<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-09-16T19:24:21+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்க ராணுவ தளங்களை தரைமட்டமாக்கிய ஈரான்: வெளியான புதிய புகைப்படங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/new-photos-reveals-iran-strike-damage-to-us-camps-1789586380"></link>
            <id>https://news.lankasri.com/article/new-photos-reveals-iran-strike-damage-to-us-camps-1789586380</id>
            <summary type="text">New Photos Reveals Iran Strike Damage to US Camps: மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்திய புகைப்படங்கள் வெளியாகியுள...</summary>
            <content type="html"><![CDATA[<p>New Photos Reveals Iran Strike Damage to US Camps: மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்திய புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.</p><h2> அமெரிக்க ராணுவ தளம் மீது தாக்குதல்</h2><p>
மத்திய கிழக்கில் அமைந்துள்ள அமெரிக்கா ராணுவ முகாம்களை குறிவைத்து ஈரானிய புரட்சிகர காவல் படையினர் வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளனர்.</p><p> இந்நிலையில் ஈரானின் இந்த தாக்குதலால் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய சேதங்களையும் விளக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.</p><p> இந்த புகைப்படங்களை அமெரிக்க செய்தி நிறுவனமான CBC அதன் கூட்டாளியான BBC நிறுவனத்திற்கு வழங்கியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ed8a51ea-1f2b-49b5-8cfe-d84fe3ecb20a/26-6aaaebcd6e613.webp' /></p><p> பாதிக்கப்பட்ட முகாம்களில் உள்ள அமெரிக்க வீரர்களால் இந்த புகைப்படங்கள் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.</p><p> அதன்படி, சவுதி அரேபியா மற்றும் குவைத் ஆகிய நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் கடுமையாக சேதமடைந்து இருப்பதை பார்க்க முடிகிறது.</p><p></p><p> குறிப்பாக சவுதி அரேபியாவில் உள்ள பிரின்ஸ் சுல்தான் விமானப்படை தளத்தில் நிலை நிறுத்தப்பட்டிருந்த போயிங் E-3 சென்டரி(Boeing E-3 Sentry) என்ற ராணுவ விமானம் ஈரானின் வான்வழித் தாக்குதலில் இரண்டாக பிளந்து வால் பகுதி முற்றிலுமாக நொறுங்கி போயுள்ளது.</p><p> மேலும் இந்த தாக்குதலில் ராணுவ வீரர்களின் குடியிருப்பு அமைப்புகளும், பல முக்கிய கட்டிடங்களும் தரைமட்டமாக்கப்பட்டு இருப்பது புகைப்படங்களில் பார்க்க முடிகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b48f9be7-35ff-4e38-85a2-7d1a5cdb9b8d/26-6aaaebce25d85.webp' /></p><p> இந்த புகைப்படங்களை வெளியிட்ட BBC, இந்த புகைப்படங்களின் நம்பகத்தன்மையை சுயாதீனமாக உறுதிப்படுத்த முடியவில்லை என்று தெரிவித்துள்ளது.</p><p> இருப்பினும், மத்திய கிழக்கில் ஈரான் நடத்திய தாக்குதலில் அமெரிக்கா முகாம்களில் உள்ள பல கட்டிடங்கள் சேதமடைந்து இருப்பதாக பெண்டகன் சமீபத்திய அறிக்கையில் உறுதிப்படுத்தியுள்ளது.</p><p><br></p>]]></content>
            <updated>2026-09-16T19:19:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[திருமணத்திற்கு முன் காதல் உறவு ; கர்ப்பமான இளம்பெண்ணுக்கு நேர்ந்த கதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/woman-dies-due-contraceptive-pill-before-marriage-1789581018"></link>
            <id>https://jvpnews.com/article/woman-dies-due-contraceptive-pill-before-marriage-1789581018</id>
            <summary type="text">இந்தியாவில் தெலுங்கானா மாநிலத்தில், காதலன் வழங்கியதாகக் கூறப்படும் கருத்தடை மாத்திரைகளை உட்கொண்ட பின்னர் ஏற்பட்ட உடல்நலக்குறைவால் 30 வயதுடைய இளம்பெண் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியாவில் தெலுங்கானா மாநிலத்தில், காதலன் வழங்கியதாகக் கூறப்படும் கருத்தடை மாத்திரைகளை உட்கொண்ட பின்னர் ஏற்பட்ட உடல்நலக்குறைவால் 30 வயதுடைய இளம்பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><p>
</p><p></p><p>ராஜமகேந்திரவரம் பகுதியைச் சேர்ந்த குறித்த இளம்பெண், ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவ ஆய்வகத்தில் பணியாற்றி வந்துள்ளார்.</p><h3>பொலிஸார் தீவிர விசாரணை</h3><p>

இதன்போது, கிருஷ்ணா மாவட்டத்தைச் சேர்ந்த நாகசாய் (26) என்ற இளைஞருடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டதாகவும், பின்னர் அது காதலாக மாறியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5b72d6e9-528b-4ec5-8bf4-c92498e7bdc6/26-6aaad6dc53213.webp' /></p><p>

நாகசாய்க்கு ஏற்கனவே திருமணமாகி பெண் குழந்தை இருந்த நிலையில், அந்த தகவலை மறைத்து குறித்த இளம்பெண்ணுடன் காதல் உறவில் இருந்ததாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது.
</p><p>
இந்நிலையில், சுமார் 5 மாதங்களுக்கு முன்னர் இருவரும் தனிமையில் சந்தித்ததாகவும், அதன் பின்னர் இளம்பெண் கர்ப்பமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இந்த விடயம் குடும்பத்தினருக்கு தெரியவந்தால் பிரச்சினை ஏற்படும் என இளம்பெண் கூறியதைத் தொடர்ந்து, நாகசாய் அவருக்கு கருத்தடை மாத்திரைகளை வழங்கியதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
</p><p>
அந்த மாத்திரைகளை உட்கொண்ட பின்னர் இளம்பெண்ணுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. </p><p>தொடர்ந்து கடுமையான வயிற்றுவலி மற்றும் வாந்தி ஏற்பட்ட நிலையில், அவரது உடல்நிலை மோசமடைந்துள்ளது.</p><p>
</p><h3>மேலதிக சிகிச்சை</h3><p>இதையடுத்து, அதிர்ச்சியடைந்த அவரது தோழிகள் அவரை நிஜாம்பேட்டை சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.</p><p>
</p><p></p><p>எனினும், அங்கு அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்ததால், மேலதிக சிகிச்சைக்காக ஆந்திரப் பிரதேசத்தின் காக்கிநாடா அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.</p><p>

அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இளம்பெண் உயிரிழந்துள்ளார்.
</p><p>
இதையடுத்து, இளம்பெண்ணின் உறவினர்கள் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
</p><p>
மருத்துவ ஆலோசனையின்றி இளம்பெண்ணுக்கு மருந்து வழங்கியதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டின் அடிப்படையில் தலைமறைவாக இருந்த நாகசாயை பொலிஸார் கைது செய்துள்ளனர்.</p><p>

