<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-09-14T17:26:40+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலகளாவிய எண்ணெய் ஏற்றுமதிக்கு அச்சுறுத்தலான ஹவுதிக்களின் தாக்குதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/houthis-threaten-global-oil-exports-1789406614"></link>
            <id>https://ibctamil.com/article/houthis-threaten-global-oil-exports-1789406614</id>
            <summary type="text">ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி படைகள் யேமனின் செங்கடல் கடற்கரையைக் கைப்பற்றிய பிறகு, பாப் அல்-மண்டேப் நீரிணை ஒரு மிகவும் முக்கியமான தற்காப்பு காரணியாக மாறியு...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி படைகள் யேமனின் செங்கடல் கடற்கரையைக் கைப்பற்றிய பிறகு, பாப் அல்-மண்டேப் நீரிணை ஒரு மிகவும் முக்கியமான தற்காப்பு காரணியாக மாறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>ஹோர்முஸ் நீரிணையை மையப்படுத்திய போரின் போது, ​​8.1 மில்லியன் பீப்பாய் எண்ணெய் பாப் அல்-மண்டேப் வழியாகக் கடந்து சென்றதாக கூறப்படுகிறது.</p><p> எனினும் ஹவுதிக் படைகள் சவூதி கப்பல் போக்குவரத்தை அச்சுறுத்தியபோது, ​​உலகின் பிற பகுதிகளுக்கு எண்ணெய் விநியோகத்தைத் தடுக்கும் திட்டத்தை கையிலெடுத்துள்ளதாக அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>செங்கடல் வழியாக விநியோகம்</h2><p>எகிப்திய சூயஸ் கால்வாயால் பெரிய எண்ணெய்க் கப்பல்களை உண்மையில் கையாள முடியாது. அதனால் செங்கடல் வழியாக விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a0194e49-9c10-4040-86b6-8db735007ae9/26-6aa82d9951aa9.webp' /></p><p> இது ஒட்டுமொத்த பிராந்தியத்தின் எண்ணெய் போக்குவரத்தின் மீது ஒரு தாக்குதலை தற்போது உருவாக்கியுள்ளது.</p><p>இந்நிலையில் ஹோர்முஸ் நீரிணையில் நடக்கும் நிகழ்வுகளிலிருந்து இது தவிர்க்க முடியாமல் துண்டிக்க முடியாத ஒரு செயல்முறையாகும் என கூறப்படுகிறது.</p><p>
மிக முக்கியமான சோதனைச் சாவடிகளான ஹோர்முஸ் மற்றும் பாப் அல்-மண்டேப் ஆகிய இரண்டிற்கும் இடையே உள்ள திருப்பமானது உலகலாவிய பொருளாதாராத்துக்கு சவாலை ஏற்படுத்தியுள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-14T17:24:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[கேள்விக்குறியாகிய பிரித்தானியாவின் எதிர்காலம்! பிரிந்து செல்லபோகும் மூன்று நாடுகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/three-countries-separating-from-britain-1789403270"></link>
            <id>https://ibctamil.com/article/three-countries-separating-from-britain-1789403270</id>
            <summary type="text">வேல்ஸ், ஸ்கொட்லாந்து மற்றும் வடக்கு அயர்லாந்து ஆகிய நாடுகளுக்கு ஐக்கிய இராச்சியத்திலிருந்து சுதந்திரம் பெறுவதற்கான உரிமை இருப்பதை வலியுறுத்தும் வகையில...</summary>
            <content type="html"><![CDATA[<p>வேல்ஸ், ஸ்கொட்லாந்து மற்றும் வடக்கு அயர்லாந்து ஆகிய நாடுகளுக்கு ஐக்கிய இராச்சியத்திலிருந்து சுதந்திரம் பெறுவதற்கான உரிமை இருப்பதை வலியுறுத்தும் வகையில், அந்த நாடுகளின் அரசியல் கட்சித் தலைவர்கள் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளனர்.</p><p>
கார்டிஃப் நகரில் இன்று நடைபெற்ற இந்த முக்கிய மாநாட்டில், பிளைட் சிம்ரு கட்சித் தலைவர் ருன் அப் ஐயோர்வெர்த், ஸ்கொட்லாந்து தேசியக் கட்சித் தலைவர் ஜோன் ஸ்வின்னி மற்றும் சின் ஃபெயின் துணைத் தலைவர் மிச்செல் ஓ’நீல் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.</p><p>
வெஸ்ட்மின்ஸ்டர் அரசு, “வேல்ஸ், ஸ்கொட்லாந்து மற்றும் வடக்கு அயர்லாந்தில் அரசியலமைப்பு மாற்றத்துக்கான நடவடிக்கைகளைத் தயாரித்து, திட்டமிட்டு, அதனை எளிதாக்க வேண்டும்” எனக் கோரும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் அவர்கள் கையெழுத்திட்டுள்ளதாக கூறப்படுகிறது.</p><p></p><h2>ஐரோப்பா - சர்வதேச ஒத்துழைப்பு</h2><p>
இவர்கள் தங்களது அரசாங்கங்களின் அதிகாரபூர்வ பிரதிநிதிகளாக அல்லாமல், அரசியல் கட்சித் தலைவர்கள் என்ற அடிப்படையிலேயே இந்தச் சந்திப்பில் பங்கேற்றுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b829c81c-18b7-4195-9c40-27deb6f31948/26-6aa82265949f9.webp' /></p><p>மேலும், ஐரோப்பா, சர்வதேச ஒத்துழைப்பு, பொருளாதாரம் மற்றும் எரிசக்தி உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்தும் மாநாட்டில் கலந்துரையாடப்பட்டுள்ளன.</p><p>
மே மாதம் நடைபெற்ற செனட் தேர்தலில் பிளைட் சிம்ரு கட்சி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, செல்டிக் நாடுகளின் சுதந்திர இயக்கங்களில் புதிய அரசியல் சூழல் உருவாகியுள்ளது. </p><p>இதன் மூலம் வேல்ஸ், ஸ்கொட்லாந்து மற்றும் வடக்கு அயர்லாந்து ஆகிய மூன்று நாடுகளிலும் சுதந்திரத்தை ஆதரிக்கும் கட்சிகள் அரசாங்க அதிகாரத்தில் இருப்பது இதுவே முதல் முறையாகும்.</p><p>இங்கிலாந்தின் பிராந்தியங்களுக்கு அதிகாரங்களையும் வளங்களையும் பகிர்ந்தளிப்பதற்கு ஆதரவாக இருப்பதாக பிரதமர் ஆண்டி பர்ன்ஹாம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.</p><p></p><h2>எடின்பரோவில் உள்ள அதிகாரப் பகிர்வு&nbsp;</h2><p> </p><p>எனினும், பெல்ஃபாஸ்ட், கார்டிஃப் மற்றும் எடின்பரோவில் உள்ள அதிகாரப் பகிர்வு அரசாங்கங்களை அவர் எவ்வாறு அணுகப் போகிறார் என்பது குறித்து இன்னும் தெளிவான நிலைப்பாடு வெளியாகவில்லை என பிரித்தானிய அரசியல் தரப்புகள் தெரிவிக்கின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ca2b8733-9d86-4022-99f7-f0c4d59abc1b/26-6aa82264d8545.webp' /></p><p>
ஸ்கொட்லாந்து சுதந்திரம் தொடர்பாக 2014ஆம் ஆண்டு நடைபெற்ற வாக்கெடுப்பைப் போன்ற மற்றொரு வாக்கெடுப்பு நடத்தும் வாய்ப்பு தற்போது இல்லை என வலியுறுத்தி, பர்ன்ஹாம் கடந்த வாரம் ஜோன் ஸ்வின்னிக்கு கடிதம் அனுப்பியிருந்தார்.</p><p>

இதற்கிடையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும் ஐக்கிய இராச்சியம் பிளவுபடுவதற்கான சாத்தியம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.</p><p>

