<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-07-19T16:27:57+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[வேல்ஸில் 25 வயது இளைஞர் திடீர் மரணம்: மூவர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/25-year-old-youth-dies-in-wales-and-three-arrested-1784478257"></link>
            <id>https://news.lankasri.com/article/25-year-old-youth-dies-in-wales-and-three-arrested-1784478257</id>
            <summary type="text">வேல்ஸில் 25 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்தது தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டனர்.&amp;nbsp;அவசர சேவைக் குழுவினர் 

வேல்ஸின் லானெல்வெட் பகுதியில் உள்ள பென்...</summary>
            <content type="html"><![CDATA[<p>வேல்ஸில் 25 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்தது தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டனர்.&nbsp;</p><h2>அவசர சேவைக் குழுவினர்</h2><p> 

வேல்ஸின் லானெல்வெட் பகுதியில் உள்ள பென்மேனாவ் பண்ணையில், மருத்துவ அவசரநிலை குறித்த தகவல் கிடைத்துள்ளது. உடனே அவசர சேவைக் குழுவினர் அங்கு விரைந்தனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/666907f0-0074-47bb-b461-d985e9df2fac/26-6a5cfa98bd8ff.webp' />&nbsp;</p><p></p><p>அப்போது, Royal Welsh Show மைதானத்திற்கு அருகில் உள்ள முகாம் தளம் ஒன்றில், 25 வயது இளைஞர் ஒருவர் சுயநினைவின்றி இருந்துள்ளார்.
</p><p>
மருத்துவக் குழுவினர் அவரை காப்பாற்ற முயற்சித்தது பலனளிக்கவில்லை. குறித்த இளைஞர் இறந்ததை காவல்துறையினர் உறுதிப்படுத்தினர். </p><p>

பின்னர் அவரது நெருங்கிய உறவினர்களுக்கு காவல்துறையினர் தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டது. </p><p>

மேலும், போதைப்பொருள் விற்பனை தொடர்பான குற்றச்சாட்டுக்களின் பேரில் மூவர் கைது செய்யப்பட்டு, தற்போது காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.&nbsp;&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-19T16:25:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்கத் தாக்குதல்களால் ஈரானில் கடும் மின்சார நெருக்கடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/iran-in-power-crisis-due-to-us-attacks-1784476731"></link>
            <id>https://ibctamil.com/article/iran-in-power-crisis-due-to-us-attacks-1784476731</id>
            <summary type="text">அமெரிக்கத் தாக்குதல்களால் ஈரானின் எரிசக்தி உள்கட்டமைப்பு கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் மின்சார நெருக்கடி ஏற்பட்டள்ளதாகவும் சர்வதேச ஊடகங்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்கத் தாக்குதல்களால் ஈரானின் எரிசக்தி உள்கட்டமைப்பு கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் மின்சார நெருக்கடி ஏற்பட்டள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
</p><p>
தற்போதைய வெப்பமான வானிலையால், இந்த நாட்களில் மின்சாரத்திற்கான தேவை வழக்கத்திற்கு மாறாக அதிகரித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.</p><h2>கடுமையான நெருக்கடியில்&nbsp;&nbsp;மின்சார அமைப்பு</h2><p>அதன்படி, மின்சார உற்பத்திக்கும் தேவைக்கும் இடையே ஆயிரக்கணக்கான மெகாவாட்கள் வேறுபாடு இருப்பதால், நாட்டின் மின்சார அமைப்பு கடுமையான நெருக்கடியில் சிக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/14312add-93dc-4e8f-805d-457993a95748/26-6a5cfa271af5f.webp' /></p><p>
</p><p>
தலைநகர் தெஹ்ரான் உட்பட பல பகுதிகளில், ஒரு திட்டத்தின்படி ஏற்கனவே மின்வெட்டு தொடங்கப்பட்டுள்ளது என்றும், வாரத்தில் இரண்டு நாட்கள் தொழிற்சாலைகளுக்கு மின்சாரத்தைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்றும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.</p><p></p><h2>ட்ரம்பின் எச்சரிக்கை</h2><p>

அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை மேசைக்கு ஈரான் திரும்பத் தவறினால், வரும் நாட்களில் அந்நாட்டின் மின் உற்பத்தி நிலையங்களும் முக்கிய பாலங்களும் அமெரிக்க இராணுவத் தாக்குதல்களின் இலக்காக மாறக்கூடும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சமீபத்தில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.&nbsp; &nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7fe0905c-6f12-4604-a8d0-2122138e03d0/26-6a5cfa27bceaa.webp' /></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-19T16:24:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[அனைத்துக் கட்சி கூட்டத்தில் திரிணாமுல் காங்கிரஸ் வெளிநடப்பு -எதிர்க்கட்சிகள் ஆதரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/trinamool-congress-support-opposition-walkout-1784476078"></link>
            <id>https://ibctamilnadu.com/article/trinamool-congress-support-opposition-walkout-1784476078</id>
            <summary type="text">டெல்லியில் நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் இருந்து திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்த நிலையில், அவர்களுக்கு ஆதரவாக காங்கிரஸ், திம...</summary>
            <content type="html"><![CDATA[<p>டெல்லியில் நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் இருந்து திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்த நிலையில், அவர்களுக்கு ஆதரவாக காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் வெளிநடப்பு செய்து எதிர்ப்பை தெரிவித்தன.
</p><p>
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நாளை தொடங்க உள்ளது.இதையொட்டி, கூட்டத்தொடரை சுமூகமாக நடத்துவது குறித்து ஆலோசிக்க மத்திய அரசு சார்பில் டெல்லியில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/512b4551-2e1d-4846-8f3e-312b499bbed4/26-6a5cf42baec2f.webp' /></p><p>

நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், ஜே.பி. நட்டா, மத்திய இணையமைச்சர் எல். முருகன், காங்கிரஸ் எம்.பி. ஜெய்ராம் ரமேஷ், திமுக எம்.பி.க்கள் டி.ஆர். பாலு, திருச்சி சிவா உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.</p><h2>காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளிநடப்பு&nbsp;</h2><p>
</p><p>
கூட்டம் தொடங்கியதும், திரிணாமுல் காங்கிரஸில் இருந்து நீக்கப்பட்டதாகக் கூறப்படும் 20 எம்.பி.க்களுக்கு "இந்திய தேசியவாத குடிமக்கள் கட்சி" என்ற பெயரில் அழைப்பு விடுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.</p><p> அவர்களுக்கு ஆதரவாக காங்கிரஸ், திமுக, சமாஜ்வாதி, ஆம் ஆத்மி, இடதுசாரி கட்சிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் வெளிநடப்பு செய்து தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்தன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bb0dd733-4449-4ae6-b132-d8a55cf795e5/26-6a5cf42c5faa4.webp' /></p><p>
</p><p>
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா, அந்த 20 எம்.பி.க்களுக்கு சபாநாயகர் இன்னும் அதிகாரப்பூர்வ அங்கீகாரம் வழங்காத நிலையில், அவர்களை அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு எப்படி அழைத்தார்கள் என்று கேள்வி எழுப்பினார்.</p><p>

இதற்கிடையில், மழைக்கால கூட்டத்தொடரில் நீட் வினாத்தாள் கசிவு, அயோத்தி ராமர் கோயில் நன்கொடை முறைகேடு உள்ளிட்ட விவகாரங்களை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. </p><p>மேலும், வந்தே மாதரம் பாடலை அவமதிப்போருக்கு 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கும் மசோதா உள்ளிட்ட ஐந்து முக்கிய மசோதாக்களையும் மத்திய அரசு தாக்கல் செய்ய உள்ளது. </p><p>இதனால், இந்த முறை நாடாளுமன்ற கூட்டத்தொடர் காரசாரமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெளிநடப்புக்குப் பிறகு, சிறிது நேரத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மீண்டும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது.</p><p><br></p><br><p><br></p>]]></content>
            <updated>2026-07-19T16:20:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[நள்ளிரவில் ஆடையின்றி தெருவில் ஓடிய இளம்பெண் பொறியாளர் ; இறுதியில் காத்திருந்த விபரீதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/engineer-runs-on-street-tragedy-follows-1784477724"></link>
            <id>https://jvpnews.com/article/engineer-runs-on-street-tragedy-follows-1784477724</id>
            <summary type="text">தெலுங்கானாவின் மேடிப்பள்ளியில்,&amp;nbsp; 25 வயது இளம்பெண் மர்மமான முறையில் கோவில் குளத்தில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">தெலுங்கானாவின் மேடிப்பள்ளியில்,&nbsp; 25 வயது இளம்பெண் மர்மமான முறையில் கோவில் குளத்தில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. </p><p style="text-align: justify; ">
 
மென்பொருள் பொறியாளராக பணியாற்றி வந்த இவர், சில மாதங்களுக்கு முன்பு வேலையை விட்டுவிட்டு தனது தாயுடன் வசித்து வந்துள்ளார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8b90c113-e2a6-4235-9f53-06fa93b1613f/26-6a5cf81e477e9.webp' /></p><h2 style="text-align: justify; ">தற்கொலைக்கான காரணம்</h2><p> </p><p style="text-align: justify; ">சம்பவத்தன்று இரவு, தனது தாயின் அறையை வெளியில் இருந்து பூட்டிவிட்டு, அதிகாலை 2:30 மணிக்கு வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். </p><p style="text-align: justify; ">
 
சிசிடிவி காட்சிகளில், அவர் வீதிகளில் ஆடையின்றி ஓடுவதும், ஒரு கோவிலில் சிறிது நேரம் நின்று பிரார்த்தனை செய்வதும் பதிவாகியுள்ளது. இறுதியில், அதிகாலை 3:00 மணியளவில் குளத்திற்குள் அவர் குதிப்பது தெரியவந்துள்ளது.</p><p style="text-align: justify; "> மறுநாள் காலையில், தாய் கதவை உடைத்து வெளியே வந்து தேடியபோது, தேஜஸ்வினியின் உடல் குளத்தில் மிதப்பது கண்டெடுக்கப்பட்டது.
</p><p style="text-align: justify; "> 
அவர் கடும் மன உளைச்சல் மற்றும் பதற்றத்தால் பாதிக்கப்பட்டு இருந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. </p><p style="text-align: justify; ">தூக்கத்தில் ஏற்படும் பயங்கர கனவுகள் மற்றும் பீதி தாக்குதல்களால் அவர் அவதிப்பட்டு வந்ததாகத் தாயின் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்கொலைக்கான காரணம் மனநல பாதிப்பாகவே இருக்கலாம் என காவல்துறை கருதுகிறது.</p><p style="text-align: justify; ">இருப்பினும், பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பிறகே முழுமையான விவரங்கள் தெரியவரும் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-19T16:17:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[முன்னாள் பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்னவின் சர்ச்சைக்குரிய மரணம்..! குடும்பத்தார் வெளியிட்ட தகவல்கள்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/the-controversial-death-of-wickramaratne-igp-1784474449"></link>
            <id>https://tamilwin.com/article/the-controversial-death-of-wickramaratne-igp-1784474449</id>
            <summary type="text">முன்னாள் பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்னவின் சர்ச்சைக்குரிய மரணம், துப்பாக்கி தவறுதலாக வெடித்ததால் ஏற்பட்ட விபத்தாக இருக்கலாம் என அவரது நெருங்கியவர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்னவின் சர்ச்சைக்குரிய மரணம், துப்பாக்கி தவறுதலாக வெடித்ததால் ஏற்பட்ட விபத்தாக இருக்கலாம் என அவரது நெருங்கியவர்கள் தெரிவித்துள்ளனர். </p><p>

