<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-07-13T21:16:06+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானுக்கு ரஷ்யா அனுப்பி வைத்துள்ள மிக சக்திவாய்ந்த பாரிய விமானம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/tu-214pu-doomsday-russia-massive-plane-iran-1783976305"></link>
            <id>https://tamilwin.com/article/tu-214pu-doomsday-russia-massive-plane-iran-1783976305</id>
            <summary type="text">ரஷ்யா, தனது மிக பாதுகாப்பான Tu-214PU எனப்படும் டூம்ஸ்டே விமானத்தை ஈரானுக்கு அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.&amp;nbsp;அமெரிக்கா - ஈரான் மோதல் மீண்டு...</summary>
            <content type="html"><![CDATA[<p>ரஷ்யா, தனது மிக பாதுகாப்பான Tu-214PU எனப்படும் டூம்ஸ்டே விமானத்தை ஈரானுக்கு அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.&nbsp;</p><p>அமெரிக்கா - ஈரான் மோதல் மீண்டும் அதிகரித்துள்ள நிலையில், இந்த விமானம் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.&nbsp;</p><p>Tu-214PU, கடுமையான அச்சுறுத்தல்களிலும் செயல்படக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்ட, பாதுகாப்பான தொடர்பு மற்றும் Command-Control அமைப்புகளுடன் கூடிய வானில் பறக்கும் கட்டளை மையம் ஆகும்.</p><p></p><h2>அதி பாதுகாப்பான அமைப்புக்கள்..&nbsp;</h2><p>அமெரிக்கா சமீபத்தில் ஈரானின் ஏவுகணை தளங்கள், ட்ரோன் அமைப்புகள், விமான பாதுகாப்பு அமைப்புகள் உள்ளிட்ட பல இராணுவ இலக்குகளை தாக்கியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/05ad9ea6-0ace-4849-9f99-05cd623ebc87/26-6a555478bdd96.webp' /></p><p>ரஷ்யாவின் டூம்ஸ்டே விமானம் தெஹ்ரானில் தரையிறங்கியது, இது ரஷ்யா மற்றும் ஈரான் இடையிலான உயர் மட்ட இராணுவ மற்றும் அரசியல் ஒத்துழைப்பை வெளிப்படுத்துகிறது.</p><p>Tu-214PU, Tu-214 பயணிகள் விமானத்தின் மேம்படுத்தப்பட்ட வடிவம் ஆகும். 1989இல் முதன்முதலாக பறந்த இந்த விமானம், பல்வேறு சிறப்பு பயன்பாடுகளுக்காக மாற்றப்பட்டுள்ளது. </p><p>அதில் மிகவும் நவீனமயானது இந்த Tu-214PU விமானம்.

இந்த நடவடிக்கை, மத்திய கிழக்கில் நிலவும் பதற்றத்தை மேலும் தீவிரப்படுத்தும் அபாயம் இருப்பதைக் காட்டுகிறது.</p><p></p><p></p><p> </p>]]></content>
            <updated>2026-07-13T21:11:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[ட்ரம்பின் அதிரடி திட்டம் ; ஹோர்முஸ் நீரிணையை பயன்படுத்தும் கப்பல்களுக்கு சிக்கல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/ships-using-strait-of-hormuz-face-disruption-1783961463"></link>
            <id>https://canadamirror.com/article/ships-using-strait-of-hormuz-face-disruption-1783961463</id>
            <summary type="text">ஈரானிய துறைமுகங்கள் மீது விதிக்கப்பட்டிருந்த கடற்படைத் தடைகளை மீண்டும் அமுல்படுத்துவதற்கு அமெரிக்கா நடவடிக்கை எடுத்து வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானிய துறைமுகங்கள் மீது விதிக்கப்பட்டிருந்த கடற்படைத் தடைகளை மீண்டும் அமுல்படுத்துவதற்கு அமெரிக்கா நடவடிக்கை எடுத்து வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். </p><p>

தனது உத்தியோகபூர்வ 'ட்ரூத் சோஷியல்' (Truth Social) சமூக ஊடக கணக்கில் பதிவொன்றை இட்டு அவர் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f7434315-92f6-4ec1-bd33-b96866c9a43e/26-6a551779bfc47.webp' /></p><p> 

அதிபர் ட்ரம்ப் பதிவில் ஹோர்முஸ் நீரிணை திறந்தே இருக்கிறது, ஈரான் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அது தொடர்ந்து திறந்திருக்கும். நாம் 'ஈரானிய கடற்படைத் தடையை' மீண்டும் அமுல்படுத்துகிறோம். </p><p>ஈரான் கப்பல்கள் அல்லது அவர்களின் வாடிக்கையாளர்கள் மட்டுமே உள்ளே நுழைவதையும் வெளியேறுவதையும் இது தடுக்கும் என்பதால் இதற்கு இப்பெயர் சூட்டப்பட்டது. </p><p>மற்ற அனைத்து நாடுகளும் இந்த நீரிணையை நியாயமான முறையிலும் திறந்த நிலையிலும் பயன்படுத்துவதற்கான வாய்ப்பைப் பெறும். 

இனிமேல் அமெரிக்கா, 'ஹோர்முஸ் நீரிணையின் பாதுகாவலன்' என்று அழைக்கப்படும். </p><p>ஆனால் நியாயத்தின் அடிப்படையில், உலகின் இந்த அதிதீவிர பதற்றமான பிராந்தியத்திற்கு பாதுகாப்பை வழங்குவதற்காக ஏற்படும் அனைத்து செலவுகளுக்கும் ஈடாக, அந்த கடல் வழித்தடத்தின் ஊடாக கொண்டு செல்லப்படும் அனைத்து பொருட்களுக்கும் 20% வீதத்தில் நமக்கு பணம் திருப்பிச் செலுத்தப்பட வேண்டும். </p><p>இதற்கான செயல்முறை மற்றும் கட்டமைப்பை உருவாக்கும் பணிகள் உடனடியாகத் தொடங்கப்படும்." என்றார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-13T20:48:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[இன்றிரவும் நாளையும் ஈரானை கடுமையாக தாக்குவோம்.. சற்றுமுன்னர் ட்ரம்ப் வெளியிட்ட அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/trump-us-going-strike-iran-tonight-tomorrow-1783974775"></link>
            <id>https://tamilwin.com/article/trump-us-going-strike-iran-tonight-tomorrow-1783974775</id>
            <summary type="text">இன்று இரவும் நாளையும் ஈரான் மீது அமெரிக்கா கடுமையான தாக்குதல் நடத்தும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.போர்நிறுத்த ஒப்பந்தம்இது ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இன்று இரவும் நாளையும் ஈரான் மீது அமெரிக்கா கடுமையான தாக்குதல் நடத்தும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.</p><h2>போர்நிறுத்த ஒப்பந்தம்</h2><p>இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "திங்கட்கிழமை இரவும் செவ்வாய்க்கிழமையும் ஈரான் மீது அமெரிக்கா கடுமையாகத் தாக்குதல் நடத்துவோம்" என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/38325d79-2073-45c7-aa96-a7654fc7d92c/26-6a554d5d14299.webp' /></p><p>மேலும், போர்நிறுத்த ஒப்பந்தம், ​​ஈரானுக்கான ஒரு சோதனை என்றும், அதை அவர்கள் மதிக்கவில்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.&nbsp;</p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-13T20:41:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இன்னும் இரண்டு ஆண்டுகளில் எல்லாம் தலைகீழாகும்! அரசுக்கு கடும் எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/anura-npp-government-opposition-party-political-1783970508"></link>
            <id>https://tamilwin.com/article/anura-npp-government-opposition-party-political-1783970508</id>
            <summary type="text">ஒன்றிணைந்த எதிர்கட்சியின் அரசியல் நடவடிக்கை என்னவென்றால் பல்வேறு எதிர்க்ட்சியைச் சேர்ந்த அரசியல்வாதிகளை ஒன்றிணைத்து தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக பொ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஒன்றிணைந்த எதிர்கட்சியின் அரசியல் நடவடிக்கை என்னவென்றால் பல்வேறு எதிர்க்ட்சியைச் சேர்ந்த அரசியல்வாதிகளை ஒன்றிணைத்து தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக பொதுவான அரசியல் முன்னணியை உருவாக்க முயற்சிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>இந்த ஒன்றிணைவு அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராக மக்கள் ஆதரவைத் திரட்டும் நோக்கத்துடன் நடைபெறுவதாகக் குறிப்பிடப்படுகின்றது.</p><p>நீதித்துறையின் சுயாதீனத்திற்கு அச்சுறுத்தல் என்ற குற்றச்சாட்டையும் எதிர்கட்சியினர் முன்வைக்கின்றனர்.ஊழல் நிதிமோசடி உள்ளிட்ட வழக்குகளை விசாரிக்கும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு மற்றும் பிற விசாரணை அதிகாரிகளின் எதிர்காலத்தில் அரசியல் பழிவாங்கல்களுக்கு உள்ளாகலாம் எனக் கூறப்படுகின்றது.</p><p>இதேபோல் இன்னும்&nbsp; இரண்டு வருடத்தில்&nbsp;வருகின்ற எங்களுடைய ஆட்சியிலே இவை அனைத்தும் விசாரிக்கப்பட்டு உங்களை நாங்கள் சிறையில் அடைப்போம்.அந்தக்காலம் விரைவிலே நடக்கும் எனவும் அரசாங்கத்தைப் பார்த்து நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் சவால் விடுத்துள்ளார்.</p><p>இந்த விடயம் தொடர்பான விரிவான தகவல்களை நியூஸ் இன்சைட் நிகழ்ச்சியில் காணலாம்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/P_igHhCuEKs" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-13T20:38:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[கோர விபத்தில் பலியான 19 வயது இளைஞன் ; தீவிரமாகும் விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/19-year-old-youth-dies-in-tragic-accident-1783974837"></link>
            <id>https://jvpnews.com/article/19-year-old-youth-dies-in-tragic-accident-1783974837</id>
            <summary type="text">வெலிவேரிய - பியகம வீதியின் 18ஆம் கட்டை பகுதியில் பியகம நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி ஒன்று, மற்றொரு முச்சக்கர வண்டியுடன் மோதி, பின்னர் காரொன்றில் மோதி...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">வெலிவேரிய - பியகம வீதியின் 18ஆம் கட்டை பகுதியில் பியகம நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி ஒன்று, மற்றொரு முச்சக்கர வண்டியுடன் மோதி, பின்னர் காரொன்றில் மோதி விபத்துக்குள்ளானது.</p><p style="text-align: justify; ">

