<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-07-16T01:41:16+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழ் வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் கொலை வழக்கை மூடிமறைத்த முக்கிய புள்ளி நாட்டைவிட்டு தப்பிச் செல்ல முயற்சி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/death-of-dinesh-schaffter-ruled-a-murder-1784165207"></link>
            <id>https://tamilwin.com/article/death-of-dinesh-schaffter-ruled-a-murder-1784165207</id>
            <summary type="text">&amp;nbsp;இலங்கையின் பிரபல தமிழ் வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் (Dinesh Schaffter) கொலை வழக்கை மூடிமறைப்பதற்கு முன்னிலையில் இருந்து செயற்பட்டவர் தான் பிரதி பொ...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;இலங்கையின் பிரபல தமிழ் வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் (Dinesh Schaffter) கொலை வழக்கை மூடிமறைப்பதற்கு முன்னிலையில் இருந்து செயற்பட்டவர் தான் பிரதி பொலிஸ் மா அதிபர் பிரசாத் ரணசிங்க.</p><p>இவர் ராஜபக்ச கூட்டத்தின் நெருங்கிய தொடர்பு கொண்டவர். பிரசாத் ரணசிங்க இந்தச் சம்பவத்தை மூடிமறைத்தது, அவருக்குப் பின்னால் இருந்தவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கவே. தினேஷ் ஷாப்டரின் கொலை தொடர்பான விசாரணை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
</p><h2>
</h2><p></p><h2>தப்பிச் செல்வதற்கான முயற்சி</h2><p>உடனடியாக பிரசாத் ரணசிங்கவை கைது செய்ய வேண்டும்.பிரசாத் ரணசிங்கவின் மனைவி கொழும்பில் விசா (Agencies) அலுவலகம் ஒன்றை நடத்தி வருகிறார்.
</p><p>இப்போது இவர்கள் இருவரும் நாட்டை விட்டு தப்பிச் செல்லத் தயாராக உள்ளதாக தெரியவந்துள்ளது.
பிரசாத் ரணசிங்க நாட்டை விட்டுத் தப்பிச் செல்வதற்கு முன் உடனடியாக அவருக்குப் பயணத் தடை விதிக்கப்பட வேண்டும்.
</p><p> அன்று&nbsp; பிரதி பொலிஸ் மா அதிபர் பிரசாத் ரணசிங்கவை இலஞ்ச ஊழல் ஒழிப்புப் பிரிவால் (Bribery Commission) கைது செய்யச் சென்றபோது, அங்கு என்ன நடந்தது. இலஞ்ச ஒழிப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.</p><p>பி்ன்னர் விளக்கமறியலில் வைப்பதற்கு முன், அதனைத் தடுத்தார்கள் ராஜபக்ச கூட்டத்தினர். 
இந்த பிரசாத் ரணசிங்க மற்றும் SSP பிரசாந்த ஆகிய இருவரும் இணைந்தே இந்த விசாரணையை மூடிமறைத்தனர். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a691014b-abc9-492b-80df-5335216fc7b5/26-6a58335962c8e.webp' /></p><p>அன்று ஏதேனும் ஒரு வழியில் இதனை வெளிக்கொண்டு வர முடிந்திருந்தால், கொலைகாரர்கள் இந்நேரம் பிடிபட்டிருப்பார்கள்.
கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 15 ஆம் திகதி தினேஷ் ஷாப்டர் (Dinesh Schaffter) கொலை செய்யப்பட்டார். </p><p>இன்று 2026 ஆம் ஆண்டு ஜூன் மாதம் அதாவது 2022 இலிருந்து 2026 வரை இந்தக் கொலை மூடிமறைக்கப்பட்டது.மேலும் இந்த விசாரணையை மூடிமறைத்த, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) பொய்க் குறிப்புக்களை எழுதிய, பொய்ச் சாட்சியங்களை உருவாக்கிய அனைவரும் கைது செய்யப்பட வேண்டும்.&nbsp;</p><p>&nbsp;</p><p></p>]]></content>
            <updated>2026-07-16T01:35:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[சுரேஷ் சலே தொடர்பில் நீதிமன்றில் அம்பலப்படுத்தப்பட்ட தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/suresh-salley-is-not-a-criminal-1784079590"></link>
            <id>https://tamilwin.com/article/suresh-salley-is-not-a-criminal-1784079590</id>
            <summary type="text">சுரேஷ் சலே தொடர்பில் நீதிமன்றில் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான உயர் நீதிமன்ற வழக்கின் பிரதிவாதியாக சுரேஷ் சலே இருந்தாலும், எந்த இடத்திலும் அவரது பெ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சுரேஷ் சலே தொடர்பில் நீதிமன்றில் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான உயர் நீதிமன்ற வழக்கின் பிரதிவாதியாக சுரேஷ் சலே இருந்தாலும், எந்த இடத்திலும் அவரது பெயர் குறிப்பிடப்படவில்லை என சுரேஷ் சலே சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சீவ ஜயவர்தன மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்குத் தெரிவித்துள்ளார். </p><p>

ஈஸ்டர் தாக்குதலை நடத்திய சஹ்ரான் காசிம் பதுங்கி இருந்த இடம்கூட, தாக்குதலுக்கு முன்னதாகவே அப்போதைய புலனாய்வுப் பிரிவுத் தலைவரான நிலந்த ஜயவர்தனவினால் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அறிவிக்கப்பட்டிருந்தது. </p><p>

எனினும், அவரை கைது செய்ய அப்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை என ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சீவ ஜயவர்தன மேலும் தெரிவித்தார்.</p><p> </p><h2><b>

மனு விசாரணை</b></h2><p>ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்டு, தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள அரச புலனாய்வு முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேயைத் தடுத்து வைப்பதற்கான உத்தரவை செல்லாததாக்கி, உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4ce9e786-4646-4825-91d0-4950454879b4/26-6a57aff49b0e7.webp' /></p><p>அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே தாக்கல் செய்துள்ள மனுவில், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன, குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகர உள்ளிட்டோர் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.</p><p> 

மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது கருத்து வெளியிட்ட சஞ்சீவ ஜயவர்தன, ஈஸ்டர் தாக்குதலுக்கு பல மாதங்களுக்கு முன்னரே மத ரீதியான தாக்குதல் ஒன்று இடம்பெற வாய்ப்புள்ளதாக புலனாய்வுப் பிரிவினர் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அறிவிக்கப்பட்டிருந்தது. </p><p>

இருந்த போதிலும், அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டினார். 2016ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதி முதல் 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 30ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் ஸஹ்ரான் உள்ளிட்ட தீவிரவாத குழுக்களின் செயற்பாடுகள் குறித்து 97 அறிக்கைகளை பொலிஸ் மா அதிபருக்கு அனுப்பப்பட்டுள்ளது. </p><h3><b>

சட்ட நடவடிக்கை </b></h3><p>அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் நிலந்த ஜயவர்தன உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த சத்தியக் கடதாசியில் இந்த விடயம் குறிப்பிட்டுள்ளது. 

பயங்கரவாத குழுக்களுக்கு ஆதரவளிக்கும் 129 பேர் கொண்ட பட்டியலையும் அவர் சமர்ப்பித்திருந்த போதிலும், பிரதிவாதிகள் அது குறித்து முறையான விசாரணைகளை நடத்தவில்லை என சஞ்சீவ ஜயவர்தன தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c2c2853f-3391-4b36-a44f-c73c8d5f8aa7/26-6a57aff54d96a.webp' /></p><p>தனது கட்சிக்காரர் எவ்வித சம்பவத்துடனும் தொடர்புடையவர் என்பது எந்தவொரு விசாரணையிலோ அல்லது ஆணைக்குழு அறிக்கைகளிலோ வெளியாகவில்லை என சஞ்சீவ ஜயவர்தன சுட்டிக்காட்டியுள்ளார்.
</p><p>
தாக்குதல் குறித்து ஆராய நியமிக்கப்பட்ட முன்னாள் மேல் நீதிமன்ற நீதியரசர் ஜயகி டி அல்விஸ் தலைமையிலான குழுவின் அறிக்கையில், தாக்குதலை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்காமை தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர மற்றும் அதன் முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன ஆகியோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-07-16T01:22:34+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்க நலன்களுக்கு முன்னுரிமை ; ட்ரம்ப்பின் வெளியுறவுக் கொள்கையில் புதிய மாற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/us-interests-priority-new-shift-trump-foreign-1784161177"></link>
            <id>https://canadamirror.com/article/us-interests-priority-new-shift-trump-foreign-1784161177</id>
            <summary type="text">அமெரிக்காவின் தேசிய நலன்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வெளியுறவுக் கொள்கையை முன்னெடுத்து வருவதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இதன் மூலம்,...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்காவின் தேசிய நலன்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வெளியுறவுக் கொள்கையை முன்னெடுத்து வருவதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். </p><p>இதன் மூலம், சர்வதேச விவகாரங்களில் அமெரிக்காவின் பங்களிப்பு மற்றும் கூட்டணிகளை மீளாய்வு செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><p>

ட்ரம்ப்பின் கொள்கையின்படி, அமெரிக்காவுக்கு நேரடியாகப் பயனளிக்கும் நடவடிக்கைகளுக்கே அதிக முக்கியத்துவம் வழங்கப்படுவதுடன், சர்வதேச ஒப்பந்தங்கள் மற்றும் பல்தரப்பு கூட்டணிகளில் அமெரிக்காவின் பங்களிப்பும் மறுபரிசீலனை செய்யப்படுகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/088aadd8-dac1-4f23-b5cf-3f85c1e1902e/26-6a58239b620fb.webp' /></p><p>

