<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-09-05T01:50:05+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பில் இளம் தமிழ் யுவதி கழுத்து அறுக்கப்பட்டு கொடூரமாக கொலை - சந்தேக நபரின் சடலமும் மீட்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/women-killed-in-colombo-suspects-body-found-1788572187"></link>
            <id>https://tamilwin.com/article/women-killed-in-colombo-suspects-body-found-1788572187</id>
            <summary type="text">கொழும்பின் புறநகர் பகுதியான வத்தளை - பள்ளியவத்தை, டேன் லங்கா வீதியில் அமைந்துள்ள வீடொன்றில், யுவதி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

18 வயதான குறித்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பின் புறநகர் பகுதியான வத்தளை - பள்ளியவத்தை, டேன் லங்கா வீதியில் அமைந்துள்ள வீடொன்றில், யுவதி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
18 வயதான குறித்த யுவதி கழுத்து அறுக்கப்பட்டு, கண்கள் தோண்டப்பட்டு நேற்று முன்தினம் மிகக் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
பள்ளியவத்தை, டேன் லங்கா வீதியில் வசிக்கும் தனது பெற்றோர் வீட்டிற்கு சில நாட்களுக்கு முன்பு வந்து தங்கியிருந்த கனகசபை மீகா என தெரியவந்துள்ளது.</p><p>
</p><h2><b>
இளம் யுவதி கொலை</b></h2><p>இந்தக் கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர் உடுபுஸ்ஸல்லாவை, சென்ட் வத்தையைச் சேர்ந்த 25 வயதுடையவர் என தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3d3a0324-d51b-44de-bc42-e3c9ecec0fa9/26-6a9b73f9dad6f.webp' /></p><p>குறித்த சந்தேகநபர் 2020ஆம் ஆண்டு கேலி செய்தமைக்குப் பழிவாங்கும் முகமாக அவசகவெல்ல பிரதேசத்தில் நபரைக் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடையவராகும்.</p><p>

தற்போது அது குறித்த வழக்கு விசாரணையில் உள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இந்த நிலையில் கொலை செய்யப்பட்ட யுவுதி சந்தேகநபருடன் காதல் உறவைப் பேணி வந்துள்ளார்.
</p><p>
சந்தேகநபர் அவரைத் தொடர்ந்து சந்தேகப்பட்டு வந்துள்ளார். இந்த நிலையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தை தொடர்ந்து, வீட்டில் இருந்த அவரை குளியலறைக்கு அழைத்துச் சென்று கத்தியால் கழுத்தறுத்து, கண்களைத் தோண்டி படுகொலை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.
</p><p>
யுவதியை கொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் 25 வயதுடைய நபரின் சடலம் அத்துருகிரிய பொலிஸ் பிரிவில் நேற்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர்.</p><p>

இவர் நஞ்சு அருந்தி உயிரை மாய்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.</p><p>

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-09-05T01:44:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெலிகம W15 ஹோட்டல் துப்பாக்கிச் சூடு! தேசபந்து உள்ளிட்ட 08 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/chargesheet-against-deshabandu-tennakoon-1788566512"></link>
            <id>https://ibctamil.com/article/chargesheet-against-deshabandu-tennakoon-1788566512</id>
            <summary type="text">
கடந்த 2023-ஆம் ஆண்டு வெலிகம W15 ஹோட்டலில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பாக, முன்னாள் காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோன் உள்ளிட்ட ...</summary>
            <content type="html"><![CDATA[<p>
கடந்த 2023-ஆம் ஆண்டு வெலிகம W15 ஹோட்டலில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பாக, முன்னாள் காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோன் உள்ளிட்ட 8 பேருக்கு எதிராக மாத்தறை மேல் நீதிமன்றத்தில் சட்டமா அதிபர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளார்.</p><p>

2023 டிசம்பர் 30 அன்று இரவு, கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவைச் சேர்ந்த 8 அதிகாரிகள் கொண்ட குழுவினர் விசேட நடவடிக்கையொன்றுக்காக வானில் வெலிகம பகுதிக்குச் சென்று இந்தத் துப்பாக்கிச் சூட்டைச் நடத்தினர்.
</p><p>
அதன்போது, இவர்களுடன் சென்ற காவல்துறை சார்ஜன்ட் உபுல் சமிந்த குமார, வெலிகம காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்திருந்தார்.</p><p></p><h2>08 சந்தேகநபர்கள்&nbsp;</h2><p>
</p><p>
இச்சம்பவம் தொடர்பாக தேசபந்து தென்னகோன் உட்பட 8 பேரைக் கைது செய்து சந்தேகநபர்களாகப் பெயரிடுமாறு மாத்தறை நீதிவான் நீதிமன்றம் முன்னதாக உத்தரவிட்டிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4e20e614-be63-479e-a647-bc5353be7935/26-6a9b61d21c091.webp' /></p><p>

இதன்படி தேசபந்து தென்னகோன், கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் அன்றைய பொறுப்பதிகாரி அன்ஸலம் டி சில்வா, காவல்துறை பரிசோதகர்களான மகேஷ் தனுசிங்க, ஜகத் நிஷாந்த, உப பொலிஸ் பரிசோதகர் ரொஷான் மதுரங்க, பொலிஸ் சார்ஜன்ட் பிரசன்ன குமார, காவல்துறை கொன்ஸ்டபிள்களான சுபுன் பிரியஷான் மற்றும் சாரதி கிஹான் பியதிஸ்ஸ ஆகியோர் முதற்கட்டமாகச் சந்தேகநபர்களாகப் பெயரிடப்பட்டனர்.
</p><p>
பின்னர், கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் பதில் பணிப்பாளராகச் செயற்பட்ட உதவி காவல்துறை அத்தியாட்சகர் நெவில் சில்வாவும் நீதிமன்றத்தில் முன்னிலையானதை அடுத்து, இவ்வழக்கின் 9 ஆவது சந்தேகநபராக பெயரிடப்பட்டார்.</p><h2>காவல்துறை மா அதிபர் பதவி</h2><p>

இந்தத் துப்பாக்கிச் சூடு, நீதிமன்ற உத்தரவைப் புறக்கணித்து தலைமறைவாக இருந்தமை மற்றும் 2022 மே 9 வன்முறைகளைத் தடுக்கத் தவறியமை உள்ளிட்ட 23 குற்றச்சாட்டுகள் குறித்து சபாநாயகரால் நியமிக்கப்பட்ட விசேட நாடாளுமன்றக் குழு விசாரணை நடத்தியது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7b186b0c-9d9a-491a-b7c5-688e3bbdef85/26-6a9b61d2c951a.webp' /></p><p>இதில் 19 குற்றச்சாட்டுகளில் தேசபந்து தென்னகோன் குற்றவாளியாகக் கண்டறியப்பட்டதை அடுத்து, நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட பிரேரணை மீதான வாக்கெடுப்பில் 177 ஆதரவு வாக்குகளுடன், 2025 ஓகஸ்ட் 5 அன்று அவர் காவல்துறை மா அதிபர் பதவியிலிருந்து அதிகாரப்பூர்வமாக நீக்கப்பட்டார்.
</p><p>
அனுமதியின்றி அதிகாரிகளை வெலிகமவுக்கு அனுப்பி துப்பாக்கிச் சூடு நடத்தச் சதித்திட்டம் தீட்டியமை மற்றும் விசாரணைகளைத் திசைதிருப்ப முயன்றமை போன்ற குற்றச்சாட்டுகளுக்காகத் தேசபந்து தென்னகோன் ஏற்கனவே கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு, பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-05T01:32:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[அழிவின் விளிம்பில் இங்கிலாந்து ; ட்ரம்ப் விடுத்துள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/england-on-the-brink-of-ruin-trump-warns-1788568080"></link>
            <id>https://canadamirror.com/article/england-on-the-brink-of-ruin-trump-warns-1788568080</id>
            <summary type="text">வல்லரசு நாடுகளில் ஒன்றான இங்கிலாந்து, சமீபகாலமாக பல்வேறு உள்நாட்டுப் பிரச்சினைகளைச் சந்தித்து வருகிறது. குறிப்பாக, அங்குள்ள தற்போதைய அரசியல் மற்றும் ப...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">வல்லரசு நாடுகளில் ஒன்றான இங்கிலாந்து, சமீபகாலமாக பல்வேறு உள்நாட்டுப் பிரச்சினைகளைச் சந்தித்து வருகிறது. </p><p style="text-align: justify; ">குறிப்பாக, அங்குள்ள தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதாரச் சூழல்கள் உலக நாடுகளின் கவலையை அதிகரித்துள்ளன.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/db9d8b8c-f02c-45ce-9659-c1dbc3bed992/26-6a9b6212694aa.webp' /></p><p style="text-align: justify; ">


</p><p style="text-align: justify; ">
இந்தச் சூழ்நிலையில், இங்கிலாந்தின் பிரதமர் ஆண்டி பர்ன்ஹாம் தலைமையிலான அரசு கடுமையான நெருக்கடிகளைச் சந்தித்து வருவதாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.</p><p style="text-align: justify; ">


இங்கிலாந்தில் உயர்ந்து வரும் மின்சாரக் கட்டணம், பசுமை ஆற்றல் கொள்கைகள் மற்றும் உலகெங்கிலும் இருந்து எல்லையைக் கடந்து வரும் சட்டவிரோதக் குடியேற்றங்கள் ஆகியவை அந்த நாட்டைப் பேரழிவின் விளிம்பிற்குத் தள்ளியுள்ளதாக அவர் எச்சரித்துள்ளார்.</p><p style="text-align: justify; "> மேலும் இயற்கை எரிவாயு மற்றும் எண்ணெய் வளங்களைப் பயன்படுத்தாமல், இங்கிலாந்து தன் பொருளாதாரத்தை அழித்துக் கொள்வதாகவும் டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.</p>]]></content>
            <updated>2026-09-05T01:19:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி; இந்த ராசிக்காரர்களுக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிட்டும்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/mars-transit-in-the-zodiac-1788570802"></link>
            <id>https://jvpnews.com/article/mars-transit-in-the-zodiac-1788570802</id>
            <summary type="text">ஜோதிட ரீதியாக செவ்வாய் பகவான் தான் ஒருவருக்கு தைரியம், வீரியம் மற்றும் மன வலிமையை கொடுக்கக்கூடியவர். 

