<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-07-12T03:58:01+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[என்னை ஏமாற்றியிருக்கிறார்கள்.. ஒரு லட்சம் ரூபாய் கொடுங்கள் என சொல்வார்கள்! நடிகை சுவாசிகா கூறிய அதிர்ச்சியூட்டும் விஷயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/actress-swasika-talk-about-fraudulent-managers-1783828553"></link>
            <id>https://viduppu.com/article/actress-swasika-talk-about-fraudulent-managers-1783828553</id>
            <summary type="text">லப்பர் பந்து, மாமன், கருப்பு, நூறு சாமி ஆகிய படங்களில் நடித்து பிரபலமான நட்சத்திரமாக ஜொலித்துக்கொண்டிருக்கிறார் சுவாசிகா. இவர் சமீபத்தில் அளித்த பேட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>லப்பர் பந்து, மாமன், கருப்பு, நூறு சாமி ஆகிய படங்களில் நடித்து பிரபலமான நட்சத்திரமாக ஜொலித்துக்கொண்டிருக்கிறார் சுவாசிகா. இவர் சமீபத்தில் அளித்த பேட்டி இணையத்தில் வைரலாகி வருகிறது.
</p><p>
இந்த பேட்டியில் அவர் கூறியதாவது, "அங்கே போகலாம், இங்கே போகலாம் என பல மேனேஜர்கள் என்னை ஏமாற்றியிருக்கிறார்கள். அப்போதெல்லாம் சில இயக்குநர்களின் பெயர் மட்டும்தான் கிடைக்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f5a50318-ffa6-49dd-945a-f36833a31854/26-6a53104cb9245.webp' /></p><p> ஒரு லட்சம் ரூபாய் கொடுங்கள் என சொல்வார்கள்.

அம்மா உடனே அனைத்து நகைகளையும் கழற்றி தந்துவிடுவார். பலமுறை அப்படி நடந்துள்ளது. அவர்கள் அழைத்து செல்லும் இடங்களை பார்த்தால் அவ்வளவு பயமாக இருக்கும். அப்போதுதான் அம்மா என்னிடம் சொன்னார், இனிமேல் சினிமா வேண்டாம் என்று. </p><p>பிறகு மலையாளத்துக்கே சென்று முயற்சி செய்தேன். 

எப்போதும் என் மீது நம்பிக்கை இருந்தது. மிளகாய் ஸ்பிரே இல்லாமல் நான் எங்கும் போனதில்லை. ஒருநாள்கூட சினிமாவிலிருந்து பின்வாங்க நினைத்ததே இல்லை" என கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d4c8fb16-59c2-4b77-987c-1e34bea152b8/26-6a53104d6e45d.webp' /></p>]]></content>
            <updated>2026-07-12T03:56:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Fathima</name>
            </author>
            <title type="text"><![CDATA[வியட்நாம் படகு விபத்து: பிறந்தநாளில் உயிரிழந்த சோகம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/vietnam-boat-accident-updates-1783828068"></link>
            <id>https://ibctamilnadu.com/article/vietnam-boat-accident-updates-1783828068</id>
            <summary type="text">வியட்நாமில் சுற்றுலா பயணிகள் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 15 இந்தியர்கள் உயிரிழந்தனர், இவர்களில் 10 பேர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள்.

கட...</summary>
            <content type="html"><![CDATA[<p>வியட்நாமில் சுற்றுலா பயணிகள் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 15 இந்தியர்கள் உயிரிழந்தனர், இவர்களில் 10 பேர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள்.</p><h2>

கடைசி வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ்
</h2><p>
அவர்களில் முருகபிரபு என்பவரும் ஒருவர், செல்போன் கடை நடத்தி வருகிறார்.</p><p>

சிறப்பாக செயல்பட்டதால் செல்போன் நிறுவனம் சார்பில் வியட்நாம் சுற்றுலாவுக்கு அனுப்பி வைத்துள்ளனர், அவருடன் அவரது நண்பர் நிர்மல்குமாரும் சென்றிருந்தார்.
</p><p>
அங்கே படகு சவாரி சென்ற போது விபத்தில் சிக்கினார், இறப்பதாக முன்பாக காலை சுற்றுலா சென்ற இடங்களை வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் வைத்தார், அதுவே அவரது கடைசி ஸ்டேட்டஸாக அமைந்துவிட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/221b6bf9-ea4a-4b42-b0e7-08bddbf8473e/26-6a530f1be3486.webp' /><br></p><p>
</p><h2>
பிறந்த நாளில் மரணம்
</h2><p>
தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த தொழிலதிபர் செந்தில் குமார் என்பவரும் ஒருவர், தன்னார்வ தொண்டு நிறுவனத்தில் உறுப்பினர் என்பதுடன் சமூக சேவைகளிலும் ஈடுபட்டு வந்துள்ளார், இவருக்கு நேற்று பிறந்தநாள் ஆகும்.
</p><h2>
திருச்சியை சேர்ந்த 3 பேர்</h2><p>

படகு கவிழ்ந்து உயிரிழந்தவர்களில் திருச்சியை சேர்ந்த அழகுராஜன், பாலாஜி மற்றும் ஷேக் அப்துல்லா, அழகுராஜன் செல்போன் மாவட்ட விற்பனை மேலாளராகவும், பாலாஜி செல்போன் விநியேகஸ்தராகவும், ஷேக் அப்துல்லா செல்போன் விற்பனை கடையும் நடத்தியும் வந்துள்ளார்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c28c74e0-ddef-495a-98c2-b8654814c745/26-6a530f1b3f242.webp' /><br></p>]]></content>
            <updated>2026-07-12T03:51:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[நடிகை ப்ரீத்தி முகுந்தனின் அழகின் ரகசியம் என்ன தெரியுமா.. இதோ பாருங்க]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/actress-preity-mukhundhan-beauty-secret-1783827995"></link>
            <id>https://cineulagam.com/article/actress-preity-mukhundhan-beauty-secret-1783827995</id>
            <summary type="text">ப்ரீத்தி முகுந்தன்முட்டு Mu2, ஆச கூட போன்ற ஆல்பம் பாடல்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ப்ரீத்தி முகுந்தன். இதன்பின், கவின் நடிப்பில் வ...</summary>
            <content type="html"><![CDATA[<h2>ப்ரீத்தி முகுந்தன்</h2><p>முட்டு Mu2, ஆச கூட போன்ற ஆல்பம் பாடல்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ப்ரீத்தி முகுந்தன். இதன்பின், கவின் நடிப்பில் வெளிவந்த ஸ்டார் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/febf3acf-72ed-415d-a225-c24e8584853b/26-6a530e1ec8f3e.webp' /></p><p>இதை தொடர்ந்து இவர் நடிப்பில் வெளிவந்த <a href="https://www.youtube.com/watch?v=Nda6QgPCp-Y" target="_blank">பிளாஸ்ட் </a>திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. அதிலும் இப்படத்தில் ஆக்ஷன் ஹீரோயினாக நடித்து பட்டையை கிளப்பியிருந்தார். பிளாஸ்ட் திரைப்படம் தமிழ் சினிமாவில் இவருக்கு நல்ல திருப்புமுனையாக அமைந்த நிலையில், அடுத்ததாக இவர் நடிப்பில் வெளியான இதயம் முரளி படம் கலவையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6e13467b-223e-4539-ab3c-cfb2f7e919ab/26-6a530e1f7dfbc.webp' /></p><p></p><h2>அழகின் ரகசியம்</h2><p> </p><p>

தென்னிந்திய சினிமாவில் வளர்ந்து வரும் முக்கிய நடிகைகளில் ஒருவராக இருக்கும் ப்ரீத்தி முகுந்தன் எப்படி இவ்வளவு அழகாக இருக்கிறார் என்பது ரசிகர்கள் பலருக்கும் கேள்வியாக இருந்து வருகிறது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c9666a03-96a0-461e-99f4-5300a6eda085/26-6a530e2030ec6.webp' /></p><p>இந்த நிலையில், தனது அழகின் ரகசியம் குறித்து நடிகை ப்ரீத்தி வெளிப்படையாக கூறியுள்ளார். 

"நல்ல தூக்கம், போதுமான அளவு தண்ணீர் குடிப்பது, மனதை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்துக்கொள்வது ஆகியவையே என் அழகுக்கும் ஆரோக்கியத்திற்கும் காரணம்; எப்போதுமே தூக்கத்தை இழக்காதீர்கள். நல்ல வாழ்க்கைக்கு நல்ல தூக்கம் மிகவும் அவசியம்" என கூறியுள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-12T03:46:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையில் பதிவாகியுள்ள மாற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/gold-prices-record-decline-in-international-market-1783823156"></link>
            <id>https://tamilwin.com/article/gold-prices-record-decline-in-international-market-1783823156</id>
            <summary type="text">சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை இன்று (12) சற்று வீழ்ச்சியைப் பதிவுசெய்துள்ளது.

