<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-08-07T10:33:29+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹோர்முஸ் நீரிணையை மூட ஈரான் புதிய சட்டம்! சர்வதேசக் கப்பல் போக்குவரத்தில் பதற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/iran-bills-new-law-to-control-hormuz-strait-1786090054"></link>
            <id>https://ibctamil.com/article/iran-bills-new-law-to-control-hormuz-strait-1786090054</id>
            <summary type="text">ஹோர்முஸ் நீரிணை குறித்து ஈரான் நாடாளுமன்ற உறுப்பினர்கள் புதிய சட்டமூலம் ஒன்றை வரைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஹோர்முஸ் நீரி...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹோர்முஸ் நீரிணை குறித்து ஈரான் நாடாளுமன்ற உறுப்பினர்கள் புதிய சட்டமூலம் ஒன்றை வரைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
</p><p>
ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) வழியிலான கடல்சார் போக்குவரத்தைக் கட்டுப்படுத்துவதற்கும், சில குறிப்பிட்ட கப்பல்களுக்குக் கட்டுப்பாடுகளை விதிப்பதற்கும் மற்றும் விதிகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிப்பதற்கும் இந்த புதிய சட்டமூலம் முன்வைக்கப்பட்டுள்ளது.
</p><p>

ஈரான் நாடாளுமன்றத்தின் தேசிய பாதுகாப்பு ஆணைக்குழுவின் மறுஆய்வில் தற்போது உள்ள இந்தச் சட்டமூலம், வர்த்தகக் கப்பல் போக்குவரத்து தொடர்பாக ஓமானுடன் நடத்தப்படும் பேச்சுவார்த்தைகளிலிருந்து சுயாதீனமாக முன்வைக்கப்பட்ட ஒரு முயற்சியாகும்.</p><p>
</p><p></p><h2>ஈரானுக்குச் சேதம்</h2><p>இச்சட்டமூலத்தின் ஆரம்ப பதிப்பில் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரானால் பகை நாடுகளாகக் கருதப்படும் ஏனைய நாடுகளின் கப்பல்கள் இந்த கடல் பாதையைப் பயன்படுத்துவதற்குத் தடை விதிக்கப் பரிந்துரைக்கப்பட்டிருந்தது.
</p><p>
தற்போதைய புதிய பதிப்பில் இக்கட்டுப்பாடுகள் மேலும் விரிவுபடுத்தப்பட்டுள்ளன.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b9b963ba-a563-4e7c-994d-000d29849422/26-6a75b42c18a4b.webp' /></p><p>அதன்படி, இஸ்ரேலியக் கப்பல்களுடன் தொடர்புடைய அல்லது ஈரானுக்குச் சேதம் விளைவித்ததாகக் கருதப்படும் நாடுகள் மற்றும் அமைப்புகளுடன் தொடர்புடைய இராணுவ அல்லது சிவில் சரக்குகளை ஏற்றிச் செல்லும் கப்பல்கள், உரிய இழப்பீட்டைச் செலுத்தும் வரை இந்த நீரிணையைக் கடக்கத் தடை விதிக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.
</p><p>
இக்கட்டுப்பாடுகளை மீறும் கப்பல்களில் உள்ள சரக்குகளின் மதிப்பில் 20% வரை அபராதம் விதிக்கப்படும்.</p><p>
</p><p></p><h2>பாதுகாப்பான கடற்பயணம்</h2><p>நீரிணையைக் கடக்க அனுமதிக்கப்படும் கப்பல்களுக்குப் பாதுகாப்பான கடற்பயணத்தை உறுதி செய்வதற்கான செலவுகளை ஈடுசெய்யும் வகையில், ஈரான் அரசு வழிசெலுத்தல் சேவைக்கட்டணத்தை (Navigation service fees) வசூலிக்கும். </p><p>

இக்கட்டணம் ஈரானிய நாணயத்தில் (Rial) செலுத்தப்பட வேண்டும்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0f23eefc-685c-446a-a0da-4e0c6a787b15/26-6a75b42cbff87.webp' /></p><p>இச்சட்டமூலத்தை வரைவதற்கான முயற்சி குறித்து முதன்முதலில் கடந்த மார்ச் மாதம் சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டிருந்தன.
</p><p>
இதையடுத்து ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்ட வரைவில், ஈரானுக்குப் பகை நாடுகளின் கப்பல்கள் இலக்கு வைக்கப்பட்டிருந்தன. </p><p>

எனினும், தற்போதைய புதிய வரைவில் இக்கட்டுப்பாடுகள் கப்பல்களுக்கு மட்டுமன்றி, அவை ஏற்றிச் செல்லும் சரக்குகளுக்கும் (Cargo) விரிவுபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p>]]></content>
            <updated>2026-08-07T10:32:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறைச்சாலைகளில் தொடரும் பதற்றம் : யாழ் சிறையில் பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/security-has-been-strengthened-at-jaffna-prison-1786096050"></link>
            <id>https://ibctamil.com/article/security-has-been-strengthened-at-jaffna-prison-1786096050</id>
            <summary type="text">யாழ்ப்பாணச் சிறையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.நாட்டின் பல்வேறு சிறைச்சாலைகளிலும் அமைதியின்மை ஏற்பட்டதன...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணச் சிறையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p>நாட்டின் பல்வேறு சிறைச்சாலைகளிலும் அமைதியின்மை ஏற்பட்டதன் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>அதற்கமைய&nbsp;அதன்படி, யாழ்ப்பாணப் பாதுகாப்புப் படை தளபதி மேஜர் ஜெனரல் கே.ஜே.என்.எம்.பி.கே. நவரத்ன யாழ்ப்பாணச் சிறைச்சாலைக்குள் கள ஆய்வு மேற்கொண்டார்.</p><h2>குவிக்கப்பட்டுள்ள இராணுவத்தினர்</h2><p>மேலும், யாழ் சிறைச்சாலை வளாகத்தில் பாதுகாப்புப் பணிகளுக்காகப் பல இராணுவ வீரர்களும், காவல்துறையினரும் பணியமர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a82e9ed8-ce9c-4c15-9883-ad241df89785/26-6a75b1ad7d858.webp' /></p><p>அத்துடன் யாழ்ப்பாண மாவட்டத்திற்கான பிரதி காவல்துறை மா அதிபர் (DIG), மாவட்டத்திற்கான சிரேஷ்ட காவல்துறை கண்காணிப்பாளர் (SSP), மற்றும் யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள பல காவல் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள் சிறைச்சாலைக்கு வரவழைக்கப்பட்டுள்ளதுடன் அங்கு கலந்துரையாடல்கள் நடைபெற்று வருகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இதேவேளை பாதுகாப்பு நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், சிறையிலிருந்து கன உலோகப் பொருட்களையும் தளபாடங்களையும் அகற்றும் பணியும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-07T10:25:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழக முதல்வர் விஜயின் வழக்கில் திடீர் திருப்பம் ; விவகாரத்து மனுவை திரும்பப் பெற்றார் மனைவி சங்கீதா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/cm-vijay-s-wife-sangeetha-withdraws-divorce-case-1786098208"></link>
            <id>https://jvpnews.com/article/cm-vijay-s-wife-sangeetha-withdraws-divorce-case-1786098208</id>
            <summary type="text">தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கு எதிராக அவரது மனைவி சங்கீதா தாக்கல் செய்திருந்த விவாகரத்து மனுவை திரும்பப் பெற்றுள்ளா...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கு எதிராக அவரது மனைவி சங்கீதா தாக்கல் செய்திருந்த விவாகரத்து மனுவை திரும்பப் பெற்றுள்ளார்.</p><p style="text-align: justify;">

மனு திரும்பப் பெறப்பட்டதைத் தொடர்ந்து வழக்கு முடித்து வைக்கப்படுவதாக செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றம் தெரிவித்துள்ளது.</p><p style="text-align: justify;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c8dcf428-010c-493a-9e87-18083b0c16bb/26-6a75b221aabe7.webp' /></p><h2 style="text-align: justify; ">விசாரணை</h2><p style="text-align: justify; ">

இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில் முதலமைச்சர் விஜய் தரப்பில் ஆஜராக விலக்கு கோரப்பட்டது. ஆனால் நீதிமன்றம் சட்டசபை முடிந்தபின்பு ஆஜராக கோரியிருந்தது. </p><p style="text-align: justify;">பின்னர் விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது மனுவை திரும்பப் பெற்றுள்ளார் சங்கீதா.

