<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-07-16T06:36:07+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[டித்வா சூறாவளி தொடர்பான அரசாங்கத்திற்கு எதிரான மனு : உயர் நீதிமன்றின் உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/ditwah-fr-petition-against-govt-to-be-considered-1784180824"></link>
            <id>https://ibctamil.com/article/ditwah-fr-petition-against-govt-to-be-considered-1784180824</id>
            <summary type="text">&quot;டித்வா&quot; சூறாவளியினால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைப்பதற்கான பூர்வாங்கத் திட்டங்களை அரசாங்கம் நடைமுறைப்படுத்தத் தவறியதன் மூலம் பொதுமக்களின் அடிப்படை மன...</summary>
            <content type="html"><![CDATA[<p>"டித்வா" சூறாவளியினால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைப்பதற்கான பூர்வாங்கத் திட்டங்களை அரசாங்கம் நடைமுறைப்படுத்தத் தவறியதன் மூலம் பொதுமக்களின் அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகத் தீர்ப்பளிக்குமாறு கோரி அடிப்படை உரிமை மனுவொன்று&nbsp;தாக்கல் செய்யப்பட்டிருந்தது.</p><p>இந்தநிலையில் குறித்த மனுவை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 30ஆம் திகதி பரிசீலனைக்காக அழைக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p>

கண்டியைச் சேர்ந்த சட்டத்தரணி ஒருவரால் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனு, உயர் நீதிமன்ற நீதியரசர்களான ஜனக் டி சில்வா மற்றும் அசல வெங்கப்புலி ஆகியோர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது, முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்கள் கருத்திற்கொள்ளப்பட்டு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.</p><p></p><h2>சட்டமா அதிபர் மற்றும் அமைச்சரவை</h2><p> </p><p>

மனுவில் பிரதிவாதிகளாக ஜனாதிபதி சார்பாக சட்டமா அதிபர் மற்றும் அமைச்சரவை உறுப்பினர்கள் உள்ளிட்ட குழுவினர் பெயரிடப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p> 

"டித்வா" சூறாவளி நிலைமை ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களத்தினால் முன்கூட்டியே எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டிருந்த போதிலும், அதனால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்து பொதுமக்களைப் பாதுகாப்பதற்கான முறையான பூர்வாங்கத் திட்டங்களைச் செயற்படுத்துவதற்கு அரசாங்கம் தவறியுள்ளதாக மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1f250240-43fb-4147-94ff-003096daa780/26-6a5877a6ca014.webp' /></p><p> </p><p>

அரசாங்கத்தின் இந்த செயற்பாடு காரணமாக பொதுமக்களின் அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக அறிவிக்குமாறு மனுதாரர் உயர் நீதிமன்றத்திடம் கோரியுள்ளார். </p><p>

அத்துடன், எதிர்காலத்தில் இவ்வாறான இயற்கை அனர்த்தங்கள் ஏற்படுவதைத் தடுப்பதற்கும், அதனால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைப்பதற்கும் தேவையான முறையான வழிகாட்டுதல்களை அரசாங்கத்திற்கு வழங்குமாறும் அந்த மனுவின் ஊடாக மேலும் கோரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-16T06:27:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யோஷித ராஜபக்ச மற்றும் அவரது பாட்டிக்கு எதிராக நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/court-order-in-yoshida-s-case-1784182652"></link>
            <id>https://tamilwin.com/article/court-order-in-yoshida-s-case-1784182652</id>
            <summary type="text">முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்ச மற்றும் அவரது பாட்டி டெய்சி பரஸ்ட் ஆகியோருக்கு எதிராக பணச்சலவை தடுப்புச் சட்டத்தின் கீழ் சட்டம...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்ச மற்றும் அவரது பாட்டி டெய்சி பரஸ்ட் ஆகியோருக்கு எதிராக பணச்சலவை தடுப்புச் சட்டத்தின் கீழ் சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை, ஆகஸ்ட் 31ஆம் திகதி விசாரணைக்கு முந்தைய கலந்தாய்விற்காக அழைக்குமாறு கொழும்பு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
</p><p>

இந்த வழக்கு இன்று(16.07.2026) கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி ரஷ்மி சிங்கப்புலி முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p> </p><h2>


பணச்சலவை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு</h2><p>
இதன்போது, அரச சட்டத்தரணி ஒஸ்வால்ட் பெரேரா, நீதிமன்றத்தில் தனது வாதத்தை முன்வைத்து, விசாரணைக்கு முந்தைய கலந்தாய்விற்கான திகதியை நிர்ணயிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a89f163d-13b8-49c2-8972-f2d688975ef2/26-6a58795d28866.webp' /></p><p> </p><p>

 அப்போதைய வழக்கில் இரண்டாவது பிரதிவாதியான டெய்சி பரஸ்ட் தொடர்பான அரசுத் தரப்பின் நிலைப்பாட்டையும், குற்றப்பத்திரிகையில் செய்யப்படும் திருத்தங்களையும் அப்போது அவர்களுக்குத் தெரிவிப்பதாக அரச சட்டத்தரணி தெரிவித்துள்ளார். </p><p>

சமர்ப்பிக்கப்பட்ட உண்மைகளைக் கருத்தில் கொண்ட நீதிபதி, இந்த வழக்கை ஆகஸ்ட் 31ஆம் விசாரணைக்கு முந்தைய கலந்தாய்விற்காக விசாரணைக்கு அழைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.</p><p> 

சட்டவிரோதமாகச் சம்பாதித்த சுமார் 59 மில்லியன் ரூபாயை வங்கிக் கணக்குகளில் செலுத்தியதன் மூலம், பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் இழைத்ததாகக் குற்றம் சாட்டி, இந்த இரண்டு பிரதிவாதிகளுக்கு எதிராக தலைமை சட்டத்தரணி இந்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-16T06:25:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவின் புலம்பெயர்தல் திட்டம் ஒன்று திடீர் நிறுத்தம்: விவரங்கள் செய்திக்குள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/canada-pause-immigration-parents-grands-sponser-1784183067"></link>
            <id>https://news.lankasri.com/article/canada-pause-immigration-parents-grands-sponser-1784183067</id>
            <summary type="text">கனடா அரசு, கனேடிய குடிமக்கள் அல்லது கனடாவில் நிரந்தரக் குடியிருப்பு அனுமதி பெற்றவர்கள், தங்கள் பெற்றோர், தாத்தா, பாட்டியை ஸ்பான்சர் செய்யும் திட்டத்தை...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடா அரசு, கனேடிய குடிமக்கள் அல்லது கனடாவில் நிரந்தரக் குடியிருப்பு அனுமதி பெற்றவர்கள், தங்கள் பெற்றோர், தாத்தா, பாட்டியை ஸ்பான்சர் செய்யும் திட்டத்தை காலவரையறையின்றி நிறுத்தியுள்ளது.</p><h3>

புலம்பெயர்தல் திட்டம் ஒன்று திடீர் நிறுத்தம்
</h3><p>
கனடா அரசு, 2020ஆம் ஆண்டு, கனேடிய குடிமக்கள் அல்லது கனடாவில் நிரந்தரக் குடியிருப்பு அனுமதி பெற்றவர்கள், தங்கள் பெற்றோர், தாத்தா, பாட்டியை ஸ்பான்சர் செய்யும் திட்டத்தை அறிமுகம் செய்தது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8a525515-181c-48ff-a012-e6f56e5afd92/26-6a58791c6a2ca.webp' /></p><p>

அதைத் தொடர்ந்து, அந்த நேரத்தில் சுமார் 2,00,000 பேர் தங்கள் பெற்றோர், தாத்தா, பாட்டியை ஸ்பான்சர் செய்ய விருப்பம் தெரிவித்தனர்.
</p><p>
இந்நிலையில், தற்போது அந்த திட்டம் காலவரையறையின்றி இடைநிறுத்தப்பட்டுள்ளதாக கனடா ஃபெடரல் அரசின் புலம்பெயர்தல் துறை அறிவித்துள்ளது.</p><p>

அதாவது, ஸ்பான்சர் செய்வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ள இடங்களின் எண்ணிக்கையை விட, மிக அதிகமானோர் ஸ்பான்சர் செய்ய விண்ணப்பித்துள்ளதாக புலம்பெயர்தல் துறை தெரிவித்துள்ளது.&nbsp;</p><p></p><p>
ஏற்கனவே 60,500 விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ள நிலையில், அவற்றைச் செயல்படுத்துவதற்கான காத்திருப்பு காலம் சுமார் 33 மாதங்கள் ஆகும். கியூபெக்கிலோ 66 மாதங்கள் வரை ஆகலாம்.
</p><p>
ஆக, தாத்தா, பாட்டியை ஸ்பான்சர் செய்யும் திட்டத்தை பொறுப்புடன் நிர்வகிப்பதற்காகவும், காத்திருப்பு காலத்தைக் குறைப்பதற்காகவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கனடா ஃபெடரல் அரசின் புலம்பெயர்தல் துறை தெரிவித்துள்ளது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-16T06:25:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[72000 ஆக உயர்ந்த டெங்கு பாதிப்புகள் : இதுவரை 49 பேர் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/dengue-cases-rise-to-72430-this-year-1784181925"></link>
            <id>https://tamilwin.com/article/dengue-cases-rise-to-72430-this-year-1784181925</id>
            <summary type="text">தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின்படி, இந்த ஆண்டு இதுவரை பதிவான டெங்கு பாதிப்புகளின் எண்ணிக்கை 72,430 ஆக அதிகரித்துள்ளது.

