<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-07-23T13:42:41+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[கதிர்காமம் - விஷ்ணு கோவில்களில் பாதாள பகீர் போட்டியும் ஸ்பானிய முகத்தின் செம்மணி காட்சி பின்னணியும்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/eu-delegation-at-the-chemmani-mass-grave-1784808394"></link>
            <id>https://ibctamil.com/article/eu-delegation-at-the-chemmani-mass-grave-1784808394</id>
            <summary type="text">தென்னிலங்கையில் பௌத்த சிங்களவர்களின் ஆதிக்கத்தில் உள்ள மாத்தறை தெவிநுவர விஷ்ணு தேவாலயம் மற்றும் கதிர்காம கந்தன் தேவாலயத்திலும்; கஞ்சிபானி இம்ரான் எதிர...</summary>
            <content type="html"><![CDATA[<p>தென்னிலங்கையில் பௌத்த சிங்களவர்களின் ஆதிக்கத்தில் உள்ள மாத்தறை தெவிநுவர விஷ்ணு தேவாலயம் மற்றும் கதிர்காம கந்தன் தேவாலயத்திலும்; கஞ்சிபானி இம்ரான் எதிர் தெஹி பாலே மல்லி பாதாள வகையறாக்களின் போட்டிகள் வந்துவிட்டதான பகீர் செய்திகளுக்கு மத்தியில் இலங்கையின் நவீன வரலாற்றின் மிக முக்கிய இருண்ட பக்களில் ஒன்றான கறுப்பு யூலையின் 43 ஆம் ஆண்டு முடிவு நினைவுகூரல் நாட்கள் ஆரம்பித்துள்ளன.&nbsp;</p><p>

இந்த கறுப்பு யூலை படுகாலைகளுக்கு மட்டும் அல்லாமல் செம்மணி புதை குழிசார்ந்த படுகொலைகளுக்கும் இதுவரை பொறுப்புக்கூறப்படாத நிலையில் நேற்று செம்மணியில் நின்ற ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளில் இருந்த ஒரேயொரு பெண்ணான ஸ்பானிய இராஜதந்திரி கார்மென்மொரேனோ அங்குவைத்து வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் சங்கத் தலைவி கனகரஞ்சினி ஆரத்தழுவி ஆறுதல் கூறிய காட்சி அங்கிருந்தோரை நெகிழவைத்தது.&nbsp;</p><p>
மூத்த இராஜதந்திரியான கார்மென் மொரேனோவின் இந்த செய்கை ராஜதந்திர புறோட்டோகோல்களுக்கு அப்பாற்பட்டதாகபட்டாலும் இது தமிழர்தாயகத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்கள் இன்னும் எதிர்கொள்ளும் வேதனை மற்றும் நீதிக்கான தேடலை அங்கீகரிக்கும் ஒருகுறியீட்டு நகர்வும் கூட 
அவர் ஸ்பெயினை சேர்ந்தவர் என்பதால் தனது நாட்டின் வரலாற்றில் சர்வாதிகாரி பிரான்சிஸ்கோ பிராங்கோ 75 ஆம் ஆண்டுவரை நடத்திய ஆட்சியில் ஏராளமான மக்கள் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் இன்றும் அந்த நாட்டை துரத்துவதை அறிந்தவர்.சர்வாதிகாரி பிராங்கோ தன்னை எதிர்த்தவர்களில் பலரை காணாமல் ஆக்கியவர்.&nbsp;</p><p>
அந்தவகையில் நேற்று செம்மணி புதைகுழிபகுதியில் நின்ற ஐரோப்பிய ஒன்றியத் தூதுக்குழுவின் தலைவியான கார்மென் மொரேனோவின் இந்த கட்டியணைப்பு ஆறுதல் ஒரு குறியீட்டுநகர்வாக உள்ள நிலையில் இந்தவிடயங்களை மையப்படுத்திவருகிறது செய்திவீச்சு,&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/VE6v1uNAmrQ" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</h5></td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-23T13:41:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[பொதுமக்களுக்கு வெளியான அறிவிப்பு : வேகமாக பரவும் மற்றுமொரு காய்ச்சல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/rat-fever-risk-rises-1784812296"></link>
            <id>https://ibctamil.com/article/rat-fever-risk-rises-1784812296</id>
            <summary type="text">இலங்கையில் மிகவும் பரவலாக பதிவாகும் தொற்றுநோய்களில் ஒன்றான எலிக்காய்ச்சல் தொடர்பில் பொதுமக்களுக்கு பொதுச்சுகாதார பரிசோதகர் சங்கம் எச்சரிக்கையை விடுத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் மிகவும் பரவலாக பதிவாகும் தொற்றுநோய்களில் ஒன்றான எலிக்காய்ச்சல் தொடர்பில் பொதுமக்களுக்கு பொதுச்சுகாதார பரிசோதகர் சங்கம் எச்சரிக்கையை விடுத்துள்ளது.
</p><p>

இந்த தொற்று காய்ச்சலினால் ஏற்படும் உயிரிழப்பும் அதிகமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>ஊடக சந்திப்பில் பேசிய சங்கத்தின் பொருளாளர் எம்.ஏ.சி. பிரசாத், எலியின் சிறுநீரில் உள்ள லெப்டோஸ்பைரா பாக்டீரியா, தோல், கண்கள் அல்லது சளி சவ்வுகளில் ஏற்படும் சிறிய கீறல்கள் வழியாக மனித உடலுக்குள் நுழைகிறது என்று கூறினார்.</p><h2>எலிக்காய்ச்சலால் பாதிக்கப்படுவோர்</h2><p>விவசாயிகள், நெல் வயல்கள் மற்றும் சேற்று நிலங்களில் பணிபுரியும் மக்கள், வடிகால்களைச் சுத்தம் செய்யும் தொழிலாளர்கள், உழவுப் பணிகளில் ஈடுபடுபவர்கள், மற்றும் கைவிடப்பட்ட நெல் வயல்கள் மற்றும் சதுப்பு நிலங்களில் விளையாடும் குழந்தைகள் ஆகியோரும் எலிக் காய்ச்சலால் பாதிக்கப்படும் அதிக அபாயத்தில் உள்ளவர்கள் என்றும் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f9e5b240-b453-4a76-9ac1-747532c59f5e/26-6a621914e55de.webp' /></p><p>தேங்கி நிற்கும் நீர் உள்ள இடங்கள், தேங்கி நிற்கும் நீர்நிலைகள் மற்றும் நீர்த்தேக்கங்களில் குளிக்கும்போது நோய் தொற்றும் அபாயம் உள்ளது என்றும், எனவே அத்தகைய சமயங்களில் சிறப்பு கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் பிரசாத் சுட்டிக்காட்டினார்.</p><p></p><h2>ஆரம்ப அறிகுறிகள்&nbsp;</h2><p>&nbsp;சேறு நிறைந்த சூழலில் வேலை செய்வதற்கு முன்பு, மருத்துவ ஆலோசனையின்படி டொக்ஸிசைக்ளின் (Doxycycline) எனப்படும் பொடுகு எதிர்ப்பு மருந்தைப் பெறுவது மிகவும் முக்கியம் என்றும், அதை உள்ளூர் சுகாதார மருத்துவ அதிகாரி மற்றும் பொது சுகாதார ஆய்வாளர்களின் அலுவலகங்களில் இருந்து இலவசமாகப் பெற்றுக்கொள்ளலாம் என்றும் அவர் குறிப்பிட்டார். இருப்பினும், மருத்துவ ஆலோசனையின்படி சரியான அளவில் மட்டுமே அந்த மருந்தைப் பயன்படுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7b938406-7da2-4e13-9c27-07efd1d9d74e/26-6a621915c4d2f.webp' /></p><p>டெங்கு காய்ச்சல் மற்றும் டெங்குவின் ஆரம்ப அறிகுறிகள் போன்றே இவற்றின் அறிகுறிகளும் ஒத்தவை என்றும், காய்ச்சல், தலைவலி, உடல் வலி மற்றும் கண்களில் வலி போன்ற அறிகுறிகள் தோன்றக்கூடும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.</p><p></p><h2>இரத்தப் பரிசோதனை மேற்கொள்வது அவசியம்</h2><p>அத்தகைய அறிகுறிகள் இருந்தால், தாமதமின்றி மருத்துவரை அணுகுவதும், நோயைச் சரியாகக் கண்டறியத் தேவையான இரத்தப் பரிசோதனைகளை மேற்கொள்வதும் அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e25c91f0-3421-47c7-a863-204e3ca1af6a/26-6a62191673fde.webp' /></p><p>எலிக்காய்ச்சலின் அறிகுறிகள் தோன்றும்போது, ​​வீட்டிலேயே சுயமாக சிகிச்சை எடுத்துக்கொள்வது, பாரம்பரிய மருந்துகளைப் பயன்படுத்துவது அல்லது சிகிச்சையைத் தாமதப்படுத்துவது மிகவும் ஆபத்தானது என்பதால், உயிரிழப்பு அபாயத்தைக் குறைக்கும் வகையில், கூடிய விரைவில் அரசாங்க அல்லது தனியார் சுகாதார நிறுவனத்தை அணுகி முறையான மருத்துவ சிகிச்சையைப் பெறுமாறு இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-23T13:38:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[உக்ரைன் போர் குறித்து அமெரிக்க-ரஷ்ய வெளியுறவு அமைச்சர்கள் பேச்சுவார்த்தை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/us-and-russian-foreign-ministers-hold-talks-1784813235"></link>
            <id>https://tamilwin.com/article/us-and-russian-foreign-ministers-hold-talks-1784813235</id>
            <summary type="text">பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் நடைபெற்ற தென்கிழக்கு ஆசிய நாடுகளின்
கூட்டமைப்பான &#039;ஆசியான்&#039; மாநாட்டின் இடையே, உக்ரைன் போர் தொடர்பாக அமெரிக்க
வெளியுறவு...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் நடைபெற்ற தென்கிழக்கு ஆசிய நாடுகளின்
கூட்டமைப்பான 'ஆசியான்' மாநாட்டின் இடையே, உக்ரைன் போர் தொடர்பாக அமெரிக்க
வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ மற்றும் ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கே
லாவ்ரோவ் இடையிலான உயர்மட்டப் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
</p><p>
சுமார் 35 நிமிடங்கள் நடைபெற்ற இச்சந்திப்பில், போரை முடிவுக்குக்
கொண்டுவருவது குறித்து இரு தலைவர்களும் தீவிரமாக ஆலோசித்தனர்.
</p><p>
இச்சந்திப்பின் போது, உக்ரைன் மோதலுக்கு அரசியல் மற்றும் இராஜதந்திர ரீதியில்
தீர்வு காண ரஷ்யா தயாராக இருப்பதை அமைச்சர் லாவ்ரோவ் மீண்டும்
உறுதிப்படுத்தினார்.</p><p></p><h2>பேச்சுவார்த்தை</h2><p>
</p><p>
ஆகஸ்ட் 2025-இல் அலாஸ்காவில் நடைபெற்ற சந்திப்பில் அமெரிக்க அதிபர் டொனால்ட்
ட்ரம்ப் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் முன்வைத்த
முன்மொழிவுகளுக்கு ரஷ்யா இன்னமும் கட்டுப்பட்டு இருப்பதாக அவர்
தெளிவுபடுத்தினார்.
</p><p>
அதேவேளையில், உக்ரைனுக்கு மேலைநாடுகளும் ஐரோப்பிய நாடுகளும் தொடர்ந்து
ஆயுதங்களை வழங்கி வருவதை ரஷ்யா ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், ரஷ்யாவிற்கு
"மூலோபாயத் தோல்வியை" ஏற்படுத்த முனையும் ஐரோப்பிய நாடுகளின் கொள்கைகள்
பிராந்திய அமைதியை சீர்குலைப்பதாகவும் லாவ்ரோவ் சாடினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/068edb83-d19d-49c8-b235-2d1ac94d9151/26-6a6217e52814a.webp' /></p><p>
</p><p>
பேச்சுவார்த்தைக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க வெளியுறவு
அமைச்சர் மார்கோ ரூபியோ, ரஷ்ய வெளியுறவு அமைச்சருடனான சந்திப்பு நேர்மையாகவும்
சுமுகமாகவும் அமைந்ததாகத் தெரிவித்தார்.
</p><p>
அர்த்தமற்ற இந்த போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்கா ஆக்கபூர்வமான
பங்களிப்பை வழங்க எப்போதும் தயாராக இருப்பதாக ஜனாதிபதி ட்ரம்ப் தெளிவாகக்
கூறியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.</p><p></p><h2>எரிபொருள் கட்டமைப்பு</h2><p>
</p><p>
போரை முடிவுக்குக் கொண்டுவர இரு நாடுகளுக்கும் விருப்பம் இருந்தாலும், உக்ரைன்
மற்றும் ரஷ்யா ஆகிய இரு தரப்பும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு அமைதித் தீர்வை
எட்டுவதே தற்போதைய மிகப்பெரிய சவாலாக உள்ளது என ரூபியோ சுட்டிக்காட்டினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c9a78367-5ae0-40d5-a096-00c01637e211/26-6a6217e5cccf4.webp' /></p><p>

