<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-08-13T00:35:04+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிக் பாஸ் ஷிவானி சேலையில் அழகிய போட்டோஷூட்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/shivani-narayanan-saree-photoshoot-1786581036"></link>
            <id>https://cineulagam.com/article/shivani-narayanan-saree-photoshoot-1786581036</id>
            <summary type="text">சின்னத்திரையில் பிரபல நடிகையாக இருந்தவர் ஷிவானி. அதன் பின் பிக் பாஸ் ஷோவுக்கு அவர் போட்டியாளராக வந்தார்.

அதற்கு பிறகு அவர் சீரியல்களில் நடிப்பதை நி...</summary>
            <content type="html"><![CDATA[<p>சின்னத்திரையில் பிரபல நடிகையாக இருந்தவர் ஷிவானி. அதன் பின் பிக் பாஸ் ஷோவுக்கு அவர் போட்டியாளராக வந்தார்.
</p><p>
அதற்கு பிறகு அவர் சீரியல்களில் நடிப்பதை நிறுத்திவிட்டு படங்களில் மட்டும் நடித்து வருகிறார்.
</p><p>
தற்போது ஷிவானி சேலையில் அழகிய போஸ் கொடுத்து இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்களை பாருங்க.</p>]]></content>
            <updated>2026-08-13T00:33:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச மாநாடு! முன்னெடுக்கப்பட்ட கலந்துரையாடல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/jaffna-talks-on-enforced-disappearances-1786580786"></link>
            <id>https://ibctamil.com/article/jaffna-talks-on-enforced-disappearances-1786580786</id>
            <summary type="text">வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச தினத்தில் யாழில் நடைபெறவுள்ள
சர்வதேச மாநாட்டிற்கான ஆதரவை திரட்டும் வகையில் 

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர...</summary>
            <content type="html"><![CDATA[<p>வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச தினத்தில் யாழில் நடைபெறவுள்ள
சர்வதேச மாநாட்டிற்கான ஆதரவை திரட்டும் வகையில் 

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்
ஒன்றிய பிரதிநிதிகளை வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்
சங்க பிரதிநிதிகள் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
</p><p>
குறித்த கலந்துரையாடல் நேற்று (12-08-2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
</p><p>
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச தினத்தில் யாழில் நடைபெறவுள்ள
சர்வதேச மாநாட்டிற்கான ஆதரவை திரட்டும் வகையில் இந்த கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p></p><h2>பல்கலைக்கழக மாணவர்கள்</h2><p>வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச தினமான ஆகஸ்ட் 30ஆம் திகதி
யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் சர்வதேச மாநாடு நடைபெறவுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e30ebd01-0e6c-4012-a2f9-410899caace9/26-6a7d0f3962c13.webp' /></p><p>இதற்கான முழுமையான ஆதரவை பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் திரட்டும் வகையில் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய அறையில் மாணவர் ஒன்றிய
பிரதிநிதிகளை வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்க
பிரதிநிதிகள் சந்தித்துக் கலந்துரையாடியமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;&nbsp;</h6></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-13T00:27:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரஷ்ய கப்பல்கள் குறிவைக்கப்பட்டால்... ஐரோப்பிய நாடுகளுக்கு மிரட்டல் விடுத்த புடின்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/russia-will-start-seizing-vessels-1786580591"></link>
            <id>https://news.lankasri.com/article/russia-will-start-seizing-vessels-1786580591</id>
            <summary type="text">Russia will start seizing European vessels: ரஷ்ய கப்பல்கள் குறிவைக்கப்பட்டால், ஐரோப்பியக் கப்பல்களைக் கைப்பற்றப் போவதாகப் புடின்.
ஐரோப்பிய நாடுகள் ரஷ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Russia will start seizing European vessels: ரஷ்ய கப்பல்கள் குறிவைக்கப்பட்டால், ஐரோப்பியக் கப்பல்களைக் கைப்பற்றப் போவதாகப் புடின்.
</p><p>ஐரோப்பிய நாடுகள் ரஷ்ய வணிகக் கப்பல்களைக் கைப்பற்றத் தொடங்கினால், ரஷ்யாவும் அதே பாணியில் பதிலடி கொடுக்கும் என்று விளாடிமிர் புடின் மிரட்டல் விடுத்துள்ளார்.</p><h2>கப்பல்கள் மீதான தடை</h2><p>
</p><p>மேலும், எதிரி நாடுகள் என்று அவர் குறிப்பிட்ட நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டுக்கப்பல்களைச் சோதனையிடவும் சிறைப்பிடிக்கவும் தனது படைகள் தயாராக இருப்பதாக ரஷ்யாவின் பசிபிக் கடற்படைத் தளபதி தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/93c9f71f-df97-4abc-971d-447b7d6e6cfe/26-6a7d0e719c244.webp' /></p><p>ரஷ்யாவின் தூரக் கிழக்குப் பகுதியில் நடைபெற்ற கடற்படைப் பயிற்சிகளைப் பார்வையிட்டபோது புடின் இந்தக் கருத்துகளைத் தெரிவித்தார்; அதேவேளை, ரஷ்யாவின் ரகசிய எண்ணெய் கப்பல்கள் மீதான அழுத்தத்தை அதிகரிக்க ஐரோப்பிய ஒன்றியம் முயன்று வருகிறது; </p><p>இதற்காக நூற்றுக்கணக்கான கப்பல்கள் மீதான தடைகளை விரிவுபடுத்துவதுடன், சில கப்பல்களையும் அவற்றின் பணியாளர்களையும் சோதனைகளுக்காகத் தடுத்து வைத்தும் வருகிறது. </p><p>தடைகளை மீறுவதாகச் சந்தேகிக்கப்படும் கப்பல்களுக்கு எதிராக, கடுமையான கடல்சார் அமலாக்க நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்துப் பரிசீலித்து வருவதாகச் சில ஐரோப்பிய அரசாங்கங்கள் தெரிவித்துள்ளன.</p><p></p><p> </p><p>ஆனால் உண்மையில் இது கடற்கொள்ளை மற்றும் வழிப்பறிக்குச் சற்றும் குறைவானதல்ல என குறிப்பிட்டுள்ள ஜனாதிபதி புடின், இது நடைமுறைப்படுத்தப்படத் தொடங்கினால், நாங்களும் அதே பாணியில் பதிலடி கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். </p><p>அதுவும், எங்கள் கப்பல்கள் மற்றும் கலன்கள் மீதான தாக்குதல்கள் திட்டமிடப்படும் அதே கடல் பகுதிகளில் மட்டுமின்றி, நாங்களே எங்கு அவசியமென்றும் பொருத்தமென்றும் கருதுகிறோமோ அங்கெல்லாம் அப்பதிலடி அமையும் என்றார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/eb36a50f-bb5e-4336-acbe-bee8256d86b3/26-6a7d0e7253eaa.webp' /></p><h2>விவரங்கள் தெரியும்</h2><p> </p><p>இதனிடையே, ரஷ்யாவின் பசிபிக் கடற்படைத் தளபதி தெரிவிக்கையில், பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் போன்ற விரோதப் போக்குடைய நாடுகளும் தங்கள் வசதிக்கான கொடிகளை ஏந்திய கப்பல்கள் மூலம் சரக்குகளைக் கொண்டு செல்வதாகவும்; </p><p>ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பிரித்தானியாவின் கருத்துக்களின் அடிப்படையில், இவற்றையும் ரகசிய கப்பல் (shadow fleet) என்றும் விவரிக்கலாம் என்றார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7b4f44ff-e7ac-4cef-86a0-a560ecbfb433/26-6a7d0e730fed9.webp' /></p><p> ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் உள்ள கடல்வழிப் போக்குவரத்து குறித்துத் தனது கப்பற்படை விரிவான ஆய்வு ஒன்றை மேற்கொண்டதாகவும், விரோதப் போக்குடைய நாடுகளுடன் தொடர்புடைய கப்பல்களின் வழித்தடங்கள், அவை ஏற்றிச் செல்லும் சரக்குகள் மற்றும் அவற்றின் உரிமையாளர்கள் குறித்த விவரங்கள் தங்களுக்குத் தெரியும் என்றும் அவர் கூறினார். </p><p>இதனிடையே, மத்திய தரைக்கடலில் தனது கடற்படையைப் பயன்படுத்துவதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் மீது குற்றம் சாட்டி, ரஷ்ய வெளிவிவகார அமைச்சகமும் இது குறித்து கருத்து தெரிவித்துள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-13T00:21:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறையில் இம்ரான் கான் மரணம் - வெடித்த சர்ச்சை...! போராட்டத்திற்கு தயாராகும் 20 லட்சம் பேர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/journalist-claims-imran-khan-dead-in-jail-1786579472"></link>
            <id>https://ibctamil.com/article/journalist-claims-imran-khan-dead-in-jail-1786579472</id>
            <summary type="text">பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் சிறையிலேயே உயிரிழந்திருக்கலாம் என மூன்று இராணுவ அதிகாரிகள் தன்னிடம் தெரிவித்ததாக பாகிஸ்தான் பத்திரிகையாளர் வஜ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் சிறையிலேயே உயிரிழந்திருக்கலாம் என மூன்று இராணுவ அதிகாரிகள் தன்னிடம் தெரிவித்ததாக பாகிஸ்தான் பத்திரிகையாளர் வஜாஹத் சயீத் கான் தெரிவித்துள்ளார்.
</p><p>
பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், அந்நாட்டு கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனுமான இம்ரான் கான், ஊழல் வழக்கில் 14 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று ராவல்பிண்டியில் உள்ள அடியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.</p><p>

அவரது மனைவி புஷ்ரா பீபிக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>பல்வேறு தகவல்கள்&nbsp;</h2><p>


இந்நிலையில், இம்ரான் கான் சிறையிலேயே உயிரிழந்திருக்கலாம் என மூன்று இராணுவ அதிகாரிகள் தன்னிடம் தெரிவித்ததாக பாகிஸ்தான் பத்திரிகையாளர் வஜாஹத் சயீத் கான் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a7422a87-7ff6-49e4-9aa0-dec31d25c242/26-6a7d0a138c2cd.webp' /></p><p>

