<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-09-09T13:35:29+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்திய பாதுகாப்பு அமைச்சர் இலங்கையில் :மகிந்தவை தேடிச் சென்று சந்தித்த சீனாவின் புதிய தூதுவர் : வழங்கப்பட்ட அன்பளிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/new-chinese-ambassador-to-visit-mahinda-1788957316"></link>
            <id>https://ibctamil.com/article/new-chinese-ambassador-to-visit-mahinda-1788957316</id>
            <summary type="text">இலங்கைக்கான புதிய சீனத் தூதர் வெய் ஹுவாக்சியாங் மற்றும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆகியோருக்கு இடையே இன்று (09) கொழும்பில் ஒரு சந்திப்பு நடைபெற்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கைக்கான புதிய சீனத் தூதர் வெய் ஹுவாக்சியாங் மற்றும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆகியோருக்கு இடையே இன்று (09) கொழும்பில் ஒரு சந்திப்பு நடைபெற்றது.
</p><p>
வெய் ஹுவாக்சியாங் ஓகஸ்ட் 25 அன்று தனது நற்சான்றிதழ்களைச் சமர்ப்பித்த பின்னர் இலங்கைக்கான சீனத் தூதராகப் பொறுப்பேற்றார்.&nbsp;</p><h2>வழங்கப்பட்ட அன்பளிப்பு</h2><p>இந்த சந்திப்பின் போது, ​​சீனத் தூதர் பாரம்பரிய சீன ஓவியங்கள் அடங்கிய ஒரு புத்தகத்தையும் மகிந்த ராஜபக்சவுக்கு வழங்கினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b78ed452-e842-464e-8eed-cf9e7c57c1a5/26-6aa15aa055814.webp' /></p><p>இந்நிகழ்வில், சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளரும் சட்டத்தரணியுமான சாகர கரியவசமும் கலந்துகொண்டார்.</p><h2>ஜனாதிபதி அனுர இந்திய பாதுகாப்பு அமைச்சர் சந்திப்பு</h2><p>இதேவேளை இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங் இலங்கைக்கு விஜயம் செய்து ஜனாதிபதி அனுர குமார உட்பட பலரை சந்தித்து வரும் நிலையில் புதிய சீன தூதுவர் முன்னாள் ஜனாதிபதி மகிந்தவை சந்திததுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1747a4cf-9496-4c24-806b-a7534736eecb/26-6aa15ba5caa68.webp' /></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-09T13:32:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[800 மில்லியன் ரூபா கொள்ளை: பிரதான சூத்திரதாரி கைது - திடுக்கிடும் பின்னணி தகவல்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/800m-thalawathugoda-agency-robbery-arrested-1788955502"></link>
            <id>https://tamilwin.com/article/800m-thalawathugoda-agency-robbery-arrested-1788955502</id>
            <summary type="text">தலவத்துகொட பகுதியில் அமைந்துள்ள சுற்றுலா மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையத்தில் இடம்பெற்ற 800 மில்லியன் ரூபா பெறுமதியான கொள்ளைச் சம்பவத்தி...</summary>
            <content type="html"><![CDATA[<p>தலவத்துகொட பகுதியில் அமைந்துள்ள சுற்றுலா மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையத்தில் இடம்பெற்ற 800 மில்லியன் ரூபா பெறுமதியான கொள்ளைச் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரியும் வாகன சாரதியுமான நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவினர் நடத்திய விசேட சோதனையில் சந்தேகநபர் முல்லேரியாவ பகுதியில் வைத்து வளைத்துப் பிடிக்கப்பட்டார்.
</p><p>கொள்ளையடிக்கப்பட்ட பணத்தில் 15.5 மில்லியன் ரூபா, குற்றத்திற்குப் பயன்படுத்தப்பட்ட சொகுசு வாகனம், திருடப்பட்ட மோட்டார் சைக்கிள்கள் என்பன பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.</p><h2>அதிர்ச்சி தகவல்கள்&nbsp;</h2><p>
</p><p>கடந்த செப்டம்பர் 1 ஆம் திகதி முகமூடி அணிந்த மூன்று ஆயுதமேந்திய நபர்கள் குறித்த முகவர் நிலையத்திற்குள் புகுந்து, ஊழியர்களை அச்சுறுத்தி, முழங்காலிடச் செய்து தாக்குதல் நடத்தினர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/436750de-6c60-42ba-8548-791732847319/26-6aa14b7023c22.webp' /></p><p> </p><p>பின்னர், 650 மில்லியன் ரூபா ரொக்கம் மற்றும் 150 மில்லியன் ரூபா மதிப்புள்ள தங்க நகைகளைக் கொள்ளையடித்துத் தப்பிச் சென்றனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் அதே முகவர் நிலையத்தில் முன்னர் உதவிப் பிரதிநிதியாகப் பணியாற்றியவர் என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது. </p><p>
அவர் நிறுவன உரிமையாளரிடம் பெற்ற 15 மில்லியன் ரூபா கடனைத் திருப்பிக் கொடுக்க முடியாமல் கடன் சுமையில் இருந்துள்ளார்.</p><p>
அண்மையில் முல்லேரியாவ பகுதியில் நடைபெற்ற திருமண வீடொன்றில் தனக்கு ஏற்பட்ட பகிரங்க அவமானமும், கடன் சுமையுமே இந்தக் கொள்ளையைத் திட்டமிடத் தூண்டியதாக சந்தேகநபர் வாக்குமூலம் அளித்துள்ளார்.</p><p>
தனியாக இக்குற்றத்தைச் செய்ய முடியாததால், நவகாமுவ பொலிஸ் நிலையத்தின் முன்னாள் ஊழியர் ஒருவரின் உதவியை நாடியுள்ளார். </p><p>அவர் மூலம் பொமிரியாவைச் சேர்ந்த மேலும் இருவர் இணைக்கப்பட்டனர்.
கொள்ளைக்கு ஒரு மாதத்திற்கு முன்பாக, பிள்ளியந்தல – சித்தமுல்ல பகுதியிலுள்ள வீடொன்றில் கூடி திட்டமிட்டுள்ளனர்.</p><h2>&nbsp;போலி இலக்கத் தகடுகள்&nbsp;</h2><p>
</p><p>ஹன்வெல்ல நிதி நிறுவனமொன்றில் பெறப்பட்ட வாடகை வாகனத்திற்குப் போலி இலக்கத் தகடுகளைப் பொருத்தி இக்குற்றத்தை அரங்கேற்றியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/90ef4c39-dd6a-4af1-9246-4eca3a84e85d/26-6aa158e3e5d2a.webp' /></p><p>
</p><p>கொள்ளைக்குப் பிறகு கும்பல் மீண்டும் சித்தமுல்ல வீட்டிற்குச் சென்று கொள்ளைப் பொருள்களைப் பிரித்துக் கொண்டுள்ளது.</p><p> பிரதான சூத்திரதாரி: 200 மில்லியன் ரூபாவையும், முன்னாள் பொலிஸ் ஊழியர் 150 மில்லியன் ரூபா மற்றும் தங்க நகைகள் என்பனவற்றையும் மற்ற இருவர் தலா 8 மில்லியன் ரூபாவையும் பகிர்ந்து கொண்டுள்ளனர்.</p><p>
பிரதான சூத்திரதாரி தனது பங்கிலிருந்து 5 மில்லியன் ரூபாவை பொமிரியாவிலுள்ள நண்பரிடம் பாதுகாப்பிற்காகக் கொடுத்துள்ளார். 1.3 மில்லியன் ரூபாயைக் கொண்டு அடகு வைக்கப்பட்ட நிலத்தை மீட்டுள்ளதுடன், முல்லேரியாவ பகுதியில் பல பெண்களிடம் பெற்ற கடன்களையும் அடைத்துள்ளார். </p><p>பொலிஸார் இவரின் பங்கில் 300,000 ரூபாவைத் தவிர மற்ற அனைத்துப் பணத்தையும் மீட்டுள்ளனர்.
ஏனைய சந்தேகநபர்கள் பற்றிய தகவல்கள் திரட்டப்பட்டுள்ளதாகவும், அவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்றும் பொலிஸார் தெரிவித்தனர். </p><p>
கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபர் அடையாள அணிவகுப்பிற்காக கடுவெல நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-09T13:32:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[85 வயது முதியவருக்கு நேர்ந்த சோகம்: எங்கிருந்தோ வந்த தோட்டாவினால் பலியான முதியவர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/innocent-85-year-old-man-killed-in-his-home-1788938694"></link>
            <id>https://canadamirror.com/article/innocent-85-year-old-man-killed-in-his-home-1788938694</id>
            <summary type="text">&amp;nbsp;கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள பர்னபி நகரில், தனது வீட்டில் இருந்த 85 வயது முதியவர் ஒருவர், எங்கிருந்தோ பாய்ந்து வந்த தோட்டா பட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள பர்னபி நகரில், தனது வீட்டில் இருந்த 85 வயது முதியவர் ஒருவர், எங்கிருந்தோ பாய்ந்து வந்த தோட்டா பட்டு பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
</p><p>கடந்த ஆகஸ்ட் 30 ஆம் திகதி அதிகாலை 1:30 மணியளவில் துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்டதாக பர்னபி பொலிஸாருக்குத் தகவல் கிடைத்தது.</p><p>
பொலிஸார் சம்பவ இடத்திற்குச் செல்வதற்குள் சந்தேகத்திற்குரிய வாகனம் தப்பிச் சென்றதுடன், ஆரம்பக்கட்ட சோதனையில் காயமடைந்தவர்கள் எவரும் கண்டறியப்படவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2e2b1436-aa71-4c9e-b1f1-6fcaa8fcd58a/26-6aa109c859b50.webp' /></p><p>
எனினும், அன்றைய தினம் மாலை 4:00 மணியளவில், துப்பாக்கிச்சூடு நடந்த இடத்திற்கு அருகே உள்ள குடியிருப்பில் வசிக்கும் முதியவரின் நலன் குறித்து விசாரிக்க பொலிஸார் சென்றுள்ளனர்.</p><p>
வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, 85 வயதான சாங் யோங் சோ என்ற முதியவர் துப்பாக்கிக் காயத்துடன் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.
</p><p>அப்பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டின் போது தவறுதலாக பாய்ந்து வந்த தோட்டாவே இவரைத் தாக்கியுள்ளது எனவும், இந்தச் சம்பவத்தில் இவருக்கு எந்தத் தொடர்பும் இல்லை எனவும் ஒருங்கிணைந்த கொலை விசாரணைப் படை உறுதி செய்துள்ளது.</p><p>
இச்சம்பவம் கும்பல் மோதலோ அல்லது போதைப்பொருள் தொடர்பானதோ அல்ல என்றும், தனிப்பட்ட தகராறே இதற்குக் காரணம் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>இதில் தொடர்புடையதாகச் சந்தேகிக்கப்படும் இளைஞர்கள் குறித்த விவரங்கள் தெரிந்தவர்கள் அல்லது அவர்களின் பெற்றோர்கள், பொலிஸாரைத் தொடர்புகொண்டு விசாரணைக்கு உதவுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.</p><p>
ஆகஸ்ட் 30 ஆம் திகதி அதிகாலை 12:30 மணி முதல் 2:00 மணி வரை 18th and Humphries avenues பகுதிகளில் பயணித்தவர்களிடம் டேஷ்கேம் அல்லது பாதுகாப்பு கேமரா பதிவுகள் இருந்தால், 1-877-551-4448 என்ற எண்ணில் தொடர்புகொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-09T13:30:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறையில் நாமல் ராஜபக்ச; அச்சத்தில் தாயும்....தாரமும்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/namal-rajapaksa-in-prison-wife-in-fear-1788959677"></link>
            <id>https://jvpnews.com/article/namal-rajapaksa-in-prison-wife-in-fear-1788959677</id>
            <summary type="text">&amp;nbsp; ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச எதிர்வரும் 18ஆம் திகதி வரை கொழும்பு விளக்கமறியல் சிறைச்சா...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச எதிர்வரும் 18ஆம் திகதி வரை கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
</p><p>
குறித்த சிறைச்சாலையின் பாதுகாப்புமிக்க விசேட அறையில் அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/364ae4cf-8f30-4212-b56d-d6e5dcc81690/26-6aa15bbf586b3.webp' /></p><p>
</p><p>
எயார் பஸ் கொடுக்கல் வாங்கலில் இடம்பெற்ற ஊழலில் நாமல் ராஜபக்ச கைதாகியுள்ளார். இன்னிலையில் நாமலி கைது அவரது மனைவியை பாதித்துள்ளதாகவும், இதனால் அவர் அச்சத்தில் உள்ளதாகவும் கொழும்பு அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.&nbsp;&nbsp;</p><p>&nbsp;ராஜபக்ச குடும்பத்தின் முக்கிய அரசியல் முகமாகத் திகழும் நாமல் ராஜபக்சவின் இந்தத் திடீர் கைது நடவடிக்கை, இலங்கை அரசியல் களத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/oxkF3F-rgZc" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-09T13:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[வைரலாகும் கெனிஷா - ரவி மோகன் வீடியோ? பிரபலம் சொன்ன ரகசியம்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/che-guevara-talks-about-ravi-mohan-and-kenisha-1788951759"></link>
            <id>https://viduppu.com/article/che-guevara-talks-about-ravi-mohan-and-kenisha-1788951759</id>
            <summary type="text">ரவி மோகன் - கெனிஷா இருவரும் பிரிந்துவிட்டதாக கூறி வந்த நிலையில் கோவாவில் ஒன்றாக மாறிமாறி சிகரெட் பிடித்த வீடியோ இணையத்தில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது...</summary>
            <content type="html"><![CDATA[<p>ரவி மோகன் - கெனிஷா இருவரும் பிரிந்துவிட்டதாக கூறி வந்த நிலையில் கோவாவில் ஒன்றாக மாறிமாறி சிகரெட் பிடித்த வீடியோ இணையத்தில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக பலரும் பேசி வரும் நிலையில் பத்திரிக்கையாளர் சே குவேரா யூடியூப் சேனல் ஒன்றில் அளித்த பேட்டியொன்றில் பகிர்ந்துள்ளார். </p><p>அதில் இந்த வீடியோ வெளியானதற்குப்பின் ரவிமோகனுடைய இமேஜே மொத்தமாக காலி ஆகிடுச்சு, ஏன்னா லட்சக்கணக்கான பேர், கோடிக்கணக்கான பேர் இந்த வீடியோவை பார்த்துவிட்டார்கள். </p><p>இதுவரை அவரிடமிருந்து மறுப்பு, விளக்கம் எதுவும் வரவில்லை. ரவிமோகனை டேமேஜ் பண்ணி யாருக்கு என்ன கிடைக்கப்போகுது. எனக்கு தெரிஞ்ச வரைக்கும், நான் சமீபத்தில் பார்த்த விஷயங்களை எடுத்துக்கிட்டா, அடுத்தடுத்து ரவி மோகன் குறித்து சர்ச்சைகள் வந்துக்கிட்டே இருக்கு. </p><p>குறிப்பா இந்த கெனிஷாவுடன் துபாய்க்கு போன விஷயம், அங்க நடந்த பிரச்சனை பற்றி தான். இருவரும் ஒன்றாக இருக்கிறார்களா? என்ற கேள்வியை யாரும் கேட்டுவிடக்கூடாது என்பதற்கு, கெனிஷாவை யோகி பாபு நடிக்கும் படத்திற்கு இசையமைப்பாளராக்கி இருக்கிறார். கெனிஷாவால் இதுமட்டும் பிரச்சனை இல்லை, ரவி மோகன் நடித்துள்ள கராத்தே பாபு படத்திற்கும் பிரச்சனை.</p><p> இப்படத்தில் போலீஸ் உயர் அதிகாரியின் மகள் கதாநாயகியாக நடித்துள்ளார். படத்தின் ஷூட்டிங், பணிகள் அனைத்தும் முடிவடைந்தப்பின், அந்த கதாநாயகியை மாற்ற வேண்டும் என்று ரவி மோகன் கேட்டிருக்கிறார். இதன் காரணமாகவே கராத்தே பாபு படத்தின் ரிலீஸில் சிக்கல் ஏற்பட்டுள்ளது என்று சே குவேரா தெரிவித்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-09-09T13:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[தவெக தலைமையில் உருவான மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/tvk-led-secular-social-justice-victory-alliance-1788960110"></link>
            <id>https://ibctamilnadu.com/article/tvk-led-secular-social-justice-victory-alliance-1788960110</id>
            <summary type="text">tvk led alliance named as secular social justice victory alliance: தவெக தலைமையிலான கூட்டணிக்கு மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணி என பெயர் சூட்டப...</summary>
            <content type="html"><![CDATA[<p>tvk led alliance named as secular social justice victory alliance: தவெக தலைமையிலான கூட்டணிக்கு மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணி என பெயர் சூட்டப்பட்டுள்ளது. </p><h3>

மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணி</h3><p>

தவெக கூட்டணி கட்சிகளின் 2வது கூட்டம் இன்று மாலை சென்னை பனையூரில் நடைபெற்றது. </p><p>

இந்த கூட்டத்தில் முதல்வர் விஜய் மற்றும் அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, ராஜ்மோகன், நிர்மல் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். </p><p>

மேலும், காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, ஐயுஎம்எல், மதிமுக உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்களின் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6c288217-390d-4077-9671-272f2b9da6f0/26-6aa15d702eda3.webp' /></p><p>

இந்நிலையில், தவெக தலைமையிலான இந்த கூட்டணிக்கு மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணி என பெயர் சூட்டப்பட்டுள்ளது. </p><p>

இந்த கூட்டம்திற்கு பின்னர் காங்கிரஸ் மாநில தலைவர் மாணிக்கம் தாகூர், "மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணி தமிழ்நாடு, புதுச்சேரியில் செயல்படும்.</p><p> 

கூட்டணியின் தலைவராக விஜய் இருப்பார். புதிய கட்சிகளை கூட்டணியில் சேர்க்க முயற்சி எடுக்கப்படும்.</p><p>

மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி சார்பில் இடைத்தேர்தல் வேட்பாளர்கள் நாளை அறிவிக்கப்படுவார்கள். அவர்களின் வெற்றிக்காக பாடுபடுவோம்” என தெரிவித்துள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-09T13:21:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[வைரலாகும் சீமானின் புதிய தோற்றம்... ‘சேயோன்’ படத்தில் இப்படியொரு கதாபாத்திரமா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/seyon-shooting-spot-actor-seeman-photos-viral-1788958826"></link>
            <id>https://manithan.com/article/seyon-shooting-spot-actor-seeman-photos-viral-1788958826</id>
            <summary type="text">சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் ‘சேயோன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட நடிகரும், இயக்குநரும், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் ‘சேயோன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட நடிகரும், இயக்குநரும், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான சீமானின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.</p><h2>சேயோன் திரைப்படம்</h2><p>

