<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com</title>
    <subtitle type="html"><![CDATA[தமிழ் செய்தி, விசேட செய்தி, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, மரண அறிவித்தல், லங்காசிறி, சிறிலங்கா தொடர்பாக அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம், Tamil onlie news, Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, World News - Lankasri.com, NewLankasri, LankasriNew, Lankasri New, New Lankasri]]></subtitle>
    <link href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <id>https://lankasri.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://lankasri.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/lk/img/logo.png</logo>
            <updated>2026-07-10T21:20:52+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Kowshi</name>
            </author>
            <title type="text"><![CDATA[நீர்கொழும்பு சிறைச்சாலை கலவரத்தில் பிரேத பரிசோதனையின் யாருமறியா பயங்கரம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/untold-horror-of-autopsy-in-negombo-prison-riot-1783708248"></link>
            <id>https://tamilwin.com/article/untold-horror-of-autopsy-in-negombo-prison-riot-1783708248</id>
            <summary type="text">கொழும்பு மெகசின் சிறைச்சாலையில் பயங்கரமான ஒரு சூழ்நிலை ஏற்படுத்துவதற்கான செயற்பாடுகளில் சிலர் ஈடுபட்டுள்ளதாக தற்போது வெளியாகியுள்ள சில செய்திகள் உறுதி...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு மெகசின் சிறைச்சாலையில் பயங்கரமான ஒரு சூழ்நிலை ஏற்படுத்துவதற்கான செயற்பாடுகளில் சிலர் ஈடுபட்டுள்ளதாக தற்போது வெளியாகியுள்ள சில செய்திகள் உறுதிப்படுத்தியுள்ளன.
</p><p>
குறித்த சிறைச்சாலையில் ஐந்து பேருக்கிடையில் ஏற்பட்ட மோதலில் 
காயமடைந்த இரண்டு கைதிகள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். </p><p>எனினும் மோதலுக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை.

இது தொடர்பில் குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவினரும் சிறை அதிகாரிகளும் முழுமையான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள். </p><p>

இந்த சிறைச்சாலை முரண்பாடுகளுக்கு தொடக்கப்புள்ளியாக இருப்பது நீர்கொழும்பு சிறைச்சாலையில் நிகழ்ந்த அந்த மோசமான மோதல் சம்பவமே ஆகும். </p><p>

இந்த அசம்பாவிதமான சம்பவங்களை எல்லாம் பார்க்கின்ற பொழுது ஆட்சிக் கவிழ்ப்புக்கான ஒரு பெரும் இனக்கலவரம் அல்லது வன்முறைக்கான சில ஆயத்தங்கள் சிறைச்சாலைக்குள் தயார்படுத்தப்படுகின்றன என்பதே தொடர்ச்சியாகவும் மறைமுகமாகவும் வெளிப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
</p><p>
ஆனால் இந்த சிறைச்சாலைகளுக்குள் இவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுப்பது யார் என்ற கேள்வி இப்போது எழுகின்றது. இது தொடர்பாக விரிவாக ஆராய்கிறது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி..</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/9nxqgm6BfNY" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-10T21:15:02+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[பேச்சுக்கு தயார் ; ஆனால் போர் நிறுத்தம் முடிந்து விட்டது ; ட்ரம்பின் அறிவித்தல் ஈரானும் பதிலடி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/ceasefire-over-iran-retaliates-trump-announcement-1783717987"></link>
            <id>https://canadamirror.com/article/ceasefire-over-iran-retaliates-trump-announcement-1783717987</id>
            <summary type="text">ஈரான் மற்றும் அமெரிக்கா பேச்சுவார்த்தைகளைத் தொடர உடன்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், ஈரானுடனான போர் நிறுத்தம் &quot;ம...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரான் மற்றும் அமெரிக்கா பேச்சுவார்த்தைகளைத் தொடர உடன்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், ஈரானுடனான போர் நிறுத்தம் "முடிவுக்கு வந்துவிட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
</p><p>
ட்ரம்பின் இந்த அறிவித்தலுக்கு மத்தியில் கருத்துரைத்துள்ள ஈரான், இஸ்லாமாபாத் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை அமெரிக்கா மீறினால், ஈரானிய மக்களின் உரிமைகளைப் பாதுகாக்க முழு அளவிலான தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள தயாராகவே உள்ளது என்று தெரிவித்துள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/aa94487f-b012-43b9-b134-722322ab4f4d/26-6a516065624ea.webp' /></p><p>அச்சுறுத்தல் மற்றும் மிரட்டல் காலம் முடிந்துவிட்டது. இது எதற்கும் தீர்வாகாது. நாங்கள் ஒருபோதும் பணிய மாட்டோம்," என்று அந்த நாட்டின் முக்கியப் பேச்சுவார்த்தையாளருமான முகமது பகர் காலிபாப் அறிவித்துள்ளார்.</p><p>

அமெரிக்கா போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறுவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

குறிப்பாக, தொடர்ந்து தாக்குதல் மிரட்டல்களை விடுத்தல், எண்ணெய் தடைகளை மீண்டும் அமுல்படுத்துதல், ஈரானின் தெற்குப் பகுதியில் தாக்குதல் நடத்துதல் மற்றும் லெபனானில் இஸ்ரேல் தொடர்ந்து மேற்கொண்டு வரும் ஆக்கிரமிப்பு நடவடிக்கை ஆகியவற்றை அவர் அமெரிக்காவின் முக்கிய மீறல்களாகப் பட்டியலிட்டுள்ளார்.
</p><p>
இந்த நிலையில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிராக அனைத்து இஸ்லாமிய நாடுகளும் ஒன்றுதிரண்டு குரல் எழுப்ப வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.</p><p>

போரை முடிவுக்குக் கொண்டு வருவது உலக நாடுகளின் முன்னுரிமையாக இருந்தாலும், ஈரானின் சரணடைதலுடன் இந்த மோதல் முடிவுக்கு வராது என்பதை அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும் என்று அவர் எச்சரித்துள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/48ee704d-c601-48d6-b98a-d8b93ae0bb60/26-6a516064b1789.webp' /></p><p>அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே இரண்டு நாட்களாக நீடித்த தீவிர தாக்குதல்களுக்குப் பிறகு, இராஜதந்திர உறவுகளை மீண்டும் சீரமைக்கும் முயற்சியில் கட்டார் நாட்டு மத்தியஸ்தர்கள் தெஹ்ரானில் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
</p><p>
புதிதாக முன்னெடுக்கப்பபட்ட இந்த மோதல்களால் ஹோர்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே வரலாற்றில் இல்லாத அளவுக்கு விநியோகத் தடைகளைச் சந்தித்து வரும் எரிசக்தி சந்தைகளுக்கு, இது மேலும் ஒரு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
</p><p>
இதேவேளை , அமெரிக்காவின் அழுத்தத்தைத் தொடர்ந்து, லெபனானின் தெற்குப் பகுதியில் "உணர்திறன் மிக்க நடவடிக்கைகளை" (sensitive operations) மேற்கொள்ள வேண்டாம் என்று தனது இராணுவத்திற்கு இஸ்ரேலிய அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.
</p><p>
அடுத்த வாரம் ரோமில் லெபனான் மற்றும் இஸ்ரேல் இடையே கூடுதல் பேச்சுவார்த்தைகள் நடைபெறவுள்ளன.
</p><p>
இந்த நிலையில்,லெபனானின் தெற்குப் பகுதியில் உள்ள குறிப்பிட்ட சோதனைப் பகுதிகளில் (pilot areas) இருந்து தனது படைகளை இஸ்ரேலிய இராணுவம் திரும்பப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.</p>]]></content>
            <updated>2026-07-10T21:14:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[ட்ரம்பை கொல்ல சதி - ஈரானிடம் இரசாயன ஆயுதங்கள்: அமெரிக்காவுக்கு இஸ்ரேல் அனுப்பிய செய்தி]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/to-kill-trump-iran-chemical-weapons-israel-us-1783716483"></link>
            <id>https://tamilwin.com/article/to-kill-trump-iran-chemical-weapons-israel-us-1783716483</id>
            <summary type="text">அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பைக் கொலை செய்ய ஈரான் ஒரு புதிய மற்றும் குறிப்பிட்ட சதித் திட்டத்தைத் தீட்டியுள்ளதாக இஸ்ரேலியப் புலனாய்வுப் பிரிவு, அம...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பைக் கொலை செய்ய ஈரான் ஒரு புதிய மற்றும் குறிப்பிட்ட சதித் திட்டத்தைத் தீட்டியுள்ளதாக இஸ்ரேலியப் புலனாய்வுப் பிரிவு, அமெரிக்க அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளது.
</p><p>கடந்த 2020 ஆம் ஆண்டு டொனால்ட் ட்ரம்பின் உத்தரவின் பேரில் ஈரானிய இராணுவத் தளபதி காசெம் சுலைமானி கொல்லப்பட்டதில் இருந்தே அதற்குப் பழிவாங்க ட்ரம்பைக் கொல்லப் போவதாக ஈரான் தொடர்ந்து தெரிவித்து வருகின்றது.
</p><p>இதில் சமீபத்தில் கொல்லப்பட்ட ஈரானின் உச்சத் தலைவர் ஆயதுல்லா அலி கமேனியின் இறுதிச்சடங்கின் போது நாங்கள் ட்ரம்பைக் கொல்வோம் என்ற வாசகங்கள் அடங்கிய பேனர்களை ஈரானியர்கள் ஏந்தியிருந்தனர்.
</p><p>இந்தத் தகவலைத் தொடர்ந்து ட்ரம்பின் பாதுகாப்பு பலமடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய டொனால்ட் ட்ரம்பும், "அவர்கள் என்னை ஒழிக்க நினைக்கிறார்கள்.
</p><p>அவர்களின் அனைத்துப் பட்டியலிலும் எனது பெயர் முதலிடத்தில் உள்ளது" என்று பாதுகாப்பு அச்சுறுத்தலையம் உறுதிப்படுத்தியுள்ளார்.
</p><p>இது குறித்து விரிவாக ஆராய்கின்றது ஐபிசி தமிழின் உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி..</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/_MFgBUULEYs" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-10T21:13:17+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[புலம்பெயர் தொழிலாளர்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டம் ; அரசாங்கம் நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/new-pension-scheme-for-migrant-workers-1783716466"></link>
            <id>https://jvpnews.com/article/new-pension-scheme-for-migrant-workers-1783716466</id>
            <summary type="text">இலங்கையில் பணிபுரியும் புலம்பெயர் தொழிலாளர்களுக்காக, அவர்களின் பணிக்காலம் மற்றும் வருமானத்திற்கு ஏற்ப வடிவமைக்கப்பட்ட புதிய மற்றும் கவர்ச்சிகரமான ஓய்வ...</summary>
            <content type="html"><![CDATA[<p>இலங்கையில் பணிபுரியும் புலம்பெயர் தொழிலாளர்களுக்காக, அவர்களின் பணிக்காலம் மற்றும் வருமானத்திற்கு ஏற்ப வடிவமைக்கப்பட்ட புதிய மற்றும் கவர்ச்சிகரமான ஓய்வூதியத் திட்டத்தை அறிமுகப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தெரிவித்தார்.</p><p></p><p>

