<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-08-10T10:48:25+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[11ஆவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு அடுத்த வருடம் யாழ்ப்பாணத்தில்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/11th-world-tamil-studies-conference-in-next-year-1786358180"></link>
            <id>https://tamilwin.com/article/11th-world-tamil-studies-conference-in-next-year-1786358180</id>
            <summary type="text">11ஆவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு அடுத்த வருடம்
யாழ்ப்பாணத்தில் நடத்தப்படவுள்ளதாக உலகத் தமிழாராய்ச்சி மன்றத்தின் தலைவர்
அரசர் அருளாளர் தெரிவித்துள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p>11ஆவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு அடுத்த வருடம்
யாழ்ப்பாணத்தில் நடத்தப்படவுள்ளதாக உலகத் தமிழாராய்ச்சி மன்றத்தின் தலைவர்
அரசர் அருளாளர் தெரிவித்துள்ளார்.
</p><p>
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையும், யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கமும்,
தமிழி அமைப்பும் இணைந்து நடத்திய தனிநாயகம் நினைவரங்க நிகழ்வு யாழ்ப்பாணப்
பல்கலைக்கழகக் கைலாசபதி கலையரங்கில் நேற்று(09.08.2026) நடைபெற்றபோது,
அதில் கலந்துகொண்டு தொடக்க வுரை ஆற்றுகையிலேயே அவர் இந்த அறிவிப்பை
வெளியிட்டுள்ளார்.
</p><h2>தாக்குதலில் பல உயிர்கள் காவு கொள்ளப்பட்டது</h2><p>
இதேவேளை, முதலாவது தமிழாராய்ச்சி மாநாடு 1966ஆம் ஆண்டு மலேசியாவில்
கோலாலம்பூரிலும், நான்காவது மாநாடு 1974ஆம் ஆண்டு ஜனவரி மாதம்
யாழ்ப்பாணத்திலும் நடைபெற்றன. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6182eb73-9f07-49ea-b75f-ac7fe7736ac2/26-6a79ab8ed0701.webp' /></p><p>உலகத் தமிழாராய்ச்சி மன்றத்தின் நிறுவுநரான
தனிநாயகம் அடிகளார் இம்மாநாட்டை ஆரம்பித்து வைத்தார். அவர் பங்குபற்றிய இறுதி
மாநாடாகவும் இதுவே அமைந்தது.</p><p>யாழ். குடா நாடே விழாக் கோலம் பூண்டு பேரெழுச்சியுடன் அந்த மாநாடு நடைபெற்றதாக
அக்காலத்தில் வாழ்ந்தவர்கள் தெரிவிக்கின்றார்கள். </p><p>இம் மாநாட்டின் இறுதி
நாளன்று நடந்த தாக்குதலில் பல உயிர்கள் காவு கொள்ளப்பட்ட துயரச் சம்பவமும்
வரலாற்றில் பதிவாகியிருந்தது.
</p><p>
பத்தாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு கடந்த 2019ஆம் ஆண்டு அமெரிக்காவின்
சிக்காக்கோ நகரில் சிறப்பாக நடந்தேறியிருந்தது. இந்நிலையிலேயே 11ஆவது உலகத்
தமிழாராய்ச்சி மாநாடு அடுத்த வருடம் 2027ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில்
நடைபெறவுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-10T10:44:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஒக்டோபர் - நவம்பரில் பலத்த மழை : வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/heavy-rain-in-october-and-november-meteorology-dep-1786355126"></link>
            <id>https://ibctamil.com/article/heavy-rain-in-october-and-november-meteorology-dep-1786355126</id>
            <summary type="text">நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் கணிசமான மழைவீழ்ச்சியை எதிர்வரும் ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களிலேயே எதிர்பார்க்க முடியும் என&amp;nbsp; வளிமண்டலவியல் தி...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் கணிசமான மழைவீழ்ச்சியை எதிர்வரும் ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களிலேயே எதிர்பார்க்க முடியும் என&nbsp; வளிமண்டலவியல் திணைக்களத்தின் அதிகாரி கசுன் பஸ்க்குவல் தெரிவித்துள்ளார்.</p><p>இக்காலப்பகுதியில் நாட்டின் பல பாகங்களுக்கும் பரவலாக மழை கிடைக்கும் சாத்தியக்கூறுகள் உள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p>இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போது நாட்டின் கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடிய வாய்ப்புகள் காணப்படுகின்றன.</p><p></p><h2>எல் நினோ காலநிலை</h2><p>எனினும் இது பரவலான அல்லது கணிசமான மழைவீழ்ச்சி அல்ல, குறிப்பிட்ட சில பிரதேசங்களுக்கு மட்டுமே வரம்பிற்குட்பட்டதாக இருக்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0ab02288-2f27-443a-b968-cf48c0f8c5a6/26-6a79aa37150aa.webp' /></p><p>

மேலும், தற்போது நிலவிவரும் வலுவான 'எல் நினோ' காலநிலை நிலைமை காரணமாக, இம்முறை எதிர்பார்க்கப்படும் மழைவீழ்ச்சியானது மிகவும் தீவிரமடைந்து, பலத்த மழையாக மாறுவதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றது.</p><p>

இக்காலப்பகுதி நெருங்கும்போது இதுகுறித்த விரிவான மற்றும் துல்லியமான வானிலை முன்னறிவிப்புகள் வளிமண்டலவியல் திணைக்களத்தால் தொடர்ச்சியாக வெளியிடப்படும்“ என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-10T10:43:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[மாணவியை நூலகத்தில் வைத்து கதவை பூட்டி வீட்டிற்குச் சென்ற ஊழியர்களால் வெடித்தது சர்ச்சை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/studentl-library-employees-closed-the-door-1786357333"></link>
            <id>https://ibctamil.com/article/studentl-library-employees-closed-the-door-1786357333</id>
            <summary type="text">&amp;nbsp;மகரகம நகர சபை வளாகத்தில் அமைந்துள்ள பொது நூலகத்தில் படித்துக்கொண்டிருந்த உயர்தர மாணவி ஒருவர், அங்குள்ள அதிகாரிகளின் கவனக்குறைவு காரணமாக கதவுகள் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;மகரகம நகர சபை வளாகத்தில் அமைந்துள்ள பொது நூலகத்தில் படித்துக்கொண்டிருந்த உயர்தர மாணவி ஒருவர், அங்குள்ள அதிகாரிகளின் கவனக்குறைவு காரணமாக கதவுகள் பூட்டப்பட்டு சென்றதால் சுமார் அரை மணி நேரம் சிக்கிக்கொண்ட சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்துமாறு நகர சபை உறுப்பினர் ராசிகா குணசிங்க கோரிக்கை விடுத்தார். கடந்த 07ஆம் திகதி நடைபெற்ற மகரகம நகர சபையின் மாதாந்த கூட்டத்தில் அவர் இந்த தகவலை வெளிப்படுத்தினார்.&nbsp;</p><p>&nbsp;தேசிய மக்கள் சக்தியின் சமன் சமரகோன் தலைமையில் நடைபெற்ற இந்த நகர சபை கூட்டத்தில் மேலும் கருத்து தெரிவித்த ராசிகா குணசிங்க, 17 வயதுடைய இந்த மாணவி நூலகத்தின் மேல் மாடியில் படித்துக்கொண்டிருந்து கீழே வந்தபோது அதிகாரிகள் கதவுகளையும் ஜன்னல்களையும் மூடிவிட்டு வீட்டிற்குச் சென்றிருந்தனர்.</p><h2>&nbsp;மாணவியை விட்டு கதவை பூட்டி சென்ற ஊழியர்கள்</h2><p> </p><p>அங்கு யாரும் இல்லாததால் பயந்துபோன மாணவி சத்தமிட்டு அழுதார், வீதியில் சென்ற இரண்டு குழந்தைகளுக்கு அந்த சத்தம் கேட்டு நகர சபை ஊழியர்களுக்கு அறிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/656343a0-9897-4835-bc31-abf1c622f111/26-6a79ab22b13f0.webp' /></p><p> </p><p>பின்னர் இரண்டு தொழிலாளர்கள் கூரையின் வழியாக நூலகத்திற்குள் குதித்ததால் மாணவி மேலும் பயந்துபோனார், பின்னர் வேறொருவர் சாவியைக் கொண்டுவந்து கதவைத் திறந்து அவரை வெளியே கொண்டுவந்தார். </p><p>அந்த நேரத்தில் அங்கு இருந்த ஒரு தொழிலாளி மாணவியை காணொளி எடுத்ததால் மாணவி கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகி முகத்தை மூடிக்கொண்டிருந்தார் என்றும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தங்கள் பொறுப்புகளைத் தட்டிக்கழித்துள்ளனர் என்றும் உறுப்பினர் சபையில் தெரிவித்தார்.</p><p></p><p>

</p><h2>நடைபெற்றுவரும் விசாரணை</h2><p>இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த நகர சபை தலைவர் சமன் சமரகோன் , இது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வாக்குமூலங்கள் பெறப்பட்டு அறிக்கைகள் கிடைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0b8d74cc-7399-41a7-8a16-690bd3a58f7d/26-6a79ab236c135.webp' /></p><p> </p><p>அந்த அதிகாரிகள் தவறிழைத்தது உறுதி செய்யப்பட்டால் அவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தலைவர் குறிப்பிட்டார்.</p><p> இதற்கிடையில், இந்த சம்பவம் காரணமாக மகரகம நகர சபை நூலகம் குழந்தைகளுக்கு பாதுகாப்பற்ற இடமாக மாறிவிட்டது என்றும், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அங்கு படிக்க அனுப்ப தயங்குவதாகவும்சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நகர சபை உறுப்பினர் காந்தி கோடிக்கார இங்கு குறிப்பிட்டார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-10T10:42:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிளிநொச்சி ரீச்சா கேளிக்கை பூங்காவில் என்ன தவறு நடந்தது?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/kilinochchi-reecha-food-festival-what-went-wrong-1786355875"></link>
            <id>https://jvpnews.com/article/kilinochchi-reecha-food-festival-what-went-wrong-1786355875</id>
            <summary type="text">&amp;nbsp; கிளிநொச்சி ரீச்சாவில் இடம்பெற்ற உணவு திருவிழா இடை நடுவில் நிறுத்தப்பட்ட சம்பவம் சமூக வலைத்தளங்களில் பெரும் பேசுபொருளாகியுள்ளது. 

குறித்த சம்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; கிளிநொச்சி <a href="https://jvpnews.com/article/reecha-food-festival-suspended-1786270923" target="_blank">ரீச்சாவில் இடம்பெற்ற உணவு திருவிழா</a> இடை நடுவில் நிறுத்தப்பட்ட சம்பவம் சமூக வலைத்தளங்களில் பெரும் பேசுபொருளாகியுள்ளது. 

