<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-08-03T08:43:25+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[சீரற்ற காலநிலையால் முதல் உயிரிழப்பு பதிவு...!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/1-dead-in-nawalapitiya-landslide-1785745180"></link>
            <id>https://ibctamil.com/article/1-dead-in-nawalapitiya-landslide-1785745180</id>
            <summary type="text">சீரற்ற காலநிலையினால் நாட்டில் முதல் உயிரிழப்பு பதிவாகியுள்ளது.

இந்தநிலையில் நாவலப்பிட்டிய – சோலங்கந்தை (Solangakanda) பகுதியில் ஒருவர் உயிரிழந்துள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>சீரற்ற காலநிலையினால் நாட்டில் முதல் உயிரிழப்பு பதிவாகியுள்ளது.
</p><p>
இந்தநிலையில் நாவலப்பிட்டிய – சோலங்கந்தை (Solangakanda) பகுதியில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
</p><p>
மண்மேடு சரிந்து விழுந்ததில் அவர் உயிரிழந்துள்ளார்.</p><p></p><h2>பாதுகாப்பு நடவடிக்கை</h2><p>

மத்திய மலைநாட்டில் பெய்து வரும் அடைமழையால் பல பகுதிகளில் வெள்ளம் மற்றும் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/038a9242-4b98-46b1-9cb2-46ebd8721d47/26-6a7053e565042.webp' /></p><p>

இதனடிப்படையில் அனர்த்தங்களின்போது பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p>]]></content>
            <updated>2026-08-03T08:40:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கண்டி - கொழும்பு பிரதான வீதி தற்காலிகமாக மூடல்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/extreme-weather-alert-kadugannawa-road-closed-1785745497"></link>
            <id>https://tamilwin.com/article/extreme-weather-alert-kadugannawa-road-closed-1785745497</id>
            <summary type="text">நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக பாறைகள் சரிந்து விழும் அபாயம் உள்ளதால்&amp;nbsp;கண்டி - கொழும்பு பிரதான வீதி, பஹால கடுங்கன்னாவ பகுதியிலிருந்து மூடப...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக பாறைகள் சரிந்து விழும் அபாயம் உள்ளதால்&nbsp;கண்டி - கொழும்பு பிரதான வீதி, பஹால கடுங்கன்னாவ பகுதியிலிருந்து மூடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>அத்தோடு,&nbsp; கண்டி - கணேதன்ன வீதியும் மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.</p><h2>எச்சரிக்கை</h2><p>இதனால் குறித்த வீதியைப் பயன்படுத்தும் சாரதிகள் மற்றும் பொதுமக்கள் மறுஅறிவித்தல் வரும்வரை மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d6145558-958e-4faf-8024-b946d5766a6c/26-6a7053d4ae0e2.webp' /></p><p>மேலும்,ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியின் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-03T08:36:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மறு அறிவித்தல் வரை பேராதனைப் பல்கலைக்கழக நடவடிக்கை இடைநிறுத்தம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/peradeniya-university-operations-suspended-1785746062"></link>
            <id>https://jvpnews.com/article/peradeniya-university-operations-suspended-1785746062</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாகப் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் அனைத்துக் கல்வி நடவடிக்கைகளும் பரீட்சைகளும் மறு அறிவித்தல் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாகப் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் அனைத்துக் கல்வி நடவடிக்கைகளும் பரீட்சைகளும் மறு அறிவித்தல் வரை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.
</p><p>
இது தொடர்பில் மாணவர்களுக்கு வெளியிடப்பட்டுள்ள அறிவித்தலில், மாணவர்களது மற்றும் ஊழியர்களது பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காகவே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகப் பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b233b095-cf29-428d-b597-c2ab89b3ee09/26-6a705290080ac.webp' /></p><h2>கடுமையான காலநிலை</h2><p> </p><p>எவ்வாறாயினும், வளாகத்திலுள்ள அனைத்து அத்தியாவசிய சேவைகளும் எந்தவிதத் தடையுமின்றித் தொடர்ந்து செயற்படும் என்பதை அது உறுதிப்படுத்தியுள்ளது.

பாதுகாப்பாகத் தமது சொந்த ஊர்களுக்குப் பயணிக்கக் கூடிய மாணவர்கள் பல்கலைக்கழகத்திலிருந்து புறப்பட்டுச் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p><p></p><p> </p><p>கடுமையான காலநிலை காரணமாகச் சொந்த ஊர்களுக்குத் திரும்ப முடியாத மாணவர்கள், சலசல மெதுர (Sarasavi Medura) விடுதியைத் தவிர ஏனைய பல்கலைக்கழக விடுதிகளில், சம்பந்தப்பட்ட விடுதி அதிகாரிகளுக்குத் அறிவித்த பின்னர் தங்கியிருக்கலாம். </p><p>எந்தவொரு மாணவரும் தங்களது விடுதி வசதியை விட்டு வெளியேறுமாறு கட்டாயப்படுத்தப்பட மாட்டார்கள் என்று நிர்வாகம் வலியுறுத்தியுள்ளது.</p><p></p><p>
</p><p>
அதிக ஆபத்துள்ள பகுதிகளில் உள்ள தனியார் விடுதிகளில் தங்கியிருக்கும் மாணவர்கள் வளாகத்தில் தற்காலிகத் தங்குமிடம் கோரினால், அவர்களுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.</p><p>அத்தகைய மாணவர்களுக்குத் தங்குமிட வசதியை வழங்குமாறும், தேவையான பதிவுகளைப் பேணுமாறும் விடுதி அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-08-03T08:32:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[இரண்டாம் தாரமாக வந்த அப்பத்தா.. மீனாட்சிக்கு தெரிய வந்த அதிர்ச்சி உண்மை! வீட்டிற்குள் என்ட்ரி கொடுக்கும் ஆதி - வாகை சூடவா இன்றைய எபிசோட் அப்டேட்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/vaagai-sooda-vaa-serial-today-episode-03-08-2026-1785741284"></link>
            <id>https://cineulagam.com/article/vaagai-sooda-vaa-serial-today-episode-03-08-2026-1785741284</id>
            <summary type="text">தமிழ் சின்னத்திரையில் Zee தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான &#039;வாகை சூடவா&#039; சீரியல், திங்கள் முதல் சனி வரை இரவு 9:30 மணிக்கு ரசிகர்களை வி...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழ் சின்னத்திரையில் Zee தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான 'வாகை சூடவா' சீரியல், திங்கள் முதல் சனி வரை இரவு 9:30 மணிக்கு ரசிகர்களை விறுவிறுப்பாக கவர்ந்து வருகிறது.</p><p>கடந்த எபிசோடில் அப்பத்தாவின் கடந்தகால வாழ்க்கையை பற்றிய ஃபிளாஷ்பேக் காட்சிகள் வெளியாகி பல்வேறு ரகசியங்கள் வெளிச்சத்துக்கு வந்த நிலையில், இன்றைய எபிசோட் மேலும் பரபரப்பை கிளப்ப உள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1e9de089-b918-4f27-abd5-83f09d4f3a83/26-6a703fe74e6a8.webp' /></p><p>அதாவது, இதுவரை அனைவரிடமும் நல்லவர் போல நடித்து வந்த அப்பத்தாவின் உண்மையான முகம் தற்போது வெளிப்படுகிறது. லோகுவின் அம்மா தாமரையை மிரட்டி வீட்டை விட்டு வெளியேறச் செய்து, அதன் பிறகு லோகுவின் அப்பாவை திருமணம் செய்து கொண்டு இந்த வீட்டின் அதிகாரத்தை கைப்பற்றியவர் அப்பத்தாதான் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகிறது.
</p><p>இதோடு மட்டுமல்லாமல், தேவி தான் அப்பத்தாவின் சொந்த ரத்த வாரிசு என்ற உண்மையும் மீனாட்சிக்கு தெரிய வருகிறது. இதனால் அதிர்ச்சியில் உறைந்து போகும் மீனாட்சி, அப்பத்தாவின் சதிகளை புரிந்துகொள்ள தொடங்குகிறாள்.
</p><p>ஆனால் அப்பத்தா எதற்கும் அஞ்சாமல், "உன்னால என்னை ஒன்றும் செய்ய முடியாது" என்று மீனாட்சியிடம் நேருக்கு நேர் சவால் விடுகிறாள். இந்த எதிர்பாராத மோதல் வீட்டிற்குள் பதற்றத்தை அதிகரிக்கிறது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f4f13fae-7652-4c1c-94c5-6731b7d49a19/26-6a703fe803640.webp' /></p><p>இதற்கிடையில் தேன்மொழி, தனது மாமாவுடன் டைலரிங் கடைக்கு செல்லப் போவதாக கூறுகிறாள். ஆனால் அப்பத்தா அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து, "நீ எங்கயும் போகக்கூடாது" என்று தடுத்து நிறுத்துகிறாள். இதனால் மனவேதனை அடையும் தேன்மொழி, அப்பத்தாவின் கட்டுப்பாட்டால் வருத்தப்படுகிறாள்.
</p><p>மறுபக்கம், மீனாட்சியை இந்த வீட்டில் இருந்து எப்படியாவது வெளியேற்ற வேண்டும் என்று அப்பத்தா புதிய திட்டம் தீட்டுகிறாள். அதற்காக வாசுதேவனின் மனைவி ரம்யாவை தொடர்பு கொண்டு, ஆதியை அடிக்கடி வீட்டுக்கு அனுப்பி மீனாட்சியுடன் நெருக்கமாக பழகச் சொல்லும்படி தூண்டிவிடுகிறாள்.
</p><p>"அப்படி நடந்தால்தான் ஜீவா மீது மீனாட்சிக்கு இன்னும் வெறுப்பு அதிகமாகும். பிறகு அவள் ஆதியுடன் வாழ்க்கையை தொடங்க நினைப்பாள்" என தனது விஷமத்தனமான திட்டத்தை அப்பத்தா வெளிப்படுத்துகிறாள்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1680dca3-13e0-4f46-b4ce-03917ff858bc/26-6a703fe8ac808.webp' /></p><p>இந்த சூழலில் அப்பத்தா வீட்டில் பிரம்மாண்டமாக விருந்து ஏற்பாடுகளை செய்யச் சொல்கிறாள். "இன்று வீட்டுக்கு முக்கியமான விருந்தினர் வரப்போகிறார்" என்று கூற, ஜீவா ஆர்வமாக, **"யார் அந்த விருந்தாளர்?"** என்று கேட்கிறான்.
</p><p>அடுத்த நொடியே அனைவருக்கும் ஷாக் கொடுக்கும் வகையில் வீட்டிற்குள் என்ட்ரி கொடுக்கிறான் ஆதி! அவனது வருகையால் வீட்டில் என்னென்ன மாற்றங்கள் நடக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு எகிறுகிறது.
</p><p>மீனாட்சியின் வாழ்க்கையில் மீண்டும் குழப்பத்தை ஏற்படுத்த ஆதி காரணமாகப்போகிறானா? அப்பத்தாவின் சதித்திட்டம் வெற்றியடையுமா? மீனாட்சி உண்மையை அனைவரிடமும் நிரூபிப்பாளா?
</p><p>இந்த பரபரப்பான திருப்பங்களை காண, 'வாகை சூடவா' சீரியலை திங்கள் முதல் சனி வரை இரவு 9:30 மணிக்கு Zee தமிழில் தவறாமல் பாருங்கள்!
&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-03T08:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[குழந்தை பிரசவிக்க தயாரான கர்ப்பிணி தாய் உயிரிழப்பு - இரத்த பரிசோதனையில் வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/mother-and-child-die-from-dengue-fever-1785722563"></link>
            <id>https://tamilwin.com/article/mother-and-child-die-from-dengue-fever-1785722563</id>
            <summary type="text">களுத்துறை - வாதுவை பகுதியில் கர்ப்பிணி தாயொருவரும் சிசுவும் பரிதாபமாக உயிரிழந்த சம்பவமொன்று பதிவாகியுள்ளது. 

