<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-08-18T11:35:50+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையின் சுற்றுலாத் துறையை மேம்படுத்த பயணிகள் ட்ரோன் சேவை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/passenger-drone-service-to-boost-sri-lanka-tourism-1787051887"></link>
            <id>https://ibctamil.com/article/passenger-drone-service-to-boost-sri-lanka-tourism-1787051887</id>
            <summary type="text">இலங்கையின் சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, பயணிகள் ட்ரோன் சேவையை அறிமுகப்படுத்தும் சாத்தியக்கூறுகளை இலங்கை ஆராய்ந்து வருவதா...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, பயணிகள் ட்ரோன் சேவையை அறிமுகப்படுத்தும் சாத்தியக்கூறுகளை இலங்கை ஆராய்ந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p>இந்த சேவை குறித்த ஒரு விசேட கலந்துரையாடல், அமைச்சர் அனுர கருணாதிலக்க தலைமையில் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சில் நடைபெற்றது. </p><p>சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சி சிரேஷ்ட அதிகாரிகளும், சீனாவைச் சேர்ந்த ஈஹாங் நிறுவனத்தின் பிரதிநிதிகளும் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.</p><p></p><h2>அவசரகால பேரிடர் மீட்பு&nbsp;</h2><p>​​இதன்போது, ஈஹாங் பிரதிநிதிகள் இரண்டு பயணிகளை ஏற்றிச் செல்லக்கூடிய மின்சார செங்குத்து புறப்பாடு மற்றும் தரையிறக்கும் விமானங்களின் விபரங்களை வழங்கினர்.</p><p> இந்த விமானங்கள் 16 உந்துவிசை விசிறிகளுடன் பொருத்தப்பட்டு, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தன்னாட்சி முறையில் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன என்று சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c9464a05-a043-419c-af7b-8d2a1151948c/26-6a844102d762d.webp' /></p><p>முன்மொழியப்பட்ட இந்த சேவையானது, சுற்றுலாவைத் தாண்டி, அவசரகால பேரிடர் மீட்பு மற்றும் கடல்சார் செயல்பாடுகள் உள்ளிட்ட பயன்பாடுகளையும் கொண்டிருக்கக்கூடும் என்றும் அதிகாரிகள் குறிப்பிட்டனர்.</p><p>எனினும், விமானப் பாதுகாப்பு, ஒழுங்குமுறைத் தேவைகள், வான்வழிப் போக்குவரத்து மேலாண்மை, அவசரகால நடைமுறைகள், இணையப் பாதுகாப்பு, தரவுப் பாதுகாப்பு மற்றும் நியமிக்கப்பட்ட தரையிறங்கும் தளங்கள் தொடர்பான அனைத்துத் தேவையான அனுமதிகளையும் பெற்ற பின்னரே வணிகச் செயல்பாடுகளைத் தொடங்க முடியும் என்று அமைச்சர் கருணாதிலக்க தெரிவித்தார்.</p><p></p><h2>முக்கிய சுற்றுலாத் தலங்கள்</h2><p>
</p><p>
சிகிரியா, பிதுரங்கல, கொழும்பு மற்றும் துறைமுக நகரம் கொழும்பு போன்ற முக்கிய சுற்றுலாத் தலங்களில் இந்தச் சேவையை இயக்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டதாக குறிப்பிடப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/250df2b8-1abf-4e76-a0e1-18f49fe86e12/26-6a844103910db.webp' /></p><p>
பயணிகள் விமானத்தைச் சோதித்துக் காட்சிப்படுத்துவதற்காக, துறைமுக நகரம் கொழும்புக்குள் ஒரு செயல்விளக்க வலயத்தை நிறுவுவது குறித்தும் பங்கேற்பாளர்கள் மேலும் பரிசீலித்தனர்.
</p><p>
முன்மொழியப்பட்ட இந்த முயற்சி, சுற்றுலாப் பயணிகளுக்கு ஒரு புதிய வகை வான்வழிப் போக்குவரத்தை அறிமுகப்படுத்துவதோடு, இலங்கையில் அவசரகால மற்றும் கடல்சார் சேவைகளுக்கான சாத்தியமான பயன்பாடுகளுக்கும் வழிவகுக்கும் என தெரிவிக்கப்பட்டது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-18T11:29:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு பிணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/keheliya-corruption-eradication-commission-1787029367"></link>
            <id>https://tamilwin.com/article/keheliya-corruption-eradication-commission-1787029367</id>
            <summary type="text">புதிய இணைப்புஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவை பிணையில் விடுவிக்குமாறு...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவை பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">இரண்டாம் இணைப்பு</span></p><p>முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல இன்று (18) இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>விசாரணை தொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்காக ரம்புக்வெல்ல இன்று காலை இலஞ்ச ஆணையத்திற்கு சென்றிருந்த நிலையில் அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.</p><p>ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் அனுமதிக்கப்பட்ட ஊழியர்களை விட கூடுதலாக 6 ஊழியர்களை பணிக்கமர்த்தி அரசாங்கத்திற்கு இழப்பை ஏற்படுத்தியதாக கெஹெலிய ரம்புக்வெல்ல மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.</p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">முதலாம் இணைப்பு</span></p><p>முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல சற்றுமுன்னர் (18) இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.</p><p>தற்போது இடம்பெற்று வரும் விசாரணையொன்று தொடர்பில் வாக்குமூலம் அளிப்பதற்காகவே அவர் இவ்வாறு முன்னிலையாகியுள்ளார்.</p><p>இதேவேளை, 2020 ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் 13 ஆம் திகதி முதல் 2024 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 24 ஆம் திகதி வரையான காலப்பகுதியில், கெஹலிய ரம்புக்வெல்ல ஊடக, சுகாதார மற்றும் சுற்றாடல் அமைச்சராகப் பணியாற்றிய காலத்தில் முறையற்ற வகையில் சொத்துக்களை ஈட்டியதாக நிதி தூய்தாக்கல் தடுப்புச் சட்டத்தின் கீழ் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் பிரதிவாதிகளுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p><b>YOU MAY LIKE THIS VIDEO</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/ARfG7K_BvuM" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p>]]></content>
            <updated>2026-08-18T11:26:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[காலி டெஸ்டில் முன்னெச்சரிக்கையாக பாதியில் விலகிய தினேஷ் சந்திமால்: மாற்றாக இளம் வீரர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/dinesh-chandimal-shoulder-neck-injury-concussion-1787052211"></link>
            <id>https://news.lankasri.com/article/dinesh-chandimal-shoulder-neck-injury-concussion-1787052211</id>
            <summary type="text">Dinesh Chandimal concussion in galle test: காலி டெஸ்டில் ஃபீல்டிங்கின்போது காயமுற்றதால் இலங்கையின் மூத்த வீரரான தினேஷ் சந்திமால் பாதியில் விலகினார்.
...</summary>
            <content type="html"><![CDATA[<p>Dinesh Chandimal concussion in galle test: காலி டெஸ்டில் ஃபீல்டிங்கின்போது காயமுற்றதால் இலங்கையின் மூத்த வீரரான தினேஷ் சந்திமால் பாதியில் விலகினார்.
</p><p>
இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், இலங்கையின் தினேஷ் சந்திமால் காயம் காரணமாக பாதியில் வெளியேறினார். </p><h2>தினேஷ் சந்திமால் 
</h2><p>
காலியில் நடந்து வரும் டெஸ்ட் போட்டியின் நான்காம் நாளில், இலங்கையின் தினேஷ் சந்திமால் (Dinesh Chandimal) பவுண்டரியைத் தடுக்க பாய்ந்து சென்றபோது தோள்பட்டை மற்றும் கழுத்தில் காயமடைந்தார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/085baa30-6a33-4577-8be6-c06a5ceb1ead/26-6a8441dc4bfe3.webp' />&nbsp;</p><p></p><p>

இதனால் பாதியில் விலகிய அவர், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஸ்கேன் செய்ய மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.</p><p> 

Concussion சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவருக்கு பதிலாக பசிந்து சூரியபண்டார (Pasindu Sooriyabandara) நியமிக்கப்படுவார் என அறிவிக்கப்பட்டது.
</p><p>
இலங்கை கிரிக்கெட் வாரியம் வெளியிட்ட அறிக்கையில், "தினேஷ் சந்திமாலுக்கு பதிலாக Concussion மாற்று வீரராக பசிந்து சூரியபண்டாரா அணியில் இணைகிறார். 

ஸ்கேன் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டபோது அதில் உள் காயங்கள் ஏதுவுமில்லை என்பது தெரிய வந்தது" என தெரிவித்துள்ளது.&nbsp; &nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/98a61744-daad-4952-a384-b4226a48fb99/26-6a8441dd0b3cf.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-18T11:26:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rusath</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீதிபதிகளின் வயதெல்லையை அதிகரிக்க முன்மொழிந்தவர்களே அச்சத்தால் எதிர்க்கின்றனர்: பிரபு எம் பி சாடல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/the-age-limit-for-judges-should-be-raised-1787049278"></link>
            <id>https://ibctamil.com/article/the-age-limit-for-judges-should-be-raised-1787049278</id>
            <summary type="text">2015 ஆம் ஆண்டு நீதிபதிகளின் வயதெல்லைகளை அதிகரிக்க வேண்டும் என்று முன்மொழிவை
கொண்டு வந்த தரப்பினர்தான் இன்று அதற்கு எதிராக தற்போது போர்கொடி தூக்கி
இர...</summary>
            <content type="html"><![CDATA[<p>2015 ஆம் ஆண்டு நீதிபதிகளின் வயதெல்லைகளை அதிகரிக்க வேண்டும் என்று முன்மொழிவை
கொண்டு வந்த தரப்பினர்தான் இன்று அதற்கு எதிராக தற்போது போர்கொடி தூக்கி
இருக்கிறார்கள் என தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்
கந்தசாமி பிரபு தெரிவித்துள்ளானர்.</p><p>


மட்டக்களப்பு மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட
களுதாவளை பிரதேசத்தில் சுமார் 848 மீட்டர் நீளமான வீதிகளை கார்பட் வீதிகளாக
அபிவிருத்தி செய்வதற்கான பணிகளை ஆரம்பித்துவைக்கும் நிகழ்விலேயே இந்த விடயத்தை ட்டிக்காட்டி உள்ளார்.&nbsp;</p><p>
</p><p>இதன்போது அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,</p><p></p><h2>பாதாள உலக செயற்பாடு</h2><p>“எமது அரசாங்கத்திற்கு பழி சுமத்துகின்ற அல்லது அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்ற நோக்குடன் ஒரு சிலர் கங்கணம் கட்டிக்கொண்டு செயற்பட்டு வருவதை காணமுடிகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ae887468-3c0b-452f-affc-1a30a0983c6b/26-6a843b42a93e1.webp' /></p><p> </p><p>ஆனாலும் அவர்களது இந்த குழப்புகின்ற செயற்பாடுகள் மக்கள்
மத்தியில் எடுபடவில்லை.



தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நீதிபதிகளின் வயதில்லைகளை அதிகரிப்பது தொடர்பான
விடயங்களை வைத்துக்கொண்டு அதனையும் அரசுக்கு எதிரான பிரசாரங்களாக எடுத்துக்
கொண்டு சிலர் வருகின்றார்கள்.</p><p>இந்த காலங்களிலே உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு இன்று அதனோடு சம்பந்தப்பட்ட தரப்பினர்கள் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக நீதிமன்றத்தின் ஊடாக தண்டனைகள் வழங்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.</p><h2>ஊழல் குற்றச்சாட்டு</h2><p>
</p><p>அது போன்று ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலும் சம்மந்தப்பட்டவர்களுக்கு எதிராக விசாரணைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு அவர்களுக்கு எதிரான விசாரணைகளும் நீதிமன்றத்தில் ஊடாக வழங்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a78075cc-827b-4847-81c9-2f7d5c6b48f1/26-6a843b4363fee.webp' /></p><p>
</p><p>அதேபோன்று பாதாள உலக செயற்பாடுகளிலும், போதை விற்பனையில் ஈடுபட்டவர்களும்,
அதனோடு சம்பந்தப்பட்டவர்களும் வெளிநாடுகளில் இருந்தும்கூட அவர்கள் இங்கு
கொண்டுவரப்பட்டு அவர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளும் இடம்பெற்றுக்
கொண்டிருக்கின்றன.</p><p>



இவை அனைத்தும் சுயாதீனமாக நீதித்துறை கட்டமைப்புகளின் ஊடாக விடயங்கள்
முன்னெடுக்கப்படுகின்றன. </p><p>ஆனால் இதனை ஓர் அரசியலாக உருவாக்கிக் கொண்டு அதற்கு
எதிராக ஒரு சில கூட்டணிகளை அமைத்துக் கொண்டும் சிலர் எதிர்த்துக்
கொண்டிருக்கின்றார்கள்.
</p><p>


2015 ஆம் ஆண்டு நீதிபதிகளின் வயதெல்லைகளை அதிகரிக்க வேண்டும் என்று முன்மொழிவை
கொண்டு வந்த தரப்பினர்தான் இன்று அதற்கு எதிராக தற்போது போர்கொடி தூக்கி
இருக்கிறார்கள்.</p><p>



வட மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சராக இருந்த முன்னாள் நீதியரசர் சி.வி
விக்னேஸ்வரன்கூட நீதிபதிகளின் வயதிலேயே 70 வயதுகளாக நிர்ணயித்தால்கூட
சிறப்பாக இருக்கும் என அண்மையில் தெரிவித்து இருக்கின்றார்” என அவர் இதன்போது
தெரிவித்தார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-18T11:23:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[M9 நெடுஞ்சாலையில் நிகழ்ந்த சாலை விபத்து: திருமணத்திற்கு சென்ற 5 இளைஞர் பரிதாபமாக உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/m9-highway-car-accident-5-teen-dead-1787052052"></link>
            <id>https://news.lankasri.com/article/m9-highway-car-accident-5-teen-dead-1787052052</id>
            <summary type="text">M9 Highway Accident 5 teen dead: அயர்லாந்தில் கில்டேர் மாகாணத்தில் நடந்த சாலை விபத்தில் M9 நெடுஞ்சாலையில் ஏற்பட்ட சாலை விபத்தில் 5 இளைஞர் பரிதாபமாக உய...</summary>
            <content type="html"><![CDATA[<p>M9 Highway Accident 5 teen dead: அயர்லாந்தில் கில்டேர் மாகாணத்தில் நடந்த சாலை விபத்தில் M9 நெடுஞ்சாலையில் ஏற்பட்ட சாலை விபத்தில் 5 இளைஞர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.</p><h2> சாலை விபத்து</h2><p>அயர்லாந்தின் கில்டேர் மாகாணத்தில் உள்ள&nbsp; M9 நெடுஞ்சாலையில் எதிர் திசையில் வந்த கார் மோதியதில் இங்கிலாந்தில் திருமணத்திற்கு&nbsp;சென்ற 5 இளைஞர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.</p><p>மேலும் 4 பேர் வரை படுகாயமடைந்து இருப்பதாக ஐரிஷ் காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/be89c724-5dba-4eca-bd3f-e37ab7ffbde2/26-6a8440165d02a.webp' /></p><p>ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இந்த கோர விபத்தானது ஏற்பட்டுள்ளது. 5 இளைஞர்களுடன் வந்த BMW காரும், 3 பெண்கள் மற்றும் 7 வயது சிறுவன் வந்த Hyundai காரும்&nbsp; 74 மைல்களுக்கும் அதிகமான வேகத்தில் ஒன்றுடன் ஒன்று நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் இந்த கோர விபத்தானது ஏற்பட்டுள்ளது.</p><p>சம்பவ இடத்திலேயே 5 இளைஞர்களும் உயிரிழந்து விட்டதாக காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.</p><p></p><p> Hyundai காரில் பயணித்த அனைவரும் தற்போது தீவிரமான காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p><p> விபத்தில் பலியானவர்களின் விவரங்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர். அதன்படி, ஜெரமி ஓ பிரையன்(18), அலெக்ஸ் மெக்கார்த்தி(17), ஜோய் கார்தி(15), ஜாக் கென்னடி(17), கமில் புஸ்ட்கோவ்ஸ்கி(17) ஆகியோர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5225af5b-81b6-478f-8707-c9614078afc4/26-6a844015a9dbe.webp' /></p><p> இந்த துயர சம்பவத்தை தொடர்ந்து உயிரிழந்தவர்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.</p><p> அதே சமயம் குறிப்பிட்ட வாகனம் எப்படி எதிர் திசையில் நுழைந்தது என்பது குறித்தும் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p>&nbsp;<br></p>]]></content>
            <updated>2026-08-18T11:21:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாரிய நில நடுக்கத்தை அடுத்து இந்தோனேஷியாவில் தொடரும் நில அதிர்வுகள் : பீதியில் மக்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/indonesia-records-over-2100-aftershocks-1787046766"></link>
            <id>https://ibctamil.com/article/indonesia-records-over-2100-aftershocks-1787046766</id>
            <summary type="text">கடந்த சனிக்கிழமை ஏற்பட்ட 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, இந்தோனேசியாவில் தொடர்ச்சியான தீவிர நில அதிர்வு நடவடிக்கைகள் ஏற்பட்டு வருவதாகவு...</summary>
            <content type="html"><![CDATA[<p>கடந்த சனிக்கிழமை ஏற்பட்ட 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, இந்தோனேசியாவில் தொடர்ச்சியான தீவிர நில அதிர்வு நடவடிக்கைகள் ஏற்பட்டு வருவதாகவும், இதுவரை 2,119 பின் அதிர்வுகள் பதிவாகியுள்ளதாகவும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
</p><p>
இந்த அதிர்வுகள் மேலும் மூன்று முதல் நான்கு வாரங்களுக்குத் தொடரக்கூடும் என்று இந்தோனேசியாவின் வானிலை, காலநிலை மற்றும் புவி இயற்பியல் முகமை எச்சரித்துள்ளதாக ஜகார்த்தா குளோப் செய்தி வெளியிட்டுள்ளது.</p><h2>70 அதிர்வுகளை உணர்ந்த மக்கள்</h2><p>இந்தப் பின் அதிர்வுகள் 1.3 முதல் 6.2 ரிக்டர் அளவு வரை இருந்தன, அவற்றில் 24 அதிர்வுகள் 5 ரிக்டர் அளவுக்கு மேல் பதிவாகின. மேலும், அவற்றில் 70 அதிர்வுகளைப் அப்பகுதி மக்கள் உணர்ந்ததாக அந்த முகமையின் நிலநடுக்கம் மற்றும் சுனாமி பணிப்பாளர் விஜயந்தோ கூறினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/724010b6-cf74-4f7b-939c-3df46cfeb953/26-6a842e00aa249.webp' /></p><p>
</p><p>
சனிக்கிழமை, கிழக்கு நுசா தெங்காராவில் 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. அங்குதான் பிரபலமான சுற்றுலா மையமான லபுவான் பாஜோ அமைந்துள்ளது. இதனால் பரவலான சேதம் ஏற்பட்டது.</p><p></p><h2>68 பேர் உயிரிழந்தது உறுதி</h2><p>அரசு நடத்தும் அந்தரா செய்தி நிறுவனத்தின்படி, இதுவரை 68 பேர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது, மேலும் 213 பேர் காயமடைந்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6fbff7c0-8993-4d2c-abe8-a6454235054c/26-6a842e0003b39.webp' /></p><p>

இதற்கிடையில், பாதுகாப்பு ஆய்வுகளுக்காக, மேற்கு மங்காராயில் உள்ள ரங்கோ குகை, மங்காராயில் உள்ள வே ரேபோ பாரம்பரிய கிராமம் மற்றும் எண்டேயில் உள்ள கெலிமுட்டு தேசியப் பூங்கா உள்ளிட்ட புளோரஸ் தீவில் உள்ள பல சுற்றுலாத் தலங்களை அதிகாரிகள் தற்காலிகமாக மூடியுள்ளனர்.</p><p>

12,000-க்கும் மேற்பட்ட மக்கள் "நிலநடுக்கத்திற்குப் பிந்தைய அதிர்வுகளுக்கு அஞ்சி", வளாகங்களிலும் கிராமங்களிலும் இடம்பெயர்ந்த நிலையில் இருப்பதாக தேசிய பேரிடர் மேலாண்மை முகமை திங்களன்று தெரிவித்தது.</p><h2>ஆயிரக்கணக்கில் வீடுகள் சேதம்</h2><p>

குறைந்தது 914 வீடுகள் கடுமையாகவும், 126 வீடுகள் மிதமாகவும், 317 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக கூட்டுக் குழுக்கள் தெரிவித்துள்ளன. மேலும், 93 கல்வி நிறுவனங்கள், 36 சுகாதார நிலையங்கள் மற்றும் 38 அரசு அலுவலகங்களும் சேதமடைந்துள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5e8f77d8-bfc0-4c91-b9a6-f9869f029234/26-6a842dff52bfd.webp' /></p><p>

இதற்கிடையில், இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ராவில் உள்ள பத்து தீவுகள் பகுதியில் செவ்வாயன்று 5.8 ரிக்டர் அளவிலான மற்றொரு நிலநடுக்கம் ஏற்பட்டதாக யூரோ-மத்தியதரைக்கடல் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. </p><p>இந்த நிலநடுக்கத்தை அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் 5.6 ரிக்டர் அளவாகப் பதிவு செய்திருந்தது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-18T11:18:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shan</name>
            </author>
            <title type="text"><![CDATA[முல்லைத்தீவில் படுகொலைச் செய்ய 53 மாணவர்கள் - 20 ஆவது நினைவு தினம் அனுஷ்டிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/53-students-commit-murder-in-mullaitivu-1787051783"></link>
            <id>https://tamilwin.com/article/53-students-commit-murder-in-mullaitivu-1787051783</id>
            <summary type="text">முல்லைத்தீவு - வள்ளிபுனம் இடைக்கட்டு பகுதியில் அமைந்திருந்த
செஞ்சோலை வளாகத்தில் 2006.08.14 அன்றையதினம் தலைமைத்துவ பயிற்சிக்காக வருகை தந்திருந்த மாணவச...</summary>
            <content type="html"><![CDATA[<p>முல்லைத்தீவு - வள்ளிபுனம் இடைக்கட்டு பகுதியில் அமைந்திருந்த
செஞ்சோலை வளாகத்தில் 2006.08.14 அன்றையதினம் தலைமைத்துவ பயிற்சிக்காக வருகை தந்திருந்த மாணவச் செல்வங்கள் மீது சிறிலங்கா விமானப்படை விமானங்கள் நடத்திய
மிலேச்சத்தனமான தாக்குதலில் உயிரிழந்த 58 பேரின் நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இந்த தாக்குதலின் போது, பாடசாலை மாணவர்கள் 53 பேர் மற்றும்
பணியாளர்கள் 4 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இவர்களின் 20ஆ ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு வள்ளிபுனம்
இடைக்கட்டு சந்தியில் அமைக்கப்பட்ட நினைவிடத்தில் உணர்வுபூர்வமாக
அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.</p><h2>