மற்றொருபுறம், உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி, முடங்கிக்கிடக்கும்
அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்கு புத்துயிர் அளிக்கும் நோக்கில் அமெரிக்க
தூதுவர்களான ஸ்டீவ் விட்காஃப் மற்றும் ஜாரெட் குஷ்னருடன் கலந்தாலோசனை
நடத்தியதாகத் தெரிவித்துள்ளார்.
</p><p>
அண்மைக்காலமாக உக்ரைன் நடத்திய டிரோன் தாக்குதல்கள் ரஷ்யாவின் எரிபொருள்
கட்டமைப்புகளைப் பாதித்துள்ள நிலையில், அமெரிக்காவும் ரஷ்யாவும் மீண்டும்
நேரடிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருப்பது சர்வதேச அளவில்
உற்றுநோக்கப்படுகிறது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-23T13:32:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலகை உலுக்கிய எப்ஸ்டீன் கோப்பு; பிரெஞ்சு மாடலிங் மர்ம மரணம்! சர்வதேச அளவில் பெரும் அதிர்வலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/french-modeling-epstein-files-found-dead-paris-1784806762"></link>
            <id>https://jvpnews.com/article/french-modeling-epstein-files-found-dead-paris-1784806762</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;அமெரிக்க பாலியல் குற்றவாளியுமான மறைந்த ஜெஃப்ரி எப்ஸ்டீன் (Jeffrey Epstein) அதிகாரப்பூர்வ ஆவணங்களில் 2,000க்கும் மேற்பட்ட இடங்களில் பெயர் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;அமெரிக்க பாலியல் குற்றவாளியுமான மறைந்த ஜெஃப்ரி எப்ஸ்டீன் (Jeffrey Epstein) அதிகாரப்பூர்வ ஆவணங்களில் 2,000க்கும் மேற்பட்ட இடங்களில் பெயர் இடம்பெற்றிருந்த பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த மாடலிங் ஏஜென்ட் டேனியல் சியாட் (Daniel Siad, 69) பாரிஸ் நகரிலுள்ள தனது வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பிரான்ஸ் பொலிஸார் கூறியுள்ளனர்.</p><p>

 பிரெஞ்சு அதிகாரிகளின் இந்தத் திடீர் அறிவிப்பு சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க நீதித் துறை வெளியிட்ட எப்ஸ்டீன் ஆவணங்களின்படி, டேனியல் சியாட் பல ஆண்டுகளாக ஐரோப்பிய நாடுகளிலிருந்து இளம் பெண்களுக்கு மாடலிங் வாய்ப்பு தருவதாகக் கூறி எப்ஸ்டீனுக்கு அறிமுகம் செய்து வைத்த இடைத்தரகராகச் செயல்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c472e823-1f85-4450-b816-6bb43e4dc365/26-6a61fd6c55366.webp' /></p><h2>&nbsp;சர்வதேச அளவில் பெரும் அதிர்வலை</h2><p> சுமார் ஐந்துக்கும் மேற்பட்ட பெண்கள் சியாட் மீது பாலியல் வன்கொடுமை மற்றும் மனித கடத்தல் புகார்களை அளித்திருந்த நிலையில், பிரெஞ்சு காவல் துறையினர் அவர் மீது தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.</p><p>

பாரிஸின் கொலம்பஸ் (Colombes) பகுதியில் உள்ள அவரது வீட்டில் சியாட் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவரது உடலைக் கைப்பற்றிய நந்தேர் (Nanterre) நகர அரசு வழக்கறிஞர் அலுவலகம், மரணத்திற்கான உண்மையான காரணத்தைக் கண்டறிய உடற்கூறாய்வுக்கு (Autopsy) உத்தரவிட்டுள்ளது.</p><p> இருப்பினும், சியாட் மாரடைப்பு காரணமாகவே உயிரிழந்ததாக அவரது வழக்கறிஞர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, எப்ஸ்டீன் விவகாரத்தில் கைதாகி சிறையில் இருந்த மற்றொரு முன்னணி பிரெஞ்சு மாடலிங் முகவர் ஜான்-லூக் புரூனெல் (Jean-Luc Brunel) 2022-இல் சிறையிலேயே தற்கொலை செய்துகொண்டார். </p><p>தற்போது அவருக்கு அடுத்து எப்ஸ்டீனின் முக்கிய கூட்டாளியான டேனியல் சியாட்டும் விசாரணை வளையத்திற்குள் வரும் முன்பே உயிரிழந்துள்ளது, பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி கிடைப்பதில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்க்கள் குறிப்பிட்டுள்ளன.</p>]]></content>
            <updated>2026-07-23T13:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கோட்டாபயவின் ரிட் மனு ஒத்திவைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/easter-attacks-gotabaya-petition-adjourned-1784805906"></link>
            <id>https://jvpnews.com/article/easter-attacks-gotabaya-petition-adjourned-1784805906</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு, மேலதிக பரிசீலனைக்காக ஓகஸ்ட் 3ஆம் திகதிக்கு ஒத்திவைக்குமாறு மேன்முற...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;முன்னாள் ஜனாதிபதி <a href="https://jvpnews.com/article/gotabaya-rajapaksa-appears-court-of-appeal-1784794126" target="_blank">கோட்டாபய ராஜபக்சவினால் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு</a>, மேலதிக பரிசீலனைக்காக ஓகஸ்ட் 3ஆம் திகதிக்கு ஒத்திவைக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. </p><p>

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்படும் விசாரணைகளுக்கு அமைவாக, தன்னை பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்து தடுத்து வைப்பதைத் தடுக்கும் உத்தரவைப் பிறப்பிக்குமாறு கோரி கோட்டாபய ரிட் மனு தாக்கல் செய்திருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/51454d9c-969d-4821-904b-d103a7bf1224/26-6a61fa13eeff8.webp' /></p><p>
</p><p>
இந்த மனு இன்று அழைக்கப்பட்டபோது, மனுதாரர் கோட்டாபய ராஜபக்ச சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா பதிலுரைகளைச் சமர்ப்பித்தார். 

இதனையடுத்து மேலதிக சமர்ப்பணங்களை ஓகஸ்ட் 3ஆம் திகதிக்கு ஒத்திவைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.</p>]]></content>
            <updated>2026-07-23T13:28:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[லண்டன் மருத்துவர் என நம்பி பெரும் தொகையை இழந்த பெண்; தமிழர் பகுதியில் சம்பவம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/woman-loses-large-sum-of-money-face-book-uk-friend-1784811504"></link>
            <id>https://jvpnews.com/article/woman-loses-large-sum-of-money-face-book-uk-friend-1784811504</id>
            <summary type="text">&amp;nbsp; மட்டக்களப்பில், முகநூல் வழியே அறிமுகமாகி வெறும் 3 நாட்களில் நண்பரான &#039;வெளிநாட்டு வைத்தியர்&#039; ஒருவரின் ஏமாற்று வேலையினால், பெண் ஒருவர் 8 இலட்சத்து...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; மட்டக்களப்பில், முகநூல் வழியே அறிமுகமாகி வெறும் 3 நாட்களில் நண்பரான 'வெளிநாட்டு வைத்தியர்' ஒருவரின் ஏமாற்று வேலையினால், பெண் ஒருவர் 8 இலட்சத்து 37 ஆயிரம் ரூபாயை இழந்துள்ளதாக மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸார் தெரிவித்தனர்.
</p><p>
 சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், 
மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெண் ஒருவரின் முகநூலில், லண்டனைச் சேர்ந்த 'டான்' எனும் பெயருடைய வெள்ளைக்கார வைத்தியர் ஒருவர் கடந்த 13ஆம் திகதி நண்பராக இணைந்துள்ளார். அதனைத் தொடர்ந்து இருவரும் முகநூல் வாயிலாக உரையாடி வந்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1c6aabb1-9371-417d-b398-b6c0e3db7a73/26-6a620ff16a9f7.webp' /></p><h2>சர்வதேசப் பொதி விநியோக நிறுவனம் அழைப்பு</h2><p>
</p><p>
இதனையடுத்து, கடந்த 16ஆம் திகதி அப்பெண்ணின் தொலைபேசிக்கு அழைப்பொன்று வந்துள்ளது. அதில் பேசிய நபர், தாம் கட்டுநாயக்க விமான நிலையப் பகுதியில் இயங்கி வரும் சர்வதேசப் பொதி விநியோக நிறுவனம் ஒன்றிலிருந்து பேசுவதாகக் கூறியுள்ளார். </p><p>

லண்டனைச் சேர்ந்த வைத்தியர் 'டான்' பல இலட்சம் ரூபாய் பெறுமதியான விலையுயர்ந்த பொருட்கள் அடங்கிய பொதி ஒன்றை அனுப்பியுள்ளதாகவும், அதனைச் சுங்கத் திணைக்களத்திலிருந்து விடுவிப்பதற்கு (Clearance) 87,000 ரூபாய் பணத்தைக் குறிப்பிட்ட வங்கிவழியே செலுத்துமாறும் கோரியுள்ளார்.</p><p></p><p>
</p><p>
அதனை உண்மையென நம்பிய அப்பெண், 17ஆம் திகதி உடனடியாக 87,000 ரூபாயை அனுப்பியுள்ளார். </p><p>அதனைத் தொடர்ந்து, பொதியை விடுவிக்க மேலும் 3 இலட்சம் ரூபாய் தேவை எனக் கூறப்படவே, அதனையும் வைப்புச் செய்துள்ளார். 

