<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-07-26T12:49:35+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[சூப்பர் எல் நினோவால் 20 பில்லியன் டொலரை இழந்த ஆபிரிக்கா- அபிவிருத்தி வங்கி எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/loss-due-to-super-el-nino-african-development-bank-1785065551"></link>
            <id>https://tamilwin.com/article/loss-due-to-super-el-nino-african-development-bank-1785065551</id>
            <summary type="text">பசிபிக் பெருங்கடலில் ஏற்பட்டு வரும் அசாதாரண வெப்பநிலை மாற்றங்களால்
உருவாகும் சூப்பர் எல் நினோ வானிலை மாற்றம் காரணமாக, ஆப்பிரிக்க நாடுகள்
சுமார் 10 ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>பசிபிக் பெருங்கடலில் ஏற்பட்டு வரும் அசாதாரண வெப்பநிலை மாற்றங்களால்
உருவாகும் சூப்பர் எல் நினோ வானிலை மாற்றம் காரணமாக, ஆப்பிரிக்க நாடுகள்
சுமார் 10 பில்லியன் முதல் 20 பில்லியன் டொலர் வரை பொருளாதார இழப்பைச்
சந்திக்க நேரிடும் என ஆப்பிரிக்க அபிவிருத்தி வங்கியின் காலநிலை மாற்றப்
பிரிவு இயக்குநர் ஆண்டனி நியோங் எச்சரித்துள்ளார்.
</p><p>
இந்த தீவிர வானிலை மாற்றத்தால் கடுமையாகப் பாதிக்கப்படும் நாடுகளின் மொத்த
உள்நாட்டு உற்பத்தி சராசரியாக 1% முதல் 2% வரை குறையக்கூடும் என ஆப்பிரிக்க
அபிவிருத்தி வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.</p><p></p><p>
</p><p>
வரவிருக்கும் காலநிலை பாதிப்புகளை எதிர்கொள்ள ஆப்பிரிக்காவுக்கு இந்த ஆண்டு
காலநிலை தழுவல் நிதியாக சுமார் 100 பில்லியன் டொலர் தேவைப்படும் என
மதிப்பிடப்பட்டுள்ளது.</p><h2>மக்கள் இடம்பெயரும் சூழல் உருவாகலாம்</h2><p>
</p><p>
வறட்சி மற்றும் கடல் வெப்பநிலை உயர்வால் விவசாயிகளுக்கு சுமார் 330 மில்லியன்
டொலர் வருமான இழப்பும், மீன்பிடித் துறையில் 1% முதல் 4% வரை உற்பத்திக்
குறைவும் ஏற்படும் என ஆப்பிரிக்க அபிவிருத்தி வங்கி கணித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1f9769e3-a123-413c-b636-cb628589395f/26-6a65fde8136ea.webp' /></p><p>
</p><p>
உணவு மற்றும் நீர் பற்றாக்குறை காரணமாக சூடான், தெற்கு சூடான், கொங்கோ,
சோமாலியா, நைஜீரியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து மக்கள் பெருமளவில் இடம்பெயரும்
சூழல் உருவாகலாம்.
</p><p>
ஆப்பிரிக்க நாடுகளின் முக்கிய உணவான சோளத்தின் விலை இருமடங்காக உயரக்கூடும் என
அஞ்சப்படுகிறது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-26T12:32:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தண்ணீர் போத்தலால் 10 இலட்சம் ரூபாய் இழந்த சுற்றுலா நிறுவனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/water-bottle-costs-tour-firm-rs-1m-loss-1785066709"></link>
            <id>https://jvpnews.com/article/water-bottle-costs-tour-firm-rs-1m-loss-1785066709</id>
            <summary type="text">எல்ல பகுதியில் குடிநீர் போத்தல்களை நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட சுற்றுலா நிறுவனமொன்றுக்கு ஒரு மில்...</summary>
            <content type="html"><![CDATA[<p>எல்ல பகுதியில் குடிநீர் போத்தல்களை நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட சுற்றுலா நிறுவனமொன்றுக்கு ஒரு மில்லியன் ரூபாய் (10 இலட்சம் ரூபாய்) அபராதம் விதித்து பண்டாரவளை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
</p><p>


நுகர்வோர் விவகாரங்கள் ஆணையத்தின் புலனாய்வு அதிகாரிகள் கடந்த 10ஆம் திகதி மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின்போது, குறித்த நிறுவனம் குடிநீர் போத்தல்களை அதிக விலைக்கு விற்பனை செய்து வந்தமை கண்டறியப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9fe36779-f341-4bae-acb7-a164125d42c8/26-6a65f4d7347a8.webp' /></p><h2>வழக்குத் தாக்கல்</h2><p>
</p><p>


இதனையடுத்து, நுகர்வோர் விவகாரங்கள் ஆணையச் சட்டத்தின் விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளை மீறியதாகக் கூறி, சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு எதிராக நுகர்வோர் விவகாரங்கள் ஆணையம் வழக்குத் தாக்கல் செய்தது.
</p><p>


இந்த வழக்கு கடந்த 22ஆம் திகதி பண்டாரவளை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, குற்றம் சாட்டப்பட்ட நிறுவனம் குற்றத்தை ஒப்புக்கொண்டது.</p><p></p><p>
</p><p>


இதனைத் தொடர்ந்து, குறித்த நிறுவனத்திற்கு ஒரு மில்லியன் ரூபாய் அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-26T12:30:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiva</name>
            </author>
            <title type="text"><![CDATA[லிந்துல பகுதியில் இரும்பு பாலம் உடைந்து போக்குவரத்து துண்டிப்பு: 800க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/iron-bridge-collapses-in-lindula-area-traffic-1785068008"></link>
            <id>https://tamilwin.com/article/iron-bridge-collapses-in-lindula-area-traffic-1785068008</id>
            <summary type="text">லிந்துலை - மெராயா பகுதியிலிருந்து ஹென்போல்ட் தோட்டத்திற்குச் செல்லும் பாதையில் அமைந்துள்ள இரும்புப் பாலம் உடைந்து விழுந்ததால், அப்பகுதி மக்களின் போக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>லிந்துலை - மெராயா பகுதியிலிருந்து ஹென்போல்ட் தோட்டத்திற்குச் செல்லும் பாதையில் அமைந்துள்ள இரும்புப் பாலம் உடைந்து விழுந்ததால், அப்பகுதி மக்களின் போக்குவரத்து முற்றாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஏற்பட்ட டித்வா புயலின் தாக்கத்தால் இந்த நிலை ஏற்பட்டதாகவும், அதன் பின்னர் இதுவரை போக்குவரத்து முற்றாக துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.</p><p></p><p>
</p><h2>

800க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிப்பு</h2><p>
போக்குவரத்து தேவைகளுக்காக இதுவரை தற்காலிகப் பாலம் கூட அமைக்கப்படாததால், அங்குள்ள மக்கள் கடும் சிரமங்களை எதிர்கொண்டு வருவதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/98bbefe6-c546-421e-a324-b9a340c78b49/26-6a65faa839c82.webp' /></p><p>
</p><p>
இதன் காரணமாக, லிந்துலை - ஹென்போல்ட் தோட்டத்தின் கீழ்ப்பகுதியில் அமைந்துள்ள மிளகுசேனை, ஊட்டுவெளி, சென்ட்ரல் கிளாஸ் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் 800க்கும் மேற்பட்ட குடும்பங்கள், தங்களின் அத்தியாவசிய தேவைகளுக்காக ஆபத்தான முறையில் ஆற்றைக் கடந்து செல்ல வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>

சிறியளவில் மழை பெய்தாலே ஆற்றின் நீர்மட்டம் உயர்ந்து, அந்த வழியாக மக்கள் செல்ல முடியாத நிலை உருவாகிறது. இதனால், அவர்கள் சுமார் 5 கிலோமீட்டர் தூரம் சுற்றுவழிப் பாதையை பயன்படுத்த வேண்டிய சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.</p><p>

மேலும், மீண்டும் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால், கிராம மக்கள் முழுமையாக வெளியேற முடியாத அபாய நிலை உருவாகும் என்ற அச்சமும் அப்பகுதி மக்களிடையே நிலவி வருகிறது.</p><h2>

அரச அதிகாரிகளிடம் விடுத்துள்ள கோரிக்கை</h2><p>
சிறுவர்கள், பெண்கள், முதியவர்கள் என அனைவரும் அன்றாடப் போக்குவரத்து, பாடசாலைச் செல்லுதல் மற்றும் அவசர மருத்துவ சேவைகளைப் பெறுவதில் கடும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/34ac5505-fb57-44a1-b1bc-62c786f30c64/26-6a65faa907573.webp' /></p><p> </p><p>குறிப்பாக, மாணவர்கள் ஆபத்தைப் பொருட்படுத்தாமல் பாதணிகளை கையில் எடுத்துக்கொண்டு ஆற்றைக் கடந்து, மறுபுறம் கால்களை சுத்தம் செய்து மீண்டும் பாதணிகளை அணிந்து பாடசாலைக்குச் செல்லும் அவல நிலையும் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

