<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-09-13T23:25:38+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[உயர்நீதிமன்ற அதிரடி தீர்ப்பு! திடீரென தலைமறைவான ஞானசார தேரர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/gnanasara-thero-has-been-in-hiding-since-friday-1789340559"></link>
            <id>https://tamilwin.com/article/gnanasara-thero-has-been-in-hiding-since-friday-1789340559</id>
            <summary type="text">பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், கடந்த வெள்ளிக்கிழமை தொடக்கம் தலைமறைவாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.

பொதுபல சேனா (BBS) அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், கடந்த வெள்ளிக்கிழமை தொடக்கம் தலைமறைவாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.</p><p>

பொதுபல சேனா (BBS) அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டின் கீழ் கடந்த 2019-ஆம் ஆண்டில் ஆறுவருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தார்.
</p><h2>&nbsp;ஞானசார தேரர்</h2><p>
அவர் தனது சிறைவாழ்க்கையில் சுமார் ஒன்பது மாதங்களைப் பூர்த்தி செய்திருந்த நிலையில், 2019-ஆம் ஆண்டு மே மாதம் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவால் ஜனாதிபதி மன்னிப்பு வழங்கப்பட்டிருந்தது.
</p><p>
சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது முதல் பொதுமன்னிப்பு வழங்கப்படும் காலம் வரை ஞானசார தேரர், வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையில் காவியுடையில் சாதாரண விளக்கமறியல் கைதி போன்றே சகல வசதிகளுடன் காலம் கழித்திருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bdfc7893-b72a-49df-a53d-f1a93c7f40a1/26-6aa72f16ca6ac.webp' /></p><p>
</p><p>
அவ்வாறான நிலையில்தான் அவருக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டிருந்தது. அதற்கு எதிராக கடத்திச் செல்லப்பட்டு, காணாமல் போகச் செய்யப்பட்ட பிரபல ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா எக்னெலிகொட அடிப்படை மனித உரிமை மீறல் மனுவொன்றைத் தாக்கல் செய்திருந்தார்.
</p><p>
இந்நிலையில் குறித்த மனுவிசாரணையின் இறுதியில் உச்ச நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன வழங்கிய பொது மன்னிப்பு தன்னிச்சையானது என்றும், அது பொது நம்பிக்கையையும் இயற்கை நீதியின் கோட்பாடுகளையும் மீறுவதாகவும் தீர்ப்பளித்தது.</p><h2>&nbsp;தலைமறைவு</h2><p>

இந்நிலையில் தனக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி மன்னிப்பை உச்ச நீதிமன்றம் ரத்து செய்ததைத் தொடர்ந்து ஞானசார தேரர் தலைமறைவாகிவிட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. </p><p>அவரது தண்டனையின் மீதமுள்ள ஆறு ஆண்டுகளை அனுபவிப்பதற்காக அவரை மீண்டும் சிறைக்கு அழைத்துச் செல்லும் நடவடிக்கையின் ஒரு பகுதியாகஇ ராஜகிரிய, நாவலவில் உள்ள விகாரைக்கு சிறைச்சாலை அதிகாரிகள் கடந்த சனிக்கிழமை சென்றிருந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/92949f1d-1e20-4cb5-9923-f4ea4f50a0fe/26-6aa72f177ca3b.webp' /></p><p>

எனினும் ஞானசார தேரர் விகாரையில் இருந்து தலைமறைவாகியுள்ளதுடன், அவரது மெய்ப்பாதுகாவலர் உள்ளிட்ட எவருக்கும் அவரது இருப்பிடம் குறித்த தகவல்கள் தெரியவில்லை என்று கூறப்பட்டுள்ளது.
</p><p>
தனது தண்டனையில் ஒன்பது மாதங்களை மட்டுமே அனுபவித்திருந்த ஞானசார தேரர், தற்போது தனது அசல் ஆறு ஆண்டு தண்டனையின் பெரும்பகுதியை அனுபவிக்கும் நிலையை எதிர்கொள்கிறார்.</p><p> இந்நிலையில் தலைமறைவாக உள்ள அவரைத் தேடி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-13T23:17:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[மஹிந்தவின் கூட்டத்தில் சிக்கிய இரகசிய வீடியோ ; அநுரவின் மிரட்டலால் கலக்கத்தில்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/secret-video-from-mahinda-s-meeting-exposed-1789340974"></link>
            <id>https://jvpnews.com/article/secret-video-from-mahinda-s-meeting-exposed-1789340974</id>
            <summary type="text">அனுராதபுரத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நடத்திய அரசாங்க எதிர்ப்பு பேரணியில் பங்கேற்ற சில ஆதரவாளர்கள் மதுபோதையில் இருந்ததாகவும், அவர்களுக்கு உணவுப் பொட...</summary>
            <content type="html"><![CDATA[<p>அனுராதபுரத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நடத்திய அரசாங்க எதிர்ப்பு பேரணியில் பங்கேற்ற சில ஆதரவாளர்கள் மதுபோதையில் இருந்ததாகவும், அவர்களுக்கு உணவுப் பொட்டலங்களுடன் மதுபானம் வழங்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.</p><p></p><p> பேரணி நிறைவடைந்த பின்னர் மதுபோதையில் இருப்பதாகக் கூறப்படும் சிலரின் காணொளிகளும் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன.
</p><p>
இந்நிலையில், பேரணியில் கலந்துகொண்ட முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கையில் வைத்திருந்ததாகக் கூறப்படும் தங்க நிற கோல் அல்லது செங்கோல் போன்ற பொருள் மீண்டும் கவனம் பெற்றுள்ளது.</p><p>

இந்தப் பொருள் தொடர்பாக சமூக ஊடகங்களிலும் அரசியல் வட்டாரங்களிலும் பல்வேறு கருத்துகள் நிலவி வருகின்றன. சில தரப்பினர் இதனை அதிர்ஷ்டம் மற்றும் பாதுகாப்புடன் தொடர்புடைய பொருளாகவும், ஜோதிட ஆலோசனைகளின் அடிப்படையில் பயன்படுத்தப்படுவதாகவும் கூறுகின்றனர்.
</p><p>
மேலும், மகிந்த ராஜபக்சவின் ஜோதிட நம்பிக்கை, அவர் அணியும் மோதிரங்கள் மற்றும் தாயத்துக்கள் தொடர்பான விவாதங்களும் இதனுடன் இணைத்து சமூக ஊடகங்களில் மீண்டும் பேசப்பட்டு வருகின்றன.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/3crJrhXAriQ" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-09-13T23:09:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[டீசல் விலையை லீற்றருக்கு ரூ.170ஆக அதிகரிக்க வேண்டும்! அழுத்தம் தெரிவிக்கும் தனியார் நிறுவனங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/to-increase-the-diesel-price-to-rs-170-per-litre-1789340684"></link>
            <id>https://ibctamil.com/article/to-increase-the-diesel-price-to-rs-170-per-litre-1789340684</id>
            <summary type="text">செலவுகளை ஈடுகட்டும் வகையிலான எரிபொருள் விலை நிர்ணய பொறிமுறையை விரைவில் மீண்டும் நடைமுறைப்படுத்துமாறு இலங்கையில் எரிபொருள் விநியோகத்தில் ஈடுபட்டுள்ள தன...</summary>
            <content type="html"><![CDATA[<p>செலவுகளை ஈடுகட்டும் வகையிலான எரிபொருள் விலை நிர்ணய பொறிமுறையை விரைவில் மீண்டும் நடைமுறைப்படுத்துமாறு இலங்கையில் எரிபொருள் விநியோகத்தில் ஈடுபட்டுள்ள தனியார் நிறுவனங்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளன.</p><p>

