<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-08-14T19:36:40+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[திருகோணமலை GunSight முகாமில் 6 பெண்கள் கொலை! விசாரணையில் வெளியான தகவல்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/6-women-killed-at-the-gunsight-camp-in-trinco-1786733536"></link>
            <id>https://tamilwin.com/article/6-women-killed-at-the-gunsight-camp-in-trinco-1786733536</id>
            <summary type="text">திருகோணமலை பகுதியில் அமைந்திருந்த GunSight முகாமில் பலர் தடுத்து வைக்கப்பட்டு பெண்கள் உட்பட பலர் கொலை செய்யப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.இந்...</summary>
            <content type="html"><![CDATA[<p>திருகோணமலை பகுதியில் அமைந்திருந்த GunSight முகாமில் பலர் தடுத்து வைக்கப்பட்டு பெண்கள் உட்பட பலர் கொலை செய்யப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>இந்தநிலையிலே, குறித்த முகாமில் 6 பெண்கள் தடுத்து வைக்கப்பட்டு சித்திரவதைப்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என சில தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p>இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நடத்துமாறு குற்றப்புலனாய்வுப்பிரிவினருக்கு பொலிஸ்மா அதிபர் உத்தரவிட்டுள்ளார்.</p><p>அத்தோடு, இந்த முகாமில் 600 இற்கும் மேற்பட்டோர் கடத்தி கொலை செய்யப்பட்டு இருக்கலாம் எனவும் சந்தேகம் எழுந்துள்ளது.</p><p>இது தொடர்பான விசாரணைகள் திருகோணமலை நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் முன்னெடுக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.</p><p>இந்த சம்பவம் தொடர்பில் சில கடற்படை அதிகாரிகளிற்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படுகின்றது.</p><p>குறித்த விடயம் தொடர்பான விரிவான தகவல்களை நியூஸ் இன்சைட் நிகழ்ச்சியில் காணலாம்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/NyBr6WkHzr0" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-14T19:13:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[USS Abraham Lincoln கப்பல் 260 நாட்கள் கடலில் - வெளியான அதிர்ச்சி தகவல்..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/us-faces-morale-crisis-amid-iran-war-hormuz-1786728764"></link>
            <id>https://tamilwin.com/article/us-faces-morale-crisis-amid-iran-war-hormuz-1786728764</id>
            <summary type="text">அமெரிக்காவின் போர்க்கப்பலான USS Abraham Lincoln நீண்ட காலமாக கடலில் நிலைநிறுத்தப்பட்டுள்ள நிலையில், அதிலுள்ள வீரர்களின் மனநலம் மற்றும் அத்தியாவசியப் ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவின் போர்க்கப்பலான USS Abraham Lincoln நீண்ட காலமாக கடலில் நிலைநிறுத்தப்பட்டுள்ள நிலையில், அதிலுள்ள வீரர்களின் மனநலம் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் தொடர்பாக எழுந்துள்ள கவலைகளை அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் நிராகரித்துள்ளார்.
</p><p>
அவர், கப்பலில் நிலவும் மோசமான சூழ்நிலை குறித்த செய்திகள் “முற்றிலும் தவறாக சித்தரிக்கப்பட்டவை” எனத் தெரிவித்துள்ளார்.</p><h2>மத்திய கிழக்கு</h2><p>
</p><p>
அமெரிக்காவின் USS George Washington விமானந்தாங்கிக் கப்பல் மத்திய கிழக்கு நோக்கி திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. </p><p>

இது, USS Abraham Lincoln கப்பலில் நீண்டகாலப் பணியமர்த்தலால் வீரர்களின் மனநலம் மற்றும் விநியோகப் பிரச்சினைகள் அதிகரித்துள்ளதாக வெளியான தகவல்களுக்கு மத்தியில் இடம்பெற்றுள்ளது.

USS George Washington கடந்த வாரம் வியட்நாமின் டா நாங் துறைமுகத்திலிருந்து புறப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/67258ffb-817a-4853-bca8-9e534969983d/26-6a7f562edebf1.webp' /></p><p> </p><p>

அதனுடன் ஒரு க்ரூஸர் மற்றும் ஒரு டிஸ்ட்ராயர் கப்பலும் இணைந்துள்ளன. 

இந்தக் கப்பல்கள் சிங்கப்பூர் நீரிணையை கடந்து சென்றதாக அமெரிக்க கடற்படை தெரிவித்துள்ளது.</p><p>

அமெரிக்க கடற்படையின் தகவலின்படி, Washington தற்போது மலாக்கா நீரிணையில் இருந்ததாகவும், இந்தியப் பெருங்கடலை நோக்கி பயணித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>

USS Abraham Lincoln-க்கு மாற்றாக George Washington மத்திய கிழக்கில் நிலைநிறுத்தப்படலாம் என முன்னதாக Wall Street Journal செய்தி வெளியிட்டிருந்தது.</p><h2>போர்ச் சூழ்நிலை</h2><p>
</p><p>

பொதுவாக அமெரிக்க கடற்படை வீரர்களின் பணியமர்த்தல் காலம் 6 முதல் 9 மாதங்கள் வரை இருக்கும். ஆனால் போர் சூழ்நிலைகளில் அது நீட்டிக்கப்படலாம்.
</p><p>
USS Abraham Lincoln இந்த வாரத்துடன் 260 நாட்களுக்கும் மேலாக கடலில் உள்ளது.

 இது நவீன காலத்தில் ஒரு விமானந்தாங்கிக் கப்பல் மேற்கொண்டுள்ள மிக நீண்ட பணியமர்த்தல்களில் ஒன்றாகும்.</p><p>

இந்தக் கப்பலில் பணியாற்றும் வீரர்களிடையே மனநலப் பிரச்சினைகள் அதிகரித்துள்ளதாகவும், சிலர் கப்பலில் இருந்து குதித்து தவறான முடிவெடுக்க முயன்றதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6c289fdc-7bfe-4b92-8fc9-56650105dfdc/26-6a7f56300e8d6.webp' /></p><p>
</p><p>Lincoln கடந்த 2025 நவம்பர் 21ஆம் திகதி சான் டியாகோவிலிருந்து புறப்பட்டது. 

2026 ஜனவரியில் மத்திய கிழக்கை சென்றடைந்தது. பின்னர் பெப்ரவரி 28ஆம் திகதி ஈரானுக்கு எதிரான போர் தொடங்குவதற்கு முன்னதாகவே அங்கு நிலைநிறுத்தப்பட்டது.
</p><p>
போர்ச் சூழ்நிலை காரணமாக மத்திய கிழக்கில் உள்ள பாரம்பரிய விநியோக மையங்கள் பாதிக்கப்பட்டதால், கப்பலில் உணவு, சுகாதாரப் பொருட்கள் மற்றும் அஞ்சல் உள்ளிட்டவற்றின் விநியோகத்தில் பற்றாக்குறை ஏற்பட்டதாக அமெரிக்க கடற்படை ஒப்புக்கொண்டுள்ளது.</p><h2>பென்டகனிடம் பொறுப்புக்கூறல்</h2><p>
</p><p>
அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத், USS Lincoln கப்பலில் நிலவும் மோசமான சூழ்நிலை குறித்த செய்திகளை நிராகரித்துள்ளார்.</p><p>

நீண்டகாலப் பணியமர்த்தலிலும், குறைவான துறைமுகப் பயணங்களுடனும் கடலில் பணியாற்றும் வீரர்களின் அர்ப்பணிப்பை அவர் பாராட்டியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4590c69a-de95-4a5e-b70c-eb2b9459866e/26-6a7f5630b5712.webp' /></p><p>
</p><p>
ஆனால் Navy Times மற்றும் Stars and Stripes உள்ளிட்ட இராணுவ செய்தி நிறுவனங்கள், கப்பலில் தற்கொலை முயற்சிகள் மற்றும் வீரர்களின் மனஉறுதி குறைந்து வருவது குறித்து செய்தி வெளியிட்டுள்ளன.


இந்த விவகாரம் தொடர்பாக பல ஜனநாயகக் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் பென்டகனிடம் பொறுப்புக்கூறலைக் கோரியுள்ளனர்.
</p><p>
கனெக்டிகட் மாநில செனட்டர் ரிச்சர்ட் புளூமெந்தால், USS Lincoln-ன் நீண்டகாலப் பணியமர்த்தல் குறித்து கடற்படை தலைமையிடம் பல கேள்விகளுக்கு பதில் கோரியுள்ளார்.
</p><p>
அரிசோனா செனட்டரும் முன்னாள் மரைன் வீரருமான ரூபன் கலேகோ, கப்பலில் வீரர்களின் நிலைமையை நேரில் ஆய்வு செய்வதற்காக இரு கட்சிகளையும் சேர்ந்த பிரதிநிதிகள் குழுவை அழைத்துச் செல்ல திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.</p><h2>&nbsp;டொனால்ட் ட்ரம்ப்</h2><p>
</p><p>

இதற்கிடையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஹோர்முஸ் நீரிணை மீது அமெரிக்கா கட்டுப்பாட்டைக் கொண்டுள்ளதாகவும், அதை தொடர்ந்து வைத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9167c0b9-f39c-4fb8-811a-1450c61463bc/26-6a7f563168d27.webp' /></p><p>

ஈரானுடனான மோதல் சமீப வாரங்களில் ஓரளவு தணிந்திருந்தாலும், முக்கியத்துவம் வாய்ந்த ஹோர்முஸ் நீரிணையில் ஈரானிய துறைமுகங்களுக்கு எதிரான முற்றுகையை அமெரிக்க கடற்படை மீண்டும் நடைமுறைப்படுத்தியுள்ளது.
</p><p>
இந்தப் போரை எவ்வாறு முடிவுக்குக் கொண்டு வருவது என்பது குறித்து ட்ரம்ப் நிர்வாகம் தெளிவான திட்டத்தை வெளியிடவில்லை. 

