<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-09-05T00:46:29+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதிரடியாக கைது செய்யப்பட்ட நாமல் - கலக்கத்தில் தமிழ் அரசியல்வாதிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/tamil-politicians-linked-to-namal-1788545000"></link>
            <id>https://tamilwin.com/article/tamil-politicians-linked-to-namal-1788545000</id>
            <summary type="text">நாமல் ராஜபக்ச மற்றும் ராஜபக்ச குடும்பத்தினருடன் தொடர்புடைய வடக்கு- கிழக்கை சேர்ந்த அரசியல்வாதிகளும் கைது செய்ப்பட்டு தண்டிக்கபட வேண்டும் என்று ஈழவர் ஜ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாமல் ராஜபக்ச மற்றும் ராஜபக்ச குடும்பத்தினருடன் தொடர்புடைய வடக்கு- கிழக்கை சேர்ந்த அரசியல்வாதிகளும் கைது செய்ப்பட்டு தண்டிக்கபட வேண்டும் என்று ஈழவர் ஜனநாயக முன்னணியின் (Eros) செயலாளர் நாயகம் ராஜநாதன் பிரபாகரன் தெரிவித்தார்.</p><p>

லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தார்.</p><p>

மேலும் தெரிவித்த அவர்,</p><p>


நாமல் ராஜபக்சவின் கைது வரவேற்கத்தக்கது, இது நீண்ட காலத்திற்கு முன்பே நடந்திருக்க வேண்டிய ஒன்றாகும்.

சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை இந்த அரசு நிரூபிப்பித்துள்ளது.
</p><p>
ராஜபக்‌ச குடும்பத்தினர் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய அரசியல்வாதிகள் மீது பல ஊழல் முறைப்பாடுகள் உள்ளன.</p><p> 

ராஜபக்‌ச குடும்பத்தினர் மற்றும் அவர்களுடன் தொடர்புடையவர்கள் செய்த ஊழல், கொள்ளை மற்றும் அதிகார துஷ்பிரயோகம் ஆகியவை சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ள முடியாதவை.
</p><p>
தற்போதைய அரசு இத்தகைய ஊழல்களை விசாரிப்பதன் மூலம் மக்களின் நம்பிக்கையைப் பெற்றுள்ளது என குறிப்பிட்டார்.</p><p>

இந்த விடயங்களை ஆராய்கின்றது லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சி..&nbsp;&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/D9IttxaXdMQ" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-05T00:41:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை அரசியலை அதிர வைத்த நாமலின் கைது ; வழக்கின் முழு பின்னணி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/namal-s-arrest-shakes-sri-lankan-politics-1788568684"></link>
            <id>https://jvpnews.com/article/namal-s-arrest-shakes-sri-lankan-politics-1788568684</id>
            <summary type="text">ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷவை எதிர்வரும் செப்டம்பர் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமா...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான <a href="https://jvpnews.com/article/namal-said-important-news-before-his-arrest-1788543026" target="_blank">நாமல் ராஜபக்ஷ</a>வை எதிர்வரும் செப்டம்பர் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று (04) உத்தரவிட்டது.
</p><p style="text-align: justify; ">
 

சர்ச்சைக்குரிய எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளுக்கு அமைய வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்ச அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களை விசாரணை செய்யும் ஆணைக்குழுவிற்கு வருகை தந்த பின்னரே அவர் இன்று கைது செய்யப்பட்டார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a23122e1-ba5c-4c09-88bf-36a94e65b5d5/26-6a9b646e0831d.webp' /></p><h2 style="text-align: justify; ">விசாரணைகள்</h2><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
 

2013 ஆம் ஆண்டில் ஶ்ரீலங்கன் எயர்லைன்ஸ் நிறுவனத்திற்கு 14 விமானங்களை கொள்வனவு செய்த போது, 02 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலஞ்சமாகப் பெற்றதாக அன்றைய ஶ்ரீலங்கன் எயர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேன மற்றும் அவரது மனைவியான நியோமாலி விஜேநாயக்க ஆகியோர் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தன.
</p><p style="text-align: justify; ">
 

அது தொடர்பில் இலஞ்ச அல்லது ஊழல் பற்றிய சாட்டல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவினால் ஆரம்பிக்கப்பட்ட விசாரணைகளுக்கு அமைய கைது செய்யப்பட்டு, பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்ட ஶ்ரீலங்கன் எயர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேன கடந்த மே மாதம் 08 ஆம் திகதி மர்மமான முறையில் உயிரிழந்திருந்த நிலையில், அது தற்கொலை என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டிருந்தனர்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/157d6969-2380-4071-b1a7-930ceac73419/26-6a9b646eb36b9.webp' /></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
 

விமானக் கொள்வனவு தொடர்பிலான விசாரணைகள் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் பின்னணியில், இது தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ இன்று முற்பகல் இலஞ்ச அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களை விசாரணை செய்யும் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டிருந்தார்.
</p><p style="text-align: justify; ">
 

அதன்படி, இன்று (04) முற்பகல் 9.15 மணியளவில் நாமல் ராஜபக்ஷ குறித்த ஆணைக்குழுவின் முன் ஆஜரானார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
 

சுமார் ஐந்து மணித்தியாலங்கள் வாக்குமூலம் வழங்கிய பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இலஞ்ச அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டார்.

 

அதன்படி, கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார்.
</p><p style="text-align: justify; ">
 

அந்த சந்தர்ப்பத்தில் பல அரசியல் பிரதிநிதிகளும் புதுக்கடை பிரதான நீதவான் நீதிமன்றத்திற்கு வருகை தந்திருந்ததை காணக்கூடியதாக இருந்தது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">

 

அங்கு சந்தேகநபரான நாமல் ராஜபக்ஷவைக் கைது செய்தது தொடர்பில் இலஞ்ச அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களை விசாரணை செய்யும் ஆணைக்குழு சார்பில் நீதிமன்றத்தில் விடயங்களை முன்வைத்த பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டார, சர்ச்சைக்குரிய எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களமும் இலஞ்ச அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களை விசாரணை செய்யும் ஆணைக்குழுவும் இணைந்து மேற்கொண்ட கூட்டு விசாரணையின் விளைவாகவே சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாகக் குறிப்பிட்டார்.</p>]]></content>
            <updated>2026-09-05T00:38:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வைரத்தில் மின்சாரம் - ஹொங்ஹொங் விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/diamonds-found-to-generate-electricity-in-2026-1788568758"></link>
            <id>https://news.lankasri.com/article/diamonds-found-to-generate-electricity-in-2026-1788568758</id>
            <summary type="text">Scientists discover diamonds can generate electricity: வைரங்களால் மின்சாரம் தயாரிக்க முடியும் என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.வைரத்தில் மின்சாரம...</summary>
            <content type="html"><![CDATA[<p>Scientists discover diamonds can generate electricity: வைரங்களால் மின்சாரம் தயாரிக்க முடியும் என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.</p><h2>வைரத்தில் மின்சாரம்</h2><p>வைரம் (Diamond) மின்சாரம் உற்பத்தி செய்ய முடியாது என்ற நூற்றாண்டு பழைய நம்பிக்கையை ஹொங்ஹொங் பல்கலைக்கழக (HKU) விஞ்ஞானிகள் முறியடித்துள்ளனர்.
</p><p>
அவர்கள் உருவாக்கிய அதிக நெகிழ்வான, மிகச் சிறிய வைரத் தாள் (ultrathin flexible diamond membrane), வளைந்தபோது மின்சார அழுத்தத்தை (Piezoelectric Effect) உருவாக்குவதை நிரூபித்துள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4715f7bc-9334-456f-a7cf-55c6ac93f376/26-6a9b64b853690.webp' /></p><p>இந்த ஆய்வை Professor Zhiqin Chu மற்றும் Professor Yuan Lin தலைமையிலான குழு மேற்கொண்டது. வைரம், அதன் கடினத்தன்மை, வெப்பக் கடத்தல், இரசாயன நிலைத்தன்மை போன்ற காரணங்களால், இதுவரை மற்ற பொருட்களுக்கு ஆதரவாக மட்டுமே பயன்படுத்தப்பட்டது. </p><h2>வைரமே உற்பத்தி செய்யும் மின்சாரம்&nbsp;</h2><p>ஆனால் இப்போது, வைரமே மின்சாரம் (active electricity) உற்பத்தி செய்யும் பொருளாக மாறியுள்ளது.

ஆய்வாளர்கள், edge exfoliation method என்ற புதிய முறையைப் பயன்படுத்தி, வைரத்தை மிகச் சிறிய தாள்களாக வெட்டி, அதை வளைத்தபோது நிலையான மின்னழுத்தம் உருவாகுவதை கண்டறிந்தனர். </p><p>பல முறை சோதனை செய்தபோதும், ஒரே மாதிரியான மின்சார விளைவுகள் பதிவாகின.

