<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-07-14T13:27:03+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Shan</name>
            </author>
            <title type="text"><![CDATA[இராணுவ ஆக்கிரமிப்பில் பறிப்போன பூர்வீகக் காணிகள் - நிர்கதியாக்கப்பட்ட மக்களின் கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/attention-grabbing-protest-in-mullaitivu-for-land-1784034158"></link>
            <id>https://tamilwin.com/article/attention-grabbing-protest-in-mullaitivu-for-land-1784034158</id>
            <summary type="text">முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட
கேப்பாப்பிலவில், இராணுவ ஆக்கிரமிப்பில் உள்ள தமது பூர்வீகக் காணிகளை
விடுவிக...</summary>
            <content type="html"><![CDATA[<p>முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட
கேப்பாப்பிலவில், இராணுவ ஆக்கிரமிப்பில் உள்ள தமது பூர்வீகக் காணிகளை
விடுவிக்கக் கோரி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. </p><p>

இந்த போராட்டமானது, இன்றைய தினம்(14.07.2026) 21ஆவது நாளாக இரண்டாம் கட்டமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.</p><p></p><h2> 

மக்களின் கோரிக்கை</h2><p>
இதன்போது, கிழக்கு மாகாண காணி மீட்புக்கான வலையமைப்பு அணியினர்
நேரில் கலந்துகொண்டு தமது ஆதரவினை வெளிப்படுத்தியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/418fea48-cef8-4cd2-a481-f4ddfb36992d/26-6a56340063a8d.webp' /></p><p> </p><p>

தமது பூர்வீக நிலங்களையும் வாழ்வாதாரத்தையும் இழந்த
கேப்பாப்பிலவு மக்கள், பல ஆண்டுகளாக அமைதியான ஜனநாயக வழியில் பல்வேறு
போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
</p><p>
தங்களது சொந்த நிலங்களில் மீளக் குடியேறவும், விவசாயம் உள்ளிட்ட வாழ்வாதார
நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் முடியாத நிலை காரணமாக அவர்கள் தொடர்ந்தும்
பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருவதாகவும் போராட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர். </p><h2> 

21 ஆவது நாளாக தொடரும் போராட்டம்</h2><p>
கேப்பாப்புலவு பூர்வீகக் காணிகள் தொடர்பான நீண்டகால பிரச்சினைக்கு இதுவரை
நிரந்தரமான தீர்வு எட்டப்படாத நிலையில், தங்களது உரிமைகளை மீண்டும்
வலியுறுத்தும் நோக்கில் மக்கள் இரண்டாவது கட்ட போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d17c083a-af82-4cfc-bca9-56d6fb766cff/26-6a5634015cb6e.webp' /></p><p>
</p><p>
இந்த போராட்டம் இன்று(14) 21ஆவது நாளாகவும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு
வரும் வேளையில், கேப்பாப்பிலவில் 55 குடும்பங்களுக்கு சொந்தமான 59.5 ஏக்கர் பூர்வீக வாழ்விடக்
காணிகள் நீண்டகாலமாக இராணுவ ஆக்கிரமிப்பின் கீழ் உள்ள குறித்த காணிகளை
உடனடியாக மக்களிடம் மீள ஒப்படைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.</p><p> 


கேப்பாபிலவு மக்களினுடைய பூர்வீக காணிகள் விடுவிக்கப்படும் வரை அவர்களால்
முன்னெடுக்கப்படும் போராட்டத்திற்கு வலுசேர்க்கும் வரை வடகிழக்கு மாகாணங்களில்
இருக்கும் சிவில் அமைப்புக்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மற்றும் அரசியல்
வாதிகள் தொடர்ச்சியாக தமது ஆதரவினை வழங்க வேண்டும் என்றும் கிழக்கு மாகாண காணி மீட்புக்கான வலையமைப்பு அணியினர் வலியுறுத்தியுள்ளனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/157a098f-1f60-44a4-a5bc-e1fc413d6935/26-6a5634023490f.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b5c42b6b-3241-42d8-a89c-5fac122dc93e/26-6a5634030a2dc.webp' /></p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-14T13:26:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepachelvan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கேப்பாபுலவு மக்கள் நிலத்திற்காகப் பத்தாண்டுகளாகவா போராடுகின்றனர்...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/of-keppapulavu-are-fighting-for-land-1784035433"></link>
            <id>https://ibctamil.com/article/of-keppapulavu-are-fighting-for-land-1784035433</id>
            <summary type="text">ஈழத்தின் முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாபுலவு என்பது ஒரு கிராமத்தின் பெயராக மாத்திரமின்றி, தமிழர் தாயகத்தில் நில உரிமைக்காக தொடர்ந்து முன்னெடுக்கப்பட...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈழத்தின் முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாபுலவு என்பது ஒரு கிராமத்தின் பெயராக மாத்திரமின்றி, தமிழர் தாயகத்தில் நில உரிமைக்காக தொடர்ந்து முன்னெடுக்கப்படும் மிக நீண்டகால மக்கள் போராட்டத்தின் அடையாளமாக மாறியிருக்கிறது. </p><p>போர் முடிந்து பதினேழு ஆண்டுகள் கடந்தும், மக்கள் தமது சொந்த நிலங்களுக்குள் நுழைய முடியாமல் இராணுவ முகாம்களின் வேலிகளுக்கு வெளியே நின்று நீதி கேட்கும் துயரமான காட்சியை ஈழம் இன்னமும் சுமக்கிறது எகன்பதற்கு கேப்பாபுலவு ஒரு சாட்சி. </p><p>அந்தப் போராட்டம் இப்போது பத்தாண்டுகளைத் தாண்டியிருக்கிறது. ஒரு தலைமுறையின் குழந்தைகள் தமது முன்னோரின் நிலங்களை கதைகளில் மட்டுமே கேட்டு வளர்ந்திருக்கிறார்கள் என்பது ஈழ நிலத்தின் பெருந்துயரம்.</p><p></p><h2>கேப்பாபுலவின் கதை</h2><p>நாட்டின் அபிவிருத்திக்காக மக்கள் நிலத்தை தியாகம் செய்ய வேண்டும் என்று யுத்தம் முடிந்த பின்னர் வன்னி மாவட்ட படைத்தளபதியாக இருந்த மேஜர் ஜெனரல் பொனிபஸ் பெரேரா ஒருமுறை குறிப்பிட்டார். </p><p>கேப்பாபுலவு மக்கள் தமது சொந்த இடங்களை மறந்துவிட வேண்டும் என்றும் சொன்னார். இதுதான் போரை நடத்தியவர்களின் நிலம்மீதான
ஆக்கிரமிப்பு மனநிலை. ஆனால் இந்தச் சொற்கள் கேப்பாபுலவு மக்களின் போராட்டத்தை மிகவும் உக்கிரமாக்கியதே தவிர, அவர்களின் போராட்டத்தை ஒடுக்கிவிடவில்லை. </p><p>பாரிய அரச அழுத்தங்கள், அச்சுறுத்தல்களை எதிர்கொண்டு நெடிய போராட்டத்தை கேப்பாபுலவு மக்கள் நடாத்தி வந்திருக்கிறார்கள். &nbsp;

முள்ளிவாய்க்கால் யுத்தம் முடிவடைந்து பதினேழு ஆண்டுகள் ஆகப்போகின்றன என்றால், கேப்பாபுலவை அந்த மக்கள் இழந்தும் அதற்காகப் போராடியும் பதினேழு ஆண்டுகள்தான். </p><p>எம்மை சுட்டுக்கொன்றாலும் நிலத்திற்கான போராட்டத்திலிருந்து பின் வாங்கப் போவதில்லை என்று இந்த மக்கள் தொடர் எதிர்ப்புப் போராட்டத்தை பத்தாண்டுகளாக முன்னெடுக்கின்றனர். </p><p>2017இல், கேப்பாபுலவின் பிலக்குடியிருப்பு மக்களின் தொடர்ச்சியான போராட்டத்தின் ஊடாக சுமார் எண்பது ஏக்கர் நிலப் பகுதியை இந்த மக்கள் மீட்டிருந்தனர். 2017ஆம் ஆண்டு தை மாத்தில் இந்த மக்கள் தமது போராட்டத்தை பிலக்குடியிருப்பில் ஆரம்பித்தனர். </p><p>பிலக்குடியிருப்பு விமான படை முகாமின் முன்பாக தகரக் கொட்டில்களில் இருந்து பனியிலும் வெயிலிலும் குழந்தைகளை வைத்துக் கொண்டு இந்த மக்கள் நடத்திய போராட்டம் அவர்களின் பூர்வீக நிலத்தை வெல்ல வைத்தது.</p><p></p><h2>தொடர் போராட்டம்</h2><p>பெண்கள், முதியவர்கள், குழந்தைகள் என குடும்பம் குடும்பமாக அவர்கள் வீதியோரத்தில் அமர்ந்தனர். வெயிலும் மழையும் அவர்களைத் தடுக்கவில்லை. பல அரசுகள் மாறின. பல அமைச்சர்கள் வாக்குறுதிகள் அளித்தனர். </p><p>அதிகாரிகள் பேச்சுவார்த்தைகள் நடத்தினர். ஆனால் நிலம் மக்களிடம் கையளிக்கப்படவில்லை. அதனால் இந்தப் போராட்டம் மக்களின் வாழ்வுரிமை வரலாறாக மாறியிருக்கிறது. கேப்பாபுலவு மக்களின் கோரிக்கை மிகவும் தெளிவானது. </p><p>மாற்றுக் காணி வேண்டாம். நஷ்டஈடு வேண்டாம். எமது முன்னோர்கள் வாழ்ந்த நிலம், தமது குடும்பத்தின் சொத்து, தமது நினைவுகளின் வாழ்நிலம் மட்டுமே வேண்டும் என்பதுதான் அம் மக்களின் பெருங்குரல். &nbsp;
</p><p>
அந் நிலம் மக்களின் நிலம். கிணறுகளில் நீர் எடுத்தும் தம் ஊரின் ஆலயங்களில் வழிபட்டும் தம் உறவினர்கள் வாழ்ந்தும் விதைந்துமான &nbsp;அந் நிலம் அவர்களின் சொந்த நிலம். எனவே அந்த நிலத்திற்கு மாற்றாக வேறு எதையும் ஏற்க முடியாது என்பதே மக்களின் உறுதியான குரல்.</p><p> 2017இல் தொடங்கிய இம் மக்களின் போராட்டம் இன்னமும் தொடர்கிறது. சமீபத்திலும் பாரியபோராட்டம் நடந்தது. கடந்த ஜூன் 05ஆம் நாளன்று கேப்பாபுலவு மக்கள் இராணுவ முகாமின் முன்பாக மீண்டும் ஒன்றுகூடி போராட்டத்தை தீவிரப்படுத்தினர். </p><p>பல நாட்களாக அவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமது நிலங்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்பதற்காக உண்ணாவிரதப் போராட்டத்தையும் ஆரம்பித்துள்ளனர்.&nbsp;</p><p></p><h2>நிலமின்றி வாழும் துயரம்</h2><p>இராணுவம் ஆக்கிரமித்திருக்கும் தமது நிலங்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும், மக்களின் பொறுமையை மேலும் சோதிக்க வேண்டாம் என்றும் அவர்கள் அண்மைய போராட்டத்தில் வலியுறுத்தினர். </p><p>போராட்டத்தில் பெண்களும் முதியவர்களும் அதிகளவில் பங்கேற்று, தமது நிலமின்றி வாழும் வாழ்க்கையின் துயரத்தை மீண்டும் உலகிற்கு எடுத்துரைத்தனர். இந்தப் போராட்டம் சமூக ஊடகங்களிலும் பரவலாகக் கவனம் பெற்றது.
</p><p>
இன்றும் கேப்பாபுலவில் வாழும் குடும்பங்களின் நிலை மிகவும் துயரமாகவே நீள்கிறது. தமது சொந்த விவசாய நிலங்களை இழந்ததால் பல குடும்பங்கள் கூலித்தொழிலையே நம்பியிருக்கின்றன. விவசாயம் செய்து வாழ்ந்த குடும்பங்கள் தமது வாழ்வாதாரத்தை இழந்துள்ளன.</p><p> இளைஞர்கள் வேலைவாய்ப்பின்றி அலைகின்றனர். பெண்கள் குடும்பத்தை நடத்த பெரும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். வயதான பெற்றோர்கள் தாங்கள் பிறந்த மண்ணைப் பார்த்தே இறக்க வேண்டும் என்ற ஏக்கத்துடன் வாழ்கின்றனர். பலர் &nbsp;இறந்தும் போயுள்ளனர். </p><p>பல குழந்தைகள் தமது பெற்றோர் கூறும் கதைகளில்தான் தங்கள் சொந்த நிலத்தை அறிந்திருக்கின்றனர். ஒரு சமூகத்தின் பொருளாதாரமும், பண்பாடும், நினைவுகளும், மரபும் நிலத்துடன் இணைந்திருக்கின்றன என்பதை கேப்பாபுலவு மக்களின் வாழ்க்கை நினைவூட்டுகிறது.</p><p></p><h2>வாய்ச் சொல்லில் நல்லிணக்கம்</h2><p>ஒரு புறம் மக்கள் நிலமின்றி தவிக்கும்போது, மறுபுறம் அந்த நிலங்கள் இராணுவப் பயன்பாட்டில் இருப்பதைப் பார்க்கும்போது மக்களின் மனவேதனையை மேலும் பெருகுகிறது.</p><p> போருக்குப் பிறகு நல்லிணக்கம் பற்றி அரசுகள் தொடர்ந்து பேசினாலும், நல்லிணக்கத்தின் அடிப்படை நிபந்தனையான நீதி இன்னும் வழங்கப்படவில்லை என்பதே கேப்பாபுலவு மக்களின் விடயத்தில் தெளிவாகத் தெரிகின்ற செய்தியாகும்.</p><p> நிலம் மீளக் கிடைக்காமல் நல்லிணக்கமும் நம்பிக்கையும் உருவாக முடியாது என்பதை இந்தப் போராட்டம் தெளிவாகச் சுட்டுகிறது.