விஜய் மற்றும் சங்கீதாவுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்பட்ட நிலையில், சங்கீதா செங்கல்பட்டு குடும்ப நல கோர்ட்டில் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்திருந்தார்.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;"> </p><p style="text-align: justify;">வழக்கு விசாரணைக்கு வந்தபோது இருவரும் நேரில் ஆஜராகாமல், அவர்களது வழக்கறிஞர்கள் மட்டுமே நீதிமன்றத்தில் ஆஜராகினர். இருவரும் பிரபலமானவர்கள் என்பதால், வீடியோ மூலம் ஆஜராக அனுமதி வழங்குமாறு தரப்புகள் கோரிக்கை வைத்திருந்தன.
</p><p style="text-align: justify;">
இன்று நடைபெற்ற விசாரணையின்போது, சட்டமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்றிருந்ததால் முதல்-அமைச்சர் விஜய் நேரில் ஆஜராக முடியவில்லை என்று அவரது தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;">
</p><p style="text-align: justify; ">
அதே நேரத்தில், லண்டனில் இருந்த சங்கீதா வீடியோ கான்பிரன்ஸ் மூலம் ஆஜராகி, விவாகரத்து மனுவை வாபஸ் பெறுவதாக தெரிவித்தார். இதையடுத்து, வழக்கை முடித்து வைத்து கோர்ட்டு உத்தரவிட்டது.&nbsp;</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-07T10:23:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[வழக்கு தள்ளுபடி: வலிகாமம் வடக்கு தவிசாளருக்கு பொலிஸார் அச்சுறுத்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/palali-police-dismissed-by-mallakam-court-1786095874"></link>
            <id>https://tamilwin.com/article/palali-police-dismissed-by-mallakam-court-1786095874</id>
            <summary type="text">வலிகாமம் வடக்கு பிரதேச சபைக்கு எதிராக பலாலி பொலிஸார் தொடர்ந்த வழக்கு
மல்லாகம் நீதிவான் நீதிமன்றால் தள்ளுபடி செய்யப்பட்டு பிரதேச சபை தவிசாளர்
மற்றும்...</summary>
            <content type="html"><![CDATA[<p>வலிகாமம் வடக்கு பிரதேச சபைக்கு எதிராக பலாலி பொலிஸார் தொடர்ந்த வழக்கு
மல்லாகம் நீதிவான் நீதிமன்றால் தள்ளுபடி செய்யப்பட்டு பிரதேச சபை தவிசாளர்
மற்றும் செயலாளர் ஆகியோர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டாலும் கூட
நீதிமன்றத்திற்கு வெளியே தவிசாளர் சோமசுந்தரம் சுகிர்தன் பொலிஸாரால்
அச்சுறுத்தப்பட்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>பாதையை விடுவித்தால் உங்களை கைது செய்வோம் என நீதிமன்றத்தில் வழக்குக்கு முன்னிலையான
உதவி பொலிஸ் அத்தியட்சகர் உள்ளிட்ட பொலிஸ் அதிகாரிகள் நீதிமன்றத்திற்கு வெளியே
தவிசாளர் சுகிர்தனை அச்சுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>விரைவில் விடுக்க நடவடிக்கை</h2><p>
தையிட்டியில் சட்டவிரோத விகாரை அமைந்துள்ள காணிக்குள் கையகப்படுத்தப்பட்டுள்ள
பிரதேச சபைக்கு சொந்தமான வீதியினை மீட்கும் நடவடிக்கையை பிரதேச சபை கைவிட
வேண்டும் என பலாலி பொலிஸார் மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் தாக்கல் செய்த
வழக்கினை நீதிமன்று நேற்றைய தினம் தள்ளுபடி செய்து தவிசாளரையும் சபை
செயலாளரையும் வழக்கில் இருந்து முற்றாக விடுத்திருந்தது. </p><p>இந்நிலையில் குறித்த
சம்பவம் இடம்பெற்றது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c66a6b0b-1154-4b42-86ee-ddbe3832fe0f/26-6a75b0fb060d5.webp' /></p><p>நீதிமன்றத்திற்கு வெளியே தான் அச்சறுத்தலுக்குள்ளான சம்பவம் தொடர்பாக தவிசாளர்
சோ.சுகிர்தனால் எழுத்து மூலம் பொலிஸ் உயர் அதிகாரிகளுக்கு முறைப்பாடளிக்க
நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
</p><p>
இதேவேளை வழக்கின் தீர்ப்புக்கு பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த
வலிகாமம் வடக்கு பிரதேச சபை தவிசாளர் சோ.சுகிர்தன் தையிட்டி விகாரை
பகுதிக்குள் உள்ள பவானி வீதியினை மிக விரைவில் விடுக்க நடவடிக்கை எடுப்போம்
என்றும் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-07T10:19:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>H. A. Roshan</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரசாங்கம் உடனடியாக மாகாண சபை தேர்தலை நடாத்தினால் அது ஜனநாயகத்தை மதிக்கும் செயலாகும்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/local-government-election-cafeee-organization-1786096956"></link>
            <id>https://tamilwin.com/article/local-government-election-cafeee-organization-1786096956</id>
            <summary type="text">மாகாண சபை தேர்தலை அரசாங்கம் உடனடியாக நடத்துவது ஜனநாயகத்தை மதிக்கும்
செயலாகும் என கெபே
அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் மனாஸ் மகீன் தெரிவித்துள்ளார்...</summary>
            <content type="html"><![CDATA[<p>மாகாண சபை தேர்தலை அரசாங்கம் உடனடியாக நடத்துவது ஜனநாயகத்தை மதிக்கும்
செயலாகும் என கெபே
அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் மனாஸ் மகீன் தெரிவித்துள்ளார்.</p><p>ஊடகவியலாளர்
ஒருவர் இது தொடர்பில் இன்று (07) வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
</p><p>அவர், மேலும், "2017இல் இருந்து இது வரைக்கும் இருந்த அரசாங்கங்கள்
ஒவ்வொரு சாட்டுப் போக்குகளையும் சொல்லி எப்படி மாகாண சபை தேர்தலை நடத்தாமல்
பிற்போட்டார்களோ அது போல தற்கால அரசாங்கமும் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகும்.</p><p>
</p><p>மாகாண சபை தேர்தல் தொடர்பில் ஒரே அரசாங்கத்தையும் குற்றம்சாட்ட முடியாது ஏன்
எனில் மாகாண சபை தேர்தல் கட்டம் கட்டமாக நடத்தப்பட்டதால் முதலாவதாக 2017ல்
சப்ரகமுவ மாகாணம், கிழக்கு மாகாணம், வடமத்திய மாகாணம் ஆகிய மூன்று
மாகாணங்களும் முடிவுற்றது.</p><p>2017இல் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி தலைமையில்
நல்லாட்சி அரசாங்கம், 2019இல் கோட்டபாய அரசாங்கம் போன்றன மாகாண சபை தேர்தலை
நடத்துவதில் அக்கரை காட்டவில்லை. </p><p>அது போன்று 2022இல் ரணில் விக்ரமசிங்க
ஜனாதிபதியாக இருந்த போதிலும் தேர்தலை நடத்துவதில் ஆர்வம் காட்டவில்லை.</p><p>ஆனால், இந்த அரசாங்கம் தேர்தல் கொள்கை பிரகடனத்தில் தெளிவாக சொல்லப்பட்ட விடயம் தான்
அரசாங்கத்தை கையில் எடுத்து ஒரு வருடத்திற்குல் நடத்துவதாக சொன்னார்கள் ஆனால்
இருபது மாதங்களை கடந்து இரு வருடங்களை அண்மித்துள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-07T10:18:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாடளாவிய ரீதியில் ஒரு நாளில் 508 பேர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/drug-operations-508-people-have-been-arrested-1786096418"></link>
            <id>https://tamilwin.com/article/drug-operations-508-people-have-been-arrested-1786096418</id>
            <summary type="text">நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வரும் குற்றத் தடுப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளின் கீழ், கடந்த ஒரு நாளில் மட்டும் 508 பேர் கைது செய்ய...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வரும் குற்றத் தடுப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளின் கீழ், கடந்த ஒரு நாளில் மட்டும் 508 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.</p><p>நேற்று (06) மேற்கொண்ட சோதனைகளின் போது 27,054 பேர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.</p><p></p><h2>கைது&nbsp;</h2><p>கைது செய்யப்பட்டவர்களில் குற்றச் சம்பவங்களுடன் நேரடியாகத் தொடர்புடைய 20 பேரும், திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 142 பேரும் அடங்குவர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/176e4e04-e337-406e-9293-8f0518cc1b76/26-6a75aff372930.webp' /></p><p>
 

இது தவிர, மதுபோதையில் வாகனம் செலுத்திய 65 பேரும், கவனக் குறைவாக வாகனம் செலுத்தியமை தொடர்பில் 122 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-07T10:15:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தனவுக்கு பிணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/lakshman-yapa-abeywardena-released-on-bail-1786097704"></link>
            <id>https://jvpnews.com/article/lakshman-yapa-abeywardena-released-on-bail-1786097704</id>
            <summary type="text">முன்னாள் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தனவுக்கு இன்று (07) வெள்ளிக்கிழமை குற்றப்பத்திரிகை கையளிக்கப்பட்டதை அடுத்து, அவரை பிணையி...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">முன்னாள் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தனவுக்கு இன்று (07) வெள்ளிக்கிழமை குற்றப்பத்திரிகை கையளிக்கப்பட்டதை அடுத்து, அவரை பிணையில் விடுவித்து கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
</p><p style="text-align: justify; ">

கடந்த 2014 ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் இரண்டாவது பதவியேற்பு விழாவை முன்னிட்டு, நவம்பர் 19 ஆம் திகதி 11 பத்திரிகைகளை மேலதிகமாக வெளியிடுவதுக்காக, இலங்கை முதலீட்டுச் சபையின் நிதியைப் பயன்படுத்தியதன் மூலம் அரசாங்கத்துக்கு 1,748,877.76 ரூபா நிதி இழப்பை ஏற்படுத்தியதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e8e21f0d-f109-44a7-8977-effc68e7bfdb/26-6a75b02a2b2c8.webp' /></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
அரசாங்க நிதியை முறைகேடாகப் பயன்படுத்தி, 17 இலட்சத்துக்கும் அதிக தொகையை அரசாங்கத்திற்கு நட்டப்படுத்தியமை ஊடாக, ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் புரிந்துள்ளதாகக் குறிப்பிட்டு, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன உள்ளிட்ட இருவருக்கு எதிராக இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-08-07T10:15:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[முடிவுக்கு வந்தது முதலமைச்சர் விஜய் மற்றும் சங்கீதாவின் விவாகரத்து வழக்கு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/sangeetha-withdraw-the-divorce-case-against-vijay-1786097057"></link>
            <id>https://cineulagam.com/article/sangeetha-withdraw-the-divorce-case-against-vijay-1786097057</id>
            <summary type="text">தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா தொடர்பான விவாகரத்து வழக்கு இன்று குடும்ப நல நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது.

