<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-07-10T15:12:57+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[நிதி குறைப்பால் உலகளவில் 10 இலட்சம் பெண்களுக்கான உதவிகள் முடக்கம்! ஐ.நா. கவலை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/aid-for-1-million-women-worldwide-halted-funding-1783695034"></link>
            <id>https://tamilwin.com/article/aid-for-1-million-women-worldwide-halted-funding-1783695034</id>
            <summary type="text">உலகளவில் சர்வதேச நாடுகளின் நிதி ஒதுக்கீடு பெருமளவு குறைக்கப்பட்டுள்ளதால்,
கடந்த 18 மாதங்களில் மட்டும் சுமார் ஒரு மில்லியன் பெண்கள்
மற்றும் சிறுமிகளு...</summary>
            <content type="html"><![CDATA[<p>உலகளவில் சர்வதேச நாடுகளின் நிதி ஒதுக்கீடு பெருமளவு குறைக்கப்பட்டுள்ளதால்,
கடந்த 18 மாதங்களில் மட்டும் சுமார் ஒரு மில்லியன் பெண்கள்
மற்றும் சிறுமிகளுக்கான உயிர் காக்கும் அடிப்படை உதவிகள் முடங்கியுள்ளதாக
ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
</p><p>
பெண்களுக்கான அமைப்புகளிடம் உதவி கேட்டு வருவோரின் எண்ணிக்கை கடந்த ஆண்டில்
அதிகரித்துள்ள போதிலும், போதிய நிதியின்மையால் 90 சதவீத அமைப்புகளால்
அவர்களின் தேவைகளை முழுமையாகப் பூர்த்தி செய்ய முடியவில்லை என ஐ.நா.வின்
மகளிர் அமைப்பான 'யு.என். வுமன்' வெளியிட்ட அறிக்கையில்
சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
</p><p>
சர்வதேச அளவில் மனிதாபிமான உதவிகளை வழங்குவதில் அமெரிக்கா முன்னணியில் இருந்த
நிலையில், கடந்த 2025ஆம் ஆண்டு ஜனவரி மாதம் டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான அரசு
பதவியேற்ற பிறகு பல பில்லியன் டொலர் மதிப்பிலான வெளிநாட்டு நிதியுதவிகளை
அதிரடியாகக் குறைத்தது.</p><p></p><h2>அடிப்படைச் சேவை</h2><p>

மேலும், வெளிநாட்டு உதவிகளுக்கான 'யுஎஸ்ஏஐடி' அமைப்பு கலைக்கப்பட்டதால்,
அமெரிக்காவின் உலகளாவிய உதவிகள் 50 சதவீதத்திற்கும் மேலாகச் சரிந்தன.

அமெரிக்காவைத் தொடர்ந்து ஜெர்மனி, பிரான்ஸ், பிரித்தானியா போன்ற பிற முக்கிய
நன்கொடை நாடுகளும் தங்களின் உள்நாட்டுப் பொருளாதார நெருக்கடி மற்றும்
பாதுகாப்புச் செலவின அதிகரிப்பு காரணமாக நிதியுதவிகளைக் குறைத்துள்ளன.
</p><p>
கொங்கோ, ஹைட்டி, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட 52 நாடுகளில் செயல்படும் 855 பெண்கள்
அமைப்புகளிடம் நடத்தப்பட்ட ஆய்வில், போதிய நிதியின்றி 40 சதவீத அமைப்புகள்
அடுத்த ஓராண்டுக்குள் நிரந்தரமாகவோ அல்லது தற்காலிகமாகவோ மூடப்படும்
அபாயத்தில் உள்ளதாகத் தெரியவந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/55b28d88-ee35-47fd-849e-db05fd165778/26-6a510a47e3e95.webp' /></p><p>
</p><p>
இந்த நிதி நெருக்கடியால் போர் சார்ந்த பாலியல் வன்கொடுமைகளால்
பாதிக்கப்பட்டவர்கள், இடம்பெயர்ந்த தாய்மார்கள் மற்றும் பாடசாலைப் படிப்பை
பாதியில் நிறுத்திய சிறுமிகள் ஆகியோர் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
</p><p>
உலகளவில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் கடந்த ஓராண்டில்
இருமடங்காக அதிகரித்துள்ள போதிலும், 62 சதவீத அமைப்புகளால் பெண்களுக்குப்
பாதுகாப்பான இடங்களையோ அடிப்படைச் சேவைகளையோ வழங்க முடியாத அவலநிலை
உருவாகியுள்ளது.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-10T15:10:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[Zoo-க்கு போய் அழு; இனவெறியை சந்தித்த பிரபலம் Speed]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/fifa-racism-allegations-involving-ishowspeed-1783686429"></link>
            <id>https://jvpnews.com/article/fifa-racism-allegations-involving-ishowspeed-1783686429</id>
            <summary type="text">&amp;nbsp; உலகமெங்கும் மக்களிடம் பிரபலமான யூடியூபர் Speed. ishowspeed என்கிற பெயரில் யுடியூப் மற்றும் இன்ஸ்டாராமில் வீடியோக்களை வெளியிட்டு பிரபலமனவர் யூடி...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; உலகமெங்கும் மக்களிடம் பிரபலமான யூடியூபர் Speed. ishowspeed என்கிற பெயரில் யுடியூப் மற்றும் இன்ஸ்டாராமில் வீடியோக்களை வெளியிட்டு பிரபலமனவர் யூடியூபர் Speed .

 இவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கு 51.3 மில்லியன் ஃபாலோயர்ஸ் இருக்கிறார்கள். </p><p>இந்நிலையில்தான் இவர் அர்ஜென்டினா நாட்டு கால்பந்து ரசிகர் ஒருவரால் இனவெறி தாக்குதலுக்கு ஆளாகியிருக்கிறார்.

மியாமியில் நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியை பார்ப்பதற்காக Speed சென்றிருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b84298bc-bf11-413a-b5df-48f940b2da4d/26-6a50e51f23d49.webp' /></p><p> அப்போது அர்ஜென்டினா ஜெர்ஸி அணிந்திருந்த ஒருவர் கருப்பினத்தனவரான ஸ்பீடை பார்த்து மோசமாக சைகை செய்தார்.</p><p>

 மேலும், ஸ்பீடை பார்த்து ‘குரங்குகள் இருக்கும் Zoo-க்கு போய் அழு’ என ஸ்பானிஷ் மொழியில் நக்கலடித்தார். 

இந்த சம்பவம் வீடியோவாக வெளியாக சர்ச்சை ஏற்படுத்திய நிலையில் FIFA இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறது.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-10T15:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஜேர்மனியில் சர்ச்சைக்குரிய சுகாதாரச் சட்டம் நிறைவேற்றம்- மக்கள் எதிர்ப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/germany-passes-healthcare-reform-amid-protests-1783695417"></link>
            <id>https://news.lankasri.com/article/germany-passes-healthcare-reform-amid-protests-1783695417</id>
            <summary type="text">ஜேர்மனியின் நாடாளுமன்ற கீழ்சபை (Bundestag) சுகாதாரச் செலவுகளை குறைக்கும் புதிய சட்டத்தை நிறைவேற்றியுள்ளது. இந்த சட்டம் 2027 முதல் அமலுக்கு வரும்.

ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜேர்மனியின் நாடாளுமன்ற கீழ்சபை (Bundestag) சுகாதாரச் செலவுகளை குறைக்கும் புதிய சட்டத்தை நிறைவேற்றியுள்ளது. </p><p>இந்த சட்டம் 2027 முதல் அமலுக்கு வரும்.

புதிய சட்டத்தின் படி, மருந்துகளுக்கான co-payment அதிகரிக்கப்படும். இதுவரை 5 முதல் 10 யூரோவாக இருந்த கட்டணம், இனி 7.50 முதல் 15 யூரோவாக உயர்த்தப்படும்.</p><p></p><p>மேலும், காப்பீடு பெற்றவர்களின் துணைவர் இனி இலவசமாக காப்பீடு பெற முடியாது, அவர்களும் தனியாக காப்பீடு செய்ய வேண்டும்.
</p><p>
சில சிகிச்சைகள், குறிப்பாக ஹோமியோபதி மற்றும் பல் மாற்று சிகிச்சைகளுக்கான காப்பீடு குறைக்கப்படும். சில அறுவை சிகிச்சைகளுக்கு முன், இரண்டாவது மருத்துவரின் கருத்து பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/022d73c0-fbb6-4059-b8f5-5d0d2877cb7f/26-6a51083baa84f.webp' /></p><p>இந்தச் சட்டம் மூலம் ஜேர்மன் அரசு 16.3 பில்லியன் யூரோ செலவுகளை குறைக்க திட்டமிட்டுள்ளது.