இது குறித்த இறுதி நீதிமருத்துவ அறிக்கை விரைவில் வெளியாக உள்ளது.</p><p></p><h2>துயரச் சம்பவம்</h2><p>

கடந்த வெள்ளிக்கிழமை காலை, தனது மனைவி பிரியங்கி மற்றும் தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரியுடன் வழக்கமான காலை நடைப்பயிற்சிக்குச் செல்லத் தயாராகிக் கொண்டிருந்தபோது, 63 வயதான ஓய்வுபெற்ற மூத்த அதிகாரி தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக்கொண்டார் என்ற தகவல்&nbsp; வெளியானது.</p><p>

சம்பவம் நிகழ்ந்தபோது விளையாட்டு உடையும் வெள்ளை நிற டி-ஷர்ட்டும் அணிந்திருந்த அவர், மனைவி காலணியை அணிந்து முடிக்கும் வரை வீட்டின் முன்புறத்தில் அமர்ந்திருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/58fc975b-890f-4d93-80f7-1914540cc413/26-6a5cee842ed6f.webp' /></p><p> </p><p>

அப்போது பாதுகாப்பு அதிகாரியிடம் இருந்த நவீன ரக ரிவால்வரை பார்த்து அதை பரிசோதிக்க விரும்பியதாகவும், அதில் குண்டுகள் இல்லையா என்று நகைச்சுவையாகக் கேட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
இதையடுத்து பாதுகாப்பு அதிகாரி துப்பாக்கியின் மகசினை அகற்றி அவரிடம் கொடுத்ததாகவும், பின்னர் தண்ணீர் எடுக்க சமையலறைக்குச் சென்றபோது திடீரென ஒரு துப்பாக்கிச் சத்தம் கேட்டதாகவும் கூறப்படுகிறது.</p><p></p><h2>உடற்கூறு பரிசோதனை</h2><p> 

மார்பில் குண்டு பாய்ந்த நிலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்த முன்னாள் பொலிஸ் மா அதிபர் உடனடியாக முல்லேரியா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாலும், அவர் ஏற்கனவே உயிரிழந்திருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
</p><p>
சம்பவம் தொடர்பான உடற்கூறு பரிசோதனை அதே நாளில் நடத்தப்பட்டு, மேலதிக ஆய்வுகளுக்காக மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9f967121-564f-4292-bbac-18ddf1d1e9ba/26-6a5cee84d834e.webp' /></p><p> </p><p>

எதிர்வரும் புதன்கிழமை நடைபெறவுள்ள நீதிமன்ற விசாரணையில் மரணத்திற்கான துல்லியமான காரணம் அடங்கிய நீதிமருத்துவ அறிக்கை சமர்ப்பிக்கப்பட உள்ளது.
</p><p>
ஆரம்பத்தில் இது பாதுகாப்பு அதிகாரியின் துப்பாக்கியைப் பயன்படுத்தி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்திருந்தாலும், பின்னர் வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில் அந்தக் குறிப்பு நீக்கப்பட்டு, துப்பாக்கிச் சூட்டுக் காயத்தால் உயிரிழந்தார் என்று மட்டும் குறிப்பிடப்பட்டது.</p><p>

தற்போது இரண்டு பொலிஸ் விசாரணைக் குழுக்கள் இந்த மரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றன. 

வீட்டின் சிசிடிவி காட்சிகளும் ஆய்வு செய்யப்பட்டுள்ளன.</p><p></p><p>ஆரம்பகட்ட விசாரணைகளில், வீட்டுக்குள் யாரும் வலுக்கட்டாயமாக நுழைந்ததற்கான சான்றுகள் எதுவும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீதிமருத்துவ நிபுணர்களின் ஆரம்பக் கணிப்பின்படி, பொதுவாக துப்பாக்கி மூலம் நிகழும் தற்கொலைச் சம்பவங்களில் தலையில் காயம் ஏற்படுவது வழக்கம்.</p><h2>&nbsp;சந்தன விக்ரமரத்னவின் மரணம்</h2><p>ஆனால் இச்சம்பவத்தில் மார்பில் குண்டு பாய்ந்திருப்பது விசாரணையில் முக்கிய கவனத்துக்கு வந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8cc2e745-a336-48c7-a9b9-5449ac559aa9/26-6a5cee8589206.webp' /></p><p>

 எனினும் இதன் அடிப்படையில் மட்டும் முடிவுக்கு வர முடியாது என்றும், முழுமையான நீதிமருத்துவ மற்றும் பாலிஸ்டிக் (Ballistic) ஆய்வு அறிக்கைகளின் பின்னரே இறுதி முடிவு எடுக்க முடியும் என்றும் நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.</p><p>
</p><p>
இதற்கிடையில், சந்தன விக்ரமரத்ன தவறான முடிவெடுத்துகொண்டார் என்ற கருத்தை அவரது குடும்பத்தினர் திட்டவட்டமாக மறுத்துள்ளனர்.

 மரணத்திற்கு முந்தைய நாட்களிலும் அவர் மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் இருந்ததாக அவர்கள் கூறுகின்றனர்.</p><p>கண் பரிசோதனைக்கான நேரத்தை முன்பதிவு செய்திருந்ததோடு, நண்பரைச் சந்திக்கவும், ஜூலை 31ஆம் திகதி நடைபெறவிருந்த பிறந்தநாள் விழாவில் பங்கேற்கவும் திட்டமிட்டிருந்தார்.</p><p>சம்பவம் நிகழ்வதற்கு சில நிமிடங்களுக்கு முன்புகூட தனது நண்பர்களுக்கு வாட்ஸ்அப் மூலம் "காலை வணக்கம்" செய்தி அனுப்பியிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.</p><p>
மேலும், தனது இளைய மகனின் குடும்பப் பிரச்சினையால் அவர் மனஅழுத்தத்தில் இருந்ததாக சமூக ஊடகங்களில் பரவி வரும் தகவல்களையும் குடும்பத்தினர் மறுத்துள்ளனர்.</p><p> 

மகன் கைது செய்யப்பட்டதாக அல்லது விளக்கமறியலில் வைக்கப்பட்டதாக வெளியான தகவல்களும் முற்றிலும் பொய்யானவை என அவர்கள் தெரிவித்துள்ளனர்.</p><h2>அதிர்ச்சியூட்டும் தகவல்கள்</h2><p>

ஏழு மாத வயதுடைய பேத்தியை மிகவும் நேசித்த அவர், அவளை பள்ளிக்குச் செல்லும் நாளைக் காண ஆவலுடன் இருந்ததாகவும், கலாச்சாரம் மற்றும் பாரம்பரிய நம்பிக்கைகள் குறித்த நூல் ஒன்றை எழுதி வந்ததாகவும், அதன் வரைவை நண்பர்களிடம் கருத்துக்காக அனுப்பியிருந்ததாகவும் குடும்பத்தினர் கூறுகின்றனர்.</p><p>

இதனிடையே, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளில் அவர் அளித்த சாட்சியத்துடன் இந்த மரணத்தை தொடர்புபடுத்தி ஊகங்கள் வெளியானாலும், மூத்த பொலிஸ் அதிகாரிகள் அவற்றை நிராகரித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bc591b30-a6c5-4743-8354-9dbfba953e55/26-6a5cee865e783.webp' /></p><p>அந்த வாக்குமூலம் ஏற்கனவே நீதிமன்றத்தில் பதிவாகியிருந்ததுடன், அதில் புதிய அல்லது அதிர்ச்சியூட்டும் தகவல்கள் எதுவும் இல்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.</p><p>
சந்தன விக்ரமரத்ன 2020 நவம்பர் 25ஆம் திகதி இலங்கையின் 35ஆவது பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டார். மூன்று முறை சேவை நீட்டிப்பு பெற்ற அவர், 2023ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார்.</p><p>

