<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-09-13T07:27:11+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Kiyas Shafe</name>
            </author>
            <title type="text"><![CDATA[மூதூர் மஹாவலி கங்கை பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/illegal-sand-mining-in-the-mahaweli-river-1789282574"></link>
            <id>https://tamilwin.com/article/illegal-sand-mining-in-the-mahaweli-river-1789282574</id>
            <summary type="text">திருகோணமலை - மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஹாவலி கங்கைப் பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட நான்கு வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. 

திருகோண...</summary>
            <content type="html"><![CDATA[<p>திருகோணமலை - மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஹாவலி கங்கைப் பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட நான்கு வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.</p><p> 

திருகோணமலை பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் நேற்று (12.09.2026) இரவு விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையொன்றை மேற்கொண்டிருந்தனர்.</p><h2>தப்பிச் சென்ற வாகனச் சாரதிகள்</h2><p> </p><p>

இதன்போது, அனுமதிப்பத்திரமின்றி கங்கையில் இறங்கி மணல் அகழ்வில் ஈடுபட்ட மூன்று உழவு இயந்திரங்களும், ஒரு டிப்பர் வாகனமும் கைப்பற்றப்பட்டிருந்தன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fafc77cd-2f09-4d2c-994f-705cb17c906e/26-6aa64fda8a906.webp' /></p><p> </p><p>

இதன்போது வாகனச் சாரதிகள் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். </p><p>

கைப்பற்றப்பட்ட வாகனங்கள் மூதூர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், அவற்றை மூதூர் நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/64c81a66-5162-4447-b830-d2706db2f9f8/26-6aa64fdb6ef5f.webp' /></p>]]></content>
            <updated>2026-09-13T07:26:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[மோசமான வானிலையில் சிக்கிய இந்தோனேசியப் படகு... 140 பேர்களைத் தேடும் மீட்புக் குழு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/indonesian-ferry-searching-140-people-1789284194"></link>
            <id>https://news.lankasri.com/article/indonesian-ferry-searching-140-people-1789284194</id>
            <summary type="text">Indonesian rescue crews searching for 140 people: 140 பேரைத் தேடும் இந்தோனேசிய மீட்புக் குழுவினர்.
ஜாவா கடலில் காணாமல் போனதாகத் தெரிவிக்கப்பட்ட பயணிக...</summary>
            <content type="html"><![CDATA[<p>Indonesian rescue crews searching for 140 people: 140 பேரைத் தேடும் இந்தோனேசிய மீட்புக் குழுவினர்.
</p><p>ஜாவா கடலில் காணாமல் போனதாகத் தெரிவிக்கப்பட்ட பயணிகள் படகில் இருந்த 140 பேரைத் தேடும் பணியில் இந்தோனேசிய மீட்புக் குழுவினர் ஈடுபட்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/195aabbf-595f-4e3d-b50f-cfdaf95897fe/26-6aa64f64b3ea3.webp' /></p><p> தொடர்புடையக் கப்பலில் இருந்த மற்ற 103 பேர் மீட்கப்பட்ட நிலையில், அவர்களில் ஒருவர் மரணமடைந்ததாகத் தேடல் மற்றும் மீட்புப் பணி முகமையின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். </p><p>ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 240 க்கும் மேற்பட்டவர்களை ஏற்றிச் சென்ற பயணிகள் படகு ஒன்று ஜாவா கடலில் மோசமான வானிலையில் சிக்கி தொடர்பை இழந்து காணாமல் போனதாக அந்நாட்டின் தேடல் மற்றும் மீட்பு முகமை தெரிவித்திருந்தது. </p><p>விர்கோ டிரான்ஸ்போர்ட் 8 (Virgo Transport 8) கப்பல் சனிக்கிழமையன்று கிழக்கு ஜாவாவின் சுரபாயா நகரிலிருந்து தெற்கு கலிமந்தானின் பன்ஜார்மாசின் நகருக்குப் புறப்பட்ட நிலையில், அதனுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது. </p><p>இந்த நிலையில் தற்போது பல்வேறு கப்பல்களைப் பயன்படுத்தி 103 பேர் மீட்கப்பட்டதாகவும்; அவர்களில் சிலர் கிழக்கு ஜாவாவில் உள்ள ஒரு துறைமுகத்திற்குக் கொண்டு செல்லப்படுவார்கள் என்றும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p> </p><p>தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியானதும், அதிகாரிகள் தரப்பு ஒரு மீட்புக் குழுவினர் குழு, கப்பல்கள் மற்றும் ஒரு ஹெலிகொப்டரை அப்பயணிகள் கப்பல் கடைசியாக இருந்த இடத்திற்கு அனுப்பி தேடுதல் வேட்டையைத் தொடங்கினர். </p><p>போர்னியோ தீவில் அமைந்துள்ள தெற்கு கலிமந்தானின் பன்ஜார்மாசின் நகரில் உள்ள தேடல் மற்றும் மீட்புப் பிரிவு அலுவலகம், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சுமார் 2 மணியளவில் 'விர்கோ டிரான்ஸ்போர்ட் 8' (Virgo Transport 8) உடனான தொடர்பு துண்டிக்கப்பட்ட இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு இது குறித்த தகவலைப் பெற்றதாகத் தெரிவித்தது. தற்போது எஞ்சிய 140 பேர்களைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்றே தகவல் வெளியாகியுள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-13T07:20:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[செப்டம்பர் 19 முதல் அதிவேக நெடுஞ்சாலைகளில் கட்டாயமக்கப்படும் நடைமுறை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/seat-belts-mandatory-on-toll-ways-from-sept-19-1789280151"></link>
            <id>https://ibctamil.com/article/seat-belts-mandatory-on-toll-ways-from-sept-19-1789280151</id>
            <summary type="text">அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் பொதுப் போக்குவரத்து பேருந்துகள் உட்பட அனைத்து வாகனங்களின் பயணிகளும் ஆசனப்பட்டி அணிவது தொடர்பில் அறிவிப்பொன்று வெளியா...</summary>
            <content type="html"><![CDATA[<p>அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் பொதுப் போக்குவரத்து பேருந்துகள் உட்பட அனைத்து வாகனங்களின் பயணிகளும் ஆசனப்பட்டி அணிவது தொடர்பில் அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது.</p><p>அதன்படி, அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் பொதுப்பேருந்துகளில் ஆசனப்பட்டியின் பயன்பாடு செப்டம்பர் 19 முதல் கட்டாயமாக்கப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது.
</p><p>
ஆசனப்பட்டி வசதிகள் இல்லாத பேருந்துகள், ஆசனப்பட்டி அணியத் தவறும் சாரதிகள் மற்றும் பயணிகளுக்கு எதிராக சட்டரீதியான நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>தேசிய போக்குவரத்து ஆணைக்குழு&nbsp;</h2><p>இந்த புதிய விதிமுறை குறித்து பேருந்து பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேலியகொட அதிவேக நெடுஞ்சாலை நுழைவாயிலில் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அதிகாரிகளால் விழிப்புணர்வுத் துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/18bafe9a-853a-45f2-9045-df91a0fb592e/26-6aa64e3a9097d.webp' /></p><p>
</p><p>
பல்வேறு காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டிருந்த இந்த நடவடிக்கை செப்டம்பர் 19 முதல் உறுதியாக நடைமுறைப்படுத்தப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் பி.கே. சந்திரபால உறுதிப்படுத்தியுள்ளார்.
</p><p>
விதிமீறல்களில் ஈடுபடுவோருக்கு எதிராக அபராதம் அல்லது சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும், நடைமுறைத்திகதிக்கு முன்னர் மேலதிக விழிப்புணர்வு திட்டங்கள் நடத்தப்படும் என்றும் ஆணைக்குழு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-13T07:16:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[சச்சினின் டெஸ்ட் சாதனையை முறியடித்துள்ள ஜோ ரூட்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/joe-root-breaks-sachin-test-half-century-record-1789283172"></link>
            <id>https://news.lankasri.com/article/joe-root-breaks-sachin-test-half-century-record-1789283172</id>
            <summary type="text">joe root breaks sachin test half century record: சச்சினின் டெஸ்ட் அரை சத சாதனையை ஜோ ரூட் முறியடித்துள்ளார்.

சச்சினின் டெஸ்ட் சாதனையை முறியடித்த ஜோ ...</summary>
            <content type="html"><![CDATA[<p>joe root breaks sachin test half century record: சச்சினின் டெஸ்ட் அரை சத சாதனையை ஜோ ரூட் முறியடித்துள்ளார்.
</p><h3>
சச்சினின் டெஸ்ட் சாதனையை முறியடித்த ஜோ ரூட்
</h3><p>
எட்ஜ்பாஸ்டனில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 3-0 என்ற கணக்கில் தொடரை முழுமையாக கைப்பற்றியது.</p><p> 

இந்த போட்டியில் 69 பந்துகளில் 62 ஓட்டங்கள் குவித்த இங்கிலாந்தின் ஜோ ரூட் (Joe Root), சச்சின் டெண்டுல்கரின் டெஸ்ட் சாதனையை முறியடித்துள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/47363730-5c10-49a6-9345-3abcefdb3631/26-6aa64b65664b6.webp' /></p><p> 

நேற்று அடித்த அரைசதம் மூலம், ஜோ ரூட்டின் டெஸ்ட் அரைசதங்களின் எண்ணிக்கை 69 ஆக உயர்ந்துள்ளது.</p><p> 

இதன் மூலம், டெஸ்ட் வரலாற்றில் அதிக அரைசதங்கள் அடித்த வீரர் என்ற சாதனையை ஜோ ரூட் படைத்துள்ளார்.&nbsp;</p><p></p><p>

முன்னதாக சச்சின் டெண்டுல்கர் 68 அரைசதங்களுடன் இந்த சாதனை பட்டியலில் முதலிடத்தில் இருந்தார். தற்போது ஜோ ரூட் அந்த சாதனையை முறியடித்துள்ளார்.</p><p>

மேற்கிந்தியத் தீவுகளின்ஷிவ்நரைன் சந்தர்பால் 66 அரைசதங்களுடன் 3வது இடத்திலும், அவுஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டன் ஆலன் பார்டர், இந்தியாவின் ராகுல் டிராவிட் தலா 63 அரைசதங்களுடன் அடுத்தத இடங்களில் உள்ளனர். </p><p>

இதே போல், டெஸ்ட் போட்டிகளில் 15,921 ஓட்டங்களுடன் சச்சின் டெண்டுல்கர் டெஸ்ட்டில் அதிகபட்ச ஓட்டங்கள் வைத்துள்ள வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
</p><p>
தற்போது 14,278 ஓட்டங்களை குவித்துள்ள ஜோ ரூட்டிற்கு இந்த சாதனையை முறியடிக்க 1,643 ஓட்டங்களே தேவைப்படுகிறது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-13T07:11:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் : அசத்தலான அம்மிணி கார கொழுக்கட்டை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/ganesh-chaturthi-special-ammini-kozhukattai-recipe-1789280901"></link>
            <id>https://manithan.com/article/ganesh-chaturthi-special-ammini-kozhukattai-recipe-1789280901</id>
            <summary type="text">விநாயகரின் பிறந்த தினமான சதுர்த்தி தினத்தில் விநாயகருக்கு விரும்பமான கொழுக்கட்டை செய்து படைத்து சிறப்பு பூஜை செய்வது வழக்கம். 