மேலும், வர்த்தகப் பாதுகாப்புக் கொள்கைகளை வலுப்படுத்துவதன் மூலம் உள்நாட்டு உற்பத்தி, தொழில்துறை மற்றும் வேலைவாய்ப்புகளைப் பாதுகாப்பதே தனது நிர்வாகத்தின் முக்கிய நோக்கமாக இருப்பதாக ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளார்.
</p><p>
அதேவேளை, பாரம்பரிய கூட்டணி நாடுகளுடனான உறவுகளை விட, அமெரிக்காவுக்கு நேரடியாகப் பலன் அளிக்கும் இருதரப்பு ஒப்பந்தங்களுக்கே அவர் முன்னுரிமை வழங்கி வருவதாக அரசியல் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
</p><p>
எனினும், இந்தக் கொள்கை அமெரிக்காவின் உலகளாவிய செல்வாக்கையும், பல தசாப்தங்களாக உருவாக்கப்பட்ட சர்வதேச கூட்டணிகளையும் பாதிக்கக்கூடும் என விமர்சகர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
</p><p>
இதற்கு பதிலளித்துள்ள ஜனாதிபதி ட்ரம்ப், தனது அணுகுமுறை அமெரிக்காவின் இறையாண்மை, பொருளாதார வலிமை மற்றும் தேசிய பாதுகாப்பை மேலும் உறுதிப்படுத்தும் என வாதிட்டுள்ளார்.
</p><p>
ட்ரம்ப்பின் இந்த வெளியுறவுக் கொள்கை, எதிர்காலத்தில் அமெரிக்காவின் சர்வதேச உறவுகள் மற்றும் உலக அரசியல் சூழலில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும் என அரசியல் விமர்சகர்கள் எதிர்பார்க்கின்றனர்.</p>]]></content>
            <updated>2026-07-16T01:22:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் அத்துமீறல் ; மோப்ப நாயுடன் பொலிஸார் விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/woman-sleeping-at-home-molested-police-inves-dog-1784142377"></link>
            <id>https://jvpnews.com/article/woman-sleeping-at-home-molested-police-inves-dog-1784142377</id>
            <summary type="text">களுத்துறை மில்லனிய, ரத்தேகொட பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்று இரவு அத்துமீறி நுழைந்த அடையாளம் தெரியாத நபர், வீட்டின் உரிமையாளரான பெண்ணிடம் அநாகரிகமாக ...</summary>
            <content type="html"><![CDATA[<p>களுத்துறை மில்லனிய, ரத்தேகொட பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்று இரவு அத்துமீறி நுழைந்த அடையாளம் தெரியாத நபர், வீட்டின் உரிமையாளரான பெண்ணிடம் அநாகரிகமாக நடந்துகொண்டுவிட்டு தப்பிச் சென்ற சம்பவம் தொடர்பில் மில்லனிய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.</p><p></p><p>

பொலிஸார் தெரிவிப்பதன்படி, குறித்த பெண் வழக்கம்போல் தனது கணவருடன் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்துள்ளார். மனைவி ஒரு அறையிலும், கணவர் எதிர்புற அறையிலும் உறங்கியிருந்ததாக கூறப்படுகிறது.
</p><p>
இந்த நிலையில், சந்தேகநபர் வீட்டின் ஜன்னல் வழியாக உள்ளே நுழைந்து, பெண் உறங்கிக் கொண்டிருந்த அறைக்குச் சென்று அவரது உடலைத் தொட்டு எழுப்பியதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9d7b6aaf-f199-4db4-ba28-a3bb8cf78b70/26-6a57da2b0d340.webp' /></p><p>திடீரென ஏதோ அசாதாரணம் நிகழ்வதை உணர்ந்த பெண் விழித்தெழுந்து சந்தேகநபரை கண்டு உரக்கக் கூச்சலிட்டுள்ளார். </p><p>இதையடுத்து, சந்தேகநபர் அங்கிருந்து தப்பிச் செல்லும் முன், பெண் அணிந்திருந்த சேலையை இழுத்து எறிந்துவிட்டு தப்பியோடியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
சம்பவம் தொடர்பில் கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் மில்லனிய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன், தடயங்களைப் பின்தொடர்வதற்காக "ஷாகி" என்ற மோப்ப நாயும் சம்பவ இடத்திற்கு அழைக்கப்பட்டு மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p><p>

சந்தேகநபரை அடையாளம் கண்டு கைது செய்வதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-16T01:22:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆசிரியரின் காருக்கு தீ வைக்கப்பட்டதாக குற்றச்சாட்டு ; 8 வயது சிறுவன் தொடர்பில் பொலிஸ் விளக்கம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/police-explain-8-year-old-boy-teacher-car-fire-1784164757"></link>
            <id>https://jvpnews.com/article/police-explain-8-year-old-boy-teacher-car-fire-1784164757</id>
            <summary type="text">குருணாகல் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றின் வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சொகுசு கார் தீப்பற்றிய சம்பவத்திற்கும், அங்கு காணப்பட்ட 8 வயது சிறுவனுக...</summary>
            <content type="html"><![CDATA[<p>குருணாகல் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றின் வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சொகுசு கார் தீப்பற்றிய சம்பவத்திற்கும், அங்கு காணப்பட்ட 8 வயது சிறுவனுக்கும் தொடர்பு இருப்பதாக சமூக வலைத்தளங்களில் பரவி வரும் காணொளி தொடர்பில் இலங்கை பொலிஸார் விளக்கமளித்துள்ளனர்.</p><p>
</p><p></p><p>பொலிஸ் தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், குறித்த சிறுவன் காரை தீயிட்டு எரித்ததாகக் கூறப்படுவதற்கான எந்தவொரு உறுதியான ஆதாரமும் இதுவரை கிடைக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7fa1d100-6328-4531-b741-e8d46fed5264/26-6a5831974e948.webp' /></p><p>
</p><p>
கடந்த ஜூலை 3ஆம் திகதி குருணாகலில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றின் வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுமார் 14 மில்லியன் ரூபா பெறுமதியான சொகுசு கார் ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது.
</p><p>
இந்தச் சம்பவம் தொடர்பில் கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில், குருணாகல் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர். </p><p>இதன்போது, சமூக வலைத்தளங்களில் பரவி வரும் காணொளியில் காணப்படும் சிறுவன், குறித்த பாடசாலையில் கல்வி பயிலும் 8 வயது மாணவன் என்பதும், சம்பவம் இடம்பெற்ற நேரத்தில் அவர் காரின் அருகே நடந்து சென்றதும் விசாரணைகளில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>

எனினும், அந்த சிறுவனே காருக்கு தீ வைத்தார் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் எந்தவொரு நேரடி சாட்சியங்களோ அல்லது தடயவியல் ஆதாரங்களோ இதுவரை கிடைக்கவில்லை என பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.
</p><p>
இந்தச் சம்பவம் தொடர்பில் நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
</p><p>
மேலும், கார் தீப்பற்றியதற்கான உண்மையான காரணத்தை கண்டறியும் நோக்கில், அரசாங்க இரசாயன பகுப்பாய்வாளரின் நிபுணத்துவ பரிசோதனைக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-16T01:19:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[உக்ரைன் துறைமுக நகரங்கள் மீது ரஷியா தாக்குதல் ; 3 பேர் பலி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/russia-attacks-ukrainian-port-cities-3-killed-1784163959"></link>
            <id>https://canadamirror.com/article/russia-attacks-ukrainian-port-cities-3-killed-1784163959</id>
            <summary type="text">உக்ரைன்–ரஷியா போர் இன்று 1,599ஆவது நாளாக நீடித்து வரும் நிலையில், இரு நாடுகளுக்கும் இடையிலான மோதல் தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது.

போர் ஆரம்பமானதி...</summary>
            <content type="html"><![CDATA[<p>உக்ரைன்–ரஷியா போர் இன்று 1,599ஆவது நாளாக நீடித்து வரும் நிலையில், இரு நாடுகளுக்கும் இடையிலான மோதல் தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது.

போர் ஆரம்பமானதிலிருந்து ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளதுடன், உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஆயுதங்கள் உள்ளிட்ட பல்வேறு இராணுவ மற்றும் பொருளாதார உதவிகளை வழங்கி வருகின்றன.
</p><p>
போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முன்னெடுத்த போர் நிறுத்த முயற்சிகள் இதுவரை வெற்றியளிக்காத நிலையில், இரு தரப்பினருக்கும் இடையிலான மோதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f4537ebd-d17c-480b-a950-4d58241d050a/26-6a582e78795f4.webp' /></p><p>இந்த நிலையில், உக்ரைனின் துறைமுக நகரங்களான ஒடிசா மற்றும் மைகொலைவ் பகுதிகளில் அமைந்துள்ள துறைமுக உள்கட்டமைப்புகளை குறிவைத்து ரஷியா ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
</p><p>
இந்த தாக்குதலில் மூவர் உயிரிழந்ததுடன், மேலும் மூவர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
</p><p>
இதனைத் தொடர்ந்து, கருங்கடல் பகுதியில் இயங்கிய ரஷிய கடற்படை கப்பல்களை குறிவைத்து உக்ரைன் பதிலடி தாக்குதல் நடத்தியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p>

இந்நிலையில், இரு நாடுகளுக்கும் இடையிலான மோதல் மேலும் தீவிரமடையும் அபாயம் நிலவுவதாக சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-07-16T01:06:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[நயன்தாரா ஏர்போர்ட்டுக்கு எப்படி வந்திருக்கிறார் பாருங்க.. வைரலாகும் வீடியோ]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/nayanthara-trendy-airport-look-video-goes-viral-1784161793"></link>
            <id>https://cineulagam.com/article/nayanthara-trendy-airport-look-video-goes-viral-1784161793</id>
            <summary type="text">நடிகை நயன்தாரா தற்போது கைவசம் ஏராளமான படங்கள் வைத்து இருக்கிறார்.அவர் ஹிந்தியில் சல்மான் கான் ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

ஏர்போர்ட் வீட...</summary>
            <content type="html"><![CDATA[<p>நடிகை நயன்தாரா தற்போது கைவசம் ஏராளமான படங்கள் வைத்து இருக்கிறார்.</p><p>அவர் ஹிந்தியில் சல்மான் கான் ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வருகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1a6e1785-fc77-4ac9-8617-8b4883c96e41/26-6a582603316cc.webp' /></p><p>
</p><h2>
ஏர்போர்ட் வீடியோ</h2><p>

இந்நிலையில் நயன்தாரா மும்பை ஏர்போர்ட்டில் வந்திறங்கும் லேட்டஸ்ட் வீடியோ வைரல் ஆகி இருக்கிறது.
</p><p>
ட்ரெண்டியான லுக்கில் அவர் எப்படி வந்திருக்கிறார் என வீடியோவில் பாருங்க.

