<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-08-25T10:40:17+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[குற்றவாளிகளோடு வெளிநாடுகளில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்த அரசியல்வாதிகள்! ஆதாரங்ஙகளை அழிக்க துப்பாக்கிச் சூடுகள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/shootings-to-destroy-evidence-1787649926"></link>
            <id>https://tamilwin.com/article/shootings-to-destroy-evidence-1787649926</id>
            <summary type="text">

கடந்த சில நாட்களாக நாட்டில் ஆங்காங்கே நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் அனைத்தும் கடந்த கால குற்றங்களுடன் தொடர்புடைய ஆதாரங்களை அழிப்பதற்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>

கடந்த சில நாட்களாக நாட்டில் ஆங்காங்கே நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் அனைத்தும் கடந்த கால குற்றங்களுடன் தொடர்புடைய ஆதாரங்களை அழிப்பதற்காக நடத்தப்பட்ட சம்பவங்களாக இருக்கலாம் என்று பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார். </p><p>

களுத்துறை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
</p><p>

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
</p><p>
குற்றங்களைத் தடுப்பதற்கும், அவற்றுடன் தொடர்புடைய சந்தேகநபர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தேசிய மற்றும் சர்வதேச ரீதியிலான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.</p><h2>சட்டம் ஒழுங்கு சீர்குலைவு</h2><p> 

இந்தக் கடினமான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான வாய்ப்பினை பொதுமக்கள் தங்களின் ஆணையின் ஊடாக எமக்கு தந்துள்ளனர். </p><p>


சிவப்பு எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்ட 58 பாரிய குற்றவாளிகளை கடந்த காலத்தில் வெளிநாடுகளில் இருந்து அழைத்து வந்துள்ளோம். அவர்கள் அந்த நாடுகளில் பெரிய மாளிகைகளில் ஆடம்பரமாக வாழ்ந்து வந்தனர். சொகுசு வாகனங்கள் அவர்களிடம் உண்டு. </p><p> கடந்த காலங்களில் இலங்கையில் இருந்து அங்கு சென்ற பல அரசியல்வாதிகள் இந்தக் குற்றவாளிகளுடன் சேர்ந்து சொகுசு வாழ்க்கையை அனுபவித்து வந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/311b4e02-b9c0-4a31-ba70-c2e0fd902996/26-6a8d6fbd64b81.webp' /></p><p>

எமது நாட்டில் சட்டம் மிகவும் சீர்குலைந்த நிலையில் இருந்தது. ஒரு அரசியல் தரப்பை மாத்திரம் அல்ல இது போன்ற பல அரசியல் குழுக்களை நாங்கள் அகற்றியுள்ளோம். அவர்களுள் பலர் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களுடன் தொடர்பில் இருந்தார்கள்.</p><p> 

அழிவடைந்த நிலையில் இருந்த ஒரு நாட்டையே நாம் பொறுப்பேற்றோம். தற்போது நிதி ரீதியக ஓரளவு நாட்டை முன்னோக்கி கொண்டு செல்கின்றோம்.
</p><p>
அனைத்துத் துறைகளிலும் வருவாயைச் சேகரித்து நாட்டின் பொருளாதார நிலையை மேம்படுத்தி வருகின்றோம் என குறிப்பிட்டுள்ளார்.<br></p>]]></content>
            <updated>2026-08-25T10:34:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[சஞ்சீவவை படுகொலை செய்த நீதிமன்றத்திற்கே விசாரணைக்கு அழைத்துவரப்பட்ட கெஹல்பத்தர !]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/cid-produced-kehalpathara-padme-in-court-1787651413"></link>
            <id>https://ibctamil.com/article/cid-produced-kehalpathara-padme-in-court-1787651413</id>
            <summary type="text">ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்கும்பல் உறுப்பினர் கெஹல்பத்தார பத்மேவை செப்டம்பர் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.கொ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்கும்பல் உறுப்பினர் கெஹல்பத்தார பத்மேவை செப்டம்பர் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.</p><p>கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் இன்று வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.</p><p>தடுப்புக் காவல் உத்தரவுகளின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த 'கெஹல்பத்தாரா பத்மே'வை, குற்றப் புலனாய்வுத் துறை (சிஐடி) இன்று (25) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியது.</p><p></p><h2>கனேமுல்ல சஞ்சீவ படுகொலை</h2><p>இதன்போது இடம்பெற்ற விசாரணையைத் தொடர்ந்து, கொழும்பு பிரதான நீதிபதி அசங்க எஸ். போதரகமவால் மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d7bb27ed-64ac-45b8-b1ed-35dba4c35440/26-6a8d6a60524b8.webp' /></p><p>பாதாள உலகக் குழுத் தலைவரான கனேமுல்ல சஞ்சீவ படுகொலையின் பிரதான சூத்திரதாரியாக கெஹெல்பத்தர பத்மே (பத்மசிறி பெரேரா) செயல்பட்டுள்ளார் என்பது காவல்துறை விசாரணைகளில் உறுதி செய்யப்பட்டது.</p><p>இந்நிலையில் இடம்பெற்ற விசாரணைகளில் 'கெஹெல்பத்தர பத்மே' சர்வதேச காவல்துறை (Interpol) மற்றும் இந்தோனேசிய காவல்துறையின் கூட்டு நடவடிக்கையின் மூலம் இந்தோனேசியாவில் வைத்து கைது செய்யப்பட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c5a759f5-4a4a-45ed-a248-a8613ff22ccf/26-6a8d6a62182f6.webp' /></p><p>கைது செய்யப்பட்ட அவர் மற்றும் அவரது சகாக்கள் கடந்த 2025 ஆகஸ்ட் மாத இறுதியில் பலத்த பாதுகாப்புடன் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டனர்.</p><p></p><h2>CID அதிகாரிகள் விசாரணை</h2><p>இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட பத்மே, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டு தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6259c9b9-598c-402c-81fc-b86e8071ce7b/26-6a8d6a615e97a.webp' /></p><p>இவர் மீது சட்டவிரோத போதைப்பொருள் கடத்தல், பாரிய பணமோசடி, கொலைகள் மற்றும் ஆயுதக் கடத்தல் போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.</p><p>இதன்படி இந்த வழக்கில் முக்கிய அரசியல் பிரமுகர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்களுக்கு இருக்கும் தொடர்புகள் குறித்து CID அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.</p><p>&nbsp;பத்மே வழங்கிய தகவல்களின் அடிப்படையில் டி-56 ரக துப்பாக்கிகள், மைக்ரோ பிஸ்டல்கள் மற்றும் நூற்றுக்கணக்கான தோட்டாக்களை காவல்துறையினர் கைப்பற்றினர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/faa982bc-c9de-4da6-8e4d-ff5e20158dcd/26-6a8d6a62c23b6.webp' /></p><p>நுவரெலியா பகுதியில் பத்மேவின் நிதியுதவியுடன் வெளிநாட்டவர்களால் நடத்தப்பட்ட 'ஐஸ்' போதைப்பொருள் தயாரிப்பு நிலையம் ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டது.</p><p>மேலும், சட்டவிரோத சொத்துக்கள் ஒழிப்பு பிரிவினரால் இவருக்குச் சொந்தமான 50 மில்லியன் ரூபா பெறுமதியான காணிகள் மற்றும் கட்டிடங்கள் முடக்கப்பட்டன.</p><p>இதன்படி தனது மகனின் உயிருக்கு ஆபத்து இருப்பதாகக் கூறி பத்மேவின் தாயார் தாக்கல் செய்த மனுவை அடுத்து, அவரை CID custody-லேயே வைத்திருக்க மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது.</p><p>இந்நிலையில் தடுத்து வைத்து விசாரிப்பதற்கான கால அவகாசம் இன்று நிறைவடைந்ததை அடுத்து, கொழும்பு நீதவான் நீதிமன்ற உத்தரவின்படி பத்மே செப்டம்பர் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP CHANNE</a>L இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-25T10:29:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[தேசிய மாவீரன் பண்டாரவன்னியனின் 223ஆவது ஞாபகார்த்த விழா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/bandaravanniyyan-223rd-commemoration-ceremony-1787653728"></link>
            <id>https://ibctamil.com/article/bandaravanniyyan-223rd-commemoration-ceremony-1787653728</id>
            <summary type="text">வன்னியை ஆண்ட கடைசிச் சிற்றரசனும், ஆங்கிலேய ஆதிக்கத்திற்கு எதிராக வீரப்போர்
புரிந்த தேசிய மாவீரனுமான பண்டாரவன்னியனின் 223ஆவது ஞாபகார்த்த விழா
வவுனியா...</summary>
            <content type="html"><![CDATA[<p>வன்னியை ஆண்ட கடைசிச் சிற்றரசனும், ஆங்கிலேய ஆதிக்கத்திற்கு எதிராக வீரப்போர்
புரிந்த தேசிய மாவீரனுமான பண்டாரவன்னியனின் 223ஆவது ஞாபகார்த்த விழா
வவுனியாவில் உணர்வுபூர்வமாக நடைபெற்றது.
</p><p>
குறித்த நிகழ்வானது வவுனியா, மாவட்டசெயலகத்தின் முன் உள்ள பண்டாரவன்னியன்
சதுக்கத்தில் சிறப்பாக இடம்பெற்றிருந்தது.
</p><p>
இதன்போது பண்டாரவன்னியனின் உருவச்சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டதுடன்
மாவீரன் பண்டாரவன்னியன் தொடர்பான நினைவு பேருரையும் ஆற்றப்பட்டிருந்தது.</p><p></p><h2>இறுதித் தமிழ் குறுநில மன்னன்</h2><p>