அதேவேளை, பாதுகாப்புச் செயலாளர் ஹெக்செத், அமெரிக்கா இந்த முற்றுகையை “காலவரையின்றி” தொடர முடியும் எனக் கூறியுள்ளார்.&nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-08-14T18:50:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[பலஸ்தீன வீடுகளை ஆக்கிரமித்த இஸ்ரேலிய குடியேற்றவாசிகள்: பிரான்ஸ் கடும் கண்டனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/france-condemns-israeli-settler-attacks-1786727836"></link>
            <id>https://ibctamil.com/article/france-condemns-israeli-settler-attacks-1786727836</id>
            <summary type="text">குஸ்ரா (Qusra) கிராமத்தில் பலஸ்தீனியர்களின் வீடுகளை இஸ்ரேலிய குடியேற்றவாசிகள் ஆக்கிரமித்துள்ள சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸ்...</summary>
            <content type="html"><![CDATA[<p>குஸ்ரா (Qusra) கிராமத்தில் பலஸ்தீனியர்களின் வீடுகளை இஸ்ரேலிய குடியேற்றவாசிகள் ஆக்கிரமித்துள்ள சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

பிரான்ஸ் அரசு இவ்வாறு கண்டனம் தெரிவித்துள்ளது.</p><p>

இத்தகைய செயல்களில் ஈடுபட்ட குற்றவாளிகளைக் கைது செய்து நீதிமன்றத்தின் முன் நிறுத்துமாறு இஸ்ரேலிய அதிகாரிகளுக்கு பிரான்ஸ் அழைப்பு விடுத்துள்ளது.</p><p></p><h2>குடியேற்றவாசிகளின் தாக்குதல்</h2><p> 

மேலும், இஸ்ரேலின் குடியேற்றக் கொள்கையானது இரு-நாட்டுத் தீர்வுக்கு (Two-state solution) பெரும் அச்சுறுத்தலாக விளங்குவதாகவும் பிரான்ஸ் சுட்டிக்காட்டியுள்ளது.</p><p>
</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr"><a href="https://x.com/hashtag/Israel?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#Israel</a>/ <a href="https://x.com/hashtag/Palestine?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#Palestine</a> | Situation in the West Bank <a href="https://t.co/DVjssdJ4vw">pic.twitter.com/DVjssdJ4vw</a></p>&mdash; France Diplomacy 🇫🇷🇪🇺 (@francediplo_EN) <a href="https://x.com/francediplo_EN/status/2088277900462084562?ref_src=twsrc%5Etfw">August 14, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>மறுபுறம், ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையின் குஸ்ரா பகுதியில் தீவிரமடைந்துள்ள குடியேற்றவாசிகளின் தாக்குதல்களைப் பகிரங்கமாகக் கண்டிக்குமாறு இஸ்ரேலிய பிரதமர் பென்ஜமின் நெதன்யாகுவிற்கு அமெரிக்கா அழுத்தம் கொடுத்து வருகிறது.
</p><p>
இஸ்ரேலின் தீவிர ஆதரவாளரான அமெரிக்கத் தூதர் மைக் ஹக்கபி (Mike Huckabee) கூட, தாக்குதல்களில் ஈடுபட்ட அந்தக் குடியேற்றவாசிகளை இஸ்ரேலிய பயங்கரவாதிகள் என வர்ணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-14T18:40:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை முஸ்லிம் பெண் சுகாதாரப் பணி உதவியாளர்களுக்கு ஏதிராக ஒழுக்காற்று நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/action-against-muslim-female-health-worker-1786730359"></link>
            <id>https://tamilwin.com/article/action-against-muslim-female-health-worker-1786730359</id>
            <summary type="text">கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலைக்கு புதிதாக நியமனம் பெற்றுள்ள 09 முஸ்லிம் பெண் சுகாதாரப் பணி உதவியாளர்களுக்கு ஏதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வைத்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலைக்கு புதிதாக நியமனம் பெற்றுள்ள 09 முஸ்லிம் பெண் சுகாதாரப் பணி உதவியாளர்களுக்கு ஏதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வைத்தியசாலை நிர்வாகம் தற்போது தயாராகியுள்ளது.</p><p> 

இது தொடர்பில் அறிவிக்கும் கடிதம், இன்று (14.08.2026) குறித்த முஸ்லிம் பெண் சுகாதாரப் பணி உதவியாளர்களுக்கு தனித் தனியாகப் பெயரிடப்பட்டு கையளிக்கப்பட்டுள்ளது. </p><p>

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் பணிப்பாளர் எனக் குறிப்பிட்டு கையொழுத்திட்டுள்ள இந்தக் கடிதத்தில் பிரதிப் பணிப்பாளரின் இறப்பர் முத்திரையே பொறிக்கப்பட்டுள்ளது.</p><h2>அறிவுறுத்தல்</h2><p> </p><p>சுகாதார அமைச்சின் செயலாளர், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மற்றும் சுகாதார அமைச்சின் நிர்வாகப் பணிப்பாளர் ஆகியோருக்கு இந்தக் கடிதத்தின் பிரதிகள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/faeb2ff6-5ecd-4f55-a0a1-716994fba032/26-6a7f5d7a40d5e.webp' /></p><p> </p><p>

'சுகாதார பணி உதவியாளர் சீருடை தொடர்பானது' எனத் தலைப்பிடப்பட்டுள்ள இந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,&nbsp; “கடந்த ஓகஸ்ட் 6ஆம் திகதி சுகாதார பணி உதவியாளராக எமது வைத்தியசாலைக்கு சுகாதார அமைச்சினால் நியமிக்கப்பட்டிருந்தீர்கள். </p><p>

நீங்கள் கடமை பொறுப்பேற்ற அன்றைய தினத்திலேயே சுகாதார அமைச்சு மற்றும் பொது நிர்வாக அமைச்சு ஆகியவற்றினால் வெளியிடப்பட்ட சுற்றுநிரூபங்களுக்கு அமைவாக சீருடை அணியுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருந்தது.</p><h2>ஒழுக்காற்று நடவடிக்கை</h2><p> </p><p>

எனினும், சுற்றுநிரூபத்தினை பின்பற்றாமல் கடமைக்கு சமூகமளிப்பது தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4e5cc10d-d609-4591-8558-2c3df6daaad8/26-6a7f5d7ae7888.webp' /></p><p> 

நீங்கள் அனைவரும் தகுதிகாண் காலப் பகுதிக்குள் உட்பட்ட ஊழியர்கள் என்பது நினைவூட்டப்படுகின்றது. </p><p>

உடன் செயற்படும் வண்ணம் சுகாதார பணி உதவியாளர்களுக்குரிய சீருடை தொடர்பான சுற்றறிக்கையின் வழிகாட்டல்களை பின்பற்றி கடமைக்கு சமூகளிக்குமாறு பணிக்கப்படுகின்றீர்கள். 

தவறும் பட்டசத்தில் ஒழுக்காற்று நடவடிக்கைக்கு உட்படுவீர்கள்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-14T18:38:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானிய மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/uk-issues-severe-warning-over-high-wildfire-risk-1786731969"></link>
            <id>https://tamilwin.com/article/uk-issues-severe-warning-over-high-wildfire-risk-1786731969</id>
            <summary type="text">பிரித்தானியா முழுவதும் காட்டுத்தீ ஏற்படும் அபாயம் மிகவும் அதிகமாக இருப்பதாக அந்நாட்டு அரசு அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது.