அத்துடன் கேப்பாபுலவு மாத்திரன்றி, வலி வடக்கு, மயிலிட்டி, வட்டுவாகல் போன்ற பகுதிகளிலும் மக்கள் தமது நிலங்களை மீட்க தொடர்ந்து போராடி வருகின்றனர்.</p><p> இந்த எல்லாப் போராட்டங்களும் ஒரே உண்மையைத்தான் சொல்கின்றன. நிலம் என்பது வெறும் சொத்தல்ல, அது வாழ்வுரிமை. உண்மையில் நிலமென்பது அடையாளமாக, வரலாறாக நினைவாக, &nbsp;எதிர்காலமாக நம் வாழ்வின் எல்லாமுமாக உயிர்பிணைத்து நிற்கின்றது.</p><p></p><h2>நிலத்தை ஆக்கிரமிப்பது மனித உரிமை மீறல்</h2><p>ஒரு ஜனநாயக அரசின் கடமை, மக்களின் சொத்துரிமையை மதிப்பதும், நீதியை நிலைநிறுத்துவதுமே எனப்படுகிறது. ஆனால் போர் முடிந்து இவ்வளவு ஆண்டுகள் கடந்த பின்னரும் பொதுமக்களின் காணிகளை இராணுவக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாத விசயம். </p><p>நில உரிமை என்பது அடிப்படை மனித உரிமை. அதை மறுப்பது, போரின் காயங்களை தொடர்ந்து உயிரோடு வைத்திருக்கிற செயல்.

எனவே கேப்பாபுலவு மக்களின் பத்தாண்டு கால அமைதியான போராட்டத்திற்கு இலங்கை அரசு இனியும் தீர்வு வழங்காமல் இருக்க இயலாது. </p><p>மீதமுள்ள அனைத்து காணிகளையும் எந்த நிபந்தனையும் இன்றி உடனடியாக உரிமையாளர்களாக மக்களிடம் கையளிக்க வேண்டும். தமது மண்ணில் மீண்டும் வீடு கட்டி, விவசாயம் செய்து, தமது குழந்தைகளுடன் வாழும் கனவும் உரிமையும் கேப்பாபுலவு மக்களுக்கு கிடைத்தாக வேண்டும். &nbsp;</p><p>

தம் உதிரத்தை, வியர்வையை கொண்டு உருவாக்கிய சொந்த நிலத்திற்காக உயிரையும் விடுவோம் என்று உறுதி பூண்டு போராடுகிற கேப்பாபுலவு மக்களுக்கு விரைவில் தீர்வை வழங்க வேண்டும். </p><p>எங்கள் தேசத்தில் இன்னமும் மக்கள் நிலத்திற்காகப் போராடுகிறார்கள். எங்கள் தேசத்தின் உறவுகள் இன்னமும் சிறைகளில் வாடுகின்றனர். எங்கள் தேசத்தின் உரிமைகளுக்காக இன்னமும் போராடுகிறோம். ஆட்சிகள் பல மாறி, ஜனாதிபதிகள் பலர் மாறிய பின்னரும் ஈழத் தமிழர்களின் நிலைதான் இன்னமும் மாறாமல் இருக்கிறது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p>
</p><p>
</p><p>
</p>]]></content>
            <updated>2026-07-14T13:24:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மோஜ்தபா கொமெய்னி உயிர் பிழைப்பதற்கு 90 சதவிகிதம் வாய்ப்பில்லை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/90-percent-mojtaba-khomeini-will-not-survive-1784016137"></link>
            <id>https://canadamirror.com/article/90-percent-mojtaba-khomeini-will-not-survive-1784016137</id>
            <summary type="text">&amp;nbsp; ஈரானின் ஆன்மீக தலைவர் மோஜ்தபா கொமெய்னி உயிர் பிழைப்பதற்கு 90 சதவிகிதம் வாய்ப்பில்லை என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளமை பர...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; ஈரானின் ஆன்மீக தலைவர் மோஜ்தபா கொமெய்னி உயிர் பிழைப்பதற்கு 90 சதவிகிதம் வாய்ப்பில்லை என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
</p><p>


அமெரிக்கா - ஈரான் இடையே உச்சகட்டப் போர்ப் பதற்றம் நிலவி வரும் சூழலில், “ஹோர்முஸ் நீரிணையில் வணிகக் கப்பல்களுக்கு அமெரிக்கா இனி பாதுகாப்பு அளிக்கும். ஆனால், அச்செலவினங்களுக்கு ஈடாக அவ்வழியாகக் கொண்டு செல்லப்படும் சரக்குகளுக்கு 20 சதவீத கட்டணம் வசூலிக்கப்படும்” என்று ட்ரம்ப் நேற்று அறிவித்திருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/00b633ed-6f65-4509-af10-6e12bb218a71/26-6a55ed10b40ea.webp' /></p><h2>&nbsp;இறுதிச் சடங்கு நிகழ்வில் கூட கலந்துகொள்ளவில்லை&nbsp;</h2><p>


இது தொடர்பாக ஃபாக்ஸ் நியூஸ் செய்தி நிறுவனத்தின் நேர்காணலில் பேசிய ட்ரம்ப் தெரிவித்ததாவது:



“ஈரானின் கடற்படை, விமானப்படை என அனைத்தும் அழிந்துவிட்டன. அவர்களின் வான்வழித் தடுப்பு அமைப்புகள் செயலிழந்துவிட்டன. </p><p>அவர்களின் தலைவர்கள் அனைவரும் கொல்லப்பட்டுவிட்டனர். கொமெய்னி இறந்துவிட்டார். மோஜ்தபா கொமெய்னி உயிர் பிழைக்க 90 சதவிகிதம் வாய்ப்பில்லை” எனத் தெரிவித்தார்.
</p><p>


ஈரானின் ஆன்மீக தலைவர் அயதுல்லா அலி கொமெய்னி, அமெரிக்காவின் வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்ட பிறகு, அவரது மகன் மோஜ்தபா கொமெய்னி, புதிய ஆன்மீக தலைவராக அறிவிக்கப்பட்டார்.</p><p>



இந்நிலையில், அமெரிக்காவின் வான்வழித் தாக்குதல் ஒன்றில் மோஜ்தபா கொமெய்னியும் பலத்த காயமடைந்ததாகவும், தற்போது சிகிச்சைப் பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.



இதன்காரணமாக, ஈரான் மற்றும் இராக்கில் கடந்த வாரம் நடைபெற்ற அயதுல்லா அலி கொமெய்னியின் இறுதிச் சடங்கு நிகழ்வில் கூட அவர் கலந்துகொள்ளவில்லை.
</p><p>


இந்த சூழலில், மோஜ்தபா கொமெய்னி 90 சதவிகிதம் உயிர் பிழைக்க வாய்ப்பில்லை என ட்ரம்ப் கூறியுள்ளார்.</p>]]></content>
            <updated>2026-07-14T13:16:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ் தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலையில் நோயாளர் விடுதி திறப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/patient-ward-jaffna-tellippalai-cancer-hospital-1784034958"></link>
            <id>https://jvpnews.com/article/patient-ward-jaffna-tellippalai-cancer-hospital-1784034958</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளர்களுக்கு மருத்துவ வசதியுடன் கூடியதான நோயாளர் விடுதி யாழ்ப்பாணம் தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலையில் இ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளர்களுக்கு மருத்துவ வசதியுடன் கூடியதான நோயாளர் விடுதி யாழ்ப்பாணம் தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலையில் இன்றைய தினம்(14) திறந்து வைக்கப்பட்டுள்ளது.</p><p>

அவுஸ்ரேலியாவின் மனிதநேயத்திற்கான பாலம் எனும் அமைப்பினால் சுமார் 03 கோடி ரூபாய் நிதியில் முதற்கட்டமாக அமைக்கப்பட்ட விடுதியின் ஒரு பகுதியை இலங்கைக்கான அவுஸ்ரேலிய உயர்ஸ்தானிகர் மேத்யூ டக்வொர்த் ,</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1d6a7916-c53f-4236-a26d-bdebaefeb87d/26-6a5636902f6bd.webp' /></p><p> கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் ,யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறீபவானந்தராஜா, அவுஸ்திரேலியா பாலம் அமைப்பின் பணிப்பாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு திறந்து வைத்துள்ளனர்.</p><p>

இறப்பிற்கு முன் தமது இறுதிக்காலத்தினை மருத்துவ உதவியுடன் கழிப்பதற்காக மருத்துவர்களின் பரிந்துரையுடன் கூடிய இந்த விடுதியில், யாழ்.மாவட்டத்தில் எந்த பகுதியில் உள்ளவர்களும் இவ்வசதியை பயன்படுத்தமுடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-14T13:14:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Independent Writer</name>
            </author>
            <title type="text"><![CDATA[எண்ணெய்க்கும் அப்பால் மத்திய கிழக்கில் நடைபெறும் மோதலானது உரத்தில் தொடங்கி உணவை அடைந்து, ஃபாரெக்ஸ் வரையில் எவ்வாறு தொடர் தாக்கத்தை ஏற்படுத்துகிறது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/how-middle-east-conflict-impacts-food-and-forex-1784034711"></link>
            <id>https://ibctamil.com/article/how-middle-east-conflict-impacts-food-and-forex-1784034711</id>
            <summary type="text">Exness-இன் சிரேஷ்ட நிதிச் சந்தை மூலோபாய நிபுணரான இன்கி சோ
அவர்கள் எழுதிய சந்தைப் பகுப்பாய்வு.மத்திய கிழக்கில் நடைபெறும் மோதலின் விளைவுகளைக்
கருத்தில...</summary>
            <content type="html"><![CDATA[<p><b><a href="https://www.exness.com/">Exness</a></b><a>-</a>இன் சிரேஷ்ட நிதிச் சந்தை மூலோபாய நிபுணரான இன்கி சோ
அவர்கள் எழுதிய சந்தைப் பகுப்பாய்வு.</p><p>மத்திய கிழக்கில் நடைபெறும் மோதலின் விளைவுகளைக்
கருத்தில்கொண்டு சந்தைகள் விலைகளை நிர்ணயித்தபோது,
​​எண்ணெய் சார்ந்த விஷயங்கள் பற்றியே அதிக விவாதம் நடந்தது.
</p><p>இருப்பினும், ஹோர்முஸ் நீரிணை கச்சா எண்ணெயைவிட மேலும்
அதிகமானவற்றைக் கொண்டு செல்கிறது, மேலும் எரிசக்தி மீதான ஒரு
குறுகிய பார்வை, அந்தக் கட்டுப்பாட்டுப் பகுதியைச் சுற்றி உருவாகும்
பரந்த பேரியல் கண்ணோட்டத்தைக் கவனிக்கத் தவறுகிறது.
</p><p>நைதரசன் அடிப்படையிலான உரங்களுக்கும் அவற்றை உற்பத்தி
செய்வதற்கான மூலப்பொருளான இயற்கை எரிவாயுவுக்கும்
மிகப்பெரிய போக்குவரத்து வழித்தடங்களில் ஒன்றாகவும் இந்த
நீரிணை திகழ்கிறது. </p><p>உரச் சரக்குகளிலிருந்து உணவுப்பொருள்
விலையேற்றத்திற்கும், உணவுப்பொருள் விலையேற்றத்திலிருந்து DXY-
க்கும் ஏற்படும் பரிமாற்றத்தில்தான், சில்லறை மற்றும் பேரியல்
கண்ணோட்டத்தை மையமாகக் கொண்ட வர்த்தகர்களுக்கான
உண்மையான பேரியல் கதை மறைந்திருக்கிறது.</p><h3>கச்சா எண்ணெய்க்கு அப்பாற்பட்ட கட்டுப்பாட்டுப் பகுதி</h3><p>உலகளாவிய உர வர்த்தகத்தில் ஏறத்தாழ 20% முதல் 30% வரை
ஹோர்முஸ் நீரிணை வழியாகத்தான் போக்குவரத்தைச் செய்கிறது.
இதில், உலகளாவிய யூரியா ஏற்றுமதிகளில் சுமார் 35%, நைதரசன்
அடிப்படையிலான உரங்களுக்கான முதன்மை மூலப்பொருளான கடல்
வழியாகச் செல்லும் LNG-இல் சுமார் 20% ஆகியவை அடங்கும்.</p><p>
சந்தையின் கவனத்தில் ஒரு சிறு பகுதியை மட்டுமே பெற்றாலும், அது