இந்நிகழ்வில் மாநகரசபை முதல்வர் சு.காண்டீபன் தலைமையில் இடம்பெற்ற
இந்நிகழ்வில் அரசியல் தலைவர்கள்,&nbsp;அரச உயர் அதிகாரிகள்&nbsp;பொது அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துக்கொண்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/776d35c3-90df-483a-8026-a470a47d0448/26-6a8d6e6233cd1.webp' /></p><p>இலங்கையின் வன்னிப் பெருநிலப்பரப்பை ஆங்கிலேயர் கைப்பற்றுவதற்கு முன், அதனை சுதந்திரமாக ஆட்சி செய்த இறுதித் தமிழ் குறுநில மன்னன் பண்டாரவன்னியனின் ஆவார்.</p><p>வன்னி மண்ணில் காலடி எடுத்து வைத்த ஒல்லாந்தர் மற்றும் பிரித்தானியரின் ஆதிக்கத்தையும், அவர்களின் வரி வசூலிப்பையும் இவர் கடுமையாக எதிர்த்துப் போரிட்ட வரலாற்றை&nbsp;பண்டாரவன்னியனின் கொண்டுள்ளார்.</p><p>1803 ஆகஸ்ட் 25 அன்று முல்லைத்தீவில் இருந்த ஆங்கிலேயக் கோட்டையை&nbsp; தாக்கி, அங்கிருந்த பீரங்கிகளைக் கைப்பற்றிப் பெரும் வெற்றி இந்த மன்னனுக்கு சொந்தமானது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/def6159c-b115-4cb0-a7e6-0164bf74a741/26-6a8d6e62dde92.webp' /></p><p>மேலும், பிரித்தானியத் தளபதி வொன் டிறிபேர்க் தலைமையிலான பெரும் படையுடன் கச்சிலமடு என்ற இடத்தில் நடந்த இறுதிப் போரில் இவர் தீரத்துடன் போரிட்டார்.</p><p>ஆங்கிலேயர்களின் நவீன ஆயுதங்களுக்கு எதிராகத் தன் தாயக விடுதலைக்காகப் போராடி, 1803 அக்டோபர் 31 அன்று தனது உயிரைத் தியாகம் செய்தார்.</p><p>வன்னி மக்களின் சுதந்திரத்திற்காகத் தன் வாழ்வை அர்ப்பணித்த இவரை, இலங்கை அரசு 1982 ஆம் ஆண்டு 'தேசிய வீரன்' என அதிகாரப்பூர்வமாக அறிவித்துக் கௌரவித்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b8c4e6b2-3845-40bb-8c72-5cc24fc739e3/26-6a8d6e63967e7.webp' /></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-25T10:29:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[முச்சக்கரவண்டி செலுத்துவதற்கான வயது வரம்பு! அரசாங்கத்தின் முடிவு தொடர்பில் அமைச்சரின் அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/minimum-age-limit-for-three-wheeler-driver-1787648809"></link>
            <id>https://tamilwin.com/article/minimum-age-limit-for-three-wheeler-driver-1787648809</id>
            <summary type="text">முச்சக்கரவண்டி செலுத்துவதற்கான குறைந்தபட்ச வயது வரம்பை 40 ஆண்டுகளாக உயர்த்துவதற்கான முன்மொழிவை அரசாங்கம் இன்னும் பரிசீலிக்கவில்லை என அமைச்சர் நளிந்த ஜ...</summary>
            <content type="html"><![CDATA[<p>முச்சக்கரவண்டி செலுத்துவதற்கான குறைந்தபட்ச வயது வரம்பை 40 ஆண்டுகளாக உயர்த்துவதற்கான முன்மொழிவை அரசாங்கம் இன்னும் பரிசீலிக்கவில்லை என அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
</p><p>
இன்று (25.08.2026) நடைபெற்ற ஊடக சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.&nbsp;</p><p>சமீபத்தில், முச்சக்கரவண்டிகள் ஓட்டுவதற்கான குறைந்தபட்ச வயது வரம்பு 40 ஆண்டுகளாக உயர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக தொழிற்கல்வி பிரதி அமைச்சர் நலின் ஹேவகே தெரிவித்திருந்தார்.</p><p>இந்த நிலையில் இன்று அமைச்சர் நளிந்த கூறுகையில், பாடசாலை படிப்பை பாதியில் நிறுத்தியவர்கள் அல்லது கபொத உயர்தரம் முடித்தவர்களுக்கு தொழிற்பயிற்சி அளிப்பது தொடர்பாக பல்வேறு நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களிடமிருந்து பல முன்மொழிவுகள் வந்துள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/865da93e-e618-4083-b43d-60d4dd440045/26-6a8d6e2ee4170.webp' /></p><h2>தொழிற்பயிற்சி தொடர்பான ஆலோசனைகள்</h2><p>ஆனால் இது தொடர்பான இறுதி முடிவு அரசாங்கத்தால் எடுக்கப்படும். பாடசாலை படிப்பை பாதியில் நிறுத்தியவர்கள், கபொத உயர்தர தேர்வுக்குப் பிறகு படிப்பை பாதியில் நிறுத்தியவர்கள் மற்றும் சில குறிப்பிட்ட குழுவினருக்கு தொழிற்கல்வி மற்றும் தொழிற்பயிற்சி வழங்குவது தொடர்பாக பல்வேறு தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களிடமிருந்து ஆலோசனைகள் பெறப்பட்டுள்ளன. </p><p>அந்த முன்மொழிவுகளில் சில செயல்படுத்தப்பட்டு வருகின்றன, ஆனால் அரசாங்கம் குறிப்பிட்ட அந்த முன்மொழிவை இன்னும் பரிசீலிக்கவில்லை. </p><p>பல்வேறு முன்மொழிவுகள் விவாதிக்கப்பட்டு வருகின்றன. அவர்கள் இந்தத் திட்டங்களில் முன்மொழிவுகளைச் சமர்ப்பிக்கலாம், ஆனால் இறுதியில் என்ன செய்வதென்று அரசாங்கமே முடிவு செய்யும் என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-25T10:28:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[தர்மனுடன் செல்ஃபி எடுத்த நடிகை ஸ்ரேயா.. படத்தில் நடிக்கிறாரா? வெளிவந்த புகைப்படம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/shriya-selfie-with-rajinikanth-in-dharman-shooting-1787653354"></link>
            <id>https://cineulagam.com/article/shriya-selfie-with-rajinikanth-in-dharman-shooting-1787653354</id>
            <summary type="text">ரஜினிகாந்துடன் எடுத்துக்கொண்ட செல்ஃபி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்துள்ளார் நடிகை ஸ்ரேயா.