‘தாய்க்கிழவி’ திரைப்படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் சிவகுமார் முருகேசன், அடுத்ததாக ‘சேயோன்’ என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/12e6fd85-7de6-41b6-863d-d4d5b423c605/26-6aa15c861f9c2.webp' /></p><p> </p><p>இப்படத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாகவும், பாக்யஸ்ரீ போர்ஸே கதாநாயகியாகவும் நடித்து வருகின்றனர்.இப்படத்தை கமல்ஹாசன் தயாரித்து வருகிறார்.</p><p>
மும்முரமாக நடைபெறும் படப்பிடிப்பு
‘சேயோன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மதுரை மண்ணின் பாரம்பரியம், கிராமத்து வாழ்வியல் மற்றும் அப்பகுதியின் கலாசாரப் பின்னணியை மையமாகக் கொண்டு, பக்கா கிராமத்து கமர்சியல் எண்டர்டெய்னராக இப்படம் உருவாகி வருவதாகக் கூறப்படுகிறது.</p><p></p><p>

இதற்காக மதுரையைச் சுற்றியுள்ள பகுதிகளில் பிரமாண்டமான படப்பிடிப்பு தளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு முக்கியமான ஆக்சன் காட்சிகள் மற்றும் குடும்ப உணர்வுகளை மையமாகக் கொண்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ffebf8e3-608d-4430-a6a5-c71baa4b1380/26-6aa15c85695a2.webp' /></p><p></p><p>
</p><p><b>
முக்கிய கதாபாத்திரத்தில் சீமான்
</b></p><p>இந்நிலையில், ‘சேயோன்’ படத்தில் சீமான் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அரசியல் பணிகளில் தீவிரமாக இயங்கி வரும் சீமான், அவ்வப்போது திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். </p><p>அந்த வகையில், ‘சேயோன்’ படத்தில் அவரது பங்களிப்பு தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

சமீபத்தில் படக்குழு, இப்படத்தில் சீமான் நடிக்கும் கதாபாத்திரத்தின் தோற்றத்தை வெளியிட்டது. அந்த புகைப்படத்தில் அவர் கிராமத்து பின்னணிக்கு ஏற்ற தோற்றத்தில் காணப்பட்டார். </p><p>இந்த தோற்றம் வெளியானதைத் தொடர்ந்து, சீமானின் கதாபாத்திரம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a7579829-e5bb-4dbb-a171-cec35fe2110b/26-6aa15c86ced3c.webp' /></p><p>
</p><p><b>
வைரலாகும் படப்பிடிப்பு புகைப்படங்கள்</b></p><p>
தற்போது ‘சேயோன்’ படப்பிடிப்புத் தளத்தில் சீமான் கலந்து கொண்டபோது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன. படப்பிடிப்பில் அவர் இடம்பெற்றுள்ள இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தைப் பெற்றதுடன், இணையத்திலும் வேகமாகப் பரவி வருகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b8ff44ce-08d5-4b6e-84b7-c664cd5fa0eb/26-6aa15c87888de.webp' /></p><p>
</p><p>
இதற்கிடையே, இப்படத்தில் சீமான், சிவகார்த்திகேயனின் தந்தை கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும், அவரது கதாபாத்திரம் தொடர்பான முழுமையான விவரங்கள் இதுவரை படக்குழுவால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.</p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்<a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"> </a><b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-09T13:18:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[400 கிராம் தேயிலைக்கு 2 இலட்சம் ரூபாய் அபராதம் விதித்த நீதிமன்றம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/fine-of-200-000-for-400g-of-expired-tea-1788958233"></link>
            <id>https://jvpnews.com/article/fine-of-200-000-for-400g-of-expired-tea-1788958233</id>
            <summary type="text">&amp;nbsp; காலாவதியான தேயிலைப் பொதி ஒன்றை நுகர்வோருக்கு விற்பனை செய்தமை தொடர்பில் தனியார் நிறுவனம் ஒன்றுக்கு 2 இலட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது....</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; காலாவதியான தேயிலைப் பொதி ஒன்றை நுகர்வோருக்கு விற்பனை செய்தமை தொடர்பில் தனியார் நிறுவனம் ஒன்றுக்கு 2 இலட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. </p><p>

காலாவதியான தேயிலைப் பொதியை விற்பனை செய்தமைக்காகத் தனியார் நிறுவனத்திற்கு எதிராக நுகர்வோர் விவகார அதிகாரசபையினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், எதிராளி நிறுவனம் குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து கொழும்பு இலக்கம் 05 நீதவான் நீதிமன்றம், இந்த அபராதத்தை விதித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cc3d3d6c-8bdd-4182-9072-4ce821f41462/26-6aa1561a951f0.webp' /></p><h2>&nbsp;குற்றத்தை ஒப்புக்கொண்ட&nbsp; நிறுவனம் </h2><p> </p><p>

நுகர்வோர் விவகார அதிகாரசபையின் விசாரணை அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், 15.07.2026 அன்று காலாவதியானதாகக் குறிப்பிடப்பட்ட 400 கிராம் எடையுள்ள தேயிலைப் பொதி ஒன்று 1,000 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. </p><p>

சம்பவம் தொடர்பாக 15.08.2014 திகதியிடப்பட்ட 1875/38 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்ட கட்டளை இலக்கம் 52 ஐ மீறியமைக்காக நுகர்வோர் விவகார அதிகாரசபையினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.</p><p></p><p> </p><p>

கட்டளை இலக்கம் 52 இன் படி, உற்பத்தியாளர்கள், இறக்குமதியாளர்கள், விநியோகஸ்தர்கள், வழங்குநர்கள் மற்றும் வர்த்தகர்கள் விற்பனைக்குத் தகுதியற்ற, காலாவதியான அல்லது மனித நுகர்வுக்குப் பொருத்தமற்றவை எனக் கண்டறியப்பட்ட பொருட்களை, விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள ஏனைய பொருட்களுடன் சேர்த்தோ, அதற்கு அருகிலோ அல்லது அவற்றுக்கு மத்தியிலோ வைத்திருப்பது, சேமிப்பது அல்லது திரட்டி வைப்பது கூடாது என்பது குறிப்பிடத்தக்கது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-09T13:16:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெள்ளவத்தை உணவகத்தை இடிக்க இடைகால தடை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/interim-stay-on-demolition-wellawatte-restaurant-1788956594"></link>
            <id>https://jvpnews.com/article/interim-stay-on-demolition-wellawatte-restaurant-1788956594</id>
            <summary type="text">&amp;nbsp; கொழும்பு வெள்ளவத்தை கடற்கரை பகுதியில் அமைந்துள்ள உணவகம் ஒன்றை இடித்து அகற்றுமாறு தெரிவித்து கடற்கரை பாதுகாப்பு பணிப்பாளரால் பிறப்பிக்கப்பட்ட அற...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; கொழும்பு வெள்ளவத்தை கடற்கரை பகுதியில் அமைந்துள்ள உணவகம் ஒன்றை இடித்து அகற்றுமாறு தெரிவித்து கடற்கரை பாதுகாப்பு பணிப்பாளரால் பிறப்பிக்கப்பட்ட அறிவித்தலை, எதிர்வரும் 21 ஆம் திகதி வரை நடைமுறைப்படுத்துவதைத் தடுத்து மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/22314474-3191-4079-b8c8-f34dec547cdf/26-6aa14fb3a177e.webp' /></p><p> </p><p>

குறித்த உணவகத்தினால் தாக்கல் செய்யப்பட்ட மனு சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபா முன்வைத்த சமர்ப்பணங்களை ஆராய்ந்த பின்னரே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-09T13:16:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[முதல் சதமே 150 ஓட்டங்கள் விளாசிய 24 வயது வீரர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/jordan-hermann-maiden-century-150-runs-vs-namibia-1788959376"></link>
            <id>https://news.lankasri.com/article/jordan-hermann-maiden-century-150-runs-vs-namibia-1788959376</id>
            <summary type="text">Jordan hermann 150 runs vs namibia: தென் ஆப்பிரிக்காவின் ஜோர்டன் ஹெர்மன் நமீபியா அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் சதம் விளாசினார்.

