<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-07-17T00:24:37+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[நியூசிலாந்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ; சுனாமி எச்சரிக்கையால் பதற்றமடைந்த மக்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/powerful-earthquake-hits-new-zealand-tsunami-1784247462"></link>
            <id>https://canadamirror.com/article/powerful-earthquake-hits-new-zealand-tsunami-1784247462</id>
            <summary type="text">பசிபிக் பெருங்கடலின் தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ள தீவு நாடான நியூசிலாந்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பசிபிக் பெருங்கடலின் தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ள தீவு நாடான நியூசிலாந்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
</p><p>
ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவான இந்த நிலநடுக்கம், நாட்டின் பல பகுதிகளில் உணரப்பட்டதாக சர்வதேச நில அதிர்வு கண்காணிப்பு மையங்கள் தெரிவித்துள்ளன.</p><p>

நிலநடுக்கத்தின் தாக்கத்தால் கட்டிடங்கள் பலத்த அதிர்வுக்கு உள்ளாகியதுடன், மக்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்களை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைந்தனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/75ad243b-d616-4ea2-b512-3ee6af83ae2b/26-6a5974a7ef78d.webp' /></p><p>இதனையடுத்து, கடலோரப் பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டதால், அங்கு வசிக்கும் மக்கள் பாதுகாப்பான உயரமான பகுதிகளுக்கு செல்லுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
</p><p>
எனினும், உயிரிழப்புகள் அல்லது பாரிய சேதங்கள் தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. நிலைமையை நியூசிலாந்து அவசரகால சேவைகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றன.</p>]]></content>
            <updated>2026-07-17T00:22:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மியான்மரில் இரட்டை படகு விபத்து: 500-க்கும் மேற்பட்ட அகதிகள் உயிரிழந்திருக்கலாம்- ஐ.நா. அச்சம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/myanmar-shipwrecks-500-rohingya-missing-1784247514"></link>
            <id>https://news.lankasri.com/article/myanmar-shipwrecks-500-rohingya-missing-1784247514</id>
            <summary type="text">மியான்மர் கடற்கரையில் இரண்டு படகுகள் காணாமல் போனதில் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என ஐ.நா. அமைப்புகள் (UNHCR, IOM) தெரிவித்துள்ளன.

இந்...</summary>
            <content type="html"><![CDATA[<p>மியான்மர் கடற்கரையில் இரண்டு படகுகள் காணாமல் போனதில் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என ஐ.நா. அமைப்புகள் (UNHCR, IOM) தெரிவித்துள்ளன.</p><p>

இந்த படகுகள் ஜூன் மாத இறுதியில் ரகைன் மாநிலத்திலிருந்து புறப்பட்டதாகவும், பெரும்பாலும் ரோஹிங்கியா மக்கள் பயணம் செய்ததாகவும் கூறப்படுகிறது.
</p><p>
முதல் படகில் சுமார் 250 பேர் இருந்தனர். புறப்பட்ட சில நேரங்களிலேயே தொடர்பு துண்டிக்கப்பட்டது. இரண்டாவது படகில் 280 பேர் இருந்ததாகவும், ஜூலை 8-ஆம் தேதி அயேயார்வாடி கடற்கரையில் மூழ்கியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/035b07b5-0261-48fa-99ff-d75edcc3a236/26-6a5974dcac6e1.webp' /></p><p>ரோஹிங்கியா மக்கள் பல தசாப்தங்களாக மியான்மர் அரசின் அடக்குமுறைக்கு உள்ளாகி வருகின்றனர். 2017-இல் வன்முறையிலிருந்து தப்பி சுமார் ஒரு மில்லியன் பேர் வங்காளதேசம் நாட்டின் காக்ஸ் பஜார் முகாமில் தஞ்சம் புகுந்தனர்.
</p><p>
அங்கு தற்போது நிதி குறைவால் வாழ்வாதாரம் கடினமாகி, பலர் ஆபத்தான கடல் பயணத்தைத் தேர்வு செய்யத் தள்ளப்பட்டுள்ளனர்.
</p><p></p><p>சமீபத்திய கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக கடல் பயணம் இன்னும் ஆபத்தானதாக மாறியுள்ளது. இந்த ஆண்டு மட்டும் அந்தமான் கடல் மற்றும் வங்காள விரிகுடாவில் 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் அல்லது காணாமல் போயுள்ளனர்.
</p><p>
ஐ.நா. அமைப்புகள், “இது உலகின் மிக ஆபத்தான கடல் பாதைகளில் ஒன்றாகும். தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் வலுப்படுத்தப்பட வேண்டும். அகதிகளுக்கான பாதுகாப்பு மற்றும் தஞ்சம் வழங்கப்பட வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளன.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-17T00:17:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[மத்திய கிழக்கில் ஆட்டத்தை ஆரம்பித்துள்ள அமெரிக்கா! ஹோர்முஸ் நீரிணையை 'சிவப்புக் கோடு' என்று அறிவித்த ஈரான்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/which-calls-strait-of-hormuz-red-line-retaliates-1784246151"></link>
            <id>https://tamilwin.com/article/which-calls-strait-of-hormuz-red-line-retaliates-1784246151</id>
            <summary type="text">அமெரிக்கா ஹோர்முஸ் நீரிணையில் தலையிட நாங்கள் அனுமதிக்க மாட்டோம் இது ஈரானின் அசைக்க முடியாத சிவப்புக் கோடு (red line) ஆகும் என்று எச்சரிக்கை விடுக்கப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்கா ஹோர்முஸ் நீரிணையில் தலையிட நாங்கள் அனுமதிக்க மாட்டோம் இது ஈரானின் அசைக்க முடியாத சிவப்புக் கோடு (red line) ஆகும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p><p>

ஈரான் மீதான தாக்குதல்களை அமெரிக்கா தீவிரப்படுத்தியுள்ள நிலையில் மத்திய கிழக்கில் போர் பதற்றம் சூழ்ந்துள்ளது.</p><p></p><h2>தற்காலிகப் போர்நிறுத்தம்</h2><p> 

வடக்கு பகுதிகள் வரை தாக்குதல்களை நடத்தியதுடன், இஸ்லாமிய குடியரசான ஈரான் மீதான கடற்படை முற்றுகையை மீற முயன்றதாக குற்றம் சாட்டப்பட்ட கப்பல் ஒன்றின் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளது.</p><p>

இதற்கு பதிலடியாக, இப்பகுதியில் உள்ள அமெரிக்காவின் நட்பு நாடுகள் மீது ஈரான் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை ஏவியதுமேலும் தனது தாக்குதல்கள் தீவிரமடையக்கூடும் என்றும் எச்சரித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5f3d4960-7b46-4724-9b16-662b97862abc/26-6a597264dbbdc.webp' /></p><p>

கடந்த மாதம் ஒப்புக்கொள்ளப்பட்ட தற்காலிகப் போர்நிறுத்தம் முறிந்துவிட்ட நிலையில்ஹோர்முஸ் நீரிணையின் கட்டுப்பாட்டிற்காக அமெரிக்காவும் ஈரானும் மோதி வருவதால், இப்பகுதி கடந்த சில நாட்களாக இரு தரப்பு தாக்குதல்களையும் சந்தித்து வருகிறது.</p><p>அமெரிக்க தாக்குதல்களில் 35-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாகவும், 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் ஈரானிய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.</p><p></p><h2>&nbsp;சிவப்புக் கோடு&nbsp;</h2><p>

சமீபத்திய வன்முறை சுழற்சியில் முதன்முறையாக, ஈரானின் தலைநகரான தெஹ்ரானை சுற்றியுள்ள பகுதிகளிலும் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.</p><p> 

கடந்த பெப்ரவரி 28ஆம் திகதியன்று அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது போரைத் தொடங்கியபோது, ​​தெஹ்ரான் கப்பல் போக்குவரத்திற்கு அந்த நீரிணையை மூடியது.
</p><p>

இந்த நடவடிக்கை கச்சா எண்ணெய் விலையை வெகுவாக உயர்த்தியதுடன், பேச்சுவார்த்தைகளில் ஈரானுக்கு முக்கிய செல்வாக்கையும் அளித்தது.

ஈரானிய ராணுவத்தின் 'கதம் அல்-அன்பியா' மத்திய தலைமையகத்தின் செய்தித் தொடர்பாளர் கர்னல் எப்ராஹிம் ஜோல்ஃபகாரி ஒரு எச்சரிக்கையை விடுத்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/834ce30f-6ad2-44c0-becc-7b5d7b9b357e/26-6a5972658bd64.webp' /></p><p>
</p><p>

ஈரானின் பாலங்கள் மற்றும் மின் நிலையங்களை தாக்கக்கூடும் என்று ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் மீண்டும் விடுத்து வரும் எச்சரிக்கைகளை அமெரிக்கா செயல்படுத்தினால், இப்பகுதியில் உள்ள "அனைத்து உள்கட்டமைப்புகள்" மீதும் ஈரான் பரவலான தாக்குதல்களை நடத்தக்கூடும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>

"எந்த சூழ்நிலையிலும், எந்த வகையிலும், ஒரு வெளிநாட்டு மற்றும் இப்பகுதிக்கு அப்பாற்பட்ட நாடான அமெரிக்கா ஹோர்முஸ் நீரிணையில் தலையிட நாங்கள் அனுமதிக்க மாட்டோம். இது ஈரானின் அசைக்க முடியாத சிவப்புக் கோடு (red line) ஆகும்," என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-17T00:08:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[மாத்தளை புதைகுழிக்குப் பின்னால் மறைந்திருக்கும் அவிழ்க்கப்படாத முடிச்சுக்கள்...!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/matale-mass-grave-sparks-row-over-gotabaya-1784246063"></link>
            <id>https://ibctamil.com/article/matale-mass-grave-sparks-row-over-gotabaya-1784246063</id>
            <summary type="text">2012-ஆம் ஆண்டு மாத்தளை மருத்துவமனை வளாகத்தில் கண்டெடுக்கப்பட்ட மனிதப் புதைகுழி, இலங்கையின் கடந்தகால மனித உரிமை மீறல்கள் குறித்த விவாதங்களை மீண்டும் தீ...</summary>
            <content type="html"><![CDATA[<p>2012-ஆம் ஆண்டு மாத்தளை மருத்துவமனை வளாகத்தில் கண்டெடுக்கப்பட்ட மனிதப் புதைகுழி, இலங்கையின் கடந்தகால மனித உரிமை மீறல்கள் குறித்த விவாதங்களை மீண்டும் தீவிரமாகத் தூண்டியுள்ளது.
</p><p>
இந்த மனிதப் புதைகுழிக்குக் காரணமான சம்பவங்கள் நடந்ததாகக் கருதப்படும் 1988 மே முதலாம் திகதி முதல் 1990 ஜனவரி வரையான காலப்பகுதியில், மாத்தளை மாவட்ட இராணுவ ஒருங்கிணைப்பு அதிகாரியாக லெப்டினன்ட் கேர்ணல் கோட்டாபய ராஜபக்சவே கடமையாற்றியுள்ளார்.
</p><p>
இந்த விவகாரத்தில் உயர்மட்ட இராணுவ மற்றும் அரசியல் புள்ளிகளின் பெயர்கள் தொடர்புபடுத்தப்பட்டதன் விளைவாக, தடயவியல் மற்றும் ஆணைக்குழு விசாரணைகள் அனைத்தும் அரசியல் தலையீடுகளால் முடக்கப்பட்டன.
</p><p>
இந்த நிலையில், பல்லாண்டுகள் கடந்தும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு உண்மை என்னவென்று வெளிப்படுத்தப்படாமல் இருப்பது, நீதி கிடைக்கும் என்ற நம்பகத்தன்மையைக் கேள்விக்குறியாக்கியுள்ளது.</p><p>