தர்மன்

இயக்குநர் அஸ்வத் மாரிமுத்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ரஜினிகாந்துடன் எடுத்துக்கொண்ட செல்ஃபி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்துள்ளார் நடிகை ஸ்ரேயா.</p><p></p><p>
</p><h2>
தர்மன்
</h2><p>
இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ராஜ்கமல் நிறுவனம் தயாரிப்பில் <a href="https://www.youtube.com/watch?v=1GNo2KWDaTQ" target="_blank">சூப்பர்ஸ்டார் </a>ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தர்மன். பல ஆண்டுகளுக்கு பின் கமல் ஹாசன் - ரஜினிகாந்த் கூட்டணியில் இப்படம் உருவாகி வருவதால் இப்படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a8b5729c-69a6-4b4c-9145-65a61815821f/26-6a8d6ced9f4e1.webp' /></p><p>

இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து நடிகைகள் சிம்ரன் மற்றும் ராஷி கண்ணா நடிக்கிறார்கள். மேலும் தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனி இப்படத்தில் வில்லனாக நடிக்கிறார் என கூறப்படுகிறது. ஆனால் அதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளிவரவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7696951f-4f68-459d-9a90-a43d9e8b6606/26-6a8d6cee5dd45.webp' /></p><h2>

ஸ்ரேயா வெளியிட்ட புகைப்படம்
</h2><p>
நடிகை ஸ்ரேயா இந்திய அளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர். இவர் ரஜினிகாந்துடன் இணைந்து சிவாஜி திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பதை நாம் அறிவோம். இந்நிலையில், தர்மன் திரைப்படத்தின் படப்பிடிப்பில் ரஜினியுடன் எடுத்துக்கொண்ட செல்ஃபி புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3514bbdb-5989-4fa6-84ed-04dac89bd011/26-6a8d6cef17a35.webp' /></p><p>

இந்த புகைப்படம் இணையத்தில் வைரலான நிலையில், ஸ்ரேயவும் இப்படத்தில் நடிக்கிறாரா அல்லது இது வெறும் சந்திப்பு தானா என்கிற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.</p><p><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/p/Dcc-n5GiyyU/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/p/Dcc-n5GiyyU/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/p/Dcc-n5GiyyU/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by Shriya Saran (@shriya_saran1109)</a></p></div></blockquote> <script async src="//www.instagram.com/embed.js"></script></p>]]></content>
            <updated>2026-08-25T10:22:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் புடைசூழ தேரேறி வந்த தெல்லிப்பழை துர்க்கை அம்பாள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/tellippalai-durga-devi-devasthanam-car-festival-1787651414"></link>
            <id>https://ibctamil.com/article/tellippalai-durga-devi-devasthanam-car-festival-1787651414</id>
            <summary type="text">வரலாற்று சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் - தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் தேர் திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது.தெல்லிப்பழை துர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>வரலாற்று சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் - தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் தேர் திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது.</p><p>தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலய 2026 ஆம் ஆண்டுக்கான&nbsp;மகோற்சவ பெருவிழா கடந்த 15ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.</p><p>12 நாட்களைக் கொண்ட இவ்வாலய மகோற்சவத்தில்10 நாட்கள் சிறப்பான திருவிழாக்கள் நடைபெற்று&nbsp;11 ஆம் நாளான இன்று (25) இரதோற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது.</p><p></p><h2>&nbsp;சிறப்பு பூசைகள்</h2><p>இன்று காலையில் இருந்து அம்பாளுக்கு விசேட அபிஷேகங்கள் ஆராதனைகள் நடைபெற்று பின்னர் வசந்த மண்டபத்தில் விநாயகப் பெருமான், துர்க்கை அம்மன், முருகப்பெருமான் ஆகியோருக்கு சிறப்பு பூசைகள் நடைபெற்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bfb33005-e9af-4c2e-9fa6-cd1a8780c320/26-6a8d6cfa7d7f9.webp' /></p><p>அதனைத் தொடர்ந்து துர்க்கை அம்மன் வசந்த மண்டபத்தில் இருந்து வெளி வீதி எழுந்தருளி, தேரேறி பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க இரதோற்சவம் இனிதே நடைபெற்றது.</p><p>அத்துடன் தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலய 12ஆம் நாள் திருவிழாவான
நாளை (26) தீர்த்தத் திருவிழா சிறப்பாக நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-25T10:22:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஓமன் அருகே சென்ற கச்சா எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/missile-attack-on-oil-tanker-near-oman-1787653305"></link>
            <id>https://canadamirror.com/article/missile-attack-on-oil-tanker-near-oman-1787653305</id>
            <summary type="text">ஓமன் அருகே அரபிக்கடலில் பயணித்துக் கொண்டிருந்த கச்சா எண்ணெய் கப்பல் மீது இன்று அதிகாலை ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டதில், கப்பலின் எஞ்சின் அறை கடுமைய...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஓமன் அருகே அரபிக்கடலில் பயணித்துக் கொண்டிருந்த கச்சா எண்ணெய் கப்பல் மீது இன்று அதிகாலை ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டதில், கப்பலின் எஞ்சின் அறை கடுமையாக சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
ஓமனின் அஷ் ஷிஷான் நகரில் இருந்து சுமார் 9 நாட்டிகல் மைல் தொலைவில், ஹர்முஸ் ஜலசந்திக்கு அருகே கச்சா எண்ணெயை ஏற்றிச் சென்ற கப்பலை இலக்கு வைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ac6b07d5-1f2a-4954-9b0b-207137d61da0/26-6a8d6cbb1a695.webp' /></p><p>தாக்குதலின் போது கப்பலின் எஞ்சின் அறை முழுமையாக சேதமடைந்ததாகக் கூறப்படும் நிலையில், கப்பலில் இருந்த மாலுமிகள் அனைவரும் ஓமன் கடற்படையினரால் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
</p><p>
எனினும், குறித்த கப்பல் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது யார் என்பது தொடர்பான உத்தியோகபூர்வ தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.
</p><p>
முன்னதாக, ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து கடந்த பெப்ரவரி 28ஆம் திகதி தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, மத்திய கிழக்கில் பதற்றமான சூழல் நிலவி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
இதனையடுத்து, ஈரான் இஸ்ரேல் மற்றும் சில அரபு நாடுகள் மீது தாக்குதல் நடத்தியதுடன், ஹர்முஸ் ஜலசந்தியை மூடுவதாகவும் அறிவித்திருந்தது. </p><p>மேலும், அனுமதியின்றி ஹர்முஸ் ஜலசந்தியைக் கடக்கும் சரக்கு மற்றும் கச்சா எண்ணெய்க் கப்பல்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p>

இதேவேளை, ஏமனில் செயல்பட்டு வரும் ஈரான் ஆதரவு ஹவுதி கிளர்ச்சியாளர்களும் ஏடன் வளைகுடா மற்றும் செங்கடல் பகுதிகளில் பயணிக்கும் சரக்கு மற்றும் கச்சா எண்ணெய்க் கப்பல்களைத் தாக்கி வருவதாகக் கூறப்படுகிறது.</p><p>

இந்த நிலையில், ஓமன் அருகே இடம்பெற்றுள்ள புதிய ஏவுகணைத் தாக்குதல் சம்பவம், மத்திய கிழக்கு கடற்பரப்பில் மீண்டும் பதற்றத்தை அதிகரித்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-25T10:21:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அனுராதபுரம் சிறுமி துஸ்பிரயோகம்; தேரருக்கு எதிரான வழக்கில் திருப்பம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/forensic-report-hemarathana-thero-anuradhapura-1787638425"></link>
            <id>https://jvpnews.com/article/forensic-report-hemarathana-thero-anuradhapura-1787638425</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;அனுராதபுரம் சிறுமி துஸ்பிரயோகம் தொடர்பாக , பல்லேகம ஹேமரத்தன தேரருக்கு எதிரான வழக்கில் சான்றாகக் கைப்பற்றப்பட்ட படுக்கை விரிப்பில், சந்தேக...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;அனுராதபுரம் சிறுமி துஸ்பிரயோகம் தொடர்பாக , பல்லேகம ஹேமரத்தன தேரருக்கு எதிரான வழக்கில் சான்றாகக் கைப்பற்றப்பட்ட படுக்கை விரிப்பில், சந்தேகநபரினது விந்து காணப்பட்டதாக அரசாங்கப் பகுப்பாய்வாளர் அனுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில் அறிக்கை அளித்துள்ளார். </p><p>

இருப்பினும், பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்ட முடி இழைகள், சந்தேகநபரால் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டதாகக் கூறப்படும் சிறுமியினதோ அல்லது வேறொரு பெண்ணினதோ அல்ல என்று அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/347b779d-99d8-46e5-b363-bc94a2e1c44e/26-6a8d329ac3de5.webp' /></p><h2>விரிப்பில் இரத்தக் கறைகள் எதுவும் காணப்படவில்லை</h2><p> 

அந்த விரிப்பில் இரத்தக் கறைகள் எதுவும் காணப்படவில்லை என்றும் அரசாங்கப் பகுப்பாய்வாளர் மேலும் தெரிவித்துள்ளார்.</p><p>