முதலாவது மகப்பேறுக்கு இன்னும் இரண்டு ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>களுத்துறை - வாதுவை பகுதியில் கர்ப்பிணி தாயொருவரும் சிசுவும் பரிதாபமாக உயிரிழந்த சம்பவமொன்று பதிவாகியுள்ளது. </p><p>

முதலாவது மகப்பேறுக்கு இன்னும் இரண்டு நாட்களே எஞ்சியிருந்த நிலையில், குறித்த கர்ப்பிணி தாய் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p> 

வாதுவையை சேர்ந்த 34 வயதான பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.</p><p>&nbsp;</p><h2>பரிசோதனையில் வெளியான தகவல்</h2><p>
</p><p>
குறித்த பெண்ணுக்கு கடந்த 24ஆம் திகதி காய்ச்சல் ஏற்பட்ட நிலையில், வலி நிவாரணி மாத்திரைகளை உட்கொண்டதன் மூலம் காய்ச்சல் தணிந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/345b8b3a-4ec7-43f8-86c7-a6dec8598a78/26-6a7051146290d.webp' /></p><p>

எனினும், மலச்சிக்கல் உபாதை காரணமாகவே அவர் தனியார் மருத்துவமனையொன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், அறுவை சிகிச்சை மூலம் குழந்தையைப் பிரசவிப்பதற்கான பரிசோதனைகளின் போது அவர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தமை உறுதி செய்யப்பட்டுள்ளது.</p><p>

எனினும், குறித்த தனியார் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் இடவசதி இல்லாத காரணத்தினால், அரச மகப்பேறு மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளார்.</p><p>இதன்போது அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், நிலைமை மிகவும் தீவிரமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.</p><p>
இதனையடுத்து தீவிர சிகிச்சைப் பிரிவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த 28ஆம் திகதி குழந்தையும், 29ஆம் திகதி மாலையில் தாயும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
</p><p>
குறித்த பெண் உயிரிழப்பதற்கு முன்னர் அவருக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டிருந்தமை இரத்தப் பரிசோதனையில் உறுதியாகியுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-03T08:29:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையை சூழ்ந்த மோசமான வானிலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/bad-weather-engulfs-sri-lanka-1785745461"></link>
            <id>https://ibctamil.com/article/bad-weather-engulfs-sri-lanka-1785745461</id>
            <summary type="text">02.04PM - UPDATEஅம்பேவெல நீர்த்தேக்கத்தின் நீர் வெளியேற்றும் கதவுகள் திறக்கப்பட்டதை அடுத்து, ஆக்ரா ஓயாவில் நீர்மட்டம் உயர்ந்து வருவதாக எச்சரிக்கை .01....</summary>
            <content type="html"><![CDATA[<p><b>02.04PM - UPDATE</b></p><p>அம்பேவெல நீர்த்தேக்கத்தின் நீர் வெளியேற்றும் கதவுகள் திறக்கப்பட்டதை அடுத்து, ஆக்ரா ஓயாவில் நீர்மட்டம் உயர்ந்து வருவதாக எச்சரிக்கை .<b></b></p><p><b>01.53PM - UPDATE</b></p><p>மகாவலி ஆற்றங்கரைப் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்குள் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதாக நீர்ப்பாசனத் துறை எச்சரித்துள்ளது.
</p><p>
 

கடந்த சில மணிநேரங்களாக மகாவலி ஆற்றின் மேல் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த மழை, மேலும் மழை பெய்யக்கூடும் என்ற முன்னறிவிப்புகள், மற்றும் கொத்மலை நீர்த்தேக்கத்தின் நீர் வெளியேற்றும் கதவுகள் திறக்கப்பட வாய்ப்புள்ளதால், அடுத்த 48 மணி நேரத்திற்குள் ஒரு பெரிய வெள்ளப்பெருக்கு ஏற்பட அபாயம் உள்ளது என்று அது தெரிவித்தது.<b></b></p><p><b>01.47PM -&nbsp;UPDATE</b></p><p>மத்திய மலையகப் பகுதிகளில் பெய்து வரும் அதிதீவிர மழை காரணமாக, நாவலப்பிட்டிய – சோலங்கந்தை (Solangakanda) பகுதியில் மண்மேடு சரிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.</p><p><b>01.47PM - UPDATE</b></p><p>நிலச்சரிவு காரணமாக கண்டி – கடுகண்ணாவ வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.</p><p><b>01.47PM - UPDATE</b></p><p>
மலையகப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக, ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியின் தியகல பகுதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதுடன் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.
</p><p><b>12.47PM - UPDATE</b></p><p>சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் பலத்த மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது. </p><p>மேலும்,&nbsp; மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் 3 வான் கதவுகள் திறப்பு

மேல் கொத்மலை நீர்ப்பிடிப் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் அதிதீவிர மழை காரணமாக, மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின்3 வான் கதவுகள் இன்று (03) அதிகாலை தானாகத் திறக்கப்பட்டுள்ளன.
</p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-03T08:28:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் தொடர் மழையின் கோரத் தாண்டவம்! முதலாவது மரணம் நாவலப்பிட்டியவில் பதிவு..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/one-dead-in-nawalapitiya-embankment-collapse-1785745207"></link>
            <id>https://tamilwin.com/article/one-dead-in-nawalapitiya-embankment-collapse-1785745207</id>
            <summary type="text">நாவலப்பிட்டிய - சோலங்கந்தை பகுதியில் மண்மேடு சரிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

இந்த சம்பவம் இன்று(03.08.2026) இடம்பெற்றதாக தெரிவிக்கப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாவலப்பிட்டிய - சோலங்கந்தை பகுதியில் மண்மேடு சரிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார். </p><p>

இந்த சம்பவம் இன்று(03.08.2026) இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>

கடந்த இரண்டு தினங்களாக மலையகத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக வெள்ளம் மற்றும் மண்சரிவு அபாயம் அதிகரித்துள்ளது.</p><p></p><h2> 

ஒருவர் உயிரிழப்பு</h2><p>

இதன்படி, நாவலப்பிட்டிய - சோலங்கந்தை பகுதியில் மண்மேடு சரிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f3e26f6e-3574-4fb4-ac42-044d4d11f358/26-6a7050097bd11.webp' /></p><p> </p><p>இதேவேளை,&nbsp; &nbsp;கடந்த 24 மணி நேரத்தில் மகாவலி, களனி மற்றும் களு ஆறுகளின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>

இந்த நிலையில், மலையகத்தில் வாழும் மக்கள் மற்றும் சாரதிகள் அவதானத்துடன் இருக்குமாறு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.&nbsp; &nbsp;</p><p></p><p></p><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-03T08:23:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[அநுர அரசை கவிழ்க்கும் சதியில் ரணில்! நாட்டு மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள ஆதாரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ranil-s-secrete-plan-mystery-photo-released-1785725070"></link>
            <id>https://tamilwin.com/article/ranil-s-secrete-plan-mystery-photo-released-1785725070</id>
            <summary type="text">சமகால அரசாங்கத்தில் நாட்டில் ஏற்படும் பல்வேறு அசம்பாவிதங்களின் பின்னணியில் மறைமுக ஆதிக்கக் கட்டமைப்பு செயற்படுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 