பின்னரும் பணம் கோரப்பட்டதால், அப்பெண்ணின் தாயார் மேலும் 3 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாயை அந்த வங்கிக் கணக்கில் வைப்புச் செய்துள்ளார்.
</p><p>
இதன் தொடர்ச்சியாக மோசடி கும்பல் மேலும் ஒரு இலட்சம் ரூபாயைப் பெற்றுக்கொண்டதுடன், இறுதியாக "இன்னும் 1 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலுத்தினால் மட்டுமே பார்சல் விடுவிக்கப்படும்" என்று கூறியுள்ளது.
</p><p>
இதனால் சந்தேகமடைந்த அப்பெண், "இனிமேல் பணம் தர முடியாது" எனத் திட்டவட்டமாகக் கூறியுள்ளார். அதன்பின்னர் அந்த மோசடி கும்பலைத் தொலைபேசியில் தொடர்புகொள்ள முயன்றபோது, தொடர்பு துண்டிக்கப்பட்டிருந்தது.
</p><p>
 இதையடுத்து, தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அப்பெண் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
</p><p>
இந் நிலையில் முகநூல் வாயிலாக இயங்கும் இணையவழி மோசடி கும்பல்களிடம் பலர் பல இலட்சம் ரூபாய் பணத்தைப் பறப்கொடுத்து வருவதைச் சுட்டிக்காட்டியுள்ள பொலிஸார், அறிமுகமில்லாத முகநூல் நபர்களிடம் பொதுமக்கள் மிகவும் அவதானமாகவும் எச்சரிக்கையாகவும் இருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.&nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-07-23T13:27:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரான்ஸில் 1.3 மில்லியன் யூரோ மதிப்புள்ள நகைகளுடன் கைப்பை மாயம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/us-man-hand-bag-worth-jewelry-missing-in-france-1784809089"></link>
            <id>https://canadamirror.com/article/us-man-hand-bag-worth-jewelry-missing-in-france-1784809089</id>
            <summary type="text">அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு கோடீஸ்வர தொழிலதிபர், பரிசில் உள்ள ஆடம்பர தங்கும் விடுதியில் தான் கொண்டு வந்த கைப்பை மர்மமான முறையில் காணாமல் போயுள்ளதாக முறை...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு கோடீஸ்வர தொழிலதிபர், பரிசில் உள்ள ஆடம்பர தங்கும் விடுதியில் தான் கொண்டு வந்த கைப்பை மர்மமான முறையில் காணாமல் போயுள்ளதாக முறைப்பாடு செய்துள்ளார்.
</p><p>
 காணமல் போன பையில் மொத்தம் 1.3 மில்லியன் யூரோக்கள் மதிப்புள்ள உயர்தர நகைகள் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d813559d-6fb9-4bae-9f89-d9c69153718b/26-6a62068283293.webp' /></p><h2>&nbsp;8 இலட்சம் யூரோக்கள் மதிப்புள்ள வைர மோதிரம்</h2><p>
</p><p>
காணாமல் போன பொருட்களில் சுமார் 8 இலட்சம் யூரோக்கள் மதிப்புள்ள வைர மோதிரம் உள்ளிட்ட பல விலையுயர்ந்த நகைகள் இருந்ததாக ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p> 

பயணத்தின் எந்தக் கட்டத்தில் கைப்பை மாயமானது என்பது இதுவரை உறுதியாகத் தெரியாத நிலையில், சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். 

இந்த மர்மமான நகை மாயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. </p><p>விமான நிலையம், பயண வழித்தடங்கள் மற்றும் தங்கும் விடுதியின் பாதுகாப்பு காட்சிப்பதிவுகள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. 

கைப்பையை கண்டுபிடிக்கவும், சம்பவத்தின் உண்மை நிலையை வெளிக்கொணரவும் பிரான்ஸ் காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-23T13:27:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[செம்மணியில் மனதை உறைய வைக்கும் மற்றுமொரு சிறுவரின் என்புக்கூடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/another-child-s-skeleton-chemmani-mass-grave-1784813306"></link>
            <id>https://jvpnews.com/article/another-child-s-skeleton-chemmani-mass-grave-1784813306</id>
            <summary type="text">&amp;nbsp; யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழிக்குள் மழை அங்கியை ஒத்த அங்கியுடன் சிறுவரின் என்புக்கூடு ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளது .செம்மணி மனித புதைகுழி...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழிக்குள் மழை அங்கியை ஒத்த அங்கியுடன் சிறுவரின் என்புக்கூடு ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளது .</p><p>செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை 56 நாட்கள் முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், 41ஆவது நாளான இன்றைய தினம் வியாழக்கிழமை , 07 என்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/27a03d91-f4ef-40eb-a309-e0cf813c15d2/26-6a6216fc3fbaf.webp' /></p><p>
</p><p>
அதேவேளை ஏற்கனவே அடையாளம் காணப்பட்டதில் 09 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.

அதேவேளை இன்றைய தினம் மூன்று என்புக் குவியல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், ஆணிகளும் சீமெந்து துண்டு ஒன்றும் அடையாளம் காணப்பட்டுள்ளது.</p><p></p><p>
</p><p>
அதன் அடிப்படையில் செம்மணி புதைகுழியில் முதலாம் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டம் என இதுவரையில் 95 நாட்கள் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டது.
</p><p>
இந் நிலையில் , 478 என்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் 464 என்பு கூடுகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.</p>]]></content>
            <updated>2026-07-23T13:26:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆசிரியையால் தாக்கப்பட்ட மாணவி மனநல பாதிப்பு..! நியாயம் கேட்டு சென்ற பெற்றோர் நேர்ந்த கதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/student-assaulted-by-teacher-suffers-mental-health-1784812633"></link>
            <id>https://tamilwin.com/article/student-assaulted-by-teacher-suffers-mental-health-1784812633</id>
            <summary type="text">ஆசிரியையால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் மாணவி ஒருவர் உடல்நல மற்றும் மனநல பாதிப்புக்குள்ளாகி சிகிச்சை பெற்று வரும் நிலையில், சம்பவத்தைத் தொடர்ந்து ஆசிர...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஆசிரியையால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் மாணவி ஒருவர் உடல்நல மற்றும் மனநல பாதிப்புக்குள்ளாகி சிகிச்சை பெற்று வரும் நிலையில், சம்பவத்தைத் தொடர்ந்து ஆசிரியர்கள் பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக மாணவியின் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர்.
</p><p>
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
</p><p>
கொழும்பிலுள்ள தமிழ் மகளிர் பாடசாலையொன்றில் தரம் 5இல் கல்வி கற்கும் சில மாணவிகள், அவர்களின் வகுப்பாசிரியையால் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.</p><p></p><h2>

மாணவி வைத்தியசாலையில் அனுமதி</h2><p>

இதில் ஒரு மாணவி கடுமையான உடல்நலக் குறைவால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
</p><p>
ஆரம்ப சிகிச்சைகளால் முன்னேற்றம் ஏற்படாத நிலையில், மேலதிக மருத்துவப் பரிசோதனைகளில் மாணவிக்கு நோய் பயம் மற்றும் மனஅழுத்தம் ஏற்பட்டுள்ளதாக வைத்தியர்கள் பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b191e63c-4520-475f-98dc-9d0258f06132/26-6a62160715e28.webp' /></p><p>

பின்னர், மனநல வைத்திய நிபுணரின் பரிசோதனையிலும் அதே நிலைமை உறுதிப்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதையடுத்து, சம்பவம் தொடர்பில் பாடசாலை அதிபரிடம் பெற்றோர் அறிவித்ததுடன், மாணவிக்கான வகுப்பு மாற்றத்தையும் கோரியுள்ளனர்.</p><p> 

அதன் அடிப்படையில் மாணவி வேறு வகுப்புக்கு மாற்றப்பட்டுள்ளார். எனினும், மாணவி புதிய வகுப்பில் ஒரு நாள் மட்டுமே கல்வி கற்ற நிலையில், தாக்குதல் மேற்கொண்டதாகக் கூறப்படும் வகுப்பாசிரியர் மற்றொரு ஆசிரியருடன் முரண்பாடு கொண்டதாகவும், அதன் பின்னர் மாணவி அந்த வகுப்பில் தொடர வேண்டாம், என மாற்று ஏற்பாடுகள் செய்யலாம் என அதிபர் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
</p><h2>
பொலிஸாரிடம் முறைப்பாடு</h2><p>
இதற்கிடையில், மாணவியின் தாயாரிடம் பாடசாலையின் உப அதிபர், கடுமையான வார்த்தைப் பிரயோகங்களை மேற்கொண்டதாகவும், மாணவியை திறமையற்றவர் மற்றும் ஒழுக்கமற்றவர் என்ற தொனியில் விமர்சித்ததாகவும், மாணவியின் தந்தையையும் குறிப்பிட்டு அச்சுறுத்தும் வகையில் பேசியதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.</p><p>

தமக்கும் தமது மகளுக்கும் அசாதாரணமான சூழ்நிலை உருவாகியுள்ளதுடன், பழிவாங்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக உணர்ந்த மாணவியின் தந்தை, இது தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/658429ce-ad25-4c0a-aa0b-9688e7ead523/26-6a621607b8922.webp' /></p><p>
</p><p>
மேலும், கல்வி அமைச்சர், சிறுவர் பாதுகாப்பு அமைச்சர் மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழு உள்ளிட்ட சம்பந்தப்பட்ட தரப்புகளுக்கும் முறைப்பாட்டுக் கடிதங்கள் அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>

இதனையடுத்து, பொலிஸார் விசாரணைக்காக அழைத்தபோது, அதிபரும் சம்பந்தப்பட்ட ஆசிரியரும் இனி இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாது, பழிவாங்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படாது, மாணவியின் தாயாருக்கு எந்தவித அழுத்தமும் வழங்கப்படாது என உறுதியளித்ததாகக் கூறப்படுகிறது.</p><p> இதனைத் தொடர்ந்து, பொலிஸில் செய்யப்பட்ட முறைப்பாடு திரும்பப் பெறப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும், அதன் பின்னர் நிலைமை மேலும் மோசமடைந்ததாக பெற்றோர் குற்றம் சாட்டுகின்றனர்.
</p><h2>
பெற்றோர் - மாணவிக்கு எதிராக விமர்சனம் பரவல்</h2><p>
இந்த விவகாரம் குறித்த பாடசாலையைத் தாண்டி ஏனைய பாடசாலைகளுக்கும் பரவியுள்ளதாகவும், பாடசாலைக்குள்ளும் வெளியிலும் மாணவியின் தாயாருக்கு எதிராக அவதூறு பரப்பப்பட்டு வருவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d84f7afe-55bf-4372-8623-f0c0b75a62f9/26-6a621608680b3.webp' /></p><p> </p><p>மேலும், மாணவியின் தந்தை குறித்து "சண்டைக்காரர்", "பிரச்சினைக்குரியவர்" என்ற வகையிலான தகவல்கள் பரப்பப்படுவதாகவும் கூறப்படுகிறது.

தம்மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை மறைத்து, பொறுப்பிலிருந்து தப்பித்துக்கொள்வதற்காக ஆசிரியர்கள் பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவது மிகவும் கவலைக்குரிய செயல் என மாணவியின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
</p><p>
இந்நிலையில், மாணவி பாடசாலைக்குச் செல்லவே அச்சமடைந்துள்ளதாகவும், இத்தகைய சூழலில் அவர் எவ்வாறு கல்வியைத் தொடர முடியும்? அவரது பாதுகாப்புக்கு யார் உத்தரவாதம் வழங்குவார்கள்? என்ற கேள்விகளையும் பெற்றோர் எழுப்பியுள்ளன.&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-23T13:24:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஒத்திவைக்கப்பட்ட பிரித்தானிய ஐரோப்பிய ஒன்றிய உச்சி மாநாடு: அடுத்து என்ன?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/postponed-uk-eu-summit-to-be-in-year-end-1784812880"></link>
            <id>https://news.lankasri.com/article/postponed-uk-eu-summit-to-be-in-year-end-1784812880</id>
            <summary type="text">பிரித்தானியாவின் பிரதமராக இருந்த சர் கெய்ர் ஸ்டார்மர் ஐரோப்பிய ஒன்றியத்துடன் நெருக்கம் காட்டிவந்தது அனைவரும் அறிந்ததே.

