<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-08-21T10:39:22+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஏற்றுமதியாளர்களின் வரிப்பணம் திரும்பப்பெறுவதில் தாமதம் - கோப் குழுவில் ஏற்பட்டுள்ள சிக்கல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ird-explains-vat-refund-delays-on-time-1787304320"></link>
            <id>https://tamilwin.com/article/ird-explains-vat-refund-delays-on-time-1787304320</id>
            <summary type="text">சிறு மற்றும் நடுத்தர ஏற்றுமதியாளர்கள் மதிப்புக்கூட்டு வரி(VAT) பணத்தைத் திரும்பப் பெறுவதில் சந்திக்கும் தாமதங்கள் தொடர்பில் பொது நிதிக் குழு (CoPF) கே...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிறு மற்றும் நடுத்தர ஏற்றுமதியாளர்கள் மதிப்புக்கூட்டு வரி(VAT) பணத்தைத் திரும்பப் பெறுவதில் சந்திக்கும் தாமதங்கள் தொடர்பில் பொது நிதிக் குழு (CoPF) கேள்வியெழுப்பியுள்ளது.&nbsp;</p><p> 

அத்துடன், சுமார் 95% பணம் திரும்பச் செலுத்துதல்கள் நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் வழங்கப்படுவதாக உள்நாட்டு வருவாய்த் துறை தெரிவித்துள்ளது.</p><p>பணம் திரும்பச் செலுத்துவதில் தாமதம் ஏற்படுவது குறித்து ஏற்றுமதியாளர்களிடமிருந்து வந்த முறைப்பாடுகளைக் குழு உறுப்பினர்கள் சுட்டிக்காட்டிய நிலையில், IRD-யின் வரி டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் மின்னணு விலைப்பட்டியல் திட்டங்களை CoPF ஆய்வு செய்தபோது இந்தப் பிரச்சினை வெளிவந்துள்ளது.</p><h2>காலகெடுவுக்குள் பணம் செலுத்தப்படுகின்றதா...</h2><p> </p><p>

பணம் திரும்பச் செலுத்துதல் குறித்து சிறு மற்றும் நடுத்தர ஏற்றுமதியாளர்கள் முறைப்பாடு அளிப்பதாகவும், தேவையான காலக்கெடுவுக்குள் பணம் செலுத்தப்படுகிறதா என்று கேள்வி எழுப்பியதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e738f9c4-ebcc-411a-8fcb-534bd91f750b/26-6a882a2490f4c.webp' /></p><p>
</p><p>

மேலும், 14 நாட்களுக்குள் பணம் திரும்பக் கிடைக்கவில்லை என்றும் ஏற்றுமதியாளர்கள் தெரிவித்திருந்தனர்.

இதற்குப் பதிலளித்த IRD அதிகாரிகள், நிலுவையில் உள்ள வரி விவகாரங்கள், வருமான வரி தாக்கல் இணக்கம், ஆவணங்கள் மற்றும் ஒரு கோரிக்கைக்கு ஒதுக்கப்பட்ட இடர் வகைப்பாடு உள்ளிட்ட தனிப்பட்ட கோப்புகளின் சூழ்நிலைகளைப் பொறுத்தே பணம் திரும்பச் செலுத்தும் செயல்முறை அமையும் என்று குறிப்பிட்டுள்ளனர்.</p><p>

"சில நேரங்களில், அவர்கள் கையாள விரும்பாத ஒரு நிலுவைத் தொகை இருக்கும். அத்தகைய நேரங்களில், எங்களால் அவர்களுக்கு 14-15 நாட்களுக்குள் பணத்தை வழங்க முடியாது. </p><p>அவர்கள் அதைக் கையாண்ட பின்னர் தான் நாங்கள் அதை வழங்க வேண்டும்," என்று ஒரு IRD அதிகாரி CoPF-இடம் கூறினார்.

பணத்தைத் திரும்பப் பெறுவதற்கான கோப்புகள், இடர் மற்றும் இணக்கக் கருத்தாய்வுகளின்படி வகைப்படுத்தப்படுவதாக அந்த அதிகாரி மேலும் குறிப்பிட்டார்.</p><h2>இரண்டு வாரங்கள் தொடரும்</h2><p>

கோரிக்கைகள் அதிக, நடுத்தர அல்லது குறைந்த இடர் என வகைப்படுத்தப்படுவதாகவும், குறைந்த மற்றும் நடுத்தர இடர் கொண்ட கோரிக்கைகளுக்கான பணம் திரும்பச் செலுத்துதல் பொதுவாக 14-15 நாட்களுக்குள் செயல்படுத்தப்படும் என்றும் IRD கூறியது.</p><p> 

அதிக இடர் கொண்ட கோரிக்கைகளுக்குப் பணம் திரும்பச் செலுத்தப்படுவதற்கு முன்பு ஒரு தனி சரிபார்ப்பு செயல்முறைக்கு உட்படுத்தப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3cbeab45-7618-4494-b6c7-50ecb607a60d/26-6a882a2543176.webp' /></p><p>
</p><p>
"சுமார் 95% பணம் திரும்பச் செலுத்துதல், கொடுக்கப்பட்ட காலத்திற்குள் வழங்கப்படும்," என்று ஒரு IRD அதிகாரி குழுவிடம் கூறினார்.</p><p>

மீதமுள்ள வழக்குகளில் ஏற்படும் தாமதங்கள், தவறுகள், ஆவணச் சிக்கல்கள் அல்லது வரி செலுத்துவோரின் கோப்பு தொடர்பான குறிப்பிட்ட சூழ்நிலைகளால் ஏற்படக்கூடும் என்று அந்த அதிகாரி கூறினார்.
</p><p>
பணத்தைத் திரும்பப் பெறுவதில் உள்ள பிரச்சினைகளை மதிப்பிடுவதற்குத் தரவுப் பகுப்பாய்வு பயன்படுத்தப்பட்டு வருவதாக அந்தத் துறை தெரிவித்துள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-21T10:37:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் திருவிழாவுக்கு சென்றவர்களுக்கு நேர்ந்த அதிர்ச்சி! இதுவரையில் 157 பேர் வைத்தியசாலையில்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/excessive-use-of-lighting-at-a-temple-in-jaffna-1787293143"></link>
            <id>https://tamilwin.com/article/excessive-use-of-lighting-at-a-temple-in-jaffna-1787293143</id>
            <summary type="text">புதிய இணைப்புபண்டத்தரிப்பு ஆலயத்தில் பொருத்தப்பட்ட சீன மின் விளக்குகள் பொலிஸாரால்
பறிமுதல்
பண்டத்தரிப்பு பிரான்பற்று முருகன் ஆலயத்தில் நேற்றைய(20) ஆ...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p><b>பண்டத்தரிப்பு ஆலயத்தில் பொருத்தப்பட்ட சீன மின் விளக்குகள் பொலிஸாரால்
பறிமுதல்</b></p><p>
பண்டத்தரிப்பு பிரான்பற்று முருகன் ஆலயத்தில் நேற்றைய(20) ஆலயத் திருவிழாவின் போது
நூற்றுக்கணக்கானோர் கண் பாதிப்புக்குள்ளான சம்பவம் தொடர்பான விசாரணைகள்
முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
</p><p>கண் பாதிப்புக்கான காரணத்தை கண்டறியும் நோக்கில் பொலிஸார் மற்றும்
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ள நிலையில், ஆலய
வளாகத்தில் பொருத்தப்பட்டிருந்த அதிக சக்தி கொண்ட சீனத் தயாரிப்பு மின்
விளக்குகள் சிலவற்றை பொலிஸார் கையகப்படுத்தி எடுத்துச் சென்றுள்ளனர்.</p><p>
கையகப்படுத்தப்பட்ட மின் விளக்குகள் தற்போது ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு
வருவதுடன், அவற்றின் மின்சக்தி அளவு, பயன்பாட்டுத் தன்மை மற்றும் பொதுமக்கள்
பயன்பாட்டிற்கு அவை அனுமதிக்கப்பட்டவையா அல்லது தடை செய்யப்பட்டவையா என்பது
தொடர்பிலும் ஆராயப்பட்டு வருகிறது.&nbsp;</p><h2>மூன்றாம் இணைப்பு</h2><p>யாழ்.பண்டத்தரிப்பு பிரான்பற்று முருகமூர்த்தி ஆலயத்தில் நேற்றிரவு நடைபெற்ற
திருவிழாவில் அதிகளவு ஒலி காரணமாக கண் பாதிப்புக்குள்ளானவர்கள் அனைவரும்
உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டு, அங்கு சிகிச்சை
மற்றும் விசேட கண்காணிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக
வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
</p><p>கண் பாதிப்புக்குள்ளானவர்களில் இம்முறை உயர்தரப் பரீட்சைக்கு தோற்றும் இரு
மாணவர்களுக்கு மேலதிக சிகிச்சைகளைப் பெற்று வீடு திரும்பியுள்ளதுடன், அவர்கள்
தொடர்ந்தும் மருத்துவ கண்காணிப்பில் இருக்குமாறு பெற்றோருக்கு
அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><p>
இதற்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் தனியான விடுதியொன்று
ஒதுக்கப்பட்டு, அனுமதிக்கப்பட்டவர்களுக்கு மேலதிக வைத்தியர்கள், தாதியர்கள்
மற்றும் ஊழியர்களின் பங்களிப்புடன் சிகிச்சைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
</p><p>இந்நிலையில், தற்போது ஆண்கள் 58 பேரும், பெண்கள் 44 பேரும், சிறுவர்கள் 55
பேரும் என மொத்தம் 157 பேர் கண் பாதிப்பு உள்ளிட்ட பாதிப்புகளுக்காக
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.</p><p>
கண் பாதிப்புக்கான அறிகுறிகள் தென்படும் அனைவரும் தாமதமின்றி உடனடியாக
வைத்தியசாலைக்கு வருமாறு சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.</p><p>
மேலும், சுகாதார சேவைகள் பணிமனை, பொலிஸார், பிரதேச செயலாளர்கள் மற்றும்
தொடர்புடைய அதிகாரிகள் இணைந்து நிலைமையை தொடர்ந்து கண்காணித்து, தேவையான
நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p><h2>இரண்டாவது இணைப்பு&nbsp;</h2><p>பண்டத்தரிப்பு பிரான்பற்று பகுதியில் நடைபெற்ற ஆலயத் திருவிழாவின் போது
இடம்பெற்ற அதிகளவிலான வாணவேடிக்கை மற்றும் லேசர் ஒளிக்கீற்றுப் பயன்பாடு
காரணமாக பலர் கண் பாதிப்புக்குள்ளாகி வைத்தியசாலைகளை நாடி வருகின்றனர்.
</p><p>இதுதொடர்பில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் கண் வைத்திய நிபுணர் வைத்தியர்&nbsp; எம். மலரவன் பொதுமக்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்களை விடுத்துள்ளார்.</p><p>
️ கண்களில் எரிச்சல், சிவத்தல், நீர்வருதல், வலி, பார்வை மங்குதல் அல்லது
ஏதேனும் மாற்றம் ஏற்பட்டால் அலட்சியம் செய்ய வேண்டாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dbf0db8c-637c-4ee7-a408-b2a7e2bc8c8e/26-6a880a998b5a2.webp' /></p><p>
</p><p>உடனடியாக அருகிலுள்ள வைத்தியசாலைக்குச் சென்று பரிசோதனை செய்து
கொள்ளுமாறும், தேவையானவர்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் கண்
சிகிச்சைப் பிரிவை நாடுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><p>
️ குறிப்பாக நேற்றைய திருவிழாவில் கலந்துகொண்ட சிறுவர்கள், பெண்கள் உள்ளிட்ட
அனைவரும் தங்களது கண்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை கவனமாக அவதானிக்க வேண்டும்.
கண்களை தேய்க்க வேண்டாம்.
</p><p>சுயமாக எந்தவொரு கண் மருந்தையும் பயன்படுத்த வேண்டாம்.
சந்தேகம் ஏற்பட்டாலும் உடனடியாக வைத்திய ஆலோசனையைப் பெறுங்கள்.
</p><p>“கண் பாதிப்பு ஏற்பட்டால் தாமதிக்காமல் வைத்தியசாலையை நாடுங்கள்” – வைத்தியர் எம். மலரவன்
இந்த அறிவிப்பை அதிகமானவர்களுக்கு பகிர்ந்து, பாதிக்கப்பட்டவர்களை உடனடியாக
வைத்தியசாலைக்கு செல்லுமாறு அறிவுறுத்துவோம்.</p><h2>வைத்தியசாலையில் அனுமதி</h2><p>யாழ்ப்பாணம்,பண்டத்தரிப்பு பிரான்பற்று பகுதியில் உள்ள முருகமூர்த்தி
ஆலயத்தில் நேற்று (20.08.2026) நடைபெற்ற திருவிழாவின் போது அதிகளவில்
வாணவேடிக்கைகள் மற்றும் அதிக சக்தி கொண்ட லேசர் ஒளிக்கீற்றுகள்
பயன்படுத்தப்பட்டதால், சிறுவர்கள், பெண்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர்
கண் பாதிப்புக்குள்ளாகி வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக
அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p><p>முதற்கட்ட தகவல்களின் அடிப்படையில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சுமார்
120 பேரும், தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் 46 பேரும் சிகிச்சைக்காக
அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><h2>நோயாளிகளின் எண்ணிக்கை&nbsp;</h2><p>

