<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-09-04T03:27:43+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாமல் ராஜபக்‌ஷவுக்கு இலஞ்ச,ஊழல் ஆணைக்குழு அழைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/bribery-and-corruption-commission-summons-namal-1788492230"></link>
            <id>https://jvpnews.com/article/bribery-and-corruption-commission-summons-namal-1788492230</id>
            <summary type="text">நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச இன்று காலை ( 4) இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை ஆணைக்குழுவின் முன் முன்னிலையாவார் என சட்டத்தர...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச இன்று காலை ( 4) இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை ஆணைக்குழுவின் முன் முன்னிலையாவார் என சட்டத்தரணி முதித ஆர். லோகுமுதலி தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p></p><p>இன்று காலை 9 மணிக்கு ஆணைக்குழுவின் முன் முன்னிலையாகுமாறு ஆணைக்குழுவினால் நாமல் ராஜபக்சவுக்கு எழுத்துப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1f60fdb7-754b-46e4-b724-7cbae21d92b3/26-6a9a39c8565d6.webp' /></p><p>எனவே தனது கட்சிக்காரர் இந்த கோரிக்கைக்கு இணங்க ஒப்புக்கொண்டதாக சட்டத்தரணி உறுதிபடுத்தியுள்ளார்.</p><p>ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்காக பெரிய ரக விமானக்குழுமத்தை அமைப்பது மற்றும் எயார்பஸ் (Airbus) விமானக்கொள்வனவின் போது இடம்பெற்றதாக கூறப்படும் இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணையின் ஒரு பகுதியாக, நாமல் ராஜபக்சவுக்கு ஆணைக்குழு (CIABOC) அழைப்பாணை விடுத்துள்ளது&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-09-04T03:23:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாமல் ராஜபக்சவுக்கு இலஞ்ச,ஊழல் ஆணைக்குழு அழைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/namal-rajapaksa-to-appear-before-ciaboc-today-1788488124"></link>
            <id>https://ibctamil.com/article/namal-rajapaksa-to-appear-before-ciaboc-today-1788488124</id>
            <summary type="text">நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாகவுள்ளார்.இன்று (04) முற்பகல் அந்த ஆணைக்குழுவில் முன்னிலையாக...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாகவுள்ளார்.</p><p>இன்று (04) முற்பகல் அந்த ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அவருக்கு எழுத்துமூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>குறித்த விடயத்தை நமல் ராஜபக்சவின் சட்டத்தரணி முதித ஆர். லோகுமுதலி தெரிவித்துள்ளார்.</p><h2>ஆணைக்குழுவில் முன்னிலை</h2><p>ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவன கொள்வனவின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் மோசடி தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைக்கு அமைவாக இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.&nbsp;&nbsp;</p><p> 

இதற்கமைய, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச இன்றையதினம் இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாகவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.</p>]]></content>
            <updated>2026-09-04T03:16:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை சிறையில் இருந்த 9 இந்திய மீனவர்கள் விடுதலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/9-indian-fishermen-released-from-sri-lankan-prison-1788491639"></link>
            <id>https://jvpnews.com/article/9-indian-fishermen-released-from-sri-lankan-prison-1788491639</id>
            <summary type="text">இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 9 இந்திய மீனவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 9 இந்திய மீனவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.</p><p> 

கடந்த ஜூலை மாதம் 22 ஆம் திகதி தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து குறித்த 9 மீனவர்களும் கைது செய்யப்பட்டிருந்தனர்.</p><p>சந்தேகநபர்கள் நேற்று (3) மன்னார் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0d929c50-dab5-4ec4-9f91-48b7566000bd/26-6a9a377970e25.webp' /></p><p>இதன் போது விசாரணைகளை மேற்கொண்ட மேலதிக நீதிவான், 1 ஆம் மற்றும் 2 ஆம் குற்றச்சாட்டுக்களுக்கு 12 மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 10 வருட சிறை தண்டனையும், 3 ஆவது குற்றச்சாட்டுக்கு தலா ஒருவருக்கு 2 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் செலுத்த நீதிமன்றம் கட்டளை பிறப்பித்துள்ளது. </p><p>

அதேநேரம் ஏற்கனவே இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்ட மீனவர் ஒருவர் இரண்டாவது முறையாகவும் கைதாகியிருந்த நிலையில் அவருக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்தப்பட்ட நிலையில், அதற்கு மேலதிகமாக 2 இலட்சத்து 75 ஆயிரம் ரூபாய் செலுத்த நீதிமன்றம் உத்தரவிட்டது. </p><p>

இந்த நிலையில் குறித்த 9 மீனவர்களையும் நிபந்தனையின் அடிப்படையில் மன்னார் நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-04T03:14:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[பெண்ணின் நிர்வாண படங்களை வெளியிட்ட நபர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/man-arrested-for-releasing-nude-photos-of-a-woman-1788491162"></link>
            <id>https://jvpnews.com/article/man-arrested-for-releasing-nude-photos-of-a-woman-1788491162</id>
            <summary type="text">பெண்ணொருவரின் நிர்வாணப் புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பரப்பியமை தொடர்பில் சந்தேகநபரொருவரை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கணினி குற்றப் புலனாய்வுப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>பெண்ணொருவரின் நிர்வாணப் புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பரப்பியமை தொடர்பில் சந்தேகநபரொருவரை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவின் கண்டி உப பிரிவு கைது செய்துள்ளது.</p><p>கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கு அமைய மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது, சந்தேகநபர் நேற்று (03) மதியம் கினிகத்தேனை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f988d3ea-5a43-47d8-a60f-9576c8bee199/26-6a9a359c61f29.webp' /></p><p>கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கினிகத்தேனை பகுதியைச் சேர்ந்த 36 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.</p><p> 

சந்தேகநபர் முறைப்பாட்டாளரைத் திருமணம் செய்து, பின்னர் சட்டபூர்வமாகப் பிரிந்திருந்த நிலையிலேயே இந்தச் செயலைச் செய்துள்ளமை இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.</p><p> 

இச்சம்பவம் தொடர்பில் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவின் கண்டி உப பிரிவு மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-04T03:06:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Tony</name>
            </author>
            <title type="text"><![CDATA[முதல்வர் விஜய்க்கு நன்றி சொன்ன அஜித்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/ajith-kumar-thanks-cm-vijay-for-motorsports-push-1788489037"></link>
            <id>https://cineulagam.com/article/ajith-kumar-thanks-cm-vijay-for-motorsports-push-1788489037</id>
            <summary type="text">அஜித், விஜய்அஜித், விஜய் இருவரும் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருந்த நடிகர்கள். இந்த இரு துருவங்களும் தற்போது வேறு வேறு துறையை தேர்ந்தெடுத்து அவர்கள் ...</summary>
            <content type="html"><![CDATA[<h2>அஜித், விஜய்</h2><p>அஜித், <a href="https://www.youtube.com/watch?v=8CIsfQ9MKF0&amp;t=289s" target="_blank">விஜய் </a>இருவரும் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருந்த நடிகர்கள். இந்த இரு துருவங்களும் தற்போது வேறு வேறு துறையை தேர்ந்தெடுத்து அவர்கள் வாழ்க்கையில் முன்னேறி வருகிறார்கள்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8c8d9cb5-b203-4c35-aea0-1222f0d66ab6/26-6a9a2d5092b25.webp' /></p><p>அதிலும் விஜய் ஒடி படி மேலே சென்று தமிழக முதல்வராகவே ஆகிவிட்டார். அந்த வகையில், அஜித் சினிமாவை விட தற்போது தன் முழு கவனத்தையும் கார் ரேஸ் மேலேயே வைத்துள்ளார்.</p><p></p><h2>நன்றி சொன்ன அஜித்</h2><p> </p><p>

