<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-07-29T10:47:58+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Kiyas Shafe</name>
            </author>
            <title type="text"><![CDATA[மூதூரில் மர்மமான முறையில் பெண் உயிரிழப்பு : பொலிஸார் தீவிர விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/woman-dies-mysteriously-mudur-police-investigation-1785321491"></link>
            <id>https://tamilwin.com/article/woman-dies-mysteriously-mudur-police-investigation-1785321491</id>
            <summary type="text">திருகோணமலை, மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பச்சநூர் பகுதியில் உள்ள
வீடொன்றில் 73 வயதுடைய பெண் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக மூதூர்
பொலிஸா...</summary>
            <content type="html"><![CDATA[<p>திருகோணமலை, மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பச்சநூர் பகுதியில் உள்ள
வீடொன்றில் 73 வயதுடைய பெண் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக மூதூர்
பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>

குறித்த வீடொன்றில் வயதான தம்பதியினர் இருவரும் தனியாக வசித்து வந்துள்ளனர்.
</p><p>இந்நிலையில்,நேற்றிரவு (28.07.2026) வீட்டுக்குள் நுழைய முயன்ற மர்ம நபர்கள் இருவர்
தங்களைத் தாக்கியதாக உயிரிழந்த பெண்ணின் கணவர் பொலிஸாரிடம் வாக்குமூலம்
அளித்துள்ளார்.</p><p></p><h2>மேலதிக விசாரணை</h2><p> இந்தத் தாக்குதலிலேயே தனது மனைவி உயிரிழந்ததாக அவர்
குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7918617b-aa2f-411b-be42-2fdd9ea64e5e/26-6a69da0485fb5.webp' /></p><p>சம்பவம் தொடர்பான முதற்கட்ட விசாரணைகளுக்காக, திருகோணமலை தடயவியல் பிரிவு
பொலிஸாரும் மூதூர் பொலிஸாரும் இன்று (29) காலை சம்பவ இடத்திற்குச் சென்று
தடயங்களைச் சேகரித்து தீவிர விசாரணைகளை முன்னெடுத்தனர்.</p><p>

இதனைத் தொடர்ந்து, உயிரிழந்த பெண்ணின் கணவர் மேலதிக விசாரணைகளுக்காக மூதூர்
பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். </p><p>உயிரிழந்த பெண்ணின் சடலம்
தற்போது மூதூர் தள வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
</p><p>
இச்சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் தொடர்ந்து மேற்கொண்டு
வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-29T10:47:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[வளர்ப்பு நாய்களுக்கும் ஜோதிடமா? தென்கொரியாவில் பிரபலமாகும் வித்தியாசமான முறை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/dog-astrology-is-becoming-popular-in-south-korea-1785310239"></link>
            <id>https://manithan.com/article/dog-astrology-is-becoming-popular-in-south-korea-1785310239</id>
            <summary type="text">நமது ஊர்களில் மனிதர்களின் எதிர்காலம், வாழ்க்கை நிலை, திருமணம், தொழில் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை அறிந்து கொள்ள ஜோதிடம் பார்ப்பது வழக்கமாக இருந்து வருக...</summary>
            <content type="html"><![CDATA[<p>நமது ஊர்களில் மனிதர்களின் எதிர்காலம், வாழ்க்கை நிலை, திருமணம், தொழில் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை அறிந்து கொள்ள ஜோதிடம் பார்ப்பது வழக்கமாக இருந்து வருகிறது.ஆனால், தென்கொரியாவில் இதே போன்ற ஒரு வித்தியாசமான முயற்சி தற்போது கவனம் ஈர்த்து வருகிறது.</p><h2>செல்ல பிராணிகளுக்க ஜோதிடமா?&nbsp;</h2><p> அங்கு மனிதர்களுக்காக அல்லாமல், தங்களது செல்ல நாய்களின் உணர்வுகளையும் மனநிலையையும் புரிந்துகொள்ள ஜோதிடம் பார்க்கும் முறை பிரபலமடைந்து வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8f001724-3928-4984-bae9-37af143b29ee/26-6a69b0756f998.webp' /></p><p></p><p>

தென்கொரிய தலைநகர் சியோலில், நாய்களுக்கான ஜோதிடம் பார்க்கும் சிறப்பு கடைகள் ஆங்காங்கே செயல்பட்டு வருகின்றன.</p><p> தங்களது வளர்ப்பு நாய்களின் பழக்கவழக்கங்கள், மனநிலை மற்றும் அவற்றின் தேவைகளைப் புரிந்துகொள்ள விரும்பும் பலர், தங்கள் செல்லப்பிராணிகளுடன் இந்தக் கடைகளுக்கு வருகை தருகின்றமையால் இது இணையத்தில் வைரலாகி பெரும்பாலானவர்களின் கவனத்தையும் ஈர்த்து வருகின்றது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/785fd48b-d1fb-488d-acb4-3fbf2eb98485/26-6a69b0761f77e.webp' /></p><p>
இந்த ஜோதிட முறையில், மேஜை ஒன்றின் மீது பல்வேறு குறியீடுகள் மற்றும் படங்கள் கொண்ட அட்டைகள் பரப்பி வைக்கப்படுகின்றன. </p><p>பின்னர், உரிமையாளர் தனது வளர்ப்பு நாயை அந்த மேஜையின் மீது நிற்க விடுகிறார். நாய் தனது காலால் தொடும் அல்லது தேர்வு செய்யும் அட்டையை அடிப்படையாகக் கொண்டு, அதன் மனநிலை மற்றும் உடல்நிலை குறித்து ஜோதிடர் விளக்கம் கொடுக்கின்றார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/11eb3f7f-ab4b-455c-b641-a4e3c6da5c75/26-6a69b076c2561.webp' /></p><p>உதாரணமாக, வாள் போன்ற குறியீடு வரையப்பட்ட அட்டையை ஒரு நாய் தேர்வு செய்தால், அது உடல்நலப் பிரச்சினை, மூட்டு வலி அல்லது ஏதாவது அசௌகரியத்தை எதிர்கொண்டு இருக்கலாம் என்று இந்த ஜோதிட முறையை பின்பற்றி விளக்கம் கொடுக்கப்படுகின்றது.&nbsp;</p><p></p><p>மேலும் தங்களது செல்லப்பிராணிகள் தங்களைப் பற்றி என்ன நினைக்கின்றன, அவற்றை சரியான முறையில் பராமரித்து வருகிறோமா, அவற்றின் தேவைகளை புரிந்துகொள்கிறோமா என்பதை அறிந்து கொள்ளவே பலர் இந்த சேவையை நாடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ea8eaa05-b388-4f93-8a2b-c792d84e033a/26-6a69b0777116b.webp' /></p><p>செல்லப்பிராணிகளுடன் மனிதர்கள் கொண்டுள்ள உணர்வுபூர்வமான உறவை மையமாகக் கொண்டு தென்கொரியாவில் "செல்லப்பிராணி ஜோசியம்" என அழைக்கப்படும் இந்த வித்தியாசமான நடைமுறை தற்போது பிரபலமடைந்து வருகின்றது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-29T10:40:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரதமர் ஆன்டி பர்ன்ஹாம் எலெக்ரிக் காரை பயன்படுத்த வேண்டுமா? கூறப்படும் காரணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/talks-on-uk-pm-andy-burnham-may-use-electric-car-1785320179"></link>
            <id>https://news.lankasri.com/article/talks-on-uk-pm-andy-burnham-may-use-electric-car-1785320179</id>
            <summary type="text">பிரித்தானியாவில் No 10 நார்த் என்ற புதிய அலுவலகத்தை உருவாக்கும் ஆன்டி பர்ன்ஹாமின் முடிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.&amp;nbsp;அரசாங்க ஜெட் விமானம்...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரித்தானியாவில் No 10 நார்த் என்ற புதிய அலுவலகத்தை உருவாக்கும் ஆன்டி பர்ன்ஹாமின் முடிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.&nbsp;</p><h2>அரசாங்க ஜெட் விமானம்</h2><p>
பிரித்தானியாவின் புதிய பிரதமரான ஆன்டி பர்ன்ஹாம் (Andy Burham), ஐந்து நாட்களுக்குள் பர்ன்ஹாம் மூன்று முறை அரசாங்க ஜெட் விமானத்தைப் பயன்படுத்திய பிறகு, அவரது பயணம் குறித்த கேள்வி ஒரு விவாதப் பொருளாக மாறியுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/647a8517-4bfe-4860-9c87-e3808690b1d3/26-6a69d4392ee9b.webp' />&nbsp;</p><p></p><p>
அதாவது, அவர் மான்செஸ்டரில் உள்ள தனது புதிய வடக்குத் தளத்திற்கும், வெஸ்ட்மின்ஸ்டருக்கும் இடையில் எப்படி பயணிக்கத் திட்டமிடுகிறார் என்பதும், அதற்கான செலவுகளை யார் ஏற்கிறார்கள் என்பதும் தற்போது பாரிய கேள்விக்குறியாக உள்ளது.</p><p>

அதேபோல், பர்ன்ஹாம் No 10 நார்த் என்ற புதிய அலுவலகத்தை உருவாக்கும் முடிவும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.</p><p> 

ஏனெனில், இந்த நடவடிக்கைக்கு வரி செலுத்துவோரின் பணம்தான் நிதியளிக்கிறதா என்ற கேள்விகளை இது எழுப்புவதே இதற்கு முக்கியக் காரணம்.</p><p>

திங்கட்கிழமை, ஆன்டி பர்ன்ஹாம் போர்ட்ஸ்மவுத் கடற்படைத் தளத்தில் உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியை சந்திப்பதற்காக 37 நிமிட பயணமாக மீண்டும் வானில் பறந்தார். </p><h2>

பயண நேரம் </h2><p>லண்டனில் இருந்து மான்செஸ்டருக்கு இரயிலில் செல்ல சராசரியாக 2 மணிநேரம் 46 நிமிடங்கள் ஆகிறது. இதற்கான கட்டணமும் மிக அதிகமாக உள்ளது.
</p><p>
அதனால், மின்சாரக் காரைப் பயன்படுத்தினால், இதே பயணத்தை பாதிக்கும் குறைவான செலவிலேயே மேற்கொள்ள முடியும் என்று 'Carwow' நிறுவனம் கணக்கிட்டுள்ளது. </p><p>

மேலும், தற்போதைய சூழலில் இருந்து 2029 கோடையில் நடைபெறவுள்ள அடுத்த பொதுத்தேர்தல் வரை, மின்சார வாகனத்தைப் பயன்படுத்துவதன் மூலம் பயண செலவில் 27,000 பவுண்டுகளுக்கும் அதிகமாக பிரதமர் சேமிக்க முடியும் என்று அந்த கார் விற்பனை இணையதளம் கூறுகிறது.
</p><p>
பிரதமர் No 10 நார்த் மற்றும் வெஸ்ட்மின்ஸ்டர் இடையே இரயிலில் பயணம் செய்வதை விட, ஒரு மின்சாரக் காரில் பயணம் செய்வது ஆண்டுக்கு 9,000 பவுண்டுகள் மலிவாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.&nbsp; &nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ce0251fd-2a4a-4ec6-a10b-5ea47eeedf34/26-6a69d439e430e.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<i><b><a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"> WHATSAPP CHANNEL</a> </b></i>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-29T10:34:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறல் : யாழ். கடலில் கறுப்புக் கொடிப் போராட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/black-flag-protest-in-jaffna-against-ind-fisherman-1785319289"></link>
            <id>https://ibctamil.com/article/black-flag-protest-in-jaffna-against-ind-fisherman-1785319289</id>
            <summary type="text">இந்திய கடற்றொழிலாளர்களின் தொடர்ச்சியான எல்லைதாண்டிய அத்துமீறல் மீன்பிடி
நடவடிக்கைகளைக் கண்டித்து யாழ்ப்பாணம் தீவகப் பகுதி கடற்றொழிலாளர்கள் கடலில்
இற...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்திய கடற்றொழிலாளர்களின் தொடர்ச்சியான எல்லைதாண்டிய அத்துமீறல் மீன்பிடி
நடவடிக்கைகளைக் கண்டித்து யாழ்ப்பாணம் தீவகப் பகுதி கடற்றொழிலாளர்கள் கடலில்
இறங்கி கறுப்புக்கொடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
</p><p>
குறிகட்டுவான் இறங்குதுறை கடற்பகுதியில் இன்று (29) படகுகளில் கடலுக்குள் இறங்கிச் சென்ற
தீவக கடற்றொழிலாளர்கள், கறுப்புக்கொடிகளை ஏந்தி தங்களது எதிர்ப்பை
வெளிப்படுத்தியதுடன் ஜனாதிபதிக்கு அவசர நடவடிக்கை கோரி கோரிக்கை மனுவையும் சமர்ப்பித்தனர்.</p><p>