அந்த வகையில் செப்டம்பர் இரண்டாம் திகதி செவ்வா...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">ஜோதிட ரீதியாக செவ்வாய் பகவான் தான் ஒருவருக்கு தைரியம், வீரியம் மற்றும் மன வலிமையை கொடுக்கக்கூடியவர். </p><p style="text-align: justify; ">

அந்த வகையில் செப்டம்பர் இரண்டாம் திகதி செவ்வாய் பகவான் தன்னுடைய நட்சத்திரத்தை மாற்றுகிறார். செவ்வாய் குருவின் நட்சத்திரத்திற்குள் செல்வதால் அதனுடைய தாக்கம் எல்லா ராசிகளுக்கும் இருந்தாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு மிகவும் சாதகமாக அமையப் போகிறது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2602bd70-c4a7-4bd2-bd89-f2e8b3e753c1/26-6a9b6cb4354e1.webp' /></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; "><b>
மிதுனம்:
</b>மிதுன ராசிக்காரர்களுக்கு செவ்வாய் பகவானின் இந்த நட்சத்திர பெயர்ச்சியானது இவர்களுக்கு வாழ்க்கையில் மிகப் பெரிய அளவில் நன்மையை பெற்றுக் கொடுக்கப் போகிறது. வழக்கு சார்ந்த விஷயங்களில் திடீர் திருப்பங்கள் அமையும். குடும்பங்களில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். கடன் வாங்கியவர்களுக்கு கடன் அடைக்க கூடிய வாய்ப்புகள் உருவாகும்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "><b>
கன்னி:
</b>கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த காலகட்டம் இவர்களுக்கு வாழ்க்கையில் தொட்டதெல்லாம் பொன்னாகக் கூடிய காலமாக அமையப் போகிறது. உயர் அதிகாரிகளிடம் விட்டுக் கொடுத்து செல்வீர்கள். குழந்தைகள் தொடர்பான விஷயங்களில் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் விலகும். குடும்பத்தில் உங்களுக்கான மதிப்பு உயரும்.&nbsp;&nbsp;</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "><b>மகரம்:</b> மகர ராசிக்காரர்களுக்கு இந்த காலகட்டம் தொழில் ரீதியாக மிகப்பெரிய வேலை வாய்ப்புகள் தேடி வர போகிறது. அரசாங்கம் தொடர்பான விஷயங்களில் இவர்கள் நல்ல பலன்களை பெற போகிறார்கள். ஒருவருக்கு அரசு பதவிகள், அரசு மரியாதை இந்த காலகட்டங்களில் தேடி வரும்.</p>]]></content>
            <updated>2026-09-05T01:18:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை அரசியலை அதிர வைத்த நாமலின் கைது ; வழக்கின் முழு பின்னணி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/namal-s-arrest-shakes-sri-lankan-politics-1788568684"></link>
            <id>https://jvpnews.com/article/namal-s-arrest-shakes-sri-lankan-politics-1788568684</id>
            <summary type="text">ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷவை எதிர்வரும் செப்டம்பர் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமா...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான <a href="https://jvpnews.com/article/namal-said-important-news-before-his-arrest-1788543026" target="_blank">நாமல் ராஜபக்ஷ</a>வை எதிர்வரும் செப்டம்பர் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று (04) உத்தரவிட்டது.
</p><p style="text-align: justify; ">
 

சர்ச்சைக்குரிய எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளுக்கு அமைய வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்ச அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களை விசாரணை செய்யும் ஆணைக்குழுவிற்கு வருகை தந்த பின்னரே அவர் இன்று கைது செய்யப்பட்டார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a23122e1-ba5c-4c09-88bf-36a94e65b5d5/26-6a9b646e0831d.webp' /></p><h2 style="text-align: justify; ">விசாரணைகள்</h2><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
 

2013 ஆம் ஆண்டில் ஶ்ரீலங்கன் எயர்லைன்ஸ் நிறுவனத்திற்கு 14 விமானங்களை கொள்வனவு செய்த போது, 02 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலஞ்சமாகப் பெற்றதாக அன்றைய ஶ்ரீலங்கன் எயர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேன மற்றும் அவரது மனைவியான நியோமாலி விஜேநாயக்க ஆகியோர் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தன.
</p><p style="text-align: justify; ">
 

அது தொடர்பில் இலஞ்ச அல்லது ஊழல் பற்றிய சாட்டல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவினால் ஆரம்பிக்கப்பட்ட விசாரணைகளுக்கு அமைய கைது செய்யப்பட்டு, பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்ட ஶ்ரீலங்கன் எயர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேன கடந்த மே மாதம் 08 ஆம் திகதி மர்மமான முறையில் உயிரிழந்திருந்த நிலையில், அது தற்கொலை என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டிருந்தனர்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/157d6969-2380-4071-b1a7-930ceac73419/26-6a9b646eb36b9.webp' /></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
 

விமானக் கொள்வனவு தொடர்பிலான விசாரணைகள் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் பின்னணியில், இது தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ இன்று முற்பகல் இலஞ்ச அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களை விசாரணை செய்யும் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டிருந்தார்.
</p><p style="text-align: justify; ">
 

அதன்படி, இன்று (04) முற்பகல் 9.15 மணியளவில் நாமல் ராஜபக்ஷ குறித்த ஆணைக்குழுவின் முன் ஆஜரானார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
 

சுமார் ஐந்து மணித்தியாலங்கள் வாக்குமூலம் வழங்கிய பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இலஞ்ச அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டார்.

 

அதன்படி, கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார்.
</p><p style="text-align: justify; ">
 

அந்த சந்தர்ப்பத்தில் பல அரசியல் பிரதிநிதிகளும் புதுக்கடை பிரதான நீதவான் நீதிமன்றத்திற்கு வருகை தந்திருந்ததை காணக்கூடியதாக இருந்தது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">

 

அங்கு சந்தேகநபரான நாமல் ராஜபக்ஷவைக் கைது செய்தது தொடர்பில் இலஞ்ச அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களை விசாரணை செய்யும் ஆணைக்குழு சார்பில் நீதிமன்றத்தில் விடயங்களை முன்வைத்த பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டார, சர்ச்சைக்குரிய எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களமும் இலஞ்ச அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களை விசாரணை செய்யும் ஆணைக்குழுவும் இணைந்து மேற்கொண்ட கூட்டு விசாரணையின் விளைவாகவே சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாகக் குறிப்பிட்டார்.</p>]]></content>
            <updated>2026-09-05T01:18:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[குற்றவாளியின் கோப்புகள் மாயம் ; தாய்லாந்திற்குத் தப்பியோடிய நீதிமன்ற அதிகாரி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/criminal-files-vanish-court-official-flees-1788567144"></link>
            <id>https://jvpnews.com/article/criminal-files-vanish-court-official-flees-1788567144</id>
            <summary type="text">ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் குற்றவாளியும் போதைப்பொருள் கடத்தல்காரருமான சலிந்து மல்சித குணரத்ன எனப்படும் &#039;குடு சளிந்து&#039;வுக்கு எதிராக ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் குற்றவாளியும் போதைப்பொருள் கடத்தல்காரருமான சலிந்து மல்சித குணரத்ன எனப்படும் 'குடு சளிந்து'வுக்கு எதிராக பாணந்துறை நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த இரண்டு வழக்குக் கோப்புகள் காணாமல்போன சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டதை அடுத்து, அந்த நீதிமன்றத்தின் பிஸ்கல் மற்றும் அழைப்பாணைகளுக்கான பொறுப்பு அதிகாரியாகக் கடமையாற்றிய அதிகாரி வெளிநாட்டிற்குத் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p style="text-align: justify; ">
 

குறிப்பிட்ட வழக்குக் கோப்புகள் காணாமல்போனமை தொடர்பாக பானந்துறை நீதவான் நீதிமன்றப் பதிவாளர் கடந்த 1 ஆம் திகதி பாணந்துறை தெற்கு தலைமையகப் பொலிஸில் முறைப்பாடு செய்தார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ab577e73-47e1-479e-b2df-cac5cce2d42c/26-6a9b5e6a2a1d0.webp' /></p><h2 style="text-align: justify; ">10 பேரிடம் வாக்குமூலம்</h2><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
 

அத்துடன், குறித்த சம்பவம் தொடர்பில் 'பி' அறிக்கையின் ஊடாக நீதிமன்றத்திற்கு விடயங்களைஅறிக்கை செய்த பின்னர், பாணந்துறை குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.</p><p style="text-align: justify; ">
 

எனினும், நீதிமன்றப் பதிவாளர் பொலிஸில் முறைப்பாடு செய்த மறுநாளே, அதாவது செப்டம்பர் 2 ஆம் திகதியன்றே குறித்த அதிகாரி தாய்லாந்து நோக்கிப் புறப்பட்டுச் சென்றுள்ளதாகக் தெரியவந்துள்ளது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">

 

'குடு சளிந்து'வின் நெறிப்படுத்தலில் பாணந்துறை வடக்கு பகுதியில் இடம்பெற்ற மனிதக் கொலை தொடர்பான வழக்குக் கோப்பு ஒன்றும், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் பணச்சலவைச் சட்டத்தின் கீழ் தொடரப்பட்டிருந்த வழக்கு தொடர்பான கோப்பு ஒன்றுமே இவ்வாறு காணாமல்போயுள்ளன.
</p><p style="text-align: justify; ">
 

