<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-09-14T19:23:55+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானிய சமூகத்தை சீர்குலைக்க திட்டமிடும் அமெரிக்க பொருளாதாரத் தடை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/the-us-plans-to-destabilize-iranian-society-1789413759"></link>
            <id>https://ibctamil.com/article/the-us-plans-to-destabilize-iranian-society-1789413759</id>
            <summary type="text">அமெரிக்கா விதித்துள்ள பொருளாதாரத் தடைகள் மூலம் ஈரானிய சமூகத்தை சீர்குலைத்து, நாட்டில் சமூகக் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிப்பதாக ஈரான் ஜனாதிபதி மசூத் ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்கா விதித்துள்ள பொருளாதாரத் தடைகள் மூலம் ஈரானிய சமூகத்தை சீர்குலைத்து, நாட்டில் சமூகக் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிப்பதாக ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் குற்றஞ்சாட்டியுள்ளார்.
</p><p>ஈரானில் தொழிலாளர் அமைச்சகத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய அவர், அமெரிக்கா விதித்துள்ள கட்டுப்பாடுகள் மற்றும் பொருளாதார நெருக்கடிகள் ஊடாக ஈரானில் சமூக வீழ்ச்சியை ஏற்படுத்துவதே அதன் நோக்கம் எனக் குறிப்பிட்டுள்ளார்.</p><p>
மேலும், வெளிநாடுகளில் வசிக்கும் சில ஈரானியர்கள் நாட்டின் எதிரிகளுடன் இணைந்து செயல்பட்டு, ஈரானுக்குள் உள்ள மக்களிடையே குழப்பத்தையும் பிளவையும் ஏற்படுத்த முயற்சிப்பதாகவும் பெசெஷ்கியான் தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>அமெரிக்க திறைசேரி</h2><p>
அமெரிக்க திறைசேரி கடந்த ஆகஸ்ட் 24ஆம் திகதி “Operation Economic Outcast” என்ற நடவடிக்கையை அறிவித்திருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c119c591-02aa-442e-8d92-03601273e1d3/26-6aa8498155fe5.webp' /></p><p>ஈரானின் வெளிநாட்டு வர்த்தகத்தின் மூலம் கிடைக்கும் வருவாயைத் துண்டிப்பதே இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

அதேவேளை, அமெரிக்காவின் கடற்படை முற்றுகை நடவடிக்கைகள் மற்றும் கடுமையாக்கப்பட்ட பொருளாதாரத் தடைகள் காரணமாக ஈரானின் எண்ணெய் ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளதுடன், அந்நாட்டின் வெளிநாட்டு நாணய அணுகலும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
</p><p>
இதன் விளைவாக ஈரானிய பொருளாதாரத்தின் மீதான அழுத்தம் மேலும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
அமெரிக்காவின் பொருளாதார மற்றும் வர்த்தக அழுத்தங்களுக்கு மத்தியில் ஈரானிய அரசாங்கம் எதிர்கொள்ளும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சவால்கள் தொடர்பில் பெசெஷ்கியானின் இந்தக் கருத்து வெளியாகியுள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-14T19:23:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல் ; பொலிஸார் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/dehiwala-hand-grenade-attack-police-release-detail-1789413718"></link>
            <id>https://jvpnews.com/article/dehiwala-hand-grenade-attack-police-release-detail-1789413718</id>
            <summary type="text">கொழும்பு தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் பல முக்கிய தகவல்களை வெளிக்கொணர்வதில் பொலிஸார் வெற்றியடைந்துள்ளனர். 

சம்பவம் குறித்து மேற்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் பல முக்கிய தகவல்களை வெளிக்கொணர்வதில் பொலிஸார் வெற்றியடைந்துள்ளனர்.</p><p></p><p> 

சம்பவம் குறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளான படோவிட்ட அசங்க மற்றும் குடு அவிஷ்க ஆகியோரின் குழுக்களுக்கு இடையே நிலவிய பகையே இக்கைக்குண்டுத் தாக்குதலுக்குக் காரணம் என பொலிஸார் வெளிப்படுத்தியுள்ளனர். </p><p>

அத்துடன், குண்டுத் தாக்குதலை நடத்த வந்த சந்தேகநபர் மற்றும் முச்சக்கரவண்டி சாரதியின் தொலைபேசித் தரவுகள் மூலமும் பல தகவல்கள் பொலிஸாரால் பெறப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/efc78103-c973-484c-b2f8-bbea0f70cd24/26-6aa849590b420.webp' /></p><p> 

மேலும், இத்தாக்குதலை நடத்துவதற்காக சந்தேகநபர்கள் நெதிமால ஆசிரி மாவத்தை பகுதியிலிருந்து முச்சக்கரவண்டியில் புறப்பட்டுச் செல்லும் காட்சிகள் அடங்கிய CCTV காட்சிகளும் கண்டறியப்பட்டுள்ளன. </p><p>

அவிஷ்கவின் நெருங்கிய கூட்டாளியான 'கொஸ்மல்லி' என்ற குற்றவாளியின் மாமாவும் அவரது கோஷ்டியைச் சேர்ந்த ஒருவருமே இத்தாக்குதலை வழிநடத்தியுள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.</p><p> 

சந்தேகநபர் தெஹிவளை, வனரதன பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்பதுடன், அவரைக் கைது செய்ய பல பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை முடுக்கிவிட்டுள்ளன. </p><p>

அவிஷ்க குழுவின் முதன்மை கூலிப்படை கொலையாளியாக இவரே செயற்பட்டுள்ளார் என்றும், கல்கிஸ்ஸை மற்றும் தெஹிவளை பகுதிகளில் அண்மையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களுடன் இவருக்குத் தொடர்புள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். </p><p>

இச்சம்பவம் குறித்து சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரன்மல் கொடித்துவக்கின் நேரடி மேற்பார்வையில் ஒரு பொலிஸ் குழுவும், மேல் மாகாண தெற்கு திசைக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் சமந்த விஜேசேகர தலைமையில் 3 பொலிஸ் குழுக்களும் விசாரணைகளை நடத்தி வருகின்றன.</p><p> 

இதன்படி, கைக்குண்டுத் தாக்குதலுக்காக குற்றவாளிகள் வந்த முச்சக்கரவண்டியின் நிறத்தை மாற்றுவதற்காக அதை பழுது பாரக்கும் நிலையம் ஒன்றுக்கு ஒப்படைத்ததாக சந்தேகிக்கப்படும் நபர் ஒருவரும், அந்த நிலையத்தின் உரிமையாளரும் கல்கிஸ்ஸை குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இன்று பிற்பகல் கைது செய்யப்பட்டனர். </p><p>

குறித்த முச்சக்கரவண்டி களுத்துறை நாகொட பகுதியில் வைத்து திருடப்பட்டு, பின்னர் தெஹிவளை நெதிமால பகுதியில் உள்ள பழுதுபார்க்கும் நிலையம் ஒன்றில் வைத்து அதன் நிறம் மாற்றப்பட்டுள்ளமை கல்கிஸ்ஸை பிரிவின் பொறுப்பதிகாரிக்கு தெரியவந்துள்ளது.</p><p> </p><p></p><p>அதனடிப்படையிலேயே அந்த நிலைய்த்தின் உரிமையாளரான 36 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். </p><p>அத்துடன், முச்சக்கரவண்டியை அங்கு கொண்டு வந்த நபரும் கைது செய்யப்பட்டுள்ளார். 

இதேவேளை, வீட்டிற்குள் கைக்குண்டை வீசிய சந்தேகநபரும், முச்சக்கரவண்டி சாரதியும் பொலிஸாரால் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர்கள் தற்போது அப்பகுதியை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. </p><p>

வீட்டின் மீது கைக்குண்டு வீசியதாக சந்தேகிக்கப்படும் நபர் அத்திட்டிய மாந்திரிமுல்ல பகுதியைச் சேர்ந்த 26 வயதுடையவராவார். </p><p>இவர், கல்கிஸ்ஸை பொது மயானத்தின் காவலாளியாக செயற்பட்ட 'செண்டோ' என்ற குற்றவாளியின் தந்தையை சுடுவதற்கு வந்த துப்பாக்கிச் சூட்டாளர்களுக்கு தங்குமிட வசதி அளித்துள்ளமையுடன், கடந்த ஓகஸ்ட் 01 ஆம் திகதி 'குடு அஞ்சு' என்பவனின் காசாளரை படுகொலை செய்த நபர் என்பதும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. </p><p>

விசாரணைகள் எவ்வாறு முன்னெடுக்கப்பட்டாலும், இந்தச் சம்பவத்தில் நெஞ்சைப் பிளக்கும் உண்மை என்னவெனில், இந்த குண்டுத் தாக்குதல் தவறான வீட்டை இலக்கு வைத்து நடத்தப்பட்டுள்ளது என்பதை பொலிஸார் கண்டறிந்துள்ளமையாகும்.</p><p> 

தெஹிவளை, சிறிசங்கபோ மாவத்தையில் உள்ள வீடொன்றின் மீது கடந்த 11 ஆம் திகதி அதிகாலை நடத்தப்பட்ட கைக்குண்டுத் தாக்குதலில் இரு அப்பாவிச் சிறுவர்கள் உயிரிழந்தனர். </p><p>

