாதனத் தகவல் மற்றும் சேவையைப் பயன்படுத்தும் விதம் தொடர்பான சில தொழில்நுட்பத் தகவல்கள் சேகரிக்கப்படலாம்.&nbsp;</p><h3>புகைப்படங்களை Upload செய்யும்போது என்ன கவனிக்க வேண்டும்?
</h3><p>
AI மூலம் புகைப்படங்களை மாற்றுவது அல்லது Retro பாணியில் உருவாக்குவது பொதுவாக ஒரு பொழுதுபோக்கு அனுபவமாக இருந்தாலும், தனிப்பட்ட புகைப்படங்களைப் பதிவேற்றும்போது சில முன்னெச்சரிக்கைகள் அவசியம்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7aeaf6f6-5698-408f-92b9-9d915425d18f/26-6aa2e4e9221a3.webp' /></p><p>மற்றவர்களின் புகைப்படங்களை அவர்களின் அனுமதியின்றி பதிவேற்றுவதைத் தவிர்க்கவும்.
</p><p>குழந்தைகளின் புகைப்படங்களை தேவையின்றி AI சேவைகளில் பதிவேற்ற வேண்டாம்.</p><p>
முகவரி, தொலைபேசி எண், அடையாள ஆவணங்கள் போன்ற முக்கியத் தகவல்கள் தெரியும் புகைப்படங்களைப் பதிவேற்ற வேண்டாம்.
</p><p>புகைப்படங்களில் இருக்கும் metadata குறித்து கவனமாக இருக்கவும்.
</p><p>AI சேவையின் Privacy மற்றும் Data Controls அமைப்புகளைப் பார்த்து, தேவையான கட்டுப்பாடுகளைச் செயல்படுத்தவும்.
</p><p>தேவையில்லாத புகைப்படங்கள் மற்றும் உரையாடல்களை சேமித்து வைப்பதைத் தவிர்க்கவும்.&nbsp;</p><p>80s Retro, Anime, Cinematic உள்ளிட்ட பல்வேறு AI புகைப்பட டிரெண்ட்கள் தொடர்ந்து பிரபலமாகி வருகின்றன. </p><p>இவற்றை பயன்படுத்துவது குறித்து அச்சப்பட வேண்டிய அவசியமில்லை என்றாலும், “AI சேவைக்கு நாம் என்ன தரவை வழங்குகிறோம்?” என்பதைப் புரிந்துகொள்வது முக்கியம்.</p><p>

குறிப்பாக, தனிப்பட்ட அல்லது முக்கியமான தகவல்கள் இடம்பெற்றுள்ள புகைப்படங்களை பதிவேற்றுவதற்கு முன், அந்த AI சேவையின் தனியுரிமைக் கொள்கை மற்றும் தரவு கட்டுப்பாட்டு அமைப்புகளை சரிபார்ப்பது பாதுகாப்பான நடைமுறையாகும்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-10T17:12:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜோர்டானில் ஈரான் ஏவுகணை தாக்குதலில் அமெரிக்க விமானங்கள் சேதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/iran-missiles-damage-us-jets-in-jordan-1789047864"></link>
            <id>https://news.lankasri.com/article/iran-missiles-damage-us-jets-in-jordan-1789047864</id>
            <summary type="text">Iran missiles damage US jets in Jordan: ஜோர்டானில் ஈரானின் ஏவுகணை தாக்குதலில் அமெரிக்க விமானங்கள் சேதமடைந்துள்ளன.

அமெரிக்க போர் விமானங்கள் சேதம்ஜோர...</summary>
            <content type="html"><![CDATA[<p>Iran missiles damage US jets in Jordan: ஜோர்டானில் ஈரானின் ஏவுகணை தாக்குதலில் அமெரிக்க விமானங்கள் சேதமடைந்துள்ளன.</p><h2>