இந்திய இழுவைப் படகுகளின் சட்டவிரோத அத்துமீறலால் தங்களது வாழ்வாதாரம்
கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதுடன், கோடிக்கணக்கான ரூபாய் பெறுமதியான மீன்பிடி
உபகரணங்களும் அழிக்கப்படுவதாக போராட்டத்தில் ஈடுபட்ட கடற்றொழிலாளர்கள் குற்றஞ்சாட்டினர்.</p><p></p><h2>ஜனாதிபதிக்கு அனுப்பிய கோரிக்கை மனு</h2><p>இந்த நிலையில் குறித்த போராட்டகாரர்கள் ஜனாதிபதிக்கு அனுப்பிய கோரிக்கை மனுவில்,

நெடுந்தீவு, நயினாதீவு, வேலணை, எழுவைதீவு, அனலைதீவு, யாழ்குடா, பாக்குநீரிணை
மற்றும் மன்னார் கரையோரப் பகுதிகளைச் சேர்ந்த பாரம்பரிய கடற்றொழிலாளர் சமூகங்களாகிய நாங்கள், எங்களது வாழ்வாதாரம், கடல்வளம் மற்றும் நாட்டின் கடல்சார் மரபைப்
பாதுகாப்பதற்காக அரசின் உடனடி தலையீட்டை கோருகின்றோம்.</p><p>

மேலும் பல தசாப்தங்களாக இந்திய இழுவைப் படகுகள் இலங்கைக் கடற்பரப்பிற்குள்
அத்துமீறி நுழைந்து அடிமடி இழுவை மீன்பிடியில் ஈடுபட்டு வருகின்றன, இது
வெறும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கை மட்டுமன்றி கடலடித் தளங்கள், பவளப்
பாறைகள் மற்றும் மீன்களின் இனப்பெருக்கப் பகுதிகளை அழித்து கடல் உயிரினப்
பல்வகைமையையும் மீன்வளத்தையும் கடுமையாக பாதிக்கின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0eb108e0-dde1-413d-82f2-fa5126f0fc08/26-6a69d54607419.webp' /></p><p>
மேலும், இந்த நடவடிக்கைகள் வடக்கின் கடல்சார் பொருளாதாரம், உணவுப் பாதுகாப்பு
மற்றும் இலங்கையின் கடல்வள உரிமைகளுக்கு நேரடியான அச்சுறுத்தலாக
அமைந்துள்ளது.</p><p>காரைக்கால், நாகப்பட்டினம் மற்றும் தொண்டி பகுதிகளைச் சேர்ந்த இந்திய இழுவை
மடி விசைப்படகுகள், கடந்த ஜூலை 16 முதல் 18 ஆம் திகதி வரை மூன்று நாட்களில்
தீவகத்தைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட பாரம்பரிய கடற்றொழிலாளர்களின் ஐந்து கோடி
ரூபாவுக்கும் அதிக பெறுமதியான நண்டு வலைகளை இழுத்தழித்து சேதப்படுத்தியுள்ளன.</p><p>
இந்தப் பிரச்சினைக்கு தொடர்ச்சியாக ஆட்சிக்கு வந்த அரசுகள் உறுதியான தீர்வை
வழங்கத் தவறியுள்ளதால், வடக்கு கடற்றொழிலாளர்களிடையே ஏமாற்றமும் நம்பிக்கையின்மையும்
அதிகரித்துள்ளது.</p><p>இலங்கை–இந்திய இராஜதந்திர உறவுகளின் பெயரில் வடக்கு
மக்களின் வாழ்வாதாரம் தொடர்ந்து பலியிடப்படுவது ஏற்றுக்கொள்ள முடியாதது.

வடக்கின் பாரம்பரிய கடல்சார் வாழ்க்கை மரபு அழிந்துவிட்டால் அது வடக்கு
மக்களுக்கு மட்டுமல்லாது முழு இலங்கைக்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பாக அமையும்.</p><p></p><h2>&nbsp;நீதிக்கான அமைதியான குரல்</h2><p>கரையோர கடற்றொழிலாளர் சமூகங்கள் நாட்டின் கடல் எல்லைகள், கடல்வளம் மற்றும்
கடல்சார் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் முக்கியமான சமூகமாக இருந்தபோதிலும்
அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் கிடைக்க வேண்டிய பாதுகாப்பு தங்களுக்கு
மறுக்கப்பட்டுள்ளது.
</p><p>
இதேவேளை எங்களது போராட்டம் எந்தவொரு நாட்டிற்கோ அல்லது சமூகத்திற்கோ
எதிரானதல்ல என்றும், இது கடலை நம்பி வாழும் குடிமக்களின் நீதிக்கான அமைதியான
குரல்.
</p><p>
அத்துடன், இலங்கைக் கடற்பரப்பிற்குள் வெளிநாட்டு இழுவைப் படகுகள் மேற்கொள்ளும்
சட்டவிரோத அடிமடி இழுவை மீன்பிடியைத் தடுக்கும் வகையில் உறுதியான நடவடிக்கைகளை
உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/119315c9-cd34-4d31-9f7a-327ee6689604/26-6a69d546d2c2e.webp' /></p><p>பாரம்பரிய கடற்றொழிலாளர்களின் பாரம்பரிய மீன்பிடிப்
பகுதிகளை பாதுகாக்க வேண்டும், கடல் உயிரினப் பல்வகைமை, மீன்வளம் மற்றும் நீலப்
பொருளாதாரத்தை எதிர்கால சந்ததியினருக்காகப் பாதுகாக்க வேண்டும், வடக்கு
மக்களுக்கும் நாட்டின் ஏனைய மக்களைப் போன்று சமமான சட்டப் பாதுகாப்பும் அரசின்
கவனமும் வழங்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளும்
முன்வைக்கப்பட்டுள்ளன.</p><p>ஒரு நாட்டின் இறைமை இராஜதந்திரத்தாலும் ஆயுதப் படைகளாலும் மட்டும்
பாதுகாக்கப்படுவதில்லை மக்களின் நம்பிக்கை, மனவுறுதி, பங்கேற்பு மற்றும்
நாட்டின் மீதான பற்றுறுதியாலும் அது பாதுகாக்கப்படுகிறது.
</p><p>
வடக்கு இலங்கையின் பாரம்பரிய கடற்றொழிலாளர்களின் சமூகங்கள் அரசின் புறக்கணிப்பால் மறைந்து
போக அனுமதிக்காதீர்கள்.

கடலைப் பாதுகாப்போம். கடலை நம்பி வாழும் மக்களைப் பாதுகாப்போம். நாட்டின்
கடல்சார் மரபைப் பாதுகாப்போம்.</p><p>

மௌனத்தைவிட துணிவையும், தற்காலிக வசதியைவிட நீதியையும், குறுகியகால நலன்களைவிட
நாட்டின் நீண்டகால நலன்களையும் தேர்ந்தெடுக்கும் தலைவரை வரலாறு நினைவுகூரும்"
என குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p></p><p><b><i>செய்தி - கஜிந்தன், பிரதீபன்</i></b></p><p><b><i><br></i></b></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><b><i><br></i></b></p>]]></content>
            <updated>2026-07-29T10:33:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[மோட்டார் சைக்கிளில் சென்றவர் பலி : மோதிய வாகனம் தப்பியோட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/motorcyclist-killed-in-hit-and-run-1785320477"></link>
            <id>https://ibctamil.com/article/motorcyclist-killed-in-hit-and-run-1785320477</id>
            <summary type="text">வவுனியா, தாண்டிகுளம் பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் மோட்டார் சைக்கிளில்
பயணித்த 64 வயதுடைய நபர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்ததுடன், விபத்தை
ஏற்பட...</summary>
            <content type="html"><![CDATA[<p>வவுனியா, தாண்டிகுளம் பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் மோட்டார் சைக்கிளில்
பயணித்த 64 வயதுடைய நபர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்ததுடன், விபத்தை
ஏற்படுத்திய கப் ரக வாகனம் தப்பியோடியுள்ளது.
</p><p>
கனகராயன்குளத்தில் இருந்து வவுனியா நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்துக்
கொண்டிருந்த போதே இவ்விபத்து சம்பவித்துள்ளது.</p><h2>மோட்டார் சைக்கிளில் பயணித்தவேளை சம்பவம்&nbsp;</h2><p>மோட்டார் சைக்கிளில் பயணித்தவேளை அதே திசையில் பின்னால் வந்த கப் ரக வாகனம்,
மோட்டார் சைக்கிளை மோதித் தள்ளிவிட்டு நிறுத்தாமல் தப்பியோடியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f50644e4-ec99-4bcf-a199-cd671107be60/26-6a69d6401137f.webp' /></p><p>
</p><p>
இவ்விபத்தில் கனகராயன்குளத்தைச் சேர்ந்த சிவராசா உதயகுமாரன் (வயது 64) என்பவரே
உயிரிழந்துள்ளார்.</p><p></p><h2>&nbsp;வவுனியா காவல்துறையினர் மேலதிக விசாரணை</h2><p>
</p><p>
சம்பவம் தொடர்பில் வவுனியா காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன்,
விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பியோடிய கப் ரக வாகனத்தையும் அதன் சாரதியையும்
அடையாளம் கண்டு கைது செய்வதற்கான தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d9051fce-45a5-451a-a984-28523f2b08e2/26-6a69d640d7915.webp' /></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-29T10:30:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[12 நாட்களில் 'தி ஒடிசி' திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/the-odyssey-12-days-box-office-1785317829"></link>
            <id>https://cineulagam.com/article/the-odyssey-12-days-box-office-1785317829</id>
            <summary type="text">&#039;தி ஒடிசி&#039;ஹாலிவுட் திரையுலகில் தனக்கென்று தனி சாம்ராஜ்யத்தை உருவாக்கியுள்ள இயக்குநர்களில் ஒருவர் கிறிஸ்டோபர் நோலன். 

