<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-07-17T02:26:37+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Thulsi</name>
            </author>
            <title type="text"><![CDATA[வவுனியாவில் மகளை வன்புணர்வு செய்த தந்தை - கருணை காட்டாமல் அதிகபட்ச தண்டனை கொடுத்த நீதிபதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/45-years-of-rigorous-imprisonment-for-men-1784252981"></link>
            <id>https://ibctamil.com/article/45-years-of-rigorous-imprisonment-for-men-1784252981</id>
            <summary type="text">14&amp;nbsp; வயது சிறுமியான தனது மகளை தவறான முறைக்கு உட்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட தந்தை குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு 45 வருட கடூழிய சிறைத் தண்டனை ல...</summary>
            <content type="html"><![CDATA[<p>14&nbsp; வயது சிறுமியான தனது மகளை தவறான முறைக்கு உட்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட தந்தை குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு 45 வருட கடூழிய சிறைத் தண்டனை லிதிக்கப்பட்டுள்ளது.</p><p>வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ. ஆனந்தராஜா, நேற்று இந்த தீர்ப்பை வழங்கியுள்ளார்</p><p>பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மொத்தமாக 12 இலட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும், நீதிமன்றத்திற்கு ஒரு இலட்சம் ரூபாய் அபராதம் செலுத்தவும் உத்தரவிட்டார்.</p><p></p><h2>47 வயது தந்தை</h2><p>வவுனியா கனகராயன்குளம் பகுதியில் தனது 14 வயது மகளை 2013 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் தொடர்ச்சியாக பலமுறை தவறான முறைக்கு உட்படுத்தியதாக 47 வயது தந்தை மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/754cfa8b-2765-4a3c-b7fa-64c4119ecdc1/26-6a59926608ab5.webp' /></p><p>குறித்த சம்பவம் தொடர்பாக சிறுமியின் தந்தையை பொலிஸார் கைது செய்து, வவுனியா நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியதைத் தொடர்ந்து, சட்டமா அதிபர் திணைக்களம் 2022 ஆம் ஆண்டு வவுனியா மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தது.
</p><p>


வழக்கு விசாரணைகளின் போது, எதிரிக்கு எதிராக சுமத்தப்பட்ட நான்கு வன்புணர்வு குற்றச்சாட்டுகளும் சந்தேகத்திற்கு அப்பாற்பட்ட வகையில் நிரூபிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றம் தெரிவித்தது.</p><p>



இதையடுத்து, இரண்டு தனித்தனி வழக்குகளில் நிரூபிக்கப்பட்ட நான்கு குற்றச்சாட்டுகளுக்காக மொத்தம் 45 ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.</p><p></p><p> </p><h2>அதிகபட்ச தண்டனை</h2><p>



மேலும், ஒவ்வொரு குற்றச்சாட்டிற்கும் தலா 3 இலட்சம் ரூபாய் வீதம் மொத்தம் 12 இலட்சம் ரூபாயை பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீடாக வழங்கவும், 

ஒவ்வொரு குற்றச்சாட்டிற்கும் 25 ஆயிரம் ரூபாய் வீதம் மொத்தம் ஒரு இலட்சம் ரூபாயை நீதிமன்ற அபராதமாக செலுத்தவும் உத்தரவிடப்பட்டது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8ec850c2-87c2-428a-baaf-c3bb489d325c/26-6a5992655735d.webp' /></p><p>இந்த வழக்கில் அரசுத் தரப்பில் சட்டமா அதிபர் திணைக்களத்தின் சார்பில் அரச சட்டத்தரணி ஸ்ரீ. சிவஸ்கந்தஸ்ரீ ஆஜராகினார்.</p><p>



தீர்ப்பளிக்கும் போது கருத்து தெரிவித்த நீதிபதி, பாதுகாக்க வேண்டிய இயற்கை பாதுகாவலரான தந்தையே இவ்வாறான கடுமையான குற்றத்தை புரிந்துள்ளதால், எந்தவித கருணையும் காட்டாமல் அதிகபட்ச தண்டனை விதிக்கப்பட்டதாக குறிப்பிட்டார்.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://chat.whatsapp.com/DybwQnIcdgA8r9WecwZY5Q" target="_blank">WHATSAPP </a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-17T02:19:36+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவிடமிருந்து இலங்கைக்கு கிடைக்க உள்ள நல்ல செய்தி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/usa-may-cut-donw-more-traiffs-for-lanka-1784251303"></link>
            <id>https://tamilwin.com/article/usa-may-cut-donw-more-traiffs-for-lanka-1784251303</id>
            <summary type="text">இலங்கையின் ஏற்றுமதிகளுக்கான அமெரிக்காவின் வரிச்சலுகைகள் தொடர்பாக எதிர்காலத்தில் அமெரிக்காவிடமிருந்து நல்லதொரு செய்தி கிடைக்கவுள்ளதாக அமெரிக்காவிற்கான ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையின் ஏற்றுமதிகளுக்கான அமெரிக்காவின் வரிச்சலுகைகள் தொடர்பாக எதிர்காலத்தில் அமெரிக்காவிடமிருந்து நல்லதொரு செய்தி கிடைக்கவுள்ளதாக அமெரிக்காவிற்கான இலங்கைத் தூதுவர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.</p><p>
அமெரிக்காவில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
</p><p>இந்த வரிச்சலுகைகளை மேலும் குறைப்பதற்கான வர்த்தமானி அறிவித்தலில் அமெரிக்க ஜனாதிபதி சில நாட்களுக்கு முன்னர் கையெழுத்திட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p><h2>பெரும் நிவாரணம் கிடைக்கும்&nbsp;</h2><p>இதன் மூலம் இலங்கை மக்களுக்கும் ஏற்றுமதியாளர்களுக்கும் பெரும் நிவாரணம் கிடைக்கும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.</p><p>
தான் தூதுவர் பதவியிலிருந்து விலகி மீண்டும் இலங்கைக்கு வரவுள்ளதாகத் தெரிவித்த அவர், அவ்வாறு நாட்டிற்குத் திரும்பினாலும் மீண்டும் தீவிர அரசியலில் ஈடுபடும் எண்ணம் தனக்கு இல்லை என மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1c83b094-9626-48b2-8595-f9f70d9284a4/26-6a598d174a661.webp' />&nbsp; &nbsp;</p><p>
தாம் தாய்நாடு திரும்பிய பின்னரும் தாய்நாட்டிற்காகவே பணியாற்றுவதாகவும் அந்தச் சேவை ஒருபோதும் நிறுத்தப்படாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
தாம் எந்தவொரு அரசியல் கட்சியுடனும் இணைந்துகொள்ள எதிர்பார்க்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>
தற்போதைய அரசாங்கத்துடன் தான் மிகவும் சுமுகமாகப் பணியாற்றியதாகக் குறிப்பிட்ட மகிந்த சமரசிங்க, தூதுவர் பதவியில் மேலும் நீடிக்குமாறு அரசாங்கம் தனக்கு அழைப்பு விடுத்த போதிலும், தனது தனிப்பட்ட விருப்பத்தின் பேரில் பதவியிலிருந்து விலகத் தீர்மானித்ததாகக் மேலும் தெரிவித்துள்ளார்.</p><p>
அத்துடன், தான் தூதுவர் பதவியை வகித்த காலப்பகுதியில் எந்தவொரு அரசியல் நடவடிக்கைகளிலும் ஈடுபடாமல், நாட்டுக்காக அதிகபட்ச சேவையை ஆற்ற முயற்சித்ததாகவும் மகிந்த&nbsp; சமரசிங்க குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-17T02:02:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பில் கோர விபத்து - 20 பேர் காயம் - நீண்ட போராட்டத்தின் பின்னர் காப்பாற்றப்பட்ட சாரதி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/colombo-accident-10-injured-1784251829"></link>
            <id>https://tamilwin.com/article/colombo-accident-10-injured-1784251829</id>
            <summary type="text">கொழும்பு, அத்துருகிரிய, ஜயந்தி மாவத்தைக்கு அருகில் பேருந்தும் டிப்பர் வாகனமும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.

இந்த விபத்தில் சுமார் 20 பேர் காயமடைந்...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு, அத்துருகிரிய, ஜயந்தி மாவத்தைக்கு அருகில் பேருந்தும் டிப்பர் வாகனமும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
</p><p>
இந்த விபத்தில் சுமார் 20 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
</p><p>
கொடகம - பொரளை பிரதான வீதியில், அத்துருகிரிய கோவிந்தன மாவத்தைக்கு அருகில், இன்று அதிகாலை 4.15 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.</p><h2><b>கோர விபத்து</b></h2><p>

தனியார் நிறுவன ஊழியர்களை ஏற்றிச் சென்ற பேருந்தும் டிப்பர் வாகனமும் மோதியமையே&nbsp; விபத்திற்கு காரணமாகியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2fc854fa-9ce3-4e27-96d7-7aac5b4ca5b6/26-6a5988136b63c.webp' /></p><p>பேருந்தின் சாரதி, சுமார் ஒரு மணி நேரம் 45 நிமிட நீண்ட போராட்டத்திற்கு பின்னரே மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
</p><p>
இந்த விபத்தினால் டிப்பர் வாகனமும் பேருந்தும் பலத்த சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. </p><p>விபத்தைத் தொடர்ந்து, அந்த வீதியுடனான போக்குவரத்து சுமார் இரண்டு மணித்தியாலங்கள் முடங்கியிருந்தது.
</p><p>
இந்த விபத்து குறித்து அத்துருகிரிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p>]]></content>
            <updated>2026-07-17T01:41:40+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானின் முக்கிய உட்கட்டமைப்புகள் மீது தாக்குதல் ; அமெரிக்காவுக்கு ஈரான் எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/iran-warns-us-of-attack-key-iranian-infrastructure-1784244215"></link>
            <id>https://canadamirror.com/article/iran-warns-us-of-attack-key-iranian-infrastructure-1784244215</id>
            <summary type="text">ஈரானின் தெற்குப் பகுதி நகரங்களான பண்டார் அப்பாஸ், கெஷ்ம் தீவு மற்றும் சாபஹார் ஆகிய இடங்களைக் குறிவைத்து அமெரிக்க இராணுவம் தொடர் வான்வழித் தாக்குதல்களை...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரானின் தெற்குப் பகுதி நகரங்களான பண்டார் அப்பாஸ், கெஷ்ம் தீவு மற்றும் சாபஹார் ஆகிய இடங்களைக் குறிவைத்து அமெரிக்க இராணுவம் தொடர் வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது.
</p><p>
அத்துடன், ஈரானிய துறைமுகத்தை நோக்கிச் செல்ல முயன்ற எண்ணெய் கப்பல் ஒன்றின் மீது, அமெரிக்க ராணுவம் ஹெல்ஃபயர் ஏவுகணைகளை வீசி அதைச் செயலிழக்கச் செய்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3252e2ff-b8b1-4734-b1d9-5e7e03b48009/26-6a5967f963b2b.webp' /></p><p>

