<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-09-19T20:20:34+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[குளிரூட்டிகளின் பயன்பாட்டைக் குறைத்து 'பாசிவ் கூலிங்' முறைகளை ஊக்குவிக்க இலங்கை அழைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/sri-lanka-calls-promoting-passive-cooling-methods-1789847331"></link>
            <id>https://jvpnews.com/article/sri-lanka-calls-promoting-passive-cooling-methods-1789847331</id>
            <summary type="text">குளிரூட்டிகளின் (A/C -Air Conditioning) பயன்பாட்டைக் குறைத்து, கார்பன் வெளியீட்டைக் கட்டுப்படுத்தும் நோக்கில், பாரம்பரிய மற்றும் நவீன &#039;பாசிவ் கூலிங்&#039; ...</summary>
            <content type="html"><![CDATA[<p>குளிரூட்டிகளின் (A/C -Air Conditioning) பயன்பாட்டைக் குறைத்து, கார்பன் வெளியீட்டைக் கட்டுப்படுத்தும் நோக்கில், பாரம்பரிய மற்றும் நவீன 'பாசிவ் கூலிங்' (Passive Cooling) முறைகளை அதிகளவில் பயன்படுத்த வேண்டும் என இலங்கை அழைப்பு விடுத்துள்ளது.</p><p>
</p><p></p><p>ஐக்கிய நாடுகள் சுற்றாடல் திட்டம் (UNEP) மற்றும் 'குளிர்விப்பு கூட்டமைப்பு' (Cool Coalition) இணைந்து கடந்த15 ஆம் திகதி முதல் 18 ஆம் திகதி வரை நடத்திய 'உலகளாவிய குளிர்விப்பு உறுதிமொழி பேரவை 2026' (Global Cooling Pledge Assembly 2026) நிகழ்வில் கலந்துகொண்ட இலங்கை தூதுக்குழுவினால் இந்த முன்மொழிவு முன்வைக்கப்பட்டது.</p><p>

இந்தப் பேரவையில் கலந்துகொண்டு உரையாற்றிய சுற்றாடல் பிரதி அமைச்சர் எண்டன் ஜயக்கொடி, 'பாசிவ் கூலிங்' முறைகளைப் பின்பற்றுவதன் மூலம், வீடுகள் மற்றும் வர்த்தகக் கட்டடங்களின் உட்புற வெப்பநிலையை A/C இயந்திரங்களின் அதிகளவிலான பயன்பாடின்றி சுமார் 23°C முதல் 25°C வரை பராமரிக்க முடியும் எனக் குறிப்பிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9490583d-804c-40df-94b0-3cb5f3777e3f/26-6aaee72503916.webp' /></p><p>

உள்ளூர் சூழலுக்கு ஏற்ற நடைமுறைச் செயல்பாடுகள் மூலம் இந்த மாற்று முறைகளை அறிமுகப்படுத்த வேண்டியதன் அவசியத்தை இலங்கை தூதுக்குழுவினர் வலியுறுத்தினர்.</p><p>

மேலும், கார்பன் வெளியீட்டைக் குறைக்கவும், உயர்ந்து வரும் உலகளாவிய வெப்பநிலையை எதிர்கொள்ளவும் 'தேசிய குளிர்விப்பு கொள்கை' (National Cooling Policy) ஒன்றை உருவாக்குவதற்கான திட்டங்கள் குறித்தும் இலங்கை அங்கு சுட்டிக்காட்டியது.
</p><p>
கடுமையான வெப்பத்துக்குத் தீர்வு காண்பது மற்றும் சுற்றுச்சூழல் நட்புமிக்க குளிர்ச்சி அமைப்புகளை ஊக்குவிப்பது குறித்து இந்தப் பேரவையில் கவனம் செலுத்தப்பட்டது.</p><p>

காலநிலை மீள்தன்மையை வலுப்படுத்துவதற்கான முயற்சியில் பாசிவ் கூலிங் முறைகளை ஊக்குவிப்பது ஒரு முக்கிய அங்கமாக இருக்கும் எனக் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
பாசிவ் கூலிங் (Passive Cooling) முறை என்பது மின்சாரம் அல்லது செயற்கையான குளிரூட்டிகள் (Air Conditioners / Fans) ஏதும் இன்றி, இயற்கை வழிகளிலேயே ஒரு கட்டடத்தின் உட்புற வெப்பத்தைக் குறைத்து குளிர்ச்சியாக வைத்துக்கொள்ளும் வடிவமைப்பு நுட்பமாகும்.
</p><p>
அதாவது, வெப்பம் கட்டடத்துக்குள் நுழைவதைத் தடுப்பது மற்றும் கட்டடத்துக்குள் இருக்கும் வெப்பத்தை இயற்கை காற்றுச் சுழற்சி மூலம் வெளியேற்றுவது இதன் முதன்மை நோக்கமாகும்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-19T19:49:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[தரவு மையங்களுக்கு எதிரான மக்களின் எதிர்ப்பு : தேர்தல் வெற்றிக்காகப் பயன்படுத்த முயலும் அமெரிக்க ஜனநாயகக் கட்சி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/public-opposition-data-centers-us-democratic-party-1789845675"></link>
            <id>https://tamilwin.com/article/public-opposition-data-centers-us-democratic-party-1789845675</id>
            <summary type="text">அமெரிக்காவின் ஒஹாயோ மாநிலத்தில் செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் மேகக்கணி
கணினியியல் (Cloud-computing) தரவு மையங்களின் அபரிமிதமான வளர்ச்சிக்கு எதிராக
...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவின் ஒஹாயோ மாநிலத்தில் செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் மேகக்கணி
கணினியியல் (Cloud-computing) தரவு மையங்களின் அபரிமிதமான வளர்ச்சிக்கு எதிராக
மக்களிடையே கிளம்பியுள்ள எதிர்ப்பு, வரவிருக்கும் இடைத்தேர்தலில் முக்கிய
அரசியல் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
</p><p>
அமேசான் மற்றும் மெட்டா போன்ற பெரு நிறுவனங்களின் தரவு மையங்களுக்கு
வழங்கப்பட்ட வரி விலக்குகள் காரணமாக ஒஹாயோ மாநிலத்திற்கு 2 பில்லியன்
டொலர்களுக்கும் அதிகமான விற்பனை வரி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக அண்மையில்
வெளியான தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><h2>கட்சிகளைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள்</h2><p>அதேவேளை, விவசாய நிலங்கள் ஆக்கிரமிக்கப்படுவதுடன், மின்கட்டண உயர்வும்
குடிநீர் தேவையும் மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/70a92cec-727e-46a5-b094-06db90df1f8c/26-6aaee6cb71159.webp' /></p><p>

