<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-09-12T11:20:44+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ள மொட்டுக் கட்சி உறுப்பினர்! வெளியான காரணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/slpp-pradeshiya-sabha-member-arrested-1789210538"></link>
            <id>https://ibctamil.com/article/slpp-pradeshiya-sabha-member-arrested-1789210538</id>
            <summary type="text">

ஒரே பதிவு இலக்கத்தைக் கொண்ட இரண்டு மோட்டார் சைக்கிள்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) சிலாபம் பிரதேச சபை உறுப்பின...</summary>
            <content type="html"><![CDATA[<p>

ஒரே பதிவு இலக்கத்தைக் கொண்ட இரண்டு மோட்டார் சைக்கிள்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) சிலாபம் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
சிலாபம், மாதம்பே பிரதேசத்தில் உள்ள ஜெயபிம பகுயில் அமைந்துள்ள குறித்த பிரதேச சபை உறுப்பினரின் வீட்டு வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த நிலையிலேயே இந்த மோட்டார் சைக்கிள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
</p><p>
சிலாபம் குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரிக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், அப்பிரிவின் அதிகாரிகளால் நேற்று (11) இந்த வீட்டில் சோதனை முன்னெடுக்கப்பட்ட நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p></p><h2>மனைவியின் பெயரில் பதிவு&nbsp;</h2><p>
</p><p>
அங்கு கைப்பற்றப்பட்ட இரண்டு மோட்டார் சைக்கிள்களிலும் காட்சிப்படுத்தப்பட்டிருந்த பதிவு இலக்கமானது, அந்த உறுப்பினரின் மனைவியின் பெயரில் பதிவு செய்யப்பட்ட மோட்டார் சைக்கிளுக்குரியது என காவல்துறையினர் வெளிப்படுத்தியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4b1756c3-2b8a-4730-9746-79cbccd674a8/26-6aa5346da9504.webp' />&nbsp;</p><p>

இச்சம்பவம் தொடர்பில் உறுப்பினரின் மனைவியிடமும் வாக்குமூலம் பதிவு செய்யப்படவுள்ளதுடன், கைது செய்யப்பட்ட உறுப்பினர் மற்றும் இரண்டு மோட்டார் சைக்கிள்களும் இன்று சிலாபம் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h5></td></tr></tbody></table><p>

</p>]]></content>
            <updated>2026-09-12T11:19:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sakthi Raj</name>
            </author>
            <title type="text"><![CDATA[தயிரை எத்தனை நாட்கள் பிரிட்ஜில் வைத்து பயன்படுத்தலாம்?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/how-long-we-can-store-curd-in-fridge-1789205781"></link>
            <id>https://manithan.com/article/how-long-we-can-store-curd-in-fridge-1789205781</id>
            <summary type="text">தயிர் நம்முடைய அன்றாட வாழ்க்கையில் மிகவும் முக்கியமான உணவாக இருக்கிறது. இதனை நாம் சாதத்தில் கலந்தும், ரைத்தாவாகவும், மோர் லஸ்ஸி என பல வகைகளில் எடுத்து...</summary>
            <content type="html"><![CDATA[<p>தயிர் நம்முடைய அன்றாட வாழ்க்கையில் மிகவும் முக்கியமான உணவாக இருக்கிறது. இதனை நாம் சாதத்தில் கலந்தும், ரைத்தாவாகவும், மோர் லஸ்ஸி என பல வகைகளில் எடுத்துக் கொள்கிறோம். மேலும், புரோபயாடிக் (Probiotics) சத்துக்கள் அதிகம் கொண்ட இந்த தயிர் நமது குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு செரிமானத்தை எளிதாக்குகிறது. </p><p>மேலும், இதைத் தவிர பாதுகாப்பதற்கு பலரும் பிரிட்ஜில் வைத்து பயன்படுத்துவதுண்டு. ஆனால், ஃப்ரிட்ஜில் வைக்கக்கூடிய தயிர் கெட்டுப்போகாதா? எத்தனை நாட்கள் பாதுகாப்பாக இருக்கும் போன்ற பல்வேறு கேள்விகள் நமக்கு வருகிறது. அதை பற்றி பார்ப்போம்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d098b0a1-b7f4-46c2-b5a1-2b02623d279f/26-6aa51d170bc23.webp' /></p><p></p><h3>பிரிட்ஜில் வைப்பதால் தயிர் கெட்டுப்போவதை தடுக்க முடியுமா?
</h3><p>
பொதுவாக, நம்மில் பலரும் தயிரை ஃப்ரிட்ஜில் வைப்பதால் அது கெட்டுப் போகாது என்று எண்ணுவதுண்டு. உண்மையில் குளிர்சாதன பெட்டி பாக்டீரியாக்கள் உடைய செயல்பாட்டை மெதுவாக்குமே தவிர்த்து அதை முழுமையாக தடுத்து நிறுத்துவதில்லை.</p><p> Egypt National Research Centre வெளியிட்ட ஆய்வின்படி, "பிரிட்ஜில் வைக்கப்படும் அதனுடைய அமிலத்தன்மை மற்றும் நுண்ணுயிர் தரத்தில் படிப்படியான மாற்றங்களை சந்திக்கிறது என குறிப்பிடப்பட்டுள்ளது. அதனால் குளிர் சாதன பெட்டியில் நாம் தயிரை வைத்திருந்தாலும் காலப்போக்கில் அதனுடைய சுவை பதம் மற்றும் சத்துக்கள் மாறுபடலாம் என்கிறார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/957ad94a-da43-47c2-a08e-476013db4dcb/26-6aa51d17b8b3f.webp' /></p><h3>பிரிட்ஜில் தயிரை எவ்வளவு நாட்கள் வைக்கலாம்?</h3><h3>

1. பாக்கெட் தயிர்: </h3><p>
கடைகளில் இருக்கக்கூடிய தயிர் ஒவ்வொன்றுக்கும் காலாவதி தேதி குறிப்பிட்டு இருப்பார்கள். அந்த தேதிக்கு உட்பட்ட நாளில் பயன்படுத்துவதே பாதுகாப்பானது.
</p><h3>
2. வீட்டில் தயாரிக்கும் தயிர்:</h3><p> 
வீடுகளில் தயாரிக்க கூடிய தயிரை மூன்று அல்லது ஐந்து நாட்களுக்குள் பயன்படுத்துவது மிக சிறப்பு. இது எந்த வகையான பால், உறை மோர் மற்றும் ஃப்ரிட்ஜின் வெப்ப நிலைகளை குறித்து மாறப்படுகிறது. சில நாட்கள் கடந்தாலும் வீட்டு தயிர் அளவுக்கு அதிகமாக புளித்து விடும். அதனால் வயிற்று உபாதைகளில் ஏற்படுத்தலாம்.&nbsp;&nbsp;</p><h3>தயிரின் மேல் இருக்கும் தண்ணீர் கெட்டுவிட்டதற்கான அறிகுறியா? </h3><p>குளிர்சாதன பெட்டியில் வைக்கக்கூடிய தயிரின் மேல் சேரும் தண்ணீரில் தான் 'Whey' எனப்படும் சத்துக்கள் உள்ளன. தண்ணீரில் புரோட்டின் வைட்டமின் மற்றும் தாதுக்கள் உள்ளன. இந்த தண்ணீர் நிற்பதால் தயிர் கெட்டுவிட்டது என்று அர்த்தம் இல்லை. தயிரை சாப்பிடுவதற்கு முன்பாக இந்த நீரை நன்றாக கலந்து பிறகு சாப்பிடலாம். ஆனால், துர்நாற்றம் அடித்தால் அல்லது தயிரில் பூஞ்சை 
வளர்ந்திருந்தாலோ, உடனடியாக அகற்றி விடுவது அவசியம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/21368bdf-f790-4437-861d-97016631f054/26-6aa51d186f577.webp' /></p><p></p><h3>தயிரை கெடாமல் தடுக்க பின்பற்ற வேண்டிய 5 விஷயங்கள்:
</h3><p>
1. பிரிட்ஜ் உட்புற ஷெல்ப் தயிரை சேமித்து வைக்க வேண்டும். கதவு பகுதிகளில் வைப்பதே தவிர்ப்பதை நல்லது. கதவு அடிக்கடி திறக்கப்படுவதால் வெப்பநிலை மாறுபடலாம். இதனால் தயிர் சீக்கிரம் புளித்து விடும்.
</p><p>

2. தயிரை வெளியே எடுக்கும் போது சுத்தமான மற்றும் ஈரம் இல்லாத கரண்டியை பயன்படுத்துவது நல்லது. ஈரமான கரண்டிகள் தேவையில்லாத பாக்டீரியாக்களை உருவாக்கி தயிரை விரைவில் கெட்டுப் போக செய்யும்.</p><p> 

3. மேலும், காற்று புகாத இருக்குமான மூடியை கொண்ட பாத்திரங்களில் தயிரை வைக்க வேண்டும். இது பிரிட்ஜில் இருக்கக்கூடிய உணவுகளில் வாசனைகள் தயிரில் கலப்பதை தடுத்துவிடும்.</p><p> 

4. பிளாஸ்டிக் பாத்திரங்களுக்குப் பதிலாக மண் பானைகள், கண்ணாடிப் பாத்திரங்கள் அல்லது தரமான ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பாத்திரங்களில் தயிரை வைப்பது நீண்ட நேரம் கெடாமல் பாதுகாக்கும். </p><p>

5. சில வீடுகளில் செய்யக்கூடிய தயிரில் சிறிய பச்சை மிளகாய் அல்லது தேங்காய் துண்டை போட்டு வைப்பது பார்க்கலாம். இது தயிர் அதிகமாக புளிப்பதை தடுப்பதோடு அதன் புத்துணர்வியைத் தக்கவைக்க உதவும் என்று நம்பப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9ec6ac61-ac39-4913-8490-9a15d74f40a1/26-6aa51d1937261.webp' /></p><h3>தயிர் கெட்டுபோனது என்பதை குறிக்கும் அறிகுறிகள் என்ன?<br>

நிறம் மாற்றம்: </h3><p>

புதிய தயிர் நல்ல வெள்ளை அல்லது மங்கலான கிரீம் நிறத்தில் இருக்கும். அங்கு பச்சை அல்லது கருப்பு நிற புள்ளிகள் வந்தால் அங்கு பூஞ்சை அல்லது பாக்டீரியா வந்துவிட்டது என்று அர்த்தம்.</p><p> அதேபோல், தயிர் அதிகமாக வழவழப்பாக மாறினாலோ அல்லது திடீரென தண்ணீராக பிரிந்து கட்டிகட்டிகளாக மாறினாலோ அது கெட்டிருக்க வாய்ப்புள்ளது. </p><p>தயிர் இயற்கையாகவே லேசான புளிப்பு வாசனை கொண்டிருக்கும். அது அழுகிய வாசனை, ஆல்கஹால் வாசனை அல்லது தாங்க முடியாத நாற்றமடித்தால் உடனடியாக அகற்றி விடுவது நல்லது. </p><h3>

அறிய வேண்டியவை:
</h3><p>பிரிட்ஜில் வைக்கக்கூடிய தயிர் அதனுடைய ஆயுளை நீடிக்குமே தவிர என்றென்றும் கெடாமல் பாதுகாப்பதில்லை.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-12T11:15:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தோனேசியாவில் சற்று வித்தியாசமானதொரு நிலநடுக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/java-indonesia-earthquake-september-1789211383"></link>
            <id>https://news.lankasri.com/article/java-indonesia-earthquake-september-1789211383</id>
            <summary type="text">Indonesia earthquake, different from others: இந்தோனேசியாவில் சற்று வித்தியாசமானதொரு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.



