<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-07-11T19:46:21+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பு–கண்டி வீதியில் கோர விபத்து ; மோட்டார் சைக்கிளில் சென்ற இரு இளைஞர்கள் உயிரிழப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/two-youths-killed-while-riding-a-motorcycle-1783798971"></link>
            <id>https://jvpnews.com/article/two-youths-killed-while-riding-a-motorcycle-1783798971</id>
            <summary type="text">கொழும்பு – கண்டி பிரதான வீதியின் படலீய சந்திப்புப் பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில், மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸ...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு – கண்டி பிரதான வீதியின் படலீய சந்திப்புப் பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில், மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>
</p><p></p><h3>மேலதிக விசாரணை</h3><p>உயிரிழந்தவர்கள் ரதாவடுன்ன பகுதியைச் சேர்ந்த 20 மற்றும் 21 வயதுடைய இரு இளைஞர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4487383f-ec45-4056-90a1-fed9b22ef13e/26-6a529cbcc0886.webp' /></p><p>பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின்படி, குறித்த இரு இளைஞர்களும் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தபோது, அவர்களுக்கு முன்னால் சென்ற பேருந்தை முந்திச் செல்ல முயன்றுள்ளனர். </p><p>அப்போது எதிர்திசையில் வந்த லொறியுடன் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
</p><p>
விபத்தில் படுகாயமடைந்த இருவரும் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டபோதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-11T19:43:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹோர்முஸ் நீரிணையை தவிர்ப்பதற்கான திட்டம்! அமெரிக்காவுடன் கைகோர்க்கும் ஈராக் - சிரியா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/iraq-syria-join-hands-with-bypass-strait-of-hormuz-1783789931"></link>
            <id>https://ibctamil.com/article/iraq-syria-join-hands-with-bypass-strait-of-hormuz-1783789931</id>
            <summary type="text">ஈராக்கின் வடக்கு நகரமான கிர்கூக்கிலிருந்து மத்திய தரைக்கடல் கடற்கரையில் உள்ள சிரியாவின் பனியாஸ் வரை செல்லும் பழைய எண்ணெய்க் குழாயைப் புதுப்பிக்கும் தி...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈராக்கின் வடக்கு நகரமான கிர்கூக்கிலிருந்து மத்திய தரைக்கடல் கடற்கரையில் உள்ள சிரியாவின் பனியாஸ் வரை செல்லும் பழைய எண்ணெய்க் குழாயைப் புதுப்பிக்கும் திட்டத்தில் அமெரிக்கா, ஈராக் மற்றும் சிரியாவுடன் இணைந்து புதிய திட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளது.</p><p>

இது, ஹார்முஸ் நீரிணையை பயன்படுத்தாமலேயே ஈராக் எண்ணெயை ஏற்றுமதி செய்ய வழிவகுக்கும் என தெரிவிக்கப்படுகிறது.
</p><p>
பல தசாப்தங்களாக மூடப்பட்டு, கடுமையாக சேதமடைந்துள்ள 500-மைல் (800 கி.மீ.) குழாய்வழியை மீண்டும் அமைப்பதற்கான ஒப்பந்தம், அடுத்த வாரம் வெள்ளை மாளிகையில் ஈராக் பிரதமர் அலி அல்-ஜைதிக்கும் ட்ரம்பிற்கும் இடையே நடைபெறும் சந்திப்பின்போது அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>
</p><p>
</p><p></p><h2>குழாய்வழி&nbsp;மாற்றம்</h2><p>மேலும் இந்த குழாய்வழியை முழுவதுமாக மாற்ற வேண்டியிருக்கும் என்று கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1f89d157-23a0-489c-8815-b6cb9c42bbca/26-6a52796c8dadb.webp' /></p><p>
</p><p>
இதற்கு இரண்டு முதல் மூன்று ஆண்டுகள் ஆகும் என்றும் இந்தத் திட்டத்திற்காக அமெரிக்க நிறுவனங்களின் குழு ஒன்று ஏற்கனவே நியமிக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்படுகிறது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-11T19:32:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்கா–ஈரான் பதற்றம் தீவிரம் ; புரிந்துணர்வு ஒப்பந்தத்தை அமெரிக்கா மீறியதாக ஈரான் குற்றச்சாட்டு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/iran-accuses-us-of-violating-memorandum-understand-1783789733"></link>
            <id>https://canadamirror.com/article/iran-accuses-us-of-violating-memorandum-understand-1783789733</id>
            <summary type="text">அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே அண்மையில் கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை (MoU) அமெரிக்கா மீறியுள்ளதாக ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்ச்ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே அண்மையில் கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை (MoU) அமெரிக்கா மீறியுள்ளதாக ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்ச்சி குற்றம் சாட்டியுள்ளார். </p><p>இந்த விவகாரம் இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றத்தை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.

ஈரானின் உயர்மட்டத் தலைவருடன் தொடர்புடைய ஒருவருக்கு எதிராக அமெரிக்க திறைசேரி திணைக்களம் புதிய பொருளாதாரத் தடைகளை விதித்திருப்பது, இரு நாடுகளும் ஜூன் மாதத்தில் எட்டிய புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் விதிமுறைகளை மீறும் செயல் என அப்பாஸ் அராக்ச்சி தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/71a82a1c-cdc3-4c47-b0d7-4ca1d62a700c/26-6a5278a638430.webp' /></p><p>ஜூன் மாதம் கையெழுத்தான அந்த ஒப்பந்தத்தின்படி, இரு தரப்பும் தற்போதைய நிலையைப் பேணுவதுடன், புதிய பொருளாதாரத் தடைகளை விதிக்காமல் இருக்க இணக்கம் தெரிவித்திருந்ததாகவும், தற்போதைய அமெரிக்க நடவடிக்கை அந்த உறுதிமொழிக்கு முரணானது என்றும் அவர் கூறியுள்ளார்.
</p><p>
இதற்கிடையில், ஹோர்முஸ் நீரிணையில் வணிகக் கப்பல்கள் மீது மீண்டும் தாக்குதல்கள் நடத்தப்பட்டதற்குப் பதிலடியாகவே புதிய தடைகள் விதிக்கப்பட்டதாக அமெரிக்கா விளக்கம் அளித்துள்ளது.</p><p> மேலும், ஹோர்முஸ் நீரிணையில் பாதுகாப்பான கப்பல் போக்குவரத்தை உறுதிப்படுத்துமாறு ஈரானை அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.</p><p>