நேற்று (10) நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தில் இது குறித்து தெரிவிக்கையில்,

இந்தத் திட்டத்தில் சேரும் தொழிலாளர்கள், தங்களுக்குத் தேவையான வகையில் ஓய்வூதிய முறையைத் தேர்வு செய்யலாம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bd6a5b8e-3458-48a7-b9d9-0c97f878d294/26-6a515a7373339.webp' /></p><p>

அதாவது, ஓய்வுக்குப் பிறகு மாதந்தோறும் ஓய்வூதியம் (பென்ஷன்) பெறுவதையோ, அல்லது பணிக்காலம் முடிந்ததும் மொத்தத் தொகையை ஒரே தடவையாகப் பெறுவதையோ அவர்களே தீர்மானிக்கலாம்.
</p><p>
சட்டப்பூர்வமாக அனுப்பப்படும் பணத்தின் பதிவுகளை முறையாகப் பராமரிக்கவும், ஓய்வூதியக் கணக்கீட்டில் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தவும் டிஜிட்டல் தொழில்நுட்ப அமைச்சகத்துடன் இணைந்து பிரத்யேக செயலி அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
</p><p>
ரதவிரு' ஓய்வூதியத் திட்டத்திற்காக குவைத் நிதியம் ரூ. 2.1 மில்லியனை ஒதுக்கியுள்ளது. 2026 டிசம்பர் 31-ஆம் திகதிக்குள் இந்தத் திட்டத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை எட்ட எதிர்பார்ப்பதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
</p><p>
தற்போது சுமார் 17 இலட்சம் இலங்கையர்கள் வெளிநாடுகளில் பணிபுரியும் நிலையில், கடந்த 2025-ஆம் ஆண்டில் வரலாற்றில் இல்லாத அளவிலான பணவரவு பதிவாகியுள்ளது.</p><p>

இருப்பினும், தற்போதுள்ள ஓய்வூதியத் திட்டத்தில் 307 தொழிலாளர்கள் மட்டுமே இணைந்துள்ளனர். இதனை மாற்றியமைக்கும் விதமாகவே இந்தத் தன்னார்வ ஓய்வூதியத் திட்டம் அமையும்.
</p><p>
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (SLBFE), இலங்கை மத்திய வங்கி (CBSL) மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்ப அமைச்சு ஆகியவற்றின் கூட்டு முயற்சியால் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளதாகவும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தெரிவித்தார்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-10T20:47:53+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெளிநாட்டில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட இலங்கை பெண்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/lankan-woman-attacked-by-italian-husband-1783715443"></link>
            <id>https://ibctamil.com/article/lankan-woman-attacked-by-italian-husband-1783715443</id>
            <summary type="text">இத்தாலியில் இலங்கை பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

ரோம் நகரில் பிடேன் பகுதியில் உள்ள வீடொன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் 3...</summary>
            <content type="html"><![CDATA[<p>இத்தாலியில் இலங்கை பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

ரோம் நகரில் பிடேன் பகுதியில் உள்ள வீடொன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
</p><p>
சம்பவத்தில் 38 வயதுடைய இலங்கை பெண்ணே உயிரிழந்துள்ளார்.
</p><p>
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த பெண்ணின் கணவரான 41 வயதுடைய இத்தாலிய நபரே இவ்வாறு கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>
</p><p></p><h2>கண்ணாடிப் போத்தல்&nbsp;</h2><p>குறித்த நபர் கண்ணாடிப் போத்தலை எடுத்து மனைவியின் தலையில் தாக்கி கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p><p>