ஆனால், மருத்துவர்கள், மருத்துவமனைகள், மருந்தகங்கள் மற்றும் நோயாளிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
</p><p>
Green Party மற்றும் Left Party உறுப்பினர்கள், இந்தச் சட்டம் மருத்துவமனைகள் மூடப்படுவதற்கும், மருத்துவர்கள் மற்றும் மனநல நிபுணர்கள் அதிக சுமையைச் சந்திக்க வேண்டிய நிலைக்கும் வழிவகுக்கும் என எச்சரித்துள்ளனர்.
</p><p>
இச்சட்டம் தற்போது நாடாளுமன்ற மேலவை (Bundesrat) அனுமதி பெற வேண்டும். அங்கு பெரும்பான்மை கிடைக்காவிட்டால், mediation committee-க்கு அனுப்பப்படும்.&nbsp; &nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-10T14:56:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kajinthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் சுற்றுலாவிகளுக்கு இடையூறாக யாசகம் செய்தோருக்கு எதிராக நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/action-against-beggars-in-jaffna-1783690695"></link>
            <id>https://ibctamil.com/article/action-against-beggars-in-jaffna-1783690695</id>
            <summary type="text">யாழ். நகர்ப் பகுதியில் சுற்றுச்சூழலுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்தும்
விதமாகவும் சுற்றுலாவிகளுக்கு இடையூறுகளை ஏற்படுத்தும் வகையிலும் நடமாடிய 30
இற்கும்...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ். நகர்ப் பகுதியில் சுற்றுச்சூழலுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்தும்
விதமாகவும் சுற்றுலாவிகளுக்கு இடையூறுகளை ஏற்படுத்தும் வகையிலும் நடமாடிய 30
இற்கும் அதிகமான யாசகர்கள் இன்று யாழ். காவல்துறையின் பங்களிப்புடன்
வெளியேற்றபட்டுள்ளதாக வடக்கு மாகாண சுற்றுலாத்துறை தலைவர்
வைத்தியர் விவேகானந்தராஜா தெரிவித்துள்ளார்.</p><p>
இது தொடர்பில் அவர் கூறுகையில்,&nbsp; &nbsp;“சுற்றுச் சூழலை சீர்செய்யும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
</p><p>
குறிப்பாக யாழ் நகரப்பகுதி அதாவது யாழ் கோட்டைச் சுற்றுவட்டம், பேருந்து
நிலையம், கஸ்தூரியார் வீதி, மின்சார நிலைய வீதி, போதனா வைத்தியசாலை சூழல் ஆகிய
பகுதிகளில் வியாபார நிலையங்களுக்கும் வெளிநாட்டு சுற்றுலாவிகள் மற்றும்
உள்ளூர் மக்கள் ஆகியோருக்கு நாளாந்தம் பல்வேறு வகையிலும் யாசகம் என்ற
போர்வையில் அசௌகரியங்களை ஏற்படுத்தும் நபர்களை கட்டுப்படுத்துமாறு எம்மிடம்
கோரிக்கை பல தரப்பினராலும் முன்வைக்கப்பட்டு வந்தது.</p><p></p><h2>30 யாசகர்கள்</h2><p>
</p><p>
இந்நிலையில் இன்று குறித்த நடவடிக்கையை யாழ். காவல் நிலைய பொறுப்பதிகாரி பாலித
செனவிரத்னவின் கவனத்துக்கு எம்மால் கொண்டுசெல்லப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8cb2442d-92a5-4a81-b30a-0206dded6699/26-6a50f5c8c0428.webp' /></p><p>
</p><p>
அத்துடன் யாழ் மா நகரின் ஒத்துழைப்பையும் நாம் கோரியிருந்தோம். இந்த நடவடிக்கையின் போது வெளி மாவட்டங்களைச் சேர்ந்த 30 யாசகர்கள் மற்றும்
வியாபார செயற்பாடுகளை முன்னெடுத்துவந்தோர் கைதுசெய்யப்படு,&nbsp; தரவுகள் பெற்றுக்கொள்ளப்பட்டபின் அவர்கள் சொந்த இடங்களுக்கு அனுப்பிவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.</p><p></p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-10T14:50:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரித்தானியாவில் பரவும் அரிதான ஸ்கேபிஸ் நோய்- மருத்துவர்கள் எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/uk-crusted-scabies-outbreak-rare-skin-disease-1783687761"></link>
            <id>https://news.lankasri.com/article/uk-crusted-scabies-outbreak-rare-skin-disease-1783687761</id>
            <summary type="text">பிரித்தானியாவில் அரிதான மற்றும் மிகவும் தொற்றக்கூடிய நோயான Crusted Scabies (Norwegian Scabies) பரவிவருகிறது.
இதனால் வேல்ஸ் மாநிலத்தில் உள்ள Glangwili...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரித்தானியாவில் அரிதான மற்றும் மிகவும் தொற்றக்கூடிய நோயான Crusted Scabies (Norwegian Scabies) பரவிவருகிறது.</p><p>
இதனால் வேல்ஸ் மாநிலத்தில் உள்ள Glangwili வைத்தியசாலையின் Steffan Ward தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
</p><p>
சாதாரண Scabies நோயில் கடுமையான அரிப்பு மற்றும் சிரங்கு ஏற்படும். ஆனால் Crusted Scabies நோயாளிகளில் இவை தெளிவாக தெரியாது.

இருப்பினும், இவர்களின் உடலில் இரண்டு மில்லியன் வரை mites மற்றும் முட்டைகள் இருக்கக்கூடும். இதனால் நோய் மிக வேகமாக பரவக்கூடியதாக இருக்கும்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c368f598-ce46-48c5-ac2a-5a4cb7e28bc9/26-6a50ea52e6675.webp' /></p><p>மருத்துவ அதிகாரிகள், பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்த நோயாளிகள் மற்றும் பணியாளர்களுக்கு உடனடி சிகிச்சை அளித்துள்ளனர். அறிகுறிகள் தெரியாதவர்களுக்கும் முன்னெச்சரிக்கை சிகிச்சை வழங்கப்படுகிறது.</p><p>
இந்த நோய் முதியவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள், HIV/AIDS நோயாளிகள், நரம்பியல் பிரச்சினைகள் உள்ளவர்கள் ஆகியோருக்கு அதிக ஆபத்தானது.</p><p></p><p>Crusted Scabies சரியான நேரத்தில் கண்டறியப்படாவிட்டால், secondary bacterial infections மற்றும் sepsis போன்ற உயிருக்கு ஆபத்தான சிக்கல்கள் ஏற்படலாம்.
</p><p>
தடுப்பு நடவடிக்கைகளாக, பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்துதல், உடைகள் மற்றும் படுக்கைச் சீலைகளை சுத்தம் செய்தல், மருத்துவமனைகளில் கடுமையான சுகாதார நடைமுறைகளை பின்பற்ற வேண்டும்.
</p><p>
மருத்துவ நிபுணர்கள், இந்த நோயை ஆரம்பத்திலேயே கண்டறிதல் மிக முக்கியம் என எச்சரித்துள்ளனர். சரியான சிகிச்சை அளிக்கப்பட்டால் பரவலை கட்டுப்படுத்த முடியும்.&nbsp;&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-10T14:48:55+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஐரோப்பிய நாடொன்றில் கொடூரமாக தாக்கப்பட்ட இலங்கை பெண் - கணவன் அதிரடியாக கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/sri-lankan-women-attacked-by-husband-in-italy-1783692668"></link>
            <id>https://tamilwin.com/article/sri-lankan-women-attacked-by-husband-in-italy-1783692668</id>
            <summary type="text">இத்தாலியில் அடுக்குமாடி குடியிருப்பொன்றில், கணவன் தனது மனைவியை கண்ணாடிப் போத்தலால் தலையில் பலமுறை தாக்கி கொலை செய்ய முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...</summary>
            <content type="html"><![CDATA[<p>இத்தாலியில் அடுக்குமாடி குடியிருப்பொன்றில், கணவன் தனது மனைவியை கண்ணாடிப் போத்தலால் தலையில் பலமுறை தாக்கி கொலை செய்ய முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><p> 

ரோம் நகரில் பிடேன் பகுதியில் உள்ள வீடொன்றில் கடந்த வாரம் இடம்பெற்றுள்ளது. </p><p>

இந்த சம்பவம் அவர்களின் 12 வயது மகனின் கண் முன்னே இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p> </p><h2><b>பெண் மீது தாக்குதல்</b></h2><p>இத்தாக்குதலில் படுகாயமடைந்த 38 வயதுடைய இலங்கை பெண், உடனடியாகமருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cb31b951-5250-4644-844c-6793aaf2d84d/26-6a5104f8a081f.webp' /></p><p>மருத்துவர்களின் பரிசோதனையில் அவருக்கு மண்டையோட்டில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. </p><p>அவர் தற்போது ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சாதாரண விடயம் தம்பதிக்கு இடையில் பெரும் வன்முறையாக மாறியுள்ளது.
</p><p>
இதன்போது, 41 வயதுடைய இத்தாலிய நாட்டவரான கணவன், கண்ணாடிப் போத்தலை எடுத்து மனைவியின் தலையில் கொடூரமாகத் தாக்கியுள்ளார். </p><h3><b>கணவன் கைது</b></h3><p>இந்த சம்பவத்தினால் அதிர்ச்சியடைந்த சிறுவன், தற்காலிகமாக அவனது பாட்டியின் பராமரிப்பில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5135c3d8-6279-43bb-9660-d3d72035253e/26-6a5104f951c71.webp' /></p><p>தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த ரோம் நகர பொலிஸார், அடுக்குமாடி வீட்டிற்குள்ளேயே வைத்து தாக்குதல் நடத்திய கணவனைக் கைது செய்தனர். </p><p>கொலை முயற்சி மற்றும் வன்முறை குற்றச்சாட்டின் கீழ் குறித்த நபர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.</p>]]></content>
            <updated>2026-07-10T14:44:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஒன்லைன் விசா வழங்க தனியார் நிறுவனங்களுக்கு முந்தைய அரசு அனுமதி..! நீதிமன்றத்தில் சூடுபிடிக்கும் வாதம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/government-decision-regarding-online-visa-1783671258"></link>
            <id>https://tamilwin.com/article/government-decision-regarding-online-visa-1783671258</id>
            <summary type="text">ஒன்லைன் விசா வழங்கும் செயல்முறையைத் தனியார் நிறுவனங்களுக்கு மாற்றுவதற்காக கடந்த அரசாங்கம் மேற்கொண்ட ஒப்பந்தங்களை சட்டப்பூர்வமாக மறுபரிசீலனை செய்ய தற்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஒன்லைன் விசா வழங்கும் செயல்முறையைத் தனியார் நிறுவனங்களுக்கு மாற்றுவதற்காக கடந்த அரசாங்கம் மேற்கொண்ட ஒப்பந்தங்களை சட்டப்பூர்வமாக மறுபரிசீலனை செய்ய தற்போதைய அமைச்சரவை முடிவு செய்துள்ளதாக சட்டமா அதிபர் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். </p><p>

இது தொடர்பான வழக்கு இன்று(10.07.2026) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே மேற்கண்டவாறு வாதம் முன்வைக்கப்பட்டுள்ளது.</p><p></p><p> </p><p>கடந்த அரசாங்கத்தின் போது ஒன்லைன் விசா வழங்கும் செயல்முறையைத் தனியார் நிறுவனங்களுக்கு மாற்றுவதற்காக அப்போதைய அமைச்சரவை எடுத்த முடிவை எதிர்த்து, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜனாதிபதி சட்ட ஆலோசகர் எம்.ஏ. சுமந்திரன், பத்தாலி சம்பிகா ரணவக்க மற்றும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் ஆகியோர் தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மனுக்கள் இன்று(10) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. </p><h2>

ஒன்லைன் விசா&nbsp;</h2><p>
இதன்போது, ​​சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் விவேக சிறிவர்தன இந்த தகவலை நீதிமன்றத்தில் முன்வைத்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/50bc18fa-a748-40d1-951d-562bea567531/26-6a5104862abb8.webp' /></p><p> 

இந்த மனுவை பிரதம நீதிபதி பிரீத்தி பத்மன் சுரசேன விசாரணை செய்துள்ள நிலையில், நீதிபதிகள் அச்சல வெங்கப்புலி மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வின் முன் இந்த மனு விசாரணை செய்யப்பட்டுள்ளது. </p><p>