இம்மாதம், அதாவது, ஜூலை மாதம்...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரித்தானியாவின் பிரதமராக இருந்த சர் கெய்ர் ஸ்டார்மர் ஐரோப்பிய ஒன்றியத்துடன் நெருக்கம் காட்டிவந்தது அனைவரும் அறிந்ததே.
</p><p>
இம்மாதம், அதாவது, ஜூலை மாதம் 22ஆம் திகதி, பிரித்தானிய ஐரோப்பிய ஒன்றிய உச்சி மாநாடு ஒன்று நடைபெற இருந்த நிலையில், ஸ்டார்மர் ராஜினாமா செய்ததால், அந்த மாநாடு ஒத்திவைக்கப்பட்டது.
</p><h3>
அடுத்து என்ன?
</h3><p>
அந்த உச்சி மாநாடு மீண்டும் இன்னொரு திகதியில் நடத்தப்படும் என தற்போது தகவல் வெளியாகியுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c20ec01b-0dee-48c6-90de-6630624686be/26-6a6215515e89a.webp' /></p><p>
அத்துடன், பிரித்தானியாவின் ஐரோப்பிய உறவுகள் அமைச்சராக ஹாமிஷ் ஃபால்கோனர் (Hamish Falconer) என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.</p><p>

ஆகவே, பிரித்தானிய ஐரோப்பிய ஒன்றிய உச்சி மாநாட்டை நடத்துவதற்கான திகதியை முடிவு செய்வது குறித்து பேச்சுவார்த்தைகள் நடத்தும் பொறுப்பு ஃபால்கோனருடையதாகியுள்ளது.&nbsp;</p><p></p><p>
இதற்கிடையில், திங்கட்கிழமையன்று பிரித்தானியாவின் புதிய பிரதமரான ஆன்டி பர்னாமும், ஐரோப்பிய ஆணைய தலைவரான உர்சுலா வான் டெர் லேயனும் தொலைபேசி வாயிலாக பேசிக்கொண்ட நிலையில், பிரித்தானிய ஐரோப்பிய ஒன்றிய உச்சி மாநாட்டை இந்த ஆண்டின் இறுதி வாக்கில் நடத்துவது தொடர்பில் இருதரப்பும் இணைந்து செயலாற்ற ஒப்புக்கொண்டுள்ளதாக பிரதமர் இல்ல வட்டாரம் தெரிவித்துள்ளது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-23T13:21:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானிய அரசாங்கத்தில் ஈழத் தமிழ்ப் பெண்ணுக்கு கிடைத்த அங்கீகாரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-lankan-uma-kumaran-in-british-parliament-1784808812"></link>
            <id>https://tamilwin.com/article/sri-lankan-uma-kumaran-in-british-parliament-1784808812</id>
            <summary type="text">




பிரித்தானியாவின் வெளிநாட்டு அமைச்சகத்தில் இணை அமைச்சராக பதவி வகித்து வந்த இலங்கைத் தமிழரான உமா குமரன், தற்போது பிரித்தானியாவின் இராஜாங்க அமை...</summary>
            <content type="html"><![CDATA[<p>




பிரித்தானியாவின் வெளிநாட்டு அமைச்சகத்தில் இணை அமைச்சராக பதவி வகித்து வந்த இலங்கைத் தமிழரான உமா குமரன், தற்போது பிரித்தானியாவின் இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
</p><p>
கடந்த சில வாரங்களில் பிரித்தானியாவில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களைத் தொடர்ந்து, புதிய பிரதமராக ஹன்டி பெர்கம் பதவியேற்றார்.
</p><p>
இதனைத் தொடர்ந்து, அவரது புதிய அமைச்சரவையில் பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.</p><p></p><p>
</p><h2>பிரித்தானியாவில் கிடைத்த அங்கீகாரம்</h2><p>
இதன்படி, வெளிநாட்டு அமைச்சகத்தின் இராஜாங்க அமைச்சராக உமா குமரன் நியமிக்கப்பட்டுள்ளார். </p><p>

இலங்கை, இந்தியா மற்றும் தெற்கு ஆசிய நாடுகள் தொடர்பான பொறுப்புகள் அவரிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பிரித்தானிய நாடாளுமன்றத்திற்கு தெரிவான முதல் தமிழ் பெண் உறுப்பினர் என்ற பெருமையையும் உமா குமரன் பெற்றுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2b1d645d-3e21-4d91-8c6a-c0c3774511aa/26-6a62061821d1d.webp' /></p><p>

இதேவேளை, இலங்கைத் தமிழர்களின் இனப்படுகொலை விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்ற பின்னர், தொடர்ந்து வலுவாக குரல் எழுப்பி வந்ததாகவும் கூறப்படுகின்றது. </p><p>

அத்துடன், கடந்த 14ஆம் திகதி, உள்துறை அமைச்சர் யூஹெட் கூப்பருடன் செம்மணி விவகாரம் மற்றும் இலங்கையில் வாழும் தமிழர்களின் நிலைமை தொடர்பாகவும் அவர் கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-23T13:20:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[டெல்லி மாணவர்கள் போராட்டத்திற்கு ஆதரவு: சமூக வலைத்தள பதிவுகளை நீக்க ஐஐடி மெட்ராஸ் உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/iit-madras-orders-to-remove-student-protest-post-1784812804"></link>
            <id>https://news.lankasri.com/article/iit-madras-orders-to-remove-student-protest-post-1784812804</id>
            <summary type="text">நீட் தேர்வுக்கு எதிரான மாணவர்கள் போராட்டம் தொடர்பான வீடியோ காட்சிகளை நீக்குமாறு ஐஐடி மெட்ராஸ் தங்களுடைய மாணவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. வீடியோ பதிவை...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீட் தேர்வுக்கு எதிரான மாணவர்கள் போராட்டம் தொடர்பான வீடியோ காட்சிகளை நீக்குமாறு ஐஐடி மெட்ராஸ் தங்களுடைய மாணவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.</p><h2> வீடியோ பதிவை நீக்க ஐஐடி மெட்ராஸ் அறிவுறுத்தல்</h2><p>
&nbsp; நீட் தேர்வில் நடைபெற்ற குளறுபடிகளை கண்டித்து நாடு முழுவதும் மாணவர்கள் மற்றும் காக்ரோச் ஜனதா கட்சியினர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.</p><p>இந்நிலையில், போராட்டம் தொடர்பாக இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பகிரப்பட்ட வீடியோ மற்றும் பிற பதிவுகளை உடனடியாக நீக்குமாறு தங்கள் மாணவர்களுக்கு சென்னை இந்திய தொழில்நுட்பக் கழகம் அறிவுறுத்தியுள்ளது.</p><p><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/reel/DbAqdJKpZap/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/reel/DbAqdJKpZap/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/reel/DbAqdJKpZap/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by Voiceof Iitm (@voice_of_students_iitm)</a></p></div></blockquote> <script async src="//www.instagram.com/embed.js"></script></p><p>போராட்டம் தொடர்பான இணையதள உள்ளடக்கங்களை முடக்கும் வகையில் IIT Madras நிர்வாகத்தின் நேரடி தலையீடுகள் இருப்பதாக பெயர் வெளியிடாத மாணவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.</p><p>அதில், ஜந்தர் மந்தர் போராட்டம் தொடர்பான பதிவுகளை நீக்குமாறு டீன் தங்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார். நம்முடைய துறைசார் ஆலோசகரும் அழைக்கப்பட்டுள்ளார்.</p><p></p><p>எனவே ஒற்றுமை போராட்டக் காணொளி உட்பட அனைத்தையும் நாங்கள் நீக்கியுள்ளோம். அந்த காணொளி உருவாக்கத்தில் உங்களுடைய பங்கும் இருந்ததால் உங்களுக்கும் இதனை தெரிவிப்பது முக்கியம் என்று நாங்கள் நினைக்கிறோம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/169c8412-3d26-4626-b7ef-6d7e993419f3/26-6a621506683fd.webp' /></p><p> சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வீடியோவில், மாணவர்கள் பதாகைகளுடன் இருக்கும் காட்சிகள் இடம் பெற்று இருந்தன.
</p><p>அந்த பதாகைகளில் ஜந்தர் மந்தர் போராட்டத்திற்கு ஆதரவு, உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட சோனம் வாங்சுக் மற்றும் மாணவர்களுக்கு ஆதரவு மற்றும் மாணவர்களின் உயிர்கள் முக்கியம் என்பது போன்ற வாசகங்கள் இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-23T13:20:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தியில் தமன்னாவிடம் உடலை வர்ணித்து பேட்டி!! மன்னிப்பு கேட்ட பிரபல நடிகர்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/annu-kapoor-apologises-tamannaah-milky-beauty-1784811786"></link>
            <id>https://viduppu.com/article/annu-kapoor-apologises-tamannaah-milky-beauty-1784811786</id>
            <summary type="text">தமன்னா -&amp;nbsp;அன்னு கபூர்நடிகை தமன்னா சமீபத்தில் நடித்த ’ஆஜ் கி ராத்’ பாடல் நாடு முழுவதும் மிகப்பெரியளவில் ஹிட்டானது. அப்பாடலில் தமன்னாவின் நடனமும் கி...</summary>
            <content type="html"><![CDATA[<h2>தமன்னா -&nbsp;அன்னு கபூர்</h2><p>நடிகை தமன்னா சமீபத்தில் நடித்த ’ஆஜ் கி ராத்’ பாடல் நாடு முழுவதும் மிகப்பெரியளவில் ஹிட்டானது. அப்பாடலில் தமன்னாவின் நடனமும் கிளாமர் தோற்றமும் ரசிகர்களை வெகுவாக ஈர்த்தது. பலரும் சோசியல் மீடியாகளில் அப்பாடலை கொண்டாடிய நிலையில் நடிகர் அன்னு கபூரும் அப்படம் குறித்து பேசியிருந்தார். </p><p>சமீபத்தில் அளித்த பேட்டியில், அந்த பாடலை பார்த்தப்பின் தமன்னாவின் ரசிகனாகவே மாறிவிட்டேன். அவரது அழகையும் உடலமைப்பும் பார்த்து வியந்துபோனேன் என்று கூறியிருந்தார். அதோடுமட்டுமல்லாமல் தமன்னாவை பால் போன்ற மேனி கொண்டவர் என இந்தியில் சரிச்சைக்குரியபடி பேசினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/153de83b-646a-47e8-bdff-e6bc049c23ce/26-6a62110c3b05a.webp' /></p><p> </p><p>மேலும் இந்த பாடலை பார்த்த இளைஞர்களுக்கு தூக்கம் வரவில்லை என்று தமன்னா முன்பு கூறிய கருத்து பற்றி கேட்கப்பட்டது. அதற்கு அன்னு கபூர், அவரது பால் போன்ற மேனியும் முகமும் இளைஞர்கள் நிம்மதியாக தூங்க உதவுகிறது.</p><p> அது ஒரு நல்ல விஷயம், அவருடைய அனைத்து ஆசைகளையும் கடவுள் நிறைவேற்றட்டும், என்னுடைய ஆசிகள் எப்போது அவருக்கு உண்டு என்று கூறியிருந்தார். இது பலருக்கும் பிடிக்காமல் போக, உங்களுக்கு மகள்களும் பேத்திகளும் இருக்கிறார்கள். ஒரு நடிகையை பற்றி இப்படியா பேசுவீர்கள் என்று விளாசினர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/04a7ee86-2980-4711-88c2-75aff22a4c52/26-6a62110ce16f7.webp' /></p><p> </p><h2>மன்னிப்பு</h2><p>இந்நிலையில் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அன்னு கபூர், 300 ஆண்டுகள் ஆங்கிலேயர்களின் ஆட்சியில் வாழ்ந்ததன் தாக்கம் இன்னும் நம்மிடம் இருக்கிறது. ஆங்கிலத்தில் ஒருவரை பாராட்டினால் அது நாகரிகமாக தெரிகிறது. அதே கருத்தை இந்தியில் சொன்னால் மட்டும் தவறாக பார்க்கிறார்கள்.</p><p> அரசியல் ரீதியாக நமக்கு 1947ல் சுதந்திரம் கிடைத்தது, ஆனால் மனரீதியாக இன்னும் ஆங்கிலேயர்களின் தாக்கத்திலிருந்து முழுமையாக வெளிவரவில்லை. </p><p>தமன்னாவை ஆங்கிலத்தில் மில்க் ப்யூட்டி அல்லது மில்கி பாடி என்று சொன்னால் யாரும் கேள்வி கேட்பதில்லை, ஆனால் அதையே இந்தியில் தூதியா பதன் என்று சொன்னால் தவறாக எடுத்துக் கொள்கிறார்கள். </p><p>நான் பேசிய வார்த்தைகள் யாருடைய மனதை புண்படுத்தி இருந்தால் அதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். தமன்னா எப்போதும் மகிழ்ச்சியாக, நல்ல ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும் என்பது என்னுடைய விருப்பம் என்று தெரிவித்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-07-23T13:15:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாடு தழுவிய போராட்டத்திற்கு CJP அழைப்பு - சென்னையில் களமிறங்கிய திரைத்துறையினர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/tamil-actors-actress-in-chennai-anti-neet-protest-1784812301"></link>
            <id>https://news.lankasri.com/article/tamil-actors-actress-in-chennai-anti-neet-protest-1784812301</id>
            <summary type="text">சென்னையில் தமிழ் திரையுலகை சேர்ந்தவர்கள் நீட் எதிர்ப்பு போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