விஜய் - சங்கீதா வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா தொடர்பான விவாகரத்து வழக்கு இன்று குடும்ப நல நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது.</p><p></p><p>
</p><h2>
விஜய் - சங்கீதா</h2><p> </p><p>விவாகரத்து வழக்கு

தமிழக முதலமைச்சர் விஜய்க்கும், அவரது மனைவி சங்கீதாவிற்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்பட்ட நிலையில், விவாகரத்து கோரி, செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் சங்கீதா மனு தாக்கல் செய்தார்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/571d506e-6ccd-4cda-a14d-7f03877be5f4/26-6a75b040d9660.webp' /></p><p>இந்த வழக்கு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, விஜய் மற்றும் சங்கீதா இருவரும் நேரில் ஆஜராகவில்லை. அவர்களது வழக்கறிஞர்கள் மட்டும் நீதிமன்றத்தில் ஆஜராகினர். பாதுகாப்பு மற்றும் நடைமுறை சிக்கல்களை கருத்தில் கொண்டு, வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆஜராக அனுமதி வழங்க வேண்டும் என இரு தரப்பிலும் கோரிக்கை வைக்கப்பட்டது. </p><h2>

ஜூலை 15-ஆம் தேதி நடந்த விசாரணை
</h2><p>
இதன்பின், இந்த வழக்கு கடந்த ஜூலை 15-ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, சங்கீதா தரப்பு வழக்கறிஞரிடம் நீங்கள் ஏன் வக்காலத்து தாக்கல் செய்யவில்லை? என கேள்வி எழுப்பினார். பின், இருவரையும் சமரச மையத்ததுதான் அனுப்ப வேண்டும் என்று கூறி வழக்கை ஆகஸ்ட் 7-ஆம் தேதி தள்ளி வைத்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/07eacaf7-a0ab-4464-b2dd-577527254e36/26-6a75ada51c38c.webp' /></p><p> </p><h2>

இன்றைய விசாரணை
</h2><p>
இன்று செங்கல்பட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடரில் முதலமைச்சர் விஜய் பங்கேற்று இருப்பதால், அவரால் நேரில் ஆஜராக முடியவில்லை என்று அவரது தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.&nbsp;பின், லண்டனில் உள்ள சங்கீதா, வீடியோ கான்பரன்ஸ் மூலம் நீதிமன்றத்தில் ஆஜராகினர். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5e5ddac0-9c25-414a-9267-00cd1ee7350d/26-6a75af211a570.webp' /></p><h2>திரும்ப பெற்றார் சங்கீதா</h2><p>இந்த நிலையில், தமிழக முதலமைச்சர் விஜய்யிடமிருந்து விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை திரும்ப பெற்றார் சங்கீதா. இதனால் இந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டதாக செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றம் அறிவித்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0c44af53-584f-4efc-84a3-cc21a8d905de/26-6a75af63cb314.webp' /></p>]]></content>
            <updated>2026-08-07T10:12:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[முதல்வர் விஜய் மீதான விவாகரத்து வழக்கை திரும்ப பெற்ற சங்கீதா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/sangeetha-vapas-divorce-case-on-cm-vijay-1786097480"></link>
            <id>https://news.lankasri.com/article/sangeetha-vapas-divorce-case-on-cm-vijay-1786097480</id>
            <summary type="text">முதல்வர் விஜய் மீதான விவாகரத்து வழக்கை அவரது மனைவி சங்கீதா திரும்ப பெற்றுள்ளார். 

விவாகரத்து வழக்கை திரும்ப பெற்ற சங்கீதா 

தவெக தலைவர் விஜய், 20...</summary>
            <content type="html"><![CDATA[<p>முதல்வர் விஜய் மீதான விவாகரத்து வழக்கை அவரது மனைவி சங்கீதா திரும்ப பெற்றுள்ளார். </p><h3>

விவாகரத்து வழக்கை திரும்ப பெற்ற சங்கீதா </h3><p>

தவெக தலைவர் விஜய், 2026 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆகியுள்ளார்.
</p><p>
விஜய் மனைவி சங்கீதா செங்கல்பட்டு நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு விவாகரத்து கோரி மனு அளித்தார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1d5e7d48-615f-4fe9-9bec-ae5e1572f99b/26-6a75af496ffb9.webp' /></p><p>

அந்த மனுவில் கணவர் விஜய் நடிகை ஒருவருடன் திருமணத்தை மீறிய உறவில் இருப்பதாகவும், தன்னை மனரீதியாக துன்புறுத்தியதாகவும் பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார். </p><p>

இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், தற்போது நடைபெற்று வரும் தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடரில் முதலமைச்சர் விஜய் பங்கேற்றுள்ளதால், அவரால் விவாகரத்து வழக்கு தொடர்பாக இன்று நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக முடியவில்லை என அவரது வழக்கறிஞர் தெரிவித்தார்.</p><p> 

சங்கீதா காணொளி வாயிலாக ஆஜராகி 20 நிமிடங்கள் தனது வாதத்தை முன்வைத்தார். </p><p> வாதத்தை கேட்ட நீதிபதி, திகதி குறிப்பிடாமல் வழக்கை ஒத்திவைத்தார். 

இந்நிலையில் சங்கீதா வழக்கை திரும்பப் பெற்றுள்ளார்.</p><p> இதனையடுத்து வழக்கை நீதிபதி முடித்து வைத்துள்ளார்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-07T10:11:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[பல்லன்சேன சிறைச்சாலையில் நிலவிய பதற்றம் கட்டுப்பாட்டுக்குள்..! அதிரடியாக களமிறங்கிய அதிகாரிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/unrest-at-pallansena-prison-1786079920"></link>
            <id>https://tamilwin.com/article/unrest-at-pallansena-prison-1786079920</id>
            <summary type="text">புதிய இணைப்பு&amp;nbsp;நீர்கொழும்பில் உள்ள பல்லன்சேன சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரம் தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது...</summary>
            <content type="html"><![CDATA[<p><span style="color: inherit; font-size: 1.75rem;">புதிய இணைப்பு&nbsp;</span></p><p>நீர்கொழும்பில் உள்ள பல்லன்சேன சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரம் தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

சிறைக்கைதிகள் காலை உணவு நேரத்தில் சிறையில் கலவரத்தில் ஈடுபட்டுள்ளதுடன், இதன்போது நிலைமையை கட்டுப்படுத்த வந்த பாதுகாப்புப்படையினர் மீது கற்களை வீசித்தாக்குதல் நடத்தியுள்ளனர்.
</p><p>
இதன்போது சுமார் 30 கைதிகள் கூரையின் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், சில மணி நேரங்களுக்கு பின்னர், பாதுகாப்புப் படையினர் அவர்களை கீழே இறக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.</p><p>இதனையடுத்து சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரம் தற்போது முழுமையாகக் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.</p><p><span style="font-size: 28px;">மூன்றாம் இணைப்பு</span></p><p>நீர்கொழும்பு - பல்லன்சேன சிறைச்சாலையில் நிலைமையைக் கட்டுப்படுத்த கண்ணீர்ப் புகைத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>
கைதிகள் தற்போது அதிகாரிகள் மீது கற்களை வீசி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.&nbsp;</p><p>சிறைச்சாலையிலுள்ள கைதிகள் சிறைச்சாலையின் பிரதான வாயிற்கதவை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.&nbsp;&nbsp;</p><p>சிறையில் இடப்பற்றாக்குறை மற்றும் சுகாதார வசதிகள் இல்லாததாலும், வழக்குகளை விரைவாக முடிக்கக்கோரியும் தமக்கு விரைவில் பிணை வழங்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து இன்று (07) வெள்ளிக்கிழமை காலை முதல் சிறைச்சாலையில் உள்ள கைதிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.</p><p>&nbsp;<span style="color: inherit; font-size: 1.75rem;">இரண்டாம் இணைப்பு&nbsp;</span></p><p>கைதிகள் குழுவினர் கூரையின் மீது ஏறிப் போராட்டத்தில் ஈடுபட்டதைத் தொடர்ந்து, நீர்கொழும்பு மாவட்டம் தலுபோத்தாவில் உள்ள பல்லன்சேன திறந்தவெளிச் சிறையைச் சுற்றி பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. </p><p>

இப்பணிக்காக பொலிஸார், பொலிஸ் சிறப்பு அதிரடிப் படை, கலவரக் கட்டுப்பாட்டுப் பிரிவு மற்றும் விமானப்படை ஆகியவை வரவழைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>

இன்று காலை (07) கைதிகள் குழுவினர் போராட்டத்தில் ஈடுபட்டதை அடுத்து, மாடியில் கலவரம் வெடித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. </p><p>

கடந்த மாதம் நீர்கொழும்பு சிறையில் வெடித்த மோதலைத் தொடர்ந்து, அங்குள்ள கைதிகள் குழுவை பல்லன்சேன திறந்தவெளி சிறைக்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1a5aae64-61a7-4f1f-a445-2a26f2f96f69/26-6a758d346ae30.webp' /></p><p>
</p><p>
இதற்கிடையில், நேற்று இரவு (06) மெகசின் சிறையில் வெடித்த கலவரம் தற்போது கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது, மேலும் ஒரு கைதி உயிரிழந்துள்ளார். </p><p>

காயமடைந்த 11 கைதிகளை மருத்துவமனையில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டது, அதில் ஒரு கைதி உயிரிழந்தார்.

