<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-09-15T06:20:38+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாலில் ரப்பர் ரசாயனங்கள்: சுவிஸ் ஆய்வு முடிவுகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/rubber-related-chemicals-found-in-swiss-milk-1789452487"></link>
            <id>https://news.lankasri.com/article/rubber-related-chemicals-found-in-swiss-milk-1789452487</id>
            <summary type="text">Researchers find rubber related chemicals in Swiss milk: சுவிட்சர்லாந்தில், பாலில் ரப்பர் சார்ந்த ரசாயனங்கள் இருப்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளார்கள்....</summary>
            <content type="html"><![CDATA[<p>Researchers find rubber related chemicals in Swiss milk: சுவிட்சர்லாந்தில், பாலில் ரப்பர் சார்ந்த ரசாயனங்கள் இருப்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளார்கள்.</p><p>


சுவிஸ் ஃபெடரல் தொழில்நுட்ப நிறுவனம் மேற்கொண்ட ஆய்வொன்றில், சுவிட்சர்லாந்தில், பாலில் ரப்பர் சார்ந்த ரசாயனங்கள் இருப்பது தெரியவந்துள்ளது.</p><h3>

பாலில் ரப்பர் ரசாயனங்கள்
</h3><p>
சுவிட்சர்லாந்திலுள்ள 17 பண்ணைகளிலிருந்து பால் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்குட்படுத்தப்பட்ட நிலையில், அவற்றில் ஏழு பால் மாதிரிகளில் ரப்பர் தொடர்புடைய ரசாயனங்கள் இருப்பது தெரியவந்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/177be8aa-9748-423a-8b37-d4e33c52cf85/26-6aa8e0c8d978e.webp' /></p><p>
விடயம் என்னவென்றால், பால் கறக்க பயன்படுத்தப்படும் ரப்பர் குழாய்கள் காலப்போக்கில் பழமையாவதால், அதிலிருந்து இந்த ரப்பர் ரசாயனங்கள் வந்திருக்கலாம் என்னும் எதிர்பாராத ஒரு தகவல் சற்றே யோசிக்க வைத்துள்ளது.
</p><p>
அத்துடன், பொதுவாகவே உலக நாடுகள் பலவற்றில், சாலைகளில் வாகனங்கள் செல்லும்போது வாகனங்களின் டயர்கள் தேய்வதால் எக்கச்சக்கமான அளவில் ரப்பர் துகள்கள் சுற்றுச்சூழலில் கலக்கின்றன.&nbsp;</p><p></p><p>
இந்த ரப்பர் துகள்கள், காற்று, தண்ணீர் மற்றும் உரம் வாயிலாக விவசாய நிலத்தை அடைந்து உணவுச்சங்கியில் கலக்கலாம் என்றும் கருதப்படுகிறது.</p><p>

இதற்கிடையில், பாலில் ரப்பர் சார்ந்த ரசாயனங்கள் இருப்பது தெரியவந்தாலும், இந்த ரசாயனங்களால் மனித உடலுக்கு என்ன பாதிப்பு ஏற்படக்கூடும் என்பதை அறிய மேலதிக ஆய்வுகள் தேவை என்பது குறிப்பிடத்தக்கது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-15T06:13:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாமல் ராஜபக்சவிற்கு இலஞ்சம் வழங்கியதாக கூறப்படும் நிமல் பெரேராவை ஏன் கைது செய்யவில்லை! சாகர காரியவசம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-s-arrest-completely-wrong-sagara-kariyawasam-1789445958"></link>
            <id>https://tamilwin.com/article/namal-s-arrest-completely-wrong-sagara-kariyawasam-1789445958</id>
            <summary type="text">&quot;ஊழலுக்கு எதிரான நிலைப்பாட்டில் நாங்களும் முழுமையாக உறுதியாக உள்ளோம். அரச
நிதியை மோசடி செய்தவர்கள் மற்றும் இலஞ்சம் பெற்றவர்கள் கைது செய்யப்பட
வேண்டு...</summary>
            <content type="html"><![CDATA[<p>"ஊழலுக்கு எதிரான நிலைப்பாட்டில் நாங்களும் முழுமையாக உறுதியாக உள்ளோம். அரச
நிதியை மோசடி செய்தவர்கள் மற்றும் இலஞ்சம் பெற்றவர்கள் கைது செய்யப்பட
வேண்டும் என்பதில் எமக்கு எந்த மாற்றுக்கருத்தும் கிடையாது.</p><p> எனினும், 13
ஆண்டுகளுக்கு முன்னர் இடம்பெற்ற எயார் பஸ் கொடுக்கல் வாங்கல் விவகாரத்தில்,
பிறிதொரு நாட்டில் இருந்துகொண்டு நிமல் பெரேரா என்ற நபர் வழங்கிய
சாட்சியத்தின் அடிப்படையில் நாமல் ராஜபக்ச செய்யப்பட்டமை முற்றிலும் தவறான
செயலாகும்" என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம்
தெரிவித்துள்ளார்.</p><p>

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமைச் செயலகத்தில் நேற்று ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர்
மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் அங்கு மேலும் கூறியதாவது,</p><h2>ஜனாதிபதியின் கருத்து&nbsp;</h2><p>

"ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பொலன்னறுவையிலும் அனுராதபுரத்திலும் ஆற்றிய
இரு உரைகளையும் ஊடகச் செய்திகளில் நான் பார்த்தேன். அவர் நாட்டின் ஜனாதிபதி
என்ற பொறுப்புமிக்க பதவியில் இருந்துகொண்டு நாட்டின் தேசிய பிரச்சினைகளைப்
பற்றிப் பேசாமல், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவையும் அதன் தலைவர்களையும் பற்றியே
தொடர்ந்து விமர்சித்துப் பேசுகின்றார். அதைப் பார்க்கும்போது எங்களுக்கு
ஆச்சரியமாக இருக்கின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4ccec107-9d04-4626-b6b1-b177386b30ab/26-6aa8e1344c5e5.webp' /></p><p>
</p><p>
அரசு ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் நிறைவடையும் தருணத்தில், நாடு முழுவதும்
கூட்டங்களை நடத்தி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவையும் அதன் தலைவர்களையும்
மாத்திரம் விமர்சித்துச் செல்ல வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது என்றால்,
ஜனாதிபதி தன் தோல்வியை மறைமுகமாக ஏற்றுக்கொண்டார் என்றே நாம் கருத
வேண்டியுள்ளது.</p><p>

அரசின் மீது மக்களுக்கு முழுமையான நம்பிக்கை இருப்பதாக ஜனாதிபதி திரும்பத்
திரும்பக் கூறுகின்றார். அவ்வாறாயின், தமக்குத் மக்கள் மத்தியில் உண்மையான
ஆதரவு இருப்பதை நிரூபிக்க மாகாண சபைத் தேர்தலை அரசு உடனடியாக நடத்தலாம் தானே?
</p><p>தேர்தல் முறைமையைக் காரணம் காட்டி தேர்தலைத் தொடர்ந்து பிற்போடுவதன் உண்மையான
நோக்கம் என்ன?</p><h2>அரசியல் பழிவாங்கல் நிகழ்ச்சி&nbsp;</h2><p> மக்களின் அடிப்படைப் பொருளாதாரப் பிரச்சினைகளுக்குத் தீர்வு
காண்பதில் கவனம் செலுத்தாத அரசு, அரசியல் பழிவாங்கல் நிகழ்ச்சி நிரலுக்கு
அமையவே தொடர்ச்சியாகச் செயற்பட்டு வருகின்றது.
</p><p>
ஊழலுக்கு எதிரான நிலைப்பாட்டில் நாமும் உறுதியாக உள்ளோம். அரச நிதியைச்
சுருட்டியவர்கள் மற்றும் இலஞ்சம் பெற்றவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில்
நமக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d03a4bc7-2398-48dd-923e-8570f90515cc/26-6aa8e1351cf0e.webp' /></p><p> </p><p>ஆனால், 13 ஆண்டுகளுக்கு முன்னர்
இடம்பெற்ற எயார் பஸ் கொடுக்கல் வாங்கல் விவகாரத்தில், வெளிநாட்டில்
இருந்துகொண்டு நிமல் பெரேரா என்பவர் வழங்கிய சாட்சியத்தை மட்டும் வைத்துக்
கொண்டு நாமல் ராஜபக்ஷ கைது செய்யப்பட்டுள்ளமை முற்றிலும் தவறான
நடவடிக்கையாகும்.
</p><p>
நாமல் ராஜபக்ஷ இலஞ்சம் பெற்றார் என்ற குற்றச்சாட்டின் பேரில்தான் அவர் கைது
செய்யப்பட்டுள்ளார் எனில், அவருக்கு அந்த இலஞ்சத்தை வழங்கியதாகக் கூறப்படும்
நபருக்கு எதிராக இதுவரை ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை? எமது
கட்சியின் எதிர்கால வெற்றியைத் தடுக்கும் நோக்கத்துடனும், திட்டமிட்ட அரசியல்
பழிவாங்கும் செயற்பாடாகவுமே நாமல் ராஜபக்ச இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார் என்றார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-15T06:07:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[விமானத்தில் விசமிகளா? ருமேஷ் தரங்கவின் 5 ஈட்டிகள் சேதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/plane-rumesh-tharanga-a5-javelin-damaged-1789452518"></link>
            <id>https://jvpnews.com/article/plane-rumesh-tharanga-a5-javelin-damaged-1789452518</id>
            <summary type="text">&amp;nbsp;தற்போதைய உலக தடகள களத்தில் ஈட்டி எறிதல் பிரிவில் தனது ஆதிக்கத்தை தொடர்ந்து தக்கவைத்துள்ள இலங்கையின் தடகள வீரர் ருமேஷ் தரங்க இன்று (15) காலை நாட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;தற்போதைய உலக தடகள களத்தில் ஈட்டி எறிதல் பிரிவில் தனது ஆதிக்கத்தை தொடர்ந்து தக்கவைத்துள்ள இலங்கையின் தடகள வீரர் ருமேஷ் தரங்க இன்று (15) காலை நாட்டை வந்தடைந்தார். </p><p>