மனுக்கள் விசாரணைக்கு அழைக்கப்பட்டபோது, ​​தலைமை சட்டத்தரணிக்காக முன்னிலையான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல், ஒன்லைன் விசா வழங்கும் செயல்முறை தொடர்பாக தனியார் நிறுவனங்களுடன் செய்துகொண்ட ஒப்பந்தங்களின் சட்டப்பூர்வத்தன்மையை ஆராய தற்போதைய அமைச்சரவை ஒரு துணைக் குழுவை நியமித்துள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். </p><h2>


ஒப்பந்தங்களை தொடர அரசத்தரப்பு முடிவு</h2><p>
அந்தக் குழு சம்பந்தப்பட்ட விடயங்களை ஆராய்ந்து வருவதாகக் கூறி, கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல், நடவடிக்கைகளின் முன்னேற்றம் தொடர்பில் தெரியப்படுத்துவதற்காக திகதி வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ea29428b-e318-4f12-bc02-9ee6dc86f014/26-6a510486dc174.webp' /></p><p> </p><p>

இதனைத் தொடர்ந்து மனுதாரர்களில் ஒருவரான ஜனாதிபதி சட்ட ஆலோசகர் எம்.ஏ. சுமந்திரன்,</p><p> </p><p>

தற்போதைய அரசு அந்தப் பரிவர்த்தனையை ரத்து செய்ய முடிவு செய்திருந்தாலும், இந்த மனுவைத் தொடர எதிர்பார்ப்பதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார்.</p><p>

 இந்த மனுவில் தற்போதைய அமைச்சரவை உறுப்பினர்கள் பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி சட்ட ஆலோசகர் தெரிவித்துள்ளார்.</p><p> 

அதன்படி, தற்போதைய அமைச்சரவை உறுப்பினர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப நடவடிக்கை எடுக்குமாறு மனுதாரருக்கு அமர்வு உத்தரவிட்டதுடன், இந்த மனுவை செப்டம்பர் 29 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளதாகவும் திகதியிட்டு ஒத்திவைத்துள்ளார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-10T14:41:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[தனி விமானம் பிடித்து ஓடியது யார் என மக்களுக்கு தெரியும் - முதல்வர் விஜய்க்கு செந்தில் பாலாஜி பதிலடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/senthil-balaji-react-to-cm-vijay-karur-speech-1783694429"></link>
            <id>https://ibctamilnadu.com/article/senthil-balaji-react-to-cm-vijay-karur-speech-1783694429</id>
            <summary type="text">தனி விமானம் பிடித்து ஓடியது யார் என மக்களுக்கு தெரியும் என்று முதல்வர் விஜய்யின் பேச்சுக்கு செந்தில் பாலாஜி பதிலடி கொடுத்துள்ளார். 

 முதல்வர் விஜய்...</summary>
            <content type="html"><![CDATA[<p>தனி விமானம் பிடித்து ஓடியது யார் என மக்களுக்கு தெரியும் என்று முதல்வர் விஜய்யின் பேச்சுக்கு செந்தில் பாலாஜி பதிலடி கொடுத்துள்ளார். </p><h3>

 முதல்வர் விஜய் பேச்சு </h3><p>

இன்று கரூருக்கு வருகை தந்த தமிழக முதல்வர் விஜய், மக்கள் சந்திப்பு நிகழ்வில், திமுகவை குறித்து கடுமையாக விமர்சித்து பேசினார். </p><p>

குறிப்பாக கடந்த ஆண்டு நடைபெற்ற கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு சம்பவம் குறித்து பேசிய போது, "கரூர் போலீசே எங்களை கூட்டிட்டு வந்த அந்த நாடகத்தை முழுசா நம்பிட்டேன். இதுக்கெல்லாம் யார் காரணம்? இதெல்லாம் யார் சொல்லி செஞ்சது?&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7c22017f-a89a-4b2f-975c-f31411bb27bc/26-6a51045f42889.webp' /></p><p>
குடும்ப உறவுகள இழந்து அந்த வலியோடு இருக்க என்ன ஏளனமா பேசுவீங்களா.. என் மேல பழிய தூக்கி போடுவீங்களா.. இப்படி நடந்திருச்சேனு அந்த வேதனையோடு, வீட்டில இருந்த என்ன, ஓடி ஒளிஞ்சிட்டானு சொல்றீங்களா" என பேசினார். </p><p>

முதல்வரின் இந்த பேச்சுக்கு திமுக தரப்பில் எதிர்வினை எழுந்துள்ளது.</p><h3>

தனி விமானம் பிடித்து ஓடியது யார்?</h3><p>

இது குறித்து முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்டுள்ள பதிவில், "கடந்த வருடம் செப்டம்பர் 27 அன்று நடந்த கரூர் துயரச் சம்பவத்தின் போது பாதிக்கப்பட்ட, எனது உயிரில் கலந்த கரூர் மக்களுக்காக களத்தில் துணை நின்று காப்பாற்றியது யார்? எனது கரூர் சொந்தங்களுக்காக இரவு பகல் பாராமல் முன் நின்று உதவியது யார்?&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cde4d383-5849-4e14-8202-9f68dfa8dcd1/26-6a51045fe5015.webp' /></p><p>

மேலும், செய்தி கிடைத்த உடனேயே கரூருக்கு விரைந்து வந்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறி, உடனடி உயர்சிகிச்சை கிடைக்க அனைத்துத் தேவையான ஏற்பாடுகளையும் செய்து, அவர்களின் உயிரைக் காத்து, துயரைத் துடைத்தவர்கள். </p><p>அன்றைய தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களும், அன்றைய தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களும்.