20ஆவது வருட நினைவு தினம்</h2><p>

தாயக மற்றும் புலம்பெயர் உறவுகள் நினைவேந்தல் அமைப்பின் ஏற்பாட்டில் சமூக
செயற்பாட்டாளர் சாம்பசிவம் உதயன் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில்
உயிரிழந்த உறவுகளுக்கு சுடர் ஏற்றி அகவணக்கம் செலுத்தி மலர் தூவி அஞ்சலி
செலுத்தப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/587d47fe-679a-48ff-b799-5dac13c9a489/26-6a843f8a7d105.webp' /></p><p>வருடந்தோறும் குறித்த படுகொலை நினைவேந்தல் நிகழ்வு வள்ளிபுனம் பகுதியில்
அனுஷ்டிக்கப்படுவதுடன், தமிழர் தாயகத்தில் பல்வேறு இடங்களிலும் நினைவேந்தல்
நிகழ்வு இடம்பெறுவது வழக்கமாக உள்ளது.
</p><p>
குறித்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்களான துரைராசா ரவிகரன்,
புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் தவிசாளர் வே.கரிகாலன், அரசியல்
பிரமுகர்கள், கரைதுறைப்பற்று மற்றும் புதுக்குடியிருப்பு பிரதேச சபைகளின்
உறுப்பினர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள் , நலன்விரும்பிகள்,
செஞ்சோலையில் உயிரிழந்த பிள்ளைகளின் பெற்றோர்கள், உறவினர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1cc20156-dd07-4503-8193-b17375ccb64c/26-6a843f8b9394a.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e6bbf696-7874-426b-8132-27d63df9909b/26-6a843f8c7484d.webp' /></p>]]></content>
            <updated>2026-08-18T11:18:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[சனி நட்சத்திரப் பெயர்ச்சி: இந்த 3 ராசிகளுக்கு இனி பொற்காலம் ஆரம்பம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/shani-nakshatra-peyarchi-who-get-huge-luck-1787047907"></link>
            <id>https://manithan.com/article/shani-nakshatra-peyarchi-who-get-huge-luck-1787047907</id>
            <summary type="text">ஜோதிட சாஸ்திரத்தில் சனி பெயர்ச்சிக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது. காரணம் ஒருவரது செயல்களுக்கு ஏற்ப பலன்களை வழங்குபவர் சனி பகவான். மகரம...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜோதிட சாஸ்திரத்தில் சனி பெயர்ச்சிக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது. காரணம் ஒருவரது செயல்களுக்கு ஏற்ப பலன்களை வழங்குபவர் சனி பகவான். </p><p>மகரம் மற்றும் கும்ப ராசிகளின் அதிபதியான இவர், ஒரு ராசியில் சுமார் 2½ ஆண்டுகள் பயணிப்பதுடன் அவ்வப்போது நட்சத்திரத்தையும் மாற்றுவார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ba22f15b-1b18-4a7a-ab27-ad96ab350443/26-6a8433c81980c.webp' /></p><p></p><p>

தற்போது மீன ராசியில் பயணித்து வரும் சனி பகவான், ஆகஸ்ட் 20 ஆம் தேதி ரேவதி நட்சத்திரத்திற்குள் நுழைந்து, அக்டோபர் 9 ஆம் தேதி வரை அங்கு இருப்பார். ரேவதி நட்சத்திரத்தின் அதிபதி புதன் என்பதால், இந்த சனி நட்சத்திரப் பெயர்ச்சியின் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும்.</p><p>

குறிப்பாக, 3 ராசிக்காரர்கள் இந்தப் பெயர்ச்சியால் சிறப்பான பலன்களைப் பெறவுள்ளனர். ஆகஸ்ட் 20 ஆம் தேதி நிகழும் சனி நட்சத்திரப் பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகிறது என்பது குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.</p><h2>ரிஷபம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6a071571-e6b8-4668-9dc4-533f09aefd99/26-6a8433c8c379b.webp' /></p><h2>
</h2><p>சனி பகவானின் நட்சத்திரப் பெயர்ச்சி ரிஷப ராசிக்காரர்களுக்கு பல்வேறு நல்ல பலன்களைத் தரக்கூடும். குறிப்பாக, பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்ற எதிர்பார்த்த முன்னேற்றங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது.</p><p> சிலருக்கு நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த விரும்பிய இடமாற்றமும் கிடைக்கலாம்.

வியாபாரத்தில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு எதிர்பாராத வகையில் நல்ல லாபம் கிடைக்கும். </p><p>புதிய வருமான வாய்ப்புகள் உருவாகும் சூழலும் அமையும். மேலும், நீண்ட காலமாக சிக்கித் தவித்துக் கொண்டிருந்த பணம் கைக்கு வந்து சேரும் வாய்ப்பும் உள்ளது.</p><h2>

துலாம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d7cc86aa-159f-4784-9382-379d1c831f72/26-6a8433c97421d.webp' /></p><p>
சனி பகவானின் நட்சத்திரப் பெயர்ச்சி துலாம் ராசிக்காரர்களின் வாழ்க்கையில் சாதகமான மாற்றங்களை கொடுக்கப்போகின்றது.</p><p>நீண்ட காலமாக முடங்கிக் கிடந்த பணிகள் ஒவ்வொன்றாக வெற்றிகரமாக நிறைவேறும். தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும்.
</p><p>
புதிய வீடு அல்லது வாகனம் வாங்க வேண்டும் என்ற நீண்ட நாள் ஆசை நிறைவேறுவதற்கான வாய்ப்புகள் உருவாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், அமைதியும் அதிகரிக்கும். இதுவரை சந்தித்து வந்த பல்வேறு பிரச்சனைகளுக்கு படிப்படியாக தீர்வு கிடைக்கும்.&nbsp;</p><h2>
மகரம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ecc72a70-214d-45a1-8dd3-cf5b017982b2/26-6a8433ca3065d.webp' /></p><p></p><p>
சனி பகவானின் நட்சத்திரப் பெயர்ச்சியால் மகர ராசிக்காரர்களுக்கு ஆகஸ்ட் 20ஆம் தேதி முதல் சாதகமான காலகட்டம் தொடங்கும். நீண்ட நாட்களாக இருந்து வந்த பணப் பிரச்சனைகள் குறைந்து, பொருளாதார நிலை மேம்படும்.</p><p>

வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். ஏற்கனவே செய்த முதலீடுகளிலிருந்தும் எதிர்பார்த்த வருமானம் கிடைக்க வாய்ப்புள்ளது. </p><p>பரம்பரை சொத்துகள் தொடர்பாக நீண்ட காலமாக இருந்து வந்த பிரச்சனைகள் தீர்ந்து, சொத்துகள் கைக்கு வரும் யோகம் காணப்படுகின்றது. நிதி நிலையில் கணிசமான உயர்வு உண்டாகும்.</p><p><b>இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).&nbsp; &nbsp; &nbsp; &nbsp;&nbsp;</b></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்<b><u> <a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW&nbsp;</a></u></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-18T11:18:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மன்னாரில் பனைமரக்கூடலில் ஏற்பட்ட தீவிபத்து கட்டுப்பாட்டுக்குள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/fire-at-a-palm-grove-in-mannar-under-control-1787049371"></link>
            <id>https://tamilwin.com/article/fire-at-a-palm-grove-in-mannar-under-control-1787049371</id>
            <summary type="text">தலைமன்னார் கிராமம் வடக்கு பகுதியில் பனைமரக்கூடலில் ஏற்பட்ட
தீவிபத்து, மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் ஒருங்கிணைப்பில்,
கிராம பொதுமக்களின...</summary>
            <content type="html"><![CDATA[<p>தலைமன்னார் கிராமம் வடக்கு பகுதியில் பனைமரக்கூடலில் ஏற்பட்ட
தீவிபத்து, மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் ஒருங்கிணைப்பில்,
கிராம பொதுமக்களின் ஒத்துழைப்புடன் அணைக்கப்பட்டு
கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>குறித்த தீ விபத்தானது இன்று(18.08.2026) இடம்பெற்றுள்ளது.</p><h2>விபத்து தொடர்பான அவசர நடவடிக்கை</h2><p>
</p><p>இந்த விபத்து தொடர்பான அவசர நடவடிக்கைகளில் கிராம பொதுமக்கள் தீயணைப்பு
பணிகளுக்கு ஒத்துழைப்பை வழங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5f6c97d0-f749-49c6-83ca-bc508bb65fe6/26-6a843bc3ce4a8.webp' /></p><p>கட்டுப்படுத்தல் நடவடிக்கை மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின்
பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜாவின் கண்காணிப்பில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/53b5884f-1506-4e23-ab09-0c4b4d16000f/26-6a843bc4b290b.webp' /></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-18T11:17:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[எனக்கான நீதிமன்ற தீர்ப்பை NPP அமைச்சர்கள் எப்படி கணிக்கிறார்கள்..! நாமல் கேள்வி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/npp-ministers-predict-verdict-before-court-namal-1787049422"></link>
            <id>https://ibctamil.com/article/npp-ministers-predict-verdict-before-court-namal-1787049422</id>
            <summary type="text">நீதிமன்றம் இன்னும் தீர்ப்பை வழங்காத நிலையில், தனக்குச் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று NPP அமைச்சர்கள் எப்படி கணிக்க முடியும் என SLPP நாடாளுமன்ற உற...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீதிமன்றம் இன்னும் தீர்ப்பை வழங்காத நிலையில், தனக்குச் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று NPP அமைச்சர்கள் எப்படி கணிக்க முடியும் என SLPP நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கேள்வி எழுப்பியுள்ளார்.</p><p>
“நான் NPP அமைச்சர்களிடம் ஒரு எளிய கேள்வியைக் கேட்க விரும்புகிறேன். நீதிமன்றம் இன்னும் தீர்ப்பை வழங்காத நிலையில், இன்னும் சில நாட்களில் நான் சிறைக்குச் செல்லப் போகிறேன் என்பது அவர்களுக்கு எப்படித் தெரியும்?” என்று அவர் கேள்வி எழுப்பினார்.</p><h2>&nbsp;நீதிமன்றத்தின் மீது&nbsp; நம்பிக்கை&nbsp;</h2><p>&nbsp;நீதிமன்றத்தின் மீது தனக்கு நம்பிக்கை இருப்பதாகவும், நீதிமன்றம் எடுக்கும் எந்தவொரு முடிவையும் மதிப்பதாகவும் ராஜபக்ச கூறினார்.