இந்தோனேசியா நாட்டில் இன்று பகல் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Indonesia earthquake, different from others: இந்தோனேசியாவில் சற்று வித்தியாசமானதொரு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
</p><p>


இந்தோனேசியா நாட்டில் இன்று பகல் உள்ளூர் நேரப்படி 2.53 மணியளவில் நிலநடுக்கம் ஒன்று தாக்கியது.</p><h2>

சற்று வித்தியாசமானதொரு நிலநடுக்கம்
</h2><p>
ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவானது இந்த நிலநடுக்கம், ஜகார்த்தா, சுமத்ரா உட்பட பல இடங்களில் உணரப்பட்டுள்ளது.
</p><p>
விடயம் என்னவென்றால், இந்த நிலநடுக்கம் சற்று வித்தியாசமானது என அழைக்கப்படுகிறது.
</p><p>
அதாவது, நிலநடுக்கத்தைப் பொருத்தவரை, அது ரிக்டர் அளவுகோலில் எத்தனையாக பதிவாகிறது என்பதுடன், எவ்வளவு ஆழத்தில் உருவாகிறது என்பதும் முக்கியம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f7733e2b-d5b2-4847-b8f6-ceb882b14240/26-6aa533f3e9f50.webp' /><br></p><p>
</p><p>
இன்று உருவான நிலநடுக்கத்தைப் பொருத்தவரை, அது ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவானாலும், பூமியின் பரப்புக்குக்குக் கீழே 376 கிலோமீற்றர் ஆழத்தில் உருவாகியுள்ளது.
</p><p>
இதுபோல் அதிக ஆழத்தில் ஏற்படும் நிலநடுக்கத்தால் ஏற்படும் நில அதிர்வுகள், பொதுவாக நிலப்பரப்பை அடைவதற்குள் அவற்றின் ஆற்றல் வெகுவாகக் குறைந்துவிடும்.
</p><p>
அதனால், அதிக ஆழத்தில் ஏற்படும் நிலநடுக்கத்தால் அபாயம் இல்லை என்று கூறிவிடமுடியாது, இதே அழவில் ஆழம் குறைந்த இடத்தில் ஏற்படும் நிலநடுக்கத்தால் ஏற்படும் அதிர்வுகளை ஒப்பிடும்போது, ஆழம் அதிகமான இடங்களில் ஏற்படும் அதிர்வுகள் வித்தியாசமாக இருக்கும் என்று வேண்டுமானால் கூறலாம்.
</p><p>
இந்நிலையில், இந்த நிலநடுக்கத்தால் எந்த பாதிப்பும் ஏற்பட்டதாக இதுவரை தகவல் இல்லை!<br></p>]]></content>
            <updated>2026-09-12T11:14:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Bavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரதமர் தலைமையில் மட்டக்களப்பில் மாற்றுத்திறனாளி பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஊக்குவிப்பு கொடுப்பனவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/incentive-payments-for-university-students-pm-1789211125"></link>
            <id>https://tamilwin.com/article/incentive-payments-for-university-students-pm-1789211125</id>
            <summary type="text">மட்டக்களப்பில் மாற்றுத்திறனாளி பல்கலைக்கழக மாணவர்களைப் பாராட்டும் தேசிய நிகழ்ச்சித் தொடரின் மூன்றாவது நிகழ்வு இடம்பெற்றது.குறித்த நிகழ்வானது பிரதமரும்...</summary>
            <content type="html"><![CDATA[<p>மட்டக்களப்பில் மாற்றுத்திறனாளி பல்கலைக்கழக மாணவர்களைப் பாராட்டும் தேசிய நிகழ்ச்சித் தொடரின் மூன்றாவது நிகழ்வு இடம்பெற்றது.</p><p>குறித்த நிகழ்வானது பிரதமரும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய தலைமையில் இன்று (12 ) நடைபெற்றது.
</p><p>
ஜனாதிபதி நிதியத்தின் ஏற்பாட்டில் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் (SVIAS) ராஜதுரை அரங்கில் நடைபெற்ற இந்நிகழ்வில், மாற்றுத்திறனாளி பல்கலைக்கழக மாணவர்களுக்கு பிரதமர் அவர்களால் ஊக்குவிப்பு கொடுப்பனவுக்கான காசோலைகள் வழங்கி வைக்கப்பட்டன.</p><h2>பாராட்டு நிகழ்வு</h2><p>
</p><p>
இதன்போது 55 மாற்றுத்திறனாளி பல்கலைக்கழக மாணவர்கள் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.