அதேநேரம், ஈரானின் பொதுமக்களுக்கான சிவில் உட்கட்டமைப்புகள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தினால், அதற்குப் பதிலடியாக ,பிராந்தியத்தில் உள்ள அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளின் உட்கட்டமைப்புகள் முற்றிலும் அழியும் வகையில் மிகக் கடுமையான தாக்குதல் தொடுக்கப்படும் என்றும் ஈரான் எச்சரித்துள்ளது.
</p><p>
ஈரானின் "முக்கிய உட்கட்டமைப்புகள்" மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல்கள், அமெரிக்க ஆட்சியாளர்களின் குற்ற நோக்கத்தைக்" காட்டுகின்றன என்று ஈரான் குற்றம் சாட்டியுள்ளது.
</p><p>
அமெரிக்காவின் இந்த நடவடிக்கைகள் ஐக்கிய நாடுகள் சபையின் விதிகள் மற்றும் சர்வதேச சட்டத்தின் அடிப்படை கோட்பாடுகளை அப்பட்டமாக மீறுவதாகும் என்றும் ஈரான் குறிப்பிட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-17T01:40:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஆடி மாதத்தில் வாழ்க்கையில் அதிசயம் நடக்கும் ராசிக்காரர்கள் யார் யார் தெரியுமா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/zodiac-signs-that-will-make-miracles-happen-life-1784248835"></link>
            <id>https://jvpnews.com/article/zodiac-signs-that-will-make-miracles-happen-life-1784248835</id>
            <summary type="text">&amp;nbsp;தமிழ் மாதங்களில் ஆடி மாதம் மிகவும் முக்கியமான மற்றும் மங்களகரமான மாதமாக கருதப்படுகிறது.&amp;nbsp;ஆடி மாதம் ஆன்மீகரீதியாக மட்டுமின்றி ஜோதிடரீதியாகவும...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;தமிழ் மாதங்களில் ஆடி மாதம் மிகவும் முக்கியமான மற்றும் மங்களகரமான மாதமாக கருதப்படுகிறது.&nbsp;ஆடி மாதம் ஆன்மீகரீதியாக மட்டுமின்றி ஜோதிடரீதியாகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. ஆடி மாதத்தில் புதன், சனிபகவான், சுக்கிரன் மற்றும் குருபகவான் என அனைத்து முக்கிய கிரகங்களும் தங்களின் நிலையை மாற்றப்போகின்றன.</p><p>சில ராசிக்காரர்கள் அபரிமிதமான வளர்ச்சியையும், நேர்மறையான பலன்களையும் அனுபவிக்கப் போகிறார்கள். அவர்கள் எந்தெந்த ராசிக்காரர்கள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/69898cb7-918e-4477-80b3-32f0550cd996/26-6a597a0480a91.webp' /></p><h4>மேஷம்
</h4><p>ஆடி மாதம் மேஷ ராசிக்காரர்களுக்கு மிகவும் சிறப்பான மாதமாக இருக்கப்போகிறது. சூரியன் மற்றும் குருபகவான் ஆசியால் அவர்களின் நீண்ட கால ஆசைகள் நிறைவேறப்போகிறது. இந்த மாதத்தில் அவர்கள் வாழ்க்கையில் அதிர்ஷ்டம் அதிகரிக்கும். வாழ்க்கையில் பல சாதனைகள் செய்வதற்கு வாய்ப்புகள் உள்ளன. அவர்கள் பணியிடத்தில் சாதகமான சூழ்நிலைகள் நிலவும். குடும்ப உறவுகளில் மகிழ்ச்சியான சூழல் நிலவும்</p><h4>கடகம்
</h4><p>கடக ராசியில் சூரியன் நிலை பெற்றிருப்பதால் ஆடி மாதம் அவர்களுக்கு அற்புதமான மாதமாக இருக்கப்போகிறது. சூரியனின் ஆசியால் இந்த மாதத்தில், அவர்கள் தங்கள் வார்த்தைகளை மிகவும் புத்திசாலித்தனமாக பயன்படுத்துவார்கள், மேலும் இது தனிப்பட்ட மற்றும் தொழில்முறை உறவுகளை வலுப்படுத்தும். இந்த காலகட்டத்தில் நிதி நிலைமை மேம்படும், மேலும் நல்ல லாபம் ஈட்டுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்.</p><h4>கன்னி
</h4><p>கன்னி ராசிக்காரர்களுக்கு ஆடி மாதம் சூரியன் மற்றும் குருபகவான் ஆசியால் முன்னேற்றங்கள் நிறைந்த மாதமாக இருக்கும். தொழில் வாழ்க்கையில் நிலவி வந்த பல பிரச்சனைகள் இப்போது முடிவுக்கு வரும். அவர்களின் நிதிநிலை இப்போது நிலையாக இருக்கும். அவர்களுக்கு பல துறைகளில் இருந்து லாபம் கிடைக்கும். செலவுகள் குறைவதுடன் சேமிப்பும் அதிகரிக்கும்.</p><h4>மீனம்
</h4><p>மீன ராசிக்காரர்களுக்கு ஆடி மாதம் நேர்மறையான மாற்றங்கள் நிறைந்த மாதமாக இருக்கும். இந்த மாதத்தில் அவர்கள் பல்வேறு முதலீடுகளிலிருந்து பணம் சம்பாதிக்கும் வாய்ப்புகளைப் பெறலாம், மேலும் இந்த காலகட்டத்தில் நிதி நிலைமை பெரிதும் மேம்படும். வேலை தொடர்பாக வெளிநாடுகளுக்குச் செல்லும் வாய்ப்புகள் உள்ளன. குடும்ப உறுப்பினர்கள் அனைவரின் ஆதரவும் முழுமையாக கிடைக்கும், மேலும் குடும்ப விவகாரங்களில் முழு உற்சாகத்துடன் பங்கேற்கலாம்.</p>]]></content>
            <updated>2026-07-17T01:40:15+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[காதலை ஏற்க மறுத்த 16 வயது மாணவிக்கு நேர்ந்த கதி ; இளைஞனின் விபரீத செயல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/the-fate-of-student-who-refused-to-accept-love-1784246209"></link>
            <id>https://jvpnews.com/article/the-fate-of-student-who-refused-to-accept-love-1784246209</id>
            <summary type="text">இந்தியாவில் மேற்கு வங்க மாநிலத்தில் கொல்கத்தாவில் காதலை ஏற்க மறுத்ததாகக் கூறி 16 வயது பாடசாலை மாணவி ஒருவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம்...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்தியாவில் மேற்கு வங்க மாநிலத்தில் கொல்கத்தாவில் காதலை ஏற்க மறுத்ததாகக் கூறி 16 வயது பாடசாலை மாணவி ஒருவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><p>
</p><p></p><p>கொல்கத்தா அருகிலுள்ள சாந்தினிபாகன் பகுதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.</p><h3>ஆரம்பகட்ட விசாரணை</h3><p>

உயிரிழந்த மாணவி 10ஆம் வகுப்பில் கல்வி கற்று வந்தவர். பாடசாலை முடிந்து சைக்கிளில் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது, 24 வயதான சமீர் தாஸ் என்ற இளைஞர் அவரை வழிமறித்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6829db17-674c-478c-a9f4-f55bc3a31efa/26-6a596fc29141d.webp' /></p><p>அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், அதனைத் தொடர்ந்து சமீர் தாஸ் தன்னிடம் வைத்திருந்த கத்தியால் மாணவியின் கழுத்து, வயிறு மற்றும் கைகளில் பலமுறை குத்தியதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
</p><p>
பலத்த காயமடைந்த மாணவி வீதியில் ரத்த வெள்ளத்தில் கிடந்த நிலையில், அங்கிருந்த பொதுமக்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். </p><p>அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
</p><p>
இதனிடையே, தாக்குதலுக்குப் பின்னர் தப்பிச் செல்ல முயன்ற சமீர் தாஸை அங்கிருந்த பொதுமக்கள் மடக்கிப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
</p><p>
முர்ஷிதாபாத் மாவட்டத்தைச் சேர்ந்த சமீர் தாஸ், தோம்ஜூர் பகுதியில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றி வந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
ஆரம்பகட்ட விசாரணையில், தனது காதலை மாணவி ஏற்க மறுத்ததால் ஆத்திரத்தில் இந்தக் கொலையைச் செய்ததாக சந்தேகநபர் வாக்குமூலம் அளித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
</p><p>
சந்தேகநபருக்கு எதிராக கொலைக் குற்றச்சாட்டின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-17T01:40:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[அருச்சுனா எம்.பி க்கு எதிராக நடவடிக்கை எடுக்கவுள்ள கடற்தொழில் அமைச்சர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/fisheries-minister-take-action-against-aruchuna-mp-1784252382"></link>
            <id>https://jvpnews.com/article/fisheries-minister-take-action-against-aruchuna-mp-1784252382</id>
            <summary type="text">நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் நடவடிக்கைகளுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் நடவடிக்கைகளுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p></p><p>கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் இன்று (16) ஏற்பட்ட குழப்பநிலை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தபோதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.</p><p>