இது குறித்து இப்பதிவில் விரிவாக ஆராய்கின்றது லங்காசிறியின் Newsinsights நிகழ்ச்சி...</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/NUF5sRazdJY" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-17T00:05:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[காதலை ஏற்க மறுத்த 16 வயது மாணவிக்கு நேர்ந்த கதி ; இளைஞனின் விபரீத செயல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/the-fate-of-student-who-refused-to-accept-love-1784246209"></link>
            <id>https://jvpnews.com/article/the-fate-of-student-who-refused-to-accept-love-1784246209</id>
            <summary type="text">இந்தியாவில் மேற்கு வங்க மாநிலத்தில் கொல்கத்தாவில் காதலை ஏற்க மறுத்ததாகக் கூறி 16 வயது பாடசாலை மாணவி ஒருவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியாவில் மேற்கு வங்க மாநிலத்தில் கொல்கத்தாவில் காதலை ஏற்க மறுத்ததாகக் கூறி 16 வயது பாடசாலை மாணவி ஒருவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><p>
</p><p></p><p>கொல்கத்தா அருகிலுள்ள சாந்தினிபாகன் பகுதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.</p><h3>ஆரம்பகட்ட விசாரணை</h3><p>

உயிரிழந்த மாணவி 10ஆம் வகுப்பில் கல்வி கற்று வந்தவர். பாடசாலை முடிந்து சைக்கிளில் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது, 24 வயதான சமீர் தாஸ் என்ற இளைஞர் அவரை வழிமறித்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6829db17-674c-478c-a9f4-f55bc3a31efa/26-6a596fc29141d.webp' /></p><p>அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், அதனைத் தொடர்ந்து சமீர் தாஸ் தன்னிடம் வைத்திருந்த கத்தியால் மாணவியின் கழுத்து, வயிறு மற்றும் கைகளில் பலமுறை குத்தியதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
</p><p>
பலத்த காயமடைந்த மாணவி வீதியில் ரத்த வெள்ளத்தில் கிடந்த நிலையில், அங்கிருந்த பொதுமக்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். </p><p>அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
</p><p>
இதனிடையே, தாக்குதலுக்குப் பின்னர் தப்பிச் செல்ல முயன்ற சமீர் தாஸை அங்கிருந்த பொதுமக்கள் மடக்கிப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
</p><p>
முர்ஷிதாபாத் மாவட்டத்தைச் சேர்ந்த சமீர் தாஸ், தோம்ஜூர் பகுதியில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றி வந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
ஆரம்பகட்ட விசாரணையில், தனது காதலை மாணவி ஏற்க மறுத்ததால் ஆத்திரத்தில் இந்தக் கொலையைச் செய்ததாக சந்தேகநபர் வாக்குமூலம் அளித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
சந்தேகநபருக்கு எதிராக கொலைக் குற்றச்சாட்டின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-16T23:56:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தனது கணவருடன் செம ரொமான்டிக் புகைப்படம் வெளியிட்ட நடிகை அமலா பால்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/amala-paul-latest-photoshoot-with-her-husband-1783693512"></link>
            <id>https://cineulagam.com/article/amala-paul-latest-photoshoot-with-her-husband-1783693512</id>
            <summary type="text">அமலாபால்நடிகை அமலாபால், தமிழ் சினிமா சிறந்த நடிகை என கொண்டாடியவர். மைனா படம் இவரது சினிமா கேரியரில் மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது.
அதன்பின் விஜய...</summary>
            <content type="html"><![CDATA[<h2>அமலாபால்</h2><p>நடிகை அமலாபால், தமிழ் சினிமா சிறந்த நடிகை என கொண்டாடியவர். மைனா படம் இவரது சினிமா கேரியரில் மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது.</p><p>
அதன்பின் விஜய், தனுஷ் என முன்னணி நடிகர்களின் படங்களாக நடித்து வந்தார். இயக்குனர் ஏ.எல்.விஜய்யை காதலித்து திருமணம் செய்தவர் சில காரணங்களால் பிரிந்துவிட்டார். </p><p>பின் சில வருடங்கள் கழித்து ஜெகத் தேசாய் என்பவரை காதலித்து திருமணம் செய்ய இவர்களுக்கு ஒரு மகனும் உள்ளார். 
தற்போது அமலாபால் தனது கணவருடன் வெள்ளை நிற உடையில் ரொமான்டிக் போட்டோ ஷுட் நடத்தியுள்ளார். </p><p>இதோ அந்த போட்டோஸ்,</p><p><br></p>]]></content>
            <updated>2026-07-16T23:40:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீர்கொழும்பு சிறைச்சாலைக் கலவரத்தின் எதிரொலி! கைதிகளின் நெரிசலைக் குறைக்க நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/govt-steps-to-reduce-prison-overcrowding-1784236242"></link>
            <id>https://ibctamil.com/article/govt-steps-to-reduce-prison-overcrowding-1784236242</id>
            <summary type="text">சமீபத்தில் இடம்பெற்ற நீர்கொழும்பு சிறைச்சாலைக் கலவரத்தின் எதிரொலியாகச் சிறைச்சாலைகளில் கைதிகளின் நெரிசலைக் குறைப்பது தொடர்பில் தீவிர கவனம் செலுத்தப்பட...</summary>
            <content type="html"><![CDATA[<p>சமீபத்தில் இடம்பெற்ற நீர்கொழும்பு சிறைச்சாலைக் கலவரத்தின் எதிரொலியாகச் சிறைச்சாலைகளில் கைதிகளின் நெரிசலைக் குறைப்பது தொடர்பில் தீவிர கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
</p><p>இதனடிப்படையில் இலங்கையின் சிறைச்சாலைகளில் காணப்படும் நெரிசலைக் குறைத்தல், நிர்வாகச் செயற்திறனை மேம்படுத்துதல் மற்றும் சிறைச்சாலைகள் தொடர்பான பிரச்சினைகளுக்கு நீண்டகாலத் தீர்வுகளை நடைமுறைப்படுத்துதல் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.</p><p> ஆளுகை, நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு பற்றிய துறைசார் நாடாளுமன்ற மேற்பார்வைக் குழுவில் இது குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டுள்ளது.</p><p>
</p><p></p><h2>உட்கட்டமைப்பு வசதி</h2><p>நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் நஜித் இந்திக தலைமையில், நாடாளுமன்றத்தில் கூடிய இக்குழுவின் ஆலோசனைக் கூட்டத்தில் இவ்விடயம் தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a9c79917-8581-4ea5-a39a-7c9aeec84f8c/26-6a594cbfdff9f.webp' /></p><p>அதன்போது, சிறைச்சாலைகளின் உட்கட்டமைப்பு வசதிகளை விரிவுபடுத்துதல், புதிய கட்டடங்களை நிர்மாணித்தல், தற்போதுள்ள வசதிகளை மறுசீரமைத்தல், சிறைச்சாலைத் திணைக்களத்தில் நிலவும் வெற்றிடங்களை நிரப்புதல் மற்றும் கைதிகளைத் திறம்பட நிர்வகிப்பதற்காக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆழமாக ஆராயப்பட்டுள்ளது.
</p><p>
குறிப்பாக, சிறைச்சாலைகள் திணைக்களத்தில் காணப்படும் மனித வளப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காகப் புதிய ஆட்சேர்ப்புகளை மேற்கொள்ளுதல், சேவைத் தேவைகளுக்கு ஏற்ப ஆட்சேர்ப்பு நடைமுறைகளைத் திருத்தியமைத்தல் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகளின் சேவை நிலைமைகளை மேம்படுத்துதல் தொடர்பிலும் குழுவின் உறுப்பினர்கள் கவனம் செலுத்தியிருந்தனர்.</p><p></p><h2>சிறைச்சாலை நெரிசல்</h2><p>

போதைப்பொருள் தொடர்பான வழக்குகளில் அரச இரசாயனப் பகுப்பாய்வுத் திணைக்களத்தின் அறிக்கைகளைப் பெற்றுக்கொள்வதில் நிலவும் தாமதத்தைத் தவிர்ப்பதற்காகக் குறித்த திணைக்களத்தின் திறனை அதிகரித்தல், நவீன தொழில்நுட்ப உபகரணங்களைப் பெற்றுக்கொள்ளுதல் மற்றும் பரிசோதனை நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துவதன் அவசியம் குறித்தும் குழு வலியுறுத்தியுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dd4eb68a-342b-4864-a397-c86a3c636f6b/26-6a594cc091e0a.webp' /></p><p>சிறைச்சாலை நெரிசலைக் கட்டுப்படுத்துவது வெறுமனே நிர்வாக ரீதியான விடயமாக அல்லாமல், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விடயமாகக் கருதிச் செயற்பட வேண்டியதன் அவசியத்தை இக்குழு சுட்டிக்காட்டியது.
</p><p>
அத்துடன், நீதிமன்றம், இலங்கை காவல்துறை, சிறைச்சாலைகள் திணைக்களம் மற்றும் ஏனைய தொடர்புடைய நிறுவனங்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பை மேம்படுத்த வேண்டியதன் முக்கியத்துவமும் இதன்போது வலியுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-16T23:38:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[கோமாளிக்கூத்தான கிளிநொச்சி DCC கூட்டம்...! WWE-க்கே சாவால் விட்ட அரசியல் தலைமைகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/kilinochchi-dcc-meeting-mp-minister-clash-viral-1784242897"></link>
            <id>https://ibctamil.com/article/kilinochchi-dcc-meeting-mp-minister-clash-viral-1784242897</id>
            <summary type="text">&amp;nbsp;கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம், உலகப் புகழ்பெற்ற WWE மல்யுத்தப் போட்டிக்கும், தமிழ் மெகா சீரியல்களுக்கும் சவால் விடும் வகையில் அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம், உலகப் புகழ்பெற்ற WWE மல்யுத்தப் போட்டிக்கும், தமிழ் மெகா சீரியல்களுக்கும் சவால் விடும் வகையில் அரங்கேறிக் கோமாளிக்கூத்தாக முடிந்துள்ளது.</p><p>