யூரியாவையும் அமோனியாவையும் கச்சா எண்ணெய்க்கு இணையான
அபாயப் பிரிவில் வைக்கிறது.
சவூதி அரேபியா, கத்தார், ஈரான், பஹ்ரைன், ஓமான் ஆகியவை இந்த
நீரிணை வழியாக ஏற்றுமதி செய்யும் முதன்மை நாடுகளாகும்.
</p><p>இவற்றில், சவூதி அரேபியா மட்டும் உலகளாவிய அமோனியா
ஏற்றுமதியில் ஏறத்தாழ 16% பங்களிப்பை அளிக்கிறது. ஹோர்முஸைச்
சார்ந்துள்ள ஐந்து வளைகுடா நாடுகள் ஒன்றிணைந்து, உலகளாவிய உர
ஏற்றுமதியில் 8 முதல் 10 சதவீதம் வரை விநியோகம் செய்கின்றன.
</p><p>இது, இறக்குமதி செய்யும் 43 நாடுகள் வழியாக நடைபெறும் ஏறத்தாழ
13.5 பில்லியன் USD மதிப்பிலான வர்த்தகப் பரிமாற்றத்திற்குச்
சமமாகும்.
ஃபெப்ரவரி மாத இறுதியில் மோதல் தீவிரமடைந்ததிலிருந்து, நீரிணை
வழியாகச் செல்லும் போக்குவரத்தானது நெருக்கடிக்கு முந்தைய
காலத்தில் இருந்த அளவுகளைக் காட்டிலும் 95%-க்கும் மேலாகக்
குறைந்துள்ளது, மேலும் பிராந்திய யூரியா உற்பத்தி 55%-இலிருந்து 60%-
ஆகச் சரிந்துள்ளது.</p><h2>உரச் சரக்குகளிலிருந்து உணவு விலையேற்றம் வரை</h2><p>அதிக நைதரசன் தேவைப்படும் பயிர்களே முதலில் இந்த
நெருக்கடியால் முதலில் பாதிப்படைகின்றன. கோதுமை,
மக்காச்சோளம், அரிசி ஆகிய அனைத்தும் யூரியா மற்றும் அமோனியா
உள்ளீடுகளைப் பெருமளவில் சார்ந்துள்ளன, மேலும் இவற்றில் ஏற்படும்
எந்தவொரு பற்றாக்குறையும் பாவனையைக் குறைக்கும்படியோ
அல்லது சிறிய பரப்பளவில் பயிரிடும்படியோ விவசாயிகளைத்
தூண்டுகிறது. </p><p>இதன் விளைவாக, அடுத்த அறுவடைச் சுழற்சியில்
விளைச்சலில் ஏற்படும் மாற்றம் தாமதமாகவே வெளிப்படுகிறது; இது
நுகர்வோரைச் சென்றடைவதற்கு முன்பாகவே பண்டங்களின்
விலைகளில் எதிரொலிக்கிறது.
</p><p>
எண்கள் ஏற்கனவே மாறத் தொடங்கிவிட்டன. ஃபெப்ரவரி மற்றும் மார்ச்
2026-க்கு இடைப்பட்ட காலகட்டத்தில் யூரியாவின் விலை மாதந்தோறும்
சுமார் 46% உயர்ந்துள்ளது என்றும், சில அளவுகோல்கள் ஒரு மெற்றிக்
தொன்னுக்குச் சுமார் 700 USD-ஐ எட்டியது என்றும் உலக வங்கி
தெரிவித்துள்ளது. </p><p>பெஞ்ச்மார்க் எகிப்திய கிரானுலர் யூரியாவும் அதே
காலகட்டத்தில், ஒரு மெற்றிக் தொன்னுக்கு சுமார் 400 USD-இலிருந்து
490 USD-ஆக உயர்ந்தது. கோதுமை விலை 13 சதவீதம் உயர்ந்தது,
மேலும் உலகளாவிய தானிய விலைக் குறியீடு 7 சதவீதம்
அதிகரித்தது.
உலகளவில் மிகப்பெரிய உர நிறுவனங்களில் ஒன்றான Yara, நெருக்கடி
தொடங்கியதிலிருந்து யூரியா விலை 60%-இலிருந்து 70% வரை
அதிகரித்துள்ளதாகவும், இதனால் ஆப்பிரிக்க இறக்குமதியாளர்கள்
அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.</p><p> இந்த
அதிர்ச்சிகள், ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகள்
முழுவதிலும் உள்ள முக்கிய உணவு இறக்குமதியாளர்களின் பயிரிடும்
கால அட்டவணைகளுடன் நேரடியாகப் பொருந்துகின்றன.</p><h3>உணவு அதிர்ச்சி கடுமையாகத் தாக்கும் இடம்</h3><p>உலகளாவிய உர வர்த்தகத்தில் ஏறக்குறைய மூன்றில் ஒரு பங்கு
பாதிக்கப்பட்டுள்ளது, மேலும் அந்த அதிர்ச்சியைத் தாங்கிக்கொள்ள
முடியாத பிராந்தியங்களே இறக்குமதியை அதிகம் சார்ந்துள்ளன.
</p><p>தெற்காசியா மிகவும் பாதிப்புக்குள்ளான தொகுதியாகத் திகழ்கிறது.
இதில் இந்தியா தனது உரத் தேவையில் சுமார் 20%-ஐ வளைகுடா
நாடுகளில் இருந்தும், பாகிஸ்தான் தனது நாட்டில் நைதரசனை
உற்பத்தி செய்யக் கத்தார் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் LNG-ஐ
ஏறக்குறைய முழுமையாகச் சார்ந்துள்ளது.</p><p>
சஹாராவை ஒட்டியுள்ள ஆப்பிரிக்கா மற்றும் வட ஆப்பிரிக்காவின்
சில பகுதிகளிலும் இதே போன்ற பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன, மேலும்
இந்தச் சந்தைகளில் பலவற்றில் 90%-க்கும் அதிகமான உரம் இறக்குமதி
செய்யப்படுகிறது.</p><p> சர்வதேச நாணய நிதியத்தின் கூற்றுப்படி, குறைந்த

வருமானம் கொண்ட பொருளாதாரங்களில் குடும்பச் செலவினங்களில்
உணவுக்காக ஏறக்குறைய 36% செலவிடப்படுகிறது; வளர்ந்த
பொருளாதாரங்களில் இது சுமார் 9%-ஆக உள்ளது. இதன்
காரணமாகவே, மிதமான உள்ளீட்டு அதிர்ச்சிகள் கூட மிகப் பெரிய
விலையேற்றப் பதிவுகளாக மாறுகின்றன.
இதன் பேரியல் விளைவு நமக்கு நன்கு பரிச்சயமான ஒன்றுதான்.
</p><p>உணவுப்பொருள் விலையேற்றம் அதிகரிக்கும்போது, ​​மத்திய
வங்கிகள் பலவீனமான வளர்ச்சிக்கு ஏற்ப இறுக்கமான
கொள்கைகளைக் கையாளும் இக்கட்டான நிலையை
எதிர்கொள்கின்றன; இறக்குமதிச் செலவுகள் அதிகரிப்பதால் நடப்புக்
கணக்குகள் மோசமடைகின்றன; மேலும், உள்ளூர் நாணயங்களின்
மீதான நம்பிக்கையும் சிதைகிறது. </p><p>அதிக உணவு இறக்குமதி
விகிதங்கள் மற்றும் வரையறுக்கப்பட்ட நிதி இருப்புகளின் காரணமாக,
எகிப்து, பங்களாதேஷ், பாகிஸ்தான், நைஜீரியா, இலங்கை ஆகியவை
மிகவும் பாதிப்புக்குள்ளாகும் நாடுகளாகத் தனித்து நிற்கின்றன.</p><p>
"சந்தை இதை ஒரு கச்சா எண்ணெய் சார்ந்த விவகாரமாகப் பார்க்கிறது,
ஆனால், இந்தத் தடையினால் ஏற்படும் பாதிப்புகளில் உர விநியோகம்
தொடர்பான அம்சம் தான், பல அறுவடைச் சுழற்சிகளிலும் தொடர்ந்து
தீவிரமடையக்கூடிய ஒன்றாக உள்ளது," என்கிறார்<a href="https://promotion.exness.com/en-as/brand_rdx/?agent=12045628&amp;app_type=trade&amp;partner_id=12045628&amp;utm_campaign=LK_EN_Brand-Acquisition_Acquisition_Q3L_SEM_Google_Performance_Exness_EM&amp;utm_source=google&amp;utm_medium=cpc&amp;utm_content=733975180734&amp;utm_term=exness.com&amp;adgroupid=130786932629&amp;c=LK_EN_Brand-Acquisition_Acquisition_Q3L_SEM_Google_Performance_Exness_EM&amp;af_c_id=15616414552&amp;gad_source=1&amp;gad_campaignid=15616414552&amp;gbraid=0AAAAADLOwXq5UVo8gnK8J9ok35UcpTKmz&amp;gclid=CjwKCAjwvNfSBhBiEiwAyaGMCY2Nch8zvSFCNHIBJLdNaoJSIZt1yMYTvc_Fr0rZWIynrk2IS39ZlRoCbbUQAvD_BwE" target="_blank"> "http://exness.com/"Exness </a>நிறுவனத்தின் நிதி உள்ளடக்கத் தலைவர்
மைக்கேல் ஸ்டார்க். "இரண்டாம் வரிசை விளைவுகள் வளர்ந்து வரும்
சந்தைத் தரவை அடையும் நேரத்தில், மறுவிலை நிர்ணயம் விரைவாக
நடக்கும் மற்றும் அது அந்த நாணயங்களுக்குச் சார்பாக இருக்காது."</p><h2>வயல்களிலிருந்து DXY-க்கு</h2><p>இங்குதான் பகுப்பாய்வுச் சங்கிலியானது அந்நியச் செலாவணிச்
சந்தையுடன் மீண்டும் இணைகிறது. இறக்குமதி செய்யப்படும் பிரதான
பொருட்களைச் சார்ந்திருக்கும் வளரும் சந்தைகளில் உணவுப்பொருள்
விலையேற்றம் துரிதமையும்போது, ​​டொலரின் மீது மூன்று விதமான
தாக்கங்கள் ஒன்றிணைகின்றன. </p><p>கொள்கை ரீதியான நடவடிக்கைகள்
விலை மாற்றத்திற்குப் பின்னரே செயல்படுவதால், மூலதனம் USD

ஆதிக்கம் செலுத்தும் சொத்துகளை நோக்கிச் சுழல்கிறது, நடப்புக்
கணக்குப் பற்றாக்குறை விரிவடைகிறது, மற்றும் மத்திய வங்கியின்
நம்பகத்தன்மை அழுத்தத்திற்கு உள்ளாகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f68cd05b-2451-456a-8993-9822273f2652/26-6a5635988f2bf.webp' /></p><p><i><a href="https://www.exness.com/" target="_blank">Exness </a>Terminal மூலம் இயக்கப்படும் பிளவு-காட்சி விளக்கப்படம்.</i></p><p>
கடந்தகாலப் போக்கு சீராக உள்ளது. 2007-2008 ஆம் ஆண்டில் கச்சாப்
பொருட்களால் ஏற்பட்ட உணவுப்பொருள் விலை மாற்றத்தின்போது,
​​FAO உணவு விலைக் குறியீடு சுமார் 57% உயர்ந்தது, மேலும்
இறக்குமதியைச் சார்ந்த பொருளாதாரங்கள் அந்தப் பாதிப்புகளைத்
தாங்கிக்கொண்டதால், டொலர் அவ்வப்போது பாதுகாப்பான
வலிமையைக் கண்டது.</p><p> 2010-2011 காலகட்டச் சுழற்சியும் இது போன்ற
ஒரு போக்கைப் பின்பற்றியது; உணவுப் பொருட்களின் விலையில்
ஏற்பட்ட 40% உயர்வு, MENA முழுவதும் அரசியல் ஸ்திரமற்ற
தன்மையை ஊக்குவித்ததுடன், பாதுகாப்பான முதலீடுகளை நாடி
மக்கள் மீண்டும் USD சொத்துகளுக்குள் செல்லவும் வழிவகுத்தது.
</p><p>தற்போதைய அமைப்பு அந்த வார்ப்புருவைப் பிரதிபலிக்கிறது. ஃபெடரல்
ரிசர்வ் மேலும் வட்டி குறைப்புகளைச் சந்தைகள் விலக்கியதால், ஏப்ரல்
2026-இல் US நுகர்வோர் விலைக் குறியீடு -CPI 3.8%-ஆக உயர்ந்தது
மற்றும் டொலர் குறியீடு 98 மற்றும் 99-க்கு இடையில் நிலைபெற்றது.
FAO எச்சரித்துள்ளபடி, இந்த ஆண்டின் இரண்டாம் பாதியில்
உணவுப்பொருள் விலையேற்றம் அதிகரித்தால், குறிப்பாக USDINR,&nbsp;USDEGP, USDPKR மற்றும் USDZAR போன்ற ஜோடிகள் வழியாக, DXY அந்த
அழுத்தத்தின் மிகத் தெளிவான வெளிப்பாடாக அமைகிறது.</p><p>
ஸ்டார்க் குறிப்பிடுவது போல, “விநியோக மாற்றங்கள் தனித்தனியாக
இல்லாமல், அடுக்குகளாக இருக்கும் ஒரு சூழலில், டொலர் இருமடங்கு
பயனடைகிறது. முதலில், வளர்ந்து வரும் சந்தைகள் உணவு மற்றும்
எரிசக்தியை இறக்குமதி செய்ய வேண்டியிருப்பதால் நிதி வழங்கும்
நாணயமாகவும், பின்னர் விலையேற்றப் பதிவுகள் உயரும்போது அதே
பொருளாதாரங்களிலிருந்து வெளியேறும் மூலதனத்தை உள்வாங்கும்
பாதுகாப்பான புகலிடமாகவும் இது செயல்படுகிறது.”</p><p>USDEGP, USDPKR மற்றும் USDZAR போன்ற ஜோடிகள் வழியாக, DXY அந்த
அழுத்தத்தின் மிகத் தெளிவான வெளிப்பாடாக அமைகிறது.
ஸ்டார்க் குறிப்பிடுவது போல, “விநியோக மாற்றங்கள் தனித்தனியாக
இல்லாமல், அடுக்குகளாக இருக்கும் ஒரு சூழலில், டொலர் இருமடங்கு
பயனடைகிறது. முதலில், வளர்ந்து வரும் சந்தைகள் உணவு மற்றும்
எரிசக்தியை இறக்குமதி செய்ய வேண்டியிருப்பதால் நிதி வழங்கும்
நாணயமாகவும், பின்னர் விலையேற்றப் பதிவுகள் உயரும்போது அதே
பொருளாதாரங்களிலிருந்து வெளியேறும் மூலதனத்தை உள்வாங்கும்
பாதுகாப்பான புகலிடமாகவும் இது செயல்படுகிறது.”</p><p>USDEGP, USDPKR மற்றும் USDZAR போன்ற ஜோடிகள் வழியாக, DXY அந்த
அழுத்தத்தின் மிகத் தெளிவான வெளிப்பாடாக அமைகிறது.
ஸ்டார்க் குறிப்பிடுவது போல, “விநியோக மாற்றங்கள் தனித்தனியாக
இல்லாமல், அடுக்குகளாக இருக்கும் ஒரு சூழலில், டொலர் இருமடங்கு
பயனடைகிறது.</p><p> முதலில், வளர்ந்து வரும் சந்தைகள் உணவு மற்றும்
எரிசக்தியை இறக்குமதி செய்ய வேண்டியிருப்பதால் நிதி வழங்கும்
நாணயமாகவும், பின்னர் விலையேற்றப் பதிவுகள் உயரும்போது அதே
பொருளாதாரங்களிலிருந்து வெளியேறும் மூலதனத்தை உள்வாங்கும்
பாதுகாப்பான புகலிடமாகவும் இது செயல்படுகிறது.”</p><p>● யூரியா, அமோனியா, DAP ஆகியவற்றின் ஒப்பீட்டு
விலைகளில், எகிப்திய கிரானுலர் யூரியா மிகவும்
கண்காணிக்கப்படும் நைதரசன் ஒப்பீட்டு அளவாக உள்ளது.
</p><p>● நீரிணை வழியாகப் போக்குவரத்தில் உள்ள எண்ணிக்கை
மற்றும் ஏற்றப்பட்ட கப்பல் சரக்கு உட்பட பாரசீக
வளைகுடாவிலிருந்து கப்பல் போக்குவரத்து மற்றும் கொள்கலன்
தரவுகள்.
</p><p>● உலக வங்கி மற்றும் FAO உணவுப் பண்டக் குறியீடுகள்,
குறிப்பாகத் தானியங்கள் மற்றும் பயிர் வகைகளின் துணைக்
குறியீடுகள்.
</p><p>
● இந்தியா, பாகிஸ்தான், எகிப்து, நைஜீரியா ஆகிய நாடுகளின்
மத்திய வங்கி அறிக்கைகள்; இவற்றில் உணவுப் பொருட்களைச்
சார்ந்த நுகர்வோர் விலைக் குறியீட்டு எண் - CPI பதிவுகள்,
வழக்கத்திற்கு மாறான கொள்கை நகர்வுகளை மேற்கொள்ள
நிர்பந்திக்கக்கூடும்.</p><p>
● EM CPI வெளியீடுகளுக்குப் பிறகு, வளர்ந்து வரும் சந்தை
நாணயங்களுக்கு எதிரான DXY-இன் நடத்தை, இதில் எதிர்வினைச்
செயல்பாடு பெரும்பாலும் அடுத்த கட்டத்திற்கான சமிக்ஞையை
அளிக்கிறது.</p><p>அந்நியச் செலாவணிக்குள்ளேயே, இறக்குமதியை அதிகம்
சார்ந்திருக்கும் வளரும் சந்தை நாணயங்கள், தங்கம் மற்றும் பரந்த DXY
ஆகியவற்றுக்கு எதிரான டொலர் ஜோடிகளில் இந்தக் கோட்பாட்டின்
மிகத் தெளிவான வெளிப்பாடுகளைக் காணலாம். </p><p>கச்சா எண்ணெய்
தொடர்ந்து முக்கியத்துவம் வாய்ந்ததாகவே உள்ளது, ஆனால் பல
பாதைகளைக் கொண்ட ஒரு மாற்றத்தின் ஒரு பாதையை மட்டுமே
அது பதிவு செய்கிறது.</p><h3>செயலாக்கம் பல பாதைகளைக் கொண்ட ஒரு மாற்றத்தைச் சந்திக்கும்
இடத்தில்</h3><p>குறுகிய கால விநியோகமானது உற்பத்தித் திறனைக் காட்டிலும்
அரசியல் மற்றும் ஏற்பாட்டியல் அணுகலால் வடிவமைக்கப்படும்போது,
​​பாரம்பரிய விநியோக-தேவை மாதிரிகளைச் சார்ந்திருக்கும்
வர்த்தகர்கள் எதிர்பாராத விதமாகச் சிக்கலில் மாட்டிக்கொள்ளும்
அபாயத்தை எதிர்கொள்கின்றனர். </p><p>அணுகல் நிலைமைகள் விரைவாக
நிலை மாறக்கூடும், மேலும் எண்ணெய் மற்றும் உணவுடன்
தொடர்புடைய நாணய ஜோடிகள் குறுகிய, சீரற்ற ஏற்ற
இறக்கங்களுடன் மறுவிலை நிர்ணயத்தைச் செய்யலாம், இதனால் ஒரு
மாற்றத்தைக் கண்டறிவதற்கும் அதன் மீது நடவடிக்கை எடுப்பதற்கும்
இடையில் மிகக் குறைந்த இடைவெளியே இருக்கும்.
</p><p>
ஒரு மாற்றத்தை விளங்கிக்கொள்வது ஒரு விஷயம் எனில்,
உண்மையான சந்தை நிலவரங்களின்படி செயல்படுவது முற்றிலும்
வேறொரு விஷயம். புவிசார் அரசியல் சமிக்ஞைகள், கச்சா
எண்ணெய்க்கான அபாயக் கட்டுப்பாட்டில் செயல்பாட்டு
நிலைத்தன்மையை ஒரு முக்கிய அங்கமாக ஆக்குகின்றன; </p><p>மேலும்
இதே தர்க்கம், அதே தூண்டுதல்களுக்கு எதிர்வினையாற்றும் தங்கம்,
பண்டங்களுடன் இணைக்கப்பட்ட நாணயங்கள் மற்றும் வளர்ந்து வரும்
சந்தைக் குறுக்கு நாணய ஜோடிகளுக்கும் பொருந்தும்.
இங்குதான் <a href="https://www.exness.com/" target="_blank">Exness </a>இந்த விவாதத்திற்குள் நுழைகிறது. பல பாதைகளைக்
கொண்ட மாற்றங்களை எதிர்கொள்ளும்போது, ​​CFD வர்த்தகர்கள் கச்சா
எண்ணெயை மட்டும் கண்காணிப்பதில்லை. </p><p>இதே விநியோக நிலைமை
அனைத்துச் சொத்து வகைகளிலும் பரவி வருவதால், அவர்கள் தங்கம்,
DXY, பண்டங்களுடன் தொடர்புடைய நாணயங்கள் மற்றும் வளர்ந்து
வரும் சந்தை ஜோடிகளையும் கண்காணித்து வரலாம். </p><p>ஒரே நேரத்தில்
பல சந்தைகள் மறுவிலை நிர்ணயத்தைச் செய்யும்போது, ​​வர்த்தகச்
செயல்பாட்டின் நிலைத்தன்மையும் பரவல் ஸ்திரத்தன்மையும் ஒரு
வர்த்தகர் தனது அபாயத்தைக் கையாளும் முறையின் ஒரு
பகுதியாகின்றன. வர்த்தகச் சூழல், நுழைவு அல்லது வெளியேறும்
புள்ளியில் தேவையற்ற தடைகளை ஏற்படுத்தினால், ஒரு துல்லியமான
பேரியல் கணிப்பு கூட அதன் மதிப்பை இழக்கக்கூடும்.</p><p>
<a href="https://www.exness.com/" target="_blank">Exness </a>Terminal இந்தப் பணிப்பாய்வுக்குப் பங்களிக்கிறது. எண்ணெய்
விலையேற்றத்திலிருந்து உணவு விலையேற்றத்திற்கும், பின்னர்
நாணய மதிப்புகளுக்கும் பரவும் ஒரு மாற்றத்தைப் பின்பற்றி வரும் CFD
வர்த்தகர்களுக்கு, தொடர்பில்லாத கருவிகளுக்கு இடையில் மாறாமல்,
தொடர்புடைய கருவிகளைக் கண்காணிக்கவும், விலை மாற்றங்களை
ஒப்பிடவும், வர்த்தகங்களை மேற்கொள்ளவும் மற்றும் திறந்த வணிக
வாய்ப்புகளை நிர்வகிக்கவும் ஒரு தெளிவான வழி தேவைப்படுகிறது.
</p><p>பதிவு செய்தல், வர்த்தகம் செய்தல், நிலை மேலாண்மை மற்றும்
கணக்குக் கட்டுப்பாடுகள் ஆகிய அனைத்தும் ஒரே இணைய மற்றும்

