<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-08-05T09:36:02+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ட்ரம்ப் பாதுகாப்பு கேள்விக்குறி., கோல்ஃப் மைதானத்தில் ஆயுதத்துடன் நுழைந்த நபர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/armed-man-arrested-at-trump-golf-course-1785922546"></link>
            <id>https://news.lankasri.com/article/armed-man-arrested-at-trump-golf-course-1785922546</id>
            <summary type="text">ட்ரம்ப் கோல்ஃப் மைதானத்தில் ஆயுதத்துடன் நுழைந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோல்ஃப் மைதானத்தில் நிதி திரட்டும் விருந்து

அமெரிக்க ஜனாதிபதி டொனால்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ட்ரம்ப் கோல்ஃப் மைதானத்தில் ஆயுதத்துடன் நுழைந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><h2>கோல்ஃப் மைதானத்தில் நிதி திரட்டும் விருந்து</h2><p>

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் கலிபோர்னியாவில் உள்ள ராஞ்சோ பாலோஸ் வெர்டெஸ் பகுதியில் அமைந்துள்ள அவரது சொந்த Trump National Golf Course-இல் நிதி திரட்டும் விருந்தில் பங்கேற்க இருந்தார். </p><p>

அதற்கு சற்று முன், அப்பகுதியில் ஆயுதத்துடன் நுழைந்த அந்த நபர் கைது செய்யப்பட்டார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/236e0b41-1308-4baf-8735-2d83b00f3491/26-6a7303f3c8c1a.webp' /></p><p>ஜீனின் ஜான் டேல் (38) என அடையாளம் காணப்பட்டுள்ள அந்த நபர், துப்பாக்கி மற்றும் சட்டவிரோத குண்டுகள் வைத்திருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
</p><p>
லாஸ் ஏஞ்சல்ஸ் ஷெரிஃப் துறை கூறியதாவது:

அந்த நபர் மைதானத்தில் சுற்றி நடந்து, புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் எடுத்து, பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனித்துக் கொண்டிருந்தார்.
</p><p>
அவரிடம் 16 குண்டுகள் கொண்ட ஹாலோ பாயிண்ட் குண்டுகள் மற்றும் ஏற்கனவே லோடு செய்யப்பட்ட துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது.

அவரது வாகனத்திலும் கூடுதல் ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.</p><p> பின்னர் அவரது வீட்டில் FBI மற்றும் LA கவுண்டி ஷெரிஃப் துறை சோதனை நடத்தியதில், சட்டவிரோதமாக மாற்றியமைக்கப்பட்ட ரைபிள், பிஸ்டல், உடற்கவசம் மற்றும் பல்வேறு குண்டுகள் கைப்பற்றப்பட்டன.</p><p></p><p>அதிகாரிகள் தெரிவித்ததாவது, “இந்த சம்பவம் சமூகத்திற்கு நேரடி அச்சுறுத்தலாக இல்லை. ஆனால், சந்தேகத்திற்கிடமான செயல்களை முன்கூட்டியே கண்டறிந்து நடவடிக்கை எடுப்பது மிக முக்கியம்” எனக் கூறினர்.
</p><p>
ட்ரம்ப், கலிபோர்னியாவில் நடைபெறும் குடியரசுக் கட்சி நிதி திரட்டும் விருந்தில் பங்கேற்க வந்துள்ளார். அங்கு அவர், கலிபோர்னியா ஆளுநர் கேவின் நியூசம் மீது கடுமையான விமர்சன உரையாற்ற உள்ளார்.</p><p>

இந்த சம்பவம், ட்ரம்ப் மீது கடந்த சில ஆண்டுகளில் நடந்த பல தாக்குதல் முயற்சிகளுக்குப் பிறகு, அவரது பாதுகாப்பு ஏற்பாடுகள் மீண்டும் கேள்விக்குறியாகியுள்ளது.&nbsp;&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-05T09:33:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[காட்டுத்தீயின் நடுவே கேட்ட வெடிச்சத்தம்: பிரான்சில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள வெடிகுண்டுகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/400-ww2-shells-in-france-village-amid-wildfire-1785922206"></link>
            <id>https://news.lankasri.com/article/400-ww2-shells-in-france-village-amid-wildfire-1785922206</id>
            <summary type="text">பிரான்சின் சில பகுதிகளில், காட்டுத்தீக்குப் பிறகு, நூற்றுக்கணக்கான இரண்டாம் உலகப்போர்க்கால வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.



பிரான்சில் கா...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரான்சின் சில பகுதிகளில், காட்டுத்தீக்குப் பிறகு, நூற்றுக்கணக்கான இரண்டாம் உலகப்போர்க்கால வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.</p><p>



பிரான்சில் காட்டுத்தீ பற்றியெரிந்துகொண்டிருந்தபோது, தீயின் நடுவே வெடிச்சத்தம் கேட்டதாக அதிகாரிகள் கூறியிருந்த நிலையில், நூற்றுக்கணக்கான இரண்டாம் உலகப்போர்க்கால வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள விடயம் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.</p><h3>காட்டுத்தீயின் நடுவே கேட்ட வெடிச்சத்தம்
</h3><p>
தென்மேற்கு பிரான்சிலுள்ள Le Porge என்னும் கிராமத்தில் காட்டுத்தீ எரிந்துகொண்டிருக்கும்போது வெடிச்சத்தம் கேட்டதாக வெடிகுண்டு நிபுணர்கள் தெரிவித்திருந்தார்கள்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3fa6ed11-2022-48c7-a9d2-50401ea84d2e/26-6a73029f5cc8c.webp' /></p><p>
இந்நிலையில், காட்டுத்தீக்குப் பின் வீடு திரும்பிய மக்கள், தீ எரிந்த இடத்தில் வெடிகுண்டுகள் கிடப்பதைக் கண்டு அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளார்கள்.</p><p>

உடனடியாக, மக்கள் அப்பகுதிக்கு வரமுடியாதபடி தடுப்புகளை ஏற்படுத்திய உள்ளூர் அதிகாரிகள், வெடிகுண்டு நிபுணர்களை வரவழைத்துள்ளார்கள்.&nbsp;</p><p></p><p>

