<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-07-22T16:45:49+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[37 வயது ரைசா வில்சனின் கிளாமர் கிளிக்ஸ்...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/raiza-wilson-recent-photos-post-1784723222"></link>
            <id>https://viduppu.com/article/raiza-wilson-recent-photos-post-1784723222</id>
            <summary type="text">ரைசா வில்சன்நடிகர் தனுஷின் வேலையில்லா பட்டதாரி 2 படத்தில் கஜோலின் அசிஸ்டண்ட் ரோலில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை ரைசா வில்சன். மாடலிங் துறையில் இருந...</summary>
            <content type="html"><![CDATA[<h2>ரைசா வில்சன்</h2><p>நடிகர் தனுஷின் வேலையில்லா பட்டதாரி 2 படத்தில் கஜோலின் அசிஸ்டண்ட் ரோலில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை ரைசா வில்சன். மாடலிங் துறையில் இருந்து வந்த ரைசா, அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்தார். அதன்பின் பிக்பாஸ் முதல் சீசனில் கலந்து கொண்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/60b61a69-657e-42d4-b6c6-cf7bff0c7abc/26-6a60b71fe7792.webp' /></p><p>
</p><p>
ஆர்யா நடித்து வெளியான மிஸ்டர் எக்ஸ் படத்தில் முக்கிய ரோலில் நடித்திருந்தார் ரைசா. சமீபத்தில் சப்ஸ்கிரிப்ஷனில் எக்ஸ்குளூசிவ் கிளாமர் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர ஆரம்பித்திருக்கிறார்.
</p><p>
அவரது சப்ஸ்கிரிப்ஷனுக்கு மாதம் ரூபாய். 290 கட்டணமாக வசூலிப்பதாக நிர்ணயித்திருக்கிறார். அப்படி அவரது சப்ஸ்கிரிப்ஷன் பக்கத்தை 650 பேர் இதுவரை சப்ஸ்கிரைப் செய்துள்ளனர். இதனையடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தற்போது, அவுட்டிங் சென்று கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-07-22T16:45:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நான் நடத்திய போரில் இறந்த ராணுவீரர்கள் மிகவும் குறைவு ; டிரம்ப் ஷாக் தகவல்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/very-few-soldiers-died-in-the-war-is-waged-trump-1784716347"></link>
            <id>https://canadamirror.com/article/very-few-soldiers-died-in-the-war-is-waged-trump-1784716347</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;தான் நடத்திய போரில் இறந்த ராணுவீரர்கள் மிகவும் குறைவு என டிரம்ப் கூறியுள்ளமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்கா கடந்த 50 வருடங்களு...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;தான் நடத்திய போரில் இறந்த ராணுவீரர்கள் மிகவும் குறைவு என டிரம்ப் கூறியுள்ளமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்கா கடந்த 50 வருடங்களுக்கு மேலாகவே பல நாடுகளிலும் போர் தொடுத்து வருகின்றன. </p><p>அந்த போர்களில் எதிரி நாடுகள் தாக்கியதில் அமெரிக்க ராணுவ வீரர்கள் பலரும் உயிரிழந்திருக்கிறார்கள். 

அமெரிக்கா இதுவரை ஆப்கானிஸ்தான், ஈராக், வியட்நாம், கொரியா, வெனிசுலா, ஈரான் போன்ற நாடுகளின் போரை நடத்தி இருக்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4b2df269-5f74-4864-9ecf-a7c9a2b9d124/26-6a609c3d681f6.webp' /></p><p> </p><p>அதில் பல ஆயிரம் ராணுவ வீரர்கள் இறந்து போயிருக்கிறார்கள்.

நான்கு மாதங்களுக்கு முன்பு ஈரான் அணு ஆயுதம் வைத்துக்கொள்ளக்கூடாது எனக் கூறி அமெரிக்காவும், இஸ்ரலும் சேர்ந்து அந்த நாட்டின் மீது போரை துவங்கியது.&nbsp;</p><p>
இதையடுத்து, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நடத்திய போரால் பல்லாயிரம் வீரர்கள் இறந்து போய்விட்டதாக அந்நாட்டின் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்ட துவங்கியிருக்கிறார்கள். </p><p>அதோடு அமெரிக்காவுக்கு பல கோடி மில்லியன்கள் செலவாகிவிட்டதாகவும் சொல்லப்பட்டு வருகிறது. இந்நிலையில், இது தொடர்பாக தனது சமூக வலைதளத்தள பக்கத்தில் டொனால்ட் டிரம்ப் ,</p><p>

20 வருடங்கள் நடந்த ஆப்கானிஸ்தான் போரில் 2 ஆயிரம் வீரர்களும், 8 வருடங்கள் நடந்த ஈராக் போரில் 4,800 வீரர்களும், 19 வருடம் நடந்த வியட்நாம் போரில் 56,220 பேரும், 3 வருடங்கள் நடந்த கொரியன் போரில் 36,575 வீரர்களும், ஒரு நாள் நடந்த வெனிசுலா போரில் யாரும் இறக்கவில்லை, ஈரானுடான 4 மாத போரில் 18 அமெரிக்கா ராணுவ வீரர்கள் மட்டுமே இறந்துள்ளனர் என டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்</p>]]></content>
            <updated>2026-07-22T16:39:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை சிறுவர்கள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள முக்கிய தீர்மானம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/major-decision-announced-for-sri-lankan-children-1784738012"></link>
            <id>https://jvpnews.com/article/major-decision-announced-for-sri-lankan-children-1784738012</id>
            <summary type="text">இணையவழி அச்சுறுத்தல்கள், இணைய வன்முறைகள் மற்றும் டிஜிட்டல் தாக்கங்களில் இருந்து சிறுவர்களின் நலன்களைப் பாதுகாப்பதற்கான வேலைத்திட்டங்களை அரசாங்கம் தீவி...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">இணையவழி அச்சுறுத்தல்கள், இணைய வன்முறைகள் மற்றும் டிஜிட்டல் தாக்கங்களில் இருந்து சிறுவர்களின் நலன்களைப் பாதுகாப்பதற்கான வேலைத்திட்டங்களை அரசாங்கம் தீவிரப்படுத்தியுள்ளதாகத் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
</p><p style="text-align: justify; ">
பிரதமர் ஹரிணி அமரசூரிய தலைமையில் நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே இது குறித்த விரிவான தேசிய வேலைத்திட்டம் தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7f089624-aeac-46f2-a3a1-0e0739b34b4d/26-6a60f0de50eb7.webp' /></p><h2 style="text-align: justify; ">டிஜிட்டல் கல்வி</h2><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
டிஜிட்டல் கல்விச் செயற்பாட்டுப் பிரிவின் பல்துறை சார்ந்த பணிக்குழுவின் பங்களிப்புடன் இந்தக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0486d194-c9ac-42fe-a901-f7979591ebfd/26-6a60f210e96f0.webp' /></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
பல நாடுகள் சமூக வலைதளப் பயன்பாட்டிற்கான வயது எல்லைகள் குறித்து விவாதித்து வரும் நிலையில், வெறும் தடைகள் மட்டுமே தீர்வாகாது எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
</p><p style="text-align: justify; ">
ஒரு நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்ட தடையின் போதும், 85 சதவீதமான குழந்தைகள் வேறு வழிகளில் தளங்களைப் தொடர்ந்து பயன்படுத்துவதாக ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது.
</p><p style="text-align: justify; ">
இதனால் கற்றல் வாய்ப்புகள் இழப்பு மற்றும் பாதுகாப்பற்ற தளங்களை நாடும் அபாயம் ஏற்படுவதாகவும் விவாதிக்கப்பட்டது.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
இணைய வழியிலான சுரண்டல்கள், ஆபத்தான உள்ளடக்க வெளிப்பாடுகள், தூக்கமின்மை, இணைய அடிமைத்தனம் மற்றும் மனநல பாதிப்புகள் போன்றவற்றுக்குத் தீர்வு காணப் பல்துறை சார்ந்த உத்திகளைப் பின்பற்றுவது அவசியமாகும்.
</p><p style="text-align: justify; ">
டிஜிட்டல் கல்வியறிவை மேம்படுத்துதல், பெற்றோர்கள் மற்றும் குழந்தைகளுக்கு அதிகாரமளித்தல், இணைய தளங்களை நெறிப்படுத்துதல், அடிமையாக்கும் அம்சங்களை முடக்குதல் மற்றும் பாதுகாப்பு வடிவமைப்பு கொள்கைகளை நடைமுறைப்படுத்தல் போன்ற நடவடிக்கைகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify; ">
</p><p style="text-align: justify; ">
இந்தச் செயற்பாட்டின் ஒரு கட்டமாக, சர்வதேசக் கட்டமைப்புகள் மற்றும் தேசிய வளங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட இணையப் பாதுகாப்பு மற்றும் டிஜிட்டல் நல்வாழ்வு தொடர்பான வரைவு பாடசாலை மட்டத்திலான வழிகாட்டல்கள் இதன்போது சமர்ப்பிக்கப்பட்டன.
</p><p style="text-align: justify; ">
சம்பந்தப்பட்ட உரிய நிறுவனங்களின் ஒப்புதலுக்குப் பிறகு, இந்த இறுதி வழிகாட்டல்கள் நாடு முழுவதும் உள்ள பாடசாலைகளுக்கு வழங்கப்படும் எனவும், அவற்றைச் செயற்படுத்துவதற்கான முறையான பயிற்சி மற்றும் நோக்குநிலைகள் அளிக்கப்படும் எனவும் அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-22T16:33:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜனநாயகன் முதல் நாளில் எத்தனை கோடி வசூலிக்கும்? பாக்ஸ் ஆபிஸ் prediction]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/jana-nayagan-first-day-boxoffice-prediction-1784737740"></link>
            <id>https://cineulagam.com/article/jana-nayagan-first-day-boxoffice-prediction-1784737740</id>
            <summary type="text">விஜய்யின் ஜனநாயகன் படம் நாளை ரிலீஸ் என்பதால் ரசிகர்கள் தியேட்டரில் கொண்டாட தயாராகி வருகின்றனர். விஜய்யின் கடைசி படம் இது என்பதால் பெரிய அளவில் எதிர்பா...</summary>
            <content type="html"><![CDATA[<p>விஜய்யின் ஜனநாயகன் படம் நாளை ரிலீஸ் என்பதால் ரசிகர்கள் தியேட்டரில் கொண்டாட தயாராகி வருகின்றனர். விஜய்யின் கடைசி படம் இது என்பதால் பெரிய அளவில் எதிர்பார்ப்பும் இருக்கிறது.</p><p>இருப்பினும் படம் ஏற்கனவே இணையத்தில் கசிந்த காரணத்தால் தியேட்டரில் படத்திற்கு ரெஸ்பான்ஸ் எப்படி இருக்கும், பாதிப்பு ஏற்படுமா என்கிற கேள்வியும் இருக்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2eca0143-fad3-43d3-9075-48f8466c9b6e/26-6a60efcded5b9.webp' /></p><h2>வசூல் கணிப்பு
</h2><p>இந்நிலையில் வந்திருக்கும் தகவல்களின் அடிப்படையில் முதல் ஜனநாயகன் 85 - 92 கோடி ரூபாய் வரை வசூலிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
</p><p>நடிகராக விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் எந்த அளவுக்கு வசூலிக்கிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.&nbsp;</p><p><br></p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-22T16:29:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீர்வீழ்ச்சியில் புகைப்படம் எடுத்த மாணவர்களுக்கு நேர்ந்த கதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/two-school-students-deaths-from-a-waterfall-1784735499"></link>
            <id>https://ibctamil.com/article/two-school-students-deaths-from-a-waterfall-1784735499</id>
            <summary type="text">&amp;nbsp;கண்டி தெல்தெனிய, பன்விலை பகுதியில் அமைந்துள்ள நீர்வீழ்ச்சி ஒன்றில் புகைப்படம் எடுக்க முயன்ற இரண்டு மாணவர்கள் தவறி வீழந்து உயிரிழந்தனர். 