நமீபியா அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Jordan hermann 150 runs vs namibia: தென் ஆப்பிரிக்காவின் ஜோர்டன் ஹெர்மன் நமீபியா அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் சதம் விளாசினார்.
</p><p>
நமீபியா அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில், தென் ஆப்பிரிக்க தொடக்க வீரரான ஜோர்டன் ஹெர்மன் 150 ஓட்டங்கள் விளாசினார்.&nbsp;</p><h2>டோனி டி ஸோர்சி&nbsp;72</h2><p>
தென் ஆப்பிரிக்கா மற்றும் நமீபியா அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி Windhoek-யில் நடந்து வருகிறது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/281f418b-84d3-43ac-889b-175340ad6a2b/26-6aa15c0166218.webp' />&nbsp;</p><p></p><p>நாணய சுழற்சியில் வென்ற நமீபியா அணி பந்துவீச்சை தெரிவு செய்ய, தென் ஆப்பிரிக்க அணி முதலில் துடுப்பாடியது.</p><p>

கோன்னோர் எஸ்டர்ஹுய்ஸன் 10 ஓட்டங்களில் வெளியேற, ஜோர்டன் ஹெர்மன் மற்றும் டோனி டி ஸோர்சி கூட்டணி 190 ஓட்டங்கள் குவித்தது.&nbsp;</p><p>அரைசதம் அடித்த டோனி 72 ஓட்டங்களில் வெளியேற, டெவால்ட் பிரேவிஸ் 33 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f6e32fa0-893e-4438-a190-579e3fe3348a/26-6aa15c007fd7e.webp' />&nbsp;&nbsp;</p><h2>ஜோர்டன் ஹெர்மன்&nbsp;150 </h2><p>மறுமுனையில் அதிரடி மிரட்டிய ஜோர்டன் ஹெர்மன் முதல் சதத்தை பதிவு செய்தார். அணியின் ஸ்கோர் 275 ஓட்டங்களாக உயர்ந்தபோது, ஜோர்டன் ஹெர்மன் 126 பந்துகளில் 150 ஓட்டங்கள் (3 சிக்ஸர், 17 பவுண்டரிகள்) விளாசிய நிலையில் ஆட்டமிழந்தார்.&nbsp;</p><p>கார்பின் போஷ் அதிரடியாக 24 பந்துகளில் 3 சிக்ஸர், 1 பவுண்டரியுடன் 39 ஓட்டங்கள் விளாச, தென் ஆப்பிரிக்க அணி 348 ஓட்டங்கள் குவித்தது. ரூபென் ட்ரம்பல்மன் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.&nbsp; &nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0d39ca20-34cb-4ac3-b07f-36b1e2c5e460/26-6aa15a93b4f85.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-09T13:12:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுவிஸ் நகரமொன்றில் பாரிய தீவிபத்து: ஒருவர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/person-dies-in-fire-at-swiss-commercial-building-1788959278"></link>
            <id>https://news.lankasri.com/article/person-dies-in-fire-at-swiss-commercial-building-1788959278</id>
            <summary type="text">Person dies in fire at Swiss fruit and vegetable wholesaler building: சுவிட்சர்லாந்தில் காய்கறிகள், பழங்கள் விற்பனை செய்யும் கட்டிடம் ஒன்றில் ஏற்பட்ட ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Person dies in fire at Swiss fruit and vegetable wholesaler building: சுவிட்சர்லாந்தில் காய்கறிகள், பழங்கள் விற்பனை செய்யும் கட்டிடம் ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் ஒருவர் பலியானார்.</p><p>


சுவிட்சர்லாந்தின் Solothurn மாகாணத்திலுள்ள Bellach என்னுமிடத்தில், காய்கறிகள், பழங்கள் மொத்த விற்பனை செய்யும் கட்டிடம் ஒன்று உள்ளது.
</p><h3>
ஒருவர் பலி</h3><p>

இந்நிலையில், நேற்று காலை 10.30 மணியளவில் அந்தக் கட்டிடத்தில் திடீரென தீப்பற்றியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b6457589-5265-46fa-95b2-c26584fb927c/26-6aa15a2f6510d.webp' /></p><p>
</p><p>
தகவலறிந்து தீயணைப்புக்குழுவினர் அங்கு வரும் முன், தீ கட்டிடத்தை கபளீகரம் செய்துவிட்டிருக்கிறது.&nbsp;</p><p></p><p>
கட்டிடம் தீயில் முழுமையாக சேதமடைந்துவிட, பொலிசார் மேற்கொண்ட ஆய்வில், அந்தக் கட்டிடத்துக்குள் ஒருவர் உயிரிழந்துகிடந்தது தெரியவந்துள்ளது.
</p><p>
அவர் யார், எதனால் தீப்பற்றியது என்பது போன்ற விடயங்கள் குறித்து பொலிசார் விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-09T13:11:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நிலக்கரி மோசடியில் சிக்கிக் கொண்ட பிரிலோயர்ஸ் அமைப்பின் மைத்திரி குணரத்ன! திறைசேரி நிதி மோசடியை கடுமையாக விமர்சித்தவர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/maithri-gunaratne-coal-1788959175"></link>
            <id>https://tamilwin.com/article/maithri-gunaratne-coal-1788959175</id>
            <summary type="text">&amp;nbsp;2015–2016 காலப்பகுதியில் நுரைச்சோலை லக்விஜய அனல்மின் நிலையத்திற்கு நிலக்கரி கொள்முதல் செய்வதற்காக லிபர்ட்டி கொமோடிட்டீஸ் Liberty Commodities நிற...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;2015–2016 காலப்பகுதியில் நுரைச்சோலை லக்விஜய அனல்மின் நிலையத்திற்கு நிலக்கரி கொள்முதல் செய்வதற்காக லிபர்ட்டி கொமோடிட்டீஸ் Liberty Commodities நிறுவனத்துடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் நிபந்தனைகளில் மாற்றங்கள் செய்யப்பட்டதன் காரணமாக சுமார் 1,575,630 அமெரிக்க டொலர் நிதி இழப்பு ஏற்பட்டுள்ளதாக நிலக்கரி மோசடிகள் குறித்து விசாரணை நடத்தும் விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் முன்னிலையில் நேற்று (08.09.2026) வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
</p><p>இந்த ஒப்பந்தத்தில் இலங்கை நிலக்கரி நிறுவனத்தின் சார்பில் அன்றைய தலைவராகப் பணியாற்றிய பிரிலோயர் அமைப்பின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணரத்ன கையொப்பமிட்டிருந்தார்.
</p><p></p><h2>முன்னாள் செயலாளரின் சாட்சியம்</h2><p>இது குறித்த சாட்சியத்தை அன்றைய மின்சக்தி மற்றும் மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சின் மேலதிக செயலாளராகப் பணியாற்றிய டி. அமரதுங்க தெரிவித்துள்ளார்.
நேற்று சாட்சியமளித்த அமரதுங்க 2015–2016 காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட உடனடி நிலக்கரி கொள்முதல் தொடர்பாகத் தமது குழு விசாரணை நடத்தியதாகக் குறிப்பிட்டார்.
</p><p>அமரதுங்கவின் சாட்சியத்தின்படி லக்விஜய அனல்மின் நிலையத்திற்கு விநியோகிக்க தேவையான நிலக்கரியின் தொழில்நுட்பத் தரம் மற்றும் நிர்ணயிக்கப்பட்ட தரத்தை விடக் குறையும் பட்சத்தில் விநியோகஸ்தரிடமிருந்து அறவிடப்பட வேண்டிய அபராதம் அல்லது விலை மாற்றியமைத்தல் தொடர்பில் ஏல ஆவணங்களில் இருந்த நிபந்தனைகள் இறுதி ஒப்பந்தத்தில் சேர்க்கப்படும் போது பாரிய மாற்றங்களுக்கு உள்ளாகியிருந்தன.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c0aee1f1-06e2-42de-b149-22fe10cf5df4/26-6aa159c9557a1.webp' /></p><p>தொழில்நுட்ப மதிப்பீட்டுக் குழு மற்றும் கொள்முதல் குழு ஆகியன சமர்ப்பித்த கருத்துக்களையும் சரியாகப் பின்பற்றாமல் இறுதி ஒப்பந்தம் கையொப்பமிடப்பட்டுள்ளதாக அமரதுங்க ஆணைக்குழுவின் முன் தெரிவித்துள்ளார்.
</p><p>இங்கு எளிமையாக கூறுவதானால்இ நிர்ணயிக்கப்பட்ட தரத்தை விடக் குறைந்த தரமுடைய நிலக்கரி பெறப்பட்டால் விநியோகஸ்தருக்குச் செலுத்தப்படும் தொகையிலிருந்து கழிக்கப்பட வேண்டிய பணத்தைக் கணக்கிடும் சூத்திரம் ஏல ஆவணத்தில் இருந்தவாறு அல்லாமல் விநியோகஸ்தருக்குச் சாதகமான முறையில் இறுதி ஒப்பந்தத்தில் சேர்க்கப்பட்டிருந்தமையே பிரச்சினையாகும்.
</p><h2>கணக்காய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டவை</h2><p>குறித்த ஆணைக்குழு விசாரணையில் வெளிவந்த தகவல்கள்: 2009 முதல் 2016 ஜூன் வரையிலான காலப்பகுதியில் நுரைச்சோலை மின்நிலையத்திற்கு நிலக்கரி கொள்முதல் செய்யப்பட்டமை தொடர்பில் கணக்காய்வாளர் நாயகத்தினால் தயாரிக்கப்பட்ட விசேட கணக்காய்வு அறிக்கையிலும் விரிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. </p><p>இதில் ஆறு நீண்டகால நிலக்கரி கொள்முதல்களும் ஐந்து உடனடி கொள்முதல்களும் இதில் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டிருந்தன.
கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின்படி முதலாவது கொள்முதலுக்காக 'லிபர்ட்டி கொமோடிட்டீஸ்' நிறுவனம் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்ததுடன் 165,000 மெட்ரிக் தொன்னுக்கான ஒப்பந்தம் 2015 ஆகஸ்ட் 17 அன்று கையொப்பமிடப்பட்டிருந்தது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3bedfee0-c6bb-4171-93b0-dd49be6dbdf1/26-6aa159ca0e74f.webp' /></p><p>இதன்போது ஏல ஆவணத்தில் சேர்க்கப்பட்டிருந்த வரைவு ஒப்பந்தத்தில் (draft agreement) குறிப்பிடப்பட்டிருந்த சல்பர் (Sulphur) மற்றும் சாம்பல் (Ash) ஆகியவற்றிற்கான விலை சரிசெய்தல் சூத்திரங்கள் இறுதி ஒப்பந்தத்தை எட்டும் போது மாற்றப்பட்டிருந்ததாகக் கணக்காய்வாளர் தலைமை அதிபதி நேரடியாகவே குறிப்பிட்டுள்ளார். </p><p>
புதிய ஒப்பந்தங்கள் எதிலும் கையொப்பமிடாமல் அதே ஒப்பந்தமே பின்னர் இரண்டாவது மற்றும் நான்காவது கொள்முதல்களுக்காகவும் சமர்ப்பித்ததால் அவ்விரண்டு கொள்முதல்களையும் பாதித்திருந்ததாக அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
</p><p>நேற்று ஆணைக்குழுவின் முன் சாட்சியமளித்த அமரதுங்கஇ தனது தலைமையிலான மூவர் கொண்ட குழு இவ்வொப்பந்தம் தொடர்பாக மைத்திரி குணரத்னவிடமும் விசாரணை நடத்தியதாகக் கூறினார். அவ்விசாரணையின் போதுஇ குறித்த நிதி இழப்பு ஏற்பட்டுள்ளதை குணரத்ன ஒப்புக்கொண்டதாக குறிப்பிட்டார்.&nbsp;</p><p></p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-09T13:11:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[எடை குறைந்த பாண் விற்பனை: எடுக்கப்படவுள்ள நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/raids-on-outlets-selling-underweight-bread-1788957301"></link>
            <id>https://tamilwin.com/article/raids-on-outlets-selling-underweight-bread-1788957301</id>
            <summary type="text">நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை மற்றும் விசாரணை நடவடிக்கையின் போது, எடை குறைந்த பாண் மற்றும் பல்வேறு முறைகேடுகள் கண்டறியப்பட்டுள்ளன...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை மற்றும் விசாரணை நடவடிக்கையின் போது, எடை குறைந்த பாண் மற்றும் பல்வேறு முறைகேடுகள் கண்டறியப்பட்டுள்ளன. </p><p>