இச்சம்பவம் தொடர்பில் பாணந்துறை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இதுவரை பாணந்துறை நீதிமன்றத்தில் கடமையாற்றும் 07 பெண் ஊழியர்கள் உட்பட 10 பேரிடம் வாக்குமூலங்களைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-05T01:18:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீரிழிவு நோயாளிகளுக்கு நள்ளிரவில் பசி எடுத்தால் என்ன செய்ய வேண்டும்? இதையும் தெரிஞ்சுக்கோங்க]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/what-should-diabetics-eat-if-hungry-at-midnight-1788564264"></link>
            <id>https://jvpnews.com/article/what-should-diabetics-eat-if-hungry-at-midnight-1788564264</id>
            <summary type="text">நீரிழிவு நோயாளிகள் தங்கள் ரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க பெரும்பாலும் இரவில் குறைவாகவே சாப்பிடுவார்கள். ஆனால், இதன் விளைவாக நள்ளிரவில் ப...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">நீரிழிவு நோயாளிகள் தங்கள் ரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க பெரும்பாலும் இரவில் குறைவாகவே சாப்பிடுவார்கள்.</p><p style="text-align: justify; "> ஆனால், இதன் விளைவாக நள்ளிரவில் பசி ஏற்படுவது சகஜம். இந்த நேரத்தில் தவறான உணவை தேர்ந்தெடுத்தால் அல்லது அதிகமாக சாப்பிட்டால், ரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கும் அபாயம் உள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7db96fbe-f91c-4770-98f2-8ba9946bb973/26-6a9b532a18c7d.webp' /></p><h2 style="text-align: justify; ">ரத்த சர்க்கரை&nbsp;</h2><p style="text-align: justify; "> பசியை போக்கி, அதேசமயம் ரத்த சர்க்கரை அளவையும் பாதிக்காத உணவுகளை தேர்ந்தெடுப்பது சவாலானது. 
</p><p style="text-align: justify; ">
 
பாதாம் பருப்பில் குறைந்த கார்போஹைட்ரேட் மற்றும் அதிக நார்ச்சத்துகள் நிறைந்துள்ளன. இது ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைப் பராமரிக்க உதவும். </p><p style="text-align: justify; ">எனவே, நீங்கள் தூங்க செல்வதற்கு முன் ஒரு கைப்பிடி பாதாம் பருப்பை தாராளமாக சாப்பிடலாம். இது வயிறு நிறைந்த உணர்வையும் தரும். அதேசமயம், உங்கள் தூக்கத்தை சீர்குலைக்காமலும் பார்த்துக்கொள்ளும்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9e8439b5-ee4c-4e0f-9ca0-785694e8b3e9/26-6a9b544ece328.webp' /></p><p style="text-align: justify; "> 
தினமும் நள்ளிரவில் பசிக்கிறது என்றால், தூங்க செல்வதற்கு முன் நீங்கள் தாராளமாக வேகவைத்த முட்டையை சாப்பிடலாம்.</p><p style="text-align: justify; "> முட்டையில் கார்போஹைட்ரேட் குறைவாக இருந்தாலும், நல்ல கொழுப்புகள் மற்றும் புரதம் அதிகமாக இருப்பதால், ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">
 
அதேபோல் பாசிப்பயறு சூப் மற்றும் பனீர் போன்றவற்றை எடுத்துக்கொள்ளலாம். பாசிப்பயறு சூப்பில் சிறிதளவு நெய், சீரகம், பெருங்காயம் போன்றவற்றை சேர்த்துக்கொள்ளலாம். </p><p style="text-align: justify; ">சூப்பை வெதுவெதுப்பான சூட்டில் குடிக்க வேண்டும். 

 
மேற்கண்ட உணவுகள் நீரிழிவு நோயாளிகளின் நள்ளிரவு பசியை போக்க உதவும்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-05T01:18:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹூண்டாயின் புதிய மின்சார வேன் - ஐரோப்பாவில் ஆர்டர் தொடக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/hyundai-staria-electric-van-orders-begin-66k-euro-1788571153"></link>
            <id>https://news.lankasri.com/article/hyundai-staria-electric-van-orders-begin-66k-euro-1788571153</id>
            <summary type="text">Hyundai Staria Electric Van: ஹூண்டாய் நிறுவனம் தனது புதிய மின்சார வேன் Staria Electric க்கு ஆர்டர்களை ஐரோப்பாவில் தொடங்கியுள்ளது.

ஜேர்மனியில் இதன் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Hyundai Staria Electric Van: ஹூண்டாய் நிறுவனம் தனது புதிய மின்சார வேன் Staria Electric க்கு ஆர்டர்களை ஐரோப்பாவில் தொடங்கியுள்ளது.</p><p>

ஜேர்மனியில் இதன் ஆரம்ப விலை 57,450 யூரோ (சுமார் $66,500) ஆகும். இந்த மின்சார வேன், Kia PV5 மற்றும் Volkswagen ID. Buzz-ஐ விட பெரியதாகவும், 9 பயணிகள் வரை அமரக்கூடிய வசதியுடனும் வருகிறது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/633e1bc1-1a10-419d-8630-6c26264b5ef7/26-6a9b6e12c80e1.webp' /></p><p>Staria Electric, ஹூண்டாய் நிறுவனத்தின் பெட்ரோல் மாடலின் மின்சார பதிப்பாகும். 5,253 மில்லிமீட்டர் நீளம், 1,997 மில்லிமீட்டர் அகலம், 1,990 மில்லிமீட்டர் உயரம் கொண்ட இந்த வேன், IONIQ 9 SUV-ஐ விட சற்று நீளமாக உள்ளது. </p><p>வெளிப்புறத்தில் EV-க்கு ஏற்ற மூடிய கிரில், முழு நீள LED லைட் பார் போன்ற அம்சங்கள் உள்ளன.</p><p>
</p><p></p><h2>உட்புற வடிவமைப்பு</h2><p>இதில் 7 மற்றும் 9 சீட் அமைப்புகள், 1,303 லிட்டர் வரை லக்கேஜ் ஸ்பேஸ், 24 லிட்டர் முன்புற சேமிப்பு இடம் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன. </p><p>12.3 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ருமென்ட் கிளஸ்டர், இன்ஃபோடெயின்மென்ட் ஸ்கிரீன், Apple CarPlay, Android Auto ஆகியவை இணைக்கப்பட்டுள்ளன.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="ro" dir="ltr">Hyundai Staria 2026 Electric <a href="https://t.co/Ssy1f6gc4U">pic.twitter.com/Ssy1f6gc4U</a></p>&mdash; g4far (@lekan897) <a href="https://x.com/lekan897/status/2084532818785276226?ref_src=twsrc%5Etfw">August 4, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>
</p><h2>
பேட்டரி </h2><p>84 kWh பேட்டரி மற்றும் 160 kW (218 hp) மின்மோட்டார் கொண்ட Staria Electric, WLTP தரத்தில் 430 கிமீ (267 மைல்) வரை பயணிக்க முடியும். </p><p>800V சார்ஜிங் தொழில்நுட்பத்தால், 350 kW DC சார்ஜரில் 10 சதவீதம் முதல் 80 சதவீதம் வரை வெறும் 20 நிமிடங்களில் சார்ஜ் செய்யலாம்.</p><p></p><p>
</p><h2>விலை</h2><p>அடிப்படை Trend 9-seater மாடல் 57,450 யூரோ ($66,500) விலையில் கிடைக்கிறது. Prime மாடல் 63,350 யூரோ ($73,500) விலையில் கூடுதல் வசதிகளுடன் வருகிறது. Calligraphy 7-seater மாடல் 66,950 யூரோ ($77,800) விலையில், Bose சவுண்ட் சிஸ்டம், Nappa லெதர் சீட், LED ஹெட்லைட்ஸ் போன்ற பிரீமியம் அம்சங்களுடன் வழங்கப்படுகிறது.
</p><p>
இந்த மின்சார வேன், பெரிய குடும்பங்கள், ஹோட்டல் மற்றும் ஏர்போர்ட் ஷட்டில்கள், வணிக பயன்பாடுகளுக்கு சிறந்த தேர்வாக இருக்கும் என ஹூண்டாய் நம்புகிறது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-05T01:16:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆபிரிக்காவில் திருடபட்டு காணாமல் போகும் பிறப்புறுப்பு ; சமூக ஊடகத்தில் பரவும் தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/information-released-on-social-media-theft-1788545400"></link>
            <id>https://jvpnews.com/article/information-released-on-social-media-theft-1788545400</id>
            <summary type="text">ஆப்பிரிக்காவில் கடந்த ஓராண்டாக ஆண்களின் பிறப்புறுப்பு திருடப்பட்டு காணாமல் போவதாக டிக்டாக் மற்றும் ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் தகவல் பரவியதை தொ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">ஆப்பிரிக்காவில் கடந்த ஓராண்டாக ஆண்களின் பிறப்புறுப்பு திருடப்பட்டு காணாமல் போவதாக டிக்டாக் மற்றும் ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் தகவல் பரவியதை தொடர்ந்து, வன்முறை பரவி சுமார் 80 இற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.</p><p style="text-align: justify; "> 

ஆப்பிரிக்காவில் கடந்த ஏப்ரல் 1 ஆம் திகதி மகாலா என்பவர் அவரது நண்பருடன் கார் விற்பனை தொடர்பாக ஒரு வாடிக்கையாளரை சந்திப்பதற்காக, துண்டுமா என்ற நகரத்திற்கு பயணம் செய்தார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d4ca4b79-5aa1-46eb-986f-2e3cf11bd60e/26-6a9b097a2f23b.webp' /></p><h2 style="text-align: justify; ">பலர் பலி</h2><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