இவர்களில் சிறுவர்கள் மற்றும் பெண்கள் சுமார் 60 பேரும், ஆண்கள் 50-க்கும்
மேற்பட்டோரும் அடங்குவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. </p><p>மேலும்
பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து வைத்தியசாலைகளை நாடி வருவதால், நோயாளிகளின்
எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

“பொதுமக்கள் எவ்வித பதற்றமும் இன்றி உடனடியாக வைத்தியசாலைகளை நாடலாம்.
</p><p>அதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளன” என யாழ்ப்பாணம் போதனா
வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் ரி. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.</p><p>

இதேவேளை, பாதிக்கப்பட்டவர்களை உடனடியாக வைத்தியசாலைகளுக்குச் செல்லுமாறு
பிரதேச சபையினால் ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்டு வருகிறது.
</p><p>
குறிப்பாக கண்களில் பாதிப்பு, எரிச்சல் அல்லது பார்வை தொடர்பான பிரச்சினைகள்
ஏற்பட்டவர்கள் தாமதிக்காமல் அருகிலுள்ள வைத்தியசாலையை நாடுமாறு
அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><h2>ஆலயத் திருவிழா</h2><p>
</p><p>
மேலும், ஆலயத் திருவிழாவின் போது மின் இணைப்புகளை வழங்கியதாகக் கூறப்படும்
சிலர் இளவாலை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.</p><p>

இதனிடையே, இதேபோன்று நவாலி அந்திரான் பகுதியில் நடைபெற்ற ஆலயத் திருவிழாவின்
போதும் வாணவேடிக்கையால் அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2a4f5d61-1510-4a3f-bdb4-a5434702ed78/26-6a87f1b62cc5d.webp' /></p><p>
</p><p>இதன்போது பனை மரம் ஒன்றும் பாதுகாப்பு வேலியும் தீப்பற்றி எரிந்ததுடன், சில
பொதுமக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.</p><p>

இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் கவலை வெளியிட்டுள்ள யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க
அதிபர் மருதலிங்கம் பிரதீபன், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும்
வகையில் ஆலய நிர்வாகங்கள் மற்றும் மதகுருமார்கள் உள்ளிட்ட அனைத்து
பொறுப்புக்கூற வேண்டிய தரப்பினரும் சமூகப் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என
கேட்டுக்கொண்டுள்ளார்.
</p><p>
தேவையற்ற ஒலிபெருக்கி பயன்பாடு, அதிகளவிலான பட்டாசு மற்றும் வாணவேடிக்கை, அதிக
சக்தி கொண்ட லேசர் ஒளிக்கீற்றுகள் உள்ளிட்ட பொதுமக்களின் பாதுகாப்புக்கு
பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய செயற்பாடுகளைத் தவிர்க்குமாறும் அவர்
வலியுறுத்தியுள்ளார்.
</p><p>
பொதுமக்களின் பாதுகாப்பை விட எந்தவொரு திருவிழா கொண்டாட்டமும் முக்கியமானதல்ல
எனவும், எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாத வகையில் ஆலய
நிர்வாகங்கள் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும்
கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p><p><b><i>&nbsp;மேலதிக தகவல் - தீபன்</i></b></p><h2>முதலாம் இணைப்பு</h2><p>யாழ்ப்பாணம், பிரான்பற்று பகுதியில் உள்ள முருகன் ஆலயத்தில் திருவிழாவை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்ட மின் விளக்கு அலங்காரத்தால் சுமார் 35 பேருக்கு கண் பார்வை பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>

குறித்த ஆலயத்தில் திருவிழா நடைபெற்று வரும் நிலையில், ஆலய வளாகம் பல்வேறு மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
</p><h2>பார்வை பிரச்சினை</h2><p>
இந்நிலையில், அதிகளவில் பயன்படுத்தப்பட்ட மின் விளக்குகளின் ஒளியால் நேற்று ஆலயத்திற்கு சென்றவர்களில் சுமார் 35 பேருக்கு கண் பார்வை தொடர்பான பாதிப்புகள் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b96d6b16-a4d5-4f7b-9533-87ec33cef535/26-6a87f1b55bdf5.webp' /></p><p>பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
</p><p>
இதனையடுத்து, குறித்த ஆலயத்திற்கு நேற்று சென்ற அனைவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குச் சென்று கண் பரிசோதனை மேற்கொள்ளுமாறு யாழ்ப்பாணம் மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் அறிவுறுத்தியுள்ளனர்.</p><p></p><p></p><p>YOU MAY LIKE THIS VIDEO</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/CFWVi5B8mkE" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-08-21T10:29:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுரேஷ் சலேவை தீவிரவாதியாக்கும் அரசாங்கம்! ஆவேசத்தில் ஞானசார தேரர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/gnanasara-thero-concerned-about-suresh-salley-1787306901"></link>
            <id>https://ibctamil.com/article/gnanasara-thero-concerned-about-suresh-salley-1787306901</id>
            <summary type="text">
சுரேஷ் சலே போன்ற போர் வீரர்களை அரசாங்கம் தீவிரவாதிகளாகக் காட்ட முயற்சிப்பதாக கலகொட அத்தே ஞானசார தேரர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு பயங்...</summary>
            <content type="html"><![CDATA[<p>
சுரேஷ் சலே போன்ற போர் வீரர்களை அரசாங்கம் தீவிரவாதிகளாகக் காட்ட முயற்சிப்பதாக கலகொட அத்தே ஞானசார தேரர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
</p><p>
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் முன்னாள் அரச புலனாய்வு பிரதானி சுரேஷ் சலே கைது செய்யப்பட்டுத் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளதை கண்டித்து நடத்தப்பட்ட கூட்டமொன்றின் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
</p><p>
அதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், “சில முக்கிய வரலாற்று உண்மைகளை நினைவூட்ட விரும்புகிறேன். 1971 மக்கள் விடுதலை முன்னணி கிளர்ச்சியில் 4,000 முதல் 5,000 பேர் வரையிலும், 1987-89 காலப்பகுதியில் 40,000 முதல் 80,000 பேர் வரையிலும் கொல்லப்பட்டனர்.</p><p></p><h2>சஹ்ரான் குழுவுக்கும் ஜனநாயக உரிமை?</h2><p>
</p><p>
அன்று தவறான பாதையில் சென்று கொலைகளைச் செய்தவர்கள் பின்னர் ஜனநாயகத்துக்கு வந்து மனித உரிமைகளைப் பற்றிப் பேச முடிந்தது என்றால், ஏன் அந்த உரிமையைச் சஹ்ரான் குழுவுக்கும், சிறையிலிருக்கும் விடுதலைப் புலிகள் உறுப்பினர்களுக்கும், நாட்டைக் காப்பாற்றப் போராடிவிட்டு இன்று சிறையிலிருக்கும் போர் வீரர்களுக்கும் வழங்க முடியாது?</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/37843fad-c130-45c4-8bd6-1aa44d8c9b1d/26-6a882708a116c.webp' /></p><p>
1983 முதல் 2009 வரை வடக்கில் நிலவிய பயங்கரவாதத்தினால் 27,000 போர் வீரர்களை நாம் இழந்தோம்.
</p><p>
தமிழீழ விடுதலைப் புலிகளை இராணுவ ரீதியாகத் தோற்கடிக்க எமது பாதுகாப்புப் படைகள் செயல்பட்டபோது, அவர்களுக்குத் தேவையான புலனாய்வு ஆதரவை அதிகளவில் வழங்கியவர்கள் முஸ்லிம் சகோதரர்களே.</p><p>