அயர்லாந்துக்கான தனது சமீபத்திய பயணத்தின்போது, அந்நாட்டு பிரதமர் மைக்கேல் மார்ட்டினுடன் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய ட்ரம்ப், அயர்லாந்து ஒன்றிணைவதைத் தான் விரும்புவதாகவும், அது “இப்போது நடந்தாலும் நல்லதே” என்றும் தெரிவித்துள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-14T17:14:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் படகு கவிழ்ந்து விபத்து: கலிபோர்னியாவைச் சேர்ந்த முதியவர் பலி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/one-dead-after-boating-incident-1789404033"></link>
            <id>https://canadamirror.com/article/one-dead-after-boating-incident-1789404033</id>
            <summary type="text">கனடாவின் ஜார்ஜியன் பே பகுதியில் படகு ஒன்று தலைகீழாகக் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில், அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தைச் சேர்ந்த 67 வயது முதியவர் பரித...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் ஜார்ஜியன் பே பகுதியில் படகு ஒன்று தலைகீழாகக் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில், அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தைச் சேர்ந்த 67 வயது முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார். </p><p>
இச்சம்பவம் குறித்து மாகாணக் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
</p><p>சனிக்கிழமை பிற்பகல் 12:30 மணியளவில், பிராங்க்ளின் தீவுக்கு வடக்கே உள்ள ஜார்ஜியன் பே நீர்நிலைப் பகுதியில் படகு கவிழ்ந்துள்ளதாக பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3d6ea056-237b-47ce-b47c-8d36e72a88e0/26-6aa823836c60b.webp' /></p><p>
ஒன்டாரியோ மாகாணக் காவல் துறை (OPP), கூட்டு மீட்பு ஒருங்கிணைப்பு மையம், கார்லிங் தீயணைப்புத் துறை மற்றும் கில்பேர் மெரினா குழுவினர் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
கவிழ்ந்த படகிற்குள் இருந்து முதியவரின் உடலைக் காவல்துறையினர் மீட்டனர். </p><p>அவர் அமெரிக்காவின் கலிபோர்னியாவைச் சேர்ந்த 67 வயது நபர் என்பதும், படகில் அவர் ஒருவர் மட்டுமே பயணித்துள்ளார் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.</p><p>
விபத்துக்குள்ளான படகு நீரிலிருந்து வெளியே எடுக்கப்பட்டுள்ளது. முதியவரின் உயிரிழப்பிற்கான துல்லியமான காரணம் குறித்து கண்டறியும் நோக்கில் காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-14T17:03:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[விமானத்தில் இருந்து இறங்கி வந்து ஓட்டுநருடன் கைகுலுக்கிய அபுதாபி இளவரசர்: வைரல் வீடியோ]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/abu-dhabi-prince-thanks-indian-car-driver-1789404132"></link>
            <id>https://news.lankasri.com/article/abu-dhabi-prince-thanks-indian-car-driver-1789404132</id>
            <summary type="text">விமானத்தில் ஏற சென்ற அபுதாபி இளவரசர் திடீரென திரும்பி வந்து இந்திய ஓட்டுநருக்கு கைகுலுக்கி பேசி விட்டு சென்ற வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது.பிரிக்ஸ்...</summary>
            <content type="html"><![CDATA[<p>விமானத்தில் ஏற சென்ற அபுதாபி இளவரசர் திடீரென திரும்பி வந்து இந்திய ஓட்டுநருக்கு கைகுலுக்கி பேசி விட்டு சென்ற வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது.</p><h2>பிரிக்ஸ் உச்சி மாநாடு</h2><p>இந்திய தலைநகர் டெல்லியில் செப்டம்பர் 12 மற்றும் 13ம் திகதிகளில் 18 வது பிரிக்ஸ் உச்சி மாநாடு நடைபெற்றது.</p><p> 13 உலகத் தலைவர்களும், 17 தூதுக்குழு உறுப்பினர்களும் கலந்து கொண்ட இந்த உச்சிமாநாட்டில் மீள்திறன், புத்தாக்கம், ஒத்துழைப்பு மற்றும் நிலைத்தன்மை உருவாக்குதல் ஆகியவை முக்கிய கருப்பொருளாக இருந்தது.</p><p></p><p> இதில் ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் கலந்து கொள்ளவில்லை. அவருக்கு பதிலாக அந்நாட்டின் பட்டத்து இளவரசராக ஷேக் காலித் பங்கேற்றார்.</p><p> உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட பல்வேறு நாடுகளின் தலைவர்களை இந்திய பிரதமர் மோடி முறைப்படி சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தினார்.</p><h2>அபுதாபி இளவரசரின் வியப்பூட்டிய செயல்</h2><p>இந்நிலையில் மாநாட்டை முடித்து விட்டு தன்னுடைய நாட்டிற்கு செல்வதற்காக டெல்லி விமான நிலையத்திற்கு வந்த பட்டத்து இளவரசர் ஷேக் காலித், புறப்பட தயாராக இருந்த விமானத்தில் ஏறுவதற்காக சென்றார்.</p><p> ஆனால் விமானத்தில் இருந்து திடீரென காரை நோக்கி திரும்பிய பட்டத்து இளவரசர் ஷேக் காலித், தனக்கான காரை ஓட்டி வந்த இந்திய ஓட்டுநரை நோக்கி நடந்து சென்றார்.</p><p><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr">Crown Prince Sheikh Khalid bin Mohammed bin Zayed Al Nahyan<br>of <a href="https://x.com/hashtag/AbuDhabi?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#AbuDhabi</a>, Upon departing <a href="https://x.com/hashtag/India?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#India</a> and before boarding the plane, turns around and goes to bid farewell to the Indian driver who was with him <a href="https://t.co/oj5Fs6DRJ1">pic.twitter.com/oj5Fs6DRJ1</a></p>&mdash; Siddhant Mishra (@siddhantvm) <a href="https://x.com/siddhantvm/status/2099147010842718433?ref_src=twsrc%5Etfw">September 13, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p> அத்துடன் அந்த ஓட்டுநருடன் கை குலுக்கி விட்டு சில வார்த்தைகளைப் பேசிவிட்டு சென்ற மீண்டும் தன்னுடைய விமானத்தில் ஏறிச் சென்றார்.</p><p>இதையடுத்து அபுதாபி இளவரசரின் செயல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. ஓட்டுநரை அங்கீகரிப்பதற்காக நேரம் ஒதுக்கிய அபுதாபி இளவரசரின் செயலை பாராட்டி வருகின்றனர்.</p><p><br></p>]]></content>
            <updated>2026-09-14T16:42:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[டொராண்டோவில் நாய் தாக்குதல்: பெண் கைது — தப்பிய 2 நாய்களைத் தேடும் காவலத்துறை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/woman-arrested-after-2-dogs-attack-person-1789403488"></link>
            <id>https://canadamirror.com/article/woman-arrested-after-2-dogs-attack-person-1789403488</id>
            <summary type="text">கனடாவின் டொராண்டோ நகரில் உள்ள பூங்கா அருகே, பெண் ஒருவரையும் அவரது செல்லப் பிராணியையும் இரு நாய்கள் கொடூரமாகத் தாக்கிய வழக்கில் 40 வயது பெண் கைது செய்ய...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் டொராண்டோ நகரில் உள்ள பூங்கா அருகே, பெண் ஒருவரையும் அவரது செல்லப் பிராணியையும் இரு நாய்கள் கொடூரமாகத் தாக்கிய வழக்கில் 40 வயது பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>
கடந்த வியாழக்கிழமை அவென்யூ ரோடு மற்றும் ராக்ஸ்பரோ தெரு அருகே உள்ள பூங்காவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.</p><p>
பாதிக்கப்பட்டவர் தனது நாயுடன் சென்று கொண்டிருந்தபோது, வேலியிடப்பட்ட பகுதியில் இருந்து தப்பி வந்த பிட்புல் அல்லது புல் டெரியர் வகையைச் சேர்ந்த இரு பெரிய நாய்கள் அவர்கள் மீது பாய்ந்து தாக்குதல் நடத்தின.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/49da21c1-047c-4c8a-a2fd-396195bb6168/26-6aa821623d727.webp' /></p><p>தாக்குதலில் பாதிக்கப்பட்ட நபருக்கு லேசான காயங்களும், அவரது நாய்க்கு உயிருக்கு ஆபத்தான பலத்த காயங்களும் ஏற்பட்டுள்ளன.</p><p>சனிக்கிழமை இது குறித்துக் காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
ஞாயிற்றுக்கிழமை, டொராண்டோவைச் சேர்ந்த டேனிச்சியா பிளாக் என்பவரைக் காவல்துறையினர் கைது செய்தனர்.</p><p> 
குற்றவியல் அலட்சியத்தால் உடல் காயம் ஏற்படுத்துதல், நாய்கள் அடிப்பதை அல்லது தாக்குவதைத் தடுக்கத் தவறியது, மனிதனையோ அல்லது வளர்ப்புப் பிராணியையோ நாய் கடிக்க விட்டது, காவல் துறை அதிகாரியின் கடமையைச் செய்ய விடாமல் தடுத்தது உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.
</p><p>தாக்குதலில் ஈடுபட்ட இரு நாய்களும் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.
</p><p>இந்நாய்கள் இருக்கும் இடம் குறித்துத் தகவல் தெரிந்தவர்கள் உடனடியாக அதிகாரிகளையோ அல்லது 'கிரைம் ஸ்டாப்பர்ஸ்' (Crime Stoppers) அமைப்பையோ ரகசியமாகத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.</p><p>
"நாய்களை எங்காவது கண்டால் பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்; எக்காரணத்தைக் கொண்டும் அருகில் செல்ல வேண்டாம்" என்று காவலத்துறை அறிவுறுத்தியுள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-14T16:34:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[நடிகை சமந்தா வளைகாப்பு.. படுவைரல் ஆகும் புகைப்படங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/samantha-baby-shower-function-1789403436"></link>
            <id>https://cineulagam.com/article/samantha-baby-shower-function-1789403436</id>
            <summary type="text">நடிகை சமந்தா தற்போது கர்ப்பமாக இருக்கும் நிலையில் தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அவரது திருமணம் நடைபெற்ற கோவிலுக்கு சமீபத்தில் சென்று இ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நடிகை சமந்தா தற்போது கர்ப்பமாக இருக்கும் நிலையில் தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அவரது திருமணம் நடைபெற்ற கோவிலுக்கு சமீபத்தில் சென்று இருந்தார் அவர்.</p><p>தற்போது சமந்தாவுக்கு வளைகாப்பு நடந்து இருக்கிறது.
</p><p>அவரது கணவர் மற்றும் குடும்பத்தினர் தான் அதை பாரம்பரிய முறைப்படி நடத்தி இருக்கின்றனர்.
</p><p>சமந்தா அந்த புகைப்படங்களை பதிவிட்டு மிகவும் நெகிழ்ச்சியாக பேசி இருக்கிறார்.
</p><p>"நம் பாரம்பரியம் மீது எனக்கு அதிக மரியாதை இருக்கிறது. ஒவ்வொரு சடங்கின் பின்னால் இருக்கும் அர்த்தம் எனக்கு தெரியாமல் இருக்கலாம். ஆனால் ஒவ்வொன்றுக்கும் ஒரு காரணம் இருக்கிறது" என அவர் கூறி இருக்கிறார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-14T16:30:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/man-killed-by-police-after-woman-infant-reportedly-1789402889"></link>
            <id>https://canadamirror.com/article/man-killed-by-police-after-woman-infant-reportedly-1789402889</id>
            <summary type="text">கனடாவில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கனடாவின் அல்பெர்ட்டா மாகாணத்தில் உள்ள எட்மண்டன் நகரின் தென்மேற்குப் ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.</p><p>
கனடாவின் அல்பெர்ட்டா மாகாணத்தில் உள்ள எட்மண்டன் நகரின் தென்மேற்குப் பகுதியில், பெண்ணையும் குழந்தையையும் சுட்ட 36 வயது நபரை காவல்துறையினர் சுட்டுக் கொன்றனர். </p><p>
ஞாயிற்றுக்கிழமை காலையில் டான்ஸ்டேல் டிரைவ் மற்றும் 45-வது அவென்யூ பகுதிக்கு அருகில் உள்ள வீடு ஒன்றிற்குள் துப்பாக்கியுடன் நுழைந்த அந்த நபர், அங்கிருந்த பெண்ணையும் ஒரு குழந்தையையும் சுட்டதாக எட்மண்டன் காவல் துறைக்கு அவசரத் தகவல் கிடைத்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/799d4e77-0e93-44b6-867e-51229102c334/26-6aa81f0bc7ce8.webp' /></p><p>
</p><p>தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், காயமடைந்த சிலர் வீட்டின் வெளியே தவித்துக் கொண்டிருப்பதைக் கண்டனர். 
தொடர்ந்து வீட்டைச் சுற்றி வளைக்க முயன்றபோது, அந்த நபர் கையில் துப்பாக்கியுடன் வீட்டின் முன் கதவைத் திறந்து வெளியே வந்துள்ளார்.</p><p> 
அப்போது அதிகாரிகள் கொடுத்த வாய்மொழி எச்சரிக்கைகளை அவர் மதிக்கத் தவறியதால், அங்கிருந்த மூன்று காவலர்கள் அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். </p><p>
மருத்துவக் குழுவினர் அவருக்கு உடனடியாக முதலுதவி சிகிச்சை அளித்தபோதிலும், அந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.</p><p>
இந்தச் சம்பவத்தில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காயமடைந்த இரண்டு பெண்கள் மற்றும் ஒரு குழந்தை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
</p><p>அவர்களின் காயங்கள் உயிருக்கு ஆபத்தானவை அல்ல எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>
இதனிடையே, காவல்துறையினர் நடத்திய இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து தற்போது விரிவான விசாரணை மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-14T16:27:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹவுதிகளுடன் நேரடி பேச்சில் இறங்கியது அமெரிக்கா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/us-engaged-in-direct-conversations-with-houthis-1789401626"></link>
            <id>https://ibctamil.com/article/us-engaged-in-direct-conversations-with-houthis-1789401626</id>
            <summary type="text">சவுதி ஆதரவு பெற்ற யேமன் அரச படையினருக்கும் ஈரான் பின்புலமாக விளங்கும் ஹவுத்தி அமைப்பினருக்கும் இடையே தற்போது நடைபெற்று வரும் போரில் ஹவுத்திகளின் கை ஓங...</summary>
            <content type="html"><![CDATA[<p>சவுதி ஆதரவு பெற்ற யேமன் அரச படையினருக்கும் ஈரான் பின்புலமாக விளங்கும் ஹவுத்தி அமைப்பினருக்கும் இடையே தற்போது நடைபெற்று வரும் போரில் ஹவுத்திகளின் கை ஓங்கியுள்ள நிலையில் அந்த அமைப்புடன் நேரடி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.</p><p>