நாடாளுமன்றத்தின் முதல் நாளிலேயே, தனக்கு இன்னும் இருக்கை ஒதுக்கப்படவில்லை என்ற காரணத்தைக் காட்டி, எதிர்க்கட்சித் தலைவரின் ஆசனத்திலேயே அதிரடியாக அமர்ந்து விளாசிய பெருமைக்குரிய நம் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர், நேற்றைய கூட்டத்திற்குள் நுழைந்தபோதே பின்னணியில் அதிரடி இசை ஒலிப்பது போன்ற பாவனையில்தான் நுழைந்தார்.
</p><p>
ஊழலை ஒழிப்பேன் என ஆவணங்களைக் காட்டி அவர் பாய்ந்த பாய்ச்சல் இருக்கிறதே... ஐயகோ அதைப்பார்த்து அருகில் இருந்த காவல்துறை அதிகாரியே, அந்த ஆவணங்களுக்குள் ஏதேனும் வெடிபொருள் இருக்கிறதா என்று அஞ்சும் அளவுக்கு இருந்தது அவர் காட்டிய அதிரடி.
</p><p>
ஊழல் விவகாரத்தை ஆதாரத்தோடு நீதிமன்றத்திலோ அல்லது சபையிலோ விவாதிப்பதை விட, கேமரா முன்னால் அதிகாரிகளை ஒருமையில் பேசினால்தான் இணையத்தில் விளம்பரம் தேட முடியும் என்ற தற்கால டிஜிட்டல் அரசியல் தத்துவத்தை அவர் மிகச் சரியாகப் புரிந்து வைத்துள்ளார்.</p><p>

பேச வேண்டிய நாடாளுமன்றத்தில் சொந்த பிரச்சினை மாத்திரம் பேசிவிட்டு, இங்கு வந்து ஊழலுக்குக் குரல் கொடுப்பது என்ன விதமான அக்கறை என்பது கொஞ்சம் குழப்பமாகத்தான் இருக்கின்றது.</p><p>

அடுத்ததாக, நம் கடற்றொழில் அமைச்சர்.... நாங்கள் மாற்றத்தை நோக்கிப் பயணிக்கும் மாண்புமிகுக்கள் என்ற லேபிளோடு அமைதியாக அமர்ந்திருந்த அமைச்சருக்கு, இந்தத் தமிழ் எம்.பியின் அலப்பறையைப் பார்த்ததும் பொறி தட்டிவிட்டது.
</p><p>பிறகு என்ன அவரும் சீறி பாய்ந்து நேருக்கு நேர் வாக்குவாதத்தில் இறங்க, நாங்கள் மிகவும் நாகரிகமான அரசாங்கம் என்று இத்தனை நாளாகக் கட்டமைக்கப்பட்ட பிம்பம், கிளிநொச்சி வெயிலில் அப்படியே உருகிப் போனது.
</p><p>
அமைச்சரே, நீங்களும் அவரோடு சண்டைக்குப் போனால் அப்புறம் அவருக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம் என்று அதிகாரிகள் தங்களுக்குள் யோசிப்பதற்குள், அமைச்சர் கையை நீட்டி சைகை காட்டி நம் எம்.பியை அடக்க முயன்ற காட்சிகள், திரைப்படங்களின் இறுதி மோதல் காட்சிகளை நினைவுபடுத்தின.</p><p>

இந்த இரண்டு தரப்பினரும் மோதிக்கொள்வதைப் பார்த்த மாவட்ட அரசாங்க அதிபர் உள்ளிட்ட அதிகாரிகள், “ஐயா.. நீங்கள் விளம்பரத்திற்காகச் சண்டை போடுகிறீர்கள்.</p><p>

இறுதியில் நாங்கள் ஏன் நீதிமன்றத்திற்கும் காவல்துறைக்கும் அலைய வேண்டும்” என உஷாராகி, அப்படியே கூட்டத்தை விட்டு உடனடியாக வெளியேற, கூட்டமும் எவ்வித முடிவுகளுமின்றி ஒத்திவைக்கப்பட்டது.
</p><p>
இவ்வாறு இந்த நிகழ்வு, தற்கால அரசியல்வாதிகளின் டிஜிட்டல் விளம்பர மோகத்தையும் மக்கள் நலன் சார்ந்த பொறுப்பற்ற தன்மையையும் அப்பட்டமாகத் தோல்வியுரித்துக் காட்டியுள்ளது.
</p><p>
மக்களின் அன்றாட வாழ்வாதாரப் பிரச்சினைகளையும் மாவட்டத்தின் அபிவிருத்திகளையும் தீவிரமாக விவாதிக்க வேண்டிய ஒரு உத்தியோகபூர்வ தளம், இன்று கேமராக்களுக்கு முன்னால் நாடக மேடையாக மாற்றப்பட்டிருப்பது அப்பட்டமான சீரழிவாகும்.
</p><p>
ஒருபுறம், ஊழல் ஒழிப்பு என்ற போர்வையில் நாடாளுமன்ற மாண்புகளை மறந்து அதிகாரிகளை ஒருமையில் பேசி இணையத்தில் தங்களை ஹீரோக்களாகக் காட்டிக் கொள்ளும் தமிழ் எம்பிக்களின் அரசியல் முதிர்ச்சியின்மை...
</p><p>
மறுபுறம், மாற்றத்தின் மாண்புமிகுக்கள் என்ற பிம்பத்தோடு வந்து ஒரு சலசலப்பைக் கண்டதும் தங்களின் நிதானத்தை இழந்து சண்டைக்கு நிற்கும் ஆளும்தரப்பு அமைச்சரின் பலவீனம் என இருதரப்புமே இங்கு அம்பலப்பட்டுப் போயுள்ளனர்.</p><p>

அரசியல்வாதிகள் தங்களின் சுய விளம்பரத்திற்காக நடத்தும் இந்த மலிவான சண்டைகளுக்குள் பலியாகாமல், அரச அதிகாரிகள் கூட்டத்தைப் புறக்கணித்தது தார்மீக ரீதியில் சரியான நகர்வாக இருந்தாலும், இறுதியில் ஒட்டுமொத்தப் பாதிப்பும் ஏதுமறியா கிளிநொச்சி மக்களுக்கே போய் சேருகிறது.</p><p>

சத்தமும், சலசலப்பும், சினிமாத்தனமான மோதல்களும் மட்டுமே தற்கால அரசியலின் இலக்கணமாகிப் போன சூழலில், உண்மையான மக்கள் பிரதிநிதித்துவம் என்பது இத்தகைய கோமாளிக்கூத்துகளுக்குள் நசுக்கப்பட்டு விடுகிறது என்பதே கசப்பான அரசியல் யதார்த்தம்...&nbsp;</p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-16T23:36:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரத்தில் புதிய திருப்பம்! சுரேஷ் சலே வழக்கில் நீதிமன்றத்தை நாடிய பௌத்த தேரர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/writ-petition-filed-by-major-general-suresh-sallay-1784243807"></link>
            <id>https://tamilwin.com/article/writ-petition-filed-by-major-general-suresh-sallay-1784243807</id>
            <summary type="text">ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே தாக்கல் செய்துள்ள ரிட் மனுவில் இடையீட்டு தரப்பாக இணைவதற்கு அனுமதி வழங்குமாறு, பஸ்யோதுன்ரட்ட பௌத்த சம்மேளனத்தின் தலை...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே தாக்கல் செய்துள்ள ரிட் மனுவில் இடையீட்டு தரப்பாக இணைவதற்கு அனுமதி வழங்குமாறு, பஸ்யோதுன்ரட்ட பௌத்த சம்மேளனத்தின் தலைவர் தபனே ஸ்ரீ மகிந்த தேரர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.
</p><p>
சுரேஷ் சலேவை கைது செய்து தடுத்து வைத்திருப்பது சட்டவிரோதமானது எனக் கூறி தாக்கல் செய்யப்பட்டுள்ள ரிட் மனுவில், தாம் இடையீட்டு தரப்பாக இணைவது பொதுநலன் கருதியே என்றும், எந்தவொரு சட்டபூர்வ விசாரணையையும் தடுக்கவோ அல்லது பாதிக்கவோ அல்ல என்றும் தேரர் தனது மனுவில் தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்</h2><p>

மாறாக, 2019 உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பாக உருவாக்கப்பட்டுள்ள கருத்துக்களை மாற்றும் முயற்சிகள், அரசியலமைப்பு மற்றும் சமூக ரீதியில் ஏற்படுத்தக்கூடிய தாக்கங்களை நீதிமன்றம் பரிசீலிக்க வேண்டும் என அவர் கோரியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/42dacdbc-9992-4609-b3a2-4428e04d010d/26-6a5968dd73791.webp' /></p><p>
</p><p>
மனுவில் மேலும், உயிர்த்த ஞாயிறு தாக்குதலை சஹ்ரான் ஹாஷிம் தலைமையிலான தேசிய தவ்ஹீத் ஜமாஅத் (NTJ) அமைப்பே நடத்தியதாகவும், கிடைத்த புலனாய்வு தகவல்களின் அடிப்படையில் முன்கூட்டியே நடவடிக்கை எடுக்கத் தவறியதற்காக அரச அதிகாரிகள் பொறுப்புக்கூற வேண்டும் என உச்ச நீதிமன்றமும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவும் ஏற்கனவே உறுதி செய்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
</p><p>
அத்துடன், மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே தாக்குதலைத் திட்டமிட்டார் அல்லது அதற்கு உதவினார் என எந்த நீதிமன்ற தீர்ப்பிலும் அல்லது உத்தியோகபூர்வ விசாரணையிலும் குற்றஞ்சாட்டப்படவில்லை.</p><p></p><h2>பரப்பப்படும் குற்றச்சாட்டுகள்</h2><p>

தாக்குதல் நடைபெறுவதற்கு முன்னரே இஸ்லாமிய தீவிரவாதம் குறித்து அவர் அதிகாரிகளை எச்சரித்திருந்ததாகவும் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9db625b0-f4b5-4bfd-8206-9f7c06971a2d/26-6a5968de2536c.webp' /></p><p>

