<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-08-26T06:33:26+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கைக்கு அடுத்த பேரிடர் சவால் ; சஜித் வெளியிட்ட பரபரப்பு எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sri-lanka-s-next-disaster-challenge-sajith-warning-1787725912"></link>
            <id>https://jvpnews.com/article/sri-lanka-s-next-disaster-challenge-sajith-warning-1787725912</id>
            <summary type="text">எல் நினோ மற்றும் லா நினா பருவநிலை சுழற்சியின் கடுமையான தாக்கங்களை எதிர்கொள்ள இலங்கை உடனடியாகத் தயாராக வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச...</summary>
            <content type="html"><![CDATA[<p>எல் நினோ மற்றும் லா நினா பருவநிலை சுழற்சியின் கடுமையான தாக்கங்களை எதிர்கொள்ள இலங்கை உடனடியாகத் தயாராக வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எச்சரித்துள்ளார்.</p><p></p><p>

மாத்தறை - ஹம்பாந்தோட்டை, தல்ப பற்று பகுதியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் முதல் உலகளாவிய பல்வேறு நெருக்கடிகள் வரை இலங்கை ஏற்கனவே ஐந்து பெரிய பேரிடர்களைச் சந்தித்துள்ளதாகவும், விரைவில் ஆறாவது சவாலை எதிர்கொள்ள நேரிடலாம் என்றும் அவர் தெரிவித்தார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/54e1a3fc-8b0c-45f2-bc7f-cf52d4397c35/26-6a8e885962618.webp' /></p><p>கடுமையான வறட்சியைத் தொடர்ந்து பலத்த மழை பெய்யும் அபாயம் இருப்பதாகவும், குறுகிய காலத்திற்குள் இந்த இரண்டு தீவிர வானிலை மாற்றங்களையும் எதிர்நோக்க நேரிடலாம் எனவும் நிபுணர்கள் எச்சரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
</p><p>
நிவாரண நடவடிக்கைகளுடன் மாத்திரம் நின்றுவிடாமல், இந்தியாவின் ஒடிசா மாநிலத்தின் முறைகளைக் கற்றுக்கொண்டு புதிய பேரிடர் முகாமைத்துவ கட்டமைப்பு, புதிய திட்டங்கள் மற்றும் நிறுவனங்களை உருவாக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.</p><p>