மொபைல் சூழலில் இருப்பதால், சந்தை நிலவரங்கள் வேகமாக
மாறும்போது, ​​பகுப்பாய்விலிருந்து செயலுக்குச் செல்வதற்கான
மிகவும் கட்டுப்படுத்தப்பட்ட பாதையை <a href="https://www.exness.com/" target="_blank">Exness </a>Terminal ஆதரிக்கிறது.
</p><p>பரந்த நோக்கில் கூறப்பட்டுள்ள விஷயம் என்னவென்றால், விநியோக
மாற்றங்கள் ஒரே ஒரு சந்தைக்குள் மட்டும் அடங்கிவிடுவதில்லை.
அவை பண்டங்கள், விளையேற்ற எதிர்பார்ப்புகள், மத்திய வங்கிக்
கொள்கை, FX ஆகியவற்றின் ஊடாகப் பயணிக்கின்றன. </p><p>CFD
வர்த்தகர்களைப் பொறுத்தமட்டில், அந்தத் தொடர் சங்கிலியை
முன்கூட்டியே கண்டறிவது மட்டும் சவாலாக இல்லை. அந்த வர்த்தகச்
சங்கிலி நகரத் தொடங்கும்போது, ​​அவர்கள் ஒழுக்கத்துடன் செயல்பட
உதவும் ஒரு வர்த்தகச் சூழலை உருவாக்குவதே அந்தச் சவாலாகும்.</p><p><br></p>]]></content>
            <updated>2026-07-14T13:12:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[7 வயதில் உயிருக்கு போராடும் மகன்..! நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் உயிரிழந்த அதிகாரியின் கடைசி ஆசை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/tlast-wish-of-officer-who-died-in-negombo-clash-1784018697"></link>
            <id>https://tamilwin.com/article/tlast-wish-of-officer-who-died-in-negombo-clash-1784018697</id>
            <summary type="text">நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் உயிரிழிந்த அதிகாரியொருவரின் கடைசி ஆசை தொடர்பான விவரங்கள் வெளியாகியுள்ளது. 

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் உயிரிழிந்த அதிகாரியொருவரின் கடைசி ஆசை தொடர்பான விவரங்கள் வெளியாகியுள்ளது.</p><p> 

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,</p><p> 

கடந்த 5ஆம் மற்றும் 6ஆம் திகதிகளில் ஒட்டுமொத்த இலங்கையையும் பதைபதைக்க வைக்கும் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.</p><p> 

இதற்கமைய, நீர்க்கொழும்பு சிறைச்சாலை மோதலில் 21 கைதிகளும் 8 பொலிஸ் அதிகாரிகளும் உயிரிழந்துள்ளனர்.</p><p></p><p> 

அத்துடன், சிறைச்சாலையில் இருந்து 40 ஆயிரம் கைதிகள் வேறு வேறு இடங்களில் உள்ள சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர். </p><p>

இதனை தொடர்ந்து, அம்பலந்தோட்டாவின் பாலகஹகொடெல்லா பகுதியில் வசித்து வந்த 39 வயதான சிறைக்காவலர் சந்திக லஷன் குணவர்தன, சம்பவம் நடந்து ஒரு வாரக் காலப்போராட்டத்திற்கு பின்னர் நேற்று(13.07.2026) இரவு உயிரிழந்துள்ளார்.</p><h2> 

அதிகாரியின் கடைசி ஆசை</h2><p>

குறித்த அதிகாரிக்கு 7 வயதில் மகன் ஒருவர் இருப்பதாகவும், அவர் இதய நோயால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c447ac15-df8a-4602-919f-5f2fc5ec57db/26-6a55f7b8d8811.webp' /></p><p> </p><p>

அந்த சிறுவனின் உயிரைக் காப்பாற்ற பெரும் பணம் தேவை என்பதால் உயிரிழந்த அதிகாரி சந்திக மகனின் உயிரைக் காப்பாற்ற தொடர்ந்து பணம் தேடிக் கொண்டிருந்ததாக சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
</p><p>
இந்த நிலையில், சிறைச்சாலை மோதலில் படுகாயமடைந்து, கொழும்பு தேசிய மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த சந்திக, தனது இறுதி மூச்சை விடும்போதும் சிறுவனின் நினைவுகளில் இருந்தார் என்றும், தனது கடமைக்காக உயிரைத் தியாகம் செய்த ஒரு மாவீரனின் கடைசி விருப்பம், அவரின் குழந்தையைக் காப்பாற்றுவதே என்றும் கூறப்படுகிறது.</p><p> 

அத்துடன், சிறைச்சாலை மோதல் சம்பவத்தில், 100க்கும் மேற்பட்ட சிறை அதிகாரிகளும் கைதிகளும் காயமடைந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><p></p><p><b>YOU MAY LIKE THIS VIDEO</b></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/4Xl22URQsuU" width="640" height="360" class="note-video-clip"></iframe><b><br></b></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-14T13:09:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஏ9 வீதியில் விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் உயிரிழப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/motorcyclist-dies-in-accident-on-a9-road-1784033864"></link>
            <id>https://jvpnews.com/article/motorcyclist-dies-in-accident-on-a9-road-1784033864</id>
            <summary type="text">&amp;nbsp; மதவாச்சிய, வஹமாலு கொல்லேவ பகுதியில் உள்ள ஏ9 பிரதான வீதியில் இன்று (14) பிற்பகல் இடம்பெற்ற வீதி விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் சம்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; மதவாச்சிய, வஹமாலு கொல்லேவ பகுதியில் உள்ள ஏ9 பிரதான வீதியில் இன்று (14) பிற்பகல் இடம்பெற்ற வீதி விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
</p><p>
 விபத்தில் வஹமாலு கொல்லேவ பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய நபர் ஒருவரே உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/02e7984b-36c0-4c54-9fdf-542685a3b007/26-6a563249bc137.webp' /></p><h2>&nbsp;வழக்கு ஒன்றில் முன்னிலையாகிவிட்டு&nbsp; திரும்பிய போது அனர்த்தம்</h2><p>
</p><p>
ஹட்டன், கொட்டகல பகுதியிலிருந்து வவுனியா நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த லொரி ஒன்றும், மதவாச்சியவிலிருந்து அனுராதபுரம் நோக்கிச் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளும் வஹமாலு கொல்லேவ பகுதியில் வைத்து நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.</p><p></p><p>
</p><p>
உயிரிழந்த நபர் நீதிமன்ற வழக்கு ஒன்றில் முன்னிலையாகிவிட்டு, மதவாச்சியவிலிருந்து தனது மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்த போதே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.</p><p></p><p>
</p><p>
இதன்போது, திடீரென மோட்டார் சைக்கிள் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, வீதியின் எதிர் திசைப் பாதைக்குச் சென்றதால், எதிரே வந்த லொரியுடன் பலமாக மோதியுள்ளது என்பது முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p>

விபத்தைத் தொடர்ந்து லொரியின் ஓட்டுநரை மதவாச்சிய பொலிஸார் கைது செய்துள்ளதுடன் விசாரணைகாளையும் மேற்கொண்டு வருகின்றனர்.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-14T12:56:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஷேக் ஹசீனா நாடு திரும்பினால் சிறையில் அடைக்கப்படுவார் :வங்கதேச அரசு அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/if-hasina-comes-will-be-imprisoned-immediately-1784031270"></link>
            <id>https://ibctamil.com/article/if-hasina-comes-will-be-imprisoned-immediately-1784031270</id>
            <summary type="text">&amp;nbsp;முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா வங்கதேசத்திற்குத் திரும்பினால், அவர் உடனடியாகச் சிறையில் அடைக்கப்படுவார் என்று வெளியுறவுத்துறை இணை அமைச்சர் ஷமா ஒபைத...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா வங்கதேசத்திற்குத் திரும்பினால், அவர் உடனடியாகச் சிறையில் அடைக்கப்படுவார் என்று வெளியுறவுத்துறை இணை அமைச்சர் ஷமா ஒபைத் இஸ்லாம் கூறினார்.
</p><p>
அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை அனுபவிப்பதற்காக ஹசீனா சிறையில் அடைக்கப்படுவார் என்று அவர் தெரிவித்தார்.