மேலும், கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் மீண்டும் விரைவில் நடைபெறும் என தெரிவித்த அமைச்சர், மாவட்டத்தின் முன்னேற்றம் மற்றும் இருப்பு தொடர்பில் கவனம் செலுத்தப்படும் என்றும் கூறினார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0a97ad0e-eda4-4446-a7cc-1d525050859b/26-6a5987dfe5ce7.webp' /></p><p>கூட்டம் ஆரம்பத்தில் மிகவும் அமைதியான முறையில் நடைபெற்று வந்ததாக குறிப்பிட்ட அமைச்சர், பின்னர் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக கூட்டம் இடைநிறுத்தப்பட்டதாக தெரிவித்தார்.
</p><p>
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா தொடர்ச்சியாக பல கூட்டங்களில் குழப்பங்களை ஏற்படுத்தி வருவதாகவும், அதிகாரிகள் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைப்பதாகவும் அமைச்சர் குற்றம் சாட்டினார்.
</p><p>
அபிவிருத்திக் குழுக் கூட்டங்களைப் பயன்படுத்தி அரச அதிகாரிகள் மீது குற்றச்சாட்டுகளை முன்வைப்பது தவறான நடைமுறை என தெரிவித்த அவர், இதனால் அதிகாரிகளின் சமூக மதிப்பு பாதிக்கப்படக்கூடும் என்றும் குறிப்பிட்டார்.
</p><p>
இத்தகைய நடவடிக்கைகளைத் தடுப்பதற்கான தேவை ஏற்பட்டுள்ளதாகவும், அதற்கு இன்றைய சம்பவம் மற்றுமொரு சான்றாக அமைந்துள்ளதாகவும் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்தார்.</p><p>

"கிளிநொச்சி மாவட்டத்தின் முன்னேற்றம் மற்றும் இருப்புத் தொடர்பில் நாம் தொடர்ந்து கவனம் செலுத்துவோம். அடுத்த நாட்களில் மீண்டும் அபிவிருத்திக் குழுக் கூட்டம் நடைபெறும். அப்போது உறுதியான முடிவுகள் எடுக்கப்படும்" என அவர் மேலும் தெரிவித்தார்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-17T01:39:49+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாட்டு ஊழியர்களுக்கான ஓய்வூதியத் திட்டம்...! ஜனாதிபதி பிறப்பித்துள்ள உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/govt-pension-plan-for-foreign-sri-lankan-workers-1784251394"></link>
            <id>https://ibctamil.com/article/govt-pension-plan-for-foreign-sri-lankan-workers-1784251394</id>
            <summary type="text">வெளிநாட்டு ஊழியர்களுக்கான பங்களிப்பு ஓய்வூதியத் திட்டச் சிக்கல்களை விரைந்து தீர்த்து, அதனை எதிர்வரும் வரவு-செலவுத் திட்டத்தில் உள்ளடக்குமாறு ஜனாதிபதி ...</summary>
            <content type="html"><![CDATA[<p>வெளிநாட்டு ஊழியர்களுக்கான பங்களிப்பு ஓய்வூதியத் திட்டச் சிக்கல்களை விரைந்து தீர்த்து, அதனை எதிர்வரும் வரவு-செலவுத் திட்டத்தில் உள்ளடக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உத்தரவிட்டுள்ளார்.</p><p>

அத்தோடு மாவட்ட மட்ட சுற்றுலாத் திட்டங்களை விரைவுபடுத்த, நிதி ஒதுக்கீடுகளை நேரடியாக மாவட்ட செயலாளர்களிடம் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><p>

கிரியா, கலேவெல, திருகோணமலை ஆகிய பகுதிகளின் அபிவிருத்தித் திட்டங்களை, சம்பந்தப்பட்ட துறைகள் இணைந்து ஒரு பொதுவான திட்டத்தின் கீழ் செயற்படுத்தப் பணிக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p></p><h2>கொள்முதல் நடைமுறை</h2><p>கொள்முதல் நடைமுறைத் தாமதங்களைத் தவிர்க்க, ஜனவரி முதல் வாரத்திலேயே கொள்முதல் நடவடிக்கைகளைத் தொடங்குமாறு நிதியமைச்சின் புதிய திட்டத்தைப் பின்பற்றக் கூறப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5ff576b5-900f-4c62-b190-bbe54bc090db/26-6a5984043c2b6.webp' /></p><p>

2030 ஆம் ஆண்டளவில் சுற்றுலாத்துறைக்குத் தேவைப்படும் 8 இலட்சம் மனித வளத் தேவையைப் பூர்த்தி செய்ய ஹோட்டல் பாடசாலைப் பயிற்சிகளை விரிவுபடுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
</p><p>
தூதரக சேவைகளை டிஜிட்டல் மயமாக்குதல் மற்றும் ஆசிய ஒளிபரப்பாளர்களின் மாநாடு உள்ளிட்ட எதிர்கால திட்டங்கள் குறித்தும் இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-17T01:29:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vethu</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரசியலில் குழி பறிக்கும் தந்திரம் - இளைஞர்களிடம் ரணில் விடுத்த கோரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/ranil-s-guidance-for-youths-1784250852"></link>
            <id>https://tamilwin.com/article/ranil-s-guidance-for-youths-1784250852</id>
            <summary type="text">
அரசியலில் அர்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இளைஞர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

கொழும்பு சினமன் கிராண்ட்...</summary>
            <content type="html"><![CDATA[<p>
அரசியலில் அர்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இளைஞர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
</p><p>
கொழும்பு சினமன் கிராண்ட் ஹோட்டலில் நடைபெற்ற ஜென்ஸி தலைமுறையினருடான சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.</p><p> 

அரசியல் என்பது ஒரு கடினமான பயணம். சிலர் வீழ்ந்து விடுகிறார்கள். சிலர் விலகி விடுகிறார்கள்.</p><p>
</p><h2><b>

அரசியல் தந்திரோபாயங்கள்</b></h2><p>1977 ஆம் ஆண்டில் ஜே.ஆர். ஜயவர்தனவின் அரசாங்கத்தில் எங்களுடன் இருந்த சிலர் அரசியலை விட்டு விலகி, வணிக மற்றும் சட்டத் துறைகளுக்குச் சென்றனர். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/57d1cd74-e35e-4884-b61e-e1d90738f746/26-6a59841c15fd9.webp' /></p><p>அரசியலுக்கு அர்ப்பணிப்பு அவசியம். அர்ப்பணிப்பு இல்லையென்றால், எந்தவொரு அர்த்தசாஸ்திரத்தையும்,அரசியல் பொருளாதாரம் மற்றும் அரசியல் தந்திரோபாயங்கைளும் கற்றுப் பயனில்லை.
</p><p>
களத்தில் இறங்கி வேலை செய்பவர்களிடம் பொறுப்புகளை ஒப்படைப்போம். அவர்களுக்கு நாம் வழிகாட்ட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>
</p><h3><b>
அரசியல் தந்திரம்</b></h3><p>அங்கு இளைஞர் ஒருவர், “நீங்கள் பின்பற்றுவது கௌடில்யரையா? சந்திரகுப்தரையா? அல்லது இருவரையுமா?” என கேட்ட கேள்விக்கு, “நான் ரணில் விக்ரமசிங்கவாகவே இருக்கிறேன்” என அவர் பதிலளித்தார். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8b99a244-b14a-4d25-852e-7f5cf79152e3/26-6a59841cbafb3.webp' /></p><p>கௌடில்யரின் அர்த்தசாஸ்திரத்தை படிப்பதும், சந்திரகுப்தர் மற்றும் மாக்கியவெல்லி போன்ற ஆளுமைகளின் தத்துவங்களை கற்றுக்கொள்வதும் அரசியலுக்கு முக்கியமானது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
</p>]]></content>
            <updated>2026-07-17T01:24:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Manchu</name>
            </author>
            <title type="text"><![CDATA[அன்று விஜய் கேட்ட ஒற்றை கேள்வி... அந்த கதாபாத்திரத்தில் நடிப்பதை நிறுத்திய நடிகை ரோஜா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/actor-roja-talk-about-cm-vijay-one-question-1784207800"></link>
            <id>https://manithan.com/article/actor-roja-talk-about-cm-vijay-one-question-1784207800</id>
            <summary type="text">நடிகை ரோஜா தான் ஏன் அம்மா கதாபாத்திரத்தில் நடிப்பதை நிறுத்தினேன் என்பதை தற்போது வெளிப்படையாக கூறியுள்ளார்.நடிகை ரோஜாதமிழ் சினிமாவில் ஒரு காலக்கட்டத்தி...</summary>
            <content type="html"><![CDATA[<p>நடிகை ரோஜா தான் ஏன் அம்மா கதாபாத்திரத்தில் நடிப்பதை நிறுத்தினேன் என்பதை தற்போது வெளிப்படையாக கூறியுள்ளார்.</p><h2>நடிகை ரோஜா</h2><p>தமிழ் சினிமாவில் ஒரு காலக்கட்டத்தில் உச்ச நடிகையாக இருந்தவர் தான் நடிகை ரோஜா. நீண்ட இடைவெளிக்கு பின்பு அன்பே டயானா என்ற படத்தில் நடித்துள்ளார்.
</p><p>
இப்படத்தில் நடித்தது குறித்து ரோஜா கூறுகையில், இப்படத்தில் அம்மாவாக நடித்துள்ளதாகவும், கதையின்படி சென்னையில் குடியேறிய தெலுங்கு குடும்பம் என்பதால் தெலுங்கு பேசி நடித்துள்ளேன்.
</p><p>
குறித்த கதையுடன் தன்னால் கனெக்ட் ஆக முடிந்தது என்றும் படப்பிடிப்பில் மிகவும் ஜாலியாக இருந்ததாகவும் கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c58c8579-31a6-4066-b838-87ad29d1f2ed/26-6a591641dd3fd.webp' /></p><p>
</p><p>
மேலும் 12 ஆண்டுக்கு முன்பு விஜய்யின் காவலன் படத்தில் அசினுக்கு அம்மாவாக நடித்திருந்தேன். அப்பொழுது விஜய் நீங்கள் அம்மாவாக நடிக்கிறீர்களா? என்று நம்பமுடியாமல் கேட்டுள்ளார்.&nbsp;</p><p></p><p>அப்பொழுது ஒரு ஹீரோவே இவ்வாறு கேட்கிறாரே, தவறாக அம்மா கதாபாத்திரத்தினை தேர்வு செய்து விட்டோமோ? என்று நினைத்து அம்மா கதாபாத்திரத்தில் நடிப்பதையே தவிர்த்து விட்டார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6c38caf9-a546-4c36-8587-2853ffa1f13e/26-6a591643e278d.webp' /></p><p>பின்பு சின்னத்திரை நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டதாக கூறியுள்ளார். தற்போது நடிக்க வந்துள்ளதாகவும், அடுத்ததாக லெனின் பாண்டியன் படத்திலும் நடித்திருப்பதாக கூறியுள்ளார்.</p><p>
</p><p>ஆந்திர அரசியலில் நான் வெற்றி பெற்றதற்கு காரணமே சினிமா தான் என்றும் இனி நல்ல கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9faab673-ce2f-4639-85f8-8c77bbba3c39/26-6a5916428c14a.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td><i>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன்<a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள் <a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"><b>FOLLOW NOW&nbsp; &nbsp; </b></a>&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;&nbsp;<br></i></td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-17T01:10:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரத்தில் புதிய திருப்பம்! சுரேஷ் சலே வழக்கில் நீதிமன்றத்தை நாடிய பௌத்த தேரர்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/writ-petition-filed-by-major-general-suresh-sallay-1784243807"></link>
            <id>https://tamilwin.com/article/writ-petition-filed-by-major-general-suresh-sallay-1784243807</id>
            <summary type="text">ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே தாக்கல் செய்துள்ள ரிட் மனுவில் இடையீட்டு தரப்பாக இணைவதற்கு அனுமதி வழங்குமாறு, பஸ்யோதுன்ரட்ட பௌத்த சம்மேளனத்தின் தலை...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே தாக்கல் செய்துள்ள ரிட் மனுவில் இடையீட்டு தரப்பாக இணைவதற்கு அனுமதி வழங்குமாறு, பஸ்யோதுன்ரட்ட பௌத்த சம்மேளனத்தின் தலைவர் தபனே ஸ்ரீ மகிந்த தேரர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.
</p><p>
சுரேஷ் சலேவை கைது செய்து தடுத்து வைத்திருப்பது சட்டவிரோதமானது எனக் கூறி தாக்கல் செய்யப்பட்டுள்ள ரிட் மனுவில், தாம் இடையீட்டு தரப்பாக இணைவது பொதுநலன் கருதியே என்றும், எந்தவொரு சட்டபூர்வ விசாரணையையும் தடுக்கவோ அல்லது பாதிக்கவோ அல்ல என்றும் தேரர் தனது மனுவில் தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்</h2><p>