சமீபத்திய கருத்துக்கணிப்பின் படி, ஒஹாயோ மாநில மக்களில் 71 சதவீதத்தினர்
புதிய டேட்டா மையங்களின் கட்டுமானத்திற்குத் தற்காலிகத் தடை விதிக்க ஆதரவு
தெரிவித்துள்ளனர்.
</p><p>
இதனைப் பயன்படுத்தி, கிராமப்புறப் பகுதிகளில் பின்தங்கியுள்ள ஜனநாயகக்
கட்சியினர், குடியரசுக் கட்சி வேட்பாளர்களுக்கு எதிராகத் தீவிரப்
பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
</p><p>
குறிப்பாக, பெருநிறுவனங்களுக்கு அளிக்கப்படும் வரிச் சலுகைகளால் சாதாரண
மக்களின் மின்சாரக் கட்டணம் உயர்ந்துள்ளதாகக் குற்றஞ்சாட்டப்படுகின்றது.
</p><p>
நிலைமை தீவிரமடைந்துள்ளதைத் தொடர்ந்து, இரு கட்சிகளைச் சேர்ந்த அரசியல்
தலைவர்களும் தரவு மையக் கட்டுமானங்களைக் கட்டுப்படுத்தவும், அவற்றுக்கான வரிச்
சலுகைகளைக் குறைக்கவும் புதிய கொள்கை முன்மொழிவுகளை வெளியிட வேண்டிய
கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளனர்.</p><p></p><p></p><p>
</p>]]></content>
            <updated>2026-09-19T19:47:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[9 ஆண்டுகளாக இந்திய சிறையில் போராடும் பிரித்தானியர்: ஜாமீன் வழங்கிய டெல்லி நீதிமன்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/british-sikh-jagtar-singh-johal-gets-bail-1789842800"></link>
            <id>https://news.lankasri.com/article/british-sikh-jagtar-singh-johal-gets-bail-1789842800</id>
            <summary type="text">British Sikh Jagtar Singh Johal Gets Bail: இந்தியாவில் பல ஆண்டுகளாக சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த பிரித்தானியருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. பிர...</summary>
            <content type="html"><![CDATA[<p>British Sikh Jagtar Singh Johal Gets Bail: இந்தியாவில் பல ஆண்டுகளாக சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த பிரித்தானியருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.</p><h2> பிரித்தானியருக்கு ஜாமீன் வழங்கிய இந்திய நீதிமன்றம்</h2><p>
பயங்கரவாத குற்றச்சாட்டின் கீழ் கடந்த 2017 ம் ஆண்டு முதல் ஸ்காட்லாந்தை சேர்ந்த பிரித்தானிய சீக்கியர் ஜக்தார் சிங் ஜோஹல்&nbsp; இந்திய அதிகாரிகளால் சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்தார்.</p><p> தற்போது 39 வயதாகும் ஜக்தார் சிங் ஜோஹல் கடந்த 2017ம் ஆண்டு தன்னுடைய திருமணத்திற்காக இந்தியா வந்து சேர்ந்தார்.</p><p> திருமணம் முடிந்து 3 வாரங்கள் மட்டுமே ஆன நிலையில், பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் உள்ள ஷாப்பிங் மாலில் தன்னுடைய மனைவுடன் இருக்கும் போது ஜக்தார் சிங் ஜோஹல் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் காரில் பலவந்தமாக கடத்தப்பட்டு கொண்டு செல்லப்பட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4eb0b435-7673-4377-be66-03538b104a9b/26-6aaed571938fc.webp' /></p><p></p><h2> ஜக்தார் சிங் ஜோஹல் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு</h2><p>
ஜக்தார் சிங் ஜோஹல் பஞ்சாபில் உள்ள காலிஸ்தான் விடுதலை படைகளுக்கு நிதியுதவி செய்து வந்ததாக இந்திய அதிகாரிகள் குற்றச்சாட்டை முன்வைத்தனர்.</p><p> இருப்பினும் இது தொடர்பான போதிய ஆதாரங்களை இந்திய அரசு அதிகாரிகள் சமர்ப்பிக்க தவறியதால், ஜக்தார் சிங் ஜோஹல் மீதான நீதிமன்ற நடவடிக்கைகள் தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டு வந்தன.</p><p> இந்நிலையில்&nbsp; பல ஆண்டுகளாக இந்திய சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பிரித்தானிய சீக்கியர் ஜக்தார் சிங் ஜோஹலுக்கு டெல்லி நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-19T19:44:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானியாவில் காணாமல் போன 13 வயது சிறுமி: புதிய சிசிடிவி காட்சிகளை வெளியிட்ட காவல்துறை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/missing-13-year-old-girl-lillia-new-cctv-released-1789846974"></link>
            <id>https://news.lankasri.com/article/missing-13-year-old-girl-lillia-new-cctv-released-1789846974</id>
            <summary type="text">Missing 13-Year-Old Girl Lillia New CCTV Released: பிரித்தானியாவில் காணாமல் போன 13 வயது சிறுமி தொடர்பான புதிய சிசிடிவி காட்சிகளை காவல்துறையினர் வெளியி...</summary>
            <content type="html"><![CDATA[<p>Missing 13-Year-Old Girl Lillia New CCTV Released: பிரித்தானியாவில் காணாமல் போன 13 வயது சிறுமி தொடர்பான புதிய சிசிடிவி காட்சிகளை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர்.</p><h2> காணாமல் போன 13 வயது சிறுமி</h2><p>
கடந்த செப்டம்பர் 11ம் திகதி வெள்ளிக்கிழமை போல்டனைச் சேர்ந்த 13 வயது சிறுமி லில்லியா(Lillia) தன்னுடைய வீட்டில் இருந்து வெளியேறியதை அடுத்து காணாமல் போனார்.</p><p>கடந்த ஒரு வார காலமாக காணாமல் போன 13 வயது சிறுமி லில்லியை கண்டுபிடிக்கும் முயற்சியில் &nbsp; கிரேட்டர் மான்செஸ்டர் பொலிஸார் புதிய சிசிடிவி காட்சிகளை வெளியிட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/56f0c5bb-4048-4724-aa1d-1688fa4159bf/26-6aaee5c06a24f.webp' /></p><p> பல மணி நேர தீவிர சிசிடிவி ஆய்வுக்கு பிறகு செப்டம்பர் 14ம் திகதி காலை 10.36 மணிக்கு&nbsp; தேடப்பட்டு வரும் சிறுமி லில்லியா மான்செஸ்டர் பிக்காடில்லி(Piccadilly) பேருந்து நிலையில் இருந்ததை கண்டுபிடித்தனர்.</p><p></p><p> மேலும் அவர் சால்போர்ட் நகருக்கான நம்பர் 36 பேருந்தில் ஏறிய லில்லியா, பேருந்தில் இருந்து கீழே இறங்கிய சில நிமிடத்தில் கேமராவில் பதிவாகியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8c5a307f-e80d-4486-98ad-6482c05215d3/26-6aaee5c12f1ca.webp' /></p><p> இந்நிலையில் அந்த சிசிடிவி காட்சிகளை தற்போது பொதுமக்கள் பார்வைக்கு வெளியிட்டுள்ள காவல்துறை, பேருந்தில் இருந்து கீழே இறங்கிய லில்லி எந்த திசையில் சென்றார் அல்லது அவரை பற்றி வேறு ஏதேனும் தகவல் தெரிந்து இருந்தால் உடனடியாக பொலிஸாரை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுள்ளனர்.</p><p>புதிதாக வெளியான சிசிடிவி காட்சிகளில், காணாமல் போன லில்லி முதுப்பையுடன் கருப்பு நிற உடை அணிந்து இருந்ததும், தலையில் ஹூடி அணிந்து இருந்ததும் பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.</p><p><br></p>]]></content>
            <updated>2026-09-19T19:43:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜின்பிங்கை வரவேற்க தயாராகும் அமெரிக்கா! சீன - அமெரிக்க இராஜதந்திரத்தின் மீது உலகின் கவனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/us-prepares-to-welcome-xi-jinping-1789846214"></link>
            <id>https://ibctamil.com/article/us-prepares-to-welcome-xi-jinping-1789846214</id>
            <summary type="text">ஒரு தசாப்தத்திற்கும் மேலான காலத்திற்குப் பின்னர் சீன ஜனாதிபதி ஒருவர் மேற்கொள்ளும் முக்கியமான அமெரிக்க அரசுமுறைப் பயணத்தின் மீது சர்வதேசத்தின் கவனம் தி...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஒரு தசாப்தத்திற்கும் மேலான காலத்திற்குப் பின்னர் சீன ஜனாதிபதி ஒருவர் மேற்கொள்ளும் முக்கியமான அமெரிக்க அரசுமுறைப் பயணத்தின் மீது சர்வதேசத்தின் கவனம் திரும்பியுள்ளது.</p><p>இந்த விஜயத்தின்போது சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை சந்தித்து பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.&nbsp;</p><p>இந்த விஜயத்தின் போது ட்ரம்ப்,&nbsp;ஷி ஜின்பிங்கை நேரில் சென்று வரவேற்க உள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p></p><h2>ட்ரம்ப் மற்றும் ஷி ஜின்பிங்</h2><p>வெளிநாட்டு தலைவர்களை பொதுவாக வெள்ளை மாளிகையில் வரவேற்கும் ட்ரம்ப், இந்த முறை விமானத் தளத்திற்கே சென்று ஷி ஜின்பிங்கை வரவேற்க இருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4c7d0fa6-ccd6-479d-8272-3f69e93e3cee/26-6aaee2c88d2f3.webp' /></p><p>இதனைத் தொடர்ந்து ட்ரம்ப் மற்றும் ஷி ஜின்பிங், வெள்ளை மாளிகையின் Rose Garden பகுதியில் இராணுவ அணிவகுப்பு மரியாதையை பார்வையிட உள்ளனர். </p><p>பின்னர் இரு தலைவர்களும் மூடிய அறையில் முக்கிய பேச்சுவார்த்தைகளை நடத்த உள்ளனர்.
</p><p>எனினும் இந்த சந்திப்பு தொடர்பான விரிவான தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.
</p><p>இதன்படி இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் முக்கியமான கட்டமாகக் கருதப்படும் இந்தச் சந்திப்பு சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.&nbsp; &nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-19T19:30:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிக்பாஸ் 10 மேடையில் பேசியது சர்ச்சையானது குறித்து விஜய் சேதுபதி ஓபன் டாக்...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/vijay-sethupathi-clears-about-bb-10-talk-1789809593"></link>
            <id>https://cineulagam.com/article/vijay-sethupathi-clears-about-bb-10-talk-1789809593</id>
            <summary type="text">பிக்பாஸ் 10பிரம்மாண்டத்தின் உச்சமாக விஜய் டிவியில் பிக்பாஸ் 10வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. கடந்த செப்டம்பர் 6ம் தேதி 19 போட்டியாளர்களுடன் தொடங்கப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<h2>பிக்பாஸ் 10</h2><p>பிரம்மாண்டத்தின் உச்சமாக விஜய் டிவியில் பிக்பாஸ் 10வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. </p><p>கடந்த செப்டம்பர் 6ம் தேதி 19 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்டது. இதில் மக்களுக்கு அதிகம் தெரிந்த, தெரியாத போட்டியாளர்கள் பலர் கலந்துகொண்டுள்ளனர்.
இதுவரை 2 போட்டியாளர்கள் வெளியேறிவிட்டனர், பிரபல நடிகை ஆனந்தி வைல்ட் கார்ட்டு என்ட்ரியாக உள்ளே நுழைந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7fae460f-1f77-4a4b-b87f-03c763d0d9cb/26-6aae55d9ad670.webp' /></p><p> </p><p>கடைசி வார இறுதி நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி வந்துபோது அவர் சட்டசபை விஷயங்கள் பல பேச அது சர்ச்சையானது. இதனால் விஜய் சேதுபதிக்கு நிறைய எதிர்ப்புகளும் வந்தது, ஆதரவும் வந்தன.</p><h2>
விளக்கம்</h2><p>
இந்த நிலையில் விஜய் சேதுபதி, பிக்பாஸ் மேடையில் பேசியது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c923e4f6-f51e-452b-84da-2b077c8ad0ba/26-6aae55d88e6d1.webp' /></p><p> </p><p>அதில் அவர், இந்த மேடையில் பேசப்படும் கருத்துகள் அனைத்தும் இந்த வீட்டில் உள்ள போட்டியாளர்களுக்கும் எங்களுக்கும் மட்டுமே சொந்தமானவை. வெளியில் இருக்கும் எந்த நபரையும் அல்லது அமைப்பையும் சார்த்து குறிப்பிடப்படவில்லை என்பதை திட்டவட்டமாக தெரிவித்துக் கொள்கிறோம். </p><p>இதைப்பற்றி ஏற்கெனவே புரிந்திருக்கும் என்று நினைத்தேன், ஆனால் கடந்த வாரமே இதை சொல்லியிருக்க வேண்டும், இப்போது சொல்ல வேண்டிய அவசியமாகிவிட்டது என விளக்கமளித்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-09-19T19:30:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானியாவில் ஹோட்டலில் நள்ளிரவு பற்றிய தீ: சந்தேகம் எழுப்பும் காவல்துறையினர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/folkestone-hotel-fire-police-launch-investigation-1789845462"></link>
            <id>https://news.lankasri.com/article/folkestone-hotel-fire-police-launch-investigation-1789845462</id>
            <summary type="text">Folkestone Hotel Fire Police Launch Investigation: போக்ஸ்டோன் ஹோட்டலில் நள்ளிரவு ஏற்பட்ட தீ விபத்து தொடர்பில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசா...</summary>
            <content type="html"><![CDATA[<p>Folkestone Hotel Fire Police Launch Investigation: போக்ஸ்டோன் ஹோட்டலில் நள்ளிரவு ஏற்பட்ட தீ விபத்து தொடர்பில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.</p><h2>ஹோட்டலில் பரவிய தீ</h2><p>பிரித்தானியாவின் கென்ட் பகுதியில் உள்ள பிரபல கிராண்ட் பர்ஸ்டின் ஹோட்டலில் நள்ளிரவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.</p><p> அதிகாலை 1 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் மற்றும் அவசர கால சேவையினர் மீட்பு பணிகளை துரிதப்படுத்தினர்</p><p>கிட்டத்தட்ட 26 தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு ஹோட்டலில் பரவிய தீயானது கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.</p><p> இந்த சம்பவம் தொடர்பான முதற்கட்ட விசாரணையில் ஹோட்டலின் அடித்தளத்தில் இருந்து தீயானது பரவியிருக்க கூடும் என்று தெரியவந்துள்ளது.</p><p> ஹோட்டலில் பற்றிய தீயின் நிலவரத்தை சுதாரித்துக் கொண்ட அவசரகால மீட்புக் குழுவினர் அங்கு தங்கியிருந்த 300க்கும் மேற்பட்ட விருந்தினர்கள் மற்றும் ஊழியர்களை அவசர அவசரமாக வெளியேற்றினர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/86b34d6f-69fb-4ad5-89b4-8e491654ecd8/26-6aaedfd75ea48.webp' /></p><p></p><p> இந்த தீ விபத்து சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.</p><h2>திட்டமிட்ட சதியாக இருக்கலாம்</h2><p>ஹோட்டலில் நிகழ்ந்த இந்த தீ விபத்து வேண்டுமென்றே வைக்கப்பட்ட தீ எரிப்பு சம்பவமாக இருக்கலாம் என்று காவல்துறை அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.</p><p> இந்நிலையில் ஹோட்டலில் தீ விபத்து ஏற்பட்ட போது சந்தேகத்திற்குரிய முறையில் யாரேனும் நடமாடியதை கண்டிருந்தால் உடனடியாக காவல்துறை அதிகாரிகளிடம் தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.</p><p> குறிப்பாக வெள்ளிக்கிழமை இரவு 10.00 முதல் சனிக்கிழமை அதிகாலை 12.30 மணி வரையிலான நேரத்தில் பதிவான டாஷ் கேம் காட்சிகளை வழங்குமாறு அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.<br></p>]]></content>
            <updated>2026-09-19T19:19:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவில் மோசமாக செயற்பட்ட இலங்கையர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-lankan-arrested-in-canada-1789832251"></link>
            <id>https://tamilwin.com/article/sri-lankan-arrested-in-canada-1789832251</id>
            <summary type="text">கனடாவில் மோசமான செயற்பாட்டில் ஈடுபட்ட இலங்கையர் ஒருவர்&amp;nbsp;கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