மேலும், நம்பகமான ஆதாரங்கள் இன்றி சிங்கள பௌத்த இராணுவ மற்றும் புலனாய்வு அதிகாரிகளை இலக்காகக் கொண்டு பரந்த சதித்திட்டம் ஒன்று இருப்பதாக பரப்பப்படும் குற்றச்சாட்டுகள் சமூக நல்லிணக்கத்தையும், பொதுமக்களின் நம்பிக்கையையும் பாதிக்கும் எனவும் மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
</p><p>
இதனிடையே, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (PTA) கீழ் சுரேஷ் சலேவை தடுத்து வைத்திருப்பதன் சட்டபூர்வத்தன்மையை நீதிமன்றம் ஆராயும் வேளையில், இந்த வழக்குடன் தொடர்புடைய பரந்த அரசியலமைப்பு மற்றும் பொதுநல விடயங்கள் குறித்தும் சங்கத்தின் கருத்தை பரிசீலிக்குமாறு தேரர் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-16T23:27:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானின் முக்கிய உட்கட்டமைப்புகள் மீது தாக்குதல் ; அமெரிக்காவுக்கு ஈரான் எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/iran-warns-us-of-attack-key-iranian-infrastructure-1784244215"></link>
            <id>https://canadamirror.com/article/iran-warns-us-of-attack-key-iranian-infrastructure-1784244215</id>
            <summary type="text">ஈரானின் தெற்குப் பகுதி நகரங்களான பண்டார் அப்பாஸ், கெஷ்ம் தீவு மற்றும் சாபஹார் ஆகிய இடங்களைக் குறிவைத்து அமெரிக்க இராணுவம் தொடர் வான்வழித் தாக்குதல்களை...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானின் தெற்குப் பகுதி நகரங்களான பண்டார் அப்பாஸ், கெஷ்ம் தீவு மற்றும் சாபஹார் ஆகிய இடங்களைக் குறிவைத்து அமெரிக்க இராணுவம் தொடர் வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது.
</p><p>
அத்துடன், ஈரானிய துறைமுகத்தை நோக்கிச் செல்ல முயன்ற எண்ணெய் கப்பல் ஒன்றின் மீது, அமெரிக்க ராணுவம் ஹெல்ஃபயர் ஏவுகணைகளை வீசி அதைச் செயலிழக்கச் செய்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3252e2ff-b8b1-4734-b1d9-5e7e03b48009/26-6a5967f963b2b.webp' /></p><p>

அதேநேரம், ஈரானின் பொதுமக்களுக்கான சிவில் உட்கட்டமைப்புகள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தினால், அதற்குப் பதிலடியாக ,பிராந்தியத்தில் உள்ள அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளின் உட்கட்டமைப்புகள் முற்றிலும் அழியும் வகையில் மிகக் கடுமையான தாக்குதல் தொடுக்கப்படும் என்றும் ஈரான் எச்சரித்துள்ளது.
</p><p>
ஈரானின் "முக்கிய உட்கட்டமைப்புகள்" மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல்கள், அமெரிக்க ஆட்சியாளர்களின் குற்ற நோக்கத்தைக்" காட்டுகின்றன என்று ஈரான் குற்றம் சாட்டியுள்ளது.
</p><p>
அமெரிக்காவின் இந்த நடவடிக்கைகள் ஐக்கிய நாடுகள் சபையின் விதிகள் மற்றும் சர்வதேச சட்டத்தின் அடிப்படை கோட்பாடுகளை அப்பட்டமாக மீறுவதாகும் என்றும் ஈரான் குறிப்பிட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-16T23:23:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[உலக பொருளாதாரத்தின் புதிய மையமாக இந்தியப் பெருங்கடல் ; சிங்கப்பூரில் நாமல் ராஜபக்ச வலியுறுத்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/indian-ocean-as-the-new-center-of-world-economy-1784242832"></link>
            <id>https://jvpnews.com/article/indian-ocean-as-the-new-center-of-world-economy-1784242832</id>
            <summary type="text">ஆசியா, மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்காவை இணைக்கும் முக்கிய பொருளாதார மற்றும் மூலோபாய மையமாக இலங்கை தன்னை நிலைநிறுத்திக் கொள்ள வேண்டும் என நாடாளுமன்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஆசியா, மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்காவை இணைக்கும் முக்கிய பொருளாதார மற்றும் மூலோபாய மையமாக இலங்கை தன்னை நிலைநிறுத்திக் கொள்ள வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, வலியுறுத்தியுள்ளார்.</p><p>
</p><p></p><p>சிங்கப்பூரில் நடைபெற்ற Global Economic Cooperation, East Summit மாநாட்டில் உரையாற்றிய அவர், உலகம் தற்போது "இந்தியப் பெருங்கடல் நூற்றாண்டை" நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதாக தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/95cc3a78-fe74-4bb8-b6e1-fe53c4b0e706/26-6a5962920e12d.webp' /></p><p>

இந்தியப் பெருங்கடல் பகுதி ஒரு முக்கிய தசாப்தத்தை மட்டுமல்ல, அதன் பொருளாதார மற்றும் மூலோபாய முக்கியத்துவத்தால் வரையறுக்கப்படும் ஒரு புதிய நூற்றாண்டிற்குள் நுழைந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
</p><p>
மில்கன் நிறுவகத்தின் மூத்த ஆய்வாளர்கள் குழுத் தலைவர் மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கிக்கான முன்னாள் அமெரிக்க தூதுவர் கர்டிஸ் எஸ். சின் உடன் இணைந்து நடைபெற்ற கலந்துரையாடலில் பங்கேற்ற நாமல் ராஜபக்ச, பிராந்திய இணைப்பு மற்றும் பொருளாதார ஒத்துழைப்பில் இலங்கையின் பங்கு குறித்த தனது பார்வையைப் பகிர்ந்துகொண்டார்.
</p><p>
இலங்கை, முக்கிய பிராந்தியங்களை இணைக்கும் நம்பகமான பாலமாக உருவெடுப்பதுடன், புதுமை, ஒத்துழைப்பு மற்றும் தொழில்முனைவோர் முயற்சிகள் மூலம் இளைஞர்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
</p><p>
"பல நூற்றாண்டுகளாக இந்தியப் பெருங்கடல் நாகரிகங்களை இணைத்து வந்துள்ளது. இனி அது எதிர்காலத்தையும் இணைக்க வேண்டும்" எனத் தெரிவித்த நாமல் ராஜபக்ச, வேகமாக மாறிவரும் உலக பொருளாதார சூழலில் அடுத்த தலைமுறையை வழிநடத்தத் தயார்படுத்துவது அவசியம் என்றும் வலியுறுத்தினார்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-16T23:00:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[4 ஆண்டுகள் தான்- வெளிநாட்டு மாணவர்களுக்கு விசா விதிகளை கடுமையாக்கிய அமெரிக்கா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/us-tightens-visa-rules-for-foreign-students-1784242761"></link>
            <id>https://news.lankasri.com/article/us-tightens-visa-rules-for-foreign-students-1784242761</id>
            <summary type="text">அமெரிக்காவின் ட்ரம்ப் நிர்வாகம், வெளிநாட்டு மாணவர்களுக்கு புதிய கடுமையான விசா விதிகளை அறிவித்துள்ளது.

அதன் படி, மாணவர்கள் இனி அதிகபட்சம் நான்கு ஆண்...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவின் ட்ரம்ப் நிர்வாகம், வெளிநாட்டு மாணவர்களுக்கு புதிய கடுமையான விசா விதிகளை அறிவித்துள்ளது.
</p><p>
அதன் படி, மாணவர்கள் இனி அதிகபட்சம் நான்கு ஆண்டுகள் மட்டுமே அமெரிக்காவில் தங்க அனுமதி பெறுவார்கள். அதற்கு மேல் தொடர விரும்பினால், அரசின் அனுமதி அவசியமாகும்.
</p><p>
முன்பு, பல்கலைக்கழகங்கள் தாமாகவே விசா நீட்டிப்பு வழங்கும் அதிகாரம் பெற்றிருந்தன. ஆனால் புதிய விதிகள், அந்த அதிகாரத்தை நீக்குகின்றன. </p><p>மேலும், மாணவர்கள் பாடநெறிகளை மாற்றுவது அல்லது பல்கலைக்கழகங்களை மாற்றுவது கடுமையாக கட்டுப்படுத்தப்படும்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c3516180-cc1c-421e-a2f6-97220b0355d5/26-6a5962cf4985c.webp' /></p><p>அமெரிக்க உள்துறை பாதுகாப்பு அமைச்சகம், “விசா முறைகேடுகளை தடுக்கவும், தேசிய பாதுகாப்பை வலுப்படுத்தவும்” இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது.
</p><p>
இதுவரை, F-1 மற்றும் J-1 விசா பெற்ற மாணவர்கள் “duration of status” என்ற முறையில், தங்கள் படிப்பை முடிக்கும் வரை அமெரிக்காவில் தங்க அனுமதி பெற்றிருந்தனர். ஆனால் புதிய விதிகள், அந்த காலத்தை நான்கு ஆண்டுகளுக்கு மட்டுமே வரையறுக்கின்றன.
</p><p>
மேலும், பட்டம் முடித்த பின் மாணவர்கள் 30 நாட்களுக்குள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும். முன்பு வழங்கப்பட்ட 60 நாள் சலுகை காலம் குறைக்கப்பட்டுள்ளது.</p><p></p><p>இந்த விதிகள் “தவறானது, தேவையற்றது” என NAFSA: Association of International Educators அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. அதன் தலைவர் ஃபான்டா ஆவ், “இது மாணவர்களுக்கு குழப்பம், பயம், மற்றும் தேவையற்ற அதிகார சிக்கல்களை உருவாக்கும்” எனக் கூறினார்.
</p><p>
இந்த புதிய விதிகள், அமெரிக்காவில் வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கையை குறைக்கும் நோக்கத்துடன், குடியேற்றக் கட்டுப்பாடுகளை வலுப்படுத்தும் திட்டத்தின் ஒரு பகுதியாகக் கருதப்படுகின்றன.&nbsp; &nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-16T22:59:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[நியூஸிலாந்தில் மோசடியில் ஈடுபட்ட இலங்கை நிறுவனம் ; அபராதத்துடன் இழப்பீடும் வழங்க உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sri-lankan-company-involved-in-fraud-new-zealand-1784241705"></link>
            <id>https://jvpnews.com/article/sri-lankan-company-involved-in-fraud-new-zealand-1784241705</id>
            <summary type="text">நியூசிலாந்தில் வாகன விற்பனையின் போது ஓடோமீட்டர் (odometer) அளவைத் திருத்தி மோசடியில் ஈடுபட்ட இலங்கை வம்சாவளி நிறுவனத்திற்கு எதிராக அந்த நாட்டு நீதிமன்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நியூசிலாந்தில் வாகன விற்பனையின் போது ஓடோமீட்டர் (odometer) அளவைத் திருத்தி மோசடியில் ஈடுபட்ட இலங்கை வம்சாவளி நிறுவனத்திற்கு எதிராக அந்த நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
</p><p>
நியூசிலாந்தின் மோட்டார் வாகன விற்பனை சட்டத்தின் கீழ், ஓடோமீட்டர் மோசடிக்காக தொடரப்பட்ட முதலாவது வழக்காக இது அமைந்துள்ளது.</p><p></p><p>
</p><p>
கிறைஸ்ட்சர்ச் நகரை தளமாகக் கொண்டு இயங்கும் 'கார்போரியம்' (Carporium) என்ற சிற்றுந்து விற்பனை நிலையம், 2024 பெப்ரவரி மாதம் டொயோட்டா ராவ் 4 ( Toyota RAV4) ரக சிற்றுந்து ஒன்றை 24,000 நியூசிலாந்து டொலர்களுக்கு விற்பனை செய்துள்ளது.</p><p>குறித்த வாகனத்தை ஒக்லாந்து வாகன ஏலத்தில் வாங்கியபோது, அதன் பயன்பாட்டுத் தூரம் 150,031 கிலோமீட்டராகப் பதிவாகியிருந்தது.