வெடிகுண்டு நிபுணர்கள் அந்தப் பகுதியில் ஆய்வு மேற்கொண்டபோது, 400க்கும் மேற்பட்ட இரண்டாம் உலகப்போர்க்கால வெடிகுண்டுகளை அவர்கள் கண்டுபிடித்துள்ளார்கள்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/88b7ac89-0f29-4eca-90d9-a722f5e42c45/26-6a7302a01101e.webp' /></p><p>
பிரான்ஸ் ஜனாதிபதியான இமானுவல் மேக்ரான், இரண்டாம் உலகப்போருக்குப் பின் நாங்கள் எதிர்கொள்ளும் மிக பயங்கரமான விடயம் இந்த காட்டுத்தீதான் என கூறியிருந்த நிலையில், இரண்டாம் உலகப்போர்க்கால வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள விடயமும் நிகழ்ந்துள்ளது கவனம் ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-05T09:30:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவுக்கு கிளம்பும் ரேவதி... சாமுண்டீஸ்வரியின் சதிவலையில் சிக்குகிறாரா? - கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/karthigai-deepam-serial-today-episode-august-5-1785919748"></link>
            <id>https://cineulagam.com/article/karthigai-deepam-serial-today-episode-august-5-1785919748</id>
            <summary type="text">தமிழ் சின்னத்திரையில் Zee தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். நேற்றைய எபி...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழ் சின்னத்திரையில் Zee தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். நேற்றைய எபிசோடில் கார்த்திக் மற்றும் ரேவதி ஒன்றாக இருப்பதை சாமுண்டீஸ்வரி அறிந்த நிலையில், இன்று பரபரப்பான திருப்பங்கள் அரங்கேறுகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/45bea9a7-afc2-42f7-b98c-34c6462ce7a3/26-6a72f90963c43.webp' /></p><p>சாமுண்டீஸ்வரி, ரேவதியை கார்த்திக்கிடம் இருந்து நிரந்தரமாகப் பிரிக்க ஒரு ரகசிய திட்டத்தை தீட்டுகிறாள். இந்த சூழலில், வீட்டில் அனைவரும் ஒன்றாக இருக்கும் நேரத்தில், கனடாவில் வசிக்கும் தனது தோழி ஈஸ்வரியிடமிருந்து சாமுண்டீஸ்வரிக்கு தொலைபேசி அழைப்பு வருகிறது.
</p><p>தனது மகளின் திருமணத்திற்கு கண்டிப்பாக வர வேண்டும் என்று ஈஸ்வரி அழைப்பு விடுக்க, சாமுண்டீஸ்வரியும் வருவதாக உறுதியளிக்கிறாள். ஆனால் தனக்கு முக்கிய வேலை இருப்பதாக கூறி, வீட்டில் இருக்கும் யாரையாவது கனடாவுக்கு அனுப்ப முடிவு செய்கிறாள்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ee075056-7cda-4ec2-94bb-5041927a4f1b/26-6a72f908ac138.webp' /></p><p>இதைக் கேட்டதும் ஒவ்வொருவரும் பாஸ்போர்ட் இல்லை, பயணம் செய்ய முடியாது என்று காரணம் கூறுகின்றனர். அப்போது, **"என்னிடம் பாஸ்போர்ட்டும் இருக்கு, விசாவும் இருக்கு... நான் போயிட்டு வர்றேன்!"** என்று ரேவதி சொல்ல, சாமுண்டீஸ்வரியின் முகத்தில் மர்மமான மகிழ்ச்சி தெரிகிறது.</p><p>
</p><p>உடனே சந்திரகலாவிடம் இரண்டு டிக்கெட்டுகளை ஏற்பாடு செய்யச் சொல்கிறாள். ஒன்று உண்மையான டிக்கெட், மற்றொன்று அதேபோன்று இருக்கும் டூப்ளிகேட் டிக்கெட். இந்த திட்டத்தின் பின்னால் என்ன சதி இருக்கிறது என்ற கேள்வி எழுகிறது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/12aad664-954c-4dc1-a703-0670b61ff2ad/26-6a72f907eccc8.webp' /></p><p>மேலும், இந்த விஷயம் எந்தக் காரணத்திற்காகவும் கார்த்திக்குத் தெரியக்கூடாது என்று சாமுண்டீஸ்வரி எச்சரிக்கிறாள். ஆனால் எதிர்பாராத விதமாக, ரேவதி கனடா செல்லும் விஷயத்தை கார்த்திக்கே தெரிவித்து விடுகிறாள்.
</p><p>மறுபக்கம், சந்திரகலா சிவனாண்டியை சந்தித்து தனது திட்டத்தை விவரிக்கிறாள். சாமுண்டீஸ்வரியின் சதி வெற்றிபெறுமா? கனடா செல்லும் ரேவதி யாருடைய வலையில் சிக்கப் போகிறார்?</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1a2e3976-cc45-4865-a134-f5c1807c80b4/26-6a72f9073f69e.webp' /></p><p>பரபரப்பான திருப்பங்களுடன் அடுத்ததாக என்ன நடக்கப் போகிறது என்பதை காண, கார்த்திகை தீபம் சீரியலை இன்று இரவு 9 மணிக்கு Zee தமிழில் தவறாமல் காணுங்கள்!&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/m_VKsJM5gus" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-08-05T09:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thevanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சட்டவிரோத கசிப்பு உற்பத்தியில் ஈடுப்பட்ட நபர் கைது - பொலிஸார் தீவிர சோதனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/man-arrested-for-illegal-production-1785921774"></link>
            <id>https://tamilwin.com/article/man-arrested-for-illegal-production-1785921774</id>
            <summary type="text">மட்டக்களப்பு - தர்மபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புளியம் பொக்கனை துவரை ஆற்று பகுதியில் சட்டவிரோதமாக கசிப்பு உற்பத்தியில் ஈடுப்பட்டவர் பொலிஸாரால் கைது செ...</summary>
            <content type="html"><![CDATA[<p>மட்டக்களப்பு - தர்மபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புளியம் பொக்கனை துவரை ஆற்று பகுதியில் சட்டவிரோதமாக கசிப்பு உற்பத்தியில் ஈடுப்பட்டவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p> 

இந்த நடவடிக்கை நேற்று(04.08.2026) இடம்பெற்றுள்ளது. </p><h2>


1800 லீற்றர் கோடா பறிமுதல்</h2><p>
தர்மபுர பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைவாக குறித்த பகுதியில் சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d6301515-c271-4a1e-a735-eefe69f89c76/26-6a73016a67e4d.webp' /></p><p> </p><p>

இதன்போது, சட்ட விரோதமான முறையில் கசிப்பு
உற்பத்தியில் ஈடுபட்டிருந்த சந்தேக நபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
அத்துடன், கசிப்பு உற்பத்திக்கு தயார் நிலையில் இருந்த 1800 லீற்றர் கோடா பறிமுதல் செய்யப்பட்டது. </p><p>

இதனைத் தொடர்ந்து சந்தேக நபர் இன்று(05.08.2026) கிளிநொச்சி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தர்மபுர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7eb14963-4736-49b6-9f2e-232142c32057/26-6a73016b499ba.webp' />&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/50d48355-7335-49df-9703-1e6b92ca2255/26-6a73016c4d249.webp' /></p><p></p><p></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-05T09:25:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்க கோரி மனு : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sc-dismisses-petition-seeking-postponed-of-al-exam-1785916609"></link>
            <id>https://ibctamil.com/article/sc-dismisses-petition-seeking-postponed-of-al-exam-1785916609</id>
            <summary type="text">2026 ஆம் ஆண்டுக்கான&amp;nbsp;கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்குமாறு இடைக்கால உத்தரவு பிறப்பிக்கக் கோரி அடிப்படை உரிமை மனுவொன்று தாக்கல் ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026 ஆம் ஆண்டுக்கான&nbsp;கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்குமாறு இடைக்கால உத்தரவு பிறப்பிக்கக் கோரி அடிப்படை உரிமை மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டது.</p><p>குறித்த மனுவை விசாரிக்காமலேயே தள்ளுபடி செய்ய உயர் நீதிமன்றம் இன்று (05) உத்தரவிட்டுள்ளது.
</p><p>
 

பரீட்சைக்கு முதன்முறை மற்றும் இரண்டாம் முறை தோற்றவுள்ள ஐந்து மாணவர்களால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.</p><p></p><h2>ஆரம்பமாகவுள்ள பரீட்சை&nbsp;</h2><p>இதேவேளை, 2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தர பரீட்சை எதிர்வரும் 10ஆம் திகதி ஆரம்பமாகி செப்டெம்பர் மாதம் 5 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e390aec9-cc08-48a0-9ce3-f1fbabf78a1a/26-6a73009a9e79f.webp' /></p><p>நாடளாவிய ரீதியில் உள்ள 2,532 பரீட்சை நிலையங்களில் குறித்த பரீட்சை நடைபெறவுள்ளதாக பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-05T09:20:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஒரே ஏவுதலில் 23 செயற்கைக்கோள்கள்; சீனாவின் புதிய சாதனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/23-satellites-in-a-single-launch-china-new-record-1785921614"></link>
            <id>https://canadamirror.com/article/23-satellites-in-a-single-launch-china-new-record-1785921614</id>
            <summary type="text">&amp;nbsp; சீனா தனது மற்றுமொரு குறைந்த புவிச் சுற்றுப்பாதை இணைய செயற்கைக்கோள் தொகுதியை வெற்றிகரமாக விண்ணில் ஏவியுள்ளது.

சீனா நேரப்படி நேற்று (04) மாலை ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; சீனா தனது மற்றுமொரு குறைந்த புவிச் சுற்றுப்பாதை இணைய செயற்கைக்கோள் தொகுதியை வெற்றிகரமாக விண்ணில் ஏவியுள்ளது.
</p><p>
சீனா நேரப்படி நேற்று (04) மாலை 4.52 மணியளவில், ஹைனான் வர்த்தக விண்வெளி ஏவுதளத்தில் இருந்து Long March-8A ஏவுகணை மூலம் இந்த செயற்கைக்கோள் தொகுதி விண்ணில் செலுத்தப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fa49ac2c-8665-48ca-9924-583e9058186f/26-6a730050138eb.webp' /></p><p>

இதன் மூலம், குறைந்த புவிச் சுற்றுப்பாதை இணைய செயற்கைக்கோள்களின் 23ஆவது தொகுதி வெற்றிகரமாக ஏவப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

 23 செயற்கைக்கோள்களும் திட்டமிட்ட சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டதையடுத்து, இந்த விண்வெளி நடவடிக்கை முழுமையாக வெற்றியடைந்துள்ளதாக சீனா அறிவித்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-05T09:18:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[கோடிக்கணக்கில் வருமான வரி செலுத்திய ரிஷப் பண்ட்! மாநிலத்திலேயே முதல் நபர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/rishabh-pant-highest-taxpayer-in-uttarakhand-1785921436"></link>
            <id>https://news.lankasri.com/article/rishabh-pant-highest-taxpayer-in-uttarakhand-1785921436</id>
            <summary type="text">இந்திய கிரிக்கெட் அணி வீரரான ரிஷப் பண்ட் ரூ.23.84 கோடி வருமான வரி செலுத்தியிருக்கிறார்.&amp;nbsp; 