பொதுமக்கள் தீப்பற்றக்கூடி...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரித்தானியா முழுவதும் காட்டுத்தீ ஏற்படும் அபாயம் மிகவும் அதிகமாக இருப்பதாக அந்நாட்டு அரசு அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது.
</p><p>
பொதுமக்கள் தீப்பற்றக்கூடிய செயல்களில் ஈடுபட வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><h2>காட்டுத்தீ</h2><p>
</p><p>
 டிஸ்போசபிள் பார்பிக்யூ, தீ மூட்டுதல், தோட்டக் கழிவுகளை எரித்தல் மற்றும் பட்டாசு வெடித்தல் உள்ளிட்டவற்றை தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c589e4c9-cae1-48f4-b84b-680a083cb6f2/26-6a7f5f6277908.webp' /></p><p>
</p><p>
சிறிய தீப்பொறி கூட வேகமாகப் பரவி பெரிய காட்டுத்தீயாக மாறி உயிர்கள், வீடுகள், வர்த்தக நிறுவனங்கள் மற்றும் அவசரகால பணியாளர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என அரசு எச்சரித்துள்ளது.
</p><p>
தீ ஏற்பட்டதற்கான அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக 999 என்ற அவசர இலக்கத்திற்கு அழைக்குமாறும் பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-08-14T18:33:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானியாவில் உள்ள தங்களின் டன் கணக்கான தங்கத்தைத் திருப்பிக் கேட்கும் நாடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/venezuela-demands-return-of-gold-1786730859"></link>
            <id>https://news.lankasri.com/article/venezuela-demands-return-of-gold-1786730859</id>
            <summary type="text">Venezuela demands tonnes of gold from Bank of England: இங்கிலாந்து வங்கியின் பாதுகாப்புப் பெட்டகங்களில் இருந்து 31 டன் தங்கத்தைத் திருப்பித் தருமாறு வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Venezuela demands tonnes of gold from Bank of England: இங்கிலாந்து வங்கியின் பாதுகாப்புப் பெட்டகங்களில் இருந்து 31 டன் தங்கத்தைத் திருப்பித் தருமாறு வெனிசுலா கோரிக்கை விடுத்துள்ளது.
</p><p>பேரழிவுகரமான நிலநடுக்கங்களில் இருந்து மீள்வதற்காக, இங்கிலாந்து வங்கியில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள 4 பில்லியன் டொலர் மதிப்புள்ள தங்கத்தை வெனிசுலா கோருகிறது.</p><h2>நீண்ட காலமாக மறுப்பு</h2><p>
</p><p>முன்னாள் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவின் தேர்தலின் சட்டப்பூர்வத் தன்மையை பிரித்தானியா அங்கீகரிக்காததால், தங்களது நிலத்தடிப் பாதுகாப்புப் பெட்டகங்களில் பூட்டி வைத்துள்ள 31 மெட்ரிக் டன் வெனிசுலா தங்கத்தை விடுவிக்க நீண்ட காலமாக மறுத்து வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4104ebbd-d012-41aa-848a-9320643e3de0/26-6a7f596d9e8ed.webp' /></p><p> </p><p>ஜனவரியில் அமெரிக்காவால் நிக்கோலஸ் மதுரோ சிறைபிடிக்கப்பட்ட போதிலும், பல வருடங்களாக வங்கியும் பிரித்தானிய அரசாங்கமும் அந்தத் தங்கக் கட்டிகளைத் தக்கவைக்கப் போராடி வருகின்றன. </p><p>பல திருப்பங்கள் மற்றும் மாற்றங்கள் ஏற்பட்டதன் பிறகும், இந்த வழக்கு தீர்க்கப்படாமல் உள்ளது. ஜூன் மாத இறுதியில் ஏற்பட்ட இரட்டை நிலநடுக்கங்களைத் தொடர்ந்து, வெனிசுலா தனது மீட்புப் பணிகளுக்காக அந்தப் பணத்தைப் பயன்படுத்த முனைந்து வருகிறது. </p><p>மேலும், வீடுகளைப் புனரமைத்தல், சுகாதார நிலைமைகளை மேம்படுத்துதல், மின்சாரம் கிடைப்பதை உறுதி செய்தல் மற்றும் இடிபாடுகளை அகற்றுதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்ட திட்டங்களில் கவனம் செலுத்த அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளதாக இடைக்கால ஜனாதிபதி டெல்சி ரோட்ரிக்ஸ் தெரிவித்தார்.</p><p></p><p> </p><p>மட்டுமின்றி, இந்த நோக்கத்திற்காக, இங்கிலாந்தில் உள்ள வெனிசுலாவின் தங்கத்தை மீட்பதை ஊக்குவிப்பதில் முயற்சிகளை முன்னெடுப்போம் என்றும் அவர் கூறியுள்ளார். </p><p>இங்கிலாந்து வங்கியிடம் 
இருந்து தங்கத்தை விடுவிக்குமாறு மன்னர் சார்லஸிடம் அவர் மன்றாடிய ஒரு மாதத்திற்குப் பிறகு மீண்டும் இந்த கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. </p><p>அந்தத் தங்கம் எங்கள் மக்களுக்குச் சொந்தமானது. இந்த இரட்டை நிலநடுக்கத்தின் பயங்கரமான, துயரமான விளைவுகளைச் சரிசெய்ய அது பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி ரோட்ரிக்ஸ் அரசு தொலைக்காட்சியில் கூறியிருந்தார். </p><p>பாதிக்கப்பட்ட மக்களின் சமூக நலனுக்காக அந்தச் சொத்துக்களை நேரடியாகப் பயன்படுத்துவதற்கு, அவற்றை மீட்க வேண்டியதன் அவசரத் தேவையை அவர் அப்போது வெளிப்படுத்தினார்.</p><h2>பணவீக்கம் 575.9 சதவீதம்</h2><p> </p><p>கடுமையான அரசாங்க நிர்வாகச் சீர்கேடு, ஊழல் மற்றும் அமெரிக்கத் தடைகள் ஆகியவற்றின் விளைவாக, வெனிசுலா ஒரு தசாப்தத்திற்கும் மேலாகப் பொருளாதார வீழ்ச்சியில் மூழ்கியுள்ளது. </p><p>முந்தைய மாதத்தில் 13.8 சதவீதமாக இருந்த பணவீக்கம், ஜூலை மாதத்தில் 19.9 சதவீதமாக உயர்ந்ததற்கு நிலநடுக்கங்களும் ஒரு காரணம் என்று அதன் மத்திய வங்கி தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/93578d2e-d45b-4810-9f5f-ef28591d04c8/26-6a7f596e501bb.webp' /></p><p> </p><p>வெனிசுல மத்திய வங்கியின் புள்ளிவிவரங்களை அடிப்படையாகக் கொண்ட ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் கணக்கீடுகளின்படி, ஜூலை மாத முடிவுகளுடன், ஆண்டுக்கு ஆண்டு பணவீக்கம் 575.9 சதவீதமாக உள்ளது. </p><p>ஜூன் 24 ஆம் திகதி மாலையில் ஏற்பட்ட அடுத்தடுத்த நில நடுக்கங்களில் சிக்கி 6,000 க்கும் மேற்பட்டோர் மரணமடைந்தனர், 16,740 பேர் காயமடைந்தனர், மேலும் 17,907 பேர் தங்கள் வீடுகளை இழந்தனர். </p><p>நிலநடுக்கங்களால் 68 லட்சம் வரையிலான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்; இவர்களில் 680,000 குழந்தைகள் உட்பட 18 லட்சம் பேருக்கு அவசர மனிதாபிமான உதவி தேவைப்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-14T18:05:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீதிக்கான ஓலம்: சர்வதேச விசாரணையை வலியுறுத்தி ஒன்றிணையும் தமிழர் தரப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/cry-for-justice-tamil-groups-unite-to-demand-1786728740"></link>
            <id>https://tamilwin.com/article/cry-for-justice-tamil-groups-unite-to-demand-1786728740</id>
            <summary type="text">கடந்த காலங்களில் இடம்பெற்ற படுகொலைகள், காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள்
மற்றும் ஏனைய மனித உரிமை மீறல்களுக்கு நீதியும் பொறுப்புக்கூறலும் கோரி, சர்வதேச
வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கடந்த காலங்களில் இடம்பெற்ற படுகொலைகள், காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள்
மற்றும் ஏனைய மனித உரிமை மீறல்களுக்கு நீதியும் பொறுப்புக்கூறலும் கோரி, சர்வதேச
விசாரணையை வலியுறுத்தி முன்னெடுக்கப்படும் “நீதிக்கான ஓலம்” போராட்டம் இன்று(14.8.2026) யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் ஆரம்பமானது.&nbsp;</p><p>இதன்போது செம்மணி உள்ளிட்ட தமிழர் தாயகப் பகுதிகளில் இடம்பெற்றதாகக்
கூறப்படும் பல்வேறு படுகொலைச் சம்பவங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களை
நினைவுகூரும் வகையில் காட்சிப்படுத்தல்கள் இடம்பெற்றன. </p><p>கடந்த காலத்தில்
உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்ததுடன், அவர்களுக்கான நீதி இதுவரை முழுமையாக
கிடைக்கவில்லை என்ற வலியையும் போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள்
வெளிப்படுத்தினர்.</p><h2>முக்கிய கோரிக்கை</h2><p>
</p><p>
இதேவேளை, இந்த நீதிக்கான போராட்டத்தின் அடுத்த முக்கிய கட்டமாக எதிர்வரும்
17ஆம் திகதி யாழ்ப்பாணம் பொது நூலகத்திலிருந்து பேரணி ஆரம்பிக்கப்பட்டு,
ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகம் வரை சென்று மகஜர் கையளிக்கப்படவுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/15268bcd-0340-4cf5-95c0-c065ea7e12c5/26-6a7f53a54194d.webp' /></p><p>தமிழர் தாயகத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் படுகொலைகள், காணாமல்
ஆக்கப்பட்டோர் தொடர்பான விவகாரம் மற்றும் நீண்டகாலமாக தீர்வு காணப்படாத மனித
உரிமை மீறல்கள் தொடர்பில் உள்நாட்டு பொறிமுறைகளுக்கு அப்பால், சுயாதீனமான
சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதே போராட்டத்தின் முக்கிய
கோரிக்கையாக முன்வைக்கப்படுகிறது.&nbsp;</p><p>நீதிக்கான ஓலம்” என்பது கடந்த காலத்தை மட்டும் நினைவுகூரும் நிகழ்வல்ல;
உண்மையை வெளிக்கொண்டு வந்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்கச்
செய்வதற்கான தொடர்ச்சியான குரல் என ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.</p><p></p><h2>அழைப்பு&nbsp;</h2><p>
எனவே, காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் குடும்பங்கள் மற்றும் படுகொலைகளில்
பாதிக்கப்பட்ட குடும்பங்களுடன் தோளோடு தோள் நின்று, சர்வதேச விசாரணை, உண்மை,
நீதி மற்றும் பொறுப்புக்கூறலை வலியுறுத்தும் இந்தப் பயணத்தில் அனைத்து
தரப்பினரும் இணைந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b5432024-9c15-4cc8-82b3-558023d7e51b/26-6a7f53a5e8c87.webp' /></p><p>செம்மணியில் எழுந்த நீதிக்கான குரல், எதிர்வரும் 17ஆம் திகதி யாழ்ப்பாணம்
பொது நூலகத்திலிருந்து ஐ.நா. அலுவலகம் வரை செல்லும் பேரணியில் மேலும்
வலுப்பெறவுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-14T17:44:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாரசீக வளைகுடாவில் பெரும் எண்ணெய்க் கசிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/major-oil-spill-in-the-persian-gulf-1786727089"></link>
            <id>https://jvpnews.com/article/major-oil-spill-in-the-persian-gulf-1786727089</id>
            <summary type="text">பாரசீக வளைகுடா கடற்பகுதியில் ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையே நீடித்து
வரும் மோதல்கள் காரணமாகக் கப்பல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களால் கடலில்
...</summary>
            <content type="html"><![CDATA[<p>பாரசீக வளைகுடா கடற்பகுதியில் ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையே நீடித்து
வரும் மோதல்கள் காரணமாகக் கப்பல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களால் கடலில்
பெரும் எண்ணெய்க் கசிவு ஏற்பட்டுள்ளது.</p><p>

ஈரானின் கெஷ்ம் மற்றும் சிரி தீவுகளுக்கு அருகே செயற்கைக்கோள் படங்களின் மூலம்
இரு பெரிய எண்ணெய் படலங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
</p><p>
லைபீரியக் கொடியுடன் சென்ற சரக்குக் கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டதே
கெஷ்ம் தீவு அருகே ஏற்பட்ட எண்ணெய்க் கசிவுக்கு முக்கியக் காரணம் எனக்
கூறப்படுகிறது.</p><h2>மீட்புப் பணி</h2><p>

மற்றொருபுறம் ஓமன் கடற்பகுதியில் ரஷ்ய கச்சா எண்ணெயைச் சுமந்து சென்ற கப்பல்
தரைதட்டி சுமார் 2000 சதுர கிலோமீற்றர் பரப்பளவிற்கு எண்ணெய் பரவியுள்ளதால்
அரிய வகை கடல்வாழ் உயிரினங்கள் பெரும் ஆபத்தைச் சந்தித்துள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8f6920ce-0cce-4bb7-867a-842b6ba8f5cb/26-6a7f4ab4272c6.webp' /></p><p>
</p><p>
தற்போதைய போர்ப் பதற்றம் காரணமாக மீட்புப் பணிகளை மேற்கொள்வதில் பெரும்
சிக்கல் நீடித்து வருகிறது.</p>]]></content>
            <updated>2026-08-14T17:26:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டிற்கு அழைத்து வரப்பட்டார் பிரபல போதைப்பொருள் கடத்தல்காரர் ஷிரான் பாசிக்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/shiran-basik-he-is-set-to-be-brought-sl-1786716134"></link>
            <id>https://tamilwin.com/article/shiran-basik-he-is-set-to-be-brought-sl-1786716134</id>
            <summary type="text">புதிய இணைப்புபிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான &quot;ஷிரான் பாசிக்&quot; என்பவர் இன்று (14) இரவு நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளார். 

அவருடன் மேலும் இரண்டு சந...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான "ஷிரான் பாசிக்" என்பவர் இன்று (14) இரவு நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.</p><p> 