இந்நிலையில், சம்பந்தப்பட்ட அரசியல் பிரதிநிதிகள் இப்பகுதியை பார்வையிட்டுச் சென்றிருந்த போதிலும், பாலத்தை சீரமைப்பது தொடர்பாக உரிய அதிகாரிகள் இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என பாதிக்கப்பட்ட மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
</p><p>
எனவே, இப்பகுதியில் வாழும் மக்களின் பாதுகாப்பையும் நலனையும் கருத்தில் கொண்டு, உடனடியாக தற்காலிகப் பாலம் ஒன்றை அமைப்பதற்கும், நிரந்தரத் தீர்வை விரைவாக நடைமுறைப்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ab71cc53-0486-4fb3-bab9-924e757f91a0/26-6a65faa9c3ea2.webp' /></p><p></p><p></p><p><br></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-26T12:16:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[துஷாரா விஜயனின் ரீசெண்ட் பார்ட்டி புகைப்படங்கள்...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/dushara-vijayan-recent-photos-party-1785060026"></link>
            <id>https://viduppu.com/article/dushara-vijayan-recent-photos-party-1785060026</id>
            <summary type="text">துஷாரா விஜயன்இயக்குநர் பா ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் ஆர்யா, பசுபதி உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்து பெரிய ஹிட்டான படம் தான் சார்பட்டா பரம்பரை. ...</summary>
            <content type="html"><![CDATA[<h2>துஷாரா விஜயன்</h2><p>இயக்குநர் பா ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் ஆர்யா, பசுபதி உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்து பெரிய ஹிட்டான படம் தான் சார்பட்டா பரம்பரை. இப்படத்தின் ஆர்யாவுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் தான் நடிகை துஷாரா விஜயன்.
</p><p>
இப்படம் கொடுத்த நல்ல வரவேற்பை அடுத்து அனுப்புள்ள கில்லி, நட்சத்திரம் நகர்கிறது, அநீதி, ராயன், வேட்டையன், வீர தீர சூரன் உள்ளிட்ட படங்களில் நடித்து டாப் நடிகையாகினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b3c219ac-45b5-4c51-953f-af994ff3cf83/26-6a65dac1061e2.webp' /></p><p>
</p><p>
தற்போது மலையாளம், தமிழ் மொழி படங்களில் கமிட்டாகி நடித்து வரும் துஷாரா, GD Naidu என்ற படத்தில் மாதவனுடன் நடித்து படம் வெளியாகவுள்ளது. மேலும் பிக்பாஸ் பிரபலம் ராஜு ஜெயமோகனுடன் Almost நல்லவன் என்ற படத்திலும் நடிக்கவுள்ளார்.</p><p> இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகை துஷாரா, தற்போது ஷாட்டான ஆடையணிந்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-07-26T12:15:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[காங்கோவில் தீவிரமடையும் எபோலா வைரஸ் பரவல்; 1,033 பேர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/ebola-outbreak-worsens-in-congo-1-033-dead-1785067978"></link>
            <id>https://canadamirror.com/article/ebola-outbreak-worsens-in-congo-1-033-dead-1785067978</id>
            <summary type="text">மத்திய கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு காங்கோ. இந்நாட்டில் எபோலா வைரஸ் நோய் வேகமாக பரவி வருகிறது. எபோலா உலகிலேயே மிகக்கொடிய வைரஸ் நோய்களில் ஒன...</summary>
            <content type="html"><![CDATA[<p>மத்திய கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு காங்கோ. </p><p>இந்நாட்டில் எபோலா வைரஸ் நோய் வேகமாக பரவி வருகிறது. எபோலா உலகிலேயே மிகக்கொடிய வைரஸ் நோய்களில் ஒன்றாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/59dac01d-e6bf-45cf-83a6-086da7faafbe/26-6a65f9ccc344e.webp' /></p><p> </p><p>இந்த வைரஸ் காங்கோ மட்டுமின்றி உகாண்டா போன்ற ஆப்பிரிக்க நாட்டிலும் பரவி வருகிறது.
</p><p>இந்நிலையில், காங்கோவில் 2,536 பேருக்கு எபோலா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. </p><p>மேலும், எபோலா வைரஸ் பாதிப்பால் 1033 பேர் உயிரிழந்துள்ளதாக காங்கோ சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. </p><p>அதேவேளை, உகாண்டாவில் 20 பேருக்கு எபோலா வைரஸ் உறுதியாகியுள்ளது. இதில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-07-26T12:13:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இரவில் விமான நிலையத்தை பரபரபாக்கிய சகோதரர்கள் ; இத்தாலிக்கு திருப்பி அனுப்பபடும் ஜீவன்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/brothers-create-airport-drama-at-night-1785067285"></link>
            <id>https://jvpnews.com/article/brothers-create-airport-drama-at-night-1785067285</id>
            <summary type="text">கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 64 புறாக்களைத் தங்களின் பயணப் பெட்டிகளுக்குள் மறைத்துச் சட்டவிரோதமாகக் கொண்டு வர முயன்ற வென்னப்புவ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 64 புறாக்களைத் தங்களின் பயணப் பெட்டிகளுக்குள் மறைத்துச் சட்டவிரோதமாகக் கொண்டு வர முயன்ற வென்னப்புவ பகுதியைச் சேர்ந்த சகோதரர்கள் இருவருக்குச் சுங்கப் பிரிவினர் 5 இலட்சம் ரூபாய் தண்டப்பணம் விதித்துள்ளனர்.</p><p style="text-align: justify; ">

கைப்பற்றப்பட்ட புறாக்களின் பெறுமதி சுமார் 3,431,400 ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/347c6319-1829-46e1-a8c1-dc92ec3e6bfd/26-6a65f716d1c6d.webp' /></p><h2 style="text-align: justify; ">சுங்கப் விசாரணை</h2><p style="text-align: justify; ">

சந்தேகநபர்கள் வென்னப்புவ பகுதியைச் சேர்ந்த 38 மற்றும் 42 வயதுடைய இரு சகோதரர்கள் ஆவர்.
</p><p style="text-align: justify; ">
இவர்கள் இத்தாலியிலிருந்து எமிரேட்ஸ் நிறுவனத்தின் EK652 விமானம் மூலம் நேற்று ( 25) சனிக்கிழமை இரவு 7:15 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தைச் வந்தடைந்துள்ளனர்.</p><p style="text-align: justify; "> வருகை முனையத்தின் கிரீன் சேனல் வழியூடாக வெளியேற முயன்றபோது, அவர்களின் 8 பயணப் பெட்டிகளைச் சுங்க அதிகாரிகள் சோதனையிட்டனர். அதற்குள் 12 உலோகக் கூண்டுகளில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 64 புறாக்கள் கண்டுபிடிக்கப்பட்டன.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">

போதிய காற்றோட்டம் மற்றும் முறையான பராமரிப்பு இல்லாததால், கடத்தி வரப்பட்ட புறாக்களில் 8 புறாக்கள் கூண்டுகளுக்குள்ளேயே உயிரிழந்திருந்தன.
</p><p style="text-align: justify; ">
சுங்கப் விசாரணைகளின் முடிவில், குற்றவாளியாகக் காணப்பட்ட ஒரு சகோதரருக்கு 4,00,000 ரூபாய், மற்றையவருக்கு 100,000 ரூபாய் என மொத்தம் ரூ. 5,00,000 தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; ">

உயிருடன் மீட்டெடுக்கப்பட்ட எஞ்சிய புறாக்களை உடனடியாக மீண்டும் இத்தாலிக்கே திருப்பி அனுப்புமாறு இலங்கை சுங்கப் பிரிவினர் உத்தரவிட்டுள்ளனர்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-07-26T12:01:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[வைபவ் சூர்யவன்ஷி ஜிம்பாப்வேவுக்கு எதிரான 2வது அரைசதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/vaibhav-sooryavanshi-2nd-fifty-vs-zimbabwe-1785067017"></link>
            <id>https://news.lankasri.com/article/vaibhav-sooryavanshi-2nd-fifty-vs-zimbabwe-1785067017</id>
            <summary type="text">ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 3வது டி20 போட்டியில் வைபவ் சூர்யவன்ஷி அரைசதம் விளாசினார்.&amp;nbsp;அபிஷேக் ஷர்மா&amp;nbsp;சொதப்பல் 
இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிக...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 3வது டி20 போட்டியில் வைபவ் சூர்யவன்ஷி அரைசதம் விளாசினார்.&nbsp;</p><h2>அபிஷேக் ஷர்மா&nbsp;சொதப்பல் </h2><p>
இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான 3வது டி20 போட்டி, ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடந்து வருகிறது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b4576c02-71ea-45b7-af53-a7cfae2a5696/26-6a65f75406797.webp' />&nbsp;</p><p></p><p>
நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்து களமிறங்கியது.

தொடக்க வீரர் அபிஷேக் ஷர்மா (Abhishek Sharma) 2 ஓட்டங்களில் முஸரபாணி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.</p><h2> 

வைபவ் சூர்யவன்ஷி அரைசதம் </h2><p>அடுத்து வந்த இஷான் கிஷன் நிதானமாக ஓட்டங்களை சேர்க்க, வைபவ் சூர்யவன்ஷி அதிரடி ஆட்டத்தில் மிரட்டினார்.
</p><p>
கடந்த போட்டியை விட சற்று நிதானமாகவே ஆடினாலும், 31 பந்துகளில் வைபவ் சூர்யவன்ஷி (Vaibhav Sooryavanshi) அரைசதம் அடித்தார். 

இது டி20 கிரிக்கெட்டில் அவரது இரண்டாவது அரைசதம் ஆகும். </p><p>மறுமுனையில் இஷான் கிஷன் 29 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, இந்திய அணி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 95 ஓட்டங்கள் எடுத்துள்ளது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4858c71e-e228-47d1-a2b7-43925a9d2ba3/26-6a65f754be166.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-26T12:00:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[குடிநீர் போத்தல்களை அதிக விலைக்கு விற்ற சுற்றுலா பயணி: நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/fine-1million-selling-water-bottles-inflated-price-1785058150"></link>
            <id>https://ibctamil.com/article/fine-1million-selling-water-bottles-inflated-price-1785058150</id>
            <summary type="text">குடிநீர் போத்தல்களை நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிகமாக விற்பனை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட சுற்றுலா நிறுவனமொன்றுக்கு, பண்டாரவளை நீதவான் நீதிமன்றம்...</summary>
            <content type="html"><![CDATA[<p>குடிநீர் போத்தல்களை நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிகமாக விற்பனை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட சுற்றுலா நிறுவனமொன்றுக்கு, பண்டாரவளை நீதவான் நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது.
</p><p>
நுகர்வோர் விவகாரங்கள் ஆணையத்தின் புலனாய்வு அதிகாரிகள் கடந்த 10ஆம் திகதி மேற்கொண்ட சோதனையின் போது, இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p>
இதை தொடர்ந்து நுகர்வோர் விவகாரங்கள் ஆணையச் சட்டத்தின் விதிமுறைகளை மீறியதாக அந்த நிறுவனத்திற்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.</p><p></p><h2>10 லட்சம் அபராதம்</h2><p>
</p><p>
இந்த வழக்கு கடந்த 22ஆம் திகதி பண்டாரவளை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, குற்றம் சாட்டப்பட்ட நிறுவனம் குற்றத்தை ஒப்புக்கொண்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5d231e88-421c-4fe3-affe-e384e54586fc/26-6a65ef641d608.webp' /></p><p>
</p><p>
எனவே நீதிமன்றத்தால் குறித்த நிறுவனத்திற்கு ரூ.10 இலட்சம் அபராதம் விதிக்க பண்டாரவளை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-26T11:59:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[சவுதி எண்ணெய் ஆலைகளை இலக்கு வைத்த ஹூதிகள்: விரிவடையும் அமெரிக்க-ஈரான் போர் பதற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/houthis-attack-saudi-oil-facilities-us-iran-war-1785065340"></link>
            <id>https://tamilwin.com/article/houthis-attack-saudi-oil-facilities-us-iran-war-1785065340</id>
            <summary type="text">அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடத்தி வரும் போரின்
எதிரொலியாக, மத்திய கிழக்கில் பதற்றம் மேலும் தீவிரமடைந்துள்ளது.