தன்னை வன்புணர்வு செய்த தேரர், தனது படுக்கையின் அடிவாரத்தில் இருந்த ஒரு விரிப்பைக் கொண்டு விந்தைத் துடைத்ததாக பாதிக்கப்பட்ட பெண் காவல்துறையினரிடம் தெரிவித்திருந்தார்.</p><p></p><p> </p><p>வழக்கு எண் B22424/2026-இன் கீழ் அரசாங்கப் பகுப்பாய்வாளரின் அறிக்கை நீதிமன்றப் பதிவேட்டில் இணைக்கப்பட்டது. </p><p>இந்த அறிக்கையின் நகல் சட்டமா அதிபருக்கும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

தன்னை வன்புணர்வு செய்த தேரர், தரையில் சிந்திய விந்தை படுக்கையின் அடிவாரத்தில் இருந்த விரிப்பைக் கொண்டு துடைத்ததாக பாதிக்கப்பட்ட பெண் நிட்டம்புவ காவல்துறையினரிடம் தெரிவித்திருந்ததால், விசாரணையின் போது காவல்துறையினரால் அந்த விரிப்பு கைப்பற்றப்பட்டு அரசாங்கப் பகுப்பாய்வாளரின் ஆய்வுக்கு அனுப்பப்பட்டிருந்தது.</p><p></p><p>
</p><p>
 தேரரின் அறை, படுக்கை மற்றும் அந்த விரிப்பு உள்ளிட்ட அறையில் இருந்த பொருட்களை பாதிக்கப்பட்ட பெண் அடையாளம் காட்டியிருந்தார்.
</p><p>
அனுராதபுரம் காவல்துறையின் உதவியுடன், கம்பஹா பிரிவு பெண்கள் மற்றும் சிறுவர் விவகாரப் பிரிவின் பொறுப்பதிகாரி (OIC) காவல் ஆய்வாளர் (IP) வினிசியா பிரேமரத்ன மற்றும் காவல் ஆய்வாளர் (IP) வசுந்தரா குணரத்ன ஆகியோர் அடங்கிய காவல்துறை குழுவினர் சம்பவ இடத்தில் விசாரணைகளை மேற்கொண்டனர்.</p><p></p><p>
</p><p>
சட்டமா அதிபரின் ஆலோசனைக்காகக் காத்திருக்கும் நிலையில், இவ்வழக்கு அனுராதபுரம் நீதவான் பசிந்து விக்ரமரத்னவால் 2027 ஜனவரி 8-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-25T10:15:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[167 ஓட்டங்கள் குவித்ததுடன் 4 விக்கெட் வீழ்த்திய ஷாபாஸ் அகமது: இமாலய வெற்றி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/shabhaz-ahmed-man-of-the-match-duleep-trophy-2026-1787652782"></link>
            <id>https://news.lankasri.com/article/shabhaz-ahmed-man-of-the-match-duleep-trophy-2026-1787652782</id>
            <summary type="text">East zone won by an innings and 210 runs in duleep trophy 2026:
பெங்களூருவில் நடந்த துலீப் டிராபி முதல் காலிறுதிப் போட்டியில் ஈஸ்ட் ஸோன் அணி இமாலய வெ...</summary>
            <content type="html"><![CDATA[<p>East zone won by an innings and 210 runs in duleep trophy 2026:
பெங்களூருவில் நடந்த துலீப் டிராபி முதல் காலிறுதிப் போட்டியில் ஈஸ்ட் ஸோன் அணி இமாலய வெற்றி பெற்றது.
</p><p>
நார்த் ஈஸ்ட் ஸோன் அணிக்கு எதிரான துலீப் டிராபி முதல் காலிறுதிப் போட்டியில் ஈஸ்ட் ஸோன் அணி, இன்னிங்ஸ் மற்றும் 210 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.&nbsp;</p><h2>முதல் காலிறுதிப் போட்டி</h2><p>
துலீப் டிராபி முதல் காலிறுதிப் போட்டியில் நார்த் ஈஸ்ட் ஸோன் மற்றும் ஈஸ்ட் ஸோன் அணிகள் மோதின.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1fd6f701-fc40-4dfc-b692-7ae484ce188a/26-6a8d6b8724df7.webp' /></p><p></p><p>
ஈஸ்ட் ஸோன் அணி முதல் இன்னிங்ஸில் 467 ஓட்டங்கள் குவித்தது. ஷாபாஸ் அகமது 167 ஓட்டங்களும், சுதிப் 146 ஓட்டங்களும் குவித்தனர்.</p><p>
பின்னர் முதல் இன்னிங்ஸை ஆடிய நார்த் ஈஸ்ட் ஸோன் அணி, அபிஜித் சர்கார் மற்றும் ஷாபாஸ் அகமதுவின் மிரட்டலான பந்துவீச்சில் 111 ஓட்டங்களுக்கு சுருண்டது.
</p><p>
அதிகபட்சமாக அர்பித் சுபாஷ் 32 ஓட்டங்கள் எடுத்தார். அபிஜித் சர்கார் 5 விக்கெட்டுகளும், ஷாபாஸ் அகமது 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f2675294-2bdd-4ca6-a308-bcad0923631c/26-6a8d6b888b6d7.webp' /></p><h2>ஷாபாஸ் அகமது&nbsp;ஆட்ட நாயகன் </h2><p>
 ஃபாலோ-ஆன் ஆகி இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய நார்த் ஈஸ்ட் அணி 146 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது.</p><p> 

அதிகபட்சமாக பிஹெய்ரோய்ஜன் ஜோதின் 39 ஓட்டங்களும், ஆகாஷ் சௌத்ரி 27 ஓட்டங்களும் எடுத்தனர். அனுகுல் ராய் 5 விக்கெட்டுகளும், வைபவ் சூர்யவன்ஷி 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
</p><p>
167 ஓட்டங்கள் எடுத்ததுடன் 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றிய ஷாபாஸ் அகமது (Shabhaz Ahmed) ஆட்ட நாயகன் விருது பெற்றார்.&nbsp; &nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/89adf82e-2024-4452-95c7-514711a487ac/26-6a8d6b87d8034.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-25T10:13:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ்ப்பாண மாவட்ட செயலகம் முன் போராட்டத்தில் குதித்த மக்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/protest-in-north-slogans-no-more-omb-s-deception-1787651468"></link>
            <id>https://tamilwin.com/article/protest-in-north-slogans-no-more-omb-s-deception-1787651468</id>
            <summary type="text">ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம் என இராணுவத்தினரின் கையில் ஒப்படைக்கப்பட்ட எமது உறவுகளுக்கு என்ன நடந்தது? என கோரி வடக்கு, கிழக்கு வலிந்து...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம் என இராணுவத்தினரின் கையில் ஒப்படைக்கப்பட்ட எமது உறவுகளுக்கு என்ன நடந்தது? என கோரி வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் ஏற்பாட்டில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><p>இந்தப் போராட்டமானது இன்று( 25.08.2026)&nbsp; யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தின் முன்பாக நடைபெற்றுள்ளது.</p><h2>கவனயீர்ப்பு போராட்டம்</h2><p>காணாமல் போனோருக்கான சர்வதேச தின நிகழ்வை கண்டித்து வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் ஏற்பாட்டில் மாவட்ட செயலகம் முன்பாக இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ab15f769-ab5f-46cf-a215-121bd92844f8/26-6a8d689256661.webp' /></p><p>உள்நாட்டு பொறிமுறையை வலுப்படுத்தும் காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் இழப்பீடு வேண்டாம், மரண சான்றிதழும் வேண்டாம் என்பதை வலியுறுத்தியே குறித்த போராட்டம் நடைபெற்றுள்ளது.
</p><p>
இதேவேளை சர்வதேச காணாமல் போனோர் தினத்தை முன்னிட்டு, வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும் 30ஆம் திகதி சர்வதேச மாநாடு நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3230f466-f888-4146-a125-8f831c571da8/26-6a8d68917de8b.webp' /></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-25T10:13:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[புதிய ஐபோன் வாங்குவோருக்கு அதிர்ச்சித் தகவல் ; அப்பிள் நிறுவனம் அதிரடி முடிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/shocking-news-new-iphone-buyers-apple-takes-drasti-1787652715"></link>
            <id>https://jvpnews.com/article/shocking-news-new-iphone-buyers-apple-takes-drasti-1787652715</id>
            <summary type="text">அடுத்த மாதம் அறிமுகமாகவுள்ள புதிய ஐபோன் (iPhone) மொடல்களின் விலையை 9 சதவீதம் வரை உயர்த்த அப்பிள் (Apple) நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>அடுத்த மாதம் அறிமுகமாகவுள்ள புதிய ஐபோன் (iPhone) மொடல்களின் விலையை 9 சதவீதம் வரை உயர்த்த அப்பிள் (Apple) நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p>
</p><p></p><p>மெமரி சிப்களின் (Memory Chip) விலை மற்றும் உற்பத்திச் செலவுகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அதனைச் சமாளிக்கும் வகையில் புதிய விலை நிர்ணயத்தை மேற்கொள்ள அப்பிள் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/00ed3baa-eff8-403f-85a6-eca3c6cef6a1/26-6a8d6a6c9af8f.webp' /></p><p>
</p><p>
ஏற்கனவே சாம்சங் (Samsung) மற்றும் கூகுள் (Google) உள்ளிட்ட முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களது புதிய ஸ்மார்ட்போன் மொடல்களின் விலையை உயர்த்தியுள்ள நிலையில், அப்பிளும் இதேபோன்ற நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
</p><p>
எனினும், புதிய ஐபோன் மொடல்களின் விலை உயர்வு தொடர்பில் அப்பிள் நிறுவனம் இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை.</p><p></p>]]></content>
            <updated>2026-08-25T10:12:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[தெல்லிப்பழை துர்க்கை அம்மனுக்கு இன்று இரத உற்சவம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/chariot-festival-of-goddess-durga-in-tellipallai-1787651527"></link>
            <id>https://tamilwin.com/article/chariot-festival-of-goddess-durga-in-tellipallai-1787651527</id>
            <summary type="text">வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் தெல்லிப்பழை துர்க்கை அம்மனுக்கு இன்று
(25.08.2026) இரத உற்சவம் சிறப்பாக நடைபெற்றுள்ளது