உலக சந்தையில் எரிபொருள் விலைகள் வேகமாக அதிகரித்து வருவதுடன், கடல் போக்குவரத்துக் கட்டணங்களும் உயர்ந்துள்ள நிலையில் அவர்கள் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
</p><p>
தற்போதைய நிலைமையில் ஒரு லீற்றர் டீசலை விநியோகிக்கும் போது சுமார் 170 ரூபாய் நட்டத்தை எதிர்கொள்ள வேண்டியுள்ளதாக அந்த நிறுவனங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.</p><p></p><h2>தனியார் எரிபொருள் விநியோக நிறுவனங்கள்&nbsp;</h2><p>
</p><p>
இது தொடர்பில் எரிபொருள் விநியோகத்தில் ஈடுபட்டுள்ள தனியார் நிறுவனங்கள் ஒன்றிணைந்து, எரிசக்தி அமைச்சருக்கும் அமைச்சின் செயலாளருக்கும் நிலைமையை அறிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8cfa8471-eed6-46e1-a19b-284c1b4e3526/26-6aa72c105f6e9.webp' /></p><p>
</p><p>
முன்னதாக அரசாங்கத்தினால் ஒரு லீற்றர் டீசலுக்கு 100 ரூபாயும், ஒரு லீற்றர் பெட்ரோலுக்கு 20 ரூபாயும் வழங்கப்பட்டு வந்த மானியம் கடந்த ஜூலை மாதம் முதல் இடைநிறுத்தப்பட்டது.
</p><p>
இந்தத் தீர்மானத்தையடுத்து, எதிர்கால எரிபொருள் தொகுதிகளுக்கான கொள்வனவு உத்தரவுகளை மேற்கொள்ள தேவையான நிதியை திரட்டுவதில் கடுமையான நெருக்கடியை எதிர்கொண்டு வருவதாக தனியார் எரிபொருள் விநியோக நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
</p><p>
செலவுக்கு ஏற்ப எரிபொருள் விலைகளில் திருத்தம் மேற்கொள்ளப்படாவிட்டால், நிறுவனங்களுக்கு ஏற்படும் நட்டம் காரணமாக தொடர்ச்சியான எரிபொருள் விநியோகத்தைப் பேணுவது கடும் ஆபத்துக்குள்ளாகும் எனவும் அந்த நிறுவனங்கள் எச்சரித்துள்ளன.
</p><p>
இதேவேளை, தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு வழங்கப்படும் எரிபொருள் தொகைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.</p><p></p><h2>மத்திய கிழக்கில் நிலவும் மோதல்கள்&nbsp;</h2><p>
மேலும் சில தனியார் எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் டீசல் இல்லை என்ற அறிவித்தல் பலகைகள் தொங்கவிடப்பட்டுள்ளதை அறியமுடிகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9fcf2113-7ea3-4320-a6eb-3d1d792e2042/26-6aa72c0faacf3.webp' /></p><p>

இருப்பினும், இது குறித்து இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே.ராஜகருணா, எரிபொருள் கூட்டுத்தாபன (Ceypetco) எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் போதுமான அளவு எரிபொருள் கையிருப்பில் உள்ளதாக அவர் உறுதியளித்துள்ளார்.</p><p>இந்நிலையில் மத்திய கிழக்கில் நிலவும் மோதல்கள் காரணமாக எரிபொருள் இறக்குமதிக்கான செலவு அதிகரித்துள்ள நிலையில், தனியார் எரிபொருள் நிறுவனங்களுக்கான எரிபொருள் விலையை திருத்தியமைப்பது குறித்து அரசாங்கம் பரிசீலிக்கக்கூடும் என்று எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக முன்னதாக தெரிவித்திருந்தார்.</p><p>

தனியார் எரிபொருள் நிறுவனங்களுடன் எட்டப்பட்டுள்ள ஒப்பந்தங்களின்படி, இவ்வாறு எரிபொருள் விலையை திருத்தியமைப்பதில் எந்தவித சட்டத் தடைகளும் இல்லை என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td><br></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-13T23:05:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறைத் தண்டனை அனுபவிக்கும் பியங்கர ஜயரத்ன அச்சுப் பிரிவில் நியமனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/imprisoned-piyangara-jayarathne-printing-section-1789339889"></link>
            <id>https://jvpnews.com/article/imprisoned-piyangara-jayarathne-printing-section-1789339889</id>
            <summary type="text">சிறைத்தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் அமைச்சர் பியங்கர ஜயரத்ன, சிறைச்சாலையின் அச்சுப் பிரிவில் (Printing Section) பணிக்கு நியமிக்கப்பட்டுள்ளதாக சிறைச...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிறைத்தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் அமைச்சர் பியங்கர ஜயரத்ன, சிறைச்சாலையின் அச்சுப் பிரிவில் (Printing Section) பணிக்கு நியமிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்களை மேற்கோள் காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.</p><p></p><p>

அரசியல்வாதிகளுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்படும் சந்தர்ப்பங்களில், அவர்களில் பலர் சிறைச்சாலையின் அச்சுப் பிரிவு உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு நியமிக்கப்படுவது வழமையாக உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/11ffdb05-45ff-4d2c-aa28-0515d3a0d228/26-6aa728f32fe4a.webp' /></p><p>

2014ஆம் ஆண்டு கொழும்பில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் மே தின ஊர்வலத்தில் கலந்துகொண்ட அரசியல் ஆதரவாளர்கள் குழுவொன்றுக்கு உணவு வழங்குவதற்காக, ஸ்ரீலங்கன் கேட்டரிங் நிறுவனத்திற்கு சொந்தமான கணக்கிலிருந்து 330,000 ரூபாய் செலவிட்டு அரசாங்கத்திற்கு நட்டம் ஏற்படுத்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் பியங்கர ஜயரத்னவுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
</p><p>
இந்த வழக்கில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளில் இரண்டு குற்றச்சாட்டுகளுக்கு அவர் குற்றவாளி என கொழும்பு உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.
</p><p>
இதன்படி, முன்னாள் அமைச்சர் பியங்கர ஜயரத்னவுக்கு 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதுடன், அதனை ஏழு ஆண்டுகளில் அனுபவிக்கும் வகையில் கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி முகமது மிஹைல் தீர்ப்பளித்திருந்தார்.</p><p>இந்நிலையில், தற்போது சிறைத்தண்டனை அனுபவித்து வரும் அவர், சிறைச்சாலையின் அச்சுப் பிரிவில் பணிக்கு நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p></p>]]></content>
            <updated>2026-09-13T22:51:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[சர்வதேச அளவில் விரிவடையும் சபாநாயகர் விவகாரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/the-speaker-issue-expands-internationally-1789339585"></link>
            <id>https://ibctamil.com/article/the-speaker-issue-expands-internationally-1789339585</id>
            <summary type="text">சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவுக்கு எதிராக இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில்,&amp;nbsp;நாடாளுமன்ற உறு...</summary>
            <content type="html"><![CDATA[<p>சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவுக்கு எதிராக இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில்,&nbsp;நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர பொதுநலவாய நாடாளுமன்ற சங்கத்தில் உத்தியோகபூர்வ முறைப்பாடொன்றைச் செய்துள்ளார்.</p><p>அது தொடர்பில் தான் நாடாளுமன்றத்தில் முன்வைக்க முயன்ற சிறப்புரிமைப் பிரச்சினையை சபாநாயகர் தடுத்ததாகக் குற்றஞ்சாட்டி, இந்த முறைப்பாட்டை பதிவு செய்துள்ளார்.</p><p>பொதுநலவாய நாடாளுமன்ற சங்கத்தின் தலைவரான ரெஃபில்வே ட்ஷ்வேனி-ட்ஷிபானே மற்றும் அதன் பொதுச் செயலாளர் ஸ்டீவன் ட்விக் ஆகியோருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ள அவர்,&nbsp;இந்த விடயம் தொடர்பில் அறிவித்துள்ளார்.</p><p></p><h2>நிறுவன ரீதியான நடுநிலைத்தன்மை</h2><p> </p><p>இலங்கை நாடாளுமன்றத்தின் நிறுவன ரீதியான நடுநிலைத்தன்மை, நாடாளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமைகள் மற்றும் பேச்சுச் சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்காக உடனடியாக தலையிடுமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5aba5ac5-9eeb-48f1-9342-c4c43aba5d41/26-6aa727c4838ed.webp' /></p><p>

சபாநாயகரின் உத்தியோகபூர்வ கடமைகளுடன் தொடர்புடைய விடயமொன்று தொடர்பில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் விசாரணை முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், அவர் தொடர்ந்து சபாநாயகர் பதவியில் செயற்படுவது தொடர்பாக கடந்த செப்டம்பர் 10ஆம் திகதி தான் சிறப்புரிமைப் பிரச்சினையொன்றை முன்வைத்ததாக தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
</p><p>
குறித்த சிறப்புரிமைப் பிரச்சினையை நாடாளுமன்ற ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமைகள் தொடர்பான குழுவுக்கு அனுப்ப எதிர்பார்த்திருந்த போதிலும், அது தொடர்பில் தாமே ஆய்வு செய்ய வேண்டும் எனத் தெரிவித்து சபாநாயகர் அதற்கு அனுமதி வழங்க மறுத்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள நபரே, தனக்கு எதிரான முறைப்பாடு தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமா இல்லையா என்பதைத் தீர்மானிப்பது இயற்கை நீதியின் அடிப்படைகளுக்கு முரணானது எனவும், இது நிறுவன ரீதியான நடுநிலைத்தன்மை குறித்து பாரிய கேள்விகளை எழுப்புவதாகவும் தயாசிறி ஜயசேகர சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p></p><h2>நாடாளுமன்ற அதிகாரங்கள்</h2><p>
</p><p>
அத்துடன், மற்றுமொரு விவாதத்தின் போது இந்த விடயம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் கருத்து தெரிவிக்க முயன்றபோது, சபாநாயகர் தனது உரையை இடைநிறுத்தியதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b41bcb6f-4c04-46a6-8c4c-34a88eb1bc97/26-6aa727c3ce565.webp' /></p><p>

