<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-07-25T00:46:41+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பகுதியில் 14 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய பாதுகாவலருக்கு நேர்ந்த கதி ; நீதிமன்றம் அதிரடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/guardian-jailed-for-assaulting-14-year-old-girl-1784940180"></link>
            <id>https://jvpnews.com/article/guardian-jailed-for-assaulting-14-year-old-girl-1784940180</id>
            <summary type="text">2017 செப்டம்பர் மாதம் வவுனியா, பூவரசன்குளம் பகுதியில் பெற்றோரால் கைவிடப்பட்ட 14 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய 54 வயது பாதுகாவலர...</summary>
            <content type="html"><![CDATA[<p>2017 செப்டம்பர் மாதம் வவுனியா, பூவரசன்குளம் பகுதியில் பெற்றோரால் கைவிடப்பட்ட 14 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய 54 வயது பாதுகாவலரை, வவுனியா மேல்நீதிமன்ற நீதிபதி “குற்றவாளி” என அறிவித்து நேற்று (24) தீர்ப்பளித்தார்.
</p><p>
பாதிக்கப்பட்ட சிறுமி கருவுற்றமையைத் தொடர்ந்து பொலிஸ் புலன் விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டன. அதன் பிரகாரம், 2017ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சந்தேக நபருக்கு எதிராக வவுனியா நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/30397874-c2cd-48c3-b924-f0007438f3cc/26-6a6406964dde5.webp' /></p><p>
</p><p>
அதனை தொடர்ந்து, 2023இல் சந்தேக நபருக்கு எதிராக சட்ட மாஅதிபர் திணைக்களத்தினால் குற்றப்பகர்வுப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
</p><p>
இந்த வழக்கானது விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில், சந்தேக நபர் தலைமறைவாகியிருந்தார். அதனையடுத்து, சந்தேக நபர் முன்னிலையாகாத இவ்வழக்கானது சட்ட மாஅதிபர் திணைக்களத்தின் அரச சட்டத்தரணியால் நெறிப்படுத்தப்பட்டது.</p><p>

இவ்வழக்கு விசாரணைகளின் பின்னர், தீர்ப்பினை வழங்கிய நீதிபதி, வழக்கு தொடுத்தவர் தரப்பானது சந்தேக நபருக்கு எதிரான குற்றச்சாட்டினை சந்தேகத்துக்கு அப்பாற்பட்டு நிரூபித்ததால் அந்த நபர் “குற்றவாளி” என அறிவித்தார்.</p><p> 


அத்தோடு, குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனையும், ஒரு இலட்சம் ரூபா நீதிமன்ற அபராதம் மற்றும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஒரு மில்லியன் ரூபா இழப்பீடும் செலுத்தப்பட வேண்டும் என தீர்ப்பளித்தார். </p><p>

இந்த குற்றச்செயலின்போது எதிரியால் சிறுமிக்கு இழைக்கப்பட்ட கடுமையான உடல் மற்றும் உளவியல் சித்திரவதைகள், சிறுமி கருவுற்றமை, குற்றவாளி வழக்கு விசாரணைகளிலிருந்து தலைமறைவானமை, சிறுமியின் பாதுகாவலரே குறித்த செயலை புரிந்தமை போன்றவை குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனை விதிக்கப்பட பிரதான காரணிகளாக அமைந்துள்ளன என மேல்நீதிமன்ற நீதிபதி தனது தீர்ப்பில் மேலும் சுட்டிக்காட்டியிருந்தார்.</p>]]></content>
            <updated>2026-07-25T00:43:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பஹ்ரைனில் அமேசான் டேட்டா சென்டரை குறிவைத்து ஈரான் தாக்குதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/iran-claims-attack-on-amazon-bahrain-centre-1784939712"></link>
            <id>https://news.lankasri.com/article/iran-claims-attack-on-amazon-bahrain-centre-1784939712</id>
            <summary type="text">மத்திய கிழக்கில் அமெரிக்கா-ஈரான் இடையேயான பதற்றம் மேலும் தீவிரமடைந்துள்ளது.

ஈரான் புரட்சிகர காவல்படை (Revolutionary Guards), பஹ்ரைனில் உள்ள அமெரிக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>மத்திய கிழக்கில் அமெரிக்கா-ஈரான் இடையேயான பதற்றம் மேலும் தீவிரமடைந்துள்ளது.

ஈரான் புரட்சிகர காவல்படை (Revolutionary Guards), பஹ்ரைனில் உள்ள அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனமான அமேசானுக்கு சொந்தமான டேட்டா சென்டரை குறிவைத்து தாக்கியதாக அறிவித்துள்ளது.
</p><p>
ஈரான் அரசுத் தொலைக்காட்சியில் வெளியிடப்பட்ட அறிக்கையில், “அமெரிக்க இராணுவத்திற்கான தகவல் சேகரிப்பில் முக்கிய பங்கு வகிக்கும் அமேசான் டேட்டா சென்டர் கட்டிடம் அழிக்கப்பட்டது” என தெரிவித்துள்ளனர். </p><p></p><p>ஆனால், இதுவரை அமேசான் அல்லது பஹ்ரைன் அதிகாரிகள் எந்தவிதமான கருத்தும் வெளியிடவில்லை.
</p><p>
மத்திய கிழக்கில் அமெரிக்க இராணுவம் பயன்படுத்தும் எந்த வசதியும், ஈரானுக்கு எதிரான தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கச் சரியான இலக்காக இருக்கும் என ஈரான் தெரிவித்துள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/29e3320d-b4ee-4492-8721-4656e73942e6/26-6a6404c216d72.webp' /></p><p>இதற்கு முன்னர், கடந்த புதன்கிழமையும் அதே டேட்டா சென்டரை குறிவைத்து தாக்கியதாக IRGC தெரிவித்திருந்தனர்.
</p><p>
இந்தச் சம்பவம், அமெரிக்கா-ஈரான் இடையேயான போர் சூழ்நிலையை மேலும் மோசமாக்கும் அபாயம் உள்ளது. </p><p>அமெரிக்கா, சமீபத்தில் ஈரானின் பல இடங்களில் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, ஈரான் பல்வேறு இடங்களில் பதிலடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

மத்திய கிழக்கில் உள்ள பல நாடுகள், இந்த நிலைமை காரணமாக பாதுகாப்பு எச்சரிக்கை வெளியிட்டுள்ளன. </p><p>குறிப்பாக, வளைகுடா நாடுகளில் உள்ள முக்கிய தொழில்நுட்ப மற்றும் எரிசக்தி நிறுவனங்கள், சைபர் மற்றும் உடல் தாக்குதல்களுக்கு ஆளாகும் அபாயம் அதிகரித்துள்ளதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-25T00:33:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[பழமை அரசியல் முகங்களை ஒரே புகைப்படத்தில் தோன்றவைத்த பிணைமுறியால் முறித்த இருக்கரங்கள்...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/the-bonds-that-united-the-losers-have-been-broken-1784898525"></link>
            <id>https://ibctamil.com/article/the-bonds-that-united-the-losers-have-been-broken-1784898525</id>
            <summary type="text">நீதித்துறையின் சுதந்திரத்தைப் பாதுகாக்க வேண்டும் என்ற முழக்கத்தின் கீழ், இலங்கையின் முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்கள் ஒரே மேசையில் கடந்த 23 ஆம் திகதி அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீதித்துறையின் சுதந்திரத்தைப் பாதுகாக்க வேண்டும் என்ற முழக்கத்தின் கீழ், இலங்கையின் முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்கள் ஒரே மேசையில் கடந்த 23 ஆம் திகதி அமர்ந்த காட்சி அரசியல் ரீதியாக குறிப்பிடத்தக்க ஒன்றாக அமைந்தது. </p><p>

ஆனால் அந்தப் புகைப்படத்தை அரசியல் நினைவுகளின் கண்ணாடியில் பார்த்த பலருக்கு அது ஜனநாயகத்தைக் காப்பதற்கான புதிய தொடக்கமாக அல்ல, கடந்த கால அரசியல் கூட்டணிகளின் மீள்வருகையாகவே தோன்றியது.
</p><p>
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீட்டிக்கும் அரசாங்கத்தின் முன்மொழிவுக்கு எதிராக ஒருங்கிணைந்த பதிலை உருவாக்கும் நோக்கில், மொட்டுக்கட்சியின் நாமல் ராஜபக்ச எழுத்துப்பூர்வமாக விடுத்த கோரிக்கையைத் தொடர்ந்து, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இந்த உயர்மட்டக் கூட்டத்தை கூட்டினார்.</p><p></p><h2>நீதித்துறையைப் பற்றிய ஆலோசனை</h2><p> </p><p>

இதில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, முன்னாள் பிரதமர் தினேஷ் குணவர்தன,பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச , மற்றும் ஐக்கிய குடியரசு முன்னணி தலைவர் பாட்டலி சம்பிக்க ரணவக்க ஆகியோர் இக்கூட்டத்தில் அடங்குவர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e1f8fb67-b60b-4409-8a97-8bcae4c1cfbe/26-6a637525bc917.webp' /></p><p>
</p><p>அதிகாரப்பூர்வமாக இது நீதித்துறையைப் பற்றிய ஆலோசனையாக இருந்தாலும், அரசியல் ரீதியாக அந்த அறையில் அமர்ந்திருந்த முகங்கள்தான் அதிக கவனத்தை ஈர்த்தன.
</p><p>
ஒரு காலத்தில் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்தவர்களும், தேர்தல் மேடைகளில் ஒருவரை ஒருவர் தோற்கடிக்கப் போராடியவர்களும், இப்போது "நீதித்துறை சுதந்திரம்" என்ற பொதுவான கருப்பொருளின் கீழ் ஒன்றிணைந்திருந்தனர். </p><p>