இதன்படி, ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 4,108.44 அமெரிக்க டொலராக பதி...</summary>
            <content type="html"><![CDATA[<p>சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை இன்று (12) சற்று வீழ்ச்சியைப் பதிவுசெய்துள்ளது.</p><p>

இதன்படி, ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 4,108.44 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.</p><p>
</p><p>
அதேவேளை, வெள்ளி ஒரு அவுண்ஸ் விலை 59.7 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.</p><p></p><h2>இலங்கை நிலவரம்&nbsp;</h2><p>இதன்படி, இலங்கையில் இன்று (12) பதிவாகியுள்ள தங்கவிலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 373,300 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e10d1ec9-86ae-4ead-9a6e-d40642e70ee0/26-6a530c82c02c8.webp' />&nbsp;</p><p>

22 கரட் தங்கம் பவுண் ஒன்று 342,200 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-12T03:38:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹார்முஸ் விவகாரம்... ஈரானுக்கு சாதகமான முடிவெடுக்க இருக்கும் ஐரோப்பா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/europe-considering-hormuz-fees-1783807890"></link>
            <id>https://news.lankasri.com/article/europe-considering-hormuz-fees-1783807890</id>
            <summary type="text">ஹார்முஸ் நீரிணையைப் பயன்படுத்தும் கப்பல்களுக்குத் தன்னார்வ வழிசெலுத்தல் சேவைக் கட்டணங்களை அறிமுகப்படுத்தக்கூடிய திட்டங்களை ஐரோப்பிய நாடுகள் ஆராய்ந்து ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹார்முஸ் நீரிணையைப் பயன்படுத்தும் கப்பல்களுக்குத் தன்னார்வ வழிசெலுத்தல் சேவைக் கட்டணங்களை அறிமுகப்படுத்தக்கூடிய திட்டங்களை ஐரோப்பிய நாடுகள் ஆராய்ந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><h2>பேரழிவை ஏற்படுத்தும்</h2><p>
</p><p>சுங்கக் கட்டணங்கள் கட்டாயமற்றவையாகவும், ஐக்கிய நாடுகள் சபையின் கடல்சார் அமைப்பின் ஆதரவைப் பெற்றவையாகவும் இருக்கும் பட்சத்தில் ஈரானின்&nbsp;கட்டணம் வசூலிக்கும் திட்டம் சாத்தியம் என்றே கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5d5f19fd-718b-4184-a6dc-65cee9e73056/26-6a52c2a771d68.webp' /></p><p>
</p><p>மத்திய கிழக்கில் இஸ்ரேல் உருவாக்கியுள்ள மிக ஆபத்தான நெருக்கடியைத் தொடர்ந்து, உலகின் மிக முக்கியமான கப்பல் போக்குவரத்துப் பாதைகளில் ஒன்றில் நிலவும் பதற்றங்களுக்கு நீண்டகாலத் தீர்வைக் காண நிபுணர்கள் தரப்பு முயன்று வரும் நிலையில்,&nbsp;ஐரோப்பிய நாடுகளால் இந்த முன்மொழிவு பரிசீலிக்கப்பட்டு வருகிறது. </p><p>இந்த நிலையில், ஹார்முஸ் நீரிணை வழியாகச் செல்வதற்கு கட்டாயக் கட்டணம் விதிப்பது பேரழிவை ஏற்படுத்தும் என்று பிரித்தானியாவின் துணைப் பிரதமர் டேவிட் லாமி எச்சரித்துள்ளார்.</p><p></p><p> </p><p>இருப்பினும், மலாக்கா நீரிணை மற்றும் ஆங்கிலக் கால்வாய் உள்ளிட்ட பல சர்வதேச நீர்வழிகளில், குறிப்பிட்ட கப்பல் போக்குவரத்து தொடர்பான சேவைகளுக்குக் கட்டணம் வசூலிக்கும் நடைமுறை ஏற்கனவே ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது என்பதை பிரித்தானிய அரசாங்கத்தின் சில உறுப்பினர்கள் ஒப்புக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. </p><p>இந்த நிலையில், பிரித்தானியாவின் சட்ட நிபுணர்களுடன் இணைந்து, மலாக்கா நீரிணையில் பின்பற்றப்படும் கூட்டுறவு முறையை முன்மாதிரியாகக் கொண்ட ஒரு நிர்வாகத் திட்டத்தை ஓமன் உருவாக்கி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.</p><h2>ஓமனுக்குப் பயணம்</h2><p> </p><p>மேலும், கட்டாயப் போக்குவரத்துக்கட்டணங்களுக்குப் பதிலாகக் கடல்சார் சேவைகளுக்கான தன்னார்வப் பங்களிப்புகளை அடிப்படையாகக் கொண்ட செயல்முறையை விளக்குவதற்காக, சட்ட நிபுணர்களை ஈரானுக்கு அனுப்பவும் ஓமன் நிர்வாகம் முன்வந்துள்ளது. </p><p>இதனிடையே, ஹார்முஸ் நீரிணையின் எதிர்காலம் மற்றும் கடல்சார் பாதுகாப்பு குறித்த பேச்சுவார்த்தைகளுக்காக, ஈரான் வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அராக்சி ஓமனுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3d6ccc46-30fd-4b22-8132-554f3223c980/26-6a52c2a85d748.webp' /></p><p> </p><p>அந்த நீரிணையில் கப்பல் போக்குவரத்திற்கு ஏற்ற பெரும்பாலான நீர்ப்பகுதிகளை ஓமன் தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளதுடன், கட்டாயக் கட்டண முறை எதற்கும் எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது. </p><p>மட்டுமின்றி, முக்கியத்துவம் வாய்ந்த நீர்வழியின் மீது ஈரானின் அதிகாரத்தை விரிவுபடுத்தக்கூடிய முன்மொழிவுகள் குறித்தும் கத்தார் நிர்வாகமும் கவலை தெரிவித்துள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-12T03:27:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவின் டொராண்டோவில் துப்பாக்கிச்சூடு: 2 பேர் உயிரிழப்பு 3 பேர் காயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/canada-toronto-fatal-shooting-incident-2-dead-1783826795"></link>
            <id>https://news.lankasri.com/article/canada-toronto-fatal-shooting-incident-2-dead-1783826795</id>
            <summary type="text">டொராண்டோவில் நடந்த திடீர் துப்பாக்கிச் சூடு தாக்குதல் சம்பவத்தில் இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர். கனடாவில் துப்பாக்கி சூடுசனிக்கிழமை இரவு டொராண்டோவின்...</summary>
            <content type="html"><![CDATA[<p>டொராண்டோவில் நடந்த திடீர் துப்பாக்கிச் சூடு தாக்குதல் சம்பவத்தில் இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர்.</p><h2> கனடாவில் துப்பாக்கி சூடு</h2><p>சனிக்கிழமை இரவு டொராண்டோவின் பரபரப்பான வணிகப் பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.</p><p> மேலும் 3 பேர் வரை காயமடைந்துள்ளனர். இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் குற்றவாளியை தீவிரமாக தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.</p><p>டொராண்டோ வணிகப் பகுதியில் துப்பாக்கி சூடு தாக்குதல் நடந்த உடனே பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்து டொராண்டோ காவல்துறை X தளத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தது.</p><p style="margin-left: 25px;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9402fea4-6dfb-4515-9b09-3226e1c09a70/26-6a53096c46786.webp' /></p><p> அதில், மக்கள் தாக்குதல் நடந்த பகுதியில் இருந்து விலகி இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டு இருந்தது.</p><p></p><p> மேலும் சிறிது நேரத்தில் சம்பந்தப்பட்ட இடத்தை பொலிஸார் தங்கள் கட்டுப்பாட்டிற்கு கீழ் கொண்டு வந்து விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.</p><p> உள்ளூர் ஊடகம் வழங்கிய தகவலின் படி, சல்சா திருவிழா நடைபெற்று கொண்டிருந்த இடத்தில் இந்த தாக்குதல் சம்பவமானது அரங்கேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p>&nbsp;<br></p>]]></content>
            <updated>2026-07-12T03:26:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்து சமுத்திரத்தை நெருங்கும் எல்நினோ! பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள முக்கிய அறிவுறுத்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/el-nino-approaching-indian-ocean-advice-to-public-1783824704"></link>
            <id>https://tamilwin.com/article/el-nino-approaching-indian-ocean-advice-to-public-1783824704</id>
            <summary type="text">மத்திய பசுபிக் பிராந்திய கடற் பகுதிகளில் இருந்து இந்து சமுத்திர கடல்
பிராந்தியத்திற்கு ஊடுருவியுள்ள எல்நினோ தாக்கம் இம்மாதம் ஜூலை தொடக்கம் அக்டோபர்
...</summary>
            <content type="html"><![CDATA[<p>மத்திய பசுபிக் பிராந்திய கடற் பகுதிகளில் இருந்து இந்து சமுத்திர கடல்
பிராந்தியத்திற்கு ஊடுருவியுள்ள எல்நினோ தாக்கம் இம்மாதம் ஜூலை தொடக்கம் அக்டோபர்
மாதம் வரை வெப்ப தாக்கத்தைச் செலுத்தும் என யாழ்ப்பாண பல்கலைக்கழக புவியியல்
துறை பேராசிரியரும் கலை பீடாதிபதியுமான நாகமுத்து பிரதிபராஜா தெரிவித்துள்ளார்.
</p><p>
நேற்று யாழ். கலட்டி வீதியில் அமைந்துள்ள தனியார் விடுதியில்
மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான அமைப்பு ஏற்பாடு செய்த எல்நினோ
தொடர்பான விவசாய போதன ஆசிரியர்கள் மற்றும் கடற்தொழில் சார்ந்தவர்களுக்கான
செயலமர்வில் கருத்து தெரிவிக்கும் போது அவர் இவ்வாறு
தெரிவித்துள்ளார். </p><p>இதன்போது அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,</p><p></p><h2>இந்து சமுத்திர பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள தாக்கம்</h2><p>
இந்து சமுத்திர பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள கடல் வெப்பம் இலங்கை மற்றும்
மாலைதீவில் அதிக தாக்கத்தை செலுத்த வாய்ப்புகள் உள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/815c5878-1eb7-4f12-bf1e-dc411d4ced06/26-6a53081046c53.webp' />&nbsp;</p><p>