ஆனால், வாடிக்கையாளருக்கு விற்கும்போது அது 119,244 கிலோமீட்டராகக் குறைக்கப்பட்டிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fa48c759-5d24-4f69-b7dc-a0c1adf2ccaf/26-6a595e2ac46c2.webp' /></p><p>
</p><p>
இதன்படி, சுமார் 30,000 கிலோமீட்டர்களைத் திட்டமிட்டுத் திருத்தி, வாடிக்கையாளரை ஏமாற்றியது விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஒரு வருடத்திற்குப் பிறகு, வழக்கமான பராமரிப்புப் பணிகளின் போது பயன்பாட்டுப் பதிவுகளில் இருந்த குளறுபடியை தொழில்நுட்ப வல்லுநர்கள் கண்டறிந்தனர்.
</p><p>
இந்த நிலையில், நியூசிலாந்தின் வணிகம், புத்தாக்கம் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் நடத்திய விரிவான விசாரணையைத் தொடர்ந்து, இந்த வழக்கு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டது.
</p><p>
இதனையடுத்து வழங்கப்பட்டுள்ள தீர்ப்பின் அடிப்படையில், குறித்த வாகனத்தை வாங்கிய அதே விலையான 24,000 நியூசிலாந்து டொலருக்கு மீண்டும் நிறுவனமே வாங்கிக் கொள்ள வேண்டும்.

நிறுவனத்தின் இயக்குநருக்கு மன உளைச்சலுக்கான இழப்பீடாக 1,000 நியூசிலாந்து டொலர் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
</p><p>
வாகன விற்பனை நிலையத்திற்கு 5,000 நியூசிலாந்து டொலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், வாகனங்களின் மதிப்பு, தரம் மற்றும் பராமரிப்பு வரலாற்றைத் தவறாகக் காண்பித்து நுகர்வோரை ஏமாற்றும் இத்தகைய மோசடிச் செயல்களை நியூசிலாந்து அரசாங்கம் ஒருபோதும் சகித்துக்கொள்ளாது என்று அந்த நாட்டின் வணிகத்துறை அமைச்சு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-16T22:41:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[&quot;We Will Kill Trump&quot; பரபரப்பை கிளப்பிய ஈரானின் புதிய விளம்பர பலகை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/we-will-kill-trump-iran-new-billboard-us-president-1784227395"></link>
            <id>https://tamilwin.com/article/we-will-kill-trump-iran-new-billboard-us-president-1784227395</id>
            <summary type="text">அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை குறிவைத்து, &quot;We Will Kill Trump&quot; (ட்ரம்பைக் கொல்வோம்) என்ற வாசகத்துடன் கூடிய பிரம்மாண்ட விளம்பர பலகையொன்று ஈரான் தல...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை குறிவைத்து, "We Will Kill Trump" (ட்ரம்பைக் கொல்வோம்) என்ற வாசகத்துடன் கூடிய பிரம்மாண்ட விளம்பர பலகையொன்று ஈரான் தலைநகர் டெஹ்ரானில் நிறுவப்பட்டுள்ளது.</p><p> 

இந்த விளம்பர பலகை தற்போது சர்வதேச அரசியல் வட்டாரங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.</p><p></p><h2>ட்ரம்பைக் கொல்வோம்</h2><p>
</p><p>
டெஹ்ரானின் எங்கெலாப் சதுக்கத்தில் வைக்கப்பட்டுள்ள அந்த விளம்பர பலகையில், கருப்பு நிற சவப்பெட்டிக்குள் டொனால்ட் ட்ரம்ப் படுத்திருப்பது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது. </p><p>

அவரது தலைமுடி சீர்குலைந்த நிலையிலும், கண்களும் வாயும் மூடிய நிலையிலும், சிவப்பு நிற டையின் மீது கைகளை வைத்தபடி சித்தரிக்கப்பட்டுள்ளார். 


சவப்பெட்டியின் மீது பாரசீக மொழியிலும் ஆங்கிலத்திலும் "We Will Kill Trump" என்ற வாசகம் எழுதப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f4147468-5a8f-4ea2-b2ca-b8f91c094409/26-6a5928b8ae682.webp' /></p><p>
</p><p>
இந்த விளம்பர பலகை, அண்மையில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதல்களில் உயிரிழந்ததாக கூறப்படும் ஈரானின் முன்னாள் உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமேனி உள்ளிட்டோருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
</p><p>
 அதன் பின்னணியில் துக்கச் சுவர் போன்ற வடிவமைப்பும், தாக்குதல்களில் உயிரிழந்தவர்களை நினைவுகூறும் வாசகங்களும் இடம்பெற்றுள்ளன.</p><p></p><h2>பிரம்மாண்ட விளம்பர பலகை</h2><p>

ஈரான், அரசியல் மற்றும் புரட்சிகர கருத்துகளை பொதுமக்களிடம் கொண்டு சேர்க்கும் நோக்கில் இதுபோன்ற பிரம்மாண்ட விளம்பர பலகைகளை நீண்ட காலமாக பயன்படுத்தி வருகிறது.</p><p> </p><p>

குறிப்பாக, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், தலைநகர் டெஹ்ரானின் முக்கிய பகுதிகளில் இதுபோன்ற அரசியல் விளம்பரங்கள் அதிகளவில் வைக்கப்பட்டுள்ளன.</p><p><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr">🇮🇷🇺🇸 | <a href="https://x.com/hashtag/Tehran?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#Tehran</a> Billboard Shows <a href="https://x.com/hashtag/Trump?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#Trump</a> in Coffin<a href="https://x.com/hashtag/Iran?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#Iran</a> has installed a billboard in Tehran showing President Trump lying in a coffin. A nearby statue depicts the fist of late Supreme Leader Ali Khamenei, who was killed at the start of the US-Israeli war on Iran.<br><br>A separate… <a href="https://t.co/Hf3yhonHcy">pic.twitter.com/Hf3yhonHcy</a></p>&mdash; Mahalaxmi Ramanathan (@MahalaxmiRaman) <a href="https://x.com/MahalaxmiRaman/status/2077672243958849758?ref_src=twsrc%5Etfw">July 16, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>
</p><p>
இதற்கு முன்பும், டொனால்ட் ட்ரம்பை விமர்சிக்கும் வகையில் "The Breaking Point" என்ற வாசகத்துடன் அவரது வாய் தைக்கப்பட்டிருப்பது போன்ற விளம்பர பலகையை ஈரான் வெளியிட்டிருந்தது.</p><p>மேலும், அமெரிக்க விமானங்கள் மற்றும் போர்க்கப்பல்கள் ஈரானின் வலையில் சிக்கியிருப்பது போன்ற காட்சிகளும் அந்நாட்டின் விளம்பர பிரச்சாரங்களில் இடம்பெற்றுள்ளன.</p><p></p><h2>சர்வதேச ரீதியில் பதற்றம்</h2><p>
</p><p>
அதேவேளை, ஈரானில் வெளியான ஒரு பழமைவாத நாளிதழ், அயத்துல்லா அலி கமேனி உயிரிழந்ததற்குப் பழிவாங்க வேண்டிய இலக்குகளின் பட்டியலையும் வெளியிட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/57b94b76-ac0f-4096-ac59-11d4b1606418/26-6a5928b96d747.webp' /></p><p> </p><p>

அதில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, பிரித்தானிய பிரதமர் கீர் ஸ்டார்மர் உள்ளிட்ட பல வெளிநாட்டு தலைவர்களின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன.
</p><p>
இந்த புதிய விளம்பர பலகை, ஈரான்-அமெரிக்கா இடையிலான ஏற்கனவே நிலவி வரும் பதற்றத்தை மேலும் அதிகரிக்கக்கூடும் என சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-07-16T22:41:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[மனோஜிற்கும், ரோஹினிக்கும் விவாகரத்து ஆனதா?... வெளிவந்த சிறகடிக்க ஆசை புதிய புரொமோ]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/siragadikka-aasai-16th-to-18th-july-2026-promo-1784220957"></link>
            <id>https://cineulagam.com/article/siragadikka-aasai-16th-to-18th-july-2026-promo-1784220957</id>
            <summary type="text">சிறகடிக்க ஆசைசிறகடிக்க ஆசை, அழகான ஒரு குடும்ப கதை, ஆனால் சாதாரண குடும்ப கதையாக இல்லாமல் எப்போதும் பிரச்சனையாகவே இருந்து வருகிறது. சில வாரங்களுக்கு முன...</summary>
            <content type="html"><![CDATA[<h2>சிறகடிக்க ஆசை</h2><p>சிறகடிக்க ஆசை, அழகான ஒரு குடும்ப கதை, ஆனால் சாதாரண குடும்ப கதையாக இல்லாமல் எப்போதும் பிரச்சனையாகவே இருந்து வருகிறது. </p><p>சில வாரங்களுக்கு முன் வீடு கிடைக்குமா இல்லையா என இருந்தது, பெரிய போராட்டத்திற்கு பிறகு முத்து வீட்டை மீட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f6660d09-7d9c-4db9-a42c-58027cfa38d7/26-6a590d1fe41ce.webp' /></p><p> </p><p>அடுத்து மனோஜ்-ரோஹினி விவாகரத்து பிரச்சனை தொடங்கியது. ரோஹினி மனோஜிடம் ரூ. 5 லட்சம் கொடுத்தால் விவாகரத்து தரேன் என கூற மனோஜ் பணத்திற்காக திருட்டுத்தனமாக ஒரு கல்யாணத்தை செய்துவிட்டார். </p><p>அந்த பிரச்சனை எப்போது வெடிக்கும் என தெரியவில்லை, அதற்குள் மீனா குழந்தை பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு இல்லை என்ற சோகமான கதைக்களம் தொடங்கிவிட்டது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/efdd3c37-6aab-4f03-9229-2735702c8ce1/26-6a590d20b83ca.webp' /></p><h2>புரொமோ
</h2><p>திருமணம் செய்ததற்காக கனகா அம்மாவிடம் ரூ. 5 லட்சம் பணம் வாங்கிய மனோஜ் வீட்டிற்கு வந்து குடும்பத்திடம் பணம் கிடைத்த விஷயத்தை கூறுகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/efe19e2c-a28c-4cfe-9b5c-5ce61597c8cd/26-6a590d1f35cd2.webp' /></p><p> </p><p>விஜயா ரோஹினிக்கு போன் செய்து முதலில் இந்த விஷயத்தை சொல்லச் சொல்ல மனோஜ் அவருக்கு போன் செய்து பணம் ரெடி நீ வந்து விவாகரத்தில் கையெழுத்து போட்டு பணத்தை வாங்கிக்கொள் என்கிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/79d5f059-65c1-40d9-895f-ded937071fc4/26-6a590d1e8423e.webp' /></p><p> </p><p>மனோஜ் சொன்னதை கேட்டு ரோஹினி அப்படியே உடைந்து போகிறார், ஆனால் இதில் பல திருப்பங்கள் இருப்பதாக தெரிகிறது. என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து காண்போம். இதோ புதிய புரொமோ,</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/6-bnUG-GbJ8" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p>]]></content>
            <updated>2026-07-16T22:40:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[நள்ளிரவில் அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதல்..! இலக்கு வைக்கப்பட்ட முக்கிய இடங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/us-strikes-hit-bridge-airport-railway-station-iran-1784240378"></link>
            <id>https://tamilwin.com/article/us-strikes-hit-bridge-airport-railway-station-iran-1784240378</id>
            <summary type="text">அமெரிக்கா நடத்திய நள்ளிரவு வான்வழித் தாக்குதலில், ஈரானின் முக்கிய விமான நிலையம், தொடருந்து சந்திப்பு நிலையம் மற்றும் இரண்டு பாலங்கள் இலக்காகத் தாக்கப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்கா நடத்திய நள்ளிரவு வான்வழித் தாக்குதலில், ஈரானின் முக்கிய விமான நிலையம், தொடருந்து சந்திப்பு நிலையம் மற்றும் இரண்டு பாலங்கள் இலக்காகத் தாக்கப்பட்டதாக அந்நாட்டு அரச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.</p><p>