சஜித் பிரேமதாசவும் ரணில் விக்ரமசிங்கவும் அதற்கான மிகத் தெளிவான எடுத்துக்காட்டாக இருந்தனர். </p><p>

ஐக்கிய தேசியக் கட்சியின் உட்பிளவுகள், திறைசேரிப் பத்திர விவகாரத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட அரசியல் மோதல்கள், பின்னர் ஐக்கிய மக்கள் சக்தி உருவான வரலாறு ஆகியவற்றின் பின்னணியில், இவர்கள் இருவரும் ஒரே மேசையில் அமர்ந்திருப்பது இலங்கை அரசியலின் புதிய சமன்பாடுகளை வெளிப்படுத்தியது.
</p><p>
அந்த மேசையில் ரணில் விக்கிரமசிங்க மட்டும் அல்ல. முன்னாள் பிரதமர் தினேஷ் குணவர்தன, நாமல் ராஜபக்ச, பாட்டளி சம்பிக்க ரணவக்க, விமல் வீரவன்ச, ரவூப் ஹக்கீம், சாகல ரத்நாயக்க, திரான் அலஸ், திலித் ஜயவீர உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
</p><p>
இது ஒரு சாதாரண எதிர்க்கட்சிக் கூட்டமாக இல்லாமல், கடந்த இரு தசாப்தங்களாக இலங்கையின் ஆட்சியிலும் அதிகார மையங்களிலும் முக்கிய பங்கு வகித்த அரசியல் தலைமைகளின் மறுசேர்க்கையை நினைவூட்டும் நிகழ்வாக அமைந்தது.</p><p></p><h2>பொது நிர்வாகம் தொடர்பான சர்ச்சை</h2><p>
</p><p>
இந்தக் கூட்டத்தின் மிகப் பெரிய முரண்பாடு, நீதித்துறையின் சுதந்திரத்தைப் பாதுகாக்க வேண்டும் என்று வலியுறுத்திய பல அரசியல் தலைவர்களே தங்களது அரசியல் வாழ்க்கையின் பல கட்டங்களில் நீதித்துறை, அரசியலமைப்பு அல்லது பொது நிர்வாகம் தொடர்பான சர்ச்சைகளில் சிக்கியவர்களாக இருந்ததுதான். </p><p>

நாமல் ராஜபக்ச தற்போது மோசடி குற்றச்சாட்டுகள் தொடர்பாக நீதிமன்றத்தில் பிணையில் உள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0ff0047c-3245-453d-8368-ab2c674ee022/26-6a6375250c7e4.webp' /></p><p> 

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் பொது நிதி பயன்படுத்தப்பட்டமை தொடர்பான வழக்கில் நீதிமன்ற நடவடிக்கைகளை எதிர்கொண்டு வருகிறார். </p><p>

மேலும், ரவி கருணாநாயக்க, உதய கம்மன்பில, சாமர சம்பத் தசநாயக்க உள்ளிட்ட பலரும் பல்வேறு வழக்குகளில் நீதிமன்றங்களின் முன் நிற்கும் அரசியல் முகங்களாக உள்ளனர்.</p><p>

இவ்வாறான பின்னணியில், நீதித்துறையின் சுயாதீனத்தைப் பாதுகாக்கும் உரிமையை அவர்கள் முன்வைப்பதை சட்டரீதியாக மறுப்பதற்கு அடிப்படை இல்லாவிட்டாலும், அதன் அரசியல் நம்பகத்தன்மை குறித்து பொதுமக்கள் கேள்வி எழுப்புவது இயல்பானதே. </p><p>

இன்று நீதித்துறையின் மீது அரசாங்கம் தலையிடுகிறது என்று குற்றம்சாட்டும் அரசியல் தலைமைகள், தாங்கள் ஆட்சியில் இருந்த காலங்களில் நீதித்துறை சுதந்திரம் குறித்து எழுந்த விமர்சனங்களுக்கு எவ்வாறு பதிலளித்தனர் என்பதையும் மக்கள் நினைவுகூர்கிறார்கள்.</p><p>

கூட்டத்தில் உரையாற்றிய சஜித் பிரேமதாச, "அரசாங்கம் நீதித்துறையின் மீது கை வைத்துள்ளது" என்று குற்றம்சாட்டினார். அனுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் நீதித்துறையை அரசியல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயல்கிறது என்றும் அவர் வாதிட்டார்.</p><p> 

மறுபுறம், ரணில் , நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீட்டிப்பது அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையில் மக்கள் வாக்கெடுப்புக்கு உட்படுத்தப்பட வேண்டிய விடயம் என வலியுறுத்தினார். நாட்டில் நிலுவையில் உள்ள சுமார் 11 இலட்சம் வழக்குகளைத் தீர்ப்பதற்காக நாடாளுமன்றத் தெரிவுக்குழுவை அமைக்க வேண்டும் என்றும் அவர் முன்மொழிந்தார்.</p><p></p><h3>ஊழல், குடும்ப ஆட்சி, அதிகார துஷ்பிரயோகம்&nbsp;</h3><p>

நாமல் ராஜபக்ச, "நீதித்துறை மற்றும் காவல்துறையை அரசியல் கருவிகளாக மாற்ற அரசாங்கம் முயன்றால் ஜனநாயகத்தைப் பாதுகாப்பது அனைவரின் பொறுப்பு" என்றார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cfde039d-adc7-426f-bb51-0adabbeb7518/26-6a637523a6430.webp' /></p><p> </p><p>

விமல் வீரவன்ச, "அரசாங்கத்தின் செயல்களே பல ஆண்டுகளாகப் பிரிந்திருந்த எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்துள்ளன" என்று கூறினார்.
</p><p>
ரவூப் ஹக்கீம், பாட்டளி சம்பிக்க ரணவக்க உள்ளிட்டவர்களும் அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகம் தொடர்பான அச்சங்களை முன்வைத்தனர்.</p><p>ஆனால் இந்தக் கூட்டத்தின் உண்மையான அரசியல் செய்தி, நீதிபதிகளின் ஓய்வுவயது விவகாரத்தைத் தாண்டி இருந்தது.</p><p>

அரசாங்கத்திற்கு எதிராக பல்வேறு அரசியல் சக்திகளை ஒரே மேடையில் நிறுத்தும் முயற்சி இது என்ற வாசிப்பும் உருவாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fd5dff61-26f1-4977-8a95-049541ba87bf/26-6a63752459044.webp' /></p><p> </p><p>

ஒருகாலத்தில் ஊழல், குடும்ப ஆட்சி, அதிகார துஷ்பிரயோகம் போன்ற குற்றச்சாட்டுகளை ஒருவர்மீது ஒருவர் முன்வைத்த தலைவர்கள், இன்று ஜனநாயகத்தைப் பாதுகாப்போம் என்ற ஒரே முழக்கத்தின் கீழ் தோன்றியிருப்பது அரசியல் தேவையா அல்லது கொள்கை மாற்றமா என்ற கேள்வி இன்னும் விடைபெறவில்லை.</p><p>

இந்த அணிதிரட்டல் தேர்தல் அரசியலை முன்னிட்டு பழைய அதிகார மையங்கள் மீண்டும் ஒருங்கிணையும் ஆரம்ப அறிகுறியாக கூட இருக்கலாம்.
</p><p>
இந்தக் கேள்விகளுக்கு உடனடி பதில் அளிக்க முடியாது. ஆனால் ஒரு விடயம் தெளிவாகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரே அறையில் கூட அமர முடியாத அரசியல் தலைவர்கள், இன்று ஒரே புகைப்படத்தில் தோன்றியுள்ளனர்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-25T00:30:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[கட்டுநாயக்கவில் கைது செய்யப்பட்ட ஸ்பெயின் நாட்டு பொறியியலாளர்...!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/spanish-man-arrested-with-cocaine-in-sri-lanka-1784939324"></link>
            <id>https://ibctamil.com/article/spanish-man-arrested-with-cocaine-in-sri-lanka-1784939324</id>
            <summary type="text">பண்டார நாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வெளிநாட்டவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த வேளாண் பொறியியலாளர் ஒருவரே இவ்வாறு க...</summary>
            <content type="html"><![CDATA[<p>பண்டார நாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வெளிநாட்டவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த வேளாண் பொறியியலாளர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>

குறித்த கைது நடவடிக்கை நேற்று (24-07-2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p></p><h2>முதன்மைப் பயணப்பெட்டி</h2><p>இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், சந்தேகநபர் கடந்த ஜூலை 22 ஆம் திகதி அன்று சியெரா லியோனிலிருந்து புறப்பட்டு அடிஸ் அபாபா மற்றும் தோஹா வழியாக கத்தார் ஏர்வேஸ் (QR654) வானூர்தியில் இலங்கையை வந்தடைந்தார்.</p><p>

அவர் வந்தபோது அவரது கைப்பை சோதனையிடப்பட்டு விடுவிக்கப்பட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dccf5167-1a73-47f7-b25b-a8d69ef20269/26-6a64033edf365.webp' /></p><p> 