இலங்கையை பொறுத்தவரையில் குறிப்பாக வட மாகாணத்தின் முல்லைத்தீவு, மன்னார் ,
கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் பாரிய நீருக்கான தட்டுப்பாட்டினை ஏற்படுத்தும்.
</p><p>
நிலத்தின் ஊடாக வெப்பத்தை கடத்துவதிலும் பார்க்க 16 மடங்கு வேகமாக நீரின் ஊடாக
வெப்பம் கடத்தப்படுகின்ற நிலையில் இந்த சமுத்திரக்கடற்பரப்பில் ஏற்படுகின்ற
கடல் வெப்ப ஏற்றம் வேகமாக ஏனைய பகுதிகளுக்கும் பரவும்.
</p><p>
ஜூலை செப்டம்பர் மாதங்களில் அதிகமான வறட்சியை ஏற்படுத்துகின்ற எல்நினோ
அக்டோபர், நவம்பர் மாதங்களில் பாரிய மழை வீழ்சியையும் ஏற்படுத்தும்.</p><h2>நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு அறிவுறுத்தல்</h2><p>இருப்பினும், இந்த தாளமுக்கங்கள் அக்டோபர் மாதத்திற்கு பின்னரான காலப்பகுதியிலே ஏற்படுவதற்கான சாத்தியங்கள் இருக்கும் நிலையில் அதுவரையான காலப்பகுதியில் அதிக வரட்சியே நிலாவும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c3288db9-17e5-415b-acf0-75888c25c01e/26-6a530810e9355.webp' /></p><p>
</p><p>
ஆகவே எல்நினோ இந்து சமுத்திரத்தை அண்மித்துள்ள நிலையில் பொதுமக்கள் நீர்
முகாமைத்துவத்தை சரியாக பின்பற்றி அதிக வெப்பத்தினால் ஏற்படுகின்ற
நீர்த்தட்டுப்பாட்டினை சமாளிக்கும் செயற்பாடுகளில் ஈடுபட முன்வர வேண்டும் என
அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
</p><p>
குறித்த நிகழ்வில் வட மாகாண பிரதி விவசாய பணிப்பாளர் அஞ்சனாதேவி சிறிரங்கன்,
யாழ். மாவட்ட கடற்தொழில் நீரயல் வள திணைக்கள உதவி பணிப்பாளர் எஸ்.அகிலன்
மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான அமைப்பு ஜான்சன் பிரிடாரோ ஆகியோர்
கலந்துகொண்டனர்.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-12T03:20:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இன்றைய நாளுக்கான வானிலை : வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/today-sri-lanka-weather-fodcast-in-tamil-1783825267"></link>
            <id>https://ibctamil.com/article/today-sri-lanka-weather-fodcast-in-tamil-1783825267</id>
            <summary type="text">நாட்டின் பல பிரதேசங்களில் பிரதானமாக வறட்சியான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றதாக&amp;nbsp;வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.அந்த திணைக்களம...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டின் பல பிரதேசங்களில் பிரதானமாக வறட்சியான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றதாக&nbsp;வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p>அந்த திணைக்களம் இன்று (12.07.2026) வெளியிட்ட வானிலை முன்னறிப்பில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p>மேலும் அந்த அறிவிப்பில், சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும்.</p><p></p><h2>இடியுடன் கூடிய மழை</h2><p>மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சிறிதளவில் மழை பெய்யக்கூடும்.</p><p>

ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/008cf931-d44a-46be-a1d5-f340e538b577/26-6a5306094bf06.webp' /></p><p>மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் வடமத்திய மாகாணத்திலும் மொனராகலை, புத்தளம், ஹம்பாந்தோட்டை, திருகோணமலை மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடும். </p><p>

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக வீசக் கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ள வேண்டும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-12T03:18:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரசியல்வாதிகள், அதிகாரிகள் உள்ளிட்ட 500 பேர் தொடர்பில் விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ciabor-starts-investigations-against-politicans-1783825494"></link>
            <id>https://tamilwin.com/article/ciabor-starts-investigations-against-politicans-1783825494</id>
            <summary type="text">அரசியல்வாதிகள், அரச அதிகாரிகள் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டவர்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
நாடு முழுவதும் 500க்கும் மேற்பட்ட நபர்களி...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரசியல்வாதிகள், அரச அதிகாரிகள் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டவர்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
</p><p>நாடு முழுவதும் 500க்கும் மேற்பட்ட நபர்களின் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பாக, இலஞ்ச, ஊழல் மோசடி தவிர்ப்பு விசாரணை ஆணைக்குழு விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.</p><p>&nbsp;</p><h2>குவியும் முறைப்பாடுகள்</h2><p>
</p><p>இந்த 500க்கும் மேற்பட்ட நபர்களில் முன்னாள் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட சுமார் 60 அரசியல்வாதிகளும், கிட்டத்தட்ட 100 உயர் அரச அதிகாரிகளும் உள்ளடங்குவதாக அறிக்கை செய்யப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ebb54b70-dbc8-4414-9695-3a40c03e0473/26-6a530457e255b.webp' /></p><p>
</p><p>ஆணைக்குழுவிற்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளுக்கு அமைவாகவே இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p><p> 
இவ்வளவு பெரிய எண்ணிக்கையிலான நபர்களுக்கு எதிராக ஒரே நேரத்தில் சொத்து விசாரணை ஆரம்பிக்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறை என ஆணைக்குழுவின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
</p><p>சம்பந்தப்பட்ட நபர்களால் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள சொத்து மற்றும் பொறுப்புக்கள் பற்றிய பிரகடனங்களின் உண்மைத்தன்மை குறித்து இந்த விசாரணையின் போது விசேட கவனம் செலுத்தப்படவுள்ளது.</p><h2>சொத்து விபரங்களை சமர்ப்பிக்க&nbsp;காலக்கெடு </h2><p>
சொத்து விபரங்களை சமர்ப்பிக்க வேண்டிய உத்தியோகத்தர் பிரிவில் அண்மையில் ஊடகவியலாளர்களும் கப்பல்துறை ஆவணப் பணியாளர்களும் உள்வாங்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/efc07406-c362-4d18-a864-4784a93862cc/26-6a530e6b92991.webp' /></p><p>
இதற்கான காலக்கெடு கடந்த ஜூன் 30ஆம் திகதியுடன் முடிவடைந்திருந்த போதிலும், இணையத்தளத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக அது ஜூலை 07ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டது.
</p><p>2023ஆம் ஆண்டின் 09ஆம் இலக்க ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் 80(1) பிரிவின்படி, சொத்து மற்றும் பொறுப்புக்கள் பற்றிய பிரகடனங்களை சமர்ப்பிக்கத் தவறும் நபர்களுக்கு அபராதம் விதிக்க அல்லது ஓராண்டிற்கு மேற்படாத சிறைத்தண்டனை வழங்க நீதிமன்றத்திற்கு அதிகாரம் உள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-12T03:05:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[9 நாட்களில் கட்டா குஸ்தி 2 திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/gatta-kusthi-2-movie-9-days-box-office-1783824329"></link>
            <id>https://cineulagam.com/article/gatta-kusthi-2-movie-9-days-box-office-1783824329</id>
            <summary type="text">கட்டா குஸ்தி 2கடந்த வாரம் திரைக்கு வந்து பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பி வரும் திரைப்படம்தான் கட்டா குஸ்தி 2. இயக்குநர் செல்லா அய்யாவு இயக்கத்தில் விஷ்...</summary>
            <content type="html"><![CDATA[<h2>கட்டா குஸ்தி 2</h2><p>கடந்த வாரம் திரைக்கு வந்து பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பி வரும் திரைப்படம்தான் கட்டா குஸ்தி 2. இயக்குநர் செல்லா அய்யாவு இயக்கத்தில் விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பில் உருவாகி வெளிவந்த இப்படத்தை வேல்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/54a6c814-ad90-4be2-bd5e-cd958ea44207/26-6a52ffcd7fe71.webp' /></p><p></p><p>இப்படத்தில் முனீஸ்காந்த், மோக்ஷா, சாரா, காளி வெங்கட், ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் நடித்திருந்தனர். ஷான் ரோல்டன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். எதிர்பார்ப்புடன் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ளது.</p><h2>வசூல்&nbsp;</h2><p>
</p><p>
கட்டா குஸ்தி 2 திரைப்படத்தின் <a href="https://www.youtube.com/watch?v=cshaXjiFylM" target="_blank">வசூல் </a>குறித்து தொடர்ந்து முதல் நாளிலிருந்தே பார்த்து வருகிறோம். அந்த வகையில் தற்போது 9 நாட்களில் இப்படம் உலகளவில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b78366eb-a1eb-4159-968a-98474ad146fb/26-6a52ffcccabc3.webp' /></p><p>

அதன்படி, 9 நாட்களில் கட்டா குஸ்தி 2 திரைப்படம் உலகளவில் ரூ. 37 கோடி வரை வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் எவ்வளவு வசூல் செய்யும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.</p>]]></content>
            <updated>2026-07-12T03:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் வங்கிகளில் கணக்கு வைத்திருப்போருக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/central-bank-s-warning-to-the-public-1783821306"></link>
            <id>https://tamilwin.com/article/central-bank-s-warning-to-the-public-1783821306</id>
            <summary type="text">பொதுமக்கள் தங்களது தனிப்பட்ட வங்கிக்கணக்கை வெளியாட்களுக்கு பயன்படுத்த அனுமதிக்க வேண்டாம் என மத்திய வங்கி பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொதுமக்கள் தங்களது தனிப்பட்ட வங்கிக்கணக்கை வெளியாட்களுக்கு பயன்படுத்த அனுமதிக்க வேண்டாம் என மத்திய வங்கி பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.</p><p>