2019ஆம் ஆண்டு முதல் நீண்டகாலம் பதில் பொலிஸ் மா அதிபராகவும் பணியாற்றிய அவர், இலங்கை வரலாற்றில் மிக நீண்ட காலம் பதில் பொலிஸ் மா அதிபர் பதவியை வகித்த அதிகாரியாகவும் பதிவாகியுள்ளார்.</p>]]></content>
            <updated>2026-07-19T16:06:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[அல்பர்டா பிரிவினை வாக்கெடுப்பை முன்னிட்டு கனடாவை ஒன்றுபடுத்தும் பிரசாரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/conservatives-appoint-referendum-lead-as-poilievre-1784469919"></link>
            <id>https://canadamirror.com/article/conservatives-appoint-referendum-lead-as-poilievre-1784469919</id>
            <summary type="text">&amp;nbsp;கனடாவின் அல்பர்டா மாகாணத்தில் நடைபெறவுள்ள பிரிவினை தொடர்பான வாக்கெடுப்பை முன்னிட்டு, நாட்டின் ஒற்றுமையை வலுப்படுத்தும் நோக்கில் கன்சர்வேட்டிவ் க...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கனடாவின் அல்பர்டா மாகாணத்தில் நடைபெறவுள்ள பிரிவினை தொடர்பான வாக்கெடுப்பை முன்னிட்டு, நாட்டின் ஒற்றுமையை வலுப்படுத்தும் நோக்கில் கன்சர்வேட்டிவ் கட்சித் தலைவர் பியர் பொய்லிவ்ரே புதிய நடவடிக்கையை அறிவித்துள்ளார்.
</p><p>அதன்படி, அல்பர்டா தொடர்பான வாக்கெடுப்பு பிரச்சாரத்தை ஒருங்கிணைக்கும் "Referendum Lead for Alberta" என்ற புதிய பொறுப்புக்கு பார்க்லாண்ட் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் டேன் லொய்டை, அவர் நியமித்துள்ளார்.
</p><p>ஒன்றுபட்ட கனடாவுக்குள் வலிமையான அல்பர்டாவை உருவாக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியை டேன் லொய்ட் முன்னெடுக்க வேண்டுமென பொய்லிவ்ரே தெரிவித்துள்ளார்.
</p><p>அல்பர்டா மக்களின் கருத்துகளையும் கவலைகளையும் நேரடியாகக் கேட்டு, அவர்களின் பிரச்சினைகளுக்கு நம்பிக்கையூட்டும் தீர்வுகளை முன்வைத்து, கனடாவின் ஒற்றுமையை பாதுகாக்கும் பணியில் டேன் லொய்ட், அல்பர்டா கன்சர்வேட்டிவ் உறுப்பினர்கள் மற்றும் கட்சித் தலைமையுடன் இணைந்து செயல்படுவார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>அல்பர்டா மக்களின் அதிருப்திக்கு நியாயமான காரணங்கள் இருப்பதாகக் கூறிய பொய்லிவ்ரே, வீடு வாங்க முடியாத நிலை, வாழ்க்கைச் செலவின் உயர்வு, குடும்பத்தை நடத்தும் சிரமம் போன்ற காரணங்களால் இளைஞர்கள் கனடாவின் எதிர்காலத்தின் மீது நம்பிக்கை இழந்து வருவதாக தெரிவித்தார்.
</p><p>மேலும், லிபரல் அரசின் கொள்கைகள் அல்பர்டாவின் எரிசக்தித் துறையை பாதித்ததுடன், முக்கிய எண்ணெய் குழாய் திட்டங்களையும் தடுத்ததாக அவர் குற்றம்சாட்டினார்.
</p><p>"அல்பர்டா மக்களை கண்டிப்பது எங்கள் நோக்கமல்ல; அவர்களின் குரலைக் கேட்பதே எங்கள் கடமை" என பொய்லிவ்ரே வலியுறுத்தினார்.
</p><p>அல்பர்டா மாகாணம் கனடாவிலிருந்து பிரிய வேண்டுமா என்பது குறித்து கட்டாய வாக்கெடுப்பை நடத்த வேண்டுமா என்ற கேள்வி தொடர்பாக, வரும் அக்டோபர் மாதம் மக்கள் வாக்கெடுப்பில் பங்கேற்க உள்ளனர்.</p><p>
இதற்கு முன்னரும், அல்பர்டாவில் பிரிவினை ஆதரவை எதிர்த்து கோடை காலம் முழுவதும் பிரசாரம் மேற்கொள்வதாக பொய்லிவ்ரே அறிவித்திருந்தார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-19T16:00:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரூ.153 கோடி லாட்டரி வெற்றி.., ஒரே மணி நேரத்தில் ஏழையான பெண்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/wins-153-crore-lottery-tragically-becomes-poor-1784445991"></link>
            <id>https://manithan.com/article/wins-153-crore-lottery-tragically-becomes-poor-1784445991</id>
            <summary type="text">இங்கிலாந்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு ரூ.153 கோடி லாட்டரி பரிசு கிடைத்தும், அதை பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

லாட்டரி வென்ற பெண் 

இங்கிலாந்தின்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இங்கிலாந்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு ரூ.153 கோடி லாட்டரி பரிசு கிடைத்தும், அதை பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.</p><h2>

லாட்டரி வென்ற பெண் </h2><p>

இங்கிலாந்தின் தெற்கு வேல்ஸில் வசிக்கும் கீத் மெயின் என்பவர் கடந்த 20 ஆண்டுகளாக லாட்டரி சீட்டுகளை வாங்கி வந்துள்ளார்.</p><p> 

ஜூன் 6ஆம் தேதி நடைபெற்ற லாட்டரி குலுக்கலில், கீத் வாங்கிய சீட்டுக்கு 12 மில்லியன் பவுண்டுகள் இந்திய மதிப்பில் சுமார் ரூ.153 கோடி ஆகும்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/eb4e8150-bee1-4b67-b6fe-6e3ddeb55fa5/26-6a5c7c293bf5c.webp' /></p><p>லாட்டரியில் வெற்றி பெற்றதை அறிந்த கீத், உடனடியாக தனது தாயிடம் தெரிவித்தார். </p><p>

கீத்தின் தாய், அந்த லாட்டரி சீட்டை இயந்திரத்தில் ஸ்கேன் செய்து பார்த்தபோது எந்தவிதமான எச்சரிக்கை ஒலியும் வரவில்லை.&nbsp;</p><h2>ஏழையான பெண் </h2><p>

அந்த சீட்டு வெற்றி பெற்றதாக தெரியவில்லை என நினைத்து, அதை லாட்டரி மையத்தில் இருந்த குப்பைத்தொட்டியில் வீசிவிட்டார்.</p><p>

இதையடுத்து, கீத் உடனடியாக லாட்டரி நிறுவனத்தை தொடர்பு கொண்டு, வெற்றி பெற்ற சீட்டு தங்களிடம் இருந்ததாக தெரிவித்தார்.</p><p>

இதனைத்தொடர்ந்து அந்த லாட்டரி சீட்டு கிடைக்காததால் ரூ.153 கோடி பரிசை வென்றும், அதை பெற முடியாமல் கீத் தவித்து வருகிறார்.
</p><p>
இந்நிலையில், லாட்டரி நிறுவனம் இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தி வருகிறது. </p><p>

இதற்காக 30 நாட்கள் காலக்கெடு வழங்கப்பட்டதை தொடர்ந்து கீத் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-19T16:00:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜன நாயகன் படம் வெளியாகும் நாளில் அரசு விடுமுறையா?- அதிமுக விமர்சனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/a-gov-holiday-for-the-release-of-jana-nayagan-admk-1784453888"></link>
            <id>https://manithan.com/article/a-gov-holiday-for-the-release-of-jana-nayagan-admk-1784453888</id>
            <summary type="text">மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், தவெக அரசு மற்றும் முதல்வர் விஜய் குறித்து விமர்சனம் செய்தார்.&amp;nbsp;அவர...</summary>
            <content type="html"><![CDATA[<p>மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், தவெக அரசு மற்றும் முதல்வர் விஜய் குறித்து விமர்சனம் செய்தார்.&nbsp;</p><h2>அவர் கூறியதாவது..,
</h2><p>
தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்ட பல திட்டங்கள் செயல்படுத்த முடியாதவை என்று அவர் குற்றம்சாட்டினார்.
</p><p>
நிதி ஆதாரங்களை கணக்கில் கொள்ளாமல்,காணல் நீரைப் போன்ற திட்டங்களை தேர்தல் அறிக்கையில் விஜய் அறிவித்திருந்தார்.</p><p>மேலும், வீடுகளுக்கு மாதம் 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என தேர்தல் அறிக்கையில் அறிவித்துவிட்டு, தற்போது 500 யூனிட் வரை பயன்படுத்தும் நுகர்வோருக்கு மட்டுமே 200 யூனிட் இலவச மின்சாரம் என அறிவித்திருப்பது கண்துடைப்பு என்று விமர்சித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fd2fdac4-4ba4-41cd-84e9-b5836a1f39f7/26-6a5c9b02663b2.webp' />
</p><p>
அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு தாய்மாமன் திட்டத்தின் கீழ் தங்க மோதிரம் வழங்கும் திட்டத்தையும் அவர் கேள்வி எழுப்பினார்.</p><p>இந்தத் திட்டத்தால் அரசுக்கு அதிக செலவு ஏற்படும் என்றும், மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு இது எந்த அளவுக்கு உதவும் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.&nbsp;&nbsp;</p><p>மேலும், ஜன நாயகன் திரைப்பட வெளியீட்டு விழாவை திருவிழா போல கொண்டாட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p> 

அடுத்ததாக, படம் வெளியாகும் நாளில் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்று ஆர்.பி. உதயகுமார் விமர்சித்தார்.</p>]]></content>
            <updated>2026-07-19T15:59:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் நாளை முதல் அதிகரிக்கும் முட்டையின் விலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/egg-prices-to-increase-in-sri-lanka-from-tomorrow-1784476474"></link>
            <id>https://jvpnews.com/article/egg-prices-to-increase-in-sri-lanka-from-tomorrow-1784476474</id>
            <summary type="text">வெள்ளை முட்டையொன்றை 41 ரூபாவாகவும், சிவப்பு முட்டையொன்றை 42 ரூபாவாகவும் நாளை (20) முதல் அதிகரிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை முட்டை உற்பத்திய...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">வெள்ளை முட்டையொன்றை 41 ரூபாவாகவும், சிவப்பு முட்டையொன்றை 42 ரூபாவாகவும் நாளை (20) முதல் அதிகரிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. </p><p style="text-align: justify; ">

இன்று (19) குளியாப்பிட்டியவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அச்சங்கத்தின் தலைவர் சரத் ரத்நாயக்க இதனைத் தெரிவித்தார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1b854cdd-b356-4c66-82af-836ee1aaf412/26-6a5cf33bb4fe6.webp' /></p><h2 style="text-align: justify; ">முட்டை விலை அதிகரிப்பு</h2><p style="text-align: justify; "> 

முட்டை விலை அதிகரிப்புக்கு அரசாங்கமும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுமே நேரடிப் பொறுப்பாளிகள் எனவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். </p><p style="text-align: justify; ">

சோளம் இறக்குமதி முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளதுடன், உள்நாட்டு சோள உற்பத்தி முட்டைத் தொழிலுக்குத் தேவையான அளவிற்கு போதுமானதாக இல்லை என சரத் ரத்நாயக்க தெரிவித்தார். </p><p style="text-align: justify; ">

சோளத்திற்குப் பதிலாக அரிசி உள்ளிட்ட பல்வேறு மாற்றீடுகளைப் பயன்படுத்துவதால் விலங்குகளின் ஆரோக்கியம் மற்றும் சமிபாட்டுத் தொகுதி பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் முட்டை உற்பத்தி 20 முதல் 30 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

அத்துடன், சில மோசடி வியாபாரிகள் விலங்கு உணவுகளில் பல்வேறு இரசாயனங்கள் மற்றும் மருந்துகளைக் கலப்பதன் காரணமாக பெருமளவிலான கோழிகள் உயிரிழந்துள்ளதாகவும் சங்கத்தின் தலைவர் குற்றம் சுமத்தினார். </p><p style="text-align: justify; ">

இந்த நிலைமையினால் விவசாயிகள் பெரும் நஷ்டத்தை எதிர்நோக்கியுள்ளதுடன், தினசரி முட்டை உற்பத்தியும் கணிசமாகக் குறைந்துள்ளதாக அவர் கூறினார். </p><p style="text-align: justify; ">

சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த பிரச்சினைகள் குறித்து அறிந்திருந்த போதிலும், இதற்கான முறையான வேலைத்திட்டம் எதுவும் நடைமுறைப்படுத்தப்படுவதாகத் தெரியவில்லை எனவும் சரத் ரத்நாயக்க தெரிவித்தார்.</p>]]></content>
            <updated>2026-07-19T15:54:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[சாட்சிகளை அகற்றும் முயற்சி இது..! விக்ரமரத்னவின் மரணம் குறித்து இடதுசாரி மையம் பகிரங்க குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/this-is-an-attempt-to-eliminate-witnesses-1784475769"></link>
            <id>https://tamilwin.com/article/this-is-an-attempt-to-eliminate-witnesses-1784475769</id>
            <summary type="text">முன்னாள் பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் மரணம் சாதாரணமானதாகத்
தெரியவில்லை என்றும், அதன் பின்னணியில் மர்மம் இருப்பதாகத் தமக்குத் தீவிர
சந்தேகம்...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் மரணம் சாதாரணமானதாகத்
தெரியவில்லை என்றும், அதன் பின்னணியில் மர்மம் இருப்பதாகத் தமக்குத் தீவிர
சந்தேகம் எழுந்துள்ளது என்று இடதுசாரி மையத்தின் அழைப்பாளர் சமீர பெரேரா
தெரிவித்தார்.
</p><p>
கொழும்பில் இன்று(19) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர்
மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.</p><p></p><h2>டி.என்.ஏ. பரிசோதனை</h2><p>
இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது,</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5c762d7a-5818-4d0f-a682-84bfbc2af531/26-6a5cf2387e370.webp' /></p><p>
"உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான பல தீர்க்கமான சாட்சியங்களை
முன்னாள் பொலிஸ்மா அதிபர் வழங்கியிருந்தார். </p><p>குறிப்பாக, 'சாரா ஜாஸ்மின்'
என்பவரின் டி.என்.ஏ. பரிசோதனையை மீண்டும் மேற்கொள்ள வேண்டாம் எனத் தமக்குக்
கடுமையான அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டன என்று அவர் தெரிவித்திருந்தார்.
</p><p>இத்தகைய பாரதூரமான விடயங்களை வெளிப்படுத்திய சில நாள்களிலேயே அவர்
உயிரிழந்திருக்கின்றமை பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் தருகின்றது.

கடந்த காலங்களிலும் சாட்சியங்களை வழங்கிய நபர்கள் தற்கொலை செய்துகொண்ட
சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.</p><p></p><h2>&nbsp;சி.டி. விக்ரமரத்னவின் மரணம்&nbsp;</h2><p> இந்த வரிசையில் இவருடைய மரணத்தையும் ஒரு பாரதூரமான
பிரச்சினையாகவே பார்க்க வேண்டியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cb21d31d-9246-4215-820f-f556874d9a9b/26-6a5cf2394fd42.webp' /></p><p>
</p><p>
இந்த நாட்டின் நிழல் அரசின் ஆதிக்கம் இன்னும் தொடர்கின்றது என்பதையும்,
சாட்சிகளைத் திட்டமிட்டு அகற்றும் வேலைத்திட்டம் ஒன்று
முன்னெடுக்கப்படுகின்றதோ என்ற சந்தேகத்தையும் இது வலுப்படுத்துகின்றது.

எனவே, இந்த மரணம் குறித்து மிக விரிவான மற்றும் முறையான விசாரணைகள்
முன்னெடுக்கப்பட வேண்டும்.</p><p> மறுபுறம், ஒரு குறிப்பிட்ட குடும்பத்துடன்
தொடர்புடைய ஊழல் நிறைந்த இரு ஊடக நிறுவனங்கள், இந்த மரணத்தை அவசரமாகத் தற்கொலை
எனச் சித்தரிக்க முயற்சித்தன.</p><p> அவ்வாறான ஊடகங்களின் இத்தகைய செயற்பாடே, எமது
சந்தேகத்தை மேலும் உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-19T15:50:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுரேஷை திருப்பி அடித்த மதி.. அழகே அழகு அடுத்த வார பரபரப்பு ப்ரோமோ]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/azhagae-azhagu-20th-to-24th-july-2026-promo-1784475831"></link>
            <id>https://cineulagam.com/article/azhagae-azhagu-20th-to-24th-july-2026-promo-1784475831</id>
            <summary type="text">விஜய் டிவியில் மிகவும் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது அழகே அழகு சீரியல். அதில் சுரேஷ் vs மதி பிரச்சனை தற்போது உச்சத்தை தொட்டு இருக்கிறது.நாங்கள் பெயரள...</summary>
            <content type="html"><![CDATA[<p>விஜய் டிவியில் மிகவும் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது அழகே அழகு சீரியல். அதில் சுரேஷ் vs மதி பிரச்சனை தற்போது உச்சத்தை தொட்டு இருக்கிறது.</p><p>நாங்கள் பெயரளவுக்கு தான் கணவன் மனைவி, ஆனால் வாழவே ஆரம்பிக்கவில்லை என அந்தரங்க விஷயத்தை குடும்பத்தினர் முன்னிலையில் சுரேஷ் கூறுகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a3710a4b-8609-4203-8b0c-d0af5567d546/26-6a5cf0b919b67.webp' /></p><p>
</p><h2>திருப்பி அடித்த மதி
</h2><p>அதன் பின் சண்டை முற்றி மதியை சுரேஷ் கன்னத்தில் அறைய, அவர் திருப்பிஅறைந்துவிடுகிறார். அதனால் மதியின் பெற்றோரை வர வைத்து சுரேஷின் அப்பா பேசுகிறார்.
</p><p>"அப்போ மாப்பிள்ளை அடிச்சது தப்பு இல்லையா..?" என கேட்டு நோஸ் கட் கொடுக்கிறார் மதியின் அப்பா.

பரபரப்பான ப்ரோமோவை பாருங்க.&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/eERZr0uCdvA" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-07-19T15:44:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடைசி ஓவரில் திக் திக்..த்ரில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றிய வங்காளதேசம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/bangladesh-win-t20-series-vs-zimbabwe-2026-1784475445"></link>
            <id>https://news.lankasri.com/article/bangladesh-win-t20-series-vs-zimbabwe-2026-1784475445</id>
            <summary type="text">ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடரை வங்காளதேச அணி கைப்பற்றியது. டியோன் மையர்ஸ் 73&amp;nbsp;ஓட்டங்கள் 

வங்காளதேசம் மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையில...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடரை வங்காளதேச அணி கைப்பற்றியது. </p><h2>டியோன் மையர்ஸ் 73&nbsp;ஓட்டங்கள் </h2><p>

வங்காளதேசம் மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் கடைசி டி20 போட்டி புலவாயோவில் நடந்தது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/91502ed5-78cc-45ee-9dfe-137d7e802990/26-6a5ceffb68360.webp' />&nbsp;</p><p></p><p>

முதலில் ஆடிய ஜிம்பாப்வே அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 143 ஓட்டங்கள் எடுத்தது. 

டியோன் மையர்ஸ் 73 (53) ஓட்டங்களும், பிரையன் பென்னெட் 47 (38) ஓட்டங்களும் விளாசினர். சைஃப்புதின் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.</p><p>

பின்னர் ஆடிய வங்காளதேச அணியில் தன்ஸித் ஹசன் தமிம் நிலைத்து நின்று ஆடி அரைசதம் அடித்தார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/08a6547e-a65d-4778-974c-181de7b62522/26-6a5cf0d66796e.webp' /></p><h2>

தொடரை வென்ற&nbsp;வங்காளதேச அணி</h2><p>கடைசி ஓவரில் 5 ஓட்டங்கள் தேவைப்பட, பிராட் எவன்ஸ் அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

இதனால் ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக் கொண்டது. </p><p>அப்போது களமிறங்கிய மஹெதி ஹசன் பவுண்டரி அடிக்க, வங்காளதேச அணி வெற்றி பெற்று தொடரை வென்றது.</p><p>

58 பந்துகளில் 4 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரியுடன் 66 ஓட்டங்கள் விளாசிய தன்ஸித் ஹசன் (Tanzid Hasan) ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதுகளை வென்றார்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/579120a2-bddb-4844-8a92-81268f02c5c0/26-6a5ceffa824f7.webp' />&nbsp;</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Bangladesh clinch the T20I series 2-1 against Zimbabwe with a fantastic team performance. A well-deserved series victory built on determination, teamwork, and resilience. <a href="https://t.co/upWbYHCzvq">pic.twitter.com/upWbYHCzvq</a></p>&mdash; Bangladesh Cricket (@BCBtigers) <a href="https://x.com/BCBtigers/status/2078847560467521677?ref_src=twsrc%5Etfw">July 19, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-19T15:42:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவின் அரச பாதுகாப்பு நிறுவனங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/spy-watchdog-do-more-to-avoid-canadian-1784471733"></link>
            <id>https://canadamirror.com/article/spy-watchdog-do-more-to-avoid-canadian-1784471733</id>
            <summary type="text">&amp;nbsp;வெளிநாடுகளுடன் தகவல்களைப் பகிரும் போது, அந்த தகவல்கள் சித்திரவதை அல்லது மனித உரிமை மீறல்களுக்கு வழிவகுக்காத வகையில் கனடாவின் சில மத்திய அரச நிறு...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;வெளிநாடுகளுடன் தகவல்களைப் பகிரும் போது, அந்த தகவல்கள் சித்திரவதை அல்லது மனித உரிமை மீறல்களுக்கு வழிவகுக்காத வகையில் கனடாவின் சில மத்திய அரச நிறுவனங்கள் மேலும் கவனமாக செயல்பட வேண்டும் என புதிய பாதுகாப்பு கண்காணிப்பு அறிக்கை எச்சரித்துள்ளது.
</p><p>தேசிய பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை மறுஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ள இந்த அறிக்கையில், சர்ச்சைக்குரிய தகவல் பரிமாற்றங்களை கையாளும் சட்ட நடைமுறைகளை வலுப்படுத்த பல பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
</p><p>வெளிநாட்டு அமைப்புகளால் ஏற்படும் தவறான நடத்தைகளில் பங்காளியாக இருப்பதைத் தவிர்க்கும் சட்டம் வெளிநாட்டு அமைப்புகளுடன் தகவல்களை பகிர்வதை அல்லது அவர்களிடமிருந்து பெறப்படும் தகவல்களை பயன்படுத்துவதை தடை செய்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1c6c19e2-a857-4895-8a9b-0a7969699d3a/26-6a5ce0b7c4bda.webp' /></p><p> 
குறிப்பாக, அந்த நடவடிக்கை காரணமாக ஒருவர் வெளிநாட்டில் தடுத்து வைக்கப்பட்ட நிலையில் சித்திரவதை அல்லது மனிதாபிமானமற்ற நடத்தைக்கு உள்ளாகும் கணிசமான அபாயம் இருந்தால் அது அனுமதிக்கப்படாது.
</p><p>எனினும், அந்த அபாயங்களை மதிப்பீடு செய்து, அவற்றை குறைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டால் மட்டுமே தகவல் பகிர்வு அனுமதிக்கப்படலாம். இது அபாயத்தை குறைக்கும் நடைமுறை என அழைக்கப்படுகிறது.
</p><p>மேலும், சித்திரவதை மற்றும் மனிதாபிமானமற்ற தண்டனைகளை ஒழிப்பதற்கான சர்வதேச மனித உரிமை கடமைகளுக்கு ஏற்ப இந்த கடுமையான விதிமுறை அமைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
</p><p>வெளிநாட்டு தகவல் பகிர்வு தொடர்பான முடிவுகளில் இந்த சட்டத் தேவைகளை எவ்வாறு பரிசீலித்தனர் என்பதற்கான முழுமையான பதிவுகளை மத்திய அரச நிறுவனங்கள் பராமரிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-19T15:38:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தோனேசியாவில் படகு விபத்து: தேடும் பணிகள் தீவிரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/boat-accident-in-indonesia-search-operations-1784474760"></link>
            <id>https://tamilwin.com/article/boat-accident-in-indonesia-search-operations-1784474760</id>
            <summary type="text">இந்தோனேசியாவின் தெற்கு சுலவேசி கடற்கரைக்கு அப்பால் பயணிகள் படகு ஒன்று
கடலில் மூழ்கியதில், மூன்று நாட்களாக கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த 7 வயது
சிற...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தோனேசியாவின் தெற்கு சுலவேசி கடற்கரைக்கு அப்பால் பயணிகள் படகு ஒன்று
கடலில் மூழ்கியதில், மூன்று நாட்களாக கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த 7 வயது
சிறுமி உட்பட 5 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.</p><p>

