<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-09-04T05:19:02+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதிகாலையில் கொழும்பை உலுக்கிய துப்பாகிச்சூடு! பெண் காயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/morning-shooting-rocks-colombo-woman-injured-1788498345"></link>
            <id>https://canadamirror.com/article/morning-shooting-rocks-colombo-woman-injured-1788498345</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;கொழும்பு, கொள்ளுப்பிட்டி பகுதியின் ஆறாவது வீதியில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பு வளாகம் ஒன்றில் இன்று (04) அதிகாலை துப்பாக்கிச் ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;கொழும்பு, கொள்ளுப்பிட்டி பகுதியின் ஆறாவது வீதியில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பு வளாகம் ஒன்றில் இன்று (04) அதிகாலை துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
</p><p>
இந்த துப்பாக்கிச் சூட்டில் பெண்ணொருவர் காயமடைந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/203f4483-99f1-497f-89f0-23a29c3940af/26-6a9a51aac6cbf.webp' /></p><p>
அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் மேல் தளத்தில் இருந்த நபர் ஒருவர், கட்டிடத்திற்கு வெளியே நின்றுகொண்டிருந்த இரு பெண்கள் மீது துப்பாக்கியால் சுட்டதாகக் கூறப்படுகிறது.
</p><p>
இச் சம்பவம் அதிகாலை சுமார் 3:00 மணியளவில் இடம்பெற்றது.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த பெண்களில் ஒருவர் சிகிச்சைக்காகக் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-04T05:11:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[இன்று நள்ளிரவு முதல் உலை எண்ணெய் மற்றும் நெப்தா விலை குறைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/price-furnace-oil-naphtha-reduced-midnight-today-1788498547"></link>
            <id>https://jvpnews.com/article/price-furnace-oil-naphtha-reduced-midnight-today-1788498547</id>
            <summary type="text">இன்று (04) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் உலை எண்ணெய் (Furnace Oil) மற்றும் நெப்தா (Naphtha) ஆகியவற்றின் விலைகளைக் குறைக்க இலங்கை பெற்றோலியக் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இன்று (04) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் உலை எண்ணெய் (Furnace Oil) மற்றும் நெப்தா (Naphtha) ஆகியவற்றின் விலைகளைக் குறைக்க இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது.</p><p></p><p>

இதன்படி, இதுவரை 248 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட உலை எண்ணெய் ஒரு லீற்றரின் விலை 38 ரூபாவால் குறைக்கப்பட்டு, புதிய விலை 210 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d5fac342-e503-4bba-8491-2a677787f815/26-6a9a5274992e0.webp' /></p><p>அத்துடன், 210 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட நெப்தா ஒரு லீற்றரின் விலை 35 ரூபாவால் குறைக்கப்பட்டு, புதிய விலை 175 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.</p><p>

இந்தப் புதிய விலை இன்று (04) நள்ளிரவு முதல் அமுலுக்கு வருகின்றன.</p><p></p>]]></content>
            <updated>2026-09-04T05:11:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பில் அதிரடியாக கைது செய்யப்பட்ட பெண்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/woman-arrested-in-mattakkuliya-colombo-1788498122"></link>
            <id>https://ibctamil.com/article/woman-arrested-in-mattakkuliya-colombo-1788498122</id>
            <summary type="text">மட்டக்குளி பகுதியில் போதைப்பொருளுடன் பெண்ணொருவர் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.கொழும்பு - மட்டக்குளி காவல்துறை பிரிவிற...</summary>
            <content type="html"><![CDATA[<p>மட்டக்குளி பகுதியில் போதைப்பொருளுடன் பெண்ணொருவர் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>கொழும்பு - மட்டக்குளி காவல்துறை பிரிவிற்குட்பட்ட சமித்புர பகுதியில் இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது</p><p>
</p><p>


35 வயதுடைய குறித்த பெண் சமிட்புர பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><p> </p><h2>நீதிமன்றத்தில் முன்னிலை</h2><p>அவரிடம் இருந்து 1,000 போதை மாத்திரைகளையும் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.



இவ்வாறு கைப்பற்றப்பட்ட போதை மாத்திரைகளின் பெறுமதி சுமார் ரூ.2 இலட்சம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4a1c9d1a-6725-4594-8317-c8c79079439e/26-6a9a52c0399b5.webp' /></p><p>கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் ஐந்தாம் இலக்கப் பிரிவின் அதிகாரிகள் சுற்றிவளைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார். </p><p>



இதன்போது மேற்கொள்ளப்பட்ட சோதனையில் இந்த போதைமாத்திரைகள் கைப்பற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><p>



சந்தேகநபரான பெண் இன்று (4) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதுடன், கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-04T05:10:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டின் மொத்த எரிபொருள் இறக்குமதி செலவீனம்...! வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/the-country-s-total-fuel-import-expenditure-1788495067"></link>
            <id>https://ibctamil.com/article/the-country-s-total-fuel-import-expenditure-1788495067</id>
            <summary type="text">நாட்டின் மொத்த எரிபொருள் இறக்குமதி செலவீனம் 59.9 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.நடப்பு 2026 ஆம் ஆண்டின் ஜனவரி முதல் ஜூலை வரையிலான ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டின் மொத்த எரிபொருள் இறக்குமதி செலவீனம் 59.9 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>நடப்பு 2026 ஆம் ஆண்டின் ஜனவரி முதல் ஜூலை வரையிலான காலப்பகுதியில் இந்த அதிகரிப்பு பதிவாகியுள்ளது.&nbsp;</p><p>இலங்கை மத்திய வங்கி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.</p><p></p><h2>எரிபொருள் இறக்குமதி</h2><p>இதனடிப்படையில் 2025 ஆம் ஆண்டின் ஜனவரி - ஜூலை காலத்தில் 2,265.4 மில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்த எரிபொருள் இறக்குமதி செலவு, 2026 ஆம் ஆண்டின் அதே காலப்பகுதியில் 3,621.5 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fac9839b-9558-422d-9d44-8b66c187aa38/26-6a9a4e90674ff.webp' /></p><p>கச்சா எண்ணெய் இறக்குமதிக்கான செலவு அதிகரித்தமையே இந்த உயர்வுக்கு முதன்மை காரணியாக அமைந்துள்ளது.</p><p>