இருப்பினும், இந்த தகவல் இதுவரை உறுதி செய்யப்படவில்லை.
</p><p>
இம்ரான் கானின் உடல்நிலை குறித்து ஏற்கனவே பல்வேறு தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், கடந்த சில நாட்களாக அவரது குடும்பத்தினருக்கும் PTI கட்சியின் முக்கிய நிர்வாகிகளுக்கும் அவரை சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>
</p><p></p><h2>ஆதரவாளர்களிடையே கவலை</h2><p>இதனால் அவரது ஆதரவாளர்களிடையே கவலை அதிகரித்துள்ளது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/904ad7d4-7ae1-46fb-8190-f049cdbc0fdc/26-6a7d0a12da8fd.webp' /></p><p>இதற்கிடையே, இம்ரான் கானுக்கு ஏதேனும் நடந்தால் 20 லட்சம் பேர் தெருவில் இறங்கி போராட்டம் நடத்த தயாராக இருப்பதாக அவரது PTI கட்சி எச்சரித்துள்ளது.
</p><p>
இம்ரான் கான் நலமாக இருப்பதாக உடனடியாக அறிவிக்க வேண்டும் என்றும் அவரது குடும்பத்தினரை சிறையில் சந்திக்க அனுமதிக்க வேண்டும் என்றும் கட்சி வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;&nbsp;</h6></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-13T00:08:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுக்கிர பெயர்ச்சியால் உருவாகும் மாளவ்ய ராஜயோகம் ; இந்த ராசிக்காரர்களுக்கு பண மழை கொட்டும்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/malaviya-raja-yogam-sukra-peyarchi-panam-perum-ras-1786575917"></link>
            <id>https://jvpnews.com/article/malaviya-raja-yogam-sukra-peyarchi-panam-perum-ras-1786575917</id>
            <summary type="text">ஜோதிடத்தில் அசுரர்களின் குருவாக கருதப்படுபவர் சுக்கிரன்.&amp;nbsp;இந்த சுக்கிரன் தற்போது கன்னி ராசியில் பயணித்து வருகிறார். இந்த ராசிக்கு ஆகஸ்ட் மாத தொடக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜோதிடத்தில் அசுரர்களின் குருவாக கருதப்படுபவர் சுக்கிரன்.&nbsp;இந்த சுக்கிரன் தற்போது கன்னி ராசியில் பயணித்து வருகிறார். இந்த ராசிக்கு ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் தான் நுழைந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/316864fa-20f9-4b94-bceb-d852f0f45257/26-6a7cfc2ee9dd5.webp' /></p><p>இந்த கன்னி ராசியின் அதிபதி புதன். இந்நிலையில் இந்த சுக்கிரன் செப்டம்பர் மாத தொடக்கத்தில் துலாம் ராசிக்குள் நுழையவுள்ளார். இந்த துலாம் ராசியின் அதிபதி சுக்கிரன் ஆவார். தனது சொந்த ராசிக்கே சுக்கிரன் செல்வதால், மிகவும் மங்களகரமான மற்றும் பஞ்ச மகாபுருஷ யோகங்களில் ஒன்றான மாளவ்ய ராஜயோகம் உருவாகவுள்ளது.</p><p>சுக்கிர பெயர்ச்சியால் உருவாகும் மாளவ்ய ராஜயோகத்தால் பண மழையில் நனையப் போகும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதை நாம் பார்ப்போம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/73ac9f24-8bdf-4530-9036-96be009d068d/26-6a7cfca5443f9.webp' /></p><h4>துலாம்
</h4><p>துலாம் ராசியின் முதல் வீட்டில் மாளவ்ய ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் தன்னம்பிக்கையும், ஆளுமையும் மேம்படும். பணிபுரிபவர்களுக்கு புதிய பொறுப்புக்கள் வழங்கப்படலாம். வணிகத்தை விரிவாக்கும் திட்டங்கள் வெற்றிகரமாக நடக்கும். நீண்ட காலமாக கைக்கு வராமல் சிக்கியிருந்த பணம் சுக்கிரனின் அருளால் கைக்கு வந்து சேரும். புதிய வருமான வழிகள் உருவாகும் வாய்ப்புள்ளது. இதன் மூலம் நிதி நிலையில் நல்ல உயர்வு ஏற்படும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f69ea502-2a0d-44b8-9e5a-5f8e2928cf88/26-6a7cfc2f9c5e2.webp' /></p><h4>மகரம்
</h4><p>மகர ராசியின் 10 ஆவது வீட்டில் மாளவ்ய ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் தொழில் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு அல்லது புதிய பொறுப்புகள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. வணிகர்கள் நல்ல லாபத்தைக் காண்பார்கள். ஏற்கனவே முதலீடுகளை செய்திருந்தால், அதிலிருந்து நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும் வாய்ப்புள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e1c03335-8b9c-4ba1-a1b4-1b1645915e8d/26-6a7cfc30517f0.webp' /></p><h4>கும்பம்
</h4><p>கும்ப ராசியின் 9 ஆவது வீட்டில் மாளவ்ய ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். வெளிநாட்டுடன் தொடர்புடைய தொழிலை செய்பவர்களுக்கு நல்ல லாபமும், எடுக்கும் முயற்சிகளில் நல்ல வெற்றியும் கிடைக்கும். போட்டி தேர்வுகளுக்கு தயாராகிக் கொண்டிருந்தால் இக்காலத்தில் நல்ல செய்திகளைப் பெறக்கூடும். வியாபாரிகளுக்கு எதிர்பாராத அளவில் லாபம் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு வருமானத்தில் உயர்வு ஏற்படும் வாய்ப்புள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/30c9cd47-7784-463f-b1a7-e5ad3972106a/26-6a7cfc3106919.webp' /></p><h4>கடகம்
</h4><p>கடக ராசியின் 4 ஆவது வீட்டில் மாளவ்ய ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு பொன்னும், பொருளும் குவியும். புதிய வீடு, வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். புதிய தொழிலை தொடங்குவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கலாம். வியாபாரிகள் நல்ல லாபத்தை காண்பார்கள். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும்.</p><p>[MDWE
]</p>]]></content>
            <updated>2026-08-13T00:08:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாமல் ராஜபக்சவின் சொத்துப் பின்னணி...! வெடித்த புதிய சர்ச்சை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/namal-declares-assets-since-age-24-1786578956"></link>
            <id>https://ibctamil.com/article/namal-declares-assets-since-age-24-1786578956</id>
            <summary type="text">நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தனது 24 வயதிலேயே நாடாளுமன்றத்திற்கு வந்ததாகவும் அன்று முதல் இன்று வரை தனது சொத்து விவரங்களை முறையாகச் சமர்ப்பித்து...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தனது 24 வயதிலேயே நாடாளுமன்றத்திற்கு வந்ததாகவும் அன்று முதல் இன்று வரை தனது சொத்து விவரங்களை முறையாகச் சமர்ப்பித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
</p><p>
தனக்குச் சொந்தமான பெரும்பாலான காணிகள் தனது பெற்றோர் மற்றும் குடும்பத்தினரிடமிருந்து வந்தவை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
தான் ஒரு காலத்தில் கன்சல்டன்ட் ஃபார்ம் (Consultant Firm) என்ற ஆலோசனை நிறுவனம் ஒன்றை நடத்தியதாகவும் அதன் வருமானம் மற்றும் வரி கணக்குகள் அனைத்தையும் முறையாகப் பிரகடனப்படுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
</p><p>
இந்தநிலையில், நாமல் ராஜபக்சவின் இந்தக் கருத்துக்களுக்குப் பதிலடியாக அவரது குடும்பத்தின் சொத்துக்கள் குறித்துப் பல்வேறு கேள்விகள் எழுப்பப்படுகின்றன.
</p><p>
இது தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது லங்காசிறியின் நாட்டு நடப்பு நிகழ்ச்சி...&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/Jzvh1Ha0Qj8" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p></p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-12T23:56:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[கல்முனை வைத்தியசாலை சீருடை விவகாரம்: சீருடை அனைவருக்கும் பொதுவானது என பா.அரியநேத்திரன் அதிரடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/muslim-girls-dress-issue-1786578298"></link>
            <id>https://tamilwin.com/article/muslim-girls-dress-issue-1786578298</id>
            <summary type="text">சீருடை என்பது பொதுவான ஒரு உடை அது ஒவ்வொரு மதத்துக்கும் ஏற்றவிதமாக மாற்றமுடியாது என்று மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்தி...</summary>
            <content type="html"><![CDATA[<p>சீருடை என்பது பொதுவான ஒரு உடை அது ஒவ்வொரு மதத்துக்கும் ஏற்றவிதமாக மாற்றமுடியாது என்று மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.
</p><p>
கல்முனை ஆதார வைத்தியசாலை சீருடை விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.</p><p>

அவர் மேலும் தெரிவிக்கையில்..</p><h2>சீருடை விவகாரம்</h2><p>
</p><p>
பாடசாலை, வைத்தியசாலை, அரச அல்லது அரச சார்பற்ற நிறுவனங்கள் பொதுவாக ஒரு சீருடையை தயாரித்தால் அதனை அனுசரித்து ஏற்றுக்கொள்ளவேண்டியது அனைவரினதும் கடமை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/70de06b3-37a6-4889-9e62-586c211edb61/26-6a7d05ea8dfa1.webp' /></p><p>

ஒவ்வொரு மதத்தவர்களும் அவர்கள் விரும்பியபடி ஆடை அணிதல் என்றால் சீருடை என்ற ஒன்று அவசியமில்லை.</p><p>

புதிய சுகாதார உதவியாளர்களுக்கு கொழும்பில் மூன்று நாட்கள் பயிற்சி வழங்கிய வேளை இந்த சீருடை தொடர்பாக தெளிவாக அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது.</p><p>

எனவே இது வேண்டுமென்று கல்முனை ஆதார வைத்தியசாலையின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க வெளியில் ஒரு குழுவினர் சதித்திட்டம் தீட்டி சமூக ஊடகங்களில் வன்மத்தை கொட்டி வருகின்றனர்.</p><p>