அப்போது அவர்கள் ஒரு மதிய உணவிற்காக ஒரு உணவகத்தில் நின்று கொண்டிருந்தபோது, அங்கு இருந்த ஒருவரின் பிறப்புறுப்புகளை இவர்கள் திருடிவிட்டதாக, உணவகத்தில் இருந்த நபர்கள் கூச்சலிட தொடங்கினர்.</p><p style="text-align: justify; "> 

இதையடுத்து அங்கு திரளான கூட்டம் கூடியதால், அவர்களால் அங்கிருந்து தப்பிச் செல்வது கடினமாக இருந்ததாகவும், பின்னர் அங்கிருந்து தப்பித்து வந்ததாகவும் உயிர்பிழைத்த நபர்கள் தெரிவித்தனர்.</p><p style="text-align: justify; "> 

இந்த வகையிலான வதந்திகள் சமூக ஊடகங்கள் மூலமாக பரப்பப்பட்டு, பொதுமக்களிடம் பீதியை ஏற்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். </p><p style="text-align: justify; ">

இந்த தகவல் ஜாம்பியா, தான்சானியா, மொசாம்பிக், அங்கோலா, மலாவி, புருண்டி, கென்யா உள்ளிட்ட பிற நாடுகளுக்கும் பரவின. </p><p style="text-align: justify; ">

இதன் காரணமாக கடந்த ஆறு வாரங்களில் சுமார் 55 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். மேலும் இந்த தாக்குதலில் ஒரு பொலிஸ் அதிகாரி, அரசு ஊழியர்கள், சுகாதார பணியாளர்கள் உள்ளிட்டவர்களும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். </p><p style="text-align: justify; ">இது போன்ற வதந்திகள் கடந்த 2008 ஆம் ஆண்டும் பரவியதாக பொலிஸார் தெரிவித்தனர். </p><p style="text-align: justify; ">

சமூக ஊடகங்களில் அதிகப்படியான பின்தொடர்பவர்களை வைத்திருப்பவர்கள், மக்களின் கவனத்தையும் அதிகப்படியான பார்வைகளையும் ஈர்ப்பதற்காக இந்த வகையான வதந்திகள் மூலமாக நாட்டில் வன்முறைகளை தூண்டுவதாக கொம்பாசா மாவட்ட ஆணையர் முகமது நூர் கூறியுள்ளார். </p><p style="text-align: justify; ">

மொசாம்பிக் நாட்டு ஜனாதிபதி டேனியல் சாப்போ, வதந்திகள் பரப்பப்படுவதையும் அதன் விளைவாக ஏற்படும் மரணங்களையும் பகிரங்கமாக கண்டித்தார்.</p><p style="text-align: justify; ">

மேலும் உண்மையில் எந்த நபரும் தங்கள் உடல் உறுப்புகளை இழந்துள்ளதாக எந்த வைத்திய ஆதாரமும் கிடைக்கவில்லை என்றும் அவர் கூறினார்</p>]]></content>
            <updated>2026-09-05T01:15:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[12ஆம் திகதி இது தான் நடக்கும் ; கைதாவதற்கு முன்னர் நாமல் கூறிய விடயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/namal-said-important-news-before-his-arrest-1788543026"></link>
            <id>https://jvpnews.com/article/namal-said-important-news-before-his-arrest-1788543026</id>
            <summary type="text">என்னை கைது செய்தாலும், நான் பங்கேற்காவிட்டாலும் எதிர்வரும் 12ஆம் திகதி நடைபெறும் கூட்டத்தில் மக்கள் படை அணிதிரளும்” என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேச...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">என்னை கைது செய்தாலும், நான் பங்கேற்காவிட்டாலும் எதிர்வரும் 12ஆம் திகதி நடைபெறும் கூட்டத்தில் மக்கள் படை அணிதிரளும்” என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்திருந்தார்.&nbsp;</p><p style="text-align: justify;">


இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாவதற்கு முன்னர் இன்று (04) காலை ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்திருந்தார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f791100b-34d4-4701-badf-ade18b5fe72f/26-6a9b00343421e.webp' /></p><h2 style="text-align: justify; ">விளக்கமறியல்</h2><p> </p><p style="text-align: justify;">



தாம் எந்தவொரு குற்றத்தையும் இழைக்கவில்லை எனக் குறிப்பிட்ட நாமல் ராஜபக்ஷ, குற்றம் இழைக்காத காரணத்தினாலேயே விசாரணைகளுக்கு தொடர்ந்து முன்னிலையாகி வருவதாகவும் தெரிவித்திருந்தார்.</p><p style="text-align: justify; ">இந்நிலையில்&nbsp;இலஞ்சக் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கைவிலங்குடன் வெலிக்கடை சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify;">
இலஞ்ச அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, அவரை வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் இன்று (04) உத்தரவிட்டார்.</p><p style="text-align: justify;"></p><p> </p>]]></content>
            <updated>2026-09-05T01:15:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[2026-இல் உலகின் போட்டித்திறன் மிகுந்த பொருளாதாரங்கள் - சிங்கப்பூர் முதலிடம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/singapore-tops-2026-global-competitiveness-ranking-1788564479"></link>
            <id>https://news.lankasri.com/article/singapore-tops-2026-global-competitiveness-ranking-1788564479</id>
            <summary type="text">Singapore tops 2026 global competitiveness ranking: 2026 இல் உலகின் போட்டித்திறன் மிகுந்த பொருளாதாரங்களின் தரவரிசையை இங்கே பார்க்கலாம்.

சிங்கப்பூர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>Singapore tops 2026 global competitiveness ranking: 2026 இல் உலகின் போட்டித்திறன் மிகுந்த பொருளாதாரங்களின் தரவரிசையை இங்கே பார்க்கலாம்.</p><h2>

சிங்கப்பூர்&nbsp;முதலிடம்</h2><p>சிங்கப்பூர், 2026-ஆம் ஆண்டிற்கான உலகின் மிகப் போட்டித்திறன் வாய்ந்த பொருளாதாரமாக (Most Competitive Economy) தேர்வாகியுள்ளது.</p><p>

IMD World Competitiveness Ranking வெளியிட்ட பட்டியலில், சிங்கப்பூர் 100 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/259fa4da-2bc6-4880-9f49-4af2a4662953/26-6a9b560c0ea16.webp' /></p><p>இரண்டாம் இடத்தில் ஹொங்ஹொங் (95.6), மூன்றாம் இடத்தில் சுவிட்சர்லாந்து (95.3), நான்காம் இடத்தில் தைவான் (94.3), ஐந்தாம் இடத்தில் டென்மார்க் (94.1) ஆகியவை உள்ளன. </p><p>

தொடர்ந்து அயர்லாந்து (94.1), ஐக்கிய அரபு அமீரகம் (94.1), நெதர்லாந்து (90.1), ஸ்வீடன் (88.5) அடுத்ததடுத்த இடங்கைப் பிடித்துள்ளன.
</p><p></p><h2>அமெரிக்கா</h2><p>அமெரிக்கா, உலகின் மிகப்பெரிய பொருளாதாரமாக இருந்தாலும், இந்த பட்டியலில் 10-வது இடத்தில் உள்ளது. இது, பொருளாதாரத்தின் அளவும் போட்டித்திறனும் ஒன்றல்ல என்பதை காட்டுகிறது.
</p><p>
முதல் 10 இடங்களில் 5 இடங்களை ஐரோப்பிய நாடுகள் பிடித்துள்ளன. இந்தியா இந்த தரவரிசையில் 44-வது இடத்தையே பிடித்துள்ளது.
</p><p>
IMD, போட்டித்திறனை மதிப்பீடு செய்ய 341 அளவுகோல்கள் பயன்படுத்துகிறது. இதில் பொருளாதார செயல்திறன், அரசின் திறன், வணிக திறன், அடிப்படை வசதிகள் ஆகிய நான்கு முக்கிய தூண்கள் அடங்கும்.
</p><p></p><p>சிங்கப்பூர், 2026-இல் வணிக திறன் (Business Efficiency) பிரிவில் முதலிடத்தைப் பெற்றதால், மொத்தத்தில் மீண்டும் உலகின் முதலிடத்தை கைப்பற்றியுள்ளது.

ஐரோப்பா மற்றும் ஆசியா இணைந்து 10 இடங்களில் 9 இடங்களை பிடித்துள்ளன. காரணம், திறமையான தொழிலாளர்கள், மேம்பட்ட அடிப்படை வசதிகள், சட்டத்தின் நம்பகத்தன்மை, மற்றும் புதுமை (Innovation) ஆகியவை.
</p><p>
இந்த பட்டியலில் வியட்நாம் முதல் முறையாக இடம் பெற்றுள்ளது. ஐக்கிய அரபு அமீரகம் (UAE) 7-வது இடத்தில், சவுதி அரேபியா 13-வது இடத்தில் உள்ளது.