இந்நிலையில், தற்போது தமிழ்நாட்டின் முதல்வர் விஜய் அவர்கள் தமிழகத்தில் மிகப்பெரிய மோட்டார் சிட்டி ஒன்று கட்டப்படும் என நேற்று சட்டமன்றத்தில் அறிவிப்பை வெளியிட்டார்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c59f820c-2a91-4cf3-96d6-94d6a035c1ba/26-6a9a2d514fbf7.webp' /></p><p>அதற்கு அஜித் பெரிய அறிக்கை ஒன்றை வெளியிட்டு, முதல்வர் விஜய் அவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். இது சமூக வலைத்தளங்களில் மிகப்பெரிய பேசுபொருளாக ஆகியுள்ளது.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Thanks giving message from Ajith Kumar to Tamil Nadu Chief Minister Hon. C.Joseph Vijay. 🇮🇳 <a href="https://x.com/CMOTamilnadu?ref_src=twsrc%5Etfw">@CMOTamilnadu</a> <a href="https://x.com/Akracingoffl?ref_src=twsrc%5Etfw">@Akracingoffl</a> <a href="https://x.com/SureshChandraa?ref_src=twsrc%5Etfw">@SureshChandraa</a> <a href="https://x.com/hashtag/AjithKumar?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#AjithKumar</a> <a href="https://x.com/hashtag/JosephVijay?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#JosephVijay</a> <a href="https://x.com/hashtag/TamilNadu?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#TamilNadu</a> <a href="https://x.com/hashtag/TamilNaduCM?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#TamilNaduCM</a> <a href="https://x.com/hashtag/AKRacing?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#AKRacing</a> <a href="https://x.com/hashtag/AjithKumarRacing?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#AjithKumarRacing</a> <a href="https://t.co/yWTn3F8RtN">pic.twitter.com/yWTn3F8RtN</a></p>&mdash; Suresh Chandra (@SureshChandraa) <a href="https://x.com/SureshChandraa/status/2095541477401354707?ref_src=twsrc%5Etfw">September 3, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p>]]></content>
            <updated>2026-09-04T03:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகும் நாமல் ராஜபக்ச]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-appears-before-the-bribery-commission-today-1788489690"></link>
            <id>https://tamilwin.com/article/namal-appears-before-the-bribery-commission-today-1788489690</id>
            <summary type="text">நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச இன்று காலை ( 4) இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை ஆணைக்குழுவின் முன் முன்னிலையாவார் என சட்டத்தர...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச இன்று காலை ( 4) இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை ஆணைக்குழுவின் முன் முன்னிலையாவார் என சட்டத்தரணி முதித ஆர். லோகுமுதலி 
தெரிவித்துள்ளார்.
</p><p>
இன்று காலை 9 மணிக்கு ஆணைக்குழுவின் முன் முன்னிலையாகுமாறு ஆணைக்குழுவினால் நாமல் ராஜபக்சவுக்கு எழுத்துப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.</p><h2>கோரிக்கைக்கு இணக்கம்</h2><p>
</p><p>
எனவே தனது கட்சிக்காரர் இந்த கோரிக்கைக்கு இணங்க ஒப்புக்கொண்டதாக சட்டத்தரணி உறுதிபடுத்தியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/65d604aa-af14-4c35-8f3d-9d56698586ac/26-6a9a33ebe94cb.webp' />&nbsp;</p><p>

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்காக பெரிய ரக விமானக்குழுமத்தை அமைப்பது மற்றும் எயார்பஸ் (Airbus) விமானக்கொள்வனவின் போது இடம்பெற்றதாக கூறப்படும் இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணையின் ஒரு பகுதியாக, நாமல் ராஜபக்சவுக்கு ஆணைக்குழு (CIABOC) அழைப்பாணை விடுத்துள்ளது&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-04T02:59:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[கணவனின் கொடூர செயல் - கர்ப்பிணிப்பெண் குத்திக் கொலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/man-killed-wife-and-baby-1788486637"></link>
            <id>https://tamilwin.com/article/man-killed-wife-and-baby-1788486637</id>
            <summary type="text">புத்தளம் கல்பிட்டி, எஸ்.பி.ஆர்.வத்தை, தலவில பகுதியில் கணவனின் கத்திக்குத்து தாக்குதலுக்கு இலக்காகி கர்ப்பிணி பெண் உயிரிழந்துள்ளார். 

இரண்டு பிள்ளைக...</summary>
            <content type="html"><![CDATA[<p>புத்தளம் கல்பிட்டி, எஸ்.பி.ஆர்.வத்தை, தலவில பகுதியில் கணவனின் கத்திக்குத்து தாக்குதலுக்கு இலக்காகி கர்ப்பிணி பெண் உயிரிழந்துள்ளார். </p><p>

இரண்டு பிள்ளைகளின் தாயான கர்ப்பிணிப் பெண்ணும் அவரது வயிற்றில் இருந்த சிசுவும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p> 

பொலிஸாரின் அவசர தொலைபேசி சேவையான 119 இற்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், உடனடியாக செயற்பட்ட கல்பிட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர், சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர்.</p><p> </p><h2><b>

கர்ப்பிணிப்பெண் குத்திக் கொலை </b></h2><p>45 நிமிடங்களுக்குள் துரத்திச் சென்று சந்தேக நபரையும் குற்றத்திற்கு பயன்படுத்திய கத்தியையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/55acc1bb-8c19-4f11-a391-5d0218e60078/26-6a9a33b7d0e6e.webp' /></p><p>இவ்வாறு உயிரிழந்தவர் களாப்பள்ளி, தலவில முகவரியை சேர்ந்ததிலினி தில்ருக்ஷி என்ற 26 வயதுடைய பெண் என தெரியவந்துள்ளது.</p><p> 