ஆனால், 1990களில் உருவான ஆயுதக் குழுக்கள் அல் கொய்தா, போகோ ஹராம், ஐ.எஸ்.ஐ.எஸ் போன்ற அமைப்புகளின் செல்வாக்கினால் வஹாபி தீவிரவாதத்துக்கு இரையானார்கள்.
</p><p>
சுரேஷ் சலே போன்ற புலனாய்வு அதிகாரிகள் இந்த வஹாபி தீவிரவாதத்தில் இருந்து நாட்டைக் காப்பாற்றப் பாடுபட்டவர்கள்.
</p><p>
அத்தகைய போர் வீரர்களைத் தீவிரவாதிகளாகக் காட்ட அரசாங்கம் முயற்சிக்கிறது. ஆனால், ஆயிரம் வழக்குகள் போட்டாலும் சிறையில் அடைத்தாலும் நாம் எமது தேசியப் பொறுப்பையும், சாசனப் பொறுப்பையும் கைவிடப் போவதில்லை.” என்றார்.</p><p></p><p>[IIXB9PG</p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;&nbsp;</h5></td></tr></tbody></table><p></p>]]></content>
            <updated>2026-08-21T10:23:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kowshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை ரூபாயின் பெறுமதியில் பதிவாகியுள்ள மாற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/the-decline-in-us-dollar-selling-rate-in-sri-lanka-1787306006"></link>
            <id>https://tamilwin.com/article/the-decline-in-us-dollar-selling-rate-in-sri-lanka-1787306006</id>
            <summary type="text">அமெரிக்க டொலரின் விற்பனை விகிதம் 334 ரூபாவாக குறைந்துள்ளது. அதே சமயம் நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில், இன்று(21.08.2026) அமெரிக்க டொலருக்கு எதிராக இல...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்க டொலரின் விற்பனை விகிதம் 334 ரூபாவாக குறைந்துள்ளது.</p><p> அதே சமயம் நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில், இன்று(21.08.2026) அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாயின் மதிப்பு மேலும் உயர்ந்துள்ளது.</p><h2>டொலரின் பெறுமதி&nbsp;</h2><p>
</p><p>
இலங்கை மத்திய வங்கியின் தகவல்படி, அமெரிக்க டொலரின் கொள்வனவு பெறுமதி ரூ. 326.05இலிருந்து ரூ. 325.10 ஆகக் குறைந்துள்ளது. மேலும் அதன் விற்பனை விகிதமும் ரூ. 335.01இலிருந்து ரூ. 334.23 ஆகக் குறைந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/56be3058-d5b3-45dc-8f26-41d9f7bf2ad9/26-6a882286ee908.webp' /></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-21T10:22:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பின்லாந்து வான்வெளியில் ரஷ்ய விமானம் - விசாரணை தொடக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/russian-jet-suspected-in-finland-airspace-probe-1787306187"></link>
            <id>https://news.lankasri.com/article/russian-jet-suspected-in-finland-airspace-probe-1787306187</id>
            <summary type="text">Russian jet suspected in Finland airspace: பின்லாந்து வான்வெளியில் ரஷ்ய விமானம் நுழைந்ததாக சந்தேகிக்கப்படுகிறது.

பின்லாந்து பாதுகாப்பு அமைச்சகம், ர...</summary>
            <content type="html"><![CDATA[<p>Russian jet suspected in Finland airspace: பின்லாந்து வான்வெளியில் ரஷ்ய விமானம் நுழைந்ததாக சந்தேகிக்கப்படுகிறது.
</p><p>
பின்லாந்து பாதுகாப்பு அமைச்சகம், ரஷ்யாவின் ஒரு விமானம் பின்லாந்து வான்வெளியில் நுழைந்ததாக சந்தேகிக்கப்படும் சம்பவம் குறித்து அதிகாரப்பூர்வ விசாரணையை தொடங்கியுள்ளது.
</p><p>
இந்த சம்பவம் ஆகஸ்ட் 20, 2026 அன்று கிழக்கு பால்டிக் கடலின் போர்வோ அருகே நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b30842fb-2b18-442b-bd22-57baff2e8f32/26-6a88269be355c.webp' /></p><h2>ஆய்வு&nbsp;</h2><p>அந்த ரஷ்ய விமானம் பின்லாந்து வான்வெளியில் சில நிமிடங்கள் பறந்ததாகவும், சில கிலோமீட்டர் தூரம் பின்லாந்து எல்லைக்குள் நுழைந்ததாகவும் கூறப்படுகிறது. பின்னர் அது சர்வதேச வான்வெளிக்குத் திரும்பியதாக கூறப்படுகிறது.
</p><p>
பின்லாந்து விமான கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு அமைப்புகள் உடனடியாக செயல்படுத்தப்பட்டு, அந்த விமானத்தின் பாதையை கண்காணித்தன. தற்போது ரேடார் மற்றும் பிற தரவுகள் ஆய்வு செய்யப்படுகின்றன.
</p><p></p><p>பின்லாந்து பாதுகாப்பு அமைச்சர் அண்டி ஹக்கனென், “எந்தவொரு வான்வெளி மீறலையும் மிகுந்த முக்கியத்துவத்துடன் எடுத்துக்கொள்கிறோம். விசாரணை நடைபெற்று வருகிறது” என்று தெரிவித்துள்ளார்.</p><h2>

ஒரு சம்பவம் அல்ல
</h2><p>
இதுப்போன்ற சம்பவம் முதல்முறைய அல்ல. கடந்த மே மற்றும் ஜூன் மாதங்களிலும் ரஷ்ய விமானங்கள் பின்லாந்து வான்வெளியில் நுழைந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அப்போது பின்லாந்து, ரஷ்ய தூதரக அதிகாரியை அழைத்து எதிர்ப்பு தெரிவித்தது.
</p><p>
பின்லாந்து, ரஷ்யாவுடன் 1,340 கிலோமீட்டர் நீளமான நில எல்லையை பகிர்ந்து கொள்கிறது. இது நேட்டோ (NATO) உறுப்பினரான பின்லாந்துக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான மிக நீளமான எல்லையாகும். 2023 ஏப்ரல் மாதம் பின்லாந்து நேட்டோ கூட்டணியில் இணைந்ததிலிருந்து, பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
</p><p>
இந்த சம்பவம், பால்டிக் பிராந்தியத்தில் பாதுகாப்பு சூழ்நிலையை மேலும் பதற்றமாக்கியுள்ளது. பின்லாந்து எல்லை பாதுகாப்பு படை, இந்த விமானம் திட்டமிட்டே நுழைந்ததா அல்லது வழிச் சிக்கலால் ஏற்பட்டதா என்பதை ஆராய்கிறது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-21T10:19:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடற்படை முகாம் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஹரக் கட்டா! நீதிமன்றில் அறிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/harakatta-who-is-being-held-at-a-naval-camp-1787306407"></link>
            <id>https://ibctamil.com/article/harakatta-who-is-being-held-at-a-naval-camp-1787306407</id>
            <summary type="text">போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஹரக் கட்டா என அழைக்கப்படும் நந்துன் சிந்தக விக்ரமரத்ன குறித்த வழக்கு விசாரணை நேற்று இடம்பெ...</summary>
            <content type="html"><![CDATA[<p>போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஹரக் கட்டா என அழைக்கப்படும் நந்துன் சிந்தக விக்ரமரத்ன குறித்த வழக்கு விசாரணை நேற்று இடம்பெற்றுள்ளது.</p><p>இந்த வழக்கில் சந்தேகநபருக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பில் மேன்முறையீடு செய்யப்பட்டுள்ளதாக நீதிமன்றுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இந்நிலையில் இந்த வழக்கில் ஹரக் கட்டாவும் கருத்துக்களை முன்வைக்க சந்தரப்பம் வழங்கப்பட்டுள்ளது.</p><p></p><h3>முழங்கால் பாதிப்பு</h3><p>இந்த வழக்கிற்காக பிரதிவாதியான ஹரக் கட்டா ‘சூம்’ தொழில்நுட்பத்தின் ஊடாக நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7741ba3d-fa22-4533-acc7-ae7c1c36533d/26-6a88256246955.webp' /></p><p> </p><p>அவர் தொலைக்காட்சித் திரை ஊடாக கையை உயர்த்தி, தாம் எதிர்நோக்கும் நிலைமை குறித்து நீதிமன்றத்தில் முறையிட்டார்.</p><p>&nbsp;தமக்கு பொருத்தமான சிறைச்சாலையில் தடுத்து வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த போதிலும், தற்போது தாம் கடற்படை முகாம் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். </p><p>மேலும், தங்காலை பழைய சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தபோது தனது முழங்கால் பாதிப்புக்காக ஆயுர்வேத சிகிச்சை வழங்கப்பட்டதாகவும், தற்போது அந்தச் சிகிச்சை கிடைப்பதில்லை என்றும் அவர் தெரிவித்தார்.</p><p></p><h2>பயங்கரவாதத் தடுப்புச் சட்டம்</h2><p> </p><p>இதன்போது ஹரக் கட்டா சார்பில் முன்னிலையான சட்டத்தரணி சாலிய சமரசிங்க, தமது சேவை பெறுநரை பொருத்தமான சிறைச்சாலையில் தடுத்து வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த போதிலும், அவர் தற்போது கடற்படை அதிகாரிகளின் பொறுப்பில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/97c9590a-175f-44f4-bd27-edbdee915d5a/26-6a882562efa22.webp' /></p><p> </p><p>இந்நிலையில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஹரக் கட்டா என அழைக்கப்படும் நந்துன் சிந்தக விக்ரமரத்ன உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு எதிராக பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல முடியாது என கொழும்பு மேல் நீதிமன்றம் அண்மையில் வழங்கிய உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம் நேற்று (ஆகஸ்ட் 20) கொழும்பு மேல் நீதிமன்றத்திற்கு அறிவித்தது.</p><p>
இந்த வழக்கு இன்று கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி புத்திக சி. ராகல முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.</p><p>