இந்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>சமகால அரசாங்கத்தில் நாட்டில் ஏற்படும் பல்வேறு அசம்பாவிதங்களின் பின்னணியில் மறைமுக ஆதிக்கக் கட்டமைப்பு செயற்படுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. </p><p>

இந்த பின்னணி குறித்து இலங்கை பொலிஸாரை அரசியலிலிருந்து விடுவிப்பதற்கான சர்வதேச அமைப்பின் உறுப்பினரும், ஓய்வுபெற்ற பொலிஸ் அதிகாரியுமான அஜித் தர்மபால அம்பலப்படுத்தியுள்ளார்.</p><p> 

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ரஜு அமரசூரிய உள்ளிட்டோர் கலந்துகொண்ட இரகசியச் சந்திப்பு தொடர்பான புகைப்படம் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.</p><p></p><p> </p><h2><b>

மறைமுக ஆதிக்கக் கட்டமைப்பு</b></h2><p>இந்த புகைப்படம் மூலம் நாட்டின் மறைமுக ஆதிக்கக் கட்டமைப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளதாக அஜித் தர்மபால சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/22e4cb3f-33db-43e3-8ead-c3ec497062d6/26-6a70189894fc2.webp' /></p><p>சமூக வலைத்தளங்களில் பரவிவரும் அந்தப் புகைப்படத்தில், ரணில் விக்ரமசிங்க மதுக் கோப்பையைக் கையில் வைத்துக் கொண்டும், சிகரெட் புகைத்துக் கொண்டிருக்கிறார். </p><p>

அவருடன் சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ராஜு அமரசூரிய உள்ளிட்ட உயர் தரப்பினர் கலந்துரையாடும் காட்சி பதிவாகியுள்ளது.</p><p> 

இந்தச் சந்திப்பானது சாதாரண பாமர மக்களுக்காக நடத்தப்பட்டது அல்ல. தங்களைச் சேர்ந்த உயர் வர்க்கத்தினருக்கு ஏதேனும் அழுத்தம் அல்லது அச்சுறுத்தல் ஏற்படும்போது, இவ்வாறான கூட்டத்தினர் உடனடியாக ஒன்றிணைந்து அதைப் பாதுகாக்கும் நோக்கில் செயற்படும் ஒன்றாகும்.</p><p>
</p><h2><b>
அரங்கேறும் குழப்பங்கள்</b></h2><p>மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கம் ஒன்று நாட்டில் இயங்கிக் கொண்டிருந்தாலும், அதற்குள் அரச அதிகாரிகள், உயர்மட்ட பொலிஸ் மற்றும் முப்படை அதிகாரிகள் மற்றும் முக்கிய தொழிலதிபர்களை உள்ளடக்கிய ஒரு மறைமுக சக்தியாக தீவிரமாகச் செயற்பட்டு வருகின்றது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c2061f02-3f3d-4f7e-a275-d987ddc7e2fc/26-6a701abbd3bc0.webp' /></p><p>மஹர மற்றும் நீர்கொழும்பு போன்ற சிறைச்சாலைகளில் தொடர்ச்சியாக அரங்கேறும் குழப்பங்கள் மற்றும் அசம்பாவிதங்களுக்குப் பின்னால் இந்த மறைமுக ஆதிக்கக் கட்டமைப்பின் சூழ்ச்சிகள் உள்ளது. </p><p>

அரசாங்கம் இது தொடர்பில் கூடிய கவனம் செலுத்த வேண்டும். சமகால அரசாங்கம் முறையான விசாரணைகளை முன்னெடுத்தாலும், இந்த உயர்மட்டக் குழாமினர் தங்களது வர்க்கத்தினரை பாதுகாப்பதற்காகவும், வரவிருக்கும் சட்ட நடவடிக்கைகளில் இருந்து தப்புவதற்காகவும் தொடர்ந்தும் பல்வேறு முட்டுக்கட்டைகளைப் போட்டு வருகின்றது.</p><p></p><p></p><p> </p>]]></content>
            <updated>2026-08-03T08:22:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yoosuf</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரசின் வாக்குறுதிகள் நிறைவேறவில்லை: விவசாயிகள் குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/farmers-allege-price-of-paddy-has-also-fallen-1785743368"></link>
            <id>https://tamilwin.com/article/farmers-allege-price-of-paddy-has-also-fallen-1785743368</id>
            <summary type="text">தேர்தல் காலத்தில் விவசாயிகளுக்கு பல்வேறு நலத்திட்டங்களையும் உதவிகளையும்
வழங்குவதாக அரசாங்கம் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியிருந்தாலும், அவை இதுவரை
மு...</summary>
            <content type="html"><![CDATA[<p>தேர்தல் காலத்தில் விவசாயிகளுக்கு பல்வேறு நலத்திட்டங்களையும் உதவிகளையும்
வழங்குவதாக அரசாங்கம் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியிருந்தாலும், அவை இதுவரை
முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை என விவசாயிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
</p><p>

மேலும், தற்போது நெல்லின் கொள்வனவு விலை கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளதால்,
தங்களது உற்பத்திச் செலவைக் கூட ஈடுசெய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும்
விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.</p><p></p><h2>பொருளாதார நெருக்கடி</h2><p>
</p><p>
இதனால் பெரும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டு வருவதாக தெரிவித்துள்ள விவசாயிகள், தேர்தல் காலத்தில் வழங்கப்பட்ட வாக்குறுதிகளை உடனடியாக
நிறைவேற்றுமாறும் தெரிவித்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/67b92cc8-f705-4816-ad7e-dca41c8d4101/26-6a704e3d2e475.webp' /></p><p>அத்துடன், நெல்லுக்கு நியாயமான உத்தரவாத விலையை நிர்ணயித்து
விவசாயிகளுக்கு தேவையான நிவாரணங்களை அரசு விரைந்து வழங்க வேண்டும் என கோரிக்கை
விடுத்துள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-08-03T08:16:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thileepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[விரைவில் நடைமுறைக்கு வரும் ஊடகவியலாளருக்கான திட்டங்கள் - பிரதியமைச்சர் கௌசல்யா உறுதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/various-schemes-journalists-to-implemented-soon-1785744663"></link>
            <id>https://tamilwin.com/article/various-schemes-journalists-to-implemented-soon-1785744663</id>
            <summary type="text">ஊடகவியலாளருக்கான காப்புறுதி திட்டத்தை விரைவில் நடைமுறைப்படுத்தவுள்ளதாக
வெகுஜன ஊடகத்துறை பிரதி அமைச்சர் கௌசல்யா ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.

வவுனியாவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஊடகவியலாளருக்கான காப்புறுதி திட்டத்தை விரைவில் நடைமுறைப்படுத்தவுள்ளதாக
வெகுஜன ஊடகத்துறை பிரதி அமைச்சர் கௌசல்யா ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.</p><p>

வவுனியாவில் நேற்று(02.08.2026) இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட பின்னர் 
வவுனியா ஊடகவியலாளர்களுடன் கலந்துரையாடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><p> </p><h2>

ஊடகவியலாளருக்கான கொடுப்பனவுகள்</h2><p>

அவர் மேலும் தெரிவிக்கையில்,
</p><p>
பிராந்திய ஊடகவியலாளர்கள் செய்தி அறிக்கையிடலின் போது எதிர்நோக்கும் துன்பங்கள்
தொடர்பில் எமக்கு தெரியும்.</p><p> ஊடகவியலாளருக்கான கொடுப்பனவுகள் தொடர்பில் அரச ஊடக
நிறுவனங்களுடன் கலந்துரையாடி அதற்கான தீர்வுகளைப் பெற முடியும். 

ஏனைய ஊடக நிறுவனங்களும் சரியான முறையில் ஊடகவியலாளருக்கான கொடுப்பனவுகளை வழங்குவதை உறுதி செய்ய வேண்டும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fa08ced2-785f-4b89-af64-dd2e0235e1d7/26-6a704dee6883e.webp' /></p><p>
</p><p>
ஊடகவியலாளருக்கான காப்புறுதி திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்தவுள்ளோம். அதற்கான
அமைச்சரவைப் பத்திரத்தை விரைவில் கொண்டுவரவுள்ளேன். </p><h2>

கோரிக்கைகளை நிறைவேற்ற தீர்மானம்</h2><p>
இதனை ஒரு வருடத்திற்கு
மட்டும் வழங்காது தொடர்ச்சியாக வழங்க ஏற்பாடுகள் மேற்கொள்ள
திட்டமிடப்பட்டுள்ளது.