இவ்விபத்தில் படுகாயமடைந்து உடுபில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட, முச்சக்கரவண்டி சாரதியான, கடுவெல பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞன் உயிரிழந்துள்ளார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3937f9b8-ed98-4f7c-89f3-b5e54d1b5a76/26-6a554bb6a8fbb.webp' /></p><p>
</p><p style="text-align: justify; ">
மேலும், காரின் சாரதி காயமடைந்து கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், மற்றைய முச்சக்கரவண்டியின் சாரதி வெலிவேரிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">மேலும், இச்சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-07-13T20:34:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரான் கடற்படைத் தளம் மீது அமெரிக்கா நள்ளிரவில் பயங்கர வான்வழித் தாக்குதல்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/us-military-attacks-iran-bandar-abbas-naval-base-1783970730"></link>
            <id>https://ibctamil.com/article/us-military-attacks-iran-bandar-abbas-naval-base-1783970730</id>
            <summary type="text">
ஈரானில் உள்ள நீர்மூழ்கிக் கப்பல் மற்றும் கப்பல் பராமரிப்பு தளம் ஒன்றின் மீது அமெரிக்க இராணுவப் படைகள் தாக்குதல் நடத்தியுள்ளன. 

நள்ளிரவில் இந்த பய...</summary>
            <content type="html"><![CDATA[<p>
ஈரானில் உள்ள நீர்மூழ்கிக் கப்பல் மற்றும் கப்பல் பராமரிப்பு தளம் ஒன்றின் மீது அமெரிக்க இராணுவப் படைகள் தாக்குதல் நடத்தியுள்ளன. </p><p>

நள்ளிரவில் இந்த பயங்கர வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
</p><p>
அமெரிக்க மத்திய கட்டளையகம் சற்றுமுன்னர் இதனை தெரிவித்துள்ளது.</p><p>
</p><p></p><h2>ட்ரோன் விமானங்கள்&nbsp;</h2><p>தெற்கு ஈரானில் உள்ள பண்டார் அப்பாஸ் கடற்படைத் தளத்தில் (Bandar Abbas Naval Base) இந்தத் துறைமுகம் அமைந்துள்ளது. </p><p>

குறித்த தளத்தின் மீது ஒரே திசையில் சென்று தாக்கும் பல ட்ரோன் விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ள கட்டளையகம், இது தொடர்பான காணொளி காட்சிகளையும் வெளியிட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/44b5501d-f504-4714-a0bf-364e8e44290e/26-6a5548c958487.webp' /></p><p>நேற்று இரவு நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல்களானது வணிகக் கப்பல்கள் மீது ஈரான் தொடர்ச்சியாக மேற்கொண்டு வரும் தாக்குதல் நடத்தும் திறனைப் பெருமளவில் சீர்குலைத்துள்ளது என கட்டளையகம் தெரிவித்துள்ளது.</p><p>

ஹோர்முஸ் நீரிணையில் (Strait of Hormuz) வணிகக் கப்பல்கள் மீது ஈரான் நடத்திய தாக்குதல்களுக்குப் பதிலடியாகவே இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக அமெரிக்கா ஏற்கனவே தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-13T20:24:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீர்கொழும்பு சிறையில் 9MM வெற்று தோட்டாக்கள்! CID யின் அதிர்ச்சி தகவல்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/9mm-spent-cartridges-found-at-negombo-prison-cid-1783961438"></link>
            <id>https://tamilwin.com/article/9mm-spent-cartridges-found-at-negombo-prison-cid-1783961438</id>
            <summary type="text">நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவம் தொடர்பில் பல்வேறு விடயங்கள் பரவலாகப் பேசப்பட்டுக் கொண்டு இருப்பதுடன் விசாரணைகளும் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவம் தொடர்பில் பல்வேறு விடயங்கள் பரவலாகப் பேசப்பட்டுக் கொண்டு இருப்பதுடன் விசாரணைகளும் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p><p>சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் 8 சிறைச்சாலை அதிகாரிகளும், 19 கைதிகளும் கொலை செய்யப்பட்டு இருந்தனர்.</p><p>இந்த சம்பவத்திற்கு காரணமானவர்களை அடையாளம் காணும் விசாரணைகளை குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.</p><p>இந்தநிலையில், 14 கைதிகள் துப்பாக்கி காயங்களுடன் மீட்கப்பட்டு இருக்கின்றார்கள்.அதில் இந்தியர் ஒருவர் உட்பட நான்கு பேரின் உடல்கள் அவர்களது உறவினர்களால் அடையாளம் காணப்பட்டுள்ளது.</p><p>துப்பாக்கிக் காயங்களுடன் உயிரிழந்த கைதிகளின் உடல்களில் இருந்து கண்டெடுக்கப்பட்ட மாதிரிகள் நீதிமன்றின் உத்தரவில் ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும், சுடுவதற்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கிகள் அடையாளம் காணும் விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகின்றது.</p><p>மேலும், துப்பாக்கிக் குண்டுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.துப்பாக்கிக் குண்டுகளை சுடுவதற்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களோ அல்லது சுட்ட நபரோ இதுவரை அடையாளம் காணப்படவில்லை.</p><p>இந்த விடயம் தொடர்பான விரிவான தகவல்களை செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சியில் காணலாம்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/vz-p2oPKElM" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-13T20:18:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[விடுதலை புலிகளின் தலைவர் தேரர்களை சந்திக்காதது ஏன்..! காலம் கடந்த உண்மைகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-lankan-tamils-sri-lanka-thero-1783971567"></link>
            <id>https://tamilwin.com/article/sri-lankan-tamils-sri-lanka-thero-1783971567</id>
            <summary type="text">விடுதலை புலிகளின் தலைவரோடு ஒரு புகைப்படம் கூட எடுத்ததில்லை என இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் குறிப்பிட்டுள்ளார்.&amp;nbsp;&quot;விடுதலை புலிகளின் தலைவரோடு யாராவது...</summary>
            <content type="html"><![CDATA[<p>விடுதலை புலிகளின் தலைவரோடு ஒரு புகைப்படம் கூட எடுத்ததில்லை என இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p>"விடுதலை புலிகளின் தலைவரோடு யாராவது ஒரு பௌத்த துறவி புகைப்படம் எடுத்ததை பார்த்ததுண்டா? </p><p>இல்லை, ஏனெனில் அவர் ஒரு பயங்கரவாதி, ஒழுக்கத்தோடு இருக்கும் நாங்கள் அவரொடு எல்லாம் சேரக்கூடாது” என கூறியுள்ளார்.&nbsp;</p><p>இந்நிலையில், இவர் வெளியிட்ட இந்த கருத்து தொடர்பில் கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.&nbsp;</p><p>அண்மையில் சில தேரர்களின் அநாகரீகமான நடவடிக்கைகள் அம்பலப்படுத்தப்பட்டு வருகின்றன.&nbsp;</p><p>இதற்கிடையில்,&nbsp;விடுதலை புலிகளின் தலைவரை குறித்த இந்த கருத்து தமிழ் அரசியல் ஆர்வலர்கள் மத்தியில் கடும் பேசுபொருளாகியுள்ளது.&nbsp;</p><p>இது உள்ளிட்ட நாட்டில் இடம்பெற்ற பல முக்கிய அரசியல் நகர்வுகளை ஆராய்கின்றது நாட்டு நடப்பு நிகழ்ச்சி,&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/h7yCxCoAiUU" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-13T20:18:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரான் விமானத்தை தடுக்க சொந்த நாட்டின் விமான நிலையத்தையே தாக்கிய ஏமன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/yemen-strikes-own-airport-to-block-iran-flight-1783973586"></link>
            <id>https://canadamirror.com/article/yemen-strikes-own-airport-to-block-iran-flight-1783973586</id>
            <summary type="text">ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் சனா நகரில் அமைந்துள்ள சனா சர்வதேச விமான நிலைய ஓடுதளம் மீது ஏமன் ராணுவம் தாக்கியுள்ளது. ஏமன் அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் சனா நகரில் அமைந்துள்ள சனா சர்வதேச விமான நிலைய ஓடுதளம் மீது ஏமன் ராணுவம் தாக்கியுள்ளது. </p><p>ஏமன் அரசின் ராணுவம் மற்றும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இடையே நாட்டின் முக்கிய உள்கட்டமைப்புகளை கைப்பற்றுவதில் உள்நாட்டு போர் இருந்து வருகிறது.

ஈரான் போர் நடந்துகொண்டிருக்கும் இந்த சமயத்தில் ஹவுதிக்கள் ஈரானுக்கு ஆதரவாகவும் ஏமன் அரசு எதிராகவும் இருந்து வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9923717d-0ea2-48d4-a9d4-7b0378ec6d7f/26-6a5546d430f0e.webp' /></p><p>
</p><p>

இந்நிலையில் ஹவுதிக்கள் கட்டுப்பாட்டில் உள்ள சனா சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்க முயன்ற ஈரானிய விமானத்தை தடுப்பதற்காக ஏமன் அரசுப் படைகள் அதன் ஓடுதளத்தின் மீது குண்டுவீசித் தாக்கியுள்ளன.</p><p>

இந்தத் தாக்குதலால் சனா விமான நிலையத்தின் செயல்பாடுகள் தற்காலிகமாக முடங்கின.


இதனையடுத்து, அந்த ஈரானிய விமானம் செங்கடலின் மேற்கு கடற்கரையில் உள்ள அல் ஹுதைதா விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டு, அங்குப் பத்திரமாக தரையிறங்கியதாக ஈரானிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
</p><p>
சனாவைப் போலவே அல் ஹுதைதா பகுதியும் ஹவுதி கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது.