மரண பயமின்றி ஹசீனா வங்கதேசத்திற்குத் திரும்புவார் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.</p><h2>இந்த வருடம் நாட்டிற்கு திரும்ப விருப்பம்</h2><p>&nbsp;முன்னதாக, என்.டி.டி.வி-க்கு அளித்த ஒரு பிரத்யேகப் பேட்டியில், இந்த ஆண்டின் இறுதிக்குள் வங்கதேசத்திற்குத் திரும்ப விரும்புவதாக ஷேக் ஹசீனா கூறியிருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4d763a6f-dbc0-4d0f-8c5b-321b0483ef83/26-6a563140cd042.webp' /></p><p>
</p><p>
மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்காக ஹசீனாவைக் குற்றவாளி எனத் தீர்ப்பளித்த வங்கதேசத்திற்கான சர்வதேசத் தீர்ப்பாயம், கடந்த ஆண்டு நவம்பர் 17 அன்று அவருக்கு மரண தண்டனை விதித்தது.</p><p>&nbsp;வங்கதேசத்தில் ஏற்பட்ட கலவரத்தை அடுத்து ஷேக் ஹசீனா இந்தியாவிற்கு தப்பிச்சென்று அங்கு வாழ்ந்து வருகின்றமை கறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-14T12:53:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாதாள உலகக் குழுக்களுக்கு பணம் வழங்கினாரா சஜித்..! குற்றச்சாட்டை மறுக்கும் முஜிபுர் ரஹ்மான்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/criticism-of-government-negombo-prison-incident-1784033246"></link>
            <id>https://tamilwin.com/article/criticism-of-government-negombo-prison-incident-1784033246</id>
            <summary type="text">எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, பாதாள உலகக் குழுக்களிடம்
பணம் பெற்று வருகின்றார் என ஆளுங்கட்சி பிரதி அமைச்சர் ஒருவர் சுமத்தியுள்ள
குற்றச்சாட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, பாதாள உலகக் குழுக்களிடம்
பணம் பெற்று வருகின்றார் என ஆளுங்கட்சி பிரதி அமைச்சர் ஒருவர் சுமத்தியுள்ள
குற்றச்சாட்டை முற்றாக நிராகரிப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.</p><p>


 எதுல்கோட்டேயிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமைப் பணிமனையில் இன்று(14.07.2026) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p>
</p><h2>


31 பேர் உயிரிழப்புக்கு அரசே காரணம்</h2><p>

அவர் மேலும் தெரிவிக்கையில்,&nbsp;</p><p>
வடக்கு, கிழக்கு மாகாணங்களின் பிரச்சினைகள், மாகாண சபைத் தேர்தல்கள்
நடத்தப்படாததால் ஏற்பட்டுள்ள நிர்வாகச் சிக்கல்கள் மற்றும் மலையக மக்களின்
பிரச்சினைகள் குறித்துக் கலந்துரையாடவே இந்தக் கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது.</p><p>

இதில் ரவூப் ஹக்கீம், ரிஷாத் பதியுதீன் மற்றும் பி. திகாம்பரம் ஆகியோரின்
கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் இணைந்துள்ளனர். இது எதிர்க்கட்சிக்கோ அல்லது
ஐக்கிய மக்கள் கூட்டணிக்கோ எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d809d112-a9c3-4c1b-b4ee-e90af74337b5/26-6a56308e19b52.webp' /></p><p>
</p><p>
 இந்த விடயம்
குறித்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுடன்
கலந்துரையாடப்பட்டுள்ளதுடன், அவர் எப்போதும் இம்மக்களின் பிரச்சினைகளில்
மிகுந்த அவதானத்துடன் இருந்து வருகின்றார்.
</p><p>
இதனைத் தொடர்ந்து, நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் 
சம்பவத்தில் 31 பேர் உயிரிழந்துள்ளதுடன், அரசின் மெத்தனமே இதற்கு காரணமாகவும் அமைந்துள்ளது.</p><p> 


முதல் நாளிலேயே மோதலில் ஈடுபட்டவர்களைத் தனிமைப்படுத்தியிருந்தால், இரண்டாம்
நாள் ஏற்பட்ட உயிரிழப்புகளைத் தவிர்த்திருக்கலாம். சிறைச்சாலை நெருக்கடியைக்
கையாளத் தவறிய நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார உடனடியாகப் பதவி விலக வேண்டும்.
அவருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவர எதிர்க்கட்சி
தீர்மானித்துள்ளது.</p><h2>

பாதாளக் குழுக்களிடன் சஜித்திற்கு தொடர்பு</h2><p>
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்க அரசு எடுக்கும் முயற்சி
நீதித்துறைக்குள் குழப்பத்தை ஏற்படுத்தும், பிற துறைசார்
பற்றாக்குறைகளைத் தீர்க்காமல் ஒரு துறைக்கு மட்டும் சலுகை வழங்குவது ஏனைய
துறையினரிடையே அதிருப்தியைத் தோற்றுவிக்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/382aa196-8e17-4421-93fe-7a49e3f0b798/26-6a56308ebdf47.webp' /></p><p>
</p><p>
அத்துடன், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ பாதாள உலகக் குழுக்களிடம்
பணம் பெற்று வருகின்றார் என்று ஆளுங்கட்சி பிரதி அமைச்சர் ஒருவர் சுமத்தியுள்ள
குற்றச்சாட்டை நான் முற்றாக நிராகரிக்கின்றேன். </p><p>

இது ஆதாரமற்ற பொய்க் குற்றச்சாட்டு. தைரியமிருந்தால் நாடாளுமன்றத்துக்கு
வெளியே குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்யட்டும்.
</p><p>
புதிய அரசியல் கலாசாரத்தை ஏற்படுத்துவதாகக் கூறி ஆட்சிக்கு வந்த தேசிய மக்கள்
சக்தி, பழைய அரசுகளின் அதே அரசியல் பாணியையே பின்பற்றுகின்றது என்றார்.&nbsp;&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-14T12:50:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானை முற்றுகையிட்டது தவறு., அமெரிக்காவின் செயலுக்கு சீனா எதிர்ப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/china-condemns-for-us-action-in-hormuz-1784020407"></link>
            <id>https://news.lankasri.com/article/china-condemns-for-us-action-in-hormuz-1784020407</id>
            <summary type="text">ஈரான் கடற்படைக்கு எதிரான அமெரிக்காவின் கடற்படை முற்றுகையை சீனா கண்டித்துள்ளது. மத்திய கிழக்கில் அதிகரிக்கும் பதற்றம்
ஹார்முஸ் ஜலசந்தியில் வணிக கப்பல்...</summary>
            <content type="html"><![CDATA[<h3>ஈரான் கடற்படைக்கு எதிரான அமெரிக்காவின் கடற்படை முற்றுகையை சீனா கண்டித்துள்ளது.</h3><h2> மத்திய கிழக்கில் அதிகரிக்கும் பதற்றம்</h2><p>
ஹார்முஸ் ஜலசந்தியில் வணிக கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதை அடுத்து அதற்கு பதிலடியாக அமெரிக்க படைகள் ஈரானிய இராணுவ இருப்புகளை குறிவைத்து தாக்குதலை தொடங்கியுள்ளது.</p><p> அமெரிக்காவின் நடவடிக்கைகளுக்கு பதிலளிக்கும் விதமாக பஹ்ரைன் மற்றும் குவைத் ஆகிய நாடுகளை குறிவைத்து ஈரானும் ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குரலை முன்னெடுத்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1e7f6067-b5e1-486f-ba8a-bf056292cb1d/26-6a55fdb8b3b2a.webp' /></p><p></p><h4> அமெரிக்காவுக்கு சீனா எதிர்ப்பு</h4><p>இந்நிலையில் செவ்வாய்க்கிழமை சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் லின் ஜுயான் அமெரிக்காவின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.</p><p> மீண்டும் ஈரானுக்கு எதிரான அமெரிக்க படைகளின் கடற்படை முற்றுகை நடவடிக்கையை சீனா எதிர்ப்பதாக தெரிவித்துள்ளார்.</p><p> செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய லின், அமெரிக்கா - ஈரான் ஆகிய இரண்டு நாடுகள் இடையிலும் மீண்டும் ஆயுத மோதல் தொடங்கி இருப்பது கவலையையும், அக்கறையையும் ஏற்படுத்தி இருப்பதாக தெரிவித்துள்ளார்.</p><p> அத்துடன் பேச்சுவார்த்தைகள் மற்றும் இராஜதந்திர முயற்சிகள் மூலம் இருதரப்பும் தீர்வு காண வேண்டும் என்றும் லின் வலியுறுத்தியுள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-14T12:47:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[வருத்தப்படாத வாலிபர் சங்கம் 2 வருகிறது.. ஆனால் ஹீரோ யார் பாருங்க]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/varuthapadatha-valibar-sangam-2-this-hero-to-lead-1784031355"></link>
            <id>https://cineulagam.com/article/varuthapadatha-valibar-sangam-2-this-hero-to-lead-1784031355</id>
            <summary type="text">பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் மிகப்பெரிய ஹிட் படம் ஆனது. SK கெரியரில் இன்னும் பேசப்படும் படமாக அது இருந்து ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் மிகப்பெரிய ஹிட் படம் ஆனது. SK கெரியரில் இன்னும் பேசப்படும் படமாக அது இருந்து வருகிறது.</p><p>கிராமத்து பின்னணியில் காமெடிக்கு பஞ்சம் இல்லாமல் அந்த படத்தை இயக்குனர் எடுத்திருப்பார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ba3f09b3-d018-44c6-a95e-ca3b48b12a76/26-6a56287dede0e.webp' /></p><h2>ரியோ ராஜ்
</h2><p>தற்போது வருத்தப்படாத வாலிபர் சங்கம் 2 படத்தின் பணிகள் தொடங்கி இருக்கிறதாம். அதில் ரியோ ராஜ் தான் ஹீரோவாக நடிக்கிறார்.
</p><p>அந்த படத்தை ரியோ ராஜ் தனது சொந்த நிறுவனம் மூலமாக தயாரிக்கிறாராம்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-14T12:45:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாடொன்றிலிருந்து தங்கம் இறக்குமதி செய்ய தடை: உள்நாட்டு யுத்தப் பின்னணி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/eu-bans-gold-imports-from-sudan-to-curb-money-war-1784032662"></link>
            <id>https://news.lankasri.com/article/eu-bans-gold-imports-from-sudan-to-curb-money-war-1784032662</id>
            <summary type="text">ஆப்பிரிக்க நாடான சூடான் நாட்டிலிருந்து தங்கத்தை இறக்குமதி செய்வதற்கு ஐரோப்பிய ஒன்றியம் தடை விதித்துள்ளது.

தங்கம் இறக்குமதி செய்ய தடை

ஆப்பிரிக்க ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஆப்பிரிக்க நாடான சூடான் நாட்டிலிருந்து தங்கத்தை இறக்குமதி செய்வதற்கு ஐரோப்பிய ஒன்றியம் தடை விதித்துள்ளது.</p><h3>

தங்கம் இறக்குமதி செய்ய தடை
</h3><p>
ஆப்பிரிக்க நாடுகளிலேயே, அதிக அளவில் தங்கம் உற்பத்தி செய்யும் நாடுகளில் சூடானும் ஒன்று.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4d3e15ff-87b0-481b-981c-cc6650607425/26-6a562d97889ba.webp' /></p><p>
விடயம் என்னவென்றால், சூடானில் 2023ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் முதல், ராணுவத்துக்கும், போராளிக்குழுவான Rapid Support Forces (RSF) என்னும் அமைப்புக்கும் இடையே உள்நாட்டு யுத்தம் நடைபெற்றுவருகிறது.
</p><p>
யுத்தம் காரணமாக, 14 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு தப்பியோட நேர்ந்துள்ளது. கடுமையான மனித உரிமை மீறல்கள் நிகழ்ந்துவருகின்றன.</p><p> 

இந்த இரு பிரிவினரும், நாட்டிலுள்ள தங்கச் சுரங்கங்களைக் கட்டுப்படுத்துகிறார்கள். நாட்டின் மேற்கு மற்றும் மையப் பகுதிகளில் உள்ள தங்கச் சுரங்கங்களை RSFஅமைப்பும், வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகள் தங்க உற்பத்தியை ராணுவமும் கட்டுப்படுத்துகின்றன.&nbsp;</p><p></p><p>
ஆக, இருதரப்பும் போர் செய்வதற்குத் தேவையான பணம், இந்த தங்க ஏற்றுமதி மூலம்தான் கிடைக்கிறது.
</p><p>
ஆகவே, சூடானிலிருந்து தங்கம் இறக்குமதி செய்வதற்கு ஐரோப்பிய ஒன்றியம் தடை விதித்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8c1c7cde-81ab-4377-970e-9e2430686e2c/26-6a562d98377df.webp' /></p><p>

ஐரோப்பிய ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், சூடானில் நடக்கும் உள்நாட்டு யுத்தத்தில், யுத்தத்துக்கான முக்கிய நிதி ஆதாரமாக தங்கம்தான் விளங்குகிறது.
</p><p>
ஆகவே, சூடானிலிருந்து தங்கம் இறக்குமதி செய்வதற்கு தடை விதித்தால், அது வன்முறைக்குக் காரணமாக இருப்போருக்கு பணம் கிடைப்பது குறைய வழிவகுக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
</p><p>
இந்த தடை நடவடிக்கைகள், யுத்தத்துக்கு நிதி வழங்கும் ஆதாரத்தை கட்டுப்படுத்துவதற்காகவும், யுத்தத்தை தூண்டுவோர் மீது அழுத்தத்தை அதிகரிப்பதற்காகவும் உருவாக்கப்பட்டுள்ளன என்றும் ஐரோப்பிய ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கை கூறுகிறது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-14T12:44:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வளைகுடா பதற்றத்தால் மசகு எண்ணெய் விலைகள் ஏற்றம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/crude-oil-prices-rise-due-to-gulf-tensions-1784033042"></link>
            <id>https://canadamirror.com/article/crude-oil-prices-rise-due-to-gulf-tensions-1784033042</id>
            <summary type="text">&amp;nbsp; மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அதிகரித்து வரும் பதற்றமான சூழ்நிலைகளுக்கு மத்தியில், சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலைகள் மேலும் அதிகரிப்பைப் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அதிகரித்து வரும் பதற்றமான சூழ்நிலைகளுக்கு மத்தியில், சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலைகள் மேலும் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளன.
</p><p>
இதன்படி, உலக சந்தையின் தற்போதைய மசகு எண்ணெய் விலை நிலவரம்,</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a07c9e71-b376-4cb0-8a8c-7131058e3783/26-6a562f139fb4e.webp' /></p><p> </p><p>