சட்டம் நீதி தன் கடமையை செய்யும். யாரும் அஞ்ச வேண்டியதில்லை. உண்மை வெவ்லும் என குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content>
            <updated>2026-08-12T23:46:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[குருவிட்ட சிறைச்சாலை மோதலில் உயிரிழந்த கைதிகள்: வெளியான பிரேதப் பரிசோதனை அறிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/kuruwita-inmates-died-of-gunshots-pm-1786578390"></link>
            <id>https://ibctamil.com/article/kuruwita-inmates-died-of-gunshots-pm-1786578390</id>
            <summary type="text">குருவிட்ட சிறைச்சாலையில் அண்மையில் ஏற்பட்ட அமைதியின்மையின் போது உயிரிழந்த இரண்டு கைதிகளின் மரணத்திற்குக் காரணம், துப்பாக்கிச் சூட்டினால் ஏற்பட்ட பலத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>குருவிட்ட சிறைச்சாலையில் அண்மையில் ஏற்பட்ட அமைதியின்மையின் போது உயிரிழந்த இரண்டு கைதிகளின் மரணத்திற்குக் காரணம், துப்பாக்கிச் சூட்டினால் ஏற்பட்ட பலத்த காயங்களே எனப் பிரேதப் பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
</p><p>
இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பிரேதப் பரிசோதனை அறிக்கையின்படி இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இதனடிப்படையில் ஒரு கைதியின் தலையிலும் மற்றைய கைதியின் மார்பிலும் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்தமையாலேயே உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.</p><p></p><h2>கண்ணீர்ப்புகைத் தாக்குதல்&nbsp;</h2><p>

இந்த அமைதியின்மை சம்பவத்தில் இரண்டு கைதிகள் உயிரிழந்ததுடன் மேலும் 12 பேர் காயமடைந்தனர்.
</p><p>
சிறைச்சாலைக்குள் ஏற்பட்ட இந்த அசாதாரண சூழலைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்காகக் கண்ணீர்ப்புகைத் தாக்குதல் மற்றும் துப்பாக்கிச் சூடு நடத்த வேண்டியிருந்ததாக அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார தெரிவித்திருந்தார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/51a08ad2-cc0f-4e4f-8358-ede94c899ab4/26-6a7d05d8d42c6.webp' /></p><p>இந்தநிலையில் நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்காக காவல்துறையினருக்கு மேலதிகமாக காவல்துறை விசேட அதிரடிப்படை (STF), கலகமடக்கும் பிரிவு மற்றும் இராணுவமும் வரவழைக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.</p><p>

இதற்கு முன்னரும் நீர்கொழும்பு, மஹர, புதிய மெகசின் மற்றும் பள்ளன்சேன ஆகிய சிறைச்சாலைகளில் இதுபோன்ற அமைதியின்மை சம்பவங்கள் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-12T23:46:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[இம்ரான் கான் சிறையிலேயே உயிரிழந்துவிட்டாரா..! போராட்டத்திற்கு தயாராகும் 20 லட்சம் பேர்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/imran-khan-dead-prison-us-pakistan-journalist-1786567775"></link>
            <id>https://tamilwin.com/article/imran-khan-dead-prison-us-pakistan-journalist-1786567775</id>
            <summary type="text">பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், அந்நாட்டு கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனுமான இம்ரான் கான், ஊழல் வழக்கில் 14 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று ராவல்பிண்டி...</summary>
            <content type="html"><![CDATA[<p>பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், அந்நாட்டு கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனுமான இம்ரான் கான், ஊழல் வழக்கில் 14 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று ராவல்பிண்டியில் உள்ள அடியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
</p><p>
 அவரது மனைவி புஷ்ரா பீபிக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.</p><h2>ஆதரவாளர்கள் கவலை</h2><p>
</p><p>
இந்நிலையில், இம்ரான் கான் சிறையிலேயே உயிரிழந்திருக்கலாம் என 3 ராணுவ அதிகாரிகள் தன்னிடம் தெரிவித்ததாக பாகிஸ்தான் பத்திரிகையாளர் வஜாஹத் சயீத் கான் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><p> 

எனினும், இந்த தகவல் இதுவரை உறுதி செய்யப்படவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1a880889-9cde-44e1-9cbe-29480a9efb28/26-6a7cde049a13c.webp' /></p><p>
</p><p>
இம்ரான் கானின் உடல்நிலை குறித்து ஏற்கனவே பல்வேறு தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், கடந்த சில நாட்களாக அவரது குடும்பத்தினருக்கும், PTI கட்சியின் முக்கிய நிர்வாகிகளுக்கும் அவரை சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. </p><p>

இதனால் அவரது ஆதரவாளர்களிடையே கவலை அதிகரித்துள்ளது.

இதற்கிடையே, இம்ரான் கானுக்கு ஏதேனும் நடந்தால் 20 லட்சம் பேர் தெருவில் இறங்கி போராட்டம் நடத்த தயாராக இருப்பதாக அவரது PTI கட்சி எச்சரித்துள்ளது. </p><p>

இம்ரான் கான் நலமாக இருப்பதாக உடனடியாக அறிவிக்க வேண்டும் என்றும், அவரது குடும்பத்தினரை சிறையில் சந்திக்க அனுமதிக்க வேண்டும் என்றும் கட்சி வலியுறுத்தியுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-12T23:38:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாடாளுமன்ற உணவுச் செலவு ரூபாய் 24 கோடி! வெளியான அதிகாரப்பூர்வ அறிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/rs-240m-spent-on-sl-parliament-food-1786577637"></link>
            <id>https://ibctamil.com/article/rs-240m-spent-on-sl-parliament-food-1786577637</id>
            <summary type="text">2025 ஆம் ஆண்டில் இலங்கை நாடாளுமன்றத்தின் உணவு மற்றும் பானங்களைக் கொள்வனவு செய்வதற்காக 24 கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகை செலவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப...</summary>
            <content type="html"><![CDATA[<p>2025 ஆம் ஆண்டில் இலங்கை நாடாளுமன்றத்தின் உணவு மற்றும் பானங்களைக் கொள்வனவு செய்வதற்காக 24 கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகை செலவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
நாடாளுமன்றத்தின் புதிய வருடாந்த செயல்திறன் அறிக்கை இதனை வெளிப்படுத்தியுள்ளது.
</p><p>
அந்த அறிக்கையின்படி, 2025 ஆம் ஆண்டில் உணவு மற்றும் பானங்களைக் கொள்வனவு செய்வதற்காக மட்டுமே ரூபாய் 247,049,010.08 செலவிடப்பட்டுள்ளது.</p><p> </p><p></p><h2>பயன்படுத்தப்படும் எரிவாயு</h2><p>இதற்கு மேலதிகமாக, போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீரைக் கொள்வனவு செய்வதற்காக ரூபாய் 2,278,758.12 செலவிடப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ed352b74-e906-4d58-b13f-77c05d794416/26-6a7d02e87c4ef.webp' /></p><p>நாடாளுமன்றத்தில் உணவு சமைப்பதற்காகப் பயன்படுத்தப்படும் எரிவாயுவுக்காக (Gas) ரூபாய் 3,050,850.00 செலவாகியுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
</p><p>
உணவு மற்றும் பானங்களை வழங்கிய சேவைத் தடவைகளின் எண்ணிக்கையைக் கருத்தில் கொள்ளும்போது, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக உணவு மற்றும் பானங்களை வழங்குவதற்கு எதிர்பார்க்கப்பட்ட இலக்கான 7,200 என்ற வரம்பைத் தாண்டி 10,670 தடவைகள் சேவைகள் வழங்கப்பட்டுள்ளன.</p><p> </p><p></p><h2>நாடாளுமன்றப் பணியாளர்கள்</h2><p>இது 148 சதவீத குறிப்பிடத்தக்க வளர்ச்சியாகும்.
</p><p>
அவ்வாறே, நாடாளுமன்ற உறுப்பினர்களின் விருந்தினர்கள் மற்றும் நாடாளுமன்றப் பணியாளர்களுக்காக உணவு, பானங்கள் வழங்கியதில் 361,930 தடவைகள் சேவைகள் வழங்கப்பட்டுள்ளன.</p><p> </p><p></p><p>இது எதிர்பார்க்கப்பட்ட இலக்கை விட 119 சதவீத அதிகரிப்பாகும்.
</p><p>
நாடாளுமன்ற வளாகத்திற்குள் தினசரி ஐந்து சிற்றுண்டிச்சாலைகள் இயங்கி வருவதுடன், நாடாளுமன்ற அமர்வுகள் நடைபெறாத நாட்களில்கூட ஒரு நாளைக்கு 1,000 முதல் 1,200 நபர்களுக்கு உணவு வழங்கப்படுவதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-12T23:34:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[சொத்து விவகாரத்தில் மகிந்தவை மாட்டிவிட்ட நாமல்..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-rajapaksa-s-assets-and-properties-1786576870"></link>
            <id>https://tamilwin.com/article/namal-rajapaksa-s-assets-and-properties-1786576870</id>
            <summary type="text">நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தனது 24 வயதிலேயே நாடாளுமன்றத்திற்கு வந்ததாகவும், அன்று முதல் இன்று வரை தனது சொத்து விவரங்களை முறையாகச் சமர்ப்பித்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தனது 24 வயதிலேயே நாடாளுமன்றத்திற்கு வந்ததாகவும், அன்று முதல் இன்று வரை தனது சொத்து விவரங்களை முறையாகச் சமர்ப்பித்து வருவதாகவும் கூறியுள்ளார்.
</p><p>
தனக்குச் சொந்தமான பெரும்பாலான காணிகள் தனது பெற்றோர் மற்றும் குடும்பத்தினரிடமிருந்து வந்தவை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>

 தான் ஒரு காலத்தில் 'கன்சல்டன்ட் ஃபார்ம்' (Consultant Firm) என்ற ஆலோசனை நிறுவனம் ஒன்றை நடத்தியதாகவும், அதன் வருமானம் மற்றும் வரி கணக்குகள் அனைத்தையும் முறையாகப் பிரகடனப்படுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p>

 இந்தநிலையில், நாமல் ராஜபக்சவின் இந்தக் கருத்துக்களுக்குப் பதிலடியாக, அவரது குடும்பத்தின் சொத்துக்கள் குறித்துப் பல்வேறு கேள்விகள் எழுப்பப்படுகின்றன. </p><p>

