<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-08-09T06:42:23+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[பரபரப்பை ஏற்படுத்திய துண்டிக்கப்பட்ட மனிதத்தலை - பின்னணியில் மறைந்துள்ள மர்மம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/human-head-without-a-trunk-is-found-in-wellawaya-1786256061"></link>
            <id>https://tamilwin.com/article/human-head-without-a-trunk-is-found-in-wellawaya-1786256061</id>
            <summary type="text">எல்ல - வெல்லவாய வீதியில் வெல்லவாய பகுதியில், துண்டிக்கப்பட்ட மனிதத்தலையொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த வீதியருகே உ...</summary>
            <content type="html"><![CDATA[<p>எல்ல - வெல்லவாய வீதியில் வெல்லவாய பகுதியில், துண்டிக்கப்பட்ட மனிதத்தலையொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
குறித்த வீதியருகே உள்ள வனப்பகுதியில் அந்த மனிதத்தலை கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் கூறியுள்ளனர்.</p><h2>பொலிஸார் விசாரணை</h2><p>இந்த சந்தேகத்திற்கிடமான மனிதத்தலை தொடர்பில் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை என்றும் கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/90547d25-613a-4f0b-8735-2738d68838d5/26-6a7820f2b3b7e.webp' />&nbsp;</p><p>
</p><p>
மேலும், சில நாட்களுக்கு முன்னர் உயிரிழந்த ஒருவருடைய தலையாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
</p><p>
இந்த சம்பவத்தின் பின்னணியில் ஏதோ மர்மம் இருப்பதாக சந்தேகிக்கப்படுவதாக பொலிஸார் தற்போது விசாரணையை தொடங்கியுள்ளன.</p><p></p><p>&nbsp;</p><p><br></p>]]></content>
            <updated>2026-08-09T06:41:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இரத்மலானையில் வீடொன்றின் மீது கைக்குண்டுத் தாக்குதல் : நால்வர் அதிரடி கைது!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/hand-grenade-attack-on-a-house-in-ratmalana-1786254514"></link>
            <id>https://ibctamil.com/article/hand-grenade-attack-on-a-house-in-ratmalana-1786254514</id>
            <summary type="text">இரத்மலானை - ஞானேந்திர வீதியிலுள்ள வீடொன்றின் மீது கைக்குண்டுத் தாக்குதல் நடத்திய சம்பவத்துடன் தொடர்புடைய நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சந்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>இரத்மலானை - ஞானேந்திர வீதியிலுள்ள வீடொன்றின் மீது கைக்குண்டுத் தாக்குதல் நடத்திய சம்பவத்துடன் தொடர்புடைய நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். </p><p>குறித்த சந்தேக நபர்கள் நால்வரும் நேற்றைய தினம் (8) காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>

கடந்த ஓகஸ்ட் 5ஆம் திகதி குறித்த இருமாடி வீட்டின் மீது இரண்டு கைக்குண்டுகள் வீசப்பட்டிருந்த நிலையில் அவற்றில் ஒன்று வெடித்துச் சிதறியதுடன், மற்றைய குண்டு வீட்டின் தோட்டத்தில் விழுந்திருந்த நிலையில் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டது.</p><p></p><h2>நான்கு சந்தேகநபர்கள் கைது</h2><p> </p><p>

இது தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த கல்கிஸை காவல் நிலையத்தினர், மொரட்டுவை மற்றும் இரத்மலானை ஆகிய பகுதிகளில் வைத்து இந்த நான்கு சந்தேகநபர்களையும் கைது செய்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7c1ef317-5427-4d40-80a6-3e4c0ddafe6a/26-6a781a8887c54.webp' /></p><p> 

கைது செய்யப்பட்டவர்கள் 21, 26, 28 மற்றும் 30 வயதுடைய மொரட்டுவை மற்றும் இரத்மலானை பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p> </p><p>

தற்போது வெளிநாட்டில் இருக்கும் திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் நபரின் வழிகாட்டலின் பேரிலேயே இக்குற்றச்செயல் இடம்பெற்றுள்ளதாகவும், திட்டமிட்ட குற்றவாளிகளுக்கு இடையே நிலவும் தகராறே இத்தாக்குதலுக்கு காரணம் என்றும் இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. </p><p>

இந்த கைக்குண்டுத் தாக்குதலால் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்பதுடன், வீட்டின் இரு ஜன்னல் கண்ணாடிகள் மாத்திரமே சேதமடைந்துள்ளதமாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><p>இந்தநிலையில் சம்பவம் தொடர்பில் கல்கிஸை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/nT-V1g3hrTc" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-09T06:30:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடல் அலையில் சிக்கி வெளிநாட்டு சுற்றுலாப் பயணி பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/tunisian-tourist-died-swept-away-while-surfing-1786255211"></link>
            <id>https://ibctamil.com/article/tunisian-tourist-died-swept-away-while-surfing-1786255211</id>
            <summary type="text">இலங்கையின் வெலிகம பகுதியில் அலைச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டிருந்த 21 வயதுடைய துனிசிய நாட்டு சுற்றுலாப் பயணி ஒருவர் கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் வெலிகம பகுதியில் அலைச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டிருந்த 21 வயதுடைய துனிசிய நாட்டு சுற்றுலாப் பயணி ஒருவர் கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்துள்ளார்.
</p><p>
நேற்று சனிக்கிழமை (08) அன்று வெலிகம, பரண கடே கடற்கரைப் பகுதியில் துனிசிய நண்பர்கள் குழுவுடன் இவர் அலைச்சறுக்கில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது, பலத்த காற்று மற்றும் கடலின் வலுவான நீரோட்டத்தில் சிக்கிக் காணாமல் போயுள்ளார்.</p><p></p><h2>மேலதிக விசாரணை</h2><p>
</p><p>
இதனைத் தொடர்ந்து காவல்துறை உயிர்காப்பாளர்கள், கடலோரக் காவல் படையினர் மற்றும் தனியார் மூழ்காளர்கள் இணைந்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டபோதிலும் அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை என தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4c6a66a8-361f-4b53-a0b9-83067421f862/26-6a781aea50ef2.webp' /></p><p>
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை (09) காலை அதே கடற்கரைப் பகுதியில் அவரது உடல் கரை ஒதுங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது.</p><p>

இச்சம்பவம் குறித்து வெலிகம காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-09T06:27:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஒரு போன் கால் போதுமானது - புரமோஷன் நிகழ்வுகளில் பங்கேற்காதது குறித்து நயன்தாரா ஓபன் டாக்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/why-nayanthara-stays-away-from-movie-promotions-1786253827"></link>
            <id>https://manithan.com/article/why-nayanthara-stays-away-from-movie-promotions-1786253827</id>
            <summary type="text">திரைப்படங்களின் புரமோஷன் நிகழ்வுகளில் பெரும்பாலும் பங்கேற்காமல் இருப்பது குறித்து நடிகை நயன்தாரா வெளிப்படையாக விளக்கம் அளித்துள்ளார். குறித்த பேட்டி த...</summary>
            <content type="html"><![CDATA[<p>திரைப்படங்களின் புரமோஷன் நிகழ்வுகளில் பெரும்பாலும் பங்கேற்காமல் இருப்பது குறித்து நடிகை நயன்தாரா வெளிப்படையாக விளக்கம் அளித்துள்ளார். குறித்த பேட்டி தற்போது ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்து வருகின்றது.&nbsp;</p><h2>புரமோஷன் நிகழ்வுகளில் நயன்தாரா&nbsp;</h2><p>கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘டாக்ஸிக்’ திரைப்படத்தில் கியாரா அத்வானி, நயன்தாரா, ருக்மணி வசந்த் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ec7481bc-1e0c-45cb-b66f-496d16cca578/26-6a781d6aa0085.webp' /></p><p></p><p>பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் வரும் 26-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், இதன் ட்ரெய்லர் வெளியீட்டு விழா பெங்களூருவில் நடைபெற்றது.</p><p>

இந்த நிகழ்வில் கலந்துகொண்ட நயன்தாரா, திரைப்பட புரமோஷன் நிகழ்ச்சிகளில் தான் ஏன் அதிகம் பங்கேற்பதில்லை என்பது குறித்து வெளிப்படையாக பகிர்ந்துக்கொண்டார்.</p><p>“படங்களின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளக் கூடாது என்ற எந்த எண்ணமும் எனக்கு இல்லை.ஆனால், அது எனக்கு அவ்வளவு சரியாக வராது என்பதால், அதிலிருந்து சற்று விலகியே இருக்கிறேன்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6837ad35-7b0a-4ec6-8255-72f5772a26d0/26-6a781d6b51b78.webp' /></p><p>இருப்பினும், ‘டாக்ஸிக்’ திரைப்படம் எனக்கு மிகவும் ஸ்பெஷல். அதற்கு முக்கிய காரணம் யஷ். இந்த நிகழ்வில் நான் கலந்துகொள்ள வேண்டும் என்பதற்காக யஷ் செய்த ஒரு போன் கால் மட்டுமே போதுமானதாக இருந்தது” என்று நயன்தாரா கூறினார்.</p><p>இதனைத் தொடர்ந்து பேசிய யஷ், நயன்தாராவுக்கு தனது நன்றியைத் தெரிவித்ததுடன், அவரது அர்ப்பணிப்பையும் பாராட்டினார்.

“நயன்தாரா ஒரு லேடி சூப்பர் ஸ்டார். அவரை முதன்மைப்படுத்தும் கதாபாத்திரங்களிலேயே தொடர்ந்து நடித்து வருகிறார். அவருக்கான ரசிகர்கள் கூட்டமும், மார்க்கெட்டும் என்ன என்பது எனக்கு நன்றாகத் தெரியும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d160b293-c2e3-4b29-91c4-a41049349fd4/26-6a781d6c02973.webp' /></p><p></p><p>
இந்தப் படத்தில் நடிக்கும்போது அவருக்கு தேதிகள் தொடர்பாக சில சிக்கல்கள் இருந்தன. ஆனால், படத்தில் நடிக்க ஒப்புக்கொண்ட பிறகு அதை அவர் கையாண்ட விதம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. தனது சிறந்த நடிப்பை அவர் வழங்கியிருக்கிறார்.</p><p> இந்தப் படத்துக்கு நயன்தாரா ஒரு மிகப்பெரிய பலம். தனது கதாபாத்திரத்தை மிகவும் சிறப்பாக செய்திருக்கிறார்” என்றார்.