அப்படி ஒவ்வொரு வருடம...</summary>
            <content type="html"><![CDATA[<p>விநாயகரின் பிறந்த தினமான சதுர்த்தி தினத்தில் விநாயகருக்கு விரும்பமான கொழுக்கட்டை செய்து படைத்து சிறப்பு பூஜை செய்வது வழக்கம். </p><p>

அப்படி ஒவ்வொரு வருடமும் ஒரே மாதிரியாக கொழுக்கட்டை செய்யாமல் இந்த தடவை சற்று வித்தியாசமாக வீட்டில் உள்ள சர்க்கரை நோயாளிகளும் தாராளமாக சாப்பிடும் வகையில், கார கொழுக்கட்டையையும் சேர்த்து செய்யுங்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4c3c951d-07af-4d63-b16c-cd6a66f16c55/26-6aa64ba357d10.webp' /></p><p></p><p> அதுவும் அம்மிணி கார கொழுக்கட்டையை செய்யுங்கள்.

இந்த அம்மிணி கார கொழுக்கட்டையை எளிமையான முறையில் பஞ்சுபோல் மெது மெதுவென எப்படி செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம். </p><h2>

தேவையான பொருட்கள்
</h2><p>கொழுக்கட்டை மாவு / பச்சரிசி மாவு – 1 கப்<br></p><p>&nbsp;உப்பு– ½ டீஸ்பூன்
</p><p>நெய் – 1–2 டீஸ்பூன்
</p><p>சுடுநீர் – தேவையான அளவு
அரைக்க</p><p>பச்சை மிளகாய் – 3
</p><p>தேங்காய் – ½ கப்
</p><p>கறிவேப்பிலை – 1 கொத்து</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ebe3f36d-dd49-434b-925e-0a83b2ccb2cc/26-6aa64ba40c7fe.webp' /></p><p>
</p><p><b>தாளிக்க தேவையானவை</b></p><p>
எண்ணெய் – 2 டீஸ்பூன்</p><p>
கடுகு – ½ டீஸ்பூன்
</p><p>உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்</p><p>
கறிவேப்பிலை – 1 கொத்து</p><p>
வரமிளகாய் – 1–2
</p><p>பெருங்காயத் தூள் – ¼ டீஸ்பூன்</p><p>
உப்பு – ¼ டீஸ்பூன்
</p><p>வேக வைத்த கொழுக்கட்டை – தேவையான அளவு</p><p>
அரைத்த தேங்காய் விழுது – தேவையான அளவு
</p><p>கொத்தமல்லி – சிறிதளவு</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/89527a03-7406-4681-8e7d-f3e7beaba50e/26-6aa64ba4b4cd7.webp' /></p><p>
</p><h2>செய்முறை</h2><p>
முதலில் ஒரு பாத்திரத்தில் கொழுக்கட்டை மாவை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் உப்பு மற்றும் நெய் சேர்த்து, சுடுநீரை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி மென்மையாக பிசைந்து கொள்ளுங்கள். மாவை மூடி வைத்து சுமார் 15 நிமிடங்கள் ஊற விடுங்கள்.
</p><p>
இதற்கிடையில், மிக்சர் ஜாரில் தேங்காய், பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு நன்றாக அரைத்து வைத்துக் கொள்ளுங்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d7c3bf78-0e3f-41d7-ac1b-fd2cd0a2dced/26-6aa64ba566f44.webp' /></p><p></p><p>
</p><p>
பின்னர் ஊற வைத்த மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளுங்கள். அவற்றை இட்லித் தட்டில் வைத்து, இட்லி பாத்திரத்தில் சுமார் 10 நிமிடங்கள் வேகவைத்து எடுத்து வைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.</p><p>அதனையடுத்து,&nbsp; ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றுங்கள். எண்ணெய் சூடானதும் கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, வரமிளகாய் மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்து தாளிக்க வேண்டும்.&nbsp;</p><p>

பிறகு வேக வைத்த கொழுக்கட்டையைச் சேர்த்து ஒரு நிமிடம் மெதுவாக கிளறுங்கள். அதனுடன் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதையும் சேர்த்து நன்றாகக் கிளறி, தேவையான அளவு உப்பு சேர்த்து இறுதியாக கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், சுவையான அம்மிணி கொழுக்கட்டை தயார்.</p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b>&nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-13T07:07:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[லண்டனில் அசத்திய தமிழக முதலமைச்சர் விஜய் ; இணையத்தை கலக்கும் ட்ரெண்டிங் காட்சிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/tamil-nadu-cm-vijay-impresses-in-london-1789282542"></link>
            <id>https://jvpnews.com/article/tamil-nadu-cm-vijay-impresses-in-london-1789282542</id>
            <summary type="text">லண்டனில் நடிகர் அஜித் பங்கேற்ற சிற்றூந்து பந்தய நிகழ்வில், முதலமைச்சர் விஜய் ரேசர் உடையில் திடீரென வருகை தந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வர...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">லண்டனில் நடிகர் அஜித் பங்கேற்ற சிற்றூந்து பந்தய நிகழ்வில், முதலமைச்சர் விஜய் ரேசர் உடையில் திடீரென வருகை தந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
</p><p style="text-align: justify; ">
ரேசிங் களத்தில் விஜய் மற்றும் அஜித் இருவரும் ரேசர் உடையில், இந்திய தேசியக் கொடியை ஏந்தியவாறு ஒன்றாக நிற்கும் நிழற்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2dea059b-dfec-4659-8bc5-ded42400a6ad/26-6aa64d35ca4cd.webp' /></p><p style="text-align: justify; ">இருவரும் ஒரே இடத்தில் இணைந்து தேசியக் கொடியை ஏந்தியுள்ள இந்த அரிய காட்சி, விஜய் மற்றும் அஜித் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.</p><p style="text-align: justify; ">
கோர்ப்பரேட் பந்தய உடையில் அங்கு சென்றிருந்த விஜய், ரசிகர்களைப் பார்த்து கை அசைத்து வாழ்த்து தெரிவித்ததுடன், நடிகர் அஜித்திற்கு தனது ஆதரவையும் வாழ்த்துக்களையும் நேரில் தெரிவித்துள்ளார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">

இதனைத் தொடர்ந்து, இருவரும் இணைந்து காணப்படும் நிழற்படங்கள் மற்றும் காணொளிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பகிரப்பட்டு வருகின்றன.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-13T07:02:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[நள்ளிரவில் பொலிஸார் நடத்திய துப்பாக்கிச்சூடு ; சொகுசு வேனுக்குள் அரங்கேறிய தகாத செயல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/police-shooting-at-midnight-1789273765"></link>
            <id>https://jvpnews.com/article/police-shooting-at-midnight-1789273765</id>
            <summary type="text">கம்பஹா, அஸ்கிரிய பகுதியில் பொலிஸாரின் கட்டளையை மீறிச் சென்ற வேன் மீது பொலிஸாரால் நேற்று (12) இரவு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

 

மேல் மா...</summary>
            <content type="html"><![CDATA[<p>கம்பஹா, அஸ்கிரிய பகுதியில் பொலிஸாரின் கட்டளையை மீறிச் சென்ற வேன் மீது பொலிஸாரால் நேற்று (12) இரவு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
</p><p>
 

மேல் மாகாணப் புலனாய்வுப் பிரிவுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், வேன் ஒன்றின் மூலம் கம்பஹா பிரதேசத்திற்கு போதைப்பொருள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக முற்கூட்டியே கிடைத்த தகவலுக்கு அமைவாக வெலிவேரிய பொலிஸ் நிலையத்தின் உத்தியோகத்தர்கள் குழுவொன்று நேற்றைய தினம் இந்த நடவடிக்கையை முன்னெடுத்திருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/99c2670f-bf64-40a1-a98d-5dbbd240e160/26-6aa626a6a7253.webp' /></p><h2>துப்பாக்கிச் சூடு&nbsp;</h2><p>
 

அதற்கமைய, குறித்த வேன் கம்பஹா உடுகம்பொல நோக்கிப் பயணம் செய்வதை உறுதிப்படுத்திக் கொண்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஜீப் வண்டி மூலம் குறித்த வேனை நுணுக்கமாகப் பின்தொடர்ந்துள்ளனர்.</p><p>

 

இதன்போது, பொலிஸ் உத்தியோகத்தர்கள் தன்னைத் பின்தொடர்வதை அறியாத வேனின் சாரதி, உடுகம்பொல வீதியின் மல்வத்த சந்தைப் பகுதியில் வேனை வீதியோரமாக நிறுத்தியுள்ள நிலையில், பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஜீப்பிலிருந்து இறங்கி வேனைப் பரிசோதிக்க முற்பட்டுள்ளனர்.
</p><p>
 

இதன்போது வேனின் சாரதி, வீதியில் சென்ற பல வாகனங்களை விபத்துக்குள்ளாக்கியவாறு வேனைப் பல தடவைகள் உடனடியாக முன்னும் பின்னுமாக இயக்கியதுடன், பொலிஸ் ஜீப் மீதும் மோதி உத்தியோகத்தர்களுக்கும் ஆபத்தை ஏற்படுத்தித் தப்பியோட முயன்றுள்ளார்.
</p><p>
 

இதனையடுத்து பொலிஸ் உத்தியோகத்தர்கள் வேன் நோக்கித் துப்பாக்கிச் சூடு நடத்தியதுடன், துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி வேனின் சாரதியும் காயமடைந்துள்ளார்.
</p><p>
 

காயமடைந்த சாரதியைப் பொலிஸ் பாதுகாப்புடன் கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
</p><p>
 

இதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது, வேனுக்குள் இருந்து 15 கிராம் ஹெரோயின் போதைப்பொருளும் 9 கிராம் ஐஸ் போதைப்பொருளும் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

 

