<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-08-14T23:39:46+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வடக்கில் அரச அதிகாரிகளுக்கு எதிராக போராட்டம்...! விடுக்கப்பட்டுள்ள அழைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/northern-officers-call-sick-leave-protest-1786748865"></link>
            <id>https://ibctamil.com/article/northern-officers-call-sick-leave-protest-1786748865</id>
            <summary type="text">அரச அதிகாரிகளுக்கு எதிரான சுகவீன விடுமுறை போராட்டத்திற்கு அழைப்பு
விடுக்கப்பட்டுள்ளது.

அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவையை களங்கப்படுத்தும் மற்றும் அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரச அதிகாரிகளுக்கு எதிரான சுகவீன விடுமுறை போராட்டத்திற்கு அழைப்பு
விடுக்கப்பட்டுள்ளது.
</p><p>
அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவையை களங்கப்படுத்தும் மற்றும் அதிகார துஷ்பிரயோகத்தில்
ஈடுபடும் அதிகாரிகளுக்கு எதிராகவே போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. </p><p>

இதனடிப்படையில் எதிர்வரும் திங்கட்கிழமை 17 ஆம் திகதி காலை 8 மணிக்கு கைதடியில் உள்ள வடக்கு
மாகாண சபை அலுவலகம் முன்பாக ஒன்றுகூடுமாறு அறிவுருத்தப்பட்டுள்ளது.</p><p>
</p><p></p><h2>அரச அதிகாரிகள்</h2><p>யாழ் ஊடக அமையத்தில் நேற்று (14-08-2026) 
இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/00eff3db-6e97-470d-aa9d-537274286593/26-6a7f9fc3b92af.webp' /></p><p>வடக்கு மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கத்தின் அழைப்பில் வடக்கு மாகாண
தொழிற்சங்கங்களின் சம்மேளனம், இலங்கை ஆசிரியர் சங்கம் ஆகியவற்றின் ஆதரவுடன்
குறித்த போராட்டம் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;&nbsp;</h6></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-14T23:29:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜப்பானை உலுக்கிய வரலாறு காணாத கனமழை: இதுவரையில் 8 பேர் பலி..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/record-breaking-heavy-rains-hit-japan-8-dead-1786749867"></link>
            <id>https://tamilwin.com/article/record-breaking-heavy-rains-hit-japan-8-dead-1786749867</id>
            <summary type="text">கிழக்கு ஜப்பானின் சிபா மாகாணத்தில் பெய்து வரும் வரலாறு காணாத கனமழை மற்றும்
வெள்ளப்பெருக்கினால் இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

தலைநகர் டோக்கியோவை ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிழக்கு ஜப்பானின் சிபா மாகாணத்தில் பெய்து வரும் வரலாறு காணாத கனமழை மற்றும்
வெள்ளப்பெருக்கினால் இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளனர்.</p><p>

தலைநகர் டோக்கியோவை ஒட்டியுள்ள பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை
நீடித்து வருகிறது.

வழக்கமாக ஒகஸ்ட் மாதத்தில் பெய்யும் மழையின் அளவை விட 3 மடங்கு அதிகமான மழை
வெறும் அரை நாளில் பதிவாகியுள்ளது.</p><h2>வரலாறு காணாத கனமழை</h2><p>
</p><p>
ஒரு மணி நேரத்திற்கு 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி
பதிவாகியுள்ளதாக ஜப்பான் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மழை வெள்ளம் காரணமாக 20,000-க்கும் மேற்பட்ட வீடுகளில் மின்சாரம் முற்றிலும்
துண்டிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/95cb1d6b-38f6-45f6-b2c1-7428dc119931/26-6a7fa49969e6e.webp' /></p><p>

மண்சரிவு மற்றும் வெள்ள அபாயம் காரணமாக ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்களைப்
பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறுமாறு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.</p><p>

அதேநேரம் தொடருந்து மற்றும் வீதிப் போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால் நரிட்டா
சர்வதேச விமான நிலையத்தில் 7,000-க்கும் மேற்பட்ட பயணிகள் இரவு முழுவதும் விமான
நிலையத்திலேயே முடங்கினர்.</p><p>

மேலும், 1,800-க்கும் மேற்பட்டோர் அரச அலுவலகக் கட்டிடங்களில்
தஞ்சமடைந்துள்ளனர்.
</p><p>
ஆபத்தின் அளவை உணர்த்தும் நிலை 5 அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டு, தற்போது
நிலை 4 ஆகக் குறைக்கப்பட்டிருந்தாலும், மண்சரிவு மற்றும் திடீர் வெள்ள அபாயம்
தொடர்ந்து நிலவுவதாகப் பேரிடர் மேலாண்மை துறை எச்சரித்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-14T23:28:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[வவுனியாவில் செஞ்சோலை படுகொலையின் 20 ஆம் ஆண்டு நினைவேந்தல் முன்னெடுப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/20th-sencholai-massacre-marked-in-vavuniya-1786747656"></link>
            <id>https://ibctamil.com/article/20th-sencholai-massacre-marked-in-vavuniya-1786747656</id>
            <summary type="text">முல்லைத்தீவு வல்லிபுனம் பகுதியில் அமைந்திருந்த செஞ்சோலை வளாகத்தின் மீது
மேற்கொள்ளப்பட்ட கொடூர வான் தாக்குதலின் 20 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு
வவுன...</summary>
            <content type="html"><![CDATA[<p>முல்லைத்தீவு வல்லிபுனம் பகுதியில் அமைந்திருந்த செஞ்சோலை வளாகத்தின் மீது
மேற்கொள்ளப்பட்ட கொடூர வான் தாக்குதலின் 20 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு
வவுனியாவில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
</p><p>
வவுனியாவில் தனியார் விடுதி ஒன்றில் மிக உணர்வுபூர்வமாக நேற்று (14-08-2026) இந்நிகழ்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
</p><p>
தமிழ் தேசிய செயற்பாட்டாளர் குழுமத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற குறித்த
நிகழ்வில் படுகொலை செய்யப்பட்ட மாணவிகளின் நினைவாகப் பொதுச்சுடர் ஏற்றப்பட்டு
அகவணக்கம் செலுத்தப்பட்டிருந்தது.</p><p>
</p><p></p><h2>நினைவேந்தல் நிகழ்வு</h2><p>அதனைத் தொடர்ந்து, படுகொலை செய்யப்பட்ட மாணவிகளின் உருவப்படத்திற்கு மலர் மாலை
அணிவித்து மலரஞ்சலியினையும் செலுத்தப்பட்டிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c53a46bb-6f6d-4fa2-b37f-293742d1a93d/26-6a7f9b0e6d04c.webp' /></p><p>

அத்தோடு நாடாளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கத்தினா படுகொலை செய்யப்பட
மாணவிகளின் நினைவாக நினைவு பேருரையினை ஆற்றிய இருந்தார்.</p><p>

