<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-07-14T10:30:03+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீலநிற சேலையில் கிளாமர் கிளிக்ஸ்!! சேயோன் பட நடிகை பாக்யஸ்ரீயின் புகைப்படங்கள்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/seyon-actress-bhagyashri-borse-recent-click-1784024077"></link>
            <id>https://viduppu.com/article/seyon-actress-bhagyashri-borse-recent-click-1784024077</id>
            <summary type="text">இந்தியில் ஒருசில படங்களில் சப்போர்ட்டிங் ரோலில் நடித்து பிரபலமாகி நடிகர் ரவி தேஜா நடித்த மிஸ்டர் பச்சன் படத்தின் மூலம் கதாநாயகியாக தெலுங்கு மொழியில் அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியில் ஒருசில படங்களில் சப்போர்ட்டிங் ரோலில் நடித்து பிரபலமாகி நடிகர் ரவி தேஜா நடித்த மிஸ்டர் பச்சன் படத்தின் மூலம் கதாநாயகியாக தெலுங்கு மொழியில் அறிமுகமாகினார் நடிகை பாக்யஸ்ரீ போர்ஸே. இப்படத்தில் தன்னுடைய முதல் SIIMA விருதினை பெற்றார் பாக்யஸ்ரீ. </p><p>இப்படத்தினை தொடர்ந்து , கிங்டம், காந்தா, ஆந்திரா கிங் தாலுகா என்ற படங்களிலும் நடித்து பிரபலாமானர் பாக்யஸ்ரீ போர்ஸே.
</p><p>
தென்னிந்திய சினிமாவில் 26 வயதில் சென்ஷேஷ்னல் நடிகையாக உலாவரும் நடிகை பாக்யஸ்ரீ, தெலுங்கில் லெனின் என்ற படத்தில் நடித்து ஜூலை 10 ஆம் தேதி வெளியாகி பலரது கவனத்தையும் பெற்றார், சிவகார்த்திகேயனின் சேயோன் படத்தில் கமிட்டாகி நடித்து வருகிறார்.
</p><p>
இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் பாக்யஸ்ரீ, நீலநிற சேலையணிந்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-07-14T10:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீர்கொழும்பு சிறைக் கலவரத்தின் பின்னணியில் உள்ள சதித்திட்டங்கள் : விசாரணைகள் தீவிரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/conspiracies-behind-the-negombo-prison-conflict-1784021647"></link>
            <id>https://ibctamil.com/article/conspiracies-behind-the-negombo-prison-conflict-1784021647</id>
            <summary type="text">நீர்கொழும்பு சிறைச்சாலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஏற்பட்ட மோதல் குறித்து&amp;nbsp;சுகாதார பிரதி அமைச்சர் வைத்தியர் ஹன்ஸக விஜேமுனி கருத்து வெளியிட...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீர்கொழும்பு சிறைச்சாலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஏற்பட்ட மோதல் குறித்து&nbsp;சுகாதார பிரதி அமைச்சர் வைத்தியர் ஹன்ஸக விஜேமுனி கருத்து வெளியிட்டுள்ளார்.</p><p>அதன்படி, குறித்த மோதலின் பின்னணியில் ஏதேனும் சதித்திட்டங்கள் அடங்கிய செயற்பாடுகள் காணப்பட்டதா என்பது குறித்து தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.</p><p>

கண்டியில் நடைபெற்ற கலந்துரையாடல் ஒன்றின் போது கருத்துத் தெரிவிக்கையிலேயே பிரதி அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.</p><p></p><h2>சிறைச்சாலைகளில் அதிக நெரிசல்&nbsp;</h2><p>தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,&nbsp; நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலின் பின்னணியில் ஏதேனும் சதித்திட்டம் இருந்ததா? என்பது குறித்து தற்போது விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த விசாரணைகளின் முன்னேற்றத்தின் அடிப்படையிலேயே எம்மால் உறுதியாகக் கூற முடியும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a7104383-0891-45fe-84b0-1ac05f32cf67/26-6a560d29529c2.webp' /></p><p> சிறைச்சாலைகளில் உள்ள அதிக நெரிசல் நீண்டகாலமாக நிலவி வரும் ஒரு பிரச்சினையாகும். சிறைச்சாலைக்குள் பல பிரச்சினைகள் உருவாகின்றன.</p><p> வழக்குகள் தேவையற்ற முறையில் தாமதமடைதல், அறிக்கைகள் கிடைக்காமை, போதைப்பொருள் கைதுகள் அதிகரிப்பு ஆகியன சிறைச்சாலை நெரிசல் அதிகரிப்பதற்கு காரணமாக அமைந்துள்ளன.</p><p></p><h2>தற்காலிக நடவடிக்கை&nbsp;</h2><p>காலி மஹமோதர பழைய வைத்தியசாலை, கண்டி போகம்பரை சிறைச்சாலை ஆகிய இரண்டையும் நாங்கள் சிறைச்சாலைகளாக தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல எதிர்பார்ப்பவை அல்ல. எமக்கு வேறு திட்டங்கள் உள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f67bf3e2-df55-47fe-a714-fa95efcfb06a/26-6a560cf6844a0.webp' /></p><p> </p><p>ஆனால் இந்த நேரத்தில் உடனடி நடவடிக்கையாக சில மாதங்களுக்கு மட்டுமே அந்தப் படியை எடுத்தோம். சில மாதங்களுக்கு மட்டுமே அந்த இடங்களில் சிறைச்சாலைகள் நடத்தப்படும். தீர்வுகள் கிடைக்கும் போது அந்த இரண்டு சிறைச்சாலைகளும் நீக்கப்படும்" என தெரிவித்தார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-14T10:22:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[முன்னாள் அமைச்சர் பிரசன்னவின் வெளிநாட்டுப் பயணத் தடை நீக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/prasannas-foreign-travel-ban-temporarily-lifted-1784023612"></link>
            <id>https://ibctamil.com/article/prasannas-foreign-travel-ban-temporarily-lifted-1784023612</id>
            <summary type="text">&amp;nbsp;ஊழல் குற்றச்சாட்டின் பேரில் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மீது விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டுப் பயணத் தடையை ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;ஊழல் குற்றச்சாட்டின் பேரில் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மீது விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டுப் பயணத் தடையை தற்காலிகமாக நீக்க கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று (14) முடிவு செய்தது.</p><p>

முன்னாள் அமைச்சர் சார்பில் நீதிமன்றத்தில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி அனில் சில்வா விடுத்த கோரிக்கையைப் பரிசீலித்த பின்னர் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.</p><h2>சட்டத்தரணி விடுத்த கோரிக்கையும் நீதிமன்றின் அனுமதியும்</h2><p>&nbsp;சந்தேக நபர் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி, தனது கட்சிக்காரர் தனிப்பட்ட காரணங்களுக்காக வெளிநாடு செல்ல வேண்டியிருப்பதால் அவர் மீதான வெளிநாட்டுப் பயணத் தடையை இன்றிலிருந்து ஓகஸ்ட் 02 வரை தற்காலிகமாக நீக்குமாறு நீதிமன்றத்தைக் கேட்டுக்கொண்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/75ad96f0-4b29-4a5f-a262-ac70b8af28d5/26-6a560d1dd0ee8.webp' /></p><p>
</p><p>

இதனையடுத்து அவர் மீதான பயணத்தடையை நீதிமன்றம் தற்காலிகமாக நீக்கியுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-14T10:19:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹீரோவாக களமிறங்கும் முதலமைச்சர் விஜய் மகன் ஜேசன் சஞ்சய்; வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/cm-vijay-son-jason-sanjay-set-to-debut-as-a-hero-1784024297"></link>
            <id>https://jvpnews.com/article/cm-vijay-son-jason-sanjay-set-to-debut-as-a-hero-1784024297</id>
            <summary type="text">தமிழகத்தின் முதலமைச்சர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய்&amp;nbsp;&amp;nbsp;ஹீரோவாக நடிக்க உள்ளதாக&amp;nbsp; இந்திய&amp;nbsp; ஊடகங்கள் தெரிவித்துள்ளன.&amp;nbsp;&amp;nbsp; விஜய் நடித...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழகத்தின் முதலமைச்சர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய்&nbsp;&nbsp;ஹீரோவாக நடிக்க உள்ளதாக&nbsp; இந்திய&nbsp; ஊடகங்கள் தெரிவித்துள்ளன.&nbsp;&nbsp;</p><p> விஜய் நடித்த வேட்டைக்காரன் படத்தில் ஒரு பாடலுக்கு வந்து நடனமாடியிருப்பார் ஜேசன் சஞ்சய் . அப்ப பெரிய நடிகராக இருந்ததால் எப்படியும் பின்னாளில் ஜேசன் சஞ்சய் நடிகராக வருவார் என எல்லோரும் எதிர்பார்த்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/792348d2-96a7-4d48-93b7-56cf1f26ba70/26-6a560ceb2fc4f.webp' /></p><p>
</p><p>
ஆனால், அவரோ இயக்குனராக களமிறங்கி எல்லோரையும் ஆச்சர்யப்படுத்தினார். லைக்கா நிறுவனம் தயாரிப்பில் தெலுங்கு நடிகர் சந்தீப் கிஷனை வைத்து சிக்மா என்கிற படத்தை இயக்கினார் ஜேசன் சஞ்சய்.</p><p></p><p> </p><p>

அவருக்கு நடிப்பில் ஆரமில்லை என சொல்லப்பட்டாலும் சிக்மா படத்தின் புரமோஷன் பாடலில் பர்பாமன்ஸும் செய்திருந்தார் ஜேசன்.