இதன் மூலம் 1953ஆம் ஆண்டு 21ஆம் இலக்க நாடாளுமன்ற அதிகாரங்கள் மற்றும் சிறப்புரிமைகள் சட்டத்தின் கீழ் நாடாளுமன்ற உறுப்பினருக்கு வழங்கப்பட்டுள்ள பேச்சுச் சுதந்திரம் மீறப்பட்டுள்ளதாகவும் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
</p><p>
இந்த நிலைமையை கருத்திற்கொண்டு, நாடாளுமன்ற ஜனநாயகம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமைகளைப் பாதுகாப்பதற்காக இந்த விடயம் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் என அவர் கோரியுள்ளார்.
</p><p>
மேலும், சபாநாயகரின் செயற்பாடுகள் ஏற்றுக்கொள்ளப்பட்ட நாடாளுமன்ற சம்பிரதாயங்கள் மற்றும் நடுநிலைத்தன்மைக்கு அமைவானதா என்பதை ஆராய வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
</p><p>
அத்துடன், குறித்த சிறப்புரிமைப் பிரச்சினையை நாடாளுமன்ற ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமைகள் தொடர்பான குழுவிடம் சமர்ப்பிக்க இலங்கை நாடாளுமன்றத்தை ஊக்குவிக்க வேண்டும் என்றும், சிறப்புரிமைப் பிரச்சினையை எழுப்புவதற்கு அனுமதி மறுக்கப்பட்டமை தொடர்பில் சுயாதீனமானதும் நடுநிலையானதுமான விசாரணையை முன்னெடுக்க வேண்டும் என்றும் அவர் பொதுநலவாய நாடாளுமன்ற சங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-13T22:46:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிக் பாஸ் எனக்கு செட் ஆகாது.. நடிகர் VJ சித்து பேட்டி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/ashika-ranganath-trendy-cute-photoshoot-1789339532"></link>
            <id>https://cineulagam.com/article/ashika-ranganath-trendy-cute-photoshoot-1789339532</id>
            <summary type="text">பிக் பாஸ் எனக்கு செட் ஆகாது.. நடிகர் VJ சித்து பேட்டி&amp;nbsp;</summary>
            <content type="html"><![CDATA[<p>பிக் பாஸ் எனக்கு செட் ஆகாது.. நடிகர் VJ சித்து பேட்டி&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/gZUvt8QIv6M" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-09-13T22:45:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆஷிகா ரங்கநாத் ட்ரெண்டி போட்டோஷூட்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/ashika-ranganath-trendy-glam-photoshoot-1789339345"></link>
            <id>https://cineulagam.com/article/ashika-ranganath-trendy-glam-photoshoot-1789339345</id>
            <summary type="text">&amp;nbsp;ஆஷிகா ரங்கநாத் ட்ரெண்டி போட்டோஷூட்</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;ஆஷிகா ரங்கநாத் ட்ரெண்டி போட்டோஷூட்</p>]]></content>
            <updated>2026-09-13T22:42:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[அனிகா சுரேந்திரன் வெளிநாட்டில் அழகிய புகைப்படங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/anikha-surendran-australia-trip-photos-1789339176"></link>
            <id>https://cineulagam.com/article/anikha-surendran-australia-trip-photos-1789339176</id>
            <summary type="text">அனிகா சுரேந்திரன் வெளிநாட்டில் அழகிய புகைப்படங்கள்&amp;nbsp;</summary>
            <content type="html"><![CDATA[<p>அனிகா சுரேந்திரன் வெளிநாட்டில் அழகிய புகைப்படங்கள்&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-13T22:39:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[விக்ரம் பட நடிகை சுவதிஷ்டா கிருஷ்ணன் அழகிய போட்டோஷூட்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/swathishta-krishnan-cute-photoshoot-1789339019"></link>
            <id>https://cineulagam.com/article/swathishta-krishnan-cute-photoshoot-1789339019</id>
            <summary type="text">விக்ரம் பட நடிகை சுவதிஷ்டா கிருஷ்ணன் அழகிய போட்டோஷூட்</summary>
            <content type="html"><![CDATA[<p>விக்ரம் பட நடிகை சுவதிஷ்டா கிருஷ்ணன் அழகிய போட்டோஷூட்</p>]]></content>
            <updated>2026-09-13T22:37:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[நற்கருணை பெற்ற தேவாலயத்தில் சுட்டுக்கொலை: ஜோசப் பரராஜசிங்கம் படுகொலையின் அதிர்ச்சிதரும் ஆதாரங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/mystery-surrounding-death-joseph-pararajasingam-1789338488"></link>
            <id>https://ibctamil.com/article/mystery-surrounding-death-joseph-pararajasingam-1789338488</id>
            <summary type="text">முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம், தேவாலயத்தில் நற்கருணை பெற்றுவிட்டு திரும்பியபோது சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான பல ஆண்டுகளுக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம், தேவாலயத்தில் நற்கருணை பெற்றுவிட்டு திரும்பியபோது சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான பல ஆண்டுகளுக்குப் பின்னரான புதிய தகவல்களை&nbsp;ஐ.பி.சி தமிழின் உண்மைகள் நிகழ்ச்சி வெளிப்படுத்தியுள்ளது.</p><p>
இந்தத் தாக்குதலில் பரராஜசிங்கத்தின் மனைவி உள்ளிட்ட மேலும் பலரும் காயமடைந்தனர். அவர்களில் ஒரு கத்தோலிக்க அருட்சகோதரியும் இரண்டு சிறுமிகளும் அடங்குகின்றனர். இதனால், இந்தத் தாக்குதல் எவ்வளவு கொடூரமானதாக இருந்தது என்பதும் வெளிப்படுகிறது.</p><p>
பரராஜசிங்கம் மீது தாக்குதல் நடத்துவதற்கு தேவாலயம் தேர்ந்தெடுக்கப்பட்டதன் பின்னணியில், உளவியல் ரீதியான அச்சத்தை ஏற்படுத்தும் நோக்கம் இருந்திருக்கலாம் என்ற சந்தேகங்கள் தற்போது வெளிப்படுகிறது.</p><p>
அவரை வேறு இடங்களிலும் இலக்கு வைப்பதற்கான வாய்ப்புகள் இருந்தபோதிலும், ஒரு வழிபாட்டுத் தலத்திற்குள் வைத்து தாக்குதல் நடத்தப்பட்டமை, எதிர்ப்புக் குரல் எழுப்புவோர் மத்தியில் தீவிர அச்சத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என்ற கேள்வியையும் எழுப்புகிறது.
</p><p>
இந்தப் படுகொலை பொதுவாக கருணா மற்றும் பிள்ளையான் சார்ந்த குழுக்களுடன் தொடர்புபடுத்தப்பட்டு வந்துள்ளது. எனினும், இந்தத் தாக்குதலின் பின்னணியில் இலங்கை இராணுவப் புலனாய்வுப் பிரிவு, EPDP, EPRLF மற்றும் கருணா குழு உள்ளிட்ட பல தரப்புகள் தொடர்புபட்டிருந்ததாகவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன.
</p><p>
இந்நிலையில், சம்பவம் தனது கண்முன்னேயே இடம்பெற்றதாகக் கூறும் புலனாய்வு ஊடகவியலாளர் நிராஜ் டேவிட், துப்பாக்கிச் சூட்டுக்குப் பின்னர் ஜோசப் பரராஜசிங்கத்தை தனது வாகனத்தில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதாகவும், தனது கைகளிலேயே அவர் உயிரிழந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
</p><p>
அவர் வெளியிட்டுள்ள இந்தத் தகவல்கள், ஜோசப் பரராஜசிங்கம் படுகொலையின் பின்னணியில் இதுவரை வெளிவராத பல கேள்விகளை மீண்டும் எழுப்புகின்றன.</p><p>இந்தக் கேள்விகளுக்கான பதில்களைத் தேடி, ஜோசப் பரராஜசிங்கம் படுகொலையின் பின்னணியை விரிவாக ஆராய்கிறது ஐ.பி.சி தமிழின் ‘உண்மைகள்’ நிகழ்ச்சி....</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/Mf5NlT3f33E" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-13T22:28:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெடுக்குநாறிமலையில் 11 அடி புத்தர் சிலை இருந்தது ; சந்தபோதி தேரர் அதிரடி அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/an-11-foot-buddha-statue-at-vedukkunaari-malai-1789330045"></link>
            <id>https://jvpnews.com/article/an-11-foot-buddha-statue-at-vedukkunaari-malai-1789330045</id>
            <summary type="text">வவுனியா வடக்கு, வெடுக்குநாறிமலை பகுதி பௌத்த வழிபாட்டுத் தலம் எனவும், அங்கு கடந்த 2012ஆம் ஆண்டுக்கு முன்னர் 11 அடி உயரமான புத்தர் சிலை ஒன்று இருந்ததாகவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>வவுனியா வடக்கு, வெடுக்குநாறிமலை பகுதி பௌத்த வழிபாட்டுத் தலம் எனவும், அங்கு கடந்த 2012ஆம் ஆண்டுக்கு முன்னர் 11 அடி உயரமான புத்தர் சிலை ஒன்று இருந்ததாகவும், அதனை மீண்டும் அப்பகுதியில் நிறுவுவதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் சந்தபோதி தேரர் தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p></p><p>வெடுக்குநாறிமலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ள பகுதிக்கு பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்புக்கு மத்தியில் சுமார் 25 சிங்கள மக்களுடன் சந்தபோதி தேரர் தலைமையிலான குழுவினர் நேற்று சனிக்கிழமை சென்றிருந்தனர்.
</p><p>
மலைப் பகுதிக்குச் சென்ற குறித்த குழுவினர், சூலம் அமைந்திருந்த பகுதியில் சுமார் ஒன்றரை மணிநேரம் பிரித் ஓதி, பூஜை மற்றும் வழிபாடுகளில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8e2def7b-6d0f-43c8-8c58-72700fe1f1f5/26-6aa7027f74a58.webp' /></p><p>இதேவேளை, குறித்த காலப்பகுதியில் சைவ மக்களை மலை உச்சிப் பகுதிக்குச் செல்ல வேண்டாம் என பொலிஸார் அறிவுறுத்தியிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
இதன்போது கருத்து தெரிவித்த சந்தபோதி தேரர், வெடுக்குநாறிமலை ஒரு பௌத்த வழிபாட்டுத் தலம் எனக் குறிப்பிட்டதுடன், அங்கு 2012ஆம் ஆண்டுக்கு முன்னர் 11 அடி உயரமான புத்தர் சிலை ஒன்று இருந்ததாகவும், தற்போது அந்த சிலை தங்களிடம் இருப்பதாகவும் தெரிவித்தார்.
</p><p>
மேலும், அந்த புத்தர் சிலையை மீண்டும் வெடுக்குநாறிமலையில் நிறுவுவதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அவர் கூறினார்.
</p><p>
வெடுக்குநாறிமலையில் சைவ வழிபாடுகள் 2013ஆம் ஆண்டுக்குப் பின்னரே ஆரம்பிக்கப்பட்டதாகவும், தமிழர்கள் போலியான நம்பிக்கையின் அடிப்படையில் அங்கு வழிபாடுகளில் ஈடுபட்டு வருவதாகவும் சந்தபோதி தேரர் குற்றம் சாட்டினார்.
</p><p>
வெடுக்குநாறிமலை தொடர்பில் நீண்டகாலமாக சைவ மற்றும் பௌத்த தரப்புகளுக்கு இடையில் உரிமை மற்றும் வழிபாட்டு விவகாரங்கள் தொடர்பாக சர்ச்சைகள் நிலவி வருகின்ற நிலையில், சந்தபோதி தேரரின் இந்தக் கருத்துக்கள் மீண்டும் கவனம் பெற்றுள்ளன.
</p><p>
இந்நிலையில், குறித்த பகுதியில் நிலவும் நிலைமை தொடர்பில் பொலிஸார் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினரின் நடவடிக்கைகள் தொடர்ந்தும் அவதானிக்கப்பட்டு வருகின்றன.</p><p></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8e2def7b-6d0f-43c8-8c58-72700fe1f1f5/26-6aa7027f74a58.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/02254a71-c1d7-4fab-8f3c-a1929028f485/26-6aa70280d44a7.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c626e1c4-5d93-488b-99e2-9f90ad10b877/26-6aa7028028d66.webp' /></p>]]></content>
            <updated>2026-09-13T22:25:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[மத்திய கிழக்கு பதற்றம் ; கொழும்பு-துபாய் விமான சேவையை தற்காலிக இடைநிறுத்தம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/suspension-of-colombo-dubai-flight-service-1789332124"></link>
            <id>https://jvpnews.com/article/suspension-of-colombo-dubai-flight-service-1789332124</id>
            <summary type="text">மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உருவாகி வரும் அசாதரண சூழ்நிலை காரணமாக, ஃபிட்ஸ் ஏர் நிறுவனம் தனது கொழும்பு-துபாய் விமானசேவையை தற்காலிகமாக இடைநிறுத்தம் ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உருவாகி வரும் அசாதரண சூழ்நிலை காரணமாக, ஃபிட்ஸ் ஏர் நிறுவனம் தனது கொழும்பு-துபாய் விமானசேவையை தற்காலிகமாக இடைநிறுத்தம் செய்ய முடிவு செய்துள்ளது.</p><p></p><p>