இந்நிகழ்வில் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம், மாநகரசபை மேயர்
சு.காண்டீபன், தெற்கு தமிழ் பிரதேச சபையின் தவிசாளர் பா.பாலேந்திரன், முன்னாள்
போராளிகள், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், சிவில் சமூக அமைப்புகள்
மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;&nbsp;</h6></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-14T22:55:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹார்முஸ் நீரிணை அமெரிக்கப் பிரதேசமாகும்... எரிபொருள் விலை உயர்வை ஏற்க ட்ரம்ப் கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/trump-urges-higher-gas-prices-1786747930"></link>
            <id>https://news.lankasri.com/article/trump-urges-higher-gas-prices-1786747930</id>
            <summary type="text">Trump urges to accept higher gas prices: ஈரான் மீதான தனது விதண்டாவாதத்தை தீவிரப்படுத்தும் ட்ரம்ப், உயர்ந்த எரிவாயு விலைகளை ஏற்றுக்கொள்ளுமாறு அமெரிக்கர...</summary>
            <content type="html"><![CDATA[<p>Trump urges to accept higher gas prices: ஈரான் மீதான தனது விதண்டாவாதத்தை தீவிரப்படுத்தும் ட்ரம்ப், உயர்ந்த எரிவாயு விலைகளை ஏற்றுக்கொள்ளுமாறு அமெரிக்கர்களை வலியுறுத்துகிறார்.
</p><p>ஈரான் அணு ஆயுதத்தைப் பெறுவதைத் தடுப்பதற்கான ஒரு விலையாக, சற்று அதிகமான எரிபொருள் விலையை ஏற்றுக்கொள்ளுமாறு அமெரிக்கர்களை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளார்.</p><h2>மிகவும் தீய நாடொன்று</h2><p> </p><p>அத்துடன், ஹார்முஸ் நீரிணையை விரைவில் அமெரிக்கப் பிரதேசமாக அறிவிக்க இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5c10cfac-db12-4da2-955c-532e5c0e8be0/26-6a7f9c1d58f06.webp' /></p><p>
</p><p>எரிபொருள் விலையேற்றம், எரிசக்தி செலவுகளைக் குறைப்பதாக ட்ரம்ப் அளித்த தேர்தல் வாக்குறுதிக்கு முரணாக அமைந்திருப்பதால் அவருக்கு அரசியல் ரீதியான சிக்கல் அதிகரித்து வருகிறது என்பதை இது சுட்டிக்காட்டுகின்றன; </p><p>அதேவேளை, நவம்பர் மாதம் நடைபெறவுள்ள இடைக்காலத் தேர்தலை முன்னிட்டு, ஈரான் போரினால் ஏற்படும் பொருளாதார விளைவுகளை ஒரு முக்கிய விவகாரமாக மாற்ற ஜனநாயகக் கட்சியினர் முயற்சித்து வருகின்றனர். </p><p>கார்டன் சிட்டியில் ஆற்றிய உரையில், பெட்ரோலுக்காகச் சற்று கூடுதல் விலை கொடுக்க வேண்டியிருந்த அமெரிக்கர்கள் ஒரு விடயத்தை நினைவில் கொள்ள வேண்டும்: அதாவது, மிகவும் தீய நாடொன்று அணு ஆயுதத்தைப் பெறுவதைத் தடுப்பதற்காகவே அந்த விலை கொடுக்கப்படுகிறது என்று ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p> </p><p>நாம் செய்வது நமக்காக மட்டுமல்ல, உலகிற்கே செய்யும் ஒரு சிறந்த சேவையாகும்... ஈரானுக்கு எதிராக நாம் உண்மையில் மிகச் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறோம் என்று கூறிய ட்ரம்ப், ஈரானைத் தாக்கியதற்காக ஒருபோதும் மன்னிப்பு கேட்கப்போவதில்லை என்றும் குறிப்பிட்டார். </p><p>ஈரானை நாம் தோற்கடித்த பிறகு, மிக விரைவில் நான் ஹார்முஸ் நீரிணையை ஐக்கிய அமெரிக்காவின் ஒரு பிராந்தியமாக அறிவிப்பேன் என்றார்.</p><h2>எண்ணெய் விலை</h2><p> </p><p>ட்ரம்ப் அந்தக் கருத்தை எந்தளவுக்குத் தீவிரமாக முன்வைத்தார் என்பதோ அல்லது அது ஒரு புதிய கொள்கை நிலைப்பாட்டைக் குறிக்கிறதா என்பதோ எவரும் விவாதிக்கப் போவதில்லை என்றே, ட்ரம்பின் இதுவரையான வாதங்கள் தொடர்பில் ஆய்வாளர்களின் கருத்தாக உள்ளது. </p><p>ஹார்முஸ் நீரிணை அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் உள்ளதாக ட்ரம்ப் சமீப நாட்களில் அறிவித்து வந்தாலும், அங்கிருந்து கப்பல்கள் வெளியேறுவது மட்டும் இதுவரை நடக்கவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0c877ead-e5f3-4d98-b803-4eea62d93551/26-6a7f9c1ca77d8.webp' /></p><p> </p><p>
 உலகளாவிய எண்ணெய் மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (LNG) ஏற்றுமதிகளில் சுமார் 20 சதவீதம் வழக்கமாக ஹார்முஸ் நீரிணை வழியாகவே செல்கின்றன; இதில் ஏற்படக்கூடிய நீண்டகாலத் தடங்கலுக்கான சாத்தியக்கூறு எண்ணெய் விலையை உயர்த்தியுள்ளது. </p><p>இந்த வாரம் எண்ணெய் விலைகள் மீண்டும் உயர்ந்துள்ளன; பிரென்ட் கச்சா எண்ணெய் ஒரு பேரலுக்கு 90 டொலரை நெருங்குகிறது, அதே நேரத்தில் அமெரிக்க பெட்ரோல் விலை ஒரு கேலனுக்கு சுமார் 4 டொலராக அதிகரித்துள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-14T22:49:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[அசத்தலான உடையில் ருக்மிணி வசந்த்.. அழகிய ஸ்டில்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/rukmini-vasanth-stunning-new-stills-1786747728"></link>
            <id>https://cineulagam.com/article/rukmini-vasanth-stunning-new-stills-1786747728</id>
            <summary type="text">நடிகை ருக்மிணி வசந்த் தற்போது தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வளர்ந்து இருக்கிறார். அவர் நடிக்கும் படங்கள் பெரிய அளவில் வசூலை குவிக்கின்றன. கா...</summary>
            <content type="html"><![CDATA[<p>நடிகை ருக்மிணி வசந்த் தற்போது தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வளர்ந்து இருக்கிறார். அவர் நடிக்கும் படங்கள் பெரிய அளவில் வசூலை குவிக்கின்றன. காந்தாரா சாப்டர் 1 படமே அதற்கு உதாரணம்.</p><p>

தற்போது பல படங்களை கைவசம் வைத்திருக்கிறார் ருக்மிணி வசந்த். ரஜினி உடன் தர்மன் படத்திலும் அவர் நடித்து வருகிறார்.</p><p>

ருக்மிணி தற்போது டாக்சிக் பட விழாவுக்கு மாடர்ன் உடையில் வந்த நிலையில், அதே லுக்கில் அவர் எடுத்த போட்டோஷூட் ஸ்டில்கள் இதோ.
</p>]]></content>
            <updated>2026-08-14T22:48:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[நடிகை பவித்ரா ஜனனி எங்கே சென்றிருக்கிறார் பாருங்க.. வைரலாகும் புகைப்படங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/pavithra-janani-exploring-places-1786747523"></link>
            <id>https://cineulagam.com/article/pavithra-janani-exploring-places-1786747523</id>
            <summary type="text">சின்னத்திரையில் பிரபல நடிகைகளில் ஒருவராக இருப்பவர் பவித்ரா ஜனனி. அவர் விஜய் டிவியின் பிக் பாஸ் 8ம் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டு இருந்தார்.

அடி...</summary>
            <content type="html"><![CDATA[<p>சின்னத்திரையில் பிரபல நடிகைகளில் ஒருவராக இருப்பவர் பவித்ரா ஜனனி. அவர் விஜய் டிவியின் பிக் பாஸ் 8ம் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டு இருந்தார்.
</p><p>
அடிக்கடி பல்வேறு இடங்களுக்கு ட்ரிப் செல்வதை தற்போது வழக்கமாக கொண்டிருக்கிறார் அவர். </p><p>

தற்போது அவர் மகாராஷ்டிராவின் பூனே அருகில் இருக்கும் Jivdhan Fort என்ற கோட்டைக்கு ட்ரிப் சென்று இருக்கிறார். அங்கு அவர் எடுத்த அழகிய புகைப்படங்களை பாருங்க.
</p>]]></content>
            <updated>2026-08-14T22:45:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[வறட்சியான வானிலையால் ஆயிரக்கணக்கானோர் பாதிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/68-000-people-affected-by-dry-weather-1786739980"></link>
            <id>https://jvpnews.com/article/68-000-people-affected-by-dry-weather-1786739980</id>
            <summary type="text">வறட்சியான வானிலை காரணமாக 68,041 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையம் தெரிவித்துள்ளது. 

