<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-07-12T04:48:28+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீர்கொழும்பு சிறைக் கலவரத்தில் உயிரிழந்த அதிகாரிகளுக்கு 20 இலட்சம் ரூபாய் இழப்பீடு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/compensation-for-officers-killed-in-prison-clash-1783829457"></link>
            <id>https://ibctamil.com/article/compensation-for-officers-killed-in-prison-clash-1783829457</id>
            <summary type="text">நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்த சிறைச்சாலை அதிகாரிகளின் குடும்பங்களுக்கு 20 இலட்சம் ரூபாய்க்கும் அதிகமான தொகையை வழங்குவதற்கு த...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்த சிறைச்சாலை அதிகாரிகளின் குடும்பங்களுக்கு 20 இலட்சம் ரூபாய்க்கும் அதிகமான தொகையை வழங்குவதற்கு திணைக்களம் கவனம் செலுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><p>சிறைச்சாலைகள் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் ஏ.சி. கஜநாயக்க&nbsp;குறித்த விடயத்தினை ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.</p><p>அவர் மேலும் தெரிவிக்கையில், சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்த சிறைச்சாலை அதிகாரிகளின் குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட 5 இலட்சம் ரூபாய் என்பது ஆரம்பக் கட்டக் கொடுப்பனவு மட்டுமே.</p><p></p><h2>வைத்தியசாலையில் சிகிச்சை பெறுகின்றனர்</h2><p>உயிரிழந்த அதிகாரிகளின் குடும்பங்களுக்கு 20 இலட்சம் ரூபாய்க்கும் அதிகமான தொகையை வழங்குவதற்கு திணைக்களம் கவனம் செலுத்தியுள்ளது.</p><p> அத்துடன், உயிரிழந்தவர்களின் அனைத்து இறுதிக்கிரியைகளும் சிறைச்சாலைகள் திணைக்களத்தின் செலவிலேயே மேற்கொள்ளப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cf94eee7-8392-473a-a619-e6989312bd2d/26-6a53193830f2f.webp' /></p><p> 

இதற்கிடையில், இந்த மோதலில் காயமடைந்த சிறைச்சாலை அதிகாரிகளுக்கு நட்டஈடு வழங்குவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. </p><p>

மோதலில் காயமடைந்த 7 அதிகாரிகள் தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் மூவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்” என தெரிவித்தார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ்<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-12T04:45:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[உண்மைகளை எதிர்கொள்ளத்தயார்! எதிர்க்கட்சிக்கு நீதி அமைச்சர் விடுத்துள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/tice-minister-warns-opposition-1783830789"></link>
            <id>https://tamilwin.com/article/tice-minister-warns-opposition-1783830789</id>
            <summary type="text">நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் சம்பவம் தொடர்பில் எதிர்க்கட்சி தனக்கு எதிராக
நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாப் பிரேரணையை முன்வைத்தால், அதனைத்
தவிடுபொ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் சம்பவம் தொடர்பில் எதிர்க்கட்சி தனக்கு எதிராக
நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாப் பிரேரணையை முன்வைத்தால், அதனைத்
தவிடுபொடியாக்கத் தயார் என்று நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார
தெரிவித்துள்ளார்.
</p><p>
நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற மோதல் சம்பவங்கள் மற்றும்
அதன் விளைவாக ஏற்பட்ட உயிரிழப்புகள் தொடர்பில், நீதி அமைச்சர் சட்டத்தரணி
ஹர்ஷன நாணயக்காரவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டுவர
எதிர்க்கட்சி தீர்மானித்துள்ளது.</p><p></p><h2>கைதிகள் குழுக்களுக்கிடையே மோதல்</h2><p>

சிறைச்சாலைக்குள் கைதிகள் குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதல்களைத் தடுப்பதிலும்,
சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் கைதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதிலும்
நீதி அமைச்சர் தனது தார்மீகப் பொறுப்பையும், அமைச்சுக்குரிய கடமைகளையும் சரிவர
நிறைவேற்றத் தவறிவிட்டார் என்று குற்றம் சாட்டியே எதிர்க்கட்சி இந்தப்
பிரேரணையை முன்வைக்கவுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b65529af-4689-4cb9-b2eb-422825c18adf/26-6a531ba9b953b.webp' />&nbsp;</p><p>
</p><p>
எதிர்க்கட்சியின் இந்த நடவடிக்கைகள் குறித்துப் பதிலளிக்கும் போதே நீதி
அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-</p><p>

"அரசைப் பலவீனப்படுத்தவும், அரசியல் ஆதாயம் தேடவும் சில தரப்பினர் இவ்வாறான
நம்பிக்கையில்லாப் பிரேரணைகளை முன்வைக்கின்றனர்.</p><h2>நம்பிக்கையில்லா பிரேரணை</h2><p> எனக்கு எதிராகக்
கொண்டுவரப்படும் எந்தவொரு நம்பிக்கையில்லாப் பிரேரணையும் நாடாளுமன்றத்தில்
தவிடுபொடியாகும். இவ்வாறான தந்திரங்கள் மூலம் அரசின் செயற்பாடுகளை ஒருபோதும்
முடக்க முடியாது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d8e67fcd-0d0a-4213-86cc-84e7177ac5ed/26-6a531baa67b05.webp' /></p><p>

சிறைச்சாலைகளில் நிலவும் பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு
உண்டு. அந்தப் பொறுப்பிலிருந்து நாங்கள் விலகிச் செல்லவில்லை. இவ்வாறான
விமர்சனங்கள் என்னை மேலும் வலுவான முடிவுகளை எடுப்பதற்கே தூண்டுகின்றன.
</p><p>உண்மைகளை எதிர்கொள்ளத் தயாராக இருக்கும் எனக்கு, இதுபோன்ற அரசியல் சவால்கள்
ஒரு பொருட்டல்ல." - என்றார்.</p><p>

எதிர்க்கட்சியின் குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ள நீதி அமைச்சர்,
சிறைச்சாலைத் துறை மற்றும் நீதி அமைச்சின் எதிர்காலத் திட்டங்கள் குறித்து
நாடாளுமன்றத்தில் விரிவான விளக்கங்களை வழங்கத் தயாராக இருப்பதாகவும் மேலும்
சுட்டிக்காட்டினார்.</p><p></p><p>&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-12T04:44:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vironika</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழர் பகுதியில் துயரை ஏற்படுத்திய ஆசிரியரின் மரணம் ; பாம்பு தீண்டியதில் நேர்ந்த அசம்பாவிதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/teacher-s-death-saddens-tamil-community-1783831381"></link>
            <id>https://jvpnews.com/article/teacher-s-death-saddens-tamil-community-1783831381</id>
            <summary type="text">மட்டக்களப்பு, கொக்கட்டிசோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பண்டாரியாவெளியில் ஆசிரியர் ஒருவர் நேற்று (11)&amp;nbsp; பாம்பு தீண்டியதில் உயிரிழந்துள்ளார். 

பண்டா...</summary>
            <content type="html"><![CDATA[<p style="text-align: justify; ">மட்டக்களப்பு, கொக்கட்டிசோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பண்டாரியாவெளியில் ஆசிரியர் ஒருவர் நேற்று (11)&nbsp; பாம்பு தீண்டியதில் உயிரிழந்துள்ளார்.</p><p style="text-align: justify; "> 

பண்டாரியாவெளியைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான 54 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.</p><p style="text-align: justify; "><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f067d083-8359-44e2-9d57-cc03c0b3f8a9/26-6a531b5695fe7.webp' /></p><p style="text-align: justify; "> 

பண்டாரியா வெளியில் உள்ள தனது வீட்டில் இருந்து வயல் அறுவடை வேலைகளுக்காக சென்ற போது வயலில் இருந்த பாம்பு தீண்டியது. </p><p style="text-align: justify; ">

பின்னர் அவரை மகிழடித்தீவு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கொண்டு செல்லப்பட்டு சென்ற போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். </p><p style="text-align: justify; ">