இந்த இடைநிறுத்தம் 2026 செப்டம்பர் 6 ஆம் திகதி முதல் அமலுக்கு வரும் என்று அந்த விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f547f4d5-3298-429b-81b2-081b36f9f1e2/26-6aa70a9de9967.webp' /></p><p>பிராந்தியத்தில் நிலவும் சூழ்நிலையைத் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், மேலும் அதன் தாக்கம் தனது விமானச் செயல்பாடுகளில் எவ்வாறு இருக்கும் என்பதையும் மதிப்பிட்டு வருவதாகவும் ஃபிட்ஸ் ஏர் கூறியுள்ளது.</p><p>&nbsp;தற்போதைய திட்டத்தின்படி, 2026 நவம்பர் 19 முதல் கொழும்பு-துபாய் விமான சேவையை மீண்டும் தொடங்க ஃபிட்ஸ் ஏர் எதிர்பார்க்கிறது. </p><p>இருப்பினும், இது அக்காலத்தில் நிலவும் சூழ்நிலையையும் எதிர்கால நிகழ்வுகளையும் பொறுத்தே அமையும் என்று அந்த விமான நிறுவனம் மேலும் கூறியுள்ளது. &nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-09-13T22:24:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாடப்புத்தகங்களுக்கான பெறுமதிசேர் வரி நீக்கம் ; 2027 வரவு-செலவுத் திட்டத்தில் திட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/removal-of-value-added-tax-vat-on-textbooks-1789338234"></link>
            <id>https://jvpnews.com/article/removal-of-value-added-tax-vat-on-textbooks-1789338234</id>
            <summary type="text">பாடப்புத்தகங்கள் மீது விதிக்கப்பட்டுள்ள பெறுமதிசேர் வரியை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.2027 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தில் அதற்குரிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>பாடப்புத்தகங்கள் மீது விதிக்கப்பட்டுள்ள பெறுமதிசேர் வரியை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.</p><p></p><p>2027 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தில் அதற்குரிய திட்டங்கள் முன்வைக்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
</p><p>
நொச்சியாகம பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (13) நடைபெற்ற அரசியல் கூட்டத்தில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c2d7489f-afda-4bc1-80df-54c541168095/26-6aa7227bcaee4.webp' /></p><p>அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டு, அதிலிருந்து மீண்டு வரும்நிலையில் தான் அரச நிர்வாகத்தை முன்னெடுத்துச் செல்கிறோம். பொருளாதார ரீதியில் ஸ்திரமடைந்துள்ளோம்.</p><p>இருப்பினும் பொருளாதார சுயாதீனத்தை இன்னும் அடையவில்லை.


