<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-07-11T06:37:48+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி விவகாரம்! சந்தேகநபராக மீண்டும் பெயரிடப்பட்ட முன்னாள் அமைச்சர் துமிந்த]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/former-minister-duminda-named-as-suspect-again-1783751633"></link>
            <id>https://tamilwin.com/article/former-minister-duminda-named-as-suspect-again-1783751633</id>
            <summary type="text">ஹெவ்லொக் டவுண் குடியிருப்புத் தொகுதியில் இருந்து கண்டெடுக்கப்பட்ட தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க, ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹெவ்லொக் டவுண் குடியிருப்புத் தொகுதியில் இருந்து கண்டெடுக்கப்பட்ட தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க, மீண்டும் சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ளார்.
</p><p>
கடந்த 2025ஆம் வருடம் ஹெவ்லொக் டவுணில் உள்ள ஒரு குடியிருப்பு வளாகத்தில் இருந்து தங்கமுலாம் பூசப்பட்ட டி56 ரக துப்பாக்கி கண்டெடுக்கப்பட்டது.</p><p>

அது தொடர்பான விசாரணைகளின் முடிவில் முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்கவும் சம்பவத்துடன் தொடர்புடையதாக குற்றம் சாட்டப்பட்டு விளக்கமறியலின் பின்னர் பிணை வழங்கப்பட்டிருந்தார்.</p><p> அத்துடன் வழக்கின் நான்காவது சந்தேகநபராகவும் பெயரிடப்பட்டிருந்தார்.

எனினும் போதிய சாட்சியங்கள் இல்லாததால் வழக்கில் இருந்து அவரை விடுவிக்க கல்கிஸ்சை நீதவான் நீதிமன்றம் கடந்த ஆண்டு ஜூலை 29ஆம் திகதி நடவடிக்கை எடுத்திருந்தது.</p><p></p><h2>சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ள துமிந்த</h2><p>

இந்நிலையில் சம்பவம் தொடர்பாக நடைபெற்று வரும் வழக்கில், முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க தற்போது மீண்டும் ஒரு சந்தேகநபராகப் பெயரிடப்பட்டுள்ளார். </p><p>கல்கிஸ்சை நீதவான் நீதிமன்றத்தில் நேற்று (10) பதில் நீதவான் ரவி மத்துகம முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது இந்த முடிவு அறிவிக்கப்பட்டது.
</p><p>
இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணை அறிக்கைகள் ஏற்கனவே சட்டமா அதிபருக்கு அனுப்பப்பட்டுவிட்டதாகவும், இந்த வழக்கில் நான்காவது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டிருந்த துமிந்த திசாநாயக்க, போதிய ஆதாரங்கள் இல்லாததால் விடுவிக்கப்பட்டுவிட்டதாகவும் பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.</p><p> இருப்பினும், சட்டமா அதிபரின் அறிவுறுத்தல்களின் பேரில் இந்த வழக்கில் இரண்டாவது சந்தேகநபரிடமிருந்து பெறப்பட்ட கூடுதல் வாக்குமூலத்தின் அடிப்படையில், நான்காவது சந்தேக நபரும் இந்தச் சம்பவத்தில் நேரடியாக ஈடுபட்டுள்ளார் என்பதற்கு தற்போது போதுமான ஆதாரங்கள் கண்டறியப்பட்டுள்ளன என்று புலனாய்வு அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c8b51096-d531-455f-a9c4-b73bf1a5426b/26-6a51e3d3f1a46.webp' /></p><h2>விரிவான விசாரணை</h2><p>
</p><p>
முன்னதாக வெளிப்படுத்தப்பட்ட சாட்சியங்கள், குறித்த தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கியை அப்புறப்படுத்துவதில் நான்காவது சந்தேகநபர் ஈடுபட்டிருந்தார் என்பதைக் குறிப்பிட்டிருந்த போதிலும், பின்னர் நடத்தப்பட்ட விரிவான விசாரணைகளின் போது, ​​இரண்டாவது சந்தேக நபர் அதனைத் தன் வசம் வைத்திருக்க உதவியது தெரியவந்துள்ளது. </p><p>அதன்படி, பயங்கரவாத விசாரணைப் பிரிவால் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட மேலதிக அறிக்கையைப் பரிசீலித்த பின்னர், முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்கவை இந்த வழக்கில் மீண்டும் ஒரு சந்தேக நபராக பெயரிட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சட்டமா அதிபர் திணைக்களம் தனது விசாரணைகளை தற்போது முடித்துவிட்டதாகவும், இது தொடர்பாக எதிர்காலத்தில் உயர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்றும் நீதிமன்றத்திற்குத் தெரிவிக்கப்பட்டது.
</p><p>
துமிந்த திசாநாயக்கவுக்காக முன்னிலையான வழக்கறிஞர், போதிய சாட்சியங்கள் இல்லாததால் கடந்த ஆண்டு ஜூலை 29 ஆம் திகதி தனது கட்சிக்காரரை விடுவிக்க நீதவான் நீதிமன்றம் நடவடிக்கை எடுத்திருந்ததாகக் கூறினார். எனவே, விசாரணைப் பிரிவுகள் எடுத்த இந்த புதிய முடிவை உயர் நீதிமன்றத்தில் எதிர்த்து மேல்முறையீடு செய்ய உத்தேசித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.</p><p>

அனைத்து வாதங்களையும் பரிசீலித்த பதில் நீதவான் ரவி மத்துகம, துமிந்த திசாநாயக்கவை தலா ஐந்து லட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளின் பேரில் விடுவிக்க உத்தரவிட்டார். சட்டமா அதிபரின் அறிவுறுத்தல்களின்படி நடத்தப்பட்டு வரும் விசாரணைகளின் முன்னேற்ற அறிக்கைகளைப் பரிசீலிப்பதற்காக, இந்த வழக்கு டிசம்பர் 11 அன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-11T06:34:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[29 பேரை பலியெடுத்த நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் - 5 இலட்சம் இழப்பீடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/negombo-prison-clash-leaves-29-dead-1783751262"></link>
            <id>https://tamilwin.com/article/negombo-prison-clash-leaves-29-dead-1783751262</id>
            <summary type="text">நீர்கொழும்பு சிறைச்சாலைக் கலவரத்தில் உயிரிழந்த சிறைச்சாலை உத்தியோகத்தர்களின் குடும்பங்களுக்கு தலா ஐந்து லட்சம் ரூபா வீதம் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது....</summary>
            <content type="html"><![CDATA[<p>நீர்கொழும்பு சிறைச்சாலைக் கலவரத்தில் உயிரிழந்த சிறைச்சாலை உத்தியோகத்தர்களின் குடும்பங்களுக்கு தலா ஐந்து லட்சம் ரூபா வீதம் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.

நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் மூலமாக முதற்கட்ட நிவாரணமாக குறித்த இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.</p><p>

நீர்கொழும்பு சிறைச்சாலைக் கலவரத்தில் உயிரிழந்த சிறை உத்தியோகத்தர்களின் வாரிசுகள் மற்றும் நெருங்கிய உறவினர்களுக்கு குறித்த இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளது.</p><p></p><p>
</p><h2>
பதவி உயர்வுடன் இழப்பீடு தொகை</h2><p>
நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் எட்டுப்பேர் உயிரிழந்துள்ளனர்.

அவர்களின் மறைவுக்குப் பின் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதுடன், அவர்களுக்கான பதவி உயர்வின் அடிப்படையிலான ஓய்வூதியங்களை அவர்களின் குடும்பத்தினருக்கு உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் வழங்குவதற்கும் என சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் ஏ.சி. கஜநாயக்க தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f96578d5-7237-41d7-a4c1-4fa8c8cae6ac/26-6a51e3cbe5c32.webp' /></p><p>
</p><p>
சிறைச்சாலைகள் திணைக்களத்தின் ஜெயிலர் எஸ்.எச். சந்திரவன்ச, எஸ்.டி. அபேவர்தன, பி.என். தரங்க, ஏ.டி. தரங்க, டி.டபிள்யூ. புஷ்பகுமார, ஆர்.ஆர். சஞ்சீவ, டி.ஆர். திலகசிறி மற்றும் எம்.ஜி. உபாலி ஆகிய சிறைக்காவலர்களும் நீர்கொழும்பு சிறைச்சாலை கலவரத்தில் உயிரிழந்துள்ளனர். </p><p> 

பணியில் இருந்தபோது கொல்லப்பட்ட மேற்குறித்த ஏழு சிறைக்காவலர்களும் மரணத்தின் பின்னர் சிறைச்சாலை சார்ஜென்ட் தரத்துக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
</p><p>
சிறைச்சாலை ஜெயிலர் எஸ்.எச். சந்திரவன்ச, இரண்டாம் வகுப்புப் பதவியிலிருந்து முதலாம் தர ஜெயிலர் நிலைக்கு பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.
</p><p>
இந்த பதவி உயர்வுகள் அனைத்தும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இறந்த திகதியிலிருந்து நடைமுறைக்கு வரும் வகையில் வழங்கப்பட்டுள்ளன.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-11T06:33:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பகுதியில் முற்றுகையிடப்பட்ட வாவி ; அதிகாலையில் அதிரடி காட்டிய அதிகாரிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/officials-launch-early-morning-crackdown-1783738108"></link>
            <id>https://jvpnews.com/article/officials-launch-early-morning-crackdown-1783738108</id>
            <summary type="text">கொக்கட்டிச்சோலையில் இருந்து ஆரையம்பதி பிரதேசத்துக்கு காஞ்சிரம்குடா வாவி ஊடாக மீன்பிடி தோணியில் கசிப்பு கடத்தி சென்று ஒருவரை 150 லீற்றர் கசிப்புடன் வெள...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify;">கொக்கட்டிச்சோலையில் இருந்து ஆரையம்பதி பிரதேசத்துக்கு காஞ்சிரம்குடா வாவி ஊடாக மீன்பிடி தோணியில் கசிப்பு கடத்தி சென்று ஒருவரை 150 லீற்றர் கசிப்புடன் வெள்ளிக்கிழமை (10) அதிகாலையில் கஞ்சரம்குடாவில் வைத்து 60 வயதுடைய ஒருவரை கைது செய்துள்ளதாக கொக்கட்டிச்சோலை பொலிசார் தெரிவித்தனர்.
</p><p style="text-align: justify;">