அங்கு, அவர் கொண்டுவந்த 5 ஈட்டிகள் விமான மூலம் கொண்டுவரப்பட்டபோது சந்தேகத்திற்கு இடமான வகையில் உடைந்து சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b82aa282-4ebc-450a-9d5f-b30fd6f2cc1d/26-6aa8e0e7c530c.webp' /></p><h2>&nbsp;துருக்கி ஏர்லைன்ஸ் விமானம்</h2><p> </p><p>

ஹங்கேரியின் புடாபெஸ்ட் நகரில் 91.09 மீற்றர் தூரம் எறிந்து உலக சாதனை படைத்த ஈட்டி, சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரில் 92.07 மீற்றர் தூரம் எறிந்த ஈட்டி உட்பட அவர் பயன்படுத்திய 5 ஈட்டிகளுமே சேதமடைந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p></p><p> </p><p>

அல்டிமேட் மற்றும் டைமண்ட் லீக் ஆகிய இரண்டு செம்பியன்ஷிப் பட்டங்களையும் வென்ற ருமேஷ் தரங்க, இன்று அதிகாலை 5:10 மணிக்கு துருக்கிய ஏர்லைன்ஸுக்குச் சொந்தமான TK-730 ரக விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்திருந்தார்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-15T06:05:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[கர்ப்பமாக இருக்கும் வயிற்றுடன் தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே வெளியிட்ட போட்டோ...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/priyanka-deshpande-baby-bump-photo-1789449348"></link>
            <id>https://cineulagam.com/article/priyanka-deshpande-baby-bump-photo-1789449348</id>
            <summary type="text">பிரியங்கா தேஷ்பாண்டேதமிழ் சின்னத்திரையில் டிடியை தொடர்ந்து விஜய் டிவியில் நிறைய நிகழ்ச்சிகள் வெற்றிகரமாக தொகுத்து வழங்கி மக்களால் கொண்டாடப்பட்டு வருகி...</summary>
            <content type="html"><![CDATA[<h2>பிரியங்கா தேஷ்பாண்டே</h2><p>தமிழ் சின்னத்திரையில் டிடியை தொடர்ந்து விஜய் டிவியில் நிறைய நிகழ்ச்சிகள் வெற்றிகரமாக தொகுத்து வழங்கி மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறார் பிரியங்கா தேஷ்பாண்டே.</p><p>இப்போது விஜய்யில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். சில மாதங்களுக்கு முன் பிரியங்கா தொகுத்து வழங்கிய Happy Wife Happy Life என்ற நிகழ்ச்சி பெரிய அளவில் வரவேற்பு பெற்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ebf37add-0ab4-4c02-b51e-944c6e234367/26-6aa8dd361da7b.webp' /></p><p>பிரபலங்கள் அனைவரும் தங்களது வாழ்க்கை துணையுடன் நிகழ்ச்சிக்கு வந்து சந்தோஷமாக நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சென்றனர். இந்நிகழ்ச்சியும் ரசிகர்களால் ஒரு எபிசோட் கூட மிஸ் ஆகாமல் பார்க்கப்பட்டது. தொடங்கிய வேகத்தில் ஹிட்டாக ஓடிய நிகழ்ச்சி முடிவடைந்தது ரசிகர்களுக்கு வருத்தம் தான்.</p><h2>புகைப்படம்</h2><p>வசி என்பவரை கடந்த வருடம் காதலித்து திருமணம் செய்துகொண்டார் தொகுப்பாளினி பிரியங்கா. தனது கணவருடன் எடுக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வந்தவர் கடந்த ஜுன் மாதம் தான் கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை அறிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9a8376c6-49e5-45d4-9768-fba1354a6b62/26-6aa8dd3531522.webp' /></p><p>இந்த நிலையில் பிரியங்கா தனது கர்ப்பமான வயிற்றை புகைப்படம் எடுத்து இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படத்திற்கு செம லைக்ஸ் குவிந்து வருகிறது.</p><p><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/p/DdS14R2k_5A/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/p/DdS14R2k_5A/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/p/DdS14R2k_5A/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by Priyanka Deshpande (@priyankapdeshpande)</a></p></div></blockquote> <script async src="//www.instagram.com/embed.js"></script></p>]]></content>
            <updated>2026-09-15T06:00:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரஷ்யா தாக்குதல் ; மயிரிழையில் தப்பித்த ஐரோப்பிய தூதுவர்கள் மற்றும்போரிஸ் ஜொன்சன்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/russia-attack-train-poland-boris-johnson-escapes-1789452143"></link>
            <id>https://jvpnews.com/article/russia-attack-train-poland-boris-johnson-escapes-1789452143</id>
            <summary type="text">&amp;nbsp; உக்ரைன் – போலந்து எல்லைக்கு அருகே பயணிகள் ரயில் ஒன்றின் மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளது.

 ட்ரோன் நெருங்கியதை முன்கூட்டியே அறிந்ததா...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; உக்ரைன் – போலந்து எல்லைக்கு அருகே பயணிகள் ரயில் ஒன்றின் மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளது.

 ட்ரோன் நெருங்கியதை முன்கூட்டியே அறிந்ததால், பயணிகள் ரயிலிலிருந்து வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டதனால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>


அதேவேளை பிரிட்டனின் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜொன்சன், ஸ்வீடனின் முன்னாள் பிரதமர் காரல் பில்ட் உள்ளிட்ட ஐரோப்பிய தூதுவர்கள் பயணித்த ரயில் ஒன்று சம்பவ இடத்தை கடந்து சென்ற சில நிமிடங்களுக்குப் பின்னர், அதே வழித்தடத்தில் சென்ற மற்றொரு பயணிகள் ரயில் மீது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/654c8871-3147-4462-9860-2f332e36b82b/26-6aa8df70b2291.webp' /></p><h2>ஐரோப்பிய தூதுவர்கள் பயணித்த ரயில்&nbsp;</h2><p>
</p><p>


நேட்டோ உறுப்பு நாடான போலந்தின் எல்லையிலிருந்து சுமார் 2 கிலோமீற்றர் தொலைவில் இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. 

உக்ரைன் தலைநகர் கீவிலிருந்து திரும்பும் வெளிநாட்டு பிரதிநிதிகள் அதிகளவில் பயன்படுத்தும் முக்கியமான ரயில் வழித்தடமாகவும் இது காணப்படுகின்றது.</p><p></p><p>
</p><p>


அதேவேளை ரஷ்யப் படைகளின் தொடர் தாக்குதல் அச்சுறுத்தல் காரணமாக ரயில்களின் நேர அட்டவணை நிகழ்நேரத்தில் மாற்றியமைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>

இதனால் தூதுவர்கள் பயணித்த ரயில் திட்டமிட்ட நேரத்திற்கு முன்னதாகவே புறப்பட்டுச் சென்றுள்ளது. எனவே, ரஷ்யாவின் உண்மையான இலக்கு தூதுவர்கள் பயணித்த ரயிலாக இருக்கலாம் என உக்ரைன் ரயில்வே நிர்வாகம் சந்தேகம் வெளியிட்டுள்ளது.</p><p></p><p>
</p><p>


இதே பகுதியில் மற்றொரு சரக்கு வாகனமும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேட்டோ எல்லைக்கு அருகில் ரஷ்யா மேற்கொண்டுள்ள இத்தகைய தாக்குதல்களை போலந்து கடுமையாக கண்டித்துள்ளதுடன், இது ‘அத்துமீறலின் உச்சகட்டம்’ என தெரிவித்துள்ளது.</p><p>



எனினும், ஐரோப்பாவிலிருந்து வரும் இராணுவத் தளவாடங்களை ஏற்றிச் செல்லும் கட்டமைப்புகளையே தாங்கள் இலக்கு வைத்ததாக ரஷ்யா தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-15T05:59:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஒரு நாள் பிச்சைக்காரராக மாறிய ரூ.3000 கோடி சொத்து மதிப்புள்ள எம்.எல்.ஏ]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/rs-3000-crore-worth-mla-turns-begger-in-mumbai-1789451925"></link>
            <id>https://news.lankasri.com/article/rs-3000-crore-worth-mla-turns-begger-in-mumbai-1789451925</id>
            <summary type="text">ரூ.3000 கோடி சொத்து மதிப்புள்ள மும்பை எம்.எல்.ஏ ஒருவர் ஒரு நாள் பிச்சைக்காரராக மாறி தெருவோரத்தில் அமர்ந்து யாசகம் பெற்றுள்ளார். 

ஒரு நாள் பிச்சைக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>ரூ.3000 கோடி சொத்து மதிப்புள்ள மும்பை எம்.எல்.ஏ ஒருவர் ஒரு நாள் பிச்சைக்காரராக மாறி தெருவோரத்தில் அமர்ந்து யாசகம் பெற்றுள்ளார். </p><h3>

ஒரு நாள் பிச்சைக்காரராக மாறிய எம்.எல்.ஏ </h3><p>

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள காட்கோபர் கிழக்கு சட்டமன்ற தொகுதியின் எம்.எல்ஏ வாக இருப்பவர் பாஜகவை சேர்ந்த பராக் ஷா(parag shah).&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b4de0076-2aba-4f28-b345-90057d775230/26-6aa8de978b4cd.webp' /></p><p>

ரியல் எஸ்டேட் தொழிலதிபரான அவர், 2024 மகாராஷ்டிர சட்டமன்றத் தேர்தலின் போது தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில், தனது சொத்துமதிப்பு ரூ. 3,383 கோடிக்கும் அதிகமாக இருப்பதாக குறிப்பிட்டிருந்தார். </p><p>

இந்நிலையில், தனது தோற்றத்தை ஒரு பிச்சைக்காரர் போல் மாற்றிக்கொண்டு, பாதுகாப்பை துறந்து விட்டு, காட்கோபர் வீதிகளில் அமர்ந்து யாசகம் பெற்றுள்ளார். </p><p>