பொருளாதார சுயாதீனத்தை அடைவதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளோம்.</p><p>இலவச கல்வி மற்றும் இலவச சுகாதாரத்துறை பாதுகாப்பதற்கும், மக்களுக்கான சேவை வழங்கலையும் வினைத்திறனாக்க அடுத்தாண்டு வரவு செலவுத் திட்டத்தில் அதிக நிதி ஒதுக்கப்படும்.
</p><p>
பாடப்புத்தகங்கள் மீது விதிக்கப்பட்டுள்ள பெறுமதிசேர் வரியை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.2027 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தில் அதற்குரிய திட்டங்கள் முன்வைக்கப்படும் என்றார்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-13T22:24:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[2026 மகளிர் ஆசிய கோப்பை: இலங்கையை வீழ்த்தி 8வது முறை சாம்பியனான இந்தியா!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/women-s-asia-cup-2026-final-india-beats-sri-lanka-1789331832"></link>
            <id>https://news.lankasri.com/article/women-s-asia-cup-2026-final-india-beats-sri-lanka-1789331832</id>
            <summary type="text">WOMEN&#039;S ASIA CUP 2026 Final India Beats Sri Lanka: மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கை அணியை வீழ்த்தி இந்திய அணி வெற்றி கோ...</summary>
            <content type="html"><![CDATA[<p>WOMEN'S ASIA CUP 2026 Final India Beats Sri Lanka: மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கை அணியை வீழ்த்தி இந்திய அணி வெற்றி கோப்பையை தட்டிச் சென்றுள்ளது.</p><h2> இந்திய அணியின் அதிரடியான பேட்டிங்</h2><p>துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற 2026 மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கை மற்றும் இந்தியாவின் மகளிர் அணிகள் மோதின.</p><p> நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து களமிறங்கியது.</p><p><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr">🇮🇳🏆 CHAMPIONS! 🏆🇮🇳<br><br>TEAM INDIA WOMEN HAVE WON THE ASIA CUP 2026! 🔥🏏<br><br>India beat Sri Lanka by 72 runs in the final! 💙🇮🇳<br><br>8th Asia Cup title for India! 🏆🔥<br><br>JAI HIND 🇮🇳<a href="https://x.com/hashtag/INDvsSL?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#INDvsSL</a> <a href="https://x.com/hashtag/TeamIndia?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#TeamIndia</a> <a href="https://x.com/hashtag/WomensAsiaCup2026?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#WomensAsiaCup2026</a> <a href="https://t.co/BylJK9ENt9">pic.twitter.com/BylJK9ENt9</a></p>&mdash; UDAI LAL OJHA (@UDAILALOJHA1200) <a href="https://x.com/UDAILALOJHA1200/status/2099198525917835586?ref_src=twsrc%5Etfw">September 13, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>தொடக்க வீரர்களாக களமிறங்கிய ஸ்மிருதி மந்தனா(Smriti Mandhana) 39 பந்துகளில் 59 ஓட்டங்களும், ஷஃபாலி வர்மா(Shafali Verma) 39 பந்துகளில் 68 ஓட்டங்களும் குவித்து மிரட்டினர்.</p><p>இதனால் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 183 ஓட்டங்கள் குவித்தது.</p><p></p><h2> ஆசியக் கோப்பையை வென்ற இந்திய மகளிர் அணி</h2><p>
184 ஓட்டங்கள் குவித்தால் வெற்றி என்ற சற்று கடினமான இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணியில் வீராங்கனைகள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்து திணறினர்.</p><p> தொடக்க வீரராக களமிறங்கிய கேப்டன் சமரி அதபத்து(Chamari Athapaththu) 32 பந்துகளில் 36 ஓட்டங்கள் குவித்து போராடினார்.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">India, Indiaaaaaaaa..... 🇮🇳<br><br>Heartiest congratulations to our Indian Women’s Cricket Team on winning the Women’s Asia Cup 2026. This remarkable triumph reflects the team’s hard work, determination and belief.<br><br>Your performance has made the entire nation proud. Wishing the… <a href="https://t.co/hJv1Qipmrc">pic.twitter.com/hJv1Qipmrc</a></p>&mdash; Smriti Z Irani (@smritiirani) <a href="https://x.com/smritiirani/status/2099198592443678927?ref_src=twsrc%5Etfw">September 13, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p> விஷ்மி குணரத்ன 20 ஓட்டங்களிலும், நிலக்ஷிகா சில்வா 22 ஓட்டங்களில் விக்கெட்டை பறிகொடுத்தனர்.</p><p>இறுதியில் இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 10 விக்கெட்டுகளையும் இழந்து வெறும் 111 ஓட்டங்கள் மட்டுமே குவித்தது.</p><p> இந்திய அணியின் பந்துவீச்சில் ஶ்ரீ சரணி(Shree Charani) 4 விக்கெட்டுகளையும், தீப்தி சர்மா 3 விக்கெட்டுகளையும் எடுத்து அசத்தினர்.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">𝐂𝐑𝐎𝐖𝐍𝐄𝐃 𝐀𝐆𝐀𝐈𝐍 👑<br><br>India showcased their dominance with an unprecedented eighth Women’s Asia Cup title, defeating Sri Lanka in the final in style 👊<br><br>How it unfolded ➡️ <a href="https://t.co/AUjCTQEkz0">https://t.co/AUjCTQEkz0</a> <a href="https://t.co/tpnJx2ts2u">pic.twitter.com/tpnJx2ts2u</a></p>&mdash; ICC (@ICC) <a href="https://x.com/ICC/status/2099201869730201690?ref_src=twsrc%5Etfw">September 13, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p> இதன் மூலம் 2026 மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கை அணியை 72 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம் பெற்றுள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-13T22:15:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையை வீழ்த்தி மகளிர் ஆசியக் கிண்ணத்தை தம்வசமாக்கியது இந்தியா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/india-defeated-sri-lanka-to-clinch-women-asia-cup-1789337113"></link>
            <id>https://jvpnews.com/article/india-defeated-sri-lanka-to-clinch-women-asia-cup-1789337113</id>
            <summary type="text">மகளிர் ஆசிய கிண்ண இருபதுக்கு 20 தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கை அணியை 72 ஓட்டங்களால் வீழ்த்திய இந்திய அணி கிண்ணத்தை தம்வசமாக்கியுள்ளது. 

இலங்கை ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>மகளிர் ஆசிய கிண்ண இருபதுக்கு 20 தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கை அணியை 72 ஓட்டங்களால் வீழ்த்திய இந்திய அணி கிண்ணத்தை தம்வசமாக்கியுள்ளது.</p><p></p><p> 

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான போட்டி டுபாயில் இன்று (13) இடம்பெற்றது.</p><p> 

இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய மகளிர் அணி முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cda1f7f3-d223-4804-b3c3-a6d9014a1da5/26-6aa71e1b7b64d.webp' /></p><p>அதன்படி முதலில் துடுப்பாடிய இந்திய மகளிர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 183 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. </p><p>

ஆரம்ப துடுப்பாட்டத்திற்காக களமிறங்கிய சுமிர்த்தி மந்தனா மற்றும் ஷபாலி வர்மா ஆகியோர் அதிவிரைவான ஓட்டங்களை பெற்று அணிக்கு வலுசேர்த்தனர். </p><p>

ஷபாலி வர்மா 68 ஓட்டங்களையும், சுமிர்த்தி மந்தனா 59 ஓட்டங்களையும் அதிரடியாக பெற்றனர். 

அதன்பிறகு ஆடுகளம் வந்தவர்கள் பெரியளவில் சோபிக்கவில்லை. </p><p>

ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களில் விக்கெட்டுக்களை வீழ்த்தியதன் பின்னர் இந்திய ஓட்ட எண்ணிக்கையை இலங்கை அணி வெகுவாக கட்டுப்படுத்தினர். </p><p>

இலங்கை அணி சார்பில் பந்துவீச்சில் மிதாலி அயோதா, சமதி அத்தபத்து, சமுதி பிரபோதா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர். </p><p>

இந்நிலையில் 184 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 111 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியடைந்தது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-13T22:05:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹவுதி கிளர்ச்சியாளர்களை இலக்கு வைத்து ஏமன் இராணுவம் அதிரடி தாக்குதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/yemeni-army-launches-swift-attack-targeting-houthi-1789336663"></link>
            <id>https://ibctamil.com/article/yemeni-army-launches-swift-attack-targeting-houthi-1789336663</id>
            <summary type="text">ஏமனின் துபாப் (Dhubab) மற்றும் மோச்சா (Al Mocha) பகுதிகளில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்களின் இராணுவ வாகனங்களை இலக்கு வைத்து ஏமன் விமானப்படை அதிரடித் தாக...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஏமனின் துபாப் (Dhubab) மற்றும் மோச்சா (Al Mocha) பகுதிகளில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்களின் இராணுவ வாகனங்களை இலக்கு வைத்து ஏமன் விமானப்படை அதிரடித் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக அரசாங்க ஆயுதப் படைகளின் செய்தித் தொடர்பாளர் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார்.</p><p>பாதுகாப்புப் படையினருக்குக் கிடைத்த துல்லியமான உளவுத்துறை தகவல்களின் அடிப்படையில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. </p><p>செங்கடல் கடலோரப் பகுதிகளில் ஹவுதி அமைப்பினர் தங்களின் பலத்தைப் பெருக்கவும், நடமாட்டத்தை அதிகரிக்கவும் திட்டமிட்டிருந்த வாகனப் பேரணிகள் மற்றும் இலக்குகளை ஏமன் போர் விமானங்கள் துல்லியமாகத் தாக்கி அழித்துள்ளன.</p><p></p><h2>பெரும் சேதங்கள்&nbsp;</h2><p>இந்தத் தாக்குதலின் மூலம் ஹவுதி கிளர்ச்சியாளர்களின் நடமாட்டம் முற்றிலுமாக முறியடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த செய்தித் தொடர்பாளர், தாக்குதலில் கிளர்ச்சியாளர்கள் தரப்பில் பெரும் சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9a58a3e3-e87a-4d62-b4a6-91bfcaf8941e/26-6aa71c59252c3.webp' /></p><p> </p><p>செங்கடல் பிராந்தியத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், அரசாங்கப் படைகளின் கட்டுப்பாட்டை பலப்படுத்தவும் இந்த இராணுவ நடவடிக்கை தொடரும் என ஏமன் இராணுவத் தரப்பு எச்சரித்துள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-13T21:59:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் 27 வயது இளைஞர் பரிதாப பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/man-dead-after-crashing-stolen-motorcycle-1789318666"></link>
            <id>https://canadamirror.com/article/man-dead-after-crashing-stolen-motorcycle-1789318666</id>
            <summary type="text">கனடாவின் நியூ பிரன்சுவிக் மாகாணத்தில், திருடப்பட்ட மோட்டார் சைக்கிளில் பயணித்து விபத்துக்குள்ளானதில் 27 வயது இளைஞர் உயிரிழந்துள்ளார். 
சனிக்கிழமை கால...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் நியூ பிரன்சுவிக் மாகாணத்தில், திருடப்பட்ட மோட்டார் சைக்கிளில் பயணித்து விபத்துக்குள்ளானதில் 27 வயது இளைஞர் உயிரிழந்துள்ளார். </p><p>
சனிக்கிழமை காலை சுமார் 6:30 மணியளவில், டிரம்ண்ட் பகுதியில் அமைந்துள்ள சடர்லேண்ட் புரூக் சாலையில் இந்த ஒற்றை வாகன விபத்து ஏற்பட்டது. </p><p>
வளைவான பாதையில் வேகமாகச் சென்றபோது மோட்டார் சைக்கிள் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்ததால் இவ்விபத்து நேரிட்டிருக்கலாம் என கனடிய அரச காவல்துறை தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/29ce2977-2c38-4659-bbf8-75bd7134b73c/26-6aa6d60bb590a.webp' /></p><p>
</p><p>சம்பவ இடத்திற்கு காவல் அதிகாரிகள் விரைந்தபோது, டிரம்ண்ட் பகுதியைச் சேர்ந்த 27 வயது இளைஞர் தீவிர காயங்கள் காரணமாக உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டார்.</p><p>
விபத்துக்குள்ளான மோட்டார் சைக்கிள், முன்னதாக செயிண்ட்-ஆண்ட்ரே பகுதியில் உள்ள ஒரு வீட்டின் வசிப்பிடத்திலிருந்து திருடப்பட்ட ஒன்று என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p>
உயிரிழந்த இளைஞரின் இறப்பிற்கான துல்லியமான காரணத்தைக் கண்டறிய உடற்கூறாய்வு நடத்தப்பட உள்ளது. 
மேலும், காவல்துறையினர் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-13T21:45:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவில் ரகசிய நீதிமன்ற நடவடிக்கை மூலம் ஆப்கானிஸ்தான் பெண் நாடுகடத்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/afghan-woman-deportede-us-following-secret-court-1789335648"></link>
            <id>https://canadamirror.com/article/afghan-woman-deportede-us-following-secret-court-1789335648</id>
            <summary type="text">அமெரிக்காவில் சட்டப்பூர்வ நிரந்தர வசிப்பிட உரிமையைக் கொண்டிருந்த 47 வயதுடைய ஆப்கானிஸ்தானிய பெண் ஒருவரை, அந்த நாட்டின் இரகசிய நீதிமன்ற நடவடிக்கைகளின் ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவில் சட்டப்பூர்வ நிரந்தர வசிப்பிட உரிமையைக் கொண்டிருந்த 47 வயதுடைய ஆப்கானிஸ்தானிய பெண் ஒருவரை, அந்த நாட்டின் இரகசிய நீதிமன்ற நடவடிக்கைகளின் மூலம் நாடுகடத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p>அமெரிக்காவில் 1996ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட 'அந்நிய பயங்கரவாத அகற்றும் நீதிமன்றம்' (Alien Terrorist Removal Court - ATRC) அதன் வரலாற்றில் முதன்முறையாக ஒரு வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டு நாடுகடத்தல் உத்தரவைப் பிறப்பித்துள்ளமை இதுவே முதல்முறையாகும் என தெரிவிக்கப்படுகிறது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9f44eb9b-f88c-4422-b4d8-3dba5837665c/26-6aa7186281413.webp' /></p><p>தேசிய பாதுகாப்பு தொடர்பான இரகசிய ஆதாரங்களின் அடிப்படையில் பயங்கரவாதக் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் அமெரிக்கக் குடியுரிமை பெறாத நபர்களுக்கு எதிராகவே இந்த விசேட நீதிமன்றம் பயன்படுத்தப்படுகிறது.
</p><p>
டெக்சாஸ் மாநிலத்தின் ஃபோர்ட் வொர்த் நகரில் வசித்து வந்த நஸீரா ஹாஜி சாதா என்ற இந்த பெண் மீது எந்தவொரு குற்றவியல் வழக்கும் நேரடியாகப் பதிவு செய்யப்படவில்லை.</p><p>