விசேட புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றினையடுத்து கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலைய பெரும் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி&nbsp; தலைமையில் விசேட புலனாய்வு பிரிவினர் இணைந்து சம்பவ தினமான வெள்ளிக்கிழமை (10) அதிகாலை 4 மணிக்கு குறித்த வாவியை முற்றுகையிட்டு சோதனையில் ஈடுபட்டனர்.</p><p style="text-align: justify;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e7e12a17-3c20-4624-abce-10c240351f76/26-6a51aefe7853e.webp' /></p><p style="text-align: justify;">

இதன்போது தோணியில் கலன்களில் எடுத்துச் செல்ல முற்பட்ட 150 லீற்றர் கசிப்புடன் 60 வயதுடைய ஆரையம்பதியைச் சேர்ந்த ஒருவரை கைது செய்ததுடன் கடத்தலுக்கு பயன்படுத்திய மீன்பிடி தோணி ஒன்றையும் மீட்டுள்ளனர்.
</p><p style="text-align: justify;">
இதில் கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.</p>]]></content>
            <updated>2026-07-11T06:31:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[தினமும் ஒரு கப் வெண்டைக்காய் நீர்.., கிடைக்கும் நன்மைகள் என்னென்ன ?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/health-benefits-of-drinking-lady-s-finger-water-1783751301"></link>
            <id>https://news.lankasri.com/article/health-benefits-of-drinking-lady-s-finger-water-1783751301</id>
            <summary type="text">வெண்டைக்காய் குறைந்த கலோரியும், அதிக நார்ச்சத்தும் கொண்ட ஒரு சிறந்த காய்கறி ஆகும். 

இது செரிமானத்தை மேம்படுத்துதல், இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்பட...</summary>
            <content type="html"><![CDATA[<p>வெண்டைக்காய் குறைந்த கலோரியும், அதிக நார்ச்சத்தும் கொண்ட ஒரு சிறந்த காய்கறி ஆகும். </p><p>

இது செரிமானத்தை மேம்படுத்துதல், இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துதல், இதய ஆரோக்கியத்தை பாதுகாத்தல், மற்றும் எலும்பு வளர்ச்சிக்குத் தேவையான வைட்டமின் கே போன்ற பல முக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது.
</p><p>
அதன்படி, இரவு முழுவதும் வெண்டைக்காயை தண்ணீரில் ஊறவைத்து, மறுநாள் காலையில் அந்த நீரை வெறும் வயிற்றில் குடித்து வருவதால் பல நன்மைகள் கிடைக்கும்.</p><p>

<img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4c8000ca-a469-4df0-aced-86a9f16a1745/26-6a51e28778549.webp' />
</p><p>
அந்தவகையில், ஒரு மாதத்திற்கு தினமும் ஒரு கப் வெண்டைக்காய் நீர் குடிப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.</p><p></p><h2>கிடைக்கும் நன்மைகள் </h2><p><b>உடல் சோர்வு நீங்கும்-</b> எலுமிச்சை சேர்த்த வெண்டைக்காய் நீரை தொடர்ந்து ஒரு மாதம் குடித்தால் உடல் சோர்வு குறைந்து, சுறுசுறுப்பு அதிகரிக்க உதவலாம்.
</p><p><b>
சிறுநீரகங்களுக்கு நல்லது- </b>வெண்டைக்காயில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் சிறுநீரக செல்களை பாதுகாக்க உதவக்கூடும். இருப்பினும், இதற்கான மனிதர்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் இன்னும் குறைவாகவே உள்ளன.
</p><p><b>
இதய ஆரோக்கியம்- </b>வெண்டைக்காயில் உள்ள நார்ச்சத்து மற்றும் கோழைப் பொருள் கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவலாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4db154d1-ed8d-4570-9340-a3bd76d1ed35/26-6a51e2882cf48.webp' /></p><p>
</p><p><b>
இரத்த சர்க்கரை&nbsp;கட்டுப்பாடு- </b>வெண்டைக்காய் இரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும், இன்சுலின் எதிர்ப்புத்தன்மையை குறைக்கவும் உதவக்கூடும் என்று சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
</p><p><b>
கல்லீரல் சுத்தம்-</b> வெண்டைக்காயில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் கல்லீரலை ஆக்ஸிஜனேற்ற சேதத்திலிருந்து பாதுகாத்து, அதன் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவலாம்.</p><p><b>

நோய் எதிர்ப்பு சக்தி- </b>வைட்டமின் A, C, K, ஃபோலேட் மற்றும் மக்னீசியம் போன்ற சத்துக்கள் இருப்பதால், நோயெதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தவும் உதவக்கூடும்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp; உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-11T06:29:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அவசர அழைப்பு இலக்கம் தற்காலிகமாக செயலிழப்பு - பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/new-fire-brigade-emergency-hotline-call-117-1783750651"></link>
            <id>https://ibctamil.com/article/new-fire-brigade-emergency-hotline-call-117-1783750651</id>
            <summary type="text">நாட்டு மக்களுக்கு தீயணைப்பு சேவைகள் திணைக்களம் முக்கிய அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.தீயணைப்பு சேவைகள் திணைக்களத்தின் அவசர அழைப்பு இலக்கம் தற்காலிகமாக...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டு மக்களுக்கு தீயணைப்பு சேவைகள் திணைக்களம் முக்கிய அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.</p><p>தீயணைப்பு சேவைகள் திணைக்களத்தின் அவசர அழைப்பு இலக்கம் தற்காலிகமாக செயலிழந்துள்ளதாக அத்திணைக்களம் அறிவித்துள்ளது. </p><p>

எனவே, தீ விபத்துகளைப் புகாரளிப்பதற்காக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் 117 என்ற அவசர இலக்கத்திற்கு அழைக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5b3e28b3-a438-4eec-a15c-9166bfff8fe5/26-6a51e28aea394.webp' /></p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-11T06:28:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[246 பயணிகளின் உயிரை காப்பாற்றிய விமானி - சற்றுமுன் கட்டுநாயக்கவில் விமானம் தரையிறக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/bird-attacked-on-sri-lankan-flight-1783742929"></link>
            <id>https://tamilwin.com/article/bird-attacked-on-sri-lankan-flight-1783742929</id>
            <summary type="text">புதிய இணைப்புகட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து இஸ்தான்புல்லுக்குப் புறப்பட்ட விமானம் ஒன்று, பறவை மோதியதில் 246 பயணிகளுடன் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து இஸ்தான்புல்லுக்குப் புறப்பட்ட விமானம் ஒன்று, பறவை மோதியதில் 246 பயணிகளுடன் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டுள்ளது.</p><p>துருக்கிய ஏர்லைன்ஸ் விமானம் TK-731 இந்த விபத்தைச் சந்தித்ததுடன், பறவை மோதியதன் காரணமாகத் தனது பயணத்தைக் கைவிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><h3>

246 பயணிகளுடன் தரையிறக்கம்</h3><p>

அதன் பின்னர், தரையிறங்குவதற்கு ஏற்ற அளவிற்கு எரிபொருள் இருப்பு குறையும் வரை, அந்த விமானம் நீர்கொழும்பு - காயல் அருகே உள்ள கடல் பகுதியில் 3 மணி நேரம் 15 நிமிடங்கள் குறைந்த வேகத்தில் பறக்கவிடப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/81f99886-e99c-4da1-a01d-bd426c7c1092/26-6a51dec3552a4.webp' /></p><p> 

தரையிறங்குவதற்கு ஏற்ற நிலையை அடைந்த பின்னர், அது காலை 10.21 மணிக்குத் தரையிறக்கப்பட்டுள்ளது. 

இந்த விமானத்தில் 246 பயணிகள் மற்றும் 10 பணியாளர்கள் இருந்ததாகவும், ஏர்பஸ் A-330 ரக விமானம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>

சர்வதேச தொழிலாளர் அமைப்பின் இயக்குநர் உள்ளிட்ட ஒரு குழுவும் இந்த விமானத்தில் பயணித்ததாக 'அட டெரானா' விமான நிலைய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.


விமானம் இன்று காலை 7.07 மணிக்கு கட்டுநாயக்கவிலிருந்து இஸ்தான்புல்லுக்கான 6 மணி நேரப் பயணத்திற்காகப் புறப்பட்டுள்ளதுடன், அதுவரை விமானத்தில் 80,000 கிலோகிராம் எரிபொருள் நிரப்பப்பட்டிருந்தது.</p><h4>

எரிபொருள் குறையும் வரை பறந்த விமானம்</h4><p>
விமானம் புறப்பட்ட உடனேயே பறவை மோதியது, இதுகுறித்து விமானி கட்டுநாயக்க விமான நிலையத்திற்குத் தகவல் தெரிவித்திருந்தார்.
</p><p>
விமானத்தில் எரிபொருள் இருப்புடன் மீண்டும் தரையிறங்குவது சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து அமைப்பின் சமீபத்திய விதிகளுக்கு எதிரானது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/00298c61-25a5-4976-8074-f52ebaf40ec0/26-6a51defb38dc8.webp' /></p><p>
</p><p>
இதன் விளைவாக, தரையிறங்குவதற்கு ஏற்ற நிலைக்கு எரிபொருள் அளவு குறையும் வரை, விமானம் நீர்கொழும்பு கடற்காயலுக்கு மேலே 7,000 அடி உயரத்தில் மணிக்கு 253 நாட்ஸ் வேகத்தில் 3 மணி நேரம் 15 நிமிடங்கள் பறக்க வேண்டியிருந்தது.
</p><p>
தீயணைப்பு வாகனங்கள், ஆம்புலன்ஸ்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மீட்புப் பணியாளர்களை வரவழைத்து, அவசரகாலத் தரையிறக்கத்திற்காக விமான நிலையமும் தயார் செய்யப்பட்டுள்ளதாகவும் இதன்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.&nbsp;</p><h2>முதலாம் இணைப்பு</h2><p>கட்டுநாயக்காவில் இருந்து துருக்கியின் இஸ்தான்புல் நோக்கிப் புறப்பட்ட விமானத்தில் பறவை மோதிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. </p><p>