கைது செய்யப்பட்டுள்ள அவரிடம் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
</p><p>
இளம்பெண்ணின் உயிரிழப்புக்கான மருத்துவ காரணங்கள் உள்ளிட்ட சம்பவத்தின் முழுமையான பின்னணி தொடர்பில் விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-09-16T19:18:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[மின்சார ஸ்கூட்டர்கள் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/e-scooters-are-becoming-faster-amid-safety-1789569887"></link>
            <id>https://canadamirror.com/article/e-scooters-are-becoming-faster-amid-safety-1789569887</id>
            <summary type="text">மின்சார ஸ்கூட்டர்களின் பயன்பாட்டினால் ஏற்படும் ஆபத்துகள் அதிகரித்து வருவதாகக் கூறி, சர்வதேச அளவில் தீவிர பாதுகாப்பு கவலைகள் எழுப்பப்பட்டு வருகின்றன. ...</summary>
            <content type="html"><![CDATA[<p>மின்சார ஸ்கூட்டர்களின் பயன்பாட்டினால் ஏற்படும் ஆபத்துகள் அதிகரித்து வருவதாகக் கூறி, சர்வதேச அளவில் தீவிர பாதுகாப்பு கவலைகள் எழுப்பப்பட்டு வருகின்றன. </p><p>
அண்மைய புள்ளிவிவரங்களின்படி, மின்சார ஸ்கூட்டர்களைப் பயன்படுத்தும்போது காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 40 சதவீதம் அதிகரித்துள்ளது. </p><p>
இதில் பெரியவர்கள் மற்றும் குழந்தைகள் இருவருமே பாதிக்கப்படுகின்ற போதிலும், 15 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் தீவிர காயமடையும் சம்பவங்கள் கிட்டத்தட்ட மும்மடங்காக உயர்ந்துள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/03a36ce4-99d5-41f0-a321-5f6bdcd05859/26-6aaaab61175f8.webp' /></p><p> </p><p>
கனடிய சுகாதார தகவல் நிறுவனத்தின் தரவுகளின்படி, ஏப்ரல் 2025 முதல் மார்ச் 2026 வரையிலான காலகட்டத்தில் மின்சார ஸ்கூட்டர் விபத்துகள் தொடர்பாக 837 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். </p><p>
மேலும், 2025 ஆம் ஆண்டில் மின்சார ஸ்கூட்டர்கள் அல்லது இ-பைக்குகளைப் பயன்படுத்திய 10 குழந்தைகள் உயிரிழந்ததாகக் கனடிய குழந்தைகள் நல கண்காணிப்பு திட்டம் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.</p><p>
மறுபுறம், மின்சார ஸ்கூட்டர்களின் வேகம் கணிசமாக அதிகரித்து வருவதே விபத்துகளுக்கு முக்கியக் காரணம் என நுகர்வோர் அமைப்பான 'கான்ஸியூமர் ரிப்போர்ட்ஸ்' (Consumer Reports) நடத்திய ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. </p><p>
2022-இல் மணிக்கு 25 கி.மீ ஆக இருந்த ஸ்கூட்டர்களின் சராசரி வேகம், 2026-இல் மணிக்கு 32 கி.மீ ஆக உயர்ந்துள்ளது. தாம் சோதித்த 13 மின்சார ஸ்கூட்டர்களில் ஒன்றைக் கூடப் பயன்படுத்தப் பரிந்துரைக்கவில்லை என்று அவ்வமைப்பு தெரிவித்துள்ளது.</p><p> 
சோதனை ஓட்டத்தின்போதே இரண்டு அனுபவமிக்க ஆய்வாளர்கள் கட்டுப்பாட்டை இழந்து காயமடைந்தனர். பிரேக் பிடிக்கும் போது ஓட்டுநரின் உடல் எடை இயல்பாகவே முன்பக்க சக்கரத்திற்கு மாறுவதால், பின்பக்க சக்கரத்தின் பிடிமானம் குறைந்து வளைவுகளில் வாகனம் சறுக்கி விபத்து ஏற்படுவதாக வல்லுநர்கள் விளக்கமளிக்கின்றனர்.
</p><p>இந்த விபத்துகளில் இருந்து தப்பிக்கத் தலைக்கவசம் (Helmet), முழங்கால் மற்றும் மணிக்கட்டு கவசங்களை அணிவது மிகவும் அவசியமாகும். குறிப்பாக, மூளையில் ஏற்படும் தீவிர காயங்களைத் தடுக்க தலைக்கவசம் கட்டாயம் என மருத்துவர் ரோசன்ஃபீல்ட் வலியுறுத்துகிறார்.
</p><p> அதேபோல, 16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் மின்சார ஸ்கூட்டர்களை ஓட்டுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும், எந்த வயதினராக இருந்தாலும் வேகத்தைக் குறைத்து, ஹெட்போன் மற்றும் மொபைல் போன்களைத் தவிர்த்துச் செல்ல வேண்டும் என்றும் அறிவுறுத்தப்படுகிறது. </p><p>
ஒன்டாரியோ போன்ற இடங்களில் பொதுச் சாலைகள், நடைபாதைகள் மற்றும் சைக்கிள் பாதைகளில் மின்சார ஸ்கூட்டர்களை ஓட்ட சட்டப்படி அனுமதியில்லை என்ற போதிலும் பலர் அதை மீறி வருகின்றனர். எனவே, சட்டங்களை முறையாக நடைமுறைப்படுத்துவதே விபத்துகளைக் குறைக்க உதவும்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-16T19:18:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[காஸாவில் திடீரென இடிந்து விழுந்த 7 மாடிக் கட்டடம் ; 5 குழந்தைகள் உட்பட 20 பேர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/20-killed-after-residential-buildin-collapses-gaza-1789586265"></link>
            <id>https://canadamirror.com/article/20-killed-after-residential-buildin-collapses-gaza-1789586265</id>
            <summary type="text">காஸாவில் இஸ்ரேலின் போர்த் தாக்குதல்களால் சேதமடைந்த 7 மாடிக் குடியிருப்பு கட்டடம் திடீரென இடிந்து விழுந்ததில், 5 குழந்தைகள் உட்பட 20 பேர் உயிரிழந்துள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p>காஸாவில் இஸ்ரேலின் போர்த் தாக்குதல்களால் சேதமடைந்த 7 மாடிக் குடியிருப்பு கட்டடம் திடீரென இடிந்து விழுந்ததில், 5 குழந்தைகள் உட்பட 20 பேர் உயிரிழந்துள்ளனர்.</p><p>



இந்தச் சம்பவம் இன்று (16) அதிகாலை இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 14 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2f572298-fab5-438b-911a-2f178c8aa718/26-6aaaeb5b3f743.webp' /></p><p>இதேவேளை, கட்டடத்தின் இடிபாடுகளுக்குள் 100-க்கும் மேற்பட்டோர் சிக்கியுள்ளதாகவும், அவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் காஸாவின் பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
</p><p>


இடிபாடுகளில் சிக்கியவர்களைத் தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், உயிரிழந்தவர்களின் உடல்களும் மீட்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
</p><p>


போதிய மீட்பு உபகரணங்கள் இல்லாமை மற்றும் இஸ்ரேல் விதித்துள்ள கட்டுப்பாடுகள் காரணமாக மீட்புப் பணிகளை முன்னெடுப்பதில் கடும் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>


இஸ்ரேலின் தொடர்ச்சியான போர்த் தாக்குதல்களால் காஸாவில் நூற்றுக்கணக்கான கட்டடங்கள் சேதமடைந்துள்ள நிலையில், அடிப்படை வசதிகளின்றி சேதமடைந்த கட்டடங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருவதாகவும் கூறப்படுகிறது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-16T19:17:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொஸ் மல்லியின் மைத்துனர் கொலை வழக்கில் நால்வர் அதிரடி கைது - சிசிடிவியில் சிக்கிய முக்கிய ஆதாரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/four-arrested-in-murder-case-of-kos-malli-relative-1789585953"></link>
            <id>https://tamilwin.com/article/four-arrested-in-murder-case-of-kos-malli-relative-1789585953</id>
            <summary type="text">ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான கொஸ்மல்லியின் நெருங்கிய உறவினரான தமித் பிரசாத் பொன்சேகா என்ற “பூத கலுவா” வின் கொலை சம்பவம் தொடர்பாக மவுண்ட் லவினியா பிர...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான கொஸ்மல்லியின் நெருங்கிய உறவினரான தமித் பிரசாத் பொன்சேகா என்ற “பூத கலுவா” வின் கொலை சம்பவம் தொடர்பாக மவுண்ட் லவினியா பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவு நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். </p><p>

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், </p><p>

 மவுண்ட் லவினியா பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவால் கைது செய்யப்பட்ட நான்கு சந்தேக நபர்களிடம் இருந்து, ​​21 கிராமுக்கும் அதிகமான ஐஸ் போதைப்பொருள், 4 வாள்கள் உள்ளிட்ட பல கூர்மையான ஆயுதங்கள் மற்றும் 4 தொலைபேசிகள் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
</p><p>
கடந்த 7ஆம் திகதி அதிகாலை சுமார் 1.45 மணியளவில், தெஹிவளை- ஓபன் பிளேஸைச் சேர்ந்த 46 வயதான தமித் பிரசாத் பொன்சேகாவின் வீட்டிற்கு, முச்சக்கர வண்டியில் நான்கு பேர் கொண்ட கும்பல் ஒன்று புகுந்துள்ளது.</p><p> 

அதன் பின்னர், படுக்கையறையில், உறங்கிக் கொண்டிருந்த அவரை, கூர்மையான ஆயுதங்களால் தாக்கிக் கொலைச் செய்த நிலையில், சந்தேக நபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/41aadfe6-5335-4c9c-81c3-11b4aca64cd9/26-6aaaeaa1e007f.webp' /></p><p> </p><p>

இவ்வாறு உயிரிழந்தவர், பல ஆண்டுகளாக கொஸ் மல்லியுடன் துபாயில் தங்கியிருந்ததாகவும், அங்கு பக்கவாதம் ஏற்பட்டதைத் தொடர்ந்து சில வாரங்களுக்கு முன்பு இலங்கைக்கு திரும்பியதாகவும் பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.</p><h2> 

பிரதான சந்தேக நபர்கள் கைது</h2><p>
சம்பவத்தில் ஈடுபட்ட சந்தேக நபரின் புகைப்படம், பாதுகாப்பு கேமரா காட்சிகளைப் பயன்படுத்திப் பெறப்பட்டு, மேலதிக விசாரணைக்காக கொழும்பு குற்றப் பதிவேடுகள் பிரிவுக்கு அனுப்பப்பட்டுள்ளது. </p><p>

புகைப்படத்தில் உள்ள நபர், பல குற்றங்களில் ஈடுபட்டு வரும் அங்கலானா பகுதியைச் சேர்ந்த ஒருவரை 65 சதவீதம் ஒத்திருப்பதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b2033a0f-59bd-42a4-bbdd-71c8472d70d1/26-6aaaeaa2970eb.webp' /></p><p>
</p><p>
 அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது, ​​இந்தக் கொலையில் மேலும் நான்கு பேர் சம்பந்தப்பட்டிருந்ததாக பொலிஸாருக்கு தெரியவந்துள்ளது.