ஹோர்முஸ் நீரிணையை மையமாகக் கொண்டு இரு நாடுகளுக்கும் இடையிலான மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், அமெரிக்கா ஈரான் தொடர்புடைய இலக்குகள் மீது தாக்குதல்களை மேற்கொண்டதாகவும், அதற்கு பதிலடியாக மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க நலன்கள் மற்றும் தளங்களை குறிவைத்து ஈரான் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. </p><p>இந்தச் சூழ்நிலையில், ஓமான் உள்ளிட்ட நாடுகளின் மத்தியஸ்தத்துடன் பதற்றத்தைத் தணிக்கும் இராஜதந்திர முயற்சிகளும் தொடர்கின்றன.</p>]]></content>
            <updated>2026-07-11T19:18:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[தொடர்ந்தும் போர்த்துக்கல் தேசிய அணியில் ரொனால்டோ! புதிய பயிற்சியாளரின் திட்டம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/ronaldo-continues-portugal-national-team-1783797437"></link>
            <id>https://ibctamil.com/article/ronaldo-continues-portugal-national-team-1783797437</id>
            <summary type="text">போர்த்துக்கல் அணியின் புதிய தேசிய அணிப் பயிற்சியாளராக ஜார்ஜ் ஜீசஸ் நியமிக்கப்பட்டுள்ள நிலையில்,&amp;nbsp; மூத்த நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ குற...</summary>
            <content type="html"><![CDATA[<p>போர்த்துக்கல் அணியின் புதிய தேசிய அணிப் பயிற்சியாளராக ஜார்ஜ் ஜீசஸ் நியமிக்கப்பட்டுள்ள நிலையில்,&nbsp; மூத்த நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ குறித்து அவர் வெளியிட்ட கருத்துக்கள் தற்போது போசுபொருளாகியுள்ளது.</p><p>கிறிஸ்டியானோ ரொனால்டோ&nbsp; விளையாடுவதை தொடர்ந்தால் , அவரைத் தொடர்ந்து பயன்படுத்துவேன் என்றும், அந்த முன்கள வீரரால் ஒருபோதும் பிரச்சினை ஏற்படாது எனவும் அவர் கூறியுள்ளார்.
</p><p>
தனது கடைசி உலகக் கோப்பையில் பங்கேற்றுவிட்டதாகக் ரொனால்டோ கூறிய றிலையில், 2026 உலகக் கோப்பையின் காலிறுதிக்கு முந்தைய சுற்றில், போர்த்துக்கலின் தோல்வியின் பின்னர் இது குறித்த கேள்விகள் வெளிவந்துள்ளன.&nbsp;&nbsp;</p><p></p><h2>போர்த்துகீசிய கால்பந்தின் சின்னம்</h2><p>எனினும், தேசிய அணிக்காக தொடர்ந்து விளையாடுவதா இல்லையா என்பது குறித்து அவர்&nbsp; இன்னும் முடிவு செய்யவில்லை என்று கூறப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0ce50bc3-37a7-440e-b38a-4e06fdc9dd1b/26-6a5296bf870c5.webp' /></p><p>அவர் விளையாடும் வரையிலும், தேர்வு செய்யப்படும் நிலையில் இருக்கும் வரையிலும், சில வரம்புகளுக்கு உட்பட்டும், தேசிய அணிக்குச் சிறந்ததாக நான் கருதும் நிபந்தனைகளின் கீழும் அவரைத் தேர்ந்தெடுப்பேன்,"என்று ஜீசஸ் தனது அறிமுக விழாவில் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.</p><p>தான் ரொனால்டோவிடம் இன்னும் பேசவில்லை என்றும், ஆனால் மான்செஸ்டர் யுனைடெட் மற்றும் ரியல் மாட்ரிட் அணிகளின் முன்னாள் நட்சத்திர வீரரான அவரது கால்பந்து எதிர்காலம் குறித்து இருவரும் விவாதிப்பார்கள் என்றும் கூறியுள்ளார்.<br></p><p>ரொனால்டோ போர்த்துகீசிய கால்பந்தின் சின்னம். ரொனால்டோ தேசிய அணியின் சின்னம். அந்த விடயம் என்றென்றும் சரித்திர ஏடுகளில் இடம்பெறும் என அவர் கூறியுள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-11T19:17:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரியந்தியை தேடிய ஜனாதிபதி அநுர..! நாமலின் அரசின் அமைச்சரவையின் பெயர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/names-cabinet-anura-namal-govt-searched-priyanthi-1783792757"></link>
            <id>https://tamilwin.com/article/names-cabinet-anura-namal-govt-searched-priyanthi-1783792757</id>
            <summary type="text">தற்போதைய அரசியல் சூழ்நிலையில் இலங்கையில் நாட்டில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மீது பல்வேறு விமர்சனங்களை எதிர்க்கட்சிகள் முன்வைத்து வருகின்றன.&amp;nbsp;நீ...</summary>
            <content type="html"><![CDATA[<p>தற்போதைய அரசியல் சூழ்நிலையில் இலங்கையில் நாட்டில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மீது பல்வேறு விமர்சனங்களை எதிர்க்கட்சிகள் முன்வைத்து வருகின்றன.&nbsp;</p><p>நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலை தொடர்ந்து, ஏற்பட்ட உயிரிழப்புக்களுக்கும் குறித்த வன்முறைக்கும் அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.&nbsp;</p><p>இதற்கிடையில், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் எளிமையான பண்புகள் தொடர்பில் பலரும் கருத்துக்கள் முன்வைத்து வருகின்றனர்.&nbsp;</p><p>இந்நிலையில், தனது பாடசாலை நண்பர்களை சந்தித்த&nbsp;ஜனாதிபதி, அவர்களுடம் மிக எளிமையாக உரையாடியிருந்தார்.&nbsp;</p><p>அதன்போது, தனது பாடசாலை நண்பர்களில் பிரியந்தி என்ற ஒருவரை&nbsp;ஜனாதிபதி குறிப்பாக விசாரித்திருந்தார், இது பலர் மத்தியில் பேசுபொருளாகியிருந்தது.&nbsp;</p><p>இது உள்ளிட்ட பல முக்கிய அரசியல் நகர்வுகளை ஆராய்கின்றது நாட்டு நடப்பு நிகழ்ச்சி,&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/IoIwSxx4WZw" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-11T19:16:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[விம்பிள்டன் பட்டத்தை வென்றார் லிண்டா நோஸ்கோவா... உருக்கமாக அவர் கூறிய விடயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/noskova-lift-wimbledon-trophy-1783797260"></link>
            <id>https://news.lankasri.com/article/noskova-lift-wimbledon-trophy-1783797260</id>
            <summary type="text">செக் குடியரசின் இளம் வீராங்கனை லிண்டா நோஸ்கோவா, ஐந்து சாம்பியன்ஷிப் புள்ளிகளை இழந்த நிலையிலிருந்து மீண்டு வந்து, தனது தோழி கரோலினா முச்சோவாவை வீழ்த்தி...</summary>
            <content type="html"><![CDATA[<p>செக் குடியரசின் இளம் வீராங்கனை லிண்டா நோஸ்கோவா, ஐந்து சாம்பியன்ஷிப் புள்ளிகளை இழந்த நிலையிலிருந்து மீண்டு வந்து, தனது தோழி கரோலினா முச்சோவாவை வீழ்த்தி, அசாதாரணமான மற்றும் பரபரப்பான விம்பிள்டன் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்றுள்ளார்.</p><h2>அபாரமான மன உறுதியுடன்</h2><p>
</p><p>நோஸ்கோவா 6-2, 5-2 என்ற கணக்கில் முன்னிலை வகித்தபோது எளிதான வெற்றியை நோக்கிச் செல்வது போல் தோன்றியது; ஆனால், வெற்றிக்கு மிக அருகில் வந்த நிலையில் அவர் தடுமாறினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0feb90f8-fac1-4a1f-b37b-49646f296acc/26-6a5297bf1aa2c.webp' /></p><p> </p><p>அப்போது, ​​10-வது வரிசை வீராங்கனையான முச்சோவா தொடர்ந்து ஐந்து கேம்களை வென்று, ஆட்டத்தை ஒரு தீர்க்கமான சுற்றுக்கு (decider) கொண்டு சென்றார். </p><p>இருப்பினும், 21 வயதான நோஸ்கோவா அபாரமான மன உறுதியுடன் தன்னை மீள அமைத்துக்கொண்டு, இறுதியில் 6-2, 5-7, 6-3 என்ற கணக்கில் வெற்றியைப் பதிவு செய்துள்ளார்.</p><p></p><p> </p><p>ஆட்டத்தின் முடிவில் பேசிய நோஸ்கோவா, இது நம்பமுடியாத உணர்வு என்றும், உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் இது சவாலானதாக இருந்தது என்றும், கடைசிப் புள்ளியைப் பெறுவது ஒருபோதும் எளிதான காரியம் அல்ல என்றும் கூறினார்.</p><p> மேலும், முச்சோவாவிடம் பேசிய அவர், நீங்கள் எனக்குப் பெரும் சவாலை அளித்துவிட்டீர்கள். எனது முதல் முதன்மையான இறுதிப் போட்டியை உங்களுடன் விளையாடியதில் மகிழ்ச்சி; இன்று நாம் வரலாற்றைப் படைத்துள்ளோம் என்று நான் கருதுகிறேன் என்றார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ad280691-f1e9-4578-8767-1672e3818bdc/26-6a5297be2fee6.webp' /></p><p> </p><p>அதன் பிறகு மைதானத்தில் ஆற்றிய உரையில், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு விம்பிள்டன் போட்டிக்கு முந்தைய நாள் காலமான தனது தாயார் இவானா உட்பட தனது குடும்பத்தினருக்கு நோஸ்கோவா அஞ்சலி செலுத்தினார்.</p><h2>சிறப்பான வெற்றி</h2><p> </p><p>மட்டுமின்றி, ஆட்டத்தைக் காண வந்த என் அப்பாவுக்கும், விமானத்தில் பயணம் செய்து இங்கே வந்த என் குடும்பத்தினருக்கும் நன்றி சொல்ல விரும்புகிறேன் - உங்களுக்கு விமானப் பயணம் பிடிக்காது என்பது எனக்குத் தெரியும், அதனால் இதை நான் மிகவும் மதிக்கிறேன் என்று அவர் கண்கலங்கியவாறே கூறினார்.</p><p> 
செக் குடியரசில் பிறந்தவரும் ஒன்பது முறை ஒற்றையர் பிரிவு சேம்பியனுமான மார்டினா நவ்ரதிலோவா மற்றும் 2011 மற்றும் 2014-ல் வெற்றி பெற்றவரும் தனக்கு முன்மாதிரியாகத் திகழ்பவருமான பெட்ரா க்விடோவா ஆகியோர் முன்னிலையில், நோஸ்கோவாவின் அந்தச் சிறப்பான வெற்றி நிகழ்ந்தது மிகவும் பொருத்தமானதாக அமைந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/75f0c946-eed9-44f2-a995-f854c03b1d62/26-6a5297bfc38e7.webp' /></p><p> </p><p>புகழ்பெற்ற 'வீனஸ் ரோஸ்வாட்டர் டிஷ்' (Venus Rosewater Dish) கிண்ணத்தை வெல்வதோடு மட்டுமல்லாமல், நோஸ்கோவா 3.6 மில்லியன் பவுண்டுகள் பரிசுத்தொகையையும் பெறுவார்; அத்துடன் உலகத் தரவரிசையில் தனது தொழில் வாழ்க்கையிலேயே மிக உயர்ந்த இடமான ஏழாவது இடத்திற்கு முன்னேறுவார். </p><p>செக் குடியரசைச் சேர்ந்த திறமையாளர்களின் நீண்ட வரிசையில் சமீபத்திய ஒருவரான நோஸ்கோவா, கிராண்ட் ஸ்லாம் பட்டங்களுக்காகப் போட்டியிடக்கூடிய ஒரு வருங்கால நட்சத்திரமாகத் திகழ்வார் என்று கணிக்கப்பட்டிருந்தார்.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-11T19:13:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[டிட்வா புயலின் பின் பேராதனையில் சீரமைப்புப் பணிகளுக்காகத் தொடருந்து சேவை ஆரம்பம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/train-service-begins-renovation-works-peradeniya-1783797026"></link>
            <id>https://jvpnews.com/article/train-service-begins-renovation-works-peradeniya-1783797026</id>
            <summary type="text">டிட்வா புயலின் பாதிப்புக்கு பிறகு முதன்முறையாக, பேராதனை சந்திப்பு தொடருந்து நிலையத்திலிருந்து பிலிமத்தலாவ வரை தொடருந்து ஒன்று இயக்கப்பட்டுள்ளது.