இருப்பினும் அவரது முதன்மைப் பயணப்பெட்டி (Checked Luggage) அதே வானூர்தியில் வரவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
</p><p>
இந்தநிலையில் நேற்று மாலை 6:30 மணியளவில் தாமதமாக வந்த தனது பயணப்பெட்டியைப் பெற அவர் விமான நிலையத்திற்கு வந்தபோது சுங்க அதிகாரிகள் பயணப்பெட்டியை எக்ஸ்-ரே (X-Ray) பரிசோதனைக்கு உட்படுத்தினர்.</p><p>
</p><p></p><h2>பயணப்பெட்டி&nbsp;</h2><p>இதன்போது பயணப்பெட்டிக்குள் இருந்த 2 கோப்பு வைத்திருப்புகளில் (File Holders) மிக நுணுக்கமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 4 கொக்கெய்ன் பொதிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
</p><p>
அவை சுமார் 109.9 மில்லியன் ரூபாய்க்கும் அதிக மதிப்புள்ள , 2,198 கிராம் (2.198 கிலோகிராம்) கொக்கெய்ன் என்பது கண்டறியப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/08d550b3-bf64-4454-b849-1385c5f07624/26-6a64033d8c3be.webp' /></p><p>

தனிப்பட்ட முறையில் பயணி இல்லாமல் தாமதமாக வந்த பெட்டியாக இருந்த போதிலும் சுங்க அதிகாரிகளினால் இந்த துல்லியமான கடத்தல் முறியடிக்கப்பட்டுள்ளது.
</p><p>
கைது செய்யப்பட்ட சந்தேகநபர், பறிமுதல் செய்யப்பட்ட கொக்கெய்னுடன் மேலதிக விசாரணைகளுக்காக காவல்துறை போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்திடம் (PNB) ஒப்படைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-25T00:29:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[சாவகச்சேரி உப தவிசாளர் தெரிவு ; யாழ்ப்பாண மேல் நீதிமன்றம் அதிரடி உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/jaffna-high-court-delivers-major-ruling-1784939143"></link>
            <id>https://jvpnews.com/article/jaffna-high-court-delivers-major-ruling-1784939143</id>
            <summary type="text">சாவகச்சேரி நகரசபை உப தவிசாளர் பதவி மற்றும் நகரசபை உறுப்புரிமையிலிருந்து ஞானப்பிரகாசம் கிஷோர் என்பவரை நீக்கி வட மாகாண ஆளுநரால் வெளியிடப்பட்ட வர்த்தமானி...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">சாவகச்சேரி நகரசபை உப தவிசாளர் பதவி மற்றும் நகரசபை உறுப்புரிமையிலிருந்து ஞானப்பிரகாசம் கிஷோர் என்பவரை நீக்கி வட மாகாண ஆளுநரால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை இரத்து செய்யக் கோரிய மனு (24) யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.</p><p style="text-align: justify; ">


இந்த வழக்கில் மனுதாரர் சார்பாக சட்டத்தரணி குமாரவடிவேல் குருபரன், எதிர்வரும் 28 ஆம் திகதி நடைபெறவுள்ள சாவகச்சேரி நகரசபையின் புதிய உப தவிசாளர் தெரிவுக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் எனச் சமர்ப்பணங்களை முன்வைத்தார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8bf77d17-3ec8-47bd-a49b-07f574567cd3/26-6a64028946b2b.webp' /></p><p style="text-align: justify; ">

மனுவை ஆராய்ந்த யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதி, புதிய உப தவிசாளர் தெரிவை தடை செய்யக்கோரிய கோரிக்கையை நிராகரித்தார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
அத்துடன் வழக்கின் எழுத்து மூல சமர்ப்பணங்களைச் சமர்ப்பிப்பதற்காக வழக்கை எதிர்வரும் 27 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-07-25T00:26:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[அடுத்தடுத்து வெடித்த குண்டுகள் ; அமெரிக்கவின் தாக்குதல்களால் அதிர்ந்த ஈரானின் கடற்படை தளம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/us-strikes-rock-iran-s-naval-base-1784938199"></link>
            <id>https://canadamirror.com/article/us-strikes-rock-iran-s-naval-base-1784938199</id>
            <summary type="text">அமெரிக்கா-ஈரான் இடையிலான இடைக்கால போர்நிறுத்தம் முறிந்ததை தொடர்ந்து, நேற்று 13-வது நாளாக இரு நாடுகளிடையே சண்டை நடந்தது.

ஈரான் வடபகுதியில் புரட்சிகர...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்கா-ஈரான் இடையிலான இடைக்கால போர்நிறுத்தம் முறிந்ததை தொடர்ந்து, நேற்று 13-வது நாளாக இரு நாடுகளிடையே சண்டை நடந்தது.</p><p>

ஈரான் வடபகுதியில் புரட்சிகர காவல்படைக்கு சொந்தமான கடற்படை தளம் மீது அமெரிக்க படைகள் தாக்குதல் நடத்தின.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/85a44527-d33a-45ac-a164-0d13f5307f0a/26-6a63fed9612b4.webp' /></p><p> ஈரானின் டிரோன் படகுகள் உள்ளிட்ட கடற்படை சொத்துகள் வைக்கப்பட்டுள்ள கேஷம் தீவிலும், விமான தளமும், அணுஆயுத தளமுமான இஸ்பஹான் மாகாணத்திலும் அமெரிக்கா தாக்குதல் நடத்தியது.</p><p>ஈரானின் குசேஸ்தான் மாகாணம், பார்ஸ் மாகாணம் ஆகியவற்றிலும் வெடிச்சத்தம் கேட்டது. அவாஸ் பகுதியில் அமெரிக்க ஏவுகணை தாக்குதலில் 4 பேர் பலியானார்கள்.
</p><p>
இதற்கு பதிலடியாக, ஈராக்கில் அமெரிக்க படைகள் முகாமிட்டுள்ள ராணுவ தளம் அருகே தொடர்ச்சியாக குண்டுகள் வெடித்தன.</p><p> ராணுவ தளத்தில் இருந்து கரும்புகை வானை நோக்கி எழுந்தது.

இதற்கிடையே, மற்றொரு முக்கியமான வர்த்தக வழித்தடத்தை மூடப்போவதாக ஈரான் ஆதரவுபெற்ற ஹவுதி இயக்கத்தினர் அச்சுறுத்தல் விடுத்துள்ளனர். </p><p>ஆனால், கப்பல்கள் மீதான அவர்களது தாக்குதல் தொடர்ந்தால், ராணுவ ரீதியாக மிகப்பெரிய தண்டனை அளிக்கப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-07-25T00:10:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மழை அங்கியுடனான சிறுவனின் என்புக்கூடு! அகழ்வு நடவடிக்கை ஒத்திவைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/chemmani-child-skeleton-excavation-postponed-1784937575"></link>
            <id>https://ibctamil.com/article/chemmani-child-skeleton-excavation-postponed-1784937575</id>
            <summary type="text">செம்மணி புதைகுழிக்குள் அடையாளம் காணப்பட்ட மழை
அங்கியுடனான சிறுவரின் என்புக்கூடு ஆகஸ்ட் நான்காம் திகதிக்கு பின்னரே அகழ்ந்து
எடுக்கப்படவுள்ளது.


அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>செம்மணி புதைகுழிக்குள் அடையாளம் காணப்பட்ட மழை
அங்கியுடனான சிறுவரின் என்புக்கூடு ஆகஸ்ட் நான்காம் திகதிக்கு பின்னரே அகழ்ந்து
எடுக்கப்படவுள்ளது.
</p><p>

அதேவேளை குறித்த என்பு கூடு தொடர்பில் எவருக்கேனும் தகவல்கள்
தெரிந்திருந்தால் அது தொடர்பில் நீதிமன்றுக்கு அறிவிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
சட்டத்தரணி
வி.எஸ் நிரஞ்சன் இதனை தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>செம்மணி புதைகுழிக்கு</h2><p>

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “செம்மணி புதைகுழிக்குள் மழை அங்கியுடன் காணப்பட்ட என்புக்கூடு அகழ்ந்து எடுக்கப்படவில்லை.</p><p> 