பொருளாதார ரீதியில் வீழ்ச்சியடைந்த நாடுகள் வெளிநாட்டு அழுத்தங்களுக்கு எளிதில் இலக்காகக்கூடும் என்றும், சர்வதேச நிதி நிறுவனங்கள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களின் தாக்கங்களை எதிர்கொள்ள அனைவரும் ஒன்றிணைய வேண்டும் எனவும் சஜித் பிரேமதாச எச்சரித்தார்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-26T06:31:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[மீண்டும் கருப்பு பக்கம் நடிகை ஸ்ருதிஹாசன்... லேட்டஸ்ட் போட்டோ ஷுட்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/actress-shruti-haasan-black-attire-photoshoot-1787721716"></link>
            <id>https://cineulagam.com/article/actress-shruti-haasan-black-attire-photoshoot-1787721716</id>
            <summary type="text">ஸ்ருதிஹாசன்தமிழ் சினிமாவில் பிரபலத்தின் வாரிசாக களமிறங்கிய நடிகை தான் ஸ்ருதிஹாசன்.கருப்பு நிறம் எந்த ஒரு விசேஷத்திற்கும் அணிய கூடாது என்பார்கள், ஆனால்...</summary>
            <content type="html"><![CDATA[<h2>ஸ்ருதிஹாசன்</h2><p>தமிழ் சினிமாவில் பிரபலத்தின் வாரிசாக களமிறங்கிய நடிகை தான் ஸ்ருதிஹாசன்.</p><p>கருப்பு நிறம் எந்த ஒரு விசேஷத்திற்கும் அணிய கூடாது என்பார்கள், ஆனால் நடிகை ஸ்ருதிஹாசன் கடந்த சில வருடங்களாகவே ஒரே கருப்பு நிற உடைகளாகவே அணிந்து வந்தார்.&nbsp;</p><p>கடந்த சில போட்டோ ஷுட்களில் வேறு நிறங்கள் சில பயன்படுத்திய ஸ்ருதிஹாசன் மீண்டும் கருப்பு நிறத்தில் மாடர்ன் உடையில் போட்டோ ஷுட் நடத்தியுள்ளார், இதோ அந்த போட்டோஸ்,</p><p><br></p>]]></content>
            <updated>2026-08-26T06:30:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பகுதியில் கொடூரம்: கணவனின் கத்திக் குத்துக்கு இலக்காகி மனைவி பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/husband-stabs-wife-with-knife-in-mannar-1787725067"></link>
            <id>https://ibctamil.com/article/husband-stabs-wife-with-knife-in-mannar-1787725067</id>
            <summary type="text">கணவனின் கத்திக்குத்திற்கு இலக்காகி மனைவி உயிரிழந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவம்&amp;nbsp; இன்று புதன்கிழமை (26) காலை 9 மணியளவில் தலைமன்னார் தொடர...</summary>
            <content type="html"><![CDATA[<p>கணவனின் கத்திக்குத்திற்கு இலக்காகி மனைவி உயிரிழந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
</p><p>இந்த சம்பவம்&nbsp; இன்று புதன்கிழமை (26) காலை 9 மணியளவில் தலைமன்னார் தொடருந்து நிலையப் பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் இடம்பெற்றுள்ளது.</p><p>இவ்வாறு உயிரிழந்தவர் இரண்டு பிள்ளைகளின் தாய் ஆவார்.</p><p></p><h2>கணவர் கைது</h2><p>
கணவனின் கத்தி குத்துக்கு இலக்காகிய மனைவி தலை மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d8a64116-e201-46bb-a64e-399fffc72e93/26-6a8e87f5d3285.webp' /></p><p>தாக்குதலில் உயிரிழந்த பெண்ணின் கணவர் தலைமன்னார் பகுதியில் வைத்து தலைமன்னார் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
மேலும், இச் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளில் தலைமன்னார் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/FJQcrzobjUcEaJJsEVOWpF" target="_blank">WHATSAPP </a>CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-26T06:30:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஐ.ம. சக்தி -ஐ.தே.க இணைப்பில் ஏற்பட்டுள்ள திடீர் திருப்பம்! முதல்நிலையை விடுத்து தீட்டப்படும் திட்டம்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/united-nations-party-samagi-jana-balawegaya-1787724480"></link>
            <id>https://tamilwin.com/article/united-nations-party-samagi-jana-balawegaya-1787724480</id>
            <summary type="text">ஐக்கிய தேசியக் கட்சியும் ஐக்கிய மக்கள் சக்தியும் இணைந்து செயற்படுவதாக ஆங்காங்கே பல கதைகள் பேசப்பட்ட போதிலும் இணைப்பு சாத்தியமாகவில்லை.&amp;nbsp; தற்போதைய ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஐக்கிய தேசியக் கட்சியும் ஐக்கிய மக்கள் சக்தியும் இணைந்து செயற்படுவதாக ஆங்காங்கே பல கதைகள் பேசப்பட்ட போதிலும் இணைப்பு சாத்தியமாகவில்லை.&nbsp; தற்போதைய அரசியல் நிலைமையை கருத்தில் கொண்டு ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் இரண்டாம் மூன்றாம் நிலை உறுப்பினர்கள் இணைந்து புதிய தலைவரைத் தேட திட்டமிடப்படுவதாக அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர்.</p><p>அது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது
ஐக்கிய மக்கள் சக்தி - ஐக்கிய தேசியக் கட்சி ஒன்றாக இணைந்து செயற்படப்போவதாக கடந்த வருடத்தில் இருந்தே பேசப்பட்டது.அதனை தொடர்ந்து இரு பிரிவினருக்கும் இடையே உத்தியோகபூர்வ மற்றும் உத்தியோகபூர்வமற்ற மட்டங்களில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன.
</p><h2>
</h2><p></p><h2>இரண்டாம் நிலை உறுப்பினர்களின் இணைப்பு</h2><p>தலைவர்கள் சந்தித்ததாகக் கூறப்பட்டது இரண்டாம் நிலை உறுப்பினர்கள் சந்தித்ததாகக் கூறப்பட்டது.யார் யாரைச் சந்தித்தாலும் இறுதியில் கிடைத்த விடை எதுவும் இல்லை என்பதுதான் அரசியல் மேடையில் பேசப்பட்ட விடயமாகும்.
</p><p>இருப்பினும் இரு கட்சிகளும் இணைந்தால் யார் தலைவர் என்பது தொடர்பான பிரச்சினை ஒன்று இருப்பதாக ஒரு தரப்பும் கூறுகிறது. இந்த இரு தலைவர்களுக்கும் நெருக்கமாக இருக்கும் சிரேஷ்டர்கள் என கூறிக்கொள்ளும் ஒரு குழுவினர் இந்த இணைப்பை சீர்குலைப்பதாக மற்றொரு தரப்பு கூறுகிறது.
</p><p>எனவே யார் தடை போட்டாலும் இப்போது இதைப் பார்த்துப் பார்த்து சலித்துப்போன இந்த இரு கட்சிகளினதும் இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலையில் உள்ளவர்கள் 'தலைவர்கள் விரும்புவதைச் செய்யட்டும் நாங்கள் இணைகிறோம்' என்று தீர்மானித்துள்ளதாகத் தகவல்கள் தெரியவந்துள்ளன. </p><p>
அவர்கள் கூறுவது போல் 'நாம் இணையாவிட்டால் முன்னோக்கி செல்வதற்கு வேறு வழியில்லை என்பதோடு பலமான ஒரு அணியை உருவாக்க முடியாது. இது யாருக்கும் புரிவதில்லை. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c9023abe-4eed-429a-83e8-951c234a5442/26-6a8e82c23e34c.webp' /></p><p>இந்தப் புரியாத விடயத்தைப் புரியவைக்க குறைந்தபட்சம் நாமாவது இணைந்து இந்த இணைப்பை உருவாக்க வேண்டும். இல்லையெனில் எம்மால் இந்தப் பயணத்தை முன்னெடுத்துச் செல்ல முடியாது' என்று இரண்டாம் - மூன்றாம் நிலை உறுப்பினர்கள் பேசியுள்ளனர்.
</p><p>இதன் மூலம் எப்படியாவது தலைவர்களுக்குச் செய்தியை அனுப்ப ஆயத்தமாகிறார்கள். 'தலைவர்கள் இணையாவிட்டாலும் சிரேஷ்ட தலைவர்கள் எனத் தங்களைக் கூறிக்கொள்பவர்கள் தடைபோட்டாலும் நாமாவது இணைகிறோம்' என்றுதான் அவர்கள் கூறுகிறார்கள்.
</p><p>அப்படியென்றால் 'தலைவர் யார் என்ற கேள்வி எழுந்தால்இ அதை அந்த நேரத்தில் பார்த்துக்கொள்வோம். நமது இரண்டாம் நிலையிலிருந்தோ அல்லது மூன்றாம் நிலையிலிருந்தோ ஒரு தலைவரைக் கண்டபிடிக்க முடியாதா என்ன? </p><p>தலைவரைப் பின்னர் கண்டபிடித்துக் கொள்ளலாம் முதலில் இந்த இணைப்பை உருவாக்கி நாம் ஒன்றாக இருக்க வேண்டும் என்பதுதான் அவர்களின் நிலைப்பாடாகும்.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-26T06:28:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[கணவனை பழி வாங்க இளம் மனைவி மீது அசிட் தாக்குதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/young-women-attacked-by-acid-attack-1787711052"></link>
            <id>https://tamilwin.com/article/young-women-attacked-by-acid-attack-1787711052</id>
            <summary type="text">ஹொரணையில் இடம்பெற்ற அசிட் தாக்குதலில் 29 வயதுடைய பெண் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். படுகாயமடைந்த பெண் ஹொரணை மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹொரணையில் இடம்பெற்ற அசிட் தாக்குதலில் 29 வயதுடைய பெண் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். </p><p>படுகாயமடைந்த பெண் ஹொரணை மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p> இரு தரப்பினரிடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றியதன் காரணமாக ஏற்பட்ட மோதலின் விளைவாகவே இந்த அசிட் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. </p><h2><b>இரு தரப்புக்கு இடையில் மோதல்</b></h2><p>எனினும், குறித்த தகராறு ஏற்பட்ட சந்தர்ப்பத்தில் குறித்த பெண் எந்தவிதத்திலும் தலையிடவில்லை என்பது பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9e8e4f13-ebdb-451e-b0d3-29e76a63fe17/26-6a8e872d794e2.webp' /></p><p>நபர்கள் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தின் போது ஒருவருக்குத் தாக்கப்பட்டமையே இந்தச் சம்பவத்திற்கு காரணமாகும். </p><p>பின்னர், தாக்குதலுக்கு உள்ளான நபர், தன் மீது தாக்குதல் தாக்கிய நபரின் வீட்டிற்கு அசிட் போத்தலையும் எடுத்துச் சென்றுள்ளார்.</p><p> அந்தச் சந்தர்ப்பத்தில் தாக்குதல் மேற்கொண்ட நபர் வீட்டில் இல்லாத காரணத்தினால், குறித்த நபரின் மனைவியின் மீது இந்த தாக்குதல் மேற்கொண்டுள்ளப்பட்டுள்ளது. </p><p> அசிட் தாக்குதலை மேற்கொண்ட நபர் உள்ளிட்ட மூன்று சந்தேகநபர்களை ஹொரணை தலைமையகப் பொலிஸார் கைது செய்துள்ளனர். </p><p>இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளவர்கள் ஹொரணை பகுதியைச் சேர்ந்த 30, 28 மற்றும் 27 வயதுடைய மூவராகும்.</p><p> சந்தேகநபர்களை ஹொரணை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. </p>]]></content>
            <updated>2026-08-26T06:27:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[தேசியக் கொடியில் மாற்றம் செய்ய வேண்டுமென அமைச்சர் கூறினாரா!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/fake-statement-regarding-the-national-flag-1787723863"></link>
            <id>https://tamilwin.com/article/fake-statement-regarding-the-national-flag-1787723863</id>
            <summary type="text">தேசியக் கொடியில் மாற்றம் செய்யப்பட வேண்டும் எனத் தான் கூறியதாகப் பரப்பப்படும் செய்தி முற்றிலும் பொய்யானது என அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் அமைச்சர் டொக்டர...</summary>
            <content type="html"><![CDATA[<p>தேசியக் கொடியில் மாற்றம் செய்யப்பட வேண்டும் எனத் தான் கூறியதாகப் பரப்பப்படும் செய்தி முற்றிலும் பொய்யானது என அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் அமைச்சர் டொக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
</p><p>இந்த பிரசாரம் குறித்து குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
</p><p>தேசியக் கொடி மாற்றம் குறித்துப் பரப்பப்பட்ட போலிச் செய்திகள் தொடர்பான இணையதள இணைப்புகள் ஊடகவியலாளர்களிடம் இருந்தால், அவற்றை தன்னிடம் ஒப்படைக்குமாறு அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/14431723-67a9-40ec-8c72-badd59cc32dd/26-6a8e805957e6a.webp' /></p><p>
இதேவேளை, முச்சக்கரவண்டிகளை இயக்குவதற்கான குறைந்தபட்ச வயதை 40 ஆக உயர்த்தும் யோசனை குறித்து அரசாங்கம் இதுவரை பரிசீலிக்கவில்லை என ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த அமைச்சர் தெளிவுபடுத்தினார்.</p><p>
பாடசாலைக் கல்வியை இடைநிறுத்தியவர்கள் மற்றும் உயர்தரப் பரீட்சைக்குப் பிந்திய மாணவர்களுக்கு தொழிற்பயிற்சிகளை வழங்குவது தொடர்பாக பல்வேறு தரப்பினரிடமிருந்தும் யோசனைகள் கிடைத்துள்ளதாகவும், எனினும் இது குறித்த இறுதித் தீர்மானத்தை அரசாங்கமே எடுக்கும் எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-26T06:25:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலக சாம்பியன் கார்ல்சனை வீழ்த்திய 15 வயதான இந்திய இளம் சதுரங்க வீரர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/15-year-old-indian-teen-stuns-world-magnus-carlsen-1787723020"></link>
            <id>https://ibctamil.com/article/15-year-old-indian-teen-stuns-world-magnus-carlsen-1787723020</id>
            <summary type="text">ஐந்து முறை உலக சதுரங்க சாம்பியனான Magnus Carlsen-ஐ 15 வயதான இந்திய சதுரங்க வீரர் வந்தன் அலங்கார் சவாய் 50 நகர்வுகளில் வீழ்த்தி சிறப்பான வெற்றியைப் பதி...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஐந்து முறை உலக சதுரங்க சாம்பியனான Magnus Carlsen-ஐ 15 வயதான இந்திய சதுரங்க வீரர் வந்தன் அலங்கார் சவாய் 50 நகர்வுகளில் வீழ்த்தி சிறப்பான வெற்றியைப் பதிவு செய்துள்ளார்.
</p><p>
2,288 தரவரிசை புள்ளிகளைக்கொண்ட இந்திய வீரர் வந்தன், 2,823 புள்ளிகளுடன் போட்டியில் பங்கேற்ற கார்ல்சனை இரண்டாவது சுற்றில் இவ்வாறு தோற்கடித்தார்.</p><p>

26ஆவது நகர்வு வரை ஆட்டம் சமநிலையில் இருந்த நிலையில், கார்ல்சன் செய்த முக்கிய தவறை பயன்படுத்திக் கொண்ட வந்தன், தனது சாதகமான நிலையை வெற்றியாக மாற்றினார்.</p><p></p><h2>சர்வதேச மாஸ்டர் (IM) பட்டம்</h2><p>
</p><p>
இந்த வெற்றி குறித்து வந்தன் தெரிவிக்கும்போது, கார்ல்சனுக்கு எதிராக விளையாடுகையில் தன்னிடம் இழப்பதற்கு எதுவும் இல்லை என்பதால் வழக்கமான அணுகுமுறையுடன் நிதானமாக விளையாடியதாகத் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0c618468-af11-4420-9c69-0bd7a8ae0feb/26-6a8e852a153b2.webp' /></p><p>
</p><p>
வந்தனின் பெற்றோருக்குக்கூட அவர் கார்ல்சனுடன் விளையாடியது முதலில் தெரியவில்லை. போட்டி குறித்து குடும்பத்தினர் கேட்டபோதுதான் அவர் கார்ல்சனை தோற்கடித்த செய்தியை அறிந்துள்ளனர்.</p><p>

