<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-08-25T08:26:23+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[2027 சிங்கள - தமிழ் புத்தாண்டு சுப நேரங்கள் உத்தியோகபூர்வமாக வெளியீடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/2027-sinhala-tamil-new-year-auspicious-times-1787645342"></link>
            <id>https://tamilwin.com/article/2027-sinhala-tamil-new-year-auspicious-times-1787645342</id>
            <summary type="text">2027ஆம் ஆண்டிற்கான சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு சுப நேரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.&amp;nbsp;இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு புத்தசாசன, சமய மற்றும் க...</summary>
            <content type="html"><![CDATA[<p>2027ஆம் ஆண்டிற்கான சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு சுப நேரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.&nbsp;</p><p>இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது.</p><p>இதற்கமைய, 2027ஆம் ஆண்டு புத்தாண்டு ஏப்ரல் 14ஆம் திகதி பிற்பகல் 3:29 மணிக்கு பிறக்கின்றது என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>சுப நேர பட்டியல் வெளியீடு</h2><p>
 

புத்தாண்டு பிறப்பு, புண்ணிய காலம், அடுப்பு மூட்டுதல், உணவு உட்கொள்ளல் மற்றும் கைவிஷேடம் பரிமாறல் உள்ளிட்ட பாரம்பரிய சுப நேரங்கள் அடங்கிய பட்டியல் அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-25T08:23:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[காரில் 3,400 லிப்ஸ்டிக் முத்தங்கள்: காதலியின் செயலால் பொலிஸில் சிக்கிய காதலன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/3400-lipstick-covered-car-police-fined-gwalior-man-1787646115"></link>
            <id>https://news.lankasri.com/article/3400-lipstick-covered-car-police-fined-gwalior-man-1787646115</id>
            <summary type="text">3400 Lipstick Covered Car police fined Gwalior man: &amp;nbsp;வித்தியாசமான முறையில் காதலை வெளிப்படுத்தும் விதமாக காதலி செய்த செயல் காதலனுக்கு தலைவலியாக போ...</summary>
            <content type="html"><![CDATA[<p>3400 Lipstick Covered Car police fined Gwalior man: &nbsp;வித்தியாசமான முறையில் காதலை வெளிப்படுத்தும் விதமாக காதலி செய்த செயல் காதலனுக்கு தலைவலியாக போய் முடிந்துள்ளது.</p><h2>காரில் 3,400 லிப்ஸ்டிக் முத்தங்கள்</h2><p>
குவாலியரில் காதலனுக்கு தன்னுடைய காதலை வெளிப்படுத்தும் விதமாக காதலனின் காரில் 3,400 லிப்ஸ்டிக் முத்தங்களை காதலி வரைந்த நிலையில் போக்குவரத்து அதிகாரிகள் காரின் உரிமையாளருக்கு ரூ 5.500 அபராதமாக விதித்துள்ளனர்.</p><p> அத்துடன் காரில் உள்ள மொத்த லிப்ஸ்டிக் முத்தங்களையும் சுத்தப்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளனர்.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Police in Gwalior seized a car with 3,400 lipstick marks by owner’s girlfriend and issued Rs 5,500 challan. They later made the man scrub lipstick marks off the vehicle<a href="https://x.com/hashtag/gwalior?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#gwalior</a> <a href="https://t.co/G78swQteqj">pic.twitter.com/G78swQteqj</a></p>&mdash; NDTV (@ndtv) <a href="https://x.com/ndtv/status/2092120380249198642?ref_src=twsrc%5Etfw">August 25, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><h2>இணையத்தில் வைரலான விவகாரம்</h2><p>கடந்த சில நாட்களாக நகரின் முக்கிய வீதிகளில் இந்த கார் சுற்றித் திரிந்த நிலையில், இந்த கார் தொடர்பான வீடியோ சமூக ஊடகங்கள் வேகமாக பரவியது.</p><p> இந்நிலையில் சிட்டி சென்டர் பகுதியில் இந்த கார் செல்வதை கவனித்த போக்குவரத்து அதிகாரிகள், காரையும், காரின் உரிமையாளரையும் காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.</p><p>இதையடுத்து அவர் மோட்டார் வாகன சட்டத்தின் விதிகளை மீறியதாக கூறி ரூ.5500 அபராதமாக விதித்துள்ளனர்.</p><p>அத்துடன் காரில் இருக்கும் முத்தக் கரைகளை முழுமையாக சுத்தம் செய்யுமாறு உத்தரவிட்டுள்ளனர்.</p><p></p><h2> செய்தியாளர்களிடம் அளித்த விளக்கம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/35fdbf3e-d483-4547-a589-7b22dfc1ceb0/26-6a8d50a462928.webp' /></p><p>
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய காரின் உரிமையாளர் ஆதித்யா, வெளிநாட்டு ட்ரெண்டால் கவரப்பட்ட தன்னுடைய காதலி இந்த முத்த அலங்காரத்தை செய்ததாக குறிப்பிட்டார்.</p><p> பொலிஸாரின் அறிவுறுத்தலுக்கு பிறகு சுமார் மூன்றரை மணி நேரம் போராடி காரில் இருந்த ,400 லிப்ஸ்டிக் முத்தங்களையும் சுத்தம் செய்துள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-25T08:22:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கைக்கு இழுத்து வரப்பட்ட ஆபத்தான நபர் - பட்டாசு வெடித்து கொண்டாடிய மக்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/people-celebrates-the-bus-lalith-s-arrest-1787631988"></link>
            <id>https://tamilwin.com/article/people-celebrates-the-bus-lalith-s-arrest-1787631988</id>
            <summary type="text">ஆபத்தான நபரான லலித் கண்ணங்கர கைது செய்யப்பட்டதனை வரவேற்று ஹன்வெல்ல, வத்தரேகா, மீகோடா மற்றும் கலகெதர உள்ளிட்ட பல பகுதிகளில் மக்கள் பட்டாசுகளை வெடித்து ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஆபத்தான நபரான லலித் கண்ணங்கர கைது செய்யப்பட்டதனை வரவேற்று ஹன்வெல்ல, வத்தரேகா, மீகோடா மற்றும் கலகெதர உள்ளிட்ட பல பகுதிகளில் மக்கள் பட்டாசுகளை வெடித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.
</p><p>
டுபாயில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான லலித் கண்ணங்கர என்ற பஸ் லலித் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு இழுத்து வரப்பட்டுள்ளார்.
</p><p>
இதனை ஹன்வெல்ல, வத்தரேகா, மீகோடா மற்றும் கலகெதர உள்ளிட்ட பல பகுதிகளில் மக்கள் கொண்டாடி மகிழ்ந்துள்ளனர்.</p><h2><b> 

பாதிக்கப்பட்ட மக்கள் மகிழ்ச்சி</b></h2><p>மேலும், அப்பகுதிகளில் அரசாங்கத்திற்கு நன்றி தெரிவிக்கும் பதாகைகளும் காட்சிப்படுத்தப்பட்டன.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f2d03d77-9a29-4aed-aed6-0204c9f63f94/26-6a8d1be7d46c2.webp' /></p><p>யாசகர்கள் உட்பட அனைத்து மக்களிடமும் பஸ் லலித் லட்சக்கணக்கான ரூபாய்களை பறித்துள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
</p><p>
இந்நிலையில் குறித்த நபரினால் பாதிக்கப்பட்ட மக்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p> </p>]]></content>
            <updated>2026-08-25T08:21:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[இரத்மலானை விமான நிலையத்தில் விபத்துக்குள்ளான பயிற்சி விமானம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/training-aircraft-accident-at-ratmalana-airport-1787645645"></link>
            <id>https://tamilwin.com/article/training-aircraft-accident-at-ratmalana-airport-1787645645</id>
            <summary type="text">இரத்மலானை விமான நிலையத்தில் பயிற்சி விமானம் ஒன்று இன்று விபத்திற்குள்ளாகியுள்ளது.

இரத்மலானை விமான நிலையத்தை மையமாக கொண்டு இயங்கும் விமானப் பயிற்சி ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இரத்மலானை விமான நிலையத்தில் பயிற்சி விமானம் ஒன்று இன்று விபத்திற்குள்ளாகியுள்ளது.
</p><p>
இரத்மலானை விமான நிலையத்தை மையமாக கொண்டு இயங்கும் விமானப் பயிற்சி பாடசாலைக்கு சொந்தமான, 4R-DRA என்ற பதிவு இலக்கத்தை கொண்ட Cessna 152 ரக பயிற்சி விமானம் ஒன்றே விபத்துக்குள்ளாகியுள்ளது.
</p><p>
இன்று இரத்மலானை விமான நிலையத்திற்கு தரையிறங்கும் போது விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c36a45db-eb36-4b0a-a860-f38a62ea8c39/26-6a8d4fc25a9b2.webp' /></p><p>இது தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகி்ன்றன.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-25T08:19:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[H-1B விசா கட்டணத்தை உயர்த்த அமெரிக்கா நடவடிக்கை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/us-moves-to-raise-h-1b-visa-fees-1787646103"></link>
            <id>https://canadamirror.com/article/us-moves-to-raise-h-1b-visa-fees-1787646103</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp; புதிய H-1B விசாக்களுக்கு 103,265 அமெரிக்க டொலர் கட்டணம் விதிக்கும் வகையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் புதிய விதிமுறையை...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp; புதிய H-1B விசாக்களுக்கு 103,265 அமெரிக்க டொலர் கட்டணம் விதிக்கும் வகையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் புதிய விதிமுறையை முன்மொழிந்துள்ளது.
</p><p>
முன்னதாக தற்காலிகமாக நடைமுறைப்படுத்தப்பட்ட இந்தக் கட்டணம், நீதிமன்ற நடவடிக்கைகள் காரணமாக தற்போது வசூலிக்க முடியாத நிலையில் உள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9e43077b-cf27-4316-b362-8898a4911a00/26-6a8d5099a2fd6.webp' /></p><h2>செப்டெம்பர் மாதத்தில் நிறைவடையவுள்ள&nbsp; கட்டண நடைமுறை </h2><p> 

