<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-09-07T22:50:54+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[மடோனா செபஸ்டியன் கிளாமர் போட்டோஷூட்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/madonna-sebastian-glam-photoshoot-1788821318"></link>
            <id>https://cineulagam.com/article/madonna-sebastian-glam-photoshoot-1788821318</id>
            <summary type="text">மடோனா செபஸ்டியன் கிளாமர் போட்டோஷூட்</summary>
            <content type="html"><![CDATA[<p>மடோனா செபஸ்டியன் கிளாமர் போட்டோஷூட்</p>]]></content>
            <updated>2026-09-07T22:48:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிங்கப்பெண்ணே சீரியல் நடிகர் தர்ஷாக் கௌடா குடும்பத்துடன் அழகிய ஸ்டில்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/serial-actor-darshak-gowda-family-photos-1788820940"></link>
            <id>https://cineulagam.com/article/serial-actor-darshak-gowda-family-photos-1788820940</id>
            <summary type="text">சன்டிவியின் சிங்கப்பெண்ணே சீரியல் நடிகர் தர்ஷாக் கௌடா தனது குடும்பத்துடன் இருக்கும் அழகிய புகைப்படங்கள்....</summary>
            <content type="html"><![CDATA[<p>சன்டிவியின் சிங்கப்பெண்ணே சீரியல் நடிகர் தர்ஷாக் கௌடா தனது குடும்பத்துடன் இருக்கும் அழகிய புகைப்படங்கள்.</p>]]></content>
            <updated>2026-09-07T22:42:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[மாளவிகா மோகனன் அழகிய போட்டோஷூட்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/malavika-mohanan-cute-look-at-an-event-1788820706"></link>
            <id>https://cineulagam.com/article/malavika-mohanan-cute-look-at-an-event-1788820706</id>
            <summary type="text">நடிகை மாளவிகா மோகனன் தற்போது தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கிறார். அடுத்து அவர் சர்தார் 2 படத்தின் ரிலீசுக்காக காத்திருக்கிறா...</summary>
            <content type="html"><![CDATA[<p>நடிகை மாளவிகா மோகனன் தற்போது தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கிறார். </p><p>அடுத்து அவர் சர்தார் 2 படத்தின் ரிலீசுக்காக காத்திருக்கிறார்.

தற்போது மாளவிகா மோகனன் அழகிய உடையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட புகைப்படங்கள் இதோ.
</p><p>
இந்த போட்டோக்களுக்கு ரசிகர்களிடம் லைக்குகள் குவிந்து வருகிறது.</p>]]></content>
            <updated>2026-09-07T22:38:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[நடிகை ஈஷா ரெப்பா ட்ரான்ஸ்பரென்ட் சேலையில் ஹாட் போட்டோஷூட்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/eesha-rebba-sizzling-in-transparent-saree-1788819431"></link>
            <id>https://cineulagam.com/article/eesha-rebba-sizzling-in-transparent-saree-1788819431</id>
            <summary type="text">தெலுங்கில் பிரபல நடிகைகளில் ஒருவர் ஈஷா ரெப்பா. ஆந்திராவை பூர்வீகமாக கொண்டவர் என்றாலும் தமிழிலும் சில படங்கள் நடித்து இருக்கிறார்.இன்ஸ்டாவில் 2.4 மில்ல...</summary>
            <content type="html"><![CDATA[<p>தெலுங்கில் பிரபல நடிகைகளில் ஒருவர் ஈஷா ரெப்பா. ஆந்திராவை பூர்வீகமாக கொண்டவர் என்றாலும் தமிழிலும் சில படங்கள் நடித்து இருக்கிறார்.</p><p>இன்ஸ்டாவில் 2.4 மில்லியன் ரசிகர்கள் வைத்திருக்கும் அவர் அடிக்கடி கிளாமராக புகைப்படங்கள் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.</p><p>

தற்போது ட்ரான்ஸ்பரென்ட் சேலையில் அவர் எடுத்த போட்டோஷூட் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-07T22:18:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் சட்டவிரோதமாக மணல் ஏற்றிய உழவு இயந்திரம் மடக்கி பிடிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/tractor-carrying-illegal-sand-seized-in-jaffna-1788816737"></link>
            <id>https://jvpnews.com/article/tractor-carrying-illegal-sand-seized-in-jaffna-1788816737</id>
            <summary type="text">யாழ் வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டில் சட்டவிரோதமான முறையில் இரவு நேரத்தில் மணல் ஏற்றிய உழவு இயந்திரம் மருதங்கேணி பொலிசாரால் மடக்கி பிடிக்கப்பட்டுள்ளத...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">யாழ் வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டில் சட்டவிரோதமான முறையில் இரவு நேரத்தில் மணல் ஏற்றிய உழவு இயந்திரம் மருதங்கேணி பொலிசாரால் மடக்கி பிடிக்கப்பட்டுள்ளதுடன் சந்தேக நபர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.</p><p style="text-align: justify; ">&nbsp; சம்பவம் குறித்து மெலும் தெரிய வருகையில் ,

கட்டைக்காடு பகுதியில் இரவு நேரத்தில் சில உழவு இயந்திரங்கள் மூலம் சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றி அருகில் உள்ள கேவில், நித்தியவெட்டை, வெற்றிலைக்கேணி பகுதிகளுக்கு கொண்டு செல்வதாக மருதங்கேணி பொலிசாருக்கு இரகசிய தகவல் கிடைத்தது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0c144353-6cb6-47b6-b674-5f4c208b308b/26-6a9f2d62c9fc2.webp' /></p><h2 style="text-align: justify; ">&nbsp;சட்ட நடவடிக்கை</h2><p style="text-align: justify; ">

இதனடிப்படையில் குறித்த பகுதியை&nbsp; இரவு சுற்றிவளைத்த மருதங்கேணி பொலிஸ் பொறுப்பதிகாரி&nbsp; தலைமையிலான பொலிஸ் குழுவினர் மணல் ஏற்றிய உழவு இயந்திரத்தை கைப்பற்றினர்.
</p><p style="text-align: justify; ">
தப்பிச் சென்ற சந்தேக நபர்களை கைது செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதுடன் கைப்பற்றப்பட்ட உழவு இயந்திரம் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மருதங்கேணி பொலிஸ் நிலையம் கொண்டு செல்லப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
உழவு இயந்திரம் வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியை சேர்ந்த நபர் ஒருவருக்கு சொந்தமானதென்று பொலிசார் தெரிவித்துள்ளனர்
</p><p style="text-align: justify; ">
குறித்த பகுதியில் இருந்து மேலும் ஒருவரும், கேவில் பகுதியில் இருந்து இன்னொருவரும் தொடர்ச்சியாக களவாக மணல் ஏற்றிவருவது தொடர்பில் பொலிசார் அவதானம் செலுத்தியுள்ளதுடன்.</p><p style="text-align: justify; ">விரைவில் அவர்களை கைது செய்யும் பணி முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸ் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.&nbsp;&nbsp;</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-07T22:15:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானக் கொள்வனவு சர்ச்சை! 2 மில்லியன் டொலர் இழப்பு - 200 மில்லியன் டொலர் இழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/srilankan-airlines-bribery-case-namal-arrested-1788810819"></link>
            <id>https://tamilwin.com/article/srilankan-airlines-bribery-case-namal-arrested-1788810819</id>
            <summary type="text">ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானக் கொள்வனவு தொடர்பான லஞ்ச விவகாரத்தில் நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சுமார் 16.84 மி...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானக் கொள்வனவு தொடர்பான லஞ்ச விவகாரத்தில் நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.</p><p>

சுமார் 16.84 மில்லியன் டொலர் லஞ்சம் பெற முயற்சிக்கப்பட்டதாகவும், அதில் 2 மில்லியன் டொலர் கைமாறியதாகவும் கூறப்படுகிறது.
</p><p>
விமானக் கொள்வனவு ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதால், இலங்கைக்கு சுமார் 200 மில்லியன் டொலர் (65.6 பில்லியன் ரூபா) இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
</p><p>
இந்த விவகாரத்தில், 16.84 மில்லியன் டொலர் இலஞ்சமாகப் பெற முயற்சிக்கப்பட்டதாகக் கூறப்பட்டாலும், இறுதியில் சுமார் 2 மில்லியன் டொலர் மட்டுமே இலஞ்சமாகப் பெறப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p>