குறிப்பாக, கால்டன் (Carlton) இல்லம் கைமாறப்பட்டது தொடர்பான சர்ச்சைகள் மற்றும் அவர் தனது சொத்துக்களை எவ்வாறு சம்பாதித்தார் என்பது குறித்த விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.</p><p>

இந்த விடயங்கள் தொடர்பில் பேசுகின்றது நாட்டு நடப்பு நிகழ்ச்சி...&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/Jzvh1Ha0Qj8" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p>]]></content>
            <updated>2026-08-12T23:26:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரஷ்யாவின் மொத்த பாலிஸ்டிக் ஏவுகணைகளையும் அழிப்போம்... ஜெலென்ஸ்கி வைத்த கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/will-destroy-russian-ballistic-1786576831"></link>
            <id>https://news.lankasri.com/article/will-destroy-russian-ballistic-1786576831</id>
            <summary type="text">We will destroy all the Russians’ ballistic missiles: அமெரிக்காவின் பேட்ரியாட் ஏவுகணைகளில் 10 சதவீதம் உக்ரைனுக்கு விற்றால், ரஷ்யர்களின் மொத்த பாலிஸ்டி...</summary>
            <content type="html"><![CDATA[<p>We will destroy all the Russians’ ballistic missiles: அமெரிக்காவின் பேட்ரியாட் ஏவுகணைகளில் 10 சதவீதம் உக்ரைனுக்கு விற்றால், ரஷ்யர்களின் மொத்த பாலிஸ்டிக் ஏவுகணைகளையும் அழித்துவிடுவோம் என ஜெலென்ஸ்கி.
</p><p>அதிகரித்து வரும் ரஷ்யாவின் பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதல்களை முறியடிக்க, அமெரிக்காவிடமிருந்து அவசரமாகத் தேவைப்படும் இடைமறிப்பு ஏவுகணைகளில் பத்தில் ஒரு பங்கு மட்டுமே உக்ரைனிடம் உள்ளது என்று ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி கூறியுள்ளார்.</p><h2>தடுத்து நிறுத்த</h2><p>
</p><p>உக்ரைனிடம் கிட்டத்தட்ட இல்லாத பேட்ரியாட் இடைமறிப்பு ஏவுகணைகளின் இருப்பை ரஷ்யா சாதகமாகப் பயன்படுத்திக்கொள்வதால், சமீபத்திய வாரங்களில் ரஷ்யாவின் ஏவுகணைத் தாக்குதல்கள் தீவிரமடைந்து, உக்ரைன் தலைநகரை குறிப்பாகக் கடுமையாகத் தாக்கியுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e0cd5829-ebed-4e85-81b5-04d63e9cfe11/26-6a7cffc296c43.webp' /></p><p> </p><p>அமெரிக்காவின் தற்போதைய ஏவுகணைக் கையிருப்பில் பத்தில் ஒரு பங்கு, ரஷ்யாவின் அனைத்து பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதல்களையும் தடுத்து நிறுத்தப் போதுமானது என்றும், ஆனால் நூற்றுக்கு ஐந்து ஏவுகணைகள் உக்ரைனைக் குளிர்காலத்தைக் கடக்கச் செய்யப் போதுமானதாக இருக்கும் என்றும் ஜெலென்ஸ்கி கூறியுள்ளார்.
</p><p>2025-ல் இருந்ததை விட இந்த ஆண்டு எங்களிடம் இரண்டரை மடங்கு குறைவான இடைமறிப்பு ஏவுகணைகளே உள்ளன என குறிப்பிட்டுள்ள ஜெலென்ஸ்கி, முன்பை விட தற்போது ரஷ்யாவிடம் மாதத்திற்கு இரண்டு மடங்கு அதிகமான பாலிஸ்டிக் ஏவுகணைகள் உள்ளன என்றார். </p><p>ஐக்கிய நாடுகள் மன்றத்தின் தகவலின்படி, ஏப்ரல் 2022-க்குப் பிறகு உக்ரைனியப் பொதுமக்களுக்கு ஜூலை மாதம் மிக அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்திய மாதமாக அமைந்தது. </p><p>இந்த நிலையில், அமெரிக்கா எங்களுக்கு 5 சதவீத பேட்ரியாட் ஏவுகணைகளை விற்றால், நாங்கள் குளிர்காலத்தைக் கடந்து மக்களின் உயிர்களைக் காப்பாற்றுவோம், அவர்கள் எங்களுக்கு 10 சதவீதத்தை விற்றால், ரஷ்யர்களின் அனைத்து பாலிஸ்டிக் ஏவுகணைகளையும் அழித்துவிடுவோம் என்றும் ஜெலென்ஸ்கி கூறியுள்ளார்.</p><p></p><p> </p><p>ஈரானுடனான போரின் காரணமாக ஏவுகணைகளுக்கு உலகளவில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது; ஏனெனில், ஈரானின் ஏவுகணை மற்றும் குறைந்த செலவிலான ட்ரோன் தாக்குதல்களை எதிர்கொள்ள அமெரிக்காவும் வளைகுடா நாடுகளும் டசின் கணக்கான ஏவுகணைகளைப் பயன்படுத்தியுள்ளன. </p><p>இந்தத் தட்டுப்பாடு உக்ரைனை மிகக் கடுமையாகப் பாதித்துள்ளது; அங்குள்ள நகரங்கள் சில இரவுகளில் ரஷ்யாவின் ஏவுகணைத் தாக்குதல்களுக்கு எதிராகத் தற்காப்பு ஏதுமற்ற நிலையில் காணப்படுகின்றன.</p><h2>உதவியை அதிகரிக்க</h2><p> </p><p>இதனிடையே, தங்களுக்குத் தேவையான இடைமறிப்பு ஏவுகணைகளைப் (interceptors) பெறுவதற்காகத் தான் தினசரி மேற்கொள்ளும் தனிப்பட்ட முயற்சிகள் குறித்த அரிய தகவல்களை ஜெலென்ஸ்கி வெளிப்படுத்தியுள்ளார்; இதில் அவர் ரகசியமாக வைத்திருக்க விரும்பிய ஒப்பந்த நடவடிக்கைகளும் அடங்கும்.</p><p> உக்ரைனில் பேட்ரியாட் இடைமறிப்பு ஏவுகணைகளைத் தயாரிக்க அனுமதிப்பது குறித்த ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் வெளிப்படையான உறுதிப்பாடு எவ்வாறு நிறைவேறும் என்பது குறித்து இன்னும் சந்தேகங்கள் நிலவுவதாக ஜெலென்ஸ்கி கூறினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e0cd5829-ebed-4e85-81b5-04d63e9cfe11/26-6a7cffc296c43.webp' /></p><p> </p><p>மேலும், பேட்ரியாட் ஏவுகணைக்கான தங்களின் உதவியை அதிகரிக்குமாறு, வெள்ளை மாளிகையிடம் நேரடியாக தொலைபேசி அழைப்புகள், குறுஞ்செய்திகள் மூலமாகவும், மறைமுகமாக நேச நாடுகள் மூலமாகவும் மன்றாடி வருவதாக ஜெலென்ஸ்கி கூறியுள்ளார். </p><p>ஆனால், ட்ரம்ப் நிர்வாகத்துடனான தனது சமீபத்திய சந்திப்புகள் குறித்த விவரங்களை வெளியிட அவர் தயக்கம் காட்டினார். மட்டுமின்றி, புடின் கைப்பற்ற விரும்பும் டான்பாஸ் பகுதியின் எஞ்சிய நிலப்பரப்பை உக்ரைன் விட்டுக்கொடுக்க வேண்டும் என்ற யோசனையையும் அவர் நிராகரித்தார்; உக்ரைனைப் பொறுத்தவரை பாதுகாப்பு உத்தரவாதங்களே மிக முக்கியமானவை என்றும் அவர் கூறியுள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-12T23:18:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[59 வணிகக் கப்பல்களைத் திருப்பி அனுப்பிய அமெரிக்கா! ஹோர்முஸில் அதிரடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/us-navy-turns-back-59-ships-near-iran-1786570962"></link>
            <id>https://ibctamil.com/article/us-navy-turns-back-59-ships-near-iran-1786570962</id>
            <summary type="text">ஈரான் மீதான கடற்படை முற்றுகையை (Naval Blockade) மீண்டும் தீவிரப்படுத்தியதைத் தொடர்ந்து, அந்நாட்டுத் துறைமுகங்களுக்குச் செல்ல முயன்ற 59 வணிகக் கப்பல்கள...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரான் மீதான கடற்படை முற்றுகையை (Naval Blockade) மீண்டும் தீவிரப்படுத்தியதைத் தொடர்ந்து, அந்நாட்டுத் துறைமுகங்களுக்குச் செல்ல முயன்ற 59 வணிகக் கப்பல்களை அமெரிக்கப் படைகள் தடுத்து திருப்பி அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
அமெரிக்க மத்திய கட்டளையகம் இதனை தெரிவித்துள்ளது.