மேலும், காணாமல் போன 20-க்கும் மேற்பட்டோரைத் தேடும் பணி தொடர்ந்து தீவிரமாக
நடைபெற்று வருகிறது.</p><p>

சுமார் 78 பயணிகள் மற்றும் மாலுமிகளுடன் 'கே.எம். நுருல் சல்சா' என்ற படகு
கடந்த புதன்கிழமை புறப்பட்டுச் சென்றபோது, திடீரென இன்ஜின் பழுதடைந்து கடலில்
மூழ்கி விபத்துக்குள்ளானது.</p><p></p><h2>விபத்து</h2><p>
</p><p>
விபத்து நேரிட்டபோது, படகில் இருந்தவர்கள் தங்களுக்குக் கிடைத்த மீன்பிடி
வலைகள், கார்க் துண்டுகள் மற்றும் கேன்களைக் கயிறுகளால் ஒன்றாகக் கட்டி, அதன்
மீது ஏறி உயிர் பிழைத்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dd194162-e0c6-4786-a08b-3a32df8ed40b/26-6a5ceec55668c.webp' /></p><p>&nbsp;மாலை இருள் சூழ்வதற்கு முன்னதாக, கடலில் மிதந்து கொண்டிருந்த ஒரு
ஆண், மூன்று பெண்கள் மற்றும் ஒரு சிறுமி ஆகிய 5 பேரையும் உள்ளூர் மீன்பிடி
படகு ஒன்று கண்டறிந்து மீட்டது.
</p><p>
பலத்த காற்றின் காரணமாக தாங்கள் மற்ற குழுவினரிடமிருந்து பிரிந்துவிட்டதாக
அவர்கள் மீட்புக் குழுவினரிடம் தெரிவித்துள்ளனர்.</p><p></p><h2>தேடும் பணி</h2><p>

இந்த விபத்தில் இதுவரை 47 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும், ஒருவர் நீரில் மூழ்கி
உயிரிழந்துள்ளதாகவும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/034bb6c1-66b5-4252-aefc-a44ebef4e1a9/26-6a5ceec6063e1.webp' /></p><p>

கடலில் மாயமான எஞ்சியவர்களைத் தேடும் பணியில் ஐந்து பெரிய கப்பல்கள், ஒரு
உளவு விமானம் மற்றும் ஒரு ஹெலிகொப்டர் ஆகியவை ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
</p><p>
17,000-க்கும் மேற்பட்ட தீவுகளைக் கொண்ட இந்தோனேசியாவில் படகு போக்குவரத்து
பொதுவான ஒன்றாக இருந்தாலும், போதிய பாதுகாப்பு குறைபாடுகள் மற்றும் அளவுக்கு
அதிகமான பயணிகளை ஏற்றுவது போன்ற காரணங்களால் இதுபோன்ற விபத்துகள் அடிக்கடி
நிகழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-19T15:38:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[சொகுசு பேருந்தில் தீப்பரவல் ; தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் சம்பவம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/luxury-bus-catches-fire-1784475289"></link>
            <id>https://jvpnews.com/article/luxury-bus-catches-fire-1784475289</id>
            <summary type="text">தெற்கு அதிவேக வீதியில் பயணித்த பேருந்து ஒன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. 

வெலிப்பன்ன பகுதியில் வைத்து இன்று (19) மாலை இந்த தீப்பரவல் ஏற்பட்டுள்ளது....</summary>
            <content type="html"><![CDATA[<p>தெற்கு அதிவேக வீதியில் பயணித்த பேருந்து ஒன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. </p><p>

வெலிப்பன்ன பகுதியில் வைத்து இன்று (19) மாலை இந்த தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.</p><p><br></p><p> 

குறித்த பேருந்து தீ விபத்துக்குள்ளான சந்தர்ப்பத்தில் 20 க்கும் அதிகமானோர் அதில் பயணித்துள்ளதாக தெரியவந்துள்ளது. </p><p>

தற்சமயம் பேருந்தில் ஏற்பட்ட தீப்பரவலை கட்டுப்படுத்துவதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p>]]></content>
            <updated>2026-07-19T15:34:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரான்மீது அதிகரிக்கப்போகும் தாக்குதல்கள் : இஸ்ரேலுக்கு வந்து குவியப்போகும் அமெரிக்க விமானங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/israel-to-receive-more-us-refuelling-planes-1784468877"></link>
            <id>https://ibctamil.com/article/israel-to-receive-more-us-refuelling-planes-1784468877</id>
            <summary type="text">ஈரான் மீதான தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், இஸ்ரேலுக்கு மேலும் பல அமெரிக்க எரிபொருள் நிரப்பும் விமானங்கள் வரவிருக்கின்றன என இஸ்ரேலிய அதிகாரிகள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரான் மீதான தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், இஸ்ரேலுக்கு மேலும் பல அமெரிக்க எரிபொருள் நிரப்பும் விமானங்கள் வரவிருக்கின்றன என இஸ்ரேலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
</p><p>
கடந்த ஒரு வாரமாக அமெரிக்காவும் ஈரானும் மேற்கொண்டுவரும் தாக்குதல்கள் அதிகரித்துள்ள நிலையில், மேலும் பல அமெரிக்க எரிபொருள் நிரப்பும் விமானங்களைப் பெற இஸ்ரேல் தயாராகி வருவதாக ஒரு இஸ்ரேலிய இராணுவ அதிகாரி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.</p><p>ஒரு மாதத்திற்கு முன்பு கையெழுத்திடப்பட்ட இடைக்கால போர்நிறுத்த ஒப்பந்தம் முறிந்ததிலிருந்து, அமெரிக்காவும் ஈரானும் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளன. இது மீண்டும் ஒரு முழுமையான போர் மூளும் சாத்தியத்தை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்திய அமெரிக்கத் தாக்குதல்களில் இஸ்ரேல் பங்கேற்கவில்லை.</p><h2>அமெரிக்கா எடுத்துள்ள முடிவு</h2><p>"பிராந்தியத்தில் தனது படை நிலையைச் சரிசெய்யவும்", "இஸ்ரேலில் ஏற்கனவே நிலைநிறுத்தப்பட்டுள்ள வான்வழி எரிபொருள் நிரப்பும் விமானங்களின் எண்ணிக்கையை கூடுதல் எரிபொருள் நிரப்பும் விமானங்களைக் கொண்டு வலுப்படுத்தவும்" அமெரிக்கா முடிவு செய்துள்ளதாக அந்த இஸ்ரேலிய அதிகாரி கூறினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/99fddb2a-ba4e-4a8d-af4c-35356f9bf343/26-6a5cd977471e6.webp' /></p><p>&nbsp;டசின் கணக்கான அமெரிக்க எரிபொருள் நிரப்பும் விமானங்கள் இஸ்ரேலுக்கு வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுவதாக மற்றொரு மூத்த இஸ்ரேலிய அதிகாரி தெரிவித்தார்.</p><p></p><h2>&nbsp;இஸ்ரேலில் தரித்துள்ள டசின் கணக்கான விமானங்கள்</h2><p>ஜெருசலேமில் உள்ள அமெரிக்கத் தூதரகம் உடனடியாகக் கருத்து தெரிவிக்கவில்லை. பெப்ரவரி 28 அன்று ஈரானுக்கு எதிரான அமெரிக்க மற்றும் இஸ்ரேலியத் தாக்குதல்களுடன் மோதல் தொடங்கியதிலிருந்து, அமெரிக்கா டசின் கணக்கான எரிபொருள் நிரப்பும் விமானங்களை இஸ்ரேலில் நிறுத்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/270aa44a-0f9d-4d5c-a020-9cdee4996bf3/26-6a5cd976944c6.webp' /></p><p>மூன்று அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய அதிகாரிகளை மேற்கோள் காட்டி, ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளை விரிவுபடுத்தும் சாத்தியத்திற்கு முன்னதாக, மேலும் டசின் கணக்கான எரிபொருள் நிரப்பும் விமானங்களை இஸ்ரேலுக்கு அனுப்புவதாக ட்ரம்ப் நிர்வாகம் அறிவித்ததாக ஆக்சியோஸ் வெள்ளிக்கிழமை செய்தி வெளியிட்டது.</p><p>இந்த விமானங்களின் வருகையால் பென் குரியன் (Ben Gurion) சர்வதேச விமான நிலையத்தின் சிவிலியன் விமானப் போக்குவரத்து பாதிக்கப்படுவதைத் தவிர்க்கும் பொருட்டு, சில விமானங்கள் இஸ்ரேலிய விமானப்படை தளங்களில் நிறுத்தப்பட உள்ளதாக இராணுவ அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-19T15:32:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[FIFA உலக கோப்பையை வெல்லப்போகும் அணி..! முன்னாள் ஜாம்பவானின் கணிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/ronaldo-drops-bold-world-cup-final-prediction-1784473803"></link>
            <id>https://ibctamil.com/article/ronaldo-drops-bold-world-cup-final-prediction-1784473803</id>
            <summary type="text">பிரேசிலிய கால்பந்து ஜாம்பவான் ரொனால்டோ நசாரியோ, FIFA உலகக் கோப்பை 2026 இறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியனான அர்ஜென்டினாவை ஸ்பெயின் எளிதாக வெல்லும் என்...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரேசிலிய கால்பந்து ஜாம்பவான் ரொனால்டோ நசாரியோ, FIFA உலகக் கோப்பை 2026 இறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியனான அர்ஜென்டினாவை ஸ்பெயின் எளிதாக வெல்லும் என்று தனது கணிப்பை வெளியிட்டுள்ளார்.</p><p>