இன்று காலை (07) குருவிட்ட சிறைச்சாலையிலும் அமைதியின்மை நிலவியது. </p><p>

இரண்டு கைதிகள் உயிரிழந்ததாகவும், மற்றொரு குழுவினர் மருத்துவமனையிலஅனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கைதிகள் குழு ஒன்று சிறை மருத்துவமனையையும் சேதப்படுத்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">முதலாம் இணைப்பு&nbsp;</span></p><p>நீர்கொழும்பு - பல்லன்சேன சிறைச்சாலையிலும் சற்றுமுன்னர் அமைதியின்மை நிலவி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p>மேலும், கைதிகள் குழு ஒன்று கூரையின் மீது ஏறியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><span style="font-size: 14px;">சம்பவ இடத்திற்கு பல பொலிஸ் குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளதாக மூத்த பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.</span></p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">மெகசின் மற்றும்&nbsp;&nbsp;குருவிட்ட சிறையிலும் பதற்றம்</span></p><p>இதற்கிடையில், நேற்று இரவு (06) மெகசின் சிறையில் கலவரம் வெடித்த நிலையில், தற்போது கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e99e3076-6fae-4b15-8a6e-0a1381b05b1b/26-6a7571ed9c29f.webp' />&nbsp;</p><p>
இதில் 11 கைதிகள் காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில், இன்று காலை கைதி ஒருவர் உயிரிழந்திருந்தார்.</p><p>

இதனையடுத்து இன்று காலை முதல் (07) குருவிட்ட சிறையிலும் கலவரம் வெடித்துள்ளதுடன், இரண்டு கைதிகள் உயிரிழந்ததாகவும், மற்றொரு குழுவினர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>கடந்த மாதம் நீர்கொழும்பு சிறையில் வெடித்த மோதலைத் தொடர்ந்து, அங்குள்ள கைதிகள் குழுவை பல்லன்சேன திறந்தவெளி சிறைக்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</p><p>&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-08-07T10:11:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீதிமன்றத்திற்கு வந்த விஜய்-சங்கீதா விவாகரத்து வழக்கின் தீர்ப்பு என்ன?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/status-about-vijay-sangeetha-divorce-case-1786097342"></link>
            <id>https://viduppu.com/article/status-about-vijay-sangeetha-divorce-case-1786097342</id>
            <summary type="text">விவாகரத்து
பிரபலங்களின் திருமண செய்திகளும், விவாகரத்து செய்திகளும் அதிகம் வந்துகொண்டே தான் இருக்கின்றன. அப்படி ரசிகர்கள் எதிர்ப்பார்க்காத பிரபலத்தின்...</summary>
            <content type="html"><![CDATA[<h2>விவாகரத்து</h2><p>
பிரபலங்களின் திருமண செய்திகளும், விவாகரத்து செய்திகளும் அதிகம் வந்துகொண்டே தான் இருக்கின்றன. </p><p>அப்படி ரசிகர்கள் எதிர்ப்பார்க்காத பிரபலத்தின் விவாகரத்து செய்திகளில் ஒன்று தான் விஜய்-சங்கீதா பிரிவு. 
இவர்கள் இருவரின் விவாகரத்து செய்ய முடிவு எடுத்த செய்தி கடந்த வருடம் வெளியாக ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களும் ஷாக் ஆனார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b0433a9c-4349-410e-8277-4ebd8ddaa845/26-6a75aec01aec8.webp' /></p><p> </p><p>இன்று விஜய்-சங்கீதாவின் விவாகரத்து வழக்கு நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு வந்துள்ளது. விஜய் சட்டசபையில் இருப்பதால் கலந்துகொள்ளவில்லை, ஆனால் வீடியோ காலில் சங்கீதா நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார். </p><p>இன்றைய விசாரணையில் சங்கீதா விவாகரத்து வழக்கை வாபஸ் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.</p>]]></content>
            <updated>2026-08-07T10:09:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ashik</name>
            </author>
            <title type="text"><![CDATA[மன்னாரில் கரையொதுங்கிய ஆணின் சடலம் - விசாரணைகள் தீவிரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/body-of-a-man-washed-ashore-in-mannar-1786097097"></link>
            <id>https://tamilwin.com/article/body-of-a-man-washed-ashore-in-mannar-1786097097</id>
            <summary type="text">மன்னார் - வங்காலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வங்காலை கடற்கரையில் உருக்குலைந்த நிலையில் ஆணொருவரின் சடலம் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. 

இந்த சம்பவம் இன...</summary>
            <content type="html"><![CDATA[<p>மன்னார் - வங்காலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வங்காலை கடற்கரையில் உருக்குலைந்த நிலையில் ஆணொருவரின் சடலம் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. </p><p>

இந்த சம்பவம் இன்று(07.08.2026) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>

இன்றைய தினம் காலையில், கடற்றொழிலுக்காக கடற்றொழிலாளர்கள் கடலுக்கு சென்ற நிலையில், சடலம் கிடப்பதை கண்டு பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. </p><h2>

சடலம் மீட்பு</h2><p>
இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், சடலத்தை மீட்டுச் சென்றுள்ளனர். 

குறித்த சடலம் உருக்குலைந்த நிலையில் காணப்படுவதோடு இதுவரை அடையாளம்
காணப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bcd25bcc-c179-41b2-bea2-5b4777b5f4fa/26-6a75ae6c72ada.webp' /></p><p> </p><p>

குறித்த சடலம் இந்திய கடற்றொழிலாளரா? அல்லது தொழிலுக்குச் சென்று காணாமல் போன கடற்றொழிலாளரா? என்பது குறித்து இதுவரை தெரியவில்லை.
</p><p>
இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-07T10:09:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரான் ராணுவம் குறித்த தகவல்களைச் சேகரித்த 21 இஸ்ரேலிய உளவாளிகள் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/21-israeli-spy-suspects-detained-by-iran-1786096821"></link>
            <id>https://canadamirror.com/article/21-israeli-spy-suspects-detained-by-iran-1786096821</id>
            <summary type="text">&amp;nbsp;ஈரான் ராணுவம் குறித்த தகவல்களைச் சேகரித்த 21 இஸ்ரேலிய உளவாளிகள் கைது செய்யப்பட்டதாக, ஈரானிய அரசு அறிவித்துள்ளது.

ஈரானின் தென்கிழக்கு மாகாணமான...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;ஈரான் ராணுவம் குறித்த தகவல்களைச் சேகரித்த 21 இஸ்ரேலிய உளவாளிகள் கைது செய்யப்பட்டதாக, ஈரானிய அரசு அறிவித்துள்ளது.
</p><p>
ஈரானின் தென்கிழக்கு மாகாணமான கெர்மனில், இஸ்ரேலிய உளவுப்பிரிவான மொசாத் அமைப்பிற்காகச் செயல்பட்ட கூலிப்படையைச் சேர்ந்த 21 பேர் அந்நாட்டு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bab0d533-1189-4abc-915e-570635eb61c8/26-6a75acb71c937.webp' /></p><p>



இதனைத் தொடர்ந்து, கைது செய்யப்பட்ட 21 பேரும் ஈரான் ராணுவம் குறித்த தகவல்களைச் சேகரித்து மொசாத் உளவாளிகளுக்கு அனுப்பியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

தற்போது கைது செய்யப்பட்டுள்ள இஸ்ரேலிய உளவாளிகளுக்கான தண்டனைக் குறித்து இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை.
</p><p>
முன்னதாக, 2026 ஜனவரி முதல் ஈரானில் 52 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது என ஐக்கிய நாடுகள் அவையின் மனித உரிமை ஆணையம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-07T10:00:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மட்டக்களப்பு சிறைச்சாலையை சுற்றி பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/army-security-around-batticaloa-prison-1786093657"></link>
            <id>https://ibctamil.com/article/army-security-around-batticaloa-prison-1786093657</id>
            <summary type="text">மட்டக்களப்பு சிறைச்சாலையை சுற்றி இராணுவத்தினர் மற்றும் விசேட
அதிரடிப்படையினர் காவல்துறை இணைந்து பலத்த பாதுகாப்பு நடவடிக்கையில் இன்று (07.08.2026) ஈடு...</summary>
            <content type="html"><![CDATA[<p>மட்டக்களப்பு சிறைச்சாலையை சுற்றி இராணுவத்தினர் மற்றும் விசேட
அதிரடிப்படையினர் காவல்துறை இணைந்து பலத்த பாதுகாப்பு நடவடிக்கையில் இன்று (07.08.2026) ஈடுபட்டுள்ளனர்.&nbsp;</p><p>மேலும் இராணுவ மோட்டார் சைக்கிள் பிரிவு
சிறைச்சாலை பகுதியை சுற்றி கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.&nbsp;</p><p>தற்போது நாட்டில் உள்ள பல்வேறு சிறைச்சாலைகளில் கைதிகளுக்கிடையே&nbsp; ஏற்பட்டு வரும் மோதல் நிலை காரணமாக மட்டக்களப்பிலும் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.&nbsp;</p><p></p><h2>மட்டக்களப்பு சிறைச்சாலையில் பரபரப்பு</h2><p>இதனுடன்&nbsp;நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்டட சிறை உடைப்பையடுத்து அங்கிருந்து 60 கைதிகள் மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு கொண்டுவரப்பட்டு அடைக்கப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/324482c6-e11c-4359-8371-2465f4145981/26-6a75a9e718417.webp' /></p><p>இதனால் அங்கு பாதுகாப்பை பலப்படுத்துவதன் நோக்கமாக&nbsp;சிறைச்சாலையை சுற்றி இராணுவத்தினரை நிறுத்தப்பட்டதுடன் விசேட அதிரடிப்படையினர் காவல்துறை இணைந்து

பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுவருகின்றனர்.&nbsp;</p><p>இந்த நிலையில் தற்போது குறித்த சிறைச்சாலையில் நீர் கொழும்பில் இருந்து கொண்டுவரப்பட்ட 60 கைதிகளில் 42 பேர் உள்ளதுடன் இன்று மொத்தம் 980 பேர் சிறையில் உள்ளதாகவும் அவர்கள் பாதுகாப்பாக உள்ளதாக சிறைச்சாலை அதியட்சகர் தெரிவித்தார். </p><p>மேலும் மாவட்ட சிரேஷ்ட காவல் அத்தியட்சகர் லலித் லீலாரெத்தின சிறைச்சாலைக்கு
விஜயம் மேற்கொண்டு அங்கு பாதுகாப்பு நடவடிக்கையை ஆராய்ந்தார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a7114d1c-33cb-46fe-9836-2f32e50c33fa/26-6a75a9e5af6ac.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/37f2e48d-e012-48dd-bbb4-faca63312a3c/26-6a75a9e6646e7.webp' /></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b> WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-07T09:59:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[கோட்டபய ராஜபக்சவிற்கு யாழ் நீதிவான் நீதிமன்றம் பிறப்பித்த விசேட உத்தரவு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/gotabaya-ordered-to-testify-in-disappearance-1786093505"></link>
            <id>https://ibctamil.com/article/gotabaya-ordered-to-testify-in-disappearance-1786093505</id>
            <summary type="text">காணாமலாக்கப்பட்ட மனித உரிமை செயற்பாட்டாளர்களான லலித் மற்றும் குகன் ஆகியோரின் வழக்கு தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்சவிற்கு யாழ் நீதிவான் நீ...</summary>
            <content type="html"><![CDATA[<p>காணாமலாக்கப்பட்ட மனித உரிமை செயற்பாட்டாளர்களான லலித் மற்றும் குகன் ஆகியோரின் வழக்கு தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்சவிற்கு யாழ் நீதிவான் நீதிமன்றம் விசேட உத்தரவொன்றை பிறப்பித்துள்ளது.
</p><p>
மனித உரிமைச் செயற்பாட்டாளர்களான லலித்குமார் வீர்ராஜ் மற்றும் குகன் முருகானந்தன் தொடர்பான வழக்கில் சாட்சியமளிப்பதற்காக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இதற்கமைய கோட்டாபய ராஜபக்ச எதிர்வரும் செப்டம்பர் 29ஆம் திகதி கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.</p><p>
</p><p></p><h2>நீதிமன்றத்திற்குச் சாட்சியம்</h2><p>இதனடிப்படையில் அன்றைய தினம் கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் நேரில் முன்னிலையாகி, இணையவழி (Online) மூலமாக யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்திற்குச் சாட்சியமளிக்க அவருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b090279d-1b2d-4d79-bb9f-f859d0caef32/26-6a75a5ec98465.webp' /></p><p>2011 டிசம்பர் 10 அன்று சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த காணாமல்போனோரின் உறவினர்களின் போராட்டத்தை ஒருங்கிணைத்துக்கொண்டிருந்த வேளையில், லலித்குமார் வீர்ராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோர் ஆவாரங்கல் பகுதியில் வைத்துக் காணாமல்போயினர்.</p><p>
</p><p></p><h2>யாழ்ப்பாணத்தில் விசாரணை&nbsp;</h2><p>2012 இல் இவர்களின் உறவினர்களால் கொழும்பு மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு (Habeas Corpus) தாக்கல் செய்யப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/902ba780-ae4e-4777-a002-0c600f7568c5/26-6a75a5ed49177.webp' /></p><p> </p><p>இச்சம்பவம் தொடர்பான சாட்சிகளை விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்திற்கு மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது.</p><p>

அதன்படி 2012 செப்டம்பர் 19 அன்று யாழ்ப்பாணத்தில் விசாரணை ஆரம்பமானது.</p><p>
</p><p></p><h2>மீண்டும் விசாரணை</h2><p>2017 இல் இவ்வழக்கின் சாட்சிகள் பட்டியலில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டபய ராஜபக்சவின் பெயர் சேர்க்கப்பட்டது.</p><p>

பாதுகாப்பு காரணங்களினால் தம்மால் யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் நேரில் முன்னிலையாக முடியாது எனப் பாதுகாப்புச் செயலாளராக இருந்த கோட்டபய ராஜபக்ச நீதிமன்றத்திற்கு அறிவித்திருந்ததுடன், தனது சட்டத்தரணிகள் ஊடாக இணையவழியில் சாட்சியமளிக்க அனுமதி கோரியிருந்தார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/eed995e9-96ef-49cf-932b-fab3e3b1b52c/26-6a75a5edef296.webp' /></p><p>அக்கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், பொருத்தமான ஒரு நீதிவான் நீதிமன்றத்தில் நேரில் முன்னிலையாகி அங்கிருந்து இணையவழியில் சாட்சியமளிக்க அனுமதி அளித்திருந்தது.</p><p> 

அதனடிப்படையில், வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, செப்டம்பர் 29ஆம் திகதி கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் இருந்தவாறு சாட்சியமளிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-07T09:57:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜேர்மன் விமான நிலையத்தில் வெடிப்பொருள் இணைக்கப்பட்ட ட்ரோன்: சில புதிய தகவல்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/drone-on-germany-airport-not-blast-tech-error-1786096601"></link>
            <id>https://news.lankasri.com/article/drone-on-germany-airport-not-blast-tech-error-1786096601</id>
            <summary type="text">ஜேர்மனியின் Leipzig விமான நிலையத்தில் கண்டுபிடிக்கப்பட்ட வெடிப்பொருள் இணைக்கப்பட்ட ட்ரோன், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வெடிக்கவில்லை என தகவல் வெளியாக...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜேர்மனியின் Leipzig விமான நிலையத்தில் கண்டுபிடிக்கப்பட்ட வெடிப்பொருள் இணைக்கப்பட்ட ட்ரோன், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வெடிக்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
</p><p>


ஜேர்மனியின் Leipzig விமான நிலையத்தில் கண்டுபிடிக்கப்பட்ட வெடிப்பொருள் இணைக்கப்பட்ட ட்ரோன், உக்ரைன் விமானத்தை குறிவைத்து அனுப்பப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.
</p><h3>
ஜேர்மன் விமான நிலையத்தில் மர்மப் பொருள்</h3><p>

ஜேர்மனியின் Leipzig விமான நிலையம் நோக்கி வந்துகொண்டிருந்த விமானம் ஒன்றின் முன்பகுதியில் ஏதோ மோதியதைத் தொடர்ந்து அந்த விமானம் வேறொரு விமான நிலையத்துக்கு திருப்பி விடப்பட்டது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e69b5a70-84e1-47c2-920d-a4187a3b377b/26-6a75abdad3327.webp' /></p><p>
பின்னர், விமான ஓடுபாதையில் மர்மப்பொருள் ஒன்று கிடப்பது தெரியவரவே, உஷாரான அதிகாரிகள், வெடிகுண்டு செயலிழக்கச் செய்யும் ரோபோ ஒன்றை அங்கு அனுப்பியுள்ளனர்.
</p><p>
அவர்கள் சந்தேகப்பட்டது போலவே, அங்கு வெடிப்பொருட்கள் இணைக்கப்பட்ட ட்ரோன் ஒன்று கிடப்பது தெரியவந்துள்ளது.&nbsp;</p><p></p><p>
அந்தக் கருவியில் தொழில் நுட்பக் கோளாறு ஏற்பட்டதைத் தொடர்ந்து அது வெடிக்கவில்லை என ஜேர்மன் ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
</p><p>
அத்துடன், அந்த ட்ரோன், உக்ரைன் விமானம் ஒன்றின் அருகே கண்டெடுக்கப்பட்டதாகவும், அந்த விமானத்தில் ராணுவ தளவாடங்கள் இருந்ததாகவும் ஜேர்மன் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fdf0a2b9-365e-4010-9234-c64d26eea25c/26-6a75abdb8431e.webp' /></p><p>
ஆனால், அந்த தகவலை ஜேர்மன் நாடாளுமன்ற உள்துறை கமிட்டி உறுப்பினரான Detlef Seif மறுத்துள்ளார்.&nbsp;</p><p>
ஒரு முக்கிய சரக்கு மையமாகவும், ரஷ்யாவுக்கு அருகிலுள்ள தனது தளத்துக்கு உபகரணங்களை வழங்க உதவும் தளமாகவும் பயன்படும் Leipzig விமான நிலையத்தை, உக்ரைன் விமானங்கள் பயன்படுத்துவது வழக்கம்.
</p><p>
ஏற்கனவே, 2024ஆம் ஆண்டு, Leipzig விமான நிலையத்திற்கு அனுப்பப்பட்ட பார்சல்கள் தானாக தீப்பிடித்து எரிந்த விடயத்தின் பின்னால் ரஷ்யா இருப்பதாக சந்தேகிக்கப்படும் நிலையில், அங்கு உக்ரைன் விமானங்களும் நிற்கும் நிலையில், உக்ரைன் ரஷ்யப் போர் பின்னணியில், இந்த விடயத்தின் பின்னணியிலும் ரஷ்யா இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-07T09:56:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நல்லூர் கந்தசுவாமி ஆலய மஹோற்சவம்: கொடிச்சீலை வடிவமைப்பாளர்களிடம் காளாஞ்சி கையளிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/nallur-kandaswamy-temple-mahotsavam-1786096452"></link>
            <id>https://tamilwin.com/article/nallur-kandaswamy-temple-mahotsavam-1786096452</id>
            <summary type="text">நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவத்தை முன்னிட்டு கொடிச்சீலை
வடிவமைப்பாளர்களிடம் காளாஞ்சி கையளிக்கும் நிகழ்வு இன்று(07.08.2026) காலை
கல்வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவத்தை முன்னிட்டு கொடிச்சீலை
வடிவமைப்பாளர்களிடம் காளாஞ்சி கையளிக்கும் நிகழ்வு இன்று(07.08.2026) காலை
கல்வியங்காட்டில் நடைபெற்றுள்ளது. </p><p>