இது தொடர்பில் மத்திய வங்கி விடுத்துள்ள அறிக்கையில்,</p><p>&nbsp;</p><h2>சட்டவிரோத&nbsp;நடவடிக்கை</h2><p>ஒருவரின் தனிப்பட்ட வங்கிக் கணக்கில் நிகழும் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் அவரே பொறுப்பு என்று கூறியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/98d64fbc-1100-45b6-8f03-a817fe525ce4/26-6a52f602b6c26.webp' />&nbsp;</p><p>

சிலர் சிறிய மாதாந்திர கட்டணத்திற்கு தங்களது வங்கிக்கணக்கை வாடகைக்கு விட முன்வருகின்றனர். அவ்வாறு வாடகைக்கு விடப்பட்ட கணக்குகள் சட்டவிரோத நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் என்றும் மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.
</p><p>
எனவே இவ்வாறான சூழல் ஏற்படுமாயின் மற்றவர்களின் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு நீங்களும் சட்டப்படி பதில் சொல்ல வேண்டியிருக்கும் என்றும் வாடிக்கையாளர்கள் எச்சரித்துள்ளது.
</p><p>
இது குறித்து பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு மத்திய வங்கி பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.&nbsp;&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-12T02:58:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீர்கொழும்பு சிறை மோதல் தொடர்பில் விசாரிக்க இருவேறு குழுக்கள்..! 600 இற்கும் மேற்பட்ட கைதிகளை இடமாற்ற முடிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/negombo-prison-attack-important-announcement-1783823973"></link>
            <id>https://tamilwin.com/article/negombo-prison-attack-important-announcement-1783823973</id>
            <summary type="text">நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற வன்முறை மோதல் தொடர்பில்
விசாரணை நடத்துவதற்காக விசேட குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடக...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற வன்முறை மோதல் தொடர்பில்
விசாரணை நடத்துவதற்காக விசேட குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப்பேச்சாளரும், சிறைச்சாலைகள் ஆணையாளருமான ஏ.சி. கஜநாயக்க தெரிவித்துள்ளார்.</p><p>
சிறைச்சாலையில் ஏற்பட்ட சொத்து சேதங்கள் குறித்து விசாரிப்பதற்காக ஒரு விசேட
குழுவும், மோதல் சம்பவம் குறித்து தனியானதொரு விசாரணையை முன்னெடுப்பதற்காகச்
சிறைச்சாலைகள் திணைக்களத்தால் மற்றுமொரு குழுவும் நியமிக்கப்பட்டுள்ளன.</p><p></p><h2>அடுத்தகட்ட நடவடிக்கை</h2><p>
</p><p>
இதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் அடுத்தகட்ட நடவடிக்கையாக, நீர்கொழும்பு
சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள மேலும் 600 இற்கும் மேற்பட்ட கைதிகளை
நாட்டின் ஏனைய சிறைச்சாலைகளுக்கு இடமாற்றம் செய்வதற்கான ஏற்பாடுகள் தற்போது
முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2f114b2d-2423-42ff-8824-7367cdf4cb17/26-6a52fe677cd0c.webp' /></p><p>

போதைப்பொருள் கடத்தல் விவகாரம் ஒன்றை மையமாகக்கொண்டு கைதிகளின் இரு
குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட இந்த வன்முறை மோதலில், சிறைச்சாலை அதிகாரிகள்
உட்பட 100 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.</p><p> இந்த மோதலின் போது 8 சிறைச்சாலை
அதிகாரிகள் மற்றும் 21 கைதிகள் என மொத்தம் 29 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது
குறிப்பிடத்தக்கது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-12T02:39:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாடு முழுவதும் 143 இடங்களில் நாளை நெல் கொள்முதல் ஆரம்பம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/rice-paddy-procurement-across-the-country-tomorrow-1783822023"></link>
            <id>https://ibctamil.com/article/rice-paddy-procurement-across-the-country-tomorrow-1783822023</id>
            <summary type="text">இந்த ஆண்டின் பெரும்போக அறுவடைக்கான நெல் கொள்முதலை நாளை (13.07.2026) முதல் ஆரம்பிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக&amp;nbsp;நெல் சந்தைப்படு...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்த ஆண்டின் பெரும்போக அறுவடைக்கான நெல் கொள்முதலை நாளை (13.07.2026) முதல் ஆரம்பிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக&nbsp;நெல் சந்தைப்படுத்தல் வாரியம் தெரிவித்துள்ளது.</p><p>
பல பகுதிகளில் பெரும்போக நெல் அறுவடை ஏற்கனவே தொடங்கிவிட்டதால், அதிக அறுவடை உள்ள பகுதிகளைக் அடையாளப்படுத்தி நெல் களஞ்சியசாலைகள் திறக்கப்படும் என வாரியத்தின் தலைவர் மஞ்சுலா பின்னலந்த கூறியுள்ளார்.</p><p>

அதன்படி, நாடு முழுவதும் 143 இடங்களில் அமைந்துள்ள களஞ்சியசாலைகளில் இருந்து நெல் கொள்முதல் செய்ய ஏற்பாடுகள் செய்யப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>தனியார் துறை களஞ்சியசாலை</h2><p>
களஞ்சியசாலைகளின் கொள்ளளவு நிரம்பிவிட்டால், அருகிலுள்ள தனியார் துறை களஞ்சியசாலைகளை பயன்படுத்துவது குறித்துப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளதாகவும், அவர் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f3f86d15-6441-467e-b6ec-de65abdea8f8/26-6a52f6c8aad7c.webp' /></p><p>மேலும், குறிப்பிட்ட நெல் ஆலை உரிமையாளர்களும் தனியார் நிறுவனங்களும் அந்தக் களஞ்சியசாலைகளை இலவசமாக வழங்க ஒப்புக்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> IBC தமிழ் WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-12T02:23:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்! உயிரிழந்த அதிகாரிகளுக்கு இழப்பீடு வழங்குவதில் ஏற்பட்டுள்ள குழப்பம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/negombo-prison-clash-1783820555"></link>
            <id>https://tamilwin.com/article/negombo-prison-clash-1783820555</id>
            <summary type="text">நீர்கொழும்பு சிறைச்சாலையில் நடந்த மோதலில் உயிரிழந்த அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட&amp;nbsp;தலா 05 இலட்சம் ரூபா நஷ்டஈடு&amp;nbsp; ஒரு ஆரம்பக்கட்ட தொகை மட்டுமே என்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீர்கொழும்பு சிறைச்சாலையில் நடந்த மோதலில் உயிரிழந்த அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட&nbsp;தலா 05 இலட்சம் ரூபா நஷ்டஈடு&nbsp; ஒரு ஆரம்பக்கட்ட தொகை மட்டுமே என்று சிறைச்சாலைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p>

அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட தொகை குறித்து பலர் எழுப்பிய விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் விதமாக, சிறைச்சாலைகள் திணைக்களத்தின் ஆணையாளரும், ஊடகப் பேச்சாளருமான&nbsp;ஏ.சி. கஜநாயக்க இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்.</p><p>&nbsp;</p><h2>இறுதிச்சடங்கு ஏற்பாடுகள்&nbsp;</h2><p>சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் குடும்பங்களுக்கு 20 இலட்சத்திற்கு அதிகமான தொகையை வழங்குவதற்கு திணைக்களத்தில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e830ae79-872b-4f48-9f5f-3a4e57adc085/26-6a52f929b14aa.webp' /></p><p>
அனைத்து இறுதிச் சடங்கு ஏற்பாடுகளும் சிறைச்சாலைத் திணைக்களத்தின் செலவிலேயே மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.</p><p>
இதற்கிடையில், மோதலில் காயமடைந்த சிறை அதிகாரிகளுக்கு சில இழப்பீடுகளை வழங்குவதிலும் கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது.
</p><p>மேலும், மோதலில் காயமடைந்த 7 சிறை அதிகாரிகள் இன்னும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக சிறைச்சாலை ஆணையாளர் ஏ.சி. கஜநாயக்க தெரிவித்துள்ளார்.
</p><p>
இவர்களில் மூவர் கொழும்பு தேசிய மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப்பிரிவில் இன்னமும் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-12T02:22:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Manchu</name>
            </author>
            <title type="text"><![CDATA[செவ்வாய் மீது சனியின் மூன்றாம் பார்வை... அதிர்ஷ்டத்தினை அள்ளிச் செல்லும் ராசியினர் யார்னு தெரியுமா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/saturns-third-aspect-on-mars-lucky-zodiac-signs-1783784764"></link>
            <id>https://manithan.com/article/saturns-third-aspect-on-mars-lucky-zodiac-signs-1783784764</id>
            <summary type="text">செவ்வாய் மீது சனியின் மூன்றாம் பார்வை விழும் நிலையில், எந்தெந்த ராசியினருக்கு அதிர்ஷ்ட காற்று வீசுகின்றது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.பொதுவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>செவ்வாய் மீது சனியின் மூன்றாம் பார்வை விழும் நிலையில், எந்தெந்த ராசியினருக்கு அதிர்ஷ்ட காற்று வீசுகின்றது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.</p><p>பொதுவாக ஜோதிடத்தில் கிரகங்களின் நிலைகள் மிகவும் முக்கியமாக பார்க்கப்படுகின்றது. அதிலும் ஜுலை மாதத்தில் பல கிரகங்களின் நிலைகளில் மாற்றங்கள் ஏற்படவுள்ளது.</p><p>சனி பகவான் ஜுலை மாதத்தில் வக்ர நிலையில் பயணிக்கவுள்ள நிலையில், அதே வேளையில் செவ்வாய் ரிஷப ராசிக்குள் நுழைகின்றார்.</p><p>செவ்வாய் மற்றும் சனி இடையிலான உறவால் சில ராசியினருக்கு ஆழமான தாக்கத்தினை ஏற்படுத்தும். ஒவ்வொரு கிரகத்திற்கும் ஏழாம் பார்வை உண்டு.&nbsp;</p><p>ஆனால் சனி, செவ்வாய், குரு ஆகிய கிரகங்களுக்கு சிறப்பு பார்வைகள் உள்ளது. அதிலும் சனியின் 3,7,10ம் பார்வை மிகவும் சிறப்பானதாக இருக்கும்.</p><p>ஜுலை மாதத்தில் செவ்வாய் ரிஷப ராசியிலும், சனி மீன ராசியிலும் இருப்பதால், சனியின் 3ம் பார்வை செவ்வாயின் மீது விழுகின்றது.</p><p>இந்த பார்வையானது ஆகஸ்ட் 2ம் தேதி வரை நீடித்திருக்கின்றது. செவ்வாய் மீது சனியின் மூன்றாம் பார்வை விழுவதால் அதிர்ஷ்டம் பெறும் ராசியினரைக் குறித்து தெரிந்து கொள்வோம்.&nbsp;</p><p>[XO9Z3G
]</p><h2>ரிஷபம்</h2><p>
</p><p>ரிஷப ராசியினருக்கு இந்த பார்வையானது அதிர்ஷ்டமானதாக இருக்குமாம். வேலை, வியாபாரம் என எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் நல்ல வெற்றி கிடைக்குமாம்.</p><p>நீண்ட காலமாக முடியாமல் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும் நிலையில், இந்த காலத்தில் போடப்படும் ஒவ்வொரு திட்டங்களிலும் வெற்றியே கிடைக்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/23db343b-aa63-44da-b99e-2213045f340a/26-6a527d31449e0.webp' /><br></p><h2>கன்னி
</h2><p>கன்னி ராசியினருக்கு இந்த காலக்கட்டம் மிக அதிர்ஷ்டமானதாக இருக்கின்றது. அலுவலகத்தில் பணிபுரிபவர்களுக்கு புதிய பொறுப்புக்கள் கிடைக்கும்.</p><p>வருமாத்தில் உயர்வு ஏற்படுவதால் நிதி ரீதியாக நல்ல முன்னேற்றம் ஏற்படும் வாய்ப்புள்ளது. தொழிலை விரிவுபடுத்தும் வாய்ப்புகள் கிடைப்பதுடன், வியாபாரிகளுக்கு நல்ல் லாபம் கிடைக்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4f5145b4-357e-4ca9-8d9b-eadf71044d36/26-6a527d31e570d.webp' />&nbsp;</p><p></p><h2>மகரம்
</h2><p>மகர ராசியினருக்கு ஆஸ்ட் மாதம் வரை மிகவும் மங்களரமானதாக இருப்பதுடன், நிதி நிலைமையும் மிகவும் சிறப்பாகவே இருக்கும். நீண்ட கால கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும்.</p><p>நீதிமன்ற வழக்குகளில் நல்ல வெற்றி கிடைப்பதுடன், அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் கிடைக்கும். எதிர்பாராத நல்ல செய்தியும் வந்துசேரும். முதலீடுகளிலம் நல்ல லாபம், பண பரிவர்த்தனைகளால் நல்ல பலனும் கிடைக்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0a789215-37b4-42c3-b901-6aeda16a08e6/26-6a527d32933d0.webp' /></p><h2>கும்பம்
</h2><p>கும்ப ராசியினருக்கு ஆகஸ்ட் வரை தொழிலில் நல்ல மாற்றங்களை காணலாம். நீண்ட காலமாக வராமல் இருந்த பணம் கைக்கு வந்து சேரும். வருமானத்தில் எதிர்பாராத அளவில் உயர்வு ஏற்படும்.</p><p>புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும் வாய்ப்புள்ளதுடன், ஏற்கனவே செய்த முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்குமாம். வியாபாரிகளுக்கு இக்காலத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/34c6fddd-2c7d-4a87-8c6d-6051f55cfa96/26-6a527d3340e1f.webp' /></p><p><b>இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).</b>&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;<br></p><table class="table table-bordered"><tbody><tr><td><i>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் <a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள் <a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"><b>FOLLOW NOW</b></a>&nbsp; &nbsp; &nbsp;</i><br></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-12T02:11:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழ் சினிமா நடிகர்களின் முதல் ரூ. 50 கோடி வசூல் செய்த திரைப்படங்கள்.. லிஸ்ட் இதோ]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/tamil-cinema-actors-first-50-crore-movies-list-1783741201"></link>
            <id>https://cineulagam.com/article/tamil-cinema-actors-first-50-crore-movies-list-1783741201</id>
            <summary type="text">வசூல்&amp;nbsp;ஒவ்வொரு புதிய திரைப்படத்தின் வசூல் விவரங்களை தெரிந்துகொள்ள ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக இருப்பார்கள். தயாரிப்பு நிறுவனங்களும் ரசிகர்கள் எதிர்ப...</summary>
            <content type="html"><![CDATA[<h2>வசூல்&nbsp;</h2><p>ஒவ்வொரு புதிய திரைப்படத்தின் வசூல் விவரங்களை தெரிந்துகொள்ள ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக இருப்பார்கள். தயாரிப்பு நிறுவனங்களும் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் வசூல் விவரங்கள் குறித்து அறிவிப்பை வெளியிடுவதை தற்போது வழக்கமாக்கிவிட்டனர்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0b4361f4-f06f-4768-b1ce-984bfe358ca3/26-6a51bb1648693.webp' /></p><p></p><p>அதுவும் முன்னணி ஹீரோக்களின் படங்கள் என்றால் சொல்லவே தேவையில்லை, சமூக வலைத்தளங்களில் அந்தந்த நடிகர்களின் ரசிகர்கள் வசூல் பற்றி பேசி சண்டையே போடுவார்கள். அப்படி வசூல் என்பது படத்தின் மிக முக்கியமான ஒன்றாக உள்ளது.</p><h2>முதல் ரூ. 50 கோடி வசூல்</h2><p> </p><p>

இந்த நிலையில், பாக்ஸ் ஆபிஸில் ரூ. 50 கோடி, ரூ. 100 <a href="https://www.youtube.com/watch?v=1LKorLUYf30" target="_blank">கோடி</a>, ரூ. 500 கோடி என்பது மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e83739ee-08e6-4614-845f-6cb5b9150cbb/26-6a51bb1592a04.webp' /></p><p>அப்படி தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்களின் திரை வாழ்க்கையில் ரூ. 50 கோடி வசூல் செய்த முதல் திரைப்படம் என்ன என்பதை பற்றித்தான் இந்த பதிவில் நாம் பார்க்கப்போகிறோம். </p><ul><li>

ரஜினிகாந்த் - படையப்பா: ரூ. 60 கோடி</li><li>
கமல் ஹாசன் - இந்தியன்: ரூ. 50 கோடி</li><li> 
விஜய் - வேலாயுதம்: ரூ. 60+ கோடி
</li><li>அஜித் - மங்காத்தா: ரூ. 86 கோடி
</li><li>சூர்யா - அயன்: ரூ. 60+ கோடி
</li><li>விக்ரம் - அந்நியன்: ரூ. 60+ கோடி
</li><li>தனுஷ் - வேலையில்லா பட்டதாரி: ரூ. 50+ கோடி</li><li>சிம்பு, விஜய் சேதுபதி - செக்க சிவந்த வானம்: ரூ. 90+ கோடி
</li><li>சிவகார்த்திகேயன் - ரஜினி முருகன்: ரூ. 60 கோடி</li></ul><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1bd2d9d9-c2f2-4ec1-a452-8945ee13c20f/26-6a51bb14da045.webp' /></p>]]></content>
            <updated>2026-07-12T01:55:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[கருணா - டக்ளஸ் - தேசப்பந்து - ஞானசார தேரர் உள்ளிட்டோருக்கு சிறப்பு பாதுகாப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/publication-government-s-special-protection-list-1783820255"></link>
            <id>https://ibctamil.com/article/publication-government-s-special-protection-list-1783820255</id>
            <summary type="text">சட்ட முறைக்கு அமைவாக காவல்துறை பாதுகாப்புக்குத் தகுதியுள்ள பதவிகளுக்கு மேலதிகமாக 13 முக்கிய அரசியல்வாதிகளுக்கு&amp;nbsp; சிறப்பு பாதுகாப்பானது தற்போதைய அர...</summary>
            <content type="html"><![CDATA[<p>சட்ட முறைக்கு அமைவாக காவல்துறை பாதுகாப்புக்குத் தகுதியுள்ள பதவிகளுக்கு மேலதிகமாக 13 முக்கிய அரசியல்வாதிகளுக்கு&nbsp; சிறப்பு பாதுகாப்பானது தற்போதைய அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ளது.</p><p>தற்போதைய அரசாங்கம், கந்த காலங்களில் முக்கியப் பிரமுகர்களுக்குப் பாதுகாப்பு வழங்கி வந்த காவல்துறை அதிகாரிகளைப் பெருமளவில் நீக்கிய நிலையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><p>அதன்படி, எதிர்க்கட்சி உறுப்பினர்களில் கபீர் ஹாஷிம், எஸ். சிறீதரன், ரஞ்சித் மத்தும பண்டார, எச்.எல். தர்மசேன, உள்ளிட்ட எம். பிக்களுக்கு அத்தகைய பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>முக்கியப் பிரமுகர் பாதுகாப்பு</h2><p>மேலும், முன்னாள் சபாநாயகர் அசோக சப்புமல் ரன்வல, சட்டத்தரணி சரத் குமார, அஜித் சாந்த பிரியதர்ஷனா, ருவன் விஜேவீர, திலங்க யு. கமகே, சுனில் பியான்வல, மற்றும் தினேஷ் ஹேமந்தா ஆகியோருக்கு மட்டுமே ஆளும் கட்சியிலிருந்து முக்கியப் பிரமுகர் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/152adb0a-1068-45f5-80e6-af9acf7b1ff3/26-6a52efe14e931.webp' /></p><p>
</p><p>
மேலும், முன்னாள் சபாநாயகர் கரு ஜெயசூரிய, வினாயகமூர்த்தி முரளிதரன்மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோருக்கும் முக்கியப் பிரமுகர் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.</p><p>