மாறாக, 2019 உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பாக உருவாக்கப்பட்டுள்ள கருத்துக்களை மாற்றும் முயற்சிகள், அரசியலமைப்பு மற்றும் சமூக ரீதியில் ஏற்படுத்தக்கூடிய தாக்கங்களை நீதிமன்றம் பரிசீலிக்க வேண்டும் என அவர் கோரியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/42dacdbc-9992-4609-b3a2-4428e04d010d/26-6a5968dd73791.webp' /></p><p>
</p><p>
மனுவில் மேலும், உயிர்த்த ஞாயிறு தாக்குதலை சஹ்ரான் ஹாஷிம் தலைமையிலான தேசிய தவ்ஹீத் ஜமாஅத் (NTJ) அமைப்பே நடத்தியதாகவும், கிடைத்த புலனாய்வு தகவல்களின் அடிப்படையில் முன்கூட்டியே நடவடிக்கை எடுக்கத் தவறியதற்காக அரச அதிகாரிகள் பொறுப்புக்கூற வேண்டும் என உச்ச நீதிமன்றமும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவும் ஏற்கனவே உறுதி செய்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
</p><p>
அத்துடன், மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே தாக்குதலைத் திட்டமிட்டார் அல்லது அதற்கு உதவினார் என எந்த நீதிமன்ற தீர்ப்பிலும் அல்லது உத்தியோகபூர்வ விசாரணையிலும் குற்றஞ்சாட்டப்படவில்லை.</p><p></p><h2>பரப்பப்படும் குற்றச்சாட்டுகள்</h2><p>

தாக்குதல் நடைபெறுவதற்கு முன்னரே இஸ்லாமிய தீவிரவாதம் குறித்து அவர் அதிகாரிகளை எச்சரித்திருந்ததாகவும் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9db625b0-f4b5-4bfd-8206-9f7c06971a2d/26-6a5968de2536c.webp' /></p><p>

மேலும், நம்பகமான ஆதாரங்கள் இன்றி சிங்கள பௌத்த இராணுவ மற்றும் புலனாய்வு அதிகாரிகளை இலக்காகக் கொண்டு பரந்த சதித்திட்டம் ஒன்று இருப்பதாக பரப்பப்படும் குற்றச்சாட்டுகள் சமூக நல்லிணக்கத்தையும், பொதுமக்களின் நம்பிக்கையையும் பாதிக்கும் எனவும் மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
</p><p>
இதனிடையே, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (PTA) கீழ் சுரேஷ் சலேவை தடுத்து வைத்திருப்பதன் சட்டபூர்வத்தன்மையை நீதிமன்றம் ஆராயும் வேளையில், இந்த வழக்குடன் தொடர்புடைய பரந்த அரசியலமைப்பு மற்றும் பொதுநல விடயங்கள் குறித்தும் சங்கத்தின் கருத்தை பரிசீலிக்குமாறு தேரர் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-17T01:08:54+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு விடுத்துள்ள அவசர எச்சரிக்கை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/ciaboc-warns-of-fake-info-on-asset-declarations-1784249027"></link>
            <id>https://ibctamil.com/article/ciaboc-warns-of-fake-info-on-asset-declarations-1784249027</id>
            <summary type="text">மையப்படுத்தப்பட்ட மின்னணு அமைப்பு மூலம் சொத்து மற்றும் பொறுப்பு பிரகடனங்களைச் சமர்ப்பிப்பது தொடர்பாக பல்வேறு வெளித் தரப்பினரால் வழங்கப்படும் தவறான தகவ...</summary>
            <content type="html"><![CDATA[<p>மையப்படுத்தப்பட்ட மின்னணு அமைப்பு மூலம் சொத்து மற்றும் பொறுப்பு பிரகடனங்களைச் சமர்ப்பிப்பது தொடர்பாக பல்வேறு வெளித் தரப்பினரால் வழங்கப்படும் தவறான தகவல்கள் குறித்து அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது.</p><p>

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
</p><p>
சொத்து மற்றும் பொறுப்பு பிரகடனங்களைச் சமர்ப்பிக்க வேண்டியவர்கள், அவற்றை அறிவிப்பதற்காக ஆணைக்குழுவால் நிறுவப்பட்ட மையப்படுத்தப்பட்ட மின்னணு அமைப்பில் தகவல்களை உள்ளிடுவது மற்றும் அந்த அமைப்பை அணுகுவது ஆகியவை குறித்து ஆணைக்குழுவின் அதிகாரிகள் அல்லாத பிற நபர்களால் பல்வேறு தகவல்கள் வழங்கப்படுவது அவதானிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p></p><h2>விழிப்புணர்வுப் பிரச்சாரங்கள்</h2><p>இதுபோன்ற விழிப்புணர்வுப் பிரச்சாரங்களிலும், இந்த மின்னணு அமைப்பின் பயன்பாட்டிலும் சம்பந்தப்பட்ட நபர்களால் தவறான தகவல்களும் தவறான வழிமுறைகளும் தெரிவிக்கப்படுவதை ஆணைக்குழு இதுவரை அவதானித்துள்ளது எனவும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
</p><p>
எனவே, ஆணைக்குழுவால் அல்லது அதன் அதிகாரிகள் அல்லாத பிற வெளி நபர்களால் நடத்தப்படும் இதுபோன்ற விழிப்புணர்வுப் பிரச்சாரங்களுக்கு இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு பொறுப்பேற்காது என்பதை குறித்த அறிவிப்பின் மூலம் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e5f68d6e-f0fa-43d8-8648-09cbb3a0faaf/26-6a59806bd7eb4.webp' /></p><p>மேலும்,