இதன்படி ஹவுத்தி அமைப்பினருடன் அமெரிக்க அரசாங்கம் நேரடிப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருவதாக அமெரிக்கத் துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் தெரிவித்துள்ளார்.</p><h2>முக்கிய தீவை கைப்பற்றிய ஹவுத்திகள்</h2><p>கான்சாஸ் நகரில் நடைபெறவுள்ள தேர்தல் பிரசாரக் கூட்டத்திற்கு முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய வான்ஸ், பாப்-அல்-மண்டேப் (Bab-el-Mandeb) நீரிணையில் உள்ள மாயூன் தீவை ஹவுத்திகள் கைப்பற்றியிருப்பது குறித்துத் தான் கவலை கொண்டிருப்பதாகக் கூறினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3bc7462a-a6cd-488b-b82a-922f0e7c53cc/26-6aa8206ca5235.webp' /></p><p>
</p><p>
மேலும், ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா மற்றும் "இப்பிராந்தியத்தில் பாதிக்கப்பட்டுள்ள பிற தரப்பினர்" ஆகியோருடன் அமெரிக்கா தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும் வான்ஸ் குறிப்பிட்டார்.
</p><p>

இதேவேளை ஏமனில் தொடர்ந்து நடைபெற்று வரும் மோதல்கள் காரணமாக 93,000-க்கும் மேற்பட்டோர் புதிதாக இடம்பெயர்ந்துள்ளதாக சர்வதேச இடம்பெயர்வு அமைப்பு (IOM) தெரிவித்துள்ளது.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-14T16:27:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் மங்கல விளக்கேற்றலில் சர்ச்சை ; தவிசாளர் க.ஜெசீதன் மீது விமர்சனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/auspicious-lamp-jaffna-criticism-directed-chairman-1789403116"></link>
            <id>https://jvpnews.com/article/auspicious-lamp-jaffna-criticism-directed-chairman-1789403116</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் மானிப்பாய் பிரதேச சபையின் தவிசாளர் கந்தையா ஜெசீதன் அண்மையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட விதம் தொடர்பில் சமூக வலைத்தளங்களிலும் பொது...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் மானிப்பாய் பிரதேச சபையின் தவிசாளர் கந்தையா ஜெசீதன் அண்மையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட விதம் தொடர்பில் சமூக வலைத்தளங்களிலும் பொதுமக்கள் மத்தியிலும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.</p><p></p><p>