இச்சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-13T07:02:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[Toronto Film Festival-லில் கீர்த்தி சுரேஷ்.. Stunning லுக்கில் போட்டோஷூட்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/toronto-film-festival-keerthy-suresh-photoshoot-1789280933"></link>
            <id>https://cineulagam.com/article/toronto-film-festival-keerthy-suresh-photoshoot-1789280933</id>
            <summary type="text">தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் கீர்த்தி சுரேஷ் தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் &#039;டோரதி&#039; எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார்...</summary>
            <content type="html"><![CDATA[<p>தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் கீர்த்தி சுரேஷ் தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் 'டோரதி' எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் 25-ஆம் தேதி வெளியாகிறது. ஆனால், அதற்கு முன் டொராண்டோ சர்வதேசத் திரைப்பட விழாவில் (Toronto International Film Festival) இப்படம் திரையிடப்பட்டு நல்ல வரவேற்பையும், பாராட்டுகளையும் பெற்றுள்ளது. </p><p>இந்த திரைப்பட விழாவில் கலந்துகொண்ட கீர்த்தி சுரேஷ், தன்னுடைய Stunning லுக்கில் எடுத்துக்கொண்ட போட்டோஷூட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. </p><p>இதோ அந்த போட்டோஷூட்:</p>]]></content>
            <updated>2026-09-13T07:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[செம்மணி மனிதப் புதைகுழிக்கு நீதி கோரி யாழில் மாபெரும் பேரணி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/rally-in-jaffna-justice-for-the-chemmani-1789280590"></link>
            <id>https://ibctamil.com/article/rally-in-jaffna-justice-for-the-chemmani-1789280590</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான விசாரணைகளை சர்வதேசம் முன்னெடுக்க வேண்டும் என
கோரி தமிழ் தேசிய பேரவையின்&amp;nbsp; ஏற்பாட்டில் யாழில் பேரணி...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான விசாரணைகளை சர்வதேசம் முன்னெடுக்க வேண்டும் என
கோரி தமிழ் தேசிய பேரவையின்&nbsp; ஏற்பாட்டில் யாழில் பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது.</p><p>இன்று (13) காலை நல்லூர் கைலாச பிள்ளையார் கோவில் அருகாமையில் அமைந்துள்ள, ஐக்கிய நாடுகள் காரியாலயத்திற்கு முன்னால் இருந்து ஆரம்பமான பேரணி கிட்டு பூங்கா பகுதியில் நிறைவடைந்ததுடன் அங்கு கூட்டமும் நடைபெற்றது.</p><p>இலங்கையில் நடைபெற்றது இனப்படுகொலை என்பதற்கான சான்றாக செம்மணி மனிதப் புதைகுழி காணப்படுவதனால் அது தொடர்பில் சர்வதேச விசாரணை முன்னெடுக்க வேண்டும் என கோரியே இப்பேரணி நடைபெற்றது.</p><p></p><h2>சர்வதேச விசாரணைகள்&nbsp;</h2><p>
செம்மணி மனித புதைகுழியில் இருந்து 583 மனித என்புக்கூடுகளும், சான்றுப் பொருட்களும் மீட்கப்பட்டுள்ள நிலையில் அவை தொடர்பில் சர்வதேச விசாரணைகள்
முன்னெடுக்கப்பட வேண்டும் என்று இதன்போது வலியுறுத்தப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5259dc65-2c5a-4060-b479-c416e201798d/26-6aa6462b16eb7.webp' /></p><p>இதன்போது தமிழின அழிப்பிற்கு சர்வதேச நீதி, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச விசாரணை, அரசியல் கைதிகளின் விடுதலை, பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குதல், வட கிழக்கு கடற்றொழிலாளர் பிரச்சினைக்கு தீர்வு, இராணுவத்தினர் வசமுள்ள மக்களின் காணிகளை விடுவித்தல், தமிழ் ஊடகவியலாளர்கள் மீதான அடக்குமுறை உள்ளிட்ட மேலும் சில கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-13T06:51:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Malaivanjan</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு நுவரெலியா மாவட்டத்தில் புதிய சாகச சுற்றுலாத் திட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/adventure-tourism-project-in-nuwara-eliya-district-1789281060"></link>
            <id>https://tamilwin.com/article/adventure-tourism-project-in-nuwara-eliya-district-1789281060</id>
            <summary type="text">உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு, மத்திய மாகாணத்தில்
சுற்றுலாத்துறையை மேலும் மேம்படுத்தும் நோக்கில், புதிய சாகச சுற்றுலா
நிகழ்ச்சித் திட்டமொன்று முன்...</summary>
            <content type="html"><![CDATA[<p>உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு, மத்திய மாகாணத்தில்
சுற்றுலாத்துறையை மேலும் மேம்படுத்தும் நோக்கில், புதிய சாகச சுற்றுலா
நிகழ்ச்சித் திட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
</p><p>
இதன் ஒரு பகுதியாக, நுவரெலியா மாவட்டத்தின் மஸ்கெலியா, நல்லதண்ணி மற்றும்
மவுசாகலை ஆகிய பகுதிகளை மையமாகக் கொண்டு, நீர் மற்றும் சாகச சுற்றுலா நடவடிக்கைகள் இடம்பெறவுள்ளன.
</p><p>
இந்த நிகழ்வு எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 26 மற்றும் 27ஆம் திகதிகளில்,
நுவரெலியா மாவட்டத்தின் பிரபலமான மோஹினி அருவியை மையமாகக் கொண்டு நடத்துவதற்கு
திட்டமிடப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/db1fda8e-4a4e-403a-a4c0-3c6a1881611c/26-6aa64728c3371.webp' /></p><h2>பல்வேறு கலாசாரங்களின் இணைவு</h2><p>

மத்திய மாகாணத்தில் இயற்கை வளங்கள், வரலாற்று முக்கியத்துவம் மற்றும் பல்வேறு
கலாசாரங்களின் இணைவு காணப்படுவதுடன், இதுவரை முழுமையாகப் பயன்படுத்தப்படாத பல
சுற்றுலா வளங்களும் காணப்படுகின்றன.</p><p>

இந்த வளங்களை பொறுப்புடனும் நிலையான முறையிலும் பயன்படுத்தி, பிரதேச மக்களின்
வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதும், சுற்றுலாத்துறையின் ஊடாக புதிய பொருளாதார
வாய்ப்புகளை உருவாக்குவதுமே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
</p><p>
குறிப்பாக, நொர்வூட் பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட மவுசாகலை நீர்த்தேக்கம்,
காமோர், மேரே மற்றும் மோஹினி போன்ற நீர்வீழ்ச்சிகள், அத்துடன் புனித
சிவனொளிபாதமலை ஆகியவற்றை மையப்படுத்தி எதிர்காலத்தில் சுற்றுலா அபிவிருத்தி
மற்றும் ஊக்குவிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a74fa324-6296-470f-bb9d-dcafb2a840f2/26-6aa6472997a11.webp' /></p><h2>சாகச சுற்றுலா</h2><p>

இதனடிப்படையில், சாகச சுற்றுலாவை ஒரு புதிய சுற்றுலா உற்பத்தியாக
அறிமுகப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்வதற்கும் இந்த நிகழ்வு
பயன்படுத்தப்படவுள்ளது.
</p><p>
இந்த நிகழ்ச்சியின் பிரதான நோக்கங்களில் ஒன்றாக நல்லதண்ணி மற்றும் அதனைச்
சூழவுள்ள பகுதிகளின் சுற்றுலா கவர்ச்சியை மேலும் அதிகரிப்பது
குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/528c0995-7a07-42e9-bf54-e1695b59b017/26-6aa6472a6f747.webp' /></p><p>

அத்துடன், பிரதேச மக்களுக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகளை
உருவாக்குதல், அவர்களின் வருமான மட்டத்தை உயர்த்துதல், சுற்றுலாப் பயணிகளுக்கு
புதிய அனுபவங்களையும் சுற்றுலா உற்பத்திகளையும் அறிமுகப்படுத்துதல் ஆகியவையும்
எதிர்பார்க்கப்படுகின்றன.
</p><p>
குறிப்பாக, நல்லதண்ணியை ஒரு முக்கிய சுற்றுலா இலக்காக மேலும் நிலைநிறுத்தி,
வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை இரண்டு முதல் மூன்று நாட்கள் வரை பிரதேசத்தில்
தங்க வைப்பதற்கான வாய்ப்புகளை உருவாக்குவதும் திட்டத்தின் மற்றுமொரு
இலக்காகும்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/377bc3ce-3ace-461c-b29d-37632c783dbe/26-6aa6472b47ecf.webp' /></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-13T06:50:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[செப்டம்பர் 19 முதல் கட்டாயமாக்கப்படும் நடைமுறை ; காத்திருக்கும் சட்ட நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/new-procedure-mandatory-from-september-19-1789281870"></link>
            <id>https://jvpnews.com/article/new-procedure-mandatory-from-september-19-1789281870</id>
            <summary type="text">அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் பொதுப் போக்குவரத்து பேருந்துகள் உட்பட அனைத்து வாகனங்களின் பயணிகளும் ஆசனப்பட்டி அணிவது எதிர்வரும் 19ஆம் திகதி முதல் க...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் பொதுப் போக்குவரத்து பேருந்துகள் உட்பட அனைத்து வாகனங்களின் பயணிகளும் ஆசனப்பட்டி அணிவது எதிர்வரும் 19ஆம் திகதி முதல் கட்டாயமாக்கப்படவுள்ளது.</p><p style="text-align: justify; ">

அதிவேக நெடுஞ்சாலைகளில் இயங்கும் பொதுப்பேருந்துகளில் ஆசனப்பட்டியின் பயன்பாடு செப்டம்பர் 19 முதல் கட்டாயமாக்கப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b29d6aa2-ec54-4033-adca-ca4d234b89b6/26-6aa6464f7fda9.webp' /></p><h2 style="text-align: justify; ">ஆசனப்பட்டி</h2><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
ஆசனப்பட்டி வசதிகள் இல்லாத பேருந்துகள், ஆசனப்பட்டி அணியத் தவறும் சாரதிகள் மற்றும் பயணிகளுக்கு எதிராக சட்டரீதியான நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
</p><p style="text-align: justify; ">
இந்த புதிய விதிமுறை குறித்து பேருந்து பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேலியகொட அதிவேக நெடுஞ்சாலை நுழைவாயிலில் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அதிகாரிகளால் விழிப்புணர்வுத் துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">

பல்வேறு காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டிருந்த இந்த நடவடிக்கை செப்டம்பர் 19 முதல் உறுதியாக அமுல்படுத்தப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர்&nbsp; உறுதிப்படுத்தியுள்ளார்.
</p><p style="text-align: justify; ">
விதிமீறல்களில் ஈடுபடுவோருக்கு எதிராக அபராதம் அல்லது சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும், நடைமுறைத்திகதிக்கு முன்னர் மேலதிக விழிப்புணர்வு திட்டங்கள் நடத்தப்படும் என்றும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-13T06:44:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[செம்மணி மனித புதைகுழிக்கு சர்வதேச விசாரணை கோரி யாழில் பேரணி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/rally-in-jaffna-demanding-an-international-inquiry-1789281482"></link>
            <id>https://tamilwin.com/article/rally-in-jaffna-demanding-an-international-inquiry-1789281482</id>
            <summary type="text">செம்மணி மனித படுகொலை தொடர்பான விசாரணைகளை சர்வதேசம் முன்னெடுக்க வேண்டும் என
கோரி யாழ்ப்பாணத்தில் பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

இந்த போராட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>செம்மணி மனித படுகொலை தொடர்பான விசாரணைகளை சர்வதேசம் முன்னெடுக்க வேண்டும் என
கோரி யாழ்ப்பாணத்தில் பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. </p><p>

இந்த போராட்டமானது, இன்று(13.09.2026) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2> 



 சர்வதேச கவனத்திற்கான பேரணி</h2><p>
செம்மணி மனித புதைகுழியில் இருந்து 583 மனித என்புக்கூடுகளும் , சான்று
பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன. 