இதன்போது அரசுத் தரப்பு சார்பில் முன்னிலையான அரச சட்டத்தரணி சஜித் பண்டார, நீதிமன்றம் முன்னர் வழங்கிய உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள I<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">BC தமிழ் WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-21T10:17:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kowshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொரிய விமானிகளைக் காப்பாற்றிய இலங்கைத் தொழிலாளர்கள்! கிடைத்துள்ள அங்கீகாரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-lankan-workers-save-korean-pilots-1787302984"></link>
            <id>https://tamilwin.com/article/sri-lankan-workers-save-korean-pilots-1787302984</id>
            <summary type="text">4 ஆண்டுகளுக்கு முன்பு, 3 இலங்கை புலம்பெயர் தொழிலாளர்கள்&amp;nbsp;தென் கொரிய படகொன்றின் மாலுமியுடன் இணைந்து&amp;nbsp;மஞ்சள் கடலில்&amp;nbsp; தீப்பிடித்து விழுந்த வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>4 ஆண்டுகளுக்கு முன்பு, 3 இலங்கை புலம்பெயர் தொழிலாளர்கள்&nbsp;தென் கொரிய படகொன்றின் மாலுமியுடன் இணைந்து&nbsp;மஞ்சள் கடலில்&nbsp; தீப்பிடித்து விழுந்த விமானமொன்றில் இருந்து 2 விமானிகளை காப்பாற்றியுள்ளனர்.</p><p>அவ்வாறு உயிரைக் காப்பாற்றிய 2&nbsp;இலங்கையர்களுக்கு தேசிய நலனுக்கு ஆற்றிய சிறப்பான பங்களிப்பை காரணம் காட்டி, அங்கு நீண்ட காலம் தங்குவதற்கான திறன்மிகு தொழிலாளர் விசாக்களை வழங்கியதாக அந்த நாட்டு நீதி அமைச்சு தெரிவித்துள்ளது.&nbsp;</p><h2>திறன்மிகு தொழிலாளர் தகுதி&nbsp;</h2><p>மூன்றாவது மீட்பாளர் ஏற்கனவே நீண்ட கால வதிவிடத் தகுதியைப் பெற்றிருப்பதுடன் 2022 ஆகஸ்ட் 12 அன்று, சியோலுக்குத் தெற்கே சுமார் 45 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஹ்வாசொங் கடற்கரைக்கு அப்பால் இந்த மீட்பு நடவடிக்கை நடைபெற்றுள்ளது.</p><p> இயந்திரத்தில் ஏற்பட்ட தீ விபத்தைத் தொடர்ந்து கீழே விழுந்த போர் விமானத்தின் விமானிகளை, கடற்றொழில் படகில் இருந்த இலங்கைத் தொழிலாளர்கள் கண்டுள்ளனர்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1b427d77-16df-48da-a688-fea3f86ba3ba/26-6a881d8da7f5d.webp' /></p><p>அந்த நேரத்தில், அந்த மூன்று பேரும் தொழிலாளர் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் துறைகளில் உள்ள வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்குப் பொதுவாக வழங்கப்படும் E-9 விசாக்களை வைத்துக்கொண்டு, வேலைவாய்ப்பு அனுமதி முறையின் கீழ் தென் கொரியாவில் இருந்துள்ளனர். </p><p>இந்தத் தகுதி, தொழிலாளர்கள் அதிகபட்சமாக நான்கு ஆண்டுகள் மற்றும் 10 மாதங்கள் தங்குவதற்கு அனுமதி வழங்கும். வெள்ளிக்கிழமை அன்று E-7-4 திறன்மிகு தொழிலாளர் தகுதி வழங்கப்பட்ட அந்த இரு நபர்களும், ஆரம்பத்தில் இரண்டு ஆண்டுகள் வரை தென் கொரியாவில் தங்கியிருக்கலாம்.</p><h2>அதிகாரப்பூர்வ அங்கீகாரம்</h2><p> </p><p>அதன் பிறகு, நீட்டிப்புகளின் எண்ணிக்கைக்கு வரம்பின்றி, அவர்களின் விசாக்களை இரண்டு ஆண்டு இடைவெளிகளில் புதுப்பித்துக் கொள்ளலாம். </p><p>இதனையடுத்து "நமது சமூகத்திற்குச் சிறப்பான பங்களிப்புகளை ஆற்றியுள்ள வெளிநாட்டினர் நாட்டில் நிலையாக வாழ்வதற்கு நாங்கள் தொடர்ந்து ஆதரவளிப்போம்" என நீதித்துறை அமைச்சர் ஜங் சங்-ஹோ கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c70a4a7f-f60b-4e4a-be68-5b387715c92c/26-6a881d8e58f5f.webp' /></p><p> </p><p>அந்த வீரர்களின் செயல்களுக்கு கிடைத்த மற்றொரு அதிகாரப்பூர்வ அங்கீகாரத்தைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.</p><p> கடந்த மே மாதம், இரண்டு விமானிகளைக் காப்பாற்ற உதவியதற்காக, விமானப்படைத் தலைமைத் தளபதியிடமிருந்து அவர்கள் ஒரு பாராட்டுக் கடிதத்தைப் பெற்றுள்ளனர். </p><p>4 ஆண்டுகளுக்கு முன்பு செய்யப்பட்ட அந்தத் தொழிலாளர்களின் செயல், இறுதியில் 2 உயிர்களை காப்பாற்றியது மட்டுமல்லாமல், தென் கொரியாவில் அவர்களின் வாழ்க்கைப் போக்கையும் மாற்றியமைத்துள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-21T10:17:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதிக டெஸ்ட் அரை சதம் - சச்சினின் சாதனையை சமன் செய்த ஜோ ரூட்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/joeroot-equal-sachin-record-most-test-half-century-1787307249"></link>
            <id>https://news.lankasri.com/article/joeroot-equal-sachin-record-most-test-half-century-1787307249</id>
            <summary type="text">joe root equal sachin record most test half century: அதிக டெஸ்ட் அரை சதம் அடித்துள்ள சச்சினின் சாதனையை ஜோ ரூட் சமன் செய்துள்ளார். 

சச்சினின் சாதனைய...</summary>
            <content type="html"><![CDATA[<p>joe root equal sachin record most test half century: அதிக டெஸ்ட் அரை சதம் அடித்துள்ள சச்சினின் சாதனையை ஜோ ரூட் சமன் செய்துள்ளார். </p><h3>

சச்சினின் சாதனையை சமன் செய்த ஜோ ரூட்</h3><p> 

இங்கிலாந்துக்கு சென்றுள்ள பாகிஸ்தான் அணி 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
</p><p>
முதல் டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தான் அணி 171 ஓட்டங்கள் குவித்து ஆல் அவுட் ஆனது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1ba60590-466f-4559-9cfa-bdeee68fd67d/26-6a8824f287ba7.webp' /></p><p>

அதனைத்தொடர்ந்து முதல் இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து அணி, 8 விக்கெட் இழப்பிற்கு 366 ஓட்டங்கள் குவித்துள்ளது.&nbsp;</p><p>

இங்கிலாந்து தரப்பில் ஜோர்டான் காக்ஸ், ஹாரி ப்ரூக், ஜோ ரூட் உள்ளிட்ட மூவரும் அரைசதம் அடித்தனர்.&nbsp;</p><p></p><p>

66 ஓட்டங்களை குவித்த ஜோ ரூட்டிற்கு இது 68வது டெஸ்ட் அரைசதம் ஆகும்.
</p><p>
இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக அரைசதம் அடித்துள்ள சச்சின் டெண்டுல்கரின் சாதனையை சமன் செய்துள்ளார்.&nbsp;</p><p>
278 இன்னிங்ஸில் சச்சின் செய்த சாதனையை, ஜோ ரூட் 264 இன்னிங்ஸில் சமன் செய்துள்ளார்.&nbsp;&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-21T10:14:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[மூத்த நடிகை சௌகார் ஜானகி காலமானார்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/veteran-actress-sowcar-janaki-passes-away-1787306661"></link>
            <id>https://tamilwin.com/article/veteran-actress-sowcar-janaki-passes-away-1787306661</id>
            <summary type="text">உடலநலக் குறைவு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகை சௌகார் ஜானகி தனது 94ஆவது வயதில் காலமானார்.தென்னிந்திய சினிமாவின் மூத்த நடிகைகளில் ஒ...</summary>
            <content type="html"><![CDATA[<p>உடலநலக் குறைவு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகை சௌகார் ஜானகி தனது 94ஆவது வயதில் காலமானார்.</p><p>தென்னிந்திய சினிமாவின் மூத்த நடிகைகளில் ஒருவரான சௌகார் ஜானகி, உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் வைத்தியசாலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அனுமதிக்கப்பட்டிருந்தார்.</p><h2>சௌகார் ஜானகி</h2><p> </p><p>இந்த நிலையில் இன்று(21) மதியம் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக வைத்தியர்கள்கள் அறிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b3f305b5-6c0d-429a-9abe-fcc503e997a2/26-6a8824aee63f8.webp' /></p><p>கடந்த 1950 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான ’சவுகாரு’ திரைப்படத்தின் மூலம் அவர் திரையுலகில் அடியெடுத்து வைத்தார். அதை தொடர்ந்து சௌகார் ஜானகி என அவர் அழைக்கப்பட்டார்.</p><p>சௌகார் ஜானகியின் மறைவு தென்னிந்திய திரையுலகத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-21T10:13:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரெஞ்சு பொலிஸார் மீது புலம்பெயர்ந்தோர் தாக்குதல்; சம்பவத்தால் பரபரப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/migrants-attack-french-police-1787293186"></link>
            <id>https://canadamirror.com/article/migrants-attack-french-police-1787293186</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;பிரான்ஸ் நாட்டின் வடக்குக் கடற்கரைப் பகுதியிலிருந்து சிறிய ரப்பர் படகுகள் (Small Boats) மூலம் இங்கிலாந்து நோக்கிக் சட்டவிரோதமாகப் பயணிக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;பிரான்ஸ் நாட்டின் வடக்குக் கடற்கரைப் பகுதியிலிருந்து சிறிய ரப்பர் படகுகள் (Small Boats) மூலம் இங்கிலாந்து நோக்கிக் சட்டவிரோதமாகப் பயணிக்க முயன்ற புலம்பெயர்ந்தோரைத் தடுக்க முயன்ற பிரெஞ்சு காவல் துறையினர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><p> 