விட்பி பகுதியில் உள்ள மருந்தகம் ஒன்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவில் மோசமான செயற்பாட்டில் ஈடுபட்ட இலங்கையர் ஒருவர்&nbsp;கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p> 

விட்பி பகுதியில் உள்ள மருந்தகம் ஒன்றில் பணியாற்றிய 62 வயதான சம்பத் பெரேரா என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p> 

குறித்த மருந்தகத்தில் பணியாற்றிய சிறுவன் ஒருவரை தகாத முறையில் துன்புறுத்திய குற்றச்சாட்டில் இலங்கையர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p> </p><h2><b>

இலங்கையர் கைது</b></h2><p>பாதிக்கப்பட்ட 16 வயதான சிறுவன் செய்த முறைப்பாட்டுக்கு அமைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக டர்ஹாம் பிராந்திய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>சந்தேக நபரான இலங்கையர் மீது தகாத வகையில் செயற்பட்ட இரண்டு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. எனினும் நீதிமன்றத்தில் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.</p><p>

குறித்த நபரால் எவராது பாதிக்கப்பட்டிருந்தால் பொலிஸாரை தொடர்பு கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p><p> </p>]]></content>
            <updated>2026-09-19T19:13:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டில் டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 75 ஆக உயர்வு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/number-of-dengue-deaths-rises-to-75-1789845135"></link>
            <id>https://jvpnews.com/article/number-of-dengue-deaths-rises-to-75-1789845135</id>
            <summary type="text">நாட்டில் இந்த ஆண்டின் இதுவரையிலான காலப்பகுதியில் பதிவான டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 75 ஆக உயர்ந்துள்ளது.
தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் தரவுகள...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டில் இந்த ஆண்டின் இதுவரையிலான காலப்பகுதியில் பதிவான டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 75 ஆக உயர்ந்துள்ளது.</p><p>
</p><p></p><p>தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் தரவுகளின்படி, இதுவரை 98,616 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், மரண வீதம் 0.076% ஆகப் பதிவாகியுள்ளது.
</p><p>
 

மொத்த நோயாளர்களில் 52.62% பேர் மேல் மாகாணத்திலேயே பதிவாகியுள்ளனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d7756a99-0bf9-4f53-ac60-8512e1cc080e/26-6aaede91286c0.webp' /></p><p>இரண்டாவதாக அதிகளவிலான நோயாளர்கள் தென் மாகாணத்தில் பதிவாகியுள்ளதுடன், அந்த எண்ணிக்கை 14,209 ஆகும்.</p><p>

 

மாவட்ட ரீதியில் அதிகளவிலான டெங்கு நோயாளர்கள் கம்பஹா மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளனர். </p><p>அங்கு 20,917 நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், கொழும்பு மாவட்டத்தில் 19,435 நோயாளர்களும், கண்டி மாவட்டத்தில் 7,410 நோயாளர்களும் பதிவாகியுள்ளனர்.
</p><p>
 

இதனிடையே, ஜூலை மாதத்திலேயே அதிகளவிலான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், அந்த எண்ணிக்கை 29,964 ஆகும்.

 

மேலும், ஜூன் மாதத்தில் 21,533 நோயாளர்களும், ஓகஸ்ட் மாதத்தில் 10,155 நோயாளர்களும் பதிவாகியுள்ளனர்.
</p><p>
 

செப்டம்பர் மாதத்தில் இதுவரையிலான காலப்பகுதியில் 3,125 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
</p><p>
 