இந்த தரவரிசை, பொருளாதார வளர்ச்சி மட்டுமல்லாமல், நிறுவனங்களின் நீண்டகால முதலீடு மற்றும் போட்டித்திறனை உருவாக்கும் சூழ்நிலைகளையும் பிரதிபலிக்கிறது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-05T01:06:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரசியல் களத்தில் இறங்கப் போகும் நாமலின் மனைவி லிமினி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-s-wife-limini-to-enter-politics-1788569495"></link>
            <id>https://tamilwin.com/article/namal-s-wife-limini-to-enter-politics-1788569495</id>
            <summary type="text">நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் மனைவி லிமினி ராஜபக்ச, செயற்பாட்டு அரசியல் களத்தில் இறங்கத் தீர்மானித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

எதிர்வரும் 1...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் மனைவி லிமினி ராஜபக்ச, செயற்பாட்டு அரசியல் களத்தில் இறங்கத் தீர்மானித்துள்ளதாக தெரியவந்துள்ளது.</p><p>

எதிர்வரும் 12ம் திகதி அநுராதபுரத்தில் பொதுஜன பெரமுண கட்சியின் மக்கள் போராட்டப் பேரணி நடைபெற ஏற்பாடாகி உள்ளது.</p><h2>நாமலின் மனைவி லிமினி</h2><p>
</p><p>
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் தலைமையில் குறித்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.எனினும் அவர் தற்போதைக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/56b11e84-cc7b-4d30-ad9d-657108eb69c6/26-6a9b6a17b5f44.webp' /></p><p>
இந்நிலையில் இந்தப் பேரணியில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாமல் ராஜபக்சவுக்குப் பதிலாக, அவரது மனைவி லிமினி ராஜபக்ச பிரதான மேடைக்கு வந்து மக்களிடம் உரையாற்றவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உள்வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
</p><p>
அத்துடன் எதிர்வரும் நாட்களில் கொழும்பில் லிமினி தலைமையில் முக்கிய எதிர்ப்பு நடவடிக்கையொன்றை மேற்கொள்ளவும், ஊடகச் சந்திப்பொன்றை நடத்தவும் அக்கட்சி தீர்மானித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-05T01:02:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[சூரியனின் தெற்கு நோக்கிய நகர்வு! வடக்கு, கிழக்கு மக்களுக்கு வெளியான முன்னெச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/the-southward-movement-of-the-sun-today-weather-1788569124"></link>
            <id>https://ibctamil.com/article/the-southward-movement-of-the-sun-today-weather-1788569124</id>
            <summary type="text">
சூரியனின் தெற்கு நோக்கிய நகர்வின் காரணமாக இன்று இன்று மதியம் சுமார் 12.08 மணியளவில் மொரட்டுவ, கெஸ்வெவ, பொல்ஹஸ்ஓவிட்ட, ஹந்தபான்கொட, சிறீபலாவத்தல, பொஹ...</summary>
            <content type="html"><![CDATA[<p>
சூரியனின் தெற்கு நோக்கிய நகர்வின் காரணமாக இன்று இன்று மதியம் சுமார் 12.08 மணியளவில் மொரட்டுவ, கெஸ்வெவ, பொல்ஹஸ்ஓவிட்ட, ஹந்தபான்கொட, சிறீபலாவத்தல, பொஹவந்தலாவ, இதல்ஹஸ்ஹின்ன, யுத்தகனாவ, கொட்டியாகல மற்றும் பாணமை போன்ற இடங்களுக்கு மேலாக சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.</p><p>

கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் இன்று பகல் வேளையில் அதிகரித்த வெப்பநிலையை மனித உடலினால் உணரக்கூடியதாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><h2>மழையுடனான வானிலை</h2><p>
</p><p>
இதேவேளை, கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் பல இடங்களிலும் அத்துடன் பொலனறுவை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் சில இடங்களில் 75 mm இலும் கூடிய ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் என்றும் திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d51f864a-b7d8-4571-86b9-0ec9ed517de1/26-6a9b6993e649a.webp' /></p><p>

சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும். </p><p>

இடியுடன் கூடிய மழை பெய்கின்ற வேளைகளில் பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-05T01:00:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பகுதியில் சிறுவனின் உயிரை பறித்த சம்பவத்தால் பரபரப்பு ; கொந்தளிப்பில் மக்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/6-year-old-boy-s-death-shocks-1788569890"></link>
            <id>https://jvpnews.com/article/6-year-old-boy-s-death-shocks-1788569890</id>
            <summary type="text">மட்டக்களப்பு நெடியமடு பகுதியில் நீர்ப்பாசன திணைக்களம் ஆற்றின் குறுக்கே பாலம் அமைப்பதற்கு நீர் எடுப்பதற்காக வெட்டிய பாதுகாப்பற்ற குழியில் 6 வயதுடைய சிற...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">மட்டக்களப்பு நெடியமடு பகுதியில் நீர்ப்பாசன திணைக்களம் ஆற்றின் குறுக்கே பாலம் அமைப்பதற்கு நீர் எடுப்பதற்காக வெட்டிய பாதுகாப்பற்ற குழியில் 6 வயதுடைய சிறுவன் ஒருவர் தவறி வீழ்ந்து உயிரிழந்த சம்பவம் வெள்ளிக்கிழமை (4) பிற்பகல் 11.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக ஆயித்தியமலை பொலிசார் தெரிவித்தனர்.


</p><p style="text-align: justify;">பகுதியைச் சேர்ந்த 6 வயதுடைய சிறுவனே இவ்வாறு பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.</p><p style="text-align: justify;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/74cce35a-d23b-42fd-80aa-f18e3520aed1/26-6a9b69245ce87.webp' /></p><h2 style="text-align: justify; ">பாதுகாப்பற்ற குழி</h2><p>
</p><p style="text-align: justify; ">
ஆயித்தியமலை பொலிஸ் பிரிவிலுள்ள 6ம் கட்டை என அழைக்கப்படும் நெடியமடு பாடசாலைக்கு எதிர்பக்கம் உன்னிச்சைக் குளத்தில் இருந்து வயலுக்கு செல்லும் ஆற்றின் குறுக்கே பாலம் அமைப்பதற்கு நீர்ப்பாசன திணைக்களம் தண்ணீர் எடுப்பதற்காக குறித்த சிறுவனின் வீட்டு வேலிக்கு அருகில் பாரிய குழி ஒன்றை தோண்டியுள்ளதுடன் அதற்கு பாதுகாப்பு நடவடிக்கை எதையும் மேற்கொள்ளவில்லை.
</p><p style="text-align: justify;">
இந்நிலையில் சம்பவ தினமான வெள்ளிக்கிழமை பகல் 11.00 மணியளவில் குறித்த சிறுவன் வீட்டின் வேலிக்கு அருகாமையில் நடந்து சென்ற போது வேலிக்கு அருகில் வெட்டிய குழியில் வீழ்ந்ததையடுத்து சிறுவனை மீட்டெடுத்து கரடியனாறு வைத்தியசாலைக்கு கொண்டு சென்று அனுமதிக்கப்பட்ட நிலையில் சிறுவன் ஏற்கனவே உயிரிழந்துள்ளார்.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;">&nbsp;பாலம் நிர்மாணம் பணியின் போது அங்கு பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளாததால் இந்த துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிசாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.</p><p style="text-align: justify;">&nbsp; &nbsp;இதனையடுத்து சம்பவ இடத்திற்கு மரண விசாரணை அதிகாரி சென்று விசாரணைகளை மேற்கொண்டு உயிரிழந்த சிறுவனின் உடல் பார்வையிட்டு நீதிமன்ற நீதவானுக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளதுடன் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என பொலிசார் தெரிவித்தனர்.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;">

இது தொடர்பாக ஆயித்தியமலை பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p style="text-align: justify;">

இதேவேளை இந்த பாலம் புனரமைப்பின் போது புனரமைப்பு பணியை மேற்கொண்டார்கள் அங்கு எந்தவிதமான பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யாதலால் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் மற்றம் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் கடும் விசனம் தெரிவித்துள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-09-05T00:58:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடலில் மூழ்கடிக்கப்பட்ட Airbus விமானம் - டைவிங் சுற்றுலாவின் புதிய கவர்ச்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/turkeys-sunken-airbus-a300-becomes-dive-spot-1788570027"></link>
            <id>https://news.lankasri.com/article/turkeys-sunken-airbus-a300-becomes-dive-spot-1788570027</id>
            <summary type="text">Turkeys sunken Airbus A300 becomes dive spot: துருக்கியில் கடலில் மூழ்கடிக்கப்பட்ட ஏர்பஸ் விமானம் இப்போது சிறந்த சுற்றுலா தலமாக மாறியுள்ளது.

கடலுக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>Turkeys sunken Airbus A300 becomes dive spot: துருக்கியில் கடலில் மூழ்கடிக்கப்பட்ட ஏர்பஸ் விமானம் இப்போது சிறந்த சுற்றுலா தலமாக மாறியுள்ளது.</p><h2>

கடலுக்குள்&nbsp;ஏர்பஸ் A300 விமானம்</h2><p>2016-ஆம் ஆண்டு துருக்கியின் குசாதாசி கடற்கரையில் ஓய்வு பெற்ற ஏர்பஸ் A300 விமானம் கடலுக்குள் மூழ்கடிக்கப்பட்டது. </p><p>

கடலுக்கடியில் செயற்கை பாறையை உருவாக்கி, கடல் உயிரினங்களுக்கு புதிய வாழ்விடமாகவும், சுற்றுலா பயணிகளுக்கு தனித்துவமான டைவிங் அனுபவமாகவும் மாற்றுவதற்காக இவாறு செய்யப்பது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/af953499-4389-41b9-b852-4906ee757774/26-6a9b69addbe14.webp' /></p><p>54 மீட்டர் நீளமுடைய இந்த விமானம், மூன்று மணி நேரத்தில் 22 மீட்டர் ஆழத்தில் கடலடியில் நிலை கொண்டது.</p><p> 