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-09-04T02:58:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பகுதியில் பனை மரத்துடன் மோதிய மோட்டார் சைக்கிள்! இளைஞன் பரிதாபமாக பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/boy-dead-after-a-crash-into-a-palm-tree-1788489810"></link>
            <id>https://ibctamil.com/article/boy-dead-after-a-crash-into-a-palm-tree-1788489810</id>
            <summary type="text">கிளிநொச்சி பகுதியில் மோட்டார் சைக்கிள் வேக கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த பனை மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானதின் இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளார்....</summary>
            <content type="html"><![CDATA[<p>கிளிநொச்சி பகுதியில் மோட்டார் சைக்கிள் வேக கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த பனை மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானதின் இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளார்.</p><p>குறித்த சம்பவம் கிளிநொச்சி - உருத்திரபுரம் இந்துக் கல்லூரி பாடசாலைக்கு அண்மித்த பகுதியில் இடம்பெற்றுள்ளது.</p><p>கிளிநொச்சி உதயநகர் பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய புஷ்பராசா சமர்நிலவன் என்ற இளைஞனே குறித்த விபத்தில் பரிதாபகரமான உயிரிழந்துள்ளார்.</p><p></p><h2>பிரேத பரிசோதனை</h2><p>இளைஞன் பயணித்த மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியோரம் நின்ற பனை மரத்துடன் மீது மோதி விபத்து சம்பவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5e682de2-0670-4741-ad4f-e3e77e630479/26-6a9a33a8bfcfb.webp' /></p><p>
விபத்தில் படுகாயம் அடைந்த நிலையில் குறித்த இளைஞன் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
</p><p>உயிரிழந்த இளைஞனின் சடலம் பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p> விபத்து தொடர்பாக கிளிநொச்சி காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-04T02:57:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆணவத்தின் உச்சத்தில் இருந்தேன்!! கொடுமைப்படுத்தி இருக்கிறேன்!! நடிகை நமீதா ஓபன் டாக்...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/namitha-reflects-on-sudden-fame-and-industry-1788444866"></link>
            <id>https://viduppu.com/article/namitha-reflects-on-sudden-fame-and-industry-1788444866</id>
            <summary type="text">தமிழ், தெலுங்கு சினிமாவில் நடித்து டாப் நடிகையாக 2000களில் திகழ்ந்து வந்தவர் தான் நடிகை நமீதா. பல முன்னணி நடிகர்களுடன் நடித்து வந்த நமீதாவுக்கு திருமண...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழ், தெலுங்கு சினிமாவில் நடித்து டாப் நடிகையாக 2000களில் திகழ்ந்து வந்தவர் தான் நடிகை நமீதா. பல முன்னணி நடிகர்களுடன் நடித்து வந்த நமீதாவுக்கு திருமணமாகி இரட்டை குழந்தைகள் பிறந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8836bdfc-e785-465a-a2e0-deef3af4e141/26-6a99810f46a46.webp' /></p><p> </p><h2>நமீதா</h2><p>சமீபத்தில் உடல் எடையை குறைத்து அனைவரது கவனத்தையும் ஈர்த்த நமீதா, தனக்கு இருந்த ஆணவம், தான் நடித்திருக்கக்கூடாத படங்கள், காலம் தாழ்வதற்கு முன் தன்னை மாற்றிக்கொள்ள வெண்டும் என்ற அறிவுறுத்திய நண்பர்கள் குறித்து மனம் திறந்து பகிர்ந்துள்ளார். </p><p>அதில், என்னுடைய ஆரம்பக்காலத்தில் நான் கொஞ்சம் ஆணவமாக இருந்தேன். முதல், இரண்டு ஆண்டுகள் நான் அப்படித்தான் இருந்தபோது, பலரும் என்னிடம், 'இப்படிப்பட்ட மனநிலையுடன் இருந்தால் இந்த சினிமாத்துறையில் நீண்டகாலம் உங்களால் நிலைத்திருக்க முடியாது' என்று கூறினர். அதன்பின் நான் என்னை மாற்றிக்கொண்டேன்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f161c932-064b-413f-9cf9-fec8f9f502bc/26-6a9981101f727.webp' /></p><p> அக்காலக்கட்டத்தில் தனது நடத்தை படப்பிடிப்பு தளத்தில் இருந்த சக நடிகர்கள் முதல் தொழில்நுட்பக் கலைஞர்கள், தன்னுடன் பணியாற்றிய இளம் உதவியாளர்கள் வரை பலருக்கும் மன அழுத்தத்தை ஏற்படுத்தி இருக்கலாம் என்று ஒப்புக்கொள்கிறேன். </p><p>என்னை மாற்றிக் கொள்ள வேண்டும் என்ற அறிவுரை ஒருவரிடம் இருந்து மட்டும் வரவில்லை. தன்னுடைய அணுகுமுறை எந்தத் திசையில் சென்று கொண்டிருக்கிறது என்பதை உணர்ந்த பல திரையுலக சகாக்கள், அது தன்னுடைய திரையுலக வாழ்க்கையை பாதிப்பதற்கு முன் என்னை எச்சரித்தது என்று தெரிவித்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-09-04T02:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[எரிபொருள் இறக்குமதி செலவு அதிகரிப்பு: இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/oil-import-amount-hiked-1788488532"></link>
            <id>https://tamilwin.com/article/oil-import-amount-hiked-1788488532</id>
            <summary type="text">நடப்பு 2026 ஆம் ஆண்டின் ஜனவரி முதல் ஜூலை வரையிலான காலப்பகுதியில், நாட்டின் மொத்த எரிபொருள் இறக்குமதி செலவீனம் 59.9 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக இலங்கை...</summary>
            <content type="html"><![CDATA[<p>நடப்பு 2026 ஆம் ஆண்டின் ஜனவரி முதல் ஜூலை வரையிலான காலப்பகுதியில், நாட்டின் மொத்த எரிபொருள் இறக்குமதி செலவீனம் 59.9 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
</p><p>2025 ஆம் ஆண்டின் ஜனவரி - ஜூலை காலத்தில் 2,265.4 மில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்த எரிபொருள் இறக்குமதி செலவு, 2026 ஆம் ஆண்டின் அதே காலப்பகுதியில் 3,621.5 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது.</p><h2>கச்சா எண்ணெய் இறக்குமதிக்கான செலவு</h2><p>
கச்சா எண்ணெய் இறக்குமதிக்கான செலவு அதிகரித்தமையே இந்த உயர்வுக்கு முதன்மை காரணியாக அமைந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ae63d40f-0e27-4bfd-baac-7f0baa76847e/26-6a9a2b55bbf38.webp' /></p><p>
</p><p>2026 ஜூன் மாதத்தில் 465 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவான மாதாந்த எரிபொருள் இறக்குமதி செலவு, ஜூலை மாதத்தில் 453 மில்லியன் அமெரிக்க டொலர்களாக சற்றே குறைந்துள்ளது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-04T02:22:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பில் அதிகாலையில் பரபரப்பு - பெண்கள் மீது துப்பாக்கிச்சூடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/woman-injured-in-early-shooting-in-colpetty-1788484217"></link>
            <id>https://tamilwin.com/article/woman-injured-in-early-shooting-in-colpetty-1788484217</id>
            <summary type="text">கொழும்பு - கொள்ளுப்பிட்டியின் 6 வது ஒழுங்கை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் பெண் உட்பட இருவர் காயமடைந்துள்ளனர்.

இன்று அதிகாலை சு...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு - கொள்ளுப்பிட்டியின் 6 வது ஒழுங்கை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் பெண் உட்பட இருவர் காயமடைந்துள்ளனர்.
</p><p>
இன்று அதிகாலை சுமார் 3 மணியளவில் அந்த பகுதியில் அமைந்துள்ள தொடர்மாடிக் குடியிருப்புத் தொகுதியிலேயே இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
</p><p>
அடுக்குமாடிக் குடியிருப்பு வளாகத்தின் மேல் தளத்தில் இருந்த நபர் ஒருவர், வெளியே இருந்த இரண்டு பெண்களை நோக்கித் துப்பாக்கியால் சுட்டுள்ளார்.</p><p>
</p><h2><b>
துப்பாக்கி சூடு</b></h2><p>துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயமடைந்து சிகிச்சைக்காக கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b5e0266b-93c9-4a97-a0c7-a527bd40c2f2/26-6a9a1deda8785.webp' /></p><p>இந்தத் துப்பாக்கிச் சூடு தனிப்பட்ட காரணத்திற்காக நடத்தப்பட்டதாகவும், சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
</p><p>
இந்த சம்பவம் குறித்து கொழும்புப்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-04T02:21:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[மோசடிக்குள் சிக்கவேண்டாம்! பொதுமக்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள அவசர எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/police-warn-public-fake-traffic-fine-payment-1788486106"></link>
            <id>https://tamilwin.com/article/police-warn-public-fake-traffic-fine-payment-1788486106</id>
            <summary type="text">போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதங்களை ஆன்லைனில் செலுத்துமாறு கோரும் மோசடி குறித்து இலங்கை பொலிஸார் வாகன சாரதிகளை எச்சரித்துள்ளனர்.

போக்குவரத்து...</summary>
            <content type="html"><![CDATA[<p>போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதங்களை ஆன்லைனில் செலுத்துமாறு கோரும் மோசடி குறித்து இலங்கை பொலிஸார் வாகன சாரதிகளை எச்சரித்துள்ளனர்.
</p><p>
போக்குவரத்து பொலிஸார் தரப்பிலிருந்து அழைப்பதாக கூறி மோசடியாளர்கள் இந்த மோசடியை மேற்கொள்வதாக தெரிவிக்கபடப்டுள்ளது.
</p><p>
இது தொடர்பில் போக்குவரத்து மற்றும் வீதி பாதுகாப்புப் பிரிவின் (Traffic Control and Road Safety Range) பொறுப்பதிகாரி டி.ஐ.ஜி. செனதீர விளக்கமளிக்கையில்,</p><h2>போக்குவரத்து விதிமீறல்கள்</h2><p>

பெறுநர்கள் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்டுள்ளதாகவும், குறிப்பிட்ட காலத்திற்குள் அபராதங்களை ஆன்லைனில் செலுத்த வேண்டும் என்றும் கூறி செய்திகள் பரப்பப்படுகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ad810053-6dbf-4ad6-952a-7a64e15f575c/26-6a9a29aeeb448.webp' /></p><p>
</p><p>
சில நாட்களுக்குள் பணம் செலுத்தப்படாவிட்டால் அபராதம் அதிகரிக்கும் என்றும், சட்ட நடவடிக்கை எடுக்கப்படலாம் என்றும் அச்சுறுத்துவதாக கண்டறியப்பட்டுள்ளது.</p><p>