அது தொடர்பில் நிபுணர்களின் ஆலோசனைகளை பெற்ற
பின்னரே அதனை அகழ்ந்து எடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/339d5562-3593-4a68-95ac-f5a953f2a963/26-6a63fc6865c20.webp' /></p><p>குறித்த என்புக்கூடு சட்ட ரீதியாக புதைக்கப்பட்டதற்கான அனுமானம் இருப்பதனால் அது தொடர்பிலான தகவல்கள் தெரிந்தவர்கள், நீதிமன்ற பதிவாளருக்கோ, சட்டத்தரணி
ஊடாக நீதிமன்றுக்கோ அல்லது காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்திற்கோ அறிவிக்குமாறு
கேட்டுக்கொள்கிறோம்.
</p><p>
அது தொடர்பிலான தகவல்கள் தெரிந்தால் இந்த அகழ்வு பணிகள் தொடர்பிலான தகவல்கள்
சில வெளிப்படும்” என தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-25T00:00:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[முதல் லொட்டரி டிக்கெட்டிலேயே 3 கோடி வென்ற இளம்பெண்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/gastonia-woman-wins-100k-dollars-lottery-first-try-1784936689"></link>
            <id>https://news.lankasri.com/article/gastonia-woman-wins-100k-dollars-lottery-first-try-1784936689</id>
            <summary type="text">அமெரிக்காவில் இளம் பெண்ணொருவர் வாங்கிய முதல் லொட்டரி டிக்கெட்டிலேயே அவருக்கு அதிர்ஷ்டம் அடித்துள்ளது.
 நார்த் கரோலினா மாநிலம் காஸ்டோனியாவில் வசிக்கும...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவில் இளம் பெண்ணொருவர் வாங்கிய முதல் லொட்டரி டிக்கெட்டிலேயே அவருக்கு அதிர்ஷ்டம் அடித்துள்ளது.
</p><p> நார்த் கரோலினா மாநிலம் காஸ்டோனியாவில் வசிக்கும் காலா ஜெஃப்ரிஸ் (Kahla Jeffries) என்ற பெண், தனது வாழ்க்கையில் முதல் முறையாக வாங்கிய லொட்டரி டிக்கெட்டிலேயே 100,000 டொலர் (இலங்கை பணமதிப்பில் 3.36 கோடி ரூபா) வென்று அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார்.</p><p>காலா, ஹிக்கரி க்ரோவ் ரோடில் உள்ள Will’s Food Store-ல் பெட்ரோல் நிரப்பச் சென்றபோது, தனது அதிர்ஷ்டத்தை ஒருமுறை சோதனை செய்து பார்க்கலாம் என “Cash Payday” என்ற ஸ்கிராட்ச்-ஆஃப் டிக்கெட்டை வாங்கினார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f780a48d-19e4-4d55-a290-3d39b0dbbb00/26-6a63f8f341836.webp' /></p><p>அதைச் சுரண்டியபோது, அவர் வெற்றி பெற்றிருப்பதை அறிந்தார். “நான் பார்த்தது சரி தானா என்று முதலில் நம்பவே முடியவில்லை,” என்று அவர் கூறியுள்ளார்.
</p><p>
அவர் வெற்றியை உறுதிப்படுத்திய பின், நார்த் கரோலினா எஜுகேஷன் லொட்டரி அலுவலகத்தில் சென்று பரிசை பெற்றார். மாநில மற்றும் கூட்டாட்சி வரிகள் கழிக்கப்பட்ட பின், அவர் 72,018 டொலர் தொகையை வீட்டிற்கு எடுத்துச் சென்றார்.
</p><p>
காலா, இந்த வெற்றித் தொகையைப் பயன்படுத்தி ஒரு புதிய கார் வாங்கவும், தனது கல்விக்காக சேமிக்கவும் திட்டமிட்டுள்ளார்.</p><p>
</p><p></p><p>இந்தச் சம்பவம், Beginner’s Luck என்ற சொல்லை மீண்டும் உண்மையாக்கியுள்ளது. மக்கள் பொறுப்புடன் விளையாட வேண்டும் என்றும், அதிர்ஷ்டம் எப்போது, எங்கு வந்து சேரும் என்பதை யாரும் கணிக்க முடியாது.&nbsp;&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-24T23:43:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை அதிகாரிகளை மிரள வைத்த 79 வயது பொறியியலாளர் ; தாமதமாக வந்த பயணபொதியால் அம்பலமான விடயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/authorities-shocked-by-79-year-old-engineer-1784936553"></link>
            <id>https://jvpnews.com/article/authorities-shocked-by-79-year-old-engineer-1784936553</id>
            <summary type="text">பண்டார நாயக்க சர்வதேச வானூர்தி நிலையத்தில் சுங்கத் துறையின் போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவு அதிகாரிகள் நடத்திய தீவிர சோதனையில், சுமார் ரூ. 110 மில்ல...</summary>
            <content type="html"><![CDATA[<p>பண்டார நாயக்க சர்வதேச வானூர்தி நிலையத்தில் சுங்கத் துறையின் போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவு அதிகாரிகள் நடத்திய தீவிர சோதனையில், சுமார் ரூ. 110 மில்லியன் மதிப்புள்ள கொக்கெய்னை இலங்கைக்குள் கடத்த முயன்ற 79 வயதான ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த வேளாண் பொறியியலாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
சந்தேகநபர் கடந்த ஜூலை 22 ஆம் திகதி அன்று சியெரா லியோனிலிருந்து புறப்பட்டு, அடிஸ் அபாபா மற்றும் தோஹா வழியாக கத்தார் ஏர்வேஸ் (QR654) விமானத்தில் இலங்கையை வந்தடைந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8c0e038a-91f8-4c04-95d6-ac46e91aa876/26-6a63f8d1ecb93.webp' />'</p><h2>மேலதிக விசாரணை</h2><p>
</p><p>
அவர் வந்தபோது அவரது கைப்பை சோதனையிடப்பட்டு விடுவிக்கப்பட்டார். ஆனால், அவரது முதன்மைப் பயணப்பெட்டி&nbsp; அதே விமானத்தில் வரவில்லை.
</p><p>
நேற்று (ஜூலை 24) மாலை 6:30 மணியளவில் தாமதமாக வந்த தனது பயணப்பெட்டியைப் பெற அவர் வானூர்தி நிலையத்திற்கு வந்தபோது, சுங்க அதிகாரிகள் பயணப்பெட்டியை எக்ஸ்-ரே பரிசோதனைக்கு உட்படுத்தினர் .
</p><p>
இதன்போது பயணப்பெட்டிக்குள் இருந்த 2 கோப்பு வைத்திருப்புகளில் மிக நுணுக்கமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 4 கொக்கெய்ன் பொதிகள் கண்டுபிடிக்கப்பட்டன.</p><p></p><p>
</p><p>
அவை சுமார் ரூ. 109.9 மில்லியன் ரூபாய்க்கும் அதிக மதிப்புள்ள , 2,198 கிராம், கொக்கெய்ன் என்பது கண்டறியப்பட்டது.
</p><p>
தனிப்பட்ட முறையில் பயணி இல்லாமல் தாமதமாக வந்த பெட்டியாக இருந்தபோதிலும், சுங்க அதிகாரிகளினால் இந்த துல்லியமான கடத்தல் முறியடிக்கப்பட்டுள்ளது.
</p><p>
கைது செய்யப்பட்ட சந்தேகநபர், பறிமுதல் செய்யப்பட்ட கொக்கெய்னுடன் மேலதிக விசாரணைகளுக்காக காவல்துறை போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்திடம்&nbsp; ஒப்படைக்கப்படவுள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-24T23:42:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[விஜய் ஆட்சிக்கு பின் அதிகரித்த இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறல்! சுட்டு வீழ்த்த கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/jaffna-fishermen-urge-navy-to-stop-indian-boats-1784934717"></link>
            <id>https://ibctamil.com/article/jaffna-fishermen-urge-navy-to-stop-indian-boats-1784934717</id>
            <summary type="text">எமது கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து கடற்றொழிலில் ஈடுபடும் இந்திய
கடற்றொழில் படகுகள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டாவது
கட்டுப்படுத்துங்கள் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>எமது கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து கடற்றொழிலில் ஈடுபடும் இந்திய
கடற்றொழில் படகுகள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டாவது
கட்டுப்படுத்துங்கள் என யாழ் மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின்
சம்மேளனம் கடற்படையிடம் கோரிக்கை முன்வைத்துள்ளது.
</p><p>
யாழ். மாவட்ட கூட்டுறவு சங்கத்தில் இடம்பெற்ற
ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
</p><p>
இது குறித்து மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இந்திய கடற்தொழிலாளர்கள் எமது கடற்பரப்புக்குள்
அத்துமீறி நுழைந்து எமது கடற்றொழில் மக்களின் வாழ்வாதாரத்தை முற்று முழுதாக
அழித்துவிட்டு செல்கின்றனர்.</p><p></p><h2>பெறுமதியான வலை</h2><p>
</p><p>இந்திய கடற்றொழிலாளர்களின் இத்தகைய செயற்பாடு பல வருடங்களாக இடம்பெற்றுவரும் நிலையில்
இதனை கட்டுப்படுத்த இந்திய அரசும் தமிழக அரசும் தவறிவிட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/483f4cd1-82e4-445f-b878-b7de7970ee8a/26-6a63f6c70848f.webp' /></p><p>
இந்திய தமிழக புதிய முதல்வராக விஜய் பொறுப்பேற்றதன் பின் அதிகளவிலான இந்திய
கடற்றொழிலாளர்கள் எமது கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டு வருகின்றனர்.
</p><p>
அண்மையில் தீவகக் கடற்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட
இந்திய சட்டவிரோத கடற்றொழிலாளர்கள் எமது கடற்றொழிலாளர்கள் கடலில் வீசியிருந்த பல கோடி
பெறுமதியான வலைகளை அறுத்து நாசம் செய்தனர்.</p><p>
</p><p></p><h2>தொடர்ச்சியான வருகை&nbsp;</h2><p>இந்திய கடற்றொழிலாளர்களின் தொடர்ச்சியான வருகை எமது கடற்றொழிலாளர்களை வாழ்வாதார நீதியாக
பாதிப்பது மட்டுமல்லாது கடற்தொழிலில் இருந்து வேறு தொழில்களுக்கு செல்லவும்
நிர்ப்பந்தித்துள்ளது.</p><p>

இலங்கை கடற்படையிடம் வினையமாக கேட்கிறோம் எல்லை தாண்டும் இந்திய கடற்றொழிலாளர்களை
கட்டுப்படுத்துங்கள் இல்லையேல் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டாவது அவர்களின்
வருகையை கட்டுப்படுத்துங்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/64f8e322-9442-47ba-abe8-9a94cbc181ce/26-6a63f6c650d59.webp' /></p><p>

எங்களால் இனியும் பொறுமை காக்க முடியாது நாட்டின் ஜனாதிபதியையும் துறைசார்
அமைச்சரையும் சந்தித்து எமது கோரிக்கையை தெளிவாக கூற இருக்கிறோம்.
</p><p>
சட்டத்தை நாங்கள் கையில் எடுக்க விரும்பவில்லை ஆகவே இறையுள்ள எமது கடற்
பகுதியை பாதுகாக்கும் அதிகாரமும் கடமையும் கடற்படையிடம் உள்ள நிலையில் எல்லை
தாண்டும் இந்திய கடற்றொழிலாளர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு
கட்டுப்படுத்துங்கள் நாங்கள் பக்க பலமாக இருப்போம்” என தெரிவித்துள்ளனர்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-24T23:36:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையை உலுக்கிய 100 வழக்குகளின் முழுப் பட்டியல்.. திடீரென ஒன்றுகூடிய எதிர்க்கட்சிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/anura-government-sri-lanka-politics-ranil-sajith-1784922155"></link>
            <id>https://tamilwin.com/article/anura-government-sri-lanka-politics-ranil-sajith-1784922155</id>
            <summary type="text">புதிய ஒரு நாடாளுமன்றக் குழுவை நியமிப்பது தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டியிருந்தார். 