ஏமன் ராணுவத்தின் தாக்குதல் குறித்து பேசிய ஹவுதி அமைப்பின் ராணுவ செய்தி தொடர்பாளர் யஹ்யா சாரி, சனா விமானம் நிலையம் மீதான தாக்குதலுக்கு தகுந்த பதிலடி தரப்பும் என சூளுரைத்துள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-13T20:13:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[இரண்டு மாதம் வாட்டியெடுத்த வெப்ப அலை... பிரித்தானியாவில் 2,700 பேர்கள் மரணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/england-and-wales-heatwaves-1783964885"></link>
            <id>https://news.lankasri.com/article/england-and-wales-heatwaves-1783964885</id>
            <summary type="text">ஜூன் மாதத்தில் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் பகுதிகளைப் பாதித்த வெப்ப அலை, அதன் உச்சக்கட்டமாக இருந்த மூன்று நாட்களில் நாளொன்றுக்கு சுமார் 440 பேர்களின் உ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜூன் மாதத்தில் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் பகுதிகளைப் பாதித்த வெப்ப அலை, அதன் உச்சக்கட்டமாக இருந்த மூன்று நாட்களில் நாளொன்றுக்கு சுமார் 440 பேர்களின் உயிரைப் பறித்ததாக விஞ்ஞானிகள் மதிப்பிட்டுள்ளனர்.</p><h2>சிவப்பு எச்சரிக்கை</h2><p>
</p><p>ஜூன் மாதம் மொத்தம் நிலவிய வெப்ப அலை மற்றும் மே மாதத்தில் ஏற்பட்ட ஒரு வெப்ப அலை ஆகியவற்றின் காரணமாக, சுமார் 2,700 பேர்கள் அகால மரணமடைந்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5fc9b0f8-e095-42b7-80b1-d8efe96d23ca/26-6a5526660ec33.webp' /></p><p> </p><p>காலநிலை நெருக்கடியால் தீவிரமடைந்து வரும் கடும் வெப்பத்தின் ஆபத்தை இந்தத் தரவுகள் மிகத் தெளிவாக எடுத்துக்காட்டுகின்றன. </p><p>வெளியாகியுள்ள ஆய்வுகலின் அடிப்படையில், மனித நடவடிக்கைகளால் இதுவரை ஏற்பட்டுள்ள 1.4 டிகிரி செல்சியஸ் அளவிலான புவி வெப்பமடைதல் இல்லாவிட்டால், பாதிக்கப்பட்டவர்களில் 40 சதவீதத்திற்கும் அதிகமானோர் இறந்திருக்க வாய்ப்பில்லை என்றே தெரிய வந்துள்ளது. </p><p>ஒப்பீட்டளவில் பார்த்தால், அரசுப் புள்ளிவிவரங்களின்படி, சாலை விபத்துகளால் நாளொன்றுக்கு சுமார் நான்கு பேரும், மது மற்றும் போதைப்பொருள் பயன்பாட்டால் நாளொன்றுக்கு சுமார் 35 பேரும் மரணமடைகின்றனர். </p><p>ஜூன் மாத வெப்ப அலை உச்சக்கட்டத்தின் விளைவாக, இங்கிலாந்து சுகாதாரப் பாதுகாப்பு முகமையும் வானிலை ஆய்வு மையமும் முன்னெப்போதும் இல்லாத வகையில் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு சிவப்பு எச்சரிக்கைகளை விடுத்தன.</p><p></p><p> </p><p>இது அனைவரின் உயிருக்கும் ஆபத்து இருப்பதாக எச்சரித்தாலும், அதிக வெப்பநிலை மற்றும் ஈரப்பதத்தால் இளையோர், முதியோர் மற்றும் ஏற்கனவே நோய் உள்ளவர்கள் அதிக ஆபத்தில் உள்ளதாக அறிவித்திருந்தது. </p><p>2020 மற்றும் 2024-க்கு இடைப்பட்ட காலத்தில், கோடைக்கால வெப்ப அலைகளால் பிரித்தானியாவில் 10,000-க்கும் மேற்பட்டோர் மரணமடைந்ததாக UKHSA முன்பு கண்டறிந்தது. </p><p>இதனிடையே, வேகமாக மோசமடைந்து வரும் தீவிர வானிலை நிகழ்வுகளிலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்கான பிரித்தானிய அரசாங்கத்தின் திட்டங்கள் போதுமானதாக இல்லை என்று பருவநிலை மாற்றக் குழு ஒரு தசாப்தத்திற்கும் மேலாக எச்சரித்து வருகிறது.</p><h2>கூடுதல் வெப்பம்</h2><p> </p><p>ஜூன் மாதத்தில் நிலவிய வெப்ப அலை ஐரோப்பாவில் இதுவரை பதிவானவற்றிலேயே மிகவும் பரவலானதாகவும் தீவிரமானதாகவும் இருந்தது; இது 20,000-க்கும் மேற்பட்ட உயிர்களைப் பலிவாங்கியதாக மதிப்பிடப்பட்டுள்ளது. </p><p>மே மாத வெப்ப அலையின்போது மேற்கு லண்டனில் அதிகபட்சமாக 35.1 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது; அதேவேளையில், ஜூன் மாதத்தில் தொடர்ந்து மூன்று நாட்களாக சாதனை அளவிலான வெப்பநிலைகள் நிலவிய சூழல், கிழக்கு ஆங்லியாவில் 37 டிகிரி செல்சியஸுக்கும் அதிகமான வெப்பநிலை பதிவானது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/00f10759-f94e-4065-af03-cc65b5cb5252/26-6a552666eabe0.webp' /></p><p> </p><p>2026 மே 21 முதல் 29 வரை நீடித்த மே மாத வெப்ப அலைக் காலத்தில், வெப்பம் தொடர்பான காரணங்களால் 550 பேர் மரணமடைந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது. </p><p>இவர்களில் கிட்டத்தட்ட 60 சதவீதம் பேர்கள், பருவநிலை நெருக்கடியால் ஏற்பட்ட கூடுதல் வெப்பத்தின் விளைவாக மரணமடைந்துள்ளனர்.
மேலும், ஜூன் 24-26 வரையிலான உச்சக்கட்ட வெப்ப அலை காலகட்டத்தை உள்ளடக்கிய, ஜூன் 18 முதல் 28 வரையிலான காலகட்டத்தில் சுமார் 2,200 வெப்ப மரணங்கள் நிகழ்ந்ததாக அந்த ஆய்வு சுட்டிக்காட்டியது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-13T19:57:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[வடக்கிற்கான ரயில் சேவைகள் மீண்டும் வழமைக்கு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/northern-railway-services-return-to-normal-1783971301"></link>
            <id>https://jvpnews.com/article/northern-railway-services-return-to-normal-1783971301</id>
            <summary type="text">கொழும்பில் இருந்து காங்கேசன்துறை நோக்கி பயணிக்கும் நகராந்தர கடுகதி ரயில் சேவையை வாரத்திற்கு நான்கு நாட்களுக்கு மாத்திரம் வரையறுப்பதற்கு ரயில்வே நிர்வா...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">கொழும்பில் இருந்து காங்கேசன்துறை நோக்கி பயணிக்கும் நகராந்தர கடுகதி ரயில் சேவையை வாரத்திற்கு நான்கு நாட்களுக்கு மாத்திரம் வரையறுப்பதற்கு ரயில்வே நிர்வாகம் இதற்கு முன்னர் எடுத்திருந்த தீர்மானத்தை மாற்றி, இன்று (14) முதல் அதனை வழமை போல் இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. </p><p style="text-align: justify; ">

ரயில் இயந்திரத் தொகுதிகளில் தட்டுப்பாடு நிலவுவதாக கூறி, இதற்கு முன்னர் செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் இந்த ரயிலின் சேவையை நிறுத்துவதற்கு ரயில்வே நிர்வாகம் தீர்மானித்திருந்தது.</p><p style="text-align: justify; margin-left: 25px;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4689ca62-a0a3-4536-b7dc-71bbfcfa7c07/26-6a553de764aed.webp' /></p><h2 style="text-align: justify; margin-left: 25px;">&nbsp;வடக்கு ரயில் பாதை</h2><p style="text-align: justify; "> 

எவ்வாறாயினும், இந்த கட்டுப்பாடுகள் காரணமாக வடக்கு ரயில் பாதையைப் பயன்படுத்தும் பயணிகள் பெரும் அசௌகரியங்களுக்கும் பாதிப்புகளுக்கும் உள்ளாவதாக ரயில்வே தொழிற்சங்கங்கள் நிர்வாகத்திற்கு சுட்டிக்காட்டியிருந்தன. </p><p style="text-align: justify; ">

விடயங்களை கருத்திற்கொண்டு, இதற்கு முன்னர் ரத்து செய்யப்பட்டிருந்த செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளிலும் இந்த நகராந்தர கடுகதி ரயிலை நாளை முதல் அமலுக்கு வரும் வகையில் மீண்டும் சேவையில் ஈடுபடுத்துவதற்கு ரயில்வே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