34 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் இன்னமும் டெங்கு அதிடர்க் மண்டலங்களாக அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், நுளம்புகள் பரவும் இடங்களை அழித்து சுற்றுச்சூழலைச் சுத்தமாக வைத்திருக்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு சுகாதாரப் பிரிவினர் பொதுமக்களிடம் கேட்டுக்கொள்கின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-19T19:12:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[நியூயார்க்கில் நிறுவப்பட்ட இலவச பொது கழிப்பறைகள் ; 10 நிமிடத்திற்கு மேல் உள்ளே இருந்தால் கதவு திறந்துவிடும்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/free-public-toilets-installed-in-new-york-1789844490"></link>
            <id>https://canadamirror.com/article/free-public-toilets-installed-in-new-york-1789844490</id>
            <summary type="text">அமெரிக்காவின் நியூயார்க் நகரில் பொதுமக்களின் தேவைக்காக, நகரின் 5 முக்கிய பகுதிகளில் மொத்தம் 17 இலவச பொது கழிப்பறைகள் நிறுவப்பட்டுள்ளன. இந்த கழிப்பறைகள...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவின் நியூயார்க் நகரில் பொதுமக்களின் தேவைக்காக, நகரின் 5 முக்கிய பகுதிகளில் மொத்தம் 17 இலவச பொது கழிப்பறைகள் நிறுவப்பட்டுள்ளன. </p><p>இந்த கழிப்பறைகளை யார் வேண்டுமானாலும் இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம். காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை இந்த கழிப்பறைகள் திறந்திருக்கும்.</p><p>இந்த கழிப்பறைகள் இருக்கும் இடத்தை கண்டறிய பிரத்யேக மொபைல் செயலியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு பல வசதிகள் இருந்தாலும், இந்த கழிப்பறைகளை பயன்படுத்துவதற்கு ஒரு முக்கியமான விதி உள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b50bc855-abe8-4d3b-89f4-a81c584c7d64/26-6aaedc0ca9f45.webp' /></p><p>அதாவது, கழிவறைக்கு உள்ளே சென்றுவிட்டால் 10 நிமிடத்திற்குள் வேலையை முடித்துவிட்டு வெளியே வந்துவிட வேண்டும். </p><p>கழிவறையை பயன்படுத்த தொடங்கியதில் இருந்து கவுண்ட் டவுன் ஓடத் தொடங்கிவிடும். 5 நிமிடங்கள் ஆனவுடன் ஒரு ஆடியோ எச்சரிக்கை வரும். தொடர்ந்து 8-வது நிமிடத்தில் மீண்டும் ஒரு எச்சரிக்கை வரும்.</p><p>இதைத் தொடர்ந்து 10-வது நிமிடத்தில் கடைசியாக ஒரு எச்சரிக்கை ஒலிக்கும். அதன் பிறகு சில வினாடிகளில் கழிப்பறையின் கதவு தானாக திறந்துவிடும். </p><p>இத்தகைய நவீன தொழில்நுட்பம் கொண்ட இந்த கழிப்பறையை நியூயார்க் நகரில் நிறுவுவது தொடர்பான அறிவிப்பை நியூயார்க் மேயர் சோஹ்ரான் மம்தானி வெளியிட்டார்.
</p><p>
இது குறித்து அவர் கூறுகையில், “கழிப்பறைகள் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்க வேண்டும் என்பதற்காக இந்த புதிய தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்துள்ளோம். கழிப்பறை என்பது செல்போனில் ஸ்கோரல் செய்து கொண்டிருக்கும் இடமாக இருக்கக் கூடாது” என்று தெரிவித்தார்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/13fd3acc-a29a-4d68-af3f-0931088c64df/26-6aaedc0bf1e78.webp' /></p><p>இந்த நவீன கழிப்பறை திட்டத்திற்காக நியூயார்க் நகர நிர்வாகம் சுமார் 4 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ.38 கோடி) செலவு செய்துள்ளதாக அவர் கூறினார்.
</p><p>
இத்தகைய கழிப்பறைகளை நிறுவுவதற்கு முன்னதாக, இது குறித்து ஆய்வுகளும் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. </p><p>அதாவது சராசரியாக ஒரு நபர் மூன்றரை நிமிடங்கள் கழிப்பறையை பயன்படுத்துகிறார் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளதாகவும், எனவே 10 நிமிடங்கள் என்பது பெரும்பாலான நபர்களுக்கு போதுமான நேரமாகவே இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-19T19:01:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Benat</name>
            </author>
            <title type="text"><![CDATA[சவூதி அரேபியாவில் சிக்கிய அனோஜன்! இலங்கை அரசாங்கத்தின் தொடர் நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/saudi-arabia-anojan-issue-1789843480"></link>
            <id>https://tamilwin.com/article/saudi-arabia-anojan-issue-1789843480</id>
            <summary type="text">சவூதி அரேபிய நீதிமன்றத்தினால் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட இலங்கையரான அனோஜன் தொடர்பான சட்ட நடவடிக்கைகள் குறித்து வெளிவிவகார அமைச்சு தீவிரமாக கண்காணித்து...</summary>
            <content type="html"><![CDATA[<p>சவூதி அரேபிய நீதிமன்றத்தினால் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட இலங்கையரான அனோஜன் தொடர்பான சட்ட நடவடிக்கைகள் குறித்து வெளிவிவகார அமைச்சு தீவிரமாக கண்காணித்து வருவதாக ஊடகத் துறைய அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். </p><p>

இது குறித்து ஊடகங்களிடம் அவர் தெரிவிக்கையில், </p><p>

சவூதி அரேபியா நாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கையரான சிவராசா அனோஜனுக்கு மன்னிப்பு பெற்றுக் கொடுக்க அல்லது அவருக்கு வழங்கப்பட்டுள்ள தண்டனையைக் குறைப்பதற்கு அரசாங்கம் இயன்றவரை முயற்சி செய்து வருகின்றது.</p><h2>பல கட்ட கலந்துரையாடல்கள்&nbsp;</h2><p> </p><p>

இதுகுறித்து வெளியுறவுத் துறை அமைச்சுக்குத் தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. </p><p>

சம்பந்தப்பட்ட அரசாங்கத்துடன் ஏற்கனவே பல கட்ட கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3113ba48-991e-4090-ad9b-bbb8243f9403/26-6aaedb2b9f157.webp' /></p><p>
</p><p>
அதேவேளை, குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக நடவடிக்கைகள் அனைத்தும் சவூதி அரேபியாவில் நடைமுறையில் உள்ள சட்டத்திட்டங்களுக்கு அமைவாகவே முன்னெடுக்கப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-19T18:57:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாடொன்றில் 100 ஆண்டுகளுக்கு பிறகு கண்டுபிடிக்கப்பட்ட புதிய பூனை இனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/a-new-cat-species-discovered-after-100-years-1789843879"></link>
            <id>https://ibctamil.com/article/a-new-cat-species-discovered-after-100-years-1789843879</id>
            <summary type="text">100 ஆண்டுகளுக்கும் மேலான இடைவெளிக்குப் பின்னர், அறிவியலுக்கு இதுவரை அறியப்படாத புதிய பூனை இனம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள...</summary>
            <content type="html"><![CDATA[<p>100 ஆண்டுகளுக்கும் மேலான இடைவெளிக்குப் பின்னர், அறிவியலுக்கு இதுவரை அறியப்படாத புதிய பூனை இனம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.</p><p>

2017ஆம் ஆண்டு பொலிவியாவில் பணியாற்றி வந்த உயிரியல் நிபுணரும் National Geographic Explorer-ஆகவும் இருந்த பவுலா நோகலெஸ்-அஸ்கர்ருன்ஸ் என்பவருக்கு, உள்ளூர் வனவிலங்கு சரணாலயத்திலிருந்து வித்தியாசமான பூனை ஒன்று குறித்து தகவல் கிடைத்துள்ளது.</p><p>
காட்டுப்பகுதிக்கு அருகிலுள்ள சாலையோரத்தில் பூனைக்குட்டியாக இருந்தபோது உள்ளூர் நபர் ஒருவர் அதனை மீட்டெடுத்து, வீட்டுப் பூனை என நினைத்து வளர்த்து வந்துள்ளார்.</p><p></p><h2>வித்தியாசமான&nbsp;தோற்றம் </h2><p> சுமார் ஒரு வருடத்திற்குப் பின்னர், அது காட்டுப் பூனை என்பதை உணர்ந்த அவர், அந்த விலங்கை வனவிலங்கு சரணாலயத்தில் ஒப்படைத்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8b6b5cbb-f472-48c4-98ba-98915f4f3b18/26-6aaeda349e50a.webp' /></p><p>
</p><p>
இந்த விலங்கை பார்வையிட்ட நோகலெஸ்-அஸ்கர்ருன்ஸ், அதன் தோற்றம் மிகவும் வித்தியாசமாக இருப்பதை கவனித்துள்ளார்.</p><p>சிறிய சுருங்கிய முகம், குட்டையான வட்டமான காதுகள், நீண்ட மீசைகள் மற்றும் சிறுத்தையைப் போன்ற உடல் புள்ளிகள் ஆகியவை அந்தப் பூனையின் முக்கிய தனிச்சிறப்புகளாக இருந்துள்ளன.</p><p>

“அந்தப் பூனையை சுமார் 100 புகைப்படங்கள் எடுத்தேன். நான் மிகவும் வியப்படைந்திருந்தேன்” என நோகலெஸ்-அஸ்கர்ருன்ஸ் தெரிவித்துள்ளார்.
</p><p>
முதலில் இந்தப் பூனை ஏற்கனவே அறியப்பட்ட Leopardus tigrinus இனத்தைச் சேர்ந்ததாகவே விஞ்ஞானிகள் கருதியுள்ளார்.</p><p></p><h2>மேற்கொள்ளப்பட்ட ஆய்வு</h2><p> இந்த இனத்திற்கு Tigrina, Oncilla, Tigrillo மற்றும் Little Spotted Cat உள்ளிட்ட பெயர்கள் பயன்படுத்தப்படுகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c0ce61c6-3927-4f8c-b883-d5801de81a9a/26-6aaeda355796e.webp' /></p><p>
</p><p>
எனினும், தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் மூலம் இந்த விலங்கு ஏற்கனவே அறியப்பட்ட இனத்தைச் சேர்ந்தது அல்ல என்பது தெரியவந்துள்ளது.</p><p> இதன் மூலம், 100 ஆண்டுகளுக்கும் மேலான காலத்திற்குப் பிறகு பூனை குடும்பத்தில் புதிய இனமாக அறிவிக்கப்படும் முக்கியமான கண்டுபிடிப்பாக இது அமைந்துள்ளது.
</p><p>
இந்தக் கண்டுபிடிப்பு தொடர்பான ஆய்வு Current Biology என்ற அறிவியல் இதழில் வெளியிடப்பட்டுள்ளது.</p><p>