பிரபல அரசியவாதியாக இருந்தாலும் மக்கள் யாருக்கும் அவரை அடையாளம் தெரியவில்லை.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5a288660-7464-41ea-bf54-23c9b792a845/26-6aa8de98421da.webp' /></p><p>

ஜைன மதத்தின் சதுர்மா பண்டிகைகள் நடைபெறும் சூழலில், வாழ்க்கையையும், மக்கள் அன்றாடம் சந்திக்கும் இன்னல்களையும் உண்மையாக அனுபவிப்பதற்காக, ஒரு நாள் பிச்சைக்காரராக ஆகும்படி தனது ஆன்மீக குருவான நம்ரமுனி மகாராஜின் ஆலோசனையின் பேரில் இதனை செய்துள்ளார். </p><p>

இந்த அனுபவம் குறித்து தனது குருவிடமும் மக்களிடமும் பகிர்ந்து கொண்ட பராக் ஷா, "ஒரு நபர் எனக்கு ரூ.20 வழங்கி சாப்பிடுமாறு கூறியுள்ளார். </p><p>ஒரு சமோசா கடைக்கு சென்று தன்னிடம் பணம் இல்லை எனக்கூறி விட்டு சமோசா கேட்டபோது, அந்த ஏழை வியாபாரி முகம் சுழிக்காமல் எனக்கு இலவசமாகவே சமோசா வழங்கினார்.</p><p>

நான் கவனித்த ஒரு விஷயம், மும்பை நகரம் அப்படிப்பட்டது, இங்குள்ள மக்கள் எப்போதும் ஒருவருக்கொருவர் உதவத் தயாராக இருப்பார்கள்" என தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p><blockquote class="twitter-tweet"><p lang="hi" dir="ltr">🙏 पवित्र पर्युषण पर्व पर एक प्रेरणादायी अनुभव 🙏<br><br>परम पूज्य राष्ट्रसंत श्री नम्रमुनि महाराज साहेब ने अपने प्रवचन में समाज के जरूरतमंद लोगों के प्रति संवेदनशीलता, करुणा और मानवता का संदेश दिया।<br><br>गुरुदेव की आज्ञा का पालन करते हुए वेशभूषा बदलकर घाटकोपर रेलवे स्टेशन परिसर में आम… <a href="https://t.co/mFL2cWWfne">pic.twitter.com/mFL2cWWfne</a></p>&mdash; Parag Shah (@ParagShahBJP) <a href="https://x.com/ParagShahBJP/status/2099357542535319818?ref_src=twsrc%5Etfw">September 14, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>

மேலும், "நான் பிச்சைக்காரன் வேடத்தில் என் சொந்த வளாகத்திற்குள் சென்றபோது, ​​என் காவலாளியே என்னை வெளியே தள்ளிவிட்டார். 

என்னுடைய நண்பர் ஒருவர் அடிக்கடி மக்களுக்கு உதவுவார், மேலும் எனக்கு ஏதாவது கொடுக்க வேண்டும் என்று எப்போதும் வற்புறுத்துவார். </p><p>

ஆனால் நான் பிச்சைக்காரன் வேடத்தில் அவரிடம் சென்றபோது, ​​அவர் என்னை விரட்டிவிட்டார். மக்கள் தனிநபரை விட பணம், பதவி மற்றும் அதிகாரத்திற்கே அதிக மதிப்பு கொடுக்கிறார்கள்" என கூறியுள்ளார்.</p><p>

பராக் ஷா யாசகம் பெற்றது மட்டுமில்லாமல் ஒரு பிச்சைக்காரரை போல் சாலை ஓரத்தில் அமர்ந்து தனது கிடைத்த உணவை சாப்பிட்டார்.</p><p> 

அதன் பிறகு தனது பிச்சைக்காரர் தோற்றதை கலைத்துவிட்டு தான் யாசகம் பெற்ற பகுதிக்கு சென்று அங்குள்ள மக்களிடம் கலந்துரையாடினார்.&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-09-15T05:58:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஷானி அபேசேகர - ரவி செனவிரத்ன ஆகியோரின் அடிப்படை உரிமை மீறல்! இழப்பீடு செலுத்த உயர் நீதிமன்றம் உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ravi-seneviratne-shani-s-fundamental-rights-1789451037"></link>
            <id>https://tamilwin.com/article/ravi-seneviratne-shani-s-fundamental-rights-1789451037</id>
            <summary type="text">பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன மற்றும் குற்றப் புலனாய்வுத் துறையின் தற்போதைய பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஷானி அபேசேகர ஆகியோரின் அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன மற்றும் குற்றப் புலனாய்வுத் துறையின் தற்போதைய பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஷானி அபேசேகர ஆகியோரின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
</p><p>
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவங்களுடன் ரவி செனவிரத்ன மற்றும் ஷானி அபேசேகர ஆகியோருக்குத் தொடர்பிருப்பதாக ஓய்வுபெற்ற பிரதிப் பொலிஸ் மா அதிபர் பாலித சிறிவர்தன அளித்த புகாரின் பேரில், தேசபந்து தென்னக்கோனின் உத்தரவின் பேரில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் அப்போதைய தலைமைப் பொலிஸ் பரிசோதகர் இந்துக்க டி சில்வா, ஷானி அபேசேகரா மற்றும் ரவி செனவிரத்னவுக்கு எதிராக விசாரணையொன்றை முன்னெடுத்திருந்தார்.</p><h2>அடிப்படை உரிமை மனு தாக்கல்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bb26d890-443d-4d0e-9d95-792cf44c51d2/26-6aa8de4e41bca.webp' /></p><p>
</p><p>
குறித்த விசாரணைகளின் அப்படிடையில் தங்களை சட்டவிரோதமாகக் கைது செய்யும் நோக்கம் இருப்பதால் அதற்குத் தடை விதிக்கக் கோரி, கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது ஷானி அபேசேகர மற்றும் ரவி செனவிரத்ன தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவை விசாரித்த பின்னர் உயர் நீதிமன்றம் மேற்கண்ட உத்தரவைப் பிறப்பித்துள்ளது.</p><p>
</p><p>
அதன்படி, இது தொடர்பான புகாரைத் தாக்கல் செய்த ஓய்வுபெற்ற பிரதிப் பொலிஸ் மா அதிபர் பாலித சிறிவர்தன, தலா 50,000 ரூபாவும், இது தொடர்பான விசாரணையை நடத்திய அப்போதைய தலைமைப் பொலிஸ் பரிசோதகர் இந்துக்க டி சில்வா, தலா 10,000 ரூபாவும் ஷானி அபேசேகர மற்றும் ரவி செனவிரத்ன ஆகியோருக்கு வழங்க வேண்டும் என்றும் அந்தத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-15T05:57:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் வெட்டி படுகொலை செய்யப்பட்ட குடும்பஸ்தர்: பிரதான சந்தேகநபர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/main-suspect-in-jaffna-sword-attack-surrenders-1789447200"></link>
            <id>https://ibctamil.com/article/main-suspect-in-jaffna-sword-attack-surrenders-1789447200</id>
            <summary type="text">யாழில் குடும்பஸ்தர் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தலைமறைவாகியிருந்த பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். 

முன் பகை காரணமாக கு...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழில் குடும்பஸ்தர் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தலைமறைவாகியிருந்த பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p> 

முன் பகை காரணமாக குடும்பஸ்தர் ஒருவர் வீதியில் வைத்து வெட்டி
படுகொலை செய்யப்பட்டிருந்த நிலையில் சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் தலைமறைவாகி இருந்தார்.
</p><p>
இந்தநிலையில் நேற்றைய தினம் (14-09-2026) அவர் காவல்துறையினரிடம் சரணடைந்ததை அடுத்து கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>
</p><p></p><h2>வாள் வெட்டு தாக்குதல் </h2><p>சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், வடமராட்சி கிராமக்கோடு சந்திக்கு அருகாமையில் கடந்த 09 ஆம் திகதி இரவு
இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்தில் துன்னாலை பகுதியை சேர்ந்த ஜெயசீலன்
ஜெனிதன் (வயது 33) என்பவர் படுகொலை செய்யப்பட்டார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f7a41e67-5136-423f-8973-5576fd21d54d/26-6aa8d30b59dea.webp' /></p><p>துன்னாலை பகுதியை சேர்ந்த இரு குழுக்களுக்கு இடையில் நீண்ட காலமாக பகைமை
நீடித்து வந்த நிலையில் , மோட்டார் சைக்கிளில் வந்த நால்வர் அடங்கிய குழு
ஜெனிதன் என்பவர் மீது சரமாரியாக வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டனர். </p><p>

அதில் ஜெனிதன்
சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.</p><p>
</p><p></p><h2>மேலதிக விசாரணை</h2><p>சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்த
நிலையில், சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் முல்லைத்தீவில் பதுங்கியிருப்பதாக
கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் கடந்த 11ஆம் திகதி அங்கு விரைந்த காவல்துறையினர் மூவரையும்
கைது செய்து நீதிமன்றில் முற்படுத்திய நிலையில் மூவரும் விளக்கமறியலில்
வைக்கப்பட்டுள்ளனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8e80b233-f8f9-4dcb-ab9c-71ed2caf892c/26-6aa8d30c44e07.webp' /></p><p>இந்நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் தொடர்ந்து
தலைமறைவாகியிருந்த நிலையில், நேற்றைய தினம் காவல்துறையினரிடம் சரணடைந்ததை அடுத்து
கைது செய்துள்ளனர்.</p><p>

கைது செய்யப்பட்ட நபரை பருத்தித்துறை காவல் நிலையத்தில் தடுத்து வைத்து
காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-15T05:54:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும்! ஆற்று பகுதிகளை அண்மித்த மக்கள் விழிப்புடன் இருக்குமாறு எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/minor-flood-risk-kalu-ganga-and-attanagalu-oya-1789449493"></link>
            <id>https://tamilwin.com/article/minor-flood-risk-kalu-ganga-and-attanagalu-oya-1789449493</id>
            <summary type="text">நாட்டில் இன்று குறிப்பிடத்தக்க மழை பெய்தால், அத்தனகலு ஓயா மற்றும் கலு கங்கையின் கீழ் பகுதிகளில் சிறிய வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என நீர்ப்பாசனத் தி...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டில் இன்று குறிப்பிடத்தக்க மழை பெய்தால், அத்தனகலு ஓயா மற்றும் கலு கங்கையின் கீழ் பகுதிகளில் சிறிய வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என நீர்ப்பாசனத் திணைக்களத்தின் பணிப்பாளர் பொறியாளர் எல். எஸ். சூரியபண்டார தெரிவித்துள்ளார்.