உத்தரகாண்ட் மாநிலத்திலேயே அதிக வருமான வரி செலுத்திய ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்திய கிரிக்கெட் அணி வீரரான ரிஷப் பண்ட் ரூ.23.84 கோடி வருமான வரி செலுத்தியிருக்கிறார்.&nbsp;</p><p> 

உத்தரகாண்ட் மாநிலத்திலேயே அதிக வருமான வரி செலுத்திய நபராக கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் உருவெடுத்துள்ளார்.&nbsp;</p><h2>ரிஷப் பண்ட்&nbsp;</h2><p>

இந்திய கிரிக்கெட் அணியில் விக்கெட் கீப்பர் துடுப்பாட்ட வீரராக விளையாடி வரும் ரிஷப் பண்ட் (Rishabh Pant), இலங்கை அணிக்கு எதிரான தொடரில் இடம்பெற்றுள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3fad98e4-4360-4528-8db8-def1d09885f7/26-6a72ff9f0bc5c.webp' /></p><p></p><p> 

இந்த சூழலில், உத்தர்காண்டின் அதிகபட்ச வரி செலுத்துபவராக ரிஷப் பண்ட் உருவெடுத்துள்ளது பேசுபொருளாக மாறியுள்ளது.</p><p> 

அதாவது, 2025-26 நிதியாண்டிற்காக ரிஷப் பண்ட் ரூ.23.84 கோடி வருமான வரி செலுத்தியிருக்கிறார். இதன்மூலம் மாநிலத்திலேயே அதிகபட்ச தனிநபர் வரி செலுத்துபவராக திகழ்கிறார். 

மேலும், ஒரு நிதியாண்டில் அதிக வரி செலுத்தியவராக அவர் தொடர்ந்து இரண்டாவது முறையாக திகழ்கிறார்.</p><p> 

ரிஷப் பண்டின் மொத்த சொத்து மதிப்பு சுமார் ரூ.150 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. 

இதில், விளம்பர ஒப்பந்தங்கள் மற்றும் கிரிக்கெட் மூலம் ஈட்டிய வருமானம் ஆகியவை அடங்கும். </p><p>

குறிப்பாக, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியுடனான ரூ.27 கோடி மதிப்பிலான ஒப்பந்தமும் இதில் அடங்கும்.&nbsp; &nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/44141664-7ada-4b3a-8953-d487ab3f439e/26-6a72ff9fb6355.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"> <b>WHATSAPP CHANNEL</b></a><b> </b>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-05T09:15:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shan</name>
            </author>
            <title type="text"><![CDATA[செம்மணி மனிதபுதைகுழி: காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் மரபணுமாதிரிகளை பாதுகாக்குமாறு வலியுறுத்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/chemmani-human-burial-site-investigation-1785918942"></link>
            <id>https://tamilwin.com/article/chemmani-human-burial-site-investigation-1785918942</id>
            <summary type="text">செம்மணியில் அகழ்ந்தெடுக்கப்படுகின்ற எலும்புக்கூடுகளின் தரவுகளோடு, வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் மரபணு மாதிரிகளை ஒப்பிட்டு ஆய்வு செய்ய வேண்டிய சட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>செம்மணியில் அகழ்ந்தெடுக்கப்படுகின்ற எலும்புக்கூடுகளின் தரவுகளோடு, வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் மரபணு மாதிரிகளை ஒப்பிட்டு ஆய்வு செய்ய வேண்டிய சட்டத் தேவைப்பாடு இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>
எனவே காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களின் மரபணுக்களை அவர்களின் ஒப்புதலுடன் சேகரித்து, அவற்றை பன்னாட்டு மேற்பார்வையுடன் பாதுகாக்கின்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டுமெவும் அவர் இதன்போது வலியுறுத்தியுள்ளார். </p><p>

நாடாளுமன்றில் இன்றைய தினம் (05.08.2026) உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கருத்துத் தெரிவித்துள்ளார்.</p><h2>அகழ்வாய்வுப் பணிகள்</h2><p>
</p><p>
மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தின் மேற்பார்வையில் செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாங்கட்ட அகழ்வாய்வுப் பணிகள் ஆகஸ்ட் 04ஆம் திகதி நேற்றைய தினம் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. </p><p>அந்தவகையில் செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வாய்வுகளில் இதுவரை மொத்தம் 483 மனித எலும்புக்கூடுகள் அடையாளங்காணப்பட்டுள்ளன.

அவற்றில் 481 மனித எலும்புக்கூடுகள் இதுவரை முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f1618de8-aa91-4a31-8a22-88278838cb09/26-6a72fdd3d42cb.webp' /></p><p> </p><p>எனவே வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் ஒப்புதலுடன் அவர்களின் மரபணுக்களைச் சேகரித்து, அவற்றை பன்னாட்டு மேற்பார்வையுடன் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படவேண்டுமென இச்சந்தர்ப்பத்தில் கேட்டுக்கொள்ள விரும்புகின்றேன். மனிதப்புதைகுழி விடயத்தில் அடையாளங்காணப்பட்ட எலும்புத்தொகுதிகளை நிலத்திலிருந்து அகழ்ந்தெடுப்பதென்பது முதற்கட்ட செயற்பாடாகும்.</p><h2>அகழ்ந்தெடுக்கப்பட்ட என்புத்தொகுதிகளின் கால எல்லை&nbsp;</h2><p> </p><p>

அதன் பிற்பாடு என்பு மாதிரிகளை அறிவியல்பூர்வமாக ஆய்வுசெய்வது இரண்டாவது நடவடிக்கையாகும். அதனைத்தொடர்ந்து அகழ்ந்தெடுக்கப்பட்ட என்புத்தொகுதிகளின் கால எல்லை தொடர்பில் தொல்லியல் திணைக்களம் அறிவியல் அறிக்கை ஒன்றினை சமர்ப்பிப்பார்கள். மூன்றாவது கட்டமானவே காணாமல்போன உறவுகள் தொடர்பான தேடுதல் விவகாரங்கள் ஆரம்பமாகும். </p><p>

யாராவது தங்களுடைய உறவினர்கள் குறிப்பிட்ட காலத்தில் காணாமல்போனதாகவோ அல்லது, கைதுசெய்யப்பட்டதன் பிற்பாடு இருப்பிடம் தெரியவில்லை என்றோ முறைப்பாடு வழங்கியிருந்தால், தொல்லியல் திணைக்களம் கணித்துள்ள காலப்பகுதியோடு அந்தத் தரவுகளை ஒப்பிட்டு பாதிக்கப்பட்ட உறவுகளின் மரபணு மாதிரிகளை ஆய்வுசெய்யவேண்டிய சட்டத் தேவைப்பாடு உள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a1df787e-c5bd-4f72-aa75-7f22f4094f43/26-6a72fdd48c771.webp' /></p><p> </p><p>

ஆனால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் மரபணுக்களைச் சேகரித்து அதனைப் பாதுகாக்கும் காப்பகம் எதுவும் இதுவரை உருவாக்கப்படாத நிலையே காணப்படுகின்றது. எனவே காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் மரபணுக்களை அவர்களின் ஒப்புதலுடன் சேகரித்து, அவற்றை பன்னாட்டு மேற்பார்வையுடன் பாதுகாக்கின்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.</p><p> 

மனிதப் புதைகுழி அகழ்வாய்வுகளில் பங்கேற்கின்ற சட்டத்தரணிகளில் ஒருவரான ரனித்தா ஞானராசா அவர்களும் அண்மையில் இதுதொடர்பில் வலியுறுத்தியிருக்கின்றார். எனவே இதுதொடர்பிலும் கவனஞ்செலுத்தப்பட வேண்டுமென இவ் உயரிய சபையைக் கோருகின்றேன் என்றார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-05T09:12:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தங்கப் பதக்கம் வென்ற ரூமேஷ் தரங்கவிற்கு பதவி உயர்வு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/promotion-for-gold-medalist-rumesh-tharanga-1785921091"></link>
            <id>https://jvpnews.com/article/promotion-for-gold-medalist-rumesh-tharanga-1785921091</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;தங்கப்பதக்கம் வென்று நாட்டுக்கு பெருமை தேடிக்கொடுத்த இலங்கை விமானப் படையின் ஈட்டி எறிதல் வீரரான கோப்ரல் ரூமேஷ் தரங்க, சார்ஜன்ட் (Sergeant...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;தங்கப்பதக்கம் வென்று நாட்டுக்கு பெருமை தேடிக்கொடுத்த இலங்கை விமானப் படையின் ஈட்டி எறிதல் வீரரான கோப்ரல் ரூமேஷ் தரங்க, சார்ஜன்ட் (Sergeant) தரநிலைக்குப் பதவி உயர்வு பெற்றுள்ளார்.
</p><p>