தெல்லிப்பழை துர்க்கை அம...</summary>
            <content type="html"><![CDATA[<p>வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் தெல்லிப்பழை துர்க்கை அம்மனுக்கு இன்று
(25.08.2026) இரத உற்சவம் சிறப்பாக நடைபெற்றுள்ளது
</p><p>
தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலயத்தின் 2026 மகோற்சவ பெருவிழாவில் இன்று
காலையில் இருந்து அம்பாளுக்கு விசேட அபிஷேகங்கள், ஆராதனைகள் நடைபெற்று காலை
வசந்த மண்டபத்தில் விநாயகப் பெருமான் துர்க்கை அம்மன் முருகப்பெருமான்
ஆகியோருக்கு சிறப்பு பூசைகள் நடைபெற்றது.</p><h2>நாளை தீர்த்த திருவிழா</h2><p>துர்க்கை அம்மன் வசந்த
மண்டபத்தில் இருந்து வெளி வீதி எழுந்தருளி தேரேறி பக்தர்கள் வடம் பிடித்து
இழுக்க தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ரத உற்சவம் இனிதே நடைபெற்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7ee0de33-201c-413b-9890-4a1754eadd7d/26-6a8d6841718eb.webp' /></p><p>

12 நாட்களை கொண்ட இவ்வாலய மகோற்சவத்தில் கடந்த. 15ஆம் திகதி கொடியேற்றத்துடன்
ஆரம்பான மகோற்சவத்தில் 10 நாட்கள் சிறப்பான திருவிழாக்கள் தினமும் நடைபெற்றது.</p><p>இந்நிலையில் 11ஆம் நாளான இன்று (25) இரத உற்சவமும் 12ஆம் நாள் திருவிழாவாக
நாளை (26) தீர்த்த திருவிழா சிறப்பாக நடைபெறவுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-25T10:07:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரான்சில் சூறாவளி தாக்குதல் ; கர்ப்பிணி பெண் உட்பட 41 பேர் காயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/tornado-france-41-people-injured-pregnant-woman-1787652206"></link>
            <id>https://canadamirror.com/article/tornado-france-41-people-injured-pregnant-woman-1787652206</id>
            <summary type="text">பிரான்ஸின் தென்மேற்கு பகுதியில் ஏற்பட்ட கடும் சூறாவளி காரணமாக கர்ப்பிணி பெண் உட்பட 41 பேர் காயமடைந்துள்ளதுடன், அவர்களில் 15 பேர் வைத்தியசாலையில் சிகிச...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரான்ஸின் தென்மேற்கு பகுதியில் ஏற்பட்ட கடும் சூறாவளி காரணமாக கர்ப்பிணி பெண் உட்பட 41 பேர் காயமடைந்துள்ளதுடன், அவர்களில் 15 பேர் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
</p><p>
தென்மேற்கு பிரான்ஸின் பொமாஸ் கிராமத்தில் நேற்று மாலை சுமார் 5.30 மணியளவில் மணிக்கு 117 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்றுடன் சூறாவளி வீசியுள்ளது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b35f5854-f2c0-4160-b0b0-a2945f1778ae/26-6a8d687018036.webp' /></p><p>சுமார் 1,000 பேர் வசிக்கும் இந்தக் கிராமம் சூறாவளியின் தாக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

பலத்த காற்று காரணமாக வீடுகளின் மேற்கூரைகள் தூக்கி வீசப்பட்டதுடன், சுமார் 300 வீடுகள் சேதமடைந்துள்ளன.</p><p> மேலும், பல மரங்கள் வேரோடு சாய்ந்ததுடன், சில வீடுகள் இடிந்து விழுந்துள்ளதோடு, பல வாகனங்களும் சேதமடைந்துள்ளன.</p><p>

சூறாவளியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை முன்னெடுப்பதற்காக 100-க்கும் மேற்பட்ட மீட்புப் பணியாளர்கள் சம்பவ இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
</p><p>
இதன்போது காயமடைந்த 41 பேர் மீட்கப்பட்ட நிலையில், கர்ப்பிணி பெண் உட்பட 15 பேர் மேலதிக சிகிச்சைக்காக வைத்தியசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ca27bbff-06c4-4efe-8e14-7732b12a5414/26-6a8d6870bc603.webp' /></p><p>

இதேவேளை, பைரனீஸ் மலைப்பகுதியில் ஏற்பட்ட ஆலங்கட்டி மழை காரணமாக தென்மேற்கு பிரான்ஸில் நடைபெறவிருந்த வுல்டா எஸ்பானா சைக்கிள் பந்தயமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.</p><p>

மேலும், போர்டோ, மார்சேய், நைஸ் மற்றும் துலூஸ் உள்ளிட்ட முக்கிய நகரங்களிலும் கடுமையான வானிலை காரணமாக விமானப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

சூறாவளியால் ஏற்பட்ட சேதங்களை மதிப்பிடும் பணிகளும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p><p> இந்த அனர்த்தம் தென்மேற்கு பிரான்ஸில் பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-25T10:03:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுரேஷ் சலே தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/court-order-regarding-suresh-sallay-1787650171"></link>
            <id>https://jvpnews.com/article/court-order-regarding-suresh-sallay-1787650171</id>
            <summary type="text">&amp;nbsp; அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேவை மேலும் 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. 
...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேவை மேலும் 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. </p><p>

விசாரணைகள் தொடர்ந்தும் நடைபெற்று வரும் நிலையில் ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த 90 நாட்கள் தடுப்புக் காவல் காலம் முடிவடைந்துள்ளது. 

இந் நிலையிலேயே மேலும் 90 நாட்கள் தடுப்பு காவல் உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cefc8735-7517-48c9-bfbe-158224aaf566/26-6a8d607d1a0ae.webp' /></p><h2>&nbsp;90 நாட்கள் தடுப்பு காவல் உத்தரவு</h2><p> </p><p>

2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியாக, சுரேஷ் சலே கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p></p><p> 