ஜேசன் சஞ்சய் இயக்கியுள்ள சிக்மா திரைப்படம் வருகிற ஆகஸ்டு மாதம் இறுதியில் வெளியாகும் எனத்தெரிகிறது.</p><p> 

இந்நிலையில்தான், எல்லோரும் எதிர்பார்த்தபடி ஜேசன் சஞ்சய் ஹீரோவாக நடிக்கவுள்ளதாக தற்போது செய்திகள் வெளியாகியிருக்கிறது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-14T10:16:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[2030இற்குள் சுற்றுலாப் பயணிகளுக்கான செலவினத்தை அதிகரிக்க முடிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/higher-tourist-spending-by-2030-1784020086"></link>
            <id>https://tamilwin.com/article/higher-tourist-spending-by-2030-1784020086</id>
            <summary type="text">பொருளாதாரத்திற்கு சுற்றுலாத் துறையின் பங்களிப்பை அதிகரிக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, 2030ஆம் ஆண்டிற்குள் சராசரி சுற்றுலாப் பயணிகளின் செலவினத்தை கண...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொருளாதாரத்திற்கு சுற்றுலாத் துறையின் பங்களிப்பை அதிகரிக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, 2030ஆம் ஆண்டிற்குள் சராசரி சுற்றுலாப் பயணிகளின் செலவினத்தை கணிசமாக அதிகரிப்பதை இலங்கை நோக்கமாகக் கொண்டுள்ளது என சுற்றுலா பிரதி அமைச்சர் ருவன் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
</p><p>
 

களுத்துறை மாவட்ட செயலகத்தில் மாவட்டத்தின் சுற்றுலாத் தொழிலை வலுப்படுத்துவது தொடர்பாக நடைபெற்ற கூட்டத்தில் பேசிய பிரதி அமைச்சர் ரணசிங்க, நாட்டில் தங்கியிருக்கும் போது பார்வையாளர்கள் செலவிடும் தொகையை அதிகரிப்பதற்கான திட்டங்களை அரசாங்கம் வகுத்து வருவதாக குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>சுற்றுலாப் பயணிகளின் செலவினங்கள்&nbsp;</h2><p>

 

2018 மற்றும் 2019ஆம் ஆண்டுகளில் 171 அமெரிக்க டொலராகப் பதிவான நிலையில், தற்போது ஒரு சராசரி சுற்றுலாப் பயணி சுமார் 148 அமெரிக்க டொலரைச் செலவிடுகிறார் என்று அவர் கூறியுள்ளார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7d0e3dfc-7953-4ad2-870d-9691a3bdb26a/26-6a560c2c6f5be.webp' /></p><p>கொவிட்-19 பெருந்தொற்றைத் தொடர்ந்து சுற்றுலாப் பயணிகளின் நடத்தை மற்றும் செலவின முறைகளில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்து, அரசாங்கம் பதவியேற்ற பின்னர் ஓர் ஆய்வை நடத்தியதாக பிரதி அமைச்சர் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
</p><p>
 

சுற்றுலாப் பயணிகளின் செலவினங்களை அதிகரிப்பதற்கு, ஒட்டுமொத்த வருகையாளர் அனுபவத்தை மேம்படுத்துவதே முக்கியமானது என்றும், அந்த இலக்கை அடைவதற்குத் திட்டமிட்ட மற்றும் முறையான அணுகுமுறை தேவைப்படும் என்றும் கூறியுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-14T10:16:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ashik</name>
            </author>
            <title type="text"><![CDATA[போதைப்பொருள் விற்பனை செய்த இளைஞருக்கு மன்னார் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/mannar-high-court-man-wattala-to-life-imprisonment-1784019209"></link>
            <id>https://tamilwin.com/article/mannar-high-court-man-wattala-to-life-imprisonment-1784019209</id>
            <summary type="text">5 கிராமுக்கும் அதிகமாக ஐஸ் போதைப் பொருளைத் தன்வசம் வைத்திருந்து விற்பனை செய்த குற்றச்சாட்டின் கீழ், கைது செய்யப்பட்டிருந்த நபர் ஒருவருக்கு மன்னால் மேல...</summary>
            <content type="html"><![CDATA[<p>5 கிராமுக்கும் அதிகமாக ஐஸ் போதைப் பொருளைத் தன்வசம் வைத்திருந்து விற்பனை செய்த குற்றச்சாட்டின் கீழ், கைது செய்யப்பட்டிருந்த நபர் ஒருவருக்கு மன்னால் மேல் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.&nbsp;</p><p>இந்த வழக்கு கடந்த (01.07.2026) திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோதே இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p>இந்த வழக்கின் அனைத்து பரிமாணங்களையும், சமர்ப்பிக்கப்பட்ட சான்றுகளையும் மிக ஆழமாக ஆராய்ந்த மன்னார் மேல் நீதிமன்ற நீதிபதி, குற்றச்சாட்டுகள் அனைத்தும் நியாயமான முறையில் நிரூபிக்கப்பட்டுள்ளதை உறுதி செய்திருந்தார்.</p><p></p><h2>ஆயுள் தண்டனை</h2><p>
</p><p>
கடந்த 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 14ஆம் திகதி, 5 கிராமுக்கும் அதிகமான
'ஐஸ்' போதைப் பொருளைத் தன் வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் கீழும், அதனை
விற்பனை செய்த குற்றச்சாட்டின் கீழும் கைது செய்யப்பட்ட நபர் வத்தளை பகுதியை சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/efb73e11-64b4-4493-8636-2e2257d15c02/26-6a55ff2ae9bdf.webp' /></p><p>
</p><p>
குறித்த வழக்கின் விசாரணைகள் மன்னார் நீதிமன்றில் இடம் பெற்று வந்த நிலையில்,
குற்றவாளிக்கு எதிரான சாட்சியங்களையும் சான்றுகளையும் அரச சட்ட வாதிகளான தேவ
விதுரன் மற்றும் ஆறுமுகம் தனுஷன் ஆகியோர் நெறிப்படுத்தி நீதிமன்றத்தின் முன்
சமர்ப்பித்திருந்தனர்.
</p><p>இதேவேளை,&nbsp; அரசு தரப்பால் முன்வைக்கப்பட்ட ஆதாரங்கள் அனைத்தும், குற்றவாளியின்
மீதான குற்றச்சாட்டுகளைச் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிப்பதாக அமைந்திருந்தன.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-14T10:12:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[NPP நகர சபை உறுப்பினர் பதவி ராஜினாமா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/badulla-npp-city-council-member-resigns-1784023426"></link>
            <id>https://jvpnews.com/article/badulla-npp-city-council-member-resigns-1784023426</id>
            <summary type="text">பதுளை மாநகர சபையின் தேசிய மக்கள் சக்தியின் (NPP) நகர சபை உறுப்பினர் மஹிந்த குணசேகர தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

 

தனிப்பட்ட காரணம் நிமித்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>பதுளை மாநகர சபையின் தேசிய மக்கள் சக்தியின் (NPP) நகர சபை உறுப்பினர் மஹிந்த குணசேகர தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
</p><p>
 

தனிப்பட்ட காரணம் நிமித்தமே அவர் இவ்வாறு தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/92aa7a2c-1459-40e1-8331-2d7024742bd8/26-6a5609840a919.webp' /></p><p>

 

இதன் மூலம் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்புவதற்காக, பதுளை மாநகர சபையின் தேசிய மக்கள் சக்தியின் புதிய நகர சபை உறுப்பினராக ஜயசேன ரத்நாயக்க நேற்று (13) ஊவா மாகாண ஆளுநர் சட்டத்தரணி கபில ஜயசேகர முன்னிலையில் பதவியேற்றுள்ளார்.</p>]]></content>
            <updated>2026-07-14T10:02:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[புதிய வசூல் சாதனை படைத்த ‘மைக்கேல்’.. பாக்ஸ் ஆபிஸில் இப்படம் தான் நம்பர் 1]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/michael-crossed-1-billion-at-the-global-box-office-1784021927"></link>
            <id>https://cineulagam.com/article/michael-crossed-1-billion-at-the-global-box-office-1784021927</id>
            <summary type="text">மைக்கேல்&amp;nbsp;நடனத்தின் கடவுளாக ரசிகர்களால் பார்க்கப்படும் மைக்கேல் ஜாக்சனின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இப்படத்தை இயக்குநர் Antoine Fuqu...</summary>
            <content type="html"><![CDATA[<h2>மைக்கேல்&nbsp;</h2><p>நடனத்தின் கடவுளாக ரசிகர்களால் பார்க்கப்படும் மைக்கேல் ஜாக்சனின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இப்படத்தை இயக்குநர் Antoine Fuqua இயக்கியிருந்தார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c1f03f95-4074-4cf9-b922-3faecc1161fb/26-6a5603aa5f624.webp' /></p><p></p><p>ஹீரோவாக ஜாஃபர் ஜாக்சன் நடிக்க ஜான் லோகன் இப்படத்திற்கு திரைக்கதை வடிவமைத்திருந்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளிவந்த இப்படம் பாக்ஸ் ஆபிஸில் மாபெரும் வசூல் சாதனையை படைத்துள்ளது.</p><h2>வசூல் சாதனை</h2><p>
</p><p>
ஆம், மைக்கேல் திரைப்படம் உலகளவில் 1 பில்லியன் அமெரிக்க டாலர் வசூலித்துள்ளது. அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ. 9,533 கோடி <a href="https://www.youtube.com/watch?v=1LKorLUYf30" target="_blank">வசூல் </a>செய்து சாதனை படைத்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/95e29116-1311-4d9a-8c87-57d4689ff4e4/26-6a5603ab13876.webp' /></p><p>