அவை தொடர்பில் சர்வதேச விசாரணைகள்
முன்னெடுக்கப்பட வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2ad8e520-3af3-4657-9bd0-cf10f93b2f7c/26-6aa6453bd8d7b.webp' /></p><p> </p><p>

இலங்கையில் நடைபெற்றது இன படுகொலை என்பதற்கான
சான்றாக செம்மணி மனித புதைகுழி காணப்படுகிறது. அதனால் அது தொடர்பில் சர்வதேச
விசாரணை முன்னெடுக்க வேண்டும் என போராட்டக்காரர்களால் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.</p><p>

நல்லூர் கைலாச பிள்ளையார் கோவில் அருகாமையில் அமைந்துள்ள , ஐ.நா
காரியாலயத்திற்கு அருகில் இருந்து ஆரம்பமான இந்த பேரணி, கிட்டு பூங்கா பகுதியில்
நிறைவடைந்துள்ளது.</p><p> 

இதனைத் தொடர்ந்து போராட்டக்காரர்கள் சேர்ந்து கூட்டம் ஒன்றும் இடம்பெற்றுள்ளது.&nbsp; &nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/31aaaa9a-b0b1-4953-b35e-5f659d1c4edb/26-6aa6453cc8abe.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9068d9de-c500-4c04-bcf8-05fe71f0a170/26-6aa6453da2376.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f7c4e9cf-87ee-4b8a-bc99-2acc021eb25c/26-6aa6453e7bd46.webp' /></p><p></p><p></p><p><br></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-13T06:40:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஏன்டா அரசியலுக்கு வந்தோம்னு கதறி அழுவாங்க..திரிஷாவுக்கு கல்யாணம் நிலைக்காது!! ஜோதிடர் உடைத்த உண்மை..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/astrologer-predictions-trishas-marriage-politics-1789281230"></link>
            <id>https://viduppu.com/article/astrologer-predictions-trishas-marriage-politics-1789281230</id>
            <summary type="text">பிரபல ஜோதிடரான ஷெல்வி, நடிகர் விஜய், முதலமைச்சராவார் என்று கணித்தது நிஜமானதை தொடர்ந்து பலருக்கும் ஜோதிடம் மீது நம்பிக்கை ஏற்பட்டு வருகிறது. தற்போது, ஜ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரபல ஜோதிடரான ஷெல்வி, நடிகர் விஜய், முதலமைச்சராவார் என்று கணித்தது நிஜமானதை தொடர்ந்து பலருக்கும் ஜோதிடம் மீது நம்பிக்கை ஏற்பட்டு வருகிறது. தற்போது, ஜோதிடர் ரேவதி ராஜேஷ்கண்ணா, திரிஷாவின் திருமணம், அரசியல் குறித்து சமீபத்திய பேட்டியில் பகிர்ந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4ba3f70a-4f04-43ef-8461-6dd41a20a84b/26-6aa643d16ffc5.webp' /></p><p> அதில், திரிஷா அரசியலுக்குள் வந்தால் அவருடைய ஜாதகம் அதற்கு முழுமையாக ஆதரவாக இருக்கிறது. </p><h2>அரசியலுக்கு வந்தோம்</h2><p>தற்போதைய நேரத்தில் அவருக்கு அரசியல் ரீதியாக மிகவும் சாதகமான சூழல் உள்ளது, ஆனால், எதிர்காலத்தில் குறிப்பாக 2030-க்கு பின் அவர் சில பெரிய சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அப்போது எதற்காக அரசியலுக்கு வந்தோம் என்று கதறி அழக்கூடிய அளவுக்கு பெரிய சோதனைகள் வர வாய்ப்புள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/62816fbb-c93f-4ec4-914c-b46791fddc62/26-6aa643d0bca9d.webp' /></p><p> </p><p>சினிமாவில் புகழின் உச்சியில் இருக்கும் திரிஷாவுக்கு, தனிப்பட்ட வாழ்க்கை, திருமணம் ஏன் இவ்வளவு தடைகள் வருகிறது என்பது குறித்து பேசிய ரேவதி, 20 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் முன்னணி நடிகையாக திரிஷா இருப்பதற்கு சுக்கிரனின் உச்ச பலமே காரணம். சுக்கிரன் புகழ், பணம், கண்ணியம், திருமணம் ஆகியவற்றிக்கு உரியவர். திரிஷாவின் ஜாதகத்தில் புகழுக்கான காரகம் வலுவாக இருப்பதால் சினிமாவில் கொடிக்கட்டி பறக்கிறார். </p><h2>திரிஷாவுக்கு கல்யாணம்</h2><p>மகர ராசியை சேர்ந்த திரிஷாவுக்கு காலசர்ப்ப தோஷம் அல்லது ராகு - கேது பாதுப்புகள் இருப்பதால் திருமணம் நிச்சயமாகும் நிலைக்கு சென்று நின்றுபோனது. அப்படித்தான் அவருடைய நிச்சயம் நடந்து நின்றுபோனது. </p><p>இனிமேல் திரிஷா திருமணம் செய்துகொண்டாலும், அது பெயருக்கான திருமணமாக மட்டுமே இருக்குமே தவிர, கணவன் - மனைவிக்குள் முழுமையான ஆத்மார்த்தமான, அந்நியோன்யமான வாழ்க்கையாக அந்த திருமண வாழ்க்கை இருக்காது. மகர ராசியை பொறுத்தவரை ஒரு விஷயத்தை பிடித்துவிட்டால் அதை விடாமல் சாதித்துக் காட்ட வேண்டும் என்ற எண்ணம் அதிகம் இருக்கும். அதேபோல் பிடிக்காத விஷயம் என்றால் அதில் இருந்து சரியாக விலகிவிடுவார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8d52b1e5-ac46-477c-b02f-ded65f1e64d8/26-6aa643d221ea7.webp' /></p><p>தங்களுக்கு பிடித்த விஷயத்தை அடைவதில் மகர ராசிக்காரர்கள் மிகவும் பிடிவாதமாக இருப்பார்கள். சில நேரங்களில் சுயநலமாகவும் செயல்படுவார்கள். மகர ராசிக்குள் உத்திராடம், திருவோணம், அபிஜித் ஆகிய நட்சத்திரங்கள் இருப்பதால், குறிப்பிட்ட கிரகங்களின் ஆதிக்கம் மகர ராசிக்கு கூடுதல் பலத்தை கொடுக்கும், அதனால் இந்த ராசிக்காரர்கள் ஒரு விஷயத்தை நினைத்தால் அதை ஆக்கவும் முடியும், தேவையில்லை என்றால் அழிக்கவும் குணம் கூடியவர்களாக இருக்கிறார்கள் என்று ஜோதிடர் ரேவதி ராஜேஷ் கண்ணா தெரிவித்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-09-13T06:33:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆட்சி மாறியது; அரசியல் கலாசாரம் மாறியதா..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/govt-changed-has-the-political-culture-changed-1789279842"></link>
            <id>https://ibctamil.com/article/govt-changed-has-the-political-culture-changed-1789279842</id>
            <summary type="text">

பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டு வருவதாக இலங்கை புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. ஆனால் ஒரு நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி காண்கிறது என்று கூறுவதற்...</summary>
            <content type="html"><![CDATA[<p>

பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டு வருவதாக இலங்கை புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. ஆனால் ஒரு நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி காண்கிறது என்று கூறுவதற்கும், அந்த வளர்ச்சியை மக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையில் உணர்வதற்கும் இடையே இன்னும் ஒரு பெரிய இடைவெளி இருக்கிறது.</p><p>
உணவுப் பொருட்களின் விலை, மின்சாரக் கட்டணம், போக்குவரத்துச் செலவு, கல்வி மற்றும் சுகாதாரச் செலவுகள் போன்றவை குடும்பங்களின் வாழ்க்கையைத் தொடர்ந்து தீர்மானிக்கும் நிலையில், இலங்கை இன்று பொருளாதார மீட்சியையும் அரசியல் மாற்றத்தையும் ஒரே நேரத்தில் எதிர்கொள்கிறது. இதனால் எழும் அடிப்படைக் கேள்வி ஒன்றுதான்: நாடு பொருளாதார ரீதியாக மீண்டு வருகிறதா என்பது மட்டுமல்ல; அரசியல் ரீதியாகவும் உண்மையில் மாறுகிறதா?</p><p>
கடந்த சில ஆண்டுகள் இலங்கை அரசியலில் சாதாரணமான ஆட்சி மாற்றங்களின் காலமாக இருக்கவில்லை. 2022 பொருளாதார நெருக்கடி, அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட மக்கள் எழுச்சி, பழைய அரசியல் தலைமையின் மீதான கடுமையான அதிருப்தி, பின்னர் இடம்பெற்ற தேர்தல் மாற்றங்கள் என, நாட்டின் அரசியல் வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனை உருவானது.</p><p>
இந்த மாற்றத்தின் உச்சமாக 2024 நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி (NPP) 225 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் 159 ஆசனங்களைப் பெற்றது. பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி 40 ஆசனங்களையும், இலங்கைத் தமிழரசுக் கட்சி 8 ஆசனங்களையும் பெற்றன</p><p>