தாயின் அரவணைப்பும் இன்றி, தந்தையின் பாதுகாப்பில் வளர்ந்து வந்த 17 வயதான கசுன் ரஷ்மிக மற்றும் அவரது சகோதரரான 11 வயதான துமிந்த கிஹான் ஆகிய இருவருமே இவ்வாறு துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்தனர்.</p><p> 

பாதாள உலகத்தைப் பற்றி எதுவுமே அறியாத, தாயின் குறையையும் போக்கி தங்களை வளர்த்த தந்தையுடன் ஆயிரம் கனாக்களுடன் வாழ்ந்த இரு அப்பாவி சிறுவர்களுமே இந்த குண்டுத் தாக்குதலால் தங்களின் உயிர்களை வீணாகப் பலி கொடுத்துள்ளனர்.</p><p> 

இத்தாக்குதலில் சிறுவர்களின் தந்தையின் காலில் பலத்த காயம் ஏற்பட்டு, சிகிச்சை பலனின்றி அவரது ஒரு கால் துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a4c3bd22-66ea-4636-b722-f8350af72916/26-6aa849585065c.webp' /></p><p> </p><p>

பாதாள உலகத்துடன் எந்தத் தொடர்பும் இல்லாத, முச்சக்கரவண்டி ஓட்டி தனது இரு பிள்ளைகளையும் காப்பாற்றி வந்த அந்த அன்புத் தந்தை, தற்போது ஒரு காலை இழந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p><p> 

மனைவியும் இல்லாத சூழலில், தான் ஆசையாக வளர்த்த இரு பிள்ளைகளின் முகத்தைக் கூட கடைசி நேரத்தின் போது நேரில் பார்க்க முடியாமல், வைத்தியசாலைக் கட்டிலில் கண்ணீர் வடித்தபடி அந்தத் தந்தை தவிக்கின்றார்.</p><p>இதேவேளை, இந்த இரு சிறுவர்களின் படுகொலை தனது இதயத்தை உலுக்கிய சம்பவமாகும் எனக் குறிப்பிட்டு இலங்கையிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க் ஆண்ட்ரூ பிரான்ஸ் (Marc-André Franche) எக்ஸ் (X) தளத்தில் பதிவொன்றை இட்டுள்ளார். </p><p>

எந்தவொரு குழந்தையும் ஒருபோதும் இத்தகைய வன்முறைக்கு பலியாகக் கூடாது என்றும், இந்த சம்பவத்திற்கு பொறுப்பானவர்கள் அதற்கு பதிலளிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ள அவர், உயிரிழந்த சிறுவர்களின் உறவினர்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துள்ளார். </p><p>

ஒரு கிராமத்தையே அழவைத்துவிட்டு அநியாயமாகப் பிரிந்த இந்த சிறு சகோதரர்களின் இறுதிக்கிரியைகள் இன்று கல்கிஸ்ஸை பொது மயானத்தில் இடம்பெற்றன. </p><p>

இறுதியில்... தங்கள் உயிர் ஏன் பறிக்கப்பட்டது என்று கூட அறியாமல் விடைபெற்ற இந்த அப்பாவிச் சிறுவர்கள், இந்த சமூகம் எவ்வளவு பாதுகாப்பற்றது, பயங்கரமானது என்பதைக் காட்டிக் கொடுத்துவிட்டு நாடே கண்ணீர் சிந்த உலகை விட்டுப் பிரிந்து சென்றுவிட்டனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-14T19:22:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ள மாட்டோம்! ஒப்புக் கொண்ட உக்ரைன் - ரஷ்யா: டிரம்ப் தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/trump-says-ukraine-russia-accept-to-halt-attacks-1789407597"></link>
            <id>https://news.lankasri.com/article/trump-says-ukraine-russia-accept-to-halt-attacks-1789407597</id>
            <summary type="text">Trump Says Ukraine and Russia Accept to Halt Attacks: &amp;nbsp;ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ள மாட்டோம் என்று ரஷ்யாவும்,&amp;nbsp; உக்ரைனும் ஒப்புக் கொண்டதாக டி...</summary>
            <content type="html"><![CDATA[<p>Trump Says Ukraine and Russia Accept to Halt Attacks: &nbsp;ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ள மாட்டோம் என்று ரஷ்யாவும்,&nbsp; உக்ரைனும் ஒப்புக் கொண்டதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.</p><h2> எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீது தாக்க மாட்டோம்</h2><p>
உக்ரைனும், ரஷ்யாவின் இனி எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீது தாக்கிக் கொள்ள மாட்டோம் என்று ஒப்புக் கொண்டு இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.</p><p>மேலும், உலகளாவிய அளவில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாட்டிற்கு மத்திய கிழக்கில் நடந்து வரும் போர் காரணம் இல்லை என்றும், உக்ரைன் - ரஷ்யா இடையே நடந்து வரும் மோதல்களே காரணம் என்றும் டிரம்ப் குற்றஞ்சாட்டியுள்ளார்.</p><p>இது தொடர்பாக தன்னுடைய ட்ரூத் சோஷியல் பக்கத்தில் தகவல் பதிவிட்டுள்ள டிரம்ப், ரஷ்யாவின் எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீது இனி தாக்குதல் நடத்த மாட்டோம் என்று உக்ரைன் தெரிவித்து இருப்பதாகவும், ரஷ்யாவும் அவ்வாறே ஒப்புக் கொண்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bf003e7d-46e1-47fb-b6c8-d5389ae829eb/26-6aa8316ed80fa.webp' /></p><p> மேலும் அதில் உலகின் டீசல் விலை ஏற்றத்திற்கு ரஷ்யா - உக்ரைன் போர் தான் காரணம், ஈரான் அல்ல என்றும் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>நேட்டோ ஆதரவை பெறும் உக்ரைன்</h2><p>இதற்கிடையில் உக்ரைனுக்கான ஆதரவை நேட்டோ அதிகரிக்கும் என்று அந்த அமைப்பின் தலைவர் மார்க் ரூட்டே தெரிவித்துள்ளார்.</p><p> உக்ரைனுக்கு எதிராக மோசமான தாக்குதல்களை ரஷ்யா தொடர்ந்து வருகிறது. இதன்மூலம் மேலும் மேலும் ரஷ்ய பொறுப்பற்ற முறையில் செயல்பட்டு வருகிறது.</p><p> உக்ரைனுக்கு நேட்டோ ஆதரவு அளிப்பதை யாராலும் தடுத்துவிட முடியாது என்றும், நேட்டோவின் ஒற்றுமையை சிதைத்து விட முடியும் என்று ரஷ்யா நினைக்கிறது. ஆனால் அது தவறு என்றும் தெரிவித்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-09-14T19:19:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தோனேசிய கப்பல் விபத்தில் 129 பேரைக் காணவில்லை - தேடுதல் பணிகள் தீவிரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/129-missing-in-indonesian-ship-accident-1789410705"></link>
            <id>https://tamilwin.com/article/129-missing-in-indonesian-ship-accident-1789410705</id>
            <summary type="text">இந்தோனேசியாவின் ஜாவா கடற்பகுதியில் 243 பயணிகளுடன் பயணித்த கப்பலொன்று சீரற்ற
வானிலை காரணமாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 129 பேர் காணாமல்போயுள்ளத...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தோனேசியாவின் ஜாவா கடற்பகுதியில் 243 பயணிகளுடன் பயணித்த கப்பலொன்று சீரற்ற
வானிலை காரணமாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 129 பேர் காணாமல்போயுள்ளதாக
அந்நாட்டு தேடுதல் மற்றும் மீட்பு முகவரகம் தெரிவித்துள்ளது.
</p><p>
சுராபாயா நகரிலிருந்து போர்னியோ தீவின் பஞ்சார்மாசின் துறைமுக நகரை நோக்கிப்
பயணித்த 'வர்ஜோ ட்ரான்ஸ்போர்ட் 8' (Virgo Transport 8) என்ற கப்பலே இவ்வாறு
விபத்துக்குள்ளாகியுள்ளது.
</p><h2>மீட்புப் பணிகளை முன்னெடுப்பதில்</h2><p>
இதுவரை இடம்பெற்ற மீட்பு நடவடிக்கைகளின் போது 108 பேர் பத்திரமாக
மீட்கப்பட்டுள்ளதுடன், ஆறு பேரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/090071a2-2da1-4492-aa05-104594ab84bb/26-6aa847bd08a04.webp' /></p><p>
காணாமல்போனவர்களைத் தேடும் பணிகளில் 600இற்கும் மேற்பட்ட மீட்புப்
பணியாளர்களும் 12 கப்பல்களும் தீவிரமாக ஈடுபடுத்தப்பட்டுள்ளன.</p><p>