2026 ஜூன் மாதத்தில் 465 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவான மாதாந்த எரிபொருள் இறக்குமதி செலவு, ஜூலை மாதத்தில் 453 மில்லியன் அமெரிக்க டொலர்களாக சற்றே குறைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-04T05:01:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[விஜய்யின் அதிரடி அறிவிப்பு… அஜித் வெளியிட்ட நன்றி அறிக்கை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/ajith-kumar-thanks-to-cm-vijay-post-goes-viral-1788496292"></link>
            <id>https://manithan.com/article/ajith-kumar-thanks-to-cm-vijay-post-goes-viral-1788496292</id>
            <summary type="text">தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களாக பல ஆண்டுகளாக ரசிகர்களின் மனதில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர்கள் அஜித் மற்றும் விஜய். இருவரும் ஒரே காலகட்டத்தில் உ...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களாக பல ஆண்டுகளாக ரசிகர்களின் மனதில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர்கள் அஜித் மற்றும் விஜய். </p><p>இருவரும் ஒரே காலகட்டத்தில் உச்ச நட்சத்திரங்களாக உயர்ந்ததுடன், அவர்களுக்கென தனித்தனி ரசிகர் பட்டாளத்தையும் உருவாக்கியவர்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cfa5c525-4950-4010-8871-e0e8a28c6aa9/26-6a9a508b2007a.webp' /></p><p></p><p> </p><p>இவர்களது படங்கள் வெளியாகும் போதெல்லாம் தமிழ் சினிமா மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழகமே திருவிழா கோலம் பூண்ட காலங்களும் உண்டு.ஆனால், காலம் மாற… இருவரது பயணமும் தற்போது வெவ்வேறு திசைகளில் சென்று கொண்டிருக்கிறது.</p><h2>
அரசியலில் விஜய் ரேஸ் களத்தில் அஜித்...</h2><p>நடிகர் விஜய் சினிமாவிலிருந்து அரசியல் களத்திற்கு தனது பயணத்தைத் தொடங்கி, தமிழக அரசியலில் முக்கியமான இடத்தை பிடித்துள்ளார்.</p><p> மறுபுறம், அஜித் தொடர்ந்து சினிமாவில் நடித்துக் கொண்டிருந்தாலும், கார் பந்தயம் மீதான தனது ஆர்வத்தை தற்போது தீவிரமாக முன்னெடுத்து வருகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/07fe8b86-ec03-40e2-904a-4513a31f0ed3/26-6a9a5089b9619.webp' /></p><p>
</p><p>
குறிப்பாக சர்வதேச அளவிலான மோட்டார் ஸ்போர்ட்ஸ் போட்டிகளில் அஜித்தின் பங்கேற்பும், அவரது ரேசிங் அணியின் செயல்பாடுகளும் ரசிகர்கள் மத்தியில் பெரும் கவனத்தை ஈர்த்து வருகின்றன.
</p><p>
இந்நிலையில், தமிழகத்தில் மிகப்பெரிய மோட்டார் சிட்டி ஒன்றை உருவாக்குவது தொடர்பாக முதல்வர் விஜய் நேற்று&nbsp; சட்டமன்றத்தில் அறிவிப்பு வெளியிட்டார்.&nbsp;</p><h2>
முதல்வர் விஜய்க்கு அஜித் நன்றி!
</h2><p>இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, நடிகர் அஜித் முதல்வர் விஜய்க்கு நன்றி தெரிவித்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9c97fbd7-db41-4cbf-9888-c10aeb1c5357/26-6a9a508a6d1d6.webp' /></p><p></p><p>மோட்டார் ஸ்போர்ட்ஸ் மீது மிகுந்த ஆர்வம் கொண்ட அஜித்துக்கு, தமிழகத்தில் சர்வதேச தரத்திலான மோட்டார் சிட்டி உருவாகும் திட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
</p><p>
திரையில் பல ஆண்டுகளாக ரசிகர்களால் போட்டியாளர்களாக பார்க்கப்பட்ட அஜித் மற்றும் விஜய், இன்று சினிமாவைத் தாண்டி தங்களது தனித்தனி பாதையில் பயணித்து வருகின்றனர். </p><p>இப்படிப்பட்ட சூழலில், ஒரு முக்கியமான திட்டத்திற்காக அஜித், விஜய்க்கு வெளிப்படையாக நன்றி தெரிவித்திருப்பது&nbsp; ரசிகர்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கவனம் பெற்றுள்ளது.
</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Thanks giving message from Ajith Kumar to Tamil Nadu Chief Minister Hon. C.Joseph Vijay. 🇮🇳 <a href="https://x.com/CMOTamilnadu?ref_src=twsrc%5Etfw">@CMOTamilnadu</a> <a href="https://x.com/Akracingoffl?ref_src=twsrc%5Etfw">@Akracingoffl</a> <a href="https://x.com/SureshChandraa?ref_src=twsrc%5Etfw">@SureshChandraa</a> <a href="https://x.com/hashtag/AjithKumar?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#AjithKumar</a> <a href="https://x.com/hashtag/JosephVijay?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#JosephVijay</a> <a href="https://x.com/hashtag/TamilNadu?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#TamilNadu</a> <a href="https://x.com/hashtag/TamilNaduCM?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#TamilNaduCM</a> <a href="https://x.com/hashtag/AKRacing?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#AKRacing</a> <a href="https://x.com/hashtag/AjithKumarRacing?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#AjithKumarRacing</a> <a href="https://t.co/yWTn3F8RtN">pic.twitter.com/yWTn3F8RtN</a></p>&mdash; Suresh Chandra (@SureshChandraa) <a href="https://x.com/SureshChandraa/status/2095541477401354707?ref_src=twsrc%5Etfw">September 3, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b>&nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-04T05:01:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/ex-minister-johnston-fernando-arrives-at-ciaboc-1788496959"></link>
            <id>https://ibctamil.com/article/ex-minister-johnston-fernando-arrives-at-ciaboc-1788496959</id>
            <summary type="text">முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ&amp;nbsp; இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இன்று (04) காலை வாக...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ&nbsp; இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p>இன்று (04) காலை வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக அந்த ஆணைக்குழுவிற்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>வாக்குமூலம் ஒன்றை பெற்றுக்கொள்வதற்காக முன்னர் அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், அவர் இவ்வாறு முன்னிலையாகியுள்ளார்.</p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-04T05:00:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[வீட்டை விட்டு வெளியே போ.. அயலிக்கு அதிர்ச்சி கொடுத்த இந்திராணி - அயலி சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/zee-tamizh-ayali-serial-latest-episode-1788497989"></link>
            <id>https://cineulagam.com/article/zee-tamizh-ayali-serial-latest-episode-1788497989</id>
            <summary type="text">அயலி சீரியல்தமிழ் சின்னத்திரையில் Zee தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அயலி. இந்த சீர...</summary>
            <content type="html"><![CDATA[<h2>அயலி சீரியல்</h2><p>தமிழ் சின்னத்திரையில் Zee தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அயலி.</p><p> இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் இந்திராணி செழியன் வீட்டை விட்டு துரத்திய நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. </p><p>

அதாவது, இங்கே வர்மா அர்ச்சனாவை தேடி வர அழகு காப்பாற்றி விட்டு பர்தா அணிந்து கொண்டு ரூமில் இருந்து வெளியே வருகிறாள். பர்மாவின் அடியாளுக்கு பர்தா அணிந்திருப்பதை பார்க்கில் சந்தேகம் வந்து பின்தொடர்கிறான். மேலும் வர்மாவுக்கும் தகவல் கொடுக்க வர்மா அந்த பெண்ணை கடத்தி அழைத்து வந்து முகத்தை திறந்து பார்க்க அது அயலி இல்லை என தெரிய வருகிறது. </p><p>

இதையடுத்து வருமா அடியாளை போட்டு அடித்து இதை கூட தெரிய நோட் பண்ண மாட்டியா என கோபப்படுகிறார். பிறகு அயலி வீட்டுக்கு வர பாவை சாப்பிடாமல் இருக்க என்ன ஆச்சு என்று விசாரிக்கும் போது நடந்த விஷயங்கள் தெரிய வருகிறது. 

அடுத்து அயலி செழியன் அண்ணா அப்படி பண்ணி இருக்க மாட்டார் என சப்போர்ட் செய்து பேச இந்திராணி அவர் தப்பு பண்ணி இருக்காரு.. </p><p>அவருக்கு சப்போர்ட் பண்றதா இருந்தா அவரோட அப்படியே போயிட்டு இந்த வீட்டை விட்டு போய் அவரோடவே இருந்துக்க சொல்ல அயலி அதிர்ச்சி அடைகிறாள். </p><p>