இருப்பினும், 2024ஆம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நாளில் தீவிரவாத அமைப்பின் தூண்டுதலால் துப்பாக்கிச் சூடு நடத்தத் திட்டமிட்ட குற்றத்துக்காக இவரது மகனும் மருமகனும் தண்டிக்கப்பட்டனர்.
</p><p>
இந்த நிலையில், குடும்பத்தினரை தீவிரவாதப் பாதைக்கு வழிநடத்திய "குடும்பத் தலைமைப் பெண்" என அரச தரப்பு சட்டத்தரணிகள் இவர் மீது குற்றஞ்சாட்டினர்.
</p><p>
அரசாங்கத்துடன் நீண்ட சட்டப் போராட்டம் நடத்துவதற்குப் பதிலாக, அமெரிக்காவை விட்டு வெளியேற நஸீரா ஹாஜி சாதா சம்மதம் தெரிவித்ததாக அமெரிக்க நீதித் திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p>

அதேசமயம், இந்த நீதிமன்ற நடவடிக்கைகள் அமெரிக்க அரசியலமைப்பு வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளை மீறுவதாக நஸீரா சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
</p><p>
குற்றம் சாட்டப்பட்டவருக்கோ அல்லது அவரது சட்டத்தரணிகளுக்கோ, எதிரான ஆதாரங்களைக்கூடக் காண்பிக்காமல் ரகசியமாக நடத்தப்படும் இந்த நீதிமன்ற முறைமை, அரசியலமைப்புக்கு முரணானது என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
</p><p>
இருப்பினும், இந்த நடவடிக்கை நாட்டின் தேசிய பாதுகாப்புக்கும் சட்டத்தின் ஆட்சிக்கும் கிடைத்துள்ள வெற்றி என அமெரிக்க சட்டமா அதிபர் டோட் பிளான்ச் (Todd Blanche) தெரிவித்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-09-13T21:41:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆப்கானிஸ்தானை விழுங்கிய அபிஷேக் சர்மா புயல்: 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/t20-2026-india-beats-afghanistan-by-7-wickets-1789333021"></link>
            <id>https://news.lankasri.com/article/t20-2026-india-beats-afghanistan-by-7-wickets-1789333021</id>
            <summary type="text"> T20 2026: India beats Afghanistan by 7 Wickets: ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்...</summary>
            <content type="html"><![CDATA[<p> T20 2026: India beats Afghanistan by 7 Wickets: ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.</p><h2> இலக்கை நிர்ணயித்த ஆப்கானிஸ்தான்</h2><p>
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி, இன்று டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இந்திய அணியை எதிர்கொண்டது.</p><p> இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">INNINGS CHANGE! 🔁<br><br>Azmatullah Omarzai (64*) played a gem of a knock and was well supported by Mohammad Nabi (33) as <a href="https://x.com/hashtag/AfghanAtalan?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#AfghanAtalan</a> posted 156/8 runs on the board in the first innings. 👏<br><br>Over to our bowling unit now to take the proceedings forward! 👍<a href="https://x.com/hashtag/AfghanAtalan?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#AfghanAtalan</a> | <a href="https://x.com/hashtag/AFGvIND?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#AFGvIND</a> |… <a href="https://t.co/QKXXfpOURn">pic.twitter.com/QKXXfpOURn</a></p>&mdash; Afghanistan Cricket Board (@ACBofficials) <a href="https://x.com/ACBofficials/status/2099164757785808948?ref_src=twsrc%5Etfw">September 13, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>இதனால் முதல் பேட்டிங்கில் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 156 ஓட்டங்கள் குவித்தது.</p><p> ஆப்கானிஸ்தான் அணியில் அஸ்மத்துல்லா உமர்சாய் 64 ஓட்டங்களையும், முகமது நபி 33 ஓட்டங்களையும் அதிகபட்சமாக குவித்து அசத்தினர்.</p><p></p><h2> அபார வெற்றி பெற்ற இந்தியா</h2><p>வெற்றி இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க வீரராக களமிறங்கிய சஞ்சு சாம்சன் 10 ஓட்டங்களில் விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f9ad205f-e514-4a42-b3fc-ed85c9a91281/26-6aa70e20986bc.webp' /></p><p> இருப்பினும் அதிரடியை குறைக்காத அபிஷேக் சர்மா 32 பந்துகளில் 7 பவுண்டரிகள், 7 சிக்சர்கள் விளாசி 82 ஓட்டங்கள் குவித்தார்.</p><p> அவருக்கு ஜோடியாக இஷான் கிஷான் 33 பந்துகளில் 42 ஓட்டங்கள் குவித்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fb52d7ae-2cc4-4c53-b6c6-3bc3c09fa6a7/26-6aa70e1fde8b9.webp' /></p><p> இதன் மூலம் வெறும் 13.4 ஓவர்களிலேயே இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 157 ஓட்டங்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"> WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p>&nbsp;<br></p>]]></content>
            <updated>2026-09-13T21:29:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[அனுராதபுர பேரணியில் சிக்கிய இரகசிய காணொளிகள்! மகிந்தவை காப்பாற்றும் மர்ம தாயத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/anuradhapura-rally-mahinda-1789333208"></link>
            <id>https://tamilwin.com/article/anuradhapura-rally-mahinda-1789333208</id>
            <summary type="text">அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அனுராதபுரத்தில் பொதுஜன பெரமுன கட்சியினரால் நடத்தப்பட்ட பேரணிக்கு வந்த ஆதரவாளர்களில் பலர் மது போதையில் இருந்ததாகவு...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அனுராதபுரத்தில் பொதுஜன பெரமுன கட்சியினரால் நடத்தப்பட்ட பேரணிக்கு வந்த ஆதரவாளர்களில் பலர் மது போதையில் இருந்ததாகவும், அவர்களுக்கு உணவுப் பொட்டலங்கள் மற்றும் மது வழங்கப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
</p><p>
மேலும், பேரணி முடிந்த பின்னர் பலர் மதுபோதையில் இருக்கும் விதத்தில் பல காணொளிகள் வெளியாகியுள்ளன.</p><p>


இந்தநிலையில்,
அனுராதபுரத்தில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) பேரணியில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கலந்துகொண்ட நிலையில், அவர் கையில் வைத்திருந்ததாகக் கூறப்படும் மர்மமான கோல் தொடர்பில் மீண்டும் கவனம் திரும்பியுள்ளது.
</p><p>
பொது நிகழ்வுகளில் மகிந்த ராஜபக்ச கையில் வைத்திருக்கும் இந்தப் பொருள், தங்க முலாம் பூசப்பட்ட கோல் அல்லது செங்கோல் போன்ற வடிவத்தில் காணப்படுவதாகக் கூறப்படுகிறது.