அன்றைய கூட்டத்தில், பெருமளவில் மக்கள் பாதிக்கப்பட்டு மயங்கி விழுந்த அந்த அசாதாரண சூழ்நிலையிலும், தண்ணீர் பாட்டிலை வீசிவிட்டு, ஆம்புலன்ஸை வரச் சொல்லிவிட்டு, மக்களைக் காப்பாற்றாமல், தனது பேச்சை தொடர்ந்து பேசியது யார்?
</p><p>
திருச்சி விமான நிலையத்தில் பத்திரிகையாளர்கள் அத்தனை பேர் இறந்துள்ளதாகக் கூறியும், பாதிக்கப்பட்ட மக்களைப் பார்க்காமல், தனி விமானம் பிடித்து ஓடியது யார் என்பது எனது கரூர் மக்களுக்கு நன்றாகத் தெரியும்" என குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-10T14:40:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yashini</name>
            </author>
            <title type="text"><![CDATA[9,18,27ஆம் திகதியில் பிறந்தவர்களுக்கான எண்கணித பலன்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/birth-date-numerology-in-tamil-1783688190"></link>
            <id>https://news.lankasri.com/article/birth-date-numerology-in-tamil-1783688190</id>
            <summary type="text">எண் கணிதம் என்பது ஒவ்வொருவரின் பிறந்த தேதி மற்றும் பெயரில் உள்ள எழுத்துக்களின் அடிப்படையில், எண்களின் ஆற்றலையும் அதன் தாக்கத்தையும் ஆராயும் ஒரு பழங்கா...</summary>
            <content type="html"><![CDATA[<p>எண் கணிதம் என்பது ஒவ்வொருவரின் பிறந்த தேதி மற்றும் பெயரில் உள்ள எழுத்துக்களின் அடிப்படையில், எண்களின் ஆற்றலையும் அதன் தாக்கத்தையும் ஆராயும் ஒரு பழங்கால முறையாகும்.
</p><p>
இது உங்கள் குணநலன்கள், பலம், பலவீனங்கள் மற்றும் எதிர்கால வாய்ப்புகளைப் புரிந்து கொள்ள உதவுகிறது.
</p><p>
எண்கணிதம் உங்கள்அன்றாட வாழ்வில் துல்லியமான முடிவுகளை எடுக்கவும், சிக்கல்களைத் தீர்க்கும் திறனை மேம்படுத்தவும் உதவுகிறது.
</p><p>
நிதி நிர்வாகத்தை எளிதாக்குவதோடு, தர்க்கரீதியான சிந்தனையை வளர்த்து, சிறப்பான தொழில் வாய்ப்புகளுக்கும் இது அடித்தளமாக அமைகிறது.
</p><p>
எண் கணிதத்தில் 1 முதல் 9 வரையிலான எண்கள் மிக முக்கியமானவை. ஒவ்வொரு எண்ணும் ஒரு குறிப்பிட்ட கிரகத்தால் ஆளப்படுகிறது.</p><p>
அந்தவகையில் 9,18,27ஆம் திகதியில் பிறந்தவர்களுக்கான எண்கணித பலன்களை இராம்ஜி சுவாமிகள் இக்காணொளியில் பகிர்ந்துள்ளார்.</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/i9GuPE9kwjg" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp; உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணையுங்கள்.&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-10T14:40:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Manchu</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆரோக்கியத்தை அள்ளித்தரும் அத்திக்காய்... ஒருமுறை செய்து பாருங்க]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/cluster-fig-pickle-recipe-in-tamil-1783682813"></link>
            <id>https://manithan.com/article/cluster-fig-pickle-recipe-in-tamil-1783682813</id>
            <summary type="text">அத்திப்பழம் சாப்பிட்டிருப்பவர்கள் அத்திக்காயில் ஊறுகாய் செய்து பலரும் சாப்பிட்டிருக்க மாட்டார்கள். தற்போது அத்திக்காய் ஊறுகாய் எவ்வாறு செய்யலாம் என்பத...</summary>
            <content type="html"><![CDATA[<p>அத்திப்பழம் சாப்பிட்டிருப்பவர்கள் அத்திக்காயில் ஊறுகாய் செய்து பலரும் சாப்பிட்டிருக்க மாட்டார்கள். தற்போது அத்திக்காய் ஊறுகாய் எவ்வாறு செய்யலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.</p><h2>தேவையான பொருட்கள்</h2><p>அத்திக்காய்- 1/4 கிலோ
<br>காய்ந்த மிளகாய்-50 கிராம்
<br>மிளகு, தனியா, மஞ்சள்- தலா 5 கிராம்
<br>ஓமம், பெருங்காயம்- தலா 5 கிராம்&nbsp;<br>உப்பு - 20 கிராம்</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9d503140-41de-4d9c-aa4f-032be6d392b6/26-6a50e8896a7fa.webp' /></p><h2>செய்முறை</h2><p>அத்திக்காய் தவிர அனைத்துப் பொருட்களையும் ஒன்றாக லேசாக வறுத்து அரைத்துக் கொள்ளவும். பின்னர் அத்திக்காயை காம்பு&nbsp;நீக்கி இரண்டாக அரிந்து ஒரு பாத்திரத்தில் போட்டு, அரைத்து வைத்துள்ள விழுதையும் அதோடு சேர்த்து நன்றாக கலக்கவும்.</p><p>அதை ஓர் உலர்ந்த பாத்திரத்தில் இட்டு, அதன் வாயில் துணியைக் கட்டி ஒரு வாரம் வரை வெயிலில் வைத்திருந்து பின்னர் உபயோகிக்கவும்</p><p>இந்த ஊறுகாயை உண்டு வர, நன்கு செரிமானம் ஏற்படும். பித்தம் தணியும். இதய நோயாளிகளுக்கு ஏற்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6a6ccd49-febb-45a7-8539-9c3d07e886a3/26-6a50e888a75a3.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td><i>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் <a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"><b>WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள் <a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"><b>FOLLOW NOW&nbsp; </b></a>&nbsp; &nbsp; &nbsp;</i><br></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-10T14:37:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யூடியூப் காணொளிகளை 'லைக்' செய்தால் 500 ரூபாய் பணம் வருமா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/police-warning-youtube-video-likes-earn-money-1783688732"></link>
            <id>https://jvpnews.com/article/police-warning-youtube-video-likes-earn-money-1783688732</id>
            <summary type="text">&amp;nbsp; யூடியூப் காணொளிகளுக்கு &#039;லைக்&#039; செய்வதன் மூலம் நாளொன்றுக்கு ஆயிரக்கணக்கில் பணம் சம்பாதிக்கலாம் என வரும் குறுஞ்செய்திகள், நிதி மோசடிக்காகப் பின்னப...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; யூடியூப் காணொளிகளுக்கு 'லைக்' செய்வதன் மூலம் நாளொன்றுக்கு ஆயிரக்கணக்கில் பணம் சம்பாதிக்கலாம் என வரும் குறுஞ்செய்திகள், நிதி மோசடிக்காகப் பின்னப்பட்ட வலையாகும் என இலங்கை பொலிஸார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
</p><p>
அத்துடன், டெலிகிராம் போன்ற சமூக ஊடகத் தளங்களில் பதுங்கியிருக்கும் இத்தகைய மோசடிக்காரர்களிடம் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு பொலிசார் அறிவுறுத்தியுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4bc2a9e2-6fed-4602-b2c2-25264aad2ab3/26-6a50ee1dd33a7.webp' /></p><p></p><h2>500 ரூபாய் வழங்கப்படுவதாகக் கூறப்படுவது ஒரு பொறி&nbsp;</h2><p>
</p><p>
எந்தவொரு முதலீட்டை மேற்கொள்வதற்கு முன்பும், மக்கள் தமது பொது அறிவைப் பயன்படுத்திச் சிந்தித்துச் செயற்படுமாறு காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.</p><p></p><p>
</p><p>
குறிப்பாக, ஒரு யூடியூப் காணொளிக்கு 'லைக்' இடுவதற்கு 500 ரூபாய் வழங்கப்படுவதாகக் கூறப்படுவது ஒரு பொறி என்பதைப் புரிந்துகொள்ளுமாறும் பொலிஸார் வலியுறுத்தியுள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-10T14:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[13 மில்லியன் பீப்பாய் தேசிய எண்ணெய் காப்பகம் அமைக்க இந்திய திட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/indias-ongc-plans-13m-bbl-oil-reserve-1783693729"></link>
            <id>https://news.lankasri.com/article/indias-ongc-plans-13m-bbl-oil-reserve-1783693729</id>
            <summary type="text">இந்தியாவின் Oil and Natural Gas Corporation (ONGC) நிறுவனம், மங்களூரில் 1.75 மில்லியன் மெட்ரிக் டன் (சுமார் 13 மில்லியன் பீப்பாய்) கொள்ளளவு கொண்ட தேசி...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியாவின் Oil and Natural Gas Corporation (ONGC) நிறுவனம், மங்களூரில் 1.75 மில்லியன் மெட்ரிக் டன் (சுமார் 13 மில்லியன் பீப்பாய்) கொள்ளளவு கொண்ட தேசிய எண்ணெய் காப்பகம் (Strategic Petroleum Reserve-SPR) ஒன்றை அமைக்க திட்டமிட்டுள்ளது.
</p><p>
இந்தியா உலகின் மூன்றாவது பெரிய எண்ணெய் இறக்குமதி நாடாகும். ஹார்முஸ் நீரிணை (Strait of Hormuz) பகுதியில் ஏற்பட்ட தடைகள் காரணமாக, இந்தியா தனது எரிசக்தி பாதுகாப்பை வலுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/14957904-16bb-4b51-bc29-8b8a47f9acfb/26-6a5101a37e894.webp' /></p><p>தற்போது இந்தியாவிடம் மங்களூர், படூர், விசாக் ஆகிய இடங்களில் 5.33 மில்லியன் டன் கொள்ளளவு கொண்ட எண்ணெய் சேமிப்பு கிடங்கு உள்ளது.
</p><p>
புதிய காப்பகம் தேசிய நலனுக்காக உருவாக்கப்படுவதோடு, வணிக பயன்பாட்டிற்கும் அனுமதி பெற திட்டமிடப்பட்டுள்ளது.
</p><p></p><p>ONGC-யின் துணை நிறுவனம் Mangalore Refinery and Petrochemicals Ltd ஏற்கனவே மங்களூர் SPR-இன் ஒரு பகுதியை பயன்படுத்தி வருகிறது. மீதமுள்ள பகுதி Abu Dhabi National Oil Company (ADNOC)-க்கு வாடகைக்கு வழங்கப்பட்டுள்ளது.</p><p>இந்திய அரசு, ஓடிசா மாநிலத்தில் 4 மில்லியன் டன் கொள்ளளவு கொண்ட SPR மற்றும் படூரில் 2.5 மில்லியன் டன் கொள்ளளவு கொண்ட புதிய காப்பகத்தை அமைக்கவும் திட்டமிட்டுள்ளது. </p><p>ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளுடன் இந்தியா எரிசக்தி ஒத்துழைப்பை அதிகரித்து வருகிறது.

இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால், இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பு வலுவடையும்.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-10T14:27:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhushi</name>
            </author>
            <title type="text"><![CDATA[29 பேரை பலியெடுத்த நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் - அதிகாரிகளுக்கு பதவி உயர்வு..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/8-officers-killed-in-negombo-clash-promoted-1783692785"></link>
            <id>https://tamilwin.com/article/8-officers-killed-in-negombo-clash-promoted-1783692785</id>
            <summary type="text">&amp;nbsp;நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் உயிரிழந்த 8 அதிகாரிகளுக்கு சிறைத்துறை பதவி உயர்வு வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதற்கமைய கடந்த 5 மற்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் உயிரிழந்த 8 அதிகாரிகளுக்கு சிறைத்துறை பதவி உயர்வு வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>

இதற்கமைய கடந்த 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் சிறைக் கைதிகளுக்குள் கிளம்பிய மோதலில் 8 அதிகாரிகள் உட்பட 29 பேர் மொத்தமாக உயிரிழந்துள்ளனர். </p><p>

இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மேற்கொண்டு வருகின்றது.</p><p></p><p>

இதன் அடிப்படையில், நீர்கொழும்பு மருத்துவமனை மற்றும் கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் சிறை அதிகாரிகள் மற்றும் கைதிகளிடமிருந்து வாக்குமூலங்களைப் பெறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.</p><h2>

கட்டுவெல்லகம சுரேஷால் தாக்கப்பட்ட கைதிகள்</h2><p>
அத்துடன், கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் 29 அதிகாரிகள் மற்றும் கைதிகளிடமிருந்து வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/111933e8-297a-4336-8dbc-ffba4edbc9a9/26-6a51011db2169.webp' /></p><p>
</p><p>
அவர்களில் உள்ள அனைத்து கைதிகளும் கட்டுவெல்லகம சுரேஷால் தாக்கப்பட்டதாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.</p><p> 

இந்நிலையில், கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் சிறை அதிகாரிகளிடமிருந்தும் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன, ஆனால் அவற்றை இன்னும் முழுமையாகப் பதிவு செய்ய முடியாமல் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p> 

ஏனெனில், சில அதிகாரிகள் வாக்குமூலம் அளிப்பதற்கு உகந்த உடல்நிலையில் இல்லை.</p><p>

இதற்கிடையில், மோதலில் உயிரிழந்த எட்டு சிறை அதிகாரிகளுக்கும் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
</p><h2>

அதிகாரிகளுக்கு பதவி உயர்வு</h2><p>

கொலை செய்யப்பட்ட இரண்டாம் வகுப்பு சிறைக்காவலர் எஸ்.எச்.எஸ். சந்திரவன்ச முதலாம் வகுப்பு சிறைக்காவலர் பதவிக்கும், மற்ற சிறைக்காவலர்கள் சார்ஜென்ட் (Sergeant) பதவிக்கும் பதவி உயர்வு பெற்றுள்ளனர் என சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b73edd57-3283-452d-9abb-74380e1cb02c/26-6a51011e5fe0c.webp' /></p><p>
</p><p>
இதற்கிடையில், நீர்கொழும்பு சிறைச்சாலையின் பெண்கள் பிரிவில் இருந்த அனைத்து கைதிகளும் இன்று மற்ற சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர். </p><p>

சிறைச்சாலையில் நடந்த மோதலின் போது படுகாயமடைந்து கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்த சார்ஜென்ட் கமகே உபாலியின் உடல், இன்று(10.07.2026) கம்புருபிட்டியாவில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.</p><p> 