 

நேற்று (15.07.202...</summary>
            <content type="html"><![CDATA[<p>தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின்படி, இந்த ஆண்டு இதுவரை பதிவான டெங்கு பாதிப்புகளின் எண்ணிக்கை 72,430 ஆக அதிகரித்துள்ளது.
</p><p>
 

நேற்று (15.07.2026) மொத்தம் 1,195 டெங்கு வழக்குகள் பதிவாகியுள்ளன என்று அந்தப் பிரிவு தெரிவித்துள்ளது.
</p><p></p><h2>49 பேர் உயிரிழப்பு</h2><p>
 

ஜூலை மாதத்தின் முதல் 15 நாட்களில் மட்டும் 17,051 டெங்கு தொற்றுகள் கண்டறியப்பட்டுள்ளன.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4e27c140-e8eb-40f7-b6f4-e202a92c012a/26-6a5878e9da9c4.webp' /></p><p>
 

மேற்கு மாகாணத்தில் அதிகபட்சமாக 38,160 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

தெற்கு மாகாணத்தில் 11,274 வழக்குகளும், சபரகமுவ மாகாணத்தில் 6,073 வழக்குகளும், மத்திய மாகாணத்தில் 6,026 வழக்குகளும் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
</p><p>
 

ஜூலை மாதத்தில், கம்பஹா மாவட்டத்தில் 15,082 டெங்கு நோய்த்தொற்றுகளும், கொழும்பு மாவட்டத்தில் 14,447 நோய்த்தொற்றுகளும், மாத்தறை மாவட்டத்தில் 5,124 நோய்த்தொற்றுகளும் பதிவாகியுள்ளன.
</p><p>
 

டெங்கு நோய்த்தொற்று காரணமாக இதுவரை 49 பேர் உயிரிழந்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-16T06:24:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[நியூசிலாந்தில் இலங்கையரின் நிறுவனத்தில் நடந்த மோசடி - பெருந்தொகை டொலர் அபராதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-lankan-fined-in-new-zealand-1784180349"></link>
            <id>https://tamilwin.com/article/sri-lankan-fined-in-new-zealand-1784180349</id>
            <summary type="text">நியூசிலாந்தில் வாகனத்தின் ஓடோமீட்டர் (Odometer) அளவை மாற்றியமைத்து மோசடியாக விற்பனை செய்த குற்றச்சாட்டில், இலங்கையருக்கு சொந்தமான கார் விற்பனை நிறுவனம...</summary>
            <content type="html"><![CDATA[<p>நியூசிலாந்தில் வாகனத்தின் ஓடோமீட்டர் (Odometer) அளவை மாற்றியமைத்து மோசடியாக விற்பனை செய்த குற்றச்சாட்டில், இலங்கையருக்கு சொந்தமான கார் விற்பனை நிறுவனம் ஒன்று தண்டிக்கப்பட்டுள்ளது.
</p><p>
நியூசிலாந்து அதிகாரிகளின் தகவலுக்கமைய, Sachis Holdings Ltd நிறுவனத்தினால் நடத்தப்படும் கார்போரியம் வாகன விற்பனை நிலையம், 2024ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் டொயோட்டா RAV4 ரக வாகனம் ஒன்றை 24,000 நியூசிலாந்து டொலர்களுக்கு விற்பனை செய்துள்ளது.
</p><p>
ஒரு வருடத்திற்கும் மேலாக பயன்பாட்டில் இருந்த குறித்த வாகனம், வழமையான சேவைப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது, அதன் ஓடோமீட்டர் பதிவிற்கும் சேவைப் பதிவேடுகளுக்கும் இடையில் முரண்பாடு இருப்பது கண்டறியப்பட்டது.
</p><h2><b>
வாகனம்&nbsp;கொள்வனவு </b></h2><p>விசாரணையில், குறித்த வாகனம் ஒக்லாந்து வாகன ஏலத்தில் கொள்வனவு செய்யப்பட்டபோது 150,031 கிலோமீற்றராக அதன் பயணத் தூரம் காணப்பட்டுள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a8dc6ddf-ce74-4bd7-b6e8-a418eac82326/26-6a5878cb87adc.webp' /></p><p>வாடிக்கையாளருக்கு விற்பனை செய்யப்பட்டபோது 119,244 கிலோமீற்றராகக் குறைத்துக் காட்டப்பட்டிருந்தது. </p><p>

சுமார் 30,000 கிலோமீற்றருக்கும் அதிகமான தூரம் போலியாகக் குறைத்து மோசடி செய்யப்பட்டுள்ளது.
</p><p>
நியூசிலாந்தின் வணிக, புத்தாக்கம் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சு, நடத்திய விசாரணையை தொடர்ந்து, மோட்டார் வாகன விற்பனைச் சட்டத்தின் கீழ் ஓடோமீட்டர் மோசடி மற்றும் அது தொடர்பான குற்றச்சாட்டுகளின் பேரில் வழக்குத் தொடரப்பட்டது.
</p><h3><b>
அபராதம்&nbsp;விதிப்பு</b></h3><p>தண்டனை வழங்குவதற்கு முன்னதாக, குறித்த வாகனத்தை ஆரம்பத்தில் விற்பனை செய்த அதே விலையான 24,000 நியூசிலாந்து டொலர்களுக்கு மீண்டும் கொள்வனவு செய்ய கார்போரியம் நிறுவனம் ஒப்புக்கொண்டது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/41735a5e-0e30-4b1e-ae72-e91e7b7f0860/26-6a5878cc53d82.webp' /></p><p>அத்துடன், குறித்த நிறுவனத்திற்கு 5,000 நியூசிலாந்து டொலர்கள் அபராதம் விதிக்கப்பட்டது.

அத்துடன், வாடிக்கையாளருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்காக 1,000 நியூசிலாந்து டொலர்களை இழப்பீடாக வழங்குமாறும் நிறுவனத்தின் இயக்குநருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
</p>]]></content>
            <updated>2026-07-16T06:23:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பல்கலைக்கழக மாணவி திடீர் உயிரிழப்பு; சம்பவத்தால் துயரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/ruhuna-university-student-dies-suddenly-1784182938"></link>
            <id>https://jvpnews.com/article/ruhuna-university-student-dies-suddenly-1784182938</id>
            <summary type="text">&amp;nbsp; கேகாலை, ரங்வல – பரணகம்பல பகுதியைச் சேர்ந்த ருகுணு பல்கலைக்கழக விவசாய பீட மாணவி ஒருவர் உடல் நலக் குறைவு காரணமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; கேகாலை, ரங்வல – பரணகம்பல பகுதியைச் சேர்ந்த ருகுணு பல்கலைக்கழக விவசாய பீட மாணவி ஒருவர் உடல் நலக் குறைவு காரணமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
</p><p>
24 வயதான ரணசிங்க முதலியன்சேலாகே சுஹாரி சந்தீபா என்பவரே இறந்துள்ளார்.


சந்தீபாவின் உடல் நலப் பிரச்சினை நாக்கின் கீழ் ஏற்பட்ட சிறிய கொப்புளம் ஒன்றைத் தொடர்ந்து ஆரம்பமானதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/211b812b-442d-4895-a1b8-ca5ee5ce58af/26-6a58789bb6959.webp' /></p><h2>நாக்கின் கீழ் ஏற்பட்ட&nbsp; கொப்புளம்</h2><p>

பின்னர் ஏற்பட்ட தொற்று நிலை காரணமாக உணவு உட்கொள்வதிலும் சிரமம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

உடல் நிலை மோசமடைந்த நிலையில் அவர் குருநாகல் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.</p><p></p><p>
</p><p>
தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை வழங்கப்பட்ட போதிலும், சில நாட்களுக்குப் பின்னர் அவர் உயிரிழந்தார்.