ESPN பிரேசிலிடம் பேசிய ரொனால்டோ, போட்டி முழுவதும் பந்தை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஸ்பெயினின் திறன், கோப்பையை வெல்வதற்கு அவர்களை விருப்பமானவர்களாக ஆக்குகிறது என்று கூறினார்.</p><h2>ஸ்பெயின்&nbsp; எளிதாக வெற்றி பெறும்&nbsp;</h2><p>"ஸ்பெயின் இந்த ஆட்டத்தில் எளிதாக வெற்றி பெறும் என்று நான் நினைக்கிறேன்," என்று ரொனால்டோ தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/53a81d38-ef60-4247-a6b7-4914719b3e64/26-6a5ceda14df0d.webp' /></p><p>
</p><p>
மேலும், போட்டிக்கு முன்பே ஸ்பெயினும் பிரான்சும் தனது விருப்பமான அணிகளாக இருந்ததாகவும், இறுதிப் போட்டிக்கு வரும் வழியில் ஸ்பெயின் தொடர்ந்து போட்டிகளைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.</p><p></p><p>

</p><h2>அர்ஜென்டினாவிற்கு அந்த தகுதி இல்லை</h2><p>அர்ஜென்டினா பின்தங்கினால், அதிலிருந்து மீண்டு வரும் திறன் குறித்தும் ரொனால்டோ கேள்வி எழுப்பினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b5c42265-c786-4536-b03d-0286854846c4/26-6a5ceda2014dd.webp' /></p><p>
</p><p>
"ஸ்பெயின் ஒன்று அல்லது இரண்டு கோல்கள் முன்னிலை பெற்றால், ஆட்டத்தைத் திருப்புவதற்கான வலிமை அர்ஜென்டினாவிடம் இருப்பதாக நான் நினைக்கவில்லை, ஏனென்றால் ஸ்பெயின் எல்லா நேரமும் பந்தை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும்," என்று அவர் கூறினார்.
</p><p>
1962-ல் பிரேசிலுக்குப் பிறகு, ஃபிஃபா உலகக் கோப்பை பட்டத்தை வெற்றிகரமாகத் தக்கவைத்துக் கொள்ளும் முதல் நாடாக அர்ஜென்டினா திகழ இலக்கு வைத்துள்ளது. அதே நேரத்தில், ஸ்பெயின் தனது இரண்டாவது உலகக் கோப்பைப் பட்டத்தை வெல்ல முயல்கிறது.
</p><p>
ஸ்பெயின் மற்றும் அர்ஜென்டினா அணிகளுக்கு இடையேயான 2026 ஃபிஃபா உலகக் கோப்பை இறுதிப் போட்டி,இன்று ஞாயிற்றுக்கிழமை நியூயோர்க்கில் (இலங்கை நேரம் நள்ளிரவு 12.30 மணிக்கு) நடைபெற உள்ளது.&nbsp; &nbsp;&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-19T15:30:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஒன்டாரியோவில் காட்டுத்தீ பரவல் தீவிரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/ntario-premier-visits-thunder-bay-1784469609"></link>
            <id>https://canadamirror.com/article/ntario-premier-visits-thunder-bay-1784469609</id>
            <summary type="text">&amp;nbsp;கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் இன்று மேலும் ஏழு இடங்களில் புதிய காட்டுத்தீகள் பதிவாகியுள்ளதால், தற்போது எரிந்து கொண்டிருக்கும் காட்டுத்தீகளின் ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் இன்று மேலும் ஏழு இடங்களில் புதிய காட்டுத்தீகள் பதிவாகியுள்ளதால், தற்போது எரிந்து கொண்டிருக்கும் காட்டுத்தீகளின் மொத்த எண்ணிக்கை 191 ஆக உயர்ந்துள்ளது.
</p><p>இயற்கை வள அமைச்சு இது குறித்து தகவல்களை வெளியிட்டுள்ளது.
மேகமூட்டமான வானிலை மற்றும் அண்மையில் பெய்த மழை காரணமாக சில பகுதிகளில் தீ பரவல் ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டிருந்தாலும், மாகாணத்தின் வடமேற்கு பகுதிகளில் நிலைமை இன்னும் மிகவும் ஆபத்தானதாகவே உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
</p><p>இந்நிலையில், ஒன்டாரியோ முதல்வர் டக் ஃபோர்ட் தண்டர் பே நகருக்குச் சென்று தீயணைப்பு வீரர்கள், அவசரகால மீட்புப் பணியாளர்கள் மற்றும் சமூக பிரதிநிதிகளை சந்தித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e51ac2c4-1591-4e8f-a465-cbbe6abd4b1a/26-6a5cd86ac0ec3.webp' /></p><p> </p><p>
காட்டுத்தீயை கட்டுப்படுத்த தேவையான அனைத்து வளங்களையும் பயன்படுத்த அரசு தயங்காது என்றும், இதற்கான செலவுகளுக்கு எந்த வரம்பும் விதிக்கப்படமாட்டாது எனவும் அவர் உறுதியளித்தார்.
</p><p>மேலும், அல்பர்டா மாகாணத்திலிருந்து தீயணைப்பு வீரர்கள், யூகோனிலிருந்து நீர்குண்டு வீச்சு விமானங்கள் உள்ளிட்ட பல்வேறு மாகாணங்களின் உதவிகளும் பெறப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.
</p><p>காட்டுத்தீ நெருக்கடியை எதிர்கொள்ள அரசு போதுமான முன்னேற்பாடுகளை மேற்கொள்ளவில்லை என்ற எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டை முதல்வர் ஃபோர்ட் நிராகரித்ததுடன், அவசரநிலையை அரசியல் லாபத்திற்காக பயன்படுத்த வேண்டாம் எனவும் வலியுறுத்தினார்.</p><p>
இந்தக் காட்டுத்தீயால் முதன்மையாக பூர்வீக மக்களின் சமூகங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. நிஷ்னாவ்பே அஸ்கி நேஷன் பகுதிகளில் உள்ள பல சமூகங்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளன. </p><p>இந்நிலையில், மாகாண அரசின் நடவடிக்கைகள் மிகவும் தாமதமாக உள்ளதாக அந்த அமைப்பின் தலைமைத் தலைவர் ஆல்வின் ஃபிட்லர் குற்றம்சாட்டியுள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-19T15:17:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[புடின் அணு ஆயுதத் தாக்குதல் நடத்தினால்? 10 லட்சம் பேர் தப்பிக்க நிலத்தடி நகரம்..உருவாக்கிய நாடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/finland-s-bunker-city-space-for-million-people-1784473356"></link>
            <id>https://news.lankasri.com/article/finland-s-bunker-city-space-for-million-people-1784473356</id>
            <summary type="text">பின்லாந்தில் 10 லட்சம் பேர் வரை தங்கும் வசதி கொண்ட நிலத்தடி நகரம் உருவாக்கப்பட்டுள்ளது.நிலத்தடியில் நகரம்

ஐரோப்பிய நாடான பின்லாந்து, 1954ஆம் ஆண்டு ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பின்லாந்தில் 10 லட்சம் பேர் வரை தங்கும் வசதி கொண்ட நிலத்தடி நகரம் உருவாக்கப்பட்டுள்ளது.</p><h2>நிலத்தடியில் நகரம்
</h2><p>
ஐரோப்பிய நாடான பின்லாந்து, 1954ஆம் ஆண்டு முதல் 1,200 சதுர மீற்றருக்கும் அதிகமான பரப்பளவு கொண்ட கட்டிடங்களின் அடியில், குண்டுத் தாக்குதலில் இருந்து பாதுகாக்கும் அறையை அமைப்பது கட்டாயம் என்று சட்டம் இயற்றியுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bf641332-7ce3-4c24-81cc-3693bf2e8350/26-6a5ce89378ab8.webp' />&nbsp;</p><p></p><p>
அதன்படி, தலைநகர் ஹெல்சின்கியின் நிலத்தடியில் நகரம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

இந்நகரின் தெருக்களில் காணப்படும் எண்ணற்ற சானா குளியல் நிலையங்கள் மற்றும் காபி கடைகளுக்கு அடியில், ஒரு இரகசிய 'இரண்டாவது நகரம்' உள்ளது; பேரிடர் ஏற்படும் வரை இது பயன்பாடின்றி அமைதியாக இருக்கும்.
</p><p>
ஒருவேளை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் (Vladimir Putin) அணு ஆயுதத் தாக்குதலை நடத்தினால், 10 லட்சம் பேர் வரை தங்கும் வசதி கொண்டதாக இது இருக்கும் என்று கூறப்படுகிறது.
</p><p>தலைநகருக்கு அடியில் பாறைப் படுகையில் 5,500-க்கும் மேற்பட்ட பாதுகாப்பான நிலத்தடி அறைகள் (Shelters) குடைந்து அமைக்கப்பட்டுள்ளன. 