இதற்கிடையில், மோதலில் உயிரிழந்த சார்ஜென்ட் ருவன் திலகசிறியின் இறுதிச் சடங்குகள் இன்று(10) பிற்பகல் அம்பகஹாவெவ பொது மயானத்தில் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><p></p><p> </p>]]></content>
            <updated>2026-07-10T14:26:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[இஸ்ரேலையும் விட்டுவைக்காத பதிலடி! தாக்குதலில் இருந்து அமெரிக்கா தப்பாது என்கிறது ஈரான்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/iran-going-launch-attack-that-israel-cannot-avoid-1783693286"></link>
            <id>https://ibctamil.com/article/iran-going-launch-attack-that-israel-cannot-avoid-1783693286</id>
            <summary type="text">தனது உள்கட்டமைப்பு மீதான எந்தவொரு தாக்குதலுக்கும் ஈரான் பதிலடி கொடுக்கும் என்றும், அந்தப் பதிலடியிலிருந்து இஸ்ரேலும் தப்பாது என்றும் ஈரானின் உயர்மட்ட ...</summary>
            <content type="html"><![CDATA[<p>தனது உள்கட்டமைப்பு மீதான எந்தவொரு தாக்குதலுக்கும் ஈரான் பதிலடி கொடுக்கும் என்றும், அந்தப் பதிலடியிலிருந்து இஸ்ரேலும் தப்பாது என்றும் ஈரானின் உயர்மட்ட பாதுகாப்பு செயலாளர் எச்சரித்துள்ளதாக மத்திய கிழக்கு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p>முன்னரே எச்சரித்தபடி, ஈரானிய உள்கட்டமைப்புகள் மீதான தாக்குதல்களுக்குப் பதிலடி கொடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்ட றிலையில்&nbsp;ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்பு மன்றத்தின் செயலாளர் முகமது பாகர் சுல்காத்ரினால் மேற்படி எச்சரிக்கை வெளியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p> மேலும் ஈரானிய ஆயுதப் படைகளின் எதிர்வினையிலிருந்து இஸ்ரேல் பாதுகாப்பாக இருக்காது என்று அவர் வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>ஈரானின் எதிரொலி</h2><p>ஹோர்முஸ் நீரிணையை கடந்து செல்லும் வர்த்தகக் கப்பல்கள் மீது ஈரான் நடத்திய சமீபத்திய தாக்குதல்களுக்குப் பதிலடியாகவே இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகக் கூறி, அமெரிக்கா புதன்கிழமை மற்றும் வியாழக்கிழமைகளில் தெற்கு ஈரானில் உள்ள பல நகரங்கள் மீது வான்வழித் தாக்குதல்களை நடத்தியது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4b4e7911-3580-4201-8b25-a13fc1603c79/26-6a51005e3b4d4.webp' /></p><p>மேலும், வடகிழக்கு ஈரானில் உள்ள இரண்டு தொடருந்து பாலங்களையும் இந்த தாக்குதல் குறிவைத்தது.</p><p>இதற்கு பதிலடியாக, குவைத், பஹ்ரைன், கட்டார் மற்றும் ஜோர்தானில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள் மற்றும் வசதிகள் மீது ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தியதாக ஈரானின் இஸ்லாமியப் புரட்சிக் காவலர் படையும் இராணுவமும் தெரிவித்துள்ளன.
</p><p>
சமீபத்தில் கையெழுத்திடப்பட்ட அமைதிப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, ஈரானும் அமெரிக்காவும் இறுதி உடன்பாட்டை எட்டுவதற்காக 60 நாட்களுக்குள் பேச்சுவார்த்தை நடத்தத் திட்டமிட்டிருந்த நிலையில் இந்த மோதல்கள் நிகழ்ந்தமை அமைதியடைந்த மத்தியகிழக்கின் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள<a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank"> IBC தமிழ் WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-10T14:21:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[சென்னையில் பிபிஎல் தொடக்க போட்டி நடத்துவது ஏன்? BBL தலைவர் விளக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/chennai-to-host-bbl-opener-in-12-december-1783692512"></link>
            <id>https://news.lankasri.com/article/chennai-to-host-bbl-opener-in-12-december-1783692512</id>
            <summary type="text">சென்னையில் பிபிஎல் தொடக்க போட்டி நடத்துவது ஏன் என BBL தலைவர் தெரிவித்துள்ளார். 

சென்னையில் பிபிஎல் தொடக்க போட்டி

2011 ஆம் ஆண்டு முதல் பிக் பாஸ் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சென்னையில் பிபிஎல் தொடக்க போட்டி நடத்துவது ஏன் என BBL தலைவர் தெரிவித்துள்ளார். </p><h3>

சென்னையில் பிபிஎல் தொடக்க போட்டி
</h3><p>
2011 ஆம் ஆண்டு முதல் பிக் பாஸ் லீக் (Big Bash League - BBL) T20 தொடரை அவுஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம், நடத்தி வருகிறது. இதில் 8 அணிகள் பங்கு பெற்று வருகின்றன.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/86dadab3-bd3c-472e-84f2-6710225f7883/26-6a50fce3ccaf8.webp' /></p><p> 

முதல்முறையாக BBL போட்டி அவுஸ்திரேலியாவிற்கு வெளியே நடத்தப்பட உள்ளது. இதே போல் ஒரு வெளிநாட்டு பிரான்சைஸ் தொடரின் போட்டி முதல்முறையாக இந்தியாவில் நடத்தப்பட்ட உள்ளது.</p><p> 

2026 BBL தொடரின் தொடக்கப்போட்டி, சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற உள்ளது.&nbsp;</p><p></p><p> 

சில மாதங்களுக்கு முன்னரே, அவுஸ்திரேலியா கிரிக்கெட் நிர்வாகிகள் சேப்பாக்கம் மைதானத்திற்கு வருகை தந்து ஆய்வு செய்ததோடு, பிசிசிஐ மற்றும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்க நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினர்.
</p><p>
இந்திய பிரதமர் மோடி அவுஸ்திரேலியாவிற்கு சென்றுள்ள நிலையில், மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் (MCG) நடைபெற்ற ஒரு நிகழ்வில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அவுஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டார்.</p><h3>
போட்டி நடைபெற உள்ள திகதி, நேரம்</h3><p> சென்னையில் டிசம்பர் 12 ஆம் திகதி நடைபெற உள்ள போட்டியில், நடப்பு சாம்பியனான பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் மற்றும் மெல்போர்ன் ரெனேகேட்ஸ் விளையாட உள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6f3c8f4f-5bb9-4e81-99e4-ff519c687e2a/26-6a50fce32abdb.webp' /></p><p>

இந்திய நேரப்படி பிற்பகல் 2.40 மணிக்கு இந்த போட்டி தொடங்கும் எனத் திட்டமிடப்பட்டுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a5d3d3ac-1f24-4cf7-ad93-168852ad4b65/26-6a50fce47b505.webp' /></p><p> 

ஸ்கார்ச்சர்ஸ் அணியில் மிட்செல் மார்ஷ், கூப்பர் கொன்னோலி ஆகியோர் இடம்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜோஷ் இங்லிஸ், ஜை ரிச்சர்ட்சன் டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கவில்லை என்றால், அவர்களையும் அணியில் சேர்க்க வாய்ப்புள்ளது. </p><h3>

சென்னையில் நடத்த காரணம்</h3><p>

இது குறித்து பேசிய BBL நிர்வாகப் பொது மேலாளர் அலிஸ்டர் டாப்சன், "இந்தியா முழுவதும், குறிப்பாக சென்னையில், கிரிக்கெட் மீது மிகுந்த ஆர்வம் கொண்ட ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பது எங்களுக்குத் தெரியும்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/294fca50-9880-432a-9eac-4db1b26a8946/26-6a50fce27a8ff.webp' /></p><p>
நாங்கள் பேசிய அனைவரும், நல்ல கூட்டம் வரும் என எதிர்பார்க்கலாம் என மிகவும் நம்பிக்கையுடன் இருந்தனர். இந்த நிகழ்வை நாங்கள் கட்டமைத்தபோது, ​​இந்தியாவில் பிபிஎல் ஏற்கனவே எவ்வளவு பிரபலமாக உள்ளது என்பது எங்களுக்குத் தெளிவாகியுள்ளது.</p><p> 

ஐபிஎல்க்கு ஈடாகாது என்றாலும், பிபிஎல் மிகவும் விரும்பப்படும் ஒரு தொடராகும். கூட்டத்தில் கணிசமான அளவு மஞ்சள் நிற உடைகள் இருக்கும் என்று எதிர்பார்க்கிறேன். அவுஸ்திரேலியாவில் தொலைக்காட்சியில் பார்க்கும் மக்கள், இது ஒரு பிபிஎல் போட்டி போலவே தோற்றமளிக்க வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம். </p><p>

ஒரு ஐபிஎல் போட்டியை இங்கு நடத்துவதற்கான ஆர்வம் அரசு மற்றும் கிளப்களிடையே உள்ளது. நேரம் வரும்போது அந்தக் கலந்துரையாடல்களை நடத்துவதற்கான வாய்ப்பை, நாங்கள் நிச்சயமாக வரவேற்போம். ஏனெனில், அவுஸ்திரேலியாவில் ஐபிஎல்க்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது" என பேசியுள்ளார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-10T14:15:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Theepan</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ். பல்கலைக்கழக முன்னாள் கலைப்பீடாதிபதியின் அவதூறு வழக்கு! நீதிமன்றின் உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/jaffna-uni-faculty-of-arts-fomer-dean-court-case-1783691084"></link>
            <id>https://ibctamil.com/article/jaffna-uni-faculty-of-arts-fomer-dean-court-case-1783691084</id>
            <summary type="text">


யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர், முன்னாள் மாணவிகள், முகநூல், டிக் டொக் மற்றும் யூடியூப் சமூக வலைத்தளங்கள் உள்ளிட்ட 14 பேரை எதிர் மனுதாரர்களாக ...</summary>
            <content type="html"><![CDATA[<p>


யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர், முன்னாள் மாணவிகள், முகநூல், டிக் டொக் மற்றும் யூடியூப் சமூக வலைத்தளங்கள் உள்ளிட்ட 14 பேரை எதிர் மனுதாரர்களாக கொண்டு பருத்தித்துத்துறை நீதவான் நீதிமன்றில் நிகழ்நிலை காப்பு சட்டத்தின் கீழ் யாழ். பல்கலைக்கழக முன்னாள் கலைப்பீடாதிபதி சிவசுப்பிரமணியம் ரகுராம் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை எதிர்வரும் திங்கட்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
</p><p>
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் முன்னாள் கலைப்பீடாதிபதியான சிவசுப்பிமணியம் ரகுராம் தன்னை துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியதாக முன்னாள் பல்கலைக்கழக மாணவியும் இரண்டு வருட காலமாக தற்காலிக உதவி விரிவுரையாளராகவும் கடமையாற்றிய பெண் ஒருவர் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவிற்கு முறைப்பாடு செய்ததை அடுத்து, பல்கலைக்கழக மட்டத்தில் விசாரணை குழு அமைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.</p><p></p><h2>தொடரப்பட்டுள்ள&nbsp;வழக்கு </h2><p>