மேலும், தானும் நயன்தாராவைப் போலவே புரமோஷன் நிகழ்ச்சிகளில் அதிகம் பங்கேற்பதில்லை என்று குறிப்பிட்ட யஷ், “புரமோஷன் நிகழ்ச்சிகளுக்கு வருவது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல. நிகழ்வுகளுக்கு வந்தால் பேச வேண்டும். </p><p>என்ன பேசுவது? நாம் ஏற்கனவே ரசிகர்களிடம் நிறைய அன்பைப் பெற்றிருக்கிறோம். சில நேரங்களில் நாம் அதிகமாகவும் பேசிவிடுகிறோம்.

ஆனால், இன்று நயன்தாரா இந்த நிகழ்வுக்காக வந்திருக்கிறார். அதுவும் தனது உள்ளத்திலிருந்து பேசியிருக்கிறார்.அதற்காக அவருக்கு நன்றி” எனத் தெரிவித்தார்.</p><p>

நயன்தாரா வழக்கமாக புரமோஷன் நிகழ்வுகளில் இருந்து விலகியிருக்கும் நிலையில், ‘டாக்ஸிக்’ படத்துக்காக அவர் நேரில் வந்து பேசியிருப்பது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளதுள்ளதுடன் குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகின்றது.</p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b></td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-09T06:26:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[முதல் முறையாக மகுடம் சூடிய..தசுன் ஷானகாவின் காலி கல்லன்ட்ஸ்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/galle-gallants-won-maiden-lpl-trophy-2026-1786256731"></link>
            <id>https://news.lankasri.com/article/galle-gallants-won-maiden-lpl-trophy-2026-1786256731</id>
            <summary type="text">LPL 2026 இறுதிப்போட்டியில் காலி கல்லன்ட்ஸ் வெற்றி பெற்று மகுடம் சூடியது. ஜாஃப்னா கிங்ஸ் அணிக்கு எதிரான லங்கா பிரீமியர் லீக் இறுதிப் போட்டியில் காலி கல...</summary>
            <content type="html"><![CDATA[<p>LPL 2026 இறுதிப்போட்டியில் காலி கல்லன்ட்ஸ் வெற்றி பெற்று மகுடம் சூடியது. </p><p>ஜாஃப்னா கிங்ஸ் அணிக்கு எதிரான லங்கா பிரீமியர் லீக் இறுதிப் போட்டியில் காலி கல்லன்ட்ஸ் அணி வெற்றி பெற்று கிண்ணத்தை வென்றது.&nbsp;</p><h2>LPL 2026 இறுதிப்போட்டி</h2><p>கொழும்பில் நடந்த LPL 2026 இறுதிப்போட்டியில் ஜாஃப்னா கிங்ஸ் மற்றும் காலி கல்லன்ட்ஸ் அணிகள் மோதின.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/76d8061d-034d-4b73-9906-6158bf5379e5/26-6a781d5f181d5.webp' />&nbsp;</p><p></p><p>முதலில் ஆடிய ஜாஃப்னா கிங்ஸ் அணி 19.3 ஓவர்களில் 123 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது. கமில் மிஷாரா 41 (32) ஓட்டங்களும், சமிந்து விக்ரமசிங்கே 24 (16) ஓட்டங்களும் எடுத்தனர். சரித் அசலங்கா, இஷான் மலிங்கா தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.</p><p> பின்னர் ஆடிய காலி கல்லன்ட்ஸ் அணியில் ஹார்பர் (1), அசலங்கா (2) ஆகியோர் சொதப்ப, தாமஸ் ஃப்ரேஸர் 34 ஓட்டங்கள் எடுத்தார்.</p><h2> ஷானகா அதிரடி </h2><p>தினுர கலுபஹன அதிரடியாக 19 பந்துகளில் 31 ஓட்டங்கள் விளாச, கருணாரத்னே 16 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். </p><p>எனினும் சஹன் அரச்சிகே மற்றும் அணித்தலைவர் தசுன் ஷானகா 15.5வது ஓவரிலேயே அணியை வெற்றி பெற வைத்தார்.</p><p> ஷானகா (Shanaka) 9 பந்துகளில் ஒரு சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 20 ஓட்டங்கள் விளாசினார். ட்ரவீன், ஷாகிப் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1acab41a-5d7b-4357-98de-3d1efc5c644a/26-6a781d5e6888a.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-09T06:23:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[டாக்சிக் பட நாயகி தாரா சுதாரியாவின் கிளாமர் போட்டோஷூட்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/toxic-actress-tara-sutaria-glamour-photoshoot-1786256050"></link>
            <id>https://cineulagam.com/article/toxic-actress-tara-sutaria-glamour-photoshoot-1786256050</id>
            <summary type="text">டாக்சிக் திரைப்பட நடிகை தாரா சுதாரியா, dramatic leopard-print உடையில் எடுத்துக்கொண்ட கிளாமர் போட்டோஷூட் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பத...</summary>
            <content type="html"><![CDATA[<p>டாக்சிக் திரைப்பட நடிகை தாரா சுதாரியா, dramatic leopard-print உடையில் எடுத்துக்கொண்ட கிளாமர் போட்டோஷூட் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
</p><h2>
டாக்சிக்</h2><p>

இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யாஷ் ஹீரோவாக நடித்துள்ள திரைப்படம் டாக்சிக். இப்படத்தில் நயன்தாரா, ஹுமா குரேஷி, கியாரா அத்வானி, ருக்மிணி வசந்த், தாரா சுதாரியா என பலரும் நடித்துள்ளனர். வருகிற ஆகஸ்ட் 26-ஆம் தேதி டாக்சிக் திரைப்படம் வெளியாகிறது.</p><h2>

டிரைலர் வெளியீட்டு விழா
</h2><p>
நேற்று இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா பிரம்மாண்ட முறையில் நடைபெற்றது. இந்த விழாவில் தாரா சுதாரியா dramatic leopard-print உடையில் வருகை தந்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். </p><h2>

போட்டோஷூட் </h2><p>

இந்நிலையில், அந்த உடையில் எடுத்துக்கொண்ட கிளாமர் போட்டோஷூட் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை தாரா வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்:&nbsp;</p><p><br></p>]]></content>
            <updated>2026-08-09T06:20:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தியாவில் 97 ஆறுகள் பாயும் ஒரே ஒரு மாவட்டம்.. எது தெரியுமா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/which-district-in-india-where-97-rivers-flow-1786255734"></link>
            <id>https://news.lankasri.com/article/which-district-in-india-where-97-rivers-flow-1786255734</id>
            <summary type="text">97 Rivers Flow Through a Single District in India – இந்தியாவில் 97 ஆறுகள் பாயும் ஒரே ஒரு மாவட்டம் எது என்பது குறித்து பலருக்கும் தெரியாத ஒரு விடயமாகும...</summary>
            <content type="html"><![CDATA[<p>97 Rivers Flow Through a Single District in India – இந்தியாவில் 97 ஆறுகள் பாயும் ஒரே ஒரு மாவட்டம் எது என்பது குறித்து பலருக்கும் தெரியாத ஒரு விடயமாகும்.
</p><h2>
எந்த மாவட்டம்?
</h2><p>
இந்தியாவில் பல முக்கியமான மற்றும் பிரபலமான ஆறுகள் உள்ளன. சில பகுதிகளில் அதிக எண்ணிக்கையிலான சிறிய ஆறுகளும் பாய்கின்றன.</p><p> 

அந்தவகையில், குஜராத் மாநிலத்தில் மொத்தம் 185 ஆறுகள் உள்ளன. இதில் ஒரே ஒரு மாவட்டத்தில் மட்டும் 97 ஆறுகள் பாய்கின்றன.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f58116dc-6b92-47c5-a9e1-cf5e052b822d/26-6a781ab8f14cd.webp' /></p><p>குஜராத்தில் உள்ள ஆறுகள் கீழ் குஜராத், சௌராஷ்டிரா மற்றும் கட்ச் என மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. </p><p>

இதில் குஜராத்தின் கட்ச் பகுதியில் அதிகபட்சமாக 97 ஆறுகள் பாய்கின்றன. </p><p>

ஆனால், இவற்றில் பெரும்பாலான ஆறுகளில் ஆண்டு முழுவதும் தண்ணீர் இருப்பதில்லை. பருவமழை காலத்தில் மட்டுமே இந்த ஆறுகளில் நீர் பாய்கிறது.
</p><h2>
97 ஆறுகள்</h2><h2> </h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/183e3326-ef0a-4066-bd62-bfcbce68602b/26-6a781ab81c64c.webp' /></p><p>கட்ச் பகுதியில் உள்ள ஆறுகள் அவை செல்லும் திசையின் அடிப்படையில் வடக்குப் பகுதி மற்றும் தெற்குப் பகுதி இரண்டு வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன.</p><p> 

கட்ச்சின் வடக்குப் பகுதியில் குக்கி, காளி, சுவி, மாலன், சரண் மற்றும் காரி உள்ளிட்ட ஆறுகள் பாய்கின்றன.
</p><p>
தெற்குப் பகுதியில் நைரோ, கனகாவதி, நாகமதி, கரோட், மிதி, சாங் மற்றும் சாய் உள்ளிட்ட ஆறுகள் உள்ளன. இவை கட்ச் வளைகுடாவில் கலக்கின்றன.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6645a444-25a5-4d00-99be-d393ee4446b7/26-6a781ab9c1cb0.webp' /></p><p>கட்ச்சில் ருக்மாவதி, சுவி, மாலன், சரண், சாகர், மிதி, குருத், வெக்தி, சாங், காரி, நாரா, பஞ்சோரா, கரோட், கொட்டி, காளி, கனகாவதி மற்றும் ருத்ரமாதா உள்ளிட்ட பல முக்கியமான ஆறுகள் உள்ளன.
</p><p>
கட்ச்சில் உள்ள சில ஆறுகள் கடலில் கலப்பதில்லை. இவை கன்னி நதிகள் என்று அழைக்கப்படுகின்றன.</p><p>