நான்கு மாவட்டங்களில் உள்ள 17 கிராம...</summary>
            <content type="html"><![CDATA[<p>வறட்சியான வானிலை காரணமாக 68,041 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையம் தெரிவித்துள்ளது. </p><p>

நான்கு மாவட்டங்களில் உள்ள 17 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளைச் சேர்ந்த மக்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதாகக் அதன் சிரேஷ்ட உதவிச் செயலாளர் பிரகீத் தனன்சூரிய குறிப்பிட்டுள்ளார்.</p><p> 

மட்டக்களப்பு, அம்பாறை, மொனராகலை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மக்களே இந்த வறட்சியான வானிலையினால் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.</p><h2>வறட்சியான வானிலை</h2><p> </p><p>

அதற்கமைய, 21,873 குடும்பங்களைச் சேர்ந்த 68,041 பேர் வறட்சியான வானிலையினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/09f1b4c6-1224-44e9-b0b7-fdd641f6a267/26-6a7f7df3037c3.webp' /></p><p>

மேலும், குடிநீர் பிரச்சினையை எதிர்நோக்கியுள்ள 3,495 குடும்பங்களைச் சேர்ந்த 12,291 பேருக்குத் தேவையான குடிநீரை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பிரகீத் தனன்சூரிய குறிப்பிட்டுள்ளார். </p><p>

பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான உதவிகளை வழங்குவதற்காக உள்ளூராட்சி அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து திட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-08-14T22:44:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சோகத்தில் முடிந்த திருமண வரவேற்பு; மணப்பெண் வீட்டில் பெரும் துயரம் ; பறிபோன உயிர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/accident-while-returning-wedding-reception-1786713787"></link>
            <id>https://jvpnews.com/article/accident-while-returning-wedding-reception-1786713787</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;கம்பஹா மகலேகொட - நைவல வீதிக்கு அருகில் இடம்பெற்ற கோர விபத்தில் இருவர் உயிரிழந்ததுடன், 7 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்....</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;கம்பஹா மகலேகொட - நைவல வீதிக்கு அருகில் இடம்பெற்ற கோர விபத்தில் இருவர் உயிரிழந்ததுடன், 7 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>


திருமண வரவேற்பு நிகழ்ச்சியை முடித்துவிட்டு குடும்பத்தினருடன் வேனில் வீடு திரும்பிக் கொண்டிருந்த போதே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/26cda6a6-7965-483a-a3d9-5cfe9feb5f49/26-6a7f16bd09586.webp' /></p><h2>&nbsp;மணமகளின் சகோதரரும்,&nbsp; பாட்டியும் உயிரிழப்பு</h2><p>
</p><p>


விபத்தில் உயிரிழந்தவர்களில் வாகனத்தைச் செலுத்திச் சென்ற மணமகளின் சகோதரரும், அவரின் பாட்டியும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.</p><p>



விபத்து இடம்பெற்ற நேரத்தில் மணமகளின் பெற்றோர் உட்பட மொத்தம் ஒன்பது பேர் வாகனத்தில் பயணித்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p></p><p>


வாகன ஓட்டுநர் தூக்கக் கலக்கத்தில் வாகனம் ஓட்டியதே இந்த விபத்துக்குக் காரணமாக இருக்கலாம் என ஆரம்பக் கட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-14T22:43:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[நடிகை சுரபி-யை நினைவிருக்கா.. இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/actress-surabhi-stunning-photos-1786747284"></link>
            <id>https://cineulagam.com/article/actress-surabhi-stunning-photos-1786747284</id>
            <summary type="text">விக்ரம் பிரபுவின் இவன் வேறமாதிரி படத்தில் ஹீரோயினாக நடித்து இருந்தவர் சுரபி. தனுஷின் விஐபி படத்திலும் சின்ன ரோலில் நடித்திருப்பார்.

தமிழில் அவருக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>விக்ரம் பிரபுவின் இவன் வேறமாதிரி படத்தில் ஹீரோயினாக நடித்து இருந்தவர் சுரபி. தனுஷின் விஐபி படத்திலும் சின்ன ரோலில் நடித்திருப்பார்.
</p><p>
தமிழில் அவருக்கு பட வாய்ப்புகள் குறைந்த நிலையில் தெலுங்கில் தான் அவர் அதிகம் நடித்து வருகிறார்.</p><p>

தற்போது படவிழாவுக்கு சேலையில் அழகாக அவர் வந்திருக்கும் லேட்டஸ்ட் ஸ்டில்களை பாருங்க.</p>]]></content>
            <updated>2026-08-14T22:41:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாட்டில் சிக்கிய முக்கிய குற்றவாளி - இலங்கைக்கு இழுத்துவர நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/shiran-basik-he-is-set-to-be-brought-sl-1786720066"></link>
            <id>https://jvpnews.com/article/shiran-basik-he-is-set-to-be-brought-sl-1786720066</id>
            <summary type="text">துபாயில் கைது செய்யப்பட்ட பிரபல போதைப்பொருள் கடத்தல்காரர் எனக் குற்றம் சாட்டப்பட்ட &quot;ஷிரான் பாசிக்&quot;, இன்று (14) நாட்டிற்கு அழைத்து வரப்பட உள்ளதாகத் தெர...</summary>
            <content type="html"><![CDATA[<p>துபாயில் கைது செய்யப்பட்ட பிரபல போதைப்பொருள் கடத்தல்காரர் எனக் குற்றம் சாட்டப்பட்ட "ஷிரான் பாசிக்", இன்று (14) நாட்டிற்கு அழைத்து வரப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>கடந்த மே 26 ஆம் திகதி ஷிரான் பாசிக் துபாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
</p><p>
ஈரானின் போதைப்பொருள் வலையமைப்புடன் அவருக்கு உள்ள நேரடித் தொடர்புகள் காரணமாக, அவர் அமெரிக்காவால் கூட தேடப்படும் நபராக உள்ளார் என்றும் கூறப்படுகிறது.</p><p></p><h2>மேலதிக விசாரணை</h2><p>
</p><p>நாட்டிற்கு போதைப்பொருட்களை விநியோகிக்கும் ஐந்து மிகப்பெரிய போதைப்பொருள் கடத்தல்காரர்களில் ஒருவராக ஷிரான் பாசிக் கருதப்படுகிறார்.</p><p></p><p>
</p><p>மேலும் குறித்த சந்தேகநபர் உள்ளூர் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மேலதிக விசாரணைகளுக்காக அவரை இலங்கைக்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.</p><p></p>]]></content>
            <updated>2026-08-14T22:40:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதுல்யா ரவி மாடர்ன் உடையில் லேட்டஸ்ட் போட்டோஷூட்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/athulya-ravi-stunning-in-side-slit-dress-1786747027"></link>
            <id>https://cineulagam.com/article/athulya-ravi-stunning-in-side-slit-dress-1786747027</id>
            <summary type="text">நடிகை அதுல்யா ரவி தமிழ் சினிமாவில் வேகமாக வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர். அவர் இன்ஸ்டாவில் மட்டும் 2.4 மில்லியன் ரசிகர்களை வைத்திருக்கிறார்.

தற்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>நடிகை அதுல்யா ரவி தமிழ் சினிமாவில் வேகமாக வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர். அவர் இன்ஸ்டாவில் மட்டும் 2.4 மில்லியன் ரசிகர்களை வைத்திருக்கிறார்.
</p><p>
தற்போது அதுல்யா மாடர்ன் உடையில் ஹாட் ஆக போஸ் கொடுத்திருக்கும் லேட்டஸ்ட் ஸ்டில்கள் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இதோ..</p>]]></content>
            <updated>2026-08-14T22:39:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானுடனான போருக்கு மத்தியில் ஹோர்முஸ் நீரிணை குறித்து ட்ரம்ப் அதிரடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/trump-says-will-soon-declare-hormuz-us-territory-1786743977"></link>
            <id>https://canadamirror.com/article/trump-says-will-soon-declare-hormuz-us-territory-1786743977</id>
            <summary type="text">அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரானை தோற்கடித்த பின்னர் ஹோர்முஸ் நீரிணையை அமெரிக்காவின் பிரதேசமாக விரைவில் அறிவிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.