13 ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கண்டி தெல்தெனிய, பன்விலை பகுதியில் அமைந்துள்ள நீர்வீழ்ச்சி ஒன்றில் புகைப்படம் எடுக்க முயன்ற இரண்டு மாணவர்கள் தவறி வீழந்து உயிரிழந்தனர். </p><p>

13 மற்றும் 15 வயதுடைய இரண்டு மாணவர்களே இவ்வாறு தவறி வீழ்ந்து உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.</p><p> 

பாடசாலை நேரம் முடிந்த பின்னர் ஐந்து மாணவர்கள் அடங்கிய குழுவொன்று இந்த நீர்வீழ்ச்சியைப் பார்வையிடச் சென்றுள்ளது.&nbsp;</p><h2>புகைப்படம் எடுக்க முற்பட்ட போது விபத்து&nbsp;</h2><p>அங்கு அவர்கள் புகைப்படம் எடுக்க முற்பட்ட போதே இந்த விபத்து நேர்ந்துள்ளதாக காவல்துறையின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/24f7cf03-478b-452e-a145-d295c6672ce1/26-6a60ef2bb5ff9.webp' /></p><p> </p><p>

இந்தசம்பவம் குறித்து காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-22T16:26:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் மாயமான 11 வயது சிறுவனை தேடும் பணி ஏழாவது நாளாகவும் தீவிரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/search-for-missing-calgary-child-parker-1784735950"></link>
            <id>https://canadamirror.com/article/search-for-missing-calgary-child-parker-1784735950</id>
            <summary type="text">கனடாவின் ஆல்பர்டா மாகாணம் கால்கரி நகரில் காணாமல் போன 11 வயது சிறுவன் பார்கர் வெல்ஸ்ஐ கண்டுபிடிக்கும் தேடுதல் நடவடிக்கை புதன்கிழமையுடன் ஏழாவது நாளாகவும...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் ஆல்பர்டா மாகாணம் கால்கரி நகரில் காணாமல் போன 11 வயது சிறுவன் பார்கர் வெல்ஸ்ஐ கண்டுபிடிக்கும் தேடுதல் நடவடிக்கை புதன்கிழமையுடன் ஏழாவது நாளாகவும் தொடர்கிறது.
</p><p>கால்கரியின் வடமேற்கு பகுதியில் உள்ள Connaught Drive N.W.-இல் அமைந்திருந்த தனது சிறுவர் பராமரிப்பு மையத்திலிருந்து பார்கர் காணாமல் போனதாக காவல்துறை தெரிவித்துள்ளது.</p><p>&nbsp;கால்கரி காவல்துறை, கண்காணிப்பு கமெரா பதிவுகளின் அடிப்படையில் பார்கர் சென்றதாக உறுதிப்படுத்தப்பட்ட பாதையை காட்டும் வரைபடத்தையும் வெளியிட்டது.
தேடுதலை கைவிடவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a1b74d5c-977b-43cd-b7f5-961df3857e30/26-6a60e8d019010.webp' /></p><p> </p><p>இது ஒவ்வொரு பெற்றோருக்கும் மிகப்பெரிய துயரமான கனவாகும். இந்த கடினமான நேரத்தில் பார்கரின் குடும்பத்துடன் எங்கள் மனமும் இணைந்துள்ளது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>இதுவரை 400-க்கும் மேற்பட்ட கால்கரி காவல்துறை அதிகாரிகளும், பயிற்சி பெற்ற தன்னார்வலர்களும் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.</p><p>
தேடுதல் நடவடிக்கையின் போது 7,000 கிலோமீட்டருக்கும் அதிகமான நிலப்பரப்பு சோதனை செய்யப்பட்டுள்ளதுடன், மொத்தமாக 5,500 மணிநேரத்திற்கும் அதிகமான தேடுதல் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
</p><p>மேலும், பொதுமக்களிடமிருந்து 300-க்கும் மேற்பட்ட தகவல்கள் கிடைத்துள்ளன. அவை அனைத்தும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு, ஒவ்வொரு தகவலும் முழுமையாக ஆய்வு செய்யப்பட்டு வருகிறது என காவல்துறை தெரிவித்துள்ளது.</p><p>
அதேவேளை, தனியார் வீடுகளில் அனுமதியின்றி நுழைந்து தேடுதல் நடத்தவோ, அங்குள்ள மக்களை எதிர்கொள்ளவோ அல்லது சமூக ஊடகங்கள் மூலம் தனிப்பட்ட விசாரணைகளை முன்னெடுக்கவோ கூடாது என்று காவல்துறை பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.</p><p> இத்தகைய நடவடிக்கைகள் அதிகாரப்பூர்வ தேடுதல் பணிகளை பாதிப்பதுடன், சமூகத்தின் பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தலாக அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-22T16:02:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[கணவரின் நினைவோடு வாழும் நடிகை - மறுமணம் குறித்து ஓபன் டாக்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/sruthi-shanmuga-priya-open-up-second-marriage-1784711770"></link>
            <id>https://manithan.com/article/sruthi-shanmuga-priya-open-up-second-marriage-1784711770</id>
            <summary type="text">திருமண வாழ்க்கை தொடங்கிய சில மாதங்களிலேயே கணவரை இழந்த நடிகை ஸ்ருதி சண்முகப்பிரியா, இன்றும் அவரது நினைவுகளுடன் வாழ்ந்து வருவதாக கூறியுள்ள நிலையில், தனத...</summary>
            <content type="html"><![CDATA[<p>திருமண வாழ்க்கை தொடங்கிய சில மாதங்களிலேயே கணவரை இழந்த நடிகை ஸ்ருதி சண்முகப்பிரியா, இன்றும் அவரது நினைவுகளுடன் வாழ்ந்து வருவதாக கூறியுள்ள நிலையில், தனது மறுமணம் குறித்த அவரது சமீபத்திய பேட்டி சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது.</p><h2>நடிகை ஸ்ருதி சண்முகப்பிரியா</h2><p>

சின்னத்திரை ரசிகர்களிடையே பிரபலமான நடிகை ஸ்ருதி சண்முகப்பிரியா, சன்டிவியின் வெற்றிகரமான தொடரான “நாதஸ்வரம்” மூலம் தனது நடிப்பு பயணத்தை தொடங்கினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0747deb9-8437-422b-9b06-ad2ee320524b/26-6a6094049fd78.webp' /></p><p></p><p>அதனை தொடர்ந்து “வாணி ராணி”, “கல்யாண பரிசு”, “பாரதி கண்ணம்மா” உள்ளிட்ட பல தொடர்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிக்கொண்டார்.&nbsp;</p><p>
நடிப்பில் தொடர்ந்து பயணித்து வந்த ஸ்ருதி, தனது நீண்ட நாள் காதலரான பாடி பில்டர் அரவிந்த் சேகரை 2024ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/35d78997-15b8-4804-a150-878845824bab/26-6a6094054e18a.webp' /></p><p>ஆனால், திருமண வாழ்க்கை மலர்ந்த சில மாதங்களிலேயே அரவிந்த் சேகர் திடீரென உயிரிழந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.</p><p>