இதற்கான காரணம், வைரத் தாளின் grain boundaries எனப்படும் சிறிய சீரற்ற பகுதிகளில் மின்சார துருவம் (charge polarization) உருவாகுவதால். இதனால் தாளின் மேல் மற்றும் கீழ் பகுதிகளில் மின்னழுத்த வேறுபாடு ஏற்படுகிறது.
</p><p></p><p>இந்த கண்டுபிடிப்பு, மருத்துவ சாதனங்கள், சிறிய மின்சார அமைப்புகள், தானாக இயங்கும் சென்சார்கள் போன்ற துறைகளில் புரட்சியை ஏற்படுத்தும். வைரம், உடலுக்கு பாதிப்பு இல்லாதது, இரசாயன ரீதியாக நிலையானது, நச்சுத்தன்மை இல்லாதது என்பதால், உடலுக்குள் பொருத்தப்படும் மருத்துவ சாதனங்களுக்கு (Implants) சிறந்த தேர்வாகும்.
</p><p>
இனி, வைரம் செயல் மின்சாரம் உற்பத்தி செய்யும் பொருளாக உலகின் மிக நம்பகமான, நீடித்த, பாதுகாப்பான தொழில்நுட்பங்களில் ஒன்றாக மாறும் வாய்ப்பு உள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-05T00:36:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாமல் கைது.. மீண்டும் களமிறங்கும் மகிந்த - ராஜபக்ச அரசியலில் புதிய திருப்பம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/mahinda-decides-to-re-enter-active-politics-1788568091"></link>
            <id>https://tamilwin.com/article/mahinda-decides-to-re-enter-active-politics-1788568091</id>
            <summary type="text">முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, மீண்டும் செயற்பாட்டு அரசியலில் இறங்கத் தீர்மானித்துள்ளதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஸ்ரீ லங...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, மீண்டும் செயற்பாட்டு அரசியலில் இறங்கத் தீர்மானித்துள்ளதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
</p><p>
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுண கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச உள்ளிட்ட ராஜபக்ச தரப்பு அரசியல்வாதிகள் பலர் அ ண்மைக்காலமாக வழக்குகளுக்கு முகம்கொடுக்க நேர்ந்துள்ளதுடன், விளக்கமறியல் உத்தரவுகளையும் எதிர்கொண்டுள்ளனர்.</p><h2>மீண்டும் மகிந்த</h2><p>
</p><p>
இவ்வாறான நிலையில் எதிர்வரும் 2029ம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு கட்சி மேற்கொள்ள எதிர்பார்த்துள்ள அரசியல் செயற்பாடுகளில் சில தடங்கல்கள் ஏற்பட்டுள்ளது.
</p><p>
அதன் காரணமாக சிறிது காலமாக அரசியல் செயற்பாடுகளை விட்டும் ஒதுங்கியிருந்த முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுணவின் தலைவர் என்ற ரீதியில் மீண்டும் செயற்பாட்டு அரசியலில் களமிறங்கத் தீர்மானித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5a99636b-abd5-4d8a-b471-8c284e0853ab/26-6a9b63cd198bb.webp' /></p><p>
அதன் முதற்கட்டமாக எதிர்வரும் 12ம் திகதி அநுராதபுரத்தில் நடைபெறவுள்ள கட்சியின் முதலாவது மக்கள் போராட்ட பேரணிக்கு அவர் தலைமை தாங்கவுள்ளதாக தெரிய வந்துள்ளது.</p><p>

முன்னதாக குறித்த பேரணி நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் தலைமையில் நடைபெற ஏற்பாடாகி இருந்த நிலைமையில், இலஞ்ச வழக்கொன்றில் தற்போதைக்கு நாமல் ராஜபக்ச விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
</p><p>
அவ்வாறான பின்னணியில் அநுராதபுர பேரணி தொடக்கம் எதிர்வரும் 2029ம் ஆண்டுக்கான ஜனாதிபதித் தேர்தல் வரையான கட்சியின் செயற்பாடுகளை தலைமையேற்று முன்கொண்டு செல்ல மகிந்த ராஜபக்ச தீர்மானித்துள்ளார்.</p><p></p><p></p><p><br><br><b><i>you may like this..<br></i></b></p><p><b><i><br><br><br></i></b><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/kLhfyZi69CA" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><i><br></i></b></p>]]></content>
            <updated>2026-09-05T00:35:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[அழிவின் விளிம்பில் இங்கிலாந்து ; ட்ரம்ப் விடுத்துள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/england-on-the-brink-of-ruin-trump-warns-1788568080"></link>
            <id>https://canadamirror.com/article/england-on-the-brink-of-ruin-trump-warns-1788568080</id>
            <summary type="text">வல்லரசு நாடுகளில் ஒன்றான இங்கிலாந்து, சமீபகாலமாக பல்வேறு உள்நாட்டுப் பிரச்சினைகளைச் சந்தித்து வருகிறது. குறிப்பாக, அங்குள்ள தற்போதைய அரசியல் மற்றும் ப...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">வல்லரசு நாடுகளில் ஒன்றான இங்கிலாந்து, சமீபகாலமாக பல்வேறு உள்நாட்டுப் பிரச்சினைகளைச் சந்தித்து வருகிறது. </p><p style="text-align: justify; ">குறிப்பாக, அங்குள்ள தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதாரச் சூழல்கள் உலக நாடுகளின் கவலையை அதிகரித்துள்ளன.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/db9d8b8c-f02c-45ce-9659-c1dbc3bed992/26-6a9b6212694aa.webp' /></p><p style="text-align: justify; ">


</p><p style="text-align: justify; ">
இந்தச் சூழ்நிலையில், இங்கிலாந்தின் பிரதமர் ஆண்டி பர்ன்ஹாம் தலைமையிலான அரசு கடுமையான நெருக்கடிகளைச் சந்தித்து வருவதாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.</p><p style="text-align: justify; ">


இங்கிலாந்தில் உயர்ந்து வரும் மின்சாரக் கட்டணம், பசுமை ஆற்றல் கொள்கைகள் மற்றும் உலகெங்கிலும் இருந்து எல்லையைக் கடந்து வரும் சட்டவிரோதக் குடியேற்றங்கள் ஆகியவை அந்த நாட்டைப் பேரழிவின் விளிம்பிற்குத் தள்ளியுள்ளதாக அவர் எச்சரித்துள்ளார்.</p><p style="text-align: justify; "> மேலும் இயற்கை எரிவாயு மற்றும் எண்ணெய் வளங்களைப் பயன்படுத்தாமல், இங்கிலாந்து தன் பொருளாதாரத்தை அழித்துக் கொள்வதாகவும் டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.</p>]]></content>
            <updated>2026-09-05T00:28:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெலிகம W15 ஹோட்டல் துப்பாக்கிச் சூடு! தேசபந்து உள்ளிட்ட 08 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/chargesheet-against-deshabandu-tennakoon-1788566512"></link>
            <id>https://ibctamil.com/article/chargesheet-against-deshabandu-tennakoon-1788566512</id>
            <summary type="text">
கடந்த 2023-ஆம் ஆண்டு வெலிகம W15 ஹோட்டலில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பாக, முன்னாள் காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோன் உள்ளிட்ட ...</summary>
            <content type="html"><![CDATA[<p>
கடந்த 2023-ஆம் ஆண்டு வெலிகம W15 ஹோட்டலில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பாக, முன்னாள் காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோன் உள்ளிட்ட 8 பேருக்கு எதிராக மாத்தறை மேல் நீதிமன்றத்தில் சட்டமா அதிபர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளார்.</p><p>

2023 டிசம்பர் 30 அன்று இரவு, கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவைச் சேர்ந்த 8 அதிகாரிகள் கொண்ட குழுவினர் விசேட நடவடிக்கையொன்றுக்காக வானில் வெலிகம பகுதிக்குச் சென்று இந்தத் துப்பாக்கிச் சூட்டைச் நடத்தினர்.
</p><p>
அதன்போது, இவர்களுடன் சென்ற காவல்துறை சார்ஜன்ட் உபுல் சமிந்த குமார, வெலிகம காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்திருந்தார்.</p><p></p><h2>08 சந்தேகநபர்கள்&nbsp;</h2><p>
</p><p>
இச்சம்பவம் தொடர்பாக தேசபந்து தென்னகோன் உட்பட 8 பேரைக் கைது செய்து சந்தேகநபர்களாகப் பெயரிடுமாறு மாத்தறை நீதிவான் நீதிமன்றம் முன்னதாக உத்தரவிட்டிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4e20e614-be63-479e-a647-bc5353be7935/26-6a9b61d21c091.webp' /></p><p>

இதன்படி தேசபந்து தென்னகோன், கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் அன்றைய பொறுப்பதிகாரி அன்ஸலம் டி சில்வா, காவல்துறை பரிசோதகர்களான மகேஷ் தனுசிங்க, ஜகத் நிஷாந்த, உப பொலிஸ் பரிசோதகர் ரொஷான் மதுரங்க, பொலிஸ் சார்ஜன்ட் பிரசன்ன குமார, காவல்துறை கொன்ஸ்டபிள்களான சுபுன் பிரியஷான் மற்றும் சாரதி கிஹான் பியதிஸ்ஸ ஆகியோர் முதற்கட்டமாகச் சந்தேகநபர்களாகப் பெயரிடப்பட்டனர்.
</p><p>
பின்னர், கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் பதில் பணிப்பாளராகச் செயற்பட்ட உதவி காவல்துறை அத்தியாட்சகர் நெவில் சில்வாவும் நீதிமன்றத்தில் முன்னிலையானதை அடுத்து, இவ்வழக்கின் 9 ஆவது சந்தேகநபராக பெயரிடப்பட்டார்.</p><h2>காவல்துறை மா அதிபர் பதவி</h2><p>