இருப்பினும், கொள்வனவு ஒப்பந்தம் பின்னர் ரத்து செய்யப்பட்டதால் ஏற்பட்ட ரத்து கட்டணங்கள் (Cancellation fees), விமான பராமரிப்பு செலவுகள் மற்றும் லீசிங் செலவுகள் போன்றவற்றால் நாட்டின் பொருளாதாரத்திற்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளதாக விளக்கப்பட்டுள்ளது.
</p><p>

இந்த விடயங்கள் தொடர்பில் பேசுகின்றது செய்திகளுக்கு NewsInsightTamil...&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/AdsYi1CP5b0" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-07T22:14:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[&quot;சந்திரனும் அமெரிக்காவிற்குச் சொந்தமானது&quot; ட்ரம்பின் அடுத்த அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/the-moon-belongs-to-america-trump-says-1788808579"></link>
            <id>https://ibctamil.com/article/the-moon-belongs-to-america-trump-says-1788808579</id>
            <summary type="text">&amp;nbsp;அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சமீபத்தில் தனது &#039;ட்ரூத்&#039; சமூக வலைதளக் கணக்கில், சந்திரன் அமெரிக்காவிற்குச் சொந்தமானது என்று கூறி ஒரு புகைப்பட...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சமீபத்தில் தனது 'ட்ரூத்' சமூக வலைதளக் கணக்கில், சந்திரன் அமெரிக்காவிற்குச் சொந்தமானது என்று கூறி ஒரு புகைப்படத்தைப் பதிவிட்டார். ஜனாதிபதி ட்ரம்ப் சமீபத்தில் தனது 'ட்ரூத்' சமூக வலைதளக் கணக்கில், செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட சந்திரனின் புகைப்படத்தை, "சந்திரன் நமக்குச் சொந்தமானது" என்ற வாசகத்துடன் பதிவிட்டிருந்தார்.&nbsp;</p><p>அதன் ஓரத்தில் ஒரு அமெரிக்கக் கொடியும் இருந்தது.</p><h2>&nbsp;சமூக வலைதளங்களில் பெரும் விவாதம்&nbsp;</h2><p> </p><p>இருப்பினும், ட்ரம்பின் இந்தப் புகைப்படம் குறித்து சமூக வலைதளங்களில் பெரும் விவாதம் எழுந்ததுடன், அது விமர்சிக்கவும் பட்டது.

ஒரு சமூக வலைதளப் பயனர், ட்ரம்ப் சந்திரனோடு நின்றுவிடாமல், செவ்வாய் மற்றும் சூரியனுக்கும் செல்ல வேண்டும் என்று ஒரு பதிவை வெளியிட்டிருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/41dd0166-2db7-45c8-a52e-e075f83af397/26-6a9f1d158362c.webp' /></p><p> சமீபத்தில், ஜனாதிபதி ட்ரம்ப் தனது 'ட்ரூத்' சமூக வலைதளக் கணக்கில், ஹோர்மஸ் நீரிணையும் அமெரிக்காவிற்குச் சொந்தமானது என்று கூறியிருந்தார். மேலும், நியூ மெக்ஸிகோவிற்கு 'நியூ அமெரிக்கா' என்று பெயரிடப்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி ட்ரம்ப் கூறியிருந்தார்.&nbsp; &nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-07T22:12:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Bavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மட்டக்களப்பு முன்னாள் - இந்நாள் எம்.பிக்கள் மீது ஊழல் விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/corruption-probe-law-will-treat-all-equally-1788815692"></link>
            <id>https://tamilwin.com/article/corruption-probe-law-will-treat-all-equally-1788815692</id>
            <summary type="text">மட்டக்களப்பு மாவட்டத்தின் முன்னாள் மற்றும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் தொடர்பில் ஊழல் மற்றும் மோசடி குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகள் ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>மட்டக்களப்பு மாவட்டத்தின் முன்னாள் மற்றும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் தொடர்பில் ஊழல் மற்றும் மோசடி குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தெரிவித்துள்ளார்.</p><p>

மட்டக்களப்பில்&nbsp; இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.</p><h2>ஊழல் மற்றும் மோசடி&nbsp;</h2><p>
</p><p>
ஊழல் மற்றும் மோசடி குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும், சட்டத்தின் முன் அனைவரும் சமமாக நடத்தப்படுவார்கள் என்றும், சட்டம் தனது கடமையை சுயாதீனமாக முன்னெடுக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.</p><p>

மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் மற்றும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பான விசாரணைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், அனைவரும் சட்டத்திற்கு மதிப்பளித்து செயற்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5b2cb381-ccb6-4956-a056-80da9170dc42/26-6a9f34620bb13.webp' /></p><p>
</p><p>
விசாரணைகளின் முடிவில் எடுக்கப்படும் தீர்மானங்கள் எவ்வித அரசியல் தலையீடுகளுமின்றி நடைமுறைப்படுத்தப்படும் என்றும் கந்தசாமி பிரபு கூறினார்.
</p><p>
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் சட்ட ஆட்சியை நிலைநாட்டுவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாகக் குறிப்பிட்ட அவர், முன்னாள் ஜனாதிபதிகள், ஆளுநர்கள் மற்றும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் என யாராக இருந்தாலும் சட்டம் அனைவருக்கும் சமமாகவே நடைமுறைப்படுத்தப்படும் என்றார்.</p><p>

இதேவேளை, நாமல் ராஜபக்ச சிறைவாசம் அனுபவித்து வரும் நிலையில், அவருக்கு ஆதரவாக பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.</p><h2>&nbsp;ராஜபக்ச குடும்பத்தினர்</h2><p>

முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்க, கடந்த காலங்களில் ராஜபக்ச குடும்பத்தினரை கடுமையாக விமர்சித்திருந்த நிலையில், தற்போது அவர்களுக்கு ஆதரவாகக் கருத்துகளை வெளியிடுவது குறித்து கந்தசாமி பிரபு விமர்சனம் முன்வைத்தார்.</p><p>

ரணில் விக்ரமசிங்க கடந்த காலங்களில் ராஜபக்ச குடும்பத்தினரை விமர்சித்த போதிலும், பின்னர் அவர்களுடன் இணைந்து ஆட்சி அமைத்ததாகவும், தற்போது அவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9378d683-be9d-42d2-9ff5-f6e879190905/26-6a9f34638e8e6.webp' /></p><p>
</p><p>
நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்கு காரணமானவர்களில் ரணில் விக்ரமசிங்கவும் ஒருவர் எனக் குறிப்பிட்ட அவர், தற்போது குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணைகளை எதிர்கொள்பவர்களை பாதுகாக்க முயற்சிப்பதாகவும் குற்றஞ்சாட்டினார்.
</p><p>
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் நீதித்துறை மற்றும் விசாரணை அமைப்புகள் சுயாதீனமாக செயற்பட்டு வருவதாகவும், குற்றம் நிரூபிக்கப்பட்டால் சிறியவர், பெரியவர் என்ற பாகுபாடின்றி சட்டம் தனது கடமையைச் செய்யும் என்றும் கந்தசாமி பிரபு மேலும் தெரிவித்தார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-07T22:06:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[2029 ஜனாதிபதி தேர்தல்: அநுர அரசின் திட்டம் இதுதான் : போட்டுடைத்த கம்மன்பில]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/2029-presidential-election-a-one-horse-race-1788814718"></link>
            <id>https://ibctamil.com/article/2029-presidential-election-a-one-horse-race-1788814718</id>
            <summary type="text">&amp;nbsp;எதிர்வரும் 2029 ஆம் ஆண்டு நடைபெற உள்ள ஜனாதிபதித் தேர்தலைத் தனியொரு குதிரையின் பந்தயமாக மாற்றுவதற்கு அரசாங்கம் சர்வதிகார போக்கில் ஈடுபட்டு வருவதா...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;எதிர்வரும் 2029 ஆம் ஆண்டு நடைபெற உள்ள ஜனாதிபதித் தேர்தலைத் தனியொரு குதிரையின் பந்தயமாக மாற்றுவதற்கு அரசாங்கம் சர்வதிகார போக்கில் ஈடுபட்டு வருவதாகப் பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில குற்றம் சாட்டியுள்ளார்.
</p><p>
சிறையில் உள்ள நாமல் ராஜபக்சவை இன்று (07) திங்கட்கிழமை பார்வையிட்ட பின் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,</p><h2>தேர்தலை தனியொரு குதிரை பந்தயமாக மாற்ற முயற்சி</h2><p>எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் முன்னிலை சோசலிசக் கட்சியின் குமார் குணரத்தினம், ஜனசெத பெரமுனவின் பத்தரமுல்ல சீலரத்ன தேரர் உள்ளிட்டோரே ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட இருப்பார்கள், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுடன் அவர்கள் மட்டுமே எஞ்சியிருப்பார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d9a5771a-f2c7-44e9-8e24-6d5994b97b0f/26-6a9f34fa6a330.webp' /></p><p>