இதன்மூலம் ஓப்பன்ஹெய்மர், போஹிமியன் ராபிசோடி படங்களின் சாதனைகளை முறியடித்து, அதிக வசூல் செய்த பயோபிக் திரைப்படமாக மைக்கேல் உருவெடுத்துள்ளது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-14T10:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Farook Sihan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கல்முனை ஆணையாளருக்கு மரண அச்சுறுத்தல் விடுத்த மாநகர சபை ஊழியர் சிறையிலடைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/death-threat-to-kalmunai-commissioner-1784022973"></link>
            <id>https://ibctamil.com/article/death-threat-to-kalmunai-commissioner-1784022973</id>
            <summary type="text">கல்முனை மற்றும் அக்கரைப்பற்று மாநகர சபைகளின் ஆணையாளர் என்.எம்.
நெளபீஸுக்குக் கடமை நேரத்தில் உயிர் அச்சுறுத்தல் விடுத்த குற்றச்சாட்டில்
கைது செய்யப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>கல்முனை மற்றும் அக்கரைப்பற்று மாநகர சபைகளின் ஆணையாளர் என்.எம்.
நெளபீஸுக்குக் கடமை நேரத்தில் உயிர் அச்சுறுத்தல் விடுத்த குற்றச்சாட்டில்
கைது செய்யப்பட்ட கல்முனை மாநகர சபை ஊழியரை 02 சரீரப் பிணைகளில்
விடுவிப்பதற்கு கல்முனை நீதிமன்ற நீதிவான் கே.எல்.எம்.சாஜித்
உத்தரவிட்டுள்ளார்.</p><p>

குறித்த சந்தேகநபரை 02 சரீரப் பிணைகளில் செல்ல நீதிமன்றம்
உத்தரவிட்டிருந்த போதிலும், நீதிமன்ற வேலை நேரத்திற்குள் உரிய முறையில் பிணை
எடுக்கத் தவறியமையினாலேயே அவர் சிறைச்சாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.</p><p>

கடந்த சில தினங்களுக்கு முன்னர் கல்முனை மாநகர சபைக்குள் வைத்து, அதன்
ஆணையாளர் என்.எம். நெளபீஸை அதே சபையில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் கடமை
நேரத்தில் அச்சுறுத்தியுள்ளார்.</p><p></p><h2>நீதிமன்றில் முன்னிலை&nbsp;</h2><p> </p><p>இச்சம்பவம் தொடர்பாக ஆணையாளரினால் கல்முனை
தலைமையக காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனையடுத்து காவல்துறையால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு, சந்தேகநபரான ஊழியர்
நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3c656a68-8058-4002-a30a-e79c1a1cc2b4/26-6a5607beeb451.webp' /></p><p>
இந்த வழக்கானது கடந்த திங்கட்கிழமை (13) கல்முனை நீதிமன்ற நீதிவான்
கே.எல்.எம்.சாஜித் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.</p><p> இதன்போது
நீதிமன்றில் முன்னிலையான இருதரப்புச் சமர்ப்பணங்களையும் நீதிவான் விரிவாக
ஆராய்ந்தார்.

அதனைத் தொடர்ந்து, சந்தேகநபரை 02 சரீரப் பிணைகளில் விடுவிப்பதற்கு நீதிவான்
உத்தரவிட்டார். </p><p>எனினும், நீதிமன்ற நேரம் முடிவடையும் வரை சந்தேகநபர் சார்பில்
பிணை எடுப்பதற்கு எவரும் முன்வராத காரணத்தினால், அவர் சிறைச்சாலைக்குக் கொண்டு
செல்லப்பட்டார்.</p><p>

மேலும், இந்த வழக்கின் மேலதிக விசாரணைகளை எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் 3 ஆம் திகதி
வரை ஒத்திவைப்பதாகவும் கல்முனை நீதிமன்ற நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-14T09:56:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Manchu</name>
            </author>
            <title type="text"><![CDATA[பெட்ஷீட், தலையணை உறையை எப்போது துவைக்கிறீங்க? எச்சரிக்கை பதிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/how-often-should-bedsheets-and-pillowcases-washed-1784019207"></link>
            <id>https://manithan.com/article/how-often-should-bedsheets-and-pillowcases-washed-1784019207</id>
            <summary type="text">படுக்கை விரிப்பு, தலையணை உறையினை எத்தனை நாட்களுக்கு ஒருமுறை துவைக்க வேண்டும்? அதனால் நன்மைகள் என்ன? என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.பொதுவாக ஒரு ...</summary>
            <content type="html"><![CDATA[<p>படுக்கை விரிப்பு, தலையணை உறையினை எத்தனை நாட்களுக்கு ஒருமுறை துவைக்க வேண்டும்? அதனால் நன்மைகள் என்ன? என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.</p><p>பொதுவாக ஒரு மனிதர் தனது வாழ்நாளில் மூன்றில் ஒரு பகுதியை படுக்கைக்கு தான் செலவிடுகின்றனர். அவ்வாறு நாம் அதிகமாக பயன்படுத்தும் படுக்கை சுத்தமாக இருந்தால் தான் நல்ல தூக்கத்தையும், உடல் ஆரோக்கியத்தையும் பெற முடியும்.</p><p>தூங்கி எழும்பிய பின்பு படுக்கையை சரியான ஒழுங்கு செய்து வைத்துவிட்டு செல்கின்றோம். ஆனால் அதனை எப்பொழுது துவைக்கின்றோம் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/83489b1f-f825-489f-ad9d-b349cc0737c5/26-6a5607b3b19e9.webp' /></p><p>அதிகமான நாட்கள் துவைக்காமல் பயன்படுத்தினால், உடல் எண்ணெய், வியர்வை, இறந்த சரும செல்கள், தூசிப் பூச்சிகள், பாக்டீரியா, பூஞ்சை என துணிகளில் படிந்து கொண்டே செல்லும்.</p><p>இதனால் தோல் அரிப்பு, ஒவ்வாமை, முகப்பரு, மூச்சுத்திணறல், துர்நாற்றம், சரியாமல் தூங்கமுடியாத பிரச்சனைகள் ஏற்படும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/75795d82-0828-44b1-abec-c50591877d44/26-6a5607b45f2c6.webp' /></p><p></p><h2>எத்தனை நாட்களுக்குள் துவைக்க வேண்டும்?</h2><p>படுக்கை விரிப்பினை வாரத்திற்கு ஒருமுறை கட்டாயம் துவைக்க வேண்டும். அதிலும் அதிகமாக வியர்ப்பவர்கள், ஆஸ்துமா பிரச்சனை உள்ளவர்கள், குழந்தைகள் இவர்கள் எனில் 3 நாட்களுக்கு ஒருமுறை கட்டாயம் துவைக்கவும்.</p><p>அதுவே தலையணை உறையினை 3 நாட்களுக்கு ஒருமுறை மாற்றவும். அவ்வாறு இல்லையெனில் அதிகபட்சம் வாரத்திற்கு ஒருமுறையாவது துவைத்து சுத்தம் செய்யவும்.</p><p>துவைக்கும் போது வெதுவெதுப்பான தண்ணீரில் ஊற வைத்து துவைப்பது சிறந்தது. ஏனெனில் அதில் படிந்திருக்கும் பாக்டீரியா, கிருமிகள் அழியுமாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/22025902-f38f-4332-a513-0ff26c9b4e8f/26-6a5607b50d0f2.webp' /></p><p>அதிகமாக வியர்ப்பவர்கள், ஒவ்வாமை பிரச்சனை, சளி, காய்ச்சல், ஆஸ்துமா போன்ற பிரச்சனை உள்ளவர்கள் அடிக்கடி துவைப்பது அவசியம்.</p><p>இவ்வாறு அடிக்கடி துவைத்து பயன்படுத்தும் போது தரமான தூக்கத்தையும், உடல்நலத்தில் மிகப்பெரிய மாற்றத்தினையும் பெறுவீர்கள்.</p><table class="table table-bordered"><tbody><tr><td><i>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன்<a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்<a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"><b> FOLLOW NOW</b></a>&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;</i><br></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-14T09:56:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடா முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வீட்டில் நூற்றுக்கணக்கான துப்பாக்கிகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/hundreds-of-weapons-seized-in-canada-ex-mp-house-1784022823"></link>
            <id>https://canadamirror.com/article/hundreds-of-weapons-seized-in-canada-ex-mp-house-1784022823</id>
            <summary type="text">கனடா முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் வீட்டில் பொலிசார் நடத்திய சோதனையின்போது, நூற்றுக்கணக்கான துப்பாக்கிகள் முதலான ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டு...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடா முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் வீட்டில் பொலிசார் நடத்திய சோதனையின்போது, நூற்றுக்கணக்கான துப்பாக்கிகள் முதலான ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள விடயம் பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது.</p><p>