ஏமனில் செயல்பட்டு ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடத்தி வரும் போரின்
எதிரொலியாக, மத்திய கிழக்கில் பதற்றம் மேலும் தீவிரமடைந்துள்ளது.
</p><p>
ஏமனில் செயல்பட்டு வரும் ஈரான் ஆதரவு ஹூதி அமைப்பினர், சவூதி அரேபியாவின்
செங்கடல் பகுதியில் உள்ள இரு முக்கிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளை இலக்கு
வைத்து ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளனர்.</p><p></p><h2>&nbsp;வான்வழித் தாக்குதல்கள்</h2><p>
</p><p>
சவூதியின் ஜிஷான் மற்றும் யான்பு நகரங்களில் உள்ள 'அராம்கோ' நிறுவனத்தின்
ஆலைகள் மீது இந்தத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டதாக ஹூதி இராணுவத் செய்தி
தொடர்பாளர் யஹ்யா சாரீ அறிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/32e5a639-66b1-4148-bc80-ca7d7c05603e/26-6a65f572cc89b.webp' /></p><p>
</p><p>
அதேவேளையில், ஈரானின் ஹார்முஸ் நீரிணைபகுதியில் ஏற்பட்ட மோதல்களைத்
தொடர்ந்து அமெரிக்கா நடத்தி வந்த தொடர் வான்வழித் தாக்குதல்கள் கடந்த இரண்டு
நாட்களாக நிறுத்தப்பட்டுள்ளன.
</p><p>
இரு நாடுகளுக்கும் இடையே சமரச தூதுவர்கள் மூலமாகப் பேச்சுவார்த்தைகள்
மறைமுகமாக நடைபெற்று வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p></p><h2>பொருளாதார நெருக்கடி&nbsp;</h2><p>

இருப்பினும், இரு தரப்பிற்கும் இடையே நிலவும் கடுமையான கருத்து வேறுபாடுகள்
காரணமாக இதில் பெரிய முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த மோதல்கள் தற்போது பிற பிராந்தியங்களுக்கும் பரவி வருகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ae60483c-d8a9-4914-8eca-0f287154e11b/26-6a65f5737b979.webp' /></p><p> </p><p>கஸ்பியன்
கடலில் உள்ள ஈரான் கப்பல் மீது உக்ரைன் நடத்திய தாக்குதலில் மாலுமி ஒருவர்
உயிரிழந்ததாக ஈரான் குற்றம் சாட்டியுள்ளது.
</p><p>
இதனிடையே, செங்கடலையும் ஏடன் வளைகுடாவையும் இணைக்கும் பாப் அல்-மந்தேப்
நீரிணையை ஹூதிகள் முடக்கக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது.</p><p>

ஹோர்முஸ் மற்றும் பாப் அல்-மந்தேப் ஆகிய இரு முக்கியப் பாதைகளும்
முடக்கப்பட்டால், உலகளாவிய விநியோகச் சங்கிலி பாதிக்கப்பட்டுப் கடுமையான
பொருளாதார நெருக்கடி ஏற்படும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.</p>]]></content>
            <updated>2026-07-26T11:54:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஓடேசா துறைமுகத்தில் வணிக கப்பல் மீது தாக்குதல்: 2 இந்திய மாலுமிகள் மாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/2-indian-nationals-missing-after-odesa-attack-1785066707"></link>
            <id>https://news.lankasri.com/article/2-indian-nationals-missing-after-odesa-attack-1785066707</id>
            <summary type="text">ஓடேசா துறைமுகத்தில் நடந்த தாக்குதலில் இரண்டு இந்திய மாலுமிகள் காணாமல் போயுள்ளனர். சரக்கு கப்பல் மீது தாக்குதல்
உக்ரைனின் ஓடேசா துறைமுகத்தில் சரக்கு க...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஓடேசா துறைமுகத்தில் நடந்த தாக்குதலில் இரண்டு இந்திய மாலுமிகள் காணாமல் போயுள்ளனர்.</p><h2> சரக்கு கப்பல் மீது தாக்குதல்</h2><p>
உக்ரைனின் ஓடேசா துறைமுகத்தில் சரக்கு கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் இரண்டு இந்திய மாலுமிகள் காணாமல் போயுள்ள நிலையில் அவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.</p><p> ஜூலை 25ம் திகதி எம்.வி அக்ன் ராக்நார்(MV AGN Ragnar) என்ற வணிக கப்பல் தாக்கப்பட்டதாக கீவ்வில் உள்ள இந்திய தூதரகம் தகவல் தெரிவித்துள்ளது.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Point of Contact, Embassy of India, Ukraine<br>cons.kyiv@mea.gov.in<br>cons1.kyiv@mea.gov.in<br>Our Emergency contact no. - +380933559958 Mr. Aji Kumar, SS ( Consular) <a href="https://x.com/MEAIndia?ref_src=twsrc%5Etfw">@MEAIndia</a> <a href="https://t.co/2XolkORrcu">pic.twitter.com/2XolkORrcu</a></p>&mdash; India in Ukraine (@IndiainUkraine) <a href="https://x.com/IndiainUkraine/status/2081237337539772452?ref_src=twsrc%5Etfw">July 26, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p> அந்த கப்பலில் 4 இந்தியர்கள் இருந்த நிலையில் தாக்குதலை அடுத்து 2 இந்திய மாலுமிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர். ஆனால் மேலும் 2 மாலுமிகள் குறித்து எந்தவொரு தகவலும் இல்லை.</p><p> இந்நிலையில் மாயமான 2 இந்திய மாலுமிகளையும் கண்டுபிடிக்க உள்ளூர் அதிகாரிகளுடன் 24 மணி நேரமும் தீவிரமாக செயல்பட்டு வருவதாக இந்திய தூதரகம் அறிவித்துள்ளது.</p><p> மேலும் உக்ரைனில் வசிக்கும் இந்தியர்கள் யாருக்கும் உதவி தேவைப்பட்டால் அழைக்குமாறு உதவி எண்களையும் இந்திய தூதரகம் அறிவித்துள்ளது.</p><p></p><h2> அடுத்தடுத்த தாக்குதல்</h2><p>ஓடேசாவில் ஜூலை 19ம் திகதி நடந்த தாக்குதலில் எம்.வி கோல்டன் லியோ என்ற கப்பல் தாக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3b2481d0-bc76-453d-b3cb-6f05dccf4ec8/26-6a65f4d546024.webp' /></p><p>இதில் இருந்த 17 பணியாளர்களில் 5 பேர் இந்தியர்கள். இதில் துரதிர்ஷ்டவசமாக 4 இந்திய மாலுமிகள் கொல்லப்பட்டனர் மற்றும் ஒருவர் படுகாயமடைந்தார்.</p><p> இந்த சம்பவத்தை தொடர்ந்து வணிக கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலை இந்திய வெளியுறவு அமைச்சகம் கடுமையாக கண்டித்துள்ளது.</p><p> மேலும் இது போன்ற சம்பவங்கள் உறுதியாக தவிர்க்கப்பட வேண்டும் என்றும் இந்தியா வலியுறுத்தியுள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p>&nbsp;<br></p>]]></content>
            <updated>2026-07-26T11:51:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[சமூக ஊடக காணொளியால் பணி இடைநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ் அதிகாரி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/police-officer-suspended-over-social-media-video-1785066138"></link>
            <id>https://jvpnews.com/article/police-officer-suspended-over-social-media-video-1785066138</id>
            <summary type="text">வத்துபிட்டிவலை முதலீட்டு வலய பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர், பொதுமக்களுடன் காரசாரமான வாக்குவாதத்தில் ஈடுபடும் காணொளி சமூக ஊடகங்...</summary>
            <content type="html"><![CDATA[<p>வத்துபிட்டிவலை முதலீட்டு வலய பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர், பொதுமக்களுடன் காரசாரமான வாக்குவாதத்தில் ஈடுபடும் காணொளி சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலானதைத் தொடர்ந்து, அவர் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
கடந்த 23 ஆம் திகதி காலை 10:45 மணியளவில் வத்துபிட்டிவலை வைத்தியசாலைக்கு அருகிலுள்ள தனியார் நிறுவனத்திற்கு முன்பாக இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dca58e34-0bd3-46ec-b22f-edd0f0c5a1d0/26-6a65f29c0596a.webp' /></p><h2>பணியிடைநீக்கம்</h2><p>
</p><p>
சீருடையில் இருந்த குறித்த உப பொலிஸ் பரிசோதகர், கடமையில் இருந்தபோது ஒரு பொலிஸ் உத்தியோகத்தருக்குச் சிறிதும் பொருத்தமில்லாத வகையில் நடந்து கொண்டதுடன், பொதுமக்களுடன் தர்க்கத்தில் ஈடுபட்டு மிரட்டும் தொனியில் பேசியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
</p><p>
குறித்த உத்தியோகத்தரின் இத்தகைய செயல் இலங்கை பொலிஸ் திணைக்களத்துக்கும், அரச சேவைக்கும் பெரும் களங்கத்தை ஏற்படுத்தும் என்பதால், அமைச்சுசார் நிறுவன விதிக் கோவையின் கீழ் அவர் உடனடியாகப் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.</p><p></p><p>


சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்ட வேண்டிய அதிகாரிகள் இதுபோன்ற ஒழுங்கீனமான அல்லது பொருத்தமற்ற நடத்தைகளில் ஈடுபடுவதைக் சகித்துக் கொள்ள முடியாது என இலங்கை பொலிஸ் கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-26T11:42:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதிகவிலைக்கு அரிசி விற்ற கடை உரிமையாளருக்கு நேர்ந்த கதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/shop-selling-keeri-ponni-rice-overpriced-fined-1785065004"></link>
            <id>https://ibctamil.com/article/shop-selling-keeri-ponni-rice-overpriced-fined-1785065004</id>
            <summary type="text">காலி, அக்மீமான பகுதியில் இறக்குமதி செய்யப்பட்ட கீரி பொன்னி சம்பா அரிசியை அதிக விலைக்கு விற்ற ஒரு கடைக்கு ரூ. 5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

...</summary>
            <content type="html"><![CDATA[<p>காலி, அக்மீமான பகுதியில் இறக்குமதி செய்யப்பட்ட கீரி பொன்னி சம்பா அரிசியை அதிக விலைக்கு விற்ற ஒரு கடைக்கு ரூ. 5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
</p><p>
ஒரு கிலோகிராம் இறக்குமதி செய்யப்பட்ட கீரி பொன்னி சம்பா அரிசியின் அதிகபட்ச சில்லறை விலையான ரூ. 255-ஐ விட அதிகமாக, ரூ. 270 என்ற விலையில் விற்றதற்காக, நுகர்வோர் விவகார அதிகாரசபையின் காலி மாவட்ட புலனாய்வு அதிகாரிகள், காலி நீதவான் நீதிமன்றத்தில் அந்தக் கடைக்கு எதிராக வழக்குப் பதிவு செய்திருந்தனர்.</p><h2>நீதிமன்றம் ரூ. 5 லட்சம் அபராதம்&nbsp;</h2><p>கடந்த 17-ஆம் திகதி நடத்தப்பட்ட சோதனையின் போது இந்த சட்டவிரோத விற்பனை கண்டுபிடிக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bb8ec578-da34-40e8-995f-85c228b694f7/26-6a65f236c7ab3.webp' /></p><p>
</p><p>
வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ​​சம்பந்தப்பட்ட கடை உரிமையாளர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து, காலி நீதவான் நீதிமன்றம் ரூ. 5 லட்சம் அபராதம் விதித்தது&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-26T11:40:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் இரவில் பிடிபட்ட மூவர் ; சோதனையில் அம்பலமான விடயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/three-held-in-jaffna-night-raid-1785062310"></link>
            <id>https://jvpnews.com/article/three-held-in-jaffna-night-raid-1785062310</id>
            <summary type="text">&amp;nbsp;யாழ்.நீர்வேலிப் பகுதியில் போதைபொருள்கள் தொகையுடன் 3 சந்தேகநபர்களை யாழ்.மாவட்டக் குற்றத்தடுப்பு பிரிவுப் பொலிஸார் நேற்றுமுன்தினம் இரவு கைதுசெய்து...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;யாழ்.நீர்வேலிப் பகுதியில் போதைபொருள்கள் தொகையுடன் 3 சந்தேகநபர்களை யாழ்.மாவட்டக் குற்றத்தடுப்பு பிரிவுப் பொலிஸார் நேற்றுமுன்தினம் இரவு கைதுசெய்துள்ளனர்.</p><p>



சந்தேகநபர்களிடமிருந்து 600 போதைமாத்திரைகள், 5.650 மில்லிகிராம் ஹெரோய்ன் போதைப்பொருள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a898c5a7-0df0-4825-a607-69e5b2f22970/26-6a65e3a7bb8d0.webp' /></p><p>
</p><p>


கைப்பற்றப்பட்ட போதைப்பொருள்களுடன் சந்தேகநபர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் பாரப்படுத்தப்பட்டுள்ளனர்.
</p><p>


சந்தேகநபர்களை நீதிமன்றில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-07-26T11:35:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[சோதனைகளை சாதனைகளாக மாற்றும் டாப் 3 ராசிகள்! உங்க ராசியும் இதுவா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/zodiacs-who-born-with-healing-power-1785059384"></link>
            <id>https://manithan.com/article/zodiacs-who-born-with-healing-power-1785059384</id>
            <summary type="text">மனித வாழ்க்கையில் இன்பமும் துன்பமும் இயல்பானவை. ஒவ்வொருவரும் வாழ்க்கையின் ஏதோ ஒரு கட்டத்தில் சவால்களையும் கஷ்டங்களையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.ஆன...</summary>
            <content type="html"><![CDATA[<p>மனித வாழ்க்கையில் இன்பமும் துன்பமும் இயல்பானவை. ஒவ்வொருவரும் வாழ்க்கையின் ஏதோ ஒரு கட்டத்தில் சவால்களையும் கஷ்டங்களையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.ஆனால், அந்த சூழ்நிலைகளிலும் மனம் தளராமல் தன்னம்பிக்கையுடன் முன்னேறுபவர்களே வெற்றியை அடைகிறார்கள்.</p><p>ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் இந்த 3 ராசிகளில் பிறந்தவர்கள் சூழ்நிலை எவ்வளவு மோசமாக இருந்தாலும் தங்களின் இலக்கில் குறியாக இருப்ந்து பழி சொன்னவர்கள் முன்னிலையிலும், அவமானப்படுத்தியவர்கள் மத்தியிலும் நிச்சம் சாதித்து காட்டுவார்கள்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c55bda63-ee5c-46a8-8aae-fbb0b24bbc02/26-6a65ddd6cfa59.webp' /></p><p>அப்படி பிறப்பிலே அதீத தன்னம்பிக்கையும், மன உறுதியும் கொண்ட ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.</p><p></p><h2>மகரம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c687fe65-81ec-4e93-bc9f-0db360ab8374/26-6a65ddd77f999.webp' /></p><p>மகர ராசியில் பிறந்தவர்கள் ஒழுக்கத்தின் கிரகமான சனிபகவானால் ஆளப்படுவதால், இவர்களின் வாழ்வில் நீதி நேர்மைக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள்.</p><p> 

இந்த ராசியினர் தங்களுக்கு வலிகளை கொடுத்தவர்களுக்கும் துரோகம் செய்தவர்களுக்கு தங்களின் வெற்றியால் பதில் சொல்லும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
</p><p>
இவர்களை சுற்றி இருக்கும் அனைவரும் இவர்களின் வளர்ச்சியை தடுக்க முயன்றாலும் தனிஒருவராக நின்று வாழ்வில் சாதித்துகாட்டு தைரியம் இவரை்களுக்கு இயல்பிலேயே இருக்கும்.&nbsp;</p><h2>ரிஷபம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c47b2e9e-2a98-4b21-b573-b2dbaa2608e6/26-6a65ddd82f9e9.webp' /></p><p>ரிஷப ராசியில் பிறந்தவர்கள்&nbsp; எவ்வளவு கடினமான சூழ்நிலையிலும் தங்களின் தன்னம்பிக்கையை இழக்கவே மாட்டார்கள். </p><p>இவர்கள் வாழ்வில் அழுத்தம் என்பது புதியது அல்ல. இவர்கள் வலிகளை சுமந்துககொண்டே வாழ்வில் பல்வேறு சாதனைகளையும் நிகழ்த்தும் ஆற்றல் கொண்டவர்களாக இருப்பார்கள்.&nbsp;</p><p>இவர்களை அவமானப்படுத்தினாலும் கொஞ்சமும் கண்டுக்கொள்ளாமல் இருந்து தங்களின் வெற்றியால் பதில் சொல்லும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். தேவையற்ற விவாதங்களில்&nbsp; இருந்து அமைதியாக விலகிவிடுவார்கள்.</p><h2>கடகம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/43bfbf4a-2075-4947-8ffb-7253d4c4f448/26-6a65ddd8d831f.webp' /></p><p></p><p>கடக ராசியினரிடம், இயல்பிலேயே&nbsp; அசாத்திய தைரியம் இருக்கும். 

இவர்கள் தங்கள் சுறுசுறுப்பான ஆற்றல் மற்றும் அச்சமற்ற மனப்பான்மைக்கு பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள்.
</p><p>
இவர்களுக்கு வலிகளை கொடுத்து வளர்ச்சியை தடுப்பது மிகவும் கடினமாக காரியமாக இருக்கும். இவர்கள் தங்களின் வலிகளை சாதனைகளாக மாற்றும் ஆற்றல் பெற்றவர்களாக இருப்பார்கள்.&nbsp;</p><p>இவர்களை மனதளவில் நொருக்கினாலும், அதனை தாங்களாகவே சரிப்படுத்திக்கொண்டு தங்களின் வெற்றியால், அவதூறு பேசியவர்கள் முகத்தில் கரியை பூசுவார்கள். இவர்களை&nbsp; தோற்கடிப்பது அசாத்தியம்.</p><p><b>இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;&nbsp;</b></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-26T11:31:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜூலை மாதத்தில் இலங்கைக்கு வந்து குவிந்த சுற்றுலாப் பயணிகள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/138-730-tourists-visited-sri-lanka-21-days-in-july-1785064321"></link>
            <id>https://ibctamil.com/article/138-730-tourists-visited-sri-lanka-21-days-in-july-1785064321</id>
            <summary type="text">இந்த ஆண்டின் ஜூலை மாதத்தின் முதல் 22&amp;nbsp; நாட்களில் 138,730 சுற்றுலாப் பயணிகள்&amp;nbsp;இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இலங்கை சுற்றுல...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்த ஆண்டின் ஜூலை மாதத்தின் முதல் 22&nbsp; நாட்களில்<a href="https://www.sltda.gov.lk/storage/common_media/Weekly_Report_1st_to_22nd_July_2026.pdf" target="_blank"> 138,730 சுற்றுலாப் பயணிகள்</a>&nbsp;இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p>இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> </p><p>குறித்த காலப்பகுதியில் இந்தியாவிலிருந்து 31,734 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ள நிலையில் இது மொத்த சுற்றுலாப் பயணிகளின் வருகையில் 23 சதவீதம் ஆகும்.</p><p></p><h2>அதிக சுற்றுலாப் பயணிகள்&nbsp;</h2><p> 