இருப்பினும், அப்பகுதியில் நிலவும் பலத்த காற்று, கொந்தளிப்பான கடல் அலைகள்
மற்றும் சீரற்ற காலநிலை காரணமாக மீட்புப் பணிகளை முன்னெடுப்பதில் பெரும்
சவால்கள் நிலவுவதாக மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-14T19:15:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/man-killed-by-police-after-woman-infant-reportedly-1789402889"></link>
            <id>https://canadamirror.com/article/man-killed-by-police-after-woman-infant-reportedly-1789402889</id>
            <summary type="text">கனடாவில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கனடாவின் அல்பெர்ட்டா மாகாணத்தில் உள்ள எட்மண்டன் நகரின் தென்மேற்குப் ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.</p><p>
கனடாவின் அல்பெர்ட்டா மாகாணத்தில் உள்ள எட்மண்டன் நகரின் தென்மேற்குப் பகுதியில், பெண்ணையும் குழந்தையையும் சுட்ட 36 வயது நபரை காவல்துறையினர் சுட்டுக் கொன்றனர். </p><p>
ஞாயிற்றுக்கிழமை காலையில் டான்ஸ்டேல் டிரைவ் மற்றும் 45-வது அவென்யூ பகுதிக்கு அருகில் உள்ள வீடு ஒன்றிற்குள் துப்பாக்கியுடன் நுழைந்த அந்த நபர், அங்கிருந்த பெண்ணையும் ஒரு குழந்தையையும் சுட்டதாக எட்மண்டன் காவல் துறைக்கு அவசரத் தகவல் கிடைத்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/799d4e77-0e93-44b6-867e-51229102c334/26-6aa81f0bc7ce8.webp' /></p><p>
</p><p>தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், காயமடைந்த சிலர் வீட்டின் வெளியே தவித்துக் கொண்டிருப்பதைக் கண்டனர். 
தொடர்ந்து வீட்டைச் சுற்றி வளைக்க முயன்றபோது, அந்த நபர் கையில் துப்பாக்கியுடன் வீட்டின் முன் கதவைத் திறந்து வெளியே வந்துள்ளார்.</p><p> 
அப்போது அதிகாரிகள் கொடுத்த வாய்மொழி எச்சரிக்கைகளை அவர் மதிக்கத் தவறியதால், அங்கிருந்த மூன்று காவலர்கள் அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். </p><p>
மருத்துவக் குழுவினர் அவருக்கு உடனடியாக முதலுதவி சிகிச்சை அளித்தபோதிலும், அந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.</p><p>
இந்தச் சம்பவத்தில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காயமடைந்த இரண்டு பெண்கள் மற்றும் ஒரு குழந்தை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
</p><p>அவர்களின் காயங்கள் உயிருக்கு ஆபத்தானவை அல்ல எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>
இதனிடையே, காவல்துறையினர் நடத்திய இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து தற்போது விரிவான விசாரணை மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-14T19:02:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[லண்டனில் முதலமைச்சர் விஜய் முன்னிலையில் ரூ.11,000 கோடி முதலீடு ; 7000 பேருக்கு வேலைவாய்ப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/11-000-crore-secured-london-presence-chief-vijay-1789406889"></link>
            <id>https://jvpnews.com/article/11-000-crore-secured-london-presence-chief-vijay-1789406889</id>
            <summary type="text">தமிழ்நாட்டில் சுமார் இந்திய மதிப்பில் 11,000 கோடி ரூபாய் முதலீட்டில் 7000 பேருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில், முதலமைச்சர் விஜய் முன்னிலையில்...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழ்நாட்டில் சுமார் இந்திய மதிப்பில் 11,000 கோடி ரூபாய் முதலீட்டில் 7000 பேருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில், முதலமைச்சர் விஜய் முன்னிலையில் லண்டனில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது.</p><p>
</p><p></p><p>தொழில் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் பிரித்தானியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்க்கு, லண்டனில் வசிக்கும் தமிழர்கள் உற்சாக வரவேற்பு அளித்திருந்தனர்.
</p><p>
இந்த நிலையில், இன்று (14) லண்டனில் நடைபெற்ற முதலீட்டாளர் சந்திப்பில், சம்வர்தனா மதர்சன் இன்டர்நேஷனல் லிமிடெட் (Samvardhana Motherson International Ltd.) நிறுவனம், அதன் ஐரோப்பா மற்றும் இங்கிலாந்தைச் சேர்ந்த கூட்டு நிறுவனங்களுடன் இணைந்து, தமிழ்நாடு அரசின் வழிகாட்டி நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/79990f73-9e9e-4308-ad3a-75d014484de7/26-6aa82eaad318a.webp' /></p><p>இதன்படி, வடிவமைப்பு, பொறியியல், உற்பத்தி, கூட்டிணைப்பு மற்றும் தளபாட வசதிகள் உள்ளிட்ட துறைகளில் சுமார் 11,000 கோடி ரூபாய் முதலீடு செய்யப்படவுள்ளதுடன், சுமார் 7000 பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இதனைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் உலகளாவிய திறன் மையங்களை (Global Capability Centres – GCCs) நிறுவுவதற்கும் விரிவுபடுத்துவதற்கும் மேலும் இரண்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன.
</p><p>
இங்கிலாந்தை தலைமையிடமாகக் கொண்ட முன்னணி உலகளாவிய தகவல் தொடர்பு நிறுவனம், சென்னையில் உலகளாவிய திறன் மையம் ஒன்றை அமைப்பதற்காக தமிழ்நாடு அரசின் வழிகாட்டி நிறுவனம் மற்றும் ஏர்ன்ஸ்ட் &amp; யங் (Ernst &amp; Young) நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டுள்ளது.
</p><p>
சுமார் 1000 கோடி ரூபாய் முதலீட்டில் அமையவுள்ள இந்த மையத்தின் ஊடாக 2000க்கும் மேற்பட்ட உயர் மதிப்புடைய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படவுள்ளன.
</p><p>
இந்த மையம், சென்னையின் மவுண்ட் பூந்தமல்லி வீதியில் புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள GCC கொரிடார் பகுதியில் அமைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
மேலும், சுவீடனைச் சேர்ந்த சிக்மா டெக்னாலஜி குரூப் (Sigma Technology Group), தனது இந்திய நிறுவனமான ஸ்ரியா சொல்யூஷன்ஸ் (Sria Solutions) மூலம், திருச்சிராப்பள்ளி மற்றும் சென்னையில் இயங்கி வரும் உலகளாவிய திறன் மையங்களை விரிவுபடுத்துவதற்கும் உறுதியளித்துள்ளது.</p><p>

இதன்மூலம் எம்பெடட் சிஸ்டம்ஸ், மின்மயமாக்கல் மற்றும் தொழில்துறை டிஜிட்டல் மயமாக்கல் உள்ளிட்ட துறைகளில் 600 உயர் மதிப்புடைய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படவுள்ளன.
</p><p>
இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், முதலமைச்சர் விஜய் முன்னிலையில், சிக்மா டெக்னாலஜி குரூப் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி மைக்கேல் கார்ல்சன், ஸ்ரியா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கிருஷ்ணா ராதாகிருஷ்ணன் மற்றும் தமிழ்நாடு அரசின் வழிகாட்டி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் தீபக் ஜேக்கப் IAS ஆகியோருக்கு இடையே பரிமாறிக் கொள்ளப்பட்டது.
</p><p>
இந்த முதலீடுகள் மூலம் தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சி மற்றும் உயர்தர வேலைவாய்ப்புகள் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-14T19:02:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் சட்டவிரோத மணல் கடத்தல் ; இரு டிப்பர்கள் மீது அதிரடிப்படையினர் துப்பாக்கிச்சூடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/shots-fired-tipper-involved-sand-smuggling-jaffna-1789412280"></link>
            <id>https://jvpnews.com/article/shots-fired-tipper-involved-sand-smuggling-jaffna-1789412280</id>
            <summary type="text">யாழ்ப்பாணம், கொடிகாமம் - மீசாலை வடக்கு புத்தூர் வீதியில் சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்று, சமிக்ஞையை மீறி தப்பிச் செல்ல முயன்ற இரண்டு டிப்பர் வாகனங்கள...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம், கொடிகாமம் - மீசாலை வடக்கு புத்தூர் வீதியில் சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்று, சமிக்ஞையை மீறி தப்பிச் செல்ல முயன்ற இரண்டு டிப்பர் வாகனங்கள் மீது பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.</p><p></p><h3>பொலிஸார் மேலதிக விசாரணை</h3><p> </p><p>

நேற்று இரவு 11.15 இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/705cbe19-d6a3-4642-90a0-5ff928a5c600/26-6aa843ba81532.webp' /></p><p>சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றிச் சென்ற இரு டிப்பர் வாகனங்களை புத்தூர் வீதியில் வைத்து பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் வழிமறித்துள்ளனர். </p><p>

இருப்பினும், அவர்களின் சமிக்ஞையை மீறி வாகனங்கள் நிறுத்தப்படாமல் வேகமாகச் சென்றுள்ளன. </p><p>

இதனையடுத்து, அதிரடிப்படையினர் குறித்த டிப்பர் வாகனங்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி அவற்றை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். </p><p>

தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட சோதனையில் இரு டிப்பர் வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டதுடன், அவற்றைச் செலுத்தி வந்த சாரதிகள் இருவரும் கைது செய்யப்பட்டனர்.</p><p> 