பனாஸ், சரஸ்வதி, ரூபன், லூனி, மச்சு, கோடத்ரோய், பிராமினி, காரி, ஃபால்கி, நாரா, சுவி, பூர் மற்றும் புருட் ஆகியவை குஜராத்தின் முக்கியமான கன்னி நதிகளாகும்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p>&nbsp; &nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-08-09T06:14:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[அவுஸ்திரேலியாவில் பட்டதாரி விசா... அதிர்ச்சியளிக்கும் குடியேற்ற எண்ணிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/graduate-visas-shock-immigration-1786255907"></link>
            <id>https://news.lankasri.com/article/graduate-visas-shock-immigration-1786255907</id>
            <summary type="text">Graduate visas going to Family members:
அவுஸ்திரேலியாவில் கல்வி பயின்றிராதவர்களுக்கு ஏறக்குறைய 30 சதவீத பட்டதாரி விசாக்கள் வழங்கப்பட்டுள்ளன. 
அவுஸ்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>Graduate visas going to Family members:
அவுஸ்திரேலியாவில் கல்வி பயின்றிராதவர்களுக்கு ஏறக்குறைய 30 சதவீத பட்டதாரி விசாக்கள் வழங்கப்பட்டுள்ளன. </p><p>
அவுஸ்திரேலியாவில் ஒருபோதும் கல்வி பயின்றிராத குடும்ப உறுப்பினர்களுக்கே ஏறக்குறைய 30 சதவீத பட்டதாரி விசாக்கள் வழங்கப்பட்டுள்ளதாக அதிரவைக்கும் தரவுகள் வெளிப்படுத்தியுள்ளன.</p><h2>குடும்ப உறுப்பினர்கள்</h2><p>
</p><p>மொத்தம் வழங்கப்பட்ட 271,191 தற்காலிகப் பட்டதாரி விசாக்களில் சுமார் 73,900 விசாக்கள், துணைவர் மற்றும் சார்ந்திருக்கும் பிள்ளைகள் உள்ளிட்ட இரண்டாம் நிலை விண்ணப்பதாரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/830fc98f-5b43-4e4b-bbd6-eb3d0342c097/26-6a781a25edfa3.webp' /></p><p> </p><p>இந்த எண்ணிக்கை, ஜூன் 2022-ல் பதிவான 24,200 என்ற எண்ணிக்கையை விட 204 சதவிகிதம் அதிகரிப்பைக் குறிக்கிறது. இந்த விசாக்கள் பொதுவாக மாணவர்களுக்கு வழங்கப்படுகின்றன, மேலும் அவை பட்டம் பெற்ற பிறகு அவுஸ்திரேலியாவில் தங்குவதற்கு அவர்களை அனுமதிக்கின்றன. </p><p>அடுத்த இரண்டு வாரங்களுக்குள் நடைபெறவுள்ள முக்கிய உரை ஒன்றில், குடியேற்றம் தொடர்பான புதிய அணுகுமுறையை லேபர் கட்சி அறிமுகப்படுத்த உள்விவகார அமைச்சர் டோனி பர்க் தயாராகி வரும் நிலையில், இந்தத் தரவுகள் குடியேற்றக் கொள்கை நடைமுறைகள் குறித்த விவாதத்தைத் தூண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. </p><p>வீட்டு வசதி மலிவுத்தன்மை, வாடகைப் பற்றாக்குறை மற்றும் உள்கட்டமைப்பு அழுத்தங்கள் குறித்த கவலைகள் அதிகரித்து வந்தபோதிலும், அல்பானிஸ் அரசாங்கம் தங்கள் நீண்டகால இடம்பெயர்வு இலக்கைக் குறைக்க வேண்டாம் என முடிவு செய்துள்ளது. </p><p>மட்டுமின்றி, ஆண்டுக்கு 225,000 பேர் என்ற நிகர வெளிநாட்டு இடம்பெயர்வு இலக்கை லேபர் கட்சி அரசாங்கம் தக்கவைத்துக்கொள்ளும் என்றும் தெரிய வருகிறது.</p><p></p><p> </p><p>2026-ஆம் ஆண்டிற்கான ஃபெடரல் வரவு-செலவுத் திட்டம், 2027 முதல் குடியேற்றத்தின் அளவு ஆண்டுக்கு 225,000 ஆகக் குறையும் என்று கணித்திருந்தது; ஆனால், அரசின் கணிப்புகளைத் தாண்டி குடியேற்ற எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது; குறிப்பாக, கடந்த ஆண்டில் நிகர வெளிநாட்டு குடியேற்றத்தின் அளவு 301,000-ஐ எட்டியுள்ளது. </p><p>குடியேற்றத்தை மேலும் குறைப்பதில் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக, மக்கள்தொகைப் பெருக்கத்தை வீட்டுவசதி வழங்கல், உள்கட்டமைப்பு முதலீடு மற்றும் அத்தியாவசிய சேவைகளுடன் சிறப்பாகப் பொருத்துவதில் அரசாங்கத்தின் புதிய அணுகுமுறை கவனம் செலுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.</p><h2>மாணவர் விசா வழங்கல்</h2><p> தற்போதைய விதிகளின்படி, பல்கலைக்கழகப் பட்டப் படிப்புகள் அல்லது தொழிற்கல்விப் பாடநெறிகளைப் பயிலும் சர்வதேச மாணவர்கள், தங்கள் நெருங்கிய குடும்ப உறுப்பினர்களைத் தங்களுடன் அவுஸ்திரேலியாவிற்கு அழைத்து வரலாம். </p><p>மேலும், முதன்மை விசா வைத்திருப்பவருக்கு வழங்கப்படும் அதே பணி உரிமைகள் அந்தக்குடும்ப உறுப்பினர்களுக்கும் வழங்கப்படுகின்றன. </p><p>படிப்பை முடித்த பிறகு, மாணவர்கள் 'தற்காலிகப் பட்டதாரி விசா'விற்கு (temporary graduate visa) மாறலாம்; இது அவர்கள் பணி அனுபவத்தைப் பெறும் அதே வேளையில், அவர்களும் அவர்களது குடும்பத்தினரும் அவுஸ்திரேலியாவில் தங்கியிருக்க அனுமதிக்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d64d4f8f-93b3-495f-9601-3da49d748b19/26-6a781a269eec6.webp' /></p><p> </p><p>கோவிட் பெருந்தொற்றுக்குப் பிறகு சர்வதேச எல்லைகள் மீண்டும் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, மாணவர் விசா வழங்கல்கள் சாதனை அளவை எட்டியதால், இந்த வழிமுறை வேகமாக விரிவடைந்தது. </p><p>2022-23 ஆம் ஆண்டில் 5,77,000-க்கும் மேற்பட்ட மாணவர் விசாக்கள் வழங்கப்பட்டன; இதன் விளைவாக, படிப்பை முடித்த பிறகு வழங்கப்படும் விசா நடைமுறைகளுக்கு மாறிய பட்டதாரிகளின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்துள்ளது. </p><p>2022-இல் லேபர் கட்சி ஆட்சிக்கு வந்ததிலிருந்து, தற்காலிகப் பட்டதாரி விசா வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை 174 சதவீதம் அதிகரித்துள்ளதாக உள்விவகார அமைச்சகத்தின் தரவுகள் காட்டுகின்றன.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-09T06:09:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[42 ஆண்டுகளுக்குப் பின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/congo-first-national-population-census-in-42-years-1786255532"></link>
            <id>https://canadamirror.com/article/congo-first-national-population-census-in-42-years-1786255532</id>
            <summary type="text">கொங்கோ ஜனநாயகக் குடியரசில் 42 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த நாட்டு அரசாங்கம் மக்கள் தொகைக் கணக்கெடுப்பை நடத்தத் தயாராகி வருகின்றது.இறுதியாக 1984ஆம் ஆண்டு ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொங்கோ ஜனநாயகக் குடியரசில் 42 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த நாட்டு அரசாங்கம் மக்கள் தொகைக் கணக்கெடுப்பை நடத்தத் தயாராகி வருகின்றது.</p><p>இறுதியாக 1984ஆம் ஆண்டு ஜாயிர் என்ற பெயரிலிருந்தபோதே கொங்கோவில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.</p><p>அதன்பின்னர் இடம்பெற்ற மோதல்கள் மற்றும் அரசியல் குழப்பங்களால் கணக்கெடுப்பு நடத்தப்படாத நிலையில், தற்போதைய மக்கள் தொகை சுமார் 112 மில்லியனாக இருக்கும் என உலக வங்கி மதிப்பிட்டுள்ளது.</p><p>பல தசாப்தங்களாகத் தேசிய அடையாள அட்டைகள் வழங்கப்படாததால், பல மில்லியன் மக்கள் தங்கள் நாட்டு குடியுரிமைக்கான உத்தியோகபூர்வ ஆவணங்கள் எதுவுமின்றியே வாழ்ந்து வருகின்றனர்.</p><p>எதிர்வரும் 2028ஆம் ஆண்டு பொதுத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தித் தரவுகளைத் திரட்ட அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது.</p><p><br></p><p>எனினும், நாட்டின் கிழக்குப் பகுதியில் நிலவும் வன்முறைகள் மற்றும் இடம்பெயர்வுகள் இந்த கணக்கெடுப்பிற்குப் பெரும் சவாலாக அமையும் எனக் கருதப்படுகிறது.</p>]]></content>
            <updated>2026-08-09T06:05:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Erimalai</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறையில் வன்முறையை தூண்டும் முயற்சி! காரணத்தை வெளியிட்ட பிரதியமைச்சர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/deputy-minister-pradeep-media-meeting-1786254348"></link>
            <id>https://tamilwin.com/article/deputy-minister-pradeep-media-meeting-1786254348</id>
            <summary type="text">போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளை முடக்குவதற்காக, சிறைக்குள் இருக்கும் கைதிகளை தூண்டிவிட்டு வன்முறையை ஏற்படுத்த சிலர் முயல்வதாக பிரதியமைச்சர் சுந்தரலி...</summary>
            <content type="html"><![CDATA[<p>போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளை முடக்குவதற்காக, சிறைக்குள் இருக்கும் கைதிகளை தூண்டிவிட்டு வன்முறையை ஏற்படுத்த சிலர் முயல்வதாக பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்துள்ளார். </p><p>

நேற்றைய தினம் (08.08.2026) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.</p><p> 

அவர் மேலும் தெரிவிக்கையில், சிறைச்சாலை வன்முறை மற்றும் அரசாங்க நடவடிக்கை நாட்டில் சமீபத்தில் சிறைச்சாலைகளில் ஏற்பட்ட வன்முறைகள் மற்றும் அசாதாரண சூழ்நிலைகள் குறித்து அரசாங்கம் தீவிர கவனம் செலுத்தி வருகிறது.</p><h2>போதைப்பொருள் கடத்தலுக்கான மத்தியஸ்த நிலையம்</h2><p> </p><p>

கடந்த காலங்களில் இலங்கை போதைப்பொருள் கடத்தலுக்கான ஒரு முக்கிய மத்தியஸ்த நிலையமாக விளங்கியது. 

தற்போதைய அரசாங்கம் பொறுப்பேற்ற பிறகு, போதைப்பொருளை முழுமையாக ஒழிப்பதற்கான தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.</p><p> போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு குற்றவாளிகள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகின்றனர். 

போதைப்பொருள் வியாபாரிகளுக்கும் சில அரசியல்வாதிகளுக்கும் இடையே நெருங்கிய தொடர்பு இருப்பது தற்போதைய சம்பவங்கள் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/01d17a42-991e-46c8-940a-e2c0f04eeed5/26-6a78176e0d9a0.webp' /></p><h2>வன்முறையை ஏற்படுத்தும் முயற்சி</h2><p> போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளை முடக்குவதற்காக, சிறைக்குள் இருக்கும் கைதிகளை தூண்டிவிட்டு வன்முறையை ஏற்படுத்த சிலர் முயல்கின்றனர். 