போட்டியில் வந்தன் மொத்தம் 3 வெற்றிகளையும் ஒரு தோல்வியையும் பதிவு செய்த நிலையில், நான்காவது சுற்றுக்குப் பின்னர் சோர்வாக உணர்ந்ததால் போட்டியில் இருந்து விலகியதாக தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p>
தற்போது தனது முக்கிய இலக்கு சர்வதேச மாஸ்டர் (IM) பட்டத்தை பெறுவதே என வந்தன் குறிப்பிட்டுள்ளார்.</p><p> எனினும், எதிர்காலத்தில் சதுரங்கத்தை முழுநேரத் தொழிலாகத் தொடர்வாரா என்பது குறித்து அவர் இன்னும் முடிவு செய்யவில்லை.
</p><p>
குறிப்பாக, கார்ல்சனின் 2,823 தரவரிசை புள்ளிகளுடன் ஒப்பிடுகையில் 2,288 தரவரிசை புள்ளிகளை கொண்டிருந்த 15 வயது வீரரின் இந்த வெற்றி, அவரது இளம் சதுரங்க வாழ்க்கையின் குறிப்பிடத்தக்க சாதனையாக அமைந்துள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-26T06:19:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[சொந்த ஊர் செல்ல கொழும்பு பேருந்து நிலையத்தில் அலைமோதும் பயணிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/passengers-crowd-at-colombo-bus-station-1787724892"></link>
            <id>https://jvpnews.com/article/passengers-crowd-at-colombo-bus-station-1787724892</id>
            <summary type="text">நீண்ட வார இறுதி விடுமுறையையொட்டி, கொட்டாவ மாகும்புர பல்நோக்கு போக்குவரத்து நிலையத்திற்கு அதிகளவிலான பயணிகள் வருகை தருவதாக தெரிவிக்கப்படுகிறது.

விடு...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீண்ட வார இறுதி விடுமுறையையொட்டி, கொட்டாவ மாகும்புர பல்நோக்கு போக்குவரத்து நிலையத்திற்கு அதிகளவிலான பயணிகள் வருகை தருவதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><p>

விடுமுறையைக் கழிப்பதற்காக தங்களது சொந்த ஊர்களுக்கும் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் பயணிக்கும் மக்கள் அதிகரித்துள்ளதால், மாகும்புர போக்குவரத்து நிலையத்தில் இன்று (26) கடும் பயணிகள் நெரிசல் ஏற்பட்டுள்ளது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1b15fd49-0876-4cba-a133-1211fc396577/26-6a8e845e3f65d.webp' /></p><p>பேருந்துகளைப் பயன்படுத்தி பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், நிலையத்தில் நீண்ட வரிசைகளும் பரபரப்பான சூழலும் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
நீண்ட வார இறுதி விடுமுறையை முன்னிட்டு பயணிகள் அதிகளவில் பயணிக்கக்கூடும் என்பதால், போக்குவரத்து நிலையங்களுக்கு செல்லும் மக்கள் தங்களது பயணங்களை முன்கூட்டியே திட்டமிடுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-26T06:15:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சமூக வலைத்தாளங்களில் ஆபாசம்; பிரபல நடிகைக்கு பொலிஸார் வலைவீச்சு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/obscenity-on-social-media-actress-dharsha-gupta-1787724309"></link>
            <id>https://jvpnews.com/article/obscenity-on-social-media-actress-dharsha-gupta-1787724309</id>
            <summary type="text">&amp;nbsp; சமூக வலைத்தாளங்களில் ஆபாச பேசியமை தொடர்பில் நடிகை தர்ஷா குப்தாவை கைது செய்ய பொலிஸார் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றதாக இந்திய ஊடகங்க்கள...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; சமூக வலைத்தாளங்களில் ஆபாச பேசியமை தொடர்பில் நடிகை தர்ஷா குப்தாவை கைது செய்ய பொலிஸார் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றதாக இந்திய ஊடகங்க்கள் தெரிவித்துள்ளன.
</p><p>
சமூக வலைத்தளங்களில் ஆபாசமாக பேசுதல் போன்ற பதிவுகளை வெளியிட்ட திருச்சி சாதனா, நடிகை தர்ஷா குப்தா உள்பட 12 பேர் மீது பொலிஸார் வழக்கு பதிவுசெய்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8b39bea3-5b5a-4a14-b53f-72119e5c5430/26-6a8e8217ecf35.webp' /></p><p> </p><h2>&nbsp;திருச்சி சாதனா, நடிகை தர்ஷா குப்தா உள்பட 12 பேர் மீது வழக்கு</h2><p>

மேலும் அவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் பொலிஸார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். 

சேலத்தை சேர்ந்த சட்டத்தரணி அஜித் என்பவர், மாநகர சைபர் கிரைம் பொலிஸில் புகார் மனு ஒன்றை அளித்தார். </p><p>

அதில் இன்ஸ்டாகிராம், யூடியூப் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் சிலர், 18 வயதுக்கும் கீழ் உள்ள இளம் வயதுடையவர்களுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் ஆபாசமாக பேசுதல் உள்ளிட்டவைகளை பதிவிட்டு வெளியிடுகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6d4f95e5-14bf-4492-b1c8-c30003582c3c/26-6a8e82173f69a.webp' /></p><p> 

குறிப்பாக திருச்சி சாதனா, நடிகை தர்ஷா குப்தா உள்பட 12 பெண்கள் சமூக வலைத்தளங்களில் நேரடியாக வந்து ஆபாசத்தை தூண்டும் வகையில் பேசுகின்றனர். 

அவர்கள் பல லட்சம் ரூபாய் வரை சம்பாதிக்கின்றனர்.</p><p> இவர்களின் நடவடிக்கையால் இளைஞர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். 

எனவே சமூக வலைத்தளங்களில் ஆபாசமாக பேசுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. </p><p>அதன்பேரில் பொலிஸ் இன்ஸ்பெக்டர் மெட்டில்டா ஜோசி தலைமையிலான பொலிஸார் விசாரணை நடத்தினர். </p><p>

இதையடுத்து சமூக வலைத்தளங்களில் ஆபாசமாக பேசுதல் போன்ற பதிவுகளை வெளியிட்ட திருச்சி சாதனா, நடிகை தர்ஷா குப்தா உள்பட 12 பேர் மீது பொலிஸார் வழக்கு பதிவுசெய்தனர். 

மேலும் அவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் பொலிஸார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-26T06:11:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீண்ட வார இறுதி விடுமுறை! அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிப்போருக்கு முக்கிய அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/notice-issued-to-travelers-on-expressways-1787723961"></link>
            <id>https://tamilwin.com/article/notice-issued-to-travelers-on-expressways-1787723961</id>
            <summary type="text">அதிவேக நெடுஞ்சாலைகளின் பல வெளியேறும் இடங்களில் தற்போது கடுமையான போக்குவரத்து நெரிசல் காணப்படுவதாக தெரிவிகக்ப்படுகின்றது. வீதி அபிவிருத்தி அதிகார சபை இ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அதிவேக நெடுஞ்சாலைகளின் பல வெளியேறும் இடங்களில் தற்போது கடுமையான போக்குவரத்து நெரிசல் காணப்படுவதாக தெரிவிகக்ப்படுகின்றது.</p><p> வீதி அபிவிருத்தி அதிகார சபை இதனை தெரிவித்துள்ளது.</p><p>



இதன்படி,, தெற்கு அதிவேக நெடுஞ்சாலை, வெளிவட்ட அதிவேக நெடுஞ்சாலை மற்றும் மத்திய அதிவேக நெடுஞ்சாலை ஆகியவற்றின் பல வெளியேறும் இடங்களிலே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.</p><h2>சாரதிகளுக்கு முக்கிய அறிவிப்பு&nbsp;</h2><p>தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் மத்தள வெளியேறும் இடம், வெளிவட்ட அதிவேக நெடுஞ்சாலையின் கடவத்தை வெளியேறும் இடத்தில் இவ்வாறு நெரிசல் ஏற்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b28c61af-bd07-4975-8dd9-c8719bd85dbd/26-6a8e8339925c7.webp' /></p><p> </p><p>



அத்துடன் மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் மீரிகம நுழைவு இடம் மற்றும் யக்கபிட்டிய வெளியேறும் இடம் ஆகிய பகுதிகளுக்கு அருகிலும் இவ்வாறு போக்குவரத்து நெரிசல் நிலவுகின்றது.
</p><p>


குறித்த பகுதிகள் ஊடாக பயணிக்கும் சாரதிகள் அவதானத்துடனும் கவனமாகவும் வாகனங்களைச் செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.</p><p>இன்று தொடங்கும் நீண்ட வார இறுதி விடுமுறை காரணமாக, அதிவேக நெடுஞ்சாலைகளின் நுழைவு மற்றும் வெளியேறும் வாயில்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக அந்த அதிகாரசபை மேலும் கூறியுள்ளது.</p><p>&nbsp;</p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-26T06:10:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ்ப்பாணம் - புங்குடுதீவு கடற்கரையில் உருக்குலைந்த சடலம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/mutilated-body-found-on-the-beach-at-pungudutivu-1787724721"></link>
            <id>https://jvpnews.com/article/mutilated-body-found-on-the-beach-at-pungudutivu-1787724721</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;யாழ்ப்பாணம் - புங்குடுதீவு கடற்கரையில் இன்று காலை சடலம் ஒன்று கரையொதுங்கியுள்ளது. 