முன்னதாக 90 நாட்கள் தடுப்புக் காவற் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த காலத்தில் சுரேஷ் சலே உணவு தவிர்ப்பில் ஈடுபட்ட நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-25T10:03:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[லட்சணமாக புடவையில் நடிகை ராய் லட்சுமி வெளியிட்ட அழகிய புகைப்படங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/actress-raai-lakshmi-saree-attire-photoshoot-1787651529"></link>
            <id>https://cineulagam.com/article/actress-raai-lakshmi-saree-attire-photoshoot-1787651529</id>
            <summary type="text">ராய் லட்சுமிகல்லூரி படிக்கும் காலம் முதலே மாடலிங் துறையில் நுழைந்து பணியாற்றி வந்தவர் நடிகை ராய் லட்சுமி. அடுத்து சினிமாவில் என்ட்ரி கொடுத்தவர் விக்ரா...</summary>
            <content type="html"><![CDATA[<h2>ராய் லட்சுமி</h2><p>கல்லூரி படிக்கும் காலம் முதலே மாடலிங் துறையில் நுழைந்து பணியாற்றி வந்தவர் நடிகை ராய் லட்சுமி. </p><p>அடுத்து சினிமாவில் என்ட்ரி கொடுத்தவர் விக்ராந்த் நடித்த கற்க கசடற படத்தின் மூலம் நாயகியாக தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார். அடுத்தடுத்து படங்களில் நடித்து வந்தவர் திடீரென கவர்ச்சியில் இறங்கினார்.</p><p> சமூக வலைதளங்களில் அவ்வப்போது கவர்ச்சி போட்டோ ஷுட் புகைப்படங்களை பதிவிடும் ராய் லட்சுமி தற்போது புடவையில் போட்டோஸ் வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்,</p><p><br></p>]]></content>
            <updated>2026-08-25T09:53:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பஸ் லலித் இற்கு 72 மணி நேரம் தடுப்புக் காவல் உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/72-hour-preventive-detention-order-bus-lalith-1787651435"></link>
            <id>https://jvpnews.com/article/72-hour-preventive-detention-order-bus-lalith-1787651435</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;டுபாயிலிருந்து நாட்டிற்கு அழைத்து வரப்பட்ட, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான லலித் கன்னங்கர என்ற &quot;பஸ் லலித்&quot;, 72 மணி நேரம் தடுப்புக் காவலில...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;டுபாயிலிருந்து நாட்டிற்கு அழைத்து வரப்பட்ட<a href="https://jvpnews.com/article/police-release-background-information-onbus-lalith-1787640968" target="_blank">, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான லலித் கன்னங்கர </a>என்ற "பஸ் லலித்", 72 மணி நேரம் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு விசாரிக்கப்படுவார் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அறிவித்துள்ளார்.
</p><p>
போதைப்பொருள் கடத்தல், மனிதக்கொலை மற்றும் கொலை முயற்சி, பலத்த காயங்களை ஏற்படுத்துதல், கப்பம் கோருதல் மற்றும் சொத்துக்களுக்குத் தீ வைப்பு உள்ளிட்ட பல கடுமையான குற்றச்சாட்டுகள் பஸ் லலித்க்கு எதிராகச் சுமத்தப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/de1448b1-2d61-4015-9a4a-d06d63b99cd3/26-6a8d656c7704c.webp' /></p><h2>மக்கள் பட்டாசுகளை வெடித்து கொண்டாட்டம்</h2><p>&nbsp; அதேவேளை துபாயில் கைது செய்யப்பட்ட, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர் எனக் கூறப்படும், ‘பஸ் லலித்’ என்றழைக்கப்படும் லலித் கன்னங்கர இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ள நிலையில், ஹங்வெல்ல, வட்டரெக்க, மீகொட மற்றும் கலகெதர உள்ளிட்ட பல பகுதிகளில் மக்கள் பட்டாசுகளை வெடித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.</p><p></p><p>
இதனை முன்னிட்டு, குறித்த பகுதிகளில் பல்வேறு பதாகைகளும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதுடன், குறித்த நடவடிக்கைகளை முன்னெடுத்த அரசாங்கத்துக்கும் மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.</p><p></p><p>

அத்துடன், ‘பஸ் லலித்’ என அழைக்கப்படும் லலித் கன்னங்கர, யாசகர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடமிருந்து இலட்சக்கணக்கான பணத்தைப் பெற்றதாக பிரதேச மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-08-25T09:47:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[அவுஸ்திரேலிய முதலீட்டு மாநாட்டில் கொழும்பு துறைமுக நகருக்கு சர்வதேச கவனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/international-attentio-australia-colombo-port-city-1787651252"></link>
            <id>https://jvpnews.com/article/international-attentio-australia-colombo-port-city-1787651252</id>
            <summary type="text">கொழும்பு துறைமுக நகரத்திற்காக அடுத்த ஐந்து ஆண்டுகளில் மேலும் 4.1 பில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டை ஈர்ப்பதற்கு அரசாங்கம் இலக்கு நிர்ணயித்துள்ளதாக கைத...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு துறைமுக நகரத்திற்காக அடுத்த ஐந்து ஆண்டுகளில் மேலும் 4.1 பில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டை ஈர்ப்பதற்கு அரசாங்கம் இலக்கு நிர்ணயித்துள்ளதாக கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p></p><p>கொழும்பு துறைமுக நகரில் ஏற்கனவே 2.1 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான முதலீடுகள் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
இதன் கீழ் இரண்டு பாரிய குடியிருப்புத் திட்டங்கள், நவீன உணவகங்கள் மற்றும் மாநாட்டு மையம் உள்ளிட்ட முக்கிய அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a5661a1b-93e6-45ea-ab9a-09a226351a13/26-6a8d64b5dedc0.webp' /></p><p>அவுஸ்திரேலியாவில் கடந்த வாரம் நடைபெற்ற முதலீட்டு மாநாட்டில் கொழும்பு துறைமுக நகரம் முக்கிய முதலீட்டு வாய்ப்பாக அறிமுகப்படுத்தப்பட்டதாகவும், உறுதி செய்யப்பட்டுள்ள முதலீடுகளில் சில முன்னணி சர்வதேச முதலீட்டாளர்களிடமிருந்து கிடைத்துள்ளதாகவும் பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
</p><p>
முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்கு வரிச் சலுகைகள் மாத்திரம் போதுமானதல்ல எனச் சுட்டிக்காட்டியுள்ள அவர், பொருளாதார ஸ்திரத்தன்மை, முதலீட்டாளர் நம்பிக்கை, சிறந்த தொடர்பாடல் மற்றும் தெளிவான பொருளாதார நோக்கு ஆகியவையும் முக்கியமானவை எனத் தெரிவித்துள்ளார்.
</p><p>
இத்தகைய முதலீட்டுக்குச் சாதகமான சூழலை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்து வருவதாகவும் பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-25T09:47:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுரேஷ் சலேயின் தடுப்புக் காவல் மேலும் நீடிப்பு : நீதிமன்றம் அதிரடி உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/new-90day-detention-order-issued-for-suresh-sallay-1787649865"></link>
            <id>https://ibctamil.com/article/new-90day-detention-order-issued-for-suresh-sallay-1787649865</id>
            <summary type="text">அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேயை மேலும் 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. 

விசார...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேயை மேலும் 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.</p><p> 

விசாரணைகள் தொடர்ந்தும் நடைபெற்று வரும் நிலையில் ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த 90 நாட்கள் தடுப்புக் காவல் காலம் முடிவடைந்துள்ளது. </p><p>

இந்த நிலையில் அவருக்கான தடுப்புக் காவலை&nbsp;மேலும் 90 நாட்களுக்கு நீடித்து நீதிமன்றம் இன்று (25) உத்தரவிட்டுள்ளது.</p><p></p><h2>உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள்</h2><p>

2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியாக, சுரேஷ் சலே கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/db6e488a-c5d4-486a-a076-6f9626ba4693/26-6a8d63d7ea42f.webp' /></p><p> </p><p>

முன்னதாக 90 நாட்கள் தடுப்புக் காவல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த காலத்தில் சுரேஷ் சலே உணவு தவிர்ப்பில் ஈடுபட்ட நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p>&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-25T09:43:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஐபோன் வாங்குவோருக்கு வெளியான அதிர்ச்சி தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/apple-to-increase-iphone-prices-1787649458"></link>
            <id>https://tamilwin.com/article/apple-to-increase-iphone-prices-1787649458</id>
            <summary type="text">புதிய ஐபோன் (iPhone) மொடல்களின் விலையை 9 சதவீதம் வரை உயர்த்த அப்பிள்நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மெமரி சிப்களின் (Memory Chi...</summary>
            <content type="html"><![CDATA[<p>புதிய ஐபோன் (iPhone) மொடல்களின் விலையை 9 சதவீதம் வரை உயர்த்த அப்பிள்நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
</p><p>
மெமரி சிப்களின் (Memory Chip) விலை மற்றும் உற்பத்திச் செலவுகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அதனைச் சமாளிக்கும் வகையில் புதிய விலை நிர்ணயத்தை மேற்கொள்ள அப்பிள் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><h2>அதிகாரபூர்வ அறிவிப்பு</h2><p>