பிறகு அயலி சிவாவிடம் நாம இதுக்காகவா இவ்வளவு கஷ்டப்பட்டோம்? அவங்க ரெண்டு பேரும் ஒண்ணா இருக்கணும் என சண்டையிட சிவா அடுத்து என்ன செய்யலாம் என்று கேட்கிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அயலி சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-04T05:00:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ இலஞ்சம், ஊழல் ஆணைக்கழுவில் ஆஜர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/johnston-appears-bribery-and-corruption-commission-1788497954"></link>
            <id>https://jvpnews.com/article/johnston-appears-bribery-and-corruption-commission-1788497954</id>
            <summary type="text">முன்னாள் அமைச்சரான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவில் இன்று (04) முற்பகல் ஆஜராகியுள்ளார்.
வாக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் அமைச்சரான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவில் இன்று (04) முற்பகல் ஆஜராகியுள்ளார்.</p><p>
</p><p></p><p>வாக்குமூலம் ஒன்றைப் பெற்றுக்கொள்வதற்காக இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு ஆணைக்குழுவினால் அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b1b645cc-c83e-4dad-9180-51be7ca9596a/26-6a9a50246b7e2.webp' /></p><p>இதன்படி, அவர் சற்றுமுன்னர் குறித்த ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.
</p><p>
அவரிடம் எந்த விடயம் தொடர்பில் வாக்குமூலம் பெறப்படவுள்ளது என்பது தொடர்பான மேலதிக தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.
</p><p>
இந்நிலையில், ஆணைக்குழுவில் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவிடம் வாக்குமூலம் பெறும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p><p></p>]]></content>
            <updated>2026-09-04T04:59:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[அணு ஆயுதத் தாக்குதலில் இருந்து பிரித்தானியாவைக் காப்பாற்றினேன்... ட்ரம்ப் மீண்டும் அதிரடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/trump-claims-he-saved-the-uk-1788497647"></link>
            <id>https://news.lankasri.com/article/trump-claims-he-saved-the-uk-1788497647</id>
            <summary type="text">Donald Trump claims he saved the UK from a nuclear attack: அணு ஆயுதத் தாக்குதலில் இருந்து பிரித்தானியாவைத் தாம் காப்பாற்றியதாக டொனால்ட் ட்ரம்ப்.ஈரான் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Donald Trump claims he saved the UK from a nuclear attack: அணு ஆயுதத் தாக்குதலில் இருந்து பிரித்தானியாவைத் தாம் காப்பாற்றியதாக டொனால்ட் ட்ரம்ப்.</p><p>ஈரான் மீது போர் தொடுத்ததன் மூலம் பிரித்தானியாவை அணு ஆயுதத் தாக்குதலில் இருந்து காப்பாற்றியதாக டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார்.</p><h2>ஒரு மோசமான நபர்</h2><p>
</p><p>இந்தப் போரில் அமெரிக்காவுக்கு ஆதரவாக களமிறங்க மறுத்ததற்காக பிரித்தானியா மீதான தனது விமர்சனத்தையும் அவர் மீண்டும் முன்வைத்துள்ளார்.</p><p>
பிரித்தானியா ஒரு திருப்புமுனையை எட்டி வருவதாகக் குறிப்பிட்ட ட்ரம்ப், புலம்பெயர் மக்களால் லண்டனில் மக்கள் பயணப்பட முடியாத பகுதிகள் உருவாகியுள்ளதாகக் கூறி, அந்நகரத்தின் மீது மீண்டும் ஒரு தாக்குதலைத் தொடுத்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ea7c964b-5a1e-4538-a199-3e614c607be0/26-6a9a4ef158cc5.webp' /></p><p> </p><p>வியாழக்கிழமையன்று தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றின்போது, ​​லண்டன் மேயர் சாதிக் கானை ஒரு மோசமான நபர்&nbsp;என வம்பிழுத்த ஜனாதிபதி ட்ரம்ப், அவருடனான தனது நீண்டகாலப் பகையை மீண்டும் கிளறினார். </p><p>ஆனால் ட்ரம்பால் எங்கள் வெற்றியைப் புரிந்துகொள்ளவே முடியாது என்று மேயர் சாதிக் கானின் ஆதரவாளர்கள் தரப்பில் இருந்து பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது.</p><p></p><p> </p><p>ஈரானுடனானப் போரை
நியாயப்படுத்திய ஜனாதிபதி ட்ரம்ப், பிரித்தானியாவையும் ஈரானின் அச்சுறுத்தலில் இருந்து காப்பாற்றி வருகிறேன் என்றார்.</p><p> ஈரானிடம் அணு ஆயுதம் இருந்தால், அவர்கள் அமெரிக்கா மீது பயன்படுத்துவதை விட ஐரோப்பா மீதே பயன்படுத்த வாய்ப்பு என்றும் ட்ரம்ப் விளக்கமளித்துள்ளார்.
</p><p>மத்திய கிழக்கில் ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான பதற்றம் உச்சகட்டத்தில் உள்ள நிலையில், ட்ரம்ப் பிரித்தானியாவைக் காப்பாற்றவும் வேண்டியே போரை முன்னெடுத்து வந்ததாகத் தெரிவித்தார்.
</p><p>அணு ஆயுதத்தை உருவாக்குவதைத் தடுக்கும் நோக்கில் ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் தாக்குதல் நடத்துவதற்கு முன்பு, ஹார்முஸ் நீரிணை எவ்வித அச்சுறுத்தலும் இன்றி தொடர்ந்து செயல்பாட்டில் இருந்தது. </p><p>ஆனால், இஸ்ரேல் அழுத்தத்தால் ஈரான் மீது தாக்குதல் நடத்தியதன் பின்னர், அந்த நீரிணையில் கப்பல் போக்குவரத்து முடங்கியது. தற்போது அந்த நீரிணையை மீட்பதற்காக ட்ரம்ப் போராடி வருகிறார்.</p><h2>போர் முடிந்துவிட்டதாக</h2><p> </p><p>வளைகுடாப் பாதையில் இஸ்ரேலும் அமெரிக்காவும் உருவாக்கியுள்ள இந்த இடையூறு, பிரித்தானியா உட்பட உலகின் பல்வேறு நாடுகளின் பொருளாதாரங்களிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளதுடன், பெட்ரோல் விலையிலும் கடும் உயர்வை உருவாக்கியுள்ளது. </p><p>இதனிடையே, GB News ஊடகம் நடத்திய நேர்காணளில், மறந்துவிடாதீர்கள், உங்கள் எண்ணெயில் பெரும் பகுதியை நீங்கள் ஹார்முஸ் நீரிணை வழியாகவே பெறுகிறீர்கள்; ஆனால் அமெரிக்காவுக்கு உதவ நீங்கள் மறுத்து விட்டீர்கள் என்று ட்ரம்ப் மீண்டும் கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fe41ad5a-461a-4cc8-b098-72b48687828b/26-6a9a4ef20d525.webp' /></p><p> </p><p>ஈரான் உடனானப் போர் முடிந்துவிட்டதாக அறிவிப்பதா என்பது குறித்து, அமெரிக்க ஜனாதிபதி தனது மூத்த உதவியாளர்களுடன் தனிப்பட்ட முறையில் ஆலோசனை நடத்தி வருவதாகத் தகவல் கசிந்துள்ள நிலையிலேயே, பிரித்தானியா தமக்கு உதவ முன்வரவில்லை என்று அவர் கருத்து தெரிவித்துள்ளார்.</p><p> ஈரான் மீது பொருளாதார அழுத்தத்தை அதிகரிப்பது, இறுதியில் அந்த அரசாங்கம் தனது அணுசக்தித் திட்டத்தைக் கைவிடவோ அல்லது வீழ்ச்சியடையவோ கட்டாயப்படுத்தும் என்று தான் நம்புவதாக ட்ரம்ப் தனது உதவியாளர்களிடம் கூறியுள்ளார் என்றே தெரிய வருகிறது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-04T04:52:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/johnston-fernando-bribery-or-corruption-commission-1788497114"></link>
            <id>https://tamilwin.com/article/johnston-fernando-bribery-or-corruption-commission-1788497114</id>
            <summary type="text">சற்றுமுன்னர் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார். 

வாக்குமூலம் ஒன்றை பெற...</summary>
            <content type="html"><![CDATA[<p>சற்றுமுன்னர் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார். </p><p>

வாக்குமூலம் ஒன்றை பெற்றுக்கொள்வதற்காக அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், அவர் இன்று (4) ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-04T04:52:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[தேசிய மின் அமைப்பின் ஸ்திரத்தன்மை மற்றும் பாதுகாப்பு கடுமையாகப் பாதிப்பு! நாட்டு மக்களுக்கு அவசர எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/national-electricity-system-movement-warns-1788496802"></link>
            <id>https://tamilwin.com/article/national-electricity-system-movement-warns-1788496802</id>
            <summary type="text">தேசிய மின்சார அமைப்பு இயக்கம், பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கையொன்றை விடுத்துள்ளது. 

அதன்படி உயர் அழுத்த மின் பாதைகள் மற்றும் துணை மின் நிலையங்களுக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>தேசிய மின்சார அமைப்பு இயக்கம், பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கையொன்றை விடுத்துள்ளது. </p><p>

அதன்படி உயர் அழுத்த மின் பாதைகள் மற்றும் துணை மின் நிலையங்களுக்கு அருகில் பட்டம் விடுவதைத் தவிர்க்குமாறு கடுமையான அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. </p><p>

இது தொடர்பான அறிவிப்பில் மேலும்,

பட்டங்கள் மற்றும் நூல்கள் உயர் அழுத்த மின் கம்பிகளில் சிக்கியதன் காரணமாக பல மின் பாதைகளில் தடங்கல் ஏற்பட்டுள்ளன.</p><h2>கடுமையான பாதிப்பு</h2><p> </p><p>

அத்துடன், இது தேசிய மின் அமைப்பின் ஸ்திரத்தன்மை மற்றும் பாதுகாப்பைக் கடுமையாகப் பாதிக்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ddbbf00e-cda1-427e-8981-75fd7fdf3dcd/26-6a9a4dff357aa.webp' /></p><p>
</p><p>
இதேவேளை அவசரகால நடவடிக்கையாக சில மின் விநியோகப் பாதைகள் தற்காலிகமாகத் துண்டிக்கப்பட வேண்டிய சூழ்நிலையையும் ஏற்படுத்தியுள்ளது.</p><p> 