கணவரின் மறைவுக்குப் பிறகும் அவரது நினைவுகளை சுமந்து வாழ்ந்து வரும் ஸ்ருதி, “அவர் என்னைவிட்டு பிரிந்துவிடவில்லை.இன்றும் என்னுடன் இருக்கிறார். அவருடன் நான் பேசிக்கொண்டே இருக்கிறேன்” என்று தனது கணவர் குறித்த உருக்கமான வார்த்தைகளை பகிர்ந்து வருகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4e3b4038-f961-4a67-81d7-19b49dae2fb3/26-6a609405f2543.webp' /></p><h2>மறுமணம் குறித்து ஓபன் டாக்&nbsp;</h2><p>

மறுமணம் குறித்து பேசிய அவர், “சமூகத்தின் கட்டுப்பாடுகள் என்னுடைய வாழ்க்கையை தீர்மானிக்காது. தனியாக வாழ்வதா அல்லது மீண்டும் திருமணம் செய்துகொள்வதா என்பது ஒவ்வொருவரின் தனிப்பட்ட முடிவு” என்று தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c1f16ef6-4e3e-47d8-b220-df10c9773882/26-6a609406a4814.webp' /></p><p></p><p>

மேலும், “எதிர்காலத்தில் என் வாழ்க்கையில் வேறு ஒருவர் வந்தாலும், அவரை எனக்கு அனுப்பி வைப்பது என் பாதுகாவலர் தேவதையாக இருக்கும் என் கணவர் அரவிந்த்தான் என்று நம்புவேன்” என அவர் கூறியிருப்பது பலரையும் நெகிழ வைத்துள்ளது.
</p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-22T15:59:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாடொன்றில் இரண்டு பெண்கள் உட்பட 7 இலங்கையர்கள் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/seven-sri-lankans-arrested-abroad-two-women-1784735914"></link>
            <id>https://jvpnews.com/article/seven-sri-lankans-arrested-abroad-two-women-1784735914</id>
            <summary type="text">சக இலங்கையர் ஒருவரைக் கட்டாயத் தொழிலாளியாகச் சுரண்டியதாகச் சந்தேகிக்கப்படும் இலங்கையர் ஒருவரை மலேசியக் குடிவரவுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">சக இலங்கையர் ஒருவரைக் கட்டாயத் தொழிலாளியாகச் சுரண்டியதாகச் சந்தேகிக்கப்படும் இலங்கையர் ஒருவரை மலேசியக் குடிவரவுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார். </p><p style="text-align: justify;">

சிலாங்கூர், ஜெஞ்சாரோம் பகுதியில் உள்ள மூன்று இடங்களில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனைகளின் போது, குறித்த சந்தேகநபர் கைதாகியுள்ளார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4f0b6ec7-90ed-49de-b2eb-f1e124553f41/26-6a60e8ac5e0d9.webp' /></p><h2 style="text-align: justify; ">ஆட்கடத்தல் நடவடிக்கை</h2><p> </p><p style="text-align: justify; ">

தனது முதலாளியால் சுரண்டலுக்கு உள்ளாக்கப்படுவதாகக் கருதப்படும் இலங்கையைச் சேர்ந்த பெண்ணொருவர் தொடர்பில் பொதுமக்களிடம் இருந்து கிடைத்த முறைப்பாடு மற்றும் புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையிலேயே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அத்திணைக்களம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p style="text-align: justify; ">

இந்தப் புலனாய்வுத் தகவல்கள், ஆட்கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக நம்பப்படும் சந்தேகநபரை அடையாளம் காண உதவியுள்ளன. </p><p style="text-align: justify; ">

சந்தேகநபரைத் தவிர, செல்லுபடியாகும் பயண ஆவணங்கள் அல்லது கடவுச்சீட்டுகள் இல்லாத காரணத்தினால் 21 முதல் 51 வயதிற்குட்பட்ட நான்கு ஆண்கள் மற்றும் இரண்டு பெண்கள் அடங்கலாக மேலும் ஆறு இலங்கையர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p style="text-align: justify; "></p><p style="text-align: justify;"> 

மலேசிய ஊடக அறிக்கைகளின்படி, மனிதக் கடத்தல் எதிர்ப்பு மற்றும் சட்டவிரோதக் குடியேற்றத் தடுப்புப் பிரிவு மற்றும் பணமோசடி தடுப்புப் பிரிவு (AMLA) ஆகியவற்றின் புலனாய்வு மற்றும் பொதுமக்களின் முறைப்பாட்டைத் தொடர்ந்தே 38 வயதுடைய இச்சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். </p><p style="text-align: justify;">

இந்த நடவடிக்கையின் மூலம் கட்டாயத் தொழிலாளர் சுரண்டலுக்கு ஆளானவராக அடையாளம் காணப்பட்ட இலங்கைப் பெண் ஒருவர் மீட்கப்பட்டுள்ளதாக மலேசியக் குடிவரவுத் தலைமைப் பணிப்பாளர் டாதுக் ஜகாரியா ஷாபான் தெரிவித்துள்ளார். </p><p style="text-align: justify;">

வேலை வாய்ப்புகள் மற்றும் பணி அனுமதிப் பத்திரம் பெற்றுத் தருவதாகக் கூறி ஏமாற்றப்பட்டு, சந்தேகநபருக்குச் சொந்தமான உணவகம் ஒன்றில் பணிபுரிவதற்காகவே பாதிக்கப்பட்ட பெண் மலேசியாவிற்கு அழைத்து வரப்பட்டுள்ளமை ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p style="text-align: justify;"></p><p style="text-align: justify;"> </p><p style="text-align: justify;">பாதிக்கப்பட்ட பெண் சம்பளம் வழங்கப்படாமல் வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டதாகவும், போதிய உணவு வழங்கப்படாமல் அவரது நடமாட்டங்கள் கட்டுப்படுத்தப்பட்டதுடன், அச்சுறுத்தலாக உடலிரீதியான வன்முறைகளுக்கும் உட்படுத்தப்பட்டதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. </p><p style="text-align: justify;">

அதேநேரம் செல்லுபடியாகும் பயண ஆவணங்கள் அல்லது அனுமதிகள் இல்லாததால் 21 முதல் 51 வயதிற்குட்பட்ட மேலும் ஆறு இலங்கையர்களும் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-22T15:58:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[இணையத்தில் நோய் அறிகுறிகளை தேடுகிறீர்களா? இந்த உண்மையை முதலில் தெரிந்துகொள்ளுங்கள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/do-you-know-hypochondriasis-the-fear-of-illness-1784720838"></link>
            <id>https://manithan.com/article/do-you-know-hypochondriasis-the-fear-of-illness-1784720838</id>
            <summary type="text">மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரும் நோய் நொடியில்லாமல் ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்றே விரும்புகிறார்கள். ஆனால், சிலருக்கு இந்த ஆரோக்கியத்தின் மீதான அக்கறை, ...</summary>
            <content type="html"><![CDATA[<p>மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரும் நோய் நொடியில்லாமல் ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்றே விரும்புகிறார்கள். ஆனால், சிலருக்கு இந்த ஆரோக்கியத்தின் மீதான அக்கறை, காலப்போக்கில் நோய் குறித்த அளவுக்கு மீறிய பயமாக (Fear of Illness) மாறிவிடுகிறது. </p><p>இதுவே பல்வேறு மனநலச் சிக்கல்களுக்கு வழிவகுக்கும் ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது.