இச்சம்பவம் தொடர்பில் கொடிகாமம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-14T18:58:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானியாவில் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் சோகம்: 2 இளைஞர்கள் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/2-participants-dies-in-great-north-run-1789411762"></link>
            <id>https://news.lankasri.com/article/2-participants-dies-in-great-north-run-1789411762</id>
            <summary type="text">2 Participants Dies in Great North Run: பிரித்தானியாவில் நடைபெற்ற கிரேட் நார்த் ரன் போட்டியில் இரண்டு பங்கேற்பாளர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படு...</summary>
            <content type="html"><![CDATA[<p>2 Participants Dies in Great North Run: பிரித்தானியாவில் நடைபெற்ற கிரேட் நார்த் ரன் போட்டியில் இரண்டு பங்கேற்பாளர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><h2> இருவர் உயிரிழப்பு</h2><p>உலகின் மிகப்பெரிய அரை மாரத்தான் போட்டியாக கருதப்படும் கிரேட் நார்த் ரன்(Great North Run) போட்டியில் இரண்டு பங்கேற்பாளர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><p> நியூகேஸில்(Newcastle) முதல் சவுத் ஷீல்ட்ஸ்(South Shields) வரை நடைபெற்ற 13.1 மைல் தூரப் அரை மாரத்தான் ஓட்டப் பந்தயத்தில் வடகிழக்கு பகுதியை நேர்ந்த இரண்டு 25 வயது இளைஞர்கள் திடீரென மயங்கி விழுந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d08605f5-3365-44b7-ab06-388ac54e0839/26-6aa841b3aa132.webp' /></p><p> அவர்களுக்கு உடனடியாக மருத்துவ உதவிகள் வழங்கப்பட்ட போதிலும் இருவரும் பரிதாபமாக உயிரிழந்ததாக கிரேட் ரன் கம்பெனி அறிவித்துள்ளது.</p><p> உயிரிழப்புக்கான அதிகாரப்பூர்வ காரணங்கள் இன்னும் கண்டறியப்படவில்லை. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை கருத்தில் கொண்டு மேற்கண்ட விவரங்கள் எதுவும் வெளியிடப்படாது என்று போட்டி அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.</p><p></p><p> ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற உலகப் புகழ்பெற்ற இந்த அரை மாரத்தான் போட்டியில் கிட்டத்தட்ட 63,000க்கும் அதிகமானோர் பங்கேற்றனர்.</p><p> மேலும் இந்த ஓட்டப் பந்தயத்தில் மற்றொரு முக்கியமான நிகழ்வாக, இதில் பிரித்தானிய பிரதமர் ஆண்டி பர்ஹாம் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.</p><p> இதன் மூலம் இந்த போட்டியில் பங்கேற்ற முதல் பிரித்தானிய பிரதமர் என்ற பெருமையை அவர் ஆண்டி பர்ஹாம் பெற்றுள்ளார்.</p>]]></content>
            <updated>2026-09-14T18:49:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[எல் நினோ குறித்து சஜித் எச்சரிக்கை ; பேரழிவுக்கு முன்பே தயாராக வேண்டும்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sajith-warn-about-el-ni-no-before-disaster-strikes-1789411615"></link>
            <id>https://jvpnews.com/article/sajith-warn-about-el-ni-no-before-disaster-strikes-1789411615</id>
            <summary type="text">சர்வதேச காலநிலை அமைப்புகளின் தரவுகளின்படி &#039;எல் நினோ&#039; காலநிலையில் மாற்றம் ஏற்படுவது 100 சதவீதம் உறுதியாகியுள்ளதால், பேரழிவைத் தடுப்பதற்கான தயார்நிலையை ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சர்வதேச காலநிலை அமைப்புகளின் தரவுகளின்படி 'எல் நினோ' காலநிலையில் மாற்றம் ஏற்படுவது 100 சதவீதம் உறுதியாகியுள்ளதால், பேரழிவைத் தடுப்பதற்கான தயார்நிலையை அதிகரிக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.</p><p></p><p>

பேரழிவுகள் நிகழ்ந்த பின்னர் நிவாரணம் வழங்குவதில் கவனம் செலுத்துவதை விடுத்து, முன்னெச்சரிக்கையாக , முன்கூட்டியே தயாராகுவதிலும் பாதிப்புகளைக் குறைப்பதிலும் கவனம் செலுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e10a141c-964d-468b-bbd8-593eaa28f161/26-6aa84120e0d8e.webp' /></p><p>

பாரம்பரியமாக, ஒரு பேரழிவு தாக்கிய பின்னரே இலங்கை அதற்கான நடவடிக்கைகளில் கவனம் செலுத்தி வருகிறது.
</p><p>
பேரழிவு குறித்து முன்னெச்சரிக்கை விடுக்கப்படும்போதெல்லாம், அதன் பாதிப்புகளைக் குறைப்பதற்கும் முன்கூட்டியே தயாராகுவதற்கும் முன்னுரிமை அளிக்கும் வகையில் முழுமையான மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-14T18:47:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[மாணவர்களின் ஆரோக்கியத்திற்காக இங்கிலாந்து அரசாங்கம் எடுத்த அதிரடி நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/bold-move-by-the-uk-government-students-health-1789410385"></link>
            <id>https://canadamirror.com/article/bold-move-by-the-uk-government-students-health-1789410385</id>
            <summary type="text">இங்கிலாந்தில் உள்ள பாடசாலைகளில் வழங்கப்பட்டு வரும் உணவுகளில் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
சிறுவர்களின் ஆரோக்கியத...</summary>
            <content type="html"><![CDATA[<p>இங்கிலாந்தில் உள்ள பாடசாலைகளில் வழங்கப்பட்டு வரும் உணவுகளில் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.</p><p>
</p><p>சிறுவர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கிலும், சிறுவர் பருமன் (Childhood obesity) பிரச்சனையைக் கட்டுப்படுத்தும் நோக்கிலும் இந்த புதிய கட்டுப்பாடுகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cd05831b-d1c1-46cc-87cd-b3173067cf2a/26-6aa83c531fbaf.webp' /></p><p>இந்தப் புதிய விதிமுறைகளின் கீழ், பாடசாலைகளில் பொரித்த உணவுகள் (Deep-fried food) முழுமையாகத் தடை செய்யப்படுவதோடு, புதிய பழங்கள், காய்கறிகள், நார்ச்சத்துள்ள உணவுகள் மற்றும் முழு தானியங்கள் ஆகியவற்றின் பயன்பாடு அதிகரிக்கப்படவுள்ளது.
</p><p>
அத்துடன், இனிப்புப் பண்டங்கள் மற்றும் பதப்படுத்தப்பட்ட இறைச்சி வகைகளின் பயன்பாடு வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறைகளாகக் கட்டுப்படுத்தப்படவுள்ளது.</p><p>

அதன்படி, பேஸ்ட்ரி வகைகள், பொரித்த முட்டைகள் மற்றும் அதிக சீனியைக் கொண்ட தானிய உணவுகள் வழங்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
</p><p>
பாடசாலைகள் தங்களின் உணவு அட்டவணைகளை இணையத்தில் வெளியிட வேண்டும் என்பதுடன், உணவுத் தரநிலை ஆய்வகத்துடன் இணைந்து கண்காணிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என கல்வித் திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-09-14T18:26:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலகளாவிய முதலீட்டாளர்களை ஈர்க்க கனடா பிரதமர் மார்க் கார்னி தீவிர முயற்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/mark-carney-effort-to-attract-global-investors-1789408257"></link>
            <id>https://tamilwin.com/article/mark-carney-effort-to-attract-global-investors-1789408257</id>
            <summary type="text">நாட்டின்
பொருளாதாரத்தைச் சீரமைக்கும் நோக்கில் சர்வதேச அளவிலான முன்னணி
முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்கான இரண்டு நாட்கள் மாநாட்டை கனடா பிரதமர் மார்க்
கார்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டின்
பொருளாதாரத்தைச் சீரமைக்கும் நோக்கில் சர்வதேச அளவிலான முன்னணி
முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்கான இரண்டு நாட்கள் மாநாட்டை கனடா பிரதமர் மார்க்
கார்னி டொரான்டோவில் ஆரம்பித்து வைத்துள்ளார்.
</p><p>
சுமார் 160 க்கும் மேற்பட்ட பல்வேறு திட்டங்களுக்காக 1 டிரில்லியன் கனடிய
டொலர்களை அடுத்த ஐந்து ஆண்டுகளில் திரட்டுவதை இலக்காகக் கொண்டு இந்த மாநாடு
ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
</p><p>
இதில் பிளக்ரொக் தலைமை நிர்வாகி லாரி ஃபிங்க் மற்றும் பிளக்ஸ்டோன் தலைவர் ஜோன்
கிரே உள்ளிட்ட உலகின் முன்னணி நிதி நிறுவனங்களின் தலைவர்கள் பலர்
கலந்து கொண்டுள்ளனர்.</p><h2>வர்த்தக உறவு</h2><p>
</p><p>
சுரங்கம், எரிசக்தி, தொழில்நுட்பம் மற்றும் போக்குவரத்து போன்ற முக்கிய
துறைகளில் முதலீடுகளை ஈர்ப்பதையே கனடா முதன்மையாக நோக்கமாகக் கொண்டுள்ளது.
</p><p>
குறிப்பாக, அல்பர்ட்டா மற்றும் நியூ பிரன்சுவிக் பகுதிகளில் தரவு மையங்கள்,
ஆல்பர்ட்டாவின் ஹைட்ரஜன் திட்டங்கள் மற்றும் கல்கரிக்கும் எட்மண்டனுக்கும்
இடையிலான அதிவேக போக்குவரத்துத் திட்டம் போன்றவை இம்மாநாட்டில் சர்வதேச
முதலீட்டாளர்களுக்குக் காட்சிப்படுத்தப்படவுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1349d293-b5dc-4a33-9b52-d055079278b3/26-6aa8383fd6a6c.webp' /></p><p>
</p><p>
அமெரிக்கா விதித்துள்ள வரி விதிப்புகளால் ஏற்பட்டுள்ள பொருளாதாரப் பாதிப்புகளை
ஈடுசெய்யவும், உலகளாவிய முதலீடுகளை அதிகரிக்கவும் மத்திய கிழக்கு, ஆசியா
மற்றும் ஐரோப்பிய நாடுகளுடனான வர்த்தக உறவுகளைப் பலப்படுத்த கனடிய அரசாங்கம்
நடவடிக்கை எடுத்து வருகிறது.
</p><p>
எனினும், இம்மாநாட்டின் மூலம் பேச்சுவார்த்தைகள் தொடங்கப்பட்டாலும்,
மிகப்பெரிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக குறைந்தது 12 முதல் 18 மாதங்கள் வரை
ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-14T18:22:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[முள்ளிவாய்க்கால் முற்றத்தில் நினைவேந்தல் சுவர் இடிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/demolition-memorial-wall-at-mullivaikkal-mutram-1789409172"></link>
            <id>https://ibctamil.com/article/demolition-memorial-wall-at-mullivaikkal-mutram-1789409172</id>
            <summary type="text">முள்ளிவாய்க்கால் முற்றத்தின் நினைவேந்தல் சுவர் இடிக்கப்பட்ட காணொளி சமூக ஊடகங்களில் விவாதத்தை கிளப்பியுள்ளது.