 ஊடகவியலாளர்களுக்கான புலமைப்பரிசில்கள், கடன் திட்டங்கள
வழங்குவது தொடர்பில் ஊடகவியலாளர்களால் விடுக்கப்பட்ட கோரிக்கைகளை நாம்
பரிசீலித்து சிறந்த தீர்வினை வழங்கவுள்ளோம்.
</p><p>
கலைஞர்களுக்கான வீட்டுத் திட்டங்கள நடைமுறைப்படுத்தும் போது
ஊடகவியலாளர்களுக்கும் வீட்டுத்திட்டத்தை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/995479ad-1c84-4117-afe7-7d22f1b0fbb5/26-6a704def32888.webp' /></p><p>
</p><p>
 எமது அரசாங்கம் 2029 ஆம் ஆண்டுக்குள் வீடற்ற அனைவருக்கும் வீட்டுத் திட்டத்தை வழங்க
நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கமைவாக ஊடகவியலாளருக்கும் ஏதோவொரு வகையில்
வீட்டுத்திட்டம் கிடைக்கும்.
</p><h2>

20 வருடங்களுக்கு மேலாக நிகழும் படுகொலை</h2><p>
அத்துடன், கடத்தப்பட்ட, காணாமல் ஆக்கப்பட்ட, கொல்லப்பட்ட ஊடகவியலாளர்கள்
தொடர்பான பிரச்சனைகள் 20 வருடங்களுக்கு மேலாக உள்ளது. </p><p>நாம் பல வழக்குகளை
தற்போது துரிதப்படுத்தி நீதியைப் பெற்றுக் கொடுக்கின்றோம். 

தேங்கியுள்ள
வழக்குளை துரிதமாக முடிப்பதற்காகவே நீதிபதிகளின் பதவிக் காலத்தை நீடிக்க யோசனை
முன்வைத்துள்ளோம்.</p><p> கடத்தப்பட்ட மற்றும் கொல்லப்பட்ட ஊடகவியலாளர்கள் தொடர்பான
பிரச்சனைகளுக்கு நீதியைப் பெற ஆதாரங்கள் பல இல்லை. 

அவற்றை திரட்ட
வேண்டியுள்ளது. அவை தொடர்பான விசாரணைகள் இடம்பெறும். ஆதாரங்கள் தேவை. அதன்
மூலமே நீதியைப் பெற முடியும்.</p><h2>
சட்ட நடவடிக்கை எடுக்க தீர்மானம்</h2><p>

இருப்பினும் குறித்த சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் வேறு வகையிலும் பல
சம்பவங்களுடன் தொடர்புபட்டுள்ளனர். அவர்கள் அதில் தண்டனை பெறுவார்கள்.</p><p> அந்த
வகையில் ஊடகவியலாளர்கள் கடத்தல் மற்றும் கொலை செய்யப்பட்டமை போன்றவற்றுடன்
தொடர்புடைய அனைவரும் ஏதோ ஒரு வகையில் தண்டனை பெறுவார்கள். 

வடக்கில் மட்டுமன்றி
தெற்கிலும் பல ஊடகவியலாள்கள் கடத்தப்பட்டுள்ளனர். கொல்லப்பட்டும் உள்ளார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f7da0801-c7f7-4642-a2af-c0ab7c746d56/26-6a704defd96a4.webp' /></p><p>
எனவே இதனை நாம் வடக்கு, கிழக்கு, தெற்கு என வேறுபாடுகளின்றி அனைத்து
ஊடகவியலாளர்களுக்கும் நீதியை பெற்றுக் கொடுப்போம்.
</p><p>
எமது அரசாங்கம் ஊடகவியலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பில் ஊடக
நிறுவனங்களுடனும் பேசி அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளுக்கான தீர்வைப் பெற
நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-03T08:14:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹோர்முஸ் நீரிணைக்கான புதிய கடல் வழிப்பாதை; உலகளவில் பெரும் எதிர்பார்ப்பு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/new-maritime-route-for-strait-of-hormuz-oman-iran-1785744104"></link>
            <id>https://jvpnews.com/article/new-maritime-route-for-strait-of-hormuz-oman-iran-1785744104</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;உலகின் மிக முக்கிய எண்ணெய் போக்குவரத்துப் பாதையான ஹோர்முஸ் நீரிணைக்குஅமைவாகப் புதிய கடல் வழிப்பாதை ஒன்றை உருவாக்குவது தொடர்பாக, ஈரானுக்கு...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;உலகின் மிக முக்கிய எண்ணெய் போக்குவரத்துப் பாதையான ஹோர்முஸ் நீரிணைக்குஅமைவாகப் புதிய கடல் வழிப்பாதை ஒன்றை உருவாக்குவது தொடர்பாக, ஈரானுக்கும் ஓமானுக்கும் இடையே இந்த பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.
</p><p>


இந்தநிலையில் இரண்டு தரப்பிற்கும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு புதிய பாதையை அமைப்பதில் உடன்பாட்டை ஏற்படுத்தி வருவதாக ஈரான் அறிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b8238bce-3fc7-4c29-bf07-d218c402f320/26-6a704ae9ba57c.webp' /></p><h2>இரண்டு தரப்பிற்கும் ஏற்றுக்கொள்ளக்கூடிய புதிய பாதை</h2><p>
</p><p>
ஹோர்முஸ் நீரிணை கடல் வழிப்பாதை தொடர்பாக ஈரான் மற்றும் ஓமான் இடையே நடைபெற்று வரும் பேச்சுவார்த்தைகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி தெரிவித்துள்ளார்.</p><p></p><p>
</p><p>
இது தற்போதுள்ள வடக்கு அல்லது தெற்குப் பாதையாக இல்லாமல், இரு நாடுகளின் இறையாண்மையையும், ஈரானின் தேசிய பாதுகாப்பு மற்றும் நலன்களையும் பாதுகாக்கும் வகையில் அமையும் என்றும் ஈரானிய அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
உலகளவில் நுகரப்படும் மசகு எண்ணெயில் சுமார் 20 சதவீதம் ஹோர்முஸ் நீரிணை வழியே கொண்டு செல்லப்படும் நிலையில், இந்தப் பேச்சுவார்த்தை உலகளாவிய எரிபொருள் சந்தையில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-03T08:11:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹரக் கட்டாவை அதியுயர் பாதுகாப்புச் சிறைக்கு மாற்ற உத்தரவு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/transfer-harak-kata-to-a-high-security-prison-cout-1785744644"></link>
            <id>https://jvpnews.com/article/transfer-harak-kata-to-a-high-security-prison-cout-1785744644</id>
            <summary type="text">&amp;nbsp; ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்குழு உறுப்பினரான &#039;ஹரக் கட்டா&#039;வை, பொருத்தமான அதியுயர் பாதுகாப்புடைய சிறைச்சாலைக்கு மாற்றுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்குழு உறுப்பினரான 'ஹரக் கட்டா'வை, பொருத்தமான அதியுயர் பாதுகாப்புடைய சிறைச்சாலைக்கு மாற்றுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
</p><p>
குறித்த பிரதிவாதிகளுக்கு எதிராகப் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் நீக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f32ccf70-824a-43af-905f-8e29d55ec8e0/26-6a704d05ab737.webp' /></p><h2>குற்றச்சாட்டுகள் நீக்கம்</h2><p>
</p><p>
 தங்காலை பழைய சிறைச்சாலையில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள ஹரக் கட்டாவை பொருத்தமான அதியுயர் பாதுகாப்புடைய சிறைச்சாலைக்கு மாற்றுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p></p><p>

பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் மற்றும் மேலதிக அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் நோக்கில், அவரைப் பலத்த பாதுகாப்புடன் கூடிய சிறைச்சாலையில் தடுப்பில் வைப்பதற்கான நடைமுறைகளை முன்னெடுக்குமாறு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.</p><p></p><p>
</p><p>
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் தடுப்புக் காவலில் இருந்தபோது தப்பிச் செல்லச் சதித் திட்டம் தீட்டியதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ள 'ஹரக் கட்டா' என அழைக்கப்படும் நதுன் சிந்தக விக்ரமரத்ன உள்ளிட்ட ஐந்து பிரதிவாதிகளுக்கு எதிராக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகளைத் தொடர முடியாது என அண்மையில் நீதிமன்ற உத்தரவு வழங்கப்பட்டது.
</p><p>
இது தொடர்பான வழக்கு இன்று (3) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி புத்திக சி. ராகல முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டது.</p><p></p><p>
</p><p>
அதன்போது சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான அரச சட்டத்தரணி , குறித்த உத்தரவு தொடர்பில் மேன்முறையீடு செய்யவுள்ளதாக கொழும்பு மேல் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.
</p><p>
தொடர்ந்து, பிரதிவாதிகளின் பிணை விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்ட நிலையில், அது தொடர்பான உத்தரவு எதிர்வரும் ஓகஸ்ட் 20 ஆம் திகதி பிறப்பிக்கப்படும் என நீதிபதி உத்தரவிட்டார்.</p>]]></content>
            <updated>2026-08-03T08:08:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹரக் கட்டாவை அதியுயர் பாதுகாப்பு சிறைச்சாலைக்கு மாற்ற நீதிமன்றம் உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/ordered-transferred-security-prison-harak-katta-1785744266"></link>
            <id>https://ibctamil.com/article/ordered-transferred-security-prison-harak-katta-1785744266</id>
            <summary type="text">தடுப்புக் காவலில் தங்காலை பழைய சிறைச்சாலையில் வைக்கப்பட்டுள்ள ஹரக் கட்டா என்ற பிரதிவாதியைப் பொருத்தமான பாதுகாப்புடைய சிறைச்சாலையொன்றில் தடுத்து வைக்கு...</summary>
            <content type="html"><![CDATA[<p>தடுப்புக் காவலில் தங்காலை பழைய சிறைச்சாலையில் வைக்கப்பட்டுள்ள ஹரக் கட்டா என்ற பிரதிவாதியைப் பொருத்தமான பாதுகாப்புடைய சிறைச்சாலையொன்றில் தடுத்து வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
</p><p>
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி புத்திக சி. ராகலவால் இன்று(03.08.2026) இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இந்த வழக்கில் உண்மைகளை முன்வைத்த சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பொறுப்பில் இருந்தபோது தப்பிச் செல்வதற்குச் சதித் திட்டம் தீட்டினார் எனக் குற்றம் சுமத்தப்பட்டுள்ள ஹரக் கட்டா என்ற நதுன் சிந்தக விக்ரமரத்ன உள்ளிட்ட ஐந்து பிரதிவாதிகளுக்கு எதிராகப் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகளை முன்னெடுத்துச் செல்ல முடியாது என அண்மையில் அளிக்கப்பட்ட தீர்ப்பிற்கு எதிராக மேன்முறையீடு செய்யவுள்ளதாகச் அறிவித்துள்ளார்.​</p><p></p><h2>பிணை கோரிக்கை</h2><p>