சடலமானது அடையாளம் காண முடியாத அளவிற்கு உருக்குல...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;யாழ்ப்பாணம் - புங்குடுதீவு கடற்கரையில் இன்று காலை சடலம் ஒன்று கரையொதுங்கியுள்ளது. 



சடலமானது அடையாளம் காண முடியாத அளவிற்கு உருக்குலைந்து காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>


இன்று காலை கடற்தொழிலுக்கு சென்றவர்கள் குறித்த சடலத்தை கண்டுள்ளனர். அதன்பின்னர் ஊர்காவற்துறை பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.



சடலமாக கரையொதுங்கிய குறித்த நபர் யாரென இதுவரை அடையாளம் காணப்படவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e061b441-a68f-4612-86a1-dc264fb7c65c/26-6a8e83b2c9515.webp' /></p><p>
</p><p>


குறித்த சடலத்தை மீட்டு உடற்கூற்று பரிசோதனைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-26T06:09:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[புனர்பூசம் நட்சத்திரத்தில் செவ்வாய்: இந்த 3 ராசிகளுக்கு பணவரவு அதிகரிக்கும்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/mars-transit-in-punarpoosam-who-get-huge-luck-1787720914"></link>
            <id>https://manithan.com/article/mars-transit-in-punarpoosam-who-get-huge-luck-1787720914</id>
            <summary type="text">ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில், நவகிரகங்களின் நிலையானது மனித வாழ்க்கையில் ஆழமான தாக்கத்தை கொண்டிருக்கும் என்று தொன்று தொட்டு நம்பப்பட்டு வருகின்றது....</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில், நவகிரகங்களின் நிலையானது மனித வாழ்க்கையில் ஆழமான தாக்கத்தை கொண்டிருக்கும் என்று தொன்று தொட்டு நம்பப்பட்டு வருகின்றது. </p><p>நவகிரகங்களின் தளபதியாகக் கருதப்படும் செவ்வாய், தைரியம், வீரம், வலிமை, துணிச்சல் ஆகியவற்றின் காரணியாக விளங்குகிறார். மேலும் மேஷம் மற்றும் விருச்சிக ராசிகளின் அதிபதியாகவும் உள்ளார்.செவ்வாய் ஒரு ராசியில் சுமார் 45 நாட்கள் தங்கி, அவ்வப்போது நட்சத்திரத்தையும் மாற்றுவார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bcbe1cf2-d5d9-4a44-8a00-6166eb314f80/26-6a8e7bee54225.webp' /></p><p></p><p>அந்த வகையில், செப்டம்பர் 2 ஆம் தேதி செவ்வாய் புனர்பூசம் நட்சத்திரத்தில் நுழைகிறார். இதன் அதிபதி குரு பகவான். </p><p>செவ்வாய் இந்த நட்சத்திரத்தில் செப்டம்பர் 24 ஆம் தேதி வரை இருப்பார்.

செவ்வாயின் இந்த நட்சத்திர பெயர்ச்சி அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும், 3 ராசிக்காரர்களுக்கு குறிப்பாக மங்களகரமாக அமையவுள்ளது.</p><p> இவர்களுக்கு நிதி நிலையில் முன்னேற்றமும், வேலைவாய்ப்பு மற்றும் தொழிலில் வெற்றியும் கிடைக்க வாய்ப்புள்ளது. செப்டம்பர் முதல் வாரத்தில் நிகழும் இந்த பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் பெறும்&nbsp; ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.</p><h2>மேஷம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e53894de-9e1e-4bb5-8ec1-3e6c00f0f1f4/26-6a8e7bef08eec.webp' /></p><p>
செவ்வாயின் நட்சத்திரப் பெயர்ச்சியால் மேஷ ராசியைச் சேர்ந்தவர்களுக்கு செப்டம்பர் மாதத்தின் தொடக்கமே மிகவும் சிறப்பாக அமையப் போகிறது. </p><p>நீண்ட காலமாக முடிக்க முடியாமல் நிலுவையில் இருந்த வேலைகள் மற்றும் முயற்சிகள் அனைத்தும் இந்த காலகட்டத்தில் சாதகமாக முடிவடையும். </p><p>இதனால் மனதில் இருந்த கவலைகள் நீங்கி, நிம்மதியும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். முன்னைய முதலீடுகளில் இருந்து எதிர்ப்பாராத லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது.</p><h2>தனுசு</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7361a11c-36b8-42c5-a7cc-a9fa1351433d/26-6a8e7befae8c7.webp' /></p><p>செவ்வாயின் நட்சத்திரப் பெயர்ச்சியால் தனுசு ராசிக்காரர்களுக்கு செப்டம்பர் மாதத்தின் தொடக்கமே சாதகமாகவும் சிறப்பாகவும் அமையும்.</p><p>இந்த காலகட்டத்தில் மன தைரியம் அதிகரிப்பதுடன், எதையும் நம்பிக்கையுடன் எதிர்கொள்ளும் ஆற்றலும் வளரும். நீண்ட நாட்களாக மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கி, தெளிவான முடிவுகளை எடுக்க முடியும்.
</p><p>
வேலை செய்பவர்களுக்கு அவர்களின் சிறப்பான செயல்திறன் மற்றும் கடின உழைப்புக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். இதன் காரணமாக பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகளும் உருவாகலாம்.குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கி மகிழ்ச்சியான சூழல் உருவாகும்.</p><h2>