குறித்த சம்பவம் தொடர்பில் சர்வதேச மனித உரிமை ஆர்வலர் முஹீத் ஜீரன் தனது முக நூலில் பதிவிட்டுள்ளதாவது,</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2e21cb00-9f80-49b9-8b6c-6ff7b62331bf/26-6a79a0a4b4956.webp' /></p><p><b> 

கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள பி.கே.யின் ரீச்சா கேளிக்கை பூங்காவில் என்ன தவறு நடந்தது?
</b></p><p>&nbsp;ரீச்சா கேளிக்கை பூங்கா மற்றும் உல்லாச விடுதி (ரீச்சா இயற்கை பண்ணை) என்பது இலங்கையின் கிளிநொச்சியில் அமைந்துள்ள 150 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஒரு சூழல் சுற்றுலா மற்றும் இயற்கை வேளாண் திட்டமாகும்.
</p><p>
 டிஸ்னிலேண்ட் பாணியிலான இந்தப் பூங்காவை, பி.கே. என அறியப்படும் பாஸ்கரன் கந்தையா என்ற இலங்கை-டச்சு தொழிலதிபர் 2018-ல் நிறுவினார். பி.கே., ஆறு நாடுகளில் செயல்படும் ஒரு ஐரோப்பிய தொலைத்தொடர்பு நிறுவனமான லெபாரா குழுமத்தின் இணை நிறுவனர் மற்றும் இயக்குனர் ஆவார். </p><p>மேலும், லண்டனைத் தளமாகக் கொண்ட பிரபலமான தமிழ் தொலைக்காட்சி அலைவரிசையான ஐபிசி தமிழின் தாய் நிறுவனமான லண்டன் தமிழ் மீடியாவின் தலைவராகவும் அவர் உள்ளார். </p><p>அண்மையில் அவர் தமிழ்வின், லங்காஸ்ரீ, சினியுலகம், மனிதன், ஐபிசி தமிழ், எல்பிசி தமிழ், விடுதலை, கனடாமிரர் மற்றும் ஜேவிபி நியூஸ் ஆகிய இணையதளங்களையும் வாங்கியதோடு, தமிழ் ஊடக சாம்ராஜ்யத்தில் கணிசமான பங்கையும் சொந்தமாகக் கொண்டுள்ளார்.
வட இலங்கையில் இந்த கேளிக்கை பூங்காவைக் கட்டுவதற்காக பி.கே. 1000 கோடி ரூபாய்க்கும் மேல் முதலீடு செய்துள்ளார். </p><p>சமீபத்தில் அவர் தனது கேளிக்கை பூங்காவில் நான்கு நாள் உணவுத் திருவிழாவை ஏற்பாடு செய்தார், அங்கு உணவுடன் கூடிய ஒவ்வொரு பொழுதுபோக்குக்கான நுழைவுச்சீட்டும் 3000 ரூபாய்க்கு விற்கப்பட்டது. </p><p>இருப்பினும், நேற்று அந்த கேளிக்கை பூங்காவிற்குள் பெரிய உணவு நெருக்கடி கலவரங்கள் ஏற்பட்டன, அங்கு வாடிக்கையாளர்கள் உணவுத் திருவிழாவில் உணவுப் பற்றாக்குறை குறித்து புகார் அளித்தனர். </p><p>நுழைவுச்சீட்டு வாங்கியவர்கள் உணவுத் திருவிழாவில் உணவு உண்ணாமலேயே திரும்பிச் சென்றனர். இத்தகைய பெரிய அவமானத்தையும் ஏமாற்றத்தையும் சந்தித்த பிறகு, எதிர்காலத்தில் இந்த கேளிக்கை பூங்காவிற்கு வருவதைப் புறக்கணிக்குமாறு வாடிக்கையாளர்கள் மற்றவர்களை வலியுறுத்தினர்.</p><p> வாடிக்கையாளர்களின் அதிருப்தி குறித்த பல சமூக ஊடக காணொளிகள் பரப்பப்பட்டு, அவை வைரலாகவும் பரவின.
உண்மையில், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நான் ஒரு நல்லெண்ணப் பயணமாக இந்த கேளிக்கை பூங்காவிற்குச் செல்லவிருந்தேன், ஆனால் அவ்வளவு நீண்ட பயணத்திற்கு என் நேரம் ஒருபோதும் அனுமதிக்கவில்லை.</p><p>
ஒரு நாளைக்கு 2500 வாடிக்கையாளர்கள் வருவார்கள் என்ற எதிர்பார்ப்புடன் 4 நாள் உணவுத் திருவிழா நிகழ்ச்சியை அவர்கள் ஏற்பாடு செய்திருந்ததாகவும், அந்த எண்ணிக்கைக்கு ஏற்ப உணவையும் ஏற்பாடு செய்திருந்ததாகவும் பி.கே. தரப்பிலிருந்து எனக்குக் கிடைத்தது. அவர்கள் 100 வகையான உணவுகளையும் 100 விதமான பொழுதுபோக்கு நடவடிக்கைகளையும் ஏற்பாடு செய்திருந்தனர். </p><p>முதல் நாளில் 10,000 பேரும், இரண்டாம் நாளில் 30,000-க்கும் மேற்பட்டோரும் வருகை தந்தனர். இது ஒரு எதிர்பாராத கூட்டமாக இருந்தது. உதாரணமாக, அவர்களிடம் 5 ஹாப்பர்ஸ் நிலையங்கள் இருந்தன, ஆனால் இரண்டு மணி நேரத்தில் 5,000 பேர் சாப்பிடுவதற்காகக் காத்திருந்தனர். </p><p>BK தரப்பின்படி, இதை நிர்வகிப்பது அவர்களுக்கு எளிதான காரியமல்ல. இருப்பினும், ஆன்லைன் முன்பதிவைத் தவிர, கவுண்டரில் நேரடியாக டிக்கெட் வாங்கியவர்களையும் அனுமதித்ததே BK தரப்பிலிருந்து நடந்த தவறு. அதுதான் மிகப்பெரிய தவறு. </p><p>அவர்கள் பணத்தைத் திருப்பிக் கொடுத்து, ஏற்பட்ட சிரமத்திற்காக மன்னிப்பும் கோரியுள்ளனர். அவர்களின் கூற்றுப்படி, BK-யின் எதிரிக் கும்பல் ஒன்று, யூடியூபர்களைப் பயன்படுத்தி அவரைத் தாக்கி, ஒரு பெரிய பிரச்சனையை உருவாக்கியுள்ளது.
</p><p>எப்படியிருந்தாலும், ஒரு வணிகத்தின் நிலைத்தன்மைக்கு நுகர்வோர் திருப்தி இன்றியமையாதது என்பதால், எதிர்காலத்தில் இதுபோன்ற பிரச்சனைகளைத் தவிர்க்க இது அமைப்பாளர்களுக்கு ஒரு பாடம் என்று நான் நினைக்கிறேன். </p><p>இதற்கிடையில், தனது தொழிலை அழிப்பதற்கான எதிரியின் சதித்திட்டத்தின் எல்லைக்குள் செல்லாமல், எதிர்காலத்தில் இது மீண்டும் நிகழக்கூடாது என்று எச்சரிக்கை விடுப்பதன் மூலம் மக்கள் பி.கே-யின் பொழுதுபோக்கு பூங்காவிற்கு ஆதரவளிக்க வேண்டும்.</p><p>
முஹீத் ஜீரன் 
சர்வதேச மனித உரிமை ஆர்வலர்&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-10T10:41:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மரண தண்டனை விதிக்கப்பட்ட நபர் மாயம்; பொதுமக்களின் உதவி கோரும் பொலிஸார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/police-seek-public-help-ragama-death-sentence-1786351263"></link>
            <id>https://jvpnews.com/article/police-seek-public-help-ragama-death-sentence-1786351263</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;2019-ஆம் ஆண்டு இடம்பெற்ற கொலை வழக்கு ஒன்றில் மரண தண்டனை விதிக்கப்பட்ட, ரகம பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய நபர் ஒருவரைக் கண்டறிய உதவுமாறு பொ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;2019-ஆம் ஆண்டு இடம்பெற்ற கொலை வழக்கு ஒன்றில் மரண தண்டனை விதிக்கப்பட்ட, ரகம பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய நபர் ஒருவரைக் கண்டறிய உதவுமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
</p><p>ராகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வால்பொல பகுதியில் பெண் ஒருவரைக் கொலை செய்த குற்றச்சாட்டில் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டதையடுத்து, நீகொம்போ உயர் நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை விதித்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6c251a83-16f6-486b-a176-89b29f96e5a1/26-6a798ea14d267.webp' /></p><h2>&nbsp;சந்தேக நபர் இல்லாத நிலையிலேயே&nbsp; தீர்ப்பு</h2><p>
</p><p>
குறித்த நபர் நீதிமன்றத்தில் முன்னிலையாகத் தவறியதால், குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் விதிகளின் கீழ்&nbsp; சந்தேக நபர் இல்லாத நிலையிலேயே இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டது.</p><p></p><p>
</p><p>
அவரைக் கண்டறிவதற்குப் பொதுமக்களின் ஒத்துழைப்பை பொலிஸார் கோரியுள்ளனர். இது குறித்த தகவல் தெரிந்தவர்கள் பின்வரும் தொலைபேசி எண்கள் ஊடாக பொலிஸாருக்குத் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்:</p><p>

பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி (OIC), ரகம 2 — 0718591604
பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி (OIC), குற்றப் பிரிவு — 0719627561</p><p></p>]]></content>
            <updated>2026-08-10T10:41:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[இத்தாலியின் நெல் விளையும் பகுதிகளை வாட்டி வதைக்கும் வறட்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/water-supplies-hit-record-lows-1786358553"></link>
            <id>https://news.lankasri.com/article/water-supplies-hit-record-lows-1786358553</id>
            <summary type="text">Drought scorches Italy&#039;s rice belt: நீர் இருப்பு வரலாறு காணாத அளவு குறைந்துள்ள நிலையில், இத்தாலியின் நெல் விளையும் பகுதிகளை வறட்சி வாட்டி வதைக்கிறது.ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>Drought scorches Italy's rice belt: நீர் இருப்பு வரலாறு காணாத அளவு குறைந்துள்ள நிலையில், இத்தாலியின் நெல் விளையும் பகுதிகளை வறட்சி வாட்டி வதைக்கிறது.</p><h2>நெல் உற்பத்தி&nbsp;</h2><p>
</p><p>'காசினோ ரினால்டா' (Cascina Rinalda) பண்ணையானது, பெரும்பாலும் 'போ' (Po) பள்ளத்தாக்குப் பகுதியில் அமைந்துள்ள சுமார் 3,500 இத்தாலிய நெல் வயல்களில் ஒன்றாகும்; </p><p>இவ்வயல்கள் நீண்டகால வெப்ப அலைகள் மற்றும் போதிய மழையின்மை போன்ற சவால்களை எதிர்கொண்டு வருகின்றன, இதனால் பாசனக் காலத்தில் நீர் கிடைப்பதில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9bb82373-8a25-4caf-a0b6-1b6e5e94511d/26-6a79ab1bbbd57.webp' /></p><p> </p><p>தேசிய நெல் ஆணையத்தின் தரவுகளின்படி, 2025-ஆம் ஆண்டில் சுமார் 235,000 ஹெக்டேர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டதன் மூலம், ஐரோப்பாவிலேயே அதிக அளவில் நெல் உற்பத்தி செய்யும் நாடாக இத்தாலி விளங்குகிறது. </p><p>இதில் 80 சதவீதத்திற்கும் அதிகமானவை, நீண்ட காலமாக 'போ' (Po) ஆற்றுப் படுகைப் பகுதியில் செழித்து வளர்ந்து வரும் வடக்கு மாகாணங்களான பாவியா (Pavia), வெர்செல்லி (Vercelli) மற்றும் நோவாரா (Novara) ஆகிய இடங்களில் பயிரிடப்படுகின்றன.</p><p></p><p>
</p><p>இருப்பினும், ஆல்ப்ஸ் மலைப்பகுதி ஏரிகளில் நீர் இருப்பு குறைந்து வருவதால், 'போ' (Po) நதிப் படுகை ஆணையம் இந்த ஆண்டு கடுமையான வறட்சி நிலவுவதாக எச்சரித்துள்ளது.</p><h2>100 மில்லியன் யூரோ</h2><p> </p><p>தற்போது 'மஜியோரே' (Maggiore) ஏரி தீவிர வறட்சி நிலையில் உள்ளதாக வகைப்படுத்தப்பட்டுள்ளது; அதேவேளையில், 'கிரெமோனா' (Cremona) பகுதியில் 'போ' நதியின் நீர்மட்டம் அண்மையில் இந்த ஆண்டின் இக்காலகட்டத்திற்கான மிகக் குறைந்த அளவை எட்டியுள்ளது. </p><p>நீண்ட காலமாகப் போதுமான நீர் வளங்களைப் பெற்று வந்த இத்தாலியின் நெல் சாகுபடிப் பகுதி, நடப்புப் பருவத்தைக் காப்பாற்றிக்கொள்ள முன்னெப்போதும் இல்லாத வகையிலான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது; 2022-ல் நிலவிய கடுமையான வறட்சியை விடவும் தற்போதைய சூழல் மிகவும் சவாலானதாக இருப்பதாக உள்ளூர் மக்கள் கூறுகின்றனர். </p><p>இதனிடையே, இந்த ஆண்டு சுழற்சி முறையை அறிமுகப்படுத்த வேண்டியிருந்தது என்று Est Sesia பாசனக் கூட்டமைப்பின் நீர் மேலாண்மை இயக்குநர் ஃபிராங்கோ புல்லானோ கூறியுள்ளார். </p><p>இது லோம்பார்டி மற்றும் பீட்மாண்ட் பகுதிகளுக்கு இடையே உள்ள நெல் சாகுபடிப் பரப்பில் பெரும்பகுதிக்கு நீர் வழங்குகிறது. இந்தத் திட்டத்தின் கீழ், வெவ்வேறு பகுதிகளுக்கு மாறி மாறி வரும் வாரங்களில் தண்ணீர் வழங்கப்படுவதால், பிராந்தியம் முழுவதும் பற்றாக்குறை நிர்வர்த்தி செய்யபப்டுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3ab4fe67-a3fe-4e70-a115-c79cd8c6d2e5/26-6a79ab1c6dc18.webp' /></p><p> கான்ஃபாக்ரிகோல்டுரா விவசாயிகள் சங்கத்தின் உள்ளூர் கிளையின்படி, வறட்சி, அதிகரித்து வரும் உற்பத்திச் செலவுகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் சாராத ஏற்றுமதியாளர்களின் போட்டியின் மத்தியில் சரிந்து வரும் நெல் விலை ஆகிய காரணிகளின் கூட்டு விளைவால், பாவியா பகுதி வேளாண் மக்கள் 100 மில்லியன் யூரோக்களுக்கும் அதிகமான இழப்பைச் சந்திக்கக்கூடும். </p><p>வெப்பமயமாதலால் பனி முன்கூட்டியே உருகுவதால், அதிக நீர் கிடைக்கும்போது அதைப் பயன்படுத்த வேண்டிய குளிர்கால வெள்ளப்பெருக்கு போன்ற, பெருமளவில் வழக்கொழிந்து போன நடைமுறைகளை மீண்டும் கொண்டு வருவது குறித்து விவசாயிகள் விவாதித்து வருகின்றனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-10T10:40:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதி : பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/public-assistance-in-arresting-death-row-inmate-1786356396"></link>
            <id>https://tamilwin.com/article/public-assistance-in-arresting-death-row-inmate-1786356396</id>
            <summary type="text">2019ஆம் ஆண்டில் ராகம பொலிஸ் பிரிவின் வல்பொலவில் வசிக்கும் ஒரு பெண்ணைத் தாக்கி கொலை செய்த வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளியைக் கைது செய்ய, ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>2019ஆம் ஆண்டில் ராகம பொலிஸ் பிரிவின் வல்பொலவில் வசிக்கும் ஒரு பெண்ணைத் தாக்கி கொலை செய்த வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளியைக் கைது செய்ய, பொலிஸ் பொதுமக்கள் உதவியை நாடியுள்ளது.
</p><p>
நீர்கொழும்பு உயர் நீதிமன்றம் குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்தது. இந்நிலையில் அவர் நீதிமன்றத்தில் முன்னிலையாகத் தவறியதால், குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் விதிகளின்படி இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><h2>ஏதேனும் தகவல் தெரிந்தால்</h2><p>
பொலிஸாாரால் தேடப்படும் குற்றவாளி, ரணேபுர தேவகே ரணுக எரண்ட விஜேதுங்க என்ற 38 வயதுடைய ஆண் ஆவார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/caa5ed06-3da7-4f72-967f-40a9bdd6aa52/26-6a79a7cab3546.webp' /></p><p>
அவரது முகவரி: எண் 35/1, உக்கஹேன, வல்பொல, ராகம.
</p><p>
குற்றவாளி குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தால், ராகம பொலிஸ் பொறுப்பதிகாரியை 071 859 1604 என்ற எண்ணிலோ அல்லது குற்றப்பிரிவு பொறுப்பதிகாரியை 071 962 7561 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளுமாறு பொலிஸ் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-10T10:28:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Keethan</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பகுதியில் பூட்டப்பட்ட வீட்டை உடைத்து திருட்டு - விசாரணையில் சிக்கிய இருவர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/burglary-breaks-into-locked-house-in-tamil-area-1786357310"></link>
            <id>https://tamilwin.com/article/burglary-breaks-into-locked-house-in-tamil-area-1786357310</id>
            <summary type="text">முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் பாரதிதிபுரம் கிராமத்தில் போதைப்பொருள் வாங்க பணம் இல்லாத காரணத்தினால் வீடு ஒன்றைய உடைத்து திருடிய இருவர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் பாரதிதிபுரம் கிராமத்தில் போதைப்பொருள் வாங்க பணம் இல்லாத காரணத்தினால் வீடு ஒன்றைய உடைத்து திருடிய இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
இதன்போது, பணம் மற்றும் பெறுமதியான கையடக்க தொலைபேசிகள் திருட்டு போயுள்ளதாக வீட்டின் உரிமையாளர் குற்றம் சுமத்தியுள்ளார். </p><h2>

இலட்சம் பெறுமதியான பொருட்கள் திருட்டு</h2><p>
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், </p><p>

 கடந்த 7ஆம் திகதி போதைப்பொருள் வாங்க பணம் இல்லாத காரணத்தினால் குறித்த பகுதியைச் சேர்ந்த இரு இளைஞர்களும் அப்பகுதியில் உள்ள வீடு ஒன்றை உடைத்து பணம் மற்றும் கையடக்க தொலைபேசிகளை திருடியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5522c426-c6d0-4002-8a97-0a8afa2d6368/26-6a79a6c65882c.webp' /></p><p> 

இதன்போது, 125 ஆயிரம் ரூபாய் பணம், 80 ஆயிரம் ரூபாய் பெறுமதியான கையடக்க தொலைபேசிகள் திருட்டு போயுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.</p><p> 

இதனைத் தொடர்ந்து, குறித்த திருட்டு சம்பவம் தொடர்பில், வீட்டின் உரிமையாளர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.</p><h2> 


நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை</h2><p>
புதுக்குடியிருப்பு குற்றத்தடுப்பு பிரிவின் பொலீஸ் பரிசோதகர் சிறீவன்ச,பொலீஸ்
சாயன்ட் 45555 அஜித் 88582 ஜெனன் உள்ளிட்டவர்கள் விசாரணைகளை மேற்கொண்டு சந்தேக
நபர்கள் இருவரை கைதுசெய்துள்ளதுடன், அவர்கள் 80 ஆயிரம் பெறுமதியான தொலைபேசியை, 8 ஆயிரம் ரூபாய்க்கு அடகு வைத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3006d85b-acc2-473f-a920-91b2f9b86645/26-6a79a6c72f252.webp' /></p><p> 

இதனைத் தொடர்ந்து, தொலைபேசி மீட்கப்பட்டுள்ளதுடன், கைதுசெய்யப்பட்ட சந்தேக நபரில் ஒருவர் மீது ஏற்கனவே வழக்கு ஒன்று நீதிமன்றத்தில் உள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. </p><p>

இந்த நிலையில், சந்தேக நபர்களிடம் இருந்து திருடப்பட்ட பணத்தை மீட்ட பின்னர், நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு உட்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.&nbsp; &nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-10T10:25:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[றீச்சாவில் உணவுத்திருவிழாவில் திட்டமிடப்பட்ட சதி நடவடிக்கை : எழுந்துள்ள குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/planned-conspiracy-at-the-reecha-food-festival-1786356786"></link>
            <id>https://ibctamil.com/article/planned-conspiracy-at-the-reecha-food-festival-1786356786</id>
            <summary type="text">கிளிநொச்சி - இயக்கச்சியில் அமைந்துள்ள றீச்சா ஒருங்கிணைந்த பண்ணையில் அண்மையில் நடைபெற்ற உணவுத்திருவிழாவில் எழுந்த சர்ச்சைகளும் அதன் பின்னணியில் சில உண்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிளிநொச்சி - இயக்கச்சியில் அமைந்துள்ள றீச்சா ஒருங்கிணைந்த பண்ணையில் அண்மையில் நடைபெற்ற உணவுத்திருவிழாவில் எழுந்த சர்ச்சைகளும் அதன் பின்னணியில் சில உண்மைகளும் உண்டு.</p><p>

திடீரென மக்கள் திரட்சியாக வந்தமையினால் பிரமாண்டமாக நடைபெற்ற அந்த உணவுத்திருவிழா சிலரால் விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்டது.
</p><p>
நிகழ்வு ஏற்பாட்டாளர்கள் எதிர்பார்த்த அளவை விட பல்லாயிரக் கணக்கான மக்கள் ஓரே நேரத்தில் ஒரே இடத்தில் திரண்டதனால் உணவு விநியோகத்திலும் தவிர்க்க முடியாத சில தாமதங்களும் அசௌகரியங்களும் ஏற்பட்டன.
</p><p>
பல்லாயிரக் கணக்கான மக்கள் கூடிய நிலையில் ஏற்பட்ட அசௌகரியத்திற்கு பொறுப்பேற்று றீச்சாவின் நிறுவனர் உள்ளே வந்த ஒவ்வொருவரிடமும் மன்னிப்பு கோரினார்.
</p><p>
அன்றைய நாளில் றீச்சா வளாகத்தில் இருந்த அலங்காரங்கள் சேதமாக்கப்பட்டமை, மரங்களுக்கு சேதம் ஏற்படுத்தியமை அதுமாத்திரமின்றி அளவுக்கு அதிகமான உணவுகளை எடுத்து அவற்றை வீண் விரயமாக அந்தப் பகுதிகளில் சிந்தச் செய்தமை போன்ற நடவடிக்கைகளே இந்த விவகாரத்தின் மூலகாரணமாகும். </p><p>

செயற்கையான ஒரு பிரச்சினையைத் தோற்றுவிக்கும் வகையில், இப்படியான நகர்வுகள் மேற்கொள்ளப்பட்டதாக என்ற கேள்வி அந்த நிறுவனத்தின் உரிமையாளரால் ஆதாரபூர்வமாக எழுப்பப்பட்டுள்ளது.</p><p><b>இது குறித்த மேலும் பல விடயங்களை கீழுள்ள காணொளியில் காண்க....</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/wyn_c6u3fNU" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-10T10:20:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழக அரசு அமைத்துள்ள குழுவில் பிகில் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்திக்கு பொறுப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/producer-archana-kalpathi-in-tn-govt-committee-1786354858"></link>
            <id>https://ibctamilnadu.com/article/producer-archana-kalpathi-in-tn-govt-committee-1786354858</id>
            <summary type="text">கோயில்களுக்கான அறங்காவலர்களை தேர்வு செய்ய தமிழக அரசு அமைத்துள்ள குழுவில் பிகில் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்திக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
 
அர...</summary>
            <content type="html"><![CDATA[<p>கோயில்களுக்கான அறங்காவலர்களை தேர்வு செய்ய தமிழக அரசு அமைத்துள்ள குழுவில் பிகில் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்திக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
</p><h3> 
அரசு பொறுப்பு சர்ச்சை</h3><p> 

முதலமைச்சர் விஜய்யின் தவெக ஆட்சியில், விஜய்க்கு நெருக்கமானவர்களுக்கு முக்கிய அரசு பொறுப்பு வழங்கப்பட்டதாக சர்ச்சை எழுந்தது. </p><p>

முன்னதாக அவருடைய ஆஸ்தான ஜோதிடர் ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேல் முதல்வர் விஜயின் அரசியல் பிரிவு சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டு அரசாணை வெளியானது. 