சொத்துக்கள் மற்றும் பொறுப்புகளை அறிவிப்பதற்கான மையப்படுத்தப்பட்ட மின்னணு அமைப்பில் தகவல்களை உள்ளிடுவது தொடர்பான எந்தவொரு சிக்கல்களையும், ஆணைக்குழுவின் சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் அறிவிப்புப் பிரிவின் 0767011954 மற்றும் 0112587284 ஆகிய தொலைபேசி எண்கள் மூலமாக மட்டுமே தீர்க்க முடியும்.</p><p>இதனடிப்படையில், பொதுமக்கள் சம்பந்தப்பட்ட தொலைபேசி எண்களை அழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-17T01:08:22+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[தேசிய பாடசாலை ஆசிரியர்களுக்கான இடமாற்ற விண்ணப்பங்கள் குறித்து வெளியான முக்கிய தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/transfer-applications-for-national-school-teachers-1784250251"></link>
            <id>https://jvpnews.com/article/transfer-applications-for-national-school-teachers-1784250251</id>
            <summary type="text">2026-ஆம் ஆண்டிற்கான தேசிய பாடசாலை ஆசிரியர்களின் வருடாந்த மற்றும் கட்டாய இடமாற்றங்களுக்கான விண்ணப்பங்கள் இணையவழியில் கோரப்பட்டுள்ளதாக கல்வி, உயர் கல்வி...</summary>
            <content type="html"><![CDATA[<p>2026-ஆம் ஆண்டிற்கான தேசிய பாடசாலை ஆசிரியர்களின் வருடாந்த மற்றும் கட்டாய இடமாற்றங்களுக்கான விண்ணப்பங்கள் இணையவழியில் கோரப்பட்டுள்ளதாக கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
</p><p>
இடமாற்றத்திற்கு விண்ணப்பிப்பதற்கு தகுதியுடைய ஆசிரியர்கள் இன்று (16) முதல் எதிர்வரும் 30ஆம் திகதி வரை இணையதளம் ஊடாக விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க முடியும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/301c1507-ea1f-4807-adc2-066b2741e8ee/26-6a597f8cf1b77.webp' /></p><p>

இணையவழியில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தின் அச்சுப் பிரதியை பெற்று, ஆசிரியர்கள் தமது பாடசாலை அதிபரிடம் எதிர்வரும் 31ஆம் திகதி அல்லது அதற்கு முன்னதாகச் சமர்ப்பிக்க வேண்டும்.
</p><p>
ஆசிரியர்கள் நேரடியாக அமைச்சிற்கு வந்து கையளிக்கும் விண்ணப்பங்களோ அல்லது தபால் மூலம் அனுப்பப்படும் விண்ணப்பங்களோ எக்காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என்று கல்வி அமைச்சு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-17T01:04:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாட்டு ஊழியர்களுக்கான ஓய்வூதியத் திட்டம்: வரவு - செலவுத் திட்டத்தில் உள்ளடக்குமாறு ஜனாதிபதி அறிவுறுத்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/pension-scheme-foreign-workers-include-budget-1784249985"></link>
            <id>https://tamilwin.com/article/pension-scheme-foreign-workers-include-budget-1784249985</id>
            <summary type="text">வெளிநாட்டு ஊழியர்களுக்காக முன்மொழியப்பட்டுள்ள பங்களிப்பு ஓய்வூதியத்
திட்டத்தில் உள்ள சிக்கல்களை விரைந்து தீர்த்து, அதனை எதிர்வரும் வரவு -
செலவுத் தி...</summary>
            <content type="html"><![CDATA[<p>வெளிநாட்டு ஊழியர்களுக்காக முன்மொழியப்பட்டுள்ள பங்களிப்பு ஓய்வூதியத்
திட்டத்தில் உள்ள சிக்கல்களை விரைந்து தீர்த்து, அதனை எதிர்வரும் வரவு -
செலவுத் திட்ட முன்மொழிவுகளில் உள்ளடக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க
அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
</p><p>
வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை
அமைச்சின் 2026 ஆம் ஆண்டுக்கான திட்டங்களின் முன்னேற்றத்தை மீளாய்வு செய்தும்,
2027 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்துக்கு முந்தைய ஆலோசனைகளை
மேற்கொண்டும் ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று(16) நடைபெற்ற கலந்துரையாடலின் போதே
அவர் இந்த அறிவுறுத்தல்களை வழங்கினார்.</p><p></p><h2>&nbsp;ஓய்வூதியத் திட்டம்</h2><p>
</p><p>
நாட்டுக்கு அந்நியச் செலாவணியை ஈட்டித் தரும் பிரதான துறையாக விளங்கும்
புலம்பெயர் தொழிலாளர்களுக்காக முறையான ஓய்வூதியத் திட்டமொன்றின் அவசியத்தை
வலியுறுத்திய ஜனாதிபதி, இதற்கான நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துமாறு பணித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8b2e0135-fa97-4e94-afe3-d8eecb1674e6/26-6a597f8faae2b.webp' /></p><p>
</p><p>
சுற்றுலாத்துறை சார்ந்த திட்டங்களை மாவட்ட மட்டத்தில் செயற்திறனுடன்
முன்னெடுக்க, நிதி ஒதுக்கீடுகளை நேரடியாக மாவட்ட செயலாளர்களிடம் வழங்குமாறு
அறிவுறுத்தப்பட்டது. இதன் மூலம் மாவட்ட அபிவிருத்திக் குழுக்களுடன் இணைந்து
திட்டங்களை விரைவாகச் செயற்படுத்த முடியும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

</p><p>கிரியா, கலேவெல மற்றும் திருகோணமலை ஆகிய பகுதிகளை மையமாகக் கொண்ட
அபிவிருத்தித் திட்டங்களை, வீதி அபிவிருத்தி அதிகார சபை, சுற்றுலா அமைச்சு
மற்றும் தொல்பொருள் திணைக்களம் ஆகியன இணைந்து ஒரு பொதுவான திட்டத்தின் கீழ்
செயற்படுத்துவதன் மூலம் நேரத்தையும் உழைப்பையும் மிச்சப்படுத்த முடியும்
என்றார்.</p><p></p><h2>ஜனாதிபதி பணிப்பு</h2><p>
</p><p>
திட்டங்களைச் செயல்படுத்துவதில் கொள்முதல் நடைமுறைகளால் ஏற்படும் தாமதங்களைத்
தவிர்க்க, ஜனவரி முதல் வாரத்திலேயே கொள்முதல் நடவடிக்கைகளைத் தொடங்குமாறு நிதி
அமைச்சின் புதிய திட்டத்தைப் பின்பற்றுமாறு பணித்தார். அத்துடன், சுற்றுலா
அமைச்சின் நிர்மாணத்துறை போன்ற விசேட கொள்முதல் தேவைகளை விரைவுபடுத்த இணக்கம்
தெரிவிக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0b5069e0-115b-4751-8475-f2a52b98e879/26-6a597f9062bc0.webp' /></p><p>
</p><p>
2030 ஆம் ஆண்டளவில் சுற்றுலாத்துறைக்குத் தேவைப்படும் 8 இலட்சம் மனித வளத்
தேவையைப் பூர்த்தி செய்ய, ஹோட்டல் பாடசாலைகளின் பயிற்சிப் பாடநெறிகளை
விரிவுபடுத்தவும், அமைச்சின் கீழ் உள்ள வளங்கள் மற்றும் காணிகள் குறித்த
முறையான அறிக்கையைத் தயாரிக்கவும் நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி
உத்தரவிட்டார்.</p><p>

தூதரக சேவைகளை டிஜிட்டல் மயமாக்குதல் மற்றும் ஆசிய ஒளிபரப்பாளர்களின் மாநாடு
உள்ளிட்ட எதிர்கால திட்டங்கள் குறித்தும் இதன்போது விரிவாகக்
கலந்துரையாடப்பட்டது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-17T01:04:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[மாதுளைப்பழம் சாப்பிடும் போது தவறியும் இதை மட்டும் செய்யாதீர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/pomegranate-lover-dont-make-mistake-while-eating-1784249684"></link>
            <id>https://jvpnews.com/article/pomegranate-lover-dont-make-mistake-while-eating-1784249684</id>
            <summary type="text">மாதுளை பழம் மிகவும் சுவையான, சத்துக்கள் நிறைந்த பழம் தான். தினமும் சிறிதளவு சாப்பிடுவது நல்லதுதான். ஹீமோகுளோபின் அதிகரிப்பது முதல் ரத்தத்தை சுத்தப்படு...</summary>
            <content type="html"><![CDATA[<p>மாதுளை பழம் மிகவும் சுவையான, சத்துக்கள் நிறைந்த பழம் தான். தினமும் சிறிதளவு சாப்பிடுவது நல்லதுதான். ஹீமோகுளோபின் அதிகரிப்பது முதல் ரத்தத்தை சுத்தப்படுத்துவது வரை நிறைய நன்மைகளை தரும். ஆனால் அதை நீங்கள் தப்பா தான் சாப்பிடறீங்கனு உங்களுக்கு தெரியுமா? மாதுளை பழம் சாப்பிடும்போது பொதுவாக செய்யும் 5 தவறுகள் என்ன? அதை ஏன் செய்யக்கூடாது? என்பது பற்றி நாம் இங்கு பார்க்கலாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/52f11297-9549-48f4-a4d2-9c55119960d6/26-6a597d560c417.webp' /></p><p>நிறைய பேர் மாதுளை பழத்தை நறுக்கும்போது ஒழுங்காக நறுக்கத் தெரியாமல் அதன் சாறு முழுக்க கீழே சிந்திவிடுவார்கள். அதிலேயே பாதி சத்துக்கள் வீணாகி போய்விடும். அதோடு பழத்தை மென்று விட்டு அதன் விதைகளை தூக்கி கீழே வீசி விடுவார்கள். அப்படி செய்ய கூடாது.
</p><p>
மாதுளை பழத்தை பொறுத்தவரை அதன் விதைகளையும் சேர்த்து தான் சாப்பிட வேண்டும். அதில்தான் நிறைய ஆண்டி அக்கிட்சிட்டுங்கள் இருக்கின்றன.