ஏற்கனவே சாம்சங் (Samsung) மற்றும் கூகுள் (Google) உள்ளிட்ட முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களது புதிய ஸ்மார்ட்போன் மொடல்களின் விலையை உயர்த்தியுள்ள நிலையில், அப்பிளும் இதேபோன்ற நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c1622ade-71d1-43d2-a735-683d139f9052/26-6a8d6341e1d4f.webp' /></p><p>
எனினும், புதிய ஐபோன் மொடல்களின் விலை உயர்வு தொடர்பில் அப்பிள் நிறுவனம் இதுவரை அதிகாரபூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-25T09:41:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[பேருந்தும் - எரிபொருள் லொறியும் நேருக்கு நேர் மோதி விபத்து: துருக்கியில் பயங்கரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/bus-and-oil-tanker-collision-in-turkey-1787650644"></link>
            <id>https://news.lankasri.com/article/bus-and-oil-tanker-collision-in-turkey-1787650644</id>
            <summary type="text">Bus and oil tanker Collision in turkey: துருக்கியில் பேருந்து மற்றும் எரிபொருள் லொறி மோதிய விபத்தில் 40 பேர் வரை படுகாயமடைந்துள்ளனர்.பேருந்து - எரிபொர...</summary>
            <content type="html"><![CDATA[<p>Bus and oil tanker Collision in turkey: துருக்கியில் பேருந்து மற்றும் எரிபொருள் லொறி மோதிய விபத்தில் 40 பேர் வரை படுகாயமடைந்துள்ளனர்.</p><h2>பேருந்து - எரிபொருள் லொறி விபத்து</h2><p>
மத்திய துருக்கியின் அனடோலியா பகுதியின் கைசேரி மாகாணத்தில் பேருந்தும் எரிபொருள் லொறியும் மோதிக் கொண்ட விபத்தில் கிட்டத்தட்ட 40 பேர் காயமடைந்துள்ளனர்.</p><p> இவர்களில் 4 பேரின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.</p><p> விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் முழுவீச்சில் மீட்பு பணிகளை முன்னெடுத்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5a26772d-8516-40b1-8d40-b77dc913bc82/26-6a8d6255b9806.webp' /></p><p> அதே சமயம் விபத்துக்கான&nbsp; காரணத்தை கண்டறிய பொலிஸாரும் அதிகாரப்பூர்வ விசாரணையை தொடங்கியுள்ளனர்.</p><p></p><p>பேருந்தும் எரிபொருள் லொறியும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் இரண்டு வாகனங்களும் சாலையில் கவிழ்ந்ததாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p>இந்த விபத்து தலைநகர் அங்காராவுக்கு தென்கிழக்கே 200 மைல் தொலைவில் உள்ள தொழிற்துறை சாலையில் நடைபெற்றுள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"> WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-25T09:37:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[சற்றுமுன்னர் கெஹெல்பத்தர பத்மே நீதிமன்றில் ஆஜர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/kehelpatara-padme-appears-in-court-1787650420"></link>
            <id>https://jvpnews.com/article/kehelpatara-padme-appears-in-court-1787650420</id>
            <summary type="text">தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்குழுவுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் ‘கெஹெல்பத்தர பத்மே’ என அழைக்கப்படு...</summary>
            <content type="html"><![CDATA[<p>தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்குழுவுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் ‘கெஹெல்பத்தர பத்மே’ என அழைக்கப்படும் சந்தேகநபர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.</p><p>
</p><p></p><p>பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் அவர் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d325e253-ebe8-4d5a-a358-d5b764cc5184/26-6a8d61755eab7.webp' /></p><p>சந்தேகநபர் தொடர்பான விசாரணைகள் மற்றும் அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் குறித்து நீதிமன்றத்தில் பொலிஸார் மேலதிக தகவல்களை சமர்ப்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
இதேவேளை, ‘கெஹெல்பத்தர பத்மே’ தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளின் முன்னேற்றம் குறித்தும் பொலிஸார் கவனம் செலுத்தி வருகின்றனர்.
</p><p>
இந்த வழக்கு தொடர்பான மேலதிக நடவடிக்கைகள் நீதிமன்ற விசாரணைகளின் அடிப்படையில் முன்னெடுக்கப்படவுள்ளன.</p><p></p>]]></content>
            <updated>2026-08-25T09:33:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஓணம் புடவையில் சொக்க வைக்கும் நடிகை நிகிதா ஷர்மா போட்டோ ஷுட்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/actress-nikita-sharma-onam-special-photoshoot-1787648650"></link>
            <id>https://viduppu.com/article/actress-nikita-sharma-onam-special-photoshoot-1787648650</id>
            <summary type="text">நிகிதா ஷர்மாஓணம் பண்டிகை ஸ்பெஷலாக பிரபலங்கள் முக்கியமாக நடிகைகள் விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்கள். கேரளா நடிகைகளை தாண்டி சோஷியல் மீடியா இ...</summary>
            <content type="html"><![CDATA[<h2>நிகிதா ஷர்மா</h2><p>ஓணம் பண்டிகை ஸ்பெஷலாக பிரபலங்கள் முக்கியமாக நடிகைகள் விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்கள். </p><p>கேரளா நடிகைகளை தாண்டி சோஷியல் மீடியா இன்ஃப்ளூயன்சர்கள் வரை ஓணம் ஸ்பெஷலாக புகைப்படங்கள் வெளியிடுகிறார்கள்.
</p><p>8 மில்லியனுக்கும் அதிகமான இன்ஸ்டா ஃபாலோயர்களை கொண்டுள்ள நிகிதா ஷர்மா ஓணம் ஸ்பெஷல் வெளியிட்ட போட்டோக்களுக்கு லைக்ஸ் குவிந்து வருகிறது.</p><p> இதோ அவர் இன்ஸ்டாவில் வெளியிட்ட ஓணம் ஸ்பெஷல் போட்டோஸ்,</p><p><br></p>]]></content>
            <updated>2026-08-25T09:30:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Fathima</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாரதிராஜாவுக்கு மணிமண்டபம்: விஜய்க்கு வைரமுத்து நன்றி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/vairamuthu-thanks-to-cmvijay-1787649870"></link>
            <id>https://ibctamilnadu.com/article/vairamuthu-thanks-to-cmvijay-1787649870</id>
            <summary type="text">Lyricist Vairamuthu thanked Chief Minister Vijay: இயக்குனர் இமயம் பாரதிராஜாவுக்கு தேனியில் திருவுருவச் சிலையுடன் மணிமண்டபம் அமைக்கப்படும் என சட்டப்பேர...</summary>
            <content type="html"><![CDATA[<p>Lyricist Vairamuthu thanked Chief Minister Vijay: இயக்குனர் இமயம் பாரதிராஜாவுக்கு தேனியில் திருவுருவச் சிலையுடன் மணிமண்டபம் அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டுள்ளதற்கு கவிஞர் வைரமுத்து நன்றி தெரிவித்துள்ளார்.
</p><p>
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான பாரதிராஜா, கடந்த யூன் மாதம் 10ம் தேதி உயிரிழந்தார், அவரது உடல் தேனியில் உள்ள பண்ணை வீட்டில் 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.</p><p>

இந்நிலையில் பாரதிராஜாவுக்கு தேனியில் மணிமண்டபம் கட்டப்படும் என அமைச்சர் ராஜ்மோகன் நேற்று அறிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b0b69413-944d-4e95-b06b-63c4d92c0a29/26-6a8d605670397.webp' /><br></p><p>
</p><p>
இதனை பாராட்டி கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

இயக்குநர் இமயம்
பாரதிராஜாவுக்கு
மணிமண்டபம் கட்டும் 
அறிவிப்பை வெளியிட்ட
தமிழ்நாட்டு அரசுக்கும்
முதலமைச்சர் 
ஜோசப் விஜய் அவர்களுக்கும்
கோரிக்கையை 
முதலில் முன்வைத்தவன்
என்ற முறையில்
என் முதல் நன்றியைத்
தெரிவித்துக்கொள்கிறேன்.</p><p>அல்லி நகரத்தின் கலாசாரத்துக்கு
டெல்லி நகரத்து
அங்கீகாரம் பெற்றுத்தந்த
பெருங்கலைஞர் பாரதிராஜா

அடித்தட்டு மக்களின்
கனவுகளை நம்பிக்கைகளை
வாழ்வியலை விழுமியங்களைக் 
காட்சிப் படுத்திய
கலைப் பெருமகன்

அவருக்கான மணிமண்டபத்தை
அவர் பிறந்த 
தேனி மாவட்டத்திலேயே
அமைப்பது என்பது
அவருக்கு அரசு வழங்கும்
கடைசி மரியாதையாகும்
</p><p>
தமிழ்நாட்டு அரசுக்கு
என் முதல் மரியாதை