சூழ்நிலையைக் கட்டுப்படுத்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் உயர்மட்ட சந்திப்பு நடைபெற்றது.</p><p> இதில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால, நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் பங்கேற்று அவசர கால நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்தனர். </p><p>

சிறைச்சாலை அமைதியின்மைகளை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாகவும், நாட்டின் அமைதியை குலைக்க முயலும் நபர்களுக்கு எதிராக மிக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-09T06:00:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கவர்ச்சிகரமான பெண்களில் மயங்க வேண்டாம்; சமூக ஊடகங்கள் தொடர்பில் எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/glamorous-woman-on-social-media-scam-warnings-1786255216"></link>
            <id>https://jvpnews.com/article/glamorous-woman-on-social-media-scam-warnings-1786255216</id>
            <summary type="text">இலங்கையர்களை இலக்குவைத்து சமூக வலைத்தளங்கள் மற்றும் குறுஞ்செய்தி செயலிகள் ஊடாக முன்னெடுக்கப்பட்டு வரும் பாரிய அளவிலான இணையப் பணப்பறிப்பு மோசடி குறித்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையர்களை இலக்குவைத்து சமூக வலைத்தளங்கள் மற்றும் குறுஞ்செய்தி செயலிகள் ஊடாக முன்னெடுக்கப்பட்டு வரும் பாரிய அளவிலான இணையப் பணப்பறிப்பு மோசடி குறித்து இலங்கை கணனி அவசரநிலை ஆயத்தக் குழு (SLCERT) எச்சரிக்கை விடுத்துள்ளது.</p><p>இந்த சட்டவிரோத நடவடிக்கை இந்தியாவிலிருந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக இதுவரை திரட்டப்பட்ட தகவல்கள் மூலம் தெரியவந்துள்ளது.</p><p>பாதிக்கப்படுபவர்களின் விபரங்களை முன்னதாகவே திரட்டும் மோசடிக்காரர்கள், கவர்ச்சிகரமான பெண்களின் புகைப்படங்களைக் கொண்ட இன்ஸ்டகிராம் கணக்குகள் மூலம் 'Hi' என குறுந்தகவல் (மெசேஜ்) அனுப்பி பேச்சை ஆரம்பிக்கின்றனர்.</p><p>சில நாட்கள் நம்பிக்கையை ஏற்படுத்திய பின்னர், அவர்களின் அந்தரங்கப் படங்கள் அல்லது காணொளி அழைப்புகளைப் பதிவுசெய்து, பணத்தைத் தராவிட்டால் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு அனுப்பிவைப்பதாக மிரட்டிப் பணம் பறித்து வருகின்றனர்.</p><p>எனவே, அறிமுகமில்லாத சமூக வலைத்தளக் கணக்குகள் அல்லது தொலைபேசி இலக்கங்களிலிருந்து வரும் அழைப்புகள் மற்றும் செய்திகளுக்குப் பதிலளிக்கும் போது பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-08-09T06:00:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மக்களின் நிலங்களை சுரண்டுவதை நிறுத்து..! அரசின் காணி கையகப்படுத்தலுக்கு எதிராக கண்டனம் போராட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/protest-against-government-land-acquisition-1786254881"></link>
            <id>https://tamilwin.com/article/protest-against-government-land-acquisition-1786254881</id>
            <summary type="text">வலிகாமம் வடக்கு, பலாலி பகுதியில் தமது பூர்வீக காணிகளில் மீள்குடியேற
அனுமதிக்கக் கோரி, காணி உரிமையாளர்கள் இன்று 8ஆவது வாரமாகவும் தொடர்
அமைதிவழிப் போர...</summary>
            <content type="html"><![CDATA[<p>வலிகாமம் வடக்கு, பலாலி பகுதியில் தமது பூர்வீக காணிகளில் மீள்குடியேற
அனுமதிக்கக் கோரி, காணி உரிமையாளர்கள் இன்று 8ஆவது வாரமாகவும் தொடர்
அமைதிவழிப் போராட்டத்தை முன்னெடுத்தனர்.</p><p>

பலாலி சந்தியில் இடம்பெற்ற இந்தப் போராட்டத்தில், நீண்டகாலமாக தமது காணிகள் அரச
படைகளின் கட்டுப்பாட்டில் இருப்பதால் தங்களால் சொந்த நிலங்களுக்குத் திரும்ப
முடியாத நிலை தொடர்வதாக மக்கள் தெரிவித்தனர்.</p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">காணி சுவீகரிப்பிற்கு எழும் கண்டனம்</span></p><p>
“எங்கள் காணிகள் எங்களுக்கே வேண்டும்”, “பூர்வீக நிலங்களில் மீள்குடியேற
அனுமதிக்க வேண்டும்”, “மக்களின் நிலங்களை சுரண்டுவதை நிறுத்த வேண்டும்”
உள்ளிட்ட கோஷங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தமது
கோரிக்கைகளை முன்வைத்தனர்.

பல ஆண்டுகளாக தமது சொந்த நிலங்களில் குடியேற முடியாத காரணத்தால்,
குடியிருப்பு, வாழ்வாதாரம் மற்றும் எதிர்கால வாழ்க்கை
பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a81a4e8e-0b34-495c-ac18-0291b613d9bd/26-6a78168612515.webp' /></p><p>தமது காணிகளை விடுவிப்பதாக பல்வேறு சந்தர்ப்பங்களில் அரசாங்கத்தினால்
உறுதிமொழிகள் வழங்கப்பட்டிருந்த போதிலும், அவை முழுமையாக
நடைமுறைப்படுத்தப்படவில்லை என போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.</p><p> 


இதன் காரணமாகவே தமது காணிகளை மீட்பதற்காக தொடர்ச்சியான போராட்டத்தை
முன்னெடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். </p><h2>


மக்களின் கோரிக்கை</h2><p>
தமது பூர்வீக நிலங்களில் மீள்குடியேறி, இயல்பான வாழ்க்கையை முன்னெடுப்பதே
தங்களது பிரதான கோரிக்கை என தெரிவித்த மக்கள், எந்தவித வன்முறையுமின்றி
அமைதியான முறையில் தமது போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்து வருவதாகவும்
குறிப்பிட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/58b1b70c-9b4d-460a-9b1a-1fc2438f1993/26-6a781686e84e9.webp' /></p><p> </p><p>

எனவே, பலாலி மக்களின் பூர்வீக காணிகளை உரிய உரிமையாளர்களிடம் மீளக் கையளித்து,
அவர்களின் மீள்குடியேற்றத்தை உறுதிப்படுத்த அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை
எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். </p><p>

“நிலம் எங்களின் உரிமை; எங்கள் பூர்வீக நிலங்களை விட்டுக்கொடுக்க மாட்டோம்”
என்ற கோரிக்கையுடன், 8ஆவது வாரமாகவும் பலாலி சந்தியில் மக்கள் தமது அமைதிவழிப்
போராட்டத்தை தொடர்ந்துள்ளனர்.&nbsp;</p><p></p><p></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/693d5d1d-ba04-473f-9e38-0fefbb56f862/26-6a781706b55e1.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/21c97e87-5348-4ce2-bff7-aa1b224e93a2/26-6a781707a31b6.webp' /></p><p><br></p><p>&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-09T05:56:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜெய்ஸ்வாலுடன் காதலா? நடிகை மிருணாள் தாகூர் விளக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/mrunal-thakur-put-a-end-to-online-dating-rumors-1786254654"></link>
            <id>https://cineulagam.com/article/mrunal-thakur-put-a-end-to-online-dating-rumors-1786254654</id>
            <summary type="text">நடிகை மிருணாள் தாகூர் பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் யஷ்ஸ்வி ஜெய்ஸ்வாலை காதலிக்கிறாரா என பரவி வந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

மிருணா...</summary>
            <content type="html"><![CDATA[<p>நடிகை மிருணாள் தாகூர் பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் யஷ்ஸ்வி ஜெய்ஸ்வாலை காதலிக்கிறாரா என பரவி வந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.</p><p></p><p>
</p><h2>
மிருணாள் தாகூர்
</h2><p>
பான்-இந்தியன் ஸ்டாராக வலம் வரும் நடிகை மிருணாள் <a href="https://www.youtube.com/watch?v=q8r640z9Q_s" target="_blank">தாகூர் </a>குறித்து தொடர்ந்து பல விதமான வதந்திகள் சமூக வலைத்தளங்களில் பரப்பப்படுகின்றன. சில மாதங்களுக்கு முன், பிரபல நடிகர் தனுஷை மிருணாள் தாகூர் காதலிக்கிறார் என கூறப்பட்டது. இது தொடர்பாக பல செய்திகள் ஊடகங்கள் மத்தியில் வெளிவந்தன. பின் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/956a7053-d710-4930-a128-6bdbe9e331f8/26-6a78154384514.webp' /></p><h2> 

யஷ்ஸ்வி ஜெய்ஸ்வால் - மிருணாள் தாகூர்
</h2><p>
இந்நிலையில், நடிகை மிருணாள் தாகூரும் இந்திய கிரிக்கெட் வீரரான யஷ்ஸ்வி ஜெய்ஸ்வாலும் மும்பை பாந்தரா வெஸ்ட் பகுதியில் உள்ள கஃபேவில் இருந்து வெளியேறிதாக கூறப்படும் வீடியோ சமீபத்தில் வைரலானது. இதையடுத்து இருவரும் காதலித்து வருவதாகவும் சமூக வலைத்தளங்களில் பேச்சு எழுந்தது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/29cc7233-7ab6-4c71-95f6-205a93648519/26-6a7815420fbdc.webp' /></p><h2>விளக்கம் கொடுத்த மிருணாள்
</h2><p>
இந்நிலையில், வைரலான வீடியோ தொடர்பான பதிவில், கமெண்ட் பகுதியில் மிருணாள் தாகூர் தனது விளக்கம் கொடுத்துள்ளார். 