 மாணவர்களின் கல்வி சாதனைகள் மற்றும் திறமைகளை ஊக்குவிப்பதுடன், சமூகத்தில் அவர்களுக்கான சம வாய்ப்புகளை உறுதிப்படுத்தும் நோக்கில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/35be4fb9-3f38-4906-8bcc-a360779eaa3f/26-6aa533d0b6fad.webp' /></p><p>
</p><p>
மேலும் ஜனாதிபதி செயலகத்தின் செயற்பாடுகளை பிரதேச மட்டத்தில் சிறப்பாகவும் பன்முகப்படுத்தப்பட்ட வகையிலும் முன்னெடுத்த பிரதேச செயலகங்களைப் பாராட்டும் நிகழ்வும் இதன்போது இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
</p><p>
இந்நிகழ்வில் சுவாமி நிலமாதவானந்த ஜீ மஹாராஜ், சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்கிரமரத்தின, கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்தலால் ரத்னசேகர, கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுனில் ஹந்துன்னெத்தி, மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு, ஜனாதிபதி நிதியத்தின் செயலாளர் ரோசான் கமகே, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர்கள் என உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-12T11:13:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுமார் 50,000 யேமன் பொதுமக்கள்... செங்கடல் கடற்கரையோரமாக முன்னேறும் ஹவுதிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/houthis-advance-along-red-sea-1789208646"></link>
            <id>https://news.lankasri.com/article/houthis-advance-along-red-sea-1789208646</id>
            <summary type="text">Nearly 50,000 Yemeni civilians flee as Houthis advance: ஹவுதிகள் முன்னேறுவதால் சுமார் 50,000 யேமன் பொதுமக்கள் வெளியேறியுள்ளனர்.
மேற்கு ஏமனில் ஹவுதிகள...</summary>
            <content type="html"><![CDATA[<p>Nearly 50,000 Yemeni civilians flee as Houthis advance: ஹவுதிகள் முன்னேறுவதால் சுமார் 50,000 யேமன் பொதுமக்கள் வெளியேறியுள்ளனர்.
</p><p>மேற்கு ஏமனில் ஹவுதிகள் திடீரென முன்னேறியதைத் தொடர்ந்து, சுமார் 50,000 பேர் அங்கிருந்து வெளியேறியுள்ளனர்; இதனால் முழு கிராமங்களும் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடிக் காணப்படுகின்றன.</p><h2>உள்நாட்டுப் போர் மீண்டும்</h2><p>
</p><p>உதவிப் பணியாளர்களின் தகவலின்படி, உணவு இருப்பு குறைந்து வரும் நிலையில், போர்முனைக்கு அருகில் குடும்பங்கள் பல சிக்கியுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d4275ecc-6273-478b-b894-287ad7179965/26-6aa5284823119.webp' /></p><p> </p><p>உலகின் மிக முக்கியமான கப்பல் போக்குவரத்துப் பாதைகளில் ஒன்றைக் கட்டுப்பாட்டில் கொண்டுவருவதற்கான உலகளாவிய அதிகாரப் போட்டியால், மத்திய கிழக்கின் மிக ஏழ்மையான நாடான ஏமனின் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்; இந்தப் போட்டி, அந்நாட்டில் அவ்வப்போது நிகழ்ந்துவரும் மோதலை ஒரு முடிவில்லாத போராக மாற்றும் அபாயத்தை உருவாக்கியுள்ளது. </p><p>இந்த வாரம் மின்னல் வேக முன்னேற்றத்தின் ஊடாக, ஹவுதிகள், அமெரிக்கா மற்றும் சவுதி ஆதரவு பெற்ற ஏமன் அரசாங்கப் படைகளிடமிருந்து செங்கடல் கடற்கரையோரத்தில் உள்ள பல நகரங்களைக் கைப்பற்றியுள்ளனர். </p><p>இதில் நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சவுதி அரேபியாவின் தலையீட்டால் 1,50,000 பேரின் உயிரைப் பறித்து, பலரைத் தீவிரப் பஞ்சத்தின் விளிம்பிற்குக் கொண்டு சென்ற முழு அளவிலான உள்நாட்டுப் போர் மீண்டும் வந்துவிடுமோ என்றும் பலர் அஞ்சுகின்றனர்.</p><p></p><p> </p><p>தைஸ் (Taiz) மற்றும் ஹோடைடா (Hodeidah) மாகாணங்களில், 46,000 பேர் இடம்பெயர்ந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச இடம்பெயர்வு அமைப்பு (IOM) வெள்ளிக்கிழமை தெரிவித்தது. </p><p>பல குடும்பங்களைப் பொறுத்தவரை, தங்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்படுவது இது இரண்டாவது அல்லது மூன்றாவது முறையாகும். குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான மக்கள் தங்கள் உடைமைகளுடன் நகரத்தை விட்டு வெளியேறி வருகின்றனர். </p><p>அவசரகாலத் தங்குமிடங்கள், பண உதவி, உணவு, குடிநீர், வீட்டு உபயோகப் பொருட்கள், சுகாதாரம் மற்றும் பாதுகாப்புச் சேவைகள் ஆகியவை மிக அவசரமான தேவைகளாக உள்ளன.</p><h2>பாதுகாப்பு சார்ந்த</h2><p> </p><p>
ஹவுதிகளின் முன்னேற்றம் எதிர்பாராத விதமாகவும் வேகமாகவும் நிகழ்ந்துள்ளது; குறிப்பாக, உலகளாவிய காபி வர்த்தகத்தின் பிறப்பிடமாகவும், சாக்லேட் சுவையிலான காபி வகைக்குப் பெயர்க்காரணமாகவும் பரவலாகக் கருதப்படும் 'மோச்சா' (Mocha) எனும் முக்கியத்துவம் வாய்ந்த துறைமுக நகரம் ஹவுதிகளிடம் வீழ்ந்தது இதில் குறிப்பிடத்தக்கது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cd7487fd-4f43-4e50-adc5-5e4d2174765f/26-6aa52848ccb10.webp' /></p><p> </p><p>ஏமன் விவகார ஆய்வாளர்கள், அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளும் ஏமன் விவகாரத்தில் இராஜதந்திரம் மற்றும் மேம்பாட்டிற்குப் போதிய முக்கியத்துவம் அளிக்காமல், பாதுகாப்பு சார்ந்த அணுகுமுறையைக் கடைப்பிடிப்பதாக நீண்டகாலமாக விமர்சித்து வருகின்றனர். </p><p>21-ஆம் நூற்றாண்டின் பெரும்பகுதியில் சன்னி அல்-கொய்தா போராளிகளுக்கு எதிராக அமெரிக்கா ட்ரோன் தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொண்டது; ஆனால், 2014-இல் ஷியா ஹவுதிகள் தலைநகரைக் கைப்பற்றும் வரை, அவர்களின் தீவிரவாதக் கிளர்ச்சி மீது அமெரிக்கா குறிப்பிடத்தக்க கவனம் செலுத்தவில்லை. </p><p>கடலோரத் தீவுகள் உட்பட முக்கியப் பகுதிகளைத் தங்கள் கட்டுப்பாட்டிற்குக் கொண்டுவருவதன் மூலம், ஆசியாவையும் ஐரோப்பாவையும் இணைக்கும் மிக முக்கியமான வர்த்தக மற்றும் எரிசக்திப் பாதையான 'பாப் அல்-மண்டப்' (Bab al-Mandab) நீரிணைக்கு அருகில் நேரடி இருப்பை ஏற்படுத்திக்கொள்ள மேற்கத்திய எதிர்ப்பு மனப்பான்மை கொண்ட ஹவுதிகள் நம்புகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/69a58b93-750d-4935-8f02-12d159bec6b2/26-6aa5284984b99.webp' /></p><p> </p><p>ஆனால் ஹவுதிகள் இயற்கையான பாப் அல்-மண்டப் நீரிணையை முடக்கினால், உலகப் பொருளாதாரத்தின் மீதான தாக்கம் பேரழிவை ஏற்படுத்தும். பல வாரங்களாக ஒரு பீப்பாய் 80 டொலருக்கு அருகில் வர்த்தகம் செய்யப்பட்ட நிலையில், தற்போது நடைபெற்று வரும் மோதல்கள் கச்சா எண்ணெயின் விலையை ஒரு பீப்பாய் 100 டொலருக்கும் அதிகமாக உயர்த்தக் காரணமாக அமைந்துள்ளன. </p><p>ஏமனில் நடைபெறும் சண்டையும், சவுதி அரேபியா மீதான ஹவுதி ஏவுகணைத் தாக்குதல்களும், 2022-ல் ஐக்கிய நாடுகள் மன்றத்தின் மத்தியஸ்தத்துடன் மேற்கொள்ளப்பட்ட அமைதி ஒப்பந்தத்திற்குப் பிறகு அந்நாட்டில் நிகழ்ந்த மிக முக்கியமான வன்முறைச் சம்பவங்களாகும். </p><p>ஏமனில் நிலவும் ஸ்திரமின்மையை, சவுதி அரேபியா, ஈரான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் போன்ற பிராந்திய சக்திகள் மறைமுகப் போர்களை நடத்துவதற்குப் பயன்படுத்திக்கொண்டுள்ளன; மேலும், வன்முறையை முடிவுக்குக் கொண்டுவரத் தவறியது சக்திவாய்ந்த ஆயுதக் குழுக்களின் வளர்ச்சிக்கு வழிவகுத்துள்ளது.</p><p> ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலியப் போர் பதற்றத்தை அதிகரித்துள்ளதுடன், பிராந்திய அளவிலான விரோத உணர்வும் உச்சத்தை எட்டியுள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-12T11:10:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[Fall 2: Deadpoint திரை விமர்சனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/fall-2-deadpoint-movie-review-1789210198"></link>
            <id>https://cineulagam.com/article/fall-2-deadpoint-movie-review-1789210198</id>
            <summary type="text">Fall 2: Deadpointஹாலிவுட்டில் மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியாகியுள்ள Fall 2: Deadpoin சர்வைவல் த்ரில்லர் படம் எப்படி இருக்கிறது என்று பார்ப்போம் வாங்க...</summary>
            <content type="html"><![CDATA[<h2>Fall 2: Deadpoint</h2><p>ஹாலிவுட்டில் மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியாகியுள்ள Fall 2: Deadpoin சர்வைவல் த்ரில்லர் படம் எப்படி இருக்கிறது என்று பார்ப்போம் வாங்க.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7ec07dd8-44eb-40eb-854d-bdd1d23d2c9e/26-6aa52f6b23f45.webp' /></p><h2>
கதைக்களம்</h2><p> 

சாகசங்களை மேற்கொள்ளும் தனது சகோதரி ஷைலோ ஹன்டரின் மரணத்திற்கு பிறகு ஜாக்ஸ் ஹன்டர் துயரத்தில் மூழ்கியிருக்கிறார்.

அந்த சமயத்தில் ஷைலாவின் மீட்கப்பட்ட ட்ரக் ஒன்றை விற்பதற்காக, அவளது தோழி லூஸ் என்ற பெண் ஜாக்ஸை சந்திக்கிறார். </p><p>

ட்ரக்கின் உள்ளே ஷைலோ எழுதிய எதிர்கால திட்டங்களை இருவரும் படிக்கின்றனர். அதில் தாய்லாந்தில் உள்ள மலையில் சாகச பயணம் மேற்கொண்டு டிராகன் சிலையை பார்க்க வேண்டும் என்ற குறிப்பு உள்ளது. </p><p>

அதனைக் குறிப்பிட்டு மலை சாகச பயணம் மேற்கொள்ளலாம் என ஜாக்சிடம் கூறி லூஸ் அவளை தாய்லாந்திற்கு அழைத்துச் செல்கிறாள்.

அங்கு ஜான் என்ற நபரை சந்திக்கும் இருவரும் டிராகனை அடைய பயணம் மேற்கொள்ள தங்களை அழைத்து செல்ல வேண்டும் என்று கோருகின்றனர். </p><p>

அதற்கு ஜான் 5000 டாலர்கள் ஆகும் என்று கூற, தயக்கத்துடன் இருவரும் சம்மதித்து மூவரும் பயணம் மேற்கொள்கின்றனர்.

தடை செய்யப்பட்ட வழியில், மோசமான பாதையில் மூவரும் பயணம் மேற்கொள்ள அவர்கள் என்னவெல்லாம் சிக்கல்களை எதிர்கொண்டார்கள்? மூவரும் உயிரிபிழைத்தார்களா? என்பதே மீதிக்கதை.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/05ef6984-fd5d-4cfc-b8ac-fade2c33f67d/26-6aa52f6bf1bbe.webp' /></p><h2>
படம் பற்றிய அலசல்</h2><p> 

2022யில் வெளியான Fall திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தி ஸ்பியரிக் சகோதரர்கள் இப்படத்தை இயக்கியுள்ளனர்.

இதற்கு முன் இவர்களது இயக்கத்தில் வெளியான ஜிக்ஸா, வின்செஸ்டர் ஆகிய படங்கள் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதாலும், Fall இரண்டாம் பாகம் எப்படி இருக்கும் என்பதும் Fall 2-விற்கு பெரிய எதிர்பார்ப்பை கிளப்பின.
</p><p>
ஜாக்ஸின் மூவர் குழு மலையேறி, ஒரு கட்டத்தில் ஜானை பிரிந்து இருவர் மட்டுமே தப்பிக்க வேண்டும் என்ற கட்டம் வர படம் விறுவிறுப்பாக செல்கிறது.

துருப்பிடித்த இரும்பு படிகள், நடைபாதை பலகைகள் ஆகியவற்றை பனி படர்ந்ததுபோல் காட்டும்போது நமக்கு பயம் தொற்றிக் கொள்கிறது.
</p><p>
ஜானை (டாம் பிரிட்னி) பிரிந்ததும் ஜாக்ஸ், லூஸ் இருவரும் தப்பிக்க மேற்கொள்ளும் முயற்சிகளும், 4000 அடி உயரத்தில் அவர்கள் சகஜமாக இருப்பதையும் பார்க்கும்போது நமக்கு எந்த பதட்டமும் வரவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ac1d8688-1faf-4c31-ad40-3901f930f480/26-6aa52f6cc164f.webp' /></p><p>
</p><p>அதுவே படத்தை சுவாரஸ்யமற்றதாக மாற்றிவிடுகிறது. அதன் பிறகு வரும் ஒன்றிரண்டு ட்விஸ்ட் பெரிய ஆச்சரியத்தை தரவில்லை. 