தெலவல வீட்டுவசதி வளாகத்தைச் சேர்ந்த “சஞ்சு” என்பவரும் இந்தக் குழுவில் அடங்குவதாகவும், இவர் தற்போது வெளிநாட்டில் இருக்கும் “சாண்டோ” என்ற பெரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரரின் பிரதான அடியாள் என்றும் கண்டறியப்பட்டுள்ளது. </p><h2>

வாகனங்கள் மற்றும் வாள்கள் பறிமுதல்</h2><p>
கைது செய்யப்பட்ட சந்தேக நபரின் வீட்டிற்குப் பின்னாலுள்ள காட்டில், குற்றக் கும்பலைச் சேர்ந்தவர்களால் செய்யப்பட்ட மூன்று பெரிய வாள்கள், ஒரு மிதிவண்டி கரப்பான் பூச்சி மற்றும் ஒரு கூர்மையான ஆயுதம் ஆகியவையும் கண்டெடுக்கப்பட்டன. </p><p>

மேலும், கொரலவெல்ல பகுதியைச் சேர்ந்த ஒருவரிடம் இருந்து ரூ. 100 கோடிக்கு வாடகைக்கு எடுக்கப்பட்ட ஒரு முச்சக்கர வண்டியில் போலி எண் தகடு பொருத்தப்பட்டிருந்ததும் விசாரணையின் போது தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7379fa03-46ba-41f0-8d4c-bec564facc70/26-6aaaeaa34afc9.webp' /></p><p> </p><p>

50,000 ரூபாய் மதிப்புள்ள முச்சக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், அந்த வாகனத்தை ஓட்டிச் சென்ற தெலவாலா பகுதியைச் சேர்ந்த நபரும் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
குற்றச் சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட முச்சக்கர வாகனத்தைக் கண்டுபிடிப்பதற்கும், இச்சம்பவத்தில் தொடர்புடையதாகக் கூறப்படும் மற்ற இரண்டு சந்தேக நபர்களைக் கைது செய்வதற்கும் பொலிஸார் தற்போது மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். </p><p>

இந்த முழுமையான விசாரணை நடவடிக்கையையும், மவுண்ட் லவினியா பிரதேச குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் பொறுப்பதிகாரியான தலைமை ஆய்வாளர் நிலந்த கமகே மற்றும் அவரது குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-16T19:15:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[சூடானில் தங்கச் சுரங்கம் விபத்துக்குள்ளானதில் 60 பேர் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/60-killed-in-gold-mine-accident-in-sudan-1789585881"></link>
            <id>https://canadamirror.com/article/60-killed-in-gold-mine-accident-in-sudan-1789585881</id>
            <summary type="text">ஆபிரிக்க நாடான சூடானில் தங்கச் சுரங்கம் இடிந்து விழுந்ததில் 60 சுரங்கத் தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.



மேற்கு கோர்டோபன்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஆபிரிக்க நாடான சூடானில் தங்கச் சுரங்கம் இடிந்து விழுந்ததில் 60 சுரங்கத் தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>


மேற்கு கோர்டோபன் மாகாணத்தில் எல்-நஹூத் நகருக்கு அருகில் அமைந்துள்ள அல்-சாரா தங்கச் சுரங்கமே நேற்று திடீரென இடிந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் 60 பேர் உயிரிழந்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/87fa0b04-6752-49cb-9783-6041986bf874/26-6aaae9dab7f0f.webp' /></p><p>


விபத்தைத் தொடர்ந்து சக தொழிலாளர்கள் தங்களிடமிருந்த கருவிகளைப் பயன்படுத்தி, இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் இரவு முழுவதும் ஈடுபட்டுள்ளனர்.</p><p> எனினும், மேலும் பலர் காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.



பாறைகள் மற்றும் மண்ணை அகற்றுவதற்கு கனரக இயந்திரங்கள் தேவைப்படுவதாக அங்கிருந்து தப்பிய தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர். </p><p>இதனால் மீட்புப் பணிகள் சிரமமடைந்துள்ளதாகக் கூறப்படுகின்றது.



சுரங்கங்கள் மிகவும் நெருக்கமாக அமைக்கப்பட்டிருப்பதே இதுபோன்ற சுரங்க விபத்துகளுக்கு முக்கிய காரணமாக இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>மேலும், 2023ஆம் ஆண்டு முதல் சூடானில் நீடித்து வரும் உள்நாட்டுப் போர் மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக, வாழ்வாதாரத்துக்காக பலர் சுரங்கத் தொழிலில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகின்றது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-16T19:11:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[உங்கள் வேலைக்கு ஆபத்தா? ; AI பற்றி Sam Altman சொன்ன அந்த அதிர்ச்சி உண்மை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/is-your-job-at-risk-sam-altman-revealed-about-ai-1789585537"></link>
            <id>https://canadamirror.com/article/is-your-job-at-risk-sam-altman-revealed-about-ai-1789585537</id>
            <summary type="text">செயற்கை நுண்ணறிவான AI-யின் எதிர்கால வளர்ச்சி மற்றும் அது மனிதர்களின் பணிபுரியும் முறையில் ஏற்படுத்தவுள்ள மாற்றங்கள் குறித்து OpenAI நிறுவனத்தின் தலைமை...</summary>
            <content type="html"><![CDATA[<p>செயற்கை நுண்ணறிவான AI-யின் எதிர்கால வளர்ச்சி மற்றும் அது மனிதர்களின் பணிபுரியும் முறையில் ஏற்படுத்தவுள்ள மாற்றங்கள் குறித்து OpenAI நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சாம் ஆல்ட்மேன் (Sam Altman) முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.</p><p>அமெரிக்காவில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இந்தக் கருத்துகளைப் பகிர்ந்துள்ளார்.

கடந்த ஓராண்டில் AI மற்றும் தொழில்நுட்பத் துறையில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக சாம் ஆல்ட்மேன் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6e1875e0-09f9-4c57-9b1f-5c3edaa9a8d9/26-6aaae88321b9e.webp' /></p><p>

மனிதர்கள் கணினிகளுடன் நேரடியாக உரையாடும் நிலை தற்போது உருவாகியுள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், இது ஒரு திரைப்படத்திற்குள் இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்துவதாகவும், அறிவியல் புனைகதை நிஜமாக மாறியதைப் போன்ற தோற்றத்தைத் தருவதாகவும் தெரிவித்துள்ளார்.</p><p>

மேலும், சாதாரண உரையாடலுக்கு அப்பாற்பட்டு, கணினிகளைப் பயன்படுத்தும் விதத்தையும், மனிதர்கள் பணிபுரியும் முறையையும் முற்றிலும் மாற்றியமைக்கக்கூடிய “மூன்றாம் கட்டத்திற்குள்” தற்போது நுழைந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>

இணையம் ஆரம்பகாலத்தில் அறிமுகமானபோது மக்கள் அதனை எவ்வாறு படிப்படியாக ஏற்றுக்கொண்டார்களோ, அதேபோன்று தற்போதைய AI வளர்ச்சியையும் மக்கள் இயல்பாக ஏற்றுக்கொண்டு வருவதாக சாம் ஆல்ட்மேன் தெரிவித்துள்ளார்.
</p><p>
மனிதர்களின் பணிபுரியும் பழக்கவழக்கங்களில் இயல்பான மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு காலம் தேவைப்படுவதால், இந்த புதிய தொழில்நுட்பத்துடன் பழகுவதற்கும் மாற்றங்களை ஏற்றுக்கொள்வதற்கும் சிறிது காலம் எடுக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.
</p><p>
எனினும், இந்த ஆண்டின் இறுதிக்குள் பணிபுரியும் முறையில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்படக்கூடும் என்றும், மனிதர்கள் வேலை செய்வதற்கு முற்றிலும் புதியதொரு முறை உருவாகும் சாத்தியம் உள்ளதாகவும் சாம் ஆல்ட்மேன் தெரிவித்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-09-16T19:05:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[உக்ரைனில் சாலை விபத்தில் உயிரிழந்த பிரித்தானிய வீரர்: இறுதியில் உறுதி செய்யப்பட்ட அடையாளம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/british-soldier-who-died-in-ukraine-named-1789584889"></link>
            <id>https://news.lankasri.com/article/british-soldier-who-died-in-ukraine-named-1789584889</id>
            <summary type="text">British Soldier Who Died in Accident in Ukraine Named: உக்ரைனில் சாலை விபத்தில் உயிரிழந்த பிரித்தானிய இராணுவ வீரரின் பெயர் அடையாளம் காணப்பட்டுள்ளது. ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>British Soldier Who Died in Accident in Ukraine Named: உக்ரைனில் சாலை விபத்தில் உயிரிழந்த பிரித்தானிய இராணுவ வீரரின் பெயர் அடையாளம் காணப்பட்டுள்ளது.</p><h2> சாலை விபத்தில் உயிரிழந்த பிரித்தானிய வீரர்</h2><p>கடந்த வாரம் உக்ரைனில் பிரித்தானிய ராணுவ வீரர் ஒருவர் மோசமான சாலை விபத்தில் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டார்.</p><p> தற்போது, உயிரிழந்த பிரித்தானிய வீரர் மேஜர் பால் வில்க்ஸ்(Major Paul Wilks) என அதிகாரப்பூர்வமாக பாதுகாப்பு அமைச்சகம் அடையாளம் கண்டுள்ளது.</p><p> 40 வயதுடைய மேஜர் பால் வில்க்ஸ் சனிக்கிழமை அன்று போர் முனையில் இருந்து வெகு தொலைவில் உள்ள சாலையில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்து இருப்பது அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8d8eec61-2790-4709-a81f-7d92e13b9e3e/26-6aaae5fa9a5ea.webp' /></p><p> சாண்ட் ஹர்ஸ்ட் ராயல் ராணுவ அகாடமியில் பயிற்சி பெற்ற மேஜர் பால் வில்க்ஸ், உளவு பிரிவில் தனது பணியை கடந்த 2012ம் ஆண்டு தொடங்கினார்.</p><p> ஆப்கானிஸ்தான் போன்ற பல நாடுகளில் பால் வில்க்ஸ் தனது பணியை சிறப்பாக நிறைவு செய்துள்ளார்.</p><p> மேஜர் பால் வில்க்ஸ் சேவையை பாராட்டி இரண்டு பதக்கங்களையும் பெற்று பெருமை சேர்த்துள்ளார்.</p><p><br></p>]]></content>
            <updated>2026-09-16T18:55:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பு - மட்டக்குளிய பகுதியில் இன்று இடம்பெற்ற கோர விபத்தின் சிசிரிவி காட்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/cctv-footage-of-the-mattakkuliya-accident-1789584590"></link>
            <id>https://ibctamil.com/article/cctv-footage-of-the-mattakkuliya-accident-1789584590</id>
            <summary type="text">கொழும்பு - மட்டக்குளிய பகுதியில் இன்று இடம்பெற்ற கோர விபத்தின் சிசிரிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