கடலோரக் காவல் படையினர் படகை நோக்கிச் சென்றபோது, அங்கிருந்த புலம்பெயர்ந்தோர் அவர்களைத் தடுத்து நிறுத்தி மோதலில் ஈடுபட்ட காட்சிகள் வெளியாகியுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6cf82c50-d0e5-4a6b-babd-0a2e76f635c2/26-6a87ee036fa0e.webp' /></p><h2>மனித கடத்தல்காரர்கள் மற்றும் புலம்பெயர்ந்தோர்&nbsp;</h2><p>
</p><p>
ஆங்கிலக் கால்வாய் (English Channel) வழியாகப் பிரிட்டனை அடைய கடத்தல் கும்பல்களின் உதவியுடன் நூற்றுக்கணக்கானோர் தினமும் பிரெஞ்சு கடற்கரைகளில் திரள்கின்றனர். </p><p>

பாதுகாப்புப் படையினர் படகுகளைக் பறிமுதல் செய்யவோ அல்லது கடலுக்குள் செல்வதைத் தடுக்கவோ முயலும் போது, அவர்கள் மீது கற்களை வீசியும், தடி மற்றும் கூர்மையானப் பொருட்களைக் கொண்டும் தாக்குதல்கள் நடத்தப்படுவதாகப் பிரெஞ்சு அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
சமீபகாலமாகப் பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் அரசுகள் இணைந்து எல்லைக் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியுள்ளன. </p><p>போலீசார் கடலோரப் பகுதிகளில் ரோந்துப் பணியை அதிகரித்துள்ள போதிலும், மனித கடத்தல்காரர்கள் மற்றும் புலம்பெயர்ந்தோர் மிகவும் ஆக்ரோஷமான முறையில் சட்ட அமலாக்கப் படையினரை எதிர்கொண்டு படகுகளை இயக்க முயல்வது தொடர்கதையாகி வருகிறது.
</p><p>
ஆபத்தான இந்த கடல்சார் பயணங்களின் போது ஏற்படும் மோதல்கள் மற்றும் விபத்துக்களால் உயிரழப்புகள் அதிகரிக்கும் அபாயம் உருவாகியுள்ளது. </p><p>

இந்த வன்முறை சம்பவங்களைத் தொடர்ந்து, பிரெஞ்சு கடலோரப் பகுதிகளில் கூடுதல் காவல் படையினரைக் குவிக்கவும், கடத்தல் நெட்வொர்க்குகளுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கவும் இரு நாடுகளின் அதிகாரிகளும் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-08-21T10:09:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடா மருத்துவமனையில் செவிலியர் மீது தாக்குதல்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/nurse-beaten-in-psychiatric-ward-of-hospital-1787306826"></link>
            <id>https://canadamirror.com/article/nurse-beaten-in-psychiatric-ward-of-hospital-1787306826</id>
            <summary type="text">கனடாவின் கியூபெக் நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றின் மனநல அவசர சிகிச்சைப் பிரிவில் பணிபுரியும் செவிலியர் ஒருவர், கோபமடைந்த நோயாளி ஒருவரால் கொடூரமாகத் தாக...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் கியூபெக் நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றின் மனநல அவசர சிகிச்சைப் பிரிவில் பணிபுரியும் செவிலியர் ஒருவர், கோபமடைந்த நோயாளி ஒருவரால் கொடூரமாகத் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><p>இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து, மருத்துவமனைகளில் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.</p><p> 
'CHU de Québec-Université Laval' மருத்துவமனையில் பணிபுரியும் பாட்ஸி வான் டேம் என்ற செவிலியர் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் இந்த அதிர்ச்சி சம்பவத்தைப் பகிர்ந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a6304065-a99a-4cd1-89e1-c777fb835b8f/26-6a88234bc68d8.webp' /></p><p> 
நோயாளி ஒருவர் தனது சக ஊழியரைத் தாக்க முயன்றபோது, அவரைக் காப்பாற்ற வான் டேம் இடையூறாகச் சென்றுள்ளார். 
அப்போது அந்த நோயாளி வான் டேமைப் பிடித்துக்கொண்டு, அவரது முடியைப் பிடித்து இழுத்து, கழுத்தை நெரிக்க முயன்று சரமாரியாகத் தாக்கியுள்ளார். </p><p>
"அவர் தனது முழு பலத்தையும் கொண்டு என்னை அடித்தார். எனது சக ஊழியர் மிகுந்த சிரமத்திற்கு இடையே தப்பித்துச் சென்றுவிட, நான் மட்டும் அந்த நோயாளியிடம் தனியாகச் சிக்கிக் கொண்டேன்" என்று கூறிய வான் டேம், "நான் நரகத்தை அனுபவித்தேன். என் உயிருக்கே பயந்து நடுங்கினேன்" எனத் தனது காயமடைந்த முகத்தைச் சுட்டிக்காட்டி வேதனையுடன் தெரிவித்தார்.</p><p> 
நிதி குறைப்பு காரணமாக மனநலப் பிரிவில் பிரத்யேகப் பாதுகாப்பு ஊழியர்கள் நியமிக்கப்படாததே இந்தத் தாக்குதலுக்கு முதன்மைக் காரணம் என அவர் குற்றம்சாட்டியுள்ளார்.</p><p>நிதிகள் எதுவும் களத்தில் பணிபுரியும் எங்களுக்கு வந்து சேருவதில்லை; அதிகாரிகளின் முடிவுகளுக்கானப் பலனைத்தான் நான் என் காயங்கள் மூலம் அனுபவிக்கிறேன் என தெரிவித்துள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-21T10:07:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் பலரின் கண்ணுக்கு பிரச்சனையான மின் விளக்குகள் பறிமுதல்; சீனா தயாரிப்பாம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/eye-injury-china-light-at-jaffna-temple-festival-1787306941"></link>
            <id>https://jvpnews.com/article/eye-injury-china-light-at-jaffna-temple-festival-1787306941</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;யாழ்ப்பாணம் - பண்டத்தரிப்பு பிரான்பற்று முருகன் ஆலயத்தில் நடைபெற்ற ஆலயத் திருவிழாவின் போது, நூற்றுக்கணக்கானோர் கண் பாதிப்புக்குள்ளான சம்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;யாழ்ப்பாணம் - பண்டத்தரிப்பு பிரான்பற்று முருகன் ஆலயத்தில் நடைபெற்ற ஆலயத் திருவிழாவின் போது, நூற்றுக்கணக்கானோர் கண் பாதிப்புக்குள்ளான சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. </p><p>

கண் பாதிப்புக்கான உண்மையான காரணத்தைக் கண்டறியும் நோக்கில் பொலிஸாரும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் விசாரணைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e6f6d1da-b07c-47e9-b6c8-49a9842a3ea9/26-6a8823beca16d.webp' /></p><p> </p><p>

இதன் ஒரு கட்டமாக, ஆலய வளாகத்தில் பொருத்தப்பட்டிருந்த அதிக வலு கொண்ட சீனத் தயாரிப்பு மின் விளக்குகள் சிலவற்றை பொலிஸார் கையகப்படுத்தி எடுத்துச் சென்றுள்ளனர்.</p><p></p><p> </p><p>

கையகப்படுத்தப்பட்ட இந்த மின் விளக்குகள் தற்போது ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு வருவதுடன், அவற்றின் மின்சக்தி அளவு, பயன்பாட்டுத் தன்மை மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அவை அனுமதிக்கப்பட்டவையா? அல்லது தடை செய்யப்பட்டவையா என்பது தொடர்பிலும் விரிவாக ஆராயப்பட்டு வருகிறது.</p>]]></content>
            <updated>2026-08-21T10:06:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரூ. 100 கோடி கிளப்பில் இணைந்ததா லோகேஷ் கனகராஜின் டிசி திரைப்படம்... மாஸ் கலெக்ஷன் விவரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/lokesh-kanagaraj-dc-movie-bo-1787300573"></link>
            <id>https://cineulagam.com/article/lokesh-kanagaraj-dc-movie-bo-1787300573</id>
            <summary type="text">டிசி திரைப்படம்ஆல் ஏரியாவிலும் நான் கில்லி என விஜய்யின் பட வசனம் வருவது போல் இயக்கம் மட்டுமில்லை நடிப்பிலும் மாஸ் காட்டுவேன் வசூல் வேட்டை செய்வேன் என ...</summary>
            <content type="html"><![CDATA[<h2>டிசி திரைப்படம்</h2><p>ஆல் ஏரியாவிலும் நான் கில்லி என விஜய்யின் பட வசனம் வருவது போல் இயக்கம் மட்டுமில்லை நடிப்பிலும் மாஸ் காட்டுவேன் வசூல் வேட்டை செய்வேன் என செய்து காட்டி வருகிறார் லோகேஷ் கனகராஜ். </p><p>அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் லோகேஷ் கனகராஜ், வாமிகா கபி, சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியான படம் டிசி. </p><p>அனிருத் இசையமைக்க ஆக்ஷன் கதைக்களத்தில் உருவான டிசி படம் கடந்த ஆகஸ்ட் 7ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/60811e8d-e65d-4b6f-ad28-ec7d6436f9e0/26-6a881baef0715.webp' /></p><h2>பாக்ஸ் ஆபிஸ்</h2><p>
ஹீரோவாக களமிறங்கியுள்ள லோகேஷ் கனகராஜின் நடிப்பு ரசிகர்களால் வெகுவாக பாராட்டப்பட்டது. அதேபோல் அனிருத்தின் இசையும் படத்திற்கு பலம் சேர்த்துள்ளது. </p><p>படம் வெளியாகி 15 நாள் முடிவில் உலகளவில் ரூ. 100 கோடிக்கு மேலான வசூல் வேட்டை செய்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/DSmdlruqxMg?start=5" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p> </p><p>படங்கள் இயக்கி ரூ. 100 கோடி மட்டுமில்லை நடிப்பின் மூலமாகவும் வசூல் வேட்டை செய்வேன் என இப்படம் மூலம் மாஸ் காட்டியுள்ளார் லோகேஷ் கனகராஜ்.</p>]]></content>
            <updated>2026-08-21T10:00:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ் ஆலயத் திருவிழாவில் அதிக வெளிச்சம்; நூற்றிற்கும் மேற்பட்டோர் வைத்தியசாலைகளில்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/excessive-lighting-jaffna-temple-vision-impairment-1787297452"></link>
            <id>https://jvpnews.com/article/excessive-lighting-jaffna-temple-vision-impairment-1787297452</id>
            <summary type="text">&amp;nbsp; யாழ்ப்பாணம் பண்டத்தரிப்பு பகுதியில் இடம்பெறும் ஆலயத் திருவிழாவின்போது அதிக வெடிகள் மற்றும் லேசர் லைற் பயன்பாட்டின் காரணமாக கண்ணில் பாதிப்படைந்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; யாழ்ப்பாணம் பண்டத்தரிப்பு பகுதியில் இடம்பெறும் ஆலயத் திருவிழாவின்போது அதிக வெடிகள் மற்றும் லேசர் லைற் பயன்பாட்டின் காரணமாக கண்ணில் பாதிப்படைந்த நூற்றிற்கும் மேற்பட்டோர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக&nbsp; தெரியவருகின்றது.</p><p>
பிரான்பற்று, பண்டத்தரிப்பு பகுதியில் உள்ள ஆலயத்தில் நேற்றைய உற்சவத்தின்போது அதிக வானவேடிக்கை வெடிகள் கொளுத்தப்பட்டதோடு ஆலயத்தில் இசை நிகழ்வின்போது அதிக சக்திகொண்ட லேசர் லைற் வகைகளும் பயன்படுத்தப்பட்டுள்ளன.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f910deef-2b2a-44c8-8dbd-ff8acea46d1d/26-6a87feae4d898.webp' /></p><p>
</p><h2>&nbsp;கண்ணில் பாதிப்படைந்த நூற்றுக் கணக்கானோர்</h2><p>இதனால் கண்ணில் பாதிப்படைந்த நூற்றுக் கணக்கானோர் வைத்தியசாலைகளை நாடி வருகின்றனர்.</p><p>
இதனால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வழமையான பணிகள் குறைக்கப்பட்டு இதற்காக விசேட ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதோடு ஏனைய வைத்தியசாலைகளில் இருந்து வைத்தியர்கள், தாதியர்கள் வரவழைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளதாகவும் கூறப்படுகின்றது.</p><p></p><p>