எதிர்வரும் 2029 ஆம் ஆண்டு நடைபெற உள்ள ஜனாதிபதித் தேர்தலைத் தனியொரு குதிரையின் பந்தயமாக மாற்றுவதற்கு அரசாங்கம் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.</p><p>

தனக்கு அச்சுறுத்தலாக அமையாத குறிப்பிட்ட சில வேட்பாளர்களுக்கு மாத்திரம் சந்தர்ப்பத்தை விட்டுவிட்டு, தனக்கு அச்சுறுத்தலாக மாறக்கூடிய அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களையும் ஏதேனும் ஒரு பொய்க் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்து சிறையில் அடைக்கும் நடவடிக்கையிலேயே அரசாங்கம் தீவிரம் காட்டி வருகிறது.</p><p></p><h2>சிறைக்குள் அடைக்கும் வழிமுறை</h2><p>

ஜனாதிபதியின் நேற்றைய கூட்டத்தில் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த அனைவரையும் சிறைக்குள் அடைக்கும் வழிமுறைகள் குறித்தே விரிவாகப் பேசப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f518f2bf-237b-46d1-af0b-c2af81014bfb/26-6a9f34f9b80a4.webp' /></p><p>
</p><p>
2050 ஆம் ஆண்டு வரை வேறு அரசாங்கங்கள் வராது என்றும் அவர்கள் கூறுகின்றனர். சிலர் கூறுவது போன்று பொது வாக்கெடுப்பு வரும் என்ற கதைகளை நாங்கள் கூறவில்லை. </p><p>மாறாக, எதிர்க்கட்சியில் உள்ள சிலர் அரசாங்கம் மற்றவர்களைத்தான் உள்ளே போடுகிறது, நம்மை ஒன்றும் செய்யவில்லை என்று மௌனமாக இருந்துவிட்டு, தமக்கு எதிராக வராது என்று நினைக்கின்றனர்.</p><h2>எங்களால் கூற வேண்டியது அவ்வளவுதான்&nbsp;</h2><p>
</p><p>

அவ்வாறான எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு ஜெர்மன் போதகரான மார்ட்டின் நியேமோலரிகன் நாஜிவாதிகள் குறித்துக் கூறிய கவிதையை நான் இந்த நேரத்தில் ஞாபகப்படுத்த விரும்புகிறேன்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/039e6c1f-0ea2-43c1-9c83-c501a448b764/26-6a9f34f90ecc7.webp' /></p><p>
</p><p>
அந்த கவிதையின் சுருக்கம் என்னவென்றால், ஏனையவர்களைக் கைது செய்து கொண்டு செல்லும்போது, ஏனையவர்களைக் கொல்லத் தேடி வரும்போது, அவர்கள் எனது அருகில் வரவில்லை என்பதால் நான் எதற்காகப் பேச வேண்டும் என்று மௌனமாக இருந்தனர்.
</p><p>
இறுதியில் அவர்கள் தன்னைத் தேடி வந்தபோது தனக்காகப் பேச யாருமே எஞ்சியிருக்கவில்லை என்பதாகும். இன்றும் கூட முனிவதியைக் கடைப்பிடித்து மௌனம் காப்பவர்களுக்கு எங்களால் கூற வேண்டியது அவ்வளவுதான் என்றார்.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-07T22:04:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாமலின் கோரிக்கைக்கு நாடாளுமன்றச் செயலாளர் நாயகம் வழங்கிய பதில்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/parliament-secretary-general-s-response-to-namal-1788815761"></link>
            <id>https://jvpnews.com/article/parliament-secretary-general-s-response-to-namal-1788815761</id>
            <summary type="text">விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் சட்டத்தரணி நாமல் ராஜபக்ஷ, எதிர்வரும் நாட்களில் நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் சட்டத்தரணி நாமல் ராஜபக்ஷ, எதிர்வரும் நாட்களில் நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்துகொள்வதற்குத் தேவையான வசதிகளைச் செய்து தருமாறு விடுத்த கோரிக்கைக்கு நாடாளுமன்றச் செயலாளர் நாயகம் பதிலளித்துள்ளார்.</p><p style="text-align: justify; "> 

குறித்த கோரிக்கை தொடர்பில் நாடாளுமன்றச் செயலாளர் நாயகம் சட்டத்தரணி குஷானி ரோஹணதீர, சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்திற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b5fd12ba-0720-4dc7-9389-28ab796318ef/26-6a9f29935a40d.webp' /></p><p style="text-align: justify; ">அதன்படி, நாமல் ராஜபக்ஷ நாடாளுமன்றத்திற்கு வருகை தருவதற்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்யுமாறு நாடாளுமன்றச் செயலாளர் நாயகம், சிறைச்சாலைகள் ஆணையாளருக்கு அறிவித்துள்ளார்.</p><p style="text-align: justify; ">

இந்தக் கோரிக்கைக்கு அமைவாக, நாமல் ராஜபக்ஷ இன்று (08) நாடாளுமன்றத்திற்கு வருகை தர அதிக வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. </p><p style="text-align: justify; ">பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய எயார்பஸ் (Airbus) விமானங்கள் கொள்முதல் விவகாரத்தில் 02 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலஞ்சமாகப் பெற்றார் என்ற சந்தேகத்தின் பேரில் நாமல் ராஜபக்ஷ கைது செய்யப்பட்டு, செப்டெம்பர் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் கடந்த செப்டெம்பர் 4 ஆம் திகதி உத்தரவிட்டிருந்தது.</p>]]></content>
            <updated>2026-09-07T21:45:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதிநவீன ஏவுகணை அழிப்பு கப்பலால் உலகை அச்சத்தில் ஆழ்த்தும் வடகொரியா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/north-korea-alarms-with-new-missile-destroyer-1788817250"></link>
            <id>https://canadamirror.com/article/north-korea-alarms-with-new-missile-destroyer-1788817250</id>
            <summary type="text">அணுசக்தி தடுப்பு காவல்படையின் ஒரு பகுதியாக, 5,000 டன் எடைகொண்ட &#039;காங் கோன்&#039; என்ற அதிநவீன வழிகாட்டப்பட்ட ஏவுகணை அழிப்பு கப்பலை வடகொரியா தனது கடற்படையில்...</summary>
            <content type="html"><![CDATA[<p>அணுசக்தி தடுப்பு காவல்படையின் ஒரு பகுதியாக, 5,000 டன் எடைகொண்ட 'காங் கோன்' என்ற அதிநவீன வழிகாட்டப்பட்ட ஏவுகணை அழிப்பு கப்பலை வடகொரியா தனது கடற்படையில் அதிகாரப்பூர்வமாக இணைத்துள்ளது.</p><p>வடகொரியா மற்றும் அமெரிக்கா - தென்கொரியா இடையே கொரிய தீபகற்பத்தில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3df5d16d-ecb5-42c3-8914-7a15c2a33c84/26-6a9f2f646ded4.webp' /></p><p> இந்த சூழ்நிலையில், தனது ராணுவ பலத்தை உலகிற்கு நிரூபிக்கும் வகையில் வடகொரியா தொடர்ந்து புதிய ஆயுதங்களையும், போர்க்கப்பல்களையும் அறிமுகம் செய்து வருகிறது.</p><p> இதன் ஒரு பகுதியாக, வடகொரியாவின் கிழக்குக் கடல் கடற்படைப் பிரிவில் 'காங் கோன்' என்ற புதிய போர்க்கப்பல் இணைக்கப்பட்டுள்ளது. </p><p>'சோ ஹியோன்' வகையை சேர்ந்த இரண்டாவது போர்க்கப்பலான இது, பல கட்ட போர் மற்றும் நம்பகத்தன்மை சோதனைகளைக் கடந்து வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.</p><p>
இக்கப்பலை கடற்படையில் இணைக்கும் விழாவில் வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் நேரில் கலந்துகொண்டார். </p><p>அப்போது பேசிய அவர்:"போர் காலங்களில் அணுசக்தி போர் அமைப்புகளை உடனடியாக இயக்கி, எதிரிகளுக்கு பதிலடி தாக்குதல்களை நடத்த வேண்டும்.