கண...</summary>
            <content type="html"><![CDATA[<p>டிட்வா புயலின் பாதிப்புக்கு பிறகு முதன்முறையாக, பேராதனை சந்திப்பு தொடருந்து நிலையத்திலிருந்து பிலிமத்தலாவ வரை தொடருந்து ஒன்று இயக்கப்பட்டுள்ளது.</p><p></p><p>

கண்டி தொடருந்து நிலையத்திலிருந்து சாலை வழியாக கொண்டுவரப்பட்ட ஓர் இயந்திரம் மற்றும் இரண்டு பெட்டிகளைக் கொண்ட தொடருந்தே இவ்வாறு இயக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e6796e24-0fe3-47dc-9641-fc3c56ed26b8/26-6a5295244192b.webp' /></p><p>

டிட்வா புயலால் சேதமடைந்த தொடருந்து தண்டவாளங்களைச் சீரமைக்கத் தேவையான மூலப்பொருட்கள், இயந்திரங்கள் மற்றும் பணியாளர்களை ஏற்றிச் செல்வதற்காகவே இந்த தொடருந்து பயன்படுத்தப்பட உள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-11T19:10:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[அவரது இரத்தத்திற்குப் பழிவாங்குவது உறுதி: தந்தையின் இறுதிச்சடங்கில் மொஜ்தபா கமேனி உருக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/mojtaba-on-father-funeral-1783787197"></link>
            <id>https://news.lankasri.com/article/mojtaba-on-father-funeral-1783787197</id>
            <summary type="text">இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவால் கொல்லப்பட்ட அலி கமேனியின் இரத்தத்திற்குப் பழிவாங்க வேண்டும் என்று ஈரானிய மக்கள் கோருவதாக தற்போதைய உயர் தலைவர் மொஜ்தபா கம...</summary>
            <content type="html"><![CDATA[<p>இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவால் கொல்லப்பட்ட அலி கமேனியின் இரத்தத்திற்குப் பழிவாங்க வேண்டும் என்று ஈரானிய மக்கள் கோருவதாக தற்போதைய உயர் தலைவர் மொஜ்தபா கமேனி தெரிவித்துள்ளார்.</p><h2>பழிவாங்குவது உறுதி</h2><p> </p><p> 
தனது சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட எழுத்துப்பூர்வமான செய்தி ஒன்றில், கமேனி மற்றும் போரில் கொல்லப்பட்ட தியாகிகள் ஆகியோரின் இரத்தத்திற்குப் பழிவாங்குவது உறுதி என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8f52f592-f892-4642-8e16-1684cc8a3de1/26-6a5277868759b.webp' /></p><p> </p><p>வீரமரணம் அடைந்த தலைவரின் இரத்தத்திற்கும், இந்த இரண்டு போர்களில் உயிர்நீத்த அனைத்து தியாகிகளின் இரத்தத்திற்கும், குற்றவாளிகளும் இழிவானவர்களுமான கொலையாளிகளிடமிருந்து பழிவாங்குவோம் என நாங்கள் சபதம் செய்கிறோம் என மொஜ்தபா குறிப்பிட்டுள்ளார். </p><p>மேலும், ஈரானின் பழிவாங்கும் நடவடிக்கை தவிர்க்க முடியாத வகையில் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ள அவர், இந்த விவகாரம் தனது தனிப்பட்ட இருப்பு அல்லது பிற அதிகாரிகளின் இருப்பைச் சார்ந்ததல்ல என்றும் தெரிவித்துள்ளார். </p><p>பின்னர், தமது தந்தையின் இறுதிச்சடங்குகளில் ஈரான் மற்றும் ஈராக் முழுவதும் எதிரிகளை நிலைகுலையச் செய்யும் வகையில் மக்கள் திரண்டு வந்தமைக்காக அவர் தனது நன்றியைத் தெரிவித்தார்.</p><p></p><p> </p><p>பிப்ரவரி 28 அன்று தெஹ்ரானில் உள்ள அலி கமேனியின் அலுவலகத்தின் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் கொல்லப்பட்ட பல மாதங்களுக்குப் பிறகு நடைபெற்ற இறுதிச் சடங்குகளின்போது மொஜ்தபாவின் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. </p><p>வியாழக்கிழமை இரவு மஷ்ஹத் நகரில் உள்ள இமாம் ரெசாவின் புனிதத் தலத்தில் அயதுல்லா அலி கமேனி நல்லடக்கம் செய்யப்பட்டார்; அப்போது ஆயிரக்கணக்கான மக்கள் அந்தத் தலைவருக்குத் தங்கள் இறுதி விடைபெறும் அஞ்சலியைச் செலுத்த அங்கு கூடியிருந்தனர்.</p><h2>ஈரானின் திட்டம்</h2><p>
</p><p>இதற்கிடையில், தன்னை படுகொலை செய்வதற்காக ஈரான் திட்டமிட்டு வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சமீப நாட்களாக தீவிரமாகப் பேசி வருகிறார். கமேனியின் அறிக்கை வெளியாவதற்கு ஒரு நாள் முன்னதாக, நீண்ட காலமாகவே தான் ஈரானின் கொலைப்பட்டியலில் இடம்பெற்றிருப்பதாக ட்ரம்ப் கூறியுள்ளார். </p><p>மேலும், ட்ரம்பிற்கு எதிரான ஈரானின் திட்டம் தொடர்பில் இஸ்ரேல் உளவு அமைப்புகள் திரட்டியுள்ள தரவுகளை அமெரிக்க உளவு அமைப்புகள் இதுவரை ஆய்வுக்கு உட்படுத்தவோ உறுதி செய்யவோ இல்லை என உள்ளூர் செய்தி ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2b5643bd-896f-4f88-97ee-91ea657d7204/26-6a5277875aeb2.webp' /></p><p> </p><p>ஆனால், இஸ்ரேல் தெரிவித்துள்ள கொலை மிரட்டலை ட்ரம்ப் மட்டும் இதுவரை பல சந்தர்ப்பங்களில் கூறி வருகிறார். ஈரானிடம் இருந்து ட்ரம்பிற்கு அச்சுறுத்தல் இருப்பதாக அமெரிக்க உளவு அமைப்புகள் எதுவும் இதுவரை உறுதி செய்யவில்லை. </p><p>மேலும், தாம் சொல்வது உண்மை என்பதை உறுதி செய்யும் வகையில், அங்காராவில் நடைபெற்ற நேட்டோ உச்சிமாநாட்டிற்குப் பிறகு, அமெரிக்காவுக்குத் திரும்பும் வழியில் ட்ரம்ப் தனது பயணத் திட்டங்களை மாற்றிக்கொண்டார். </p><p>இதனையடுத்து, ஜனாதிபதியின் பாதுகாப்பிற்கான ஒரு பாதுகாப்பு உத்தி இது என்று வெள்ளை மாளிகை பின்னர் விளக்கமளித்தது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-11T18:58:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Dharu</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொலை செய்யப்பட்ட பிரித்தானியாவின் முன்னாள் அமைச்சர்! விசாரணையில் வெளிவந்த தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/ann-widdecombe-investigation-kill-24-hour-before-1783794794"></link>
            <id>https://ibctamil.com/article/ann-widdecombe-investigation-kill-24-hour-before-1783794794</id>
            <summary type="text">பிரித்தானிய அரசாங்கத்தின் முன்னாள் அமைச்சர் ஆன் விடெகோம்பின் உயிரிழப்பு குறித்து தீவிர விசாரணைகளை தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக அந்நாட்டு ஊடகங்கள...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரித்தானிய அரசாங்கத்தின் முன்னாள் அமைச்சர் ஆன் விடெகோம்பின் உயிரிழப்பு குறித்து தீவிர விசாரணைகளை தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
</p><p>
இந்நிலையில் அவரது மரணம் கொலையாக சந்தேகிக்கப்படும் நிலையில், ஆன் விடெகோம்பின் உடல் கண்டெடுக்கப்படுவதற்கு 24 மணி நேரத்திற்கு முன்பே அவர் கொல்லப்பட்டிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
</p><p>
இறுதியாக வெளியாகிள ஒரு புதிய தகவலில், விடெகோம்ப் புதன்கிழமை மதியம் சுமார் 12.30 மணியளவில் தாக்கப்பட்டார் என்ற அனுமானத்தின் அடிப்படையில் விசாரணை அதிகாரிகள் செயல்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. </p><p></p><h2>கண்டெடுக்கப்பட்ட&nbsp;உடல் </h2><p>

கடந்த வியாழக்கிழமை(09.07.2026) காலை 11.40 மணிக்கு, டெவோனின் ஹேட்டரில் உள்ள விடெகோம்பின் பங்களாவில் இருந்து அவரது உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/afbe1ea0-393c-4a90-ab82-fd2fba02c612/26-6a528c6c6cca2.webp' /></p><p>
</p><p>
இந்த விசாரணை தொடர்பாக கைது செய்யப்பட்ட 26 வயது இளைஞன், தற்போது எந்தக் குற்றச்சாட்டும் இன்றி விடுவிக்கப்பட்டார் என்றும் மேலும், அவர் இனி இந்த விசாரணையின் ஒரு பகுதியாக அவர் இருக்கபோவதில்லை என்றும் கூறியுள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">IBC தமிழ் WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-11T18:55:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெண்கலப் பதக்கம் வென்ற ஜித்மா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/jitma-wins-bronze-medal-in-400m-race-1783795710"></link>
            <id>https://jvpnews.com/article/jitma-wins-bronze-medal-in-400m-race-1783795710</id>
            <summary type="text">சீனாவில் நடைபெற்று வரும் ஆசிய 23 வயதுக்குட்பட்டோருக்கான தடகளப் போட்டியில், பெண்களுக்கான 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் ஜித்மா ஷெனாரி விஜேதுங்க வெண்கலப்...</summary>
            <content type="html"><![CDATA[<p>சீனாவில் நடைபெற்று வரும் ஆசிய 23 வயதுக்குட்பட்டோருக்கான தடகளப் போட்டியில், பெண்களுக்கான 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் ஜித்மா ஷெனாரி விஜேதுங்க வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளார்.</p><p> </p><p></p><p>அவர் குறித்த போட்டியை 53.10 வினாடிகளில் நிறைவு செய்தார். 