இதனடிப்படையில் அமெரிக்காவின் உத்தரவை மீறிச் செல்ல முயன்ற 3 கப்பல்கள் செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளதுடன், 2 கப்பல்களில் நேரடிச் சோதனைகளும் நடத்தப்பட்டுள்ளன.
</p><p>
ஜூலை 14 முதல் மீண்டும் நடைமுறைக்கு வந்த இந்த முற்றுகை நடவடிக்கைகளை மத்திய கட்டளையகம் உறுதிப்படுத்தியுள்ளது.</p><p>

ஹோர்முஸ் நீரிணையில் அமெரிக்கக் கடற்படை அமைத்துள்ள இந்த முற்றுகையை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இரும்புச் சுவர் என வர்ணித்துள்ளார்.</p><p>

மறுபுறம், அமெரிக்கா விதித்துள்ள நிபந்தனைகளை ஏற்கும் வரை கடல் வழித்தடம் திறக்கப்படாது என ஈரான் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">An F/A-18 fighter jet launches from the flight deck of USS George H.W. Bush (CVN 77) while the ship sails in regional waters and supports enforcement of America’s 🇺🇸 steel wall blockade against Iran. As of Aug. 12, U.S. forces have redirected 59 commercial vessels, disabled 3 and… <a href="https://t.co/dH4BBshoTE">pic.twitter.com/dH4BBshoTE</a></p>&mdash; U.S. Central Command (@CENTCOM) <a href="https://x.com/CENTCOM/status/2087616031758103033?ref_src=twsrc%5Etfw">August 12, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-12T23:16:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>H. A. Roshan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கல்முனை வடக்கு வைத்தியசாலையில் 9 பெண் சுகாதார உதவியாளர்களின் ஆடை விவகாரம்: உதவிப் பணிப்பாளரின் நடவடிக்கைக்கு கண்டனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/racist-attire-against-9-female-health-assistant-1786575559"></link>
            <id>https://tamilwin.com/article/racist-attire-against-9-female-health-assistant-1786575559</id>
            <summary type="text">கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் 9 பெண் சுகாதார உதவியாளர்கள் புதிய
நியமனத்தின் போது ஆடை விடயத்தில் உதவி பணிப்பாளரின் தன்னிச்சையான இனவாத
நடவடிக்கை...</summary>
            <content type="html"><![CDATA[<p>கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் 9 பெண் சுகாதார உதவியாளர்கள் புதிய
நியமனத்தின் போது ஆடை விடயத்தில் உதவி பணிப்பாளரின் தன்னிச்சையான இனவாத
நடவடிக்கை கண்டிக்கத்தக்கது என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின்
கிண்ணியா பிரதேச சபை உறுப்பினர் எம்.ஏ.அப்துல் ஹாதி தெரிவித்துள்ளார்.</p><p>இது
தொடர்பில் ஊடகங்களுக்கு இன்று (12) வெளியிட்டுள்ள அறிக்கையிலே இவ்வாறு
தெரிவித்துள்ளார்.</p><h2>&nbsp;9 பெண் சுகாதார உதவியாளர்கள்</h2><p>குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,</p><p>
இந்த சம்பவம் ஒரு அரச அதிகாரியால் எமது இஸ்லாமியர்களின் அடிப்படை உரிமைகள்
(சரத்து 12) , 12(1),12(2) பிரகாரம் மீறப்பட்டதை ஏற்றுக் கொள்ள முடியாது.
</p><p>அத்துடன் இப்படியான விடயங்களை சாதாரணமாக கடந்து செல்ல முடியாது . இதன் பின்னணி
, இவருக்கு இந்த அதிகாரம் யாரால் வழங்கபட்டது .</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ff805cc3-eaca-4d9f-b160-c4f282607487/26-6a7cfcc74b91c.webp' /></p><p> </p><p>அப்படியாயின் இதற்காக பூரண
விசாரனை நடாத்தி இவ்வாறான இனமுறுகளுக்கு வழிவகுக்கும் செயற்பாடுகளை இல்லாது
செய்து உரிய அதிகாரிக்கு சட்டநடவடிக்கை எடுத்து இன நல்லிணக்கத்தை உறுதிப்
படுத்த அரசாங்கம் விரைந்து செயல்பட வேண்டும் என இக்கண்டன அறிக்கை மூலம்
கேட்டுக் கொள்கிறேன்.</p><p>

இவ்வாறான விடயங்களை சாதாரணமாக கடந்து செல்ல முடியாது.</p><p> கடந்த காலங்களிலும்
திருகோணமலை (2018.04.25)சண்முகா கல்லூரி சம்பவம், திருகோணமலை சாஹிரா
மாணவர்களின் உயர்தர பெறுபேறு வெளியிடுதல் கால தாமதம் இவ்வாறு தொடர்ந்து எமது
சமூகம் காலாகாலமாக போராடித்தான் சாதாரண உரிமைகளை கூட பெற வேண்டியுள்ளது. இந்த வரலாறுகள் மாற்றப்பட வேண்டும் என்றும் மேலும் தெரிவித்தார்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-12T23:07:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[இங்கிலாந்தில் பிரதமரின் ஆலோசகராக இந்திய வம்சாவளி நியமனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/indian-man-appointed-advisor-prime-minister-uk-1786574956"></link>
            <id>https://canadamirror.com/article/indian-man-appointed-advisor-prime-minister-uk-1786574956</id>
            <summary type="text">இங்கிலாந்து பிரதமர் ஆண்டி பர்ன்ஹாம், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த உத்தி வகுப்பாளரும் ஊடகத் துறை நிர்வாகியுமான கவுதம் ரங்கராஜனை, பிரதமர் அலுவலகத்தின் கட...</summary>
            <content type="html"><![CDATA[<p>இங்கிலாந்து பிரதமர் ஆண்டி பர்ன்ஹாம், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த உத்தி வகுப்பாளரும் ஊடகத் துறை நிர்வாகியுமான கவுதம் ரங்கராஜனை, பிரதமர் அலுவலகத்தின் கட்டமைப்பு மற்றும் செயல்முறைக்கான நிபுணத்துவ ஆலோசகராக நியமித்துள்ளார்.</p><p>புதிதாக உருவாக்கப்பட்டுள்ள இந்தப் பொறுப்பில், முன்னாள் பிபிசி உத்தி வகுப்பாளரும் இசைக்கலைஞருமான கவுதம் ரங்கராஜன், லண்டனில் உள்ள பிரதமர் அலுவலகமான 10 டவுனிங் ஸ்ட்ரீட்டில் இந்த வாரம் தனது பணியைத் தொடங்குகிறார்.

அரசின் நிர்வாகக் கட்டமைப்பு மற்றும் செயல்முறைகளை மேம்படுத்தும் வகையில் இந்தப் புதிய பொறுப்பு உருவாக்கப்பட்டுள்ளது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0c8d373a-310d-4d1b-8d2f-69828a82fa21/26-6a7cf86e2d4e2.webp' /></p><p>கார்ப்பரேட் உத்தி மற்றும் நிறுவன மாற்றங்களை செயல்படுத்துவதில் கவுதம் ரங்கராஜனுக்கு குறிப்பிடத்தக்க அனுபவம் இருப்பதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
</p><p>
அரசின் கட்டமைப்பு மற்றும் செயல்பாட்டு முறைகளில் மாற்றங்களை மேற்கொள்ளும் பிரதமர் ஆண்டி பர்ன்ஹாமின் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த நியமனம் பார்க்கப்படுகிறது.</p><p> புதிய நிர்வாக அணுகுமுறையை உருவாக்கும் முயற்சியில் ரங்கராஜனின் உத்தி மற்றும் நிறுவன மாற்ற அனுபவம் பயன்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
</p><p>
முன்னாள் பிபிசி நிர்வாகியாக பணியாற்றியுள்ள கவுதம் ரங்கராஜன், ஊடகம் மற்றும் நிறுவன உத்தி சார்ந்த துறைகளில் அனுபவம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.</p><p><br></p>]]></content>
            <updated>2026-08-12T22:49:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[ராகுல் ப்ரீத் ரெட் ஹாட் போட்டோஷூட்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/rakul-preet-red-glamour-dress-photoshoot-1786574949"></link>
            <id>https://cineulagam.com/article/rakul-preet-red-glamour-dress-photoshoot-1786574949</id>
            <summary type="text">நடிகை ராகுல் ப்ரீத் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

தற்போது ரெட் ஹாட் உடையில் அவரது கவர்ச்சி ஸ்டில்கள் வைரல் ஆகி இர...</summary>
            <content type="html"><![CDATA[<p>நடிகை ராகுல் ப்ரீத் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

தற்போது ரெட் ஹாட் உடையில் அவரது கவர்ச்சி ஸ்டில்கள் வைரல் ஆகி இருக்கிறது. இதோ பாருங்க.
</p><p>
 சில மணி நேரத்தில் கிட்டத்தட்ட ஒரு லட்சம் லைக்குகள் இந்த போட்டோக்களுக்கு கிடைத்திருக்கிறது. ஹாட் ஸ்டில்கள் இதோ.</p>]]></content>
            <updated>2026-08-12T22:49:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[சவுதியில் தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு ; ஒருவர் பலி, 3 பேர் காயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/tamil-nadu-fishermen-shot-saudi-arabia-one-killed-1786564295"></link>
            <id>https://canadamirror.com/article/tamil-nadu-fishermen-shot-saudi-arabia-one-killed-1786564295</id>
            <summary type="text">சவுதி அரேபியாவில் ஈரான் எல்லையை ஒட்டிய கடற்பகுதியில் தமிழக மீனவர்கள் மீது ஈரான் கடற்கொள்ளையர்கள் நடத்தியதாகக் கூறப்படும் துப்பாக்கிச் சூட்டில், மயிலாட...</summary>
            <content type="html"><![CDATA[<p>சவுதி அரேபியாவில் ஈரான் எல்லையை ஒட்டிய கடற்பகுதியில் தமிழக மீனவர்கள் மீது ஈரான் கடற்கொள்ளையர்கள் நடத்தியதாகக் கூறப்படும் துப்பாக்கிச் சூட்டில், மயிலாடுதுறையைச் சேர்ந்த மீனவர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மூவர் காயமடைந்துள்ளனர்.
</p><p>
சவுதி அரேபியாவின் ஈரான் எல்லையை ஒட்டிய கடற்பகுதிகளில், தனியார் நிறுவனங்களின் சார்பில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் ஆழ்கடல் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0d62ab07-7b0f-4ee2-8573-393c40ee1637/26-6a7cceca45cb6.webp' /></p><p>

இந்நிலையில், மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த சில மீனவர்கள் குறித்த கடற்பகுதியில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிருந்தபோது, அவர்களை நோக்கி ஈரான் கடற்கொள்ளையர்கள் சிலர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>இந்த துப்பாக்கிச் சூட்டில் மயிலாடுதுறையைச் சேர்ந்த மாவீரன் என்ற மீனவர் உயிரிழந்துள்ளார்.</p><p>

மேலும், கீழமூவர்கரையைச் சேர்ந்த சங்கர் உள்ளிட்ட மூவர் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு அருகிலுள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.</p><p>

