<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-07-15T17:23:08+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Manchu</name>
            </author>
            <title type="text"><![CDATA[அவல் தோசை செய்வது எப்படி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/how-to-prepare-aval-dosai-recipe-for-dinner-1784132016"></link>
            <id>https://manithan.com/article/how-to-prepare-aval-dosai-recipe-for-dinner-1784132016</id>
            <summary type="text">தேவையான பொருள்கள்அரிசி-2கிண்ணம்
உளுந்தம் பருப்பு-1 கிண்ணம்
அரிசி-2கிண்ணம்
அவல்- கால் கிண்ணம்
சீரகம், உப்பு மற்றும் எண்ணெய்
அவல்- கால் கிண்ணம்&amp;nbs...</summary>
            <content type="html"><![CDATA[<h2>தேவையான பொருள்கள்</h2><p>அரிசி-2கிண்ணம்
</p><p>உளுந்தம் பருப்பு-1 கிண்ணம்
</p><p>அரிசி-2கிண்ணம்
</p><p>அவல்- கால் கிண்ணம்
</p><p>சீரகம், உப்பு மற்றும் எண்ணெய்
</p><p>அவல்- கால் கிண்ணம்&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f27ccfa6-9592-42bf-b4a2-46497c853453/26-6a57be73126ec.webp' /></p><h2>செய்முறை</h2><p>முதலில் அரிசி, உளுந்தம் பருப்பை 5 மணி நேரம் ஊற வைக்கவும். அதேபோல் அவலை 45 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
</p><p>அனைத்தையும் தோசை ஊற்றும் பதத்துக்கு அரைத்துக்கொள்ளவும்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4aaa2d54-8bf7-42fb-bda1-bd1746aa60ba/26-6a57be73b7e77.webp' /></p><p>இதையடுத்து மாவை 8 மணி நேரம் புளிக்க வைக்க வேண்டும். பின்னர் உப்பு சேர்த்து தோசையாக ஊற்றவும்.
</p><p>அவ்வுளவுதான் அவல் தோசை தயார். காரச்சட்னியுடன் சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fe2f4b75-e788-4758-8a0c-fb3ce202e1de/26-6a57be746aa34.webp' /></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><i>&nbsp;சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் <a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"><b>WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள் <a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"><b>FOLLOW NOW</b></a>&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;&nbsp;<br></i></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-15T17:14:09+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழ் பேசும் கட்சிகளின் புதிய கூட்டணி ஒரு தரகு கூட்டு! இளங்குமரன் எம்.பி. விமர்சனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/new-alliance-tamil-parties-ilangumaran-mp-1784132821"></link>
            <id>https://tamilwin.com/article/new-alliance-tamil-parties-ilangumaran-mp-1784132821</id>
            <summary type="text">தமிழ் பேசும் கட்சிகள் கொழும்பில் ஒன்றிணைந்து மேற்கொண்ட
முன்னெடுப்புகள், மக்கள் நலன் சார்ந்தவை அல்ல, அவை வெறும் தரகு வேலைகளே என்று தேசிய மக்கள் சக்திய...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழ் பேசும் கட்சிகள் கொழும்பில் ஒன்றிணைந்து மேற்கொண்ட
முன்னெடுப்புகள், மக்கள் நலன் சார்ந்தவை அல்ல, அவை வெறும் தரகு வேலைகளே என்று தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற
உறுப்பினர் க.இளங்குமரன் குறிப்பிட்டார்.&nbsp;</p><p>
இது தொடர்பில் ஊடகங்களுக்கு அவர் கருத்துத் தெரிவிக்கையில், "தமிழ் பேசும் கட்சிகள் என்று கூறிக்கொண்டு சிலர் கொழும்பில்
ஒன்றுகூடியுள்ளனர்.</p><p></p><h2>&nbsp;மக்களின் தெளிவான சிந்தனை</h2><p> </p><p>இவர்கள் ஏன் தங்களின் சொந்தத்தாயகமான தமிழ்ப்
பிரதேசங்களில் கூட்டத்தை நடத்தவில்லை? இதற்கு முக்கிய காரணம், இவர்கள்
கொழும்பை மையமாகக் கொண்டு அரசியல் செய்பவர்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/253ba125-4c9c-4e51-bbd4-d45f33e56a77/26-6a57bec809508.webp' /></p><p> </p><p>இவர்களின் பிள்ளைகள்
தென்பகுதியில் திருமணம் முடித்தவர்கள், கொழும்பிலேயே தங்கியிருப்பவர்கள்.

தென்பகுதியில் தோல்வியடைந்த ஆட்சியாளர்கள் மீண்டும் இனவாதத்தைத் தூண்டி, அதன்மூலம் ஆட்சியைப் பிடிக்கத் துடிக்கின்றார்கள். </p><p>அதற்கு, தமிழ் மக்களின்
பிரதிநிதிகள் என்று கூறிக்கொள்ளும் இவர்கள் தரகு வேலைகளைப் பார்க்கின்றார்கள்.
மக்கள் இன்று தெளிவான சிந்தனையுடன் இருக்கின்றார்கள்.</p><p> எனவே, இது மக்களுக்கான
கூட்டம் அல்ல. தனிப்பட்ட நலன்களுக்காகக் கூடியவர்களின் கூட்டம்.
</p><p>
தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்று கூறிக்கொண்டு, வடக்கு மாகாணத்தில் ஒரு
கூட்டத்தைக் கூட நடத்தத் துணிவற்ற இவர்கள், கொழும்பில் உள்ள ஹோட்டல்களில்
சென்று கூடியிருப்பது வெட்கக்கேடான விடயமாகும்" என்று அவர் சாடினார்.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-15T17:09:30+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரான் மீது பகல் நேரத்திலும் அமெரிக்கா குண்டுமழை!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/us-bombs-attack-on-iran-even-during-the-day-1784134030"></link>
            <id>https://tamilwin.com/article/us-bombs-attack-on-iran-even-during-the-day-1784134030</id>
            <summary type="text">தென் ஈரானில் உள்ள கடற்கரை இராணுவ நிலைகளை இலக்காகக் கொண்டு,
அமெரிக்கப் படைகள் பகல் நேரத்திலும் வான்வழித் தாக்குதல்களைத் தொடங்கியுள்ளதாக அமெரிக்க இராணு...</summary>
            <content type="html"><![CDATA[<p>தென் ஈரானில் உள்ள கடற்கரை இராணுவ நிலைகளை இலக்காகக் கொண்டு,
அமெரிக்கப் படைகள் பகல் நேரத்திலும் வான்வழித் தாக்குதல்களைத் தொடங்கியுள்ளதாக அமெரிக்க இராணுவத்தின் மத்திய கட்டளை அலுவலகம் அறிவித்துள்ளது.</p><p>90 நிமிடங்கள் நீடித்த இந்தத் தாக்குதலில், ஹோர்முஸ் நீரிணைக்கு அருகில்
அமைந்துள்ள மிக முக்கியமான கிரேட்டர் துன்ப் தீவில் உள்ள ஈரானின் ஏவுகணைத்
தளங்கள் மற்றும் இராணுவக் கட்டமைப்புகள் அழிக்கப்பட்டதாக அமெரிக்கா
தெரிவித்துள்ளது.</p><p>

பொதுவாக இரவு நேரங்களில் மட்டுமே தாக்குதல் நடத்தி வந்த அமெரிக்கா, தற்போது
தனது தாக்குதல் வேகத்தை அதிகரித்து பகல் நேரத்திலும் குண்டுமழையைப் பொழிந்து
வருகிறது.</p><p></p><h2>எச்சரிக்கை</h2><p>
</p><p>
மறுபுறம், தென் ஈரானில் கடந்த சில நாட்களாக அமெரிக்கா நடத்திய தாக்குதல்களில்
30-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்றும், 260-க்கும்
அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர் என்றும் ஈரான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p>

இதற்கிடையே, ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள், பாலங்கள் மற்றும் முக்கியக்
குடிமைசார் உள்கட்டமைப்புகளை அடுத்த வாரத்தில் குறிவைக்கத் திட்டமிட்டுள்ளதாக
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும் எச்சரித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1a69497a-f362-49c1-8068-2c73869ebc78/26-6a57bd1863fd8.webp' /></p><p>
</p><p>
இது உலக அளவில் போர்க்குற்றக் குற்றச்சாட்டுகளுக்கு வழிவகுக்கும் என்ற பெரும்
கவலையை உலக நாடுகளிடையே எழுப்பியுள்ளது.
</p><p>
இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சர்ச்சைக்குரிய சட்டம் ஒன்றிற்கு
இஸ்ரேல் உச்ச நீதிமன்றம் தற்போது இடைக்காலத் தடை விதித்துள்ளது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-15T17:09:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[முதல்வர் விஜய்யின் ‘ஜன நாயகன்’ எப்போது ரிலீஸ் தேதி அறிவிப்பு - குஷியில் ரசிகர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/jana-nayagan-movie-release-date-announced-1784125426"></link>
            <id>https://manithan.com/article/jana-nayagan-movie-release-date-announced-1784125426</id>
            <summary type="text">தற்போதைய தழழக முதல்வரும் முன்னாள் நடிகருமான&amp;nbsp; விஜய் நடிப்பில் உருவாகி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘ஜன நாயகன்’ திரைப்படத்தின் வெளியீட்டு த...</summary>
            <content type="html"><![CDATA[<p>தற்போதைய தழழக முதல்வரும் முன்னாள் நடிகருமான&nbsp; விஜய் நடிப்பில் உருவாகி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘ஜன நாயகன்’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. </p><p>பல்வேறு காரணங்களால் தள்ளிப்போன இந்தப் படம், தற்போது ரசிகர்களின் நீண்டகால எதிர்பார்ப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளதுடன் ரசிகர்களை குஷியில் ஆழ்த்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d0b41859-2a4b-4932-b649-d1145b3e131c/26-6a579c5371c56.webp' /></p><p></p><h2>ஜனநாயகன்</h2><p>
ஹெச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். மேலும் மமிதா பைஜூ, பிரியாமணி உள்ளிட்ட பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். </p><p>அதேபோல் பிரகாஷ் ராஜ், கௌதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.அனிருத் இசையமைத்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bcd98851-cc0d-49cc-8b60-ad5aafdd89ea/26-6a579c5423051.webp' /></p><p>கேவிஎன் புரொடக்ஷன் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம், விஜய்யின் திரைப்பயணத்தில் முக்கியமான படமாகவும் இறுதி படமாகவும் பார்க்கப்படுகின்றது.&nbsp;</p><p>