அத்துடன், சீனாவிலிருந்து 8,484 பேரும், பிரித்தானியாவில் இருந்து 14,959 பேரும், நெதர்லாந்திலிருந்து 8,415 பேரும் இந்த காலப்பகுதியில் இலங்கைக்கு வந்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2a3731f5-a272-4b65-84ad-906cf2f6a307/26-6a65eea827c49.webp' /></p><p> </p><p>

மேலும், 2026 ஜனவரி 01 முதல் ஜூலை 22 வரை மொத்த சுற்றுலாப் பயணிகளின் வருகை 1,285,303 ஆகப் பதிவாகியுள்ளது. </p><p>

அவர்களில் இந்தியாவிலிருந்து 325,417 பேரும், பிரித்தானியாவில் இருந்து 123,526 சுற்றுலாப் பயணிகளும் வருகை தந்துள்ளதாக அந்த அதிகாரசபை குறிப்பிட்டுள்ளது. </p><p>

இதற்கிடையில், இந்த ஆண்டின் ஜனவரி முதல் ஜூன் வரையிலான காலப்பகுதியில் சுற்றுலாத்துறை மூலம் நாட்டிற்கு கிடைத்த வருமானம் 475.6 பில்லியன் ரூபாயாகும்.</p><p>கடந்த ஜூன் மாதத்தில் மட்டும் சுற்றுலாத்துறை வருமானமாக 50.5 பில்லியன் ரூபாய் ஈட்டப்பட்டுள்ளதாகவும் மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-26T11:29:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரான்ஸில் தீவிரமாக பரவும் காட்டுத் தீ! சாலைப் பயணங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/wildfires-spreading-rapidly-in-france-1785063362"></link>
            <id>https://tamilwin.com/article/wildfires-spreading-rapidly-in-france-1785063362</id>
            <summary type="text">பிரான்ஸின் தென்மேற்குப் பகுதியில், குறிப்பாக ஜிரோன்ட் பிராந்தியத்தில்
தீவிரமாகப் பரவி வரும் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த அவசரகால மீட்புக்
குழுவினரும...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரான்ஸின் தென்மேற்குப் பகுதியில், குறிப்பாக ஜிரோன்ட் பிராந்தியத்தில்
தீவிரமாகப் பரவி வரும் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த அவசரகால மீட்புக்
குழுவினரும் பாதுகாப்புப் படையினரும் அதிகளவில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
</p><p>
இதன் காரணமாக, உலகப் புகழ்பெற்ற 'டூர் டி பிரான்ஸ்' சைக்கிள் பந்தயத்தின்
இறுதிச் சுற்றுப் பாதை சுருக்கப்பட்டு, புதிய வழித்தடத்தில் நடத்தப்படுவதாக
அமைப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.</p><p></p><h2>காட்டுத் தீ பரவல்</h2><p>
</p><p>
பாரீஸ் நகரில் நடைபெறவிருந்த இறுதி கட்டப் பந்தயம் திட்டமிடப்பட்ட 133
கிலோமீட்டரிலிருந்து 89 கிலோமீட்டராகக் குறைக்கப்பட்டுள்ளது.</p><p>