இந்தத் துப்பாக்கிச் சூடு, நீதிமன்ற உத்தரவைப் புறக்கணித்து தலைமறைவாக இருந்தமை மற்றும் 2022 மே 9 வன்முறைகளைத் தடுக்கத் தவறியமை உள்ளிட்ட 23 குற்றச்சாட்டுகள் குறித்து சபாநாயகரால் நியமிக்கப்பட்ட விசேட நாடாளுமன்றக் குழு விசாரணை நடத்தியது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7b186b0c-9d9a-491a-b7c5-688e3bbdef85/26-6a9b61d2c951a.webp' /></p><p>இதில் 19 குற்றச்சாட்டுகளில் தேசபந்து தென்னகோன் குற்றவாளியாகக் கண்டறியப்பட்டதை அடுத்து, நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட பிரேரணை மீதான வாக்கெடுப்பில் 177 ஆதரவு வாக்குகளுடன், 2025 ஓகஸ்ட் 5 அன்று அவர் காவல்துறை மா அதிபர் பதவியிலிருந்து அதிகாரப்பூர்வமாக நீக்கப்பட்டார்.
</p><p>
அனுமதியின்றி அதிகாரிகளை வெலிகமவுக்கு அனுப்பி துப்பாக்கிச் சூடு நடத்தச் சதித்திட்டம் தீட்டியமை மற்றும் விசாரணைகளைத் திசைதிருப்ப முயன்றமை போன்ற குற்றச்சாட்டுகளுக்காகத் தேசபந்து தென்னகோன் ஏற்கனவே கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு, பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-05T00:27:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதிரடியாக கைதான நாமல் - பொதுஜன பெரமுண முக்கியஸ்தர்களின் அவசர ஒன்று கூடல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/urgent-meeting-of-podujana-peramuna-key-figures-1788567108"></link>
            <id>https://tamilwin.com/article/urgent-meeting-of-podujana-peramuna-key-figures-1788567108</id>
            <summary type="text">ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுண (மொட்டுக்) கட்சியின் முக்கியஸ்தர்கள் அவசர ஒன்றுகூடல் ஒன்றுக்காக கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

பொதுஜன பெரமுண கட்சியின் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுண (மொட்டுக்) கட்சியின் முக்கியஸ்தர்கள் அவசர ஒன்றுகூடல் ஒன்றுக்காக கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
</p><p>
பொதுஜன பெரமுண கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச இலஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலுக்கு அனுப்பப்பட்டுள்ளார்.</p><h2>அவசர ஒன்று கூடல்</h2><p>
</p><p>
இதற்கிடையே மொட்டுக் கட்சியின் ஏற்பாட்டில் எதிர்வரும் 12ம் திகதி அநுராதபுரம் நகரில் மக்கள் போராட்டம் (ஜன சடன) என்ற பெயரில் அரசாங்கத்துக்கு எதிராக மாபெரும் பேரணியொன்று நடைபெற ஏற்பாடாகி உள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7956ad61-7dca-4132-ab78-004c6311a581/26-6a9b5ff82aaae.webp' /></p><p>
</p><p>
இவ்வாறான நிலையில் நாமல் ராஜபக்சவின் கைது விவகாரத்தை எதிர்கொள்வது மற்றும் அநுராதபுர பேரணியை வெற்றிகரமாக நடத்துவது உள்ளிட்ட முக்கிய விடயங்களை கலந்துரையாடுவதற்காக பொதுஜன பெரமுண கட்சியின் முக்கியஸ்தர்கள் அவசரமாக கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
</p><p>
கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் அதற்கான அழைப்பை விடுத்துள்ளார்.
</p><p>
பத்தரமுல்லை , நெளும் மாவத்தையில் அமைந்துள்ள பொதுஜன பெரமுண கட்சியின் தலைமையகத்தில் இன்று(5) முற்பகல் மேற்குறித்த விடயங்கள் தொடர்பில் கட்சி முக்கியஸ்தர்களின் முக்கிய கலந்துரையாடல் ஒன்று நடைபெறவுள்ளதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-05T00:19:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[குற்றவாளியின் கோப்புகள் மாயம் ; தாய்லாந்திற்குத் தப்பியோடிய நீதிமன்ற அதிகாரி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/criminal-files-vanish-court-official-flees-1788567144"></link>
            <id>https://jvpnews.com/article/criminal-files-vanish-court-official-flees-1788567144</id>
            <summary type="text">ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் குற்றவாளியும் போதைப்பொருள் கடத்தல்காரருமான சலிந்து மல்சித குணரத்ன எனப்படும் &#039;குடு சளிந்து&#039;வுக்கு எதிராக ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் குற்றவாளியும் போதைப்பொருள் கடத்தல்காரருமான சலிந்து மல்சித குணரத்ன எனப்படும் 'குடு சளிந்து'வுக்கு எதிராக பாணந்துறை நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த இரண்டு வழக்குக் கோப்புகள் காணாமல்போன சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டதை அடுத்து, அந்த நீதிமன்றத்தின் பிஸ்கல் மற்றும் அழைப்பாணைகளுக்கான பொறுப்பு அதிகாரியாகக் கடமையாற்றிய அதிகாரி வெளிநாட்டிற்குத் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p style="text-align: justify; ">
 

குறிப்பிட்ட வழக்குக் கோப்புகள் காணாமல்போனமை தொடர்பாக பானந்துறை நீதவான் நீதிமன்றப் பதிவாளர் கடந்த 1 ஆம் திகதி பாணந்துறை தெற்கு தலைமையகப் பொலிஸில் முறைப்பாடு செய்தார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ab577e73-47e1-479e-b2df-cac5cce2d42c/26-6a9b5e6a2a1d0.webp' /></p><h2 style="text-align: justify; ">10 பேரிடம் வாக்குமூலம்</h2><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
 

அத்துடன், குறித்த சம்பவம் தொடர்பில் 'பி' அறிக்கையின் ஊடாக நீதிமன்றத்திற்கு விடயங்களைஅறிக்கை செய்த பின்னர், பாணந்துறை குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.</p><p style="text-align: justify; ">
 

எனினும், நீதிமன்றப் பதிவாளர் பொலிஸில் முறைப்பாடு செய்த மறுநாளே, அதாவது செப்டம்பர் 2 ஆம் திகதியன்றே குறித்த அதிகாரி தாய்லாந்து நோக்கிப் புறப்பட்டுச் சென்றுள்ளதாகக் தெரியவந்துள்ளது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">

 

'குடு சளிந்து'வின் நெறிப்படுத்தலில் பாணந்துறை வடக்கு பகுதியில் இடம்பெற்ற மனிதக் கொலை தொடர்பான வழக்குக் கோப்பு ஒன்றும், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் பணச்சலவைச் சட்டத்தின் கீழ் தொடரப்பட்டிருந்த வழக்கு தொடர்பான கோப்பு ஒன்றுமே இவ்வாறு காணாமல்போயுள்ளன.
</p><p style="text-align: justify; ">
 

இச்சம்பவம் தொடர்பில் பாணந்துறை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இதுவரை பாணந்துறை நீதிமன்றத்தில் கடமையாற்றும் 07 பெண் ஊழியர்கள் உட்பட 10 பேரிடம் வாக்குமூலங்களைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-05T00:12:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[கைதாகியும் கைவிலங்குடன் சிரித்தபடி சிறை சென்ற நாமல்! கைதாவதை முன்கூட்டியே அறிந்தது எப்படி..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-rajapaksa-arrested-1788566415"></link>
            <id>https://tamilwin.com/article/namal-rajapaksa-arrested-1788566415</id>
            <summary type="text">தான் கைது செய்யப்படலாம் என்று நாமல் ராஜபக்ச முன்பே கூறியிருந்த நிலையில், அவர் கைது செய்யப்பட்டு செப்டம்பர் 18-ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>தான் கைது செய்யப்படலாம் என்று நாமல் ராஜபக்ச முன்பே கூறியிருந்த நிலையில், அவர் கைது செய்யப்பட்டு செப்டம்பர் 18-ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமையானது தற்போது பேசுபொருளாகியுள்ளது.
</p><p>
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான கொள்முதல் பரிவர்த்தனைகளுடன் தொடர்புடைய விடயத்திலே இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
</p><p>
இதில் சுமார் 1.4 மில்லியன் யூரோக்களுக்கு மேலான இலஞ்சப் பணம் வெளிநாட்டு வங்கிக் கணக்குகள் மற்றும் உள்ளூர் நிறுவனங்கள் மூலம் பரிமாற்றம் செய்யப்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
</p><p>
பிரான்ஸ் நாட்டு ஏர்பஸ் (Airbus) நிறுவன அதிகாரிகளின் வாக்குமூலங்கள் மற்றும் ஆவணங்களின் அடிப்படையில் இந்த விசாரணை நடத்தப்பட்டுள்ளது.</p><p> 