குறித்த வழக்கு இன்று (03) கொழும்பு மேல் நீதிமன்றில் விசாரணைக்காக அழைக்கப்பட்ட சந்தர்ப்பத்தில், சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் இந்த அறிவிப்பை வௌியிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7ffa6929-f60c-43d9-a61a-c0267ef4617b/26-6a704b8c9ff63.webp' /></p><p>
</p><p>
அதனைத் தொடர்ந்து பிணை கோரிக்கை பரிசீலிக்கப்பட்டதுடன், இச்சந்தேகநபர்களின் பிணை கோரிக்கை மீதான உத்தரவு ஒகஸ்ட் மாதம் 20 ஆம் திகதி அறிவிக்கப்படும் என மேல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.​&nbsp;&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-03T08:04:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டின் 3 மாவட்டங்களுக்கு மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/landslide-warning-for-4-districts-in-sri-lanka-1785726947"></link>
            <id>https://ibctamil.com/article/landslide-warning-for-4-districts-in-sri-lanka-1785726947</id>
            <summary type="text">புதிய இணைப்புநாட்டில் தற்போது நிலவும் மோசமான வானிலையைக் கருத்திற்கொண்டு 03 மாவட்டங்களுக்கு மண்சரிவு சிவப்பு எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளது.

அதன்...</summary>
            <content type="html"><![CDATA[<h2>புதிய இணைப்பு</h2><p>நாட்டில் தற்போது நிலவும் மோசமான வானிலையைக் கருத்திற்கொண்டு 03 மாவட்டங்களுக்கு மண்சரிவு சிவப்பு எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளது.</p><p>

அதன்படி, கண்டி மாவட்டத்தின் உடுதும்பறை, கங்க இஹல கோரலே மற்றும் பஸ்பாகே கோரலே பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.</p><p>

இதேபோல், கேகாலை மாவட்டத்தின் யடியந்தோட்ட பகுதிக்கும், நுவரெலியா மாவட்டத்தின் அம்பகமுவ மற்றும் நோர்வூட் பகுதிகளுக்கும் சிவப்பு வெளியேற்ற எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.</p><h2>மண்சரிவுக்கான அறிகுறிகள்</h2><p>கண்டி மாவட்டத்தின் உடபலாத்த, டெல்தோட்ட, மெததும்பர மற்றும் பன்வில பகுதிகளுக்கு நிலை 2இன் கீழ் முன்கூட்டிய எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.</p><p>கேகாலை மாவட்டத்தின் தெரணியகல, புலத்கொகுபிட்டிய, அரநாயக்க மற்றும் தெஹியோவிட்ட பகுதிகளுக்கு நிலை 2-இன் கீழ் எச்சரிக்கை அறிவிப்பும், கேகாலை பகுதிக்கு நிலை 1இன் கீழ் எச்சரிக்கை அறிவிப்பும் விடுக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1c774663-cdd1-4a47-b748-cafd649f99d1/26-6a704b15449d1.webp' /></p><p>நுவரெலியா மாவட்டத்தின் கொத்மலை கிழக்கு, கொத்மலை மேற்கு மற்றும் நுவரெலியா பகுதிகளுக்கு நிலை 2-இன் கீழ் எச்சரிக்கை அறிவிப்பும், ஹங்குரங்கெத்த பகுதிக்கு நிலை 1-இன் கீழ் எச்சரிக்கை அறிவிப்பும் விடுக்கப்பட்டுள்ளது.
</p><p>இரத்தினபுரி மாவட்டத்தில் உள்ள ஓபநாயக்க, இரத்தினபுரி மற்றும் இம்புல்பே பகுதிகளுக்கு நிலை 2-இன் கீழ் எச்சரிக்கை அறிவிப்பும், குருவிட்ட மற்றும் நிவிதிகல பகுதிகளுக்கு நிலை 1-இன் கீழ் எச்சரிக்கை அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.
</p><p>
இந்த அறிவுரைகள் இன்று (03) நண்பகல் 12:00 மணி முதல் நாளை (04) நண்பகல் 12:00 மணி வரை அடுத்த 24 மணி நேரத்திற்குச் செல்லுபடியாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p>

எச்சரிக்கை விடுக்கப்பட்ட பகுதிகளில் மண்சரிவுக்கான அறிகுறிகள் தென்பட்டாலோ அல்லது மழை தொடர்ந்தாலோ, பொதுமக்கள் உடனடியாகப் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">முதலாம் இணைப்பு</span></p><h4>நாட்டின் நான்கு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!&nbsp;</h4><p>நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நான்கு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p>தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் நேற்று (02) இரவு 11:00 மணிக்கு வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>அதற்கமைய, கண்டி மாவட்டத்தின் பஸ்பாகே கோரள மற்றும் கங்கஇஹல கோரள ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகள் மற்றும் அவற்றைச் சூழவுள்ள பகுதிகளுக்கு இரண்டாம் கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

​</p><p></p><h2>இரண்டாம் கட்டத்தின் கீழ் எச்சரிக்கை</h2><p>அத்துடன் கேகாலை மாவட்டத்தின் யட்டியாந்தோட்டை பிரதேச செயலகப் பிரிவுக்கும், நுவரெலியா மாவட்டத்தின் அம்பகமுவ மற்றும் நோர்வுட் பிரதேச செயலகப் பிரிவுகள் உட்பட அவற்றைச் சூழவுள்ள பகுதிகளுக்கும் இரண்டாம் கட்டத்தின் கீழ் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/06821a82-1e86-466e-a038-e8f0c8ab74be/26-6a700e87ab3e1.webp' /></p><p> 

​இது தவிர,கேகாலை மாவட்டத்தின் அரநாயக்க மற்றும் தெஹியோவிட்ட பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு முதலாம் கட்டத்தின் கீழ் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