இன்று காலை கட்டுநாயக்காவிலிருந்து துருக்கியின் இஸ்தான்புல் நகரை நோக்கிப் புறப்பட்ட A330 ரக பயணிகள் விமானத்திலேயே இவ்வாறு பறவை ஒன்று மோதியுள்ளது. </p><p>

இதன் காரணமாக, அந்த விமானம் தற்போது சிலாபம் வான்பரப்பில் மிகவும் தாழ்வாகப் பறந்து வட்டமடித்துள்ளது. </p><h2><b>மீண்டும் தரையிறக்கம் </b></h2><p> அத்துடன் எரிபொருளை குறைத்து, பாதுகாப்பாக விமானம் தரையிறங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/112a1042-c6e1-4a5d-8c84-dac19164099f/26-6a51c400d694e.webp' /></p><p> </p>]]></content>
            <updated>2026-07-11T06:28:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[தீயணைப்பு பிரிவின் அவசர அழைப்பு இலக்கம் தற்காலிகமாக செயலிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/fire-dept-emergency-hotline-temporarily-block-1783749572"></link>
            <id>https://tamilwin.com/article/fire-dept-emergency-hotline-temporarily-block-1783749572</id>
            <summary type="text">தீயணைப்பு சேவைகள் திணைக்களத்தின் அவசர அழைப்பு இலக்கம் தற்காலிகமாக செயலிழந்துள்ளதாக அந்த திணைக்களம் அறிவித்துள்ளது. 

எனவே, தீ விபத்துகள் தொடர்பில் ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>தீயணைப்பு சேவைகள் திணைக்களத்தின் அவசர அழைப்பு இலக்கம் தற்காலிகமாக செயலிழந்துள்ளதாக அந்த திணைக்களம் அறிவித்துள்ளது. </p><p>

எனவே, தீ விபத்துகள் தொடர்பில் முறைப்பாடு அளிப்பதற்காக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் 117 என்ற அவசர இலக்கத்திற்கு அழைக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0a4fba77-83b5-4ba4-b808-a6b4551fad88/26-6a51e1bb0ab61.webp' /></p><p></p><p></p><p style="margin-left: 25px;"><br></p>]]></content>
            <updated>2026-07-11T06:25:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இரு இளைஞர்களின் உயிரை பறித்த சம்பவம் ; இரவில் நடந்த அசம்பாவிதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/tragic-incident-claims-lives-of-two-young-men-1783750933"></link>
            <id>https://jvpnews.com/article/tragic-incident-claims-lives-of-two-young-men-1783750933</id>
            <summary type="text">கொழும்பு - கண்டி பிரதான வீதியில் உள்ள பத்தாலியா சந்திப்பு அருகே, நேற்று இரவு 10 மணிக்கு மோட்டார் சைக்கிளில் சென்ற இரண்டு இளைஞர்கள் விபத்தொன்றில் உயிரி...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">கொழும்பு - கண்டி பிரதான வீதியில் உள்ள பத்தாலியா சந்திப்பு அருகே, நேற்று இரவு 10 மணிக்கு மோட்டார் சைக்கிளில் சென்ற இரண்டு இளைஞர்கள் விபத்தொன்றில் உயிரிழந்ததாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
</p><p style="text-align: justify;">
விபத்தில் உயிரிழந்தவர்கள் ரடவடுன்ன பகுதியைச் சேர்ந்த 20 மற்றும் 21 வயதுடைய இரண்டு இளைஞர்கள் ஆவர்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b7bc4f20-edab-4821-8de9-273d514b5cfe/26-6a51e28abf01c.webp' /></p><h2 style="text-align: justify; ">மேலதிக விசாரணை</h2><p style="text-align: justify; ">

கொழும்பிலிருந்து அனுராதபுரத்திற்குச் சென்று கொண்டிருந்த ஒரு தனியார் பேருந்தை மோட்டார் சைக்கிள் முந்திச் செல்ல முயன்ற போது பேருந்து மீது மோதியதாகவும், பின்னர் கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்ற லொறி மீது மோதி விபத்துக்குள்ளானதாகவும் தெரிவிக்கபடுகின்றது.</p><p style="text-align: justify; "></p><p>
</p><p style="text-align: justify;">
விபத்தில் படுகாயமடைந்த இரண்டு இளைஞர்களும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட பின்னர் உயிரிழந்தனர்.</p><p style="text-align: justify; ">சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-07-11T06:24:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[மதம் மாற மறுத்த இந்திய மாணவி - உஸ்பெகிஸ்தானில் நேர்ந்த துயரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/kerala-student-killed-in-uzbekistan-due-conversion-1783750831"></link>
            <id>https://news.lankasri.com/article/kerala-student-killed-in-uzbekistan-due-conversion-1783750831</id>
            <summary type="text">உஸ்பெகிஸ்தானில் படித்து வந்த இந்திய மாணவி மதம் மாற மறுத்தால் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உஸ்பெகிஸ்தானில் கொல்லப்பட்ட இந்திய மனைவி 
...</summary>
            <content type="html"><![CDATA[<p>உஸ்பெகிஸ்தானில் படித்து வந்த இந்திய மாணவி மதம் மாற மறுத்தால் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><h3>

உஸ்பெகிஸ்தானில் கொல்லப்பட்ட இந்திய மனைவி</h3><p> 

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் ஹரிபாடு பகுதியைச் சேர்ந்தவர் பசந்த்-மினி தம்பதியின் மகளான சவரியா பசந்த்(21), உஸ்பெகிஸ்தானில் உள்ள புகாரா மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் படித்து வருகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dab6a699-6294-4b3e-b2d7-7e9c5cf30a2e/26-6a51e0b0804e2.webp' /></p><p> </p><p>

அதே கல்லூரியில், மலப்புரம் மாவட்டம் பெரிந் தல்மண்ணா பகுதியை சேர்ந்த சாதருள் அனாம் (21) என்ற மாணவரும் படித்து வந்துள்ளார். </p><p>

மாணவ, மாணவிகள் ஒரே விடுதியில் வேறு வேறு தளங்களில் வசித்து வந்துள்ளனர். </p><p>

இந்நிலையில், கடந்த ஜூலை 3 ஆம் திகதி சவரியாவை, சாதருல் அனாம் மடிக்கணினியால் அடித்ததில் உயிரிழந்து விட்டதாக சாகர்யாவின் உறவினர்களுக்கு தகவல் கிடைத்தது.</p><p> 

சாதருல் அனாமை உஸ்பெகிஸ்தான் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.&nbsp;</p><p></p><p>சவரியாவின் உறவினர்கள் உஸ்பெகிஸ்தான் சென்ற நிலையில், அவரது உடல் விமானம் மூலம் கேரளாவிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.</p><p> 

உறவினர்களின் கோரிக்கையை ஏற்று, ஆலப்புழை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சவரியாவின் உடல் மீண்டும் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் உடல் தகனம் செய்யப்பட்டது.</p><h3>

மதம் மாற வற்புறுத்தல் </h3><p>

இது குறித்து பேசிய சவரியாவின் மாமா ஜனீஷ், "உஸ்பெகிஸ்தானில் உள்ள ஒரு விசாரணை அதிகாரி, மடிக்கணினி மூலம் தலையில் அடித்ததில் அவர் உயிரிழக்கவில்லை. 

சவரியாவின் உடல் முழுவதும் காயங்கள் இருந்ததாகவும், இது அவர் நீண்ட நேரத் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கலாம் என்பதைக் காட்டுவதாகவும் என்னிடமே தெரிவித்தார். </p><p>

மேலும், சாதருள் அனாம் சவரியாவை மதம் மாற கட்டாயப்படுத்தியதை அங்குள்ள மாணவர்கள் பலரும் பார்த்ததாக என்னிடம் தெரிவித்தனர் என விசாரணை அதிகாரி கூறினார்" என்று தெரிவித்துள்ளார். </p><p>

இது தொடர்பாக ஹரிபாடு காவல்நிலையத்தில் அவரது குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-11T06:20:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[23 வயது காதலியுடன் லாட்ஜில் தங்கிய 19 வயது காதலனுக்கு நேர்ந்த கதி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/19-year-old-boy-stayed-in-a-lodge-die-chhattisgarh-1783750885"></link>
            <id>https://jvpnews.com/article/19-year-old-boy-stayed-in-a-lodge-die-chhattisgarh-1783750885</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;இந்தியா சத்தீஸ்கரில் காதலியுடன் லாட்ஜில் அறை எடுத்து தங்கிய இளைஞர் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;இந்தியா சத்தீஸ்கரில் காதலியுடன் லாட்ஜில் அறை எடுத்து தங்கிய இளைஞர் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சம்பவம்&nbsp; தொடர்பில் இந்திய ஊடகங்கள்&nbsp; தெரிவித்துள்ளதாவது,&nbsp;</p><p> 

சத்தீஸ்கரின் பிலாய் பகுதியில் உள்ள ஒரு லாட்ஜில் இளைஞர் ஒருவர் கடந்த புதன்கிழமை காலை சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். உயிரிழந்தவர் பிலாயின் 'கேம்ப்-1' பகுதியைச் சேர்ந்த , 19 வயது ஷதாப் ஷேக் என்று பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c9856cc1-982c-44e0-a3aa-e4ea7dc51f1d/26-6a51e0e68497a.webp' /></p><h2>கொலையா? தற்கொலையா? என விசாரணை&nbsp;</h2><p> </p><p>

ஸ்மிருதி நகர் பொலிஸ் நிலைய எல்லைக்குட்பட்ட கோஹ்கா பகுதியில் உள்ள 'ஹோட்டல் குனால்' என்ற இடத்தில் இச்சம்பவம் நடந்துள்ளது. </p><p>

ஷதாப் மற்றும் அவரது 23 வயது காதலி கடந்த 8 ஆம் திகதி மாலை&nbsp; &nbsp;லாட்ஜில் அறை எடுத்துத் தங்கியுள்ளனர். இருவரும் அறையில் வைத்து மது அருந்திய போது ஷதாப்பிற்கு அவரது முன்னாள் காதலியிடமிருந்து தொலைப்பேசி அழைப்பு வந்ததைத் தொடர்ந்து, தற்போதைய காதலியுடன் வாக்குவாதம் ஏற்பட்டதாகத் தெரிகிறது.</p><p></p><p> 

 வாக்குவாதம் தீவிரமடைய மதுபோதையிலிருந்த அந்தப் பெண் தனது மணிக்கட்டை அறுத்துக்கொண்டு காயப்படுத்திக்கொண்டதாகவும், பின்னர் மயக்கமடைந்ததாகவும் தெரிகிறது. </p><p>இந் நிலையில் காதலியின் ஸ்கார்ஃப் துணியைப் பயன்படுத்தி தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர். 