உத்தரவு
அதற்கு ஏதுவாக ஒட்டுமொத்த கடற்படையையும் அணுசக்தி ஆயுதம் ஏந்திய படையாக மாற்ற வேண்டும்."என்று ராணுவத்தினருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-09-07T21:41:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுவிட்சர்லாந்தில் 1 கோடி சம்பளம் பெற்ற இந்திய டெக்கி - சிறிய தவறால் பணி நீக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/swiss-techie-fired-over-sauna-towel-mix-up-1788817298"></link>
            <id>https://news.lankasri.com/article/swiss-techie-fired-over-sauna-towel-mix-up-1788817298</id>
            <summary type="text">Swiss techie fired over sauna towel mix-up: சுவிட்சர்லாந்தில் 1 கோடி சம்பளம் பெற்ற இந்திய டெக்கி, மூத்த நிர்வாகியுடன் ஏற்பட்ட சிறிய சம்பவத்தால் வேலை இ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Swiss techie fired over sauna towel mix-up: சுவிட்சர்லாந்தில் 1 கோடி சம்பளம் பெற்ற இந்திய டெக்கி, மூத்த நிர்வாகியுடன் ஏற்பட்ட சிறிய சம்பவத்தால் வேலை இழந்ததாக கூறியுள்ளார்.</p><p>
</p><h2>சுவிட்சர்லாந்தில் ரூ.1 கோடி சம்பளம்</h2><p>சுவிட்சர்லாந்தில் உள்ள ஒரு பெரிய தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியாற்றிய இந்திய மென்பொருள் பொறியாளர், சுமார் ரூ.1 கோடி வருடச்சம்பளம் பெற்றிருந்தார்.
</p><p>
ஆனால், உடற்பயிற்சி மையத்தில் சோனாவில் நடந்த ஒரு சிறிய தவறால் அவர் வேலை இழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ab5a3152-7ad1-4a69-a41f-03421ebc9485/26-6a9f2f93d63a4.webp' /></p><h2>தவறுதலாக துண்டை எடுத்ததற்காக</h2><p>அவரது விளக்கத்தின் படி, மே 8 அன்று ஜிம் சோனாவில் பயிற்சி முடிந்தபின் தவறுதலாக ஒரு மூத்த நிர்வாகியின் துண்டை எடுத்துக் கொண்டார். பின்னர் அந்த நிர்வாகி அமைதியாக நடந்துகொண்டாலும், “புதிய வேலை தேடத் தொடங்குங்கள்” என்று எச்சரித்ததாக கூறப்படுகிறது.
</p><p>
ஐந்து நாட்களுக்குப் பிறகு, மே 13 அன்று, HR குழுவினரிடமிருந்து “பொருளாதார காரணங்களால்” பணி நீக்கம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், அந்த சோனா சம்பவமே உண்மையான காரணமாக இருக்கலாம் என்று அவர் சந்தேகிக்கிறார்.</p><p></p><h2>வேறு நிறுவனங்களில் வேலை கிடைக்காது..</h2><p>அவர் 2022 முதல் அந்த நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். பல திட்டங்களில் ஈடுபட்டிருந்தபோதும், திடீரென பணி நீக்கம் செய்யப்பட்டதால் திட்டங்கள் தாமதமானதாகவும், தான் எவ்வளவு சிறப்பாக செயல்பட்டிருந்தாலும் உழைந்திருந்தாலும் அது அவர்களுக்கு ஒரு பொருட்டே இல்லை என்று அவர் மனவருத்தம் தெரிவித்தார்.
</p><p>
மேலும், “என்னை ‘சமூக விரோத’ (antisocial) பட்டியலில் சேர்த்துள்ளனர், இதனால் எதிர்காலத்தில் வேறு நிறுவனங்களில் வேலை கிடைக்காது” என்று அவர் குற்றம்சாட்டினார்.</p><p> தற்போது மூன்று மாதங்களாக வேலை இழந்த நிலையில், தனியார் வியாபாரம் தொடங்க வேண்டிய சூழ்நிலையில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
</p><p></p><p>இந்த சம்பவம், ஊழியர்களின் வாழ்க்கை எந்த அளவிற்கு உயர்நிலை நிர்வாகத்தின் முடிவுகளின் கீழ் இருக்கிறது என்பதை வெளிப்படுத்துவதாக அவர் கூறியுள்ளார்.</p><p>அவர் இந்த சம்பவத்தை Reddit பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-07T21:38:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[2029க்கு முன் அனைவரும் சிறையில்! நடுநடுங்கும் ராஜபக்ச குடும்பம்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/everyone-jail-before-2029-rajapaksa-family-tremble-1788814458"></link>
            <id>https://tamilwin.com/article/everyone-jail-before-2029-rajapaksa-family-tremble-1788814458</id>
            <summary type="text">இலங்கை அரசியலில் ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகள் தீவிரமடைந்து வரும் நிலையில், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் குடும்பத்தைச் சேர்ந்த அரசியல்வாதிகள் தொ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை அரசியலில் ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகள் தீவிரமடைந்து வரும் நிலையில், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் குடும்பத்தைச் சேர்ந்த அரசியல்வாதிகள் தொடர்பான சட்ட நடவடிக்கைகள் கவனம் பெற்றுள்ளன.</p><p>
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவருக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p><p> 

இதேவேளை, யோஷித ராஜபக்ச தொடர்பான சட்ட நடவடிக்கைகளும் தொடர்கின்றன.
</p><p>
கடந்த கால ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் அரசாங்கம் முன்னெடுத்து வரும் விசாரணைகள் மற்றும் சட்ட நடவடிக்கைகள் காரணமாக ராஜபக்ச குடும்பத்தினருக்கு அரசியல் ரீதியாகவும் சட்ட ரீதியாகவும் அழுத்தம் அதிகரித்து வருவதாக அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.</p><p>

நாமல் ராஜபக்சவின் கைது மற்றும் யோஷித ராஜபக்ச எதிர்கொண்டுள்ள சட்ட நெருக்கடிகள், ராஜபக்ச குடும்பத்தின் அரசியல் எதிர்காலம் தொடர்பில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளன.</p><p>

இந்நிலையில், ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகள் எதிர்வரும் நாட்களில் மேலும் தீவிரமடையக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>

அதனால் இது ராஜபக்ச குடும்பத்தினருக்கு உறக்கமில்லாத இரவுகளை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
</p><p>

இந்த விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடுகின்றது லங்காசிறியின் நாட்டுநடப்பு நிகழ்ச்சி..</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/M1HrfKLwrlc" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-07T21:07:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஊரையே பல நாட்கள் அலற வைத்த தம்பதி ; வினோதமான பூஜைகளால் பீதியில் உறைந்த கிராமம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/couple-who-terrified-the-entire-village-for-days-1788808936"></link>
            <id>https://jvpnews.com/article/couple-who-terrified-the-entire-village-for-days-1788808936</id>
            <summary type="text">திருப்பத்தூர் அருகே &quot;என் மீது கருப்பசாமி இறங்கியுள்ளார்&quot; எனக் கூறி, கணவனும் மனைவியும் கடந்த 4 நாட்களாக ஆடைகளின்றி&amp;nbsp; ஊருக்குள் வலம் வந்த சம்பவம் அப...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">திருப்பத்தூர் அருகே "என் மீது கருப்பசாமி இறங்கியுள்ளார்" எனக் கூறி, கணவனும் மனைவியும் கடந்த 4 நாட்களாக ஆடைகளின்றி&nbsp; ஊருக்குள் வலம் வந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் திகைப்பையும்,பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.