இதன்பின்னர், பெறுநர்கள் மோசடி இணையதளங்களுக்கு வழிநடத்தப்பட்டு, அங்கு அவர்கள் தனிப்பட்ட தகவல்கள் மற்றும் வங்கி அட்டை விபரங்களை உள்ளிடுமாறு கேட்கப்படுகின்றார்கள்.
</p><p>
இதுபோன்ற இணைப்புகள் மூலம் மக்கள் தங்கள் வங்கி விவரங்களை உள்ளிட்டு, பின்னர் தங்கள் கணக்குகளிலிருந்து பணத்தை இழந்ததாக பொலிஸார்களுக்கு தகவல்கள் கிடைத்துள்ளன.
</p><p>
போக்குவரத்து அபராதங்களைச் செலுத்துவதற்காக வாகன சாரதிகளை இணையதளங்களுக்கு வழிநடத்தும் நடவடிக்கையை இலங்கை போக்குவரத்து பொலிஸார் அனுப்புவதில்லை என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.</p><h2>அபராதங்களை செலுத்துவதற்கான&nbsp;ஒரே இணையவழி வழிமுறை</h2><p>
</p><p>
போக்குவரத்து அபராதங்களை செலுத்துவதற்கு தற்போது கிடைக்கக்கூடிய அங்கீகரிக்கப்பட்ட ஒரே இணையவழி வழிமுறை GovPay ஆகும்.
</p><p>
இதில், சம்பந்தப்பட்ட போக்குவரத்து விதிமீறல் தொடர்பாக ஒரு பொலிஸ் அதிகாரியால் வழங்கப்படும் தகவல்களை பயன்படுத்தி பணம் செலுத்தப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f25b7cfa-55d0-4bde-84b2-74e4f7beddfc/26-6a9a29afa6c82.webp' />&nbsp;</p><p>

"இலங்கை போக்குவரத்து பொலிஸ் துறையினால் அனுப்பப்படும் போக்குவரத்து அபராதங்களைச் செலுத்துவதற்குத் தனி இணையதளம் எதுவும் இல்லை.

எனவே சந்தேகத்திற்கிடமான இணைப்புகளைக் கிளிக் செய்ய வேண்டாம் என்றும், வங்கி மற்றும் பிற இரகசியத் தகவல்களை வெளியிட வேண்டாம் என்றும் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளார்.
</p><p>
இந்த மோசடிக்கு பலியானவர்கள், விசாரணைக்காகத் தமக்கு அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.</p><p>
போக்குவரத்து அபராதங்கள் எனக்கூறப்படும் தொகைகளை உடனடியாகச் செலுத்துமாறு கோரும் அழைப்புகளை புறக்கணிக்குமாறு பொலிஸார் வாகன சாரதிகளை வலியுறுத்தியுள்ளது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-04T02:15:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதிகாலையில் கொழும்பில் பரபரப்பு - கொள்ளுப்பிட்டி துப்பாக்கிச் சூட்டில் பெண்கள் காயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/two-injured-in-colombo-kollupitiya-shooting-1788485983"></link>
            <id>https://ibctamil.com/article/two-injured-in-colombo-kollupitiya-shooting-1788485983</id>
            <summary type="text">கொள்ளுப்பிட்டி பகுதியில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்&amp;nbsp;இந்த சம்பவம் இன்று (04) அதிகாலை கொள்ளுப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொள்ளுப்பிட்டி பகுதியில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்&nbsp;</p><p>இந்த சம்பவம் இன்று (04) அதிகாலை கொள்ளுப்பிட்டி 6 ஆவது ஒழுங்கையில் அமைந்துள்ள வீடமைப்புத் தொகுதியொன்றில்&nbsp; இடம்பெற்றுள்ளது.
</p><p>
இந்த துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.&nbsp; &nbsp;</p><p></p><h2>மேலதிக விசாரணை</h2><p>அடுக்குமாடிக் குடியிருப்பு வளாகத்தின் மேல் தளத்தில் இருந்த நபர் ஒருவர், வெளியே இருந்த இரண்டு பெண்களை நோக்கித் துப்பாக்கியால் சுட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6bcfa036-76bc-4ca0-b93a-757d819cad83/26-6a9a28792025d.webp' /></p><p>


</p><p>துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த இருவர் சிகிச்சைக்காக கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
</p><p>
தனிப்பட்ட தகராறின் காரணமாக இந்தத் துப்பாக்கிச் சூடு நடந்திருக்கலாம் என நம்பப்படுவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
</p><p>
இந்தச் சம்பவம் குறித்து கொள்ளுப்பிட்டி காவல்துறையினர்&nbsp; மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p><p>

</p>]]></content>
            <updated>2026-09-04T01:48:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை அதிகாரிகளால் தேடப்பட்டு வந்த இருவர் அபுதாபியிலிருந்து நாடு கடத்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/two-deportees-abu-dhabi-brought-back-to-sri-lanka-1788484985"></link>
            <id>https://tamilwin.com/article/two-deportees-abu-dhabi-brought-back-to-sri-lanka-1788484985</id>
            <summary type="text">இலங்கை பொலிஸாரால் தேடப்பட்டு வந்த இரு சந்தேகநபர்கள், அபுதாபியில் இருந்து நாடு கடத்தப்பட்டுள்ளனர்.நேற்று (03) கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நி...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை பொலிஸாரால் தேடப்பட்டு வந்த இரு சந்தேகநபர்கள், அபுதாபியில் இருந்து நாடு கடத்தப்பட்டுள்ளனர்.</p><p>நேற்று (03) கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.</p><p>போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத துப்பாக்கிகளை வைத்திருந்தமை உள்ளிட்ட குற்றச்செயல்கள் தொடர்பில் நீண்ட காலமாக தேடப்பட்டு வந்துள்ளனர்.</p><h2>கையடக்க தொலைபேசிகளில் சிக்கிய காணொளி</h2><p>
</p><p>இரு சந்தேகநபர்களும் ஐக்கிய அரபு இராச்சியத்தின் பாதுகாப்புப் பிரிவினரின் காவலில் இருந்தபோது, ஈரான் நடத்திய தாக்குதல்களில் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் ஆளில்லா வானூர்திகள் மற்றும் ஏவுகணைகள் தொடர்பான காணொளிகளை தமது கையடக்கத் தொலைபேசிகளில் வைத்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9ee6cc27-157a-4ca9-9b51-28575b4aadaa/26-6a9a2100af27c.webp' />&nbsp;</p><p>
</p><p>
நாடு கடத்தப்பட்ட இரு சந்தேகநபர்களும் 36 மற்றும் 37 வயதுடையவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>இவர்களிடம் மேலதிக வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டதையடுத்து, இருவரும் மேலதிக விசாரணைகளுக்காக பயங்கரவாத விசாரணைப் பிரிவு மற்றும் கொழும்பு தெற்கு பிரிவின் குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-04T01:38:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[முன்னாள் மனைவிக்கு நபர் செய்த மோசமான செயல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ex-husband-arrested-for-leaking-photos-1788485292"></link>
            <id>https://tamilwin.com/article/ex-husband-arrested-for-leaking-photos-1788485292</id>
            <summary type="text">கண்டியில் பெண்ணொருவரின் தகாத புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பரப்பிய சந்தேகநபர் ஒருவர், கைது செய்யப்பட்டுள்ளார். குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கண்டியில் பெண்ணொருவரின் தகாத புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பரப்பிய சந்தேகநபர் ஒருவர், கைது செய்யப்பட்டுள்ளார். </p><p>குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கணினி குற்ற விசாரணைப் பிரிவின் கண்டி உப அலுவலக அதிகாரிகளினால் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். </p><p>கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது, சந்தேகநபர் நேற்று கினிகத்தேனை பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p> </p><h2><b>பொலிஸார்&nbsp;விசாரணை</b></h2><p>கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 36 வயதுடைய கினிகத்தேனை பகுதியைச் சேர்ந்தவராகும்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ab3170e6-20d8-49c4-b286-50da127f0b10/26-6a9a2de145503.webp' /></p><p>சந்தேகநபர் முறைப்பாட்டாளருடன் திருமணம் செய்திருந்தார். எனினும் சட்டப்பூர்வமாக பிரிந்திருந்த நிலையில் இந்த மோசமான செயலில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p> இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைக் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-04T01:35:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[எல்லை தாண்டிய மீன்பிடி! 09 இந்திய கடற்றொழிலாளர்கள் நிபந்தனை அடிப்படையில் விடுதலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/9-indian-fishermen-released-on-conditions-1788484670"></link>
            <id>https://ibctamil.com/article/9-indian-fishermen-released-on-conditions-1788484670</id>
            <summary type="text">இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட நிலையில் கடந்த ஜூலை மாதம் 22 ஆம் திகதி தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து கடற்படையினரால் கைது...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட நிலையில் கடந்த ஜூலை மாதம் 22 ஆம் திகதி தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து கடற்படையினரால் கைது செய்யப்பட்டு தொடர்ச்சியாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 09 இந்திய கடற்றொழிலாளர்களையும் விடுதலை செய்ய மன்னார் மேலதிக நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.</p><p>