குறித்த பகுதியில் பயணித்த மற்றுமொரு காரில் பொருத்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு - மட்டக்குளிய பகுதியில் இன்று இடம்பெற்ற கோர விபத்தின் சிசிரிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
</p><p>
குறித்த பகுதியில் பயணித்த மற்றுமொரு காரில் பொருத்தப்பட்டிருந்த கமராவிலேயே விபத்துசம்பவம் பதிவாகியுள்ளது.</p><p>

இதன்போது அதிவேகமாக வரும் காரானது முதலில் ஒரு மோட்டார் சைக்கில் மற்றும் முச்சக்கரவண்டியுடன் மோதுண்டு வருவதோடு, அந்த திசையில் திரும்பிய மற்றுமொரு முச்சக்கர வண்டியுடன் மோதவது காணொளியில் பதிவாகியுள்ளது.</p><p><iframe src="https://www.facebook.com/plugins/video.php?height=316&amp;href=https%3A%2F%2Fwww.facebook.com%2Freel%2F2119787948662021%2F&amp;show_text=false&amp;width=560&amp;t=0" width="560" height="316" style="border-width: medium; border-style: none; overflow: hidden;" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share"></iframe></p><p></p><h2>காவல்துறையின் நடவடிக்கை</h2><p>
</p><p>
இந்நிலையில் விபத்தை பார்வையிட வந்தவர்களை விலக்கி விட்டு சம்பவ இடத்தை காவல்துறையினர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f3ea4751-070a-4ace-b27c-98a22e724ad3/26-6aaae4d08bc3d.webp' /></p><p>
</p><p>
காரணம் கோபத்தில் சிலர் விபத்து ஏற்பட காரணமான வாகனத்தை தாக்கி எரிப்பதற்க்கு முயற்சித்ததாக கூறப்படுகிறது.</p><p>

இதனை தடுக்கும் முகமாகவே காவவல்துறை பொது மக்கள் அனைவரையும் அந்த இடத்தில் இருந்து அகற்றியதாக தெரிவிக்கப்படுகிறது.&nbsp;&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-16T18:49:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[இன்று நள்ளிரவு முதல் தொடருந்து ஊழியர்கள் 48 மணி நேர அடையாள பணிப்புறக்கணிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/railway-employees-to-stage-48-hour-symbolic-strike-1789584524"></link>
            <id>https://jvpnews.com/article/railway-employees-to-stage-48-hour-symbolic-strike-1789584524</id>
            <summary type="text">பல கோரிக்கைகளை முன்வைத்து இன்று (16) நள்ளிரவு முதல் 48 மணி நேர அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக தொடருந்து தொழிற்சங்கங்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>பல கோரிக்கைகளை முன்வைத்து இன்று (16) நள்ளிரவு முதல் 48 மணி நேர அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக தொடருந்து தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.</p><p>
</p><p></p><p>பணிப்புறக்கணிப்பு போராட்டம் அதிகாரப்பூர்வமாக ஆரம்பமாவதற்கு முன்னரே, காங்கேசன்துறை மற்றும் திருகோணமலைக்கான இரவுநேர அஞ்சல் தொடருந்து (Night Mail) மற்றும் மாலை நேர விரைவுத் தொடருந்து சேவைகள் உள்ளிட்ட பல தொலைதூரச் சேவைகளை தொடருந்து திணைக்களம் இரத்து செய்துள்ளதாக இலங்கை தொடருந்து நிலைய அதிபர்கள் சங்கத்தின் செயலாளர் சுமேத சோமரத்ன தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2e1a0d37-25a6-452a-a064-83e393481bb6/26-6aaae48e20d43.webp' /></p><p>மேலும், சில தொடருந்து சேவைகள் இலக்கை அடைவதற்கு முன்னரே நிறுத்தப்பட்டதால் பயணிகள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

பணிப்புறக்கணிப்பு போராட்டம் குறித்து 14 நாட்களுக்கு முன்னரே அறிவித்தல் வழங்கப்பட்ட போதிலும், சம்பந்தப்பட்ட அமைச்சரோ அல்லது அதிகாரிகளோ இதுவரை பேச்சுவார்த்த நடத்தி தீர்வு காணத் தவறிவிட்டதாக தொடருந்து இயந்திர இயக்குநர்கள் சங்கத்தின் செயலாளர் எஸ்.ஆர்.சி.எம். சேனாநாயக்க குற்றம் சுமத்தியுள்ளார்.
</p><p>
அத்துடன், தொடருந்து பொது முகாமையாளர் தலைமைத்துவம் குறித்து கேள்வி எழுப்பிய அவர், திணைக்களத்தில் நாளாந்தம் இயங்கும் தொடருந்து சேவைகளின் எண்ணிக்கை 450 இலிருந்து 184 ஆகக் குறைந்துள்ளதாகத் தெரிவித்தார்.</p><p>

பருவகால பயணச்சீட்டு (Season tickets) விநியோகத்தில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் நிதி முறைகேடுகள் குறித்தும் அவர் சுட்டிக்காட்டினார்.</p><p>

தங்களது கோரிக்கைகளுக்கு உடனடியாகத் தீர்வு காணப்படாவிட்டால், எதிர்வரும் 48 மணித்தியாலங்களில் பயணிகள் கடும் சிரமங்களை எதிர்கொள்ள நேரிடும் என தொழிற்சங்கங்கள் எச்சரித்துள்ளன.</p><p></p>]]></content>
            <updated>2026-09-16T18:48:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[தென் சூடான் தேர்தலில் புதிய மாற்றம்: தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் பதவியிலிருந்து நீக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/new-change-in-south-sudan-election-1789581895"></link>
            <id>https://tamilwin.com/article/new-change-in-south-sudan-election-1789581895</id>
            <summary type="text">தென் சூடானில் எதிர்வரும் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க
தேர்தலுக்கு இன்னும் மூன்று மாதங்களே எஞ்சியுள்ள நிலையில், அந்நாட்டின்
தேர...</summary>
            <content type="html"><![CDATA[<p>தென் சூடானில் எதிர்வரும் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க
தேர்தலுக்கு இன்னும் மூன்று மாதங்களே எஞ்சியுள்ள நிலையில், அந்நாட்டின்
தேர்தல் ஆணைக்குழுத் தலைவர் மாற்றப்பட்டுள்ளார்.
</p><p>
அந்த நாட்டின் ஜனாதிபதி சல்வா கீர், தேர்தல் ஆணைக்குழுவின் தலைவராக இருந்த
அபேத்னெகோ அகோக் கச்சுவோலை உடனடியாகப் பதவியிலிருந்து நீக்கி, அவருக்குப்
பதிலாக ஆணைக்குழுவின் பொதுச்செயலாளராகப் பணியாற்றிய கேப்ரியல் போல் டெங்கை
புதிய தலைவராக நியமித்துள்ளார்.
</p><h2>
தலைவர் பதவியிலிருந்து நீக்கம்</h2><p>

இதற்கான அறிவிப்பு அரசாங்கத் தொலைக்காட்சி ஊடாக வெளியிடப்பட்ட போதிலும்,
இந்தத் திடீர் மாற்றத்திற்கான காரணங்கள் எதுவும் அதிகாரப்பூர்வமாக
அறிவிக்கப்படவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c8cf44c0-709c-4ede-bb1f-c663b2490d83/26-6aaae42f973c9.webp' /></p><p>
</p><p>
2011 ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்ற பின்னர் தென் சூடானில் நடத்தப்படும் முதலாவது
பொதுத் தேர்தல் இதுவாகும்.

டிசம்பர் 22 ஆம் திகதி ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்கள் நடைபெறவுள்ள
நிலையில், கடைசி நேரத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த நியமனம் வாக்காளர்களின்
நம்பிக்கையைக் குறைக்கக்கூடும் எனச் சிவில் சமூக அமைப்புகள் அச்சம்
வெளியிட்டுள்ளன.
</p><p>
அத்துடன், நியாயமான மற்றும் அமைதியான முறையிலான தேர்தலை நடத்துவதற்கான போதிய
சூழல் இன்னும் அங்கு உருவாகவில்லை என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள்
ஆணைக்குழுவும் சுட்டிக்காட்டியுள்ளது.&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-16T18:47:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பில் சற்றுமுன் இடம்பெற்ற பாரிய விபத்து ; சம்பவ இடத்திலேயே இருவர் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/accident-in-colombo-a-short-while-ago-two-dead-1789575355"></link>
            <id>https://jvpnews.com/article/accident-in-colombo-a-short-while-ago-two-dead-1789575355</id>
            <summary type="text">கொழும்பு – மட்டக்குளி பகுதியில் இன்று (16) இரவு இடம்பெற்ற பாரிய வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.முதலாம் இணைப்பு&amp;nbsp;விபத்து இடம்பெற்ற இடத்தில்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு – மட்டக்குளி பகுதியில் இன்று (16) இரவு இடம்பெற்ற பாரிய வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.</p><h4>முதலாம் இணைப்பு&nbsp;</h4><p>விபத்து இடம்பெற்ற இடத்தில் திரண்ட பொதுமக்களை பொலிஸார் அங்கிருந்து அகற்றி, சம்பவ இடத்தை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ee0fde52-b93d-4e36-89b9-ef6d5e1efbe0/26-6aaae1edc672f.webp' /></p><p>விபத்தை பார்வையிடுவதற்காக பெருமளவான மக்கள் சம்பவ இடத்தில் திரண்டிருந்த நிலையில், அவர்களில் சிலர் விபத்துக்கு காரணமானதாகக் கூறப்படும் வாகனத்தை தாக்கி தீ வைக்க முயன்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><p>
இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டதைத் தொடர்ந்து, நிலைமையை கட்டுக்குள் கொண்டுவரும் நோக்கில் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.</p><p>
</p><p></p><h3>மேலதிக விசாரணை</h3><p>கார், 3 முச்சக்கரவண்டிகள் மற்றும் 4 மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/71f794ad-580e-48e6-a53d-6ec5a9b208ac/26-6aaacad1058d0.webp' /></p><p>