குறிப்பாக குழந்தைகளுக்கு கொடுக்கும்போது அவர்களுக்கு விதைகளோடு சாப்பிட கற்றுக் கொடுங்கள். பெரும்பாலான குழந்தைகள் விதைகளை துப்பி விடுகிறார்கள்.</p><p>மாதுளை சாப்பிடும்போது செய்யும் இரண்டாவது தவறு என்னவென்றால் மாதுளையின் மேல் பகுதி தோலை உரித்தவுடன் அதன் உட்புறத்தில் இருக்கும் மெலிதான வெள்ளை நிற தோல்களை நீக்கிவிட்டு மாதுளையின் முத்துக்களை மட்டும் சாப்பிடுவார்கள். அது மிக மிகத் தவறு.
</p><p>
மாதுளையின் உட்புறத்தில் இருக்கும் மெல்லிய தோலில் உள்ள துவர்ப்புத் தன்மை தான் அந்த பழத்தின் ஒட்டுமொத்த பயன்களையுமே தாங்கி இருக்கிறது. குறிப்பாக அந்த பகுதியில் தான் நார்ச்சத்து இருக்கிறது. அது செரிமான ஆற்றலை மேம்படுத்த உதவி செய்யும். அதை நீக்கிவிட்டால் அதிலுள்ள நார்ச்சத்துக்கள் முழுமையாக நீங்கிவிடும்.</p><p>மாதுளை பழம் மட்டுமல்ல எந்த வகை பழமாக இருந்தாலும் அது உடலுக்கு நல்லது என்பதற்காக நிறைய சாப்பிடக் கூடாது. ஏனென்றால் பழங்களில் இயற்கையாகவே சர்க்கரை இருக்கும். அது ரத்தத்தின் சர்க்கரை அளவை அதிகரிக்கச் செய்து விடும்.</p><p>

குறிப்பாக மாதுளை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் செரிமானக் கோளாறுகள் ஏற்படலாம். அதிலும் சிலருக்கு குடல் சென்சிடிவிட்டி அதிகமாக இருக்கும். அவர்களுக்கு இந்த அஜீரணக் கோளாறு சார்ந்த பிரச்சினைகள் ஏற்படும்.</p><p>மற்ற பழங்களையாவது நறுக்குவதற்கு முன்போ பின்போ கழுவிவிட்டு சாப்பிடுவோம். ஆனால் நன்கு யோசித்துப் பாருங்கள். மாதுளை பழத்தை நாம் கழுவுவதே கிடையாது.

மாதுளை முத்துக்கள் உள்ளுக்குள் தானே இருக்கிறது என்று உரித்து அப்படியே சாப்பிடுகிறோம். அப்படி செய்யக்கூடாது. </p><p>மாதுளை பழத்தின் தோலில் நிறைய பாக்டீரியாக்கள் இருக்கும். அதேபோல பழங்களில் நிறைய பூச்சிக்கொல்லிகள் தெளித்து இருப்பார்கள்.

அதனால் மாதுளை வெட்டுவதற்கு முன் பழத்தை நன்கு கழுவிவிட்டு தான் நறுக்க வேண்டும்.</p>]]></content>
            <updated>2026-07-17T00:54:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[6 தமிழ்த் தரப்புகளின் ஐக்கியத்தால் சாதகம்..! வரவேற்ற நீதியரசர் விக்னேஸ்வரன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/advantage-unity-6-tamil-factions-vigneswaran-welco-1784248617"></link>
            <id>https://tamilwin.com/article/advantage-unity-6-tamil-factions-vigneswaran-welco-1784248617</id>
            <summary type="text">தமிழ் பேசும் ஆறு அரசியல் தரப்புகள் ஒன்றிணைவது தமிழ் மக்களுக்கு ஒரு சாதகமான
அறிகுறியாகும் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் மக்கள்
கூட்டணி...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழ் பேசும் ஆறு அரசியல் தரப்புகள் ஒன்றிணைவது தமிழ் மக்களுக்கு ஒரு சாதகமான
அறிகுறியாகும் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் மக்கள்
கூட்டணியின் தலைவருமான நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.</p><p>

நேற்று(16) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்து
தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.</p><p></p><h2>ஆறு அரசியல் தரப்புகள்</h2><p>
</p><p>
சிங்கள மொழி பேசும் கட்சிகளிடமிருந்து தாங்கள் பிரதிநிதித்துவப்படுத்தும்
மக்களுக்கு எந்தவொரு நிவாரணமும் கிடைக்காது என்ற எண்ணத்தில் அவர்கள் இந்த
முடிவை எடுத்திருக்கலாம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f882bca8-273a-4314-a18e-ad910506f6f8/26-6a597cfcb32e3.webp' /></p><p>
</p><p>
இந்நாட்டிலுள்ள தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் எதிர்காலம் குறித்து அவதானம்
செலுத்தியே அந்தந்தக் கட்சிகளின் தலைவர்கள் இந்தத் தீர்மானத்தை
மேற்கொண்டுள்ளனர். </p><p>தற்போதைய அரசின் செயற்பாடுகள் குறித்து வடக்கு, கிழக்கு
மக்கள் திருப்தியடையவில்லை என்றும் சி.வி. விக்னேஸ்வரன் குறிப்பிட்டார்.</p><p></p><h2>&nbsp;நீதியரசர் விக்னேஸ்வரன்</h2><p>

அதற்கான காரணமாக, அந்த மக்களின் தனியார் நிலங்களை இராணுவத்தினர் தொடர்ந்து
தம்வசம் வைத்துள்ளமையை அவர் சுட்டிக்காட்டினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f83928d5-77e5-4541-96f3-021f75137885/26-6a597cfd66a91.webp' /></p><p>

சில நிலங்களில் விவசாய நடவடிக்கைகளை மேற்கொண்டு, அவற்றின் மூலம் கிடைக்கும்
வருமானத்தை இராணுவத்தினர் பெற்றுக்கொள்கின்றனர் என்றும் முன்னாள் நாடாளுமன்ற
உறுப்பினர் அங்கு வெளிப்படுத்தினார்.
</p><p>
இவ்வாறான காரணங்களால், தேசிய மக்கள் சக்தி அரசின் கீழ் தமிழ் மக்களுக்கு
நிவாரணம் கிடைக்கும் என்று எதிர்பார்க்க முடியாது என்றார் அவர், தற்போதைய அரசும் தமிழ் மக்களை இரண்டாம் தரப் பிரஜைகளைப் போலவே நடத்துகின்றது
என்றும், அவர்களுக்குச் சம உரிமைகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை
என்றும் சி.வி. விக்னேஸ்வரன் மேலும் தெரிவித்தார்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-17T00:53:21+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானின் அடுத்த பேரிடி., உத்தரவுக்காக காத்திருக்கும் ஹவுதி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/iran-orders-houthis-close-red-sea-route-1784248608"></link>
            <id>https://news.lankasri.com/article/iran-orders-houthis-close-red-sea-route-1784248608</id>
            <summary type="text">உலகின் மற்றொரு முக்கியமான நீரிணையை மூட ஈரான் திட்டமிட்டுள்ளது.ஈரானின் மின்சார வலையமைப்பை அமெரிக்கா தாக்கினால், யேமனின் ஹவுதி இயக்கம் செங்கடல் வாயிலான ...</summary>
            <content type="html"><![CDATA[<p>உலகின் மற்றொரு முக்கியமான நீரிணையை மூட ஈரான் திட்டமிட்டுள்ளது.</p><p>ஈரானின் மின்சார வலையமைப்பை அமெரிக்கா தாக்கினால், யேமனின் ஹவுதி இயக்கம் செங்கடல் வாயிலான பாப் எல்-மண்டெப் நீரிணையை (Bab el-Mandeb strait) மூட தயாராக இருக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
</p><p></p><p>இந்த வாயில் உலகின் முக்கியமான எண்ணெய் போக்குவரத்து பாதைகளில் ஒன்றாகும்.

ஹவுதிகள் ஏற்கனவே ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை அந்தப் பகுதியில் நிறுத்தி வைத்துள்ளதாகவும், உத்தரவை எதிர்பார்த்து காத்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
</p><p>
ஹார்முஸ் நீரிணை ஏற்கனவே மூடப்பட்ட நிலையில், செங்கடல் வாயிலும் மூடப்பட்டால், மத்திய கிழக்கு நாடுகளின் இரண்டு முக்கிய எண்ணெய் ஏற்றுமதி பாதைகளும் ஒரே நேரத்தில் பாதிக்கப்படும். இது உலகளாவிய எரிசக்தி நெருக்கடியை மேலும் தீவிரப்படுத்தும் அபாயம் உள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2635fd0f-6bd9-49d9-81a8-3861fdfe1dcf/26-6a597921c36a2.webp' /></p><p>சவுதி அரேபியா இந்த அச்சுறுத்தலை மிகுந்த கவனத்துடன் எடுத்துக்கொண்டு வருகிறது. ஏற்கனவே தனது எண்ணெய் ஏற்றுமதியின் 70 சதவீதம் செங்கடல் வழியாக யன்பு துறைமுகத்திற்கு மாற்றியுள்ளது.</p><p> அங்கு நேரடி தாக்குதல் நடந்தால், உலக எண்ணெய் சந்தையில் பெரும் அதிர்ச்சி ஏற்படும்.
</p><p>
ஈரான், ஹவுதிகளை தனது Axis of Resistance கூட்டணியின் ஒரு பகுதியாகக் கருதுகிறது. இதில் லெபனானின் ஹிஸ்புல்லா மற்றும் ஈராக்கின் ஷியா ஆயுதக் குழுக்களும் அடங்குகின்றன.</p><p>அமெரிக்கா, ஈரான் ஹவுதிகளுக்கு ஆயுதங்கள் மற்றும் நிதி வழங்குவதாக குற்றம் சாட்டுகிறது. ஆனால் ஈரான் அதை மறுத்துள்ளது.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;&nbsp;</td></tr></tbody></table><p>
</p>]]></content>
            <updated>2026-07-17T00:50:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[சமீபத்தில் மறுமணம் செய்துகொண்ட நடிகை ஸ்வாதியின் கியூட் போட்டோஸ்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/actress-swathi-some-cute-photos-in-instagram-1784212140"></link>
            <id>https://cineulagam.com/article/actress-swathi-some-cute-photos-in-instagram-1784212140</id>
            <summary type="text">நடிகை ஸ்வாதிதமிழ் சினிமாவில் வெளியான சுப்ரமணியபுரம் படத்தின் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் தான் நடிகை ஸ்வாதி.
2005ம் ஆண்டு தெலுங்கில் வெளியான டேன்ஞர...</summary>
            <content type="html"><![CDATA[<h2>நடிகை ஸ்வாதி</h2><p>தமிழ் சினிமாவில் வெளியான சுப்ரமணியபுரம் படத்தின் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் தான் நடிகை ஸ்வாதி.
</p><p>2005ம் ஆண்டு தெலுங்கில் வெளியான டேன்ஞர் படத்தின் மூலம் சினிமாவில் நடிகையாக அடியெடுத்து வைத்துள்ளார். </p><p>தமிழில் சுப்ரமணியபுரம், கனிமொழி, போராளி, இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, வடகறி, யட்சன், யாக்கை என தொடர்ந்து படங்கள் நடித்தார்.
சமீபத்தில் நடிகை ஸ்வாதி, இயக்குனர் ஸ்ரீகாந்த் நாகோத்தி என்பவரை மிகவும் சிம்பிளான முறையில் மறுமணம் செய்துகொண்டார். </p><p>தற்போது நாம் நடிகை ஸ்வாதி தனது இன்ஸ்டாவில் வெளியிட்ட சில கியூட் புகைப்படங்களை காண்போம்.</p><p><br></p>]]></content>
            <updated>2026-07-17T00:40:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாட்டில் கொட்டி தீர்க்கப்போகும் கனமழை...! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/heavy-rain-with-lightning-thunder-weather-report-1784244584"></link>
            <id>https://ibctamil.com/article/heavy-rain-with-lightning-thunder-weather-report-1784244584</id>
            <summary type="text">சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சிறிதளவு மழை பெய்யக்கூடும்.வளிமண்டலவியல் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சிறிதளவு மழை பெய்யக்கூடும்.</p><p>வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (17-07-2026) விடுத்துள்ள அறிக்கையில் மேற்படி விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</p><p>இதனடிப்படையில் நாட்டின் ஏனைய பிராந்தியங்களில் வறட்சியான வானிலை நிலவக்கூடும்.