 இருவருக்கும் இடையே வாக்குவாதம் நடந்ததை அறிந்த ஷதாப்பின் நண்பர்கள் சிலர், இரவு 11 மணியளவில் ஹோட்டலுக்கு வந்ததாக ஹோட்டல் ஊழியர்கள் தெரிவித்தனர். 

அவர்கள் அறையின் கதவை பலமுறை தட்டியும் எந்தப் பதிலும் கிடைக்கவில்லை.</p><p></p><p> மறுநாள் காலை, அந்தப் பெண் அறையிலிருந்து வெளியே வந்து ஷதாப் தூங்கிக்கொண்டிருப்பதாக ஹோட்டல் ஊழியர்களிடம் கூறி விட்டு அங்கிருந்து சென்றுள்ளார்.</p><p> பின்னர் காலை 9 மணியளவில் ஷதாப்பின் நண்பர்கள் மீண்டும் வந்து அறைக்குள் சென்றபோது அவர் எந்த அசைவும் இன்றி கிடந்ததால் அவரை தனியார் வைத்தியசாலைக்கு தூக்கிச் சென்றனர். 

அங்கு உடலை பரிசோதித்த வைத்தியர்கள் ஷதாப் ஏற்கனவே இறந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர். </p><p>

 ஷதாப்பின் காதலியிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இளைஞரின் உடலை உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்த காவல்துறையினர், இது கொலையா? தற்கொலையா? என விசாரணை நடைபெற்று வருவதாக கூறப்படுகின்றது.&nbsp;</p><p><br></p>]]></content>
            <updated>2026-07-11T06:20:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Pavi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீர்கொழும்பு சிறைச்சாலை சேதங்களை விசாரிக்க விசேட குழு நியமனம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/new-committee-appoint-investigate-negombo-prison-1783740981"></link>
            <id>https://ibctamil.com/article/new-committee-appoint-investigate-negombo-prison-1783740981</id>
            <summary type="text">நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் ஏற்பட்ட சேதங்களை விசாரணை செய்வதற்காக விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.&amp;nbsp;இந்த மோதல் சம்பவம் குறித்து விசாரணை ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் ஏற்பட்ட சேதங்களை விசாரணை செய்வதற்காக விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p>இந்த மோதல் சம்பவம் குறித்து விசாரணை நடத்துவதற்காக மற்றுமொரு குழுவும் நியமிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளரும், சிறைச்சாலைகள் ஆணையாளருமான ஏ.சி. கஜநாயக்க தெரிவித்துள்ளார்.</p><p>நீர்கொழும்பு சிறைச்சாலை போதைபொருள் கடத்தல் வன்முறை சம்பவத்தில்&nbsp;8 சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் 21 கைதிகள் என மொத்தம் 29 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 100இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.&nbsp;</p><p></p><h2>உயிரிழந்த அதிகாரிகளுக்கு பதவி உயர்வு</h2><p> </p><p>

மேலும் மோதலில் உயிரிழந்த சிறைச்சாலை அதிகாரிகளுக்கு பதிவி உயர்வும், இழப்பீடுகளை வழங்குவதற்கும் சிறைச்சாலைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c50a870a-cecc-48fa-9a77-d47629d4c234/26-6a51c7eeca08d.webp' /></p><p>
நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலின் காரணமாக அந்த வளாகம் கைதிகளுக்கு பொருத்தமான இடமில்லை என முடிவு செய்யப்பட்டது. </p><p>

இந்த நிலையில் அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ள 600க்கும் மேற்பட்ட கைதிகளை வேறு சிறைச்சாலைகளுக்கு இடமாற்றம் செய்வதற்கான நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் சிறைச்சாலைகள் ஆணையாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.&nbsp; &nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-11T06:14:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[கடக ராசியில் சந்திரன்–குரு இணைவு: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையை மாற்றும் கஜகேசரி ராஜயோகம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/gajakesari-rajayoga-forms-on-july-14-who-get-luck-1783747489"></link>
            <id>https://manithan.com/article/gajakesari-rajayoga-forms-on-july-14-who-get-luck-1783747489</id>
            <summary type="text">ஜோதிட சாஸ்திரத்தின் படி, கிரகங்கள் குறிப்பிட்ட கால இடைவெளிக்குப் பிறகு தங்களின் ராசி மற்றும் நட்சத்திரங்களை தொடர்ந்து மாற்றிக்கொண்டே இருக்கும். இந்த க...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜோதிட சாஸ்திரத்தின் படி, கிரகங்கள் குறிப்பிட்ட கால இடைவெளிக்குப் பிறகு தங்களின் ராசி மற்றும் நட்சத்திரங்களை தொடர்ந்து மாற்றிக்கொண்டே இருக்கும். இந்த கிரகப் பெயர்ச்சிகளின் போது, சில சமயங்களில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கிரகங்கள் ஒன்றிணைந்து சக்திவாய்ந்த ராஜயோகங்களை உருவாக்குகின்றன. </p><p>இத்தகைய யோகங்கள் சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் அதிர்ஷ்டம், செல்வம், முன்னேற்றம் மற்றும் புதிய வாய்ப்புகளை ஏற்படுத்தும் என்று ஜோதிடத்தில் நம்பப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7e2fe340-d309-4284-879d-e8c946d00630/26-6a51d7f56711f.webp' /></p><p>
</p><p>
அந்த வகையில், ஜூலை மாதத்தில் பல முக்கியமான கிரகச் சேர்க்கைகள் நிகழவுள்ளன. அவற்றில் மிகவும் சிறப்பான ஒன்றாக, ஜூலை 14 அன்று கடக ராசியில் சந்திரன் மற்றும் குருபகவான் இணைவதால் சக்திவாய்ந்த கஜகேசரி ராஜயோகம் உருவாகிறது.</p><p>இதன் தாக்கமானது அனைத்து ராசிகளிலும் பிரதிபலித்ததாலும், தொழில் மற்றும், நிதி ரீதியில் உச்சகட்ட அதிர்ஷ்ட பலன்களை அனுபவிக்கப்போகும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.</p><p></p><h2>மேஷம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/17ed7903-0d9c-470b-a3ad-a0d7c2b5c170/26-6a51d7f614e28.webp' /></p><p>மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த குறுகிய கால ராஜயோகம் தொழிலில் நல்ல முன்னேற்றத்தை தரும். புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் உருவாகும்.</p><p>வேலை செய்பவர்களுக்கு அங்கீகாரமும் பதவி உயர்வுக்கான வாய்ப்பும் தானாகவே அமையும். தன்னம்பிக்கை அதிகரிக்கும், தொழிலில் இருந்த தடைகள் நீங்கும்.எதிர்பாராத பண வரவால் நிதி நிலை மேம்படும்.</p><p>குடும்பம் மற்றும் ஆரோக்கியம் தொடர்பான நீண்ட நாள் பிரச்சினைகள் குறையலாம். குடும்பத்தினரும் மேலதிகாரிகளும் ஆதரவாக இருப்பார்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு நல்ல லாபமும் புதிய வாய்ப்புகளும் கிடைக்கும்.
</p><h2>
கடகம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c116af29-5c9f-4ade-a6b8-a8991fe71cbe/26-6a51dea906b05.webp' /></p><p> கடக ராசிக்காரர்களுக்கு கடின உழைப்புக்கு நல்ல பலன் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் உருவாகி, வருமானம் அதிகரிக்கலாம். முக்கிய பொறுப்புகள் கிடைக்கும்.</p><p> பண நெருக்கடி குறைந்து, நிதி நிலை சீராகும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் அமையலாம். திருமணமானவர்களின் குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். </p><p>குழந்தைகள் முன்னேற்றம் அடைந்து சாதனைகள் படைக்கலாம். அதிர்ஷ்டம் அதிகரித்து, திடீர் பண ஆதாயங்களும் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
</p><h2>
சிம்மம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c1e3ad84-9ab6-4991-8c60-3bdb307b64bd/26-6a51dea9cd791.webp' /></p><p></p><p>சிம்ம ராசிக்காரர்களுக்கு நீண்ட நாட்களாக காத்திருந்த வாய்ப்புகள் கிடைக்கலாம். தொழிலில் வளர்ச்சி, நல்ல தொடர்புகள், அதிக தன்னம்பிக்கை மற்றும் குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும்.</p><p>வேலை செய்பவர்களுக்கு முன்னேற்றமும், மேலதிகாரிகளின் ஆதரவும் கிடைக்கும். இலக்குகளை எளிதாக அடைய முடியும். மனதில் தெளிவும் உற்சாகமும் பிறக்கும்.</p><p>பெற்றோர் மற்றும் குருவின் ஆதரவு கிடைக்கும். இந்த காலத்தில் நிதி நிலையில் இதுவரையில் இல்லாத அளவுக்கு அசுர வளர்ச்சி உண்டாகும்.</p><p><b>இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;</b> &nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b>&nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-11T06:14:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பகையை மிஞ்சிய பாசம்... நான்கு ஆண்டுகளுக்குப் பின் பேரப்பிள்ளைகளை சந்தித்த மன்னர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/king-charles-meet-harry-kids-after-4-years-1783746945"></link>
            <id>https://news.lankasri.com/article/king-charles-meet-harry-kids-after-4-years-1783746945</id>
            <summary type="text">சார்லஸ்



பிரித்தானிய மன்னர் சார்லஸ், நான்கு ஆண்டுகளுக்குப் பின் தனது இளைய மகனான ஹரியின் பிள்ளைகளை சந்தித்துள்ளார்.