நாட்டில் வழக்குகளின் விசாரணையில் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>புதிய ஒரு நாடாளுமன்றக் குழுவை நியமிப்பது தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டியிருந்தார். </p><p>

நாட்டில் வழக்குகளின் விசாரணையில் ஏற்படும் தாமதத்திற்கான சாத்தியமான தீர்வுகளை எடுக்கவே இந்த குழு என தெரிவிக்கப்பட்டது. </p><p>

எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில், ஒன்றுகூடிய எதிர்க்கட்சியினருடனான கூட்டத்தில் தனது கருத்துக்களைத் தெரிவித்த போது அவர் இவ்வாறு கூறியிருந்தார்.&nbsp;</p><p>இந்த திடீர் கூட்டம் தொடர்பிலும் அதன்போது முன்வைக்கப்பட்ட தீர்மானம் தொடர்பிலும் பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன.&nbsp;</p><p>கூட்டத்தின் போது ரணில் விக்ரமசிங்க, "நாடாளுமன்றத்தில் ஒன்றுகூடி ஒரு தீர்மானத்தை முன்வைத்து, அதை அடுத்த சபாநாயகரிடம் ஒப்படைக்குமாறு எதிர்க்கட்சித் தலைவரிடம் நான் கூறுகிறேன்.
</p><p>
இந்த நாட்டில் உள்ள இந்த 1.1 மில்லியன் வழக்குகளுக்குத் தீர்வு காண்பது குறித்து ஆராய ஒரு குழுவை நியமிக்கவும்” என எதிர்க்கட்சி தலைவரிடம் குறிப்பிட்டிருந்தார்.&nbsp;</p><p>இது உள்ளிட்ட பல முக்கிய விடயங்கள் குறித்து ஆராய்கின்றது நியூஸ் இன்சைக்ட் நிகழ்ச்சி,&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/AcM1A-O8k4Y" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-24T23:24:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரான்ஸ் மற்றும் ஸ்பெயினிலிருந்து அவசரமாக வெளியேற்றப்பட்ட 1 லட்சம் மக்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/europe-wildfires-force-140-000-evacuations-1784934985"></link>
            <id>https://canadamirror.com/article/europe-wildfires-force-140-000-evacuations-1784934985</id>
            <summary type="text">ஐரோப்பிய நாடுகளான பிரான்ஸ் மற்றும் ஸ்பெயினில் காட்டுத்தீ அசுர வேகத்தில் பரவி வருவதால், இதுவரை 1 லட்சத்து 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் தங்கள் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஐரோப்பிய நாடுகளான பிரான்ஸ் மற்றும் ஸ்பெயினில் காட்டுத்தீ அசுர வேகத்தில் பரவி வருவதால், இதுவரை 1 லட்சத்து 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் தங்கள் வீடுகளை விட்டு பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். </p><p>ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட் அருகே பற்றி எரியும் தீயைக் கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்கள் இரவு பகலாகப் போராடி வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c3b02f73-f3ed-4035-82c3-de57d24e87be/26-6a63f24af372f.webp' /></p><p>


</p><p>&nbsp;ஐரோப்பாவில் நிலவி வரும் கடும் வெப்ப அலை மற்றும் பலத்த காற்று காரணமாக காட்டுத்தீ மளமளவென பரவி வருகிறது. ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவிலான காடுகள் முற்றிலும் சாம்பலாகியுள்ளன.</p><p> பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் இருந்து மக்கள் ராணுவ உதவியுடன் மீட்கப்பட்டு வருகின்றனர். இதுவரை 1,40,000-க்கும் மேற்பட்டோர் முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

</p><p>நூற்றுக்கணக்கான தீயணைப்பு வாகனங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் மூலம் தீயை அணைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. எனினும், காற்றின் திசை மாறுவதால் தீயைக் கட்டுப்படுத்துவதில் கடும் சவால் நீடித்து வருகிறது.</p><p>
தற்போது நிலைமையைக் கட்டுப்படுத்த பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் நாடுகள் ஐரோப்பிய ஒன்றியத்தின் அவசர உதவியைக் கோரியுள்ளன. </p><p>அதனைத் தொடர்ந்து குரோஷியா, போர்ச்சுகல், செக் குடியரசு போன்ற அண்டை நாடுகள் தீயணைப்பு விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களை அனுப்பி உதவி வருகின்றன.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-24T23:16:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[மருமகனால் கோட்டாபயவிற்கு காத்திருக்கும் பேரிடி - சகோதரி வெளியிட்ட அதிர்ச்சி காணொளி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/gotabaya-rajapaksa-may-be-arrested-cid-inquiry-1784914642"></link>
            <id>https://tamilwin.com/article/gotabaya-rajapaksa-may-be-arrested-cid-inquiry-1784914642</id>
            <summary type="text">முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தொடர்பில் தற்போது பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.&amp;nbsp;கோட்டாபய ராஜபக்சவின் சகோதரியின் மகன், அவருக்கு எதிராக கொழு...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தொடர்பில் தற்போது பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.&nbsp;</p><p>கோட்டாபய ராஜபக்சவின் சகோதரியின் மகன், அவருக்கு எதிராக கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவில் வாக்குமூலம் அளித்துள்ளார்.</p><p>

இந்த வாக்குமூலத்தின் படி கோட்டாபய ராஜபக்சவுக்கு பாரிய சிக்கல் ஏற்படுவதோடு சட்டத்தில் இருந்து தப்பிக்க முடியாத நிலைமை ஏற்படும் என தெரிவிக்கப்படுகின்றது.&nbsp;</p><p>
கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினால் கோட்டாபய ராஜபக்ச மற்றும் சுகீஸ்வர பண்டார ஆகியோருக்கு எதிராக பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
</p><p>கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்தபோது, சுகீஸ்வர பண்டார அவருடைய தனிப்பட்ட செயலாளராகப் பணியாற்றினார். அதற்காக அவர் சம்பளம் பெற்றார்.</p><p>
அதுமட்டுமன்றி, ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியான பின்னரும் விசேட ஜனாதிபதித் திட்டத்தை உருவாக்கி அதிலிருந்தும் அவருக்குச் சம்பளம் வழங்கப்பட்டுள்ளது.</p><p>இந்நிலையில், கோட்டாபய ராஜபக்ச தனது மருமகன் தொடர்பில் வெளியிட்ட தகவல், அவரின் மருமகன் வழங்கிய வாக்குமூலத்திற்கு முரணாகவுள்ளது. எனவே இதன் உண்மைத்தன்மை குறித்து சந்தேகம் எழுவதாக அரசியல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.&nbsp;</p><p>இவ்விடயங்கள் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி,&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/RdSZsItywV0" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-24T23:11:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[சாக்ஷி அகர்வாலை தள்ளி விட்ட கணவர்.. ஆனால் அதன்பின் நடந்ததை பாருங்க]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/sakshi-agarwal-husband-pushes-her-reels-video-1784933488"></link>
            <id>https://cineulagam.com/article/sakshi-agarwal-husband-pushes-her-reels-video-1784933488</id>
            <summary type="text">நடிகை சாக்ஷி அகர்வாலை தெரியாதவர்கள் இருக்க முடியாது. அவர் படங்களில் நடித்து பிரபலம் ஆனதை விட பிக் பாஸ் 3ம் சீசனில் செய்த விஷயங்கள் மூலம் பிரபலம் ஆனது ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நடிகை சாக்ஷி அகர்வாலை தெரியாதவர்கள் இருக்க முடியாது. அவர் படங்களில் நடித்து பிரபலம் ஆனதை விட பிக் பாஸ் 3ம் சீசனில் செய்த விஷயங்கள் மூலம் பிரபலம் ஆனது தான் அதிகம்.</p><p>கவின் - சாக்ஷி காதல் விவகாரம் அந்த பிக் பாஸ் சீசனில் பரபரப்பாக பேசப்பட்டது. அதன் பின் நவநீத் என்பவரை கடந்த வருடம் சாக்ஷி திருமணம் செய்து கொண்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d48fb94a-490a-484e-94ce-731036c81668/26-6a63fa56c1071.webp' /></p><h2>ரீல்ஸுக்காக தள்ளிவிட்ட கணவர்
</h2><p>சாக்ஷி அகர்வாலை அவரது கணவர் தள்ளிவிடுவது போன்ற வீடியோ ஒன்றை வீடியோவை வெளியிட்டு இருக்கிறார்.
</p><p>கீழே விழுந்த சாக்ஷி கிளாமர் ஆன உடையில் எழுவது போல transformation வீடியோவை தான் வெளியிட்டு இருக்கின்றனர். வீடியோவை பாருங்க.&nbsp;</p><p><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/reel/DbFtPXvI0S7/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/reel/DbFtPXvI0S7/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/reel/DbFtPXvI0S7/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by Sakshi Agarwal (@iamsakshiagarwal)</a></p></div></blockquote> <script async src="//www.instagram.com/embed.js"></script></p>]]></content>
            <updated>2026-07-24T22:51:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[நடிகை ஆஷிகா ரங்கநாதன் வெள்ளை நிற சேலையில் அசத்தல் போட்டோஷூட்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/ashika-ranganath-white-saree-photoshoot-1784933343"></link>
            <id>https://cineulagam.com/article/ashika-ranganath-white-saree-photoshoot-1784933343</id>
            <summary type="text">தெலுங்கு மற்றும் தமிழில் பிரபல நடிகையாக இருப்பவர் ஆஷிகா ரங்கநாதன். அவர் அடுத்து தமிழில் சர்தார் 2 படத்தில் நடித்து வருகிறார்.