பின்னர் கடும் எதிர்ப்பு காரணமாக இந்த நியமனம் திரும்பபெறப்பட்டது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/db472ece-23db-4821-aa90-fd8878ae355e/26-6a799cab8eb85.webp' /></p><p>

அதனையடுத்து, லியோ, மாஸ்டர் போன்ற படங்களின் இணைத் தயாரிப்பாளரும் தனது மேலாளருமான ஜெகதீஷ் பழனிசாமி முதலமைச்சரின் தனிச் செயலாளராக நியமிக்கப்பட்டார். </p><p>

மேலும், ஜனநாயகன் படத்தயாரிப்பாளரான கர்நாடகாவை சேர்ந்த கே.வெங்கட நாராயணா தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி என்ற அரசு பதவியில் நியமிக்கப்பட்டார்.&nbsp;</p><p></p><h3> 

அரசு அமைத்துள்ள குழுவில் அர்ச்சனா கல்பாத்தி</h3><p> 

தற்போது, பிகில் பட தயாரிப்பாளரான அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு அமைத்துள்ள குழுவில் இடம் அளிக்கப்பட்டுளளது.</p><p> 

இந்து சமய அறநிலையத் துறை ஆளுகைக்குட்பட்ட திருக்கோயில்களுக்கு பரம்பரை முறைவழி சாரா அறங்காவலர்களை நியமனம் செய்திட உரிய வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட்டு ஆணை வெளியிடப்பட்டுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/71662dbc-4e90-47ad-ac4a-b11798a7b3fd/26-6a799cac5a50d.webp' /></p><p> 

திருக்கோயில்களுக்கு பரம்பரை முறைவழி சாரா அறங்காவலர்களை நியமனம் செய்திட, விண்ணப்பதாரர்களை தெரிவு செய்து உரிய பெயர்ப் பட்டியல் தயாரித்து அரசுக்கு அளித்திட மாநிலக்குழு அமைத்து ஆணை வெளியிடப்பட்டது.

இந்த குழுவின் பதவிக்காலம் 2 ஆண்டுகள் ஆகும்.</p><p> 

இந்த குழுவின் தலைவராக தவத்திரு சிவஞான பாலய சுவாமிகள். பொம்மபுரம் ஆதினம், மயிலம் நியமிக்கப்பட்டுள்ளார். </p><p>

குழுவின் துணைத் தலைவராக ஓய்வ பெற்ற மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதி டாக்டர். K.ராமநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். </p><p>

மேலும், தயாரிப்பாளர் திருமதி அர்ச்சனா கல்பாத்தி அகோரம், ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி திரு. பராசம்பத் இ.ஆ.ப. (ஓய்வு), திருமதி. மாசுமதி (எ) சுமதிஸ்ரீ, டாக்டர் த.வேல்முருகன் ஆகியோர் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளனர். </p><p>

மேலும், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பதவி வழி உறுப்பினர்/செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.&nbsp; &nbsp; &nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp;</td></tr></tbody></table><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-10T10:18:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[புற்றுநோய் அபாயகட்டத்தில் அமெரிக்க முன்னாள் அதிபர் ஜோ பைடன்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/former-us-president-joe-biden-at-risk-of-cancer-1786357155"></link>
            <id>https://canadamirror.com/article/former-us-president-joe-biden-at-risk-of-cancer-1786357155</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜோ பைடனைத் தாக்கியுள்ள கொடிய புற்றுநோய், தற்போது அவரின் எலும்புகளையும் தாண்டி உடலின் பிற பகுதிகளுக்கும் வேக...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜோ பைடனைத் தாக்கியுள்ள கொடிய புற்றுநோய், தற்போது அவரின் எலும்புகளையும் தாண்டி உடலின் பிற பகுதிகளுக்கும் வேகமாகப் பரவி வருவதாக அவரது மகன் அண்டர் பைடன் (Hunter Biden) மிகுந்த வேதனையுடன் தெரிவித்துள்ளார். </p><p> 

பிபிசி செய்தி நிறுவனத்திற்கு அளித்த நேர்காணலில் பேசிய அண்டர் பைடன், தனது தந்தையின் உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ளதை வெளிப்படுத்தினார். "புற்றுநோய் அவரது எலும்புகள் மற்றும் அதற்கும் அப்பால் பரவிவிட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0aff6e6a-5e55-4695-92e0-75ba6f11ad3b/26-6a79a5a49f42d.webp' /></p><h2>&nbsp; மிகவும் கடினமாகவும், பெருந்துயரமாகவும் உள்ளது&nbsp;</h2><p> </p><p>
இது அவருக்குக் கடுமையான வலியையும், பல வகைகளில் உடல் தளர்ச்சியையும் ஏற்படுத்தி வருகிறது" எனக் கூறிய அவர், தனது தந்தையின் தற்போதைய நிலையைப் பார்ப்பது "உண்மையிலேயே மிகவும் கடினமாகவும், பெருந்துயரமாகவும் உள்ளது" கண்ணீர் மல்கக் குறிப்பிட்டார்.</p><p> 

 83 அகவையுடைய மக்களாட்சிக் கட்சியின் தலைவரான ஜோ பைடன், 2021 முதல் 2025 வரை அமெரிக்காவின் 46-வது அதிபராகப் பணியாற்றினார். 

அவரது உடல்நலம் குறித்த பல்வேறு ஐயங்கள் எழுந்ததால், 2024-ஆம் ஆண்டு தேர்தலில் அவர் போட்டியிடவில்லை. </p><p>அவருக்குப் பதிலாகப் போட்டியிட்ட கமலா ஹாரிஸ் , குடியரசுக் கட்சியின் டொனால்ட் டிரம்பிடம் தோற்றார். 
வெள்ளை மாளிகையிலிருந்து விடைபெற்று நான்கு மாதங்களுக்குப் பிறகு, கடந்த 2025-ஆம் ஆண்டு மே மாதம் தனக்கு முன்னிற்குஞ்சுரப்பிப் புற்றுநோய் (Prostate cancer) இருப்பதை ஜோ பைடன் உலகிற்கு அறிவித்தார்.
</p><p> தொடரும் மருத்துவப் போராட்டங்கள்அதன்பின்னர் கதிர்வீச்சு மருத்துவம் மற்றும் இயக்குநீர் மருத்துவக் (Hormone therapy) கட்டமைப்புக்குள் அவர் உட்படுத்தப்பட்டார். </p><p>

கடந்த மாதம் கூட, தனது பணிக்காலம் குறித்த புதிய நூல் ஒன்றின் வெளியீட்டு அறிவிப்பின்போது, தனது மருத்துவம் "மிகவும் நன்றாக" சென்று கொண்டிருப்பதாக அவர் கூறியிருந்தார். ஆனால், நோயின் வீரியம் தற்போது கட்டற்ற நிலையை எட்டியுள்ளதை அண்டர் பைடனின் சொற்கள் உறுதிப்படுத்துகின்றன</p>]]></content>
            <updated>2026-08-10T10:17:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[சொகுசு ஜீப்பில் கஞ்சா கடத்திய இளம் தம்பதி கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/young-couple-arrested-for-smuggling-ganja-1786356204"></link>
            <id>https://ibctamil.com/article/young-couple-arrested-for-smuggling-ganja-1786356204</id>
            <summary type="text">&amp;nbsp;சொகுசு ஜீப்பில் கஞ்சா கடத்திச் சென்ற இளம் தம்பதியினர் ஆராச்சிக்கட்டுவ காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புத்தளம்-சிலாபம் சாலையில் உள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;சொகுசு ஜீப்பில் கஞ்சா கடத்திச் சென்ற இளம் தம்பதியினர் ஆராச்சிக்கட்டுவ காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p>
புத்தளம்-சிலாபம் சாலையில் உள்ள பத்துலுயோயா காவல் சோதனைச் சாவடியில் நடத்தப்பட்ட சோதனையின் போது இருவரும் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.</p><h2>சொகுசு ஜீப்பிலிருந்து மீட்கப்பட்ட 17 கிலோ கஞ்சா</h2><p>
</p><p>
சொகுசு ஜீப்பிலிருந்து 17 கிலோகிராம் மற்றும் 985 கிராம் கஞ்சா காவல்துறை காவலில் எடுக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9e2e36a9-3d33-414f-a66b-b807c58198ed/26-6a79a3a51e9bd.webp' /></p><p>&nbsp;கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மொனராகல ஹப்பகமுவ பகுதியைச் சேர்ந்த 26 வயதுடையவர், மற்றொரு சந்தேக நபர் ராஜாங்கனை பகுதியைச் சேர்ந்த 23 வயதுடையவர்.</p><h2>விடுதலை செய்ய ஐந்து இலட்சம் கொடுக்க முயற்சி</h2><p>
</p><p>
கஞ்சா கையிருப்பு பறிமுதல் செய்யப்பட்ட பின்னர், சோதனை நடத்திய காவல்துறை அதிகாரிகளுக்கு, தங்களை விடுவிக்குமாறு கோரி, சந்தேக நபர் ஒரு லட்சம் ரூபாய் லஞ்சம் கொடுக்க முயன்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னர் சந்தேக நபர் அந்தத் தொகையை ஐந்து லட்சம் ரூபாயாக உயர்த்த முயன்றதும் தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/90084ab6-766c-4afc-bd07-f1e51368f35d/26-6a79a3a5e71df.webp' /></p><p>
</p><p>
சந்தேக நபர்கள் இன்று (10) புத்தளம் நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட உள்ளனர்.</p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-10T10:10:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிளாஸ்டிக்கையே சிதைக்கும் பூஞ்சை: குப்பை மேட்டில் ஒரு அரிய கண்டுபிடிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/scientists-found-waste-dump-fungus-degrade-plastic-1786356470"></link>
            <id>https://news.lankasri.com/article/scientists-found-waste-dump-fungus-degrade-plastic-1786356470</id>
            <summary type="text">மண்ணில் மட்காமல் நீண்ட காலம் கிடந்து மண் மாசுவை ஏற்படுத்தும் பிளாஸ்டிக்கையே சிதைக்கக்கூடிய பூஞ்சை ஒன்றை அறிவியலாளர்கள் கண்டுபிடித்துள்ளார்கள்.


பி...</summary>
            <content type="html"><![CDATA[<p>மண்ணில் மட்காமல் நீண்ட காலம் கிடந்து மண் மாசுவை ஏற்படுத்தும் பிளாஸ்டிக்கையே சிதைக்கக்கூடிய பூஞ்சை ஒன்றை அறிவியலாளர்கள் கண்டுபிடித்துள்ளார்கள்.
</p><p>

பிளாஸ்டிக் பொருட்கள், இயற்கையாக மண்ணில் மட்காமல் நீண்ட காலம் கிடக்கும் விடயம், மனித குலத்துக்கு பெரும் தொல்லையாக காணப்படும் நிலையில், பிளாஸ்டிக்கையே சிதைக்கக்கூடிய பூஞ்சை ஒன்றை அறிவியலாளர்கள் கண்டுபிடித்துள்ளார்கள்.
</p><h3>
பிளாஸ்டிக்கையே சிதைக்கும் பூஞ்சை
</h3><p>
பாகிஸ்தான் மற்றும் சீன அறிவியலாளர்கள், பிளாஸ்டிக்கையே மக்கச் செய்யும் பூஞ்சை ஏதாவது உள்ளதா என்பதைக் கண்டறியும் ஆய்வில் ஈடுபட்டுவந்துள்ளார்கள்.
</p><p>
அதற்காக ஆய்வு மேற்கொள்வதற்காக அவர்கள் தேர்ந்தெடுத்த இடம், பாகிஸ்தான் நாட்டின் தலைநகரான இஸ்லாமாபாதில் உள்ள குப்பை மேடு ஒன்று!&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c45f9584-1313-404d-833e-1f5ea5d5073c/26-6a79a2f81fbd1.webp' /></p><p>
அந்தக் குப்பை மேட்டில் கிடந்த பிளாஸ்டிக் போத்தல்களை சிதைக்கக்கூடிய ஏதாவது பூஞ்சை உள்ளதா என்னும் ஆய்வில் அவர்கள் ஈடுபட, அப்படி ஒரு பூஞ்சை உண்மையாகவே உள்ளதை அவர்கள் கண்டுபிடித்துள்ளார்கள்.
</p><p>
ஆம், ஆஸ்பெர்ஜில்லஸ் டியூபிங்கென்சிஸ் (Aspergillus tubingensis) என்னும் பூஞ்சையால், கடினமான பிளாஸ்டிக்கான Polyurethane என்னும் பிளாஸ்டிக்கை இரண்டு மாதங்களில் சிதைக்கமுடியும் என்பதை அவர்கள் கண்டுபிடித்துள்ளார்கள்.&nbsp;</p><p></p><p>
அதாவது, உண்மையில் இந்த பூஞ்சை பிளாஸ்டிக் மீது வளரும்போது அந்த பிளாஸ்டிக்கை இரண்டு மாதங்களில் காணாமல்போகச் செய்துவிடும் என்று பொருள் இல்லை.
</p><p>
விடயம் என்னவென்றால், இந்த Polyurethane என்னும் பிளாஸ்டிக், தோல் பொருட்களுக்கு மாற்றாக, குறைந்த விலையில் தோல் போலவே காணப்படும் செயற்கை தோல் (synthetic leather) காலணிகள், தண்ணீர் புகாத மழை கோட்கள், மெத்தைகள் போன்றவற்றின்மீது பூசப்படுகிறது.</p><p>