...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரானை தோற்கடித்த பின்னர் ஹோர்முஸ் நீரிணையை அமெரிக்காவின் பிரதேசமாக விரைவில் அறிவிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.</p><p>

நியூயோர்க் மாநிலத்தில் நடைபெற்ற அரசியல் பேரணியில் பேசிய ட்ரம்ப், </p><h2>ஹோர்முஸ் நீரிணை</h2><p>“ஈரானை தோற்கடித்த பின்னர், ஹோர்முஸ் நீரிணையை அமெரிக்காவின் பிரதேசமாக அறிவிப்பேன்” எனக் குறிப்பிட்டார்.
</p><p>
மேலும், ஹோர்முஸ் நீரிணையில் அமெரிக்கா முற்றுகையை ஏற்படுத்தியுள்ளதாகவும், அமெரிக்காவின் அனுமதியின்றி எந்தக் கப்பலும் அந்தப் பகுதியை கடந்து செல்ல முடியாது என்றும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cb2ef49b-b1b1-474f-b8d9-0d83b6789c85/26-6a7f8cab91dd7.webp' /></p><p>

உலகின் முக்கியமான எரிசக்தி மற்றும் வர்த்தகப் பொருட்கள் கொண்டு செல்லப்படும் முக்கிய கடல்வழிப் பாதையாக ஹோர்முஸ் நீரிணை விளங்குகிறது.
</p><p>
 ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான மோதலின் காரணமாக இந்தப் பகுதியில் கப்பல் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-14T22:35:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீதி அமைச்சரை கடுமையாக சாடிய சிறீதரன் எம்.பி...!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sreedharan-slams-minister-over-chemmani-1786746223"></link>
            <id>https://ibctamil.com/article/sreedharan-slams-minister-over-chemmani-1786746223</id>
            <summary type="text">தென்பகுதியில் நடந்த சூரியகந்த படுகொலையை ஏற்றுக்கொள்ளுகின்ற நீதி அமைச்சர்
ஹர்சண நாணயக்கார, செம்மணியிலே நடந்திருப்பது ஒரு மனிதப் படுகொலை, மனிதப்
பேரவல...</summary>
            <content type="html"><![CDATA[<p>தென்பகுதியில் நடந்த சூரியகந்த படுகொலையை ஏற்றுக்கொள்ளுகின்ற நீதி அமைச்சர்
ஹர்சண நாணயக்கார, செம்மணியிலே நடந்திருப்பது ஒரு மனிதப் படுகொலை, மனிதப்
பேரவலம் என்பதை ஏற்றுக்கொள்ளாத ஒரு மாற்றாந்தாய் மனப்பான்மையோடு அவருடைய
கருத்து அமைவது துரதிர்ஷ்டவசமானது என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்
தெரிவித்துள்ளார்.</p><p>

சிவஞானம் சிறீதரன் நேற்று (14-08-2026) 
நீதிமன்ற அனுமதியுடன் செம்மணி மனித புதைகுழியை பார்வையிட்டார்.
</p><p>
பார்வையிட்ட பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்படி கருத்தை தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p></p><h2>நாட்டினுடைய நீதி&nbsp;</h2><p>இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “பல குழுக்கள் இங்கு இருந்திருக்கலாம் ஆனால்,
குழுக்கள் தங்களுக்குள் மோதி யாரையும் கொண்டுவந்து தாட்டதாக நாங்கள் இதுவரை
அறியவில்லை.</p><p>

அவ்வாறான சம்பவங்களுக்கு அவர் ஒரு கதை வடிவம் கொடுக்க முனைவது
நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a703b455-6836-4d15-a091-040f78fddd53/26-6a7f9571c3797.webp' /></p><p>

 நாட்டினுடைய நீதி அமைச்சர் மக்களை
திசைதிருப்பும் வகையிலே இவ்வாறான வார்த்தைகளை உதிர்க்கக்கூடாது. </p><p>தமிழர்கள்
எதிர்பார்ப்பது போல இது நூற்றுக்கு 100 சதவீதம் உண்மையானது ஏனெனில், இங்கே
நடந்த பல பேர் காணாமல் போயிருக்கிறார்கள்.</p><p> </p><p></p><h2>போராளிக் குழு</h2><p>வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களைப்
பற்றி தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுக்கிறார்கள்.
</p><p>
யாழ்ப்பாண மண்ணிலே 95 ஆம் ஆண்டிலிருந்து 2001 ஆம் ஆண்டு வரையான இடைப்பட்ட
காலப்பகுதியில் கிட்டத்தட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்கள் காணாமல் போயும்,
கொல்லப்பட்டும் இருக்கிறார்கள் இதனை நாங்கள் சொல்லவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8740d436-18e9-4f5e-b95b-3594620db306/26-6a7f957275266.webp' /></p><p>

இலங்கையினுடைய
கிரிசாந்தி கொலை வழக்கிலே சாட்சியாக இருக்கிற சோமரத்ன ராஜபக்ச
சொல்லியிருக்கிறார் இப்பொழுதும் சொல்லுகிறார்.
</p><p>
சோமரத்ன ராஜபக்சவை அரசாங்கம் அழைத்து வந்து, அவர் அடையாளப்படுத்துகின்ற
இடங்களைக் கிண்ட வேண்டும் அப்பொழுதுதான் உண்மை வெளியிலே வரும்.</p><p>அந்த உண்மைகளை
மறைப்பதற்கு எங்களிடம் இருந்த போராளிக் குழுக்களைப் பற்றியோ அல்லது இது ஒரு
அனாமதேய விடயங்கள் போலவோ அதற்கான ஒரு சோடனைக் கதைகளைச் சொல்ல அமைச்சர்
முன்வரக் கூடாது என்பதைத்தான் நாங்கள் வலியுறுத்துகிறோம்” என தெரிவித்துள்ளார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;&nbsp;</h6></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-14T22:23:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரான்ஸில் காட்டுத்தீ! 474 பேர் அதிரடியாக கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/people-arrested-causing-wildfires-in-france-1786740780"></link>
            <id>https://canadamirror.com/article/people-arrested-causing-wildfires-in-france-1786740780</id>
            <summary type="text">பிரான்ஸில் கடந்த ஜூலை 1ஆம் திகதி முதல் காட்டுத்தீ ஏற்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் 474 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வரலாறு காணாத வெப்ப அலையால் பிர...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரான்ஸில் கடந்த ஜூலை 1ஆம் திகதி முதல் காட்டுத்தீ ஏற்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் 474 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p>
வரலாறு காணாத வெப்ப அலையால் பிரான்ஸ் உள்ளிட்ட பல ஐரோப்பிய நாடுகள் கடுமையான காட்டுத்தீயை எதிர்கொண்டு வரும் நிலையில், இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p><p>கைது செய்யப்பட்டவர்களில் 183 பேர் சிறார்கள் என பிரான்ஸ் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.</p><h3>காட்டுத்தீ&nbsp;</h3><p> </p><p>கைது செய்யப்பட்டவர்களில் சுமார் 70 சதவீதம் பேர் திட்டமிட்டு காட்டுத்தீ ஏற்படுத்தியதாகவும், ஏனையோர் தற்செயலாக தீ ஏற்படக் காரணமாக இருந்ததாகவும் சந்தேகிக்கப்படுகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/729fa1a2-672e-40d5-88f3-f253d4cfa4e4/26-6a7f802f9a56e.webp' /></p><p>இந்நிலையில் 24 மணி நேரத்திற்கும் குறைவான காலப்பகுதியில் சுமார் 1,100 ஹெக்டேர் (2,700 ஏக்கர்) அளவிலான வறண்ட பைன் காடு தீக்கிரையாகியுள்ளது என்றும் தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
மேலும் தீயைக் கட்டுப்படுத்த சுமார் 500 தீயணைப்பு வீரர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் எனவும் கூறப்படுகிறது.</p>]]></content>
            <updated>2026-08-14T22:06:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹோர்முஸ் நீரிணை குறித்து ட்ரம்ப் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/trump-says-will-soon-declare-hormuz-us-territory-1786743553"></link>
            <id>https://tamilwin.com/article/trump-says-will-soon-declare-hormuz-us-territory-1786743553</id>
            <summary type="text">அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரானை தோற்கடித்த பின்னர் ஹோர்முஸ் நீரிணையை அமெரிக்காவின் பிரதேசமாக விரைவில் அறிவிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.