இன்றைய டிஜிட்டல் உலகில், உடலில் ஏற்படும் சாதாரண தலைவலி, வயிற்றுவலி அல்லது சிறிய உடல்நலக் குறைபாடு போன்றவற்றுக்குக்கூட பலர் முதலில் இணையத்தில் தேடுகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ef14e71d-e180-4064-b1c6-b86f63e43176/26-6a60b3efcbe41.webp' /></p><p></p><h2>நோய் மீதான பயம்&nbsp;</h2><p> </p><p>அப்போது கிடைக்கும் தகவல்களில் கடுமையான நோய்களின் அறிகுறிகளும் இடம்பெறுவதால், "எனக்கும் அதே நோய்தான் இருக்குமோ?", "இது உயிருக்கு ஆபத்தான நிலையாக மாறிவிடுமோ?" என்ற அச்சம் அவர்களிடம் உருவாகிறது.
</p><p>
இந்தப் பழக்கம், தேவையற்ற கவலை, பதற்றம் மற்றும் மன அழுத்தத்தை அதிகரிக்கக் காரணமாகிறது. இணையத்தில் கிடைக்கும் பொதுவான மருத்துவத் தகவல்களை தங்களின் உடல்நிலையுடன் ஒப்பிட்டு தவறான முடிவுகளுக்கு வருவதால், மனநலமும் பாதிக்கப்படலாம் என்று உளவியல் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.</p><p></p><p>
</p><p>
சிறிய உடல்நல அறிகுறிகளையே பெரிய நோய்களின் அடையாளமாக கற்பனை செய்து பயப்படுவது ஏன் ஏற்படுகிறது? இந்தப் பழக்கத்திலிருந்து எவ்வாறு மீள்வது? போன்ற முக்கியமான கேள்விகளுக்கான விளக்கங்களையும் பயனுள்ள ஆலோசனைகளையும் இந்தக் காணொளியில் தெரிந்துகொள்ளலாம்.</p><p><iframe width="325" height="578" src="https://www.youtube.com/embed/foh7961VftI" title="இணையத்தில் நோய் அறிகுறிகளைத் தேடுகிறீர்களா? எச்சரிக்கை!" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share" referrerpolicy="strict-origin-when-cross-origin" allowfullscreen></iframe></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-22T15:57:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் குற்றச் செயல்களின் எண்ணிக்கையில் ஏற்பட்டுள்ள மாற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/national-crime-rates-and-crime-severity-fell-1784734731"></link>
            <id>https://canadamirror.com/article/national-crime-rates-and-crime-severity-fell-1784734731</id>
            <summary type="text">கனடாவில் கடந்த ஆண்டில் குற்றச் செயல்களின் எண்ணிக்கையில் மாற்றம் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கனடாவில் 2025-ஆம் ஆண்டில் குற்றங்களின் விகிதமு...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவில் கடந்த ஆண்டில் குற்றச் செயல்களின் எண்ணிக்கையில் மாற்றம் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
</p><p>கனடாவில் 2025-ஆம் ஆண்டில் குற்றங்களின் விகிதமும் குற்றங்களின் தீவிரமும் குறைந்துள்ளதாக கனடா புள்ளிவிபரவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
</p><p>கனடாவின் குற்றத் தீவிரக் குறியீடு கடந்த ஆண்டில் 5 சதவீதம் குறைந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/226fbfa0-156c-460d-8879-5a773b98f66e/26-6a60e40d50430.webp' /></p><p> </p><p>
அதற்கு முந்தைய 8 ஆண்டுகளாக இக்குறியீடு தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், தற்போது தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டாக சரிவைக் கண்டுள்ளது.</p><p>
குற்றங்களின் தீவிரத்தைப் பொருட்படுத்தாமல், மொத்தக் குற்றங்களின் எண்ணிக்கையைக் கணக்கிடும் வழக்கமான குற்ற விகிதம் 2025-ஆம் ஆண்டில் 2 சதவீதம் குறைந்துள்ளது.</p><p>
வீடுகளின் கதவு/பூட்டை உடைத்துத் திருடும் சம்பவங்கள் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாகக் குறைந்ததே குற்றத் தீவிரக் குறியீடு சரிந்ததற்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.</p><p>
கொலைகள், மோட்டார் வாகனத் திருட்டுகள் மற்றும் மிரட்டிப் பணம் பறித்தல் போன்ற குற்றச் செயல்களின் தேசிய விகிதமும் குறைந்துள்ளது.
அதேவேளையில், கடைகளில் பொருட்கள் திருடப்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகப் பதிவாகியுள்ளது.
</p><p>2025-இல் ஏமாற்று வேலை மற்றும் மோசடி வழக்குகள் சற்றே குறைந்திருந்தாலும், கடந்த பத்தாண்டுகளில் இத்தகைய வழக்குகள் பெருமளவில் அதிகரித்துள்ளன. </p><p>இதனால் 2015-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் தற்போதைய மோசடி விகிதம் இன்னும் 61 சதவீதம் அதிகமாகவே உள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-22T15:45:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீர்வீழ்ச்சியில் புகைப்படம் எடுக்க சென்ற 2 சிறுவர்களுக்கு நேர்ந்த விபரீதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/two-boys-killed-while-taking-waterfall-photos-1784735102"></link>
            <id>https://jvpnews.com/article/two-boys-killed-while-taking-waterfall-photos-1784735102</id>
            <summary type="text">தெல்தெனிய, பன்விலை பகுதியில் அமைந்துள்ள நீர்வீழ்ச்சி ஒன்றில் தவறி வீழந்து இரண்டு சிறுவர்கள் உயிரிழந்தனர். 

13 மற்றும் 15 வயதுடைய இரண்டு சிறுவர்களே ...</summary>
            <content type="html"><![CDATA[<p>தெல்தெனிய, பன்விலை பகுதியில் அமைந்துள்ள நீர்வீழ்ச்சி ஒன்றில் தவறி வீழந்து இரண்டு சிறுவர்கள் உயிரிழந்தனர். </p><p>

13 மற்றும் 15 வயதுடைய இரண்டு சிறுவர்களே இவ்வாறு தவறி வீழ்ந்து உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/29f1cbfc-d391-475b-a765-be92eaba6a09/26-6a60e5800ff73.webp' /></p><p> </p><p>

பாடசாலை நேரம் முடிந்த பின்னர் ஐந்து மாணவர்கள் அடங்கிய குழுவொன்று இந்த நீர்வீழ்ச்சியைப் பார்வையிடச் சென்றுள்ளது. </p><p>

அங்கு அவர்கள் புகைப்படம் எடுக்க முற்பட்ட போதே இந்த விபத்து நேர்ந்துள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p></p><p> </p><p>

இச்சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-22T15:45:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[எப்ஸ்டீனுடன் தொடர்புடைய மற்றுமொரு நபர் பிரான்சில் உயிரிழப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/another-person-linked-to-epstein-dies-in-france-1784733681"></link>
            <id>https://tamilwin.com/article/another-person-linked-to-epstein-dies-in-france-1784733681</id>
            <summary type="text">மறைந்த அமெரிக்கக் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் தொடர்புடைய மோடலிங் முகவரான
டேனியல் சியாட் (69), பாரிஸ் நகருக்கு வெளியே உள்ள அவரது இல்லத்தில் சடலமாகக...</summary>
            <content type="html"><![CDATA[<p>மறைந்த அமெரிக்கக் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் தொடர்புடைய மோடலிங் முகவரான
டேனியல் சியாட் (69), பாரிஸ் நகருக்கு வெளியே உள்ள அவரது இல்லத்தில் சடலமாகக்
கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அரசு வழக்கறிஞர்கள் புதன்கிழமை தெரிவித்துள்ளனர்.
</p><p>
திங்கட்கிழமை மாலை இவரது உடல் கண்டெடுக்கப்பட்ட நிலையில், உயிரிழப்பிற்கான
சரியான காரணத்தைக் கண்டறிய பிரேதப் பரிசோதனைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக
நன்டேர் அரசு வழக்கறிஞர் அலுவலகம் தெரிவித்துள்ளது.</p><p></p><h2>எப்ஸ்டீனுடன் தொடர்பு</h2><p>
</p><p>
அமெரிக்க நீதித்துறை வெளியிட்ட எப்ஸ்டீன் தொடர்பான ஆவணங்களில் டேனியல்
சியாட்டின் பெயர் சுமார் 2,000 முறை இடம்பெற்றுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1b94f81c-51b6-4e25-80eb-ea4dd9b29973/26-6a60e489156e3.webp' /></p><p>
</p><p>
பிரெஞ்சு ஊடகங்களின்படி, சியாட் மீது குறைந்தது ஐந்து பெண்கள் பாலியல் துர்நடத்தை மற்றும் மனிதக் கடத்தல் குற்றச்சாட்டுகளைச் சுமத்தியிருந்தனர்.

இருப்பினும், தன் மீதான அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் சியாட்
மறுத்திருந்தார்.
</p><p>
இது குறித்து சியாட்டின் வழக்கறிஞர் மெய்னா அரப்-டிக்ரைன் தெரிவிக்கையில்,
"டேனியல் சியாட் தனது நிரபராதித்தனத்தை தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.

அவர் மாரடைப்பு காரணமாகவே உயிரிழந்தார், எனக் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>பிரான்சில் உயிரிழப்பு</h2><p>
</p><p>
மேலும், அவர் மீது இதுவரை எந்தவொரு முறையான நீதிமன்ற வழக்குகளும்
தொடரப்படவில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3eb80e58-d984-48bb-aa73-9882d1b6051a/26-6a60e489e505e.webp' /></p><p>
</p><p>பிரான்சில் எப்ஸ்டீனுடன் தொடர்புடை நபர்களில் உயிரிழக்கும் இரண்டாவது நபர்
சியாட் ஆவார்.</p><p>

இதற்கு முன்னர், 2020இல் கைதுசெய்யப்பட்ட மோடலிங் முகவர் ஜீன்-லூக் புருனல்
என்பவர் 2022ஆம் ஆண்டு தனது சிறை அறையில் தூக்கிட்டுத் தவறான முடிவெடுத்து கொண்டார்
என்பது குறிப்பிடத்தக்கது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-22T15:42:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[மலேசியாவில் இலங்கை நபர் வலையில் சிக்கிய பெண்..! 7 இலங்கையர்கள் அதிரடி கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/7-sri-lankans-human-trafficker-arrest-malaysia-1784729680"></link>
            <id>https://tamilwin.com/article/7-sri-lankans-human-trafficker-arrest-malaysia-1784729680</id>
            <summary type="text">மலேசியாவின் செலாங்கூர் மாநிலம், ஜென்ஜாரம் (Jenjarom) உள்ளிட்ட மூன்று இடங்களில் முன்னெடுக்கப்பட்ட விசேட நடவடிக்கையின் போது, சக இலங்கையரை கட்டாயத் தொழில...</summary>
            <content type="html"><![CDATA[<p>மலேசியாவின் செலாங்கூர் மாநிலம், ஜென்ஜாரம் (Jenjarom) உள்ளிட்ட மூன்று இடங்களில் முன்னெடுக்கப்பட்ட விசேட நடவடிக்கையின் போது, சக இலங்கையரை கட்டாயத் தொழிலாளராக சுரண்டியதாக சந்தேகிக்கப்படும் இலங்கை நபர் ஒருவரை மலேசிய குடிவரவு திணைக்களம் கைது செய்துள்ளது.</p><p>

பொதுமக்கள் அளித்த முறைப்பாடு மற்றும் புலனாய்வு தகவல்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக மலேசிய குடிவரவு திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p></p><h2>மலேசியாவில் கைது</h2><p>

இலங்கைப் பெண் ஒருவர் தனது முதலாளியால் தொழிலாளர் சுரண்டலுக்கு உள்ளாக்கப்பட்டிருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், மனிதக் கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 38 வயதுடைய இலங்கை நபர் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
இந்த நடவடிக்கையின் போது, செல்லுபடியாகும் பயண ஆவணங்கள் அல்லது கடவுச்சீட்டுகள் இன்றி தங்கியிருந்ததாகக் கூறப்படும் 21 முதல் 51 வயதுக்குட்பட்ட மேலும் ஆறு இலங்கையர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2acc6286-7f92-4170-a0de-eec645540ec4/26-6a60d4fc7d23a.webp' /></p><p> </p><p>