​</p><p>நுவரெலியா மாவட்டத்தின் நுவரெலியா, தலவாக்கலை, கொத்மலை கிழக்கு மற்றும் கொத்மலை மேற்கு ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும், இரத்தினபுரி மாவட்டத்தின் நிவித்திகலை மற்றும் இரத்தினபுரி பிரதேச செயலகப் பிரிவுகள் மற்றும் அவற்றைச் சூழவுள்ள பகுதிகளுக்கும் முதலாம் கட்டத்தின் கீழ் மண்சரிவு முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-03T08:02:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[தெருவில் போறவங்கள கூப்பிட்டு உட்கார வெக்கல!! கலா மாஸ்டர் சர்ச்சைக்கு கோபத்தில் நடிகை குஷ்பூ...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/khushbu-shouted-in-anger-about-controversy-kala-1785744650"></link>
            <id>https://viduppu.com/article/khushbu-shouted-in-anger-about-controversy-kala-1785744650</id>
            <summary type="text">குஷ்பூ -&amp;nbsp;கடந்த மாதம் 72வது தேசிய திரைப்பட விருதுகான பட்டியல் அறிவிக்கப்பட்ட நிலையில் சோசியல் மீடியாகளில் பேசும் பொருளாகவே இருந்த வருகிறது. குறிப்...</summary>
            <content type="html"><![CDATA[<h2>குஷ்பூ -&nbsp;</h2><p>கடந்த மாதம் 72வது தேசிய திரைப்பட விருதுகான பட்டியல் அறிவிக்கப்பட்ட நிலையில் சோசியல் மீடியாகளில் பேசும் பொருளாகவே இருந்த வருகிறது. குறிப்பான நடிகை தனுஷ் இயக்கி நடித்த ராயன் படத்திற்கு சிறந்த இயக்குநருக்கான விருதும் கேப்டம் மில்லர் படத்திற்காக தனுஷுக்கு சிறப்பு நடிகர் அங்கீகாரம் கிடைத்ததும் ரசிக்ர்கள் மத்தியில் கலவையான கருத்துக்களை உருவாக்கியது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/663e44f9-4503-4ee9-9cc8-fd12028a7695/26-6a704d0cbdd98.webp' /></p><p> </p><p>இந்நிலையில் தேசி விருது தேர்வு குழுவில் ஜூரியாக இருந்ததும் அதிகமான விமர்சனங்களை சந்தித்து வரும் நிலையில் நடிகை குஷ்பூ தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.
</p><p>
அதில், ஒரு விருது கிடைக்கிறது என்றால் என்ன காரணம் இருக்கும். தேசிய விருது படத்திற்கு கிடைத்திருக்கிறது என்றால் அப்படத்தில் ஏதோ ஒரு விஷயம் தேர்வு குழுவினரை ஈர்த்திருக்கும். ஒவ்வொரு பிரிவுக்கும் தனித்தனி விதிமுறைகள் இருக்கிறது. சிறந்த இயக்குநர் பிரிவில் போட்டியிடும் படங்கள் அனைத்தையும் ஒப்பிட்டு பார்த்தப்பின் தான் ஒரு முடிவு எடுக்கப்படுகிறது. இந்த குழுவில் திரைப்படத் துறையை பற்றி நன்றாக அறிந்தவர்கள் தான் இருக்கிறார்கள். </p><h2>தெருவில் போறவங்கள</h2><p>தெருவில் போகிறவர்களை கூப்பிட்டு அங்கே உட்கார வைக்கவில்லை. ஒரு படம் நமக்கு பிடித்திருக்கலாம், ஆனால் தேசிய விருது குழுவில் இருக்கும் அனைவருக்கும் அப்படம் பிடிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. அதேபோல் நமக்கு பிடிக்காத படம் அவர்களுக்கு பிடித்திருக்கலாம், அதுதான் தேர்வு குழுவின் முடிவு. நான் சின்னத்தம்பி போன்ற மிகப்பெரிய வெற்றிப் படத்தில் நடித்திருக்கீறேன்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b127f1a8-1465-40be-9bc5-b65886575005/26-6a704d0d71714.webp' /></p><p> </p><p>அப்படத்திற்கு தேசிய விருது கிடைக்கவில்லை, அதற்காக ஏன் எனக்கு தரவில்லை என்று நான் கேள்வி கேட்க முடியுமா? தேர்வு குழுவில் பார்வையில் வேறு நடிகையின் நடிப்பு பெட்டராக இருந்ததாக நினைத்து இருக்கலாம். அதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். கலா மாஸ்டருக்கு என்ன தகுதி என்று கேட்கிறார்கள். ஆனால் அவரே தேசிய விருது பெற்றபோது யாரும் இந்த கேள்வியை எழுப்பவில்லை. அப்போது அவர் திறமையானவர் என்று ஏற்றுக் கொண்டார்கள். </p><p>இப்போது ஜூரியாக இருந்ததற்கு மட்டும் ஏன் குறை சொல்கிறார்கள். ஒரு பெண் அந்த பொறுப்பில் இருப்பதால்தான் இவ்வளவு தாக்குதலா? அதுதான் எனக்கு தோன்றுகிறாது. இது தவறானஅணுகுமுறை என்று கோபத்துடன் பேசியுள்ளார்.</p>]]></content>
            <updated>2026-08-03T08:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[4 நாட்களில் உலகளவில் ஸ்பைடர் மேன் திரைப்படம் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/spiderman-brand-new-day-4-days-box-office-1785740821"></link>
            <id>https://cineulagam.com/article/spiderman-brand-new-day-4-days-box-office-1785740821</id>
            <summary type="text">சமீபத்தில் வெளிவந்து பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பி வரும், ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே திரைப்படத்தின் 4 நாட்கள் வசூல் விவரம் குறித்துதான் இந்த பதிவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சமீபத்தில் வெளிவந்து பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பி வரும், ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே திரைப்படத்தின் 4 நாட்கள் வசூல் விவரம் குறித்துதான் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம்.</p><h2>பிராண்ட் நியூ டே&nbsp; &nbsp;</h2><p>
ஸ்பைடர் மேன், ஸ்பைடர் மேன், ஸ்பைடர் மேன் - எங்கு திரும்பினாலும் இந்த வார்த்தை தான் சினிமா ரசிகர்களிடையே பேசப்பட்டு வருகிறது. கடந்த வாரம் திரைக்கு வந்த ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே திரைப்படத்திற்கு உலகளவில் அமோக வரவேற்பு கிடைத்தது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5f62c517-33d5-4554-94ca-5f9e0c61e44e/26-6a703e1834db6.webp' /></p><p></p><p>விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பி வருகிறது. இப்படத்தில் நடித்த டாம் ஹோலாண்ட், செண்டயா, சாடி சிங்க் மற்றும் இயக்குநர் டெஸ்டின் டேனியல் க்ரெட்டன் என அனைவருக்கும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/df095442-686c-4e48-a0cc-78c29dccea5a/26-6a703e18e759f.webp' /></p><h2>வசூல்&nbsp;</h2><p>
இந்நிலையில், 4 நாட்களை வெற்றிகரமாக <a href="https://www.youtube.com/watch?v=8VENH1WwhyE&amp;t=3s" target="_blank">பாக்ஸ் ஆபிஸில்</a> கடந்துள்ள ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே திரைப்படத்தின் 4 நாட்கள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 4 நாட்களில் உலகளவில் இப்படம் 927 மில்லியன் டாலர் வசூல் செய்துள்ளது. இந்திய மதிப்பில் ரூ. 8800 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8f0ae3d4-a429-428d-8972-8c5643b5d1c7/26-6a703e199ae22.webp' /></p><p>இதற்கு முன் வெளியான ஸ்பைடர் மேன்: நோ வே ஹோம் திரைப்படம் 1.9 பில்லியன் டாலர் வசூல் செய்து, உலகளவில் அதிக வசூலித்த டாப் 10 திரைப்படங்களில் இடம்பிடித்து சாதனை படைத்தது. அந்த சாதனையை பிராண்ட் நியூ டே திரைப்படம் முறியடிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-03T08:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[திடீரென நடுவானில் விமானத்தை நெருங்கிய பறக்கும் தட்டு - விமானியில் பகீர் தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/pilot-reports-mysterious-disc-near-airport-london-1785741032"></link>
            <id>https://ibctamil.com/article/pilot-reports-mysterious-disc-near-airport-london-1785741032</id>
            <summary type="text">லண்டன் கேட்விக் விமான நிலையத்திற்கு அருகில் தரையிறங்கத் தயாராகிக் கொண்டிருந்த போது விமானி ஒருவர் மர்மமான தட்டு வடிவப் பொருள் ஒன்றைக் கண்டதாகக் கூறியதா...</summary>
            <content type="html"><![CDATA[<p>லண்டன் கேட்விக் விமான நிலையத்திற்கு அருகில் தரையிறங்கத் தயாராகிக் கொண்டிருந்த போது விமானி ஒருவர் மர்மமான தட்டு வடிவப் பொருள் ஒன்றைக் கண்டதாகக் கூறியதாக சர்வதேச ஊடகம் வெளியிட்டுள்ளது.</p><p>அதிகாரிகள் கருத்துத் தெரிவிக்கையில்அது ஒரு நவீன டிரோனாக இருக்க கூடும். ஆனால்இ அதன் சரியான அடையாளமோ அல்லது எந்த பகுதியில் இருந்து வந்தது என்றோ தெரியவில்லை என கூறியுள்ளார்.</p><p>சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், இங்கிலாந்து நாட்டின் லண்டன் நகரில் கேட்விக் விமான நிலையத்தில் எயார்பஸ் ஏ319 என்ற பயணிகள் விமானம் தரையிறங்க வேண்டி இருந்தது.</p><p></p><h2>நவீன டிரோனாக இருக்க கூடும்&nbsp;</h2><p>இதற்காக கேட்விக் பகுதிக்கு தெற்கே 7 மைல்கள் தொலைவில், சசெக்ஸ் கவுன்டி பகுதியில் ஹேங்கிராஸ் அருகே நடுவானில் பறந்து வந்து கொண்டிருந்தது. விமானம் தரையிறங்க சில நிமிடங்கள் இருக்கும்போது, அந்த சம்பவம் நடந்தது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0edc855e-dcfa-4b2b-9632-16c0bdf1f0e5/26-6a704451b4c8a.webp' /></p><p>திடீரென மர்ம பொருள் ஒன்று மெதுவாக மேலே எழும்பி வந்தது. விமானிக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில், விமானத்தின் வலது இறக்கை பகுதியருகே வட்ட வடிவிலான அந்த பறக்கும் தட்டு 100 முதல் 300 அடி இடைவெளியில் விமானத்திற்கு மிக நெருங்கிய தொலைவில் வந்துள்ளது.</p><p>