வள்ளியம்மை திருக்கல்யாணப் படிப்புடன் பந்தற்கால் நாட்டுதல் இடம்பெற்று, 
பாரம்பரிய முறைப்படி கொடிச்சீலை வழங்கும் மரபுடையவர்களுக்கான காளாஞ்சி
மாட்டுவண்டில் மூலம் நல்லூரிலிருந்து கல்வியங்காட்டுக்கு எடுத்துச்
செல்லப்பட்டது.</p><p>

அதன் பின்னர், கலாச்சார முறைப்படி பெருந்திருவிழாவுக்கான பத்திரிகையும்
காளாஞ்சியும் கையளிக்கப்பட்டன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/48954cda-9754-4b21-984f-007862a05c09/26-6a75ab6694a6c.webp' /></p><p>

ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழா எதிர்வரும் ஆகஸ்ட் 17ஆம் திகதி காலை 10
மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-08-07T09:54:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/trump-unveils-key-announcement-for-the-us-1786080270"></link>
            <id>https://canadamirror.com/article/trump-unveils-key-announcement-for-the-us-1786080270</id>
            <summary type="text">உலகளாவிய மற்றும் அமெரிக்காவின் எரிபொருள் விலைகள் குறித்து செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த அமெரிக்க ஜனாதிபதி, ஈரான் மீதான போர் &quot;மிக விரைவில்...</summary>
            <content type="html"><![CDATA[<p>உலகளாவிய மற்றும் அமெரிக்காவின் எரிபொருள் விலைகள் குறித்து செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த அமெரிக்க ஜனாதிபதி, ஈரான் மீதான போர் "மிக விரைவில்" முடிவடையும் எனத் தாம் நினைப்பதாகத் தெரிவித்தார்.
</p><p>
"அவர்களால் இனி அதிக காலம் நீடிக்க முடியாது என்று நான் நினைக்கிறேன்," என்றும் அவர் கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b7346414-12f7-4135-a12b-7c82fedaa43e/26-6a756c10215de.webp' /></p><p>
</p><p>
தற்போது, ஈரான் ஓமானுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
</p><p>
முக்கிய கடல்வழிப் பாதையான ஹோர்முஸ் நீரிணை வழியாக வர்த்தகக் கப்பல்களின் போக்குவரத்தை அதிகரிக்கும் வகையில், இரு தரப்பினருக்கும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு பாதையை முறைப்படுத்துவதற்கான ஒப்பந்தத்தை எட்டும் கட்டத்தை அந்த இரண்டு நாடுகளும் நெருங்கியுள்ளன என்று ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content>
            <updated>2026-08-07T09:50:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் வெளிநாட்டவரின் மோசமான செயல் ; விரட்டி பிடித்த பொது மக்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sri-lanka-foreigner-accused-in-serious-incident-1786095638"></link>
            <id>https://jvpnews.com/article/sri-lanka-foreigner-accused-in-serious-incident-1786095638</id>
            <summary type="text">கொழும்பு - கொள்ளுப்பிட்டி சந்தியில் தொலைபேசி பறிப்பு சம்பவம் தொடர்பான குற்றச்சாட்டில் வெளிநாட்டு பிரஜை ஒருவர் பொலிஸ் காவலில் எடுக்கப்பட்டுள்ளார்.

...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">கொழும்பு - கொள்ளுப்பிட்டி சந்தியில் தொலைபேசி பறிப்பு சம்பவம் தொடர்பான குற்றச்சாட்டில் வெளிநாட்டு பிரஜை ஒருவர் பொலிஸ் காவலில் எடுக்கப்பட்டுள்ளார்.
</p><p style="text-align: justify;">


இச் சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p style="text-align: justify;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a1459ba0-a70f-45ca-8a08-3b52e58d9962/26-6a75a81885cb8.webp' /></p><p style="text-align: justify;">சந்தேகநபர் வீதியில் சென்ற ஒருவரின் கையடக்கத் தொலைபேசியை பறித்துக்கொண்டு தப்பிச் செல்ல முயன்றுள்ளார்.</p><p style="text-align: justify; ">



எனினும், அவரை துரத்திச் சென்ற உள்ளூர் நபர் ஒருவர் பிடித்து, பின்னர் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify;">



குறித்த நபரை பொதுமக்கள் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் சூழ்ந்து நிற்கும் காட்சிகள் காணொளிகளில் பதிவாகியுள்ள நிலையில் அது தற்போது வைரலாகி வருகின்றது.&nbsp; </p><p style="text-align: justify;"></p>]]></content>
            <updated>2026-08-07T09:50:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் இளைஞன் செய்த விபரீத செயல் ; இதற்காகவா இப்படி? துயரில் கதறும் தாய்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/jaffna-young-man-takes-extreme-step-1786084368"></link>
            <id>https://jvpnews.com/article/jaffna-young-man-takes-extreme-step-1786084368</id>
            <summary type="text">&amp;nbsp;யாழ்ப்பாணம், சுன்னாகம் பகுதியில் தாயாருடன் ஏற்பட்ட வாக்குவாத காரணமாக இளைஞர் ஒருவர் நேற்று(06) தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்....</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">&nbsp;யாழ்ப்பாணம், சுன்னாகம் பகுதியில் தாயாருடன் ஏற்பட்ட வாக்குவாத காரணமாக இளைஞர் ஒருவர் நேற்று(06) தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.</p><p style="text-align: justify; ">


சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.</p><p style="text-align: justify; margin-left: 25px;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ea718b1d-fc2d-4d5c-af5e-c070ba750299/26-6a757c1260baa.webp' /></p><h2 style="text-align: justify; margin-left: 25px;">மேலதிக விசாரணை</h2><p>
</p><p style="text-align: justify;">

இது குறித்து மேலும் தெரியவருகையில்,
</p><p style="text-align: justify; ">
தாயாரின் அடையாள அட்டையை பயன்படுத்தி, சிம் அட்டை ஒன்றினை வாங்கி தருமாறு குறித்த இளைஞர் தாயாரிடம் கோரிய நிலையில், வாக்குவாதமாக மாறியுள்ளது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
அதன் பின்னர், குறித்த இளைஞர் தனக்கு தானே தீ வைத்துக் கொண்டு, வயலுக்குள் உள்ள கிணற்றுக்குள் பாய்ந்து உயிர்மாய்த்து கொண்டுள்ளார்.</p><p style="text-align: justify; ">

இந்த நிலையில் அவரது சடலமானது மீட்கப்பட்டு உடற்கூற்று பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp; &nbsp; &nbsp;</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-08-07T09:50:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[PSG அணி அதிர்ச்சித் தோல்வி: சர்வதேச வீரர்கள் திரும்பிய பிறகே..பயிற்சியாளரின் காரணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/psg-coach-said-about-upset-loss-vs-mallorca-1786096039"></link>
            <id>https://news.lankasri.com/article/psg-coach-said-about-upset-loss-vs-mallorca-1786096039</id>
            <summary type="text">மல்லோர்கா அணிக்கு எதிரான போட்டியில் PSG அணி படுதோல்வி அடைந்தது.&amp;nbsp;&amp;nbsp;கிளப் நட்பு போட்டியில் பாரிஸ் செயிண்ட் ஜேர்மைன் அணி 0-3 என்ற கோல் கணக்கில் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>மல்லோர்கா அணிக்கு எதிரான போட்டியில் PSG அணி படுதோல்வி அடைந்தது.&nbsp;&nbsp;</p><p>கிளப் நட்பு போட்டியில் பாரிஸ் செயிண்ட் ஜேர்மைன் அணி 0-3 என்ற கோல் கணக்கில் மல்லோர்காவிடம் அதிர்ச்சித் தோல்வியடைந்தது.&nbsp;</p><h2>மல்லோர்கா வெற்றி </h2><p>
பாரிஸ் செயிண்ட் ஜேர்மைன் (PSG) மற்றும் மல்லோர்கா அணிகளுக்கு இடையிலான கிளப் நட்பு போட்டி ஸ்பெயினியில் நடந்தது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9ea2abed-72b6-4886-9c48-8e74dfc1118e/26-6a75a9aa75be4.webp' />&nbsp;</p><p></p><p>