ஆஷிகாவுக்கு இன்ஸ்டாவி...</summary>
            <content type="html"><![CDATA[<p>தெலுங்கு மற்றும் தமிழில் பிரபல நடிகையாக இருப்பவர் ஆஷிகா ரங்கநாதன். அவர் அடுத்து தமிழில் சர்தார் 2 படத்தில் நடித்து வருகிறார்.</p><p>

ஆஷிகாவுக்கு இன்ஸ்டாவில் 2.7 மில்லியன் ரசிகர்கள் இருக்கிறார்கள்.</p><p>தற்போது வெள்ளை நிற சேலையில் ஆஷிகா அழகிய போஸ் கொடுத்து இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகிவருகிறது. இதோ பாருங்க.</p>]]></content>
            <updated>2026-07-24T22:49:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிக் பாஸ் ரைசா தாராள கிளாமர் போட்டோஷூட்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/raiza-wilson-glamour-photoshoot-1784933174"></link>
            <id>https://cineulagam.com/article/raiza-wilson-glamour-photoshoot-1784933174</id>
            <summary type="text">விஜய் டிவியின் பிக் பாஸ் முதல் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டு பிரபலம் ஆனவர் ரைசா வில்சன். அவர் அதன்பிறகு படங்களில் ஹீரோயினாக நடித்தாலும், சில படங்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>விஜய் டிவியின் பிக் பாஸ் முதல் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டு பிரபலம் ஆனவர் ரைசா வில்சன்.</p><p> அவர் அதன்பிறகு படங்களில் ஹீரோயினாக நடித்தாலும், சில படங்களுக்கு பின் சினிமாவில் இருந்து காணாமல் போனார்.</p><p>

ரைசா தற்போது இன்ஸ்டாவில் அடிக்கடி கவர்ச்சியாக புகைப்படங்கள் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

தற்போது ரைசா ஹாட் உடையில் இருக்கும் லேட்டஸ்ட் ஸ்டில்களை பாருங்க.</p>]]></content>
            <updated>2026-07-24T22:46:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[மோடியை பதவி விலகச் சொல்லுங்கள் ; மெலோனியின் இன்ஸ்டா பக்கத்தில் குவியும் வேண்டுகோள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/requests-flood-meloni-s-instagram-page-1784932567"></link>
            <id>https://jvpnews.com/article/requests-flood-meloni-s-instagram-page-1784932567</id>
            <summary type="text">உங்கள் நெருங்கிய நண்பர் நரேந்திர மோடியை பதவி விலகச் சொல்லுங்கள் என்று, இன்ஸ்டாகிராம் வாயிலாக இத்தாலிப் பிரதமர் ஜார்ஜியா மெலோனிக்கு வேண்டுகோள் குவிந்து...</summary>
            <content type="html"><![CDATA[<p>உங்கள் நெருங்கிய நண்பர் நரேந்திர மோடியை பதவி விலகச் சொல்லுங்கள் என்று, இன்ஸ்டாகிராம் வாயிலாக இத்தாலிப் பிரதமர் ஜார்ஜியா மெலோனிக்கு வேண்டுகோள் குவிந்து வருவது, நீட் எதிர்ப்புப் போராட்டத்தில் திடீர் திருப்பமாக அமைந்துள்ளது.
</p><p>
நாடு முழுவதும் நீட் வினாத்தாள் கசிவுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதானை பதவி விலகக் கோரி கரப்பான்பூச்சி மக்கள் கட்சி சார்பில் நடத்தி வரும் போராட்டம் நாடு முழுவதும் பரவி வரும் நிலையில், திடீர் திருப்பமாக, நாட்டைத் தாண்டி சர்வதேச அளவில் கவனம் ஈர்க்கும் வகையில் மாறியிருக்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1d5530eb-4d51-45c1-9ed4-ed3155da3ceb/26-6a63e8d8cf1d1.webp' /></p><h2>போராட்டம்&nbsp;</h2><p>

இத்தாலிப் பிரதமர் ஜார்ஜியா மெலோனி, தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். </p><p>அந்த வீடியோவுக்கான கருத்துப் பிரிவில் ஏராளமானோர், இந்திய பிரதமர் நரேந்திர மோடியை ராஜிநாமா செய்யச் சொல்லுங்கள் என்று மெலோனிக்கு கோரிக்கை வைத்து வருகிறார்கள்.</p><p></p><p>
</p><p>&nbsp;நாடாளுமன்றம் நோக்கி மாணவர்கள் பேரணியாகச் சென்ற போது, அவர்கள் மீது நடத்தப்பட்ட தடியடி தாக்குதல்களைத் தொடர்ந்து போராட்டம் நாடு முழுவதும் தீவிரமடைந்த நிலையில், இன்ஸ்டாகிராம் வாயிலாக இத்தாலி பிரதமர் வரை சென்றிருக்கிறது.&nbsp;</p><p> மாணவர்களின் மிகப்பெரிய போராட்டத்தின் தாக்கம் இப்போது சர்வதேச அளவிலும் எதிரொலிக்கத் தொடங்கியிருக்கிறது. இத்தாலியப் பிரதமர் ஜார்ஜியா மெலோனியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தனது "அன்பிற்குரிய நண்பரான" மோடியை பதவி விலகுமாறு அவரிடம் வலியுறுத்தும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருவது பேசுபொருளாகியிருக்கிறது.&nbsp;&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-24T22:36:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[போராட்டத்தால் அதிரும் டெல்லி....! மத்திய கல்விச் செயலாளர் பணியிட மாற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/delhi-neet-exam-protest-cockroach-janata-party-1784930996"></link>
            <id>https://ibctamil.com/article/delhi-neet-exam-protest-cockroach-janata-party-1784930996</id>
            <summary type="text">மத்திய கல்வித்துறை செயலாளர் வினீத் ஜோஷியை பணியிட மாற்றம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்தியாவின் நீட் (NEET) வினாத்தாள் கசிவுக்கு எதிராக மாணவர்கள் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>மத்திய கல்வித்துறை செயலாளர் வினீத் ஜோஷியை பணியிட மாற்றம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
</p><p>
இந்தியாவின் நீட் (NEET) வினாத்தாள் கசிவுக்கு எதிராக மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.</p><p>

இந்தநிலையில், குறித்த உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளது.</p><p>
</p><p></p><h2>வினாத்தாள் முறைகேடு</h2><p>இதையடுத்து புதிய கல்வி செயலராக நரேஷ் பால் கங்வார் நியமிக்கப்பட்டுள்ளார்.</p><p>
நீட் வினாத்தாள் கசிவு தொடர்பாக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக்கோரியும் மற்றும் கல்வி முறையில் கல்வி முறையில் முழுமையான சீர்திருத்தம் செய்ய வேண்டும் எனக் கோரியும் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8dd72af5-8f41-4351-a9ca-ff2f000d629d/26-6a63e78e46752.webp' /></p><p>

மத்திய கல்வி அமைச்சரை மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டு வந்த நிலையில் மத்திய அரசு நேற்றிரவு திடீரென மத்திய உயர் கல்வித்துறை செயலாளரை மாற்றி உத்தரவு பிறப்பித்துள்ளது.
</p><p>
அதே போல் பிரதமர் மோடியின் வாக்குறுதியின்படி வினாத்தாள் முறைகேடுகளை மட்டும் விசாரிப்பதற்காக ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் விரைவு சிறப்பு நீதிமன்றத்தை டெல்லி உயர் நீதிமன்றம் அமைத்துள்ளது. </p><p>

இந்த நீதிமன்றத்தின் சிறப்பு நீதிபதியாக அனு குரோவர் பலிகா என்பவர் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-24T22:31:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் ஏற்பட்ட 900-க்கும் மேற்பட்ட காட்டுத்தீ., அர்ஜென்டினாவில் சாதனை வெப்பம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/canada-900-plus-wildfires-argentina-heat-records-1784932165"></link>
            <id>https://news.lankasri.com/article/canada-900-plus-wildfires-argentina-heat-records-1784932165</id>
            <summary type="text">கனடாவில் சமீபத்திய வெப்பம் மற்றும் வறட்சி காரணமாக 900-க்கும் மேற்பட்ட காட்டுத்தீகள் பரவியுள்ளன.