2026 பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்தமைக்காக, அவரைப் பாராட்டி இந்த பதவி உயர்வு இன்று (05) விமானப்படைத் தலைமையகத்தில் விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் பந்து எதிரிசிங்கவினால் வழங்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/04c5a3a3-7d06-44ba-91e1-64380944b618/26-6a72fe44eec5b.webp' /></p><p>
</p><p>


கிளாஸ்கோவில் உள்ள ஸ்காட்ஸ்டவுன் மைதானத்தில் நடைபெற்ற ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில், ரூமேஷ் தரங்க 89.75 மீற்றர் தூரம் எறிந்து தனது திறமையை வெளிப்படுத்தி தங்கப் பதக்கத்தை வென்றார்.</p><p></p><p>



தரங்கவின் திறமையை அங்கீகரிக்கும் வகையில் விமானப்படைத் தளபதி அவருக்கு சிறப்பு பணவிருதையும் வழங்கியதுடன் , ரூமேஷ் தரங்கவின் வெற்றிக்கு ஆதரவாகவும் பங்களிப்பாகவும் இருந்த அவரது பயிற்றுவிப்பாளர் டோனி பிரசன்ன மற்றும் பிசியோதெரபிஸ்ட் கோப்ரல் சந்திம குருசிங்க ஆகியோருக்கும் பணவிருதுகள் வழங்கப்பட்டன.</p><p></p><p>



 ரூமேஷ் தரங்க ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் தங்கப் பதக்கத்தையும், பாலித பண்டார ஆண்களுக்கான மாற்றுத்திறனாளிகளுக்கான தட்டு எறிதல் (para discus throw) போட்டியில் வெள்ளிப் பதக்கத்தையும் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-08-05T09:09:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/former-minister-akila-viraj-kariyawasam-arrested-1785919451"></link>
            <id>https://jvpnews.com/article/former-minister-akila-viraj-kariyawasam-arrested-1785919451</id>
            <summary type="text">முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் இன்று முற்பகல் ஆஜரான...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் இன்று முற்பகல் ஆஜரான நிலையில் அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>ஜனாதிபதி செயலகத்திற்கு ஊழியர்களை நியமித்தமை மற்றும் அவர்களை அரசியல் நோக்கங்களுக்காகப் பயன்படுத்தியமை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரிப்பதற்காக முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் இன்றையதினம் (5) இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் ஆஜராகி இருந்த நிலையில் கைதாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dd47e7ee-725e-44d8-a2a0-f2bbf4b2f7c5/26-6a72f7dc6dd9f.webp' /></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-05T09:06:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் இன்று தங்கத்தின் விலை எவ்வளவு? (05-08-2026)]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/today-gold-price-in-sri-lanka-1785920669"></link>
            <id>https://news.lankasri.com/article/today-gold-price-in-sri-lanka-1785920669</id>
            <summary type="text">இலங்கையின் இன்றைய தங்க நிலவரம் (05-08-2026) என்னவென்று தெரிந்து கொள்வோம்.உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி W...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் இன்றைய தங்க நிலவரம் (05-08-2026) என்னவென்று தெரிந்து கொள்வோம்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p>

தங்கம் அவுன்ஸ் விலை ரூபாய் 1,316,362.00 ஆகும்.
</p><p>
24 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 46,440.00.</p><p>

24 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 371,500.00.
</p><p>
22 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 42,570.00.
</p><p>
22 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 340,600.00.
</p><p>
21கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 40,640.00.
</p><p>
21 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 325,100.00.</p>]]></content>
            <updated>2026-08-05T09:05:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் கைது!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/ex-education-min-akila-viraj-appears-before-ciaboc-1785912413"></link>
            <id>https://ibctamil.com/article/ex-education-min-akila-viraj-appears-before-ciaboc-1785912413</id>
            <summary type="text">புதிய இணைப்புமுன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் இன்று (...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
 

வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் இன்று (05) காலை முன்னிலையான நிலையில் அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.&nbsp; &nbsp;</p><h2>முதலாம் இணைப்பு</h2><p>முன்னாள் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p>நடைபெற்று வரும் விசாரணை ஒன்றுக்கு வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று (05) அந்த ஆணைக்குழுவிற்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>ஜனாதிபதி செயலகத்திற்கு ஊழியர்களை நியமித்தமை மற்றும் அவர்களை அரசியல் நோக்கங்களுக்காகப் பயன்படுத்தியமை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரிப்பதற்காகவே அகில விராஜ் காரியவசம் அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-05T09:00:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[கயல் சீரியல் நடிகை சைத்ரா ரெட்டி விவாகரத்து பெறுகிறாரா?... என்ன செய்துள்ளார் பாருங்க]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/serial-actress-chiatra-reddy-getting-divorce-1785918614"></link>
            <id>https://cineulagam.com/article/serial-actress-chiatra-reddy-getting-divorce-1785918614</id>
            <summary type="text">சைத்ரா ரெட்டிசன் தொலைக்காட்சியில் சில வருடங்களாக வெற்றிகரமாக ஒளிபரப்பாகும் சீரியல் கயல். இந்த தொடரில் கயல் என்ற கதாபாத்திரத்தில் நடித்து தமிழக மக்களின...</summary>
            <content type="html"><![CDATA[<h2>சைத்ரா ரெட்டி</h2><p>சன் தொலைக்காட்சியில் சில வருடங்களாக வெற்றிகரமாக ஒளிபரப்பாகும் சீரியல் கயல். </p><p>இந்த தொடரில் கயல் என்ற கதாபாத்திரத்தில் நடித்து தமிழக மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகை சைத்ரா ரெட்டி. 6 வருடங்களாக ஓடிக் கொண்டிருக்கும் இந்த சீரியல் எப்போது முடியும் என கேட்கும் ரசிகர்களும் சிலர் உள்ளார்கள்.</p><p> கயல் சீரியலுக்கு முன் ஜீ தமிழில் யாரடி நீ மோகினி சீரியலில் வில்லியாக நடித்தார் சைத்ரா. 
சீரியல்கள் நடிப்பதை தாண்டி வெப் தொடர்களிலும் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c8ae3094-e3be-43c9-8ebf-386bd55dcb24/26-6a72f79558c0d.webp' /></p><h2>விவாகரத்து</h2><p>
பிரபலங்களின் விவாகரத்து செய்தி அதிகம் வெளியாகி வரும் நிலையில் சீரியல் நடிகை சைத்ரா ரெட்டியும் தனது கணவரை விவாகரத்து செய்கிறார் என்ற தகவல் வந்துள்ளது.</p><p> தயாரிப்பாளரும், ஒளிப்பதிவாளருமான ராகேஷ் சமலாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார் சைத்ரா. கணவருடன் எடுக்கும் புகைப்படங்களை அவ்வப்போது வெளியிட்டு வந்த சைத்ரா தற்போது தனது திருமண புகைப்படங்களை இன்ஸ்டாவில் இருந்து நீக்கியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bb4f6d24-05b9-4c28-807a-cb7da774e02d/26-6a72f79624005.webp' /></p><p> </p><p>இதனால் சைத்ரா தனது கணவர் ராகேஷை விவாகரத்து செய்கிறார் என்ற செய்தி வலம் வருகிறார்.</p>]]></content>
            <updated>2026-08-05T09:00:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[உச்சக்கட்ட கிளாமர் லுக்கில் பிக்பாஸ் கெமி!! புகைப்படங்கள்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/cwc-biggboss-kemy-recent-photoshoot-post-1785920492"></link>
            <id>https://viduppu.com/article/cwc-biggboss-kemy-recent-photoshoot-post-1785920492</id>
            <summary type="text">விஷாலி கெம்கர்பிரபல வானொலியில் ஆர்ஜேவாக பணியாற்றி அதன்பின் விஜய் தொலைக்காட்சியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானவர் தான் விஷாலி கெம...</summary>
            <content type="html"><![CDATA[<h2>விஷாலி கெம்கர்</h2><p>பிரபல வானொலியில் ஆர்ஜேவாக பணியாற்றி அதன்பின் விஜய் தொலைக்காட்சியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானவர் தான் விஷாலி கெம்கர்.
</p><p>
கெமி என்று அனைவராலும் அழைக்கப்படும் இவர், பிக்பாஸ் சீசன் 9ல் பங்கேற்று அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2e3f978d-70f1-4d81-a1f1-26723dbbc6e7/26-6a72fbf6bea43.webp' /></p><p>