விபத்தில் படுகாயமடைந்த இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
இதன்போது காயமடைந்த 6 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர்களில் இருவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் உறுதிப்படுத்தியுள்ளன.&nbsp;</p><p>விபத்தை ஏற்படுத்திய காரின் ஓட்டுநர் தற்போது காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/71f794ad-580e-48e6-a53d-6ec5a9b208ac/26-6aaacad1058d0.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/025d002f-7d4c-4453-a06b-62a0368805c6/26-6aaacad1ef725.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f01202cc-e0fb-49a1-a3d8-c6d5553e236e/26-6aaacad2aad4d.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f876a3ce-3ac3-4ea7-9c6f-20ee660ee26a/26-6aaacad360cbe.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a09ba8a2-42c0-4189-a1c0-fdc6d7abedde/26-6aaae1ed1acaf.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/382f8518-7d74-4167-8aef-58b4c24503f4/26-6aaae1ec619af.webp' /></p>]]></content>
            <updated>2026-09-16T18:37:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானியாவில் காணாமல் போன 3 வயது சிறுவன்: சோகத்தில் முடிந்த தேடுதல் வேட்டை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/missing-toddler-noah-woods-body-recovered-1789583556"></link>
            <id>https://news.lankasri.com/article/missing-toddler-noah-woods-body-recovered-1789583556</id>
            <summary type="text">Missing Toddler Noah Woods Body Recovered: பிரித்தானியாவில் காணாமல் போன 3 வயது சிறுவனின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. காணாமல் போன சிறுவன்பிரித்தானி...</summary>
            <content type="html"><![CDATA[<p>Missing Toddler Noah Woods Body Recovered: பிரித்தானியாவில் காணாமல் போன 3 வயது சிறுவனின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.</p><h2> காணாமல் போன சிறுவன்</h2><p>பிரித்தானியாவின் சஃபோல்க்(Suffolk) பகுதியில் 3 வயது சிறுவன் நோவா வுட்ஸ்(Noah Woods) காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டார்.</p><p> அவர் பிராந்தம்(Brantham) கிராமத்தில் உள்ள விளையாட்டு மையத்தில் இருந்து மதியம் 3 மணிக்கு ஓடிச் சென்றுள்ளார். அவர் கடைசியாக சந்து ஒன்றின் வழியாக வீட்டு வசதிப் பகுதி அருகே சுற்றித் திரிந்தது பார்க்கப்பட்டுள்ளது.</p><p> சிறுவன் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டதை அடுத்து நூற்றுக்கணக்கான உள்ளூர் தன்னார்வலர்கள், காவல்துறையினர், கடற்படையினர் இணைந்து சிறுவனை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கினர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/018dc496-ad7f-45c4-83b6-584610688277/26-6aaae0c6956c8.webp' /></p><p></p><p> இந்த பணியில் மீட்பு ஹெலிகாப்டர்களும் பயன்படுத்தப்பட்டது. இருப்பினும் பிராந்தம் கிராமத்தில் உள்ள டிகாய் குளத்தில்(Decoy Pond) சிறுவன் நோவா வுட்ஸ் சடலமாக கண்டெடுக்கப்பட்டு இருப்பதாக காவல்துறை கண்காணிப்பாளர் டாம் பியர்ஸ்(Tom Pearse) தகவல் தெரிவித்துள்ளார்.</p><p> அதிகாரப்பூர்வ அடையாளம் காணும் பரிசோதனை நடைபெறவில்லை. இருப்பினும் சிறுவனின் குடும்பத்தினருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> ஆரம்பக்கட்ட விசாரணையில் சந்தேகத்திற்குரிய சூழல் எதுவும் இல்லை என்று காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.</p><p> அதே நேரத்தில் இந்த சம்பவம் தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-09-16T18:32:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[போர்க் குற்ற வழக்கில் கொசோவோவின் முன்னாள் ஜனாதிபதிக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/former-president-kosovo-sentenced-25-years-1789579855"></link>
            <id>https://tamilwin.com/article/former-president-kosovo-sentenced-25-years-1789579855</id>
            <summary type="text">கொசோவோவின் முன்னாள் ஜனாதிபதி ஹாஷிம் தாசிக்கு கொலை, சித்திரவதை மற்றும்
சட்டவிரோத தடுப்புக் காவல் உள்ளிட்ட போர்க் குற்றச்சாட்டுக்கள்
நிரூபிக்கப்பட்டதை...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொசோவோவின் முன்னாள் ஜனாதிபதி ஹாஷிம் தாசிக்கு கொலை, சித்திரவதை மற்றும்
சட்டவிரோத தடுப்புக் காவல் உள்ளிட்ட போர்க் குற்றச்சாட்டுக்கள்
நிரூபிக்கப்பட்டதையடுத்து, அவருக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து
நெதர்லாந்தின் தி ஹேக் போர்க் குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.</p><p>

1990களின் பிற்பகுதியில் செர்பியாவிடமிருந்து கொசோவோ பிரிவதற்காக இடம்பெற்ற
மோதல்களின் போது, கொசோவோ விடுதலை இராணுவத்தின் (KLA) உயர் தளபதியாகச்
செயற்பட்ட போதே இவர் இக்குற்றங்களைப் புரிந்ததாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.
</p><h2>தீர்ப்பிற்கு எதிராக மேல்முறையீடு செய்ய</h2><p>
அரசியல் எதிராளிகள் மற்றும் செர்பிய பாதுகாப்புப் படைகளுக்கு ஆதரவாகச்
செயற்பட்டதாகக் சந்தேகிக்கப்பட்ட 96 பேரை கொலை செய்தமை, 385 பேரை
சட்டவிரோதமாகத் தடுப்புக் காவலில் வைத்திருந்தமை மற்றும் நூற்றுக்கணக்கானோரை
சித்திரவதைக்கு உட்படுத்தியமை போன்ற குற்றச்சாட்டுகள் இவர் மீது
சுமத்தப்பட்டிருந்தன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/296d3dce-25eb-4051-ae40-17560d06c2cb/26-6aaadd23de086.webp' /></p><p>நீதிமன்றத் தீர்ப்பின் போது குற்றச்சாட்டுகளை மறுத்த 58 வயதான ஹாஷிம் தாசி,
இத்தீர்ப்பிற்கு எதிராக மேல்முறையீடு செய்ய முடியும் எனக்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இத்தீர்ப்பை அடுத்து கொசோவோ தலைநகர் பிரிஸ்டினாவில் கூடியிருந்த அவரது
ஆதரவாளர்கள் கவலையையும் எதிர்ப்பையும் வெளியிட்டதோடு, அமைதியின்மை ஏற்படுவதைத்
தடுக்கும் பொருட்டு பாதுகாப்புப் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-16T18:22:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மட்டக்குளியில் கோர விபத்து: இருவர் பலி - வெளியான சிசிடிவி காட்சிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/accident-in-colombo-1789574054"></link>
            <id>https://tamilwin.com/article/accident-in-colombo-1789574054</id>
            <summary type="text">புதிய இணைப்புகொழும்பு மக்களைத் துக்கத்தில் ஆழ்த்திய மட்டக்குளியில் இடம்பெற்ற விபத்தில், கார் எவ்வாறு மற்ற வாகனங்கள் மீது மோதியது என்பதைக் காட்டும் சிச...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>கொழும்பு மக்களைத் துக்கத்தில் ஆழ்த்திய மட்டக்குளியில் இடம்பெற்ற விபத்தில், கார் எவ்வாறு மற்ற வாகனங்கள் மீது மோதியது என்பதைக் காட்டும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.</p><h2>மூன்றாம் இணைப்பு</h2><p>விபத்தை பார்வையிட வந்தவர்களை விலக்கி விட்டு சம்பவ இடத்தை பொலிஸாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.</p><p><iframe src="https://www.facebook.com/plugins/video.php?height=316&href=https%3A%2F%2Fwww.facebook.com%2Freel%2F2119787948662021%2F&show_text=true&width=560&t=0" width="560" height="431" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share" allowFullScreen="true"></iframe></p><p> 

ஏனெனின், கோபத்தில் சிலர் விபத்து ஏற்படுத்திய வாகனத்தை உடைத்து எரிப்பதற்கு முயற்சித்துள்ளனர்.</p><p> 

இதனை தடுக்கும் வகையில் பொலிஸார், பொது மக்கள் அனைவரையும் அந்த இடத்தில் இருந்து அகற்றியுள்ளனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f9a5590b-37b9-4b13-bf13-aaef0a3ded18/26-6aaadb33ab910.webp' /></p><h2>இரண்டாம் இணைப்பு</h2><p>விபத்தை ஏற்படுத்திய காரின் சாரதி பொலிஸாரிடம் சரணடைந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
</p><p>
இதேவேளை, இருவர் விபத்தில் உயிரிழந்துள்ளதாக கூறப்பட்ட நிலையில், சம்பவ இடத்தில் இருப்பவர்கள் தெரிவித்த தகவல்களின் அடிப்படையில், பலி எண்ணிக்கை அதிகரித்திருக்கலாம் என்றும் கூறப்படுகின்றது.</p><p><iframe src="https://www.facebook.com/plugins/video.php?height=316&href=https%3A%2F%2Fwww.facebook.com%2Freel%2F2119787948662021%2F&show_text=true&width=560&t=0" width="560" height="431" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share" allowFullScreen="true"></iframe></p><h2>முதலாம் இணைப்பு</h2><p>கொழும்பு - மட்டக்குளி பகுதியில் ஏற்பட்ட கோர விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாகவும், காயமடைந்தவர்கள் வைத்தியசாலைக்கு கொண்டுச் செல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/eWo_AvzmHTg" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p>