பகையை மிஞ்சிய பாசம்...

...</summary>
            <content type="html"><![CDATA[<p>சார்லஸ்



பிரித்தானிய மன்னர் சார்லஸ், நான்கு ஆண்டுகளுக்குப் பின் தனது இளைய மகனான ஹரியின் பிள்ளைகளை சந்தித்துள்ளார்.
</p><h3>
பகையை மிஞ்சிய பாசம்...
</h3><p>
ராஜ குடும்ப மரபுக்கு மாறாக, விவாகரத்து பெற்ற, நடிகையான ஒரு பெண்ணை ராஜ குடும்பத்துக்குள் கொண்டு வந்த இளவரசர் ஹரி, அதன் தொடர்ச்சியாக உருவான பிரச்சினைகளை சமாளிக்க முடியாமல், ராஜ குடும்பத்தை விட்டு வெளியேறினார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f85fda3a-7cd9-4ac8-9838-a9a898175afc/26-6a51d1842c546.webp' /></p><p>
ராஜ குடும்பத்தை விட்டு மட்டுமல்ல, பிரித்தானியாவை விட்டே வெளியேறி அமெரிக்காவில் குடியமர்ந்த ஹரி மேகன் தம்பதியர், ராஜ குடும்பத்தைக் குறித்தும், ராணி கமீலா, இளவரசர் வில்லியம், இளவரசி கேட் குறித்தும் மோசமாக விமர்சனங்கள் முன்வைக்க, அவர்களுக்கும் ராஜ குடும்பத்துக்கும் இடையே பிரிவு ஏற்பட்டது.
</p><p>
ஹரி, தனது சுய சரிதைப் புத்தகமான ‘ஸ்பேர்’ எனும் புத்தகத்தில், தன் பங்குக்கு தன் குடும்பத்தைக் குறித்து மோசமாக எழுதி நிலைமையை மேலும் மோசமாக்கினார்.
</p><p>
ஒருபக்கம் ராஜ குடும்பத்துக்கும் ஹரி குடும்பத்துக்கும் இடையிலான பிளவு அதிகரித்துக்கொண்டே செல்ல, இன்னொரு பக்கம், ஹரியின் பிள்ளைகளான தனது பேரப்பிளைகளைக் காண ஏங்கினார் மன்னர் சார்லஸ்.
</p><p>
இந்நிலையில், ஹரி தனது இன்விக்டஸ் விளையாட்டுப் போட்டிகள் தொடர்பான ஒரு நிகழ்ச்சிக்காக பிரித்தானிய வரவேண்டிய நிலை ஏற்பட்டது.
</p><p>
அப்படி அவர் பிரித்தானியா வரும்போது மன்னரை சந்திப்பது என ஒரு திட்டம் உருவாக, இதை ஒரு வாய்ப்பாக வைத்து தன் பேரப்பிள்ளைகளை சந்திக்க திட்டமிட்டார் மன்னர்.&nbsp;</p><p></p><p>
அதன்படி, நேற்று வெள்ளிக்கிழமை மதியம், மன்னரும் ராணி கமீலாவும், ஹரி மேகன் தம்பதியர் மற்றும் அவர்களுடைய பிள்ளைகளான ஆர்ச்சி மற்றும் லிலிபெட்டை சந்தித்துள்ளார்கள்.
</p><h3>
சந்திப்பு நிகழ்ந்த இடம்</h3><p>

விடயம் என்னவென்றால், இந்த சந்திப்பு ஊடகவியலாளர்கள் காண லண்டனில் நடைபெறவில்லை. மன்னரின் தனிப்பட்ட இல்லமான ஹைக்ரோவ் இல்லம் என்னும் இடத்தில் அந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/389e09cb-d8fd-4377-ac4a-782d88fd3649/26-6a51d182ccbdc.webp' /></p><p>
இந்த ஹைக்ரோவ் இல்லம், லண்டனிலிருந்து சுமார் 2 மணி நேர பயண தூரத்தில் அமைந்துள்ளது.</p><h3>

எதனால் இப்படி ஒரு ரகசிய சந்திப்பு?
</h3><p>
மன்னர் சார்லஸ், ஹரி குடும்பத்தை சந்திக்க இந்த ஹைக்ரோவ் இல்லத்தை தேர்ந்தெடுக்க பல காரணங்கள் உள்ளன.
</p><p>
அதாவது, இது ஒரு தனிப்பட்ட முறையிலான சந்திப்பு. மன்னர் தன் மகன் குடும்பத்தை சந்திக்கிறார் அவ்வளவுதான். அதனால், அங்கு ஊடகவியலாளர்கள் யாருக்கும் அனுமதி இல்லை. ஆகவே, அந்த சந்திப்பு தொடர்பான புகைப்படங்களும் வெளியாகாது.
</p><p>
அத்துடன், ஹரியின் இன்விக்டஸ் நிகழ்ச்சி நடக்கும் இடம் பர்மிங்காம். அது ஹைக்ரோவ் இல்லத்திலிருந்து இரண்டு மணி நேர பயண தூரத்தில் அமைந்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b4e8e01c-42a0-4efb-b516-ff1a5adc2da9/26-6a51d1837c04a.webp' /></p><p>

மன்னரை சந்தித்தபின் ஹரி குடும்பம் இளவரசி டயானாவின் கல்லறையைக் காணச் செல்வதாக திட்டம். ஹைக்ரோவ் இல்லத்திலிருந்து அங்கு செல்ல இரண்டு மணி நேரம் ஆகும்.
</p><p>
அதேபோல, மன்னர் சார்லஸ் நிகழ்ச்சி ஒன்றிற்காக ஆக்ஸ்ஃபோர்ட்ஷையருக்கு வந்திருந்தார், அங்கிருந்து ஹைக்ரோவ் இல்லம் வர ஒரு மணி நேரம் ஆகும். ஆக, எல்லோருக்கும் பயணிக்க வசதியான ஒரு இடமாக ஹைக்ரோவ் இல்லம் அமைந்துவிட்டது.
</p><p>
எல்லாவற்றிற்கும் மேல், சிறு வயதில் இளவரசர்கள் ஹரியும் வில்லியமும் மகிழ்ச்சியுடன் செலவிட்ட வீடு ஹைக்ரோவ் இல்லம் என்பது கூடுதல் சிறப்பு!&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-11T06:14:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[நடிகை ஜான்வி கபூரின் வைர வாட்ச்.. விலை தெரிந்தால் ஷாக் ஆகிடுவீங்க..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/janhvi-kapoor-watch-price-shocks-everyone-1783744401"></link>
            <id>https://viduppu.com/article/janhvi-kapoor-watch-price-shocks-everyone-1783744401</id>
            <summary type="text">ஜான்வி கபூர்

தயாரிப்பாளர் கபூரின் மகளும், மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளுமான ஜான்வி கபூர் இந்திய அளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவராவார். பாலிவுட் சின...</summary>
            <content type="html"><![CDATA[<h2>ஜான்வி கபூர்
</h2><p>
தயாரிப்பாளர் கபூரின் மகளும், மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளுமான ஜான்வி கபூர் இந்திய அளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவராவார். பாலிவுட் சினிமாவில் அறிமுகமான இவர் தற்போது தென்னிந்திய சினிமா பக்கம் தனது கவனத்தை செலுத்தி வருகிறார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த பெத்தி திரைப்படம் சுமாரான வரவேற்பை பாக்ஸ் ஆபிஸில் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. </p><h2>

அன்ஷுலா திருமணம்</h2><p>

ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூரின் முதல் மனைவி மகன் அன்ஷுலா கபூரின் திருமண கொண்டாட்டம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. சினிமா திரையுலக சேர்ந்த பல நட்சத்திரங்கள் இந்த திருமணத்தில் கலந்துகொண்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d1678ce4-ab23-4213-b6b7-60726553e81e/26-6a51c7940caff.webp' /></p><p> 

ஜான்வி கபூர் அணிந்திருந்த வாட்ச்

ஜான்வி கபூர் பட்டு சேலையில் மிகவும் அழகாக வந்திருந்த புகைப்படங்களும், குடும்பத்தோடு சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களும் இணையத்தில் வைரலானது. இந்த திருமணத்தில் நடிகை ஜான்வி கபூர் பிங்க் நிற உடையில் வந்தபோது கட்டி இருந்த வாட்ச் கட்டியிருந்தார்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/38077db5-be73-4805-a950-b43936fe185f/26-6a51c794b8478.webp' /></p><p>இந்த நிலையில், ஜான்வி கபூர் கட்டி இருந்த அந்த வாட்சின் விலை ரசிகர்களுக்கு செம ஷாக் கொடுத்துள்ளது. அந்த வாட்சில் 251 வைர கற்கள், தங்க Dial பிளேட் ஆகியவை இருக்கிறது. மேலும் இந்த வாட்சின் விலை ரூ. 2.5 கோடி என தெரியவந்துள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-11T06:06:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையிலிருந்து வெளியேறும் இளைஞர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/young-people-seeking-employment-abroad-1783748583"></link>
            <id>https://tamilwin.com/article/young-people-seeking-employment-abroad-1783748583</id>
            <summary type="text">இலங்கையின் இளம் தலைமுறையினர் அண்மைக்காலமாக வெளிநாட்டுத் தொழில்வாய்ப்புகளை தேடிச் செல்வதில் அதிக ஆர்வத்தை வெளிக்காட்டத் தொடங்கியுள்ளனர்.

