<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-07-26T21:38:23+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[டிரம்பின் 50% வரி விதிப்பு அச்சுறுத்தல்: ஆல்பர்ட்டா பிரதமரின் அறிவிப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/alberta-premier-says-she-wont-retaliate-trumps-1785076499"></link>
            <id>https://canadamirror.com/article/alberta-premier-says-she-wont-retaliate-trumps-1785076499</id>
            <summary type="text">கனடியப் பொருட்கள் மீது 50 சதவீதம் வரி விதிக்கப்படும் என்ற அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் எச்சரிக்கைக்குப் பதிலடியாக, அமெரிக்க மதுபானங்களுக்குத் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடியப் பொருட்கள் மீது 50 சதவீதம் வரி விதிக்கப்படும் என்ற அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் எச்சரிக்கைக்குப் பதிலடியாக, அமெரிக்க மதுபானங்களுக்குத் தடை விதிக்கப் போவதில்லை என ஆல்பர்ட்டா மாகாணப் பிரதமர் டேனியல் ஸ்மித் தெரிவித்துள்ளார். </p><p>
சனிக்கிழமை ஒளிபரப்பான வானொலி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>தங்களது கடைகளில் அமெரிக்கப் பொருட்களை விற்பனைக்கு வைப்பது மற்றும் நுகர்வது குறித்த முடிவை சில்லறை வியாபாரிகளிடமும், நுகர்வோரிடமுமே விட்டுவிடுவதாகக் கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/824fa86f-abb5-425c-ad1b-c86a9b2e5fb1/26-6a661b14a3e13.webp' /></p><p>
கனடாவிலிருந்து அமெரிக்காவிற்குள் செல்லும் எந்தவொரு பொருளுக்கும் அமெரிக்கா தடை விதிக்கவில்லை என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.
</p><p>எனவே பதிலுக்கு நாம் தடை விதிப்பது என்பது சற்று தீவிரமான நடவடிக்கையாகிவிடும் எனவும் நாம் இதைக் நிதானமாகவும் அமைதியாகவும் கையாள வேண்டும் எனவும் உணர்ச்சிவசப்படாமல், துறை சார்ந்த சிக்கல்களை ஒவ்வொன்றாக அணுகித் தீர்க்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
</p><p>கடந்த ஆண்டு டிரம்பின் வரி விதிப்பு அச்சுறுத்தல்கள் மற்றும் கருத்துகளுக்குப் பதிலடியாக, கனடாவின் பல மாகாண மதுபானக் கட்டுப்பாட்டு வாரியங்கள் அமெரிக்க மதுபானங்களை வாங்குவதை நிறுத்தியிருந்தன.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-26T21:37:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டை உலுக்கிய கொள்ளைக் கும்பல் ; PickMe சாரதி கொலை வழக்கில் அதிர்ச்சி திருப்பம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/shocking-twist-in-pickme-driver-murder-case-1785086629"></link>
            <id>https://jvpnews.com/article/shocking-twist-in-pickme-driver-murder-case-1785086629</id>
            <summary type="text">நாட்டின் பல்வேறு பகுதிகளில் துப்பாக்கி மற்றும் பிற ஆயுதங்களைப் பயன்படுத்தி பொதுமக்களை அச்சுறுத்தி பல கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் முன...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டின் பல்வேறு பகுதிகளில் துப்பாக்கி மற்றும் பிற ஆயுதங்களைப் பயன்படுத்தி பொதுமக்களை அச்சுறுத்தி பல கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் முன்னாள் இராணுவ அதிகாரி ஒருவரையும், அவரது மகனையும் ஹோமகம பொலிஸார் கைது செய்துள்ளனர்.</p><p>
</p><p></p><p>கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபர், பனாகொட இராணுவ முகாமின் விளையாட்டுப் பிரிவின் பொறுப்பாளராக முன்னர் பணியாற்றிய முன்னாள் இராணுவ அதிகாரி என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><h3>ஆரம்பகட்ட விசாரணை</h3><p> </p><p>ஆரம்பகட்ட விசாரணைகளின் அடிப்படையில், அவர் தனது மகனுடன் இணைந்து பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டிருந்ததாகவும் தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7cf33b6f-49a7-4bc8-aa71-8e753ce779f5/26-6a6642a85c088.webp' /></p><p>
கடந்த 16ஆம் திகதி அதிகாலை ஹோமகம, கலகஹேன பகுதியில் உள்ள கால்வாயொன்றில் இருந்து வாடகை மோட்டார் சைக்கிள் சேவையில் (PickMe) ஈடுபட்டிருந்த சாரதி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டது. </p><p>பின்னர் மேற்கொள்ளப்பட்ட பிரேதப் பரிசோதனையில், அவரது கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தமை உறுதிப்படுத்தப்பட்டது.</p><p>

கொலை செய்யப்பட்ட சாரதியின் மோட்டார் சைக்கிள், தங்க நெக்லஸ், கையடக்கத் தொலைபேசி மற்றும் பணப்பை ஆகியனவும் கொள்ளையிடப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>

சம்பவம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் கிடைத்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, உயிரிழந்த PickMe சாரதி மற்றொருவரை தனது மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு சென்றிருந்தது கண்டறியப்பட்டது.</p><p> இதையடுத்து மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளில், அந்த நபரே சாரதியைக் கொலை செய்திருந்ததாகவும், பின்னர் அவர் மற்றும் அவரது தந்தை இணைந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டிருந்ததாகவும் தெரியவந்துள்ளது.</p><p>

விசாரணைகளின்படி, கொலை இடம்பெற்ற மறுநாளே, சந்தேகநபர்கள் உயிரிழந்த சாரதியின் மோட்டார் சைக்கிளைப் பயன்படுத்தி மொரகஹஹேன பகுதியில் பெண்ணொருவரை கூர்மையான ஆயுதங்களால் அச்சுறுத்தி அவரது தங்க நெக்லஸை கொள்ளையிட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><h3>மேலதிக விசாரணை</h3><p>
</p><p>
மேலும், ஹோமகம, அவிசாவளை, கிரியுல்ல மற்றும் தெஹியோவிட்ட பகுதிகளில் இடம்பெற்ற நான்கு தனித்தனி ஆயுதக் கொள்ளைச் சம்பவங்களுடனும் கைது செய்யப்பட்ட முன்னாள் இராணுவ அதிகாரிக்கு தொடர்பு இருப்பதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5c79eb11-d6a2-4146-bb59-2fefa3289316/26-6a6642a7a84eb.webp' /></p><p>
</p><p>
இந்நிலையில், ஹோமகம, பிட்டிபன பகுதியில் உள்ள வீடொன்றில் சந்தேகநபர் தங்கியிருப்பதாக கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பில், முன்னாள் இராணுவ அதிகாரியும் அவரது மகனும் கைது செய்யப்பட்டனர்.</p><p>

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட வெடிகுண்டொன்றும், 500 மில்லிகிராம் ஹெரோயினும் கைப்பற்றப்பட்டுள்ளன.</p><p>அத்துடன், குற்றச்செயல்களுக்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் பல்சர் ரக மோட்டார் சைக்கிளும், இரத்தக்கறை படிந்திருந்த மோட்டார் சைக்கிள் தலைக்கவசமொன்றும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹோமகம பொலிஸார் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். </p><p>கைது செய்யப்பட்ட தந்தை மற்றும் மகனை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.</p><p></p>]]></content>
            <updated>2026-07-26T21:37:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[பெர்லின் பிரைட் பேரணி தாக்குதல் ; சந்தேகநபர் பொலிஸ் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/berlin-pride-attack-suspect-killed-police-shooting-1785101722"></link>
            <id>https://canadamirror.com/article/berlin-pride-attack-suspect-killed-police-shooting-1785101722</id>
            <summary type="text">ஜேர்மனியின் பெர்லின் நகரில் நடைபெற்ற பிரைட் (Pride) பேரணியின் மீது நடத்தப்பட்ட தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகநபர், பொலிஸாரின் தேடுதல் நடவடிக்கையின்போத...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜேர்மனியின் பெர்லின் நகரில் நடைபெற்ற பிரைட் (Pride) பேரணியின் மீது நடத்தப்பட்ட தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகநபர், பொலிஸாரின் தேடுதல் நடவடிக்கையின்போது இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளதாக ஜேர்மன் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p>

மேற்கு பெர்லினிலுள்ள ஸ்பாண்டாவ் (Spandau) பகுதியில் அமைந்துள்ள தோட்டம் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட பொலிஸ் நடவடிக்கையின்போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/efab52f6-8de0-40ce-94f7-b0076d9df318/26-6a667d9c48952.webp' /></p><p>உயிரிழந்தவர் அப்துல் பலூத் (Abdul Ballout) என்ற 21 வயதுடைய இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர், பிரைட் பேரணியின் போது மக்கள் கூட்டத்துக்குள் வாகனத்தை செலுத்தியதுடன், கத்தியால் பலரைத் தாக்கியதாகவும் குற்றம் சாட்டப்பட்டிருந்தார்.
</p><p>
இந்தத் தாக்குதலில் பெண் ஒருவர் உயிரிழந்ததுடன், குறைந்தது 29 பேர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
</p><p>
லெபனான் பின்னணியைக் கொண்ட ஜேர்மன் பிரஜையான அப்துல் பலூத், ஏற்கனவே குற்றப் பின்னணி கொண்டவர் எனவும், ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் இணைவதற்கு முயற்சித்தவர் எனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