</p><p>அத்தனகலு ஓயா மற்றும் கலு கங்கையின் மில்லகந்த மற்றும் எலகாவா பகுதிகளில் நீர்மட்டம் தற்போது உச்ச அளவில் உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><h2>நீர்ப்பாசனத்திணைக்களம் எச்சரிக்கை&nbsp;</h2><p>
</p><p>
இதற்கிடையில், களனி ஆற்றில் நீர்மட்டம் வேகமாக உயரவில்லை என்றாலும், படிப்படியாக அதிகரித்து வருவதாகவும், தற்போதைக்கு வெள்ள அபாயம் எதுவும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/29226463-3b78-4844-b29b-222988384c14/26-6aa8dbc9d06a5.webp' /></p><p>
</p><p>
அதேபோல், நில்வலா ஆறு, ஜின், களனி, கலு, அத்தனகலு மற்றும் பெந்தாரா ஆகிய அனைத்து ஆறுகளின் கீழ் பகுதிகளிலும் நீர்மட்டம் தற்போது ஓரளவிற்கு உயர்ந்துள்ளது.</p><p>

இருப்பினும், வரவிருக்கும் வானிலை நிலவரங்களைப் பொறுத்து நீர்மட்டம் மேலும் உயரக்கூடும் என்பதால், குறித்த ஆறுகளின் கீழ் பகுதிகளில் வசிக்கும் மக்கள் விழிப்புடனும் கவனத்துடனும் இருக்குமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் கேட்டுக்கொள்கின்றது.</p><p></p><p></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-15T05:51:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நல்லூரில் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகள் ஆரம்பம்...!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/thileepan-39th-commemorative-event-in-jaffna-1789450152"></link>
            <id>https://ibctamil.com/article/thileepan-39th-commemorative-event-in-jaffna-1789450152</id>
            <summary type="text">ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நீராகாரமின்றி உண்ணாவிரதம் இருந்து
உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் 39 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய
த...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நீராகாரமின்றி உண்ணாவிரதம் இருந்து
உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் 39 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய
தினம் யாழ்ப்பாணத்தில் ஆரம்பமானது.
</p><p>
யாழ்ப்பாணம், நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின்
நினைவிடத்தில் தியாகி தீலிபன் உண்ணாவிரதத்தை ஆரம்பித்த நேரம் காலை 9.45
மணியளவில் அஞ்சலி நிகழ்வுகள் ஆரம்பமானது.</p><p>
</p><p>
மூத்த போராளியும் , மாவீரர்களின் தந்தையுமான பஷீர் காக்கா பொதுச் சுடர் ஏறியதை
தொடர்ந்து நினைவேந்தலில் கலந்து கொண்டவர்கள் மலர் மாலை அணிவித்து, மலர் தூவி
அஞ்சலி செலுத்தினர்.</p><p></p><h2>திலீபனின் கோரிக்கைகள்</h2><ol><li>மீளக்குடியமர்தல் என்ற பெயரில் இலங்கைத்தீவின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் புதிதாக திட்டமிடப்படும் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்தவேண்டும்.</li><li> சிறைக் கூடங்களிலும் இராணுவ காவல்துறை தடுப்பு முகாம்களிலும் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியற் கைதிகள் யாவரும் விடுதலை செய்யப்படவேண்டும்.
</li><li>
அவசரகாலச் சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும்.
</li><li>
ஊர்காவல் படையினருக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் முற்றாகக் களையப்படவேண்டும்.
</li><li>
தமிழர் பிரதேசங்களில் புதிதாக காவல் நிலையங்களைத் திறப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் முற்றாக நிறுத்தப்பட வேண்டும்.</li></ol><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6e7d29f4-abb1-4b6a-99c6-f7df859c6d57/26-6aa8db4539a72.webp' /></p><p>

ஆகிய ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நீராகாரமின்றி உண்ணாவிரதம் இருந்து
தியாக தீபம் திலீபனின் கோரிக்கைகள் எவையும் நிறைவேற்றப்படாத நிலையில் 12
நாட்களின் பின்னர் செப்டெம்பர் 26 ஆம் திகதி காலை 10.48 மணிக்கு அவரது உயிர்
பிரிந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-15T05:49:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[தங்கம் விலை அதிரடி சரிவு - நகை பிரியர்கள் மகிழ்ச்சி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/september-15th-gold-and-silver-price-in-chennai-1789448670"></link>
            <id>https://manithan.com/article/september-15th-gold-and-silver-price-in-chennai-1789448670</id>
            <summary type="text">நகைப்பிரியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் வகையில் தங்க விலை சரிவை பதிவு செய்துள்ள நிலையில், இன்றைய (செப்டம்பர் 15) தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரம...</summary>
            <content type="html"><![CDATA[<p>நகைப்பிரியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் வகையில் தங்க விலை சரிவை பதிவு செய்துள்ள நிலையில், இன்றைய (செப்டம்பர் 15) தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
</p><p>
செப்டம்பர் மாத தொடக்கம் முதலே தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வருகிறது. குறிப்பாக, கடந்த சில நாட்களாக தங்கம் விலையில் மாற்றங்கள் ஏற்பட்டு வரும் நிலையில், இன்றும் விலை கணிசமாகக் குறைந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ebf27b3c-f32a-4e34-b24c-9b9102081be6/26-6aa8d87846976.webp' /></p><p></p><p>
</p><p>
நேற்று செப்டம்பர் 14ஆம் தேதி, 22 காரட் தங்கம் விலை ஒரு கிராமுக்கு ரூ.45 குறைந்து ரூ.14,125க்கும், ஒரு சவரனுக்கு ரூ.360 குறைந்து ரூ.1,13,000க்கும் விற்பனை செய்யப்பட்டது.</p><h2>இன்றைய நிலவரம்</h2><p>
</p><p>
இந்நிலையில், இன்றும் தங்கம் விலையில் அதிரடி சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் தங்க நகைகள் வாங்க திட்டமிட்டுள்ளவர்கள் மற்றும் நகை பிரியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/224fbc9a-0161-4c0d-9cf9-6163e9318470/26-6aa8d878eff26.webp' /></p><p>
</p><p>
அதன்படி, இன்று 22 காரட் தங்கம் விலை ஒரு கிராமுக்கு ரூ.85 குறைந்து ரூ.14,040க்கும், ஒரு சவரனுக்கு ரூ.680 குறைந்து ரூ.1,12,320க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
</p><p>
இதேபோல், 18 காரட் தங்கம் விலையிலும் சரிவு பதிவாகியுள்ளது. ஒரு கிராமுக்கு ரூ.85 குறைந்து ரூ.11,810க்கும், ஒரு சவரனுக்கு ரூ.680 குறைந்து ரூ.94,480க்கும் விற்பனை செய்யப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5b33875a-665d-4306-b8e0-67cacbe502aa/26-6aa8d879a329c.webp' /></p><p></p><p>வெள்ளி விலை எந்த மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ.250க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் விற்பனை செய்யப்படுகிறது.&nbsp;</p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்<a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"> </a><b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-15T05:47:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[துருக்கியில் தரையிறங்கும்போது ஜெட் விமானம் விபத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/jet-crashes-while-landing-in-turkey-istanbul-1789451425"></link>
            <id>https://canadamirror.com/article/jet-crashes-while-landing-in-turkey-istanbul-1789451425</id>
            <summary type="text">&amp;nbsp; துருக்கியின் இஸ்தான்புல்லில் இருந்து லிபியாவின் மிஸ்ராதா சர்வதேச விமான நிலையத்திற்கு சென்ற தனியார் ஜெட் விமானம் தரையிறங்கும்போது ஓடுபாதையை விட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; துருக்கியின் இஸ்தான்புல்லில் இருந்து லிபியாவின் மிஸ்ராதா சர்வதேச விமான நிலையத்திற்கு சென்ற தனியார் ஜெட் விமானம் தரையிறங்கும்போது ஓடுபாதையை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.</p><p>விமானத்தில் பயணித்த இரண்டு விமானிகள் மற்றும் ஒரு விமானப் பணியாளர் என மூவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p>
</p><p>

Cessna Citation Latitude ரகத்தைச் சேர்ந்த குறித்த தனியார் விமானம், தரையிறங்கியபோது ஓடுபாதையில் இருந்து விலகியதைத் தொடர்ந்து தீப்பிடித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6b1c0b61-7bb5-42f8-8f0c-7cefc90631e3/26-6aa8dca367da6.webp' /></p><p>

விமான நிலைய அவசர தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினர் உடனடியாகச் செயற்பட்டு தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
</p><p>துருக்கி ஊடகங்களின் தகவலின்படி, இந்த தனியார் ஜெட் துருக்கியின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான Akfen Holding நிறுவனத்தின் நிறுவனரும் தலைவருமான பிரபல தொழிலதிபர் Hamdi Akın என்பவருக்கு சொந்தமானதாகும்.</p><p>