தற்போதைய நி...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் இளம் தலைமுறையினர் அண்மைக்காலமாக வெளிநாட்டுத் தொழில்வாய்ப்புகளை தேடிச் செல்வதில் அதிக ஆர்வத்தை வெளிக்காட்டத் தொடங்கியுள்ளனர்.
</p><p>
தற்போதைய நிலவரப்படி உலகெங்கிலும் உள்ள பல்வேறு நாடுகளில் 1.7 மில்லியனுக்கும் அதிகமான இலங்கையர்கள் பல்வேறு தொழில்வாய்ப்புகளைப் பெற்றுள்ளனர்.</p><h2>அந்நியச் செலாவணி</h2><p></p><p>
</p><p>
மேலும், கடந்த 2025ஆம் ஆண்டில் மட்டும், வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தொழிலாளர்கள் 8.2 பில்லியன் அமெரிக்க டொலர் அந்நியச் செலாவணியை நாட்டிற்கு அனுப்பியுள்ளனர் என்றும் தெரியவந்துள்ளது.
</p><p>
மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள புலம்பயெர் தொழிலாளர்களிடம் இருந்தே ஆகக்கூடுதலான அந்நியச் செலாவணி நாட்டுக்கு கிடைத்து வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2d89c585-9ca2-4b78-b347-894697f68d65/26-6a51dd0e787be.webp' /></p><p> அதேவேளை அண்மைக்காலமாக தென்கொரியாவில் பணியாற்றும் இலங்கைத் தொழிலாளர்களிடம் இருந்தும் குறிப்பிடத்தக்க அளவில் அந்நியச் செலாவணி கிடைக்கத் தொடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-11T06:05:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் இருந்து புறப்பட்ட துருக்கிய விமானம் அவசமாக தரையிறக்கம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/bird-hit-turkish-plane-emergency-landing-sri-lanka-1783749854"></link>
            <id>https://canadamirror.com/article/bird-hit-turkish-plane-emergency-landing-sri-lanka-1783749854</id>
            <summary type="text">&amp;nbsp;கொழும்பு கட்டுநாயக்கவிலிருந்து இஸ்தான்புல் நோக்கிப் புறப்பட்ட துருக்கிய ஏர்லைன்ஸ் வானூர்தி, அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.கட்டுநாயக்க பண்டாரநாயக...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கொழும்பு கட்டுநாயக்கவிலிருந்து இஸ்தான்புல் நோக்கிப் புறப்பட்ட துருக்கிய ஏர்லைன்ஸ் வானூர்தி, அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.</p><p>கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட போது பறவையுடன் மோதி, இலங்கையின் மேற்கு வான்பரப்பில் நீண்டநேரம் வட்டமிட்டுக்கொண்டிருந்த துருக்கி நாட்டு பயணிகள் விமானம் இன்று சனிக்கிழமை (11) காலை 10:24 மணியளவில் பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டுள்ளது.</p><p>

துருக்கி விமான சேவைக்குச் சொந்தமான 'TK-731' என்ற 'A330' ரக பரந்த உடற்பகுதியைக் கொண்ட இந்த விமானம், இன்று காலை 7:07 மணியளவில் 246 பயணிகளுடன் இஸ்தான்புல் நோக்கிப் புறப்பட்ட போதே இந்த விபத்துக்கு முகங்கொடுத்திருந்தது.</p><p>
</p><p>
விமானத்தில் பறவை மோதியதைத் தொடர்ந்து துருக்கிய ஏர்லைன்ஸ் வானூர்தி மீண்டும் கட்டுநாயக்க வானூர்தி நிலையத்தில், பாதுகாப்பாகத் தரையிறங்கியுள்ளதாக&nbsp; &nbsp;இலங்கை சிவில் வானூர்தி போக்குவரத்து அதிகார சபை உறுதிப்படுத்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9b5803a2-3010-4104-ba65-49ad4d4a2bce/26-6a51dce046341.webp' /></p><p>துருக்கி விமான சேவைக்குச் சொந்தமான 'TK-731' என்ற 'A330' ரக பரந்த உடற்பகுதியைக் கொண்ட இந்த விமானம், இன்று காலை 7:07 மணியளவில் 246 பயணிகளுடன் கட்டுநாயக்கவிலிருந்து புறப்பட்டுள்ளது.
</p><p>
பறவை மோதியதால் ஏற்பட்டுள்ள அவசர நிலைமையைத் தொடர்ந்து, விமானத்தைப் பாதுகாப்பாகத் தரையிறக்குவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டது.
</p><p>
விமானத்தின் எடையைக் குறைத்துப் பாதுகாப்பாகத் தரையிறக்கும் நோக்கில், முதலில் சிலாபம் வான்பரப்பில் மிகக் குறைந்த உயரத்தில் பறந்து எரிபொருளைக் குறைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த விமானம் , அதன் பின்னர் பாதுகாப்பாக தரையிரகியது.</p>]]></content>
            <updated>2026-07-11T06:02:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரோஹிணியும், கனகாவும் ஒரே இடத்தில்.. மாட்டிக்கொள்வாரா மனோஜ்.. சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்த வாரம் நடக்கவிருப்பது இதுதான்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/rohini-kanaga-in-manoj-showroom-siragadikka-aasai-1783739349"></link>
            <id>https://cineulagam.com/article/rohini-kanaga-in-manoj-showroom-siragadikka-aasai-1783739349</id>
            <summary type="text">சிறகடிக்க ஆசைசின்னத்திரையில் மிகவும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சிறகடிக்க ஆசை சீரியலில் தற்போது மனோஜின் இரண்டாம் திருமணம் எபிசோட்கள் விறுவிறுப்பா...</summary>
            <content type="html"><![CDATA[<h2>சிறகடிக்க ஆசை</h2><p>சின்னத்திரையில் மிகவும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சிறகடிக்க ஆசை சீரியலில் தற்போது மனோஜின் இரண்டாம் திருமணம் எபிசோட்கள் விறுவிறுப்பாக போய்க்கொண்டு இருக்கிறது. தனது குடும்பத்திற்கு தெரியாமல் கனகாவை இரண்டாம் திருமணம் செய்துகொண்டார் மனோஜ்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aec80988-cf3d-45c0-94f3-948da7432aeb/26-6a51b3d8a98e3.webp' /></p><p></p><p> 

அதுவும் ரோகிணியிடம் இருந்து இன்னும் விவாகரத்து கிடைக்காத நிலையில், மனோஜ் இப்படி செய்திருப்பது மிகப்பெரிய பின்விளைவை அவரது குடும்பத்திற்கு தரப்போகிறது என ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.</p><h2>அடுத்த வாரம்</h2><p> 

இந்த நிலையில், அடுத்த வாரம் <a href="https://www.youtube.com/watch?v=8daGMXF6uyo" target="_blank">சிறகடிக்க ஆசை</a> சீரியலில் நடக்கப்போவது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/70b3ddb6-53a1-4b48-a640-17643ae0059e/26-6a51b3d95c03a.webp' /></p><p>அதன்படி, அடுத்த வாரம் ஷோரூமில் மனோஜை பார்க்க அவருடைய இரண்டாவது மனைவி கனகா வருகிறார். அதே சமயத்தில் முதல் மனைவி ரோகிணியும் அங்கு வர, அதிர்ச்சியடைகிறார் மனோஜ். இதன்பின், கனகா மனோஜை பார்த்து Husband என அழைக்க, ரோகிணி ஷாக்காகிறார். இதன்பின் என்ன நடக்கப்போகிறது என்பதை வரும் வாரம் பொறுத்திருந்து பார்ப்போம்.</p>]]></content>
            <updated>2026-07-11T06:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[நடுவானில் திடீரென உடைந்த விமானத்தின் ஜன்னல் கண்ணாடி ; சீட் பெல்டால் தப்பிய உயிர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/plane-window-shatters-mid-air-sparks-panic-1783743996"></link>
            <id>https://canadamirror.com/article/plane-window-shatters-mid-air-sparks-panic-1783743996</id>
            <summary type="text">கிரீஸ் நாட்டில் இருந்து ஜெர்மனிக்கு அயர்லாந்து நாட்டின் ரயன்ஏர் விமான நிறுவத்திற்கு சொந்தமான விமானம் ஒன்றில் திடீரென ஜன்னல் கண்ணாடி உடைந்ததால் பெரும் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிரீஸ் நாட்டில் இருந்து ஜெர்மனிக்கு அயர்லாந்து நாட்டின் ரயன்ஏர் விமான நிறுவத்திற்கு சொந்தமான விமானம் ஒன்றில் திடீரென ஜன்னல் கண்ணாடி உடைந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.</p><p>

இந்த விபத்தின் போது ஜன்னல் அருகில் அமர்ந்திருந்த செர்பிய நாட்டைச் சேர்ந்த 60 வயது மதிக்கத்தக்க பயணி ஒருவர், காற்றின் கடுமையான அழுத்தத்தால் ஜன்னல் வழியாக வெளியே இழுக்கப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e6494bd7-d565-4414-8aff-ab36ae666c42/26-6a51c5fda30bf.webp' /></p><p>சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,</p><p>கிரீஸ் நாட்டில் இருந்து ஜெர்மனிக்கு அயர்லாந்து நாட்டின் ரயன்ஏர் விமான நிறுவத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று சென்று கொண்டிருந்தது. இதில் செர்பியாவைச் சேர்ந்த சுற்றுலா பயணி ஒருவரும் பயணித்தார். </p><p>அப்போது இவர் அருகில் இருந்து ஜன்னல் மீது ஏதோ ஒன்று வேகமாக மோதி, ஜன்னல் உடைத்துள்ளது. பின்னர் காற்றழுத்தம் காரணமாக அவரை விமானத்திற்கு வெளியே தள்ளியுள்ளது.</p><p> ஆனால், சீட் பெல்ட் அணிந்திருந்ததால் அவரை காற்றால் வெளியே இழுத்துச் செல்ல முடியவில்லை. அவரது தோள்பட்டை மற்றும் தலை ஏறக்குறைய வெளியே சென்றுள்ளது. ஆனால், அருகில் இருந்து பயணிகள் அவரை உள்ளே இழுத்ததால் உயிர் பிழைத்துள்ளார்.</p><p>
டயர் வெடிப்பது போன்ற சத்தமும் அலறல் சத்தமும் கேட்டு தாங்கள் விழித்துக்கொண்டதாகவும், அதன்பிறகு பாதிக்கப்பட்ட பயணியின் தலையும் தோள்களும் ஜன்னலுக்கு வெளியே இருப்பதை கண்டதாகவும் பயணிகள் கூறினர்.