இந்த சம்பவம் இன்று (16.09.2026) பகுதியில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>

இருவர் உயிரிழப்பு</h2><p>
சற்றுமுன்னர், மட்டக்குளி பகுதியில் பாரிய விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9d189f63-f5f6-4da3-81c0-322c2c558426/26-6aaabcb30e1cb.webp' /></p><p>
</p><p>
இதில், இருவர் உயிரிழந்துள்ளதுடன், படுகாயமடைந்தவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு கொண்டுச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
அத்துடன், 2 மோட்டார் சைக்கிள்கள், 2 முச்சக்கர வண்டிகள் மற்றும் கார் ஆகிய வாகனங்களே இவ்வாறு ஒன்றுக்கொன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.</p><p>இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p><iframe src="https://www.facebook.com/plugins/video.php?height=314&href=https%3A%2F%2Fwww.facebook.com%2FLankasriTv%2Fvideos%2F1071684679163794%2F&show_text=true&width=560&t=0" width="560" height="429" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share" allowFullScreen="true"></iframe></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f6d02315-7173-4749-a061-463da4fdffc2/26-6aaadb3549c1a.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7efe0220-6f15-4afe-9166-36cc802fe4d1/26-6aaadb347dece.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/11eff0c8-b449-4104-ac9f-00c2bdb953cd/26-6aaabcb41818c.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/eec64609-4848-44b4-a577-d9f5277a7cd8/26-6aaabcb4df2d5.webp' /></p><p></p><p></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-16T18:12:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[மலாவியில் கடத்தப்பட்ட பிரித்தானிய பெண்: பரிசுத் தொகையை அறிவித்த பொலிஸார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/british-auditor-abducted-malawi-police-offer-cash-1789577772"></link>
            <id>https://news.lankasri.com/article/british-auditor-abducted-malawi-police-offer-cash-1789577772</id>
            <summary type="text">British Auditor Abducted Malawi Police offer Cash Reward: மலாவி நாட்டில் பிரித்தானிய பெண் ஒருவர் பகல் வேளையில் கடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...</summary>
            <content type="html"><![CDATA[<p>British Auditor Abducted Malawi Police offer Cash Reward: மலாவி நாட்டில் பிரித்தானிய பெண் ஒருவர் பகல் வேளையில் கடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><h2> கடத்தப்பட்ட பிரித்தானிய தணிக்கையாளர்</h2><p>மலாவி(Malawi) நாட்டின் பிளான்டைர்(Blantyre) நகரில் பட்டப்பகலில் 47 வயது பிரித்தானிய பெண் கடத்தப்பட்டதை அடுத்து தீவிர தேடுதல் வேட்டையை அந்நாட்டு காவல்துறையினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.</p><p> &nbsp;ஆடிட் கன்சல்ட் லிமிடெட் நிறுவனத்தில் தணிக்கையாளராக பணிபுரியும் நுஸ்ரத் உஸ்மான்(Nusrat Osman) என்ற பிரித்தானியா பெண்ணே இந்த கடத்தல் சம்பவத்தில் பாதிக்கப்பட்டுள்ளார்.</p><p> மவுண்ட் ப்ளீசண்ட் பகுதியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் இருந்து&nbsp; நுஸ்ரத் உஸ்மான் வெள்ளிக்கிழமை 12.30 மணிக்கு அடையாளம் தெரியாத 4 சந்தேக நபர்களால் கடத்தப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e75c9bc4-bd23-44a0-8175-b9db48a75267/26-6aaaca2e08460.webp' /></p><p> கடத்தல்காரர்கள் சாம்பல் நிற நிசான் டூலிஸ் காரை பயன்படுத்தி தப்பிச் சென்று இருக்கலாம் என்று பொலிஸார் நம்புகின்றனர்.</p><h2> பரிசுத் தொகையை அறிவித்த பொலிஸார்</h2><p>நுஸ்ரத் உஸ்மானை விரைவாக மீட்டெடுக்க எண்ணி, கடத்தல் மற்றும் நுஸ்ரத் உஸ்மான் குறித்த துப்பு கொடுப்பவர்களுக்கு 30 மில்லியன் மலாவி கவாச்ச(சுமார் £12,800) பரிசு தொகையாக வழங்கப்படும் என்று மலாவி காவல்துறை அறிவித்துள்ளது.</p><p> காவல்துறையினர் உள்ளூர் பொதுமக்களுக்கு தொடர்ச்சியாக குறுஞ்செய்திகளை அனுப்பி தீவிர தேடுதல் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.</p><p>இந்த சம்பவம் தொடர்பாக பொதுமக்கள் அமைதி காக்க வேண்டும் என்றும், தற்போதைய மீட்பு நடவடிக்கையை பாதிக்கும் வகையில் சரிபார்க்கப் படாத எந்தவொரு வதந்திகளையும் பரப்ப வேண்டாம் என்று காவல்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.</p><p></p><p> உஸ்மான் கடத்தப்பட்டதை உறுதிப்படுத்திய அவரது குடும்பம், உஸ்மான் அமைதியான முறையில் தணிக்கையாளராக பணியாற்றி வந்ததாகவும், அவருக்கு யாருடனும் எந்தவொரு தனிப்பட்ட விரோதங்களும் இல்லை என்று அவரது கணவர் தெரிவித்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-09-16T18:08:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நள்ளிரவு 12.50க்கு ஷிரந்தியை கதிகலங்க வைத்த செய்தி! திணறும் நாமல் மற்றும் தாய்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/shiranthi-rajapaksa-visited-singapore-1789581399"></link>
            <id>https://tamilwin.com/article/shiranthi-rajapaksa-visited-singapore-1789581399</id>
            <summary type="text">இலஞ்சம், ஊழல் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் தற்போது ராஜபக்சர்கள் மீது தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

இதன் அடிப்படையில், கைது செய்யப்பட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலஞ்சம், ஊழல் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் தற்போது ராஜபக்சர்கள் மீது தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.</p><p>

இதன் அடிப்படையில், கைது செய்யப்பட்ட நாமல் ராஜபக்ச விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இருப்பினும், இவர் எத்தனை முறை நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டாலும், பிணை கிடைக்காத ஒரு நிலையை குற்றப்புலனாய்வுத் துறை அதிகாரிகள் உருவாக்கியிருக்கின்றனர்.
</p><p>
நாமலைத் தொடர்ந்து அவரது தாயார் ஷிரந்தி ராஜபக்ச கைது செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட வேளையில், அவர் சிங்கப்பூருக்கு மருத்துவ சிகிச்சைக்காக சென்றுள்ளார்.
</p><p>
இவ்வாறு அவசர அவசரமாக ஷிரந்தி விமான நிலையத்தில் புறப்பட்டுக் கொண்டிருந்தபோது, FCID அதிகாரிகளால் 24ஆம் திகதி விசாரணைக்கு வருமாறு அழைப்பு விடுத்து கடிதமொன்று வழங்கப்பட்டுள்ளது.</p><p>