கடந்த காலங்களில் கபில சந்திரசேன சம்பந்தப்பட்ட வழக்குகள் குறித்தும் இதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
</p><p>

இந்தநிலையில் அதற்கு முன்னதாகவும் நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டுள்ளார், ஆனால் அப்போதைய நிலை தற்போது மாற்றமடைந்துள்ளதை காண முடிகின்றது.
</p><p>
அதே சமயம் நாமல் ராஜபக்ச காலையிலிருந்து அமைதியான மற்றும் புன்னகைத்த முகபாவனையுடனேயே காணப்பட்டார்.</p><p>

இந்த விடயங்கள் தற்போது இலங்கை அரசியலில் பேசுபோருளாகியுள்ள நிலையில், விரிவான விளக்கங்களை எடுத்து வருகின்றது NewsInsightTamil நிகழ்ச்சி...</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/cqqPn-TnFso" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-05T00:02:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[சூடானில் கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் 21 பேர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/rebel-attack-in-sudan-kills-21-people-1788566157"></link>
            <id>https://canadamirror.com/article/rebel-attack-in-sudan-kills-21-people-1788566157</id>
            <summary type="text">வடக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு சூடான்.&amp;nbsp;சூடானில் கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் 21 பேர் உயிரிழந்தனர்.&amp;nbsp; சூடானின் தெற்கு கார்டோப...</summary>
            <content type="html"><![CDATA[<p>வடக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு சூடான்.&nbsp;</p><p>சூடானில் கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் 21 பேர் உயிரிழந்தனர்.&nbsp;</p><p><br></p><p> </p><p>சூடானின் தெற்கு கார்டோபன் மாகாணம் கவ்டா அருகே உள்ள டிபி, லுவிரி ஆகிய கிராமங்களுக்குள் புகுந்த கிளர்ச்சியாளர்கள் பொதுமக்கள் மீது சரமாரி தாக்குதல் நடத்தினர்.</p><p>இந்த தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உள்பட 21 பேர் உயிரிழந்தனர்.</p><p> இந்த தாக்குதல் குறித்து தகவலறிந்த பாதுகாப்புப்படையினர் விரைந்து சென்று சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-04T23:56:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[2026-இல் உலகின் போட்டித்திறன் மிகுந்த பொருளாதாரங்கள் - சிங்கப்பூர் முதலிடம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/singapore-tops-2026-global-competitiveness-ranking-1788564479"></link>
            <id>https://news.lankasri.com/article/singapore-tops-2026-global-competitiveness-ranking-1788564479</id>
            <summary type="text">Singapore tops 2026 global competitiveness ranking: 2026 இல் உலகின் போட்டித்திறன் மிகுந்த பொருளாதாரங்களின் தரவரிசையை இங்கே பார்க்கலாம்.

சிங்கப்பூர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>Singapore tops 2026 global competitiveness ranking: 2026 இல் உலகின் போட்டித்திறன் மிகுந்த பொருளாதாரங்களின் தரவரிசையை இங்கே பார்க்கலாம்.</p><h2>

சிங்கப்பூர்&nbsp;முதலிடம்</h2><p>சிங்கப்பூர், 2026-ஆம் ஆண்டிற்கான உலகின் மிகப் போட்டித்திறன் வாய்ந்த பொருளாதாரமாக (Most Competitive Economy) தேர்வாகியுள்ளது.</p><p>

IMD World Competitiveness Ranking வெளியிட்ட பட்டியலில், சிங்கப்பூர் 100 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/259fa4da-2bc6-4880-9f49-4af2a4662953/26-6a9b560c0ea16.webp' /></p><p>இரண்டாம் இடத்தில் ஹொங்ஹொங் (95.6), மூன்றாம் இடத்தில் சுவிட்சர்லாந்து (95.3), நான்காம் இடத்தில் தைவான் (94.3), ஐந்தாம் இடத்தில் டென்மார்க் (94.1) ஆகியவை உள்ளன. </p><p>

தொடர்ந்து அயர்லாந்து (94.1), ஐக்கிய அரபு அமீரகம் (94.1), நெதர்லாந்து (90.1), ஸ்வீடன் (88.5) அடுத்ததடுத்த இடங்கைப் பிடித்துள்ளன.
</p><p></p><h2>அமெரிக்கா</h2><p>அமெரிக்கா, உலகின் மிகப்பெரிய பொருளாதாரமாக இருந்தாலும், இந்த பட்டியலில் 10-வது இடத்தில் உள்ளது. இது, பொருளாதாரத்தின் அளவும் போட்டித்திறனும் ஒன்றல்ல என்பதை காட்டுகிறது.
</p><p>
முதல் 10 இடங்களில் 5 இடங்களை ஐரோப்பிய நாடுகள் பிடித்துள்ளன. இந்தியா இந்த தரவரிசையில் 44-வது இடத்தையே பிடித்துள்ளது.
</p><p>
IMD, போட்டித்திறனை மதிப்பீடு செய்ய 341 அளவுகோல்கள் பயன்படுத்துகிறது. இதில் பொருளாதார செயல்திறன், அரசின் திறன், வணிக திறன், அடிப்படை வசதிகள் ஆகிய நான்கு முக்கிய தூண்கள் அடங்கும்.
</p><p></p><p>சிங்கப்பூர், 2026-இல் வணிக திறன் (Business Efficiency) பிரிவில் முதலிடத்தைப் பெற்றதால், மொத்தத்தில் மீண்டும் உலகின் முதலிடத்தை கைப்பற்றியுள்ளது.

ஐரோப்பா மற்றும் ஆசியா இணைந்து 10 இடங்களில் 9 இடங்களை பிடித்துள்ளன. காரணம், திறமையான தொழிலாளர்கள், மேம்பட்ட அடிப்படை வசதிகள், சட்டத்தின் நம்பகத்தன்மை, மற்றும் புதுமை (Innovation) ஆகியவை.
</p><p>
இந்த பட்டியலில் வியட்நாம் முதல் முறையாக இடம் பெற்றுள்ளது. ஐக்கிய அரபு அமீரகம் (UAE) 7-வது இடத்தில், சவுதி அரேபியா 13-வது இடத்தில் உள்ளது.

இந்த தரவரிசை, பொருளாதார வளர்ச்சி மட்டுமல்லாமல், நிறுவனங்களின் நீண்டகால முதலீடு மற்றும் போட்டித்திறனை உருவாக்கும் சூழ்நிலைகளையும் பிரதிபலிக்கிறது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-04T23:33:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீரிழிவு நோயாளிகளுக்கு நள்ளிரவில் பசி எடுத்தால் என்ன செய்ய வேண்டும்? இதையும் தெரிஞ்சுக்கோங்க]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/what-should-diabetics-eat-if-hungry-at-midnight-1788564264"></link>
            <id>https://jvpnews.com/article/what-should-diabetics-eat-if-hungry-at-midnight-1788564264</id>
            <summary type="text">நீரிழிவு நோயாளிகள் தங்கள் ரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க பெரும்பாலும் இரவில் குறைவாகவே சாப்பிடுவார்கள். ஆனால், இதன் விளைவாக நள்ளிரவில் ப...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">நீரிழிவு நோயாளிகள் தங்கள் ரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க பெரும்பாலும் இரவில் குறைவாகவே சாப்பிடுவார்கள்.</p><p style="text-align: justify; "> ஆனால், இதன் விளைவாக நள்ளிரவில் பசி ஏற்படுவது சகஜம். இந்த நேரத்தில் தவறான உணவை தேர்ந்தெடுத்தால் அல்லது அதிகமாக சாப்பிட்டால், ரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கும் அபாயம் உள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7db96fbe-f91c-4770-98f2-8ba9946bb973/26-6a9b532a18c7d.webp' /></p><h2 style="text-align: justify; ">ரத்த சர்க்கரை&nbsp;</h2><p style="text-align: justify; "> பசியை போக்கி, அதேசமயம் ரத்த சர்க்கரை அளவையும் பாதிக்காத உணவுகளை தேர்ந்தெடுப்பது சவாலானது. 
</p><p style="text-align: justify; ">
 
பாதாம் பருப்பில் குறைந்த கார்போஹைட்ரேட் மற்றும் அதிக நார்ச்சத்துகள் நிறைந்துள்ளன. இது ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைப் பராமரிக்க உதவும். </p><p style="text-align: justify; ">எனவே, நீங்கள் தூங்க செல்வதற்கு முன் ஒரு கைப்பிடி பாதாம் பருப்பை தாராளமாக சாப்பிடலாம். இது வயிறு நிறைந்த உணர்வையும் தரும். அதேசமயம், உங்கள் தூக்கத்தை சீர்குலைக்காமலும் பார்த்துக்கொள்ளும்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9e8439b5-ee4c-4e0f-9ca0-785694e8b3e9/26-6a9b544ece328.webp' /></p><p style="text-align: justify; "> 
தினமும் நள்ளிரவில் பசிக்கிறது என்றால், தூங்க செல்வதற்கு முன் நீங்கள் தாராளமாக வேகவைத்த முட்டையை சாப்பிடலாம்.</p><p style="text-align: justify; "> முட்டையில் கார்போஹைட்ரேட் குறைவாக இருந்தாலும், நல்ல கொழுப்புகள் மற்றும் புரதம் அதிகமாக இருப்பதால், ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">
 
அதேபோல் பாசிப்பயறு சூப் மற்றும் பனீர் போன்றவற்றை எடுத்துக்கொள்ளலாம். பாசிப்பயறு சூப்பில் சிறிதளவு நெய், சீரகம், பெருங்காயம் போன்றவற்றை சேர்த்துக்கொள்ளலாம். </p><p style="text-align: justify; ">சூப்பை வெதுவெதுப்பான சூட்டில் குடிக்க வேண்டும். 