TC-AKF என்ற பதிவு இலக்கத்தைக் கொண்ட இந்த விமானம் செப்டம்பர் 14 ஆம் திகதி அதிகாலை சுமார் 5.45 மணியளவில் இஸ்தான்புல் அதாதுர்க் விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு, பயணிகளை ஏற்றிச் செல்வதற்காக லிபியா நோக்கிச் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
விபத்துக்கான காரணம் இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. சம்பவம் தொடர்பில் அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-09-15T05:47:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[உகரைன் அதிரடி; புடினின் முதன்மை ஜெனரல் கொல்லப்பட்டதாகத் தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/putin-s-top-general-has-been-killed-ukraine-attack-1789450911"></link>
            <id>https://canadamirror.com/article/putin-s-top-general-has-been-killed-ukraine-attack-1789450911</id>
            <summary type="text">&amp;nbsp; உக்ரைனில் ரஷ்யாவின் ஆக்கிரமிப்பில் உள்ள டொனெட்ஸ்க் (Donetsk) பிராந்தியத்தில் உக்ரைன் படைகள் நடத்திய அதிநவீன ஏவுகணைத் தாக்குதலில், ரஷ்ய அதிபர் வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; உக்ரைனில் ரஷ்யாவின் ஆக்கிரமிப்பில் உள்ள டொனெட்ஸ்க் (Donetsk) பிராந்தியத்தில் உக்ரைன் படைகள் நடத்திய அதிநவீன ஏவுகணைத் தாக்குதலில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினால் ‘ரஷ்யாவின் வீரன்’ (Hero of Russia) என நாட்டின் உயரிய விருது வழங்கி கௌரவிக்கப்பட்ட லெப்டினன்ட் ஜெனரல் செர்ஜி மில்சாகோவ் (Sergei Milchakov) கொல்லப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
</p><p>

ரஷ்ய ராணுவத்தின் தெற்கு ராணுவ மண்டலத்திற்குட்பட்ட 51-வது ஒருங்கிணைந்த படைகளின் (51st Combined Arms Army) தளபதியாகச் செயல்பட்டு வந்த செர்ஜி மில்சாகோவ், உக்ரைனின் டொனெட்ஸ்க் பிராந்தியத்தில் அவ்டிவ்கா உள்ளிட்ட முக்கிய நகரங்களைக் கைப்பற்றுவதற்கான ராணுவ நகர்வுகளுக்குத் தலைமை தாங்கி வந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6d955ac7-d78f-4fff-b935-90731f3acd6d/26-6aa8daa06f163.webp' /></p><p> </p><p>

உக்ரைன் படையினரின் ஏவுகணைகள் ரஷ்யாவின் முதன்மை மற்றும் மாற்று ராணுவக் கட்டுப்பாட்டு மையங்களை மிகத் துல்லியமாகத் தாக்கி அழித்ததில் மில்சாகோவ் உட்படப் பல உயர் ராணுவ அதிகாரிகள் பலியானதாகக் கூறப்படுகிறது.</p><h2>&nbsp;பல உயர் ராணுவ அதிகாரிகள் பலி</h2><p>
</p><p>
உக்ரைனின் மறைமுக ஆதரவு இயக்கமான ‘அதேஷ்’ (Atesh) மற்றும் ரஷ்யாவின் சுதந்திர ஊடகங்கள் இந்த மரணச் செய்தியைப் பரப்பி வருகின்றன. தாக்குதல் நடந்த ராணுவ முகாமின் துல்லியமான இருப்பிடம் ரஷ்ய ராணுவத்திற்குள் இருந்தே கசிந்திருக்கலாம் என்ற சந்தேகத்தை ரஷ்ய ஆதரவுப் பிரச்சாரகர்களும் எழுப்பியுள்ளனர்.
</p><p>
 உக்ரைன் மீதான முழு அளவிலான போரில் இதுவரை 23-க்கும் மேற்பட்ட ரஷ்ய ஜெனரல்கள் கொல்லப்பட்டுள்ள நிலையில், மில்சாகோவின் இழப்பு ரஷ்ய ராணுவத்திற்குப் பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.
</p><p>

இருப்பினும், இந்தத் தாக்குதல் மற்றும் ஜெனரல் செர்ஜி மில்சாகோவின் மரணம் குறித்த அதிகாரப்பூர்வமான உறுதிப்படுத்தலை மாஸ்கோவில் உள்ள ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் இதுவரை வெளியிடவில்லை. </p><p>

உக்ரைன் படைகளின் இந்தத் திடீர் ஏவுகணைத் தாக்குதலால், கிழக்கு உக்ரைன் போர்க்களத்தில் மீண்டும் பதற்றமும் மோதல் சூழலும் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளன.</p>]]></content>
            <updated>2026-09-15T05:38:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாக்ஸ் ஆபிஸ்: 5 நாட்களில் சர்தார் 2 திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/sardar-2-movie-5-days-box-office-1789449448"></link>
            <id>https://cineulagam.com/article/sardar-2-movie-5-days-box-office-1789449448</id>
            <summary type="text">இயக்குநர் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகி வெளியான சர்தார் 2 திரைப்படத்தின் 5 நாட்கள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

சர...</summary>
            <content type="html"><![CDATA[<p>இயக்குநர் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகி வெளியான சர்தார் 2 திரைப்படத்தின் 5 நாட்கள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.</p><p></p><p>
</p><h2>
சர்தார் 2
</h2><p>
தண்ணீரால் மக்களுக்கு ஏற்படப்போகும் மிகப்பெரிய பிரச்சனை குறித்து பேசிய திரைப்படம் சர்தார். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து சர்தார் 2 ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. இதனால் மீண்டும் இயக்குநர் பி.எஸ். மித்ரன் - நடிகர் கார்த்தி கூட்டணி அமைந்தது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6ee60092-b9ad-458e-b84c-bbc621e8f9f8/26-6aa8d4ec9cf4f.webp' /></p><p>

பிரம்மாண்ட பொருட்செலவில் உருவான சர்தார் 2 திரைப்படத்தில் கார்த்தியுடன் இணைந்து எஸ்.ஜே. சூர்யா, மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத், யோகி பாபு, ரஜிஷா விஜயன் ஆகியோர் நடித்துள்ளனர். சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். கடந்த வாரம் திரைக்கு வந்த சர்தார் 2 திரைப்படம் கலவையான விமர்சனங்களை ரசிகர்களிடம் பெற்றது. இதனால் பாக்ஸ் ஆபிஸில் சற்று சரிவை சந்தித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b4deff4b-b4ee-460e-b1de-bb385c32623f/26-6aa8d4ebe1076.webp' /></p><p></p><p>
</p><h3>
வசூல்
</h3><p>
இந்த நிலையில், பாக்ஸ் ஆபிஸில் 5 நாட்களை கடந்துள்ள ச<a href="https://cinema.dinamalar.com/news/kollywood/2026-two-wins-for-brother-two-losses-for-brother/140872" target="_blank">ர்தார் 2</a> திரைப்படம் உலகளவில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் உலகளவில் இதுவரை ரூ. 17.5 கோடி வசூல் செய்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9f728d91-435b-4951-9249-46194df1cbbb/26-6aa8d4eb3232c.webp' /></p>]]></content>
            <updated>2026-09-15T05:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[மகிந்தவின் மேடையில் அர்ச்சுனாவின் சர்ச்சைக்குரியப் பேச்சு! விமலும் - கம்மன்பிலவும் வேடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/archuna-s-controversial-speech-on-mahinda-s-stage-1789449818"></link>
            <id>https://tamilwin.com/article/archuna-s-controversial-speech-on-mahinda-s-stage-1789449818</id>
            <summary type="text">அநுராதபுரத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நடத்திய மக்கள் பேரணியானது நாட்டில்
நிலவும் பிரச்சினைகளுக்கு எதிரான மக்கள் போராட்டமாக அமையவில்லை. மாறாக,
தங்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>அநுராதபுரத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நடத்திய மக்கள் பேரணியானது நாட்டில்
நிலவும் பிரச்சினைகளுக்கு எதிரான மக்கள் போராட்டமாக அமையவில்லை. மாறாக,
தங்களுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகளுக்குப் பயந்து சட்டம் மற்றும்
நீதித்துறைக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட ஒரு வெற்றுக்கூச்சலாகவே அமைந்தது&nbsp; என்று ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் இணை அழைப்பாளர் நிருக்ச குமார தெரிவித்தார்.</p><p>

ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
</p><p>
அவர் மேலும் கூறியதாவது,</p><p>ஊழலுக்கு எதிரான அரசு எதிர்ப்புப் பேரணி எனக் கூறி நடத்தப்பட்ட இந்த
நிகழ்வில், விவசாயிகள் எதிர்கொள்ளும் உண்மையான பிரச்சினைகள், நெல்லுக்கான
நியாயமான விலை, மீனவர்கள் மற்றும் வர்த்தகர்களின் அன்றாடச் சிரமங்கள்,
எரிபொருள் மற்றும் மின்சாரக் கட்டணக் குறைப்பு போன்ற எந்தவொரு அடிப்படை மக்கள்
நலன் குறித்தும் மேடையில் பேசிய பேச்சாளர்கள் எவருமே சிறிதும் பேசவில்லை.</p><h2>மௌனம் சாதித்தனர்</h2><p>

மாறாக, இலஞ்ச ஊழல் ஆணைக்குழு, குற்றப் புலனாய்வுப் பிரிவு, பொலிஸார் மற்றும்
நீதிமன்றங்கள் தங்களுக்கு எதிராக முன்னெடுக்கும் சட்ட நடவடிக்கைகளிலிருந்து
தப்பிப்பதையும், கைதுகளில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதையுமே முதன்மை
நோக்கமாகக் கொண்டே அவர்கள் உரையாற்றினர்.
</p><p>
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவினால் 2011 ஆம் ஆண்டு பயங்கரவாதத் தடைச்
சட்டத்தின் கீழ் எல்.ரி.ரி.ஈ. அமைப்பானது தடை செய்யப்பட்ட அமைப்பாக
அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. </p><p>அந்தச் சட்டத்தின்படி தடை செய்யப்பட்ட
அமைப்பின் சின்னங்களைப் பயன்படுத்துவது, அதன் உறுப்பினராக இருப்பது, அந்த
அமைப்பை ஊக்குவிப்பது அல்லது அதற்கான கூட்டங்களை நடத்துவது என்பன முற்றிலும்
சட்டவிரோதமாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b79173e6-f748-4731-ac2d-a26c5393018b/26-6aa8d78ce2232.webp' /></p><p> </p><p>ஆனால், அதே மகிந்த ராஜபக்ச மேடையில் அமர்ந்திருக்கையில்,
அர்ச்சுனா என்பவர் மேடையேறித் தடை செய்யப்பட்ட அமைப்பைப்
பிரதிநிதித்துவப்படுத்தி உரையாற்றியுள்ளார். </p><p>அதனைப் பார்த்து ஸ்ரீலங்கா பொதுஜன
பெரமுன ஆதரவாளர்களும் தலைவர்களும் கைதட்டி வரவேற்பளித்துள்ளமை நாட்டின்
அரசமைப்பையும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தையும் மிக மோசமாக மீறும் செயலாகும்.</p><p>