அவருடன் மேலும் இரண்டு சந்தேகநபர்களும் அழைத்து வரப்பட்டுள்ளனர். </p><p>

இன்று இரவு 08:48 மணியளவில் எயார் அரேபியா (Air Arabia) சேவையின் 3L-708 எனும் விமானம் மூலம் அபுதாபியிலிருந்து சந்தேகநபர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தனர்.&nbsp;</p><h2>முதலாம் இணைப்பு</h2><p>துபாயில் கைது செய்யப்பட்ட பிரபல போதைப்பொருள் கடத்தல்காரர் எனக் குற்றம் சாட்டப்பட்ட "ஷிரான் பாசிக்", இன்று (14) நாட்டிற்கு அழைத்து வரப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>கடந்த மே 26 ஆம் திகதி ஷிரான் பாசிக் துபாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
</p><p>
ஈரானின் போதைப்பொருள் வலையமைப்புடன் அவருக்கு உள்ள நேரடித் தொடர்புகள் காரணமாக, அவர் அமெரிக்காவால் கூட தேடப்படும் நபராக உள்ளார் என்றும் கூறப்படுகிறது.</p><p></p><h2>மேலதிக விசாரணை</h2><p>
</p><p>நாட்டிற்கு போதைப்பொருட்களை விநியோகிக்கும் ஐந்து மிகப்பெரிய போதைப்பொருள் கடத்தல்காரர்களில் ஒருவராக ஷிரான் பாசிக் கருதப்படுகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d033e3f3-ffe7-499c-8101-90cd0e495b59/26-6a7f24b700506.webp' /></p><p>
</p><p>மேலும் குறித்த சந்தேகநபர் உள்ளூர் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மேலதிக விசாரணைகளுக்காக அவரை இலங்கைக்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.</p><p></p>]]></content>
            <updated>2026-08-14T17:18:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹோர்முஸில் தொடரும் கப்பல் போக்குவரத்து முடக்கம்: ஆய்வறிக்கையில் அதிர்ச்சித் தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/ship-traffic-plummets-in-strait-of-hormuz-1786723936"></link>
            <id>https://ibctamil.com/article/ship-traffic-plummets-in-strait-of-hormuz-1786723936</id>
            <summary type="text">வெள்ளிக்கிழமை அன்று இரண்டு வணிகக் கப்பல்கள் மட்டுமே ஹோர்முஸ் நீரிணை வழியே பயணித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கப்பல்களைக் கண்காணிக்கும் கெப்லர் (...</summary>
            <content type="html"><![CDATA[<p>வெள்ளிக்கிழமை அன்று இரண்டு வணிகக் கப்பல்கள் மட்டுமே ஹோர்முஸ் நீரிணை வழியே பயணித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
கப்பல்களைக் கண்காணிக்கும் கெப்லர் (Kpler) நிறுவனத்தின் பகுப்பாய்வின்படி இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இதனடிப்படையில் குறித்த இரண்டு கப்பல்களில் ஒன்று ஈரானிய கடற்பரப்பிற்குள் நுழைந்த தானியக் கப்பல், மற்றொன்று எதிர் திசையில் சென்ற காலியான உலர் சரக்குக் கப்பல் (Dry bulk ship) என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p></p><h2>தினசரி எண்ணிக்கை</h2><p>இதுதவிர, திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயுவை ஏற்றிச் செல்லும் காலியான டேங்கர் கப்பல் ஒன்று நீரிணை வழியே பாரசீக வளைகுடாவிற்குள் நுழைந்ததாகத் தரவுகள் காட்டுகின்றன. </p><p>

வெள்ளிக்கிழமை அன்று கச்சா எண்ணெய் ஏற்றிச் சென்ற எந்தவொரு கப்பல்களின் பயணமும் பதிவாகவில்லை.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/23d60677-0ab3-4f08-b900-70249bc48d01/26-6a7f4c571072a.webp' /></p><p>அத்தோடு வியாழக்கிழமையன்று 9 கப்பல்கள் இந்த ஜலசந்தியைக் கடந்துள்ளன.</p><p>இது புதன்கிழமை பதிவான 5 கப்பல்களை விட அதிகம் என்றாலும், ஆகஸ்ட் மாதத்தின் சராசரி தினசரி எண்ணிக்கையான 12-ஐ விடக் குறைவானதாகும்.&nbsp;&nbsp;</p><p> </p><p></p><h2>கண்காணிப்புக் கருவி</h2><p>சில கப்பல்கள் தங்களின் கண்காணிப்புக் கருவிகளை (Transponders) அணைத்துவிட்டு இரகசியமாகப் பயணிக்கக்கூடும் என்ற போதிலும், கடந்த பெப்ரவரி மாதம் ஈரான் மீது அமெரிக்க-இஸ்ரேல் போர் தொடங்குவதற்கு முன்பு வரை தினசரி 130-க்கும் மேற்பட்ட கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையை கடந்து சென்ற நிலமையுடன் ஒப்பிடுகையில், தற்போதைய எண்ணிக்கை மிக மிகக் குறைவாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/be043fd8-a9d9-4672-9213-958efcbd5bb6/26-6a7f4c57b5296.webp' /></p><p>
இது குறித்து வெரிஸ்க் மேப்பிள்கிராஃப்ட் (Verisk Maplecroft) அபாய உளவுத்துறை நிறுவனத்தின் மத்திய கிழக்கு பிராந்திய முதன்மை பகுப்பாய்வாளர் டார்ப்ஜோர்ன் சோல்வெட் கருத்து வெளியிட்டுள்ளார்.
</p><p>
மேலும் தெரிவித்த அவர், பிராந்தியத்தில் உள்ள எரிசக்தி உள்கட்டமைப்புகளுக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ள அதேவேளையில் ஹோர்முஸ் நீரிணை வழியிலான கப்பல் போக்குவரத்தைக் கட்டுப்படுத்தும் ஈரானின் திறனே பேச்சுவார்த்தைகளில் அந்நாட்டிற்கான மிக முக்கிய பலமாக (Leverage) விளங்குவதாக சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-14T17:12:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[வவுனியாவில் சொத்து தகராறால் திட்டமிட்டு நடத்தப்பட்ட கொள்ளை..! வவுனியாவில் இருவர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/vavuniya-house-break-in-2-arrested-in-robbery-case-1786725695"></link>
            <id>https://jvpnews.com/article/vavuniya-house-break-in-2-arrested-in-robbery-case-1786725695</id>
            <summary type="text">வவுனியாவில் வீட்டை உடைத்து, 51 வயது பெண்ணை கூட்டு பாலியல் துர்நடத்தைக்குட்படுத்தி, கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இத...</summary>
            <content type="html"><![CDATA[<p>வவுனியாவில் வீட்டை உடைத்து, 51 வயது பெண்ணை கூட்டு பாலியல் துர்நடத்தைக்குட்படுத்தி, கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>

இதனை வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் இன்று (14) தெரிவித்துள்ளனர்.</p><p>

கடந்த 8ஆம் திகதி வவுனியா, மடுகந்தை, மயிலங்குளம் பகுதியில் உள்ள வீடொன்றை உடைத்து உள்ளே நுழைந்த கொள்ளையர்கள், அங்கிருந்த வாகன சாரதி மீது வாளால் தாக்குதல் நடத்தியுள்ளனர்.</p><h2>பெறுமதியான பொருட்கள்</h2><p>

பின்னர், வீட்டின் உரிமையாளரான 51 வயது பெண்ணின் வாயை பிளாஸ்டரால் ஒட்டி, கைகளை பின்புறமாகக் கட்டி, அவர் அணிந்திருந்த நகைகளை கழற்றி எடுத்துள்ளனர்.</p><p>

 இதனைத் தொடர்ந்து, மூவர் இணைந்து குறித்த பெண்ணை கூட்டு பாலியல் துர்நடத்தைக்குட்படுத்தியுள்ளனர்.</p><p>
 வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பெறுமதியான பொருட்களையும் கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.
</p><p>
இதன்போது, 80 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரத்தினக்கற்கள், 56 இலட்சம் ரூபாய் பெறுமதியான 15 பவுணுக்கும் அதிகமான தங்க நகைகள், 5 இலட்சத்து 70 ஆயிரம் ரூபாய் பணம், 15 வாகனப் புத்தகங்கள் மற்றும் திறப்புகள், 35 காணி மற்றும் வீட்டு உறுதிப்பத்திரங்கள் உள்ளிட்ட பல பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dee82fa8-8ced-4c9a-a6f3-426df4dbc307/26-6a7f45f4b2ac1.webp' /></p><p>
</p><p>
சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்டவர்கள் வவுனியா தலைமைப் பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவில் முறைப்பாடு செய்துள்ளனர். 

இதையடுத்து விரைந்து செயற்பட்ட பொலிஸார், ஆபத்தான நிலையில் இருந்த இருவரையும் மீட்டு வவுனியா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்துள்ளனர்.
</p><p>
வவுனியா சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் ஆலோசனையின் பேரில், வவுனியா தலைமைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆர்.எம்.யே.எஸ். ரத்னமலலாவின் வழிகாட்டலில், வவுனியா குற்றத்தடுப்பு பிரிவின் பதில் பொறுப்பதிகாரி ஆர். பந்துல தலைமையிலான பொலிஸ் குழுவினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.</p><p>

விசாரணைகளின் போது, பாதிக்கப்பட்ட பெண்ணின் தொழிற்சாலையில் பணியாற்றிய 35 வயதுடைய உக்குவெல, மாத்தறை பகுதியைச் சேர்ந்த ஒருவரும், 29 வயதுடைய களேமிதுனுவெல, சிவலாங்குளம் பகுதியைச் சேர்ந்த மற்றொருவரும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><h2>பாதிக்கப்பட்ட பெண்</h2><p>
</p><p>
பாதிக்கப்பட்ட பெண்ணிடம் பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில், அவரது சொத்துக்கள் தொடர்பாக ஏற்பட்ட முரண்பாடு காரணமாக, அவரது முதல் கணவரின் மகனே இந்த கொள்ளைச் சம்பவத்திற்கு திட்டமிட்டு மூல காரணமாக செயற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
குறித்த நபர் தனது காரில் களேமிதுனுவெல, சிவலாங்குளம் பகுதியில் இருந்து சந்தேகநபர்களை அழைத்து வந்து, வீட்டிற்கு அருகிலுள்ள வீதியில் இறக்கிவிட்டுச் சென்றுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f29eb1e8-4550-49af-9a2f-158c9733f2da/26-6a7f45f565d18.webp' /></p><p>
</p><p>
மேலும், சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், காட்டுப் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த திருடப்பட்ட இரத்தினக்கற்கள், தங்க நகைகள், வாகனப் புத்தகங்கள், திறப்புகள் மற்றும் 35 காணி மற்றும் வீட்டு உறுதிப்பத்திரங்கள் உள்ளிட்ட பொருட்களை பொலிஸார் மீட்டுள்ளனர்.</p><p>

இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய சந்தேகநபர்களையும் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், மேலதிக விசாரணைகளின் பின்னர் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-08-14T17:03:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[புது சைடு பிஸ்னஸ் தொடங்கிய பிக் பாஸ் சாக்ஷி அகர்வால்! எந்த நடிகையும் செய்யாத ஒன்று]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/sakshi-agarwal-new-business-of-energy-bar-1786725754"></link>
            <id>https://cineulagam.com/article/sakshi-agarwal-new-business-of-energy-bar-1786725754</id>
            <summary type="text">நடிகை சாக்ஷி அகர்வால் படங்களில் நடித்து பிரபலமானதை விட பிக் பாஸ் மூலமாக தான் பெரிய அளவில் பிரபலம் அடைந்தார். பல படங்களில் அவர் குணசித்திர ரோல்களில் நட...</summary>
            <content type="html"><![CDATA[<p>நடிகை சாக்ஷி அகர்வால் படங்களில் நடித்து பிரபலமானதை விட பிக் பாஸ் மூலமாக தான் பெரிய அளவில் பிரபலம் அடைந்தார். பல படங்களில் அவர் குணசித்திர ரோல்களில் நடித்து இருந்தாலும் பிக் பாஸ் ஷோ அவரை புகழின் உச்சிக்கே கொண்டு சென்றது.</p><p>இருப்பினும் அந்த ஷோவுக்கு பிறகும் அவருக்கு பெரிய அளவில் படம் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அதனால் சின்ன படங்களில் அதிகம் நடித்து வருகிறார். தற்போது திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார் அவர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b9382184-584a-4ede-9f86-56bd1519aa7a/26-6a7f457c773c2.webp' /></p><h2>புது பிசினஸ்</h2><p>இந்நிலையில் சாக்ஷி அகர்வால் ஒரு புதிய சைடு பிசினஸ் ஒன்று தொடங்கி இருக்கிறார். எனர்ஜி பார் சாக்லேட் நிறுவனம் ஒன்றை தொடங்கியிருக்கும் அவர் அதன் விளம்பரத்திலும் நடித்து பிரபலப்படுத்தி வருகிறாராம்.
</p><p>சென்னையில் பல இடங்களில் அதன் பேனர் வைக்கப்பட்டு இருக்கும் நிலையில் அதை நேரில் சென்று பார்வையிடும் லைவ் வீடியோவை சாக்ஷி தற்போது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருக்கிறார். இதோ பாருங்க.&nbsp;&nbsp;</p><p><blockquote class="instagram-media" data-instgrm-permalink="https://www.instagram.com/reel/Db8dBWLlLOE/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/reel/Db8dBWLlLOE/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/reel/Db8dBWLlLOE/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by Sakshi Agarwal (@iamsakshiagarwal)</a></p></div></blockquote> <script async src="//www.instagram.com/embed.js"></script></p><p>
</p>]]></content>
            <updated>2026-08-14T16:42:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரான்- அமெரிக்கா இடையே மோதல்கள்: பாரசீக வளைகுடாவில் பெரும் எண்ணெய்க் கசிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/major-oil-spill-in-the-persian-gulf-1786725631"></link>
            <id>https://tamilwin.com/article/major-oil-spill-in-the-persian-gulf-1786725631</id>
            <summary type="text">பாரசீக வளைகுடா கடற்பகுதியில் ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையே நீடித்து
வரும் மோதல்கள் காரணமாகக் கப்பல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களால் கடலில்
...</summary>
            <content type="html"><![CDATA[<p>பாரசீக வளைகுடா கடற்பகுதியில் ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையே நீடித்து
வரும் மோதல்கள் காரணமாகக் கப்பல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களால் கடலில்
பெரும் எண்ணெய்க் கசிவு ஏற்பட்டுள்ளது.</p><p>