இதற்கமைய, பயணிகள் வழமை போன்று வார நாட்களில் எவ்வித தடையுமின்றி இந்த சேவையைப் பெற்றுக்கொள்ள முடியும்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-07-13T19:35:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[கலிபோர்னியாவை உலுக்கிய இன்னொரு நிலநடுக்கம்: மிகப்பெரிய ஆபத்தை எச்சரிக்கும் நிபுணர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/california-earthquake-experts-warn-1783971031"></link>
            <id>https://news.lankasri.com/article/california-earthquake-experts-warn-1783971031</id>
            <summary type="text">தெற்கு கலிபோர்னியாவில் இரண்டு நாட்களில் இரண்டாவது பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதை அடுத்து நிபுணர்கள் மிகப்பெரிய அச்சுறுத்தல் தொடர்பில் எச்சரித்துள்ளனர...</summary>
            <content type="html"><![CDATA[<p>தெற்கு கலிபோர்னியாவில் இரண்டு நாட்களில் இரண்டாவது பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதை அடுத்து நிபுணர்கள் மிகப்பெரிய அச்சுறுத்தல் தொடர்பில் எச்சரித்துள்ளனர்.</p><h2>பெரிய மற்றும் பேரழிவை</h2><p>
</p><p>கலிபோர்னியாவில் விரைவில் மிகப்பெரிய நிலநடுக்கம் ஒன்று ஏற்படக்கூடும் என்று நிபுணர் ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/385e7b08-3cee-4aa1-af11-3199a6844c26/26-6a553e9241b2b.webp' /></p><p> </p><p>திங்கள்கிழமை உள்ளூர் நேரம் காலை 9:40 மணியளவில், லாஸ் ஏஞ்சல்ஸிலிருந்து 90 மைல்களுக்கும் குறைவான தொலைவில் 4.3 ரிக்டர் அளவுள்ள நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது. </p><p>மட்டுமின்றி, ரிக்டர் அளவுகோலில் 4.1 அளவுள்ள நில அதிர்வு ஏற்பட்ட 24 மணி நேரத்திற்கும் குறைவான நேரத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. </p><p>இந்த நிலையில், ஒரு பெரிய மற்றும் பேரழிவை ஏற்படுத்தக்கூடிய நிலநடுக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் நெருங்கி வந்துள்ளதாக கலிஃபோர்னியாவைச் சேர்ந்த புவி இயற்பியலாளர் ஒருவர் எச்சரித்துள்ளார். </p><p>இரு நிலநடுக்கங்களும் ஒப்பீட்டளவில் சிறியவையாக இருந்ததோடு, அதனால் எந்தவொரு காயங்களும் பதிவாகவில்லை என்றாலும், ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த இந்த நில அதிர்வு, கார்லாக் பிளவுக்கோட்டையும் பெரும் பாதிப்புக்குள்ளான சான் ஆண்ட்ரியாஸ் பிளவுக்கோட்டையும் இணைக்கும் ஒரு அரிதான சந்திப்பில் ஏற்பட்டதாகப் புவி இயற்பியலாளர் ஸ்டெஃபான் பர்ன்ஸ் எச்சரித்துள்ளார்.</p><p></p><p> </p><p>கார்லாக் என்பது தெற்கு கலிபோர்னியாவில் உள்ள ஒரு பெரிய கிழக்கு-மேற்குப் பிளவு ஆகும், அதேசமயம் சான் ஆண்ட்ரியாஸ் என்பது தெற்கு கலிபோர்னியாவிலிருந்து வடக்கே வளைகுடாப் பகுதி வழியாக பசிபிக் பெருங்கடலுக்குள் செல்லும் 800 மைல் நீளமுள்ள ஒரு பிளவு ஆகும். </p><p>இந்த இரண்டு பிளவுப் பகுதிகளும் சந்திக்கும் இடத்தில், அதாவது கடந்த 26 ஆண்டுகளுக்கும் மேலாக இவ்வளவு தீவிரமான நிலநடுக்கம் ஏற்படாத ஒரு பகுதியில் இந்த நிலநடுக்கம் தாக்கியதாக பர்ன்ஸ் எச்சரித்துள்ளார். </p><p>விஞ்ஞானியின் கூற்றுப்படி, அந்தச் சந்திப்பில் நடந்த இந்த சிறிய நிகழ்வானது, நிலத்தடியில் அழுத்தம் அதிகரித்து வருவதற்கான ஆரம்ப அறிகுறியாக இருக்கலாம் என்றும், கலிபோர்னியாவில் ஏற்படவிருக்கும் அடுத்த பெரிய நிலநடுக்கத்தில் கார்லாக் பிளவு ஒரு பங்கு வகிக்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7dfabc62-edd3-468e-9c0e-e343a112d53a/26-6a553e932b117.webp' /></p><p> </p><p>நீண்ட காலமாக கலிபோர்னியாவில் விஞ்ஞானிகள் பேரச்சத்துடன் எதிர்பார்க்கும் அந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு 8-ஐ விட வலிமையானதாக இருக்க வாய்ப்புள்ளது என்றும், சான் ஆண்ட்ரியாஸ் கடற்பரப்பு வழியாகப் பரவும்போது மேற்கு கடற்கரையைப் பேரழிவுக்கு உள்ளாக்கும் அளவுக்கு மிகப் பெரியதாக இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் அஞ்சுகின்றனர். </p><p>பர்ன்ஸ் தெரிவிக்கையில், கார்லாக் (Garlock) பிளவு மண்டலம் ஒரு பெரும் நிலநடுக்கத்தை ஏற்படுத்தத் தயாரான நிலையில் உள்ளது. இது ரிக்டர் அளவில் 7 அல்லது அதற்கும் அதிகமாகவும், ஏன் 7.5 அல்லது அதற்கு மேற்பட்ட அளவாகக் கூட இருக்கலாம் என்கிறார். </p><p>திங்களன்று ஏற்பட்ட 4.3 ரிக்டர் அளவுள்ள நிலநடுக்கம் கார்லாக் பிளவுப் பகுதியில் (Garlock Fault) ஏற்பட்டதாகக் கருதப்படுகிறது; எனினும், இது சான் ஆண்ட்ரியாஸ் பிளவுடன் கார்லாக் பிளவு இணையும் இடத்திலிருந்து கிழக்கே சுமார் 70 மைல் தொலைவில் நிகழ்ந்துள்ளது. </p><p>இதனிடையே, இந்த நிலநடுக்கங்கள் மாபெரும் நிலநடுக்கத்திற்கான முன்னோட்ட அதிர்வுகளாக இருப்பதற்கான பல முக்கிய காரணங்களை பர்ன்ஸ் குறிப்பிட்டுள்ளார். </p><p>கலிபோர்னியாவில் உள்ள சான் ஆண்ட்ரியாஸ் மற்றும் பிற புவிப்பிளவுகள் குறித்த முந்தைய ஆய்வுகள், 2043-ஆம் ஆண்டிற்குள் ரிக்டர் அளவில் 6.7-க்கும் அதிகமான தீவிரத்தன்மை கொண்ட ஒரு பெரும் நிலநடுக்கம் ஏற்படுவதற்கு 99 சதவீத வாய்ப்பு இருப்பதாகக் கண்டறிந்துள்ளன. </p><p>லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு அடியில் ஒரு மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டால், அது நூற்றுக்கணக்கான உயிரிழப்புகளையும், பல்லாயிரக்கணக்கான காயங்களையும், 200 பில்லியன் டொலர் மதிப்பிலான சேதங்களையும் ஏற்படுத்தும் என்று USGS-ஐச் சேர்ந்த நிபுணர்கள் கணித்துள்ளனர்.</p><h2>ரிக்டர் அளவுகோலில் 8</h2><p> </p><p>கார்லாக் மற்றும் சான் ஆண்ட்ரியாஸ் ஆகிய இரண்டும் பக்கவாட்டு நகர்வுப் பிளவுகள் என்றும், அவை நெடுஞ்சாலையில் இரண்டு டிராக்டர்-டிரெய்லர்கள் எதிர் திசைகளில் அருகருகே செல்வதைப் போல, புவியின் மேலோட்டின் இரண்டு பிரம்மாண்டமான பாறைகள் கிடைமட்டமாக ஒன்றையொன்று கடந்து சரியும் இடங்கள் என்றும் பர்ன்ஸ் விளக்கமளித்துள்ளார். </p><p>கார்லாக் பிளவு இடப்புறமாக நகர, சான் ஆண்ட்ரியாஸ் பிளவு வலப்புறமாக நகர்கிறது. இவ்விரு பிளவுகளும் கலிபோர்னியாவின் ஃபிரேசியர் பூங்காவிற்கு அருகில் சந்தித்து, சான் ஆண்ட்ரியாஸ் பிளவின் ஒரு குறிப்பிடத்தக்க வளைவில் சிக்கலான தள்ளுதல் மற்றும் இழுத்தல் மண்டலத்தை உருவாக்குகின்றன.</p><p> பல தசாப்தங்கள் அல்லது நூற்றாண்டுகளாக, பிணைக்கப்பட்ட பகுதிகளில், குறிப்பாக சான் ஆண்ட்ரியாஸ் பிளவுப் பகுதியில் உள்ள இந்த வளைவுக்கு அருகில், மிகப்பெரிய அளவிலான அழுத்தமும் ஆற்றலும் குவிய்கின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c794aaf8-d681-48ba-bb4e-b0b9d58055b5/26-6a553e93ce9ae.webp' /></p><p> </p><p>சிக்கிய பகுதிகள் இறுதியாகத் திடீரென நழுவும்போது, ​​அது சேமித்து வைத்திருந்த நில அதிர்வு ஆற்றல் அனைத்தையும் ஒரு நிலநடுக்கமாக வெளியிடுகிறது.</p><p> இது, கார்லாக் பிளவைப் பொறுத்தவரை, ரிக்டர் அளவுகோலில் ஏறக்குறைய 8 அளவுள்ள ஒரு நிகழ்வை உருவாக்கும் ஒரு பெரிய பிளவைத் தூண்டக்கூடும்.</p><p>


தெற்கு கலிபோர்னியாவின் இப்பகுதி இன்னும் தீவிரமான அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளது என்றும், சான் ஆண்ட்ரியாஸ் (San Andreas) பிளவு கடந்த 1,000 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கான மிக உயர்ந்த நில அதிர்வு அழுத்தத்தை எதிர்கொண்டு வருகிறது என்றும் விஞ்ஞானிகள் ஏற்கனவே எச்சரித்துள்ளனர்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-13T19:29:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரான்சில் பெரும் அனர்த்தம்! பற்றி எரிந்த புகழ்பெற்ற ஃபோன்டைன்பிளூ காடுகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/paris-wildfire-transport-services-disrupted-1783963238"></link>
            <id>https://ibctamil.com/article/paris-wildfire-transport-services-disrupted-1783963238</id>
            <summary type="text">பிரான்ஸ் நாட்டின் புகழ்பெற்ற ஃபோன்டைன்பிளூ காடுகள் பாரிய தீ விபத்திற்குள்ளாகியுள்ளன.