அத்துடன் கிளைமேக்சில் வரும் சண்டைக்காட்சியும், அதற்கான காரணமும் தேவையில்லாத ஆணி. பிண்ணனி இசையும் பெரிதளவில் பதட்டத்தை கூட்டவில்லை.
</p><p>
ஜாக்ஸ் ஆக நடித்திருக்கும் ஹாரியேட்டும், லூஸ் ஆக நடித்திருக்கும் அர்சேமாவும், ஜேக்ஸாக வரும் டாம் பிரிட்டினியும் சுமாரான நடிப்பையே தந்துள்ளனர். </p><h2>

க்ளாப்ஸ்</h2><p> 

முதல் அரைமணிநேரம் 

ட்விஸ்ட்</p><h2> 

பல்ப்ஸ்</h2><p> 

சுவாரஸ்யம் இல்லாத திரைக்கதை 

சுமாரான நடிப்பு </p><p><b>


மொத்தத்தில் இந்த Fall 2: Deadpoint படமாகவே Fall (சறுக்கி) ஆகிவிட்டது. </b></p><h3>

ரேட்டிங்: 2/5</h3>]]></content>
            <updated>2026-09-12T11:10:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேருக்கு நேர் மோதிய மோட்டார் சைக்கிள்கள் ; நான்கு இளைஞர்களுக்கு நேர்ந்த கதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/motorcycles-collide-head-on-in-road-crash-1789211393"></link>
            <id>https://jvpnews.com/article/motorcycles-collide-head-on-in-road-crash-1789211393</id>
            <summary type="text">தனமல்வில சர்வோதயா கங்கேபாய உப வீதியில் இடம்பெற்ற விபத்தில் நான்கு இளைஞர்கள் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இரண்டு மோட்டார் சைக்கிள்...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">தனமல்வில சர்வோதயா கங்கேபாய உப வீதியில் இடம்பெற்ற விபத்தில் நான்கு இளைஞர்கள் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p style="text-align: justify; ">
இரண்டு மோட்டார் சைக்கிள்கள் கட்டுப்பாட்டை நேருக்கு நேர் மோதி இன்று சனிக்கிழமை (12) இவ்விபத்து இடம்பெற்றுள்ளதோடு குறித்த விபத்தில் படுகாயமடைந்த நான்கு இளைஞர்களும் தனமல்வில பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7643cfb2-d408-46af-a276-1f9eb45420dd/26-6aa5330302fb3.webp' /></p><h2 style="text-align: justify; ">தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி</h2><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
எனினும் மேலதிக சிகிச்சைகளுக்காக அவர்களில் மூவர் எம்பிலிப்பிட்டிய பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.
</p><p style="text-align: justify; ">

இவ்வாறு எம்பிலிபிட்டிய பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டவர்களில் ஒருவரின் நிலைமை மோசமடைந்ததையடுத்து குறித்த இளைஞன் அங்குள்ள தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">

இவ்விபத்தில தனமல்வில கல்வலயாய பகுதியைச் சேர்ந்த 16 18 19 மற்றும் 31 வயதுடைய இளைஞர்களே காணமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p style="text-align: justify; ">
மேலும், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளில் தனமல்வில பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.&nbsp;</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-12T11:10:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[டெல்லி தெருக்களில் வலம் வந்த சீன ஜனாதிபதியின் கார்: சுவாரஸ்ய தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/xi-jinping-s-car-arrives-in-delhi-1789211264"></link>
            <id>https://news.lankasri.com/article/xi-jinping-s-car-arrives-in-delhi-1789211264</id>
            <summary type="text">Xi Jinping&#039;s car arrives in Delhi under black covers: சீன ஜனாதிபதியான ஜி ஜின்பிங்கின் கார், பிளாஸ்டிக் கவர்களால் சுற்றப்பட்டு டெல்லியில் வலம் வந்த விட...</summary>
            <content type="html"><![CDATA[<p>Xi Jinping's car arrives in Delhi under black covers: சீன ஜனாதிபதியான ஜி ஜின்பிங்கின் கார், பிளாஸ்டிக் கவர்களால் சுற்றப்பட்டு டெல்லியில் வலம் வந்த விடயம் கவனம் ஈர்த்துவருகிறது.
</p><p>

இன்றும் நாளையும், இந்தியாவின் தலைநகர் புதுடெல்லியில் BRICS மாநாடு நடைபெற உள்ள நிலையில், மாநாட்டுக்காக சம்பந்தப்பட்ட நாடுகளின் தலைவர்கள் இந்தியா வந்துள்ளார்கள்.
</p><h2>
கவனம் ஈர்த்த கார்</h2><p>

இந்நிலையில், கருப்பு நிற கவர்களால் பொதியப்பட்ட கார் ஒன்று டெல்லி தெருக்களில் வலம் வரும் காட்சி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.</p><p>

அந்தக் கார், சீன ஜனாதிபதியான ஜி ஜின்பின் பயன்படுத்துவதற்காக சீனாவிலிருந்து கொண்டுவரப்பட்ட கார் ஆகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/750a26fb-88bf-4b3f-bd70-1a40317a439b/26-6aa53281d9ac7.webp' /><br></p><p>

அது Hongqi N701 என்னும் பலத்த பாதுகாப்பு கொண்ட ஆடம்பர கார் ஆகும். </p><p>சீன நிறுவனமான Hongqi நிறுவனம் அந்தக் காரை தனிப்பட்ட முறையின் ஜி ஜின்பிங்குக்காக தயாரித்துள்ளது. </p><p>Hongqi என்பதன் பொருள், சிவப்புக் கொடி என்பதாகும்.

அதாவது, கவனம் ஈர்க்கக்கூடாது என்பதற்காக கவர்கள் சுற்றப்பட்டு கொண்டுவரப்பட்ட சீன ஜனாதிபதியின் கார், பெருமளவில் கவனம் ஈர்த்துவிட்டது!
</p><p>
இன்னொரு விடயம், இதேபோல மற்றொரு நாட்டின் தலைவருக்காகவும் தனிப்பட்ட முறையில் பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட ஆடம்பரக் கார் ஒன்று இந்தியாவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. அந்த தலைவர், ரஷ்ய ஜனாதிபதி புடின்!&nbsp;<br></p>]]></content>
            <updated>2026-09-12T11:08:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mubarak</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாலமுனைப் பிரதான வீதியில் கோர விபத்து! குடும்பஸ்தர் சம்பவ இடத்தில் பரிதாப பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/accident-on-balamunai-main-road-family-man-dies-1789210615"></link>
            <id>https://tamilwin.com/article/accident-on-balamunai-main-road-family-man-dies-1789210615</id>
            <summary type="text">அக்கரைப்பற்று – கல்முனை பிரதான வீதியில் பாலமுனைப் பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் சம்பவ இடத்திலேயே
பரிதாபமாக உயிரிழந...</summary>
            <content type="html"><![CDATA[<p>அக்கரைப்பற்று – கல்முனை பிரதான வீதியில் பாலமுனைப் பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் சம்பவ இடத்திலேயே
பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.</p><p>குறித்த விபத்தானது இன்று(12.9.2026) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>
</p><p>
தனியார் பேருந்து ஒன்றும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.</p><h2>மேலதிக விசாரணை</h2><p>
</p><p>விபத்தில் பாலமுனையை பிறப்பிடமாகவும் அட்டாளைச்சேனை - 08 அக்கரையை
வசிப்பிடமாகவும் கொண்ட&nbsp; 4 பிள்ளைகளின் தந்தையே
சம்பவ இடத்தில் உயிரிழந்தவராவார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b3938e2e-cace-4eb5-ab26-5b6c57d30573/26-6aa5315ab9115.webp' /></p><p>
</p><p>
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளைப் அக்கரைப்பற்று பொலிஸார்
முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-12T11:03:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[திடீர் சோதனை - வசமாக சிக்கிய மத்தள விமான நிலைய விமானப்படை அதிகாரிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/air-force-officers-arrested-at-mattala-airport-1789209103"></link>
            <id>https://tamilwin.com/article/air-force-officers-arrested-at-mattala-airport-1789209103</id>
            <summary type="text">

மத்தள மகிந்த ராஜபக்ச சர்வதேச விமான நிலைய 5 விமானப்படை அதிகாரிகள் வசமாக சிக்கியுள்ளனர். 

வளாகத்தினுள் சுற்றித்திரியும் மான்களைச் சுட்டுக்கொன்று,...</summary>
            <content type="html"><![CDATA[<p>

மத்தள மகிந்த ராஜபக்ச சர்வதேச விமான நிலைய 5 விமானப்படை அதிகாரிகள் வசமாக சிக்கியுள்ளனர். </p><p>

வளாகத்தினுள் சுற்றித்திரியும் மான்களைச் சுட்டுக்கொன்று, அந்த இறைச்சியை வெளிநபர்களுக்கு விற்பனை செய்யும் மோசடியில் ஈடுபட்டு வந்த நிலையிலேயே அவர்கள் கைதாகியுள்ளனர். </p><p>

சம்பவம் தொடர்பில் 5 விமானப்படை அதிகாரிகள் மற்றும் இரண்டு சிவில் பிரஜைகள் ஆகியோரை மத்தள பொலிஸார் கைது செய்துள்ளனர்.</p><h2>விசேட சோதனை</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1c8673d8-8c8c-48f2-8177-d8f333148657/26-6aa52f94d9b3e.webp' />&nbsp; &nbsp;</p><p> </p><p>