இவர் இயக்கத்தில் Interstellar,...</summary>
            <content type="html"><![CDATA[<h2>'தி ஒடிசி'</h2><p>ஹாலிவுட் திரையுலகில் தனக்கென்று தனி சாம்ராஜ்யத்தை உருவாக்கியுள்ள இயக்குநர்களில் ஒருவர் கிறிஸ்டோபர் நோலன். </p><p>

இவர் இயக்கத்தில் Interstellar, Inception, The Dark Knight, Dunkirk என பல ஆகச்சிறந்த படைப்புகள் வெளியாகியுள்ளன. இதையடுத்து இவர் இயக்கத்தில் உருவாகி கடந்த ஜூலை 17-ஆம் தேதி வெளிவந்த திரைப்படம்தான் 'தி ஒடிசி'.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2390462e-1d3f-4833-adbf-929ad88bf9f7/26-6a69c9c950ff9.webp' /></p><p>

இப்படத்தில் டாம் ஹொலண்ட், Matt Damon, Anne Hathaway, ஜென்டயா என பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளியான இப்படம் மக்களிடையே அமோக வரவேற்பை பெற்று வெற்றியடைந்துள்ளது.</p><p></p><h2>வசூல்&nbsp;</h2><p>
</p><p>
இந்நிலையில், 12 நாட்களை கடந்து வெற்றிகரமாக பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டை நடத்தி வரும் 'தி ஒடிசி' திரைப்படம், உலகளவில் இதுவரை செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 12 நாட்களில் உலகளவில் இப்படம் 700 மில்லியன் டாலர் வசூலித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7de2f63c-9677-49d8-83f0-cb1d5e6a41d0/26-6a69c9c89f28f.webp' /></p>]]></content>
            <updated>2026-07-29T10:20:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அவுஸ்திரேலியாவில் 22 வயது இலங்கை தமிழ் இளைஞருக்கு 8 மாத சிறை !]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/sri-lankan-tamil-youth-8-months-prision-australia-1785320265"></link>
            <id>https://canadamirror.com/article/sri-lankan-tamil-youth-8-months-prision-australia-1785320265</id>
            <summary type="text">&amp;nbsp;அவுஸ்திரேலியாவில் பிரிஸ்பேன் ரயில் ஒன்றில், தமக்கு அறிமுகமில்லாத ஒருவரின் தலையில் கண்ணாடிப் போத்தால் தாக்கிய இலங்கை தமிழ் இளைஞர் ஒருவருக்கு, மூ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;அவுஸ்திரேலியாவில் பிரிஸ்பேன் ரயில் ஒன்றில், தமக்கு அறிமுகமில்லாத ஒருவரின் தலையில் கண்ணாடிப் போத்தால் தாக்கிய இலங்கை தமிழ் இளைஞர் ஒருவருக்கு, மூன்று மாதங்களுக்கும் குறைவான சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
</p><p>
சிறுவயதிலேயே அவுஸ்திரேலியாவுக்குக் குடியேற அனுமதிக்கப்பட்ட இலங்கை தமிழ் இளைஞர் 22 வயதான சரணீஸ் சிவகுமார் (Saranees Sivakumar) மற்றும் அவருடன் குற்றத்தில் ஈடுபட்ட பாட்லி மாஹ்வினி (Baddeley Mawhinney) ஆகியோர் ஏப்ரல் 25 அன்று கிளீவ்லேண்ட் வழித்தட ரயிலில் கொடூரமான தாக்குதலை நடத்தியது சிசிடிவி (CCTV) கமராவில் பதிவாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6795bdcd-90ba-4dfe-a7b1-74e26aed1aba/26-6a69d34b504d9.webp' /></p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">கொடூரமான தாக்குதல்&nbsp;</span></p><p>
</p><p>
தாக்குதலில் தனது பங்கிற்காக மாவின்னிக்கு ஏற்கனவே 10 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்த நிலையில், கலவரத்தில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்ட சிவகுமார், திங்களன்று காவலில் இருந்து காணொளிக் காட்சி மூலம் கிளீவ்லேண்ட் நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலையானார்.
</p><p>
தனியாகப் பயணம் செய்து கொண்டிருந்த பாதிக்கப்பட்ட நபரை சிவகுமாரும் மாஹினியும் அணுகிப் பேசத் தொடங்கியதாகவும், ஆனால் அந்தச் சந்திப்பு விரைவில் வன்முறையாக மாறியதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.</p><p>அவ்விருவரும் அந்த நபரின் தலை மற்றும் முகத்தில் பலமுறை குத்தியதுடன், மூடிக் கொண்டிருந்த ரயில் கதவுகள் வழியாக அவரை இழுத்துச் சென்று அவர் வெளியேறுவதைத் தடுத்த பின்னர் மற்றொரு பெட்டிக்குச் சென்றனர்.</p><p>

 அவர்கள் விரைவில் திரும்பி வந்து அந்த நபரின் பையைப் பறிக்க முயன்ற போது சிவகுமார் ஒரு கண்ணாடிப் போத்தலால் அந்த நபரின் தலையில் தாக்கியதில் அவருக்கு ரத்தக் கசிவு ஏற்பட்டது.</p><p>

இந்தத் தாக்குதலால் பாதிக்கப்பட்ட நபர் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானதாகவும், அதனால் அவர் குயின்ஸ்லாந்தை விட்டு வெளியேறிவிட்டதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.</p><p>தாக்க முற்பட்டவர்களிடமிருந்து தன்னைப் பாதுகாத்துக்கொள்ளவே அவ்வாறு செய்ததாக சிவகுமார் நீதிமன்றத்தில் வாதிட்டார். எனினும் இந்தத் தாக்குதலுக்காக சிவகுமாருக்கு எட்டு மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது,

ஏற்கனவே 89 நாட்கள் சிறைக்காவலில் இருந்ததால், அவர் கண்காணிப்புடன் கூடிய நிபந்தனையில் விடுவிக்கப்பட்டார்.</p><p>
அதேசமயம் சிவகுமார் கடந்த ஆண்டு ஆஸ்திரேலியக் குடிமகனாக மாறியதாகவும், வேலை தேடி மெல்போர்னிலிருந்து பிரிஸ்பேனுக்குச் சென்ற அவர், வீடின்றியும் வேலையின்றியும் இருந்ததாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-29T10:16:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கழிவுகளால் நிரம்பும் கீரிமலை - புனித தன்மையை கெடுக்கும் செயலா என விசனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/keerimalai-waste-is-it-destroy-sacred-nature-1785318143"></link>
            <id>https://tamilwin.com/article/keerimalai-waste-is-it-destroy-sacred-nature-1785318143</id>
            <summary type="text">வரலாற்று சிறப்புமிக்க கீரிமலை மற்றும் மாவிட்டபுரம் பகுதிகளில் கழிவுகளை
கொட்டி வருவதனால் அப்பகுதி மிக மோசமான குப்பைகள் நிறைந்த பகுதியாக மாறும்
அபாயம்...</summary>
            <content type="html"><![CDATA[<p>வரலாற்று சிறப்புமிக்க கீரிமலை மற்றும் மாவிட்டபுரம் பகுதிகளில் கழிவுகளை
கொட்டி வருவதனால் அப்பகுதி மிக மோசமான குப்பைகள் நிறைந்த பகுதியாக மாறும்
அபாயம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

யாழ்ப்பாணத்தில் உள்ள வரலாற்று சிறப்பு மிக்க மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில்
, கீரிமலை நகுலேஸ்வரம் ஆலயம் ஆகியவற்றை அண்மித்த பகுதிகளில் குப்பைகள்
கொட்டப்பட்டு வருகின்றன.
</p><p>
மாவிட்டபுரத்தில் இருந்து கீரிமலை செல்லும் வீதியில் , கடந்த காலங்களில்
சுண்ணக்கற்கள் அகழப்பட்டு பாரிய குழிகள் காணப்படுகின்றன

அவை காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை இயங்கிய கால பகுதியில் அப்பகுதியில்
இருந்து சுண்ணக்கற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டமையால் ஏற்பட்ட குழிகள் என
தெரிவிக்கப்படுகிறது.&nbsp;</p><p></p><h2>கழிவுகள் கொட்டப்படுவதற்கு எதிர்ப்பு&nbsp;</h2><p>குறித்த பகுதிகளில் இருந்து யுத்தம் காரணமாக அப்பகுதி மக்கள் 1990ஆம் ஆண்டு
கால பகுதியில் இடம்பெயர்ந்து சென்றனர். </p><p>அதனை தொடர்ந்து குறித்த பகுதிகள்
உயர்பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டு இருந்தன.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/082f57ba-b415-4903-b16e-959094804407/26-6a69d0e2e99e7.webp' /></p><p>
அந்நிலையில் யுத்தம் நிறைவுக்கு வந்த பின்னர் 2014ஆம் ஆண்டு கால
பகுதியில் கட்டம் கட்டமாக அப்பகுதிகள் விடுவிக்கப்பட்டு வந்தன.
</p><p>
அக்கால பகுதியில் வலி வடக்கில் இருந்து இடம்பெயர்ந்து, யாழின் பல்வேறு
பகுதிகளிலும் தற்காலிக முகாம்களில் வசித்தவர்களை, காணிகள் அற்றவர்களை
"நல்லிணக்கபுரம் மாதிரி கிராமம்" எனும் பெயரில் வீடுகள் அமைத்துக்கொடுத்து,
பாரிய குழிகளை அண்டிய பகுதிகளில் குடியேற்றினார்கள்.</p><p>இந்த குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு ஓரிரு வருடங்களில் அப்பகுதிகள் முற்று
முழுதாக உயர் பாதுகாப்பு வலயத்தினுள் இருந்து விடுவிக்கப்பட்டதை பாரிய
குழிகளுக்குள் கழிவுகளை கொட்ட தொடங்கினர்.</p><p>

முதலில் உக்காதா கழிவுகளை, பிளாஸ்ரிக் கழிவுகளை கொட்டியவர்கள் பின்னர்
இறைச்சி கழிவுகள், மருத்துவ கழிவுகள் என எவ்வித கண்காணிப்புக்களும் கட்டுப்பாடுகளும் இன்றி குழிகளுக்குள் கொட்டப்பட்டன.</p><p>

அதனை அடுத்து 2019 ஆம் ஆண்டு பகுதியில் அப்பகுதியில் இருக்கும் மக்கள்
கழிவுகள் கொட்டப்படுவதற்கு எதிர்ப்பு கட்ட தொடங்கினர்.