இந்நிலையில், முன்னாள் கலைப்பீடாதிபதி சிவசுப்ரமணியம் ரகுராம் குறித்த முன்னாள் மாணவியுடன் உரையடாடிய தொலைபேசி ஒலிப்பதிவு என சில ஒலிப்பதிவுகள் டிக்டோக் தளம் மற்றும் முகநூல்களில் பகிரப்பட்டன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8a43d160-a399-4870-b226-61817768a671/26-6a50fe28b4a46.webp' /></p><p>
</p><p>
அதன் அடிப்படையில் சிலரால் முகநூல்களிலும் யூடியூப் தளத்திலும் கருத்துக்கள் பகிரப்பட்டன.
</p><p>
இந்நிலையில், பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில், நிகழ்நிலை காப்பு சட்டத்தின் பிரிவு 20இன் கீழ் யாழ்ப்பாண பல்கலைக்கழக முன்னாள் கலைப்பீடாதிபதி சிவசுப்பிரமணியம் ரகுராமால் கடந்த முதலாம் திகதி வழக்கு தொடரப்பட்டுள்ளதுடன் அதில் 14 பேர் எதிர் மனுதாரர்களாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.</p><h2>தடை செய்யப்பட்ட கூற்றுக்கள்</h2><p>

குறித்த 14 பேரில், சிவசுப்பிரமணியம் ரகுராம் மீது குற்றச்சாட்டை முன்வைத்துள்ள மாணவி, அவரது நண்பியான முன்னாள் மாணவி, யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர், ஆகியோருடன் இணைய இடையீட்டாளர்களாக யூடியூப், டிக்டொக், பேஸ்புக் ஆகியவை மனுதாரர் தொடர்பிலான தடை செய்யப்பட்ட கூற்றுக்களை பிரசுத்தமைக்கு எதிராகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5ad778b9-dea3-4373-9e74-4deae61f5b75/26-6a50fe296bc7e.webp' /></p><p>
</p><p>
சம்பந்தப்பட்ட வழக்கில் நிபந்தனையுடனான கட்டளையை பிறப்பிப்பதா? இல்லையா என்பதனை முடிவு செய்வதற்காக வழக்கினை இன்றையதினம் வெள்ளிக்கிழமைக்கு திகதிக்கு மன்று திகதியிட்டு இருந்தது.
</p><p>
அதன் அடிப்படையில் குறித்த வழக்கு இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட போது, எவ்வித கட்டளைகளும் வழங்கப்படாது, வழக்கினை எதிர்வரும் திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும் என மன்று உத்தரவிட்டுள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-10T14:14:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்; அரசாங்கத்தை பாராட்டிய ரஞ்சன் ராமநாயக்க!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/negombo-prison-clash-ranjan-ramanayake-comments-1783687225"></link>
            <id>https://jvpnews.com/article/negombo-prison-clash-ranjan-ramanayake-comments-1783687225</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற மோதல் சம்பவமானது, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் புனர்வாழ்வு அமைச்சரின் திட்டமிட்ட செ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; &nbsp;நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற மோதல் சம்பவமானது, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் புனர்வாழ்வு அமைச்சரின் திட்டமிட்ட செயலல்ல என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.</p><p> 


 இன்று (10) ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த ரஞ்சன் ராமநாயக்க, 

சிறைச்சாலையின் உள்ளே ஒரே அறையில் அல்லது வார்டில் நூற்றுக்கணக்கான கைதிகள் அடைக்கப்பட்டு ஒன்றாக வாழும் சூழலில், இவ்வாறான மோதல்கள் ஏற்படுவது இயல்பான ஒன்று என அவர் சுட்டிக்காட்டினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c81b49df-14e6-4fd9-b47c-f25432782081/26-6a50e83a6146d.webp' /></p><h2>&nbsp;உயிர்த்த ஞாயிறு தாக்குதல்&nbsp; யாரும் இதுவரை பொறுப்பேற்கவில்லை</h2><p> </p><p>

இத்தகைய சம்பவங்கள் இன்றும் அல்லது நாளையும் கூட மீண்டும் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக தெரிவித்த அவர், தானும் கடந்த காலங்களில் வெலிக்கடை மற்றும் அகுனுகொலபெலஸ்ஸ போன்ற சிறைச்சாலைகளில் கைதியாக இருந்தவன் என்ற ரீதியில் இந்த அனுபவங்களை நன்கு அறிவதாகவும், தானும் இவ்வாறான ஆபத்தான சூழ்நிலைகளை எதிர்கொண்ட அறை ஒன்றிலேயே அடைக்கப்பட்டிருந்ததாகவும் குறிப்பிட்டார்.</p><p></p><p> </p><p>

 சிறைச்சாலை மோதல்கள் மற்றும் அங்குள்ள நிலமைகள் குறித்து சமூகத்தில் இரண்டு விதமான கருத்துக்கள் நிலவுவதாகவும், சிலர் அங்கு போதிய வசதிகள் இல்லை என்று கூறும் அதேவேளை, இன்னும் சிலர் சிறைச்சாலை என்பது ஐந்து நட்சத்திர ஹோட்டல் அல்ல என்று வாதிடுவதாகவும் அவர் தெரிவித்தார்.</p><p>

 இந்த சம்பவத்திற்கு ஒரு அரசாங்கமாகவோ அல்லது அமைச்சராகவோ பொறுப்பேற்றுக் கொண்டமை பாராட்டுக்குரியது என ரஞ்சன் ராமநாயக்க வலியுறுத்தினார்.</p><p></p><p> </p><p>


இதற்கு முன்னர் இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் போன்ற பெரிய பேரழிவுகளுக்குக் கூட யாரும் இதுவரை பொறுப்பேற்காத நிலையில், இந்த சம்பவத்திற்குப் பொறுப்பான அமைச்சர், "நான் இதற்குப் பொறுப்பேற்கிறேன்" என்று தைரியமாக முன்வந்துள்ளதை அவர் சுட்டிக்காட்டினார். </p><p>