இந்த மரணம் தொடர்பாக குருநாகல் போதனா வைத்தியசாலையில் பிரேதப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.</p><p>

மருத்துவ அறிக்கைகள் மற்றும் கிடைக்கப் பெற்ற தகவல்களை அடிப்படையாகக் கொண்டு, மரணத்துக்கான உறுதியான காரணத்தை கண்டறிய முடியவில்லை என கூறப்படுகின்றது.</p><p>]</p>]]></content>
            <updated>2026-07-16T06:22:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழ் வர்த்தகர் கொலை வழக்கை மூடிமறைக்க திட்டமிட்ட நபர்! நாட்டை விட்டு தப்பியோட பாரிய திட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/businessman-schaffter-murder-case-covered-up-1784180351"></link>
            <id>https://ibctamil.com/article/businessman-schaffter-murder-case-covered-up-1784180351</id>
            <summary type="text">தமிழ் வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் (Dinesh Schaffter) கொலை வழக்கை மூடிமறைப்பதற்கு முன்னிலையில் இருந்து செயற்பட்ட நபர் குறித்த கருத்தை இலங்கை காவல்துறையை...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழ் வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் (Dinesh Schaffter) கொலை வழக்கை மூடிமறைப்பதற்கு முன்னிலையில் இருந்து செயற்பட்ட நபர் குறித்த கருத்தை இலங்கை காவல்துறையை 
அரசியல் அழுத்தங்களில் இருந்து பாதுகாக்கும் சர்வதேச அமைப்பு வெளிப்படுத்தியுள்ளது.
</p><p>
இதன்படி இந்த வழக்கை பிரதி காவல்துறைமா அதிபர் பிரசாத் ரணசிங்க மூடிமறைப்பதற்கு முன்னிலையில் இருந்து செயற்பட்டவர் என அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
</p><p>
இவர் ராஜபக்ச கூட்டத்தின் நெருங்கிய தொடர்பு கொண்டவர் என்றும், இந்தச் சம்பவத்தை மூடிமறைத்தது, அவருக்குப் பின்னால் இருந்தவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கவே என்றும் கூறப்படுகிறது.</p><p></p><h2>தினேஷ் ஷாப்டரின் கொலை</h2><p>
</p><p>
இந்நிலையில் தற்போது தினேஷ் ஷாப்டரின் கொலை தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9a255d87-bb8a-44d1-a0e2-3d8fe0535f6c/26-6a586e80f3056.webp' /></p><p>
</p><p>
இதற்கமைய உடனடியாக பிரசாத் ரணசிங்கவை கைது செய்ய வேண்டும் என இலங்கை காவல்துறையை அரசியல் அழுத்தங்களில் இருந்து பாதுகாக்கும் சர்வதேச அமைப்பின் தலைவர் குறிப்பிட்டுள்ளார். </p><p> 

அவருக்கு கிடைத்த தகவல்களை அடிப்படையாக கொண்டு இதனை குறிப்பிட்டுள்ளதாக தெரிவித்த அவர், பிரசாத் ரணசிங்கவின் மனைவி கொழும்பில் விசா (Agencies) அலுவலகம் ஒன்றை நடத்தி வருகிறார் என்றும், இப்போது இவர்கள் இருவரும் நாட்டை விட்டு தப்பிச் செல்லத் தயாராக உள்ளதாக தெரியவந்துள்ளது எனவும் கூறியுள்ளார்.
</p><p>

பிரசாத் ரணசிங்க நாட்டை விட்டுத் தப்பிச் செல்வதற்கு முன் உடனடியாக அவருக்குப் பயணத் தடை விதிக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.</p><p></p><h2>கைத தடுத்த ராஜபக்சர்கள்&nbsp;</h2><p>

“அன்று பிரதி பொலிஸ் மா அதிபர் பிரசாத் ரணசிங்கவை இலஞ்ச ஊழல் ஒழிப்புப் பிரிவால் (Bribery Commission) கைது செய்யச் சென்றபோது, அங்கு என்ன நடந்தது. இலஞ்ச ஒழிப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.</p><p></p><p>
</p><p>
ஆனால் விளக்கமறியலில் வைப்பதற்கு முன், அதனைத் தடுத்தார்கள் ராஜபக்ச கூட்டத்தினர். இந்த பிரசாத் ரணசிங்க மற்றும் SSP பிரசாந்த ஆகிய இருவரும் இணைந்தே இந்த விசாரணையை மூடிமறைத்தனர்.
</p><p>
அன்று ஏதேனும் ஒரு வழியில் இதனை வெளிக்கொண்டு வர முடிந்திருந்தால், கொலைகாரர்கள் இந்நேரம் பிடிபட்டிருப்பார்கள் என அவர் மேலும் கூறியுள்ளார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-16T06:20:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[இதுவரை கட்டா குஸ்தி 2 திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/gatta-kusthi-2-movie-worldwide-box-office-1784177046"></link>
            <id>https://cineulagam.com/article/gatta-kusthi-2-movie-worldwide-box-office-1784177046</id>
            <summary type="text">கட்டா குஸ்திதமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் விஷ்ணு விஷால் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் கட்டா குஸ்தி 2. முதல் பாகத்த...</summary>
            <content type="html"><![CDATA[<h2>கட்டா குஸ்தி</h2><p>தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் விஷ்ணு விஷால் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் கட்டா குஸ்தி 2. முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து 4 ஆண்டுகளுக்கு பின் இப்படம் வெளியாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4e0479e6-7e87-4549-a311-f6acec24f427/26-6a5861998156b.webp' /></p><p> 

இயக்குநர் செல்லா அய்யாவு இப்படத்தை இயக்க, ஐஸ்வர்யா லட்சுமி கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் ரம்யா கிருஷ்ணன், முனீஸ்காந்த், லிஸ்ஸி ஆன்டனி, கருணாஸ், காளி வெங்கட், யோகி பாபு என பல நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஷான் ரோல்டன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.</p><p></p><h2>வசூல் விவரம்</h2><p> 

கடந்த ஜூலை 3-ஆம் தேதி திரைக்கு வந்த <a href="https://www.youtube.com/watch?v=YShtISBHAYE" target="_blank">கட்டா </a>குஸ்தி 2 திரைப்படம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு, நாளுக்கு நாள் வசூலை வாரிக்குவித்து வந்தது. 

தொடர்ந்து ஒவ்வொரு நாளும் இப்படத்தின் வசூல் விவரம் என்னவென்று பார்த்து வருகிறோம்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c7925f32-6072-41ad-8f9e-c6de71a52df6/26-6a58619a39410.webp' /></p><p>இந்த நிலையில், பாக்ஸ் ஆபிஸில் 13 நாட்களை கடந்திருக்கும் கட்டா குஸ்தி 2, இதுவரை உலகளவில் ரூ. 48.5 கோடி வசூலித்துள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-16T06:20:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sudaron</name>
            </author>
            <title type="text"><![CDATA[முல்லைத்தீவு மாவட்டத்தில் நெல் கொள்வனவு ஆரம்பம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/paddy-procurement-begins-in-mullaitivu-district-1784180641"></link>
            <id>https://tamilwin.com/article/paddy-procurement-begins-in-mullaitivu-district-1784180641</id>
            <summary type="text">விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு அரசாங்கம் நிர்ணய விலையில் நெல்லைக்
கொள்வனவு செய்துவருகின்றது.

இதன் அடிப்படையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் நெல...</summary>
            <content type="html"><![CDATA[<p>விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு அரசாங்கம் நிர்ணய விலையில் நெல்லைக்
கொள்வனவு செய்துவருகின்றது.
</p><p>
இதன் அடிப்படையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் நெல் கொள்வனவு நேற்றையதினம்(15.07.2026) முள்ளியவளை கமநல சேவே நிலய நெல் களஞ்சியசாலையில் நெல் சந்தைப்படுத்தல்
சபையினால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><h2>
நெல் வகைகள் </h2><p>சிவப்பு நாடு - 120 ரூபாய்
</p><p>வெள்ளை நாடு- 120 ரூபாய்
</p><p>சம்பா - 130 ரூபாய்
</p><p>கீரிச்சம்பா - 140 ரூபாய்க்கும் கொள்வனவு செய்யப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/10687e88-de48-4543-a081-2e47cb3f1e9d/26-6a586fa705d68.webp' /></p><p>
</p><p>
ஒரு விவசாயிடம் இருந்து 2500kg நெல் கொள்வனவு செய்யப்படுகின்றது.
</p><p>முல்லைத்தீவு மாவட்டத்தில் தற்போது முள்ளியவளை கமநல சேவை நிலையத்தின் நெல்
களஞ்சிய சாலையிலும், முற்றிப்பு நெல் களஞ்சிய சாலையிலும் நெல் கொள்வனவு
ஆரம்பிக்கப்படுகின்றது.
</p><p>
முல்லைத்தீவு மாவட்டத்தில் 2800 மெற்றிக் தொன் நெல் கொள்வனவு செய்ய
எதிர்பார்க்கப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-16T06:19:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பில் ரூ.2 கோடி போதைப்பொருளுடன் பிரபல பாடசாலை ஆசிரியை கைது..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/couple-arrested-with-drugs-worth-rs-2-crore-1784181180"></link>
            <id>https://tamilwin.com/article/couple-arrested-with-drugs-worth-rs-2-crore-1784181180</id>
            <summary type="text">



கொழும்பில் உள்ள ஒரு சர்வதேச பாடசாலையின் ஆசிரியை ஒருவரும், அவரது கணவரும் 20 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள போதைப்பொருட்களுடன் மாதம்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>