சென்னையில் திரைத்துறையினர் போராட்டம் 

நீட் தேர்வு முறைகேடு...</summary>
            <content type="html"><![CDATA[<p>சென்னையில் தமிழ் திரையுலகை சேர்ந்தவர்கள் நீட் எதிர்ப்பு போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
</p><h3>
சென்னையில் திரைத்துறையினர் போராட்டம் </h3><p>

நீட் தேர்வு முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி டெல்லியில் நடைபெற்று வரும் போராட்டத்தில் காவல்துறை தடியடி நடத்தி வன்முறையை கையாண்டதால் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/efcff12c-b865-4de9-87f1-d115743d9acc/26-6a62131115c54.webp' /></p><p>
தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் போராட்டம் நடைபெற தொடங்கியுள்ள நிலையில், சில இடங்களில் அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபடுவதாக மாணவ அமைப்புகளை சேர்ந்தவர்களை தமிழ்நாடு காவல்துறை கைது செய்தது.&nbsp;</p><p></p><p>

இதனை தொடர்ந்து, ஜல்லிக்கட்டு போராட்டம் போல் மாணவர்கள் மெரினா கடற்கரையில் திரண்டுவிடக்கூடாது என முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மெரினாவில் ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d735a4b6-cc95-4498-92d5-6264353a5c04/26-6a62130ef1da3.webp' /></p><p>
 
இந்நிலையில், சென்னையில் எழும்பூரில் உள்ள ராஜராத்திரத்தினம் மைதானத்தில் இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் சார்பில் போராட்டம் நடைபெற்றது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dc83edf6-32e4-4f90-9865-6544e98a8f73/26-6a62130fa33fc.webp' /></p><p>

இதில் தமிழ் திரையுலகை சேர்ந்த இயக்குநர்கள் பா.ரஞ்சித், வெற்றிமாறன், அமீர், நடிகைகள் ஆண்ட்ரியா, ரேவதி, நடிகர் மன்சூர் அலி கான், எழுத்தாளர் கரண் கார்கி, கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு மாணவர் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும், நீட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்தும் பேசினர். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/56854338-306f-499e-8905-0b8ec5c69c9b/26-6a62131054a24.webp' /></p><p>

சென்னை ராயப்பேட்டையில் உள்ள புதுக்கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.&nbsp;</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">‼️Nationwide Call For Peaceful Protest‼️ <a href="https://t.co/D2jte841z2">pic.twitter.com/D2jte841z2</a></p>&mdash; Cockroach is Back (@Cockroachisback) <a href="https://x.com/Cockroachisback/status/2080246110480982216?ref_src=twsrc%5Etfw">July 23, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>

மேலும், நாடு தழுவிய அளவில் நாளை அமைதி போராட்டத்தை முன்னெடுக்க CJP அழைப்பு விடுத்துள்ளது.&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-23T13:11:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிலிப்பைன்ஸில் இலங்கை மற்றும் வெளிநாட்டு வெளிவிவகார அமைச்சர்கள் சந்திப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/meeting-of-foreign-ministers-of-sl-philippines-1784811043"></link>
            <id>https://tamilwin.com/article/meeting-of-foreign-ministers-of-sl-philippines-1784811043</id>
            <summary type="text">பிலிப்பைன்ஸின் மணிலா நகரில் இடம்பெற்றுவரும் பேச்சுவார்த்தையின் முக்கிய நிகழ்வுகளுக்கு இடையே, இலங்கை, இந்திய, பங்களாதேஷ் வெளிவிவகார அமைச்சர்கள் சந்தித்...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிலிப்பைன்ஸின் மணிலா நகரில் இடம்பெற்றுவரும் பேச்சுவார்த்தையின் முக்கிய நிகழ்வுகளுக்கு இடையே, இலங்கை, இந்திய, பங்களாதேஷ் வெளிவிவகார அமைச்சர்கள் சந்தித்துக்
கலந்துரையாடியுள்ளனர்.</p><p>இலங்கையின் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் மற்றும் பங்களாதேஷ் வெளிவிவகார அமைச்சர் கலீலுர் ரஹ்மான் ஆகியோரைச்&nbsp;சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.</p><p>இந்த சந்திப்புத் தொடர்பில் எக்ஸ் தளத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ள இந்திய
வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், பிராந்திய அளவிலான இந்த முக்கிய
மாநாட்டின்போது இலங்கை மற்றும் பங்களாதேஷ் வெளிவிவகார அமைச்சர்களைச்
சந்தித்ததில் பெருமகிழ்ச்சியடைவதாகக் குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><h2>விவகாரங்கள்&nbsp;</h2><p>ஆசிய - பசிபிக் பிராந்திய நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் மற்றும்
பிரதிநிதிகள் பங்கேற்கும் இம்மாநாட்டில், பிராந்திய பாதுகாப்பு, கூட்டுறவு
மற்றும் சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த பல விவகாரங்கள் தொடர்பில் தீவிரமாக
விவாதிக்கப்பட்டு வருகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ae5995bb-b369-42fc-8e24-cfe681db5ccd/26-6a6210d2718a6.webp' /></p><p>
</p><p>
இன்றும், நாளையும் நடைபெறவுள்ள 33 ஆவது ஆசிய பிராந்திய கூட்டமைப்பு மாநாடு
மற்றும் தென்கிழக்கு ஆசியாவின் நட்பு மற்றும் கூட்டுறவு ஒப்பந்தத்தின் 50 ஆவது
ஆண்டு விழா ஆகிய இரண்டிலும் அமைச்சர் விஜித ஹேரத் உரை நிகழ்த்தவுள்ளார்.</p><p></p><h2>பேச்சுவார்த்தை</h2><p>

ஆசியான் அமைப்பின் பொதுச்செயலாளர், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஆசிய
அபிவிருத்தி வங்கியின் சிரேஷ்ட அதிகாரிகள் உட்படப் பல்வேறு நாடுகளின்
வெளிவிவகார அமைச்சர்களைச் சந்தித்து அவர் இருதரப்புப் பேச்சுவார்த்தைகளில்
ஈடுபடவுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e85d349b-0a4f-404d-bb98-18adf62941c0/26-6a621268b9bcb.webp' /></p><p>

பிலிப்பைன்ஸ் வெளிவிவகாரச் செயலாளர் மா. தெரேசா பி. லசாரோவைச் சந்தித்து
இருதரப்பு உறவுகள் குறித்துக் கலந்துரையாடவுள்ளது.</p><p>அத்துடன், இப்பயணத்தின் ஒரு
பகுதியாகப் பிலிப்பைன்ஸின் மண்டனாவோ பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இலங்கையின்
கௌரவத் தூதரக அலுவலகத்தையும் அமைச்சர் விஜித ஹேரத் உத்தியோகபூர்வமாகத் திறந்து
வைக்கவுள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-23T13:09:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பில் சீன நாட்டவர்களிடையே பதற்றம்! தூதரகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/chinese-citizens-case-sri-lanka-1784811182"></link>
            <id>https://ibctamil.com/article/chinese-citizens-case-sri-lanka-1784811182</id>
            <summary type="text">இலங்கையில் உள்ள சீனக் குடிமக்கள் சம்பந்தப்பட்ட தற்போதைய விவகாரத்தை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக இலங்கையிலுள்ள சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது. 

உ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் உள்ள சீனக் குடிமக்கள் சம்பந்தப்பட்ட தற்போதைய விவகாரத்தை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக இலங்கையிலுள்ள சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.</p><p> 

உண்மைகளைக் கண்டறிய கூடிய விரைவில் விரிவான விசாரணையை நடத்துமாறு இலங்கை அதிகாரிகளுக்கு தூதரகம் கோரிக்கை விடுத்துள்ளது.</p><p>

கொழும்பு துறைமுக நகரில் இரு சீனக் குழுக்களிடை ஏற்பட்ட மோதல் மற்றும் அங்கிருந்து சீன நாட்டவர் ஒருவர் கடத்தப்பட்டுள்ள சம்பங்களை தொடர்ந்து தூதரகத்தின் மேற்படி அறிக்கை வெளியாகியுள்ளது.</p><p></p><h2>சீனக் குடிமக்களின் தனிப்பட்ட பாதுகாப்பு</h2><p>

அறிக்கையில், இது குறித்து முழுமையான விசாரணை நடத்தி, இலங்கையில் உள்ள சீனக் குடிமக்களின் தனிப்பட்ட பாதுகாப்பு, சட்டப்பூர்வ உரிமைகள் மற்றும் நியாயமான நலன்களைப் பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு இலங்கை காவல்துறையிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a65b50cb-e4af-4577-9422-866c34ba3813/26-6a6211fd851c9.webp' /></p><p>