முன்னதாக 'தோய்ரி' என்ற இடத்திலிருந்து தொடங்கவிருந்த இந்தப் போட்டி, தற்போது
நேரடியாக சாம்ப்ஸ்-எலிசீஸ் பகுதியிலிருந்தே தொடங்குகிறது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a013eafc-6710-47db-8872-7368918c3f9e/26-6a65eaa7a312d.webp' /></p><p>பாதுகாப்புப் பணியில் ஈடுபட வேண்டிய காவலர்கள் காட்டுத்தீ மீட்புப்
பணிகளுக்குத் திருப்பி விடப்பட்டுள்ளதால், போட்டிக்கான பாதுகாப்பு
ஏற்பாடுகளின் சுமையைக் குறைக்கும் வகையில் பிரெஞ்சு உள்துறை அமைச்சகம் இந்த
முடிவை எடுத்துள்ளது.
</p><p>
பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளில் மிக வேகமாகப் பரவி வரும் இந்தக்
கடுமையான காட்டுத்தீ காரணமாக இதுவரை 2,67,000-க்கும் மேற்பட்ட மக்கள் தங்கள்
வீடுகளை விட்டு பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.</p><p></p><h2>சாலைப் பயணங்களுக்கு எச்சரிக்கை</h2><p>
</p><p>
போர்டோ விமான நிலையம் மூடப்பட்டுள்ளதுடன், பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கான தொடருந்து மற்றும் சாலைப் பயணங்களைத் தவிர்க்குமாறு பிரெஞ்சு அரசு பொதுமக்களுக்கு
எச்சரிக்கை விடுத்துள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/60fd9db6-c824-46cd-b824-0610d6f7bb6c/26-6a65eaa6f1125.webp' /></p><p>பாதை சுருக்கப்பட்ட போதிலும், புகழ்பெற்ற சாம்ப்ஸ்-எலிசீஸ் சுற்றுகள் மற்றும்
மான்ட்மார்ட்ரே மலைப் பகுதி வழியிலான பந்தயப் பாதையில் சவாரி தொடர்ந்து
நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
மேலும், இந்த ஆண்டின் டூர் டி பிரான்ஸ் போட்டியில் ஸ்லோவேனியாவின் நட்சத்திர
வீராங்கனை தாடே பொகாச்சர் ஆதிக்கம் செலுத்தி, தனது 5ஆவது சம்பியன் பட்டத்தைக்
கைப்பற்றவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-26T11:25:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kumar</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை வரலாற்றில் முதன்முறையாக ஏற்பட்டுள்ள மாற்றம்! மார்தட்டிக்கொள்ளும் எரங்க குணசேகர]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/eranga-gunasekara-statement-1785061249"></link>
            <id>https://tamilwin.com/article/eranga-gunasekara-statement-1785061249</id>
            <summary type="text">இலங்கை வரலாற்றில் முதன்முறையாகச் சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள், பர்கர்கள்
என அனைத்துத் தரப்பு மக்களின் இதயங்களையும் ஒன்றிணைத்து ஒரு இலங்கை
அரசாங்கத...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை வரலாற்றில் முதன்முறையாகச் சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள், பர்கர்கள்
என அனைத்துத் தரப்பு மக்களின் இதயங்களையும் ஒன்றிணைத்து ஒரு இலங்கை
அரசாங்கத்தைக் கட்டியெழுப்ப முடிந்துள்ளதையையிட்டு மகிழ்ச்சியடைகிறோம் என&nbsp;நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்புப் பிரதியமைச்சர் எரங்க குணசேகர தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p>கடந்த ஒன்றரை ஆண்டுகளில் இதனைச் சாதிக்க முடிந்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p>
ரணிலின் தலையும், சஜித்தின் உடலும், நாமலின் வாலும் சேர்ந்து ஒரு புதிய
விசித்திரப் பிராணியை உருவாக்க முயல்கிறார்கள். இதனால் மக்களுக்கு எந்தப்
பயனும் இல்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p>மட்டக்களப்பு பழைய மாவட்ட செயலகத்தில் இன்றைய தினம் (26.07.2026) 2026ஆம் ஆண்டின்
சகோதரத்துவ நாளை முன்னிட்டு "இதயங்களின் பிணைப்பு, ஒன்றிணைந்த பயணம்" எனும்
கருப்பொருளிலான நிகழ்வு தொடர்பில் அறிவுறுத்தும் ஊடகவியலாளர்
சந்திப்பு நடைபெற்றது.
</p><p>இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.</p><p></p><h2>ஒன்றிணைந்து வாழும் தேசம்</h2><p> </p><p>மேலும் கூறுகையில், நமது நாடு சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள், பர்கர்கள், மலாய்க்காரர்கள் என
அனைவரும் ஒன்றாக இணைந்து வாழும் ஒரு தேசமாகும். ஆனால், கடந்த பல தசாப்தங்களாக
சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஒரு தேசமாக
முன்னேறுவதற்கு தடையாகச் சில காரணிகள் இருந்தன.</p><p>
சுதந்திரம் அடைந்த காலத்திலிருந்தே ஆட்சியில் இருந்த சிங்கள, தமிழ், முஸ்லிம்
தலைவர்கள் அனைவரும் மக்களைப் பிரித்து வைத்தே ஆட்சி செய்தனர். சிங்கள மக்களின்
பிரச்சினைகள், தமிழ் மக்களின் பிரச்சினைகள், முஸ்லிம் மக்களின் பிரச்சினைகள்
என தனித்தனியாகக் கையாண்டு, நம்மை ஒன்றிணைப்பதற்குப் பதிலாகப் பிரித்து
ஆண்டனர். இதன் இறுதி விளைவாகவே நாடு பொருளாதார ரீதியாகப் பேரழிவைச் சந்தித்தது.
</p><p>ஆனால், இலங்கை வரலாற்றில் முதன்முறையாகச் சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள்,
பர்கர்கள் என அனைத்துத் தரப்பு மக்களின் இதயங்களையும் ஒன்றிணைத்து ஒரு இலங்கை
அரசாங்கத்தைக் கட்டியெழுப்ப முடிந்துள்ளதையையிட்டு நாம் மகிழ்ச்சியடைகிறோம்.
கடந்த ஒன்றரை ஆண்டுகளில் இதனைச் சாதிக்க முடிந்துள்ளது.</p><p>
கடந்த ஒன்றரை ஆண்டுகளில், இலங்கை வரலாற்றில் முதன்முறையாக இனவாதப்
பிரச்சினைகள் ஏதுமின்றி அனைவரும் ஒன்றுபட்டுச் செயல்படும் ஒரு காலம்
உருவாகியுள்ளது என்பதை மிகவும் பணிவுடனும் மகிழ்ச்சியுடனும் அறியத்தருகிறேன்.
சகோதரத்துவ நாள் என்பது என்ன? 1983 கருப்பு ஜூலை நிகழ்ந்து இன்றுடன் 43
ஆண்டுகள் நிறைவடைகின்றன. அந்தப் பழைய கசப்பான நிகழ்வுகளையும் வேதனைகளையும்
மீண்டும் தோண்டித் துருவுவதற்காக நாம் இங்கு வரவில்லை.</p><p></p><p> </p><p>மாறாக, ஒரு தேசமாக நாம்
அதிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு, மீண்டும் அத்தகையதொரு நிலைமை ஏற்படாமல்
தடுப்பதற்கே 2008ஆம் ஆண்டிலிருந்து இந்தச் சகோதரத்துவ நாளை நாம் நினைவு
கூர்ந்து வருகிறோம்.
கருப்பு ஜூலைக்குப் பிறகு ஏற்பட்ட அந்த கறைபடிந்த வரலாற்றுக்கு மாற்றாக,
அனைத்து இன மக்களும் ஒன்றிணைந்த சகோதரத்துவ நாளாக மாற்ற வேண்டும் என்பதே எமது
இலக்காகும்.
83 கருப்பு ஜூலை என்பது ஒரு தனிப்பட்ட சம்பவமல்ல.</p><p> அது அரசியல் ரீதியாகத்
திட்டமிடப்பட்ட ஒரு சதி. உயிர்த்த ஞாயிறு தாக்குதலும் அரசியல் லாபத்திற்காகத்
திட்டமிட்டு நடத்தப்பட்ட ஒரு கொடூர நிகழ்வே ஆகும்.
1977 இல் ஜே.ஆர். ஜெயவர்த்தன ஆட்சிக்கட்டிலில் அமர்ந்தார். 1981 இல் மாவட்ட
வளர்ச்சிச் சபை தேர்தல் நடைபெற்றது. வரலாற்றில் முதன்முறையாக ஐந்தில் நான்கு
பெரும்பான்மை பெற்றும் யாழ்ப்பாண மக்களின் மனங்களை ஜே.ஆரினால் வெல்ல முடியாமல்
போனது.</p><h2>தேர்தல் முறைகேடுகள் மற்றும் வன்முறைகள்</h2><p> </p><p>அதனாலேயே, 81 தேர்தலில் வரலாற்றிலேயே முதன்முறையாக அரச அனுசரணையுடன்
தேர்தல் முறைகேடுகள் மற்றும் வன்முறைகள் நிகழ்த்தப்பட்டன. யாழ்ப்பாணப் பொது
நூலகம் எரியூட்டப்பட்டது.
அதன் தொடர்ச்சியாகவே 1983 ஜூலை 23 அன்று 13 இராணுவ வீரர்கள் படுகொலை
செய்யப்பட்டனர். அந்தப் படுகொலையைச் சிங்கள இனவாதத்தைத் தூண்டுவதற்காக ஜே.ஆர்.
அரசாங்கம் பயன்படுத்திக்கொண்டது. கொழும்பு பொரளைக்கு உடல்களைக் கொண்டுவந்து
கலவரத்தை உருவாக்கத் திட்டமிட்டனர்.
</p><p>அதன் விளைவாகக் கொழும்பு மற்றும் நாடு முழுவதும் வன்முறை பரவியது. வாக்காளர்
பட்டியலைப் பயன்படுத்தித் தமிழ் மக்களின் வீடுகள் மற்றும் வர்த்தக நிலையங்கள்
அடையாளங் காணப்பட்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. வெலிக்கடைச் சிறைச்சாலையில்
அடைக்கப்பட்டிருந்த 43 தமிழ் அரசியல் கைதிகள் படுகொலை செய்யப்பட்டனர்.
இதன் தொடர்ச்சியாகச் நாட்டில் 30 ஆண்டுகாலப் போர் உருவானது. அந்தப் போரின்
முடிவில் நமக்கு எஞ்சியது உடைந்த கட்டடங்களும், பெற்றோரையும் கணவர்களையும்
இழந்த அனாதைகளுமே ஆகும்.</p><p> அரசியல்வாதிகள் மட்டுமே அதில் லாபமடைந்தனர்.
30 ஆண்டுகாலப் போருக்குப் பிறகும் ஆட்சியாளர்கள் பாடம் கற்றுக்கொள்ளவில்லை.
சிங்கள - தமிழ் மோதலுக்குப் பிறகு, சிங்கள - முஸ்லிம் மோதலை உருவாக்க முயன்றனர்.
கடந்த 15 ஆண்டுகளில் முஸ்லிம் மக்களுக்கு எதிராகப் பல நெருக்கடிகள்
அளிக்கப்பட்டன.
ஆனால் இன்று, நாம் அனைவரும் ஒன்றிணைந்து ஒரு சகோதரத்துவமிக்க இலங்கையைக்
கட்டியெழுப்ப உறுதிபூண்டுள்ளோம்.
எமது நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கவும், இளைஞர்கள், விவசாயிகள்,
பெண்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணவும் நாம் நடவடிக்கைகளை மேற்கொண்டு
வருகிறோம்.</p><p></p><p> </p><p>மட்டக்களப்பு, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின்
வளர்ச்சிக்காகச் சிறப்புத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறோம்.
கடந்த காலங்களில் இராணுவக் கட்டுப்பாட்டில் இருந்த பல காணிகளை விடுவித்து,
விவசாயத்திற்கும் பொதுமக்களின் பயன்பாட்டிற்கும் வழங்கி வருகிறோம்.
நாம் ஆட்சியமைத்து ஒன்றரை ஆண்டுகள் ஆகின்றன. தமிழ் மற்றும் முஸ்லிம்
மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதில் உறுதியாக உள்ளோம். எமது ஆட்சியில்
சிறுபான்மையினருக்கு எவ்விதப் பாதிப்பும் ஏற்பட இடமளிக்கவில்லை.
காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் தொடர்பாகச் சட்டப்பூர்வ விசாரணைகள்
துரிதப்படுத்தப்பட்டுள்ளன.</p><p> உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாகவும் நடுநிலையான
விசாரணைகள் நடத்தப்பட்டு, உண்மைகள் வெளிக்கொண்டு வரப்படுகின்றன.
தமிழ் மக்களின் பூர்வீகக் காணிகளை விடுவிக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று
வருகின்றன. வடக்கு, கிழக்கின் அபிவிருத்திக்காக அதிக அளவிலான நிதி
ஒதுக்கப்பட்டுள்ளது.
ஊழல்வாதிகளும் குற்றவாளிகளும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவதை எண்ணிப் பயந்தே
அவர்கள் ஒன்றிணையப் பார்க்கிறார்கள் என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-26T11:25:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[70 மில்லியன் மக்களைப் பாதிக்கவுள்ள கடும் வெப்ப அலை: அதிகாரிகள் எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/scorching-us-heatwave-to-hit-1785065139"></link>
            <id>https://news.lankasri.com/article/scorching-us-heatwave-to-hit-1785065139</id>
            <summary type="text">அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய மாநிலங்களின் பெரும்பகுதியை ஆபத்தான அளவிலான கடும் வெப்பம் வாட்டி வதைக்க இருப்பதால், சுமார் 7 கோடி மக்கள் தீவிர வெப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய மாநிலங்களின் பெரும்பகுதியை ஆபத்தான அளவிலான கடும் வெப்பம் வாட்டி வதைக்க இருப்பதால், சுமார் 7 கோடி மக்கள் தீவிர வெப்பம் தொடர்பான எச்சரிக்கைகளை எதிர்கொள்ள உள்ளனர்.</p><h2>வரும் வாரத்திலும் நீடிக்கும்</h2><p>
</p><p>கடந்த ஒரு மாதத்தில் அமெரிக்காவைத் தாக்கும் மூன்றாவது பெரிய வெப்ப அலையானது வார இறுதியில் வலுவடையும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது; இது மெக்சிகோ வளைகுடா கடற்கரை முதல் கிரேட் ப்ளைன்ஸ் மற்றும் மத்திய-மேற்குப் பகுதிகள் வரை நாட்டின் பெரும்பாலான நிலப்பரப்பில் பரவியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a0924db7-6f73-4e24-9136-56d78e14b424/26-6a65f01126556.webp' /></p><p> </p><p>இந்த நிலையில், 95 முதல் 105 டிகிரி ஃபாரன்ஹீட் (35-40 டிகிரி செல்சியஸ்) வரையிலான வெப்பநிலை எதிர்பார்க்கப்படுகிறது; தென்மேற்கு அமெரிக்கப் பாலைவனப் பகுதிகளில் வெப்பநிலை 120 டிகிரி ஃபாரன்ஹீட் (48 டிகிரி செல்சியஸ்) வரை கூட உயரக்கூடும். </p><p>'ஹீட் டோம்' (heat dome) எனப்படும் வளிமண்டல உயர் அழுத்த அமைப்பின் காரணமாக, அதிக வெப்பம் வரும் வாரத்திலும் நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது; இந்த அமைப்பு ஒரு மூடியைப் போலச் செயல்பட்டு, ஒரு குறிப்பிட்ட பகுதியின் மீது வெப்பத்தை நாட்கள் அல்லது வாரக்கணக்கில் சிறைபிடித்து வைத்துக்கொள்கிறது.</p><p></p><p> </p><p>அமெரிக்கக் கோடைக்காலத்தில் வெப்ப அலைகள் ஒன்றும் புதிதல்ல என்றாலும், மனித நடவடிக்கைகளால் ஏற்படும் பருவநிலை நெருக்கடியின் காரணமாக இத்தகைய நிகழ்வுகளின் நிகழ்வுத்தன்மையும் தீவிரமும் மோசமடைந்து வருகின்றன. </p><p>அமெரிக்காவில் பலருக்கும் இந்த கோடைக்காலம் ஏற்கனவே கடும் வெப்பம் நிறைந்ததாக அமைந்துள்ளது; ஜூலை மாதத் தொடக்கத்தில் ஏற்பட்ட தீவிர வெப்ப மண்டல நிகழ்வு (heat dome) காரணமாக, நாட்டின் கிழக்குப் பகுதியில் சுதந்திர தின நிகழ்ச்சிகள் சில ரத்து செய்யப்பட்டன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fd6cd462-6662-4b78-8c68-b6badbd17b05/26-6a65f0105810a.webp' /></p><h2>ஆபத்தான வெப்பச் சூழல்</h2><p> அதன்பிறகு, மேற்கே மேலும் ஒரு வெப்ப அலை தாக்கியது; இதனால் மொன்டானாவில் வெப்பநிலை 115 டிகிரி ஃபாரன்ஹீட் வரை உயர்ந்ததுடன், முந்தைய வெப்பநிலைச் சாதனைகளும் முறியடிக்கப்பட்டன. </p><p>சமீபத்திய 'ஹீட் டோம்' (heat dome) நிகழ்வு டென்வர் பகுதியில் புதிய வெப்பச் சாதனைகளை முறியடிக்கக்கூடும்; அதேவேளையில், வார இறுதியில் வெப்பநிலை 108 டிகிரி ஃபாரன்ஹீட் வரை உயரக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ள மேற்கு நெப்ராஸ்கா பகுதிக்குத் தேசிய வானிலை ஆய்வு மையம் கடும் வெப்பத்திற்கான எச்சரிக்கையை விடுத்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e8219c4f-aca6-479d-aa7c-543d9248bab6/26-6a65f011e243c.webp' /></p><p> </p><p>இதனிடையே, ஐரோப்பாவின் பெரும்பகுதி தற்போது ஆபத்தான வெப்பச் சூழலில் சிக்கியுள்ளது; ஸ்பெயின் மற்றும் பிரான்சில் காட்டுத்தீயிலிருந்து தப்பிக்க 300,000 பேர் வெளியேறியுள்ளனர். </p><p>பிரான்சில் ஜூன் மாதத்தில் ஏற்பட்ட தனியொரு வெப்ப அலை காரணமாக சுமார் 5,700 பேர் மரணமடைந்திருக்கலாம் என்று அதிகாரிகள் மதிப்பிட்டுள்ளனர்.</p><p>
காட்டுத்தீ எளிதில் ஏற்படக்கூடிய சூழலை உருவாக்கியுள்ள வெப்பமான மற்றும் வறண்ட வானிலையால், பிரித்தானியாவின் சில பகுதிகளும் தீப்பிடித்து எரிகின்றன. அமெரிக்கா முழுவதும், 88 இடங்களில் ஏற்பட்டுள்ள தீயை அணைக்கும் பணிகளில் தீயணைப்பு வீரர்கள் தற்போது ஈடுபட்டு வருகின்றனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-26T11:23:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[இராணுவப் பயிற்சியை இரத்து செய்த பிரித்தானியா - கென்யா உடனான உறவில் ஏற்பட்டுள்ள விரிசல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/britain-cancels-military-training-in-kenya-1785064918"></link>
            <id>https://tamilwin.com/article/britain-cancels-military-training-in-kenya-1785064918</id>
            <summary type="text">கென்யாவில் நடைபெறவிருந்த கூட்டு இராணுவப் பயிற்சியைப் பிரித்தானியா இரத்து
செய்த நடவடிக்கையானது, இரு நாடுகளுக்கும் இடையே பல தசாப்தங்களாக நிலவி வரும்
ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>கென்யாவில் நடைபெறவிருந்த கூட்டு இராணுவப் பயிற்சியைப் பிரித்தானியா இரத்து
செய்த நடவடிக்கையானது, இரு நாடுகளுக்கும் இடையே பல தசாப்தங்களாக நிலவி வரும்
பாதுகாப்பு உறவில் ஏற்பட்டுள்ள விரிசலை வெளிப்படுத்தியுள்ளது.</p><p>