</p><p>'ரயன்ஏர்' நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், "விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே ஒரு பயணியின் ஜன்னல் கழன்று விழுந்ததால், அது மீண்டும் புறப்பட்ட இடத்திற்கே திரும்பியது. விமானம் வழக்கமான முறையில் தரையிறங்கியது. பயணிகள் முனையத்திற்குத் திரும்பினர்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr">😱 Horrifying! A passenger was partially sucked through a shattered plane window at an altitude of 6,000 metres<br><br>Shortly after a Ryanair flight from Thessaloniki to Germany took off, a fragment broke off the engine and smashed a window.<br><br>The 61-year-old man began to be pulled… <a href="https://t.co/cax9KP96pY">pic.twitter.com/cax9KP96pY</a></p>&mdash; NEXTA (@nexta_tv) <a href="https://x.com/nexta_tv/status/2075607226245403026?ref_src=twsrc%5Etfw">July 10, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p> <script async="" src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>]]></content>
            <updated>2026-07-11T05:52:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பஹாமாஸ் விமான விபத்தில் 10 பேர் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/10-killed-in-bahamas-plane-crash-1783747698"></link>
            <id>https://canadamirror.com/article/10-killed-in-bahamas-plane-crash-1783747698</id>
            <summary type="text">அமெரிக்காவின் புளோரிடா மற்றும் கியூபாவுக்கு அருகில் அமைந்துள்ள&amp;nbsp; &amp;nbsp;பஹாமாஸ் நாட்டின் சிறிய இரகத்தைச் சேர்ந்த &#039;செஸ்னா 402&#039; என்ற விமானம் நடுவானில...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவின் புளோரிடா மற்றும் கியூபாவுக்கு அருகில் அமைந்துள்ள&nbsp; &nbsp;பஹாமாஸ் நாட்டின் சிறிய இரகத்தைச் சேர்ந்த 'செஸ்னா 402' என்ற விமானம் நடுவானில் சென்றுகொண்டிருந்தபோது திடீரென எதிர்பாராதவிதமாக விபத்துக்குள்ளாகியுள்ள நிலையில்,10 பேர் உயிரிழந்துள்ளனர்.</p><p> 



பஹாமாஸ் நாட்டின் 53 ஆவது சுதந்திர தின கொண்டாட்டங்கள் நடந்து வரும் வேளையில் இந்தத் துயர விமான விபத்து நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/14eae8a7-c002-4884-96a7-10b41fa375b1/26-6a51d473a04a1.webp' /></p><p> </p><p>



மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அவர் தனது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துள்ளார்.



மேலும், இந்த விபத்துக்கான காரணம் இன்னும் வெளியாகவில்லை.</p>]]></content>
            <updated>2026-07-11T05:51:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தீயணைப்பு அவசர அழைப்பு இலக்கத்தில் தொழில்நுட்பக் கோளாறு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/fire-emergency-hotline-faces-technical-issue-1783748829"></link>
            <id>https://jvpnews.com/article/fire-emergency-hotline-faces-technical-issue-1783748829</id>
            <summary type="text">தீயணைப்பு சேவைத் திணைக்களத்தின் அவசர அழைப்பு இலக்கத்தில் தற்காலிகமாக தொழில்நுட்பக் கோளாறு காரணமாக துண்டிப்பு ஏற்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத...</summary>
            <content type="html"><![CDATA[<p>தீயணைப்பு சேவைத் திணைக்களத்தின் அவசர அழைப்பு இலக்கத்தில் தற்காலிகமாக தொழில்நுட்பக் கோளாறு காரணமாக துண்டிப்பு ஏற்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்புலி தெரிவித்துள்ளார்.
</p><p>
எனவே, பொதுமக்கள் ஏதேனும் தீ விபத்துகள் அல்லது அவசர நிலைகள் குறித்து அறிக்கை செய்வதற்கு, அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் 117 என்ற அவசர அழைப்பு இலக்கத்தைத் தொடர்பு கொள்ளுமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aa32cd08-d065-422b-b876-36bbf4636d37/26-6a51d9a93597e.webp' /></p><p></p><p style="margin-left: 25px;"></p>]]></content>
            <updated>2026-07-11T05:50:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[31 உயிர்களை பலியெடுத்த சிறை வன்முறை - மரணங்கள் குறித்த விசாரணைக்கு அழுத்தம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/international-says-sri-lanka-answer-prison-deaths-1783739395"></link>
            <id>https://ibctamil.com/article/international-says-sri-lanka-answer-prison-deaths-1783739395</id>
            <summary type="text">நீர்கொழும்பு சிறையிலிருந்து பிற தடுப்புக்காவல் நிலையங்களுக்கு மாற்றப்பட்ட
கைதிகளின் மரணங்கள் குறித்து உடனடி விசாரணை நடத்த வேண்டும் என ஐக்கிய நாடுகள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீர்கொழும்பு சிறையிலிருந்து பிற தடுப்புக்காவல் நிலையங்களுக்கு மாற்றப்பட்ட
கைதிகளின் மரணங்கள் குறித்து உடனடி விசாரணை நடத்த வேண்டும் என ஐக்கிய நாடுகள்
மனித உரிமைகள் சபை உள்ளிட்ட சர்வதேச அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன.
</p><p>
31 உயிர்களை பலியெடுத்த சிறை வன்முறையின் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி
மனித உரிமை ஆர்வலர்கள் தொடர்ந்து போராடி வரும் நிலையில் இந்த அறிவிப்பு
வெளியாகியுள்ளது.
</p><p>
நீர்கொழும்பு சிறையில் நடந்த வன்முறையிலிருந்து உயிர்பிழைத்த கைதிகள்
சித்திரவதை செய்யப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை விசாரிக்க வெலிக்கடை
சிறைக்குள் செல்ல, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு அனுமதி
மறுக்கப்பட்டது குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழு
அறிவித்துள்ளது.</p><p></p><h2>பழிவாங்கும் கொலைகள் மற்றும் சித்திரவதைகள்&nbsp;</h2><p>

கைதிகள் மாற்றப்பட்ட இடங்களில் பழிவாங்கும் கொலைகள் மற்றும் சித்திரவதைகள்
நடந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை விசாரிக்க, தடுப்புக்காவல்
நிலையங்களுக்குள் தடையின்றி செல்ல இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு
அனுமதி வழங்கப்பட வேண்டுமென, ஐ.நா. மனித உரிமைகள் பேரவை கோரியுள்ளது.

நீர்கொழும்பு சிறையில் நடந்த வன்முறையைத் தொடர்ந்து பிற சிறைகளுக்கு
மாற்றப்பட்ட கைதிகளின் மரணங்கள் குறித்து உடனடி விசாரணை நடத்த வேண்டும் என
சர்வதேச மன்னிப்புச் சபை அழைப்பு விடுத்துள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/489f2f2e-02c3-43a3-b4ec-a0359284ed63/26-6a51d889efda2.webp' /></p><p>நீண்டகாலமாக அடையாளம் காணப்பட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு காண அரசாங்கங்கள்
தவறிவருவது, சிறைக்கைதிகளின் மற்றும் சிறைச்சாலை பணியாளர்களின் உயிர்களை
ஆபத்தில் தள்ளுவதாக சர்வதேச மன்னிப்புச் சபையின் தெற்காசிய பிராந்திய பிரதிப்
பணிப்பாளர் பாபு ராம் பந்த் வலியுறுத்தியுள்ளார்.
</p><p>
சித்திரவதைக்கு எதிரான ஐக்கிய நாடுகள் குழு உள்ளிட்ட சர்வதேச அமைப்புகள்
நீண்டகாலமாக சுட்டிக்காட்டி வரும் இந்தப் பிரச்சினைகளுக்கு உரிய நடவடிக்கை
எடுக்க அரசாங்கங்கள் தவறிவருவது, கைதிகளின் மற்றும் சிறைச்சாலை பணியாளர்களின்
உயிர்களுக்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
</p><p>
நீண்டகால விசாரணைக்கு முன்னரான தடுப்புக்காவல், சிறைகளில் நெரிசல், மற்றும்
போதைப்பொருள் குற்றங்களில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் ஏராளமானோரை
சிகிச்சைக்கு அனுப்பாமல் தடுத்து வைத்தல் ஆகியவை ஐ.நா. அறிக்கையில்
சுட்டிக்காட்டப்பட்ட குறிப்பிடத்தக்க பிரச்சினைகளாகும்.
</p><p>
இலங்கை நீதி அமைச்சு வெளியிட்ட அண்மைய புள்ளிவிவரங்களுக்கு அமைய, சுமார்
10,000 பேரை மாத்திரமே தங்கவைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட இலங்கையின்
சிறைகளில் 41,000-ற்கும் மேற்பட்டோர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-11T05:46:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[விண்வெளிக்கு செல்லும் இந்திய வம்சாவளி அனில் மேனன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/anil-menon-of-indian-origin-travel-to-space-nasa-1783748684"></link>
            <id>https://canadamirror.com/article/anil-menon-of-indian-origin-travel-to-space-nasa-1783748684</id>
            <summary type="text">&amp;nbsp; அமெரிக்காவின் மினிசோட்டா மாகாணத்தில் உள்ள மனியாபோலிஸ் நகரில், இந்திய மற்றும் உக்ரைன் குடியேறி பெற்றோர்களுக்கு பிறந்தவர் அனில் மேனன்(49). மருத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; அமெரிக்காவின் மினிசோட்டா மாகாணத்தில் உள்ள மனியாபோலிஸ் நகரில், இந்திய மற்றும் உக்ரைன் குடியேறி பெற்றோர்களுக்கு பிறந்தவர் அனில் மேனன்(49). மருத்துவம், ராணுவம் மற்றும் மனித விண்வௌி பயணம் ஆகியவற்றில் பல்வேறு புரிந்துள்ளார்.
</p><p>
 அமெரிக்க விமான படையில் பணியாற்றியபோது, ஆபரேஷன் ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

நாசாவில் கடந்த 2014ம் ஆண்டு தனது பணியை தொடங்கிய அனில் மேனன், சர்வதேச விண்வௌி நிலையத்தில் பணியாற்றும் விண்வௌி வீரர்களுடன் இணைந்து பணி புரிந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3e078e5f-5a77-466c-bf94-e9783ef38e06/26-6a51d84e44673.webp' /></p><p> 