இதேநேரம் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் 46 பேரும் போதனா வைத்தியசாலையில் 120 பேரும் அனுமதிக்கப்பட்டுள்ளதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a083bad8-0591-43ff-a5be-7c09f2afc38a/26-6a8819a638212.webp' /></p><p></p><p>
</p><p>
இதேநேரம் எந்தவித பதற்றமும் இன்றி உடன் வைத்தியசாலையை நாடலாம் அதற்கு தேவையான ஏற்பாடுகள் அனைத்தும் தயார. நிலையில் உள்ளதாக போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் ரி.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.</p><p>
இதேநேரம் ஆலய திருவிழாவின்போது மின் இணைப்புக்களை வழங்கியவர்கள் இளவாலைப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p></p><p>அதேவேளை&nbsp; ஆலய திருவிழாக்கள்&nbsp; தற்போது&nbsp; கேளிக்கை கூடமாக மாறி வருவதாக&nbsp; சமூக ஆர்வலர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-08-21T10:00:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Farook Sihan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கல்முனை வைத்தியசாலை சீருடை விவகாரம் : எழுந்துள்ள விசனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/constitutional-rights-not-denied-by-circulars-1787291603"></link>
            <id>https://tamilwin.com/article/constitutional-rights-not-denied-by-circulars-1787291603</id>
            <summary type="text">அரசியலமைப்பு உரிமைகளை சுற்றறிக்கைகளைக் காட்டி மறுக்க முடியாது என&amp;nbsp; மனித உரிமைகள் ஆணைக்குழுவில் சட்டத்தரணி மு. அஸ்ஸம் தெரிவித்துள்ளார்.கல்முனை - வட...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரசியலமைப்பு உரிமைகளை சுற்றறிக்கைகளைக் காட்டி மறுக்க முடியாது என&nbsp; மனித உரிமைகள் ஆணைக்குழுவில் சட்டத்தரணி மு. அஸ்ஸம் தெரிவித்துள்ளார்.</p><p>கல்முனை - வடக்கு ஆதார வைத்தியசாலை சீருடை விவகாரம் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள்
ஆணைக்குழுவின்&nbsp; விசாரணைகளை அடுத்தே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.</p><h2>அடிப்படை உரிமைகளை பாதுகாத்தல்</h2><p>
பாதிக்கப்பட்ட பணியாளர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி எம்.எம்.எம்.மு.அஸ்ஸம்,
"குறித்த ஆடை அனுமதிக்கப்படாத ஒன்றாக இருந்தால், அதே ஆடையுடன் அவர்கள் வேறு
அரச வைத்தியசாலையில் எவ்வாறு பணியாற்ற முடியும்? அவ்வாறாயின் அரசியலமைப்பை
நடைமுறைப்படுத்த முடியாத தனி மண்டலமாகவா கல்முனை ஆதார வைத்தியசாலை
தொழிற்படுகிறது? எனக்கேள்வி எழுப்பியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/873ecbfe-73af-462a-adea-e2db7c391d7d/26-6a87ebbc0ed35.webp' /></p><p>
மேலும், அரச தாபன விதிக்கோவை மற்றும் சுற்றறிக்கைகளை மட்டும் மேற்கோள்காட்டி
அதிகாரிகள் அடிப்படை உரிமைகளை பாதுகாக்கும் பொறுப்பிலிருந்து விலகிவிட
முடியாது என்றும், தாதியர் உள்ளிட்ட ஏனைய பணியாளர்களுக்கும் இந்தப் பிரச்சினை
விரிவடையும் முன் சுகாதார அமைச்சு தேசிய மட்டத்திலான நிரந்தர கொள்கைத்
தீர்வை வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.</p><p>

அத்துடன், இந்தச் சம்பவத்தை சாதகமாக பயன்படுத்தி சமூக வலைத்தளங்களில்
இனவாதக் கருத்துக்களையும் போலிப் பிரசாரங்களையும் பரப்புவதை தவிர்த்து பொறுப்புடன் நடந்துகொள்ளுமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-21T09:57:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பொலிஸ் சான்றிதழ் தொடர்பில் தற்காலிக நடைமுறை !]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/temporary-procedure-regarding-police-certificates-1787306282"></link>
            <id>https://jvpnews.com/article/temporary-procedure-regarding-police-certificates-1787306282</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;இலங்கை பொலிஸ் தலைமையகத்தின் சான்றளிப்பு பிரிவின் தரவுத்தளக் கணினி அமைப்பு செயலிழந்துள்ள நிலையில், பொலிஸ் சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்வதற்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;இலங்கை பொலிஸ் தலைமையகத்தின் சான்றளிப்பு பிரிவின் தரவுத்தளக் கணினி அமைப்பு செயலிழந்துள்ள நிலையில், பொலிஸ் சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்வதற்காகப் பொதுமக்கள் விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான தற்காலிக நடைமுறையொன்றைப் பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.</p><p>

பத்தரமுல்லையில் அமைந்துள்ள 'சுஹுருபாய' கட்டிடத்தின் 17வது மாடியில் இயங்கி வரும் சான்றளிப்புப் பிரிவின் கணினி முறைமை, நேற்று வியாழக்கிழமை (20) முதல் செயலிழந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/49df860a-1700-492a-91a0-4a533580d06c/26-6a88212bbeb09.webp' /></p><p>
</p><p>
இக் கணினி முறைமை மீண்டும் சீரமைக்கப்படும் வரை பொதுமக்கள் பின்வரும் தற்காலிக நடைமுறையைப் பின்பற்றி விண்ணப்பிக்கலாம்.

பொதுமக்கள் இலங்கை பொலிஸின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.police.lk என்ற முகவரிக்குச் சென்று, "Download Application" என்பதைக் கிளிக் செய்து விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்ய வேண்டும்.</p><p></p><p>இலங்கை அரசியல்

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்துடன், தேசிய அடையாள அட்டை மற்றும் கடவுச்சீட்டின் ஒளிப்ப பிரதிகளை clear.application@police.gov.lk என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
</p><p>
இத் தற்காலிக நடைமுறையின் கீழ் விண்ணப்பிக்கும் போது தற்போதைக்கு எந்தவொரு கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை.

இவ்வாறாக மின்னஞ்சல் மூலம் பெறப்படும் விண்ணப்பங்களுக்குரிய பின்னணி அறிக்கைகளைச் சம்மந்தப்பட்ட பொலிஸ் நிலையங்களில் இருந்து பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்.</p><p></p><p>
</p><p>
முறைமை சீரமைக்கப்பட்ட பின்னர், இத் தற்காலிக வழியில் விண்ணப்பித்த அனைவரும் அதற்குரிய கட்டணத்தைச் செலுத்தி, இணையவழி மூலமாக மீண்டும் ஒருமுறை விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.
</p><p>
ஏற்கனவே விண்ணப்பங்களைச் சமர்ப்பித்துள்ளவர்களில், சான்றிதழ் தயார் செய்யப்பட்டுள்ளவர்களின் குறிப்பு எண்கள் பொலிஸ் இணையத்தளத்தில் வெளியிடப்படும்.</p><p></p><p>
</p><p>
குறிப்பு எண்கள் வெளியிடப்பட்ட விண்ணப்பதாரர்கள், பத்தரமுல்லை சுஹுருபாய கட்டிடத்தின் 17வது மாடிக்குச் சென்று வார இறுதி நாட்களில் (சனி மற்றும் ஞாயிறு) தங்களது சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.
</p><p>
குறிப்பு எண்கள் வெளியிடப்படாத விண்ணப்பதாரர்களுக்கு, கணினி அமைப்பு சீரமைக்கப்பட்ட பின்னரே சான்றிதழ்கள் வழங்கப்படும்.
</p><p>