இதையடுத்து படுகாயமடைந்த பெண், உடனடியாகமருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3919d33a-3a2c-4309-bdd7-4e3d20e47c2e/26-6a5157c02c55c.webp' /></p><p>மருத்துவர்களின் பரிசோதனையில் அவருக்கு மண்டையோட்டில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
</p><p>
தற்போது அவருக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
</p><p>
 தாக்குதல் நடத்திய கணவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் கொலை முயற்சி மற்றும் வன்முறை குற்றச்சாட்டின் கீழ் குறித்த நபர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p><p></p><p>[TTMN7PP
]</p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-10T20:42:38+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[யோஷிதவுடன் 3 ஆண்டுகள் வாழ்ந்த காதலியின் பகீர் வாக்குமூலம்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/yoshitha-rajapaksa-ex-girlfriend-confession-1783713984"></link>
            <id>https://tamilwin.com/article/yoshitha-rajapaksa-ex-girlfriend-confession-1783713984</id>
            <summary type="text">முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்ச மீதான வழக்கு விசாரணையில் அவரின் முன்னாள் காதலியான யசரா அபேயநாயக்க சாட்சியம் அளித்திருக்கின்றார...</summary>
            <content type="html"><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்ச மீதான வழக்கு விசாரணையில் அவரின் முன்னாள் காதலியான யசரா அபேயநாயக்க சாட்சியம் அளித்திருக்கின்றார்.&nbsp;</p><p>73 இலட்சம் ரூபாய்க்கும் அதிக பெறுமதி கொண்டு ஐந்து காணிகளை சட்டவிரோதமாகக் கையகப்படுத்தியதன் மூலம், பணச்சலவை தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் இடம்பெற்றுள்ளதாக குற்றம் சுமத்தி யோஷித ராஜபக்ச மீது சட்டமா அதிபர் இந்த வழக்கைத் தாக்கல் செய்தார்.&nbsp;</p><p>இவ்வழக்கு நேற்று (09.07.2026) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, யோஷிதவின் முன்னாள் காதலி கொழும்பு உயர் நீதிமன்றத்தில் சாட்சியமளித்துள்ளார்.&nbsp;</p><p>இதன்போது பல முக்கிய தகவல்களை அவர் வெளிப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.&nbsp;</p><p>இது உள்ளிட்ட நாட்டில் இடம்பெற்ற பல முக்கிய அரசியல் நகர்வுகள் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது நாட்டு நடப்பு நிகழ்ச்சி,&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/RNwoLfuUIcI" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-10T20:39:05+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழக சட்டசபையில் செம்மணி விவகாரம் ; கஜேந்திரகுமார் வெளியிட்ட தகவல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/chemmani-issue-tamil-nadu-assembly-gajendrakumar-1783715123"></link>
            <id>https://jvpnews.com/article/chemmani-issue-tamil-nadu-assembly-gajendrakumar-1783715123</id>
            <summary type="text">யாழ்ப்பாணம் செம்மணி அவலத்துடன் தொடர்புடைய இனப்படுகொலை சாட்சியங்களை தமிழக சட்டசபையில் முன்வைக்க தமிழக முதலமைச்சர் விஜய் தீர்மானித்துள்ளதாக நாடாளுமன்ற உ...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணம் செம்மணி அவலத்துடன் தொடர்புடைய இனப்படுகொலை சாட்சியங்களை தமிழக சட்டசபையில் முன்வைக்க தமிழக முதலமைச்சர் விஜய் தீர்மானித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.</p><p></p><p>
செம்மணி போன்ற சம்பவங்களின் சாட்சியங்களை சர்வதேச சமூகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லும் முயற்சிகளில் குறித்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளதாகவும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bf2c1fe0-24de-4866-bd1c-bad2f04178a2/26-6a5155347454a.webp' /></p><p>மேலும், தமிழ் மக்களின் வரலாற்றில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பாரிய மனித உரிமை மீறல்கள் தொடர்பான விடயங்களை சர்வதேச மட்டத்தில் எடுத்துச் செல்ல தொடர்ந்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-10T20:25:29+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஈரான் அவரைக் கொலை செய்தால்... ட்ரம்ப் அதிகாரிகளுக்கு இட்டுள்ள ஒரேயொரு கட்டளை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/trump-instructions-bomb-them-1783714995"></link>
            <id>https://news.lankasri.com/article/trump-instructions-bomb-them-1783714995</id>
            <summary type="text">ஈரான் தன்னைத் தாக்கிக் கொல்லும் பட்சத்தில், அந்த நாட்டின் மீது மிகப் பெரிய அளவில் குண்டுவீச்சு தாக்குதல் நடத்துமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரான் தன்னைத் தாக்கிக் கொல்லும் பட்சத்தில், அந்த நாட்டின் மீது மிகப் பெரிய அளவில் குண்டுவீச்சு தாக்குதல் நடத்துமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.</p><h2>இதுவரை கண்டிராத</h2><p>
</p><p>நியூயார்க் போஸ்ட் இதழிடம் பேசிய ட்ரம்ப், நீண்ட காலமாகவே தான் ஈரானின் கொலைப் பட்டியலில் இடம்பெற்றிருப்பதாகக் கூறினார்.
நீண்ட காலமாகவே தாம் அவர்களின் பட்டியலில் இருப்பதாகக் குறிப்பிட்ட ட்ரம்ப், இதுதான் தற்போதைய நிலைமை என்றார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d6511293-6572-4510-b879-769f7f37a3f3/26-6a5158267c685.webp' /></p><p> </p><p>ஒரே ஒரு விடயம் என்னவென்றால், ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால், அவர்கள் இதுவரை கண்டிராத அளவுக்கு அவர்கள் மீது குண்டுவீசுமாறு நான் உத்தரவிட்டுள்ளேன் என்றார்.
</p><p>தன்னைக் கொலை செய்ய ஈரான் தீட்டியுள்ள புதிய சதித்திட்டம் குறித்து இஸ்ரேல் எச்சரித்தது பற்றி அவரிடம் கேட்டபோது, ​​அத்தகைய புதிய திட்டங்கள் எதுவும் இல்லை என்று அவர் கூறினார். </p><p>இருப்பினும், பல ஆண்டுகளாகவே ஈரான் தன்னை ஒழித்துக்கட்ட விரும்புவதாக அவர் குறிப்பிட்டார். அங்காராவில் நடைபெற்ற நேட்டோ உச்சிமாநாட்டிற்குப் பிறகு, அமெரிக்காவுக்குத் திரும்பும் வழியில் ட்ரம்ப் தனது பயணத் திட்டங்களை மாற்றிக்கொண்டார்.</p><p></p><p> </p><p>இது ஜனாதிபதியின் பாதுகாப்பிற்கான ஒரு பாதுகாப்பு உத்தி என்று வெள்ளை மாளிகை பின்னர் ஒப்புக்கொண்டது. ஈரானிய இராணுவ அதிகாரி காசெம் சுலைமானியைக் கொன்ற தாக்குதலை ட்ரம்ப் முன்னெடுத்ததிலிருந்து, அவர் ஈரானின் இலக்காக இருந்து வருவதாக நம்புகிறார். </p><p>ஈரானின் கொலைப் பட்டியல் என்று சொல்லப்படுவதில், தாம் முதன்மையான இலக்கு என்று ட்ரம்ப் கூறுவது இது முதல் முறையல்ல. இத்தனை நாளும் தனக்கு அதிர்ஷ்டம் இருந்தபோதிலும், அந்த நிலை தொடராமல் போகலாம் என்றும் ட்ரம்ப் உருக்கமாக தெரிவித்திருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/928a2ef0-fc93-4377-86a1-07ca95003aa2/26-6a5158251c5a6.webp' /></p><p> </p><p>ட்ரம்பின் இந்த குழப்பமான மனநிலைக்கு இஸ்ரேல் உளவு அமைப்புகள் காரணம் என்றும் அமெரிக்க செய்தி நிறுவனங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.</p><h2>வன்முறை குணம்</h2><p> </p><p>ஈரான் மீதான ஒப்பந்தத்தை முறித்துக்கொள்ள திட்டமிட்டு வரும் இஸ்ரேல், ட்ரம்பை ஒரு உறுதியான முடிவெடுக்க விடாமல் செய்துள்ளது. இஸ்ரேலின் திட்டத்தின்படியே ஈரானுடனான புரிந்துணர்வு ஒப்பந்தம் முடிவுக்கு வந்துவிட்டதாக ட்ரம்ப் அறிவித்ததைத் தொடர்ந்து, கொலைப்பட்டியல், முதன்மையான இலக்கு உள்ளிட்டக் கருத்துகளை அவர் தெரிவித்து வருகிறார். </p><p>ஈரானியப் பேச்சுவார்த்தையாளர்களை அற்பர்கள் என்று குறிப்பிட்ட ட்ரம்ப், அவர்களைத் தமக்குச் சிறிதளவும் பிடிக்காது என்றும் கூறினார். ஈரானின் 80 பகுதிகளில் குண்டுவீச்சு நடத்தியதன் பின்னர், அவர்கள் கொடூரமான, வன்முறை குணம் கொண்டவர்கள்... என்னைப் பொறுத்தவரை, எல்லாம் முடிந்துவிட்டது என்றும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/326a2ffd-8d02-4dc8-becb-a1e4573d9db7/26-6a515825cbfc8.webp' /></p><p> </p><p>இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவால் படுகொலை செய்யப்பட்ட ஈரானின் முன்னாள் உயர் தலைவர் அலி கமேனியின் இறுதிச் சடங்கில் கூட, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகியோரைக் கொல்ல வேண்டும் என்ற கோரிக்கைகள், தெஹ்ரானில் மக்கள் கூட்டம் நிரம்பியிருந்த கிராண்ட் மொசல்லா தொழுகை வளாகம் முழுவதும் எதிரொலித்தன. </p><p>கிராண்ட் மொசல்லாவில் இருந்த சுவரொட்டிகள் மற்றும் சுவரெழுத்துக்கள், டிரம்ப் மற்றும் நெதன்யாகுவைக் கொலை செய்யக் கோரியதோடு, கூட்டத்தினரிடையேயும் அதுபோன்ற முழக்கங்கள் எதிரொலித்தன.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-10T20:22:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் 21 இலட்சம் ரூபாய் பெறுமதியான போலி நாணயத்தாள் அச்சிடல் ; மேல் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/fake-currency-notes-worth-21-lakh-printed-jaffna-1783714111"></link>
            <id>https://jvpnews.com/article/fake-currency-notes-worth-21-lakh-printed-jaffna-1783714111</id>
            <summary type="text">யாழ்ப்பாணத்தில் 21 இலட்சம் ரூபாய் பெறுமதியான போலி நாணயத்தாள்கள் மற்றும் அவற்றை அச்சிட பயன்படுத்திய உபகரணங்களுடன் கைது செய்யப்பட்ட நபருக்கு யாழ்ப்பாணம்...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணத்தில் 21 இலட்சம் ரூபாய் பெறுமதியான போலி நாணயத்தாள்கள் மற்றும் அவற்றை அச்சிட பயன்படுத்திய உபகரணங்களுடன் கைது செய்யப்பட்ட நபருக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் 6 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்துள்ளது.</p><p>
</p><p></p><p>கடந்த 2017ஆம் ஆண்டு, யாழ்ப்பாணத்தில் 5 ஆயிரம் ரூபாய் பெறுமதியான போலி நாணயத்தாள்கள் 21 இலட்சம் ரூபாய் பெறுமதியில் கைப்பற்றப்பட்டதுடன், அவற்றை தயாரிக்க பயன்படுத்தப்பட்ட உபகரணங்களும் மீட்கப்பட்டிருந்தன.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fa5c9f5e-787d-442c-9bc7-1a86b45c4475/26-6a515140a3027.webp' /></p><p>இது தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டு, அவருக்கு எதிராக யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.</p><p>