2009ஆம் ஆண்டு இறுதிக்கட்டப் போரில் உயி...</summary>
            <content type="html"><![CDATA[<p>முள்ளிவாய்க்கால் முற்றத்தின் நினைவேந்தல் சுவர் இடிக்கப்பட்ட காணொளி சமூக ஊடகங்களில் விவாதத்தை கிளப்பியுள்ளது.
</p><p>
2009ஆம் ஆண்டு இறுதிக்கட்டப் போரில் உயிரிழந்த தமிழ் மக்களை நினைவுகூரும் மிக முக்கியமானதொரு வரலாற்று இடத்தில் அமைந்துள்ள நினைவேந்தல் சுவரே இவ்வாறு இடிக்கப்பட்டுள்ளது.
</p><p>
நீதிமன்ற உத்தரவுக்கு அமைய இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி (TNPF) கட்சியைச் சேர்ந்த ஒரு முக்கிய அரசியல்வாதியும் யாழ்ப்பாண மாநகர சபை முன்னாள் உறுப்பினருமான ரத்னம் சதீஸ், வீதி அபிவிருத்தி அதிகார சபையால் இந்த செயற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளது என்ற விடயத்தை தனது முகநூலில் பகிர்ந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/53251a8b-8961-4e3e-9b0a-d686f57765f8/26-6aa837962d7c0.webp' /></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள I<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">BC தமிழ் WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-14T18:08:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[கருணா - டக்ளஸ் கைது தாமதம் ஏன்..! 80 இலட்சம் ஊழல் பின்னணி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/delay-in-arresting-karuna-and-douglas-1789405381"></link>
            <id>https://tamilwin.com/article/delay-in-arresting-karuna-and-douglas-1789405381</id>
            <summary type="text">தென்னிலங்கையில் இன்று கைது விவகாரம் சூடுபிடித்திருக்கின்ற நிலையில் வடக்கு கிழக்கிலே பல மக்கள் அநாதரவாக்கப்படுவதற்கும் காரணமாக இருந்த ஒட்டுக் குழுக்கள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>தென்னிலங்கையில் இன்று கைது விவகாரம் சூடுபிடித்திருக்கின்ற நிலையில் வடக்கு கிழக்கிலே பல மக்கள் அநாதரவாக்கப்படுவதற்கும் காரணமாக இருந்த ஒட்டுக் குழுக்கள் விவகாரத்திலே பிள்ளையானை மட்டும் ஏன் கைது செய்துள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்ணணியின் ஊடகப்பேச்சாளரும் சிரேஸ்ட சட்டத்தரணியுமான சுகாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.&nbsp;</p><p>லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
</p><p>

இவர்கள் ஏன் பிள்ளையானின் தலைவனான கருணாவை கைது செய்யவில்லை. அதாவது தற்பேோது எடுபிடிகளையும் அடியாட்களையும் தான் கைது செய்கின்றார்கள்.</p><p>

யாழ்ப்பாணத்தில் பல கடத்தல்களையும் கொலையையும் செய்த டக்ளஸ் தேவானந்தாவை ஏன் கைது செய்யவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.</p><p>இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்....</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/zJao2wvCNU4" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-14T18:06:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாளை மறுதினம் வடக்கிற்கு வருகிறார் ஜனாதிபதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/anura-visiting-the-north-the-day-after-tomorrow-1789404868"></link>
            <id>https://ibctamil.com/article/anura-visiting-the-north-the-day-after-tomorrow-1789404868</id>
            <summary type="text">அநுராதபுரம், திருகோணமலை, முல்லைத்தீவு, மன்னார் ஆகிய மாவட்டங்களில் உள்ள அரச வைத்தியசாலைகளில் 7148 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்க உத்தேசிக்கப்பட்டுள...</summary>
            <content type="html"><![CDATA[<p>அநுராதபுரம், திருகோணமலை, முல்லைத்தீவு, மன்னார் ஆகிய மாவட்டங்களில் உள்ள அரச வைத்தியசாலைகளில் 7148 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள புதிய கட்டடங்களுக்கு ஜனாதிபதி அடிக்கல் நாட்டவுள்ளார்.


அந்த வகையில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க புதன்கிழமை (16) மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு விஜயம் செய்யவுள்ளார்.</p><p>&nbsp; ஜனாதிபதியின் இந்தப் பயணத்தின்போது, மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைகளில் இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்படவுள்ள கட்டடத் தொகுதிகளுக்கான அடிக்கல் நடும் நிகழ்வில் அவர் கலந்துகொள்ளவுள்ளார்.</p><p> 

</p><h2>அடிக்கல் நடும் நிகழ்வு</h2><p>இந்நிகழ்வில் இலங்கைக்கான இந்தியத் தூதுவரும் கலந்துகொள்ளவுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/536f88d0-aa92-4713-8cdb-8c132c436d08/26-6aa836480f411.webp' /></p><p>
</p><p>
இதன்படி, மன்னார் மாவட்டத்தில் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவுக்கான கட்டடமும், முல்லைத்தீவு மாவட்டத்தில் மருத்துவ விடுதிக்கான கட்டடமும் நிர்மாணிக்கப்படவுள்ள நிலையில், குறித்த கட்டடங்களுக்கான அடிக்கல் நடும் நிகழ்வுகளில் ஜனாதிபதி கலந்துகொள்ளவுள்ளார்.&nbsp;</p><p></p><p></p><p><b>you may like this</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/wJDK9pWylLI" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-14T18:00:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[குருநாகலில் பாரிய தீ விபத்து ; கணினி நிலையத்திற்குள் நேர்ந்த பெரும் சேதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/major-fire-in-kurunegala-computer-center-damaged-1789408268"></link>
            <id>https://jvpnews.com/article/major-fire-in-kurunegala-computer-center-damaged-1789408268</id>
            <summary type="text">குருநாகல் - மஹவ நகரத்தில் இயங்கி வந்த கணினி பழுதுபார்க்கும் நிலையம் ஒன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

இந்தத் தீப்பரவலில் குறித்த நிலையத்தில் இருந்த ...</summary>
            <content type="html"><![CDATA[<p>குருநாகல் - மஹவ நகரத்தில் இயங்கி வந்த கணினி பழுதுபார்க்கும் நிலையம் ஒன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.</p><p></p><p>