இந்த நடவடிக்கையின் கீழ் நாடு முழுவதிலுமுள்ள சில்லறை விற்பனை நிலையங்கள் மற்றும் பேக்கரிகள் உட்பட 118 நிறுவனங்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.</p><p>அத்துடன், பாணின் சரியான எடை பேணப்படுகிறதா என்பதும், எடை மற்றும் விலை சரியாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதா என்பதும் தீவிரமாகப் பரிசோதிக்கப்பட்டுள்ளது.</p><h2>வர்த்தக முறைகேடுகள்</h2><p> </p><p>

கிடைக்கப்பெற்றுள்ள ஆரம்பக்கட்ட அறிக்கைகளின்படி, எடைக் தகவல்கள் பெறப்பட்ட விற்பனை நிலையங்கள் மற்றும் பேக்கரிகளின் அடிப்படையில் 54 நிறுவனங்களில் எடை குறைந்த பாண் கண்டறியப்பட்டுள்ளது. </p><p>அதற்கமைய, குறித்த பேக்கரிகளின் உற்பத்தி நடவடிக்கை மற்றும் அவற்றின் மூலம் ஏனைய விற்பனை நிலையங்களுக்கு பாண் விநியோகிக்கப்படும் விதம் குறித்துப் பரிசோதிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a17c36ea-225d-41e4-b36e-f376fc809ea1/26-6aa157b0b4e25.webp' /></p><p>ஒரு முழுப் பாண் 450 கிராமும், அரைப் பாண் 225 கிராமும் கொண்டிருக்க வேண்டும் என நுகர்வோர் விவகார அதிகாரசபை சுட்டிக்காட்டியுள்ளது.</p><p> 

பாணின் எடை, விலை அல்லது ஏனைய வர்த்தக முறைகேடுகள் தொடர்பாக ஏதேனும் முறைப்பாடுகள் இருந்தால், அலுவலக நேரங்களில் 1977 என்ற நுகர்வோர் உடனடி அழைப்பு இலக்கத்திற்குத் தெரிவிக்குமாறு நுகர்வோர் விவகார அதிகாரசபை பொதுமக்களைக் கேட்டுக்கொள்கிறது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-09T13:10:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்திய பாதுகாப்பு விவகாரம்! ராஜ்நாத் சிங்கிடம் அநுர வழங்கிய விசேட செய்தி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/srilanka-stance-activity-directagainstindsecurity-1788957705"></link>
            <id>https://ibctamil.com/article/srilanka-stance-activity-directagainstindsecurity-1788957705</id>
            <summary type="text">கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலகத்தில் இன்று&amp;nbsp; இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க ஆகியோருக்கு இடையே நடை...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலகத்தில் இன்று&nbsp; இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க ஆகியோருக்கு இடையே நடைபெற்ற கலந்துரையாடல் தொடர்பாக இந்திய பாதுகாப்பு அமைச்சு ஒரு செய்திக்குறிப்பை வெளியிட்டுள்ளது.
</p><p>
இரு நாடுகளுக்கும் இடையிலான பரஸ்பர நம்பிக்கையின் அடிப்படையிலான வரலாற்று உறவுகளை மேலும் மேம்படுத்த தலைவர்கள் ஒப்புக்கொண்டதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>மேலும், இந்தியாவின் பாதுகாப்பு நலன்களுக்கு எதிரான எந்தவொரு நடவடிக்கைக்காகவும் இலங்கையின் நிலப்பரப்பு ஒருபோதும் பயன்படுத்தப்படாது என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இச்சந்திப்பின்போது ஒரு கருத்தை வெளியிட்டார் என அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>முதல்நிலை மீட்பாளர்</h2><p>
தித்வா புயலின்போது 'சாகர் பந்து நடவடிக்கை'யின் கீழ் இந்தியா வழங்கிய மனிதாபிமான நிவாரணம் மற்றும் மறுவாழ்வு உதவிகளுக்கு இலங்கை ஜனாதிபதி தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/36431c58-c5d7-47d4-8e21-215f1530bb00/26-6aa15a8b9f3a1.webp' /></p><p> </p><p>இதற்குப் பதிலளித்த இந்திய பாதுகாப்பு அமைச்சர், மிக நெருங்கிய அண்டை நாடாகவும் நண்பராகவும் ஒரு முதல்நிலை மீட்பாளராக ஆதரவளிப்பது தனது பொறுப்பு என்று கருதுவதாகவும், எதிர்காலத்திலும் அவ்வாறே தொடர்ந்து செய்வேன் என்றும் கூறியுள்ளார் என்றும் அறிக்கை கூறியுள்ளது.</p><p>
இரு நாடுகளின் தலைவர்களின் ஆதரவின் கீழ், இந்திய அரசாங்கத்தின் மானியத்தின் கீழ் இலங்கை விமானப்படையின் எல்70 விமான எதிர்ப்புத் துப்பாக்கிகளை நவீனமயமாக்குவதற்கான ஒப்பந்தம் மற்றும் தேசிய பாதுகாப்பு கல்லூரிகள் மற்றும் தேசிய மாணவர் படைக்கு இடையேயான ஒத்துழைப்பு ஒப்பந்தங்கள் உள்ளிட்ட பல முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் பரிமாறப்பட்டன.</p><p>

மேலும், இந்திய பாதுகாப்புப் படைகளால் கட்டப்பட்ட மூன்று பெய்லி பாலங்களும் அடையாளப்பூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டன என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-09T13:09:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறையிலுள்ள நாமலை பார்க்க சென்று சர்ச்சையில் சிக்கிய ஷிரந்தி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/shiranthi-in-struggle-after-visiting-prison-1788919351"></link>
            <id>https://tamilwin.com/article/shiranthi-in-struggle-after-visiting-prison-1788919351</id>
            <summary type="text">விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச பார்ப்பதற்காக அவரது தாயார் ஷிராந்தி ராஜபக்ச தனது சொந்த வாகனத்திலேயே சிறைச்சாலைக்குள...</summary>
            <content type="html"><![CDATA[<p>விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச பார்ப்பதற்காக அவரது தாயார் ஷிராந்தி ராஜபக்ச தனது சொந்த வாகனத்திலேயே சிறைச்சாலைக்குள் செல்ல அனுமதிக்கப்பட்ட விடயம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. </p><p>

இந்த விடயம் தொடர்பில் அமைச்சர் விஜித்த ஹேரத்திடம் நேற்று ஊடகவிலாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். </p><p>

அதற்கு பதிலளித்தவர், முன்னாள் ஜனாதிபதி ஒருவரின் மனைவியாக இருப்பதனால் ஷிரந்திக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கலாம் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>
</p><h2><b>சர்ச்சையில் சிக்கிய ஷிரந்தி</b></h2><p><i>“நாமல் ராஜபக்சவை பார்க்க ஷிராந்தி ராஜபக்ச தனது வாகனத்திலேயே சிறைச்சாலைக்குள் செல்வதை நாங்கள் கண்டோம். அது எப்படி சாத்தியம்? இப்போது ஏனைய கைதிகளையும் அவ்வாறே வாகனத்தில் சென்று பார்க்க முடியுமா..! அல்லது இது நாமலுக்கு மட்டும் கிடைக்கும் விசேட சலுகையா</i>..! என ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2bc742a5-fa7d-4a50-9aef-2c48b5106ee2/26-6aa0c09b01f70.webp' /></p><p>“<i>சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்கள் விளக்கமறியலில் உள்ளனர். அத்தகையவர்களைப் பார்ப்பதற்காக சிறைச்சாலை திணைக்களத்தின் முறையொன்று உள்ளது. அந்த முறையின் அடிப்படையில்தான் அது நடந்திருக்க வேண்டும், எனக்கு அது குறித்து சரியாகத் தெரியாது</i>” என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.</p><p><i>