இதில், "ப்ரோ, கொஞ்சம் ரிலாக்ஸ். நாங்கள் இருவரும் ஒன்றாக இருக்கும் இடத்தை காட்டுங்கள். எப்படி இப்படியெல்லாம்? படித்தவர்களாக இருக்கும் நீங்களே இப்படி வதந்திகளை உண்மை என நம்புகிறீர்களே? நாட்டில் எவ்வளவோ விஷயங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. ஜென்-Z-விடம் இருந்து சில விஷயங்களை கற்றுக்கொள்ளுங்கள். சரியான பிரச்சனைகள் குறித்து வீடியோக்களை உருவாக்கினால் அதிகமான பார்வைகள் கிடைக்கும்" என்று அவர் கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/18ad94b7-10a2-416d-90d6-a107e61e01fe/26-6a781542c77f6.webp' /></p><p> </p><h2>

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி</h2><p>

நடிகை மிருணாள் தாகூரின் இந்த பதிவால், யஷ்ஸ்வி ஜெய்ஸ்வாலை அவர் காதலித்து வருகிறார் என சமூக வலைத்தளங்களில் பரவிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/104059cd-336f-463d-aeb4-43d65fbcbebd/26-6a7815415ce5e.webp' /></p>]]></content>
            <updated>2026-08-09T05:51:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[30 ஆண்டுகள் பழமையான முறைமையை மாற்றும் நிதி அமைச்சு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/change-government-salary-structure-after-30-years-1786250956"></link>
            <id>https://jvpnews.com/article/change-government-salary-structure-after-30-years-1786250956</id>
            <summary type="text">30 ஆண்டுகள் பழமையான அரச வேதன முறைமையை மாற்றுவதற்காக நிதியமைச்சகம் புதிய அரச வேதன முறைமைக்கான விளம்பரத்தை வெளியிட்டுள்ளது.ஆங்கில ஊடகம்&amp;nbsp; ஒன்று வெளி...</summary>
            <content type="html"><![CDATA[<p>30 ஆண்டுகள் பழமையான அரச வேதன முறைமையை மாற்றுவதற்காக நிதியமைச்சகம் புதிய அரச வேதன முறைமைக்கான விளம்பரத்தை வெளியிட்டுள்ளது.</p><p>ஆங்கில ஊடகம்&nbsp; ஒன்று வெளியிட்டுள்ள தகவல்படி, அரச நிறுவனங்களுக்கான வேதன முறைமையின் வடிவமைப்பு, மேம்பாடு மற்றும் செயலாக்கத்திற்கான கொள்முதல்" (Procurement of Design&gt; Development and Implementation of a Payroll System for Government Organizations) என்ற கேள்விப்பத்திர அறிவிப்பை நிதியமைச்சின் மாநிலக் கணக்குகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது.</p><p>தற்போதைய ஜி.பி.எஸ் முறைமை 1996 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.</p><p>இது அமைச்சகங்கள், திணைக்களங்கள், சிறப்புச் செலவின அலகுகள், மாகாண சபைகள், உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் சில சட்டபூர்வ நிறுவனங்கள் உள்ளிட்ட பலதரப்பட்ட பொதுத்துறை நிறுவனங்களால் பயன்படுத்தப்படுகிறது.</p><p>தற்போதைய முறைமையின் கீழ் பல்வேறு குறைபாடுகள் உள்ளன.</p><p>இதன் பலவீனமான பாதுகாப்பு நெறிமுறைகள் கையாளுதல்கள் மற்றும் வேதனம் தொடர்பான மோசடி அபாயங்களுக்கு உட்படுத்துகின்றன, இது அரசு நிதிக்கூறுகளின் நம்பகத்தன்மையை மற்றும் செயல்திறனைக் குலைக்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>அத்துடன், தற்போதைய முறைமையில் ஒருங்கிணைந்த மனித வளம் மற்றும் வேதன முகாமைத் தளமாகச் செயற்படத் தேவையான நெகிழ்வுத்தன்மையும் அளவிடக்கூடிய தன்மையும் இல்லை, இதனால் நிறுவனங்களின் உற்பத்தித்திறன் மற்றும் செயல்திறன் தடைப்படுகிறது என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><p>இதன் காரணமாக, தொழில்நுட்ப ரீதியில் மேம்பட்ட, பாதுகாப்பான மற்றும் ஒருங்கிணைந்த வேதன செயலாக்க முறைமைக்கு மாறுவதற்கான தேவை அவசரமானது என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-09T05:50:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பெரும் துயரை ஏற்படுத்திய யாழ். பல்கலைக்கழக மாணவியின் மரணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/death-of-a-university-of-jaffna-student-1786252413"></link>
            <id>https://jvpnews.com/article/death-of-a-university-of-jaffna-student-1786252413</id>
            <summary type="text">யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இராமநாதன் நுண்கலை பீடத்தின் இசைத்துறை மாணவி ஒருவர்&amp;nbsp; கடந்த&amp;nbsp; (06) இரவு உயிரிழந்துள்ளார்.&amp;nbsp;கண்டி மாவட்டத்தைச் சேர்ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இராமநாதன் நுண்கலை பீடத்தின் இசைத்துறை மாணவி ஒருவர்&nbsp; கடந்த&nbsp; (06) இரவு உயிரிழந்துள்ளார்.&nbsp;</p><p>கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த நிரோஷினி (வயது 27) என்ற மாணவியே உயிரிழந்தவராவார்.குறித்த மாணவி யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இராமநாதன் நுண்கலை பீடத்தில் கல்வி கற்று வந்தார்.</p><p>இந்நிலையில், புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த மாணவி கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.&nbsp;</p><p>இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் வைத்தியசாலையிலேயே உயிரிழந்துள்ளார்.மாணவியின் மரணம்அனைவர் மத்தியிலும் ஆழ்ந்த துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-09T05:50:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜப்பானைத் தாக்கிய ‘டொல்பின்’ புயல்; விமானச் சேவைகள் ரத்து]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/typhoon-dolphin-hits-japan-flights-cancelled-1786254509"></link>
            <id>https://canadamirror.com/article/typhoon-dolphin-hits-japan-flights-cancelled-1786254509</id>
            <summary type="text">தெற்கு ஜப்பானின் ஒகினாவா, ககோஷிமா மாகாணங்களை ‘டொல்பின்’ புயல் சனிக்கிழமை பலத்த காற்றுடன் தாக்கியது.&amp;nbsp;அப்போது, மணிக்கு 216 கி.மீ. வேகத்தில் வீசிய ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>தெற்கு ஜப்பானின் ஒகினாவா, ககோஷிமா மாகாணங்களை ‘டொல்பின்’ புயல் சனிக்கிழமை பலத்த காற்றுடன் தாக்கியது.&nbsp;</p><p>அப்போது, மணிக்கு 216 கி.மீ. வேகத்தில் வீசிய புயல் காற்றால் ஏற்பட்ட விபத்துகளில் 6 போ் காயமடைந்தனா்.</p><p>பல இடங்களில் மரங்களும், மின் கம்பங்களும் சாய்ந்ததால், 50,000-க்கும் மேற்பட்ட கட்டடங்களில் மின் விநியோகம் முற்றிலும் துண்டிக்கப்பட்டது.&nbsp;</p><p>முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஒகினாவாவுக்கான விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டன.</p><p>இப்புயல் ஞாயிற்றுக்கிழமை இரவு அல்லது திங்கள்கிழமை அதிகாலைக்குள் சீனாவின் கிழக்குக் கரையைக் கடக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.</p><p>&nbsp;இதன்காரணமாக, அந்நாட்டு அரசும் தீவிர வானிலை எச்சரிக்கைகளை விடுத்துள்ளது.</p><p><br></p><p><br></p><p><br></p><p>இதற்கு மத்தியில், புயலையொட்டி தாய்வான் நீரிணை வழியாகச் செல்லும் கப்பல்கள் தங்களின் கட்டுப்பாடுகளைப் பின்பற்றமாறு சீனா அறிவுறுத்தியதற்கு தைவான் அரசு எதிா்ப்பு தெரிவித்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-09T05:48:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[முக்கிய சிறைச்சாலைகளை உலுக்கிய மோதல்கள் - நாளை வெளியாகவுள்ள முக்கிய அறிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/person-attack-in-issue-investigation-1786242527"></link>
            <id>https://tamilwin.com/article/person-attack-in-issue-investigation-1786242527</id>
            <summary type="text">குருவிட்ட, பல்லன்சேன மற்றும் மெகசின் சிறைகளில் மோதல்களில் ஈடுபட்ட கைதிகள் தொடர்பான அறிக்கை நாளை (10) சமர்ப்பிக்கப்படவுள்ளதாக பொலிஸ் பிரிவு தெரிவித்துள...</summary>
            <content type="html"><![CDATA[<p>குருவிட்ட, பல்லன்சேன மற்றும் மெகசின் சிறைகளில் மோதல்களில் ஈடுபட்ட கைதிகள் தொடர்பான அறிக்கை நாளை (10) சமர்ப்பிக்கப்படவுள்ளதாக பொலிஸ் பிரிவு தெரிவித்துள்ளது.
</p><p>
சிறை நிர்வாகத்தால் தொடங்கப்பட்ட விசாரணையின் அறிக்கை பின்வருமாறு சமர்ப்பிக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவி பொலிஸ் கண்காணிப்பாளர் எஃப். யு. உட்லர் தெரிவித்துள்ளார்.&nbsp;&nbsp;</p><h2>கட்டுப்பாட்டுக்குள் சிறைச்சாலை கலவரம்</h2><p>குருவிட்ட சிறைச்சாலை மற்றும் பல்லன்சேன திறந்தவெளி சிறை முகாமில் கடந்த (07) திகதி அமைதியின்மை ஏற்பட்டிருந்த நிலையில், இலங்கை பொலிஸ் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரின் உதவியும் பெறப்பட்டு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக சிறைச்சாலைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/40c8eef3-1f4e-48aa-a90d-a49c1862e76d/26-6a7813ff238fd.webp' /></p><p>இதனைத் தொடர்ந்து, குறித்த சிறைச்சாலைகளின் பாதுகாப்பிற்காக இலங்கை பொலிஸ், பொலிஸ் விசேட அதிரடிப்படை மற்றும் முப்படையினர் ஈடுபடுத்தப்பட்டுப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.</p><p>இந்நிலையில், குருவிட்ட சிறைச்சாலையின்&nbsp; மோதல்களில் 13 கைதிகள் காயமடைந்த நிலையில், வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்ட போது இருவர் உயிரிழந்தனர்.
</p><p>இதேவேளை, நீர்கொழும்பு, பல்லன்சேன சிறைச்சாலையிலும் பதற்றம் ஏற்பட்டதை அடுத்து, கலவரத்தின் போது காயமடைந்த 28 கைதிகளை வெலிக்கடை சிறை மருத்துவமனையில் அனுமதிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.</p><p>