&nbsp;</p><p><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/reel/Da0ybOEIe_H/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/reel/Da0ybOEIe_H/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a><p style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;"><a href="https://www.instagram.com/reel/Da0ybOEIe_H/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by Deepak Yadav (@deepakyadav___)</a></p></div></blockquote> <script async src="//www.instagram.com/embed.js"></script></p>]]></content>
            <updated>2026-07-16T01:00:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Manchu</name>
            </author>
            <title type="text"><![CDATA[Peanuts: வேர்க்கடலை சாப்பிடுவதால் கிடைக்கும் 7 சூப்பர் நன்மைகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/what-benefits-you-get-by-eating-peanut-regularly-1784134477"></link>
            <id>https://manithan.com/article/what-benefits-you-get-by-eating-peanut-regularly-1784134477</id>
            <summary type="text">தினமும் வேர்க்கடலை சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் 7 முக்கிய நன்மைகளைப் பற்றி இந்த வெப் ஸ்டோரியில் தெரிந்துகொள்ளலாம்.ஒரு சிறந்த ஸ்நாக்ஸ்ஊட்டச்சத்துக...</summary>
            <content type="html"><![CDATA[<p>தினமும் வேர்க்கடலை சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் 7 முக்கிய நன்மைகளைப் பற்றி இந்த வெப் ஸ்டோரியில் தெரிந்துகொள்ளலாம்.</p><h2>ஒரு சிறந்த ஸ்நாக்ஸ்</h2><p>ஊட்டச்சத்துக்கள் நிறைந்த வேர்க்கடலை ஒரு சிறந்த மாலை நேர சிற்றுண்டி. இது பல நோய்களை நம்மிடமிருந்து தள்ளி வைக்க உதவுகிறது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3be8b655-b2b1-481b-b695-8eb353051592/26-6a57bfc564e1e.webp' /></p><h2>கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்கும்
</h2><p>வேர்க்கடலை, உடலில் உள்ள எல்.டி.எல் (LDL) கொலஸ்ட்ரால் மற்றும் ட்ரைகிளிசரைடுகளைக் குறைக்க உதவுகிறது
</p><h2>&nbsp;சருமத்தைப் பாதுகாக்கும்
</h2><p>வேர்க்கடலை சரும ஆரோக்கியத்திற்குப் பல நன்மைகளைத் தருகிறது. இது சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருக்கவும், கொலாஜன் உற்பத்தியைத் தூண்டவும், முகப்பருவுக்கு எதிராகப் போராடவும் உதவுகிறது&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a2cb4575-d2d8-46b7-b342-a0d6b05184c6/26-6a57bfc6c231a.webp' /></p><h2>மூளையைப் பாதுகாக்கும்
</h2><p>வேர்க்கடலையில் உள்ள நியாசின் மற்றும் ஃபோலேட் ஆகியவை மூளையின் செயல்பாடு மற்றும் ஆரோக்கியத்திற்கு உதவுகின்றன. நியாசின் நரம்புகளின் செயல்பாட்டை ஆரோக்கியமாகப் பராமரிக்க உதவுகிறது.
</p><h2>ரத்த சர்க்கரையைக் கட்டுப்படுத்தும்
</h2><p>வேர்க்கடலையில் உள்ள புரோட்டீன், நார்ச்சத்து மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் ரத்த சர்க்கரை அளவை சீராக வைத்திருக்க உதவுகின்றன. இது சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு நல்ல ஸ்நாக்ஸ் ஆகும்&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/41906e4f-cd40-4a80-b6fb-5a2db43e4ed8/26-6a57bfc619b55.webp' /></p><h2>ஆக்ஸிடேட்டிவ் பாதிப்பிலிருந்து பாதுகாப்பு"
</h2><p>வேர்க்கடலையில் பாலிபினால்கள், வைட்டமின் ஈ போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இவை செல்களை ஆக்ஸிடேட்டிவ் பாதிப்பு மற்றும் வீக்கத்திலிருந்து பாதுகாக்க உதவுகின்றன.</p><h2>
எப்படிச் சாப்பிடலாம்?
</h2><p>வேர்க்கடலையைப் பச்சையாகவோ, சாலட்களில் சேர்த்தோ, ஸ்மூத்திகளில் கலந்தோ அல்லது வேகவைத்தோ சாப்பிடுவது சிறந்தது என நிபுணர்கள் கூறுகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9e3b74dd-8cf0-48e9-8ad4-5caccfb1ac05/26-6a57bfc775dbb.webp' /></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><i>&nbsp;சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன்<a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள் <a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"><b>FOLLOW NOW</b></a>&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;&nbsp;<br></i></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-16T01:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆசிரியரின் காரிற்கு சிறுவன் தீ வைத்ததாக பரவும் தகவல்...! காவல்துறையின் அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/no-proof-8-year-old-burnt-car-in-kurunegala-1784163313"></link>
            <id>https://ibctamil.com/article/no-proof-8-year-old-burnt-car-in-kurunegala-1784163313</id>
            <summary type="text">குருணாகல் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கார் தீப்பற்றிய சம்பவம் குறித்து இலங்கை காவல்துறையினர் விளக்கமளித்துள்ளனர்.

குறித்த பாடசாலையின் முன் கார் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>குருணாகல் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கார் தீப்பற்றிய சம்பவம் குறித்து இலங்கை காவல்துறையினர் விளக்கமளித்துள்ளனர்.
</p><p>
குறித்த பாடசாலையின் முன் கார் ஒன்று தீப்பற்றிய சம்பவத்திற்கும் அங்கிருந்த எட்டு வயது சிறுவனுக்கும் தொடர்பிருப்பதாகச் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வந்தது.

இந்த நிலையில், அறிக்கையொன்றை வெளியிட்டு இது குறித்துக் காவல்துறையினர் விளக்கமளித்துள்ளனர்.
</p><p>
குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, குறித்த சிறுவன் தான் காரைத் தீயிட்டமைக்கான எந்தவொரு ஆதாரமும் இதுவரை கிடைக்கவில்லை எனக் காவல்துறையினர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர்.</p><p>
</p><p></p><h2>பிரபல பாடசாலை&nbsp;</h2><p>கடந்த ஜூலை மூன்றாம் திகதி குருணாகலில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றின் வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுமார் 14 மில்லியன் ரூபா பெறுமதியான சொகுசு கார் ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/23b693c6-ffbf-4c76-87b7-9fda9e63b909/26-6a582bf37f612.webp' /></p><p>

இந்தச் சம்பவத்திற்கு அங்கு நின்ற எட்டு வயது சிறுவனே காரணம் என முறைப்பாடு அளிக்கப்பட்டதை அடுத்துக் குருணாகல் காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.</p><p>

சமூக வலைத்தளங்களில் பரவி வரும் காணொளியில் இருக்கும் சிறுவன், அதே பாடசாலையில் கல்வி பயிலும் எட்டு வயது மாணவன் என்பதும், சம்பவம் நடந்த நேரத்தில் சிறுவன் அந்தக் காரின் அருகே நடந்து சென்றதும் காவல்துறை விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.</p><p></p><h2>மேலதிக விசாரணை</h2><p>

எனினும், அந்த சிறுவன் தான் காரைத் தீயிட்டுக் கொளுத்தினார் என்பதற்கான எந்தவொரு நேரில் கண்ட சாட்சியங்களோ அல்லது தடயவியல் ஆதாரங்களோ இதுவரை கிடைக்கப்பெறவில்லை எனக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p>
</p><p></p><p>இந்தச் சம்பவம் குறித்து நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>

அத்துடன், கார் தீப்பற்றியதற்கான உண்மையான காரணத்தைக் கண்டறியும் நோக்கில், அரசாங்க இரசாயனப் பகுப்பாய்வாளரின் நிபுணத்துவ பரிசோதனைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-16T00:55:44+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெனிசுலாவில் நிலநடுக்கம் ஏற்படுத்திய பேரழிவு ; உயிரிழப்பு 4,734 ஆக உயர்வு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/earthquake-disaster-venezuela-death-rises-4-734-1784163113"></link>
            <id>https://canadamirror.com/article/earthquake-disaster-venezuela-death-rises-4-734-1784163113</id>
            <summary type="text">தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் கடந்த மாதம் 24ஆம் திகதி அடுத்தடுத்து ஏற்பட்ட இரு சக்திவாய்ந்த நிலநடுக்கங்களால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4,734 ஆக உயர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் கடந்த மாதம் 24ஆம் திகதி அடுத்தடுத்து ஏற்பட்ட இரு சக்திவாய்ந்த நிலநடுக்கங்களால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4,734 ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
</p><p>
ரிக்டர் அளவுகோலில் 7.2 மற்றும் 7.5 ஆக பதிவான இந்த நிலநடுக்கங்கள் நாட்டின் பல பகுதிகளில் பாரிய சேதத்தை ஏற்படுத்தியுள்ளன.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4dfd24a0-f2b8-4ce3-9b56-b4f427cee144/26-6a582b2aa1ce0.webp' /></p><p>பல கட்டிடங்கள் இடிந்து விழுந்ததுடன், ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
</p><p>
அதிகாரப்பூர்வ தகவல்களின்படி, இந்த அனர்த்தத்தில் இதுவரை 4,734 பேர் உயிரிழந்துள்ளதுடன், 16,740 பேர் காயமடைந்துள்ளனர்.
</p><p>
மேலும், நிலநடுக்கத்தால் 17 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தங்களது வீடுகளை இழந்து இடம்பெயர்ந்துள்ளதாக வெனிசுலா அரசு தெரிவித்துள்ளது.
</p><p>
நிலநடுக்கம் ஏற்பட்டுத் மூன்று வாரங்கள் கடந்துள்ள நிலையிலும், இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களைத் தேடும் பணிகளும், நிவாரண மற்றும் மீட்புப் பணிகளும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
</p><p>
பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசர நிவாரண உதவிகளை வழங்கும் நடவடிக்கைகளும் அரசாங்கம் மற்றும் மீட்பு அமைப்புகளால் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.</p>]]></content>
            <updated>2026-07-16T00:52:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[நடிகை துஷாரா விஜயன் லேட்டஸ்ட் கிளாமர் போட்டோஷூட்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/dushara-vijayan-glamour-look-at-art-gallery-1784162663"></link>
            <id>https://cineulagam.com/article/dushara-vijayan-glamour-look-at-art-gallery-1784162663</id>
            <summary type="text">துஷாரா விஜயன் தமிழில் வேகமாக வளர்ந்து வரும் ஹீரோயின்களில் ஒருவர். அவர் மேலும் மலையாளத்திலும் நடிக்க தொடங்கி இருக்கிறார்.