குறித்த வழக்கு இன்றைய தினம் தீர்ப்புக்காக எடுத்துக்கொள்ளப்பட்டபோது, சந்தேகநபரை குற்றவாளியாக அறிவித்த மன்று, அவருக்கு 6 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
</p><p>
இதன்போது, குற்றவாளி சார்பில் முன்னிலையான சட்டத்தரணி, சிறைத்தண்டனையை ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனையாக மாற்றுமாறு நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தார்.
</p><p>
எனினும், அந்த கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம், போலி நாணயத்தாள்களை புழக்கத்தில் விடுவது நாட்டின் பொருளாதார கட்டமைப்புக்கு பாரிய பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய குற்றமாகும் எனக் குறிப்பிட்டது.
</p><p>
இத்தகைய செயற்பாடுகள் நாட்டின் பொருளாதாரத்திற்கு பேரழிவை ஏற்படுத்தக்கூடியவை என்பதைக் கருத்தில் கொண்டு, விதிக்கப்பட்ட 6 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனையை உறுதி செய்வதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-10T20:08:37+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Rakesh</name>
            </author>
            <title type="text"><![CDATA[2029ஆம் ஆண்டு நாமலின் ஆட்சி உறுதி - மக்கள் சந்திப்பில் முழக்கமிட்ட பொதுஜன பெரமுன]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/namal-rule-assured-2029-podujana-peramuna-slogans-1783699949"></link>
            <id>https://tamilwin.com/article/namal-rule-assured-2029-podujana-peramuna-slogans-1783699949</id>
            <summary type="text">ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கோட்டே தொகுதி மக்கள் சந்திப்பு, நேற்று (09.07.2026) ஒபேசேகரபுர சமூகக் கூடத்தில் நடைபெற்றுள்ளது. இதில் கலந்துகொண்ட
கட்சியி...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கோட்டே தொகுதி மக்கள் சந்திப்பு, நேற்று (09.07.2026) ஒபேசேகரபுர சமூகக் கூடத்தில் நடைபெற்றுள்ளது. </p><p>இதில் கலந்துகொண்ட
கட்சியின் முக்கிய தலைவர்கள், தற்போதைய அரசின் நிர்வாகச் சீர்கேடுகளை
விமர்சித்ததுடன், 2029 ஆம் ஆண்டு நாமல் ராஜபக்சவின் தலைமையில் புதிய அரசை
உருவாக்க ஒன்றிணையுமாறு பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.</p><p></p><h2>புதிய தலைமுறை அரசியல்</h2><p>

நிகழ்வில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, "கிராமப்புறங்களில் மக்கள் பெரும் ஆதரவைத் தந்து வருகின்றனர். வாக்களித்தவர்கள், வாக்களிக்காதவர்கள் என அனைவருமே எமது மக்கள் தான்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/501bd7ec-351f-412d-87ed-1c73d6736276/26-6a512f4f5c73e.webp' /></p><p>தற்போதைய
அரசு பெரும் வாக்குறுதிகளுடன் ஆட்சிக்கு வந்தாலும், எதனையும் நிறைவேற்றவில்லை.
வேலைவாய்ப்பின்மை, வரியதிகரிப்பு மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை
உயர்வால் மக்கள் அல்லல்படுகின்றனர்.</p><p>வெறுப்பு அரசியலை விடுத்து, அபிவிருத்தி
மற்றும் மனிதநேயத்தை அடிப்படையாகக் கொண்ட புதிய தலைமுறை அரசியலை உருவாக்க
நாங்கள் தயாராகவுள்ளோம்" என தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>சிறைச்சாலை மோதல்</h2><p>
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ எதிரிமான்ன கருத்துத் குறிப்பிடுகையில்,
</p><p>
"அரசு ஆட்சிக்கு வந்து மூன்றில் ஒரு பங்கு காலம் கடந்தும், கோட்டே தொகுதியில்
எந்தவொரு உருப்படியான அபிவிருத்தியும் நடக்கவில்லை.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7198c345-697d-4b68-8dd3-3712d9f0d6bd/26-6a512f4eaccb7.webp' /></p><p>சிறைச்சாலை மோதலில்
உயிரிழந்த அதிகாரிகளின் மரணத்துக்கு இந்த அரசே பொறுப்பேற்க வேண்டும்.
பொறுப்பான அமைச்சர் தனது கடமையை முறையாகச் செய்யவில்லை. </p><p>2029 இல் நாட்டின்
எதிர்காலத்தை நாமல் ராஜபக்சவிடம் ஒப்படைக்க நாம் இன்று முதலே தயாராக
வேண்டும்" என தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>வரி செலுத்துதல்</h2><p>

இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் தனது உரையில், "மகிந்த மற்றும் கோட்டாபய ராஜபக்சவின் காலத்தில் உலகத்தரம் வாய்ந்த நகரமாக
மாற்றப்பட்ட கோட்டே, இன்று முறையற்ற நிர்வாகத்தாலும், டெங்கு அபாயத்தாலும்
சீரழிந்து போயுள்ளது.</p><p>மக்கள் வரி செலுத்துவது சுகாதாரமான சூழலைப்
பெறுவதற்காகவே தவிர, அபராதம் கட்டுவதற்காக அல்ல. அரசாங்கமும் உள்ளூராட்சி
மன்றங்களும் தங்கள் பொறுப்பை உணர்ந்து செயற்பட வேண்டும்" என கவலை
வெளியிட்டுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d9031dc4-d576-4d0b-ab09-225fca9c2ac5/26-6a512f500af3d.webp' /></p><p>

இறுதியாக உரையாற்றிய யூ.கே. சுமித் உடுகும்பர,

"நாட்டின் ஒவ்வொரு துறை சார்ந்து நாடாளுமன்றத்தில் தெளிவான புரிதலுடன் பேசும்
நாமல் ராஜபக்சவே நாட்டின் எதிர்காலத் தலைவர் என்பதை மக்கள்
ஏற்றுக்கொண்டுள்ளனர்.</p><p> 2029 இல் அவர் ஜனாதிபதியாவது உறுதி. கோட்டே தொகுதியில்
மிலிந்த ராஜபக்சவின் வலுவான தலைமைத்துவத்துடன் நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப
நாம் ஒன்றிணைந்துள்ளோம்" என்று நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
</p><p>
இந்த நிகழ்வில் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, நாடாளுமன்ற உறுப்பினர்
சானக சம்பத் மதுகொட உள்ளிட்ட பல முக்கிய அரசியல் பிரமுகர்கள் மற்றும்
பொதுமக்கள் கலந்துகொண்டுள்ளனர்.</p>]]></content>
            <updated>2026-07-10T19:59:24+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shan</name>
            </author>
            <title type="text"><![CDATA[இனிய வாழ்வு இல்லம் தொடர்பான குற்றச்சாட்டுக்கள்: ஊடகங்களுக்கு விளக்கமளித்த இடைக்கால நிர்வாகம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/allegations-regarding-happy-home-1783698785"></link>
            <id>https://tamilwin.com/article/allegations-regarding-happy-home-1783698785</id>
            <summary type="text">&amp;nbsp;முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட தேவிபுரம்
பகுதியில் அமைந்துள்ள மாற்றுத்திறனாளி சிறுவர்களுக்கான ஒரு பராமரிப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>&nbsp;முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட தேவிபுரம்
பகுதியில் அமைந்துள்ள மாற்றுத்திறனாளி சிறுவர்களுக்கான ஒரு பராமரிப்பு இல்லமாக இனிய வாழ்வு
இல்லம் இருந்து வருகின்றது.
</p><p>
கடந்த காலங்களில் இனியவாழ்வு இல்லத்திற்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பாக இன்றையதினம்(10.06.2026)&nbsp; இனிய வாழ்வு
இல்லத்தின் இடைக்கால நிர்வாகத்தின் தலைவரும், புதுக்குடியிருப்பு பிரதேச செயலக
சமூக சேவைகள் உத்தியோகத்தருமான ச.சதாகரன்&nbsp; ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்துள்ளார்.</p><p></p><h2>இனியவாழ்வு இல்லம்</h2><p>அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,</p><p>

புதுக்குடியிருப்பு தேவிபுரத்தில் அமைந்துள்ள இனியவாழ்வு இல்லம் 57 மாணவர்களை
கொண்டியங்குகின்ற இல்லமாக காணப்படுகின்றது.</p><p>அதில் பல்கலைகழகத்தில் 8
மாணவர்களும், வள்ளிபுனம் பாடசாலையில் 10 மாணவர்கள், கேட்கும்திறன்,
வாய்பேசமுடியாத 39 மாணவர்களுக்கு இல்லத்தில் கல்விகற்று வருகின்றனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/69f7570b-6852-4f14-b9b5-bad188797edc/26-6a51170e92c52.webp' /></p><p>