</p><p style="text-align: justify; ">இந்த தம்பதியினர் கடந்த சில நாட்களாக வீட்டின் உள்ளே வினோதமான பூஜைகளை செய்து வந்ததாக கூறப்படுகிறது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5eeed6db-6cb8-4680-af2c-90775a49900e/26-6a9f0eea0d6a6.webp' /></p><h2 style="text-align: justify; ">தீவிர விசாரணை&nbsp;</h2><p style="text-align: justify; ">கடந்த 4 நாட்களாக தெருக்களில் அவர்கள் வலம் வர, இதை பார்த்து அதிர்ச்சியடைந்த&nbsp; பொதுமக்கள் அவர்களை தட்டிக்கேட்டபோது, "எங்களை எதிர்த்தால் நீங்கள் அனைவரும் தடம் தெரியாமல் நாசமாகிவிடுவீர்கள்" என கணவன்-மனைவி இருவரும் ஊர் மக்களை நோக்கி சாபமிட்டு, மிரட்டல் விடுத்துள்ளனர்.
</p><p style="text-align: justify; ">&nbsp;அதுமட்டுமின்றி, தங்களை சாமி வந்த கோலத்தில் அப்படியே மொபைலில் 'லைவ் வீடியோ' எடுத்து சமூக வலைத்தளங்களில் வைரல் ஆக்கும்படியும் ஊர் மக்களிடம் வற்புறுத்தி ரகளையில் ஈடுபட்டுள்ளார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> பொதுமக்கள், ஒருகட்டத்தில் பொறுமையிழந்து ஆவேசமடைந்தனர். சாமியாடிய தம்பதியினரை மடக்கி பிடித்து, கயிறுகளால் கட்டி வைத்தனர். </p><p style="text-align: justify; ">&nbsp;தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிசார், பொதுமக்களின் பிடியில் இருந்த தம்பதியினரை மீட்டு, காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-07T21:05:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிராம பாடசாலைகளிலும் அதிகரிக்கும் ஆபத்து ; அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/growing-danger-in-rural-schools-1788814866"></link>
            <id>https://jvpnews.com/article/growing-danger-in-rural-schools-1788814866</id>
            <summary type="text">தற்போது சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளில் சுமார் 70 சதவீதம் பேர் போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>தற்போது சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளில் சுமார் 70 சதவீதம் பேர் போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.</p><p>

அவற்றில், போதைப்பொருள் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய சுமார் 40,000 கைதிகள் தற்போது சிறைச்சாலைகளில் உள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b16e3920-53c9-4631-b4b7-c44f55013335/26-6a9f261407ab2.webp' /></p><p>
</p><p>
கொழும்பு நகரில் உள்ள பாடசாலைகள் மட்டுமன்றி, கிராமப்புறங்களில் உள்ள பாடசாலைகளுக்கும் போதை மாத்திரைகளின் பரவல் விரிவடைந்துள்ளதாக அமைச்சர் விஜேபால கவலை வெளியிட்டுள்ளார்.</p><p></p><p>

பாடசாலைகளில் போதைப்பொருள் பரவுவதைத் தடுப்பதற்காக விசேட வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-07T21:01:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாட்டிலிருந்து வந்தவரை வெட்டிக்கொன்ற ஆசாமிகள் : பின்னணியில் அதிர்ச்சி தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/the-assailants-who-killed-a-foreigner-1788805410"></link>
            <id>https://ibctamil.com/article/the-assailants-who-killed-a-foreigner-1788805410</id>
            <summary type="text">கொழும்பில் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இவ்வாறு கொலை செய்யப்பட்டவர் திட்டமிடப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினர...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பில் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
</p><p>
இவ்வாறு கொலை செய்யப்பட்டவர் திட்டமிடப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினரான கொஸ் மல்லி என்பவரின் மைத்துனரான பூத களுவா (46) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.</p><p>

</p><h2>அதிகாலைவேளை இடம்பெற்ற சம்பவம்</h2><p>இன்று (07) அதிகாலை 1.45 மணியளவில் இந்தக் கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.&nbsp;</p><p>கொலை செய்யப்பட்ட நபர், திட்டமிடப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினரான கொஸ் மல்லி என்பவருடன் பல வருடங்கள் டுபாயில் தங்கியிருந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8979a10d-dd95-400c-80e8-4fcf7c3b6cae/26-6a9f0c22b953a.webp' /></p><p> 

பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்டதையடுத்து, அவர் சில வாரங்களுக்கு முன்பு இலங்கைக்கு வருகை தந்துள்ளார். </p><p>

முச்சக்கர வண்டியில் வந்த நால்வர் கொண்ட கும்பல் வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்து, கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த இந்த நபரை கூர்மையான ஆயுதங்களால் தாக்கி பலத்த காயங்களை ஏற்படுத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளது.</p><p></p><p> 

</p><h2>காவல்துறை&nbsp; மேலதிக விசாரணை</h2><p>படுகாயமடைந்த அவர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4cc90303-e9b2-40f1-a65e-7a0f08b4c1fd/26-6a9f0c236dbea.webp' /></p><p> </p><p>

இந்தக் கொலையைத் திட்டமிடப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினரான படோவிட்ட அசங்கவின் தரப்பினர் செய்திருக்கலாம் என காவல்துறையினர்சந்தேகிக்கின்றனர். 

சந்தேகநபர்களைக் கைது செய்வதற்காகப் பல காவல்துறை குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-07T21:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ்ப்பாணம் உட்பட மூன்று மாவட்டங்களுக்கு வருகிறது மெட்ரோ பேருந்து சேவை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/metro-bus-service-three-districts-including-jaffna-1788813199"></link>
            <id>https://ibctamil.com/article/metro-bus-service-three-districts-including-jaffna-1788813199</id>
            <summary type="text">மெட்ரோ பேருந்து சேவையை மேல் மாகாணத்திற்கு அப்பால் விரிவுபடுத்தி காலி, கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளுக்கும் அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>மெட்ரோ பேருந்து சேவையை மேல் மாகாணத்திற்கு அப்பால் விரிவுபடுத்தி காலி, கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளுக்கும் அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து, அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். </p><p>


இன்று (07) கடவத்தை மெட்ரோ டிப்போ முனையத்தின் செயல்பாடுகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.</p><h2>உயரப்போகும் பேருந்துகளின் எண்ணிக்கை</h2><p>&nbsp;இம்மாதத்திற்குள் மெட்ரோ பேருந்து சேவையின் பேருந்துகளின் எண்ணிக்கையை 122 ஆக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும், மேலும் 50 பேருந்துகளை கொள்முதல் செய்வதற்கான அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டு, அதன்படி, இந்த ஆண்டின் இறுதிக்குள் அல்லது அடுத்த ஆண்டின் முற்பகுதியில் மெட்ரோ பேருந்து சேவையை 172 பேருந்துகள் வரை விரிவாக்க எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/305558ed-551d-45c7-b975-afb7cff74062/26-6a9f21927a555.webp' /></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-07T20:42:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[புதையல் தோண்டும் முயற்சியில் ஈடுபட்ட ஐந்து சந்தேகநபர்கள் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/five-suspects-arrested-treasure-hunting-1788807646"></link>
            <id>https://jvpnews.com/article/five-suspects-arrested-treasure-hunting-1788807646</id>
            <summary type="text">புதையல் தோண்டும் முயற்சியில் ஈடுபட்ட ஐந்து சந்தேகநபர்களைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
ஹிங்குராக்கொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தல்பொத்த பகுதியில் பொலி...</summary>
            <content type="html"><![CDATA[<p>புதையல் தோண்டும் முயற்சியில் ஈடுபட்ட ஐந்து சந்தேகநபர்களைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.</p><p>
ஹிங்குராக்கொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தல்பொத்த பகுதியில் பொலிஸ் அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைய,&nbsp; மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போதே இக் கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/73e783af-3646-443e-bceb-6d11890a4c59/26-6a9f09e012386.webp' /></p><p>
</p><p>
கைது செய்யப்பட்டவர்கள் பொலன்னறுவை மற்றும் புலஸ்திகம பகுதிகளைச் சேர்ந்த 19, 26, 45, 47 மற்றும் 49 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
</p><p>
மேலும், இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் ஹிங்குராக்கொட பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-09-07T20:00:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை மனித உரிமைகள் விவகாரம்: ஜெனிவாவில் ஆரம்பமான முக்கிய அமர்வு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/63rd-session-un-human-rights-council-begins-geneva-1788807653"></link>
            <id>https://tamilwin.com/article/63rd-session-un-human-rights-council-begins-geneva-1788807653</id>
            <summary type="text">ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 63ஆவது அமர்வு சுவிட்சர்லாந்தின்
ஜெனிவா நகரில் இன்று(7) ஆரம்பமாகியுள்ளது.