இவரது சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இன்று (12) ஞாயிற்றுக்கிழமை பிரேத பரிசோதனை செய்யப்பட்ட பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப் படவுள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-12T04:43:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[முழு அரசு மரியாதையுடன் பாடகி எஸ்.ஜானகி உடல் அடக்கம்: கர்நாடக அரசு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/karnataka-gives-state-honours-for-late-s-janaki-1783831328"></link>
            <id>https://news.lankasri.com/article/karnataka-gives-state-honours-for-late-s-janaki-1783831328</id>
            <summary type="text">முழு அரசு மரியாதையுடன் பாடகி எஸ்.ஜானகி உடல் அடக்கம் செய்யப்படும் என்று கர்நாடக அரசு அறிவித்துள்ளது. பாடகி எஸ்.ஜானகி காலமானார்இந்திய திரையுலகில் 40 ஆயி...</summary>
            <content type="html"><![CDATA[<p>முழு அரசு மரியாதையுடன் பாடகி எஸ்.ஜானகி உடல் அடக்கம் செய்யப்படும் என்று கர்நாடக அரசு அறிவித்துள்ளது.</p><h2> பாடகி எஸ்.ஜானகி காலமானார்</h2><p>இந்திய திரையுலகில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ள பிரபல பாடகி எஸ்.ஜானகி தன்னுடைய 88வது வயதில் நேற்று காலமானார்.</p><p>தென்னிந்தியாவின் நைட்டிங்கேல், ஜானகியம்மா, கான கோகிலா மற்றும் இசை அரசி என்று புகழப்படும் பாடகி எஸ்.ஜானகி வயது மூப்பு காரணமாக இயற்கை எய்தியுள்ளார்.</p><p>தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி என 10க்கும் மேற்பட்ட மொழிகளில் பாடி 4 முறை தேசிய விருதுகளை பெற்றுள்ளார்.</p><p></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/eaed4981-7062-4490-bffe-a639b66297ce/26-6a531b21686e1.webp' /></p><h2> முழு அரசு மரியாதை</h2><p>பாடகி எஸ்.ஜானகியின் உடல் மைசூருவில் உள்ள மகாராஜா கல்லூரி மைதானத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.</p><p> பிற்பகல் 3 மணிக்கு அவரது பூத உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கனியனகுந்தி என்ற பகுதியில் இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டு முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட உள்ளது.</p><p> இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் அவரது குடும்பத்தினர் கவனித்து வருகின்றனர்.</p><p> பாடகி ஜானகியின் மறைவுக்கு பொதுமக்கள் ரசிகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-12T04:42:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீதி அமைச்சரை நீக்கிவிட்டு விசாரணையை நடத்துங்கள்!- நளின் பண்டார எம்.பி. இடித்துரைப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/negombo-prison-clash-updates-1783828370"></link>
            <id>https://tamilwin.com/article/negombo-prison-clash-updates-1783828370</id>
            <summary type="text">நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் விவகாரத்தில் அரசு மிகவும் பொறுப்பற்ற முறையில்
செயற்படுகின்றது என்று&amp;nbsp; ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற
உறுப்பினர...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் விவகாரத்தில் அரசு மிகவும் பொறுப்பற்ற முறையில்
செயற்படுகின்றது என்று&nbsp; ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற
உறுப்பினர் நளின் பண்டார குற்றம் சுமத்தியுள்ளார்.&nbsp;</p><p>நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவைப் பதவியிலிருந்து
நீக்காமல் இந்தச் சம்பவம் குறித்து ஒருபோதும் நியாயமான விசாரணையை முன்னெடுக்க
முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.</p><p>

கொழும்பில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைக்
கூறினார்.</p><p></p><h2>போகம்பரை சிறைச்சாலைக்கு எதிர்ப்பு</h2><p>

இந்த விவகாரம் குறித்து மேலும் கருத்து வெளியிட்ட நளின் பண்டார எம்.பி.,
</p><p>
"நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பாக நாம் தீவிர அவதானம்
செலுத்தியுள்ளோம். பொறுப்பற்ற முறையில் செயற்பட்ட நீதி அமைச்சருக்கு எதிராக
எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து நம்பிக்கையில்லாப் பிரேரணையை முன்வைக்கவுள்ளோம்.
எதிர்க்கட்சியில் இருந்தபோது விமர்சனங்களை முன்வைத்தவர்கள், இன்று ஆட்சிக்கு
வந்து அதே பொறுப்பற்ற தன்மையைக் கடைப்பிடிக்கின்றனர்" என்று குறிப்பிட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b89f65f3-8d61-408b-afa0-7853199647e0/26-6a531a1f8db02.webp' /></p><p>
சிறைச்சாலை நெரிசலைக் குறைப்பதற்குப் பதிலாக, வரலாற்றுச் சிறப்புமிக்க
போகம்பரை சிறைச்சாலை வளாகத்தை மீண்டும் சிறைச்சாலையாக மாற்றுவதற்கு அரசு
எடுத்து வரும் தன்னிச்சையான நடவடிக்கைகளுக்கு அவர் தனது கடுமையான எதிர்ப்பைத்
தெரிவித்தார்.</p><p>
</p><p>
இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,
</p><p>
"போகம்பறை சிறைச்சாலை வளாகத்தை முதலீட்டுச் சபையின் கீழ் கொண்டு வந்து,
சுற்றுலா மற்றும் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் மாற்றியமைத்தோம். ஆனால்,
தற்போதைய அரசு மீண்டும் அதனைச் சிறைச்சாலையாக மாற்றுகின்றது.</p><p> ஒரு நாட்டின்
கொள்கை என்பது சிறைச்சாலையைக் குறைப்பதாகவே இருக்க வேண்டும். சிறைச்சாலைகள்
தேவையென்றால் வேறு பொருத்தமான இடங்களைக் கண்டறியலாம். வரலாற்று முக்கியத்துவம்
வாய்ந்த இடங்களை இவ்வாறு பயன்படுத்துவது தவறு"என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/70f4e3f0-8d4b-42f4-9e40-5860a962b667/26-6a531a205f3f2.webp' /></p><p>