மிதுனம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/85cacb07-0c05-4850-85e9-c4608d461bdc/26-6a8e7bf060b51.webp' /></p><p></p><p>செவ்வாயின் நட்சத்திரப் பெயர்ச்சியால் மிதுன ராசிக்காரர்களின் வாழ்க்கையில் செப்டம்பர் மாதத்தின் முதல் வாரத்திலேயே பல நல்ல மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.</p><p>குறிப்பாக, நிதி ரீதியாக இந்த காலகட்டம் மிகவும் சாதகமாக அமையும். வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படுவதோடு, பல்வேறு வழிகளில் இருந்து எதிர்பாராத நிதி ஆதாயங்கள் கிடைக்கும்.&nbsp;</p><p>
நீங்கள் மேற்கொள்ளும் ஒவ்வொரு பணியையும் சிறப்பாகவும், திட்டமிட்டபடியும் செய்து முடிப்பீர்கள். இதன் மூலம் உங்கள் திறமை மற்றும் உழைப்புக்கு நல்ல அங்கீகாரம் கிடைக்கும்..இதுவரை தாமதமாகி வந்த சில காரியங்களும் சாதகமாக முடிவடையும்.</p><p><b>இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;&nbsp;</b></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b>&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-26T06:04:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடத்தப்பட்ட தனம்.. கையெழுத்து போட்ட கதிர், ரகுராம் செய்யப்போவது என்ன? - சந்தியா ராகம் இன்றைய எபிசோட் அப்டேட்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/sandhya-raagam-serial-today-episode-1787721878"></link>
            <id>https://viduppu.com/article/sandhya-raagam-serial-today-episode-1787721878</id>
            <summary type="text">Zee தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சந்தியா ராகம். நேற்றைய எபிசோடில் புவனேஸ்வரி தனத்தை...</summary>
            <content type="html"><![CDATA[<p>Zee தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சந்தியா ராகம். நேற்றைய எபிசோடில் புவனேஸ்வரி தனத்தை கடத்தி அதிர்ச்சி கொடுத்த நிலையில், இன்று நடக்கப்போவது என்ன என்று பார்க்கலாம் வாங்க.</p><p>அதாவது, கடத்தப்பட்ட தனத்தை ஒரு ஃப்ரீசர் ரூமுக்குள் அடைத்து வைக்கிறார்கள். அதன்பிறகு புவனேஸ்வரி, மாயாவுக்கு வீடியோ கால் செய்து, தனம் தன்னிடம் இருப்பதாக சொல்கிறாள். மேலும், கதிர்தான் ஜீவா என்ற உண்மையை ஒப்புக்கொண்டு கதிர் சில ஆவணங்களில் கையெழுத்து போட வேண்டும் என்று கண்டிஷன் போடுகிறாள்.
</p><p>இதை கேட்ட மாயா உடனே கதிரை சந்தித்து விஷயத்தை சொல்ல, தனத்தை காப்பாத்தணும் என்பதற்காக எங்கே வேண்டுமானாலும் கையெழுத்து போட தயார் என்று கதிர் சொல்கிறான். இதையடுத்து இருவரும் வீட்டில் யாருக்கும் தெரியாமல் புவனேஸ்வரியை சந்திக்க கிளம்புகிறார்கள்.
</p><p>மறுபக்கம், தனம் அடைக்கப்பட்டிருக்கும் ஃப்ரீசர் ரூமுக்குள் வரும் ரவுடி தனது செல்போனை தவறவிட்டு செல்கிறான். அந்த போன் தனத்தின் கையில் கிடைக்க, உடனே சீனுவுக்கு போன் செய்கிறாள். ஆனால் எதிர்பாராத விதமாக அந்த அழைப்பை மணி எடுக்கிறார். தனம் தான் கடத்தப்பட்டிருப்பதை சொல்ல, மணி உடனே இந்த விஷயத்தை வீட்டில் உள்ள அனைவரிடமும் தெரிவிக்கிறார்.</p><p>இதனால் வீட்டில் இருப்பவர்கள் எல்லோரும் அதிர்ச்சி அடைகிறார்கள். தனத்தை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்று முடிவு செய்து தேட ஆரம்பிக்கிறார்கள். ஒரு கட்டத்தில் மின்வாரிய அலுவலகத்துக்குச் சென்று ஒவ்வொரு ஏரியாவாக கரண்டை கட் செய்து, தனம் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்க முயற்சி செய்கிறார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f812bf25-488b-42a8-a1f3-0b7f8579ba54/26-6a8e7899b8c7b.webp' /></p><p>இதற்கிடையில் கதிரும் மாயாவும் புவனேஸ்வரியை சந்திக்கிறார்கள். புவனேஸ்வரி கொடுத்த ஆவணங்களில் கதிர் கையெழுத்து போடுகிறான். ஆனால் தனம் இருக்கும் இடத்தை மட்டும் சொல்லாமல் புவனேஸ்வரி தொடர்ந்து நக்கல் அடிக்கிறாள். இதனால் கடுப்பாகும் மாயா, "இவங்க சொல்லப் போற மாதிரி தெரியல, நாமளே தனத்தை தேடலாம்" என்று கதிருடன் அங்கிருந்து கிளம்புகிறாள்.</p><p>மறுபக்கம், கடும் குளிரில் ஃப்ரீசர் ரூமுக்குள் தவித்துக் கொண்டிருக்கும் தனம், கையில் இருக்கும் செயினை பார்த்து கண்கலங்குகிறாள். "நீதான் ஜீவா என்ற உண்மை ரகுராமுக்கு தெரியணும். அவர் தொலைச்ச தங்கை பையன் நீதான் என்பதை அவர் தெரிஞ்சுக்கணும். நான் இல்லாம போனாலும் நீ சந்தோஷமா இருக்கணும்" என்று மனதிற்குள் நினைத்து உருகுகிறாள்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4acaa0c9-8164-4c82-92ca-e9cff31839a8/26-6a8e789a6faca.webp' /></p><p>இப்படியான நிலையில் தனத்தை குடும்பத்தினர் காப்பாற்றுவார்களா? கதிர் போட்ட கையெழுத்தால் என்ன பிரச்சனை வரப்போகிறது? ரகுராம் அடுத்ததாக என்ன செய்யப் போகிறார்? என்பதை தெரிந்துகொள்ள சந்தியா ராகம் சீரியலை இன்று இரவு 10 மணிக்கு Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத் தவறாதீர்கள்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-26T06:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[டாக்சிக் திரைப்படத்தின் முன்பதிவு.. முதல் நாள் வசூல் இத்தனை கோடி வருமா!!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/toxic-advance-collection-and-first-day-box-office-1787718116"></link>
            <id>https://cineulagam.com/article/toxic-advance-collection-and-first-day-box-office-1787718116</id>
            <summary type="text">டாக்சிக் திரைப்படம் இன்று வெளியாகியுள்ள நிலையில், அதன் முன்பதிவு வசூல் விவரம் மற்றும் முதல் நாள் எவ்வளவு வசூல் வரும் என்கிற எதிர்பார்ப்பு குறித்த தகவல...</summary>
            <content type="html"><![CDATA[<p>டாக்சிக் திரைப்படம் இன்று வெளியாகியுள்ள நிலையில், அதன் முன்பதிவு வசூல் விவரம் மற்றும் முதல் நாள் எவ்வளவு வசூல் வரும் என்கிற எதிர்பார்ப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது.</p><p></p><h2>

டாக்சிக்
</h2><p>
யாஷ் கே.ஜி.எப் 2 திரைப்படத்தின் மூலம் இந்திய சினிமாவின் உச்ச நட்சத்திரமாக மாறினார். இவருக்கென்று தனி மார்க்கெட் மட்டுமின்றி, உலகளவில் கன்னட சினிமாவிற்கு மாபெரும் மார்க்கெட் திறந்தது. இதன்பின் காந்தாரா 1 &amp; 2 போன்ற படங்களும் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்றன.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/23297631-566a-4b5a-af30-9423df5d6012/26-6a8e69e73c4c7.webp' /></p><p>இப்படி மிகப்பெரிய இண்டஸ்ட்ரியாக கன்னட சினிமா மாறியுள்ள நிலையில், கன்னடத்தில் இருந்து அடுத்த பிரம்மாண்ட பான் இந்தியா திரைப்படமாக இன்று டாக்சிக் வெளியாகியுள்ளது.</p><h2> 

முன்பதிவு</h2><p>

ஒவ்வொரு புதிய திரைப்படம் வெளிவரும்போதும், அப்படத்தின் முன்பதிவு வசூல் விவரம் வெளியாகும். அந்த வகையில், இன்று வெளியாகியுள்ள <a href="https://www.youtube.com/watch?v=7TwkpFlc0dA" target="_blank">டாக்சிக் </a>திரைப்படம் முன்பதிவிலேயே மொத்தமாக ரூ. 80 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a2b2308b-3907-4a1d-bed8-a639869e06a6/26-6a8e69e8097ab.webp' /></p><p>
</p><h2>
முதல் நாள் வசூல்</h2><p>

முன்பதிவில் ரூ. 80 கோடிக்கும் மேல் வசூலித்துள்ள டாக்சிக் திரைப்படம், முதல் நாள் உலகளவில் ரூ. 125 கோடிக்கும் மேல் வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f5671b76-cc45-4846-b476-72bb90caf18d/26-6a8e69e8d0c72.webp' /></p>]]></content>
            <updated>2026-08-26T06:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[பதவியை கைவிடத் தயார்! விளக்கம் வழங்கிய ஆளும் தரப்பு எம்.பி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/nilanthi-kottahachchi-ready-to-resign-1787722943"></link>
            <id>https://ibctamil.com/article/nilanthi-kottahachchi-ready-to-resign-1787722943</id>
            <summary type="text">தாங்கள் வகிக்கும் பதவிகளை எந்த நேரத்திலும் கைவிடுவதற்கு தாம் உள்ளிட்ட குழுவினர் தயாராக இருப்பதாக&amp;nbsp;நாடாளுமன்ற உறுப்பினர் நிலந்தி கொட்டாச்சி தெரிவித...</summary>
            <content type="html"><![CDATA[<p>தாங்கள் வகிக்கும் பதவிகளை எந்த நேரத்திலும் கைவிடுவதற்கு தாம் உள்ளிட்ட குழுவினர் தயாராக இருப்பதாக&nbsp;நாடாளுமன்ற உறுப்பினர் நிலந்தி கொட்டாச்சி தெரிவித்துள்ளார்.</p><p>மேலும், தங்களுக்கு பதவிகள் என்பது அதிகாரத்திற்கானவை அல்ல, மக்களுக்காக நிறைவேற்ற வேண்டிய பொறுப்புகள் மட்டுமே எனவும் அவர் கூறியுள்ளார்.</p><p>மக்கள் சந்திப்பொன்றில் உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>மக்களின் பிரச்சினைகள்</h2><p>
</p><p>இது குறித்து மேலும் கருத்து வெளியிட்ட அவர்,&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9cd5988c-235e-4eb4-9cef-ba62e57be772/26-6a8e7fb098501.webp' /></p><p>“ 2029ஆம் ஆண்டு ஜனாதிபதி பதவியை இலக்காகக் கொண்டு செயற்படும் சிலர் உள்ளனர். அவ்வாறானவர்கள் மிகவும் சிரமப்பட்டு மக்களை ஒன்றுதிரட்டி அரசியல் இயக்கங்களை உருவாக்க முயற்சித்து வருகின்றனர்.</p><p>தற்போதைய ஜனாதிபதி கொழும்பில் குளிரூட்டப்பட்ட அறைகளில் இருந்து கிராமத்திற்கு வந்தவர் அல்ல. தம்புத்தேகம ரம்பண்டாவின் மகனாக, மண்ணில் காலூன்றி, மண்ணின் வாசனையை அறிந்த தலைவராக அவர் இருக்கின்றார்.</p><p>நாங்கள் மீண்டும் குளிரூட்டப்பட்ட அறைகளில் இருந்து மண்ணுக்கு வர வேண்டிய அவசியமில்லை. நாங்கள் எப்போதும் மக்களோடு, மண்ணோடுதான் இருக்கிறோம். </p><p>எனவே, 2029ஆம் ஆண்டை கனவு காண்பவர்களிடம் நாங்கள் கூறுவது என்னவென்றால், மிகவும் திட்டமிட்டும் ஒழுங்கமைக்கப்பட்டும் மக்களின் பிரச்சினைகளுக்கு செவிசாய்த்து இந்தப் பயணத்தை முன்னெடுத்து வருகிறோம்” என கூறியுள்ளார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-26T05:55:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாகிஸ்தான் அரசு மருத்துவமனையில் தீ விபத்து - 15 குழந்தைகள் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/15-infants-dies-in-pakistan-hospital-fire-1787723457"></link>
            <id>https://news.lankasri.com/article/15-infants-dies-in-pakistan-hospital-fire-1787723457</id>
            <summary type="text">15 infants dies in pakistan hospital fire: பாகிஸ்தானில் உள்ள அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 15 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.