1980-ஆம் ஆண்டு பிரான்சில் தயாரிக்கப்பட்ட இந்த விமானம் முதலில் கிரீஸின் ஒலிம்பிக் ஏர்வேஸில் பயணிகள் சேவையில் இருந்தது. பின்னர் சரக்கு விமானமாக துருக்கியில் பணி செய்தது. அதிக பராமரிப்பு செலவினால் ஓய்வு பெற்றபோது, அய்டின் நகராட்சி இதனை வாங்கி, கடலடியில் மூழ்கடிக்கும் திட்டத்தை மேற்கொண்டது.
</p><p></p><p>மூழ்கடிக்கும் முன், விமானத்தின் ஆபத்தான பாகங்கள், கண்ணாடிகள், கூர்மையான உதிரிகள் அனைத்தும் அகற்றப்பட்டன. இதனால் டைவிங் செய்யும் பயணிகள் பாதுகாப்பாக உள்ளே சென்று ஆராய முடிகிறது. </p><p>விமானத்தின் உட்புறம் வழியாக நீந்திச் சென்று, காக்பிட் வரை சென்று அமர்வது சுற்றுலாப் பயணிகளுக்கு மிகப்பெரிய அனுபவமாக உள்ளது.
</p><p>
இந்த செயற்கை பாறை, கடலடியில் பல்வேறு மீன்கள் மற்றும் கடல் உயிரினங்களை ஈர்க்கிறது. துருக்கி இதற்கு முன் சிறிய விமானங்களை மூழ்கடித்திருந்தாலும், இவ்வளவு பெரிய அளவிலான விமானம் கடலடியில் வைக்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறை.
</p><p></p><p>இன்று, குசாதாசி கடற்கரை, டைவிங் ஆர்வலர்களுக்கு உலகின் முக்கியமான இடங்களில் ஒன்றாக மாறியுள்ளது. </p><p>கடலடியில் விமானம் வழியாக நீந்திச் செல்லும் அனுபவம், சுற்றுலா பயணிகளுக்கு மறக்க முடியாத நினைவாக உள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-05T00:57:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[டென்னிஸ் மைதானத்தில் கஞ்சா வாசனை ; வீராங்கனை செய்த சம்பவம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/cannabis-smell-at-tennis-court-player-s-act-1788569406"></link>
            <id>https://canadamirror.com/article/cannabis-smell-at-tennis-court-player-s-act-1788569406</id>
            <summary type="text">அமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடரின் மூன்றாவது சுற்றில் விளையாடிய உலகத் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள அரினா சபலென்கா (Aryna Sabalenka), மைதானத்தில் வீசிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடரின் மூன்றாவது சுற்றில் விளையாடிய உலகத் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள அரினா சபலென்கா (Aryna Sabalenka), மைதானத்தில் வீசிய கஞ்சா புகையின் வாசனை காரணமாக போட்டியைச் சிறிது நேரம் நிறுத்தி நடுவரிடம் முறைப்பாட்டை செய்துள்ளார்.
</p><p>
உஸ்பெகிஸ்தானின் கமில்லா ரகிமோவாவுக்கு எதிரான போட்டியின் போதுஇ இரண்டாவது சர்வீஸ் விளையாடியபோது இந்த வாசனை திடீரென வீசியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3d5ce0f3-8124-47f4-8f0d-5f05882bbb09/26-6a9b673fa71ce.webp' /></p><p>
</p><p>
இதுகுறித்து நடுவர் ஈவா அஸ்டெராக்கி-மோர்விடம் முறையிட்ட அரினா சபலென்கா , மக்கள் எதை வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம், ஆனால் டென்னிஸ் மைதானத்திற்கு அருகில் அதைப் புகைப்பதைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொண்டார்.
</p><p>
மைதானத்தில் கஞ்சா வாசனை வருவது இது முதல்முறை அல்ல என்றாலும் இந்த முறை காற்று காரணமாக வாசனை மிகவும் தீவிரமாக இருந்ததாக சபலென்கா தெரிவித்தார்.
</p><p>
நியூயோர்க் நகரில் பெரியவர்களுக்குக் கஞ்சா பயன்பாட்டை சட்டம் அனுமதியளித்தாலும்இ மைதான வளாகத்திற்குள் புகைப்பிடிக்க அனுமதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-09-05T00:50:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதிரடியாக கைது செய்யப்பட்ட நாமல் - கலக்கத்தில் தமிழ் அரசியல்வாதிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/tamil-politicians-linked-to-namal-1788545000"></link>
            <id>https://tamilwin.com/article/tamil-politicians-linked-to-namal-1788545000</id>
            <summary type="text">நாமல் ராஜபக்ச மற்றும் ராஜபக்ச குடும்பத்தினருடன் தொடர்புடைய வடக்கு- கிழக்கை சேர்ந்த அரசியல்வாதிகளும் கைது செய்ப்பட்டு தண்டிக்கபட வேண்டும் என்று ஈழவர் ஜ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாமல் ராஜபக்ச மற்றும் ராஜபக்ச குடும்பத்தினருடன் தொடர்புடைய வடக்கு- கிழக்கை சேர்ந்த அரசியல்வாதிகளும் கைது செய்ப்பட்டு தண்டிக்கபட வேண்டும் என்று ஈழவர் ஜனநாயக முன்னணியின் (Eros) செயலாளர் நாயகம் ராஜநாதன் பிரபாகரன் தெரிவித்தார்.</p><p>

லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தார்.</p><p>

மேலும் தெரிவித்த அவர்,</p><p>


நாமல் ராஜபக்சவின் கைது வரவேற்கத்தக்கது, இது நீண்ட காலத்திற்கு முன்பே நடந்திருக்க வேண்டிய ஒன்றாகும்.

சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை இந்த அரசு நிரூபிப்பித்துள்ளது.
</p><p>
ராஜபக்‌ச குடும்பத்தினர் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய அரசியல்வாதிகள் மீது பல ஊழல் முறைப்பாடுகள் உள்ளன.</p><p> 

ராஜபக்‌ச குடும்பத்தினர் மற்றும் அவர்களுடன் தொடர்புடையவர்கள் செய்த ஊழல், கொள்ளை மற்றும் அதிகார துஷ்பிரயோகம் ஆகியவை சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ள முடியாதவை.
</p><p>
தற்போதைய அரசு இத்தகைய ஊழல்களை விசாரிப்பதன் மூலம் மக்களின் நம்பிக்கையைப் பெற்றுள்ளது என குறிப்பிட்டார்.</p><p>

இந்த விடயங்களை ஆராய்கின்றது லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சி..&nbsp;&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/D9IttxaXdMQ" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-05T00:41:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வைரத்தில் மின்சாரம் - ஹொங்ஹொங் விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/diamonds-found-to-generate-electricity-in-2026-1788568758"></link>
            <id>https://news.lankasri.com/article/diamonds-found-to-generate-electricity-in-2026-1788568758</id>
            <summary type="text">Scientists discover diamonds can generate electricity: வைரங்களால் மின்சாரம் தயாரிக்க முடியும் என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.வைரத்தில் மின்சாரம...</summary>
            <content type="html"><![CDATA[<p>Scientists discover diamonds can generate electricity: வைரங்களால் மின்சாரம் தயாரிக்க முடியும் என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.</p><h2>வைரத்தில் மின்சாரம்</h2><p>வைரம் (Diamond) மின்சாரம் உற்பத்தி செய்ய முடியாது என்ற நூற்றாண்டு பழைய நம்பிக்கையை ஹொங்ஹொங் பல்கலைக்கழக (HKU) விஞ்ஞானிகள் முறியடித்துள்ளனர்.
</p><p>
அவர்கள் உருவாக்கிய அதிக நெகிழ்வான, மிகச் சிறிய வைரத் தாள் (ultrathin flexible diamond membrane), வளைந்தபோது மின்சார அழுத்தத்தை (Piezoelectric Effect) உருவாக்குவதை நிரூபித்துள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4715f7bc-9334-456f-a7cf-55c6ac93f376/26-6a9b64b853690.webp' /></p><p>இந்த ஆய்வை Professor Zhiqin Chu மற்றும் Professor Yuan Lin தலைமையிலான குழு மேற்கொண்டது. வைரம், அதன் கடினத்தன்மை, வெப்பக் கடத்தல், இரசாயன நிலைத்தன்மை போன்ற காரணங்களால், இதுவரை மற்ற பொருட்களுக்கு ஆதரவாக மட்டுமே பயன்படுத்தப்பட்டது. </p><h2>வைரமே உற்பத்தி செய்யும் மின்சாரம்&nbsp;</h2><p>ஆனால் இப்போது, வைரமே மின்சாரம் (active electricity) உற்பத்தி செய்யும் பொருளாக மாறியுள்ளது.

ஆய்வாளர்கள், edge exfoliation method என்ற புதிய முறையைப் பயன்படுத்தி, வைரத்தை மிகச் சிறிய தாள்களாக வெட்டி, அதை வளைத்தபோது நிலையான மின்னழுத்தம் உருவாகுவதை கண்டறிந்தனர். </p><p>பல முறை சோதனை செய்தபோதும், ஒரே மாதிரியான மின்சார விளைவுகள் பதிவாகின.