எனவே, தடையற்ற மின் விநியோகத்தை உறுதி செய்வதற்குப் பொதுமக்கள் உரிய ஒத்துழைப்பு வழங்குமாறு தேசிய மின்சார அமைப்பு இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-04T04:51:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையின் மனித உரிமை நிலவரம் குறித்து ஐக்கிய நாடுகள் கடும் கவலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/un-expresses-deep-concern-srilanka-human-situation-1788497249"></link>
            <id>https://jvpnews.com/article/un-expresses-deep-concern-srilanka-human-situation-1788497249</id>
            <summary type="text">மனித உரிமை மீறல்கள் தொடர்பான பொறுப்புக்கூறலை வலுப்படுத்தல், நல்லிணக்கம் மற்றும் தீர்வு நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கம் தொடந்து முன்னெடுத்துச் செல்ல வேண்...</summary>
            <content type="html"><![CDATA[<p>மனித உரிமை மீறல்கள் தொடர்பான பொறுப்புக்கூறலை வலுப்படுத்தல், நல்லிணக்கம் மற்றும் தீர்வு நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கம் தொடந்து முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அறிக்கை ஒன்றில் கோரப்பட்டுள்ளது.</p><p>
</p><p></p><p>ஜெனீவாவில் நேற்று (3) வெளியிடப்பட்டுள்ள இந்த அறிக்கை,ஒக்டோபர் 2025 முதல் ஜூலை 2026 வரையிலான காலப்பகுதியை உள்ளடக்கியது. </p><p>

இந்தக் காலகட்டத்தில் டிட்வா புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் உலகளாவிய எரிபொருள் விலை உயர்வு போன்ற சவால்களுக்கு இலங்கை முகங்கொடுத்தது.
</p><p>
எனினும், ஊழலை எதிர்த்துப் போராடுதல், காணாமல் ஆக்கப்பட்டோர் மற்றும் 2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பிலான விசாரணைகள் போன்ற விடயங்கள் தொடர்பில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதை ஐக்கிய நாடுகளின் இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/188c7f88-8faf-4a97-a59a-ed701f0521f0/26-6a9a4d62dadf0.webp' /></p><p>இருப்பினும்,சட்ட மற்றும் நிறுவன சீர்திருத்தங்கள் குறித்த வாக்குறுதிகள் அளிக்கப்பட்ட போதிலும், அரசாங்கம் தொடர்ந்தும் அடக்குமுறை நிறைந்த பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி வருவதாக அறிக்கையில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இதனால் தன்னிச்சையான கைதுகள் மற்றும் குற்றச்சாட்டுகள் இன்றி பலர் நீண்டகாலம் காவலில் வைக்கும் நடவடிக்கைகள் தொடர்கின்றன. </p><p>

சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், ஆர்வலர்கள் மற்றும் செய்தியாளர்கள் மீது அரசாங்கத்தின் கண்காணிப்புத் தொடர்வதாகவும், நிலங்கள் மற்றும் மதத் தலங்கள் தொடர்பான பதற்றங்கள் நீடிப்பதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுளளது.
</p><p>
"பதவி அதிகார துஷ்பிரயோகம், அடக்குமுறைச் சட்டங்கள், காவலில் நிகழும் வன்முறைகள் மற்றும் தண்டனைவிலக்கு மரபு ஆகியவற்றைக் கைவிட இந்த அரசாங்கத்துக்கு இன்னும் ஒரு வாய்ப்பு உள்ளது" என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் குறிப்பிட்டுள்ளார். </p><p>

போர்க்கால மீறல்கள் மற்றும் ஊழல் வழக்குகள் தொடர்பான நடவடிக்கைகளில் சில முன்னேற்றங்கள் காணப்பட்டாலும்,தண்டனைவிலக்கு கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க இன்னும் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றார் அவர்.
</p><p>
 இலங்கையின் மனித உரிமைகள் ஆணைக்குழு 2025 ஆம் ஆண்டில் 602 சித்திரவதை மற்றும் வன்கொடுமை வழக்குகளையும், ஏப்ரல் 2026 வரை 138 வழக்குகளையும் ஆவணப்படுத்தியுள்ளது. </p><p>

மேலும் கடந்த ஆண்டு காவலில் மரணித்த 18 மரணங்களும் இந்த ஆண்டு ஏப்ரல் வரை 03 மரணங்களும் பதிவாகியுள்ளன. 

வெலிக்கடை சிறைச்சாலையில் சிறிய குற்றத்திற்காகத் தடுத்துவைக்கப்பட்டிருந்த 40 வயது கைதி கடுமையான தாக்கப்பட்டு மே 3 ஆம் திகதி உயிரிழந்த சம்பவமும் இதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
</p><p>
ஜூலை மாதத்தில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறையில் குறைந்தபட்சம் 32 பேர் உயிரிழந்தனர். 

இது கடும் நெரிசல் உள்ளிட்ட முறையான சிறைச்சாலைச் சீர்திருத்தங்களின் அவசியத்தை வலியுறுத்துகிறது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/820fb64e-edbd-4124-921e-9167844df1de/26-6a9a4d638f39c.webp' /></p><p>சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மீது இராணுவ மற்றும் துப்பறியும் பிரிவினரால் தொடர்ச்சியான கண்காணிப்புகள் மற்றும் அச்சுறுத்தல்கள் நிலவுகின்றன. </p><p>

குறிப்பாக ஜெனீவா பயணம் மற்றும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமை நிகழ்வுகளில் பங்கேற்பது குறித்து அவர்கள் மீண்டும் மீண்டும் விசாரிக்கப்படுகிறார்கள் என்று ஐக்கிய நாடுகளின் அறிக்கையில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
</p><p>
இந்தநிலையில், பயங்கரவாதத் தடைச் சட்டம் முழுமையாக நீக்கப்படும் வரை அதன் பயன்பாட்டின் மீது உடனடியாக இடைக்காலத் தடை விதிக்கப்பட வேண்டும்.</p><p>

நீண்டகாலமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும்.

மனித உரிமை மீறல்களில் நம்பகத்தன்மையுடன் குற்றம் சாட்டப்பட்டவர்கள், அரசாங்க, பாதுகாப்புத் துறை அல்லது தூதரகப் பணிகளில் உயர் பதவிகள் வகிப்பதிலிருந்து விலக்கி வைக்கப்பட வேண்டும்.</p><p>

பாதிக்கப்பட்டவர்களின் நினைவு கூரும் முயற்சிகளுக்கு அரசாங்கம் ஆதரவளிக்க வேண்டும் மற்றும் இராணுவத்தின் பிடியில் உள்ள நிலங்கள் விடுவிக்கப்பட வேண்டும் என்றும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் அலுவலகம், இலங்கை அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளது.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-09-04T04:47:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடவுச்சீட்டை பெற வரிசையில் காத்திருந்த முக்கியஸ்தர்! அதிகாரிகள் தொடர்பில் வெளியிட்ட பதிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/former-ambassador-mahinda-queues-passport-1788495909"></link>
            <id>https://tamilwin.com/article/former-ambassador-mahinda-queues-passport-1788495909</id>
            <summary type="text">இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் அதிகாரிகளை அமெரிக்காவிற்கான முன்னாள் இலங்கைத்தூதர் மஹிந்த சமரசிங்க பாராட்டியுள்ளார்.

சமூக வலைத்தள...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் அதிகாரிகளை அமெரிக்காவிற்கான முன்னாள் இலங்கைத்தூதர் மஹிந்த சமரசிங்க பாராட்டியுள்ளார்.</p><p>

சமூக வலைத்தளத்தில் பதிவொன்றினையிட்டு அவர் தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். அவரது பதிவில்,</p><h2>பாராட்டு</h2><p>
அண்மையில் இலங்கை கடவுச்சீட்டு அலுவலகத்திற்கு புதிய கடவுச்சீட்டை பெற்றுக்கொள்வதற்காக சென்றிருந்தேன். அங்கு பணியாற்றிய அனைத்து அதிகாரிகளும் மிகவும் உதவிகரமாகவும் திறமையாகவும் செயற்பட்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/815bf8be-2cd3-4845-9426-1de037153dc3/26-6a9a4c41a065f.webp' />&nbsp;</p><p> </p><p>

எனவே அனைவருக்கும் தனது நன்றியை சமூக ஊடகப்பதிவின் மூலம் வெளிப்படுத்துவதாக பதிவிட்டுள்ளார்.&nbsp;</p><p>&nbsp;</p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-04T04:43:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[சம்பள அதிகரிப்பு! நாட்டை விட்டு வெளியேறும் அரச ஊழியர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/government-employees-leaving-the-country-1788494836"></link>
            <id>https://tamilwin.com/article/government-employees-leaving-the-country-1788494836</id>
            <summary type="text">

உரிய சம்பள அதிகரிப்பு வழங்கப்படாததால் வைத்தியர்கள், பொறியியலாளர்கள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மற்றும் அரச ஊழியர்கள் உள்ளிட்ட பெருமளவானோர் நாட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>

உரிய சம்பள அதிகரிப்பு வழங்கப்படாததால் வைத்தியர்கள், பொறியியலாளர்கள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மற்றும் அரச ஊழியர்கள் உள்ளிட்ட பெருமளவானோர் நாட்டை விட்டு வெளியேறிச் செல்வதாக ஒன்றிணைந்த தொழிற்சங்க கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஆனந்த பாலித்த தெரிவித்துள்ளார். </p><p>

கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
தொடர்ந்தும் தெரிவிக்கையில், </p><p>

மசகு எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளைச் சரியாகப் பராமரிப்பதன் மூலம் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை 50 முதல் 70 ரூபா வரை குறைப்பதற்கான சாத்தியங்கள் இருந்தும், அரசாங்கம் அதனைச் செய்யத் தவறியுள்ளது.</p><h2>உரிய சம்பள அதிகரிப்பு இல்லை</h2><p> </p><p>

பேருந்து கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ள நிலையில், கோதுமை மா உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.</p><p> 

இதன் காரணமாக, பொதுமக்கள் இரட்டைச் சுமைகளுக்குள் உள்ளாகியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a6e52409-7a13-4288-8d0d-5335f9c2d3e9/26-6a9a4baf5b6ea.webp' /></p><p>

மேலும், உரிய சம்பள அதிகரிப்பு வழங்கப்படாமையினால், வைத்தியர்கள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் உள்ளிட்ட அரச ஊழியர்கள் நாட்டை விட்டு வெளியேறிச் செல்கின்றனர். </p><p>

இவ்வாறான பல்வேறு நெருக்கடி நிலைகளைப் பொருட்படுத்தாமல், அரசியலமைப்புச் சீர்த்திருத்தம் என்ற பெயரில் நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பதுடன் அவர்களது சம்பளத்தையும் அதிகரிக்க அரசாங்கம் திட்டமிடுவதாக தெரியவந்துள்ளது ஏன் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p><p> 
</p>]]></content>
            <updated>2026-09-04T04:40:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[அடுத்த வாரம் இலங்கைக்கு வரும் சர்வதேச நாணய நிதியத்தின் தூதுக்குழு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/imf-team-visit-sri-lanka-next-week-for-eff-review-1788494314"></link>
            <id>https://ibctamil.com/article/imf-team-visit-sri-lanka-next-week-for-eff-review-1788494314</id>
            <summary type="text">நாட்டின் தற்போதைய பொருளாதார சீர்திருத்த வேலைத்திட்டத்துடன் தொடர்புடைய அடுத்த கட்ட கடன் மதீப்பீட்டிற்காக இலங்கை தயாராகி வரும் நிலையில், சர்வதேச நாணய நி...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டின் தற்போதைய பொருளாதார சீர்திருத்த வேலைத்திட்டத்துடன் தொடர்புடைய அடுத்த கட்ட கடன் மதீப்பீட்டிற்காக இலங்கை தயாராகி வரும் நிலையில், சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகள் குழு அடுத்த வாரம் இலங்கைக்கு வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p> அரசாங்க அதிகாரிகளுடன் புதிய சுற்றுப் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதற்காக அந்த குழுவானது எதிர்வரும் செப்டெம்பர் 10 ஆம் திகதி முதல் 23 ஆம் திகதி வரை நாட்டில் தங்கியிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> 

இந்த விஜயம் குறித்து இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் தூதுக்குழுவின் தலைவர் இவான் பாப்பஜோர்ஜியோ தெரிவிக்கையில், சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட நிதி வசதியின் கீழ் ஆதரிக்கப்படும் இலங்கையின் சீர்திருத்த வேலைத்திட்டத்தின் ஒருங்கிணைந்த 7வது மதிப்பாய்வு மற்றும் 2026 ஆம் ஆண்டின் உறுப்புரை IV ஆலோசனைகள் ஆகியவற்றில் இந்தப் பேச்சுவார்த்தைகள் கவனம் செலுத்தும்.</p><p></p><h2>&nbsp;வெளியிடப்படவுள்ள அறிவிப்பு&nbsp;&nbsp;</h2><p>இந்த விஜயத்தின் முடிவில் சர்வதேச நாணய நிதியத்தின் குழு தமது அறிவிப்பை வெளியிட எதிர்பார்த்துள்ளது.</p><p>

கொள்கை வகுப்பாளர்களின் நிலைத்தன்மையைப் பேணுவதற்கும் பொருளாதார மீட்சியை வலுப்படுத்துவதற்குமான முயற்சிகளைத் தொடரும் நிலையில், பொருளாதாரச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதில் இலங்கையின் முன்னேற்றத்தை எதிர்வரும் விஜயத்தின்போது தூதுக்குழுவினர் உன்னிப்பாக மதிப்பாய்வு செய்வார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b345c335-e17c-4099-ae05-8221468c0762/26-6a9a49823e150.webp' /></p><p>நாட்டின் பேரண்ட பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்தும் ஆராய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.” என தெரிவித்துள்ளார்.</p><p> 

பாப்பஜோர்ஜியோ தலைமையிலான சர்வதேச நாணய நிதியத்தின் தூதுக்குழு முன்னதாக 2026 ஜூன் 24 முதல் 30 ஆம் திகதி வரை கொழும்பில் மேற்கொண்ட விஜயத்தைத் தொடர்ந்தே, இந்த செப்டெம்பர் மாத விஜயம் இடம்பெறவுள்ளது. </p><p>

சர்வதேச நாணய நிதியத்தின் கடன் திட்டத்தின் கீழ் இதுவரை இலங்கைக்கு வழங்கப்பட்ட மொத்த நிதி ஆதரவு சுமார் 2.4 பில்லியன் அமெரிக்க டொலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.&nbsp;&nbsp;</p><p>&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-04T04:35:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் நெகிழ்ச்சி சம்பவம் - பேருந்தில் தவறவிட்ட நகை..! சாரதி - நடத்துநரின் நேர்மையான செயல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/sltb-staff-return-lost-gold-chain-worth-million-rs-1788493247"></link>
            <id>https://ibctamil.com/article/sltb-staff-return-lost-gold-chain-worth-million-rs-1788493247</id>
            <summary type="text">கீரிமலை – பருத்தித்துறை வழித்தடத்தில் சேவையில் ஈடுபடும் இலங்கை
போக்குவரத்துச் சபை பேருந்தில் பயணி ஒருவர் தவறவிட்ட பெறுமதியான நகை
கண்டெடுக்கப்பட்டு உ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கீரிமலை – பருத்தித்துறை வழித்தடத்தில் சேவையில் ஈடுபடும் இலங்கை
போக்குவரத்துச் சபை பேருந்தில் பயணி ஒருவர் தவறவிட்ட பெறுமதியான நகை
கண்டெடுக்கப்பட்டு உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.</p><p>
பேருந்தில் நகை இருப்பதை அவதானித்த சாரதி மற்றும் நடத்துனர், அதனை பாதுகாப்பாக
வைத்திருந்து உரிய முறையில் நகையின் உரிமையாளரிடம் கையளித்துள்ளனர்.
</p><p>
அவர்களின் நேர்மையான செயற்பாட்டைப் பாராட்டும் வகையில், வடக்கு மாகாண வீதிப்
பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையினால் கௌரவிப்பு நிகழ்வு ஏற்பாடு
செய்யப்பட்டது.</p><p></p><h2>நேர்மையான செயற்பாடு</h2><p>

இந்நிகழ்வு 2026 செப்டெம்பர் 3ஆம் திகதி யாழ் வீதிப் பயணிகள் அதிகாரசபை
அலுவலகத்தில் இடம்பெற்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/884c4e5d-5db2-4e17-9fcc-5edbaa319ed9/26-6a9a3f8c018d0.webp' /></p><p>இதன்போது வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து
அதிகாரசபையின் தலைவர் சூ. விமலேஸ்வரனால் சாரதி மற்றும் நடத்துனர்
கௌரவிக்கப்பட்டனர்.
</p><p>
பொதுமக்களின் உடமைகளைப் பாதுகாத்து, உரியவரிடம் மீளக் கையளித்த இவர்களின்
நேர்மையான செயற்பாடு, பொதுப் போக்குவரத்துச் சேவையில் பணியாற்றும் ஊழியர்களின்
பொறுப்புணர்வுக்கு சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-04T04:31:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சற்றுமுன் நாமல் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/namal-rajapaksa-to-appear-before-ciaboc-today-1788488124"></link>
            <id>https://ibctamil.com/article/namal-rajapaksa-to-appear-before-ciaboc-today-1788488124</id>
            <summary type="text">புதிய இணைப்புநாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு ஆணைக்குழுவில் சற்றுமுன்னர் முன்னிலையாகியுள்ளார். முதலாம் இணைப்பு&amp;nbsp;நா...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு ஆணைக்குழுவில் சற்றுமுன்னர் முன்னிலையாகியுள்ளார். </p><h2>முதலாம் இணைப்பு&nbsp;</h2><p>நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாகவுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/81058ac8-614b-4ebb-945a-fc706377a876/26-6a9a37db30a00.webp' /></p><p>இன்று (04) முற்பகல் அந்த ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அவருக்கு எழுத்துமூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>குறித்த விடயத்தை நமல் ராஜபக்சவின் சட்டத்தரணி முதித ஆர். லோகுமுதலி தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>ஆணைக்குழுவில் முன்னிலை</h2><p>ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவன கொள்வனவின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் மோசடி தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைக்கு அமைவாக இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.&nbsp;&nbsp;</p><p> 