மேலும், முன்னாள் காவல்துறைத் தலைவர்கள் என்.கே. இலங்கக்கூன், புஜித் ஜயசுந்தர, தேசபந்து தென்னக்கோன் மற்றும் முன்னாள் சிறைச்சாலைகள் ஆணையாளர் துஷார உபுல்தெனிய ஆகியோருக்கும் இந்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>ஞானசார தேரர்</h2><p>
</p><p>
பொதுபல பால சேனா கட்சியின் தேசிய அமைப்பாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கும் சிறப்பு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a7daf4ed-c78c-47a5-b7ca-78a2540290a1/26-6a52efe206a83.webp' /></p><p>இதற்கிடையில், குற்றத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகளின் பாதுகாப்பிற்காகவும் சிறப்பு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது என பொதுப் பாதுகாப்பு பிரதி அமைச்சரால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஓர் ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக மேட்படி விடயங்களை உள்ளடக்கி தென்னிலங்கையின் சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.</p><p>வி.பி.ஏ பாதுகாப்பு வழங்கப்பட்ட நபர்கள் யார் என்று எதிர்க்கட்சிப் நாடாளுமன்ற உறுப்பினர் கவிந்த ஜயவர்தன கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் அவர் இந்த ஆவணத்தை சமர்ப்பித்ததாக தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> IBC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-12T01:42:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறை அதிகாரிகள் படுகொலை: 75 கைதிகளுக்கு எதிராக CID தீவிர நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/75-inmates-identified-in-massacre-prison-officers-1783818763"></link>
            <id>https://ibctamil.com/article/75-inmates-identified-in-massacre-prison-officers-1783818763</id>
            <summary type="text">நீர்கொழும்பு சிறையில் 8 சிறை அதிகாரிகளை கொடூரமாக சித்திரவதை செய்து கொலை செய்த அனைத்து கைதிகளையும் மீண்டும் கைது செய்யவும், அவர்கள் மீது கொலைக் குற்றச்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீர்கொழும்பு சிறையில் 8 சிறை அதிகாரிகளை கொடூரமாக சித்திரவதை செய்து கொலை செய்த அனைத்து கைதிகளையும் மீண்டும் கைது செய்யவும், அவர்கள் மீது கொலைக் குற்றச்சாட்டின் கீழ் வழக்குப் பதிவு செய்யவும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.</p><p>இந்தக் கொடூரமான கொலைகளில் ஈடுபட்ட சுமார் 75 கைதிகள் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>மேலும், இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய அனைவரையும் அடையாளம் காணும் விசாரணையை குற்றப் புலனாய்வுத் துறை தொடர்ந்துள்ளது.</p><p></p><h2>சித்திரவதை செய்து கொலை</h2><p>சிறை அதிகாரிகளை மிகக் கொடூரமான முறையில் சித்திரவதை செய்து கொலை செய்த சந்தேக நபர்களை அடையாளம் காண்பதற்காக, இந்தச் சம்பவம் நடந்த நேரத்தில் நீர்கொழும்பு சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அனைத்து கைதிகளிடமும் தற்போது விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8c6fb5ac-ca95-476f-a33f-6628fde2170c/26-6a52ea0cbc000.webp' /></p><p>
</p><p>மேலும், சிறையில் பொருத்தப்பட்டுள்ள சிசிரிவி கமராக்களில் பதிவான காட்சிகளைக் கொண்ட டிவிஆர்-களைத் தேடி, காவல்துறையினர் தற்போது நீர்கொழும்பு சிறைச்சாலையில் முழுமையான சோதனையை நடத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-12T01:13:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீர்கொழும்பு சிறைக் கைதிகளுக்கு எதிராக மனித படுகொலை குறற்ச்சாட்டின் கீழ் வழக்கு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/cid-will-filce-case-against-prisoners-1783818479"></link>
            <id>https://tamilwin.com/article/cid-will-filce-case-against-prisoners-1783818479</id>
            <summary type="text">நீர்கொழும்பு சிறைக் கைதிகளுக்கு எதிராக மனித படுகொலை குற்றச்சாட்டின் கீழ் வழக்குத் தொடரப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சிறைச்சாலையில் இடம்பெற்ற கொ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீர்கொழும்பு சிறைக் கைதிகளுக்கு எதிராக மனித படுகொலை குற்றச்சாட்டின் கீழ் வழக்குத் தொடரப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
</p><p>சிறைச்சாலையில் இடம்பெற்ற கொலைகளுடன் தொடர்புடைய அனைத்து கைதிகளையும் மீண்டும் கைது செய்து, அவர்களுக்கு எதிராக கொலைக் குற்றச்சாட்டின்கீழ் வழக்குத் தொடர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.</p><p>
நீர்கொழும்பு சிறைச்சாலையில் 8 சிறைச்சாலை அதிகாரிகளை சித்திரவதை செய்து கொடூரமான முறையில் கொலை செய்த சம்பவம் தொடர்பில், குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b1400ec9-0ed2-4072-9846-7aca1acee964/26-6a52e8f6d1684.webp' /></p><p> </p><p>
இக்கொடூரக் கொலைகளுடன் தொடர்புடைய சுமார் 75 கைதிகள் இதுவரையில் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அடுத்த சில நாட்களில் அவர்களைக் கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
</p><p>அதிகாரிகளைக் கொலை செய்த அனைத்து கைதிகளையும் அடையாளம் காணும் விசாரணைகளை குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் மிக வெற்றிகரமாக முன்னெடுத்து வருவதாகவும், சந்தேகநபர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பதில் பொலிஸ் மா அதிபர் சஞ்சீவ தர்மரத்ன, தெரிவித்துள்ளார்.
</p><p>கொலையாளிகளை அடையாளம் காண்பதற்காக, இச்சம்பவம் நடந்த நேரத்தில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் இருந்த அனைத்து கைதிகளிடமும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
</p><p>சிறைச்சாலையினுள் பொருத்தப்பட்டிருந்த சீ.சீ.ரீ.வி கமராக்களின் காட்சிகள் அடங்கிய டிவிஆர் இயந்திரங்களைக் கண்டறிவதற்காக நீர்கொழும்பு சிறைச்சாலையை பொலிஸார் தீவிர சோதனைக்கு உட்படுத்தி வருகின்றனர்.</p><p>
கொல்லப்பட்ட 8 அதிகாரிகளும் அவசர உத்திகள் பிரிவைச் (சிறைச்சாலை பொலிஸ்) சேர்ந்தவர்களாவர். கைதிகளின் கொடூரமான தாக்குதல்கள் மற்றும் சித்திரவதைகளுக்கு உள்ளாகியே இவர்கள் உயிரிழந்துள்ளனர் என்பது மரண பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
</p><p>சில அதிகாரிகளின் தலைகளில் பெரிய கற்களைப் போட்டு தலை நசுக்கப்பட்டிருப்பதுடன், சில அதிகாரிகளின் வாய் மற்றும் மலக்குடல் வழியே துடைப்பக் கட்டைகளை உட்செலுத்தி மிகக் கொடூரமான முறையில் சித்திரவதை செய்யப்பட்டுள்ளதாக மரண பரிசோதனை அறிக்கைகள் வெளிப்படுத்தியுள்ளன.
</p><p>இந்தத் தாக்குதலை நடத்திய கைதிகளின் பெயர்கள் மற்றும் முகவரிகள் உள்ளிட்ட அனைத்து விபரங்களும் தற்போது விசாரணை அதிகாரிகளுக்குக் கிடைத்து வருவதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது. </p><p>
சந்தேகநபர்களிடம் வாக்குமூலங்களைப் பெற்ற பின்னர், அவர்களைக் கைது செய்து கொலைக் குற்றச்சாட்டின்கீழ் வழக்குத் தொடர பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-12T01:08:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்கா–ஈரான் பதற்றம் தீவிரம் ; புரிந்துணர்வு ஒப்பந்தத்தை அமெரிக்கா மீறியதாக ஈரான் குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/iran-accuses-us-of-violating-memorandum-understand-1783789733"></link>
            <id>https://canadamirror.com/article/iran-accuses-us-of-violating-memorandum-understand-1783789733</id>
            <summary type="text">அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே அண்மையில் கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை (MoU) அமெரிக்கா மீறியுள்ளதாக ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்ச்ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே அண்மையில் கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை (MoU) அமெரிக்கா மீறியுள்ளதாக ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்ச்சி குற்றம் சாட்டியுள்ளார். </p><p>இந்த விவகாரம் இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றத்தை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.