...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரானை தோற்கடித்த பின்னர் ஹோர்முஸ் நீரிணையை அமெரிக்காவின் பிரதேசமாக விரைவில் அறிவிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.</p><p>

நியூயோர்க் மாநிலத்தில் நடைபெற்ற அரசியல் பேரணியில் பேசிய ட்ரம்ப், </p><h2>ஹோர்முஸ் நீரிணை</h2><p>“ஈரானை தோற்கடித்த பின்னர், ஹோர்முஸ் நீரிணையை அமெரிக்காவின் பிரதேசமாக அறிவிப்பேன்” எனக் குறிப்பிட்டார்.
</p><p>
மேலும், ஹோர்முஸ் நீரிணையில் அமெரிக்கா முற்றுகையை ஏற்படுத்தியுள்ளதாகவும், அமெரிக்காவின் அனுமதியின்றி எந்தக் கப்பலும் அந்தப் பகுதியை கடந்து செல்ல முடியாது என்றும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/46f87b06-8d87-44b4-96be-d4fb6934a229/26-6a7f8c13682ed.webp' /></p><p>

உலகின் முக்கியமான எரிசக்தி மற்றும் வர்த்தகப் பொருட்கள் கொண்டு செல்லப்படும் முக்கிய கடல்வழிப் பாதையாக ஹோர்முஸ் நீரிணை விளங்குகிறது.
</p><p>
 ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான மோதலின் காரணமாக இந்தப் பகுதியில் கப்பல் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-14T21:56:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானியாவில் மில்லியன் கணக்கானோருக்கு அனுப்பப்பட்ட காட்டுத்தீ எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/brits-phones-ring-alert-warning-1786743195"></link>
            <id>https://news.lankasri.com/article/brits-phones-ring-alert-warning-1786743195</id>
            <summary type="text">Millions of Brits received emergency alert: காட்டுத்தீ பரவும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கும் அவசரச் செய்தி ஒன்றை, லட்சக்கணக்கான பிரித்தானியர்கள் தங்கள் அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Millions of Brits received emergency alert: காட்டுத்தீ பரவும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கும் அவசரச் செய்தி ஒன்றை, லட்சக்கணக்கான பிரித்தானியர்கள் தங்கள் அலைபேசிகளில் பெற்றுள்ளனர்.
</p><p>நாடு மீண்டும் ஒரு கடும் வெப்ப அலையில் சிக்கியுள்ள நிலையில், பார்பிக்யூ, முகாம் தீ, பட்டாசுகள் உள்ளிட்ட தீப்பொறியை ஏற்படுத்தக்கூடிய எதையும் பற்றவைக்க வேண்டாம் என மக்களுக்கு எச்சரிக்கை விடுத்து அரசாங்கம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.</p><h2>ஆபத்தை ஏற்படுத்தக்கூடும்</h2><p> </p><p>மாலை சுமார் 7 மணியளவில், நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கானோரின் கைபேசிகளுக்கு அந்த உரத்த எச்சரிக்கை ஒலித்துள்ளது. கைபேசி அமைதி பயன்முறையில் வைக்கப்பட்டிருந்தாலும், எச்சரிக்கை அனுப்பப்பட்டுவிட்டது எனில், அதன் ஒலியும் அதிர்வும் சுமார் 10 வினாடிகள் நீடிக்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bbe9e8a8-c42d-4e6a-947a-dc57705575f1/26-6a7f899dd7826.webp' /></p><p> </p><p>சைரன் ஒலியுடன், ஒரு சிறிய தீச்சுவாலை கூட விரைவாக ஒரு பெரிய காட்டுத்தீயாகப் பரவி, உயிர்கள், வீடுகள், வணிக நிறுவனங்கள் மற்றும் அவசரகால மீட்புப் பணியாளர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என்று அது எச்சரித்தது. </p><p>அந்த எச்சரிக்கையில், காட்டுத்தீ ஏதேனும் ஏற்பட்டால், உடனடியாக 999 என்ற இலக்கத்திற்கு அழைத்துத் தெரிவிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.</p><p> சமீப வாரங்களில் நாடு முழுவதும் தீ மற்றும் காட்டுத்தீ பரவி வரும் நிலையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நேற்று மட்டும், வெஸ்ட் மிட்லாண்ட்ஸ் பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 11 பெரிய தீ விபத்துகள் பதிவாகியுள்ளன. </p><p>நேற்று மதியம் மேற்கு மிட்லாண்ட்ஸின் ஸ்டோர்பிரிட்ஜ் முழுவதும் தீ பரவியதால், மொத்தம் 19 வீடுகள் முற்றிலுமாக அழிந்தன மற்றும் 18 வீடுகள் சேதமடைந்தன. இதனால், குடும்பங்கள் வெளியேற்றப்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. </p><p>இதனிடையே, எச்சரிக்கை விடுக்கும் இந்தக் கோரிக்கை தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகளிடமிருந்து நேரடியாக வந்ததாக பிரதமர் ஆன்டி பர்னாம் தெரிவித்துள்ளார்.</p><p></p><p>
</p><p>காட்டுத்தீ அபாயம் மிக அதிகமாக நீடிப்பதால், இன்று மாலை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் முழுவதும் உள்ள மக்களுக்கு அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என பிரதமர் கூறியுள்ளார். </p><p>மேலும், அனைவரையும் பாதுகாப்பாக வைத்திருப்பதும், தீ விபத்துகள் ஏற்படுவதைத் தடுப்பதுமே தற்போது நமது முன்னுரிமையாகும். இந்தக் கடும் வெப்பக் காலத்தில், அனைவரும் கூடுதல் கவனம் செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். </p><p>தயவுசெய்து தோட்டங்கள், கிராமப்புறங்கள் அல்லது பூங்காக்கள், தரிசு நிலங்கள் மற்றும் மரங்கள் அடர்ந்த பகுதிகள் உள்ளிட்ட பிற திறந்தவெளிகளில் தீ மூட்ட வேண்டாம்.</p><h2>முந்தைய சாதனை</h2><p> </p><p>நமது தீயணைப்பு வீரர்களும் அவசரகால மீட்புப் பணியாளர்களும், மிகவும் கடினமான சூழ்நிலைகளில் இரவு பகலாக உழைத்து வருகின்றனர். நாம் அனைவரும் அவர்களுக்கு உதவலாம். தயவுசெய்து இந்த அவசரகால எச்சரிக்கையைத் தீவிரமாக எடுத்துக்கொண்டு, நடைமுறையில் உள்ள வழிகாட்டுதல்களைப் பின்பற்றுங்கள் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். </p><p>லண்டனின் கியூ கார்டன்ஸில் (Kew Gardens) வெப்பநிலை 38.5 டிகிரி செல்சியஸை எட்டியதன் மூலம், மிக வெப்பமான நாளுக்கான முந்தைய சாதனையை இங்கிலாந்து அதிகாரப்பூர்வமாக முறியடித்த நிலையில், தீ விபத்துகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2a389e4a-605a-4d08-88b5-f4a6a3527804/26-6a7f899e8bf81.webp' /></p><p> </p><p>ஸ்டோர் பிரிட்ஜில் (Stourbridge) ஏற்பட்ட தீ விபத்து, கடும் வெப்பம் மற்றும் பலத்த காற்றினால் தீவிரமடைந்து, 500 ஏக்கர் பரப்பளவில் பரவிய அந்தத் தீ விரைவிலேயே ஒரு பெரும் விபத்தாக மாறியது. </p><p>நேற்று மிட்லாண்ட்ஸ் முழுவதும், குறிப்பாக ஸ்டோக்-ஆன்-ட்ரென்ட், பர்மிங்காம், வார்விக்ஷயர் மற்றும் வொர்செஸ்டர்ஷயர் ஆகிய இடங்களிலும், அத்துடன் நார்போக் மற்றும் வேல்ஸிலும் பல காட்டுத்தீ சம்பவங்கள் பதிவாகியுள்ளன.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-14T21:31:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாலஸ்தீனிய வீடுகள் முற்றுகை: நெதன்யாகுவுக்கு அமெரிக்கா அழுத்தம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/palestinian-homes-in-the-west-bank-netanyahu-1786741027"></link>
            <id>https://tamilwin.com/article/palestinian-homes-in-the-west-bank-netanyahu-1786741027</id>
            <summary type="text">இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள குஸ்ரா எனும் பாலஸ்தீனிய
கிராமத்தில் பாலஸ்தீனியர்களின் வீடுகளை தீவிரவாத இஸ்ரேலிய குடியேற்றவாசிகள்
முற்றுகையிட்டுள்ள ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள குஸ்ரா எனும் பாலஸ்தீனிய
கிராமத்தில் பாலஸ்தீனியர்களின் வீடுகளை தீவிரவாத இஸ்ரேலிய குடியேற்றவாசிகள்
முற்றுகையிட்டுள்ள சம்பவத்திற்குப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பகிரங்கக்
கண்டனம் தெரிவிக்க வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.
</p><p>
தண்ணீர் மற்றும் மின்சார இணைப்புகளைத் துண்டித்து கடந்த ஒரு வாரமாகப்
பாலஸ்தீனியக் குடும்பங்களைச் சிறைபிடித்துள்ள இந்தச் சம்பவத்திற்கு அமெரிக்கத்
தூதுவர் மைக் ஹக்கபி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.</p><h2>ஆதரவு</h2><p>
</p><p>
அமெரிக்க குடியுரிமை பெற்ற பாலஸ்தீனியரின் வீடும் முற்றுகையிடப்பட்டுள்ளதால்
அமெரிக்கா தனது எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/79eedf0b-9427-45b2-ad4b-403e3676780f/26-6a7f826128f27.webp' /></p><p>