முதலில் இப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த ஜனவரி மாதம் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், சென்சார் தொடர்பான பிரச்சினைகள் காரணமாக திட்டமிட்ட தேதியில் படத்தை வெளியிட முடியாத நிலை ஏற்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e1cfe606-4092-4032-b97a-11e2262acfaa/26-6a579c54c849a.webp' /></p><p> </p><p>சென்சார் சான்றிதழ் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்ததுடன், சான்றிதழ் வழங்குவதிலும் தாமதம் ஏற்பட்டது.

இதற்கிடையில், நடிகர் விஜய் அரசியல் களத்தில் கால் பதித்து, சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று தமிழக முதல்வராகவும் பொறுப்பேற்றார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/56b4812c-c6d1-4fa9-8aba-066f99de4980/26-6a579c557daef.webp' /></p><p></p><h2>எப்போது ரிலீஸ்?</h2><p>இந்நிலையில், கடந்த வாரம் இப்படத்திற்கு சென்சார் சான்றிதழ் வழங்கப்பட்டது. ‘ஜன நாயகன்’ திரைப்படம் ‘A’ சான்றிதழை பெற்றுள்ளது.

இதனைத் தொடர்ந்து, விஜய் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வந்த ‘ஜன நாயகன்’ திரைப்படம் வரும் ஜூலை 23-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. </p><p>நீண்ட இடைவெளிக்குப் பிறகு வெளியாகும் விஜய்யின் இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெறுமா என்ற எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்துள்ளது.</p><p><br></p><table class="table table-bordered"><tbody><tr><td>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW&nbsp;</a></u></b> &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-15T17:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Parthiban A</name>
            </author>
            <title type="text"><![CDATA[CM விஜய்யை நேரில் சந்தித்த சிவகார்திகேயன்! என்ன சொன்னார் பாருங்க]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://cineulagam.com/article/sivakarthikeyan-met-cm-vijay-insta-post-goes-viral-1784134641"></link>
            <id>https://cineulagam.com/article/sivakarthikeyan-met-cm-vijay-insta-post-goes-viral-1784134641</id>
            <summary type="text">நடிகர் விஜய் முதலமைச்சராக பதவி ஏற்ற பிறகு பல முன்னணி சினிமா நட்சத்திரங்கள் மற்றும் சினிமா துறையினர் என பலரும் நேரில் சென்று அவரை சந்தித்து வருகின்றனர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நடிகர் விஜய் முதலமைச்சராக பதவி ஏற்ற பிறகு பல முன்னணி சினிமா நட்சத்திரங்கள் மற்றும் சினிமா துறையினர் என பலரும் நேரில் சென்று அவரை சந்தித்து வருகின்றனர்.</p><p>அந்த புகைப்படங்களும் தினமும் இணையத்தில் வந்து வைரல் ஆகின்றன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6d90f7f8-31a4-4c8d-a17d-bac9f9bdfc68/26-6a57bbf5803de.webp' /></p><p>
</p><h2>சிவகார்த்திகேயன்</h2><p>இந்நிலையில் இன்று நடிகர் சிவகார்த்திகேயன் முதல்வர் விஜய்யை சந்தித்து இருக்கிறார். அது பற்றி இன்ஸ்டாவில் பதிவிட்டு இருக்கும் சிவகார்த்திகேயன் கூறி இருப்பதாவது..</p><p>"நடிகராக இருந்து நாட்டை ஆள்பவராக.. சில பயணங்கள் உண்மையிலேயே அசாதாரணமானவை."
</p><p>"முதலைச்சர் திரு சி.ஜோசப் விஜய் சாரை சந்தித்தது எனது கௌரவம். ரசிகன் எக்ஸ்பிரஸ் முதல், விஜய் விருதுகள் மேடை, GOAT படத்தில் ஒன்றாக நடித்தது வரை.. இப்போது இந்த தருணம். எப்போதும் எனக்கு ரொம்ப ஸ்பெஷல்."
</p><p>"சகோதரத்துவம், இந்த பிணைப்பு.. அது தொடரும்" என சிவகார்த்திகேயன் கூறி இருக்கிறார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-15T16:57:48+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தும் எண்ணம் இல்லை: ஈரான்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/no-plans-for-talks-with-us-right-now-iran-1784134025"></link>
            <id>https://tamilwin.com/article/no-plans-for-talks-with-us-right-now-iran-1784134025</id>
            <summary type="text">&amp;nbsp;அமெரிக்காவுடன் தற்போதைக்கு எந்தவொரு பேச்சுவார்த்தையிலும் ஈடுபடும் எண்ணம் ஈரானுக்கு இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
தங்களது நாட்டைப் பாதுகாப்பதில...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;அமெரிக்காவுடன் தற்போதைக்கு எந்தவொரு பேச்சுவார்த்தையிலும் ஈடுபடும் எண்ணம் ஈரானுக்கு இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>தங்களது நாட்டைப் பாதுகாப்பதில் மட்டுமே தற்போதைய கவனம் முழுமையாக உள்ளது என்றும் ஈரானிய வெளியுறவு அமைச்சின் ஊடகப் பேச்சாளர் இஸ்மாயில் பகாஹி தெரிவித்துள்ளார். </p><p>
அமெரிக்கா தனது சர்வதேச உறுதிமொழிகளை முறையாக நிறைவேற்றினால் மட்டுமே, ஈரானும் தனது சர்வதேச கடமைகளை மதித்து நடக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0c2fee55-52ce-4834-b994-f70c63eda951/26-6a57b98e2fd8d.webp' /></p><p>வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பகாஹி இது குறித்து மேலும் கூறியதாவது:
அமெரிக்கா தங்களது வாக்குறுதிகளை நிறைவேற்றும் வரை மட்டுமே எங்களது கடமைகளும் அமுலில் இருக்கும் என தெரிவித்துள்ளார்.</p><p> தற்காலிக புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் தங்களுக்குரிய பகுதியை நிறைவேற்ற அமெரிக்கா தவறியதை அடுத்து, அந்த ஒப்பந்தத்தின் கீழான கடமைகளை ஈரானும் கைவிட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
</p><p>அவர்கள் தங்களது கடமைகளை மீறிய பின்னர், அதற்கு ஈடாக நாங்கள் எந்தெந்தப் பகுதிகளில் எங்களது கடமைகளைத் தவிர்க்க வேண்டுமோ, அங்கெல்லாம் அவற்றைச் செயல்படுத்துவதை நிறுத்திக்கொண்டோம் என தெரிவித்துள்ளார்.
</p><p>இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்ட தற்காலிக போர்நிறுத்த உடன்படிக்கையை அமெரிக்கா தொடர்ந்து மீறி வருவதாக ஈரான் குற்றம் சாட்டியுள்ளது. </p><p>
தங்களது எண்ணெய் ஏற்றுமதி உரிமங்களை ரத்து செய்தது மற்றும் புதிய தடைகளை விதித்தது போன்ற அமெரிக்காவின் நடவடிக்கைகள் மூலம் இந்த ஒப்பந்தம் மீறப்பட்டுள்ளதாக ஈரான் சுட்டிக்காட்டியுள்ளது.&nbsp;&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-15T16:57:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரானில் அரசியல் கைதிகளுக்கான மரணதண்டனை நிறைவேற்றத்தில் உயர்வு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/massive-increase-in-executions-prisoners-in-iran-1784134631"></link>
            <id>https://tamilwin.com/article/massive-increase-in-executions-prisoners-in-iran-1784134631</id>
            <summary type="text">மத்திய கிழக்கில் நிலவி வரும் மோதல் மற்றும் பதற்றமான சூழ்நிலையைப் பயன்படுத்தி, ஈரானிய அரசாங்கம் அரசியல் கைதிகளுக்கு மரணதண்டனை நிறைவேற்றுவதை கணிசமாக அதி...</summary>
            <content type="html"><![CDATA[<p>மத்திய கிழக்கில் நிலவி வரும் மோதல் மற்றும் பதற்றமான சூழ்நிலையைப் பயன்படுத்தி, ஈரானிய அரசாங்கம் அரசியல் கைதிகளுக்கு மரணதண்டனை நிறைவேற்றுவதை கணிசமாக அதிகரித்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
</p><p>நோர்வேயின் ஒஸ்லோவைத் தளமாகக் கொண்டு இயங்கும் 'ஈரான் மனித உரிமைகள்' என்ற தன்னார்வ அமைப்பு தெரிவித்துள்ளது.</p><p>
ஈரானுக்கு உள்ளேயும் வெளியேயும் உறுப்பினர்களைக் கொண்டுள்ள இந்த அமைப்பின் தரவுகளின்படி, ஈரான் அரசு இந்த ஆண்டில் மட்டும் இதுவரை குறைந்தது 47 அரசியல் கைதிகளுக்கு மரணதண்டனையை நிறைவேற்றியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6f4a93c1-35d2-472e-8e72-b834d5d0c8d8/26-6a57bbe958215.webp' /></p><p> </p><p>
கடந்த ஆண்டு இதே காலப்பகுதியில் இந்த எண்ணிக்கை 16 ஆக மட்டுமே இருந்த நிலையில், தற்போது இது மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
</p><p>கடந்த ஆண்டின் இறுதியில் ஈரான் முழுவதும் வெடித்த பரவலான போராட்டங்களின் போது, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், போராட்டக்காரர்கள் மீது வன்முறையான அடக்குமுறைகளைக் கையாள வேண்டாம் என ஈரானியத் தலைமைக்கு எச்சரிக்கை விடுத்திருந்தார். </p><p>
அத்துடன், போராட்டக்காரர்களின் மீட்புக்கு அமெரிக்கா உறுதுணையாக நிற்கும் என்றும் அவர் உறுதியளித்திருந்தார்.</p><p>எனினும், அமெரிக்கா - ஈரான் இடையேயான மோதல் போக்கு நீடித்ததாலும், அதன் விளைவாக உலகளாவிய பொருளாதார பாதிப்புகள் மோசமடைந்ததாலும், வெள்ளை மாளிகையின் கடுமையான தொனி காலப்போக்கில் மென்மையடைந்தது. </p><p>
இதன் காரணமாக, ஈரான் அதிருப்தியாளர்களுக்கான அமெரிக்காவின் ஆதரவு குறையத் தொடங்கியது. இத்தகைய உலகளாவிய புவிசார் அரசியல் மாற்றங்களுக்கு மத்தியிலேயே, ஈரானில் மரணதண்டனைகள் தற்போது தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-15T16:57:20+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரச காணி மோசடி :முன்னாள் அமைச்சர்கள் இருவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/mervyn-prasanna-ranatunga-indicted-over-alleged-1784132595"></link>
            <id>https://ibctamil.com/article/mervyn-prasanna-ranatunga-indicted-over-alleged-1784132595</id>
            <summary type="text">போலி ஆவணங்களைப் பயன்படுத்தி கிரிபத்கொடவில் உள்ள அரசிற்குச் சொந்தமான நிலத்தை விற்க முயன்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், முன்னாள் அமைச்சர் மேர...</summary>
            <content type="html"><![CDATA[<p>போலி ஆவணங்களைப் பயன்படுத்தி கிரிபத்கொடவில் உள்ள அரசிற்குச் சொந்தமான நிலத்தை விற்க முயன்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா, முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மற்றும் மேலும் நான்கு பேர் மீது சட்டமா அதிபரால் புதன்கிழமை (15) அன்று குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டன.</p><p>கம்பகா உயர் நீதிமன்ற நீதிபதி நயன செனவிரத்னவின் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது இந்தக் குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டன.</p><h2>வழங்கப்பட்ட குற்றப்பத்திரிகை&nbsp;</h2><p>
</p><p>
சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான அரச சட்ட ஆலோசகர் சமதாரி பியசேன, குற்றம் சாட்டப்பட்ட ஒவ்வொருவருக்கும் குற்றப்பத்திரிகைகளை வழங்கினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2a38ceb9-8040-4225-8dcc-78fa02bc0bd4/26-6a57b97d3f8bf.webp' /></p><p>