 H-1B விசா தற்காலிக கட்டண நடைமுறை செப்டெம்பர் மாதத்தில் நிறைவடையவுள்ள நிலையில், அதனை நிரந்தரமாக்கும் நோக்கில் அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் திணைக்களம் இந்த புதிய விதிமுறையை முன்வைத்துள்ளது.</p><p>

புதிய கட்டணம் நடைமுறைக்கு வந்தால், தொழில்நுட்பம், கல்வி மற்றும் ஆராய்ச்சி உள்ளிட்ட துறைகளில் வெளிநாட்டு பணியாளர்களை நியமிக்கும் அமெரிக்க நிறுவனங்களின் செலவுகள் கணிசமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>

எனினும், அமெரிக்காவில் ஏற்கனவே மாணவர் விசாவில் தங்கியிருப்பவர்களுக்கு வழங்கப்படும் H-1B விசாக்களுக்கும், ஏற்கனவே உள்ள விசாக்களைப் புதுப்பிப்பதற்கும் இந்தக் கட்டணம் பொருந்தாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இந்தக் கட்டணத்தை எதிர்த்து அமெரிக்க வர்த்தக அமைப்புகள், சில மாநில அரசுகள் மற்றும் தொழிற்சங்கங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் நீதிமன்றங்களில் வழக்குத் தொடர்ந்துள்ளனர்.
</p><p>
இந்தநிலையில், H-1B திட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் 65,000 விசாக்களும், உயர் கல்வித் தகுதி பெற்றவர்களுக்கு கூடுதலாக 20,000 விசாக்களும் வழங்கப்படுகின்றன.
</p><p>
கடந்த ஆண்டு H-1B விசாக்களுக்காக அமெரிக்க நிறுவனங்கள் சுமார் 344,000 விண்ணப்பங்களைப் பதிவு செய்திருந்ததாக அமெரிக்க குடியகல்வு மற்றும் குடிவரவு சேவைத் தரவுகள் தெரிவிக்கின்றன. </p><p>இது 2024ஆம் ஆண்டை விட 25 சதவீதத்துக்கும் அதிகமான வீழ்ச்சியாகும்.

மேலும், H-1B விண்ணப்பதாரர்களுக்கான விசாரணை மற்றும் பின்னணி சரிபார்ப்பு நடவடிக்கைகளை அமெரிக்க நிர்வாகம் கடுமையாக்கியுள்ளது.</p><p>அத்துடன், அதிக திறன் கொண்ட மற்றும் அதிக ஊதியம் பெறும் பணியாளர்களுக்கு முன்னுரிமை வழங்கும் புதிய விசா தேர்வு முறையையும் முன்மொழிந்துள்ளதாக கூறப்படுகின்றது</p>]]></content>
            <updated>2026-08-25T08:19:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kumar</name>
            </author>
            <title type="text"><![CDATA[இதை தமிழ் இனத்தின் பிரச்சினையாகப் பாருங்கள்! காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத் தலைவி ஆதங்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/tamil-community-must-see-this-as-their-problem-1787641528"></link>
            <id>https://tamilwin.com/article/tamil-community-must-see-this-as-their-problem-1787641528</id>
            <summary type="text">இதை தமிழ் இனத்தின் பிரச்சினையாகப் பாருங்கள், எங்களுடைய காணாமல்
ஆக்கப்பட்ட உறவுகளுக்கு இன்றைக்கு நீதி கேட்டு நிற்கிறோம் என மட்டக்களப்பு மாவட்ட வலிந்து...</summary>
            <content type="html"><![CDATA[<p>இதை தமிழ் இனத்தின் பிரச்சினையாகப் பாருங்கள், எங்களுடைய காணாமல்
ஆக்கப்பட்ட உறவுகளுக்கு இன்றைக்கு நீதி கேட்டு நிற்கிறோம் என மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட
உறவுகள் சங்கத் தலைவி அ.அமலநாயகி தெரிவித்துள்ளார்.</p><p>

மட்டக்களப்பு ஊடக அமையத்தில் நேற்று (24.08.2026) 
நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.</p><h2>வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினம்</h2><p>
</p><p>
மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின்
ஏற்பாட்டில் இந்த ஊடகவியலாளர் சந்திப்பு நடைபெற்றுள்ளது.
</p><p>
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர், மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின்
தலைவியாகவும் வடக்கு - கிழக்கு இணைந்த உப தலைவியாகவும் இருக்கிறேன்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/41f26b1d-f964-40f0-902b-c36cd92bb325/26-6a8d41dd8080e.webp' /></p><p>எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 30ஆம் திகதி வழக்கம்போல சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட
தினத்தை வடக்கிலும் கிழக்கிலும் நாங்கள் பேரணிகளாக செய்து வருகின்றோம்.</p><p>
</p><p>
இந்தமுறை அதனை ஒரு மாநாடாகச் செய்வதற்காக வடக்கு - கிழக்கு இணைந்த தாய்மார்களாக
நாங்கள் ஒன்றிணைந்து இந்த மாநாட்டிற்கான வேலைகளைச் செய்து கொண்டிருக்கிறோம்.</p><h2>சர்வதேச விசாரணை</h2><p>
</p><p>
எதிர்வரும் 30ஆம் திகதி வீரசிங்கம் மண்டபத்திற்கு முன்பாக இந்த பேரணியானது
ஆரம்பிக்கப்பட இருக்கிறது. 

காலையில் 9 மணி போல இந்த பேரணி ஆரம்பிக்கப்பட்டு,
தந்தை செல்வா மண்டபத்திற்கு பேரணியாக வந்த பிற்பாடு, இந்த மாநாட்டிற்கான
நிகழ்ச்சிகள் இடம்பெறும் என்பதை ஊடக வாயிலாக
எல்லோருக்கும் தெரியப்படுத்துகிறோம்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/283b6a40-c69d-4052-b9f8-729dc97e8171/26-6a8d438e0a42f.webp' /></p><p>அந்த மாநாட்டின் நோக்கம், இவ்வளவு காலமும் உலகப் பொறிமுறையில்
நம்பிக்கையிழந்து, சர்வதேச நீதிப் பொறிமுறையை வேண்டி, பாதிக்கப்பட்ட தரப்பாக
நீண்டகாலமாக நாங்கள் சர்வதேச விசாரணையின் ஊடாக எங்களுடைய உறவுகளுக்கு என்ன
நடந்தது என்ற உண்மையைக் கண்டறிந்து, அதற்குப் பொறுப்பானவர்களைச் சட்டத்தின்
முன் நிறுத்தி, அவர்களுக்கு உரிய சட்ட நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்பதை
வலியுறுத்தி, 2017ஆம் ஆண்டிலிருந்து நாங்கள் இதனை முன்னெடுத்து வருகின்றோம்.</p><p>

ஆனால்,
இதுவரைக்கும் எங்களுக்கான எந்தவொரு நீதியும் கிடைக்காத பட்சத்தில் நாங்கள் இந்த முடிவை எடுத்துள்ளோம்.

இது ஒரு தமிழர்களின் பிரச்சனையாகப் பாருங்கள், எங்களுடைய காணாமல்
ஆக்கப்பட்ட உறவுகளுக்கு இன்றைக்கு நீதி கேட்டு நிற்கிறோம். இனிவரும்
சந்ததிகளுக்கு அது இனிமேல் நடக்காமல் இருக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-25T08:16:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரச வங்கி - தனியார் கடையில் அடகு வைக்கப்பட்ட யாழில் திருடப்பட்ட கோடி ரூபாய் நகைகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/stolen-jewelry-jaffna-that-was-pawned-is-recovered-1787645741"></link>
            <id>https://ibctamil.com/article/stolen-jewelry-jaffna-that-was-pawned-is-recovered-1787645741</id>
            <summary type="text">யாழ் குடாநாட்டில் ஆட்கள் இல்லாத வேளைகளில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைத்
திருட்டில் ஈடுபட்டு வந்த மூவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதோடு, அடகு
...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ் குடாநாட்டில் ஆட்கள் இல்லாத வேளைகளில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைத்
திருட்டில் ஈடுபட்டு வந்த மூவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதோடு, அடகு
வைக்கப்பட்டிருந்த 43 பவுண் தங்க நகைகள் சாவகச்சேரிப் காவல்துறையால் மீட்க்கப்பட்டுள்ளன.</p><p>மீட்க்கப்பட்ட தங்க நகைகளின் பெறுமதி ஒருகோடியே 50 இலட்சம் ரூபா என
சாவகச்சேரிப் காவல்துறையினரை் தெரிவித்துள்ளனர்.</p><p>

கடந்த ஜூலை மாதம் ஒன்பதாம் திகதி சாவகச்சேரி நகரிலுள்ள நகைக் கடை உரிமையாளரின்
வீட்டிலிருந்து 17 பவுண் தங்க நகைகள் களவாடப்பட்டதாக சாவகச்சேரிப் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.</p><p></p><h2>சிசிரிவி காணொளி</h2><p>
</p><p>
அதனைத் தொடர்ந்து சிசிரிவி காணொளியின் உதவியுடன் சாவகச்சேரிப் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4e4cdf20-fe5f-4a92-bab1-4079d70bd5c0/26-6a8d4f306ab6a.webp' /></p><p>