மனித்தோபாவில் பல கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து, கடைசியில் சுயேட்சையாக போட்டியிட்டு தோல்வியடைந்தவர் இங்கி மார்க் (78).&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/764a9413-9328-4c4f-914e-b112ba0ad0b6/26-6a560728bedde.webp' /></p><p>

இம்மாதம், அதாவது, ஜூலை மாதம் 7ஆம் திகதி, மார்க் வீட்டில் பொலிசார் சோதனை மேற்கொண்டனர்.
</p><p>
அப்போது, அவர் வீட்டில் நூற்றுக்கணக்கான துப்பாக்கி முதலான ஆயுதங்கள் இருப்பதும், அவை முறைப்படி பாதுகாப்பாக வைக்கப்படாமல் இருந்ததும் தெரியவந்துள்ளது.
</p><p>
அவற்றில் சில, கடத்தப்பட்டவை என பொலிசார் கருதுகிறார்கள்.
</p><p>
அத்துடன், மார்க் வீட்டிலிருந்து துப்பாக்கி குண்டுகளும், 300,000 டொலர்கள் ரொக்கமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
</p><p>
மார்க் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் மீது ஆயுதக் கடத்தல் முதலான பல குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
</p><p>
அவர் கடந்த வாரம் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட நிலையில், ஆகத்து மாதம் 11ஆம் திகதி, மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட உள்ளார்.</p>]]></content>
            <updated>2026-07-14T09:53:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடா முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கைது: வீட்டில் கண்ட அதிரவைத்த காட்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/ex-mp-inky-mark-charged-for-firearms-trafficking-1784022657"></link>
            <id>https://news.lankasri.com/article/ex-mp-inky-mark-charged-for-firearms-trafficking-1784022657</id>
            <summary type="text">&amp;nbsp;கனடா முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் வீட்டில் பொலிசார் நடத்திய சோதனையின்போது, நூற்றுக்கணக்கான துப்பாக்கிகள் முதலான ஆயுதங்கள் கண்டுபிடிக்கப...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;கனடா முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் வீட்டில் பொலிசார் நடத்திய சோதனையின்போது, நூற்றுக்கணக்கான துப்பாக்கிகள் முதலான ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள விடயம் பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது.
</p><h3>
பொலிசார் கண்ட அதிரவைத்த காட்சி
</h3><p>
மனித்தோபாவில் பல கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து, கடைசியில் சுயேட்சையாக போட்டியிட்டு தோல்வியடைந்தவர் இங்கி மார்க் (78).&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/403d2e4c-451a-41ce-bc89-1da9b01e41c8/26-6a56068300251.webp' /></p><p>

இம்மாதம், அதாவது, ஜூலை மாதம் 7ஆம் திகதி, மார்க் வீட்டில் பொலிசார் சோதனை மேற்கொண்டனர்.&nbsp;</p><p>
அப்போது, அவர் வீட்டில் நூற்றுக்கணக்கான துப்பாக்கி முதலான ஆயுதங்கள் இருப்பதும், அவை முறைப்படி பாதுகாப்பாக வைக்கப்படாமல் இருந்ததும் தெரியவந்துள்ளது.&nbsp;</p><p></p><p>
அவற்றில் சில, கடத்தப்பட்டவை என பொலிசார் கருதுகிறார்கள்.
</p><p>
அத்துடன், மார்க் வீட்டிலிருந்து துப்பாக்கி குண்டுகளும், 300,000 டொலர்கள் ரொக்கமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.</p><p>

மார்க் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் மீது ஆயுதக் கடத்தல் முதலான பல குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
</p><p>
அவர் கடந்த வாரம் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட நிலையில், ஆகத்து மாதம் 11ஆம் திகதி, மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட உள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-14T09:51:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kowshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அஜித் நிவாட் கப்ராலுக்கு எதிரான விசாரணை : ஜூலை 20இல் ஆரம்பம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/cabraal-bid-halt-greek-bond-corruption-case-fails-1784016655"></link>
            <id>https://tamilwin.com/article/cabraal-bid-halt-greek-bond-corruption-case-fails-1784016655</id>
            <summary type="text">மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள இலஞ்ச ஊழல் வழக்கு விசாரணைகளை எதிர்வரும் ஜூலை மாதம் 20ஆம் தி...</summary>
            <content type="html"><![CDATA[<p>மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள இலஞ்ச ஊழல் வழக்கு விசாரணைகளை எதிர்வரும் ஜூலை மாதம் 20ஆம் திகதி ஆரம்பிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
</p><p>
பிரதிவாதி தரப்பினரால் தாக்கல் செய்யப்பட்ட ஆரம்பக்கட்ட ஆட்சேபனையை கொழும்பு மேல் நீதிமன்றம் நிராகரித்துள்ளதாக நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>அரசாங்கத்திற்கு ஏற்பட்ட நட்டம்</h2><p>
</p><p>
2012ஆம் ஆண்டில் கிரீஸ் நாடு பொருளாதார ரீதியாக வீழ்ச்சியடைந்திருந்த போது, அந்த நாட்டுப் பிணைமுறிவுகளில் முதலீடு செய்ததன் மூலம் அரசாங்கத்துக்கு 184 கோடி ரூபாவுக்கும் அதிகமாக நட்டம் ஏற்பட்டிருந்தது. </p><p>இதற்கு எதிராகவே இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கை விசாரணை செய்வதற்கு கொழும்பு மேல் நீதிமன்றத்துக்கு சட்ட வரம்புக்குட்பட்ட அதிகாரம் இல்லை எனத் தெரிவித்தே மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் தரப்பினரால் இந்த ஆரம்பக்கட்ட ஆட்சேபனை தாக்கல் செய்யப்பட்டிருந்தது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a799fba7-84b0-4530-9c03-d6d9d78e53b7/26-6a55f0f6223a6.webp' /></p><p>நீதிபதி மனோஜ் தல்கொடபிட்டிய தலைமையில், உதேஷ் ரணதுங்க மற்றும் புத்திக சி. ராகல ஆகியோர் அடங்கிய அமர்வே இந்தத் தீர்ப்பை அறிவித்துள்ளது. </p><p>

தனக்கு எதிராக மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த HCB 271/24 மற்றும் HCB 33/24 ஆகிய வழக்குகளில் உள்ள குற்றச்சாட்டுக்களும், இந்த வழக்கின் குற்றச்சாட்டுகளும் சமமானவை என பிரதிவாதி தரப்பு மன்றில் தெரிவித்ததுடன், அந்த வழக்கு நடவடிக்கைகள் ஏற்கனவே நிறைவடைந்துள்ளதால், மீண்டும் அதே குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வழக்கைத் தொடர்வது சட்டவிரோதமானது எனவும் குறிப்பிட்டுள்ளனர்.</p><p>

இதன்போது பதிலளித்த இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு, அதன் பணிப்பாளர் நாயகத்தினால் 2018ஆம் ஆண்டின் 9ஆம் இலக்க சட்ட ஏற்பாடுகளுக்கமைய இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளரினால் நிர்வாகக் கட்டமைப்புக்கமைய இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக மன்றில் தெரிவித்திருந்தனர்.</p><p></p><h2>நீதிமன்ற உத்தரவு</h2><p>
</p><p>
மன்றில் முன்வைக்கப்பட்ட இரு தரப்பு சமர்ப்பனங்களையும் பரிசீலித்த நீதிபதிகள் அமர்வு , இந்தச் சட்டத்தின் மூலம் தற்போதுள்ள மூலச் சட்டத்தின்கீழ் எந்தவித உரிமைகளும் பறிக்கப்படவில்லை என்றும், இது நடைமுறைச் சட்டமே எனவும் தெரிவித்திருந்தது.</p><p> 

மேலும், மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் அமர்வினால் வழங்கப்படும் தீர்ப்பினால், பாதிக்கப்படும் தரப்பு அதற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்யும் உரிமை சட்டத்தினால் பாதுகாக்கப்பட்டுள்ளதுடன், உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பே இறுதியானது என்றும் நீதிபதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d7ebc1cf-caff-4132-b4aa-11553f494def/26-6a55f0f6c58ab.webp' /></p><p>