இவர்களில் நான்கு ஆண்களும் இரண்டு பெண்களும் அடங்குகின்றனர்.
</p><p>
மலேசிய குடிவரவு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் டத்துக் சகாரியா ஷாபான் (Datuk Zakaria Shaaban) வெளியிட்டுள்ள அறிக்கையில், கட்டாயத் தொழிலாளர் சுரண்டலுக்குள்ளானதாக அடையாளம் காணப்பட்ட இலங்கைப் பெண் ஒருவர் இந்த நடவடிக்கையின் போது மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>7 இலங்கையர்கள்</h2><p>
</p><p>
ஆரம்பக்கட்ட விசாரணைகளில், வேலைவாய்ப்பு மற்றும் வேலை அனுமதி வழங்கப்படும் என்ற வாக்குறுதியின் பேரில் குறித்த பெண் ஏமாற்றப்பட்டு மலேசியாவிற்கு அழைத்து வரப்பட்டதாகவும், பின்னர் சந்தேகநபருக்குச் சொந்தமான உணவகம் ஒன்றில் பணியமர்த்தப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.</p><p>

மேலும், அந்தப் பெண் எந்தவித சம்பளமும் வழங்கப்படாமல் வேலை செய்ய கட்டாயப்படுத்தப்பட்டதுடன், போதுமான உணவும் வழங்கப்படவில்லை. </p><p>

அவரது சுதந்திரமான நடமாட்டமும் கட்டுப்படுத்தப்பட்டதுடன், அச்சுறுத்தல் மற்றும் மிரட்டலுக்காக உடல் ரீதியான வன்முறைகளும் மேற்கொள்ளப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2b0b23b5-f286-4557-b230-df46b7ee0862/26-6a60d4fd2dbed.webp' /></p><p>

மலேசியப் பிரஜையை திருமணம் செய்ததன் மூலம் நீண்டகால சமூக வருகை அனுமதிப்பத்திரம் (Long-Term Social Visit Pass) பெற்றுள்ள சந்தேகநபர், மனிதக் கடத்தல் மற்றும் குடியேறியவர்களை கடத்தல் தடுப்பு சட்டம் (ATIPSOM) பிரிவு 12 மற்றும் 1959/63 குடிவரவு சட்டத்தின் கீழ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p>

தொழிலாளர் சுரண்டல் மற்றும் மனிதக் கடத்தல் போன்ற குற்றங்களுக்கு எதிராக எந்தவித சமரசமும் மேற்கொள்ளப்படமாட்டாது என மலேசிய குடிவரவு திணைக்களம் வலியுறுத்தியுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-22T15:22:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்கத் தொழில்நுட்பங்களில் 'கில் ஸ்விட்ச்' பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைக்க அமெரிக்க தூதுவர்களுக்கு ரூபியோ உத்தரவு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/rubio-orders-us-envoys-put-end-to-talk-kill-switch-1784731489"></link>
            <id>https://tamilwin.com/article/rubio-orders-us-envoys-put-end-to-talk-kill-switch-1784731489</id>
            <summary type="text">அமெரிக்கா உருவாக்கியுள்ள செயற்கை நுண்ணறிவு (AI) போன்ற அதிநவீன தொழில்நுட்ப
தயாரிப்புகளில் அமெரிக்க அரசுக்கு கட்டுப்பாடு வைக்கும் &#039;கில் ஸ்விட்ச்&#039; (Kill...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்கா உருவாக்கியுள்ள செயற்கை நுண்ணறிவு (AI) போன்ற அதிநவீன தொழில்நுட்ப
தயாரிப்புகளில் அமெரிக்க அரசுக்கு கட்டுப்பாடு வைக்கும் 'கில் ஸ்விட்ச்' (Kill
Switch) வசதி இருப்பதாக வெளியாகும் தகவல்களை மறுக்குமாறு, அந்நாட்டின்
வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ உலகெங்கிலும் உள்ள அமெரிக்க
தூதுவர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
</p><p>
அமெரிக்காவின் ‘ஆந்த்ரோபிக்’ நிறுவனத்தின் முன்னணி ஏஐ மாதிரிகளுக்கான
வெளிநாட்டுப் பயன்பாட்டு அணுகலை அமெரிக்க அரசு தற்காலிகமாகத் தடை செய்ததைத்
தொடர்ந்து, சர்வதேச அளவில் எழுந்த பலத்த எதிர்ப்புகளையும் கவலைகளையும்
தணிக்கும் முயற்சியாக அமெரிக்க வெளியுறவுத்துறை இந்தத் தூதரக நடவடிக்கையை
மேற்கொண்டுள்ளது.</p><p></p><h2>கில் ஸ்விட்ச்' பேச்சு</h2><p>

அமெரிக்க அரசு தூதரகங்களுக்கு அனுப்பியுள்ள இந்த இரகசிய வழிகாட்டுதலில்,
அமெரிக்காவின் ஏஐ தொழில்நுட்பங்களைத் தங்களுக்குச் சாதகமாக விற்பனை செய்யவும்,
பிற நாடுகள் சொந்தமாக "ஏஐ இறையாண்மை" அல்லது "டிஜிட்டல் இறையாண்மை" என்ற
பெயரில் அமெரிக்க நிறுவனங்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத்
தடுக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/56f5d97e-d5f4-40ae-bdb6-206a492fab51/26-6a60de67a9f1e.webp' /></p><p>
</p><p>
தொழில்நுட்பப் பாதுகாப்பு காரணங்களுக்காக 30 நாட்கள் சோதனைக்குட்படுத்துவது
என்பது 'கில் ஸ்விட்ச்' அல்லது அரசின் 'மாய பொத்தான்' (Magic button) கிடையாது
என்றும், அமெரிக்க கொள்கைகளைத் தவறாகப் புரிந்துகொண்டு இந்தச் செய்திகள்
பரப்பப்படுவதாகவும் தூதுவர்கள் வாயிலாக அமெரிக்கா தெளிவுபடுத்த முயல்கிறது.</p><p>

இருப்பினும், அமெரிக்கா எப்போது வேண்டுமானாலும் தங்களுக்கு வழங்கப்பட்ட
தொழில்நுட்ப அணுகலைத் துண்டித்துவிடும் என்ற அச்சம் காரணமாக, ஐரோப்பிய ஒன்றிய
நாடுகளும் ஆசிய நாடுகளும் அமெரிக்க தொழில்நுட்பங்களைச் சார்ந்திருப்பத்தைக்
குறைத்து, சொந்தமாகத் தொழில்நுட்ப உள்கட்டமைப்புகளை உருவாக்க தீவிரம் காட்டி
வருகின்றன.</p><p>அமெரிக்க அரசு பொருளாதாரத் தடைகள் மற்றும் வரிகளைப் பயன்படுத்தி பிற நாடுகளைக்
கட்டுப்படுத்த நினைப்பதே, இத்தகைய நம்பிக்கையின்மைக்கு முக்கியக் காரணம் என
சர்வதேச நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-22T15:16:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[வீடியோ காலுக்கு ரூ. 6000!! APP ஆரம்பித்து காசு பார்க்கும் நடிகை தர்ஷா குப்தா..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/dharsha-gupta-her-own-app-with-shocking-price-list-1784722281"></link>
            <id>https://viduppu.com/article/dharsha-gupta-her-own-app-with-shocking-price-list-1784722281</id>
            <summary type="text">தர்ஷா குப்தா தர்ஷா குப்தா சீரியல் மூலம் ரசிகர்களை கவர்ந்து இழுத்தவர். இதை விட குக் வித் கோமாளி தான் இவருக்கு பெரிய மேடையை போட்டு கொடுத்தது. சமீப காலமா...</summary>
            <content type="html"><![CDATA[<h2>தர்ஷா குப்தா </h2><p>தர்ஷா குப்தா சீரியல் மூலம் ரசிகர்களை கவர்ந்து இழுத்தவர். இதை விட குக் வித் கோமாளி தான் இவருக்கு பெரிய மேடையை போட்டு கொடுத்தது. சமீப காலமாக இன்ஸ்டாவில் Subscribers ஆப்ஷன் வைத்தே இவர் பல லட்சம் சம்பாதித்துவிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9f9261e8-9dfe-449b-95b2-d6eef6a27af9/26-6a60b36d8c52a.webp' /></p><p>

BMW கார் எல்லாம் வாங்கிவிட்டார் என பலர் கூறி வந்த நிலையில், தற்போது புதிய ஆப் செயலியை தொடங்கியுள்ளார். அந்த ஆப்பில் அவர் போட்டுள்ள ரேட் கார்டை பார்த்து ரசிகர்கள் வாயை பிளந்துள்ளனர்.</p><h2>வீடியோ காலுக்கு ரூ. 6000</h2><p>அதாவது பிறந்தநாளுக்கு வீடியோ காலில் வாழ்த்து சொல்ல ரூ. 6000, பிராண்ட் பிரமோஷனுக்கு ரூ. 50 ஆயிரம், ப்ரீமியம் சப்ஸ்கிரிப்ஷனுக்கு ரூ. 1000, இதுதவிர 3 மாதங்கள் மற்றும் 1 ஆண்டுகளுக்கான ஸ்பெஷல் ஸ்கீம்களும் அதற்கு சலுகை ஆஃபர்களும் வழங்கியுள்ளார். </p><p>இந்த கட்டணப் பட்டியலை பார்த்து நெட்டிசன்கள் இப்படி எல்லாம் இறங்கிட்டாங்களே என்று விமர்சித்து வருகிறார்கள்.</p>]]></content>
            <updated>2026-07-22T15:15:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவிலிருந்து அமெரிக்காவிற்கு இடம்மாற்றப்பட்ட பாரிய திமிங்கிலங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/beluga-whales-relocated-from-canada-1784733156"></link>
            <id>https://ibctamil.com/article/beluga-whales-relocated-from-canada-1784733156</id>
            <summary type="text">கனடாவின் ஒன்டாரியோவில் நயாகரா அருவிப் பகுதியில் உள்ள மரைன்லேண்ட் கடல் பூங்காவில் இருந்து நான்கு பெலூகா திமிங்கிலங்கள், அமெரிக்காவின் சிகாகோவில் உள்ள ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் ஒன்டாரியோவில் நயாகரா அருவிப் பகுதியில் உள்ள மரைன்லேண்ட் கடல் பூங்காவில் இருந்து நான்கு பெலூகா திமிங்கிலங்கள், அமெரிக்காவின் சிகாகோவில் உள்ள மீன் காட்சியகத்துக்கு பாதுகாப்பாகக் கொண்டுவரப்பட்டன.
</p><p>