அறிவியலுக்கு முற்றிலும் புதிய ஒரு பூனை இனம் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது, உலக வனவிலங்கு ஆராய்ச்சியில் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகக் கருதப்படுகிறது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-19T18:53:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rukshy</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரியாத்தில் வான்வழித் தாக்குதல் எச்சரிக்கை : விமான சேவைகள் பாதிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/houthis-claim-attack-on-saudi-capital-1789841114"></link>
            <id>https://tamilwin.com/article/houthis-claim-attack-on-saudi-capital-1789841114</id>
            <summary type="text">சவூதி தலைநகரில் வான்வழித் தாக்குதல் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்ட சில மணிநேரங்களுக்குப் பிறகு, ரியாத் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகில் கறுப்புப் புகை...</summary>
            <content type="html"><![CDATA[<p>சவூதி தலைநகரில் வான்வழித் தாக்குதல் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்ட சில மணிநேரங்களுக்குப் பிறகு, ரியாத் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகில் கறுப்புப் புகைமண்டலம் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

 

அண்டை நாடான யேமனில் ஈரான் ஆதரவு ஹூத்தி போராளிகளுடனான மோதல் சமீபத்தில் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, குடியிருப்பாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு, வீட்டிலேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டது.
</p><p>
 

</p><h2>பதிலடி கொடுக்கப்படாமல் போகாது</h2><p>அதனைத் தொடர்ந்து தலைநகரில் பல வெடிப்புச் சத்தங்கள் கேட்கப்பட்டதாகவும், கிங் காலித் சர்வதேச விமான நிலையத்தில் பெரும் சிக்கல்கள் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/75b2a0b2-5132-4880-a1c0-40ac15a3f52a/26-6aaed84d2c831.webp' /></p><p> மேலும், நீண்ட தாமதங்கள் மற்றும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாக FlightRadar24 என்ற கண்காணிப்பு இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.&nbsp; &nbsp;</p><p>கடந்த வாரத்தில் சவூதி அரேபியா யேமன் முழுவதும் 300 தாக்குதல்களை நடத்தியுள்ளதாக ஹூத்தி இராணுவ செய்தித் தொடர்பாளர் யஹ்யா அல்-சரியா தெரிவித்தார்.
</p><p>
 

சனா மீதான தாக்குதல்கள் குறித்துக் கூறப்படும் செய்திகளுக்குப் பதிலடி கொடுக்கப்படாமல் போகாது என அவர் எச்சரித்தார்.</p><h2>முக்கிய கப்பல் வழித்தடத்தின் நுழைவாயில்</h2><p>

 

சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட யேமன் அரசாங்கத்துடன் உள்நாட்டுப் போரில் ஈடுபட்டுள்ள ஹூதிகள், சமீபத்தில் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த துறைமுக நகரமான மோக்காவையும், பெரிம் தீவையும் கைப்பற்றினர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d887528c-ab6a-49ba-816b-991198e94ff3/26-6aaed84dd968d.webp' /></p><p> இந்தத் தீவு, வளைகுடா நாடான யேமன் ஆசியா மற்றும் ஐரோப்பாவிற்கு ஏற்றுமதி செய்யப் பயன்படுத்தும் ஒரு முக்கிய கப்பல் வழித்தடத்தின் நுழைவாயிலாகும்.
</p><p>
 

ஹூதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள வடமேற்கு யேமனில் உள்ள துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்களுக்கு சவூதி விதித்த முற்றுகைக்குப் பதிலடியாகவே இந்தக் கடற்படை முற்றுகையிடப்பட்டதாக அக்குழு கூறியது.
</p><p>
 

அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானுக்கு எதிராக நடத்திய போரினால் ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டதிலிருந்து, சவூதி கப்பல்கள் எண்ணெய் ஏற்றுமதிக்காக செங்கடலின் அந்தப் பகுதியையே நம்பி இருந்து வருகின்றன.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-19T18:45:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர ரஷ்யா மீது பொருளாதார அழுத்தம் ; ட்ரம்ப் நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/economic-pressure-on-russia-to-end-the-ukraine-war-1789843282"></link>
            <id>https://canadamirror.com/article/economic-pressure-on-russia-to-end-the-ukraine-war-1789843282</id>
            <summary type="text">அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், உக்ரைனுடனான போரை முடிவுக்குக் கொண்டுவர ரஷ்யாவுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில், அந்த நாட்டுக்கு எதிராக விரிவான பொர...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், உக்ரைனுடனான போரை முடிவுக்குக் கொண்டுவர ரஷ்யாவுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில், அந்த நாட்டுக்கு எதிராக விரிவான பொருளாதாரத் தடைகளை விதிக்க வழிவகுக்கும் சட்டத்தில் கையொப்பமிட்டுள்ளார்.
</p><p>
இந்தச் சட்டத்தின் மூலம், ரஷ்யாவுக்கு எதிரான தடைகளை மேலும் கடுமையாக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள அமெரிக்க நிர்வாகத்திற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/09dcf490-5b43-4c70-8fa3-6fd795e94635/26-6aaed753b8c0e.webp' /></p><p>அத்துடன், ரஷ்யாவுக்கு விதிக்கப்பட்டுள்ள தடைகளை மீறி அந்தநாட்டுடன் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடும் நாடுகளுக்கு மேலதிக வரிகளை விதிக்கும் அதிகாரமும் ஜனாதிபதி ட்ரம்புக்கு வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இந்த நடவடிக்கைகள், உக்ரைன் மீதான ரஷ்யாவின் போரை முடிவுக்குக் கொண்டுவர அந்தநாட்டின் மீது பொருளாதார அழுத்தத்தை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
இதேவேளை, குறித்த சட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்படவுள்ள மேலதிக தடைகள் மற்றும் வரிகள் தொடர்பான விபரங்கள் அமெரிக்க நிர்வாகத்தால் பின்னர் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது</p>]]></content>
            <updated>2026-09-19T18:41:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிம்பிளான உடையில் நடிகை மமிதா பைஜு வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோ ஷுட்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/actress-mamitha-baiju-latest-cute-photoshoot-1789817224"></link>
            <id>https://cineulagam.com/article/actress-mamitha-baiju-latest-cute-photoshoot-1789817224</id>
            <summary type="text">மமிதா பைஜு2026ம் ஆண்டு சினிமாவில் உள்ள பல கலைஞர்களுக்கு வெற்றி ஆண்டாக அமைந்துள்ளது. இதில் முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து 3 ரூ. 100 கோடி படங்களை...</summary>
            <content type="html"><![CDATA[<h2>மமிதா பைஜு</h2><p>2026ம் ஆண்டு சினிமாவில் உள்ள பல கலைஞர்களுக்கு வெற்றி ஆண்டாக அமைந்துள்ளது. </p><p>இதில் முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து 3 ரூ. 100 கோடி படங்களை கொடுத்துள்ளவர் தான் நடிகை மமிதா பைஜு. </p><p>முதலில் விஜய்யின் ஜனநாயகன் ரிலீஸ், அடுத்து சூர்யாவுடன் அவர் நடித்த விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அடுத்து மலையாளத்தில் மமிதா பைஜு நடித்த பெத்லேகேம் குடும்ப யூனிட். இந்த 3 படங்களுமே ரூ. 100 கோடியை எட்டிவிட்டது. </p><p>இந்த வருடம் மமிதா பைஜுவிற்கு மாஸ் வெற்றி ஆண்டாக அமைந்துள்ளது, இந்த நிலையில் அவர் லேட்டஸ்ட்டாக வெளியிட்டுள்ள போட்டோ ஷுட் புகைப்படம் வைரலாகி வருகிறது. இதோ போட்டோஸ்,</p><p><br></p>]]></content>
            <updated>2026-09-19T18:30:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[காதலருடன் 2 மாதம் உல்லாசம் ; வீட்டுக்கு திரும்பி வந்து கணவரின் அந்தரங்க உறுப்பில் கடித்து வைத்த மனைவி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/illicit-romance-lover-wife-husband-private-part-1789842438"></link>
            <id>https://jvpnews.com/article/illicit-romance-lover-wife-husband-private-part-1789842438</id>
            <summary type="text">காதலருடன் 2 மாத உல்லாசம் அனுபவித்து விட்டு, வீட்டுக்கு திரும்பி வந்த மனைவி, கணவரின் அந்தரங்க உறுப்பில் கடித்து வைத்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
...</summary>
            <content type="html"><![CDATA[<p>காதலருடன் 2 மாத உல்லாசம் அனுபவித்து விட்டு, வீட்டுக்கு திரும்பி வந்த மனைவி, கணவரின் அந்தரங்க உறுப்பில் கடித்து வைத்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.</p><p></p><p>

உத்தர பிரதேசத்தின் ஹர்தோய் மாவட்டத்தில் வசித்து வருபவர் சாதனா. இவருடைய கணவர் தீபக். இந்த தம்பதிக்கு, 3 வயது பெண் குழந்தை உள்பட 3 பெண் குழந்தைகள் உள்ளனர்.</p><h3>குடும்பத் தகராறு</h3><p> </p><p>இந்த நிலையில், தீபக்கின் நண்பருடன் சாதனாவுக்கு நட்பு ஏற்பட்டது.