சவுதி அரேபியா – ஈரான் எல்லையை ஒட்டிய கடற்பகுதிகளில் ஆழ்கடல் மீன்பிடியில் ஈடுபடும் தமிழக மீனவர்கள் மீது ஈரான் கடற்கொள்ளையர்கள் மற்றும் கடலோரக் காவல் படையினரால் அவ்வப்போது துப்பாக்கிச் சூடு நடத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
இதன் காரணமாக, கடந்த காலங்களிலும் தமிழக மீனவர்கள் உயிரிழந்துள்ளதுடன், பலர் காயமடைந்த சம்பவங்களும் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/468d2bd3-e258-4547-88ce-50c7cb6fa921/26-6a7ccecaeb5df.webp' /></p><p>தற்போதைய துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தமிழக மீனவர் சமூகத்தினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. </p><p>வெளிநாட்டு கடற்பரப்புகளில் தொழிலில் ஈடுபடும் தமிழக மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
</p><p>
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதுடன், துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் மற்றும் சம்பவம் தொடர்பான மேலதிக விவரங்கள் வெளியாக வேண்டியுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-12T22:40:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[கள்ளக்காதலனுக்காக கணவரை சிறைக்கு அனுப்ப போட்ட திட்டம் ; மனைவியின் பயங்கர சதி அம்பலம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/the-wife-s-terrible-plot-to-kill-the-murderer-1786574277"></link>
            <id>https://jvpnews.com/article/the-wife-s-terrible-plot-to-kill-the-murderer-1786574277</id>
            <summary type="text"> இந்தியாவின் ஜம்மு காஷ்மீரில்&amp;nbsp; 28 வயதான கோழிப்பண்ணை உரிமையாளர் ஒருவரை சிக்கவைத்து சிறையில் அடைக்க திட்டமிட்டு, அவரது மனைவி தனது கள்ளக்காதலனுடன் இ...</summary>
            <content type="html"><![CDATA[<p> இந்தியாவின் ஜம்மு காஷ்மீரில்&nbsp; 28 வயதான கோழிப்பண்ணை உரிமையாளர் ஒருவரை சிக்கவைத்து சிறையில் அடைக்க திட்டமிட்டு, அவரது மனைவி தனது கள்ளக்காதலனுடன் இணைந்து போதைப்பொருட்களை கூரியர் (courier) மூலம் அனுப்பியதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.</p><p>
</p><p></p><p>குறித்த இளைஞர் கோழிப்பண்ணை நடத்தி வருவதுடன், அதே பகுதியில் இறைச்சிக் கடையொன்றையும் நடத்தி வருகிறார். </p><p>இவருக்கு திருமணமாகி ஒரு மாதமே ஆன நிலையில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.</p><h3>மேலதிக விசாரணை</h3><p>

சம்பவத்தன்று கான்பூரிலிருந்து அவரது முகவரிக்கு கூரியர் பார்சல் ஒன்று வந்துள்ளது. </p><p>அதனைத் திறந்து பார்த்தபோது, சர்வதேச சந்தையில் பல கோடி ரூபாய் மதிப்புள்ளதாகக் கூறப்படும் சுமார் 4 கிலோ கொக்கைன், 80 கிராம் சரஸ் மற்றும் தடைசெய்யப்பட்ட மனநல மாத்திரைகள் உள்ளிட்ட போதைப்பொருட்கள் இருப்பது தெரியவந்துள்ளது.</p><p>
</p><p></p><p>இதுகுறித்து பொலிஸாருக்கு இரகசிய தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, கந்தர்பால் பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்சலை கைப்பற்றியதுடன், கோழிப்பண்ணை உரிமையாளரையும் விசாரணைக்கு உட்படுத்தினர்.
</p><p>
விசாரணையின்போது, தனக்கு பார்சலில் போதைப்பொருட்கள் இருப்பது குறித்து எதுவும் தெரியாது என அவர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
</p><p>
சவுதி அரேபியாவிலிருந்து தொலைபேசியில் தொடர்புகொண்ட ஒருவர், குறைந்த விலையில் கோழித் தீவனம் வழங்குவதாகவும், அதற்கான மாதிரிகளை அனுப்புவதாகவும் கூறியதாக அவர் தெரிவித்துள்ளார். </p><p>இதனை நம்பியே பார்சலைப் பெற்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
மேலும், தனது திருமணத்திற்கு முன்னரும் அதே தொலைபேசி இலக்கத்திலிருந்து அழைப்புகள் வந்ததாகவும், திருமணத்தை நிறுத்துமாறு தன்னை மிரட்டியதாகவும் அவர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
</p><p>
இதையடுத்து, அவர் மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்வதற்குப் பதிலாக, பொலிஸார் அவரது மனைவியின் தொலைபேசி தொடர்பு விபரங்களை ஆய்வு செய்ததாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
அதன்போது, திருமணத்திற்கு முன்னரே அந்தப் பெண்ணுக்கும் ஸ்ரீநகரின் ஜைனகோட் பகுதியைச் சேர்ந்த 51 வயதான தாரிக் அகமது சோஃபி என்ற அரசு ஊழியருக்கும் தொடர்பு இருந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
</p><p>
பெற்றோரின் வற்புறுத்தலால் குறித்த பெண் கோழிப்பண்ணை உரிமையாளரை திருமணம் செய்துகொண்டதாகவும், திருமணத்திற்குப் பின்னரும் தாரிக் அகமதுவுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்ததாகவும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது.
</p><p>
இதனைத் தொடர்ந்து, கணவரை போதைப்பொருள் கடத்தல் போன்ற கடுமையான வழக்கில் சிக்கவைத்து நீண்ட காலம் சிறையில் அடைக்கச் செய்வதற்கு, குறித்த பெண்ணும் அவரது காதலனும் திட்டமிட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><h3>போதைப்பொருட்கள்</h3><p>

இதற்காக தாரிக் அகமது, கான்பூரில் உள்ள தனது நண்பர் அரீப் என்பவரின் உதவியுடன் போதைப்பொருட்களைப் பெற்று, அவற்றை கோழித் தீவனம் எனக் கூறி பார்சல் மூலம் கணவரின் முகவரிக்கு அனுப்பியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ba1e62f1-4825-40cc-9b2f-e780f7d1eb63/26-6a7cf5c731ef3.webp' /></p><p>பின்னர், பார்சலில் போதைப்பொருட்கள் இருப்பதாக பொலிஸாருக்கு தகவல் வழங்கி, கணவரை கையும் களவுமாக சிக்கவைக்க திட்டமிட்டிருந்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
</p><p>
இந்த வழக்கில் கோழிப்பண்ணை உரிமையாளரின் மனைவி மற்றும் அவரது கள்ளக்காதலன் தாரிக் அகமது சோஃபி ஆகிய இருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.</p><p>

அதேவேளை, சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் அரீப் சவுதி அரேபியாவுக்குத் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் சந்தேகிப்பதாக தெரிவிக்கப்படுகிறது. </p><p>அவரைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
</p><p>
இந்தச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-12T22:38:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ். கீரிமலையில் குவிக்கப்பட்ட குப்பைகளை அகற்றக் கோரி கவனயீர்ப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/protest-remove-garbage-piled-up-keerimalai-jaffna-1786572854"></link>
            <id>https://jvpnews.com/article/protest-remove-garbage-piled-up-keerimalai-jaffna-1786572854</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் – கீரிமலை பகுதியில் கொட்டப்பட்டுள்ள குப்பைகளை உடனடியாக அகற்றுமாறு கோரி, ஆடி அமாவாசை தினத்தை முன்னிட்டு நேற்று (12) புதன்கிழமை கவனயீர்ப்பு ...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் – கீரிமலை பகுதியில் கொட்டப்பட்டுள்ள குப்பைகளை உடனடியாக அகற்றுமாறு கோரி, ஆடி அமாவாசை தினத்தை முன்னிட்டு நேற்று (12) புதன்கிழமை கவனயீர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.</p><p></p><p>

வலி. வடக்கு பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்ட கீரிமலை பகுதியில், சுண்ணக்கல் அகழ்வினால் உருவான பாரிய பள்ளங்களுக்குள் வலி. தெற்கு பிரதேச சபையினால் இலத்திரனியல் கழிவுகள், மருத்துவக் கழிவுகள் உள்ளிட்ட பல்வேறு வகையான கழிவுகள் சட்டவிரோதமாகக் கொட்டப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dd3b727a-16dd-414a-86c0-6b07cf7d1e08/26-6a7cf03874ba0.webp' /></p><p>
</p><p>
இவ்வாறு கொட்டப்பட்டுள்ள கழிவுகளை உடனடியாக மீள அகற்றுமாறு கோரி, வலி. வடக்கு பிரதேச சபையின் 34 உறுப்பினர்களில் 26 உறுப்பினர்கள் கையொப்பமிட்டு, வடமாகாண ஆளுநர், வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர், மாவட்ட செயலாளர், மத்திய சுற்றாடல் அதிகார சபை மற்றும் தெல்லிப்பழை பிரதேச செயலாளர் ஆகியோரிடம் கடந்த வாரம் முறையிட்டிருந்தனர்.</p><p>எனினும், இதுவரை இந்த விடயம் தொடர்பில் காத்திரமான நடவடிக்கைகள் எதுவும் முன்னெடுக்கப்படவில்லை என குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஆடி அமாவாசை தினமான நேற்று, குப்பைகள் கொட்டப்பட்டுள்ள பகுதியில் கவனயீர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.</p><p>

இதன்போது, குறித்த குப்பைக் குவியல்களால் ஏற்படக்கூடிய சுற்றுச்சூழல் மற்றும் சமூகப் பாதிப்புகள் தொடர்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்வும் இடம்பெற்றது. </p><p>மேலும், விழிப்புணர்வு பதாகைகள் காட்சிப்படுத்தப்பட்டதுடன், துண்டுப் பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டன.