இதுவரை சுமார் 30 லட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பு தீயில்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவில் சமீபத்திய வெப்பம் மற்றும் வறட்சி காரணமாக 900-க்கும் மேற்பட்ட காட்டுத்தீகள் பரவியுள்ளன.
</p><p>
இதுவரை சுமார் 30 லட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பு தீயில் எரிந்துள்ளது. குறிப்பாக நார்த் வெஸ்ட் டெரிட்டரீஸ் மற்றும் ஒன்டாரியோ பகுதிகளில் தீயை கட்டுப்படுத்த முடியாமல் அதிகாரிகள் போராடி வருகின்றனர்.
</p><p>
இந்த தீயின் புகை, காற்றின் வழியாக அமெரிக்காவிலும், வடக்கு ஐரோப்பாவிலும் பரவியதால், பல இடங்களில் காற்றின் தரம் மோசமடைந்தது.</p><p> வட அமெரிக்காவில் தீ பரவல் அதிகரிக்கும் காலம் தொடங்கியுள்ளதால், மேலும் தீ விபத்துகள் ஏற்படும் அபாயம் அதிகம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ec92ea85-8da3-4fab-ad06-7fa99c5255b7/26-6a63e74704fa7.webp' /></p><p>இதே நேரத்தில், அர்ஜென்டினாவின் சால்டா நகரம் வரலாற்றிலேயே அதிகமான இரவு வெப்பநிலையை பதிவு செய்துள்ளது. குளிர்காலத்தில் இருந்தபோதும், வெப்பநிலை 26 டிகிரி செல்ஸியஸுக்கு கீழே குறையாமல் இருந்தது.
</p><p>
சாதாரணமாக அந்த பகுதியில் குளிர்கால இரவு வெப்பநிலை 3 டிகிரி செல்ஸியஸ் மட்டுமே இருக்கும் நிலையில், இந்த மாற்றம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><p>
</p><p></p><p>இந்த அசாதாரண வெப்பம், சோண்டா காற்று (Zonda Wind) மற்றும் எல் நினோ (El Niño) காரணமாக ஏற்பட்டதாக வானிலை நிபுணர்கள் கூறுகின்றனர்.</p><p> எல் நினோ வலுப்பெறுவதால், பசிபிக் பகுதியில் கடும் புயல் செயல்பாடு அதிகரிக்கும் எனவும், பிலிப்பைன்ஸ் அருகே உருவான டிராபிக்கல் ஸ்டார்ம் Noul சீனாவின் தென்கிழக்கு கடற்கரையில் புயலாக மாறும் அபாயம் உள்ளதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-24T22:28:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shan</name>
            </author>
            <title type="text"><![CDATA[முல்லைத்தீவு - பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/annual-pongal-festival-chemmalai-pillayar-temple-1784930552"></link>
            <id>https://tamilwin.com/article/annual-pongal-festival-chemmalai-pillayar-temple-1784930552</id>
            <summary type="text">முல்லைத்தீவு மாவட்டத்தின் பழைய செம்மலை பகுதியில் அமைந்துள்ள வரலாற்றுச்
சிறப்புமிக்க நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் உற்சவம் இடம்பெற...</summary>
            <content type="html"><![CDATA[<p>முல்லைத்தீவு மாவட்டத்தின் பழைய செம்மலை பகுதியில் அமைந்துள்ள வரலாற்றுச்
சிறப்புமிக்க நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் உற்சவம் இடம்பெறவுள்ளது.&nbsp;</p><p>எதிர்வரும் ஆடி மாதம் 17ஆம் நாள் (02.08.2026), சங்கடஹர
சதுர்த்தி திதியை முன்னிட்டு மிகவும் சிறப்பாக நடைபெறவுள்ளதாக ஆலய பரிபாலன சபை
அறிவித்துள்ளது.</p><p>

திருவிழா நாளான 02ஆம் திகதி காலை 7.00 மணிக்கு விசேட அபிஷேகத்துடன் உற்சவ
நிகழ்வுகள் ஆரம்பமாகின்றன.</p><p> </p><p>தொடர்ந்து காலை மற்றும் நண்பகல் நேரங்களில்
விநாயகப் பெருமானுக்கும் பரிவார மூர்த்திகளுக்கும் விசேட பூஜைகள் நடைபெற்று,
விபூதிப் பிரசாதம் மற்றும் காழாஞ்சிப் பிரசாதம் வழங்கப்படுவதுடன், மதியம்
11.30 மணியளவில் அடியவர்களுக்கு அன்னதானமும் வழங்கப்படவுள்ளது.
</p><p>
மாலை 3.30 மணிக்கு, நீராவியடிப் பிள்ளையார் ஆலய பிரதம பூசகரால் பாரம்பரிய
முறைப்படி, நீராவியடிப் பிள்ளையாரின் அருளனுமதியுடன் நாயாறு முனியப்பர்
ஆலயத்திலிருந்து மடைப்பண்டம் எடுத்து வரப்படும்.</p><p></p><h2>இடம்பெறவுள்ள பூஜைகள்..&nbsp;</h2><p> </p><p>பின்னர் மாலை 6.00 மணிக்கு
கச்சை நேருதல், இரவு 7.00 மணிக்கு மடை பரவுதல், இரவு 8.00 மணிக்கு வளந்துக்கு
நூல் சுற்றுதல் ஆகிய நிகழ்வுகள் நடைபெறும்.
அதனைத் தொடர்ந்து இரவு 10.00 மணிக்கு வளந்து நேர்ந்து பொங்கல் நிகழ்வு
இடம்பெறவுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/16d1292f-1295-45e4-90dc-7879f264cd60/26-6a63e4134e786.webp' /></p><p> </p><p>பின்னர் 03.08.2026 அதிகாலை 12.30 மணிக்கு சிறப்பு பூஜை
வழிபாடுகளும், அதிகாலை 2.00 மணிக்கு பரிகலம் வழிவிடுதல் நிகழ்வும் நடைபெற்று
வருடாந்த பொங்கல் உற்சவம் நிறைவடையவுள்ளது.</p><p>

இவ்வுற்சவத்தில் பிரதம குருவாக "சிவாகம கிரியா கிராமஜோதி" சிவசிறி
திருஞானசுந்தர திருஞானசம்பந்தக் குருக்கள் (ஸ்ரீ கற்பக விநாயகர் தேவஸ்தானம் –
குழுழமுனை) தலைமையேற்கவுள்ளதுடன், ஆலய பூசகராக சிவபாதம் கணேசபுவன்
(நீராவியடிப் பிள்ளையார் ஆலயம் – பழைய செம்மலை) வழிபாடுகளை முன்னின்று
நடத்தவுள்ளார்.
</p><p>பொங்கல் தினத்தன்று ஆலயத்திற்கு வருகை தரும் அனைத்து பக்தர்களுக்கும்
அன்னதானம் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.</p><p>

மேலும், பக்தர்கள் பால், தயிர், இளநீர், பூக்கள், பூமாலைகள் மற்றும் பழவகைகள்
உள்ளிட்ட உபயங்களை வழங்கி இறைபணியில் பங்கேற்று விநாயகப் பெருமானின்
திருவருளைப் பெற்றிடுமாறு பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலய பரிபாலன
சபை அன்புடன் அழைப்பு விடுத்துள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-24T22:15:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஒருபக்கம் காதலன், மறுபக்கம் திருமணமானவருடன் பழக்கம்; சடலமாக கிடந்த பெண் பொலிஸ் அதிகாரி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/police-probe-death-of-female-officer-1784920487"></link>
            <id>https://jvpnews.com/article/police-probe-death-of-female-officer-1784920487</id>
            <summary type="text">இந்தியாவில் பெண் பொலிஸ் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர் 24 வயதுடைய...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">இந்தியாவில் பெண் பொலிஸ் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p style="text-align: justify;">

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர் 24 வயதுடைய பெண் பொலிஸ் அதிகாரி பொலிஸ் குடியிருப்பில் தங்கி பணிபுரிந்து வந்துள்ளார்.</p><p style="text-align: justify;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f7bf1b03-86d9-46be-aa29-4825733a0b73/26-6a63ba0bc1f63.webp' /></p><h2 style="text-align: justify;">முதற்கட்ட விசாரணை</h2><p>
</p><p style="text-align: justify; ">
காலை நீண்ட நேரமாக அவரது அறை தறக்கப்படாமல் பூட்டியே இருந்தது. இதனால் சந்தேக மடைந்த சக பொலிசார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது, ரஞ்சனி அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
</p><p style="text-align: justify;">

பொலிசாரின் முதற்கட்ட விசாரணையில், குறித்த இளம் பெண்ணுக்கு ஆண் பொலிஸ் ஒருவருடன் பழக்கம் இருந்ததாகவும், இவர்களது காதல் தொடர்பு குறித்து இரு தரப்பு குடும்பத்தினருக்கும் தெரிந்திருந்ததாகவும் கூறப்படுகிறது.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;">&nbsp;திருமணத்திற்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வந்துள்ளன. இந்த நிலையில் திருப்பூரில் பணியாற்றி வரும் திருமணமான பொலிஸ் ஒருவருடன் ரஞ்சினிக்கு பழக்கம் இருந்தாக கூறப்படுகிறது. மேலும் செல்போனில் இருவரும் அடிக்கடி பேசி வந்ததாக கூறப்படுகிறது.
</p><p style="text-align: justify;">
இந்த விவகாரம் காதலனுக்கு தெரியவந்தது. இதனால் ஆத்திரமடைந்த காதலன் ரஞ்சனியுடன் பேசி வந்த அந்த திருமணமான பொலிஸ்காரரை நேரில் சென்று மிரட்டியுள்ளார். "எங்களுக்குத் திருமணம் நிச்சயமாகி உள்ளது.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;">இனி ரஞ்சனியுடன் பேசுவதையும் தொடர்புகொள்வதையும் நிறுத்திக் கொள்ள வேண்டும்" எனக் கண்டிப்புடன் கூறியுள்ளார்.