குற்றம் சாட்டப்பட்ட ஆறு பேர்: முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா, முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, நவீன் வீரகோன், மில் ராய் பெரேரா, ஜயந்த கப்ரால் மற்றும் சரத் எதிரிசிங்க.
</p><p>
கிரிபத்கொடவில் உள்ள அரசாங்கத்திற்குச் சொந்தமான சொத்தை, போலி ஆவணங்களைப் பயன்படுத்தி விற்க குற்றம் சாட்டப்பட்டவர் முயன்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பான வழக்கு இதுவாகும்.&nbsp;</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-15T16:47:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஹார்முஸ் தாக்குதலில் கொல்லப்பட்ட மாலுமிகளில் பெரும்பாலோர் இந்த நாட்டவர்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/sailors-killed-hormuz-attacks-1784132879"></link>
            <id>https://news.lankasri.com/article/sailors-killed-hormuz-attacks-1784132879</id>
            <summary type="text">உலகளாவிய கடல்சார் ஊழியர்களில் சுமார் 12 சதவீதத்தினர் இந்தியர்கள் என்ற நிலையில், சமீபகாலமாக கடலில் நிலவும் ஆபத்துகளின் பெரும் பகுதியை இந்தியர்களே எதிர்...</summary>
            <content type="html"><![CDATA[<p>உலகளாவிய கடல்சார் ஊழியர்களில் சுமார் 12 சதவீதத்தினர் இந்தியர்கள் என்ற நிலையில், சமீபகாலமாக கடலில் நிலவும் ஆபத்துகளின் பெரும் பகுதியை இந்தியர்களே எதிர்கொண்டுள்ளனர்.</p><h2>கொல்லப்பட்ட மாலுமிகள்</h2><p>
</p><p>வெளியாகியுள்ள சமீபத்திய தரவுகளின் அடிப்படையில், ஈரானின் ஹார்முஸ் நீரிணையில் நடத்தப்படும் தாக்குதலில் கொல்லப்பட்ட மாலுமிகளில் பெரும்பாலோர் இந்தியர்கள் என்றேத் தெரிய வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3cfd71f9-d284-4c17-b435-95f59c39dd6c/26-6a57bc0e712f1.webp' /></p><p> </p><p>மார்ச் 1 முதல் ஜூலை 14, 2026 வரையிலான காலகட்டத்தில் ஹார்முஸ் நீரிணைப் பகுதியில் வணிகக் கப்பல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் கொல்லப்பட்ட 16 மாலுமிகளில் 7 பேர் (சுமார் 44 சதவீதம்) இந்தியர்கள் என்றே தெரிய வருகிறது. </p><p>மட்டுமின்றி, 2025-ஆம் ஆண்டில், உலகம் முழுவதும் கப்பல் உரிமையாளர்களால் கைவிடப்பட்ட மாலுமிகளில் 18 சதவீதம் பேர் இந்தியர்களாக இருந்தனர்; இதன் மூலம், தொடர்ந்து இரண்டாவது ஆண்டாகவும் இப்பாதிப்புக்குள்ளானவர்களில் இந்தியர்களே அதிக எண்ணிக்கையில் உள்ளனர். </p><p>ஜூன் 8 மற்றும் ஜூன் 11 ஆகிய திகதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில், MT Marivex, MT Settebello மற்றும் MT Jalveer ஆகிய எண்ணெய் கப்பல்கள் மீது அமெரிக்கப் படைகள் நடத்திய தாக்குதல்களில் மூன்று இந்தியக் கப்பல் ஊழியர்கள் கொல்லப்பட்டனர். </p><p>ஈரான் நடத்தியதாகக் கருதப்படும் தாக்குதல்களில் மேலும் நால்வர் கொல்லப்பட்டனர். மட்டுமின்றி, இந்தத் தாக்குதல்கள் நூற்றுக்கணக்கான பிற இந்தியக் கப்பல் ஊழியர்களையும் ஆபத்தில் தள்ளியது.</p><p></p><p> </p><p>ஹார்முஸ் நீரிணை, பாரசீக வளைகுடா மற்றும் ஓமன் வளைகுடா ஆகிய பகுதிகளில் தங்கள் கப்பல்கள் தாக்குதலுக்குள்ளானதைத் தொடர்ந்து, 180-க்கும் மேற்பட்ட இந்தியக் கப்பல் ஊழியர்கள் மீட்கப்பட்டனர். </p><p>இந்தியக் கடல்சார் ஊழியர்களைப் பொறுத்தவரை, ஏவுகணைகள் மற்றும் கடல்சார் மோதல்கள் மட்டுமே ஆபத்துகள் அல்ல; கப்பல் உரிமையாளர்களால் கைவிடப்படும் சூழலையும் அவர்கள் எதிர்கொள்கின்றனர்.</p><h2>கைவிடப்பட்டவர்கள்</h2><p> </p><p>இதனால், ஊதியம், அத்தியாவசியப் பொருட்கள் அல்லது தாயகம் திரும்பும் வழிவகை ஏதுமின்றி அவர்கள் பெரும்பாலும் வெளிநாட்டுத் துறைமுகங்களில் சிக்கிக்கொள்ளும் நிலை ஏற்படுகிறது.
</p><p>கடல்சார் தொழிலாளர் விதிகளின் அடிப்படையில், ஒரு மாலுமியைக் கப்பல் உரிமையாளர் அவரது சொந்த நாட்டிற்குத் திருப்பி அனுப்பத் தவறினாலோ, அத்தியாவசிய ஆதரவை வழங்கத் தவறினாலோ, அல்லது குறைந்தது இரண்டு மாதங்களுக்கு ஊதியம் வழங்கத் தவறினாலோ, அவர் கைவிடப்பட்டவராகக் கருதப்படுவார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6cbed5c6-a8a5-492f-bbae-b0d5efe26c27/26-6a57bc0f3c9f7.webp' /></p><p> </p><p>சர்வதேச போக்குவரத்துத் தொழிலாளர் கூட்டமைப்பின் (International Transport Workers' Federation) தரவுகளின் அடிப்படையில், 2024 மற்றும் 2025 ஆகிய இரு ஆண்டுகளிலும் கைவிடப்பட்ட சூழலால் அதிகம் பாதிக்கப்பட்ட நட்டவர்கள் இந்தியர்களே. </p><p>2025-ஆம் ஆண்டில் 1,125 இந்தியக் கடல்சார் பணியாளர்கள் கைவிடப்பட்டனர்; இது உலகம் முழுவதும் கைவிடப்பட்ட 6,223 கடல்சார் பணியாளர்களில் சுமார் 18 சதவீதமாகும். </p><p>கைவிடப்பட்ட மாலுமிகளின் எண்ணிக்கையில் 539 பேர்களுடன் பிலிப்பைன்ஸ் நாட்டினர் இரண்டாவது இடத்தில் உள்ளனர். அவர்களைத் தொடர்ந்து சிரியா நாட்டினர் 309 பேர்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளனர். </p><p>சமீபத்திய கணக்கெடுப்பு ஒன்றின்படி, உலகளாவிய மாலுமிப் பணியாளர்களில் சுமார் 12 சதவீதம் பேர் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-15T16:26:35+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Farook Sihan</name>
            </author>
            <title type="text"><![CDATA[தென்கிழக்குப் பல்கலைக்கழக பேரவைக்கு மூதவைப் பிரதிநிதிகள் தெரிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/election-senate-representatives-south-eastern-uni-1784131986"></link>
            <id>https://tamilwin.com/article/election-senate-representatives-south-eastern-uni-1784131986</id>
            <summary type="text">தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் இன்று (15) நடைபெற்ற மூதவை அமர்வில், பல்கலைக்கழக மூதவையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பேரவை உறுப்பினர்களாக சமூக விஞ்ஞானத...</summary>
            <content type="html"><![CDATA[<p>தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் இன்று (15) நடைபெற்ற மூதவை அமர்வில், பல்கலைக்கழக மூதவையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பேரவை உறுப்பினர்களாக சமூக விஞ்ஞானத் துறையின் தத்துவவியல் பேராசிரியரும் துறைத்
தலைவருமான பேராசிரியர் ஏ.எல்.எம். றியால் மற்றும் ஆங்கில மொழிக்
கற்பித்தல்&nbsp; துறையின் பேராசிரியர் ஏ.எம்.எம். நவாஸ் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
</p><p>
பல்கலைக்கழகத்தின் உயரிய தீர்மானங்களை எடுக்கும் நிர்வாக அமைப்பான பேரவையில்
மூதவையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்களாக இவ்விரு சிரேஷ்ட
கல்வியாளர்களும் தெரிவு செய்யப்பட்டிருப்பது, அவர்களின் கல்விசார் ஆளுமை,
நிர்வாக அனுபவம் மற்றும் பல்கலைக்கழக சமூகத்திடம் பெற்றுள்ள உயர்ந்த
நம்பிக்கைக்கு கிடைத்த முக்கிய அங்கீகாரமாக கல்வி வட்டாரங்களில்
கருதப்படுகிறது.
</p><p>
பேராசிரியர் ஏ.எல்.எம். றியால் கல்வி, ஆராய்ச்சி, நிர்வாகம்
மற்றும் பல்கலைக்கழக ஆளுமைத்துவம் ஆகிய துறைகளில் நீண்டகால அனுபவம் பெற்ற
கல்வியாளராகத் திகழ்கிறார்.</p><h2>பிரதிநிதிகள் தெரிவு</h2><p> </p><p>சமூக விஞ்ஞானத் துறையின் தத்துவவியல்
பேராசிரியராகவும் துறைத் தலைவராகவும் பணியாற்றி வரும் அவர், கல்வி மற்றும்
நிர்வாகத் துறைகளில் பல்வேறு பொறுப்புகளை திறம்பட வகித்துள்ளார்.</p><p>அதேவேளை, பேராசிரியர் ஏ.எம்.எம். நவாஸ் அவர்கள் ஆங்கில மொழிக்
கற்பித்தல் துறையில் நீண்டகால கல்வி, ஆய்வு மற்றும் நிர்வாக அனுபவம் கொண்ட
கல்வியாளராகப் பரவலாக அறியப்படுகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a88daf0a-0044-4df2-9976-d9239959c97d/26-6a57b336ad57d.webp' /></p><p> </p><p>தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கல்வி
வளர்ச்சிக்கும், தரமான ஆங்கில மொழிக் கல்வியை மேம்படுத்துவதற்கும் அவர்
ஆற்றிவரும் பங்களிப்புகள் குறிப்பிடத்தக்கவையாகும்.</p><p>இவர்களின் கல்விசார் அனுபவமும் தொலைநோக்குப் பார்வையும், பல்கலைக்கழகத்தின்
எதிர்கால கல்வி, ஆராய்ச்சி, நிர்வாக மற்றும் கொள்கைத் தீர்மானங்களை மேலும்
வலுப்படுத்துவதற்கு முக்கிய பங்களிப்பை வழங்கும் என பல்கலைக்கழக சமூகத்தினர்
நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-07-15T16:20:42+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[தென்பெண்ணை ஆற்றில் நச்சு நுரை விவகாரம் - இரு மாநில அரசுகளுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் முக்கிய உத்தரவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/thenpennai-river-pollution-orders-two-states-1784129963"></link>
            <id>https://ibctamilnadu.com/article/thenpennai-river-pollution-orders-two-states-1784129963</id>
            <summary type="text">தென்பெண்ணை ஆற்றில் மாசு ஏற்படுவதைத் தடுக்க, தமிழ்நாடு மற்றும் கர்நாடகா அரசுகள் இணைந்து பலனளிக்கும் தீர்வுகளைத் தயாரித்து தீர்ப்பாயத்தில் சமர்ப்பிக்க வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>தென்பெண்ணை ஆற்றில் மாசு ஏற்படுவதைத் தடுக்க, தமிழ்நாடு மற்றும் கர்நாடகா அரசுகள் இணைந்து பலனளிக்கும் தீர்வுகளைத் தயாரித்து தீர்ப்பாயத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என தென் மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
</p><p>
கெலவரப்பள்ளி அணையில் நுரை பொங்கி மாசுபாடு ஏற்பட்டது மற்றும் பெங்களூரு நகர கழிவுகள் தென்பெண்ணை ஆற்றில் கலப்பதாக வெளியான செய்திகளையடுத்து, தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தாமாக முன்வந்து இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fc11a5c0-1a03-49a9-866b-0ba4bec98458/26-6a57b02ba219a.webp' /></p><h2>விசாரணை</h2><p>