இந்த விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை விநியோகிக்கும் நடவடிக்கையில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் கலந்துகொண்டார்.
</p><p>
ஆடி அமாவாசை தினத்தில் முன்னோர்களுக்கான பிதிர்க்கடன்களை நிறைவேற்றுவதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் கீரிமலை பகுதிக்கு வருகை தருவது வழக்கமாகும்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5cad907a-38c4-490b-b1db-bb1bde4a8f38/26-6a7cf03a7e942.webp' /></p><p>அத்துடன், மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தின் தீர்த்தோற்சவத்தை முன்னிட்டு, பக்தர்கள் கீரிமலைப் பகுதியை ஊடறுத்து தீர்த்தமாடச் செல்வதும் குறிப்பிடத்தக்கது.</p><p>

இதனைக் கருத்திற்கொண்டு, ஆடி அமாவாசை தினத்திற்கு முன்னதாக கீரிமலையில் கொட்டப்பட்டுள்ள குப்பைகளை அகற்றுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டிருந்த போதிலும், அவற்றை அகற்றுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவில்லை என ஏற்பாட்டாளர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
</p><p>
இதனால், குறித்த பகுதியில் கொட்டப்பட்டுள்ள கழிவுகளை உடனடியாக அகற்றி, எதிர்காலத்தில் அப்பகுதியில் கழிவுகள் கொட்டப்படுவதைத் தடுப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.</p><p></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dd3b727a-16dd-414a-86c0-6b07cf7d1e08/26-6a7cf03874ba0.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5cad907a-38c4-490b-b1db-bb1bde4a8f38/26-6a7cf03a7e942.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fb98231a-7eb8-44ff-8069-a824c637c4b8/26-6a7cf03927878.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1e88f0b4-c07e-4c90-83a0-95840e71edb9/26-6a7cf039cd24d.webp' /></p>]]></content>
            <updated>2026-08-12T22:16:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுவிஸ் மக்களுக்கு முக்கிய அறிவுறுத்தல் ; வானில் பிரமிக்க வைக்கும் அரிய சூரிய கிரகணம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/rare-solar-eclipse-in-swiss-skies-1786572136"></link>
            <id>https://canadamirror.com/article/rare-solar-eclipse-in-swiss-skies-1786572136</id>
            <summary type="text">சுவிட்சர்லாந்தில் இன்று (12) புதன்கிழமை மாலை அரிய பகுதி சூரிய கிரகணம் தென்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுவிஸ் நேரப்படி (CEST), பகுதி சூரிய கிர...</summary>
            <content type="html"><![CDATA[<p>சுவிட்சர்லாந்தில் இன்று (12) புதன்கிழமை மாலை அரிய பகுதி சூரிய கிரகணம் தென்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
சுவிஸ் நேரப்படி (CEST), பகுதி சூரிய கிரகணம் மாலை 7:23 மணியளவில் ஆரம்பித்து, இரவு 8:50 மணியளவில் நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>எனினும், கிரகணம் முடிவடைவதற்கு முன்னரே சில பகுதிகளில் சூரியன் அஸ்தமித்துவிடும் என்பதால், சரியான நேரம் இருப்பிடத்தைப் பொறுத்து மாறுபடும்.
</p><p>
கிரகணத்தின் உச்சநிலை சுமார் இரவு 8:15 முதல் 8:20 மணி வரை இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/abbd56c1-a1e9-40e0-b3ec-0e382de00d64/26-6a7ced6a87fb0.webp' /></p><p>இந்த நேரத்தில் சுவிட்சர்லாந்தின் பல பகுதிகளில் சந்திரன் சூரியனின் சுமார் 90 முதல் 93 சதவீதம் வரையிலான பகுதியை மறைக்கும். </p><p>சூரிச்சில் அதிகபட்ச மறைப்பு சுமார் 91.9 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

இந்த சூரிய கிரகணம், சந்திரன் பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் கடந்து செல்வதால் ஏற்படுகிறது. </p><p>சுவிட்சர்லாந்தில் இது பகுதி சூரிய கிரகணமாகவே தென்படும்; முழு சூரிய கிரகணம் அங்கு காணப்படாது.
</p><p>
மாலை நேரத்தில் சூரியன் மேற்கு முதல் வடமேற்கு திசையில் தாழ்வாகக் காணப்படும் என்பதால், கிரகணத்தை அவதானிக்க விரும்புவோர் கட்டிடங்கள், மரங்கள் அல்லது மலைகளால் மறைக்கப்படாத திறந்த வெளி, உயரமான பகுதிகள் மற்றும் ஏரிக்கரைகள் போன்ற இடங்களைத் தெரிவுசெய்வது சிறந்ததாகக் கருதப்படுகிறது.</p><h4>பாதுகாப்பு எச்சரிக்கை</h4><p>
முறையான ISO-certified (ISO 12312-2) கிரகணக் கண்ணாடிகள் (Eclipse Glasses) இல்லாமல் சூரியனை நேரடியாகப் பார்க்க வேண்டாம். </p><p>
சாதாரண கூலிங் கிளாஸ்கள் கண்களைப் பாதுகாக்காது.</p>]]></content>
            <updated>2026-08-12T22:02:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தோனேசியாவில் கடலில் தீப்பிடித்த படகு ; ஒருவர் பலி; காணாமல் போனோரை தேடும் பணி தீவிரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/boat-catches-fire-at-sea-in-indonesia-one-dead-1786571246"></link>
            <id>https://canadamirror.com/article/boat-catches-fire-at-sea-in-indonesia-one-dead-1786571246</id>
            <summary type="text">சுற்றுலாத் தீவான பாலியில் இருந்து பயணித்த படகு ஒன்று லோம்போக் கடற்பகுதியில் தீப்பிடித்து எரிந்ததில் 172 பேரை இந்தோனேசிய அதிகாரிகள் மீட்டுள்ளனர்.மேலும்...</summary>
            <content type="html"><![CDATA[<p>சுற்றுலாத் தீவான பாலியில் இருந்து பயணித்த படகு ஒன்று லோம்போக் கடற்பகுதியில் தீப்பிடித்து எரிந்ததில் 172 பேரை இந்தோனேசிய அதிகாரிகள் மீட்டுள்ளனர்.</p><p>மேலும், காணாமல் போன மற்ற பயணிகளைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b4a29fe3-c4c1-4d43-a95d-e926ea13df68/26-6a7ce9efa61de.webp' /></p><p>KM புத்ரி யாஸ்மின் படகு பாலியில் உள்ள பதங்பாய் துறைமுகத்தில் இருந்து மேற்கு நுசா தெங்கரா மாகாணத்தில் உள்ள லம்போக்கில் உள்ள லெம்பார் துறைமுகத்திற்கு புறப்பட்டது என்று உள்ளூர் மீட்பு அமைப்பின் தலைவர் முஹம்மது ஹரியாடி தெரிவித்தார்.</p><p>

இந்நிலையில், ஒரு இந்தோனேசியர் இறந்தது உறுதி செய்யப்பட்டது மற்றும் 172 பேர் பாலி மற்றும் லோம்போக்கில் உள்ள துறைமுகங்களுக்கு வெளியேற்றப்பட்டன.</p>]]></content>
            <updated>2026-08-12T21:47:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலக சாதனை படைத்த சீனாவின் சோதனை புல்லட் ரயில்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/china-experimental-bullet-train-sets-world-record-1786570708"></link>
            <id>https://canadamirror.com/article/china-experimental-bullet-train-sets-world-record-1786570708</id>
            <summary type="text">சீனாவில் ஒரு சோதனை மாக்லேவ் ரயில் தனது சொந்த குறுகிய-தூர சாதனையை ஆறு மாதங்களில் மூன்றாவது முறையாக முறியடித்துள்ளது.

இது வெறும் 5.3 வினாடிகளில் 800 ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சீனாவில் ஒரு சோதனை மாக்லேவ் ரயில் தனது சொந்த குறுகிய-தூர சாதனையை ஆறு மாதங்களில் மூன்றாவது முறையாக முறியடித்துள்ளது.
</p><p>
இது வெறும் 5.3 வினாடிகளில் 800 கிமீ வேகத்தை எட்டி புதிய சாதனையை படைத்ததுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b23a64ac-051a-4d31-bc56-e4c9e6a17257/26-6a7ce7d64d58b.webp' /></p><p>1.1 டன் எடையுள்ள ரயில் ஹூபே மாகாணத்தில் உள்ள டோங்கு ஆய்வகத்தில் 1 கிமீ பாதையில் சோதனையை முடித்தது.</p><p>இருப்பினும், வழக்கமான பயணிகள் ரயில்களைப் போலல்லாமல், இந்த சோதனை வாகனம் மக்களை ஏற்றிச் செல்லும் வகையில் வடிவமைக்கப்படவில்லை. </p><p>