</p><p>&nbsp;</p><p>&nbsp;</p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-09T05:45:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[முழு சூரிய கிரகணம் ;121 ஆண்டுகளுக்குப் பின் இருளில் மூழ்கும் நாடுகள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/totalsolar-eclipse-europe-darkness-after-121-years-1786252967"></link>
            <id>https://jvpnews.com/article/totalsolar-eclipse-europe-darkness-after-121-years-1786252967</id>
            <summary type="text">ஸ்பெயினில் 121 ஆண்டுகளுக்குப் பின்னர் எதிர்வரும் 12ஆம் திகதி முழு சூரிய கிரகணம் தென்படவுள்ளதாக&amp;nbsp; சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.1905ஆம் ஆண...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஸ்பெயினில் 121 ஆண்டுகளுக்குப் பின்னர் எதிர்வரும் 12ஆம் திகதி முழு சூரிய கிரகணம் தென்படவுள்ளதாக&nbsp; சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p>1905ஆம் ஆண்டுக்குப் பின்னர் முதன்முறையாக ஸ்பெயினில் தென்படவுள்ள இந்த அரிய முழு சூரிய கிரகணத்தை, கிரீன்லாந்து, ஐஸ்லாந்து, ரஷ்யா மற்றும் போர்த்துக்கல்லின் சில பகுதிகளிலும் காண முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>சூரியன் முழுமையாக நிலவால் மறைக்கப்படும் இந்த வானியல் நிகழ்வு, வானியல் ஆர்வலர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><p>இதேவேளை, கடந்த 2024ஆம் ஆண்டு அமெரிக்கா மற்றும் மெக்சிகோ உள்ளிட்ட பகுதிகளில் முழு சூரிய கிரகணம் தென்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-08-09T05:44:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது; ஈரான் விடாப்பிடி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/iran-remands-strait-of-hormuz-not-fully-reopen-1786254202"></link>
            <id>https://canadamirror.com/article/iran-remands-strait-of-hormuz-not-fully-reopen-1786254202</id>
            <summary type="text">ஹோர்முஸ் நீரிணையின் கட்டுப்பாடு தொடர்பாக ஓமானுடன் ஒப்பந்தம் எட்டப்படும் நிலையை நெருங்கியுள்ள போதிலும், அந்த நீர்வழியை மீண்டும் திறப்பதற்கு அது மட்டுமே...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹோர்முஸ் நீரிணையின் கட்டுப்பாடு தொடர்பாக ஓமானுடன் ஒப்பந்தம் எட்டப்படும் நிலையை நெருங்கியுள்ள போதிலும், அந்த நீர்வழியை மீண்டும் திறப்பதற்கு அது மட்டுமே போதுமானதாக இருக்காது என்று ஈரான் தெளிவுபடுத்தியுள்ளது.</p><p>இதற்கிடையே, அப் பகுதியில் ஈரான் மற்றொரு கப்பல் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளதாக ஐக்கிய அரபு இராஜ்ஜியம் குற்றம் சாட்டியுள்ளது.</p><p>ஹோர்முஸ் நீரிணையின் இருபுறமும் அமைந்துள்ள ஈரானும் ஓமானும் புதிய கப்பல் போக்குவரத்து பாதை குறித்த ஒப்பந்தத்தை நெருங்கியுள்ளதாக ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராச்சி தெரிவித்துள்ளார்.</p><p> இருப்பினும், நீரிணையை மீண்டும் திறப்பது அமெரிக்கா ஈரானுக்கு வழங்கும் நஷ்டஈடு உள்ளிட்ட பிற நிபந்தனைகளிலேயே தங்கியுள்ளது என்றும் அவர் வலியுறுத்தினார்.</p><p>மேலும், பழைய கப்பல் போக்குவரத்துத் திட்டம் இனி ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று எனக் குறிப்பிட்ட அவர், நிரந்தரப் பாதை குறித்த சட்ட மற்றும் தொழில்நுட்பப் பிரச்சினைகள் தீர்க்கப்படும் வரை தற்காலிகப் பாதை குறித்து ஓமானுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகக் கூறினார்.</p><p>நீரிணையின் கட்டுப்பாடு குறித்து எட்டப்படும் ஒப்பந்தம் மூலம் வழமையான எண்ணெய் போக்குவரத்து மீண்டும் தொடங்கும் என்றும், இது பெப்ரவரி 28 அன்று ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களால் தொடங்கிய மோதலை முடிவுக்குக் கொண்டுவர உதவும் என்றும் அமெரிக்க அதிகாரி ஒருவர் நம்பிக்கை தெரிவித்திருந்தார்.</p><p>உலகளாவிய எண்ணெய் மற்றும் எரிவாயு ஏற்றுமதியில் ஐந்தில் ஒரு பங்கைக் கொண்டு சென்ற இந்த முக்கிய நீர்வழியில் செல்லும் கப்பல்கள் மீதும், வளைகுடா பகுதியிலுள்ள அமெரிக்கத் தளங்கள் மீதும் ஈரான் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது. </p><p>இந்நிலையில், ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து சென்ற தனது அரசுக்குச் சொந்தமான எண்ணெய் நிறுவன தொடர்புடைய சரக்குக் கப்பல் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளதாக ஐக்கிய அரபு இராஜ்ஜியம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-08-09T05:43:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஓய்வு பெற்ற இராணுவ வீரர்கள் வசமாகும் சிறைச்சாலை பாதுகாப்பு! அரசாங்கத்தின் முக்கிய முடிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/military-officers-made-jailers-on-prison-duty-1786252668"></link>
            <id>https://ibctamil.com/article/military-officers-made-jailers-on-prison-duty-1786252668</id>
            <summary type="text">
சிறைகளில் சமீபத்தில் ஏற்பட்ட அமைதியின்மை மற்றும் மோதல்களைக் கட்டுப்படுத்தும் ஒரு விரைவான நடவடிக்கையாக, சமீபத்தில் ஓய்வுபெற்ற 1,000 இராணுவ வீரர்களைச்...</summary>
            <content type="html"><![CDATA[<p>
சிறைகளில் சமீபத்தில் ஏற்பட்ட அமைதியின்மை மற்றும் மோதல்களைக் கட்டுப்படுத்தும் ஒரு விரைவான நடவடிக்கையாக, சமீபத்தில் ஓய்வுபெற்ற 1,000 இராணுவ வீரர்களைச் சிறைக் காவலர்களாக நியமிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
</p><p>
சிறை அமைப்பில் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக எடுக்கப்பட்ட இந்த முடிவுக்கு மேலதிகமாக, நாடு முழுவதும் உள்ள 32 சிறைச்சாலைகளில் சிறப்பு அதிரடிப்படைப் பிரிவுகளை நிறுவுவதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.</p><p></p><h2>சிறப்பு கலந்துரையாடல்</h2><p>

சிறைகளில் நிலவும் தற்போதைய நிலைமை குறித்து ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் நடைபெற்ற ஒரு சிறப்பு கலந்துரையாடலில் இந்த முடிவுகள் எடுக்கப்பட்டதாக தெரியவருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1c94cf25-b152-4851-b558-9415daf59db9/26-6a7812e8c0ae9.webp' /></p><p>

இதேவேளை, ஒரு சிறையில் ஏற்படும் அமைதியின்மை மற்ற சிறைகளுக்குப் பரவுவதைத் தடுப்பதற்காக, ஒவ்வொரு சிறையிலும் சிறப்பு ஒருங்கிணைப்புக் குழுக்கள் நிறுவப்பட உள்ளதாக, ஒரு சிரேஷ்ட அரசாங்க அதிகாரியை மேற்கோள் காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.</p><h2>இராணுவ வீரர்கள் ஆட்சேர்ப்பு</h2><p>
</p><p>
சிறைச்சாலை திணைக்களம், காவல்துறை, ஆயுதப்படைகள் மற்றும் உளவுத்துறை ஆகியவற்றின் பிரதிநிதிகளைக் கொண்ட இந்தக் குழுக்கள், தகவல்களைப் பரிமாறிக்கொள்வதன் மூலம் பாதுகாப்பு நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கும் என கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ddb024cb-3e97-4ab1-8518-a17b081df897/26-6a7812e98e6ef.webp' /></p><p>
</p><p>
சிறைக் காவலர்களின் கடுமையான பற்றாக்குறையை நிரப்புவதற்காக இந்த ஓய்வுபெற்ற இராணுவ வீரர்கள் ஆட்சேர்ப்பு செய்யப்படுகிறார்கள், மேலும் தேர்ந்தெடுக்கப்பட்ட குழுவிற்கு குறுகிய கால பயிற்சி அளித்த பிறகு பணியில் ஈடுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
இந்த ஆட்சேர்ப்பு செயல்முறையை விரைவுபடுத்துவதற்கு நீதி அமைச்சு தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a></b> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-09T05:43:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாடளாவிய ரீதியில் ஆரம்பமான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/grade-5-scholarship-examination-begins-islandwide-1786250871"></link>
            <id>https://ibctamil.com/article/grade-5-scholarship-examination-begins-islandwide-1786250871</id>
            <summary type="text">நாடளாவிய ரீதியில் 2026ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை இன்று (09) காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகியுள்ள நிலையில் நண்பகல் 12.15 மணிக்கு நிறை...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடளாவிய ரீதியில் 2026ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை இன்று (09) காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகியுள்ள நிலையில் நண்பகல் 12.15 மணிக்கு நிறைவடையவுள்ளது.</p><p>2,723 பரீட்சை நிலையங்களில் நடைபெறுகின்ற இந்த புலமைப்பரிசில் பரீட்சைக்கு 294,089 மாணவர்கள் தோற்றுகின்றனர்.</p><p>சிங்கள மொழியில் 220,366 மாணவர்களும், தமிழ் மொழியில் 73,723 மாணவர்களும் இதில் அடங்குவதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்தது.</p><p>&nbsp;</p><h2>நுவரெலியா மாவட்டம்</h2><p>முதலாவதாக இரண்டாம் வினாத்தாள் வழங்கப்படும் என்பதுடன், அது காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகி காலை 10.45 மணிக்கு நிறைவடையவுள்ளதுடன் சிறு இடைவேளையின் பின்னர், காலை 11.15 முதல் நண்பகல் 12.15 வரை ஒரு மணித்தியால காலம் முதல் வினாத்தாளுக்காக வழங்கப்படும்.&nbsp;</p><p>இந்த நிலையில் நிலவும் சீரற்ற காலநிலைக்கு மத்தியிலும் நுவரெலியா மாவட்டத்தில் மாணவர்கள் தமது பெற்றோருடன் பரீட்சை நிலையங்களுக்கு ஆர்வத்துடன் வருகை தந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/92d2f53e-f825-4503-a773-351f026bb6fe/26-6a7811c5701f7.webp' /></p><p> </p><p>