“ நீதிபதி வழக்கை விசாரித்து, ஆதாரங்களைப் பார்த்து, தீர்ப்பை வழங்க வேண்டும்,” என்று அவர் குறிப்பிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ee6c77ec-10b7-409f-91bc-64068d52a1b7/26-6a843ea313bb3.webp' /></p><p>
</p><p>
நீதிமன்றத் தீர்ப்பை அமைச்சர்கள் கணிப்பது பொதுமக்களிடையே இயல்பாகவே கேள்விகளை எழுப்பும் என்று அவர் தெரிவித்தார்..

“நீதிமன்றம் ஒரு தீர்ப்பை வழங்குவதற்கு முன்பே, நான் சிறைக்குச் செல்லப் போகிறேன் என்று அமைச்சர்கள் கூறும்போது, ​​மக்கள் இயல்பாகவே கேள்விகளைக் கேட்கத் தொடங்குவார்கள்.நீதிமன்றம் என்ன தீர்ப்பளிக்கப் போகிறது என்பது அவர்களுக்கு எப்படித் தெரியும்?” என்று அவர் கேட்டார்.</p><p></p><p>
</p><h2>நீதிமன்றத் தீர்ப்புகளை&nbsp;அரசியல் தலைவர்கள் கணிக்கக் கூடாது</h2><p>இந்தப் பிரச்சினை தன்னைப் பற்றியது மட்டுமல்ல, நீதித்துறையின் சுதந்திரம் பற்றியதுமாகும் என்று ராஜபக்ச கூறினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2ab7f8c0-965c-4c9a-b88c-050e5bfb896d/26-6a843ea3b8b1d.webp' /></p><p>
</p><p>
“அரசியல் தலைவர்கள் நீதிமன்றத் தீர்ப்புகளைக் கணிக்கக் கூடாது. எந்தவித அழுத்தமோ தலையீடோ இன்றி நீதிமன்றங்கள் தங்கள் பணியைச் செய்ய அவர்கள் அனுமதிக்க வேண்டும்,” என்று அவர் தெரிவித்தார்.</p><p>ஒரு வழக்கின் முடிவு அமைச்சர்களுக்கு ஏற்கனவே தெரிந்திருந்தால், அத்தகைய தகவலின் மூலத்தைக் கேள்வி கேட்க பொதுமக்களுக்கு உரிமை உண்டு என்றும் அவர் மேலும் கூறினார்.

“தீர்ப்பு நீதிமன்றத்திடமிருந்து வர வேண்டுமே தவிர, ஓர் அமைச்சரிடமிருந்து அல்ல,” என்று அவர் மேலும் தெரிவித்தார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-18T11:15:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[புதிய பயங்கரவாத தடுப்பு சட்டமூலத்துக்கு அமைச்சரவை ஒப்புதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/cabinet-approves-new-anti-terrorism-bill-1787047111"></link>
            <id>https://ibctamil.com/article/cabinet-approves-new-anti-terrorism-bill-1787047111</id>
            <summary type="text">இலங்கையின் தற்போதைய பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தில் (PTA) உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்ட புதிய சட்டமூலத்தை பிரசுரிப்பதற்கும், அத...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் தற்போதைய பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தில் (PTA) உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்ட புதிய சட்டமூலத்தை பிரசுரிப்பதற்கும், அதனை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வதற்கும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.</p><p>இந்த விடயத்தை அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நலிந்த ஜயதிஸ தெரிவித்துள்ளார்.</p><p>

“பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம்” எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த முன்மொழியப்பட்ட சட்ட வரைவு, 1979-ஆம் ஆண்டின் 48-ஆம் இலக்க பயங்கரவாதத் தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டத்தில் கண்டறியப்பட்ட குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் வகையில் ஒரு புதிய சட்டக் கட்டமைப்பை அறிமுகப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>பூர்வாங்க வரைவு</h2><p>

தற்போதுள்ள சட்டத்தில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் ஒரு பூர்வாங்க வரைவைத் தயாரிப்பதற்காக, தொழில்நுட்ப வல்லுநர் குழு ஒன்று முன்னதாக நியமிக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/de5186f7-e8be-4d74-9619-341f7ae204cd/26-6a84305be1568.webp' /></p><p>

அந்த வரைவின் அடிப்படையில், புதிய சட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கான கொள்கை ஒப்புதலை அமைச்சரவை தனது ஆகஸ்ட் 10, 2026 கூட்டத்தில் வழங்கியது.
</p><p>
அதனைத் தொடர்ந்து சட்ட வரைவாளரால் தயாரிக்கப்பட்ட இந்த சட்டமூலத்துக்கு தற்போது சட்டமா அதிபரின் ஒப்புதல் கிடைத்துள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.</p><p>இந்நிலையில் நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்காக சட்டமூலத்தை சமர்ப்பிப்பதற்கு முன்னர், அதனை அரசாங்க வர்த்தமானியில் வெளியிட அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது” என அமைச்சர் ஜெயதிதசா தெரிவித்துள்ளார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-18T11:14:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு பிணை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/keheliya-appears-ciaboc-1787030090"></link>
            <id>https://ibctamil.com/article/keheliya-appears-ciaboc-1787030090</id>
            <summary type="text">புதிய இணைப்புஊழல் குற்றச்சாட்டு தொடர்பில்&amp;nbsp; கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவை&amp;nbsp;கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் பிணை ...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில்&nbsp; கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவை&nbsp;கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் பிணை வழங்கப்பட்டுள்ள்ளது.&nbsp;</p><p>
குறித்த வழக்கு இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், முன்னாள் அமைச்சரை பிணையில் செல்ல உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.</p><p>தேசிய ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் அனுமதிக்கப்பட்ட ஊழியர் எண்ணிக்கைக்கு புறம்பாக மேலதிகமாக 6 பணியாளர்களைப் பணியில் அமர்த்தியதன் மூலம் அரசாங்கத்திற்கு நட்டத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டில்&nbsp;கெஹெலிய ரம்புக்வெல்ல கைது செய்யபட்டிருந்தார்.&nbsp;</p><h2>இரண்டாம் இணைப்பு</h2><h5><b>முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல கைது</b></h5><p>முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். </p><p>

</p><p>தேசிய ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் அனுமதிக்கப்பட்ட ஊழியர் எண்ணிக்கை குறித்த விசாரணைக்காக&nbsp;இன்று (18) காலை குறித்த ஆணைக்குழுவில் முன்னிலையான நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>தேசிய ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் அனுமதிக்கப்பட்ட ஊழியர் எண்ணிக்கைக்கு புறம்பாக மேலதிகமாக 6 பணியாளர்களைப் பணியில் அமர்த்தியதன் மூலம் அரசாங்கத்திற்கு நட்டத்தை ஏற்படுத்தியதாக கெஹெலிய ரம்புக்வெல்ல மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.</p><p></p><h2>முதலாம் இணைப்பு</h2><h5><b>முன்னாள் சுகாதார அமைச்சர் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலை&nbsp;</b></h5><p>முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல சற்றுமுன்னர் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவில் (CIABOC) முன்னிலையாகி உள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/427eb487-a1a4-43a7-bb7d-bc716895a77d/26-6a83edf50a2f0.webp' /></p><p>
தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணை ஒன்றுடன் தொடர்புடையதாக வாக்குமூலம் அளிப்பதற்காகவே அவர் ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>மேலும் குறித்த விசாரணைக்காக&nbsp; கெஹெலிய ரம்புக்வெல்ல சக்கர நாற்காலியில் வருகை தந்திருந்தமை ஊடகங்களில் கவனம் பெற்றுள்ளது.&nbsp;</p><p>இந்நிலையில் இந்த விசாரணை தொடர்பான மேலதிக விவரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-18T11:13:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கைதான வங்கி முகாமையாளர்கள் தொடர்பில் அதிர்ச்சித் தகவல்கள்; அம்பலப்படுத்திய அமைச்சர்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/shocking-details-regarding-arrested-bank-managers-1787051515"></link>
            <id>https://jvpnews.com/article/shocking-details-regarding-arrested-bank-managers-1787051515</id>
            <summary type="text">நாட்டிற்கு வெளியே சட்டவிரோதமான முறையில் உண்டியல் முறை ஊடாக பல பில்லியன் அமெரிக்க டொலர்களை அனுப்பிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 4 தனியார் வங்கி ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டிற்கு வெளியே சட்டவிரோதமான முறையில் உண்டியல் முறை ஊடாக பல பில்லியன் அமெரிக்க டொலர்களை அனுப்பிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 4 தனியார் வங்கி முகாமையாளர்கள் குறித்து அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கலாநிதி நலின்த ஜயதிஸ்ஸ இன்று (18) பல அதிர்ச்சித் தகவல்களை வெளியிட்டார்.
</p><p>
 

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் கலாநிதி நலின்த ஜயதிஸ்ஸ இதனைத் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/09f61b73-5244-486c-9ebb-0ece65578d8b/26-6a843dfcc634e.webp' /></p><h2>&nbsp;நான்கு முகாமையாளர்கள்&nbsp; 89 கணக்குகள்</h2><p> </p><p>அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அமைச்சர், 

 

இந்த நான்கு முகாமையாளர்களும் 89 கணக்குகள் ஊடாக 10,151 தடவைகளில் சட்டவிரோதமாக பணத்தை அனுப்பியுள்ளமை இதுவரை கண்டறியப்பட்டுள்ளதாகக் அமைச்சர் நலின்த ஜயதிஸ்ஸ கூறினார்.</p><p></p><p>

 

இவ்வருடம் ஜனவரி மாதத்தில் சுங்க மேலதிக பணிப்பாளர் நாயகத்தினால் நிதி குற்றப் புலனாய்வுப் பணியகத்திற்கு (FCID) செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டதாகக் கூறிய அமைச்சர், அதற்கமைய கடந்த ஜூன் 19 ஆம் திகதி நீர்கொழும்பு பகுதியில் வைத்து ஒருவர் கைது செய்யப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.</p><p></p><p>
</p><p>
 

அங்கு மேற்கொள்ளப்பட்ட மேல் விசாரணைகளின் பலனாக இந்த 4 வங்கி முகாமையாளர்களும் கைது செய்யப்பட்டதாகவும், சந்தேகநபர்களுக்கு எதிராக பணச்சலவை தடுப்புச் சட்டம் மற்றும் தண்டனைச் சட்டக் கோவையின் கீழ் நீதிமன்றத்தில் தகவல்கள் சமர்ப்பிக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.</p>]]></content>
            <updated>2026-08-18T11:09:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[விரைவில் நடைமுறைக்கு வரும் புதிய பயங்கரவாதத் தடுப்பு சட்டம் - வர்த்தமானியில் வெளியிட நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/replace-prevention-of-terrorism-act-1787043687"></link>
            <id>https://tamilwin.com/article/replace-prevention-of-terrorism-act-1787043687</id>
            <summary type="text">1979ஆம் ஆண்டின் 48ஆம் இலக்க பயங்கரவாதத் தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டத்தின் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கான புதிய சட்டமான “பயங்கரவாதத்திலிருந்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>1979ஆம் ஆண்டின் 48ஆம் இலக்க பயங்கரவாதத் தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டத்தின் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கான புதிய சட்டமான “பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டத்தை” அறிமுகப்படுத்த அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.</p><p>

நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சரால் சமர்ப்பிக்கப்பட்ட இந்த முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. </p><p>

தற்போதுள்ள சட்டத்தின் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கான பூர்வாங்க வரைவைத் தயாரிப்பதற்காக ஒரு தொழில்நுட்ப நிபுணர் குழு நியமிக்கப்பட்டது.
</p><h2>
அரசாங்க வர்த்தமானியில் வெளியிடத் திட்டம்</h2><p>
 மேலும், அந்த பூர்வாங்க வரைவின் அடிப்படையில் ஒரு புதிய சட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கு, 2026 ஆகஸ்ட் 10 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கொள்கை ரீதியான ஒப்புதல் வழங்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/79bac0ff-ffa3-4452-b411-00760f70def2/26-6a843ca62f7b8.webp' /></p><p>
</p><p>
சட்ட வரைவாளரால் தயாரிக்கப்பட்ட தொடர்புடைய வரைவு மசோதாவிற்கு தற்போது தலைமை சட்டத்தரணிகளின் ஒப்புதல் கிடைத்துள்ளது.</p><p> 

இந்த வரைவு மசோதா விரைவில் அரசாங்க வர்த்தமானியில் வெளியிடப்பட்டு, பின்னர் ஒப்புதலுக்காக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-18T11:06:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரபல வங்கி முகாமையாளர்கள் கைது விவகாரம்! அமைச்சர் வெளிப்படுத்திய தகவல்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/bank-managers-arrest-issue-goverment-statement-1787047618"></link>
            <id>https://tamilwin.com/article/bank-managers-arrest-issue-goverment-statement-1787047618</id>
            <summary type="text">சட்டவிரோதமான முறையில் உண்டியல் முறை ஊடாக நாட்டிலிருந்து பல பில்லியன் அமெரிக்க டொலர்களை அனுப்பிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 4 தனியார் வங்கி முக...</summary>
            <content type="html"><![CDATA[<p>சட்டவிரோதமான முறையில் உண்டியல் முறை ஊடாக நாட்டிலிருந்து பல பில்லியன் அமெரிக்க டொலர்களை அனுப்பிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 4 தனியார் வங்கி முகாமையாளர்கள் தொடர்பில் அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ பல தகவல்களை வெளியிட்டுள்ளார்.</p><p>

இன்று (18) அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>சட்டவிரோதமாக அனுப்பியுள்ள பணம்</h2><p>

ஜனவரி மாதம் சுங்க மேலதிக பணிப்பாளர் நாயகத்தினால் நிதி குற்றப் புலனாய்வுப் பணியகத்திற்கு (FCID) செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் இவர்கள் சிக்கியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e4f100f3-7da4-41e4-9145-5ff2c8b5efcf/26-6a843a05224b2.webp' /></p><p>
</p><p>
இதற்கமைய, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் நிதியியல் குற்றப் விசாரணை பிரிவினரால் நேற்று கைது செய்யப்பட்ட நான்கு முகாமையாளர்களும் 89 கணக்குகள் ஊடாக 10,151 தடவைகளில் சட்டவிரோதமாக பணத்தை அனுப்பியுள்ளமை விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.
</p><p>
இதற்கமைய கடந்த ஜூன் 19 ஆம் திகதி நீர்கொழும்பு பகுதியில் வைத்து ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் 4 வங்கி முகாமையாளர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p>
 சந்தேகநபர்களுக்கு எதிராக பணச்சலவை தடுப்புச் சட்டம் மற்றும் தண்டனைச் சட்டக் கோவையின் கீழ் நீதிமன்றத்தில் தகவல்கள் சமர்ப்பிக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-18T11:04:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[சீரியல் நடிகை நிவிஷாவின் டீசெண்ட் புகைப்படங்கள்...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/serial-actress-nivisha-recent-photoshoot-post-1787050614"></link>
            <id>https://viduppu.com/article/serial-actress-nivisha-recent-photoshoot-post-1787050614</id>
            <summary type="text">நிவிஷாசன், விஜய் சீரியல்களில் மாறி மாறி நடித்து வந்தவர் நிவிஷா. அறந்தாங்கியில் பிறந்து சினிமா மீது உள்ள ஆசையால் சென்னை வந்து நடிக்க தொடங்கியவர் நிவிஷா...</summary>
            <content type="html"><![CDATA[<h2>நிவிஷா</h2><p>சன், விஜய் சீரியல்களில் மாறி மாறி நடித்து வந்தவர் நிவிஷா. அறந்தாங்கியில் பிறந்து சினிமா மீது உள்ள ஆசையால் சென்னை வந்து நடிக்க தொடங்கியவர் நிவிஷா.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/918e0134-2994-4f57-a7e5-2919cf94cac4/26-6a843a7ec7205.webp' /></p><p> </p><p>அவளுக்கு என்ன அழகிய முகம் படத்தில் நடித்தவர் சின்னத்திரை பக்கம் மீண்டும் வந்து தெய்வமகள், பொன்னூஞ்சல், ஓவியா, கங்கா, யாரடி நீ மோகினி, முள்ளும் மலரும், ஈரமான ரோஜாவே போன்ற சீரியல்களிலும் நடித்துள்ளார் நிவிஷா. </p><p>இன்ஸ்டா பக்கத்தில் எப்போதும் ஆக்டீவாக இருக்கும் நிவிஷா இறுக்கமான ஆடையணிந்து எடுத்த கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-08-18T11:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட 3 மனுக்கள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/22nd-constitutional-amendment-bill-tabled-in-parli-1787036790"></link>
            <id>https://ibctamil.com/article/22nd-constitutional-amendment-bill-tabled-in-parli-1787036790</id>
            <summary type="text">புதிய இணைப்புஅரசாங்கத்தால் இன்று (18) நாடாளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட 22 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை நீதிமன்றில் சவாலுக்குட்படுத்த ஐக்கிய மக்...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>அரசாங்கத்தால் இன்று (18) நாடாளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட 22 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை நீதிமன்றில் சவாலுக்குட்படுத்த ஐக்கிய மக்கள் சக்தி நடவடிக்கை எடுத்துள்ளது.
</p><p>அதற்கமைய, SC/SD/31/2026 எனும் இலக்கத்தின் கீழ் இந்த மனு இன்று உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
</p><p>
 

22 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பிலும், அதன் அரசியலமைப்புச் செல்லுபடியாகும் தன்மை மற்றும் நிலவும் பிரச்சினைகள் தொடர்பில் நீதிமன்றத்தின் கருத்தைப் பெற்றுக்கொள்வதற்காகவே இவ்வாறு உயர் நீதிமன்றத்தை நாடியது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/53f4a258-e534-4851-8c65-16d164de82e4/26-6a843b3a4d257.webp' /></p><p>
</p><p>
 

அரசியலமைப்பிற்கு மேற்கொள்ளப்படும் எந்தவொரு திருத்தமும் நாட்டின் ஜனநாயகக் கட்டமைப்பில், அதிகாரப் பகிர்வில் மற்றும் மக்களின் உரிமைகளில் ஏற்படுத்தக்கூடிய தாக்கங்கள் பற்றி ஆழமாகக் பரிசீலிக்கப்பட வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி சுட்டிக் காட்டுகிறது.</p><p>இதேவேளை&nbsp;அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்டுள்ள அரசியலமைப்பின் 22வது திருத்தச் சட்ட மூல வரைவு, அரசியலமைப்புக்கு முரணானது என தீர்ப்பளிக்குமாறு கோரி சர்வஜன அதிகாரத்தினால் இன்று (18) உயர் நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><h2>இரண்டாம் இணைப்பு</h2><p>அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்டுள்ள அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலம் அரசியலமைப்பிற்கு முரணானது எனத் தீர்ப்பளிக்குமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் முதலாவது மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. </p><p>

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் பொருளாளர் டி.எம்.எஸ். பசிது சில்வா மற்றும் அச்சங்கத்தின் உதவிச் செயலாளர் ஆகியோரால் இன்று (18) இம்மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>

குறித்த சட்டமூலத்தை நிறைவேற்றுவதற்குத் தேவை எனின், அது நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்கினால் அங்கீகரிக்கப்பட்டு, சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றின் மூலமும் அங்கீகரிக்கப்பட வேண்டும் எனத் தீர்ப்பளிக்குமாறு மனுதாரர்கள் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c586c888-859b-4989-a442-115c3c6c1775/26-6a8427468aeca.webp' /></p><h2>முதலாம் இணைப்பு</h2><h4>நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட அரசியலமைப்பின் 22வது திருத்தச் சட்டமூலம்!&nbsp;</h4><p>அரசியலமைப்பின் 22வது திருத்தச் சட்டமூல வரைவு மற்றும் நீதித்துறை திருத்தச் சட்டமூல வரைவு என்பன நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.</p><p> நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவினால் சற்று முன்னர் குறித்த சட்டமூலங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>

உயர் நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை நீடிப்பதற்காக அரசியலமைப்பில் திருத்தத்தை மேற்கொள்வதற்கான சட்டமூலம் முன்வைக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>வர்த்தமானி அறிவித்தல்&nbsp;</h2><p>

அத்துடன், ஏனைய நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை நீடிப்பதற்காக நீதித்துறை திருத்தச் சட்டமூலம் கொண்டுவரப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3c290fe7-2c83-4765-9817-42b8dd76fd52/26-6a8409eaf2ab9.webp' /></p><p>
</p><p>
நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இந்தச் சட்டமூல வரைவுகள் தொடர்பான மேலதிக விவாதங்கள் எதிர்வரும் அமர்வுகளின் போது முன்னெடுக்கப்படவுள்ளன.</p><p>இதேவேளை&nbsp;சட்டமூலமொன்றின் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டு ஒரு வாரத்திற்குப் பின்னரே அது முதலாம் வாசிப்பிற்காக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்பதோடு, அதன்பின்னர் எவரேனும் நீதிமன்றத்தை நாடுவதற்கு ஒரு வார காலம் அவகாசம் கிடைக்கும்.</p><p></p><h2>சபாநாயகருக்கு அறிவிக்கப்படும்</h2><p>அதன்படி, உயர் நீதிமன்றம் மனுக்களை விசாரித்து 3 முதல் 21 நாட்களுக்குள் தனது தீர்மானத்தை நாடாளுமன்ற சபாநாயகருக்கு அறிவிக்கப்படும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b98b38cc-1939-46aa-8070-ad07263b60c4/26-6a8409ebdd26d.webp' /></p><p> </p><p>