கடந்த மூன்று மாத காலமாக செயற்பட்டுவரும் இடைக்கால நிர்வாகத்தில் நாம்
பொறுப்பேற்றதற்கான காரணம் கடந்த (21.03.2026) ஆம் ஆண்டு புதிய நிர்வாகம் தெரிவு
செய்யப்பட இருந்த வேளை யாப்பிற்கு முரணாக தொடர்ச்சியாக முக்கிய பதவிகளை
வகிப்பதற்காக தெரிவு செய்யப்பட இருந்த போது பொதுச்சபையில் முரண்பாடுகள்
ஏற்பட்டிருந்தது.
</p><p>
அக்காலப்பகுதியில் யாப்பு சீர்திருத்த குழு அமைக்கப்பட்டு யாப்பினை
சீர்திருத்தி மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் கருத்துக்களையும் பெறப்பட்டு
யாப்பு சரியான முறையில் சீர்திருத்தப்பட்டது.</p><p>இதனையடுத்து மீளவும் பொதுச்சபையினை கூட்டி புதிய
நிர்வாகத்தினை தெரிவு செய்வதற்கான காலக்கெடுவாக மூன்று மாத காலம் வழங்கப்பட்டது.</p><p></p><h2>முறைப்பாடுகள் பதிவு</h2><p> அக்காலப்பகுதியில் மூன்று பேர் கொண்ட மூன்று மாத காலத்திற்கு இடைக்கால
நிர்வாகத்தினால் பிரதேச செயலாளர் இ.விஜயகுமாரின் நேரடி கண்காணிப்பில்
செயற்படுத்தி வருகின்றோம்.</p><p>இல்ல விடுதியில் ஆரம்பத்தில் போடப்பட்ட மெத்தைகள் மாணவர்கள் பயன்படுத்த
முடியாத நிலையில் காணப்பட்டதால் புதிய மெத்தைகள் போடப்பட்டுள்ளது.</p><p>இயங்காத
நிலையில் இருந்த மின் விசிறிகள் புதிதாக மாற்றப்பட்டுள்ளதுடன் பழுதடைந்த
கணணிகள் திருத்தப்பட்டு மாணவர்களின் கல்வி நடவடிக்கைக்கு
பயன்படுத்தப்படுகின்றது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1102baff-64db-4054-a3bb-e6763227644b/26-6a51170da756a.webp' /></p><p>இல்லத்தில் இருந்து சாப்பாடு பொதி செய்யப்பட்டு வெளியில் கொண்டு செல்வது
குறித்த குற்றசாட்டுகள் இருந்தமையால் சாப்பாடு பொதி வெளியில் கொண்டு
செல்வதற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.</p><p>உள்ளக முரண்பாடுகளை தீர்க்கும் நோக்கில் பிரதேச செயலாளரை இங்கு அழைத்து முரண்பாடுகளை தீர்க்கும் நோக்கில் மாணவர்களின் பெற்றோர்களை
சந்தித்து அவர்களின் பிரச்சினைகள் இனங்காணப்பட்டு மாணவர்கள் தங்கியிருந்த
விடுதிகளை நேரடியாக காட்டி விளங்கப்படுத்தி ஆசிரியர்களுடன் உரையாடவிட்டு
தீர்க்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.</p><p>

இவ்வாறிருக்கையில் கடந்த (30.06.2026) ஆம் திகதி இடம்பெற்ற போராட்டத்தின் போது
குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன என குறிப்பிட்டுள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-10T19:54:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sajithra</name>
            </author>
            <title type="text"><![CDATA[தமிழ்நாட்டு முதலமைச்சர் கண் கலங்கினார்.. பின்னணியில் நடந்தது என்ன!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/cm-vijay-visits-to-karur-cried-speech-in-karur-1783708934"></link>
            <id>https://tamilwin.com/article/cm-vijay-visits-to-karur-cried-speech-in-karur-1783708934</id>
            <summary type="text">தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் பதவியேற்ற பின்னர் முதன்முறையாக கரூரிற்கு நேற்றைய தினம் சென்றிருந்தார்.&amp;nbsp;கடந்த 2025ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் தமிழக வெ...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் பதவியேற்ற பின்னர் முதன்முறையாக கரூரிற்கு நேற்றைய தினம் சென்றிருந்தார்.&nbsp;</p><p>கடந்த 2025ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் தமிழக வெற்றிக்கழகத்தின் கரூர் பிரசாரத்தின் போது கூட்டநெரிசல் காரணமாக 41 பேர் உயிரிழந்தனர்.&nbsp;&nbsp;</p><p>குறித்த சம்பவத்திற்கு பின்னர் முதன்முறையாக ஜோசப் விஜய் நேற்று தான் கரூருக்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்தார்.&nbsp;</p><p>
இந்தநிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் கலந்துகொள்ளும் கரூர் மாவட்ட பொதுக்கூட்டம் மற்றும் நன்றி அறிவிப்பு விழாவில், பாதுகாப்பு காரணங்களுக்காக மிகக் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது.&nbsp;</p><p>இவ்விடயம் உள்ளிட்ட பல முக்கிய தகவல்களை ஆராய்கின்றது பின்வரும் காணொளி..&nbsp;</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/vF7uPQQfhic" width="640" height="360" class="note-video-clip"></iframe></p><p></p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-10T19:52:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[கொழும்பு பங்குச்சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் அதிகரிப்பு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/colombo-stock-exchange-all-price-index-increases-1783713031"></link>
            <id>https://jvpnews.com/article/colombo-stock-exchange-all-price-index-increases-1783713031</id>
            <summary type="text">கொழும்பு பங்குச்சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் இன்று 67.84 புள்ளிகளால் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது.
இதன்படி, இன்றைய வர்த்தக நடவடிக்கைகள...</summary>
            <content type="html"><![CDATA[<p>கொழும்பு பங்குச்சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் இன்று 67.84 புள்ளிகளால் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது.</p><p>
</p><p></p><p>இதன்படி, இன்றைய வர்த்தக நடவடிக்கைகளின் முடிவில் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் 21,765.56 ஆகப் பதிவாகியுள்ளது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/cbb864a4-d93d-4d8b-be16-fdbbe42a62ec/26-6a514d08d3139.webp' /></p><p>மேலும், இன்றைய நாளாந்தப் புரள்வு 02 பில்லியன் ரூபாவாகும்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-10T19:50:39+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[தன்னை குறிவைத்தால் வரலாறு காணாத பதிலடி ; ஈரானுக்கு கடும் எச்சரிக்கை விடுத்த டொனால்ட் ட்ரம்ப்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://canadamirror.com/article/donald-trump-issues-stern-warning-to-iran-1783711834"></link>
            <id>https://canadamirror.com/article/donald-trump-issues-stern-warning-to-iran-1783711834</id>
            <summary type="text">ஈரான் தன்னைப் படுகொலை செய்யும் முயற்சியில் ஈடுபட்டால், அதற்கு முன்னெப்போதும் இல்லாத வகையில் கடுமையான பதிலடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு முன்கூட்டியே அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஈரான் தன்னைப் படுகொலை செய்யும் முயற்சியில் ஈடுபட்டால், அதற்கு முன்னெப்போதும் இல்லாத வகையில் கடுமையான பதிலடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு முன்கூட்டியே அறிவுறுத்தல்கள் வழங்கியுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
</p><p>
சர்வதேச ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் இதனைத் தெரிவித்த அவர், ஈரானில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் தன்னை இலக்காகக் கொண்ட பதாகைகள் காட்சிப்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் விடயத்தையும் குறிப்பிட்டார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d8af2c64-c782-4bf4-bfb0-a220c997e91f/26-6a51485c70ab8.webp' /></p><p>"நான் நீண்ட காலமாக அவர்களின் இலக்குப் பட்டியலில் இருக்கிறேன். இது புதிய சூழ்நிலை அல்ல. எனக்கு ஏதேனும் நேர்ந்தால், அவர்கள் இதற்கு முன் கண்டிராத அளவுக்கு மிகக் கடுமையான தாக்குதலை மேற்கொள்ளுமாறு தேவையான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளேன்," என ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.</p><p>

மேலும், "தெஹ்ரான் பல ஆண்டுகளாக என்னை இலக்காகக் கொண்டுள்ளது.</p><p> நீங்கள் என்னை மிஸ் செய்வீர்கள் என்று நம்புகிறேன்," என்றும் அவர் தனது கருத்தில் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content>
            <updated>2026-07-10T19:30:41+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[ட்ரம்பைக் கொல்ல ஈரானின் சதி! எச்சரிக்கை விடுத்த இஸ்ரேலியப் புலனாய்வுப் பிரிவு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/iran-plots-to-kill-donald-trump-us-warned-1783711539"></link>
            <id>https://ibctamil.com/article/iran-plots-to-kill-donald-trump-us-warned-1783711539</id>
            <summary type="text">அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பைக் கொலை செய்ய ஈரான் ஒரு புதிய மற்றும் குறிப்பிட்ட சதித் திட்டத்தைத் தீட்டியுள்ளதாக இஸ்ரேலியப் புலனாய்வுப் பிரிவு, அம...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பைக் கொலை செய்ய ஈரான் ஒரு புதிய மற்றும் குறிப்பிட்ட சதித் திட்டத்தைத் தீட்டியுள்ளதாக இஸ்ரேலியப் புலனாய்வுப் பிரிவு, அமெரிக்க அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளது.
</p><p>
கடந்த 2020 ஆம் ஆண்டு டொனால்ட் ட்ரம்பின் உத்தரவின் பேரில் ஈரானிய இராணுவத் தளபதி காசெம் சுலைமானி கொல்லப்பட்டதில் இருந்தே அதற்குப் பழிவாங்க ட்ரம்பைக் கொல்லப் போவதாக ஈரான் தொடர்ந்து தெரிவித்து வருகின்றது.
</p><p>
இதில் சமீபத்தில் கொல்லப்பட்ட ஈரானின் உச்சத் தலைவர் ஆயதுல்லா அலி கமேனியின் இறுதிச்சடங்கின் போது நாங்கள் ட்ரம்பைக் கொல்வோம் என்ற வாசகங்கள் அடங்கிய பேனர்களை ஈரானியர்கள் ஏந்தியிருந்தனர்.
</p><p>
இந்தத் தகவலைத் தொடர்ந்து ட்ரம்பின் பாதுகாப்பு பலமடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.
</p><p>
 இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய டொனால்ட் ட்ரம்பும், "அவர்கள் என்னை ஒழிக்க நினைக்கிறார்கள். </p><p>