தாக்குதலைத் தொடர்ந்து, ஜேர்மனியில் பாதுகாப்பு அச்சுறுத்தல் நிலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இதேபோன்ற தாக்குதல்கள் மீண்டும் இடம்பெறுவதற்கான வாய்ப்புகளை நிராகரிக்க முடியாது எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
</p><p>
பிரைட் பேரணியின் கொண்டாட்டத்துக்காக தயாரான பெர்லின் நகரம், எதிர்பாராத வன்முறைச் சம்பவத்தால் அதிர்ச்சியிலும் சோகத்திலும் மூழ்கியுள்ளதாக ஜேர்மன் ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.</p>]]></content>
            <updated>2026-07-26T21:35:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ்ப்பாணம் - விக்டோரியா கல்லூரியின் 150வது ஆண்டு விழா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/jaffna-150th-anniversary-of-victoria-college-1785101181"></link>
            <id>https://tamilwin.com/article/jaffna-150th-anniversary-of-victoria-college-1785101181</id>
            <summary type="text">யாழ்ப்பாணம், சுழிபுரம் விக்டோரியா கல்லூரியின் 150ஆவது ஆண்டு நிறைவு விழாவின்
இரண்டாம் நாள் நிகழ்வு, பாடசாலையின் திறந்தவெளி அரங்கில் சனிக்கிழமை (25.07....</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம், சுழிபுரம் விக்டோரியா கல்லூரியின் 150ஆவது ஆண்டு நிறைவு விழாவின்
இரண்டாம் நாள் நிகழ்வு, பாடசாலையின் திறந்தவெளி அரங்கில் சனிக்கிழமை (25.07.2026) நடைபெற்றது.
</p><p>
பாடசாலை முதல்வர் திருமதி க.சுலபாமதியின் தலைமையில் நடைபெற்ற இந்த வரலாற்றுச்
சிறப்புமிக்க நிகழ்வில், வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் பிரதம
விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்பித்தார்.</p><p>

இவ்விழாவின் பிரதான அம்சமாக விக்டோரியா கல்லூரியின் 150 ஆண்டு கால வரலாற்றைப்
பறைசாற்றும் 'விக்ரோறிய வித்தகம்' எனும் சிறப்பு மலர் உத்தியோகபூர்வமாக
வெளியிட்டு வைக்கப்பட்டது. </p><p>இந்நிகழ்வில் வலிகாமம் மேற்குப் பிரதேச சபையின்
தவிசாளர் விக்ரோறியன் ச.ஜெயந்தன் மற்றும் வலிகாமம் வலயக் கல்விப் பணிப்பாளர்
திருமதி ஜமுனா ராஜசீலன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக்
கலந்துகொண்டிருந்தனர்.</p><p>

மங்கல விளக்கேற்றல் மற்றும் இறைவணக்கத்துடன் ஆரம்பமான இந்நிகழ்வில், வரவேற்பு
நடனம், குழு இசை, 'பதம்' நடனம், சிங்களப் பாடல், 'காலிங்க நர்த்தனம்' நாட்டிய
நாடகம் மற்றும் 'துப்பல் பரிசு' நாடகம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்வுகள்
அரங்கேறிச் சபையோரைச் சிறப்பித்தன. </p><p>அத்துடன், மாணவர்களுக்கும்,
பல்கலைக்கழகத்துக்குத் தெரிவாகிய மாணவர்களுக்கும் இதன்போது விசேட பரிசில்கள்
வழங்கி கௌரவிக்கப்பட்டன.</p>]]></content>
            <updated>2026-07-26T21:26:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[நிர்ணய விலையை மீறி குடிநீர் விற்பனை ; நிறுவனத்திற்கு ரூ.10 இலட்சம் அபராதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/selling-drinking-water-fixed-price-fined-10-lakh-1785099766"></link>
            <id>https://jvpnews.com/article/selling-drinking-water-fixed-price-fined-10-lakh-1785099766</id>
            <summary type="text">நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு குடிநீர் போத்தல்களை விற்பனை செய்த குற்றத்திற்காக, குற்றம் சாட்டப்பட்ட நிறுவனம் ஒன்றிற்கு 10 லட்சம் ரூபாய் அப...</summary>
            <content type="html"><![CDATA[<p>நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு குடிநீர் போத்தல்களை விற்பனை செய்த குற்றத்திற்காக, குற்றம் சாட்டப்பட்ட நிறுவனம் ஒன்றிற்கு 10 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்க நீதிமன்றம் நடவடிக்கை எடுத்துள்ளது.</p><p></p><p>நுகர்வோர் விவகார அதிகாரசபையின் புலனாய்வு அதிகாரிகள் நடத்திய சோதனையின் போது, சம்பந்தப்பட்ட நிறுவனம் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலையில் குடிநீர் போத்தல்களை விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4052360a-5d34-49fe-9c3a-09a47197c371/26-6a6675f8adb3e.webp' /></p><p>இதனைத் தொடர்ந்து, பண்டாரவளை நீதவான் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-26T21:02:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானுக்கு நெதன்யாகு விடுத்த கடுமையான எச்சரிக்கை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/netanyahu-s-stern-warning-to-iran-1785098572"></link>
            <id>https://ibctamil.com/article/netanyahu-s-stern-warning-to-iran-1785098572</id>
            <summary type="text">இஸ்ரேல் மீது நேரடியாகவோ அல்லது அதன் ஆதரவு அமைப்புகள் மூலமாகவோ நடத்தப்படும் எந்தவொரு தாக்குதலும் மிகவும் சக்திவாய்ந்த முறையில் பதிலடி கொடுக்கப்படும் என...</summary>
            <content type="html"><![CDATA[<p>இஸ்ரேல் மீது நேரடியாகவோ அல்லது அதன் ஆதரவு அமைப்புகள் மூலமாகவோ நடத்தப்படும் எந்தவொரு தாக்குதலும் மிகவும் சக்திவாய்ந்த முறையில் பதிலடி கொடுக்கப்படும் என இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு ஈரானை எச்சரித்துள்ளார்.
</p><p>
ஊடகமொன்றுக்கு அளித்த நேர்காணலில், போரை முடிவுக்குக் கொண்டுவர ஈரானின் ஆட்சி வீழ வேண்டும் அல்லது சவூதி அரேபியா, பஹ்ரைன், கத்தார், குவைத், ஐக்கிய அரபு அமீரகம், இஸ்ரேல் மற்றும் ஜோர்டான் ஆகிய நாடுகளுக்கு ஈரான் கொடுக்க வேண்டிய விலையை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
</p><p>
ட்ரம்ப்பின் இராஜதந்திர முயற்சிகளுக்குத் தான் முழு ஆதரவு அளிப்பதாக தெரிவித்த நெதன்யாகு, ஒப்பந்தத்துடன் அல்லது ஒப்பந்தம் இல்லாமல் ஈரானின் அணுசக்தித் திட்டம் முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.</p><p></p><h2>ட்ரம்பின் முன்மொழிவு&nbsp;</h2><p>

முறையான உறவுகளை ஏற்படுத்துவதற்குப் பதிலாக, சவூதி-இஸ்ரேல் உறவை சீராக்குவதற்கு ட்ரம்ப் முன்மொழிந்த நிபந்தனையான ரியாத்துக்கு ராணுவ அணுசக்தி திட்டம் இல்லாமல், சிவில் அணுசக்தித் திட்டத்தை வழங்கும் முன்மொழிவை தான் ஆதரிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9afda122-a8bf-4802-98a9-6d3640e68ee2/26-6a66714e223b5.webp' /></p><p><i>Image Credit: Reuters</i></p><p>
</p><p>
லெபனான் குறித்துப் பேசிய நெதன்யாகு, இஸ்ரேலியப் படைகள் ஹெஸ்பொல்லாவை இஸ்ரேல்-லெபனான் எல்லையிலிருந்து 5 முதல் 8 மைல்கள் வரை பின்னோக்கித் தள்ளியுள்ளதாகவும், அதன் தோராயமாக 150,000 ஏவுகணைகள் மற்றும் ரொக்கெட்டுகளில் சுமார் 94 வீதத்தை அழித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank" style=""><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-26T20:53:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[மூத்த ஊடகப் புகைப்படப்பிடிப்பாளர் சண்முகலிங்கம் சுரேந்திரனின் மறைவுக்கு இரங்கல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/senior-media-photographer-shanmugalingam-surendran-1785097832"></link>
            <id>https://tamilwin.com/article/senior-media-photographer-shanmugalingam-surendran-1785097832</id>
            <summary type="text">மூத்த ஊடகப் புகைப்படப்பிடிப்பாளரும் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் சிரேஷ்ட
உறுப்பினருமான சண்முகலிங்கம் சுரேந்திரனின் மறைவுச் செய்தி அதிர்ச்சியையும்
...</summary>
            <content type="html"><![CDATA[<p>மூத்த ஊடகப் புகைப்படப்பிடிப்பாளரும் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் சிரேஷ்ட
உறுப்பினருமான சண்முகலிங்கம் சுரேந்திரனின் மறைவுச் செய்தி அதிர்ச்சியையும்
ஆழ்ந்த வேதனையையும் தருகின்றது என்று தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் விடுத்துள்ள
இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளது.
</p><p>
அதில், "சுமார் 40 வருடங்களுக்கு மேலாகச் சண்முகலிங்கம் சுரேந்திரன் பத்திரிகையின் புகைப்படப் பிடிப்பாளராகக் கடமையாற்றி, அண்மையில் தனது உடல்நிலை
காரணமாக ஓய்வு பெற்றிருந்த நிலையிலேயே, தனது 69 ஆவது வயதில் திருகோணமலையில் நேற்று காலமானார்.
</p><p>
திருகோணமலை, சாம்பல்தீவைப் பிறப்பிடமாகக் கொண்ட சுரேந்திரன், கொழும்பு
மட்டக்குளியை வசிப்பிடமாகக் கொண்டே தனது புகைப்பட ஊடகப் பணியைச் செவ்வனே ஆற்றி
வந்தார்.</p><p></p><h2>பூதவுடல் நல்லடக்கம்&nbsp;</h2><p>