ப்ரெண்ட் (Brent) ரக மசகு எண்ணெய்: ஒரு பீப்பாய் - 86.91 டொலர்கள் ஆக உள்ளது.
</p><p>
அதோடு WTI ரக மசகு எண்ணெய்: ஒரு பீப்பாய் - 80.48 டொலர்கள் ஆக உள்ளது.</p><p>அமெரிக்கா - ஈரான் இடையே உச்சகட்டப் போர்ப் பதற்றம் நிலவி வரும் சூழலில், மசகு எண்னெய் விலை மீண்டும் அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-14T12:42:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[முதல் வாட்டி பாக்கும்போது அறையணும்னு தோணுச்சு!! சரத்குமார் மனைவி ராதிகா ஓபன் டாக்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/i-felt-like-slapping-him-radhikas-open-sarathkumar-1784032277"></link>
            <id>https://viduppu.com/article/i-felt-like-slapping-him-radhikas-open-sarathkumar-1784032277</id>
            <summary type="text">சரத்குமார்நடிகர் சரத்குமார் தன்னுடைய 72வது வயதை ஜூலை 14 இன்று எட்டியுள்ளார். அவருக்கு பலரும் வாழ்த்து கூறி வரும் நிலையில் நடிகையும் சரத்குமாரின் மனைவி...</summary>
            <content type="html"><![CDATA[<h2>சரத்குமார்</h2><p>நடிகர் சரத்குமார் தன்னுடைய 72வது வயதை ஜூலை 14 இன்று எட்டியுள்ளார். அவருக்கு பலரும் வாழ்த்து கூறி வரும் நிலையில் நடிகையும் சரத்குமாரின் மனைவியும் விருது நிகழ்ச்சி ஒன்றில் கணவர் பற்றி பேசிய வீடியோ பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. </p><p>அதில், அவரை முதல் தடவையாக பார்த்தபோதே ஓங்கி அறையணும்னு தோணுச்சு. ஏன்னா அவர் வந்து ஒரு மொக்க ஜோக் சொல்லிட்டு, அதுக்கே அவரே சிரிச்சிட்டே இருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4600cd76-2388-483c-9448-d0eb50c181b5/26-6a562c17a21af.webp' /></p><p> நான் மட்டும் சிரிக்கவே இல்லை. இதைவிட நல்ல ஜோ எதுவும் உங்களுக்கு தெரியாதான்னு கேட்டேன். இப்ப வரைக்கும் அந்த பழக்கம் மட்டும் மாறவே இல்லை. </p><p>மொக்க ஜோக்ஸ்னா அதுக்கு ஒரு யுனிவர்சிட்டியே சரத்குமார் தான். எந்த நேரமும் ஏதாவது ஒரு ஜோக் ரெடியா இருக்கும். நான் சோசியல் மீடியாக்களில் மொக்க ஜோக்ஸ் போடுறதுக்கு முக்கிய காரணமே அவர்தான்.</p><p> அவர்கிட்ட இருக்கிற மொக்க ஜோக்ஸ்க்கு பதிலடி கொடுக்கணும் தான் நான் வீடியோ போட ஆரம்பிச்சேன். ஆனால் நான் போடுற ஜோக்ஸ் எல்லாமே சோசியல் மீடியாக்களில் இருந்து எடுத்ததுதான் என்று நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய குரோஷியிடம் ராதிகா கூறியுள்ளார்.</p>]]></content>
            <updated>2026-07-14T12:31:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிவபெருமானின் அருள் பொழியும் ஸ்ராவண மாதம்: இந்த ராசிகளின் வாழ்க்கையே அதிர்ஷ்டத்தால் நிறையும்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/lord-shiva-bless-these-4-zodiacs-on-this-month-1784026653"></link>
            <id>https://manithan.com/article/lord-shiva-bless-these-4-zodiacs-on-this-month-1784026653</id>
            <summary type="text">இந்து மதத்தில் மிகவும் புனிதமான மாதங்களில் ஒன்றாகக் கருதப்படும் ஸ்ராவண மாதம் இந்த ஆண்டு ஜூலை 30-ஆம் தேதி தொடங்குகிறது. சிவபெருமானை வழிபடுவதற்கு மிகவும...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்து மதத்தில் மிகவும் புனிதமான மாதங்களில் ஒன்றாகக் கருதப்படும் ஸ்ராவண மாதம் இந்த ஆண்டு ஜூலை 30-ஆம் தேதி தொடங்குகிறது. சிவபெருமானை வழிபடுவதற்கு மிகவும் உகந்த காலமாகக் கருதப்படும் இந்த மாதம், ஆன்மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் பார்க்கப்படுகின்றது.</p><p> குறிப்பாக, இந்த மாதத்தில் வரும் நான்கு திங்கட்கிழமைகள் (ஸ்ராவண சோமவாரங்கள்) விரதம் இருந்து சிவபெருமானை சிறப்பு பூஜைகளுடன் வழிபடுவதற்கு மிகவும் சிறப்பான நாட்களாகக் கருதப்படுகின்றன.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c311c891-3487-41d4-be0d-94ded5ebc718/26-6a562bf40ad98.webp' /></p><p></p><p>குறிப்பாக, சிவலிங்கத்திற்கு புனித நீரால் ஜலாபிஷேகம் செய்து வழிபட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவில்களில் திரள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வழிபாடு சிவபெருமானின் அருளைப் பெறுவதற்கும், வாழ்க்கையில் நன்மைகள் பெருகுவதற்கும் துணைப்புரியும் என நம்பப்படுகின்றது.</p><p>
இதனுடன், ஜோதிட சாஸ்திரத்தின்படி, சிவபெருமானின் அருள் சில ராசிக்காரர்களுக்கு இந்த ஸ்ராவண மாதத்தில் அதிக அளவில் கிடைக்கும் என்றும், அவர்களின் வாழ்க்கையில் முன்னேற்றம், பொருளாதார வளர்ச்சி மற்றும் மன அமைதி போன்ற பலன்கள் கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.அப்படி சிவனின் அருளை முழுமையாக பெறப்போகும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.</p><h2>ரிஷபம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/850a2be1-2643-43f9-84da-0eaa090a715f/26-6a562bf4b0690.webp' /></p><p>

ரிஷப ராசி சந்திரனுடன் தொடர்புடையதாகக் கருதப்படுகிறது. சிவபெருமானின் நெற்றியை அலங்கரிக்கும் சந்திரனுக்கு அவரது வழிபாட்டில் தனித்துவமான முக்கியத்துவம் இருப்பதால், இந்த ராசிக்காரர்களுக்கு ஸ்ராவண மாதம் மிகவும் சிறப்பானதாக அமையும்.</p><p>

இந்த மாதத்தில் நிதி நிலைமை முன்னேற்றம் காணும் வாய்ப்புகள் அதிகம். மன அமைதி, உணர்வுப்பூர்வமான சமநிலை மற்றும் தன்னம்பிக்கை ஆகியவை அதிகரிக்கக்கூடும். </p><p>குடும்பத்தில் ஒற்றுமை வலுப்பெறுவதுடன், கணவன்-மனைவி உறவும் மேலும் இணக்கமாக அமையும். திருமணமாகாதவர்களுக்கு பொருத்தமான வாழ்க்கைத் துணையைச் சந்திக்கும் வாய்ப்பும் உருவாகும். திருமண வாழ்க்கையில் பிரச்சினைகளை அனுபவிப்பவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாக மாறும்.&nbsp;</p><h2>
கடகம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/31250f8c-1c58-4c3b-b9ea-9488a22e14b3/26-6a562bf56ea90.webp' /></p><p>

சந்திரனால் ஆளப்படும் கடக ராசிக்காரர்களுக்கு ஸ்ராவண மாதம் சிவபெருமானின் அருள் நிறைந்த காலமாகக் கருதப்படுகிறது. இந்த மாதத்தில் தொழில் மற்றும் வணிகத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படலாம். </p><p>புதிய வருமான வாய்ப்புகள் உருவாகுவதுடன், திட்டமிட்டு செய்யப்படும் முதலீடுகள் எதிர்காலத்தில் நல்ல லாபத்தைத் தரும்.அதிர்ஷ்டம் இந்தக் காலத்தில் இவர்களுக்குச் சாதகமாக அமையும் .தொழில் ரீதியாக புதிய வாய்ப்புகள் தானாகவே தேடி வரும்.</p><p>சிவனின் ஆசியால் வாழ்வி்ல் பல்வேறு வழிகளிலும் முன்னேற்றம் உண்டாகும். இவர்களின் வாழ்க்கையி்ல் இதுவரையில் இருந்த துன்பங்களுக்கு விடிவு கிடைக்கப்போகின்றது.<br></p><h2>மகரம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1ec3fbb5-3924-48fb-8526-b3140334962e/26-6a562bf61dd82.webp' /></p><p>

மகர ராசி சனிபகவானால் ஆளப்படுகிறது. இந்து புராணங்களில் சனிபகவான் சிவபெருமானின் தீவிர பக்தராகப் போற்றப்படுவதால், ஸ்ராவண மாதம் மகர ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமானதாகக் கருதப்படுகிறது.
</p><p>
இந்த மாதத்தில் நிதி ஆதாயங்கள் அதிகரிக்கலாம். தொழில் மற்றும் பணியிடத்தில் முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புகள் உருவாகும். </p><p>நீண்டகாலமாக சந்தித்து வந்த சவால்கள் படிப்படியாகக் குறைந்து, முன்னேற்றத்திற்கான புதிய பாதைகள் திறக்கப்படலாம்.

செல்வாக்கு மிக்கவர்களுடன் ஏற்படும் அறிமுகங்கள் வாழ்க்கையில் முக்கிய மாற்றங்கள் உருவாகும்.</p><p>இந்த மாதத்தில் அங்கீகாரம், பாராட்டு மற்றும் புகழ் கிடைக்கும் வாய்ப்பும் அதிகம். முதலீடுகள் எதிர்பார்த்ததை விட அதிக லாபத்தை அளிக்கக்கூடும்.&nbsp;</p><h2>
கும்பம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4fec7070-803b-4ad0-9a29-72eeee3ee3aa/26-6a562bf6ce65f.webp' /></p><p></p><p>சனிபகவானால் ஆளப்படும் கும்ப ராசிக்காரர்களுக்கும் ஸ்ராவண மாதம் சிறப்பான பலன்களைத் தரக்கூடிய காலமாகக் கருதப்படுகிறது.</p><p>இந்த மாதத்தில் நிதி நிலைமை மேம்பட்டு, முந்தைய முதலீடுகள் எதிர்பார்த்ததை விடச் சிறந்த பலன்களை வழங்கத் தொடங்கலாம்.
</p><p>
புதிய சொத்து வாங்குதல், முக்கிய முடிவுகளை எடுப்பது மற்றும் தொழில் ரீதியான முன்னேற்றங்களை நோக்கி நகர்வது போன்ற விஷயங்களுக்கு இந்தக் காலம் சாதகமாக அமையும். கடந்த கால கடின உழைப்புக்கான பலன்ககள் சிகனின் ஆசியால் கைமேல் வந்து சேரும்.</p><p><b>இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. ( மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;&nbsp;</b></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b>&nbsp; &nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-14T12:31:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நடுறோட்டில் பொலிஸ் அதிகாரியின் வெறிச்செயல் ; பிறந்தநாளன்று துடிதுடித்து பிரிந்த மனைவியின் உயிர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/delhi-police-officer-shoots-wife-dead-her-birthday-1784032161"></link>
            <id>https://jvpnews.com/article/delhi-police-officer-shoots-wife-dead-her-birthday-1784032161</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;இந்தியா டெல்லியில் குடும்பத் தகராறு காரணமாக பிறந்தநாளன்று மனைவியை சுட்டுக்கொலை செய்துவிட்டு தப்பியோடிய பொலிஸ் அதிகாரி ஒருவரை பொலிஸார் தீவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;இந்தியா டெல்லியில் குடும்பத் தகராறு காரணமாக பிறந்தநாளன்று மனைவியை சுட்டுக்கொலை செய்துவிட்டு தப்பியோடிய பொலிஸ் அதிகாரி ஒருவரை பொலிஸார் தீவிரமாக தேடி வருகின்றனர். </p><p>

டெல்லி வினோத் நகர் பகுதியில் வசித்து வந்த தம்பதியினரான டெல்லி கிழக்கு மாவட்ட வாகன திருட்டு தடுப்பு பிரிவில் பொலிஸ் அதிகாரியாக பணியாற்றும் மனிஷ் பதி என்பவருக்கும், அசோக் விஹாரில் உள்ள பாடசாலையில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்த பிரியங்கா (24) என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் திருமணமாநது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4749da60-e0fe-4f79-8ae6-6b6b47e97e19/26-6a562ba26edf5.webp' /></p><h2>அடிக்கடி குடும்ப தகராறு&nbsp;</h2><p>
</p><p>
 எனினும் இருவருக்கும் அடிக்கடி குடும்ப தகராறு நடந்து வந்த நிலையில், சுமார் 8 மாதங்களாக தனது சகோதரர் வீட்டில் பிரியங்கா வசித்து வந்துள்ளார். </p><p>

இந்நிலையில், நேற்று (13) பிரியங்காவின் பிறந்தநாளன்று அதிகாலை 2 மணியளவில் இருவரும் தங்களது பைக்கில் வெளியே சென்றபோது&nbsp; கல்யாண்பூரி பகுதியில் உள்ள லால் பகதூர் சாஸ்திரி வைத்தியசாலை அருகே கடுமையான வாக்குவாதம்&nbsp; ஏற்பட்டது.</p><p></p><p>
</p><p>
இதன்போது , மனிஷ் பதி தனது பைக்கை நிறுத்தியதும் அதிலிருந்து இறங்கிய பிரியங்காவை தான் வைத்திருந்த துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்துவிட்டு சம்பவ இடத்திலிருந்து தப்பியோடியுள்ளார். </p><p>

இரத்த வெள்ளத்தில் கிடந்த பிரியங்காவை அந்த வழியாக வந்த ஆட்டோ ஓட்டுனர் மீட்டு வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நிலையில் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.</p><p></p><p>
</p><p>
 இச்சம்பவம் பெரும் அதிவலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் தப்பியோடிய பொலிஸ் அதிகாரியை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-14T12:29:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[விளக்கமறியல் நீடிப்பு; யாழில் சிறை உத்தியோகத்தர் மீது கைதி தாக்குதல்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/prisoner-attacks-prison-officer-in-jaffna-1784025101"></link>
            <id>https://jvpnews.com/article/prisoner-attacks-prison-officer-in-jaffna-1784025101</id>
            <summary type="text">யாழ்ப்பாணத்தில் விளக்கமறியல் கைதியொருவர் சிறைச்சாலை உத்தியோகத்தர் மீது தாக்குதலை மேற்கொண்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

தாக்குதலுக்கு உள்ளான ...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணத்தில் விளக்கமறியல் கைதியொருவர் சிறைச்சாலை உத்தியோகத்தர் மீது தாக்குதலை மேற்கொண்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
</p><p>
தாக்குதலுக்கு உள்ளான சிறைச்சாலை உத்தியோகஸ்தர் சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் .</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/007f8ef3-ec93-4a19-89e2-ef5a3e7fe8d2/26-6a56100f4e605.webp' /></p><p></p><p>
</p><p>
போதைப்பொருள் வழக்கு தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கைதியொருவர் நேற்றைய தினம் (13) நீதிமன்ற வழக்கு விசாரணை நடைபெற்ற போது , குறித்த நபரின் விளக்கமறியலை நீதிமன்று நீடித்து உத்தரவிட்டது.</p><p></p><p>
</p><p>
இதனை அடுத்து விளக்கமறியல் கைதியை மீண்டும் சிறைச்சாலைக்கு அழைத்து சென்ற போது, குறித்த நபர் சிறைச்சாலை உத்தியோகஸ்தர் மீது தாக்குதலை மேற்கொண்டுள்ளார்.</p><p>

தாக்குதலில் காயமடைந்த சிறைச்சாலை உத்தியோகஸ்தர் யாழ் . போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் , சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-14T12:28:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[அணியில் உள்ளவருடன் சேர்ந்து துரோகம் செய்த மனைவி - அவுஸ்திரேலிய கிரிக்கெட்டில் வெடித்த சர்ச்சை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/partner-accuse-aus-cricketer-gardner-affair-voll-1784031968"></link>
            <id>https://news.lankasri.com/article/partner-accuse-aus-cricketer-gardner-affair-voll-1784031968</id>
            <summary type="text">அவுஸ்திரேலிய கிரிக்கெட்டில் அணியில் உள்ள சக வீராங்கனையுடன் சேர்ந்து தனது மனைவி துரோகம் செய்துவிட்டதாக மோனிகா ரைட் குற்றநச்சட்டியுள்ளார்.