அப்படியிருக்கும்பட்சத்தில், இந்த வகை ஆஸ்பர்ஜில்லஸ் பூஞ்சை பிளாஸ்டிக்கை இரண்டு மாதங்களில் சிதைக்குமானால், இரண்டு மாதங்களில் பூஞ்சை படர்ந்த காலணிகளும், மழை கோட்களும் மாயமாகிவிடும்.
</p><p>
ஆக, விடயம் அப்படியல்ல, அந்த பூஞ்சை உருவாக்கும் ஒருவித என்சைம், இந்த பிளாஸ்டிக்கை சிதைக்க காரணமாக அமைந்துள்ளது என்பதுதான் பொருள்.</p><p>

மேற்கொண்டு மேற்கொள்ளப்படும் ஆய்வுகள் மூலம், அந்த என்சைமை ஆய்வாளர்கள் தனியாக பிரித்தெடுக்கும் நிலையில், அதை பெருமளவில் தயாரித்து, மட்காத பிளாஸ்டிக்கை மட்கச் செய்வதற்காக பயன்படுத்தமுடியும் என்பதுதான் இந்த ஆய்வின் மூலம் தெரியவந்துள்ள ஒரு நல்ல செய்தியாகும்!&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-10T10:08:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[eKYC Update செய்வது எப்படி? எளிமையான விளக்கங்களுடன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/lpg-gas-cylinder-ekyc-update-details-1786354647"></link>
            <id>https://manithan.com/article/lpg-gas-cylinder-ekyc-update-details-1786354647</id>
            <summary type="text">Gas Cylinder eKYC Update Details: சமையல் எரிவாயு சிலிண்டர் பெறுவோர் கண்டிப்பாக eKYC நிறைவு செய்ய வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

சமையல் எர...</summary>
            <content type="html"><![CDATA[<p>Gas Cylinder eKYC Update Details: சமையல் எரிவாயு சிலிண்டர் பெறுவோர் கண்டிப்பாக eKYC நிறைவு செய்ய வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.</p><p>

சமையல் எரிவாயு சிலிண்டர் பெறுபவர்கள் ஆகஸ்ட் 16ஆம் தேதிக்குள் eKYC நிறைவு செய்யாவிட்டால், அவர்களுக்கு சிலிண்டர் பெறுவதில் சிக்கல் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><h2>சமையல் எரிவாயு சிலிண்டர்</h2><p>
வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் ரூ.957.50-க்கும், வணிக பயன்பாட்டு சிலிண்டர் ரூ.2906-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/88c373cd-b451-47be-982a-3bd6df9a810f/26-6a799bdabc6c6.webp' /></p><p>

இந்த நிலையில், வீட்டு உபயோக சிலிண்டருக்கு எரிவாயு நிரப்புதல், மானியம் மற்றும் பிற சேவைகள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்யபொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், நுகர்வோரை ஆதார் அடிப்படையிலான eKYC சரிபார்ப்பை முடிக்க மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.
</p><p>
எனவே, சமையல் எரிவாயு சிலிண்டர் பெறுபவர்கள் ஆகஸ்ட் 16ஆம் தேதிக்குள், எரிவாயு சிலிண்டருக்கான eKYC-ஐ முடிக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.</p><p>

அதே நேரத்தில், முன்னதாக eKYC சரிபார்ப்பை முடித்தவர்கள் மீண்டும் செய்யத் தேவையில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
</p><h2>
எப்படி செய்வது?
</h2><p>
சமையல் எரிவாயு சிலிண்டர் பெறுபவர்கள், அந்ததந்த கேஸ் நிறுவனங்களின் (இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம்) செயலி அல்லது இணையதளம் வாயிலாக eKYC சரிபார்ப்பை முடிக்கலாம்.
</p><p>
Indane சிலிண்டர் பயன்படுத்துவோர் indianoil one செயலியையும், பாரத் கேஸ் பயன்படுத்துவோர் hello bpcl செயலியையும், HP கேஸ் பயன்படுத்துவோர் hp pay என்ற செயலியையும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.</p><ul><li>

செயலியை பதிவிறக்கம் செய்த பின், செல்போன் எண் மற்றும் நுகர்வோர் எண் ஆகியவற்றை உள்ளிடவும்.

பின்னர் Update eKYC என்பதை Click செய்து, உங்கள் 12 இலக்கு எண் கொண்ட ஆதார் எண்ணை உள்ளிட வேண்டும். </li><li>

அடுத்து Play Store-யில் இருந்து AadhaarFaceRD செயலியை உங்கள் செல்போனில் Install செய்துகொள்ளுங்கள்.
</li><li>
உங்கள் முகத்தை Scan செய்து ஆதார் அடிப்படையிலான பயோமெட்ரிக் சரிபார்ப்பை முடிக்க வேண்டும்.
</li><li>
Online-யில் முடிக்க தெரியாதவர்கள், சிலிண்டர் விநியோகம் செய்யும் நபர்கள் மூலமே அல்லது எரிவாயு நிறுவனத்திற்கு நேரடியாக சென்றும் eKYC-ஐ முடிக்கலாம்.</li></ul><p> 

இந்த பணியை ஆகஸ்ட் 16ஆம் தேதிக்குள் முடிக்காவிட்டால், உங்களுக்கு சிலிண்டர் முன்பதிவு செய்வதிலும், உஜ்வாலா திட்டத்தின் கீழ் மானிய விலையில் சிலிண்டர் பெறுவதிலும் சிக்கல் ஏற்படலாம்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/32260539-431a-4bfc-b119-b28b9968a1b1/26-6a799bdb6e1cf.webp' /></p>]]></content>
            <updated>2026-08-10T10:00:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாலு செவுத்துக்குள் நடந்தது..இந்த பிரச்சனையால் உடல்,மன வேதனை!! ஜாய் கிரிஸில்டா..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/joy-crizildaa-emotional-rangaraj-son-raga-1786356289"></link>
            <id>https://viduppu.com/article/joy-crizildaa-emotional-rangaraj-son-raga-1786356289</id>
            <summary type="text">ஜாய் கிரிஸில்டாபிரபல சமையல் கலைஞரும் குக் வித் கோமாளி நடுவருமான மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் அவரது இரண்டாம் மனைவி ஜாஸ் கிரிஸில்டா இருவருக்கும் இடையே கட...</summary>
            <content type="html"><![CDATA[<h2>ஜாய் கிரிஸில்டா</h2><p>பிரபல சமையல் கலைஞரும் குக் வித் கோமாளி நடுவருமான மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் அவரது இரண்டாம் மனைவி ஜாஸ் கிரிஸில்டா இருவருக்கும் இடையே கடந்த ஆண்டு விவாகரத்து மற்றும் குழந்தை விவகாரம் குறித்து வழக்கு நடைபெற்று வந்தது. சில மாதங்களுக்கு முன், டிஎன்ஏ ஆய்வில் ஜாய் கிரிஸில்டாவின் குழந்தைக்கு ரங்கராஜ் தான் தந்தை என்று டிஎன்ஏ டெஸ்ட் வந்தது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f3e01acc-4d96-4487-b52b-1c0fc0655ce7/26-6a79a243c4036.webp' /></p><p>இதனையடுத்து தான் தான் குழந்தைக்கு தந்தை, குழந்தையின் முழுப்பொறுப்பையும் ஏற்றுகொண்டார் ரங்கராஜ். இதனையடுத்து தன்னுடைய குழந்தையுடன் மாதம்பட்டி ரங்கராஜ் எடுத்த புகைப்படத்தை ஜாய் கிரிஸில்டா இணையத்தில் பகிர்ந்தார்.</p><p> சமீபத்திய பேட்டியொன்றில், அந்த பிரச்சனையின்போது உடல்ரீதியாகவும், மன ரீதியாகவும், பல கொடுமைகளை அனுபவித்தேன். அந்த சமயத்தில் நான் மிகவும் உடைந்து போனேன். எப்படி எனக்கு அவ்வளவு தைரியம் வந்தது என்றே தெரியவில்லை. என் குழந்தைக்காக நான் போராட வேண்டும், நாளை அவனுடைய அடையாளம் கேள்விக்குறியாகிவிடக்கூடாது என்ற ஒரேவொரு எண்ணம் மட்டும்தான் என்னை இயக்கியது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6f797544-46c9-4013-84e0-f576266ec494/26-6a79a244750e2.webp' /></p><p> </p><p>நான் ஒரு அம்மாவாக வெற்றி அடைந்துவிட்டேன் என்று சொல்வதைவிட, என் மகனுக்கு சரியான முகவரியை வாங்கித் தந்துவிட்டேன் என்பதில் பெருமை. இச்சமயம் குறித்து மக்கள் பலவிதமான விமர்சனங்களை பலர் முன் வைத்தார்கள். </p><p>ஆனால் அந்த நாலு செவுத்துக்குள் நான் எப்படி வாழ்க்கை நடத்தினேன் என்பது எனக்கு மட்டும் தான் தெரியும், நானு பேர் பேசுவாங்க, இரண்டு பேர் சேரை போட்டு உட்கார்ந்து, என் கூடவே வாழ்ந்ததுபோல் பேசுவாங்க. இதையெல்லாம் கடந்து, தைரியமாக போராட ஒரே காரணம் என் மகன் ராகா தான். என் மகனுக்காக அப்போதும் நான் இருப்பேன் என்று கூறியிருக்கிறார் ஜாய் கிரிஸில்டா.</p>]]></content>
            <updated>2026-08-10T10:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாடு முழுவதும் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ள தொழிற்சங்க நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/grama-niladhari-sick-leave-campaign-from-today-1786326805"></link>
            <id>https://tamilwin.com/article/grama-niladhari-sick-leave-campaign-from-today-1786326805</id>
            <summary type="text">புதிய இணைப்புபயணக் கொடுப்பனவு அதிகரிப்பு, பதவி உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை
முன்வைத்து கிராம உத்தியோகத்தர்கள் இன்று (10) நாடளாவிய ரீதியில் முன...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>பயணக் கொடுப்பனவு அதிகரிப்பு, பதவி உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை
முன்வைத்து கிராம உத்தியோகத்தர்கள் இன்று (10) நாடளாவிய ரீதியில் முன்னெடுத்த
சுகயீன விடுமுறைப் போராட்டம் காரணமாக, கிண்ணியா பிரதேச செயலகத்துக்கு
சேவைகளைப் பெற்றுக்கொள்ள வந்த பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.</p><p>