அவர்களின் அனைத்துப் பட்டியலிலும் எனது பெயர் முதலிடத்தில் உள்ளது" என்று பாதுகாப்பு அச்சுறுத்தலையம் உறுதிப்படுத்தியுள்ளார்.
</p><p>
இது குறித்து விரிவாக ஆராய்கின்றது ஐபிசி தமிழின் உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி...</p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/_MFgBUULEYs" width="640" height="360" class="note-video-clip"></iframe><br></p><p></p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-10T19:26:03+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[இங்கிலாந்து அணி உலகக் கிண்ணத்தை வென்றால்... 19 மில்லியன் பவுண்டுகள் ஊக்கத்தொகை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/if-england-win-bonus-bonanza-1783711253"></link>
            <id>https://news.lankasri.com/article/if-england-win-bonus-bonanza-1783711253</id>
            <summary type="text">இங்கிலாந்து அணி உலகக் கிண்ணத்தை வென்றால், ஃபிஃபாவிடமிருந்து அந்நாட்டு கால்பந்து சங்கத்திற்கு (FA) கிடைக்கும் 38 மில்லியன் பவுண்டு பரிசுத்தொகையில் சுமா...</summary>
            <content type="html"><![CDATA[<p>இங்கிலாந்து அணி உலகக் கிண்ணத்தை வென்றால், ஃபிஃபாவிடமிருந்து அந்நாட்டு கால்பந்து சங்கத்திற்கு (FA) கிடைக்கும் 38 மில்லியன் பவுண்டு பரிசுத்தொகையில் சுமார் பாதியை அந்நாட்டு வீரர்களும் பயிற்சியாளர் குழுவினரும் ஊக்கத்தொகையாகப் பெறுவார்கள்.</p><h2>ஊக்கத்தொகை</h2><p>
</p><p>உலகக் கிண்ணம் தொடா் தொடங்குவதற்கு முன்பாகவே வீரா்களின் தலைமைக்குழுவுடன் ஒப்புக்கொள்ளப்பட்ட ஊக்கத்தொகைத் திட்டத்தின் ஒரு பகுதியாக, அடுத்த வார இறுதியில் நியூயார்க்கில் ஹரி கேன் குழு கிண்ணத்தை வென்றால்,</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e5d95a9d-38bd-451b-a3ff-85c3adea4c34/26-6a5147a1cfcfe.webp' /></p><p> </p><p>கால்பந்து சங்கம் (FA) அணியினருக்கு சுமார் 15 மில்லியன் பவுண்டுகளையும், டுச்செலுக்கு 3 மில்லியன் பவுண்டுகளையும், அவரது உதவியாளர் குழுவினருக்கு ஏறக்குறைய 1 மில்லியன் பவுண்டுகளையும் ஊக்கத்தொகையாக வழங்கும்.
</p><p>நான்கு ஆண்டுகளுக்கு முன்பு கத்தாரில் நடைபெற்ற உலகக் கிண்ணத்தை வென்றிருந்தால் வீரர்களுக்குக் கிடைத்திருக்கக்கூடிய தொகையை விட, தற்போது அவர்களுக்குக் கிடைக்கக்கூடிய சாத்தியமான ஊக்கத் தொகை இரண்டு மடங்குக்கும் அதிகமாகும்.
</p><p>FA வழங்கவிருக்கும் இந்தத் தாராளமான நிதிக்கு, டுச்செலின் தலைமையிலான ஆண்கள் அணியினர் ஒரு வகையில் தங்கள் பெண் சகாக்களுக்கே கடமைப்பட்டுள்ளனர்.</p><p></p><p> </p><p>2023 மகளிர் உலகக் கிண்ணத்திற்கு முன்னதாக, கூடுதல் ஊக்கத்தொகைத் திட்டம் குறித்து உடன்பாடு எட்டப்படாத நிலையில், FA-வுடனான தங்கள் கருத்து வேறுபாட்டை இங்கிலாந்து மகளிர் அணி (Lionesses) பகிரங்கப்படுத்தியது. </p><p>ஏனெனில், வெற்றியாளர்களுக்கு 200,000 பவுண்டுகள் வரை வழங்கப்பட்ட ஃபிஃபா (Fifa)-வின் தனிப்பட்ட பரிசுத் தொகையைத் தாண்டி, கூடுதல் சலுகைகளை வழங்க அந்த நிர்வாக அமைப்பு ஆரம்பத்தில் தயக்கம் காட்டியிருந்தது. </p><p>இறுதிப் போட்டியில் ஸ்பெயினிடம் இங்கிலாந்து தோல்வியடைந்த அந்தப் போட்டித் தொடருக்குப் பிறகு, அந்தச் சர்ச்சை தீர்க்கப்பட்டது.
மகளிர் அணி
பெரிய ஊக்கத்தொகைகளைப் பெறுவதால், அதற்குப் பதிலளிக்கும் விதமாக கால்பந்து சங்கம் (FA), ஆண்களுக்கு வழங்கப்படக்கூடிய தொகையை அதிகரித்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7292ce64-abd1-471f-b725-adfea21272c4/26-6a5147a2aa507.webp' /></p><p> மேலும், தேசிய சங்கங்களுக்கு வழங்கப்படும் பரிசுத் தொகையை ஃபிஃபா பெருமளவில் அதிகரித்ததன் மூலம் ஆண்களும் பயனடைந்துள்ளனர். 2022 கத்தார் உலகக் கிண்ணம் தொடருடன் ஒப்பிடுகையில், பரிசுத்தொகை 50 சதவீதம் அதிகரித்து 655 மில்லியன் டொலராக (488 மில்லியன் பவுண்டுகள்) உயர்ந்துள்ளது; இருப்பினும், இத்தொகை 32 சங்கங்களுக்குப் பதிலாக 48 சங்கங்களுக்கு இடையே பகிர்ந்தளிக்கப்பட வேண்டியுள்ளது.</p><h2>நன்கொடையாக</h2><p> </p><p>தொடரில் வெற்றி பெறுபவர்களுக்கு 50 மில்லியன் டொலர் வழங்கப்படும்; இது நான்கு ஆண்டுகளுக்கு முன்பு வழங்கப்பட்ட 32 மில்லியன் டொலரை விட அதிகமாகும்.
</p><p>காலிறுதிக்கு முன்னேறியதன் மூலம் இங்கிலாந்து அணிக்கு சுமார் 19 மில்லியன் டொலர் தொகை உறுதியாகியுள்ளது; இதில் ஏறக்குறைய பாதித் தொகை, சனிக்கிழமையன்று நார்வே அணிக்கு எதிராக நடைபெறவுள்ள காலிறுதி ஆட்டத்தின் முடிவைப் பொருட்படுத்தாமல், வீரர்களுக்கும் ஊழியர்களுக்கும் வழங்கப்படும். </p><p>ஒவ்வொரு வீரருக்கும் வழங்கப்படும் துல்லியமான தொகை அவர்கள் களத்தில் செலவிட்ட நேரத்தைப் பொறுத்து அமையும்; இருப்பினும், சமமாகப் பகிர்ந்துகொள்ளப்பட்டால், அது ஒருவருக்கு 577,000 பவுண்டுகளுக்குச் சமமாக இருக்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6d2b364b-9f52-448e-a12d-e23b49b5cde2/26-6a5147a358af7.webp' /></p><p> </p><p>மேலும், ஒவ்வொரு போட்டிக்கும் வீரர்கள் 2,000 பவுண்டுகள் வீதம் பங்கேற்புக் கட்டணத்தைப் பெறுகின்றனர்; இருப்பினும், ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தத்தின்படி அத்தொகை தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடையாக வழங்கப்படுகிறது. </p><p>இதன் விளைவாக, 2027-ஆம் ஆண்டு முதல் 'இங்கிலாந்து கால்பந்து வீரர்கள் அறக்கட்டளை' (England Footballers Foundation) வாயிலாக நற்பணிகளுக்காக 5 மில்லியன் பவுண்டுகளுக்கும் அதிகமான நிதி திரட்டப்பட உள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-10T19:19:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[இரத்தினபுரியில் சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட ஐவர் கைது]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/five-arrested-for-illegal-gem-mining-in-ratnapura-1783708997"></link>
            <id>https://jvpnews.com/article/five-arrested-for-illegal-gem-mining-in-ratnapura-1783708997</id>
            <summary type="text">இரத்தினபுரி காவல் பிரிவிற்குட்பட்ட ஹகபுவ வீதி பகுதியில், உரிய அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட ஐந்து சந்தேகநபர்கள் கைது...</summary>
            <content type="html"><![CDATA[<p>இரத்தினபுரி காவல் பிரிவிற்குட்பட்ட ஹகபுவ வீதி பகுதியில், உரிய அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட ஐந்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p></p><p>