இதற்கமைய, 2026 செப்டெம்பர் மாதம் திட்டமிடப்பட்டிருந்த இந்தப் பயிற்சிக்குத் தேவையான
உரிய ஒப்புதல்கள் மற்றும் உரிமங்கள் கிடைக்காததால், பயிற்சிப் பயணம் இரத்து
செய்யப்பட்டுள்ளதாகப் பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.</p><p></p><p>
</p><p>
இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தின் கீழ்,
கென்யாவில் தங்கியிருக்கும் பிரித்தானியப் படைகளின் சட்ட வரம்பு, குற்றவியல்
நடவடிக்கைகள் மீதான விசாரணை மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பான நிபந்தனைகளில்
எழுந்த கருத்து வேறுபாடே இந்த சர்ச்சைக்கு முக்கியக் காரணமாகும்.</p><h2>

நாடாளுமன்ற உறுப்பினர்களின் வலியுறுத்தல்</h2><p>
கென்யாவில் உள்ள “பாதுகாப்புப் படைப் பயிற்சி அலகு” மூலம் கூட்டுப் பயிற்சிகள்
மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், அங்குள்ள பிரித்தானிய வீரர்களால் மனித உரிமை
மீறல்கள் அல்லது குற்றச் செயல்கள் கோரப்பட்டால், அவர்கள் மீது நடவடிக்கை
எடுக்கும் அதிகாரம் கென்ய சட்ட அமைப்பிற்கு வழங்கப்பட வேண்டும் என அந்நாட்டு
நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0bcd71a2-0db1-41db-8a83-a523e9b86370/26-6a65ee2ed107a.webp' /></p><p>

கென்யாவின் இந்தக் கவலைகளுக்குப் பிரித்தானியா தனது வருத்தத்தைப் பதிவு
செய்துள்ள போதிலும், தங்களது கூட்டாண்மை இரு நாடுகளின் பரஸ்பர பாதுகாப்பு
நலன்களையே அடிப்படையாகக் கொண்டுள்ளது என்று கூறியுள்ளது.</p><p>

இருப்பினும், இந்தப் பயிற்சி இரத்து செய்யப்பட்டமை உடனடியாக இரு நாடுகளுக்கு
இடையேயான இராணுவ உறவுக்கு முற்றுப்புள்ளி வைக்கவில்லை என்றாலும், எதிர்காலப்
பாதுகாப்பு ஒப்பந்தங்கள் மற்றும் வெளிநாட்டுப் படைகளின் செயல்பாடுகள் மீதான
கென்யாவின் கண்காணிப்பு மேலும் தீவிரமடையும் என்பதையே உணர்த்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-26T11:23:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரேணுகா விடுதி பிளட்போம்காரருக்கு அநுரவின் ஓகஸ்ட் 3 சந்திப்பு டீல்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/6-tamil-political-parties-meet-with-anura-kumara-1785063886"></link>
            <id>https://ibctamil.com/article/6-tamil-political-parties-meet-with-anura-kumara-1785063886</id>
            <summary type="text">ஆறு தமிழ் அரசியல் கட்சிகள் நேற்று முன்தினம் (24) சிறிலங்கா நாடாளுமன்ற வளாகத்தில் ஒன்று கூடி, சிறிலங்கா அரசதலைவர் அநுரவுடன் ஒரு சந்திப்பை நடத்த முடிவு ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஆறு தமிழ் அரசியல் கட்சிகள் நேற்று முன்தினம் (24) சிறிலங்கா நாடாளுமன்ற வளாகத்தில் ஒன்று கூடி, சிறிலங்கா அரசதலைவர் அநுரவுடன் ஒரு சந்திப்பை நடத்த முடிவு செய்து ஒரு கடிதத்தை அனுப்பிய நிலையில் என்ன ஆச்சரியம் நேற்று அநுர தரப்பில் மளமளவென சில நகர்வுகள் நடந்தன.</p><p>
இந்த மளமள நகர்வுகளால் எதிர்வரும் ஓகஸ்ட் 3 ஆம் திகதி இந்த சந்திப்பை நடத்தும் முகூர்த்தம் ரேணுகா டீல் பிளட்போம்காரருக்கு கிட்டிவிட்டது.</p><p>சிறிலங்காவின் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு தமிழரசு கட்சி மற்றும் எதிரணியிலுள்ள மலையக நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களிப்பதை தவிர்த்த பின்னர் அந்த நன்றிக்கு கடப்பாடோ என்னவோ உடனடியாக சந்திப்புக்கு பதில் வழங்கப்பட்டது. </p><p>அநுரவுக்கு ஒரு கடிதம் பறந்த ஒரிரு மணிநேரங்களில் இந்த சந்திப்புக்கு நாள் குறிக்கப்பட்டமை அசாதாரணம் தான் 
அதிலும் உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு வயதை நீடிக்கும் நகர்வுக்கு அரசாங்கம் உறுதியாக உள்ள நிலையில் ஆகக்குறைந்தது இந்த விடயத்தில் 6 தமிழபேசும் கட்சிகளை சமரம் செய்வது தனக்கு ஆதாயமாக கூடும் என்ற அடிப்படையில் இந்த சந்திப்புக்கு அநுர விரைவாக முகூர்த்தம் குறித்திருக்காலாம்.</p><p>இந்த நிலையில் என்ன மாயமோ மந்திரமோ கடந்த சில மாதங்களாகக் கணிசமாகக் குறைந்திருந்த பாதளா டுமீல்கள் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள், திடீரென மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில் இந்த விடயங்களை தழுவி வருகிறது செய்திவீச்சு.........</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/sepKKHv_eQ4" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p>

</p><p>

</p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-26T11:21:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[குளியலறையில் உருக்குலைந்த நிலையில் மீட்கப்பட்ட சடலம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/body-found-mutilated-inside-bathroom-1785064580"></link>
            <id>https://jvpnews.com/article/body-found-mutilated-inside-bathroom-1785064580</id>
            <summary type="text">காலி, கராப்பிட்டிய - மாயிடிபே பகுதியில் உள்ள வீடொன்றின் குளியலறையில் இருந்து உருக்குலைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. 