தூரத்திலேயே விமானி அதனை கவனித்து விட்டார். வேறு திசைக்கு செல்வதற்கு ஏற்ப விமானமும், முன்பே திசை திருப்பப்பட்டு விட்டது. இதனால், பெரிய அளவில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.</p><p></p><h2>தனித்துவமான தட்டு&nbsp;</h2><p>விமானி அந்த விண்கலத்தை, அதன் வெளி விளிம்பில் அடர் நிறக் குறிகளைக் கொண்ட ஒரு தனித்துவமான தட்டு என்று விபரித்துள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2ddada92-1239-430a-a741-b77fa4915d27/26-6a7044527147b.webp' /></p><p> எனினும், விமானம் தரையிறங்கியதும் இதுபற்றி உயரதிகாரிகளுக்கு விமானி தகவல் தெரிவித்து உள்ளார். அது ஒரு வட்ட தட்டு அல்லது பறக்கும் தட்டு அல்லது டிரோனாக இருக்க கூடும் என அதிகாரிகளிடம் கூறியுள்ளார்.</p><p> அது, விமானத்திற்கு எதிர் திசையில் மிக நெருக்கத்தில், விமானத்தின் மட்டத்திற்கு இணையாக அதே மட்டத்தில் வந்தது. வலது இறக்கை பகுதியில் கடந்து சென்றது என கூறியுள்ளார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-08-03T07:59:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியின் போக்குவரத்து நிறுத்தம் - சாரதிகளுக்கு முக்கிய அறிவுறுத்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/hatton-colombo-road-blocked-by-landslides-stop-1785742554"></link>
            <id>https://tamilwin.com/article/hatton-colombo-road-blocked-by-landslides-stop-1785742554</id>
            <summary type="text">தொடரும் சீரற்ற வானிலை காரணமாக ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியின்&amp;nbsp;போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.&amp;nbsp;ஹட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>தொடரும் சீரற்ற வானிலை காரணமாக ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியின்&nbsp;போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>&nbsp;ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியின் தியகல பகுதியில் பல இடங்களில் மண்மேடுகள் சரிந்து விழுந்தமையினால் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக அவ்வீதியூடான போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளன.</p><p></p><h2>சாரதிகளுக்கு முக்கிய அறிவுறுத்தல்</h2><p>இதன் காணரமாக ஹட்டனிலிருந்து கினிகத்தேனை, நாவலப்பிட்டி, கண்டி மற்றும் கொழும்பு நோக்கிப் பயணிக்கும் வாகனங்களுக்கும், அத்திசைகளிலிருந்து ஹட்டன் நோக்கி செல்லும் வாகனங்களுக்கும் போக்குவரத்துக்கு தடைகள் ஏற்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a2bad670-4815-45ff-b52e-4d64bb3884fa/26-6a704a32e6966.webp' /></p><p>இதன் காரணமாக வீதியின் இருபுறமும் பெருமளவிலான வாகனங்கள் நீண்ட வரிசைகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதுடன், மண்மேடுகளை அகற்றும் நடவடிக்கையில் வீதி அபிவிருத்தி அதிகாரசபையும் பிரதேச மக்களும் இணைந்து செயற்படுகின்றனர். 

​</p><p>எவ்வாறாயினும், நிலவும் சீரற்ற வானிலையைக் கருத்திற் கொண்டு மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் சாரதிகளைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.</p><p>&nbsp;&nbsp;</p><p>&nbsp;</p><p><br></p>]]></content>
            <updated>2026-08-03T07:58:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Erimalai</name>
            </author>
            <title type="text"><![CDATA[வல்வைப் படுகொலை 37வது ஆண்டு நினைவேந்தல் அனுஷ்டிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/37th-anniversary-of-valvai-massacre-commemorated-1785743779"></link>
            <id>https://tamilwin.com/article/37th-anniversary-of-valvai-massacre-commemorated-1785743779</id>
            <summary type="text">வல்வைப் படுகொலை 37வது ஆண்டு நினைவேந்தல் நேற்று(02.08.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

வல்வெட்டித்துறை நகரில் தமிழ்த் தேசிய கட்சி, தமிழ்த்தேசியப் பேர...</summary>
            <content type="html"><![CDATA[<p>வல்வைப் படுகொலை 37வது ஆண்டு நினைவேந்தல் நேற்று(02.08.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

வல்வெட்டித்துறை நகரில் தமிழ்த் தேசிய கட்சி, தமிழ்த்தேசியப் பேரவை ஏற்பாட்டில் வல்வைப் படுகொலை 37ம் ஆண்டு நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. </p><p>

1989.08.02 அன்று இந்திய இராணுவத்தினரால் வல்வெட்டித்துறை பகுதியில்
நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டின் போது 72 பொது மக்கள் சுட்டுப் படுகொலை
செய்யப்பட்டிருந்தனர்.</p><p>படுகொலைசெய்யப்பட்ட 72 பொது மக்களினதும் நினைவேந்நல் நிகழ்வில், தமிழ்த் தேசிய
கட்சியின் தலைவர் என்.ஶ்ரீகாந்தா, தமிழ்த் தேசிய மக்கள்
முன்னணியின் பொதுச் செயலாளர் செ.கஜேந்திரன் உள்ளிட்ட கட்களின் உறுப்பினர்கள் கலந்து கொண்டுள்ளனர்.</p><p>

இதன்போது, பொதுச் சுடரேற்றப்பட்டுள்ளதுடன், மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.&nbsp; &nbsp;</p>]]></content>
            <updated>2026-08-03T07:56:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டில் பல பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை...! வெளியான அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/department-of-meteorology-weather-forecast-1785640786"></link>
            <id>https://ibctamil.com/article/department-of-meteorology-weather-forecast-1785640786</id>
            <summary type="text">வளிமண்டலவியல் திணைக்களம் அம்பர் (Amber) நிற எச்சரிக்கையை விடுத்துள்ளது.

சப்ரகமுவ மாகாணம் மற்றும் கண்டி, நுவரெலியா, காலி, மாத்தறை ஆகிய மாவட்டங்களுக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>வளிமண்டலவியல் திணைக்களம் அம்பர் (Amber) நிற எச்சரிக்கையை விடுத்துள்ளது.
</p><p>
சப்ரகமுவ மாகாணம் மற்றும் கண்டி, நுவரெலியா, காலி, மாத்தறை ஆகிய மாவட்டங்களுக்குப் பலத்த மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.</p><p>

இந்தநிலையில் குறித்த எச்சரிக்கை இன்று (03-08-2026) விடுக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>முன்னெச்சரிக்கை நடவடிக்கை</h2><p>

குறித்த எச்சரிக்கை அறிவித்தல் நாளை (04-08-2026) காலை 11:30 மணி வரை நடைமுறையில் இருக்கும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
</p><p>
நாட்டைச் சூழவுள்ள தென்மேற்கு பருவப்பெயர்ச்சி (Southwest Monsoon) தீவிரமடைந்துள்ளதன் காரணமாக தீவின் தென்மேற்குப் பகுதிகளில் தற்போது நிலவும் மழை மற்றும் காற்றுடன் கூடிய வானிலை அடுத்த 24 மணி நேரத்திற்குத் தொடரும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ebb8cb61-cd34-4e67-9fc1-53085880d931/26-6a70479304c7f.webp' /></p><p>இதனடிப்படையில் சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களின் சில இடங்களில் 100 மி.மீட்டருக்கும் அதிகமான கனமழை பெய்யக்கூடும்.</p><p>

இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-08-03T07:55:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்துதல் தொடர்பில் பிரித்தானிய பிரதமர் வெளியிட்டுள்ள செய்தி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/andy-burnham-about-controlling-small-boat-migrants-1785743632"></link>
            <id>https://news.lankasri.com/article/andy-burnham-about-controlling-small-boat-migrants-1785743632</id>
            <summary type="text">சிறு படகுகள் மூலம் பிரித்தானியாவுக்குள் நுழைவோரைத் தடுக்கும் பிரித்தானியாவின் நடவடிக்கைகள் தளராது என்கிறார் பிரதமர்.


பிரித்தானியாவின் பிரதமரான ஆன...</summary>
            <content type="html"><![CDATA[<p>சிறு படகுகள் மூலம் பிரித்தானியாவுக்குள் நுழைவோரைத் தடுக்கும் பிரித்தானியாவின் நடவடிக்கைகள் தளராது என்கிறார் பிரதமர்.</p><p>


பிரித்தானியாவின் பிரதமரான ஆன்டி பர்னாம், சிறு படகுகள் மூலம் பிரித்தானியாவுக்குள் நுழைய முயலும் சட்டவிரோத புலம்பெயர்வோரை தடுக்க, பிரித்தானிய அரசு தளராமல் நடவடிக்கை எடுக்கும் என உறுதியளித்துள்ளார்.
</p><h3>
பிரித்தானிய பிரதமர் வெளியிட்டுள்ள செய்தி
</h3><p>
சட்டவிரோத புலம்பெயர்தலைத் தடுக்கும் முயற்சியில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள பிரதமர் ஆன்டி பர்னாம், புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்துதல் தொடர்பான அணுகுமுறையையே அரசு முழுமையாக மாற்றிக்கொண்டிருப்பதாகவும், ஆட்கடத்தல்காரர்களை கட்டுப்படுத்தும் அதிகாரிகளின் எண்ணிக்கை பிரான்ஸ், பிரித்தானியா என இருதரப்பிலும் இரட்டிப்பாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fbba7ec9-4fa4-4a38-9dcb-a23ee041ba4f/26-6a704911a6a0d.webp' /></p><p>
புலம்பெயர்தல் பிரச்சினையை அரசு கையாள்கிறது என்பதை மக்கள் பார்க்க விரும்புகிறார்கள் என்று கூறியுள்ள ஆன்டி பர்னாம், அதே நேரத்தில், பிரித்தானியாவுக்கு புலம்பெயர விரும்புவோருக்காக பாதுகாப்பான பாதைகளையும் உருவாக்கவேண்டும் என்றும், அப்படிச் செய்வதால், ஆட்கடத்தல் கும்பல்கள் புலம்பெயர்வோரை நம்பி பணம் பார்க்கும் வாய்ப்பை அது தட்டிப் பறித்துவிடும் என்றும் கூறியுள்ளார்.&nbsp;</p><p></p><p>