இந்த சம்பவம் ராஜபக்சர்கள் மத்தியிலும், அவர்களின் ஆதரவாளர்கள் மத்தியிலும் வியப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், இனி வரும் காலங்களில் ராஜபக்சர்கள் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்குவார்களா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
</p><p>
இந்த விடயம் தொடர்பில் இன்னும் தீவிரமாக ஆராய்கின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/Ki-Hg_wWbdk" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-16T17:59:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[மக்கா மீது தாக்குதலா..! சவூதி அரேபியாவின் குற்றச்சாட்டை மறுக்கும் ஹவுதி அமைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/qatar-condemns-shameful-houthi-attack-1789579110"></link>
            <id>https://tamilwin.com/article/qatar-condemns-shameful-houthi-attack-1789579110</id>
            <summary type="text">இஸ்லாமியர்களின் புனிதத் தலமான மக்காவை இலக்கு வைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய ட்ரோன் தாக்குதல் முயற்சிக்குக் கட்டார் அரசு தனது கடுமையான கண்டனத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>இஸ்லாமியர்களின் புனிதத் தலமான மக்காவை இலக்கு வைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய ட்ரோன் தாக்குதல் முயற்சிக்குக் கட்டார் அரசு தனது கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது.</p><p> 
புனிதத் தலத்தின் மீதான இந்தத் தாக்குதல் முயற்சியை ஒரு வெட்கக்கேடான ஆக்கிரமிப்பு நடவடிக்கை என கட்டார் வெளியுறவு அமைச்சு கடுமையாகச் சாடியுள்ளது.
</p><p> இது குறித்துக் கட்டார் அமைச்சு வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில் இந்த குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/acc48036-b422-4e8e-b337-d817b2728f5f/26-6aaacf67837ac.webp' /></p><p>
</p><p>புனிதத் தலங்களின் பாதுகாப்பு, புனிதத்தன்மை மற்றும் அங்கு வருகை தரும் யாத்ரீகர்களின் பாதுகாப்பு ஆகியவை ஒருபோதும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்படவோ அல்லது பிராந்திய மோதல்களில் பயன்படுத்தப்படவோ கூடாது என கட்டார்ர் வலியுறுத்தியுள்ளது. </p><p>
மேலும், தனது நிலப்பரப்பு, புனிதத் தலங்கள் மற்றும் யாத்ரீகர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய சவூதி அரேபியா எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் கட்டார் அரசு முழு ஆதரவை அளிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>முன்னதாக, மக்காவை நோக்கி ஹவுதி அமைப்பால் ஏவப்பட்ட ட்ரோன் ஒன்றை வான்வெளியிலேயே வெற்றிகரமாக இடைமறித்து அழித்துவிட்டதாகச் சவூதி அரேபிய இராணுவம் அறிவித்திருந்தது.</p><p> 
எனினும், சவூதி அரேபியாவின் இந்த குற்றச்சாட்டை ஹவுதி அமைப்பு முற்றிலுமாக மறுத்துள்ளதுடன், புனிதத் தலத்தை இலக்கு வைத்துத் தாம் எந்தத் தாக்குதலும் நடத்தவில்லை எனவும், சவூதி சுமத்தும் குற்றச்சாட்டு ஒரு "அருவருப்பான பொய்" எனவும் விளக்கம் அளித்துள்ளது.&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-16T17:41:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[மக்கா புனிதத் தலத்தின் மீது ஹவுதிக்கள் ட்ரோன் தாக்குதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/houthis-launch-drone-attack-holy-site-of-mecca-1789579794"></link>
            <id>https://ibctamil.com/article/houthis-launch-drone-attack-holy-site-of-mecca-1789579794</id>
            <summary type="text">இஸ்லாமியர்களின் புனிதத் தலமான மக்காவை இலக்கு வைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய ட்ரோன் தாக்குதல் முயற்சிக்குக் கட்டார் அரசு தனது கடுமையான கண்டனத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>இஸ்லாமியர்களின் புனிதத் தலமான மக்காவை இலக்கு வைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய ட்ரோன் தாக்குதல் முயற்சிக்குக் கட்டார் அரசு தனது கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது.</p><p> 
புனிதத் தலத்தின் மீதான இந்தத் தாக்குதல் முயற்சியை ஒரு வெட்கக்கேடான ஆக்கிரமிப்பு நடவடிக்கை என கட்டார் வெளியுறவு அமைச்சு கடுமையாகச் சாடியுள்ளது.
</p><p> இது குறித்துக் கட்டார் அமைச்சு வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில் இந்த குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>யாத்ரீகர்களின் பாதுகாப்பு</h2><p>
</p><p>புனிதத் தலங்களின் பாதுகாப்பு, புனிதத்தன்மை மற்றும் அங்கு வருகை தரும் யாத்ரீகர்களின் பாதுகாப்பு ஆகியவை ஒருபோதும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்படவோ அல்லது பிராந்திய மோதல்களில் பயன்படுத்தப்படவோ கூடாது என கட்டார்ர் வலியுறுத்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/96377a06-35bb-4ca6-b58d-b20690c8b946/26-6aaad38545f44.webp' /></p><p> </p><p>
மேலும், தனது நிலப்பரப்பு, புனிதத் தலங்கள் மற்றும் யாத்ரீகர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய சவூதி அரேபியா எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் கட்டார் அரசு முழு ஆதரவை அளிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>முன்னதாக, மக்காவை நோக்கி ஹவுதி அமைப்பால் ஏவப்பட்ட ட்ரோன் ஒன்றை வான்வெளியிலேயே வெற்றிகரமாக இடைமறித்து அழித்துவிட்டதாகச் சவூதி அரேபிய ராணுவம் அறிவித்திருந்தது.</p><p> 
எனினும், சவூதி அரேபியாவின் இந்த குற்றச்சாட்டை ஹவுதி அமைப்பு முற்றிலுமாக மறுத்துள்ளதுடன், புனிதத் தலத்தை இலக்கு வைத்துத் தாம் எந்தத் தாக்குதலும் நடத்தவில்லை எனவும், சவூதி சுமத்தும் குற்றச்சாட்டு ஒரு "அருவருப்பான பொய்" எனவும் விளக்கம் அளித்துள்ளது.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள I<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">BC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-16T17:37:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மக்காவில் வான்வழித் தாக்குதல் - குடியிருப்பாளர்களுக்கு அவசர எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/airstrike-in-mecca-1789580111"></link>
            <id>https://tamilwin.com/article/airstrike-in-mecca-1789580111</id>
            <summary type="text">இஸ்லாமியப் புனித நகரமான மக்காவில் வான்வழித் தாக்குதல் இடம்பெறவுள்ளதாகத் தெரிவித்து, சவூதி அரேபியாவின் குடிமைப் பாதுகாப்பு அமைப்பு அவசரகால எச்சரிக்கை வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இஸ்லாமியப் புனித நகரமான மக்காவில் வான்வழித் தாக்குதல் இடம்பெறவுள்ளதாகத் தெரிவித்து, சவூதி அரேபியாவின் குடிமைப் பாதுகாப்பு அமைப்பு அவசரகால எச்சரிக்கை விடுத்துள்ளது.
</p><p>
இதுபோன்ற ஒரு சம்பவம் வரலாற்றில் முதல் தடவையாக இடம்பெறுகின்றது என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><p>

ஆபத்து நீங்கும் வரை, குடியிருப்பாளர்கள் பாதுகாப்பான வீடுகளின் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல வேண்டும் என்றும், கதவுகளிலிருந்து விலகி இருக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
</p><h2>
பொதுமக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை</h2><p>

ஜித்தா மற்றும் தாயிஃப் ஆளுநரகங்களுக்கும் இதேபோன்ற எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டன.

சில நிமிடங்களிலேயே இந்த எச்சரிக்கை விலக்கிக்கொள்ளப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/98bd2e2b-058f-4217-8ddb-9608b2e42e70/26-6aaad3c9a328f.webp' /></p><p> </p><p>ஆனால், ஈரான் ஆதரவு ஹூதி குழுவிடமிருந்து சவூதி அரேபியா ஒரு விரிவான பாதுகாப்புச் சவாலை எதிர்கொண்டுள்ள வேளையில் இது நிகழ்ந்துள்ளது.
</p><p>
அந்தக் குழு, சவூதி அரேபியா மீதான தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியதோடு, யேமனின் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த செங்கடல் கடற்கரையோரப் பகுதிகளைக் கைப்பற்றி வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-16T17:37:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[சூடானில் தங்கச் சுரங்கம் இடிந்து வீழ்ந்து விபத்து : 60இற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/gold-mine-collapse-in-sudan-over-60-dead-1789578191"></link>
            <id>https://tamilwin.com/article/gold-mine-collapse-in-sudan-over-60-dead-1789578191</id>
            <summary type="text">சூடானின் மேற்கு கொர்டோஃபான் மாநிலத்தில் அமைந்துள்ள தங்கம் தோண்டும் சுரங்கம்
ஒன்று இடிந்து விழுந்ததில் குறைந்தது 60 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>சூடானின் மேற்கு கொர்டோஃபான் மாநிலத்தில் அமைந்துள்ள தங்கம் தோண்டும் சுரங்கம்
ஒன்று இடிந்து விழுந்ததில் குறைந்தது 60 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
அல்-நுஹுத் பகுதிக்கு அருகில் அமைந்துள்ள அல்-ஸாரா தங்கச் சுரங்கத்தில் பல
அண்டைச் சுரங்கப் பாதைகள் அடுத்தடுத்து சரிந்து வீழ்ந்ததில், 70க்கும்
மேற்பட்ட சுரங்கத் தொழிலாளர்கள் உயிரிழந்திருக்கலாம் அல்லது காணாமல்
போயிருக்கலாம் எனக் மனித உரிமைகள் கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது.
</p><h2>முறையான பாதுகாப்பு நடைமுறைகள்&nbsp;</h2><p>
இடிபாடுகளுக்குள் சிலர் இன்னும் உயிருடன் சிக்கியிருக்கக்கூடும் என்றும்,
அவர்களை மீட்க அவசர உதவி தேவை என்றும் உள்ளூர் அமைப்புகள் கோரிக்கை
விடுத்துள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c2816f59-9ff9-46ee-9a52-efaa6d234d54/26-6aaad02e751fc.webp' /></p><p>இருப்பினும், மீட்புப் பணிகளுக்குத் தேவையான நவீன உபகரணங்கள் இல்லாமை மற்றும்
மணற்பாங்கான நில அமைப்பு காரணமாக மீட்புப் பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.
</p><p>
முறையான பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்படாமையே இந்த பாரிய
உயிரிழப்புகளுக்குக் காரணம் எனக் கூறப்படுகின்றது.
</p><p>
ஆபிரிக்காவின் மிகப்பெரிய தங்க உற்பத்தியாளர்களில் ஒன்றான சூடானில்,
பெரும்பான்மையான தங்கம் இவ்வாறான ஆபத்தான பாரம்பரிய முறைகளிலேயே வெட்டி
எடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-16T17:22:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[2027 ஐபிஎல் ஏலம் மீண்டும் இந்தியாவில் ; பிசிசிஐ அதிரடி முடிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/2027-ipl-auction-return-india-bcci-bold-decision-1789578894"></link>
            <id>https://jvpnews.com/article/2027-ipl-auction-return-india-bcci-bold-decision-1789578894</id>
            <summary type="text">2027-ம் ஆண்டு நடைபெற உள்ள இந்தியன் பிரீமியர் லீக் தொடருக்கான வீரர்கள் ஏலம் இந்தியாவிலேயே நடைபெறும் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை முடிவு செய்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>2027-ம் ஆண்டு நடைபெற உள்ள இந்தியன் பிரீமியர் லீக் தொடருக்கான வீரர்கள் ஏலம் இந்தியாவிலேயே நடைபெறும் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை முடிவு செய்துள்ளது.</p><p> </p><p></p><p>கடந்த 3 ஆண்டுகளாக வெளிநாடுகளில் நடைபெற்ற ஐபிஎல் ஏலம் மீண்டும் இந்தியாவுக்கு திரும்புகிறது. 