மானிப்பாய் பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்ட கட்டுடை பகுதியில் வீதியொன்றின் புனரமைப்புப் பணிகளை ஆரம்பிப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு அண்மையில் இடம்பெற்றுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e878a277-e3d1-48cb-bcdb-ca41b2bc77a5/26-6aa81fee92948.webp' /></p><p>குறித்த நிகழ்வில் மானிப்பாய் பிரதேச சபை தவிசாளர் கந்தையா ஜெசீதனும் கலந்துகொண்டிருந்தார்.
</p><p>
இதன்போது இடம்பெற்ற மங்கல விளக்கேற்றும் நிகழ்வில், தவிசாளர் காலணிகளை கழற்றாமல் மங்கல விளக்கை ஏற்றியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. </p><p>இது தொடர்பான காணொளி மற்றும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்ட நிலையில், அவரது செயற்பாடு தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
</p><p>
மங்கல விளக்கேற்றும் நிகழ்வுகள் பொதுவாக சமய மற்றும் கலாசார மரபுகளுடன் தொடர்புடையதாகக் கருதப்படும் நிலையில், இவ்வாறான நிகழ்வுகளில் கடைப்பிடிக்க வேண்டிய மரபுகள் மற்றும் சம்பிரதாயங்கள் குறித்து பொதுமக்கள் கவனம் செலுத்தி வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-14T16:25:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shan</name>
            </author>
            <title type="text"><![CDATA[புதுக்குடியிருப்பு பிரதேச சபை தவிசாளர் மீது பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/complaint-lodged-against-chairman-police-station-1789401167"></link>
            <id>https://tamilwin.com/article/complaint-lodged-against-chairman-police-station-1789401167</id>
            <summary type="text">புதுக்குடியிருப்பு பிரதேச சபை தவிசாளர் வே.கரிகாலன் மீது பிரதேச சபை
உறுப்பினர் ஒருவரால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில்,
புதுக்குடியிருப...</summary>
            <content type="html"><![CDATA[<p>புதுக்குடியிருப்பு பிரதேச சபை தவிசாளர் வே.கரிகாலன் மீது பிரதேச சபை
உறுப்பினர் ஒருவரால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில்,
புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு
செய்யப்பட்டுள்ளது.
</p><p>
பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த அமைச்சருடன் இணைந்து பிரதேச சபையின்
உறுப்பினர்கள் இருவர் புகைப்படம் எடுத்துக் கொண்ட சம்பவத்தை, பிரதேச சபை
தவிசாளர் வெளியில் கூறி செல்வதாக தெரிவித்து NPP பிரதேச சபை உறுப்பினர்
ஒருவரால் குறித்த குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
</p><h2>அதற்கான போதுமான ஆதாரங்கள்</h2><p>
இதனடிப்படையில் பதிவு செய்யப்பட்ட முறைப்பாடு தொடர்பில், நேற்றையதினம் (13.09.2026)
புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் விசாரணை இடம்பெற்றுள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d312cdb3-4fb9-46e3-9dda-11180068e4ed/26-6aa81b541433d.webp' /></p><p>
இதன்போது, தோளில் கை போட்டு புகைப்படம் எடுத்து கொண்டதனை வெளியே கூறி செல்வதான
குறித்த குற்றச்சாட்டுகளை நிரூபிப்பதற்கான ஆதாரங்களை சமர்ப்பிக்குமாறு
பொலிஸார் முறைப்பாட்டாளர் தரப்பினரிடம் கோரியுள்ளனர். </p><p>எனினும், அதற்கான
போதுமான ஆதாரங்கள் தங்களிடம் இல்லை என அவர்கள் தெரிவித்துள்ளதாக
தெரிவிக்கப்படுகிறது.</p><p>இதனையடுத்து, சம்பந்தப்பட்ட முறைப்பாட்டாளர் தரப்பினருக்கு பொலிஸாரால்
அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டதுடன், எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள்
இடம்பெறாத வகையில் செயற்படுமாறும் அறிவுறுத்தப்பட்டு அவர்கள்
விடுவிக்கப்பட்டுள்ளனர்.
</p><h2>சட்டரீதியான நடவடிக்கை</h2><p>
இது தொடர்பில் கருத்து தெரிவித்த தவிசாளர் வே.கரிகாலன், தாம் மக்களால் தெரிவு
செய்யப்பட்ட தவிசாளராக மக்களின் தேவைகள் மற்றும் கோரிக்கைகளுக்கு அமைவாக
பிரதேச சபையின் அபிவிருத்திப் பணிகளையும் மக்கள் சேவையையும் முன்னெடுத்து
வருவதாகவும் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/efe863e7-b09b-4c00-93ab-09c112770b72/26-6aa81b552d0a4.webp' />]</p><p>ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் தமது கௌரவத்தையும் நற்பெயரையும்
பாதிப்பதுடன் பிரதேச சபையின் மக்கள் சேவைக்கும் பாதிப்பை ஏற்படுத்தும்
எனவும் உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டால் சட்டரீதியான
நடவடிக்கைகளை மேற்கொள்ள நேரிடும்.
</p><p>நாங்கள் அரசியலுக்காக அல்ல, மக்களுக்காகவே பணியாற்றுகின்றோம். மக்களின்
தேவைகளும் பிரதேசத்தின் அபிவிருத்தியுமே எமது முதன்மையான நோக்கங்கள் என
தவிசாளர் வே.கரிகாலன் மேலும் தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-14T16:22:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[இத்தாலியில் பெண்ணை கொடூரமாக தாக்கிய இலங்கை இளைஞனை துரத்தி பிடித்த பொலிஸ்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-lankan-boy-arrested-in-italy-1789396538"></link>
            <id>https://tamilwin.com/article/sri-lankan-boy-arrested-in-italy-1789396538</id>
            <summary type="text">இத்தாலியின் வெரோனா நகரில் சுப்பர் மார்க்கெட் ஒன்றிலிருந்து மதுபானப் போத்தல்களைத் திருடிவிட்டு, தப்பியோட முற்பட்டபோது, பெண் ஊழியர் ஒருவரை தாக்கிய 29 வய...</summary>
            <content type="html"><![CDATA[<p>இத்தாலியின் வெரோனா நகரில் சுப்பர் மார்க்கெட் ஒன்றிலிருந்து மதுபானப் போத்தல்களைத் திருடிவிட்டு, தப்பியோட முற்பட்டபோது, பெண் ஊழியர் ஒருவரை தாக்கிய 29 வயதுடைய இலங்கையர் கைது செய்யப்பட்டுள்ளார். </p><p>இந்தச் சம்பவம்&nbsp; Vicolo Fossetto பகுதியில் அமைந்துள்ள கடை ஒன்றில் இடம்பெற்றுள்ளது. </p><p>குறித்த இலங்கையர் அலுமாரிகளில் இருந்த பல மதுபானப் போத்தல்களை எடுத்து தனது பைக்குள் மறைத்து வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. </p><h2><b>பெண் மீது தாக்குதல்</b></h2><p>பணம் செலுத்தாமல் காசாளர் பகுதியைக் கடந்து வெளியேறும் பகுதியை நோக்கிச் சென்றுள்ளார். ஊழியர் ஒருவர் அவரை அணுகி திருடப்பட்ட பொருட்களைத் திருப்பி தருமாறு கோரியுள்ளார். எனினும் அவர் ஊழியரை உடல் ரீதியாக தாக்கியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2a03fafc-08cd-4e3e-aa39-7d9d716c3277/26-6aa81c6181bf1.webp' /></p><p>ஊழியரை கீழே தள்ளியதோடு, திருடப்பட்ட பொருட்களுடன் இலங்கையர் தப்பியோடியுள்ளார். </p><p> கீழே விழுந்த பெண் எழுந்து, தனக்கு உதவ நின்ற வாடிக்கையாளர் ஒருவரின் காரில் இலங்கையரை துரத்தத் தொடங்கினார். </p><p>அங்கு வசிப்பவர் ஒருவர் சந்தேக நபரை அடையாளம் கண்டு, சந்தேக நபர் எங்கு பதுங்கியிருக்கின்றார் என்பதை அதிகாரிகளுக்கு தெரிவித்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p> </p><h3><b>சட்டவிரோத குடியேற்றவாசி</b></h3><p>சோதனையின் போது, பையில் திருடப்பட்ட இரண்டு மதுபானப் போத்தல்களைக் கண்டெடுத்தனர். தப்பியோடும்போது கைவிடப்பட்ட மூன்றாவது மதுபான போத்தல் அதிகாரிகளால் மீட்கப்பட்டது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ef89cfd9-9a3d-4d28-976c-4469b8d7f026/26-6aa81c6272d81.webp' /></p><p>இந்நிலையில் விற்பனை செய்யக்கூடிய நிலையில் இருந்த அனைத்துப் பொருட்களும் அதன் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டன. </p><p>விசாரணையை தொடர்ந்து பல குற்றப் பின்னணியை கொண்டவரும் சட்டவிரோதமான குடியேற்றவாசியுமான இலங்கையர் கைது செய்யப்பட்டார். </p>]]></content>
            <updated>2026-09-14T16:10:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[திட்டமிட்ட ரயில் தொழிற்சங்கங்களின் வேலைநிறுத்தம் உறுதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/planned-railway-trade-union-strike-confirmed-1789402067"></link>
            <id>https://jvpnews.com/article/planned-railway-trade-union-strike-confirmed-1789402067</id>
            <summary type="text">தற்போதைய ரயில்வே பொது முகாமையாளரின் பதவி குறித்து அரசாங்கத்திடமிருந்து இதுவரை உறுதியான தீர்மானம் எதுவும் கிடைக்கப்பெறாததால், முன்னதாக அறிவிக்கப்பட்டவா...</summary>
            <content type="html"><![CDATA[<p>தற்போதைய ரயில்வே பொது முகாமையாளரின் பதவி குறித்து அரசாங்கத்திடமிருந்து இதுவரை உறுதியான தீர்மானம் எதுவும் கிடைக்கப்பெறாததால், முன்னதாக அறிவிக்கப்பட்டவாறு இலங்கை ரயில்வே சேவையில் செப்டெம்பர் 17 மற்றும் 18 ஆகிய இரு தினங்களில் மேற்கொள்ளப்படவிருந்த அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் எவ்வித மாற்றமுமின்றி முன்னெடுக்கப்படும் என ஒன்றிணைந்த ரயில் தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.</p><p> </p><p></p><p>ஒன்றிணைந்த ரயில் தொழிற்சங்கங்களின் இணை அழைப்பாளர் கசுன் சாமர ஜயசேகர இன்றைய தினம் (14) அறிக்கையொன்றை வெளியிட்டு இதனை அறிவித்துள்ளார். </p><p>

இன்று போக்குவரத்து அமைச்சு வளாகத்தில், போக்குவரத்து அமைச்சின் செயலாளருக்கும் ஒன்றிணைந்த ரயில்வே தொழிற்சங்கத் தலைவர்களுக்கும் இடையில் இந்த வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பில் விசேட கலந்துரையாடலொன்று நடைபெற்றுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2e543362-53e7-4642-a812-5f02c33944fa/26-6aa81bd4ae246.webp' /></p><p> 

இதன்போது ரயில்வே திணைக்களத்திற்குள் எழுந்துள்ள நிர்வாக மற்றும் செயல்பாட்டுப் பிரச்சினைகள் குறித்தும், பயணிகள் எதிர்கொண்டுள்ள சேவை முடக்கங்கள் குறித்தும் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் விரிவாகச் சுட்டிக்காட்டியதாகத் தெரிவிக்கப்படுகிறது. </p><p>

தற்போதைய ரயில்வே பொது முகாமையாளரின் நிர்வாகத்தின் மீது தொழிற்சங்கங்களுக்கு உள்ள நம்பிக்கை முற்றாகச் சீர்குலைந்துள்ளதால், அவரை உடனடியாக அப்பதவியில் இருந்து நீக்க வேண்டும் என தொழிற்சங்கப் பிரதிநிதிகள் இங்கு வலியுறுத்தியுள்ளனர். </p><p>

ரயில்வே திணைக்களத்தை மீண்டும் கட்டியெழுப்புவது, திறமையான சேவையை நிறுவுவது மற்றும் பயணிகளுக்கு சிறந்த சேவையை வழங்குவதே இந்த தொழிற்சங்க நடவடிக்கையின் ஒரே நோக்கம் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். </p><p>

கலந்துரையாடலில் கலந்துகொண்ட போக்குவரத்து அமைச்சின் செயலாளர், ரயில்வே திணைக்களத்தைக் கட்டியெழுப்புவதே தொழிற்சங்கங்களின் உண்மையான நோக்கம் என்பதைத் தான் ஏற்றுக்கொள்வதாகவும், ரயில் நிலைய அதிபர்கள் சங்கத்தின் செயலாளருக்கு விளக்கமளிக்குமாறு கோரி கடிதம் அனுப்பியது சரியான செயலல்ல என்றும் குறிப்பிட்டுள்ளார்.</p><p> 

எவ்வாறாயினும், தற்போதைய ரயில்வே பொது முகாமையாளரைப் பதவியிலிருந்து நீக்குவது குறித்து இறுதித் தீர்மானம் எடுப்பதற்குத் தமக்கு மேலும் அவகாசம் தேவை என அமைச்சின் செயலாளர் இதன்போது அறிவித்துள்ளார். </p><p>

எனினும், கடந்த இரண்டு வருடங்களாக நிலவிவரும் இந்தப் பிரச்சினைக்கு மேலும் அவகாசம் வழங்க முடியாது எனக் கூறி தொழிற்சங்கங்கள் அந்த முன்மொழிவை நிராகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><p> 