22வது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர், உயர் நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயது 65 இலிருந்து 67 ஆகவும், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயது 63 இலிருந்து 65 ஆகவும் உயரும்.&nbsp;</p><p>நீதித்துறை அமைப்புகள் திருத்தச் சட்டமூலம் நிறைவேற்றப்படுவதன் மூலம் மேல்நீதிமன்றம், மாவட்ட நீதிமன்றம் மற்றும் நீதவான் நீதிமன்றங்களின் நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை 62 ஆக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/Sjen6oDZeZY" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p><p> </p>]]></content>
            <updated>2026-08-18T10:59:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையின் அரிய இயற்கை நீர்நிலையான நீல்திய பொக்குண ஆரம்பமாகவுள்ள சுற்றுலா நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/nilthiya-pokuna-sri-lankas-new-tourist-destination-1787049857"></link>
            <id>https://ibctamil.com/article/nilthiya-pokuna-sri-lankas-new-tourist-destination-1787049857</id>
            <summary type="text">இலங்கையின் அரிய இயற்கை நீர்நிலை வளமாகக் கருதப்படும் நீல்திய பொக்குண (Nil Diya Pokuna) பகுதியை பாதுகாப்பதன் அவசியத்தை கருத்தில் கொண்டு, வனஜீவராசிகள் பா...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் அரிய இயற்கை நீர்நிலை வளமாகக் கருதப்படும் நீல்திய பொக்குண (Nil Diya Pokuna) பகுதியை பாதுகாப்பதன் அவசியத்தை கருத்தில் கொண்டு, வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தின் மேற்பார்வையின் கீழ் அங்கு ஒழுங்குபடுத்தப்பட்ட சுற்றுலா நடவடிக்கைகளை ஆரம்பிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
</p><p>
பதுளை மாவட்டம், எல்ல பிரதேச செயலகப் பிரிவின் கரந்தகொல்ல கிராம அலுவலர் பிரிவில் அமைந்துள்ள இராவணா எல்ல சரணாலயத்தின் நிலத்தடி குகைத் தொகுதிக்குள் நீல்திய பொக்குண அமைந்துள்ளது. இது அரிய இயற்கை நீரூற்றாகக் கருதப்படுகிறது.
</p><p>
அதன் தனித்துவமான புவியியல் அமைப்புகள் காரணமாக, இந்த இடம் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளிடையே பிரபலமான சுற்றுலாத் தலமாக மாறியுள்ளது.</p><p></p><h2>நீல்திய பொக்குண</h2><p>

இந்த இடத்தை ஆய்வு செய்து, அதன் நிர்வாகம் மற்றும் பாதுகாப்பு தொடர்பாக பரிந்துரைகளை முன்வைப்பதற்காக பல்கலைக்கழக கல்வியாளர்கள் மற்றும் தொடர்புடைய அரச நிறுவனங்களின் பிரதிநிதிகளை உள்ளடக்கிய தொழில்நுட்பக் குழுவொன்று நியமிக்கப்பட்டதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/536ce366-99c6-4f6f-96c0-c4373068117e/26-6a843a15405a0.webp' /></p><p>

அந்தக் குழுவின் ஆய்வு அறிக்கையின் அடிப்படையில், நீல்திய பொக்குண பகுதியில் சுற்றுலா நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்துவதற்கான விதிமுறைகள் தயாரிக்கப்பட்டன. </p><p>அந்த விதிமுறைகள் சட்டவரைவு வரைவாளரால் பரிசீலிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

தற்போது, விலங்கினங்கள் மற்றும் தாவரங்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் விதிகளின் கீழ், இந்த விதிமுறைகளை வர்த்தமானியில் வெளியிடுவதற்காக சுற்றுச்சூழல் அமைச்சர் முன்வைத்த முன்மொழிவுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
</p><p>
இதன் மூலம், நீல்திய பொக்குண பகுதியில் சுற்றுலா நடவடிக்கைகளை வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தின் மேற்பார்வை மற்றும் ஒழுங்குமுறையின் கீழ் மேற்கொள்ள முடியும். அதேவேளை, இந்த இயற்கைச் சூழலின் பாதுகாப்பும் உறுதி செய்யப்படும்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-18T10:55:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[16 வயதில் CA பட்டம் பெற்று கின்னஸ் சாதனை படைத்த தமிழ் வம்சாவளி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/lakshmanan-meyyappan-record-youngest-ca-at-age16-1787044059"></link>
            <id>https://news.lankasri.com/article/lakshmanan-meyyappan-record-youngest-ca-at-age16-1787044059</id>
            <summary type="text">lakshmanan meyyappan as youngest ca: தமிழ் வம்சாவளியான லக்ஷ்மணன் மெய்யப்பன் 16 வயதில் CA பட்டம் பெற்று கின்னஸ் சாதனை படைத்துள்ளார். 

16 வயதில் CA ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>lakshmanan meyyappan as youngest ca: தமிழ் வம்சாவளியான லக்ஷ்மணன் மெய்யப்பன் 16 வயதில் CA பட்டம் பெற்று கின்னஸ் சாதனை படைத்துள்ளார். </p><h3>

16 வயதில் CA படம் பெற்ற தமிழ் வம்சாவளி</h3><p>

இந்தியாவை சேர்ந்த தமிழ் வம்சாவளியான லக்ஷ்மணன் மெய்யப்பன்(lakshmanan meyyappan) என்பவர் தனது குடும்பத்துடன் துபாயில் வசித்து வருகிறார். </p><p>

தனது 10 ஆம் வகுப்பு பள்ளி விடுமுறையின் போது, ஏசிசிஏ பட்டம் பெற்ற அவரது தாயார், அடிப்படை கணக்கியல் கருத்துக்களை அறிமுகப்படுத்தியுள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f4e6e294-462a-4e72-9ca3-eb07748453fa/26-6a8420dc9012f.webp' /></p><p> 

இதன் மூலம், கணக்கியல் மீது ஆர்வம் கொண்ட உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட கணக்கியல் சான்றிதழான ACCA தகுதியைப் பெற முடிவு செய்து, ஒரு ஆண்டிலே அதற்கான தேர்வில் தேர்ச்சி பெற்று, தகுதி பெற்றார். </p><p>

அத்துடன் நில்லாமல், முதலீட்டு மேலாண்மையில் மிகவும் மதிக்கப்படும் தகுதிகளில் ஒன்றான CFA பட்டயத்தையும் அவர் பெற்றார்.&nbsp;உலகளவில் 2 லட்சத்திற்கும் குறைவானவர்களே இந்த பட்டத்தை பெற்றுள்ளனர்.</p><p>
இதன் மூலம், 16 வயது 141 நாட்களில் பட்டய கணக்காளர் பட்டம் பெற்ற உலகின் இளம் வயது ஆண் என்ற கின்னஸ் சாதனையை படைத்துள்ளார் லக்ஷ்மணன் மெய்யப்பன்.&nbsp;</p><p></p><p> 

oxford brookes பல்கலைக்கழகத்தில் Applied science பிரிவில் Bachelor of Science பட்டம் பெற்றுள்ள அவர், தற்போது american university of sharjah ல் நிதி பிரிவில் முதுகலைப் பட்டம் படித்து வருகிறார்.</p><p> 

தற்போது செஞ்சுரி ஃபைனான்சியல் நிறுவனத்தில் மூத்த ஆராய்ச்சி ஆய்வாளராகப் பணியாற்றி வருகிறார்.
</p><p>
இது குறித்து பேசிய அவர், "இந்த மைல்கல் எனக்கு மிகவும் முக்கியமானது, ஆனால் நான் தகுதிகளை ஒருபோதும் ஒரு பந்தயமாக அணுகியதில்லை. 

நிஜ உலகில் நிதி எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் புரிந்துகொள்வதும், காலப்போக்கில் பொருத்தமானதாக இருக்கும் திறன்களை வளர்த்துக்கொள்வதுமே முக்கியமாக இருந்தது. </p><p>

வேகத்தை விட ஆர்வத்தால் கற்றல் உந்தப்படும்போது, ​​அதன் விளைவு மிகவும் அர்த்தமுள்ளதாக அமைகிறது. உலக சாதனை படைப்பது ஒருபோதும் தனது இலக்காக இருந்ததில்லை" என தெரிவித்துள்ளார்.</p><p> 

தனது தொழில்முறை தவிர்த்து ஓய்வு நேரங்களில் கைக்கடிகாரங்களை உருவாக்கி வருகிறார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-18T10:55:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[டிஜிட்டல் தேசிய அடையாள அட்டை விநியோகம் குறித்து வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/steps-to-issue-the-first-digital-identity-card-1787048599"></link>
            <id>https://ibctamil.com/article/steps-to-issue-the-first-digital-identity-card-1787048599</id>
            <summary type="text">இலங்கையில் தற்போது வழங்கப்பட்டுள்ள அனைத்து தேசிய அடையாள அட்டைகளுக்கும் பதிலாக, எதிர்வரும் சில வருடங்களுக்குள் டிஜிட்டல் தேசிய அடையாள அட்டைகளை வழங்குவத...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் தற்போது வழங்கப்பட்டுள்ள அனைத்து தேசிய அடையாள அட்டைகளுக்கும் பதிலாக, எதிர்வரும் சில வருடங்களுக்குள் டிஜிட்டல் தேசிய அடையாள அட்டைகளை வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p>குறித்த விடயத்தினை டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன தெரிவித்துள்ளார்.
</p><p>
 

டிஜிட்டல் மயமாக்கல் செயற்திட்டத்தின் கீழ், இந்த ஆண்டின் எஞ்சியுள்ள சில மாதங்களுக்குள் முதலாவது டிஜிட்டல் அடையாள அட்டையை வெளியிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p></p><h2>புதிய டிஜிட்டல் முறைமை</h2><p>
</p><p>
 

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

 

"டிஜிட்டல் பொருளாதாரத்திற்கு நாங்கள் முன்னுரிமை அளித்துள்ளோம். இந்த வருடத்திற்குள் முதலாவது டிஜிட்டல் அடையாள அட்டையை வெளியிடும் கட்டத்தை எட்டுவோம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4ef4a281-c9f2-43b3-a3c8-363bf67bfadc/26-6a84374178e98.webp' /></p><p> </p><p>அதேபோன்று, அடுத்த வருடம் ஓகஸ்ட் மாதமளவில் முழுமையான டிஜிட்டல் அடையாள அட்டையை வழங்க எதிர்பார்க்கிறோம். </p><p>அங்கிருந்து சுமார் 2 வருட காலப்பகுதிக்குள் நாட்டின் 17 மில்லியன் மக்களையும் பழைய அடையாள அட்டைகளுக்குப் பதிலாக புதிய டிஜிட்டல் முறைமைக்குக் கொண்டுவர எதிர்பார்க்கிறோம்." என தெரிவித்தார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-18T10:49:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறுபடகுகள் மூலம் பிரித்தானியாவுக்குள் நுழையும் புலம்பெயர்வோர்: ஜேர்மனி நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/germany-raids-warehouses-crack-down-smugglers-1787049903"></link>
            <id>https://news.lankasri.com/article/germany-raids-warehouses-crack-down-smugglers-1787049903</id>
            <summary type="text">Germany carries out raids to crack down on smugglers: சிறுபடகுகள் மூலம் பிரித்தானியாவுக்குள் நுழையும் புலம்பெயர்வோரைக் கட்டுப்படுத்துதல் தொடர்பில் ஜேர...</summary>
            <content type="html"><![CDATA[<p>Germany carries out raids to crack down on smugglers: சிறுபடகுகள் மூலம் பிரித்தானியாவுக்குள் நுழையும் புலம்பெயர்வோரைக் கட்டுப்படுத்துதல் தொடர்பில் ஜேர்மனி ரெய்டுகள் நடத்தியுள்ளது.
</p><p>