இத்தனை காலம் தங்களைச் சிங்களத் தேசியவாதத்தின் பாதுகாவலர்கள் என்றும்,
இராணுவத்தினரைப் பாதுகாத்தவர்கள் என்றும் கூறி அரசியல் செய்து வந்த விமல்
வீரவன்ச, உதய கம்மன்பில மற்றும் திஸ்ஸ குட்டியாரச்சி போன்றவர்கள், மேடையில்
தடை செய்யப்பட்ட அமைப்புக்கு ஆதரவாக உரையாற்றப்பட்டபோது அதைத் தடுத்து
நிறுத்தாமல் மௌனம் சாதித்துள்ளனர். </p><p>கீழிருந்த ஆதரவாளர்களும் அதற்குத் தாளம்
போட்டு கைதட்டி வரவேற்பளித்துள்ளனர். இது அவர்களின் போலித் தேசியவாதத்தையும்,
வெற்று அரசியல் சுயநலத்தையும் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1eaa664d-b207-4f03-96c7-80d689266cde/26-6aa8d78dbf583.webp' /></p><p>
</p><p>
நாட்டின் இறையாண்மை மற்றும் தேசிய பாதுகாப்பைச் சீர்குலைக்கும் வகையிலும், தடை
செய்யப்பட்ட அமைப்பை பகிரங்கமாக ஊக்குவிக்கும் வகையிலும் இந்தக் கூட்டத்தை
ஏற்பாடு செய்தமைக்காகக் குற்றப் புலனாய்வுத் துறையினர் மற்றும் பொலிஸ்மா
அதிபரிடம் உடனடியாக அவசரப் புகார் அளிக்கப்படவுள்ளது.</p><p>

இத்தகைய சட்டவிரோத செயல்களுக்குப் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் 20
ஆண்டுகளுக்கும் மேலான சிறைத்தண்டனை விதிக்கப்பட முடியும். </p><p>தங்களின் சுயநல
அரசியல் இலாபத்துக்காகவும் ஊழல் வழக்குகளிலிருந்து தப்புவதற்காகவுமே ஸ்ரீலங்கா
பொதுஜன பெரமுன கட்சியினர் நாட்டின் தேசிய பாதுகாப்பைப் பந்தயப் பொருளாக
ஆக்கியுள்ளனர்" என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-15T05:28:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Bavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[அநுராதபுரத்திற்கு வந்து தவழ்ந்த கூட்டம்! பணத்தை பெற்றுக்கொண்டு மனதிலிருந்து வந்த வார்த்தை - ஈரோஸ் கட்சி விசனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/rajanathan-prabakaran-statement-about-mahinda-1789445750"></link>
            <id>https://tamilwin.com/article/rajanathan-prabakaran-statement-about-mahinda-1789445750</id>
            <summary type="text">முள்ளிவாய்க்கால் மட்டுமல்ல வடக்கு - கிழக்கு மாகாணங்களில் கொத்துக் கொத்தாக தமிழர்களை கொன்று குவித்த மஹிந்த ராஜபக்ச கூட்டத்தை புகழ் பாடிய பைத்தியத்தை தெ...</summary>
            <content type="html"><![CDATA[<p>முள்ளிவாய்க்கால் மட்டுமல்ல வடக்கு - கிழக்கு மாகாணங்களில் கொத்துக் கொத்தாக தமிழர்களை கொன்று குவித்த மஹிந்த ராஜபக்ச கூட்டத்தை புகழ் பாடிய பைத்தியத்தை தெளிய வைக்க விரைவில் மருந்து கட்டுவேன் என ஈரோஸ் கட்சி தலைவர் இராஜநாதன் பிரபாகரன் தெரிவித்துள்ளார்.
</p><p>
அதேவேளை அநுர அரசாங்கம் 20 வருடம் நிலைத்து நின்று ஆட்சி செய்யும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
மட்டக்களப்பில் நேற்றைய தினம் (14.09.2026) இடம்பெற்ற ஊடக மாநாட்டில் வைத்து அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.</p><h2>அரசாங்கத்திற்கு எதிரான கூட்டம்</h2><p>
</p><p>
அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக கொலை, கொள்ளை, குடிகாரர்கள் தான் இருக்கின்றனர் என உலகத்துக்கே தெரிந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5d397a0c-2acc-4071-b62d-647fe03df947/26-6aa8d668535e4.webp' /></p><p> இருந்தபோதும் அரசாங்கத்துக்கு எதிராக அநுராதபுரத்தில் பெரிய ஒரு கூட்டம் நடந்தது அந்த கூட்டத்திற்கு சென்றவர்கள் அனைவரும் வீதியில் தவழ்ந்ததை முகநூலில் பார்த்திருப்பீர்கள்.
</p><p>
பணத்தையும், மதுபானத்தையும் வாங்குவதற்கு அனுர ஹொரா என சொல்வது கடமை, ஏன் என்றால் பணத்தையும் மதுபானத்தையும் பெற்றுக் கொண்டதற்காக. </p><p>ஆனால் அடிமனதில் இருந்து நாமல் ஹொரா என சொல்லியிருந்தனர்.

இது தான் நிலைமை இலங்கையில் இவ்வளவு பேரும் தான் அனைத்து கட்சிக்கும் ஆதரவாளர்கள் என்பது ஊடகங்கள் மூலம் தெரிகின்றது என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/pP30fxl7UZ8" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-15T05:26:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் இறந்த நிலையில் கரை ஒதுங்கும் நன்னீர் மீன்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/freshwater-fish-washing-ashore-dead-in-jaffna-1789450163"></link>
            <id>https://jvpnews.com/article/freshwater-fish-washing-ashore-dead-in-jaffna-1789450163</id>
            <summary type="text">&amp;nbsp; யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பகுதியில் மருதங்கேணி பிரதான பாலம் அருகே ஆற்றங்கரையின் இருபுறங்களிலும் பெருமளவான நன்னீர் மீன்கள் இறந்த நிலையில் கர...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பகுதியில் மருதங்கேணி பிரதான பாலம் அருகே ஆற்றங்கரையின் இருபுறங்களிலும் பெருமளவான நன்னீர் மீன்கள் இறந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
</p><p>
தற்போது நிலவும் அதீத வெப்பநிலை காரணமாகவே மீன்கள் இறந்து கரை ஒதுங்கியிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/04d1d448-3ddd-46f3-8f91-4920e62b80aa/26-6aa8d7b4626cd.webp' /></p><p>
</p><p>
கடந்த சில நாட்களாக மருதங்கேணி பிரதான பாலம் பகுதியில் பல தொன் எடையிலான நன்னீர் மீன்கள் இறந்த நிலையில் கரையொதுங்கி காணப்படுகின்றன. </p><p>

இதனால் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதுடன், அப்பகுதியால் பயணிக்கும் மக்களும் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.</p><p></p><p>

வடமராட்சி கிழக்கு பகுதியில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் நன்னீர் மீன்பிடித் தொழிலை தமது பிரதான வாழ்வாதாரமாகக் கொண்டுள்ள நிலையில், மீன்கள் பெருமளவில் இறந்து கரை ஒதுங்கியுள்ளமை அவர்களின் வாழ்வாதாரத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><p>
</p><p>
கடந்த காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் தமது பகுதியில் இடம்பெற்றதில்லை எனவும், தங்களது வாழ்நாளில் முதன்முறையாக இவ்வாறான இயற்கைக்கு மாறான சம்பவத்தை அவதானிப்பதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-15T05:26:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹோர்முஸ் நீரிணையில் தீப்பிடித்து எரிந்த கப்பல் - அமெரிக்கா கடும் விசனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/oil-tanker-on-fire-after-hormuz-attack-1789446320"></link>
            <id>https://ibctamil.com/article/oil-tanker-on-fire-after-hormuz-attack-1789446320</id>
            <summary type="text">ஹோர்முஸ் நீரிணையின் தெற்கே உள்ள தடை செய்யப்பட்ட பகுதி வழியே செல்ல முயன்ற மிகப்பெரிய எண்ணெய் தாங்கி கப்பல் ஒன்று, கண்ணிவெடிகளில் தாக்கப்பட்டு தீப்பிடித...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹோர்முஸ் நீரிணையின் தெற்கே உள்ள தடை செய்யப்பட்ட பகுதி வழியே செல்ல முயன்ற மிகப்பெரிய எண்ணெய் தாங்கி கப்பல் ஒன்று, கண்ணிவெடிகளில் தாக்கப்பட்டு தீப்பிடித்ததாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படை (IRGC) வெளியிட்டுள்ள அறிக்கையில்,&nbsp;இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p>கப்பல் மீதான தாக்குதலில் ஒருவர் உயிரிழந்ததாகவும், மூவர் காயமடைந்ததாகவும் ஈரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p></p><h2>மற்றொரு தாக்குதல்</h2><p>