மீண்டும் நன்றி.<br></p>]]></content>
            <updated>2026-08-25T09:29:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[டிரம்பின் புதிய மிரட்டல்; அமெரிக்கா - கனடா வர்த்தகப் போர் தீவிரம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/us-canada-trade-war-intensifies-1787635466"></link>
            <id>https://canadamirror.com/article/us-canada-trade-war-intensifies-1787635466</id>
            <summary type="text">&amp;nbsp; கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் வாகனங்கள் மீது கூடுதல் வரி விதிக்கப்போவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ள நிலையில், அமெ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் வாகனங்கள் மீது கூடுதல் வரி விதிக்கப்போவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ள நிலையில், அமெரிக்கா மற்றும் கனடா இடையே வர்த்தகப் போர் மேலும் தீவிரமடைந்துள்ளது.
</p><p>
 கனடாவிலிருந்து வரும் சிற்றுந்துகள், கனரக வாகனங்கள், மற்றும் வாகனங்களின் உதிரி பாகங்கள் மீதான வரியை ஜனவரி 1 முதல் 25 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாக உயர்த்தப்போவதாக ட்ரம்ப் அறிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/081963f2-9189-4638-858b-cb702ac79eea/26-6a8d270d4f86d.webp' /></p><h2>வர்த்தகப் பேச்சுவார்த்தை தோல்வி</h2><p>கடந்த வார இறுதியில் அமெரிக்கா - கனடா இடையிலான வர்த்தகப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததை அடுத்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கடைசி நேரத்தில் இரு நாடுகளும் ஏற்றுக்கொள்ள முடியாத கோரிக்கைகளை முன்வைத்ததாக பரஸ்பரம் குற்றம் சாட்டின</p><p>.

 ட்ரம்ப்பின் இந்த புதிய வரி அச்சுறுத்தல் தனக்கு வியப்பளிக்கவில்லை என்று தெரிவித்துள்ள கனடா பிரதமர் மார்க் கர்னி, கனடாவின் வாகன உற்பத்தியைக் அழிக்க ட்ரம்ப் நினைப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
</p><p>
அமெரிக்கா "சரியான அணுகுமுறையுடன்" வந்தால் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த கனடா தயார் என்றும் அவர் கூறியுள்ளார்.</p><p>

 அத்துடன் பேச்சுவார்த்தைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும், மீண்டும் ஆரம்பிப்பதற்கான எந்த குறிப்பிட்ட திகதியும் நிர்ணயிக்கப்படவில்லை என்றும் இரண்டு நாட்டு அதிகாரிகளும் தெரிவித்தனர்.
</p><p>
கிட்டத்தட்ட 20 பில்லியன் டொலர் மதிப்பிலான கனடிய இறக்குமதிகள் மீது 50வீத வரி விதிக்கும் அமெரிக்காவின் கெடுவை அடுத்து கடந்த வெள்ளிக்கிழமையன்று கனடா பேச்சுவார்த்தையிலிருந்து வெளியேறி இருந்தமை குரிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-08-25T09:28:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் ஈழத் தமிழர்களின் பங்களிப்பு அளப்பரியது - இஸபெலா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/northern-governor-requested-to-diaspora-1787649367"></link>
            <id>https://canadamirror.com/article/northern-governor-requested-to-diaspora-1787649367</id>
            <summary type="text">கனடாவில், ஈழத் தமிழர்களின் பங்களிப்பு மிகவும் அளப்பரியது என&amp;nbsp;இலங்கைக்கான கனடிய உயர்ஸ்தானிகர் இஸபெலா மார்டின் தெரிவித்துள்ளார்.வடக்கு மாகாண மருத்து...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவில், ஈழத் தமிழர்களின் பங்களிப்பு மிகவும் அளப்பரியது என&nbsp;இலங்கைக்கான கனடிய உயர்ஸ்தானிகர் இஸபெலா மார்டின் தெரிவித்துள்ளார்.</p><p>வடக்கு மாகாண மருத்துவமனைகளுக்கு குருதி சுத்திகரிப்பு இயந்திரங்களை வழங்கும் நிகழ்வு கடந்த 20ஆம் திகதி யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீட மருத்துவ சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையத்தில் நடைபெற்றது.</p><p>இந்த நிகழ்வில் இலங்கைக்கான கனடிய உயர்ஸ்தானிகர் இஸபெலா மார்டின் மற்றும் வட மாகாண ஆளுநர் என். வேதநாயகன், இந்த குருதி சுத்திகரிப்பு இயந்திரங்களை நன்கொடையாளர்கள்&nbsp; உள்ளிட்ட பலர் பங்கேற்று இருந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f666a7b6-61e7-4e9d-996b-544f447aea32/26-6a8d5f29a3b3b.webp' /></p><p>இலங்கையிலிருந்து கனடாவிற்கு வந்த இலங்கையர்கள் அந்நாட்டுக்கு பல்வேறு வகையில் சேவைகளை வழங்கி வருவதாக இலங்கைக்கான கனடிய தூதுவர் இஸபெல்லா மார்டின் தெரிவித்துள்ளார்.
</p><p>
கனடாவின் வெற்றிக்கு புலம்பெயர் இலங்கையர்களின் பங்களிப்பு மகத்துவமானது என அவர் தெரிவித்துள்ளார்.</p><p> இவ்வாறு கனடிய புலம்பெயர் தமிழர்கள் தாயகத்திற்கு கொடைகளை வழங்குவதும் தங்களது திறமைகளை வழங்குவதும் மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளார்.
</p><p>
கனடாவில் பெற்றுக் கொண்டவற்றை தாயக சமூகத்திற்கு வழங்குவது போற்றுதற்குரியது என அவர் தெரிவித்துள்ளார்.
</p><p>
இந்தத் தருணம் பெரும் மகிழ்ச்சியையும் பெருமிதத்தையும் தருவதாக அவர் குறிப்பிடுகின்றார். </p><p>கனடாவின் சார்பில் இந்த நன்கொடை வழங்குவதற்கு வழங்கும் நிகழ்வுடன் தொடர்புடைய அனைவருக்கும் நன்றி பாராட்டுவதாக அவர் தெரிவித்துள்ளார்.&nbsp; &nbsp;</p><p>
</p><p>இதேவேளை, கனடிய வாழ் தமிழ் மக்கள் தொடர்ச்சியாக ஈழத்து தமிழ் மக்களுக்கு உதவிகளை வழங்கி வருவதாக வட மாகாண ஆளுநர் வேதநாயகன் தெரிவித்துள்ளார்.</p><p>கனடாவில் கடின உழைப்பில் பெற்றுக் கொள்ள பட்ட பணம் தாயகத்தில் தேவைகள் உடையவருக்கு உதவுவதற்காக பயன்படுத்தப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.</p><p>
புலம்பெயர் சமூகத்திடம் தாம் ஒரு கோரிக்கையை முன்வைக்க விரும்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.</p><p>
புலம்பெயர் சமூகத்தினர் தாயகத்திற்கு தொழில்நுட்பத்தையும் அறிவையும் வழங்க முடியும் எனவும் மருத்துவமனைகளுக்கு உதவுமாறு கோருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p>
எமது மருத்துவமனைகளுக்கு காணப்படும் முக்கியமான தேவைப்பாடுகளை கண்டறிந்து பேண்தகு அடிப்படையில் அவற்றை பூர்த்தி செய்யுமாறு புலம்பெயர் சமூகத்திடம் கோருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.</p><p>
கடந்த காலங்களில் புலம்பெயர் சமூகத்தினர் இலங்கையில் முதலீடு செய்வதில் எதிர்நோக்கிய நிர்வாக மற்றும் ஏனைய சிக்கல்களை களைவதற்கு காத்திரமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.</p><p>
வட மாகாணத்தை முதலீடுகளுக்கு சிறந்த ஓர் மாகாணமாகவும் சமூக பொறுப்புடைய ஒரு மாகாணமாகவும் மாற்றுவதற்கு முனைப்பு காட்டி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.</p><p>
கொடையாளர்கள் மீது நம்பிக்கை கொண்டிருந்தால் மட்டுமே பெருந்தொகை பணத்தை நம்பி கொடுப்பார்கள் எனவும் தற்போதைய சமூகத்தில் ஏமாற்று பேர்வழிகள் இருக்கிறார்கள் எனவும் இந்த கொடையாளி மீது நம்பிக்கை கொண்டு பெருந்தொகை பணம் வழங்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
</p><p>நன்கொடையாளர்களின் சேவை தொடர வேண்டும் எனவும் வடமகாணத்திற்கு தொடர்ந்து சேவைகள் ஆற்றப்பட வேண்டும் எனவும் அவர் கோரியுள்ளார்.
</p><p><br></p>]]></content>
            <updated>2026-08-25T09:27:55+00:00</updated>
        </entry>
    </feed>