2023-ம் ஆண்டு ஐபிஎல் வீரர்கள் ஏலம் கொச்சியில் நடைபெற்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d0229e23-c24f-429d-b1a9-176f35d54d2a/26-6aaace8fa8225.webp' /></p><p> அதன்பிறகு தொடர்ந்து 3 ஆண்டுகள் வெளிநாடுகளில் ஏலம் நடத்தப்பட்டது. 

2024-ம் ஆண்டு டுபாயிலும், 2025-ம் ஆண்டு மெகா ஏலம் ஜெட்டாவிலும், 2026-ம் ஆண்டு ஏலம் அபுதாபியிலும் நடைபெற்றது. </p><p>

தற்போது 2027-ம் ஆண்டு ஏலத்தை மீண்டும் இந்தியாவில் நடத்த பிசிசிஐ முடிவு செய்துள்ளது. 

ஐபிஎல் 2027 ஏலம் மினி ஏலமாக நடைபெற உள்ளது. </p><p>இதனால் மெகா ஏலத்தைப் போன்று அணிகளில் மிகப்பெரிய அளவில் வீரர்கள் மாற்றம் இருக்காது. 

பிசிசிஐ மற்றும் ஐபிஎல் நிர்வாகக் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட இந்த முடிவு, அணிகளின் நிர்வாகத்துக்கும் வெளிநாட்டு பயணச் சுமையை குறைக்கும் வகையில் அமைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p></p>]]></content>
            <updated>2026-09-16T17:21:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவிற்கு மற்றுமொரு இழப்பு : அதிகாலைவேளை அதிநவீன ட்ரோனை அழித்தது ஈரான்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/irgc-downs-52nd-us-mq-9-drone-south-of-iran-1789578668"></link>
            <id>https://ibctamil.com/article/irgc-downs-52nd-us-mq-9-drone-south-of-iran-1789578668</id>
            <summary type="text">இன்று (16)புதன்கிழமை அதிகாலை கெஷ்ம் (Qeshm) தீவுக்கு மேலே, அமெரிக்க இராணுவத்திற்குச் சொந்தமான 52-வது MQ-9 ட்ரோனை (ஆளில்லா விமானம்) இஸ்லாமிய புரட்சிகர ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இன்று (16)புதன்கிழமை அதிகாலை கெஷ்ம் (Qeshm) தீவுக்கு மேலே, அமெரிக்க இராணுவத்திற்குச் சொந்தமான 52-வது MQ-9 ட்ரோனை (ஆளில்லா விமானம்) இஸ்லாமிய புரட்சிகர காவலர் படை (IRGC) இடைமறித்து அழித்ததாக தஸ்னிம் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
</p><p>
IRGC-யின் மக்கள் தொடர்புத் துறையின் தகவலின்படி, ஈரானின் ஒருங்கிணைந்த வான் பாதுகாப்பு அமைப்பின் கட்டுப்பாட்டில் இயங்கிக்கொண்டிருந்தபோது, ​​புதன்கிழமை உள்ளூர் நேரப்படி அதிகாலை 2:29 மணிக்கு, IRGC-யின் விண்வெளிப் படையின் புதிய மேம்பட்ட வான் பாதுகாப்பு அமைப்பால் இந்த அமெரிக்க MQ-9 ட்ரோன் சுட்டு வீழ்த்தப்பட்டது.</p><h2>52-வது அமெரிக்க MQ-9 ட்ரோன்&nbsp;</h2><p>

மோதலின் போது அழிக்கப்பட்ட 52-வது அமெரிக்க MQ-9 ட்ரோன் இதுவே என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6dde52a1-45ef-41ca-9d12-85e1d367a21d/26-6aaacfa170dbb.webp' /></p><p>
</p><p>
ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் திணித்த போரின் போது, ​​லூகஸ் (Lukas), ஹெர்ம்ஸ் (Hermes), MQ-1 மற்றும் MQ-9 ரகங்கள் உட்பட நூற்றுக்கணக்கான விரோத ட்ரோன்கள் ஈரானின் வான் பாதுகாப்பு அமைப்புகளால் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளன.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-16T17:20:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஊழல் குற்றச்சாட்டுகளை உடனுக்குடன் அறிய அரசின் புதிய திட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/new-government-scheme-to-identify-corruption-1789578880"></link>
            <id>https://tamilwin.com/article/new-government-scheme-to-identify-corruption-1789578880</id>
            <summary type="text">இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை ஆணைக்குழுவின் பணிகளைச் சீரமைப்பதற்காக, நாடு முழுவதும் 23 புதிய பிராந்திய அலுவலகங்களைத் திறப்பதற்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை ஆணைக்குழுவின் பணிகளைச் சீரமைப்பதற்காக, நாடு முழுவதும் 23 புதிய பிராந்திய அலுவலகங்களைத் திறப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.</p><p>

இந்த பிராந்திய அலுவலகங்கள் அனைத்தும் இந்த வருடம் டிசம்பர் மாதத்திற்குள் திறக்கப்பட்டு முடிக்கப்படும் என்று இலஞ்ச ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ரங்க திசாநாயக்க தெரிவித்துள்ளார். </p><h2>

23 புதிய பிராந்திய அலுவலகங்கள்</h2><p>
தற்போதுள்ள நடைமுறையின்படி, நாட்டின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் மக்கள், இலஞ்சம் அல்லது ஊழல் குறித்துப் புகார் அளிக்கவும், அதற்கான ஆதாரங்களை வழங்கவும் கொழும்பில் உள்ள தலைமை அலுவலகத்திற்கு வர வேண்டியிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c3d819e8-420d-4e0d-baa3-0fa6aedd29eb/26-6aaacedd3b9f7.webp' /></p><p>
</p><p>
மக்கள் சந்திக்கும் கடுமையான சிரமங்களைக் கருத்தில் கொண்டு புதிய பிராந்திய அலுவலகங்களை நிறுவ முடிவு செய்யப்பட்டதாக பணிப்பாளர் நாயகம் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p> 

இந்த புதிய அலுவலகங்களின் வலையமைப்பு, பிராந்திய அளவில் முறைப்பாடுகளைப் பெறுதல், விசாரணைகளை நடத்துதல் மற்றும் வழக்குகளைப் பதிவு செய்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளைச் செய்ய உள்ளது.
</p><p>
இதற்காக, சட்ட அதிகாரிகள் மற்றும் விசாரணை அதிகாரிகள் உட்பட மொத்தம் 971 புதிய அதிகாரிகளை நியமிப்பதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.&nbsp;</p><p></p><p></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-16T17:16:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் நெடுஞ்சாலையில் அவசரமாகத் தரையிறக்கப்பட்ட விமானம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/small-plane-makes-emergency-landing-1789576600"></link>
            <id>https://canadamirror.com/article/small-plane-makes-emergency-landing-1789576600</id>
            <summary type="text">&amp;nbsp;கனடாவின் அல்பெர்ட்டா மாகாணத்தில் உள்ள எட்மண்டன் நகருக்குக் கிழக்கே, பரபரப்பான நெடுஞ்சாலையின் நடுவே சிறிய ரக விமானம் ஒன்று அவசரமாகத் தரையிறக்கப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கனடாவின் அல்பெர்ட்டா மாகாணத்தில் உள்ள எட்மண்டன் நகருக்குக் கிழக்கே, பரபரப்பான நெடுஞ்சாலையின் நடுவே சிறிய ரக விமானம் ஒன்று அவசரமாகத் தரையிறக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><p>
ஸ்ட்ராத்கோனா கவுண்டியில் உள்ள நெடுஞ்சாலை 16 மற்றும் பேஸ்லைன் வீதிக்கு இடைப்பட்ட நெடுஞ்சாலை 21-ன் தெற்கு நோக்கிய பாதையில் 'செஸ்னா 172' ரக விமானம் திடீரென அவசரமாகத் தரையிறங்கியது.
</p><p>விமானம் நெடுஞ்சாலையின் பாதையை மறித்து நின்றதால், மீட்புக் குழுவினர் அந்த இடத்தை முழுமையாகச் சீரமைக்கும் வரை காவல்துறையினர் போக்குவரத்தை மாற்றுப் பாதைகளில் திருப்பி விட்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8ac4c2db-1123-485c-b1b2-a0267d2d30fb/26-6aaac599b9c98.webp' /></p><p>
</p><p>விமானம் தரையிறக்கப்பட்ட சமயத்தில் அதில் இருவர் இருந்ததாகவும், அதிர்ஷ்டவசமாக அவர்களுக்கு எவ்விதக் காயமும் ஏற்படவில்லை என்றும் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.</p><p>நெடுஞ்சாலையில் விமானம் அவசரமாகத் தரையிறக்கப்பட்டதற்கான காரணம் குறித்து ஆய்வு செய்ய கனடாவின் போக்குவரத்து பாதுகாப்பு வாரியத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.</p><p>
செஸ்னா 172 ஸ்கைஹாக் என்பது பொதுவாக விமான ஓட்டுநர் பயிற்சி பெறும் மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கப் பரவலாகப் பயன்படுத்தப்படும் ஒற்றை எஞ்சின் கொண்ட சிறிய ரக விமானமாகும்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-16T16:52:35+00:00</updated>
        </entry>
    </feed>