ஈரானின் உயர்மட்டத் தலைவருடன் தொடர்புடைய ஒருவருக்கு எதிராக அமெரிக்க திறைசேரி திணைக்களம் புதிய பொருளாதாரத் தடைகளை விதித்திருப்பது, இரு நாடுகளும் ஜூன் மாதத்தில் எட்டிய புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் விதிமுறைகளை மீறும் செயல் என அப்பாஸ் அராக்ச்சி தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/71a82a1c-cdc3-4c47-b0d7-4ca1d62a700c/26-6a5278a638430.webp' /></p><p>ஜூன் மாதம் கையெழுத்தான அந்த ஒப்பந்தத்தின்படி, இரு தரப்பும் தற்போதைய நிலையைப் பேணுவதுடன், புதிய பொருளாதாரத் தடைகளை விதிக்காமல் இருக்க இணக்கம் தெரிவித்திருந்ததாகவும், தற்போதைய அமெரிக்க நடவடிக்கை அந்த உறுதிமொழிக்கு முரணானது என்றும் அவர் கூறியுள்ளார்.
</p><p>
இதற்கிடையில், ஹோர்முஸ் நீரிணையில் வணிகக் கப்பல்கள் மீது மீண்டும் தாக்குதல்கள் நடத்தப்பட்டதற்குப் பதிலடியாகவே புதிய தடைகள் விதிக்கப்பட்டதாக அமெரிக்கா விளக்கம் அளித்துள்ளது.</p><p> மேலும், ஹோர்முஸ் நீரிணையில் பாதுகாப்பான கப்பல் போக்குவரத்தை உறுதிப்படுத்துமாறு ஈரானை அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.</p><p>

ஹோர்முஸ் நீரிணையை மையமாகக் கொண்டு இரு நாடுகளுக்கும் இடையிலான மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், அமெரிக்கா ஈரான் தொடர்புடைய இலக்குகள் மீது தாக்குதல்களை மேற்கொண்டதாகவும், அதற்கு பதிலடியாக மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க நலன்கள் மற்றும் தளங்களை குறிவைத்து ஈரான் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. </p><p>இந்தச் சூழ்நிலையில், ஓமான் உள்ளிட்ட நாடுகளின் மத்தியஸ்தத்துடன் பதற்றத்தைத் தணிக்கும் இராஜதந்திர முயற்சிகளும் தொடர்கின்றன.</p>]]></content>
            <updated>2026-07-12T01:03:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழ் அரசியல் கைதிகளின் பாதுகாப்பு கேள்விக்குறி ; கோமகன் எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/question-mark-safety-tamil-political-prisoners-1783818186"></link>
            <id>https://jvpnews.com/article/question-mark-safety-tamil-political-prisoners-1783818186</id>
            <summary type="text">நாட்டின் சிறைச்சாலைகளில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் வன்முறைச் சம்பவங்கள், நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் பாதுகாப்பு கு...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டின் சிறைச்சாலைகளில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் வன்முறைச் சம்பவங்கள், நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் பாதுகாப்பு குறித்து கடும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக 'குரலற்றவர்களின் குரல்' அமைப்பின் தலைவர் கோமகன் தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p></p><p>யாழ்ப்பாண ஊடக அமையத்தில் நேற்று (11) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர், சிறைச்சாலைகளில் நிலவும் பாதுகாப்பு மற்றும் மனித உரிமை நிலைமை தொடர்பில் கடும் கவலை வெளியிட்டார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c533abed-9649-467f-8a47-6890f93264b3/26-6a52e7cb7b4a3.webp' /></p><p>சிறைச்சாலைகளில் "கைதிகளும் மனிதர்களே" என்ற வாசகம் காட்சிப்படுத்தப்பட்டிருந்தாலும், நடைமுறையில் கைதிகள் மீது மனிதாபிமானமற்ற கொடுமைகள் அரங்கேற்றப்படுவதாக அவர் குற்றம்சாட்டினார்.
</p><p>
அண்மையில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவத்தில் பல கைதிகள் உயிரிழந்தமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்த அவர், கைதிகள் எந்தக் குற்றச்சாட்டில் தடுத்து வைக்கப்பட்டிருந்தாலும், அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது அரசின் பொறுப்பாகும் என்றார்.</p><p>

தற்போது சிறைச்சாலைகளில் நிலவும் வன்முறைச் சூழலைக் கருத்தில் கொள்ளும்போது, நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் திட்டமிட்ட தாக்குதல்களுக்கு இலக்காகும் அபாயம் இருப்பதாக அச்சம் வெளியிட்ட கோமகன், அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.</p><p>
மேலும், சிறைச்சாலைகளுக்குள் கைதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் அதிகாரிகள் காட்டும் அலட்சியப் போக்கையும், அங்கு இடம்பெறுவதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்களையும் தாம் வன்மையாகக் கண்டிப்பதாக அவர் தெரிவித்தார்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-12T01:03:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Manchu</name>
            </author>
            <title type="text"><![CDATA[உடல் எடை கடகடவென குறைய வேண்டுமா? இந்த பானத்தை கட்டாயம் குடிங்க]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/drink-this-6-magic-drinks-to-reduce-weight-1783789540"></link>
            <id>https://manithan.com/article/drink-this-6-magic-drinks-to-reduce-weight-1783789540</id>
            <summary type="text">உடல் எடையை குறைக்க உதவும் ஆறு அற்புதமான பானங்கள் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.கிரீன் டீ
கிரீன் டீயில் கேட்டசின்கள் மற்றும் காஃபின் நிறைந்...</summary>
            <content type="html"><![CDATA[<p>உடல் எடையை குறைக்க உதவும் ஆறு அற்புதமான பானங்கள் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/57812df3-f822-4584-ab2a-a0ed59daa043/26-6a527b360b040.webp' /></p><h2>கிரீன் டீ
</h2><p>கிரீன் டீயில் கேட்டசின்கள் மற்றும் காஃபின் நிறைந்துள்ளது. இது மெட்டபாலிசத்தை அதிகரித்து, உடல் உள்ள கொழுப்பைக் கரைக்க உதவுகிறது.
</p><h2>பிளாக் காபி
</h2><p>காஃபின், மெட்டபாலிசத்தின் வேகத்தை அதிகரிக்கிறது. இதனால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பைக் குறைக்க முடியும்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/68bf280d-aa57-46eb-b5a7-dc2062753f17/26-6a527b36ddaf6.webp' /></p><h2>இஞ்சி எலுமிச்சை தண்ணீர்
</h2><p>இஞ்சி மற்றும் எலுமிச்சை சாறு கலந்த தண்ணீர், வயிறு உப்புசமாக இருப்பதை குறைக்கும். இது நல்ல செரிமானத்திற்கு நல்லது.
</p><h2>ஆப்பிள் சைடர் வினிகர்
</h2><p>ஒரு கிளாஸ் தண்ணீரில் ஆப்பிள் சைடர் வினிகரைக் கலந்து குடித்தால், பசி உணர்வு குறையும், மேலும், இது ரத்த சர்க்கரை அளவையும் கட்டுக்குள் வைக்கும்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/89ea54ba-e100-4029-831d-9a3aaf8199ae/26-6a527b378bdb3.webp' /></p><h2>இஞ்சி டீ
</h2><p>இஞ்சி டீ மெட்டபாலிசத்தை மேம்படுத்துகிறது. அதிக கலோரிகளை எரிக்க உதவுவதோடு, வயிறு நிரம்பிய உணர்வையும் கொடுக்கும்.
</p><h2>புதினா தண்ணீர்
</h2><p>புதினா தண்ணீரில் கலோரிகள் மிகவும் குறைவு. எனவே இது உடல் எடையைக் குறைக்க பெரிதும் உதவுகிறது. புத்துணர்ச்சிக்கும் இது சிறந்தது.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e899f840-c35e-468e-87cc-e5595c47ed4e/26-6a527b383e720.webp' /></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><i>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன்<a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்<a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"><b> FOLLOW NOW</b></a>&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;</i><br></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-12T01:00:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையை தாக்கும் எல் நினோ ; யாழ். பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/el-nino-jaffna-nagamuthu-pratheeparaja-warns-1783812767"></link>
            <id>https://jvpnews.com/article/el-nino-jaffna-nagamuthu-pratheeparaja-warns-1783812767</id>
            <summary type="text">பசிபிக் பெருங்கடலில் உருவாகியுள்ள &#039;எல் நினோ&#039; (El Niño) காலநிலை நிகழ்வின் தாக்கம் தற்போது இலங்கைக்கு அருகில் நிலைகொள்ளத் தொடங்கியுள்ளதாகவும், இதன் தாக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>பசிபிக் பெருங்கடலில் உருவாகியுள்ள 'எல் நினோ' (El Niño) காலநிலை நிகழ்வின் தாக்கம் தற்போது இலங்கைக்கு அருகில் நிலைகொள்ளத் தொடங்கியுள்ளதாகவும், இதன் தாக்கம் ஜூலை மாத இறுதி அல்லது ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் தீவிரமடையக்கூடும் என்றும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட பீடாதிபதி பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா எச்சரித்துள்ளார்.</p><p></p><p>

யாழ்ப்பாணத்தில் உள்ள மிலேனியம் ஹோட்டலில் இன்று நடைபெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட அவர், எல் நினோவால் இலங்கையில் ஏற்படக்கூடிய தாக்கங்கள் மற்றும் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விளக்கமளித்தார்.</p><p>

பொதுவாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மே முதல் செப்டம்பர் வரை வறட்சியான காலநிலையும் அதிக வெப்பமும் நிலவுகின்றன. </p><p>இந்நிலையில் யாழ்ப்பாணத்தின் தீவுப் பகுதிகள், முல்லைத்தீவு, துணுக்காய், மாந்தை கிழக்கு, மாந்தை மேற்கு, முசலி, நானாட்டான் மற்றும் வவுனியா வெங்கலச்செட்டிக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் ஏற்கனவே நீர் நெருக்கடி தீவிரமடைந்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/daf4f4cb-e14b-4ee9-8ea1-a91342ce6f1b/26-6a52d2a14208e.webp' /></p><p>கடந்த 60 நாட்களில் இந்தப் பகுதிகளில் வெறும் 12 மில்லிமீற்றர் மழை மட்டுமே பதிவாகியுள்ள நிலையில், அதே காலப்பகுதியில் 288 மில்லிமீற்றருக்கும் அதிகமான நீர் ஆவியாகியுள்ளதாகவும், இதனால் நீர் வளங்கள் வேகமாக குறைந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
</p><p>
எல் நினோவின் தாக்கம் அதிகரிப்பதால் வெப்பநிலை மேலும் உயர்ந்து, ஆவியாக்கமும் பல மடங்கு அதிகரிக்கும். மழையற்ற வறண்ட காலநிலை நீடிப்பதால் தற்போது உள்ள நீர்நிலைகளே மக்களின் பிரதான நீர் ஆதாரங்களாக இருக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.</p><p>

எனவே, தற்போதுள்ள நீர் வளங்களை வீணாக்காமல் பாதுகாப்பதுடன், சிக்கனமாகவும் திறமையாகவும் பயன்படுத்துவதற்கான கட்டமைப்புகளை அரசாங்கமும் மக்களும் இணைந்து உடனடியாக உருவாக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.</p><p>

மத்திய பசிபிக் பிராந்தியத்தில் எல் நினோ உருவாகியுள்ளது அனைத்து காலநிலை மாதிரிகளாலும் 100 சதவீதம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும், ஜூலை 10 ஆம் திகதி நிலவரப்படி எல் நினோ 3.4 பிராந்தியத்தின் கடல் மேற்பரப்பு வெப்பநிலை 1.4 பாகை செல்சியஸ் அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.</p><p>

இந்த வெப்பநிலை ஜூலை மாத இறுதியில் அல்லது ஆகஸ்ட் தொடக்கத்தில் 2 பாகை செல்சியஸை எட்டக்கூடும் என்றும், அதன் தாக்கம் இந்தியப் பெருங்கடல் வழியாக இலங்கைக்கு அருகில் விரிவடையும் என்றும் அவர் கூறினார். </p><p>மேலும், இந்தியப் பெருங்கடலின் வெப்பநிலையும் தற்போதைய நிலையை விட சுமார் 1.8 பாகை செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7c8a9476-4699-4d0a-9d86-33fb08ad1cc8/26-6a52d2a1e8ed0.webp' /></p><p>எல் நினோவுடன் தொடர்புடைய வெப்ப அலை காரணமாக ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் சுமார் 11 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளதாகவும், ஸ்பெயினில் எதிர்பாராத காட்டுத்தீ சம்பவங்களும் பதிவாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
</p><p>
இலங்கையில் ஜூலை முதல் செப்டம்பர் வரை கடுமையான வறட்சி நிலவக்கூடும் என்றும், அதனைத் தொடர்ந்து அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் கடும் மழை பெய்யும் சாத்தியமும் இருப்பதாகவும் அவர் எச்சரித்தார்.
</p><p>
அரசாங்க திணைக்களங்கள் ஒருங்கிணைந்து செயற்பட்டு, நீர் பாதுகாப்பு, பொதுமக்கள் விழிப்புணர்வு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உடனடியாக முன்னெடுத்தால் மட்டுமே இந்த எல் நினோ காலநிலை சவாலை வெற்றிகரமாக எதிர்கொள்ள முடியும் என பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-12T00:58:33+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[கியூபாவில் மீண்டும் மின்கட்டமைப்பு முடக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/cuba-suffers-another-power-outage-1783817762"></link>
            <id>https://canadamirror.com/article/cuba-suffers-another-power-outage-1783817762</id>
            <summary type="text">தீவு நாடான கியூபாவில் நிலவி வரும் மிக மோசமான எரிசக்தி தட்டுப்பாடு காரணமாக, அங்குள்ள தேசிய மின்கட்டமைப்பு மீண்டும் முழுமையாக முடங்கியுள்ளது.இதன் விளைவா...</summary>
            <content type="html"><![CDATA[<p>தீவு நாடான கியூபாவில் நிலவி வரும் மிக மோசமான எரிசக்தி தட்டுப்பாடு காரணமாக, அங்குள்ள தேசிய மின்கட்டமைப்பு மீண்டும் முழுமையாக முடங்கியுள்ளது.</p><p></p><p>இதன் விளைவாக, கடந்த ஐந்து நாட்களில் இரண்டாவது முறையாக அந்த நாடு முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டு, பல மில்லியன் மக்கள் இருளில் மூழ்கியுள்ளனர்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8a8e7495-f821-4432-ae68-dc071fb24453/26-6a52e6236d460.webp' /></p><p>தொடர்ந்து மோசமடைந்து வரும் இந்த மின்கட்டமைப்பு முடக்கத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாகப் பாதிக்கப்பட்டுள்ளதுடன், நாட்டின் பொருளாதாரமும் பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது.</p><p>மின்கட்டமைப்பைச் சீரமைத்து, மின் விநியோகத்தை மீண்டும் கொண்டு வருவதற்கான தீவிர முயற்சிகளில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
</p><p>
எனினும், எரிபொருள் பற்றாக்குறை மற்றும் உள்கட்டமைப்புப் பராமரிப்புப் பணிகள் தொய்வடைந்துள்ளதால், மின்சாரத்தை முழுமையாக மீட்டெடுப்பதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருகிறது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-12T00:56:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரதமர் பதவி விவகாரத்தில் விஜித ஹேரத்தின் பதிலால் கிளம்பிய புதிய சர்ச்சை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/vijitha-herath-on-the-prime-ministerial-post-issue-1783808782"></link>
            <id>https://ibctamil.com/article/vijitha-herath-on-the-prime-ministerial-post-issue-1783808782</id>
            <summary type="text">வெளியுறவுத்துறை அமைச்சர் விஜித ஹேரத் பிரதமராக நியமிக்கப்படுவார் என்பது குறித்து அரசியல் வட்டாரங்களில் பரிமாற்றப்படும் கருத்துக்கள் குறித்து தென்னிலங்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>வெளியுறவுத்துறை அமைச்சர் விஜித ஹேரத் பிரதமராக நியமிக்கப்படுவார் என்பது குறித்து அரசியல் வட்டாரங்களில் பரிமாற்றப்படும் கருத்துக்கள் குறித்து தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. </p><p>

இது குறித்த செய்தியில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது.
</p><p>
ஊடக நிறுவனம் ஒன்றின் தலைவரின் மகளுடைய திருமணம், கடந்த வாரம் காலியில் உள்ள ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது.</p><p></p><p> </p><h2>ரணிலின் கருத்து&nbsp;&nbsp;</h2><p>

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், முன்னாள் அமைச்சர்கள் தலதா அதுகோரல மற்றும் வஜிர அபேவர்தன மற்றும் மேலும் பலர் அதே மேசையில் அமர்ந்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9bcf1003-9f3d-4ac7-8bce-9ba207b0db09/26-6a52c58f2d3d0.webp' /></p><p>இதன்போது முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவை அப்பதவியிலிருந்து நீக்கியமை குறித்துப் பேச்சு எழுந்துள்ளது.</p><p>
அப்போது ஜனாதிபதியாக இருந்த ரணில் விக்ரமசிங்க பதில் வழங்கையில்,

 "அதற்கு நான் பதிலளிக்கிறேன். நான் தலையிடச் செல்லவில்லை. அவர்கள் என்னுடன் விளையாட்டு தொடர்பான விடயங்களைப் பற்றி விவாதிக்கவில்லை.</p><p> அந்தப் பெண்மணிதான் எல்லாவற்றிலும் தலையிட்டார்," என்பதே முன்னாள் ஜனாதிபதியின் பதிலாக இருந்தது என கூறியுள்ளார்.
</p><p></p><h2>சர்வதேசத்தின் பார்வை&nbsp;</h2><p>
இந்த உரையாடலின் போது, ​​வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் அங்கு வந்து முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அருகில் அமர்ந்துள்ளார்.
</p><p>
அந்த மேசையில் இருந்த ஒரு பத்திரிகையாளர் வெளியுறவு அமைச்சரிடம், "நீங்கள் அடுத்த ஆண்டு பிரதமராகிவிடுவீர்கள் என்று கேள்விப்படுகிறேன்" என்று கேட்டுள்ளார்.</p><p>

" இந்த வருடமே ஏன் கூடாது?" என்று அமைச்சர் புன்னகையுடன் பதிலளித்ததாக தெரிவிக்கப்படுகிறது.
</p><p>

இவ்வாறான பின்னணியில், அமெரிக்கத் தூதரகத்தின் 250வது தேசிய தினக் கொண்டாட்டங்களின் போது, ​​பல தூதரகங்களின் அதிகாரிகளும், ஒரு மேற்கத்திய தூதரகத்தின் அதிகாரிகளும், எதிர்காலத்தில் அரசாங்கத்தில் பிரதமர் பதவிக்கான போட்டி உருவாகும் என்று ஊகித்துள்ளனர் என்றும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> IBC தமிழ் WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-12T00:55:09+00:00</updated>
        </entry>
    </feed>