இதற்கமைய, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச இன்றையதினம் இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாகவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-04T04:30:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[பூஞ்சப்பரத்தில் எழுந்தருளிய முருகப்பெருமான் ; நல்லூரில் 18ஆம் திருவிழா பக்தி பரவசத்துடன் நிறைவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/lord-murugan-of-poonjapparam-flood-devotees-nallur-1788496232"></link>
            <id>https://jvpnews.com/article/lord-murugan-of-poonjapparam-flood-devotees-nallur-1788496232</id>
            <summary type="text">வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்று வரும் நிலையில், ஆலயத்தின் 18ஆம் திருவிழாவான கார்த்திகை தி...</summary>
            <content type="html"><![CDATA[<p>வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்று வரும் நிலையில், ஆலயத்தின் 18ஆம் திருவிழாவான கார்த்திகை திருவிழா நேற்று வியாழக்கிழமை சிறப்பாக இடம்பெற்றது.</p><p></p><p>

கார்த்திகை திருவிழாவை முன்னிட்டு, வள்ளி தெய்வானை சமேத முத்துக்குமார சுவாமி பூஞ்சப்பரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருட்காட்சி அளித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e3197b78-5024-4b35-95de-8cf7b5f106f7/26-6a9a496a041b7.webp' /></p><p>

தொடர்ந்து, சுவாமி பூஞ்சப்பரத்தில் ஆலயத்தின் வெளிவீதியுலா இடம்பெற்றதுடன், பெருமளவான பக்தர்கள் கலந்துகொண்டு முருகப்பெருமானை வழிபட்டு அருளாசி பெற்றனர்.</p><p>

திருவிழாவை முன்னிட்டு ஆலய வளாகம் மற்றும் வெளிவீதிகளில் பக்தர்களின் வருகை அதிகரித்திருந்ததுடன், பக்தர்கள் நேர்த்திக்கடன்களை நிறைவேற்றி வழிபாடுகளில் ஈடுபட்டனர்.
</p><p>
நல்லூர் கந்தசுவாமி ஆலய மகோற்சவத்தின் முக்கிய திருவிழாக்களில் ஒன்றாகக் கருதப்படும் கார்த்திகை திருவிழா, பக்தி மற்றும் ஆன்மிக எழுச்சியுடன் நடைபெற்றது.
</p><p>
வருடாந்த மகோற்சவத்தை முன்னிட்டு ஆலயத்தில் தொடர்ச்சியாக பல்வேறு திருவிழாக்கள் நடைபெற்று வருகின்ற நிலையில், எதிர்வரும் முக்கிய திருவிழாக்களிலும் பெருமளவான பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e3197b78-5024-4b35-95de-8cf7b5f106f7/26-6a9a496a041b7.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b0067d82-44b5-4b55-9556-f6615fec2bcf/26-6a9a496ab01e4.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1bfad8e3-d8f0-4bd0-a1b3-c702b11c9c0b/26-6a9a4a471a2c9.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b361824c-6eca-45ed-b5c7-1ea51cc95888/26-6a9a4a47e321a.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b28104e7-dfa8-4eac-8d2b-6dea8e989d42/26-6a9a4a4899e4e.webp' /></p>]]></content>
            <updated>2026-09-04T04:30:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுக்கிரனால் உருவாகும் மாளவ்ய ராஜயோகம்: அதிர்ஷ்ட பலன்களை அள்ளப்போகும் 5 ராசிகள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/venus-libra-make-malavya-rajyog-who-get-luck-1788433435"></link>
            <id>https://manithan.com/article/venus-libra-make-malavya-rajyog-who-get-luck-1788433435</id>
            <summary type="text">வேத ஜோதிடத்தில் அழகு, காதல், செல்வம், செழிப்பு மற்றும் ஆடம்பரத்தின் காரணியாகக் கருதப்படுபவர் சுக்கிரன். அசுரர்களின் குருவாகவும் கருதப்படும் இவர், ரிஷப...</summary>
            <content type="html"><![CDATA[<p>வேத ஜோதிடத்தில் அழகு, காதல், செல்வம், செழிப்பு மற்றும் ஆடம்பரத்தின் காரணியாகக் கருதப்படுபவர் சுக்கிரன். அசுரர்களின் குருவாகவும் கருதப்படும் இவர், ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளின் அதிபதியாவார். </p><p>சுக்கிரன் ஒரு ராசியில் சுமார் 23 முதல் 30 நாட்கள் வரை இருப்பார். அவரது நிலை மாறும்போது, அனைத்து ராசிகளின் நிதி நிலையிலும் தாக்கம் ஏற்படுவதாக ஜோதிடம் கூறுகிறது.

அந்த வகையில், செப்டம்பர் 2ஆம் தேதி சுக்கிரன் தனது சொந்த ராசியான துலாமில் நுழைந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/eb32183e-9736-4b11-9e67-e1915d7ee833/26-6a995a36e6302.webp' /></p><p> </p><p>இதனால் பஞ்ச மகாபுருஷ யோகங்களில் ஒன்றான மாளவ்ய ராஜயோகம் உருவாகியுள்ளது. இந்த யோகம் செல்வம், செழிப்பு, கௌரவம், பொருளாதார வசதி, காதல் மற்றும் திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி ஆகியவற்றுடன் தொடர்புடையதாகக் கருதப்படுகிறது.
</p><p>
இந்த யோகத்தின் தாக்கம் 12 ராசிகளிலும் காணப்பட்டாலும், 5 ராசிக்காரர்கள் இதன் மூலம் அதிர்ஷ்டத்தின் சிறப்பான ஆதரவைப் பெறவுள்ளனர்.</p><p>மேலும், இந்த யோகம் நவம்பர் 6ஆம் தேதி வரை நீடிப்பதால், அதுவரை இந்த 5 ராசிக்காரர்களுக்கும் பொற்காலமாக அமையப் போகிறது. சுக்கிரனால் உருவாகியுள்ள மாளவ்ய ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பெறப்போகும் அந்த 5 ராசிகள் யாவை என்பதை தற்போது பார்க்கலாம்.</p><p></p><h2>மிதுனம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fd9c7664-bc10-4be0-a410-f88abfe25ee2/26-6a995a3799af2.webp' /></p><h2>
</h2><p>மிதுன ராசியின் 5-வது வீட்டிற்கு சுக்கிரன் சென்று மாளவ்ய ராஜயோகத்தை உருவாக்கியுள்ளார். இதனால் திருமண மற்றும் காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரித்து, வாழ்க்கைத்துணையுடனான உறவு வலுப்படும்.</p><p> பணியிடத்தில் பொறுப்புகள் அதிகரித்தாலும், எதிர்காலத்தில் நல்ல பலன்கள் கிடைக்கும். தொழிலதிபர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் மற்றும் தொடர்புகள் மூலம் லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது.
</p><h2>
கன்னி</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bc7cb394-3550-4cb0-b168-5cb46892d665/26-6a995a385c12a.webp' /></p><h2>
</h2><p>கன்னி ராசியின் 2-வது வீட்டிற்கு சுக்கிரன் சென்றுள்ளதால் புதிய வருமான வாய்ப்புகள் உருவாகி, நிதி நிலை உயரும். தேவையற்ற செலவுகள் கட்டுப்படும்.</p><p> சிலருக்கு புதிய வீடு அல்லது வாகனம் வாங்கும் வாய்ப்பு கிடைக்கலாம். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரித்து, குடும்பத்தினரின் முழு ஆதரவும் கிடைக்கும்.
</p><h2>
தனுசு</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/51684187-99e8-486a-b628-c3cb2ac78077/26-6a995a3952e9c.webp' /></p><p>
தனுசு ராசியின் 11-வது வீட்டிற்கு சுக்கிரன் சென்றுள்ளதால் அடுத்த 2 மாதங்கள் சிறப்பாக இருக்கும். பணியிடத்தில் சக ஊழியர்கள் மற்றும் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.</p><p> நிலுவையில் உள்ள பணிகள் வெற்றிகரமாக முடியும். குடும்பத்தினர் மற்றும் வாழ்க்கைத்துணையுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடுவீர்கள். நிதி ரீதியாகவும் இந்த காலம் சிறப்பாக இருக்கும்.
</p><h2>
மீனம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/032e4a8e-94cd-47e7-8551-917f58d17c5f/26-6a995a3a08f5a.webp' /></p><h2>
</h2><p>மீன ராசியின் 8-வது வீட்டிற்கு சுக்கிரன் சென்றுள்ளதால் தொழில் ரீதியாக முன்னேற்றம் ஏற்படும். பணியிடத்தில் உங்கள் நிலை வலுவடையும். இருப்பினும் தவறான செயல்களில் ஈடுபடாமல், வேலையில் நேர்மையாக இருப்பது அவசியம்.</p><p>அவ்வாறு செயல்பட்டால் நல்ல உயரத்தை அடையலாம். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்தினால் நல்ல பலன்கள் கிடைக்கும். குடும்பப் பிரச்சனைகள் நீங்கி மகிழ்ச்சியான சூழல் உருவாகும்.
</p><h2>
துலாம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bb451fb3-a050-4e6d-aac3-06a9bd496fb4/26-6a995a3ab0a8f.webp' /></p><p></p><h2>
</h2><p>துலாம் ராசியின் முதல் வீட்டிற்கு சுக்கிரன் சென்று மாளவ்ய ராஜயோகத்தை உருவாக்கியுள்ளார். இதனால் ஆளுமையும் வசீகரமும் அதிகரிக்கும். </p><p>அலுவலகத்தில் உங்கள் கருத்துகளை திறம்பட வெளிப்படுத்தும் வாய்ப்பு கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் அமையும். நிதி நிலை வலுப்படும். ஏற்கனவே செய்த முதலீடுகள் மூலம் நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது.</p><p><b>இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).&nbsp; &nbsp;&nbsp;</b></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b>&nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-04T04:20:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஊடகவியலாளர் மீதான அச்சுறுத்தல் குறித்து சுகாஷ் கடும் கண்டனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sukash-condemns-the-threat-against-the-journalist-1788495561"></link>
            <id>https://jvpnews.com/article/sukash-condemns-the-threat-against-the-journalist-1788495561</id>
            <summary type="text">தமிழ் ஊடகவியலாளர்கள் மீது அரச அதிகாரப் பின்னணியில் அச்சுறுத்தல்கள் விடுக்கப்படுவதாகக் குற்றம்சாட்டியுள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சா...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழ் ஊடகவியலாளர்கள் மீது அரச அதிகாரப் பின்னணியில் அச்சுறுத்தல்கள் விடுக்கப்படுவதாகக் குற்றம்சாட்டியுள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ், அதனை வன்மையாகக் கண்டிப்பதாகத் தெரிவித்துள்ளார்.</p><p></p><p>