இந்தத் தீப்பரவலில் குறித்த நிலையத்தில் இருந்த அனைத்துக் கணினி உபகரணங்களும் எரிந்து அழிவடைந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a9d10639-ecae-4014-8f22-ee6ee5e1f4cf/26-6aa8340e26dc8.webp' /></p><p>தீப்பரவலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், பிரதேசவாசிகளும் காவல்துறையினரும் இணைந்து தீயைக் கட்டுப்படுத்தியுள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-14T17:51:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஷிரந்தி ராஜபக்ச பொய் சொல்லி பெற்ற 1 கோடி! நாமலுக்கு ஏற்படவுள்ள சிக்கல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/shiranthi-admit-hospital-cid-namal-1789406625"></link>
            <id>https://tamilwin.com/article/shiranthi-admit-hospital-cid-namal-1789406625</id>
            <summary type="text">முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவியான ஷிரந்தி ராஜபக்ச இந்த வாரத்தில் சிஐடிக்கு விசாரணைக்கு அழைக்கப்பட உள்ளதாக வெளியான தகவலையடுத்து தான் அவர் வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவியான ஷிரந்தி ராஜபக்ச இந்த வாரத்தில் சிஐடிக்கு விசாரணைக்கு அழைக்கப்பட உள்ளதாக வெளியான தகவலையடுத்து தான் அவர் வைத்தியசாலைக்கு சென்றாரா என்கின்ற கேள்வி எழுகின்றது.</p><p>கொழும்பு ரிஜ்வே ஆரியா குழந்தைகள் மருத்துவமனைக்கு நன்கொடையாக CT ஸ்கேன் இயந்திரம் ஒன்றை வாங்குவதற்காக அரச வங்கி ஒன்றிடமிருந்து ஒரு கோடி ரூபாய் அந்த நோக்கத்திற்காக பயன்படுத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.</p><p>இந்த விசாரணை&nbsp;ஷிரந்தி ராஜபக்ச உள்ளிட்ட அதன் உறுப்பினர்கள் மற்றும் ஏனைய தரப்பினரை மையப்படுத்தியே முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.</p><p>மேலும்,&nbsp;CT ஸ்கேன் இயந்திரம் வாங்குவதற்காக&nbsp;தேசிய சேமிப்பு வங்கியில் இருந்து பெறப்பட்ட ஒருகோடி ரூபாய் வேறு நோக்கத்திற்காக பயன்படுத்தப்பட்டு இருக்கலாம் என விசாரணையாளர்கள் சந்தேகிக்கின்றனர்.</p><p>இந்த விடயம் தொடர்பான விரிவான தகவல்களை நியூஸ் இன்சைட் நிகழ்ச்சியில் காணலாம்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/9Poe2i6CulQ" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-14T17:48:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[போராட்டம் திரைப்படத்தின் மெய்சிலிர்த்த தருணம்! கந்தையா பாஸ்கரன் நெகிழ்ச்சிப் பேச்சு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/a-spine-tingling-moment-from-the-movie-porattam-1789408013"></link>
            <id>https://ibctamil.com/article/a-spine-tingling-moment-from-the-movie-porattam-1789408013</id>
            <summary type="text">ஒவ்வொரு மனிதனின் வாழ்வும் ஒரு போராட்டம்தான். போர்க்கள சூழலில் இருந்து புலம்பெயர்ந்து ஐரோப்பா சென்று, அங்கு பல சவால்களைச் சந்தித்து இன்று மீண்டும் இந்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஒவ்வொரு மனிதனின் வாழ்வும் ஒரு போராட்டம்தான். போர்க்கள சூழலில் இருந்து புலம்பெயர்ந்து ஐரோப்பா சென்று, அங்கு பல சவால்களைச் சந்தித்து இன்று மீண்டும் இந்த மண்ணை நேசித்து வந்திருக்கிறேன் என ஐ.பி.சி ஊடக நிறுவனத்தின் தலைவர் கந்தையா பாஸ்கரன் தெரிவித்தார்.</p><p>

ஈழத் திரையுலகில் புதியதோர் அத்தியாயத்தைப் படைக்கவிருக்கும் போராட்டம் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.
</p><p>
மேலும், “ஆரம்பத்தில் இத்திரைப்படம் மில்லர் (Miller) என்ற பெயரிலேயே ஆரம்பிக்கப்பட்டது. </p><p>

கதையைக் கேட்டபோதே இதன் முன்னோட்டக் காட்சியால் நான் மெய்சிலிர்த்துப் போனேன். </p><p>

நான் இதனைத் தயாரிக்கிறேன் என்றவுடன் என் மீது வஞ்சமம் பொறாமையும் கொண்ட சிலர் எதிர்மறை விமர்சனங்களை முன்வைத்தனர்.
</p><p>
ஆனால், அந்த விமர்சனங்கள் என்னைச் சோர்வடையச் செய்யாமல் மேலும் ஊக்கப்படுத்தின ” எனவும் கூறினார்.
</p><p>
தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/szfvfNdMSGg" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-14T17:47:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[அர்ச்சுனாவுக்கு எதிராக காவல்துறை தலைமையகத்தில் முறைப்பாடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/complaint-lodged-against-arjuna-police-headquarter-1789407772"></link>
            <id>https://jvpnews.com/article/complaint-lodged-against-arjuna-police-headquarter-1789407772</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிராக, ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினரால் இன்று (14) காவல்துறை தலைமையகத்தில் முறைப்பாட...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிராக, ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினரால் இன்று (14) காவல்துறை தலைமையகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.</p><p>
</p><p></p><p>அநுராதபுரத்தில் அண்மையில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மக்கள் பேரணியின் போது, தடைசெய்யப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பை ஊக்குவிக்கும் வகையில் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா கருத்துக்களை வெளியிட்டதாக அந்த முறைப்பாட்டில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/25ae8550-a4e2-4ba6-a354-cc4a24c33f54/26-6aa8321e31cfe.webp' /></p><p>இந்த விடயம் தொடர்பில் உடனடியாகவும் முறையான வகையிலும் விசாரணைகளை முன்னெடுக்குமாறு வலியுறுத்தியே இந்த முறைப்பாடு அளிக்கப்பட்டதாக ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் தெரிவித்துள்ளனர்.
</p><p>
அதற்கமைய, ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் இணை ஏற்பாட்டாளர் நிருக்ஷ குமார உள்ளிட்ட குழுவினர் நேரடி விஜயம் மேற்கொண்டு, கொழும்பிலுள்ள காவல்துறை தலைமையகத்தில் இந்த முறைப்பாட்டைக் கையளித்துள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-14T17:42:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹவுதிகளுடன் நேரடி பேச்சில் இறங்கியது அமெரிக்கா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/us-engaged-in-direct-conversations-with-houthis-1789401626"></link>
            <id>https://ibctamil.com/article/us-engaged-in-direct-conversations-with-houthis-1789401626</id>
            <summary type="text">சவுதி ஆதரவு பெற்ற யேமன் அரச படையினருக்கும் ஈரான் பின்புலமாக விளங்கும் ஹவுத்தி அமைப்பினருக்கும் இடையே தற்போது நடைபெற்று வரும் போரில் ஹவுத்திகளின் கை ஓங...</summary>
            <content type="html"><![CDATA[<p>சவுதி ஆதரவு பெற்ற யேமன் அரச படையினருக்கும் ஈரான் பின்புலமாக விளங்கும் ஹவுத்தி அமைப்பினருக்கும் இடையே தற்போது நடைபெற்று வரும் போரில் ஹவுத்திகளின் கை ஓங்கியுள்ள நிலையில் அந்த அமைப்புடன் நேரடி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.</p><p>


இதன்படி ஹவுத்தி அமைப்பினருடன் அமெரிக்க அரசாங்கம் நேரடிப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருவதாக அமெரிக்கத் துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் தெரிவித்துள்ளார்.</p><h2>முக்கிய தீவை கைப்பற்றிய ஹவுத்திகள்</h2><p>கான்சாஸ் நகரில் நடைபெறவுள்ள தேர்தல் பிரசாரக் கூட்டத்திற்கு முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய வான்ஸ், பாப்-அல்-மண்டேப் (Bab-el-Mandeb) நீரிணையில் உள்ள மாயூன் தீவை ஹவுத்திகள் கைப்பற்றியிருப்பது குறித்துத் தான் கவலை கொண்டிருப்பதாகக் கூறினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3bc7462a-a6cd-488b-b82a-922f0e7c53cc/26-6aa8206ca5235.webp' /></p><p>
</p><p>
மேலும், ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா மற்றும் "இப்பிராந்தியத்தில் பாதிக்கப்பட்டுள்ள பிற தரப்பினர்" ஆகியோருடன் அமெரிக்கா தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும் வான்ஸ் குறிப்பிட்டார்.
</p><p>