இருப்பினும், ஈரானின் இந்தக் கூற்றை அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு மறுத்துள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f8d0db34-5045-4dd0-9342-e7fcc20d1f56/26-6aa8cbfbc1c7e.webp' /></p><p>அமெரிக்க மத்திய மத்திய கட்டளைப் பிரிவு வெளியிட்டுள்ள விளக்கத்தில், பனாமா கொடியுடன் பயணித்த 'எல் கையா' (EI Gaia) என்ற குறிப்பிட்ட எண்ணெய் தாங்கி கப்பல், கடந்த மாதம் ஈரானின் ஏவுகணைத் தாக்குதலால் ஏற்கனவே செயலிழந்திருந்தது.</p><p> அத்துடன், கடந்த வார இறுதியில் ஓமன் கடலோரப் பகுதியில் மீண்டும் ஈரான் நடத்திய மற்றொரு தாக்குதலுக்கு உள்ளானது என்றும் தெரிவித்துள்ளது.</p><p>"நீர்வழியில் வர்த்தகக் கப்பல்களைத் தடுக்க முயற்சிக்கும் ஐ.ஆர்.ஜி.சி-யின் இந்த பொய்யான கூற்று, அவர்களின் பொய்கள் மற்றும் அச்சுறுத்தல் முயற்சிகளுக்கு மற்றுமொரு உதாரணமாகும்," என்று அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு தனது எக்ஸ் பதிவில் எழுதியுள்ளது.</p><p></p><h2>தேடும் பணிகள்</h2><p>இதனைத் தொடர்ந்து, இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் இந்தத் தாக்குதலைக் கண்டித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e8792252-1c76-4965-a4b7-c5b7801ea01f/26-6aa8cbfc7cb8a.webp' /></p><p>கப்பலில் இருந்த 14 இந்தியப் பணியாளர்களில் 13 பேர் மீட்கப்பட்டுவிட்டதாகவும், காணாமல் போன நபரைத் தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளது.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-15T05:20:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Fathima</name>
            </author>
            <title type="text"><![CDATA[முக ஸ்டாலினுக்கு உடல்நலக்குறைவு: திமுக முப்பெரும் விழா ஒத்திவைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/dmk-mupperum-vizha-adjourn-1789449025"></link>
            <id>https://ibctamilnadu.com/article/dmk-mupperum-vizha-adjourn-1789449025</id>
            <summary type="text">2026ம் ஆண்டுக்கான திமுக முப்பெரும் விழா இன்று கொண்டாடப்பட இருந்த நிலையில் முக ஸ்டாலின் உடல்நலக்குறைவு காரணமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

திமுக சார்பி...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026ம் ஆண்டுக்கான திமுக முப்பெரும் விழா இன்று கொண்டாடப்பட இருந்த நிலையில் முக ஸ்டாலின் உடல்நலக்குறைவு காரணமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
</p><p>
திமுக சார்பில் ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் முப்பெரும் விழா கொண்டாடப்பட்டு வருகிறது, பெரியார், அண்ணா பிறந்தநாள் மற்றும் திமுக தொடங்கப்பட்ட நாள் ஆகிய மூன்றையும் இணைத்து முப்பெரும் விழா நடத்தப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7b684a03-e84d-4dd3-8e37-f5c8fb8a1e28/26-6aa8d3d10c4a6.webp' /><br></p><p>
</p><p>
இந்த ஆண்டும் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
</p><p>
இந்நிலையில் விழா ஒத்திவைக்கப்படுவதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
</p><p>
மேலும் திமுக தலைவர் முக ஸ்டாலின் உடல்நலக்குறைவு காரணமாக விழா ஒத்திவைக்கப்படுவதாகவும் விழாவுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ac8314a5-d3e9-4766-a55b-c06b3abbbefd/26-6aa8d3d055cd3.webp' /><br></p>]]></content>
            <updated>2026-09-15T05:13:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரான்சுக்கு நாடுகடத்தப்பட்ட புகலிடக்கோரிக்கையாளர்கள் உடலில் காயங்கள்: பரபரப்பை உருவாக்கியுள்ள தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/asylum-seekers-came-in-france-with-injure-from-uk-1789448903"></link>
            <id>https://news.lankasri.com/article/asylum-seekers-came-in-france-with-injure-from-uk-1789448903</id>
            <summary type="text">Asylum seekers arriving in France injured after being deported from UK: பிரான்சுக்கு நாடுகடத்தப்பட்ட புகலிடக்கோரிக்கையாளர்கள் உடலில் காயங்கள் இருக்கும...</summary>
            <content type="html"><![CDATA[<p>Asylum seekers arriving in France injured after being deported from UK: பிரான்சுக்கு நாடுகடத்தப்பட்ட புகலிடக்கோரிக்கையாளர்கள் உடலில் காயங்கள் இருக்கும் விடயம் பரபரப்பை உருவாக்கியுள்ளது.
</p><p>

பிரித்தானியாவுக்கும் பிரான்சுக்கும் இடையில் செய்துகொள்ளப்பட்ட One in, one out என்னும் ஒப்பந்தத்தின்கீழ், பிரான்சிலிருந்து பிரித்தானியாவுக்குள் ஆங்கிலக்கால்வாய் வழியாக நுழைந்த ஒரு புகலிடக்கோரிக்கையாளர், தனக்கு பிரித்தானியாவில் குடும்பம் இருப்பதை நிரூபிக்க இயலாதபட்சத்தில், அவர் பிரான்சுக்கே திருப்பி அனுப்பப்படுவார்.
</p><p>
அப்படி பிரான்ஸ் ஏற்றுக்கொள்ளும் ஒவ்வொரு புகலிடக்கோரிக்கையாளருக்கும் பதிலாக, பிரித்தானியாவில் குடும்பம் உள்ளதை நிரூபிக்கக்கூடிய, பிரான்சிலிருந்து வரும் ஒரு புலம்பெயர்வோருக்கு பிரித்தானியா புகலிடம் அளிக்கும்.
</p><h3>
புகலிடக்கோரிக்கையாளர்கள் உடலில் காயங்கள்
</h3><p>
விடயம் என்னவென்றால், அப்படி One in, one out ஒப்பந்தத்தின்கீழ் பிரான்சுக்கு திருப்பி அனுப்பப்பட்ட புகலிடக்கோரிக்கையாளர்கள், பிரித்தானியாவிலிருக்கும்போது கடுமையாக தாக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d77d770c-45f0-40f5-9baa-6b86ec62cf0b/26-6aa8d2c98ea43.webp' /></p><p>

ஆம், பிரித்தானியாவிலிருந்து பிரான்சுக்கு திருப்பி அனுப்பப்பட்ட புகலிடக்கோரிக்கையாளர்களை பிரான்ஸ் மருத்துவர்கள் பரிசோதித்தபோது, அவர்கள் உடலில் காயங்கள் முதல் எலும்பு முறிவு வரை இருப்பது தெரியவந்துள்ளது.
</p><p>
சிலர், பயங்கர மன அழுத்தத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டு, தான் தங்கியிருக்கும் இடத்தின் அறைக்கதவு எங்குள்ளது என்பதைக் கண்டுபிடிக்கக்கூட முடியாமல் திணறும் அளவுக்கு மோசமான நிலையில் உள்ளார்கள்.&nbsp;</p><p></p><p>
சிலர் வயிற்றில் பலமாக மிதிக்கப்பட்டதால் வயிற்று வலியால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
</p><p>
இந்த விடயங்கள், சமீபத்தில், அதாவது, அவர்கள் பிரித்தானியாவில் தடுப்புக்காவலில் இருக்கும்போது நடந்துள்ளது.
</p><p>
இதற்கிடையில், வழக்கம்போல உள்துறை அலுவலகம், அந்த புகலிடக்கோரிக்கையாளர்கள் ஒப்பந்ததாரர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும், புகலிடக்கோரிக்கையாளர்களை மரியாதையுடனும், கௌரவத்துடனும் நடத்த அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-15T05:08:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[களுதாவளை பிள்ளையார் ஆலயத்தில் மெய்சிலிர்க்க வைத்த சம்பவம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/kaluthavalai-pillaiyar-temple-elephant-pray-viral-1789448955"></link>
            <id>https://jvpnews.com/article/kaluthavalai-pillaiyar-temple-elephant-pray-viral-1789448955</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;நேற்றையதினம் முழுமுதல் கடவுளாம் விநாயககடவுள் பிறந்ததாக புராணங்கள் கூறுகின்றது. அந்தவகையில் ஆலயங்கள் தோறும் விநாயக பெருமானுக்கு சிறப்பு அப...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;நேற்றையதினம் முழுமுதல் கடவுளாம் விநாயககடவுள் பிறந்ததாக புராணங்கள் கூறுகின்றது. அந்தவகையில் ஆலயங்கள் தோறும் விநாயக பெருமானுக்கு சிறப்பு அபிசீக ஆராதனைகள் இடம்பெற்றது.
</p><p>

விநாயகர் சதுர்த்தி மற்றும் ஆலயத் திருவிழாக்கள் என்பது இறைவனின் அருளைப் பெற்று மன அமைதி அடையும் ஆன்மீக நன்னாளாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/141febcd-005b-40d6-9c71-e42573fba838/26-6aa8d2fd72357.webp' /></p><p> </p><p>

இன்னிலையில் களுதாவளை கல்லடி பிள்ளையார் ஆலயத்தின் வீதியில், விநாயகப் பெருமானின் திருமுன்னே ஒரு யானை முழந்தாளிட்டுத் தன் தும்பிக்கையை உயர்த்தி வணங்கிய காட்சி, காண்போர் அனைவரையும் மெய்சிலிர்க்க வைப்பதாக அமைந்துள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-15T05:05:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தாய்லாந்தில் இலங்கையர்களுக்கான வேலைவாய்ப்பு: வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/job-opportunities-10-000-sri-lankans-in-thailand-1789446639"></link>
            <id>https://ibctamil.com/article/job-opportunities-10-000-sri-lankans-in-thailand-1789446639</id>
            <summary type="text">தொழிலாளர் ஒத்துழைப்பு மற்றும் இலங்கைத் தொழிலாளர்களை தாய்லாந்தில் வேலைவாய்ப்புக்கு அனுப்புவது தொடர்பாக இலங்கைக்கும் தாய்லாந்துக்கும் இடையே பல முக்கிய ஒ...</summary>
            <content type="html"><![CDATA[<p>தொழிலாளர் ஒத்துழைப்பு மற்றும் இலங்கைத் தொழிலாளர்களை தாய்லாந்தில் வேலைவாய்ப்புக்கு அனுப்புவது தொடர்பாக இலங்கைக்கும் தாய்லாந்துக்கும் இடையே பல முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.
</p><p>
வெளியுறவு அமைச்சர் விஜய்தா ஹெரத்தின் தாய்லாந்து உத்தியோகப்பூர்வ பயணத்தின் போது, ​​நேற்று (14.09.2026) பாங்காக்கில் இந்த ஒப்பந்தங்கள் கையெழுத்தானதாக தெரிவிக்கப்பட்டது.
</p><p>
இந்த ஒப்பந்தங்கள் இலங்கைத் தொழிலாளர்களின் உரிமைகள், நலன் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதோடு, இரு நாடுகளுக்கும் பாதுகாப்பான, நிலையான மற்றும் ஆக்கப்பூர்வமான வேலைவாய்ப்புகளுக்கு வழிவகுக்கின்றன.</p><p></p><h2>இலங்கைத் தொழிலாளர்களின் உரிமை</h2><p>