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய அவர், ஊடக சுதந்திரம் ஜனநாயகத்தின் முக்கிய தூண் எனக் குறிப்பிட்டு, ஊடகவியலாளர்களை அச்சுறுத்துவதும் அழுத்தங்களுக்கு உள்ளாக்குவதும் நிறுத்தப்பட வேண்டும் என்றார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b94914dc-30fb-475d-bcde-12ba0721f315/26-6a9a46ca7253d.webp' /></p><p>அத்துடன், பிரபாகரன் டிலக்சன் என்ற ஊடகவியலாளர் அரச ஆதரவுடன் அழுத்தங்களுக்கும் விசாரணைகளுக்கும் உள்ளாக்கப்படுவதாக அவர் குற்றஞ்சாட்டினார்.</p><p> மேலும், வடமராட்சியில் தேசிய மக்கள் சக்தியின் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் சிசிடிவி கமராவை சேதப்படுத்திய சம்பவத்தில் பொலிஸார் சட்ட நடைமுறைகளை மீறி அவரை விடுவித்ததாகவும் சுகாஷ் குற்றம்சாட்டினார்.
</p><p>
தமிழர் தாயகப் பகுதிகளில் காணி சுவீகரிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகள் இடம்பெறுவதாகக் கூறிய அவர், தமிழர்களின் இருப்பையும் உரிமைகளையும் பாதுகாக்க ஜனநாயக ரீதியான அரசியல் நடவடிக்கைகள் அவசியம் என வலியுறுத்தினார்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-04T04:19:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[டிஜிட்டல் காப்புறுதி அட்டையை ஏற்க மறுக்கும் பொலிஸாருக்கு கடும் எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/stern-warning-police-refus-digital-insurance-cards-1788495192"></link>
            <id>https://jvpnews.com/article/stern-warning-police-refus-digital-insurance-cards-1788495192</id>
            <summary type="text">டிஜிட்டல் காப்புறுதி அட்டைகளை (Digital Insurance Cards) பரிசோதிப்பது தொடர்பாக பொலிஸ் மா அதிபரினால் வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்கள் மற்றும் வழிகாட்டல்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>டிஜிட்டல் காப்புறுதி அட்டைகளை (Digital Insurance Cards) பரிசோதிப்பது தொடர்பாக பொலிஸ் மா அதிபரினால் வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்கள் மற்றும் வழிகாட்டல்களை மீறி, சாரதிகளை அசௌகரியத்திற்கு உள்ளாக்குவது கடுமையான கடமை மீறலாகும் என போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்பு திணைக்களத்திற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் டபிள்யூ.பி.ஜே.சேனாதீர தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p></p><p>நேற்று (03) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த பிரதிப் பொலிஸ் மா அதிபர், பாதுக்கை மற்றும் கம்பஹா ஆகிய பொலிஸ் நிலையங்களைச் சேர்ந்த சில பொலிசார் டிஜிட்டல் காப்பீட்டு அட்டைகளை ஏற்றுக்கொள்ள மறுத்து பொதுமக்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தியதாக தகவல்கள் பதிவாகியுள்ளதாகக் குறிப்பிட்டார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c80200c9-8f89-4bdf-8f7f-6f696418a16f/26-6a9a455959db2.webp' /></p><p>இதன்படி, R.T.M. 93 சட்டத்தின் மூலம் 2026.05.05 ஆம் திகதியிட்ட மேலதிக செய்தி மூலம் காப்புறுதி ஒழுங்குமுறை ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்டுள்ள, நாட்டின் முன்னணி 14 காப்புறுதி நிறுவனங்களால் வழங்கப்படும் டிஜிட்டல் காப்பீட்டு அட்டைகளை உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொள்ளுமாறு பொலிஸ் மா அதிபரினால் நாட்டின் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.</p><p>

2006 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க மின்னணு பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் டிஜிட்டல் காப்புறுதி அட்டைகளுக்கு முழுமையான சட்ட அங்கீகாரம் கிடைப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
</p><p>
ஒரு சாரதியிடம் டிஜிட்டல் காப்புறுதி அட்டை இல்லாத சந்தர்ப்பத்தில் கூட, பின்வரும் இலவச சேவைகள் மூலம் காப்புறுதி பாதுகாப்பு செல்லுபடியாகும் நிலையில் உள்ளதா என்பதை பொலிஸார் உறுதிசெய்து கொள்ள முடியும்.</p><p>

*1338# ஐ அழைப்பதன் மூலம் காப்பீட்டு இலக்கம் அல்லது வாகன இலக்கத்தை உள்ளீடு செய்து உடனடியாக தகவல்களைப் பெறுதல்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-04T04:13:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[சற்றுமுன்னர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையான நாமல்! குவிந்துள்ள ஆதரவாளர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-appears-before-the-bribery-commission-today-1788489690"></link>
            <id>https://tamilwin.com/article/namal-appears-before-the-bribery-commission-today-1788489690</id>
            <summary type="text">புதிய இணைப்புசற்றுமுன்னர் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்....</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>சற்றுமுன்னர் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.</p><p>