இந்த முடிவை வெறுமனே ஒரு கட்சியின் தேர்தல் வெற்றியாகப் பார்ப்பது போதுமானதல்ல. அது பழைய அரசியல் கலாசாரத்தின் மீதான மக்களின் தீர்ப்பாகவும் அமைந்தது. ஊழலற்ற நிர்வாகம், பொறுப்புக்கூறல், சட்டத்தின் ஆட்சி, அரசியல் சலுகைகளுக்கு முற்றுப்புள்ளி, அரச நிறுவனங்களின் மறுசீரமைப்பு மற்றும் “system change” என அழைக்கப்பட்ட அரசியல் மாற்றம் ஆகியவை மக்கள் எதிர்பார்த்த முக்கிய அம்சங்களாகின.</p><p></p><h3>

ஆனால் இப்போது மிகப் பெரிய கேள்வி எழுகிறது:</h3><p><b>
ஆட்சி மாறியிருக்கிறது. ஆனால் அரசியல் கலாசாரம் உண்மையில் மாறியிருக்கிறதா?</b></p><p>
2024 தேர்தலில் கிடைத்த 159 ஆசனங்கள் எந்தவொரு புதிய அரசாங்கத்திற்கும் அரிதாகக் கிடைக்கும் அளவிலான அரசியல் அதிகாரத்தை வழங்கின. அதேவேளை, புதிய நாடாளுமன்றத்தில் கணிசமான எண்ணிக்கையில் புதிய முகங்களும் இடம்பெற்றன. பழைய அரசியல் தலைமுறையிலிருந்து வேறுபட்ட ஒரு புதிய அரசியல் தலைமுறைக்கு மக்கள் வாய்ப்பளித்தனர்.</p><p>
இதன் அரசியல் முக்கியத்துவம் ஆழமானது. பல ஆண்டுகளாக இலங்கையில் ஆட்சிகள் மாறினாலும், அரசியல் கலாசாரம் பெரிதாக மாறவில்லை என்ற விமர்சனம் நிலவியது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6e20a4d7-c361-48cf-b848-6f22443528d8/26-6aa641c44ece4.webp' /></p><p>

தேர்தலுக்கு முன் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் அதிகாரத்தில் அமர்ந்த பின்னர் வேறு வடிவம் பெறுவது, அரசியல் நியமனங்கள், அதிகார துஷ்பிரயோகம், ஊழல் குற்றச்சாட்டுகள் மற்றும் அரச வளங்களின் அரசியல் பயன்பாடு ஆகியவை மக்கள் மத்தியில் அரசியல் மீதான நம்பிக்கையைத் தொடர்ந்து சிதைத்தன.</p><p>
இந்தப் பின்னணியில்தான் NPP-யின் எழுச்சியைப் புரிந்துகொள்ள வேண்டும்.மக்கள் ஒரு புதிய கட்சியை மட்டும் தேர்ந்தெடுக்கவில்லை. “இப்படியே இனிமேல் முடியாது” என்ற அரசியல் மனநிலையையும் வெளிப்படுத்தினர். ஆனால் தேர்தல் வெற்றி அரசியல் மாற்றத்தின் முடிவு அல்ல; அது அதன் தொடக்கம் மட்டுமே. அந்த மாற்றத்தை நிறுவனங்களுக்குள் கொண்டு செல்வதே உண்மையான சவால்.</p><p>
புதிய அரசாங்கம் பொருளாதார ஸ்திரத்தன்மை, நிதி ஒழுக்கம், ஊழல் தடுப்பு, வெளிப்படைத்தன்மை, அரச நிறுவனங்களின் நவீனமயமாக்கல் மற்றும் டிஜிட்டல் நிர்வாகம் போன்ற பல்வேறு சீர்திருத்தங்களை முன்னிறுத்தி வருகிறது.</p><p>

இவை காகிதத்தில் நிச்சயமாக வரவேற்கத்தக்கவை. ஆனால் அரசியலில் கொள்கை அறிவிப்புக்கும் அதன் நடைமுறை விளைவுக்கும் இடையே மிகப்பெரிய வித்தியாசம் இருக்கிறது.</p><p>ஒரு புதிய சட்டம் நிறைவேற்றப்படுவது மட்டும் அரசியல் மாற்றத்தின் அடையாளமல்ல. அந்தச் சட்டம் பொதுமக்களின் வாழ்க்கையில் என்ன மாற்றத்தை ஏற்படுத்துகிறது என்பதே முக்கியம்.</p><h2>ஊழல் எதிர்ப்பு</h2><p>
அதேபோல், ஊழலை எதிர்ப்பதாக அறிவிப்பது மட்டும் போதாது. அரசியல் சார்பின்றி விசாரணைகள் நடைபெறுகிறதா? அதிகாரத்தில் இருப்பவர்களும் அதே சட்டத்தின் கீழ் பொறுப்புக்கூறுகிறார்களா? அரச நிறுவனங்களில் நியமனங்கள் திறமை மற்றும் வெளிப்படைத்தன்மையின் அடிப்படையில் நடைபெறுகின்றனவா? என்பதுதான் மக்களின் அடுத்த கேள்வியாக இருக்கும்.</p><p>
குறிப்பாக அரச நிறுவனங்களின் நிர்வாக நியமனங்கள் இங்கு முக்கியமான பரீட்சையாகின்றன. பல ஆண்டுகளாக அரச நிறுவனங்கள் அரசியல் நியமனங்களுக்கும் ஆதரவாளர்களுக்கான பதவி வழங்கல்களுக்கும் உட்பட்டதாக விமர்சிக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5d5936c5-cecc-45ad-bf46-a874ad87cf6b/26-6aa641c52a345.webp' /></p><p> </p><p>இதனை மாற்றுவதாக தற்போதைய அரசாங்கம் கூறுகிறது. அரச நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் பணிப்பாளர் சபைகளுக்கான நியமனங்கள் தொழில்முறைத் தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் அமைய வேண்டும் என்பதே அதன் வாக்குறுதி.</p><p>

ஊழல் எதிர்ப்பு என்பது எதிர்க்கட்சியில் இருந்தவர்களை விசாரணைக்கு உட்படுத்துவதால் மட்டும் நிரூபிக்கப்படாது. அதிகாரத்தில் இருப்பவர்களுக்கும் அவர்களுடன் நெருக்கமாக இருப்பவர்களுக்கும் அதே அளவுகோல் பயன்படுத்தப்படுகிறதா என்பதில்தான் அதன் உண்மையான நம்பகத்தன்மை இருக்கிறது. பொருளாதாரத்திலும் இதே நிலைதான்.</p><p>

பொருளாதார வளர்ச்சி விகிதம் உயர்வது நிச்சயமாக நல்ல செய்தி. ஆனால் ஒரு குடும்பத்தின் பார்வையில் பொருளாதார மீட்சி என்பது GDP வளர்ச்சி விகிதம் அல்ல. அது சந்தையில் பொருட்களின் விலை, மின்சாரக் கட்டணம், போக்குவரத்துச் செலவு, குழந்தைகளின் கல்விச் செலவு, வேலைவாய்ப்பு, வீட்டுக் கடன் மற்றும் மாத இறுதியில் கையில் மீதமிருக்கும் பணம் ஆகியவற்றோடு தொடர்புடையது.</p><p>
எனவே எதிர்காலத்தில் அரசாங்கத்தின் மீது எழப்போகும் முக்கியமான கேள்வி “நாடு மீண்டதா?” என்பதல்ல; “நாடு மீண்டதன் பயன் யாருக்குக் கிடைத்தது?” என்பதாக இருக்கும்.</p><h2>இலங்கையின் அரசியல் மாற்றம்</h2><p>

ஒரு ஜனநாயகத்தில் அரசாங்கத்தின் வலிமை மட்டுமே முக்கியமல்ல. எதிர்க்கட்சியின் வலிமையும் அவசியம். NPP-க்கு 159 ஆசனங்கள் இருப்பதால் அரசாங்கம் சட்டமன்ற ரீதியாக மிகவும் வலுவான நிலையில் உள்ளது. இந்த சூழலில் எதிர்க்கட்சியின் பங்கு அரசாங்கத்தை விமர்சிப்பதில் மட்டும் முடிவடையக் கூடாது.</p><p>
“அரசாங்கம் தவறு செய்கிறது” என்று கூறுவது எளிது. அதற்குப் பதிலாக “இதற்கு மாற்றாக நாங்கள் என்ன செய்வோம்?” என்ற கேள்விக்கு தெளிவான பதிலை வழங்குவதே உண்மையான எதிர்க்கட்சியின் அரசியல்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/657685d9-f00d-4dbb-8030-1c66bd7ff5d4/26-6aa641c5e984a.webp' /></p><p>

பொருளாதாரம், கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, இனப்பிரச்சினை, மாகாண அதிகாரப் பகிர்வு மற்றும் வெளிநாட்டு முதலீடு போன்ற துறைகளில் மாற்றுக் கொள்கைகளை முன்வைக்க முடியாவிட்டால், எதிர்க்கட்சிகள் மீதான மக்களின் நம்பிக்கையும் குறையக்கூடும்.</p><p>அதேவேளை, இலங்கையின் அரசியல் மாற்றத்தை வடக்கு மற்றும் கிழக்கின் எதிர்பார்ப்புகளைப் புறக்கணித்து மதிப்பிட முடியாது.</p><p>

2024 தேர்தலில் NPP வடக்கு உள்ளிட்ட பல பகுதிகளில் பெற்ற வாக்குகள் பாரம்பரிய இன அடிப்படையிலான அரசியல் கணக்கீடுகளில் ஏற்பட்டுவரும் மாற்றத்திற்கான முக்கிய அறிகுறியாக அமைந்தன. ஆனால் வாக்களித்தல் மட்டும் அரசியல் ஒருங்கிணைப்பின் இறுதி இலக்காக இருக்க முடியாது.</p><p>
நிலம், காணாமல் போனோர் தொடர்பான கேள்விகள், மீள்குடியேற்றம், வேலைவாய்ப்பு, கல்வி, அபிவிருத்தி, அரசியல் பிரதிநிதித்துவம் மற்றும் அதிகாரப் பகிர்வு போன்ற நீண்டகால பிரச்சினைகளில் அரசாங்கத்தின் அணுகுமுறை எவ்வாறு அமைகிறது என்பதே முக்கியம்.</p><p>