வாகனத்தை உள்ளே கொண்டு செல்வது இருக்கட்டும், ஒரு சாதாரண நபர் அங்கு வாகனத்தை நிறுத்தக் கூட அனுமதிக்கப்படுவதில்லையே </i>என ஊடகவிலாளர் கேள்வி எழுப்பியுள்ளார். </p><p>
முன்னாள் ஜனாதிபதி ஒருவரின் மனைவியாக இந்த அனுமதி வழங்கப்பட்டிருக்கலாம். சரியான காரணத்தை விசாரித்துவிட்டு தகவல்களை வெளிப்படுத்துகிறேன் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.</p><p><b>YOU MAY LIKE THIS..&nbsp;</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/Di9SgPrs56M" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p>]]></content>
            <updated>2026-09-09T13:03:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[100 டொலரை தாண்டிய கச்சா எண்ணெய் விலை - மத்திய கிழக்கு மோதல் தீவிரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/brent-oil-tops-100-dollars-amid-middle-east-war-1788959020"></link>
            <id>https://news.lankasri.com/article/brent-oil-tops-100-dollars-amid-middle-east-war-1788959020</id>
            <summary type="text">Brent oil tops 100 dollars amid middle east war: மத்திய கிழக்கில் மோதல் தீவிரமடைந்ததால், உலக சந்தையில் எண்ணெய் விலை மீண்டும் உயர்ந்துள்ளது.

100 டொல...</summary>
            <content type="html"><![CDATA[<p>Brent oil tops 100 dollars amid middle east war: மத்திய கிழக்கில் மோதல் தீவிரமடைந்ததால், உலக சந்தையில் எண்ணெய் விலை மீண்டும் உயர்ந்துள்ளது.</p><h2>

100 டொலரை தாண்டிய&nbsp;கச்சா எண்ணெய்</h2><p>ப்ரெண்ட் கச்சா எண்ணெய் விலை செப்டம்பர் 9 அன்று ஒரு பீப்பாய் 100 டொலரை தாண்டியது. கடந்த ஜூலை 24-க்குப் பிறகு முதல் முறையாக 100 டொலரை கடந்துள்ளது.
</p><p>
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான ஆறு மாதங்களாக நீடிக்கும் மோதல், எண்ணெய் விநியோகத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/eafbe0ea-f0cd-4eea-bc08-8e908025515a/26-6aa1592daf61f.webp' /></p><p>ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி படைகள் சவுதி அரேபியாவின் எரிசக்தி நிலையங்களை தாக்கியதால், எண்ணெய் உற்பத்தி நிலையங்கள் தீப்பற்றி சேதமடைந்தன. இதனால் செங்கடல் வழியாக செல்லும் கச்சா எண்ணெய் கப்பல்கள் கூட அபாயத்தில் உள்ளன.
</p><p>
சந்தை நிபுணர்கள், இந்த மோதல் நீண்ட காலம் நீடிக்கும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கின்றனர். இது தற்காலிக உயர்வு அல்ல, பாதுகாப்பு அபாயம் காரணமாக உருவான நிலையான விலை உயர்வு என Abaxx Markets நிறுவனத்தின் ஜெஃப்ரி கர்ரி தெரிவித்துள்ளார்.
</p><p></p><h2>எண்ணெய் விநியோகம் குறையும்</h2><p>அமெரிக்கா, கனடா, கயானா போன்ற OPEC கூட்டமைப்பில் அல்லாத நாடுகள் உற்பத்தியை அதிகரித்தாலும், சர்வதேச எரிசக்தி நிறுவனம் (IEA) உலகளாவிய எண்ணெய் விநியோகம் இந்த ஆண்டு 4.3 மில்லியன் பீப்பாய் குறையும் என எச்சரித்துள்ளது.
</p><p>
Goldman Sachs, Bank of America, HSBC போன்ற முக்கிய வங்கிகள், எண்ணெய் விலை முன்னறிவிப்புகளை உயர்த்தியுள்ளன.
</p><p>
இந்த விலை உயர்வு உலகளாவிய பொருளாதாரத்தில் பெரும் பணவீக்கம் ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. குறிப்பாக, ஆசியா மற்றும் ஐரோப்பிய நாடுகள் அதிகம் பாதிக்கப்படலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-09T13:00:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணி - தவெக தலைமையிலான கூட்டணிக்கு பெயர் அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/tvk-to-led-secular-social-justice-victory-alliance-1788958803"></link>
            <id>https://news.lankasri.com/article/tvk-to-led-secular-social-justice-victory-alliance-1788958803</id>
            <summary type="text">tvk led alliance named as secular social justice victory alliance: தவெக தலைமையிலான கூட்டணிக்கு மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணி என பெயர் சூட்டப...</summary>
            <content type="html"><![CDATA[<p>tvk led alliance named as secular social justice victory alliance: தவெக தலைமையிலான கூட்டணிக்கு மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணி என பெயர் சூட்டப்பட்டுள்ளது. </p><h3>

மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணி
</h3><p>
தவெக கூட்டணி கட்சிகளின் 2வது கூட்டம் இன்று மாலை சென்னை பனையூரில் நடைபெற்றது. </p><p>

இந்த கூட்டத்தில் முதல்வர் விஜய் மற்றும் அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, ராஜ்மோகன், நிர்மல் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c9df255b-ea65-48ab-a118-883c35ee2c31/26-6aa1585469af3.webp' /></p><p> 

மேலும், காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, ஐயுஎம்எல், மதிமுக உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்களின் கூட்டத்தில் கலந்து கொண்டனர். </p><p>

இந்நிலையில், தவெக தலைமையிலான இந்த கூட்டணிக்கு மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணி என பெயர் சூட்டப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p>இந்த கூட்டத்திற்கு பின்னர் காங்கிரஸ் மாநில தலைவர் மாணிக்கம் தாகூர், "மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணி தமிழ்நாடு, புதுச்சேரியில் செயல்படும். 

கூட்டணியின் தலைவராக விஜய் இருப்பார். புதிய கட்சிகளை கூட்டணியில் சேர்க்க முயற்சி எடுக்கப்படும்.</p><p> இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் என யாரையும் இதுவரை முன்னிறுத்தியது கிடையாது. கடந்த தேர்தலிலும் அப்படி யாரையும் அறிவிக்கவில்லை. 

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் யார் பிரதமர் வேட்பாளர் என்பதை இந்தியா கூட்டணி முடிவு செய்யும்.</p><p> 

மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி சார்பில் இடைத்தேர்தல் வேட்பாளர்கள் நாளை அறிவிக்கப்படுவார்கள்.அவர்களின் வெற்றிக்காக பாடுபடுவோம்” என தெரிவித்துள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-09T13:00:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்: கையெழுத்து போட தயாரான ரேவதி.. கார்த்திக் செய்யப் போவது என்ன?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/karthigai-deepam-serial-today-episode-sep-09-2026-1788949650"></link>
            <id>https://cineulagam.com/article/karthigai-deepam-serial-today-episode-sep-09-2026-1788949650</id>
            <summary type="text">தமிழ் சின்னத்திரையில் Zee தமிழில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர் கார்த்திகை தீபம், திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இன...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழ் சின்னத்திரையில் Zee தமிழில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர் கார்த்திகை தீபம், திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இன்றைய எபிசோடில் என்ன நடக்கப் போகிறது என்பதை பேசும் தமிழில் பார்க்கலாம்.</p><p>சாமுண்டீஸ்வரியை சந்தித்த ரேவதி, அவர் விரும்பியபடியே கையெழுத்து போட்டு தர சம்மதம் தெரிவிக்கிறார். இந்த விஷயம் தெரிய வந்ததும் ராஜராஜன் கடும் கோபமடைகிறார். "சாமுண்டீஸ்வரி இப்படி செய்தால் ரேவதி வேறு என்ன முடிவு எடுப்பார்?" என்று வருத்தப்படுகிறார். அதே நேரத்தில், குடும்பத்தினர் அனைவரும் சேர்ந்து எப்படியாவது ரேவதியை தடுக்க வேண்டும் என்று முடிவு செய்கிறார்கள்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0ae57f61-c057-4a30-bbc9-23fe18dc9ee7/26-6aa13495360ca.webp' /></p><p></p><p>மறுபக்கம், சந்திரகலா சிவனாண்டியை சந்தித்து, ரேவதி கையெழுத்து போட ஒப்புக்கொண்ட செய்தியை உற்சாகமாக தெரிவிக்கிறார். இதைக் கேட்ட சிவனாண்டி மிகவும் மகிழ்ச்சியடைந்து, "நம்ம திட்டம் ஒவ்வொன்றாக நிறைவேற ஆரம்பிச்சிருக்கு... இனிமேல் எல்லாமே நம்ம பக்கம் தான்!" என்று நம்பிக்கையுடன் பேசுகிறார்.
</p><p>அடுத்த நாள், சாமுண்டீஸ்வரியை சந்திக்க ரேவதி கிளம்பத் தயாராகிறார். வீட்டில் பாட்டி மட்டும் இருப்பதால் என்ன சொல்லி வெளியே போவது என்று குழப்பமடைகிறார். முதலில் பொய் சொல்லிவிட்டு கிளம்பலாம் என நினைக்கிறார். ஆனால் அவரால் பொய் சொல்ல முடியாமல் தவிக்கிறார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f828e3a5-7e33-431a-b373-417a7e148122/26-6aa13495e4f1c.webp' /></p><p>இறுதியில், உண்மையை பாட்டியிடம் சொல்லிவிடுகிறார். இதைக் கேட்ட பாட்டி, ரேவதியை வெளியே செல்லவிடாமல் தடுக்க முயற்சி செய்கிறார். ஆனாலும் ரேவதி தனது முடிவில் உறுதியாக இருந்து அங்கிருந்து கிளம்பி சாமுண்டீஸ்வரி வீட்டிற்கு செல்கிறார்.
</p><p>அங்கு சாமுண்டீஸ்வரி தேவையான ஆவணங்களுடன் ரேவதிக்காக காத்திருக்கிறார். ரேவதி உண்மையிலேயே கையெழுத்து போடுவாரா? இதை தடுக்க கார்த்திக் எந்த முடிவை எடுக்கப் போகிறார்? என்ற பரபரப்பான திருப்பங்களுடன் இன்றைய எபிசோட் நகரவுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2f4ac4b2-40d8-408e-9149-a6c9c7884f0a/26-6aa13496a3a80.webp' /></p><p></p><p>
</p><p>கார்த்திகை தீபம், திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு, உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது. இந்த பரபரப்பான எபிசோடை காண தவறாதீர்கள்!
&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-09T13:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவை சந்தித்தார் புதிய சீனத் தூதுவர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/new-chinese-ambassador-meets-mahinda-rajapaksa-1788958956"></link>
            <id>https://jvpnews.com/article/new-chinese-ambassador-meets-mahinda-rajapaksa-1788958956</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;புதிதாக பதவியேற்றுள்ள இலங்கைக்கான சீனத் தூதுவர் வெய் ஹீஆஷியாங்க்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவுக்கும் இடையிலான ஒரு சுமூகமான சந்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;புதிதாக பதவியேற்றுள்ள இலங்கைக்கான சீனத் தூதுவர் வெய் ஹீஆஷியாங்க்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவுக்கும் இடையிலான ஒரு சுமூகமான சந்திப்பு புதன்கிழமை (9) கொழும்பில் உள்ள மஹிந்த ராஜபக்‌ஷவின் இல்லத்தில் இடம்பெற்றுள்ளது. </p><p>

இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர், சட்டத்தரணி சாகர காரியவசம் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்&nbsp; &nbsp;.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/00f3bc14-6a55-4d1f-b999-57a49df0e2c2/26-6aa158ed8d504.webp' /></p><p></p>]]></content>
            <updated>2026-09-09T12:59:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானியா தூதரகத்தை மூட இஸ்ரேல் உத்தரவு; 30 நாட்கள் கெடு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/israel-orders-closure-of-british-consulate-1788945593"></link>
            <id>https://canadamirror.com/article/israel-orders-closure-of-british-consulate-1788945593</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;கிழக்கு ஜெருசலேமில் உள்ள பிரித்தானியாவின் துணைத் தூதரகத்தை 30 நாட்களுக்குள் மூடுமாறு இஸ்ரேல் உத்தரவிட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;கிழக்கு ஜெருசலேமில் உள்ள பிரித்தானியாவின் துணைத் தூதரகத்தை 30 நாட்களுக்குள் மூடுமாறு இஸ்ரேல் உத்தரவிட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p>

 காசா தொடர்பான பணிகளில் ஈடுபட்டுள்ள அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட பிரித்தானிய அதிகாரிகள் மற்றும் ரமல்லாவில் பணியாற்றும் பிரித்தானிய ஊழியர்கள் 7 நாட்களுக்குள் அங்கிருந்து வெளியேறுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/14caf05c-a6d9-472f-af13-2a32c44d52c9/26-6aa124baeec29.webp' /></p><p>

இஸ்ரேலிய குடியேற்றங்களுக்கு எதிராக பிரித்தானியா அண்மையில் விதித்த தடைகளைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
</p><p>
இஸ்ரேல் மற்றும் பிரித்தானியா இடையிலான உறவுகளில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், இந்த உத்தரவு வெளியாகியுள்ளமை மேலும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-09T12:53:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நல்லூர் கந்தன் தேர்த் திருவிழாவில் தாலிக்கொடியை பறிகொடுத்து கதறும் பெண்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/woman-losing-thali-chain-nallur-chariot-festival-1788935884"></link>
            <id>https://jvpnews.com/article/woman-losing-thali-chain-nallur-chariot-festival-1788935884</id>
            <summary type="text">&amp;nbsp;&amp;nbsp;நல்லூர் கந்தன் தேர்த் திருவிழாவில் தாலிக்கொடியை பறிகொடுத்து கதறும் பெண்!

வரலாற்று பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் நல்லூர் கந்தன் தேர்த் திர...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;<a href="https://jvpnews.com/article/nallur-kandan-blesses-devotees-from-chariot-1788928177" target="_blank">&nbsp;நல்லூர் கந்தன் தேர்த் திருவிழாவி</a>ல் தாலிக்கொடியை பறிகொடுத்து கதறும் பெண்!

வரலாற்று பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் நல்லூர் கந்தன் தேர்த் திருவிழாவில் (9) தாலிக்கொடியைப் பறிகொடுத்து பெண் ஒருவர் கதரி அழுத காணொளி சமூக ஊடகங்க்களில் வெளியாகியுள்ளது.</p><p> 

 
இன்று காலை நல்லூரான் தேர்த் திருவிழாவை காண வந்த பெண் தாலிக்கொடியை பறிகொடுத்து விட்டு தாயொருவர் நிலத்தில் இருந்து அழுதவாறு நின்றுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d4c78acd-8686-4669-97e9-c56a4860aea8/26-6aa10168d6818.webp' /></p><p></p><h2>திருடர்கள் குறித்து பொலிஸார்&nbsp; &nbsp;எச்சரிக்கை</h2><p> 

 அந்த பெண் மட்டுமல்லாது விலையுயர்ந்த அணிகலன்களை பறிகொடுத்து விட்டு தவித்த வண்ணம் உள்ளார்கள். சிலர் காவல்துறையினரிடம் வாக்குமூலத்தை பதிவு செய்துள்லதாகவும் கூறப்படுகின்றது.</p><p></p><p>

அதேவேளை நல்லூர் கந்தன் ஆலய திருவிழா திருடர்கள் குறித்து பொலிஸார் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p><iframe src="https://www.facebook.com/plugins/video.php?height=476&href=https%3A%2F%2Fwww.facebook.com%2Freel%2F1390156846568193%2F&show_text=false&width=380&t=0" width="380" height="476" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share" allowFullScreen="true"></iframe></p>]]></content>
            <updated>2026-09-09T12:48:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஐசிசியின் முடிவால் ரூ.656 கோடி இழப்பை சந்திக்கும் இலங்கை கிரிக்கெட் வாரியம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/sri-lanka-cricket-to-face-rs-656-cr-revenue-loss-1788958061"></link>
            <id>https://news.lankasri.com/article/sri-lanka-cricket-to-face-rs-656-cr-revenue-loss-1788958061</id>
            <summary type="text">இலங்கையில் நடைபெறவிருந்த மகளிர் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் இந்தியாவிற்கு மாற்றப்பட்டதால் இலங்கை கிரிக்கெட் வாரியம் 656 கோடி இலங்கை ரூபாய் இழப...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் நடைபெறவிருந்த மகளிர் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் இந்தியாவிற்கு மாற்றப்பட்டதால் இலங்கை கிரிக்கெட் வாரியம் 656 கோடி இலங்கை ரூபாய் இழப்பை சந்திக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. </p><h3>

ரூ.656 கோடி இழப்பை சந்திக்கும் இலங்கை கிரிக்கெட் வாரியம் </h3><p>

இலங்கை கிரிக்கெட் வாரியத்தில் தொடர்ச்சியான அரசாங்கத் தலையீடு மற்றும் இலங்கை கிரிக்கெட் வாரியத்தில் (SLC) தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகம் இல்லாததால், அரசு இடைக்கால குழு அமைத்து நிர்வகித்து வருகிறது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c8a2ebf6-b349-465c-83b5-4033718c6aaa/26-6aa1556e8c027.webp' /></p><p>
இதன் காரணமாக இலங்கையில் நடைபெறவிருந்த மகளிர் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரை இந்தியாவிற்கு மாற்றுவதாக ஐசிசி அறிவித்துள்ளது. </p><p>

6 அணிகள் பங்கேற்க உள்ள இந்தத் தொடர், 2027 பிப்ரவரி 14 முதல் 28 வரை இந்தியாவில் நடைபெற உள்ளது.&nbsp;</p><p></p><p>

இந்த தொடரை நடத்தும் உரிமையை இலங்கை இழந்ததால், நேரடியாகவும் சுற்றுலா உள்ளிட்டவை மூலமும் இலங்கை கிரிக்கெட் வாரியம் சுமார் 20 மில்லியன் டொலர்(இலங்கை ரூபாய் மதிப்பில் ரூ.656 கோடி) இழப்பை சந்திக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. </p><p>