இதற்கமைய, வேலைநிறுத்தத்தைக் கைவிடுவது அல்லது இரத்து செய்வது தொடர்பில் எவ்வித உடன்பாடும் இன்றி கலந்துரையாடல் நிறைவடைந்துள்ளதால், செப்டெம்பர் 17 மற்றும் 18 ஆகிய இரு தினங்களில் திட்டமிட்டபடி தொழிற்சங்க நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என ஒன்றிணைந்த ரயில் தொழிற்சங்கங்கள் மேலும் அறிவித்துள்ளன.&nbsp;&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-09-14T16:09:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜனாதிபதி அநுர தோல்வியை ஒப்புக் கொண்டுள்ளார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/gove-accepted-their-loss-1789401651"></link>
            <id>https://tamilwin.com/article/gove-accepted-their-loss-1789401651</id>
            <summary type="text">ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தனது தோல்வியை ஒப்புக் கொண்டுள்ளார் என ஸ்ரீலங்கா பொது ஜன முன்னணி குற்றம் சுமத்தியுள்ளது.
ஸ்ரீலங்கா பொது ஜன முன்னணியின் ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தனது தோல்வியை ஒப்புக் கொண்டுள்ளார் என ஸ்ரீலங்கா பொது ஜன முன்னணி குற்றம் சுமத்தியுள்ளது.</p><p>
ஸ்ரீலங்கா பொது ஜன முன்னணியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
ஆட்சி பொறுப்பினை ஏற்று இரண்டு ஆண்டுகள் பூர்த்தியாகும் நிலையில் ஜனாதிபதி ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியை விமர்சிப்பதில் கூடுதல் கவனம் செலுத்துவதாக தெரிவித்துள்ளார்.
</p><p>ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி கட்சியையும் அதன் தலைவர்களையும் ஜனாதிபதி விமர்சனம் செய்வது குறித்து பெருமிதம் கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/41c91748-caa6-4512-a337-4168e2e6f89e/26-6aa81a34d9d9e.webp' /></p><p>
நாடு முழுவதும் பிரசார கூட்டங்களை நடத்தி பொதுஜன முன்னணியை விமர்சனம் செய்வதன் ஊடாக ஜனாதிபதி தனது தோல்வியை ஏற்றுக் கொண்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.
</p><p>இந்த விடயம் தமக்கு மகிழ்ச்சி அளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
அநுரவின் கூட்டங்களில் பங்கேற்ற மக்கள் அவரது உரை தொடர்பில் எவ்வித துலங்களையும் மேற்கொளள்வில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>இது ஜனாதிபதி அநுரவின் அரசாங்கம் வீழ்ச்சியடைந்து செல்வதன் வெளிப்பாடேயாகும் என சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-14T16:01:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெனிசுலா ஒப்பந்தம் போன்று... ஈரான் எண்ணெய் மொத்தம் அமெரிக்கா கைப்பற்றும்: ட்ரம்ப் விருப்பம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/trump-iran-oil-like-venezuela-1789369714"></link>
            <id>https://news.lankasri.com/article/trump-iran-oil-like-venezuela-1789369714</id>
            <summary type="text">US could stay in Iran and keep oil, like Venezuela deal: வெனிசுலா ஒப்பந்தத்தைப் போலவே, அமெரிக்கா ஈரானின் எண்ணெயைத் தன்வசம் வைத்துக்கொள்ளக்கூடும்.

அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>US could stay in Iran and keep oil, like Venezuela deal: வெனிசுலா ஒப்பந்தத்தைப் போலவே, அமெரிக்கா ஈரானின் எண்ணெயைத் தன்வசம் வைத்துக்கொள்ளக்கூடும்.
</p><p>
அமெரிக்கா ஈரானில் தங்கி அங்கிருக்கும் எண்ணெயைத் தன்வசம் வைத்துக்கொள்ளக்கூடும் என்று ஞாயிற்றுக்கிழமை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.</p><h2>முடிவுக்கு வரும்</h2><p>
</p><p>வெனிசுலாவின் மொத்த எண்ணெய் இருப்புகளில் ஐந்தில் ஒரு பங்கைத் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவர அமெரிக்கா மேற்கொண்ட முயற்சியுடன் ஒப்பிட்டுப் பேசிய ஜனாதிபதி ட்ரம்ப் இதைத் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0b3b5999-8860-4e4f-ae4e-863b3551683a/26-6aa79d7452b91.webp' /></p><p> </p><p>அயர்லாந்து சென்றிருந்த ட்ரம்ப், ​​ஈரான் தொடர்பான போர் இந்த ஆண்டிலேயே - அநேகமாக நவம்பரில் அமெரிக்காவில் நடைபெறவுள்ள இடைத் தேர்தல்களுக்குப் பிறகு - முடிவுக்கு வரும் என்று தான் தொடர்ந்து எதிர்பார்ப்பதாக அவர் மீண்டும் வலியுறுத்தினார். </p><p>ஐரிஷ் ஓபன் கோல்ஃப் சாம்பியன்ஷிப் போட்டியில் பேசிய ட்ரம்ப், ஈரான் போர் முடிவுக்கு வந்தவுடன் பெட்ரோல் விலை மிக வேகமாகச் சரியும் என்றும் குறிப்பிட்டார்.</p><p></p><p> </p><p>மத்திய கிழக்கில் நிலவும் கொந்தளிப்பு எண்ணெய் சந்தைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது; சவுதி எண்ணெய் குழாய் வழித்தடம் மீதான தாக்குதலைத் தொடர்ந்து, திங்கட்கிழமையன்று மீண்டும் விலை உயரும் என்று எண்ணெய் வர்த்தகர்கள் எதிர்பார்க்கின்றனர். </p><p>இதனிடையே, ஈரானுடன் சரியான ஒப்பந்தத்தை மட்டுமே மேற்கொள்வதாகவும், பயனற்ற ஒப்பந்தங்களைச் செய்யப்போவதில்லை என்றும் ட்ரம்ப் கூறியுள்ளார்; அத்துடன் ஈரான் தொடர்ந்து அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்கு அழைப்பு விடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3b530145-e70d-475d-afdc-e764c7607ea8/26-6aa79d75072f1.webp' /></p><p> </p><p>ஆனால், இந்தக் கூற்றை ஈரான் ஏற்கனவே பல முறை மறுத்துள்ளது. 
இருப்பினும், ஈரானுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பது என்ற மற்றொரு திட்டத்தையும் ஜனாதிபதி ட்ரம்ப் முன்வைத்தார். </p><p>ஆகஸ்ட் மாதத்தில் அறிவிக்கப்பட்ட வெனிசுலாவுடனான அமெரிக்க ஒப்பந்தத்தை இதற்கு அவர் ஒரு உதாரணமாகக் குறிப்பிட்டார்.
மேலும், வெனிசுலா போன்றதொரு முடிவுக்கு அமெரிக்கா வராவிட்டால், இறுதியில் (ஈரானிலிருந்து) நாம் வெளியேற்றப்படுவோம் என்று கூறிய ட்ரம்ப், வெனிசுலாவிலிருந்து கிடைக்கும் அமெரிக்க வருவாய் பலமுறை போருக்கான செலவை ஈடுகட்டியுள்ளது என்றும் குறிப்பிட்டார்.</p>]]></content>
            <updated>2026-09-14T15:52:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Bavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடற்றொழில் அனுமதி பத்திரம் வழங்குவதற்காக இலஞ்சம் பெற்ற அதிகாரிகள்: நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/fisheries-department-officials-bribe-1789398247"></link>
            <id>https://tamilwin.com/article/fisheries-department-officials-bribe-1789398247</id>
            <summary type="text">மட்டக்களப்பில் கடற்றொழில் அனுமதி பத்திரம் வழங்குவதற்காக இலஞ்சம் பெற்ற கடற்றொழில் நீரியல்
வள திணைக்கள அதிகாரிகளுக்கு நடவடிக்கை எடுக்குமாறு ஊழல் மோசடிக...</summary>
            <content type="html"><![CDATA[<p>மட்டக்களப்பில் கடற்றொழில் அனுமதி பத்திரம் வழங்குவதற்காக இலஞ்சம் பெற்ற கடற்றொழில் நீரியல்
வள திணைக்கள அதிகாரிகளுக்கு நடவடிக்கை எடுக்குமாறு ஊழல் மோசடிக்கு எதிரான அமைப்பின் ஊடக
பேச்சாளர் அந்தனிசில் ராஜ்குமார் தெரிவித்தார்.</p><p>மட்டக்களப்பில் சுருக்கு வலை பாவித்து சிறிய முரல் மீன் பிடிப்பதற்கான
அனுமதி பத்திரம் வழங்குவதற்காக ஒரு படகு உரிமையாளரிடம் இருந்து 35 ஆயிரம் ரூபா
வீதம் 20 படகு உரிமையாளர்களிடம் இருந்து சுமார் 7 இலட்சம் ரூபாவை இலஞ்சமாக
கடற்றொழில் நீரியல் வள திணைக்கள உத்தியோகத்தர்கள் வாங்கியுள்ளனர். </p><p>எனவே கடற்றொழில் அமைச்சர் உடன் விசாரணை செய்து அந்த உத்தியோகத்தர்களுக்கு எதிராக சட்ட
நடவடிக்கை எடுக்குமாறு&nbsp; அந்தனிசில் ராஜ்குமார் தெரிவித்தார்.</p><h2>கோரிக்கை</h2><p>
</p><p>அவர் மேலும் தெரிவிக்கையில், கடற்றொழிலாளர்கள் சுட்டெரிக்கும் வெயிலிலும் கொட்டும் மழையிலும் தமது
வாழ்வாதாரத்துக்காக எரிபொருள் விலை ஏற்றத்தின் மத்தியில் கடற்தொழிலை
மேற்கொண்டு வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/77939ad8-9a04-43ee-8a67-8bc8368562a1/26-6aa817fa485f6.webp' /></p><p> இவ்வாறான நிலையில் அனுமதி பத்திரம் வழங்க பெரும் தொகை
இலஞ்சமாக பணம் வாங்கிய அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
</p><p>கடற்றொழிலாளர்களின் நலன் கருதி அவர்களிடம் இலஞ்சப்
பணம் வாங்கிய உத்தியோகத்தர் உடனடியாக பணி நீக்கம் செய்யப்பட்டு கடற்றொழிலாளர்களின் பணத்தை மீண்டும் திருப்பி கொடுக்க வேண்டும்.</p><p> அத்துடன் பணம் இல்லாது அனுமதி பத்திரம் பெறமுடியாது உள்ள ஒரு சில கடற்றொழிலாளர்களுக்கும் இந்த அனுமதி பத்திரத்தை வழங்க வேண்டும் என்பதுடன் 70 ஆயிரம்
கொடுத்து இதுவரை அனுமதி பத்திரம் வழங்காத அவருக்கு அனுமதி பத்திரத்தை வழங்கி
அந்த பணத்தை மீள பெற்றுக் கொடுக்க வேண்டும் என அமைச்சரிடம் கேட்டுக்
கொள்கின்றோம் எனக் குறிப்பிட்டார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-14T15:51:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[அஸ்வெசும கொடுப்பனவு : நாளை மறுதினம் வங்கிகளுக்கு வருகிறது பணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/aswesuma-allowance-for-september-to-be-credited-1789399229"></link>
            <id>https://ibctamil.com/article/aswesuma-allowance-for-september-to-be-credited-1789399229</id>
            <summary type="text">செப்டம்பர் மாதத்திற்கான அஸ்வெசும கொடுப்பனவு பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் 16ஆம் திகதி வரவு வைக்கப்படும் என நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.&amp;nb...</summary>
            <content type="html"><![CDATA[<p>செப்டம்பர் மாதத்திற்கான அஸ்வெசும கொடுப்பனவு பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் 16ஆம் திகதி வரவு வைக்கப்படும் என நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.</p><p>&nbsp;
இதற்கமைய, அஸ்வெசும நலன்புரி நன்மைகள் பெறும் திட்டத்தின் முதற்கட்டத்தின் கீழ் 999,053 முதியோர்களுக்காக 9,181,696,250 ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.</p><h2>இரண்டாம் கட்ட கொடுப்பனவு</h2><p>இரண்டாம் கட்டமாக, 213,335 பயனாளிக் குடும்பங்களுக்கு ரூபாய் 2,120,856,250 வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2d06c848-5ab1-42b9-b623-fbce1f9a41a0/26-6aa814300f982.webp' /></p><p>
</p><p>
அதன்படி, பயனாளிகள் இந்தத் தொகையை 17ஆம் திகதி முதல் பெற முடியும் என நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.&nbsp; &nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-14T15:38:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழுப்பு கல்லீரல் நோய் : முகத்தில் தோன்றக்கூடிய எச்சரிக்கை அறிகுறிகள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/warning-signs-of-fatty-liver-disease-on-your-face-1789397915"></link>
            <id>https://manithan.com/article/warning-signs-of-fatty-liver-disease-on-your-face-1789397915</id>
            <summary type="text">தற்போது கொழுப்பு கல்லீரல் நோய் மிகவும் பொதுவான உடல்நலப் பிரச்சனையாக உள்ளது. முக்கியமாக, இந்த நோய் ஆரம்பத்தில் பெரிய அளவில் அறிகுறிகளை வெளிப்படுத்தாமல்...</summary>
            <content type="html"><![CDATA[<p>தற்போது கொழுப்பு கல்லீரல் நோய் மிகவும் பொதுவான உடல்நலப் பிரச்சனையாக உள்ளது. முக்கியமாக, இந்த நோய் ஆரம்பத்தில் பெரிய அளவில் அறிகுறிகளை வெளிப்படுத்தாமல் அமைதியாக உருவாகும் தன்மை கொண்டது.</p><p> உலகம் முழுவதும் மில்லியன் கணக்கான மக்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதிகப்படியான ஆல்கஹால் அருந்துவது கொழுப்பு கல்லீரலுக்கான முக்கிய காரணமாக இருந்தாலும், சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்தம், உடல் பருமன், அதிக கொலஸ்ட்ரால் போன்றவைகளும் இந்தப் பிரச்சனைக்கு வழிவகுக்கலாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f1c99236-7ce4-4708-9e99-436492e7cbe7/26-6aa8132b8e1f1.webp' /></p><p></p><p>
</p><p>
ஆல்கஹால் அல்லாத கொழுப்பு கல்லீரல் நோயை ஆரம்பத்திலேயே கவனிக்காமல் விட்டால், நாளடைவில் கல்லீரலில் வீக்கம், வடு போன்ற பாதிப்புகள் ஏற்பட்டு, தீவிரமான நிலையில் கல்லீரல் புற்றுநோய்க்கும் வழிவகுக்கலாம்.</p><p>