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்த நிலையில் தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து இந்திய இழுவைப் படகு ஒன்றுடன் 9 இந்திய கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்கள் தலைமன்னார் கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.</p><p>
தலைமன்னார் கடற்படையினர் விசாரணைகளின் பின்னர் மன்னார் மாவட்ட கடற்தொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.</p><p></p><h2>நீதிமன்ற உத்தரவு</h2><p>
</p><p>
கடற்தொழில் திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளின் பின்னர் மன்னார் நீதிமன்றத்தில் முற்படுத்திய நிலையில் குறித்த 9 கடற்றொழிலாளர்களும் தொடர்ச்சியாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b862d3fb-6dfb-4d2a-ab88-133535d5c2ed/26-6a9a1c4043829.webp' /></p><p>
</p><p>
இந்த நிலையில் குறித்த 9 கடற்றொழிலாளர்களும் நேற்றையதினம் வியாழக்கிழமை (03) மன்னார் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டனர்.
</p><p>
இதன் போது விசாரணைகளை மேற்கொண்ட மேலதிக நீதிவான், 1 ஆம் மற்றும் 2 ஆம் குற்றச்சாட்டுக்களுக்கு 12 மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 10 வருட சிறை தண்டனையும், 3 ஆவது குற்றச்சாட்டுக்கு நபர் ஒருவருக்கு 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் குற்றப் பணமும் செலுத்த உத்தரவிட்டார்.</p><p>
</p><p>
மேலும் ஏற்கனவே இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்ட கடற்றொழிலாளர் ஒருவருக்கு இரண்டாவது முறையாக இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடித்த குற்றச்சாட்டுக்காக 25 ஆயிரம் ரூபாய் குற்றப்பணம் செலுத்தப்பட்ட நிலையில் மேலதிகமாக 2 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் செலுத்த நீதிமன்றம் உத்தரவிட்டது.
</p><p>
இந்த நிலையில் குறித்த 9 கடற்றொழிலாளர்களும் நிபந்தனையின் அடிப்படையில் மன்னார் நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-04T01:23:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பகுதியை உலுக்கிய துயரம் ; பாம்பின் விஷம் பட்ட நாவல் பழத்தால் பறிபோன சிறுவனின் உயிர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/boy-dies-after-eating-snake-poisoned-jamun-fruit-1788480955"></link>
            <id>https://jvpnews.com/article/boy-dies-after-eating-snake-poisoned-jamun-fruit-1788480955</id>
            <summary type="text">நிலத்தில் வீழ்ந்து கிடந்த பாம்பின் விஷம் பட்டதாக சந்தேகிக்கப்படும் நாவல் பழத்தை உண்ட 11 வயதுடைய சிறுவன் ஒருவர் உயிரிழந்த பரிதாபகரமான சம்பவம் நேற்று (0...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">நிலத்தில் வீழ்ந்து கிடந்த பாம்பின் விஷம் பட்டதாக சந்தேகிக்கப்படும் நாவல் பழத்தை உண்ட 11 வயதுடைய சிறுவன் ஒருவர் உயிரிழந்த பரிதாபகரமான சம்பவம் நேற்று (03) மாலை மட்டு வெல்லாவெளி பொலிஸ் பிரிவிலுள்ள பாலையடிவட்டை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக வெல்லாவெளி பொலிசார் தெரிவித்தனர்.
</p><p style="text-align: justify; ">

பாலையடிவட்டை வைத்தியசாலை வீதியைச் சேர்ந்த 11 வயதுடைய 37-ஆம் கிராமம் நவகிரி வித்யாலயத்தில் 6ம் ஆண்டில் கல்வி கற்று வந்த சிறுவனே இவ்வாறு பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/113d3016-3c97-4cf7-80d8-0c38a19d6844/26-6a9a0dbca725d.webp' /></p><h2 style="text-align: justify; ">பாம்பின் விஷம் பட்ட நாவற்பழம்</h2><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
குறித்த சிறுவனின் வீட்டிற்கு முன்னால் நின்ற நாவற்பழ மரத்தில் இருந்து நிலத்தில் வீழ்ந்து கிடந்த நாவற்பழத்தை சம்பவ தினமான நேற்று மாலை எடுத்து உண்டுள்ள நிலையில் சிறிது நேரத்தில் சிறுவன் மயங்கி வீழ்ந்ததையடுத்து அவரை உடனடியாக களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நிலையில் அவன் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாகவும் பாம்பின் விஷம் பட்ட நாவற்பழத்தை உண்டதால் உயிரிழந்துள்ளதாக பொலிசாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
இதனையடுத்து சடலத்தை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கான நடவடிக்கையை முன்னெடுத்து வருவதாக பொலிசார் தெரிவித்தனர்.

</p><p style="text-align: justify; ">இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லாவெளி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-04T01:21:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாள அனர்த்தத்தை முன்பே கணித்த கிறிஸ்தவ பாதிரியார்; வைரலாகும் வீடியோ]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/priest-who-predicted-nepal-disaster-1788475887"></link>
            <id>https://canadamirror.com/article/priest-who-predicted-nepal-disaster-1788475887</id>
            <summary type="text">நேபாளம் வெள்ளத்தால் பாதிக்கப்படும் எனப் பேரிடருக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பே கிறிஸ்தவ பாதிரியார் ஒருவர் கணித்துள்ள விடியோ இணையத்தில் வைரலாகி வருகிறத...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">நேபாளம் வெள்ளத்தால் பாதிக்கப்படும் எனப் பேரிடருக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பே கிறிஸ்தவ பாதிரியார் ஒருவர் கணித்துள்ள விடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.</p><p style="text-align: justify; ">



திபெத்தில் ஏற்பட்ட பனிப்பாறை வெடிப்பால், நேபாளத்தின் வடக்கு ரசுவா மாவட்டத்தில் உள்ள போடே கோஷி ஆற்றில் கடந்த ஒகஸ்ட் 26 ஆம் திகதி மாபெரும் வெள்ளம் ஏற்பட்டு அங்குள்ள கட்டமைப்புகள் மற்றும் கட்டடங்கள் அடித்துச் செல்லப்பட்டன.</p><p style="text-align: justify; "><br></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
இந்தப் பேரிடரில், இதுவரை 1,200-க்கும் அதிகமானோர் பலியாகியுள்ள நிலையில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டினர் உட்பட சுமார் 4,200 பேர் காணாமல் போனதாகத் தெரிவிக்கப்படுகிறது.
</p><p style="text-align: justify; ">


 

 

இந்த நிலையில்,&nbsp; யூடியூப் பக்கத்தில் கிறிஸ்தவ பாதிரியார் ஒருவர் கடந்த ஜூன் மாதம் வெளியிட்ட விடியோவில், நேபாளம் வெள்ளத்தால் பாதிக்கப்படப் போவதாகக் கணித்துக் கூறியுள்ளார்.
</p><p style="text-align: justify; ">


இதுபற்றி, கடந்த ஜூன் 12 ஆம் திகதி அவர் வெளியிட்டுள்ள விடியோவில்,



“இன்று ஜூன் 12 2026. நேபாளத்தில் ஒரு பெரிய காட்டுத் தீ எரிவதை நான் பார்க்கிறேன். நேபாளத்தின் வனப்பகுதிகள் குறித்து எச்சரிக்கையாக இருக்கவும்.</p><p style="text-align: justify; "> நேபாளத்தைத் தாக்கும் நிலநடுக்கங்களை நான் பார்க்கிறேன். இந்த நிலநடுக்கம் 7 முதல் 8 ரிச்டர் அளவில் சக்திவாய்ந்தவையாக இருக்கும். இதனால், சிலர் பலியாவதையும் நான் பார்க்கிறேன்.</p><p style="text-align: justify; ">