பாரிஸ் நகரின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இது பெரும் பாதிப்பை ஏற...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரான்ஸ் நாட்டின் புகழ்பெற்ற ஃபோன்டைன்பிளூ காடுகள் பாரிய தீ விபத்திற்குள்ளாகியுள்ளன.</p><p>

பாரிஸ் நகரின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இது பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
</p><p>
பாரிஸிலிருந்து தென்கிழக்கே சுமார் 60 கி.மீ தொலைவில் உள்ள இந்த காட்டுப்பகுதியில்சூடான காற்று காரணமாகத் தீ மிக வேகமாகப் பரவி வருகிறது.</p><p></p><h2>அதிகமான பரப்பளவு</h2><p>

இதுவரை 800 ஹெக்டேயருக்கும் அதிகமான பரப்பளவுள்ள காடுகள் முற்றிலும் எரிந்து சாம்பலாகியுள்ளன.
</p><p>
இந்த தீவிர காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த சுமார் 400 தீயணைப்பு வீரர்கள், ஹெலிகொப்டர்கள் மற்றும் நீர் குண்டு வீசும் விமானங்கள் மூலம் தொடர்ந்து போராடி வருகின்றனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0dd13f9e-e3b6-4ead-a621-947df089d998/26-6a5529933789d.webp' /></p><p>பிரான்சின் தெற்குப் பகுதியிலிருந்து பாரிஸ் பிராந்தியத்திற்குத் தீயணைப்பு விமானங்கள் அனுப்பப்படுவது இதுவே முதல் முறை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
</p><p>
இந்த அசாதாரண காட்டுத்தீ காரணமாக பிரான்சின் வடக்கு மற்றும் தெற்குப் பகுதிகளை இணைக்கும் முக்கிய ஏ6 அதிவேக நெடுஞ்சாலை பகுதியளவில் மூடப்பட்டுள்ளதுடன் தொடருந்து சேவைகளும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
</p><p>
மேலும் வாடோவ் போன்ற அருகிலுள்ள கிராமங்களிலிருந்து 15 இற்கும் மேற்பட்ட வீடுகளில் இருந்த பொதுமக்கள் அவசரமாகப் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
</p><p>
பருவநிலை மாற்றத்தின் காரணமாகவே இத்தகைய தீவிர வெப்ப அலைகளும் காட்டுத்தீயும் ஏற்படுவதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-13T19:27:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஏமனில் பயங்கர வான்வழித் தாக்குதல்: சனா விமான நிலைய ஓடுதளம் தகர்ப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/yemen-gov-forces-attack-sanaa-airport-runway-1783959394"></link>
            <id>https://ibctamil.com/article/yemen-gov-forces-attack-sanaa-airport-runway-1783959394</id>
            <summary type="text">ஏமன் நாட்டின் தலைநகர் சனாவில் உள்ள சர்வதேச விமான நிலையத்தின் ஓடுதளத்தை
இலக்கு வைத்து சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட ஏமன் அரசுப் படைகள் அதிரடி
வான்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஏமன் நாட்டின் தலைநகர் சனாவில் உள்ள சர்வதேச விமான நிலையத்தின் ஓடுதளத்தை
இலக்கு வைத்து சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட ஏமன் அரசுப் படைகள் அதிரடி
வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளன.
</p><p>
சனா விமான நிலையத்தில் ஈரானிய விமானம் ஒன்று தரையிறங்குவதைத் தடுப்பதற்காகவே
இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக ஏமன் அரசு அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.
</p><p>
ஈரான் ஆதரவு பெற்ற ஹூதி கிளர்ச்சியாளர்கள் ஏமனின் தேசிய விமானங்களைச் சனா
விமான நிலையத்தில் தரையிறங்க அனுமதிக்க மறுத்ததாகவும் மாறாக ஏமனின்
வான்வெளியை மீறி ஈரானிய விமானம் அங்கு நுழைவதற்கு பிடிவாதமாக
வழிவகுத்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.</p><p>
</p><p></p><h2>வெளியிட்டுள்ள அறிக்கை</h2><p>இதன் காரணமாகவே விமான நிலைய ஓடுதளம் தகர்க்கப்பட்டதாக
ஏமன் அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

தற்போது ஏமனின் தலைநகர் சனா பகுதி ஈரான் ஆதரவு பெற்ற ஹூதி கிளர்ச்சியாளர்களின்
கட்டுப்பாட்டில் உள்ளது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b5dee3a7-9c22-4d35-b3a5-5039133a6674/26-6a552434206b3.webp' /></p><p>இற்தறிலையில் சவூதி அரேபியா மற்றும் வளைகுடா நாடுகளின்
ஆதரவு பெற்ற ஏமன் அரசு, தெற்கு கடலோரப் பகுதியான ஏடனை தளமாகக் கொண்டு இயங்கி
வருகிறது.
</p><p>
இந்த தாக்குதலுக்கு முன்னதாக ஏமன் பாதுகாப்பு அமைச்சகம் பொதுமக்கள், தூதரக
அதிகாரிகள் மற்றும் மனிதாபிமான உதவி அமைப்புகளை விமான நிலையப் பகுதியை விட்டு
உடனடியாக வெளியேறுமாறு எச்சரித்திருந்தது.</p><p>

இதற்கிடையே இந்த தாக்குதலுக்குச் சவூதி அரேபியாவே காரணம் என்று எவ்வித
ஆதாரமுமின்றி குற்றம் சாட்டியுள்ள ஹூதி அமைப்பின் இராணுவ செய்தித் தொடர்பாளர்
யஹ்யா சாரி, இந்த ஆக்கிரமிப்பு நடவடிக்கை பழிவாங்கப்படாமல் போகாது என்று
எச்சரித்துள்ளதால் அப்பகுதியில் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-13T19:27:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹோர்முஸ் நீரிணை எங்களின் கட்டுப்பாட்டில்...! ஈரானின் அதிரடி அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/iran-reacts-to-trump-on-strait-of-hormuz-1783967052"></link>
            <id>https://ibctamil.com/article/iran-reacts-to-trump-on-strait-of-hormuz-1783967052</id>
            <summary type="text">ஈரான் எப்போதும் ஹோர்முஸ் நீரிணையின் பாதுகாவலனாகவே இருந்துள்ளது என ஈரானின் வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
 
அத்துடன் அது அப்படியே நீடிக்கும் என...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரான் எப்போதும் ஹோர்முஸ் நீரிணையின் பாதுகாவலனாகவே இருந்துள்ளது என ஈரானின் வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.</p><p>
 
அத்துடன் அது அப்படியே நீடிக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
</p><p>
ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) வழியாகச் செல்லும் கப்பல்களுக்கு அமெரிக்கா கட்டணம் விதிக்கும் என ட்ரம்ப் அறிவித்ததைத் தொடர்ந்தே அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.</p><p></p><h2>ஹோர்முஸ் நீரிணை</h2><p>

இது குறித்து எக்ஸ் தளத்தில் அவர் பதிவொன்றை இட்டுள்ளார்.</p><p>
</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">POTUS is absolutely right. Whoever provides secure and safe passage of commercial vessels through the Strait of Hormuz should be compensated for this service. <br><br>Iran has always been the GUARDIAN of the Strait and will remain so FOREVER.<br><br>20% is of course too much. We will be fair</p>&mdash; Seyed Abbas Araghchi (@araghchi) <a href="https://x.com/araghchi/status/2076728062662557961?ref_src=twsrc%5Etfw">July 13, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>குறித்த பதிவில் மேலும் தெரிவித்துள்ள அவர், “அமெரிக்க ஜனாதிபதி கூறுவது முற்றிலும் சரியானதுதான். 

ஹோர்முஸ் நீரிணை வழியாக வர்த்தகக் கப்பல்கள் பாதுகாப்பாகவும் பத்திரமாகவும் செல்வதை உறுதி செய்பவர்களுக்கு அந்தச் சேவைக்கான இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். </p><p>

அத்துடன் 20% என்பது நிச்சயமாக மிக அதிகம் அத்தோடு நாங்கள் நியாயமாக நடந்து கொள்வோம்” என அவர் தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-13T19:26:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[நள்ளிரவில் ஈரானில் உள்ள நீர்மூழ்கிக் கப்பல் - பராமரிப்பு தளம் மீது அமெரிக்கா அதிரடித் தாக்குதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/us-strikes-iran-submarine-ship-maintenance-sencom-1783967188"></link>
            <id>https://tamilwin.com/article/us-strikes-iran-submarine-ship-maintenance-sencom-1783967188</id>
            <summary type="text">ஈரானில் உள்ள நீர்மூழ்கிக் கப்பல் மற்றும் கப்பல் பராமரிப்பு தளம் ஒன்றின் மீது அமெரிக்க இராணுவப் படைகள் நள்ளிரவில் பயங்கர வான்வழித் தாக்குதல்களை நடத்திய...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானில் உள்ள நீர்மூழ்கிக் கப்பல் மற்றும் கப்பல் பராமரிப்பு தளம் ஒன்றின் மீது அமெரிக்க இராணுவப் படைகள் நள்ளிரவில் பயங்கர வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக அமெரிக்க மத்திய கட்டளையகம் சற்றுமுன்னர் தெரிவித்துள்ளது.</p><p>

தெற்கு ஈரானில் உள்ள பண்டார் அப்பாஸ் கடற்படைத் தளத்தில் (Bandar Abbas Naval Base) இந்தத் துறைமுகம் அமைந்துள்ளது.&nbsp;</p><p></p><h2>ட்ரோன்&nbsp;தாக்குதல்கள்&nbsp;</h2><p>குறித்த தளத்தின் மீது ஒரே திசையில் சென்று தாக்கும் பல ட்ரோன் விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ள கட்டளையகம், இது தொடர்பான காணொளி காட்சிகளையும் வெளியிட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ef169131-986d-4e7d-b177-216ff5a76569/26-6a5538e720d63.webp' /></p><p>

"நேற்று இரவு நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல்களானது, வணிகக் கப்பல்கள் மீது ஈரான் தொடர்ச்சியாக மேற்கொண்டு வரும் தாக்குதல் நடத்தும் திறனைப் பெருமளவில் சீர்குலைத்துள்ளது" என கட்டளையகம் தனது எக்ஸ் (X) சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.</p><p>