மழையினால் மாணவர்களுக்கு ஏற்படக்கூடிய அசௌகரியங்களைக் தவிர்க்கும் பொருட்டு, பெற்றோர்கள் முச்சக்கரவண்டிகள் மற்றும் வாடகை வாகனங்களைப் பயன்படுத்தி பிள்ளைகளைப் பாதுகாப்பாக அழைத்து வந்தனர். </p><p>மேலும், மாணவர்களின் தடையற்ற போக்குவரத்திற்காக அரசாங்கத்தினால் விசேட 'சிசு செரிய' பேருந்து சேவைகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.</p><p></p><h2>மட்டக்களப்பு மாவட்டம்</h2><p>இதேவேளை ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை மட்டக்களப்பு மாவட்டத்தின் ஐந்து கல்வி
வலயங்களிலும் நடைபெற்று வருகின்றது.</p><p>
மட்டக்களப்பு மாவட்டத்தின் மட்டக்களப்பு கல்வி வலயம், மட்டக்களப்பு மத்தி கல்வி
வலயம், மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயம், பட்டிருப்பு கல்வி வலயம், கல்குடா கல்வி
வலயம் ஆகியவற்றில் உள்ள பாடசாலைகளில் இன்றைய தினம் ஐந்தாம் தர புலமைப்பரிசில்
பரீட்சைகள் நடைபெற்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9d7285c4-ed1d-4995-9062-b8ef98165341/26-6a78116eee5ce.webp' /></p><p>
இன்றைய தினம் மாணவர்கள் ஆலயங்களுக்கு சென்று வழிபாடுகளை முன்னெடுத்து பரீட்சை
நிலையங்களுக்கு சென்றதை காணமுடிந்ததுடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்றைய தினம் சுமுகமான முறையில் பரீட்சைகள்
நடைபெறுகின்றன.</p><p><b><i>செய்தி - கிருஸ்ணகுமார்</i></b></p><h2>யாழ் மாவட்டம்</h2><p>தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை யாழ் மாவட்டத்தில் சுமுகமான முறையில் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.</p><p>மாணவர்கள் தங்களது பெற்றோர் மற்றும்
ஆசிரியர்களின் வாழ்த்துகளுடன் பரீட்சைக்கு தயாராகி பரீட்சை நிலையங்களுக்கு
சென்றுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/74c210b6-60f4-4534-a3fd-06b114810bfc/26-6a78116fa9bf6.webp' /></p><p>மாணவர்களின் எதிர்கால கல்வி வாய்ப்புகளில் முக்கியத்துவம் வாய்ந்த இந்தப்
பரீட்சை சுமுகமாகவும் அமைதியான முறையிலும் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள்
செய்யப்பட்டுள்ளன.
</p><p>பரீட்சைக்கு தோற்றும் அனைத்து மாணவர்களும் சிறப்பாகச் செயற்பட்டு நல்ல
பெறுபேறுகளைப் பெற வேண்டும் என பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் கல்விச்
சமூகத்தினர் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.</p><p><b><i style="">செய்தி - த.பிரதீபன்</i></b>&nbsp;</p><h2>அம்பாறை மாவட்டம்&nbsp;</h2><p>தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை அம்பாறை மாவட்டத்தில் கடும்
வெயிலுக்கு மத்தியில் இடம்பெற்று வருகின்றது.</p><p>பரீட்சை காலை 09.30 மணிக்கு
ஆரம்பமானதுடன் பரீட்சார்த்திகள் அனைவரும் உரிய ஒழுங்கமைப்புடன் பரீட்சை
மண்டபத்திற்கு சென்றதை காண முடிந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e971d8ba-9f7a-4125-9ba4-87bfb0b4c52d/26-6a78116e0f443.webp' /></p><p>இன்று காலை ஆரம்பமான குறித்த பரீட்சைக்கு கல்முனை கல்வி வலயம் சம்மாந்துறை
கல்வி வலயத்தை சேர்ந்த மாணவர்கள் மிக ஆர்வத்துடன் பரீட்சைக்கு
சமூகமளித்திருந்தனர்.</p><p>மேலும் பரீட்சை இடம்பெற்ற நிலையங்களில் காவல்துறையினரின் பாதுகாப்பு
பலப்படுத்தப்பட்டுள்ளதாக&nbsp;எமது
பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.</p><p><b><i>செய்தி - பாறுக் ஷிஹான்</i></b></p><p><b><i></i></b></p><p>
</p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p>&nbsp;</p><p><br></p>]]></content>
            <updated>2026-08-09T05:42:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kumar</name>
            </author>
            <title type="text"><![CDATA[மட்டக்களப்பு மண்டூர் ஸ்ரீ கந்தசுவாமி ஆலய கொடியேற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/batticaloa-mandur-sri-kanthaswamy-temple-1786253953"></link>
            <id>https://tamilwin.com/article/batticaloa-mandur-sri-kanthaswamy-temple-1786253953</id>
            <summary type="text">இலங்கையின் சின்னக்கதிர்காமம் எனப்போற்றப்படும் வரலாற்றுசிறப்புமிக்க ஆலயமான மட்டக்களப்பு மண்டூர் கந்திசுவாமி ஆலயத்தின் வருடாந்த உற்சவம் பாரம்பரிய கொடியே...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் சின்னக்கதிர்காமம் எனப்போற்றப்படும் வரலாற்றுசிறப்புமிக்க ஆலயமான மட்டக்களப்பு மண்டூர் கந்திசுவாமி ஆலயத்தின் வருடாந்த உற்சவம் பாரம்பரிய கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது. </p><p>

இந்த நிகழ்வு, நேற்று(08.08.2026) இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


கதிர்காமக் கந்தன் ஆலயத்தில் இடம்பெறுகின்ற பூஜை முறைகளுக்கு ஒப்பானதாக
மட்டக்களப்பு மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் உற்சவமும் கப்புறாளைகளினால்
வாய்கட்டப்பட்டு உற்சவம் நடைபெற்றுள்ளது.</p><h2> 


மண்டூர் கந்தசுவாமி ஆலய உற்சவம்</h2><p>

கிழக்கிலங்கையில் மிகவும் பழமையும், பிரசித்தமாகவும் இருந்த முருகன் கோயில்கள் திருப்படைக் கோயில்கள் என்றும் அழைக்கப் பெற்றன. </p><p>

பண்டைய அரசனின் மதிப்பு, மானியங்களும், சீர்வரிசைகளும், நிருவாக அமைப்பும் பெற்ற கோயிலே இது என்பதால் இதனை “தேசத்துக்கோயில்” என்றும் அழைக்கப்படுகின்றது. 

இவ்வாறான பாரம்பரிய சிறப்புகளைக் கொண்ட மட்டக்களப்பு மண்டூர் கந்தசுவாமி
ஆலயத்தின் வருடாந்த உற்சவம் பல்லாயிரக்கணக்கானோர் புடைசூழ நேற்றிரவு
கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ef19ab69-4c28-4836-88b0-d5b969869dd7/26-6a7812e5573ad.webp' /></p><p> </p><p>

போரதீவுற்று பிரதேச செயலாளர் இ.ரங்கநாதன், ஆலயத்தின் தேசத்துக்கு குருவான
சிவஸ்ரீ மு.கு.சச்சிதானந்த குருக்கள், ஆலய வண்ணக்குமார்கள் தலைமையில் திருவிழா
அறிவிப்புகள் வெளியிடப்பட்டதை தொடர்ந்து, பாரம்பரிய முறைப்படி ஆலயத்தின் உட்
பகுதிக்குள் கொடியேற்றம் இடம்பெற்றது.</p><h2> 

20 நாட்கள் நடக்கும் மாபெரும் திருவிழா</h2><p>இதனைத் தொடர்ந்து, வள்ளியம்மன் ஆலயம் மற்றும் தெய்வானையம்மன் ஆலயங்களுக்கு
முன்பாகவும் இந்த பாரம்பரிய கொடியேற்றம் செய்யப்பட்டுள்ளது.</p><p> 

தொடர்ந்து 20 நாட்கள் நடைபெறும் இத் திருவிழா காலத்தில் தினமும் வேல் தாங்கிய
பேழை உள்வீதி வெளிவீதி கொண்டுவரப்பட்டு வீதியுலா நடைபெறும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b7809dee-3bcd-4a29-9d5b-23d070cd6f8d/26-6a7812e6647ae.webp' /></p><p>

அதன் பின்னர், திருவிழாவின் தீர்த்தோற்சவம் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 28ஆம் திகதி
வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு வாவியில் சிறப்பாக நடைபெறவுள்ளது.</p><p>

நேற்றைய கொடியேற்ற நிகழ்வினை கண்டுகளிப்பதற்கான கிழக்கு மாகாணத்தின் பல்வேறு பகுதிகளிலுமிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்துள்ளனர்.&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-09T05:41:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Tony</name>
            </author>
            <title type="text"><![CDATA[படுதோல்வியடைந்த ஜனநாயகன், அதுவும் இந்த ஏரியாவில்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/jananayagan-movie-flopped-in-this-area-1786242499"></link>
            <id>https://viduppu.com/article/jananayagan-movie-flopped-in-this-area-1786242499</id>
            <summary type="text">தளபதி விஜய் நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் வெளிவந்த படம் ஜனநாயகன், இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. மேலும் இந்த படம் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>தளபதி விஜய் நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் வெளிவந்த படம் ஜனநாயகன், இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. </p><p>மேலும் இந்த படம் ஏற்கனவே இணையத்தில் லீக் ஆனது குறிப்பிடத்தக்கது. அப்படியிருந்தும் இந்த படம் ரூ 300 கோடி வசூல் செய்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4f252748-e722-4c18-9f71-0bd5578aaf2d/26-6a77e5c69f700.webp' /></p><p> அப்படியிருந்தும் வெளிநாடுகளில் இந்த படம் படுதோல்வியை சந்தித்துள்ளது, ரூ 150 கோடி வசூல் வரும் என நினைத்த நிலையில், தற்போது ரூ 90 கோடி மட்டுமே படம் வசூல் செய்துள்ளதாம்.</p><p> தளபதி கடைசி படம் இப்படி ஆகிவிட்டதே என ரசிகர்கள் கவலையில் ஆழ்த்தியுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-09T05:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[வார ராசிபலன் 2026: ஆகஸ்ட் 09 முதல் 15 வரை மேஷம் முதல் மீனம் வரை முழு பலன்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/09-august-2026-to-15-august-2026-weekly-horoscope-1786250925"></link>
            <id>https://manithan.com/article/09-august-2026-to-15-august-2026-weekly-horoscope-1786250925</id>
            <summary type="text">நம் வாழ்வில் நிகழும் ஒவ்வொரு நல்லது, கெட்டது உள்ளிட்ட பல்வேறு சம்பவங்களுக்கும் நமது ஜாதகத்தில் அமைந்துள்ள கிரக நிலைகள் முக்கிய காரணமாக இருப்பதாக ஜோதிட...</summary>
            <content type="html"><![CDATA[<p>நம் வாழ்வில் நிகழும் ஒவ்வொரு நல்லது, கெட்டது உள்ளிட்ட பல்வேறு சம்பவங்களுக்கும் நமது ஜாதகத்தில் அமைந்துள்ள கிரக நிலைகள் முக்கிய காரணமாக இருப்பதாக ஜோதிடத்தில் கூறப்படுகிறது. </p><p>குறிப்பாக, கிரகங்களின் சஞ்சாரம் மற்றும் அவற்றின் நிலைப்பாடுகள் ஒருவரின் வாழ்க்கையில் பல்வேறு மாற்றங்களையும், எதிர்பாராத திருப்பங்களையும் ஏற்படுத்தக்கூடும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5fb95d14-1013-4108-aee6-2002105a814a/26-6a780b584c088.webp' /></p><p>
</p><p>
அந்த வகையில், 2026 ஆகஸ்ட் 09 ஆம் தேதி முதல் 2026 ஆகஸ்ட் 15 ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில், கிரக நிலைகளின் அடிப்படையில் 12 ராசிக்காரர்களுக்கும் எவ்வாறு பலன்கள் அமையப் போகின்றன?எந்த ராசிக்காரர்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கலாம்? யாருக்கு சில சவால்கள் அல்லது எதிர்பாராத மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது? என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.</p><h2>12 ராசிகளுக்குமான வார ராசிபலன்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/322ef689-8210-4ac1-91d6-340c9eb4e6fe/26-6a780b58f4085.webp' /></p><p></p><p><b>மேஷம்</b></p><p>
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. நீண்ட காலமாக இருந்த வேலைத் தடைகள் நீங்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். அதே நேரத்தில் வேலைப்பளுவும், கடின உழைப்பும் அதிகமாக இருக்கும். மாணவர்கள் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.</p><p><b>