மேலும் இரண்டு திமிங்கிலங்கள் டெக்சாசில் உள்ள சான் ஆன்டோனியோ கடல் அருங்காட்சியகத்துக்குக் கொண்டு செல்லப்பட்டன.</p><h2>30 பெலூகா திமிங்கிலங்களை மீட்கும் சர்வதேச முயற்சி</h2><p>&nbsp;மரைன்லேண்ட் கடல் பூங்கா மூடப்பட்டதையடுத்து, அங்கிருந்த 30 பெலூகா திமிங்கிலங்களை மீட்கும் சர்வதேச முயற்சியின் முதல்கட்டமாக ஆறு திமிங்கிலங்கள் இடமாற்றம் செய்யப்பட்டன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f2fac695-4402-4459-a979-9fc425807d43/26-6a60dde6409a3.webp' /></p><p>
</p><p>
மீதமுள்ள திமிங்கிலங்கள், ஜோர்ஜியா, சான் டியாகோ, ஸ்பெயின் ஆகிய இடங்களில் உள்ள கடல் அருங்காட்சியகங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p>
</p>]]></content>
            <updated>2026-07-22T15:12:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[துலாம் முதல் மீனம் வரை.., சனி வக்ர பெயர்ச்சி பலன்கள் எப்படி இருக்கும்?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/thulam-to-meenam-sani-vakra-palangal-1784727003"></link>
            <id>https://news.lankasri.com/article/thulam-to-meenam-sani-vakra-palangal-1784727003</id>
            <summary type="text">நவகிரகங்களின் நீதிமானாக விளங்கக்கூடிய சனிபகவான் செய்யும் செயலுக்கு ஏற்ப கர்ம பலன்களை கொடுக்கக்கூடியவர்.

இவர் நீதி, நேர்மை, ஒழுக்கம், கடின உழைப்பு ஆ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நவகிரகங்களின் நீதிமானாக விளங்கக்கூடிய சனிபகவான் செய்யும் செயலுக்கு ஏற்ப கர்ம பலன்களை கொடுக்கக்கூடியவர்.
</p><p>
இவர் நீதி, நேர்மை, ஒழுக்கம், கடின உழைப்பு ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார்.
</p><p>
இந்நிலையில், சனி பகவான் 2026ஆம் ஆண்டு ஜூலை 27ஆம் திகதி அன்று மீன ராசியில் வக்ர நிலையில் பயணிக்கத் தொடங்குவார்.</p><p>

இந்த சனி வக்ர பெயர்ச்சியின் தாக்கம் 12 ராசிகள் மீதும் ஏற்படும்.</p><p>

அந்தவகையில், சனி வக்ர பெயர்ச்சி துலாம் முதல் மீனம் வரை முதல் 6 ராசிகளுக்கு எப்படி இருக்கும் என்று ஜோதிடர் ஸ்ரீரங்கம் கார்த்திகேயன் இக்காணொளியில் பகிர்ந்துள்ளார்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/WE0RMOYe9Ko?start=4" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-22T15:10:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையின் ஏற்றுமதி வருமானம் அதிகரிப்பு; 6 மாதங்களில் 9 பில்லியன் டொலர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sri-lanka-export-earnings-rise-9-billion-6th-month-1784725615"></link>
            <id>https://jvpnews.com/article/sri-lanka-export-earnings-rise-9-billion-6th-month-1784725615</id>
            <summary type="text">&amp;nbsp; 2026 ஆம் ஆண்டின் முதல் 6 மாதங்களில் இலங்கையின் மொத்த ஏற்றுமதி வருமானம் 9 பில்லியன் அமெரிக்க டொலர்களைத் தாண்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; 2026 ஆம் ஆண்டின் முதல் 6 மாதங்களில் இலங்கையின் மொத்த ஏற்றுமதி வருமானம் 9 பில்லியன் அமெரிக்க டொலர்களைத் தாண்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>

இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் தலைவரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான மங்கள விஜேசிங்க,
</p><p>2026 ஜனவரி முதல் ஜூன் வரையிலான காலப்பகுதியில், பொருட்கள் மற்றும் சேவை ஆகிய இரு துறைகளின் மொத்த ஏற்றுமதி வருமானம் 9,012.24 மில்லியன் அமெரிக்க டொலர்களாக மதிப்பிடப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6f9645bc-8fc2-4a6a-8127-6de5dd47c267/26-6a60c071a571a.webp' /></p><h2>அரையாண்டில் பொருட்கள் ஏற்றுமதி வருமானம்</h2><p> </p><p>

இது 2025 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 8% வளர்ச்சியாகும். 

2026 இன் முதல் அரையாண்டில் பொருட்கள் ஏற்றுமதி வருமானம் 7,073.31 மில்லியன் டொலர்களாகப் பதிவாகியுள்ளது. </p><p>கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 8.95% அதிகரிப்பாகும். 

இக்காலப்பகுதியில் சேவை ஏற்றுமதித் துறையும் 4.49% வளர்ச்சியைப் பதிவு செய்து 1,938.94 மில்லியன் டொலர்களை ஈட்டியுள்ளது.</p><p></p><p> </p><p>

2026 ஜூன் மாதத்தில் மாத்திரம் மொத்த ஏற்றுமதி வருமானம் 1,658.62 மில்லியன் டொலர்களாகப் பதிவாகியுள்ளதுடன் கடந்த ஆண்டின் ஜூன் மாதத்தை விட 12.53% வளர்ச்சியாகும். </p><p>

இதில் பொருட்கள் ஏற்றுமதி 1,314.10 மில்லியன் டொலர்களாகவும் (15.09% வளர்ச்சி), சேவை ஏற்றுமதி 344.52 மில்லியன் டொலர்களாகவும் (3.75% வளர்ச்சி) பதிவாகியுள்ளது.</p><p></p><p> 

தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பம், நிர்மாணம், நிதிச் சேவைகள், போக்குவரத்து மற்றும் விநியோகம் போன்ற அறிவுசார் சேவைத் தொழில்கள், நாட்டின் ஏற்றுமதி வருமானத்தைப் பல்வகைப்படுத்துவதற்கும் அந்நியச் செலாவணியை ஈட்டுவதற்கும் கணிசமான பங்களிப்பை வழங்கியுள்ளன. </p><p>

 உலகச் சந்தையில் நிலவும் பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும் ஏற்றுமதியாளர்கள் வெளிப்படுத்தும் போட்டித்தன்மையே இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணம் எனக் குறிப்பிட்டார்.</p>]]></content>
            <updated>2026-07-22T15:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[காலை உணவு திட்டத்திற்கு காமராஜர் பெயர்: தமிழ்நாடு அரசு அரசாணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/cm-vijay-breakfast-scheme-name-change-1784731836"></link>
            <id>https://ibctamilnadu.com/article/cm-vijay-breakfast-scheme-name-change-1784731836</id>
            <summary type="text">தமிழ்நாட்டில் மாணவர்கள் பள்ளிக்கு வருவதை ஊக்குவிக்கவும், அவர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் முன்னாள் முதலமைச்சர் பெருந்தலைவர் காமராஜர் மதிய உணவுத் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழ்நாட்டில் மாணவர்கள் பள்ளிக்கு வருவதை ஊக்குவிக்கவும், அவர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் முன்னாள் முதலமைச்சர் பெருந்தலைவர் காமராஜர் மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். </p><p>பின்னர் அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி, மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட முதலமைச்சர்கள் அந்தத் திட்டத்தை விரிவுபடுத்தி செயல்படுத்தினர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/446a0439-a31a-40a3-9074-ec327a89e62b/26-6a60da116ec8d.webp' /></p><h2>அரசாணை&nbsp; வெளியீடு&nbsp;</h2><p>