இன அரசியலைத் தாண்டி ஒரு புதிய இலங்கை அரசியலை உருவாக்குவதாகக் கூறும் அரசாங்கம், அனைத்து சமூகங்களின் அரசியல் மற்றும் சமூக அச்சங்களுக்கும் நம்பகமான பதிலை வழங்க வேண்டிய பொறுப்பைக் கொண்டுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-13T06:29:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடலில் நீராடச் சென்ற இளைஞன் நீரில் மூழ்கி மாயம் ; தீவிரமாகும் மீட்பு பணி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/young-man-missing-after-drowning-in-chilaw-sea-1789280935"></link>
            <id>https://jvpnews.com/article/young-man-missing-after-drowning-in-chilaw-sea-1789280935</id>
            <summary type="text">மாரவில பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குறுச பல்லிய பகுதிக்கு அருகாமையிலுள்ள சிலாபம் கடற்பகுதியில் நேற்று சனிக்கிழமை (12) நீராடச் சென்ற இளைஞன் ஒருவன் கடலில் ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>மாரவில பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குறுச பல்லிய பகுதிக்கு அருகாமையிலுள்ள சிலாபம் கடற்பகுதியில் நேற்று சனிக்கிழமை (12) நீராடச் சென்ற இளைஞன் ஒருவன் கடலில் மூழ்கிக் காணாமல்போயுள்ளார்.
</p><p>
இச் சம்பவம் தொடர்பாகப் பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் மாரவில பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d2d264d8-de94-4bc2-9911-99adf60e5537/26-6aa642a883f1f.webp' /></p><h2>மேலதிக விசாரணை</h2><p>
</p><p>
குளியாப்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞர் ஒருவரே கடலில் மூழ்கிக் காணாமல்போயுள்ளார்.</p><p>

தனது நண்பர்களுடன் இணைந்து கடலில் நீராடச் சென்றபோதே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p></p><p>
</p><p>

காணாமல்போன இளைஞனைக் கண்டுபிடிப்பதற்காக பொலிஸார், கடற்படையினர் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து தீவிர தேடுதல் நடவடிக்கைகளை எடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
</p><p>
மேலும், இந்த சம்பவம் தொடர்பில் மாரவில பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-13T06:29:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Tony</name>
            </author>
            <title type="text"><![CDATA[முதலமைச்சர் விஜய்க்கு ரேஸ் கார் ஓட்ட கற்றுக்கொடுத்த அஜித், ட்ரெண்டிங் வீடியோ]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/ajith-taught-cn-vijay-how-to-drive-a-race-car-1789278979"></link>
            <id>https://cineulagam.com/article/ajith-taught-cn-vijay-how-to-drive-a-race-car-1789278979</id>
            <summary type="text">அஜித் - விஜய்அஜித் - விஜய் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத பெயர்கள். இவர்கள் இல்லாமல் தமிழ் சினிமா ரசிகர்கள் தியேட்டரில் திருவிழா ஆக்குவதை குறைத்துக...</summary>
            <content type="html"><![CDATA[<h2>அஜித் - விஜய்</h2><p>அஜித் - விஜய் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத பெயர்கள். இவர்கள் இல்லாமல் தமிழ் சினிமா ரசிகர்கள் தியேட்டரில் திருவிழா ஆக்குவதை குறைத்துக்கொண்டே வருகின்றனர்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/402ecaa2-2ca0-47a2-ba78-43018c055cff/26-6aa63b0774263.webp' /></p><p></p><p>ஏனெனில், எல்லோருக்கும் தெரிந்ததுதான், விஜய் தமிழக முதல்வர் ஆக, அஜித் கார் ரேஸில் கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d1682988-8716-414e-9757-c86c09ecbeda/26-6aa63b082f135.webp' /></p><h3>கற்றுக்கொடுத்த அஜித்</h3><p> </p><p>

இந்நிலையில், நேற்று லண்டனில் நடந்த கார் ரேஸ் போட்டியில் சிறப்பு விருந்தினராக முதல்வர் விஜய் கலந்துகொண்டு, கொடி அசைத்து போட்டியை தொடங்கி வைத்தார். அதோடு <a href="https://www.dailythanthi.com/news/world/chief-minister-meets-vijay-and-ajith-in-london-enthusiastic-welcome-from-fans" target="_blank">அஜித் </a>- விஜய் இருவரும் ஒருவருக்கொருவர் தங்கள் அன்பை பரிமாறியதோடு, பல வருட ரசிகர்கள் சண்டைக்கு நேற்று அன்பால் முற்றுப்புள்ளி வைத்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/30f9cb6f-0d55-453a-9bd4-9478644df634/26-6aa63b08eb0a9.webp' /></p><p></p><p>
அதோடு, போட்டி முடிந்த பிறகு முதல்வர் விஜய்க்கு ரேஸ் கார் குறித்த கேள்விகளுக்கு, அதை எப்படி இயக்க வேண்டும் என்று பல தகவல்களை அஜித் பகிர்ந்தார். அந்த வீடியோ தான் தற்போது ட்ரெண்டிங் ஆகி வருகிறது இதோ..</p><p><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="in" dir="ltr">Ak training 🫂🔥 <a href="https://t.co/Ets7zdrdsv">pic.twitter.com/Ets7zdrdsv</a></p>&mdash; RM Clicks (@RM_Clicks) <a href="https://x.com/RM_Clicks/status/2098971860532883686?ref_src=twsrc%5Etfw">September 13, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p>]]></content>
            <updated>2026-09-13T06:20:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[240க்கும் மேற்பட்ட பயணிகளுடன் மாயமான கப்பல் ; தீவிரமாகும் மீட்புபணி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/ship-missing-with-more-than-240-passengers-1789280219"></link>
            <id>https://canadamirror.com/article/ship-missing-with-more-than-240-passengers-1789280219</id>
            <summary type="text">மோசமான வானிலை காரணமாக 240க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்ற பயணிகள் கப்பல் ஒன்றுடன் தொடர்பு துண்டிக்கப்பட்டதை அடுத்து, ஜாவா கடலில் தேடுதல் மற...</summary>
            <content type="html"><![CDATA[<p>மோசமான வானிலை காரணமாக 240க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்ற பயணிகள் கப்பல் ஒன்றுடன் தொடர்பு துண்டிக்கப்பட்டதை அடுத்து, ஜாவா கடலில் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p><p>

 

இதுவரை 103 பேர் மீட்கப்பட்டுள்ளதுடன், 140 பேர் இன்னும் காணாமல் போயுள்ள நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/80b04c6b-59ed-454c-a378-b1967fe64471/26-6aa63fdd7d410.webp' /></p><p>
</p><p>
 

விபத்து நடந்த நேரத்தில், குறித்த கப்பல் சுரபயாவிலிருந்து பன்ஜார்மாசின் நோக்கிச் சென்று கொண்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
 

17,000-க்கும் மேற்பட்ட தீவுகளைக் கொண்ட இந்தோனேசியத் தீவுக்கூட்டத்தில் கடல்வழிப் போக்குவரத்தே பிரதான போக்குவரத்து முறையாகும்.
</p><p>
 

விமானப் பயணம் விலை உயர்ந்ததாக இருப்பதால், பொதுமக்கள் மலிவான கடல்வழிப் பாதைகளை அதிகளவில் நாடி வருகின்றனர்.
</p><p>
 

இருப்பினும், நாட்டின் கடல்சார் துறையில் பாதுகாப்புத் தரங்களும் விதிமுறைகளும் முறையாகச் செயல்படுத்தப்படாததாலேயே இதுபோன்ற உயிரிழப்புகள் அடிக்கடி நிகழ்கின்றன என்று வெளிநாட்டு ஊடகங்கள் சுட்டிக்காட்டுகின்றன.</p>]]></content>
            <updated>2026-09-13T06:17:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yoosuf</name>
            </author>
            <title type="text"><![CDATA[டீசலுக்கு பதிலாக மண்ணெண்ணெய் பயன்படுத்திய பேருந்து சாரதிகள் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/bus-drivers-arrested-for-using-kerosene-1789278841"></link>
            <id>https://tamilwin.com/article/bus-drivers-arrested-for-using-kerosene-1789278841</id>
            <summary type="text">திருகோணமலை - கந்தளாய் பொலிஸாரினால்&amp;nbsp;டீசலுக்கு பதிலாக சட்டவிரோதமான முறையில் மண்ணெண்ணெயைப் பயன்படுத்தி இயக்கப்பட்டு வந்த இரண்டு தனியார் பேருந்துகள் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>திருகோணமலை - கந்தளாய் பொலிஸாரினால்&nbsp;டீசலுக்கு பதிலாக சட்டவிரோதமான முறையில் மண்ணெண்ணெயைப் பயன்படுத்தி இயக்கப்பட்டு வந்த இரண்டு தனியார் பேருந்துகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

</p><p>நேற்று (12) மாலை

மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது&nbsp;பேருந்துகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

</p><p>குறித்த பேருந்துகளின் இரண்டு சாரதிகளும் கைது செய்யப்பட்டு பொலிஸ்
பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.</p><h2>சாரதிகள் பொலிஸ் பிணையில் விடுவிப்பு</h2><p>

கண்டியிலிருந்து உள்நாட்டுச் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிக்கொண்டு திருகோணமலை
நோக்கி பயணித்து கொண்டிருந்த பேருந்துகள், கந்தளாய்
போட்டான்காட்டு சந்தியில் வைத்து பொலிஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.</p><p>

இதன்போது, டீசலுக்குப் பதிலாக மண்ணெண்ணெயை எரிபொருளாகப் பயன்படுத்தி
பேருந்துகள் இயக்கப்பட்டமை உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவை பொலிஸ்
பொறுப்பில் எடுக்கப்பட்டதுடன், சாரதிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>

கைது செய்யப்பட்ட சாரதிகள் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள போதிலும்,
மேலதிக விசாரணைகளின் பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்துவதற்கான
நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-13T06:15:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையுடன் IMFஇன் 7ஆவது மீளாய்வு கலந்துரையாடல்கள் ஆரம்பம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/imf-s-7th-review-discussions-with-sri-lanka-begin-1789278839"></link>
            <id>https://tamilwin.com/article/imf-s-7th-review-discussions-with-sri-lanka-begin-1789278839</id>
            <summary type="text">இலங்கை வந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பிரதிநிதிகள், நிதி அமைச்சு
மற்றும் மத்திய வங்கியின் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளனர்....</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை வந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பிரதிநிதிகள், நிதி அமைச்சு
மற்றும் மத்திய வங்கியின் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளனர்.
</p><p>
இலங்கையின் கடன் திட்டத்தின் 7ஆவது மீளாய்வு தொடர்பான கலந்தாலோசனைகளை
மேற்கொள்வதற்காகவே IMF குழுவினர் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.</p><h2>மேற்கொள்ளப்படவுள்ள கலந்துரையாடல்</h2><p>
</p><p>
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் (CPC), மின்சாரத் துறை ஒழுங்குமுறை
அமைப்புக்கள் மற்றும் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் ஆகியவற்றின்
அதிகாரிகளுடனும் சர்வதேச நாணய நிதியப் பிரதிநிதிகள் கலந்துரையாடல்களை
நடத்தவுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f5fa2850-6662-465d-bc39-bab159e4ce49/26-6aa63e759e11a.webp' /></p><p>
</p><p>
இந்த பேச்சுவார்த்தைகள் செப்டம்பர் 23 ஆம் திகதி வரை நடத்த
திட்டமிடப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-13T06:12:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[பயணிகளுடன் காணாமல் போன கப்பல் கண்டுபிடிப்பு! 140 பேர் தொடர்ந்தும் மாயம் ஒருவர் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/ship-carrying-243-passengers-disappeared-1789276799"></link>
            <id>https://ibctamil.com/article/ship-carrying-243-passengers-disappeared-1789276799</id>
            <summary type="text">