ஹோர்முஸ் நீரிணையில் (Strait of Hormuz) வணிகக் கப்பல்கள் மீது ஈரான் நடத்திய தாக்குதல்களுக்குப் பதிலடியாகவே இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக அமெரிக்கா ஏற்கனவே தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-13T19:14:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[புதுக்குடியிருப்பில் கலப்பட மிளகாய்த்தூள் விற்பனை ; வியாபாரிக்கு அபராதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/puthukudiyiruppu-trader-fined-1783969904"></link>
            <id>https://jvpnews.com/article/puthukudiyiruppu-trader-fined-1783969904</id>
            <summary type="text">முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு நகர்ப் பகுதியில் விற்பனை செய்யப்பட்ட மிளகாய்த்தூளில் கலப்படம் இருப்பது ஆய்வக பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டதை தொடர்ந...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு நகர்ப் பகுதியில் விற்பனை செய்யப்பட்ட மிளகாய்த்தூளில் கலப்படம் இருப்பது ஆய்வக பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டதை தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் நீர்கொழும்பிலிருந்து அனுமதியின்றி கலப்பட உணவுப் பொருட்களை கொண்டுசென்று மொத்த விற்பனையில் ஈடுபட்டிருந்த வியாபாரி ஒருவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; ">

வர்த்தகர்களினால் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டையடுத்து கடந்த வெள்ளிக்கிழமை (10) சுகாதார பரிசோதகர்களால் சந்தேகத்தின் பேரில் மிளகாய்த்தூள் மாதிரிகள் எடுத்து ஆய்வகத்துக்கு அனுப்பி பரிசோதனை செய்யப்பட்டது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/937d985a-8a62-454d-a34d-1b3665217fc3/26-6a55387242dee.webp' /></p><h2 style="text-align: justify; ">மிளகாய்த்தூள் கலப்படம்&nbsp;</h2><p>
</p><p style="text-align: justify; ">
அந்த பரிசோதனை முடிவுகளில், மிளகாய்த்தூள் கலப்படம் செய்யப்பட்டிருந்தமை உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் குறித்த பொருட்கள் நீர்கொழும்பிலிருந்து மொத்த விற்பனைக்காக கொண்டுசெல்லப்பட்டமை தெரியவந்தது.</p><p style="text-align: justify; ">

மேலும், பொருட்களை விற்பனை செய்த மொத்த வியாபாரி உரிய அனுமதியின்றி கலப்பட உணவுப் பொருட்களை உற்பத்தி செய்து விற்பனை நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்ததும் கண்டறியப்பட்டது.
</p><p style="text-align: justify; ">

இந்தச் சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பகுதியில் மொத்த விற்பனையில் ஈடுபட்டிருந்த வியாபாரிக்கு எதிராக முல்லைத்தீவு நீதிமன்றத்தில் பொது சுகாதார பரிசோதகர் உள்ளிட்ட குழுவினர் வழக்குத் தாக்கல் செய்தனர்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
அதனையடுத்து குறித்த வியாபாரி கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

வழக்கை விசாரித்த நீதிமன்றம் குறித்த வியாபாரிக்கு 15,000 ரூபா அபராதமும் ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனையும் விதித்துள்ளது.</p><p style="text-align: justify; ">

இதேவேளை, வெளிமாவட்டங்களில் இருந்து கலப்பட உணவுப் பொருட்கள் கொண்டுசெல்லப்பட்டு வர்த்தக நிலையங்களில் விற்பனை செய்யப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">

தமக்கு கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் தொடர்ச்சியாக இவ்வாறான பரிசோதனைகள் செய்யப்பட்டு வருவதாகவும் வெளி மாவட்டங்களில் இருந்து உணவுப் பொருட்களை கொள்வனவு செய்யும் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் அவற்றின் தரத்தை உறுதிப்படுத்துவதுடன், தேவையான ஆவணங்கள், உற்பத்தி நிலையத்துக்கு உள்ளூராட்சி அமைப்பின் அனுமதி உள்ளிட்ட விடயங்களை சரிபார்த்து விழிப்புணர்வுடன் செயற்படுமாறும் சுகாதார அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-07-13T19:11:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Farook Sihan</name>
            </author>
            <title type="text"><![CDATA[அம்பாறையில் 9 நெல் களஞ்சியசாலைகளைத் திறக்க நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/9-more-paddy-warehouses-in-ampara-1783966501"></link>
            <id>https://tamilwin.com/article/9-more-paddy-warehouses-in-ampara-1783966501</id>
            <summary type="text">அம்பாறை
மாவட்டத்தில் மேலும் ஒன்பது நெல் களஞ்சியசாலைகள் திறந்து வைக்கப்படும் என
மாவட்டச் செயலாளர் அனுபமா மங்கள
விக்ரமாராச்சி தெரிவித்தார்.அம்பாறை மா...</summary>
            <content type="html"><![CDATA[<p>அம்பாறை
மாவட்டத்தில் மேலும் ஒன்பது நெல் களஞ்சியசாலைகள் திறந்து வைக்கப்படும் என
மாவட்டச் செயலாளர் அனுபமா மங்கள
விக்ரமாராச்சி தெரிவித்தார்.</p><p>அம்பாறை மாவட்டத்தில் இந்த ஆண்டுக்கான யால பருவ நெல் கொள்முதல் நடவடிக்கைகள் நேற்று (13) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.</p><p>அவர் மேலும் தெரிவிக்கையில் ,குறித்த பகுதியில் இரண்டு பிரதான நெல் களஞ்சியசாலைகள் அமைந்துள்ள போதிலும்,
தற்போது 1,000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட ஒரு களஞ்சியசாலை மாத்திரமே நெல்
கொள்முதலுக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது.</p><p></p><h2>நெல் களஞ்சியசாலைகள்</h2><p>
வரவிருக்கும் நாட்களில் விவசாயிகளின் அறுவடை நிலவரங்களுக்கு ஏற்ப, அம்பாறை
மாவட்டத்தில் மேலும் ஒன்பது நெல் களஞ்சியசாலைகள் திறந்து வைக்கப்படும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f4c39722-6604-4755-99c2-9ebaf336eb3a/26-6a552ee8e699b.webp' /></p><p>இதுவரை 18 தனியார் களஞ்சியசாலைகள் நெல் சேமிப்புத் தேவைகளுக்காக ஒதுக்கீடு
செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட மாவட்டச் செயலாளர், நெல் சந்தைப்படுத்தல்
சபையின் ஏனைய களஞ்சியசாலைகளில் உள்ள பழைய இருப்புக்களை அகற்றுவதற்காக ஏற்கனவே
ஒப்பந்தப்புள்ளிகள் (Tenders) கோரப்பட்டுள்ளதாகவும், அவை விரைவில் நீக்கப்படும் என்றும் கூறினார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-13T18:53:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமை செய்த நபர் ; அபராதம் வசூலித்து மதுவிருந்து நடத்தி கொண்டாடிய கிராமத்தினர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/villagers-hold-liquor-party-using-fine-money-1783968146"></link>
            <id>https://jvpnews.com/article/villagers-hold-liquor-party-using-fine-money-1783968146</id>
            <summary type="text">ஜார்க்கண்ட் மாநிலம் கும்லா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த வாலிபர், 3 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