இன்று பொதுமக்கள் தினமாக இருப்பதால், கிராம உத்தியோகத்தர்களின்
சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்காக கிண்ணியா பிரதேச செயலகத்துக்கு 10 முதல் 15
கிலோமீற்றர் தொலைவிலுள்ள பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் வருகை தந்திருந்தனர்.
</p><p>
எனினும், கிராம உத்தியோகத்தர்கள் சுகயீன விடுமுறைப் போராட்டத்தில்
ஈடுபட்டிருந்ததால், அவர்களுடன் தொடர்புடைய எந்தவொரு சேவையும் இடம்பெறவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6a812a8d-5fd8-4d7f-9697-c217e10c34f8/26-6a79a05f7028e.webp' /></p><p>
</p><p>இதனால், தூரப் பகுதிகளில் இருந்து அதிகளவு பணம் செலவிட்டு போக்குவரத்து
வசதிகளைப் பெற்றுக்கொண்டு வந்த பொதுமக்கள், ஏமாற்றத்துடனும் அதிருப்தியுடனும்
வீடு திரும்பினர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5553729f-1480-40b1-880f-2741eb5b1aea/26-6a79a0604f36e.webp' /></p><h2>முதலாம் இணைப்பு</h2><p>பயணக் கொடுப்பனவை உயர்த்தாமை உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து கிராம உத்தியோகத்தர்கள் இன்றும் (10) நாளையும் (11) நோய் விடுப்புப் பதிவு செய்து சேவையில் ஈடுபடாதிருக்க தீர்மானித்துள்ளனர்.</p><p> 

கொழும்பில் நேற்று (09.08.2026) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே கிராம உத்தியோகத்தர் தொழிற்சங்க கூட்டமைப்பின் தலைவர் நந்தன ரணசிங்க இதனைத் தெரிவித்துள்ளார். </p><h2>எரிபொருளுக்குச் சமமான கொடுப்பனவு</h2><p>கிராம உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்படும் 600 ரூபாய் பயணக் கொடுப்பனவு கடந்த 8 வருடங்களாக உயர்த்தப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/747f02ad-a45f-4d2f-9929-b5a307fb7dc1/26-6a79334733501.webp' /></p><p>

2024ஆம் ஆண்டில் குறித்த கொடுப்பனவுக்குப் பதிலாக 20 லீட்டர் எரிபொருளுக்குச் சமமான கொடுப்பனவை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்திருந்தது. </p><p>

இருப்பினும் இதுவரை அது வழங்கப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றும் (10) நாளையும் (11) நோய் விடுப்புப் பதிவு செய்து தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக நந்தன ரணசிங்க தெரிவித்துள்ளார்.</p><p> 

இதற்கமைய இந்த தொழிற்சங்க நடவடிக்கை நாடு முழுவதும் முன்னெடுக்கப்படவுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5553729f-1480-40b1-880f-2741eb5b1aea/26-6a79a0604f36e.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/85392ddc-afff-49a6-8b6f-1b42ba3ad31d/26-6a79a061263e2.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dd78784e-c712-4e7a-bc8f-ca4af3364e82/26-6a79a0620241b.webp' /></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-10T09:59:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆன்டி பர்னாம் தலைமையின் கீழ் ஐரோப்பிய ஒன்றியத்துடனான உறவு எப்படி இருக்கும்?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/hamish-falconer-about-uk-eu-relation-1786355922"></link>
            <id>https://news.lankasri.com/article/hamish-falconer-about-uk-eu-relation-1786355922</id>
            <summary type="text">ஆன்டி பர்னாம் தலைமையின் கீழான அரசும், ஐரோப்பிய ஒன்றியத்துடன் நல்லுறவுகளையே நாட உள்ளதாக துறைசார் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவின் பிரதமரா...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஆன்டி பர்னாம் தலைமையின் கீழான அரசும், ஐரோப்பிய ஒன்றியத்துடன் நல்லுறவுகளையே நாட உள்ளதாக துறைசார் அமைச்சர் தெரிவித்துள்ளார்.</p><p>

பிரித்தானியாவின் பிரதமராக இருந்த சர் கெய்ர் ஸ்டார்மர், ஐரோப்பிய ஒன்றியத்துடன் நெருக்கம் காட்டிவந்தது அனைவரும் அறிந்ததே.
</p><p>
இந்நிலையில், ஜூலை மாதம் 22ஆம் திகதி, பிரித்தானிய - ஐரோப்பிய ஒன்றிய உச்சி மாநாடு ஒன்று நடைபெற இருந்தது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7ceee7ca-2688-4c83-a0e5-cb40f18143b5/26-6a79a0d476176.webp' /></p><p>

ஆனால், ஸ்டார்மர் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்ததால், அந்த மாநாடு ஒத்திவைக்கப்பட்டது.
</p><p>
ஆக, பிரித்தானியாவின் புதிய பிரதமராக ஆன்டி பர்னாம் பொறுப்பேற்றுள்ள நிலையில், அவரது தலைமையின் கீழ் பிரித்தானிய - ஐரோப்பிய ஒன்றிய உறவுகளின் நிலைப்பாடு என்ன என்னும் கேள்வி எழுந்தது.&nbsp;</p><p></p><h3>

ஐரோப்பிய ஒன்றியத்துடனான உறவு</h3><p>

ஆன்டி பர்னாம், தனது அரசின் பிரெக்சிட்டுக்கு பிந்தைய பேச்சுவார்த்தைகளுக்கான அமைச்சராக ஹாமிஷ் ஃபால்கோனர் (Hamish Falconer) என்பவரை நியமித்துள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/99906c69-26f8-48b6-b5a7-2f3dfc2db450/26-6a79a0d3c66aa.webp' /></p><p>
இந்நிலையில், ஆன்டி பர்னாம் தலைமையின் கீழான அரசும், ஐரோப்பிய ஒன்றியத்துடன் நல்லுறவுகளையே நாட உள்ளதாக, ஃபால்கோனர் தெரிவித்துள்ளார்.</p><p>

தான் தன் மனைவியுடன் தேனிலவுக்காக சென்றிருந்த நிலையில், ஆன்டி பர்னாம் தன்னை அழைத்து தனக்கு இந்த பொறுப்பைக் கொடுத்ததாக தெரிவித்துள்ள ஃபால்கோனர், முன்பு தான் தாலிபான்களுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தியவன் என்றும், ஆகவே ஐரோப்பிய ஒன்றியத்தைப் பொருத்தவரை ஒத்த கருத்துக்கள் கொண்ட நம் நண்பர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாகவே தான் கருதுவதாகவும் தெரிவித்துள்ளார்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-10T09:58:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ். பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீடத்தின் புதிய பீடாதிபதி நியமனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/appointment-of-new-dean-of-management-studies-1786355724"></link>
            <id>https://tamilwin.com/article/appointment-of-new-dean-of-management-studies-1786355724</id>
            <summary type="text">யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீடத்தின்
பீடாதிபதியாகப் பேராசிரியர் பி. பிரதீப்காந் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிக...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீடத்தின்
பீடாதிபதியாகப் பேராசிரியர் பி. பிரதீப்காந் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.</p><p>

இந்த நிகழ்வு இன்று(10.08.2026) காலை இடம்பெற்றுள்ளது.</p><p> 


முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக
பீடச்சபைக் கூட்டத்தில் நடத்தப்பட்ட பீடாதிபதி தெரிவின் போது 15 வாக்குகளால்
முன்னிலை பெற்றுப் பேராசிரியர் பி. பிரதீப்காந் பீடாதிபதியாகத் தெரிவு
செய்யப்பட்டுள்ளார்.
</p><h2>

பதவிக் காலம் நிறைவு</h2><p>
தற்போதைய பீடாதிபதி பேராசிரியர் ந.கெங்காதரனின் பதவிக்காலம் எதிர்வரும் 14 ஆம் திகதி நிறைவடையவுள்ள நிலையில், 2026 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க,
பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் (திருத்தப்பட்ட) படி புதிய பீடாதிபதியைத் தெரிவு
செய்யப்பட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/85b699b0-c358-428f-bf0b-03a8075caeab/26-6a79a05c9cb02.webp' /></p><p> 

இந்த நிலையில், இன்று(10) காலை இடம்பெற்ற தெரிவுக் கூட்டத்தில் பேராசிரியர்
பி. பிரதீப்காந் எதிர்வரும் 15.08.2026 முதல் செயற்படும் வகையில்
பீடாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-10T09:57:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெள்ளை மயில் உட்பட 5 மயில்களை ஐ.நா.விற்கு பரிசளித்த இந்தியா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/india-gifts-rare-white-peacock-to-un-1786355722"></link>
            <id>https://news.lankasri.com/article/india-gifts-rare-white-peacock-to-un-1786355722</id>
            <summary type="text">India Gifts Rare White Peacock to UN: இந்திய அரசு வெள்ளை மயில் உட்பட 5 மயில்களை ஐ.நா.விற்கு பரிசாக அளித்துள்ளது.
5 மயில்கள் -&amp;nbsp;பாரம்பரியம் இந்திய...</summary>
            <content type="html"><![CDATA[<p>India Gifts Rare White Peacock to UN: இந்திய அரசு வெள்ளை மயில் உட்பட 5 மயில்களை ஐ.நா.விற்கு பரிசாக அளித்துள்ளது.
</p><h2>5 மயில்கள் -&nbsp;பாரம்பரியம் </h2><p>இந்தியா, ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் (UN) அலுவலகத்திற்கு 5 மயில்களை பரிசளித்துள்ளது.

இதில், மிகவும் அரிய வெள்ளை மயிலும் அடங்கும். </p><p>45 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா முதன்முதலாக மயில்களை பரிசளித்தது. இப்போது அந்த பாரம்பரியம் மீண்டும் உயிர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த பரிசளிப்பு, இந்தியாவின் கலாச்சார அடையாளத்தையும், இயற்கைச் செல்வத்தையும் உலகிற்கு எடுத்துக்காட்டுகிறது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b295afdc-2d34-4f02-99bd-3d6c9c8ab8e5/26-6a79a00bc9202.webp' /></p><p>மயில், இந்தியாவின் தேசியப் பறவையாகும். அதன் அழகு, பெருமை, மற்றும் ஆன்மீகச் சின்னம் காரணமாக, உலகளாவிய அளவில் மதிப்புமிக்கதாக கருதப்படுகிறது.
</p><p>
ஜெனீவா ஐ.நா. வளாகத்தில் ஏற்கனவே இந்தியா வழங்கிய மயில்கள் வாழ்ந்து வருகின்றன. புதிய மயில்கள் சேர்க்கப்படுவதால், அந்த வளாகம் மேலும் அழகுபெறும்.
</p><p>
“இந்த பரிசு, இந்தியாவின் கலாச்சார பாரம்பரியத்தையும், இயற்கை வளங்களையும் உலகிற்கு பகிர்ந்து கொள்ளும் முயற்சியாகும்” என்று இந்தியாவின் வெளிநாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.</p><p>
</p><p></p><p>இந்த நிகழ்வு, இந்தியா-ஐ.நா. உறவுகளை வலுப்படுத்தும் முக்கியமான அடையாளமாகக் கருதப்படுகிறது. </p><p>உலக அமைதி, கலாச்சார பரிமாற்றம், மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் இந்தியாவின் பங்களிப்பை வெளிப்படுத்தும் வகையில் இந்த பரிசளிப்பு நடந்துள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-10T09:56:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Erimalai</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறையில் வாடும் கடற்றொழிலாளர்கள் தொடர்பில் தமிழக முதலமைச்சர் விஜய்யிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/fishermen-languishing-in-prison-1786355164"></link>
            <id>https://tamilwin.com/article/fishermen-languishing-in-prison-1786355164</id>
            <summary type="text">இலங்கை சிறைச்சாலைகளில் நிலவும் அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு சிறைச்சாலைகளில் உள்ள தமிழக கடற்றொழிலாளர்களை உடனடியாக விடுவிக்கமாறு வட மாகாண மீனவ பி...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை சிறைச்சாலைகளில் நிலவும் அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு சிறைச்சாலைகளில் உள்ள தமிழக கடற்றொழிலாளர்களை உடனடியாக விடுவிக்கமாறு வட மாகாண மீனவ பிரதிநிதி நா.வர்ணாகுலசிங்கம் கோரிக்கை விடுத்துள்ளார்.</p><p>