ஈரானின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள இரான்ஷஹர் விமான நிலையம் அருகே மூன்று வெடிப்புச் சத்தங்கள் கேட்கப்பட்டதாகவும், அமெரிக்காவின் ஏவுகணை ஒன்று விமான நிலையத்தைத் தாக்கியதாகவும் அரச தொலைக்காட்சி IRIB தனது டெலிகிராம் பதிவில் தெரிவித்துள்ளது.</p><p></p><h2>வான்வழித் தாக்குதல்</h2><p>

அதேபோல், துறைமுக நகரமான பந்தர் அப்பாஸ் (Bandar Abbas) நகரின் முக்கிய தொடருந்து சந்திப்பு நிலையமும் அமெரிக்க தாக்குதலுக்கு இலக்கானதாக மெஹர் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. 

இந்த தாக்குதலில் இரண்டு ஈரானியர்கள் காயமடைந்ததாக கூறப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fd44123b-1b27-44b2-ba9a-853bbeb2eab1/26-6a595d7b0b5d8.webp' /></p><p>

மேலும், ஹோர்முஸ்கான் மாகாணத்தில், உலகின் முக்கிய கடல்சார் வர்த்தகப் பாதையான ஹோர்முஸ் நீரிணை அருகிலுள்ள இரண்டு பாலங்கள் மீதும் வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p>

ஈரான் அரசின் செய்தி நிறுவனமான IRNA வெளியிட்ட தகவலின்படி, இந்த தாக்குதல்களில் இருவர் உயிரிழந்ததுடன், மேலும் நால்வர் காயமடைந்துள்ளனர்.</p><p>

இந்தத் தாக்குதல்கள், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நீடித்து வரும் பதற்றத்தை மேலும் தீவிரப்படுத்தும் என சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-16T22:38:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[அடர்த்தியான முடி வளர்ச்சியை பெற சிறந்த ஆயுர்வேத எண்ணெய்...!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/best-hair-oil-for-hair-growth-and-thickness-1784240282"></link>
            <id>https://ibctamil.com/article/best-hair-oil-for-hair-growth-and-thickness-1784240282</id>
            <summary type="text">அழகிய நீளமான கூந்தல் என்பது அனைத்து பெண்களினதும் பெரிய கனவாகவே காணப்படுகின்றது.

ஆனால் அதனை பெற்றுகொள்வதற்கான நடவடிக்கை என்பது மிகவும் பாதிப்பை ஏற்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>அழகிய நீளமான கூந்தல் என்பது அனைத்து பெண்களினதும் பெரிய கனவாகவே காணப்படுகின்றது.
</p><p>
ஆனால் அதனை பெற்றுகொள்வதற்கான நடவடிக்கை என்பது மிகவும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியதாகவே உள்ளது.
</p><p>
இந்நிலையில், எவ்வித செயற்கையான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாமல் இயற்கையான முறையில் நீளமான கூந்தலை எவ்வாறு பெறலாம் என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.</p><p></p><p><u>🛑&nbsp;<b>தேவையான பொருட்கள்</b></u></p><ol><li>கடுகு எண்ணெய்- 1 கப்</li><li>
கறிவேப்பிலை- 2 கொத்து</li></ol><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/11ed5c86-637e-4746-a7d1-5dc44fbad8e4/26-6a59589c65dd5.webp' /></p><p><u>🛑&nbsp;<b>பயன்படுத்தும் முறை&nbsp;&nbsp;</b></u></p><ol><li>முதலில் ஒரு பாத்திரத்தில் கடுகு எண்ணெயை சேர்த்து சூடுபடுத்தி அதில் கறிவேப்பிலையை சேர்த்து கொதிக்கவைத்து பின் குளிர வைக்க வேண்டும்.
</li><li>
பின் அந்த எண்ணெயை வடிகட்டி ஒரு பாட்டிலில் ஊற்றிக் கொள்ள வேண்டும்.</li><li>அடுத்து இந்த எண்ணெயை உச்சந்தலை முதலில் முடியின் நுனி வரை தடவி ஆயில் மசாஜ் செய்யவும்.</li><li>பின்னர் மென்மையான ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை அலசிக்கொள்ளலாம்.
</li><li>
இதனை வாரத்திற்கு இரண்டு முறை தொடர்ந்து பயன்படுத்தி வர முடி வளர்ச்சியை அதிகரிக்கும்.&nbsp;&nbsp;</li></ol><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>&nbsp;செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/FJQcrzobjUcEaJJsEVOWpF" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-16T22:18:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Aanadhi</name>
            </author>
            <title type="text"><![CDATA[சொத்து மற்றும் பொறுப்புக்கள் பிரகடனம் குறித்த தவறான தகவல்கள்..! இலஞ்ச ஆணைக்குழு முக்கிய அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/incorrect-information-asset-liability-declarations-1784239149"></link>
            <id>https://tamilwin.com/article/incorrect-information-asset-liability-declarations-1784239149</id>
            <summary type="text">இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு, மையப்படுத்தப்பட்ட மின்னணு அமைப்பு மூலம் சொத்து மற்றும் பொறுப்பு பிரகடனங்களைச் சமர்ப்பிப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு, மையப்படுத்தப்பட்ட மின்னணு அமைப்பு மூலம் சொத்து மற்றும் பொறுப்பு பிரகடனங்களைச் சமர்ப்பிப்பது தொடர்பாக பல்வேறு வெளித் தரப்பினரால் வழங்கப்படும் தவறான தகவல்கள் குறித்து ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.</p><p>

சொத்து மற்றும் பொறுப்பு பிரகடனங்களைச் சமர்ப்பிக்க வேண்டியவர்கள், அவற்றை அறிவிப்பதற்காக ஆணைக்குழுவால் நிறுவப்பட்ட மையப்படுத்தப்பட்ட மின்னணு அமைப்பில் தகவல்களை உள்ளிடுவது மற்றும் அந்த அமைப்பை அணுகுவது ஆகியவை குறித்து, ஆணைக்குழுவின் அதிகாரிகள் அல்லாத பிற நபர்களால் பல்வேறு தகவல்கள் வழங்கப்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.</p><p></p><h2>முக்கிய அறிவிப்பு</h2><p>
</p><p>
இதுபோன்ற விழிப்புணர்வுப் பிரச்சாரங்களிலும், இந்த மின்னணு அமைப்பின் பயன்பாட்டிலும், சம்பந்தப்பட்ட நபர்களால் தவறான தகவல்களும் தவறான வழிமுறைகளும் தெரிவிக்கப்படுவதை ஆணைக்குழு இதுவரை அவதானித்துள்ளது என்று அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cbb55053-05ef-4351-8619-647999ebc8ef/26-6a59572f46f4d.webp' /></p><p>
</p><p>
எனவே, ஆணைக்குழுவால் அல்லது அதன் அதிகாரிகள் அல்லாத பிற வெளி நபர்களால் நடத்தப்படும் இதுபோன்ற விழிப்புணர்வுப் பிரச்சாரங்களுக்கு இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு பொறுப்பேற்காது என்பதை குறித்த அறிவிப்பின் மூலம் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.</p><p>