தகுதியான அரச அதிகாரிகளை முறையற்ற விதத்தில் இடமாற்றம் செய்வது ஒட்டுமொத்த அரச
பொறிமுறையையும் வீழ்ச்சியடையச் செய்கின்றது என்று சாடிய அவர், "சிறைச்சாலைகள்
ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனியவை நீக்கியமை நியாயமற்றது. அவரை மீண்டும்
பதவியில் அமர்த்துமாறு மனித உரிமைகள் ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளதையும் அரசு
கவனத்தில் கொள்ள வேண்டும். </p><p>மஹர சிறைச்சாலைச் சம்பவத்தின் போது இருந்தவாறே,
இப்போதும் ஜனாதிபதி தலையிட்டு நீதியை நிலைநாட்ட வேண்டும்"&nbsp; என்று வலியுறுத்தினார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-12T04:41:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[மற்றவர்களை நொடியில் ஈர்க்கும் டாப் 3 ராசியினர் இவர்கள் தான்... உங்க ராசியும் இதுவா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/which-zodiac-sings-are-easily-attract-others-1783781597"></link>
            <id>https://manithan.com/article/which-zodiac-sings-are-easily-attract-others-1783781597</id>
            <summary type="text">ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒருவர் பிறக்கும் ராசி மற்றும் நட்சத்திரமானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை மற்றும் விசேட ஆளுமைகளில் அதிக ஆதிக்த்தை கொண்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒருவர் பிறக்கும் ராசி மற்றும் நட்சத்திரமானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை மற்றும் விசேட ஆளுமைகளில் அதிக ஆதிக்த்தை கொண்டிருக்கும் என தொன்று தொட்டு நம்பப்படுகின்றது.</p><p>அந்த வகையில் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்கள் முதல் பார்வையிலே மற்றவர்களை ஈர்க்கும் வசீகரிக்கும் ஆற்றல் கொண்டவர்களாக இருப்பார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/382d6d85-2ff5-46e5-a9bb-9d2ce27ef678/26-6a52644dab1af.webp' /></p><p>இவர்களின் வெளிப்புற அழகு மட்டுமன்றி இவர்களின் குணமும் மிகவும் அழகாகவே இருக்கும்.அப்படி மற்றவர்களை&nbsp; தங்களின் ஈர்க்கும் காந்த ஆற்றலால் நொடியில் தன்வசப்படுத்தும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.&nbsp;</p><p></p><h2>சிம்மம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3169f2ae-d754-4380-b1e3-1ff417343439/26-6a52644e582f1.webp' /></p><p>சிம்ம ராசியில் பிறந்தவர்கள் மற்றவர்களை வசீகரிக்கும் காந்த புண்ணகையை நிச்சயம் பெற்றிருப்பார்கள். அதனால் அவர்கள் அனைவராலும் விரும்பப்படுகின்றார்கள்.</p><p>இவர்களின் வித்தியாசமான ஆளுமை மற்றும் உடல் அழகு ,அழகிய முடி, கவர்ச்சியான முகம் மற்றும் நம்பிக்கையான பேச்சி மற்றவர்களுக்கு இவர்கள் மீது இனம் புரியாத விருப்பை தூண்டுகின்றது.&nbsp;</p><p>ஆயிரம் போர் இருக்கும் கூட்டத்திலும் சிம்ம ராசியினர் தான் கவன ஈர்ப்பாளர்களாக இருப்பார்கள். இவர்கள் இருக்கும் இடத்தில் ஒரு பாசிட்டிவ் ஆற்றல் இருந்துக்கொண்டே இருக்கும்.</p><h2>மிதுனம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1e8e7c75-0f94-4ff3-9f31-4cbbf4dd22b8/26-6a52644f08aa4.webp' /></p><p>மிதுன ராசிக்காரர்கள் இயற்கையாகவே வசீகரிக்கும் அழகை பெற்றிருப்பார்கள்.&nbsp; அவர்களின் நடையும் இயல்பும் தனித்துவதானதாக இருக்கும்.&nbsp;</p><p>இவர்களிடம்&nbsp; மற்றவர்களை கவரும் குணமும்&nbsp; பேச்சாற்றலும் நிச்சயம் இருக்கும்.வசீகரமான தோற்றமும், சிரித்த முகமும் பார்ப்பவர்களை காரணமின்றி கவரும் வகையில் அமைந்திருக்கும்.&nbsp;</p><p>இவர்கள் மற்றவர்களிடம் பழகும் தனித்துவமான பாணியும் பெரும்பாலனவர்களுக்கு முதல் சந்திப்பிலேயே பிடித்துவிடுவதால், இந்த ராசியினர் அனைவருக்கும் பிடித்தவர்களாக இருப்பார்கள்.</p><h2>விருச்சிகம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9e2a963b-9e77-40b3-a980-73abe016d7c1/26-6a52644fabdfc.webp' /></p><p></p><p>பிறப்பிலேயே ரகசிய இயல்புக்கும் மர்மமான குணத்துக்கும் பெயர் பெற்ற இவர்கள் அனைவரையும் எளிதில் ஈர்க்கும் ஒரு வசீகர ஆற்றல் கொண்டவர்களாக இருப்பார்கள்.&nbsp;</p><p>பார்ப்பதற்கு இவர்கள் அமைதியாக இருந்தாலும், வெறும் பார்வையிலேயே மற்றவர்களின் மனங்களில் மறக்க முடியாத அளவுக்கு ஒரு வேதியல் மாற்றத்தை கொடுத்துவிடுவார்கள்.</p><p>இவர்களின் பார்வையில் இயல்பாகவே ஒரு காந்த ஆற்றல் நிச்சயம் இருக்கும். இந்த ராசியினர் மனதில் என்ன இருக்கின்றது என்பதை அறிந்துக்கொள்வதற்காகவே இவர்களை சுற்றி ஒரு கூட்டம் இருந்துக்கொண்டே இருக்கும்.</p><p><b>இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. ( மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).</b></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b>&nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-12T04:33:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[டொராண்டோவில் திட்டமிட்டு நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு: 3 சந்தேகநபர்களுக்கு பொலிஸார் வலைவீச்சு!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/toronto-police-victim-in-targeted-triple-shooting-1783830051"></link>
            <id>https://canadamirror.com/article/toronto-police-victim-in-targeted-triple-shooting-1783830051</id>
            <summary type="text">கனடாவின் டொராண்டோ நகரில் உள்ள நோர்த் யார்க் பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 22 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் டொராண்டோ நகரில் உள்ள நோர்த் யார்க் பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 22 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.</p><p> 
இச்சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று சந்தேகநபர்களை டொராண்டோ பொலிஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.</p><p>
வெள்ளிக்கிழமை இரவு 11 மணியளவில் ஜேன் ஸ்ட்ரீட் மற்றும் ஷெப்பர்ட் அவென்யூ வெஸ்ட் பகுதியில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக பொலிஸாருக்கு பல அழைப்புகள் கிடைத்துள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2181a255-6f4c-402d-b9ed-3495f230f67e/26-6a531625964ca.webp' /></p><p>
</p><p>பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்தபோது, 20 மதிக்கத்தக்க மூன்று இளைஞர்கள் துப்பாக்கிக் குண்டு காயங்களுடன் கண்டறியப்பட்டனர்.</p><p> 
அவர்களில் 22 வயதுடைய அப்திஹமீம் ஆதன் என்ற இளைஞர் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 
இவர் 2026 ஆம் ஆண்டில் டொராண்டோவில் பதிவான 18 ஆவது கொலைச் சம்பவம் இதுவாகும்.
</p><p>காயமடைந்த மற்ற இரு இளைஞர்களும் பலத்த காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். தற்போது அவர்களின் நிலைமை சீராக உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>
இந்தத் துப்பாக்கிச் சூடானது திட்டமிட்டு நடத்தப்பட்ட ஒரு இலக்கு வைக்கப்பட்ட தாக்குதல் என முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸ் அதிகாரி சான்ட்ரா அர்ருடா தெரிவித்துள்ளார். </p><p>
எனினும், இதற்கான காரணம் என்ன என்பது குறித்து இன்னும் கண்டறியப்படவில்லை.
கருப்பு நிற ஆடைகள் மற்றும் முகமூடி அணிந்திருந்த மூன்று ஆண் சந்தேகநபர்கள், திருடப்பட்ட கருப்பு நிற ஹோண்டா சிவிக் காரில் சம்பவ இடத்திலிருந்து தப்பியோடியுள்ளனர்.</p><p> 
இந்த சந்தேகநபர்களின் கார் சனிக்கிழமை அதிகாலை 3 மணியளவில் பிராம்ப்டன் பகுதியில் தீப்பிடித்த நிலையில் கண்டறியப்பட்டுள்ளது. 
இக்கார் சில நாட்களுக்கு முன்பு நோர்த் யார்க் பகுதியில் திருடப்பட்ட ஒன்று என தெரிவிக்கப்படுகின்றது.</p><p>
சம்பவ இடத்தில் வசிக்கும் செவிலியர் ஒருவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், சுமார் 6 துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்கள் கேட்டதாகவும், பின்னர் உதவி கேட்டு அலறிய சத்தம் கேட்டு தான் வெளியே வந்து காயமடைந்தவர்களுக்கு உதவ முயன்றதாகவும் தெரிவித்துள்ளார்.
</p><p>இந்தக் கொடூரக் குற்றத்துடன் தொடர்புடையவர்களைக் கைது செய்ய பொலிஸார் அனைத்து வளங்களையும் பயன்படுத்தி தீவிர விசாரணைகளை முடுக்கிவிட்டுள்ளனர். </p><p>
சம்பவ இடத்தை கடந்து சென்ற வாகனங்களின் டேஷ்கேம் காட்சிகள் அல்லது தகவல்கள் ஏதேனும் இருந்தால், உடனடியாக தமக்கு வழங்கி உதவுமாறு டொராண்டோ பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-12T04:32:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[டொராண்டோ 'சல்சா' திருவிழாவில் துப்பாக்கிச் சூடு: இருவர் பலி, 6 பேர் காயம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/two-people-are-dead-as-salsa-festival-1783821589"></link>
            <id>https://canadamirror.com/article/two-people-are-dead-as-salsa-festival-1783821589</id>
            <summary type="text">கனடாவின் டொராண்டோ நகரில் நடைபெற்ற புகழ்பெற்ற ‘சல்சா ஆன் செயின்ட் கிளயர்’ வீதித் திருவிழாவில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இருவர் உயிர...</summary>
            <content type="html"><![CDATA[<p>கனடாவின் டொராண்டோ நகரில் நடைபெற்ற புகழ்பெற்ற ‘சல்சா ஆன் செயின்ட் கிளயர்’ வீதித் திருவிழாவில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஆறு பேர் காயமடைந்துள்ளதாக டொராண்டோ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>செயின்ட் கிளெயர் அவென்யூ வெஸ்ட் மற்றும் ஆர்லிங்டன் அவென்யூ பகுதிக்கு அருகில் இந்த கொடூரச் சம்பவம் அரங்கேறியுள்ளது.
</p><p>சனிக்கிழமை இரவு 8:12 மணியளவில் துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து பொலிஸாருக்கு அழைப்பு கிடைத்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3d51d9a4-0a96-49d8-b281-83759f0c38cf/26-6a52f517c68e8.webp' /></p><p> </p><p>
சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், துப்பாக்கிக் குண்டு காயங்களுடன் ஐந்து பேரைக் கண்டறிந்தனர். அவர்களில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.
</p><p>விசாரணைகள் தொடர்ந்த நிலையில், இரவு 9:34 மணியளவில் காயமடைந்த ஆறாவது நபர் ஒருவரையும் பொலிஸார் கண்டறிந்துள்ளனர்.</p><p> எனினும், காயமடைந்தவர்களின் நிலைமை குறித்த உடனடி விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.
சம்பவ இடத்தை பொலிஸார் தற்போது தமது பாதுகாப்புக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். </p><p>எனினும், விசாரணைகள் தொடர்வதால் அப்பகுதியில் பெருமளவிலான பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் அந்தப் பகுதியைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
</p><p> துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் குறித்த விபரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. அவர் அப்பகுதியிலிருந்து தப்பியோடியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. </p><p>அங்கிருந்த பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் தகவல்களின் அடிப்படையில் பொலிஸார் தீவிர தேடுதல் வேட்டையை ஆரம்பித்துள்ளனர்.
</p><p>திருவிழாவில் மக்கள் மகிழ்ச்சியாக நடனமாடிக் கொண்டிருந்த போதே இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. </p><p>இதனால் அங்கு பெரும் பதற்றமும் பயமும் நிலவியதுடன், திருவிழா உடனடியாக நிறுத்தப்பட்டு மக்கள் வீடுகளுக்குப் போகுமாறு பொலிஸாரால் பணிக்கப்பட்டனர்.
'</p><p>சல்சா ஆன் செயின்ட் கிளெயர்' திருவிழா என்பது கனடாவின் முதன்மையான 'இலத்தீன் அமெரிக்க கலாசாரக் கொண்டாட்டம்' ஆகும். 
இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த வருடாந்த திருவிழாவில் ஒவ்வொரு வருடமும் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்துகொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.&nbsp; &nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-12T04:31:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[2 நாட்களில் இதயம் முரளி திரைப்படம் செய்துள்ள வசூல், எவ்வளவு தெரியுமா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/idhayam-murali-2-days-box-office-1783830263"></link>
            <id>https://cineulagam.com/article/idhayam-murali-2-days-box-office-1783830263</id>
            <summary type="text">இதயம் முரளிதமிழ் சினிமாவில் தனக்கென்று தனி இடத்தை பிடித்துள்ள நடிகர்களில் ஒருவர் அதர்வா. இவர் நடிப்பில் இந்த ஆண்டு பராசக்தி திரைப்படம் முதலில் வெளியான...</summary>
            <content type="html"><![CDATA[<h2>இதயம் முரளி</h2><p>தமிழ் சினிமாவில் தனக்கென்று தனி இடத்தை பிடித்துள்ள நடிகர்களில் ஒருவர் அதர்வா. இவர் நடிப்பில் இந்த ஆண்டு பராசக்தி திரைப்படம் முதலில் வெளியானது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d8d461a1-aabf-43af-b5d2-725512883863/26-6a5316fc24fa7.webp' /></p><p>அதை தொடர்ந்து இவர் ஹீரோவாக நடித்து வெளிவந்துள்ள திரைப்படம்தான் இதயம் முரளி. 