அதன் போது குறித்த பகுதியில் உள்ள குழிகளை தாம் தென் கொரிய நாட்டின் நிதி
உதவியுடன் " சுகாதார நில நிரவுகை திட்டம்" ஊடாக குழிகளை
நிரவுவதாக தெரிவித்தனர்.</p><p>அவ்வாறு அந்த குழிகள் நிரவ 25 தொடக்கம் 30 வருட காலம் எடுக்கும். இந்த
காலப்பகுதிக்குள் அந்த குப்பைகளை நாடி வரும் பறவைகள், விலங்குகளால்
ஏற்படப்போகும் சுகாதார சீர்கோடுகள் அப்பகுதியில் உள்ளவர்களுக்கு பாதிப்பினை
ஏற்படுத்தும் என பலரும் அந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
போராட்டங்களையும் முன்னெடுத்தனர்.</p><p></p><h2>சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம்</h2><p>அதனை அடுத்து சில வருடங்கள் அக்குழிகளுக்குள் பாரிய அளவில் கழிவுகள்
கொட்டப்படுவது தவிர்க்கப்பட்டு வந்த நிலையில் , மீண்டும் அப்பகுதியில் உள்ள
குழிகளுக்குள், வலி. வடக்கின் ஆளுகைக்குள் உள்ள பகுதிக்குள் வலி. தெற்கு
பிரதேச சபை மற்றும் கடற்படையினர் கழிவுகளை கொட்ட தொடங்கியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0812798a-9b6c-422b-bc9c-ab988d5fe5d3/26-6a69d0e3ef096.webp' /></p><p>
கழிவுகள் கொட்டப்படும் பகுதிகளை அண்மித்த பகுதிகளில் மாவிட்டபுரம் கந்தசுவாமி
கோவில், கீரிமலை நகுலேஸ்வரம் ஆலயம் ,போன்ற ஐந்து இந்து ஆலயங்களும் ,
சித்தர்களின் சமாதி கோவில்களும் குறித்த பகுதியை அண்மித்த பகுதியில்
தேவாலயமும் காணப்படுவதால் அப்பகுதி புண்ணிய புனித தன்மையான பூமி எனவும்
அப்பகுதியில் கழிவுகள் கொட்டுவதனால் , அதன் புனித தன்மைகள் அற்றுப்போகும்
எதிர்ப்புக்கள் கிளம்பியுள்ளன.</p><p>அது மாத்திரமன்றி , காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை பகுதியில் முதலீட்டு
வலயம் உருவாக உள்ள நிலையிலும் கீரிமலையில் மகிந்த ராஜபக்ச காலத்தில்
கட்டப்பட்ட ஜனாதிபதி மாளிகையை முதலீட்டாளர்களுக்கு கையளிக்க ஏற்பாடுகள்
நடைபெறும் நிலையில் அப்பகுதியில் கழிவுகள் கொட்டப்படுவதானல் அதன்
அபிவிருத்தி திட்டங்களுக்கு பாரிய பின்னடைவுகள் ஏற்படும் அபாயங்கள்
காணப்படுகின்றன.
</p><p>
அவை மாத்திரமின்றி குப்பை கொட்டப்படும் பகுதிக்கு மிக அருகில் கடல் உள்ளது.
மழை காலத்தில் கடல் நீர் உட்புகுமாயின் அது பெரும் சுகாதார
சீர்கேட்டினை ஏற்படும் அபாயம் உள்ளது.</p><p>இது தொடர்பில் வலி. வடக்கு பிரதேச சபையின் உறுப்பினர்களுக்கு அப்பகுதி மக்கள்
அறிவித்ததை அடுத்து, உறுப்பினர்கள் அப்பகுதிக்கு சென்று கழிவுகள்
கொட்டப்படுவதனை நேரில் பார்த்துள்ளனர்.
</p><p>
அது தொடர்பில் , கடந்த 16ஆம் திகதி நடைபெற்ற வலி. வடக்கின் பிரதேச சபையின்
மாதாந்த அமர்வில் உறுப்பினர்கள் பிரஸ்தாபித்து அப்பகுதியில் கழிவுகளை
கொட்டுவதனை நிறுத்த வேண்டும் என கோரினர்.</p><p>அந்நிலையில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை வலி. வடக்கு பிரதேச சபையின்
சுகாதார குழு உறுப்பினர்கள் அப்பகுதிக்கு சென்ற போது டிப்பர் வாகனத்தில்
கடற்படையினர் கழிவுகளை கொட்டுவதற்கு எடுத்து வந்த நிலையில் அதனை
அங்கு கொட்டாது தடுத்து நிறுத்தினர்.
</p><p>
அதேபோன்று வலி. தெற்கு பிரதேச சபையினரும் கழிவுகளை கொட்டுவதற்கு வந்த வேளை
அத்தனையும் தடுத்து நிறுத்தியுள்ளனர்.</p><p></p><h2>குப்பைகளை கொட்டுவதற்கு அனுமதி</h2><p>அதேநேரம் குறித்த சம்பவம் தொடர்பில் வலி. வடக்கு பிரதேச சபை தவிசாளருக்கு
உறுப்பினர்கள் குறித்த விடயம் தொடர்பில் தெரியப்படுத்திய நிலையில், சம்பவ
இடத்திற்கு வந்த தவிசாளர், அங்கு அனுமதியின்றி யாரும் கழிவுகளை கொட்ட
முடியாது என கூறி கழிவு ஏற்றி வந்த வாகனங்களை திருப்பி அனுப்பிய பின்னர்,
குறித்த குழிகளுக்கு செல்லும் பாதை ஒன்றில் காணப்பட்ட "கேற்றினை" பூட்டு
போட்டு பூட்டி சென்றுள்ளார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4a0462ae-1c52-4846-b2b3-3f11ebdd8644/26-6a69d0e4c79ea.webp' /></p><p>
அதன் போது தவிசாளர் பூட்டி சென்ற "கேற்றுக்கு" அருகினால் , மற்றுமொரு பாதை
காணப்படும் நிலையில் , அதனூடாக கழிவுகளை எடுத்து வரும் வாகனங்கள் உள்ளே செல்ல
முடியும். </p><p>அதனால் அப்பகுதிக்குள் எவரும் அனுமதியின்றி நுழைய முடியாதவாறு ,
நிரந்தர வேலிகளை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதேச சபை
உறுப்பினர்கள் தவிசாளரிடம் கோரியுள்ளனர்.</p><p>குறித்த பகுதிகளில் குப்பைகளை கொட்டுவதற்கு அனுமதிக்கப்பட்டால் , "நல்லிணக்க
புர" மக்கள் மாத்திரமின்றி , முதலீட்டு திட்டங்கள் , பாரிய அபிவிருத்தி
திட்டங்கள் என்பவற்றுடன் , சுற்றுலாத்துறைக்கும் பாரிய
பாதிப்புக்களை ஏற்படுத்தும்.

நீண்ட கால திட்டமிடல்கள் இன்றி , கழிவுகளை கொட்ட அனுமதிப்பது பாரிய
சிக்கல்களை எதிர்காலத்தில் ஏற்படுத்தும் எனவே இது தொடர்பில் சம்பந்தப்பட்ட
துறை சார்ந்தோர் விரைந்து காத்திரமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே
எதிர்பார்ப்பாகும்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-29T10:16:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[Budapest நாட்டில் குட்டையாடையுடன் உலா வரும் நடிகை பூஜா ஹெக்டே..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/actress-pooja-hegde-vacation-to-budapest-photos-1785319060"></link>
            <id>https://viduppu.com/article/actress-pooja-hegde-vacation-to-budapest-photos-1785319060</id>
            <summary type="text">பூஜா ஹெக்டேபான்-இந்தியன் ஸ்டாராக ஜொலித்து வரும் நடிகை பூஜா ஹெக்டே சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் பிரபலம் ஆவார். குறிப்பாக இன்ஸ்டாகிராம் பக்கத்...</summary>
            <content type="html"><![CDATA[<h3>பூஜா ஹெக்டே</h3><p>பான்-இந்தியன் ஸ்டாராக ஜொலித்து வரும் நடிகை பூஜா ஹெக்டே சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் பிரபலம் ஆவார். குறிப்பாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது தனது புகைப்படங்களை பதிவு செய்து ரசிகர்களிடையே கவனத்தை பெறுவார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7aa6cf0b-91f1-4b4d-b992-f892c7669b14/26-6a69ce9cd2cab.webp' /></p><p>
</p><p>
இந்த நிலையில், தற்போது புதிய ஹேர் ஸ்டைலில் எடுத்துக்கொண்ட அசத்தலான புகைப்படங்களை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டார். அதன்பின் அவர் நடிப்பில் ஜனநாயகன் படம் வெளியானது.
</p><p>
மேலும் துல்கர் சல்மானுடன் பொம்மா பொம்மா படத்திலும் நடித்துள்ளார்.
தற்போது, Budapest, Hungary இடத்திற்கு சென்றுள்ள பூஜா, குட்டையான ஆடையணிந்து உலா வந்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-07-29T10:15:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ்.போதனா வைத்தியசாலையில் பெண் பாதுகாப்பு உத்தியோகத்தர் மீது தாக்குதல் : விசாரணைகள் தீவிரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/men-attack-female-security-officer-in-jaffna-th-1785305783"></link>
            <id>https://ibctamil.com/article/men-attack-female-security-officer-in-jaffna-th-1785305783</id>
            <summary type="text">யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்குள் கடமையில் இருந்த பெண் பாதுகாப்பு
உத்தியோகத்தரை தாக்கி, அதனை காணொளி பதிவு செய்த சம்பவம் தொடர்பில்
யாழ்ப்பாணம் காவல் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்குள் கடமையில் இருந்த பெண் பாதுகாப்பு
உத்தியோகத்தரை தாக்கி, அதனை காணொளி பதிவு செய்த சம்பவம் தொடர்பில்
யாழ்ப்பாணம் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.</p><p>இது குறித்து மேலும் தெரியவருகையில், யாழ். போதனா வைத்தியசாலைக்கு நேற்றைய தினம் (28) மாலை நோய்
வாய்ப்பட்ட யுவதியொருவர் குடும்பத்தினரால் அழைத்து வரப்பட்டு அவசர
சிகிச்சை பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p><p>
நோய் வாய்ப்பட்ட யுவதியுடன், யுவதியின் தாய் உள்ளிட்ட இரு பெண்களும் மேலும் 5
ஆண்களும் வைத்தியசாலைக்கு வந்திருந்த நிலையில், அவர்களும் அவசர சிகிச்சைப் பிரிவின் வாயில் பகுதியில் குழுமி இருந்துள்ளனர்.</p><p></p><h2>காணொளி பதிவு&nbsp;</h2><p>

அதன்போது அங்கு கடமையில் இருந்த பெண் பாதுகாப்பு உத்தியோகத்தர், யுவதியின்
தாயாரை தவிர ஏனையோரை அங்கிருந்து செல்லுமாறு பணித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/551c29e6-c671-4f5d-b4ad-20784cc22389/26-6a69a41e73bb9.webp' /></p><p>
</p><p>இந்தநிலையில், அங்கிருந்தவர்கள் யுவதியுடன் முரண்பட்டு அதனை தமது தொலைபேசியில் காணொளியாகவும் பதிவு செய்துள்ளனர். </p><p>இதற்கு பெண்
பாதுகாப்பு உத்தியோகத்தர் எதிர்ப்பு தெரிவித்த போது பாதுகாப்பு
உத்தியோகத்தரை ஒருவர் பின் பக்கமாக இறுக்கி பிடிக்க மற்றுமொருவர்
அவரை தாக்கிவிட்டு அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p></p><h2>காவல்துறையினர் விசாரணை</h2><p>இது தொடர்பில் தாக்குதலுக்கு இலக்கான பெண் பாதுகாப்பு
உத்தியோகத்தர் வைத்தியசாலை பணிப்பாளருக்கு அறிவித்ததுடன், தனது பாதுகாப்பு
சேவை நிறுவனத்திற்கும் அறிவித்த நிலையில், அவர்களின் அறிவுறுத்தலுக்கு அமைய காவல் நிலையத்தில் சிறுவர் பெண்கள் பாதுகாப்பு பிரிவில் முறைப்பாடு
செய்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7f86e570-f4e1-4b09-81a8-30f2074f311c/26-6a69a41da63f5.webp' /></p><p>குறித்த முறைப்பாட்டின் பிரகாரம் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன்,
சம்பவத்துடன் தொடர்புடைய ஆண்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-29T10:09:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஐபிஎல் அணிகளின் பிராண்ட் மதிப்பு - ரூ.2,983 கோடியுடன் RCB முதலிடம், CSK நிலை என்ன?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/2026-ipl-brand-value-rcb-tops-csk-in-4th-1785319284"></link>
            <id>https://news.lankasri.com/article/2026-ipl-brand-value-rcb-tops-csk-in-4th-1785319284</id>
            <summary type="text">உலகளாவிய முதலீட்டு வங்கியான ஹூலிஹான் லோக்கி, 2026 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் பிராண்ட் மதிப்பீட்டு ஆய்வை வெளியிட்டுள்ளது.  

11 சதவீதம் உயர்ந்த ஐபிஎல் மதி...</summary>
            <content type="html"><![CDATA[<p>உலகளாவிய முதலீட்டு வங்கியான ஹூலிஹான் லோக்கி, 2026 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் பிராண்ட் மதிப்பீட்டு ஆய்வை வெளியிட்டுள்ளது. </p><h3> 

11 சதவீதம் உயர்ந்த ஐபிஎல் மதிப்பு</h3><p> 

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் வணிக மதிப்பு, 11 சதவீதத்திற்கும் மேலாக உயர்ந்து 20.6 பில்லியன் டொலராக(இந்திய மதிப்பில் ரூ.1.97 லட்சம் கோடி) அதிகரித்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8448ddfd-a39b-48c6-9522-c3ab3c3ba079/26-6a69cf761dc3b.webp' /></p><p>

ஐபிஎல் வணிக மதிப்பில் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக இரட்டை இலக்க வளர்ச்சி ஏற்பட்டிருப்பதையே இந்த அதிகரிப்பு பிரதிபலிக்கிறது.</p><p>

ஐபிஎல் இன் தனிப்பட்ட பிராண்ட் மதிப்பு கடந்த ஆண்டில் 10.3 சதவீதம் உயர்ந்து, 4.3 பில்லியன் டொலராக அதிகரித்துள்ளது. </p><p>

NFLக்குஅடுத்தபடியாக, உலகின் முதன்மையான விளையாட்டு நிறுவனங்களில் ஒன்றாக ஐபிஎல் உருவெடுத்துள்ளது.&nbsp;</p><p></p><p>

ஜியோஸ்டாரின் கூற்றுப்படி, பார்வையாளர் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு 7% அதிகரித்துள்ளது.
</p><h3>
முதலிடத்தில் RCB</h3><p> 

RCB, 2025 ஆம் ஆண்டில் இருந்த 269 மில்லியன் டொலர் மதிப்பிலிருந்து 16.0% அதிகரித்து, 312 மில்லியன் டொலர்(இந்திய மதிப்பில் ரூ.2,983 கோடி) பிராண்ட் மதிப்புடன் ஐபிஎல் இன் மிகவும் மதிப்புமிக்க அணியாக முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/83a408f4-fac0-413a-80a2-d2eb7476c82c/26-6a69cf76c2a0a.webp' /></p><p>