 இது குறித்து அந்த குழ...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">ஜார்க்கண்ட் மாநிலம் கும்லா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த வாலிபர், 3 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
</p><p style="text-align: justify; ">
 இது குறித்து அந்த குழந்தை தனது தாயிடம் கூறிய நிலையில், உடனடியாக பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்காமல், கிராம பஞ்சாயத்தை கூட்டி நியாயம் கேட்டுள்ளனர்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cae59f98-4681-4220-ba91-68bdb3e18a5d/26-6a553194c6cd2.webp' /></p><h2 style="text-align: justify; ">மது விருந்து&nbsp;</h2><p style="text-align: justify; "> ஆனால் பஞ்சாயத்தை சேர்ந்த சில நபர்கள், இந்த விவகாரத்தை காவல்துறை வரை கொண்டு செல்ல வேண்டாம் என்றும், சந்தேகநபருக்கு அபராதம் விதித்து பிரச்சினையை இங்கேயே தீர்த்துவிடலாம் என்றும் ஆலோசனை கூறியுள்ளனர்.
</p><p style="text-align: justify; ">
இதனை கிராம பஞ்சாயத்து ஏற்றுக்கொண்டதாக தெரிகிறது. இதன்படி குற்றவாளிக்கு 1 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. அந்த தொகையில் 20,000 பணத்தை உடனடியாக செலுத்திய அவர், மீதம் உள்ள பணத்தை ஒரு வாரத்திற்குள் கொடுத்து விடுவதாக கூறியுள்ளார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> </p><p style="text-align: justify; ">அவர் கொடுத்த 20,000 ரூபாய்பணத்தில் கிராமத்தினர் சிலர் மதுபானங்களையும், அசைவ உணவுகளையும் வாங்கி வந்து விருந்து வைத்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனிடையே, கிராம பஞ்சாயத்தில் எடுக்கப்பட்ட இந்த முடிவு குறித்து பொலிஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.</p><p style="text-align: justify; "> இதை அறிந்து பொலிஸார் சம்பந்தப்பட்ட கிராமத்திற்கு சென்று பார்த்தபோது அங்கு மது விருந்து படுஜோராக நடந்து கொண்டிருந்தது. </p><p style="text-align: justify; ">இதையடுத்து பாதிக்கப்பட்ட குழந்தையின் தாயாரிடம் நேரடியாக புகாரைப் பெற்ற பொலிஸார், அந்த புகாரின் அடிப்படையில் சந்தேகநபர் கைது செய்து அழைத்துச் சென்றனர். தொடர்ந்து இந்த விவகாரம் குறித்து பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.&nbsp;</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-07-13T18:42:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Manchu</name>
            </author>
            <title type="text"><![CDATA[குரு - சூரியன் சேர்க்கை.. ஜூலை 16 முதல் 6 ராசிகளுக்கு ராஜயோகம்! பணம் கொட்டும்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/guru-suriyan-join-very-lucky-zodiac-signs-1783963585"></link>
            <id>https://manithan.com/article/guru-suriyan-join-very-lucky-zodiac-signs-1783963585</id>
            <summary type="text">ஜூலை 16 முதல் கடக ராசியில் நிகழவுள்ள குரு-சூரியன் சேர்க்கையால் உருவாகும் &#039;குரு ஆதித்ய ராஜயோகம்&#039; மூலம் மேஷம், மிதுனம் உள்ளிட்ட 6 ராசிகளுக்கு பெரும் செல...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜூலை 16 முதல் கடக ராசியில் நிகழவுள்ள குரு-சூரியன் சேர்க்கையால் உருவாகும் 'குரு ஆதித்ய ராஜயோகம்' மூலம் மேஷம், மிதுனம் உள்ளிட்ட 6 ராசிகளுக்கு பெரும் செல்வமும் யோகமும் கிடைக்கவுள்ளது.</p><p>ஜோதிட சாஸ்த்திரத்தின்படி, ஒவ்வொரு கிரகமும் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திற்கு பிற்கு தனது ராசி மற்றும் நட்சத்திரத்தை மாற்றிக்கொள்ளும். அதன் தாக்கம் மனித வாழ்க்கையிலும் இருக்கும். அந்த வகையில், கிரகங்களின் தலைவனாக கருதப்படும் சூரியன் தனது ராசியை ஒவ்வொரு மாதமும் மாற்றி அமைத்துக்கொள்ளும். அதேபோல் குரு பகவானும் தனது ராசியை ஆண்டிற்கு ஒருமுறை மாற்றுவார். தற்போது குரு பகவான் தனது உச்ச ராசியான் கடக ராசியில் பயணித்து வருகிறார்.</p><p>இந்த நிலையில், கடக ராசிக்கு ஜூலை 16 ஆம் தேதி சூரிய பகவான் பெயர்ச்சி ஆகிறார். இதனால் கடக ராசியில் குரு மற்றும் சூரியனின் சேர்க்கை நிகழ உள்ளது. இந்த சேர்க்கையானது குரு ஆதித்ய ராஜயோகத்தை உருவாக்குகிறது. இது ஆகஸ்ட் 17 ஆம் தேதி வரை என ஒரு மாத காலம் நீடிக்கிறது. இந்த காலகட்டத்தில், குரு அதித்ய ராஜயோகம் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும், சில குறிப்பிட்ட ராசிக்காரர்களுக்கு மட்டும் நல்ல செல்வத்தையும் வளர்ச்சியையும் கொடுக்க இருக்கிறது. அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார் யார் என்பதை தெரிந்துக்கொள்வோம்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c5a4440a-39cf-4712-8b8c-6311e9a8bbdc/26-6a55225970f3b.webp' /></p><h2>

மேஷம் </h2><p>
மேஷ ராசியினருக்கு 4 ஆம் இடத்தில் உருவாகும் குரு ஆதித்ய ராஜயோகம் காரணமாக, எதிர்பாராத பண வரவுகள் உண்டாகும். நீண்ட நாட்களாக இருந்த கடன் சுமைகள் படிப்படியாக குறையும். தொழில் அல்லது வேலை நிமித்தமாக நீங்கள் மேற்கொள்ளும் நீண்ட தூர பயணங்கள் உங்களுக்கு பெரும் லாபத்தை தேடி தரும். அதிர்ஷ்டத்தின் துணையோடு பணியிடத்தில் நீங்கள் செய்யும் கடின உழைப்புக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கும். சமுதாயத்தில் அந்தஸ்து உயர்வதுடன், மாணவர்களுக்கும் இந்த காலகட்டம் சாதகமாக அமையும். தம்பதியரிடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி தம்பதி பிணைப்பு பலப்படும்.&nbsp; &nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c46984aa-0819-4536-a106-2146ec5ccfc6/26-6a55225a3af25.webp' /></p><h2>மிதுனம்&nbsp;</h2><p>மிதுன ராசியின் 2 ஆம் இடத்தில் இந்த ராஜயோகம் அமைவதால், உங்கள் வாழ்க்கை தரம் உயரும் வகையில் பல சாதகமான மாற்றங்கள் நிகழும். பொருளாதார ரீதியாக மிகவும் வலுவான நிலையை அடைவீர்கள். தொட்ட காரியங்கள் யாவும் தடையின்றி வெற்றியில் முடியும். போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிப்பதுடன், சமூகத்தில் உங்களுக்கான மதிப்பும், மரியாதையும் கூடும். உத்தியோகம் மற்றும் சொந்த வாழ்க்கை என இரண்டிலுமே சிறப்பான முன்னேற்றத்தை காண்பீர்கள்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f48c7ae3-4248-4f1c-a0e0-69be0e1bc221/26-6a55225aec3d8.webp' /></p><h2>சிம்மம் </h2><p>சிம்ம ராசிக்கு 12 ஆம் வீட்டில் இந்த யோகம் அமைவதால், குடும்பத்திற்குள் மகிழ்ச்சியும் நிம்மதியும் தங்கும். பணப்புழக்கம் அதிகரித்து பொருளாதார நிலை சீராகும். திடீர் அதிர்ஷ்டம் மூலம் பணவரவு உண்டாக வாய்ப்புள்ளது. கணவன்-மனைவி இடையே அன்யோன்யம் கூடும். கடன்களிலிருந்து விடுபடுவதற்கான வழிகள் பிறக்கும். புதிய விஷயங்களை கற்று கொள்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். சகோதர, சகோதரிகளின் ஆதரவு உங்களுக்கு பக்கபலமாக இருக்கும். உத்தியோகம் மற்றும் கல்வியில் மாணவர்கள் எதிர்பார்த்த வெற்றியைப் பெறலாம்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2ec6ae99-8bb6-4396-bdbd-16db448657e2/26-6a55225ba257e.webp' /></p><h2>கன்னி </h2><p>கன்னி ராசியினருக்கு 11-ஆம் இடத்தில் தோன்றும் குரு ஆதித்ய ராஜயோகம், தொழிலில் புதிய உச்சத்தை அடைவதற்கான பிரகாசமான வாய்ப்புகளை உருவாக்கும். சொத்துச் சேர்க்கை ஏற்படுவதோடு, ஒன்றுக்கும் மேற்பட்ட வழிகளில் வருமானம் ஈட்டும் வாய்ப்புகள் கைகூடி வரும். வேலை செய்யும் இடத்தில் மேலதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களின் முழுமையான ஒத்துழைப்பு உங்களுக்குக் கிடைக்கும். நீண்ட நாட்களாக அவதிப்பட்டு வந்த நாள்பட்ட உடல்நலப் பாதிப்புகள் நீங்கி ஆரோக்கியம் சீராகும். சகல வசதிகளும் பெருகும் யோகம் உண்டாகும்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/499c01b6-2d57-4cab-ba72-b2d313c3e02e/26-6a55225c531ab.webp' /></p><p></p><h2>துலாம்</h2><p>
துலாம் ராசியின் 10 ஆம் வீட்டில் இந்த யோகம் உருவாவதால், உங்கள் நிதி நிலைமையில் அசுர வளர்ச்சி ஏற்படும். குறிப்பாக வியாபாரிகளுக்கு இருந்து வந்த மந்த நிலை மாறி, தொழில் ரீதியான பணப் பற்றாக்குறைகள் அனைத்தும் தீரும். சமுதாயத்தில் பெரிய மனிதர்களின் நட்பு கிடைப்பதுடன், அது உங்களின் எதிர்கால முன்னேற்றத்திற்குப் பெரிதும் உதவும். அதிர்ஷ்டக் காற்று உங்கள் பக்கம் வீசுவதால் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் தடையின்றி நிறைவேறும். திட்டமிட்ட காரியங்களைச் செவ்வனே செய்து முடிப்பீர்கள்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5d863dcc-fb08-4b6d-aa75-d5b4770005ea/26-6a55225d06708.webp' /></p><h2>தனுசு </h2><p>தனுசு ராசிக்கு 8 ஆம் இடத்தில் இந்த ராஜயோகம் அமைவதால், சமூகத்தில் உங்கள் பெயர், புகழ் ஓங்கும். நீண்ட நாட்களாக வராமல் முடங்கி கிடந்த நிலுவைத் தொகைகள் மற்றும் வாராக்கடன்கள் வசதியாகும். தெய்வ வழிபாடுகளில் நாட்டம் அதிகரிக்கும். குடும்பத்தில் நிலவி வந்த குழப்பங்கள் நீங்கி அமைதியான சூழல் உருவாகும். கோர்ட், கேஸ் போன்ற சட்ட ரீதியான சிக்கல்களிலிருந்து உங்களுக்கு சாதகமான தீர்வு கிடைக்கும். புதிய வருமான வாய்ப்புகள் உருவாகி, சேமிப்பு உயரும்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b9277c47-3e94-4e94-91f3-f2fd3eec88da/26-6a55225dabfe1.webp' /></p><p><b>இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. ( மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).</b>&nbsp; &nbsp; &nbsp; &nbsp;&nbsp;<br></p><table class="table table-bordered"><tbody><tr><td><i>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் <a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள் <a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"><b>FOLLOW NOW</b></a>&nbsp; &nbsp; &nbsp; &nbsp;<br></i></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-13T18:25:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீரை மிகவும் சிக்கனமாகப் பயன்படுத்துங்கள் ; இலங்கை மக்களுக்கு முக்கிய அறிவித்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/use-water-wisely-public-urged-1783965197"></link>
            <id>https://jvpnews.com/article/use-water-wisely-public-urged-1783965197</id>
            <summary type="text">நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டிலுள்ள 80 நீர்த்தேக்கங்களின் மொத்த நீர்க்கொள்ளளவு தற்போது 48 சதவீதமாகக் காணப்படுவதாக நீர்ப்பாசனப் பணிப்பாளரும்...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டிலுள்ள 80 நீர்த்தேக்கங்களின் மொத்த நீர்க்கொள்ளளவு தற்போது 48 சதவீதமாகக் காணப்படுவதாக நீர்ப்பாசனப் பணிப்பாளரும் நீர் முகாமைத்துவ பொறியியலாளருமான எச்.எம்.பி.எஸ்.டி. ஹேரத் தெரிவித்துள்ளார். </p><p style="text-align: justify; ">