நடிகை, டான்ஸர், பேஸ்கட் பால் வீராங்கனை என்று பன்முகத்திறமை கொண்ட கெமி, இணையத்தில் ஆக்டிவாக இருந்து நடனமாடும் வீடியோக்களை பகிர்ந்து பலரது கவனத்தையும் ஈர்த்தார்.
</p><p>
தற்போது, ரம்பை லுக்கில் எடுத்த கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.</p><h2>புகைப்படங்கள்</h2>]]></content>
            <updated>2026-08-05T09:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[உணவுப் பொதிக்குள் போதைப்பொருள்; சம்பவத்தால் ஷாக்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/drugs-found-inside-a-food-parcel-1785919930"></link>
            <id>https://jvpnews.com/article/drugs-found-inside-a-food-parcel-1785919930</id>
            <summary type="text">&amp;nbsp; களுத்துறை சிறைச்சாலைக்கு உணவுப் பொதிக்குள் போதைப்பொருள் கொண்டு செல்ல முயன்ற இருவரை அங்குருவாத்தோட்ட பொலிஸார் கைது செய்துள்ளனர்.

 

சம்பவத்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; களுத்துறை சிறைச்சாலைக்கு உணவுப் பொதிக்குள் போதைப்பொருள் கொண்டு செல்ல முயன்ற இருவரை அங்குருவாத்தோட்ட பொலிஸார் கைது செய்துள்ளனர்.

 

சம்பவத்தில் ஹொரணை பிரதேசத்தைச் சேர்ந்த இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p>
 

மில்லனிய - படகொட வீதியில் பொலிஸாரால் வீதித் தடை ஏற்படுத்தப்பட்டு வாகன சோதனைகள் மேற்கொள்ளப்பட்ட போதே, மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு சந்தேகநபர்களும் சோதனையிடப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bd1bbb38-e8b2-4876-9534-f32e222ef866/26-6a72f9bb98cb3.webp' /></p><h2>&nbsp;களுத்துறை சிறைச்சாலைக்கு உணவுப் பொதி</h2><p> </p><p>

 

போதைப்பொருள் குற்றச்சாட்டிற்காக களுத்துறை சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள தமது சகோதரரைப் பார்ப்பதற்காக அவர்கள் சென்றுகொண்டிருந்ததாகத் தெரியவந்துள்ளது.</p><p></p><p>
</p><p>
 

இவர்களின் சந்தேகத்திற்கிடமான நடத்தையை அடுத்து, மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனையிட்ட போது, இரண்டு 'மிக்ஸ் ரைஸ்' உணவுக்குள் மிளகாய் பேஸ்ட் போட்டிருந்த சிறிய பொலித்தீன் உரையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 12,400 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.</p><p></p><p>
</p><p>
 

 சந்தேகநபர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் மற்றும் கைப்பேசி என்பனவும் பொலிஸாரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளன.

அதேசமயம் குறித்த சந்தேகநபர்களுக்கு எதிராக முன்னர் போதைப்பொருள் தொடர்பாக நீதிமன்றங்களில் பல வழக்குகள் நிலுவையில் உள்ளமை தெரியவந்துள்ளது.
</p><p>
 

சந்தேகநபர்களை ஹொரணை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதுடன், சம்பவம் தொடர்பில் அங்குருவாத்தோட்ட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-05T08:50:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Fathima</name>
            </author>
            <title type="text"><![CDATA[இல்லத்தரசிகளுக்கு ஏமாற்றம் அளித்த தமிழக பட்ஜெட்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/tn-budget-2026-latest-update-1785919429"></link>
            <id>https://ibctamilnadu.com/article/tn-budget-2026-latest-update-1785919429</id>
            <summary type="text">தமிழ்நாடு மக்கள் பெரிதும் எதிர்பார்த்த மகளிர் உரிமைத்தொகை ரூ.2500ஆக உயர்த்தி வழங்கப்படும் என்ற அறிவிப்பு இல்லாததால் மக்கள் ஏமாற்றமடைந்தனர்.

2026- 2...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழ்நாடு மக்கள் பெரிதும் எதிர்பார்த்த மகளிர் உரிமைத்தொகை ரூ.2500ஆக உயர்த்தி வழங்கப்படும் என்ற அறிவிப்பு இல்லாததால் மக்கள் ஏமாற்றமடைந்தனர்.
</p><p>
2026- 27ம் ஆண்டுக்கான தமிழ்நாட்டின் பட்ஜெட்டை இன்று நிதியமைச்சர் மரியவில்சன் தாக்கல் செய்தார்.
</p><p>
இதில் பெண்கள், இளைஞர்களுக்காக அறிவிப்புகள் வெளியாகும் என காத்திருந்த நிலையில் ஏமாற்றமே மிஞ்சியதாக பேசப்படுகிறது.
</p><p>
மிக முக்கியமாக குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் 2500 ரூபாய், விவசாய பயிர்கடன் முழுமையாக தள்ளுபடி, வீட்டிற்கு 6 இலவச சிலிண்டர், வேலையில்லா பட்டதாரிகளுக்கு 4000 ரூபாய், திருமணத்துக்கு ஒரு பவுன் தங்கம், 20 லட்ச ரூபாய் வரை கல்விக்கடன் உள்ளிட்டவை பார்க்கப்பட்டது.
</p><p>
ஆனால் பட்ஜெட் தொடங்கியவுடனே தமிழ்நாட்டின் கடன் இருமடங்காக உயர்ந்துள்ளதாகவும், புது திட்டங்கள் தொடங்க நிதிகுறைவாக இருப்பதாகவும் நிதியமைச்சர் பேசினார்.
</p><p>
இதனால் திருமணத்துக்கு ஒரு பவுன் தங்கம், 11ம் வகுப்பு மாணவர்களுக்கு சைக்கிளுடன் ஹெல்மெட், இலவச மடிக்கணனிகள் மட்டுமே அறிவிக்கப்பட்டது.
</p><p>
உரிமைத்தொகையை உயர்த்துவது குறித்தோ, வீட்டு உபயோக சிலிண்டர்கள் குறித்தோ அறிவிப்பு வெளியாகவில்லை.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/AEQtNahUvog" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-08-05T08:47:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மீட்டியாகொட துப்பாக்கிச் சூடு: இவரை கண்டால் அறிவிக்கவும்.. பொதுமக்கள் உதவியை நாடும் பொலிஸார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/police-seek-public-help-to-arrest-1785918387"></link>
            <id>https://tamilwin.com/article/police-seek-public-help-to-arrest-1785918387</id>
            <summary type="text">மீட்டியாகொடவில் உள்ள ஒரு உணவகத்தில் பெண் காசாளர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாகத் தேடப்பட்டு வரும் ஹிக்கடுவவைச் சேர்ந்த 39 வயது நபரைக் க...</summary>
            <content type="html"><![CDATA[<p>மீட்டியாகொடவில் உள்ள ஒரு உணவகத்தில் பெண் காசாளர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாகத் தேடப்பட்டு வரும் ஹிக்கடுவவைச் சேர்ந்த 39 வயது நபரைக் கண்டுபிடிப்பதற்கு பொலிஸார் பொதுமக்கள் உதவியை நாடியுள்ளனர். </p><p>

இந்த சம்பவம் கடந்த 2025 நவம்பர் 17 ஆம் திகதியன்று இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> 


பொலிஸார் வெளியிட்ட தகவலின் படி, மீட்டியகோடா பொலிஸ் நிலையம் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது. </p><h2>