மேலும், தான் புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்துதல் விடயத்தை வைத்து அரசியல் செய்துகொண்டிருக்க விரும்பவில்லை என்றும், அதை எதிர்கொள்ளவே விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
</p><p>
பிரித்தானியாவின் எல்லை, கட்டுப்பாட்டுக்குள் இல்லாதது போல் தோன்றுகிறது என்னும் எண்ணம் பொதுமக்களுக்குப் பிடித்தது அல்ல என்று கூறியுள்ள ஆன்டி பர்னாம், நாம் எல்லையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் அதே நேரத்தில், உண்மையாகவே ஆதரவு தேவைப்படும் மக்களுக்கு நாம் ஆதரவும் அளிக்கவேண்டும் என்றும் கூறியுள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-03T07:55:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிளிநொச்சியில் எரிந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் ;பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/burnt-body-found-in-kilinochchi-iranamadu-1785737451"></link>
            <id>https://jvpnews.com/article/burnt-body-found-in-kilinochchi-iranamadu-1785737451</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;கிளிநொச்சி இரணை மடுக்குளத்தை அண்மித்த காட்டுப்பகுதியில் எரிந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் அடையாளம் காணப்பட்டுள்ள சம்பவம் பரப்ரப்பை ஏற்பட...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;கிளிநொச்சி இரணை மடுக்குளத்தை அண்மித்த காட்டுப்பகுதியில் எரிந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் அடையாளம் காணப்பட்டுள்ள சம்பவம் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது.
</p><p>
 

இன்று திங்கட்கிழமை (03) குறித்து சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

 உயிரிழந்தவர் தொடர்பில் தகவல் வெளியாகத நிலையில் சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9e82ef7b-4e4d-44b2-be6e-c7775eccc627/26-6a7030ed16932.webp' /></p><p></p>]]></content>
            <updated>2026-08-03T07:50:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[அடுத்து சிக்கப்போகும் முன்னாள் ஜனாதிபதியின் செல்லப்பிள்ளை; குற்றப்பத்திரிகை தாக்கல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/charge-sheet-filed-against-yoshitha-karannagoda-1785740586"></link>
            <id>https://jvpnews.com/article/charge-sheet-filed-against-yoshitha-karannagoda-1785740586</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;ஊழல் குற்றச்சாட்டு ஒன்று தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் புதல்வர் யோஷித ராஜபக்ஸ மற்றும் முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;ஊழல் குற்றச்சாட்டு ஒன்று தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் புதல்வர் யோஷித ராஜபக்ஸ மற்றும் முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட ஆகியோருக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

​</p><p>2006 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 1 ஆம் திகதிக்கும் 2007 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 8 ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலத்தில் இலங்கை கடற்படையின் தளபதியாகக் கடமையாற்றியபோது,</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/694046d6-21e8-463b-b57a-7b3cc744f7e4/26-6a703d2c6f2f3.webp' /></p><p></p><h2>யோஷித ராஜபக்ஸவிற்கும் எதிராகக் குற்றச்சாட்டுகள்</h2><p> </p><p>யோஷித ராஜபக்ஸ என்ற பிரதிவாதி பிரித்தானியாவின் அரச கடற்படைப் பயிற்சிப் கல்லூரியின் 'Royal Navy Young Officers Course' பாடநெறிக்குச் செல்வதற்கு முறையற்ற விதத்தில் சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்து அரசாங்கத்திற்கு நஷ்டத்தை ஏற்படுத்தியதாகக் குற்றம் சுமத்தி, முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொடவிற்கு எதிராகக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.</p><p></p><p> </p><p>

இதனூடாக முறையற்ற இலாபத்தைப் பெற்றுக் கொண்டமை தொடர்பில் பிரதிவாதியான யோஷித ராஜபக்ஸவிற்கும் எதிராகக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. 

​ பிரதிவாதிகளுக்கு எதிராக ஆணைக்குழுவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளின் எண்ணிக்கை 08 ஆகும்.</p><p>. 

​இக்குற்றப்பத்திரிகைகள் தற்போது கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன், அதனை பிரதிவாதிகளிடம் கையளிக்க எதிர்காலத்தில் நீதிமன்றத்தினால் அழைப்பாணை பிறப்பிக்கப்படவுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-03T07:49:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiva</name>
            </author>
            <title type="text"><![CDATA[காசல்ரீ நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் உயர்வு: வெள்ள நீரில் மூழ்கிய ஹட்டன் - டிக்கோயா தோட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/water-level-of-castlereagh-reservoir-rises-1785743098"></link>
            <id>https://tamilwin.com/article/water-level-of-castlereagh-reservoir-rises-1785743098</id>
            <summary type="text">மத்திய மலைநாட்டில் பெய்து வரும் தொடர் கடும் மழை காரணமாக ஹட்டன் - டிக்கோயாவில் பல குடியிருப்புகள் மற்றும் தாழ் நிலப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன....</summary>
            <content type="html"><![CDATA[<p>மத்திய மலைநாட்டில் பெய்து வரும் தொடர் கடும் மழை காரணமாக ஹட்டன் - டிக்கோயாவில் பல குடியிருப்புகள் மற்றும் தாழ் நிலப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.</p><p>

ஹட்டனிலிருந்து காசல்ரீ நீர்த்தேக்கத்திற்கு பாயும் டிக்கோயா கால்வாய் பெருக்கெடுத்து ஓடியதன் காரணமாக இன்று(03.08.2026) இந்த வெள்ளம் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p>
</p><h2>
நீரில் மூழ்கிய டிக்கோயா தோட்டம்</h2><p> 

கால்வாயின் இருபுறமும் உள்ள பல வீடுகளும் ஒரு வாகனம் திருத்தும் நிலையமும் நீரில் மூழ்கியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/795c0ccf-b39f-4ed1-be93-20405cbc05bd/26-6a70475bf35b5.webp' /></p><p>
</p><p>
2013ஆம் ஆண்டிலும் டிக்கோயா கால்வாய் பெருக்கெடுத்து ஓடியதன் காரணமாக, இதேபோன்று ஒரு பேரழிவு ஏற்பட்டதாகவும், மீண்டும் டிக்கோயா கால்வாய் பெருக்கெடுத்து ஓடுவதால் தங்களது வீடுகள் நீரில் மூழ்கியதாகவும் அப்பகுதி மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.</p><p> 

இதற்கிடையில், மகாவலி ஆறு பெருக்கெடுத்து ஓடியதன் காரணமாக நாவலப்பிட்டிய பகுதியில் உள்ள ஒரு சுற்றுலா விடுதி நீரில் மூழ்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-08-03T07:47:31+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Balamanuvelan</name>
            </author>
            <title type="text"><![CDATA[இளைஞர்கள் நடத்திய பார்ட்டி: சுவிஸ் மாகாண விவசாயிகள் புகார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/swiss-farmers-complaint-illegal-rave-hits-pastures-1785742635"></link>
            <id>https://news.lankasri.com/article/swiss-farmers-complaint-illegal-rave-hits-pastures-1785742635</id>
            <summary type="text">சுவிட்சர்லாந்தில் இளைஞர்கள் புல்வெளியில் நடத்திய பார்ட்டி தொடர்பில் விவசாயிகள் புகார்


சுவிட்சர்லாந்தின் வாட் மாகாணத்தில், இளைஞர்கள் புல்வெளியில் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சுவிட்சர்லாந்தில் இளைஞர்கள் புல்வெளியில் நடத்திய பார்ட்டி தொடர்பில் விவசாயிகள் புகார்</p><p>


சுவிட்சர்லாந்தின் வாட் மாகாணத்தில், இளைஞர்கள் புல்வெளியில் நடத்திய பார்ட்டி தொடர்பில் விவசாயிகள் புகார் ஒன்றை தெரிவித்துள்ளார்கள்.
</p><h3>
விவசாயிகள் புகார்
</h3><p>
வெள்ளிக்கிழமை இரவு, சுவிட்சர்லாந்தின் வாட் மாகாணத்தில், ஆயிரக்கணக்கான இளைஞர்கள் கூடி புல்வெளிகளில் சட்டவிரோதமாக பார்ட்டி ஒன்றை நடத்தியுள்ளார்கள்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d609f150-644a-46ee-8e67-8226468840d7/26-6a70452cd2dc2.webp' /></p><p>
அதைத் தொடர்ந்து பொலிசில் புகாரளிக்கப்பட, பொலிசார் வந்து பார்ட்டி ஒருங்கிணைப்பாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி பார்ட்டியை ஞாயிற்றுக்கிழமை காலை முடிவுக்குக் கொண்டுவந்துள்ளார்கள்.
</p><p>
விடயம் என்னவென்றால், ஏற்கனவே சுவிஸ் விவசாயிகள் பலர் தங்கள் பசுக்களுக்கு புல் இல்லாததால் கடும் நஷ்டத்தை எதிர்கொண்டுள்ளார்கள்.&nbsp;</p><p></p><p>

இந்நிலையில், ஆயிரக்கணக்கான இளைஞர்கள் புல்வெளியில் பார்ட்டி நடத்தியதால், புல்வெளி நாசமாகிவிட்டதாகவும், அதனால் தங்கள் பசுக்கள் கோடையில் மேய்வதற்கு புல் இல்லாமல் போய்விட்டதாகவும் விவசாயிகள் தெரிவித்துள்ளார்கள்.
</p><p>
சம்பந்தப்பட்ட முனிசிபாலிட்டியும் பார்ட்டி நடத்தியவர்கள் மீது புகாரளித்துள்ள நிலையில், பார்ட்டி ஒருங்கிணைப்பாளர்கள் உட்பட சிலர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-08-03T07:43:09+00:00</updated>
        </entry>
    </feed>