இலங்கை கிரிக்கெட் வாரியம் ஐசிசி தொடரை நடத்தும் உரிமையை இழப்பது இது முதல் முறை இல்லை.</p><p> 

முன்னதாக, 2023 ஆம் ஆண்டில் நிர்வாகக் கவலைகள் காரணமாக ஐசிசி இலங்கை கிரிக்கெட்டை இடைநீக்கம் செய்ததுடன், 2024 ஆம் ஆண்டுக்கான U19 உலகக் கிண்ணத்தை இலங்கையிலிருந்து தென்னாப்பிரிக்காவிற்கு மாற்றியது.&nbsp;&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-09T12:47:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[வருடாந்தம் 1000 சிறுவர்களுக்கு புற்றுநோய் பாதிப்பு - வெளியான அதிர்ச்சித் தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/900-1-000-childhood-cancer-cases-detected-1788955536"></link>
            <id>https://tamilwin.com/article/900-1-000-childhood-cancer-cases-detected-1788955536</id>
            <summary type="text">இலங்கையில் ஆண்டுதோறும் 19 வயதுக்குட்பட்ட சுமார் 900 முதல் 1,000 சிறுவர்கள் மற்றும் இளம் பருவத்தினருக்குப் புற்றுநோய் கண்டறியப்படுவதாக, தேசிய புற்றுநோய...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் ஆண்டுதோறும் 19 வயதுக்குட்பட்ட சுமார் 900 முதல் 1,000 சிறுவர்கள் மற்றும் இளம் பருவத்தினருக்குப் புற்றுநோய் கண்டறியப்படுவதாக, தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் (NCCP) சமூக மருத்துவ ஆலோசகரான வைத்தியர் சுராஜ் பெரேரா தெரிவித்துள்ளார்.
</p><p>
 

தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டுத் திட்டத்துடன் இணைந்து, இன்று (09.09.2026) சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
</p><h2>புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்து</h2><p>
 

மிகவும் பொதுவாகக் கண்டறியப்படும் புற்றுநோய்களின் வகைகள் இரத்தப் புற்றுநோய், நிணநீர்ச் சுரப்பிப் புற்றுநோய், மூளைப் புற்றுநோய், எலும்புப் புற்றுநோய் மற்றும் கண் புற்றுநோய் என வைத்தியர் சுராஜ் பெரேரா சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b1a4e0ff-f46c-484f-8ef0-d9997756ecb9/26-6aa153088eb48.webp' /></p><p>
 

புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்து, அதற்கேற்ப தகுந்த சிகிச்சை அளித்தால், அதைக் குணப்படுத்துவதற்கான சாத்தியம் மிக அதிகம் என்று மேலும் தெரிவித்துள்ளார்.
</p><p>
 

குழந்தைகள் மற்றும் வளரிளம் பருவத்தினரைப் பாதிக்கும் புற்றுநோய்கள் மற்றும் அவற்றின் சிகிச்சை முறைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்தில், செப்டெம்பர் மாதம் உலகெங்கிலும் “குழந்தைப் பருவப் புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக” அனுசரிக்கப்படுகிறது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-09T12:40:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[கர்ப்பமாக இருக்கும் நிலையில் நடிகை சமந்தா எடுத்த லேட்டஸ்ட் போட்டோ ஷுட்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/actress-samantha-latest-photoshoot-1788949641"></link>
            <id>https://cineulagam.com/article/actress-samantha-latest-photoshoot-1788949641</id>
            <summary type="text">நடிகை சமந்தாநடிகை சமந்தா, ராஜ் நிடிமோரு என்பவரை மறுமணம் செய்துகொண்டு கொண்டாட்டத்தின் உச்சத்தில் வாழ்க்கையை அனுபவித்து வருகிறார். திருமணத்திற்கு பிறகு ...</summary>
            <content type="html"><![CDATA[<h2>நடிகை சமந்தா</h2><p>நடிகை சமந்தா, ராஜ் நிடிமோரு என்பவரை மறுமணம் செய்துகொண்டு கொண்டாட்டத்தின் உச்சத்தில் வாழ்க்கையை அனுபவித்து வருகிறார். </p><p>திருமணத்திற்கு பிறகு எங்கள் தங்கம் என்ற படத்தில் நடித்தார் சமந்தா, அப்படம் பல கோடி வசூல் வேட்டை செய்து சாதனை படைத்தது.</p><p> தற்போது படங்கள் நடிப்பதை நிறுத்திய சமந்தா தனது கர்ப்ப கால நாட்களை பல இடங்கள் சென்று கழித்து வருகிறார். </p><p>இந்த நிலையில் அவர் ஒரு ஆங்கில அட்டைப் படத்திற்காக எடுத்த போட்டோ ஷுட் புகைப்படங்கள் இதோ,&nbsp;</p><p><br></p>]]></content>
            <updated>2026-09-09T12:30:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சொத்து விவர அறிக்கைகளை உரிய நேரத்தில் சமர்ப்பிக்காதவர்களுக்கு அரசாங்கம் வழங்கியுள்ள வாய்ப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/bribery-commission-gives-opportunity-who-submitted-1788955386"></link>
            <id>https://ibctamil.com/article/bribery-commission-gives-opportunity-who-submitted-1788955386</id>
            <summary type="text">சொத்து மற்றும் பொறுப்பு அறிக்கைகளை உரிய காலத்திற்குள் சமர்ப்பிக்கத் தவறியவர்களுக்கு நிர்வாக அபராதம் விதிப்பதற்கு முன்னர், தாமதத்திற்கான நியாயமான காரணங...</summary>
            <content type="html"><![CDATA[<p>சொத்து மற்றும் பொறுப்பு அறிக்கைகளை உரிய காலத்திற்குள் சமர்ப்பிக்கத் தவறியவர்களுக்கு நிர்வாக அபராதம் விதிப்பதற்கு முன்னர், தாமதத்திற்கான நியாயமான காரணங்களை முன்வைக்க சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக இலஞ்சம் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையம் தெரிவித்துள்ளது.
</p><p>
2026 ஜூன் 30ஆம் திகதிக்குப் பின்னரும், ஆகஸ்ட் 31ஆம் திகதி வரையிலும் தாமதமாக சமர்ப்பிக்கப்பட்ட சொத்து மற்றும் பொறுப்பு அறிக்கைகளுக்கு, தாமதமான நாட்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப 2023ஆம் ஆண்டின் 9ஆம் இலக்க ஊழல் தடுப்புச் சட்டத்தின் 90ஆம் பிரிவின் கீழ் நிர்வாக அபராதம் விதிக்கப்படவுள்ளதாக ஆணையம் தெரிவித்திருந்தது.
</p><p>
எனினும், அபராதம் விதிப்பதற்கு முன்னர் தாமதத்திற்கான நியாயமான காரணங்கள் ஏதேனும் இருப்பின் அவற்றை ஆணையத்திடம் சமர்ப்பிக்க வாய்ப்பு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>நிர்வாக அபராதம்</h2><p>
</p><p>
இதன்படி, 2023ஆம் ஆண்டின் 9ஆம் இலக்க ஊழல் தடுப்புச் சட்டத்தின் 80(1)ஆம் பிரிவின் கீழ் சொத்து மற்றும் பொறுப்பு அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டியிருந்தும், அதனை உரிய காலத்தில் சமர்ப்பிக்கத் தவறியவர்கள், நிர்வாக அபராதம் விதிக்காமல் இருப்பதற்கான காரணங்களை 2026 செப்டெம்பர் 30ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் எழுத்து மூலம் ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/598e91cb-6513-4ac1-b51a-1c1192f7814e/26-6aa1510f783a8.webp' /></p><p>மேலும் தாமதத்திற்கான காரணங்களுடன் தொடர்புடைய ஆதார ஆவணங்கள் இருப்பின் அவற்றையும் இணைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
</p><p>
காரணங்களை சமர்ப்பிக்கும்போது, கோரிக்கை விடுக்கும் நபரின் தேசிய அடையாள அட்டை இலக்கம் மற்றும் தொலைபேசி இலக்கம் கட்டாயமாக குறிப்பிடப்பட வேண்டும்.
</p><p>
செப்டெம்பர் 30ஆம் திகதிக்குள் தாமதத்திற்கான காரணங்கள் ஆணையத்திடம் கிடைக்காவிட்டால், தாமதத்திற்கான காரணம் எதுவும் இல்லை எனக் கருதி நிர்வாக அபராதம் விதிக்கப்படும் என ஆணையம் தெரிவித்துள்ளது.
</p><p>
தபால் மூலம் காரணங்களை சமர்ப்பிக்கும்போது, உறையின் இடது பக்க மேல் மூலையில் “தாமதத்திற்கான காரணங்கள்” என குறிப்பிட வேண்டும். மின்னஞ்சல் மூலம் அனுப்பும்போது, மின்னஞ்சலின் தலைப்புப் பகுதியில் அதே விடயத்தை குறிப்பிடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><p><b>தொடர்புடைய முகவரிகள் மற்றும் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
</b></p><ul><li>நிறுவன முகவரி: இயக்குனர் (சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் அறிக்கை பிரிவு), எண் 36, மலலசேகர மாவத்தை, கொழும்பு 07.
</li><li>மின்னஞ்சல் முகவரி: ald@ciaboc.gov.lk
</li><li> தொலைபேசி/தொலைநகல் எண்: 0112587287
</li><li>வாட்ஸ்அப் எண்: 0767011954</li></ul><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-09T12:29:16+00:00</updated>
        </entry>
    </feed>