குறித்த விமானப்படை அதிகாரிகளால் விமான நிலைய நிலப்பரப்பினுள் வேட்டையாடப்பட்ட மான் இறைச்சியை, வளாகத்திற்கு வெளியே கொண்டு செல்ல முயன்ற வேளையில் பொலிஸார் மேற்கொண்ட விசேட சோதனையின் போது சந்தேகநபர்கள் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளனர்.</p><p>இந்த கைதை தொடர்ந்து, வேட்டைக்காகப் பயன்படுத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் துப்பாக்கிகள் மற்றும் விமானப்படைக்குச் சொந்தமான ஜீப் வண்டி ஒன்றும் பொலிஸாரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளன.</p><p>குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-12T10:55:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[என்னை பற்றி நீங்க என்ன வேணா பேசுங்க..என் கணவர் பத்தி பேசாதீங்க!! சாக்ஷி அகர்வால் ஆவேசம்...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/sakshi-agarwal-reply-to-trolls-about-husband-sm-1789210617"></link>
            <id>https://viduppu.com/article/sakshi-agarwal-reply-to-trolls-about-husband-sm-1789210617</id>
            <summary type="text">சாக்ஷி அகர்வால்மாடலிங் துறையில் இருந்து வந்து வெள்ளித்திரையில் ஒருசில படங்களில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை சாக்ஷி அகர்வால். பிக்பாஸ் சீசன் 3ல் போட...</summary>
            <content type="html"><![CDATA[<h2>சாக்ஷி அகர்வால்</h2><p>மாடலிங் துறையில் இருந்து வந்து வெள்ளித்திரையில் ஒருசில படங்களில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை சாக்ஷி அகர்வால். பிக்பாஸ் சீசன் 3ல் போட்டியாளராக கலந்து கொண்ட சாக்ஷி, 2025ல் தன்னுடைய நீண்ட நாள் காதலர் நவநீத் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e02c201c-d1f0-4024-8aa6-cace401c1c39/26-6aa52ffbf0f1a.webp' /></p><p> திருமணத்திற்கு பின் இணையத்தில் ஆக்டிவாக இருந்தும் கணவருடன் அவுட்டிங் சென்றும் வருகிறார்.</p><p> இந்நிலையில் சாக்ஷி அளித்த பேட்டியொன்றில் தன்னுடைய கணவரை பற்றி சில பதிவிட்டு வரும் அநாகரிகமான கமெண்ட்டுகள் குறித்து வேதனையுடன் பகிர்ந்துள்ளார். </p><h2>என் கணவர் பத்தி பேசாதீங்க</h2><p>அதில், நாங்கள் பதிவிடும் ஒன்று, இரண்டு வீடியோகளில் என் கணவரைப் பற்றி சில போட்ட கமெண்ட்டுகளை பார்த்தேன், அது எனக்கு ரொம்பவே ஹர்ட் ஆச்சு, என்னை பற்றி நீங்க என்ன வேணா பேசுங்க, கல்யாணத்திற்குப்பின் நான் இப்படி டிரெஸ் பண்றேன், அப்படி டிரெஸ் பண்றேன்னு எதை வேணா சொல்லுங்க, எனக்கு அதைப்பற்றி கவலை இல்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6f5c546b-49b5-4d9a-a4e9-dacfe0a9073c/26-6aa52ffb3f025.webp' /></p><p> </p><p>ஆனால் என் வாழ்க்கை துணையை பற்றி கமெண்ட் செய்யும்போது அவர் ஒரு பொது நபர் கிடையாது. நாங்கள் மாலத்தீவு, பாங்காக் போறப்போ எடுக்கிற வீடியோக்கள் எங்களோட சந்தோஷமான தருணங்கள். நாங்கள் ஹாப்பியா இருக்கோம்னு உலகத்துக்கு காட்டத்தான் அதை ஹேர் பண்றோம், ஆனால் சில பாரு அவங்களுக்கு எல்லைமீஈர்ய சுதந்திரம் இருக்குன்னு நினைச்சுக்கிட்டு எதை வேணா பேசுறாங்க. </p><p>பணத்துக்காகத்தான் நான் அவரை கல்யாணம் செய்து கொண்டேன் என்று சிலர் கமெண்ட் பண்றாங்க. உண்மை என்னவென்றே தெரியாமல், எதுவும் தெரியாமல் ஏன் இப்படி பேசுறீங்க? என தன் கணவரை தேவையில்லாத சோசியல் மீடியா சர்ச்சைக்குள் இழுப்பவர்களுக்கு பதிலடி கொடுத்து பேசியுள்ளார் சாக்ஷி அகர்வால்.</p>]]></content>
            <updated>2026-09-12T10:55:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[அநுராதபுரத்தில் ஆரம்பமான மொட்டுவின் மக்கள் பேரணி : அர்ச்சுனா எம்.பியும் பங்கேற்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/slpp-rally-against-the-anura-government-1789185431"></link>
            <id>https://ibctamil.com/article/slpp-rally-against-the-anura-government-1789185431</id>
            <summary type="text">புதிய இணைப்புசிறிலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) &quot;ஜனசதன&quot; (Janasatana) மக்கள் பேரணி அனுராதபுரத்தில் தற்போது நடைபெறுகின்றது.இந்தப் பேரணியில் பல முன்னாள் ...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) "ஜனசதன" (Janasatana) மக்கள் பேரணி அனுராதபுரத்தில் தற்போது நடைபெறுகின்றது.</p><p>இந்தப் பேரணியில் பல முன்னாள் அமைச்சர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்டுள்ள நிலையில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும் இக்கூட்டத்தில் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>இக்கூட்டத்திற்காக பெருமளவிலான பொதுஜன பெரமுன ஆதரவாளர்கள் அங்கு கூடியுள்ளதுடன், கட்சியின் அமைப்பாளர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் கூட்டத்தில் உரையாற்றி வருகின்றனர்.</p><p>இந்த நிலையில் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7b296775-89bc-4ba0-a778-ed4a0acf0602/26-6aa52f411f193.webp' /></p><h2>முதலாம் இணைப்பு</h2><h5>அநுராதபுரத்தில் மகிந்த தலைமையில் அநுர அரசுக்கு எதிராக மக்கள் பேரணி!</h5><p>சிறிலங்கா பொதுஜன பெரமுன&nbsp;முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையில் இன்று அநுராதபுரத்தில் மக்கள் பேரணியை நடத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>குறித்த விடயத்தினை சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் டி.வி. சானக்க தெரிவித்துள்ளார்.
</p><p>
விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை அரசாங்கம் நிறைவேற்றத் தவறியமையைக் கண்டித்து இந்தப் பேரணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p></p><h2>விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாமல் </h2><p>
அரசாங்கத்தின் வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்றுவதற்கு அழுத்தம் கொடுப்பதே இந்தப் பேரணியின் முதன்மை நோக்கமாகும் என டி.வி. சானக்க சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2bfaa53d-859c-4238-a57b-19d9bdd2b348/26-6aa4d23f06a79.webp' /></p><p>
</p><p>
முன்னதாக இந்தப்பேரணி நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தலைமையில் நடைபெறவிருந்தது.</p><p>
எனினும் அவர் ஊழல் குற்றச்சாட்டின் கீழ் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் மகிந்த ராஜபக்ச பேரணிக்கு தலைமை தாங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p>&nbsp;</p><p>&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-12T10:52:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[குற்றச் செயல்களில் ஈடுபட்ட பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நபர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/wanted-suspect-arrested-for-criminal-activities-1789210151"></link>
            <id>https://jvpnews.com/article/wanted-suspect-arrested-for-criminal-activities-1789210151</id>
            <summary type="text">வீடு உடைப்பு உள்ளிட்ட பல குற்றச் செயல்களுடன் தொடர்புடைய, நீதிமன்றினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நபர் ஒருவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் இணையக்...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">வீடு உடைப்பு உள்ளிட்ட பல குற்றச் செயல்களுடன் தொடர்புடைய, நீதிமன்றினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நபர் ஒருவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் இணையக் கண்காணிப்பு மற்றும் விசாரணைப் பிரிவினரால் தனமல்வில பகுதியில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p style="text-align: justify; ">
இராஜகிரிய பகுதியில் உள்ள வீடொன்றை உடைத்து உள்ளே நுழைந்த சந்தேகநபர், அங்குள்ள பெண்ணொருவரின் கைபேசி மற்றும் ரூபா 25,000 ரொக்கப் பணத்தைத் திருடித் தப்பியுள்ளார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/63736c44-9e4d-4f82-95ae-f902f2166884/26-6aa52f3175d13.webp' /></p><h2 style="text-align: justify; ">விசாரணைகள்&nbsp;</h2><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
திருடப்பட்ட கைபேசியைப் பயன்படுத்தி, அப்பெண் உறங்கிக் கொண்டிருக்கும் போது எடுக்கப்பட்ட காணொளியை அவரின் தொலைபேசி தொடர்புகளுக்கு அனுப்பியுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p style="text-align: justify; ">

இச் சம்பவம் தொடர்பில் முதலில் வெலிக்கடை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்ட நிலையில், பின்னர் விசாரணைகள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு மாற்றப்பட்டன.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">

</p><p style="text-align: justify; ">குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட தீவிர கண்காணிப்பு மற்றும் விசாரணைகளின் பலனாகவே சந்தேகநபர் தனமல்வில பகுதியில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p style="text-align: justify; ">

மேலும், இச் சம்பவத்துடன் தொடர்புடைய மேலதிக விசாரணைகளில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-12T10:49:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[விமான நிலைய வளாகத்துக்குள் மான் வேட்டை! விமானப்படை வீரர்கள் ஐவர் அதிரடி கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/five-air-force-personnel-arrested-for-hunting-deer-1789201378"></link>
            <id>https://ibctamil.com/article/five-air-force-personnel-arrested-for-hunting-deer-1789201378</id>
            <summary type="text">



மத்தள சர்வதேச விமான நிலைய வளாகத்தில் சுற்றித்திரிந்த மான்களைச் சுட்டுக்கொன்று, அவற்றின் இறைச்சியை வெளியாட்களுக்கு விற்பனை செய்த கும்பலைச் சேர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>



மத்தள சர்வதேச விமான நிலைய வளாகத்தில் சுற்றித்திரிந்த மான்களைச் சுட்டுக்கொன்று, அவற்றின் இறைச்சியை வெளியாட்களுக்கு விற்பனை செய்த கும்பலைச் சேர்ந்த ஐந்து விமானப்படை வீரர்கள் உட்பட ஏழு பேரை மத்தள காவல்துறையினர் கைது செய்துள்ளனர். </p><p>

விமான நிலைய வளாகத்திற்குள் வேட்டையாடப்பட்ட மான் இறைச்சியை அங்கிருந்து வெளியே கொண்டு செல்ல முயன்றபோது, ​​காவல்துறையினர் மேற்கொண்ட சிறப்புச் சோதனையின்போது சந்தேக நபர்கள் பிடிபட்டுள்ளனர்.</p><p></p><h2>மேலதிக விசாரணை</h2><p>