ஊடகத்துறையில் தன்னை இணைத்துக்கொண்டது முதல் தனது இறுதிமூச்சு வரை ஊடகப் பணியை
உயிர் மூச்சாகக் கொண்டிருந்தவர். புகைப்பட ஊடகவியலாளர் ஒருவர் எவ்வாறிருக்க
வேண்டும் என்பதற்கு அவர் சிறந்ததொரு முன்மாதிரியாகத் திகழ்ந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7463538d-4806-4cd1-8f9b-d85592676069/26-6a6672ba3abaa.webp' /></p><p>
</p><p>
தனது புகைப்படங்கள் மூலம் தமிழ் மக்களின் மனங்களில் ஆழப்பதிந்த சுரேந்திரன்,
தான் பணிபுரிந்த ஊடகத்தின் மேம்பாட்டுக்காக அயராது அர்ப்பணிப்புமிக்க சேவைகளை
முன்னெடுத்தவர். யுத்த காலச் சூழ்நிலை உட்பட நெருக்கடியான, சவால்மிக்க
காலகட்டங்களில் கூட ஊடக நேர்மை தவறாமல் அயராது பணியில் ஈடுபட்டார்.
</p><p>
தனது துணிச்சலான, தனித்துவமான புகைப்படப் பணியின் மூலம் தமிழ் ஊடகங்களில்
தனிமதிப்பும் தமிழ் மக்களின் மனங்களில் தனி இடமும் பிடித்திருந்த
சுரேந்திரனின் மறைவு, தமிழ் ஊடகத்துறைக்கும் தமிழ் ஊடகவியலாளர்
ஒன்றியத்துக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாக உள்ளது. </p><p>அன்னாரின் இழப்பால்
துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்பதுடன்,
அவரின் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்கின்றோம்." - என்று அதில் மேலும்
குறிப்பிடப்பட்டுள்ளது.
</p><p>
அன்னாரது இறுதிக்கிரியைகள் நாளைமறுதினம் செவ்வாய்க்கிழமை முற்பகல் 10
மணியளவில், இலக்கம் 08, நித்தியபுரி, மூன்றாம் கட்டை, திருகோணமலை என்ற
முகவரியில் நடைபெற்று, சாம்பல்தீவு இந்து மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம்
செய்யப்படவுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-26T20:49:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சஜித் பிரேமதாசவுக்கு எதிரான அரசியல் நடவடிக்கைளை தீவிரப்படுத்த அரசாங்கம் தீர்மானம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/government-decides-political-actions-sajith-1785098488"></link>
            <id>https://tamilwin.com/article/government-decides-political-actions-sajith-1785098488</id>
            <summary type="text">எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு எதிரான அரசியல் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அதன் ஒரு கட்டமாக அவருக்கு எதிரா...</summary>
            <content type="html"><![CDATA[<p>எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு எதிரான அரசியல் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.</p><p>

அதன் ஒரு கட்டமாக அவருக்கு எதிரான முறைப்பாடுகள் மற்றும் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகளை மீண்டும் முன்னெடுக்க அரசாங்கம் உத்தேசித்துள்ளது.
</p><p>
அதன் மூலம் 'நீங்கள் அரசாங்கத்துக்கு எதிராக தீவிரமாக செயற்பட முயற்சித்தால் இதுதான் உங்களுக்கு நடக்கும்...' என்று சஜித்துக்கு ஒரு சமிக்ஞையை விடுக்க அரசாங்கம் நாட்டம் கொண்டுள்ளது.</p><p></p><h2>குற்றச்சாட்டு&nbsp;</h2><p> 2015-2019 நல்லாட்சிக் காலத்தில் நடைபெற்ற சம்பவங்களின் அடிப்படையில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தொடர்பாக 3 விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/299e85b1-9a61-44dc-adb7-252d58c2ea7d/26-6a66724068bd3.webp' /></p><p> </p><p>அவற்றில் ஒன்று, சஜித்தின் பாரியார் ஜலனி பிரேமதாசவுக்குச் சொந்தமான அழகுநிலையத்தில் பணியாற்ற வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை ஊழியர்கள் பயன்படுத்தப்பட்டனர் என்ற குற்றச்சாட்டு முக்கியமானது.
</p><p>
இது தொடர்பாக வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை அதிகாரிகள் மற்றும் சம்பந்தப்பட்ட ஊழியர்களின் அனைத்து வாக்குமூலங்களும் பெறப்பட்டிருந்தாலும், ஜனாதிபதியால் கொடுக்கப்பட்ட 'சிவப்பு சமிக்ஞை' காரணமாக விசாரணை அப்படியே இடைநிறுத்தம் செய்யப்பட்டிருந்தது.</p><p></p><h2>விசாரணை</h2><p>
</p><p>
தற்போது குறித்த விசாரணைகளை மீண்டும் முன்னெடுக்க அரசாங்கத் தரப்பு உத்தேசித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a228cccc-ec9e-4fba-a1d8-b586f43d620d/26-6a667241171e4.webp' /></p><p>

நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை நீடிப்பதற்கு எதிராக கடந்த 23ம் திகதி எதிர்க்கட்சியின் சகல தலைவர்களையும் தனது அலுவலகத்தில் ஒன்றுகூட்டிய எதிர்க்கட்சித் தலைவரின் செயற்பாடு அரசாங்கத்துக்கு ஆழ்ந்த மன உளைச்சலைக் கொடுத்துள்ளது.</p><p> அதன் காரணமாகவே சஜித் பிரேமதாசவுக்கு எதிரான விசாரணைகளை தூசுதட்ட அரசாங்கம் தீர்மானித்துள்ளது.&nbsp;&nbsp;</p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-26T20:47:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிளிநொச்சியில் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் மற்றும் விசேட அதிரடிப்படையினர் மீது தாக்குதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/wildlife-department-officials-attacked-kilinochchi-1785098405"></link>
            <id>https://jvpnews.com/article/wildlife-department-officials-attacked-kilinochchi-1785098405</id>
            <summary type="text">கிளிநொச்சி - அக்கராயன்குளம் பகுதியில் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் மற்றும் காவல்துறை விசேட அதிரடிப்படையினர் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பி...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிளிநொச்சி - அக்கராயன்குளம் பகுதியில் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் மற்றும் காவல்துறை விசேட அதிரடிப்படையினர் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 9 பேரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.</p><p>
</p><p></p><p>சந்தேகநபர்களை கிளிநொச்சி நீதவான் முன்னிலையில் பிரசன்னபடுத்திய போதே இந்த விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.</p><h3>மேலதிக விசாரணை</h3><p>

இதற்கமைய, கைது செய்யப்பட்ட 09 சந்தேகநபர்களையும் எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4289810d-340c-429c-ac9f-58c453629e48/26-6a6670a6e4023.webp' /></p><p>முன்னதாக, கிளிநொச்சி - முட்கொம்பன் பகுதியில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியை சட்டவிரோதமான முறையில் அழித்துத் துப்புரவு செய்வதாகக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளும், காவல்துறை விசேட அதிரடிப்படையினரும் இணைந்து தேடுதல் நடவடிக்கையொன்றை முன்னெடுத்திருந்தனர்.
</p><p>
இதன்போது, சம்பவ இடத்திலிருந்த சிலர் அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததுடன், அவர்கள் மீது தாக்குதலிலும் ஈடுபட்டுள்ளனர்.
</p><p>
நிலைமை தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, நிலைமையைக் கட்டுப்படுத்தும் நோக்கில் காவல்துறை விசேட அதிரடிப்படையினர் வானத்தை நோக்கி எச்சரிக்கைத் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
</p><p>

இந்த மோதலில் காவல்துறை விசேட அதிரடிப்படையைச் சேர்ந்த 04 அதிகாரிகள் காயமடைந்து, கிளிநொச்சி மாவட்ட பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
</p><p>
இதேவேளை, கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களில் ஒருவருக்குத் திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டமையால், அவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
</p><p>
மேலும், பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியைச் சட்டவிரோதமாக அழிப்பதற்குப் பயன்படுத்தப்பட்ட கனரக இயந்திரங்களையும் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.</p><p>

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்கராயன்குளம் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-26T20:40:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரான் அச்சுறுத்தல் காரணமாக விமானத்தை மாற்றிய ட்ரம்ப்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/iran-threat-forces-trump-plane-swap-in-turkey-1785097814"></link>
            <id>https://news.lankasri.com/article/iran-threat-forces-trump-plane-swap-in-turkey-1785097814</id>
            <summary type="text">ஈரான் அச்சுறுத்தல் காரணமாக துருக்கியில் ட்ரம்ப் தனது விமானத்தை மாற்றினார்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப், துருக்கியில் நடைபெற்ற NATO உச்சி மாந...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரான் அச்சுறுத்தல் காரணமாக துருக்கியில் ட்ரம்ப் தனது விமானத்தை மாற்றினார்.
</p><p>
அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப், துருக்கியில் நடைபெற்ற NATO உச்சி மாநாட்டில் கலந்து கொண்டபோது, ஈரான் சார்ந்த பிரதிநிதி படைகள் அவரை குறிவைத்து தாக்குதல் நடத்தும் அபாயம் இருப்பதாக அமெரிக்க ரகசிய சேவை தகவல் பெற்றது.
</p><p>
இதனால், அவர் பயணித்திருந்த புதிய Boeing 747-8 விமானத்திலிருந்து பழைய Air Force One-க்கு மாற்றப்பட்டார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a50eb8a1-edc5-4897-a3bf-bce40baa5c97/26-6a666e5880a60.webp' /></p><p>இந்த Boeing 747-8 விமானத்தை கத்தார் அரசு அமெரிக்காவுக்கு வழங்கியிருந்தது. ஆனால், அதில் பழைய Air Force One-ல் உள்ள மேம்பட்ட பாதுகாப்பு அமைப்புகள் இல்லாததால், ரகசிய சேவை அதிகாரிகள் உடனடியாக மாற்றம் செய்ய அறிவுறுத்தினர்.
</p><p>
ட்ரம்ப் இந்த மாற்றத்தை “பிரித்தானியாவில் உள்ள அமெரிக்க படையினருக்கு புதிய விமானத்தை காட்டுவதற்காக” என கூறியிருந்தாலும், அதிகாரப்பூர்வ தகவல்கள் பாதுகாப்பு காரணமே உண்மையான காரணம் என உறுதிப்படுத்துகின்றன.</p><p>இந்த சம்பவம், புதிய விமானத்தின் பாதுகாப்பு குறைபாடுகளை வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது. </p><p></p><p>ஜனாதிபதி ட்ரம்ப் கூட, “விமானத்தில் ஏவுகணை எதிர்ப்பு பாதுகாப்பு இல்லை, ஆனால் விரைவில் மேம்படுத்தப்படும்” என தெரிவித்துள்ளார்.