அனில் மேனனின் மனைவி அன்னா வில்ஹெல்மும் ஒரு விண்வௌி வீராங்கனை ஆவார். இந்நிலையில், அனில் மேனன் வரும் 14ம் தேதி தனது முதல் சர்வதேச விண்வெளி பயணத்தை தொடங்க உள்ளார்.
</p><p>
ரஷ்ய விண்வௌி வீரர்களான பியோத்தர் டுப்ரோவ் மற்றும் அன்னா கிகினா ஆகியோருடன் கஜகஸ்தானில் உள்ள பைக்னோனூர் விண்வௌி ஏவுதளத்தில் இருந்து சோயுஸ் எம்எஸ்-9 விண்கலத்தில் பயணம் மேற்கொள்ள அனில் மேனன் தயாராகி வருகிறார்.
</p><p>
 8 மாதகாலம் விண்வௌி நிலையத்தில் தங்கவுள்ள அனில் மேனன், நீண்டகால விண்வௌி பயணத்தால் ஏற்படும் உடலியல் பாதிப்புகள், விண்வௌியில் மனித ரத்த ஓட்டம், திசுக்கள் வளர்ச்சி உள்பட பல்வேறு ஆராய்ச்சிகளில் ஈடுபட உள்ளார்.</p>]]></content>
            <updated>2026-07-11T05:43:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Erimalai</name>
            </author>
            <title type="text"><![CDATA[பளை பகுதியில் மின்சாரம் தாக்கி ஒருவர் மரணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/one-person-dies-after-electrocuted-in-palai-area-1783747674"></link>
            <id>https://tamilwin.com/article/one-person-dies-after-electrocuted-in-palai-area-1783747674</id>
            <summary type="text">கிளிநொச்சி -&amp;nbsp;பளை பகுதியில் மின்சாரம் தாக்கி ஒருவர் மரணமடைந்துள்ளார்.பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவிற்கு உட்பட்ட பனிக்கையடி
இயக்கச்சியை சேர்ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிளிநொச்சி -&nbsp;பளை பகுதியில் மின்சாரம் தாக்கி ஒருவர் மரணமடைந்துள்ளார்.</p><p>பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவிற்கு உட்பட்ட பனிக்கையடி
இயக்கச்சியை சேர்ந்த 31 வயதுடைய சிவகுமார் சிவதாஸ் இளைஞனே மின்சாரம்
தாக்கி மரணமடைந்துள்ளார்.</p><p></p><h2>மின்சார இணைப்பு வேலை</h2><p>
</p><p>குறித்த இளைஞன் மின்சார இணைப்பு வேலைகளை செய்து கொண்டிருக்கு ம்போது மின்சாரம்
தாக்கிய நிலையில் உடனடியாக பளை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது உயிரிழந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8e5b6413-b291-43c0-a856-820f87028b90/26-6a51d75641d5c.webp' /></p><p>இந்நிலையில், குறித்த சம்பவம் அப்பகுதியில் பேரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-11T05:42:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[உக்ரைனை தாக்கிய ரஷ்ய ஏவுகணைகள்: தலைநகர் கீவ்வில் பதற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/russian-missiles-targets-kyiv-6-injured-1783748492"></link>
            <id>https://news.lankasri.com/article/russian-missiles-targets-kyiv-6-injured-1783748492</id>
            <summary type="text">உக்ரைனிய தலைநகர் கீவ்வை குறிவைத்து சனிக்கிழமை அதிகாலை ரஷ்ய வான்வழித் தாக்குதலை முன்னெடுத்துள்ளது.அதிகாலை 3.38 மணியளவில் தொடங்கிய இந்த வான்வழித் தாக்கு...</summary>
            <content type="html"><![CDATA[<p>உக்ரைனிய தலைநகர் கீவ்வை குறிவைத்து சனிக்கிழமை அதிகாலை ரஷ்ய வான்வழித் தாக்குதலை முன்னெடுத்துள்ளது.</p><p>அதிகாலை 3.38 மணியளவில் தொடங்கிய இந்த வான்வழித் தாக்குதலில் நகரத்தின் பல்வேறு பகுதிகளில் வெடி சத்தம் கேட்கப்பட்டது.</p><p>இதையடுத்து கீவ் மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளுக்கு வான்வழித் தாக்குதல் எச்சரிக்கை ஒலி எழுப்பப்பட்டது.</p><p> கீவ் நகர இராணுவ நிர்வாக தலைவர் டைமூர் டகாசென்கோ டெலிகிராமில் தெரிவித்துள்ள தகவலில், தலைநகர் கீவ்வை குறிவைத்து எதிரிப் படைகள் ஏவுகணை தாக்குதல் தொடங்கியுள்ளனர். எனவே பொது மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு எச்சரிக்கை விடுத்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7dfa4c0d-f732-47cc-a6ad-3435e275b882/26-6a51d78de5b39.webp' /></p><p> கீவ் நகர மேயர் இந்த தாக்குதலில் பாலிஸ்டிக் ஏவுகணை பயன்படுத்தப்பட்டு இருப்பதாக உறுதிப்படுத்தியுள்ளார்.</p><p></p><h2>பாதிக்கப்பட்டவர்கள் விவரம்</h2><p>
இந்த தாக்குதலில் குறைந்தது 6 பேர் வரை காயமடைந்துள்ளனர். இதில் 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் 3 பேர் சம்பவ இடத்திலேயே முதலுதவி அளிக்கப்பட்டுள்ளது.</p><p>ரஷ்ய படைகளின் தாக்குதலில் டிப்ரோவ்ஸ்கி மற்றும் ஸ்வியாடோஷின்ஸ்கி மாவட்டங்கள் உள்ள பொதுமக்கள் பயன்பாட்டு கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன.</p><p> சேதத்தின் முழு அளவை மதிப்பீடும் பணியில் அதிகாரிகள் தற்போது ஈடுபட்டு வருகின்றனர்.</p><p> தாக்குதலுக்கு ரஷ்ய படைகள் பயன்படுத்திய ஏவுகணைகள் வகை குறித்து உக்ரைனிய படைகள் இன்னும் அதிகாரப்பூர்வ தகவல்கள் எதையும் வெளியிடவில்லை.</p><p> இருப்பினும் ரஷ்யாவின் பிரையன்ஸ்க் பிராந்தியத்தில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணை Iskander-M அல்லது S-300/S-400 ஏவுகணையாக இருக்கலாம் என உக்ரைன் தரப்பு சந்தேகம் எழுப்பி வருகிறது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-11T05:41:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரான் மீது 1000 ஏவுகணைகள் பாயும்: ட்ரம்ப் எச்சரிக்கை: ஹோர்முஸ் நீரிணையில் பதற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/ships-pass-through-strait-of-hormuz-1783742124"></link>
            <id>https://ibctamil.com/article/ships-pass-through-strait-of-hormuz-1783742124</id>
            <summary type="text">தொடர்ந்து மூன்றாவது இரவாக உலகின் மிக முக்கிய வர்த்தக நீர்வழியான ஹோர்முஸ் நீரிணை வழியாகப் போக்குவரத்து குறைந்துள்ளதாக&amp;nbsp;கப்பல் போக்குவரத்தை கண்காணிக...</summary>
            <content type="html"><![CDATA[<p>தொடர்ந்து மூன்றாவது இரவாக உலகின் மிக முக்கிய வர்த்தக நீர்வழியான ஹோர்முஸ் நீரிணை வழியாகப் போக்குவரத்து குறைந்துள்ளதாக&nbsp;கப்பல் போக்குவரத்தை கண்காணிக்கும் நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.</p><p>உலக எரிசக்தி சந்தைகளுக்கு மிக முக்கியமான நீர்வழியான ஹார்முஸ் நீரிணை கப்பல் போக்குவரத்துக்குத் திறந்திருப்பதாகவும், கப்பல்கள் தடையின்றி செல்லலாம் என்றும் ஈரான் பகிரங்கமாக அறிவிக்க வேண்டும் என்று வாஷிங்டன் அழுத்தம் கொடுத்து வரும் நிலையில் இந்த விடயம் வெளியாகி உள்ளது.</p><p>ஜூலை 9 மற்றும் 10- ஆம் திகதிக்கு இடையில், ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் வணிகப் போக்குவரத்து தொடர்ந்து மூன்றாவது இரவாகக் குறைந்திருந்தது.</p><p></p><h2>கொலை செய்ய ஈரான் முயற்சி</h2><p>சில நாட்களுக்கு முன்பு வரை வழக்கமாக 18 முதல் 22 கப்பல்கள் அந்த நீர்வழியைக் கடந்து சென்ற நிலையில், தற்போது 12 மணி நேரத்திற்குள் வெறும் ஆறு கப்பல்கள் மட்டுமே கடந்து சென்றதாக அது கூறுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e35e7271-2571-4917-bf0c-24057f19f633/26-6a51cb4b543a9.webp' /></p><p>அதே நேரத்தில், கப்பல்கள் தங்கள் பயணம் செய்வதை மறைப்பதற்காக டிரான்ஸ்பாண்டர்களை அணைத்து விடும் நடவடிக்கைகள் அதிகரித்து வருவதாகவும்&nbsp; விண்ட்வார்ட்&nbsp;நிறுவனம் கூறுகிறது.</p><p>தன்னைக் கொலை செய்ய ஈரான் முயற்சித்தால், ஆயிரக்கணக்கான ஏவுகணைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக&nbsp;அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.</p><p>அமெரிக்காவின் தற்போதைய ஜனாதிபதியான என்னை, படுகொலை செய்வோம் அல்லது படுகொலை செய்ய முயற்சிப்போம் என்ற தனது அச்சுறுத்தலை ஈரான் அரசாங்கம் செயல்படுத்தினால், 1000 ஏவுகணைகள் ஈரான் இஸ்லாமியக் குடியரசை நோக்கித் தயார் நிலையில் வைக்கப்பட்டு குறிவைக்கப்பட்டுள்ளன; மேலும் ஆயிரக்கணக்கான ஏவுகணைகள் உடனடியாகப் பின்தொடரும்!" என்று டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-11T05:38:42+00:00</updated>
        </entry>
    </feed>