துஷாரா தற்போது கிளாமர் ஆன ...</summary>
            <content type="html"><![CDATA[<p>துஷாரா விஜயன் தமிழில் வேகமாக வளர்ந்து வரும் ஹீரோயின்களில் ஒருவர். அவர் மேலும் மலையாளத்திலும் நடிக்க தொடங்கி இருக்கிறார்.
</p><p>
துஷாரா தற்போது கிளாமர் ஆன லுக்கில் ஆர்ட் கேலரியை சுற்றிப்பார்க்க சென்று இருக்கிறார்.
</p><p>
அங்கே அவர் எடுத்த புகைப்படங்களை பாருங்க.</p>]]></content>
            <updated>2026-07-16T00:45:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹோர்முஸ் நீரிணை பதற்றம் ; அமெரிக்கா–ஈரான் மோதல் தீவிரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/strait-hormuz-tension-us-iran-conflict-intensifies-1784162489"></link>
            <id>https://canadamirror.com/article/strait-hormuz-tension-us-iran-conflict-intensifies-1784162489</id>
            <summary type="text">அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான பதற்றம் மேலும் தீவிரமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்கா, ஈரான் துறைமுகங்களுக்கு எதிராக கடல்வழ...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான பதற்றம் மேலும் தீவிரமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. </p><p>அமெரிக்கா, ஈரான் துறைமுகங்களுக்கு எதிராக கடல்வழி முற்றுகையை மீண்டும் அமல்படுத்தியுள்ளதுடன், அந்நாட்டின் பல்வேறு இராணுவ இலக்குகள் மீது வான்வழித் தாக்குதல்களையும் தீவிரப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p><p>
ஹோர்முஸ் நீரிணையில் ஈரான் அங்கீகரிக்காத கடல் வழித்தடத்தில் வணிகக் கப்பல்கள் பயணித்ததாகக் கூறப்படும் சம்பவத்தைத் தொடர்ந்து, இருதரப்புக்கும் இடையில் நிலவிய இடைக்கால அமைதி ஒப்பந்தம் முறிவடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/537e30e2-bf38-405b-99f8-c9d28986e8e6/26-6a5828bb651e6.webp' /></p><p>இந்த நிலையில், ஈரானின் சிஸ்தான்–பலூசிஸ்தான் மாகாணத்தில் அமைந்துள்ள 388ஆவது தரைப்படைப் பிரிவின் இராணுவ முகாம் மீது அமெரிக்கா ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதாகவும், இதில் ஏழு இராணுவ வீரர்கள் உயிரிழந்ததுடன் பலர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
அத்துடன், ஹோர்முஸ் நீரிணையில் வியூக ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த கிரேட்டர் துன்ப் தீவில் அமைந்திருந்த பாதுகாப்பு மற்றும் ஏவுகணைத் தளங்களும் அமெரிக்க வான்வழித் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
</p><p>
அமெரிக்காவின் சமீபத்திய தாக்குதல்களில் மொத்தம் 35 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும், அவர்களில் 72 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
</p><p>
இதனிடையே, ஈரான் துறைமுகங்களுக்கு எதிராக அறிவிக்கப்பட்ட கடல்வழி முற்றுகைக்குப் பின்னர், அமெரிக்காவின் எச்சரிக்கையை மீறி பயணிக்க முயன்ற இரண்டு வணிகக் கப்பல்கள் தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது. </p><p>சர்வதேச கடல்சார் விதிமுறைகள் பின்பற்றப்படுவதை உறுதிப்படுத்தும் வகையில் நடவடிக்கைகள் தொடரும் என்றும் அது குறிப்பிட்டுள்ளது.
</p><p>
இதற்கு பதிலடியாக, பஹ்ரைன், குவைத் மற்றும் ஜோர்டான் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்களை நோக்கி ஈரான் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை ஏவி தாக்குதல் நடத்தியதாகவும், இதனால் அந்நாடுகளில் பாதுகாப்பு எச்சரிக்கை ஒலிகள் எழுப்பப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
</p><p>
மேலும், அமெரிக்காவின் நடவடிக்கைகள் தொடருமானால், வளைகுடா நாடுகளின் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு ஏற்றுமதியை முற்றிலுமாக முடக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஈரானின் புரட்சிகர காவல் படை (IRGC) எச்சரித்துள்ளது.
</p><p>
இந்தப் பதற்றமான சூழ்நிலையில் கருத்து வெளியிட்டுள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரான் உடனடியாக பேச்சுவார்த்தைக்கு வரத் தவறினால் தாக்குதல்கள் மேலும் தீவிரப்படுத்தப்படும் என்றும், அடுத்த கட்டமாக முக்கிய உட்கட்டமைப்புகள் இலக்காகக் கொள்ளப்படலாம் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.</p>]]></content>
            <updated>2026-07-16T00:42:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டில் இடியுடன் கூடிய கனமழை...! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/department-of-meteorology-weather-forecast-1784162044"></link>
            <id>https://ibctamil.com/article/department-of-meteorology-weather-forecast-1784162044</id>
            <summary type="text">சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சிறிதளவு மழை பெய்யக்கூடும்.வளிமண்டலவியல் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சிறிதளவு மழை பெய்யக்கூடும்.</p><p>வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (16-07-2026) விடுத்துள்ள அறிக்கையில் மேற்படி விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>நாட்டின் ஏனைய பிராந்தியங்களில் வறட்சியான வானிலை நிலவக்கூடும்.
 


</p><p> 
</p><p></p><h2>பனிமூட்டமான நிலை</h2><p>வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் மாத்தளை, ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் மணித்தியாலத்திற்கு சுமார் 40 - 50 km வேகத்தில் அடிக்கடி பலத்த காற்று வீசக் கூடும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b0e6abbd-403a-48c6-8574-c52305f62fd4/26-6a5826fd8ceea.webp' /></p><p>இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-16T00:34:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[அகமதாபாத் ஏர் இந்தியா வானூர்தி விபத்து ; விசாரணையின் தற்போதைய நிலை என்ன?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/ahmedabad-air-india-plane-crash-status-investigat-1784161849"></link>
            <id>https://jvpnews.com/article/ahmedabad-air-india-plane-crash-status-investigat-1784161849</id>
            <summary type="text">அஹமதாபாத்தில் இடம்பெற்ற ஏர் இந்தியா வானூர்தி விபத்து தொடர்பான விசாரணை அறிக்கை எதிர்வரும் ஒக்டோபர் மாதத்தில் தாக்கல் செய்யப்படும் என இந்திய மத்திய அரசு...</summary>
            <content type="html"><![CDATA[<p>அஹமதாபாத்தில் இடம்பெற்ற ஏர் இந்தியா வானூர்தி விபத்து தொடர்பான விசாரணை அறிக்கை எதிர்வரும் ஒக்டோபர் மாதத்தில் தாக்கல் செய்யப்படும் என இந்திய மத்திய அரசு உறுதியளித்துள்ளது.</p><p>
</p><p></p><p>இது தொடர்பாக இந்திய உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் வழங்கியுள்ளதுடன், இன்னும் ஆறு வாரங்களுக்குள் விபத்து தொடர்பான விசாரணை முழுமையாக நிறைவடையும் என்றும் தெரிவித்துள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/98b9d999-3de6-48d1-80da-bbff2aace11c/26-6a58263adeb6e.webp' /></p><p>விசாரணைப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகவும், அதன் பின்னர் தயாரிக்கப்படும் விரிவான அறிக்கை ஒக்டோபர் மாதத்தில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றும் மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது.</p><p>
அஹமதாபாத் ஏர் இந்தியா வானூர்தி விபத்துக்கான காரணங்களைக் கண்டறியும் நோக்கில் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-16T00:30:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆசிரியரின் காரிற்கு தீவைத்த 8 வயது சிறுவன்.. பொலிஸ் விசாரணையில் வெளியான தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/kurunegala-child-car-virul-video-police-report-1784160616"></link>
            <id>https://tamilwin.com/article/kurunegala-child-car-virul-video-police-report-1784160616</id>
            <summary type="text">குருணாகல் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கார் தீப்பற்றிய சம்பவத்திற்கும், அங்கிருந்த 8 வயது சிறுவனுக்கும் தொடர்பிருப்பதாக சமூக வலைத்தளங்களில் பரவி வரு...</summary>
            <content type="html"><![CDATA[<p>குருணாகல் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கார் தீப்பற்றிய சம்பவத்திற்கும், அங்கிருந்த 8 வயது சிறுவனுக்கும் தொடர்பிருப்பதாக சமூக வலைத்தளங்களில் பரவி வரும் காணொளி குறித்து இலங்கை பொலிஸார் விளக்கமளித்துள்ளனர்.</p><p> பொலிஸ் தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், குறித்த சிறுவன் காரை தீயிட்டமைக்கான எந்தவொரு ஆதாரமும் இதுவரை கிடைக்கவில்லை என பொலிஸார் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர்.</p><p>
கடந்த ஜூலை 3ஆம் திகதி குருணாகலில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றின் வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுமார் 14 மில்லியன் ரூபா பெறுமதியான சொகுசு கார் ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது.</p><p></p><h2>உரிய ஆதாரங்கள்..&nbsp;</h2><p> இந்த சம்பவத்திற்கு அங்கு நின்ற 8 வயது சிறுவனே காரணம் என முறைப்பாடு அளிக்கப்பட்டதை அடுத்து, குருணாகல் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4d497f69-fb16-4547-a994-191df4aedd2b/26-6a5822e34ff0b.webp' /></p><p>