ஜித்மா விஜேதுங்க தனது தனிப்பட்ட சிறந்த நேரத்தைப் பதிவு செய்தமை குறிப்பிடத்தக்கது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/80013870-c285-4e1c-8e40-7ec22bbb10c9/26-6a528fffbd099.webp' /></p><p>

இதற்கிடையில், ஆண்களுக்கான 400 மீட்டர் தடைதாண்டும் ஓட்டப்பந்தயத்தில் அயோமல் அகலங்க வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார். </p><p>

அவர் குறித்த போட்டியை நிறைவு செய்ய 49.03 வினாடிகளை எடுத்துக்கொண்டார்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-11T18:48:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்த குழந்தை யார் தெரியுமா? அஜித்துக்கு ஜோடியாக நடித்த ஹீரோயின் தான்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/guess-the-actress-in-the-childhood-photo-1783794978"></link>
            <id>https://cineulagam.com/article/guess-the-actress-in-the-childhood-photo-1783794978</id>
            <summary type="text">ஒரு சில நடிகர்களை தவிர, பல சினிமா நடிகர்களின் குழந்தை பருவ போட்டோக்களை பார்த்தால், &quot;அவரா இது!!&quot; என ஆச்சர்யப்பட்டு கேட்கும் அளவுக்கு தான் இருக்கும்.அந்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஒரு சில நடிகர்களை தவிர, பல சினிமா நடிகர்களின் குழந்தை பருவ போட்டோக்களை பார்த்தால், "அவரா இது!!" என ஆச்சர்யப்பட்டு கேட்கும் அளவுக்கு தான் இருக்கும்.</p><p>அந்த வகையில் இந்த போட்டோவில் இருக்கும் குழந்தை யார் என தெரிகிறதா பாருங்க.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4369c660-75b0-4e01-ab3b-84789406339c/26-6a528d263240b.webp' /></p><p>
</p><h2>கனிகா</h2><p>

அஜித் ஜோடியாக வரலாறு படத்தில் நடித்து இருந்த கனிகாவின் குழந்தை பருவ போட்டோ தான் இது. </p><p>அவர் சன் டிவியின் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலிலும் நடித்து இருக்கிறார் என்பது குறிபிடித்தக்கது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-11T18:36:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[தலைசிறந்த பின்னணி பாடகி எஸ். ஜானகி காலமானார்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/singer-s-janaki-passes-away-1783782983"></link>
            <id>https://ibctamil.com/article/singer-s-janaki-passes-away-1783782983</id>
            <summary type="text">இந்தியாவின் தலைசிறந்த பின்னணி பாடகி எஸ். ஜானகி வயது மூப்பு காரணமாக இன்று கர்நாடக மாநிலத்தின் மைசூரில் காலமானதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியாவின் தலைசிறந்த பின்னணி பாடகி எஸ். ஜானகி வயது மூப்பு காரணமாக இன்று கர்நாடக மாநிலத்தின் மைசூரில் காலமானதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.</p><p>

88 வயதான இவர் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். தனது காந்த குரலால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர்.</p><h2>நான்கு முறை தேசிய விருதுகள்&nbsp;</h2><p>
</p><p>
தமிழ் சினிமாவின் எம்.எஸ். விஸ்வநாதன், இளையராஜா, ஏ.ஆர். ரகுமான் உள்ளிட்ட பல்வேறு இசையமைப்பாளர்கள் இசையில் ஆயிரக்கணக்கான பாடல்களை பாடியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/18a48a97-13c2-4cfd-a3d2-89ea2025be18/26-6a525fd3d59a2.webp' /></p><p>&nbsp;இவர் நான்கு முறை தேசிய விருதுகள் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட ஏராளமான மொழிகளிலும் பாடியுள்ளார்.</p><p>&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-11T18:33:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[பேச்சு சுதந்திரத்துக்கு அரசாங்கம் சதி - எதிர்க்கட்சித் தலைவர் சஜித் சீற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/government-against-freedom-sajith-furious-1783789931"></link>
            <id>https://tamilwin.com/article/government-against-freedom-sajith-furious-1783789931</id>
            <summary type="text">இந்த அரசாங்கமும் கடந்த அரசாங்கத்தைப் போலவே பேச்சுச் சுதந்திரம், கருத்துச்
சுதந்திரம் உள்ளிட்ட அடிப்படை உரிமைகளை அப்பட்டமாக மீறி வருகின்றது என
எதிர்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்த அரசாங்கமும் கடந்த அரசாங்கத்தைப் போலவே பேச்சுச் சுதந்திரம், கருத்துச்
சுதந்திரம் உள்ளிட்ட அடிப்படை உரிமைகளை அப்பட்டமாக மீறி வருகின்றது என
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ குற்றம் சுமத்தியிருக்கின்றார்.</p><p>ஐக்கிய மக்கள் சக்தி தலைமை செயலகத்தில் தாபிக்கப்பட்டுள்ள டி.எஸ். சேனநாயக்க அரசியல் பீடத்தில் இன்று(11.07.2026) நடைபெற்ற செயலமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதஸ இவ்வாறு தெரிவித்தார்.</p><p></p><h2>ஜனநாயக உரிமைகளை ஒடுக்கம்</h2><p>அவர் மேலும் தெரிவிக்கையில்,</p><p>ஜனநாயக நாடொன்றில் சட்டவாக்கத்துறை, நிறைவேற்றுத்துறை மற்றும் நீதித்துறை என மூன்று முக்கிய தூண்கள் காணப்படுகின்றன. </p><p>இதற்கு மேலதிகமாக சுதந்திர ஊடகமும் மற்றுமொரு தூணாக விளங்குவதால், அது அரசமைப்பில் குறிப்பிடப்படாவிட்டாலும் அதனைப் பாதுகாக்க வேண்டும். தற்போதைய அரசாங்கம் ஜனநாயக உரிமைகளை ஒடுக்கி
பேச்சுச் சுதந்திரத்தை இல்லாதொழித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/85fecb38-fd98-4dda-9044-9ccda25356fe/26-6a527edc6287f.webp' /></p><p> நிகழ்நிலை காப்புச் சட்டம்,
பயங்கரவாதத் தடைச் சட்டம் ஆகியவற்றை நீக்குவோம் என்று இவர்கள் ஏலவே
கூறினாலும், அவை இன்னும் நடைமுறையில் இருக்கின்றமையோடு, தற்போது
நாடாளுமன்றத்தில் பேசும் சுதந்திரம் கூட மீறப்பட்டு வருகின்றது.</p><p>இன்று விவசாயிகள் எதிர்கொள்ளும் பாரிய பிரச்சினைகள் குறித்து பேசுவதற்குக் கூட
சுதந்திரம் இல்லை. தேர்தல் காலத்தில் தற்போதைய அரசாங்கத்தின் அமைச்சர்கள்
நெல்லுக்கு 150 ரூபா உத்தரவாத விலை தருவோம் என பிரஸ்தாபித்தனர். இன்று அது 120
ரூபாவிற்கும் குறைந்த மட்டத்திற்கு வந்துள்ளது.</p><p>ஒரு கிலோ நெல்லை உற்பத்தி
செய்வதற்கு 137 ரூபா செலவாவதாக விவசாய அமைச்சரே ஒப்புக்கொண்டுள்ள நிலையில்,
விவசாயிகளின் தோள்களில் ஏறி ஆட்சிக்கு வந்த தற்போதைய அரசாங்கம் இன்று
விவசாயிக்கு 17 ரூபா நட்டத்தை ஏற்படுத்தியுள்ளது என சுட்டிக்காட்டியுள்ளார்.&nbsp;</p><p></p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-11T18:32:45+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>H. A. Roshan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிழக்கு மாகாண ஆளுனருக்கும் ஆசிய நாட்டு தூதுவர்களுக்குமிடையில் சந்திப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/meeting-between-governor-and-asian-countries-1783787823"></link>
            <id>https://tamilwin.com/article/meeting-between-governor-and-asian-countries-1783787823</id>
            <summary type="text">மலேசியா, இந்தோனேசியா, வியட்நாம், மியான்மர் மற்றும் தாய்லாந்து ஆகிய
நாடுகளின் இலங்கை நாட்டுக்கான தூதுவர்களுக்கும், கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த
லால் ரத...</summary>
            <content type="html"><![CDATA[<p>மலேசியா, இந்தோனேசியா, வியட்நாம், மியான்மர் மற்றும் தாய்லாந்து ஆகிய
நாடுகளின் இலங்கை நாட்டுக்கான தூதுவர்களுக்கும், கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த
லால் ரத்னசேகரவுக்கும் இடையிலான சந்திப்பொன்று திருகோணமலையில் உள்ள
ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது.</p><p>

கிழக்கு மாகாணத்தில் உள்ள சுற்றுலாத் துறையில் உள்ள முதலீட்டு வாய்ப்புகள்
மற்றும் கேள்விக்குட்பட்ட சுற்றுலாத் தளங்கள் குறித்து தூதுவர்களும் ஆளுநரும்
விரிவாகக் கலந்துரையாடியுள்ளனர்.</p><p></p><h2>முதலீட்டு வாய்ப்புகள்</h2><p>
</p><p>
குறிப்பாக, கிழக்கு மாகாணத்தின் கடலோரப் பகுதிகளில் உள்ள முதலீட்டு
வாய்ப்புகள் குறித்து விவாதிக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/caca8258-4e2e-4171-95d6-5ba46b530820/26-6a52751a882d8.webp' /></p><p> மேலும், கிழக்கு மாகாணத்தில்
சுற்றுலா ஈர்ப்பு மையங்களாக அமையக்கூடிய இடங்களை இந்தத் தூதுக்குழு
பார்வையிடத் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
</p><p>
இதில் கிழக்கு மாகாணத்தின் பிரதம செயலாளர்கே.குணநாதன், கிழக்கு மாகாண
சுற்றுலாப் பணியகத்தின் தலைவர் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.</p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-11T18:31:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தோனேசியாவின் ஊழல் தடுப்பு தலைமை அரசு சட்டத்தரணி வீட்டில் தங்கம் மற்றும் பணம் பறிமுதல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/gold-cash-seized-from-indonesia-prosecutor-s-home-1783782130"></link>
            <id>https://tamilwin.com/article/gold-cash-seized-from-indonesia-prosecutor-s-home-1783782130</id>
            <summary type="text">இந்தோனேசியாவின் முன்னணி ஊழல் தடுப்பு சிறப்புப் பிரிவு தலைமை அரசு
சட்டத்தரணி ஃபெப்ரி அத்ரியான்சா என்பவரது வீடு உள்ளிட்ட பல இடங்களில்
பொலிஸார் நடத்திய...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தோனேசியாவின் முன்னணி ஊழல் தடுப்பு சிறப்புப் பிரிவு தலைமை அரசு
சட்டத்தரணி ஃபெப்ரி அத்ரியான்சா என்பவரது வீடு உள்ளிட்ட பல இடங்களில்
பொலிஸார் நடத்திய அதிரடி சோதனையில், கிலோ கணக்கில் தங்கக் கட்டிகளும்,
கோடிக்கணக்கான ரூபாய் பணமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
</p><p>
இந்த ஊழல் முறைப்பாட்டின் எதிரொலியாக அவர் தனது பதவியை சனிக்கிழமை அன்று
இராஜினாமா செய்துள்ளார்.</p><p></p><h2>சட்ட ஒழுங்கு நடைமுறையாக்கம்</h2><p>