இதனடிப்படையில், பிரதிவாதி தரப்பால் முன்வைக்கப்பட்ட ஆரம்பக்கட்ட ஆட்சேபனைகளில் எந்தவித அடிப்படையும் இல்லை எனக் கூறி அதனை நிராகரித்த நீதிமன்றம், வழக்கின் முழுமையான விசாரணைகளை எதிர்வரும் ஜூலை மாதம் 20ஆம் திகதி ஆரம்பிப்பதற்குத் தீர்மானித்துள்ளது.
</p><p>
2011 மார்ச் 11 முதல் 2012 நவம்பர் 19 வரையான காலப்பகுதிக்குள், கிரீஸின் பிணைமுறிவுகளில் அரசாங்கப் பணத்தை முதலீடு செய்ததன் மூலம், அரசிற்கு 184 கோடிக்கும் அதிக நட்டத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் இந்த வழக்குத் தொடரப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-14T09:50:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுரேஷ் சலே தாக்கல் செய்த மனு : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/court-defers-hearing-on-suresh-sallay-s-petition-1784019981"></link>
            <id>https://ibctamil.com/article/court-defers-hearing-on-suresh-sallay-s-petition-1784019981</id>
            <summary type="text">அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேவினால் தாக்கல் செய்யப்பட்ட மனு குறித்து நீதிமன்றம் உத்தரவொன்றைப் பிறப்பித்துள்ளது.அதன்படி, குறி...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேவினால் தாக்கல் செய்யப்பட்ட மனு குறித்து நீதிமன்றம் உத்தரவொன்றைப் பிறப்பித்துள்ளது.</p><p>அதன்படி, குறித்த மனு மீதான விசாரணைகளை எதிர்வரும் ஜூலை 17ஆம் திகதி வரை ஒத்திவைக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (14) உத்தரவிட்டுள்ளது. </p><p>உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கு அமைவாக, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தம்மைக் கைது செய்து காவலில் வைத்துள்ளமையை சவாலுக்குட்படுத்தி&nbsp;சுரேஷ் சலே இந்த மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.</p><p></p><h2>நீதிமன்றின் உத்தரவு</h2><p>இந்த மனு இன்று (14) எடுத்துக்கொள்ளப்பட்ட போது, மனுதாரரான சுரேஷ் சலே சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சீவ ஜயவர்தன மேலதிக சமர்ப்பிப்புகளை மேற்கொண்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f0d96606-8b34-433f-ad67-f8cc2a2f1eb8/26-6a560048cd790.webp' /></p><p>இதனைத் தொடர்ந்தே, மனு மீதான மேலதிக பரிசீலனையை எதிர்வரும் 17ஆம் திகதி வரை ஒத்திவைக்க நீதிமன்றம் உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.</p><p>சுரேஷ் சலே கடந்த பெப்ரவரி மாதம் 25 ஆம் திகதி குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-14T09:50:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[எகிப்து உலகக் கோப்பை அணிக்கு 59 SUV கார்களை பரிசளிக்கும் UAE தொழிலதிபர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/uae-billionaire-gifts-59-cars-to-egypt-team-1784022664"></link>
            <id>https://news.lankasri.com/article/uae-billionaire-gifts-59-cars-to-egypt-team-1784022664</id>
            <summary type="text">உலகக்கோப்பையில் மெஸ்ஸியின் அர்ஜென்டினா அணியை கிட்டத்தட்ட தோற்கடித்த எகிப்து அணிக்கு UAE தொழிலதிபர் ஒருவர் SUV கார்களை பரிசாக அறிவித்துள்ளார்.

59 Mi...</summary>
            <content type="html"><![CDATA[<p>உலகக்கோப்பையில் மெஸ்ஸியின் அர்ஜென்டினா அணியை கிட்டத்தட்ட தோற்கடித்த எகிப்து அணிக்கு UAE தொழிலதிபர் ஒருவர் SUV கார்களை பரிசாக அறிவித்துள்ளார்.
</p><h2>
59 Mitsubishi SUV</h2><p>

ஐக்கிய அரபு அமீரகத்தின் பிரபல தொழிலதிபர் கலாஃப் அல் ஹப்தூர் (Khalaf Al Habtoor), எகிப்து உலகக் கோப்பை கால்பந்து அணிக்கும் அவர்களின் ஆதரவு குழுவினருக்கும் மொத்தம் 59 Mitsubishi SUV கார்கள் பரிசளிக்க உள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/52599292-69c4-40b9-b18d-2e6a29d5eef2/26-6a560689d74b3.webp' /></p><p>
</p><h2>
வரலாற்றில் முதன்முறை
</h2><p>
எகிப்து அணி, உலகக் கோப்பை போட்டிகளில் வரலாற்றில் முதன்முறையாக Round-Off 16 சுற்றுக்கு முன்னேறியது.</p><p> இறுதியில் அர்ஜென்டினாவிடம் 3-2 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தாலும், அவர்களின் வீரத்தையும் உறுதியையும் உலகம் முழுவதும் பாராட்டியது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/afba2475-4c62-4b1d-a1fd-2abdf26e209c/26-6a56068a8e36b.webp' /></p><h2>

அன்பும் நன்றியும்</h2><p>

எகிப்தின் மகிழ்ச்சி இன்று அனைத்து அரபு மக்களின் மகிழ்ச்சி என்றும், அதனால் எகிப்தின் வீரர்களுக்கு அன்பையும் நன்றியையும் தெரிவிக்கும் விதமாக இந்த பரிசை வழங்குவதாக அல் ஹப்தூர் குழுமத்தின் தலைவர் கலாஃப் அல் ஹப்தூர் சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார்.</p><p>

வீரர்கள் மட்டுமல்லாமல், தொழில்நுட்ப, நிர்வாக மற்றும் மருத்துவ குழுவினருக்கும் கார்கள் வழங்கப்பட உள்ளன.</p><p></p><p>
</p><h2>
Order of Merit விருது</h2><p>

அணி எகிப்து திரும்பியபோது, ஆயிரக்கணக்கான ரசிகர்கள் வரவேற்று கொடியசைத்து, வீரர்களின் பெயர்களை முழங்கினர். </p><p>எகிப்து ஜனாதிபதி அப்துல் ஃபத்தாஹ் எல் சிசி, அணியினருக்கு ‘Order of Merit’ விருதையும் வழங்கினார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p>
</p>]]></content>
            <updated>2026-07-14T09:49:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[திருமணத்திற்கு பின் பழைய ஃபார்முக்கு வரும் நடிகை ரம்யா பாண்டியன்!! புகைப்படங்கள்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/arulvaan-movie-actress-ramya-pandian-recent-photos-1784023014"></link>
            <id>https://viduppu.com/article/arulvaan-movie-actress-ramya-pandian-recent-photos-1784023014</id>
            <summary type="text">ரம்யா பாண்டியன்சோசியல் மீடியாவில் கிளாமர் புகைப்படங்கள், வீடியோக்களை பகிர்ந்து பிரபலமான நடிகை ரம்யா பாண்டியன், டம்மி பட்டாசு, ஜோக்கர், ஆண் தேவதை உள்ளி...</summary>
            <content type="html"><![CDATA[<h2>ரம்யா பாண்டியன்</h2><p>சோசியல் மீடியாவில் கிளாமர் புகைப்படங்கள், வீடியோக்களை பகிர்ந்து பிரபலமான நடிகை ரம்யா பாண்டியன், டம்மி பட்டாசு, ஜோக்கர், ஆண் தேவதை உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார்.

குக் வித் கோமாளி சீசன் 1ல் கலந்து கொண்டு 2வது ரன்னர் அப் இடத்தை பிடித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/df8d5a3f-f92e-4313-9c7e-7ffbc235e09d/26-6a5607ed03e30.webp' /></p><p> </p><p>அதன்பின் கலக்கப்போவது யாரு சீசன் 9 நிகழ்ச்சியில் நடுவராக பணியாற்றினார். அதன்பின் பிக்பாஸ் சீசன் 4ல் கலந்து கொண்டு 3வது ரன்னர் அப்பும், பிக்பாஸ் அல்டிமேட் 1ல் கலந்து கொண்டு 2வது ரன்னர் அப் இடத்தையும் பிடித்தார்.</p><p>
கடந்த 2024ல் யோகா பயிற்சியாளர் லோவல் தவான் என்பவரை திருமணம் செய்து கொண்டார். யூடியூப் ஆரம்பித்து பல விஷயங்களை பகிர்ந்து வரும் ரம்யா பாண்டியன், நடிப்பில் அருள்வான் என்ற படம் ஜூலை 17 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் பிரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார்.தற்போது எடுத்த க்யூட் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார் ரம்யா பாண்டியன்.</p>]]></content>
            <updated>2026-07-14T09:45:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Mayuri</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீர்க்கொழும்பு சிறைச்சாலை சம்பவம் - காரணத்தை வெளிப்படுத்திய முன்னாள் சிறைச்சாலை ஆணையாளர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/negombo-prison-clash-27-death-1784016248"></link>
            <id>https://tamilwin.com/article/negombo-prison-clash-27-death-1784016248</id>
            <summary type="text">நீர்க்கொழும்பு சிறைச்சாலை மோதல் சம்பவம் இவ்வளவு தூரம் சென்றதற்குக் காரணம், கைதிகள் மீது இருந்த நம்பிக்கையே என முன்னாள் சிறைச்சாலை ஆணையாளர் ஜகத் வீரசிங...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீர்க்கொழும்பு சிறைச்சாலை மோதல் சம்பவம் இவ்வளவு தூரம் சென்றதற்குக் காரணம், கைதிகள் மீது இருந்த நம்பிக்கையே என முன்னாள் சிறைச்சாலை ஆணையாளர் ஜகத் வீரசிங்க கூறியுள்ளார்.&nbsp;</p><p>