சமூக வலைத்தளங்களில் பரவி வரும் காணொளியில் இருக்கும் சிறுவன், அதே பாடசாலையில் கல்வி பயிலும் 8 வயது மாணவன் என்பதும், சம்பவம் நடந்த நேரத்தில் சிறுவன் அந்த காரின் அருகே நடந்து சென்றதும் பொலிஸ் விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.</p><p>

எனினும், அந்த சிறுவன் தான் காரைத் தீயிட்டுக் கொளுத்தினார் என்பதற்கான எந்தவொரு நேரில் கண்ட சாட்சியங்களோ அல்லது தடயவியல் ஆதாரங்களோ இதுவரை கிடைக்கப்பெறவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
இந்தச் சம்பவம் குறித்து நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p> அத்துடன், கார் தீப்பற்றியதற்கான உண்மையான காரணத்தைக் கண்டறியும் நோக்கில், அரசாங்க இரசாயன பகுப்பாய்வாளரின் நிபுணத்துவ பரிசோதனைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-16T00:25:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[மத்திய கிழக்கிலிருந்து அனைத்து எரிசக்தி ஏற்றுமதிகளும் முடக்கப்படும்: அச்சுறுத்தும் ஈரான்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/halt-middle-east-energy-exports-1784161526"></link>
            <id>https://news.lankasri.com/article/halt-middle-east-energy-exports-1784161526</id>
            <summary type="text">துறைமுகங்கள் மற்றும் கப்பல்கள் மீதான முற்றுகையை அமெரிக்கா மீண்டும் அமுல்படுத்தியதைத் தொடர்ந்து, மத்திய கிழக்கிலிருந்து அனைத்து எரிசக்தி ஏற்றுமதிகளையும...</summary>
            <content type="html"><![CDATA[<p>துறைமுகங்கள் மற்றும் கப்பல்கள் மீதான முற்றுகையை அமெரிக்கா மீண்டும் அமுல்படுத்தியதைத் தொடர்ந்து, மத்திய கிழக்கிலிருந்து அனைத்து எரிசக்தி ஏற்றுமதிகளையும் நிறுத்திவிடுவதாக ஈரான் மிரட்டல் விடுத்துள்ளது.</p><h2>அணுசக்தித் திட்டத்துடன்</h2><p>
</p><p>இரு நாடுகளும் ஐந்தாவது நாளாகப் பரஸ்பரம் தாக்குதல் நடத்திக்கொண்ட நிலையில், அடுத்த வாரம் அமெரிக்கத் தாக்குதல்களை மேலும் விரிவுபடுத்துவது குறித்து டொனால்ட் ட்ரம்ப் பரிசீலித்து வந்த வேளையில்,</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e92bb75c-6b4e-4532-b9c5-9e049e60898f/26-6a5825eb3c623.webp' /></p><p> </p><p>ஈரானின் அணுசக்தித் திட்டத்துடன் தொடர்புடைய ஒரு தளம் மீது தாக்குதல் நடத்தப்போவதாகவும் அவர் அச்சுறுத்தியுள்ளார். </p><p>அமெரிக்க இராணுவத்தின் தகவலின்படி, புதன்கிழமை அதிகாலையில் அமெரிக்காவின் முற்றுகை நடவடிக்கை நடைமுறைக்கு வந்தது; அதனைத் தொடர்ந்து, ஈரானின் கடற்கரை பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் ஏவுகணைத் தளங்கள் மீது 90 நிமிடங்கள் நீடித்த தாக்குதல்கள் நடத்தப்பட்டன. </p><p>முந்தைய நாள் நடத்தப்பட்ட அமெரிக்கத் தாக்குதல்களில் குறைந்தது ஏழு ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாகவும், 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் ஈரானிய அதிகாரிகள் தெரிவித்தனர்; இரு நாடுகளுக்கும் இடையே சமீபகாலமாக நிகழ்ந்த வன்முறைச் சம்பவங்களிலேயே இதுதான் அதிகபட்ச உயிரிழப்பு எண்ணிக்கையாகும்.</p><p></p><p> </p><p>ஈரானிய அரசாங்கச் செய்தித்தொடர்பாளர் ஃபாத்திமா மொஹஜெரானியின் கூற்றுப்படி, சமீபத்திய நாட்களில் தெற்கு ஈரானில் நடத்தப்பட்ட அமெரிக்கத் தாக்குதல்களில் குறைந்தது 30 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். </p><p>ஹார்முஸ் நீரிணையைத் திறக்கச் செய்வதற்காக ஈரான் மீதான தாக்குதல்களை விரிவுபடுத்தக்கூடும் என்று ட்ரம்ப் கூறியிருந்த நிலையில் இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன; ஈரானின் அணுசக்தித் திட்டத்துடன் தொடர்புடைய, பலத்த பாதுகாப்புடன் கூடிய நிலத்தடி மையமான "பிக்காக்ஸ் மலை" (Pickaxe Mountain) மீது தாக்குதல் நடத்தப்போவதாகவும் அமெரிக்க ஜனாதிபதி எச்சரித்திருந்தார்.</p><h2>தொடர்ச்சியான பதிலடி</h2><p> </p><p>அமெரிக்காவின் தாக்குதல்கள் மற்றும் மீண்டும் விதிக்கப்பட்ட முற்றுகை காரணமாக, ஈரான் ஹார்முஸ் நீரிணையை மூடியதுடன், அப்பகுதியில் அமெரிக்கத் தளங்களைக் கொண்ட நாடுகள் மீது தொடர்ச்சியான பதிலடி வான்வழித் தாக்குதல்களையும் நடத்தியது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5e11f034-d73b-42ac-8bd5-e7ac8cfa55ed/26-6a5825ebecbdf.webp' /></p><p> </p><p>இதனிடையே, அமெரிக்க இராணுவத்தின் பாதுகாப்பில் அந்த நீரிணையைக் கடக்கவும் கப்பல் நிறுவனங்கள் மறுத்துள்ளன. கடந்த வாரம் அந்த நீரிணையில் ஏழு வணிகக் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதாகவும், இதில் சுமார் பன்னிரண்டு கப்பல் பணியாளர்கள் கொல்லப்பட்டோ, காணாமலோ அல்லது காயமடைந்தோ உள்ளதாகவும் அமெரிக்கா கூறியது. </p><p>அமெரிக்கப் படைகளைத் தங்கள் மண்ணில் கொண்டுள்ள பஹ்ரைன், ஜோர்டான் மற்றும் குவைத் ஆகிய நாடுகள் மீதும் ஈரான் வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-16T00:24:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[திருகோணமலையில் பிரதான பாதாள உலகக் குழுத் தலைவர் உட்பட மூவர் கைது!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/underworld-leader-kempa-and-two-others-arrested-1784161343"></link>
            <id>https://ibctamil.com/article/underworld-leader-kempa-and-two-others-arrested-1784161343</id>
            <summary type="text">திருகோணமலையில் பிரதான பாதாள உலகக் குழுத் தலைவரான கெம்பா உட்பட மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

உப்புவெளி பகுதியில் ஆபத்தான வாள்கள் மற்...</summary>
            <content type="html"><![CDATA[<p>திருகோணமலையில் பிரதான பாதாள உலகக் குழுத் தலைவரான கெம்பா உட்பட மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>

உப்புவெளி பகுதியில் ஆபத்தான வாள்கள் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
</p><p>
விசேட காவல்துறை அதிரடிப்படையினர் இந்தக்கைது நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.</p><p></p><h2>போதைப்பொருள்&nbsp;</h2><p>
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், உப்புவெளி மின்சார நிலைய வீதியில் நேற்றுமுன்தினம் (14.07.2026) மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின்போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4f84b39c-ed16-404c-9c4b-6b6c66a40246/26-6a582441ed512.webp' /></p><p>கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடமிருந்து ஆபத்தான ஆயுதங்களும் கணிசமான அளவு போதைப்பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
</p><p>
இதன்போது, முக்கிய சந்தேகநபரிடமிருந்து 16 கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் 2 கூர்மையான வாள்களும், இரண்டாவது சந்தேகநபரிடமிருந்து 8 கிராம் ஐஸ் போதைப்பொருளும், மூன்றாவது சந்தேகநபரிடமிருந்து 7 கிராம் ஐஸ் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளன.</p><p>
</p><p></p><h2>சட்டவிரோத செயல்கள்</h2><p>கைது செய்யப்பட்ட குழுவினர் திருகோணமலை பகுதியில் பல்வேறு சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
</p><p>
இந்தக் குழுவினருக்கு எதிராக ஏற்கனவே இரண்டு கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4cd231bf-a215-4909-956c-4ed04ee5ea40/26-6a5824414796e.webp' /></p><p>

அத்துடன், பொதுமக்களை அச்சுறுத்திப் பணம் பறித்தமை மற்றும் போதைப்பொருள் கடத்தல் தொடர்பான பல வழக்குகள் திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p><p>