 
மேற்கண்ட உணவுகள் நீரிழிவு நோயாளிகளின் நள்ளிரவு பசியை போக்க உதவும்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-04T23:24:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜனநாயகம் சீரழிகிறது..! அரசுக்கு எதிராக சஜித் போர்க்கொடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/country-and-democracy-being-destroyed-government-1788562996"></link>
            <id>https://tamilwin.com/article/country-and-democracy-being-destroyed-government-1788562996</id>
            <summary type="text">பாதாள உலகக் குழுக்களின் துப்பாக்கிச்சூடுகளால் தொடரும் உயிரிழப்புகள்
ஒருபுறமிருக்க, அரசின் நாசகார வேலைகளினால் நாடும், நீதிமன்றமும், ஜனநாயகமும்
சீரழிந...</summary>
            <content type="html"><![CDATA[<p>பாதாள உலகக் குழுக்களின் துப்பாக்கிச்சூடுகளால் தொடரும் உயிரிழப்புகள்
ஒருபுறமிருக்க, அரசின் நாசகார வேலைகளினால் நாடும், நீதிமன்றமும், ஜனநாயகமும்
சீரழிந்து வருகின்றன என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ
தெரிவித்தார்.
</p><p>
அம்பாந்தோட்டை திஸ்ஸமகாராம கொங்வெலான பிரதேசத்தில் விவசாயிகளின் பிரச்சினைகளை
ஆராயும் மக்கள் சந்திப்பில் நேற்று வெள்ளிக்கிழமை கலந்துகொண்டு
உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.</p><h2>22ஆவது திருத்தம்</h2><p>
</p><p>
இந்தக் கூட்டத்தில் அவர் மேலும் உரையாற்றுகையில்,</p><p>

"அரசு 22ஆவது திருத்தத்தைக் கொண்டுவந்து ஜனநாயகம், சுதந்திரமான நீதித்துறை,
சட்டத்தின் ஆட்சி மற்றும் நீதி வழங்கும் செயற்பாடுகளின் மீது பெரும் அடியைக்
கொடுத்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a2b7a26f-28c8-43f6-ae72-2b2a4b274635/26-6a9b4fb0bf875.webp' /></p><p> </p><p>நீதித்துறையின் சுதந்திரத்தில் கைவைத்து அரசு ஜனநாயகத்தை
சீரழித்து வருகின்றது.

பொருளாதாரத்தின் மீது அரசு தொடுத்த தாக்குதலால் வாழ்க்கைச் சுமை மற்றும்
செலவுகள் அதிகரித்து காணப்படுகின்றன.</p><p> மின்சாரக் கட்டணக் குறைப்பு மற்றும்
உலகளாவிய விலைக்கு எரிபொருள் வழங்குவதாகக் கூறிய வாக்குறுதிகள் எவையும்
நிறைவேற்றப்படவில்லை.</p><h2>சஜித் பிரேமதாஸ</h2><p>
</p><p>
தேர்தல் காலத்தில் அஸ்வெசும தொகை அதிகரிக்கப்படும் என்று கூறப்பட்ட போதிலும்,
தற்போது அஸ்வெசும தொகையும் பயனாளர்களின் எண்ணிக்கையும் அரசாங்கத்தினால்
குறைக்கப்பட்டு வருகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2d3bc845-e58e-4d6e-87b7-24f11702ba34/26-6a9b4fb1b5662.webp' /></p><p> </p><p>வறுமையை ஒழிப்பதற்கான காத்திரமான திட்டங்கள்
எதுவும் இவர்களிடம் இல்லை.

விவசாயிகள் விதை மற்றும் உர விலை உயர்வுடன், யானை - மனித மோதல்களுக்கு
மத்தியிலும் உற்பத்தியை மேற்கொண்டாலும் நிலையான விலை கிடைக்கவில்லை. </p><p>150 ரூபா
வாக்குறுதி மீறப்பட்டு, விவசாயிக்கு நெல் ஒரு கிலோவுக்கு 17 ரூபா நட்டம்
ஏற்படுத்தப்பட்டுள்ளது. </p><p>மேலும், நுண், சிறிய மற்றும் நடுத்தர தொழில்முனைவோர்
மீதான வரித் தாக்குதல்கள் மற்றும் பராட்டே சட்டம் காரணமாக இவர்கள் பெரிதும்
பாதிக்கப்பட்டுள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-04T23:18:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[வீழ்ச்சியடையும் ட்ரம்பின் செல்வாக்கு ! ஈரான் போர் தொடர்பில் ஜே.டி. வான்ஸ் வெளியிட்ட அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/conflict-between-us-and-iran-not-a-war-vance-1788562089"></link>
            <id>https://ibctamil.com/article/conflict-between-us-and-iran-not-a-war-vance-1788562089</id>
            <summary type="text">அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான சண்டையை ஒரு போர் என்று குறிப்பிட முடியாது என்றும், இந்த மோதல் எப்போது முடிவடையும் என்பதற்கான குறிப்பிட்ட காலக்கெடுவை ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான சண்டையை ஒரு போர் என்று குறிப்பிட முடியாது என்றும், இந்த மோதல் எப்போது முடிவடையும் என்பதற்கான குறிப்பிட்ட காலக்கெடுவை வழங்க முடியாது என்றும் அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் தெரிவித்துள்ளார்.</p><p>

இடைக்காலத் தேர்தல்கள் நெருங்கி வரும் வேளையில், இந்த மோதல் ஏழாவது மாதத்தை எட்டியுள்ளதால் ட்ரம்ப் நிர்வாகம் எதிர்கொள்ளும் சவால்களை குறைக்க அவர் இவ்வாறான கருத்துக்களை தெரிவிப்பதாக சர்வதேச வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.</p><p>

அமைதியான சூழலுக்குப் பிறகு இந்த வாரம் இரு நாடுகளுக்கும் இடையே மீண்டும் தாக்குதல்கள் தொடங்கியுள்ளன. தற்போதைக்கு அமைதியை ஏற்படுத்த எவ்வித இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளும் நடைபெறவில்லை.</p><p></p><h2>ட்ரம்பின் செல்வாக்கு</h2><p>
</p><p>
இந்தப் போர் காரணமாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் செல்வாக்கு சரிந்துள்ளதுடன், எரிபொருள் விலையும் உயர்ந்துள்ளதால் வரும் நவம்பர் தேர்தலில் குடியரசுக் கட்சிக்கு இது பெரும் சவாலாக மாறியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/88fe2280-08ad-4a69-976f-344a2e85c729/26-6a9b4e478e4a2.webp' /></p><p><i>Image Credit: CNN</i></p><p>
</p><p>இந்நிலையில், வெள்ளை மாளிகையில் பேசிய வான்ஸ், ஹோர்முஸ் நீரிணை வழியாக எண்ணெய் போக்குவரத்தை சீராக வைத்திருக்க அமெரிக்கா எடுக்கும் முயற்சிகளைப் பாராட்டினார்.</p><p> மேலும், அமெரிக்கா தனது முக்கிய ராணுவ நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டுவந்துவிட்டதால் இதை 'போர்' என்று கூற முடியாது என்றும், தற்போது தீவிரமான தாக்குதல்கள் எதுவும் நடைபெறவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><h2>மோதலின் முடிவு&nbsp;</h2><p>
</p><p>
இருப்பினும், மத்திய கிழக்கில் அமெரிக்கா 50,000-க்கும் மேற்பட்ட வீரர்களையும், 20 போர்க்கப்பல்களையும் நிலைநிறுத்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/90cfff47-7ead-4137-8527-5bb63f49902a/26-6a9b4e4850b49.webp' /></p><p><i>Image Credit:&nbsp;defensenews</i></p><p> 

வர்த்தகக் கப்பல்கள் மீதான தாக்குதலை ஈரான் நிறுத்தும் வரை இராஜதந்திர பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பில்லை என்று கூறிய வான்ஸ், இந்த மோதல் எப்போது முற்றிலுமாக முடிவுக்கு வரும் என்பதைக் கணிக்க முடியாது என்றும் தெளிவுபடுத்தியுள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-04T23:13:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[கைதுக்கு முன் நாமலுக்கு தெரிந்த இரகசியம் - 12ஆம் திகதியின் சூழ்ச்சிகள் அம்பலம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-rajapaksa-arrested-by-bribery-commission-1788554374"></link>
            <id>https://tamilwin.com/article/namal-rajapaksa-arrested-by-bribery-commission-1788554374</id>
            <summary type="text">ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச,லஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச,லஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.</p><p>