இதேவேளை, கைது நடவடிக்கையுடன், விமானப்படைக்குச் சொந்தமான ஒரு ஜீப் வண்டியையும், வேட்டைக்கு பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் துப்பாக்கிகளையும் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/880798b0-297d-4827-9868-6d1a231dba65/26-6aa52ce82e0ca.webp' /></p><p> </p><p>

இச்சம்பவம் தொடர்பாகக் குற்றத்தளப் புலனாய்வு (SOCO) விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன.
</p><p>
அத்தோடு, மத்தள காவல்துறையினரும் மேலதிக விசாரணைகளையும் ஆரம்பித்துள்ளனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-12T10:45:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[அனுராதபுரத்தில் களமிறங்கும் மகிந்த.. சூடுபிடிக்கும் தென்னிலங்கை அரசியல்களம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/mahinda-in-anuradhpura-rally-slpp-namal-1789206840"></link>
            <id>https://tamilwin.com/article/mahinda-in-anuradhpura-rally-slpp-namal-1789206840</id>
            <summary type="text">ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசாங்கத்திற்கு எதிரான பேரணி அனுராதபுரத்தில் சற்று முன்னர் ஆரம்பமாகியுள்ளது.&amp;nbsp;நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தலைம...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசாங்கத்திற்கு எதிரான பேரணி அனுராதபுரத்தில் சற்று முன்னர் ஆரம்பமாகியுள்ளது.&nbsp;</p><p>நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தலைமையில் இடம்பெறவிருந்த குறித்த பேரணியானது, அவர் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து அவரின் தந்தை தலைமை தாங்குவார் என அக்கட்சி தெரிவித்திருந்தது.&nbsp;</p><p>அதன்படி, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இன்று குறித்த பேரணியில் கலந்து கொள்வார் என உறுதிபடுத்தப்பட்டுள்ளது.&nbsp;</p><p>இந்நிலையில், மீ்ண்டும் அரசியல் களத்தில் இறங்கும் மகிந்த என்னும் பாணியில் தென்னிலங்கை அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/j9vVKx2Yx3I" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-12T10:43:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiva</name>
            </author>
            <title type="text"><![CDATA[சீதை அம்மன் ஆலயத்திற்கு முன் கொலைக்களமாகும் பாதசாரிகள் கடவை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/seetha-amman-temple-pedestrian-crossing-death-1789208093"></link>
            <id>https://tamilwin.com/article/seetha-amman-temple-pedestrian-crossing-death-1789208093</id>
            <summary type="text">நுவரெலியா மாவட்டத்தில் இராமாயணத்துடன் தொடர்புபட்ட வரலாற்று
சிறப்புமிக்க சீதாஎலிய பிரதேசத்தில் சீதை அம்மன் ஆலயம் அமைந்துள்ள நுவரெலியா -
பதுளை பிரதான ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நுவரெலியா மாவட்டத்தில் இராமாயணத்துடன் தொடர்புபட்ட வரலாற்று
சிறப்புமிக்க சீதாஎலிய பிரதேசத்தில் சீதை அம்மன் ஆலயம் அமைந்துள்ள நுவரெலியா -
பதுளை பிரதான வீதியில்
வாகனங்களின் பாவனையும், போக்குவரத்து நெரிசலும் தொடர்ச்சியாக
அதிகரித்துக்கொண்டே செல்கிறது.</p><p> அதற்கு ஏற்றால்போல் ஆலயதிக்கு முன் காணப்படும்
பாதசாரிகள் கடவையில் விதிமுறைகளை மீறுதலும், வாகன விபத்துக்களின்
எண்ணிக்கையும் கூட அதிகரித்துக் கொண்டே செல்வதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>குறித்த வீதியில்
பயணிக்கும் வாகனங்கள் மட்டும் விபத்துக்குள்ளாவதில்லை, மாறாக நடைபாதையை
பயன்படுத்தும் பாதசாரிகளும், பாதசாரி கடவையை முறையாக பயன்படுத்தும் அப்பாவி
மக்களும் கூட விபத்தில் சிக்குகிறார்கள்.சில சமயங்களில் உயிரிழக்கவும்
செய்கிறார்கள்.</p><h2>விபத்து</h2><p> தற்போதைய நிலையில், வீதிகளில் நாம் மட்டும் விதிகளை பின்பற்றி
பயணிப்பதால் மாத்திரம் விபத்துக்களை தடுத்துவிட முடியாது என்கிற நிலை
உருவாகிவிட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a40399dc-0933-4b63-b4ac-64331670bc71/26-6aa52c524f6a7.webp' /></p><p>
</p><p>
இறுதியாக வெள்ளிக்கிழமை (11) மாலை வரலாற்று சிறப்புமிக்க சீதாஎலிய
பிரதேசத்தில் சீதை அம்மன் ஆலயத்துக்கு முன்பாக காணப்படும் பாதசாரிகள் கடவையை
கடக்க முயன்ற ஒருவர் மீது முச்சக்கர வண்டி ஒன்று மோதியதில் பலத்த காயம்
அடைந்துள்ளார்.</p><p> எனினும் முச்சக்கர வண்டி சாரதி கண்டுகொள்ளாமல் சென்று விட்டதாக
பிரதேச மக்கள் தெரிவித்தனர்.</p><h2>கோரிக்கை</h2><p>
</p><p>
குறித்த ஆலயத்திற்கு முன்பாக வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சுற்றுலா பயணிகள்
அதிகம் வந்து செல்லும் வரலாற்று பிரசித்தி பெற்ற ஆலயம் ஆகும். அது போலவே வீதி
விபத்துகளும் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/33ca4192-492e-451c-9516-c526ba4bf294/26-6aa52c5177d1a.webp' /></p><p> எனவே நுவரெலியா வீதி
போக்குவரத்து பொலிசாரும், வீதிகள் தொடர்பான அமைச்சும் இது தொடர்பில் அதீத
கவனத்தை செலுத்தி இது தொடர்பிலான நடைமுறைக்கு பொருத்தமான திட்டங்களை
நடைமுறைப்படுத்துவதும் அவசியமாகிறது என பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-12T10:41:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/shiran-basik-s-father-arrested-court-order-1789206901"></link>
            <id>https://ibctamil.com/article/shiran-basik-s-father-arrested-court-order-1789206901</id>
            <summary type="text">டுபாயில் இருந்து நாட்டுக்கு அழைத்து வரப்பட்ட போதைப்பொருள் கடத்தல்காரர் எனக் கூறப்படும் ஷிரான் பாஸிக்கின் தந்தையான அப்துல் ரசாக் மொஹமட் பாஸிக் என்பவரைக...</summary>
            <content type="html"><![CDATA[<p>டுபாயில் இருந்து நாட்டுக்கு அழைத்து வரப்பட்ட போதைப்பொருள் கடத்தல்காரர் எனக் கூறப்படும் ஷிரான் பாஸிக்கின் தந்தையான அப்துல் ரசாக் மொஹமட் பாஸிக் என்பவரைக் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
</p><p>
 

சந்தேக நபரான அவர் இன்று (12) கொழும்பு புதுக்கடை இலக்கம் 3 நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
</p><p>
 

இதன்போது, சந்தேக நபரை எதிர்வரும் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.</p><p></p><h2>மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவு&nbsp;</h2><p>சந்தேக நபரான&nbsp;ஷிரான் பாஸிக்கின் தந்தை பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்று (11) கைது செய்யப்பட்டிருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3b501389-8020-4bcd-8048-f4e80f8c351d/26-6aa52b59bc510.webp' /></p><p>
</p><p>
 

ஷிரான் பாஸிக்கினால் போதைப்பொருள் கடத்தல் மூலம் உழைக்கப்பட்டதாகக் கூறப்படும் 3 கோடி ரூபாய் பணத்தைச் செலவிட்டு கம்பஹா பிரதேசத்தில் சொகுசு வீடு ஒன்றை தனது பெயரில் கொள்வனவு செய்தது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைக்கு அமைவாகவே இவர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-12T10:36:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[நோர்வேயில் இலங்கை வம்சாவளி பெண்ணுக்கு கிடைத்த உயர் பதவி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/sri-lankan-origin-woman-gets-top-norway-post-1789198392"></link>
            <id>https://canadamirror.com/article/sri-lankan-origin-woman-gets-top-norway-post-1789198392</id>
            <summary type="text">இலங்கை வம்சாவழியைச் சேர்ந்தவரும் நோர்வேயின் தொழிலாளர் கட்சியைச் சேர்ந்தருமான கம்சி குணரட்ணம், அந்நாட்டின் புதிய போக்குவரத்து அமைச்சராக நியமிக்கப்பட்டு...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை வம்சாவழியைச் சேர்ந்தவரும் நோர்வேயின் தொழிலாளர் கட்சியைச் சேர்ந்தருமான கம்சி குணரட்ணம், அந்நாட்டின் புதிய போக்குவரத்து அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.</p><p>&nbsp;நோர்வே மன்னர் தலைமையில் நடைபெற்ற அரசாங்க சபைக் கூட்டத்தில், 2026 செப்டெம்பர் 11ஆம் திகதி கம்சி குணரட்ணம் போக்குவரத்து அமைச்சராக உத்தியோகபூர்வமாக நியமிக்கப்பட்டதாக நோர்வே அரசாங்கம் அறிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5d667326-a3ed-437d-a262-d79e39344d20/26-6aa500398df93.webp' /></p><p>
</p><p>
இதன் மூலம் நோர்வே அரசியலில் முக்கியமான அமைச்சுப் பதவியை வகிக்கும் தமிழ்ப் பின்னணியைக் கொண்ட அரசியல்வாதியாக கம்சி குணரட்ணம் உலகத் தமிழர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
</p><p>
இளம் வயதிலேயே அரசியலில் ஈடுபட்ட கம்சி குணரட்ணம், தொழிலாளர் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தி படிப்படியாக பல்வேறு அரசியல் பொறுப்புகளை வகித்து முன்னேறியுள்ளார்.</p><p> 19 வயதில் ஒஸ்லோ மாநகர சபைக்கு தெரிவான அவர், பின்னர் தேசிய அரசியலிலும் முக்கிய இடத்தைப் பெற்றார்.
</p><p>
தற்போது நோர்வே அரசாங்கத்தில் போக்குவரத்து அமைச்சராக பொறுப்பேற்றுள்ள கம்சி குணரட்ணம், பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்து, அஞ்சல் சேவைகள் உள்ளிட்ட துறைகள் தொடர்பான கொள்கைகளுக்கு பொறுப்பானவராக செயற்படவுள்ளார்.</p><p>அரசியல் செய்திகளை வாசி