எனினும் வரவிருக்கும் தேர்தலில் தீவிர வலதுசாரி வாக்காளர்களின் ஆதரவு தேவை
என்பதால் நெதன்யாகு இதுவரை இதுகுறித்து கருத்து எதுவும் தெரிவிக்காமல் மௌனம்
காத்து வருகிறார்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-14T21:30:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரான் மீது கனடா அதிரடி நடவடிக்கை! 5 மூத்த அதிகாரிகளுக்குப் பொருளாதாரத் தடை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/canada-sanctions-5-iranian-officials-1786742199"></link>
            <id>https://ibctamil.com/article/canada-sanctions-5-iranian-officials-1786742199</id>
            <summary type="text">ஈரானிய இஸ்லாமிய புரட்சிகரக் காவல் படையின் (IRGC) உறுப்பினர்கள் உட்பட ஐந்து மூத்த ஈரானிய அரசு அதிகாரிகளுக்குக் கனடா பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது.
...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானிய இஸ்லாமிய புரட்சிகரக் காவல் படையின் (IRGC) உறுப்பினர்கள் உட்பட ஐந்து மூத்த ஈரானிய அரசு அதிகாரிகளுக்குக் கனடா பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது.
</p><p>
ஹோர்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்து உரிமைகளை முடக்கியதாகக் குற்றம்சாட்டி இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.</p><p>

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், சர்வதேச அமைதி, பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையைப் சீர்குலைக்கும் வகையில் இராணுவ, சட்ட மற்றும் தகவல் தொடர்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காக இந்த ஐந்து நபர்கள் மீதும் தடைகள் விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>கப்பல் போக்குவரத்து</h2><p>

கனடாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் அனிதா ஆனந்த் (Anita Anand) ஈரானைப் பதற்றத்தைக் குறைக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1e959b09-c113-48c5-8b15-8d0fc6a5d87f/26-6a7f86f4e0ed0.webp' /></p><p>மேலும் ஹோர்முஸ் ஜலசந்தி வழியிலான சுதந்திரமான கப்பல் போக்குவரத்தானது உலகளாவிய வர்த்தகத்திற்கும் எரிசக்தி பாதுகாப்பிற்கும் மிக அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>
இன்றைய பொருளாதாரத் தடைகள், இந்தக் கொள்கைகளைச் சீர்குலைத்து உலகப் பொருளாதாரம் மற்றும் எரிசக்தி பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக விளங்கும் நபர்களை இலக்கு வைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;&nbsp;</h6></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-14T21:28:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kumar</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் நடைபெறவுள்ள சர்வதேச மாநாடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/association-of-relatives-of-the-disappeared-1786735105"></link>
            <id>https://tamilwin.com/article/association-of-relatives-of-the-disappeared-1786735105</id>
            <summary type="text">எதிர்வரும் 30ஆம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ள சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு, யாழ்ப்பாணம் தந்தை செல்வா மண்டபத்தில் சர்வதேச மாநாடொன்றை ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>எதிர்வரும் 30ஆம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ள சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு, யாழ்ப்பாணம் தந்தை செல்வா மண்டபத்தில் சர்வதேச மாநாடொன்றை நடத்துவதற்கு வடக்கு–கிழக்கு இணைந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
</p><p>
இது தொடர்பில் தெளிவுபடுத்தும் வகையிலான பொதுக்கூட்டம் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள அமெரிக்கன் மிஷன் மண்டபத்தில் இடம்பெற்றது.</p><h2>&nbsp;சர்வதேச மாநாடு</h2><p>

இந்த மாநாடு தொடர்பாகவும், மாநாட்டுக்கு வலுச்சேர்க்கும் வகையிலும், மாநாட்டுக்கு ஆதரவு கோரும் வகையிலும் இந்தக் கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3fe299b9-0e04-42cf-85bf-bc194f27af6c/26-6a7f8653212c8.webp' /></p><p>
</p><p>
மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளின் சங்கத்தின் ஏற்பாட்டில், அதன் தலைவி அ. அமலநாயகி தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெற்றது.</p><p>

இந்தக் கூட்டத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா. சாணக்கியன், ஞா. சிறிநேசன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன், சிவில் செயற்பாட்டாளர்கள், மதகுருமார்கள், அமெரிக்கன் மிஷன் அருட்தந்தை டேவிட், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் மற்றும் ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.</p><p>

இதன்போது முக்கியமான சில விடயங்கள் மற்றும் மாநாடு தொடர்பான கருத்துக்கள் பகிரப்பட்டன.</p><p>

அதேபோன்று, மாநாடு தொடர்பிலான ஆலோசனைகளும் பெறப்பட்டதுடன், மாநாட்டை முன்னெடுத்துச் செல்வதற்கு அனைவரினதும் ஒத்துழைப்பும் கோரப்பட்டது.</p><h2>தாய்மார்களின் வலி</h2><p>
</p><p>
இந்த சர்வதேச மாநாடு, உள்ளகப் பொறிமுறையில் நம்பிக்கை இழந்துள்ள தாய்மார்களின் குரலை சர்வதேசத்திற்கு எடுத்துரைக்கும் வகையிலும், தங்களுக்கு நேர்ந்தது வலிந்து காணாமல் ஆக்கப்படுதல் மற்றும் திட்டமிட்ட இன அழிப்பு என்பதை சர்வதேசத்திற்கு எடுத்துக்கூறும் வகையிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/534dcd71-c5b1-441e-91d7-1f2158e2552f/26-6a7f8653eff98.webp' /></p><p>
</p><p>
இந்த மாநாட்டில் அனைத்துச் சமூகங்களும் பங்கேற்று, தாய்மார்களின் வலிகளை உணர்த்தும் மாநாடாக இது அமையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இதுவரை காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளைத் தேடிய நிலையில், 600-க்கும் மேற்பட்ட தாய்மார்கள் உயிரிழந்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளின் சங்கத்தின் தலைவி அ. அமலநாயகி தெரிவித்தார்.
</p><p>
அவர்களின் சாட்சியங்களைப் பதிவு செய்து, 'அழிக்கப்பட்ட சாட்சியங்கள்' என்ற புத்தகத்தையும், இதுவரை காலமும் போராட்டங்களின்போது கையளிக்கப்பட்ட அறிக்கைகளைப் புத்தக வடிவிலும் வெளியிடவுள்ளதாக அவர் தெரிவித்தார்.</p><h2>தமிழ் தேசியம்</h2><p>
</p><p>
அதேபோன்று, மாநாட்டில் பல்வேறு அம்சங்கள் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.</p><p>

இதில் குழு கலந்துரையாடல்கள், சிறப்புரைகள், கண்காட்சிகள், பேரணி உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0534ab86-dd6b-48f8-b8f2-31753ab04464/26-6a7f8654c64ce.webp' /></p><p>
</p><p>
இதற்கு சர்வதேச ரீதியிலும், வடக்கு–கிழக்கு சார்ந்த ரீதியிலும், தமிழ் தேசியத்துடன் பயணிக்கும் அனைவரும் ஆதரவு வழங்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
</p><p>
எமக்கு நடந்த இந்த அநியாயத்துக்கும் அநீதிக்கும் நீதி பெற்றுக்கொடுப்பதற்காக அனைவரும் ஒன்றுதிரண்டு எமக்காகக் குரல்கொடுத்து, எமக்கான நீதியைப் பெற்றுக்கொடுப்பதற்கு முன்வர வேண்டும் எனவும் இந்தச் சந்தர்ப்பத்தில் கேட்டுக்கொள்கிறேன் எனவும் அவர் தெரிவித்தார்.</p>]]></content>
            <updated>2026-08-14T21:19:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானிய மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/uk-issues-high-risk-wildfire-alert-1786739129"></link>
            <id>https://ibctamil.com/article/uk-issues-high-risk-wildfire-alert-1786739129</id>
            <summary type="text">பிரித்தானியா முழுவதும் காட்டுத்தீ ஏற்படும் அபாயம் மிகவும் அதிகமாக இருப்பதாக அந்நாட்டு அரசு அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது.