</p><p></p><h2>பனிமூட்டமான நிலை</h2><p>கிழக்கு மாகாணத்திலும் அத்துடன் வவுனியா, முல்லைத்தீவு மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் "வெப்பச் சுட்டெண்" காரணமாக மனித உடலினால் பகல் வேளையில் அதிகரித்த வெப்பநிலையை உணரக்கூடியதாக இருக்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/91674b1b-8b7f-49d4-a463-a24edabc9d5a/26-6a5972d846293.webp' />&nbsp;&nbsp;</p><p>மத்திய மலைப் பிராந்தியத்தின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் மொனராகலை, ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் மணித்தியாலத்திற்கு சுமார் 40 - 50 km வேகத்தில் அடிக்கடி பலத்த காற்று வீசக் கூடும்.</p><p>இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-17T00:37:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[துபாய் மத்தியப் பகுதியில் அடுத்தடுத்து பலத்த வெடிச்சத்தம் ; காரணம் குறித்து தீவிர விசாரணை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/a-series-of-loud-explosions-in-central-dubai-1784222032"></link>
            <id>https://canadamirror.com/article/a-series-of-loud-explosions-in-central-dubai-1784222032</id>
            <summary type="text">துபாயின் மத்திய (Central Dubai) பகுதியில் அடுத்தடுத்து பலத்த வெடிச்சத்தங்கள் கேட்கப்பட்டதாக ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம், அப்பகுதியில் இருந்த சாட்சிகளை...</summary>
            <content type="html"><![CDATA[<p>துபாயின் மத்திய (Central Dubai) பகுதியில் அடுத்தடுத்து பலத்த வெடிச்சத்தங்கள் கேட்கப்பட்டதாக ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம், அப்பகுதியில் இருந்த சாட்சிகளை மேற்கோள்காட்டி அவசரத் தகவல் வெளியிட்டுள்ளது.</p><p>

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்கனவே பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், இந்த வெடிச்சத்தங்கள் துபாய் நகரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/da305343-0df3-41e6-8fdc-6f9a1e4ff762/26-6a5911517d7f0.webp' /></p><p> </p><p>எனினும், வெடிச்சத்தங்களுக்கான துல்லியமான காரணம், உயிரிழப்புகள், காயமடைந்தோர் அல்லது சொத்துச் சேதம் தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.

பாதுகாப்புப் படையினரும், உள்ளூர் அதிகாரிகளும் சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். </p><p>சம்பவத்தின் பின்னணி மற்றும் பாதிப்புகள் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
</p><p>
இந்தச் சம்பவம், அமெரிக்கா–ஈரான் மோதல் மற்றும் அதனுடன் தொடர்புடைய பிராந்திய பாதுகாப்பு பதற்றம் அதிகரித்துள்ள சூழலில் இடம்பெற்றுள்ளது. </p><p>இருப்பினும், துபாயில் கேட்கப்பட்ட வெடிச்சத்தங்கள் எந்தச் சம்பவத்துடன் தொடர்புடையவை என்பது இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை</p>]]></content>
            <updated>2026-07-17T00:29:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kiyas Shafe</name>
            </author>
            <title type="text"><![CDATA[மூதூர் மணற்சேனை படுகொலையின் 40ஆம் ஆண்டு நினைவேந்தல்: கண்ணீர் மல்க அஞ்சலி!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/40th-anniversary-mutur-manarchenai-massacre-1784247524"></link>
            <id>https://tamilwin.com/article/40th-anniversary-mutur-manarchenai-massacre-1784247524</id>
            <summary type="text">கடந்த 1986ஆம் ஆண்டு ஜூலை மாதம் 16ஆம் திகதி மூதூர், மணற்சேனை கிராமத்தில்
இடம்பெற்ற கொடூரத் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட 44 அப்பாவி பொதுமக்களின்
40...</summary>
            <content type="html"><![CDATA[<p>கடந்த 1986ஆம் ஆண்டு ஜூலை மாதம் 16ஆம் திகதி மூதூர், மணற்சேனை கிராமத்தில்
இடம்பெற்ற கொடூரத் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட 44 அப்பாவி பொதுமக்களின்
40ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று (16) வியாழக்கிழமை உணர்வுபூர்வமாக
அனுஷ்டிக்கப்பட்டது.</p><p>

மணற்சேனை இந்து மயான முன்றலில் நடைபெற்ற இந்நினைவேந்தல் நிகழ்வை,
உயிரிழந்தவர்களின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உறவினர்கள் ஒன்றிணைந்து
ஏற்பாடு செய்திருந்தனர்.</p><h2>&nbsp;40ஆம் ஆண்டு நினைவேந்தல்</h2><p>
</p><p>
நிகழ்வின் ஆரம்பத்தில், உயிரிழந்தவர்களின் ஆத்ம சாந்திக்காக ஒரு நிமிட மௌன
அஞ்சலி செலுத்தப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4740698c-0aa2-46de-b635-bc8fa161ee40/26-6a5976e363c97.webp' /></p><p> அதனைத் தொடர்ந்து, உயிரிழந்த தங்களின் உறவுகளை
நினைவுகூர்ந்து ஈகைச்சுடர்கள் ஏற்றப்பட்டு, மலர்தூவி கண்ணீர் மல்க அஞ்சலி
செலுத்தப்பட்டது.</p><p>

இதில் பெருமளவிலான பொதுமக்களும் கலந்துகொண்டு அஞ்சலிகளைச் செலுத்தினர்.
</p><p>
கடந்த 1986 ஜூலை 16 அன்று மணற்சேனை கிராமத்திற்குள் புகுந்து நடத்தப்பட்ட
கொடூரத் தாக்குதலில், ஒரே நாளில் 44 பொதுமக்கள் கொடூரமாகப் படுகொலை
செய்யப்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-07-17T00:29:04+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[நியூசிலாந்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ; சுனாமி எச்சரிக்கையால் பதற்றமடைந்த மக்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/powerful-earthquake-hits-new-zealand-tsunami-1784247462"></link>
            <id>https://canadamirror.com/article/powerful-earthquake-hits-new-zealand-tsunami-1784247462</id>
            <summary type="text">பசிபிக் பெருங்கடலின் தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ள தீவு நாடான நியூசிலாந்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக ...</summary>
            <content type="html"><![CDATA[<p>பசிபிக் பெருங்கடலின் தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ள தீவு நாடான நியூசிலாந்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
</p><p>
ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவான இந்த நிலநடுக்கம், நாட்டின் பல பகுதிகளில் உணரப்பட்டதாக சர்வதேச நில அதிர்வு கண்காணிப்பு மையங்கள் தெரிவித்துள்ளன.</p><p>

நிலநடுக்கத்தின் தாக்கத்தால் கட்டிடங்கள் பலத்த அதிர்வுக்கு உள்ளாகியதுடன், மக்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்களை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைந்தனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/75ad243b-d616-4ea2-b512-3ee6af83ae2b/26-6a5974a7ef78d.webp' /></p><p>இதனையடுத்து, கடலோரப் பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டதால், அங்கு வசிக்கும் மக்கள் பாதுகாப்பான உயரமான பகுதிகளுக்கு செல்லுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
</p><p>
எனினும், உயிரிழப்புகள் அல்லது பாரிய சேதங்கள் தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. நிலைமையை நியூசிலாந்து அவசரகால சேவைகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றன.</p>]]></content>
            <updated>2026-07-17T00:22:18+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Ragavan</name>
            </author>
            <title type="text"><![CDATA[மியான்மரில் இரட்டை படகு விபத்து: 500-க்கும் மேற்பட்ட அகதிகள் உயிரிழந்திருக்கலாம்- ஐ.நா. அச்சம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/myanmar-shipwrecks-500-rohingya-missing-1784247514"></link>
            <id>https://news.lankasri.com/article/myanmar-shipwrecks-500-rohingya-missing-1784247514</id>
            <summary type="text">மியான்மர் கடற்கரையில் இரண்டு படகுகள் காணாமல் போனதில் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என ஐ.நா. அமைப்புகள் (UNHCR, IOM) தெரிவித்துள்ளன.