இந்த விடயம் தொடர்பில், தமிழக முதலமைச்சர் மற்றும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2> 

கைதியாக இருக்கும் 38 தமிழக கடற்றொழிலாளர்கள்</h2><p>அவர் மேலும் தெரிவிக்கையில்,</p><p> 


38 தமிழக கடற்றொழிலாளர்கள் வெலிக்கடை, யாழ்ப்பாணம் உள்ளிட்ட பல்வேறு இலங்கை சிறைகளில் உள்ளனர். அதில் 16 விசாரணை கைதிகளும், 21 தண்டனை கைகளும் அடங்குகிறார்கள்.
</p><p>
இலங்கையின் பல்வேறு சிறைச்சாலையில் நடந்த கலவரங்களில் 33 பேருக்கு மேல்
கொல்லப்பட்டுள்ளதுடன், நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2e070edf-b8b4-4463-83e8-a692f5365fc0/26-6a799e3e03a27.webp' /></p><p>



நீர்கொழும்பு சிறைச்சாலையில் நடந்த கலவரத்தில் சிறைச்சாலையில் இருந்த
உன்னிகிருஷ்ணன் என்ற இந்திய கைதி ஒருவர் கொல்லப்பட்டார்.</p><h2>

தமிழக முதல்வரிடம் விடுக்கப்பட்ட கோரிக்கை</h2><p>
இந்த நிலையில் பல்வேறு சிறைச்சாலையில் இருந்த 600 க்கு மேற்பட்ட சிங்கள கைதிகள்,
யாழ்ப்பாணம் சிறைச்சாலை உள்ளிட்ட வடகிழக்கு தமிழ் மாகாண சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/045b30ee-fe58-468e-97b8-8194dc1bc0e1/26-6a799e3ee37a0.webp' /></p><p>
</p><p>
மேலும் இலங்கை சிறைச்சாலைகளில் வெளியில் இருந்து சதிசெய்து, திட்டமிட்டு
கலவரம் நடத்தப்படுவதாக இலங்கை அரசு கூறுகிறது. இதனால் தமிழக கடற்றொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தவும் வாய்ப்பு உள்ளது.


இதனால் யாழ்ப்பாணம் உள்ளிட்ட சிறைச்சாலைகள் உள்ள தமிழக கடற்றொழிலாளர்கள் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
</p><p>

எனவே இந்த விடயத்தில் தமிழக முதல்வர் மற்றும் இந்திய வெளியுறவு துறை
அமைச்சர் தலையிட்டு உடனடியாக தமிழக கடற்றொழிலாளர்களை மீட்டு அவர்கள் குடும்பங்களிடம்
சேர்க்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.&nbsp;&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-10T09:47:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்க அச்சுறுத்தல் ஒருபக்கம்... ரஷ்ய எண்ணெய் இறக்குமதியைத் தொடர இந்தியா முடிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/india-russian-crude-purchases-1786355392"></link>
            <id>https://news.lankasri.com/article/india-russian-crude-purchases-1786355392</id>
            <summary type="text">India unlikely to cut Russian crude: அமெரிக்க செனட்டின் பொருளாதாரத் தடைகள் மசோதா இருந்தபோதிலும், ரஷ்ய கச்சா எண்ணெய் கொள்முதலை இந்தியா குறைக்க வாய்ப்பி...</summary>
            <content type="html"><![CDATA[<p>India unlikely to cut Russian crude: அமெரிக்க செனட்டின் பொருளாதாரத் தடைகள் மசோதா இருந்தபோதிலும், ரஷ்ய கச்சா எண்ணெய் கொள்முதலை இந்தியா குறைக்க வாய்ப்பில்லை.
</p><p>அமெரிக்க செனட் சபை ரஷ்யா மீதான பொருளாதாரத் தடைகள் தொடர்பான மசோதாவை நிறைவேற்றியுள்ள நிலையில், இந்தியா தனது கச்சா எண்ணெய் கொள்முதலை ரஷ்யாவிடமிருந்து சமீப காலத்தில் குறைப்பதற்கான வாய்ப்பு குறைவு என்றே தகவல் வெளியாகியுள்ளது.</p><h2>நெருக்கடிக்கு உள்ளாக்கும்</h2><p> </p><p>
குறித்த மசோதாவானது, ரஷ்ய எரிபொருளைத் தொடர்ந்து இறக்குமதி செய்யும் நாடுகளை இது குறிவைப்பதாகத் தொழில் துறை வட்டாரங்களும் ஆய்வாளர்களும் கூறுகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/75717449-47a3-41ec-b68a-f23295c4e9f7/26-6a799ec289dbe.webp' /></p><p> </p><p>இருப்பினும், இந்த நிகழ்வு ரஷ்ய கச்சா எண்ணெய் விநியோகம் தொடர்பான கொள்கை ரீதியான அபாயத்தை அதிகரிக்கிறது. இந்த நடவடிக்கைகள் இன்னும் கூடுதல் சட்ட மற்றும் நிர்வாகத் தடைகளை எதிர்கொள்கின்றன. </p><p>இதன் இறுதித் தாக்கம், விலக்குகள் அல்லது தள்ளுபடிகளைப் பயன்படுத்துவது உட்பட, அமெரிக்க நிர்வாகம் அவற்றை எவ்வளவு தீவிரமாகச் செயல்படுத்தத் தேர்வு செய்கிறது என்பதைப் பெருமளவில் சார்ந்துள்ளது. </p><p>ரஷ்ய எண்ணெய் விநியோகத்தில் ஏற்படும் எந்தவொரு இடையூறும், மாற்று கச்சா எண்ணெய் ஆதாரங்கள் மூலம் ஈடுசெய்யப்படாவிட்டால், இறுதியில் உலகளாவிய எண்ணெய் கிடைப்புத்தன்மையையும் சந்தைகளையும் மேலும் நெருக்கடிக்கு உள்ளாக்கும். </p><p>
ரஷ்ய எண்ணெயை இறக்குமதி செய்யும் நாடுகளின் மீது ஆரம்பத்தில் 500 சதவீதம் வரையிலான வரிகளை விதிக்க முன்மொழிந்திருந்த இந்த மசோதா, 100 சதவீதம் வரையிலான இரண்டாம் நிலை வரி கட்டமைப்பை அமுல்படுத்தும் வகையில் திருத்தப்பட்டுள்ளது.</p><p></p><p> ரஷ்யா மற்றும் ஈரான் மீது தடைகளை விதிப்பதற்கான இருகட்சி ஆதரவுடைய 'லிண்ட்சே கிரஹாம் சட்டம் - 2026'-ஐ, செனட் சபை ஆகஸ்ட் 7 அன்று 86-க்கு 11 என்ற வாக்கு வித்தியாசத்தில் நிறைவேற்றியது. </p><p>இந்த மசோதா தற்போது பிரதிநிதிகள் சபைக்கு அனுப்பப்பட்டுள்ளது; ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை சென்றடைவதற்கு முன் இதுவே அடுத்த கட்ட நகர்வாகும். </p><p>ஆகஸ்ட் 31 அன்று பிரதிநிதிகள் சபை மீண்டும் கூடும்போது, ​​செனட் சபையின் வடிவிலான மசோதாவை அது பரிசீலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.</p><p> இந்தியாவைப் பொறுத்தவரை, ரஷ்யாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் எண்ணெய் ஒரு முக்கியமான விநியோகப் பாதையாகவும், மேற்கு ஆசியப் போரினால் மத்திய கிழக்கின் விநியோகத்தில் ஏற்படும் தடைகளுக்கு எதிரான ஒரு முக்கியப் பாதுகாப்பு அரணாகவும் மாறியுள்ளது.</p><h2>தற்காலிகத் தடைகளில்</h2><p> </p><p>இந்தியா தனது எண்ணெய் தேவையில் 88 சதவீதத்தை இறக்குமதி செய்கிறது; இதில் ரஷ்யாவின் பங்கு ஏறக்குறைய பாதியளவாக உள்ளது. </p><p>ஜூன்-ஜூலை மாதங்களில் ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதி நாளொன்றுக்கு சுமார் 2.7 மில்லியன் பீப்பாய்களாக உயர்ந்ததாகவும், இது இந்தியாவின் மொத்த கச்சா எண்ணெய் இறக்குமதியில் 50 சதவீதத்திற்கும் அதிகமான பங்கைக் கொண்டிருந்ததாகவும் Kpler தரவுகள் தெரிவிக்கின்றன.
</p><p>ரஷ்ய கச்சா எண்ணெய், இந்திய சுத்திகரிப்பு ஆலைகளுக்கு ஒரு முக்கியமான விநியோகப் பாதுகாப்பாக மாறியுள்ளது. இது, மத்திய கிழக்கின் பாரம்பரிய விநியோகப் பாதைகளில் ஏற்படும் தடங்கல்களால் அவை பாதிக்கப்படுவதைக் குறைக்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8886547e-96e9-4332-8ee8-6dd22036434a/26-6a799ec33fed4.webp' /></p><p> </p><p>சமீபத்தில் மத்திய கிழக்கில் விநியோக அபாயங்கள் அதிகரித்த காலகட்டத்தில் இது குறிப்பாகத் தெளிவாகத் தெரிந்தது. தற்போது, ​​ரஷ்ய கச்சா எண்ணெய் தொடர்ந்து இந்தியாவிற்கு வருவதை அனுமதிக்கும் வகையில், அமெரிக்கா தற்காலிகத் தடைகளில் நெகிழ்வுத்தன்மையை வழங்கியுள்ளது.
</p><p>மத்திய கிழக்கிலிருந்து கச்சா எண்ணெய் விநியோகம் குறித்த நிச்சயமற்ற தன்மை நிலவும் மற்றும் உலகளாவிய கச்சா எண்ணெய் இருப்பு நிலைமை இறுக்கமாக உள்ள ஒரு சூழலில் இந்த மசோதா முன்னெடுக்கப்பட்டுள்ளது. </p><p>குறிப்பாக, மேற்கு ஆசியாவில் நிலவும் போர்ச் சூழல், மாற்று விநியோகங்களின் முக்கியத்துவத்தை அதிகரித்துள்ளது. எனவே, இந்தக் கட்டத்தில் ரஷ்ய கச்சா எண்ணெய்க்கு விதிக்கப்படும் ஒரு குறிப்பிடத்தக்க கட்டுப்பாடு, தற்போதுள்ள வர்த்தகப் பரிமாற்றங்களை வெறுமனே மாற்றி அமைப்பதற்குப் பதிலாக, பரந்த சந்தையை மேலும் இறுக்கமாக்கக்கூடும். </p><p>தற்போதைய அளவுகளில் ரஷ்ய கச்சா எண்ணெய்க்கு மாற்றீடு செய்வது சவாலானதாக அல்லது சாத்தியமற்றதாக இருக்கும் என்றே ஆய்வாளர்களின் கருத்தாக உள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-10T09:47:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[றீச்சா உணவுத் திருவிழாவில் பெண் ஊழியருக்கு நடந்த அசம்பாவிதம்! கவலையில் பாஸ்கரன் கந்தையா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/bhaskaran-expresses-concern-over-reecha-issue-1786347116"></link>
            <id>https://ibctamil.com/article/bhaskaran-expresses-concern-over-reecha-issue-1786347116</id>
            <summary type="text">கிளிநொச்சியில் நடைபெற்ற றீச்சா உணவுத் திருவிழாவில் இடம்பெற்ற விரும்பத்தகாத சம்பவங்கள் குறித்து பாஸ்கரன் கந்தையா தனது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துள்ளார...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிளிநொச்சியில் நடைபெற்ற றீச்சா உணவுத் திருவிழாவில் இடம்பெற்ற விரும்பத்தகாத சம்பவங்கள் குறித்து பாஸ்கரன் கந்தையா தனது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துள்ளார்.</p><p>