ஆனால், ஆச்சரியப்படும் வகையில், சிலருக்கு கொழுப்பு கல்லீரல் பிரச்சனையின் ஆரம்ப அறிகுறிகள் முகத்தில் சில மாற்றங்களாகத் தெரியக்கூடும். இந்த மாற்றங்களை கவனித்து, சரியான நேரத்தில் மருத்துவப் பரிசோதனை செய்துகொண்டால் பிரச்சனையை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து தேவையான நடவடிக்கைகளை எடுக்க முடியும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4c399370-e7a6-4af7-98aa-3017b3e66dca/26-6aa8132c45a55.webp' /></p><p>
</p><p>
அப்படி கொழுப்பு கல்லீரல் இருந்தால் முகத்தில் என்னென்ன அறிகுறிகள் தெரியும் என்பது&nbsp; குறித்த விரிவான விளக்கத்தையும் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் இந்த பதிவில் பார்க்கலாம்.</p><h2>முக்கிய எச்சரிக்கை அறிகுறிகள்&nbsp;</h2><p><b>முக வீக்கம்</b></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/56c281e1-f140-4340-ae18-287adad6cd59/26-6aa8132cef2d1.webp' /><b></b></p><p><b>
</b></p><p>கல்லீரல் சரியாக செயல்படாமல் இருப்பதன் முக்கியமான, முகத்தில் வெளிப்படையாகத் தெரியும் அறிகுறிகளில் ஒன்று முக வீக்கம். குறிப்பாக கண்கள் மற்றும் கன்னங்களைச் சுற்றி வீக்கம் காணப்படும்.</p><p>

கல்லீரல் சரியாக செயல்படாதபோது, உடலுக்குத் தேவையான புரதங்களின் உற்பத்தி குறைந்து, திரவ சமநிலை மற்றும் இரத்த ஓட்டம் பாதிக்கப்படடும்.அதனால் எந்தவித அழற்சியும் இல்லாமல் தொடர்ந்து முகத்தில் வீக்கம் ஏற்பட்டால், அது கல்லீரலின் செயல்பாடு மோசமாக இருப்பதற்கான அறிகுறியாக இருக்கலாம்.
</p><p>
எனவே, இதுபோன்ற அறிகுறியை தொடர்ந்து சந்தித்தால், அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டியது அவசியம்.</p><p><b>
கழுத்துப் பகுதியில் கருமை</b></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/360dcec7-3a37-4912-bc9c-6174cb483a25/26-6aa8132da20ee.webp' /><b></b></p><p>
கழுத்துப் பகுதியில் திடீரென கருமையான படலம் போன்ற தோற்றம் ஏற்பட்டால், அது இன்சுலின் எதிர்ப்புடன் தொடர்புடைய சில கல்லீரல் பிரச்சனைகளின் அறிகுறியாக இருக்கலாம்.
</p><p>
உடலில் இன்சுலின் அளவு அதிகமாக இருக்கும்போது, அது சருமத்தில் நிறமிகளின் உற்பத்தியை அதிகரித்து, குறிப்பாக கழுத்துப் பகுதியில் கருமையை ஏற்படுத்தலாம். இந்த மாற்றம் பெரும்பாலும் கழுத்துப் பகுதியில் தான் முதலில் கவனிக்கப்படும்.
</p><p>
எனவே, உங்கள் கழுத்துப் பகுதியில் திடீரென கருமை ஏற்படுவதை கவனித்தால், அதை சாதாரணமாக நினைக்காமல் மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து கொள்வது நல்லது.</p><p><b>முகம் சிவந்து போவது</b></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/99e2c6a2-f055-4c83-892f-caaa6ac3b092/26-6aa8132e542f1.webp' /><b></b></p><p><b>
</b></p><p>நாள்பட்ட கல்லீரல் பிரச்சனை சில நேரங்களில் முகம் சிவந்து போவதற்கும், ரோசாசியா போன்ற தோற்றத்தில் சிறிய கட்டிகள் அல்லது தடிப்புகள் ஏற்படுவதற்கும் காரணமாக இருக்கலாம்.
</p><p>
ஆனால் முகம் சிவந்து போவதற்கு கல்லீரல் நோய் மட்டுமே காரணம் என்று சொல்ல முடியாது. இருப்பினும், இதனுடன் முக வீக்கம், கழுத்துப் பகுதியில் கருமை போன்ற மற்ற அறிகுறிகளும் இருந்தால், கல்லீரல் தொடர்பான பிரச்சனையும் ஒரு காரணமாக இருக்கலாம்.</p><p>

மேலும், கல்லீரலின் செயல்பாடு பாதிக்கப்படுவதால் ஏற்படும் ஜிங்க் போன்ற ஊட்டச்சத்து குறைபாடுகள், வாயைச் சுற்றி தடிப்புகள் அல்லது லேசான எரிச்சலை ஏற்படுத்தக்கூடும்.
</p><p><b>ஏனைய அறிகுறிகள்</b></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7e5565bb-94ab-40c9-b34a-fe4f2aa121a1/26-6aa8132f0d1c6.webp' /></p><p></p><p><b></b></p><p><b>
</b></p><p>கொழுப்பு கல்லீரல் நோய் தீவிரமடையும் போது, உடலில் பிலிரூபின் அதிகமாக தேங்கலாம். இதனால் கண்கள் மற்றும் சருமம் மஞ்சள் நிறமாக மாறி, மஞ்சள் காமாலை ஏற்படலாம்.சிலருக்கு இரத்தத்தில் பித்த உப்புக்கள் அதிகமாக சேர்வதால், முகத்தில் கடுமையான அரிப்பும் ஏற்படலாம்.</p><p>
எனவே, எந்தவித காரணமும் இல்லாமல் இதுபோன்ற அறிகுறிகள் தொடர்ந்து காணப்பட்டால், அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல் உடனடியாக மருத்துவரை அணுகி உரிய பரிசோதனைகளை செய்து கொள்வதன் மூலம் ஆரம்ப கட்டத்திலேயே கல்லீரல் பிரச்சினையை கண்டறிந்து சிகிச்சை பெற்றுக்கொள்ள முடியும்.&nbsp;</p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b></td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-14T15:31:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் நடிகை அஞ்சலியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/anjali-latest-photoshoot-1789379638"></link>
            <id>https://viduppu.com/article/anjali-latest-photoshoot-1789379638</id>
            <summary type="text">தென்னிந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் அஞ்சலி. இவர் நடிப்பில் சமீபத்தில் மகுடம் திரைப்படம் வெளிவந்தது. ரசிகர்களின் மனம் கவர்ந்த நாய...</summary>
            <content type="html"><![CDATA[<p>தென்னிந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் அஞ்சலி. இவர் நடிப்பில் சமீபத்தில் மகுடம் திரைப்படம் வெளிவந்தது.</p><p> ரசிகர்களின் மனம் கவர்ந்த நாயகியாக இருக்கும் இவர், இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் பிரபலம் ஆவார். அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை பதிவு செய்வார். </p><p>இவர் வெளியிடும் புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும். அந்த வகையில் தற்போது சேலையில் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.</p><p> இதோ அந்த புகைப்படங்கள்:</p>]]></content>
            <updated>2026-09-14T15:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[குடும்பத்திற்குள்ளேயே நடந்த சதியால் துரோகத்தில் சிக்கிய கோட்டாபய]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/gotabaya-was-betrayed-by-family-1789384066"></link>
            <id>https://tamilwin.com/article/gotabaya-was-betrayed-by-family-1789384066</id>
            <summary type="text">முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு எதிராக சதித் திட்டம் ஒன்று தீட்டப்பட்டிருந்தமைக்கான வலுவான சாட்சியங்கள் தற்போது வெளிவந்துள்ளதாக தென்னிலங்கை ஊ...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு எதிராக சதித் திட்டம் ஒன்று தீட்டப்பட்டிருந்தமைக்கான வலுவான சாட்சியங்கள் தற்போது வெளிவந்துள்ளதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.</p><p> 