ரிஷபம்
</b></p><p>ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் நிதி ஆதாயங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. ஏற்கனவே செய்த முதலீடுகளில் லாபம் கிடைக்கலாம். குடும்பப் பிரச்சனைகள் முடிவுக்கு வரும். வேலையிலும் தொழிலிலும் இருந்த தடைகள் நீங்கும். இருப்பினும் உடல்நலத்தில் கவனம் தேவை. வியாபாரிகள் வாடிக்கையாளர்களிடம் பொறுமையுடன் பேசுவது நல்லது. செலவுகள் சற்று அதிகரிக்கலாம்.
</p><p><b>
மிதுனம்
</b></p><p>மிதுன ராசிக்காரர்ளுக்கு&nbsp; இந்த வாரம் நீண்ட காலமாக திட்டமிட்டிருந்த வேலைகள் வெற்றிகரமாக முடியும். தொழில் தொடர்பான பயணங்கள் நல்ல பலன் தரும். நீண்ட நாட்களாக சிக்கியிருந்த பணம் கைக்கு வரலாம். நிதி நிலை மேம்படும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கலாம். வெளிநாட்டு வேலை முயற்சிகளிலும் சாதகமான செய்தி கிடைக்க வாய்ப்புள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/54374303-7a04-4198-b709-672102976c0f/26-6a780b59a7fad.webp' /></p><p>
</p><p><b>
கடகம்
</b></p><p>கடக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் தொழில் மற்றும் வேலை தொடர்பாக சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வாய்ப்புகளும், பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வும் கிடைக்கலாம். புதிய தொழில் தொடங்குவதற்கும் இது நல்ல நேரம். ஆனால் மன அழுத்தம் அதிகரிக்கலாம். வயிறு தொடர்பான உடல்நலப் பிரச்சனைகளில் கவனம் தேவை.</p><p><b>

சிம்மம்
</b></p><p>சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சில நல்ல செய்திகள் கிடைக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவுக்கு வரும். குடும்பப் பிரச்சனைகள் தீர்ந்து, சுப நிகழ்ச்சிகள் நடைபெற வாய்ப்புள்ளது. பணியிடத்தில் கூடுதல் பொறுப்புகள் கிடைத்தாலும், உயர் அதிகாரிகளின் ஆதரவு இருக்கும். வேலை தொடர்பான பயணங்களும் அமையலாம். செலவுகள் சற்று அதிகரிக்கலாம்.
</p><p><b>
கன்னி</b></p><p>
கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் மன அழுத்தமும் கவலைகளும் அதிகரிக்கலாம். இருப்பினும் குடும்ப சூழல் சாதகமாக இருக்கும். மனதில் உள்ள திட்டங்களை செயல்படுத்த நல்ல வாய்ப்பு கிடைக்கும். உடல்நலத்தில் கூடுதல் கவனம் தேவை. மாணவர்களுக்கு இந்த வாரம் சிறப்பாக அமையும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் அமைய வாய்ப்புள்ளது.
</p><p><b>
துலாம்</b></p><p>
துலாம் ராசியினருக்கு இந்த வாரம் வெற்றிகள் கிடைக்கும். நீண்ட கால கடின உழைப்புக்கான பலன் கிடைக்கலாம். பயணங்கள் மூலம் நிதி ஆதாயம் கிடைக்கும். வேலை தேடுபவர்களுக்கு விரும்பிய வேலை கிடைக்க வாய்ப்புள்ளது. மனக்கவலை இருந்தால், நம்பிக்கையானவர்களிடம் மனம் விட்டுப் பேசுவது நல்லது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bf844b41-6cc8-49da-9379-edea99c52fd6/26-6a780b5a5815f.webp' /></p><p>
</p><p><b>
விருச்சிகம்
</b></p><p>விருச்சிக ராசிக்காரர்களுக்கு&nbsp; இந்த வாரம் செலவுகள் அதிகரிப்பதால் மன உளைச்சல் ஏற்படலாம். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைத்தாலும், செலவுகளும் கூடும். குடும்ப வாழ்க்கை சிறப்பாக இருக்கும்; குடும்பத்தினரின் ஆதரவும் கிடைக்கும். புதிய திட்டங்களைத் தொடங்கும் முன் அவர்களின் ஆலோசனையைப் பெறுவது நல்லது.</p><p><b>

தனுசு</b></p><p>
தனுசு ராசியினருக்கு&nbsp; இந்த வாரம் மன அழுத்தம் இருந்தாலும், நிதி ரீதியாக சாதகமான பலன்கள் கிடைக்கும். மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வாய்ப்பும், பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வும் கிடைக்கலாம்.
</p><p><b>
மகரம்
</b></p><p>மகர ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் பயணங்கள் அதிகரிக்கலாம். நற்பெயரும், மதிப்பும் உயரும். ஆனால் பணியிடத்தில் அதிக வேலைப்பளுவால் மன அழுத்தம் ஏற்படலாம். புதிய முயற்சிகளைத் தொடங்கும் முன் நன்கு யோசித்து, அனுபவமுள்ளவர்களின் ஆலோசனையைப் பெறுவது நல்லது.
</p><p><b>
கும்பம்</b></p><p>கும்ப ராசிக்காரர்களுக்கு&nbsp; இந்த வாரம் வெற்றி, முன்னேற்றம் மற்றும் வளர்ச்சிக்கான காலமாக இருக்கும். பணியிடத்தில் பாராட்டுகளும், அங்கீகாரமும் கிடைக்கும். வேலை தொடர்பான பயணங்கள் நல்ல ஆதாயத்தைத் தரலாம். பயணங்களின்போது மட்டும் சற்று கவனமாக இருக்க வேண்டும். தொழில் ரீதியாகவும் இந்த வாரம் சிறப்பாக அமையும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/af50a18d-af3d-47f1-8958-60d3c7631640/26-6a780b5b0b7ff.webp' /></p><p></p><p><b>

மீனம்
</b></p><p>மீன ராசியினருக்கு இந்த வாரம் பயணங்கள் அதிகமாக இருக்கும். அவை நல்ல ஆதாயங்களைத் தரலாம். குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடுவீர்கள். புதிய நட்புகள் உருவாகும். காதல் உறவில் இருப்பவர்களுக்கு திருமணம் தொடர்பான நல்ல முடிவுகள் அமையலாம். குடும்பம் மற்றும் நிதி ரீதியாகவும் இந்த வாரம் சாதகமாக இருக்கும். கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும்.</p><p><b>இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;</b></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW&nbsp;</a></u></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-09T05:08:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜனநாயகன் பாக்ஸ் ஆபிஸ்: 17 நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/jananayagan-movie-17-days-worldwide-box-office-1786251514"></link>
            <id>https://cineulagam.com/article/jananayagan-movie-17-days-worldwide-box-office-1786251514</id>
            <summary type="text">17 நாட்களில் தளபதி விஜய்யின் ஜனநாயகன் திரைப்படம் உலகளவில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

ஜனநாயகன்

தளபதி விஜய்யி...</summary>
            <content type="html"><![CDATA[<p>17 நாட்களில் தளபதி விஜய்யின் ஜனநாயகன் திரைப்படம் உலகளவில் எவ்வளவு <a href="https://www.youtube.com/watch?v=aIF0c2xWOWg" target="_blank">வசூல் </a>செய்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.</p><p></p><h2>

ஜனநாயகன்</h2><p>

தளபதி விஜய்யின் கடைசி திரைப்படமான ஜனநாயகன் கடந்த ஜூலை 23-ஆம் தேதி வெளியானது. பல தடைகளை தாண்டி வெளிவந்த இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்தது. மறுபுறம் கலவையான விமர்சனங்களையும் எதிர்கொண்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b990bccb-360a-466d-85c3-e46bec786175/26-6a7808fecfdff.webp' /></p><h2>

சரிவு
</h2><p>
ரசிகர்களால் கொண்டாடப்பட்டாலும் ஆந்திரா, தெலுங்கானா மற்றும் வெளிநாடுகளில் இப்படத்தின் வசூல் குறைவாகவே உள்ளது. எதிர்பார்த்த வசூல் வரவில்லை என்பதால், கிட்டத்தட்ட அந்த இடங்களில் மட்டும் தோல்வியை நோக்கி ஜனநாயகன் நகர்ந்து கொண்டிருக்கிறது என கூறப்படுகிறது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/efd84ff8-c3f6-40cc-9552-dc97cafa6227/26-6a7808fe20cef.webp' /></p><h2>உலகளவில் செய்துள்ள வசூல்
</h2><p>
ஜனநாயகன் திரைப்படத்தின் வசூல் விவரங்களை தொடர்ந்து ஒவ்வொரு நாளும் பார்த்து வருகிறோம். இந்நிலையில், பாக்ஸ் ஆபிஸில் 17 நாட்களை கடந்திருக்கும் ஜனநாயகன் உலகளவில் இதுவரை ரூ. 310 கோடி வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் எவ்வளவு வசூல் செய்யும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f7d61b10-cc14-406c-8a2c-55c8edabb661/26-6a7808fd6921f.webp' /></p>]]></content>
            <updated>2026-08-09T05:00:00+00:00</updated>
        </entry>
    </feed>