இதேவேளை ஏமனில் தொடர்ந்து நடைபெற்று வரும் மோதல்கள் காரணமாக 93,000-க்கும் மேற்பட்டோர் புதிதாக இடம்பெயர்ந்துள்ளதாக சர்வதேச இடம்பெயர்வு அமைப்பு (IOM) தெரிவித்துள்ளது.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-14T17:28:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலகளாவிய எண்ணெய் ஏற்றுமதிக்கு அச்சுறுத்தலான ஹவுதிக்களின் தாக்குதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/houthis-threaten-global-oil-exports-1789406614"></link>
            <id>https://ibctamil.com/article/houthis-threaten-global-oil-exports-1789406614</id>
            <summary type="text">ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி படைகள் யேமனின் செங்கடல் கடற்கரையைக் கைப்பற்றிய பிறகு, பாப் அல்-மண்டேப் நீரிணை ஒரு மிகவும் முக்கியமான தற்காப்பு காரணியாக மாறியு...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி படைகள் யேமனின் செங்கடல் கடற்கரையைக் கைப்பற்றிய பிறகு, பாப் அல்-மண்டேப் நீரிணை ஒரு மிகவும் முக்கியமான தற்காப்பு காரணியாக மாறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>ஹோர்முஸ் நீரிணையை மையப்படுத்திய போரின் போது, ​​8.1 மில்லியன் பீப்பாய் எண்ணெய் பாப் அல்-மண்டேப் வழியாகக் கடந்து சென்றதாக கூறப்படுகிறது.</p><p> எனினும் ஹவுதிக் படைகள் சவூதி கப்பல் போக்குவரத்தை அச்சுறுத்தியபோது, ​​உலகின் பிற பகுதிகளுக்கு எண்ணெய் விநியோகத்தைத் தடுக்கும் திட்டத்தை கையிலெடுத்துள்ளதாக அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>செங்கடல் வழியாக விநியோகம்</h2><p>எகிப்திய சூயஸ் கால்வாயால் பெரிய எண்ணெய்க் கப்பல்களை உண்மையில் கையாள முடியாது. அதனால் செங்கடல் வழியாக விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a0194e49-9c10-4040-86b6-8db735007ae9/26-6aa82d9951aa9.webp' /></p><p> இது ஒட்டுமொத்த பிராந்தியத்தின் எண்ணெய் போக்குவரத்தின் மீது ஒரு தாக்குதலை தற்போது உருவாக்கியுள்ளது.</p><p>இந்நிலையில் ஹோர்முஸ் நீரிணையில் நடக்கும் நிகழ்வுகளிலிருந்து இது தவிர்க்க முடியாமல் துண்டிக்க முடியாத ஒரு செயல்முறையாகும் என கூறப்படுகிறது.</p><p>
மிக முக்கியமான சோதனைச் சாவடிகளான ஹோர்முஸ் மற்றும் பாப் அல்-மண்டேப் ஆகிய இரண்டிற்கும் இடையே உள்ள திருப்பமானது உலகலாவிய பொருளாதாராத்துக்கு சவாலை ஏற்படுத்தியுள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-14T17:24:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[கேள்விக்குறியாகிய பிரித்தானியாவின் எதிர்காலம்! பிரிந்து செல்லபோகும் மூன்று நாடுகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/three-countries-separating-from-britain-1789403270"></link>
            <id>https://ibctamil.com/article/three-countries-separating-from-britain-1789403270</id>
            <summary type="text">வேல்ஸ், ஸ்கொட்லாந்து மற்றும் வடக்கு அயர்லாந்து ஆகிய நாடுகளுக்கு ஐக்கிய இராச்சியத்திலிருந்து சுதந்திரம் பெறுவதற்கான உரிமை இருப்பதை வலியுறுத்தும் வகையில...</summary>
            <content type="html"><![CDATA[<p>வேல்ஸ், ஸ்கொட்லாந்து மற்றும் வடக்கு அயர்லாந்து ஆகிய நாடுகளுக்கு ஐக்கிய இராச்சியத்திலிருந்து சுதந்திரம் பெறுவதற்கான உரிமை இருப்பதை வலியுறுத்தும் வகையில், அந்த நாடுகளின் அரசியல் கட்சித் தலைவர்கள் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளனர்.</p><p>
கார்டிஃப் நகரில் இன்று நடைபெற்ற இந்த முக்கிய மாநாட்டில், பிளைட் சிம்ரு கட்சித் தலைவர் ருன் அப் ஐயோர்வெர்த், ஸ்கொட்லாந்து தேசியக் கட்சித் தலைவர் ஜோன் ஸ்வின்னி மற்றும் சின் ஃபெயின் துணைத் தலைவர் மிச்செல் ஓ’நீல் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.</p><p>
வெஸ்ட்மின்ஸ்டர் அரசு, “வேல்ஸ், ஸ்கொட்லாந்து மற்றும் வடக்கு அயர்லாந்தில் அரசியலமைப்பு மாற்றத்துக்கான நடவடிக்கைகளைத் தயாரித்து, திட்டமிட்டு, அதனை எளிதாக்க வேண்டும்” எனக் கோரும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் அவர்கள் கையெழுத்திட்டுள்ளதாக கூறப்படுகிறது.</p><p></p><h2>ஐரோப்பா - சர்வதேச ஒத்துழைப்பு</h2><p>
இவர்கள் தங்களது அரசாங்கங்களின் அதிகாரபூர்வ பிரதிநிதிகளாக அல்லாமல், அரசியல் கட்சித் தலைவர்கள் என்ற அடிப்படையிலேயே இந்தச் சந்திப்பில் பங்கேற்றுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b829c81c-18b7-4195-9c40-27deb6f31948/26-6aa82265949f9.webp' /></p><p>மேலும், ஐரோப்பா, சர்வதேச ஒத்துழைப்பு, பொருளாதாரம் மற்றும் எரிசக்தி உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்தும் மாநாட்டில் கலந்துரையாடப்பட்டுள்ளன.</p><p>
மே மாதம் நடைபெற்ற செனட் தேர்தலில் பிளைட் சிம்ரு கட்சி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, செல்டிக் நாடுகளின் சுதந்திர இயக்கங்களில் புதிய அரசியல் சூழல் உருவாகியுள்ளது. </p><p>இதன் மூலம் வேல்ஸ், ஸ்கொட்லாந்து மற்றும் வடக்கு அயர்லாந்து ஆகிய மூன்று நாடுகளிலும் சுதந்திரத்தை ஆதரிக்கும் கட்சிகள் அரசாங்க அதிகாரத்தில் இருப்பது இதுவே முதல் முறையாகும்.</p><p>இங்கிலாந்தின் பிராந்தியங்களுக்கு அதிகாரங்களையும் வளங்களையும் பகிர்ந்தளிப்பதற்கு ஆதரவாக இருப்பதாக பிரதமர் ஆண்டி பர்ன்ஹாம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.</p><p></p><h2>எடின்பரோவில் உள்ள அதிகாரப் பகிர்வு&nbsp;</h2><p> </p><p>எனினும், பெல்ஃபாஸ்ட், கார்டிஃப் மற்றும் எடின்பரோவில் உள்ள அதிகாரப் பகிர்வு அரசாங்கங்களை அவர் எவ்வாறு அணுகப் போகிறார் என்பது குறித்து இன்னும் தெளிவான நிலைப்பாடு வெளியாகவில்லை என பிரித்தானிய அரசியல் தரப்புகள் தெரிவிக்கின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ca2b8733-9d86-4022-99f7-f0c4d59abc1b/26-6aa82264d8545.webp' /></p><p>
ஸ்கொட்லாந்து சுதந்திரம் தொடர்பாக 2014ஆம் ஆண்டு நடைபெற்ற வாக்கெடுப்பைப் போன்ற மற்றொரு வாக்கெடுப்பு நடத்தும் வாய்ப்பு தற்போது இல்லை என வலியுறுத்தி, பர்ன்ஹாம் கடந்த வாரம் ஜோன் ஸ்வின்னிக்கு கடிதம் அனுப்பியிருந்தார்.</p><p>

இதற்கிடையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும் ஐக்கிய இராச்சியம் பிளவுபடுவதற்கான சாத்தியம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.</p><p>