வலான மத்திய ஊழல் ஒழிப்புத் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/32f6442f-f277-45b7-af2a-19b23c9d85c6/26-6a513d46c9bdc.webp' /></p><p>இதன்போது, அகழ்வுப் பணிகளுக்குப் பயன்படுத்தப்பட்ட உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
</p><p>
கைது செய்யப்பட்டவர்கள் 30 முதல் 43 வயதுக்குட்பட்ட இரத்தினபுரி பகுதியைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களும் கைப்பற்றப்பட்ட உபகரணங்களும் மேலதிக விசாரணைகளுக்காக இரத்தினபுரி காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.</p><p></p>]]></content>
            <updated>2026-07-10T18:43:26+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிழக்கு கடற்பரப்பில் சட்டவிரோத நடவடிக்கைகள் ; அரசின் உடனடி தலையீட்டை கோரும் ஹிஸ்புல்லாஹ்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/illegal-activities-in-eastern-seaboard-hezbollah-1783708040"></link>
            <id>https://jvpnews.com/article/illegal-activities-in-eastern-seaboard-hezbollah-1783708040</id>
            <summary type="text">மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மக்களின் பிரதான வாழ்வாதாரமாக விளங்கும் கடற்றொழில், தற்போது கடற்கொள்ளை மற்றும் மீன்...</summary>
            <content type="html"><![CDATA[<p>மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மக்களின் பிரதான வாழ்வாதாரமாக விளங்கும் கடற்றொழில், தற்போது கடற்கொள்ளை மற்றும் மீன் திருட்டுச் சம்பவங்களால் பெரும் அச்சுறுத்தலுக்குள்ளாகியிருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார்.</p><p></p><p>
</p><p>
இன்றைய நாடாளுமன்ற அமர்வின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5eec4f84-0cc8-4c02-b477-7938caba3f8c/26-6a51398a6fe34.webp' /></p><p>
கடலில் சட்டவிரோதமான முறையில் நிகழும் மீன் திருட்டு மற்றும் கடற்கொள்ளையினால் இந்த மூன்று மாவட்ட கடற்றொழிலாளர்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.</p><p>

வாகரைப் பகுதியில் அண்மையில் இடம்பெற்ற பாரிய மீன் திருட்டுச் சம்பவங்கள் இதற்கு சான்றாகும்.</p><p>
கிழக்கு மாகாண கடற்றொழிலாளர்களின் இந்த அவல நிலைக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும் எனவும், கடல் கொள்ளையர்களைக் கட்டுப்படுத்தி கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மீட்க அரசாங்கம் உடனடியாகத் தலையிட்டு உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் வலியுறுத்தியுள்ளார்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-10T18:27:27+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Shalini Balachandran</name>
            </author>
            <title type="text"><![CDATA[நான் கொல்லப்பட்டால் ஈரான் மீது குண்டுவீசுங்கள்...! ட்ரம்பின் பகிரங்க அறிவுறுத்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamil.com/article/trump-warns-of-huge-strikes-if-iran-kills-him-1783705504"></link>
            <id>https://ibctamil.com/article/trump-warns-of-huge-strikes-if-iran-kills-him-1783705504</id>
            <summary type="text">ஒருவேளை ஈரான் தன்னைத் படுகொலை செய்தால் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்த அறிவுறுத்தல்களைத் தான் வழங்கியுள்ளேன் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஒருவேளை ஈரான் தன்னைத் படுகொலை செய்தால் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்த அறிவுறுத்தல்களைத் தான் வழங்கியுள்ளேன் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.</p><p>

ஈரானின் உச்சத் தலைவர் அலி கமேனியின் இறுதிச் சடங்கின் போதே ட்ரம்பைக் கொல்லுமாறு கோரி காட்சிப்படுத்தப்பட்ட பதாகைகளைக் (Banners) சுட்டிக்காட்டி அவர் இதனை தெரிவித்துள்ளார்.
</p><p>
சர்வதேச ஊடகமொன்றிற்கு வழங்கிய நேர்காணல் ஒன்றிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.</p><p>
</p><p></p><h2>இலக்குப் பட்டியல்&nbsp;</h2><p>இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “நான் நீண்ட காலமாக அவர்களின் இலக்குப் பட்டியலில் இருக்கிறேன். </p><p>

நாம் இத்தகையதொரு சூழலையே எதிர்கொண்டுள்ளோம்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/58e59fe2-60f7-480c-b2e1-f9f37e0c4992/26-6a5138fb06d86.webp' /></p><p>ஒரே ஒரு விஷயம் என்னவென்றால் எனக்கு ஏதேனும் நேர்ந்தால் அவர்கள் இதற்கு முன் பார்த்திராத அளவிலான மட்டங்களில் மிகக் கொடூரமாக அவர்கள் மீது குண்டுவீச்சு நடத்துமாறு நான் அறிவுறுத்தல்களை விட்டுச் சென்றுள்ளேன்.
</p><p>
தெஹ்ரான் (ஈரான்) தான் இறக்க வேண்டும் எனப் பல ஆண்டுகளாக விரும்புகின்றது.</p><p>

நீங்கள் என்னை மிஸ் செய்வீர்கள் என்று நம்புகிறேன்” என அவர் தெரிவித்துள்ளார்.</p><p></p><p></p><table class="table table-bordered"><tbody><tr><td><h6>செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் <a href="https://www.whatsapp.com/channel/0029VaE5tyQ7IUYRDTjhh73u" target="_blank"><b>WHATSAPP </b></a>இல் இணைந்து கொள்ளுங்கள்...!&nbsp; &nbsp; &nbsp;</h6></td></tr></tbody></table><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-10T18:25:12+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[மிதுனத்தில் புதன் வக்ர பெயர்ச்சி: பெரும் சவால்களை சந்திக்கப்போகும் 3 ராசிகள்!]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://manithan.com/article/mercury-retrograde-in-gemini-who-get-bad-luck-1783699057"></link>
            <id>https://manithan.com/article/mercury-retrograde-in-gemini-who-get-bad-luck-1783699057</id>
            <summary type="text">ஜோதிட சாஸ்திரத்தில் புதன் கிரகம், கிரகங்களின் இளவரசராகப் போற்றப்படுகிறார். அறிவாற்றல், வணிகம், தகவல் தொடர்பு மற்றும் பேச்சுத் திறனின் பிரதிநிதியாக புத...</summary>
            <content type="html"><![CDATA[<p>ஜோதிட சாஸ்திரத்தில் புதன் கிரகம், கிரகங்களின் இளவரசராகப் போற்றப்படுகிறார். அறிவாற்றல், வணிகம், தகவல் தொடர்பு மற்றும் பேச்சுத் திறனின் பிரதிநிதியாக புதன் கருதப்படுவதால், அவரது இயக்கத்தில் ஏற்படும் ஒவ்வொரு மாற்றமும் ஜோதிடத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
</p><p>
அந்த வகையில், புதன் கிரகம் ஜூலை 7ஆம் தேதி மிதுன ராசியில் நுழைந்தது. தற்போது புதன் வக்ர நிலையில் பயணித்து வரும் நிலையில், இந்த காலகட்டம் ஜூலை 24ஆம் தேதி வரை நீடிக்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/88dec942-de13-40f9-836b-ffcfc581e6e8/26-6a511cbb278a5.webp' /></p><p>
</p><p>
ஜோதிட நம்பிக்கைகளின்படி, புதனின் இந்த வக்ர இயக்கம் சிலருக்கு தாமதங்கள், கருத்து வேறுபாடுகள் மற்றும் எதிர்பாராத சவால்களை ஏற்படுத்தக்கூடும். </p><p>அப்படி தங்கள் தொழில், நிதி நிலை மற்றும் சொத்து தொடர்பான விஷயங்களில் சில தடைகள் அல்லது சவால்களை அனுபவிக்கப்போகும் ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.</p><p></p><h2>மேஷம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a06ead09-8e7e-437a-be04-05bf4b3e387e/26-6a511cbbcc02b.webp' /></p><p>
புதன் வக்ர நிலை மேஷ ராசிக்காரர்களுக்கு சில பொருளாதார சவால்களை ஏற்படுத்தக்கூடும். ஜூலை 24 வரை கடன் கொடுப்பது, அதிக ஆபத்து உள்ள முதலீடுகளில் ஈடுபடுவது அல்லது புதிய முயற்சிகளை அவசரமாக தொடங்குவது போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது.</p><p> இந்த காலகட்டத்தில் தேவையற்ற வாக்குவாதங்கள் மற்றும் சட்டரீதியான பிரச்சனைகளில் சிக்காமல் கவனமாக இருக்கவும். எந்த ஒரு முக்கிய முடிவையும் நிதானமாக யோசித்த பிறகே எடுப்பது சிறந்தது. பணவிடயங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.&nbsp;</p><h2>