இந்...</summary>
            <content type="html"><![CDATA[<p>மியான்மர் கடற்கரையில் இரண்டு படகுகள் காணாமல் போனதில் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என ஐ.நா. அமைப்புகள் (UNHCR, IOM) தெரிவித்துள்ளன.</p><p>

இந்த படகுகள் ஜூன் மாத இறுதியில் ரகைன் மாநிலத்திலிருந்து புறப்பட்டதாகவும், பெரும்பாலும் ரோஹிங்கியா மக்கள் பயணம் செய்ததாகவும் கூறப்படுகிறது.
</p><p>
முதல் படகில் சுமார் 250 பேர் இருந்தனர். புறப்பட்ட சில நேரங்களிலேயே தொடர்பு துண்டிக்கப்பட்டது. இரண்டாவது படகில் 280 பேர் இருந்ததாகவும், ஜூலை 8-ஆம் தேதி அயேயார்வாடி கடற்கரையில் மூழ்கியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/035b07b5-0261-48fa-99ff-d75edcc3a236/26-6a5974dcac6e1.webp' /></p><p>ரோஹிங்கியா மக்கள் பல தசாப்தங்களாக மியான்மர் அரசின் அடக்குமுறைக்கு உள்ளாகி வருகின்றனர். 2017-இல் வன்முறையிலிருந்து தப்பி சுமார் ஒரு மில்லியன் பேர் வங்காளதேசம் நாட்டின் காக்ஸ் பஜார் முகாமில் தஞ்சம் புகுந்தனர்.
</p><p>
அங்கு தற்போது நிதி குறைவால் வாழ்வாதாரம் கடினமாகி, பலர் ஆபத்தான கடல் பயணத்தைத் தேர்வு செய்யத் தள்ளப்பட்டுள்ளனர்.
</p><p></p><p>சமீபத்திய கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக கடல் பயணம் இன்னும் ஆபத்தானதாக மாறியுள்ளது. இந்த ஆண்டு மட்டும் அந்தமான் கடல் மற்றும் வங்காள விரிகுடாவில் 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் அல்லது காணாமல் போயுள்ளனர்.
</p><p>
ஐ.நா. அமைப்புகள், “இது உலகின் மிக ஆபத்தான கடல் பாதைகளில் ஒன்றாகும். தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் வலுப்படுத்தப்பட வேண்டும். அகதிகளுக்கான பாதுகாப்பு மற்றும் தஞ்சம் வழங்கப்பட வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளன.&nbsp;</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-17T00:17:07+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[மத்திய கிழக்கில் ஆட்டத்தை ஆரம்பித்துள்ள அமெரிக்கா! ஹோர்முஸ் நீரிணையை 'சிவப்புக் கோடு' என்று அறிவித்த ஈரான்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/which-calls-strait-of-hormuz-red-line-retaliates-1784246151"></link>
            <id>https://tamilwin.com/article/which-calls-strait-of-hormuz-red-line-retaliates-1784246151</id>
            <summary type="text">அமெரிக்கா ஹோர்முஸ் நீரிணையில் தலையிட நாங்கள் அனுமதிக்க மாட்டோம் இது ஈரானின் அசைக்க முடியாத சிவப்புக் கோடு (red line) ஆகும் என்று எச்சரிக்கை விடுக்கப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்கா ஹோர்முஸ் நீரிணையில் தலையிட நாங்கள் அனுமதிக்க மாட்டோம் இது ஈரானின் அசைக்க முடியாத சிவப்புக் கோடு (red line) ஆகும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p><p>

ஈரான் மீதான தாக்குதல்களை அமெரிக்கா தீவிரப்படுத்தியுள்ள நிலையில் மத்திய கிழக்கில் போர் பதற்றம் சூழ்ந்துள்ளது.</p><p></p><h2>தற்காலிகப் போர்நிறுத்தம்</h2><p> 

வடக்கு பகுதிகள் வரை தாக்குதல்களை நடத்தியதுடன், இஸ்லாமிய குடியரசான ஈரான் மீதான கடற்படை முற்றுகையை மீற முயன்றதாக குற்றம் சாட்டப்பட்ட கப்பல் ஒன்றின் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளது.</p><p>

இதற்கு பதிலடியாக, இப்பகுதியில் உள்ள அமெரிக்காவின் நட்பு நாடுகள் மீது ஈரான் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை ஏவியதுமேலும் தனது தாக்குதல்கள் தீவிரமடையக்கூடும் என்றும் எச்சரித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5f3d4960-7b46-4724-9b16-662b97862abc/26-6a597264dbbdc.webp' /></p><p>

கடந்த மாதம் ஒப்புக்கொள்ளப்பட்ட தற்காலிகப் போர்நிறுத்தம் முறிந்துவிட்ட நிலையில்ஹோர்முஸ் நீரிணையின் கட்டுப்பாட்டிற்காக அமெரிக்காவும் ஈரானும் மோதி வருவதால், இப்பகுதி கடந்த சில நாட்களாக இரு தரப்பு தாக்குதல்களையும் சந்தித்து வருகிறது.</p><p>அமெரிக்க தாக்குதல்களில் 35-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாகவும், 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் ஈரானிய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.</p><p></p><h2>&nbsp;சிவப்புக் கோடு&nbsp;</h2><p>

சமீபத்திய வன்முறை சுழற்சியில் முதன்முறையாக, ஈரானின் தலைநகரான தெஹ்ரானை சுற்றியுள்ள பகுதிகளிலும் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.</p><p> 

கடந்த பெப்ரவரி 28ஆம் திகதியன்று அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது போரைத் தொடங்கியபோது, ​​தெஹ்ரான் கப்பல் போக்குவரத்திற்கு அந்த நீரிணையை மூடியது.
</p><p>

இந்த நடவடிக்கை கச்சா எண்ணெய் விலையை வெகுவாக உயர்த்தியதுடன், பேச்சுவார்த்தைகளில் ஈரானுக்கு முக்கிய செல்வாக்கையும் அளித்தது.

ஈரானிய ராணுவத்தின் 'கதம் அல்-அன்பியா' மத்திய தலைமையகத்தின் செய்தித் தொடர்பாளர் கர்னல் எப்ராஹிம் ஜோல்ஃபகாரி ஒரு எச்சரிக்கையை விடுத்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/834ce30f-6ad2-44c0-becc-7b5d7b9b357e/26-6a5972658bd64.webp' /></p><p>
</p><p>

ஈரானின் பாலங்கள் மற்றும் மின் நிலையங்களை தாக்கக்கூடும் என்று ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் மீண்டும் விடுத்து வரும் எச்சரிக்கைகளை அமெரிக்கா செயல்படுத்தினால், இப்பகுதியில் உள்ள "அனைத்து உள்கட்டமைப்புகள்" மீதும் ஈரான் பரவலான தாக்குதல்களை நடத்தக்கூடும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p>

"எந்த சூழ்நிலையிலும், எந்த வகையிலும், ஒரு வெளிநாட்டு மற்றும் இப்பகுதிக்கு அப்பாற்பட்ட நாடான அமெரிக்கா ஹோர்முஸ் நீரிணையில் தலையிட நாங்கள் அனுமதிக்க மாட்டோம். இது ஈரானின் அசைக்க முடியாத சிவப்புக் கோடு (red line) ஆகும்," என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-17T00:08:10+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[மாத்தளை புதைகுழிக்குப் பின்னால் மறைந்திருக்கும் அவிழ்க்கப்படாத முடிச்சுக்கள்...!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/matale-mass-grave-sparks-row-over-gotabaya-1784246063"></link>
            <id>https://ibctamil.com/article/matale-mass-grave-sparks-row-over-gotabaya-1784246063</id>
            <summary type="text">2012-ஆம் ஆண்டு மாத்தளை மருத்துவமனை வளாகத்தில் கண்டெடுக்கப்பட்ட மனிதப் புதைகுழி, இலங்கையின் கடந்தகால மனித உரிமை மீறல்கள் குறித்த விவாதங்களை மீண்டும் தீ...</summary>
            <content type="html"><![CDATA[<p>2012-ஆம் ஆண்டு மாத்தளை மருத்துவமனை வளாகத்தில் கண்டெடுக்கப்பட்ட மனிதப் புதைகுழி, இலங்கையின் கடந்தகால மனித உரிமை மீறல்கள் குறித்த விவாதங்களை மீண்டும் தீவிரமாகத் தூண்டியுள்ளது.
</p><p>
இந்த மனிதப் புதைகுழிக்குக் காரணமான சம்பவங்கள் நடந்ததாகக் கருதப்படும் 1988 மே முதலாம் திகதி முதல் 1990 ஜனவரி வரையான காலப்பகுதியில், மாத்தளை மாவட்ட இராணுவ ஒருங்கிணைப்பு அதிகாரியாக லெப்டினன்ட் கேர்ணல் கோட்டாபய ராஜபக்சவே கடமையாற்றியுள்ளார்.
</p><p>
இந்த விவகாரத்தில் உயர்மட்ட இராணுவ மற்றும் அரசியல் புள்ளிகளின் பெயர்கள் தொடர்புபடுத்தப்பட்டதன் விளைவாக, தடயவியல் மற்றும் ஆணைக்குழு விசாரணைகள் அனைத்தும் அரசியல் தலையீடுகளால் முடக்கப்பட்டன.
</p><p>
இந்த நிலையில், பல்லாண்டுகள் கடந்தும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு உண்மை என்னவென்று வெளிப்படுத்தப்படாமல் இருப்பது, நீதி கிடைக்கும் என்ற நம்பகத்தன்மையைக் கேள்விக்குறியாக்கியுள்ளது.</p><p>

இது குறித்து இப்பதிவில் விரிவாக ஆராய்கின்றது லங்காசிறியின் Newsinsights நிகழ்ச்சி...</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/NUF5sRazdJY" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-17T00:05:13+00:00</updated>
        </entry>
    </feed>