ஈரானின் கெஷ்ம் மற்றும் சிரி தீவுகளுக்கு அருகே செயற்கைக்கோள் படங்களின் மூலம்
இரு பெரிய எண்ணெய் படலங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
</p><p>
லைபீரியக் கொடியுடன் சென்ற சரக்குக் கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டதே
கெஷ்ம் தீவு அருகே ஏற்பட்ட எண்ணெய்க் கசிவுக்கு முக்கியக் காரணம் எனக்
கூறப்படுகிறது.</p><p></p><h2>மீட்புப் பணி</h2><p>

மற்றொருபுறம் ஓமன் கடற்பகுதியில் ரஷ்ய கச்சா எண்ணெயைச் சுமந்து சென்ற கப்பல்
தரைதட்டி சுமார் 2000 சதுர கிலோமீற்றர் பரப்பளவிற்கு எண்ணெய் பரவியுள்ளதால்
அரிய வகை கடல்வாழ் உயிரினங்கள் பெரும் ஆபத்தைச் சந்தித்துள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d6d66a2a-1953-4a75-b367-48ac92d4ba7a/26-6a7f450188bd1.webp' /></p><p>
</p><p>
தற்போதைய போர்ப் பதற்றம் காரணமாக மீட்புப் பணிகளை மேற்கொள்வதில் பெரும்
சிக்கல் நீடித்து வருகிறது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-14T16:40:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thileepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வவுனியாவில் 51 வயது பெண்ணுக்கு நேர்ந்த கதி - 1.4 கோடி ரூபாய்க்கும் அதிகமான பொருட்கள் கொள்ளை..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/vavuniya-house-break-in-2-arrested-in-robbery-case-1786725286"></link>
            <id>https://tamilwin.com/article/vavuniya-house-break-in-2-arrested-in-robbery-case-1786725286</id>
            <summary type="text">வவுனியாவில் வீட்டை உடைத்து, 51 வயது பெண்ணை கூட்டு பாலியல் துர்நடத்தைக்குட்படுத்தி, கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இத...</summary>
            <content type="html"><![CDATA[<p>வவுனியாவில் வீட்டை உடைத்து, 51 வயது பெண்ணை கூட்டு பாலியல் துர்நடத்தைக்குட்படுத்தி, கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>

இதனை வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் இன்று (14) தெரிவித்துள்ளனர்.</p><p>

கடந்த 8ஆம் திகதி வவுனியா, மடுகந்தை, மயிலங்குளம் பகுதியில் உள்ள வீடொன்றை உடைத்து உள்ளே நுழைந்த கொள்ளையர்கள், அங்கிருந்த வாகன சாரதி மீது வாளால் தாக்குதல் நடத்தியுள்ளனர்.</p><h2>பெறுமதியான பொருட்கள்</h2><p>

பின்னர், வீட்டின் உரிமையாளரான 51 வயது பெண்ணின் வாயை பிளாஸ்டரால் ஒட்டி, கைகளை பின்புறமாகக் கட்டி, அவர் அணிந்திருந்த நகைகளை கழற்றி எடுத்துள்ளனர்.</p><p>

 இதனைத் தொடர்ந்து, மூவர் இணைந்து குறித்த பெண்ணை கூட்டு பாலியல் துர்நடத்தைக்குட்படுத்தியுள்ளனர்.</p><p>
 வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பெறுமதியான பொருட்களையும் கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.
</p><p>
இதன்போது, 80 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரத்தினக்கற்கள், 56 இலட்சம் ரூபாய் பெறுமதியான 15 பவுணுக்கும் அதிகமான தங்க நகைகள், 5 இலட்சத்து 70 ஆயிரம் ரூபாய் பணம், 15 வாகனப் புத்தகங்கள் மற்றும் திறப்புகள், 35 காணி மற்றும் வீட்டு உறுதிப்பத்திரங்கள் உள்ளிட்ட பல பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c478ef0c-fd5a-4ffa-9562-cea1409b3afb/26-6a7f44fd2fa02.webp' /></p><p>
</p><p>
சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்டவர்கள் வவுனியா தலைமைப் பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவில் முறைப்பாடு செய்துள்ளனர். 

இதையடுத்து விரைந்து செயற்பட்ட பொலிஸார், ஆபத்தான நிலையில் இருந்த இருவரையும் மீட்டு வவுனியா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்துள்ளனர்.
</p><p>
வவுனியா சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் ஆலோசனையின் பேரில், வவுனியா தலைமைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆர்.எம்.யே.எஸ். ரத்னமலலாவின் வழிகாட்டலில், வவுனியா குற்றத்தடுப்பு பிரிவின் பதில் பொறுப்பதிகாரி ஆர். பந்துல தலைமையிலான பொலிஸ் குழுவினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.</p><p>

விசாரணைகளின் போது, பாதிக்கப்பட்ட பெண்ணின் தொழிற்சாலையில் பணியாற்றிய 35 வயதுடைய உக்குவெல, மாத்தறை பகுதியைச் சேர்ந்த ஒருவரும், 29 வயதுடைய களேமிதுனுவெல, சிவலாங்குளம் பகுதியைச் சேர்ந்த மற்றொருவரும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><h2>பாதிக்கப்பட்ட பெண்</h2><p>
</p><p>
பாதிக்கப்பட்ட பெண்ணிடம் பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில், அவரது சொத்துக்கள் தொடர்பாக ஏற்பட்ட முரண்பாடு காரணமாக, அவரது முதல் கணவரின் மகனே இந்த கொள்ளைச் சம்பவத்திற்கு திட்டமிட்டு மூல காரணமாக செயற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
குறித்த நபர் தனது காரில் களேமிதுனுவெல, சிவலாங்குளம் பகுதியில் இருந்து சந்தேகநபர்களை அழைத்து வந்து, வீட்டிற்கு அருகிலுள்ள வீதியில் இறக்கிவிட்டுச் சென்றுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a92e6ad9-f0cf-4610-b80b-d93d0169f2da/26-6a7f44fdeb087.webp' /></p><p>
</p><p>
மேலும், சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், காட்டுப் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த திருடப்பட்ட இரத்தினக்கற்கள், தங்க நகைகள், வாகனப் புத்தகங்கள், திறப்புகள் மற்றும் 35 காணி மற்றும் வீட்டு உறுதிப்பத்திரங்கள் உள்ளிட்ட பொருட்களை பொலிஸார் மீட்டுள்ளனர்.</p><p>

இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய சந்தேகநபர்களையும் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், மேலதிக விசாரணைகளின் பின்னர் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-08-14T16:40:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரான்சில் காட்டுத்தீயை மூட்டியதாக சிறார்கள் உட்பட 500 பேர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/500-arrested-of-starting-wildfires-1786725269"></link>
            <id>https://news.lankasri.com/article/500-arrested-of-starting-wildfires-1786725269</id>
            <summary type="text">Almost 500 arrested on starting wildfires: இந்த கோடையில் காட்டுத்தீயை மூட்டியதாக சந்தேகத்தின் பேரில் கிட்டத்தட்ட 500 பேர் கைது செய்யப்பட்டனர்.
பிரான்...</summary>
            <content type="html"><![CDATA[<p>Almost 500 arrested on starting wildfires: இந்த கோடையில் காட்டுத்தீயை மூட்டியதாக சந்தேகத்தின் பேரில் கிட்டத்தட்ட 500 பேர் கைது செய்யப்பட்டனர்.</p><p>
பிரான்சில் கோடை தொடங்கியதிலிருந்து காட்டுத்தீயை மூட்டியதாக சந்தேகத்தின் பேரில் கிட்டத்தட்ட 500 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><h2>183 சிறார்கள் உட்பட</h2><p>
</p><p>வரலாறு காணாத வெப்ப அலைக்கு மத்தியில், ஆறு ஐரோப்பிய நாடுகளில் தீயணைப்பு வீரர்கள் கொழுந்துவிட்டு எரியும் தீயை அணைக்கப் போராடி வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2da77c1a-2d05-4166-b4d7-f3fa3e074b93/26-6a7f43978ee2b.webp' /></p><p> </p><p>வெள்ளிக்கிழமையன்று ஐந்து ஐரோப்பிய நாடுகளில் மூன்றில் குறைந்தபட்சம் 30 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையையும், சுமார் 15 கோடி மக்கள் 35 டிகிரி செல்சியஸ் அல்லது அதற்கும் அதிகமான வெப்பநிலையையும் எதிர்கொண்ட நிலையில், </p><p>பிரான்சில் ஜூலை 1 முதல் ஏற்பட்ட காட்டுத்தீ தொடர்பாக 183 சிறார்கள் உட்பட 474 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டின் உள்விவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது. </p><p>கைது செய்யப்பட்டவர்களில் சுமார் 70 சதவீதம் பேர் வேண்டுமென்றே தீ வைத்ததாகவும், எஞ்சியவர்கள் தற்செயலாக அவ்வாறு செய்ததாகவும் சந்தேகிக்கப்படுவதாக உள்விவகார அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.</p><p></p><p> </p><p>இதனிடையே, கடந்த ஜூலை மாதம் போர்டோ விமான நிலையம் அருகே ஏற்பட்ட காட்டுத்தீயில் இரண்டு தீயணைப்பு வீரர்கள் மரணமடைந்தது தொடர்பாக 15 வயது சிறுவன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரெஞ்சு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. </p><p>24 மணி நேரத்திற்கும் குறைவான நேரத்தில், கிட்டத்தட்ட 1,100 ஹெக்டேர் பரப்பளவிலான, எளிதில் தீப்பற்றக்கூடிய பைன் மரக்காடுகளை ஒரு புதிய காட்டுத்தீ அழித்ததைத் தொடர்ந்து, பிரான்சின் தென்மேற்குப் பகுதியான லாண்டெஸில் உள்ள லுக்லான் கிராமத்திலிருந்து 525-க்கும் மேற்பட்ட மக்களை பிரெஞ்சு அதிகாரிகள் வெள்ளிக்கிழமை வெளியேற்றியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/446cf2c4-7968-48f6-a61b-c92ac0c38532/26-6a7f4398e5036.webp' /></p><p>
</p><p>பிரபலமான விடுமுறைத் தலங்களான அர்காச்சோன் வளைகுடா மற்றும் லேஜ்-கேப்-ஃபெரெட் தீபகற்பத்திலிருந்து லுக்லான் கிராமம் சுமார் 62 மைல்கள் தென்கிழக்கில் அமைந்துள்ளது. </p><p>இப்பகுதிகளில் ஜூலை மாத இறுதியில் ஏற்பட்ட இரண்டு பெரும் காட்டுத்தீ சம்பவங்கள் 50,000 ஹெக்டேருக்கும் அதிகமான நிலப்பரப்பை அழித்ததால், சுமார் 220,000 மக்கள் வெளியேற்றப்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.</p><h2>இரண்டு மடங்கு வேகத்தில்</h2><p> </p><p>இந்த நிலையில், காலநிலை சீர்குலைவு காரணமாக, அடிக்கடி மற்றும் தீவிரமான வானிலை நிகழ்வுகள் ஏற்படுவதாகவும், மண் மற்றும் நீர்வழிகள் ஆவியாவதாகவும், காட்டுத்தீ தீவிரமடைவதாகவும், பிரான்சில் ஆயிரக்கணக்கானோர் கூடுதலாக மரணமடைவதற்கும் வழிவகுப்பதாகவும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர். </p><p>ஐரோப்பா, உலக சராசரியை விட சுமார் இரண்டு மடங்கு வேகத்தில் வெப்பமடைந்து வருகிறது என்றே தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.
குரோஷியாவில், டால்மேஷியன் கடற்கரையில் உள்ள லோக்வா ரோகோஸ்னிகா என்ற சுற்றுலா நகரத்தில், பலத்த காற்றினால் பரவிய காட்டுத்தீ இரவோடு இரவாகத் தீவிரமடைந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1939824e-7195-4769-a6a9-c04944785771/26-6a7f43983f4c0.webp' /></p><p> </p><p>இதில் வீடுகள் முற்றிலுமாக எரிந்து சாம்பலாயின, சுமார் 1,000 பேர் வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது, ஒருவர் மரணமடைந்தார் மற்றும் பல டசின் பேர்கள் காயமடைந்தனர் என்று தீயணைப்பு மற்றும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். </p><p>வடக்கே சுமார் 15.5 மைல் தொலைவில் உள்ள ஸ்பிளிட் நகரில், ஆம்புலன்ஸ் சேவைகளால் சிகிச்சை அளிக்கப்பட்ட 36 பேரில், 14 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர் மற்றும் ஏழு பேருக்கு உயிருக்கு ஆபத்தான காயங்கள் ஏற்பட்டிருந்தன. </p><p>இதனிடையே, தெற்கு ஸ்பெயினில் ஏற்பட்ட மிகப் பெரிய காட்டுத்தீயும் வியாழக்கிழமையன்று மேலும் மோசமடைந்தது. ஹுயெல்வா மாகாணத்தில் இதுவரையில் 31,000 ஹெக்டேர் பரப்பளவை எரித்துள்ள இந்தத் தீ, சுமார் 700 பேரை வெளியேறும்படி கட்டாயப்படுத்தியுள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-14T16:32:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Erimalai</name>
            </author>
            <title type="text"><![CDATA[பருத்தித்துறை அஞ்சல் அலுவலக காணி விடுவிப்பில் ஏமாற்றும் படைத்தரப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/military-release-of-point-pedro-post-office-land-1786724501"></link>
            <id>https://tamilwin.com/article/military-release-of-point-pedro-post-office-land-1786724501</id>
            <summary type="text">பருத்தித்துறை அஞ்சல் அலுவலகத்திற்கு சொந்தமான காணி விடுவிப்பு விடயத்தில் படைத்தரப்பு ஏமாற்று நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந...</summary>
            <content type="html"><![CDATA[<p>பருத்தித்துறை அஞ்சல் அலுவலகத்திற்கு சொந்தமான காணி விடுவிப்பு விடயத்தில் படைத்தரப்பு ஏமாற்று நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார்
பொன்னம்பலம் அம்பலப்படுத்தி உள்ளார்.</p><p>

பருத்தித்துறை நகரபிதா வின்சென் டீ போல் டக்ளஸ் போலின் அழைப்பில் இன்று (14)
வெள்ளிக்கிழமை பருத்தித்துறைக்கு விஜயம் மேற்கொண்ட கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
பருத்தித்துறை அஞ்சல் அலுவலகம் தற்காலிகமாக இயங்கும் இடத்திற்கு சென்று
அதிகாரிகளுடன் கலந்துரையாடி நிலமைகளை கேட்டறிந்து கொண்டார்.</p><p>அத்துடன் இராணுவ
கட்டுப்பாட்டி உள்ள பழைய கட்டிடம் மற்றும் விடுவிக்கப்பட தீர்மானிக்கப்பட்ட
இடம் என்பவற்றை நேரில் சென்று பார்வையிட்டிருந்தார்.</p><p></p><h2>காணி விடுவிப்பு</h2><p>இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

பருத்தித்துறை அஞ்சல் அலுவலகத்திற்கு சொந்தமான காணி கட்டடத்தினை இராணுவ
கட்டுப்பாட்டில் இருந்து விடுவிப்பதற்கு விரைவில் நடவடிக்கை எடுப்பதாக
அண்மையில் யாழ்பாணத்திற்கு விஜயம் செய்திருந்த வெகுஜன ஊடக பிரதியமைச்சர்
கௌசல்யா ஆரியரத்ன யாழ் மாவட்ட அஞ்சல் திணைக்கள தரப்பினரிடம்
உறுதியளித்திருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0c9436ca-d891-40af-8010-58d05a687f5e/26-6a7f4302b684f.webp' /></p><p> </p><p>இது தொடர்பில் பிரதி அமைச்சர் நாடாளுமன்றத்தில் வைத்து
நேரில் சந்தித்து கதைக்கும் போது குறித்த காணி விடுவிப்பு தொடர்பில் யாழ்
விஜயத்தின் போது முன்வைக்கப்பட்டதாக தெரிவித்திருந்ததுடன் அதனை நிறைவேற்றுவது
தொடர்பில் சாதகமான நிலையினையும் வெளிப்படுத்தி இருந்தார்.</p><p>படைத்தரப்பின் இருப்பை காரணம் காட்டி பருத்தித்துறை தபால் நிலைய காணி
விடுவிக்கப்படாமையை ஒருபோதும் நியாயப்படுத்தி விட முடியாது. அதற்கான
அழுத்தங்களை வழங்கி உரிய காணியை விடுவிக்க நடவடிக்கை எடுக்க உள்ளோம்.</p><p>காணி விடுவிப்பு இடம்பெற்று வரும் மேற்குறித்த நிலைவரங்கள் தொடர்பில்
அண்மையில் கனேடிய தூதர் மற்றும் இந்திய தூதருடனான சந்திப்பில்
தெளிவுபடுத்தியதுடன், காணி விடுவிப்பு தொடர்பில் வலியுறுத்தி உள்ளோம் எனக் குறிப்பிட்டார்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-14T16:32:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தடியால் தாக்கப்பட்டு பொலிஸ் அதிகாரி படுகொலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/police-officer-died-after-being-struck-1786724110"></link>
            <id>https://jvpnews.com/article/police-officer-died-after-being-struck-1786724110</id>
            <summary type="text">குருநாகல்-வெல்லவ பகுதியில் தடியால் தாக்கப்பட்டதில் பொலிஸ் அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், கடந்த (25) ஆம்...</summary>
            <content type="html"><![CDATA[<p>குருநாகல்-வெல்லவ பகுதியில் தடியால் தாக்கப்பட்டதில் பொலிஸ் அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.</p><p>இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், கடந்த (25) ஆம் திகதி பொலிஸ் அதிகாரிக்கும் வேறு தரப்பினருக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டது.</p><p>
சம்பவத்தைத் தொடர்ந்து படுகாயமடைந்த பொலிஸ் அதிகாரி, மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்தநிலையில், அவர் நேற்று (13) உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.</p><h2>மேலதிக விசாரணை</h2><p>வெல்லவ பொலிஸ் நிலையத்தில் பணியாற்றி வந்த 54 வயது அதிகாரியே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d026496a-4658-42fc-ac3c-ddf87695cc71/26-6a7f3f114b1aa.webp' /></p><p>மேலும், இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-08-14T16:27:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[தொகுப்பாளினி சமீனா அன்வரின் கிளாமர் லுக் போட்டோஷூட்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/sameena-anwar-vj-recent-photoshoot-1786713935"></link>
            <id>https://viduppu.com/article/sameena-anwar-vj-recent-photoshoot-1786713935</id>
            <summary type="text">சமீனா அன்வர்ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் தொகுப்பாளினியாக பணியாற்றி மக்கள் மத்தியில் அதிக கவனம் ஈர்த்தவர்களில் ஒருவர் சமீனா அன்வர்.

சமீபகாலமாக ஐபிஎல் ப...</summary>
            <content type="html"><![CDATA[<h2>சமீனா அன்வர்</h2><p>ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் தொகுப்பாளினியாக பணியாற்றி மக்கள் மத்தியில் அதிக கவனம் ஈர்த்தவர்களில் ஒருவர் சமீனா அன்வர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/31ffd54f-3b10-4af0-9590-c9c53971ac4c/26-6a7f1753d72e8.webp' /></p><p>

சமீபகாலமாக ஐபிஎல் போட்டிகளை தொகுத்து வழங்கி வந்தார். தற்போது ஐபிஎல் 2026 போட்டிகள் உட்பல பல கிரிக்கெட் போட்டிகளை ஸ்டார் ஸ்போர்ட் தொலைக்காட்சியில் தொகுத்து வழங்கி வந்தா.
</p><p>
இணையத்தில் ஆக்டிவாக இருந்து வரும் சமீனா அன்வர், கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து அனைவரையும் ஈர்த்தார்.