அதன்போது யாழ். நகரில் வைத்து நவாலியைச் சேர்ந்த பிரதான சந்தேக நபர் நேற்று
முன்தினம் (22) கைது செய்யப்பட்டார்.
</p><p>
பிரதான சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணையில் குறித்த நபர்,
கோப்பாய் பிரதேசத்தில் மூன்று வீடுகளிலும், வட்டுக்கோட்டை, சாவகச்சேரி ஆகிய
இடங்களில் தலா ஒவ்வொரு வீடுகளிலுமாக ஐந்து வீடுகளில் தங்க நகைகளைத் திருடியமை
தெரியவந்தது.
</p><p>
அதனையடுத்து சந்தேக நபருக்கு உதவிய ஊர்காவற்றுறையைச் சேர்ந்த பெண் ஒருவரையும்,
நவாலியைச் சேர்ந்த ஆண் ஒருவரையும் சாவகச்சேரி காவல்துறையினர் கைது செய்தனர்.</p><p></p><h2>கொள்வனவு செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள்&nbsp;</h2><p>
</p><p>
அத்துடன் அடகு வைத்த பணத்தில் கொள்வனவு செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள்
ஒன்றையும் சாவகச்சேரிப் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/39a843c9-d1e0-465e-927e-73d480f07564/26-6a8d4f2fb5fbc.webp' /></p><p>
அதனையடுத்து சந்தேக நபர்கள் சாவகச்சேரி நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்</p><p>
இதன்போது சந்தேக நபர்களை 14 நாட்கள் விளக்க மறியலில் வைக்குமாறு நீதவான்
உத்தரவிட்டுள்ளார்.
</p><p>
மேலும், அடகு கடைகளில் வைக்கப்பட்ட தங்க நகைகளை கட்டுக்காவலுக்குள் கொண்டு
வருவதற்கான உத்தரவையும் காவல்துறையினர் பெற்றனர்.</p><p>

அதற்கமைய ஊர்காவற்றுறையிலுள்ள அரச வங்கியில் அடகு வைக்கப்பட்டிருந்த 26 பவுண்
தங்க நகைகளையும், யாழ். நகரிலுள்ள தனியார் அடகு கடையில் அடகு வைக்கப்பட்ட 17
பவுண் தங்க நகைகளையும் சாவகச்சேரிப் காவல்துறையினர் மீட்டுள்ளனர்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-25T08:16:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[டிரம்பின் புதிய மிரட்டல்; அமெரிக்கா - கனடா வர்த்தகப் போர் தீவிரம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/us-canada-trade-war-intensifies-1787635466"></link>
            <id>https://canadamirror.com/article/us-canada-trade-war-intensifies-1787635466</id>
            <summary type="text">&amp;nbsp; கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் வாகனங்கள் மீது கூடுதல் வரி விதிக்கப்போவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ள நிலையில், அமெ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் வாகனங்கள் மீது கூடுதல் வரி விதிக்கப்போவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ள நிலையில், அமெரிக்கா மற்றும் கனடா இடையே வர்த்தகப் போர் மேலும் தீவிரமடைந்துள்ளது.
</p><p>
 கனடாவிலிருந்து வரும் சிற்றுந்துகள், கனரக வாகனங்கள், மற்றும் வாகனங்களின் உதிரி பாகங்கள் மீதான வரியை ஜனவரி 1 முதல் 25 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாக உயர்த்தப்போவதாக ட்ரம்ப் அறிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/081963f2-9189-4638-858b-cb702ac79eea/26-6a8d270d4f86d.webp' /></p><h2>வர்த்தகப் பேச்சுவார்த்தை தோல்வி</h2><p>கடந்த வார இறுதியில் அமெரிக்கா - கனடா இடையிலான வர்த்தகப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததை அடுத்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கடைசி நேரத்தில் இரு நாடுகளும் ஏற்றுக்கொள்ள முடியாத கோரிக்கைகளை முன்வைத்ததாக பரஸ்பரம் குற்றம் சாட்டின</p><p>.

 ட்ரம்ப்பின் இந்த புதிய வரி அச்சுறுத்தல் தனக்கு வியப்பளிக்கவில்லை என்று தெரிவித்துள்ள கனடா பிரதமர் மார்க் கர்னி, கனடாவின் வாகன உற்பத்தியைக் அழிக்க ட்ரம்ப் நினைப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
</p><p>
அமெரிக்கா "சரியான அணுகுமுறையுடன்" வந்தால் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த கனடா தயார் என்றும் அவர் கூறியுள்ளார்.</p><p>

 அத்துடன் பேச்சுவார்த்தைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும், மீண்டும் ஆரம்பிப்பதற்கான எந்த குறிப்பிட்ட திகதியும் நிர்ணயிக்கப்படவில்லை என்றும் இரண்டு நாட்டு அதிகாரிகளும் தெரிவித்தனர்.
</p><p>
கிட்டத்தட்ட 20 பில்லியன் டொலர் மதிப்பிலான கனடிய இறக்குமதிகள் மீது 50வீத வரி விதிக்கும் அமெரிக்காவின் கெடுவை அடுத்து கடந்த வெள்ளிக்கிழமையன்று கனடா பேச்சுவார்த்தையிலிருந்து வெளியேறி இருந்தமை குரிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-08-25T08:12:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாடாளுமன்ற உறுப்பினர்கள் நீதிதிகள் மீது அவதூறு பரப்புவது கண்டனத்திற்குரியது! - சுரேன் ராகவன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/defamation-justice-is-condemnable-suren-raghavan-1787644238"></link>
            <id>https://tamilwin.com/article/defamation-justice-is-condemnable-suren-raghavan-1787644238</id>
            <summary type="text">நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹிணி கவிரத்ன உட்பட சிலர் நாடாளுமன்ற சிறப்புரிமைகளுக்கு பின்னால் மறைந்துகொண்டு, தலைமை நீதியரசர் மற்றும்
நீதிபதிகள் குறித்து அவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹிணி கவிரத்ன உட்பட சிலர் நாடாளுமன்ற சிறப்புரிமைகளுக்கு பின்னால் மறைந்துகொண்டு, தலைமை நீதியரசர் மற்றும்
நீதிபதிகள் குறித்து அவதூறாகப் பேசுவது முற்றிலும் தவறானது என ஸ்ரீலங்கா
சுதந்திரக் கட்சியின் உப செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கலாநிதி சுரேன்
ராகவன் தெரிவித்துள்ளார்.
</p><p>
கொழும்பில் உள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று (24)
நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர்
மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது,</p><h2>அதிகபட்ச தண்டனை</h2><p>

"நீதிபதிகள் மற்றும் தலைமை நீதியரசருக்கு எதிரான இத்தகைய அவதூறுகள் தொடர்பில்,
நீதிச் சேவைகள் ஆணைக்குழுவும் நாடாளுமன்றச் சிறப்புரிமைக் குழுக்களும் உடனடி
விசாரணை நடத்தி, தவறிழைத்தவர்களுக்குச் சட்டப்படி அதிகபட்ச தண்டனையை வழங்க
வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/68d830aa-c6ed-4936-9ac2-bc18b6f80f61/26-6a8d4dfa3038a.webp' /></p><p>

மேலும், 22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் மற்றும் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ்
தாக்கல் செய்த மனுக்கள் தொடர்பில் உயர்நீதிமன்றத்திலுள்ள 14 நீதிபதிகளையும்
உள்ளடக்கிய விரிவான நீதிபதி அமர்வு அமைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட
வேண்டும்" என்று வலியுறுத்தினார்.</p><p>

நாட்டில் தற்போதைய நிலவரப்படி உணவுப் பணவீக்கம் 11 வீதமாகவும், பொதுப்
பணவீக்கம் 7 வீதமாகவும் உயர்ந்துள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், நாட்டில்
மீண்டும் ஒரு பொருளாதாரப் பின்னடைவு மற்றும் இயற்கைப் பேரிடர்கள் ஏற்படும்
அபாயம் காணப்படுவதாகவும் எச்சரித்தார்.</p><p>

எல் நினோ காலநிலை மாற்றத்தால் நாட்டின் நெல் விவசாயத்திற்கு
ஏற்படவுள்ள பாதிப்புகளை எதிர்கொள்ள அரசாங்கம் வைத்துள்ள தீர்வுகள் என்ன
என்றும், நெல் கொள்முதலை அரசாங்கம் எவ்வாறு முன்னெடுக்கப் போகின்றது என்றும்
அவர் கேள்வி எழுப்பினார்.</p><h2>இலங்கையின் ஊடகத்துறை வீழ்ச்சி</h2><p>

மேலும், ஜனாதிபதியின் நெருங்கிய நண்பர் மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின்
(jVP) தீவிர செயற்பாட்டாளர் என்ற ஒரே காரணத்திற்காக, கணேசன் என்பவர்
சென்னையின் துணை உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டிய
அவர், தகுதியான பல நபர்கள் இருக்கும் நிலையில் இந்த நியமனத்தை மாற்றுமாறும்
கோரிக்கை விடுத்தார்.</p><p>இலங்கையின் ஊடகத்துறை வீழ்ச்சியடைந்து வருவது குறித்தும் கவலை வெளியிட்ட அவர்,
மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதில் அரசாங்கம் தொடர்ந்தும் தாமதம் காட்டுவது
ஏன் என வினவினார்.</p><p>
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி என்ற ரீதியிலேயே தாம் இணைந்த எதிரணியில்
அமர்வதாகவும், தனிப்பட்ட சிலரின் கருத்துக்களுடன் தமக்கு உடன்பாடில்லை எனவும்
குறிப்பிட்ட அவர், முன்னாள் தலைமை நீதியரசர் சிராணி பண்டாரநாயக்கவைப்
பதவியிலிருந்து நீக்கப் பாடுபட்ட வழக்கறிஞர்கள் சிலர் அங்கு இருப்பதாகவும்,
அத்தகைய செயற்பாடுகளுடன் தம்மால் ஒருபோதும் உடன்பட முடியாது எனவும் சுரேன்
ராகவன் மேலும் தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-25T08:12:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அனுராதபுரம் சிறுமி துஸ்பிரயோகம்; தேரருக்கு எதிரான வழக்கில் திருப்பம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/forensic-report-hemarathana-thero-anuradhapura-1787638425"></link>
            <id>https://jvpnews.com/article/forensic-report-hemarathana-thero-anuradhapura-1787638425</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;அனுராதபுரம் சிறுமி துஸ்பிரயோகம் தொடர்பாக , பல்லேகம ஹேமரத்தன தேரருக்கு எதிரான வழக்கில் சான்றாகக் கைப்பற்றப்பட்ட படுக்கை விரிப்பில், சந்தேக...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;அனுராதபுரம் சிறுமி துஸ்பிரயோகம் தொடர்பாக , பல்லேகம ஹேமரத்தன தேரருக்கு எதிரான வழக்கில் சான்றாகக் கைப்பற்றப்பட்ட படுக்கை விரிப்பில், சந்தேகநபரினது விந்து காணப்பட்டதாக அரசாங்கப் பகுப்பாய்வாளர் அனுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில் அறிக்கை அளித்துள்ளார். </p><p>