இவ்வாறு உ...</summary>
            <content type="html"><![CDATA[<p>காலி, கராப்பிட்டிய - மாயிடிபே பகுதியில் உள்ள வீடொன்றின் குளியலறையில் இருந்து உருக்குலைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. </p><p>

இவ்வாறு உயிரிழந்தவர் குறித்த வீட்டில் தனியாக வசித்து வந்த 58 வயதுடைய திருமணமாகாதவர் என தெரிவிக்கப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6c7dbfab-62b3-49c9-bdf7-aa46b22f70c5/26-6a65ec85ed8ba.webp' /></p><h2>மேலதிக விசாரணை</h2><p> </p><p>

குறித்த வீட்டில் இருந்து வீசிய துர்நாற்றம் தொடர்பில் அருகில் உள்ள வீடொன்றில் தங்கியிருந்த பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் கராப்பிட்டிய பொலிஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். </p><p>

அதற்கமைய, பொலிஸார் குறித்த வீட்டில் பரிசோதனை மேற்கொண்டபோதே குளியலறையில் இருந்து இந்த சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.</p><p></p><p> </p><p>

பிரேத பரிசோதனைக்காக சடலம் காலி தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. </p><p>

இச்சம்பவம் தொடர்பில் காலி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன</p><p></p>]]></content>
            <updated>2026-07-26T11:16:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரூ. 100 கோடி கொடுத்தால் அதை செய்யமாட்டேன்!! நடிகை ஐஸ்வர்யா லட்சுமி..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/aishwarya-lekshmi-bold-statement-about-re-entry-1785059262"></link>
            <id>https://viduppu.com/article/aishwarya-lekshmi-bold-statement-about-re-entry-1785059262</id>
            <summary type="text">ஐஸ்வர்யா லட்சுமிதென்னிந்திய சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி, கட்டா குஸ்தி 2 படத்தில் நடித்து மிகப்பெரிய வரவேற்பை பெற்ற...</summary>
            <content type="html"><![CDATA[<h2>ஐஸ்வர்யா லட்சுமி</h2><p>தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி, கட்டா குஸ்தி 2 படத்தில் நடித்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றார். சில ஆண்டுகளாக சோசியல் மீடியாக்களில் இருந்து விலகி இருந்து வருகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e4bb8b26-c592-41f1-a7aa-fde586efa7f4/26-6a65d7c00ce50.webp' /></p><p> சமீபத்தில் அவர் அளித்த பேட்டியொன்றில், சோசியல் மீடியாகளில் என்னுடைய புகைப்படங்கள் மார்ஃபிங் செயப்பட்டு ஆபாசமாக பகிரப்பட்டதும், தரக்குறைவான கருத்துகள் பதிவானதும் என்னை கடுமையாக பாதித்தது. ஒரு கட்டத்தில் உலகமே எனக்கு எதிராக இருப்பதுபோல் உணர்ந்தேன். </p><p>மேலும் கடந்த ஆண்டு அனைத்து சோசியல் மீடியாக்களில் இருந்தும் விலகினேன். ரூ. 100 கோடி கொடுத்தாலும் மீண்டும் சோசியல் மீடியாவுக்கு வரவேமாட்டேன். ஆன்லைனில் பழகுவதைவிட மக்களை நேரில் சந்தித்து பேசுவதையே விரும்புகிறேன் என்று ஐஸ்வர்யா லட்சுமி தெரிவித்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-07-26T11:15:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[தென் சீனப் பகுதிகளை தாக்கிய சூறாவளி: 9 பேர் உயிரிழப்பு - பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/typhoon-hits-southern-china-1785064198"></link>
            <id>https://tamilwin.com/article/typhoon-hits-southern-china-1785064198</id>
            <summary type="text">தென் சீனப் பகுதிகள் மற்றும் ஹொங்கொங்கைச் சுற்றியுள்ள பகுதிகளில் நௌல் சூறாவளிவால் பலத்த காற்று மற்றும் கனமழை பெய்து வரும் நிலையில், அப்பகுதி மக்கள் பாத...</summary>
            <content type="html"><![CDATA[<p>தென் சீனப் பகுதிகள் மற்றும் ஹொங்கொங்கைச் சுற்றியுள்ள பகுதிகளில் நௌல் சூறாவளிவால் பலத்த காற்று மற்றும் கனமழை பெய்து வரும் நிலையில், அப்பகுதி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>

இது தொடர்பான அறிவிப்புகளை சீன தேசிய வானிலை மையம் வழங்கி வருவதுடன், இன்று(26.07.2026) அதிகாலை 3:50 மணியளவில் குவாங்டாங்- ஹுய்ஷோ பகுதியில் இந்த சூறாவளி கரையை கடந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p> </p><p>

சீனாவின் கரையைக் கடந்த மிக வலுவான சூறாவளி இது என்றும், அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமொன்றும் செய்தி வெளியிட்டுள்ளது.
</p><p>
இதற்கமைய, மணிக்கு 110 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்றை வீசிய இந்தச் சூறாவளி,
உள்நோக்கி நகர்ந்து படிப்படியாக வலிமை இழந்து வருவதாகவும் கூறப்படுகின்றது. </p><h2>

9 பேர் உயிரிழப்பு</h2><p>
இருப்பினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குவாங்டாங் மாகாணத்தில் மட்டும்
7,15,000-க்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு
வெளியேற்றப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/08e0b2d6-9c80-4ba2-acb3-cfdc990efb27/26-6a65eb56e32d8.webp' /></p><p>
</p><p>
மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளதோடு, ஹொங்கொங்கில் பலத்த காற்றினால் கட்டிடப்
பலகைகள் சரிந்து விழுந்தன.

இந்த இயற்கைச் சீற்றத்தின் காரணமாக ஹொங்கொங் விமான நிலையத்தில் சுமார் 350
விமானங்கள் இரத்து செய்யப்பட்டன.
</p><p>
 மேலும், ஹொங்கொங்கில் குறைந்தது 9 பேர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சூறாவளியின் தாக்கம் தாய்வானின் தென் மற்றும் கிழக்கு பகுதிகளிலும் பலத்த
மழையை பொழிந்துவிட்டுத் தற்போது தாய்வான் கடற்பகுதியை விட்டு விலகிச்
சென்றுள்ளது.&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-26T11:11:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kumar</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பிலிருந்து புறப்பட்ட பேருந்து விபத்து - சாரதி உட்பட இருவர் படுகாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/two-people-injured-in-bus-accident-1785061937"></link>
            <id>https://tamilwin.com/article/two-people-injured-in-bus-accident-1785061937</id>
            <summary type="text">கொழும்பிலிருந்து அக்கரைப்பற்று நோக்கி பயணித்த பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியதில் சாரதி உட்பட இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
குறித்த விபத்தானது, இன்றை...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பிலிருந்து அக்கரைப்பற்று நோக்கி பயணித்த பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியதில் சாரதி உட்பட இருவர் படுகாயமடைந்துள்ளனர்.</p><p>
குறித்த விபத்தானது, இன்றைய தினம்(26.07.2026) நேர்ந்துள்ளது.</p><p></p><h2>பேருந்து விபத்து</h2><p>
</p><p>விபத்தில் காயமடைந்த சாரதி உட்பட இருவர் மட்டக்களப்பு போதனா
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9c527995-bb85-4125-b913-25bb8c566e83/26-6a65e4b1373c0.webp' /></p><p>

சாரதியின் நித்திரை கலக்கமே இந்த விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
</p><p>இந்த விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.&nbsp;&nbsp;</p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-26T11:01:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[கூலியை முந்திய ஜனநாயகன்.. சம்பவம் செய்யும் தளபதி விஜய்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/jananayagan-beats-coolie-movie-record-in-booking-1785063082"></link>
            <id>https://cineulagam.com/article/jananayagan-beats-coolie-movie-record-in-booking-1785063082</id>
            <summary type="text">ஜனநாயகன்கடந்த ஜூலை 23-ஆம் தேதி முதலமைச்சர் விஜய்யின் ஜனநாயகன் திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. கலவையான விமர்சனங்கள் ஒர...</summary>
            <content type="html"><![CDATA[<h2>ஜனநாயகன்</h2><p>கடந்த ஜூலை 23-ஆம் தேதி முதலமைச்சர் விஜய்யின் ஜனநாயகன் திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. கலவையான விமர்சனங்கள் ஒரு பக்கம் இருந்தாலும், ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aa92510b-50ae-4d5c-a527-77c842d19348/26-6a65e6ade5684.webp' /></p><p>வெளியாகி 3 நாட்கள் ஆகியுள்ள நிலையில், இதுவரை உலகளவில் ரூ. 165 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களிலும் இப்படத்தின் வசூல் வேட்டை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p> </p><p></p><h2>கூலியை முந்திய ஜனநாயகன்
</h2><p>
இந்நிலையில், ரஜினியின் கூலி திரைப்படத்தை விஜய்யின் ஜனநாயகன் திரைப்படம் முந்தியுள்ளது. படம் வெளியாகி முதல் சனிக்கிழமை அன்று புக் மை ஷோவில் அதிக டிக்கெட் புக் செய்யப்பட்ட டாப் 10 திரைப்படங்களில், ஜனநாயகன் 4-வது இடத்தை பிடித்துள்ளது. முதல் சனிக்கிழமை அன்று இப்படத்திற்கு 488K டிக்கெட்டுகள் புக் செய்யப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/09a6bca2-0149-4f25-887a-dda2ecab0c81/26-6a65e6ad3d595.webp' /></p><p>கூலி திரைப்படம் வெளிவந்த முதல் சனிக்கிழமை அன்று புக் மை ஷோவில் 481K டிக்கெட்டுகள் புக் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-07-26T11:00:00+00:00</updated>
        </entry>
    </feed>