அதன் தொடர்ச்சியாக, கடந்த 2022 செப்டம்பர் 15ஆம் தேதி, அறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு, 1 முதல் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்காக 'முதலமைச்சர் காலை உணவு திட்டத்தை' அன்றைய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிமுகப்படுத்தினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/315c357e-3fad-44d9-85c2-a21c592c667e/26-6a60da1220716.webp' /></p><p> மேலும், வரும் செப்டம்பர் 17ஆம் தேதி முதல் இத்திட்டம் 1 முதல் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விரிவுபடுத்தப்படும் என தற்போதைய முதலமைச்சர் அறிவித்துள்ளார்.</p><p>
இந்நிலையில், 'முதலமைச்சர் காலை உணவு திட்டம்' என்ற பெயர் மாற்றப்பட்டு, இனி 'பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டம்' என்ற பெயரில் செயல்படுத்தப்படும் என்று தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-22T14:56:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பிலிருந்து மன்னார் வந்த அருட்சகோதரிகளுக்கு அதிகாலைவேனை நிகழ்ந்த அனர்த்தம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/vehicle-carrying-nuns-in-mannar-accident-1784730082"></link>
            <id>https://ibctamil.com/article/vehicle-carrying-nuns-in-mannar-accident-1784730082</id>
            <summary type="text">கொழும்பில் இருந்து மன்னார் நோக்கி அருட்சகோதரிகள் பயணித்த வாகனம் இன்று
புதன்கிழமை (22) அதிகாலை 3:30 மணியளவில் பறையனாலங்குளம் இரும்பு பாலத்தில்
விபத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பில் இருந்து மன்னார் நோக்கி அருட்சகோதரிகள் பயணித்த வாகனம் இன்று
புதன்கிழமை (22) அதிகாலை 3:30 மணியளவில் பறையனாலங்குளம் இரும்பு பாலத்தில்
விபத்துக்குள்ளானது.
</p><p>
இதன் போது குறித்த வாகனத்தில் பயணித்த 4 அருட்சகோதரிகள் (கன்னியாஸ்திரிகள்)
காயமடைந்த நிலையில் அவர்கள் உடனடியாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டனர்.</p><h2>&nbsp;யாழ்.போதனாவில் ஒருவர் அனுமதி&nbsp;</h2><p>&nbsp;அவர்களில் ஒரு அருட்சகோதரி பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் மேலதிக
சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/10d1c132-6c4c-420b-9984-8c61657db11f/26-6a60d9bac84d5.webp' /></p><p>
</p><p>
மன்னாரைச் சேர்ந்த மாசற்ற அமலோற்பவ அன்னை சபையைச் சேர்ந்த அருட்சகோதரிகள்
(கன்னியாஸ்திரிகள்) பயணித்த வாகனமே விபத்துக்கு உள்ளாகியமை
குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-22T14:55:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[இணையத்தை ஆக்கிரமிக்கும் ஆர்த்தி ரவியின் நியூ லுக்! வாயடைத்துப்போன நெட்டிசன்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/arti-ravi-latest-new-instagram-post-viral-1784723832"></link>
            <id>https://manithan.com/article/arti-ravi-latest-new-instagram-post-viral-1784723832</id>
            <summary type="text">விவாகரத்து சர்ச்சைக்கு பின்னர் ஆர்த்தி ரவி வெளியிடும் ஒவ்வொரு பதிவும் இணையத்தில் படு வைரலாகி வரும் நிலையில், தற்போது ட்ரெண்டிங் உடையில் அசத்தல் போஸ் க...</summary>
            <content type="html"><![CDATA[<p>விவாகரத்து சர்ச்சைக்கு பின்னர் ஆர்த்தி ரவி வெளியிடும் ஒவ்வொரு பதிவும் இணையத்தில் படு வைரலாகி வரும் நிலையில், தற்போது ட்ரெண்டிங் உடையில் அசத்தல் போஸ் கொடுத்து ஆர்த்தி ரவி தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது.</p><h2>

ரவி மோகன்- ஆர்த்தி ரவி</h2><p>ரவி மோகன் - ஆர்த்தி ரவி
ஆர்த்தியை பிரிவதாக நடிகர் ரவி மோகன் கடந்த வருடம் அறிவித்தார். இரண்டு பேருக்குமான விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடந்துவருகிறது.விரைவில் சட்டப்படி டைவர்ஸ் கிடைத்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2fab2b6c-822e-488e-943f-0e2ccd33c59f/26-6a60c2f5399a2.webp' /></p><p>
</p><p>
தங்களின் திருணம வாழ்க்கையில் பாடகி கெனிஷாவால் தான் பிரிவு நிகழ்ந்ததாக ஆர்த்தி ரவி குறிப்பிடுகின்றார்.ஆனால் ரவி மோன் தனக்கு உண்டான மரியாதையும், சுதந்திரமும் பறிக்கப்பட்டதால் தான் ஆர்த்தியை பிரிந்ததாக குறிப்பிகின்றார்.</p><p></p><p>
</p><p>
இருப்பினும் ஆர்த்தியை பிரிந்து அவர் தனித்து வாழாமல் பாடகி கெனிஷாவுடன் வாழ்ந்து வந்ததால், ரசிகர்களும் நெட்டிசன்களும் இது குறித்து கருத்து தெரிவித்து வந்தனர். ஆர்த்தி ரவிக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆதரவு காணப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/baf6d289-301e-476d-9c4b-44aa575ad75c/26-6a60c2f5ddc71.webp' /></p><p>
</p><p>
ரவிமோன் கெனிஷாவுடன் சுற்றிதிரிந்து என்ஜாய் செய்யும் புகைப்படங்களையும், காணொளிகளையும் தனது இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து பதிவிட்டு வந்தார்.

பாடகி கெனிஷா சமீபத்தில் ஆர்த்தி ரவி குறித்து அவதூறு பரப்பும் வகையில் கருத்துக்களை பதிவிட்டு வந்தார்.</p><p>ரவி மோகனின் பெண் தோழியென அறியப்படும் பாடகி கெனிஷா தனக்கு எதிராக அவதூறு கருத்துக்களை தெரிவித்து வருவதால் அதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும், ஏற்கனவே பதிவிட்டுள்ள கருத்துக்களை நீக்கவேண்டும் என்றும் கோரி ஆர்த்தி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f910a6c4-1995-4fcc-b3dd-da35032e83c6/26-6a60c2f6903d1.webp' /></p><p>
</p><p>
அதனை தொடர்ந்து ஆர்த்தி ரவிக்கு எதிராக அவதூறு கருத்துகளை தெரிவிக்க பாடகி கெனிஷாவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டது. அதன் பின்னர் பாடகி கெனிஷா சமூக வலைத்தளங்களை முடக்குவதாக அறிவித்துவிட்டு சென்னையை விட்டு வெளியேறினார்.</p><p></p><p>
</p><p>
அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ரவி மோகன் தனது திருமண வாழ்க்கையில் நடந்த பல கொடுமைகள் குறித்து பொது வெளியில் கொட்டி தீர்த்தார். விவாகராத்து கிடைக்கும் வரையில் திரைப்படங்களில் நடிக்க மாட்டேன் என அறிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f91182f3-df0a-4a11-9928-8850a7bf3d0d/26-6a60c2f73d9f4.webp' /></p><p>இதனை தொடர்ந்து விவாகரத்து நிலுவையில் இருக்கும் நிலையில், இருதரப்பபும் சமூக ஊடகங்களில் தனிப்பட்ட கருத்துக்களை பகிரகூடாது என உயர் நீதிமன்றம் உத்ததவிட்டது.</p><p>இந்நிலையில், ஆர்த்தி ரவி&nbsp;தற்போது ட்ரெண்டிங் உடையில் அசத்தல் போஸ் கொடுத்து ஆர்த்தி ரவி தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது.</p><p><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/p/DbFfKY6Euin/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/p/DbFfKY6Euin/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/p/DbFfKY6Euin/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by Aarti (@aarti.ravi)</a></p></div></blockquote> <script async src="//www.instagram.com/embed.js"></script></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-22T14:39:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மீண்டும் மோசடி வழக்குகளில் சிக்கியுள்ள மகிந்தவின் புதல்வர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/vehicle-import-fraud-case-yoshitha-rohitha-1784694503"></link>
            <id>https://tamilwin.com/article/vehicle-import-fraud-case-yoshitha-rohitha-1784694503</id>
            <summary type="text">வெளிநாட்டு தொழிலாளர்களுக்காக மின்சார வாகனங்களை இறக்குமதி செய்ய வழங்கப்பட்ட அனுமதிப்பத்திர முறையை பயன்படுத்தி மோசடியான முறையில் வாகன இறக்குமதி செய்த கு...</summary>
            <content type="html"><![CDATA[<p>வெளிநாட்டு தொழிலாளர்களுக்காக மின்சார வாகனங்களை இறக்குமதி செய்ய வழங்கப்பட்ட அனுமதிப்பத்திர முறையை பயன்படுத்தி மோசடியான முறையில் வாகன இறக்குமதி செய்த குற்றச்சாட்டொன்றை முன்னாள் ஜனாதிபதி மகிந்தவின் புதல்வர்கள் எதிர்கொண்டுள்ளனர்.
</p><p>
வெளிநாட்டு தொழிலாளர்களுக்காக மின்சார வாகனங்களை இறக்குமதி செய்ய வழங்கப்பட்ட அனுமதிப்பத்திர முறை மூலம் அரசாங்கத்திற்கு 2.4 பில்லியன் ரூபா நிதி இழப்பு ஏற்பட்டுள்ளதாக ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ருவன்திலக ஜயகொடி நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>பாரியளவிலான முறைகேடுகள்</h2><p>

குறித்த பாரிய அளவிலான முறைகேடுகள் முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் பதவிக்காலத்தில் நிகழ்ந்ததாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/519db4b7-f595-4db2-8995-cbf8183fe716/26-6a6051d1a9cbc.webp' /></p><p>
</p><p>
2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் செயல்படுத்தப்பட்ட இந்ருவன்திலக ஜயகொடிதத் திட்டத்தின் கீழ், 640 வாகனங்களை இறக்குமதி செய்ய இரண்டு நிறுவனங்களுக்கு மட்டுமே சிறப்புரிமைகள் வழங்கப்பட்டதாக, பிரதம கணக்காய்வாளரின் அறிக்கைகளை மேற்கோள் காட்டி நாடாளுமன்ற உறுப்பினர் குற்றம்சாட்டியுள்ளார். </p><p>இந்த செயல்முறை தொடர்பான சரியான தகவல்கள் பிரதம கணக்காய்வாளருக்கு தெரிவிக்கப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p>