மேலும், 300 மில்லியன் டொலர் பிராண்ட் மதிப்பு என்ற மைல்கல்லை கடந்த முதல் கிரிக்கெட் அணி என்ற பெருமையை RCB பெற்றுள்ளது.</p><p> 

2026 ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் 9 வது இடத்தை பிடித்திருந்தாலும், 2025 ஆம் ஆண்டில் இருந்த 242 மில்லியன் டொலரிலிருந்து 9.1% அதிகரித்து, 264 மில்லியன் டொலர்(இந்திய மதிப்பில் ரூ.2,524 கோடி) பிராண்ட் மதிப்பை பதிவு செய்துள்ளது.&nbsp; &nbsp;</p><p></p><p>
கொல்கத்தா நைட் ரைடர்ஸ், 2025 ஆம் ஆண்டில் இருந்த 227 மில்லியன் டொலரிலிருந்து 7.9% அதிகரித்து, 245 மில்லியன் டொலர்(இந்திய மதிப்பில் ரூ.2,343 கோடி) பிராண்ட் மதிப்பை எட்டியது. </p><p>

CSK 3.8% ஆண்டு வளர்ச்சியுடன், 244 மில்லியன் டொலர்(இந்திய மதிப்பில் ரூ.2,333 கோடி) பிராண்ட் மதிப்புடன் 4வது இடத்தில் உள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e2eabe9f-7295-4301-8814-ee38f2d450ff/26-6a69cf777656d.webp' /></p><p>

9.1% வளர்ச்சியுடன் 168 மில்லியன் டொலர் பிராண்ட் மதிப்புடன் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 5வது இடத்திலும், 10.3% வளர்ச்சியுடன் 161 மில்லியன் டொலர் பிராண்ட் மதிப்புடன் ராஜஸ்தான் ராயல்ஸ் 6வது இடத்திலும், 12.1% வளர்ச்சியுடன் 158 மில்லியன் டொலர் பிராண்ட் மதிப்புடன் பஞ்சாப் கிங்ஸ் 7வது இடத்திலும் உள்ளன.
</p><p>
10.6% வளர்ச்சியுடன் 157 மில்லியன் டொலர் பிராண்ட் மதிப்புடன் குஜராத் டைட்டன்ஸ் 8வது இடத்திலும், 2.6% வளர்ச்சியுடன் 156 மில்லியன் டொலர் பிராண்ட் மதிப்புடன் டெல்லி கேப்பிட்டல்ஸ் 9வது இடத்திலும், 122 மில்லியன் டொலர் பிராண்ட் மதிப்புடன் மதிப்புடன் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 10வது இடத்திலும் உள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-29T10:02:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுவிட்சர்லாந்தின் கழிவுநீரில் விலைமதிப்பற்ற தங்கம், வெள்ளி! ஆண்டுதோறும் 43 கிலோகிராம் தங்கம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/gold-and-silver-in-switzerland-s-wastewater-1785319370"></link>
            <id>https://jvpnews.com/article/gold-and-silver-in-switzerland-s-wastewater-1785319370</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;சுவிட்சர்லாந்தின் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் வழியாக ஒவ்வொரு ஆண்டும் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான தங்கம், வெள்ளி உள்ளிட்ட விலைம...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;சுவிட்சர்லாந்தின் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் வழியாக ஒவ்வொரு ஆண்டும் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான தங்கம், வெள்ளி உள்ளிட்ட விலைமதிப்பற்ற உலோகங்கள் கழிவுநீருடன் கலந்து செல்வது Eawag மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளதாக கூறப்படுகின்றது.
</p><p>


சுவிட்சர்லாந்தின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கூட்டாட்சி நிறுவனமான Eawag மேற்கொண்ட ஆய்வில், நாட்டின் 64 கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fff8db04-5c4f-4a05-8b30-9816c2902d40/26-6a69cfcce6aac.webp' /></p><h2>ஆண்டுதோறும்&nbsp; 43 கிலோகிராம் தங்கமும், 3,000 கிலோகிராம் வெள்ளியும்</h2><p>
</p><p>


அந்த ஆய்வின் படி, ஆண்டுதோறும் சுமார் 43 கிலோகிராம் தங்கமும், 3,000 கிலோகிராம் வெள்ளியும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை வந்தடைகின்றன. இவற்றின் தற்போதைய சந்தை மதிப்பு சுமார் 3 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.</p><p></p><p>
</p><p>


வீடுகளில் பயன்படுத்தப்படும் நகைகள் மற்றும் பல்வேறு பொருட்களில் இருந்து வெளியேறும் மிகச் சிறிய உலோகத் துகள்கள் கழிவுநீரில் கலந்து செல்லக்கூடும்.



அதேவேளை, சுவிட்சர்லாந்தின் ஜூரா உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடிகார உற்பத்தித் தொழிற்சாலைகளும் முக்கிய காரணமாகக் குறிப்பிடப்படுகின்றன.
</p><p>
 இத்தொழில்களில் பயன்படுத்தப்படும் தங்கம், ருத்தேனியம், ரோடியம் உள்ளிட்ட உலோகங்களின் துகள்கள் கழிவுநீருடன் கலந்து சுத்திகரிப்பு நிலையங்களைச் சென்றடைகின்றன.



கழிவுநீரில் தங்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டாலும், நாடு முழுவதும் அதை மீட்டெடுப்பது பொருளாதார ரீதியாக லாபகரமானதாக இல்லை எனவும் கூறப்படுகின்றது.</p><p></p><p>
</p><p>


 ஈனெனில் , கழிவுநீரில் இருந்து தங்கம் மற்றும் பிற உலோகங்களைப் பிரித்தெடுப்பதற்கான செலவு, அவற்றின் மதிப்பைவிட அதிகமாக இருக்கக்கூடும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
</p><p>


ஆனால் சுவிட்சர்லாந்தின் டிசினோ பகுதியில் கழிவுநீர் சேற்றில் அதிக அளவு தங்கம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அப்பகுதியில் செயல்படும் தங்க சுத்திகரிப்பு ஆலைகளால், குறிப்பிட்ட இடத்தில் மட்டும் தங்கத்தை மீட்டெடுப்பது லாபகரமாக இருக்கலாம் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.</p><p></p><p>அதேசமயம் சுவிட்சர்லாந்து மட்டுமல்லாமல், அமெரிக்காவிலும் கழிவுநீர் சேற்றில் ஆண்டுதோறும் மில்லியன் கணக்கான டொலர்கள் மதிப்புள்ள தங்கம் உள்ளிட்ட விலைமதிப்பற்ற உலோகங்கள் கலந்து செல்வதாக முந்தைய ஆய்வுகளில் இருந்து தெரியவந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.</p>]]></content>
            <updated>2026-07-29T10:00:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rusath</name>
            </author>
            <title type="text"><![CDATA[களுவாஞ்சிகுடியில் மோட்டார் சைக்கிள் திருடிய இளைஞர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/motorcycle-stolen-in-kaluvanchikudy-recovered-1785318143"></link>
            <id>https://tamilwin.com/article/motorcycle-stolen-in-kaluvanchikudy-recovered-1785318143</id>
            <summary type="text">களுவாஞ்சிகுடியில் வைத்து களவாடப்பட்ட மோட்டார் சைக்கிள் பாணமை பகுதியில்
வைத்து பொலிஸாரால் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>களுவாஞ்சிகுடியில் வைத்து களவாடப்பட்ட மோட்டார் சைக்கிள் பாணமை பகுதியில்
வைத்து பொலிஸாரால் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். </p><p>இந்த சம்பவம் தொடர்பில் மேலும்
தெரியவருவதாவது,&nbsp; மட்டக்களப்பு-&nbsp; களுவாஞ்சிகுடி
கிராமத்தைச் சேர்ந்த நபர் ஒருவரின் மோட்டார் வைக்கிள் கடந்த (2026.07.22) அன்று
களுவாஞ்சிகுடி கண்ணகை அம்மன் ஆலயத்தில் வைத்து காணாமல் போயுள்ளது.</p><p> இது தொடர்பில் குறித்த நபர் களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டைப்
பதிவு செய்திருந்தார்.</p><p></p><h2>கைது</h2><p>
</p><p>இதனையடுத்து, நேற்று(28.07.2026) குறித்த மோட்டார் சைக்கிளையும் அதனைக் களவாடிச்
சென்றதாகக் கருதப்படும் சந்தேக நபரையும் பாணமை பகுதியில் வைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/67bf1936-d9fc-4a7e-b830-6af553721786/26-6a69ce8b6061c.webp' /></p><p>&nbsp;இவ்வாறு கைது செய்யப்பட்டவர் 25 வயது மதிக்கத்தக்கவர் எனவும்,
மோட்டார் சைக்கிளின் பெறுமதி சுமார் எட்டு இலட்சத்தது தொண்ணூராயிரத்துக்கு மேல்
எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.</p><p>குறித்த நபர்
மிகவும் சூட்சுமமான முறையில் குறித்த மோட்டார் சைக்கிளைத் திருடிச் சென்று
இலக்கத் தகட்டையும் மாற்றிவிட்டு கதிர்காமம் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த
நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-29T09:59:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[விடுதலைப்புலிகள் காலத்தில் கூடப் பெரஹெராக்கள் பாதுகாப்பாக நடந்தன! அரசாங்கத்தை கடுமையாக சாடிய நாமல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/hold-provincial-elections-namal-challenges-govt-1785314375"></link>
            <id>https://ibctamil.com/article/hold-provincial-elections-namal-challenges-govt-1785314375</id>
            <summary type="text">விடுதலைப்புலிகள் காலத்தில் கூட வரலாற்று ரீதியாகத் தலதா பெரஹரா மற்றும் கதிர்காம பெரஹெராக்கள் பாதுகாப்பாக நடாத்தப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ரா...</summary>
            <content type="html"><![CDATA[<p>விடுதலைப்புலிகள் காலத்தில் கூட வரலாற்று ரீதியாகத் தலதா பெரஹரா மற்றும் கதிர்காம பெரஹெராக்கள் பாதுகாப்பாக நடாத்தப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
</p><p>

கட்சித் தலைமையகத்தில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
</p><p>
இந்தநிலையில், அரசாங்கம் இந்த நாட்டு மக்களின் உண்மையான விருப்ப நிலையை அறிந்துகொள்ள விரும்பினால் பல்வேறு தனியார் நிறுவனங்களுக்குப் பணத்தைக் கொடுத்துக் கருத்துக்கணிப்பு அறிக்கைகளைப் பெறுவதைத் தவிர்த்து உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>கருத்துக்கணிப்பு அறிக்கை</h2><p>


அரசாங்கம் பணம் கொடுத்துச் செய்யும் கருத்துக்கணிப்பு அறிக்கைகளிலேயே நாட்டின் 50 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் பட்டினியால் அவதிப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டிய அவர், மாகாண சபைத் தேர்தலை நடத்தினால் ஜனாதிபதியை எத்தனை சதவீத மக்கள் ஆதரிக்கிறார்கள் என்பதைத் துல்லியமாக அறிய முடியும் என தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b07364b6-5a79-46a8-b0d3-5c6a70c7e4cf/26-6a69c22287a36.webp' /></p><p>மேலும் தெரிவித்த அவர், தற்போதைய அரசாங்கம் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிவிட்டது.</p><p>

இருப்பினும், ஒரு கட்சியாக நாங்கள் எந்த நேரத்திலும் எந்தவொரு தேர்தலையும் சந்திக்கத் தயாராகவே உள்ளோம்.</p><p>
</p><p></p><h2>குழுக்களின் அச்சுறுத்தல்&nbsp;</h2><p>வழக்கறிஞர்கள் சங்கம் (BASL), பொதுநலவாய வழக்கறிஞர்கள் சங்கம், ஆசிய வழக்கறிஞர்கள் சங்கம், சட்டத்தரணிகள் மற்றும் கீழ் நீதிமன்ற நீதிபதிகள் உட்பட ஒட்டுமொத்த மக்களின் விருப்பத்திற்கும் எதிராக அரசாங்கம் தன்னிச்சையாக அரசியலமைப்புத் திருத்தங்களைக் கொண்டுவந்து அதிகாரத்தைத் தக்கவைக்க நினைத்தால் அது பெரும் தவறாகும்.</p><p>வரலாற்றில் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்ட அரசாங்கங்களுக்கு நேர்ந்த கதியைத் தற்போதைய ஆட்சியாளர்கள் நினைவில் கொள்ள வேண்டும்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0c721733-246d-48aa-9399-9ed8c1cbffc1/26-6a69c223dbb40.webp' /></p><p>பாதாள உலகக் குழுக்களின் அச்சுறுத்தலைக் காரணம் காட்டி கலாச்சாரப் பெரஹராக்களைத் தீர்மானிக்கக் கூடாது. </p><p>