நிகழ்வின் போது ஏற்பட்ட எதிர்பாராத சிரமங்களுக்கு மன்னிப்பு கேட்டுக் கொண்ட அவர், பணியில் ஈடுபட்டிருந்த பெண் ஊழியர் மீது சிலர் குப்பைகளைக் கொட்டியது மற்றும் ஊழியர்களை துன்புறுத்தியது போன்ற அருவருப்பான சம்பவங்களுக்கு கடுமையான கவலைகளையும் வெளியிட்டுள்ளார்.
</p><p>
இந்த நிகழ்வைச் சீர்குலைக்க வேண்டுமென்றே சில குழுக்கள் திட்டமிட்டுச் செயல்பட்டதாக சுட்டிக்காட்டிய பாஸ்கரன், ஒரு கிராமத்தின் வளர்ச்சியை தனது சொந்த சகோதரர்கள் போன்றோரே ஏன் எதிர்க்கிறார்கள் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
</p><p>
அத்தோடு, சமூக வலைதளங்களில் வன்மத்தைப் பரப்புவதையும், போதை மற்றும் வன்முறையைத் தவிர்த்து, சக மனிதர்களை மதித்து நடக்குமாறும் இளைய தலைமுறைக்கு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
</p><p>
எவ்வாறாயினும், தனக்கு ஆதரவாக இருக்கும் அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றி தெரிவித்த அவர், சமூக வளர்ச்சிக்காகத் தொடர்ந்தும் பணியாற்றுவேன் என்று உறுதியளித்துள்ளார்.
</p><p>
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,&nbsp;&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/7ZhC4P7s_AA" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-10T09:47:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடிய அமைதிப்படை வீரர்களுக்கு ஒட்டாவாவில் கௌரவம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/canadian-peacekeepers-honoured-1786354410"></link>
            <id>https://canadamirror.com/article/canadian-peacekeepers-honoured-1786354410</id>
            <summary type="text">&amp;nbsp;உலக நாடுகளின் அமைதியைக் காக்கும் சர்வதேசப் பணிகளில் ஈடுபட்டுச் சேவையாற்றிய கனடிய அமைதிப்படை வீரர்களின் தியாகத்தைப் போற்றும் வகையில், ஒட்டாவாவில்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;உலக நாடுகளின் அமைதியைக் காக்கும் சர்வதேசப் பணிகளில் ஈடுபட்டுச் சேவையாற்றிய கனடிய அமைதிப்படை வீரர்களின் தியாகத்தைப் போற்றும் வகையில், ஒட்டாவாவில் உள்ள 'நல்லிணக்க அமைதிப்படை நினைவுச் சின்னத்தில்' சிறப்பு நினைவஞ்சலி நிகழ்வு நடைபெற்றது. </p><p>
தேசிய அமைதிப்படை வீரர்கள் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற இந்நிகழ்வில் ஓய்வுபெற்ற முன்னாள் படைவீரர்கள், தற்போதைய இராணுவ வீரர்கள், கனடிய அரச பொலிஸார், அவர்களின் குடும்பத்தினர் மற்றும் முக்கிய அதிகாரிகள் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர். </p><p>
1974 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 9 ஆம் திகதி, ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிப் பணியில் ஈடுபட்டிருந்த 9 கனடியப் படை வீரர்கள் பயணித்த 'பஃப்பலோ' விமானம் சிரியாவில் சுட்டு வீழ்த்தப்பட்டதில் அனைவரும் உயிரிழந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b15f66b6-82ca-4402-bc71-35fc8d3820a3/26-6a799aec85b51.webp' /></p><p> கனடிய அமைதிப்படை வரலாற்றில் ஒரே நாளில் ஏற்பட்ட மிக மோசமான உயிரிழப்பு இதுவாகும். </p><p>
இந்தத் தியாகத்தை நினைவு கூரும் வகையில், கனடாவில் 2008 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 9 ஆம் திகதி 'தேசிய அமைதிப்படை வீரர்கள் தினமாக' அதிகாரப்பூர்வமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.</p><p> 
1948 ஆம் ஆண்டு முதல், 1,25,000-க்கும் மேற்பட்ட கனடிய ஆயுதப்படை வீரர்களும் 4,000-க்கும் மேற்பட்ட பொலிஸ் அதிகாரிகளும் உலகின் 35-க்கும் மேற்பட்ட நாடுகளில் அமைதி காக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
</p><p>சர்வதேச அமைதிப் பணிகளின் போது இதுவரை மொத்தம் 130 கனடியப் படை வீரர்கள் தங்களது உயிரைத் தியாகம் செய்துள்ளனர்.</p><p> 
மேலும், அடுத்த தலைமுறை இளைஞர்களும் நாட்டின் அமைதிப் பாரம்பரியத்தைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வது நம்பிக்கையளிப்பதாக நிகழ்வில் பங்கேற்ற அதிகாரிகள் தெரிவித்தனர்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-10T09:44:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆணாகப் பிறந்து பெண்ணாக மாறும் அதிசய மீன்! அரிய தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/barramundi-fish-change-sex-from-male-to-female-1786354606"></link>
            <id>https://jvpnews.com/article/barramundi-fish-change-sex-from-male-to-female-1786354606</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;ஆணாகப் பிறந்து பெண்ணாக மாறும் அதிசய மீன் தொடர்பில் வியக்க வைக்கும் தகவல் வெளியாகியுள்ளது.

கொடுவா மீன்களே இவ்வாறு ஆணாகப் பிறந்து பெண்ணா...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;ஆணாகப் பிறந்து பெண்ணாக மாறும் அதிசய மீன் தொடர்பில் வியக்க வைக்கும் தகவல் வெளியாகியுள்ளது.

கொடுவா மீன்களே இவ்வாறு ஆணாகப் பிறந்து பெண்ணாக மாறும் தன்மையை கொண்டுள்ளதாம்.
</p><p>
 மீன் வகைகளிலிருந்து முற்றிலும் மாறுபட்ட இனப்பெருக்க முறையைக் கொண்ட கொடுவா மீன்கள் என அழைக்கப்படும் ‘பாராமுண்டி’ (Barramundi) மீன்களின் அதிசயம் குறித்து அறிவோம்.

பாராமுண்டி மீன்கள் ஆரம்பகால வாழ்க்கையில் ஆண்களாகவே காணப்படுகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d3fcd6f7-085b-4c5f-b5c1-c95f7c5f7954/26-6a799bafaef90.webp' /></p><h2>இனப்பெருக்க காலத்தில் மில்லியன் கணக்கான முட்டை&nbsp;இடும் திறன்</h2><p> </p><p>பொதுவாக இவை 3 முதல் 5 ஆண்டுகளுக்குள் இனப்பெருக்கத்திற்குத் தயாராகின்றன.

உடல் வளர்ச்சி மற்றும் வயது அதிகரிக்கும் நிலையில், இவற்றில் சில மீன்கள் இயற்கையாகவே பெண் மீன்களாக மாறுகின்றன.</p><p> இந்த பாலின மாற்ற நிகழ்வு அறிவியல் ரீதியாக “புரோட்டாண்ட்ரி” (Protandry) என அழைக்கப்படுகிறது.

இவ்வாறு பெண்ணாக மாறும் பெரிய அளவிலான பாராமுண்டி மீன்கள், இனப்பெருக்க காலத்தில் மில்லியன் கணக்கான முட்டைகளை இடும் திறன் கொண்டவை.</p><p> சில சமயங்களில் ஒரு மீன் 3 கோடிக்கும் அதிகமான முட்டைகளை இடக்கூடும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

 அதேசமயம் , அனைத்து ஆண் பாராமுண்டி மீன்களும் பெண் மீன்களாக மாறுவதில்லை. அவற்றில் சில வாழ்நாள் முழுவதும் ஆண் மீன்களாகவே வாழும் என்று ம் கூறப்படுகின்றது.</p>]]></content>
            <updated>2026-08-10T09:44:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழக அரசு அமைத்துள்ள குழுவில் பிகில் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்திக்கு பொறுப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/producer-archana-kalpathi-in-tn-govt-committee-1786354858"></link>
            <id>https://news.lankasri.com/article/producer-archana-kalpathi-in-tn-govt-committee-1786354858</id>
            <summary type="text">கோயில்களுக்கான அறங்காவலர்களை தேர்வு செய்ய தமிழக அரசு அமைத்துள்ள குழுவில் பிகில் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்திக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
 
அர...</summary>
            <content type="html"><![CDATA[<p>கோயில்களுக்கான அறங்காவலர்களை தேர்வு செய்ய தமிழக அரசு அமைத்துள்ள குழுவில் பிகில் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்திக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
</p><h3> 
அரசு பொறுப்பு சர்ச்சை</h3><p> 

முதலமைச்சர் விஜய்யின் தவெக ஆட்சியில், விஜய்க்கு நெருக்கமானவர்களுக்கு முக்கிய அரசு பொறுப்பு வழங்கப்பட்டதாக சர்ச்சை எழுந்தது. </p><p>

முன்னதாக அவருடைய ஆஸ்தான ஜோதிடர் ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேல் முதல்வர் விஜயின் அரசியல் பிரிவு சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டு அரசாணை வெளியானது. 

பின்னர் கடும் எதிர்ப்பு காரணமாக இந்த நியமனம் திரும்பபெறப்பட்டது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/db472ece-23db-4821-aa90-fd8878ae355e/26-6a799cab8eb85.webp' /></p><p>

அதனையடுத்து, லியோ, மாஸ்டர் போன்ற படங்களின் இணைத் தயாரிப்பாளரும் தனது மேலாளருமான ஜெகதீஷ் பழனிசாமி முதலமைச்சரின் தனிச் செயலாளராக நியமிக்கப்பட்டார். </p><p>

மேலும், ஜனநாயகன் படத்தயாரிப்பாளரான கர்நாடகாவை சேர்ந்த கே.வெங்கட நாராயணா தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி என்ற அரசு பதவியில் நியமிக்கப்பட்டார்.&nbsp;</p><p></p><h3> 

அரசு அமைத்துள்ள குழுவில் அர்ச்சனா கல்பாத்தி</h3><p> 

தற்போது, பிகில் பட தயாரிப்பாளரான அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு அமைத்துள்ள குழுவில் இடம் அளிக்கப்பட்டுளளது.</p><p> 

இந்து சமய அறநிலையத் துறை ஆளுகைக்குட்பட்ட திருக்கோயில்களுக்கு பரம்பரை முறைவழி சாரா அறங்காவலர்களை நியமனம் செய்திட உரிய வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட்டு ஆணை வெளியிடப்பட்டுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/71662dbc-4e90-47ad-ac4a-b11798a7b3fd/26-6a799cac5a50d.webp' /></p><p> 

திருக்கோயில்களுக்கு பரம்பரை முறைவழி சாரா அறங்காவலர்களை நியமனம் செய்திட, விண்ணப்பதாரர்களை தெரிவு செய்து உரிய பெயர்ப் பட்டியல் தயாரித்து அரசுக்கு அளித்திட மாநிலக்குழு அமைத்து ஆணை வெளியிடப்பட்டது.

இந்த குழுவின் பதவிக்காலம் 2 ஆண்டுகள் ஆகும்.</p><p> 

இந்த குழுவின் தலைவராக தவத்திரு சிவஞான பாலய சுவாமிகள். பொம்மபுரம் ஆதினம், மயிலம் நியமிக்கப்பட்டுள்ளார். </p><p>

குழுவின் துணைத் தலைவராக ஓய்வ பெற்ற மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதி டாக்டர். K.ராமநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். </p><p>

மேலும், தயாரிப்பாளர் திருமதி அர்ச்சனா கல்பாத்தி அகோரம், ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி திரு. பராசம்பத் இ.ஆ.ப. (ஓய்வு), திருமதி. மாசுமதி (எ) சுமதிஸ்ரீ, டாக்டர் த.வேல்முருகன் ஆகியோர் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளனர். </p><p>

மேலும், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பதவி வழி உறுப்பினர்/செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.&nbsp; &nbsp; &nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp;</td></tr></tbody></table><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-10T09:41:34+00:00</updated>
        </entry>
    </feed>