துரோகம் செ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அவுஸ்திரேலிய கிரிக்கெட்டில் அணியில் உள்ள சக வீராங்கனையுடன் சேர்ந்து தனது மனைவி துரோகம் செய்துவிட்டதாக மோனிகா ரைட் குற்றநச்சட்டியுள்ளார்.</p><h3>

துரோகம் செய்த அவுஸ்திரேலிய வீராங்கனை</h3><p> 

இரு வாரங்களுக்கு முன்னர் நடைபெற்ற 2026 மகளிர் உலக கிண்ண இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்திய அவுஸ்திரேலிய அணி 7வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.
</p><p>
தற்போது அவுஸ்திரேலியா மகளிர் கிரிக்கெட் அணியில் பெரும் சர்ச்சை வெடித்துள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c73dd0ed-b303-4ecc-be05-59d9a2ba35ea/26-6a562ae32b543.webp' /></p><p>
அவுஸ்திரேலிய அணியின் துணை கேப்டனான ஆஷ்லே கார்ட்னர், தனது நீண்டகால காதலியான மோனிகா ரைட்டை ஏப்ரல் 2025 ஆம் ஆண்டில் தன்பாலின திருமணம் செய்து கொண்டார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/23e71980-4301-4167-a9c8-470ef0f95cd8/26-6a562ae273ec0.webp' /></p><p>

இவர்கள் இருவருக்குமிடையே பிரிவு உள்ளதாக தகவல் வெளியாகி வந்த நிலையில், ஆஷ்லே கார்ட்னர் தனக்கு துரோகம் செய்துள்ளதாக மோனிகா ரைட் பகிரங்க குற்றச்சாட்டை வைத்துள்ளார். </p><p>

தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் சக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீராங்கனையான ஜார்ஜியா வோலின் புகைப்படத்தை பதிவிட்ட மோனிகா ரைட், இவருடன் தான் என் மனைவி துரோகம் செய்தார் என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e8aeac9e-d5a1-49d5-8eb4-6c4529566ff5/26-6a562ae3ccd3e.webp' /></p><p> 

கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற 2025 ஒருநாள் உலகக்கிண்ண தொடரின் பின்னர் இவர்களுக்குள் பிரிவு தொடங்கியதாகக் கூறப்படுகிறது.</p><p> 

இந்தியாவில் இருந்த போதே கார்டனர் மற்றும் வோல்க்கு இடையே உறவு இருந்ததாகவும், அது தெரியாமல் உலககிண்ணத்தில் கார்டனருக்கு ஆதரவளிக்க மோனிகா இந்தியா வந்துள்ளார்.</p><p>
அவுஸ்திரேலியா திரும்பிய பின்னர் மோனிகாவிடம் அவருக்கு துரோகம் செய்ததை கார்டனர் ஒப்புக்கொண்டுள்ளார்.&nbsp;</p><p></p><p>
இருவரும் ஒரு குழந்தையைப் பெற்றுக்கொள்ள திட்டமிட்டு அதற்கான மருத்துவமனை முன்பதிவையும் செய்திருந்த நிலையில், இந்த பிரிவால் அந்த முன்பதிவை மோனிகா ரத்து செய்துள்ளார்.
</p><p>
இதன் பின்னர் தனது திருமண மோதிரத்தை மட்டும் வீட்டில் விட்டுவிட்டு, அங்கிருந்த மற்ற பொருட்களை எடுத்துக்கொண்டு சொல்லாமல் கார்ட்னர் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். </p><p>

இந்த விவகாரம் அவுஸ்திரேலிய கிரிக்கெட் ரசிகர்களிடையே பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-14T12:26:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ்.தெல்லிப்பழை தள வைத்தியசாலையில் நோய்த் தடுப்பு சிகிச்சை விடுதி திறந்துவைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/inauguration-hostel-at-tellippalai-hospital-jaffna-1784030749"></link>
            <id>https://tamilwin.com/article/inauguration-hostel-at-tellippalai-hospital-jaffna-1784030749</id>
            <summary type="text">யாழ்.தெல்லிப்பழை தள வைத்தியசாலையில்
&quot;அரவணன்&quot;
நோய்த்தடுப்பு சிகிச்சை நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.இதில் பிரதம விருந்தினராக
இலங்கைக்கான அவுஸ்திர...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்.தெல்லிப்பழை தள வைத்தியசாலையில்
"அரவணன்"
நோய்த்தடுப்பு சிகிச்சை நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.</p><p>இதில் பிரதம விருந்தினராக
இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர்
மேத்யூ டக்வொர்த் கலந்து கொண்டு விடுதியினை திறந்து வைத்துள்ளார்.
</p><p></p><h2>முதற்கட்டமாக அமைக்கப்பட்ட விடுதி</h2><p>கடற்றொழில் நீரியல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், யாழ்.மாவட்ட
நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறீபவானந்தராஜா, அவுஸ்திரேலியா பாலம் அமைப்பின்
பணிபபாளர்களான பிரணவன், வைத்தியர்கள், ஊழியர்கள், பொது மக்கள்
கலந்து கொண்டனர்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2c2bc26d-dcc3-4bbb-8281-8425f70ba0ee/26-6a5629682329b.webp' /></p><p>
அவுஸ்திரேலியாவின், மனிதநேயத்திற்கான பாலம் (bridge to humunity )எனும்
அமைப்பின் ஆயிரம் அவுஸ்திரேலிய டொலர் 150,000செலவில்( 03 கோடி )
முதற்கட்டமாக அமைக்கப்பட்ட இந்த விடுதி நோயாளர்கள் இறப்பிற்கு முன் தமது
இறுதிக்காலத்தினை மருத்துவ உதவியுடன் கழிப்பதற்காக இது&nbsp;ிறந்து வைக்கப்பட்டுள்ளது.</p><p>மேலும், மருத்துவர்களின்
பரிந்துரையுடன் யாழ்.மாவட்டத்தின் எங்குள்ளவர்களும் இவ்வசதியை
பயன்படுத்த முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-14T12:26:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[எபோலா வைரஸ் பரவல் அதிகரிப்பு - போராட்டத்தில் குதித்த சுகாதாரப் பணியாளர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ebola-virus-outbreak-increases-1784031843"></link>
            <id>https://tamilwin.com/article/ebola-virus-outbreak-increases-1784031843</id>
            <summary type="text">கொங்கோ ஜனநாயகக் குடியரசில் (DRC) எபோலா வைரஸ் பரவல் தீவிரமடைந்து வரும்
நிலையில், அங்குள்ள எபோலா சிகிச்சை மையத்தைச் சேர்ந்தவர்கள் சுகாதாரப் பணிப்பாளர்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொங்கோ ஜனநாயகக் குடியரசில் (DRC) எபோலா வைரஸ் பரவல் தீவிரமடைந்து வரும்
நிலையில், அங்குள்ள எபோலா சிகிச்சை மையத்தைச் சேர்ந்தவர்கள் சுகாதாரப் பணிப்பாளர்கள் திடீர் வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
</p><p>
இதன்போது போராட்டக்காரர்கள், தங்களுக்கு வழங்கப்பட வேண்டிய பல மாத சம்பள மிகுதியை உடனே வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.</p><p></p><p> </p><h2> 

சுகாதார ஊழியர்கள் வேலைநிறுத்தம்</h2><p>
அத்துடன், தங்களின் பாதுகாப்பு வசதிகளை மேம்படுத்த வலியுறுத்தியும் அவர்கள் இந்த
வேலைநிறுத்தத்தைக் ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/18daa61b-91ad-4e88-a3bf-fbc70b2465f2/26-6a562a9f930ba.webp' /></p><p> 

இவர்களில் சிலர், தங்களுக்குப் பல மாதங்களாகச் சம்பளமே வழங்கப்படவில்லை என்றும் விசனம் தெரிவித்துள்ளனர். </p><p> 