வெள்ளை மாளிகை, இந்த புதிய விமானம் பாதுகாப்பானது என்றாலும், கூடுதல் மேம்பாடுகள் செய்யப்படும் என அறிவித்துள்ளது.
</p><p>
அமெரிக்க ரகசிய சேவை இயக்குநர், “அமெரிக்க தலைவர்களுக்கு எதிரான அச்சுறுத்தல்கள் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளன” என எச்சரித்துள்ளார்.
</p><p>
இந்த சம்பவம், அமெரிக்கா-ஈரான் இடையிலான பதற்றத்தை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-26T20:28:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹமாஸ் அமைப்புக்கு பேரிழப்பு! முக்கிய தளபதியை வீழ்த்தியது இஸ்ரேல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/israeli-army-killed-hamas-drone-commander-1785097074"></link>
            <id>https://ibctamil.com/article/israeli-army-killed-hamas-drone-commander-1785097074</id>
            <summary type="text">மத்திய காசாவில் நடத்திய தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் தளபதி ஒருவரைக் கொன்றுவிட்டதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது.

கொல்லப்பட்டவர் ஹமாம் ஈத் என அடை...</summary>
            <content type="html"><![CDATA[<p>மத்திய காசாவில் நடத்திய தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் தளபதி ஒருவரைக் கொன்றுவிட்டதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது.
</p><p>
கொல்லப்பட்டவர் ஹமாம் ஈத் என அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், ட்ரோன்கள் தயாரிப்பிற்கு அவரே பொறுப்பாக இருந்தார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, ஹமாஸ் அமைப்பின் வான்வழிப் படையை மீண்டும் கட்டியெழுப்ப ஈத் சமீபத்தில் முயன்றதாக இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது.</p><p></p><h2>போர்நிறுத்த ஒப்பந்தம்</h2><p>
</p><p>
ஒக்டோபர் மாதம் அமெரிக்காவின் மத்தியஸ்தத்தில் எட்டப்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தத்தைக் குறிப்பிட்டு இந்த அறிக்கை வெளியாகியுள்ளது.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">🔴ELIMINATED: Hamam Eid, the Commander of the Hamas’ UAV Cell in the central camps.<br><br>Previously, he had served as the Head of the Drone Unit in the central camps. As part of his current role, he was responsible for the production of UAVs for Hamas, and intended to harm Israeli… <a href="https://t.co/f967TXmw0T">pic.twitter.com/f967TXmw0T</a></p>&mdash; Israel Defense Forces (@IDF) <a href="https://x.com/IDF/status/2081398317494206902?ref_src=twsrc%5Etfw">July 26, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p> </p><p>

இந்த ஒப்பந்தம் காசாவில் இருந்து இஸ்ரேலிய படைகளை படிப்படியாக விலக்கிக் கொள்வதையும், ஹமாஸை சரிபார்க்கப்பட்ட முறையில் ஆயுதங்களைக் களையச் செய்வதையும் வலியுறுத்தியது.
</p><p>
இருப்பினும், இந்த ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவது பெரும்பாலும் முடங்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.&nbsp;&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-26T20:25:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானை சீண்டி விட்ட உக்ரைன்! பதிலடி நிச்சயம் - அராக்ச்சி வெளியிட்ட அறிவிப்பால் பதற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/ukraine-s-caspian-sea-attack-iran-warn-1785095860"></link>
            <id>https://ibctamil.com/article/ukraine-s-caspian-sea-attack-iran-warn-1785095860</id>
            <summary type="text">கஸ்பியன் கடலில் ஈரானிய வணிகக் கப்பல் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி மீது ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கஸ்பியன் கடலில் ஈரானிய வணிகக் கப்பல் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி மீது ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்ச்சி நேரடியாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
</p><p>
 ஒரு மாலுமி உயிரிழந்த இந்தச் சம்பவத்தை பதிலடி கொடுக்காமல் விட முடியாது என்று அவர் எச்சரித்துள்ளார்.</p><p></p><h2>அராக்ச்சியின் பதிவு</h2><p>
</p><p>
தனது எக்ஸ் சமுக ஊடக பக்கத்தில் பதிவிட்டுள்ள அராக்ச்சி, ஐரோப்பாவை போருக்குள் இழுப்பதற்காக இஸ்ரேலின் தூண்டுதலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட இத்தாக்குதல் ஐ.நா சாசனத்தின் தெளிவான மீறல் என்று விமர்சித்துள்ளார்.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Zelenskyy has attacked an Iranian commercial vessel, killing a sailor. A blatant UN Charter violation done at Israel&#39;s behest to drag Europe into its war. <br><br>In calls with EU High Rep Kallas and FM Lavrov, made clear that what the freeloader in Kyiv did CANNOT GO UNANSWERED.</p>&mdash; Seyed Abbas Araghchi (@araghchi) <a href="https://x.com/araghchi/status/2081406217486778612?ref_src=twsrc%5Etfw">July 26, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p> </p><p>

ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுக் கொள்கைத் தலைவர் காஜா கல்லாஸ் மற்றும் ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் ஆகியோருடன் தொலைபேசியில் பேசியபோது, “கீவ் நிர்வாகம் செய்த இந்தச் செயலுக்குக் கண்டிப்பாகப் பதிலடி கொடுக்கப்படும்” என்பதைத் தெளிவுபடுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><h2>உக்ரைனின் உளவுத்துறை</h2><p>
</p><p>
ஈரானுடன் தொடர்புடைய இராணுவப் பொருட்களை ஏற்றிச் செல்லப் பயன்படுத்தப்படும் கப்பல்களுக்கு எதிராக கஸ்பியன் கடலில் உக்ரைன் நீண்ட தூரத் தாக்குதல்களை நடத்தியதை ஜெலென்ஸ்கி உறுதிப்படுத்தியதைத் தொடர்ந்து இந்த எச்சரிக்கை வெளியாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f0e7f4ff-4f03-46f7-bb75-1aa0ad890c18/26-6a6668ba90dea.webp' /></p><p> </p><p>

எவ்வாறாயினும், ஈரானுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே இராணுவ உபகரணங்களைக் கொண்டு செல்லும் தடைகளுக்குட்பட்ட சரக்குக் கப்பல்களை இலக்கு வைத்ததாக உக்ரைனின் உளவுத்துறை தெரிவித்துள்ளது.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-26T20:06:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டின் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைக்கு அமெரிக்கா ஒத்துழைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/us-supports-country-s-dengue-eradication-efforts-1785096106"></link>
            <id>https://jvpnews.com/article/us-supports-country-s-dengue-eradication-efforts-1785096106</id>
            <summary type="text">இலங்கை முழுவதும் பரவிவரும் டெங்கு நோயை கட்டுப்படுத்தும் பணிகளுக்கு அமெரிக்கா ஒத்துழைப்புக்களை வழங்கவுள்ளது. 

அதன்படி நாட்டின் பொதுச் சுகாதாரத்துறைய...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை முழுவதும் பரவிவரும் டெங்கு நோயை கட்டுப்படுத்தும் பணிகளுக்கு அமெரிக்கா ஒத்துழைப்புக்களை வழங்கவுள்ளது. </p><p>

அதன்படி நாட்டின் பொதுச் சுகாதாரத்துறையை வலுப்படுத்தும் நோக்கில் அமெரிக்கா புதிய திட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளது.</p><p></p><p> 

கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம், சுகாதார அமைச்சு மற்றும் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு ஆகியன இணைந்து இத்திட்டத்தைச் செயல்படுத்துகின்றன.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/852a48e9-1d24-4b3e-aa99-804eadfb3ce1/26-6a6667ac033bf.webp' /></p><p>தொழில்நுட்ப ஒத்துழைப்பு மற்றும் அறிவைப் பகிர்ந்துகொள்வதன் மூலம் டெங்கு நோயைத் தடுத்தல், கண்டறிதல் மற்றும் அதற்குப் பதிலளிக்கும் திறன்களை மேம்படுத்துவதே இதன் பிரதான நோக்கமாகும். </p><p>

அமெரிக்கப் பாதுகாப்புத் திணைக்களத்தின் வெளிநாட்டு மனிதநேய, பேரிடர் உதவித் திட்டத்தின் நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் இந்த முயற்சி, நுளம்புகள் பெருக்கம் அடையும் இடங்களை அழித்தல், பொதுமக்களுக்கான விழிப்புணர்வு திட்டங்கள் மற்றும் முன்னறிவிப்பு அடிப்படையிலான தடுப்பு உத்திகள் உள்ளிட்ட இலங்கையின் பரந்த டெங்கு ஒழிப்பு முயற்சிகளுக்கு ஆதரவளிக்கத் திட்டமிட்டுள்ளது. </p><p>