இதன் தொடர்ச்சியாக, ரஞ்சனிக்கும் அவரது காதலனுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. </p><p style="text-align: justify;">சம்பவத்தன்றும் ரஞ்சனி தனது காதலனுடன் செல்போனில் வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளார். அவ்வாறு காதலனுடன் போனில் சண்டைபோட்டபடியே வீட்டிற்குள் சென்ற ரஞ்சனி,மன உளைச்சலில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-24T22:10:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[நடுவீதியில் இளைஞனின் உயிரை பறித்த சம்பவம் ; தீவிரமாகும் விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/young-man-killed-in-mid-street-incident-1784930338"></link>
            <id>https://jvpnews.com/article/young-man-killed-in-mid-street-incident-1784930338</id>
            <summary type="text">பொலன்னறுவை - மஹியங்கனை பிரதான வீதியில் நாமல்பொகுண பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றொருவர் பலத்த காயமடைந்து வைத்தியசால...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொலன்னறுவை - மஹியங்கனை பிரதான வீதியில் நாமல்பொகுண பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றொருவர் பலத்த காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
</p><p>
கார் மற்றும் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்ந்து பயணித்தவர் உயிரிழந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/54658dbf-4ffb-437f-9978-610bb728a188/26-6a63e0240826e.webp' /></p><h2>மேலதிக விசாரணை</h2><p>
</p><p>
விபத்தில் பலத்த காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் பொலன்னறுவை வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.</p><p>

உயிரிழந்தவர் திம்புலாகல, மகாஉல்பத பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய நபர் என பொலிஸார் தெரிவித்தனர்.</p><p></p><p>
</p><p>
மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் மதுபோதையில் அலட்சியமான முறையில் வாகனத்தை செலுத்தியதாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.</p><p>


இந்த விபத்து தொடர்பில் காரின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-24T22:00:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[மழை அங்கியுடன் மீட்கப்பட்ட என்புக்கூடு: ஓகஸ்ட் 4ஆம் திகதிக்குப் பின்பே அகழ்வு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/chemmani-grave-raincoat-boy-skeleton-1784929544"></link>
            <id>https://tamilwin.com/article/chemmani-grave-raincoat-boy-skeleton-1784929544</id>
            <summary type="text">யாழ். செம்மணி மனிதப் புதைகுழியில் அடையாளம்
காணப்பட்ட, மழை அங்கியுடன் கூடிய சிறுவரின் என்புக்கூடு எதிர்வரும் ஆகஸ்ட்
4ஆம் திகதிக்குப் பின்னரே முற்றாக ...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ். செம்மணி மனிதப் புதைகுழியில் அடையாளம்
காணப்பட்ட, மழை அங்கியுடன் கூடிய சிறுவரின் என்புக்கூடு எதிர்வரும் ஆகஸ்ட்
4ஆம் திகதிக்குப் பின்னரே முற்றாக அகழ்ந்து எடுக்கப்படவுள்ளது.</p><p>

இது தொடர்பில் செம்மணி மனிதப் புதைகுழி வழக்கில் காணாமல் ஆக்கப்பட்டோர்
சார்பில் முன்னிலையாகும் சட்டத்தரணி வி.எஸ்.நிரஞ்சன் ஊடகங்களுக்குக் கருத்துத்
தெரிவிக்கையில் மேலும் குறிப்பிடுகையில்,</p><p>
</p><p>
"செம்மணி மனிதப் புதைகுழிக்குள் மழை அங்கியுடன் காணப்பட்ட மேற்படி சிறுவரின்
என்புக்கூடு நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை உடனடியாக அகழ்ந்து
எடுக்கப்படவில்லை.</p><p></p><h2>அகழ்வதற்கான நடவடிக்கை</h2><p> </p><p>இது தொடர்பாகத் துறைசார் நிபுணர்களின் ஆலோசனைகளைப் பெற்ற
பின்னரே அதனை அகழ்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f38218ea-4216-4323-b9ac-bbc8c5ba0be7/26-6a63df2bb33b0.webp' /></p><p>

இந்த என்புக்கூடு சட்ட ரீதியாகப் புதைக்கப்பட்டிருக்கலாம் என்ற அனுமானம்
காணப்படுவதால், அது தொடர்பான விவரங்கள் அல்லது தகவல்கள் எவருக்கேனும்
தெரிந்திருந்தால், உடனடியாக நீதிமன்றப் பதிவாளருக்காவோ, சட்டத்தரணி ஊடாக
நீதிமன்றத்துக்கோ அல்லது காணாமல் போனோருக்கான அலுவலகத்துக்கோ அறிவிக்குமாறு
கேட்டுக்கொள்கின்றோம்.
</p><p>
இந்தச் சம்பவம் தொடர்பான உண்மையான தகவல்கள் ஏதேனும் வெளிச்சத்துக்கு வந்தால்,
அது செம்மணி அகழ்வுப் பணிகள் தொடர்பான பல முக்கிய உண்மைகளைக் கண்டறிய உதவும்" என்றார்.</p><p></p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-24T21:54:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[இரண்டாம் நாளிலும் தொடரும் சாதனை.. ஜனநாயகன் சென்னை வசூல் அப்டேட்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/jana-nayagan-2nd-day-box-office-in-chennai-1784905674"></link>
            <id>https://cineulagam.com/article/jana-nayagan-2nd-day-box-office-in-chennai-1784905674</id>
            <summary type="text">நடிகர் விஜய்யின் ஜனநாயகன் படம் தியேட்டரில் ரிலீஸ் ஆனதை விஜய் ரசிகர்கள் வெறித்தனமாக கொண்டாடி வருகின்றனர். கடைசி முறையாக விஜய்யின் படத்தை தியேட்டரில் பா...</summary>
            <content type="html"><![CDATA[<p>நடிகர் விஜய்யின் ஜனநாயகன் படம் தியேட்டரில் ரிலீஸ் ஆனதை விஜய் ரசிகர்கள் வெறித்தனமாக கொண்டாடி வருகின்றனர். கடைசி முறையாக விஜய்யின் படத்தை தியேட்டரில் பார்க்க ரசிகர்கள் எல்லோரும் எமோஷ்னலாக வருகின்றனர்.</p><p>அதனால் படம் நல்ல வசூலை முதல் நாளில் இருந்தே குவித்து வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ce4870fc-be3c-4ee6-ae4f-88dd6aec8e12/26-6a637fcc18bf4.webp' /></p><p>
</p><h2>2ம் நாள் வசூல்
</h2><p>இரண்டாம் நாளிலும் நல்ல வசூலை ஜனநாயகன் பெற்று வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னையில் நல்ல வசூல் வந்திருக்கிறது.
</p><p>இரண்டு நாட்களில் மொத்தம் 11 கோடி ரூபாயை ஜனநாயகன் ஈட்டி இருக்கிறது. அடுத்து விடுமுறை நாட்களில் இன்னும் வசூல் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
&nbsp;</p><p><br></p>]]></content>
            <updated>2026-07-24T21:53:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shan</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை ஜப்பானிய தூதரக உயர்மட்ட குழு - ரெலோ தலைமையுடனான சந்திப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/high-level-delegation-japanese-embassy-meets-relo-1784928098"></link>
            <id>https://tamilwin.com/article/high-level-delegation-japanese-embassy-meets-relo-1784928098</id>
            <summary type="text">தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ தலைமையுடனான கலந்துரையாடல் ஒன்றை இலங்கை ஜப்பானிய தூதரக உயர்மட்ட அதிகாரிகள் அடங்கிய குழுவினர்
மேற்கொண்டுள்ளனர்.

மேற்படி ...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ தலைமையுடனான கலந்துரையாடல் ஒன்றை இலங்கை ஜப்பானிய தூதரக உயர்மட்ட அதிகாரிகள் அடங்கிய குழுவினர்
மேற்கொண்டுள்ளனர்.
</p><p>
மேற்படி சந்திப்பில் தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ தலைவரும் வன்னி மாவட்ட
நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன், ரெலோ கட்சியின் தேசிய
அமைப்பாளரும் உள்ளிட்ட பல முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர்.</p><p></p><h2>முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை&nbsp;</h2><p>
</p><p>
நாட்டின் சமகால அரசியல் நடவடிக்கைகள் தொடர்பாகவும், தமிழ் மக்களின் உரிமை
சார்ந்த விடயங்களில் அரசின் தற்போதைய நிலைப்பாடுகள் தொடர்பாகவும் மற்றும்
தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகள் தொடர்பாகவும் பலதரப்பட்ட
கருத்து பரிமாற்றங்கள் நடைபெற்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0e6573f4-b0f0-4fb7-840e-826e34494637/26-6a63da41b28bc.webp' /></p><p>

மேலும், இச்சந்திப்பில் சமகாலத்தில் தமிழர் நலன் மற்றும் உரிமை
விடயங்களுக்காக தமிழ் பேசும் அரசியல் கட்சிகளின் ஒண்றிணைவு தொடர்பாகவும்,
செம்மணி மனித புதைகுழி தொடர்பான மக்களுக்கு நடந்தேறிய அநீதிகளை
முன்னிலைப்படுத்தி அவற்றுக்கான நீதி நிலைநாட்டப்பட கோரிய கலந்துரையாடல்
இடம்பெற்றது.&nbsp;</p><p>அத்துடன், போர்க்காலங்களில் ஐப்பான் அரசு மற்றும் இலங்கைக்கான ஐப்பானிய தூதரகம் எமது
தமிழ் மக்களுக்கு பலதரப்பட்ட உதவிகளை, நிவாரணங்களாக வழங்கியதை
சுட்டிக்காட்டியதுடன், தமிழ் மக்களுக்கு ஐப்பானிய அரசின் உதவி பணிகள் தொடர
வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-24T21:42:55+00:00</updated>
        </entry>
    </feed>