எபோலா போன்ற கொடிய நோய் பரவி வரும் நிலையில், முன்நின்று
பணியாற்றும் சுகாதாரப் பணியாளர்கள் கொங்கோவில் மேற்கொண்டுள்ள இந்த
வேலைநிறுத்தம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.&nbsp;&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-14T12:25:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹோர்முஸை தவிர்த்து புதிய துறைமுகத்தை அமைக்க தயாராகும் ஐக்கிய அரபு அமீரகம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/uae-prepares-to-build-new-port-bypassing-hormuz-1784020073"></link>
            <id>https://ibctamil.com/article/uae-prepares-to-build-new-port-bypassing-hormuz-1784020073</id>
            <summary type="text">ஹோர்முஸ் நீரிணையை தவிர்த்து ஒரு புதிய துறைமுகத்தை அமைப்பதில் ஐக்கிய அரபு அமீரகம், கவனம் செலுத்தி வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஈரான...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹோர்முஸ் நீரிணையை தவிர்த்து ஒரு புதிய துறைமுகத்தை அமைப்பதில் ஐக்கிய அரபு அமீரகம், கவனம் செலுத்தி வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p>
ஈரான் ஹோர்முஸ் நீரிணையை மூடியதன் காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் வர்த்தகத்திற்கு ஏற்பட்ட இடையூறுகளைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
அதன்படி, துபாயை தளமாக கொண்ட முக்கிய உலகலாவிய நிறுவனங்களில் ஒன்று ஐக்கிய அரபு அமீரகத்தின் கிழக்குக் கடற்கரையில் ஒரு புதிய துறைமுகம் மற்றும் கொள்கலன் முனையத்தை அமைக்கத் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.&nbsp;</p><p></p><h2>துறைமுகத்தை அமைப்பதற்கான பேச்சுவார்த்தை</h2><p>மேலும், ஃபுஜைரா கடற்கரையில் இந்த புதிய பல்நோக்கு துறைமுகத்தை அமைப்பதற்கான பேச்சுவார்த்தைகள் ஏற்கனவே நடைபெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/41fee679-0739-4100-a88a-895718bc6517/26-6a55fc6a9e4fb.webp' /></p><p>
</p><p>
இந்தத் திட்டம் 18 மாதங்களுக்குள் முடிக்கப்படும் என்று வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-14T12:20:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[தீவிரமடைந்து வரும் மத்திய கிழக்கு மோதலில் உச்சத்தை எட்டிய எண்ணெய் விலைகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/record-high-amid-escalating-middle-east-conflict-1784031145"></link>
            <id>https://ibctamil.com/article/record-high-amid-escalating-middle-east-conflict-1784031145</id>
            <summary type="text">மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதட்டங்களால், உலகளாவிய எரிசக்தி விநியோகத்தில் ஏற்படக்கூடிய தடைகள் குறித்த கவலைகள் அதிகரித்த நிலையில், உலகளாவிய எண்ணெ...</summary>
            <content type="html"><![CDATA[<p>மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதட்டங்களால், உலகளாவிய எரிசக்தி விநியோகத்தில் ஏற்படக்கூடிய தடைகள் குறித்த கவலைகள் அதிகரித்த நிலையில், உலகளாவிய எண்ணெய் விலைகள் அதிக வரம்புநிலையை எட்டியுள்ளன.</p><p>
அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே மீண்டும் தொடங்கிய மோதல்களால், மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த ஹோர்முஸ் நீரிணை வழியாக எண்ணெய் விநியோகம் குறித்த அச்சங்கள் அதிகரித்துள்ள நிலையில், பிரென்ட் கச்சா எண்ணெய் எதிர்கால ஒப்பந்தங்கள் ஒரு பீப்பாய்க்கு 86 டொலருக்கும் அதிகமாகவும், அமெரிக்காவின் வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியட் (WTI) கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய்க்கு 80 டாலருக்கும் அதிகமாகவும் உயர்ந்தன.
</p><p>
ஈரான் மீது மீண்டும் கடற்படை முற்றுகையை விதித்து, ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் சரக்குகளுக்கு 20% கட்டணம் விதிக்கும் அமெரிக்காவின் முடிவைத் தொடர்ந்து இந்த சமீபத்திய முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. </p><p></p><h2>&nbsp;போக்குவரத்து வழித்தடங்கள்</h2><p>இது உலகின் மிகவும் பரபரப்பான எண்ணெய் கப்பல் போக்குவரத்து வழித்தடங்களில் ஒன்றான ஹோர்மூஸ் குறித்த கவலைகளைத் தூண்டியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/576d5972-86a2-47c3-9fc0-0ccc75de7e48/26-6a5627aad478c.webp' /></p><p> </p><p>மேலும், அந்த நீரிணை வழியாக கப்பல் போக்குவரத்து நடவடிக்கைகள் குறைந்துள்ளதால், விநியோகத் தடைகள் குறித்த கவலைகள் மேலும் அதிகரித்துள்ளன.
</p><p>
மீண்டும் அதிகரித்துள்ள புவிசார் அரசியல் பதட்டங்கள், எண்ணெய் விலைகளுக்கு ஒரு குறிப்பிடத்தக்க இடர் பிரீமியத்தைச் சேர்த்துள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்தனர். </p><p>மேலும், மோதல் தொடர்ந்தால் மற்றும் எரிசக்தி விநியோகத்தில் தொடர்ந்து இடையூறு ஏற்பட்டால், பிரென்ட் கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய்க்கு 85-90 டாலர் வரம்பில் நீடிக்கக்கூடும் என்று சிலர் கணித்துள்ளனர்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-14T12:12:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[சவுதி அரேபியாவின் புதிய Package Visa- விமானம், ஹோட்டல், விசா அனைத்தும் ஒரே இடத்தில்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/saudi-arabia-launches-all-in-one-travel-visa-1784031105"></link>
            <id>https://news.lankasri.com/article/saudi-arabia-launches-all-in-one-travel-visa-1784031105</id>
            <summary type="text">சவுதி அரேபியா சுற்றுலா பயணிகளுக்காக புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.பேக்கேஜ் விசா (Package Visa) எனப்படும் இந்த திட்டம் மூலம் பயணிகள் விமான டிக்கெ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சவுதி அரேபியா சுற்றுலா பயணிகளுக்காக புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.</p><p>பேக்கேஜ் விசா (Package Visa) எனப்படும் இந்த திட்டம் மூலம் பயணிகள் விமான டிக்கெட், ஹோட்டல் முன்பதிவு, சுற்றுலா விசா ஆகியவற்றை ஒரே இடத்தில் எளிதாக பெற முடியும்.
</p><p>
இந்த சேவை முழுமையாக டிஜிட்டல் முறையில் செயல்படுகிறது. பயணிகள் தனித்தனியாக விமானம், ஹோட்டல், விசா ஆகியவற்றை ஏற்பாடு செய்ய வேண்டிய அவசியம் இல்லை. ஒரே பிளாட்ஃபார்மில் அனைத்தையும் ஒரே நேரத்தில் பதிவு செய்யலாம். இதன் மூலம் சுற்றுலா திட்டமிடுதல் மிகவும் எளிதாகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/57af52c1-d9e9-40af-bf01-e9598dfd6684/26-6a562782d78cc.webp' /></p><h2>பேக்கேஜ் விசாவின் அம்சங்கள்</h2><ul><li>இரு வழி விமான டிக்கெட்
</li><li>ஹோட்டல் வசதி
</li><li>சுற்றுலா e-விசா
</li><li>வழிகாட்டியுடன் சுற்றுலா அனுபவங்கள்
</li><li>கலாச்சார நிகழ்ச்சிகள், என பல சேவைகளை ஒரே முன்பதிவில் பெற முடியும்.</li></ul><p>இந்த திட்டம் தற்போது இந்தியா, பாகிஸ்தான், வங்காளதேசம், இந்தோனேஷியா, ஜோர்டான், எகிப்து, மெக்சிகோ போன்ற நாடுகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அடுத்த கட்டத்தில் மேலும் பல நாடுகளுக்கு விரிவாக்கம் செய்யப்பட உள்ளது.</p><p></p><p>சவுதி அரேபியாவின் ‘விஷன் 2030’ சுற்றுலா திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. </p><p>உலகளாவிய சுற்றுலா தலமாக சவுதி அரேபியாவை மாற்றும் நோக்கத்துடன், பயணிகளுக்கு எளிதான, சீரான அனுபவத்தை வழங்கும் வகையில் இந்த பேக்கேஜ் விசா அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-14T12:10:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[மாகாண சபைத் தேர்தல் தாமதமடைய நிதி பிரச்சனை காரணமே அல்ல..! அமைச்சர் நலிந்த விளக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/provincial-council-elections-delayed-1784029180"></link>
            <id>https://ibctamil.com/article/provincial-council-elections-delayed-1784029180</id>
            <summary type="text">மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதற்கு எந்த நிதி சிக்கல்களும் இல்லை என்றும், எந்தவொரு தேர்தலையும் நடத்துவதற்குத் தேவையான நிதி ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ளது ...</summary>
            <content type="html"><![CDATA[<p>மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதற்கு எந்த நிதி சிக்கல்களும் இல்லை என்றும், எந்தவொரு தேர்தலையும் நடத்துவதற்குத் தேவையான நிதி ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
</p><p>
ஒருவேளை திடீர் தேர்தல் அறிவிக்கப்பட்டாலும், தேவையான நிதியை ஒதுக்கீடு செய்யும் திறன் அரசாங்கத்திடம் உள்ளது என்று அமைச்சர் விளக்கினார். மாகாண சபைத் தேர்தல்கள் தொடர்பான பிரச்சினை நிதி சம்பந்தப்பட்டது அல்ல, மாறாக தற்போது நடைமுறையில் உள்ள தேர்தல் முறை சம்பந்தப்பட்டது என்று அவர் வலியுறுத்தினார்</p><h2>ரில்வின் சில்வா வெளியிட்ட தகவல்</h2><p>அமைச்சர் ஜெயதிஸ்ஸவின் கூற்றுப்படி, புதிய தேர்தல் முறையை அறிமுகப்படுத்துவதற்கு தேவையான திருத்தங்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டவுடன் மாகாண சபைத் தேர்தல்களை நடத்த முடியும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b0af64d0-ec51-4753-9fdc-e5ee7d50e51c/26-6a5623eceb8a9.webp' /></p><p>&nbsp;முன்னதாக, ஜனதா விமுக்தி பெரமுனவின் (JVP) பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா, 'டித்வா' பேரிடர் காரணமாக மாகாண சபைத் தேர்தல்களை நடத்த முடியவில்லை என்றும், தேர்தல்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதி பேரிடர் நிவாரணப் பணிகளுக்குத் திருப்பி விடப்பட்டுள்ளது என்றும் கூறியிருந்தார்.</p><p>இந்தக் கூற்றை நிராகரித்த அமைச்சர் ஜெயதிஸ்ஸ, இன்று (14) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகள் குறித்த விளக்கக் கூட்டத்தில் பேசுகையில், ‘டித்வா’ பேரிடர் மீட்புப் பணிகளுக்காக ரூ. 500 பில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். இந்த ஒதுக்கீட்டில் சுமார் ரூ. 260 பில்லியன் இதுவரை செலவிடப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள நிதி இன்னும் கையிருப்பில் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.</p><p></p><h2>ரில்வின் கூற்றை மறுத்த அமைச்சர் ஜெயதிஸ்ஸ</h2><p>&nbsp;பேரிடர் மீட்புப் பணிகள் தொடர்பான செலவினங்களால் மாகாண சபைத் தேர்தல்களுக்கான நிதி ஒதுக்கீடு பாதிக்கப்படவில்லை என்றும் அமைச்சர் மேலும் தெளிவுபடுத்தினார். திடீர் பொதுத் தேர்தல் உட்பட, தேர்தல்களை நடத்துவதற்கு அரசாங்கம் நிதி ரீதியாகத் திறன் பெற்றுள்ளதாக அவர் மீண்டும் வலியுறுத்தினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b914bdcd-bacb-4b0f-9f0d-0f89b9a38472/26-6a5623ec45f41.webp' /></p><p>“பிரச்சினை நிதி சம்பந்தப்பட்டது அல்ல; நாடாளுமன்றத்தில் தேர்தல் முறைக்கு ஒப்புதல் அளிப்பதே பிரச்சினை. பாரம்பரியமாக, அனைத்து தேர்தல்களுக்கும் நிதி ஒதுக்கப்பட்டு வருகிறது. கூடுதல் நிதி தேவைப்பட்டாலும், அதை ஒரு துணை மதிப்பீட்டின் மூலம் வழங்க முடியும். எனவே, நிதி ரீதியான தடை எதுவும் இல்லை,” என்று அமைச்சர் கூறினார்.</p><p></p><h2>&nbsp;தேர்தல் முறைக்கு ஒப்புதல்&nbsp;அளித்தவுடன் தேர்தல்</h2><p>ஒரு தேர்தலை நடத்துவதற்கான செலவு, அனர்த்த முகாமைக்கு ஒதுக்கப்பட்ட நிதியை விட கணிசமாகக் குறைவு என்றும், முந்தைய தேர்தல் ஒதுக்கீடுகள் சுமார் ரூ. 6 பில்லியனாக இருந்து, பின்னர் ரூ. 100 பில்லியனாக உயர்த்தப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.. மதிப்பிடப்பட்ட அதிகபட்ச செலவு சுமார் ரூ. 15 பில்லியன் ஆக இருக்கும் நிலையில், இதன் மொத்த செலவு ரூ. 10 பில்லியன் ஆகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8fa88cda-64a8-4052-903e-f557355af213/26-6a5623eb6500f.webp' /></p><p>

"'டித்வா' பேரிடருக்காக ஒதுக்கப்பட்ட ரூ. 500 பில்லியனில், சுமார் ரூ. 260 பில்லியன் ஏற்கனவே செலவிடப்பட்டுள்ளது. நிதி ஒதுக்கீடு தொடர்பாக எந்தப் பிரச்சினையும் இல்லை. தேர்தல் முறைக்கு நாடாளுமன்றத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டவுடன், எந்த நேரத்திலும் தேர்தலை நடத்த நாங்கள் தயாராக இருக்கிறோம்," என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-14T12:06:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[6 தலைமுறைகள் - 83 பேர்... ஒற்றுமையாக வாழும் அதிசயக் கூட்டுக் குடும்பம்! எங்கு தெரியுமா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/andhra-pradesh-6-generations-83-members-family-1784022436"></link>
            <id>https://manithan.com/article/andhra-pradesh-6-generations-83-members-family-1784022436</id>
            <summary type="text">நவீன காலத்தில் கூட்டுக் குடும்பங்கள் குறைந்து, தனிக்குடித்தன வாழ்க்கை அதிகரித்து வரும் சூழலில், ஆந்திரப் பிரதேசத்தில் கடந்த 6 தலைமுறைகளாக 83 பேர் ஒரே ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நவீன காலத்தில் கூட்டுக் குடும்பங்கள் குறைந்து, தனிக்குடித்தன வாழ்க்கை அதிகரித்து வரும் சூழலில், ஆந்திரப் பிரதேசத்தில் கடந்த 6 தலைமுறைகளாக 83 பேர் ஒரே கூட்டுக் குடும்பமாக ஒற்றுமையுடனும் அன்புடனும் வாழ்ந்து வரும் சம்பவம் பலரையும் ஆச்சரியத்திலும் நெகிழ்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது.</p><p>
</p><p>
ஆந்திரப் பிரதேசத்தின் அனந்தபூர் மாவட்டம், குர்லபள்ளி கிராமத்தைச் சேர்ந்த நாகப்பா குடும்பம்தான் இந்த அபூர்வமான ஒற்றுமைக் குடும்பமாகத் திகழ்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ac13d4be-5be6-4750-95ea-dda475c83768/26-6a5609221c625.webp' /></p><p></p><h2>வியக்க வைத்த கூட்டுக் குடும்பம்</h2><p>குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும், அனைவரும் வசதிக்காக ஒன்றுக்கொன்று அடுத்ததாக அமைந்துள்ள நான்கு வீடுகளில் வசிக்கின்றனர். ஆனால், வாழ்வியல் முறையிலும் குடும்ப நிர்வாகத்திலும் அவர்கள் ஒரே குடும்பமாகவே செயல்பட்டு வருகின்றனர்.</p><p>
இந்தக் குடும்பத்தின் சிறப்பம்சம் என்னவென்றால், 83 பேருக்குமான உணவும் ஒரே சமையலறையில்தான் தினமும் தயாரிக்கப்படுகிறது. குடும்பத்தின் மருமகள்கள் அனைவரும் முழு ஒற்றுமையுடன் சமையல் உள்ளிட்ட வீட்டுப் பொறுப்புகளைப் பகிர்ந்து செய்து வருகின்றனர்.</p><p> வயது, திறமை மற்றும் அனுபவத்திற்கு ஏற்ப ஒவ்வொருவருக்கும் பொறுப்புகள் ஒதுக்கப்பட்டுள்ளதால், குடும்ப நிர்வாகம் எந்தச் சிக்கலும் இன்றி சீராக நடைபெறுகிறது.

குடும்பத்தின் மூத்தோர் அனைவரும் ஆலோசனைகளின் மூலம் குடும்பத்தை ஒற்றுமையுடன் வழிநடத்துகின்றனர். </p><p>இளைஞர்கள் விவசாயம் மற்றும் குடும்பத் தொழில்களை முழுப் பொறுப்புடனும் அர்ப்பணிப்புடனும் கவனித்து வருகின்றனர். இதனால் தலைமுறைகள் மாறினாலும் குடும்பத்தின் ஒற்றுமை மற்றும் பாரம்பரியம் தொடர்ந்து பாதுகாக்கப்பட்டு வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ba2837a5-38da-4e50-938e-26927718233f/26-6a560922c58b5.webp' /></p><p></p><p>

இந்த மாபெரும் கூட்டுக் குடும்பத்திற்குச் சொந்தமாக 120 ஏக்கர் விவசாய நிலமும், 4 பேருந்துகளும் உள்ளன. இவற்றின் மூலம் கிடைக்கும் வருமானம் யாருக்கும் தனித்தனியாகப் பிரிக்கப்படாமல், முழுமையாக ஒரே பொதுக் கணக்கில் சேர்க்கப்பட்டு குடும்பத்தின் தேவைகளுக்காக வெளிப்படையான முறையில் பயன்படுத்தப்படுகிறது.</p><p>

இன்றைய வேகமான வாழ்க்கை முறையிலும், தனிமனிதச் சிந்தனைகள் மேலோங்கும் காலத்திலும், அன்பு, விட்டுக்கொடுத்தல், பரஸ்பர நம்பிக்கை மற்றும் ஒற்றுமையின் மூலம் ஒரு பெரிய குடும்பத்தை வெற்றிகரமாக வழிநடத்த முடியும் என்பதை இந்தக் குடும்பம் நிரூபித்துக் காட்டியுள்ளது.</p><p> இவர்களின் அசைக்க முடியாத குடும்ப ஒற்றுமை சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பகிரப்பட்டு, ஆயிரக்கணக்கானோரின் பாராட்டுகளையும் நெகிழ்ச்சியான வாழ்த்துகளையும் பெற்று வருகிறது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW&nbsp;</a></u></b> &nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-14T12:06:10+00:00</updated>
        </entry>
    </feed>