இதன் காரணமாக, நீரை மிகவும் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு அவர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1776cf71-8ab3-471e-a0c1-6aec58d5965a/26-6a55260f3b121.webp' /></p><h2 style="text-align: justify; ">குடிநீர் தட்டுப்பாடு</h2><p> </p><p style="text-align: justify; ">

எவ்வாறாயினும், சிறுபோக விவசாய நடவடிக்கைகள் தற்போது நிறைவடைந்துள்ளதால், தற்போதுள்ள நீரின் அளவு அதற்குப் போதுமானதாக இருக்கும் என்றும் பொறியியலாளர் குறிப்பிட்டுள்ளார்.</p><p style="text-align: justify; "> 

இதேவேளை, இந்த நீர்த்தேக்கங்கள் மூலம் குடிநீர் வசதிகளைப் பெற்றுக்கொள்ளும் மக்களுக்கான குடிநீர்த் தேவையும் போதுமான அளவில் உள்ளதாக எச்.எம்.பி.எஸ்.டி. ஹேரத் வலியுறுத்தியுள்ளார்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">

ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் மழை எதிர்பார்க்கப்படுவதால், குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை என்றும் நீர்ப்பாசனப் பணிப்பாளரும் நீர் முகாமைத்து பொறியியலாளருமான எச்.எம்.பி.எஸ்.டி. ஹேரத் மேலும் தெரிவித்துள்ளார்.&nbsp;&nbsp;</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-07-13T18:15:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[காலக்கெடு நீடிக்கப்படாது :கல்வியமைச்சு வெளியிட்ட அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/no-further-extensions-school-stationery-allowance-1783962059"></link>
            <id>https://ibctamil.com/article/no-further-extensions-school-stationery-allowance-1783962059</id>
            <summary type="text">2026 ஆம் ஆண்டுக்கான பாடசாலை எழுதுபொருள் உதவித்தொகைத் திட்டத்தின் கீழ், பயனாளி விவரங்களை உள்ளிடுவதற்கும் சரிபார்ப்பதற்கும், மற்றும் பற்றுச்சீட்டுகளை ஸ்...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026 ஆம் ஆண்டுக்கான பாடசாலை எழுதுபொருள் உதவித்தொகைத் திட்டத்தின் கீழ், பயனாளி விவரங்களை உள்ளிடுவதற்கும் சரிபார்ப்பதற்கும், மற்றும் பற்றுச்சீட்டுகளை ஸ்கான் செய்வதற்கும் உள்ள காலக்கெடு நீட்டிக்கப்படாது என்று கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.</p><p>

அமைச்சகத்தின்படி, பயனாளி தகவல்களை உள்ளிடுவதற்கான காலக்கெடு ஜூலை 25 ஆகும், அதே நேரத்தில் பயனாளி விவரங்கள் ஜூலை 27-க்குள் சரிபார்க்கப்பட வேண்டும்.&nbsp;</p><h2>காலக்கெடுக்கள் இறுதியானவை&nbsp;</h2><p>பற்றுச்சீட்டுகளை ஸ்கான் செய்யும் பணி ஓகஸ்ட் 30-க்குள் முடிக்கப்பட வேண்டும் என்றும் அமைச்சு கூறியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ea237f14-67ba-42a1-bb46-0d3d7d217289/26-6a5528266db65.webp' /></p><p>
</p><p>
இந்தக் காலக்கெடுக்கள் இறுதியானவை என்றும், மேலும் நீடிக்கப்படாது என்றும் அது வலியுறுத்தியுள்ளது.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-13T18:05:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[சூடான் தங்க வர்த்தகத்திற்கு ஐரோப்பிய ஒன்றியம் தடை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/european-union-bans-sudan-gold-trade-1783965138"></link>
            <id>https://tamilwin.com/article/european-union-bans-sudan-gold-trade-1783965138</id>
            <summary type="text">சூடானில் தொடர்ந்து நீடித்து வரும் இராணுவ மோதல்களுக்கு நிதி திரட்டுவதைத்
தடுக்கும் நோக்கில், அந்நாட்டின் தங்க வர்த்தகத்தை இலக்கு வைத்து புதிய
பொருளாத...</summary>
            <content type="html"><![CDATA[<p>சூடானில் தொடர்ந்து நீடித்து வரும் இராணுவ மோதல்களுக்கு நிதி திரட்டுவதைத்
தடுக்கும் நோக்கில், அந்நாட்டின் தங்க வர்த்தகத்தை இலக்கு வைத்து புதிய
பொருளாதாரத் தடைகளை விதிப்பதாக ஐரோப்பிய ஒன்றியம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
</p><p>
இந்த புதிய முடிவின்படி, சூடானை பூர்வீகமாகக் கொண்ட தங்கம் எதையும்
வாங்குவதற்கோ, இறக்குமதி செய்வதற்கோ அல்லது கைமாற்றுவதற்கோ முழுமையான தடை
விதிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இதுமட்டுமன்றி, தங்கம் பிரித்தெடுக்கப் பயன்படும் பாதரசம் மற்றும் சயனைடு
ஆகிய வேதிப்பொருட்களைச் சூடானுக்கு விற்பனை செய்வதற்கும், விநியோகிப்பதற்கும்
அல்லது ஏற்றுமதி செய்வதற்கும் ஐரோப்பிய ஒன்றியம் தடை விதித்துள்ளது.</p><p></p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">உள்நாட்டுப் போர்</span></p><p>
</p><p>
சூடான் நாட்டின் அதிகாரப்பூர்வ இராணுவத்திற்கும், துணை இராணுவப் படையான
'விரைவு ஆதரவுப் படைகளுக்கும்' இடையே கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக
நடந்து வரும் இந்த கொடூரமான உள்நாட்டுப் போர், அந்நாட்டில் மிகப்பெரிய
மனிதாபிமான நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/df5864db-47e7-4f85-b72d-bf56d59808a3/26-6a5527f47268c.webp' /></p><p>

இந்த சூழலில், போருக்கான முக்கிய நிதி ஆதாரமாக விளங்கும் தங்க வர்த்தகத்தை
முடக்குவதன் மூலம் அங்கு வன்முறையைக் குறைக்க முடியும் என்று ஐரோப்பிய ஒன்றிய
பேரவை தெரிவித்துள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-13T18:04:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரான் - அமெரிக்க போரின் எதிரொலி: தங்கம், எண்ணெய் விலைகளில் திடீர் மாற்றம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/oil-prices-rise-gold-drops-as-us-iran-fighting-1783963334"></link>
            <id>https://canadamirror.com/article/oil-prices-rise-gold-drops-as-us-iran-fighting-1783963334</id>
            <summary type="text">அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே தொடர்ந்து மோதல்கள் நீடித்து வரும் நிலையில், சர்வதேச சந்தையில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை மூன்று சதவீதத்திற்...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே தொடர்ந்து மோதல்கள் நீடித்து வரும் நிலையில், சர்வதேச சந்தையில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை மூன்று சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. </p><p>இதேவேளை, தங்கத்தின் விலை மேலும் சரிவைச் சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஈரான் மீதான கடற்படை முற்றுகையை மீண்டும் அமல்படுத்துவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார்.</p><p>இதனைத் தொடர்ந்து சர்வதேச சந்தையின் மதிய வர்த்தகத்தில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 78 டாலராக பதிவாகியிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/21cec955-fa73-4c9d-9037-fb1985022c9a/26-6a551ec7f0114.webp' /></p><p>
</p><p>இதேவேளை, சர்வதேச நேரப்படி (GMT) மாலை 15:00 மணி நிலவரப்படி, தங்கத்தின் விலை சுமார் மூன்று சதவீதம் வரை சரிந்து, ஒரு அவுன்ஸ் தங்கம் 4,005.59 டொலராக வர்த்தகமானது.
</p><p>ஈரான் மற்றும் அமெரிக்காவிற்கு இடையிலான போர் பதற்றம் சர்வதேச சந்தை நிலைமைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-13T18:00:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீர்கொழும்பு சிறையில் அநுரவிடம் இருந்து மறைக்கப்பட்ட உண்மைகள்! ஆபத்தாகும் நிமிடங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/negombo-prison-issue-anura-kumara-govet-security-1783964480"></link>
            <id>https://tamilwin.com/article/negombo-prison-issue-anura-kumara-govet-security-1783964480</id>
            <summary type="text">நீர்கொழும்பு சிறைச்சாலையில் மோசமான வன்முறை சம்பவங்கள்&amp;nbsp;நடந்து இன்றுடன் ஒருவாரம் கடக்கின்றது.&amp;nbsp;இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பில் இன்னமும் பல்வேற...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீர்கொழும்பு சிறைச்சாலையில் மோசமான வன்முறை சம்பவங்கள்&nbsp;நடந்து இன்றுடன் ஒருவாரம் கடக்கின்றது.&nbsp;</p><p>இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பில் இன்னமும் பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன.&nbsp;</p><p>இலங்கை வரலாற்றிலேயே இடம்பெற்ற மிகக் கொடூரமான வன்முறை தாக்குதல்களில் ஒன்றாக இச்சம்பவம் பதிவாகியுள்ளது.&nbsp;</p><p>இதளை தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் எவ்வாறு கையாள்கின்றது என்பது குறித்து தொடர்ந்து பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.&nbsp;</p><p>அதேநேரம், இவ்வாறான சம்பவங்களை எதிர்நோக்கும் அளவு நாட்டின் படை பலம் உள்ளிட்டவை திடமாக உள்ளனவா எனவும் பல அரசியல் ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.&nbsp;</p><p>இவ்விடயங்கள் குறித்து விரிவாக ஆராய்கின்றது இன்றை ஊடறுப்பு நிகழ்ச்சி,&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/nVxJ9EwKYpI" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-13T17:58:33+00:00</updated>
        </entry>
    </feed>