பொதுமக்கள் தீப்பற்றக்கூடி...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரித்தானியா முழுவதும் காட்டுத்தீ ஏற்படும் அபாயம் மிகவும் அதிகமாக இருப்பதாக அந்நாட்டு அரசு அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது.
</p><p>
பொதுமக்கள் தீப்பற்றக்கூடிய செயல்களில் ஈடுபட வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
</p><p>
டிஸ்போசபிள் பார்பிக்யூ, தீ மூட்டுதல், தோட்டக் கழிவுகளை எரித்தல் மற்றும் பட்டாசு வெடித்தல் உள்ளிட்டவற்றை தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.</p><p></p><h2>அவசரகால பணியாளர்கள்</h2><p>

சிறிய தீப்பொறி கூட வேகமாகப் பரவி பெரிய காட்டுத்தீயாக மாறி உயிர்கள், வீடுகள், வர்த்தக நிறுவனங்கள் மற்றும் அவசரகால பணியாளர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என அரசு எச்சரித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0bded0f3-e56a-49c4-914f-058c65cebfb9/26-6a7f7b1a247cc.webp' /></p><p>

தீ ஏற்பட்டதற்கான அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக 999 என்ற அவசர இலக்கத்திற்கு அழைக்குமாறும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-14T20:37:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிரியாவின் முன்னாள் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்ட அதிரடி தீர்ப்பு - மகிந்த - கோட்டாபயவிற்கு கிடைக்குமா..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/airstrike-on-the-sencholai-girls-home-complex-1786738447"></link>
            <id>https://tamilwin.com/article/airstrike-on-the-sencholai-girls-home-complex-1786738447</id>
            <summary type="text">2006 ஆம் ஆண்டு ஒகஸ்ட் 14ஆம் திகதி, செஞ்சோலை சிறுமிகள் இல்ல வளாகத்தின் மீது நடத்தப்பட்ட வான்படைத் தாக்குதலில் 61ற்கும் மேற்பட்ட மாணவிகள் கொல்லப்பட்டதுட...</summary>
            <content type="html"><![CDATA[<p>2006 ஆம் ஆண்டு ஒகஸ்ட் 14ஆம் திகதி, செஞ்சோலை சிறுமிகள் இல்ல வளாகத்தின் மீது நடத்தப்பட்ட வான்படைத் தாக்குதலில் 61ற்கும் மேற்பட்ட மாணவிகள் கொல்லப்பட்டதுடன், பலர் காயமடைந்தனர்.
</p><p>
அந்தக் காலகட்டத்தில் மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாகவும், கோட்டாபய ராஜபக்ச பாதுகாப்பு அமைச்சின் செயலாளராகவும் பதவி வகித்தனர்.
</p><p>
செஞ்சோலை தாக்குதல் தொடர்பாக சர்வதேச மனித உரிமை அமைப்புகள், சர்வதேச அரசு சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் உயர்ஸ்தானிகர்கள் வெளியிட்ட அறிக்கைகளில், இலங்கை வான்படையின் தாக்குதலில் சிறுவர்கள் கொல்லப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
</p><p>
எனினும், செஞ்சோலை வளாகம் விடுதலைப் புலிகளின் பயிற்சி முகாம் என இலங்கை அரசாங்கம் அப்போது விளக்கம் அளித்திருந்தது.

ஆனால், தாக்குதலுக்குப் பின்னர் வெளியான புகைப்படங்களில், சிறுவயதுடைய மாணவிகள் சீருடைகளுடன் காணப்பட்டமை தொடர்பிலும் பல்வேறு தரப்பினரால் கேள்விகள் எழுப்பப்பட்டன.
</p><p>
இந்நிலையில், சிரியாவின் முன்னாள் ஜனாதிபதி பஷார் அல்-அசாத் மற்றும் அவருக்கு ஆதரவாக செயற்பட்டவர்களுக்கு எதிராக மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
</p><p>
இதுபோன்ற சூழலில், இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் கடந்தகால குற்றங்கள் மற்றும் அநீதிகளுக்கு பொறுப்பானவர்கள் தண்டிக்கப்படுவார்களா என்ற எதிர்பார்ப்பு தமிழ் சமூகத்திலும் நிலவி வருகிறது.</p><p>

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, நாட்டு மக்களின் நலனுக்காகவும் ஊழலற்ற நிர்வாகத்தை முன்னெடுப்பதற்காகவும் செயற்படுவதாகத் தெரிவித்து வருகிறார்.
</p><p>
இவ்வாறான அரசியல் மாற்றங்கள், கடந்த காலங்களில் இடம்பெற்ற அநீதிகளுக்கு தீர்வைப் பெற்றுத்தருமா என்ற எதிர்பார்ப்பு இளைஞர்கள் மத்தியிலும் எழுந்துள்ளது.</p><p>


இந்த விடயங்கள் தொடர்பில் விரிவாகப் பேசுகிறது ‘செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி...</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/6_lUEKeR67Q" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-08-14T20:24:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாடொன்றில் வரலாறு காணாத கனமழை: 8 பேர் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/heavy-rains-batter-japan-8-dead-1786735410"></link>
            <id>https://jvpnews.com/article/heavy-rains-batter-japan-8-dead-1786735410</id>
            <summary type="text">கிழக்கு ஜப்பானின் சிபா மாகாணத்தில் பெய்து வரும் வரலாறு காணாத கனமழை மற்றும்
வெள்ளப்பெருக்கினால் இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

தலைநகர் டோக்கியோவை ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிழக்கு ஜப்பானின் சிபா மாகாணத்தில் பெய்து வரும் வரலாறு காணாத கனமழை மற்றும்
வெள்ளப்பெருக்கினால் இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளனர்.
</p><p>
தலைநகர் டோக்கியோவை ஒட்டியுள்ள பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை
நீடித்து வருகிறது.</p><p>ஒரு மணி நேரத்திற்கு 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி
பதிவாகியுள்ளதாக ஜப்பான் வானிலை மையம் தெரிவித்துள்ளது.</p><h2>அவசர எச்சரிக்கை</h2><p>

மழை வெள்ளம் காரணமாக 20,000-க்கும் மேற்பட்ட வீடுகளில் மின்சாரம் முற்றிலும்
துண்டிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8b849e19-d313-4498-b893-050318d74eb7/26-6a7f6b34ed20d.webp' /></p><p>

மண்சரிவு மற்றும் வெள்ள அபாயம் காரணமாக ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்களைப்
பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறுமாறு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.</p><p>ஆபத்தின் அளவை உணர்த்தும் நிலை 5 அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டு, தற்போது
நிலை 4 ஆகக் குறைக்கப்பட்டிருந்தாலும், மண்சரிவு மற்றும் திடீர் வெள்ள அபாயம்
தொடர்ந்து நிலவுவதாகப் பேரிடர் மேலாண்மை துறை எச்சரித்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-14T20:20:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[காட்டுத்தீ அபாயம் மிக அதிகம்: பிரித்தானிய அரசின் எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/uk-issues-severe-warning-over-high-wildfire-risk-1786732676"></link>
            <id>https://jvpnews.com/article/uk-issues-severe-warning-over-high-wildfire-risk-1786732676</id>
            <summary type="text">பிரித்தானியா முழுவதும் காட்டுத்தீ ஏற்படும் அபாயம் மிகவும் அதிகமாக இருப்பதாக அந்நாட்டு அரசு அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது.