கொழும்பில் உள்ள ஒரு சர்வதேச பாடசாலையின் ஆசிரியை ஒருவரும், அவரது கணவரும் 20 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள போதைப்பொருட்களுடன் மாதம்பிட்டிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். </p><p>

இந்த கைது நடவடிக்கை இன்று(16.07.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது. </p><p>

கொழும்பு வடக்கு பிரதேச புலனாய்வு அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் நடத்தப்பட்ட சோதனையிலேயே இவ்வாறு தம்பதி கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p></p><h2>

சட்டக்கல்வி மாணவி கைது</h2><p>
இதன்போது, கணவரிடம் இருந்து 1.6 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருளும், மனைவியிடம் இருந்து 149.150 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.
</p><p>

“மொதர மயூர” என அழைக்கப்படும் சக்திவாய்ந்த போதைப்பொருள் கடத்தல்காரரின் ஆதரவாளர்களாக இவர்கள் பணிப்புரிந்து வந்துள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e0093f17-5f4d-49c6-afd3-38003ecffb66/26-6a5876968cac1.webp' /></p><p> </p><p>

மேலும், குறித்த தம்பதியினர் சில காலமாக போதைப்பொருள் கடத்தல் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளனர் என்றும், சந்தேக நபர், ஒரு தனியார் நிறுவனத்தில் சட்ட மாணவி என்றும், அதற்கான செலவுகளை ஈடுசெய்யும் நோக்கத்தில் இந்தப் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்துள்ளதாகவும் விசாரணையின் போது தெரிவித்துள்ளனர்.</p><p>

இதனைத் தொடர்ந்து, மாளிககந்த நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவின்படி, மனைவி 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன், இருவரும் விசாரணையின் பின்னர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்கள் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-16T06:13:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[கூடங்குளம் அணுமின் நிலைய ரகசிய ஆவணங்கள் கசிவா? NPCIL விளக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/npcil-react-kudankulam-nuclear-plant-data-breach-1784182143"></link>
            <id>https://news.lankasri.com/article/npcil-react-kudankulam-nuclear-plant-data-breach-1784182143</id>
            <summary type="text">கூடங்குளம் அணுமின் நிலைய தரவுகள் கசிந்தது தொடர்பாக NPCIL விளக்கமளித்துள்ளது.

கூடங்குளம் அணுமின் நிலையம்

தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தில் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கூடங்குளம் அணுமின் நிலைய தரவுகள் கசிந்தது தொடர்பாக NPCIL விளக்கமளித்துள்ளது.</p><h3>

கூடங்குளம் அணுமின் நிலையம்
</h3><p>
தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கூடங்குளத்தில் ரஷ்யா உதவியுடன் அணுமின் நிலையம் கட்டப்பட்டுள்ளது. 2013 ஆம் ஆண்டு முதல் அங்கு மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f9f87e2c-4b0f-4024-8914-ada08a707219/26-6a58758156315.webp' /></p><p>

2011 ஆம் ஆண்டில், ஜப்பானில் உள்ள புக்குஷிமா டா இச்சி அணுமின் நிலையைத்தில் நிலநடுக்கமும், சுனாமியும் ஏற்படுத்திய பாதிப்பிற்கு பின்னர், கூடங்குள அணுஉலைக்கு எதிராக மக்கள் இடிந்தக்கரையில் போராட்டம் நடத்தி வருகின்றனர். </p><p>

இந்தியாவின் அணுமின் தேவையைப் பூர்த்தி செய்வதில் கூடங்குளம் அணுமின் நிலையம் முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் 4 அலகுகளுக்கான கட்டுமானப் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.</p><p> 

அனில் அம்பானியின் ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்‌ஷர், 2018 ஆம் ஆண்டு கூடங்குளம் அணு உலையில் 3 மற்றும் 4 ஆம் அலகை வடிவமைத்து உள்கட்டமைப்பை உருவாக்குவதற்கான ஒப்பந்தத்தை பெற்றுள்ளது.&nbsp;</p><p></p><h3>

அணுமின் நிலைய தரவுகள் கசிவு</h3><p> 

இந்நிலையில், பிரபல இணைய ஊடுருவல் கும்பலான ‘வேர்ல்டு லீக்ஸ்’, 8,58,000 ரிலையன்ஸ் நிறுவன கோப்புகளை இணையத்தில் வெளியிட்டுள்ளது.</p><p> 

அதில், கூடங்குளம் அணுமின் நிலையம் தொடர்பான 14.3 ஜிபி அளவுள்ள 19,000 ரகசியக் கோப்புகள் என்று அடையாளம் கண்டறியப்பட்டுள்ளன.</p><p> 

யோட்டா என்கிற மூன்றாம் தரப்பு இந்திய தரவு சேவை மையத்தின் சர்வரில் இருந்து இருந்த அதன் தரவுகள் கசிந்ததாக ரிலையன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.</p><p>

கூடங்குளம் அணுமின் நிலையத்தின் முக்கிய ரகசிய ஆவணங்கள் கசிந்துள்ளதாகவும், இது பாதுகாப்பு பிரச்சினையை ஏற்படுத்தும் எனவும், இது குறித்து அரசு விளக்கமளிக்க வேண்டுமென பலரும் கேள்வி எழுப்பினர்.
</p><p>
இது குறித்து விளக்கமளித்துள்ள இந்திய அணுசக்தி கழகம்(NPCIL), "ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் லிமிடெட் நிறுவனத்தில் ஏற்பட்ட பாதுகாப்பு மீறல் காரணமாக, கூடங்குளம் அணுமின் திட்டம் தொடர்பாக கசிந்ததாகக் கூறப்படும் வரைபடங்கள் 'பேலன்ஸ் ஆஃப் பிளாண்ட்' வசதிகளுடன் தொடர்புடையவை.

பாதுக்காப்பு தொடர்பான எந்த வித முக்கியமான தரவுகளும் கசியவில்லை" என தெரிவித்துள்ளது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-16T06:09:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[இறுதிப்போட்டிக்குள் நுழைந்த அர்ஜென்டினா அணிக்கு எதிராக நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/action-taken-against-arg-who-qualified-for-final-1784182101"></link>
            <id>https://ibctamil.com/article/action-taken-against-arg-who-qualified-for-final-1784182101</id>
            <summary type="text">இங்கிலாந்துக்கு எதிரான உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெற்றதை, கொண்டாடிய விவகாரம் குறித்து அர்ஜென்டினா அணிக்கு எதிராக ஃபிஃபாவிடமிருந்து நட...</summary>
            <content type="html"><![CDATA[<p><p>இங்கிலாந்துக்கு எதிரான உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெற்றதை, கொண்டாடிய விவகாரம் குறித்து அர்ஜென்டினா அணிக்கு எதிராக ஃபிஃபாவிடமிருந்து நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.</p><p>ஃபாக்லாந்து தீவுகள் மீதான தங்கள் நாட்டின் உரிமைகோரலை ஆதரிக்கும் பதாகையுடன் அர்ஜென்டினா வீரர்கள் கொண்டாடியதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.</p><p>இந்த போட்டியின் இறுதி நிமிடங்களில் ஆர்ஜன்டீனா அணி சிறப்பான ஆட்டத்தின் மூலம் 2 கோல்களை பெற்று இறுதிப்போட்டிகான பாதையை அமைத்துக்கொண்டது.</p><p></p><h2>ஸ்பெயினுடன் இறுதிப் போட்டி</h2><p>இதன்படி எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் ஸ்பெயினுடன்&nbsp;அர்ஜென்டினா அணி மோதவுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f9c5128b-e45c-41bc-b120-a8a250fcb264/26-6a5875574a61f.webp' /></p><p>இறுதி விசில் ஒலித்த பிறகு, அர்ஜென்டினா வீரர்கள் "ஃபாக்லாண்ட்ஸ் அர்ஜென்டினாவிற்குச் சொந்தமானது" என்று பொருள்படும் "லாஸ் மால்வினாஸ் சோன் அர்ஜென்டினாஸ்" என்ற வாசகம் அடங்கிய பதாகையை ஏந்தியபடி கொண்டாடினர்.
</p><p>
தென்மேற்கு அட்லாண்டிக் பெருங்கடலில் அமைந்துள்ள பிரித்தானிய வெளிநாட்டுப் பிரதேசமான ஃபாக்லாந்து தீவுகள், பிரித்தானியாவுக்கும் அர்ஜென்டினாவுக்கும் இடையிலான இறையாண்மைத் தகராறின் ஒரு பொருளாகத் தொடர்ந்து இருந்துவருகிறது.</p><p></p><h2>வரலாற்று பின்னணி</h2><p>
</p><p>
அர்ஜென்டினாவின் கிழக்குக் கடற்கரையிலிருந்து 300 மைல் தொலைவில் அமைந்துள்ள தீவுக் கூட்டத்திற்காக, இரு நாடுகளும் 1982 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் ஜூன் வரை போரிட்டன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/48d7c792-2ebe-4df1-9ade-4b3b25be1a3b/26-6a587558068d9.webp' /></p><p>
</p><p>
74 நாட்கள் நீடித்த இந்த மோதலில் 655 அர்ஜென்டினா வீரர்களும், 255 பிரித்தானிய வீரர்களும் உயிரிழந்தனர்.</p><p> 2014-ஆம் ஆண்டில், ஸ்லோவேனியாவுக்கு எதிரான ஒரு நட்புப் போட்டிக்கு முன்பு , அர்ஜென்டினா கால்பந்து சங்க வீரர்கள் அதே செய்தி அடங்கிய பதாகையை ஏந்தி நின்றதைத் தொடர்ந்து, ஃபிஃபா அந்தச் சங்கத்திற்கு £20,000 அபராதம் விதித்தது.</p><p></p><p></p></p><p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table></p>]]></content>
            <updated>2026-07-16T06:08:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[பொய்ப் பிரச்சாரங்களுக்கு ஏமாற வேண்டாம்; பொலிசார் விளக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/incident-setting-fire-to-car-in-kurunegala-police-1784182112"></link>
            <id>https://jvpnews.com/article/incident-setting-fire-to-car-in-kurunegala-police-1784182112</id>
            <summary type="text">&amp;nbsp; சமூக ஊடகங்களில் கடும் விவாதத்திற்கு உள்ளாகி வரும், தீப்பிடித்து எரிந்து கொண்டிருக்கும் காரின் அருகே சிறுவன் ஒருவன் நடந்து செல்லும் காணொளிக் காட...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; சமூக ஊடகங்களில் கடும் விவாதத்திற்கு உள்ளாகி வரும், தீப்பிடித்து எரிந்து கொண்டிருக்கும் காரின் அருகே சிறுவன் ஒருவன் நடந்து செல்லும் காணொளிக் காட்சி தொடர்பாக, பொலிஸ் ஊடகப் பிரிவு பொதுமக்களுக்கு அது தொடர்பான விளக்கம் ஒன்றை வழங்கியுள்ளது. </p><p>