இன்றைய ஆரம்ப நிகழ்வில் ஐக்கிய நாடு...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 63ஆவது அமர்வு சுவிட்சர்லாந்தின்
ஜெனிவா நகரில் இன்று(7) ஆரம்பமாகியுள்ளது.
</p><p>
இன்றைய ஆரம்ப நிகழ்வில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர்
வோல்கர் துர்க் தொடக்க உரையாற்றினார். </p><p>இந்தக் கூட்டத்தில் இலங்கையின் மனித
உரிமைகள் மற்றும் பொறுப்புக்கூறல் நிலைமைகள் குறித்தும் அவர் விசேடமாகக்
குறிப்பிட்டார்.</p><h2>ஜெனிவாவில் ஆரம்பம்</h2><p>
</p><p>
இலங்கையின் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்து 17 ஆண்டுகள் கடந்துள்ள
நிலையிலும், நாட்டில் மனித உரிமைகள் மற்றும் பொறுப்புக்கூறல் விவகாரங்கள்
தமக்கான முழுமையான தீர்வைப் பெறவில்லை என்று ஐக்கிய நாடுகள் சபையின் மனித
உரிமைகள் ஆணையாளர் வோல்கர் துர்க் தனது அண்மைய அறிக்கையில்
சுட்டிக்காட்டியிருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0aeafe51-dcca-4039-bc3c-10653f6a0875/26-6a9f13359ade5.webp' /></p><p>

இந்த ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அறிக்கை இந்த வாரம் பேரவையில்
உத்தியோகபூர்வமாகச் சமர்ப்பிக்கப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
</p><p>
எதிர்வரும் ஒக்டோபர் 7ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இந்த அமர்வில், இலங்கை
விவகாரங்களுக்கு மேலதிகமாக ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு எதிரான
ஒடுக்குமுறைகள், சூடான், வெனிசுலா மற்றும் மத்திய கிழக்கில் நிலவும் பாரிய
மனித உரிமை நெருக்கடிகள் குறித்தும் விசேட கவனம் செலுத்தப்படவுள்ளது.</p><p>

இந்த விவகாரங்கள் தொடர்பான விரிவான அறிக்கைகளைப் பரிசீலித்து, உரிய
தீர்மானங்களை நிறைவேற்றுவதற்கு மனித உரிமைகள் பேரவை நடவடிக்கை எடுக்கும் என்று
எதிர்பார்க்கப்படுகின்றது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-07T19:40:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மத்திய கிழக்கில் கிரிப்டோ பரிவர்த்தனை 350 பில்லியன் டொலராக உயர்வு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/middle-east-crypto-surges-to-350-bn-dollars-1788809175"></link>
            <id>https://news.lankasri.com/article/middle-east-crypto-surges-to-350-bn-dollars-1788809175</id>
            <summary type="text">Middle East Crypto Surges to 350 Bn dollars: மத்திய கிழக்கில் கிரிப்டோ பரிவர்த்தனை பல மடங்கு உயர்ந்துள்ளது.மூன்று மடங்கு அதிகரிப்பு

மத்திய கிழக்கில...</summary>
            <content type="html"><![CDATA[<p>Middle East Crypto Surges to 350 Bn dollars: மத்திய கிழக்கில் கிரிப்டோ பரிவர்த்தனை பல மடங்கு உயர்ந்துள்ளது.</p><h2>மூன்று மடங்கு அதிகரிப்பு</h2><p>

மத்திய கிழக்கில் கிரிப்டோகரன்சி பரிவர்த்தனைகள் கடந்த சில ஆண்டுகளில் மூன்று மடங்கு அதிகரித்துள்ளதாக புதிய அறிக்கை தெரிவிக்கிறது.</p><p>

Bitcoin Policy Institute வெளியிட்ட தகவலின்படி, 2022-இல் சுமார் 100 பில்லியன் டொலராக இருந்த பரிவர்த்தனை மதிப்பு, 2025–2026-இல் 350 பில்லியன் டொலராக உயர்ந்துள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/db5d72a2-cafa-4802-b0c3-c6c8062e7089/26-6a9f13048f80b.webp' /></p><h2>பாதுகாப்பான சொத்தாக Bitcoin...</h2><p>ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையேயான மோதல்கள், எண்ணெய் விலை உயர்வு, பணவீக்கம், வட்டி விகிதம் போன்ற பொருளாதார சவால்கள் காரணமாக முதலீட்டாளர்கள் தங்கள் செல்வத்தை பாதுகாக்க கிரிப்டோகரன்சிகளுக்கு மாறியுள்ளனர்.
</p><p>
ஆரம்பத்தில் Bitcoin விலை உலக பங்குச் சந்தைகளுடன் இணைந்து குறைந்தாலும், பின்னர் முதலீட்டாளர்கள் பாதுகாப்பான சொத்தாக Bitcoin-ஐ தேர்வு செய்ததால் அதன் சந்தை பங்கு 64.8 சதவீதம் வரை உயர்ந்தது.</p><p>
</p><p></p><p>எகிப்து, துருக்கி, லெபனான், ஈரான் போன்ற நாடுகளில் நாணய மதிப்பு குறைவதால் மக்கள் Bitcoin மற்றும் அமெரிக்க டொலருடன் இணைக்கப்பட்ட Stablecoins-ஐ அதிகம் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். </p><p>அதேசமயம், UAE மற்றும் பஹ்ரைன் போன்ற வளைகுடா நாடுகள் கிரிப்டோ நிறுவனங்களை ஈர்க்கும் வகையில் ஒழுங்குமுறை சட்டங்களை உருவாக்கி, டிஜிட்டல் சொத்து மையங்களாக தங்களை வலுப்படுத்தி வருகின்றன.</p><p>