புதிய இணைப்புஜாவா கடற்பகுதியில் இன்று (13) காலை காணாமல் போன பயணிகள் கப்பலை இந்தோனேசியத் தேடல் மற்றும் மீட்புக் குழுவினர் கண்டுபிடித்துள்ளனர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>




</p><h3>புதிய இணைப்பு</h3><p>ஜாவா கடற்பகுதியில் இன்று (13) காலை காணாமல் போன பயணிகள் கப்பலை இந்தோனேசியத் தேடல் மற்றும் மீட்புக் குழுவினர் கண்டுபிடித்துள்ளனர்.
</p><p>
இதுவரை 103 பயணிகளை மீட்புக் குழுவினர் மீட்டுள்ளதாகவும், இச்சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் சர்வதேச வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.</p><p>இதேவேளை, 140 பயணிகள் காணாமல் போயுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><h3>முதலாம் இணைப்பு</h3><p>இந்தோனேசியாவின் ஜாவா கடற்பகுதியில் 243 பயணிகளுடன் சென்ற கப்பல் ஒன்று இன்று (13) காலை காணாமல் போயுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.</p><p>

திடீரென நிலவிய மோசமான வானிலை காரணமாக குறித்த கப்பலின் கட்டுப்பாட்டு மையத்துடனான தொடர்பு முழுமையாகத் துண்டிக்கப்பட்டதாக தெரியவருகிறது.</p><p>

இதனையடுத்து, காணாமல் போன கப்பலைக் கண்டறியும் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.</p><p></p><h2>கடல்வழிப் போக்குவரத்து</h2><p>
</p><p>
சுரபாயா நகரத்திலிருந்து பன்ஜார்மாசின் நகரை நோக்கிச் சென்று கொண்டிருந்தபோதே இச்சம்பவம் நிகழ்ந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/643f7b3c-a33f-4e73-b5cf-169404e91518/26-6aa6369b51957.webp' /></p><p><i>Image Credit: firstpost</i></p><p>
</p><p>
17,000-க்கும் மேற்பட்ட தீவுகளைக் கொண்ட இந்தோனேசியத் தீவுக்கூட்டத்தில், கடல்வழிப் போக்குவரத்து முக்கியப் பயண முறையாக விளங்குகிறது.</p><h2>பாதுகாப்பு தரநிலைகள்</h2><p> </p><p>

இந்நிலையில், விமானப் பயணத்திற்கான செலவு அதிகம் என்பதால், பொதுமக்கள் பெரும்பாலானோர் குறைந்த கட்டணத்திலான கடல்வழிப் பயணங்களையே தேர்ந்தெடுப்பதாக கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fa851124-a1a1-4b66-a4a2-ccbb08394a57/26-6aa6369c05ed0.webp' /></p><p>

இவ்வாறானதொரு பின்னணியில், அந்நாட்டின் கடல்சார் துறையில் பாதுகாப்பு தரநிலைகள் மற்றும் விதிமுறைகள் சரியாகச் செயல்படுத்தப்படாததால், இத்தகைய ஆபத்தான விபத்துகள் அடிக்கடி நிகழ்வதாக வெளிநாட்டு ஊடகங்கள் சுட்டிக்காட்டுகின்றன.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-13T06:07:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடந்த மாதம் நாட்டிற்கு கிடைத்த பல மில்லியன் அமெரிக்க டொலர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/country-receives-millions-of-us-dollars-last-month-1789279319"></link>
            <id>https://jvpnews.com/article/country-receives-millions-of-us-dollars-last-month-1789279319</id>
            <summary type="text">வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கைத் தொழிலாளர்களால், நாட்டிற்கு கடந்த ஓகஸ்ட் மாதத்தில் 748.6 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கிடைத்துள்ளதாக இலங்கை மத்திய வங...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கைத் தொழிலாளர்களால், நாட்டிற்கு கடந்த ஓகஸ்ட் மாதத்தில் 748.6 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கிடைத்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
</p><p style="text-align: justify; ">


கடந்த 2025ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடுகையில், வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கைத் தொழிலாளர்கள் பணம் அனுப்பும் வீதம் இவ்வாண்டு அதிகரித்துள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7ae63c59-7223-4829-976c-1101f6341879/26-6aa63c58b00f4.webp' /></p><h2 style="text-align: justify; ">பணம் அனுப்புகை</h2><p style="text-align: justify; ">



இதற்கமைய, 2025 ஓகஸ்ட் மாதத்தில் 680.8 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பணம் அனுப்பப்பட்டிருந்தன.</p><p style="text-align: justify; ">



இதேவேளை, 2026ஆம் ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கைத் தொழிலாளர்களிடமிருந்து மொத்தமாக 6.131 பில்லியன் அமெரிக்க டொலர்கள் நாட்டிற்கு கிடைத்துள்ளன.</p><p style="text-align: justify; ">



2025ஆம் ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் 5.116 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பணம் அனுப்பப்பட்டிருந்த நிலையில், இந்த ஆண்டில் தொழிலாளர்களின் பணம் அனுப்புகை குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-13T06:02:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரேஸ் உடையில் மாஸ் என்ட்ரி கொடுத்த முதல்வர் விஜய்... ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/cm-vijay-dressed-in-a-racing-suit-video-viral-1789277961"></link>
            <id>https://manithan.com/article/cm-vijay-dressed-in-a-racing-suit-video-viral-1789277961</id>
            <summary type="text">லண்டன் சென்றுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், அஜித் பங்கேற்கும் கார் பந்தயத்தை துவக்கி வைத்த நிலையில்,&amp;nbsp; திடீரென ரேஸ் உடையில் தோன்றியிருப்பது அவரத...</summary>
            <content type="html"><![CDATA[<p>லண்டன் சென்றுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், அஜித் பங்கேற்கும் கார் பந்தயத்தை துவக்கி வைத்த நிலையில்,&nbsp; திடீரென ரேஸ் உடையில் தோன்றியிருப்பது அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. </p><p>வழக்கமான தோற்றத்திற்கு மாறாக, முழுமையான ரேஸ் உடையில் விஜய் காட்சியளித்தது ரசிகர்களுக்கு எதிர்பாராத இன்ப அதிர்ச்சியாக அமைந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d6fe4a10-83cb-4fba-b538-29ec7e223d51/26-6aa63a86a1a76.webp' /></p><p></p><h2>வைரலாகும் காணொளி</h2><p>
இதனைத் தொடர்ந்து, தனது நண்பரும் நடிகருமான அஜித்தைப் போலவே விஜய்யும் ரேஸ் கார் ஓட்டி தனது ஆர்வத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e3cdfe22-8808-4e0e-afb8-2fc4d50ece88/26-6aa63a87679a1.webp' /></p><p> </p><p>கார் பந்தயத்தில் ஆர்வம் கொண்ட அஜித் ஏற்கனவே பல்வேறு ரேஸ் போட்டிகளில் பங்கேற்று வரும் நிலையில், தற்போது விஜய்யும் ரேஸ் காரை ஓட்டிப் பார்த்திருப்பது ரசிகர்களின் கவனத்தை மேலும் ஈர்த்துள்ளது.</p><p></p><p>ரேஸ் உடையில் விஜய்யின் புகைப்படங்கள் மற்றும் அவர் ரேஸ் கார் ஓட்டும் காட்சிகள் வெளியாகியுள்ள நிலையில், அவை தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளதுடன் இணையத்தில் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்து வருகின்றது.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="zxx" dir="ltr">. https://t.co/AFlTjIeMY4</p>&mdash; CineArenaTN Videos (@CineArenaTNVid) <a href="https://x.com/CineArenaTNVid/status/2098851329720688832?ref_src=twsrc%5Etfw">September 12, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b>&nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-13T05:54:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமைச்சரின் தாய் குறித்த சர்ச்சை பேச்சு - வருத்தம் தெரிவித்த ஆ.ராசா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/a-raja-expresses-regret-for-controversial-speech-1789278506"></link>
            <id>https://ibctamilnadu.com/article/a-raja-expresses-regret-for-controversial-speech-1789278506</id>
            <summary type="text">a raja regret for controversial speech about ctr nirmalkumar: அமைச்சர் சிடிஆர்.நிர்மல்குமாரின் தாயாரை குறித்து பேசிய பேச்சு சர்ச்சையானதில் திமுக எம்.ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>a raja regret for controversial speech about ctr nirmalkumar: அமைச்சர் சிடிஆர்.நிர்மல்குமாரின் தாயாரை குறித்து பேசிய பேச்சு சர்ச்சையானதில் திமுக எம்.பி ஆ.ராசா தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்துள்ளார்.</p><h3> 

அமைச்சரின் தாய் குறித்த சர்ச்சை பேச்சு
</h3><p>
திமுக தலைவர் மு.க. ஸ்டாலினின் மிசா தியாகத்தை தமிழ்நாடு முதல்வர் விஜய் சட்டமன்றத்தில் கொச்சைப்படுத்தியதாக நேற்று திமுகவினர் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6d3be672-bdb3-4b26-9ee1-1055bc04a78b/26-6aa6392b9a6cd.webp' /></p><p>
சென்னை சைதாப்பேட்டையில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்டு திமுக எம்.பி ஆ.ராசா, ‘எனக்குச் சந்தேகம் இருக்கு நீ யாருக்குப் பிறந்த?’ என அமைச்சர் சிடிஆர்.நிர்மல்குமாரின் தாயாரை குறித்து பேசியது கடும் சர்ச்சையாகியுள்ளது. </p><p>

ஆ.ராசாவின் பேச்சுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர், CPIM மாநில செயலாளர் பெ.சண்முகம், அமைச்சர் வன்னிஅரசு உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். </p><p>

திமுகவைச் சேர்ந்த எம். பி. கனிமொழியும், "யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு" என்ற திருக்குறளை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.</p><h3> 