நீர்க்கொழும்பு சிறையில் நடந்த மோதல் தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p></p><p>மேலும் கூறுகையில், ஞாயிற்றுக்கிழமை அன்று ஒரு உள்ளக பிரச்சினை காரணமாக இரண்டு கைதிகள் இறந்தனர். அது அதிகாரிகள் வரை பரவவில்லை. மறுநாள் காலையில், எங்கள் அதிகாரிகள் குழு ஒன்று ஆயுதமின்றி அந்தச் சிறைக்குள் சென்றது.</p><h2>கைதிகள் மீதான நம்பிக்கை</h2><p>இங்குள்ள மிகப்பெரிய மற்றும் பிரதான பிரச்சினை, கைதிகள் மீது இருந்த நம்பிக்கையே. எனது சிறை வாழ்க்கை கிட்டத்தட்ட 38 ஆண்டுகள். நான் எந்த நேரத்திலும் ஒரு கைதியை நம்பியதில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c73a7fda-7350-4c52-9025-35ec1cbb13d8/26-6a5604c92e530.webp' /></p><p>அதனால்தான் நான் நினைக்கிறேன்... நமது அதிகாரிகள் ஒரு பெரிய தவறைச் செய்துவிட்டார்கள். அவர்கள் கைதிகளை நம்பி சிறைக்குள் சென்றார்கள்.</p><p>43,000 அதிகாரிகள் இருக்கும் இடத்தில், சுமார் 5500 அதிகாரிகள் கொண்ட ஒரு குழு சுமையைச் சுமக்க வேண்டியுள்ளது என்றுள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-14T09:44:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்; 200 பேரிடம் வாக்குமூலம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/negombo-prison-clash-statements-recorded-from-200-1784022293"></link>
            <id>https://jvpnews.com/article/negombo-prison-clash-statements-recorded-from-200-1784022293</id>
            <summary type="text">&amp;nbsp; நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் இதுவரையில் 200 பேரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் இதுவரையில் 200 பேரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். </p><p>

இன்று (14) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/85260375-c8fe-415a-9798-f1ee09904546/26-6a56051790391.webp' /></p><p> </p><p>

மேலும் நீர்கொழும்பிலிருந்து ஏனைய சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்ட கைதிகள் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களை முற்றாக மறுப்பதாகக் கூறிய அமைச்சர், சர்வதேசத்தின் மத்தியில் நாட்டின் நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்துவதற்காக சிலர் திட்டமிட்டு வதந்திகளை பரப்புவதாகவும் குறிப்பிட்டார்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-14T09:43:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நடுவானில் விமானத்திலிருந்து வெளியே இழுக்கப்பட இருந்த நபர்: காப்பாற்றிய மனைவி இவர்தான்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/wife-saved-husband-in-flight-window-break-1784022165"></link>
            <id>https://news.lankasri.com/article/wife-saved-husband-in-flight-window-break-1784022165</id>
            <summary type="text">நடுவானில் பறந்துகொண்டிருந்த விமானம் ஒன்றின் ஜன்னல் கண்ணாடி திடீரென உடைய, பயணி ஒருவர் விமானத்திலிருந்து வெளியே இழுக்கப்பட இருந்த சம்பவம் பெரும் பரபரப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>நடுவானில் பறந்துகொண்டிருந்த விமானம் ஒன்றின் ஜன்னல் கண்ணாடி திடீரென உடைய, பயணி ஒருவர் விமானத்திலிருந்து வெளியே இழுக்கப்பட இருந்த சம்பவம் பெரும் பரபரப்பை உருவாக்கியது நினைவிருக்கலாம்.
</p><p>
அந்த பயணி மற்றும் அவரது மனைவியின் புகைப்படங்கள் முதலான விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன.
</p><h3>
நடுவானில் நிகழ்ந்த பயங்கரம்...
</h3><p>
கடந்த வெள்ளிக்கிழமை காலை 5.55 மணிக்கு, கிரீஸ் நாட்டிலிருந்து RYANAIR விமானம் ஒன்று ஜேர்மனி நோக்கிப் புறப்பட்டது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/54f18324-f6d1-4f85-b227-9924d2e609bc/26-6a5604980efc8.webp' /></p><p>
விமானம் உயர எழுந்து 20,000 அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்தபோது, திடீரென டமார் என பயங்கர சத்தம் ஒன்று கேட்டுள்ளது.&nbsp;</p><p></p><p>
அதாவது, அந்த விமானத்தின் எஞ்சினிலிருந்து ஒரு துண்டு உடைந்து வந்து ஜன்னல் கண்ணாடியில் மோத, ஜன்னல் கண்ணாடி உடைந்து நொறுங்க, திடீரென ஜன்னல் திறந்ததால் ஏற்பட்ட அழுத்தக்குறைவு காரணமாக, ஜன்னல் அருகே உட்கார்ந்திருந்த பயணி ஒருவர், ஜன்னல் வழியாக வெளியே இழுக்கப்பட்டுள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/28f1cfed-74e9-4eb5-81d7-aaf41f38c097/26-6a56049758e89.webp' /></p><p>

உடனே அவரது மனைவி அவரை இரு கைகளாலும் இறுக அணைத்துப் பிடித்துக்கொண்டுள்ளார். அருகிலிருந்த சிலரும் அவரைப் பிடித்துக்கொள்ள, அவர் சீட் பெல்ட் அணிந்திருந்ததாலும் அவர்கள் அவரை பிடித்துக்கொண்டதாலும் உயிர் தப்பினார் அந்தப் பயணி.
</p><h3>
அவர்கள் இவர்கள்தான்...
</h3><p>
தற்போது, அந்த பயணி மற்றும் அவரைக் காப்பாற்றிய அவரது மனைவி தொடர்பான விவரங்கள் வெளியாகியுள்ளன.
</p><p>
அந்தப் பயணியின் பெயர் Ljubiša Karović (61) அவரது உயிரைக் காப்பாற்றிய அவரது மனைவியின் பெயர் Svetlana Grković. அவர்கள் இருவரும் செர்பியா நாட்டவர்கள்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/accbb8d5-be1a-44e8-be68-2d2e4b7c3ae0/26-6a560496a7c22.webp' /></p><p>
அந்த நெரத்தில், இறந்தால் இருவரும் சேர்ந்தே இறப்போம் என்னும் எண்ணம் மட்டும்தான் எனக்கு இருந்தது என்று கூறும் ஸ்வெட்லானா, அது ஒரு பயங்கர அனுபவம் என்கிறார்.
</p><p>
இதற்கிடையில், தன் கணவரான Ljubišaவுக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், கையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும், அவர் அதிர்ச்சியில் இருப்பதாகவும், அவரால் பேச முடியவில்லை என்றும் கூறும் ஸ்வெட்லானா, அவருக்கு நடந்தது முழுமையாக நினைவில்லை என்றும் கூறுகிறார்.</p><p>