வெளிநாடு செல்லாத நான்கு நபர்களுக்கு வாகன அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டது, விண்ணப்பத்தில் தொழில் குறிப்பிடப்படாத 60 நபர்களுக்கு அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டது, சிலருக்கு இரண்டு வீதம் அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டது மற்றும் 4 மாதங்கள் போன்ற மிக குறுகிய காலத்திற்கு வெளிநாடு சென்று திரும்பிய நபர்களுக்கும் இந்த சலுகை வழங்கப்பட்டது போன்ற பல ஊழல்களை நாடாளுமன்ற உறுப்பினர் சபையின் கவனத்திற்குக் கொண்டு வந்திருந்தார்.
</p><p>
எந்தவொரு அறிவியல் அடிப்படையுமின்றி சொகுசு வாகனங்களுக்கான 6 மில்லியனிலிருந்து 12 மில்லியன் ரூபாவாக வரி வரம்பு உயர்த்தப்பட்டதால், அரசாங்கத்திற்கு 2.4 பில்லியன் ரூபா வரி வருமான இழப்பு ஏற்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ருவன்திலக ஜயகொடி குற்றம்சாட்டிள்ளார்.</p><h2>சொகுசு வாகனங்கள் இறக்குமதி</h2><p>இது இந்த நாட்டின் வரி செலுத்தும் மக்களின் பணம் கொள்ளையடிக்கப்பட்டதற்கு சமம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/03021692-38f3-49f4-a5c0-5f9b08956d59/26-6a6051d273187.webp' /></p><p>
இந்த அனுமதிப்பத்திர முறையைத் தவறாகப் பயன்படுத்தி, ராஜபக்ச குடும்பத்தை சேர்ந்த யோஷித ராஜபக்ச மற்றும் ரோஹித ராஜபக்ச ஆகியோரும் இரண்டு சொகுசு வாகனங்களை இறக்குமதி செய்துள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>
CAB 7373 மற்றும் CAB 7171 ஆகிய எண்களைக் கொண்ட வாகனங்கள் இந்த முறையில் இறக்குமதி செய்யப்பட்டதாகவும், அவ்வாறாக பாரிய அளவிலான நிதி மோசடியில் ஈடுபட்ட அனைவர் மீதும் உடனடியாக சட்டம் நடைமுறைபடுத்தப்பட வேண்டும் என்றும் அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.</p><p></p><p></p><p><br></p><hr><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/Mp0jpPJOagE" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-07-22T14:35:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[நெதன்யாகு ஒரு போர்க் குற்றவாளி..! கைது செய்ய ஆலோசனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/netanyahu-s-arrest-in-new-york-suggested-1784730376"></link>
            <id>https://tamilwin.com/article/netanyahu-s-arrest-in-new-york-suggested-1784730376</id>
            <summary type="text">இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை போர்க் குற்றங்களுக்காக விசாரணை செய்ய வேண்டும் என நியூயோர்க் நகர மேயர் ஜோஹ்ரன் மம்தானி வலியுறுத்தியுள்ளார்.

இத...</summary>
            <content type="html"><![CDATA[<p>இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை போர்க் குற்றங்களுக்காக விசாரணை செய்ய வேண்டும் என நியூயோர்க் நகர மேயர் ஜோஹ்ரன் மம்தானி வலியுறுத்தியுள்ளார்.
</p><p>
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோ அறிக்கையில்,</p><p>

 சர்வதேச குற்றவியல்
நீதிமன்றத்தின் (ICC) பிடியாணையைச் சுட்டிக்காட்டி நெதன்யாகுவை ஒரு போர்க்
குற்றவாளி என்று குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5a549f32-cd45-4dc4-a54a-dcbaced98317/26-6a60d3b3893e0.webp' /></p><p>

இருப்பினும், கடந்த சில நாட்களாக நிலவி வந்த ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி
வைக்கும் வகையில் பேசிய மேயர் மம்தானி, சட்டப் பிரிவுகளின்படி நெதன்யாகுவை
கைதுசெய்யும் அதிகாரம் நியூயோர்க் நகரத்திற்கு இல்லை என்பதையும்
தெளிவுபடுத்தியுள்ளார்.</p><p></p><p></p><p></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-22T14:30:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்க விசா; கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் கடுமையான எச்சரிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/us-visa-us-embassy-in-colombo-stern-warning-1784726424"></link>
            <id>https://jvpnews.com/article/us-visa-us-embassy-in-colombo-stern-warning-1784726424</id>
            <summary type="text">&amp;nbsp; அமெரிக்க விசா கோரி விண்ணப்பிப்போர் தங்களது குற்றப் பின்னணி மற்றும் சுயவிவரங்களை மறைக்கவோ அல்லது தவறான தகவல்களை வழங்கவோ கூடாது என கொழும்பிலுள்ள ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; அமெரிக்க விசா கோரி விண்ணப்பிப்போர் தங்களது குற்றப் பின்னணி மற்றும் சுயவிவரங்களை மறைக்கவோ அல்லது தவறான தகவல்களை வழங்கவோ கூடாது என கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் கடுமையான எச்சரிப்பு விடுத்துள்ளது.
</p><p>


இதுதொடர்பாகத் தூதரகம் வெளியிட்டுள்ள பொது அறிவிப்பின் முக்கிய அம்சங்கள்:



மிகச் சிறிய அளவிலான குற்றச் செயல்களாக இருந்தாலும் அவை விசா நிராகரிக்கப்படுவதற்கு நேரடிச் காரணமாக அமையும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/61711919-6d55-4380-bae3-c21cd4fddb69/26-6a60c39a0e278.webp' /></p><p></p><p>
</p><p>


விண்ணப்பதாரர்களின் முழுமையான குற்றப் பின்னணி விபரங்கள் தூதரக அதிகாரிகளிடம் இருப்பதால், விண்ணப்பங்களின் போதும் நேர்காணல்களின் போதும் முழு உண்மையை மட்டுமே வெளிப்படுத்த வேண்டும்.</p><p>



பொய்யான தகவல்களை வழங்குவது கண்டறியப்பட்டால், எதிர்காலத்தில் அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு நிரந்தரத் தடை விதிக்கப்படக்கூடும்.
</p><p>


எனவே, விசா பெறும் முழுமையான நடைமுறை முழுவதும் விண்ணப்பதாரர்கள் முழுமையான நேர்மையைக் கடைப்பிடிக்குமாறு கடுமையாக அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-22T14:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[கேப்டன் கமிந்து மெண்டிஸ் 58 ஓட்டங்கள் விளாசல்: ஜாஃப்னா கிங்ஸ் த்ரில் வெற்றி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/jaffna-kings-beat-colombo-kaps-by-5-runs-lpl-2026-1784730357"></link>
            <id>https://news.lankasri.com/article/jaffna-kings-beat-colombo-kaps-by-5-runs-lpl-2026-1784730357</id>
            <summary type="text">லங்கா பிரீமியர் லீக் போட்டியில் ஜாஃப்னா கிங்ஸ் 5 ஓட்டங்கள் வித்தியாசத்தில் கொழும்பு காப்ஸ் அணியை வீழ்த்தியது. 179 ஓட்டங்கள்&amp;nbsp;
கொழும்பு காப்ஸ் மற்...</summary>
            <content type="html"><![CDATA[<p>லங்கா பிரீமியர் லீக் போட்டியில் ஜாஃப்னா கிங்ஸ் 5 ஓட்டங்கள் வித்தியாசத்தில் கொழும்பு காப்ஸ் அணியை வீழ்த்தியது. </p><h2>179 ஓட்டங்கள்&nbsp;</h2><p>
கொழும்பு காப்ஸ் மற்றும் ஜாஃப்னா கிங்ஸ் அணிகள் மோதிய போட்டி தம்புள்ளையில் நடந்தது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b17a25dd-6318-4434-85ef-6f6d68091953/26-6a60d3f541aa9.webp' />&nbsp;</p><p></p><p>
முதலில் ஆடிய ஜாஃப்னா கிங்ஸ் அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 179 ஓட்டங்கள் குவித்தது.
</p><p>
சமிந்து விக்ரமசிங்கே 43 (22) ஓட்டங்களும், கமில் மிஷாரா 39 ஓட்டங்களும், அவிஷ்கா ஃபெர்னாண்டோ 34 ஓட்டங்களும் எடுத்தனர். </p><p>

பின்னர் களமிறங்கிய கொழும்பு காப்ஸ் அணி தொடக்கத்தில் விக்கெட்டுகளை பறிகொடுத்தது. </p><h2>கமிந்து மெண்டிஸ் அரைசதம் </h2><p>அணிதலைவர் கமிந்து மெண்டிஸ் (Kamindu Mendis) அதிரடியாக 42 பந்துகளில் 58 ஓட்டங்கள் (2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள்) விளாசினார்.
</p><p>
அடுத்து வந்த ஷாருஜன் 26 ஓட்டங்களும், மிலன் 15 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழக்க, வனுஜா சஹான் வெற்றிக்காக போராடினார். 

</p><p>20வது ஓவரில் வெற்றிக்கு 27 ஓட்டங்கள் தேவைப்பட, வனுஜா 3வது பந்தில் இருந்து ஹாட்ரிக் பவுண்டரி அடித்தார். மேலும், கடைசி பந்தில் சிக்ஸர் அடித்தார்.</p><p> 

இதன்மூலம் ஜாஃப்னா கிங்ஸ் அணி 5 ஓட்டங்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. வனுஜா 15 பந்துகளில் 35 ஓட்டங்கள் விளாசினார்.
</p><p>
மிரட்டலாக பந்துவீசிய லிஸாத் வில்லியம்ஸ் 3 விக்கெட்டுகளும், தில்ஷான் மதுஷன்கா மற்றும் ட்ரவீன் மேத்யூ தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f24f49e2-5f91-4b61-b157-8ac5d2014fa6/26-6a60d3f62bd61.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-22T14:29:21+00:00</updated>
        </entry>
    </feed>