இப்படத்தை அறிமுக இயக்குநர் ஆகாஷ் பாஸ்கரன் இயக்கி, தயாரித்திருந்தார். இப்படத்தில் ப்ரீத்தி முகுந்தன், கயாடு லோஹர், சுதாகர், பகத் பாசில், நட்ராஜ், டிராவிட், ரக்ஷன், நிஹாரிகா, ஏஞ்சலின் ஆகியோர் நடித்துள்ளனர்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/73febe57-d748-4d86-8f84-4c868d2ac3e0/26-6a5316faabcb4.webp' /></p><p></p><p>தமன் இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தது மட்டுமல்லாமல், இசையமைப்பாளராகவும் பட்டையை கிளப்பி இருந்தார். இப்படத்திற்கு மிகப்பெரிய பலமாக இவருடைய பாடல்களும், பின்னணி இசையும் அமைந்தன.</p><h2>வசூல்&nbsp;</h2><p> 

கடந்த 10-ஆம் தேதி திரைக்கு வந்த இதயம் முரளி திரைப்படம் கலவையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a5efca03-975f-47da-b767-45d653908995/26-6a5316fb6ad05.webp' /></p><p>இந்த நிலையில், 2 நாட்களில் இப்படம் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 2 நாட்களில் இதயம் முரளி திரைப்படம் உலகளவில் ரூ. 6 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-12T04:26:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[கருணா - டக்ளஸ் - தேசபந்து - ஞானசார தேரர் உள்ளிட்டோருக்கு சிறப்பு பாதுகாப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/publication-government-s-special-protection-list-1783820255"></link>
            <id>https://ibctamil.com/article/publication-government-s-special-protection-list-1783820255</id>
            <summary type="text">சட்ட முறைக்கு அமைவாக காவல்துறை பாதுகாப்புக்குத் தகுதியுள்ள பதவிகளுக்கு மேலதிகமாக 13 முக்கிய அரசியல்வாதிகளுக்கு&amp;nbsp; சிறப்பு பாதுகாப்பானது தற்போதைய அர...</summary>
            <content type="html"><![CDATA[<p>சட்ட முறைக்கு அமைவாக காவல்துறை பாதுகாப்புக்குத் தகுதியுள்ள பதவிகளுக்கு மேலதிகமாக 13 முக்கிய அரசியல்வாதிகளுக்கு&nbsp; சிறப்பு பாதுகாப்பானது தற்போதைய அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ளது.</p><p>தற்போதைய அரசாங்கம், கந்த காலங்களில் முக்கியப் பிரமுகர்களுக்குப் பாதுகாப்பு வழங்கி வந்த காவல்துறை அதிகாரிகளைப் பெருமளவில் நீக்கிய நிலையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p><p>அதன்படி, எதிர்க்கட்சி உறுப்பினர்களில் கபீர் ஹாஷிம், எஸ். சிறீதரன், ரஞ்சித் மத்தும பண்டார, எச்.எல். தர்மசேன, உள்ளிட்ட எம். பிக்களுக்கு அத்தகைய பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>முக்கியப் பிரமுகர் பாதுகாப்பு</h2><p>மேலும், முன்னாள் சபாநாயகர் அசோக சப்புமல் ரன்வல, சட்டத்தரணி சரத் குமார, அஜித் சாந்த பிரியதர்ஷனா, ருவன் விஜேவீர, திலங்க யு. கமகே, சுனில் பியான்வல, மற்றும் தினேஷ் ஹேமந்தா ஆகியோருக்கு மட்டுமே ஆளும் கட்சியிலிருந்து முக்கியப் பிரமுகர் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/152adb0a-1068-45f5-80e6-af9acf7b1ff3/26-6a52efe14e931.webp' /></p><p>
</p><p>
மேலும், முன்னாள் சபாநாயகர் கரு ஜெயசூரிய, வினாயகமூர்த்தி முரளிதரன்மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோருக்கும் முக்கியப் பிரமுகர் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.</p><p>

மேலும், முன்னாள் காவல்துறைத் தலைவர்கள் என்.கே. இலங்கக்கூன், புஜித் ஜயசுந்தர, தேசபந்து தென்னக்கோன் மற்றும் முன்னாள் சிறைச்சாலைகள் ஆணையாளர் துஷார உபுல்தெனிய ஆகியோருக்கும் இந்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>ஞானசார தேரர்</h2><p>
</p><p>
பொதுபல பால சேனா கட்சியின் தேசிய அமைப்பாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கும் சிறப்பு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a7daf4ed-c78c-47a5-b7ca-78a2540290a1/26-6a52efe206a83.webp' /></p><p>இதற்கிடையில், குற்றத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகளின் பாதுகாப்பிற்காகவும் சிறப்பு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது என பொதுப் பாதுகாப்பு பிரதி அமைச்சரால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஓர் ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக மேட்படி விடயங்களை உள்ளடக்கி தென்னிலங்கையின் சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.</p><p>வி.பி.ஏ பாதுகாப்பு வழங்கப்பட்ட நபர்கள் யார் என்று எதிர்க்கட்சிப் நாடாளுமன்ற உறுப்பினர் கவிந்த ஜயவர்தன கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் அவர் இந்த ஆவணத்தை சமர்ப்பித்ததாக தெரிவிக்கப்படுகிறது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> IBC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-12T04:23:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இரகசிய தகவலில் கொழும்பில் சிக்கிய பெண் - மீட்கப்பட்ட பொருட்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/woman-arrested-in-colombo-with-drugs-1783829255"></link>
            <id>https://tamilwin.com/article/woman-arrested-in-colombo-with-drugs-1783829255</id>
            <summary type="text">வத்தளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் பெருமளவு போதைப்பொருட்களுடன்&amp;nbsp;பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று (11) பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு...</summary>
            <content type="html"><![CDATA[<p>வத்தளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் பெருமளவு போதைப்பொருட்களுடன்&nbsp;பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். </p><p>நேற்று (11) பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் நடத்தப்பட்ட சோதனையின் போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p></p><h2>பொலிஸார் விசாரணை</h2><p> 

சந்தேகநபரான பெண் மட்டக்குளிப் பகுதியைச் சேர்ந்த 36 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/125d6992-a71f-450c-b955-0cc7d554c03d/26-6a5313094e883.webp' /></p><p> </p><p>இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து 1 கிலோகிராம் 140 கிராம் ஐஸ் போதைப்பொருளும், 538 கிராம் ஹெரோயின் போதைப்பொருளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.</p><p> 

இச்சம்பவம் தொடர்பில் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p> </p><p></p>]]></content>
            <updated>2026-07-12T04:07:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹோர்முஸ் நீரிணையை மூடிய ஈரான் : புதிய தாக்குதல்களை ஆரம்பித்த அமெரிக்கா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/us-launches-strike-as-iran-closes-strait-of-hormuz-1783827145"></link>
            <id>https://ibctamil.com/article/us-launches-strike-as-iran-closes-strait-of-hormuz-1783827145</id>
            <summary type="text">ஹோர்முஸ் நீரிணை வழியாகச் சென்ற கப்பல் ஒன்றின் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, ஈரான் மீது புதிய கட்டத் தாக்குதல்களை தொடங்யுள்ளதாக அமெரிக்கா...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹோர்முஸ் நீரிணை வழியாகச் சென்ற கப்பல் ஒன்றின் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, ஈரான் மீது புதிய கட்டத் தாக்குதல்களை தொடங்யுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p>

அங்கீகரிக்கப்பட்ட பாதையில் இருந்து விலகிச் சென்றதாலும், அதன் கண்காணிப்பு அமைப்புகளை அணைத்துவிட்டுச் சென்றதாலும் ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படை அந்த கப்பலைத் தாக்கியுள்ளதாக அந்நாட்டு அரசு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.</p><p>அத்துடன் ஹோர்முஸ் நீரிணை மறு அறிவிப்பு வரும் வரை மூடப்படுவதாக ஈரான் அறிவித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><p></p><h2>அமெரிக்க மத்திய கட்டளை மையம்</h2><p>சைப்ரஸ் நாட்டைச் சேர்ந்த கப்பல் ஒன்றின் மீது ஈரான் "வெளிப்படையாகத் தாக்குதல்" நடத்தியதைத் தொடர்ந்து, "இந்த வாரத்தின் மூன்றாவது சுற்றுத் தாக்குதலை" நடத்தியுள்ளதாக அமெரிக்க மத்திய கட்டளை மையம் (Centcom) தெரிவித்துள்ளது.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">At 7:15 p.m. ET today, U.S. Central Command forces began launching the third round of strikes this week against Iran after Islamic Revolutionary Guard Corps forces blatantly attacked M/V GFS Galaxy, a Cyprus-flagged container ship transiting the Strait of Hormuz. A civilian crew…</p>&mdash; U.S. Central Command (@CENTCOM) <a href="https://x.com/CENTCOM/status/2076089130857951463?ref_src=twsrc%5Etfw">July 11, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p> 