சண்டைகள், தடைகள், நாணய நிலையற்ற தன்மை போன்ற சூழ்நிலைகளில் கிரிப்டோகரன்சிகள் செல்வத்தை பாதுகாக்கவும், மதிப்பை மாற்றவும் முக்கிய கருவியாக மாறியுள்ளன.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-07T19:36:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடா குறித்து மீண்டும் சர்ச்சையை கிளப்பும் டிரம்ப்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/canadas-exchange-rate-with-us-is-unacceptable-1788788844"></link>
            <id>https://canadamirror.com/article/canadas-exchange-rate-with-us-is-unacceptable-1788788844</id>
            <summary type="text">&amp;nbsp;அமெரிக்கா மற்றும் கனடாவுக்கு இடையிலான நாணய மாற்று விகிதம் &quot;ஏற்றுக்கொள்ள முடியாதது&quot; என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கடுமையாக விமர்சித்து...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;அமெரிக்கா மற்றும் கனடாவுக்கு இடையிலான நாணய மாற்று விகிதம் "ஏற்றுக்கொள்ள முடியாதது" என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கடுமையாக விமர்சித்துள்ளார். 
தனது 'ட்ரூத் சோஷியல்' சமூக வலைதளப் பக்கத்தில் டிரம்ப், பதிவிட்டுள்ளார்.</p><p>
அமெரிக்க டாலருடன் கனடா டொலரின் சமநிலையற்ற நிலை ஏற்றுக்கொள்ள முடியாதது. 
பல ஆண்டுகளாக இந்நிலை நீடித்து வருகிறது, ஆனால் இனி அது தொடராது!" எனக் குறிப்பிட்டுள்ளார்.</p><p> 
எனினும், இந்த விவகாரத்தில் அடுத்தகட்டமாக என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்பது குறித்து அவர் விரிவாக விளக்கவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/38a3d0a6-f62b-45a1-a9a6-9ba0aaf625a1/26-6a9ec06d74b73.webp' /></p><p> </p><p>
தற்போது 1 அமெரிக்க டொலர் என்பது சுமார் 1.38 கனடா டொலருக்குச் சமமாக உள்ளது (அதாவது 1 கனடா டொலரின் மதிப்பு சுமார் 72 அமெரிக்க சென்ட்கள்).</p><p> 
வரலாற்று ரீதியாகக் கனடா டொலர் குறைந்த மதிப்பில் இருப்பது, அமெரிக்க வாடிக்கையாளர்களுக்குக் கனடாவின் ஏற்றுமதிப் பொருட்களை மலிவாகவும், கனடா மக்களுக்கு அமெரிக்கப் பொருட்களைக் கூடுதல் விலையுடனும் மாற்றுகிறது. </p><p>
ஆகஸ்ட் 22 முதல் கனடா ஏற்றுமதிகள் மீது டிரம்ப் விதித்த 50% வரிக்கான பதிலடியாக, அமெரிக்காவின் 700 பொருட்கள் மீது புதிய வரிகளைச் சுமத்த கனடா முடிவு செய்துள்ளது. </p><p>
செப்டம்பர் 8-ஆம் திகதி இந்த வரிகள் அமலுக்கு வரவுள்ள நிலையில் டிரம்பின் இந்தப் பதிவு வெளியாகியுள்ளது. </p><p>
ஆகஸ்ட் 21 அன்று இருநாடுகளுக்கு இடையிலான வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் முறிந்ததிலிருந்து, கனடாவை "மிக மோசமாகச் சுரண்டும் நாடுகளில் ஒன்று" என டிரம்ப் கடுமையாகச் சாடி வருகிறார். </p><p>"பல தசாப்தங்களாக அவர்கள் நம்மைச் சுரண்டி வருகிறார்கள், அது இனி நிறுத்தப்படும்" என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். </p><p>
டிரம்பின் இந்த விமர்சனங்களுக்குக் கனடா பிரதமர் மார்க் கார்னி இதுவரை பகிரங்கமாகப் பதில் எதுவும் தெரிவிக்கவில்லை. </p><p>
அதேவேளையில், அமெரிக்காவின் வரிகளுக்கு எதிராகக் கனடா அரசு எடுத்து வரும் பதில்-வரி நடவடிக்கைகளுக்கு அந்நாட்டு மக்களிடையே கணிசமான ஆதரவு இருப்பதாகச் அண்மைய 'நானோஸ்' கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-07T19:24:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழக முதல்வர் விஜய்யின் சட்டமன்ற உரை ; ஒரு மணி நேரத்தில் பதிவான விடயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/tamil-nadu-cm-vijay-s-assembly-speech-1788799733"></link>
            <id>https://jvpnews.com/article/tamil-nadu-cm-vijay-s-assembly-speech-1788799733</id>
            <summary type="text">தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் சி. ஜோசப் விஜய் இன்று ஆற்றிய உரை டிஜிட்டல் தளங்களில் கவனம் பெற்றதாக கூறப்படுகிறது. குறிப்பாக பெண்களை அவமதிக்கும் பேச்சு...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் சி. ஜோசப் விஜய் இன்று ஆற்றிய உரை டிஜிட்டல் தளங்களில் கவனம் பெற்றதாக கூறப்படுகிறது.</p><p style="text-align: justify; "> குறிப்பாக பெண்களை அவமதிக்கும் பேச்சுகளுக்கு எதிராக அவர் தெரிவித்த கருத்துகள் சமூக வலைதளங்களிலும் யூடியூப் தளத்திலும் வேகமாக பரவியதாக இந்த மதிப்பீடு தெரிவிக்கிறது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/110aa765-affa-418e-9cdf-24c92e13f74a/26-6a9eeaf77217e.webp' /></p><h2 style="text-align: justify; ">பார்வையாளர்</h2><p style="text-align: justify; "> 
முக்கிய தமிழ் செய்தி நேரலைகளை சேர்த்து பார்த்தால், ஒரே நேரத்தில் சுமார் 2.7 லட்சத்துக்கும் அதிகமானோர் பார்த்ததாக கூறப்பட்டுள்ளது. </p><p style="text-align: justify; ">மேலும், உரை முடிந்த முதல் இரண்டு மணி நேரத்தில் வீடியோக்கள் மற்றும் கிளிப்புகள் மூலம் 18 லட்சத்துக்கும் அதிகமான பார்வைகள் கிடைத்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">இவை அதிகாரப்பூர்வ ஒருங்கிணைந்த புள்ளிவிவரங்கள் அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.
</p><p style="text-align: justify; "> 
பெண்கள்தான் தனது அரசியல் வெற்றிக்கு முக்கிய காரணம் என்றும், பெண்களை இழிவுபடுத்தும் வார்த்தைகளை பொறுத்துக்கொள்ள மாட்டேன் என்றும் விஜய் பேசியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "> அந்த நேரத்தில் ஆன்லைன் பார்வையாளர் செயல்பாடுகள் 340 சதவீதம் வரை அதிகரித்ததாகவும் கூறப்படுகிறது.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-09-07T19:24:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்க தடைக்கு பதிலடி! ஈரானின் அதிரடி அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/iran-decides-announce-new-exclusion-zone-gulf-1788801560"></link>
            <id>https://tamilwin.com/article/iran-decides-announce-new-exclusion-zone-gulf-1788801560</id>
            <summary type="text">ஹோர்முஸ் நீரிணைப் பகுதியில் அமெரிக்கா விதித்துள்ள தடையை எதிர்கொள்ளும்
வகையில், வளைகுடா கடற்பரப்பில் புதிய தடை மண்டலம் ஒன்றையும் புதிய கப்பல்
போக்குவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹோர்முஸ் நீரிணைப் பகுதியில் அமெரிக்கா விதித்துள்ள தடையை எதிர்கொள்ளும்
வகையில், வளைகுடா கடற்பரப்பில் புதிய தடை மண்டலம் ஒன்றையும் புதிய கப்பல்
போக்குவரத்து பாதையையும் விரைவில் அறிவிக்கவுள்ளதாக ஈரான் அரசாங்கம்
தெரிவித்துள்ளது.</p><p>

ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்பு பேரவையின் செயலாளர் மொஹ்சேன் ரெசாய் இது
குறித்துத் தெரிவிக்கையில், புதிய தடை மண்டலத்திற்குள் நுழையும் கப்பல்கள்
அனைத்தும் உடனடியாகத் தடைகளின் பட்டியலில் சேர்க்கப்படும் எனக்
குறிப்பிட்டுள்ளார்.</p><h2>&nbsp;மசகு எண்ணெய் விலை</h2><p>

அத்துடன் ஓமான் நாட்டின் எல்லைக்குட்பட்ட நீர்ப்பரப்பினூடாக அமைக்கப்படும்
புதிய சர்வதேச கப்பல் பாதையை ஈரானே நிர்வகிக்கும் என்றும் அவர்
சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>
அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே கடற்பகுதியில் பரஸ்பர தாக்குதல்கள்
தீவிரமடைந்துள்ள நிலையில், ஹோர்முஸ் நீரிணையில் மசகு எண்ணெய் கொண்டு செல்லும்
கப்பல்களின் நடமாட்டம் பெருமளவில் குறைடைந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/966e7bc0-ebdf-4b2b-b4f2-5a844de3eb61/26-6a9ef570b3f80.webp' /></p><p>
</p><p>
இதன் காரணமாக உலக சந்தையில் மசகு எண்ணெய் விலையானது பீப்பாய் ஒன்றுக்கு 97
டொலரைக் கடந்து பதிவாகியுள்ளதுடன், அமெரிக்காவின் அழுத்தங்களுக்கு மத்தியில்
நாட்டின் பொருளாதாரத்தை மீளக்கட்டியெழுப்பும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக
ஈரானிய பொருளாதார அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-07T19:19:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[டொலர் பற்றாக்குறையால் நெருக்கடியில் இலங்கை - அநுர ஆட்சியில் தொடரும் ஊழல் குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-lanka-in-crisis-due-to-lack-of-dollars-1788786861"></link>
            <id>https://tamilwin.com/article/sri-lanka-in-crisis-due-to-lack-of-dollars-1788786861</id>
            <summary type="text">இலங்கை எதிர்கொண்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடி, டொலர் பற்றாக்குறை
மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு என்பவற்றுக்கு முன்னாள் ஆட்சியாளர்களின்
ஊழல்களும்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கை எதிர்கொண்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடி, டொலர் பற்றாக்குறை
மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு என்பவற்றுக்கு முன்னாள் ஆட்சியாளர்களின்
ஊழல்களும் முறைகேடான நிர்வாகமுமே முதன்மைக் காரணம் என இடதுசாரி கேந்திர
அமைப்பின் செயற்பாட்டாளர் சமீர பெரேரா தெரிவித்துள்ளார். </p><p>