இருப்பினும், பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்ட முடி இழைகள், சந்தேகநபரால் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டதாகக் கூறப்படும் சிறுமியினதோ அல்லது வேறொரு பெண்ணினதோ அல்ல என்று அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/347b779d-99d8-46e5-b363-bc94a2e1c44e/26-6a8d329ac3de5.webp' /></p><h2>விரிப்பில் இரத்தக் கறைகள் எதுவும் காணப்படவில்லை</h2><p> 

அந்த விரிப்பில் இரத்தக் கறைகள் எதுவும் காணப்படவில்லை என்றும் அரசாங்கப் பகுப்பாய்வாளர் மேலும் தெரிவித்துள்ளார்.</p><p>

தன்னை வன்புணர்வு செய்த தேரர், தனது படுக்கையின் அடிவாரத்தில் இருந்த ஒரு விரிப்பைக் கொண்டு விந்தைத் துடைத்ததாக பாதிக்கப்பட்ட பெண் காவல்துறையினரிடம் தெரிவித்திருந்தார்.</p><p></p><p> </p><p>வழக்கு எண் B22424/2026-இன் கீழ் அரசாங்கப் பகுப்பாய்வாளரின் அறிக்கை நீதிமன்றப் பதிவேட்டில் இணைக்கப்பட்டது. </p><p>இந்த அறிக்கையின் நகல் சட்டமா அதிபருக்கும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

தன்னை வன்புணர்வு செய்த தேரர், தரையில் சிந்திய விந்தை படுக்கையின் அடிவாரத்தில் இருந்த விரிப்பைக் கொண்டு துடைத்ததாக பாதிக்கப்பட்ட பெண் நிட்டம்புவ காவல்துறையினரிடம் தெரிவித்திருந்ததால், விசாரணையின் போது காவல்துறையினரால் அந்த விரிப்பு கைப்பற்றப்பட்டு அரசாங்கப் பகுப்பாய்வாளரின் ஆய்வுக்கு அனுப்பப்பட்டிருந்தது.</p><p></p><p>
</p><p>
 தேரரின் அறை, படுக்கை மற்றும் அந்த விரிப்பு உள்ளிட்ட அறையில் இருந்த பொருட்களை பாதிக்கப்பட்ட பெண் அடையாளம் காட்டியிருந்தார்.
</p><p>
அனுராதபுரம் காவல்துறையின் உதவியுடன், கம்பஹா பிரிவு பெண்கள் மற்றும் சிறுவர் விவகாரப் பிரிவின் பொறுப்பதிகாரி (OIC) காவல் ஆய்வாளர் (IP) வினிசியா பிரேமரத்ன மற்றும் காவல் ஆய்வாளர் (IP) வசுந்தரா குணரத்ன ஆகியோர் அடங்கிய காவல்துறை குழுவினர் சம்பவ இடத்தில் விசாரணைகளை மேற்கொண்டனர்.</p><p></p><p>
</p><p>
சட்டமா அதிபரின் ஆலோசனைக்காகக் காத்திருக்கும் நிலையில், இவ்வழக்கு அனுராதபுரம் நீதவான் பசிந்து விக்ரமரத்னவால் 2027 ஜனவரி 8-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-25T08:10:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[விஜய்–சங்கீதா 27வது திருமண நாள்: ரசிகர்களின் ஒரே ஆசை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/cm-vijay-sangeetha-wedding-27-th-anniversary-1787639409"></link>
            <id>https://manithan.com/article/cm-vijay-sangeetha-wedding-27-th-anniversary-1787639409</id>
            <summary type="text">vijay -sangeetha wedding-anniversary : முதல்வர் விஜய் மற்றும் சங்கீதாவின் 27வது திருமண நாள் இன்று. இதையொட்டி தளபதி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் இருவருக...</summary>
            <content type="html"><![CDATA[<p>vijay -sangeetha wedding-anniversary : முதல்வர் விஜய் மற்றும் சங்கீதாவின் 27வது திருமண நாள் இன்று. இதையொட்டி தளபதி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் இருவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருவதுடன், “அண்ணனையும் அண்ணியையும் மீண்டும் ஜோடியாக பார்க்க வேண்டும்” என்ற தங்களது ஆசையையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.</p><p>

விஜய்–சங்கீதா திருமண நாளில் இருவரும் ஒன்றாக இருக்கும் ஒரு புகைப்படம் வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7c5f87a4-75ac-421b-a333-34acba459b3c/26-6a8d3c1edbd64.webp' /></p><p></p><h2>ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பு&nbsp;</h2><p> </p><p>நேற்றிலிருந்தே கொண்டாட்ட மனநிலையில் இருக்கும் சில ரசிகர்கள், விஜய் பிறந்தநாளையொட்டி த்ரிஷா பகிர்ந்த கேக் புகைப்படத்தை எடிட் செய்து, அதில் சங்கீதா இருப்பது போன்ற படங்களைப் பகிர்ந்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.</p><p> “எடிட் புகைப்படமாக இருந்தாலும், சங்கீதா அண்ணியை இப்படி மகிழ்ச்சியாக பார்க்கும்போது மனதுக்கு நிம்மதியாக இருக்கிறது” என ரசிகர்கள் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டு வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/40fbeb04-12be-498f-b2fa-15aa007de38b/26-6a8d3c1f8d9e6.webp' /></p><p>
</p><p>
விஜய் அரசியலில் தீவிரமாக ஈடுபடத் தொடங்கிய பிறகு, அவரை சங்கீதாவுடன் இணைந்து பார்க்க முடியாதது தங்களின் மிகப்பெரிய குறையாக இருப்பதாக ரசிகர்கள் கூறுகின்றனர்.</p><p>குறிப்பாக,&nbsp; விஜய் -சங்கீதா விவாகரத்து வழக்கு வாபஸ் பெறப்பட்டது குறித்து வெளியான தகவலுக்குப் பிறகு, இந்த திருமண நாளில் விஜய்யும் சங்கீதாவும் ஒன்றாக வெளியே வந்தால் அது தங்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியாக இருக்கும் என விஜய் ரசிகர்களும், தவெக தொண்டர்களும் மிகுந்த எதிர்ப்பார்ப்பில் உள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/04e7e0df-981f-4f66-95a8-b1b7093edf8d/26-6a8d3c203e5be.webp' /></p><h2>மகன் ஜேசன் சஞ்சய் படம் ரிலீஸ்</h2><p>இதற்கிடையே, விஜய்–சங்கீதா தம்பதியின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார். அவர் இயக்கிய ‘சிக்மா’ திரைப்படம் ஜூலை 31ஆம் தேதி வெளியாக இருந்த நிலையில், விஜய்யின் ‘ஜனநாயகன்’ பட வெளியீட்டை கருத்தில் கொண்டு அக்டோபர் 2ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3c6f5dc8-08c5-461a-9d39-6e1e51924c69/26-6a8d3c20e9809.webp' /></p><p></p><p> </p><p>பேட்டிகளில் தனது அப்பா, அம்மா குறித்து பெருமையாக பேசும் ஜேசன், அதே நேரத்தில் தனது தங்கை திவ்யா சாஷாவுடன்தான் மிகவும் நெருக்கமாகவும், பல விஷயங்களையும் அவருடன் பகிர்ந்து கொள்வதாகவும் கூறியிருப்பது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
</p><p>இந்நிலையில்,&nbsp; விஜய் - சங்கீதாவின் 27வது திருமண நாளான இன்று, பல்வேறு பேச்சுகளுக்கு மத்தியில் விஜய்–சங்கீதா இருவரும் மீண்டும் ஒன்றாக இருக்கும் ஒரு தருணத்தை பார்க்க வேண்டும் என்பதே தளபதி ரசிகர்களின் மிகப்பெரிய ஆசையாக மாறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW&nbsp;</a></u></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-25T08:09:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[Gold Rate Today: அதிரடியாக குறைந்த தங்க விலை! சவரன் எவ்வளவு?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/august-25th-gold-and-silver-price-in-chennai-1787644451"></link>
            <id>https://manithan.com/article/august-25th-gold-and-silver-price-in-chennai-1787644451</id>
            <summary type="text">ஆகஸ்ட் மாத தொடக்கம் முதலே தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வருகிறது. சர்வதேச சந்தை நிலவரம், முதலீட்டாளர்களின் எதிர்பார்ப்புகள் உள்ளிட...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஆகஸ்ட் மாத தொடக்கம் முதலே தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வருகிறது. சர்வதேச சந்தை நிலவரம், முதலீட்டாளர்களின் எதிர்பார்ப்புகள் உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் தங்கத்தின் விலையில் அவ்வப்போது மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன.</p><p>