ஆட்டத்தின் 21வது நிமிடத்தில் மல்லோர்காவின் ஸிடோ லுவும்போ கோல் அடித்தார். அடுத்த 19 நிமிடங்களில் ஜென் விர்கிலி கோல் அடித்தார்.
</p><p>
இந்த அதிர்ச்சியில் இருந்து PSG அணி மீள்வதற்குள் 51வது ஆன்டோனியோ ரெய்லோ (Antonio Raillo) கோல் அடித்தார்.</p><p> 

இறுதிவரை PSG அணியினரால் கோல் அடிக்க முடியாததால், மல்லோர்கா 3-0 என்ற கோல் வெற்றி பெற்று அதிர்ச்சி கொடுத்தது.
</p><h2>
பயிற்சியாளர் </h2><p>தோல்வி குறித்து பேசிய PSG பயிற்சியாளர் லூயிஸ் என்ரிக்யூ (Luis Enrique), "இது எங்கள் உடல்தகுதியை மேம்படுத்துவதற்கான ஒரு போட்டி. இதற்கு ஒரு சரியான பகுப்பாய்வை வழங்குவது கடினம். முதல் பாதியில் நாங்கள் சிறப்பாகவே செயல்பட்டதாக நினைக்கிறேன்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/362ac58f-9e62-4a9d-9fc8-9a411318ac55/26-6a75a9ab24140.webp' /></p><p>

ஆனால், இரண்டாவது கோலை விட்டுக்கொடுத்தபோது நாங்கள் செய்த தவறு ஆட்டத்தை எங்களுக்கு கடினமாக்கியது. 

இருப்பினும், நான் பார்த்த விடயங்களில் மகிழ்ச்சியடைகிறேன்; அகாடமி வீரர்கள் மிக சிறப்பாக செயல்பட்டதை காண முடிந்தது. இது நாங்கள் விரும்பிய முடிவு அல்ல; ஆனால் கால்பந்தில் இது இயல்பான ஒன்றுதான். PSG அணிக்கு எதிராக விளையாடுவது மற்ற அணிகளுக்கு ஒரு உந்துதலாக அமைகிறது, அது இயல்பானதே.</p><p>இது எங்கள் பருவக்காலத்திற்கு முந்தைய பயிற்சியின் முதல் வாரம்; அணியில் பல அகாடமி வீரர்கள் இடம்பெற்றிருந்தனர்.

சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்ற வீரர்கள் திரும்பிய பிறகே எங்கள் அணியின் உண்மையான நிலையை எங்களால் முழுமையாக மதிப்பிட முடியும்" என தெரிவித்தார்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e33381b2-2fea-4773-a0db-d5bc001e4e46/26-6a75a9ac8063f.webp' />&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dd0beec2-ece3-4b2b-b8fa-657e2329a7f6/26-6a75a9abcafd1.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-07T09:46:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[விவசாயிகளின் தக்காளிகளைச் சாப்பிட்டதால் பலியான 15 யானைகள்: வெளியான பகீர் பின்னணி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/elephants-killed-suspected-cyanide-1786095792"></link>
            <id>https://news.lankasri.com/article/elephants-killed-suspected-cyanide-1786095792</id>
            <summary type="text">கென்யாவின் அம்போசெலி தேசியப் பூங்காவிற்கு அருகிலுள்ள பண்ணைகளில் தக்காளிகளைச் சாப்பிட்டதால் 15 யானைகள் மரணமடைந்துள்ளன.
கென்யாவின் அம்போசெலி தேசிய பூங்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கென்யாவின் அம்போசெலி தேசியப் பூங்காவிற்கு அருகிலுள்ள பண்ணைகளில் தக்காளிகளைச் சாப்பிட்டதால் 15 யானைகள் மரணமடைந்துள்ளன.</p><p>
கென்யாவின் அம்போசெலி தேசிய பூங்காவிற்கு அருகிலுள்ள பண்ணைகளில் தக்காளிப் பழங்களைச் சாப்பிட்ட பிறகு, 15 யானைகள் இறந்த நிலையில் அது சயனைடு நச்சுத்தன்மையால் நடந்ததாகக் கூறப்படுகிறது.</p><h2>தக்காளிப் பழங்களால்</h2><p>
</p><p>காட்டு விலங்குகளும் வீட்டு விலங்குகளும் இணைந்து வாழும், பண்ணைகளில் தக்காளி மற்றும் வெங்காயம் பயிரிடப்படும் ஒரு சூழலில் சயனைடு எப்படி வந்தது என்பது குறித்து விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8548d240-1036-4cae-a62d-dcc0e88c1283/26-6a75a8b3092aa.webp' /></p><p> </p><p>ஆனால், தங்கள் தக்காளிப் பழங்களைச் சாப்பிட்டதால் யானைகள் பலியானதாக வெளியாகியுள்ளத் தகவலை விவசாயிகள் மறுத்து வருகின்றனர்.</p><p> அம்போசெலி பூங்காவிற்கு அருகில் விரிவடையும் விவசாய நடவடிக்கைகளால் இப்பகுதியில் மனித-வனவிலங்கு மோதல்கள் அதிகரித்து வரும் நிலையில், யானைகளின் இறப்புகளும் அதற்கான காரணங்கள் குறித்த கருத்து வேறுபாடுகளும் கவலைகளைத் தீவிரப்படுத்தியுள்ளன. </p><p>வேட்டையாடுதலைக் குறைத்து யானைகளைப் பாதுகாப்பதன் மூலம், வரலாற்று ரீதியாக மிகக் குறைந்த எண்ணிக்கையிலிருந்த தங்கள் யானை இனத்தின் எண்ணிக்கையை 36,000-க்கும் அதிகமானதாக மீண்டும் உயர்த்தியதற்காக, சமீப காலம் வரை கென்யா பரவலாக அங்கீகரிக்கப்பட்டு வந்துள்ளது.</p><p>
அம்போசெலி சூழல் மண்டலத்தில் ஒரு மாத காலத்திற்குள் 15 யானைகள் மரணமடைந்ததாகக் கென்யா வனவிலங்கு சேவை அமைப்பு கடந்த மாதம் அறிவித்தது.</p><p></p><p> </p><p>முதற்கட்ட ஆய்வகப் பரிசோதனைகளில் சயனைடு கண்டறியப்பட்ட நிலையில், பிரேதப் பரிசோதனைகளில் விலங்குகளின் வயிற்றில் தக்காளிகள் இருப்பது தெரியவந்தது. </p><p>மருத்துவர்கள் தெரிவிக்கையில், யானைகள் இறப்பதற்கு முன், பக்கவாதம் மற்றும் மூச்சு விடுவதில் சிரமம் போன்ற அறிகுறிகளை வெளிப்படுத்தியிருந்தன என்றும் குறிப்பிட்டுள்ளனர்.</p><h2>விவசாய நிலங்கள்</h2><p> </p><p>ஆரம்பகட்ட சோதனைகள் சயனைடு நச்சுத்தன்மையைக் சுட்டிக்காட்டின; இருப்பினும், சயனைடின் செறிவை உறுதிப்படுத்த மேலதிக ஆய்வகச் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. </p><p>அம்போசெலியின் எல்லையில் அமைந்துள்ள கிமானா, கென்யாவின் மிகச் சிறந்த விவசாயப் பகுதிகளில் ஒன்றாகும்; இங்கு விளையும் தக்காளி, வெங்காயம் மற்றும் பிரெஞ்சு பீன்ஸ் ஆகியவை தலைநகர் நைரோபியில் உள்ள சந்தைகளுக்குக் கொண்டு செல்லப்படுகின்றன. </p><p>கென்யாவின் தேசிய யானைகள் பாதுகாப்புத் திட்டத்தின்படி, பூங்காவிற்கு அருகில் விவசாய நிலங்கள் விரிவடைந்துள்ள நிலையில், வேட்டையாடுதலுக்கு அடுத்தபடியாக மனிதர்களுக்கும் யானைகளுக்கும் இடையிலான மோதலே உயிரிழப்புகளுக்கு இரண்டாவது முக்கிய காரணமாகத் தொடர்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/80a99269-f135-409e-b82f-6eb148436a1d/26-6a75a8b3bb480.webp' /></p><p> </p><p>2000 மற்றும் 2020-க்கு இடைப்பட்ட காலத்தில், தங்கள் பயிர்கள், உடைமைகள் மற்றும் உயிர்களைப் பாதுகாக்கும் முயற்சியில் சமூகங்கள் மேற்கொண்ட தற்காப்பு அல்லது பழிவாங்கும் நடவடிக்கைகளால் குறைந்தது 1,160 யானைகள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. </p><p>மேலும், பொதுவாகப் பயன்படுத்தப்படும் விவசாய இடுபொருட்களிலிருந்து சயனைடு வந்திருக்கக்கூடும் என்பதில் விவசாயிகளுக்குச் சந்தேகம் உள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-07T09:41:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[மக்களின் பூர்வீக நிலங்களை விடுவிக்குமாறு கோரி மன்னாரில் வெடித்த போராட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/protest-in-mannar-demanding-people-s-lands-release-1786088475"></link>
            <id>https://ibctamil.com/article/protest-in-mannar-demanding-people-s-lands-release-1786088475</id>
            <summary type="text">தமது பூர்வீக நிலங்களை உடனடியாக உரிமையாளர்களிடம் ஒப்படைக்க
வலியுறுத்தியும், நீண்ட காலமாக தமது பூர்வீக நிலங்களை மீட்டெடுப்பதற்காக
தொடர்ந்து போராடி வரு...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமது பூர்வீக நிலங்களை உடனடியாக உரிமையாளர்களிடம் ஒப்படைக்க
வலியுறுத்தியும், நீண்ட காலமாக தமது பூர்வீக நிலங்களை மீட்டெடுப்பதற்காக
தொடர்ந்து போராடி வரும் மக்களுக்கு ஒற்றுமையையும் ஆதரவையும் வெளிப்படுத்தியும் மன்னாரில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.</p><p>
காணி இழந்த மக்களின் குரல் ஏற்பாட்டில் மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் அனுசரணையில் இன்று&nbsp; (7) காலை 10 மணியளவில் மன்னார் நகர
சுற்றுவட்டத்துக்கு முன்பாக குறித்த கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.
</p><p>யாழ்ப்பாணம் - வலிகாமம் வடக்கு, முல்லைத்தீவு - கேப்பாப்புலவு
மற்றும் மட்டக்களப்பு மயிலத்தமடு–மாதவனை பகுதிகளில் தமது பூர்வீக காணிகளை
மீட்டெடுப்பதற்காக பல ஆண்டுகளாக போராடி வரும் மக்களின் நியாயமான
கோரிக்கைகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் குறித்த போராட்டம்&nbsp; முன்னெடுக்கப்பட்டது.</p><p></p><h2>போராட்டத்தில் கலந்துகொண்டோர்</h2><p>
</p><p>இந்தப் போராட்டத்தில் மன்னார் மாவட்டத்தில் படையினர் வசம் உள்ள காணிகளின்
உரிமையாளர்களும், கிராம மக்கள், மக்கள் அமைப்புகள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள் என வடக்கின் சில பகுதிகளில் இருந்து கலந்து கொண்டிருந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e78eff8e-a68b-4113-8750-2ad6dbd32b8a/26-6a75a6d0e7324.webp' /></p><p>போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் "நிலம் எங்கள் உரிமை - நீதி எங்கள் இலக்கு!", "எமது காணி – எமது உரிமை!", "காணி உரிமை ஒரு மனித உரிமையாகும்!", "காணியே எமது வாழ்க்கையும் அடையாளமும்!", "எமது காணி – எமது குரல்!", "மக்கள் பசியால் தவிக்கையில் மக்களின் காணிகளில் படைகள் பயிரிடுவதா?", "வலிகாமம் வடக்கு மக்களின் காணி அபகரிப்பிற்கான உயர்பாதுகாப்பு வலயத்தை
எப்போது நீக்குவீர்கள்?", "வலிகாமம் வடக்கு மக்களின் நில மீட்பு போராட்டத்திற்கு மன்னார் மக்களின்
ஆதரவு!", "முல்லைத்தீவு கேப்பாப்புலவு மக்களின் காணி விடுவிப்பு போராட்டத்திற்கு
மன்னார் மக்களின் ஆதரவு!", "மட்டக்களப்பு மயிலத்தமடு–மாதவனை மக்களின் நீண்டகால நில உரிமைப்
போராட்டத்திற்கு மன்னார் மக்களின் ஆதரவு!", "இலங்கை அரசே! பூர்வீக காணிகளை உடனடியாக உரிய மக்களிடம் ஒப்படையுங்கள்!" என்ற வாசகங்கள் எழுதிய பதாகைகளை ஈந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><p><b><i>செய்திகள் - நயன், கஜிந்தன்&nbsp;</i></b></p><p><b><i><br></i></b></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><b><i><br></i></b></p>]]></content>
            <updated>2026-08-07T09:41:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டில் பதற்றமான சூழல்! தீவிரமடையும் சிறைச்சாலை கலவரம் - ஜனாதிபதி தலைமையில் அவசர கூட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/prison-attack-emergency-meeting-by-the-president-1786094155"></link>
            <id>https://tamilwin.com/article/prison-attack-emergency-meeting-by-the-president-1786094155</id>
            <summary type="text">சிறைச்சாலைகளில் நிலவும் சூழ்நிலை தொடர்பில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (07) பிற்பகல் விசேட கலந்துரையாடல் நடைபெறவுள்ளது.பொதுப் பாதுக...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிறைச்சாலைகளில் நிலவும் சூழ்நிலை தொடர்பில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (07) பிற்பகல் விசேட கலந்துரையாடல் நடைபெறவுள்ளது.</p><p>பொதுப் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால இதனை தெரிவித்துள்ளார்.</p><p>&nbsp;</p><h2>கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் வெடித்த மோதல்கள்</h2><p>கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் நாட்டில், மெகசின், குருவிட்ட, பல்லன்சேன உள்ளிட்ட சிறைச்சாலைகளில் மோதல் நிலை ஏற்பட்டதோடு சிலர் உயிரிழந்துதுள்ளடன், பலர் படுகாயமடைந்துள்ளனர்.&nbsp; &nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/02fd628e-515b-4590-895a-1484c115f74f/26-6a75a7bb72225.webp' />&nbsp;</p><p>நேற்று இரவு (06) மெகசின் சிறையில் கலவரம் வெடித்த நிலையில், தற்போது கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p>இதில் 11 கைதிகள் காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில், இன்று காலை கைதி ஒருவர் உயிரிழந்திருந்தார்.</p><p>