இலங்கையிலுள்ள சமூகங்களுக்கு டெங்கு தொடர்ந்து ஒரு தீவிர சவாலாக இருந்து வருகிறது எனச் சுட்டிக்காட்டிய இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தின் பதில் தூதுவர் ஜேன் ஹோவெல், இந்தக் கூட்டாண்மையானது உடனடி நோயெதிர்ப்புத் திறன்களையும் நீண்டகால பொதுச் சுகாதாரத் திறன்களையும் வலுப்படுத்த உதவும் எனக் குறிப்பிட்டார்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-26T20:06:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தியாவின் தேர்வு முறைகள் குறித்து முக்கிய நடவடிக்கை.. மோடி வெளியிட்ட தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/pm-modi-task-force-exam-under-infosys-co-founder-1785093931"></link>
            <id>https://tamilwin.com/article/pm-modi-task-force-exam-under-infosys-co-founder-1785093931</id>
            <summary type="text">இந்தியாவின் தேர்வு முறைகளை மேம்படுத்துவது தொடர்பாய் ஆராய்ந்து அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்க, இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் நந்தன் நிலேகணி தலைமையில் சிறப்பு ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியாவின் தேர்வு முறைகளை மேம்படுத்துவது தொடர்பாய் ஆராய்ந்து அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்க, இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் நந்தன் நிலேகணி தலைமையில் சிறப்பு பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளதாகப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
</p><p>
இது குறித்து எக்ஸ் (X) தளத்தில் அவர் வெளியிட்டுள்ள காணொளி பதிவில், "மாணவர்களின் எதிர்காலத்திற்காக இந்திய அரசு தொடர்ந்து பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மாணவர்களின் எதிர்காலத்துடன் விளையாடியவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.</p><p></p><h2>புதிய சட்டம்..&nbsp;</h2><p> </p><p>இதற்காக விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கடுமையான சட்டப் பிரிவுகளுடன் கூடிய புதிய சட்டத்தைக் கொண்டுவரும் திசையிலும் நாடாளுமன்றத்தில் செயல்பட்டு வருகிறோம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bc66099e-f4af-40f1-aab3-a933871b6617/26-6a6665d6ef11f.webp' /></p><p>
</p><p>
எனினும், நாம் எதிர்காலத்தைக் குறித்துச் சிந்திக்க வேண்டும். நமது தேர்வு முறை நம்பகமானதாகவும், வெளிப்படையானதாகவும், நவீனத் தொழில்நுட்பத்தின் பயன்பாட்டை அதிகளவில் கொண்டதாகவும் இருக்க வேண்டும்.</p><p>இதைக் கருத்தில் கொண்டு, சர்வதேச அளவில் புகழ்பெற்ற தொழில்நுட்ப வல்லுநரான நந்தன் நிலேகணி தலைமையில் உயர்மட்டப் பணிக்குழுவை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. </p><p>அக்குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில், வரவிருக்கும் தேர்வுகளின் நம்பகத்தன்மையை உறுதி செய்வதற்கான பணிகள் விரைவாக மேற்கொள்ளப்படும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-26T19:54:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தெவிநுவர விஷ்ணு பெரஹெராவிலிருந்து காவடி நடனம் நீக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/kavadi-dance-removed-dondra-vishnu-perahera-1785090319"></link>
            <id>https://tamilwin.com/article/kavadi-dance-removed-dondra-vishnu-perahera-1785090319</id>
            <summary type="text">இரண்டு பாதாள உலகக்கும்பல்களின் மோதல் மற்றும் அச்சுறுத்தல் காரணமாக தெவிநுவர விஷ்ணு பெரஹெராவிலிருந்து காவடி நடனத்தை தற்காலிகமாக நீக்கம் செய்யுமாறு பொலிஸ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இரண்டு பாதாள உலகக்கும்பல்களின் மோதல் மற்றும் அச்சுறுத்தல் காரணமாக தெவிநுவர விஷ்ணு பெரஹெராவிலிருந்து காவடி நடனத்தை தற்காலிகமாக நீக்கம் செய்யுமாறு பொலிஸ் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.</p><p>&nbsp;தெவிநுவரவில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க உத்பலவண்ண ஸ்ரீ விஷ்ணு மகா தேவாலயத்தில் 769வது வருடாந்திர எசல மகா பெரஹெர விரைவில் நடத்தப்படவுள்ளது.</p><p>

இந்நிலையில் குறித்த பெரஹெரவில் காவடி நடனத்தை தற்காலிகமாக நீக்குமாறு பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய பரிந்துரைத்துள்ளார்.</p><p></p><h2>காவடி நடனம் நீக்கம்</h2><p>
</p><p>
ஜூலை 25 ம் திகதியிட்ட கடிதத்தில் பொலிஸ் மா அதிபர் வழங்கிய இந்த உத்தியோகபூர்வ எழுத்துப்பூர்வ அறிவுறுத்தலின் பேரில், மாத்தறை மாவட்ட செயலாளர் சந்தன திலகரத்ன, தேவாலயத்தின் பஸ்நாயக்க நிலமே- ஆரச்சிகே திலின மதுசங்க ஆகியோரிடம் சம்பந்தப்பட்ட காவடி பெரஹெர அம்சத்தை நீக்குவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/894ee7d7-bb9a-40e0-87b4-d2df9f8ddcd1/26-6a66630ccc1d0.webp' /></p><p>
</p><p>
பாதுகாப்பு அமைச்சின் தேசிய புலனாய்வுத் பிரதானி, அரச புலனாய்வு சேவை, பொலிஸ் விசேட பணியகம் மற்றும் தென் மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ஆகியோர் வழங்கிய புலனாய்வு மதிப்பீட்டு அறிக்கைகளின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-26T19:42:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[வங்கதேசத்தில் மீட்கப்பட்ட இலங்கை கடற்றொழிலாளர்கள்! அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/steps-taken-to-bring-back-two-fishermen-1785092567"></link>
            <id>https://ibctamil.com/article/steps-taken-to-bring-back-two-fishermen-1785092567</id>
            <summary type="text">
கடலில் விபத்துக்குள்ளாகி பங்களாதேஷ் கடற்பரப்பிற்கு மிதந்துச் சென்ற மாத்தறை, தேவேந்திரமுனை பகுதியைச் சேர்ந்த கடற்றொழிலாளர்களையும் தந்தையையும் மகனையும...</summary>
            <content type="html"><![CDATA[<p>
கடலில் விபத்துக்குள்ளாகி பங்களாதேஷ் கடற்பரப்பிற்கு மிதந்துச் சென்ற மாத்தறை, தேவேந்திரமுனை பகுதியைச் சேர்ந்த கடற்றொழிலாளர்களையும் தந்தையையும் மகனையும் உடனடியாக நாட்டுக்கு அழைத்து வருவதற்கு மீன்பிடி, நீரியல் வளங்கள் பிரதி அமைச்சர் ரத்ன கமகே நேரடியாக தலையிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>
கடந்த ஜூன் 19 ஆம் திகதி தேவேந்திரமுனை மீன்பிடித் துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்று காணாமல் போயிருந்த 'சோமிரச' படகிலிருந்த எஸ். எச். பியசேன மற்றும் அவரது மகனான எஸ். எச். சமிந்த ஆகியோரே இவ்வாறு பங்களாதேஷ் கடற்பரப்பிற்கு வழிமாறி சென்றுள்ளதாக கூறப்படுகிறது.</p><p>
குறித்த மீன்பிடிப் படகு கடலில் இயந்திரக் கோளாறுக்கு உள்ளானதைத் தொடர்ந்து, அதிலிருந்த கடற்றொழிலாளர் ஒருவர் வேறு படகொன்றின் மூலம் கரைக்கு வந்து சேர்ந்துள்ளார்.&nbsp;</p><p></p><h2>தூதரகங்களுக்கு அறிவிப்பு</h2><p>

எனினும், படகின் உரிமையாளரான பியசேனவும் அவரது மகன் சமிந்தவும் படகைக் கைவிடாமல் அதிலேயே தங்கியிருந்துள்ளனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cefad98e-3001-4359-b1cc-a700b47b7783/26-6a66606429809.webp' /></p><p><i>Image Credit:&nbsp;Vecteezy</i></p><p>
படகில் படகு கண்காணிப்பு அமைப்போ (VMS) அல்லது கரையுடன் தொடர்புகொள்வதற்கான HF வானொலி இயந்திரமோ இல்லாதிருந்தமையால், அவர்கள் இருக்கும் இடத்தைக் கண்டறிவது கடினமாகியிருந்தது.&nbsp;</p><p>
அவர்களைக் கண்டறிவதற்காகக் கடற்படையும் விமானப்படையும் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கைகளும் பலனளிக்கவில்லை.&nbsp;</p><p>

இருப்பினும், நிலவும் கடல் நீரோட்டங்களுக்கு ஏற்பப் படகு தொலைதூரப் பகுதிக்கு மிதந்து செல்லக்கூடும் என மீன்பிடித் திணைக்களம் கணித்ததன் அடிப்படையில், வெளிநாட்டுத் தூதரகங்களுக்குப் அறியத்தரப்பட்டிருந்தது.&nbsp;</p><h2>பங்களாதேஷில் மீட்பு&nbsp;</h2><p>
அதற்கமைய, குறித்த படகு பங்களாதேஷ் கடற்பரப்பிற்கு அடித்துச் சென்றுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், பங்களாதேஷ் மீனவர்கள் குழுவொன்றினால் அதிலிருந்த தந்தையும் மகனும் மீட்கப்பட்டுள்ளனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/76063f1b-cde3-42e0-8189-daea9a31633e/26-6a66606370adf.webp' /></p><p>
சுமார் ஒரு நாள் வரை பங்களாதேஷ் மீனவர் ஒருவரின் வீட்டில் தங்கியிருந்த அவர்கள், தற்போது சிட்டகொங் பகுதியிலுள்ள பொலிஸ் நிலையமொன்றின் பொறுப்பில் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.&nbsp;</p><p>

இச்செய்தி கிடைத்தவுடன் பிரதி அமைச்சர் ரத்ன கமகே, பங்களாதேஷிலுள்ள இலங்கைத் தூதரகத்துடன் தொடர்பு கொண்டு அவர்களை உடனடியாக நாட்டுக்கு அழைத்து வரத் தேவையான ஏற்பாடுகளைச் செய்யுமாறு பணித்துள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<b><a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> WHATSAPP CHANNEL </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-26T19:31:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரான்ஸ் போர்டோ அருகே காட்டுத்தீ -ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/france-wildfire-near-bordeaux-forces-evacuations-1785093586"></link>
            <id>https://news.lankasri.com/article/france-wildfire-near-bordeaux-forces-evacuations-1785093586</id>
            <summary type="text">பிரான்ஸ் நாட்டின் போர்டோ நகரம் அருகே பரவியுள்ள காட்டுத்தீ காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் அவசரமாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.

ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி, ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரான்ஸ் நாட்டின் போர்டோ நகரம் அருகே பரவியுள்ள காட்டுத்தீ காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் அவசரமாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.</p><p>

ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி, போர்டோவின் தெற்குப் பகுதிகளில் உள்ள கிராமங்களில் இருந்து சுமார் 55,000 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.</p><p></p><p>இந்த தீ, நகர மையத்திலிருந்து 25 முதல் 30 கிலோமீட்டர் தொலைவில் பரவி வருகிறது. </p><p>நகர மேயர் தோமஸ் காசனவே, போர்டோ நகரம் முழுவதும் வெளியேற்றப்பட வாய்ப்பு குறைவாக இருப்பதாக தெரிவித்தாலும், தீயின் வேகம் மற்றும் திசை மாற்றம் காரணமாக நிலைமை மிகுந்த ஆபத்தானதாக உள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d291eb07-8ffc-4af7-a7ae-d496d0b448da/26-6a665dd3bbcf6.webp' /></p><p>இந்த காட்டுத்தீ பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் நாடுகளில் கடந்த வாரம் முழுவதும் பரவி, மொத்தம் 3.3 லட்சம் மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். </p><p>பிரான்சில் மட்டும் 42,000 ஹெக்டேர் காடுகள் எரிந்துள்ளன. இது இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு ஏற்பட்ட மிகப்பெரிய காட்டுத்தீ என அதிகாரிகள் கூறுகின்றனர்.
</p><p><blockquote class="twitter-tweet"><p lang="pl" dir="ltr">Francja ewakuowała ponad 220 000 osób, gdy największy pożar lasu rozprzestrzenia się na południowym zachodzie kraju, zagrażając Bordeaux <a href="https://t.co/O5OyYdEMWg">pic.twitter.com/O5OyYdEMWg</a></p>&mdash; Poland news War in Ukraine (@Propeertys) <a href="https://x.com/Propeertys/status/2081315422113091682?ref_src=twsrc%5Etfw">July 26, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>தீயணைப்பு பணிகளில் 2,500 தீயணைப்பு வீரர்கள், 1,500 இராணுவத்தினர் மற்றும் 1,200 பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.</p><p>தீயின் தீவிரம் காரணமாக போர்டோ விமான நிலையத்தில் பல விமானங்கள் தாமதமாகியுள்ளன. 28 ஈசிஜெட் விமானங்கள் தாமதமாகியுள்ளதுடன், ஐந்து விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.</p><p><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="fr" dir="ltr">🚨 ALERTE ROUGE 🚨<br><br>Vue DRAMATIQUE depuis un Canadair : les flammes dévorent tout à seulement 15 km de la métropole bordelaise !!<br><br>Le mégafeu de Gironde n’est plus contenu… Bordeaux est aux portes de l’enfer. Des milliers déjà évacués, le feu avance, le vent souffle…<br><br>On est en… <a href="https://t.co/EEg6SAaSw5">pic.twitter.com/EEg6SAaSw5</a></p>&mdash; SPIRITFIT (@SpiriTfitT) <a href="https://x.com/SpiriTfitT/status/2081433851981627582?ref_src=twsrc%5Etfw">July 26, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>

பிரான்ஸ் உள்துறை அமைச்சர் லாரன்ட் நுனெஸ், “நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. தீ போர்டோ நகரப் பகுதிக்குத் தாறுமாறாக நகர்கிறது” என எச்சரித்துள்ளார். </p><p>அதேசமயம், பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான், “நாடு மீண்டும் கட்டியெழுப்பப்படும். அரசு மக்கள் பக்கம் எப்போதும் இருக்கும்” என்று உறுதியளித்துள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/41a24339-0282-4324-83eb-1ae967270683/26-6a665dd474353.webp' /></p><p></p><p>ஸ்பெயினிலும் தீ பரவி, மாட்ரிட் மற்றும் வாலென்சியா பகுதிகளில் 90,000 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். வாலென்சியா பிராந்தியத் தலைவர், “இந்த தீ எங்கள் கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்டது” என தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/06793982-7c5f-4e64-8f3d-430da2945271/26-6a665dd529a31.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-26T19:17:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹோர்முஸ் நீரிணையில் வெடித்து சிதறிய எண்ணெய் கப்பல்..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/oil-tanker-explodes-in-strait-of-hormuz-1785078684"></link>
            <id>https://tamilwin.com/article/oil-tanker-explodes-in-strait-of-hormuz-1785078684</id>
            <summary type="text">ஈரான் நிர்ணயித்திருந்த கப்பல் போக்குவரத்து வழித்தடத்தை விட்டு விலகிச் சென்ற எண்ணெய் டாங்கர், ஹோர்முஸ் நீரிணையில் கடற்படை கண்ணிவெடியில் மோதியதைத் தொடர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரான் நிர்ணயித்திருந்த கப்பல் போக்குவரத்து வழித்தடத்தை விட்டு விலகிச் சென்ற எண்ணெய் டாங்கர், ஹோர்முஸ் நீரிணையில் கடற்படை கண்ணிவெடியில் மோதியதைத் தொடர்ந்து வெடித்துள்ளதாக ஈரானின் அரசுடன் தொடர்புடைய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
</p><p>
ஈரானின் Tasnim செய்தி நிறுவனம் வெளியிட்ட தகவலின்படி, குறித்த டாங்கர் ஈரான் அதிகாரிகள் குறிப்பிட்டிருந்த கடல் வழித்தடத்தை விட்டு விலகிச் சென்ற பின்னர் கண்ணிவெடியில் மோதி வெடித்துள்ளது.</p><p></p><h2>ஹோர்முஸ் நீரிணை</h2><p> </p><p>

எனினும், இந்தச் சம்பவத்தில் உயிரிழப்புகள் ஏற்பட்டதா, எந்தக் கப்பல் தொடர்புடையது, சேதத்தின் அளவு என்ன என்பது குறித்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை.
</p><p>
கடந்த ஜூன் 26ஆம் திகதி, ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் கப்பல்கள் ஈரான் இராணுவம் நிர்ணயித்த பாதைகளில் மட்டுமே பயணிக்க அனுமதிக்கப்படும் என ஈரான் எச்சரித்திருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/688255a9-64c8-4479-9858-436dd1f1bd55/26-6a662c7e8ab6d.webp' /></p><p>
</p><p>
ஈரானின் Mehr செய்தி நிறுவனம், தகவலறிந்த வட்டாரங்களை மேற்கோள் காட்டி வெளியிட்ட செய்தியில், அனுமதிக்கப்பட்ட பாதையை விட்டு விலகியதன் காரணமாகவே கப்பல் கடற்படை கண்ணிவெடியில் சிக்கியதாக தெரிவித்துள்ளது.</p><p>
அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான பதற்றம் கடந்த சில வாரங்களாக மீண்டும் அதிகரித்துள்ள நிலையில், இரு நாடுகளும் இராணுவ நடவடிக்கைகளை மீண்டும் தீவிரப்படுத்தியுள்ளன.</p><p></p><h2>இராணுவ எச்சரிக்கை</h2><p>
</p><p>
இதற்கிடையில், ஜூலை 8ஆம் திகதி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், கடந்த மாதம் ஈரானுடன் கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) முடிவுக்கு வந்துவிட்டதாக அறிவித்து, அந்த ஒப்பந்தத்தை ஈரான் மீறியுள்ளதாக குற்றஞ்சாட்டியிருந்தார்.</p><p>

இதற்கு முன்னதாக வியாழக்கிழமை, ஹோர்முஸ் நீரிணையின் தென்பகுதியில் அனுமதியற்ற பாதையை பயன்படுத்த முயன்றதாகக் கூறப்படும் மூன்று எண்ணெய் டாங்கர்களை இஸ்லாமிய புரட்சிகர காவல் படை (IRGC) எச்சரித்திருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/554776c8-54c0-4bb8-b2c4-1e115014be5c/26-6a662c7f38777.webp' /></p><p>
</p><p>
அதில், ஒரு டாங்கர் வெடிகுண்டில் சிக்கி தீப்பற்றியதாகவும், அதைத் தொடர்ந்து மற்ற இரண்டு கப்பல்களும் திரும்பிச் சென்றதாகவும் IRGC தெரிவித்துள்ளது. அதிகாரிகளுடன் ஒருங்கிணைப்பு இல்லாமல் ஹோர்முஸ் நீரிணையை கடக்க முயற்சிக்கும் எந்தக் கப்பலும் இதேபோன்ற விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்றும் எச்சரிக்கப்பட்டது.
</p><p>
மேலும், ஜூலை 14ஆம் திகதி, இராணுவ எச்சரிக்கையைப் புறக்கணித்து, தங்களது வழிகாட்டி (Navigation) அமைப்புகளை அணைத்துவிட்டு, கண்ணிவெடிகள் பதிக்கப்பட்ட பாதைக்குள் நுழைந்ததாகக் கூறப்படும் இரண்டு எண்ணெய் டாங்கர்களை IRGC தாக்கி செயலிழக்கச் செய்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p></p>]]></content>
            <updated>2026-07-26T19:14:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[மதுபோதையில் இரு பெண்களை மோதிய பொலிஸ் அதிகாரி கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/police-officer-arrested-hitting-two-women-drunk-1785093160"></link>
            <id>https://jvpnews.com/article/police-officer-arrested-hitting-two-women-drunk-1785093160</id>
            <summary type="text">ஹோமகம சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரிவின் விசேட விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரியாக (OIC) பணியாற்றும் பிரதான பொலிஸ் பரிசோதகர் ஒருவர், மதுபோதையில் கார...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹோமகம சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரிவின் விசேட விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரியாக (OIC) பணியாற்றும் பிரதான பொலிஸ் பரிசோதகர் ஒருவர், மதுபோதையில் காரைச் செலுத்தி இரண்டு வெவ்வேறு இடங்களில் இரு பெண்களை விபத்துக்குள்ளாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளதாக மீகொட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>
</p><p></p><p>பொலிஸாரின் தகவலின்படி, நேற்று முன்தினம் (25) இரவு 11.30 மணி முதல் 11.57 மணி வரையிலான காலப்பகுதியில், ஹைலெவல் வீதியில் உள்ள மீகொட எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகிலும், வட்டரக்க 20ஆம் கட்டை பகுதியிலும் அடுத்தடுத்து இந்த இரண்டு விபத்துகள் இடம்பெற்றுள்ளன.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/800b516b-944f-4cfc-85ca-bd5457c4fa19/26-6a665c29c45da.webp' /></p><p>விபத்துகளை ஏற்படுத்திய பின்னர் காரில் தப்பிச் செல்ல முயன்ற சந்தேகநபரை பொலிஸார் கைது செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
கைது செய்யப்பட்ட அதிகாரியிடம் மேற்கொள்ளப்பட்ட மதுபோதைப் பரிசோதனையில், அவர் மதுபோதையில் வாகனத்தை இயக்கியிருந்தமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>