அத்துடன், தான் தன் கணவரைப் பிடித்துக்கொண்டபோது, ஒரு ஆணும் ஒரு பெண்ணும் கூட தன் கணவரின் கால்களைப் பிடித்துக்கொண்டதாகவும், அவர்களுக்கு தான் நன்றி சொல்ல விரும்புவதாகவும் தெரிவிக்கிறார் ஸ்வெட்லானா.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-14T09:42:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Farook Sihan</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டின் பல பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட விசேட டெங்கு ஒழிப்புச் சிரமதானம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/special-dengue-eradication-shramadhana-1784011824"></link>
            <id>https://tamilwin.com/article/special-dengue-eradication-shramadhana-1784011824</id>
            <summary type="text">சம்மாந்துறை சபூர் வித்தியாலயத்தில் கல்வி பயிலும் மாணவர்களின் பாதுகாப்பை
உறுதிப்படுத்தும் நோக்கில், பாடசாலை வளாகத்தை மையப்படுத்தி விசேட டெங்கு
ஒழிப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>சம்மாந்துறை சபூர் வித்தியாலயத்தில் கல்வி பயிலும் மாணவர்களின் பாதுகாப்பை
உறுதிப்படுத்தும் நோக்கில், பாடசாலை வளாகத்தை மையப்படுத்தி விசேட டெங்கு
ஒழிப்புச் சிரமதான நிகழ்வொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
</p><p>
அண்மைக்காலமாக நிலவும் காலநிலை மாற்றம் மற்றும் டெங்கு பரவல் அச்சுறுத்தலைக்
கருத்திற் கொண்டு, சமூகப் பொறுப்புணர்வுடன் இந்தச் சிரமதான நிகழ்வு ஏற்பாடு
செய்யப்பட்டிருந்தது.</p><p></p><h2>டெங்கு ஒழிப்புச் சிரமதானம்</h2><p> இதன்போது பாடசாலையின் உட்புற மற்றும் வெளிப்புறச்
சூழல்கள், நுளம்புகள் பெருக்கமடையாத வகையில் முழுமையாகத்
தூய்மைப்படுத்தப்பட்டு துப்புரவுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d62a806a-a108-4024-be08-f104241c2d38/26-6a55de74befe4.webp' /></p><p>இந்த விசேட சமூகப் பணியானது, பொதுச் சுகாதாரப் பரிசோதகர் ரி. பரமேஸ்வரனின்
நேரடி வழிகாட்டலில், பாடசாலை அதிபர் ரி.கே.எம். சிராஜ்&nbsp; தலைமையில்
நடைபெற்றுள்ளது.
</p><p>
இதன் போது வீரமுனை இராணுவ முகாம் வீரர்களின் ஒத்துழைப்புடன், பாடசாலை
ஆசிரியர்களும், மாணவர்களும் இணைந்து அர்ப்பணிப்புடன் இந்தப் பணியை
முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><p></p><p>60 டெங்கு அதி அபாய வலயங்களை மையப்படுத்தி இரண்டாவது நாளாக இன்றும் விசேட
டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் கிளிநொச்சி பொதுச் சந்தை மற்றும் பேருந்து
நிலையம் ஆகியவற்றில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><p>நாட்டிலுள்ள 60 டெங்கு அதி அபாய வலயங்களை மையப்படுத்தி தேசிய டெங்கு ஒழிப்புப்
பிரிவினால் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் நேற்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.</p><h2>டெங்கு ஒழிப்பு சிரமதானப் பணி&nbsp;</h2><p> இதன் தொடர்சியாக இன்று காலை கிளிநொச்சி பொதுச் சந்தை மற்றும் பேருந்து நிலையம்
ஆகியவற்றில் டெங்கு ஒழிப்பு சிரமதானப் பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><p>

இந்த சிரமதானப் பணியில் கிளிநொச்சி மாவட்டச் செயலக உத்தியோகத்தர்கள், இலங்கை
இராணுவத்தினர், இலங்கை பொலிஸார் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் இணைந்து
வைத்தியசாலை வளாகத்திலுள்ள டெங்கு நுளம்பு பெருகக்கூடிய இடங்களை
சுத்தப்படுத்தி, நீர் தேங்கும் பொருட்களை அகற்றி, சுற்றுப்புறச் சூழலை
சுகாதாரமானதாக மாற்றும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/98438611-05f5-4c27-b1fb-e78f045ed08d/26-6a55e01c5ad95.webp' /></p><p>

நாடளவில் அதிகரித்து வரும் டெங்கு நோய் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில்
முன்னெடுக்கப்படும் இந்த விசேட வேலைத்திட்டத்தின் மூலம், பொதுமக்களும் தங்களது
வீடுகள் மற்றும் சுற்றுப்புறங்களில் வாரத்திற்கு குறைந்தது 30 நிமிடங்கள்
ஒதுக்கி டெங்கு நுளம்பு பெருகக்கூடிய இடங்களை அகற்றுமாறு சுகாதார அதிகாரிகள்
வலியுறுத்தியுள்ளனர்.
</p><p>
இந்த வேலைத்திட்டம் தொடர்ச்சியாக டெங்கு அபாயம் அதிகம் காணப்படும் பகுதிகளை
மையப்படுத்தி முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><b><i>மேலதிக தகவல் - சுடரோன்</i></b></p><p></p>]]></content>
            <updated>2026-07-14T09:33:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[பயிற்சியின் போது பேசுவதை தவிர்த்த கோலி - கம்பீர்; தொடரும் மோதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/kohli-gambhir-avoid-interaction-in-england-1784021528"></link>
            <id>https://news.lankasri.com/article/kohli-gambhir-avoid-interaction-in-england-1784021528</id>
            <summary type="text">பயிற்சியின் போது விராட் கோலி மற்றும் கம்பீர் பேசிக்கொள்வதை தவிர்த்துள்ளனர். 

இங்கிலாந்து தொடர் 

இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>பயிற்சியின் போது விராட் கோலி மற்றும் கம்பீர் பேசிக்கொள்வதை தவிர்த்துள்ளனர். </p><h3>

இங்கிலாந்து தொடர் </h3><p>

இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, 5 T20 மற்றும் 3 ODI போட்டிகள் அடங்கிய தொடரில் விளையாடி வருகிறது. </p><p>

கடைசியாக ஐபிஎல் 2026 இறுதிப் போட்டியில் ஆர்சிபி அணிக்காக விளையாடிய கோலி, தொடை தசைநார் காயம் காரணமாக ஆப்கானிஸ்தான் தொடரில் விளையாடவில்லை.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3696ac37-6c06-4bf7-831e-6ded0123d58d/26-6a56021be0060.webp' /></p><p>

இன்று பர்மிங்காமில் நடைபெற உள்ள முதல் ODI போட்டியில் களமிறங்க உள்ள விராட் கோலி மீது ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்புடன் உள்ளனர். </p><h3> 

பேசுவதை தவிர்த்த கோலி - கம்பீர்
</h3><p>
ஆனால், விராட் கோலி மற்றும் அணியின் தலைமை பயிற்சியாளரான கவுதம் கம்பீர் இடையே தற்போதும் சுமூகமான உறவு இல்லை என கூறப்படுகிறது.&nbsp;</p><p>

இங்கிலாந்தில் நடைபெற்ற பயிற்சி அமர்வில் கோலியும், கம்பீரும் பேசுவதை தவிர்த்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c3e6fc25-3789-4ed7-b86c-a25f0b12ec2f/26-6a560219dc302.webp' /></p><p> 

மூத்த வீரர்களான ரோஹித் சர்மா, கே.எல். ராகுல் மற்றும் ஷுப்மன் கில் ஆகியோருடன் உரையாடிய கம்பீர் விராட் கோலியுடன் பேசவில்லை.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1e01b620-2f7c-49a8-9c12-79a63e8e5eb2/26-6a56021b3dcb6.webp' /></p><p> 

இதே போல், துடுப்பாட்ட பயிற்சியாளரான சிதான்ஷு கோடக், கோலி மற்றும் கம்பீர் ஆகிய இருவரிடமும் தனித்தனியாகப் பேசியுள்ளார்.&nbsp;</p><p></p><p>

விராட் கோலி மற்றும் கம்பீர் இடையே நீண்டகாலமாக சுமூகமான உறவு இல்லை. ஐபிஎல் போட்டியின் போது நேருக்கு நேர் மோதிக்கொண்டனர். </p><p>

நியூசிலாந்து தொடரின் போது கூட இருவரும் பேசிக்கொள்ளாமல் இருந்தனர். ஆனால் எந்த மோதலும் இல்லை என பிசிசிஐ விளக்கம் அளித்தது.&nbsp;</p><p>
2027 உலக கிண்ணத்தில் எந்த வீரர்கள் அணியில் இடம்பெற வேண்டும் என்பது குறித்து விராட் கோலியுடன் விவாதித்ததாக ஷுப்மன் கில் தெரிவித்தார்.</p><p> 

இந்திய அணி தொடர் தோல்விகளை சந்தித்து வரும் நிலையில், தலைமை பயிற்சியாளர் கம்பீர் மீதான விமர்சனமும் அதிகரித்து வருகிறது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/988ea4eb-b5fe-4629-9831-2c9e96bbc9c1/26-6a56021a8ce03.webp' /></p><p>இந்த போட்டி 

வரவிருக்கும் 2027 ஒருநாள் உலகக்கிண்ண தயாரிப்புகளுக்கு இந்தத் தொடர் மிகவும் முக்கியமானதாக இருப்பதால், கம்பீருக்கு இது மிகவும் முக்கியமானதாக இருக்கும்.
</p><p>
கோலி, ரோஹித் சர்மா, பும்ரா போன்ற மூத்த வீரர்கள் அணிக்குத் திரும்பிய போதிலும், சிறப்பாகச் செயல்படத் தவறினால், கம்பீர் தலைமையிலான நிர்வாகம் மேலும் கடுமையான விமர்சனங்களை எதிர்கொள்ளும்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-14T09:32:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் தங்கத்தின் விலை மேலும் சரிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/gold-prices-in-sri-lanka-fall-further-1784021628"></link>
            <id>https://jvpnews.com/article/gold-prices-in-sri-lanka-fall-further-1784021628</id>
            <summary type="text">இலங்கையில் தங்கத்தின் விலை இன்று (14) மீண்டும் சரிவைச் சந்தித்துள்ளது.

அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் வெளியிட்டுள்ள தகவலின்படி, நேற்று (13) 2...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் தங்கத்தின் விலை இன்று (14) மீண்டும் சரிவைச் சந்தித்துள்ளது.
</p><p>
அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் வெளியிட்டுள்ள தகவலின்படி, நேற்று (13) 24 கரட் தங்கம் ஒரு பவுண் 376,000 ரூபாயாக விற்பனையான நிலையில், இன்று அதன் விலை 2,000 ரூபாயால் குறைந்து 374,000 ரூபாயாக பதிவாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/52944679-50d9-4372-9399-a1f6bbd90282/26-6a56027d8f523.webp' /></p><p>
</p><p>
அந்தவகையில், தற்போதைய தங்க விலை நிலவரப்படி,

24 கரட் தங்கம் பவுண் ஒன்று 374,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

22 கரட் தங்கம் பவுண் ஒன்று 344,000 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.</p><p>

இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 46,750 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 43,000 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.</p><p>

தங்கம் வாங்கத் திட்டமிட்டுள்ளோர், சந்தை விலை மாற்றங்களைத் தொடர்ந்து கவனித்து வாங்குவது சிறந்தது என நகை வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.</p>]]></content>
            <updated>2026-07-14T09:32:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[செம ஸ்டைலிஷ் உடைகளில் போட்டோ ஷுட் நடத்திய மூன்று முடிச்சு சீரியல் நடிகை சஹானா...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/serial-actress-sahana-latest-photoshoot-1784019184"></link>
            <id>https://cineulagam.com/article/serial-actress-sahana-latest-photoshoot-1784019184</id>
            <summary type="text">மூன்று முடிச்சுசன் தொலைக்காட்சியில் பரபரப்பின் உச்சமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் மூன்று முடிச்சு.நிறைய டுவிஸ்ட் மற்றும் பரபரப்பான காட்சிகளுடன் சீரியல்...</summary>
            <content type="html"><![CDATA[<h2>மூன்று முடிச்சு</h2><p>சன் தொலைக்காட்சியில் பரபரப்பின் உச்சமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் மூன்று முடிச்சு.</p><p>நிறைய டுவிஸ்ட் மற்றும் பரபரப்பான காட்சிகளுடன் சீரியல் ஒளிபரப்பாகிறது, கதையில் நடக்கும் எல்லா தவறான விஷயத்திற்கு நாயகி நந்தினியே கஷ்டப்படுகிறார். தன் மீது விழும் பழிகளுக்கு நந்தினி எப்போது, எப்படி பதில் கூற போகிறார் என்பது தெரியவில்லை.</p><p>இந்த நிலையில் தொடரில் புதிய வில்லியாக மாதங்கி கதாபாத்திரத்தில் நடிக்க களமிறங்கியுள்ளார் நடிகை சஹானா.</p><p>அவர் இன்ஸ்டாவில் வெளியிட்ட சில ஸ்டைலிஷ் புகைப்படங்களை காண்போம்.</p><p><br></p>]]></content>
            <updated>2026-07-14T09:30:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Farook Sihan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆணையாளருக்கு மரண அச்சுறுத்தல் விடுத்த மாநகர சபை ஊழியர் : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/municipal-worker-jailed-over-death-threats-1784010989"></link>
            <id>https://tamilwin.com/article/municipal-worker-jailed-over-death-threats-1784010989</id>
            <summary type="text">கல்முனை மற்றும் அக்கரைப்பற்று மாநகர சபைகளின் ஆணையாளர் என்.எம்.
நெளபீஸுக்குக் கடமை நேரத்தில் உயிர் அச்சுறுத்தல் விடுத்த குற்றச்சாட்டில்
கைது செய்யப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>கல்முனை மற்றும் அக்கரைப்பற்று மாநகர சபைகளின் ஆணையாளர் என்.எம்.
நெளபீஸுக்குக் கடமை நேரத்தில் உயிர் அச்சுறுத்தல் விடுத்த குற்றச்சாட்டில்
கைது செய்யப்பட்ட கல்முனை மாநகர சபை ஊழியரை&nbsp;சிறைச்சாலைக்குக் கொண்டு செல்லுமாறு கல்முனை நீதிமன்ற நீதிவான் கே.எல்.எம்.சாஜித்
உத்தரவிட்டுள்ளார்.</p><p>குறித்த சந்தேகநபரை 2 சரீரப் பிணைகளில் விடுவிப்பதற்கு நீதிமன்றம்
உத்தரவிட்டிருந்த போதிலும், நீதிமன்ற வேலை நேரத்திற்குள் உரிய முறையில் பிணை
எடுக்கத் தவறியமையினாலேயே அவர் சிறைச்சாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.</p><p></p><h2>உயிர் அச்சுறுத்தல்</h2><p>

கடந்த சில தினங்களுக்கு முன்னர் கல்முனை மாநகர சபைக்குள் வைத்து, அதன்
ஆணையாளர் என்.எம். நெளபீஸை அதே சபையில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் கடமை
நேரத்தில் அச்சுறுத்தியுள்ளார்.&nbsp;</p><p>இந்த சம்பவம் தொடர்பாக ஆணையாளரினால் கல்முனை
தலைமையக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0b6fb37c-c173-4948-8c13-871f2fbd9f4a/26-6a55daa8110d7.webp' /></p><p>

இதனையடுத்து பொலிஸாரால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு, சந்தேகநபரான ஊழியர்
நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.
</p><p>
இந்த வழக்கானது கடந்த திங்கட்கிழமை (13) கல்முனை நீதிமன்ற நீதிவான்
கே.எல்.எம்.சாஜித் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.</p><p></p><h2>நீதிமன்ற&nbsp;உத்தரவு</h2><p> </p><p>இதன்போது
நீதிமன்றில் முன்னிலையான இருதரப்புச் சமர்ப்பணங்களையும் நீதிவான் விரிவாக
ஆராய்ந்துள்ளார்.</p><p>

அதனைத் தொடர்ந்து, சந்தேகநபரை 2 சரீரப் பிணைகளில் விடுவிப்பதற்கு நீதிவான்
உத்தரவிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/12bf7f25-07ba-47a0-892a-bab96b2b8c17/26-6a55daa8b6c3e.webp' /></p><p> </p><p>எனினும், நீதிமன்ற நேரம் முடிவடையும் வரை சந்தேகநபர் சார்பில்
பிணை எடுப்பதற்கு எவரும் முன்வராத காரணத்தினால், அவர் சிறைச்சாலைக்குக் கொண்டு
செல்லப்பட்டுள்ளார்.
</p><p>
மேலும், இந்த வழக்கின் மேலதிக விசாரணைகளை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 3 ஆம் திகதி
வரை ஒத்திவைப்பதாகவும் கல்முனை நீதிமன்ற நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-14T09:26:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானை முற்றுகையிட்டது தவறு., அமெரிக்காவின் செயலுக்கு சீனா எதிர்ப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/china-condemns-for-us-action-in-hormuz-1784020407"></link>
            <id>https://news.lankasri.com/article/china-condemns-for-us-action-in-hormuz-1784020407</id>
            <summary type="text">ஈரான் கடற்படைக்கு எதிரான அமெரிக்காவின் கடற்படை முற்றுகையை சீனா கண்டித்துள்ளது. மத்திய கிழக்கில் அதிகரிக்கும் பதற்றம்
ஹார்முஸ் ஜலசந்தியில் வணிக கப்பல்...</summary>
            <content type="html"><![CDATA[<h3>ஈரான் கடற்படைக்கு எதிரான அமெரிக்காவின் கடற்படை முற்றுகையை சீனா கண்டித்துள்ளது.</h3><h2> மத்திய கிழக்கில் அதிகரிக்கும் பதற்றம்</h2><p>
ஹார்முஸ் ஜலசந்தியில் வணிக கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதை அடுத்து அதற்கு பதிலடியாக அமெரிக்க படைகள் ஈரானிய இராணுவ இருப்புகளை குறிவைத்து தாக்குதலை தொடங்கியுள்ளது.</p><p> அமெரிக்காவின் நடவடிக்கைகளுக்கு பதிலளிக்கும் விதமாக பஹ்ரைன் மற்றும் குவைத் ஆகிய நாடுகளை குறிவைத்து ஈரானும் ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குரலை முன்னெடுத்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1e7f6067-b5e1-486f-ba8a-bf056292cb1d/26-6a55fdb8b3b2a.webp' /></p><p></p><h4> அமெரிக்காவுக்கு சீனா எதிர்ப்பு</h4><p>இந்நிலையில் செவ்வாய்க்கிழமை சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் லின் ஜுயான் அமெரிக்காவின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.</p><p> மீண்டும் ஈரானுக்கு எதிரான அமெரிக்க படைகளின் கடற்படை முற்றுகை நடவடிக்கையை சீனா எதிர்ப்பதாக தெரிவித்துள்ளார்.</p><p> செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய லின், அமெரிக்கா - ஈரான் ஆகிய இரண்டு நாடுகள் இடையிலும் மீண்டும் ஆயுத மோதல் தொடங்கி இருப்பது கவலையையும், அக்கறையையும் ஏற்படுத்தி இருப்பதாக தெரிவித்துள்ளார்.</p><p> அத்துடன் பேச்சுவார்த்தைகள் மற்றும் இராஜதந்திர முயற்சிகள் மூலம் இருதரப்பும் தீர்வு காண வேண்டும் என்றும் லின் வலியுறுத்தியுள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-14T09:14:23+00:00</updated>
        </entry>
    </feed>