இதற்கான காரணம், வைரத் தாளின் grain boundaries எனப்படும் சிறிய சீரற்ற பகுதிகளில் மின்சார துருவம் (charge polarization) உருவாகுவதால். இதனால் தாளின் மேல் மற்றும் கீழ் பகுதிகளில் மின்னழுத்த வேறுபாடு ஏற்படுகிறது.
</p><p></p><p>இந்த கண்டுபிடிப்பு, மருத்துவ சாதனங்கள், சிறிய மின்சார அமைப்புகள், தானாக இயங்கும் சென்சார்கள் போன்ற துறைகளில் புரட்சியை ஏற்படுத்தும். வைரம், உடலுக்கு பாதிப்பு இல்லாதது, இரசாயன ரீதியாக நிலையானது, நச்சுத்தன்மை இல்லாதது என்பதால், உடலுக்குள் பொருத்தப்படும் மருத்துவ சாதனங்களுக்கு (Implants) சிறந்த தேர்வாகும்.
</p><p>
இனி, வைரம் செயல் மின்சாரம் உற்பத்தி செய்யும் பொருளாக உலகின் மிக நம்பகமான, நீடித்த, பாதுகாப்பான தொழில்நுட்பங்களில் ஒன்றாக மாறும் வாய்ப்பு உள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-05T00:36:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாமல் கைது.. மீண்டும் களமிறங்கும் மகிந்த - ராஜபக்ச அரசியலில் புதிய திருப்பம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/mahinda-decides-to-re-enter-active-politics-1788568091"></link>
            <id>https://tamilwin.com/article/mahinda-decides-to-re-enter-active-politics-1788568091</id>
            <summary type="text">முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, மீண்டும் செயற்பாட்டு அரசியலில் இறங்கத் தீர்மானித்துள்ளதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஸ்ரீ லங...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, மீண்டும் செயற்பாட்டு அரசியலில் இறங்கத் தீர்மானித்துள்ளதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
</p><p>
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுண கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச உள்ளிட்ட ராஜபக்ச தரப்பு அரசியல்வாதிகள் பலர் அ ண்மைக்காலமாக வழக்குகளுக்கு முகம்கொடுக்க நேர்ந்துள்ளதுடன், விளக்கமறியல் உத்தரவுகளையும் எதிர்கொண்டுள்ளனர்.</p><h2>மீண்டும் மகிந்த</h2><p>
</p><p>
இவ்வாறான நிலையில் எதிர்வரும் 2029ம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு கட்சி மேற்கொள்ள எதிர்பார்த்துள்ள அரசியல் செயற்பாடுகளில் சில தடங்கல்கள் ஏற்பட்டுள்ளது.
</p><p>
அதன் காரணமாக சிறிது காலமாக அரசியல் செயற்பாடுகளை விட்டும் ஒதுங்கியிருந்த முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுணவின் தலைவர் என்ற ரீதியில் மீண்டும் செயற்பாட்டு அரசியலில் களமிறங்கத் தீர்மானித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5a99636b-abd5-4d8a-b471-8c284e0853ab/26-6a9b63cd198bb.webp' /></p><p>
அதன் முதற்கட்டமாக எதிர்வரும் 12ம் திகதி அநுராதபுரத்தில் நடைபெறவுள்ள கட்சியின் முதலாவது மக்கள் போராட்ட பேரணிக்கு அவர் தலைமை தாங்கவுள்ளதாக தெரிய வந்துள்ளது.</p><p>

முன்னதாக குறித்த பேரணி நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் தலைமையில் நடைபெற ஏற்பாடாகி இருந்த நிலைமையில், இலஞ்ச வழக்கொன்றில் தற்போதைக்கு நாமல் ராஜபக்ச விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
</p><p>
அவ்வாறான பின்னணியில் அநுராதபுர பேரணி தொடக்கம் எதிர்வரும் 2029ம் ஆண்டுக்கான ஜனாதிபதித் தேர்தல் வரையான கட்சியின் செயற்பாடுகளை தலைமையேற்று முன்கொண்டு செல்ல மகிந்த ராஜபக்ச தீர்மானித்துள்ளார்.</p><p></p><p></p><p><br><br><b><i>you may like this..<br></i></b></p><p><b><i><br><br><br></i></b><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/kLhfyZi69CA" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><i><br></i></b></p>]]></content>
            <updated>2026-09-05T00:35:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[உக்ரைனிய பாதுகாப்பு தலைமையகத்தையே தாக்கிய ரஷ்யா! ஜெலென்ஸ்கியின் அதிரடி அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/russian-drone-attack-on-ukrainian-sbu-headquarters-1788560045"></link>
            <id>https://ibctamil.com/article/russian-drone-attack-on-ukrainian-sbu-headquarters-1788560045</id>
            <summary type="text">
உக்ரைன் தலைநகர் கீவ்வில் உள்ள உக்ரைனிய பாதுகாப்பு சேவையின் (SBU) தலைமையகத்தின் மீது ரஷ்ய ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கி...</summary>
            <content type="html"><![CDATA[<p>
உக்ரைன் தலைநகர் கீவ்வில் உள்ள உக்ரைனிய பாதுகாப்பு சேவையின் (SBU) தலைமையகத்தின் மீது ரஷ்ய ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
</p><p>
உக்ரைன் மீதான வான்வழித் தாக்குதல்களை ரஷ்யா தீவிரப்படுத்தியுள்ள நிலையில், உக்ரைனில் இலக்கு வைக்கப்பட்ட மிக உயர்மட்ட மையங்களில் ஒன்றாக இது கருதப்படுகிறது. </p><p>இந்தச் சம்பவத்தில் சுமார் 12 பேர் காயமடைந்துள்ளதாக நகரின் மேயர் தெரிவித்துள்ளார்.</p><p>&nbsp;</p><h2>தகுந்த பதிலடி &nbsp;</h2><p>
</p><p>
தலைநகரை நோக்கிய ரஷ்யாவின் வான்வழித் தாக்குதல்கள் தொடர்ந்து 10 நாட்களாக நீடித்து வரும் நிலையில், இந்தத் தாக்குதலை போரின் பாரிய தீவிரமடைதல் என்று கூறியுள்ள உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி இதற்குப் பதிலடி கொடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d7782a10-34e4-4e8c-b6be-89f49248cd14/26-6a9b47089533f.webp' /></p><p><i>Image Credit: rollingstone</i></p><p>
</p><p>
அதன்போது, “இதற்கு தகுந்த, உறுதியான மற்றும் சாத்தியமான இடங்களில் இந்தத் தாக்குதலுக்கு நிகரான பதிலடி கொடுக்க உத்தரவிட்டுள்ளேன்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>

மேலும், “ரஷ்ய தாக்குதல்களுக்கு நாம் அளிக்கப்போகும் தீவிர பதிலடிக்கான ஆயத்தங்கள் குறித்து (SBU) தலைவர் ஒலெக்சாண்டர் போக்லாட் அறிக்கை அளித்துள்ளார்” எனவும் ஜெலென்ஸ்கி கூறியுள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-05T00:33:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதிரடியாக கைதான நாமல் - பொதுஜன பெரமுண முக்கியஸ்தர்களின் அவசர ஒன்று கூடல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/urgent-meeting-of-podujana-peramuna-key-figures-1788567108"></link>
            <id>https://tamilwin.com/article/urgent-meeting-of-podujana-peramuna-key-figures-1788567108</id>
            <summary type="text">ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுண (மொட்டுக்) கட்சியின் முக்கியஸ்தர்கள் அவசர ஒன்றுகூடல் ஒன்றுக்காக கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

பொதுஜன பெரமுண கட்சியின் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுண (மொட்டுக்) கட்சியின் முக்கியஸ்தர்கள் அவசர ஒன்றுகூடல் ஒன்றுக்காக கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
</p><p>
பொதுஜன பெரமுண கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச இலஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலுக்கு அனுப்பப்பட்டுள்ளார்.</p><h2>அவசர ஒன்று கூடல்</h2><p>
</p><p>
இதற்கிடையே மொட்டுக் கட்சியின் ஏற்பாட்டில் எதிர்வரும் 12ம் திகதி அநுராதபுரம் நகரில் மக்கள் போராட்டம் (ஜன சடன) என்ற பெயரில் அரசாங்கத்துக்கு எதிராக மாபெரும் பேரணியொன்று நடைபெற ஏற்பாடாகி உள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7956ad61-7dca-4132-ab78-004c6311a581/26-6a9b5ff82aaae.webp' /></p><p>
</p><p>
இவ்வாறான நிலையில் நாமல் ராஜபக்சவின் கைது விவகாரத்தை எதிர்கொள்வது மற்றும் அநுராதபுர பேரணியை வெற்றிகரமாக நடத்துவது உள்ளிட்ட முக்கிய விடயங்களை கலந்துரையாடுவதற்காக பொதுஜன பெரமுண கட்சியின் முக்கியஸ்தர்கள் அவசரமாக கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
</p><p>
கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் அதற்கான அழைப்பை விடுத்துள்ளார்.
</p><p>
பத்தரமுல்லை , நெளும் மாவத்தையில் அமைந்துள்ள பொதுஜன பெரமுண கட்சியின் தலைமையகத்தில் இன்று(5) முற்பகல் மேற்குறித்த விடயங்கள் தொடர்பில் கட்சி முக்கியஸ்தர்களின் முக்கிய கலந்துரையாடல் ஒன்று நடைபெறவுள்ளதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-05T00:19:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[கைதாகியும் கைவிலங்குடன் சிரித்தபடி சிறை சென்ற நாமல்! கைதாவதை முன்கூட்டியே அறிந்தது எப்படி..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-rajapaksa-arrested-1788566415"></link>
            <id>https://tamilwin.com/article/namal-rajapaksa-arrested-1788566415</id>
            <summary type="text">தான் கைது செய்யப்படலாம் என்று நாமல் ராஜபக்ச முன்பே கூறியிருந்த நிலையில், அவர் கைது செய்யப்பட்டு செப்டம்பர் 18-ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>தான் கைது செய்யப்படலாம் என்று நாமல் ராஜபக்ச முன்பே கூறியிருந்த நிலையில், அவர் கைது செய்யப்பட்டு செப்டம்பர் 18-ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமையானது தற்போது பேசுபொருளாகியுள்ளது.
</p><p>
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான கொள்முதல் பரிவர்த்தனைகளுடன் தொடர்புடைய விடயத்திலே இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
</p><p>
இதில் சுமார் 1.4 மில்லியன் யூரோக்களுக்கு மேலான இலஞ்சப் பணம் வெளிநாட்டு வங்கிக் கணக்குகள் மற்றும் உள்ளூர் நிறுவனங்கள் மூலம் பரிமாற்றம் செய்யப்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
</p><p>
பிரான்ஸ் நாட்டு ஏர்பஸ் (Airbus) நிறுவன அதிகாரிகளின் வாக்குமூலங்கள் மற்றும் ஆவணங்களின் அடிப்படையில் இந்த விசாரணை நடத்தப்பட்டுள்ளது.</p><p> 

கடந்த காலங்களில் கபில சந்திரசேன சம்பந்தப்பட்ட வழக்குகள் குறித்தும் இதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
</p><p>