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மூவரும் அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட வாள்கள் மற்றும் போதைப்பொருட்களுடன் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக உப்புவெளி காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-16T00:23:57+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kanthan</name>
            </author>
            <title type="text"><![CDATA[கோட்டாபய ராஜபக்ச சிக்கப்போகும் மாத்தளை மனிதப் புதைக்குழி விவகாரம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/the-matale-mass-grave-issue-gotabaya-rajapaksa-1784160924"></link>
            <id>https://tamilwin.com/article/the-matale-mass-grave-issue-gotabaya-rajapaksa-1784160924</id>
            <summary type="text">&amp;nbsp;மாத்தளை மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைக்குழி சம்பவம் நடந்த காலப்பகுதியில் அதாவது 1988 மே முதலாம் திகதி முதல் 1990 ஜனவரி வரை மாத்தளை ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;மாத்தளை மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைக்குழி சம்பவம் நடந்த காலப்பகுதியில் அதாவது 1988 மே முதலாம் திகதி முதல் 1990 ஜனவரி வரை மாத்தளை மாவட்ட இராணுவ ஒருங்கிணைப்பு அதிகாரியாகக் கடமையாற்றியவர் லெப்டினன்ட் கேர்ணல் கோட்டாபய ராஜபக்ச.</p><p>இவர் கஜபா படையணியின் முதலாவது படைப்பிரிவின் கட்டளை அதிகாரியாகக் கடமையாற்றியுள்ளார்.
அந்த காலத்தில் பாதுகாப்பு சம்பந்தமான அனைத்து பொறுப்புக்களும் இராணுவ ஒருங்கிணைப்பு அதிகாரிக்கே வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.</p><p>இந்த மனித புதைக்குழி கண்டுபிடிக்கப்பட்ட இடத்தில் தான் அன்று இராணுவ முகாம் இருந்துள்ளதாக நீதிமன்றத்திற்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இந்த சம்பவத்துடன் கோட்டாபய ராஜபக்ச சம்பந்தப்பட்டுள்ளதாக சந்தேகம் வலுத்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இது தொடர்பில் ஜனாதிபதி அநுர குமாரதிசாநாயக்க அன்று முன்னிலையில் செயற்பட்டவராவார்.
</p><h2>
</h2><p></p><h2>2012 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட புதைக்குழி</h2><p>2012 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மாத்தளை மாவட்டத்தில் (Bio Gas) நிலையம் ஒன்றை அமைப்பதற்காக நிலத்தை தோண்டியபோதே இந்த மனித புதைக்குழி கண்டுபிடிக்கப்பட்டது. </p><p>அதன் பின்னர் பேராசிரியர் ராஜ் சோமதேவ மற்றும் சட்ட வைத்திய அதிகாரி டாக்டர் அஜித் ஜயசேன ஆகியோர் விசாரணை நடத்தி ஒரு சிறப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டனர். </p><p>
அதன் பின்னர் அன்றைய ராஜபக்ச அரசாங்கம் இதுகுறித்து ஒரு ஆணைக்குழுவை நியமித்தது. அந்த ஆணைக்குழுவின் அறிக்கையில், இந்த எச்சங்கள் 1950-க்கு முந்தியவை என்று கூறப்பட்டது. </p><p>ஆனால் பேராசிரியர் ராஜ் சோமதேவவும் வைத்தியர் அஜித் ஜயசேனவும் தெளிவாக, இவை 1986 முதல் 1990 வரையிலான காலப்பகுதியில் நிகழ்ந்த கொலைகளுடன் தொடர்புடையவை எனக் குறிப்பிட்டனர். </p><p>
இந்த உடல்களில் பலவற்றில் சித்திரவதைக்கான தெளிவான அடையாளங்கள் காணப்பட்டதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். உடலின் பல பகுதிகளில் கூர்மையான பொருட்களால் குத்தப்பட்ட அடையாளங்கள் இருந்தன. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ad2877c7-2015-47e4-830c-e0c9862749f0/26-6a58229f7ab11.webp' /></p><p>கழுத்தில் கயிறு போடப்பட்டதைக் காட்டும் தடயங்களும் இருந்தன. பல்வேறு வகையான சித்திரவதைகள் செய்யப்பட்டதற்கான தெளிவான சான்றுகள் காணப்பட்டன.
</p><p>இந்த விவகாரம் குறித்து இன்று நீதிமன்றம் ஒரு உத்தரவை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் கமால் குணரத்ன மற்றும் ஷவேந்திர சில்வா போன்ற இராணுவ அதிகாரிகளும் சில காலங்களில் அந்தப் பகுதிகளை பொறுப்பேற்றிருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் இந்த விவகாரம் மிகவும் சர்ச்சைக்குரிய ஒன்றாக மாறியுள்ளது.</p><p>
1988–89 காலப்பகுதியில் அன்றைய ஐக்கிய தேசியக் கட்சி (UNP) அரசாங்கம் நாடு முழுவதும் உத்தியோகப்பூர்வமாக அல்லது உத்தியோகப்பூர்வமற்ற வகையில் கொலைக் குழுக்களை பயன்படுத்தியதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. </p><p>ஆயிரக்கணக்கான இளைஞர்கள் கொல்லப்பட்டதாகவும், அவர்களின் உடல்கள் ஆறுகள், ஏரிகள் போன்ற இடங்களில் மறைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. </p><p>ஆனால் காலப்போக்கில் சில ஆதாரங்கள் மீண்டும் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. மாத்தளை கூட்டுப் புதைகுழி அவற்றில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
</p><p>
இந்நிலையில், காணாமல் போனவர்களின் உறவினர்கள் பல ஆண்டுகளாக நீதிக்காக மாத்தளை நீதிமன்றத்திற்கும் பல்வேறு அதிகாரிகளிடமும் முறையிட்டு வருகின்றனர். இருப்பினும் இதுவரை அவர்களுக்கு நீதி கிடைக்கவில்லை.</p><h2>
கிடைக்காத நீதி</h2><p>அண்மையில் சட்டத்தரணி ஹிமாலி குலரத்ன, மாத்தளை மனித புதைகுழி தொடர்பான வழக்கில் நீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்தார். </p><p>அந்த மனுவில், சுமார் 155 எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ள நிலையில், அது தொடர்பான விசாரணைகளை மீண்டும் ஆரம்பிக்க குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு (CID) உத்தரவிட வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.
மேலும், மீட்கப்பட்ட எச்சங்களுக்கு DNA பரிசோதனை நடத்தவும், </p><p>இந்த வழக்கில் மேலதிக விசாரணைகளை முன்னெடுக்க தேவையான உத்தரவுகளை வழங்கவும் அவர் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6eedb4ef-b575-435e-aef1-a3beec41923c/26-6a58229ec00ed.webp' /></p><p>இந்த மனுவை பரிசீலித்த மாத்தளை நீதிவான், இது நீண்டகாலமாக நிலுவையில் உள்ள வழக்கு என்றும், பல விடயங்களை ஆய்வு செய்ய வேண்டியிருப்பதால் உடனடியாக உத்தரவு வழங்க முடியாது என்றும் தெரிவித்தார். </p><p>இதற்காக மேலதிக விசாரணைகளுக்கு பின்னர் ஜூலை 16 அன்று தீர்ப்பு வழங்கப்படும் என நீதிமன்றம் அறிவித்தது.
அதனுடன் இந்த விவகாரம் மீண்டும் பொதுமக்களின் கவனத்திற்கு வந்துள்ளது. </p><p>அறிக்கைகளின்படி, அந்த கூட்டுப் புதைகுழியில் இருந்து மொத்தம் 154 எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன.</p><p></p><p></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-16T00:17:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிரக மாற்றத்தால் கூடுதல் நன்மைகளை பெற போகும் ராசிக்காரர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/zodiac-sign-that-will-benefit-planetary-changes-1784160723"></link>
            <id>https://jvpnews.com/article/zodiac-sign-that-will-benefit-planetary-changes-1784160723</id>
            <summary type="text">ஜோதிடத்தில் கிரகங்கள் தொடர்ந்து தங்களின் ராசி மற்றும் நட்சத்திரத்தை மாற்றுகின்றன. இந்த கிரக மாற்றங்கள் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தாக்கத்...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜோதிடத்தில் கிரகங்கள் தொடர்ந்து தங்களின் ராசி மற்றும் நட்சத்திரத்தை மாற்றுகின்றன. இந்த கிரக மாற்றங்கள் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.</p><p>ஜோதிட சாஸ்திரத்தின்படி, இந்த சூரியப் பெயர்ச்சி வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். இருப்பினும், சில ராசிக்காரர்கள் இந்த கிரக மாற்றத்தால் கூடுதல் நன்மைகளை அனுவிக்கப்போகிறார்கள். அவர்கள் எந்தெந்த ராசிக்காரர்கள் யார்யார் என பார்ப்போம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/18cf70b9-9c00-47cc-ab0a-4e257a9eae74/26-6a5821d4e0450.webp' /></p><h4>மேஷம்</h4><p>
மேஷ ராசிக்காரர்கள் சூரியனின் இந்த ராசி மாற்றத்தால் மகத்தான நன்மைகளை அடையலாம். இந்த காலகட்டத்தில் அவர்கள் எதிர்பார்த்ததை விட சிறந்த வருமானத்தை ஈட்ட முடியும். வியாபாரிகள் இந்த காலகட்டத்தில் சிறப்பான வாய்ப்புகளைப் பெறலாம். மற்ற துறைகளில் வேலை செய்பவர்களும் நல்ல சம்பளத்துடன் வேலை பெறலாம். அதேபோல, சுயமாக சம்பாதிக்கும் பல வழிகள் அவர்களுக்கு முன்னால்வரும்.</p><h4>கடகம்
</h4><p>கடக ராசிக்குள் சூரியன் நுழைவது அவர்களுக்கு நேர்மறையான பலன்களை அளிக்கப்போகிறது. சூரியனின் ஆற்றல் அவர்களின் நம்பிக்கையையும் முடிவெடுக்கும் திறனையும் அதிகரிக்கும், இது லாபகரமான வாய்ப்புகளைப் பெற அவர்களுக்கு உதவுகிறது.</p><h4>சிம்மம்
</h4><p>சிம்ம ராசியின் அதிபதியாக சூரியன் இருப்பதால் இந்த காலகட்டத்தில் அவர்கள் அதிகபட்ச நன்மைகளை அடையப்போகிறார்கள். இந்த நேரத்தில் அவர்கள் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறுவார்கள், மேலும் இதனால் சிறந்த பலன்களை எதிர்பார்க்கலாம். இந்த காலகட்டத்தில், அவர்கள் வெளிநாடுகளுக்குப் பயணம் செய்யலாம். உங்கள் நீண்டகாலமாக நிலுவையில் உள்ள பணிகள் இப்போது முடிக்கப்படலாம் மற்றும் உங்கள் பணியிடத்தில் புதிய பொறுப்புகளைப் பெறலாம்.</p><h4>மகரம்</h4><p>
மகர ராசிக்காரர்கள் இந்த கிரக மாற்றத்தால் எதிர்பாராத நன்மைகளை அனுபவிக்கப்போகிறார்கள். அவர்கள் பல்வேறு வழிகளில் பணம் சம்பாதிக்க முடியும், இதனால் அவர்களின் வாழ்க்கைத்தரம் உயரும். அலுவலகத்தில் சூழ்நிலைகள் சாதகமானதாக மாறும், மேலும் அவர்கள் உயர் பதவிகளைப் பெறலாம். அவர்கள் நீண்ட காலமாக முடிக்காமல் இருந்த வேலைகள் இப்போது விரைவாக முடிவடையும்.</p>]]></content>
            <updated>2026-07-16T00:12:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டில் சொத்து வரி விதிப்பு...! இறுதி முடிவை நோக்கி நகரும் அரசாங்கம்.]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/govt-considers-property-tax-amid-imf-demands-1784160034"></link>
            <id>https://ibctamil.com/article/govt-considers-property-tax-amid-imf-demands-1784160034</id>
            <summary type="text">நாட்டில் சொத்து வரி (Property Tax) விதிப்பது குறித்துக் கவனம் செலுத்தப்பட்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பரிந்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டில் சொத்து வரி (Property Tax) விதிப்பது குறித்துக் கவனம் செலுத்தப்பட்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
</p><p>
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பரிந்துரைகளின் அடிப்படையில் அரசாங்கத்தின் வரி வருமானத்தை அதிகரிப்பதற்காக இந்நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.</p><p>