சட்ட ஒழுங்கு நடைமுறையாக்கத்தின் நேர்மை மற்றும் நடுநிலைமையைப் பேணும் நோக்கில்
ஃபெப்ரி அத்ரியான்சா தனது பதவியிலிருந்து விலகியுள்ளதாக அந்த நாட்டின் தலைமை
சட்டத்தரணி அலுவலகம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5c975361-4a56-4f37-a921-dbb61f022782/26-6a525f533f9d1.webp' /></p><p>அந்த நாட்டின் பல்வேறு பகுதிகளில் அண்மையில் ஏற்பட்ட மின்வெட்டுக்குக் காரணமான
ஊழல் மற்றும் இலஞ்ச விவகாரங்கள் தொடர்பாக ஜகார்த்தா, தெற்கு டாங்கராங் மற்றும்
போகோர் உள்ளிட்ட 12 இடங்களில் கடந்த ஜூலை 8 மற்றும் 9 ஆகிய திகதிகளில்
பொலிஸார் தீவிர சோதனை நடத்தினர்.</p><p>

இந்த சோதனையின் போது, ஃபெப்ரிக்கு சொந்தமான வீட்டில் இருந்து 74 கிலோ எடையுள்ள
தங்கக் கட்டிகள் மற்றும் இந்தோனேசிய ருபியா, அமெரிக்க டொலர், சிங்கப்பூர்
டொலர், சவுதி ரியால் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் நாணய மதிப்பில் சுமார் 20
மில்லியன் டொலர் ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக பொலிஸ் தரப்பில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p></p><h2>மின்வெட்டு விவகாரம்</h2><p>
</p><p>
இருப்பினும், தன் மீதான குற்றச்சாட்டுகளை ஃபெப்ரி திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

மின்வெட்டு விவகாரத்தில் தான் ஏன் விசாரிக்கப்படுகிறேன் என்று தனக்கு
புரியவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/39b3356f-8778-4950-8618-fb0c627c6a81/26-6a525f5257320.webp' /></p><p>

58 வயதான ஃபெப்ரி, இந்தோனேசியாவின் ஜனாதிபதி பிரபோவோ சுபியாந்தோவின் இலவச
பாடசாலை உணவுத் திட்டத்தில் நிலவும் ஊழல் முறைப்பாடு மற்றும் 'கோஜெக்' (Gojek)
நிறுவனத்தின் நிறுவனர் நாடிம் மகரிம் மீதான வழக்குகள் உள்ளிட்ட பல முக்கிய
உயர் மட்ட ஊழல் வழக்குகளை விசாரித்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
</p><p>
தற்போது அவர் மீது இதுவரை முறையான குற்றச்சாட்டுகள் எதுவும் பதிவு
செய்யப்படவில்லை என்றாலும், இந்த விவகாரம் இந்தோனேசிய அரசியலில் பெரும்
பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-11T18:31:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீர்கொழும்பு சிறை கைதிகள் அதிகாரிகளை தாக்கிய கூரிய ஆயுதங்கள் மீட்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/egombo-prison-inmates-to-attack-officers-recovered-1783794345"></link>
            <id>https://jvpnews.com/article/egombo-prison-inmates-to-attack-officers-recovered-1783794345</id>
            <summary type="text">நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் இடையே ஏற்பட்ட பயங்கர மோதலைத் தொடர்ந்து, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் (CID) மேற்கொண்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் இடையே ஏற்பட்ட பயங்கர மோதலைத் தொடர்ந்து, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் (CID) மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது பெருமளவிலான கூர்மையான ஆயுதங்கள் மற்றும் இரும்புக் கம்பிகள் காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளன.</p><p></p><p>

இவற்றுடன் 1,000-க்கும் மேற்பட்ட தடிகளும் கம்புகளும் கைப்பற்றப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
</p><p>
இந்தத் துயரச் சம்பவத்தில் 8 சிறைச்சாலை அதிகாரிகளும் 21 கைதிகளும் உட்பட மொத்தம் 29 பேர் உயிரிழந்துள்ளனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/26358d96-55fa-4051-8bfc-b91ffd3f7c87/26-6a528aab3a054.webp' /></p><p>முதற்கட்ட விசாரணைகளின்படி, கலவரத்தின் போது சிறைச்சாலையின் சமையலறைக்குள் நுழைந்த கைதிகள், அங்கிருந்த கூர்மையான ஆயுதங்களை எடுத்துக்கொண்டுள்ளனர்.</p><p>