நான் வெள்ளத்தைப் பார்க்கிறேன், தண்ணீரைப் பார்க்கிறேன் நேபாளத்தின் வீடுகள் நீரில் மூழ்கியுள்ளன. நேபாளத்துக்காகப் பிரார்த்தனை செய்யுங்கள்” எனக் கூறியுள்ளார்.
</p><p style="text-align: justify; ">


இந்தப் பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள நேபாளத்துக்கு இந்தியா உள்ளிட்ட நாடுகள் உதவிக்கரம் நீட்டி வரும் நிலையில், வெள்ளம் ஏற்படுவதை முன்கூட்டியே கணித்த பாதிரியாரின் விடியோ இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-09-04T01:20:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடக ராசிக்குள் நுழையும் கேது ; 18 வருஷத்திற்கு பிறகு மிகப்பெரிய அதிர்ஷ்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/kethu-peyarchi-bring-luck-for-3-zodiac-1788484695"></link>
            <id>https://jvpnews.com/article/kethu-peyarchi-bring-luck-for-3-zodiac-1788484695</id>
            <summary type="text">வேதஜோதிட சாஸ்திரப்படி கேது பகவான் தான் ஒருவருக்கு ஞானமும், அருளும் வழங்கக்கூடியவர். மேலும், ஒருவருக்கு ஆன்மீகத்தில் முன்னேற்றம் மற்றும் திடீர் அதிர்ஷ்...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">வேதஜோதிட சாஸ்திரப்படி கேது பகவான் தான் ஒருவருக்கு ஞானமும், அருளும் வழங்கக்கூடியவர். மேலும், ஒருவருக்கு ஆன்மீகத்தில் முன்னேற்றம் மற்றும் திடீர் அதிர்ஷ்டம் வாழ்க்கையில் உயர்ந்த முன்னேற்றம் ஆகியவைற்றை வழங்கக்கூடியவர் கேது பகவான்.
</p><p style="text-align: justify; ">
அந்த வகையில், கேது பகவான் 2026 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் திகதி கடக ராசிக்குள் நுழைகிறார். இந்த நிகழ்வு 2028 ஆம் ஆண்டு வரை உள்ளது. அதாவது கடகத்தில் கேது பகவான் சுமார் 18 மாதம் இருக்கப்போகிறார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6e429a91-b997-4cf9-a649-4bfbd3264723/26-6a9a1c58614ef.webp' /></p><h2 style="text-align: justify; ">எந்த ராசியினர்&nbsp;</h2><p style="text-align: justify; ">


இதனால் சில ராசிகளுக்கு வாழ்க்கையில்&nbsp; அதிர்ஷ்டமும், திடீர் வாய்ப்புகள் தேட வரப்போகிறது.&nbsp;</p><p style="text-align: justify; "><b>
ரிஷபம்:</b>
ரிஷப ராசிக்கு கேதுவின் இந்த மாற்றம் இவர்களுக்கு மனதில் தைரியமும், தன்னம்பிக்கையும், தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றம் கொண்டு வந்து சேர்க்கும்.

இந்த காலகட்டங்களில் எதிர்பாராத வாய்ப்புகளும், எதிர்பார்த்த விஷயங்களும் தடை இன்றி நடக்கும். மேலும், பூர்வீக தொடர்பான தடைகள் எல்லாம் இவர்களுக்கு விலகி செல்லும்.</p><p style="text-align: justify; "><b>துலாம்:</b> துலாம் ராசிக்கு இந்த காலகட்டம் இவர்களுக்கு சமுதாயத்தில் நல்ல மதிப்பும் பெயரும் புகழும் கிடைக்கபோகின்றது. வேலையில் முன்னேற்றம் மற்றும் பதவி உயர்வு பெறவேண்டும் என்று நினைப்பவருக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும். கலை துறையில் இருப்பவர்களுக்கு பொற்காலம் தேடி வரப்போகிறது. இருப்பினும் வேலையில் உயர் அதிகாரிகளிடம் கவனமாக பேசுவது அவசியம்.&nbsp;</p><p>
</p><p style="text-align: justify; "><b>
கன்னி:
</b>கன்னி ராசிக்கு இந்த காலகட்டம் இவர்களுக்கு திருமணம் தொடர்பான விஷயங்களில் இருந்து வந்த மனக்கசப்புகளை போக்கப்போகிறது.

தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றமும் புதிய தொழில் தொடங்கும் வாய்ப்புகளும் தேடி வரப்போகிறது. இருப்பினும் பொருளாதார தொடர்பான விஷயங்களில் மிகவும் நிதானமாக கையாள்வது அவசியம்.</p><p style="text-align: justify; "><br></p>]]></content>
            <updated>2026-09-04T01:18:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[தங்கத்தை வாங்கி தொடர்ந்து சேமிக்கும் சீனா., விற்கும் நிலையில் ரஷ்யா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/china-leads-global-gold-buying-in-july-1788476098"></link>
            <id>https://news.lankasri.com/article/china-leads-global-gold-buying-in-july-1788476098</id>
            <summary type="text">China leads global gold buying in July: சீனா தொடர்ந்து தங்கத்தை வாங்கி கையிருப்பை அதிகரித்துவருகிறது.

 சீன&amp;nbsp;மத்திய வங்கிஉலகின் பல மத்திய வங்கிக...</summary>
            <content type="html"><![CDATA[<p>China leads global gold buying in July: சீனா தொடர்ந்து தங்கத்தை வாங்கி கையிருப்பை அதிகரித்துவருகிறது.
</p><h2>
 சீன&nbsp;மத்திய வங்கி</h2><p>உலகின் பல மத்திய வங்கிகள், குறிப்பாக சீனாவின் People’s Bank of China (PBoC), ஜூலை மாதத்திலும் தொடர்ந்து தங்கத்தை வாங்கியுள்ளதாக World Gold Council (WGC) தெரிவித்துள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5ce3ee1a-9169-4634-9300-9bf9454d0fec/26-6a99fac3bc987.webp' /></p><h2>&nbsp;20 டன் தங்கம்</h2><p>ஜூலையில் மொத்தமாக 23 டன் தங்கம் வாங்கப்பட்டதாக அறிக்கை கூறுகிறது. அதில் சீனா மட்டும் 20 டன் தங்கம் வாங்கியுள்ளது.
</p><p>
மே 2026 முதல் சீனாவின் தங்க வாங்கும் நடவடிக்கை வேகமடைந்துள்ளது. தொடர்ந்து 21 மாதங்களாக சீனா தங்கத்தை தனது கையிருப்பில் சேர்த்துக் கொண்டிருக்கிறது.
</p><p>
தற்போது, சீனாவின் தங்க கையிருப்பு 2,366 டன்களாக உயர்ந்துள்ளது. இது உலகளவில் ஆறாவது பெரிய கையிருப்பு ஆகும்.</p><p></p><h2>மற்ற நாடுகள்</h2><p>

போலந்து 8 டன் தங்கம் வாங்கி, இந்த ஆண்டில் மொத்தமாக 90 டன் சேர்த்துள்ளது. போலந்து தனது இலக்கான 700 டன் கையிருப்பை அடைய முயற்சிக்கிறது.
</p><p>
மற்ற நாடுகளில், கசகஸ்தான், மலேசியா, போலிவியா ஆகியவை தலா 1 டன் தங்கம் வாங்கியுள்ளன. கசகஸ்தான் தனது மொத்த கையிருப்பில் 75 சதவீதம் தங்கமாக வைத்துள்ளது.
</p><p></p><h2>தொடர்ந்து தங்கத்தை விற்பனை செய்து வரும் ரஷ்யா </h2><p>ஆனால், ரஷ்யா தொடர்ந்து தங்கத்தை விற்பனை செய்து வருகிறது. ஜூலையில் 6 டன் தங்கத்தை விற்றுள்ளது. இதுவரை 2026-இல் 50 டன் தங்கத்தை விற்றுள்ளது. ரஷ்யாவின் மொத்த கையிருப்பு 2,277 டன்களாக குறைந்துள்ளது. </p><p>துருக்கி மற்றும் உஸ்பெகிஸ்தான் தலா 1 டன் தங்கத்தை விற்றுள்ளன.