சிறுவன் தான் காருக்குத் தீ வைத்ததாகக் குறிப்பிட்டாலும், விசாரணையின் போது நேரில் பார்த்த சாட்சியோ அல்லது வேறு ஆதாரமோ எதுவும் கண்டறியப்படவில்லை என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f0cfaa8a-f226-4423-a8a2-a9daac70cf31/26-6a58756250b2b.webp' /></p><h2>இதுவரை எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை</h2><p> </p><p>

குருநாகல் பொலிஸ் பிரிவுக்குச் சொந்தமான பாடசாலை வளாகத்திலேயே இந்தத் தீ விபத்து இடம்பெற்றுள்ளது. 

பொலிஸாரின் அறிக்கைகளின்படி, பாடசாலை வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த சுமார் 14 லட்சம் ரூபா பெறுமதியான கார் ஒன்று, ஜூலை 3 ஆம் திகதி தீக்கிரையானது. </p><p>

சுமார் 8 வயது மதிக்கத்தக்க சிறுவன் ஒருவன் இந்தத் தீவைப்புக்குக் காரணம் என்று குருநாகல் பொலிஸ் நிலையத்தில் ஒரு புகாரும் செய்யப்பட்டிருந்தது. </p><p>

புகாரின் பேரில் உடனடியாக விசாரணைகளை மேற்கொண்ட குருநாகல் பொலிஸாருக்கு, அந்தக் காணொளிக் காட்சியில், அதே பாடசாலையில் கல்வி கற்கும் 8 வயது மாணவன் ஒருவன், அந்த காருக்கு அருகில் நடந்து செல்கின்றமை தெரியவந்தது. </p><p>

இருப்பினும், சம்பந்தப்பட்ட சிறுவன் தான் காருக்குத் தீ வைத்தது என்பதை உறுதிப்படுத்த இதுவரை எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என்று பொலிஸார் கூறுகின்றனர். 

குருநாகல் பொலிஸார் இச்சம்பவம் குறித்து நீதிமன்றத்தில் ஏற்கனவே புகார் அளித்துள்ளதோடு, மேலும் விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர். </p><p>

காரில் ஏற்பட்ட தீ விபத்திற்கான உண்மையான காரணத்தைக் கண்டறிய, அரச தடவியல் நிபுணர்களின் விசாரணை அறிக்கைகளையும் பெறுவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கப் பகுப்பாய்வாளர் அலுவலகமும் எடுத்துள்ளது. </p><p>

எனவே, அதிகாரப்பூர்வ விசாரணைகள் முடிவடையும் முன், சமூக ஊடகங்களில் பரப்பப்படும் பொய்ப் பிரச்சாரங்களுக்கு பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என பொலிஸ் ளஊடகப் பிரிவு கேட்டுக்கொண்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-16T06:07:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[அடுத்த மாதம் வரை அதி அபாயகரமாக மாறும் நிலைமை ; இலங்கை மக்களுக்கு எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/situation-turns-highly-dangerous-until-next-month-1784181843"></link>
            <id>https://jvpnews.com/article/situation-turns-highly-dangerous-until-next-month-1784181843</id>
            <summary type="text">தற்போது நிலவும் வானிலை மாற்றத்துடன், எதிர்வரும் ஓகஸ்ட் மாத நடுப்பகுதி வரை டெங்கு நோய் பரவுவதற்கான அதிக அபாயகரமான சூழ்நிலை நிலவக்கூடும் என சுகாதார அமைச...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify;">தற்போது நிலவும் வானிலை மாற்றத்துடன், எதிர்வரும் ஓகஸ்ட் மாத நடுப்பகுதி வரை டெங்கு நோய் பரவுவதற்கான அதிக அபாயகரமான சூழ்நிலை நிலவக்கூடும் என சுகாதார அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.</p><p style="text-align: justify;"> 

எனவே, நோய் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக சுகாதாரத் துறையினர் முன்னெடுக்கும் ஒழிப்புத் திட்டங்களுக்கு அதிகபட்ச ஆதரவை வழங்குமாறும், தாங்கள் வசிக்கும் வீடுகள், பாடசாலைகள் மற்றும் பணியிடங்களைச் சுற்றியுள்ள வளாகங்களை நுளம்புகள் பெருகாதவாறு சுத்தமாக வைத்திருப்பதை உறுதிசெய்யுமாறும் சுகாதார அமைச்சர் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.</p><p style="text-align: justify;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f493562b-e7d8-4361-b2ac-e0547fd71b41/26-6a587455bf68b.webp' /></p><h2 style="text-align: justify;">நோயாளர்களின் எண்ணிக்கை&nbsp;</h2><p style="text-align: justify;"> 

தற்போது கம்பஹா மாவட்டத்தில் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார். </p><p style="text-align: justify;">

இதேவேளை, நாடு பூராகவும் நிலவும் டெங்கு அபாயத்தைக் கருத்திற்கொண்டு, 11 மாவட்டங்களை இலக்கு வைத்து இன்று (16) முதல் விசேட டெங்கு ஒழிப்புத் திட்டமொன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;"> </p><p style="text-align: justify;">

இன்று முதல் அடுத்த இரண்டு வாரங்களுக்கு சம்பந்தப்பட்ட மாவட்டங்களை மையப்படுத்தி இந்த விசேட ஒழிப்புத் திட்டத்தை தொடர்ச்சியாக முன்னெடுப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் பதில் பணிப்பாளர் வைத்தியர் கபில கன்னங்கர குறிப்பிட்டுள்ளார். </p><p style="text-align: justify;">

டெங்கு பரவல் அதிகமாகப் பதிவாகும் வலயங்களை இனங்கண்டு, நுளம்புகள் பெருகும் இடங்களை அழிப்பதும், பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதுமே இதன் முக்கிய நோக்கமாகும்.</p><p style="text-align: justify;"></p>]]></content>
            <updated>2026-07-16T06:06:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[“விஜய் வெறியன் தான்” – முதல்வர் விஜய்யை சந்தித்த பின் வரலட்சுமியின் நெகிழ்ச்சி பதிவு வைரல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/ctor-varalakshmi-met-cm-vijay-photos-viral-1784181041"></link>
            <id>https://manithan.com/article/ctor-varalakshmi-met-cm-vijay-photos-viral-1784181041</id>
            <summary type="text">நடிகை வரலட்சுமி தன் கணவருடன் முதல்வர் விஜயை சந்தித்துள்ளார். குறித்த புகைப்படங்களை பகிர்ந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வரலட்சுமி வெளியிட்டுள்ள நெக...</summary>
            <content type="html"><![CDATA[<p>நடிகை வரலட்சுமி தன் கணவருடன் முதல்வர் விஜயை சந்தித்துள்ளார். குறித்த புகைப்படங்களை பகிர்ந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வரலட்சுமி வெளியிட்டுள்ள நெகிழ்ச்சியான பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.</p><h2>வரலட்சுமி பதிவு</h2><p>முதல்வர் விஜயுடனான சந்திப்பு குறித்து வரலட்சுமி வெளியிட்ட பதிவில், “ஒருவேளை மக்கள் 100 வித்தியாசமான விஷயங்களைச் சொல்லலாம். ஆனால் இறுதியில் சி. ஜோசப் விஜய் என்பவர் நம் முதல்வர்தான். 
விமர்சிப்பது மிக எளிதானது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/82152afc-87f5-4898-b870-5f73f301cb32/26-6a587467d7879.webp' /></p><p></p><p> </p><p>ஆனால், தன் முதல் முயற்சியிலேயே முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு தைரியம், மன உறுதி, தமிழக மக்களின் பேரன்பு ஆகியவற்றைப் பெற்றால்தான் சாத்தியம்.வார்த்தைகளைவிட செய்லே வலிமை மிக்கது.</p><p>இந்த பதவியின் பொறுப்பிற்புகு மரியாதை அளிப்போம்.