இதன்பின்னர் அவருடனான உறவு நெருக்கமடைந்தது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dc6f1d97-7c00-48f3-9ac9-ef69c907b07d/26-6aaed407b589f.webp' /></p><p>ஒரு நாள் யாரிடமும் எதுவும் கூறாமல் அவருடன் சாதனா ஓடி விட்டார். 2 மாதங்களாக அவருடனேயே தங்கி, உல்லாசம் அனுபவித்து வந்த சாதனா, நேற்று முன்தினம் கணவரின் வீட்டுக்கு திரும்பியுள்ளார்.</p><p>அப்போது, சாதனாவுடன் தீபக் வாக்குவாதம் செய்துள்ளார். இதில், இருவருக்கும் மோதல் ஏற்பட்டு வன்முறையில் முடிந்தது. விசயம் பொலிஸ் வரை சென்றது. இந்த சம்பவம் பற்றி பொலிஸார் கூறும்போது, சாதனாவின் மூக்கை தீபக் கடித்து விட்டார் என புகார் பதிவானது. </p><p>இதனால், தீபக் கைது செய்யப்பட்டு உள்ளார் என்றனர்.

தீபக், சாதனாவின் தலையில் தாக்கியதுடன், அவருடைய மூக்கை கடித்து, சாக்கடையில் வீசி விட்டார். </p><p>இந்த சண்டையின்போது மாமனாரும், மாமியாரும் சாதனாவின் கைகளை பிடித்து கொண்டனர் என சாதனா குற்றச்சாட்டாக கூறியுள்ளார். </p><p>இதனால் பலத்த காயமடைந்த மீட்ட பொலிஸார் அவரை சிகிச்சைக்கு கொண்டு சென்றனர்.</p><p>எனினும், தீபக்கின் தாய் கூறும்போது, தீபக்கின் நண்பருடன் சாதனா ஓடி விட்டார். இதுபற்றி பொலிசிடம் கூறினோம். அவர்கள் சமரசம் செய்து வைத்தனர். ஆனால், யாரும் எதிர்பாராமல் பக்கத்து வீட்டு மாடியில் இருந்து எங்களுடைய வீட்டுக்குள் சாதனா குதித்து விட்டார். </p><p>குழந்தைகளை அழைத்து செல்ல முற்பட்டார்.

இந்த தகராறில், தீபக்கின் அந்தரங்க உறுப்புகளை சாதனா கடித்து வைத்து விட்டார். </p><p>பின்னர், அவராகவே தரையில் தலையைக்கொண்டு மோதி காயம் ஏற்படுத்தி கொண்டார் என கூறினார். இதுதொடர்பாக சாதனாவுக்கு எதிராக முறைபாடு அளித்துள்ளார்.&nbsp;&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-09-19T18:27:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[டயானாவின் மரணத்தால் பேரானந்தத்தில் திளைத்த சார்லஸ்! அதிர்ச்சியூட்டும் ஸ்பென்சரின் குறிப்புகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/charles-who-was-overjoyed-by-diana-s-death-1789840601"></link>
            <id>https://ibctamil.com/article/charles-who-was-overjoyed-by-diana-s-death-1789840601</id>
            <summary type="text">டயானா உயிரிழந்த சில நாட்களுக்குப் பின்னர் மன்னர் சார்லஸ் தன்னிடம் “நாம் அவரை விரைவில் மறந்துவிடுவோம்” என்று கூறியதாக மறைந்த இளவரசி டயானாவின் சகோதரர் ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>டயானா உயிரிழந்த சில நாட்களுக்குப் பின்னர் மன்னர் சார்லஸ் தன்னிடம் “நாம் அவரை விரைவில் மறந்துவிடுவோம்” என்று கூறியதாக மறைந்த இளவரசி டயானாவின் சகோதரர் சார்லஸ் ஸ்பென்சர், தனது நினைவுக் குறிப்புகளில் கூறிய விடயங்கள் பிரித்தானியா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் பேசுபொருளாகியுள்ளது.</p><p>இங்கிலாந்தின் நாளிதழ் ஒன்றில் புதன்கிழமை வெளியான நூல் பகுதியை மேற்கோள்காட்டியே இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.
</p><p>
அப்போது வேல்ஸ் இளவரசராக இருந்த சார்லஸ், டயானாவின் இறுதி ஊர்வலத்தில் தனது மகன்களான வில்லியம் மற்றும் ஹாரி பங்கேற்கக் கூடாது என தான் கருதியதாக ஸ்பென்சர் கூறியுள்ளார்.</p><p></p><h2>கோபத்தின் வெளிப்பாடு</h2><p> </p><p>இது தொடர்பாக தொலைபேசியில் பேசியபோது சார்லஸ் கோபத்தின் வெளிப்பாடாக தொடர்ந்து பேசினார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9c6991db-0778-420f-b4f0-603722ffdc19/26-6aaecfb8517ff.webp' /></p><p>
</p><p>
மேலும், டயானா உயிரிழந்த இரவில் சார்லஸ் தன்னிடம் பேசியபோது, லாட்டரி வென்றவர் போல மிகுந்த உற்சாகத்துடன் அவரது குரல் ஒலித்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p><p>வேல்ஸ் இளவரசியான டயானா, 1997 ஆகஸ்ட் மாதம் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் அதிவேகமாக சென்ற கார் விபத்தில் சிக்கி, உட்புற காயங்களுக்கு உள்ளாகி உயிரிழந்தார்.
</p><p>
அப்போது அவருடைய மகன்களான வில்லியம் மற்றும் ஹரிக்கு முறையே 15 மற்றும் 12 வயது.</p><p></p><h2>ஸ்பென்சரின் குற்றச்சாட்டு</h2><p> </p><p>டயானாவின் இறுதிச்சடங்கிற்கு சில நாட்களுக்குப் பின்னர் நடைபெற்ற இறுதி ஊர்வலத்தில் இருவரும் பங்கேற்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/095a8115-aaa6-453e-9f02-4b54f6bc77a6/26-6aaecfb90bf7b.webp' /></p><p>
</p><p>இந்நிலையில் ஸ்பென்சரின் குற்றச்சாட்டுகளுக்கு பக்கிங்ஹாம் அரண்மனை புதன்கிழமை கடும் எதிர்வினை ஆற்றியுள்ளது.</p><p>
“புத்தகங்கள் தொடர்பாக பொதுவாக கருத்து தெரிவிப்பது எங்கள் நடைமுறை அல்ல. இருப்பினும், சகோதரரை இழந்த துயரம் ஒருவரின் சிந்தனையை மங்கச் செய்யலாம். தீர்மானிக்கும் திறனை பாதிக்கலாம்.</p><p> மேலும் பல ஆண்டுகளுக்குப் பின்னரும் நினைவுகளை பிறர் உணராத வகையில் மாற்றியமைக்கலாம் என்பதை மன்னர் சார்லஸ் கவனத்தில் கொண்டுள்ளார்” என்று அரண்மனை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-19T18:09:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[குறைந்த கட்டணத்தில் வீடுகள் கட்டித்தருவதாக பணமோசடி : இரண்டு பெண்கள் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/two-women-arrested-for-housing-construction-fraud-1789837811"></link>
            <id>https://ibctamil.com/article/two-women-arrested-for-housing-construction-fraud-1789837811</id>
            <summary type="text">&amp;nbsp;குறைந்த கட்டணத்தில் வீடுகள் கட்டித் தருவதாக வாக்குறுதி அளித்து ஒரு தனியார் நிறுவனம் மக்களை ஏமாற்றிய வழக்கில் தொடர்புடைய இரண்டு பெண்களை மிரிஹானா ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;குறைந்த கட்டணத்தில் வீடுகள் கட்டித் தருவதாக வாக்குறுதி அளித்து ஒரு தனியார் நிறுவனம் மக்களை ஏமாற்றிய வழக்கில் தொடர்புடைய இரண்டு பெண்களை மிரிஹானா சிறப்பு குற்றப் புலனாய்வுப் பிரிவு கைது செய்துள்ளது.
</p><p>
பணம் பெற்ற பின்னரும் வீடுகள் கட்டத் தவறியது தொடர்பாகப் பிரிவிற்கு வந்த 245 புகார்கள் குறித்து நடத்தப்பட்ட விசாரணையின் போது, ​​அந்தத் தனியார் நிறுவனத்தின் பணிப்பாளர் ஒருவரும் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.&nbsp;</p><h2>இரண்டு பெண்கள் கைது&nbsp;</h2><p>&nbsp;இந்தச் சம்பவம் தொடர்பாக நடத்தப்பட்ட மேலதிக விசாரணையில், நிதி மோசடிக்கு உடந்தையாக இருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு, அந்த நிறுவனத்தின் பிரதம சந்தைப்படுத்தல் மேலாளர் மற்றும் செயல்பாட்டு அதிகாரியாகப் பணியாற்றிய இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2afe4fe8-05a0-4986-9248-e5d9ed4c2e8b/26-6aaecefb324cd.webp' /></p><p>
</p><p>
சந்தேக நபர்களுக்குச் சொந்தமான நான்கு கார்களும் காவல்துறை காவலில் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

30 மற்றும் 31 வயதுடைய அந்த இரண்டு பெண்களும் கஹவத்த மற்றும் கடுவெலவைச் சேர்ந்தவர்கள்.