உலகளாவிய அரசியல் மற்றும் பொருளாதார சூழ்நிலைகள் தங்க சந்தையை பாதித்துள்ளன. </p><p>2024 முதல் மத்திய வங்கிகளின் தங்க வாங்குதல் தங்க விலையை உயர்த்தியது. ஆனால், ஈரான் போருக்குப் பிறகு தங்கத்தின் விலை 20 சதவீதம் குறைந்துள்ளது.
</p><p>
ஜூலை மாத இறுதியில் தங்கம் ஒரு அவுன்ஸ் 4,444 டொலர் விலையில் விற்பனையாகியது. அமெரிக்கா-ஈரான் மோதல், வட்டி விகித உயர்வு, மற்றும் எரிசக்தி பொருட்களில் முதலீடு ஆகியவை தங்க விலையை பாதித்துள்ளன.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-04T01:07:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நேபாள பேரழிவு: 2015 நிலநடுக்கத்தை விட அதிக உயிரிழப்பு ஏற்படும் அச்சம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/nepal-flood-toll-may-exceed-2015-quake-1788484069"></link>
            <id>https://news.lankasri.com/article/nepal-flood-toll-may-exceed-2015-quake-1788484069</id>
            <summary type="text">Nepal flood toll may exceed 2015 earthquake: நேபாளத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை குறித்து அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ளது.

நேபாளம் மற்றும் திப...</summary>
            <content type="html"><![CDATA[<p>Nepal flood toll may exceed 2015 earthquake: நேபாளத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை குறித்து அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ளது.
</p><p>
நேபாளம் மற்றும் திபெத்தில் ஏற்பட்ட வெள்ளப் பேரழிவு, 2015-இல் நடந்த கோர்கா நிலநடுக்கத்தை விட அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தும் அபாயம் இருப்பதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3d31ef31-eb9a-44a0-bfca-ef9b6bd2c319/26-6a9a1a62681b5.webp' /></p><p>நேபாளத்தின் Trishuli Bazaar பகுதியில், ஹைட்ரோபவர் திட்டங்கள் அமைந்துள்ள இடங்களில் வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக சுரங்கங்கள் சேறும் மணலும் நிரம்பி, நூற்றுக்கணக்கானோர் சிக்கியுள்ளனர். </p><p>ஆகஸ்ட் 31-ஆம் திகதி கடைசியாக உயிருடன் மீட்கப்பட்டனர்.</p><p>
</p><p></p><p>நேபாள தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்ததாவது:

செப்டம்பர் 3-ஆம் திகதி வரை 1,259 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் 5,083 பேர் காணாமல் போயுள்ளனர். மொத்தம் 6,342 பேர் உயிரிழந்திருக்கலாம் அல்லது காணாமல் போயிருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது.</p><p>

சீனாவின் திபெத் பகுதியில் 21 பேர் உயிரிழந்ததாகவும், 541 பேர் காணாமல் போயுள்ளதாகவும் அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. </p><p>இதனால், நேபாளம் மற்றும் திபெத் சேர்த்து 1,280 பேர் உயிரிழப்பு, 5,624 பேர் காணாமல் போனதாக அதிகாரப்பூர்வ எண்ணிக்கை உள்ளது.

ஆனால், திபெத் பகுதியில் நிலைமை குறித்து தனிப்பட்ட மதிப்பீடு செய்வது கடினம். </p><p></p><p>Reporters Without Borders அமைப்பு, “திபெத் தகவல் கருப்பு துளை (information black hole)” எனக் குறிப்பிட்டுள்ளது.
</p><p>
Independent Power Producers’ Association of Nepal அமைப்பின் செயலாளர் Bijay M Bhattarai கூறியதாவது: “அதிகாரப்பூர்வ பதிவுகள், சுற்றுலா விசா பட்டியல், நிறுவன ஊழியர் பதிவுகள் ஆகியவற்றின் அடிப்படையில் மட்டுமே உயிரிழப்பு கணக்கிடப்படுகிறது. ஆனால், ஆற்றங்கரையில் வசிக்கும் குடிசை மக்கள், சட்டவிரோத மணல் சுரங்கத் தொழிலாளர்கள், தற்காலிக வாகன ஓட்டிகள் போன்றவர்கள் இதில் சேர்க்கப்படவில்லை.”
</p><p>
இதனால், உண்மையான உயிரிழப்பு எண்ணிக்கை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டதை விட அதிகமாக இருக்கக்கூடும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.</p><p>

2015-இல் நேபாளத்தில் ஏற்பட்ட கோர்கா நிலநடுக்கத்தில் 8,800 பேர் உயிரிழந்தனர். தற்போதைய வெள்ளப் பேரழிவு அதனை விட அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-04T01:06:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[உச்சம் கொடுக்கவுள்ள சூரியன்! வடக்கு, கிழக்கை சுட்டெரிக்கப்போகும் வெயில்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/today-weather-alert-sri-lanka-1788483489"></link>
            <id>https://ibctamil.com/article/today-weather-alert-sri-lanka-1788483489</id>
            <summary type="text">சூரியனின் தெற்கு நோக்கிய நகர்வின் காரணமாக இன்று மதியம் சுமார் 12.09 மணியளவில் நிட்டம்புவ, அல்கம, மல்வானை, அரநாயக, மீககஹிவுல மற்றும் பனங்காடு போன்ற இடங...</summary>
            <content type="html"><![CDATA[<p>சூரியனின் தெற்கு நோக்கிய நகர்வின் காரணமாக இன்று மதியம் சுமார் 12.09 மணியளவில் நிட்டம்புவ, அல்கம, மல்வானை, அரநாயக, மீககஹிவுல மற்றும் பனங்காடு போன்ற இடங்களுக்கு மேலாக சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.</p><p>

கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் இன்று பகல் வேளையில் அதிகரித்த வெப்பநிலையை மனித உடலினால் உணரக்கூடியதாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><h2>பலத்த மழை&nbsp;</h2><p>
இதேவேளை, கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் பல இடங்களிலும் அத்துடன் பொலனறுவை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். சில இடங்களில் 50 mm இலும் கூடிய ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் எனவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bf3f9cb7-e4f6-49b6-bbcb-5bb7ec2d044e/26-6a9a19099246a.webp' /></p><p>
சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.
</p><p>
இடியுடன் கூடிய மழை பெய்கின்ற வேளைகளில் பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-04T01:04:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் அதிகாலையில் பெண்கள் மீது துப்பாக்கிசூடு ; தீவிரமாகும் விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/gun-attack-on-women-in-sri-lanka-at-dawn-1788483831"></link>
            <id>https://jvpnews.com/article/gun-attack-on-women-in-sri-lanka-at-dawn-1788483831</id>
            <summary type="text">கொள்ளுப்பிட்டி 6ஆவது ஒழுங்கையில் அமைந்துள்ள வீடமைப்புத் தொகுதியொன்றில் இன்று (04) அதிகாலை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. 

இந்த ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">கொள்ளுப்பிட்டி 6ஆவது ஒழுங்கையில் அமைந்துள்ள வீடமைப்புத் தொகுதியொன்றில் இன்று (04) அதிகாலை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. </p><p style="text-align: justify; ">

இந்த துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.&nbsp; &nbsp;</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fad76f21-4dca-4138-bec0-d89ecc7cd46c/26-6a9a18f8bf4ec.webp' /></p><h2 style="text-align: justify; ">&nbsp;துப்பாக்கிச் சூடு&nbsp;</h2><p style="text-align: justify; ">இன்று அதிகாலை 3 மணியளவில் இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
</p><p style="text-align: justify; ">
கொள்ளுப்பிட்டியில் 6வது தெருவில் அமைந்துள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு வளாகத்தின் மேல் மாடியில் இருந்த நபர் ஒருவர், வெளியே இருந்த இரண்டு பெண்களை நோக்கி துப்பாக்கிச்சூட்டை மேற்கொண்டுள்ளார்.</p><p style="text-align: justify; ">
துப்பாக்கிச் சூட்டில்&nbsp; பெண் காயமடைந்ததாகவும், அவர் சிகிச்சைக்காக கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">தனிப்பட்ட காரணங்களுக்காக இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p style="text-align: justify; "> 