வழக்கை விசாரித்த அமர்வு, கடந்த 6 ஆண்டுகளாக பல உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டும் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் இல்லை என்றும், அண்மையில் எடுக்கப்பட்ட நீர் மாதிரிகள் கெலவரப்பள்ளி அணை நீர் தீவிரமாக மாசடைந்திருப்பதை உறுதிப்படுத்துவதாகவும் தெரிவித்தது.
</p><p>
இதையடுத்து, மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரிய மண்டல இயக்குநர் மற்றும் தமிழ்நாடு, கர்நாடகா மாசு கட்டுப்பாட்டு வாரியங்களின் உறுப்பினர் செயலர்கள் செப்டம்பர் 9-ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்க தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-15T16:08:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீர்கொழும்பு சிறையில் நடந்தது என்ன...! பின்னணியில் உள்ள அதிர்ச்சி உண்மைகள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/what-happened-in-negombo-prison-1784130604"></link>
            <id>https://ibctamil.com/article/what-happened-in-negombo-prison-1784130604</id>
            <summary type="text">1983 ஆம் ஆண்டு வெலிக்கடை சிறையில் இடம்பெற்ற சம்பவம் வெறுமனே கலவரம் அல்ல. மாறாக அது ஒரு திட்டமிட்ட இன அழிப்பு.தமிழ் பேசும் மக்கள் என்ற ஒரே காரணத்திற்கா...</summary>
            <content type="html"><![CDATA[<p>1983 ஆம் ஆண்டு வெலிக்கடை சிறையில் இடம்பெற்ற சம்பவம் வெறுமனே கலவரம் அல்ல. மாறாக அது ஒரு திட்டமிட்ட இன அழிப்பு.தமிழ் பேசும் மக்கள் என்ற ஒரே காரணத்திற்காக அவர்களின் பொருளாதாரம் ,வாழ்விடங்கள் என்பன திட்டமிட்டு அழிக்கப்பட்டன.அவர்கள் தமது வாழ்விடங்களில் இருந்து விரட்டியடிக்கப்பட்டார்கள். சுமார் 5000 பேர் கொல்லப்பட்டார்கள்.</p><p>சிறையில் குட்டிமணி,தங்கத்துரை உட்பட்டோர் மிகவும் கொடூரமாக கொல்லப்பட்டார்கள். இதற்கு பல சாட்சிகள் உண்டு.அந்த சம்பவத்துடன் தற்போது நீர்கொழும்பு சிறையில் நடந்த சம்பவத்தை ஒப்பிடமுடியாது.
</p><p>
இவ்வாறு தெரிவித்தார் மூத்த ஊடகவியலாளர் நிராஜ் டேவிட்.