ஆ.ராசா வருத்தம்</h3><p>

இந்நிலையில் தனது பேச்சுக்கு ஆ.ராசா வருத்தம் தெரிவித்துள்ளார். </p><p>

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், "தியாகத்தில் விளைந்த ஒரு தலைவனின் ‘அடையாளத்தை’ - உண்மை’யை வேண்டுமென்றே திட்டமிட்டு உள்நோக்கத்தோடு மீண்டும் மீண்டும் ‘பொய்’ என்று கொச்சைப்படுத்தி ‘ஏளனம்’ செய்ததால் ஏற்பட்ட ‘வலியை’ உணர்த்த ஏளனம் செய்தவரின் ‘அடையாளத்தை’ ‘உண்மையை’ உணர்ச்சி உந்துதலில் கேள்விக்குள்ளாக்கியதில் எனக்கும் வருத்தம்தான்.&nbsp;</p><p><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">தியாகத்தில் விளைந்த ஒரு தலைவனின் <br>‘அடையாளத்தை’ - உண்மை’யை வேண்டுமென்றே திட்டமிட்டு உள்நோக்கத்தோடு மீண்டும் மீண்டும் ‘பொய்’ என்று கொச்சைப்படுத்தி ‘ஏளனம்’ செய்ததால் ஏற்பட்ட ‘வலியை’ உணர்த்த ஏளனம் செய்தவரின் ‘அடையாளத்தை’ ‘உண்மையை’ உணர்ச்சி உந்துதலில்<br>கேள்விக்குள்ளாக்கியதில்…</p>&mdash; A RAJA (@dmk_raja) <a href="https://x.com/dmk_raja/status/2098986160177737797?ref_src=twsrc%5Etfw">September 13, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p> என் வார்த்தைகளை திரும்பப் பெறுவதில் எனக்குத்தயக்கமில்லை. நீங்கள் திருந்தாவிட்டால் திருத்தப்படுவீர்கள்" என தெரிவித்துள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-13T05:49:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கைக்கு கிடைத்த பல மில்லியன் அமெரிக்க டொலர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sri-lanka-s-workers-remittances-exceed-usd-6-bn-1789276608"></link>
            <id>https://ibctamil.com/article/sri-lanka-s-workers-remittances-exceed-usd-6-bn-1789276608</id>
            <summary type="text"> கடந்த ஓகஸ்ட் மாதத்தில் வெளிநாட்டு தொழிலாளர்கள் மூலம் இலங்கைக்கு அனுப்பப்பட்ட பணம் தொடர்பில் இலங்கை மத்திய வங்கி அறிக்கை ஒன்றை வெளியிடடுள்ளது.அதன்படி,...</summary>
            <content type="html"><![CDATA[<p> கடந்த ஓகஸ்ட் மாதத்தில் வெளிநாட்டு தொழிலாளர்கள் மூலம் இலங்கைக்கு அனுப்பப்பட்ட பணம் தொடர்பில் இலங்கை மத்திய வங்கி அறிக்கை ஒன்றை வெளியிடடுள்ளது.</p><p>அதன்படி, ஓகஸ்ட் மாதத்தில் மாத்திரம் 748.6 மில்லியன் அமெரிக்க டொலர்கள்&nbsp;இலங்கைக்கு கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>இது கடந்த 2025 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடும்போது வளர்ச்சியைக் காட்டுவதாகக் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p></p><h2>680.8 மில்லியன் அமெரிக்க டொலர்</h2><p>

 

கடந்த 2025 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதத்தில் இலங்கைக்கு 680.8 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கிடைத்திருந்ததாக கூறப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b1f8336d-a4da-4189-a0fc-4247d49ad3e7/26-6aa6376c519ee.webp' /></p><p>

 

இதற்கிடையில், ஜனவரி மாதம் முதல் ஓகஸ்ட் மாதம் வரை வெளிநாட்டில் வசிக்கும் தொழிலாளர்களிடமிருந்து இலங்கைக்குக் கிடைத்துள்ள மொத்தப் பணப் பரிமாற்றத் தொகை 6,131 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><p>இந்தநிலையில், கடந்த 2025 இன் முதல் 8 மாதங்களுக்குக் கிடைத்த மொத்தப் பணப் பரிமாற்றத் தொகை 5,116 மில்லியன் அமெரிக்க டொலர்கள் எனவும் மத்திய வங்கி வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-13T05:47:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[புலம்பெயர்ந்தோரை வெளியேற்ற நிதி வேண்டும்... ஜேர்மனியின் AfD கட்சி புதிய திட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/afd-party-wants-arms-factory-1789278519"></link>
            <id>https://news.lankasri.com/article/afd-party-wants-arms-factory-1789278519</id>
            <summary type="text">Germany&#039;s AfD party wants arms factory in their state: ஜேர்மனியின் AfD கட்சி தங்கள் மாகாணத்தில் ஆயுதத் தொழிற்சாலை ஒன்றை அமைக்க விரும்புகிறது.
ஜேர்மனி...</summary>
            <content type="html"><![CDATA[<p>Germany's AfD party wants arms factory in their state: ஜேர்மனியின் AfD கட்சி தங்கள் மாகாணத்தில் ஆயுதத் தொழிற்சாலை ஒன்றை அமைக்க விரும்புகிறது.
</p><p>ஜேர்மனியின் தீவிர வலதுசாரி கட்சியான AfD, தாங்கள் திட்டமிட்டுள்ள கட்டாய வெளியேற்ற நடவடிக்கைகளுக்குத் தேவையான நிதியைத் திரட்டுவதற்காக, தங்கள் மாகாணங்களில் ஒன்றில் ஆயுதத் தொழிற்சாலையை அமைக்க விரும்புகிறது.</p><h2>எதிர்க்கவில்லை</h2><p>
</p><p>கிழக்கு ஜேர்மன் மாகாணமான Saxony-Anhalt-ன் வருங்காலத் தலைவரான உல்ரிச் சிக்மண்ட், சங்கர்ஹவுசன் நகரில் திட்டமிடப்பட்ட பாதுகாப்புத் தொழில் முதலீட்டின் எதிர்காலம் குறித்து வியாழக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கேட்கப்பட்டபோது, ​​உள்நாட்டுப் பயன்பாட்டிற்கான ஆயுத உற்பத்தியை AfD கட்சி எதிர்க்கவில்லை என்று குறிப்பிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a0c1ce8d-9921-48a2-9ca8-15fafa43f505/26-6aa6393919983.webp' /></p><p> </p><p>மேலும், ராணுவ உபகரணங்களின் உற்பத்தியை ஒட்டுமொத்தமாக எதிர்க்கவில்லை என குறிப்பிட்டுள்ள அவர்; எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவுள்ள தாயகம் திரும்பும் மற்றும் நாடு கடத்தும் நடவடிக்கைகளுக்குத் தேவையான நிதி இயல்பாகவே எங்களுக்குத் தேவைப்படும் என்றார். </p><p>அத்துடன் இது உள்நாட்டுப் பாதுகாப்பு, நமது சொந்த ஸ்திரத்தன்மை மற்றும் தேசியப் பாதுகாப்பு ஆகியவற்றின் நலனுக்கும் உகந்தது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p> </p><p>இதனிடையே, வெளியாகியுள்ள தகவலின் அடிப்படையில், இஸ்ரேலின் எல்பிட் சிஸ்டம்ஸ் (Elbit Systems) நிறுவனம், பிற ஜேர்மானிய நிறுவனங்களுக்கான உதிரிபாகங்களைத் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றை அங்கு அமைப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. </p><p>ஆனால், சுமார் 400 வேலைவாய்ப்புகளை உருவாக்கக்கூடிய அந்த இடத்தில், முழுமையான ஆயுத அமைப்புகள், ட்ரோன்கள் அல்லது பீரங்கி குண்டுகள் எதுவும் தயாரிக்கப்படாது என்று நகர அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். </p><p>இதனிடையே, எல்பிட் சிஸ்டம்ஸ் தெரிவிக்கையில், ஜேர்மனியில் மேலும் விரிவாக்கம் செய்வதற்கான வாய்ப்புகளை தொடர்ந்து மதிப்பீடு செய்து வருவதாகவும்; இருப்பினும், எதிர்கால விரிவாக்கத்திற்காக இதுவரை எந்த இடங்களும் தெரிவு செய்யப்படவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளது.</p><h2>எதிராகப் பிரச்சாரம்</h2><p> </p><p>குடியேற்றத்தை எதிர்க்கும் AfD கட்சியானது, முழுமையான பெரும்பான்மைக்குச் சற்று குறைவான ஆசனங்களுடன் வரலாற்றுச் சிறப்புமிக்க தேர்தல் வெற்றியைப் பெற்று மாகாணத்தில் அரசமைக்க முயன்று வரும் நிலையில், </p><p> ஆட்சிக்கு வந்த முதல் நிமிடத்திலிருந்தே, நாடு கடத்தல் நடவடிக்கைகள், குடிமக்கள் ரோந்துப் பணிகள் மற்றும் அகதி குழந்தைகளுக்கெனத் தனி வகுப்பறைகள் ஆகியவற்றைச் செயல்படுத்த உறுதியளித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/209388d3-240b-485f-b3bf-6821c48dc260/26-6aa63939c0701.webp' /></p><p> </p><p>இதனிடையே, துல்லியமாக என்ன தயாரிக்கப்படுகிறது, எந்தச் சூழலில் தயாரிக்கப்படுகிறது என்பதையும், இது நம்மை வெளிநாட்டு மோதல்களில் ஈடுபடுத்தும் அபாயத்தைக் கொண்டிருக்கிறதா என்பதையும் நாங்கள் உன்னிப்பாக ஆராய விரும்புகிறோம் என்று உல்ரிச் சிக்மண்ட் கூறியுள்ளார். </p><p>இத்திட்டத்திற்கு அளிக்கப்படும் எந்தவொரு ஆதரவும், AfD கட்சியுடனான ஒத்துழைப்பை நிராகரிக்காத ஒரே கட்சியான இடதுசாரி மக்கள்வாதக் கட்சியான BSW-வுடனான பேச்சுவார்த்தைகளைச் சிக்கலாக்கக்கூடும். </p><p>AfD-ஐப் போலவே, உக்ரைனுக்கான ஜேர்மன் இராணுவ ஆதரவை எதிர்க்கும் BSW கட்சியானது, வெளிநாட்டுப் பாதுகாப்பு உற்பத்தியாளர்களை ஈர்ப்பதற்கான பொருளாதார வாதங்களை நிராகரித்து, சங்கர்ஹவுசன் திட்டத்திற்கு எதிராகப் பிரச்சாரம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-09-13T05:45:32+00:00</updated>
        </entry>
    </feed>