கம்சியின் இந்த உயர்வு, அவரது அரசியல் பயணத்தில் முக்கியமான புதிய கட்டமாகவும், நோர்வே வாழ் தமிழர்கள் உள்ளிட்ட உலகத் தமிழர்களுக்கு பெருமைக்குரிய நிகழ்வாகவும் பார்க்கப்படுகிறது.</p><p>

நோர்வே பிரதமர் ஜோனாஸ் கார் ஸ்டோரே தலைமையிலான தற்போதைய அரசாங்கம் தொழிலாளர் கட்சி உறுப்பினர்களைக் கொண்டதாக அமைந்துள்ள நிலையில், கம்சி குணரட்ணம் போக்குவரத்து அமைச்சராக இடம்பெற்றுள்ளார்.
</p><p>
இதேவேளை, புதிய அமைச்சருக்கான மாநிலச் செயலாளர்களாக Abel Cecilie Knibe Kroglund மற்றும் Jakob Vorren ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் நோர்வே அரசாங்கம் தெரிவித்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-12T10:34:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[முக்கிய எண்ணெய் குழாயை மூடிய சவூதி ; மோசமடையும் மத்திய கிழக்கு நிலைமை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/saudi-arabia-shuts-key-oil-pipeline-1789209268"></link>
            <id>https://canadamirror.com/article/saudi-arabia-shuts-key-oil-pipeline-1789209268</id>
            <summary type="text">ஈரான் - அமெரிக்கா மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், ஈராக்கிலிருந்து நடத்தப்பட்டதாகக் கூறப்படும் ட்ரோன் தாக்குதலைத் தொடர்ந்து, சவூதி அரேபியா தனது முக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரான் - அமெரிக்கா மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், ஈராக்கிலிருந்து நடத்தப்பட்டதாகக் கூறப்படும் ட்ரோன் தாக்குதலைத் தொடர்ந்து, சவூதி அரேபியா தனது முக்கியமான 1,200 கிலோமீட்டர் நீளமுடைய ‘கிழக்கு - மேற்கு’ எண்ணெய் குழாய் வழித்தடத்தை தற்காலிகமாக மூடியுள்ளது.</p><p>



சவூதி அரேபியாவின் எண்ணெய் ஏற்றுமதிக்கு முக்கிய மாற்று வழித்தடமாக விளங்கும் இந்தக் குழாய் வழித்தடம், ஹோர்முஸ் நீரிணையைத் தவிர்த்து எண்ணெயை உலக சந்தைகளுக்கு கொண்டு செல்லும் வகையில் அமைந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d51bcabd-5a6b-47f8-ba26-1c7ebfe6e80f/26-6aa52ab65e11d.webp' /></p><p>



பாதுகாப்பு காரணங்களுக்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தக் குழாய் மூடப்பட்டுள்ளதாக அந்நாட்டின் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
</p><p>


கடந்த வியாழக்கிழமை (10) ஈராக்கிலிருந்து ஏவப்பட்டதாகக் கூறப்படும் பல ட்ரோன்கள் இந்தத் தாக்குதலை நடத்தியதாக சவூதி வெளியுறவு அமைச்சு குற்றஞ்சாட்டியுள்ளது. </p><p>தாக்குதலை ஈராக் அரசாங்கமும் கண்டித்துள்ளதுடன், சம்பவம் தொடர்பில் விசாரணைக்கும் உத்தரவிட்டுள்ளது.



இதனிடையே, சவூதி ஆதரவு பெற்ற யேமன் அரசாங்கப் படைகளுக்கும் ஈரான் ஆதரவு ஹௌதி அமைப்பினர்களுக்கும் இடையிலான மோதலும் தீவிரமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
</p><p>


பாப்-எல்-மண்டேப் நீரிணைக்கு அருகிலுள்ள முக்கிய பகுதிகள் தொடர்பிலும் ஹௌதிகள் முன்னேற்றம் கண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
</p><p>


உலகின் முக்கிய கப்பல் போக்குவரத்து வழித்தடங்களில் ஒன்றான பாப்-எல்-மண்டேப் நீரிணை, சர்வதேச எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
</p><p>


இதனால் அப்பகுதியில் ஏற்படும் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் உலகளாவிய எரிசக்தி சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.



சவூதி அரேபியா மூடியுள்ள எண்ணெய் குழாய் வழித்தடம் மூலம் கடந்த சில மாதங்களாக நாளொன்றுக்கு சுமார் 4 முதல் 5 மில்லியன் கொள்கலன் எண்ணெய் கொண்டு செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. </p><p>இது உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டுள்ளது.



இந்நிலையில், குழாய் வழித்தடத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை பாதுகாப்புப் படையினரும் தொழில்நுட்பக் குழுவினரும் மதிப்பீடு செய்து வருகின்றனர்.</p><p>



குழாய் மீண்டும் எப்போது செயல்பாட்டுக்கு வரும் என்பது தொடர்பில் இதுவரை உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-12T10:34:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிறந்தநாள் ஸ்பெஷலாக நடிகை திவ்யா கணேசன் வெளியிட்ட போட்டோஸ்...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/serial-actress-divya-ganesan-birthday-spl-photos-1789208858"></link>
            <id>https://cineulagam.com/article/serial-actress-divya-ganesan-birthday-spl-photos-1789208858</id>
            <summary type="text">திவ்யா கணேசன்விஜய் டிவியில் ஒளிபரப்பான பாக்கியலட்சுமி சீரியலில் ஜெனிபர் என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களிடம் பிரபலமானவர் நடிகை திவ...</summary>
            <content type="html"><![CDATA[<h2>திவ்யா கணேசன்</h2><p>விஜய் டிவியில் ஒளிபரப்பான பாக்கியலட்சுமி சீரியலில் ஜெனிபர் என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களிடம் பிரபலமானவர் நடிகை திவ்யா கணேசன்.</p><p>‘அந்த சீரியலை தொடர்ந்து மகாநதி, அன்னம் போன்ற சீரியல்களில் நடித்து வந்தார், பின் பிக்பாஸ் ஒரு சீசனில் கலந்துகொண்டவர் டைட்டிலையும் வென்றார்.</p><p>இப்போது திவ்யா கணேசன் அதிகம் வெப் தொடர்களில் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது நாம் அவர் பிறந்தநாள் ஸ்பெஷலாக வெளியிட்ட புகைப்படங்களை காண்போம்.</p><p>இதோ புகைப்படங்கள்,&nbsp;</p><p><br></p>]]></content>
            <updated>2026-09-12T10:27:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thevanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் தவறான தகவல்களை நம்ப வேண்டாம்! கரைச்சி பிரதேசசபை தவிசாளர் பொதுமக்களுக்கு அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/changes-in-sand-distribution-operations-1789205712"></link>
            <id>https://tamilwin.com/article/changes-in-sand-distribution-operations-1789205712</id>
            <summary type="text">கரைச்சி பிரதேச சபையினால் மேற்கொள்ளப்பட்டு வரும் மணல் விநியோக நடவடிக்கைகள் தொடர்பில் கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் அருணாச்சலம் வேழமாலிகிதன் பொது மக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>கரைச்சி பிரதேச சபையினால் மேற்கொள்ளப்பட்டு வரும் மணல் விநியோக நடவடிக்கைகள் தொடர்பில் கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் அருணாச்சலம் வேழமாலிகிதன் பொது மக்களை தெளிவுப்படுத்தியுள்ளார்.
</p><p>
இது தொடர்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடக சந்திப்பில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.</p><h2>மணல் விநியோகம்</h2><p>

அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போது ஒரு சீரான ஒழுங்குமுறைக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. இதுவரை வட்டக்கச்சி, திருவையாறு பகுதிகளில் விநியோகிக்கப்பட்ட மணல், வரும் திங்கட்கிழமை முதல் இரணைமடுக் குளத்தின் உட்பகுதியிலிருந்து விநியோகிக்கப்படவுள்ளது.</p><p> 

இதற்காக முதற்கட்டமாக சுமார் 3000 கியூப் மணல் தயார் நிலையில் உள்ளது. பொதுமக்கள் தங்களது சொந்த வீடமைப்பு, மலசலக்கூடங்கள் மற்றும் கிணறுகள் போன்ற தேவைகளுக்கும், அரச கட்டுமான ஒப்பந்தக்காரர்கள் தங்களது திணைக்களங்கள் மூலமாகவும் மணலைப் பெற்றுக்கொள்ள முடியும். (வீட்டுத் திட்டங்களுக்கு மட்டுமே மணல் வழங்கப்படும் என்ற செய்தி தவறானது). </p><h2>

தேவையான ஆவணங்கள்</h2><p> மணல் முறைகேடாக வெளியில் விற்பனை செய்யப்படுவதைத் தடுக்க, மணல் குறிப்பிட்ட இடத்திற்கு தான் கொண்டு செல்லப்படுகிறது என்பதை உறுதிப்படுத்த கிராம அலுவலர் மற்றும் பிரதேச செயலாளரின் ஒப்புதல் கடிதம் அவசியமாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c48f92a1-425e-4821-b152-68e620383268/26-6aa528b23579d.webp' /></p><p> </p><h2>

விலை விவரம் </h2><p>குறைந்தபட்சம் 40,000 முதல் அதிகபட்சம் 45,000 வரையிலான விலையில் மணலைப் பெற்றுக்கொள்ள வசதிகள் செய்யப்பட்டுள்ளன. களஞ்சியத்திலிருந்து மணலை ஏற்றிவிடும் பொறுப்பு பிரதேச சபையைச் சார்ந்தது. அங்கிருந்து எடுத்துச் செல்லும் பொறுப்பு விண்ணப்பதாரரைச் சார்ந்தது.</p><p> பாரவூர்தி சங்கத்தினர் ஒவ்வொரு பொலிஸ் பிரிவுக்கும் நிர்ணயித்த கட்டணத்தின் அடிப்படையில் தனியாரும் வாகனங்களை ஒழுங்கு செய்ய முடியும்.
</p><p>
ஜனவரி மாதம் முதல் ‘மணல் யாட்’ (Sand Yard) அமைத்து, உழவியந்திரம் மற்றும் ஏனைய வாகனங்கள் மூலமாகவும் பொதுமக்கள் எளிதாக மணல் பெற புதிய நடைமுறை உருவாக்கப்பட்டு வருகிறது.</p><p> 

சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் தவறான தகவல்களை நம்ப வேண்டாம் என்றும், சந்தேகங்கள் இருப்பின் பிரதேச சபை உறுப்பினர்கள் அல்லது அதிகாரிகளைத் தொடர்பு கொள்ளுமாறும் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-12T10:26:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[உயர்தர பரீட்சை வினாத்தாள்கள் பாதுகாப்பு: காவல்துறை உத்தியோகத்தர் மதுபானம் அருந்திய நிலையில் ரகளை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/police-constable-drunk-and-causing-a-ruckus-1789207726"></link>
            <id>https://ibctamil.com/article/police-constable-drunk-and-causing-a-ruckus-1789207726</id>
            <summary type="text">கொழும்பு ரோயல் கல்லூரியில் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை வினாத்தாள்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்த நிலையில் அங்கு பாதுகாப்பு கடமைகளின் போது மது...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு ரோயல் கல்லூரியில் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை வினாத்தாள்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்த நிலையில் அங்கு பாதுகாப்பு கடமைகளின் போது மது அருந்தி, அந்தக் கல்லூரியின் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட ஒரு காவல்துறை கான்ஸ்டபிளின் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளது. </p><p>இவ்வாறு பணி இடைநிறுத்தப்பட்டவர் குருந்துவத்தை காவல் நிலையத்தில் கடமையாற்றிய ஒரு அதிகாரி ஆவார்.&nbsp;</p><h2>காவல்துறை விசாரணையில் வெளியான தகவல்</h2><p>சம்பந்தப்பட்ட காவல்துறை கான்ஸ்டபிள் கடந்த ஓகஸ்ட் 15 ஆம் திகதி முதல் அந்தக் கல்லூரி வளாகத்தின் பாதுகாப்பு பணிகளுக்காக நியமிக்கப்பட்டிருந்தார். அந்தக் கடமைக் காலப்பகுதியில், அதாவது ஓகஸ்ட் 19 ஆம் திகதி, கல்வித் திணைக்களத்தைச் சேர்ந்த இருவருடன் இணைந்து மது அருந்தி கல்லூரியின் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்ததாக காவல்துறை விசாரணைகளில் தகவல் வெளியாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e71065ac-8e18-4075-902f-a66e58a5cae1/26-6aa5283d17f4f.webp' /></p><p>&nbsp; இந்தச் சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட கான்ஸ்டபிளின் பணி இடைநிறுத்தம் நேற்று முன்தினம் (10) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கொழும்பு தெற்கு உதவி காவல் அத்தியட்சகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.</p><p></p><h2>சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணை</h2><p>கொழும்பு தெற்கு பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் லூஷன் சூரிய பண்டாரவின் அறிவுறுத்தலின் பேரில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7b720553-d86c-417a-b137-c1f4071e9fdb/26-6aa5283dc2697.webp' /></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-12T10:24:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/shiran-basik-s-father-remanded-after-arrest-1789208508"></link>
            <id>https://jvpnews.com/article/shiran-basik-s-father-remanded-after-arrest-1789208508</id>
            <summary type="text">டுபாயில் இருந்து நாட்டுக்கு அழைத்து வரப்பட்ட பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர் எனக் கூறப்படும் ஷிரான் பாஸிக்கின் தந்தையான அப்துல் ரசாக் மொஹமட் பாஸ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">டுபாயில் இருந்து நாட்டுக்கு அழைத்து வரப்பட்ட பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர் எனக் கூறப்படும் ஷிரான் பாஸிக்கின் தந்தையான அப்துல் ரசாக் மொஹமட் பாஸிக் என்பவரைக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
</p><p style="text-align: justify; ">
 

சந்தேக நபர் இன்று கொழும்பு புதுக்கடை இலக்கம் 3 நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6f3ca1ed-e5dc-4554-b0cb-208993a80941/26-6aa527be08bbb.webp' /></p><h2 style="text-align: justify; ">போதைப்பொருள் கடத்தல்</h2><p style="text-align: justify; ">

 

இதன்போது, சந்தேக நபரை எதிர்வரும் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
</p><p style="text-align: justify; ">
 

குறித்த சந்தேக நபர் நேற்று (11) மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்தார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
 

ஷிரான் பாஸிக் என்பவரினால் போதைப்பொருள் கடத்தல் மூலம் உழைக்கப்பட்டதாகக் கூறப்படும் 3 கோடி ரூபா பணத்தைச் செலவிட்டு கம்பஹா பிரதேசத்தில் சொகுசு வீடு ஒன்றை தனது பெயரில் கொள்வனவு செய்தது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைக்கு அமைவாகவே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p style="text-align: justify; ">

 

இச்சம்பவம் தொடர்பாக பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் சந்தேக நபர் கைது செய்யப்பட்டிருந்தார்.&nbsp;&nbsp;</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-12T10:22:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் மாற்றப்பட்ட பிரபல நடிகை... யார் அவர் பாருங்க]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/character-change-in-pandian-stores-2-serial-1789190871"></link>
            <id>https://cineulagam.com/article/character-change-in-pandian-stores-2-serial-1789190871</id>
            <summary type="text">பாண்டியன் ஸ்டோர்ஸ் 2விஜய் தொலைக்காட்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் மக்களின் பேராதரவுடன் ஒளிபரப்பாகி வருகிறது. இப்போது கதையில் தனது அம்மாவால் வீட்...</summary>
            <content type="html"><![CDATA[<h2>பாண்டியன் ஸ்டோர்ஸ் 2</h2><p>விஜய் தொலைக்காட்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் மக்களின் பேராதரவுடன் ஒளிபரப்பாகி வருகிறது. </p><p>இப்போது கதையில் தனது அம்மாவால் வீட்டைவிட்டு வெளியே அனுப்பப்பட்ட மயில் போக இடமில்லாமல் கோவிலில் அமர்ந்துகொண்டிருந்த வரை பாண்டியன்-கோமதி அவரை வீட்டிற்கு அழைத்து வந்துவிட்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8c9284e9-5924-4a65-ae7a-e24fe4438728/26-6aa4e62a5e571.webp' /></p><p> </p><p>கொஞ்ச நாள் அவர் இங்கே இருக்கட்டும் பிறகு என்ன செய்வது பார்ப்போம் என்கிறார். ஆனால் மயில் வந்ததில் இருந்து சரவணன் தனது அம்மா-அப்பா மீதே செம கோபத்தில் உள்ளார். </p><p>மயிலுடன் விவாகரத்து ஆன சந்தோஷத்தில் அஞ்சலியை திருமணம் செய்துகொள்கிறேன் என வாக்கு கொடுத்திருக்கிறார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5b5c5760-d164-48ed-907e-38ea149e3b14/26-6aa4e62888c45.webp' /></p><h2>மாற்றம்</h2><p>
கதையில் சரவணன்-மயில் பிரச்சனை என்ன ஆகப்போகிறது என்றே தெரியவில்லை. மயில் வீட்டிற்கு வந்தது சரவணன் தம்பிகள் என யாருக்குமே பிடிக்கவில்லை. இந்த நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் ஒரு நடிகையின் மாற்றம் நடந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/22b52393-4967-4a40-a078-467b30da1fe1/26-6aa4e62991803.webp' /></p><p> </p><p>சீரியலில் அஞ்சலியாக ஷதிகா நடித்து வந்தார், அவர் பிக்பாஸ் செல்லவே இப்போது நாயகி மாற்றம் நடந்துள்ளது. </p><p>அஞ்சலியாக இனி நடிப்பவர் யார் என்ற புகைப்படம் இதோ,&nbsp;</p><p><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/p/DdK8SugKQVI/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/p/DdK8SugKQVI/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/p/DdK8SugKQVI/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by Vijay TV Express (@vijaytvexpresss)</a></p></div></blockquote> <script async src="//www.instagram.com/embed.js"></script></p>]]></content>
            <updated>2026-09-12T10:05:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாதாள உலகக் கும்பல்களின் புதிய உத்தி! தெஹிவளை குற்றச்செயல்களின் சூத்திரதாரிகள் அடையாளம் - பொலிஸாரின் அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sdig-sajeeva-medhawaththa-statment-1789205044"></link>
            <id>https://tamilwin.com/article/sdig-sajeeva-medhawaththa-statment-1789205044</id>
            <summary type="text">எந்தவொரு சூழ்நிலையிலும் குற்றவியல் கும்பல்கள் பொலிஸாரையோ அல்லது பொதுமக்களையோ ஆதிக்கம் செலுத்த அனுமதிக்கப்பட மாட்டார்கள் என மேல் மாகாணத்திற்குப் பொறுப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>எந்தவொரு சூழ்நிலையிலும் குற்றவியல் கும்பல்கள் பொலிஸாரையோ அல்லது பொதுமக்களையோ ஆதிக்கம் செலுத்த அனுமதிக்கப்பட மாட்டார்கள் என மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக சஜீவ மெதவத்த தெரிவித்துள்ளார்.
</p><p>
மொரட்டுவ - கட்டுபெத்த பகுதியில் இன்றைய தினம் (12) நடைபெற்ற நிகழ்வொன்றை தொடர்ந்து ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.</p><h2>புதிய உத்தி</h2><p>
</p><p>
மேலும் தெரிவிக்கையில், பாதாள உலகக் கும்பல்கள் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களுக்காக கைக்குண்டுத் தாக்குதல்களை ஒரு புதிய உத்தியாகப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/81a604a9-f1f3-4bfc-84e1-8e9162456b04/26-6aa523bc5ffd5.webp' /></p><p> </p><p>

அத்துடன், தெஹிவளை-மவுண்ட் லாவினியா மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இடம்பெறும் குற்றச் செயல்களுக்குப் பின்னணியில் உள்ள சூத்திரதாரிகள் ஏற்கனவே அடையாளம் காணப்பட்டுள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-12T10:05:19+00:00</updated>
        </entry>
    </feed>