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு அது தொடர்பான அறிவிப்பில் மேலும் கூறியுள்ளதாவது, </p><p>சொத்துக்கள் மற்றும் பொறுப்புகளை அறிவிப்பதற்கான மையப்படுத்தப்பட்ட மின்னணு அமைப்பில் தகவல்களை உள்ளிடுவது தொடர்பான எந்தவொரு சிக்கல்களையும், ஆணைக்குழுவின் சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் அறிவிப்புப் பிரிவின் 0767011954 மற்றும் 0112587284 ஆகிய தொலைபேசி எண்கள் மூலமாக மட்டுமே தீர்க்க முடியும்; அதன்படி, பொதுமக்கள் சம்பந்தப்பட்ட தொலைபேசி எண்களை அழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-16T22:12:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்கா தாக்கினால் செங்கடலை முடக்க ஹூதிகளுக்கு ஈரான் வழங்கிய ரகசிய உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/iran-gave-secret-houthis-block-red-sea-us-attacks-1784239788"></link>
            <id>https://canadamirror.com/article/iran-gave-secret-houthis-block-red-sea-us-attacks-1784239788</id>
            <summary type="text">அமெரிக்கா தனது நாட்டின் எரிசக்தி உட்கட்டமைப்பு வசதிகள் மீது தாக்குதல் நடத்தினால், செங்கடல் ஊடான எண்ணெய் போக்குவரத்துப் பாதையை மூடுவதற்குத் தயாராக இருக...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்கா தனது நாட்டின் எரிசக்தி உட்கட்டமைப்பு வசதிகள் மீது தாக்குதல் நடத்தினால், செங்கடல் ஊடான எண்ணெய் போக்குவரத்துப் பாதையை மூடுவதற்குத் தயாராக இருக்குமாறு, ஏமனின் ஹூதி அமைப்பிடம் ஈரான் கோரிக்கை விடுத்துள்ளது.
</p><p>
அமெரிக்காவின் சாத்தியமான தாக்குதல்களை எதிர்கொள்வது குறித்த இந்தத் திட்டங்கள், ஈரானியத் தலைமைத்துவத்தின் உயர்மட்ட மட்டங்களில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ee7e4cd6-4868-4ce8-b1f3-56b4c2a9f252/26-6a5956ae2e772.webp' /></p><p>இந்தத் திட்டம் குறித்த அறிவுறுத்தல்கள் ஏற்கனவே ஈரானின் நட்பு அமைப்பான ஹூதிப் போராளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
</p><p>
எரிசக்தி விநியோகத்தில் உலகளாவிய ரீதியில் முக்கிய பங்கு வகிக்கும் செங்கடல் பகுதியில் ஏற்படக்கூடிய இத்தகைய நடவடிக்கைகள், உலகளாவிய எண்ணெய் சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என அவதானிகள் கருதுகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-07-16T22:10:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[நடிகர் அருள்நிதி நடிக்கும் அருள்வான் படப்பிடிப்பு தள புகைப்படங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/arulvan-movie-shooting-spot-photos-1784204066"></link>
            <id>https://cineulagam.com/article/arulvan-movie-shooting-spot-photos-1784204066</id>
            <summary type="text">அருள்வான்கணேஷ் விநாயகன் இயக்கியுள்ள திரைப்படம் தான் அருள்வான். அருள்நிதி நாயகனாக நடிக்க அவருடன் ஆரவ், ரம்யா பாண்டியன், கிருத்திகா உள்ளிட்டோர் முக்கிய ...</summary>
            <content type="html"><![CDATA[<h2>அருள்வான்</h2><p>கணேஷ் விநாயகன் இயக்கியுள்ள திரைப்படம் தான் அருள்வான்.</p><p> அருள்நிதி நாயகனாக நடிக்க அவருடன் ஆரவ், ரம்யா பாண்டியன், கிருத்திகா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மலைக்கிராமத்தில் வசிக்கும் மக்களின் வாழ்வையும், அங்குள்ள சிறுமியின் கல்வி தொடர்பான வலியையும் பேசும் படமாக இது எடுக்கப்பட்டுள்ளது.</p><p>நாளை ஜுலை 17, படம் வெளியாகவுள்ள நிலையில் அருள்வான் படத்தின் சில படப்பிடிப்பு புகைப்படங்கள் இதோ,</p><p><br></p>]]></content>
            <updated>2026-07-16T21:40:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்க விசா விதிகளில் புதிய கட்டுப்பாடுகள் ; வெளிநாட்டு மாணவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/new-restrictions-on-us-visa-rules-1784237915"></link>
            <id>https://canadamirror.com/article/new-restrictions-on-us-visa-rules-1784237915</id>
            <summary type="text">அமெரிக்காவுக்குச் செல்லும் வெளிநாட்டு மாணவர்கள், பரிமாற்ற வருகையாளர்கள் மற்றும் வெளிநாட்டு ஊடகவியலாளர்களுக்கான புதிய விசா விதிமுறைகளை அமெரிக்க உள்நாட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவுக்குச் செல்லும் வெளிநாட்டு மாணவர்கள், பரிமாற்ற வருகையாளர்கள் மற்றும் வெளிநாட்டு ஊடகவியலாளர்களுக்கான புதிய விசா விதிமுறைகளை அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் திணைக்களம் (DHS) அறிவித்துள்ளது.
</p><p>
புதிய விதிமுறைகளின் கீழ், தற்போது நடைமுறையில் உள்ள "Duration of Status (D/S)" எனப்படும், கல்வி அல்லது பணிக்காலம் முழுவதும் தங்க அனுமதிக்கும் முறை மாற்றப்படவுள்ளது.
</p><p>
இதன்படி, சர்வதேச மாணவர்களுக்கான F விசா, பரிமாற்ற வருகையாளர்களுக்கான J விசா மற்றும் வெளிநாட்டு ஊடகவியலாளர்களுக்கான I விசா இனி கல்வித் திட்டம் அல்லது பணிக்காலம் முழுவதற்கும் செல்லுபடியாக இருக்காது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c9f82717-2c93-46b8-b3fb-b8785eb7ed6e/26-6a594f5d4eaf1.webp' /></p><p>அதற்குப் பதிலாக, பெரும்பாலான வெளிநாட்டு மாணவர்கள் மற்றும் பரிமாற்ற வருகையாளர்கள் அதிகபட்சமாக நான்கு ஆண்டுகள் வரை அமெரிக்காவில் தங்குவதற்கு அனுமதிக்கப்படுவார்கள்.
</p><p>
வெளிநாட்டு ஊடகவியலாளர்களுக்கு பொதுவாக 240 நாட்கள் வரை மட்டுமே தங்க அனுமதி வழங்கப்படும். அதேவேளை, சீனப் பிரஜைகளான ஊடகவியலாளர் விசா (I Visa) வைத்திருப்போருக்கு இந்தக் காலம் 90 நாட்களாகக் குறைக்கப்பட்டுள்ளது.
</p><p>
அனுமதிக்கப்பட்ட கால அவகாசத்திற்குப் பின்னரும் அமெரிக்காவில் தங்க விரும்புவோர், அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் திணைக்களத்திடம் கால நீடிப்புக்கு விண்ணப்பிக்க வேண்டும் அல்லது நாட்டை விட்டு வெளியேறி மீண்டும் நுழைவதற்கான அனுமதியைப் பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இந்த புதிய விதிமுறை, அமெரிக்க காங்கிரஸின் மறுஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு, Federal Register-இல் வெளியிடப்பட்டு 60 நாட்கள் நிறைவடைந்த பின்னர் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
அமெரிக்காவிற்குள் நுழையும் சர்வதேச மாணவர்கள், பரிமாற்ற வருகையாளர்கள் மற்றும் வெளிநாட்டு ஊடகவியலாளர்களின் எண்ணிக்கை அண்மைக் காலமாக அதிகரித்து வரும் நிலையில், குடியேற்றமற்ற (Non-immigrant) விசா வைத்திருப்பவர்கள் மீதான கண்காணிப்பை வலுப்படுத்துவதே இந்த மாற்றங்களின் முக்கிய நோக்கம் என அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9e78778f-75ff-40db-8bf9-8fddbcac1295/26-6a594f5e008e2.webp' /></p><p>2025 ஆம் ஆண்டு ஜனவரியில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் பதவியேற்ற பின்னர், சட்டப்பூர்வ மற்றும் சட்டவிரோத குடியேற்றங்களை கட்டுப்படுத்தும் பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. </p><p>அந்த பரந்த குடியேற்றக் கொள்கையின் ஒரு பகுதியாகவே இந்த புதிய விசா விதிமுறைகளும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.</p>]]></content>
            <updated>2026-07-16T21:38:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மத்திய கிழக்கின் அனைத்து உள்கட்டமைப்புகளையும் அழிப்போம்- எச்சரித்துள்ள ஈரான்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/iran-threatens-regional-infrastructure-us-strikes-1784237537"></link>
            <id>https://news.lankasri.com/article/iran-threatens-regional-infrastructure-us-strikes-1784237537</id>
            <summary type="text">அமெரிக்காவின் வான்வழி தாக்குதல்கள் அதிகரித்துள்ள நிலையில், ஈரான் தனது கடுமையான எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.

காதம் அல்-அன்பியா மத்திய தலைமையகம் சார...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவின் வான்வழி தாக்குதல்கள் அதிகரித்துள்ள நிலையில், ஈரான் தனது கடுமையான எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.
</p><p>
காதம் அல்-அன்பியா மத்திய தலைமையகம் சார்பில் பேசிய இராணுவ அதிகாரி கர்னல் எப்ராஹிம் சொல்ஃபகாரி, “அமெரிக்கா எங்கள் நாட்டின் மீது தாக்குதல் நடத்தினால், பிராந்தியத்தில் உள்ள அனைத்து உள்கட்டமைப்புகளையும் எங்கள் சக்திவாய்ந்த ஆயுதப்படைகளால் நசுக்கப்படும்” எனக் கூறினார்.</p><p></p><p>

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப், ஈரானின் மின்நிலையங்கள் மற்றும் பாலங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தலாம் என எச்சரித்திருந்தார்.
</p><p>
அதற்கு பதிலளித்த ஈரான், “ஹார்முஸ் நீரிணையில் அமெரிக்கா தலையிட அனுமதிக்கமாட்டோம். இது ஈரானின் வெல்லமுடியாத சிவப்பு கோடு’” என தெரிவித்துள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2570a818-52f5-4dd6-b709-9f2f956e8150/26-6a594de382350.webp' /></p><p>இந்த எச்சரிக்கை, அமெரிக்கா-ஈரான் இடையிலான பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது. ஹார்முஸ் நீரிணை உலகின் முக்கியமான எண்ணெய் போக்குவரத்து வழியாக இருப்பதால், இங்கு எந்தவொரு மோதலும் உலகளாவிய பொருளாதாரத்தையும் பாதிக்கக்கூடும்.
</p><p>
சமீபத்தில் ஈரான் தனது புதிய ட்ரோன் உத்தியை வெளிப்படுத்தி, அமெரிக்கா மற்றும் கூட்டணி நாடுகளின் வான்வழி பாதுகாப்பை சவாலுக்கு உள்ளாக்கியுள்ளது. </p><p>இதனால், பிராந்தியத்தில் இராணுவ நிலைமை மிகவும் பதற்றமானதாக மாறியுள்ளது.

இந்த சூழ்நிலை, மத்திய கிழக்கு பிராந்தியத்தின் அமைதிக்கும், உலகளாவிய பாதுகாப்பிற்கும் சவாலை ஏற்படுத்தியுள்ளது.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-16T21:30:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[துபாய் மத்தியப் பகுதியில் அடுத்தடுத்து பலத்த வெடிச்சத்தம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/a-series-of-loud-explosions-in-central-dubai-1784232732"></link>
            <id>https://jvpnews.com/article/a-series-of-loud-explosions-in-central-dubai-1784232732</id>
            <summary type="text">துபாயின் மத்திய (Central Dubai) பகுதியில் அடுத்தடுத்து பலத்த வெடிச்சத்தங்கள் கேட்கப்பட்டதாக ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம், அப்பகுதியில் இருந்த சாட்சிகளை...</summary>
            <content type="html"><![CDATA[<p>துபாயின் மத்திய (Central Dubai) பகுதியில் அடுத்தடுத்து பலத்த வெடிச்சத்தங்கள் கேட்கப்பட்டதாக ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம், அப்பகுதியில் இருந்த சாட்சிகளை மேற்கோள்காட்டி அவசரத் தகவல் வெளியிட்டுள்ளது.</p><p>

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்கனவே பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், இந்த வெடிச்சத்தங்கள் துபாய் நகரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/50abf134-0f55-407c-b346-8ce49e23e712/26-6a593b1dc3893.webp' /></p><p> </p><p>எனினும், வெடிச்சத்தங்களுக்கான துல்லியமான காரணம், உயிரிழப்புகள், காயமடைந்தோர் அல்லது சொத்துச் சேதம் தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.