ராஜபக்ச குடும்பத்தின் அரசியல் எதிர்காலத்தை நாமல் ராஜபக்சவிடம் கையளிப்பதற்காக இந்த சதி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
</p><p>
2019 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்ச போட்டியிட, ஷிராந்தி, மகிந்த உள்ளிட்ட ராஜபக்ச குடும்பத்தினர் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.</p><p> </p><h2><b>

 துரோகத்தில் சிக்கிய கோட்டாபய </b></h2><p> அதற்கு எதிராக கடும் நிலைப்பாட்டில் அவர்கள் இருந்ததாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1bd68079-94c4-423f-b672-9bfcb0d30177/26-6aa7e23d370c4.webp' /></p><p>எனினும், வியத்மக அமைப்பை நிறுவி, அரசியல் களத்தை அமைத்துக்கொண்டு முன்னோக்கி வந்த கோட்டாபய ராஜபக்ச, உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலுடன் தனது வேட்புமனுவை வலுவாக உறுதிப்படுத்திக் கொண்டார்.
</p><p>
ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றதன் பின்னர், நாடாளுமன்றத் தேர்தலிலும் வெற்றி பெற்று கோட்டாபய ராஜபகச் அதிகாரத்தை உறுதிப்படுத்திக் கொண்டார்.
</p><p>
இந்த நிலையில் கோட்டாபயவிற்கு எதிராக, நாமல் ராஜபக்சவின் அரசியல் பெரிய அண்ணா என்று வர்ணிக்கப்பட்ட விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோரின் தலைமையில் அரசாங்கத்திற்குள் உட்கட்சி மோதல் ஏற்பட்டது.</p><h3><b>

ராஜபக்சவின் அரசியல்</b></h3><p>இதனால், 2022ஆம் ஆண்டு மார்ச் 03 ஆம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் அமைச்சுப் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டனர். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/431da20b-02c7-4d83-b5dd-592b770adb59/26-6aa7e23ded411.webp' /></p><p>அதனைத் தொடர்ந்து ஊடகங்களிடம் கருத்துத் தெரிவித்த அவர்கள் இருவரும் இனி ஒருபோதும் ராஜபக்சக்களுடன் அரசியல் செய்யப்போவதில்லை எனத் தெரிவித்திருந்தனர்.
</p><p>
ஆனால், தற்போது கோட்டாபய ராஜபக்சவை முற்றிலும் கைவிட்டுவிட்டு, அவர்கள் இருவரும் உள்ளிட்ட தரப்பினர் தற்பொழுது நாமல் ராஜபக்சவுடன் கைகோர்த்து கொண்டதன் ஊடாக இந்த தகவல்கள் உறுதி செய்யப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-14T15:00:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாமலுக்கு சிறை ஒன்றும் புதிதல்ல..! நாட்களை எண்ணிக் காத்திருக்கும் மொட்டுக்கட்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/for-namal-prison-is-not-new-place-1789396666"></link>
            <id>https://tamilwin.com/article/for-namal-prison-is-not-new-place-1789396666</id>
            <summary type="text">நாமல் ராஜபக்சவிற்கு சிறை ஒன்றும் புதிய இடம் கிடையாது என நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுனவர்தன தெரிவித்துள்ளார்.ஊடகவியலாளர்கள் நாமல் தொடர்பில் எழுப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாமல் ராஜபக்சவிற்கு சிறை ஒன்றும் புதிய இடம் கிடையாது என நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுனவர்தன தெரிவித்துள்ளார்.</p><p>ஊடகவியலாளர்கள் நாமல் தொடர்பில் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p>
</p><p>கடந்த 2015 ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கம் ஆட்சி பொறுப்பினை ஏற்றுக் கொண்டதன் பின்னர் நாமல் ராஜபக்ச மூன்று தடவைகள் விளக்கமறையில் அடைக்கப்பட்டிருந்தார் என அவர் தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p>எனவே அரசியல் செய்யும்போது இவ்வாறான நடவடிக்கைகளை எதிர்பார்க்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.</p><h2>நாமல் ராஜபக்சவிற்கு பிணை</h2><p>நாமல் ராஜபக்ச நல்ல தேக ஆரோக்கியத்துடன் நன்றாக இருக்கின்றார் என தெரிவித்துள்ளார்.
நாட்டில் சுயாதீனமான நீதிமன்ற கட்டமைப்பு ஒன்று இயங்கி வருவதாக நம்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3cc3b762-98b0-4c93-a161-d436c9615d80/26-6aa806bc62f27.webp' />&nbsp;&nbsp;</p><p>
எனவே எதிர்வரும் 18 ஆம் திகதி நாமல் ராஜபக்சவிற்கு பிணை கிடைக்கும் என நம்புவதாக அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.</p><p>
நாமலின் சட்டத்தரணிகள் பிணை பெற்றுக் கொள்வது தொடர்பான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-14T14:50:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[அனுரவின் கூட்டங்களில் பங்கேற்பவர்களை அச்சுறுத்தும் சாகர]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sagara-threatens-those-attending-anuras-meetings-1789395464"></link>
            <id>https://ibctamil.com/article/sagara-threatens-those-attending-anuras-meetings-1789395464</id>
            <summary type="text">நாட்டின் பணத்தை வீணடிக்கும் கூட்டங்களில் பங்கேற்பவர்கள் அனைவரும் தங்களது அரசாங்கத்தின் கீழ் நிச்சயமாக விளக்கம் அளிக்க வேண்டியிருக்கும் என்று சிறிலங்கா...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டின் பணத்தை வீணடிக்கும் கூட்டங்களில் பங்கேற்பவர்கள் அனைவரும் தங்களது அரசாங்கத்தின் கீழ் நிச்சயமாக விளக்கம் அளிக்க வேண்டியிருக்கும் என்று சிறிலங்கா பொதுஜன பெரமுன பொதுச் செயலாளர் சட்டத்தரணி சாகர கரியவசம் தெரிவித்தார்.
</p><p>
நாட்டில் எந்தவொரு அபிவிருத்தியும் இல்லாத நிலையில், ஜனாதிபதி நாடு முழுவதும் பயணம் செய்து இதுபோன்ற கூட்டங்களை ஏற்பாடு செய்வது பெரும் பண விரயம் என்று அவர் சுட்டிக்காட்டினார்.</p><h2>பொய் சொல்லி கூட்டத்தை நடத்தும் அரச தலைவர்</h2><p>கொழும்பில் இன்று (14) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு கூறினார்.

சாகர கரியவசம் மேலும் கூறியதாவது:</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c1e171af-a66c-49a4-b182-a13c128c25ee/26-6aa807d8ce3ec.webp' /></p><p>
</p><p>
இலங்கை வரலாற்றில் முதன்முறையாக, எந்தவொரு அபிவிருத்தித் திட்டங்களோ அல்லது அபிவிருத்திகளோ இல்லாமல், தேர்தலுக்கு முன்பு செய்வது போல பொய் சொல்லி, பொய் வாக்குறுதிகளை அளித்து, அரசாங்க அதிகாரத்தைக் கொண்ட ஒரு அரச தலைவர் கூட்டங்களை நடத்துவதை நாம் காண்கிறோம். </p><p>இது நாட்டின் பணத்தை முழுமையாக வீணடிப்பதாகும். இந்தக் கூட்டங்களில் பங்கேற்பவர்கள் அனைவரும் நமது அரசாங்கத்தின் கீழ் நிச்சயமாக விளக்கம் அளிக்க வேண்டியிருக்கும்.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-14T14:42:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[எல் நினோ தாக்கத்தை எதிர்கொள்ள அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்: சஜித் அறைகூவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/el-nino-in-sri-lanka-sajith-1789394114"></link>
            <id>https://tamilwin.com/article/el-nino-in-sri-lanka-sajith-1789394114</id>
            <summary type="text">இலங்கையில் எல் நினோ தாக்கத்தின் சாத்தியக்கூறு 100 வீதமாக மாறியுள்ளதால்,
அரசும் எதிர்க்கட்சியும் மற்றும் 220 இலட்சம் மக்களும் ஒன்றிணைந்து இந்தக்
கோரம...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் எல் நினோ தாக்கத்தின் சாத்தியக்கூறு 100 வீதமாக மாறியுள்ளதால்,
அரசும் எதிர்க்கட்சியும் மற்றும் 220 இலட்சம் மக்களும் ஒன்றிணைந்து இந்தக்
கோரமான சூழ்நிலையை வெற்றிகரமாக எதிர்கொள்ள வேண்டும் என்று எதிர்க்கட்சித்
தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.</p><p>

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ மற்றும் பேராசிரியர் எல்.எம். அபேவிக்ரம
ஆகியோரின் இணைத் தலைமையில் இன்று(14.9.2026) நடைபெற்ற இலங்கைக் காலநிலை பற்றிய நாடாளுமன்ற
ஒன்றியக் கூட்ட அமர்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர்
மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
</p><p>
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

"மனித வளம், விலங்குகள், பல்லுயிர் பெருக்கம் மற்றும் சூழலைப் பாதுகாப்பது மிக
முக்கியமான தேசிய பாதுகாப்பு முன்னுரிமைகளாகும்.</p><h2>அனர்த்த அபாயங்கள்</h2><p> </p><p>பேதங்களின்றி,
வெளிப்படைத்தன்மையுடன் தேசிய உரையாடல் திட்டமொன்றை இலங்கைக் காலநிலை பற்றிய
நாடாளுமன்ற ஒன்றியம் முன்னின்று ஆரம்பிக்கும்.