ஐபிசி தமிழ் தொலைக்காட்சியின் "களம்" நிகழ்ச்சியில், அன்றைய காலகட்டத்தில் நிகழ்த்தப்பட்ட கொடூரங்கள் மற்றும் அதன் பின்னணியில் இருந்த அரசியல் சூழ்ச்சிகளை வரலாற்று சான்றுகளுடன் அவர் விவரிக்கும் தகவல்கள் காணொளியில்</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/WnyVEz62VZo" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-15T16:05:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீர்கொழும்பு சிறையில் நடந்தது என்ன..! பின்னணியில் உள்ள அதிர்ச்சி உண்மைகள்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/what-happened-in-negombo-prison-1784130764"></link>
            <id>https://tamilwin.com/article/what-happened-in-negombo-prison-1784130764</id>
            <summary type="text">1983 ஜூலை கலவரம் என்பது தற்செயலாக நடந்த ஒன்றல்ல, அது அரசாங்கத்தால் திட்டமிட்டு நடத்தப்பட்ட இனஅழிப்பு நடவடிக்கை என்று மூத்த ஊடகவியலாளர் நிராஜ் டேவிட் வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>1983 ஜூலை கலவரம் என்பது தற்செயலாக நடந்த ஒன்றல்ல, அது அரசாங்கத்தால் திட்டமிட்டு நடத்தப்பட்ட இனஅழிப்பு நடவடிக்கை என்று மூத்த ஊடகவியலாளர் நிராஜ் டேவிட் வரலாற்று ஆதாரங்களுடன் தெரிவித்துள்ளார். </p><p>

ஐபிசி தமிழ் தொலைக்காட்சியின் 'களம்' நிகழ்ச்சியில், கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். </p><p>

வெலிக்கடை மற்றும் நீர்கொழும்பு சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்த குட்டிமணி, தங்கத்துரை, ஜெகன் போன்ற தமிழ் அரசியல் கைதிகளின் கண்கள் தோண்டப்பட்டும் நாக்குகள் வெட்டப்பட்டு கொலை செய்யபட்டுள்ளனர்.
</p><p>
குட்டிமணியின் நாக்கை வெட்டிய ஒரு சகோதர இனத்தை சேர்த்த ஒரு நபர் அதிலுள்ள இரத்தத்தை குடித்து விட்டு நான் ஒரு விடுதலை புலிகளின் இரத்தைதை குடித்து விட்டேன் என்று கத்தியுள்ளார்.
</p><p>
அன்றைய அரசு இந்த சிறை படுகொலைக்கு அனுமதித்தது என்பதை அப்போதைய அமைச்சர் ஒருவரும் ஒப்புக்கொண்டுள்ளார்.</p><p> 

எனவே அதனை சமீபத்தில் நடந்த நீர்கொழும்பு சிறை கலவரத்துடன் ஒப்பிட முடியாது என்றும் குறிப்பிட்டார்.
</p><p> 
யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் நடைபெற்ற தாக்குதல், கலவரத்தின் தொடக்கப் புள்ளியாக எவ்வாறு அமைந்தது என்பதையும் விளக்கினார்.
</p><p>
இந்த விடயங்கள் தொடர்பான விரிவான விளக்கங்களுக்கு கீழுள்ள காணொளியை காண்க...&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/WnyVEz62VZo" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-15T15:58:11+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Manchu</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிம்பிளாக நடந்த சமந்தாவின் வளைகாப்பு... குழந்தை எப்போது பிறக்கும்னு தெரியுமா?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/samantha-baby-shower-function-photos-viral-1784126781"></link>
            <id>https://manithan.com/article/samantha-baby-shower-function-photos-viral-1784126781</id>
            <summary type="text">நடிகை சமந்தாவின் வளைகாப்பு விழா மிகவும் சிம்பிளாக நடைபெற்ற நிலையில், புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.நடிகை சமந்தாதமிழ் சினிமாவில் முன்னணி நடி...</summary>
            <content type="html"><![CDATA[<p>நடிகை சமந்தாவின் வளைகாப்பு விழா மிகவும் சிம்பிளாக நடைபெற்ற நிலையில், புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.</p><h2>நடிகை சமந்தா</h2><p>தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம்வரும் நிலையில், தற்போது சினிமாவிலிருந்து ஓய்வு எடுப்பதாக கூறியிருந்தார்.</p><p>ஆம் சமந்தா கர்ப்பமாக இருக்கும் நிலையில், கடந்த செவ்வாய்கிழமை குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் பாரம்பரிய முறைப்படி வளைகாப்பு நடைபெற்றுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c546d000-4fe9-4a6b-af02-e357dcae00e2/26-6a579f4143e45.webp' /><br></p><p>நடிகை சமந்தா தனது மாமியாருடன் இருந்த நெகிழ்ச்சியான தருணங்களை புகைப்படமாக வெளியிட்டுள்ளார்.</p><p><br></p><p> </p><p>சமந்தா கர்ப்பமாக இருக்கும் விடயத்தினை கடந்த ஜுன் மாதம் எங்கள் தங்கம் பட வெற்றிவிழாவில் தான் தெரியவந்தது. அப்போதே சந்தேகத்தில் காணப்பட்ட ரசிகர்கள் பல கேள்விகளை எழுப்பி வந்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ec925f3a-5221-4d8f-b4e6-eb07c8a126b1/26-6a579f41e5fb9.webp' /><br></p><p>கடைசியாக சமந்தாவே அதிகாரப்பூர்வமாக உறுதிபடுத்தியுள்ளார். வளைகாப்பு விழா குறித்து சமந்தா அதிகாரப்பூர்வமாக அறிவிக்காத நிலையில், சமூக வளைதளங்களில் புகைப்படத்தினை பார்த்து ரசிகர்கள், பிரபலங்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் வரும் டிசம்பர் மாதம் சமந்தாவுக்கு குழந்தை பிறக்கும் எனவும் கூறுகின்றனர்.</p><table class="table table-bordered"><tbody><tr><td><i>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன்<a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள் <a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"><b>FOLLOW NOW</b></a>&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;<br></i></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-15T15:45:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jaso</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரான் கடும் அச்சுறுத்தல்: ஹோர்முஸை தவிர பிற விநியோகப்பாதைகளும் மூடப்படும் அபாயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/iran-threatens-to-block-more-trade-routes-1784126933"></link>
            <id>https://ibctamil.com/article/iran-threatens-to-block-more-trade-routes-1784126933</id>
            <summary type="text">அமெரிக்கா தனது &quot;ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை&quot; நிறுத்தும் வரை ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டிருக்கும் என்று ஈரானின் புரட்சிகரப் பாதுகாப்புப் படையினர் தெரிவித்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்கா தனது "ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை" நிறுத்தும் வரை ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டிருக்கும் என்று ஈரானின் புரட்சிகரப் பாதுகாப்புப் படையினர் தெரிவித்தனர். மேலும், பிராந்தியத்தின் பிற எண்ணெய் மற்றும் எரிவாயு ஏற்றுமதி விநியோகப்பாதைகளையும் மூடிவிடுவோம் என்றும் அவர்கள் அச்சுறுத்தியுள்ளனர்.
</p><p>

அமெரிக்காவின் முற்றுகை மீண்டும் விதிக்கப்பட்டதற்குப் பதிலளிக்கும் விதமாக, ஈரானின் புரட்சிகரப் பாதுகாப்புப் படை (IRGC), "அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளின் நலன்களுக்குப் பயன்படும் மற்ற எண்ணெய் மற்றும் எரிவாயு ஏற்றுமதிப் பாதைகள் மூடப்படும் என எதிர்பார்க்க வேண்டும்" என்று அமெரிக்காவை எச்சரித்துள்ளது.</p><h2>எந்தெந்த விநியோக பாதைகள் பாதிக்கப்படலாம்</h2><p> </p><p>எந்தெந்த விநியோக பாதைகள் பாதிக்கப்படலாம் என்பது குறித்து அது விரிவாகக் கூறவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7b3907a6-a22f-4220-87db-7db075b2678f/26-6a57a3eb7d4f4.webp' /></p><p>செவ்வாய் இரவு முழுவதும் ஏழு மணி நேர நடவடிக்கையைத் தொடர்ந்து, புதன்கிழமை காலை ஈரான் மீது ஆளில்லா விமானம், வான்வழி மற்றும் கடற்படைத் தாக்குதல்களை நடத்தியதாக அமெரிக்க இராணுவத்தின் மத்திய கட்டளைப் பிரிவு (சென்ட்காம்) தெரிவித்த நிலையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டது.</p><p></p><h2>அமெரிக்க இலக்குகள் மீது&nbsp; தனித்தனித் தாக்குதல்</h2><p>
</p><p>
இதற்கிடையில், ஜோர்டான், குவைத் மற்றும் பஹ்ரைனில் உள்ள அமெரிக்க இலக்குகள் மீது அந்நாட்டு இராணுவம் தனித்தனித் தாக்குதல்களை நடத்தியதாக ஈரானின் அரசு ஒளிபரப்பு நிறுவனம் செய்தி வெளியிட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/206bbc3c-671f-4e91-9e5d-9a6942eefebd/26-6a57a3ec2e3aa.webp' /></p><p>