இந்தநிலையில் அதற்கு முன்னதாகவும் நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டுள்ளார், ஆனால் அப்போதைய நிலை தற்போது மாற்றமடைந்துள்ளதை காண முடிகின்றது.
</p><p>
அதே சமயம் நாமல் ராஜபக்ச காலையிலிருந்து அமைதியான மற்றும் புன்னகைத்த முகபாவனையுடனேயே காணப்பட்டார்.</p><p>

இந்த விடயங்கள் தற்போது இலங்கை அரசியலில் பேசுபோருளாகியுள்ள நிலையில், விரிவான விளக்கங்களை எடுத்து வருகின்றது NewsInsightTamil நிகழ்ச்சி...</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/cqqPn-TnFso" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-05T00:02:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[சூடானில் கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் 21 பேர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/rebel-attack-in-sudan-kills-21-people-1788566157"></link>
            <id>https://canadamirror.com/article/rebel-attack-in-sudan-kills-21-people-1788566157</id>
            <summary type="text">வடக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு சூடான்.&amp;nbsp;சூடானில் கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் 21 பேர் உயிரிழந்தனர்.&amp;nbsp; சூடானின் தெற்கு கார்டோப...</summary>
            <content type="html"><![CDATA[<p>வடக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு சூடான்.&nbsp;</p><p>சூடானில் கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் 21 பேர் உயிரிழந்தனர்.&nbsp;</p><p><br></p><p> </p><p>சூடானின் தெற்கு கார்டோபன் மாகாணம் கவ்டா அருகே உள்ள டிபி, லுவிரி ஆகிய கிராமங்களுக்குள் புகுந்த கிளர்ச்சியாளர்கள் பொதுமக்கள் மீது சரமாரி தாக்குதல் நடத்தினர்.</p><p>இந்த தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உள்பட 21 பேர் உயிரிழந்தனர்.</p><p> இந்த தாக்குதல் குறித்து தகவலறிந்த பாதுகாப்புப்படையினர் விரைந்து சென்று சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-04T23:56:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜனநாயகம் சீரழிகிறது..! அரசுக்கு எதிராக சஜித் போர்க்கொடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/country-and-democracy-being-destroyed-government-1788562996"></link>
            <id>https://tamilwin.com/article/country-and-democracy-being-destroyed-government-1788562996</id>
            <summary type="text">பாதாள உலகக் குழுக்களின் துப்பாக்கிச்சூடுகளால் தொடரும் உயிரிழப்புகள்
ஒருபுறமிருக்க, அரசின் நாசகார வேலைகளினால் நாடும், நீதிமன்றமும், ஜனநாயகமும்
சீரழிந...</summary>
            <content type="html"><![CDATA[<p>பாதாள உலகக் குழுக்களின் துப்பாக்கிச்சூடுகளால் தொடரும் உயிரிழப்புகள்
ஒருபுறமிருக்க, அரசின் நாசகார வேலைகளினால் நாடும், நீதிமன்றமும், ஜனநாயகமும்
சீரழிந்து வருகின்றன என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ
தெரிவித்தார்.
</p><p>
அம்பாந்தோட்டை திஸ்ஸமகாராம கொங்வெலான பிரதேசத்தில் விவசாயிகளின் பிரச்சினைகளை
ஆராயும் மக்கள் சந்திப்பில் நேற்று வெள்ளிக்கிழமை கலந்துகொண்டு
உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.</p><h2>22ஆவது திருத்தம்</h2><p>
</p><p>
இந்தக் கூட்டத்தில் அவர் மேலும் உரையாற்றுகையில்,</p><p>

"அரசு 22ஆவது திருத்தத்தைக் கொண்டுவந்து ஜனநாயகம், சுதந்திரமான நீதித்துறை,
சட்டத்தின் ஆட்சி மற்றும் நீதி வழங்கும் செயற்பாடுகளின் மீது பெரும் அடியைக்
கொடுத்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a2b7a26f-28c8-43f6-ae72-2b2a4b274635/26-6a9b4fb0bf875.webp' /></p><p> </p><p>நீதித்துறையின் சுதந்திரத்தில் கைவைத்து அரசு ஜனநாயகத்தை
சீரழித்து வருகின்றது.

பொருளாதாரத்தின் மீது அரசு தொடுத்த தாக்குதலால் வாழ்க்கைச் சுமை மற்றும்
செலவுகள் அதிகரித்து காணப்படுகின்றன.</p><p> மின்சாரக் கட்டணக் குறைப்பு மற்றும்
உலகளாவிய விலைக்கு எரிபொருள் வழங்குவதாகக் கூறிய வாக்குறுதிகள் எவையும்
நிறைவேற்றப்படவில்லை.</p><h2>சஜித் பிரேமதாஸ</h2><p>
</p><p>
தேர்தல் காலத்தில் அஸ்வெசும தொகை அதிகரிக்கப்படும் என்று கூறப்பட்ட போதிலும்,
தற்போது அஸ்வெசும தொகையும் பயனாளர்களின் எண்ணிக்கையும் அரசாங்கத்தினால்
குறைக்கப்பட்டு வருகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2d3bc845-e58e-4d6e-87b7-24f11702ba34/26-6a9b4fb1b5662.webp' /></p><p> </p><p>வறுமையை ஒழிப்பதற்கான காத்திரமான திட்டங்கள்
எதுவும் இவர்களிடம் இல்லை.

விவசாயிகள் விதை மற்றும் உர விலை உயர்வுடன், யானை - மனித மோதல்களுக்கு
மத்தியிலும் உற்பத்தியை மேற்கொண்டாலும் நிலையான விலை கிடைக்கவில்லை. </p><p>150 ரூபா
வாக்குறுதி மீறப்பட்டு, விவசாயிக்கு நெல் ஒரு கிலோவுக்கு 17 ரூபா நட்டம்
ஏற்படுத்தப்பட்டுள்ளது. </p><p>மேலும், நுண், சிறிய மற்றும் நடுத்தர தொழில்முனைவோர்
மீதான வரித் தாக்குதல்கள் மற்றும் பராட்டே சட்டம் காரணமாக இவர்கள் பெரிதும்
பாதிக்கப்பட்டுள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-04T23:18:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[வீழ்ச்சியடையும் ட்ரம்பின் செல்வாக்கு ! ஈரான் போர் தொடர்பில் ஜே.டி. வான்ஸ் வெளியிட்ட அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/conflict-between-us-and-iran-not-a-war-vance-1788562089"></link>
            <id>https://ibctamil.com/article/conflict-between-us-and-iran-not-a-war-vance-1788562089</id>
            <summary type="text">அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான சண்டையை ஒரு போர் என்று குறிப்பிட முடியாது என்றும், இந்த மோதல் எப்போது முடிவடையும் என்பதற்கான குறிப்பிட்ட காலக்கெடுவை ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான சண்டையை ஒரு போர் என்று குறிப்பிட முடியாது என்றும், இந்த மோதல் எப்போது முடிவடையும் என்பதற்கான குறிப்பிட்ட காலக்கெடுவை வழங்க முடியாது என்றும் அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் தெரிவித்துள்ளார்.</p><p>

இடைக்காலத் தேர்தல்கள் நெருங்கி வரும் வேளையில், இந்த மோதல் ஏழாவது மாதத்தை எட்டியுள்ளதால் ட்ரம்ப் நிர்வாகம் எதிர்கொள்ளும் சவால்களை குறைக்க அவர் இவ்வாறான கருத்துக்களை தெரிவிப்பதாக சர்வதேச வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.</p><p>

அமைதியான சூழலுக்குப் பிறகு இந்த வாரம் இரு நாடுகளுக்கும் இடையே மீண்டும் தாக்குதல்கள் தொடங்கியுள்ளன. தற்போதைக்கு அமைதியை ஏற்படுத்த எவ்வித இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளும் நடைபெறவில்லை.</p><p></p><h2>ட்ரம்பின் செல்வாக்கு</h2><p>
</p><p>
இந்தப் போர் காரணமாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் செல்வாக்கு சரிந்துள்ளதுடன், எரிபொருள் விலையும் உயர்ந்துள்ளதால் வரும் நவம்பர் தேர்தலில் குடியரசுக் கட்சிக்கு இது பெரும் சவாலாக மாறியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/88fe2280-08ad-4a69-976f-344a2e85c729/26-6a9b4e478e4a2.webp' /></p><p><i>Image Credit: CNN</i></p><p>
</p><p>இந்நிலையில், வெள்ளை மாளிகையில் பேசிய வான்ஸ், ஹோர்முஸ் நீரிணை வழியாக எண்ணெய் போக்குவரத்தை சீராக வைத்திருக்க அமெரிக்கா எடுக்கும் முயற்சிகளைப் பாராட்டினார்.</p><p> மேலும், அமெரிக்கா தனது முக்கிய ராணுவ நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டுவந்துவிட்டதால் இதை 'போர்' என்று கூற முடியாது என்றும், தற்போது தீவிரமான தாக்குதல்கள் எதுவும் நடைபெறவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><h2>மோதலின் முடிவு&nbsp;</h2><p>
</p><p>
இருப்பினும், மத்திய கிழக்கில் அமெரிக்கா 50,000-க்கும் மேற்பட்ட வீரர்களையும், 20 போர்க்கப்பல்களையும் நிலைநிறுத்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/90cfff47-7ead-4137-8527-5bb63f49902a/26-6a9b4e4850b49.webp' /></p><p><i>Image Credit:&nbsp;defensenews</i></p><p> 

வர்த்தகக் கப்பல்கள் மீதான தாக்குதலை ஈரான் நிறுத்தும் வரை இராஜதந்திர பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பில்லை என்று கூறிய வான்ஸ், இந்த மோதல் எப்போது முற்றிலுமாக முடிவுக்கு வரும் என்பதைக் கணிக்க முடியாது என்றும் தெளிவுபடுத்தியுள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-04T23:13:49+00:00</updated>
        </entry>
    </feed>