மக்கள் மாத்திரமன்றி, வாக்களிக்கும் உரிமை இல்லாத விலங்குகளையும், வன
வளங்களையும் பாதுகாப்பது தற்போதைய மற்றும் எதிர்கால சந்ததியினருக்கு
இன்றியமையாதது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/046c97e6-5bab-488f-a3f2-c9ff53beba0c/26-6aa80566571b6.webp' /></p><p>

அனர்த்தங்கள் ஏற்படும்போது நாட்டின் முகாமைத்துவப் பொறிமுறை சிறப்பான
சேவையாற்றும் போதிலும், உலகளாவிய அனர்த்த அபாயங்கள் கிடைத்தவுடன் முன்கூட்டியே
பதிலளிக்கும் முறையும், துரிதமான வெளியேற்றத் திட்டமும் அவசியமாகும்.</p><p>

அனர்த்தங்கள் ஏற்பட்ட பின்னர் நிவாரணம் வழங்கும் வழமை மாறி, மனிதர்கள்,
காடுகள், குடிதண்ணீர், நீர்ப்பாசனம், உணவு மற்றும் வலுச்சக்திப்
பாதுகாப்புக்கு ஏற்படும் பாதிப்புகளை முற்கூட்டியே எதிர்கொள்ளும் முறையான
எதிர்வினைத் திட்டம் நாட்டில் உருவாக்கப்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-14T14:36:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஏழாக குறைக்கப்படும் சாதாரண தரப் பரீட்சை பாடங்கள்! வெளியாகியுள்ள தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/govt-to-reduce-subjects-in-ordinary-level-exam-1789395822"></link>
            <id>https://ibctamil.com/article/govt-to-reduce-subjects-in-ordinary-level-exam-1789395822</id>
            <summary type="text">

வரலாறு மற்றும் அழகியல் ஆகிய பாடங்களை உள்பட க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் பாடங்களின் எண்ணிக்கையை ஏழாகக் குறைப்பதற்குத் திட்டமிட்டுள்ளதாக கல்விச் ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>

வரலாறு மற்றும் அழகியல் ஆகிய பாடங்களை உள்பட க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் பாடங்களின் எண்ணிக்கையை ஏழாகக் குறைப்பதற்குத் திட்டமிட்டுள்ளதாக கல்விச் சீர்திருத்தங்கள் தொடர்பான உபகுழுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
பிரதமரும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய தலைமையில் அண்மையில் நடைபெற்ற கூட்டத்தின் போதே இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.</p><p>

அத்தோடு, 12 மற்றும் 13 ஆம் வகுப்புகளில், சமூக ஒத்திசைவு, சட்டம் மற்றும் அறநெறி தொடர்பான புதிய பாடத் தொகுதிகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாகவும் இதில் கலந்துரையாடப்பட்டுள்ளது.</p><p></p><h2>2027 கல்விச் சீர்திருத்தங்கள்</h2><p>
</p><p>
2027 ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்பட திட்டமிடப்பட்டுள்ள பொதுக் கல்விச் சீர்திருத்தங்கள் மற்றும் முன்பள்ளிக் கல்விச் சீர்திருத்தங்களின் முன்னேற்றம் குறித்தும் இக்கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0b3ab9b8-c533-481f-a1db-2257486808fc/26-6aa80610b04d3.webp' /></p><p>
ஆரம்பக் கட்டமாக, 2 மற்றும் 6 ஆம் தரங்களுக்கான செயல்முறைப் புத்தகங்கள், ஆசிரியர் வழிகாட்டிகள் மற்றும் பாடத் தொகுதிகள் ஏற்கனவே தயாரிக்கப்பட்டுள்ளதுடன், ஆசிரியர்களுக்கான பயிற்சிகளும் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.</p><h2>ஆரம்பகால சிறுவர் கல்வி</h2><p>

இந்த புதிய சீர்திருத்தங்கள் குறித்த விழிப்புணர்வு வேலைத்திட்டங்களின் தொடர் ஒன்றும் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f6fdff91-d1d9-4c7a-bb27-d8aab9231c70/26-6aa8061166216.webp' /></p><p>
</p><p>
இது தவிர, ஆரம்பகால சிறுவர் கல்வியை முறைப்படுத்துவதற்காக தேசிய முன்பள்ளிக் கொள்கை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாகவும் இக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

முன்பள்ளிப் பதிவு, பாடத்திட்டம் தயாரித்தல், ஆசிரியர் வழிகாட்டிகள் மற்றும் பயிற்சித் திட்டங்கள் ஆகிய அனைத்தும் இதில் அடங்குவதுடன், இவற்றுக்கான நடவடிக்கைகள் தற்போது தீவிரமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-14T14:35:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நபர்: பொதுமக்களின் உதவியை நாடும் காவல்துறை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/nb-rcmp-search-for-man-wanted-on-arrest-warrant-1789387787"></link>
            <id>https://canadamirror.com/article/nb-rcmp-search-for-man-wanted-on-arrest-warrant-1789387787</id>
            <summary type="text">&amp;nbsp;கனடாவின் நியூ பிரன்சுவிக் மாகாணத்தில், நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 44 வயது நபரைத் தேடி வரும் ரிச்சிபுக்டோ கனடிய காவல் துறை, அவரைக் கண்டுப...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கனடாவின் நியூ பிரன்சுவிக் மாகாணத்தில், நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 44 வயது நபரைத் தேடி வரும் ரிச்சிபுக்டோ கனடிய காவல் துறை, அவரைக் கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவியைக் கோரியுள்ளது.</p><p> 
சென் மார்கிரட்ஸ் பகுதியைச் சேர்ந்த ஜஸ்டின் சிட்னி கேபிள் என்பவர், கடந்த ஜூலை 27 அன்று நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியதால் அவர் மீது பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.</p><p> 
நீதிமன்ற உத்தரவை மீறியது தவிர, துப்பாக்கி தொடர்பான பின்வரும் குற்றச்சாட்டுகளுக்காகவும் அவர் தேடப்பட்டு வருகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/419f1a5a-6f4f-4781-a18b-bd2ad841e0e9/26-6aa7e40cacfae.webp' /></p><p>
வாகனத்தில் சட்டவிரோதமாகத் துப்பாக்கி வைத்திருந்தது, உரிய அனுமதியின்றி துப்பாக்கியை வைத்திருந்தது, துப்பாக்கியைப் பாதுகாப்பற்ற முறையில் சேமித்து வைத்திருந்தது.
</p><p>ஜஸ்டின் சிட்னி கேபிளை எங்காவது கண்டால் பொதுமக்கள் யாரும் அவரை நேரடியாக அணுகக் கூடாது என்றும், உடனடியாக 911 என்ற அவசர எண்ணிற்கு அழைக்க வேண்டும் என்றும் காவல்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.</p><p> 
இவர் இருக்குமிடம் குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தால், ரிச்சிபுக்டோ காவல் துறையை 506-523-4611 என்ற எண்ணிலோ அல்லது குற்றத் தடுப்புப் பிரிவை 1-800-222-8477 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-14T14:30:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[வீட்டின் கூரையில் ஏறிய பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/woman-climbing-roof-faces-shocking-surprise-1789393216"></link>
            <id>https://jvpnews.com/article/woman-climbing-roof-faces-shocking-surprise-1789393216</id>
            <summary type="text">&amp;nbsp;அளுத்கம, சீனவத்தை பகுதியில் தனியாக வசித்து வரும் பெண் ஒருவரின் வீட்டின் கூரையின் கீழ் (சீலிங்) இருந்து உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டு ஒன்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;அளுத்கம, சீனவத்தை பகுதியில் தனியாக வசித்து வரும் பெண் ஒருவரின் வீட்டின் கூரையின் கீழ் (சீலிங்) இருந்து உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டு ஒன்று இன்று (14) கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அளுத்கம காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
</p><p>
கடந்த சில நாட்களாகப் பெய்த மழை காரணமாக வீட்டின் வரவேற்பறைக் கூரையிலிருந்து மழைநீர் கசிந்துள்ளது.

இதனைப் பரிசோதிப்பதற்காக குறித்த நடுத்தர வயது பெண் ஏணியைப் பயன்படுத்தி கூரைப் பகுதியைச் சென்று பார்த்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c1b94a5f-4798-4f10-b75a-e931626f6f15/26-6aa7f942963c5.webp' /></p><p>
</p><p>
இதன்போது, கூரையில் சேதமடைந்திருந்த பகுதிக்கு அருகே விளாம்பழம் போன்ற வடிவில் சந்தேகத்திற்கிடமான பொருள் ஒன்று இருப்பதை அவர் அவதானித்துள்ளார். உடனடியாக இது குறித்துத் தனது உறவினருக்கு அவர் தகவல் தெரிவித்துள்ளார்.
</p><p>
இதனையடுத்து, அவர் அளுத்கம காவல்துறையினருக்கு அளித்த தகவலின் பேரில், சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறை குழுவினர் சோதனையிட்டதில் அது உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டு என்பது உறுதி செய்யப்பட்டது.
</p><p>
இந்தச் சம்பவம் தொடர்பில் குறித்த பெண்ணிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாகவும், நீதிமன்ற உத்தரவைப் பெற்று விசேட அதிரடிப்படையின் குண்டு செயலிழக்கச் செய்யும் பிரிவினரைக் கொண்டு கைக்குண்டை செயலிழக்கச் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அளுத்கம காவல்நிலையப் பொறுப்பதிகாரி சம்பத் சஞ்சீவ தெரிவித்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-09-14T14:30:26+00:00</updated>
        </entry>
    </feed>