சர்வதேச நாணய நிதியம் இதற்கு முன்னரும் பல சந்தர்ப்பங்களில் இந்த வரியை அறிமுகப்படுத்துமாறு பரிந்துரைத்திருந்தபோதிலும், கடந்த அரசாங்கத்தைப் போலவே தற்போதைய அரசாங்கமும் அதனை நடைமுறைப்படுத்துவதை அவ்வப்போது ஒத்திவைத்து வந்தது.</p><p>
</p><p></p><h2>நாணய நிதியம்</h2><p>எவ்வாறாயினும், இலங்கைக்குக் கிடைக்கவிருக்கும் அடுத்த கடன் தவணையை விடுவிப்பதற்கு முன்னர் அரசாங்க வருமானத்தை விரிவுபடுத்தும் ஒரு நடவடிக்கையாக இந்த சொத்து வரியை நடைமுறைப்படுத்த வேண்டும் எனச் சர்வதேச நாணய நிதியம் தற்போது வலியுறுத்தியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6616cf11-ae80-431a-a958-6d4469cda38e/26-6a581f24994dc.webp' /></p><p>இந்த வரி முறையை நடைமுறைப்படுத்துவது குறித்து அரசாங்கம் இதுவரை இறுதி முடிவு எதனையும் எடுக்காதபோதிலும், தற்போதைய பொருளாதார வேலைத்திட்டத்தின் கீழ் இது குறித்து எதிர்காலத்தில் தீர்க்கமான நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-16T00:00:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் ‘அரோகரா’ கோஷத்துடன் கதிர்காமக் கந்தன் ஆலயத்தில் கொடியேற்றம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/flag-hoisting-at-the-kataragama-kandan-temple-1784157365"></link>
            <id>https://jvpnews.com/article/flag-hoisting-at-the-kataragama-kandan-temple-1784157365</id>
            <summary type="text">இலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்க ஆன்மீக பூமியாகவும், மத நல்லிணக்கத்தின் திருத்தலமாகவும் விளங்கும் கதிர்காமம் கந்தன் ஆலயத்தின் வருடாந்த ஆடிவேல் விழா,...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்க ஆன்மீக பூமியாகவும், மத நல்லிணக்கத்தின் திருத்தலமாகவும் விளங்கும் கதிர்காமம் கந்தன் ஆலயத்தின் வருடாந்த ஆடிவேல் விழா, இன்று (15) மாலை 6.00 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.</p><p>
</p><p></p><p>கொடிக்கு விசேட பூஜைகள் நடத்தப்பட்டு, ஆலய வளாகத்திலுள்ள வரலாற்றுப் புகழ்பெற்ற பால்குடிபாவா பள்ளிவாசலைச் சுற்றி ஊர்வலமாக எடுத்துவரப்பட்டது.
</p><p>
இதனைத் தொடர்ந்து, நான்கு முக்கிய சமயத் தலைவர்களின் ஆசியுரைகளுடன், பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் ‘அரோகரா’ பக்தி கோஷ முழக்கங்களுக்கு மத்தியில் புனிதக் கொடி ஏற்றிவைக்கப்பட்டது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/db1f2019-35b1-43c2-b131-63274a2f3847/26-6a5814b746845.webp' /></p><p>இன, மத, மொழி வேறுபாடுகளுக்கு அப்பால், நாட்டின் பல பாகங்களிலிருந்தும் வருகை தந்திருந்த பெரும் திரளான பக்தர்கள் இந்த நிகழ்வில் பக்திப் பரவசத்துடன் கலந்துகொண்டனர்.
</p><p>
நாட்டின் பல பகுதிகளில் இருந்தும், புனித பாதயாத்திரையை மேற்கொண்ட பக்தர்களில் முதலாவது குழுவினர் இன்று அதிகாலை கதிர்காமத்தை வந்தடைந்தனர்.
</p><p>
கடந்த 10 ஆம் திகதி முதல் உகந்தை மற்றும் குமண தேசிய பூங்கா ஊடாக கதிர்காமம் வரையான காட்டுப்பாதை பக்தர்களின் வழிபாட்டுக்காகத் திறக்கப்பட்டிருந்தது.</p><p>

ஆடிவேல் விழாவின் முதலாவது வரலாற்றுச் சிறப்புமிக்க திருவீதி உலா இன்று இரவு நடைபெறவுள்ளது.</p><p>

தொடர்ந்து 15 நாட்கள் பக்திபூர்வமாக நடைபெறவுள்ள இந்த திருவிழாவின் மிக முக்கிய நிகழ்வான தீர்த்தோற்சவம், எதிர்வரும் 30 ஆம் திகதி அதிகாலை புனித மாணிக்க கங்கையில் நடைபெற்று, இந்த ஆண்டுக்கான ஆடிவேல் விழா நிறைவுபெறவுள்ளது.</p><p>IBCE1</p><p>936BMZTF</p><p>QWLKUS</p>]]></content>
            <updated>2026-07-16T00:00:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[உள்ளூராட்சி மன்றப் பிரதிநிதிகளின் விடுமுறை தொடர்பில் வெளியான சுற்றறிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/local-government-representative-holiday-circular-1784160012"></link>
            <id>https://jvpnews.com/article/local-government-representative-holiday-circular-1784160012</id>
            <summary type="text">உள்ளூராட்சி மன்றங்களுக்கு பிரதி முதல்வர்களாக, உப தவிசாளர்களாக தெரிவு செய்யப்படும் அரச உத்தியோகத்தர்களுக்கான விடுமுறை விதிகளில் திருத்தங்களை மேற்கொண்டு...</summary>
            <content type="html"><![CDATA[<p>உள்ளூராட்சி மன்றங்களுக்கு பிரதி முதல்வர்களாக, உப தவிசாளர்களாக தெரிவு செய்யப்படும் அரச உத்தியோகத்தர்களுக்கான விடுமுறை விதிகளில் திருத்தங்களை மேற்கொண்டு, அரச நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு புதிய சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது.</p><p></p><p>
</p><p>
கடந்த ஜூன் 22ஆம் திகதியன்று அமைச்சரவையால் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைய, இந்தத் திருத்தங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/75bf2d95-893e-424c-993a-ce21bf16ce25/26-6a581f0e5760d.webp' /></p><p>இதன்படி, குறித்த பதவிகளை வகிக்கும் தகுதியுடைய அரச உத்தியோகத்தர்கள் மாதம் ஒன்றுக்கு அதிகபட்சமாக 6 நாட்கள் ஊதியத்துடன் கூடிய விடுமுறையை அல்லது குறித்த பதவியில் இருக்கும் காலப்பகுதியில், தேவைப்படின் ஊதியமற்ற விடுமுறையைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளும் வசதியும் இவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது
</p><p>
உள்ளூராட்சி மன்றப் பணிகளை மேற்கொள்வதற்காக அரச உத்தியோகத்தர்களுக்குத் தேவையான நெகிழ்வுத்தன்மையை வழங்கும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-16T00:00:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[அதிக வெப்பத்தால் பல பகுதிகளில் காட்டுத் தீ ; பொதுமக்களுக்கு எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/forest-fires-in-many-areas-due-high-temperatures-1784159528"></link>
            <id>https://jvpnews.com/article/forest-fires-in-many-areas-due-high-temperatures-1784159528</id>
            <summary type="text">நிலவும் அதிக வெப்பநிலை காரணமாக பதுளை, மொனராகலை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் அடிக்கடி காட்டுத் தீ சம்பவங்கள் பதிவாகி வருவதாக வனப் பாதுகாப்புத் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நிலவும் அதிக வெப்பநிலை காரணமாக பதுளை, மொனராகலை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் அடிக்கடி காட்டுத் தீ சம்பவங்கள் பதிவாகி வருவதாக வனப் பாதுகாப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது.</p><p>
</p><p></p><p>இந்த மூன்று மாவட்டங்கள் மட்டுமின்றி, அனுராதபுரம் மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களிலும் அதிக வெப்பநிலை காரணமாக காட்டுத் தீ சம்பவங்கள் பதிவாகக்கூடும் என வனப் பாதுகாப்புத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சந்திம பாலமகும்புர தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0f622bc6-4b22-4003-8cb4-272bfbbb327c/26-6a581d29c40e4.webp' /></p><p>