கொழும்பில் இன்று(07.09.2026) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு
உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
அவர் மேலும் தெரிவிக்கையில்,
</p><p>
நாமல் ராஜபக்ச தனக்கு எதுவுமே தெரியாது எனப் பொறுப்பற்ற முறையில் நடந்து
கொள்கின்றார்.</p><p> இருப்பினும், கைதான நபர் ஒருவரின் வாக்குமூலங்களும், கேமன்
தீவுகளில் நடைபெற்ற விருந்தொன்றில் தொழிலதிபர் நிமால் பெரேராவுடன் நாமல்
ராஜபக்ச இணைந்து இருக்கும் புகைப்படங்களும் உண்மை நிலையை வெளிப்படுத்துகின்றன.
</p><h2>
கப்பம் பெறும் ஊழல்வாதிகள்</h2><p>
கப்பம் பெறுபவர்களுடனும் ஊழல்வாதிகளுடனும் கேமன் தீவுகளில் சூதாட்டத்தில்
ஈடுபட்டது யார் என்பதை நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள்.
</p><p>
ரணில் விக்ரமசிங்க, மகிந்த ராஜபக்ச, சஜித் பிரேமதாஸ மற்றும் உதய கம்மன்பில
போன்ற அரசியல்வாதிகள் வெளிநாட்டு ஒப்பந்தங்களில் பெருமளவு நிதி முறைகேடுகளைச் செய்துவிட்டு, தற்போது ஏதும் அறியாதவர்கள் போல் நடிக்கின்றார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c7b81c9f-fc88-44e6-998c-fb372ca9f59f/26-6a9eb91841043.webp' /></p><p>

சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கைகளின்படி, நாட்டுக்காகப் பெறப்பட்ட
கடன்களுக்கு இணையான திட்டங்கள் எதுவும் முன்னெடுக்கப்படவில்லை என்பது
தெளிவாகின்றது.
</p><p>
 எனவே, கடனாகப் பெறப்பட்ட பல மில்லியன் டொலர்களுக்கு என்ன
நடந்தது என்பதற்கு இவர்கள் பதிலளிக்க வேண்டும். ஜே.வி.பி. இந்தியாவுக்கு முன் மண்டியிட்டுள்ளது என்று விமல் வீரவன்ச கூறுவது
அறியாமையாகும். </p><h2>

எரிபொருள் வாங்க டொலர் இன்மை...</h2><p>

நாட்டில் எரிபொருள் வாங்குவதற்குக் கூட டொலர் இல்லாத நிலையை
உருவாக்கி, நாட்டை இந்தியாவை நோக்கிச் செல்ல வேண்டிய நிலைக்குத் தள்ளியது
யார்?</p><p> தரமற்ற மற்றும் கழிவு உரக் கப்பல்களை நாட்டுக் குள் கொண்டுவந்து
நாட்டின் விவசாயத் துறையை முற்றாக அழித்தது யார் என்பதை விவசாயிகள் நன்கு
அறிந்து வைத்துள்ளனர். 

இனிமேலும் அரசியல்வாதிகளின் வாக்குறுதிகளை நம்பி ஏமாற அவர்கள் தயாராக இல்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/98606de4-a1af-4d06-9285-5e738fb24868/26-6a9eb91915988.webp' /></p><p>
</p><p>
மக்களின் வரிப்பணத்திலும் வெளிநாட்டுக் கடன்களிலும் சுகபோகம் அனுபவித்த இந்த
ஆட்சியாளர்கள் செய்த ஊழல்களில் இது ஒரு சிறிய பகுதி மட்டுமே. </p><p>தற்போது சட்டமா
அதிபர் திணைக்களத்தில் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து ஜனாதிபதி
மிகத் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றார்.&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-07T19:08:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாமல் கைதால் Gen Z தலைமுறை ஆத்திரமடைந்தார்களா..! ரணிலின் கருத்தை நிராகரித்த முக்கியஸ்தர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ranils-statement-about-namals-arrest-is-wrong-1788783437"></link>
            <id>https://tamilwin.com/article/ranils-statement-about-namals-arrest-is-wrong-1788783437</id>
            <summary type="text">நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கைது தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்வைத்த வாதம் பிழையானது என ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கைது தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்வைத்த வாதம் பிழையானது என ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.</p><p>
நாமல் ராஜபக்‌ச கைது செய்யப்பட்டதால் 'Gen Z' தலைமுறையினர் ஆத்திரமடைந்துள்ளனர் என்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கூறிய கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><h2>மக்களிடம் பேச இதுவே காரணம்</h2><p>
தற்போதைய அரசாங்கத்தை ஆட்சிக்குக் கொண்டுவருவதில் 'Gen Z' தலைமுறையினர் மிகப்பெரிய பங்காற்றியுள்ளனர் என தெரிவித்துள்ளார்.</p><p>பழைய அரசியல் கலாசாரத்தை மீண்டும் கொண்டுவர பிற்போக்கு சக்திகள் சதி செய்தால் மட்டுமே 'Gen Z' தலைமுறையினர் அதற்கு எதிராகக் கொதித்தெழுவார்கள் என தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/03576b35-0132-4882-8724-f343c38a70bf/26-6a9eafa7362dc.webp' /></p><p>
நாமல் ராஜபக்‌ச கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தால் விளக்கமறியலில் வைக்கப்பட்டதற்கு இளைஞர் தலைமுறையினரிடம் எதிர்ப்பில்லை என்றும் அவரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கூட்டு எதிர்க்கட்சியினருக்கே அது தொடர்பில் எதிர்ப்பு உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.</p><h2>நாமல் ராஜபக்ச மீதான விளக்கமறியல் உத்தரவு</h2><p>
</p><p>தற்போதைய அரசாங்கத்திடம் நன்மையும் தீமையும் ஆகிய இரு பக்கங்களும் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
கட்சியின் அடிமட்டத்தில் ஏற்பட்டுள்ள ஒருவித குழப்ப நிலையை உணர்ந்ததாலேயே தேசிய மக்கள் சக்தி மக்கள் பேரணிகளை நடத்தத் தீர்மானித்துள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d76a1daa-16fe-4602-b6d9-c63c59dc9881/26-6a9eafa7de73a.webp' /></p><p>நாமல் ராஜபக்‌ச விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதை மட்டுமே பிரதான காரணியாக வைத்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நடத்தத் திட்டமிட்டுள்ள பேரணியில் பெருந்திரளான மக்கள் கலந்துகொள்வார்கள் எனத் தான் நம்பவில்லை என்று தெரிவித்துள்ளார்.</p><p> எனினும், நாமல் சிறையிலிருப்பது அந்த பேரணியைச் வெற்றிபெறச் செய்ய அவர்களுக்கு ஒருவகையில் உதவியாக அமையக்கூடும் என்றும் குறிப்பிட்டார்.</p><p>
அரசாங்கம் தற்போது அடிமட்ட அழுத்தத்தை உணர்ந்துள்ளதாலேயே மீண்டும் மக்களிடம் சென்று உரையாடலைத் தொடங்கத் தீர்மானித்துள்ளது என்றார்.&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-07T19:07:38+00:00</updated>
        </entry>
    </feed>