கைது செய்யப்பட்ட பிரதான பொலிஸ் பரிசோதகர் இன்று (26) ஹோமகம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக மீகொட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-26T19:12:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானிய கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதல்: ஜெலென்ஸ்கிக்கு ஈரான் கடும் எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/attack-iranian-ship-caspian-sea-iran-warn-zelensky-1785092047"></link>
            <id>https://tamilwin.com/article/attack-iranian-ship-caspian-sea-iran-warn-zelensky-1785092047</id>
            <summary type="text">கெஸ்பியன் கடலில் ஈரானிய வணிகக் கப்பல் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் மாலுமி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில், உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கெஸ்பியன் கடலில் ஈரானிய வணிகக் கப்பல் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் மாலுமி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில், உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி மீது ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி நேரடி குற்றச்சாட்டைச் சுமத்தியுள்ளார்.
</p><p>
இது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், இத்தாக்குதலானது ஐ.நா சாசனத்தின் வெளிப்படையான மீறல் என்றும், ஐரோப்பாவைப் போருக்குள் இழுக்க இஸ்ரேலின் தூண்டுதலால் செய்யப்பட்டது என்றும் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>இஸ்ரேல் மீது குற்றச்சாட்டு&nbsp;&nbsp;</h2><p> </p><p>அத்துடன் கியீவில் உள்ளவரால் செய்யப்பட்ட இந்தச் செயலை பதிலடி கொடுக்காமல் விட்டுவிட முடியாது என ஐரோப்பிய ஒன்றிய மற்றும் ரஷ்ய வெளியுறவு அமைச்சர்களுடனான உரையாடலில் தெளிவுபடுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7386c330-7ed0-4c8f-ba14-e019de594103/26-6a665958c3a0e.webp' /></p><p>
</p><p>
ஈரானில் இருந்து ரஷ்யாவிற்கு இராணுவ தளபாடங்களைக் கொண்டு செல்லப் பயன்படுத்தப்பட்ட தடை விதிக்கப்பட்ட கப்பல்களை இலக்கு வைத்து கெஸ்பியன் கடலில் தாக்குதல் நடத்தியதை உக்ரைன் உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி உறுதிப்படுத்தியுள்ளார்.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Zelenskyy has attacked an Iranian commercial vessel, killing a sailor. A blatant UN Charter violation done at Israel&#39;s behest to drag Europe into its war. <br><br>In calls with EU High Rep Kallas and FM Lavrov, made clear that what the freeloader in Kyiv did CANNOT GO UNANSWERED.</p>&mdash; Seyed Abbas Araghchi (@araghchi) <a href="https://x.com/araghchi/status/2081406217486778612?ref_src=twsrc%5Etfw">July 26, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>
</p><p>
இத்தாக்குதலில் மேலும் ஒரு மாலுமி காயமடைந்துள்ள நிலையில், தெஹ்ரானில் உள்ள உக்ரைன் தூதரக அதிகாரியை நேரில் அழைத்துக் கண்டனம் தெரிவித்துள்ள ஈரான், ரஷ்யா - உக்ரைன் மோதலில் தாம் நடுநிலை வகிப்பதாகக் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-26T19:06:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதிக விலைக்கு அரிசி விற்பனை ; வர்த்தக நிலையத்திற்கு ரூ.5 இலட்சம் அபராதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/selling-rice-at-high-prices-rs-5-lakh-fine-imposed-1785092195"></link>
            <id>https://jvpnews.com/article/selling-rice-at-high-prices-rs-5-lakh-fine-imposed-1785092195</id>
            <summary type="text">அரசாங்கத்தினால் நிர்ணயிக்கப்பட்டிருந்த அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு இறக்குமதி செய்யப்பட்ட கீரி பொன்னி அரிசியை விற்பனை செய்த காலி, அக்மீமன...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரசாங்கத்தினால் நிர்ணயிக்கப்பட்டிருந்த அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு இறக்குமதி செய்யப்பட்ட கீரி பொன்னி அரிசியை விற்பனை செய்த காலி, அக்மீமன பகுதியிலுள்ள விற்பனை நிலையமொன்றுக்கு 5 இலட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p></p><p>இறக்குமதி செய்யப்பட்ட கீரி பொன்னி அரிசி ஒரு கிலோகிராமுக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த 255 ரூபாய் அதிகபட்ச சில்லறை விலையை விடக் அதிகமாக 270 ரூபாய்க்கு விற்பனை செய்தமை தொடர்பாக, சம்பந்தப்பட்ட விற்பனை நிலையத்திற்கு எதிராக நுகர்வோர் விவகார அதிகாரசபையின் காலி மாவட்ட புலனாய்வு அதிகாரிகளால் காலி நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டிருந்தது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9f4ae97c-af18-44bd-b276-2ecb8af5f09b/26-6a665864b7afd.webp' /></p><p>கடந்த 17ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே இந்த சட்டவிரோத விற்பனை கண்டறியப்பட்டது.
</p><p>


வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது சம்பந்தப்பட்ட நிறுவனம் குற்றத்தை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, ஜூலை 23ஆம் திகதி காலி நீதவான் நீதிமன்றத்தினால் அந்த நிறுவனத்திற்கு 500,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-26T18:56:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரான்சில் கருணைக் கொலைக்கு நாடாளுமன்றம் இறுதி ஒப்புதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/legal-recognition-of-euthanasia-in-france-1785090949"></link>
            <id>https://canadamirror.com/article/legal-recognition-of-euthanasia-in-france-1785090949</id>
            <summary type="text">பல ஆண்டுகளாக நீடித்த தீவிர அரசியல் மற்றும் சமூக விவாதங்களுக்குப் பிறகு, கடுமையான நிபந்தனைகளின் கீழ் &quot;கருணைக் கொலை&quot; (Assisted Dying) மற்றும் உதவியுடனான...</summary>
            <content type="html"><![CDATA[<p>பல ஆண்டுகளாக நீடித்த தீவிர அரசியல் மற்றும் சமூக விவாதங்களுக்குப் பிறகு, கடுமையான நிபந்தனைகளின் கீழ் "கருணைக் கொலை" (Assisted Dying) மற்றும் உதவியுடனான தற்கொலையை சட்டபூர்வமாக அனுமதிக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க சட்ட மசோதாவுக்கு பிரான்ஸ் தேசிய சட்டமன்றம் இறுதி ஒப்புதல் வழங்கியுள்ளது.
</p><p>
அதிபர் இம்மானுவேல் மேக்ரோனின் முக்கியமான சமூகச் சீர்திருத்தங்களில் ஒன்றாகக் கருதப்படும் இந்தச் சட்டம், பிரான்ஸ் வரலாற்றில் முதன்முறையாக உதவியுடனான தற்கொலைக்கும், குறிப்பிட்ட விதிவிலக்கான சூழ்நிலைகளில் நேரடி கருணைக் கொலைக்கும் சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்குகிறது.</p><p>

தவறான பயன்பாடுகளைத் தடுப்பதற்கும், பிற நாடுகளைச் சேர்ந்தவர்கள் கருணைக் கொலைக்காக பிரான்சுக்கு வருவதைத் தடுக்கவும் (Sterbehilfe-Tourismus), இந்தச் சட்டத்தில் பல கடுமையான தகுதிநிபந்தனைகள் சேர்க்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3fa24136-1f4d-4dbf-acbc-9464c8be50f9/26-6a66538697db2.webp' /></p><p>

அதன்படி, குணப்படுத்த முடியாத நோயால் பாதிக்கப்பட்டு, தாங்க முடியாத உடல் அல்லது மன வேதனையை அனுபவிக்கும் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே இதற்கு விண்ணப்பிக்க முடியும்.</p><p> மேலும், விண்ணப்பதாரர் முழுமையான மனநலத்துடனும், சுயநினைவுடனும் இருக்க வேண்டும். எந்தவித கட்டாயமும் இன்றி, தனது விருப்பத்தை சுதந்திரமாகவும், மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்தியும் வெளிப்படுத்தியிருக்க வேண்டும்.
</p><p>
அத்துடன், விண்ணப்பதாரர் பிரெஞ்சு குடிமகனாகவோ அல்லது பிரான்சில் நிரந்தரமாக வசிப்பவராகவோ இருக்க வேண்டும் என்பதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
</p><p>
சட்டத்தின்படி, நோயாளியே இறப்புக்கான மருந்தை உட்கொள்ளும் "உதவியுடனான தற்கொலை" முறைக்கே முதன்மை வழங்கப்படும். உடல்நிலை காரணமாக அதனைச் செய்ய இயலாதவர்களுக்கு மட்டுமே, மருத்துவக் குழுவின் மேற்பார்வையில் மருந்து செலுத்தி நேரடி கருணைக் கொலை மேற்கொள்ள அனுமதி வழங்கப்படும். </p><p>இதற்கான அனைத்து விண்ணப்பங்களையும் மருத்துவர்கள் அடங்கிய குழு பரிசீலித்து இறுதி முடிவெடுக்கும்.