ராக்கெட்ரி, விண்வெளி மற்றும் பிற அதிவேக அமைப்புகளில் இறுதியில் பயன்பாடுகளைக் கொண்டிருக்கக்கூடிய தொழில்நுட்பங்களை சோதிக்க ஆராய்ச்சியாளர்கள் இதைப் பயன்படுத்துகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-08-12T21:42:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஐரோப்பாவில் ரத்தான நூற்றுக்கணக்கான விமானங்கள்... வெளிநாடுகளில் சிக்கிக்கொண்ட குடும்பங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/europe-hundreds-of-flights-cancelled-1786570530"></link>
            <id>https://news.lankasri.com/article/europe-hundreds-of-flights-cancelled-1786570530</id>
            <summary type="text">Flights have been cancelled across Europe: ஐரோப்பாவில் எரிமலை சீற்றம் காரணமாக நூற்றுக்கணக்கான விமானங்கள் ரத்து.
ஐரோப்பாவில் எரிமலை சீற்றம் காரணமாக நூ...</summary>
            <content type="html"><![CDATA[<p>Flights have been cancelled across Europe: ஐரோப்பாவில் எரிமலை சீற்றம் காரணமாக நூற்றுக்கணக்கான விமானங்கள் ரத்து.
</p><p>ஐரோப்பாவில் எரிமலை சீற்றம் காரணமாக நூற்றுக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால், பல குடும்பங்கள் வெளிநாடுகளில் சிக்கிக் கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.</p><h2>முழுமையாக முன்பதிவு</h2><p>
</p><p>எட்னா எரிமலையின் தற்போதைய சீற்றம் சிசிலியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது; இதன் காரணமாக வார இறுதி முதல் கட்டானியா விமான நிலையம் தனது செயல்பாடுகளை நிறுத்தி வைத்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/13828a81-12f9-4f5b-bcba-0357adb2854c/26-6a7ce72640a5a.webp' /></p><p> </p><p>இதன் விளைவாக விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன; நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வெளிநாடுகளில் சிக்கியுள்ளனர். </p><p>விமானங்கள் ரத்து மட்டுமல்லாமல், பேருந்துகள் மற்றும் ரயில்களில் இடங்கள் முழுமையாக முன்பதிவு செய்யப்பட்டுள்ளன, வாடகை வாகனங்களின் கட்டணம் மிக அதிகமாக உள்ளது, மேலும் விடுதிகளும் நிரம்பி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p></p><p> </p><p>தீவின் வடக்குப் பகுதியில் உள்ள பலெர்மோ விமான நிலையத்திலிருந்து விமானங்கள் தொடர்ந்து இயக்கப்பட்டு வருகின்றன; ஆனால், அங்கிருந்து செல்லும் விமானங்களில் அனைத்து இருக்கைகளும் முன்பதிவு செய்யப்பட்டுவிட்டதாகவே கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c97799ff-d12b-428a-b614-d86f162b4d8a/26-6a7ce724d9442.webp' /></p><h2>மாலை 4 மணி வரை</h2><p> </p><p>உள்ளூர் ஊடகங்களின் தகவலின்படி, ஆகஸ்ட் 8 முதல் 11-ஆம் திகதி வரை சுமார் 400 புறப்படும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டன; இன்று மேலும் 52 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a85a540e-5da6-40f6-89a1-cf3a10ad4f6e/26-6a7ce7258b5a5.webp' /></p><p> </p><p>250-க்கும் மேற்பட்ட விமானங்கள் வேறு விமான நிலையங்களுக்குத் திருப்பி விடப்பட்டன. கட்டானியா விமான நிலையத்திற்கான மற்றும் அங்கிருந்து புறப்படும் அனைத்து விமான சேவைகளும் குறைந்தது நாளை மாலை 4 மணி வரை இடைநிறுத்தப்பட்டுள்ளன. </p><p>எரிமலை சீற்றம் காரணமாக மால்டாவிற்கான விமானங்களும் ரத்து செய்யப்பட்டு தாமதமாவதால், சிசிலி மட்டுமல்லாமல் மால்டாவும் பாதிக்கப்பட்டுள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-12T21:33:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Bavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிழக்கை முஸ்லிம்களுக்கு தாரைவாத்து கொடுக்க ஆறுகட்சிகள் கூட்டு திட்டம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/eastern-tamil-people-party-1786569437"></link>
            <id>https://tamilwin.com/article/eastern-tamil-people-party-1786569437</id>
            <summary type="text">தமிழ்
மக்களின் பூர்வீகமான கிழக்கை முஸ்லிம்களுக்கு தாரைவார்த்து கொடுப்பதற்கான சதி
திட்டமே இந்த ஆறுகட்சிகள் கூட்டு என ஈழத்தமிழர் முன்னணி கட்சி தலைவர் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழ்
மக்களின் பூர்வீகமான கிழக்கை முஸ்லிம்களுக்கு தாரைவார்த்து கொடுப்பதற்கான சதி
திட்டமே இந்த ஆறுகட்சிகள் கூட்டு என ஈழத்தமிழர் முன்னணி கட்சி தலைவர் ஜெயா
சரவணா தெரிவிதத்தார்.</p><p>நேற்றையதினம்(12.8.2026) ஊடக அறிக்கை ஒன்றை
வெளியிட்டு அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.</p><p>அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, கிழக்கில் அம்பாறை மாவட்டத்தில் பொத்துவில் தொடக்கம் துறைநீலாவனை வரையும் உள்ள
பல சாய்ந்தமருது வீரமுனை, பொத்துவில், உட்பட பல கிராமங்களில் உள்ள
தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டு கட்டிடங்களுக்கு தீவைத்து
விரட்டியடிக்கப்பட்டு ஆலயங்கள் இருந்த
இடங்களில் பள்ளிவாசல் மற்றும் மீன்சந்தை அமைக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>தமிழர்கள் மீது அடாவடி</h2><p>&nbsp;அவ்வாறே ஓட்டுமாவடியில் காளிகோவிலை உடைத்து அதில் மீன்சந்தை கட்டியதாகவும்
அதற்கு நீதவானை கூட தனது அதிகாரத்தை பயன்படுத்து இடமாற்றம் செய்துள்ளதாக
நா.உறுப்பினர் எ.எல்.எம். ஹிஸ்புல்லா தெரிவித்த வீடியோ சமூக ஊடகங்களில்
வெளிவந்துள்ளது.
</p><p>
இவ்வாறு தமிழர்கள் மீது ஊர்காவல்படை என்ற போர்வையில் தமிழர்கள் மீது
கட்டவிழ்துவிடப்பட்டு தமிழர்களை படுகொலை செய்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ba3e0041-c87c-459b-bc25-eecc4d07e55c/26-6a7ce60db6c49.webp' /></p><p> இந்த தமிழர்கள் மீது
இடம்பெற்ற இந்த அடாவடிக்கு எதிராக அன்றில் இருந்து இன்று வரை தமிழர்களின்
பிரதி நிதிகள், தலைவர்கள் என தெரிவித்து வருபவர்கள் எவரும் குரல் கொடுக்காது
மௌனிகளாக இருந்து வருகின்றனர்.
</p><p>
கடந்த 2014ம் ஆண்டு கிழக்கு மாகாண சபை தேர்தலில் தமிழரசுகட்சி 11 ஆசனங்களை
பெற்று கொண்டு முஸ்லீம் கட்சிகளுடன் கூட்டு சேர்ந்து முஸ்லிம்களுக்கு
முதலமைச்சு பதவியை தாரைவாத்து கொடுத்தது தமிழரசு கட்சி

அதேபோல கிழக்கை முஸ்லிம்களுக்கு தாரைவார்த்து கொடுப்பதற்கே இந்த 6 கட்சி
கூட்டு . </p><p>அரசாங்கத்தால் வழங்கப்பட்ட தமிழ் மக்களின் பிரதேச செயலகமான கல்முனை
தமிழ் பிரதேசசெயலகத்தின் கணக்காளரை கூட வழங்க மறுக்கும் முஸ்லிம்
அரசியல்வாதிகள் தமிழ் மக்களின் நலனில் அல்லது உரிமைக்காக குரல்கொடுப்பார்களா
மக்களே சிந்தியுங்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-12T21:31:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்தும் திட்டம் ; இலங்கைக்கு ஐ.நா. விசேட கடிதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/un-special-letter-plan-raise-retirement-age-judges-1786557891"></link>
            <id>https://jvpnews.com/article/un-special-letter-plan-raise-retirement-age-judges-1786557891</id>
            <summary type="text">இலங்கையில் நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை மேலும் இரண்டு வருடங்களால் அதிகரிப்பதற்கு முன்மொழியப்பட்டுள்ள அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் ஐக்கிய நாடுகள...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை மேலும் இரண்டு வருடங்களால் அதிகரிப்பதற்கு முன்மொழியப்பட்டுள்ள அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை இலங்கை அரசாங்கத்துக்கு விசேட கடிதமொன்றை அனுப்பியுள்ளது.</p><p>
</p><p></p><p>நீதிபதிகள் மற்றும் சட்டத்தரணிகளின் சுதந்திரம் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் விசேட பிரதிநிதி மார்கரெட் சாட்டர்வைட் (Margaret Satterthwaite) இந்தக் கடிதத்தை அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fb5005b1-c254-4535-84a7-bb61d5c19a5d/26-6a7cb91e31ecb.webp' /></p><p>
</p><p>
தற்போதைய அரசியலமைப்பின் பிரகாரம், உயர் நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயது 65 ஆகவும், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயது 63 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.</p><p>முன்மொழியப்பட்டுள்ள அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம், உயர் நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை 67 ஆகவும், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை 65 ஆகவும் உயர்த்துவதற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
</p><p>
எனினும், அவசரமாக மேற்கொள்ளப்படும் இத்தகைய அரசியலமைப்புத் திருத்தம் நீதித்துறையின் சுதந்திரத்திற்கும், நியாயமான விசாரணைக்கான உரிமைக்கும் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என ஐக்கிய நாடுகள் சபையின் விசேட பிரதிநிதி தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளார்.
</p><p>
குறிப்பாக, முன்மொழியப்பட்டுள்ள மாற்றங்கள் எதிர்காலத்தில் நியமிக்கப்படவுள்ள நீதிபதிகளுக்கு மாத்திரம் பொருந்தாமல், தற்போது பதவியில் உள்ள நீதிபதிகளின் பதவிக்காலத்துக்கும் உடனடியாகப் பொருந்தும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளமை கவலைக்குரிய விடயம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3565a721-deef-446f-97dc-5abbf0cc704e/26-6a7cb5c50961d.webp' /></p><p>மேலும், நீதித்துறை தொடர்பான முக்கியமான சட்ட மற்றும் அரசியலமைப்பு மாற்றங்கள் உரிய கலந்தாலோசனைகள் மற்றும் வெளிப்படையான நடைமுறைகளின் ஊடாக முன்னெடுக்கப்பட வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.</p><p>

முறையான கலந்தாலோசனைகள் இன்றி இத்தகைய திருத்தங்கள் மேற்கொள்ளப்படுமானால், நீதித்துறையின் சுயாதீனம் தொடர்பில் பொதுமக்கள் மத்தியில் சந்தேகங்கள் ஏற்படுவதுடன், நீதித்துறை மீதான நம்பிக்கையும் பாதிக்கப்படக்கூடும் என ஐ.நா. விசேட பிரதிநிதி எச்சரித்துள்ளார்.
</p><p>
இதனையடுத்து, நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பதற்கான அரசியலமைப்புத் திருத்தத்தை முன்வைப்பதற்கான காரணங்கள், அதன் சட்டரீதியான அடிப்படை மற்றும் நீதித்துறையின் சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்காக அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் தெளிவுபடுத்துமாறு ஐக்கிய நாடுகள் சபை இலங்கை அரசாங்கத்திடம் கோரியுள்ளது.
</p><p>
நீதித்துறையின் சுயாதீனம் மற்றும் நீதிபதிகளின் பதவிக்காலம் தொடர்பான இந்த விவகாரம், இலங்கையில் முன்மொழியப்பட்டுள்ள அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பான முக்கியமான சர்வதேச கவனமாக பார்க்கப்படுகிறது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-12T21:11:55+00:00</updated>
        </entry>
    </feed>