இந்தத் தாக்குதலால் கப்பலின் இயந்திர அறை கடுமையாகப் பாதிக்கப்பட்டு, அது பயணத்தைத் தொடர முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும், ஒரு மாலுமி காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>&nbsp;</p><h2>ஈரானின் தவறான முடிவு</h2><p>அமெரிக்க பாதுகாப்புத் துறை செயலாளர் பீட் ஹெக்செத் தனது சமூக வலைதளப் பதிவில், வணிகக் கப்பல்கள் மீதான முந்தைய தாக்குதல்களுக்கு ஈரான் பொறுப்பேற்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டும், மீண்டும் அதே தவறைச் செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.</p><p>அத்துடன் ஈரான் தவறான முடிவை எடுத்துவிட்டது, அதற்கான விளைவை இப்போது சந்திக்கிறது என்றும் அவர் எச்சரித்துள்ளார்.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Iran made a poor choice. Now they pay. <a href="https://t.co/8m4fEfgrXv">https://t.co/8m4fEfgrXv</a></p>&mdash; Pete Hegseth (@PeteHegseth) <a href="https://x.com/PeteHegseth/status/2076091042693071025?ref_src=twsrc%5Etfw">July 11, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><p>முன்னதாக, ஒரு வணிகக் கப்பல் மீது எச்சரிக்கையாகக் கப்பல் ஏவுகணையைத் தாங்கள் ஏவியதாகவும், பலமுறை எச்சரித்தும் கேட்காததால் அந்த கப்பல் தடுத்து நிறுத்தப்பட்டதாகவும் ஈரான் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.</p><p> 

மேலும், ஹோர்முஸ் நீரிணையை மூடியதால் அமெரிக்கா மேற்கொள்ளும் எந்தவொரு "ஆக்கிரமிப்புக்கும்" கடும் பதிலடி கொடுக்கப்படும் என்றும், பிராந்தியத்தில் உள்ள அமெரிக்கத் தளங்கள் இலக்கு வைக்கப்படும் என்றும் ஈரான் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-12T03:59:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[என்னை ஏமாற்றியிருக்கிறார்கள்.. ஒரு லட்சம் ரூபாய் கொடுங்கள் என சொல்வார்கள்! நடிகை சுவாசிகா கூறிய அதிர்ச்சியூட்டும் விஷயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/actress-swasika-talk-about-fraudulent-managers-1783828553"></link>
            <id>https://viduppu.com/article/actress-swasika-talk-about-fraudulent-managers-1783828553</id>
            <summary type="text">லப்பர் பந்து, மாமன், கருப்பு, நூறு சாமி ஆகிய படங்களில் நடித்து பிரபலமான நட்சத்திரமாக ஜொலித்துக்கொண்டிருக்கிறார் சுவாசிகா. இவர் சமீபத்தில் அளித்த பேட்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>லப்பர் பந்து, மாமன், கருப்பு, நூறு சாமி ஆகிய படங்களில் நடித்து பிரபலமான நட்சத்திரமாக ஜொலித்துக்கொண்டிருக்கிறார் சுவாசிகா. இவர் சமீபத்தில் அளித்த பேட்டி இணையத்தில் வைரலாகி வருகிறது.
</p><p>
இந்த பேட்டியில் அவர் கூறியதாவது, "அங்கே போகலாம், இங்கே போகலாம் என பல மேனேஜர்கள் என்னை ஏமாற்றியிருக்கிறார்கள். அப்போதெல்லாம் சில இயக்குநர்களின் பெயர் மட்டும்தான் கிடைக்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f5a50318-ffa6-49dd-945a-f36833a31854/26-6a53104cb9245.webp' /></p><p> ஒரு லட்சம் ரூபாய் கொடுங்கள் என சொல்வார்கள்.

அம்மா உடனே அனைத்து நகைகளையும் கழற்றி தந்துவிடுவார். பலமுறை அப்படி நடந்துள்ளது. அவர்கள் அழைத்து செல்லும் இடங்களை பார்த்தால் அவ்வளவு பயமாக இருக்கும். அப்போதுதான் அம்மா என்னிடம் சொன்னார், இனிமேல் சினிமா வேண்டாம் என்று. </p><p>பிறகு மலையாளத்துக்கே சென்று முயற்சி செய்தேன். 

எப்போதும் என் மீது நம்பிக்கை இருந்தது. மிளகாய் ஸ்பிரே இல்லாமல் நான் எங்கும் போனதில்லை. ஒருநாள்கூட சினிமாவிலிருந்து பின்வாங்க நினைத்ததே இல்லை" என கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d4c8fb16-59c2-4b77-987c-1e34bea152b8/26-6a53104d6e45d.webp' /></p>]]></content>
            <updated>2026-07-12T03:56:08+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Fathima</name>
            </author>
            <title type="text"><![CDATA[வியட்நாம் படகு விபத்து: பிறந்தநாளில் உயிரிழந்த சோகம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/vietnam-boat-accident-updates-1783828068"></link>
            <id>https://ibctamilnadu.com/article/vietnam-boat-accident-updates-1783828068</id>
            <summary type="text">வியட்நாமில் சுற்றுலா பயணிகள் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 15 இந்தியர்கள் உயிரிழந்தனர், இவர்களில் 10 பேர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள்.

கட...</summary>
            <content type="html"><![CDATA[<p>வியட்நாமில் சுற்றுலா பயணிகள் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 15 இந்தியர்கள் உயிரிழந்தனர், இவர்களில் 10 பேர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள்.</p><h2>

கடைசி வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ்
</h2><p>
அவர்களில் முருகபிரபு என்பவரும் ஒருவர், செல்போன் கடை நடத்தி வருகிறார்.</p><p>

சிறப்பாக செயல்பட்டதால் செல்போன் நிறுவனம் சார்பில் வியட்நாம் சுற்றுலாவுக்கு அனுப்பி வைத்துள்ளனர், அவருடன் அவரது நண்பர் நிர்மல்குமாரும் சென்றிருந்தார்.
</p><p>
அங்கே படகு சவாரி சென்ற போது விபத்தில் சிக்கினார், இறப்பதாக முன்பாக காலை சுற்றுலா சென்ற இடங்களை வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் வைத்தார், அதுவே அவரது கடைசி ஸ்டேட்டஸாக அமைந்துவிட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/221b6bf9-ea4a-4b42-b0e7-08bddbf8473e/26-6a530f1be3486.webp' /><br></p><p>
</p><h2>
பிறந்த நாளில் மரணம்
</h2><p>
தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த தொழிலதிபர் செந்தில் குமார் என்பவரும் ஒருவர், தன்னார்வ தொண்டு நிறுவனத்தில் உறுப்பினர் என்பதுடன் சமூக சேவைகளிலும் ஈடுபட்டு வந்துள்ளார், இவருக்கு நேற்று பிறந்தநாள் ஆகும்.
</p><h2>
திருச்சியை சேர்ந்த 3 பேர்</h2><p>

படகு கவிழ்ந்து உயிரிழந்தவர்களில் திருச்சியை சேர்ந்த அழகுராஜன், பாலாஜி மற்றும் ஷேக் அப்துல்லா, அழகுராஜன் செல்போன் மாவட்ட விற்பனை மேலாளராகவும், பாலாஜி செல்போன் விநியேகஸ்தராகவும், ஷேக் அப்துல்லா செல்போன் விற்பனை கடையும் நடத்தியும் வந்துள்ளார்.&nbsp;&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c28c74e0-ddef-495a-98c2-b8654814c745/26-6a530f1b3f242.webp' /><br></p>]]></content>
            <updated>2026-07-12T03:51:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[நடிகை ப்ரீத்தி முகுந்தனின் அழகின் ரகசியம் என்ன தெரியுமா.. இதோ பாருங்க]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/actress-preity-mukhundhan-beauty-secret-1783827995"></link>
            <id>https://cineulagam.com/article/actress-preity-mukhundhan-beauty-secret-1783827995</id>
            <summary type="text">ப்ரீத்தி முகுந்தன்முட்டு Mu2, ஆச கூட போன்ற ஆல்பம் பாடல்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ப்ரீத்தி முகுந்தன். இதன்பின், கவின் நடிப்பில் வ...</summary>
            <content type="html"><![CDATA[<h2>ப்ரீத்தி முகுந்தன்</h2><p>முட்டு Mu2, ஆச கூட போன்ற ஆல்பம் பாடல்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ப்ரீத்தி முகுந்தன். இதன்பின், கவின் நடிப்பில் வெளிவந்த ஸ்டார் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/febf3acf-72ed-415d-a225-c24e8584853b/26-6a530e1ec8f3e.webp' /></p><p>இதை தொடர்ந்து இவர் நடிப்பில் வெளிவந்த <a href="https://www.youtube.com/watch?v=Nda6QgPCp-Y" target="_blank">பிளாஸ்ட் </a>திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. அதிலும் இப்படத்தில் ஆக்ஷன் ஹீரோயினாக நடித்து பட்டையை கிளப்பியிருந்தார். பிளாஸ்ட் திரைப்படம் தமிழ் சினிமாவில் இவருக்கு நல்ல திருப்புமுனையாக அமைந்த நிலையில், அடுத்ததாக இவர் நடிப்பில் வெளியான இதயம் முரளி படம் கலவையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6e13467b-223e-4539-ab3c-cfb2f7e919ab/26-6a530e1f7dfbc.webp' /></p><p></p><h2>அழகின் ரகசியம்</h2><p> </p><p>

தென்னிந்திய சினிமாவில் வளர்ந்து வரும் முக்கிய நடிகைகளில் ஒருவராக இருக்கும் ப்ரீத்தி முகுந்தன் எப்படி இவ்வளவு அழகாக இருக்கிறார் என்பது ரசிகர்கள் பலருக்கும் கேள்வியாக இருந்து வருகிறது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c9666a03-96a0-461e-99f4-5300a6eda085/26-6a530e2030ec6.webp' /></p><p>இந்த நிலையில், தனது அழகின் ரகசியம் குறித்து நடிகை ப்ரீத்தி வெளிப்படையாக கூறியுள்ளார். 