 2013-ஆம் ஆண்டில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் 'ஏர்பஸ்' (Airbus) விமானக் கொள்முதல் தொடர்பான ஊழல் மற்றும் 8 லட்சம் டொலர் லஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் அடிப்படையில் இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p><p>

செப்டம்பர் 12-ஆம் திகதி அநுராதபுரத்தில் நடைபெறவிருந்த பெரிய பேரணிக்கு முன்னதாகவே இந்தக் கைது நடந்திருப்பது அரசியல் வட்டாரங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
</p><p>
 இது போராட்டத்தை முடக்கும் முயற்சியாக ஆதரவாளர்களால் பார்க்கப்படுகிறது.
</p><p>
ஆனால் ராஜபக்ச தரப்பு போராட்டத்தை ஒரு திசைதிருப்பல் யுக்தியாகவே பயன்படுத்தியதாக விமர்சகர்கள் கூறுகின்றனர்.
</p><p>
சிறைச்சாலைக்கு வெளியே திரண்டிருந்த ஆதரவாளர்கள், ராஜபக்ச குடும்பத்தைப் பாதுகாப்பாளர்களாகச் சித்தரித்து உணர்ச்சிகரமாகத் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டனர்.</p><p>

ஊழல் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் நாமல் ராஜபக்ச உள்ளிட்டவர்களின் அரசியல் எதிர்காலம் என்னவாகும் என்பது குறித்த கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன. </p><p>

இந்த விடயங்கள் தொடர்பில் பேசுகின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி..</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/gYu0CmEyp28" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-04T23:10:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜெயிலர் நடிகை மிர்னா மேனன் சேலையில் அழகிய போட்டோஷூட்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/mirnaa-menon-cute-in-saree-1788562235"></link>
            <id>https://cineulagam.com/article/mirnaa-menon-cute-in-saree-1788562235</id>
            <summary type="text">நடிகை மிர்னா மேனன் ஜெயிலர் படத்தில் ரஜினி மருமகளாக நடித்து இருந்தவர். கேரளாவை சேர்ந்த அவர் தற்போது பிரபல நடிகையாக வளர்ந்து வருகிறார்.

மிர்னா மேனன் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நடிகை மிர்னா மேனன் ஜெயிலர் படத்தில் ரஜினி மருமகளாக நடித்து இருந்தவர். கேரளாவை சேர்ந்த அவர் தற்போது பிரபல நடிகையாக வளர்ந்து வருகிறார்.
</p><p>
மிர்னா மேனன் தற்போது அழகிய சேலையில் போஸ் கொடுத்து இருக்கும் புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.</p><p>இந்த போட்டோக்களுக்கு 50 ஆயிரம் லைக்குகளுக்கும் மேல் குவிந்து இருக்கிறது.</p>]]></content>
            <updated>2026-09-04T22:50:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[சேலையில் அழகாக வந்த ஐஸ்வர்யா லட்சுமி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/aishwarya-lekshmi-sizzling-in-saree-1788562126"></link>
            <id>https://cineulagam.com/article/aishwarya-lekshmi-sizzling-in-saree-1788562126</id>
            <summary type="text">நடிகை ஐஸ்வர்யா லட்சுமி தற்போது தமிழில் வேகமாக வளர்ந்து வரும் ஹீரோயின். சமீபத்தில் அவர் கட்டா குஸ்தி 2ல் நடித்து இருந்தார்.

ஹோம்லி லுக் மட்டுமின்றி ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நடிகை ஐஸ்வர்யா லட்சுமி தற்போது தமிழில் வேகமாக வளர்ந்து வரும் ஹீரோயின். சமீபத்தில் அவர் கட்டா குஸ்தி 2ல் நடித்து இருந்தார்.
</p><p>
ஹோம்லி லுக் மட்டுமின்றி கிளாமரிலும் ரசிகர்களை கவர்ந்து வருகிறார் ஐஸ்வர்யா லட்சுமி. அதனால் அவருக்கு அதிகம் ரசிகர்களும் இருக்கிறார்கள்.
</p><p>
தற்போது நிகழ்ச்சியில் ஐஸ்வர்யா சேலையில் அழகாக வந்த ஸ்டில்களை பாருங்க.</p>]]></content>
            <updated>2026-09-04T22:48:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிக் பாஸ் பூர்ணிமா ரவியா இப்படி.. வேற லெவல் ஹாட் போட்டோஷூட்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/bigg-boss-poornima-ravi-sizzling-glamour-1788561951"></link>
            <id>https://cineulagam.com/article/bigg-boss-poornima-ravi-sizzling-glamour-1788561951</id>
            <summary type="text">பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அதிகம் பிரபலம் ஆனவர் பூர்ணிமா ரவி. அவர் அதற்கு முன்பு Youtube வீடியோக்களில் நடித்துவந்தார். 

பிக் பாஸுக்கு பிற...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அதிகம் பிரபலம் ஆனவர் பூர்ணிமா ரவி. அவர் அதற்கு முன்பு Youtube வீடியோக்களில் நடித்துவந்தார். </p><p>

பிக் பாஸுக்கு பிறகு அவர் பட வாய்ப்புக்காக காத்திருக்கும் நிலையில், இன்ஸ்டாவில் கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு அவர் கவனத்தை ஈர்த்து வருகிறார்.</p><p>

தற்போது தாராள கவர்ச்சி உடையில் அவர் இருக்கும் லேட்டஸ்ட் ஸ்டில்களை பாருங்க.</p>]]></content>
            <updated>2026-09-04T22:45:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[கைதுக்குப் பின்னர் நாமலின் முகநூலில் வெளியான முக்கிய பதிவு..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-arrest-after-fb-post-1788538032"></link>
            <id>https://tamilwin.com/article/namal-arrest-after-fb-post-1788538032</id>
            <summary type="text"> இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணையில் கைது செய்யப்பட்டு, செப்டெம்பர் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உற...</summary>
            <content type="html"><![CDATA[<p> இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணையில் கைது செய்யப்பட்டு, செப்டெம்பர் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் முகநூல் பக்கத்தில் அவர் சார்பில் பதிவொன்று பதிவிடப்பட்டுள்ளது.
</p><p>
குறித்த பதிவில்,</p><h2>அரசியல் பழிவாங்கல்கள்</h2><p>

கடந்த இரண்டு ஆண்டுகளாக, எங்களுக்கு எதிராக தங்களிடம் ஆதாரங்கள் இருப்பதாக அவர்கள் கூறி வந்தனர். திருடப்பட்ட பணத்தை மீளப் பெற்றுக்கொண்டு, உண்மையை வெளிக்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.</p><p>

என்னைத் தொடர்புபடுத்தி ஏதேனும் ஆதாரங்கள் இருந்தால், நியாயமானதும் பாரபட்சமற்றதுமான விசாரணையை எதிர்கொள்ள நான் தயாராக இருக்கிறேன். ஏதேனும் தவறு செய்திருந்தால், அதற்குரிய சட்ட நடைமுறைகளுக்கு அமைய நடவடிக்கைகளை எதிர்கொள்ளவும் நான் தயாராக இருக்கிறேன்.</p><p><iframe src="https://www.facebook.com/plugins/post.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2FNamalSL%2Fposts%2Fpfbid02TcCpAA2u9fPZLmmc47wNT1aFyxcJEh147PMkVazPVK7ft2rZa2GqrW49bfA9ed2Gl&show_text=true&width=500" width="500" height="310" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share"></iframe></p><p>

சட்டத்தின் போர்வையைப் பயன்படுத்தி, வெறுப்பு மற்றும் அரசியல் பழிவாங்கல்கள் முன்னெடுக்கப்படக் கூடாது என்பதை நான் வலியுறுத்துகிறேன்.
</p><p>
இன்று, செப்டெம்பர் 18ஆம் திகதி வரை என்னை விளக்கமறியலில் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p>

நாளை அரசாங்கம் ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் நிறைவடையும் நிலையில், மக்கள் சந்திப்புகள் நடைபெறவுள்ளன. 

அங்கு ஜனாதிபதி மக்களுக்கு உரையாற்றவுள்ளார். </p><p>இரண்டு வருட ஆட்சிக்குப் பின்னர் உண்மையில் மக்களுக்காக என்ன செய்திருக்கிறார்கள் என்ற பல தீவிரமான கேள்விகள் எழுந்துள்ள நிலையில், இன்று இடம்பெற்ற இந்தச் சம்பவத்தைப் புறக்கணிப்பது கடினமாக உள்ளது.</p><h2>&nbsp;மாபெரும் மக்கள் பேரணி</h2><p>
</p><p>
அதேவேளை, செப்டெம்பர் 12ஆம் திகதி அனுராதபுரத்தில் நடைபெறவுள்ள எமது மாபெரும் மக்கள் பேரணியில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.
</p><p>
நான் பயப்படுவதற்கு எதுவுமில்லை.மறைத்து வைப்பதற்கும் எதுவுமில்லை. நான் ஒவ்வொரு தருணத்திலும் நம்பிய சரியான விடயங்களுக்காகவும், நான் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களுக்காகவும் தொடர்ந்து குரல் கொடுக்கும் உறுதியுடன், இந்த அனைத்து சவால்களையும் எதிர்கொள்கிறேன்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fc59b3ac-aea8-4446-8b4a-d959be46307a/26-6a9aeeb8ed3d3.webp' /></p><p>

எனது சுதந்திரத்தை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே பறிக்க முடியும். ஆனால் எனது குரலையோ, எனது நம்பிக்கைகளையோ அல்லது எனது அன்புக்குரிய தாய்நாட்டு மக்களுக்காக நான் செய்யும் அர்ப்பணிப்பையோ பறித்துக்கொள்ள முடியாது.