மேலும், ஈரானிலிருந்து ஏவப்பட்ட ஆளில்லா விமானங்கள் மற்றும் ஏவுகணைகளை இடைமறித்ததாக அமெரிக்காவின் நட்பு நாடுகளும் தெரிவித்தன.</p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணைந்து கொள்ளுங்கள்...!</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-15T15:38:19+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Laksi</name>
            </author>
            <title type="text"><![CDATA[மேர்வின் சில்வா மற்றும் பிரசன்ன ரணவீர உள்ளிட்ட 6 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/charge-sheet-filed-against-mervyn-silva-1784127386"></link>
            <id>https://tamilwin.com/article/charge-sheet-filed-against-mervyn-silva-1784127386</id>
            <summary type="text">முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா மற்றும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர உள்ளிட்ட ஆறு பேருக்கு எதிராக கம்பஹா மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்த...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா மற்றும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர உள்ளிட்ட ஆறு பேருக்கு எதிராக கம்பஹா மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.</p><p>போலி ஆவணங்களைப் பயன்படுத்தி கிரிபத்கொடவிலுள்ள அரசிற்குச் சொந்தமான காணியொன்றை விற்க முயன்றதாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டின் கீழ்&nbsp;&nbsp;குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p></p><h2>மோசடி</h2><p>கிரிபத்கொட பகுதியில் அரச நிலத்தை மோசடியாக விற்பனை செய்ய முயன்ற குற்றச்சாட்டு மற்றும் சட்டவிரோதமாக ரூ. 800 மில்லியனுக்கும் அதிகமான சொத்துக்களைச் சேர்த்ததாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் தொடரப்பட்ட வழக்குகள் உள்ளிட்ட பல வழக்குகளில் மேர்வின் சில்வா சமீபகாலமாகச் சிக்கியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c75d13a2-4165-4d1f-86c6-9f51a2e01c65/26-6a57a889975a7.webp' /></p><p> </p><p>இந்த வழக்குகளுக்காக அவர் கைது செய்யப்பட்டு, பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-15T15:35:13+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shadhu Shanker</name>
            </author>
            <title type="text"><![CDATA[அநுர சிறைக்குச் சென்றாலும் பெரும் ஆபத்து - யாரும் அறியாத திகில் நிமிடங்கள்..!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/negombo-prison-riot-new-updates-1784128010"></link>
            <id>https://tamilwin.com/article/negombo-prison-riot-new-updates-1784128010</id>
            <summary type="text">நீர்கொழும்பு சிறைச்சாலை வன்முறைச் சம்பவம் தற்போதைய அரசாங்கத்தின் வேகமான நடவடிக்கைகளுக்கு ஒரு &#039;தடைக்கல்லாக&#039; (Speed break) ஏற்படுத்தப்பட்டிருக்கலாம் என்...</summary>
            <content type="html"><![CDATA[<p>நீர்கொழும்பு சிறைச்சாலை வன்முறைச் சம்பவம் தற்போதைய அரசாங்கத்தின் வேகமான நடவடிக்கைகளுக்கு ஒரு 'தடைக்கல்லாக' (Speed break) ஏற்படுத்தப்பட்டிருக்கலாம் என்று சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளதாக பிரித்தானியாவைச் சேர்ந்த ராணுவ ஆய்வாளர் அரூஸ் தெரிவித்தார். </p><p>

 பாதாள உலகக் கும்பல்கள் மற்றும் போதைப்பொருள் மாபியாக்களின் பின்னணியில் வெளிநாடுகளில் இருந்து இவை இயக்கப்படுவதாகவும் குறிப்பிட்டார்.</p><p>தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், இராணுவம் மற்றும் பொருளாதார ரீதியாக தன்னை பலப்படுத்திக் கொள்வது பழைய அரசியல் சக்திகளுக்கு அச்சுறுத்தலாக மாறியுள்ளது என அவர் கூறினார்.</p><p> 

நீர்கொழும்பு சிறைச்சாலை கலவரத்திற்கு முதன்மையான காரணமாக, சிறைக்குள் தமது 'குட்டி ராஜ்ஜியத்தை' நடத்தி வந்த கும்பலுக்கும், அவர்களை கண்காணித்த உளவுப் பிரிவுக்கும் இடையே ஏற்பட்ட மோதலே காரணம் என்று குறிப்பிட்டார். </p><p>

சிறை வன்முறையைத் தொடர்ந்து நிலவும் பாதுகாப்பற்ற சூழல் காரணமாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்காவின் பிரான்ஸ் பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. </p><p>


அரசியல் ரீதியாக பலவீனமடைந்துள்ள எதிர்க்கட்சிகள், சட்ட ஒழுங்கை சீர்குலைப்பதன் மூலம் அரசாங்கத்தின் மீதான மக்களின் நம்பிக்கையைச் சிதைக்க முயற்சிக்கின்றனர்.
</p><p>
ஜூலை மாதத்தில் பல முக்கிய அரசியல் பிரமுகர்கள் மீதான வழக்குகள் வரவுள்ள நிலையில், சிறைக் கலவரம் இச்செய்திகளை மழுங்கடிக்கப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம்.
</p><p>
இந்த வன்முறையானது நாட்டின் சட்டம் ஒழுங்கை சீர்குலைத்து, முதலீடுகளைத் தடுத்து, தற்போதைய அரசாங்கத்தை ஸ்திரமற்ற நிலைக்குத் தள்ளும் நோக்கம் கொண்டதாகப் பார்க்கப்படுகிறது என குறிப்பிட்டார். </p><p>

இந்த விடயங்கள் தொடர்பில் ஆராய்கின்றது லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சி...</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/to1YQFyZKn8" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-15T15:21:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[லஞ்சப் புகார்களுக்கு வாட்ஸ்அப் வசதி - தமிழ்நாடு அரசு அறிவிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/tamilnadu-bribery-complaint-whatsapp-no-release-1784127637"></link>
            <id>https://ibctamilnadu.com/article/tamilnadu-bribery-complaint-whatsapp-no-release-1784127637</id>
            <summary type="text">தமிழ்நாட்டில் அரசு ஊழியர்கள் லஞ்சம் கேட்டால், பொதுமக்கள் 9498180936 என்ற வாட்ஸ்அப் எண்ணுக்கு தகவல் அனுப்பி புகார் அளிக்கலாம் என்று ஊழல் தடுப்பு மற்றும...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழ்நாட்டில் அரசு ஊழியர்கள் லஞ்சம் கேட்டால், பொதுமக்கள் 9498180936 என்ற வாட்ஸ்அப் எண்ணுக்கு தகவல் அனுப்பி புகார் அளிக்கலாம் என்று ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகம் (DVAC) அறிவித்துள்ளது.
</p><p>
மேலும், dvac@nic.in என்ற மின்னஞ்சல் முகவரி மற்றும் தொலைபேசி எண்கள் மூலமாகவும் புகார்கள் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bde36b5e-e86d-476b-8934-10dad8460990/26-6a57a28e50b8b.webp' /></p><p><span style="color: inherit; font-size: 1.75rem;">செயலாளர் சுற்றறிக்கை</span></p><p> </p><p>அதேபோல், சென்னை ஆலந்தூரில் உள்ள இயக்குநரக அலுவலகத்தில் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ புகார் அளிக்கவும் வசதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.</p><p>

இதனுடன், "லஞ்சம் வாங்குவதும், கொடுப்பதும் குற்றம்" என்ற விழிப்புணர்வு அறிவிப்புப் பலகையை அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் பொது இடங்களில் கட்டாயம் காட்சிப்படுத்த வேண்டும் என்றும், இதை அனைத்து துறைத் தலைவர்களும் மாவட்ட ஆட்சியர்களும் உறுதி செய்ய வேண்டும் என்றும் தலைமைச் செயலாளர் சுற்றறிக்கை மூலம் அறிவுறுத்தியுள்ளார்.</p>]]></content>
            <updated>2026-07-15T15:09:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கையில் 'பாலியல் கல்வி தகவல் வழிகாட்டுதல்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/guidelines-on-sexual-education-information-1784119347"></link>
            <id>https://jvpnews.com/article/guidelines-on-sexual-education-information-1784119347</id>
            <summary type="text">&amp;nbsp; பொதுமக்களுக்கு பாலியல் கல்வி குறித்த தகவல்களை வழங்குவதற்கு பின்பற்றப்பட வேண்டிய &#039;பாலியல் கல்வி தகவல் வழிகாட்டுதல்களை&#039; அறிமுகப்படுத்தும் தேசிய ந...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; பொதுமக்களுக்கு பாலியல் கல்வி குறித்த தகவல்களை வழங்குவதற்கு பின்பற்றப்பட வேண்டிய 'பாலியல் கல்வி தகவல் வழிகாட்டுதல்களை' அறிமுகப்படுத்தும் தேசிய நிகழ்வு, இன்று (15) கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறுவதாக சுகாதார மற்றும் ஊடக அமைச்சு தெரிவித்துள்ளது.
</p><p>
சுகாதார அமைச்சின் சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த நிகழ்வில், பொது மக்கள், பாடசாலைக் கட்டமைப்பு மற்றும் இளைஞர்களை இலக்காகக் கொண்ட பிரத்தியேகமான பாலியல் தகவல் வழிகாட்டுதல்கள் மற்றும் ஆய்வு அறிக்கைகள் உத்தியோகபூர்வமாக வெளியிடப்படவுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/230ee418-b5f9-4f9e-96dd-33f715d40f5b/26-6a5780348a09f.webp' /></p><p>

 இந்த நிகழ்வின் ஒரு பகுதியாக, தொழிற்பயிற்சித் துறையை ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சூழலாக மாற்றும் நோக்கில் சிறப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றும் கைச்சாத்திடப்படவுள்ளது.
</p><p>
இந்த வழிகாட்டுதல்கள் மூலம் பாலியல் கல்வி தொடர்பான விழிப்புணர்வை சமூகத்தில் சரியான முறையில் கொண்டு செல்வதற்கும், ஆரோக்கியமான எதிர்கால சந்ததியை உருவாக்குவதற்கும் அமைச்சு முன்னுரிமை அளித்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-07-15T15:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sivaraj</name>
            </author>
            <title type="text"><![CDATA[மெஸ்ஸியை தடுப்பதற்கான வழிகளை..இங்கிலாந்து பயிற்சியாளர் கூறிய விடயம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/england-coach-said-about-control-messi-tricks-1784127190"></link>
            <id>https://news.lankasri.com/article/england-coach-said-about-control-messi-tricks-1784127190</id>
            <summary type="text">அர்ஜென்டினா வீரர் மெஸ்ஸியை தடுப்பது குறித்த வழிகளை கண்டுபிடித்து வருவதாக இங்கிலாந்து பயிற்சியாளர்&amp;nbsp; தெரிவித்துள்ளார்.&amp;nbsp;அர்ஜென்டினா - இங்கிலாந்...</summary>
            <content type="html"><![CDATA[<p>அர்ஜென்டினா வீரர் மெஸ்ஸியை தடுப்பது குறித்த வழிகளை கண்டுபிடித்து வருவதாக இங்கிலாந்து பயிற்சியாளர்&nbsp; தெரிவித்துள்ளார்.&nbsp;</p><h2>அர்ஜென்டினா - இங்கிலாந்து&nbsp;</h2><p>