வெளிநாடுகளில் ஏதேனும் அசம்பாவிதங்கள் நடந்தால் அதற்குரிய தலைவர்கள் பொறுப்பேற்பதை நாம் பார்த்திருக்கிறோம் என கூறிய ரஞ்சன் ராமநாயக்க, உள்நாட்டில் இந்த அமைச்சர் பொறுப்பேற்றுக் கொண்ட துணிச்சலான மற்றும் நேர்மையான குணத்தை தான் மதிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-10T14:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Manchu</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாத்ரூமில் இந்த பொருட்களை வைத்திருக்கீங்களா? வீட்டில் வறுமை அதிகரிக்கும்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/vastu-shastra-these-things-to-remove-your-bathroom-1783688703"></link>
            <id>https://manithan.com/article/vastu-shastra-these-things-to-remove-your-bathroom-1783688703</id>
            <summary type="text">வீட்டில் செல்வம் நிலைப்பதற்கு பாத்ரூமில் வைக்கக்கூடாத பொருட்களைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.வாஸ்துவீட்டில் செல்வம் நிலைப்பதற்கு பாத்ரூம்...</summary>
            <content type="html"><![CDATA[<p>வீட்டில் செல்வம் நிலைப்பதற்கு பாத்ரூமில் வைக்கக்கூடாத பொருட்களைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.</p><h2>வாஸ்து</h2><p>வீட்டில் செல்வம் நிலைப்பதற்கு பாத்ரூம் வாஸ்து மிக முக்கியமாக கூறப்படுகின்றது. பொதுவாகவே வாஸ்து சாஸ்திரப்படி பொருட்களை வைக்கும் பழக்கம் பெரும்பாலான மக்களிடையே இருந்து வருகின்றது.</p><p>வீட்டில் மட்டுமின்றி பாத்ரூமில் வைக்கும் பொருட்கள் மூலமாக எதிர்மறை ஆற்றல் ஏற்படும் என்றும் இவை குடும்ப உறுப்பினர்களின் முன்னேற்றத்தினை தடுக்கும் என்று கூறப்படுகின்றது.</p><p></p><p>வீட்டில், சமையலறை, படுக்கையறை இவற்றிற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தினை பாத்ரூமிற்கும் கட்டாயம் கொடுக்க வேண்டும்.</p><p>அந்த வகையில் வாஸ்துபடி பாத்ரூமில் வைக்கக்கூடாத பொருட்களைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8e11e158-d67d-49aa-abb2-c841def6a7da/26-6a50f532afb30.webp' /></p><h2>பாத்ரூமில் வைக்கக்கூடாத பொருட்கள்</h2><p>பாத்ரூமில் <b>உடைந்த கண்ணாடி</b>யை கட்டாயம் வைக்கக்கூடாது. அவ்வாறு உடைந்த, விரிசல் உள்ள கண்ணாடியை வைப்பதால் வீட்டில் எதிர்மறை ஆற்றல் அதிகரித்து மன அமைதி குறையுமாம்.</p><p>அதே போன்று <b>காலியான வாளி</b>யை பாத்ரூமில் வைக்கக்கூடாது. தண்ணீர் நிரப்பி வைக்கலாம் அல்லது தலைகீழாக கவிழ்த்து வைக்கலாம். அவ்வாறு வெறும் வாளியை வைப்பதால் வீட்டில் பணப்பற்றாக்குறை இருக்கும். நீலநிற வாளியை பயன்படுததுவது மிகவும் மங்களகரமாக பார்க்கப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5f7ced18-dc5c-47dc-ad92-0ddf83730d26/26-6a50f5335de94.webp' /></p><p>பாத்ரூமில் இருக்கும்<b> தண்ணீர் குழாயிலிருந்து நீர் வீணாமல்</b> இருக்க வேண்டும். அவ்வாறு தண்ணீர் சொட்டிக் கொண்டிருந்தால் வீட்டில் பணவிரயம் ஏற்படும். மேலும் லட்சுமி தேவியின் வருகையை தடுக்கவும் செய்யும்.</p><p></p><p><b>ஈரமான மற்றும் அழுக்கு துணி</b>களை பாத்ரூமில் போடுவதை தவிர்க்க வேண்டும். குளித்த உடனேயே அதனை துவைத்து விட வேண்டுமாம். இரவுமுழுவதும் அவ்வாறு வைத்திருந்தால் ராகு மற்றும் சனியின் ஆதிக்கத்தினை அதிகப்படுத்துமாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ba426de8-695f-4595-bea9-213c4c3ca562/26-6a50f534b58cf.webp' /></p><p><b>குப்பைகள் மற்றும் உடைந்த பொருட்களான</b> சோப்பு டப்பா, ஷாம்பு டப்பா, பழைய டூத் பிரஷ் இவற்றினை பாத்ரூமில் வைக்கக்கூடாது. இவை வீட்டில் வறுமையை கொண்டுவருமாம்.</p><p>வெளியே போட்டுச் செல்லும் <b>செருப்புகளை</b> பாத்ரூமிற்குள் கொண்டு செல்லக்கூடாது. பாத்ரூமிற்கு தனி செருப்பினை பயன்படுத்தவும். வெளியே பயன்படுத்தும் செருப்பை பயன்படுத்தினால் வீட்டில் எதிர்மறை ஆற்றல் ஏற்படுமாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a233c2d0-a642-4f1f-b181-697002e90dbd/26-6a50f5340cd78.webp' /><br></p><p>பாத்ரூம் சுவர்களுக்கு <b>கருப்பு அல்லது அடர் பிரவுன் நிற டைல்</b>களை பயன்படுத்தக்கூடாது. வெளிர் நீலம், கிரீம் போன்ற கலர்களை தேர்ந்தெடுக்கலாம்.</p><table class="table table-bordered"><tbody><tr><td><i>&nbsp;சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் <a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள் <b><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank" style="">FOLLOW NOW</a>&nbsp; &nbsp; </b>&nbsp; &nbsp;</i><br></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-10T13:36:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெப் தொடரில் பெட்ரூம் காட்சியில் நடித்துள்ள பிக்பாஸ் புகழ் திவ்யா கணேசன்...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/divya-ganesan-acted-in-intimate-scene-1783682140"></link>
            <id>https://viduppu.com/article/divya-ganesan-acted-in-intimate-scene-1783682140</id>
            <summary type="text">திவ்யா கணேசன்தமிழ் சின்னத்திரையில் மிகவும் பிரபலமான சீரியல் நடிகைகளில் ஒருவர் தான் நடிகை திவ்யா கணேசன்.பாக்கியலட்சுமி என்ற சீரியலில் நடித்ததன் மூலம் ம...</summary>
            <content type="html"><![CDATA[<h2>திவ்யா கணேசன்</h2><p>தமிழ் சின்னத்திரையில் மிகவும் பிரபலமான சீரியல் நடிகைகளில் ஒருவர் தான் நடிகை திவ்யா கணேசன்.</p><p>பாக்கியலட்சுமி என்ற சீரியலில் நடித்ததன் மூலம் மக்களிடம் பிரபலமானார், அந்த சீரியலை தொடர்ந்து சன் டிவியில் அன்னம் சீரியலில் நடித்து வந்தார், ஆனால் பாதியிலேயே வெளியேறினார்.</p><p>அதேபோல் மகாநதி சீரியலிலும் நடித்தார், பாதியில் விலகிவிட்டார். பின் பிக்பாஸ் 9வது சீசனில் கலந்துகொள்ள டைட்டிலையும் வென்றார்.</p><p>தற்போது இவர் Sshhh 3 என்ற அடல்ட் வெப் தொடரில் நடித்துள்ளார். அதில் பெட்ரூம் காட்சியில் நடித்துள்ளார். அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/04ad962f-bf8d-4fae-9a5f-514989f85799/26-6a50d45da16eb.webp' /></p>]]></content>
            <updated>2026-07-10T13:30:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[சேலையில் ரசிகர்களை கிறங்கடிக்கும் நடிகை கயாடு லோஹர்.. வைரல் போட்டோஷூட்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/kayadu-lohar-latest-saree-photoshoot-1783680874"></link>
            <id>https://viduppu.com/article/kayadu-lohar-latest-saree-photoshoot-1783680874</id>
            <summary type="text">ரசிகர்கள் மனம் கவர்ந்த இளம் நடிகைகளில் ஒருவர் கயாடு லோஹர். இவர் டிராகன் திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார். இதை தொடர்ந்து இவர் நடி...</summary>
            <content type="html"><![CDATA[<p>ரசிகர்கள் மனம் கவர்ந்த இளம் நடிகைகளில் ஒருவர் கயாடு லோஹர். இவர் டிராகன் திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார். </p><p>இதை தொடர்ந்து இவர் நடிப்பில் அடுத்ததாக வெளியாகியுள்ள திரைப்படம் தான் இதயம் முரளி. மேலும் Immortal, Paradise, மஞ்சணத்தி உள்ளிட்ட பல திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார். </p><p>இன்ஸ்டாகிராமில் 3.2M followers கொண்டுள்ள நடிகை கயாடு லோஹர் அவ்வப்போது தனது போட்டோஷூட் புகைப்படங்களை அதில் பதிவிடுவார்.</p><p> அந்த வகையில் தற்போது சேலையில் எடுத்துக்கொண்ட போட்டோஷூட் புகைப்படங்களை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்:</p><p><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/p/DaklxZ5iL2k/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/p/DaklxZ5iL2k/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/p/DaklxZ5iL2k/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by kayadulohar (@kayadu_lohar_official)</a></p></div></blockquote> <script async src="//www.instagram.com/embed.js"></script></p>]]></content>
            <updated>2026-07-10T13:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dhilak</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீர்கொழும்பு சிறைச்சாலை விவகாரம்! விசாரணையை தொடங்கியது முக்கிய நிறுவனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/hrcsl-conducts-investigation-prisons-incidents-1783688425"></link>
            <id>https://ibctamil.com/article/hrcsl-conducts-investigation-prisons-incidents-1783688425</id>
            <summary type="text">


நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் ஏற்பட்ட வன்முறைகள் மற்றும் அதனைத் தொடர்ந்து ஏனைய சிறைச்சாலைகளில் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து இலங்கை மனித...</summary>
            <content type="html"><![CDATA[<p>


நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் ஏற்பட்ட வன்முறைகள் மற்றும் அதனைத் தொடர்ந்து ஏனைய சிறைச்சாலைகளில் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு (HRCSL) விரிவான விசாரணையொன்றைத் தொடங்கியுள்ளது.</p><p> 

இந்த மோதல்களுக்கு வழிவகுத்த பின்னணி, கைதிகள் மற்றும் சிறை அதிகாரிகளின் மரணங்கள், காயங்கள், சித்திரவதைகள் மற்றும் முறையற்ற நடத்தைகள் போன்ற குற்றச்சாட்டுகள் குறித்து இந்த விசாரணை முக்கிய கவனம் செலுத்துவதாக கூறப்படுகிறது.
</p><p>
அத்துடன், சிறை அதிகாரிகளின் காவலில் இருந்தபோது நீர்கொழும்பு சிறையிலிருந்து பிற சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்ட இரண்டு கைதிகளின் மரணங்கள் குறித்தும் இந்த விசாரணையின் போது ஆராயப்படும் என ஆணைக்குழு இன்று(10) விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.</p><p></p><h2>இறுதி முடிவு</h2><p>
தற்போது கைதிகள் மற்றும் சிறை அதிகாரிகளிடம் வாக்குமூலங்களைப் பெற்று ஆதாரங்களைச் சேகரிக்கும் முதற்கட்டப் பணிகளே முன்னெடுக்கப்பட்டு வருவதால், இந்தச் சம்பவங்கள் தொடர்பாக இன்னும் இறுதி முடிவுகள் எதற்கும் வரவில்லை என்று ஆணைக்குழு தெளிவுபடுத்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f1ab8b20-8670-46f4-89c4-3bf930b53d23/26-6a50f2cc8bf46.webp' /></p><p> </p><p>

எனினும், இடமாற்றம் செய்யப்பட்ட கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைச்சாலைகளுக்கு அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டபோது, பல கைதிகள் காயமடைந்திருப்பதும் அவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதும் கண்டறியப்பட்டுள்ளது. </p><p>

எனவே, காயமடைந்த கைதிகளுக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை வழங்கப்பட வேண்டும் எனப் பரிந்துரைத்துள்ள ஆணைக்குழு, சிகிச்சைகளை திட்டமிட்டு தாமதப்படுத்துவது ஒரு வகையான பழிவாங்கலாகக் கருதப்படலாம் என்றும் எச்சரித்துள்ளது.</p><h2>வெலிக்கடையில் அனுமதி மறுப்பு</h2><p>
</p><p>
இதற்கிடையில், கடந்த ஜூலை 7ஆம் திகதி இரவு 8.30 மணியளவில் வெலிக்கடை சிறைச்சாலைக்கு ஆணைக்குழுவினர் திடீர் விஜயம் மேற்கொண்டபோது, அங்கு நுழைவதற்கு அனுமதி மறுக்கப்பட்டமை குறித்து மனித உரிமைகள் ஆணைக்குழு தனது கடுமையான கவலையை வெளியிட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f79c8ed9-269c-4c63-8656-be7291682f45/26-6a50f2cd3fa65.webp' /></p><p>

 இந்த அனுமதி மறுப்பானது இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு சட்டத்தை மீறும் செயல் என்றும், சித்திரவதைகள் குறித்த முறைப்பாடுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் அதிகாரத்தைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் செயல் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. </p><p>

எவ்வாறாயினும், மறுநாள் அவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்ட போதிலும், ஏற்பட்ட காலதாமதம் காரணமாக உரிய நேரத்தில் விசாரணைகளை முன்னெடுக்கும் வாய்ப்பு பறிபோனதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.</p><p> 

இந்த நிலையில், சிறைக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டதற்கான காரணங்களை நேரில் விளக்குமாறு சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் மற்றும் வெலிக்கடை சிறைச்சாலையின் தலைமைப் பொறுப்பதிகாரி ஆகியோருக்கு ஆணைக்குழு தற்போது அழைப்பாணை விடுத்துள்ளது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h5>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <b><a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a></b>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h5></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-10T13:25:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பு மெகசின் சிறைச்சாலையில் வெடித்த மோதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/clash-erupts-at-colombo-magazine-prison-1783685164"></link>
            <id>https://jvpnews.com/article/clash-erupts-at-colombo-magazine-prison-1783685164</id>
            <summary type="text">கொழும்பு மெகசின் சிறைச்சாலையில் வெடித்த மோதல்

கொழும்பு மெகசின் சிறைச்சாலையில் உள்ள ஐந்து கைதிகளுக்கு இடையே மோதல் ஒன்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு மெகசின் சிறைச்சாலையில் வெடித்த மோதல்

கொழும்பு மெகசின் சிறைச்சாலையில் உள்ள ஐந்து கைதிகளுக்கு இடையே மோதல் ஒன்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. </p><p>