தற்போது கிளாமர் ஆடையணிந்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-08-14T16:15:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மொசாட்டுடன் இணைந்து கிழக்கில் இனங்களிடையே கலவரத்தை ஏற்படுத்த முன்னெடுக்கப்பட்ட சதி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/hizbullah-ashraf-eastern-province-sl-politics-1786720082"></link>
            <id>https://tamilwin.com/article/hizbullah-ashraf-eastern-province-sl-politics-1786720082</id>
            <summary type="text">தமிழ் மக்களிற்கும், முஸ்லிம் மக்களிற்கும் இடையில் பிளவை ஏற்படுத்துவதற்காக ரணசிங்க பிரேமதாச மொசாட்டின் தந்திரத்தை கையில் ஊர்காவல் படையை ஆரம்பித்ததாக மு...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழ் மக்களிற்கும், முஸ்லிம் மக்களிற்கும் இடையில் பிளவை ஏற்படுத்துவதற்காக ரணசிங்க பிரேமதாச மொசாட்டின் தந்திரத்தை கையில் ஊர்காவல் படையை ஆரம்பித்ததாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.</p><p>அத்தோடு, ரணசிங்க பிரேமதாச சிறுபாண்மைக்குள் ஒரு பிளவை ஏற்படுத்துவதற்காக 1989 ஆம் ஆண்டு ஜனாதிபதியாக வந்தவுடன் இனங்களிடையே பிரித்தாலும் தந்திரத்தை கையாண்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.</p><p>தமிழீழ விடுதலைப்புலிகளின் போராட்டத்திலே தமிழ் சகோதரர்களும், முஸ்லிம் சகோதரர்களும் ஆதரவு தெரிவித்ததை தட்டிகழிப்பதற்காக&nbsp; ரணசிங்க பிரேமதாச பல்வேறு சூழ்ச்சிகளை செய்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.</p><p>அத்தோடு,&nbsp;ஊர்காவல் படையை பிரேமதாச ஆரம்பித்ததையடுத்து சிறிலங்கா இராணுவத்துடன் மோதல் ஏற்பட்டு இனப்படுகொலை இடம்பெற்றதாகவும் அவர் கூறினார்.</p><p>மொசாட்டுடன் தொடர்புபடுத்தப்படும் கிழக்கின் சர்ச்சைக்குரிய சம்பவங்களின் பின்னணி என்ன என்பது தொடர்பான மேலதிக தகவல்களை ஊடறுப்பு நிகழ்ச்சியில் காணலாம்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/J82m0U8-z3Q" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-14T16:07:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டு மக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களத்தின் முக்கிய எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/strong-winds-warning-meteorology-1786720628"></link>
            <id>https://jvpnews.com/article/strong-winds-warning-meteorology-1786720628</id>
            <summary type="text">பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடற்பரப்புகள் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடற்பரப்புகள் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.</p><p>மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான மற்றும் கங்கேசன்துறையிலிருந்து மன்னார் மற்றும் புத்தளம் ஊடாக சிலாபம் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் காற்றின் வேகம் அவ்வப்போது அதிகரிக்கக்கூடும் என அத்திணைக்களம் தெரிவித்துள்ளது. </p><p>

அதற்கமைய, அப்பகுதிகளில் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 55 முதல் 60 கிலோமீற்றர் வரை அதிகரிப்பதுடன், அக்கடற்பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>எச்சரிக்கை</h2><p> </p><p>

இதன் காரணமாக கடற்றொழில் மற்றும் கடற்போக்குவரத்து நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் அவதானத்துடன் இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d1516d37-2c2c-42a9-81b2-b55c62fbed12/26-6a7f3177816ad.webp' /></p><p> </p><p>

அத்துடன், நாளை (15) சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது. </p><p>

மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என்பதுடன், மொனராகலை, அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் சில இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்குக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-14T15:40:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[5.3 விநாடிகளில் 800 கிமீ வேகம் - சீனாவின் மாக்லெவ் ரயில் சாதனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/china-maglev-train-hits-800-kmph-record-1786722035"></link>
            <id>https://news.lankasri.com/article/china-maglev-train-hits-800-kmph-record-1786722035</id>
            <summary type="text">China Maglev train hits 800 kmph record: சீனா உருவாக்கிவரும் மாக்லெவ் ரயில் 5.3 விநாடிகளில் 800 கிமீ வேகத்தை எட்டி சாதனை படைத்துள்ளது.

மூன்றாவது உல...</summary>
            <content type="html"><![CDATA[<p>China Maglev train hits 800 kmph record: சீனா உருவாக்கிவரும் மாக்லெவ் ரயில் 5.3 விநாடிகளில் 800 கிமீ வேகத்தை எட்டி சாதனை படைத்துள்ளது.</p><h2>

மூன்றாவது உலகச் சாதனை</h2><p>சீனாவின் ஹுபேய் மாகாணத்தில் உள்ள டோங்ஹூ ஆய்வகத்தில் உருவாக்கப்பட்ட 1,110 கிலோ எடையுடைய சோதனை ரயில் வண்டி, 1 கிமீ நீளமான பாதையில் 5.3 விநாடிகளில் 800 கிமீ வேகம் எட்டியுள்ளது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9c13c2a5-11ac-4145-9e3e-2406a8c30e07/26-6a7f36f521763.webp' /></p><p>இது கடந்த ஆறு மாதங்களில் மூன்றாவது உலகச் சாதனையாகும்.

இந்த ரயில், மாக்லெவ் (Maglev) தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறது. காந்த சக்தியின் மூலம் ரயில் பாதையுடன் நேரடி தொடர்பு இல்லாமல் மிதந்து செல்லும். இதனால், உராய்வு குறைந்து மிக வேகமாக முன்னேற முடிகிறது.
</p><p>
முன்னதாக, 2025 ஜூன் மாதத்தில் இந்த ரயில் 7.1 விநாடிகளில் 650 கிமீ வேகத்தை எட்டியது. பின்னர் 697 கிமீ, 798 கிமீ வேகங்களை எட்டியதும், இப்போது 800 கிமீ வேகத்தை கடந்துள்ளது.</p><p></p><p>
</p><h2>
பயணிகள் ரயிலுக்காக அல்ல</h2><p>ஆய்வாளர்கள், இந்த சோதனை பயணிகள் ரயிலுக்காக அல்ல எனவும், மாறாக ரொக்கெட், ட்ரோன், இராணுவ விமானங்கள் மற்றும் தொழில்துறை போக்குவரத்து போன்ற துறைகளில் பயன்படும் தொழில்நுட்பமாக வளரக்கூடும் எனவும் கூறுகின்றனர்.</p><p>இந்த வேகத்தில் செல்ல, பாதையின் சீரமைப்பு 0.5 மில்லிமீட்டர் துல்லியத்தில் இருக்க வேண்டும். மேலும், வண்டியின் நிலை, மிதப்பு, காந்த இயக்கம், அவசர பிரேக் போன்றவை ஒரே நேரத்தில் கட்டுப்படுத்தப்பட வேண்டும்.
</p><p></p><p>சீனாவின் தற்போதைய வணிக மாக்லெவ் ரயில்கள் (Fuxing system) 349 கிமீ வேகத்தில் இயங்குகின்றன. ஆனால், இந்த சோதனை ரயில் அதைவிட இருமடங்கு வேகத்தில் இயங்குகிறது.
</p><p>
இந்த கண்டுபிடிப்பு, எதிர்காலத்தில் எரிபொருள் செலவை குறைத்து ரொக்கெட் ஏவுதலுக்கு உதவும் வகையில் பயன்படுத்தப்படலாம் என விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-14T15:38:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[பீர் பாட்டில்களின் நிறத்திற்குப் பின்னால் இப்படி ஒரு காரணமா!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/why-are-most-beer-bottles-brown-or-green-1786719694"></link>
            <id>https://manithan.com/article/why-are-most-beer-bottles-brown-or-green-1786719694</id>
            <summary type="text">Why are most beer bottles brown or green : இளைஞர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் பீர், வெளிநாடுகளில் பல இடங்களில் சாதாரண பானமாகவே பார்க்கப்படுகிறது. ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Why are most beer bottles brown or green : இளைஞர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் பீர், வெளிநாடுகளில் பல இடங்களில் சாதாரண பானமாகவே பார்க்கப்படுகிறது. ஆனால் இந்தியாவில் வயது வரம்புக்கு உட்பட்டவர்கள் மட்டுமே இதை அருந்த அனுமதிக்கப்படுகிறார்கள். </p><p>பீரில் மற்ற சில மதுபானங்களைக் காட்டிலும் ஆல்கஹால் அளவு குறைவாக இருப்பதும், அதன் சுவையும் பலரைக் கவரும் காரணங்களில் ஒன்றாக இருக்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6446ce80-8640-4ef9-bbfc-c056df611ab0/26-6a7f356e59192.webp' /></p><p>
ஆனால் பீர் குடிப்பது உடல் நலத்துக்கு தீங்கு என்பதையும் தாண்டி, அதை அடைத்து வைக்கும் பாட்டில்களின் நிறத்தை நீங்கள் எப்போதாவது கவனித்திருக்கிறீர்களா?இதற்குப் பின்னால் சுவாரஸ்யமான ஒரு வரலாறு இருக்கிறது.இது&nbsp; குறித்த விரிவான விளக்கத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.</p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">ஏன் பழுப்பு அல்லது பச்சை நிறத்தில் இருக்கின்றன?</span></p><p>தானியங்களில் உள்ள மாவுச்சத்தை நொதிக்கச் செய்வதன் மூலமாகவே பீர் தயாரிக்கப்படுகிறது. பொதுவாக இதற்குத் தேவையான மாவுச்சத்து பார்லி முளைக்கூழிலிருந்து பெறப்படுகிறது. அதேவேளை கோதுமை, சோளம், அரிசி உள்ளிட்ட தானியங்களும் சில வகை பீர்களில் பயன்படுத்தப்படுகின்றன.</p><p></p><p>பல பீர் வகைகளில் ஹாப்ஸ் (Hops) எனப்படும் தாவரத்தின் பூக்கள் சுவையூட்டியாகப் பயன்படுத்தப்படுகின்றன. இவை பீருக்கு தனித்துவமான கசப்புச் சுவையை வழங்குவதோடு, இயற்கையான பாதுகாப்புப் பொருளாகவும் செயல்படுகின்றன.</p><p>சில பீர்களில் ஹாப்ஸுக்குப் பதிலாக மூலிகைகள், பழங்கள் உள்ளிட்டவையும் சுவையூட்டிகளாகப் பயன்படுத்தப்படுகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/96808578-c537-4940-b3ab-bcc5ab5d8095/26-6a7f356f0e3cc.webp' /></p><p>அப்படி பீர் தயாரிப்பின் ஆரம்பகாலங்களில், அது பெரும்பாலும் வெளிப்படையான கண்ணாடிப் பாட்டில்களில் அடைத்து விற்கப்பட்டது. ஆனால் அதில் ஒரு பெரிய பிரச்சினை இருந்தது.

சூரிய ஒளியில் உள்ள புற ஊதாக் கதிர்கள் (UV rays) வெளிப்படையான கண்ணாடி வழியாக பீருக்குள் ஊடுருவும்போது, பீரில் உள்ள சில வேதிப்பொருட்களுடன் வினைபுரிகின்றன. இதனால் பீரின் சுவையும் மணமும் மாறக்கூடும்.</p><p>
இந்தப் பிரச்சினைக்கு தீர்வாகக் கண்டுபிடிக்கப்பட்டது தான் பழுப்பு நிற கண்ணாடிப் பாட்டில்கள்.