இந்த புதிய சட்டத்தின் மூலம், பெல்ஜியம், நெதர்லாந்து, சுவிட்சர்லாந்து, ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகல் ஆகிய நாடுகளின் வரிசையில் கருணைக் கொலைக்கு சட்ட அங்கீகாரம் வழங்கிய நாடாக பிரான்சும் இணைந்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-26T18:35:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்த பாடசாலை மாணவி.. சந்தேகம் வெளியிடும் பெற்றோர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/school-girl-trying-to-kill-herself-bogawantalawa-1785085195"></link>
            <id>https://tamilwin.com/article/school-girl-trying-to-kill-herself-bogawantalawa-1785085195</id>
            <summary type="text">பொகவந்தலாவை திரேசியா தமிழ் வித்தியாலயத்தில் தரம் 10 இல் கல்வி பயிலும் மாணவி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று ( 27...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொகவந்தலாவை திரேசியா தமிழ் வித்தியாலயத்தில் தரம் 10 இல் கல்வி பயிலும் மாணவி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.
</p><p>
குறித்த சம்பவம் நேற்று ( 27.07.2026) பதிவாகியுள்ளது.
</p><p>
இது குறித்து தெரிய வருகையில், பொகவந்தலாவை - மோரா பிரதேசத்தைச் சேர்ந்த 15 வயது மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
</p><p>
குறித்த மாணவி கடந்த 24ஆம் திகதி வீட்டில் இருந்த இரத்த அழுத்தத்திற்கு தேவையான மருந்துகளை அளவுக்கு அதிகமாக உட்கொண்டுள்ளார்.</p><p></p><h2>மரணத்தில் சந்தேகம்..&nbsp;</h2><p>
</p><p>
இந்நிலையில், பாடசாலையில் வைத்து மாணவி மயக்கமடைந்த நிலையில் பொகவந்தலாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4bea4cf3-6332-455d-8b66-2680b8a4c9e5/26-6a6650b6d74e5.webp' /></p><p>
</p><p>
மாவட்ட வைத்தியசாலையாக இருந்தும் சிகிச்சைக்கு போதிய வசதிகள் இல்லாத நிலையில் காணப்படும் அந்த வைத்தியசாலையில் இருந்து கிளங்கன் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.</p><p>
</p><p>
இந்நிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.</p><p>

இது குறித்து பொகவந்தலாவை பொலிஸாரை தொடர்பு கொண்டு கேட்டபோது, இது குறித்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக எமது ஊடகத்திற்கு அறிவித்தனர்.
</p><p>
எனினும், மாணவியின் இந்த மரணத்தில் சந்தேகம் நிலவுவதாக குடும்பத்தினர் குற்றம் சுமத்தி வருகின்றனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-26T18:31:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிவன் கோவிலில் நந்தியின் காதில் ஏன் கிசுகிசுக்கிறார்கள்? பின்னணி காரணம் தெரியுமா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/why-do-devotees-whisper-their-wishes-nandi-s-ear-1785067427"></link>
            <id>https://manithan.com/article/why-do-devotees-whisper-their-wishes-nandi-s-ear-1785067427</id>
            <summary type="text">இந்தியாவில் ஆயிரக்கணக்கான சிவபெருமான் கோவில்கள் உள்ளன. கோவில்களின் அமைப்பு மாறினாலும், சிவபெருமானுக்கு முன் நந்தி அமர்ந்திருப்பது மட்டும் எந்த கோவிலில...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியாவில் ஆயிரக்கணக்கான சிவபெருமான் கோவில்கள் உள்ளன. கோவில்களின் அமைப்பு மாறினாலும், சிவபெருமானுக்கு முன் நந்தி அமர்ந்திருப்பது மட்டும் எந்த கோவிலிலும் மாறாத சிறப்பாகும். </p><p>சிவனை வழிபடும் போது, நந்தியின் காதில் நமது வேண்டுதல்களைச் சொல்லும் வழக்கம் தொன்று தொட்டு பின்பற்றப்பட்டு வருகின்றது. அதற்கு என்ன காரணம் என்று தெரியாமலேயே பெரும்பாலானவர்கள் பின்பற்றுகின்றார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e512eb7f-5b8e-49a4-8a69-a81fbf0c99b1/26-6a65fc22ca563.webp' /></p><p></p><h2>என்ன காரணம்?&nbsp;</h2><p>ஆனால், நேரடியாக சிவபெருமானிடம் வேண்டாமல், நந்தியின் காதில் ஏன் வேண்டுதல்களைச் சொல்கிறோம் என்ற கேள்வி பலருக்கும் எழும். இதற்கான விளக்கம் புராணங்களிலும் சைவ ஆகமங்களிலும் காணப்படுகிறது.</p><p>

புராணங்களின்படி, நந்தி சிவபெருமானின் மிகச் சிறந்த பக்தரும், கைலாயத்தின் வாயிற்காவலரும் ஆவார். நந்தியின் அனுமதியின்றி சிவபெருமானை அணுக முடியாது என்பதால், பெரும்பாலான சிவாலயங்களில் அவர் சிவனை நோக்கி அமர்ந்திருப்பார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cf92b303-78f2-4401-a5f2-e079e9b25e47/26-6a65fc237d86d.webp' /></p><p> </p><p>அவர் பக்தி, விசுவாசம், வலிமை மற்றும் ஞானத்தின் அடையாளமாகக் கருதப்படுகிறார்.

சிவபுராணத்தின்படி, சிவபெருமான் ஆழ்ந்த தியானத்தில் இருக்கும் போது, தேவர்களின் வேண்டுகோள்களை நந்திதேவரே அவரிடம் எடுத்துச் சென்றார். அதனால், பக்தர்களின் வேண்டுதல்களையும் நந்தி சிவபெருமானிடம் சேர்ப்பார் என்ற நம்பிக்கை உருவானது.</p><p>இதன் காரணமாகவே பக்தர்கள் நந்தியின் காதில் மெதுவாக தங்கள் விருப்பங்களைச் சொல்கிறார்கள்.

ஆன்மீக ரீதியாக, நந்தி ஜீவாத்மாவையும், சிவபெருமான் பரமாத்மாவையும் குறிக்கிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1d532144-57cc-4bdf-b1dd-b56431bdde70/26-6a65fc243ceb1.webp' /></p><p></p><p>நந்தியின் காதில் வேண்டுதலைச் சொல்வது, இறைவனிடம் முழுமையாகச் சரணடைவதையும், அவர்மீது அசைக்க முடியாத நம்பிக்கையை வைப்பதையும் உணர்த்துகிறது.</p><p> மேலும், ஒவ்வொரு பிரார்த்தனைக்கும் ஆன்மீக அதிர்வு உண்டு; அதை நந்தி சிவபெருமானிடம் சேர்ப்பார் என்ற நம்பிக்கையும் நிலவுகிறது.

எனவே, நந்தியின் காதில் வேண்டுதலைச் சொல்வது ஒரு பழக்கமாக மட்டும் அல்ல; அது பக்தி, பொறுமை, நம்பிக்கை மற்றும் முழுமையான சரணாகதியின் அடையாளமாகக் பார்க்கப்படுகின்றமை குறிப்பி்டத்தக்கது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்<b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"> FOLLOW NOW</a></u></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-26T18:25:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[பங்களாதேஷ் கடற்பரப்பில் மீட்கப்பட்ட இலங்கை மீனவர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sri-lankan-fishermen-rescued-in-bangladesh-1785089838"></link>
            <id>https://jvpnews.com/article/sri-lankan-fishermen-rescued-in-bangladesh-1785089838</id>
            <summary type="text">கடலில் விபத்துக்குள்ளாகி பங்களாதேஷ் கடற்பரப்பிற்கு மிதந்துச் சென்ற மாத்தறை, தேவேந்திரமுனை பகுதியைச் சேர்ந்த மீனவர் தந்தை மற்றும் மகனை உடனடியாக இலங்கைக...</summary>
            <content type="html"><![CDATA[<p>கடலில் விபத்துக்குள்ளாகி பங்களாதேஷ் கடற்பரப்பிற்கு மிதந்துச் சென்ற மாத்தறை, தேவேந்திரமுனை பகுதியைச் சேர்ந்த மீனவர் தந்தை மற்றும் மகனை உடனடியாக இலங்கைக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை மீன்பிடி மற்றும் நீரியல் வளங்கள் பிரதி அமைச்சர் ரத்ன கமகே முன்னெடுத்துள்ளார்.</p><p>
</p><p></p><p>கடந்த ஜூன் 19ஆம் திகதி தேவேந்திரமுனை மீன்பிடித் துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்று காணாமல் போன 'சோமிரச' என்ற மீன்பிடிப் படகில் பயணித்த எஸ். எச். பியசேன மற்றும் அவரது மகன் எஸ். எச். சமிந்த ஆகியோரே பங்களாதேஷ் கடற்பரப்பில் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
</p><p>
குறித்த மீன்பிடிப் படகு கடலில் இயந்திரக் கோளாறுக்கு உள்ளானதைத் தொடர்ந்து, அதில் இருந்த மீனவர் ஒருவர் மற்றொரு படகின் உதவியுடன் கரையை அடைந்தார்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0cdfa297-5ce4-4e71-8580-1bc84e7808d0/26-6a664f2fd5076.webp' /></p><p>எனினும், படகின் உரிமையாளரான பியசேனவும் அவரது மகன் சமிந்தவும் படகைக் கைவிடாமல் அதிலேயே தங்கியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
படகில் கப்பல் கண்காணிப்பு அமைப்பு (VMS) அல்லது கரையுடன் தொடர்புகொள்வதற்கான HF வானொலி வசதி இல்லாத காரணத்தால், அவர்கள் இருந்த இடத்தைக் கண்டறிவதில் சிரமம் ஏற்பட்டது. </p><p>இதையடுத்து கடற்படை மற்றும் விமானப்படை இணைந்து விரிவான தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டபோதிலும், அவர்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
</p><p>
எனினும், கடல் நீரோட்டத்தின் தன்மையை அடிப்படையாகக் கொண்டு படகு தொலைதூரப் பகுதிகளுக்கு மிதந்து செல்லக்கூடும் என மீன்பிடித் திணைக்களம் கணித்ததையடுத்து, வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தூதரகங்களுக்கு தகவல் வழங்கப்பட்டது.
</p><p>
அதன் பின்னர், குறித்த படகு பங்களாதேஷ் கடற்பரப்பை அடைந்துள்ளமை உறுதி செய்யப்பட்டதுடன், அந்நாட்டு மீனவர்கள் குழுவொன்றினால் தந்தையும் மகனும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.
</p><p>
மீட்கப்பட்ட இருவரும் முதற்கட்டமாக ஒரு நாள் பங்களாதேஷ் மீனவர் ஒருவரின் வீட்டில் தங்கவைக்கப்பட்டதுடன், தற்போது சிட்டகொங் பகுதியிலுள்ள பொலிஸ் நிலையமொன்றின் பாதுகாப்புப் பொறுப்பில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இந்நிலை தொடர்பான தகவல் கிடைத்தவுடன், மீன்பிடி மற்றும் நீரியல் வளங்கள் பிரதி அமைச்சர் ரத்ன கமகே, பங்களாதேஷிலுள்ள இலங்கைத் தூதரக அதிகாரிகளுடன் தொடர்புகொண்டு, இருவரையும் விரைவாக இலங்கைக்கு அழைத்து வர தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொள்ளுமாறு பணித்துள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;</p><p>&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-26T18:17:25+00:00</updated>
        </entry>
    </feed>