இந்தப் பொருள் தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் சமூக ஊடகங்களிலும் அரசியல் வட்டாரங்களிலும் நீண்டகாலமாக நிலவி வருகின்றன. </p><p>

குறிப்பாக, இது அதிர்ஷ்டம் மற்றும் பாதுகாப்பை வழங்கும் பொருளாகவும், ஜோதிட ஆலோசனைகளின் அடிப்படையில் பயன்படுத்தப்படுவதாகவும் சில தரப்பினரால் கூறப்படுகிறது.
</p><p>
மேலும், மகிந்த ராஜபக்ச ஜோதிடத்தின் மீது அதிக நம்பிக்கை கொண்டிருந்ததாகவும், அரசியல் முடிவுகள் உள்ளிட்ட முக்கிய விடயங்களில் ஜோதிடர்களின் ஆலோசனையைப் பெற்றதாகவும் பல ஆண்டுகளாக செய்திகள் வெளியாகியுள்ளன.
</p><p>
அவரது கைகளில் காணப்படும் பல்வேறு மோதிரங்கள், தாயத்துக்கள் உள்ளிட்டவையும் இதனுடன் தொடர்புபடுத்தப்பட்டு பேசப்பட்டுள்ளன.
</p><p>
இந்த விடயங்கள் தொடர்பில் சிரேஸ்ர ஊடகவியலாளர் தமிழரசு&nbsp; செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சியில் குறிப்பிட்டுள்ளார்&nbsp; ...&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/3crJrhXAriQ" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-13T21:18:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை! 21 ஆண்டுகளுக்குப் பின் வெளிவரும் அதிர்ச்சி தகவல்கள் - அம்பலமான ஆதாரங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/joseph-pararajasingham-death-1789324601"></link>
            <id>https://tamilwin.com/article/joseph-pararajasingham-death-1789324601</id>
            <summary type="text">2005ஆம் ஆண்டு டிசம்பர் 25ஆம் திகதி மட்டக்களப்பு புனித மரியாள் இணைப் பேராலயத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>2005ஆம் ஆண்டு டிசம்பர் 25ஆம் திகதி மட்டக்களப்பு புனித மரியாள் இணைப் பேராலயத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், இதுவரை வெளிவராததாகக் கூறப்படும் பல்வேறு தகவல்களை ஊடகவியலாளர் நீராஜ் டேவிட் வெளியிட்டுள்ளார்.</p><p>

கிறிஸ்மஸ் தினத்தையொட்டி நடைபெற்ற நள்ளிரவுத் திருப்பலியில் கலந்துகொண்டிருந்த ஜோசப் பரராஜசிங்கம், நற்கருணை பெற்றுக்கொண்டிருந்த வேளையில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி கொல்லப்பட்டார்.
</p><p>
இந்தப் படுகொலை திட்டமிட்டு நடத்தப்பட்டதாகவும், வழிபாட்டுத் தலத்தையே இலக்காகத் தேர்ந்தெடுத்ததன் ஊடாக பொதுமக்கள் மத்தியில் உளவியல் ரீதியான அச்சத்தை ஏற்படுத்துவதே முக்கிய நோக்கமாக இருந்ததாகவும் நீராஜ் டேவிட் தெரிவித்துள்ளார்.</p><p>

மேலும், இந்தப் படுகொலைக்கு கருணா குழுவினர் மாத்திரமே காரணம் என பொதுவாகக் கூறப்பட்டு வந்த நிலையில், தமது தகவல்களின் அடிப்படையில் பல்வேறு தரப்புகளைச் சேர்ந்தவர்கள் இந்தத் திட்டத்தில் தொடர்புபட்டிருந்ததாக நீராஜ் டேவிட் தெரிவித்துள்ளார்.
</p><p>
குறிப்பாக, கருணா குழு, ஈபிடிபி, ஈபிஆர்எல்எப் மற்றும் இலங்கை இராணுவப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்தவர்கள் எனக் கூறப்படும் நபர்கள் அடங்கிய ஒன்பது பேர் கொண்ட குழு இதில் ஈடுபட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
</p><p>
அத்துடன், தேவாலயத்தின் வழிபாட்டு நடைமுறைகள் மற்றும் நள்ளிரவுத் திருப்பலி நடைபெறும் நேரம் உள்ளிட்ட விடயங்களை அறிந்துகொள்வதற்காக கத்தோலிக்க பின்னணியைக் கொண்ட மூவர் அந்தக் குழுவில் இணைக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
</p><p>
இதேவேளை, இந்தப் படுகொலைக்கான தயாரிப்புகள் மற்றும் அதில் பங்கேற்றதாகக் கூறப்படும் நபர்கள் தொடர்பில், அக்குழுவில் பணியாற்றிய ஒருவர் தற்போது வெளிநாட்டில் இருந்து தகவல்களை வழங்கியுள்ளதாகவும் நீராஜ் டேவிட் தெரிவித்துள்ளார்.
</p><p>
இந்தப் படுகொலை தொடர்பான மேலும் பல நேரடி அனுபவங்கள் மற்றும் புலனாய்வுத் தகவல்களை அடுத்தடுத்த பகுதிகளில் வெளியிடவுள்ளதாகவும் நீரஜ் டேவிட் தெரிவித்துள்ளார்.
</p><p>
இந்த விடயங்கள் தொடர்பில் விரிவாக எடுத்துவருகின்றது உண்மைகள் நிகழ்ச்சி...</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/Mf5NlT3f33E" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-13T21:12:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[சரத் பொன்சேகா கொலை முயற்சி வழக்கு ; பிணை வழங்கிய தீர்ப்புக்கு எதிராக சட்டமா அதிபர் நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/attorney-general-regarding-fonseka-s-bail-ruling-1789333916"></link>
            <id>https://jvpnews.com/article/attorney-general-regarding-fonseka-s-bail-ruling-1789333916</id>
            <summary type="text">முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை மரணிக்க செய்வதற்கு முயற்சித்தமை தொடர்பான வழக்கில், 14 ஆண்டுகள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபருக்கு...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை மரணிக்க செய்வதற்கு முயற்சித்தமை தொடர்பான வழக்கில், 14 ஆண்டுகள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபருக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் பிணையில் செல்ல அனுமதித்தமைக்கு எதிராக, சட்டமா அதிபர் மேன்முறையீடு செய்ய நடவடிக்கை எடுத்துள்ளார்.</p><p>
</p><p></p><p>புலிகள் அமைப்பின் உறுப்பினர் என சந்தேகிக்கப்படும் தம்பையா பிரகாசன் என்பவருக்கே இவ்வாறு பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1a233535-77f6-47c0-b7ac-36d763ec3913/26-6aa7119de119a.webp' /></p><p>

கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குறித்த சந்தேகநபர் உட்பட மூவருக்கு எதிராக நடைபெற்று வரும் வழக்கு விசாரணைகளுக்கு, இவர் பிணையில் செல்ல அனுமதிக்கப்படுவதன் மூலம் பாதிப்பு ஏற்படக்கூடும் என சட்டமா அதிபர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p>

குறித்த சந்தேகநபருக்கு எதிராக 230 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாகவும், வழக்கு விசாரணை இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாகவும் சட்டமா அதிபர் மேன்முறையீட்டில் குறிப்பிட்டுள்ளார்.</p><p>

முன்னதாக, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை பரிசீலித்த நீதிமன்றம், சந்தேகநபருக்கு 200,000 ரூபாய் ரொக்கப் பிணை மற்றும் நான்கு சரீரப் பிணைகளில் செல்ல அனுமதி வழங்கி உத்தரவிட்டிருந்தது.</p><p>