"நல்ல தூக்கம், போதுமான அளவு தண்ணீர் குடிப்பது, மனதை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்துக்கொள்வது ஆகியவையே என் அழகுக்கும் ஆரோக்கியத்திற்கும் காரணம்; எப்போதுமே தூக்கத்தை இழக்காதீர்கள். நல்ல வாழ்க்கைக்கு நல்ல தூக்கம் மிகவும் அவசியம்" என கூறியுள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-12T03:46:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையில் பதிவாகியுள்ள மாற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/gold-prices-record-decline-in-international-market-1783823156"></link>
            <id>https://tamilwin.com/article/gold-prices-record-decline-in-international-market-1783823156</id>
            <summary type="text">சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை இன்று (12) சற்று வீழ்ச்சியைப் பதிவுசெய்துள்ளது.

இதன்படி, ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 4,108.44 அமெரிக்க டொலராக பதி...</summary>
            <content type="html"><![CDATA[<p>சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை இன்று (12) சற்று வீழ்ச்சியைப் பதிவுசெய்துள்ளது.</p><p>

இதன்படி, ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 4,108.44 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.</p><p>
</p><p>
அதேவேளை, வெள்ளி ஒரு அவுண்ஸ் விலை 59.7 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.</p><p></p><h2>இலங்கை நிலவரம்&nbsp;</h2><p>இதன்படி, இலங்கையில் இன்று (12) பதிவாகியுள்ள தங்கவிலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 373,300 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e10d1ec9-86ae-4ead-9a6e-d40642e70ee0/26-6a530c82c02c8.webp' />&nbsp;</p><p>

22 கரட் தங்கம் பவுண் ஒன்று 342,200 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-12T03:38:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹார்முஸ் விவகாரம்... ஈரானுக்கு சாதகமான முடிவெடுக்க இருக்கும் ஐரோப்பா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/europe-considering-hormuz-fees-1783807890"></link>
            <id>https://news.lankasri.com/article/europe-considering-hormuz-fees-1783807890</id>
            <summary type="text">ஹார்முஸ் நீரிணையைப் பயன்படுத்தும் கப்பல்களுக்குத் தன்னார்வ வழிசெலுத்தல் சேவைக் கட்டணங்களை அறிமுகப்படுத்தக்கூடிய திட்டங்களை ஐரோப்பிய நாடுகள் ஆராய்ந்து ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஹார்முஸ் நீரிணையைப் பயன்படுத்தும் கப்பல்களுக்குத் தன்னார்வ வழிசெலுத்தல் சேவைக் கட்டணங்களை அறிமுகப்படுத்தக்கூடிய திட்டங்களை ஐரோப்பிய நாடுகள் ஆராய்ந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.</p><h2>பேரழிவை ஏற்படுத்தும்</h2><p>
</p><p>சுங்கக் கட்டணங்கள் கட்டாயமற்றவையாகவும், ஐக்கிய நாடுகள் சபையின் கடல்சார் அமைப்பின் ஆதரவைப் பெற்றவையாகவும் இருக்கும் பட்சத்தில் ஈரானின்&nbsp;கட்டணம் வசூலிக்கும் திட்டம் சாத்தியம் என்றே கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5d5f19fd-718b-4184-a6dc-65cee9e73056/26-6a52c2a771d68.webp' /></p><p>
</p><p>மத்திய கிழக்கில் இஸ்ரேல் உருவாக்கியுள்ள மிக ஆபத்தான நெருக்கடியைத் தொடர்ந்து, உலகின் மிக முக்கியமான கப்பல் போக்குவரத்துப் பாதைகளில் ஒன்றில் நிலவும் பதற்றங்களுக்கு நீண்டகாலத் தீர்வைக் காண நிபுணர்கள் தரப்பு முயன்று வரும் நிலையில்,&nbsp;ஐரோப்பிய நாடுகளால் இந்த முன்மொழிவு பரிசீலிக்கப்பட்டு வருகிறது. </p><p>இந்த நிலையில், ஹார்முஸ் நீரிணை வழியாகச் செல்வதற்கு கட்டாயக் கட்டணம் விதிப்பது பேரழிவை ஏற்படுத்தும் என்று பிரித்தானியாவின் துணைப் பிரதமர் டேவிட் லாமி எச்சரித்துள்ளார்.</p><p></p><p> </p><p>இருப்பினும், மலாக்கா நீரிணை மற்றும் ஆங்கிலக் கால்வாய் உள்ளிட்ட பல சர்வதேச நீர்வழிகளில், குறிப்பிட்ட கப்பல் போக்குவரத்து தொடர்பான சேவைகளுக்குக் கட்டணம் வசூலிக்கும் நடைமுறை ஏற்கனவே ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது என்பதை பிரித்தானிய அரசாங்கத்தின் சில உறுப்பினர்கள் ஒப்புக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. </p><p>இந்த நிலையில், பிரித்தானியாவின் சட்ட நிபுணர்களுடன் இணைந்து, மலாக்கா நீரிணையில் பின்பற்றப்படும் கூட்டுறவு முறையை முன்மாதிரியாகக் கொண்ட ஒரு நிர்வாகத் திட்டத்தை ஓமன் உருவாக்கி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.</p><h2>ஓமனுக்குப் பயணம்</h2><p> </p><p>மேலும், கட்டாயப் போக்குவரத்துக்கட்டணங்களுக்குப் பதிலாகக் கடல்சார் சேவைகளுக்கான தன்னார்வப் பங்களிப்புகளை அடிப்படையாகக் கொண்ட செயல்முறையை விளக்குவதற்காக, சட்ட நிபுணர்களை ஈரானுக்கு அனுப்பவும் ஓமன் நிர்வாகம் முன்வந்துள்ளது. </p><p>இதனிடையே, ஹார்முஸ் நீரிணையின் எதிர்காலம் மற்றும் கடல்சார் பாதுகாப்பு குறித்த பேச்சுவார்த்தைகளுக்காக, ஈரான் வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அராக்சி ஓமனுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3d6ccc46-30fd-4b22-8132-554f3223c980/26-6a52c2a85d748.webp' /></p><p> </p><p>அந்த நீரிணையில் கப்பல் போக்குவரத்திற்கு ஏற்ற பெரும்பாலான நீர்ப்பகுதிகளை ஓமன் தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளதுடன், கட்டாயக் கட்டண முறை எதற்கும் எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது. </p><p>மட்டுமின்றி, முக்கியத்துவம் வாய்ந்த நீர்வழியின் மீது ஈரானின் அதிகாரத்தை விரிவுபடுத்தக்கூடிய முன்மொழிவுகள் குறித்தும் கத்தார் நிர்வாகமும் கவலை தெரிவித்துள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-12T03:27:06+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Thiru</name>
            </author>
            <title type="text"><![CDATA[கனடாவின் டொராண்டோவில் துப்பாக்கிச்சூடு: 2 பேர் உயிரிழப்பு 3 பேர் காயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/canada-toronto-fatal-shooting-incident-2-dead-1783826795"></link>
            <id>https://news.lankasri.com/article/canada-toronto-fatal-shooting-incident-2-dead-1783826795</id>
            <summary type="text">டொராண்டோவில் நடந்த திடீர் துப்பாக்கிச் சூடு தாக்குதல் சம்பவத்தில் இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர். கனடாவில் துப்பாக்கி சூடுசனிக்கிழமை இரவு டொராண்டோவின்...</summary>
            <content type="html"><![CDATA[<p>டொராண்டோவில் நடந்த திடீர் துப்பாக்கிச் சூடு தாக்குதல் சம்பவத்தில் இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர்.</p><h2> கனடாவில் துப்பாக்கி சூடு</h2><p>சனிக்கிழமை இரவு டொராண்டோவின் பரபரப்பான வணிகப் பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.</p><p> மேலும் 3 பேர் வரை காயமடைந்துள்ளனர். இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் குற்றவாளியை தீவிரமாக தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.</p><p>டொராண்டோ வணிகப் பகுதியில் துப்பாக்கி சூடு தாக்குதல் நடந்த உடனே பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்து டொராண்டோ காவல்துறை X தளத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தது.</p><p style="margin-left: 25px;"><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9402fea4-6dfb-4515-9b09-3226e1c09a70/26-6a53096c46786.webp' /></p><p> அதில், மக்கள் தாக்குதல் நடந்த பகுதியில் இருந்து விலகி இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டு இருந்தது.</p><p></p><p> மேலும் சிறிது நேரத்தில் சம்பந்தப்பட்ட இடத்தை பொலிஸார் தங்கள் கட்டுப்பாட்டிற்கு கீழ் கொண்டு வந்து விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.</p><p> உள்ளூர் ஊடகம் வழங்கிய தகவலின் படி, சல்சா திருவிழா நடைபெற்று கொண்டிருந்த இடத்தில் இந்த தாக்குதல் சம்பவமானது அரங்கேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp;<br></td></tr></tbody></table><p>&nbsp;<br></p>]]></content>
            <updated>2026-07-12T03:26:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்து சமுத்திரத்தை நெருங்கும் எல்நினோ! பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள முக்கிய அறிவுறுத்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/el-nino-approaching-indian-ocean-advice-to-public-1783824704"></link>
            <id>https://tamilwin.com/article/el-nino-approaching-indian-ocean-advice-to-public-1783824704</id>
            <summary type="text">மத்திய பசுபிக் பிராந்திய கடற் பகுதிகளில் இருந்து இந்து சமுத்திர கடல்
பிராந்தியத்திற்கு ஊடுருவியுள்ள எல்நினோ தாக்கம் இம்மாதம் ஜூலை தொடக்கம் அக்டோபர்
...</summary>
            <content type="html"><![CDATA[<p>மத்திய பசுபிக் பிராந்திய கடற் பகுதிகளில் இருந்து இந்து சமுத்திர கடல்
பிராந்தியத்திற்கு ஊடுருவியுள்ள எல்நினோ தாக்கம் இம்மாதம் ஜூலை தொடக்கம் அக்டோபர்
மாதம் வரை வெப்ப தாக்கத்தைச் செலுத்தும் என யாழ்ப்பாண பல்கலைக்கழக புவியியல்
துறை பேராசிரியரும் கலை பீடாதிபதியுமான நாகமுத்து பிரதிபராஜா தெரிவித்துள்ளார்.
</p><p>
நேற்று யாழ். கலட்டி வீதியில் அமைந்துள்ள தனியார் விடுதியில்
மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான அமைப்பு ஏற்பாடு செய்த எல்நினோ
தொடர்பான விவசாய போதன ஆசிரியர்கள் மற்றும் கடற்தொழில் சார்ந்தவர்களுக்கான
செயலமர்வில் கருத்து தெரிவிக்கும் போது அவர் இவ்வாறு
தெரிவித்துள்ளார். </p><p>இதன்போது அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,</p><p></p><h2>இந்து சமுத்திர பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள தாக்கம்</h2><p>
இந்து சமுத்திர பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள கடல் வெப்பம் இலங்கை மற்றும்
மாலைதீவில் அதிக தாக்கத்தை செலுத்த வாய்ப்புகள் உள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/815c5878-1eb7-4f12-bf1e-dc411d4ced06/26-6a53081046c53.webp' />&nbsp;</p><p>