அமைப்பை விரைவாகச் சீரமைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், சீரமைக்கப்பட்டதும் பொதுமக்களுக்கு உடனடியாக அறிவிக்கப்படும் என்றும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-21T09:55:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆறு மணிநேர வாக்குமூலம்! நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவில் இருந்து வெளியேறிய நாமல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/namal-appears-before-police-fcid-1787287335"></link>
            <id>https://ibctamil.com/article/namal-appears-before-police-fcid-1787287335</id>
            <summary type="text">புதிய இணைப்புநாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, காவல்துறை நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் (FCID) சுமார் ஆறு மணி நேரம் வாக்குமூலம் அளித்த பின்னர்...</summary>
            <content type="html"><![CDATA[<h3>புதிய இணைப்பு</h3><p>நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, காவல்துறை நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் (FCID) சுமார் ஆறு மணி நேரம் வாக்குமூலம் அளித்த பின்னர் வெளியேறியுள்ளார்.</p><p>நடைபெற்று வரும் ஒரு விசாரணை தொடர்பாக விடுக்கப்பட்ட அழைப்பாணைக்கு இணங்க, அவர் இன்று காலை நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகியிருந்தார்.</p><p>
விசாரணையின் ஒரு பகுதியாக, அவர் புலனாய்வாளர்களிடம் வாக்குமூலம் அளித்த பின்னர் அந்த வளாகத்தை விட்டு வெளியேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><h3>முதலாம் இணைப்பு</h3><p>காவல்துறை நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவில்&nbsp;நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச முன்னிலையாகியுள்ளார்.</p><p>நிலுவையில் உள்ள விசாரணை தொடர்பாக வழங்கப்பட்ட அழைப்பாணைக்கு அமைய இன்று காலை அவர் அங்கு சென்றுள்ளதாக தெரியவருகிறது.</p><p></p><h2>வாக்குமூலம்</h2><p>இதன்போது, புலனாய்வாளர்களிடம் அவர் வாக்குமூலம் அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/37b16b93-34fa-4e71-a4db-fbc3e65e535e/26-6a87d890e8fa6.webp' /></p><p>எவ்வாறாயினும், இந்த விசாரணை தொடர்பான மேலதிக தகவல்கள் எவையும் இதுவரை வெளியிடப்படவில்லை.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/FJQcrzobjUcEaJJsEVOWpF" target="_blank">WHATSAPP </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;&nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-21T09:49:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி காலமானார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/actress-sowcar-janaki-passed-away-1787305434"></link>
            <id>https://news.lankasri.com/article/actress-sowcar-janaki-passed-away-1787305434</id>
            <summary type="text">actress Sowcar Janaki passed away: பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி உடல் நலக்குறைவால் காலமாகியுள்ளார்.

செளகார் ஜானகி காலமானார்
1931 ஆம் ஆண்டில் ஆந்தி...</summary>
            <content type="html"><![CDATA[<p>actress Sowcar Janaki passed away: பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி உடல் நலக்குறைவால் காலமாகியுள்ளார்.
</p><h3>
செளகார் ஜானகி காலமானார்
</h3><p>1931 ஆம் ஆண்டில் ஆந்திராவில் பிறந்தவர் நடிகை சௌகார் ஜானகி. இவரின் சகோதரி கிருஷ்ண குமாரியும் புகழ்பெற்ற நடிகை ஆவார். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e25c1f45-7f94-4e1e-912c-2dfa87d2e1a5/26-6a881ddb8baf0.webp' /></p><p>
1950 ஆம் ஆண்டில் சௌகார் என்ற தெலுங்குத் திரைப்படத்தில் திரையுலகிற்கு அறிமுகமானார். 1952 ஆம் ஆண்டில் வளையாபதி திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.</p><p>

தமிழ், தெலுங்கு, கன்னடம், மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் 400க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.</p><p>

முன்னாள் முதல்வர்கள் ஆந்திராவை சேர்ந்த என்.டி.ராமராவ், எம்ஜிஆர், கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோருடன் நடித்துள்ளார். </p><p></p><p>
தனது நடிப்பிற்காக நந்தி விருதுகள், கலைமாமணி விருது ஆகியவற்றை பெற்றதோடு, இந்தியாவின் நான்காவது உயரிய குடிமகன் விருதான பத்மஸ்ரீ விருதையும் பெற்றுள்ளார்.
</p><p>
94 வயதான இவர், கடந்த சில நாட்களாக வயது மூப்பு மற்றும் மோசமான உடல் நிலை காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்தது.
</p><p>
தற்போது சிகிச்சை பலனின்றி சௌகார் ஜானகி மருத்துவமனையில் காலமாகியுள்ளார்.&nbsp; &nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-21T09:45:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[FCIDலிருந்து வௌியேறினார் நாமல் ராஜபக்ஷ]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/namal-rajapaksa-left-the-fcid-1787305584"></link>
            <id>https://jvpnews.com/article/namal-rajapaksa-left-the-fcid-1787305584</id>
            <summary type="text">&amp;nbsp; நிதிக்குற்ற விசாரணைப் பிரிவில் முன்னிலையாகியிருந்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ அங்கிர...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; நிதிக்குற்ற விசாரணைப் பிரிவில் முன்னிலையாகியிருந்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான <a href="https://jvpnews.com/article/namal-rajapaksa-appears-fcid-1787289099" target="_blank">நாமல் ராஜபக்ஷ </a>அங்கிருந்து வௌியேறியுள்ளார். </p><p>

குறித்த விசாரணைப் பிரிவினால் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணையொன்று தொடர்பில் வாக்குமூலமொன்றைப் பதிவு செய்வதற்காக இன்று (21) முற்பகல் அவர் அங்கு முன்னிலையாகியிருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fdeec952-5b06-49b4-a4d0-a2d1c6b17e23/26-6a881e7224338.webp' /></p><p>நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவினால் முன்னெடுக்கப்பட்டு வரும் தொடர் விசாரணையொன்று தொடர்பில் வாக்குமூலம் வழங்குமாறு விடுக்கப்பட்ட அழைப்பாணைக்கு அமைய அவர் அங்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-21T09:43:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Fathima</name>
            </author>
            <title type="text"><![CDATA[பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி காலமானார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/sowcar-janaki-dead-1787305007"></link>
            <id>https://ibctamilnadu.com/article/sowcar-janaki-dead-1787305007</id>
            <summary type="text">Sowcar Janaki Dead: உடல்நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரபல நடிகை சௌகார் ஜானகி காலமானார், அவருக்கு வயது 94.சௌகார் ஜா...</summary>
            <content type="html"><![CDATA[<p>Sowcar Janaki Dead: உடல்நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரபல நடிகை சௌகார் ஜானகி காலமானார், அவருக்கு வயது 94.</p><h2>சௌகார் ஜானகி மரணம்</h2><p>
</p><p>
1950, 60 களில் முன்னணி நாயகியாக வலம்வந்தார் சௌகார் ஜானகி, தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உட்பட பல இந்திய மொழிகளில் நடித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c911f733-6b4c-42f7-a5df-40c35aea4a10/26-6a881cbe44d47.webp' /><br></p><p>தனது குடும்பத்தினருடன் சென்னையில் வசித்து வந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். </p><p>இதனையடுத்து ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலமானார்.
</p><p>

2022ம் ஆண்டு பத்மஸ்ரீ விருதையும், தமிழக அரசின் கலைமாமணி விருதையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ca88194e-5d80-4fce-872d-66014af8595e/26-6a881cbeed292.webp' /><br></p>]]></content>
            <updated>2026-08-21T09:41:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Fathima</name>
            </author>
            <title type="text"><![CDATA[பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி காலமானார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/sowcar-janaki-dead-1787305007"></link>
            <id>https://manithan.com/article/sowcar-janaki-dead-1787305007</id>
            <summary type="text">Sowcar Janaki Dead: உடல்நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரபல நடிகை சௌகார் ஜானகி காலமானார், அவருக்கு வயது 94.சௌகார் ஜா...</summary>
            <content type="html"><![CDATA[<p>Sowcar Janaki Dead: உடல்நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரபல நடிகை சௌகார் ஜானகி காலமானார், அவருக்கு வயது 94.</p><h2>சௌகார் ஜானகி மரணம்</h2><p>
</p><p>
1950, 60 களில் முன்னணி நாயகியாக வலம்வந்தார் சௌகார் ஜானகி, தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உட்பட பல இந்திய மொழிகளில் நடித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c911f733-6b4c-42f7-a5df-40c35aea4a10/26-6a881cbe44d47.webp' /><br></p><p>தனது குடும்பத்தினருடன் சென்னையில் வசித்து வந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். </p><p>இதனையடுத்து ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலமானார்.
</p><p>

2022ம் ஆண்டு பத்மஸ்ரீ விருதையும், தமிழக அரசின் கலைமாமணி விருதையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ca88194e-5d80-4fce-872d-66014af8595e/26-6a881cbeed292.webp' /><br></p>]]></content>
            <updated>2026-08-21T09:39:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[கணினி அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு : தற்காலிக நடைமுறை அறிமுகம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/temporary-procedure-introduce-police-clearance-1787303483"></link>
            <id>https://tamilwin.com/article/temporary-procedure-introduce-police-clearance-1787303483</id>
            <summary type="text">பொலிஸ் அனுமதிப் பிரிவின் கணினிமயமாக்கப்பட்ட அமைப்பில் ஏற்பட்ட எதிர்பாராத தொழில்நுட்பக் கோளாறைத் தொடர்ந்து, பொலிஸ் அனுமதி அறிக்கை விண்ணப்பங்களுக்காக இல...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொலிஸ் அனுமதிப் பிரிவின் கணினிமயமாக்கப்பட்ட அமைப்பில் ஏற்பட்ட எதிர்பாராத தொழில்நுட்பக் கோளாறைத் தொடர்ந்து, பொலிஸ் அனுமதி அறிக்கை விண்ணப்பங்களுக்காக இலங்கை பொலிஸ் ஒரு தற்காலிக நடைமுறையை அறிமுகப்படுத்தியுள்ளது.</p><p>

பத்தரமுல்லையில் இசுஹுருபாய கட்டிடத்தின் 17ஆவது மாடியில் அமைந்துள்ள பொலிஸ் அனுமதிப் பிரிவால் இயக்கப்படும் இந்த அமைப்பு, நேற்று(20.08.2026) நண்பகல் முதல் செயலிழந்துள்ளதாக பொலிஸ் தெரிவித்துள்ளது. </p><h2>மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப</h2><p>விண்ணப்பங்களைச் செயலாக்குவதற்கும், பின்னணி அறிக்கைகளைப் பெறுவதற்கும், பொலிஸ் அனுமதிச் சான்றிதழ்களை அச்சிடுவதற்கும் இந்த அமைப்பு பயன்படுத்தப்படுகிறது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fc30fa12-5421-48fe-9eb7-1c2f013f59d7/26-6a881c99b999f.webp' /></p><p>
தொழில்நுட்பக் குழுக்கள் அமைப்பைச் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள நிலையில், விண்ணப்பதாரர்கள் தற்காலிக விண்ணப்ப முறையைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
</p><p>
விண்ணப்பதாரர்கள், இலங்கை பொலிஸின் உத்தியோகபூர்வ இணையதளமான www.police.lkஇற்குச் சென்று, “விண்ணப்பத்தைப் பதிவிறக்கு” ​​என்பதைத் தேர்ந்தெடுத்து, உரிய படிவத்தைப் பூர்த்தி செய்ய வேண்டும். </p><p>பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை, விண்ணப்பதாரரின் தேசிய அடையாள அட்டை மற்றும் கடவுச்சீட்டின் நகல்களுடன் சேர்த்து, clear.application@police.gov.lk என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.</p><h2>பூர்த்தி செய்யப்பட்ட சான்றிதழ்கள்</h2><p>
</p><p>
இந்த ஆரம்பக் கட்டத்தில் விண்ணப்பதாரர்கள் எந்தக் கட்டணமும் செலுத்தத் தேவையில்லை என்று பொலிஸ் தெரிவித்துள்ளது.</p><p>