விடுதலைபுலிகள் மற்றும் ஜே.வி.பி அச்சுறுத்தல்கள் மற்றும் குண்டுவெடிப்புகளுக்கு மத்தியிலும் வரலாற்று ரீதியாகத் தலதா பெரஹரா மற்றும் கதிர்காம பெரஹராக்கள் பாதுகாப்பாக நடாத்தப்பட்டன.</p><p> </p><p></p><h2>எதிர்காலக் கூட்டணிகள்&nbsp;</h2><p>எனவே, ஊர்வலத்தில் பங்கேற்கும் நடனக் கலைஞர்கள், யானைகள், நிலமேக்கள் மற்றும் பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது அரசாங்கத்தின் பொறுப்பாகும்.
</p><p>
நாங்கள் மறைமுக அரசியல் செய்யமாட்டோம், எதிர்காலக் கூட்டணிகள் குறித்து யாருடனாவது பேச்சுவார்த்தை நடத்தினால் அதை வெளிப்படையாகவே செய்வோம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/67c00890-fbef-4100-b14b-29590184baba/26-6a69c2233ad92.webp' /></p><p>

தனிநபர்களின் தேவைகளுக்காக அன்றி, நாட்டின் மற்றும் மக்களின் நலன்களுக்காக மட்டுமே கூட்டணிகள் அமைக்கப்படும்.
</p><p>
கடந்த காலத்தில் பல்வேறு காரணங்களால் பிரிந்து சென்றவர்களையும், புதிதாக இணைந்தவர்களையும் பாதுகாத்து நாட்டின் சவால்களுக்கு முகங்கொடுக்கக்கூடிய வலுவானதொரு அரசியல் சக்தியைக் கட்டியெழுப்புவதே எனது முதன்மைப் பொறுப்பாகும்” என அவர் தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-29T09:53:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[இன்று உருவாகும் 3 ராஜயோகங்கள்.., பணக்காரராக மாறப்போகும் 3 ராசிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/3-zodiac-get-money-due-to-3-rajyoga-formed-1785318479"></link>
            <id>https://news.lankasri.com/article/3-zodiac-get-money-due-to-3-rajyoga-formed-1785318479</id>
            <summary type="text">இந்த ஆண்டின் குரு பூர்ணிமா ஜூலை 29ஆம் திகதியான இன்று வருகிறது. 

இந்நாளில் சூரியனும், புதனும் சேர்ந்து புதாதித்ய ராஜயோகத்தை உருவாக்குகின்றன. 

அதோ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்த ஆண்டின் குரு பூர்ணிமா ஜூலை 29ஆம் திகதியான இன்று வருகிறது. </p><p>

இந்நாளில் சூரியனும், புதனும் சேர்ந்து புதாதித்ய ராஜயோகத்தை உருவாக்குகின்றன. </p><p>

அதோடு குரு பகவான் தனது உச்ச ராசியான கடக ராசியில் இருப்பதால் ஹன்ஸ் ராஜயோகம் உருவாகியுள்ளது.</p><p> </p><p></p><p>அதுமட்டுமின்றி, சனியின் நிலையால் சச ராஜயோகமும் உருவாகியுள்ளது. </p><p>

இப்படி இந்த 3 ராஜயோகங்களும் குரு பூர்ணிமா நாளில் சுமார் 56 ஆண்டுகளுக்கு பின் உருவாகிறது.
</p><p>
அந்தவகையில், இன்று ஒரே நாளில் உருவாகும் 3 ராஜயோகங்களால் குறிப்பிட்ட 3 ராசிகள் நற்பலன்களை பெறப்போகின்றனர்.</p><h2>ரிஷபம் </h2><ul><li>

திட்டமிட்ட வேலைகள் வெற்றிகரமாக முடியும்.</li><li> தொழிலதிபர்களுக்கு முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்பு கிடைக்கும். </li><li>புதிய முதலீடுகளுக்கு இக்காலம் சாதகமாக இருக்கும்.</li><li> உயர் அதிகாரிகளிடம் பாராட்டுக்களைப் பெறுவீர்கள்.</li><li> சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கும்.</li></ul><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/034f3262-823a-41ce-8a6b-c9f13c511e4f/26-6a69cc51df646.webp' /></p><p>
</p><h2>
கும்பம்</h2><ul><li> 

வேலையில் இருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும்.</li><li> இக்காலத்தில் பெரிய வெற்றியைக் காணலாம். </li><li>வருமானத்தில் இருந்த தடைகள் நீங்கும்.</li><li> பல புதிய வழிகளில் இருந்து பண வரவு அதிகரிக்கும். </li><li>தொழிலில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள்.</li></ul><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9a6df11c-82da-4dd4-968d-54055897eca0/26-6a69cc528d77f.webp' /></p><h2>மகரம் </h2><ul><li>

கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும்.</li><li> நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும்.
</li><li>முதலீடுகளில் இருந்து நல்ல வருமானம் கிடைக்கும். </li><li>
பணியிடத்தில் வேலைகளை வெற்றிகரமாக செய்வீர்கள்.</li><li> அலுவலகத்தில் பாராட்டைப் பெறுவீர்கள். </li><li>நிதி நிலை வலுவடையும்.&nbsp; &nbsp;&nbsp;</li></ul><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/21770857-ba9b-4d3f-83ab-7cf026626c4f/26-6a69cc533ab24.webp' /></p><p>இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-29T09:49:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈராக் மீது அமெரிக்க - சவூதி வான்வழித் தாக்குதல்; மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/u-s-and-saudi-arabia-strike-iran-backed-in-iraq-1785303129"></link>
            <id>https://canadamirror.com/article/u-s-and-saudi-arabia-strike-iran-backed-in-iraq-1785303129</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;ஈராக்கில் உள்ள,ஈரான் ஆதரவு இலக்குகள் மீது வான்வழித் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டதாக அமெரிக்க மத்திய கட்டளை பிரிவு தெரிவித்துள்ளது.

கடந...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;ஈராக்கில் உள்ள,ஈரான் ஆதரவு இலக்குகள் மீது வான்வழித் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டதாக அமெரிக்க மத்திய கட்டளை பிரிவு தெரிவித்துள்ளது.
</p><p>
கடந்த 72 மணித்தியாலங்களில் அமெரிக்கப் படைகள் மற்றும் சவூதி எரிசக்தி உட்கட்டமைப்புகளை இலக்காகக் கொண்டு, ஈரான் புரட்சிகரக் காவல்படை 30 க்கும் மேற்பட்ட வான்வழி தாக்குதல்களை நடத்தி இருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3796d8ed-8e84-489f-98c4-98d2abf4eea0/26-6a69905b730d7.webp' /></p><p>
</p><p>
இந் நிலையில் அடந்த தாக்குதல்களுக்கு பதிலடியாக, ,ஈரான் ஆதரவு இலக்குகள் மீது வான்வழித் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டதாக அமெரிக்கா கூறியுள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-29T09:45:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[எரிபொருள் விலைத்திருத்தம் தொடர்பில் வெளியான அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/fuel-price-cut-amid-global-oil-decline-cpc-1785312851"></link>
            <id>https://ibctamil.com/article/fuel-price-cut-amid-global-oil-decline-cpc-1785312851</id>
            <summary type="text">உலக சந்தையில் குறைந்து வரும் கச்சா எண்ணெய் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட எரிபொருள் விலைகளின் பலன், அடுத்த எரிபொருள் விலை திருத்தத்தின் போது பொதுமக்களுக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>உலக சந்தையில் குறைந்து வரும் கச்சா எண்ணெய் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட எரிபொருள் விலைகளின் பலன், அடுத்த எரிபொருள் விலை திருத்தத்தின் போது பொதுமக்களுக்கு வழங்கப்படும் என இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.</p><p>

அடுத்த எரிபொருள் விலை திருத்தம் நாளை மறுநாள் (31) நடைபெற உள்ளதாகவும் பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் குறிப்பிட்டுள்ளது.</p><p>