இலங்கையை பொறுத்தவரையில் குறிப்பாக வட மாகாணத்தின் முல்லைத்தீவு, மன்னார் ,
கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் பாரிய நீருக்கான தட்டுப்பாட்டினை ஏற்படுத்தும்.
</p><p>
நிலத்தின் ஊடாக வெப்பத்தை கடத்துவதிலும் பார்க்க 16 மடங்கு வேகமாக நீரின் ஊடாக
வெப்பம் கடத்தப்படுகின்ற நிலையில் இந்த சமுத்திரக்கடற்பரப்பில் ஏற்படுகின்ற
கடல் வெப்ப ஏற்றம் வேகமாக ஏனைய பகுதிகளுக்கும் பரவும்.
</p><p>
ஜூலை செப்டம்பர் மாதங்களில் அதிகமான வறட்சியை ஏற்படுத்துகின்ற எல்நினோ
அக்டோபர், நவம்பர் மாதங்களில் பாரிய மழை வீழ்சியையும் ஏற்படுத்தும்.</p><h2>நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு அறிவுறுத்தல்</h2><p>இருப்பினும், இந்த தாளமுக்கங்கள் அக்டோபர் மாதத்திற்கு பின்னரான காலப்பகுதியிலே ஏற்படுவதற்கான சாத்தியங்கள் இருக்கும் நிலையில் அதுவரையான காலப்பகுதியில் அதிக வரட்சியே நிலாவும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c3288db9-17e5-415b-acf0-75888c25c01e/26-6a530810e9355.webp' /></p><p>
</p><p>
ஆகவே எல்நினோ இந்து சமுத்திரத்தை அண்மித்துள்ள நிலையில் பொதுமக்கள் நீர்
முகாமைத்துவத்தை சரியாக பின்பற்றி அதிக வெப்பத்தினால் ஏற்படுகின்ற
நீர்த்தட்டுப்பாட்டினை சமாளிக்கும் செயற்பாடுகளில் ஈடுபட முன்வர வேண்டும் என
அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
</p><p>
குறித்த நிகழ்வில் வட மாகாண பிரதி விவசாய பணிப்பாளர் அஞ்சனாதேவி சிறிரங்கன்,
யாழ். மாவட்ட கடற்தொழில் நீரயல் வள திணைக்கள உதவி பணிப்பாளர் எஸ்.அகிலன்
மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான அமைப்பு ஜான்சன் பிரிடாரோ ஆகியோர்
கலந்துகொண்டனர்.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-12T03:20:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sathangani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இன்றைய நாளுக்கான வானிலை : வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/today-sri-lanka-weather-fodcast-in-tamil-1783825267"></link>
            <id>https://ibctamil.com/article/today-sri-lanka-weather-fodcast-in-tamil-1783825267</id>
            <summary type="text">நாட்டின் பல பிரதேசங்களில் பிரதானமாக வறட்சியான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றதாக&amp;nbsp;வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.அந்த திணைக்களம...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டின் பல பிரதேசங்களில் பிரதானமாக வறட்சியான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றதாக&nbsp;வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p>அந்த திணைக்களம் இன்று (12.07.2026) வெளியிட்ட வானிலை முன்னறிப்பில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p>மேலும் அந்த அறிவிப்பில், சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும்.</p><p></p><h2>இடியுடன் கூடிய மழை</h2><p>மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சிறிதளவில் மழை பெய்யக்கூடும்.</p><p>

ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/008cf931-d44a-46be-a1d5-f340e538b577/26-6a5306094bf06.webp' /></p><p>மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் வடமத்திய மாகாணத்திலும் மொனராகலை, புத்தளம், ஹம்பாந்தோட்டை, திருகோணமலை மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடும். </p><p>

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக வீசக் கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ள வேண்டும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-12T03:18:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரசியல்வாதிகள், அதிகாரிகள் உள்ளிட்ட 500 பேர் தொடர்பில் விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ciabor-starts-investigations-against-politicans-1783825494"></link>
            <id>https://tamilwin.com/article/ciabor-starts-investigations-against-politicans-1783825494</id>
            <summary type="text">அரசியல்வாதிகள், அரச அதிகாரிகள் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டவர்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
நாடு முழுவதும் 500க்கும் மேற்பட்ட நபர்களி...</summary>
            <content type="html"><![CDATA[<p>அரசியல்வாதிகள், அரச அதிகாரிகள் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டவர்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
</p><p>நாடு முழுவதும் 500க்கும் மேற்பட்ட நபர்களின் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பாக, இலஞ்ச, ஊழல் மோசடி தவிர்ப்பு விசாரணை ஆணைக்குழு விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.</p><p>&nbsp;</p><h2>குவியும் முறைப்பாடுகள்</h2><p>
</p><p>இந்த 500க்கும் மேற்பட்ட நபர்களில் முன்னாள் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட சுமார் 60 அரசியல்வாதிகளும், கிட்டத்தட்ட 100 உயர் அரச அதிகாரிகளும் உள்ளடங்குவதாக அறிக்கை செய்யப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ebb54b70-dbc8-4414-9695-3a40c03e0473/26-6a530457e255b.webp' /></p><p>
</p><p>ஆணைக்குழுவிற்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளுக்கு அமைவாகவே இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p><p> 
இவ்வளவு பெரிய எண்ணிக்கையிலான நபர்களுக்கு எதிராக ஒரே நேரத்தில் சொத்து விசாரணை ஆரம்பிக்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறை என ஆணைக்குழுவின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
</p><p>சம்பந்தப்பட்ட நபர்களால் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள சொத்து மற்றும் பொறுப்புக்கள் பற்றிய பிரகடனங்களின் உண்மைத்தன்மை குறித்து இந்த விசாரணையின் போது விசேட கவனம் செலுத்தப்படவுள்ளது.</p><h2>சொத்து விபரங்களை சமர்ப்பிக்க&nbsp;காலக்கெடு </h2><p>
சொத்து விபரங்களை சமர்ப்பிக்க வேண்டிய உத்தியோகத்தர் பிரிவில் அண்மையில் ஊடகவியலாளர்களும் கப்பல்துறை ஆவணப் பணியாளர்களும் உள்வாங்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/efc07406-c362-4d18-a864-4784a93862cc/26-6a530e6b92991.webp' /></p><p>
இதற்கான காலக்கெடு கடந்த ஜூன் 30ஆம் திகதியுடன் முடிவடைந்திருந்த போதிலும், இணையத்தளத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக அது ஜூலை 07ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டது.
</p><p>2023ஆம் ஆண்டின் 09ஆம் இலக்க ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் 80(1) பிரிவின்படி, சொத்து மற்றும் பொறுப்புக்கள் பற்றிய பிரகடனங்களை சமர்ப்பிக்கத் தவறும் நபர்களுக்கு அபராதம் விதிக்க அல்லது ஓராண்டிற்கு மேற்படாத சிறைத்தண்டனை வழங்க நீதிமன்றத்திற்கு அதிகாரம் உள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-12T03:05:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[9 நாட்களில் கட்டா குஸ்தி 2 திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/gatta-kusthi-2-movie-9-days-box-office-1783824329"></link>
            <id>https://cineulagam.com/article/gatta-kusthi-2-movie-9-days-box-office-1783824329</id>
            <summary type="text">கட்டா குஸ்தி 2கடந்த வாரம் திரைக்கு வந்து பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பி வரும் திரைப்படம்தான் கட்டா குஸ்தி 2. இயக்குநர் செல்லா அய்யாவு இயக்கத்தில் விஷ்...</summary>
            <content type="html"><![CDATA[<h2>கட்டா குஸ்தி 2</h2><p>கடந்த வாரம் திரைக்கு வந்து பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பி வரும் திரைப்படம்தான் கட்டா குஸ்தி 2. இயக்குநர் செல்லா அய்யாவு இயக்கத்தில் விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பில் உருவாகி வெளிவந்த இப்படத்தை வேல்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/54a6c814-ad90-4be2-bd5e-cd958ea44207/26-6a52ffcd7fe71.webp' /></p><p></p><p>இப்படத்தில் முனீஸ்காந்த், மோக்ஷா, சாரா, காளி வெங்கட், ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் நடித்திருந்தனர். ஷான் ரோல்டன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். எதிர்பார்ப்புடன் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ளது.</p><h2>வசூல்&nbsp;</h2><p>
</p><p>
கட்டா குஸ்தி 2 திரைப்படத்தின் <a href="https://www.youtube.com/watch?v=cshaXjiFylM" target="_blank">வசூல் </a>குறித்து தொடர்ந்து முதல் நாளிலிருந்தே பார்த்து வருகிறோம். அந்த வகையில் தற்போது 9 நாட்களில் இப்படம் உலகளவில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b78366eb-a1eb-4159-968a-98474ad146fb/26-6a52ffcccabc3.webp' /></p><p>