எப்போதும் குறை கூறிக் கொண்டிருப்பவர்களுக்கு, காலமே உண்மையை வெளிக்கொண்டு வரும்.அதுவரை, அவர் என்ன சாதிக்கப் போகிறார் என்பதைப் பார்க்க, கொஞ்சம் பொறுமையுடனும், மரியாதையுடனும், ஊக்கத்துடனும் இருப்போம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b3ab8e34-8747-4089-808f-de56dc424234/26-6a58746891baa.webp' /></p><p></p><p> நான் பெண்கள் நலன் சார்ந்து சில விஷயங்களை அவருடன் பகிர்ந்துகொண்டேன். ஐ லவ் யூ சார்... என்றும், என்றும் ‘விஜய் வெறியன்’தான். எங்களைச் சந்திக்க நேரம் ஒதுக்கி அன்பைப் பகிர்ந்ததற்கு நன்றி.” எனத் தெரிவித்துள்ளார். குறித்த பதிவு தற்போது இணையத்தில்&nbsp; கவனம் ஈர்த்து வருகின்றது.</p><p>முதல்வர் விஜய்யின் தீவிர ரசிகையான நடிகை வரலட்சுமி அவருடன் இணைந்து சர்க்கார் திரைப்படத்தில் முக்கியமான அரசியல் கதாபாத்திரத்தில் நடித்து பாராட்டுகளைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/p/Da1ySd0k097/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/p/Da1ySd0k097/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/p/Da1ySd0k097/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by Varalaxmi Sarathkumar (@varusarathkumar)</a></p></div></blockquote> <script async src="//www.instagram.com/embed.js"></script></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b>&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-16T06:04:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[கட்டார் பயணத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பிய பிரதமர் ஹரிணி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/pm-harini-returns-to-sri-lanka-after-qatar-visit-1784179656"></link>
            <id>https://tamilwin.com/article/pm-harini-returns-to-sri-lanka-after-qatar-visit-1784179656</id>
            <summary type="text">கட்டார் நாட்டின் முன்னாள் அமீரின் மறைவைத் தொடர்ந்து, இலங்கை அரசாங்கம் மற்றும் மக்கள் சார்பாக இரங்கல் தெரிவிப்பதற்காக கட்டாருக்குச் சென்றிருந்த பிரதமர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கட்டார் நாட்டின் முன்னாள் அமீரின் மறைவைத் தொடர்ந்து, இலங்கை அரசாங்கம் மற்றும் மக்கள் சார்பாக இரங்கல் தெரிவிப்பதற்காக கட்டாருக்குச் சென்றிருந்த பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று (16.07.2026) நாடு திரும்பியுள்ளார்.</p><p>பிரதமர் ஹரிணி லுசைல் அரண்மனையில் அமீர் ஷேக் தமீம் பின் ஹமத் அல் தானியைச் சந்தித்து, அரச குடும்ப உறுப்பினர்களுக்குத் தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>அரச குடும்பத்தின் பிற உறுப்பினர்கள்</h2><p>மேலும் அவர், காலஞ்சென்ற அமீரின் மகள்களான ஷேக்கா அல் மயஸ்ஸா பின்த் ஹமத் அல் தானி மற்றும் ஷேக்கா ஹிந்த் பின்த் ஹமத் அல் தானி ஆகியோருக்கும், அத்துடன் அரச குடும்பத்தின் பிற உறுப்பினர்களுக்கும் தனது இரங்கலைத் தெரிவித்தார். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4c4225ab-f2a1-4f75-b0c3-9e318b161846/26-6a5873ff121ba.webp' /></p><p>இந்நிகழ்வில் கட்டார் நாட்டின் சமூக மேம்பாடு மற்றும் குடும்ப விவகாரங்கள் அமைச்சர் புதைனா பின்ட் அலி அல் ஜபர் அல் நுஜைமியும் கலந்துகொண்டிருந்ததுடன், அவரிடமும் இலங்கை சார்பாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தனது இரங்கலைத் தெரிவித்தார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-16T06:02:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[37 வயதில் குறையாத கிளாமர் லுக்கில் நடிகை வாணி கபூர்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/actress-vaani-kapoor-recent-photoshoot-1784180977"></link>
            <id>https://viduppu.com/article/actress-vaani-kapoor-recent-photoshoot-1784180977</id>
            <summary type="text">வாணி கபூர்பாலிவுட் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் தான் வாணி கபூர். Shuddh Desi Romance என்கிற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர். தமி...</summary>
            <content type="html"><![CDATA[<h2>வாணி கபூர்</h2><p>பாலிவுட் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் தான் வாணி கபூர். Shuddh Desi Romance என்கிற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f6c2b829-9ce5-40de-86ba-cb43075f40cd/26-6a5870f7cb166.webp' /></p><p> தமிழில் வெளிவந்த ஆஹா கல்யாணம் படத்தில் நடித்தார்.

எதுவும் அமையவில்லை. எல்லா நாயகிகளை போல இவரும் இன்ஸ்டாவில் மிகவும் ஆக்டீவாக இருப்பார்.
</p><p>
தற்போது, 37 வயதாகும் நடிகை வாணி கபூர், கிளாமர் உடையில் சென்ற புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-07-16T06:00:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பகுதியை மிரள வைத்த ஆபத்தான நபருக்கு நேர்ந்த கதி ; அதிரடி காட்டிய அதிகாரிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/dangerous-suspect-caught-in-tamil-area-1784169974"></link>
            <id>https://jvpnews.com/article/dangerous-suspect-caught-in-tamil-area-1784169974</id>
            <summary type="text">திருகோணமலை – உப்புவெளி பகுதியில் ஆபத்தான வாள்கள் மற்றும் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் பிரதான பாதாள உலகக் குழுத் தலைவராகக் கருதப்படும் ‘கெம்பா’ உட்பட மூன்று ச...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify;">திருகோணமலை – உப்புவெளி பகுதியில் ஆபத்தான வாள்கள் மற்றும் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் பிரதான பாதாள உலகக் குழுத் தலைவராகக் கருதப்படும் ‘கெம்பா’ உட்பட மூன்று சந்தேக நபர்கள் விசேட பொலிஸ் அதிரடிப்படையினரால் (STF) கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p style="text-align: justify;">


உப்புவெளி மின்சார நிலைய வீதியில் வைத்து&nbsp; மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே இக்கைது இடம்பெற்றுள்ளது.</p><p style="text-align: justify;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/900ff38a-a1bf-42e6-99fd-aba6b4ff1244/26-6a5845fce7722.webp' /></p><h2 style="text-align: justify;">&nbsp;போதைப்பொருட்கள்</h2><p style="text-align: justify;">இதன்போது கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து கூர்மையான ஆயுதங்கள் மற்றும் கணிசமான அளவு போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.</p><p style="text-align: justify;">



கைது செய்யப்பட்ட பிரதான சந்தேக நபரான ‘கெம்பா’விடமிருந்து 16 கிராம் ‘ஐஸ்’ போதைப்பொருள் மற்றும் இரண்டு கூர்மையான வாள்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், இரண்டாவது சந்தேக நபரிடமிருந்து 8 கிராம் ‘ஐஸ்’ போதைப்பொருளும், மூன்றாவது சந்தேக நபரிடமிருந்து 7 கிராம் ‘ஐஸ்’ போதைப்பொருளும் மீட்கப்பட்டுள்ளன.
</p><p style="text-align: justify;">


ஆரம்பகட்ட விசாரணைகளில், குறித்த குழுவினர் திருகோணமலை பகுதியில் பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
</p><p style="text-align: justify;">


மேலும், இக்குழுவினருக்கு எதிராக ஏற்கனவே இரண்டு கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளதுடன், பொதுமக்களை அச்சுறுத்தி பணம் பறித்தல் மற்றும் போதைப்பொருள் கடத்தல் தொடர்பான பல வழக்குகள் திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p style="text-align: justify;">