பாகிஸ்தான் அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>15 infants dies in pakistan hospital fire: பாகிஸ்தானில் உள்ள அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 15 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.
</p><h3>
பாகிஸ்தான் அரசு மருத்துவமனையில் தீ விபத்து</h3><p>

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில், பாகிஸ்தான் மருத்துவ அறிவியல் கழக(PIMS) மருத்துவமனை இயங்கி வருகிறது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/40851987-b260-446d-b3bb-75c223181c5a/26-6a8e7ec32e3e7.webp' /></p><p>

இங்குள்ள தாய் மற்றும் குழந்தை நலப் பிரிவின் மூன்றாவது மாடியில் உள்ள மகப்பேறு மருத்துவப் பிரிவில், இன்று காலை சுமார் 7 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது.
</p><p>
மருத்துவமனைக்கு விரைந்த மீட்புக்குழுவினர், தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு, அங்கிருந்தவர்களை உடனடியாக வெளியேற்ற தொடங்கினர்.&nbsp;</p><p></p><p>

உள்ளே 16 குழந்தைகள் இருந்த நிலையில், ஒரு குழந்தை மட்டுமே உயிருடன் மீட்கப்பட்டுள்ளது. 15 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். </p><p>

குளிரூட்டும் அமைப்புகளில் ஏற்பட்ட கோளாறு காரணமாகவே தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p> 

இது குறித்து உடனடியாக விசாரணை நடத்தி, விபத்திற்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் உத்தரவிட்டுள்ளார்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-26T05:52:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பகுதியில் கொட்டிக்கிடக்கும் பெற்றோல் மற்றும் எரிவாயு - அமைச்சர் வெளியிட்ட ஆதாரங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sl-offers-4-blocks-in-mannar-basin-for-oil-and-gas-1787720329"></link>
            <id>https://ibctamil.com/article/sl-offers-4-blocks-in-mannar-basin-for-oil-and-gas-1787720329</id>
            <summary type="text">மன்னார் படுகையில் 2 பில்லியன் பீப்பாய் பெற்றோலும் 9 டிரில்லியன் கனஅடி இயற்கை எரிவாயுவும் இருப்பதற்கான ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்ற...</summary>
            <content type="html"><![CDATA[<p>மன்னார் படுகையில் 2 பில்லியன் பீப்பாய் பெற்றோலும் 9 டிரில்லியன் கனஅடி இயற்கை எரிவாயுவும் இருப்பதற்கான ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய வளங்கள் மேம்பாட்டு ஆணையகத்தின் பணிப்பாளர் நாயகம் நீல் டி சில்வா தெரிவித்துள்ளார்.</p><p>அதற்காக&nbsp;இலங்கை தனது வடமேற்கு மன்னார் படுகையில் உள்ள நான்கு கடலோரத் தொகுதிகளை சர்வதேச முதலீட்டாளர்கள் எண்ணெய் மற்றும் எரிவாயுவை ஆய்வு செய்வதற்காக வழங்கியுள்ளது.</p><p>இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே நீல் டி சில்வா இதனைக் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>எண்ணெய் மற்றும் எரிவாயு</h2><p>அவர் மேலும் தெரிவிக்கையில், “இந்த எண்ணெய் மற்றும் எரிவாயு அளவுகளின் அடிப்படையில் அதன் வணிக ரீதியான மதிப்பை கணிப்பிட முடியும். உண்மையில் இந்த மதிப்பீடு மாறக்கூடியது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/79fa031f-1d6d-4a64-905d-c02dc9de29a8/26-6a8e79983364e.webp' /></p><p>அத்துடன் எண்ணெய் மற்றும் எரிவாயுவின் அளவு இதனைக் விடவும் அதிகமாக இருக்கக்கூடும்.

மன்னார் படுகையில் எண்ணெய் மற்றும் எரிவாயு குறித்து முன்னர் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் போது இயற்கை எரிவாயு மற்றும் திரவங்களை கண்டறிய முடிந்தது.</p><p>

இதன்மூலம் பெட்ரோலிய அமைப்பு காணப்படுவதை உறுதிப்படுத்தியுள்ளது. ஒப்பீட்டளவில் பெரிய பரப்பளவை உள்ளடக்கும் வகையில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படாததால், நவீன புவிசார் ஆய்வுத் தொழில்நுட்ப முறைகள் மூலம் தரவுகளை சேகரிக்கவும், தரவுகளை விளக்குவதற்கும் சர்வதேச நிறுவனங்களுக்கு இதுவொரு நல்ல வாய்ப்பாகும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>பிரச்சினைக்கு தீர்வாக அமையும்&nbsp;</h2><p>

இதேவேளை, இந்த ஆய்வின் மூலம் பெறப்படும் பெட்ரோலியம், இலங்கை முகங்கொடுத்துள்ள எரிபொருள் இறக்குமதி என்ற பிரச்சினைக்கு நல்ல தீர்வாக அமையும் என எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக தெரிவித்துள்ளார்.</p><p>
மேலதிக எரிபொருளை அயல் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வெளிநாட்டுச் செலாவணியை ஈட்டிக்கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5377b83c-10c1-423b-9334-70279b464b16/26-6a8e7998df8c7.webp' /></p><p>இந்த முதலீட்டு அழைப்புக்காக மன்னார் படுகையில் ஒதுக்கப்பட்டுள்ள 34,000 சதுர கிலோமீற்றர் பரப்பளவைக் கொண்ட 4 கடல்சார் கட்டங்கள் இதில் அடங்குவதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

&nbsp;&nbsp;</p><p>இதற்கு முன்னர் நிறுவனங்களுக்கு வழங்குவதில் சட்டரீதியான சிக்கல்கள் ஏற்பட்ட பகுதிகள் இந்த 34,000 சதுர கிலோமீற்றர் பகுதிக்குள் அடங்காது என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
அதற்கமைய, இந்த ஆண்டு தோராயமாக 33,964 சதுர கிலோமீற்றர் பரப்பளவைக் கொண்ட பகுதி 4 பகுதிகளாகப் பிரித்து அனுமதிப்பத்திரம் வழங்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-26T05:46:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தியாவுக்கு எதிராக மீண்டும் சதம் விளாசிய இலங்கை வீரர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sonal-dinusha-hits-2nd-test-century-against-india-1787722271"></link>
            <id>https://ibctamil.com/article/sonal-dinusha-hits-2nd-test-century-against-india-1787722271</id>
            <summary type="text">இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானத்தில் நடைபெற்று ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.</p><p>கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானத்தில் நடைபெற்று வரும் போட்டியில்&nbsp;முதலில் களமிறங்கிய இந்தியா முதல் இன்னிங்சில் 503 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டத்தை இடைநிறுத்தியது.</p><p>இதனை தொடர்ந்து முதல் இன்னிங்சை தொடங்கிய இலங்கை 2ம் நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 8 ஓட்டங்கள் எடுத்திருந்தது.</p><p></p><h2>சொனால் தினுஷ சதம்</h2><p> </p><p>இதையடுத்து நேற்றும் ஆட்டத்தை தொடர்ந்த இலங்கை 3ம் நாள் ஆட்டநேர முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 265 ஓட்டங்கள் எடுத்திருந்தது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f2d6fed3-c6a5-4b24-8eee-1380bf207f29/26-6a8e7cbe5a4c9.webp' /></p><p>இந்நிலையில், இந்தியாவுக்கு&nbsp;எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் இலங்கை அணியின் வீரர் சொனால் தினுஷ சதம் விளாசியுள்ளார்.</p><p> 

இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதலாவது இன்னிங்ஸில் இவ்வாறு தனது இரண்டாவது டெஸ்ட் சதத்தை அவர் பதிவு செய்துள்ளார். இந்த போட்டியில் 8 பவுண்டரிகளும் 3 சிக்ஸர்களும் அடங்களாக அவர் இந்த சதத்தைப் பூர்த்தி செய்துள்ளார்.</p><p>கடந்த 15ம் திகதி நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கையை 165 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-26T05:46:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கெஹல்பத்தர பத்மே கைபேசிகள்; சிக்கபோகும் 9 அரசியல்வாதிகள் ஏழு நடிகைகள் !]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/actresses9-politicians-contact-kehelbaddara-padme-1787723315"></link>
            <id>https://jvpnews.com/article/actresses9-politicians-contact-kehelbaddara-padme-1787723315</id>
            <summary type="text">&amp;nbsp; பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடையவராகவும் சந்தேகிக்கப்படும் &#039;கெஹல்பத்தர பத்மே&#039; என்பவரிடமிருந்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடையவராகவும் சந்தேகிக்கப்படும் 'கெஹல்பத்தர பத்மே' என்பவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட கைப்பேசிகளிலிருந்து முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
</p><p>
ஏழு நடிகைகள் மற்றும் ஒன்பது அரசியல்வாதிகள் குறித்த தகவல்கள் அவற்றில் இருந்து பெறப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவு நீதிமன்றத்திற்குத் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ba883d3f-324a-494f-8ec2-29328000161e/26-6a8e7e34edfa8.webp' /></p><h2>சந்தேக நபரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட எட்டு கைப்பேசி</h2><p>
முன்னதாக, சந்தேக நபரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட எட்டு கைப்பேசிகளிலிருந்தும் நீக்கப்பட்ட தரவுகள் தொழில்நுட்ப உதவியுடன் மீட்கப்பட்டுள்ளன.</p><p>
இதில் 8,841 தொலைபேசி அழைப்பு விபரங்கள், 3,26,000-க்கும் மேற்பட்ட புகைப்படங்கள், 1,101 ஒலிக்குறிப்புக்கள் மற்றும் 5,039 காணொளிகள் என்பன அவற்றில் அடங்கியுள்ளன.</p><p></p><p>
</p><p>
சந்தேக நபரின் தொலைபேசிகளில் ஒன்பது அரசியல்வாதிகள் மற்றும் ஏழு நடிகைகள், தொடர்பான புகைப்படங்கள் மற்றும் தொலைபேசி உரையாடல் பதிவுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
</p><p>
இருப்பினும், பெயரிடப்பட்ட நபர்கள் எவரும் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக இதன் மூலம் அர்த்தப்படுத்த முடியாது என புலனாய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
</p><p>
அத்துடன், 20 முக்கிய போதைப்பொருள் கடத்தல்காரர்கள் குறித்த தகவல்கள் போதைப்பொருள் தடுப்புப் பிரிவுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

அத்துடன் 13 சிறைச்சாலை அதிகாரிகளின் தொலைபேசி எண்களும் கண்டு பிடிக்கப்பட்டு, அது குறித்து சிறைச்சாலைகள் ஆணையாளருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p>
பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடையதாகச் சந்தேகிக்கப்படும் 19 பேரின் கடவுச்சீட்டுப் புகைப்படங்கள் மற்றும் 17 வங்கிக் கணக்குகள் குறித்தும் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
</p><p>
கடந்த 2021 மே மாதம் இலங்கையிலிருந்து சட்டபூர்வமாக வெளியேறிய கெஹல்பத்தர பத்மே, ஐக்கிய அரபு இராச்சியம், இந்தோனேசியா, ரஷ்யா, ஜப்பான், சிங்கப்பூர், மலேசியா மற்றும் லாவோஸ் உள்ளிட்ட 13 நாடுகளுக்கு சுமார் 15 முறை பயணம் செய்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p></p><p>
எனினும், இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டு நாட்டுக்கு அழைத்து வரப்பட்ட அவர், தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வந்தார்

இந்தநிலையில், கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தால் செப்டம்பர் 3ஆம் திகதி வரை அவரை, விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-26T05:45:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாகிஸ்தானில் ஏற்பட்ட தீ விபத்தில் 15 பச்சிளம் குழந்தைகள் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/15-infants-die-in-fire-accident-in-pakistan-1787722424"></link>
            <id>https://canadamirror.com/article/15-infants-die-in-fire-accident-in-pakistan-1787722424</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள அரசுக்கு சொந்தமான ‘பாகிஸ்தான் வைத்திய அறிவியல் கழக’ (PIMS) வைத்தியசாலையின் மகப்பேறு பிரிவில் ஏற்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள அரசுக்கு சொந்தமான ‘பாகிஸ்தான் வைத்திய அறிவியல் கழக’ (PIMS) வைத்தியசாலையின் மகப்பேறு பிரிவில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் புதிதாகப் பிறந்த 15 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளனர் .</p><p>ஏர் கண்டிஷனர் (AC) அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e1a9ffd1-5308-48c0-965b-ef5ca5e14cb2/26-6a8e7aba59894.webp' /></p><p> </p><p>

விபத்து நடந்த போது அந்தப் பிரிவில் 16 குழந்தைகள் இருந்த நிலையில், ஒரு குழந்தை மட்டுமே பத்திரமாக மீட்கப்பட்டுள்ளது. </p><p>

தீயை அணைக்கும் பணிகள் நிறைவடைந்து, தற்போது புகையைக் கட்டுப்படுத்தும் பணிகள் நடந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.</p>]]></content>
            <updated>2026-08-26T05:31:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Tony</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையை சேர்ந்த Saregamapa போட்டியாளர் சபேஷனுக்கு திருமணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/saregamapa-sabesan-got-married-1787719185"></link>
            <id>https://cineulagam.com/article/saregamapa-sabesan-got-married-1787719185</id>
            <summary type="text">Saregamapa&amp;nbsp;தமிழ் Saregamapa நிகழ்ச்சி தமிழ் மக்களின் மிகப்பெரிய ஃபேவரைட் ஷோ. இதில் வரும் போட்டியாளர்கள் பலரும் மிகப்பெரும் பாடகர்களாக பல கச்சேரிக...</summary>
            <content type="html"><![CDATA[<h2>Saregamapa&nbsp;தமிழ் </h2><p>Saregamapa நிகழ்ச்சி தமிழ் மக்களின் மிகப்பெரிய ஃபேவரைட் ஷோ. இதில் வரும் போட்டியாளர்கள் பலரும் மிகப்பெரும் பாடகர்களாக பல கச்சேரிகளில் பங்கேற்று வருகின்றனர்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/93756029-df87-4d9f-a8dc-47a01c5b9c63/26-6a8e6e15a8057.webp' /></p><h2>சபேஷன்&nbsp;</h2><p>அந்த வகையில் இலங்கையை சேர்ந்த சபேஷன் Saregamapa தமிழ் சீனியர் சீசனில் கலந்துகொண்டவர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a58175ea-b480-45fd-9c1a-22a4788c1bfa/26-6a8e6e1447f90.webp' /></p><p> </p><p>

இவர் பைனல் ரவுண்ட் வரை வந்து ஒட்டுமொத்த தமிழ் மக்களின் நெஞ்சங்களை கவர்ந்தவர். இவருக்கு என பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8638dff6-1a67-453e-a491-0eaa96343049/26-6a8e6e14f072f.webp' /></p><h2>திருமணம்&nbsp;</h2><p> </p><p>

சமீபத்தில் சபேஷன் நீண்ட வருடம் காதலித்த பெண்ணை திருமணம் செய்துள்ளார், அந்த புகைப்படம் வெளிவந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறது, இதோ...</p><p><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/reel/Dcco8O1SVvj/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/reel/Dcco8O1SVvj/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/reel/Dcco8O1SVvj/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by Royal Beauty Care (@royalbeautycare8)</a></p></div></blockquote> <script async src="//www.instagram.com/embed.js"></script></p>]]></content>
            <updated>2026-08-26T05:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தியாவின் சிறந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் - CJP தலைவர் அபிஜித் தீப்கே புகழாரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/cjp-founder-abhijeet-picks-mk-stalin-as-best-cm-1787721930"></link>
            <id>https://ibctamilnadu.com/article/cjp-founder-abhijeet-picks-mk-stalin-as-best-cm-1787721930</id>
            <summary type="text">cjp founder Abhijeet Dipke picks mkstalin as best cm: மு.க.ஸ்டாலின் இந்தியாவின் சிறந்த முதல்வர்களில் ஒருவர் என CJP தலைவர் அபிஜித் தீப்கே தெரிவித்துள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p>cjp founder Abhijeet Dipke picks mkstalin as best cm: மு.க.ஸ்டாலின் இந்தியாவின் சிறந்த முதல்வர்களில் ஒருவர் என CJP தலைவர் அபிஜித் தீப்கே தெரிவித்துள்ளார். </p><h3>

இந்தியாவின் சிறந்த முதல்வர் மு.க.ஸ்டாலின்
</h3><p>
2 மாதங்களுக்கு முன்னர் இணையத்தில் தொடங்கப்பட்ட கரப்பான் பூச்சி ஜனதா கட்சி(CJP), டெல்லியில் நீட் முறைகேடுகளுக்கு எதிராக பெரிய போராட்டத்தை முன்னெடுத்து மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை ராஜினாமா செய்ய வைத்து மோடி அரசை பணிய வைத்தது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8a110274-87d9-4f21-a9f4-077ad9533622/26-6a8e78cb56ecf.webp' /></p><p>
அதன் நிறுவனராக உள்ள அபிஜித் தீப்கே ஜென் ஸீ கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொண்டு பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். </p><p>

இதில், இந்தியாவின் சிறந்த முதல்வர்கள் யார் என கேள்வி எழுப்பப்பட்டது. 