இன்று காலை 9 மணிக்கு ஆணைக்குழுவின் முன் முன்னிலையாகுமாறு நாமல் ராஜபக்சவுக்கு எழுத்துப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில் அவர் முன்னிலையாகியுள்ளார்.&nbsp;</p><h2>முதலாம் இணைப்பு</h2><p>நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச இன்று காலை ( 4) இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை ஆணைக்குழுவின் முன் முன்னிலையாவார் என சட்டத்தரணி முதித ஆர். லோகுமுதலி 
தெரிவித்துள்ளார்.
</p><p>
இன்று காலை 9 மணிக்கு ஆணைக்குழுவின் முன் முன்னிலையாகுமாறு ஆணைக்குழுவினால் நாமல் ராஜபக்சவுக்கு எழுத்துப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.</p><h2>கோரிக்கைக்கு இணக்கம்</h2><p>
</p><p>
எனவே தனது கட்சிக்காரர் இந்த கோரிக்கைக்கு இணங்க ஒப்புக்கொண்டதாக சட்டத்தரணி உறுதிபடுத்தியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/65d604aa-af14-4c35-8f3d-9d56698586ac/26-6a9a33ebe94cb.webp' />&nbsp;</p><p>இதன் காரணமாக&nbsp;நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவிற்கு ஆதரவான அரசியல்வாதிகள், பொதுமக்கள், கட்சியின் உறுப்பினர்கள் என பலர் தற்போது&nbsp;ஆணைக்குழுவின் முன்னிலையில் குவிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்காக பெரிய ரக விமானக்குழுமத்தை அமைப்பது மற்றும் எயார்பஸ் (Airbus) விமானக்கொள்வனவின் போது இடம்பெற்றதாக கூறப்படும் இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணையின் ஒரு பகுதியாக, நாமல் ராஜபக்சவுக்கு ஆணைக்குழு (CIABOC) அழைப்பாணை விடுத்துள்ளது&nbsp;</p><p></p><p></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-04T04:07:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[டாக்சிக் பாக்ஸ் ஆபிஸ்.. 9 நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/toxic-movie-9-days-box-office-1788493023"></link>
            <id>https://viduppu.com/article/toxic-movie-9-days-box-office-1788493023</id>
            <summary type="text">இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்கத்தில், கே.வி.என் நிறுவனம் தயாரிப்பில், யஷ் நடிப்பில் உருவாகி கடந்த 26-ஆம் தேதி வெளியான திரைப்படம் டாக்சிக். 

இப்படத்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்கத்தில், கே.வி.என் நிறுவனம் தயாரிப்பில், யஷ் நடிப்பில் உருவாகி கடந்த 26-ஆம் தேதி வெளியான திரைப்படம் டாக்சிக். </p><p>

இப்படத்தில் நயன்தாரா, ஹுமா குரேஷி, ருக்மிணி வசந்த், கியாரா அத்வானி மற்றும் தாரா சுதாரியா ஆகியோர் நடித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c21a1f36-b0c4-46c6-9596-8489797b7ee4/26-6a9a3ce27e93b.webp' /></p><p>
</p><p>
2026-ஆம் ஆண்டு பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படங்களில் ஒன்று டாக்சிக். ஆனால் அந்த எதிர்பார்ப்பை இப்படம் முழுமையாக பூர்த்தி செய்யவில்லை. இதனால் பாக்ஸ் ஆபிஸில் இப்படம் கடுமையாக அடிவாங்கியுள்ளது.
</p><p>
இந்நிலையில், 9 நாட்களில் உலகளவில் இப்படம் செய்துள்ள வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 9 நாட்களில் உலகளவில் ரூ. 350 கோடி வசூலித்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-04T04:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாக்ஸ் ஆபிஸ்: 7 நாட்களில் 'ஹாய்' திரைப்படம் செய்துள்ள வசூல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/kavin-hi-movie-7-days-box-office-1788492824"></link>
            <id>https://cineulagam.com/article/kavin-hi-movie-7-days-box-office-1788492824</id>
            <summary type="text">கவின், நயன்தாரா நடிப்பில் உருவாகி கடந்த வாரம் வெளியான &#039;ஹாய்&#039; திரைப்படத்தின் 7 நாட்கள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

&#039;ஹாய்&#039;

அறிமுக இயக்குந...</summary>
            <content type="html"><![CDATA[<p>கவின், நயன்தாரா நடிப்பில் உருவாகி கடந்த வாரம் வெளியான 'ஹாய்' திரைப்படத்தின் 7 நாட்கள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.</p><p></p><p>
</p><h2>
'ஹாய்'
</h2><p>
அறிமுக இயக்குநர் விஷ்ணு எடவன் இயக்கத்தில் கவின், நயன்தாரா நடிப்பில் உருவாகி கடந்த வாரம் திரைக்கு வந்த படம் 'ஹாய்'. இப்படத்தில் ராதிகா சரத்குமார், பாக்யராஜ், பிரபு, கதிர், காவ்யா என பலரும் நடித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/59c106e7-20a3-4935-8fa4-f04ae5d14a6e/26-6a9a3c1bd3b01.webp' /></p><p> 

காதல் கதைக்களத்தில் உருவாகி வெளிவந்த இப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தாலும், பாக்ஸ் ஆபிஸில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. </p><h2>

வசூல் விவரம்
</h2><p>
இந்நிலையில், 7 நாட்களை வெற்றிகரமாக பாக்ஸ் ஆபிஸில் கடந்துள்ள 'ஹாய்' திரைப்படம் இதுவரை உலகளவில் செய்துள்ள வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8554d5d4-007a-40c2-a591-e8a233d7a02c/26-6a9a3c1c8d3d5.webp' /></p><p>
அதன்படி, 7 நாட்களில் இப்படம் உலகளவில் ரூ. 11 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இது இப்படத்திற்கு பாக்ஸ் ஆபிஸில் கிடைத்துள்ள நல்ல பிக்கப் ஆகும்.</p>]]></content>
            <updated>2026-09-04T04:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[சர்வதேச நாணய நிதியத் தூதுக்குழு அடுத்த வாரம் இலங்கைக்கு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/imf-mission-to-visit-sri-lanka-next-week-1788494279"></link>
            <id>https://jvpnews.com/article/imf-mission-to-visit-sri-lanka-next-week-1788494279</id>
            <summary type="text">நாட்டின் தற்போதைய பொருளாதார சீர்திருத்த வேலைத்திட்டத்துடன் தொடர்புடைய அடுத்த கட்ட கடன் மதீப்பீட்டிற்காக இலங்கை தயாராகி வரும் நிலையில், அரசாங்க அதிகாரி...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டின் தற்போதைய பொருளாதார சீர்திருத்த வேலைத்திட்டத்துடன் தொடர்புடைய அடுத்த கட்ட கடன் மதீப்பீட்டிற்காக இலங்கை தயாராகி வரும் நிலையில், அரசாங்க அதிகாரிகளுடன் புதிய சுற்றுப் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதற்காக சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகள் குழு அடுத்த வாரம் இலங்கை வரவுள்ளது.</p><p> </p><p></p><p>அந்த குழுவானது எதிர்வரும் செப்டெம்பர் 10 ஆம் திகதி முதல் 23 ஆம் திகதி வரை அந்த குழு நாட்டில் தங்கியிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> 

இந்த விஜயம் குறித்து இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் தூதுக்குழுவின் தலைவர் இவான் பாப்பஜோர்ஜியோ தெரிவிக்கையில், சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட நிதி வசதியின் கீழ் ஆதரிக்கப்படும் இலங்கையின் சீர்திருத்த வேலைத்திட்டத்தின் ஒருங்கிணைந்த 7வது மதிப்பாய்வு மற்றும் 2026 ஆம் ஆண்டின் உறுப்புரை IV ஆலோசனைகள் ஆகியவற்றில் இந்தப் பேச்சுவார்த்தைகள் கவனம் செலுத்தும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1eb28f60-12f9-44f5-8e2d-9796452b1e2a/26-6a9a41c89cdd3.webp' /></p><p>அத்துடன், இந்த விஜயத்தின் முடிவில் சர்வதேச நாணய நிதியத்தின் குழு தமது அறிவிப்பை வெளியிட எதிர்பார்த்துள்ளதாக அவர் தெரிவித்தார். </p><p>

கொள்கை வகுப்பாளர்களின் நிலைத்தன்மையைப் பேணுவதற்கும் பொருளாதார மீட்சியை வலுப்படுத்துவதற்குமான முயற்சிகளைத் தொடரும் நிலையில், பொருளாதாரச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதில் இலங்கையின் முன்னேற்றத்தை எதிர்வரும் விஜயத்தின்போது தூதுக்குழுவினர் உன்னிப்பாக மதிப்பாய்வு செய்யப்படும் அதேவேளை, நாட்டின் பேரண்ட பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்தும் ஆராய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p> 

பாப்பஜோர்ஜியோ தலைமையிலான சர்வதேச நாணய நிதியத்தின் தூதுக்குழு முன்னதாக 2026 ஜூன் 24 முதல் 30 ஆம் திகதி வரை கொழும்பில் மேற்கொண்ட விஜயத்தைத் தொடர்ந்தே, இந்த செப்டெம்பர் மாத விஜயம் இடம்பெறவுள்ளது.</p><p> 

சர்வதேச நாணய நிதியத்தின் கடன் திட்டத்தின் கீழ் இதுவரை இலங்கைக்கு வழங்கப்பட்ட மொத்த நிதி ஆதரவு சுமார் 2.4 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும் என்பது குறிப்பிடத்தக்கது.</p><p></p>]]></content>
            <updated>2026-09-04T03:58:08+00:00</updated>
        </entry>
    </feed>