கைது செய்யப்பட்ட மூவரும், கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருட்களுடன் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக உப்புவெளி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
</p><p style="text-align: justify;">&nbsp;சந்தேக நபர்களை திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p>]]></content>
            <updated>2026-07-16T05:55:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆர்ஜென்டினா அணியிடம் தோற்ற இங்கிலாந்து ; இளவரசர் வில்லியம் கவலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/england-loses-to-argentina-prince-william-concern-1784181316"></link>
            <id>https://canadamirror.com/article/england-loses-to-argentina-prince-william-concern-1784181316</id>
            <summary type="text">&amp;nbsp; ஆர்ஜென்டினா அணியிடம் இங்கிலாந்து அணி 2-1 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்து உலகக் கிண்ணத்தில் இருந்து வெளியேறியமை குறித்து, இளவரசர் வில்லியம் மற்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; ஆர்ஜென்டினா அணியிடம் இங்கிலாந்து அணி 2-1 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்து உலகக் கிண்ணத்தில் இருந்து வெளியேறியமை குறித்து, இளவரசர் வில்லியம் மற்றும் பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் ஆகியோர் தமது கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.
</p><p>
கென்சிங்டன் அரண்மனை ஊடாக இளவரசர் வில்லியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்தத் தோல்வி மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e360ba2b-c8ce-47bc-a1d6-acaef6895f8e/26-6a587245af6c8.webp' /></p><p>

இந்தப் போட்டித் தொடரில் இங்கிலாந்து அணி வெளிப்படுத்திய போராட்ட குணமும் நம்பிக்கையும் அனைவரையும் ஊக்கப்படுத்தியது என்றும் இளவரசர் வில்லியம் குறிப்பிட்டுள்ளார்.</p><p>

அதேசமயம் பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மரும் தனது கருத்தைப் பதிவு செய்துள்ளார்.

"இங்கிலாந்து அணியின் தோல்வி மிகுந்த ஏமாற்றமளிக்கிறது. இருப்பினும், அணியினர் வெளிப்படுத்திய ஆர்வமும், ஆற்றலும் அனைவரையும் பெருமைப்பட வைத்துள்ளது" என்று அவர் கூறியுள்ளார்.</p>]]></content>
            <updated>2026-07-16T05:53:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[எதிர்வரும் ஆகஸ்ட் மாத நடுப்பகுதி வரை அதிக அபாயகரமான சூழ்நிலை - நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/dengue-fever-in-sri-lanka-1784180299"></link>
            <id>https://tamilwin.com/article/dengue-fever-in-sri-lanka-1784180299</id>
            <summary type="text">தற்போது நிலவும் வானிலை மாற்றத்துடன், எதிர்வரும் ஆகஸ்ட் மாத நடுப்பகுதி வரை டெங்கு நோய் பரவுவதற்கான அதிக அபாயகரமான சூழ்நிலை நிலவக்கூடும் என சுகாதார அமைச...</summary>
            <content type="html"><![CDATA[<p>தற்போது நிலவும் வானிலை மாற்றத்துடன், எதிர்வரும் ஆகஸ்ட் மாத நடுப்பகுதி வரை டெங்கு நோய் பரவுவதற்கான அதிக அபாயகரமான சூழ்நிலை நிலவக்கூடும் என சுகாதார அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ எச்சரித்துள்ளார்.&nbsp;</p><p>

எனவே, நோய் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக சுகாதாரத் துறையினர் முன்னெடுக்கும் ஒழிப்புத் திட்டங்களுக்கு அதிகபட்ச ஆதரவை வழங்குமாறு அவர் பொது மக்களிடம் கோரியுள்ளார்.&nbsp;</p><p></p><p>அவர் மேலும் தெரிவிக்கையில், பொதுமக்கள், தாங்கள் வசிக்கும் வீடுகள், பாடசாலைகள் மற்றும் பணியிடங்களைச் சுற்றியுள்ள வளாகங்களை நுளம்புகள் பெருகாதவாறு சுத்தமாக வைத்திருப்பதை உறுதிசெய்யுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.&nbsp;</p><h2>நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு</h2><p> தற்போது கம்பஹா மாவட்டத்தில் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/14e25c2e-d051-4101-a90f-a5db05c006e5/26-6a586fe46c035.webp' /></p><p> </p><p>

இதேவேளை, நாடு பூராகவும் நிலவும் டெங்கு அபாயத்தைக் கருத்திற்கொண்டு, 11 மாவட்டங்களை இலக்கு வைத்து இன்று (16.07.2026) முதல் விசேட டெங்கு ஒழிப்புத் திட்டமொன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. </p><p>

இன்று முதல் அடுத்த இரண்டு வாரங்களுக்கு சம்பந்தப்பட்ட மாவட்டங்களை மையப்படுத்தி இந்த விசேட ஒழிப்புத் திட்டத்தை தொடர்ச்சியாக முன்னெடுப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் பதில் பணிப்பாளர் வைத்தியர் கபில கன்னங்கர குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p></p><p><b>YOU MAY LIKE THIS VIDEO</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/-gpNqfXN4mg" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p>]]></content>
            <updated>2026-07-16T05:45:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[எஜமானின் இழப்பை தாங்காது உயிரிழந்த ஐந்தறிவு ஜீவன்; இறுதி ஊர்வலத்தில் நிகழ்ந்த சோகம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/dog-dies-owner-deeply-that-when-his-owner-passed-1784180823"></link>
            <id>https://jvpnews.com/article/dog-dies-owner-deeply-that-when-his-owner-passed-1784180823</id>
            <summary type="text">&amp;nbsp; இந்திய மத்திய பிரதேசத்தில், தனது உரிமையாளரின் மரணத்தைத் தாங்கிக்கொள்ள முடியாமல், இறுதி ஊர்வலத்தின் போது அவரது வளர்ப்பு நாய் உயிரிழந்த சம்பவம் த...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; இந்திய மத்திய பிரதேசத்தில், தனது உரிமையாளரின் மரணத்தைத் தாங்கிக்கொள்ள முடியாமல், இறுதி ஊர்வலத்தின் போது அவரது வளர்ப்பு நாய் உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
</p><p>
மத்திய பிரதேசத்தின் பெடுல் மாவட்டத்தைச் சேர்ந்த பிரதீப் ஜெயின் என்பவர் டுகி என்ற குறித்த நாயை கடந்த 15 ஆண்டுகளாகத் தனது குடும்பத்தில் ஒருவராக வளர்த்து வந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/471061d7-0675-4294-871b-0222c7fb218a/26-6a587058971ba.webp' /></p><h2>&nbsp;இறுதி ஊர்வலத்தில் நிகழ்ந்த சோகம்</h2><p>
</p><p>
இந் நிலையில் உடல்நலக்குறைவால் பிரதீப் ஜெயின் காலமான நிலையில், அவரது உடலைப் பார்த்ததிலிருந்தே அந்த நாய் மிகுந்த சோகத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.</p><p>

அத்துடன், இறுதிச் சடங்கின் போது, தனது எஜமானரின் அருகே அமைதியாக நின்றிருந்த அந்த நாய், ஊர்வலம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே அப்படியே சரிந்து விழுந்து உயிரிழந்தது.</p><p></p><p>
</p><p>
 இதனையடுத்து , பிரதீப் ஜெயின் அடக்கம் செய்யப்பட்ட இடத்தின் அருகிலேயே, அவரது செல்ல நாயான டுகியும் அடக்கம் செய்யப்பட்டதாக கூறப்படுகின்றது.</p>]]></content>
            <updated>2026-07-16T05:45:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[காவல்துறை அதிகாரி மீது துப்பாக்கிச்சூடு : சந்தேகநபர் தொடர்பில் வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/information-of-suspect-who-shot-a-police-officer-1784176789"></link>
            <id>https://ibctamil.com/article/information-of-suspect-who-shot-a-police-officer-1784176789</id>
            <summary type="text">கட்டுநாயக்க ​காவல்துறை பிரிவிற்கு உட்பட பகுதியில் காவல்துறை அதிகாரி ஒருவரின் துப்பாக்கியைப் பறித்து, மற்றொரு அதிகாரி மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கட்டுநாயக்க ​காவல்துறை பிரிவிற்கு உட்பட பகுதியில் காவல்துறை அதிகாரி ஒருவரின் துப்பாக்கியைப் பறித்து, மற்றொரு அதிகாரி மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பியோடிய சந்தேகநபர் குறித்து பல தகவல்கள் வெளியாகியுள்ளன. </p><p>

கைது செய்யப்பட்ட குறித்த சந்தேகநபரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் போதே இந்தத் தகவல்கள் தெரியவந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.</p><p>

சந்தேகநபரை கைது செய்வதற்காக பல காவல்துறை குழுக்கள் இணைந்து விசேட நடவடிக்கைகளை ஆரம்பித்திருந்த நிலையில், நீர்கொழும்பு பிராந்திய குற்றவியல் பணியகத்தின் அதிகாரிகள் குழுவொன்றினால் திவுலபிட்டிய பகுதியில் வைத்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p></p><h2>&nbsp;சிவில் பாதுகாப்புப் படை</h2><p> </p><p>