இருப்பினும், கணினிமயமாக்கப்பட்ட அமைப்பு மீண்டும் செயல்படத் தொடங்கியவுடன், தற்காலிக நடைமுறையைப் பயன்படுத்திய விண்ணப்பதாரர்கள் அனைவரும், தங்களது விண்ணப்பங்களை மீண்டும் இணையவழி மூலமாகச் சமர்ப்பித்து, வழக்கமான நடைமுறையின்படி உரிய கட்டணத்தையும் செலுத்த வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/87562803-ca42-4cb0-b760-2a43a3d672e2/26-6a881c9a6f05e.webp' /></p><p>

இதற்கிடையில், கணினி அமைப்பு செயலிழப்பதற்கு முன்னர் தமது ஆவணங்களைச் சமர்ப்பித்த விண்ணப்பதாரர்கள், தமது சான்றிதழ்கள் பெற்றுக்கொள்வதற்குத் தயாராக உள்ளதா என்பதைச் சரிபார்த்துக் கொள்ளலாம். </p><p>பூர்த்தி செய்யப்பட்ட சான்றிதழ்களின் குறிப்பு எண்கள்(reference numbers) உத்தியோகபூர்வ இலங்கை பொலிஸ் இணையதளத்தில் வெளியிடப்படும்.
</p><p>
குறிப்பு எண்கள் வெளியிடப்பட்ட விண்ணப்பதாரர்கள், இசுஹுருபாய கட்டிடத்தின் 17ஆவது மாடியில் தங்களது பொலிஸ்&nbsp; அனுமதிச் சான்றிதழ்களை நேரில் பெற்றுக்கொள்ளலாம். ஒரு சிறப்பு ஏற்பாடாக, சனிக்கிழமைகள் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் இச்சான்றிதழ்கள் வழங்கப்படும்.</p><p>குறிப்பு எண்கள் வெளியிடப்படாத விண்ணப்பதாரர்கள், கணினிமயமாக்கப்பட்ட அமைப்பு முழுமையாக மீட்டமைக்கப்பட்ட பிறகு தங்களது அறிக்கைகளைப் பெறுவார்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p></p><p></p><p>YOU MAY LIKE THIS VIDEO</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/b1K_kqmcymQ" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-08-21T09:38:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[போராட்டம் திரைப்படம் ஒக்டோபர் 2ஆம் திகதி முதல் திரையரங்குகளில்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/porattam-movie-october-2nd-1787305005"></link>
            <id>https://ibctamil.com/article/porattam-movie-october-2nd-1787305005</id>
            <summary type="text">ஐபிசி தமிழ் நிறுவனத்தின் பிரமாண்ட தயாரிப்பில் உருவாகியுள்ள ‘போராட்டம்’ திரைப்படம் எதிர்வரும் ஒக்டோபர் 2ஆம் திகதி வெளியாகவுள்ளது.

ஈழத்து கலைஞர்களை ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஐபிசி தமிழ் நிறுவனத்தின் பிரமாண்ட தயாரிப்பில் உருவாகியுள்ள ‘போராட்டம்’ திரைப்படம் எதிர்வரும் ஒக்டோபர் 2ஆம் திகதி வெளியாகவுள்ளது.
</p><p>
ஈழத்து கலைஞர்களை முன்னிலைப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்தை ராஜ் சிவராஜ் இயக்கியுள்ளதுடன், பூவன் மதீசன் இசையமைத்துள்ளார்.</p><p>

 திரைப்படத்தை தயாரிப்பாளர் மற்றும் தொழிலதிபரான ஐபிசி கந்தையா பாஸ்கரன் தயாரித்துள்ளார்.

‘போராட்டம்’ திரைப்படத்தின் மூலம் பாஸ்கரன் றீகன் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.</p><p>போராட்டம்’ திரைப்படத்திற்கு U சான்றிதழ் கிடைத்திருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.</p><p> </p><p>

திரைப்படத்தின் முதல் பார்வை (First Look) புகைப்படத்தில் அவர் உதைப்பந்தாட்ட வீரராக தோன்றியுள்ளமை ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
</p><p>
ஈழ சினிமாவில் இதுவரை வெளியாகியுள்ள திரைப்படங்களில் நீளமான திரைப்படமாக ‘போராட்டம்’ உருவாக்கப்பட்டுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.</p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-21T09:36:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[நடிகை சௌகார் ஜானகி உடல்நலக்குறைவால் 94 வயதில் காலமானார்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/veteran-actress-sowcar-janaki-passes-away-at-94-1787305547"></link>
            <id>https://viduppu.com/article/veteran-actress-sowcar-janaki-passes-away-at-94-1787305547</id>
            <summary type="text">சௌகார் ஜானகிதென்னிந்திய சினிமாவில் 1950களில் கொடிக்கட்டி பறந்த நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வந்தவர் தான் நடிகை சௌகார் ஜானகி. 400 படங்களுக்கு மேலும், 5...</summary>
            <content type="html"><![CDATA[<h2>சௌகார் ஜானகி</h2><p>தென்னிந்திய சினிமாவில் 1950களில் கொடிக்கட்டி பறந்த நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வந்தவர் தான் நடிகை சௌகார் ஜானகி. 400 படங்களுக்கு மேலும், 500க்கும் மேற்பட்ட மேடைநாடகங்களிலும் நடித்து பிரபலமானார் ஜானகி. கடந்த 2022 ஆம் ஆண்டு அவருக்கு இந்திய அரசு பத்மஸ்ரீ விருதினை வழங்கியது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b34ad6f4-5b02-4a68-9b8a-9c618db85606/26-6a881e4dc5259.webp' /></p><p>இந்நிலையில் 94 வயதாகும் செளகார் ஜானகி அம்மா, உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டிருந்தார்.</p><p> சென்னை ஆழ்வார்பேட்டையில் வசித்து வந்த அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு காவேரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு செயற்கை சுவாசம் தரப்பட்டு வந்த நிலையில் இன்று காலமானார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5a188d77-fa03-4a02-bcd1-6180e57fb709/26-6a881e4d1ac09.webp' /></p><p> </p><p>அவரின் இறப்பிற்கு பல தரப்பில் இருந்து இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.</p>]]></content>
            <updated>2026-08-21T09:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[உங்களுக்கு பதிலாக ChatGPT நேரடியாக SMS அனுப்பும் - Apple பயனர்களுக்கு Plugin அறிமுகம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/chatgpt-plugin-sends-texts-via-apple-messages-1787304683"></link>
            <id>https://news.lankasri.com/article/chatgpt-plugin-sends-texts-via-apple-messages-1787304683</id>
            <summary type="text">ChatGPT Plugin Sends Texts via Apple Messages: OpenAI நிறுவனம் தனது ChatGPT-க்கு புதிய Apple Messages பிளகினை (Plug-in) அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன...</summary>
            <content type="html"><![CDATA[<p>ChatGPT Plugin Sends Texts via Apple Messages: OpenAI நிறுவனம் தனது ChatGPT-க்கு புதிய Apple Messages பிளகினை (Plug-in) அறிமுகப்படுத்தியுள்ளது.
</p><p>
இதன் மூலம் பயனர்கள் தங்களின் iPhone-ல் உள்ள Messages பயன்பாட்டை ChatGPT-உடன் இணைத்து, AI மூலம் நேரடியாக SMS-களை அனுப்பவும், பதிலளிக்கவும் முடியும்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/525bd603-5266-4467-a0ca-9a0db361cca2/26-6a881aecaabcb.webp' /></p><p>இந்த பிளகின் மூலம், ChatGPT உங்கள் பழைய உரையாடல்களை அடிப்படையாகக் கொண்டு தானாகவே பதில்களை பரிந்துரைக்கும். </p><p>தேவையற்ற செய்திகளை நீக்கவும், பழைய மெசேஜ்களை எளிதில் தேடவும் உதவும்.

மேலும், Codex மற்றும் ChatGPT Work ஆகியவற்றுடன் இணைந்து, தனிப்பட்ட மற்றும் தொழில்நுட்ப பயன்பாட்டிற்கும் ஏற்றதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
</p><p></p><p>இந்த பிளகின் உங்கள் சாதனத்தில் மட்டும் இயங்கும். முழுமையான மெசேஜ் தரவுத்தளத்தை உருவாக்காது என OpenAI தெரிவித்துள்ளது.
</p><p>
இருப்பினும், TechCrunch அறிக்கையில், தனியுரிமை தொடர்பான சில கேள்விகள் இன்னும் தெளிவாக இல்லை என குறிப்பிடப்பட்டுள்ளது. </p><p>குறிப்பாக “persistent approval” எனப்படும் விருப்பத்தை இயக்கினால், AI அனுப்பும் செய்திகளை பயனர் இறுதியாக சரிபார்க்கும் வாய்ப்பு இல்லாமல் போகும் அபாயம் உள்ளது.</p><p></p><p>

இந்த புதிய வசதி, AI-ஐ அன்றாட வாழ்க்கையில் மேலும் நெருக்கமாக இணைக்கும் முயற்சியாக பார்க்கப்படுகிறது. </p><p>வசதியானதாக இருந்தாலும், பயனர்கள் தங்களின் தனியுரிமை மற்றும் கட்டுப்பாட்டை கவனமாக பராமரிக்க வேண்டும் என்பதும் முக்கியம்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p>&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-21T09:28:54+00:00</updated>
        </entry>
    </feed>