அதற்கு பதிலளித்த அவர், மு.க.ஸ்டாலின், அரவிந்த் கெஜ்ரிவால், பினராயி விஜயன் ஆகியோரின் பெயர்களை குறிப்பிட்டார். </p><p>

மேலும், மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டை பொருளாதாரத்தில் சிறந்த மாநிலமாகவும், பினராயி விஜயன் கேரளத்தை சுகாதாரத்தில் சிறந்த மாநிலமாகவும், அரவிந்த் கெஜ்ரிவால் தில்லியை கல்வியின் சிறந்த மாநிலமாகவும் மாற்றியதாக குறிப்பிட்டார்.</p>]]></content>
            <updated>2026-08-26T05:26:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பலாலி , குரும்பசிட்டி காணிகள் விடுவிப்பு; வங்குரோத்து அரசியல் செய்யும் தோற்றுப்போன அரசியல்வாதிகள்; அமைச்சர் சாடல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/release-of-palaly-and-kurumbasiddy-lands-1787720484"></link>
            <id>https://jvpnews.com/article/release-of-palaly-and-kurumbasiddy-lands-1787720484</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் வலி. வடக்கில் ஒரு சில வாரங்களில் பெருமளவான காணிகளை அரசாங்கம் விடுவிக்க நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் , தோற்றுப்போன அரசியல்வாதிகள் , காண...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் வலி. வடக்கில் ஒரு சில வாரங்களில் பெருமளவான காணிகளை அரசாங்கம் விடுவிக்க நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் , தோற்றுப்போன அரசியல்வாதிகள் , காணி விடுவிப்பு தொடர்பில் போராட்டங்களை முன்னெடுத்து , தமது போராட்டங்கள் ஊடாகவே காணி விடுவிக்கப்பட்டது போன்றதான வங்குரோத்து அரசியலை செய்ய முற்படுகின்றனர் என கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் குற்றம் சாட்டியுள்ளார்.
</p><p>
 
சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு, காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வு நேற்றைய தினம் (25) யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a1fc3c3b-5ffa-4875-beea-16b12ade7a05/26-6a8e732620708.webp' /></p><h2>வீடுகளைக் கட்டிக்கொள்வதற்கான முழுமையான அனுமதி</h2><p>
</p><p>
 இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 
இதன்போது பலாலி மற்றும் குரும்பசிட்டி பகுதிகளில் உள்ள விவசாய மற்றும் குடியிருப்பு காணிகள் உடனடியாக மீளளிக்கப்படுவதுடன், மக்கள் அங்கு வீடுகளைக் கட்டிக்கொள்வதற்கான முழுமையான அனுமதி வழங்கப்படவுள்ளது.</p><p></p><p> </p><p>

மேலும், 1981 மற்றும் 1988ஆம் ஆண்டுகளில் சுவீகரிக்கப்பட்ட காணிகளுக்கு தற்போதைய சந்தை மதிப்பிட்டின்படி இழப்பீடு வழங்கப்படுவதுடன், அவர்கள் அக்காணிகளைப் பயன்படுத்த முடியாமல் போன காலத்திற்கான கூடுதல் நஷ்டஈடும் வழங்க ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.</p><p></p><p>
</p><p>
 எதிர்வரும் ஆண்டில் தேவைப்படும் 13,000 வீடுகளையும் முழுமையாகக் கட்டிமுடித்து "மீள்குடியேற்ற வீடுகள்" எனும் நாமத்தையே நாட்டின் வரலாற்றில் இருந்து அகற்ற அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது.</p><p></p><p>
</p><p>
கடந்த காலங்களில் ஆட்சியில் இருந்தபோது காணி விடுவிப்பைப் பற்றிப் பேசினால் தென்னிலங்கை கொதித்துவிடும் என்று கூறி அமைதி காத்த தமிழ் அரசுக்கட்சியின் சுமந்திரன் போன்ற தலைவர்கள், தற்போது காணி விடுவிப்பு அரசாங்கத்தால் உறுதியாகியுள்ள நிலையில் போராட்டங்களை அறிவித்து அரசியல் நாடகமாடுகின்றனர்.</p><p> 

மக்கள் இனிமேலும் இத்தகைய அரசியல்வாதிகளின் பகடைக்காய்களாக மாற மாட்டார்கள் என்ற நம்பிக்கை உண்டு என தெரிவித்தார்.&nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-08-26T05:22:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[இருவரும் இப்படி இருப்பதுதான் எந்தவொரு உறவையும் வலுப்படுத்தும்.. நடிகை பிரியங்கா சோப்ரா ஓபன் டாக்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/priyanka-chopra-emphasizes-couple-understanding-1787721360"></link>
            <id>https://viduppu.com/article/priyanka-chopra-emphasizes-couple-understanding-1787721360</id>
            <summary type="text">இந்திய சினிமாவையும் தாண்டி தற்போது ஹாலிவுட் திரையுலகிலும் கலக்கிக்கொண்டிருக்கிறார் பிரியங்கா சோப்ரா. 

இவர் கடந்த 2018-ஆம் ஆண்டு நிக் ஜோனஸ் என்பவரை ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்திய சினிமாவையும் தாண்டி தற்போது ஹாலிவுட் திரையுலகிலும் கலக்கிக்கொண்டிருக்கிறார் பிரியங்கா சோப்ரா. </p><p>

இவர் கடந்த 2018-ஆம் ஆண்டு நிக் ஜோனஸ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். இந்நிலையில், தனது கணவர் குறித்து பிரியங்கா சோப்ரா பேசியது வைரலாகி வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8da21c67-e188-4b86-877f-cc3fff60fa56/26-6a8e7693a8db7.webp' /></p><p> 

இதில், "வெவ்வேறு கலாச்சாரத்தை சேர்ந்த இருவர் இணையும் போது, ஒருவரது கலாச்சாரத்தை மற்றவர் மதிப்பது மிகவும் முக்கியம். இந்திய கலாச்சாரத்தின் மீது ஜோன்ஸுக்கு இருந்த மரியாதைதான் எங்களது உறவின் முக்கிய அஸ்திவாரம்.
</p><p>
ஒருவேளை அவர் எனது நாட்டையும் கலாச்சாரத்தையும் நேசிக்காமல் இருந்திருந்தால், நான் அவரை காதலித்திருப்பேனா என எனக்கு தெரியவில்லை. அன்பாகவும் பரிவாகவும் இருவரும் இருப்பதுதான் எந்தவொரு உறவையும் வலுப்படுத்தும்" என பிரியங்கா சோப்ரா கூறினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2c6864af-3723-4c88-a628-14bbf9d8770c/26-6a8e769462142.webp' /></p>]]></content>
            <updated>2026-08-26T05:17:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மன்னார் படுகையில் பெட்ரோலியம் ; இலங்கைக்கு அடிக்கபோகும் அதிஸ்டம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/billions-in-mannar-basin-oil-and-gas-1787721315"></link>
            <id>https://jvpnews.com/article/billions-in-mannar-basin-oil-and-gas-1787721315</id>
            <summary type="text">&amp;nbsp; மன்னார் படுகையில் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு இருப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

மன்னார் படுகையில் இவ்வருடத்தி...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; மன்னார் படுகையில் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு இருப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
</p><p>
மன்னார் படுகையில் இவ்வருடத்திற்கான பெட்ரோலிய ஆய்வு உரிமங்களை வழங்குவது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு,&nbsp; (25) கொழும்பிலுள்ள இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் தலைமை அலுவலகத்தில் வெளியிடப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/abae7e1d-de36-4593-86fb-7ae0e8e385c2/26-6a8e766597c29.webp' /></p><h2>அதிகார பூர்வ&nbsp; அறிவிப்பு</h2><p> </p><p>

இலங்கை பெட்ரோலிய அபிவிருத்தி அதிகார சபையால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வு, எரிசக்தி மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் அனுர கருணாதிலக்க, தொழிலாளர் அமைச்சரும் நிதித் திட்டமிடல் பிரதி அமைச்சருமான கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது.</p><p></p><p>
</p><p>
இதன்படி சர்வதேச எரிசக்தி நிறுவனங்கள் ஆய்வுப் பணிகளை மேற்கொள்வதற்காக, மன்னார் படுகையில் சுமார் 34,000 சதுர கிலோமீற்றர் பரப்பளவைக் கொண்ட நான்கு பிரதான கடல் தொகுதிகள் (Blocks) ஒதுக்கீடு செய்யப்படவுள்ளன.
</p><p>
முந்தைய ஆய்வுகளின்போது இயற்கை எரிவாயு மற்றும் திரவக் கசிவுகள் கண்டறியப்பட்டதன் மூலம், மன்னார் படுகையில் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு இருப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.</p><p></p><p>

இதுகுறித்து கருத்து வெளியிட்ட பெட்ரோலிய மேம்பாட்டு அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் நீல் டி சில்வா, ஒப்பீட்டளவில் ஒரு பெரிய பரப்பளவில் இன்னும் ஆய்வுகள் மேற்கொள்ளப்படாததால், சர்வதேச நிறுவனங்கள் நவீன புவியியல் ஆய்வுகள் மற்றும் புதிய தொழில்நுட்ப முறைகள் மூலம் தரவுகளைச் சேகரிக்க வாய்ப்புப் பெறும் எனக் குறிப்பிட்டார்.</p><p></p><p>

மேலும், தற்போதைய தரவுகளின் அடிப்படையில் மன்னார் படுகையிலிருந்து சுமார் 2 பில்லியன் பேரல் பெட்ரோலியம் மற்றும் 9 டிரில்லியன் கன அடி இயற்கை எரிவாயுவை அகழ்ந்தெடுக்க முடியும் என மதிப்பிடப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.</p>]]></content>
            <updated>2026-08-26T05:12:31+00:00</updated>
        </entry>
    </feed>