அடர்த்தியான பழுப்பு நிறக் கண்ணாடி சூரியனின் புற ஊதாக் கதிர்களை அதிகளவில் தடுத்து நிறுத்தியது. இதனால் பீரின் தரமும் சுவையும் நீண்ட நேரம் பாதுகாக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4b3987a2-64d8-48e5-8c61-901378b23cdc/26-6a7f356fb8c64.webp' /></p><p></p><p>பீர் உற்பத்தியாளர்களுக்கும் இது பெரிய நிம்மதியைக் கொடுத்தது.

ஆனால் வரலாறு மீண்டும் ஒரு திருப்பத்தை ஏற்படுத்தியது. இரண்டாம் உலகப் போரின்போது பழுப்பு நிறக் கண்ணாடிப் பாட்டில்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது.</p><p> இதனால் சில உற்பத்தியாளர்கள் மீண்டும் வெளிப்படையான பாட்டில்களைப் பயன்படுத்த வேண்டிய சூழல் உருவானது. ஆனால் அவற்றில் விற்கப்பட்ட பீரை வாடிக்கையாளர்கள் அவ்வளவாக விரும்பவில்லை.

இதற்கு ஒரு வித்தியாசமான தீர்வை உற்பத்தியாளர்கள் கண்டுபிடித்தனர்.</p><p>பச்சை நிறக் கண்ணாடிப் பாட்டில்களை பயன்படுத்தத் தொடங்கி, அவற்றில் விற்கப்படும் பீரை பிரீமியம் வகை பீர் என்ற தோற்றத்தில் சந்தைப்படுத்தினர். இதன் மூலம் பச்சை பாட்டில்களுக்கும் தனி அடையாளம் உருவானது.

அதன் பிறகு தான் பீர் உலகில் இரண்டு நிறங்கள் மிகவும் பிரபலமாகியதாக வரலாற்று சான்றுகள் காணப்படுகின்றன.&nbsp;<br></p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்<b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"> FOLLOW NOW&nbsp;</a></u></b> &nbsp; &nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-14T15:36:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாட்டில் படுகொலை செய்யப்பட்ட இலங்கை இளைஞன் - தந்தை வெளிப்படுத்திய தகவல்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-lankan-boy-dies-in-japan-revealed-details-1786715325"></link>
            <id>https://tamilwin.com/article/sri-lankan-boy-dies-in-japan-revealed-details-1786715325</id>
            <summary type="text">ஜப்பானில் படுகொலை செய்யப்பட்ட தனது மகனுக்கு நீதி பெற்றுத் தருவதாக டோக்கியோவிலுள்ள இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளதாக உயிரிழந்த இளைஞனின் தந்தை தெரிவித்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜப்பானில் படுகொலை செய்யப்பட்ட தனது மகனுக்கு நீதி பெற்றுத் தருவதாக டோக்கியோவிலுள்ள இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளதாக உயிரிழந்த இளைஞனின் தந்தை தெரிவித்துள்ளார். </p><p>

மகனின் எதிர்பாராத மரணத்தால் குடும்பமே நிலைகுலைந்துள்ளதாக தந்தையான ஜே.ஏ. லயனல் சுசந்த ஜயகொடி தெரிவித்துள்ளார்.
</p><p>
வளமான எதிர்காலத்தை உருவாக்கும் நோக்கில் தனது மகன் ஜப்பான் சென்ற நிலையில், இப்படியான துயரம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.</p><p> </p><h2><b>

இலங்கை இளைஞன்&nbsp;கொலை</b></h2><p>கடந்த எட்டாம் திகதி ஜப்பானின் சிபா மாகாணத்தில் உள்ள நகரேயாமா நகரில் இடம்பெற்ற மோதலில் 21 வயதுடைய பிரவீன் இசுரு கொலை செய்யப்பட்டார். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/eacf8a83-3114-43cb-a824-61aead40c71c/26-6a7f2e4111491.webp' /></p><p>இது குறித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது, தந்தை இவ்வாறு தெரிவித்துள்ளார். </p><p>

வழமையாக தாய், தந்தையுடன் உரையாறும் பிரவீன் அன்றைய தினம் தொலைபேசி அழைப்பை எடுக்காத நிலையில் அவரை பெற்றோர் தேடியுள்ளனர்.</p><p> 

எனினும் மகனிடம் இருந்து எந்த பதிலும் கிடைக்காமையினால், தாய் மிகவும் கவலையடைந்தாக அவர் குறிப்பிட்டுள்ளார். </p><h3><b>

மற்றொரு இலங்கையர்&nbsp; கைது </b></h3><p>கடந்த 11 ஆம் திகதி பெருமளவில் எதிர்பார்த்திருந்தும் மகனிடமிருந்து அழைப்பு எதுவும் வரவில்லை. காலை 11:20 மணியளவில் பிரவீனின் கையடக்கத் தொலைபேசியிலிருந்து வந்த அழைப்பில் வேறு ஒருவரை உரையாடினார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/328b345c-5c83-45de-9145-cde65378e381/26-6a7f2e41dfa14.webp' /></p><p>வன்முறை சம்பவம் ஒன்றில் சிக்கிய பிரவீன் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறினார். அதனை நம்ப முடியவில்லை. ஒரு மணி நேரத்தின் பின்னர் அடுத்த அழைப்பில் பிரவீன் உயிரிழந்துவிட்டதாக குறிப்பிட்டுள்ளனர். </p><p>அந்த கணம் குடும்பம் அதிர்ச்சி அடைந்தது. அதிலிருந்து இன்னமும் மீளவில்லை என தந்தை வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.</p><p> 

ஜப்பானிய பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட ஆரம்ப விசாரணைகளில், சிபா மாகாணத்தின் நகரேயாமா நகரில் உள்ள வீடு ஒன்றில் இடம்பெற்ற இந்த கத்திக்குத்துச் சம்பவத்தினாலேயே பிரவீன் கொல்லப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. </p><p>

இந்த கொலை முயற்சி தொடர்பில் மற்றொரு இலங்கையர் ஜப்பானிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.</p>]]></content>
            <updated>2026-08-14T15:28:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[27 வயதை தொட்ட யாஷிகா ஆனந்த்.. பிறந்தநாளை எப்படி கொண்டாடி இருக்கிறார் பாருங்க]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/yashika-aannand-turns-27-birthday-celebration-1786721246"></link>
            <id>https://cineulagam.com/article/yashika-aannand-turns-27-birthday-celebration-1786721246</id>
            <summary type="text">நடிகை யாஷிகா ஆனந்த் மிக இளம் வயதிலேயே தமிழ் சினிமாவில் நடிகையாக அதிகமாக ஆகி அதிக ரசிகர்களை கவர்ந்தவர். குறிப்பாக அவர் படங்களில் தாராள கவர்ச்சி காட்டி ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நடிகை யாஷிகா ஆனந்த் மிக இளம் வயதிலேயே தமிழ் சினிமாவில் நடிகையாக அதிகமாக ஆகி அதிக ரசிகர்களை கவர்ந்தவர். குறிப்பாக அவர் படங்களில் தாராள கவர்ச்சி காட்டி நடித்து பெரிய அளவில் வைரல் ஆனவர் என்பது குறிப்பிடத்தக்கது.</p><p>இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் அவர் நடித்து இருந்தது மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. அதனை தொடர்ந்து பிக் பாஸ் ஷோவிலும் கலந்து கொண்டு யாஷிகா ஆனந்த் பெரிய அளவில் பிரபலமானார். </p><p>
தற்போது வளர்ந்து வரும் நடிகையாக இருக்கும் யாஷிகா ஆனந்துக்கு instagram-ல் 4.1 மில்லியன் ரசிகர்கள் இருக்கிறார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/76da5f31-c026-4a72-a2dd-9679d800ebf4/26-6a7f33e64187c.webp' /></p><p> </p><h2>
பிறந்தநாள் </h2><p>யாஷிகா தற்போது 27 வயதை தொட்டு இருக்கும் நிலையில் பிறந்த நாளை கேக் வெட்டி நண்பர்களுடன் குஷியாக கொண்டாடி இருக்கிறார்.
</p><p>
அவரது பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்களை பாருங்க.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-14T15:27:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானியாவை அணு ஆயுதம் பெற்ற முதல் இஸ்லாமிய குடியரசு என விமர்சித்த நெதன்யாகு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/netanyahu-calls-uk-first-nuclear-islamic-state-1786720585"></link>
            <id>https://news.lankasri.com/article/netanyahu-calls-uk-first-nuclear-islamic-state-1786720585</id>
            <summary type="text">Netanyahu calls UK First Nuclear Islamic State: பெஞ்சமின் நெதன்யாகு பிரித்தானியாவை கடுமையாக விமர்சித்துள்ளார்.

பிரித்தானிய இஸ்லாமிய குடியரசுஇஸ்ரேல்...</summary>
            <content type="html"><![CDATA[<p>Netanyahu calls UK First Nuclear Islamic State: பெஞ்சமின் நெதன்யாகு பிரித்தானியாவை கடுமையாக விமர்சித்துள்ளார்.</p><h2>

பிரித்தானிய இஸ்லாமிய குடியரசு</h2><p>இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, சமீபத்தில் அளித்த பேட்டியில், பிரித்தானியாவை “the Islamic republic of Britain” எனக் குறிப்பிட்டு, அது “அணு ஆயுதம் பெற்ற முதல் இஸ்லாமிய குடியரசு” என விவரித்துள்ளார்.</p><p>இஸ்ரேல்-பிரித்தானியா இடையிலான உறவுகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள சூழலில் நெதன்யாகு இந்த கருத்துகளை வெளியிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7197af56-50d0-4aaf-bb7b-2bc1abef3d02/26-6a7f314ada7ff.webp' /></p><p>
</p><h2>
விளைவுகள்</h2><p>புதிய பிரித்தானிய பிரதமர் ஆன்டி பர்னாம், காசா போரில் இஸ்ரேலின் நடவடிக்கைகளை விமர்சித்து, சட்டவிரோத குடியேற்றப் பொருட்கள் மீது தடைகள் விதிக்கலாம் என அறிவித்துள்ளார்.</p><p>

இஸ்லாமோபோபிக் பேச்சுகள் அதிகரிப்பதால், தங்கள் சமூகத்திற்கு எதிரான வெறுப்பு குற்றங்கள் அதிகரித்துள்ளதாக பிரித்தானியாவின் முஸ்லிம் தலைவர்கள் எச்சரித்துள்ளனர்.</p><p></p><p>இஸ்ரேல் எதிர்க்கட்சித் தலைவர்கள், “இஸ்ரேலின் முக்கிய கூட்டாளியை இழிவுபடுத்தும் வகையில் நெதன்யாகு பேசியிருப்பது, கடுமையான தூதரகத் தோல்வி” எனக் கண்டித்துள்ளனர்.</p><p>இந்த கருத்துகள், நெதன்யாகுவின் அரசியல் எதிர்காலத்தைப் பாதிக்கக்கூடியதாகவும், உலகளாவிய அளவில் இஸ்ரேலின் தனிமைப்படுத்தலை மேலும் தீவிரப்படுத்தக்கூடியதாகவும் பார்க்கப்படுகின்றன.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-14T15:14:00+00:00</updated>
        </entry>
    </feed>