அந்த வகையில், நேற்று (ஆகஸ்ட் 24) 22 காரட் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.80 அதிகரித்து ரூ.15,030 ஆகவும், ஒரு சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ.1,20,240 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6f7a09c3-f97c-4ad4-82cf-fd12a17f6263/26-6a8d4d5061d2d.webp' /></p><p></p><h2>இன்றைய நிவலரம்&nbsp;</h2><p>

இந்நிலையில், இன்று (ஆகஸ்ட் 25) தங்கம் விலையில் சிறிய அளவில் சரிவு ஏற்பட்டுள்ளது. அதன்படி, 22 காரட் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.20 குறைந்து ரூ.15,010 ஆகவும், ஒரு சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.1,20,080 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/88b70276-0efd-438e-b015-e1d0f2d17ce1/26-6a8d4d511f355.webp' /></p><p> </p><p>தொடர்ச்சியாக விலை உயர்வை எதிர்பார்த்து வந்த நகை வாங்குவோருக்கு இந்த சிறிய விலை குறைவு சற்று ஆறுதலை அளித்துள்ளது.
</p><p>
இதேபோல், 18 காரட் தங்கத்தின் விலையும் இன்று குறைந்துள்ளது.ஒரு கிராமுக்கு ரூ.20 குறைந்து ரூ.12,780 ஆகவும், ஒரு சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.1,02,240 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a42cd326-b50f-4f5f-8850-94bfdf4291b1/26-6a8d4d51d251f.webp' /></p><p></p><p>
</p><p>
தங்கத்தைத் தொடர்ந்து வெள்ளியின் விலையிலும் இன்று சரிவு பதிவாகியுள்ளது. ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.10 குறைந்து ரூ.265 ஆக உள்ளது.அதேபோல், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,65,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.&nbsp;</p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW&nbsp;</a></u></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-25T08:08:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பேருந்து நிலையத்தில் வெற்றிலை துப்பினால் ...புறக்கோட்டையில் 1,029 பேருக்கு நடந்த தரமான சம்பவம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/spitting-betel-pettah-bus-stand-punishment-1787645465"></link>
            <id>https://jvpnews.com/article/spitting-betel-pettah-bus-stand-punishment-1787645465</id>
            <summary type="text">&amp;nbsp; கொழும்பு புறக்கோட்டை பேருந்து நிலையத்தில் வெற்றிலை துப்புதல் மற்றும் சிறுநீர் கழித்தல் உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்ட 1,029 பேர் அடையாளம் காணப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; கொழும்பு புறக்கோட்டை பேருந்து நிலையத்தில் வெற்றிலை துப்புதல் மற்றும் சிறுநீர் கழித்தல் உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்ட 1,029 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இலங்கை வான்படையின் ஊடகப் பேச்சாளர் குரூப் கெப்டன் நலின் வேவக்கும்புர தெரிவித்துள்ளார்.
</p><p>
இது தொடர்பில் வினவியபோது, அடையாளம் காணப்பட்டவர்கள் அந்த இடங்களை சுத்தம் செய்யும் சமூக சேவைகளில் ஈடுபடுத்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a2717547-9423-4e67-9e25-3af6e72550bc/26-6a8d4e1ad6148.webp' /></p><p>
</p><p>
வெற்றிலை துப்புதல் மற்றும் சிறுநீர் கழித்தல் போன்ற செயல்களில் சில பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களும் ஈடுபட்டுள்ளமை தெரியவந்துள்ளது.</p><p>

பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், இலங்கை வான்படையினரால் புறக்கோட்டை பேருந்து நிலையத்தில் புதிய சிசிடிவி (CCTV) கண்காணிப்பு கட்டுப்பாட்டு அறை ஒன்றை நிறுவ நடவடிக்கை எடுக்கப்பட்டது.</p><p>

இதன் காரணமாகவே இவ்வாறான குற்றங்களில் ஈடுபடுபவர்களை எளிதில் அடையாளம் காண முடிந்துள்ளதாக வான்படை ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.</p>]]></content>
            <updated>2026-08-25T08:08:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நல்லூரில் அதிக விலைக்கு குடிநீர் போத்தல் விற்றவருக்கு சுமார் 9 இலட்சம் அபராதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/bottled-water-at-an-exorbitant-price-in-nallur-1787643265"></link>
            <id>https://tamilwin.com/article/bottled-water-at-an-exorbitant-price-in-nallur-1787643265</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் - நல்லூர் பகுதியில் உள்ள பிரபல சைவ உணவகத்தில் தண்ணீர் போத்தலை
அதிக விலைக்கு விற்ற குற்றத்திற்காக 9 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் தண்டம்
வித...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் - நல்லூர் பகுதியில் உள்ள பிரபல சைவ உணவகத்தில் தண்ணீர் போத்தலை
அதிக விலைக்கு விற்ற குற்றத்திற்காக 9 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் தண்டம்
விதிக்கப்பட்டுள்ளது.
</p><p>
குறித்த உணவகத்தில் அதிகூடிய விலைக்கு குடிநீர் போத்தல் விற்பனை
செய்யப்படுவதாக யாழ். மாவட்ட பாவனையாளர் அதிகார சபையினருக்கு கிடைக்கப் பெற்ற
தகவலுக்கு அமைய, மேற்கொள்ளப்பட்ட சோதனையில் விலை அதிகமாக விற்பனை
செய்யப்பட்டமை உறுதிப்படுத்தப்பட்டது.</p><h2>தண்டப்பணம் விதிப்பு</h2><p>

அதனை அடுத்து குறித்த உணவகத்திற்கு எதிராக, யாழ்ப்பாணம் மேலதிக நீதவான்
நீதிமன்றில் தொடரப்பட்ட வழக்கில், இன்றைய தினம் (25.08.2026) நடைபெற்ற
வழக்கு விசாரணையின் போது உணவாக உரிமையாளருக்கு 09 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய்
தண்டம் விதித்த மன்று , தண்ட பணத்தினை செலுத்த தவறின் 06 மாத கால சிறைத்தண்டனை
அனுபவிக்க வேண்டுமென கட்டளையிட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b670c766-7909-4c6b-8136-2d4e88bc3145/26-6a8d4cdb7bf09.webp' /></p><p>
</p><p>
இதேவேளை குறித்த உணவகத்தில் முன்னரும் அதிக்கூடிய விலைக்கு குடிநீர் விற்ற
குற்றத்திற்காக மன்றினால் தண்டம் அறவிடப்பட்ட நிலையில், மீண்டும் அதே
குற்றத்தை புரிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-25T08:06:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Fathima</name>
            </author>
            <title type="text"><![CDATA[3400 முத்தங்களுடன் வலம் வந்த கார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/girlfriends-plants-3400-kisses-on-boyfriend-car-1787645058"></link>
            <id>https://ibctamilnadu.com/article/girlfriends-plants-3400-kisses-on-boyfriend-car-1787645058</id>
            <summary type="text">Girlfriends Plants 3400 Kisses on Boyfriend Car: இந்தியாவில் காதலனின் காருக்கு காதலி கொடுத்த உதட்டு முத்தத்தால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மத்திய...</summary>
            <content type="html"><![CDATA[<p>Girlfriends Plants 3400 Kisses on Boyfriend Car: இந்தியாவில் காதலனின் காருக்கு காதலி கொடுத்த உதட்டு முத்தத்தால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
</p><p>
மத்திய பிரதேசத்தின் குவாலியர் நகரில் முத்தங்கள் பதித்த கார் ஒன்று வலம் வருவதாக சமூகஊடகங்களில் வீடியோ வைரலானது.
</p><p>
குறித்த காரில் சுமார் 3400 முத்தங்கள் இருந்துள்ளன, இதுகுறித்து விசாரணை நடத்த காரின் உரிமையாளரான ஆதித்யா சிகர்வாரை போலிசார் அழைத்து சென்றனர்.</p><p>
</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/852490ae-be5e-4db8-90bb-08d8d429edae/26-6a8d4ce3e1066.webp' /><br></p><p>தன்னுடைய காதலி சுமார் 3.5 மணிநேரம் செலவழித்து காரில் 3400 முத்தங்களை இட்டதாகவும், அதை வீடியோவாக எடுத்து வெளியிட்டதாகவும் தெரிவித்தார்.
</p><p>
மேலும் சட்டப்படி குற்றம் என்பது தனக்கு தெரியாது எனவும் தெரிவித்தார்.
</p><p>
இதனைதொடர்ந்து அவருக்கு 5500 ரூபாய் அபராதம் விதித்த போலிசார், முத்தங்களை அழிக்க உத்தரவிட்டனர்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/974ba034-26d3-4bb6-81c9-b2ce2bab700e/26-6a8d4ce49267d.webp' />&nbsp;<br></p>]]></content>
            <updated>2026-08-25T08:06:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[கோட்டாபயவின் முன்னாள் செயலாளருக்கு எதிராக நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sugeeshwara-bandara-further-remanded-1787644292"></link>
            <id>https://tamilwin.com/article/sugeeshwara-bandara-further-remanded-1787644292</id>
            <summary type="text">முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் முன்னாள் தனிப்பட்ட செயலாளர் சுகீஸ்வர பண்டார, செப்டெம்பர் 09 வரை மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கொ...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் முன்னாள் தனிப்பட்ட செயலாளர் சுகீஸ்வர பண்டார, செப்டெம்பர் 09 வரை மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
</p><p>
கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (25.08.2026) சுகீஸ்வர பண்டாராவின் பிணை மனுவை நிராகரித்து, அவரை மேலும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளது.</p><h2>அரசு நிறுவனங்களிடமிருந்து சம்பளம் பெற்றதாக&nbsp;</h2><p> 