பொதுமக்கள் தீப்பற்றக்கூடி...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரித்தானியா முழுவதும் காட்டுத்தீ ஏற்படும் அபாயம் மிகவும் அதிகமாக இருப்பதாக அந்நாட்டு அரசு அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது.
</p><p>
பொதுமக்கள் தீப்பற்றக்கூடிய செயல்களில் ஈடுபட வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><h2>காட்டுத்தீ</h2><p>
</p><p>
 டிஸ்போசபிள் பார்பிக்யூ, தீ மூட்டுதல், தோட்டக் கழிவுகளை எரித்தல் மற்றும் பட்டாசு வெடித்தல் உள்ளிட்டவற்றை தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9016ea65-28ae-491f-952f-a2da50800363/26-6a7f6086692dd.webp' /></p><p>
</p><p>
சிறிய தீப்பொறி கூட வேகமாகப் பரவி பெரிய காட்டுத்தீயாக மாறி உயிர்கள், வீடுகள், வர்த்தக நிறுவனங்கள் மற்றும் அவசரகால பணியாளர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என அரசு எச்சரித்துள்ளது.
</p><p>
தீ ஏற்பட்டதற்கான அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக 999 என்ற அவசர இலக்கத்திற்கு அழைக்குமாறும் பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-08-14T20:00:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[ChatGPT-யில் தேடிய விடயம்... இளைஞர் செய்த கொடுஞ்செயல்: தந்தை வெளியிட்ட பின்னணி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/massachusetts-teen-used-chatgpt-for-1786737349"></link>
            <id>https://news.lankasri.com/article/massachusetts-teen-used-chatgpt-for-1786737349</id>
            <summary type="text">Massachusetts teenager killed his mother and brother: தனது தாயையும் சகோதரனையும் கொலை செய்வதற்கு, ChatGPT-ஐப் பயன்படுத்திய மாசசூசெட்ஸைச் சேர்ந்த ஒரு பத...</summary>
            <content type="html"><![CDATA[<p>Massachusetts teenager killed his mother and brother: தனது தாயையும் சகோதரனையும் கொலை செய்வதற்கு, ChatGPT-ஐப் பயன்படுத்திய மாசசூசெட்ஸைச் சேர்ந்த ஒரு பதின்ம வயது இளைஞன்.
</p><p>தனது தாயையும் சகோதரனையும் கொலை செய்வதற்கு முன்னதாக, ChatGPT-ஐப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் மசாசூசெட்ஸைச் சேர்ந்த பதின்ம வயது இளைஞர் ஒருவர், நீதிமன்ற விசாரணையை எதிர்கொள்ள இருக்கிறார்.</p><h2>இணையச் செயல்பாடுகள்</h2><p>
</p><p>ஆக்டனில் உள்ள தங்கள் குடியிருப்பில், தனது தாயார் சுதா வெங்கடேசன் (45) மற்றும் தம்பி சித்தார்த் அரவிந்த் (14) ஆகியோரைக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட 17 வயதான அர்ஜுன் அரவிந்த், வியாழக்கிழமை அன்று கான்கார்ட் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/60a19ba7-dba5-4fd3-ac6d-fd665cb4b35f/26-6a7f72c7be164.webp' /></p><p>
</p><p>செவ்வாய்க்கிழமை கொலை நடந்த சிறிது நேரத்திலேயே அரவிந்த், தான் பணிபுரிந்த ஸ்டாப் &amp; ஷாப் கடைக்குச் சென்று 2,000 டொலருக்கும் அதிகமான தொகைக்கு தானிய உணவுகள் மற்றும் எனர்ஜி பார்களை வாங்கியதாக காவல்துறை அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.</p><p> காவல்துறை அறிக்கையின் அடிப்படையில், தனது தாய்க்குச் சொந்தமானதாகக் கருதப்படும் கிரெடிட் கார்டை அரவிந்த் பயன்படுத்தியுள்ளார். அவர் அந்த எனர்ஜி பார்களை மீண்டும் விற்பனை செய்யத் திட்டமிட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
</p><p>அரவிந்த் தனது குடும்ப வீட்டிலிருந்து எடுத்துச் சென்றதாக விசாரணை அதிகாரிகளால் கண்டறிந்த தனது தாயின் 2014 மாடல் ஹோண்டா அக்கார்ட் (Honda Accord) காரின் உள்ளே, புதன்கிழமை அதிகாலை சுமார் 3:40 மணியளவில் தூங்கிக்கொண்டிருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதாக அரசுத் தரப்பு சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர். </p><p>அரவிந்தின் தந்தையான சுகுமாரன் அரவிந்த், தனது மகனின் அண்மைய கவலைக்குரிய இணையச் செயல்பாடுகள் காரணமாகவே குடும்பத்தினர் கத்தி போன்ற ஆபத்தானப் பொருட்களை அவனிடமிருந்து மறைத்து வைத்திருந்ததாக விசாரணை அதிகாரிகளிடம் தெரிவித்தார்.</p><p></p><p> </p><p>மேலும், தனது குடும்பத்தினரைக் கொல்வது தொடர்பான கோட்பாட்டு ரீதியான கருத்துக்கள் மற்றும் கற்பனைகள் குறித்து அரவிந்த் ChatGPT-யில் தேடியதாக அவனது தந்தை காவல்துறையிடம் தெரிவித்ததாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். </p><p>ஆக்டன்-பாக்ஸ்பரோ உயர்நிலைப் பள்ளியில் இறுதியாண்டுக்கு முந்தைய வகுப்பில் பயின்று வரும் அரவிந்திற்கு, நடத்தை சார்ந்த சிக்கல்கள் இருந்ததாகவும், அவருக்கு ஆட்டிசம் (autism) இருப்பது கண்டறியப்பட்டிருந்ததாகவும் அவரது தந்தை கூறியதாகத் தெரிகிறது. </p><p>பொலிஸ் அறிக்கையில், முந்தைய சில நடத்தைகள் காரணமாக தனது மகன் செல்போன் வைத்திருப்பதற்குத் தடை விதிக்கப்பட்டிருந்ததாகவும் அவர் விசாரணை அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.</p><h2>மனநலப் பரிசோதனை</h2><p> </p><p>கொலை நடந்த நாளன்று காலை 8 மணிக்குச் சற்று முன்பு, பெற்றோர்களைக் கொல்வது போன்ற ஒரு சூழலை உருவாக்க அரவிந்த் ChatGPT-ஐப் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது. </p><p>அரவிந்த் மீது இரண்டு கொலைக் குற்றச்சாட்டுகள், குடும்ப அல்லது வீட்டு உறுப்பினர் மீதான தாக்குதல் மற்றும் உடல்ரீதியான துன்புறுத்தல் தொடர்பான தலா இரண்டு குற்றச்சாட்டுகள், அத்துடன் அனுமதியின்றி வாகனத்தைப் பயன்படுத்தியது மற்றும் மோட்டார் வாகனத்தைத் திருடியது ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. </p><p>செவ்வாய்க்கிழமை மாலை சுமார் 6:30 மணியளவில், அரவிந்தின் தந்தை காவல்துறையைத் தொடர்புகொண்டு, தங்கள் வீட்டில் உள்ளவர்களின் நலனைச் சரிபார்க்குமாறு கேட்டுக்கொண்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/287a50ee-cdcc-4da7-a75f-4b016426ae6a/26-6a7f72c86dd7e.webp' /></p><p> </p><p>கோரிக்கையை அடுத்து பொலிசார் 
அந்தக்குடும்பத்தின் மார்த்தா லேன் (Martha Lane) இல்லத்திற்கு வந்து, அந்த அதிர்ச்சி சம்பவத்தைக் கண்டறிந்தனர்.</p><p> அரவிந்த் எவ்வாறு அந்தப் படுகொலைகளைச் செய்தார் என்று அரசுத் தரப்பு சட்டத்தரணிகள் இன்னும் உறுதி செய்யவில்லை. சித்தார்த்துக்குத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டிருந்ததாகவும், சுதா வெங்கடேசனுக்குத் தலை, முகம் மற்றும் வயிற்றுப் பகுதிகளில் காயங்கள் ஏற்பட்டிருந்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர். </p><p>இந்த நிலையில், அவரை ஜாமீன் இன்றி சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது; செப்டம்பர் 11-அன்று மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவதற்கு முன்னதாக, அவருக்கு மனநலப் பரிசோதனை நடத்தப்படவுள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-14T19:53:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிளிநொச்சியில் பதுக்கி வைக்கப்பட்ட குண்டு மீட்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/bomb-recovered-in-kilinochchi-1786730605"></link>
            <id>https://jvpnews.com/article/bomb-recovered-in-kilinochchi-1786730605</id>
            <summary type="text">கிளிநொச்சி - தர்மபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரமந்தனாறு குளத்திற்கு அருகில் வெடிக்காத நிலையில் குண்டு ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிளிநொச்சி - தர்மபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரமந்தனாறு குளத்திற்கு அருகில் வெடிக்காத நிலையில் குண்டு ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
</p><p>
இந்த நடவடிக்கை இன்று(14.08.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><h2>
குண்டு செயலிழப்பு</h2><p>
சம்பவம் தொடர்பாக தருமபுர பொலிசாருக்கு வழங்கப்பட்ட
தகவலுக்கமைவாக கிளிநொச்சி நீதிமன்ற அனுமதியுடன் குறித்த பகுதியில் இருந்து குண்டு மீட்கப்பட்டு, செயலிழப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2cd04f9b-686b-4294-8e19-53e898c8af1f/26-6a7f5c1da80b4.webp' /></p><p>
</p><p>
இது தொடர்பான மேலதிக நடவடிக்கைகளை தர்மபுர பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.&nbsp; &nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-08-14T19:42:11+00:00</updated>
        </entry>
    </feed>