தற்போது, ​​பிரித்தானிய சந்தையில் ஒரு பரல் பிரென்ட் ரக கச்சா எண்ணெயின் விலை 86.66 அமெரிக்க டொலராகவும் அமெரிக்க சந்தையில் ஒரு பரல் கச்சா எண்ணெயின் விலை 81.73 அமெரிக்க டொலராகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது.</p><p></p><h2>கச்சா எண்ணெய் விலை</h2><p>
</p><p>
கடந்த சில வாரங்களாக உலக சந்தை எரிபொருள் விலைகள் ஏற்ற இறக்கத்துடன் இருந்ததாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் சுட்டிக்காட்டியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9130b366-d86b-4a57-9e89-0566f14b1e2a/26-6a69c9fdaa7e6.webp' /></p><p>சமீபத்திய வாரங்களில் சர்வதேச சந்தையில் எரிபொருள் விலைகள் மிகவும் நிலையற்றதாக இருந்து வருவதாகவும், கச்சா எண்ணெய் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலியப் பொருட்கள் இரண்டிலும் அவ்வப்போது ஏற்ற இறக்கங்கள் காணப்படுவதாகவும் கூட்டுத்தாபனம் குறிப்பிட்டது. </p><p>இத்தகைய நகர்வுகள் இலங்கையின் எரிபொருள் இறக்குமதிச் செலவுகளில் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்துவதால், நிலவும் உலகளாவிய நிலைமைகளைப் பிரதிபலிக்கும் வகையில் மாதாந்த அல்லது அவ்வப்போது உள்நாட்டு விலை திருத்தங்கள் அவசியமாகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-29T09:44:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[சீனாவின் புதிய மனிதவடிவ ரோபோக்களைத் தடை செய்த ட்ரம்ப் நிர்வாகம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/trump-bans-chinese-humanoid-1785318309"></link>
            <id>https://news.lankasri.com/article/trump-bans-chinese-humanoid-1785318309</id>
            <summary type="text">அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாகக் கூறி, வெளிநாடுகளில் தயாரிக்கப்பட்ட புதிய மனிதவடிவ ரோபோக்களை (humanoid robots) இறக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாகக் கூறி, வெளிநாடுகளில் தயாரிக்கப்பட்ட புதிய மனிதவடிவ ரோபோக்களை (humanoid robots) இறக்குமதி செய்வதற்குத் தடை விதிப்பதாக ட்ரம்ப் நிர்வாகம் அறிவித்துள்ளது.</p><h2>ஆதாரமற்ற காரணங்கள்</h2><p>
</p><p>ட்ரம்ப் நிர்வாகத்தின் இந்த நகர்வு, மனித உருவம் கொண்ட மற்றும் நான்கு கால்களைக் கொண்ட இயந்திரங்கள் உள்ளிட்ட மேம்பட்ட ரோபோக்களுக்குப் பொருந்தும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ca452a26-1e12-4234-91ee-141a3653ec90/26-6a69cd4e1437f.webp' /></p><p> </p><p>இந்த மனிதவடிவ ரோபோக்களில் பல சீனாவில் தயாரிக்கப்படுகின்றன; அந்நாடு ரோபோட்டிக்ஸ் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) ஆகிய துறைகளை மேம்படுத்துவதில் அமெரிக்காவுடன் போட்டியிட்டு வருகிறது. </p><p>அமெரிக்கப் பொருளாதாரத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடியவை எனக் கருதப்படும் பவர் இன்வெர்ட்டர்களின் இறக்குமதியையும் ஃபெடரல் கம்யூனிகேஷன்ஸ் கமிஷன் (FCC) தடை செய்துள்ளது. </p><p>இதனிடையே, வர்த்தக விவகாரங்களை அமெரிக்கா அரசியல்மயமாக்குவதையும், ஆதாரமற்ற காரணங்களின் அடிப்படையில் தடைகளை விதிப்பதையும் சீனா நீண்டகாலமாக எதிர்த்து வருவதாக அமெரிக்காவில் உள்ள சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.</p><p></p><p> </p><p>இந்தத் தடை, புதிதாகத் தயாரிக்கப்பட்ட வெளிநாட்டு மேம்பட்ட ரோபோட்டிக் சாதனங்கள் மற்றும் பவர் இன்வெர்ட்டர்களுக்குப் பொருந்தும்; அதேவேளையில், FCC-யால் ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்ட தற்போதுள்ள எந்தவொரு மொடலின் விற்பனையையோ அல்லது இறக்குமதியையோ இது தடுக்காது. </p><p>மேலும், வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட இன்வெர்ட்டர்களின் பயன்பாடு, வெளிநாட்டு நிறுவனங்கள் அவற்றை முடக்குவதற்கும், தரவுகளைத் திருடுவதற்கும், வெளிநாட்டு அரசாங்கத் தரப்பினர் தொலைநிலை அணுகல் மற்றும் கண்காணிப்பை எளிதாக்குவதற்கும், அல்லது இணையவழித் தாக்குதல் மூலம் வேறு விதங்களில் தவறாகப் பயன்படுத்தப்படுவதற்கும் வழிவகுக்கக்கூடும் என்ற கவலைகளை FCC சுட்டிக்காட்டியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/be142c57-584c-4dfa-aa73-eebe90c4bb42/26-6a69cd4d2a410.webp' /></p><p> </p><p>மட்டுமின்றி, அமெரிக்காவிற்கு வெளியே தயாரிக்கப்பட்ட ரோபோக்களைப் பயன்படுத்துவது, தீய நோக்கமுடையவர்கள் அமெரிக்கர்களைக் கண்காணிக்கவோ, வெளிநாட்டு உளவு அமைப்புகளின் திறன்களை மேம்படுத்தவோ அல்லது அந்த ரோபோக்களைத் தொலைவிலிருந்து தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவரவோ வழிவகுக்கக்கூடும் என்றும் FCC மேலும் குறிப்பிட்டுள்ளது. </p><p>உலகின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதாரமான சீனாவுடனான வர்த்தகச் சமநிலையின்மையைச் சரிசெய்ய ட்ரம்ப் நிர்வாகம் முயற்சிக்கும் நிலையில், சீனாவின் ஏற்றுமதிகள் அமெரிக்காவின் தீவிரக் கண்காணிப்புக்கு உள்ளாகியுள்ளன.</p><h2>தடைகளை எதிர்கொள்ளக்கூடும்</h2><p> </p><p>மின்சார வாகனங்களை உலகிலேயே அதிக அளவில் ஏற்றுமதி செய்யும் நாடாகத் திகழ்ந்த போதிலும், கடுமையான இறக்குமதி வரி காரணமாக அமெரிக்கச் சந்தையில் சீனாவால் நுழைய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. </p><p>இதனிடையே, அமெரிக்காவின் அறிவுசார் சொத்துக்களைத் திருடியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளின் பேரில், சீன செயற்கை நுண்ணறிவு (AI) நிறுவனங்கள் தடைகளை எதிர்கொள்ளக்கூடும் என்றும் அமெரிக்க நிதியமைச்சர் ஸ்காட் பெசென்ட் எச்சரித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/018c834b-51b4-4476-b5fb-c8feca0c18dc/26-6a69cd4ebfca1.webp' /></p><p> </p><p>இதற்குப் பதிலளிக்கும் விதமாக, சீனாவில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் மேம்படுத்தப்பட்டது என்பது சொந்த அர்ப்பணிப்பு மற்றும் முயற்சியின் விளைவு, அத்துடன் சர்வதேச ஒத்துழைப்பின் பலன் என்று சீன அரசாங்கம் கூறியுள்ளது. </p><p>தொழிற்சாலைகள் மற்றும் வீடுகள் உள்ளிட்ட பல்வேறு சூழல்களில் பயன்படுத்துவதற்காக, சீனத் தொழில்நுட்ப நிறுவனங்கள் மனிதவடிவ ரோபோக்களை (humanoid robots) தீவிரமாக உருவாக்கி வருவது குறிப்பிடத்தக்கது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-29T09:43:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[நடிகை மிருணாள் தாகூரின் அசத்தலான போட்டோஷூட்.. கவனத்தை ஈர்க்கும் புகைப்படங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/pan-indian-star-mrunal-thakur-latest-photoshoot-1785309863"></link>
            <id>https://cineulagam.com/article/pan-indian-star-mrunal-thakur-latest-photoshoot-1785309863</id>
            <summary type="text">பான்-இந்தியன் ஸ்டாராக இருக்கும் மிருணாள் தாகூர் தனது சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் பிரபலம் ஆவார். குறிப்பாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்கள...</summary>
            <content type="html"><![CDATA[<p>பான்-இந்தியன் ஸ்டாராக இருக்கும் மிருணாள் தாகூர் தனது சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் பிரபலம் ஆவார். குறிப்பாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுடன் இணைப்பில் இருப்பதற்காக, தொடர்ந்து தனது ரீசன்ட் புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார். </p><p>அந்த வகையில், தற்போது அசத்தலான போட்டோஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். நடிகை மிருணாள் தாகூரின் இந்த சமீபத்திய போட்டோஷூட் ரசிகர்களிடையே கவனத்தை பெற்றுள்ளது. இதோ அந்த போட்டோஷூட்:</p>]]></content>
            <updated>2026-07-29T09:40:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[பள்ளி மாணவர்களுக்கு வாரம் ஒரு நாள் சிக்கன் பிரியாணி வழங்க பரிந்துரை - அமைச்சர் ராஜ்மோகன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/chicken-biryani-may-soon-be-part-of-midday-meals-1785316531"></link>
            <id>https://ibctamilnadu.com/article/chicken-biryani-may-soon-be-part-of-midday-meals-1785316531</id>
            <summary type="text">தனியார் பள்ளிகள் தங்களது கட்டணத்தை குறைக்க முன்வராவிட்டால், கட்டண நிர்ணயக் குழுவை மறுசீரமைப்பது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித் துற...</summary>
            <content type="html"><![CDATA[<p>தனியார் பள்ளிகள் தங்களது கட்டணத்தை குறைக்க முன்வராவிட்டால், கட்டண நிர்ணயக் குழுவை மறுசீரமைப்பது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.</p><p>

சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகக் கூட்டரங்கில் பள்ளிக்கல்வித் துறை சார்பில் நடைபெற்ற கலந்தாய்வுக் கூட்டத்தில், ஆசிரியர் சங்கங்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர் சங்கங்களின் பிரதிநிதிகளுடன் அமைச்சர் கலந்துரையாடினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ccb5e796-117b-49e5-9464-a25d59102b27/26-6a69c9fcdd1e2.webp' /></p><p> இதில் ஆசிரியர்களின் பல்வேறு கோரிக்கைகள் மற்றும் கருத்துகளை அவர் கேட்டறிந்தார்.

அப்போது பேசிய அமைச்சர்,</p><h2>கல்வித் துறையில் புதிய முயற்சிகள்</h2><p> </p><p>முதலமைச்சரின் அனுமதியைப் பெற்று ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என உறுதியளித்தார். </p><p>மேலும், ஆசிரியர் சங்கங்களின் மனுக்கள் மற்றும் கோரிக்கைகளை கண்காணிக்கும் வகையில் பிரத்யேக மொபைல் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அதன் மூலம் மனுக்களின் நிலை மற்றும் நடவடிக்கைகள் தொடர்ந்து கண்காணிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2604d721-4b5d-4a12-adac-efeda1769d21/26-6a69c9fd8c1b7.webp' /></p><p>
</p><p>
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ராஜ்மோகன், மாணவர்களின் சத்துணவு திட்டத்தில் புதிய முயற்சியாக வாரம் ஒரு நாள் சிக்கன் பிரியாணி வழங்குவது குறித்து முதலமைச்சரிடம் பரிந்துரை செய்துள்ளதாக தெரிவித்தார்.</p><p> மதிய உணவு திட்டத்தை காமராஜர் தொடங்கியதாகவும், அதனை எம்.ஜி.ஆர் சத்துணவு திட்டமாக விரிவுபடுத்தியதாகவும், கலைஞர் அதில் முட்டையை சேர்த்ததாகவும் குறிப்பிட்ட அவர், அதே வரிசையில் மாணவர்களுக்கு பிரியாணி வழங்கும் திட்டம் பரிசீலனையில் உள்ளதாக கூறினார்.
</p><p>
மேலும், அண்ணாமலை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் தமிழ் தாய் வாழ்த்து தொடர்பாக எழுந்த விவகாரத்தில், தங்களது அரசு தமிழ் தாய் வாழ்த்துக்கு எப்போதும் முன்னுரிமை அளித்து வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.</p>]]></content>
            <updated>2026-07-29T09:39:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் போதைக்கு அடிமையான இளைஞனுக்கு நேர்ந்த அவலம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/drug-addicted-youth-dies-in-jaffna-1785317066"></link>
            <id>https://tamilwin.com/article/drug-addicted-youth-dies-in-jaffna-1785317066</id>
            <summary type="text">யாழில் போதைக்கு அடிமையான இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.குறித்த சம்பவமானது நேற்றையதினம்(28) இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணம் - சிராம்பியடியை சேர்ந்த 26 வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழில் போதைக்கு அடிமையான இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.</p><p>குறித்த சம்பவமானது நேற்றையதினம்(28) இடம்பெற்றுள்ளது.</p><p>
யாழ்ப்பாணம் - சிராம்பியடியை சேர்ந்த 26 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு
உயிரிழந்துள்ளார்.</p><p></p><h2>உயிரிழப்பு</h2><p>
</p><p>
இது குறித்து மேலும் தெரியவருகையில்,

இவர் கடந்த 3 வருடங்களாக போதைவஸ்துக்கு அடிமையாக இருந்ததாக
தெரிவிக்கப்படுகிறது. </p><p>இந்நிலையில் நேற்றுமுன்தினம்(27.7.2026) காலை மலசலகூடம் சென்று
அங்கே மயக்கமுற்றுள்ளார்.

பின்னர் அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/27a193f6-2b20-4356-81a6-c7002d388cfe/26-6a69c9aab2cb6.webp' /></p><p>
</p><p>இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்றையதினம் உயிரிழந்துள்ளார்.
</p><p>
அதிகளவான போதைவஸ்து பாவனை காரணமாக மரணம் சம்பவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-29T09:37:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுரேஷ் சலே மனுவில் மறைக்கப்பட்ட உண்மைகள் : நீதிமன்றில் வெளிப்படுத்தப்பட்ட தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/suresh-saleh-not-disclose-all-the-facts-in-court-1785311428"></link>
            <id>https://tamilwin.com/article/suresh-saleh-not-disclose-all-the-facts-in-court-1785311428</id>
            <summary type="text">முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பான உண்மைகள் எதனையும் மனுதாரரான சுரேஷ் சலே நீதிமன்றில் சமர்ப்பிக்காமல் மறைத்துள்ளார் என பிரதி சொலிசிட்டர் ஜெனர...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பான உண்மைகள் எதனையும் மனுதாரரான சுரேஷ் சலே நீதிமன்றில் சமர்ப்பிக்காமல் மறைத்துள்ளார் என பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சுஹர்ஷி ஹேரத் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். </p><p>பேராணை மனுவொன்றின் மூலம் நிவாரணம் பெற வேண்டுமாயின் அனைத்து உண்மைகளையும் நீதிமன்றில் வெளிப்படுத்த வேண்டும். அவர் தூய்மையான கரங்களுடன் நீதிமன்றத்திற்கு வரவில்லை. இவ்வாறானதொரு பின்னணியில் ரிட் மனுவை சட்டத்தின் முன் எவ்வாறு முன்னெடுத்துச் செல்ல முடியும்? என பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சுஹர்ஷி ஹேரத், மன்றில் கேள்வியெழுப்பியுள்ளார்.
</p><p></p><h2>சாரா ஜாஸ்மின்&nbsp;இந்தியாவுக்கு தப்பிச் செல்ல</h2><p>
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கு அமைய, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தன்னை கைதுசெய்து தடுத்து வைத்துள்ளமையை சவாலுக்கு உட்படுத்தி, அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே தாக்கல் செய்த ரிட் மனு மேல்முறையீட்டு நீதிமன்றில் நேற்று(28) மீண்டும் பரிசீலிக்கப்பட்டது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5da76883-fcb6-4937-abc8-0a151c79686c/26-6a69b831eb8ce.webp' /></p><p>
மேல்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் நீதியரசர் ரொஹான்த அபேசூரிய மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோரைக் கொண்ட நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இம்மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
</p><p>

 குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் ஷானி அபேசேகர உள்ளிட்ட பிரதிவாதிகள் சார்பில் மன்றில் முன்னிலையான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சுஹர்ஷி ஹேரத், 'உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கு மனுதாரரான சுரேஷ் சலே எவ்வாறு இடையூறு விளைவித்தார் என்பது குறித்து, அன்றைய காலகட்டத்தில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பிரதிப் பொலிஸ் மா அதிபராகக் கடமையாற்றிய பிரசாத் ரணசிங்க வழங்கிய வாக்குமூலத்தில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p>

2019ஆம் ஆண்டு சாய்ந்தமருது பகுதியில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 'சாரா ஜாஸ்மின்' என்ற பெண் உயிரிழக்கவில்லை என்றும், அவர் இந்தியாவுக்குத் தப்பிச் சென்றுவிட்டார் என்றும் பேச்சுக்கள் எழுந்தன. </p><h2>சுரேஷ் சலேவின் நிலைப்பாடு</h2><p>இது குறித்து குற்றப் புலனாய்வுத் திணைக்களம் சரியாக விசாரணை நடத்தவில்லை என சுரேஷ் சாலே விசாரணைப் மீளாய்வுக் கூட்டங்களில் குற்றஞ்சாட்டிப் பேசினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cab92bf5-c4e7-42c7-b86e-95c27012877f/26-6a69b832bc5db.webp' /></p><p>சாரா ஜாஸ்மின் அந்த இடத்திலேயே உயிரிழந்தார் என்றும், DNA பரிசோதனைகள் சரியாக நடத்தப்படவில்லை என்றும் சுரேஷ் சலே பல சந்தர்ப்பங்களில் குற்றஞ்சாட்டியதாக பிரதிப் பொலிஸ் மா அதிபரின் வாக்குமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் தெரிவித்தார்.</p><p> டி.என்.எ பரிசோதனையை மீண்டும் நடத்த வேண்டும் என்பதே சுரேஷ் சலேவின் நிலைப்பாடாக இருந்ததுடன், அன்றைய ஜனாதிபதி மூலம் அந்தப் பணியை அவர் நிறைவேற்றிக் கொண்டார் என்பதும் பிரதிப் பொலிஸ் மா அதிபரின் வாக்குமூலத்தில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p></p><p></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/bvS71qDw2ww" width="640" height="360" class="note-video-clip"></iframe></p>]]></content>
            <updated>2026-07-29T09:35:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் உடனடி இடைநிறுத்தம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sub-inspector-of-police-immediately-suspended-1785317672"></link>
            <id>https://jvpnews.com/article/sub-inspector-of-police-immediately-suspended-1785317672</id>
            <summary type="text">&amp;nbsp; வத்துபிட்டிவல முதலீட்டு வலய பொலிஸ் காவல் நிலையத்தில் கடமையாற்றி வந்த உப பொலிஸ் பரிசோதகர் ஒருவரின் பணி உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; வத்துபிட்டிவல முதலீட்டு வலய பொலிஸ் காவல் நிலையத்தில் கடமையாற்றி வந்த உப பொலிஸ் பரிசோதகர் ஒருவரின் பணி உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை பொலிஸ் தெரிவித்துள்ளது.
</p><p>
கடந்த ஜூலை 23 ஆம் திகதி காலை சுமார் 10.45 மணியளவில், வத்துபிட்டிவல வைத்தியசாலைக்கு அருகிலுள்ள தனியார் நிறுவனம் ஒன்றின் முன்பாக உத்தியோகபூர்வ சீருடையில் கடமையாற்றிக் கொண்டிருந்த கு அதிகாரி, </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/25073e30-9359-4624-b347-b247abbf42b3/26-6a69c929ec25e.webp' /></p><h2>பொதுமக்களுடன் மிரட்டும் வகையில் தர்க்கம்</h2><p>கடமைக்கு பொருத்தமற்ற வகையில் நடந்து கொண்டு பொதுமக்களுடன் மிரட்டும் வகையிலான வார்த்தைப் பிரயோகங்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
 சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், குறித்த அதிகாரியின் செயற்பாடு இலங்கை பொலிஸின் மற்றும் முழு அரச சேவையின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தக்கூடியதாகக் கருதப்பட்டதால், நிறுவனச் சட்டத் தொகுப்பின் (Establishments Code) தொடர்புடைய விதிகளின் கீழ் அவரது கடமைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.</p><p></p><p>
</p><p>
மேலும், இத்தகைய செயற்பாடுகள் ஏனைய அதிகாரிகளுக்கு தவறான முன்னுதாரணமாக அமையக்கூடும் என்றும், அவரை தொடர்ந்தும் சேவையில் வைத்திருப்பது பொலிஸ் சேவையின் கண்ணியத்திற்கும் நற்பெயருக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் பொலிஸ் தெரிவித்துள்ளது.
</p><p>
பொதுமக்களின் நம்பிக்கையையும் மரியாதையையும் பெற்ற ஒழுக்கமிக்க பொலிஸ் சேவையை நிலைநிறுத்துவதே தமது அடிப்படை நோக்கம் என வலியுறுத்தியுள்ள இலங்கை பொலிஸ், சட்டத்தையும் ஒழுக்கத்தையும் பாதுகாக்கப் பொறுப்பேற்றுள்ள அதிகாரிகளின் ஒழுங்கற்ற அல்லது பொருத்தமற்ற நடத்தைகள் எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது எனவும் குறிப்பிட்டுள்ளது.</p><p></p><p>
</p><p>
பொதுமக்களின் பாதுகாப்பையும் உரிமைகளையும் உறுதிப்படுத்தும் வகையில் நீதியுடனும் பொறுப்புடனும் செயல்படுவதற்கு இலங்கை பொலிஸ் உறுதிபூண்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp; &nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-29T09:32:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[முன்னாள் காதலிக்கு 860 கோடி சொத்து எழுதிய எப்ஸ்டீன்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/jeffrey-epstein-assets-860-crore-ex-girlfrien-1785317171"></link>
            <id>https://canadamirror.com/article/jeffrey-epstein-assets-860-crore-ex-girlfrien-1785317171</id>
            <summary type="text">&amp;nbsp; ஜெஃப்ரி எப்ஸ்டீன் (Jeffrey Epstein) தனது முன்னாள் காதலியாக கூறப்படும் பல் மருத்துவர் கரீனா ஷூலியாக் என்பவருக்கு 860 கோடி சொத்து எழுதி வைத்துள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; ஜெஃப்ரி எப்ஸ்டீன் (Jeffrey Epstein) தனது முன்னாள் காதலியாக கூறப்படும் பல் மருத்துவர் கரீனா ஷூலியாக் என்பவருக்கு 860 கோடி சொத்து எழுதி வைத்துள்ளமை தற்போது பெசுபொருளாகியுள்ளது.
</p><p>
சில வருடங்களுக்கு முன்பு அமெரிக்க சிறையில் இருந்த போது ஜெஃப்ரி எப்ஸ்டீன் மர்மமான முறையில் இறந்து போனார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/73fb806a-823a-4464-bbaa-1b12f3bcdcb1/26-6a69c735174fc.webp' /></p><h2>பல நாடுகளிலும் எப்ஸ்டீன் ஃபைல்ஸ்&nbsp; அதிர்வலை&nbsp;&nbsp;</h2><p> 

அவரது இறப்பின் பின் பல்வேறு உலகை உலுக்கும் பல்வேரு தகவல்&nbsp; வெளியாகி இருந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு சமூக வலைதளங்களில் அதிகமாக உச்சரிக்கப்பட்ட பெயர் எப்ஸ்டீன் ஃபைல்ஸ்&nbsp; இந்த விவகாரம் அமெரிக்காவில் மட்டுமல்லாது பல நாடுகளிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
</p><p>
அதற்கு காரணம், அமெரிக்காவில் உள்ள பெரும் பணக்காரர்களை தன் வலைக்குள் கொண்டு வந்து கடலுக்கு நடுவில் ஒரு தனித்தீவை உருவாக்கி அங்கு உல்லாச விடுதிகளை கட்டி அங்கு சிறுமிகள் முதல் இளம்பெண்கள் வரை கொண்டு வந்து பணக்காரர்களுடன் உல்லாசமாக இருக்க வைத்து அது தொடர்பான வழக்கில் சிக்கியவர்தான் இந்த எப்ஸ்டீன் (Jeffrey Epstein).</p><p>



Epstein தொடர்பான ஆவணங்கள் Epstein Files என்கிற பெயரில் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் வெளியாகி வந்தது. 

அதில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் ஆகியோர்களின் பெயர்கள் அடிபட்டதோடு, அது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களும் வெளியானது.</p><p>

ஆனால், எப்ஸ்டீனூடன் நட்பாக பழகியதாக மட்டுமே அவர்கள் சொன்னர்கல். </p><p> இந்நிலையில்தான் அமெரிக்க பாலியல் குற்றவாளி எப்ஸ்டீனின் உயில் தொடர்பான புதிய ஆவணங்கள் தற்போது வெளியாகியிருக்கிறது. அதில் அவர் முன்னாள் காதலியாக கூறப்படும் பல் மருத்துவர் கரீனா ஷூலியாக் என்பவருக்கு சுமார் ரூ.860 கோடி மதிப்பிலான சொத்தும், 33 காரட் வைர மோதிரமும் கிடைக்கவிருப்பதாக சொல்லப்படுகிறது.</p>]]></content>
            <updated>2026-07-29T09:24:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Farook Sihan</name>
            </author>
            <title type="text"><![CDATA[அம்பாறை- ரீகல் சந்தியில் விபத்து: பெண் படுகாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/accident-at-ampara-regal-junction-woman-injured-1785314097"></link>
            <id>https://tamilwin.com/article/accident-at-ampara-regal-junction-woman-injured-1785314097</id>
            <summary type="text">அம்பாறை- ரீகல் சந்தியில்&amp;nbsp; இடம்பெற்ற கோர வீதி விபத்தில் பெண்
ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டுள்ளார்.குறித்த விபத்தா...</summary>
            <content type="html"><![CDATA[<p>அம்பாறை- ரீகல் சந்தியில்&nbsp; இடம்பெற்ற கோர வீதி விபத்தில் பெண்
ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p><p>குறித்த விபத்தானது&nbsp;நேற்று(28) மாலை இடம்பெற்றுள்ளது.</p><p>
</p><p>நேற்று மாலை ரீகல் தெரு சந்திப்புப் பகுதியில் அதிவேகமாக வந்த வாகனம் ஒன்று
திடீரென கட்டுப்பாட்டை இழந்து வீதியோரம் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார்
சைக்கிள் மற்றும் கார் மீது பலமாக மோதியுள்ளது.</p><p></p><h2>மேலதிக விசாரணை</h2><p>

இதன்போது, அந்தப் பகுதியில் நின்றுகொண்டிருந்த பெண் ஒருவர் மீதும் வாகனம்
மோதியதில் அவர் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தார்.</p><p> அத்துடன்,
வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த வான் ஒன்றும் முச்சக்கர வண்டி ஒன்றும் இந்த
மோதலில் பலத்த சேதமடைந்துள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1764585b-3f9e-4593-a1d1-1275a3d170fb/26-6a69bdf6b3e13.webp' /></p><p>

காயமடைந்த பெண் உடனடியாக மீட்கப்பட்டு அம்பாறை பொது மருத்துவமனைக்குக் கொண்டு
செல்லப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.</p><p>இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-29T09:19:04+00:00</updated>
        </entry>
    </feed>