பொதுமக்கள் உதவியை நாடும் பொலிஸார்</h2><p>
துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார், ஆனால் தற்போது தலைமறைவாக உள்ளார் என்பதை பொலிஸ் நிலையம் உறுதிப்படுத்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/768852d8-5be0-41e5-a6f9-babd6e8a7038/26-6a72f6be2a96e.webp' /></p><p>
</p><p>
கந்தரா மற்றும் அம்பலாங்கொடை பொலிஸ் பிரிவுகளில் நடந்த துப்பாக்கிச் சூடுகள் தொடர்பாகவும் இந்த சந்தேக நபர் தேடப்பட்டு வருவதாகவும், பாலப்பிட்டிய நீதவான் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளில் அவருக்கு எதிராகப் பல பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். </p><p>சந்தேக நபர் தொடர்பில், தகவல் தெரிந்தவர்கள், 071-8591481 (பொறுப்பாளர்/மீட்டியகோடா) அல்லது 091-2260423 (மீட்டியகோடா பொலிஸ் நிலையம்) என்ற எண்களில் பொலிஸாரைத் தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.&nbsp;&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-05T08:39:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/akila-viraj-in-the-bribery-corruption-commission-1785908875"></link>
            <id>https://tamilwin.com/article/akila-viraj-in-the-bribery-corruption-commission-1785908875</id>
            <summary type="text">புதிய இணைப்புமுன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.&amp;nbsp;இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினரால் அவர் கைது செய்யப்...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.&nbsp;</p><p>இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.&nbsp;</p><h2>முதலாம் இணைப்பு</h2><p>முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இன்று (05) காலை முன்னிலையாகியுள்ளார்.</p><p>இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைள் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்கானவே அகில விராஜ் காரியவசம் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>ஜனாதிபதி செயலகத்திற்கு ஊழியர்களை நியமித்தமை மற்றும் அவர்களை அரசியல் நோக்கங்களுக்காகப் பயன்படுத்தியமை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரிப்பதற்காகவே அகில விராஜ் கரியவசம் அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>&nbsp;</p><p>&nbsp;</p><p><b><i>you may like this video</i></b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/1QGQREGh-68" width="640" height="360" class="note-video-clip"></iframe>&nbsp; &nbsp;</p><p>

</p>]]></content>
            <updated>2026-08-05T08:36:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[முத்து-மீனாவிற்கு ஷாக் கொடுத்த விஜயா, சிந்தாமணி அடுத்த பிளான்... சிறகடிக்க ஆசை சீரியல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/siragadikka-aasai-serial-episode-1785916118"></link>
            <id>https://cineulagam.com/article/siragadikka-aasai-serial-episode-1785916118</id>
            <summary type="text">சிறகடிக்க ஆசை&amp;nbsp;சிறகடிக்க ஆசை சீரியலில், பாட்டி உடல்நிலை சரியில்லை என்பதால் அண்ணாமலை ஊருக்கு சென்றுவிட்டார். இந்த நேரத்தில் முத்து-மீனா வீட்டின் மா...</summary>
            <content type="html"><![CDATA[<h2>சிறகடிக்க ஆசை&nbsp;</h2><p>சிறகடிக்க ஆசை சீரியலில், பாட்டி உடல்நிலை சரியில்லை என்பதால் அண்ணாமலை ஊருக்கு சென்றுவிட்டார். </p><p>இந்த நேரத்தில் முத்து-மீனா வீட்டின் மாடியில் தங்களுக்காக ஒரு அறை கட்ட ஏற்பாடு செய்கிறார்கள். அண்ணாமலை இல்லை என்பதால் விஜயாவை மேஸ்திறியிடம் பணம் கொடுக்க கேட்க விஜயா வழக்கம் போல் முடியாது என கூறிவிடுகிறார். </p><p>அந்த நேரத்தில் ஸ்ருதி விஜயாவிடம் சென்று இப்படியெல்லாம் செய்தால் யூடியூபில் போடலாம் என கூற பணம் கொடுக்க ஒப்புக் கொள்கிறார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/106ceaca-9c07-4bda-921f-5cdf0da81ce8/26-6a72f13ad197e.webp' /></p><h2>எபிசோட்</h2><p>
இன்றைய எபிசோடில், முதல் செங்கல் எடுத்து வைக்க அத்தை வர வேண்டும் என மீனா கேட்க முத்து என் அம்மா வரமாட்டாங்க என்கிறார். அந்த நேரத்தில் முத்து, ஸ்ருதியால் தான் அம்மாவை வர வைக்க முடியும் என கூற அவரும் அதையே செய்கிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/07442f73-295a-44dc-8ac8-5bce73e7ba16/26-6a72f13ba5968.webp' /></p><p> </p><p>யூடியூபில் வைரல் ஆக ஸ்ருதி சொன்னது போல் மாடிக்கு வந்து விஜயா எல்லா விஷயத்தையும் செய்கிறார். பின் விஜயா தொடங்க மிகவும் சிறப்பாக முத்து-மீனா வீட்டு வேலைகள் தொடங்குகிறது. </p><p>அடுத்து சிந்தாமணி போட்ட பிளான் போல் ரேகா அவரது அப்பாவிற்காக வீட்டிற்கு வருகிறார், சத்யாவை உன் அப்பாவுடன் இங்கே இரு என்கிறார். அடுத்து சிந்தாமணி என்ன பிளான் போடுவாரோ பொறுத்திருந்து காண்போம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f614c153-dfd6-4b87-814f-78c4ed69118f/26-6a72f13c70856.webp' /></p>]]></content>
            <updated>2026-08-05T08:30:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[52-வது பர்த்டே!! நடிகை கஜோல் தேவ்கனின் சொத்து மதிப்பு..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/kajol-has-an-estimated-net-worth-of-rs-240-crores-1785918399"></link>
            <id>https://viduppu.com/article/kajol-has-an-estimated-net-worth-of-rs-240-crores-1785918399</id>
            <summary type="text">கஜோல்1992 வெளிவந்த Bekhudi என்கிற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் கஜோல். தொடர்ந்து பாலிவுட்டில் நடித்து வந்த இவர், தமிழில் 1997ல் வெளிவந்த ...</summary>
            <content type="html"><![CDATA[<h2>கஜோல்</h2><p>1992 வெளிவந்த Bekhudi என்கிற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் கஜோல். தொடர்ந்து பாலிவுட்டில் நடித்து வந்த இவர், தமிழில் 1997ல் வெளிவந்த மின்சார கனவு படத்தில் நடித்தார்.

இதன்பின் பல ஆண்டுகள் கழித்து தனுஷ் நடிப்பில் வெளிவந்த வேலையில்லா பட்டதாரி படத்தில் நடித்திருந்தார்.</p><p> இந்திய அளவில் பிரபலமான நடிகையாக வலம் வரும் இவர் நடிகர் அஜய் தேவ்கனை காதலித்து திருமணம் செய்துகொண்டார் கஜோல்.

இவர்களுக்கு ஒரு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2e476497-fb14-457f-b011-e79ca8de78e8/26-6a72f3c14c3bb.webp' /></p><p> </p><p>கிட்டத்தட்ட 33 ஆண்டுகளாக உச்ச நட்சத்திரமாக விளங்கி வரும் கஜோல், தற்போது வரை நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறார். ஆகஸ்ட் 5 ஆம் தேதி இன்று தன்னுடைய 52வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். </p><p>ஒரு படத்திற்கு ரூ. 4 கோடி வரை சம்பளமாக வாங்கும் நடிகை கஜோலின் மொத்த சொத்து மதிப்பு சுமார் ரூ. 240 கோடி முதல் ரூ. 249 கோடி வரை இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-05T08:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[க.பொ.த உயர்தர - புலமைப்பரிசில் பரீட்சைகளை நடத்துவது தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/al-examination-scholarship-examination-bad-weather-1785917107"></link>
            <id>https://tamilwin.com/article/al-examination-scholarship-examination-bad-weather-1785917107</id>
            <summary type="text">5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் மற்றும் க.பொ.த உயர்தர பரீட்சைகள் நடைபெறவிருக்கும் திகதிகளில்&amp;nbsp;மழை பெய்தால், பாதிப்புகளைக் கண்காணித்து உரிய நடவடிக்கைகளை ...</summary>
            <content type="html"><![CDATA[<p>5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் மற்றும் க.பொ.த உயர்தர பரீட்சைகள் நடைபெறவிருக்கும் திகதிகளில்&nbsp;மழை பெய்தால், பாதிப்புகளைக் கண்காணித்து உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க ஒரு சிறப்புப் பிரிவு அமைக்கப்படும் என்று பேரிடர் மேலாண்மை மையம் அறிவித்துள்ளது.</p><p>தற்போது நிலவும் மோசமான வானிலையை கருத்திற்கொண்டு நடைபெறவுள்ள புலமைப்பரிசில் மற்றும் உயர்தர பரீட்சைகளை (GCE A/L) நடத்துவது தொடர்பாக இன்று (05) ஒரு சிறப்புக் கலந்துரையாடல் இடம்பெற்றது.</p><p>வானிலை ஆய்வுத் திணைக்களம், பேரிடர் மேலாண்மை மையம் (DMC) மற்றும் பரீட்சைகள் திணைக்களம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் இந்த கலந்துரையாடலில் பங்கேற்றனர்.</p><h2>பேரிடர் மீட்பு நடவடிக்கைகள்&nbsp;</h2><p>இதன்போது, எதிர்வரும் நாட்களில் மோசமான வானிலை நிலவினாலும், பரீட்சைகள் தடையின்றி நடைபெறுவதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் குறித்து கூட்டத்தின் போது கலந்துரையாடப்பட்டுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/617a5ad3-b26f-48ed-a5b2-f9c62d7126e6/26-6a72f2cb880dc.webp' /></p><p>அதற்கமைய, ஒகஸ்ட் 6, 7 மற்றும் 8 ஆகிய திகதிகளில் மழை பெய்தால், பரீட்சை நடவடிக்கைகளில் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் கண்காணித்து, அதற்கு பதிலளிக்கும் வகையில் தனது செயல்பாட்டு அறையில் ஒரு சிறப்புப் பிரிவு அமைக்கப்படும் என்று பேரிடர் மேலாண்மை மையம் அறிவித்துள்ளது.
</p><p>
 