அத்துடன், விசாரணை நடைபெற்று வரும் நிலையில், இலங்கையில் உள்ள சீனக் குடிமக்கள் விழிப்புடன் இருக்குமாறும், தங்களது தனிப்பட்ட பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை வலுப்படுத்திக்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
</p><p>
இதேவேளை, ஏதேனும் அவசரநிலை அல்லது பாதுகாப்பு தொடர்பான சம்பவங்கள் நிகழ்ந்தால், உடனடியாக இலங்கை காவல்துறையிடம் தெரிவிக்குமாறும், தேவைப்படும் பட்சத்தில் உதவிக்கு சீனத் தூதரகத்தைத் தொடர்பு கொள்ளுமாறும் சீனக் குடிமக்களுக்கு தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-23T13:07:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[அம்மா குறித்து நெகிழ்ச்சியுடன் பேசிய சுவாசிகா... கண்கலங்க வைத்த தருணம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/swasika-mothers-of-india-awards-2026-video-1784809899"></link>
            <id>https://manithan.com/article/swasika-mothers-of-india-awards-2026-video-1784809899</id>
            <summary type="text">இயக்குநர் சசி இயக்கத்தில், விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான &#039;நூறு சாமி&#039; திரைப்படத்தில், கணவனை இழந்த பெண்ணாக உருக்கமான கதாபாத்திரத்தில் நடித்திருந்த நடிக...</summary>
            <content type="html"><![CDATA[<p>இயக்குநர் சசி இயக்கத்தில், விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான 'நூறு சாமி' திரைப்படத்தில், கணவனை இழந்த பெண்ணாக உருக்கமான கதாபாத்திரத்தில் நடித்திருந்த நடிகை சுவாசிகா, தனது இயல்பான மற்றும் உணர்வுபூர்வமான நடிப்பின் மூலம் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்தார். </p><p>ஒரு தாயின் வாழ்க்கை, தனிப்பட்ட உணர்வுகள் மற்றும் மறுமணம் தொடர்பான நிஜச் சம்பவங்களை மையமாகக் கொண்டு உருவான அந்தப் படத்தில் அவரது நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9324da80-3519-46c5-a720-a761fbd2d5dc/26-6a621081bed7c.webp' /></p><p></p><p>
</p><p>
இந்நிலையில், தாய்மையைப் போற்றும் வகையில் ஐபிசி தமிழ் பிரம்மாண்டமாக நடத்திய Mothers Of India Awards 2026 விழாவில், நடிகை சுவாசிகாவும் அவரது தாயாரும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு மேடையை அலங்கரித்தனர்.இந்த நிகழ்வு பலரையும் நெகிழச் செய்த உணர்வுபூர்வமான தருணமாக அமைந்தது.
</p><p>
அம்மாவாகப் பலருக்கும் முன்னுதாரணமாக இருக்கும் பெண்களை கௌரவிக்கும் நோக்கில் நடைபெற்ற இந்த விருது விழாவில், நடிகை சுவாசிகாவின் தாயாருக்கு Mothers Of India விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது.</p><p>

விழா மேடையில் தனது அம்மா குறித்து நெகிழ்ச்சியுடனும் பெருமிதத்துடனும் நடிகை சுவாசிகா பகிர்ந்த மனம் தொட்ட உரையின் முழு காணொளியை இங்கே காணலாம்.</p><p></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/K5bv4RONYe4" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b></td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-23T13:01:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ்ப்பாணத்திலும் மெட்ரோ பேருந்து சேவை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/metro-bus-service-in-jaffna-too-next-year-1784797725"></link>
            <id>https://jvpnews.com/article/metro-bus-service-in-jaffna-too-next-year-1784797725</id>
            <summary type="text">&amp;nbsp; அடுத்த ஆண்டு யாழ்ப்பாணம் உள்ளிட்ட நகரங்களில் மெட்ரோ பேருந்து சேவை முன்னெடுக்க உள்ளதாக முக்கிய அறிவிப்பை அமைச்சர் பிமல் ரத்நாயக்க வெளியிட்டுள்ளா...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; அடுத்த ஆண்டு யாழ்ப்பாணம் உள்ளிட்ட நகரங்களில் மெட்ரோ பேருந்து சேவை முன்னெடுக்க உள்ளதாக முக்கிய அறிவிப்பை அமைச்சர் பிமல் ரத்நாயக்க வெளியிட்டுள்ளார்.</p><p>
 
வடக்கு மாகாணத்தின் பொது போக்குவரத்தை நவீனமயமாக்கும் நோக்கில், யாழ்ப்பாணம் உள்ளிட்ட பல நகரங்களில் அடுத்த ஆண்டு முதல் மெட்ரோ பேருந்து சேவையை அறிமுகப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/10336c1c-0aeb-4b9f-8a58-8624ee6376ad/26-6a61da1f37b29.webp' /></p><h2>2035 இல் இலங்கையின் முழு&nbsp; நகரிலும்&nbsp; மெட்ரோ பேருந்துகள்</h2><p>இலங்கையின் நகர்ப்புறப் போக்குவரத்துச் சேவையை நவீனமயமாக்குவது தொடர்பான அரசாங்கத்தின் எதிர்காலத் திட்டங்கள் குறித்துப் போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க நாடாளுமன்றத்தில் நேற்று கருத்துத் தெரிவித்தார்.</p><p>

இதற்கமைய, கொழும்பு நகரை மையமாகக் கொண்டு எதிர்வரும் செப்டம்பர் மாதத்தில் 122 பேருந்துகள் சேவையில் இணைக்கப்படவுள்ளன.</p><p></p><p>&nbsp; ஜனாதிபதியுடன் மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடலுக்கு அமைவாக, இந்த ஆண்டிற்குள் மேலும் 50 பேருந்துகளை இறக்குமதி செய்வதற்கான அனுமதி பெறப்பட்டுள்ளதாகவும், அதற்கமைய 2027ஆம் ஆண்டின் இறுதியளவில் இந்த மொத்தப் பேருந்துகளின் எண்ணிக்கை 172 ஆக உயரும் என எதிர்பார்க்கப்படுவதுடன், அடுத்த ஆண்டில் மேலும் 100 பேருந்துகளைச் சேவையில் இணைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.</p><p></p><p>&nbsp;நாட்டின் நகர்ப்புற போக்குவரத்தை முழுமையாகத் தாழ் தளப் பேருந்துகள் எனப்படும் 'மெட்ரோ பேருந்துகள்' மூலம் முன்னெடுப்பதே அரசாங்கத்தின் முதன்மைக் கொள்கையாகும்.</p><p> 

இந்தத் திட்டத்தின் கீழ், 2029ஆம் ஆண்டளவில் தாழ் தளப் பேருந்துகளின் எண்ணிக்கையை 500 ஆக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
</p><p>
இந்தப் போக்குவரத்துத் துறை கட்டமைப்பை விரிவுபடுத்துவதற்காகத் தனியார் துறை, மாநகரசபைகள், கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் ஓய்வூதிய நிதியங்கள் (Pension Funds) ஆகியவற்றையும் இத்துறையில் முதலீடு செய்து பங்கெடுக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.</p><p></p><p>
</p><p>
மேலும், வருகின்ற 2032 அல்லது 2035ஆம் ஆண்டளவில் இலங்கையின் முழுமையான நகரப் போக்குவரத்துச் சேவையையும் மெட்ரோ பேருந்துகள் மூலமாகவே முன்னெடுப்பதே அரசாங்கத்தின் நோக்கம் என்றும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.</p>]]></content>
            <updated>2026-07-23T12:58:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடத்தல் - சடலம் - 2 கோடி கொள்ளை: இலங்கையில் சீன நாட்டினரைச் சுற்றி மர்மத் தொடர் சம்பவங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/mystery-series-surrounding-china-in-sri-lanka-1784810541"></link>
            <id>https://ibctamil.com/article/mystery-series-surrounding-china-in-sri-lanka-1784810541</id>
            <summary type="text">சீன நாட்டினர் சம்பந்தப்பட்ட தொடர் சம்பவங்கள் இலங்கை முழுவதும் பல காவல்துறை விசாரணைகளைத் தூண்டியுள்ளன.

கொழும்பு துறைமுக நகரில் நடந்ததாகக் கூறப்படும்...</summary>
            <content type="html"><![CDATA[<p>சீன நாட்டினர் சம்பந்தப்பட்ட தொடர் சம்பவங்கள் இலங்கை முழுவதும் பல காவல்துறை விசாரணைகளைத் தூண்டியுள்ளன.</p><p>

கொழும்பு துறைமுக நகரில் நடந்ததாகக் கூறப்படும் கடத்தல், ஒரு சீன நாட்டவர் காணாமல் போனது, எஹெலியகொடவில் சீனக் குடிமகனுடையது என நம்பப்படும் சடலம் கண்டெடுக்கப்பட்டது, மற்றும் கொழும்பில் நடந்த தனியான ரூ. 20 மில்லியன் திருட்டு ஆகியவை குறித்து காவல்துறை அதிகாரிகள் தற்போது விசாரித்து வருகின்றனர்.</p><p>

காவல்துறையின் தகவல்படி, மூன்று சீன நாட்டினர் ஜூலை 22 ஆம் திகதி இரவு கொழும்பு துறைமுக நகரத்திற்கு வந்து, வளாகத்திற்குள் அமைந்துள்ள ஒரு பாலத்திலிருந்து மீன்பிடித்தலில் ஈடுபட்டுள்ளனர்.</p><p></p><h2>வலுக்கட்டாயமாக ஏற்றி செல்லப்பட்ட சீனர்கள்</h2><p>

இதன்படி இன்று வியாழக்கிழமை (23.07.2026) அதிகாலை 2.00 மணி முதல் 3.00 மணிக்குள் அந்த இடத்திற்கு ஒரு கருப்பு வாகனம் ஒன்று வந்துள்ளது 


அது வரை , அந்த நபர்கள் தொடர்ந்து மீன்பிடித்துக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ccd9eb1b-dd41-4322-9837-7ce8b602fa9c/26-6a620f1287c59.webp' /></p><p> </p><p>

முகத்தை மூடியிருந்ததாகக் கூறப்படும் சுமார் 15 முதல் 20 சீன நாட்டினர் அந்த வாகனத்தில் வந்ததாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.</p><p>

இவ்வாறு மீன்பிடித்துக் கொண்டிருந்த மூன்று நபர்களின் முகங்களை அந்தக் கும்பல் மூடி, அவர்களை ஒரு வான் மற்றும் மற்றொரு வாகனத்தில் வலுக்கட்டாயமாக ஏற்றியதாகக் கூறப்படுகிறது. </p><p>ஏற்றிச்செல்லப்பட்ட சீன நாட்டவர்களில் இருவர் பின்னர் சாலையோரத்தில் கைவிடப்பட்டதாகவும், அதனைத் தொடர்ந்து கொழும்பு துறைமுகக் காவல்துறையிடம் இச்சம்பவம் குறித்துப் முறைப்பாடு அளித்ததாகவும் புலனாய்வாளர்கள் தெரிவித்தனர்.</p><p> 

அந்தச் சம்பவத்தின்போது அவ்விருவரும் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இருப்பினும், வியாழக்கிழமை மாலை நிலவரப்படி, மூன்றாவது சீன நாட்டவரின் இருப்பிடம் குறித்து எந்த அதிகாரப்பூர்வ தகவலும் இல்லாததால், அவரைத் தேடவும், கூறப்படும் கடத்தலைச் சுற்றியுள்ள சூழ்நிலைகளை அறியவும் காவல்துறை தனது முயற்சிகளைத் தொடர்கிறது.</p><p>இதற்கிடையில், எஹெலியகோடாவின் கரதானா பகுதியில் சீன நாட்டவர் ஒருவருடையது என நம்பப்படும் சடலம் கண்டெடுக்கப்பட்டது குறித்தும் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.</p><p></p><h2>பிணைக்கப்பட்டிருந்த&nbsp;கைகள் </h2><p>
காட்டுப் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட சடலத்தின் கண்கள் கட்டப்பட்டு, கைகள் பிணைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

 இறந்தவர் ஒரு சீனக் குடிமகனாக இருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர், இருப்பினும் முறையான அடையாளப்படுத்தும் நடைமுறைகள் தொடர்கின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/32cd8313-e65a-4594-aa33-361ab91a49e4/26-6a620f134185c.webp' /></p><p>
</p><p>துறைமுக நகர கடத்தல் சம்பவத்துடன் இந்த சடலத்திற்குத் தொடர்பு உள்ளது என்பதற்கோ அல்லது கூறப்படும் கடத்தலைத் தொடர்ந்து இன்னும் கண்டுபிடிக்கப்படாத சீன நாட்டவருடையது என்பதற்கோ தற்போது எந்த உறுதிப்படுத்தலும் இல்லை என்று காவல்துறை வலியுறுத்தியுள்ளது.
</p><p>
இறந்தவரின் அடையாளத்தை உறுதி செய்வதற்கும், மரணத்திற்கு வழிவகுத்த சூழ்நிலைகளைத் தீர்மானிப்பதற்கும் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

சீன நாட்டினர் சம்பந்தப்பட்ட மற்றொரு விசாரணையின் பின்னணியில் இந்த முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. </p><p>

கடந்த ஜூலை 21 அன்று, கொழும்புப் பகுதியில் ஒரு சீன நாட்டவரால் கொண்டு செல்லப்பட்ட ரூ. 2 கோடி மதிப்பிலான பணம், ஒரு கும்பலால் திருடப்பட்டதாகக் கூறப்படுகிறது.