மேலும், சமையலறையிலிருந்த தேங்காய்களை எடுத்து அதிகாரிகள் மீது வீசித் தாக்கியுள்ளமையும் முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
</p><p>
இந்த மோதல் சம்பவத்தைத் தொடர்ந்து நீர்கொழும்பு சிறைச்சாலையிலிருந்து கைதிகள் வேறு சிறைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-11T18:25:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[மற்றவர்களை நொடியில் ஈர்க்கும் டாப் 3 ராசியினர் இவர்கள் தான்... உங்க ராசியும் இதுவா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/which-zodiac-sings-are-easily-attract-others-1783781597"></link>
            <id>https://manithan.com/article/which-zodiac-sings-are-easily-attract-others-1783781597</id>
            <summary type="text">ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒருவர் பிறக்கும் ராசி மற்றும் நட்சத்திரமானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை மற்றும் விசேட ஆளுமைகளில் அதிக ஆதிக்த்தை கொண்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒருவர் பிறக்கும் ராசி மற்றும் நட்சத்திரமானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை மற்றும் விசேட ஆளுமைகளில் அதிக ஆதிக்த்தை கொண்டிருக்கும் என தொன்று தொட்டு நம்பப்படுகின்றது.</p><p>அந்த வகையில் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்கள் முதல் பார்வையிலே மற்றவர்களை ஈர்க்கும் வசீகரிக்கும் ஆற்றல் கொண்டவர்களாக இருப்பார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/382d6d85-2ff5-46e5-a9bb-9d2ce27ef678/26-6a52644dab1af.webp' /></p><p>இவர்களின் வெளிப்புற அழகு மட்டுமன்றி இவர்களின் குணமும் மிகவும் அழகாகவே இருக்கும்.அப்படி மற்றவர்களை&nbsp; தங்களின் ஈர்க்கும் காந்த ஆற்றலால் நொடியில் தன்வசப்படுத்தும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.&nbsp;</p><p></p><h2>சிம்மம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3169f2ae-d754-4380-b1e3-1ff417343439/26-6a52644e582f1.webp' /></p><p>சிம்ம ராசியில் பிறந்தவர்கள் மற்றவர்களை வசீகரிக்கும் காந்த புண்ணகையை நிச்சயம் பெற்றிருப்பார்கள். அதனால் அவர்கள் அனைவராலும் விரும்பப்படுகின்றார்கள்.</p><p>இவர்களின் வித்தியாசமான ஆளுமை மற்றும் உடல் அழகு ,அழகிய முடி, கவர்ச்சியான முகம் மற்றும் நம்பிக்கையான பேச்சி மற்றவர்களுக்கு இவர்கள் மீது இனம் புரியாத விருப்பை தூண்டுகின்றது.&nbsp;</p><p>ஆயிரம் போர் இருக்கும் கூட்டத்திலும் சிம்ம ராசியினர் தான் கவன ஈர்ப்பாளர்களாக இருப்பார்கள். இவர்கள் இருக்கும் இடத்தில் ஒரு பாசிட்டிவ் ஆற்றல் இருந்துக்கொண்டே இருக்கும்.</p><h2>மிதுனம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1e8e7c75-0f94-4ff3-9f31-4cbbf4dd22b8/26-6a52644f08aa4.webp' /></p><p>மிதுன ராசிக்காரர்கள் இயற்கையாகவே வசீகரிக்கும் அழகை பெற்றிருப்பார்கள்.&nbsp; அவர்களின் நடையும் இயல்பும் தனித்துவதானதாக இருக்கும்.&nbsp;</p><p>இவர்களிடம்&nbsp; மற்றவர்களை கவரும் குணமும்&nbsp; பேச்சாற்றலும் நிச்சயம் இருக்கும்.வசீகரமான தோற்றமும், சிரித்த முகமும் பார்ப்பவர்களை காரணமின்றி கவரும் வகையில் அமைந்திருக்கும்.&nbsp;</p><p>இவர்கள் மற்றவர்களிடம் பழகும் தனித்துவமான பாணியும் பெரும்பாலனவர்களுக்கு முதல் சந்திப்பிலேயே பிடித்துவிடுவதால், இந்த ராசியினர் அனைவருக்கும் பிடித்தவர்களாக இருப்பார்கள்.</p><h2>விருச்சிகம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9e2a963b-9e77-40b3-a980-73abe016d7c1/26-6a52644fabdfc.webp' /></p><p></p><p>பிறப்பிலேயே ரகசிய இயல்புக்கும் மர்மமான குணத்துக்கும் பெயர் பெற்ற இவர்கள் அனைவரையும் எளிதில் ஈர்க்கும் ஒரு வசீகர ஆற்றல் கொண்டவர்களாக இருப்பார்கள்.&nbsp;</p><p>பார்ப்பதற்கு இவர்கள் அமைதியாக இருந்தாலும், வெறும் பார்வையிலேயே மற்றவர்களின் மனங்களில் மறக்க முடியாத அளவுக்கு ஒரு வேதியல் மாற்றத்தை கொடுத்துவிடுவார்கள்.</p><p>இவர்களின் பார்வையில் இயல்பாகவே ஒரு காந்த ஆற்றல் நிச்சயம் இருக்கும். இந்த ராசியினர் மனதில் என்ன இருக்கின்றது என்பதை அறிந்துக்கொள்வதற்காகவே இவர்களை சுற்றி ஒரு கூட்டம் இருந்துக்கொண்டே இருக்கும்.</p><p><b>இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. ( மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).</b></p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b>&nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-11T18:25:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீதிபதிகளின் ஓய்வு வயது நீடிப்பு : மொட்டுவின் நிலைப்பாடு வெளியானது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/slpp-issues-extending-the-retirement-age-of-judges-1783789658"></link>
            <id>https://ibctamil.com/article/slpp-issues-extending-the-retirement-age-of-judges-1783789658</id>
            <summary type="text">உயர் நீதிமன்றங்களில் நீதிபதிகளின் ஓய்வு வயதை நீடிக்கும் முயற்சிகள் எதிர்க்கப்பட வேண்டும் என்று சிறிலங்கா பொதுஜன பெரமுன ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது....</summary>
            <content type="html"><![CDATA[<p>உயர் நீதிமன்றங்களில் நீதிபதிகளின் ஓய்வு வயதை நீடிக்கும் முயற்சிகள் எதிர்க்கப்பட வேண்டும் என்று சிறிலங்கா பொதுஜன பெரமுன ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
</p><p>
இந்த அறிக்கை, சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சாகர கரியவசம் அவர்களின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ளது.</p><h2>கீழ்த்தரமானதும் வெட்கக்கேடானதுமான ஒரு முயற்சி</h2><p>அரசியல் தேவைகளை நிறைவேற்றுவதற்காக, இந்த நாட்டின் உயர் நீதிமன்றங்களில் நீதிபதிகளின் ஓய்வு வயதை நீடிக்க இந்த அரசாங்கம் மிகவும் கீழ்த்தரமானதும் வெட்கக்கேடானதுமான ஒரு முயற்சியை மேற்கொண்டு வருகிறது என்றும், அது எதிர்க்கப்பட வேண்டும் என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8bd9e94a-ad39-4e5b-ab6c-f5e78cfa1b62/26-6a52872dea34a.webp' /></p><p>
</p><p>
சிறிலங்கா பொதுஜன பெரமுன வெளியிட்ட அறிக்கையின் ஒரு பகுதி பின்வருமாறு:</p><p> அரசியல் தேவைகளை நிறைவேற்றுவதற்காக, இந்த நாட்டின் உயர் நீதிமன்றங்களில் உள்ள நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை நீடிக்க இந்த அரசாங்கம் மேற்கொள்ளும் மிகவும் கீழ்த்தரமான மற்றும் வெட்கக்கேடான முயற்சிக்கு எதிராக இந்த நாட்டில் மிகப் பெரிய மக்கள் கருத்து நிலவுவதை நாங்கள் காண்கிறோம்.</p><h2>நாட்டின் ஜனநாயகத்திற்கு&nbsp; மரண அடி</h2><p>
</p><p>
ஒரு கட்சியாக நாங்கள் இந்த கீழ்த்தரமான முயற்சியை தொடர்ந்து எதிர்த்து வருகிறோம், ஏனெனில் இது நமது நாட்டின் ஜனநாயகத்திற்கு ஒரு மரண அடியாகும்</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/09a2cd70-6534-4dc6-b691-c5766bca9320/26-6a52872d4788b.webp' /></p><p>இன்று, நீதிபதிகள் சங்கம் இந்த முடிவை எதிர்த்து ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது. ஜனநாயகத்தை மதிக்கும் ஒரு நாடு, இந்த அரசாங்கத்தின் வஞ்சகமான மற்றும் ஜனநாயக விரோத முயற்சிக்கு எதிராக நாட்டின் நீதிபதிகளே குரல் எழுப்புகிறார்கள் என்ற உண்மையை பெரிதும் கருத்தில் கொள்ள வேண்டும்.</p><p></p><h2>ஒன்றிணைந்து குரல் எழுப்ப சஜித்தை அழைக்கும் நாமல்</h2><p>
</p><p>
கடந்த வாரம், தற்போதைய அரசாங்கத்தின், இந்த வெட்கக்கேடான முயற்சிக்கு எதிராக ஒன்றிணைந்து குரல் எழுப்புமாறு நாடாளுமன்றத்தில் உள்ள எதிர்க்கட்சித் தலைவரை எங்கள் கட்சியின் தேசிய அமைப்பாளர் கேட்டுக்கொண்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/347dd4f5-83ff-4efb-96d5-25e5baeb965a/26-6a52853ab2fc9.webp' /></p><p> உயர் நீதிமன்றங்களில் நீதிபதிகளின் பதவிக்காலத்தை நீடிப்பது தொடர்பாக, எதிர்க்கட்சித் தலைவர் இந்த விஷயத்தில் உடனடியாகக் கவனம் செலுத்துவார் என்று நான் நம்புகிறேன். </p><p>நமது தாய்நாட்டில் ஜனநாயகத்திற்கு எதிராக எத்தகைய அச்சுறுத்தல்களும் அழுத்தங்களும் எழுந்தாலும், நாம் நமது ஜனநாயகத்துடன் உறுதியாக நிற்போம் என்றும், ஜனநாயகத்தைப் பாதுகாக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம் என்றும் நான் கூற விரும்புகிறேன்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-11T18:10:58+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[உதட்டு காயத்திற்கு சிகிச்சை ; 18 மாத குழந்தை பலி ; விசாரணை தீவிரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/18-month-old-baby-dies-investigation-underway-1783793277"></link>
            <id>https://jvpnews.com/article/18-month-old-baby-dies-investigation-underway-1783793277</id>
            <summary type="text">இந்தியாவில் கேரள மாநிலத்தின் மதமங்கலம் பகுதியைச் சேர்ந்த 18 மாத குழந்தை சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியாவில் கேரள மாநிலத்தின் மதமங்கலம் பகுதியைச் சேர்ந்த 18 மாத குழந்தை சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><p></p><p> குழந்தையின் மரணத்திற்கு மருத்துவர்களின் அலட்சியமே காரணம் என அதன் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர்.
</p><p>
கடந்த 5 ஆம் திகதி, வீட்டின் முற்றத்தில் விளையாடிக்கொண்டிருந்தபோது தவறி கீழே விழுந்ததில் குழந்தையின் உதட்டில் காயம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9adbd655-7dc0-4fe5-9817-60aa9141db12/26-6a52867ead42f.webp' /></p><p>இதையடுத்து, சிகிச்சைக்காக பெற்றோர் குழந்தையை அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
</p><p>
அங்கு காயத்திற்கு சிகிச்சை அளிக்கும் நோக்கில் குழந்தைக்கு மயக்க மருந்து வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. </p><p>எனினும், மருந்து செலுத்தப்பட்ட சிறிது நேரத்திலேயே குழந்தையின் உடல்நிலை திடீரென கவலைக்கிடமானதாக மாறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
</p><p>
இதையடுத்து, மேலதிக சிகிச்சைக்காக குழந்தை மற்றொரு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டது. </p><p>இருப்பினும், அங்கு சிகிச்சை பெற்று வந்த குழந்தை சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்தது.
</p><p>
தமது குழந்தையின் உயிரிழப்புக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களின் அலட்சியமே காரணம் என குற்றம் சாட்டியுள்ள பெற்றோர், இது தொடர்பாக காவல்துறையில் முறைப்பாடு செய்துள்ளனர்.
</p><p>
சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன், மருத்துவ சிகிச்சையில் ஏதேனும் அலட்சியம் இடம்பெற்றதா என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-11T18:08:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[தேசிய சாதனையுடன் வெள்ளிப் பதக்கம் வென்ற அயோமால்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/ayomal-wins-silver-medal-with-national-record-1783792199"></link>