வெள்ளப்பெருக்கு ஏற்படும் பட்சத்தில் உதவி வழங்குவதற்காக, படகுகளும் பேரிடர் மீட்புக் குழுக்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. </p><p>

 

2026ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் வகுப்பு புலமைப்பரிசில் பரீட்சை, ஒகஸ்ட் 9ஆம் திகதி நாடு முழுவதும் உள்ள 2,723 பரீட்சை மையங்களில் நடைபெற உள்ளது.</p><p>

 

அதேநேரம், 2026ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தர பரீட்சை, ஒகஸ்ட் 10 முதல் செப்டெம்பர் 5ஆம் திகதி வரை 2,532 பரீட்சை மையங்களில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-05T08:28:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மனிதர்களால் முடியவில்லை; Cryptography துறையில் AI வரலாற்றுச் சாதனை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/ai-achieves-historic-milestone-field-cryptography-1785918562"></link>
            <id>https://canadamirror.com/article/ai-achieves-historic-milestone-field-cryptography-1785918562</id>
            <summary type="text">&amp;nbsp;உலகின் தலைசிறந்த கிரிப்டோகிராஃபி வல்லுநர்கள் இரண்டு ஆண்டுகள் தீவிரமாக ஆராய்ந்தும் கண்டுபிடிக்கத் தவறிய கணிதவியல் பிழையை (Mathematical Flaw), இந்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;உலகின் தலைசிறந்த கிரிப்டோகிராஃபி வல்லுநர்கள் இரண்டு ஆண்டுகள் தீவிரமாக ஆராய்ந்தும் கண்டுபிடிக்கத் தவறிய கணிதவியல் பிழையை (Mathematical Flaw), இந்த AI மாடல் வெறும் 60 மணி நேரத் தேடலில் மிகத் துல்லியமாகக் கண்டுபிடித்து உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
</p><p>
செயற்கை நுண்ணறிவுத் (AI) துறையில் முன்னணி நிறுவனமான ‘ஆந்த்ரோபிக்’ (Anthropic) உருவாக்கியுள்ள தனது அதிநவீன ‘க்ளாட் மைத்தோஸ்’ (Claude Mythos) என்ற மாடல், தகவல் பாதுகாப்புத் துறையில் (Cryptography) பெரும் வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5f6fb970-d96a-4295-8101-02ef53f36bf5/26-6a72f463f32b0.webp' /></p><h2>&nbsp;60 மணி நேரத் தேடலில் மிகத் துல்லியமாகக் கண்டுபிடிப்பு</h2><p> </p><p>

எதிர்காலக் குவாண்டம் கணினிகளின் அச்சுறுத்தலில் இருந்து டிஜிட்டல் தகவல்களைப் பாதுகாக்க உருவாக்கப்பட்டு, அமெரிக்கத் தேசியத் தரநிலை அமைப்பால் (NIST) பரிசீலிக்கப்பட்டு வந்த ‘HAWK’ என்ற டிஜிட்டல் கையொப்ப அமைப்பிலேயே இந்த பிழை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
</p><p>
 மனித வல்லுநர்கள் இரண்டு கட்ட ஆய்வுகளுக்குப் பிறகும் இதைக் கவனிக்காத நிலையில், ‘க்ளாட் மைத்தோஸ்’ இதன் உள் அமைப்பில் இருந்த கணிதச் சமச்சீர்மையைக் (Mathematical Symmetry) கண்டறிந்து, அதன் பாதுகாப்புக் குறியீட்டின் வலிமையை பாதியாகக் குறைத்துக் காட்டியுள்ளது.
</p><p>
மேலும், இணைய வங்கிச் சேவைகள் மற்றும் தகவல்தொடர்புகளில் பரவலாகப் பயன்படுத்தப்படும் AES-128 குறியீட்டு அமைப்பிலும் ‘மோபியஸ் பிரிட்ஜ்’ (Möbius Bridge) என்ற புதிய தாக்குதல் நுட்பத்தை இந்த AI மாடல் சுயமாக உருவாக்கியுள்ளது. </p><p>தொடக்கத்தில் “இந்த வேலையைச் செய்ய முடியாது” என மறுத்த AI, ஆராய்ச்சியாளர்களின் தொடர் வழிகாட்டலுக்குப் பிறகு சுமார் 100 கோடி டோக்கன்களைப் (Tokens) பயன்படுத்திச் சுயமாகச் சிந்தித்து இந்த புதிய கணிதத் தாக்குதல் முறையைக் கண்டறிந்துள்ளது.</p><p>
தற்போது இந்த பிழைகள் கண்டறியப்பட்ட HAWK அமைப்பு பயன்பாட்டில் இல்லாததாலும், AES-128 சோதனைக் பதிப்பிலேயே ஆய்வு செய்யப்பட்டதாலும் நடைமுறையில் உள்ள இணைய வங்கி அல்லது பொதுமக்களின் தகவல்களுக்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லை என ஆந்த்ரோபிக் தெளிவுபடுத்தியுள்ளது. </p><p>

அதேசமயம் , மனித சங்கேத வல்லுநர்களால் பல ஆண்டுகள் கண்டறிய முடியாத சிக்கலான கணிதக் குறைபாடுகளை AI மாடல்கள் சில மணி நேரங்களில் கண்டுபிடிப்பது, எதிர்காலத் தகவல்தொடர்பு பாதுகாப்புத் துறையில் ஒரு புதிய சவாலாக பார்க்கப்படுகிறது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-05T08:27:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[துபாயில் தொழிற்சாலை பகுதியில் ஏற்பட்ட 7 குண்டு வெடிப்புகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/dubai-jebel-ali-explosions-spark-massive-fire-1785918285"></link>
            <id>https://news.lankasri.com/article/dubai-jebel-ali-explosions-spark-massive-fire-1785918285</id>
            <summary type="text">துபாயின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள ஜெபெல் அலி தொழிற்சாலை மண்டலம் இன்று அதிகாலை பல குண்டு வெடிப்புகளால் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது.

ஏழு வெடிப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>துபாயின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள ஜெபெல் அலி தொழிற்சாலை மண்டலம் இன்று அதிகாலை பல குண்டு வெடிப்புகளால் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது.</p><p>
</p><h2>
ஏழு வெடிப்புகள்</h2><p>20 நிமிடங்களில் குறைந்தது ஏழு வெடிப்புகள் நிகழ்ந்ததாக அரபு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. வெடிப்புகள் தொடர்ந்து ஏற்பட்டதால், அந்த பகுதியில் பெரிய அளவில் புகை மூட்டம் பரவியது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3731d5a6-39eb-433c-8601-47dfd1007733/26-6a72f34ec5032.webp' /></p><p>சம்பவம் நடந்த இடம் ஜெபெல் அலி துறைமுகம் மற்றும் ஜெபெல் அலி சுதந்திர வணிக மண்டலம் (Jafza) அருகே அமைந்துள்ளது. இது 1985-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, தற்போது 150-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 11,000-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இயங்கும் முக்கிய வணிக மையமாகும்.</p><p>