FIFA உலகக்கிண்ணத் தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் அர்ஜென்டினா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a4ac2c0a-5583-4c6b-b4fd-f7b23c5eaa1f/26-6a579fe9cbdc8.webp' />&nbsp;</p><p></p><p>

அர்ஜென்டினா ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸியை (Lionel Messi) சமாளித்து, வெற்றி பெறும் முனைப்பில் இங்கிலாந்து அணி உள்ளது.&nbsp;</p><h2>தாமஸ் துச்செல்</h2><p>
இதுகுறித்து அந்த அணியின் பயிற்சியாளர் தாமஸ் துச்செல் (Thomas Tuchel) பேசியுள்ளார்.</p><p> 

மெஸ்ஸி குறித்து அவர் கூறுகையில், "மெஸ்ஸியை தடுப்பதற்கான அனைத்து வழிகளையும் கண்டுபிடித்து வருகிறோம். 

ஆட்டத்தின் போக்கை மாற்றும் வகையில் அவர் செயல்படுகிறார். அவரது நகர்வுகளை கவனித்து தயாராகி வருகிறோம்.</p><p>

அவர்களின் ஆட்டத்தில் சில பணிகளை நாங்கள் கண்டறிந்துள்ளோம் என்று நினைக்கிறேன். ஆனால், அந்தப் பணிகளை மூடிவிட்டால், (மெஸ்ஸி) ஒருவேளை புதிய ஒன்றைக் கண்டுபிடித்து, புதிதாக ஒன்றை உருவாக்குவார். அதுதான் அவருடைய மிகப்பெரிய பலம்" என தெரிவித்துள்ளார்.&nbsp; &nbsp; &nbsp; &nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4687a62e-2084-40fa-add5-183bfacbf7f2/26-6a579fe91edee.webp' /></p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"> WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-15T14:57:23+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Kamal</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீர்கொழும்பு மாநகர சபை மேயர் பதவி விலகல்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/mayor-of-negombo-municipal-council-resigns-1784127276"></link>
            <id>https://tamilwin.com/article/mayor-of-negombo-municipal-council-resigns-1784127276</id>
            <summary type="text">&amp;nbsp;தேசிய மக்கள் சக்தியைப் (NPP) பிரதிநிதித்துவப்படுத்தும் நீர்கொழும்பு மாநகர சபையின் மேயர் ரொபர்ட் ஹின்கெந்த தனது பதவியிலிருந்து விலகுவதாக தகவல்கள்...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;தேசிய மக்கள் சக்தியைப் (NPP) பிரதிநிதித்துவப்படுத்தும் நீர்கொழும்பு மாநகர சபையின் மேயர் ரொபர்ட் ஹின்கெந்த தனது பதவியிலிருந்து விலகுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p>
தனது தனிப்பட்ட காரணங்களுக்காகவே இவ்வாறு பதவியிலிருந்து விலகத் தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. </p><p>
இதற்கு முன்னரும் பல சந்தர்ப்பங்களில் ரொபர்ட் ஹின்கெந்த தனது மேயர் பதவி விலகுவதாக அறிவித்திருந்த போதிலும், பின்னர் அவர் அந்த முடிவை மாற்றிக்கொண்டதாக அறிக்கைகள் வெளியாகி இருந்தன.</p><p>[DCXD8N
]</p><p> 
எனினும், அவர் இன்று (15) உத்தியோகபூர்வமாக தனது பதவி விலகல் கடிதத்தை கையளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
</p><p>தேசிய மக்கள் சக்தி கட்சி தரப்பில் இதுவரையில் அதிகாரபூர்வமாக எவ்வித தகவல்களும் இது குறித்து வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.&nbsp;</p>]]></content>
            <updated>2026-07-15T14:54:51+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[அழிந்து வரும் மரங்களைக் காக்கக் கழிவிலிருந்து பசுமை ஆற்றல்: பெண்ணின் நெகிழ்ச்சியான சாதனை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/green-energy-from-waste-to-save-endangered-trees-1784125276"></link>
            <id>https://tamilwin.com/article/green-energy-from-waste-to-save-endangered-trees-1784125276</id>
            <summary type="text">உகாண்டா நாட்டில் கரிக்காக பாரம்பரிய மரங்கள் பெருமளவில் வெட்டப்பட்டு வரும்
நிலையில், அங்குள்ள ஒரு பெண்மணி வீணாகும் கழிவுகளைக் கொண்டு தூய்மையான
எரிசக்...</summary>
            <content type="html"><![CDATA[<p>உகாண்டா நாட்டில் கரிக்காக பாரம்பரிய மரங்கள் பெருமளவில் வெட்டப்பட்டு வரும்
நிலையில், அங்குள்ள ஒரு பெண்மணி வீணாகும் கழிவுகளைக் கொண்டு தூய்மையான
எரிசக்தியை உருவாக்கிப் புரட்சி செய்து வருகிறார்.</p><p>

உகாண்டாவின் வடக்குப் பகுதியில் கரிக்காக ஷியா மரங்கள் அழிக்கப்படுவதைக் கண்டு
கவலையடைந்த லூசி எவர்லின் ஆட்டிம் என்ற காலநிலை ஆர்வலர், இதற்கு மாற்றாக ஒரு
புதிய உத்தியைக் கையாண்டுள்ளார்.
</p><p>
கடந்த 2023ஆம் ஆண்டு அவர் தொடங்கிய 'மொயாவோ ஆப்பிரிக்கா முன்முயற்சி' என்ற
சமூக நிறுவனம், வீணாகத் தூக்கி எறியப்படும் ஷியா பழங்களின் உமிகளைக் கொண்டு
சமையல் எரிபொருள் கட்டிகளை தயாரித்து வருகிறது.</p><p></p><h2>பசுமை ஆற்றல்</h2><p>
</p><p>
உகாண்டாவில் சுமார் 90 சதவீத வீடுகள் சமையலுக்குக் கரியையே நம்பியிருப்பதால்,
ஆண்டுதோறும் 1,22,000 ஹெக்டேயளர் காடுகள் அழிக்கப்பட்டு வருகின்றன.
</p><p>
லூசியின் இந்தத் திட்டம் காடுகளைப் பாதுகாப்பதோடு மட்டுமன்றி, 1,200க்கும்
மேற்பட்ட கிராமப்புறப் பெண்களுக்கு வேலைவாய்ப்பையும் தற்சார்பையும்
வழங்கியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/01483718-d47c-48c5-95c1-8f8700955b93/26-6a579cd064d15.webp' /></p><p>

இந்த அமைப்பின் மூலம் பயிற்சி பெற்ற பெண்கள், ஷியா உமிகளைச் சேகரித்து, அவற்றை
இடித்து, களிமண் மற்றும் மரவள்ளிக்கிழங்கு மாவுடன் கலந்து எரியூட்டும்
கட்டிகளாக மாற்றித் தங்களின் சமையல் தேவைகளுக்கும் பயன்படுத்தி, விற்பனையும்
செய்து வருகின்றனர்.
</p><p>
காடுகளைப் பாதுகாப்பதுடன், கிராமப்புறப் பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும்
இந்த சுற்றுச்சூழல் நட்பு முயற்சிக்கு உலக அளவில் பாராட்டுகள் குவிந்து
வருகின்றன.</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-15T14:44:59+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthikraja</name>
            </author>
            <title type="text"><![CDATA[அர்ஜென்டினாவை உலக கிண்ணத்தில் இருந்து வெளியேற்ற 1 கோடி பேர் கையெழுத்து - என்ன காரணம்?]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/1cr-sign-petition-kickout-argentina-fifa-world-cup-1784126092"></link>
            <id>https://news.lankasri.com/article/1cr-sign-petition-kickout-argentina-fifa-world-cup-1784126092</id>
            <summary type="text">அர்ஜென்டினாவை உலக கிண்ண தொடரிலிருந்து இருந்து வெளியேற்ற கோரி 1 கோடி பேர் கையெழுத்திட்டுள்ளனர்.