            <id>https://jvpnews.com/article/ayomal-wins-silver-medal-with-national-record-1783792199</id>
            <summary type="text">23 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய மெய்வல்லுனர் சாம்பியன்ஷிப் தொடரில், ஆண்களுக்கான 400 மீட்டர் தடை தாண்டி ஓடும் போட்டியில் இலங்கையின் அயோமால் அகலங்க வெள்ள...</summary>
            <content type="html"><![CDATA[<p>23 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய மெய்வல்லுனர் சாம்பியன்ஷிப் தொடரில், ஆண்களுக்கான 400 மீட்டர் தடை தாண்டி ஓடும் போட்டியில் இலங்கையின் அயோமால் அகலங்க வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார்.</p><p>
</p><p></p><p>இறுதிப் போட்டியை 49.03 வினாடிகளில் நிறைவு செய்த அவர், தனிப்பட்ட சிறந்த நேரத்தைப் பதிவு செய்ததுடன், 26 ஆண்டுகளாக நீடித்து வந்த இலங்கையின் தேசிய சாதனையையும் முறியடித்துள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/489369ed-f0c2-4a8e-be65-c0dea8ea01d2/26-6a52824924820.webp' /></p><p>இதற்கு முன்னர், 2000 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய மெய்வல்லுனர் சாம்பியன்ஷிப்பில் ஹரிஜன் ரத்நாயக்க பதிவு செய்த 49.44 வினாடிகளே இலங்கையின் தேசிய சாதனையாக இருந்து வந்தது.
</p><p>
அயோமால் அகலங்கவின் இந்தச் சாதனை, இலங்கை மெய்வல்லுனர் வரலாற்றில் புதிய மைல்கல்லாகப் பதிவாகியுள்ளதுடன், சர்வதேச அரங்கில் நாட்டிற்கு மேலும் ஒரு பெருமையைச் சேர்த்துள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-11T17:50:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Manchu</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறுத்தை படத்தில் நடித்த குழந்தையா இது? அடையாளம் தெரியாமல் காணப்படும் புகைப்படம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/baby-rakshana-recent-photo-after-siruthai-movie-1783778904"></link>
            <id>https://manithan.com/article/baby-rakshana-recent-photo-after-siruthai-movie-1783778904</id>
            <summary type="text">சிறுத்தைஇயக்குநர் சிவா இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகி வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் சிறுத்தை. இப்படத்தில் தமன்னா, சந்தானம், கார்த...</summary>
            <content type="html"><![CDATA[<h2>சிறுத்தை</h2><p>இயக்குநர் சிவா இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகி வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் சிறுத்தை. இப்படத்தில் தமன்னா, சந்தானம், கார்த்தியுடன் இணைந்து நடித்திருந்தனர்.
</p><p>
கடந்த 2011-ஆம் ஆண்டு வெளியான இப்படம் ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்று பிளாக்பஸ்டர் ஆனது. இப்படத்தின் வெற்றியால் இன்று வரை இயக்குநர் சிவா 'சிறுத்தை சிவா' என்றுதான் அழைக்கப்படுகிறார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fc4fa257-f5a8-4356-958b-3ba11ce66a63/26-6a52527180144.webp' /></p><h2>
பேபி ரக்ஷனா
</h2><p>இப்படத்தில் கார்த்தியின் மகளாக பேபி ரக்ஷனா என்பவர் நடித்திருந்தார். 'அராராரோ ஆரிரரோ' பாடலில் அவருடைய நடிப்பு ரசிகர்களின் மனதை தொட்டது. இந்த நிலையில், சிறுத்தை திரைப்படத்தில் கார்த்தியின் மகளாக நடித்திருந்த பேபி ரக்ஷனாவின் சமீபத்திய புகைப்படம் வெளியாகியுள்ளது. இதில் நன்றாக வளர்ந்து ஆளே மாறிவிட்டார் நடிகை ரக்ஷனா.
</p><p>
இந்த புகைப்படங்களை பார்க்கும் ரசிகர்கள் பலரும், 'சிறுத்தை படத்தில் நடித்த குழந்தையா இது?' என ஆச்சரியத்துடன் கேட்டு வருகிறார்கள். இதோ நீங்களே பாருங்க:</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8f6f3a5d-5cff-4ac8-926d-a8241c8108f0/26-6a5252722d08c.webp' /></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/deb7e6f7-658c-4985-af04-01b1b97a3200/26-6a525272d0717.webp' />&nbsp;</p><p></p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8a668210-0d52-4948-be44-dff20d733d11/26-6a5252737edfd.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td><i>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன்<a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள் <a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"><b>FOLLOW NOW</b></a>&nbsp; &nbsp; &nbsp;</i><br></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-11T17:49:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[அச்சுறுத்தும் சூறாவளி பாவி... கிட்டத்தட்ட 2 மில்லியன் மக்களை வெளியேற்றிய சீனா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/typhoon-bavi-china-evacuates-1783791937"></link>
            <id>https://news.lankasri.com/article/typhoon-bavi-china-evacuates-1783791937</id>
            <summary type="text">கிழக்கு சீனாவை பாவி சூறாவளி தாக்கவுள்ள நிலையில், சீன அதிகாரிகள் சனிக்கிழமையன்று கிட்டத்தட்ட 2 மில்லியன் மக்களை வெளியேற்றியதுடன், உயர் எச்சரிக்கையையும்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கிழக்கு சீனாவை பாவி சூறாவளி தாக்கவுள்ள நிலையில், சீன அதிகாரிகள் சனிக்கிழமையன்று கிட்டத்தட்ட 2 மில்லியன் மக்களை வெளியேற்றியதுடன், உயர் எச்சரிக்கையையும் விடுத்துள்ளனர்.</p><h2>மணிக்கு 144 கி.மீ வேகத்தில்</h2><p>
</p><p>பாவி சூறாவளியானது தைவான் மற்றும் ஜப்பானின் தெற்குத் தீவுகளில் பலத்த காற்றையும் மழையையும் கொண்டு வந்துள்ளது. முன்னதாக, தெற்கு பிலிப்பைன்ஸில் குறைந்தது 17 பேர் மரணமடைந்ததாக தகவல் வெளியானது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2f8e0517-17a1-4429-b678-fe3fd1b22a81/26-6a528dbcb45f6.webp' /></p><p> </p><p>தைவானை நோக்கி நகர்ந்து செல்வதற்கு முன்பு பாவி சூறாவளி தீவிரப்படுத்திய பருவமழையால் ஏற்பட்ட நிலச்சரிவுகளே இந்த இறப்புகளுக்கு முக்கியக் காரணம் என்று பிலிப்பைன்ஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். </p><p>இந்த நிலையில், தைவானின் மத்திய வானிலை நிர்வாகத்தின் தகவலின் அடிப்படையில், மையப்பகுதியில் மணிக்கு அதிகபட்சமாக 144 கி.மீ வேகத்தில் வீசும் காற்றைக் கொண்டுள்ள 'பாவி' சூறாவளி, சனிக்கிழமையன்று தைவானுக்கு வடக்கே கடந்து செல்வதாக தெரிய வருகிறது. </p><p>இது கிழக்கு சீனாவில் உள்ள ஜெஜியாங் (Zhejiang) பகுதியை நோக்கி நகரும் என்றும், சீனாவின் தேசிய வானிலை ஆய்வு மையத்தின் தகவலின்படி, நள்ளிரவுக்கு முன்னதாகவோ அல்லது ஞாயிற்றுக்கிழமை அதிகாலையிலோ கரையை கடந்து பின்னர் நிலப்பகுதியை நோக்கி நகரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.</p><p></p><p> </p><p>ஜெஜியாங் மாகாணத்தில் சனிக்கிழமை காலை நிலவரப்படி 17 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ சின்ஹுவா செய்தி முகமை தெரிவித்துள்ளது. </p><p>இதனிடையே, சீனாவின் கிழக்குக் கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ள ஷாங்காய் நகரமும், அதிக ஆபத்துள்ள பகுதிகளில் வசித்த சுமார் 34,000 மக்களை சனிக்கிழமை நண்பகலுக்குள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றியது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/21a6c176-8ab9-4930-aac3-c2c63bfdc870/26-6a528dbd86e71.webp' /></p><p> </p><p>தென்கிழக்கு சீனாவில், கடற்கரைக்கு அருகிலுள்ள நகரங்கள் பாவி சூறாவளியின் தாக்கங்களை எதிர்கொள்ளத் தயாராகி வருகின்றன. சீனாவின் தேசிய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு நிற சூறாவளி எச்சரிக்கையை விடுத்துள்ளது; இது நான்கு நிலைகளைக் கொண்ட எச்சரிக்கை அமைப்பில் இரண்டாவது மிக உயர்ந்த நிலையாகும்.</p><h2>குறைந்தது 113 பேர்</h2><p> </p><p>இதனால் பல பள்ளிகள் மற்றும் படகுச் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. நூற்றுக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன; சில அதிவேக ரயில் சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளன. </p><p>ஜெஜியாங் மற்றும் ஃபுஜியான் மாகாணங்களில் சூறாவளி தடுப்பு மற்றும் அவசரக்கால மீட்புப் பணிகளை முடுக்கி விடுவதற்காக, மத்திய இயற்கை பேரிடர் நிவாரண நிதியிலிருந்து 40 மில்லியன் யுவான் (5.9 மில்லியன் டொலர்) நிதியை ஒதுக்கியுள்ளதாக சீன அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனர்.</p><p> சனிக்கிழமை இரவு 7 மணி நிலவரப்படி, பாவி சூறாவளியால் குறைந்தது 113 பேர் காயமடைந்ததாக தைவான் அதிகாரிகள் பதிவு செய்துள்ளனர்; இவர்களில் சிலர், வழுக்கும் சாலைகளில் மழை மற்றும் பலத்த காற்றுக்கு மத்தியில் மோட்டார் சைக்கிள்களில் பயணித்தபோது காயமடைந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d30ef0aa-f5cc-42e6-8bfb-5cff5d8dfb36/26-6a528dbe395b5.webp' /></p><p> </p><p>கிழக்கு மாவட்டமான ஹுவாலியன் மற்றும் மத்திய நகரமான தைச்சுங் உள்ளிட்ட தீவின் பல்வேறு பகுதிகளிலிருந்து 14,200-க்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டனர். </p><p>சனிக்கிழமையன்று தைவானின் பெரும்பாலான பகுதிகளில் பள்ளிகள் மற்றும் அலுவலகங்கள் செயல்படவில்லை. இதனிடையே, ஜப்பானின் தெற்குத் தீவுகளில் உள்ள ஒகினாவா மாகாணத்தில், உயரமான அலைகள், பலத்த காற்று மற்றும் புயல் தீவிரமடையக்கூடும் என உள்ளூர் அதிகாரிகள் எச்சரித்துள்ள நிலையில், அப்பகுதி முழுவதும் 200-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இஷிகாகி உள்ளிட்ட தீவுகளை பலத்த காற்றும் மழையும் தாக்கியுள்ளன.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-11T17:44:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[30 நொடிகளில் 195 முத்தங்கள்: பிரேசில் ஜோடி கின்னஸ் சாதனை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/brazil-couple-guinness-record-with-195-kisses-1783770398"></link>
            <id>https://manithan.com/article/brazil-couple-guinness-record-with-195-kisses-1783770398</id>
            <summary type="text">பிரேசிலின் சாவோ பாலோவைச் சேர்ந்த டாக்டர்களான ரெனாட்டோ பேமா கையா (32) மற்றும் அவரது காதலி நயாரா ரோபர்ட்டா (33) ஆகியோர், 30 நொடிகளில் 195 முத்தங்கள் கொட...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிரேசிலின் சாவோ பாலோவைச் சேர்ந்த டாக்டர்களான ரெனாட்டோ பேமா கையா (32) மற்றும் அவரது காதலி நயாரா ரோபர்ட்டா (33) ஆகியோர், 30 நொடிகளில் 195 முத்தங்கள் கொடுத்து புதிய கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளனர்.</p><h2>கின்னஸ் சாதனை</h2><p>