நகரின் மொத்த மக்கள் தொகையே 6,75,000 மட்டுமே என்ற நிலையில், 10 லட்சம் தங்கலாம் என்பது மிகப்பெரிய அளவாகும்.
</p><p>

இரண்டாம் உலகப் போரின் ஒரு பகுதியாக, 'Winter War' என்று அழைக்கப்பட்ட நீண்ட மோதலின்போது ரஷ்யா அந்நாட்டின் மீது படையெடுத்த 1939-ஆம் ஆண்டில் இருந்தே, பின்லாந்து இத்தகைய பாதுகாப்பு நிலத்தடி அறைகளை தொடர்ந்து கட்டி வருகிறது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/882007af-b971-474e-a2e1-f30816dd78e6/26-6a5ce89465467.webp' /></p><p>

இதுபோன்ற மிகப்பெரிய பாதுகாப்பு அறைகளில் Merihaka என்பதும் ஒன்றாகும். 71,000 கன மீற்றர் கொள்ளளவு கொண்ட இந்த பதுங்குக் குழி, ஏறக்குறைய ஒரு 7 மாடி அலுவலகக் கட்டிடத்தின் கன அளவிற்கு சமமானது.
</p><h2>
 'போருக்கு தயாராகும் நாடு' </h2><p>இதில் விளையாட்டுத் திடல்கள், உடற்பயிற்சிக் கூடம் மற்றும் தரைக்குக் கீழே 25 மீற்றர் ஆழத்தில் ஒரு சிறுவர் விளையாட்டு மைதானம் ஆகியவை உள்ளன. உள்ளூர்வாசிகள் இதில் தங்குவதற்கு பழகிக் கொள்ளும் வகையில் இவை தினமும் பயன்பாட்டில் இருக்கின்றன.</p><p>அவசரகாலத் தேவை ஏற்பட்டால், 72 மணிநேரத்திற்குள் இதை அடுக்கு படுக்கைகள், நீர்த் தொட்டிகள் மற்றும் நடமாடும் கழிப்பறைகள் கொண்ட சேமிப்புக் கிடங்குகளாக மாற்றியமைக்க முடியும். </p><p>

ஹெல்சின்கியில் உள்ள 48 பெரிய தங்குமிடங்களில் மெரிஹாக்காவும் ஒன்றாகும். நகரம் முழுவதும் மிகவும் பரவலாக தங்குமிடங்கள் இருப்பதால், சில ஹெவி மெட்டல் இசைக்குழுக்களுக்கான ஒத்திகை பகுதிகளாக கூட பயன்படுத்தப்படுகின்றன.</p><p> 

இதுபோன்ற நிலத்தடி நகர நடவடிக்கையால் 'போருக்கு தயாராகும் நாடு' என்ற பெயர் மூலம் பின்லாந்து உலகத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6d8a5135-ec4d-4b76-a2d6-451e2303edbe/26-6a5ce89516f10.webp' />&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b73f3868-cdca-4355-aca7-caba7fac2454/26-6a5ce97382742.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-19T15:12:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ashik</name>
            </author>
            <title type="text"><![CDATA[மன்னார் மாவட்டத்தின் அபிவிருத்தி குறித்து விசேட கலந்துரையாடல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/discussion-development-electricity-issues-mannar-1784471793"></link>
            <id>https://tamilwin.com/article/discussion-development-electricity-issues-mannar-1784471793</id>
            <summary type="text">மன்னார் மாவட்டத்தின் அபிவிருத்தி மற்றும் மின்சாரம் தொடர்பாக ஆராயும் விசேட
கலந்துரையாடல் இடம்பெற்றது.மன்னார் மாவட்டச்
செயலகத்தில் இன்றைய தினம் (19)வல...</summary>
            <content type="html"><![CDATA[<p>மன்னார் மாவட்டத்தின் அபிவிருத்தி மற்றும் மின்சாரம் தொடர்பாக ஆராயும் விசேட
கலந்துரையாடல் இடம்பெற்றது.</p><p>மன்னார் மாவட்டச்
செயலகத்தில் இன்றைய தினம் (19)வலுசக்தி பிரதி அமைச்சர் முஹம்மது இல்யாஸ் முஹம்மது அர்கம்
தலைமையில் கலந்துரையாடல் நடைபெற்றது.</p><p>இந்தக் கலந்துரையாடலின் போது மன்னார் மாவட்டத்தின் மின்சார வசதிகள், வெள்ளத்
தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாடு தொடர்பான பல்வேறு
முக்கிய விடயங்கள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது.</p><p></p><h2>கலந்துரையாடல்</h2><p>

குஞ்சுக்குளம் பகுதியில் வெள்ளத்தால் ஏற்படும் மின்சார அபாயங்களைத்
தடுக்கும் வகையில் மின் இணைப்புகளை பாதுகாப்பான முறையில் உயர்த்தி அமைப்பது,
சிலாவத்துறை, முருங்கன் மல்வத்து ஓயா பாலம் அருகில் உள்ள மின் கேபிள் களின்
பாதுகாப்பை மேம்படுத்துதல், தள்ளாடி கடற்கரை வீதியில் வீதி விளக்குகளை
அமைப்பது , மடு பிரதேச செயலகப் பிரிவின் சோதி நகர் பகுதியில் மின்சார வசதி
அற்ற குடும்பங்களுக்கு இலவச கிராமப்புற மின் மயமாக்கல் திட்டத்தின் கீழ்
மின்சார இணைப்புகளை வழங்குவது தொடர்பாக இதன்போது கலந்துரையாடப்பட்டது.
</p><p>
மன்னார் மாவட்டத்திற்கு உட்பட்ட மறுசீரமைக்க தக்க எரிசக்தி திட்டங்கள்
தொடர்பாகவும், மன்னார் பிரதேச மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய நிறுவனங்களின்
சமூகப் பொறுப்புணர்வு திட்டங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/56f9b52f-7b60-46a7-8f3f-634fb10cf685/26-6a5ce8b717b8f.webp' /></p><p>இருப்பினும், மன்னார் தீவுக்கு வெளியேயான கொண்டாச்சி, முள்ளிக்குளம் போன்ற
பகுதிகளில் தற்போது புதிய திட்டங்கள் ஆரம்பிக்கப் பட்டு வருகின்றன.இலங்கையின்
கனிம வளங்கள் தொடர்பாக ஒரு புதிய கொள்கை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.</p><p>மேலும், அப்பகுதி மக்களுடன் கலந்தாலோசித்து, அந்த விவாதங்களின் முடிவுகளின்
அடிப்படையில் இறுதி முடிவு எட்டப்படும்.என வலுசக்தி பிரதி அமைச்சர் முஹம்மது
இல்யாஸ் முஹம்மது அர்கம் மேலும் தெரிவித்தார்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-19T15:10:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாவூறும் சுவையில் மாங்காய் துவையல்.., எப்படி செய்வது?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/mangai-thuvaiyal-recipe-in-tamil-1784465333"></link>
            <id>https://news.lankasri.com/article/mangai-thuvaiyal-recipe-in-tamil-1784465333</id>
            <summary type="text">இந்த சுவையான மாங்காய் துவையல் சாப்பிட அருமையாக இருக்கும்.

இதனை குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரும் விரும்பி உண்ணுவார்கள்.

அந்தவகையில், நாவூறும் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்த சுவையான மாங்காய் துவையல் சாப்பிட அருமையாக இருக்கும்.</p><p>

இதனை குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரும் விரும்பி உண்ணுவார்கள்.
</p><p>
அந்தவகையில், நாவூறும் சுவையில் மாங்காய் துவையல் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.</p><p></p><h2>தேவையான பொருட்கள் </h2><ul><li>

மாங்காய்- 2 </li><li>
எண்ணெய்- 1 ஸ்பூன் </li><li>கடலைப்பருப்பு- 2 ஸ்பூன் </li><li>
உளுந்து பருப்பு- 2 ஸ்பூன் </li><li>
வெந்தயம்- 1 ஸ்பூன் </li><li>
தனியா- 2 ஸ்பூன் </li><li>
கடுகு- 1 ஸ்பூன் </li><li>
சீரகம்- 2 ஸ்பூன்</li><li>
பூண்டு- 4 பற்கள் </li><li>
சிவப்பு மிளகாய்- 20</li><li>
கல்லுப்பு- 1½ ஸ்பூன்</li><li> 
மஞ்சள் தூள்- ½ ஸ்பூன்</li><li> 
நல்லெண்ணெய்- 2 ஸ்பூன்</li><li> 
கடலைப்பருப்பு- 1 ஸ்பூன்</li><li> 
உளுத்தம் பருப்பு- 1 ஸ்பூன்</li><li> 
கடுகு- 1 ஸ்பூன் </li><li>
சீரகம்- 1 ஸ்பூன் </li><li>
பெருங்காயத்தூள்- ½ ஸ்பூன்</li><li> 
கறிவேப்பிலை- 1 கொத்து</li></ul><h2>

செய்முறை
</h2><p>
முதலில் வாணலில் எண்ணெய் சேர்த்து சூடானதும் கடலைப்பருப்பு, உளுந்து பருப்பு, வெந்தயம், தனியா, கடுகு, சீரகம் சேர்த்து மிதமான தீயில் வறுத்து ஆறவிடவும்.
</p><p>
பின் பூண்டு மற்றும் காய்ந்த மிளகாய் சேர்த்து தனி தனியாக வறுத்து ஆறவிடவும்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e0ed8d3a-f9b5-4dbe-8d3a-57d9f645da82/26-6a5cc7b78e2b8.webp' /></p><p>அடுத்து இவை அனைத்தையும் மிக்ஸி ஜாரில் சேர்த்து அதனுடன் கல்லுப்பு, மஞ்சள் தூள் சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.</p><p>

இதற்கடுத்து நறுக்கிய மாங்காய் துண்டுகளை சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.</p><p> 

பின்னர் வாணலில் நல்லெண்ணெய் சேர்த்து சூடானதும் கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, கடுகு, சீரகம், இடித்த பூண், காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை சேர்த்து பொரிந்ததும் மாங்காய் துவையலுடன் சேர்த்து கலந்தால் சுவையான மாங்காய் துவையல் தயார். &nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-19T15:05:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[இரவோடு இரவாக நடத்தப்பட்ட தாக்குதல்..! மின் உற்பத்தி மற்றும் கடல்நீர் சுத்திகரிப்பு ஆலையை இலக்கு வைத்த ஈரான்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/airstrikes-nuclear-power-plant-water-desalination-1784471212"></link>
            <id>https://tamilwin.com/article/airstrikes-nuclear-power-plant-water-desalination-1784471212</id>
            <summary type="text">மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே மீண்டும்
கடுமையான போர் மூண்டுள்ளது.