பாதுகாப்புப் படையினரும், உள்ளூர் அதிகாரிகளும் சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். </p><p>சம்பவத்தின் பின்னணி மற்றும் பாதிப்புகள் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
</p><p>
இந்தச் சம்பவம், அமெரிக்கா–ஈரான் மோதல் மற்றும் அதனுடன் தொடர்புடைய பிராந்திய பாதுகாப்பு பதற்றம் அதிகரித்துள்ள சூழலில் இடம்பெற்றுள்ளது. </p><p>இருப்பினும், துபாயில் கேட்கப்பட்ட வெடிச்சத்தங்கள் எந்தச் சம்பவத்துடன் தொடர்புடையவை என்பது இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை</p>]]></content>
            <updated>2026-07-16T21:27:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[சவர்க்கார பொதிகளில் புதிய தகவல்கள் கட்டாயம் ; நுகர்வோர் அதிகார சபை விடுத்துள்ள உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/new-information-mandatory-on-detergent-packages-1784237189"></link>
            <id>https://jvpnews.com/article/new-information-mandatory-on-detergent-packages-1784237189</id>
            <summary type="text">சந்தையில் விற்பனை செய்யப்படும் சில வகை சவர்க்காரங்களின் இறக்குமதி, உற்பத்தி, களஞ்சியப்படுத்தல், விநியோகம் மற்றும் விற்பனை நடவடிக்கைகளின் போது, அவற்றின...</summary>
            <content type="html"><![CDATA[<p>சந்தையில் விற்பனை செய்யப்படும் சில வகை சவர்க்காரங்களின் இறக்குமதி, உற்பத்தி, களஞ்சியப்படுத்தல், விநியோகம் மற்றும் விற்பனை நடவடிக்கைகளின் போது, அவற்றின் பொதியிடல் மற்றும் லேபிள்களில் குறிப்பிட்ட தகவல்களை கட்டாயமாக குறிப்பிடும் வகையில் புதிய விதிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.</p><p>
</p><p></p><p>நுகர்வோர் விவகார அதிகார சபையினால் வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக இந்த புதிய உத்தரவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.</p><p>

2003 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க நுகர்வோர் விவகார அதிகார சபைச் சட்டத்தின் 10(1)(அ) பிரிவின் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cf8cf91d-ce61-4f1b-aa73-6efc554a3fbe/26-6a594c86b9723.webp' /></p><p>இதன்படி, சவர்க்கார உற்பத்தியாளர்கள், இறக்குமதியாளர்கள், விநியோகஸ்தர்கள், களஞ்சியப்படுத்துவோர் மற்றும் வர்த்தகர்கள் அனைவருக்கும் இந்த புதிய ஒழுங்குவிதிகள் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
புதிய விதிமுறைகளுக்கு அமைய, சவர்க்காரத்தின் உற்பத்திப் பெயர் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் அல்லது அவற்றில் ஏதேனும் இரண்டு மொழிகளிலும் பிரதான சட்டகத்தில் (Main Panel) தடித்த எழுத்துக்களில் குறிப்பிடப்பட வேண்டும்.
</p><p>
மூன்றாவது மொழியில் உள்ள தகவல் பொதியின் வேறு ஏதேனும் ஒரு பகுதியில் குறிப்பிடப்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><p>அத்துடன், பொதியிடப்படும் போது குறித்த சவர்க்காரத்தில் உள்ள மொத்த கொழுப்புப் பொருளின் அளவு சதவீதமாக (%) தெளிவாகவும் வெளிப்படையாகவும் 2 மில்லிமீற்றருக்கு குறையாத அளவிலான தடித்த எழுத்துக்களில் அச்சிடப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p></p><p>இந்த புதிய விதிமுறைகள் குழந்தைகளுக்கான சவர்க்காரம், உடலுக்கு பயன்படுத்தும் சவர்க்காரம், முகச்சவர சவர்க்காரம், கார்போலிக் சவர்க்காரம், சலவைச் சவர்க்காரம், குளியல் கட்டி மற்றும் மென் சவர்க்காரம் உள்ளிட்ட பல வகையான சவர்க்காரங்களுக்கு பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

நுகர்வோர் விவகார அதிகார சபையின் பதில் தலைவர் எஸ்.எம்.டீ. சூரியகுமாரவின் பரிந்துரைக்கு அமைய, இந்த புதிய ஒழுங்குவிதிகள் 2027 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 9 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அமுல்படுத்தப்படவுள்ளதாக வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
</p><p>
நுகர்வோருக்கு தயாரிப்பு தொடர்பான தெளிவான தகவல்களை வழங்குவதையும், சந்தையில் தரநிலைகளை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-16T21:26:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[தான் தூக்கிய குழந்தையே தனக்கு எதிராக களமிறங்கும் என மெஸ்ஸி நினைத்திருப்பாரா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/messi-is-fighting-against-the-child-he-raised-1784236235"></link>
            <id>https://jvpnews.com/article/messi-is-fighting-against-the-child-he-raised-1784236235</id>
            <summary type="text">கால்பந்து வரலாற்றில் மிகவும் அரிதான மற்றும் எதிர்பாராத சம்பவங்களில் ஒன்றாக, உலகின் தலைசிறந்த வீரர்களில் ஒருவரான லியோனல் மெஸ்ஸி தனது இளம் வயதில் தூக்கி...</summary>
            <content type="html"><![CDATA[<p>கால்பந்து வரலாற்றில் மிகவும் அரிதான மற்றும் எதிர்பாராத சம்பவங்களில் ஒன்றாக, உலகின் தலைசிறந்த வீரர்களில் ஒருவரான லியோனல் மெஸ்ஸி தனது இளம் வயதில் தூக்கிய குழந்தை இன்று அவருக்கே எதிராக களமிறங்கும் நிலை உருவாகியுள்ளது.</p><p>
</p><p></p><p>2007 ஆம் ஆண்டு 20 வயதான லியோனல் மெஸ்ஸி, பார்சிலோனாவின் கேம்ப் நௌ மைதானத்தில் நடைபெற்ற ஒரு தொண்டு நிகழ்வின் போது ஐந்து மாத குழந்தையான லமின் யமாலை கைகளில் தூக்கி புகைப்படம் எடுத்த சம்பவம் தற்போது மீண்டும் உலகளவில் பேசுபொருளாகியுள்ளது.
</p><p>
அந்த புகைப்படங்கள் உண்மையானவை எனவும், அவை 2008 ஆம் ஆண்டுக்கான தொண்டு நாட்காட்டி ஒன்றுக்காக எடுக்கப்பட்டவை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f7b71598-6bc4-470a-b342-9b951573246e/26-6a5948cc31ba4.webp' /></p><p>உள்ளூர் ஸ்பெயின் செய்தித்தாளான டயாரியோ ஸ்போர்ட், யுனிசெஃப் (UNICEF) உடன் இணைந்து இந்த தொண்டு முயற்சியை முன்னெடுத்திருந்தது. நிதி திரட்டும் நோக்கில் பார்சிலோனா முதல் அணியின் வீரர்களை உள்ளூர் குழந்தைகளுடன் இணைத்து புகைப்பட அமர்வு நடத்தப்பட்டது.
</p><p>
அந்த நிகழ்வில் பங்கேற்க லமின் யமாலின் குடும்பமும் வாய்ப்பு பெற்றது. மியாட்டரோவின் ரோகாஃபோண்டா பகுதியைச் சேர்ந்த யமாலின் குடும்பம், சீரற்ற முறையில் நடைபெற்ற தெரிவு முறையின் மூலம் இந்த வாய்ப்பைப் பெற்றதாக கூறப்படுகிறது.
</p><p>
அப்போது ஐந்து மாத குழந்தையாக இருந்த லமின் யமால், எதிர்பாராத விதமாக மெஸ்ஸியுடன் இணைக்கப்பட்டார். அந்த நேரத்தில் இளம் வீரராக இருந்த மெஸ்ஸிக்கு குழந்தையுடன் எவ்வாறு பழகுவது என்பது தெரியாமல் சற்று தயக்கமாக இருந்ததாக புகைப்படக் கலைஞர் ஜோன் மான்ஃபோர்ட் பின்னர் தெரிவித்திருந்தார்.</p><p>

மெஸ்ஸி அப்போது மிகவும் அமைதியான மற்றும் கூச்ச சுபாவமுடையவராக இருந்ததாகவும், குழந்தையை எவ்வாறு தூக்குவது என்பது குறித்து ஆரம்பத்தில் தயக்கம் காட்டியதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.</p><p> பின்னர் யமாலின் தாயார் ஷீலா எபானா உதவி செய்து அந்த தருணத்தை எளிதாக்கியுள்ளார்.

காலப்போக்கில் அந்த புகைப்படங்கள் அதிகம் கவனிக்கப்படாமல் இருந்த நிலையில், 2024 ஆம் ஆண்டு யூரோ கால்பந்து தொடரின் போது அவை மீண்டும் சமூக ஊடகங்களில் வைரலானது.
</p><p>
லமின் யமாலின் தந்தை மௌனீர் நஸ்ராவி, அந்தப் புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து, "இரண்டு ஜாம்பவான்களின் தொடக்கம்" என்ற கருத்தை வெளியிட்டிருந்தார்.</p><p>

அதன் பின்னர் ரசிகர்கள், மெஸ்ஸி அப்போது அந்தக் குழந்தைக்கு தனது கால்பந்து திறமையின் "ஆசீர்வாதத்தை" வழங்கியதாக நகைச்சுவையாக கருத்துகளை பகிர்ந்து வந்தனர்.</p><p>

இன்று ஸ்பெயின் அணியின் முக்கிய வீரராக உருவெடுத்துள்ள லமின் யமால், தனது இளம் வயதிலேயே உலக கால்பந்து அரங்கில் மிகப்பெரிய கவனத்தை பெற்றுள்ளார்.</p><p> மறுபுறம், அர்ஜென்டினா அணியை வழிநடத்திய லியோனல் மெஸ்ஸி கால்பந்து வரலாற்றின் மிகச்சிறந்த வீரர்களில் ஒருவராகத் திகழ்கிறார்.

ஒரு காலத்தில் மெஸ்ஸியின் கைகளில் இருந்த குழந்தை, பல ஆண்டுகளுக்குப் பின்னர் அதே கால்பந்து மேடையில் அவருக்கு எதிரான போட்டியாளராக நிற்பது, விளையாட்டு உலகின் மறக்க முடியாத சுவாரஸ்யமான கதைகளில் ஒன்றாக மாறியுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-16T21:10:42+00:00</updated>
        </entry>
    </feed>