இன்று (19) நுவகொட நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட அவர்கள், 29ஆம் திகதி வரை காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-09-19T18:05:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[அனோஜனை விடுதலை செய்ய கோரி கவனயீர்ப்பு போராட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/protest-demanding-anojan-s-release-1789839739"></link>
            <id>https://jvpnews.com/article/protest-demanding-anojan-s-release-1789839739</id>
            <summary type="text">சவூதி அரேபியச் சிறையில் வாடும் இலங்கை இளைஞன் சிவராசா அனோஜனை உடனடியாக விடுதலை செய்யக் கோரி, இந்து அமைப்புகளின் கூட்டமைப்பு சார்பில் கவனயீர்ப்பு நிகழ்வொ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சவூதி அரேபியச் சிறையில் வாடும் இலங்கை இளைஞன் சிவராசா அனோஜனை உடனடியாக விடுதலை செய்யக் கோரி, இந்து அமைப்புகளின் கூட்டமைப்பு சார்பில் கவனயீர்ப்பு நிகழ்வொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><p></p><p>

 

இப்போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள், சிவராசா அனோஜனின் புகைப்படம் தாங்கிய பதாகைகளையும் கோரிக்கை வாசகங்கள் அடங்கிய அட்டைகளையும் ஏந்தியவாறு தமது கோரிக்கைகளை வெளிப்படுத்தினர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c3db0363-8e65-4da3-a9f2-31f108a18325/26-6aaec97cc65bc.webp' /></p><p>

 

இந்நிகழ்வின்போது ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த பேச்சாளர் ஒருவர், இரு நபர்களுக்கு இடையே ஏற்பட்ட தனிப்பட்ட கருத்து முரண்பாடு காரணமாகவே அனோஜனுக்கு இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.</p><p>

 

எனவே, சிவராசா அனோஜனை விடுதலை செய்து, அவரது குடும்பத்தினர் அமைதியாக வாழச் சவூதி அரேபிய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டார்.
</p><p>
 

இதனிடையே, இக்கவனயீர்ப்பு நிகழ்வு நடைபெற்ற இடத்திற்கு முச்சக்கர வண்டியில் மதுபோதையில் வந்த நபர் ஒருவர், அங்கு செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்த ஊடகவியலாளர்களை அச்சுறுத்தும் வகையில் நடந்துகொண்டதுடன் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-19T17:42:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானின் முதன்மை நிபந்தனைகள் அமெரிக்காவுக்கு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/iran-s-main-conditions-for-the-us-1789837284"></link>
            <id>https://tamilwin.com/article/iran-s-main-conditions-for-the-us-1789837284</id>
            <summary type="text">போர் முடிவுக்கு வருவதற்கான ஈரானின் முதன்மை நிபந்தனைகள் அமெரிக்காவுக்கு
அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரானின் தேசிய பாதுகாப்பு சபை செய...</summary>
            <content type="html"><![CDATA[<p>போர் முடிவுக்கு வருவதற்கான ஈரானின் முதன்மை நிபந்தனைகள் அமெரிக்காவுக்கு
அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

ஈரானின் தேசிய பாதுகாப்பு சபை செயலாளரும் அந்த நாட்டின் பாதுகாப்புப் படை
பிரதானியுமான மொஹ்சன் ரேசாய் (Mohsen Rezaei), இதனை ஊடகம் ஒன்றிடம்
தெரிவித்துள்ளார்.</p><h2>திருப்திகரமான பதில் வராத வரை</h2><p>

அனைத்து முனைகளிலும் ஈரான் மற்றும் அதன் நட்பு நாடுகள் மீதான தாக்குதல்களை
உடனடியாக நிறுத்துவது,

முடக்கி வைக்கப்பட்டுள்ள ஈரானிய நிதிகளை விடுவிப்பது,&nbsp;ஈரான் மீதான பொருளாதார மற்றும் பிற தடைகள் / முற்றுகைகளை (Blockade)
முடிவுக்குக் கொண்டுவருவது என்பன இந்த நிபந்தனைகளாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/36c1f836-b282-4188-a95d-910fc3a94952/26-6aaec9084d2a3.webp' /></p><p>
இந்த நிபந்தனைகள் கட்டார் நாட்டின் மத்தியஸ்தம் மூலமாக
அமெரிக்காவிற்கு முறைப்படி அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.</p><p>
இந்த முன்மொழிவுகள் தற்போது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் பரிசீலனை மற்றும் பதிலுக்காகக் காத்திருப்பதாக மொஹ்சன் ரேசாய் குறிப்பிட்டுள்ளார்.</p><p>
அமெரிக்க தரப்பில் இருந்து முறையான மற்றும் திருப்திகரமான பதில் வராத வரை
பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட மாட்டாது என்றும் அவர்
தெளிவுபடுத்தியுள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-09-19T17:40:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[சவுதியின் ரியாத் விமான நிலையம் அருகே கரும்புகை: குண்டுவெடிப்பு மற்றும் வான்வழி அச்சுறுத்தல்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/riyadh-explosions-tension-spike-and-aerial-alerts-1789839467"></link>
            <id>https://news.lankasri.com/article/riyadh-explosions-tension-spike-and-aerial-alerts-1789839467</id>
            <summary type="text">Riyadh Explosions Tension Spike and Aerial Alerts: &amp;nbsp;ரியாத் சர்வதேச விமான நிலையம் அருகே திடீரென எழுந்த அடர்ந்த கரும்புகை பெரும் பரபரப்பை ஏற்படுத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>Riyadh Explosions Tension Spike and Aerial Alerts: &nbsp;ரியாத் சர்வதேச விமான நிலையம் அருகே திடீரென எழுந்த அடர்ந்த கரும்புகை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><h2>விமான நிலையம் அருகே அடர்ந்த கரும்புகை&nbsp;</h2><p> சனிக்கிழமை சவுதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தில் அமைந்துள்ள கிங் காலித் சர்வதேச விமான நிலையம் அருகே திடீரென அடர்ந்த கரும்புகை எழுந்து பரபரப்பை ஏற்படுத்தியது.</p><p>இப்பகுதியில் நள்ளிரவில் விடுக்கப்பட்ட திடீர் வான்வழி அச்சுறுத்தல்களை அடுத்து சக்திவாய்ந்த குண்டுவெடிப்பு சம்பவங்களும் அரங்கேறியது.</p><p>ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் படையினருக்கும், சவுதி ராணுவத்தினருக்கும் இடையே ஏற்பட்டுள்ள மோதல்களே தற்போதைய பதற்றமான சூழ்நிலைகளுக்கு முக்கிய காரணமாக உள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2b39222a-3eaf-4b43-aa65-78b98171728b/26-6aaec86cefcaf.webp' /></p><p> ஹவுதி படையினர் மெக்கா நகரை தாக்க முயற்சி செய்து வருவதாக சவுதி அரேபியா குற்றச்சாட்டுகளை முன்வைத்து வரும் நிலையில் இந்த குற்றச்சாட்டுகளை ஹவுதிகள் திட்டவட்டமாக மறுத்து வருகின்றனர்.</p><h2> விமான நிலையத்தில் சிக்கல்</h2><p>சவுதி தலைநகரில் அமைந்துள்ள விமான நிலையத்திற்கு செல்வதற்கான முக்கிய நெடுஞ்சாலையில் பெரும் கரும்புகை திரண்டு எழுவது தொடர்பான புகைப்படங்களை ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.</p><p> வெடிப்பு சத்தம் மற்றும் புகை மண்டலம் போன்றவை அசாதாரண சூழ்நிலையை விளக்கினாலும் இது தொடர்பான உண்மையான காரணத்தை சவுதி அதிகாரிகள் இதுவரை வெளியிடவில்லை.</p><p> இந்த பதற்றமான சூழ்நிலையை தொடர்ந்து கிங் காலித் சர்வதேச விமான நிலையத்தில் கடுமையான செயல்பாட்டு சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன என்று FlightRadar24 தெரிவித்துள்ளது.</p><p> மேலும் இந்த சம்பவத்தில் உயிரிழப்புகளோ அல்லது பொருட்சேதமோ ஏற்பட்டதாக எந்தவொரு தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.</p><p><br></p>]]></content>
            <updated>2026-09-19T17:38:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[சவுதி அரேபியாவை இலக்கு வைத்து ஹவுதிக்கள் அதிரடி ஏவுகணை தாக்குதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/houthis-launch-major-missile-attack-target-saudi-1789839432"></link>
            <id>https://ibctamil.com/article/houthis-launch-major-missile-attack-target-saudi-1789839432</id>
            <summary type="text">சவுதி அரேபியா மீது பாலிஸ்டிக் ஏவுகணைகள், குரூஸ் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களைப் பயன்படுத்தி யேமனில் செயல்பட்டு வரும் ஹவுதிகிளர்ச்சியாளர்கள்,&amp;nbsp; தாக்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>சவுதி அரேபியா மீது பாலிஸ்டிக் ஏவுகணைகள், குரூஸ் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களைப் பயன்படுத்தி யேமனில் செயல்பட்டு வரும் ஹவுதிகிளர்ச்சியாளர்கள்,&nbsp; தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>இந்த விடயத்தை ஹவுதிக்களின் இராணுவப் பேச்சாளர் யஹ்யா சரீ உறுதிப்படுத்தியுள்ளார்.</p><p>“இரண்டு சிறப்பு இராணுவ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. முதலாவது நடவடிக்கை ரியாத்தில் உள்ள முக்கியத்துவம் வாய்ந்த இலக்குகளை குறிவைத்தது.</p><p></p><h2>யேமன் படைகள்&nbsp;</h2><p> </p><p>இரண்டாவது நடவடிக்கை யன்பு பகுதியில் உள்ள சவுதி அராம்கோ நிறுவனத்தின் வசதியை குறிவைத்தது” என அவர்&nbsp; கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/90a940be-cdb8-401a-a2e7-c8f32ba6f049/26-6aaec8b5e7f44.webp' /></p><p>
</p><p>
மேலும், “முற்றுகைக்கு முற்றுகை, தீவிரப்படுத்தலுக்கு தீவிரப்படுத்தல் என்ற நிலைப்பாட்டை நடைமுறைப்படுத்துவதில் யேமன் படைகள் தொடர்ந்து உறுதியாக உள்ளன. </p><p>தங்கள் நாட்டுக்கு எதிரான தாக்குதல்கள் நிறுத்தப்பட்டு, யேமன் மீதான முற்றுகை நீக்கப்படும் வரை, எதிரி சவுதி படைகளின் திரள் நிலைகளைத் தாக்குவது தொடரும்” என்றும் யஹ்யா சரீ தெரிவித்துள்ளார்.</p><p>