வெடிப்புகளுக்குப் பிறகு தீ பரவிய நிலையில், அதிகாரிகள் உடனடியாக தீயணைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இதுவரை எந்த அமைப்பும் சம்பவத்திற்குப் பொறுப்பேற்கவில்லை. </p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">BREAKING: Yemen&#39;s Houthis have struck the industrial area of Jebel Ali in Dubai, UAE, per initial reports. Widespread fires and plumes of smoke over the area and multiple explosions in Dubai in the past few minutes. <a href="https://t.co/eMH9ASsNeT">pic.twitter.com/eMH9ASsNeT</a></p>&mdash; The Hormuz Letter (@HormuzLetter) <a href="https://x.com/HormuzLetter/status/2084798929317613584?ref_src=twsrc%5Etfw">August 5, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><h2>இரண்டு நபர்கள் கைது</h2><p>மேலும், தீ விபத்தை படம் பிடித்த இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
</p><p>
ஜெபெல் அலி துறைமுகம், அல் மக்தூம் சர்வதேச விமான நிலையம் மற்றும் முக்கிய நெடுஞ்சாலைகளுடன் இணைக்கப்பட்டுள்ளதால், இந்த சம்பவம் உலகளாவிய வணிகத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.
</p><p>
இதேவேளை, அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் ஈரான் தொடர்பான பேச்சுவார்த்தைகள் குறித்து கருத்து தெரிவித்தார். அவர், “ஹார்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும். இல்லையெனில் ஈரான் கடுமையாக தாக்கப்படும்” என எச்சரித்தார்.
</p><p>
இந்த வெடிப்புகள் மற்றும் தீ விபத்து, மத்திய கிழக்கு பகுதியில் நிலவும் அரசியல் மற்றும் பாதுகாப்பு பதற்றங்களை மேலும் தீவிரப்படுத்தும் வகையில் உள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-05T08:22:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Farook Sihan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கன மழையால் மூழ்கிய நிந்தவூர் வயல் நிலங்கள்: விவசாயிகள் பெரும் கவலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/weather-alert-in-sri-lanka-1785912812"></link>
            <id>https://tamilwin.com/article/weather-alert-in-sri-lanka-1785912812</id>
            <summary type="text">அம்பாறை - நிந்தவூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் கனமழை காரணமாக பல நூற்றுக்கணக்கான ஏக்கர் வயல் நிலங்கள் நீரினுள்
மூழ்கியுள்ளதாக பிரதே...</summary>
            <content type="html"><![CDATA[<p>அம்பாறை - நிந்தவூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் கனமழை காரணமாக பல நூற்றுக்கணக்கான ஏக்கர் வயல் நிலங்கள் நீரினுள்
மூழ்கியுள்ளதாக பிரதேச விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.</p><p>

இயற்கை சீற்றத்தின் திடீர் மாற்றத்தால் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு மற்றும்
சீரற்ற காலநிலை காரணமாக நிந்தவூர் விவசாயப் பிரிவுப் பகுதிகளில்
பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன.</p><h2>நீர்மட்டம் உயர்வு</h2><p>

பால் பிடிக்கும் பருவத்திலும், வளர்ந்த நிலையிலும் காணப்பட்ட நெற்பயிர்கள்
பலத்த காற்றினால் தரைமட்டமாகச் சாய்ந்துள்ளதுடன், தொடர் மழையால் வயல்வெளிகளில்
நீர் மட்டம் உயர்ந்து காணப்படுகின்றது. </p><p>இதனால், பயிர்கள் அழுகும் நிலை
ஏற்பட்டுள்ளதோடு, நீரில் மூழ்கிய நெல் மணிகள் முளைக்கத் தொடங்கியுள்ளதாகவும்
விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6043b434-f9bf-4c4e-b612-1892a3fc57e1/26-6a72f2a63bca9.webp' /></p><p>

வடிகான் வாய்க்கால்களில் ஏற்பட்டுள்ள அடைப்புகள் மற்றும் நீர்வரத்து
அதிகரிப்பு காரணமாக வயல்களிலிருந்து மழைநீர் வெளியேறுவதில் பெரும் தாமதம்
ஏற்பட்டுள்ளது.</p><h2>பொருளாதார பேரிடி</h2><p>
</p><p>
எரிபொருள் விலை உயர்வு, உரம் மற்றும் விதை நெல் செலவுகளுக்கு மத்தியில் கடன்
பட்டாவது சிறுபோக/பெரும்போகச் செய்கையினை மேற்கொண்ட விவசாயிகளுக்கு இந்நிலைமை
பெரும் பொருளாதார பேரிடியை ஏற்படுத்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2c1e4ae8-d485-498a-8463-e185b9af9d1c/26-6a72f2a71bdca.webp' /></p><p>
</p><p>
எனவே, பாதிப்புக்குள்ளான வயல்நிலங்களை விவசாயத் திணைக்கள அதிகாரிகளும் கமநல
சேவை அலுவலர்களும் உடனடியாகப் பார்வையிட்டு, பயிர்ச்சேத மதிப்பீடுகளை விரைவாக
மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் வேண்டுகோள்
விடுத்துள்ளனர்.</p><p>
</p><p>
அத்துடன், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டைப் பெற்றுக்கொடுக்க
அரசாங்கமும் விவசாயக் காப்பீட்டுச் சபையும் முன்வர வேண்டும் எனவும் அவர்கள்
வலியுறுத்தியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/02498b63-e5c5-4a01-9888-2d44d2dfeceb/26-6a72f2a803215.webp' /></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-05T08:22:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜேர்மன் திரைத்துறையினருக்கு ஏமாற்றத்தை அளித்துள்ள செய்தி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/german-govt-to-cut-film-funding-for-cost-saving-1785918064"></link>
            <id>https://news.lankasri.com/article/german-govt-to-cut-film-funding-for-cost-saving-1785918064</id>
            <summary type="text">அடுத்த ஆண்டுக்கான பட்ஜெட்டில், கலாச்சாரம் மற்றும் ஊடகங்களுக்காக ஒதுக்கப்படும் தொகை 8 சதவிகிதம் குறைக்கப்பட உள்ளது.


ஜேர்மனியின் 2027ஆம் ஆண்டுக்கான...</summary>
            <content type="html"><![CDATA[<p>அடுத்த ஆண்டுக்கான பட்ஜெட்டில், கலாச்சாரம் மற்றும் ஊடகங்களுக்காக ஒதுக்கப்படும் தொகை 8 சதவிகிதம் குறைக்கப்பட உள்ளது.</p><p>


ஜேர்மனியின் 2027ஆம் ஆண்டுக்கான ஃபெடரல் பட்ஜெட் திரைத்துறையினருக்கு ஏமாற்றம் அளிக்கக்கூடியதாக இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.</p><h3>

திரைத்துறையினருக்கு ஏமாற்றத்தை அளிக்கும் பட்ஜெட்
</h3><p>
ஜேர்மனியின் 2027ஆம் ஆண்டுக்கான ஃபெடரல் பட்ஜெட்டில், கலாச்சாரம் மற்றும் ஊடகத்துறைக்கு ஒதுக்கப்படும் தொகை, 2.57 பில்லியன் யூரோக்களிலிருந்து 2.36 பில்லியன் யூரோக்களாக குறைக்கப்படும் என அரசின் வரைவு மசோதா ஒன்று தெரிவித்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/921be116-11df-4f94-adca-d617a09b4fbb/26-6a72f2727a507.webp' /></p><p>

செலவுகளைக் குறைப்பதற்காக ஜேர்மன் சேன்ஸலரான பிரெட்ரிக் மெர்ஸ் தலைமையிலான அரசு இப்படி ஒரு நடவடிக்கையை எடுக்க இருக்கும் நிலையில், German Federal Film Fund (DFFF) மற்றும் German Motion Picture Fund (GMPF) என்னும் அரசின் நிதியுதவிகள், 50 மில்லியன் யூரோக்கள் குறைக்கப்பட உள்ளதால், 250 மில்லியன் யூரோக்களாக இருந்த நிதியுதவி, 200 மில்லியன் யூரோக்களாக குறைய உள்ளது.&nbsp;</p><p></p><p>
விடயம் என்னவென்றால், இதற்கு முன் அரசின் நிதியுதவி 133 மில்லியன் யூரோக்களாக இருந்த நிலையில், இந்த ஆண்டு, அதாவது, 2026ஆம் ஆண்டு ஜனவரி மாதம்தான் அதை 250 மில்லியன் யூரோக்களாக அதிகரிப்பதாக கலாச்சாரத் துறை அமைச்சரான Wolfram Weimer அறிவித்திருந்தார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a505c1c4-fa22-44e5-ac53-217c3101b7e0/26-6a72f271c571b.webp' /></p><p>

அதை நம்பி சர்வதேச அளவில் ஜேர்மன் சினிமாவை சிறப்புறச் செய்ய திரைத்துறையினர் திட்டமிட்டுக்கொண்டிருந்த நிலையில், அடுத்த ஆண்டு திரைத்துறைக்கு ஒதுக்கப்படும் தொகை 8 சதவிகிதம் குறைய இருப்பதாக வெளியாகியுள்ள தகவல் அவர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-05T08:21:33+00:00</updated>
        </entry>
    </feed>