அரசியல் அதிகாரம் தற்காலிகமானது.</p><p>

உண்மை என்றென்றும் நிலைத்திருக்கும்.

இந்த அனைத்து சம்பவங்களும் எதற்காக, எப்போது, யாரால் மேற்கொள்ளப்பட்டன என்பதற்கு வரலாறு சாட்சியாக இருக்கும்.
</p><p>
இவை அனைத்தையும் நான் அச்சமின்றி எதிர்கொள்வேன் என குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p></p><p></p><p><b><i>You may Like This video..</i></b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/gYu0CmEyp28" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><i><br></i></b></p><p><br></p><p><b><i><br></i></b></p>]]></content>
            <updated>2026-09-04T22:45:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[நயன்தாரா வீட்டில் பி.வி சிந்து.. ஒரே சந்திப்பில் அவர்களை பற்றிய பார்வையே மாறிவிட்டது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/pv-sindhu-dinner-at-nayanthara-home-1788561578"></link>
            <id>https://cineulagam.com/article/pv-sindhu-dinner-at-nayanthara-home-1788561578</id>
            <summary type="text">நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவை தாண்டி தெலுங்கு, ஹிந்தி என மற்ற மொழிகளிலும் நடித்து வருகிறார். மற்ற மொழி பிரபலங்களும் அவருடன் நட்புடன் இருந்து வருகின்றன...</summary>
            <content type="html"><![CDATA[<p>நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவை தாண்டி தெலுங்கு, ஹிந்தி என மற்ற மொழிகளிலும் நடித்து வருகிறார். மற்ற மொழி பிரபலங்களும் அவருடன் நட்புடன் இருந்து வருகின்றனர்.</p><p>அப்படி பிரபல பாட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து தற்போது நயன்தாராவின் வீட்டுக்கு வந்திருக்கிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dfb32bf8-7e2a-46c6-93b0-85a10fda4bd1/26-6a9b48ac3a59c.webp' /></p><h2>நெகிழ்ச்சியான பதிவு </h2><p>
நயன்தாரா வீட்டுக்கு வந்தது பற்றி பதிவிட்ட பிவி சிந்து, "அழகான மாலை. அருமையான உணவு. மனம் திறந்த உரையாடல்களும் முடிவில்லாத சிரிப்பும்.
</p><p>ஒரே ஒரு டின்னர் அவர்களை பற்றிய பார்வையே மாற்றிவிட்டது. நண்பர்களாக உள்ளே வந்து, வாழ்க்கை, அன்பு என அனைத்தும் பேசி, போகும்போது ஒருவரை ஒருவர் நீண்ட காலம் அறிந்தது போல செல்வீர்கள்.
</p><p>சென்னை எனக்கு வீடு போல. இந்த நாளுக்கு பின், எனக்கு இன்னொரு சிறிய குடும்பம் இங்கே காத்திருக்கிறது. விக்கி மற்றும் நயன், இருவரும் மிக அன்பானவர்கள்.

இவ்வாறு பிவி சிந்து பதிவிட்டு இருக்கிறார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-04T22:39:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[உக்ரைனிய பாதுகாப்பு தலைமையகத்தையே தாக்கிய ரஷ்யா! ஜெலென்ஸ்கியின் அதிரடி அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/russian-drone-attack-on-ukrainian-sbu-headquarters-1788560045"></link>
            <id>https://ibctamil.com/article/russian-drone-attack-on-ukrainian-sbu-headquarters-1788560045</id>
            <summary type="text">
உக்ரைன் தலைநகர் கீவ்வில் உள்ள உக்ரைனிய பாதுகாப்பு சேவையின் (SBU) தலைமையகத்தின் மீது ரஷ்ய ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கி...</summary>
            <content type="html"><![CDATA[<p>
உக்ரைன் தலைநகர் கீவ்வில் உள்ள உக்ரைனிய பாதுகாப்பு சேவையின் (SBU) தலைமையகத்தின் மீது ரஷ்ய ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
</p><p>
உக்ரைன் மீதான வான்வழித் தாக்குதல்களை ரஷ்யா தீவிரப்படுத்தியுள்ள நிலையில், உக்ரைனில் இலக்கு வைக்கப்பட்ட மிக உயர்மட்ட மையங்களில் ஒன்றாக இது கருதப்படுகிறது. </p><p>இந்தச் சம்பவத்தில் சுமார் 12 பேர் காயமடைந்துள்ளதாக நகரின் மேயர் தெரிவித்துள்ளார்.</p><p>&nbsp;</p><h2>தகுந்த பதிலடி &nbsp;</h2><p>
</p><p>
தலைநகரை நோக்கிய ரஷ்யாவின் வான்வழித் தாக்குதல்கள் தொடர்ந்து 10 நாட்களாக நீடித்து வரும் நிலையில், இந்தத் தாக்குதலை போரின் பாரிய தீவிரமடைதல் என்று கூறியுள்ள உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி இதற்குப் பதிலடி கொடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d7782a10-34e4-4e8c-b6be-89f49248cd14/26-6a9b47089533f.webp' /></p><p><i>Image Credit: rollingstone</i></p><p>
</p><p>
அதன்போது, “இதற்கு தகுந்த, உறுதியான மற்றும் சாத்தியமான இடங்களில் இந்தத் தாக்குதலுக்கு நிகரான பதிலடி கொடுக்க உத்தரவிட்டுள்ளேன்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>

மேலும், “ரஷ்ய தாக்குதல்களுக்கு நாம் அளிக்கப்போகும் தீவிர பதிலடிக்கான ஆயத்தங்கள் குறித்து (SBU) தலைவர் ஒலெக்சாண்டர் போக்லாட் அறிக்கை அளித்துள்ளார்” எனவும் ஜெலென்ஸ்கி கூறியுள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-04T22:32:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாமல் கைது அரசின் இயலாமையையே காட்டுகின்றது : முஜிபுர் ரஹ்மான் விமர்சனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-arrest-exposes-government-s-incompetence-1788558205"></link>
            <id>https://tamilwin.com/article/namal-arrest-exposes-government-s-incompetence-1788558205</id>
            <summary type="text">நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழு கைது
செய்ததன் மூலம், அரசு தனது இயலாமையை மறைக்க முற்படுகின்றது என்று ஐக்கிய
மக்கள...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழு கைது
செய்ததன் மூலம், அரசு தனது இயலாமையை மறைக்க முற்படுகின்றது என்று ஐக்கிய
மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.
</p><p>
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் குறிப்பிடுகையில்,</p><h2>நாமல் கைது</h2><p>
</p><p>
"யார் தவறு செய்திருந்தாலும் அது குறித்து விசாரணை நடத்திச் சட்டரீதியாக
நடவடிக்கை எடுப்பதற்கு நாங்கள் ஒருபோதும் எதிரானவர்கள் அல்லர்.</p><p>

அரசுக்கு எதிராகச் செயற்படுபவர்கள் மீது மட்டுமே இலஞ்ச, ஊழல் விசாரணை
ஆணைக்குழு தொடர்ச்சியாக விசாரணைகளை நடத்தி கைது நடவடிக்கைகளில் ஈடுபட்டு
வருகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7cf93668-0831-4b1e-b192-aab4bce1ee44/26-6a9b3cfad4efc.webp' /></p><p> </p><p>மாறாக, துறைமுகத்தில் இருந்து 300 க்கும் மேற்பட்ட கொள்கலன்கள்
விடுவிக்கப்பட்டமை மற்றும் தரம் குறைந்த நிலக்கரி இறக்குமதி போன்ற அரசாங்க
தரப்பினர் மீதான முறப்பாடுகள் குறித்து எந்த விசாரணையும் இடம்பெறுவதில்லை.</p><h2>முஜிபுர் ரஹ்மான் விமர்சனம்</h2><p>
</p><p>
அடுத்த வாரம் அநுராதபுரத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியினர் மக்கள்
கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ள நிலையில், நாமல் ராஜபக்சவின் இந்தைக் கைது
அந்தக் கூட்டத்துக்குப் போதுமான இலவசப் பிரசாரத்தையே வழங்கி இருக்கின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/016f8683-a592-41ee-9e3e-b9c433e214a4/26-6a9b3cfbad437.webp' /></p><p>