அர்ஜென்டினாவை வெளியேற்ற 1 கோடி பேர் கையெழுத்து

அம...</summary>
            <content type="html"><![CDATA[<p>அர்ஜென்டினாவை உலக கிண்ண தொடரிலிருந்து இருந்து வெளியேற்ற கோரி 1 கோடி பேர் கையெழுத்திட்டுள்ளனர்.
</p><h3>
அர்ஜென்டினாவை வெளியேற்ற 1 கோடி பேர் கையெழுத்து
</h3><p>
அமெரிக்கா, கனடா, மெக்சிகோவில் நடைபெற்று வரும் 2026 உலக கிண்ண கால்பந்து தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுளளது.</p><p> 

முதல் அரையிறுதியில், பிரான்ஸை வீழ்த்தி ஸ்பெயின் வெற்றி பெற்றுள்ளது. </p><p>

2வது அரையிறுதியில், நடப்பு சாம்பியனான அர்ஜென்டினா, இங்கிலாந்தை எதிர்கொள்கிறது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6f450ef7-1258-485e-98ee-557f5570e223/26-6a579a8dadc34.webp' /></p><p> 

இந்நிலையில், நடுவர்கள் அர்ஜென்டினா அணிக்கு சாதகமாக செயல்படுவதாக மற்ற அணிகள் குற்றச்சாட்டு வைத்துள்ளன. </p><p>

இந்த உலகக் கோப்பை தொடரில் இதுவரை எந்தவொரு தோல்வியையும் சந்திக்காமல் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது.&nbsp;</p><p>

நாக் அவுட் சுற்றில் எகிப்து அணி 2-0 என முன்னிலையில் இருந்தபோது, அந்த அணியின் முக்கியமான கோல் ஒன்று VAR மூலம் ரத்து செய்யப்பட்டதோடு, எகிப்து வீரர் முகமது சலா மீது பெனால்டி எல்லைக்குள் நடந்த தவறான செயலுக்கு நடுவர் அனுமதி மறுத்தார்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cf0bf07c-2e51-4703-9ef9-5b12a5449585/26-6a579a8e5f2b7.webp' /></p><p>

இதனையடுத்து, 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற அர்ஜென்டினா காலிறுதிக்கு தகுதி பெற்றது. </p><p>

இந்த போட்டியின் முடிவு முன்கூட்டியே திட்டமிட்டபட்டது என எகிப்து பயிற்சியாளர் குற்றஞ்சாட்டினார். இது குறித்து, எகிப்து கால்பந்து சம்மேளனம் (EFA) பிபாவிடம் அதிகாரப்பூர்வமாக புகார் அளித்தது. ஆனால் நடுவரின் முடிவு சரியானது என பிபா தெரிவித்தது. </p><p>

இந்நிலையில், உலக கிண்ண தொடரிலிருந்து அர்ஜென்டினா அணியை வெளியேற்ற வேண்டுமென இனைய வழியில் பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.</p><p>argentinaout.org என்று இணையதளத்தில் அர்ஜென்டினாவை வெளியேற்றுக என 1 கோடி கையெழுத்தை இலக்காக வைத்து பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/018d18b7-5fad-40ab-a45f-4cefaa57b7d5/26-6a579a8f125bb.webp' /></p><p>

இதில், "ஃபிஃபாவும் நடுவர்களும் லயோனல் மெஸ்ஸி மற்றும் அர்ஜென்டினாவுக்குச் சாதகமாகப் பாரபட்சமாக நடந்துகொள்கிறார்கள் என்பது வெளிப்படையாகத் தெரிகிறது.</p><p> 

வெற்றியாளர் ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்டுவிட்ட நிலையில், உலகின் மற்ற நாடுகள் ஏன் போட்டியிட வேண்டும்? அர்ஜென்டினாவை உலகக் கோப்பையிலிருந்து வெளியேற்றி, மற்ற அனைவருக்கும் ஒரு நியாயமான வாய்ப்பைக் கொடுங்கள்." என குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p> 

இதில், தற்போது வரை 1.04 கோடி பேர் கையெழுத்திட்டுள்ளனர்.&nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி<a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank"><b> WHATSAPP CHANNEL </b></a>இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table><p><br></p>]]></content>
            <updated>2026-07-15T14:35:14+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Manchu</name>
            </author>
            <title type="text"><![CDATA[சப்பாத்தி அருமையான சைடிஷ் முட்டை மசாலா... வெறும் பத்து நிமிஷம் போதும்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/egg-gravy-only-10-minutes-recipe-tamil-1784121978"></link>
            <id>https://manithan.com/article/egg-gravy-only-10-minutes-recipe-tamil-1784121978</id>
            <summary type="text">அசைவ பிரியர்களுக்கு பிடித்தமான முட்டை மசால் வெறும் 10 நிமிடத்தில் எவ்வாறு செய்யலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.பொதுவாக அசைவ பிரியர்களுக்கு பிடித்தமான உண...</summary>
            <content type="html"><![CDATA[<p>அசைவ பிரியர்களுக்கு பிடித்தமான முட்டை மசால் வெறும் 10 நிமிடத்தில் எவ்வாறு செய்யலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.</p><p>பொதுவாக அசைவ பிரியர்களுக்கு பிடித்தமான உணவுகளி் ஒன்று தான் முட்டை. சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை முட்டையை விரும்பி சாப்பிடுகின்றனர்.</p><p>முட்டையில் அதிகமான ஊட்டச்சத்துக்கள் உள்ள நிலையில், குழம்பாகவும், ஆம்லேட், பொரியல் என செய்து சாப்பிட்டிருப்பீர்கள். தற்போது வெறும் 10 நிமிடத்தில் அசத்தலான மசால் எவ்வாறு செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/10e58790-a9d1-450c-8abe-4e74fa994334/26-6a57987567b9e.webp' /></p><h2><span style="color: inherit; font-size: 1.75rem;">தேவையான பொருட்கள்</span></h2><p>முட்டை - 4<br>வெங்காயம் - 2<br>தக்காளி - 2<br>பச்சை மிளகாய் - 2&nbsp;<br>இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 ஸ்பூன்<br>மிளகாய் பொடி - 1 ஸ்பூன்<br>உப்பு - தேவையான அளவு<br>மல்லி இலை - சிறிதளவு<br>கறிவேப்பிலை - 1 கொத்து<br>எண்ணெய் - 2 ஸ்பூன்<br>கரம் மசாலா - அரை ஸ்பூன்<br>மல்லி தூள் - 1 ஸ்பூன்<br>மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c890829d-c817-4ef7-b30b-438ea97506b1/26-6a57987616743.webp' /></p><h2>செய்முறை</h2><p>மிக்ஸி ஜாரில் வெங்காயம் தக்காளி, மிளகாய், கறிவேப்பிலை, மல்லி இலை, உப்பு இவற்றினை சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.</p><p>கடாய் ஒன்றினை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் விடவும். அதனுடன் மிளகாய், மல்லி, மஞ்சள் பொடிகள், கரம் மசாலா இவற்றினை சேர்க்கவும்.&nbsp;</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/67f76f24-e21d-4483-b8a5-b40c45379f5e/26-6a579876ba250.webp' /></p><p>மேலும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்றாக கலந்துவிடவும். பின்பு இதனுடன் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து நன்றாக கிளறவும்.</p><p>எண்ணெய் பிரிந்து வந்ததும், ஒரு கப் தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும். பின்பு முட்டையை ஒவ்வொன்றாக உடைத்து ஊற்றி&nbsp; 6 நிமிடம் கழித்து இறக்கினால் சுவையான முட்டை மசாலா தயார்.&nbsp;&nbsp;<br></p><table class="table table-bordered"><tbody><tr><td><i>சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன்<a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"><b> WHATSAPP CHANNEL</b></a> இல் இணையுங்கள் <a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank"><b>FOLLOW NOW&nbsp; </b></a>&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;<br></i></td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-15T14:35:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sulokshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழ் செம்மணியில் இன்றும் சிறு குழந்தைகளின் எலும்பு கூடுகள் அடையாளம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/skeletons-children-identified-chemmani-mass-grave-1784120343"></link>
            <id>https://jvpnews.com/article/skeletons-children-identified-chemmani-mass-grave-1784120343</id>
            <summary type="text">&amp;nbsp; யாழ்ப்பாணம், செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 33ஆவது நாளான இன்று 02 சிறிய குழந்தைகளின் எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது....</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp; யாழ்ப்பாணம், செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 33ஆவது நாளான இன்று 02 சிறிய குழந்தைகளின் எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.

அத்துடன் 02 மனித எச்சங்களின் குவியல்களும் அடையாளம் காணப்பட்டுள்ளது.</p><p>

 எனினும் இன்றையதினம் மனித எலும்புக்கூடுகள் எவையும் அகழந்து எடுக்கப்படவில்லை என சட்டத்தரணி நிறைஞ்சன் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4f8e8f80-3ce2-43fb-b398-4bde8113d6ac/26-6a5784188f1fd.webp' /></p><h2>மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள்</h2><p>செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் 56 நாட்கள் முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், 32 நாட்கள் அகழ்வு பணிகள் இடம்பெற்றுள்ள நிலையில் , கடந்த 23ஆம் திகதியுடன் அகழ்வு பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது.
</p><p>
இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 26ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு , செப்டெம்பர் மாதம் 3ஆம் திகதி வரையிலான 45 நாட்கள் நடைபெற்ற போது , முதலாம் கட்டத்தில் அகழ்ந்து எடுக்கப்பட்ட 19 என்பு கூடுகள் உட்பட 240 என்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டன.</p><p></p><p>

இந்நிலையில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளுக்காக 56 நாட்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் 27ஆம் திகதி மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் ஆரம்பிக்கப்பட்டு மே மாதம் 09ஆம் திகதி வரையிலான 12 நாட்கள் இடம்பெற்ற அகழ்வு பணிகளில் 21 என்பு கூடுகள் மீட்கப்பட்ட நிலையில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.</p><p></p><p>

முதலாம் , இரண்டாம் கட்டங்கள் மற்றும் மூன்றாம் கட்டத்தில் 32 நாட்கள் முன்னெடுக்கப்பட்ட அகழ்வு பணிகளில் 412 என்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் 409 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-15T14:30:00+00:00</updated>
        </entry>
    </feed>