இன்று (10) பிற்பகல் இந்த மோதல் சம்பவ,ம் இடம்பெற்றுள்ளதுடன், மோதலில் காயமடைந்த இரண்டு கைதிகள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இந்த மோதலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3e1ec8d3-1006-44a5-a23d-7792c4e2afea/26-6a50e02e035ef.webp' /></p><p></p><p> சம்பவம் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அதேவேளை கடந்த வாரம் நீர்கொழும்பு சிறைசாலையில் ஏற்பட்ட மோதலில் 28 பேர் உயிர்ழந்ததுடன் நூறிற்கும் மேற்பட்டோர் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-10T13:25:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[அனுராதபுரம் வைத்தியசாலை கழிவு அகற்றலில் பாரிய மோசடி: சிவில் புலனாய்வு முன்னணி முறைப்பாடு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/massive-fraud-disposal-at-anuradhapura-hospital-1783687968"></link>
            <id>https://tamilwin.com/article/massive-fraud-disposal-at-anuradhapura-hospital-1783687968</id>
            <summary type="text">அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் மருத்துவக் கழிவுகளை அகற்றும்
ஒப்பந்தத்தில் பாரிய நிதி மோசடி இடம்பெற்றுள்ளது என்று குற்றம் சாட்டியுள்ள
சிவில் புலனா...</summary>
            <content type="html"><![CDATA[<p>அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் மருத்துவக் கழிவுகளை அகற்றும்
ஒப்பந்தத்தில் பாரிய நிதி மோசடி இடம்பெற்றுள்ளது என்று குற்றம் சாட்டியுள்ள
சிவில் புலனாய்வு முன்னணி, இது தொடர்பாகச் சுகாதார அமைச்சின் செயலாளரிடம்
முறைப்பாட்டை அளித்துள்ளது.
</p><p>
கடந்த ஏப்ரல் 8 ஆம் திகதியன்று, சுமார் 6 இலட்சத்து 50 ஆயிரம் கிலோகிராம்
மருத்துவக் கழிவுகளை அகற்றுவதற்காகக் கோரப்பட்ட டெண்டரில் மூன்று நிறுவனங்கள்
விலைமனுக்களைச் சமர்ப்பித்திருந்தன. </p><p>விதிகளின்படி, ஒரு கிலோகிராமுக்கு
ஆகக்குறைந்த விலையான 179 ரூபாவைக் கோரிய நிறுவனத்துக்கே ஒப்பந்தம்
வழங்கப்பட்டிருக்க வேண்டும்.</p><p></p><h2>நிதி நட்டம்</h2><p>

எனினும், அந்தத் தேர்வு இரத்துச் செய்யப்பட்டு, ஒரு கிலோகிராமுக்கு 230 ரூபா
கோரியிருந்த நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fb4096f4-e424-415b-b980-971a2c71a59a/26-6a50ebfb547ce.webp' /></p><p> </p><p>இந்த முறைகேடான
தெரிவினால், ஒரு கிலோகிராமுக்கு 51 ரூபா வீதம், அரசுக்கு மொத்தம் 3 கோடியே 31
இலட்சத்துக்கும் அதிகமான நிதி நட்டம் ஏற்பட்டுள்ளது என்று சிவில் புலனாய்வு
முன்னணி சுட்டிக்காட்டியுள்ளது.
</p><p>
ஒப்பந்தத்தைப் பெற்றுக்கொண்ட நிறுவனம், முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற
உறுப்பினருமான சமல் ராஜபக்சவுக்குச் சொந்தமானது என்று அந்த அமைப்பு குற்றம்
சாட்டியுள்ளது.</p><p></p><h2>முறைகேடுகள்</h2><p> </p><p>'சமல் ராஜபக்ச வேஸ்ட் பெசிலிட்டி மேனேஜ்மென்ட்' என இருந்த அந்த
நிறுவனத்தின் பெயர் தற்போது 'ஜி.எஃப்.சி' என மாற்றப்பட்டுள்ளது என்று
ஆதாரங்களுடன் தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ec4928f6-0f9b-4897-a02d-66053247c34c/26-6a50ebfc2b64a.webp' /></p><p>

டெண்டர் தொழில்நுட்பக் குழுவில் உள்ள சில அதிகாரிகள், தங்கள் தனிப்பட்ட
இலாபத்துக்காக அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தித் தகுதியான நிறுவனங்களை
ஓரங்கட்டிவிட்டு, அதிக விலை கோரிய நிறுவனத்திற்கு ஒப்பந்தத்தை வழங்கியுள்ளனர்.</p><p>

மருத்துவக் கழிவுகளை அகற்றுவது சுற்றுச்சூழல் மற்றும் பொது சுகாதாரத்துடன்
தொடர்புடைய முக்கியமான விடயமாக இருப்பதால், இத்தகைய முறைகேடுகள் பெரும்
அபாயங்களை உருவாக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-10T13:24:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டை உலுக்கிய சம்பவம்; பிரபாஷ் மண்டல் உடலை பெற தாய் மறுப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/prabhas-mondal-accused-in-the-baruipur-rape-1783682435"></link>
            <id>https://jvpnews.com/article/prabhas-mondal-accused-in-the-baruipur-rape-1783682435</id>
            <summary type="text">&amp;nbsp; &amp;nbsp;இந்தியாவில் 11 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் சுட்டுக்கொலை செய்யப்பட்ட பிரபாஷ் மண்டல், உடலை தாயார் வாங்க மறு...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; <a href="https://jvpnews.com/article/13-year-old-girl-32-men-4-hotels-rajasthan-crime-1783593062" target="_blank">&nbsp;இந்தியாவில் 11 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் </a>செய்து கொலை செய்த வழக்கில் சுட்டுக்கொலை செய்யப்பட்ட பிரபாஷ் மண்டல், உடலை தாயார் வாங்க மறுத்துள்ளதாக இந்திய ஊடகங்க்கள் தெரிவித்துள்ளன.
</p><p>

சம்பவம் நடந்த இடத்தை நேரில் சென்று ஆய்வு செய்வதற்காக காவல்துறையினர் அழைத்துச் சென்றபோது, சந்தேக நபர் தப்பிச் செல்ல முற்பட்டதால் பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0c1bfb5b-14f2-49ec-aebd-35104a638d59/26-6a50d5855f4f6.webp' /></p><h2>&nbsp;அவன் செய்த தவறுக்குத் தகுந்த தண்டனை</h2><p>

 மகனின் மரணம் குறித்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த சந்தேகநபரின் தாய், தனது மகனின் செயலைத் தான் ஒருபோதும் மன்னிக்கப் போவதில்லை என்றும், அவன் செய்த குற்றத்திற்கு அவனுக்கு உரிய தண்டனை கிடைத்துவிட்டது என்றும் ஆவேசமாகக் கூறினார்.</p><p></p><p>

காவல்துறையினர் இருவர் தங்கள் வீட்டிற்கு வந்து தன் மகன் இறந்துவிட்டதாகக் கூறினர். தன் கணவர் சுகவீனமாக இருப்பதால் என்னால் வர முடியாது என்று கூறிவிட்டேன். அவன் செய்த தவறுக்குத் தகுந்த தண்டனையை அனுபவித்துவிட்டான்.</p><p></p><p>
அவனது உடலை தான் வீட்டிற்கு எடுத்து வரமாட்டேன். அவன் எவ்வித நன்மையும் செய்யவில்லை. அவன் செய்தது பெரும் குற்றம், அதற்கான தண்டனையை அவன் பெற்றுவிட்டான். </p><p>அவனுக்கு எதைச் செய்தாலும் எனக்கு ஆட்சேபனை இல்லை," என உணர்ச்சிவசப்பட்டுத் தெரிவித்துள்ளார்.

சிறுமிக்கு இழைக்கப்பட்ட கொடுமை காரணமாக நாடு முழுவதும் எழுந்த கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில், பிரபாஷ் மண்டலின் இந்த முடிவு தற்போது பேசுபொருளாகியுள்ளது.&nbsp; &nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-10T13:20:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ்ப்பாணம் &quot;கொமோண்டோ&quot; பங்களா முன்பாக போராட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/protest-in-front-of-commando-bungalow-in-jaffna-1783689687"></link>
            <id>https://jvpnews.com/article/protest-in-front-of-commando-bungalow-in-jaffna-1783689687</id>
            <summary type="text">&amp;nbsp; யாழ்ப்பாணம் வலி.வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது காணிகளை விடுவிக்கக் கோரி, காணி உரிமையாளர்கள் இராணுவத்தினரின் &quot;கொமோண்டோ&quot; பங்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; யாழ்ப்பாணம் வலி.வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது காணிகளை விடுவிக்கக் கோரி, காணி உரிமையாளர்கள் இராணுவத்தினரின் "கொமோண்டோ" பங்களா முன்பாக இன்றைய தினம் (10) 12ஆவது வாரமாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
</p><p>
வலி. வடக்கில் 256, 248, 251 மற்றும் 255 ஆகிய கிராம சேவையாளர் பிரிவுகளைச் சேர்ந்த மக்கள், கடந்த 1990ஆம் ஆண்டு ஜூன் மாத காலப் பகுதிகளில் அவர்களது சொந்த இடங்களில் இருந்து வெளியேற்றப்பட்ட பின்னர், அப்பகுதிகள் உயர் பாதுகாப்பு வலயங்களாக காணப்படுகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ad65b075-2fe3-4c5d-b31e-95c470231169/26-6a50f1d9a02dc.webp' /></p><p> </p><p>

யுத்தம் முடிவடைந்து 17 வருடங்கள் கடந்த நிலையிலும், அப்பகுதிகளில் இருந்து பாதுகாப்புத் தரப்பினர் வெளியேறாத நிலையில், அவை உயர்பாதுகாப்பு வலயங்களாகவே காணப்படுகின்றன.</p><p></p><p>
</p><p>
இந்நிலையில் தமது காணிகளை விடுவிக்குமாறு பல வருடங்களாக காணி உரிமையாளர்கள் போராடி வரும் நிலையில் காணிகள் விடுவிக்கப்படாத நிலையில் காணிகளை விடுவிக்குமாறு பிரதி வெள்ளிக்கிழமைகளில் போராட்டங்களை முன்னெடுப்பதாக காணி உரிமையாளர்கள் முடிவெடுத்திருந்த நிலையில், இன்றைய தினம் வெள்ளிக்கிழமையும் 12ஆவது வாரமாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-10T13:20:04+00:00</updated>
        </entry>
    </feed>