கொரோனா காலத்தில் மருத்துவப் பணியில் ஈடுபட்ட வர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஜோடி, தங்களின் காதல், ஒற்றுமை மற்றும் புரிதலை உலகிற்கு எடுத்துக்காட்டும் நோக்கில் இந்தச் சாதனையை நிகழ்த்தியதாக தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/812f0fee-fa93-4b34-9a0e-e69781632f80/26-6a5230b4ac7f0.webp' /></p><p>இந்த சாதனையை கின்னஸ் அதிகாரிகள் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளனர்.

ரெனாட்டோவுக்கு கவனக்குறைவு மற்றும் மிகையான செயல்பாட்டுக் குறைபாடு (ADHD) இருந்தாலும், மன உறுதியும் பயிற்சியும் இருந்தால் எதையும் சாதிக்க முடியும் என்பதை நிரூபிக்கவே இந்த முயற்சியில் ஈடுபட்டதாக கூறியுள்ளார்.</p><p> இந்தச் சாதனையுடன் நிற்காமல், ஜப்பான் ஜோடி வைத்துள்ள ஒரு நிமிடத்தில் 277 முத்தங்கள் என்ற உலக சாதனையையும் முறியடிக்க இந்த ஜோடி தயாராகி வருவதாக தெரிவித்துள்ளர்.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Brazil man SETS WORLD RECORD with 195 KISSES in 30 seconds<br><br>Girlfriend’s expression BARELY CHANGES while he goes full rapid-fire<br><br>People say he’s ‘KISSING LIKE A WOODPECKER’ <a href="https://t.co/5ABJOCIR0P">pic.twitter.com/5ABJOCIR0P</a></p>&mdash; RT (@RT_com) <a href="https://x.com/RT_com/status/2075632675520418026?ref_src=twsrc%5Etfw">July 10, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b>&nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-11T17:00:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[சீனா - வடகொரியா நட்பு உடன்படிக்கையின் 65ஆவது ஆண்டு நிறைவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/65-anniversary-china-north-korea-friendship-treaty-1783784363"></link>
            <id>https://tamilwin.com/article/65-anniversary-china-north-korea-friendship-treaty-1783784363</id>
            <summary type="text">சீனா மற்றும் வடகொரியா ஆகிய நாடுகளுக்கு இடையிலான வரலாற்றுச் சிறப்புமிக்க
&#039;நட்புறவு, ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர உதவிக்கான&#039; உடன்படிக்கையின் 65ஆவது
ஆண்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>சீனா மற்றும் வடகொரியா ஆகிய நாடுகளுக்கு இடையிலான வரலாற்றுச் சிறப்புமிக்க
'நட்புறவு, ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர உதவிக்கான' உடன்படிக்கையின் 65ஆவது
ஆண்டு நிறைவை முன்னிட்டு, வடகொரியப் பிரதமர் பாக் தே சோங் மூன்று நாள்
உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு பெய்ஜிங் சென்றுள்ளார்.</p><p>

1961 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 11ஆம் திகதி கையெழுத்திடப்பட்ட இந்த
உடன்படிக்கையின் பிரகாரம், இரு நாடுகளில் ஏதேனும் ஒரு நாட்டின் மீது
ஆயுதமேந்திய தாக்குதல் நடத்தப்பட்டால், மற்றைய நாடு அதற்கு இராணுவ ரீதியாக உதவ
வேண்டும் என்ற பரஸ்பர பாதுகாப்பு விதிமுறை இன்றும் அமல் உள்ளது.</p><p></p><h2>இராணுவக் கூட்டணி உடன்படிக்கை</h2><p>
</p><p>
சீனாவின் ஒரேயொரு உத்தியோகபூர்வ இராணுவக் கூட்டணி உடன்படிக்கை இதுவென்பது
குறிப்பிடத்தக்கது.

இருப்பினும், கடந்த 65 ஆண்டுகளில் இரு நாடுகளினதும் பொருளாதார மற்றும்
உலகளாவிய நிலைகளில் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.</p><p>

சீனா உலகின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதார வல்லரசாக உருவெடுத்துள்ள
போதிலும், வடகொரியா தனது அணு ஆயுதப் பரீட்சார்த்தங்கள் காரணமாக சர்வதேசத்
தடைகளுக்கு முகம்கொடுத்து, தனிமைப்படுத்தப்பட்ட ஒரு நாடாகவே தொடர்கின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aa74db92-b918-4f9f-9a6c-571e07c12ecf/26-6a526f455a0e6.webp' /></p><p>

1950 ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற கொரியப் போரின் போது, அமெரிக்கப் படைகளுக்கு
எதிராக வடகொரியாவிற்காகப் பல்லாயிரக்கணக்கான சீனப் படையினர் தமது உயிர்களைத்
தியாகம் செய்திருந்தனர்.
</p><p>
இந்த வரலாறு இன்றும் இரு நாட்டுத் தலைவர்களாலும் "குருதியால் எழுதப்பட்ட
நற்புறவு" என சிலாகிக்கப்படுகின்றது. சீனா தனது எல்லையில் பிராந்திய
ஸ்திரத்தன்மையை மட்டுமே எதிர்பார்க்கின்றது.</p><p>

வடகொரியாவின் ஆட்சி வீழ்ச்சியடைந்தால், மில்லியன் கணக்கான அகதிகள் சீன
எல்லைக்குள் நுழைவர் என்றும், அமெரிக்க ஆதரவு பெற்ற ஒருங்கிணைந்த கொரியாவொன்று
தனது எல்லைக்கு அருகில் உருவாகிவிடும் என்றும் சீனா அஞ்சுகின்றது.</p><p></p><h2>அணு ஆயுதக் கொள்கை</h2><p>

இதனால், வடகொரியாவை அமெரிக்காவிற்கு எதிரான ஒரு மூலோபாயப் பாதுகாப்பு வளையமாக
சீனா பயன்படுத்தி வருகின்றது.

வடகொரியாவின் மாற்றுத் திட்டங்கள்
மறுபுறம், வடகொரியா முழுமையாகச் சீனாவில் மட்டும் தங்கியிருக்க விரும்பவில்லை.
</p><p>
2024 ஆம் ஆண்டில் ரஷ்யாவுடன் கையெழுத்திடப்பட்ட மூலோபாயக் கூட்டாண்மை
உடன்படிக்கையின் மூலம் ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் ஆதரவைப் பெற்றுள்ள
வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன், தற்போது இராணுவத் தொழில்நுட்பம் மற்றும்
எரிசக்தித் தேவைகளுக்கு ரஷ்யாவை ஒரு முக்கிய மாற்றாகப் பயன்படுத்துகின்றார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b75e9b90-5ee4-47d8-a0ea-ab44a2c69aa5/26-6a526f4609f5a.webp' /></p><p>
</p><p>
இது சீனாவிற்குச் சற்றே அதிருப்தியை ஏற்படுத்திய போதிலும், வடகொரியா மீதான
தனது செல்வாக்கை ரஷ்யாவிடம் இழக்க சீனா தயாராக இல்லை.
</p><p>
அமெரிக்கா, தென்கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் தமக்கு இடையேயான கூட்டு
இராணுவப் பயிற்சிகளைத் தீவிரப்படுத்தி வருவதனால், பெய்ஜிங்கிற்கும்
பியங்யாங்கிற்கும் இடையிலான மூலோபாயத் தேவை மேலும் அதிகரித்துள்ளது.
</p><p>
வடகொரியாவின் அணு ஆயுதக் கொள்கைகளில் சீனாவிற்கு உடன்பாடு இல்லாத போதிலும்,
மேற்கத்திய நாடுகளின் ஆதிக்கத்திற்கு எதிராக வடகொரியாவைத் தனது பக்கம் தக்க
வைத்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் சீனா உள்ளமை குறிப்பிடத்தக்கது.&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-11T16:55:52+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[கியூபாவில் மீண்டும் மின்கட்டமைப்பு முடக்கம்: 5 நாட்களில் 2ஆவது முறையாக நாடு தழுவிய இருள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/power-outage-in-cuba-nationwide-darkness-2nd-time-1783783701"></link>
            <id>https://tamilwin.com/article/power-outage-in-cuba-nationwide-darkness-2nd-time-1783783701</id>
            <summary type="text">தீவு நாடான கியூபாவில் நிலவி வரும் மிக மோசமான எரிசக்தி தட்டுப்பாடு காரணமாக,
அங்குள்ள தேசிய மின்கட்டமைப்பு மீண்டும் முழுமையாக முடங்கியுள்ளது.

இதன் வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>தீவு நாடான கியூபாவில் நிலவி வரும் மிக மோசமான எரிசக்தி தட்டுப்பாடு காரணமாக,
அங்குள்ள தேசிய மின்கட்டமைப்பு மீண்டும் முழுமையாக முடங்கியுள்ளது.
</p><p>
இதன் விளைவாக, கடந்த ஐந்து நாட்களில் இரண்டாவது முறையாக அந்த நாடு முழுவதும்
மின்சாரம் துண்டிக்கப்பட்டு, பல மில்லியன் மக்கள் இருளில் மூழ்கியுள்ளனர்.</p><p></p><h2>எரிசக்தி தட்டுப்பாடு&nbsp;</h2><p>
</p><p>
தொடர்ந்து மோசமடைந்து வரும் இந்த மின்கட்டமைப்பு முடக்கத்தால் மக்களின் இயல்பு
வாழ்க்கை முற்றிலுமாகப் பாதிக்கப்பட்டுள்ளதுடன், நாட்டின் பொருளாதாரமும்
பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/39a366d9-b69b-498b-aa8a-38f9fe0ad619/26-6a5262d6ccad8.webp' /></p><p>மின்கட்டமைப்பைச் சீரமைத்து, மின் விநியோகத்தை மீண்டும் கொண்டு வருவதற்கான
தீவிர முயற்சிகளில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
</p><p>
எனினும், எரிபொருள் பற்றாக்குறை மற்றும் உள்கட்டமைப்புப் பராமரிப்புப் பணிகள்
தொய்வடைந்துள்ளதால், மின்சாரத்தை முழுமையாக மீட்டெடுப்பதில் தொடர்ந்து சிக்கல்
நீடித்து வருகிறது.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-11T16:55:37+00:00</updated>
        </entry>
    </feed>