அரச சம்பளங்களில் நடந்ததாகக் கூறப்படும் முறைகேடுகள் குறித்த தொடர் விசாரணையின் தொடர்பில், சுகீஸ்வர பண்டாரா ஜூன் 18 அன்று மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் (CCIB) கைது செய்யப்பட்டார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d73f6dcb-f541-42f4-8c53-8487c2c24736/26-6a8d4c10e54f5.webp' /></p><p>
அவர் ஒரே நேரத்தில் இரண்டு வெவ்வேறு அரசு நிறுவனங்களிடமிருந்து சம்பளம் பெற்றதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-25T08:03:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[மத்திய கிழக்கு மோதலில் முன்னேற்றம் கண்ட பேச்சுவார்த்தை! இலக்கில் இருந்து விலகும் ஹோர்மூஸ்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/pakistan-and-iran-made-in-talks-on-conflict-1787641347"></link>
            <id>https://ibctamil.com/article/pakistan-and-iran-made-in-talks-on-conflict-1787641347</id>
            <summary type="text">ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேலியப் போர் மற்றும் அமைதிக்கான வழி ஆகியவற்றில் கவனம் செலுத்திய பேச்சுவார்த்தைகளில் பாகிஸ்தானும் ஈரானும் குறிப்பிடத்தக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேலியப் போர் மற்றும் அமைதிக்கான வழி ஆகியவற்றில் கவனம் செலுத்திய பேச்சுவார்த்தைகளில் பாகிஸ்தானும் ஈரானும் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளதாக பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் மொஹ்சின் நக்வி தெரிவித்துள்ளார்.</p><p>தெஹ்ரான் பயணத்தின் முடிவில் பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் செவ்வாய்க்கிழமை இந்த விடயத்தை தெரிவித்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p>மேலும் பதற்றம் அதிகரிப்பதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள், ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பது மற்றும் மோதலை விரைவாக முடிவுக்குக் கொண்டுவருவது ஆகியவற்றில் இரு தரப்புப் பேச்சுவார்த்தைகளும் கவனம் செலுத்தியதாக, பாகிஸ்தான் இராணுவத் தளபதி ஆசிம் முனீர் மற்றும் ஈரானியத் ஜனாதிபதிக்கும் இடையேயான சந்திப்பு குறித்து பாகிஸ்தான் இராணுவம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">உள்துறை அமைச்சரின் பதிவு</span></p><p>
பிராந்திய அமைதி மற்றும் இந்த சர்ச்சைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதற்கான வழி குறித்தும் இரு தரப்பினரும் கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டதாக அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Field Marshal Syed Asim Munir and I had a very positive and productive meeting with the President of Iran. Our discussion focused on the Iran US conflict, tensions in the Middle East and the way forward, as well as the steps needed by both sides for restoration of the Islamabad… <a href="https://t.co/jt1wtlESCa">https://t.co/jt1wtlESCa</a></p>&mdash; Mohsin Naqvi (@MohsinnaqviC42) <a href="https://x.com/MohsinnaqviC42/status/2092023991242494217?ref_src=twsrc%5Etfw">August 24, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>ஈரானிய ஜனாதிபதி தனது அரசாங்கத்தின் கண்ணோட்டத்தை வெளிப்படையாகப் பகிர்ந்து கொண்டதுடன் மேலும் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் குறித்து நாங்கள் மிகவும் ஆக்கப்பூர்வமான கருத்துப் பரிமாற்றத்தை மேற்கொண்டோம்," என்று முனிருடன் தெஹ்ரானுக்குச் சென்ற உள்துறை அமைச்சர் தனது எக்ஸ்&nbsp; (X) தளத்தில் பதிவிட்டுள்ளார்.</p><p>

அலுவலக நேரத்திற்கு வெளியே கருத்து தெரிவிக்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு வெள்ளை மாளிகையும், அமெரிக்க வெளியுறவுத் துறையும் உடனடியாகப் பதிலளிக்கவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><p>
முனீர் தனது தெஹ்ரான் பயணத்திற்கு முன்னதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடன் பேசினார் என்று ரொய்ட்டர்ஸ் திங்களன்று செய்தி வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-25T08:03:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Fathima</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர்கள் சுட்டுக்கொலை: பிரேதபரிசோதனையில் அதிர்ச்சி தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/three-tamils-were-shot-at-from-very-close-range-1787636061"></link>
            <id>https://ibctamilnadu.com/article/three-tamils-were-shot-at-from-very-close-range-1787636061</id>
            <summary type="text">கர்நாடகாவின் சாம்ராஜ்நகரில் மூன்று தமிழர்கள் துப்பாக்கியால் சுடப்பட்ட சம்பவம் திட்டமிட்ட கொலை என குற்றம்சாட்டப்பட்ட நிலையில் பிரேத பரிசோதனையில் அதிர்ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>கர்நாடகாவின் சாம்ராஜ்நகரில் மூன்று தமிழர்கள் துப்பாக்கியால் சுடப்பட்ட சம்பவம் திட்டமிட்ட கொலை என குற்றம்சாட்டப்பட்ட நிலையில் பிரேத பரிசோதனையில் அதிர்ச்சிகர தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><h2>தமிழர்கள் சுட்டுக்கொலை</h2><p>
</p><p>
கர்நாடகாவின் சாம்ராஜ்நகர் காவேரி வனப்பகுதிக்கு உட்பட்ட சாக்கியா வனப்பகுதியில் கடந்த 15ம் தேதி வனத்துறையினரால் மூன்று தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.</p><p>

அந்தோணிசாமி, ஜான் ரோஸ் பீட்டர் மற்றும் செபஸ்டின் டேவிட் குமார் ஆகிய மூன்று பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
</p><p>
இதுதொடர்பில் சாம்ராஜ்நகர் மாவட்ட உதவி கலெக்டர் தினேஷ் குமார் மீனா தலைமையிலான அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dc83a79b-b4ad-4c16-a55e-0de3aa4951de/26-6a8d29c0de6b1.webp' /><br></p><h2>பிரேதபரிசோதனை அறிக்கை</h2><p>
</p><p>
சமீபத்தில் வெளியான பிரேத பரிசோதனை அறிக்கையில், மூவரின் உடலில் இருந்த துப்பாக்கி குண்டுகள் மிக அருகில் இருந்து சுடப்பட்டவை என்றும், உடலில் உள்காயங்கள் இருந்ததாகவும் தெரியவந்துள்ளது.
</p><p>
மேலும் மூன்று பேரின் உடல்களிலும் 8.5 செ.மீ அகலத்தில், 6 செ.மீ ஆழத்துக்கு காயங்கள் இருந்தது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.<br></p>]]></content>
            <updated>2026-08-25T08:00:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[விலங்கு மாட்டி கைது செய்யப்பட்ட இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் அணியில் இருந்து நீக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/brydon-carse-removed-england-squad-after-hand-cup-1787644362"></link>
            <id>https://news.lankasri.com/article/brydon-carse-removed-england-squad-after-hand-cup-1787644362</id>
            <summary type="text">brydon carse removed from england squad after hand cupped issue: விலங்கு மாட்டி கைது செய்யப்பட்ட இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் பிரைடன் கார்ஸ் டெஸ்ட் அண...</summary>
            <content type="html"><![CDATA[<p>brydon carse removed from england squad after hand cupped issue: விலங்கு மாட்டி கைது செய்யப்பட்ட இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் பிரைடன் கார்ஸ் டெஸ்ட் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். </p><h3>

கைது செய்யப்பட்ட பிரைடன் கார்ஸ்</h3><p>

இங்கிலாந்து சென்றுள்ள பாகிஸ்தான் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. </p><p>

கவுண்டி கிரிக்கெட் விளையாடுவதற்காக முதல் டெஸ்ட் போட்டியில் இடம் பெறாத இங்கிலாந்து வீரர் பிரைடன் கார்ஸ்(brydon carse) 2வது டெஸ்ட் போட்டிக்கான அணியில் இடம் பெற்றிருந்தார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/00dd40a9-96ad-4997-bee9-210e550f9cc2/26-6a8d49cbe386c.webp' /></p><p>
கடந்த வாரம் கவுண்டி சாம்பியன்ஷிப் போட்டியில் டெர்பிஷயருக்கு எதிராக டர்ஹாம் அணி 338 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. </p><p>

இந்த வெற்றியை கொண்டாட ஆகஸ்ட் 22 ஆம் திகதி இரவு டெர்பி நகரில் உள்ள 'மோலி மலோனின் ஐரிஷ் டேவர்ன்' என்ற பிரபல நைட் கிளப்பிற்கு சக வீரர்கள் பெண் ஸ்டோக்ஸ், மேத்யூ பாட்ஸ் ஆகியோருடன் பிரைடன் கார்ஸ் சென்றுள்ளார்.</p><p> 

அங்கு மதுபோதையில் ஒழுங்கீன செயலில் ஈடுபட்டதாக கூறி பிரைடன் கார்ஸ் காவல்துறையால் விலங்கு மாட்டி கைது செய்யப்பட்டுள்ளார். 