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் திவுலபிட்டிய பகுதியைச் சேர்ந்த 41 வயதுடையவர் எனவும் இதன்போது அவரிடமிருந்து 31 கிராம் 'ஐஸ்' போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9e96d715-7220-4990-832b-918b0a543c9b/26-6a5877f22e241.webp' /></p><p>

அத்துடன், சந்தேகநபரின் வசம் இருந்த காவல்துறை அதிகாரியின் துப்பாக்கியும், கொள்ளையடிக்கப்பட்ட மோட்டார் சைக்கிளும் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. </p><p>குறித்த சந்தேக நபர் 2008ஆம் ஆண்டு முதல் 2010ஆம் ஆண்டு வரை சிவில் பாதுகாப்புப் படையின் கட்டுநாயக்க நகரப் பாதுகாப்புப் பிரிவில் கடமையாற்றியவர் என்பதை விசாரணை அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.</p><p></p><h2>நீர்கொழும்பு வைத்தியசாலை</h2><p> </p><p>

துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுக்குள்ளான காவல்துறை அதிகாரி நீர்கொழும்பு வைத்தியசாலையிலும், தாக்குதலுக்குள்ளான மற்றைய காவல்துறை அதிகாரி மினுவாங்கொடை வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a233f7b9-b03e-46c9-8ac1-fdd2dff10609/26-6a586bb88a857.webp' /></p><p>இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய மற்றொரு சந்தேகநபரை கைது செய்வதற்கான விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-16T05:43:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[தொகுப்பாளினி டிடி சேலையில் அழகிய போட்டோஷூட்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/dhivyadharshini-latest-saree-photoshoot-1784176032"></link>
            <id>https://cineulagam.com/article/dhivyadharshini-latest-saree-photoshoot-1784176032</id>
            <summary type="text">விஜய் டிவி என்றாலே நம் நினைவுக்கு வரும் பிரபலங்களில் ஒருவர் தொகுப்பாளினி திவ்யதர்ஷினி. இவரை டிடி என அனைவரும் செல்லமாக அழைப்பார்கள். இவர் தொகுத்து வழங்...</summary>
            <content type="html"><![CDATA[<p>விஜய் டிவி என்றாலே நம் நினைவுக்கு வரும் பிரபலங்களில் ஒருவர் தொகுப்பாளினி திவ்யதர்ஷினி. இவரை டிடி என அனைவரும் செல்லமாக அழைப்பார்கள். இவர் தொகுத்து வழங்கிய 'காஃபி வித் டிடி' நிகழ்ச்சியை நம்மால் மறக்கவே முடியாது. </p><p>ஆனால், கடந்த சில ஆண்டுகளாக உடல்நல குறைவு காரணமாக தொடர்ந்து நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கவில்லை. இசை வெளியீட்டு விழா போன்ற பிரம்மாண்ட நிகழ்ச்சிகளை மட்டுமே அவ்வப்போது தொகுத்து வழங்கி வருகிறார். </p><p>இந்நிலையில், தொகுப்பாளினி டிடி சேலையில் எடுத்துக்கொண்ட அழகிய போட்டோஷூட் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. இதோ பாருங்க:&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-16T05:40:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் வீட்டுச் சிறை நடைமுறைக்கான சாத்தியம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-lanka-s-house-arrest-system-1784177426"></link>
            <id>https://tamilwin.com/article/sri-lanka-s-house-arrest-system-1784177426</id>
            <summary type="text">இலங்கையில் புதிய சட்டங்களின் மூலம் எதிர்காலத்தில் வீட்டுச் சிறையை நடைமுறைப்படுத்துவதற்கான ஒழுங்குவிதிகள் கொண்டுவரப்படும் என்று பிரதி அமைச்சர் மகிந்த ஜ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் புதிய சட்டங்களின் மூலம் எதிர்காலத்தில் வீட்டுச் சிறையை நடைமுறைப்படுத்துவதற்கான ஒழுங்குவிதிகள் கொண்டுவரப்படும் என்று பிரதி அமைச்சர் மகிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார். </p><p>

நேற்றையதினம் அமைச்சில் இடம்பெற்ற நிகழ்வொன்றின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.</p><p>

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,</p><p> 

சிறைச்சாலைகளில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை குறித்து அரசாங்கம் தீவிர கவனம் செலுத்தி வருகின்றது.</p><p></p><h2>கைதிகளால் நிரம்பி வழியும் சிறைகள்&nbsp;</h2><p> 

கைதிகளால் சிறைச்சாலைகள் நிரம்பி வழிவதற்கு காரணமான சட்டத்திட்டங்களை மாற்றியமைப்பது குறித்து தற்போதைய அரசாங்கம் கரிசனை கொண்டுள்ளது. </p><p>

போதைப் பொருள் வர்த்தகர்களைப் பாதுகாத்து, நாடு முழுவதும் போதைப்பொருள் பரவுவதற்கு வழிவகுத்த பலர் இன்று சிறைச்சாலைகள் கைதிகளால் நிரம்பி வழிவது குறித்து பேசுவது வேடிக்கையாக உள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6bf4b764-d42b-49ce-8626-7f08d26ac024/26-6a586e733311e.webp' /></p><p> </p><p> 

போதைப்பொருள் கடத்தல்காரர்கள் கைது செய்யப்படும் போது, அவர்களுக்கு ஆதரவாகச் சென்று தழுவிக் கொண்டவர்கள் இன்று எப்படி பேசுகின்றாரகள் என்பது நாட்டு மக்களுக்கு நன்றாகத் தெரியும்.</p><p> 

கடந்த காலத்தில் நாட்டில் போதைப்பொருள் விஷ்வரூபமெடுப்பதற்கு யார் காரணமாக இருந்தார்கள் என்பதை நாட்டு மக்கள் மறந்துவிடவில்லை.
</p><p>
இன்று நாம் போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்க எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகளை எடுத்துவரும் நிலையில், குறித்த நபர்கள் பதற்றமடைந்துள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-16T05:39:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[மலர்ச் செடிகளுடன் இலங்கை வந்த பெண் அதிரடி கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/woman-arrested-in-sri-lanka-with-plants-1784179999"></link>
            <id>https://jvpnews.com/article/woman-arrested-in-sri-lanka-with-plants-1784179999</id>
            <summary type="text">தாய்லாந்து, பாங்கொக் நகரிலிருந்து பயணப் பொதிகளுக்குள் மறைத்து வைத்துச் சட்டவிரோதமான முறையில் இலங்கைக்குக் கடத்தி வரப்பட்ட பெருமளவிலான மலர்ச் செடிகளுடன...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">தாய்லாந்து, பாங்கொக் நகரிலிருந்து பயணப் பொதிகளுக்குள் மறைத்து வைத்துச் சட்டவிரோதமான முறையில் இலங்கைக்குக் கடத்தி வரப்பட்ட பெருமளவிலான மலர்ச் செடிகளுடன் இலங்கை பெண் ஒருவர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p style="text-align: justify; ">


பாங்கொக்கிலிருந்து ஸ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான UL 403 என்ற விமானம் மூலம் அப்பயணி கட்டுநாயக்கவை வந்தடைந்தார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8819e23c-fc70-451c-9c34-76fb1964e343/26-6a586d207877d.webp' />&nbsp;</p><h2 style="text-align: justify; ">மலர்ச் செடிகள்</h2><p>
</p><p style="text-align: justify; ">
விமான நிலையத்தின் பசுமைப் பிரிவு வழியாக அவர் வெளியேற முயன்ற போது, விமான நிலைய சுங்க அதிகாரிகள் மற்றும் இலங்கை சுங்கப் பிரிவின் பல்லுயிர், கலாசார மற்றும் தேசிய பாரம்பரிய பாதுகாப்புப் பிரிவின் அதிகாரிகள் இணைந்து அவரை மறித்துச் சோதனை மேற்கொண்டனர். </p><p style="text-align: justify; ">இதன்போது அவரது பைகளிலிருந்து மலர்ச் செடிகள் கண்டெடுக்கப்பட்டன.&nbsp;</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; "> சுங்கப் பிரிவினரின் ஆரம்பகட்ட விசாரணைகளைத் தொடர்ந்து, கடத்தி வரப்பட்ட அனைத்து மலர்ச் செடிகளும் அரசுடைமையாக்கப்பட்டதுடன், சம்பந்தப்பட்ட பெண் பயணிக்கு நிதிய அபராதமும் விதிக்கப்பட்டது. </p><p style="text-align: justify; ">

 கைப்பற்றப்பட்ட செடிகள் அனைத்தும் அடுத்தகட்ட அழிப்பு நடவடிக்கைகளுக்காக விமான நிலைய தாவர தனிமைப்படுத்தல் அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.</p><p style="text-align: justify; "></p>]]></content>
            <updated>2026-07-16T05:33:31+00:00</updated>
        </entry>
    </feed>