மக்களுக்குச் செய்ய வேண்டிய பல முக்கியமான விடயங்களை மறந்துவிட்டு,
எதிர்க்கட்சியினரைக் கைது செய்து சிறையில் அடைப்பதற்கே அரசு முன்னுரிமை
அளித்து வருகின்றது. இதன் மூலம் தனது இயலாமையை மறைக்கவே அரசு
முயற்சிக்கின்றது என குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-04T22:25:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாங்கள் தாக்குதல் நடத்தமாட்டோம் - ரஷ்யாவுடன் தற்காலிக போர்நிறுத்தத்தை முன்மொழிந்த ஜெலென்ஸ்கி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/zelensky-proposes-ceasefire-us-envoys-visit-1788555596"></link>
            <id>https://news.lankasri.com/article/zelensky-proposes-ceasefire-us-envoys-visit-1788555596</id>
            <summary type="text">Zelensky proposes ceasefire amid US envoys visit: ரஷ்யாவுடன் போர் நிறுத்தம் செய்ய ஜெலென்ஸ்கி முன்மொழிந்துள்ளார்.தற்காலிக&amp;nbsp;போர்நிறுத்தம்உக்ரைன் ஜனா...</summary>
            <content type="html"><![CDATA[<p>Zelensky proposes ceasefire amid US envoys visit: ரஷ்யாவுடன் போர் நிறுத்தம் செய்ய ஜெலென்ஸ்கி முன்மொழிந்துள்ளார்.</p><h2>தற்காலிக&nbsp;போர்நிறுத்தம்</h2><p>உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, ரஷ்யாவுடன் தற்காலிக போர்நிறுத்த ஒப்பந்தம் (Ceasefire) செய்ய முன்மொழிந்துள்ளார்.
</p><p>
காரணம், அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்பின் தூதர்கள் ஜாரெட் குஷ்னர் மற்றும் ஸ்டீவ் விட்காஃப் வார இறுதியில் ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் செல்ல உள்ளனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/79b8dc65-1b9c-4d4e-b64a-875783765bb5/26-6a9b31cf11139.webp' /></p><p>ஜெலென்ஸ்கி, “அவர்களின் பயணத்தின் போது எங்கள் பக்கம் வான்வழி தாக்குதல் இருக்காது. அதேபோல் ரஷ்யாவும் தாக்குதலை நிறுத்த வேண்டும். இதனால் பேச்சுவார்த்தைகள் நடைபெற வழி ஏற்படும்” என்று தெரிவித்துள்ளார்.</p><p>

ரஷ்யா, உக்ரைன் உளவுத்துறை தலைமையகத்தை குறிவைத்து நடத்திய தாக்குதலுக்குப் பிறகு இந்த அறிவிப்பு வந்தது. அந்த தாக்குதல், உளவுத்துறை தலைவரின் அலுவலகத்தை நேரடியாக குறிவைத்ததாக ஜெலன்ஸ்கி கூறினார்.
</p><p></p><p>அமெரிக்க தூதர்கள், மாஸ்கோவில் சனிக்கிழமையும், கீவ் நகரில் ஞாயிற்றுக்கிழமையும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். இது, ரஷ்யா-உக்ரைன் போருக்கு முடிவு காணும் முயற்சியாகக் கருதப்படுகிறது.
</p><p>
ஜெலென்ஸ்கி, “நாங்கள் ரஷ்யாவுக்காக அல்ல, தூதர்களின் பாதுகாப்புக்காக கவலைப்படுகிறோம். இந்த போரை முடிவுக்கு கொண்டுவர உண்மையான வாய்ப்புகள் தேவை” என்று குறிப்பிட்டார்.
</p><p></p><p>கடந்த சில நாட்களாக ரஷ்யா, கீவ் மற்றும் பிற நகரங்களில் பகல் நேர தாக்குதல்களை அதிகரித்துள்ளது. ஓடெசா பகுதியில் நடந்த தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார்; ஐந்து பேர் காயமடைந்தனர். ட்னிப்ரோவில் நடந்த தாக்குதலில் இரண்டு பொலிஸ் அதிகாரிகள் உயிரிழந்தனர்.
</p><p>
இந்த சூழ்நிலையில், அமெரிக்க தூதர்களின் பயணம், போருக்கு முடிவு காணும் முக்கிய அரசியல் முயற்சி எனக் கருதப்படுகிறது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-04T22:24:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தேயிலைத் தோட்டத்தில் பெண் தொழிலாளிக்கு சிறுத்தையால் நேர்ந்த கதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/leopard-attacks-woman-tea-worker-1788560663"></link>
            <id>https://jvpnews.com/article/leopard-attacks-woman-tea-worker-1788560663</id>
            <summary type="text">தேயிலைத் தோட்டத்தில் கொழுந்து கொய்து கொண்டிருந்த பெண் தொழிலாளியொருவர், சிறுத்தை தாக்குதலுக்கு இலக்காகி, காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">தேயிலைத் தோட்டத்தில் கொழுந்து கொய்து கொண்டிருந்த பெண் தொழிலாளியொருவர், சிறுத்தை தாக்குதலுக்கு இலக்காகி, காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p><p style="text-align: justify; "> 

பொகவந்தலாவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெரேசியா தோட்டத்திலேயே வெள்ளிக்கிழமை (04) இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/08b1480c-f8b3-46bd-8501-9714ef8a90bc/26-6a9b4518cec6b.webp' /></p><h2 style="text-align: justify; ">மேலதிக சிகிச்சை</h2><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
சிறுத்தை தாக்கியதில் காயமடைந்த பெண் தொழிலாளி, பொகவந்தலாவை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பிறகு, மேலதிக சிகிச்சைக்காக கிளங்கன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். </p><p style="text-align: justify; ">

குறித்த பெண் தொழிலாளி கொழுந்து கொய்துகொண்டிருக்கையில் புதருக்குள் இருந்து திடீரென பாய்ந்த பெரிய அளவிலான சிறுத்தை ஒன்று அப்பெண்ணின் கழுத்து மற்றும் கைப் பகுதியில் தாக்கியுள்ளது. 

</p><p style="text-align: justify; ">சிறுத்தையின் தாக்குதலால் அப்பெண் நிலத்தில் விழுந்த நிலையில், அருகிலிருந்த ஏனைய தோட்டத் தொழிலாளர்கள் கூச்சலிட்டதை அடுத்து சிறுத்தை அங்கிருந்து தப்பி ஓடியுள்ளது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
தோட்டத் தொழிலாளர்கள் வளர்ப்பு நாய்களைத் தேயிலைத் தோட்டங்களுக்கு அழைத்துச் செல்வதால், அந்நாய்களை இரையாக்கிக் கொள்ளவே சிறுத்தைகள் அப்பகுதிக்கு வருகின்றன என வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.</p><p style="text-align: justify; ">

நாய்களை வேட்டையாட முயலும் போது ஏற்படும் தடைகள் காரணமாகவே, அருகில் இருக்கும் மனிதர்கள் மீது சிறுத்தைகள் தாக்குதல் நடத்திவிட்டுத் தப்பிச் செல்வதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-04T22:24:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாள அனர்த்தம் ; 9 நாட்களின் பின் மண்ணுக்குள் இருந்து உயிருடன் மீட்கப்பட்ட இருவர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/two-rescued-alive-after-9-day-burial-struggle-1788559659"></link>
            <id>https://canadamirror.com/article/two-rescued-alive-after-9-day-burial-struggle-1788559659</id>
            <summary type="text">நேபாளத்தில் பனிப்பாறை மற்றும் சேறு சரிவு ஏற்பட்டு 9 நாட்களுக்குப் பிறகு, மேல் திரிசூலி 3A நீர்மின் நிலையச் சுரங்கப்பாதையில் சிக்கியிருந்த (சஞ்சய் சா )...</summary>
            <content type="html"><![CDATA[<p>நேபாளத்தில் பனிப்பாறை மற்றும் சேறு சரிவு ஏற்பட்டு 9 நாட்களுக்குப் பிறகு, மேல் திரிசூலி 3A நீர்மின் நிலையச் சுரங்கப்பாதையில் சிக்கியிருந்த (சஞ்சய் சா )மற்றும் (கபீர் மகர்ஜன் )ஆகிய இரண்டு தொழிலாளர்கள் இன்று (04) உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.
</p><p>
சுரங்கப்பாதைக்குள் இருந்து சத்தம் கேட்டதை அடுத்து, இராணுவம், காவல்துறை மற்றும் வெளிநாட்டு நிபுணர்களின் உதவியுடன் இந்தப் பிரதான மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2956721c-7e28-4168-8ad8-bc40cb51cfb2/26-6a9b412ca5266.webp' /></p><h2><span style="font-size: 14px;">மீட்கப்பட்ட இருவரும் தலைநகர் காத்மண்டுவில் உள்ள இராணுவ மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவர் தெரிவித்துள்ளனர்.</span></h2><p>
அத்துடன் ஆகஸ்ட் 26 அன்று நேரிட்ட இந்தப் பேரிடரால் 1,200-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதுடன், நீர்மின் திட்டச் சுரங்கப்பாதைகளில் குறைந்தது 900 பேர் வரை சிக்கியிருக்கலாம் என்று அனுமானிக்கப்படுவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p><br></p>]]></content>
            <updated>2026-09-04T22:07:47+00:00</updated>
        </entry>
    </feed>