2009 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட இந்த சந்தேகநபருக்கு எதிராக, 2012 ஆம் ஆண்டு செப்டம்பர் 20 ஆம் திகதி அதிபயங்கர குற்றச்சாட்டுகளின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-09-13T21:12:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையின் முதல் பெண் வெளியுறவுச் சேவை அதிகாரி மானெல் அபேசேகர காலமானார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/foreign-service-officer-abeysekera-has-passed-away-1789332660"></link>
            <id>https://jvpnews.com/article/foreign-service-officer-abeysekera-has-passed-away-1789332660</id>
            <summary type="text">இலங்கை வெளியுறவுச் சேவையின் (முன்னாள் சிலோன் வெளிநாட்டுச் சேவை) முதல் பெண் அதிகாரியான ஐராங்கனி மானெல் அபேசேகர தனது 93ஆவது வயதில் காலமானார். இவரது இறுத...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை வெளியுறவுச் சேவையின் (முன்னாள் சிலோன் வெளிநாட்டுச் சேவை) முதல் பெண் அதிகாரியான ஐராங்கனி மானெல் அபேசேகர தனது 93ஆவது வயதில் காலமானார்.</p><p></p><p> </p><p>இவரது இறுதிச் சடங்கு நேற்று (12) பொரளை பொது மயானத்தில் நடைபெற்றது.
</p><p>
1933ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14ஆம் திகதி சிரேஷ்ட சிவில் அதிகாரியும் செனட் சபை உறுப்பினருமான ஈ.டபிள்யூ. கன்னங்கரவின் மகளாகப் பிறந்த மானெல் அபேசேகர, 1958ஆம் ஆண்டு வெளியுறவுச் சேவையில் இணைந்தார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c2d93da1-ded5-4a8e-8ae2-25d98e53f944/26-6aa70cb6781e4.webp' /></p><p>அரச சேவை ஆண்களின் ஆதிக்கத்தில் இருந்த அந்தக் காலத்தில், வெளியுறவுச் சேவையில் நுழைந்த முதல் பெண் என்ற பெருமையை இவர் பெற்றார்.</p><p>

ஜேர்மனி மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கான இலங்கையின் தூதுவராகப் பணியாற்றிய இவர், நாட்டின் சிறந்த தூதுவர்களில் ஒருவராக அடையாளப்படுத்தப்பட்டார்.</p><p>

1976ஆம் ஆண்டு 92 நாட்டுத் தலைவர்கள் பங்கேற்ற அணிசேரா உச்சிமாநாட்டின் தலைமை நெறிமுறை அதிகாரியாகவும் (Chief of Protocol) இவர் பணியாற்றினார்.</p><p>

1970ஆம் ஆண்டு தாய்லாந்தின் பேங்கொக் நகருக்குப் பொறுப்பு அதிகாரியாக (chargé d’affaires) இவர் சென்றபோது, வானூர்தி நிலையத்துக்கு வந்த ஓட்டுநர் ஒருவர் பெண் தூதுவரை எதிர்கொள்வதில் பழக்கமில்லாமல் "வெல்கம், மெடம்-சேர்" என்று வரவேற்ற சம்பவத்தைக் குறிப்பிடும் வகையில், 2010ஆம் ஆண்டு இவர் வெளியிட்ட சுயசரிதைக்கு "மாஸ்டர்-சேர்" (Master-Sir) தலைப்பிட்டிருந்தார்.
</p><p>
மேலும், தாய்லாந்தில் தூதுவராகப் பணியாற்றிய காலத்தில், சேபால ஏகநாயக்க என்பவரால் 169 பயணிகளுடன் கடத்தப்பட்ட இத்தாலிய விமானப் பணயக்கைதிகள் விவகாரத்தில், 40 மணி நேர பேச்சுவார்த்தையை வெற்றிகரமாக நடத்தி அசம்பாவிதங்கள் ஏதுமின்றி நிலைமையைச் சுமுகமாக முடிவுக்குக் கொண்டுவந்ததில் இவரது இராஜதந்திர பேச்சுவார்த்தைத் திறன் முக்கிய பங்கு வகித்தது.
</p><p>
இலங்கை வெளியுறவுச் சேவையில் பல பெண்கள் உயர் பதவிகளை வகிப்பதற்கு மானெல் அபேசேகரவின் ஆரம்பகாலப் பணி ஒரு முக்கிய முன்னோடியாக அமைந்தது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-13T20:51:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பில் பிரபல நிறுவனத்திற்கு நீதிமன்றின் அதிரடி உத்தரவு! அழகுசாதனப் பொருட்கள் கொள்வனவு செய்வோருக்கான அறிவுறுத்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/fine-on-company-for-selling-expired-cosmetics-1789300997"></link>
            <id>https://tamilwin.com/article/fine-on-company-for-selling-expired-cosmetics-1789300997</id>
            <summary type="text">அழகுசாதனப் பொருட்கள் விற்பனை செய்யும், கொழும்பு - பொரளையில் அமைந்துள்ள பிரபல நிறுவனத்திற்கு 3 இலட்சம் ரூபா தண்டப்பணம் செலுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட...</summary>
            <content type="html"><![CDATA[<p>அழகுசாதனப் பொருட்கள் விற்பனை செய்யும், கொழும்பு - பொரளையில் அமைந்துள்ள பிரபல நிறுவனத்திற்கு 3 இலட்சம் ரூபா தண்டப்பணம் செலுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. </p><p>

காலாவதியான அழகுசாதனப் பொருட்கள், விற்பனை விலை குறிப்பிடப்படாத நறுமணப் பொருட்கள் மற்றும் உரிய விபரங்களற்ற பூச்சு வகைகளை விற்பனைக்கு வைத்திருந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் இவ்வாறு தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.</p><h2>மூன்று குற்றச்சாட்டுகள் தொடர்பான வழக்கு</h2><p> </p><p>

நுகர்வோர் விவகார அதிகாரசபையினால் தாக்கல் செய்யப்பட்ட மூன்று குற்றச்சாட்டுகள் தொடர்பான வழக்கை விசாரித்த கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம் (இலக்கம் 5) குறித்த உத்தரவை பிறப்பித்துள்ளது. </p><p>

கடந்த ஆகஸ்ட் மாதம் 18ஆம் திகதி நுகர்வோர் விவகார அதிகாரசபை அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே இச்சட்டவிரோத நடவடிக்கைகள் கண்டறியப்பட்டன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f77923b9-1fbd-4800-bff5-9523c9e35d9a/26-6aa697b9d2a12.webp' /></p><p> </p><p>

உச்ச சில்லறை விலை குறிப்பிடப்படாமல் நறுமணப் பொருட்களை விற்பனை செய்தமை, காலாவதியான அழகுசாதன பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்தமை மற்றும் உரிய உற்பத்தி விபரங்களன்றி அழகுசாதனப் பொருட்களை காட்சிப்படுத்தியமை ஆகிய குற்றச்சாட்டுகள் அந்நிறுவனத்திற்கு எதிராகச் சுமத்தப்பட்டன.</p><h2>அபராதம் விதிப்பு</h2><p> 

அதிகாரசபையினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் போது, குற்றச்சாட்டுகள் மூன்றையும் குறித்த நிறுவனம் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டது. </p><p>

இதனைத் தொடர்ந்து, குறித்த நிறுவனத்திற்கு 3 இலட்சம் ரூபா அபராதம் விதித்து நீதவான் தீர்ப்பளித்தமை குறிப்பிடத்தக்கது.
</p><p>
மேலும் அழகுசாதன பொருட்களை பயன்படுத்துவோர் மற்றும் கொள்வனவு செய்வோர் இந்த விடயம் தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-13T20:50:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி, கைக்குண்டு உள்ளிட்ட ஆயுதங்களுடன் ஒருவர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/foreign-made-gun-one-person-arrested-1789331353"></link>
            <id>https://jvpnews.com/article/foreign-made-gun-one-person-arrested-1789331353</id>
            <summary type="text">வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட எம். எம்.12 ரக துப்பாக்கி, கைக்குண்டு மற்றும் BMG வகையைச் சேர்ந்த 6 தோட்டாக்களுடன் சந்தேகநபர் ஒருவர் குற்றப் புலனாய்வுத் த...</summary>
            <content type="html"><![CDATA[<p>வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட எம். எம்.12 ரக துப்பாக்கி, கைக்குண்டு மற்றும் BMG வகையைச் சேர்ந்த 6 தோட்டாக்களுடன் சந்தேகநபர் ஒருவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>
</p><p></p><p>குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற விசாரணைப் பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், நேற்றைய தினம் சனிக்கிழமை கந்தானேகெதர, வலகும்புரமுல்ல பகுதியில் உள்ள வீடொன்றில் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/725d8586-518a-470e-9e52-b66373fe5b08/26-6aa7079a89e31.webp' /></p><p>
</p><p>
இதன்போது குறித்த வீட்டிலிருந்து வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட 12 ரக துப்பாக்கி, கைக்குண்டு மற்றும் BMG வகையைச் சேர்ந்த 6 தோட்டாக்கள் உள்ளிட்ட ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.
</p><p>
இதனையடுத்து, வலகும்புரமுல்ல, குளியாப்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய நபர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் இருந்து மீட்கப்பட்ட ஆயுதங்கள் எவ்வாறு அவரிடம் கிடைத்தன என்பது உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-13T20:29:22+00:00</updated>
        </entry>
    </feed>