ஆங்கிலக்கால்வாய் வழியாக பிரித்தானியாவுக்குள் நுழையும் புலம்பெயர்வோரைக் கட்டுப்படுத்த ஏதேதோ நடவடிக்கைகளை எடுத்துவருகிறது பிரித்தானியா.</p><p>

ஆனாலும், முழுமையாக சட்டவிரோத கடத்தலைக் கட்டுப்படுத்த முடியவில்லை.
</p><h3>
காரணம் என்ன?
</h3><p>
அதாவது, பொதுவாக பிரான்சிலிருந்து சிறிய ரப்பர் படகுகள் மூலம் சட்டவிரோத புலம்பெயர்வோர் ஆங்கிலக்கால்வாய் வழியாக நுழைகிறார்கள் என்பது பலருக்கும் தெரிந்த விடயம்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dbefd8f2-78ec-419d-b298-5550f88e820d/26-6a8437b0dc8fa.webp' /></p><p>

ஆனால், உண்மையில், பிரித்தானியாவுக்குள் சட்டவிரோத புலம்பெயர்வோர் நுழைவதன் பின்னணியில் பிரான்ஸ் மட்டும் இல்லை.
</p><p>
ஆம், பிரித்தானியாவுக்குள் நுழையும் சிறு ரப்பர் படகுகள், சீனாவில் தயாராகின்றன. அவை பல்கேரியா நில எல்லை வழியாக துருக்கிக்குள் கொண்டுவரப்படுகின்றன.&nbsp;</p><p></p><p>
அங்கிருந்து ட்ரக்குகள் மூலம் ஜேர்மனிக்குக் கொண்டுவரப்படும் இந்த சிறுபடகுகள், லைஃப் ஜாக்கெட்கள் போன்றவை, ஜேர்மனியிலுள்ள கிடங்குகளில் சேமித்துவைக்கப்படுகின்றன.
</p><p>
அங்கிருந்து அவை பிரான்சுக்குக் கொண்டுவரப்பட்டு, ஆட்கடத்தல்காரர்கள் உதவியுடன் ஆங்கிலக்கால்வாய் வழியாக பிரித்தானியாவுக்குள் புலம்பெயர்வோர் நுழைய அந்தப் படகுகள் பயன்படுத்தப்படுகின்றன.</p><p>

ஆக, பிரித்தானியாவுக்குள் சட்டவிரோத புலம்பெயர்வோர் நுழைவதில் இத்தனை நாடுகளுக்குப் பங்குள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8ad7d481-fe21-4abb-ab29-a9327147809d/26-6a8437b190610.webp' /></p><p>
எனவே, வெறும் பிரான்சும் பிரித்தானியாவும் மட்டும் கைகோர்த்தால் இந்த சட்டவிரோத புலம்பெயர்தலை முழுமையாகக் கட்டுப்படுத்தமுடியாது.
</p><p>
இந்த விடயங்கள் தெரியவந்ததைத் தொடர்ந்து, பிரித்தானியா ஜேர்மனியுடனும் ஒப்பந்தம் ஒன்றைச் செய்துகொள்ள, 2024ஆம் ஆண்டு, இந்த சட்டவிரோத புலம்பெயர்வோருக்கு உதவுவோரை தண்டிக்கும் வகையில் சட்டங்களை கடுமையாக்க இருப்பதாக ஜேர்மனி உறுதியளித்தது.
</p><p>
அதைத் தொடர்ந்து, சட்டங்களில் மாற்றங்கள் செய்யப்பட, அதன் மூலமாக, ஆட்கடத்தல்காரர்கள் ஜேர்மனியில் சிறுபடகுகளை மறைத்துவைத்துள்ள கிடங்குகளில், சமீபத்தில் ஜேர்மன் அதிகாரிகள் ரெய்டுகள் நடத்தியுள்ளார்கள்.
</p><p>
முதன்முறையாக ஜேர்மன் அதிகாரிகள் நடத்திய அந்த ரெய்டுகளில், 9,000க்கும் அதிகமான லைஃப் ஜாக்கெட்கள், நிறைய ரப்பர் படகுகள், அவற்றிற்கான எஞ்சின்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன.
</p><p>
அதாவது, சுமார் 2,000 சட்டவிரோத புலம்பெயர்வோர் பிரித்தானியாவுக்குள் நுழைவதை ஜேர்மன் அதிகாரிகள் தடுத்துவிட்டார்கள் எனலாம்!&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-18T10:48:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிளிநொச்சியில் விடுதலைப் புலிகளின் பயிற்சி முகாம்! தவறான தகவல்களைப் பரப்புபவர்களுக்கு எதிராக நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/govt-rejects-claims-ltte-training-camp-kilinochchi-1787047982"></link>
            <id>https://tamilwin.com/article/govt-rejects-claims-ltte-training-camp-kilinochchi-1787047982</id>
            <summary type="text">கிளிநொச்சியில் விடுதலைப் புலிகளின் பயிற்சி முகாம் ஒன்று இயங்கி வருவதாக சமூக ஊடகங்களில் பரவி வரும் கூற்றுகளை அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிளிநொச்சியில் விடுதலைப் புலிகளின் பயிற்சி முகாம் ஒன்று இயங்கி வருவதாக சமூக ஊடகங்களில் பரவி வரும் கூற்றுகளை அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜெயதிஸ்ஸ 
நிராகரித்துள்ளார்.</p><p>

தவறான தகவல்களைப் பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.</p><p>அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பின்னர் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.</p><h2><span style="color: inherit; font-size: 1.75rem;">அனுமதியற்ற கட்டுமானம்</span></h2><p>

மேலும் தெரிவித்த அவர்,

 கேள்விக்குட்பட்ட அந்த இடம் கிளிநொச்சி மாவட்டம், முக்கன்பம் பகுதியிலுள்ள கண்ணகிபுரத்தில், 1919-ஆம் ஆண்டில் வனக் காப்பகமாக அரசிதழில் வெளியிடப்பட்ட நிலத்தில் அமைந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3215f607-2e78-45dc-abc3-da4d8e4da86a/26-6a84342e7545e.webp' /></p><p>
</p><p>
அரசு நிலத்தில் சட்டவிரோதமாக சாகுபடி மற்றும் கட்டுமானம் நடைபெற்றதாகக் கூறப்படுவது தொடர்பான இந்த விவகாரம், பலமுறை நீதிமன்றத் தலையீட்டிற்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
</p><p>
அமைச்சரின் கூற்றுப்படி, 2025 ஆம் ஆண்டு முதல் அந்த இடத்தில் காடுகளை அழிப்பது மற்றும் அனுமதியற்ற கட்டுமானம் தொடர்பான சம்பவங்கள் வனத்துறை அதிகாரிகளுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளன.</p><h2>ஏழு வழக்குகள்</h2><p>
</p><p>
அந்த இடத்தில் நடந்த நடவடிக்கைகள் தொடர்பாக தியாகராச குலதீபன் என அடையாளம் காணப்பட்ட நபர் மீது ஏழு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
</p><p>
ஆரம்பத்தில் 10 ஏக்கர் நிலம் சீர்செய்யப்பட்டு, பின்னர் கற்றாழை மற்றும் காய்கறிகள் பயிர்செய்கைக்காக 20 ஏக்கராக விரிவுபடுத்தப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ea5a25d0-c392-4c5a-852d-a51f8d8a051f/26-6a84342dba555.webp' /></p><p>
</p><p>
அந்த இடத்தில், கிராமத்தைச் சேர்ந்தவர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் ஆடை உற்பத்தித் தொழில் இயங்கும் மூன்று மாடிக் கட்டிடம் ஒன்றும் கட்டப்பட்டிருந்தது.</p><p>

இந்த ஆண்டு பெப்ரவரி மாதம் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றம் அந்த நபரை நிலத்தை காலி செய்யுமாறு உத்தரவிட்டிருந்தது.</p><h2>தமிழ் அரசியல்வாதிகள்</h2><p>
</p><p>
இருப்பினும், அந்த உத்தரவு பின்பற்றப்படவில்லை என்றும், கனரக இயந்திரங்களைப் பயன்படுத்தி மணல் அள்ளுவது உள்ளிட்ட நடவடிக்கைகள் அந்த இடத்தில் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/612a58b3-bc40-46fc-8845-3638e51eeb58/26-6a84342cefe3a.webp' /></p><p>
</p><p>
இந்த விவகாரம், விடுதலைப் புலிகள் பயிற்சி முகாம் செயல்படுவது தொடர்பானது அல்ல என்றும், மாறாக அரசுச் சொத்துக்களை சட்டவிரோதமாக ஆக்கிரமித்தல், அனுமதியற்ற கட்டுமானம் மற்றும் மணல் அகழ்வு ஆகியவை தொடர்பானது.
</p><p>
இந்த நடவடிக்கைக்கு அப்பகுதி தமிழ் அரசியல்வாதிகளின் ஆதரவு இருந்ததா என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த நளிந்த ஜெயதிஸ்ஸ, அரச நிலங்களில் சட்டவிரோத நடவடிக்கைகள் குறித்த இதுபோன்ற குற்றச்சாட்டுகள் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பதிவாகியுள்ளதாகவும், அவற்றை இனவாதக் கண்ணோட்டத்தில் பார்க்காமல், கூறப்படும் குற்றங்களின் அடிப்படையில் விசாரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.</p><p><br></p><p></p>]]></content>
            <updated>2026-08-18T10:38:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[எங்கள் வீட்டிற்கு வரவேண்டாம்: பிரித்தானியாவில் 22 குழந்தைகளின் தாய் வேண்டுகோள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/22-kids-and-counting-sue-radford-demands-privacy-1787049322"></link>
            <id>https://news.lankasri.com/article/22-kids-and-counting-sue-radford-demands-privacy-1787049322</id>
            <summary type="text">22 kids and counting sue radford demands privacy: பார்வையாளர் ஒருவர் புகைப்படம் கேட்டதைத் தொடர்ந்து, பிரித்தானியாவில் 22 குழந்தைகளின் தாய் வேண்டுகோள் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>22 kids and counting sue radford demands privacy: பார்வையாளர் ஒருவர் புகைப்படம் கேட்டதைத் தொடர்ந்து, பிரித்தானியாவில் 22 குழந்தைகளின் தாய் வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.
</p><p>
பிரித்தானியாவில் 22 Kids and Counting நிகழ்ச்சியின் பார்வையாளர் ஒருவர், தங்கள் வீட்டிற்கு வந்து குழந்தைகளில் ஒருவரிடம் புகைப்படம் கேட்டதைத் தொடர்ந்து, மிகப்பெரிய குடும்பத்தின் தாயான சூ ராட்ஃபோர்ட் தனியுரிமையை மதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.&nbsp;</p><h2>தனியுரிமையை மதிக்க வேண்டும்&nbsp;</h2><p>

22 குழந்தைகளின் தாயான சூ ராட்ஃபோர்ட் மற்றும் அவரது குடும்பத்தினர் பிரித்தானியாவில் பிரபலமானவர்களாக மாறினர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5c486ecf-0866-4840-931d-4e963203dfa5/26-6a84356e8250c.webp' />&nbsp;</p><p></p><p>
Channel 5-யின் 22 Kids and Counting என இந்த குடும்பத்தைப் பற்றிய ரியாலிட்டி நிகழ்ச்சி பிரபலமாக உள்ளது.