அமெரிக்க போர் விமானங்கள் சேதம்</h2><p>ஜோர்டானில் உள்ள Muwaffaq Salti விமான தளம் (Al-Azraq) மீது ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலில் பல அமெரிக்க போர் விமானங்கள் சேதமடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
</p><p>
அமெரிக்காவின் A-10 Thunderbolt (Warthog) விமானம் கடுமையாக சேதமடைந்தது, அதன் ஒரு சிறகு முற்றிலும் அழிந்துவிட்டது. மேலும், சுமார் எட்டு F-15 போர் விமானங்கள் சிறிய அளவில் சேதங்களை சந்தித்தன. ஆனால் அவை பின்னர் சேவைக்கு திரும்பியதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/287e3fff-93d3-4de8-a047-6496616859ca/26-6aa2b50007a97.webp' /></p><p>இந்த தாக்குதலின் போது, அமெரிக்க படைகள் 30-க்கும் மேற்பட்ட Patriot interceptor missiles-ஐ பயன்படுத்தி எதிர்ப்பு நடவடிக்கை மேற்கொண்டன.
</p><p>
ஈரான், தண்டனை நடவடிக்கை (punitive operation) என அழைக்கப்படும் இந்த தாக்குதலை, அமெரிக்கா தனது ஐந்து ஈரான் எண்ணெய் கப்பல்களை அழித்ததற்கான பதிலடி எனக் கூறியுள்ளது.
</p><p></p><p>ஜோர்டான் அரசு, “எங்கள் வான்வழி பாதுகாப்பு அமைப்புகள் 20 ஏவுகணைகளில் 18-ஐ தடுத்து நிறுத்தின. மீதமுள்ள 2 ஏவுகணைகள் மக்கள் வசிப்பிடமற்ற பகுதிகளில் விழுந்தன. உயிரிழப்புகள் எதுவும் இல்லை” என தெரிவித்ததாவது.
</p><p>
இந்த சம்பவம், அமெரிக்கா-ஈரான் இடையேயான நீண்டகால பதற்றத்தை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. Strait of Hormuz மற்றும் Bab-el-Mandeb போன்ற முக்கிய கடல் வழித்தடங்களில் இரு தரப்பும் தங்கள் தாக்குதல்களை அதிகரித்து வருகின்றன.
</p><p>
சர்வதேச அரசியல் வல்லுநர்கள் எச்சரிப்பதாவது, “இந்த தாக்குதல்கள், மத்திய கிழக்கு பகுதியில் நிலவும் பதற்றத்தை உலகளாவிய எரிபொருள் விநியோகத்திற்கும், பாதுகாப்பிற்கும் பெரும் ஆபத்தாக மாற்றுகின்றன” எனக் கூறுகின்றனர்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p>&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-10T17:07:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை சாரணர் இயக்கத்துக்கும் ஜனாதிபதிக்கு இடையில் சந்திப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/meeting-between-sri-lanka-scout-association-anura-1789058891"></link>
            <id>https://tamilwin.com/article/meeting-between-sri-lanka-scout-association-anura-1789058891</id>
            <summary type="text">இலங்கை சாரணர் இயக்கத்தின் பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதி அநுரகுமார
திஸாநாயக்கவுக்கும் இடையிலான சந்திப்பொன்று நடைபெற்றது.
&amp;nbsp;குறித்த கலந்துயைாடலானது ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை சாரணர் இயக்கத்தின் பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதி அநுரகுமார
திஸாநாயக்கவுக்கும் இடையிலான சந்திப்பொன்று நடைபெற்றது.
</p><p>&nbsp;குறித்த கலந்துயைாடலானது இன்று(10.9.2026) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.</p><p>
2027ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இலங்கையில் நடைபெறவுள்ள 11ஆவது தேசிய சாரணர்
ஜம்போரி தொடர்பிலும், அதன் அமைப்பு முன்னெடுக்கும் பணிகளின் தற்போதைய நிலைமை
மற்றும் முன்னேற்றம் குறித்தும் ஜனாதிபதிக்குத் தெளிவுபடுத்தப்பட்டது.</p><h2>கருத்துப் பரிமாற்றங்கள்</h2><p>

இதன்போது, தேசிய சாரணர் ஜம்போரியின் உத்தியோகபூர்வ சின்னம் ஜனாதிபதியிடம்
கையளிக்கப்பட்டு உத்தியோகபூர்வமாக வெளியிட்டு வைக்கப்பட்டது.
</p><p>
இலங்கை சாரணர் இயக்கத்தால் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள்
மற்றும் எதிர்காலத் திட்டங்கள் தொடர்பாகவும் கருத்துப் பரிமாற்றங்கள்
மேற்கொள்ளப்பட்டன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/04076adc-b7bb-4387-a392-e01f612cd812/26-6aa2e38875e3f.webp' /></p><p>
</p><p>
சாரணர் இயக்கத்தை அதிகளவிலான பாடசாலைகளுக்கு விரிவுபடுத்துவதன் முக்கியத்துவம்
குறித்தும், அரசு முன்னெடுத்து வரும் போதைப்பொருள் ஒழிப்புத் திட்டங்களுக்கு
சாரணர் இயக்கம் வழங்கக்கூடிய பங்களிப்பின் முக்கியத்துவம் தொடர்பிலும்
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வலியுறுத்தினார்.
</p><p>
ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரோஷன் கமகே, பிரதம சாரணர் ஆணையாளர்
சட்டத்தரணி மனோஜ் நாணயக்கார, இலங்கை சாரணர் இயக்கத்தின் தலைவர் ரன்சிரி
பெரேரா, இலங்கை சாரணர் இயக்கத்தின் பிரதிப் பிரதம ஆணையாளர் (பதில்) கபில
பெரேரா, செயற்குழுத் தலைவர் கமல்நாத் ஜினதாச, ஜம்போரி இணை அமைப்பாளர் ஆணையாளர்
பொறியியலாளர் அமில் அபேசுந்தர உள்ளிட்ட இலங்கை சாரணர் இயக்கத்தின் சிரேஷ்ட
பிரதிநிதிகள் இந்தச் சந்திப்பில் பங்கேற்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-10T17:07:08+00:00</updated>
        </entry>
    </feed>