அயர்லாந்துக்கான தனது சமீபத்திய பயணத்தின்போது, அந்நாட்டு பிரதமர் மைக்கேல் மார்ட்டினுடன் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய ட்ரம்ப், அயர்லாந்து ஒன்றிணைவதைத் தான் விரும்புவதாகவும், அது “இப்போது நடந்தாலும் நல்லதே” என்றும் தெரிவித்துள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-14T17:14:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் படகு கவிழ்ந்து விபத்து: கலிபோர்னியாவைச் சேர்ந்த முதியவர் பலி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/one-dead-after-boating-incident-1789404033"></link>
            <id>https://canadamirror.com/article/one-dead-after-boating-incident-1789404033</id>
            <summary type="text">கனடாவின் ஜார்ஜியன் பே பகுதியில் படகு ஒன்று தலைகீழாகக் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில், அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தைச் சேர்ந்த 67 வயது முதியவர் பரித...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் ஜார்ஜியன் பே பகுதியில் படகு ஒன்று தலைகீழாகக் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில், அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தைச் சேர்ந்த 67 வயது முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார். </p><p>
இச்சம்பவம் குறித்து மாகாணக் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
</p><p>சனிக்கிழமை பிற்பகல் 12:30 மணியளவில், பிராங்க்ளின் தீவுக்கு வடக்கே உள்ள ஜார்ஜியன் பே நீர்நிலைப் பகுதியில் படகு கவிழ்ந்துள்ளதாக பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3d6ea056-237b-47ce-b47c-8d36e72a88e0/26-6aa823836c60b.webp' /></p><p>
ஒன்டாரியோ மாகாணக் காவல் துறை (OPP), கூட்டு மீட்பு ஒருங்கிணைப்பு மையம், கார்லிங் தீயணைப்புத் துறை மற்றும் கில்பேர் மெரினா குழுவினர் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
கவிழ்ந்த படகிற்குள் இருந்து முதியவரின் உடலைக் காவல்துறையினர் மீட்டனர். </p><p>அவர் அமெரிக்காவின் கலிபோர்னியாவைச் சேர்ந்த 67 வயது நபர் என்பதும், படகில் அவர் ஒருவர் மட்டுமே பயணித்துள்ளார் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.</p><p>
விபத்துக்குள்ளான படகு நீரிலிருந்து வெளியே எடுக்கப்பட்டுள்ளது. முதியவரின் உயிரிழப்பிற்கான துல்லியமான காரணம் குறித்து கண்டறியும் நோக்கில் காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-14T17:03:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[விமானத்தில் இருந்து இறங்கி வந்து ஓட்டுநருடன் கைகுலுக்கிய அபுதாபி இளவரசர்: வைரல் வீடியோ]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/abu-dhabi-prince-thanks-indian-car-driver-1789404132"></link>
            <id>https://news.lankasri.com/article/abu-dhabi-prince-thanks-indian-car-driver-1789404132</id>
            <summary type="text">விமானத்தில் ஏற சென்ற அபுதாபி இளவரசர் திடீரென திரும்பி வந்து இந்திய ஓட்டுநருக்கு கைகுலுக்கி பேசி விட்டு சென்ற வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது.பிரிக்ஸ்...</summary>
            <content type="html"><![CDATA[<p>விமானத்தில் ஏற சென்ற அபுதாபி இளவரசர் திடீரென திரும்பி வந்து இந்திய ஓட்டுநருக்கு கைகுலுக்கி பேசி விட்டு சென்ற வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது.</p><h2>பிரிக்ஸ் உச்சி மாநாடு</h2><p>இந்திய தலைநகர் டெல்லியில் செப்டம்பர் 12 மற்றும் 13ம் திகதிகளில் 18 வது பிரிக்ஸ் உச்சி மாநாடு நடைபெற்றது.</p><p> 13 உலகத் தலைவர்களும், 17 தூதுக்குழு உறுப்பினர்களும் கலந்து கொண்ட இந்த உச்சிமாநாட்டில் மீள்திறன், புத்தாக்கம், ஒத்துழைப்பு மற்றும் நிலைத்தன்மை உருவாக்குதல் ஆகியவை முக்கிய கருப்பொருளாக இருந்தது.</p><p></p><p> இதில் ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் கலந்து கொள்ளவில்லை. அவருக்கு பதிலாக அந்நாட்டின் பட்டத்து இளவரசராக ஷேக் காலித் பங்கேற்றார்.</p><p> உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட பல்வேறு நாடுகளின் தலைவர்களை இந்திய பிரதமர் மோடி முறைப்படி சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தினார்.</p><h2>அபுதாபி இளவரசரின் வியப்பூட்டிய செயல்</h2><p>இந்நிலையில் மாநாட்டை முடித்து விட்டு தன்னுடைய நாட்டிற்கு செல்வதற்காக டெல்லி விமான நிலையத்திற்கு வந்த பட்டத்து இளவரசர் ஷேக் காலித், புறப்பட தயாராக இருந்த விமானத்தில் ஏறுவதற்காக சென்றார்.</p><p> ஆனால் விமானத்தில் இருந்து திடீரென காரை நோக்கி திரும்பிய பட்டத்து இளவரசர் ஷேக் காலித், தனக்கான காரை ஓட்டி வந்த இந்திய ஓட்டுநரை நோக்கி நடந்து சென்றார்.</p><p><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr">Crown Prince Sheikh Khalid bin Mohammed bin Zayed Al Nahyan<br>of <a href="https://x.com/hashtag/AbuDhabi?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#AbuDhabi</a>, Upon departing <a href="https://x.com/hashtag/India?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#India</a> and before boarding the plane, turns around and goes to bid farewell to the Indian driver who was with him <a href="https://t.co/oj5Fs6DRJ1">pic.twitter.com/oj5Fs6DRJ1</a></p>&mdash; Siddhant Mishra (@siddhantvm) <a href="https://x.com/siddhantvm/status/2099147010842718433?ref_src=twsrc%5Etfw">September 13, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p> அத்துடன் அந்த ஓட்டுநருடன் கை குலுக்கி விட்டு சில வார்த்தைகளைப் பேசிவிட்டு சென்ற மீண்டும் தன்னுடைய விமானத்தில் ஏறிச் சென்றார்.</p><p>இதையடுத்து அபுதாபி இளவரசரின் செயல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. ஓட்டுநரை அங்கீகரிப்பதற்காக நேரம் ஒதுக்கிய அபுதாபி இளவரசரின் செயலை பாராட்டி வருகின்றனர்.</p><p><br></p>]]></content>
            <updated>2026-09-14T16:42:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[டொராண்டோவில் நாய் தாக்குதல்: பெண் கைது — தப்பிய 2 நாய்களைத் தேடும் காவலத்துறை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/woman-arrested-after-2-dogs-attack-person-1789403488"></link>
            <id>https://canadamirror.com/article/woman-arrested-after-2-dogs-attack-person-1789403488</id>
            <summary type="text">கனடாவின் டொராண்டோ நகரில் உள்ள பூங்கா அருகே, பெண் ஒருவரையும் அவரது செல்லப் பிராணியையும் இரு நாய்கள் கொடூரமாகத் தாக்கிய வழக்கில் 40 வயது பெண் கைது செய்ய...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் டொராண்டோ நகரில் உள்ள பூங்கா அருகே, பெண் ஒருவரையும் அவரது செல்லப் பிராணியையும் இரு நாய்கள் கொடூரமாகத் தாக்கிய வழக்கில் 40 வயது பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>
கடந்த வியாழக்கிழமை அவென்யூ ரோடு மற்றும் ராக்ஸ்பரோ தெரு அருகே உள்ள பூங்காவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.</p><p>
பாதிக்கப்பட்டவர் தனது நாயுடன் சென்று கொண்டிருந்தபோது, வேலியிடப்பட்ட பகுதியில் இருந்து தப்பி வந்த பிட்புல் அல்லது புல் டெரியர் வகையைச் சேர்ந்த இரு பெரிய நாய்கள் அவர்கள் மீது பாய்ந்து தாக்குதல் நடத்தின.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/49da21c1-047c-4c8a-a2fd-396195bb6168/26-6aa821623d727.webp' /></p><p>தாக்குதலில் பாதிக்கப்பட்ட நபருக்கு லேசான காயங்களும், அவரது நாய்க்கு உயிருக்கு ஆபத்தான பலத்த காயங்களும் ஏற்பட்டுள்ளன.</p><p>சனிக்கிழமை இது குறித்துக் காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
ஞாயிற்றுக்கிழமை, டொராண்டோவைச் சேர்ந்த டேனிச்சியா பிளாக் என்பவரைக் காவல்துறையினர் கைது செய்தனர்.</p><p> 
குற்றவியல் அலட்சியத்தால் உடல் காயம் ஏற்படுத்துதல், நாய்கள் அடிப்பதை அல்லது தாக்குவதைத் தடுக்கத் தவறியது, மனிதனையோ அல்லது வளர்ப்புப் பிராணியையோ நாய் கடிக்க விட்டது, காவல் துறை அதிகாரியின் கடமையைச் செய்ய விடாமல் தடுத்தது உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.
</p><p>தாக்குதலில் ஈடுபட்ட இரு நாய்களும் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.
</p><p>இந்நாய்கள் இருக்கும் இடம் குறித்துத் தகவல் தெரிந்தவர்கள் உடனடியாக அதிகாரிகளையோ அல்லது 'கிரைம் ஸ்டாப்பர்ஸ்' (Crime Stoppers) அமைப்பையோ ரகசியமாகத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.</p><p>
"நாய்களை எங்காவது கண்டால் பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்; எக்காரணத்தைக் கொண்டும் அருகில் செல்ல வேண்டாம்" என்று காவலத்துறை அறிவுறுத்தியுள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-14T16:34:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[நடிகை சமந்தா வளைகாப்பு.. படுவைரல் ஆகும் புகைப்படங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/samantha-baby-shower-function-1789403436"></link>
            <id>https://cineulagam.com/article/samantha-baby-shower-function-1789403436</id>
            <summary type="text">நடிகை சமந்தா தற்போது கர்ப்பமாக இருக்கும் நிலையில் தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அவரது திருமணம் நடைபெற்ற கோவிலுக்கு சமீபத்தில் சென்று இ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நடிகை சமந்தா தற்போது கர்ப்பமாக இருக்கும் நிலையில் தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அவரது திருமணம் நடைபெற்ற கோவிலுக்கு சமீபத்தில் சென்று இருந்தார் அவர்.</p><p>தற்போது சமந்தாவுக்கு வளைகாப்பு நடந்து இருக்கிறது.
</p><p>அவரது கணவர் மற்றும் குடும்பத்தினர் தான் அதை பாரம்பரிய முறைப்படி நடத்தி இருக்கின்றனர்.
</p><p>சமந்தா அந்த புகைப்படங்களை பதிவிட்டு மிகவும் நெகிழ்ச்சியாக பேசி இருக்கிறார்.
</p><p>"நம் பாரம்பரியம் மீது எனக்கு அதிக மரியாதை இருக்கிறது. ஒவ்வொரு சடங்கின் பின்னால் இருக்கும் அர்த்தம் எனக்கு தெரியாமல் இருக்கலாம். ஆனால் ஒவ்வொன்றுக்கும் ஒரு காரணம் இருக்கிறது" என அவர் கூறி இருக்கிறார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-14T16:30:50+00:00</updated>
        </entry>
    </feed>