அதன் பின்னர் அங்கிருந்து வெளியேற அவர் ஒப்புக்கொண்டதை அடுத்து, சிறிது நேரத்திலேயே கைது நடவடிக்கையிலிருந்து விடுவிக்கப்பட்டார்.&nbsp;</p><p><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr">Durham bowler Brydon Carse, who is in England squad for second Test, was released without charge after a nightclub incident while celebrating victory over Derbyshire<a href="https://x.com/willis_macp?ref_src=twsrc%5Etfw">@willis_macp</a> has the details ⤵️<a href="https://t.co/4YXyQWChe5">https://t.co/4YXyQWChe5</a> <a href="https://t.co/zFKA3lgPVi">pic.twitter.com/zFKA3lgPVi</a></p>&mdash; Telegraph Cricket (@TeleCricket) <a href="https://x.com/TeleCricket/status/2091535700709515768?ref_src=twsrc%5Etfw">August 23, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>
அவர் கைது செய்யப்படும் போது பெண் ஸ்டோக்ஸ், மேத்யூ பாட்ஸ் அருகிலுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. </p><h3>

அணியிலிருந்து நீக்கம்</h3><p> 

இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் (ECB) பரிந்துரையைத் தொடர்ந்து இந்த விவகாரம் குறித்து கிரிக்கெட் ஒழுங்குமுறை ஆணையம் விசாரிக்க உள்ளது.</p><p> 

விசாரணை முடிவடையும் வரை டெஸ்ட் போட்டியில் பிரைடன் கார்ஸ் இடம் பெற மாட்டார் என இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. </p><p>

பிரைடன் கார்ஸுக்கு பதிலாக சோனி பேக்கர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-25T07:52:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடா உயர்ஸ்தானிகருடன் ரவூப் ஹக்கீம் சந்திப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/rauff-hakeem-meets-high-commissioner-of-canada-1787643935"></link>
            <id>https://tamilwin.com/article/rauff-hakeem-meets-high-commissioner-of-canada-1787643935</id>
            <summary type="text">ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப்
ஹக்கீம், இலங்கைக்கான கனடா உயர்ஸ்தானிகர் இசபெல் மார்ட்டினை சந்தித்து கலந்துரையாடி...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப்
ஹக்கீம், இலங்கைக்கான கனடா உயர்ஸ்தானிகர் இசபெல் மார்ட்டினை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.</p><p>இந்த சந்திப்பு&nbsp;கண்டி அமாயா ஹில்ஸ் ஹோட்டலில் நேற்று (25) இடம்பெற்றுள்ளது.</p><p>இந்த சந்திப்பின் போது, நாட்டின் சமகால அரசியல் நிலைவரங்கள் மற்றும் இரு
தரப்பு உறவுகள் தொடர்பில் இருவரும் சிநேகபூர்வமாக கருத்துக்களை பகிர்ந்து
கொண்டுள்ளனர்.</p><p></p><p></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-25T07:45:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[முதலமைச்சராக விஜய் கிடைத்தது தமிழக மக்களின் அதிர்ஷ்டம் ; நடிகர் யாஷ்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/actor-yash-highly-praised-tamil-nadu-cm-vijay-1787643917"></link>
            <id>https://jvpnews.com/article/actor-yash-highly-praised-tamil-nadu-cm-vijay-1787643917</id>
            <summary type="text">&amp;nbsp; முதலமைச்சர் விஜய் எல்லோரையும் கவரக்கூடிய மனிதர். தமிழக மக்கள் ரொம்ப அதிர்ஷ்டசாலிகள் என பிரபல நடிகர் யாஷ் கூறியுள்ளமை விஜய் ரசிகர்களுக்கு மகிழ்ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; முதலமைச்சர் விஜய் எல்லோரையும் கவரக்கூடிய மனிதர். தமிழக மக்கள் ரொம்ப அதிர்ஷ்டசாலிகள் என பிரபல நடிகர் யாஷ் கூறியுள்ளமை விஜய் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . </p><p>

டாக்ஸிக் படத்தின் முன்னோட்ட விழாவில் பீசிய நடிகர் யாஷ், 

முதலமைச்சர் விஜய் மீது உள்ள பாசத்தை தேர்தல் மூலம் நிரூபித்திருக்கிறார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d0b30cb0-afe6-4eb2-97eb-1106e64463d8/26-6a8d480f9d2e8.webp' /></p><p> </p><h2> முதலமைச்சர் விஜய்யின் பொறுப்புணர்ச்சி&nbsp; வியப்பாக இருக்கிறது</h2><p>அவரும் மக்கள் மீது உள்ள பாசத்தை முதலமைச்சராக அவர் செய்யும் கடமைகள் மூலம் மக்களுக்கு தெரியப்படுத்தி வருகிறார். முதலமைச்சர் விஜய்யின் பொறுப்புணர்ச்சியை பார்க்கும் போது நமக்கே வியப்பாக இருக்கிறது. </p><p>

மக்களுக்கான பணியினை நல்ல முறையில் செய்து கொண்டிருக்கிறார். தயாரிப்பாளர் வெங்கட் நாராயணன் முதலமைச்சர் விஜய் காலை முதல் இரவு வரை மக்களுக்காக பணியாற்றிக் கொண்டிருக்கிறார் என அடிக்கடி சொல்வார். </p><p></p><p>

இதன் மூலம் என்ன தெரிகிறது என்றால் விஜய் மீது மக்கள் வைத்திருந்த அன்பை நாம் திருப்பி கொடுக்க வேண்டும். விஜய்க்கு அதற்கான நேரம் இப்போது வந்துள்ளது. விஜய் முதலமைச்சராக கிடைத்ததற்கு நாம் ரொம்ப அதிர்ஷ்டசாலி. </p><p>எப்பவும் உள்ள அரசியல் இல்லாமல் புதுவிதமான அரசியல் இப்போது நடந்து கொண்டிருக்கிறது. அதைப் பார்க்கும் போது நமக்கு ரொம்ப மகிழ்ச்சி வருகிறது. 

எல்லோருக்குமே தெரியும் இந்த தேர்தல் வெளிப்படையான தேர்தலாக நடந்தது.</p><p></p><p> </p><p>

தமிழக தேர்தல் முடிவுகளை பார்க்கும் போது மக்கள் முதலமைச்சர் விஜய்க்கு எவ்வளவு பெரிய பொறுப்பை கொடுத்துள்ளனர் என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.</p><p> விஜய்க்கும் அதற்குரிய அனைத்து தகுதியும் இருக்கிறது. இந்த அரசியலை பார்த்து உலக அரசியலும் மாற வேண்டும். தமிழக மக்கள் சரியான முடிவை எடுத்துள்ளனர் என்றும் நடிகர் யாஷ் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.</p>]]></content>
            <updated>2026-08-25T07:42:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[காவல் அதிகாரியை அறைந்த எம்.எல்.ஏ மகள் - திருப்பி அறைந்த பெண் போலீஸ்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/karnataka-bjp-mla-daughter-slapped-cop-at-temple-1787641491"></link>
            <id>https://news.lankasri.com/article/karnataka-bjp-mla-daughter-slapped-cop-at-temple-1787641491</id>
            <summary type="text">karnataka bjp mla daughter slapped cop at temple: கோவிலில் வைத்து காவல் அதிகாரியை எம்.எல்.ஏ மகள் அறைந்த நிலையில், அவரை திருப்பி பெண் பெண் போலீஸ் அறைந்...</summary>
            <content type="html"><![CDATA[<p>karnataka bjp mla daughter slapped cop at temple: கோவிலில் வைத்து காவல் அதிகாரியை எம்.எல்.ஏ மகள் அறைந்த நிலையில், அவரை திருப்பி பெண் பெண் போலீஸ் அறைந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
</p><h3>
காவல் அதிகாரியை அறைந்த எம்.எல்.ஏ மகள்
</h3><p>
கர்நாடக மாநிலம், தும்கூர் கிராமப்புற தொகுதியில் எம்.எல்.ஏ ஆக இருப்பவர் பாஜகவை சேர்ந்த பி.சுரேஷ் கௌடா.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b574e026-ef9d-4fe6-9a4a-6b58873ee22f/26-6a8d3e955abb3.webp' /></p><p> 

எம்.எல்.ஏ சுரேஷ் கௌடாவின் மகளான ஐஸ்வர்யா ஆகஸ்ட் 12 அன்று பீம அமாவாசையை முன்னிட்டு ஆர்த்தி உக்கடா கோவிலிலுக்கு தரிசனம் செய்ய வருகை தந்துள்ளார்.</p><p> 

அப்போது சிறப்பு தரிசனம் செய்வதில் அவருக்கும் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த உதவி ஆய்வாளர் சவிதா பி பாட்டிலுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><p> 

இந்த வாக்குவாதத்தின் போது, ஐஸ்வர்யா உதவி ஆய்வாளர் சவிதா பி பாட்டிலை அறைந்துள்ளார். பதிலுக்கு அவரும் ஐஸ்வர்யாவை அறைந்துள்ளார். உடனடியாக அங்கிருந்தவர்கள் அவர்களை சமாதானம் செய்துள்ளனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5103a38d-83c8-4564-aa61-8c7e6421dc96/26-6a8d3e960c8af.webp' /></p><p>
இது தொடர்பாக ஐஸ்வர்யா மீது உதவி ஆய்வாளர் சவிதா பி பாட்டில் அளித்துள்ள புகாரின் அடிப்படையில், ஒரு அரசு ஊழியரைத் தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதே போல், ஐஸ்வர்யாவும் உதவி ஆய்வாளர் சவிதா பி பாட்டில் மீது புகார் அளித்துள்ளார்.&nbsp;</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">😱The CCTV footage surfaces after 13 days! 👀<br><br>The footage appears to show an MLA’s daughter slapping Mandya PSI Savitha inside temple premises.<br><br> One message is clear: Respect the uniform. No one is above the law. 👮‍♀️🇮🇳 <a href="https://t.co/vsyBq0luup">pic.twitter.com/vsyBq0luup</a></p>&mdash; Sunanda Acharya (@Sunanda_Iam) <a href="https://x.com/Sunanda_Iam/status/2092023838620184887?ref_src=twsrc%5Etfw">August 24, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>

இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள எம்.எல்.ஏ சுரேஷ் கௌடா, "என் மகள் கோவிலுக்குச் சென்றிருந்தாள். அவள் கோவிலின் கருவறைக்குச் செல்ல அனுமதி கேட்டிருந்தாள். 