கடந்த ஆறு நாட்களாக இருதரப்பும் மாறி மாறி ஏவுக...</summary>
            <content type="html"><![CDATA[<p>மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே மீண்டும்
கடுமையான போர் மூண்டுள்ளது.</p><p>

கடந்த ஆறு நாட்களாக இருதரப்பும் மாறி மாறி ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தி வரும்
நிலையில், ஈரானில் கட்டுமானப் பணியில் உள்ள அணுமின் நிலையம் ஒன்றின் மீது
அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளதாகத் தெஹ்ரான் குற்றம் சாட்டியுள்ளது.</p><p>

இதற்குப் பதிலடியாக, குவைத்தில் உள்ள மின் உற்பத்தி மற்றும் கடல்நீர்
சுத்திகரிப்பு ஆலை மீது ஈரான் கடந்த இரண்டு நாட்களில் இரண்டாவது முறையாகத்
தாக்குதல் நடத்தியுள்ளதாக குவைத் அரசு தெரிவித்துள்ளது.</p><p></p><h2>வான்வழித் தாக்குதல்</h2><p>
</p><p>
முன்னதாக, ஜோர்டானில் நடத்தப்பட்ட ஈரான் தாக்குதலில் இரண்டு அமெரிக்க இராணுவ
வீரர்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இந்த
புதிய தாக்குதல்களுக்கு உத்தரவிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/64ff9232-318c-4d79-97c0-35403162e448/26-6a5ce26cce1de.webp' /></p><p>
</p><p>
வொஷிங்டனில் இருந்து வெளியாகும் தகவல்களின்படி, அமெரிக்க மத்திய கட்டளை
அமைப்பு ஈரானின் கடலோரக் கண்காணிப்பு மையங்கள், வான் பாதுகாப்பு வசதிகள்
மற்றும் ஏவுகணை-ட்ரோன் சேமிப்புக் கிடங்குகளை இலக்காகக் கொண்டு நடத்தியுள்ளது.
</p><p>
ஈரானின் முக்கிய உள்கட்டமைப்புகளை அமெரிக்கா தாக்கினால், அதற்குப் பதிலடியாக
வளைகுடா நாடுகளின் உள்கட்டமைப்புகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தும் என்பதால்,
அமெரிக்கா தனது இலக்குகளை இராணுவ நிலைகளோடு சுருக்கிக் கொண்டுள்ளது.</p><p></p><h2>ஹோர்முஸ் நீரிணைப் பகுதி</h2><p>
</p><p>
இதற்கிடையே, மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த ஹோர்முஸ் நீரிணைப் பகுதியில்
பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/279d4237-6ca2-4655-9e6e-50a475741f0b/26-6a5ce26daa007.webp' /></p><p>
</p><p>
மேலும், ஜோர்தானின் அகாபா நகரிலுள்ள விமான நிலையம் மற்றும் துறைமுகப்
பகுதிகளில் "குறிப்பிட்ட மற்றும் நம்பகமான அச்சுறுத்தல்" இருப்பதாகக் கூறி,
அமெரிக்கக் குடிமக்கள் அங்குச் செல்ல வேண்டாம் என ஜோர்தானில் உள்ள அமெரிக்கத்
தூதரகம் அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது.
</p><p>
வளைகுடா நாடுகளின் அழுத்தம் மற்றும் தொடர் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் இந்த
பிராந்தியப் போர் மேலும் தீவிரமடைந்து வருவது உலக நாடுகளிடையே பெரும் கவலையை
ஏற்படுத்தியுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-19T14:48:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவில் கைது செய்யப்படுவாரா நெதன்யாகு..! நியூயோர்க் மேயரின் அறிவிப்பால் பரபரப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/israeli-pm-to-be-arrested-at-us-summit-nyc-mayor-1784471411"></link>
            <id>https://ibctamil.com/article/israeli-pm-to-be-arrested-at-us-summit-nyc-mayor-1784471411</id>
            <summary type="text">ஐக்கிய நாடுகள் உச்சி மாநாட்டிற்காக நியூயோர்க் நகருக்கு வரும் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவைக் கைது செய்ய எதிர்பார்ப்பதாகவும், அவ்வாறு செய்வத...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஐக்கிய நாடுகள் உச்சி மாநாட்டிற்காக நியூயோர்க் நகருக்கு வரும் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவைக் கைது செய்ய எதிர்பார்ப்பதாகவும், அவ்வாறு செய்வதற்குத் தனக்கு அதிகாரம் உள்ளதா என்பது தெரியாததால் இது குறித்து சட்ட வல்லுநர்களுடன் விவாதித்து வருவதாகவும் நியூயோர்க் மேயர் ஸோஹ்ராப் மம்தானி தெரிவித்துள்ளார்.
</p><p>
நெதன்யாகு ஒரு போர்க் குற்றவாளி என்றும், அவர் மீது சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட வேண்டும் என்றும் மம்தானி கூறினார்.</p><h2>நெதன்யாகு ஒரு போர்க் குற்றவாளி</h2><p>&nbsp;இது தனது கருத்து மட்டுமல்ல, நெதன்யாகுவைப் பற்றி பலரும் கொண்டிருக்கும் கருத்தும் இதுவே என்று அவர் குறிப்பிட்டார். நியூயோர்க் மேயர் என்ற முறையில் தனது சட்டபூர்வ அதிகாரங்களைப் பயன்படுத்தி நெதன்யாகுவுக்கு எதிராக தன்னால் இயன்ற அனைத்தையும் செய்வேன் என்றும் மம்தானி கூறினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/845397d2-0ea0-44ed-81a4-dd061172d82b/26-6a5ce29780658.webp' /></p><p>
</p><p>
தனது மேயர் தேர்தல் பிரச்சாரத்தின் போது, ​​நெதன்யாகு நியூயோர்க் நகரத்திற்கு வந்தால் அவரைக் கைது செய்வேன் என்றும் மம்தானி கூறியிருந்தார்.</p><p></p><h2>இஸ்ரேலின் பதிலடி</h2><p>

மம்தானியின் இந்தக் கூற்றுக்கு இஸ்ரேல் உடனடியாகப் பதிலளித்தது. இஸ்ரேலுக்கான அமெரிக்கத் தூதர் டேனி டானன் தனது ட்விட்டர் கணக்கில், மம்தானி மேயராகத் தனது பொறுப்புகளை நிறைவேற்றுவதற்கும், நகரில் அதிகரித்து வரும் யூத-எதிர்ப்பு அலைக்குத் தீர்வு காண்பதற்கும் பதிலாக இஸ்ரேலைத் தாக்குகிறார் என்று பதிவிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/96385ba8-1fb0-491a-97ea-57660a49051c/26-6a5ce29830a51.webp' /></p><p>
</p><p>
திட்டமிட்டபடி நெதன்யாகு நியூயோர்க் நகரத்திற்கு வருவார் என்றும், நெதன்யாகு அல்ல, மம்தானிதான் கைது செய்யப்பட வேண்டும் என்றும் அந்த இஸ்ரேலியத் தூதர் தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-19T14:44:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Bavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மோட்டார் சைக்கிள் வாங்கச் சென்ற இளைஞர் செய்த செயல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/youth-arrested-for-stealing-motorcycle-batticaloa-1784471910"></link>
            <id>https://tamilwin.com/article/youth-arrested-for-stealing-motorcycle-batticaloa-1784471910</id>
            <summary type="text">மட்டக்களப்பில் விற்பனைக்கு உள்ள மோட்டார் சைக்கிள் ஒன்றை ஓட்டிப் பார்ப்பதாக கூறி, திருடிச் சென்ற இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த கைது நட...</summary>
            <content type="html"><![CDATA[<p>மட்டக்களப்பில் விற்பனைக்கு உள்ள மோட்டார் சைக்கிள் ஒன்றை ஓட்டிப் பார்ப்பதாக கூறி, திருடிச் சென்ற இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>

இந்த கைது நடவடிக்கை இன்று(19.07.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது. </p><p>

இதன்போது, சந்தேக நபரிடம் இருந்து 3 மோட்டார் சைக்கிள்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p> </p><h2>


27 வயது இளைஞர் கைது</h2><p>
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், </p><p>

காத்தான்குடி பகுதியில் மோட்டார் சைக்கிள் வாங்கி விற்பனை
செய்யும் கடை ஒன்றுக்கு கடந்த 2 வாரங்களுக்கு முன்னர் சென்ற இளைஞர், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை வாங்குவதாக உரிமையாளரிடம் கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/47cebbfd-e3c1-41cc-a2e8-044a2150cc36/26-6a5ce1b374b87.webp' /></p><p> </p><p>

அதன் பின்னர், மோட்டார் சைக்கிளை ஓட்டிப் பார்க்க வேண்டும் என உரிமையாளரிடம் அனுமதி வாங்கிய பின்னர், அங்கிருந்து எடுத்துச் சென்று மட்டக்களப்பு - திருகோணமலை வீதியில் உள்ள வீதி சமிஞ்சை விளக்கு அருகில் நிறுத்தி விட்டு, இன்னொரு நபருக்கு மோட்டார் சைக்கிளை கைமாற்ற முயன்றுள்ளார்.</p><p> 

இதனையடுத்து, மட்டக்களப்பு பொலிஸாரால் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், கடந்த காலங்களில் இவர் செய்த 8 குற்றச் செயல்களும் கண்டறியப்பட்டுள்ளன. </p><p>

சந்தேக நபரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp; &nbsp;&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-19T14:40:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரான் தாக்குதலில் காயமடைந்தவர்களை நேரில் சென்று பார்வையிட்ட குவைத் பிரதமர்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/kuwaiti-pm-visits-those-injured-in-iran-attack-1784469941"></link>
            <id>https://tamilwin.com/article/kuwaiti-pm-visits-those-injured-in-iran-attack-1784469941</id>
            <summary type="text">வளைகுடா நாடான குவைத் மீது ஈரான் தொடர்ந்து ஏவுகணை மற்றும் ட்ரோன்
தாக்குதல்களை நடத்தி வரும் நிலையில், தாக்குதலில் காயமடைந்து அல்-அதான்
மருத்துவமனையில்...</summary>
            <content type="html"><![CDATA[<p>வளைகுடா நாடான குவைத் மீது ஈரான் தொடர்ந்து ஏவுகணை மற்றும் ட்ரோன்
தாக்குதல்களை நடத்தி வரும் நிலையில், தாக்குதலில் காயமடைந்து அல்-அதான்
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை குவைத் பிரதமர் ஷேக் அகமது
அப்துல்லா அல்-அஹ்மத் அல்-சபா நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
</p><p>
இந்த சந்திப்பின் போது பிரதமருடன் சுகாதாரத்துறை அமைச்சர் அகமது அப்துல்வஹாப்
அல்-அவாதியும் உடனிருந்தார்.</p><p>

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பொதுமக்களின் உடல் நலம் குறித்து
கேட்டறிந்த பிரதமர், அவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் மருத்துவ சிகிச்சைகளின்
தரம் குறித்தும் ஆய்வு செய்தார்.</p><p></p><h2>மருத்துவ உதவி</h2><p>

மேலும், காயமடைந்தவர்களின் நிலைமையை அரசாங்கம் தொடர்ந்து உன்னிப்பாகக்
கண்காணிக்கும் என்றும், அவர்களுக்குத் தேவையான அனைத்து மருத்துவ உதவிகளும்
வழங்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ff016ebf-fc16-4670-8f51-15843e657660/26-6a5cdfd80ee0e.webp' /></p><p>
</p><p>
கடந்த சில நாட்களாக குவைத்தை இலக்காகக் கொண்டு ஈரான் தீவிர வான்வழித்
தாக்குதல்களை நடத்தி வரும் இக்கட்டான சூழ்நிலையில் பிரதமரின் இந்த மருத்துவமனை
வருகை அமைந்துள்ளது.&nbsp;</p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-19T14:32:05+00:00</updated>
        </entry>
    </feed>