கொழுப்பிட்டி பொலிசார் இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-04T01:03:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழ் இளைஞர்கள் கடத்தி கொல்லப்பட்ட வழக்கில் முன்னிலையான பெண் சட்டத்தரணிக்கு அரசினால் நெருக்கடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/lawyer-achala-seneviratne-attorney-general-1788483145"></link>
            <id>https://tamilwin.com/article/lawyer-achala-seneviratne-attorney-general-1788483145</id>
            <summary type="text">&amp;nbsp;தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் பாதிக்கப்பட்ட தாய்மார்களுக்காக இலவசமாக வாதாடி வரும் சட்டத்தரணி அச்சலா செனவிரத்னவுக்கு எதிராக இ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் பாதிக்கப்பட்ட தாய்மார்களுக்காக இலவசமாக வாதாடி வரும் சட்டத்தரணி அச்சலா செனவிரத்னவுக்கு எதிராக இந்த அரசாங்கத்திலும் அவர் மீது வழக்குத் தொடரப்பட்டு, அவரைச் சிறையில் அடைத்து, பல்வேறு துன்புறுத்தல்களைச் செய்வதற்கான தீட்டப்பட்ட திட்டம் ஒன்று கசிந்துள்ளது.</p><p>
சட்டமா அதிபர் திணைக்களத்தின் தவறுகள் குறித்து துணிச்சலாக நேருக்கு நேர் பேச கூடிய ஒரு பெண் தான் சட்டத்தரணி அச்சலா செனவிரத்ன.</p><p>அவருக்கு எதிராக அவரை பாதுகாக்க வேண்டிய தரப்பே செயற்பட முற்படுகிறது. 
சூழ்ச்சிக்கு மேல் சூழ்ச்சி செய்கிறார்கள், ஒரு புறம் அரசாங்கத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்த, மறுபுறம் மக்களைக் கடும் விரக்திக்கு உள்ளாக்க. இதுவும் ஒரு வகையான 'டீப் ஸ்டேட்' (Deep State)ஆக இருக்கலாம். </p><h2>
</h2><p></p><h2>பழிவாங்க காத்திருக்கும் குழுக்கள்</h2><p>“டீப் ஸ்டேட்” என்பது அரசியல்வாதிகள் செய்யும் சூழ்ச்சிகளில் மட்டும் இயங்குவதில்லை. இவை பல்வேறு அரச நிறுவனங்களுக்குள், நீதிமன்றங்களுக்குள், பொலிஸ் திணைக்களத்திற்குள், சட்டமா அதிபர் திணைக்களத்திற்குள் என எந்தவொரு அரச நிறுவனத்திற்குள்ளும் இயங்க முடியும்.
</p><p>கோட்டாபய ராஜபக்ச பாதுகாப்பு செயலாளராக இருந்த காலத்தில் தமிழ் இளைஞர்களை கடத்தி கொலைசெய்த வசந்த கரன்னாகொட, ரவீந்திர விஜேகுணவர்தன போன்றவர்களைச் சட்டமா அதிபர் திணைக்களம் விடுவித்தது.</p><p>ரவீந்திர விஜேகுணவர்தனவிற்குத் தூதுவர் பதவி வழங்கி, மைத்திரிபால சிறிசேனவின் காலத்தில் பாகிஸ்தானிற்கு அனுப்பி வைத்திருந்த போது, கடந்த காலங்களில் அச்சலா தனது வழக்கில் ரவீந்திர விஜேகுணவர்தனவை ஒரு சந்தேக நபராகப் பெயரிடுமாறு கோரினார்.
</p><p>அவர் இன்று சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு எதிராகப் பேசி, எதிராக ஆர்ப்பாட்டம் செய்ததன் விளைவாக,இன்று கடும் வெறுப்புக்கு உள்ளாகியுள்ளார். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/689e707e-e749-49c6-b75a-632fdf092428/26-6a9a164b0c1f9.webp' /></p><p>இன்று அவரைச் சுற்றி வளைத்து, தாக்கத் தொடங்கியுள்ளார்கள். ஏனெனில் சமூக நீதி மற்றும் சட்டத்தைப் பற்றி அவர் பேசுவதால்.அவர் யாருடைய பணத்திற்கும் சோரம் போகாத ஒரு பெண்மணி. </p><p>
கோட்டாபய காலத்தில் எந்த நேரத்தில் துப்பாக்கிச் சூடு நடக்குமோ என்ற பயத்தில் வாழ்ந்த ஒரு பெண் சட்டத்தரணி.உயிருக்கும் மரணத்திற்கும் இடையில் வாழ்க்கையைக் கழித்த ஓர் இரும்புப் பெண்மணி. இன்று என்ன நடந்துள்ளது? அதை விட இன்று மோசமாகியுள்ளது. </p><p>தொழில்ரீதியாக அவருக்குப் பாதிப்பு ஏற்படும் வகையில் பல்வேறு குழுக்களைப் பயன்படுத்தி, முக்கியமாக அதற்கு ஏற்ற சில பொலிஸ் அதிகாரிகளைப் பயன்படுத்தி, மிகவும் கேவலமான முறையில் தாக்குதலுக்கு மேல் தாக்குதல் நடத்த, வழக்குகளில் சிக்க வைக்கக் கடுமையான முயற்சி நடக்கிறது.&nbsp;</p><p></p><p></p><p><br><br><b><i>You May Like THis Video..<br></i></b></p><p><b><i><br></i></b></p><p><b><i><br><br></i></b><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/jnKI70IglD4" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><i><br></i></b></p>]]></content>
            <updated>2026-09-04T00:56:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Bavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மட்டக்களப்பில் பாம்பின் விஷம் பட்ட நாவல் பழத்தை உண்ட சிறுவனுக்கு நேர்ந்த பரிதாபம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/boy-dies-after-eating-snake-poisoned-fruit-1788481513"></link>
            <id>https://ibctamil.com/article/boy-dies-after-eating-snake-poisoned-fruit-1788481513</id>
            <summary type="text">மட்டக்களப்பு, வெல்லாவெளியில் நிலத்தில் வீழ்ந்து கிடந்த பாம்பின் விஷம் பட்டதாக சந்தேகிக்கப்படும் நாவல்
பழத்தை உண்ட 11 வயதுடைய சிறுவன் ஒருவர் உயிரிழந்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>மட்டக்களப்பு, வெல்லாவெளியில் நிலத்தில் வீழ்ந்து கிடந்த பாம்பின் விஷம் பட்டதாக சந்தேகிக்கப்படும் நாவல்
பழத்தை உண்ட 11 வயதுடைய சிறுவன் ஒருவர் உயிரிழந்த பரிதாபகரமான சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.</p><p>மட்டு வெல்லாவெளி காவல்துறை&nbsp;பிரிவிலுள்ள பாலையடிவட்டை பிரதேசத்தில்&nbsp;நேற்று வியாழக்கிழமை (03) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p>பாலையடிவட்டை வைத்தியசாலை வீதியைச் சேர்ந்த 11 வயதுடைய 37-ஆம் கிராமம் நவகிரி
வித்யாலயத்தில் 6ம் ஆண்டில் கல்வி கற்று வந்த ரொ.சஞ்சீவ் என்ற சிறுவனே
இவ்வாறு உயிரிழந்துள்ளார்.</p><p></p><h2>மேலதிக விசாரணை</h2><p>
குறித்த சிறுவனின் வீட்டிற்கு முன்னால் நின்ற நாவற்பழ மரத்தில் இருந்து
நிலத்தில் வீழ்ந்து கிடந்த நாவற்பழத்தை சம்பவ தினமான நேற்று மாலை எடுத்து
உண்டுள்ள நிலையில் சிறிது நேரத்தில் சிறுவன் மயங்கி வீழ்ந்ததையடுத்து அவரை
உடனடியாக களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நிலையில் அவன்
ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f9477a83-840d-4d34-9d35-44e465dee214/26-6a9a16922445e.webp' /></p><p>இதன்படி, பாம்பின் விஷம் பட்ட நாவற்பழத்தை உண்டதால்
உயிரிழந்துள்ளதாக காவல்துறையினரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது</p><p>
இதனையடுத்து சடலத்தை பிரேத பரிசோதனைக்கு உட் படுத்துவதற்கான நடவடிக்கையை
முன்னெடுத்து வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
</p><p>
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லாவெளி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-04T00:53:57+00:00</updated>
        </entry>
    </feed>