ஹவுதி தரப்பின் இந்தக் கூற்றுகள் தொடர்பான தாக்கத்தின் அளவு மற்றும் சேத விவரங்கள் குறித்து தனிப்பட்ட சரிபார்ப்பு தேவைப்படுகிறது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-09-19T17:37:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[Rajini-ஆ Vijay-ஆ னு கேட்டா என்னோட Choice எப்போதுமே....- Meesaya Murukku 2]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/meesaya-murukku-2-heroines-interview-1789810857"></link>
            <id>https://cineulagam.com/article/meesaya-murukku-2-heroines-interview-1789810857</id>
            <summary type="text">மீசைய முறுக்கு 2கடந்த 2017ம் ஆண்டு தமிழ் சினிமாவில் வெளியாகி செம ஹிட்டடித்த படங்களில் ஒன்று தான் மீசைய முறுக்கு. காதல், கனவு, நட்பு, அப்பா பாசம், காலே...</summary>
            <content type="html"><![CDATA[<h2>மீசைய முறுக்கு 2</h2><p>கடந்த 2017ம் ஆண்டு தமிழ் சினிமாவில் வெளியாகி செம ஹிட்டடித்த படங்களில் ஒன்று தான் மீசைய முறுக்கு. காதல், கனவு, நட்பு, அப்பா பாசம், காலேஜ் வாழ்க்கை என இளம் கலைஞர்களை கவரும் வண்ணம் இப்பட கதைக்களம் அமைந்தது.</p><p>முதல் பாக வெற்றியை தொடர்ந்து தற்போது மீசைய முறுக்கு இரண்டாம் பாகம் தயாராகியுள்ளது. இதில் ஹிப்ஹாப் ஆபியுடன் யூடியூப் புகர் ஹர்ஷத் கான் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.</p><p>வரும் செப்டம்பர் 25ம் தேதி படம் வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தில் நடித்துள்ள நாயகிகள் நமது சினிஉலகம் யூடியூப் பக்கத்தில் பேட்டி அளித்துள்ளனர். அவர்கள் படம் குறித்து என்ன கூறுயுள்ளார்கள் என்பதை காணுங்கள்,</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/4o7MmhmuUIY" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-09-19T17:30:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்கத் தடையை மீறி புதிய உச்சம் தொட்ட ஈரானின் எண்ணெய் விற்பனை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/iranian-oil-sales-reach-two-year-high-1789838757"></link>
            <id>https://tamilwin.com/article/iranian-oil-sales-reach-two-year-high-1789838757</id>
            <summary type="text">ஈரானிய ஏற்றுமதியைத் தடுக்கும் நோக்கில் அமெரிக்கா விதித்துள்ள தடையையும் மீறி, நாட்டின் எண்ணெய் விற்பனை கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவிலான புதிய உச்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானிய ஏற்றுமதியைத் தடுக்கும் நோக்கில் அமெரிக்கா விதித்துள்ள தடையையும் மீறி, நாட்டின் எண்ணெய் விற்பனை கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவிலான புதிய உச்சத்தைத் தொட்டுள்ளதாக ஈரானின் திட்டமிடல் மற்றும் வரவுசெலவுத் திட்ட அமைப்பு தெரிவித்துள்ளது. </p><p>
ஈரானின் முக்கிய செய்தி நிறுவனங்களில் ஒன்றான 'மெஹர்' வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
செப்டம்பர் மாதத்தில் ஈரானின் எண்ணெய் விற்பனை 3 பில்லியன் அமெரிக்க டாலர்களைத் தாண்டியுள்ளது. இது கடந்த இரண்டு ஆண்டுகளில் பதிவான மிக அதிகபட்ச மாதாந்த வருவாயாகும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3ddfb920-ab34-4694-9b8f-311ac897c558/26-6aaec5aa2e155.webp' /></p><p>
ஆயினும், அமெரிக்க தடையை மீறி ஈரான் எவ்வாறு தொடர்ந்து எண்ணெய் ஏற்றுமதி செய்து வருகிறது என்பது குறித்து இந்த அறிக்கையில் தெளிவான விளக்கம் அளிக்கப்படவில்லை.</p><p>
கடற்படைத் தடை அமலில் இருந்தபோதிலும், ஈரானிய அரசு ஏற்கனவே கடலில் நிலைகொள்ளச் செய்திருந்த தனது எண்ணெய் தாங்கிக் கப்பல்கள் மூலம் விற்பனையைத் தொடர்ந்து பராமரித்து வந்திருக்கலாம் எனப் பொருளாதார ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். </p><p>
எனினும், தற்போதும் அதே நடைமுறைதான் தொடர்கிறதா என்பது தெளிவாகத் தெரியவில்லை.
</p><p>அதேவேளையில், ஈரானிய எண்ணெயைச் சுமந்து செல்லும் ஈராக்கியக் கப்பல்கள், மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த ஹோர்மூஸ் நீரிணை வழியே பயணிக்க தெஹ்ரான் அனுமதித்து வருவதாக உறுதிப்படுத்தப்படாத சில தகவல்கள் தெரிவிக்கின்றன.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-19T17:26:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈஸ்டர் தாக்குதல் விவகாரம் ; தம்மை மீண்டும் தொடர்புபடுத்தும் செய்திகள் திரிபுபடுத்தப்பட்டவை ; றிஷாட்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/easter-sunday-attacks-repo-linking-again-distorted-1789838481"></link>
            <id>https://jvpnews.com/article/easter-sunday-attacks-repo-linking-again-distorted-1789838481</id>
            <summary type="text">அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிஷாட் பதியுதீன், ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பாக தம்மை சஹ்ரான் ஹாஷிமுடன் மீண்டும் தொடர்புபடுத்தும் வகையில் வெளிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிஷாட் பதியுதீன், ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பாக தம்மை சஹ்ரான் ஹாஷிமுடன் மீண்டும் தொடர்புபடுத்தும் வகையில் வெளியாகும் செய்திகள் திரிபுபடுத்தப்பட்டவை எனத் தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p></p><p>ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக தாம் ஏற்கனவே ஏழு மாதங்களுக்கும் மேலாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு, பின்னர் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டதாக அவர் கூறினார்.</p><p>

அண்மைய நீதிமன்ற நடவடிக்கைகள் தொடர்பான சில தகவல்கள் ஊடகங்களில் தம்மை மீண்டும் தாக்குதலுடன் இணைக்கும் வகையில் செய்தியாக்கப்பட்டுள்ளதாக அவர் குற்றஞ்சாட்டினார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0b96d0e0-df13-46ac-9d08-5fcdc1baee84/26-6aaec4934d6cd.webp' /></p><p>வர்த்தகர் அலாவுதீனுடனான தொடர்பின் அடிப்படையில் சஹ்ரானுடன் தமக்கு தொடர்பு ஏற்பட்டதாக Additional Solicitor General கூறியதாக வெளியான செய்தியையும் அவர் மறுத்தார்.
</p><p>
ஈஸ்டர் தாக்குதலுக்குப் பொறுப்பானவர்களை சட்டத்தின் முன் நிறுத்த சுயாதீனமான, அரசியல் தலையீடற்ற விசாரணை அவசியம் என அவர் வலியுறுத்தினார்.
</p><p>
அதேவேளை, தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் நீதி கிடைக்க வேண்டும் என்றும், ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளால் குற்றமற்றவர்கள் பாதிக்கப்படக்கூடாது என்றும் தெரிவித்தார்.
</p><p>
சவூதி அரேபியாவில் மரண தண்டனை எதிர்கொள்ளும் இலங்கைத் தமிழ் இளைஞர் எஸ். அனோஜன் தொடர்பாகவும் அவர் கருத்து தெரிவித்து, அவருக்கு உதவுவதற்காக முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைய வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.</p><p>

அனோஜனுக்காக சவூதி அரசாங்கத்திடம் கருணை கோரிக்கை முன்வைப்பதற்கு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா, ஜனாதிபதி மற்றும் சவூதி தூதரகம் ஊடாக நடவடிக்கை எடுக்க எதிர்பார்ப்பதாகவும் கூறினார்.</p><p></p>]]></content>
            <updated>2026-09-19T17:21:29+00:00</updated>
        </entry>
    </feed>