அந்த வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களில், முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டாராவின் மகன் அனுத பண்டாராவும் ஒருவராவார்.</p><p>

காவல்துறை வட்டாரங்களின்படி, கூறப்படும் 2 கோடி ரூபாய் திருட்டுச் சம்பவத்தில் மற்றொரு சீன நாட்டவருக்கும் தொடர்பு இருப்பதாக நம்பப்படுகிறது.
</p><p>
சந்தேக நபரைக் கண்டுபிடித்துக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை புலனாய்வாளர்கள் தற்போது மேற்கொண்டு வருகின்றனர்.

சீன நாட்டவர் ரூ. 20 மில்லியனை எவ்வாறு பெற்றார் என்பதையும், அந்த நிதியின் மூலத்தையும் கண்டறிய அதிகாரிகள் கூடுதலாக முயன்று வருகின்றனர்.
</p><p>
துறைமுக நகரக் கடத்தல், காணாமல் போன சீன நாட்டவர், எஹெலியகோடாவில் சடலம் கண்டெடுக்கப்பட்டது மற்றும் ரூ. 20 மில்லியன் திருட்டு ஆகியன தொடர்பாக காவல்துறையினர் தனித்தனி விசாரணைகளைத் தொடங்கியுள்ளனர்.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-23T12:54:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரபல நடிகருக்கு விதிக்கப்பட்டது ஒரு வருட சிறை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/one-year-jail-sentence-for-actor-vimal-1784808282"></link>
            <id>https://ibctamil.com/article/one-year-jail-sentence-for-actor-vimal-1784808282</id>
            <summary type="text">காசோலை மோசடி தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் குற்றவாளி என கண்டறிந்த நீதிமன்றம் பிரபல நடிகர் விமலுக்கு ஒருவருட சிறைத்தண்டனை விதித்துள்ளது.

இது தொடர்பில...</summary>
            <content type="html"><![CDATA[<p>காசோலை மோசடி தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் குற்றவாளி என கண்டறிந்த நீதிமன்றம் பிரபல நடிகர் விமலுக்கு ஒருவருட சிறைத்தண்டனை விதித்துள்ளது.
</p><p>
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
</p><p>
நடிகர் விமல் நடித்த திரைப்படம் ‘மன்னர் வகையறா’. இந்தப் படத்தை தயாரிக்க நடிகர் விமல், நிதியாளர் கோபி என்பவரிடமிருந்து ரூ.4.5 கோடி கடனாக பெற்றுள்ளார். படம் வெளியான பின்னரும் அந்தத் தொகையை அவர் வழங்கவில்லை&nbsp;என தெரியவந்துள்ளது.</p><p></p><h2>காசோலை மோசடி</h2><p>பின்னர், அந்த தொகையை விமல் காசோலையாக வழங்கியுள்ளார். </p><p>இந்த காசோலையை கோபி வங்கியில் செலுத்திய போது, கணக்கில் பணம் இல்லை என்று திருப்பி வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fd45e357-7a44-47f1-ae68-8698cad5afcb/26-6a620e83cc4b2.webp' /></p><p> </p><p>இதையடுத்து ரூ.4.5 கோடி காசோலை மோசடி வழக்கை நடிகர் விமல் மீது நிதியாளர் கோபி சென்னையில் உள்ள 11-வது சிறு வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ளார் .</p><p>
</p><p>
இந்த வழக்கு விசாரணைக்காக நடிகர் விமல் ஏற்கெனவே நீதிமன்றத்தில் முன்னிலையாகி இருந்தார்.&nbsp; இதன்போது அவரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் நீதிமன்றினால் மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது </p><p></p><h2>ஒரு வருட சிறைத் தண்டனை</h2><p>
</p><p>


அதில், விமலுக்கு எதிராக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு உள்ளதாகவும் எனவே, அவருக்கு ஒரு வருட சிறைத் தண்டனையை விதிப்பதாகவும், வாங்கிய தொகையை திருப்பிக் கொடுக்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1ac5a2f0-e055-4798-ad83-302c24f2154f/26-6a620e8327b4f.webp' /></p><p> எனினும் இந்த தீர்ப்பு வழங்கும்போது நடிகர் விமல் தரப்பில், மேல்முறையீட்டு செய்ய உள்ளதாகவும், அதுவரை தண்டனையை நிறுத்தி வைக்க கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-23T12:52:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹார்ட் பீட் 3 சீரிஸில் இருந்து விலகிய யோக லட்சுமி.. எமோஷ்னலாக போட்ட பதிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/yogalakshmi-quits-heart-beat-3-1784811108"></link>
            <id>https://cineulagam.com/article/yogalakshmi-quits-heart-beat-3-1784811108</id>
            <summary type="text">சமீபத்தில் அதிகம் ரசிகர்களை கவர்ந்த தொடர்களில் ஒன்றாக இருக்கிறது ஹார்ட் பீட் சீரிஸ். அதன் ரசிகர்களுக்கு தற்போது ஷாக் கொடுத்து இருக்கிறார் நடிகை யோகலட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>சமீபத்தில் அதிகம் ரசிகர்களை கவர்ந்த தொடர்களில் ஒன்றாக இருக்கிறது ஹார்ட் பீட் சீரிஸ். அதன் ரசிகர்களுக்கு தற்போது ஷாக் கொடுத்து இருக்கிறார் நடிகை யோகலட்சுமி.</p><p>அது பற்றி மிகவும் எமோஷ்னலாக அவர் பதிவை போட்டிருக்கிறார். ஹார்ட் பீட் ஷூட்டிங்கில் எடுத்த வீடியோவை பகிர்ந்து அவர் பதிவை எழுதி இருக்கிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/de0b754f-64c6-4c8b-bc75-850a2110e6d3/26-6a620e65e6b4f.webp' /></p><p>
</p><h2>விலகுகிறேன்</h2><p>இதை ஏற்றுக்கொள்வது கடினமாக இருக்கலாம். என்னை மன்னித்துவிடுங்கள். நான் ஹார்ட் பீட் சீரிஸில் இருந்து விலகுகிறேன் என்பதை கனத்த இதயத்துடன் உங்களுக்கு தெரிவித்து கொள்கிறேன். </p><p>
 தேஜு கதாப்பாத்திரம் பல பெண்களுக்கு ஊக்கமளித்து இருக்கிறது. நான் தேஜுவ மிஸ் செய்வேன். </p><p>
பலரும் ஏமாற்றம் அடைந்து இருக்கலாம். இது goodbye அல்ல. என் இறுதி மூச்சு இருக்கும் வரை உங்களை entertain செய்துகொண்டே தான் இருப்பேன். </p><p>

இவ்வாறு யோகலட்சுமி மிகவும் எமோஷ்னலாக பதிவிட்டு இருக்கிறார்.&nbsp;</p><p><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/p/DbIKDsYCPVD/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/p/DbIKDsYCPVD/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/p/DbIKDsYCPVD/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by R Yogalakshmi (@iamyogalakshmi)</a></p></div></blockquote> <script async src="//www.instagram.com/embed.js"></script></p>]]></content>
            <updated>2026-07-23T12:52:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டாரவின் மகனுக்கு விளக்கமறியல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/state-minister-shantha-bandara-son-remanded-1784803526"></link>
            <id>https://ibctamil.com/article/state-minister-shantha-bandara-son-remanded-1784803526</id>
            <summary type="text">சீன நாட்டவர் ஒருவருக்குச் சொந்தமான ரூ. 20 மில்லியன் திருட்டு தொடர்பான வழக்கில் கைது செய்யபட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டாரவின் மகனை, எதிர்வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சீன நாட்டவர் ஒருவருக்குச் சொந்தமான ரூ. 20 மில்லியன் திருட்டு தொடர்பான வழக்கில் கைது செய்யபட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டாரவின் மகனை, எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு&nbsp; நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p>இவ்வாறு கைது செய்யபட்ட குறித்த சந்தேக நபர் மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் 24 மணி நேரம் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டிருந்தார் என குற்றப்புலனாய்வு திணைக்களம் நீதிமன்றத்திற்கு தெரிவித்தது.&nbsp;</p><p>
இந்தச் சம்பவம் தொடர்பாக நீதிமன்றத்தில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தால் முக்கிய ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.&nbsp;</p><p></p><h2>27ஆம் திகதி வரை விளக்கமறியல்</h2><p>இந்த வழக்கில் தொலைபேசி அழைப்புப் பதிவுகள், வங்கிக் கணக்குகள் மற்றும் கிரிப்டோகரன்சி பரிவர்த்தனைகள் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக CID தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/10d691da-15af-4931-a9f5-32af6e17f1e5/26-6a620bebdc95a.webp' /></p><p> </p><p>மேலும், மற்றொரு சந்தேகநபரான அஜித் பிரியந்தாவை கைது செய்யவும், மோசடியில் பயன்படுத்தப்பட்ட வாகனத்தை பறிமுதல் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறபட்டுள்ளது.&nbsp;</p><p>இதன்படி ஏனைய நான்கு சந்தேகநபர்களும் நீதவானின் உத்தவிற்கமைய ஜூலை 27ஆம் திகதி வரை நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். </p><p>மேலும் இச்சம்பவம் தொடர்பான வழக்கு 27ஆம் திகதிக்கு ஒத்திவைக்கபட்டுள்ளது.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-23T12:45:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரணில் - சஜித் அணியுடன் திடீரன கொழும்பில் திரண்ட அரசியல் முக்கியஸ்தர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ranil-sajith-team-meets-unexpectedly-1784810467"></link>
            <id>https://tamilwin.com/article/ranil-sajith-team-meets-unexpectedly-1784810467</id>
            <summary type="text">நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை உயர்த்துவது தொடர்பான அரசாங்கத்தின் முன்மொழிவு தொடர்பில் விவாதிப்பதற்காக, பிரதான எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் ஒன்றுக் கூட...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை உயர்த்துவது தொடர்பான அரசாங்கத்தின் முன்மொழிவு தொடர்பில் விவாதிப்பதற்காக, பிரதான எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் ஒன்றுக் கூடியுள்ளனர். </p><p>

இந்த சந்திப்பு இன்று(23.07.2026) பிற்பகல் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.</p><p> 