தாய்லாந்தில் தற்போதுள்ள தொழிலாளர் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில், முதல் கட்டமாக 10,000 இலங்கையர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்குவதற்கு தாய் அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fc5e7ee1-fd0c-4a5d-b3b6-05361b570fba/26-6aa8d1c7b2644.webp' /></p><p>
</p><p>
மேலும் இது, தகவல் தொழில்நுட்பம் மற்றும் சுற்றுலா உள்ளிட்ட துறைகளில் இலங்கை இளைஞர்களுக்கான பயிற்சி மற்றும் வேலைவாய்ப்புகளை விரிவுபடுத்துவதற்கான வாய்ப்புகளையும் வழங்கும்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-15T05:04:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[AI-க்கு எதிரான அபத்தமான சதி! செயற்கை நுண்ணறிவுக்கு எதிரான ஒழுங்குமுறைக்கு டிரம்ப் எதிர்ப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/trump-dismisses-ai-regulation-calls-1789413966"></link>
            <id>https://news.lankasri.com/article/trump-dismisses-ai-regulation-calls-1789413966</id>
            <summary type="text">Trump Dismisses AI Regulation Calls as a Sick Conspiracy: செயற்கை நுண்ணறிவுக்கு கூடுதல் பாதுகாப்பு தேவையில்லை என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்...</summary>
            <content type="html"><![CDATA[<p>Trump Dismisses AI Regulation Calls as a Sick Conspiracy: செயற்கை நுண்ணறிவுக்கு கூடுதல் பாதுகாப்பு தேவையில்லை என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார்.</p><h2> ஆந்த்ரோபிக் CEO-யின் எச்சரிக்கை</h2><p>செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வேகத்தை குறைக்க வேண்டும் என பிரபல AI நிறுவனமான ஆந்த்ரோபிக்(Anthropic) தலைமை நிர்வாக அதிகாரி டாரியோ அமோடி(Dario Amodei) சமீபத்தில் வலியுறுத்தி இருந்தார்.</p><p> செயற்கை நுண்ணறிவுத் துறையின் கட்டுப்பாடற்ற தொழில்நுட்ப வளர்ச்சி எதிர்காலத்தில் மனித குலத்தின் கட்டுப்பாட்டை மீறிச் சென்று விடும் அபாயம் இருப்பதாகவும் டாரியோ அமோடி எச்சரித்து இருந்தார்.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">We Must Pace the Frontier: I’ve written a new essay on why the AI industry should slow down, with a three-part plan for doing so.<br><br>Anthropic is unilaterally committing to the first of these steps. We’ll provide third-party evaluators with permanent, employee-level access to our…</p>&mdash; Dario Amodei (@DarioAmodei) <a href="https://x.com/DarioAmodei/status/2098773920774074715?ref_src=twsrc%5Etfw">September 12, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p> ஆந்த்ரோபிக்-கின் தலைமை நிர்வாக அதிகாரி டாரியோ அமோடி முன்வைத்த செயற்கை நுண்ணறிவுக்கான கூடுதல் பாதுகாப்பு தேவைகளை ஓபன் ஏஐ(Open AI) நிறுவனத்தின் CEO சாம் ஆல்ட்மேன், டெஸ்லா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க் ஆகியோரும் அங்கீகரித்து இருந்தனர்.</p><h2> டிரம்பின் நிலைப்பாடு</h2><p>
இந்நிலையில் செயற்கை நுண்ணறிவுக்கு கூடுதல் பாதுகாப்பு தேவையில்லை என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தன்னுடைய நிலைப்பாட்டை உறுதிப்படுத்தியுள்ளார்.</p><p> &nbsp;ஆந்த்ரோபிக் CEO டாரியோ அமோடி முன்வைத்த கடுமையான தடைகள் தொடர்பான தேவைகள் மற்றும் வாதங்களை டிரம்ப் கடுமையாக நிராகரித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8a780ac8-aa70-4014-ab6c-4826558b588a/26-6aa84a4fa7e4c.webp' /></p><p> இது தொடர்பாக தன்னுடைய ட்ரூத் சோஷியல் பக்கத்தில் டிரம்ப் வெளியிட்ட கருத்தில், செயற்கை நுண்ணறிவு துறையின் வளர்ச்சியை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் அனைத்தும் இந்த துறைக்கு எதிரான ஒரு அபத்தமான சதி(Sick Conspiracy) என்று தெரிவித்துள்ளார்.</p><p> மேலும் அந்த பதிவில், ஆந்த்ரோபிக் CEO டாரியோ அமோடி-வை டிரம்ப் கடுமையாக விமர்சித்துள்ளார்.</p><p> குறிப்பாக, டாரியோ அமோடியை கிண்டல் செய்யும் வகையில், “அவர் தன்னை பரிசுத்தமான சிறிய தேவதை போல் காட்டிக் கொள்வதாக” குற்றஞ்சாட்டியுள்ளார்.</p>]]></content>
            <updated>2026-09-15T05:00:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[மிரர் செல்ஃபி, அசத்தல் லுக்கில் தொகுப்பாளினி டிடி.. போட்டோஷூட் புகைப்படங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/anchor-dhivyadharshini-latest-stunning-photoshoot-1789446566"></link>
            <id>https://cineulagam.com/article/anchor-dhivyadharshini-latest-stunning-photoshoot-1789446566</id>
            <summary type="text">சின்னத்திரையில் டாப் நட்சத்திரங்களில் ஒருவராக உள்ளவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி. இவர் தொகுத்து வழங்கிய காஃபி வித் டிடி நிகழ்ச்சியை நம்மால் கண்டிப்பாக ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>சின்னத்திரையில் டாப் நட்சத்திரங்களில் ஒருவராக உள்ளவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி. இவர் தொகுத்து வழங்கிய காஃபி வித் டிடி நிகழ்ச்சியை நம்மால் கண்டிப்பாக மறக்கவே முடியாது. ஆனால், தற்போது உடல்நிலை காரணமாக தொடர்ந்து நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதிலிருந்து தள்ளியிருக்கிறார். அவ்வப்போது படங்களின் இசை வெளியிட்டு விழா மற்றும் அரசு நிகழ்ச்சிகளை மட்டுமே தொகுத்து வழங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. </p><p>இந்த நிலையில், இன்ஸ்டாகிராமில் தொகுப்பாளினி டிடி அசத்தல் போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்:</p>]]></content>
            <updated>2026-09-15T05:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரச ஊழியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை - காலக்கெடுவுடன் கடுமையாகும் சட்ட நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/warning-to-those-in-government-service-action-1789441405"></link>
            <id>https://tamilwin.com/article/warning-to-those-in-government-service-action-1789441405</id>
            <summary type="text">அரச பணியில் இணையும் நபர்கள் குறிப்பாக குழந்தைகளுடன் நேரடியாக தொடர்புடைய பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்கள், குழந்தைகள் தொடர்பான குற்றங்களில் குற்றம்...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரச பணியில் இணையும் நபர்கள் குறிப்பாக குழந்தைகளுடன் நேரடியாக தொடர்புடைய பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்கள், குழந்தைகள் தொடர்பான குற்றங்களில் குற்றம்சாட்டப்படவில்லை என்பதை உறுதிப்படுத்தும் சான்றிதழை பெற வேண்டும் என மகளிர் மற்றும் சிறுவர் நல அலுவல்கள் அமைச்சு முடிவு செய்துள்ளது.
</p><p>
அரச தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா பவுல்ராஜ் இதனை தெரிவித்துள்ளார்.</p><p>

இதற்கான உரிய அமைச்சரவை ஆவணத்தை சமர்ப்பிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.</p><h2>அரச பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள்</h2><p>

இந்த சான்றிதழை பொலிஸ் அல்லது சம்பந்தப்பட்ட அதிகாரப்பூர்வ நிறுவனங்கள் மூலம் பெற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4a9c9b94-6143-4425-93a1-148633381344/26-6aa8cd2078dea.webp' />&nbsp; &nbsp;</p><p> தற்போது அரச பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள், தங்களது பணிக்கால இடைவெளி மற்றும் சம்பள உயர்வுகளை பெறும்போது, ​​குறிப்பிட்ட காலத்திற்குள் குழந்தைகள் தொடர்பான குற்றங்களில் ஈடுபடவில்லை என்று கூறும் சான்றிதழை புதுப்பித்து வழங்குவது கட்டாயமாகும் என்றும் அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.</p><p>இந்த சான்றிதழின் அவசியத்தை அமைச்சரவை அறிக்கை மூலம் சமர்ப்பித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, பொலிஸ் அல்லது தொடர்புடைய நிறுவனங்களிடமிருந்து சான்றிதழைப்பெற நாங்கள் பரிசீலித்து வருவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p>
 மேலும், அரச பணியில் சேரும்போது, ​​குழந்தைகளுடன் பழகும் வாய்ப்புள்ள பணிகளில் பணியாற்றுபவர்கள், குழந்தைகள் தொடர்பான குற்றங்களில் ஈடுபட்டதாகவோ அல்லது குற்றவாளிகள் என்றோ குற்றம் சாட்டப்பட்டிருக்கக்கூடாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.</p><p>

எனவே, ஒரு நாடாக நாம் முன்னேறிச்செல்வதற்கு இது போன்ற வி்டயங்கள் அவசியமானவை என விளக்கமளித்துள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-15T04:58:45+00:00</updated>
        </entry>
    </feed>