இதற்கிடையில், நக்கிள்ஸ் காட்டின் ஹுன்னஸ்கிரிய பகுதியில் கடந்த இரண்டு நாட்களாகப் பரவியிருந்த தீ, தற்போது முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
உலக நாடுகளைப் பாதித்து வரும் 'எல் நினோ' காலநிலை மாற்றம் தற்போது இலங்கையின் வானிலையிலும் தாக்கம் செலுத்தத் தொடங்கியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
</p><p>
உலகளாவிய முன்னறிவிப்புகளின்படி, தற்போது பலவீனமாக உள்ள இந்த 'எல் நினோ' நிலைமையானது, எதிர்வரும் ஒக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலப்பகுதியில் 80 சதவீதத்திற்கு மேல் தீவிரமடையக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-15T23:52:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[சூரியப் பெயர்ச்சியால் ஜாக்பாட் அடிக்கப்போகும் ராசிகள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/which-zodiac-signs-get-wealth-and-success-2026-1784143692"></link>
            <id>https://ibctamil.com/article/which-zodiac-signs-get-wealth-and-success-2026-1784143692</id>
            <summary type="text">ஜூலை மாதத்தில் பல முக்கிய கிரக மாற்றங்கள் நிகழவுள்ளன.இதில் குறிப்பாக கிரகங்களின் ராஜாவான சூரியன் ஜூலை 16 அன்று கடக ராசிக்குள் நுழைகிறார்.

தன்னம்பிக...</summary>
            <content type="html"><![CDATA[<p></p><p>ஜூலை மாதத்தில் பல முக்கிய கிரக மாற்றங்கள் நிகழவுள்ளன.</p><p>இதில் குறிப்பாக கிரகங்களின் ராஜாவான சூரியன் ஜூலை 16 அன்று கடக ராசிக்குள் நுழைகிறார்.
</p><p>
தன்னம்பிக்கை மற்றும் தலைமைத்துவத்தின் அதிபதியான சூரியன், உணர்வுகளின் ராசியான கடகத்தில் நுழைவது ஜோதிட ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்தது. </p><p>இந்த சூரியப் பெயர்ச்சி அனைத்து ராசிகளையும் பாதித்தாலும் சில குறிப்பிட்ட ராசிக்காரர்களுக்கு கூடுதல் நன்மைகளையும், அதிர்ஷ்டத்தையும் தரவுள்ளது. அவர்கள் யார் என்று இந்த பதிவில் காண்போம்.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>மேஷம்</td><td><ol><li>மேஷ ராசிக்காரர்கள் சூரியனின் இந்த ராசி மாற்றத்தால் மகத்தான நன்மைகளை அடையலாம். </li><li>இந்த காலகட்டத்தில் அவர்கள் எதிர்பார்த்ததை விட சிறந்த வருமானத்தை ஈட்ட முடியும்.</li><li> வியாபாரிகள் இந்த காலகட்டத்தில் சிறப்பான வாய்ப்புகளைப் பெறலாம்.</li><li> மற்ற துறைகளில் வேலை செய்பவர்களும் நல்ல சம்பளத்துடன் வேலை பெறலாம்.</li><li> அதேபோல, சுயமாக சம்பாதிக்கும் பல வழிகள் அவர்களுக்கு முன்னால்வரும்.
</li><li>
சொந்த தொழில் தொடங்க வேண்டமென்ற நீண்ட நாள் ஆசை நிறைவேறும் அதன் மூலம் பல்வேறு நிதி நன்மைகளை அடைய முடியும். புதிய வேலை தேடுபவவர்களுக்கு இப்பொது நல்ல வாய்ப்பு கிடைக்கும். </li><li>அவர்கள் வளர்ச்சியைக் கண்டு மற்றவர்கள் பொறாமைப்படும் அளவிற்கு அவர்களின் சூழல் மாறும்.</li></ol></td></tr><tr><td>கடகம் </td><td><ol><li>கடக ராசிக்குள் சூரியன் நுழைவது அவர்களுக்கு நேர்மறையான பலன்களை அளிக்கப்போகிறது.</li><li> சூரியனின் ஆற்றல் அவர்களின் நம்பிக்கையையும் முடிவெடுக்கும் திறனையும் அதிகரிக்கும் இது லாபகரமான வாய்ப்புகளைப் பெற அவர்களுக்கு உதவுகிறது.</li><li>பதவி உயர்வு, புதிய வேலை வாய்ப்பு அல்லது லாபகரமான வணிக ஒப்பந்தம் என எதுவாக இருந்தாலும் இந்த போக்குவரத்து மேஷ ராசிக்காரர்களுக்கு ஆதாயங்களை உறுதியளிக்கிறது. </li><li>நீண்ட கால முதலீடுகளைத் திட்டமிடவும் நேர்மறையான கண்ணோட்டத்தை பராமரிக்கவும் இந்த நேரத்தைப் பயன்படுத்திக் கொள்வது வாழ்க்கையில் முன்னேற உதவும்.

&nbsp;&nbsp;</li></ol></td></tr><tr><td>சிம்மம்</td><td><ol><li>சிம்ம ராசியின் அதிபதியாக சூரியன் இருப்பதால் இந்த காலகட்டத்தில் அவர்கள் அதிகபட்ச நன்மைகளை அடையப்போகிறார்கள். </li><li>இந்த நேரத்தில் அவர்கள் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறுவார்கள் மேலும் இதனால் சிறந்த பலன்களை எதிர்பார்க்கலாம். </li><li>இந்த காலகட்டத்தில் அவர்கள் வெளிநாடுகளுக்குப் பயணம் செய்யலாம். </li><li>உங்கள் நீண்டகாலமாக நிலுவையில் உள்ள பணிகள் இப்போது முடிக்கப்படலாம் மற்றும் உங்கள் பணியிடத்தில் புதிய பொறுப்புகளைப் பெறலாம்.</li><li>உங்கள் திட்டங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும் மேலும் உங்கள் வாழ்க்கையை புதிய உயரத்திற்கு கொண்டு செல்ல முடியும்.</li><li>இந்த காலம் சிம்ம ராசிக்காரர்களின் வியாபாரத்திற்கு சாதகமாக இருக்கும் மேலும் உங்கள் வாழ்க்கைத் துணையுடனான உறவுகள் வலுவடையும் இதனால் வாழ்க்கையில் நிம்மதி நிறைந்திருக்கும்.

&nbsp;&nbsp;</li></ol></td></tr></tbody></table><br><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p>]]></content>
            <updated>2026-07-15T23:51:32+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிஐடி வளையத்தில் சலே...! மாயமான குடும்பத்தின் குரல் - அரங்கேறும் மர்மங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/suresh-salle-s-family-silent-after-arrest-1784149626"></link>
            <id>https://ibctamil.com/article/suresh-salle-s-family-silent-after-arrest-1784149626</id>
            <summary type="text">உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குற்றச்சாட்டுகளின் கீழ் சுரேஷ் சலே கைது செய்யப்பட்டு சிஐடி விசாரணைகள் தொடர்ச்சியாக தீவிரமடைந்துள்ளன.

இந்தநிலையில், ஆரம்பத...</summary>
            <content type="html"><![CDATA[<p>உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குற்றச்சாட்டுகளின் கீழ் சுரேஷ் சலே கைது செய்யப்பட்டு சிஐடி விசாரணைகள் தொடர்ச்சியாக தீவிரமடைந்துள்ளன.</p><p>

இந்தநிலையில், ஆரம்பத்தில் அதிகாரிகள் மீது பகிரங்கக் குற்றச்சாட்டுகளை முன்வைத்து ஊடகங்களில் குரல் எழுப்பிய அவரது மனைவி மற்றும் மகன் ஆகியோர் தற்போது எங்கு இருக்கிறார்கள் என்றே தெரியாத அளவிற்கு முற்றிலும் மௌனமாகியுள்ளனர். </p><p>

இந்தத் திடீர் அமைதியானது, வழக்கின் போக்கை பாதிக்காமல் இருப்பதற்காக சட்டத்தரணிகளின் ஆலோசனையின் பேரில் எடுக்கப்பட்ட தற்காப்பு தந்திரோபாய நகர்வா என்ற கேள்வி எழுந்துள்ளது. </p><p>

மறுபுறம், விசாரணைகளின் தீவிரத்தைக் குறைக்க அதிகார மட்டங்களுடன் எட்டப்பட்ட மறைமுக உடன்பாடுகளின் விளைவா அல்லது அவர்களின் குரலை ஒடுக்க விடுக்கப்பட்ட அச்சுறுத்தல்களா என்ற பலத்த சந்தேகங்களும் முன்வைக்கப்பட்டு வருகின்றது.
</p><p>
இது குறித்து இப்பதிவில் விரிவாக ஆராய்கின்றது ஐபிசி தமிழின் செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி...</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/vjdt-johuV8?start=99" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-15T23:51:01+00:00</updated>
        </entry>
    </feed>