நீதிமன்றத்தின் சுதந்திரத்தில் ஏற்படக்கூடிய தாக்கம் தொடர்பில் கவலைகள் காரணமாக எதிர்க்கட்சிகளிடமிருந்து விமர்சனங்களைப் பெற்றுள்ள இந்த முன்மொழிவு தொடர்பாக, ஒரு பொதுவான எதிர்க்கட்சி நிலைப்பாட்டை வகுப்பதற்காக இந்த கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சஜித் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p></p><h2> 

நீதிபதிகளின் ஓய்வு வயது அதிகரிப்பு</h2><p>

இதில் கலந்துகொண்ட அரசியல் பிரமுகர்களில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் ஒருவராக பார்க்கப்படுகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bde851d0-a4d9-446e-9fcf-a863cb82f48c/26-6a620be5ad0ef.webp' /></p><p> </p><p> 

நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை உயர்த்துவது தொடர்பான அரசாங்கத்தின் முன்மொழிவு, சமீப நாட்களாக ஒரு முக்கியப் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.
</p><p>
இதன்போது, நீதித்துறையைப் பாதிக்கும் எந்தவொரு மாற்றமும் பரந்த கலந்தாலோசனைக்குப் பின்னரும் எச்சரிக்கையுடன் அணுகப்பட வேண்டும் என எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் வாதிடப்பட்டுள்ளது.&nbsp; &nbsp;</p><p> </p><p></p><p></p><p><b>&nbsp;YOU MAY LIKE THIS VIDEO</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/yQ2uv7RXhCA" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p>]]></content>
            <updated>2026-07-23T12:45:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[வாகன இறக்குமதி! கூடுதல் தீர்வை வரி விதிப்பின் பின் பதிவான சடுதியான மாற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/vehicle-import-in-sri-lanka-1784809982"></link>
            <id>https://tamilwin.com/article/vehicle-import-in-sri-lanka-1784809982</id>
            <summary type="text">வாகன இறக்குமதிக்கு 50 சதவீத கூடுதல் தீர்வை வரி விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, வாகன இறக்குமதிக்கான நாணயக் கடன் கடிதங்கள் திறக்கப்படும் வீதம் கணிசமாகக் கு...</summary>
            <content type="html"><![CDATA[<p>வாகன இறக்குமதிக்கு 50 சதவீத கூடுதல் தீர்வை வரி விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, வாகன இறக்குமதிக்கான நாணயக் கடன் கடிதங்கள் திறக்கப்படும் வீதம் கணிசமாகக் குறைந்துள்ளதாக பிரதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.</p><p>

நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் (23.07.2026) கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.</p><p>மேலும் தெரிவிக்கையில், இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் வாகன இறக்குமதிக்காகத் திறக்கப்பட்ட நாணயக் கடன் கடிதங்களின் சராசரி மதிப்பு 3.5 மில்லியன் அமெரிக்க டொலர்களாகக் காணப்பட்டது.</p><p></p><h2>நாணயக் கடன் கடிதங்கள் திறப்பில் வீழ்ச்சி</h2><p>
</p><p>
எனினும், கூடுதல் தீர்வை வரி விதிக்கப்பட்டதன் பின்னர் இந்த நிலைமையில் பெருமளவிலான மாற்றம் ஏற்பட்டுள்ளது. </p><p>அதன்படி, கடந்த ஜூலை 20ஆம் திகதி 1.8 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும், ஜூலை 21ஆம் திகதி 1.9 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் மாத்திரமே நாணயக் கடன் கடிதங்கள் திறக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7b0ac7c6-5c7c-4f5a-bf14-c621dd14149e/26-6a620c115e61a.webp' /></p><p>
</p><p>
கூடுதல் தீர்வை வரி நடைமுறைக்கு வந்த மே மாதம் 15ஆம் திகதியன்று மாத்திரம் 23.71 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பில் நாணயக் கடன் கடிதங்கள் திறக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது என அவர் குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><p></p><p><b>YOU MAY LIKE THIS VIDEO</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/KEpX65e7mgQ" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p>]]></content>
            <updated>2026-07-23T12:42:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kumar</name>
            </author>
            <title type="text"><![CDATA[காணாமல்போனோர் அலுவலகத்தினால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் 600இற்கும் மேற்பட்டோர் சாட்சியம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/investigation-by-the-office-of-missing-persons-1784808675"></link>
            <id>https://tamilwin.com/article/investigation-by-the-office-of-missing-persons-1784808675</id>
            <summary type="text">மட்டக்களப்பு மாவட்டத்தில் காணாமல்போனோர் அலுவலகத்தினால் முன்னெடுக்கப்பட்ட
சாட்சியங்களுடனான விசாரணைகளில் 600இற்கும் மேற்பட்டவர்கள்
சாட்சியமளித்துள்ளது...</summary>
            <content type="html"><![CDATA[<p>மட்டக்களப்பு மாவட்டத்தில் காணாமல்போனோர் அலுவலகத்தினால் முன்னெடுக்கப்பட்ட
சாட்சியங்களுடனான விசாரணைகளில் 600இற்கும் மேற்பட்டவர்கள்
சாட்சியமளித்துள்ளதுடன் வாக்குமூலங்களையும் வழங்கியுள்ளதாக காணாமல்போனோர்
அலுவலகத்தின் சிரேஸ்ட சட்டத்தரணி ஜெ.தற்பரன் தெரிவித்துள்ளார்.</p><p>காணாமல்போனோர் அலுவலகம் மற்றும் நீதி அமைச்சு இணைந்து காணாமல்போனோர்
தொடர்பான விசாரணைகளை இரண்டாவது நாளாக இன்றும் (23.07.2026) மட்டக்களப்பு மண்முனைப்பற்று
ஆரையம்பதி பிரதேச செயலகத்தில் முன்னெடுத்திருந்தன.&nbsp;</p><p>காணாமல்போனோர் தொடர்பாக அவர்களது உறவுகளினால்
கிடைக்கப்பெற்றுள்ள முறைப்பாடுகளுக்கு அமைய அவர்களின் சாட்சியங்களை பெற்றுக் கொள்ளும் நடவடிக்கைகள் மட்டக்களப்பு மாவட்டம் முழுவதும் நடைபெற்று
வருகின்ற நிலையில் இன்று மண்முனை பற்று பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.</p><p></p><p>
</p><p>
இதன்போது மண்முனைப் பற்று பிரதேச செயலக பிரிவில் உள்ள காணாமல் போனோரின்
உறவினர்களிடம் சாட்சியங்கள் பெறும் நடவடிக்கைகள் இடம்பெற்றது.</p><h2>சாட்சியம் மற்றும் வாக்குமூலம் பதிவு</h2><p>

இதேபோன்று வவுணதீவு, ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகப்பிரிவுகளிலும் இன்றைய தினம்
சாட்சியங்களை பதிவு செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாக மட்டக்களப்பு
மாவட்டத்தில் காணாமல்போனோர் அலுவலகத்தினால் முன்னெடுக்கப்பட்ட
சாட்சியங்களுடனான விசாரணைகளில் 600க்கும் மேற்பட்டவர்கள்
சாட்சியமளித்துள்ளதுடன், வாக்குமூலங்களையும் வழங்கியுள்ளதாக காணாமல்போனோர்
அலுவலகத்தின் சிரேஸ்ட சட்டத்தரணி ஜெ.தற்பரன் தெரிவித்தார்.</p><p>

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

காணாமல் போனோர் பற்றிய அலுவலகம், தங்களுடைய பூர்வாங்க விசாரணைகளினை
மட்டக்களப்பு மாவட்டத்திலே தொடர்ச்சியாக மூன்று தினங்கள் இந்த மாதத்திலே
நடத்தி வருகின்றார்கள். </p><p>அந்த வகையிலே இன்றைக்கு ஆரையம்பதி, செங்கலடி மற்றும்
வாவுணதீவு பிரதேச செயலகப் பிரிவுகளில் காணாமலாக்கப்பட்டதாக பதிந்து
ஏற்கனவே குடும்பங்கள் அறிவிக்கப்பட்டிருக்கின்றார்கள், விசாரணைக்கு பூர்வாங்க
விசாரணைக்கு வருகை தருமாறு.</p><p></p><p> அந்த வகையிலே வருகை தருமாறு அறிவித்தல்
விடுக்கப்பட்டவர்கள் வருகை தந்து இன்று தங்களுடைய சாட்சிகளுடன்,
விண்ணப்பதாரிகள் தங்களுடைய வாக்குமூலங்களினைப் பதிந்து வருகின்றார்கள்,
அதற்கென்று அமைக்கப்பட்ட விசாரணைக் குழுவின் முன்பதாக. </p><p>இதற்கமைவாக
அழைக்கப்பட்டவர்களில் முதலாவது நாள் – நேற்று முன்தினம் 233 பேரும், நேற்று
203 பேரும், இன்றைக்கு இதுவரைக்கும் 150 பேர், மூன்று பிரதேச செயலகப்
பிரிவிலுமாக மொத்தம் 600க்கும் மேற்பட்டவர்கள் இந்த முறைப்பாடுகளினைத்
தங்களுடைய சாட்சிகளினை, தங்களுடைய வாக்குமூலங்களினை இங்கே பதிவு
செய்திருக்கின்றார்கள்.</p><h2>பூர்வாங்க விசாரணைகள்</h2><p>
</p><p>
இது வந்து ஒரு நடைமுறை முறையின் ஒரு முதன்மையான அம்சம். இது வந்து
2000ஆண்டுக்கு முன்பதாகக் காணாமல் ஆக்கப்பட்டவர்களுடைய பூர்வாங்க விசாரணைகள்.
</p><p>உங்களுக்குத் தெரியும் அமைச்சரவை ஒப்புதல் அளித்ததன்படி ஏற்கனவே ஒரு சிறப்பு
நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் காணாமல் ஆக்கப்பட்டோர் சம்பந்தமான அலுவலகப்
பணியகத்தால முன்னெடுக்கப்படுகின்ற ஒரு நிகழ்வுக்கு அமைவாக, நிகழ்ச்சித்
திட்டத்துக்கு அமைவாக இது முன்னெடுத்துச் செல்லப்படுகின்றது.
</p><p>
இதிலே வந்து வருகை தருபவர்கள், அநேகமானவர்கள் ஏற்கனவே தங்களுடைய காணாமல்
ஆக்கப்பட்ட அல்லது காணாமல் போனவர்கள் சம்பந்தமாகக் காணாமல் போனோர் பற்றிய
அலுவலகம் ஆரம்பிப்பதற்கு முன்பதாகவே இறப்பினை உறுதி செய்து இறப்பு அத்தாட்சிப்
பத்திரத்தினைப் பெற்றிருக்கின்றார்கள்.</p><p></p><p> </p><p>எனவே, எங்களுக்கு அதிலே இருக்கின்ற
சிக்கல் நிலை என்னவென்று சொல்லிச் சொன்னால், கூடுதலானவர்களுக்கு அந்த இறப்பு
சம்பந்தமான விபரங்களினையும் காணாமல் போனமைக்கான காரணங்களினையும் இறப்புச்
சம்பந்தமான காரணங்களினையும் நாங்கள் துல்லியமாக அறிய வேண்டிய தேவை
இருக்கின்றபடியால், எதிர்பார்த்ததை விடவும் சற்று கால நேரம் கூடுதலாகத்
தேவைப்படுகின்ற ஒரு தேவை இருக்கின்றதை நாங்கள் அவதானிக்கக் கூடியதாக
இருக்கின்றது என்றார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-23T12:28:22+00:00</updated>
        </entry>
    </feed>