காவல்துறை அவளை உள்ளே அனுமதிக்க மறுத்தது, ஆனால் ஒரு வட்ட ஆய்வாளரை உள்ளே அனுமதித்தது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/49c2a804-ee39-4505-aa1f-8ade7b1cd52b/26-6a8d3e94ace45.webp' /></p><p>என் மகள் மீண்டும் தன்னை உள்ளே அனுமதிக்குமாறு அவர்களிடம் வேண்டினாள். 

அப்போது அந்த காவல்துறை அதிகாரி என் மகளைத் திட்டியதாகத் தெரிகிறது. </p><p>அதன் பிறகு சண்டை தொடங்கியது. என் மகள் அந்த அதிகாரியை அறைந்த காணொளியை நான் பார்க்கவில்லை. நான் மன்னிப்பு கேட்கிறேன், அதற்காக வருந்துகிறேன்" என தெரிவித்துள்ளார்.&nbsp; &nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-25T07:40:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[8 ஓட்டங்களில் அவுட்..ஆனால் பந்துவீசி 2 விக்கெட்டுகளை வீழ்த்திய வைபவ் சூர்யவன்ஷி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/vaibhav-sooryavanshi-took-2-wikts-in-duleep-trophy-1787643460"></link>
            <id>https://news.lankasri.com/article/vaibhav-sooryavanshi-took-2-wikts-in-duleep-trophy-1787643460</id>
            <summary type="text">Vaibhav Sooryavanshi took 2 wickets in duleep trophy: துலீப் டிராபி டெஸ்டில் வைபவ் சூர்யவன்ஷி ஈஸ்ட் ஸோன் அணிக்காக 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

து...</summary>
            <content type="html"><![CDATA[<p>Vaibhav Sooryavanshi took 2 wickets in duleep trophy: துலீப் டிராபி டெஸ்டில் வைபவ் சூர்யவன்ஷி ஈஸ்ட் ஸோன் அணிக்காக 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். </p><p>

துலீப் டிராபி டெஸ்டில் 8 ஓட்டங்களில் ஆட்டமிழந்த வைபவ் சூர்யவன்ஷி, பந்துவீசி இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். </p><h2>வைபவ் சூர்யவன்ஷி</h2><p>

பெங்களுருவில் நடந்து வரும் துலீப் டிராபி டெஸ்டில் ஈஸ்ட் ஸோன் அணி 467 ஓட்டங்கள் குவித்தது.&nbsp;</p><p><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr">Vaibhav Sooryavanshi is now taking wickets too! <a href="https://t.co/17IiOuZu9q">pic.twitter.com/17IiOuZu9q</a></p>&mdash; Cricbuzz (@cricbuzz) <a href="https://x.com/cricbuzz/status/2092139525623763440?ref_src=twsrc%5Etfw">August 25, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>
ஷாபாஸ் அகமது 167 ஓட்டங்களும், சுதிப் குமார் 146 ஓட்டங்களும், குமார் குஷாக்ரா 55 ஓட்டங்களும் எடுத்தனர். எதிர்பார்க்கப்பட்ட வைபவ் சூர்யவன்ஷி (Vaibhav Sooryavanshi) 8 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.&nbsp;</p><p></p><p> 

பின்னர் முதல் இன்னிங்ஸை ஆடிய நார்த் ஈஸ்ட் ஸோன் அணி 111 ஓட்டங்களுக்கு சுருண்டது. அதனால் ஃபாலோ-ஆன் ஆகி இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது.
</p><p>
துடுப்பாட்டத்தில் சொதப்பிய வைபவ் சூர்யவன்ஷி 3 ஓவர்கள் பந்துவீசி 2 விக்கெட்டுகளை வீழ்த்தி மிரட்டினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f5662c1b-b832-4119-87b9-fbce09f41b2c/26-6a8d47b204145.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p>

 </p>]]></content>
            <updated>2026-08-25T07:35:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[மலையக ரயில் பாதைக்கு மீண்டும் சிக்கல் ; சீரமைப்பு பணிகளில் தாமதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/trouble-again-for-the-upland-railway-line-delay-1787643088"></link>
            <id>https://jvpnews.com/article/trouble-again-for-the-upland-railway-line-delay-1787643088</id>
            <summary type="text">டித்வா புயலின்போது ஏற்பட்ட மண் சரிவு மற்றும் வெள்ளத்தால் சேதமடைந்த மலையக ரயில் பாதையின் புனரமைப்பு பணிகள், தற்போது நிலவும் சீரற்ற வானிலை காரணமாக தாமதம...</summary>
            <content type="html"><![CDATA[<p>டித்வா புயலின்போது ஏற்பட்ட மண் சரிவு மற்றும் வெள்ளத்தால் சேதமடைந்த மலையக ரயில் பாதையின் புனரமைப்பு பணிகள், தற்போது நிலவும் சீரற்ற வானிலை காரணமாக தாமதமடைந்துள்ளன.</p><p>
</p><p></p><p>ஹட்டன், கொட்டகலை, தலவாக்கலை, வட்டகொட, கிரேட் வெஸ்டன் மற்றும் நானுஓயா வரையிலான பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டு வரும் புனரமைப்பு பணிகள் தற்போது சுமார் 60 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக திட்டப் பொறுப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
</p><p>
கடந்த ஆண்டு டிசம்பர் 27ஆம் திகதி மத்திய மலைநாட்டில் ஏற்பட்ட தித்வா புயல் மற்றும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கு காரணமாக மலையக ரயில் பாதையின் பல பகுதிகள் சேதமடைந்தன.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b224df49-5b7e-4a2a-81a7-394fda879b02/26-6a8d44d1e0739.webp' /></p><p>இதனைத் தொடர்ந்து ஹட்டன் முதல் நானுஓயா வரையிலான பகுதிகளில் பல்வேறு புனரமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.</p><p>

கொட்டகலை மற்றும் தலவாக்கலை ரயில் நிலையங்களுக்கு இடையிலுள்ள கிரேக்லி தோட்டப் பகுதியில் ஏற்பட்ட பாரிய நிலச்சரிவு ஏற்பட்ட இடத்திலும், தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் ஜைக்கா நிறுவனத்தின் பரிந்துரைகளுக்கு அமைவாக புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
</p><p>
எனினும், நுவரெலியா மாவட்டத்தில் தொடர்ந்து நிலவும் மழையுடனான சீரற்ற வானிலை காரணமாக, கட்டுமானப் பணிகளுக்குத் தேவையான கற்கள் உள்ளிட்ட பொருட்களைப் பெற்றுக்கொள்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
</p><p>
இதன் காரணமாக பணிகளின் வேகம் குறைந்துள்ளதாகவும், இதுவரை திட்டத்தின் சுமார் 60 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
வானிலை சீரடைந்தால், கிரேக்லி தோட்டப் பகுதியில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவு பகுதியின் புனரமைப்பு பணிகளை எதிர்வரும் செப்டெம்பர் மாத இறுதிக்குள் நிறைவு செய்ய எதிர்பார்ப்பதாக திட்டத்தின் தொழில்நுட்ப அதிகாரி அதுல விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
</p><p>
மத்திய மலைநாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் ரயில் பாதையில் ஏற்பட்டுள்ள ஏனைய சேதங்களையும் சீரமைக்கும் பணிகள் சற்று மந்தமாக நடைபெற்று வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
எவ்வாறாயினும், காலநிலை சீரடைந்தவுடன் புனரமைப்பு பணிகளை விரைவுபடுத்தி, பதுளை முதல் நாவலப்பிட்டி வரையிலான ரயில் சேவைகளை மீண்டும் வழமைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என தொழில்நுட்ப அதிகாரி தெரிவித்துள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-25T07:31:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[கவர்ச்சி புயலாக மாறிய நடிகை ரைசா வில்சன் லேட்டஸ்ட் போட்டோஸ்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/actress-raiza-wilson-latest-glamour-photos-1787630528"></link>
            <id>https://viduppu.com/article/actress-raiza-wilson-latest-glamour-photos-1787630528</id>
            <summary type="text">ரைசா வில்சன்பிக்பாஸ் நிகழ்ச்சியில்&amp;nbsp; செய்த கியூட்டான விஷயங்கள் மூலம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர் தான் நடிகை ரைசா வில்சன்.கன்னட சினிமாவில் மாடலிங்...</summary>
            <content type="html"><![CDATA[<h2>ரைசா வில்சன்</h2><p>பிக்பாஸ் நிகழ்ச்சியில்&nbsp; செய்த கியூட்டான விஷயங்கள் மூலம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர் தான் நடிகை ரைசா வில்சன்.</p><p>கன்னட சினிமாவில் மாடலிங் துறையில் கலக்க ஆரம்பித்தவர் விஜய் டிவி பக்கம் வந்து பிக்பாஸில் கலந்துகொள்ள மிகவும் பிரபலமானார். அதன்பின் ஹரிஷ் கல்யாணுடன் பியார் பிரேமா காதல் படம் நடிக்க செம சூப்பர் டூப்பர் ஹிட்டானது.</p><p>அதன்பின் இவர் நடித்த படங்கள் பெரிய அளவில் வரவேற்பு பெறவில்லை. இந்த நிலையில் நடிகை ரைசா வில்சன் கடந்த சில மாதங்களாக ஒரே கவர்ச்சி புகைப்படங்களாக வெளியிட்டு வருகிறார்.</p><p>அண்மையில் அவர் வெளியிட்ட போட்டோ ஷுட் மிகவும் வைரலாகியுள்ளது.</p><p><br></p>]]></content>
            <updated>2026-08-25T07:30:25+00:00</updated>
        </entry>
    </feed>