இந்நிகழ்ச்சியின் பார்வையாளர் ஒருவர் சூ ராட்ஃபோர்ட்டின் வீட்டிற்கு சென்றுள்ளார். </p><p>அங்கு அவர் சூ ராட்ஃபோர்ட்டின் குழந்தைகளில் ஒருவரிடம் புகைப்படம் கேட்டது சங்கடத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இதனால் 51 வயதான சூ ராட்ஃபோர்ட் (Sue Radford) சமூக ஊடகங்கள் வாயிலாக தங்கள் வீட்டிற்கு வர வேண்டாம் என பின்தொடர்பாளர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.&nbsp;</p><h2>பாதுகாப்பு சிக்கல்</h2><p> 

ரசிகர்கள் தங்கள் தனியுரிமையை மதிக்க வேண்டும் என்ற அவர், தங்கள் வீட்டிற்கு வருவது அசௌகரியத்தை ஏற்படுத்துவதாகவும், உண்மையான பாதுகாப்பு சிக்கலை உருவாக்குவதாகவும் கூறியுள்ளார்.</p><p>

மேலும் அவர் தனது பதிவில், "இதைப்பற்றி மீண்டும் பேச வேண்டிய அவசியம் இருப்பதாக நான் உணர்கிறேன்; எங்கள் தரப்பு நியாயத்தை மக்கள் புரிந்துகொள்வார்கள் என்று நான் பெரிதும் நம்புகிறேன்.</p><p> 

நாங்கள் வெளியே செல்லும்போதெல்லாம் மக்களை சந்திப்பதை மிகவும் விரும்புகிறோம். நின்று பேசுவதிலும், புகைப்படம் எடுத்துக்கொள்வதிலும், நலம் விசாரிப்பதிலும் எங்களுக்கு எப்போதும் மகிழ்ச்சியே; அது எங்களுக்கு உண்மையிலேயே மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது" என்றார்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fa52e89b-a576-44b3-aff8-86579ffe03fc/26-6a84356dc18f6.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-18T10:33:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரணில் விக்ரமசிங்கவின் வழக்கு: பிரித்தானிய அரசு வெளியிட்டுள்ள திடுக்கிடும் தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ranil-wickremesinghe-united-kingdom-1787046301"></link>
            <id>https://tamilwin.com/article/ranil-wickremesinghe-united-kingdom-1787046301</id>
            <summary type="text">ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக பதவி வகித்த காலப்பகுதியில் அவரது மனைவி பேராசிரியர் மைத்திரி விக்ரமசிங்கவின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக லண்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக பதவி வகித்த காலப்பகுதியில் அவரது மனைவி பேராசிரியர் மைத்திரி விக்ரமசிங்கவின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக லண்டன் செல்வதற்கு அரச நிதியை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டு தொடர்பான வழக்கு எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 30 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. </p><p> 
இவ்வாறான நிலையில் பிரித்தானியாவின் அழைப்பின் பேரில் விஜயம் செய்த இராஜதந்திரிகளின் பெயர் பட்டியல் வெளியிட்டுள்ளதால் வழக்கில் பாரிய திருப்பங்களும், சர்ச்சைகளும் ஏற்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
</p><h2>
</h2><p><span style="color: inherit; font-size: 1.75rem;">ஓஷல ஹேரத்தின் தகவல் அறியும் கோரிக்கை</span></p><p>இந்த பின்னணியில் சிவில் சமூகச் செயற்பாட்டாளர் ஓஷல ஹேரத் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் பிரித்தானியாவில் இது குறித்து தகவல்களை கோரியிருந்தார்.
ஆனால் பிரித்தானியாவின் தகவல் ஆணைக்குழு ஆரம்பக்கட்டத்தில் சில எதிர்ப்புகளை தெரிவித்திருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ca3ef8cc-dea3-4d29-a135-c25dd229e14a/26-6a84299fa9394.webp' />&nbsp;&nbsp;</p><p>இருப்பினும் கடந்த 14 ஆம் திகதி இது தொடர்பில் ஓஷல ஹேரத்திற்குப் பதிலளித்திருந்தது. அந்த பதிலளிப்புடன் பிரித்தானியாவுக்கு அரசாங்க அழைப்பின் பேரில் வருகை தரும் இராஜதந்திரிகளின் தகவல்களான ரணில் விக்ரமசிங்க சென்ற காலப்பகுதிக்குரிய 2023 செப்டெம்பர் 22- 23 காலாண்டுத் தகவல்களைப் பகிரங்கப்படுத்தியுள்ளன.</p><p>பிரித்தானியாவின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் இது தொடர்பான முழுமையான விபரங்களும் பிரசுரிக்கப்பட்டுள்ளன.</p><p>
ரணில் விக்ரமசிங்க விஜயம் செய்த 2023 செப்டெம்பர் 22- 23 திகதி காலப்பகுதியை உள்ளடக்கியதாக ஓஷல ஹேரத்தின் தகவல் அறிக்கையில் பிரித்தானிய அரசின் அழைப்பின் பேரில் பிரித்தானியாவுக்கு விஜயம் செய்த இராஜதந்திரிகள் யார் என்ற கேள்வி மிக முக்கியமானதாகும். </p><p>அரசாங்கம் அழைப்பு விடுத்திருந்தால் அந்த அழைப்பை ஏற்று வந்தவர்கள் யார் மற்றும் அவர்களுக்காக அரசாங்கம் எவ்வளவு பணம் செலவிட்டது என்பது குறித்தும் கேட்டிருந்தார். 
இந்த தகவல் அறியும் விண்ணப்பத்தில் மற்றொரு முக்கியமான விடயமொன்று வெளிப்படுத்தப்படுகின்றது. </p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">கட்டமைப்பிற்குள் ஏற்றுக்கொள்ளப்பட்ட நான்கு வகையான விஜயங்கள்</span></p><p>பிரித்தானிய இராஜதந்திர மட்டத்தில் பிரித்தானிய அரசாங்கம் அல்லது அவர்களது கட்டமைப்பிற்குள் ஏற்றுக்கொள்ளப்பட்ட நான்கு வகையான விஜயங்கள் உள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0ef0a39d-38b7-43ef-be50-de44546ef074/26-6a84339fd542d.webp' /></p><p> </p><p>
State Visit (அரசு விஜயம்): பிரித்தானிய மன்னர் அல்லது அரச குடும்பத்தின் அழைப்பின் பேரில் மேற்கொள்ளப்படும் விஜயங்கள்.
</p><p>Guest of Government Visit (அரச விருந்தினர் விஜயம்): பிரித்தானிய நாடாளுமன்றம் அல்லது அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் மேற்கொள்ளப்படும் விஜயங்கள்.
</p><p>Working Visit (பணி விஜயம்): உதாரணமாக இலங்கையின் ஜனாதிபதி அல்லது அரசியல்வாதி ஒருவர் அந்நாட்டிலுள்ள இலங்கைக் குடிமக்களையோ மன்றங்களையோ சந்திப்பதற்காக அல்லது தமது வணிகக் விடயங்கள் மற்றும் தூதரகப் பணிகளுக்காகச் செல்லும் தனிப்பட்ட மட்டத்திலான விஜயங்கள்.
</p><p>Private Visit (தனிப்பட்ட விஜயம்): மருத்துவச் சிகிச்சை பெறுவதற்காக அல்லது ஏதேனும் நிறுவனத்தின் விழாக்களுக்குத் தனிப்பட்ட முறையில் அழைப்பை பெற்றுப் செல்லும் விஜயங்கள்.</p><p>
</p><p>அதனடிப்படையில் 2023 ஜூலை 9 ஆம் திகதி முதல் 2024 டிசம்பர் 4 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் பிரித்தானிய அரசின் அழைப்பின் பேரில் State Visit அல்லது Guest of Government Visit அரச அனுசரணையுடன் வருகை தந்த தலைவர்களின் பட்டியலும் அவர்களுக்காகப் பிரித்தானிய அரசு செலவிட்ட தொகையும் தற்போது பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளது. </p><p>இந்த பட்டியலில் ரணில் விக்ரமசிங்கவின் பெயர் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.&nbsp; &nbsp;</p><p></p><p>&nbsp;</p><p>&nbsp; &nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-08-18T10:26:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[தேனிலவுக்கு உலங்கு வானூர்தியில் சென்ற பிரிட்டன் இளம் தம்பதிக்கு நேர்ந்த துயரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/british-couple-honeymoon-killed-helicopter-crash-1787047785"></link>
            <id>https://ibctamil.com/article/british-couple-honeymoon-killed-helicopter-crash-1787047785</id>
            <summary type="text">&amp;nbsp;கிரேக்க தீவான சிஃப்னோஸில் திங்களன்று நடந்த உலங்கு வானூர்தி விபத்தில், ஒரு இளம் பிரிட்டிஷ் தம்பதியினரும் அவர்களது விமானியும் உயிரிழந்ததாக கிரேக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கிரேக்க தீவான சிஃப்னோஸில் திங்களன்று நடந்த உலங்கு வானூர்தி விபத்தில், ஒரு இளம் பிரிட்டிஷ் தம்பதியினரும் அவர்களது விமானியும் உயிரிழந்ததாக கிரேக்க காவல்துறை தெரிவித்துள்ளது.
</p><p>
உயிரிழந்தவர்கள் அலெக்சாண்டர் குரோமி மற்றும் மேரி எபர்ட் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். அந்தத் தம்பதியினர் தேனிலவுக்கு சென்றிருந்ததாக கதிமெரினி செய்தித்தாள் கூறியுள்ளது.</p><h2>தரையிறங்கும் தளத்திலிருந்து சில மீட்டர் தொலைவில் விபத்து</h2><p>அந்தத் தனியார் உலங்கு வானூர்தி, தரையிறங்கும் தளத்திலிருந்து சில மீட்டர்கள் தொலைவில் விபத்துக்குள்ளானதில், அந்தத் தம்பதியினரும், கிரேக்க நாட்டவரான அவர்களது விமானியும் உயிரிழந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ffeb508d-3e66-4489-8ceb-f04e8b2e4485/26-6a84330cb1faf.webp' /></p><p>
</p><p>
ஏதென்ஸுக்கு அருகிலுள்ள மார்கோபோலோ கிராமத்திலிருந்து அந்தப் பிரபலமான விடுமுறை தீவுக்கு அந்தத் தம்பதியினர் உலங்கு வானூர்தியில் சென்றதாகக் கூறப்படுகிறது என கதிமெரினி செய்தி வெளியிட்டுள்ளது.</p><p></p><p>
</p><p>
</p><h2>விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய விசாரணை</h2><p>விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய விசாரணை நடைபெற்று வருகிறது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e98456c1-0196-4461-b89b-604345aada87/26-6a84330d64a9c.webp' /></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-18T10:25:22+00:00</updated>
        </entry>
    </feed>