அதன்படி, 9 நாட்களில் கட்டா குஸ்தி 2 திரைப்படம் உலகளவில் ரூ. 37 கோடி வரை வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் எவ்வளவு வசூல் செய்யும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.</p>]]></content>
            <updated>2026-07-12T03:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhayani</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் வங்கிகளில் கணக்கு வைத்திருப்போருக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/central-bank-s-warning-to-the-public-1783821306"></link>
            <id>https://tamilwin.com/article/central-bank-s-warning-to-the-public-1783821306</id>
            <summary type="text">பொதுமக்கள் தங்களது தனிப்பட்ட வங்கிக்கணக்கை வெளியாட்களுக்கு பயன்படுத்த அனுமதிக்க வேண்டாம் என மத்திய வங்கி பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பொதுமக்கள் தங்களது தனிப்பட்ட வங்கிக்கணக்கை வெளியாட்களுக்கு பயன்படுத்த அனுமதிக்க வேண்டாம் என மத்திய வங்கி பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.</p><p>

இது தொடர்பில் மத்திய வங்கி விடுத்துள்ள அறிக்கையில்,</p><p>&nbsp;</p><h2>சட்டவிரோத&nbsp;நடவடிக்கை</h2><p>ஒருவரின் தனிப்பட்ட வங்கிக் கணக்கில் நிகழும் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் அவரே பொறுப்பு என்று கூறியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/98d64fbc-1100-45b6-8f03-a817fe525ce4/26-6a52f602b6c26.webp' />&nbsp;</p><p>

சிலர் சிறிய மாதாந்திர கட்டணத்திற்கு தங்களது வங்கிக்கணக்கை வாடகைக்கு விட முன்வருகின்றனர். அவ்வாறு வாடகைக்கு விடப்பட்ட கணக்குகள் சட்டவிரோத நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் என்றும் மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.
</p><p>
எனவே இவ்வாறான சூழல் ஏற்படுமாயின் மற்றவர்களின் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு நீங்களும் சட்டப்படி பதில் சொல்ல வேண்டியிருக்கும் என்றும் வாடிக்கையாளர்கள் எச்சரித்துள்ளது.
</p><p>
இது குறித்து பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு மத்திய வங்கி பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.&nbsp;&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-12T02:58:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீர்கொழும்பு சிறை மோதல் தொடர்பில் விசாரிக்க இருவேறு குழுக்கள்..! 600 இற்கும் மேற்பட்ட கைதிகளை இடமாற்ற முடிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/negombo-prison-attack-important-announcement-1783823973"></link>
            <id>https://tamilwin.com/article/negombo-prison-attack-important-announcement-1783823973</id>
            <summary type="text">நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற வன்முறை மோதல் தொடர்பில்
விசாரணை நடத்துவதற்காக விசேட குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடக...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற வன்முறை மோதல் தொடர்பில்
விசாரணை நடத்துவதற்காக விசேட குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப்பேச்சாளரும், சிறைச்சாலைகள் ஆணையாளருமான ஏ.சி. கஜநாயக்க தெரிவித்துள்ளார்.</p><p>
சிறைச்சாலையில் ஏற்பட்ட சொத்து சேதங்கள் குறித்து விசாரிப்பதற்காக ஒரு விசேட
குழுவும், மோதல் சம்பவம் குறித்து தனியானதொரு விசாரணையை முன்னெடுப்பதற்காகச்
சிறைச்சாலைகள் திணைக்களத்தால் மற்றுமொரு குழுவும் நியமிக்கப்பட்டுள்ளன.</p><p></p><h2>அடுத்தகட்ட நடவடிக்கை</h2><p>
</p><p>
இதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் அடுத்தகட்ட நடவடிக்கையாக, நீர்கொழும்பு
சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள மேலும் 600 இற்கும் மேற்பட்ட கைதிகளை
நாட்டின் ஏனைய சிறைச்சாலைகளுக்கு இடமாற்றம் செய்வதற்கான ஏற்பாடுகள் தற்போது
முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2f114b2d-2423-42ff-8824-7367cdf4cb17/26-6a52fe677cd0c.webp' /></p><p>

போதைப்பொருள் கடத்தல் விவகாரம் ஒன்றை மையமாகக்கொண்டு கைதிகளின் இரு
குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட இந்த வன்முறை மோதலில், சிறைச்சாலை அதிகாரிகள்
உட்பட 100 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.</p><p> இந்த மோதலின் போது 8 சிறைச்சாலை
அதிகாரிகள் மற்றும் 21 கைதிகள் என மொத்தம் 29 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது
குறிப்பிடத்தக்கது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-12T02:39:56+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாடு முழுவதும் 143 இடங்களில் நாளை நெல் கொள்முதல் ஆரம்பம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/rice-paddy-procurement-across-the-country-tomorrow-1783822023"></link>
            <id>https://ibctamil.com/article/rice-paddy-procurement-across-the-country-tomorrow-1783822023</id>
            <summary type="text">இந்த ஆண்டின் பெரும்போக அறுவடைக்கான நெல் கொள்முதலை நாளை (13.07.2026) முதல் ஆரம்பிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக&amp;nbsp;நெல் சந்தைப்படு...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்த ஆண்டின் பெரும்போக அறுவடைக்கான நெல் கொள்முதலை நாளை (13.07.2026) முதல் ஆரம்பிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக&nbsp;நெல் சந்தைப்படுத்தல் வாரியம் தெரிவித்துள்ளது.</p><p>
பல பகுதிகளில் பெரும்போக நெல் அறுவடை ஏற்கனவே தொடங்கிவிட்டதால், அதிக அறுவடை உள்ள பகுதிகளைக் அடையாளப்படுத்தி நெல் களஞ்சியசாலைகள் திறக்கப்படும் என வாரியத்தின் தலைவர் மஞ்சுலா பின்னலந்த கூறியுள்ளார்.</p><p>

அதன்படி, நாடு முழுவதும் 143 இடங்களில் அமைந்துள்ள களஞ்சியசாலைகளில் இருந்து நெல் கொள்முதல் செய்ய ஏற்பாடுகள் செய்யப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>தனியார் துறை களஞ்சியசாலை</h2><p>
களஞ்சியசாலைகளின் கொள்ளளவு நிரம்பிவிட்டால், அருகிலுள்ள தனியார் துறை களஞ்சியசாலைகளை பயன்படுத்துவது குறித்துப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளதாகவும், அவர் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f3f86d15-6441-467e-b6ec-de65abdea8f8/26-6a52f6c8aad7c.webp' /></p><p>மேலும், குறிப்பிட்ட நெல் ஆலை உரிமையாளர்களும் தனியார் நிறுவனங்களும் அந்தக் களஞ்சியசாலைகளை இலவசமாக வழங்க ஒப்புக்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"> IBC தமிழ் WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-12T02:23:30+00:00</updated>
        </entry>
    </feed>