இதனையடுத்து இன்று காலை முதல் (07) குருவிட்ட சிறையிலும் கலவரம் வெடித்துள்ளதுடன், இரண்டு கைதிகள் உயிரிழந்ததாகவும், மற்றொரு குழுவினர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p><h2>நாட்டில் பதற்றமான சூழல்&nbsp;</h2><p>இதனையடுத்து இன்று காலை முதல்&nbsp;நீர்கொழும்பு - பல்லன்சேன சிறைச்சாலையில் அமைதியின்மை ஏற்பட்டுள்ள நிலையில் நிலைமையைக் கட்டுப்படுத்த கண்ணீர்ப் புகைத் தாக்குதல் நடத்தப்பட்டு வருகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4bd50e0f-b08c-4f1f-930d-0bb8e4df4249/26-6a75a7bc2a8fd.webp' /></p><p>இந்தநிலையில், குறித்த சிறைச்சாலைகளில் நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர பாதுகாப்புத் தரப்பினர் கடும் பிரயத்தனங்களை மேற்கொண்டுள்ளனர்.</p><p>இதன் காரணமாக நாட்டில் பதற்றமான சூழல் நிலவிவரும் நிலையில்,&nbsp;ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (07) பிற்பகல் விசேட கலந்துரையாடல் நடைபெறவுள்ளது.</p><p></p><p>&nbsp;</p><p>

</p>]]></content>
            <updated>2026-08-07T09:39:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[முதல்வர் விஜய் விவாகரத்து வழக்கு - 20 நிமிடங்கள் காணொளியில் வாதம் செய்த சங்கீதா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/vijay-sangeetha-divorce-case-adjourned-1786095537"></link>
            <id>https://news.lankasri.com/article/vijay-sangeetha-divorce-case-adjourned-1786095537</id>
            <summary type="text">முதல்வர் விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கில், 20 நிமிடங்கள் காணொளியில் சங்கீதா வாதம் செய்த நிலையில், திகதி குறிப்பிடாமல் வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது...</summary>
            <content type="html"><![CDATA[<p>முதல்வர் விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கில், 20 நிமிடங்கள் காணொளியில் சங்கீதா வாதம் செய்த நிலையில், திகதி குறிப்பிடாமல் வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.</p><h3>

முதல்வர் விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு</h3><p>

தவெக தலைவர் விஜய், 2026 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆகியுள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8a941561-8dcc-44d4-9bca-b4d9f2e70300/26-6a75a7b247cd6.webp' /></p><p>
விஜய் மனைவி சங்கீதா செங்கல்பட்டு நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு விவாகரத்து கோரி மனு அளித்தார். </p><p>

அந்த மனுவில் கணவர் விஜய் நடிகை ஒருவருடன் திருமணத்தை மீறிய உறவில் இருப்பதாகவும், தன்னை மனரீதியாக துன்புறுத்தியதாகவும் பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார்.&nbsp;</p><p></p><p>

இருவரும் காணொளி காட்சி வாயிலாக ஆஜராக அனுமதிக்க வேண்டுமென இருதரப்பு வழக்கறிஞர்களும் கோரிக்கை விடுத்த நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. </p><p>

ஆனால் தற்போது நடைபெற்று வரும் தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடரில் முதலமைச்சர் விஜய் பங்கேற்றுள்ளதால், அவரால் விவாகரத்து வழக்கு தொடர்பாக இன்று நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக முடியவில்லை என அவரது வழக்கறிஞர் தெரிவித்தார். </p><p>

சங்கீதா காணொளி வாயிலாக ஆஜராகி 20 நிமிடங்கள் தனது வாதத்தை முன்வைத்தார். 

வாதத்தை கேட்ட நீதிபதி, திகதி குறிப்பிடாமல் வழக்கை ஒத்திவைத்தார்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-07T09:39:09+00:00</updated>
        </entry>
    </feed>