கடகம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a7293c39-5a7e-4b72-b305-e8b12db2887d/26-6a511cbc7a7b1.webp' /></p><p>
புதன் வக்ர காலத்தில் கடக ராசிக்காரர்கள் சொத்து தொடர்பான விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். நிலம் அல்லது வீடு வாங்குவது, விற்பது போன்ற செயல்களில் தாமதங்கள் அல்லது எதிர்பாராத சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. </p><p>பணத்தை திட்டமிட்டு கையாளுவது அவசியம். பயணத் திட்டங்களை முடிந்தவரை ஒத்திவைப்பது நல்லது, இல்லையெனில் தேவையற்ற செலவுகள் அல்லது இழப்புகள் ஏற்படலாம். </p><p>பணியிடத்திலும் சில தாமதங்கள் ஏற்படக்கூடும். மேலும், கடந்த காலத்தில் கொடுத்த கடனை திரும்பப் பெறுவதிலும் சிரமங்கள் இருக்கலாம்.
</p><h2>
விருச்சிகம்</h2><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dd0096ca-f2ea-4000-acac-4c19bc1088bc/26-6a511cbd2ae11.webp' /></p><p></p><p>
விருச்சிக ராசிக்காரர்களுக்கு புதன் வக்ர இயக்கம் பணியிடத்தில் சில சவால்களை கொண்டு வரலாம். மேலதிகாரிகள் அல்லது சக ஊழியர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புள்ளதால், பொறுமையுடன் செயல்பட்டு உங்கள் வேலைகளில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.</p><p> உங்கள் வார்த்தைகளை மற்றவர்கள் தவறாக புரிந்து கொள்ளக்கூடும் என்பதால் பேசும்போது கவனம் தேவை. இந்த காலகட்டத்தில் உங்கள் தனிப்பட்ட விஷயங்கள் மற்றும் ரகசியங்களை அனைவரிடமும் பகிராமல் இருப்பது நல்லது. கவனமாக செயல்பட்டால் தேவையற்ற பிரச்சனைகளைத் தவிர்க்கலாம்.</p><p><b>இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).&nbsp; &nbsp; &nbsp; </b>&nbsp; &nbsp; &nbsp;</p><table class="table table-bordered"><tbody><tr><td>&nbsp;சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் <b><u><a href="https://www.whatsapp.com/channel/0029VaXJqvRDZ4LUPtSXbL0g" target="_blank">FOLLOW NOW</a></u></b>&nbsp; &nbsp;</td></tr></tbody></table><p><br></p><p><br></p>]]></content>
            <updated>2026-07-10T18:25:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Amal</name>
            </author>
            <title type="text"><![CDATA[பழிக்குப்பழி நடவடிக்கை: வெளிநாட்டு நிறுவனங்களுக்கு நெருக்கடி கொடுக்கும் சீனாவின் புதிய சட்டங்கள்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://tamilwin.com/article/retaliatory-measures-china-new-laws-put-pressure-1783706816"></link>
            <id>https://tamilwin.com/article/retaliatory-measures-china-new-laws-put-pressure-1783706816</id>
            <summary type="text">அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் விதிக்கும் பொருளாதாரத் தடைகள் மற்றும்
ஏற்றுமதி கட்டுப்பாடுகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், சீனா தனது எதிர்ப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் விதிக்கும் பொருளாதாரத் தடைகள் மற்றும்
ஏற்றுமதி கட்டுப்பாடுகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், சீனா தனது எதிர்ப்புத் தடை சட்டங்களை தீவிரமாக விரிவுபடுத்தி வருகிறது.
</p><p>
நடப்பு ஆண்டில் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் சீனா கொண்டுவந்துள்ள இரு
புதிய சட்டங்கள் மூலமாக, தங்களின் விநியோகச் சங்கிலிப் பாதுகாப்பிற்கு
அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வெளிநாட்டு நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை
எடுக்க பெய்ஜிங் அரசுக்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.
</p><p>
மேலும், சீனாவின் தேசிய நலன்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் வெளிநாட்டு
அமைப்புகள் மற்றும் தனிநபர்கள் மீது வழக்குத் தொடர அனுமதிக்கும் மூன்றாவது
சட்ட வரைவும் தற்போது தயாராகி வருகிறது.</p><p></p><h2>விசா இரத்து&nbsp;</h2><p>
</p><p>
சீனாவின் இந்த அதிரடி மாற்றங்களால் அங்கு இயங்கி வரும் பன்னாட்டு நிறுவனங்கள்
பெரும் சட்டச் சிக்கலில் சிக்கியுள்ளன.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/313dede8-65ce-47ec-8120-46d6371bbfa2/26-6a513840c3e7b.webp' /></p><p>
</p><p>
மேற்கத்திய நாடுகளின் பொருளாதாரத் தடைகளுக்குக் கட்டுப்பட்டுச் செயல்பட
முயன்றால், அது சீனாவின் புதிய விதிகளின்படி "சீனாவிற்கு எதிரான பாகுபாடு"
எனக் கருதப்பட்டு அபராதம், சொத்து முடக்கம், முதலீட்டுக் கட்டுப்பாடுகள்
மற்றும் விசா இரத்து போன்ற கடுமையான தண்டனைகளைச் சந்திக்க நேரிடும் என சட்ட
வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
</p><p>
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஏற்கனவே சீனாவின் மேம்பட்ட தொழில்நுட்பத்
துறை மற்றும் மனித உரிமை மீறல் முறைப்பாடுகள் மீது தடைகளை விதித்துள்ள
நிலையில், சீனா தற்போது மேற்கத்திய நாடுகளுக்கு நேரடியாகப் பழிக்குப்பழி
வாங்கும் உத்தியைக் கையில் எடுத்துள்ளது.
</p><p>
இதனால், சர்வதேச நிறுவனங்கள் அமெரிக்கா மற்றும் சீனாவிற்கு இடையிலான வர்த்தகப்
போரில் மாட்டிக்கொண்டு தவித்து வருகின்றன.&nbsp;</p><p></p><p></p>]]></content>
            <updated>2026-07-10T18:24:47+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[யாழில் இளைஞனை கடத்திச் சென்று நிர்வாணமாக்கி சித்திரவதை ; பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/young-man-stripped-naked-and-tortured-in-jaffna-1783706889"></link>
            <id>https://jvpnews.com/article/young-man-stripped-naked-and-tortured-in-jaffna-1783706889</id>
            <summary type="text">யாழ்ப்பாணத்தில் இளைஞர் ஒருவரை காரில் கடத்திச் சென்று சித்திரவதைக்கு உட்படுத்தி, கூரிய ஆயுதங்களால் தாக்கிய சம்பவம் தொடர்பில் ஐந்து பேரை பொலிஸார் கைது ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>யாழ்ப்பாணத்தில் இளைஞர் ஒருவரை காரில் கடத்திச் சென்று சித்திரவதைக்கு உட்படுத்தி, கூரிய ஆயுதங்களால் தாக்கிய சம்பவம் தொடர்பில் ஐந்து பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.</p><p>
</p><p></p><h3>பொலிஸார் மேலதிக விசாரணை</h3><p>யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அருகே நின்றிருந்த இளைஞரை கார் ஒன்றில் வந்த ஐந்து பேர் கொண்ட குழுவினர் வலுக்கட்டாயமாக கடத்திச் சென்று, நாவற்குழி பகுதியில் அவரது ஆடைகளை களைந்து சித்திரவதைக்கு உட்படுத்தியதுடன், கூரிய ஆயுதங்களால் தாக்கியதாக பொலிஸார் தெரிவித்தனர்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d72a7651-5fa1-4045-b77c-f3506a73ab4b/26-6a51350abbb08.webp' /></p><p>அதனைத் தொடர்ந்து, காயமடைந்த இளைஞரை மீண்டும் காரில் அழைத்து வந்து, யாழ்ப்பாணம் போஸ்கோ கல்லூரி அருகே வீதியோரத்தில் இறக்கிவிட்டு தப்பிச் செல்ல முயன்றுள்ளனர்.
</p><p>
இந்தச் சம்பவத்தை அருகில் வீதிப் போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் குழுவினர் அவதானித்ததைத் தொடர்ந்து, தப்பிச் சென்ற காரை விரட்டிச் சென்று மடக்கிப் பிடித்துள்ளனர்.
</p><p>
காரைச் சோதனையிட்டபோது, அதில் இருந்த ஐந்து பேரும் கைது செய்யப்பட்டதுடன், இரண்டு கூரிய வாள்கள், இரத்தக் கறை படிந்த டி-ஷர்ட் மற்றும் சுமார் 2.5 கிராம் 'ஐஸ்' போதைப்பொருள் என்பனவும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bfd4aa17-780b-42e6-b39b-d65ec5d3b870/26-6a51350c1cde8.webp' /></p><p> </p><p>மேலும், காரின் உட்பகுதியிலும் இரத்தக் கறைகள் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
</p><p>
இதனிடையே, வீதியோரத்தில் காயமடைந்த நிலையில் கிடந்த இளைஞரை பொலிஸார் மீட்டு, மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.</p><p>

சம்பவத்தின் பின்னணி மற்றும் தாக்குதலுக்கான காரணம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p></p><p><iframe frameborder="0" src="//www.youtube.com/embed/9nxqgm6BfNY" width="640" height="360" class="note-video-clip"></iframe></p>]]></content>
            <updated>2026-07-10T18:10:50+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Vinoja</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரசுப் பள்ளிகளில் அரசியல் நிகழ்ச்சிகளுக்கு தடை: அமைச்சர் ராஜ்மோகன் எச்சரிக்கை]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://ibctamilnadu.com/article/school-headmistress-suspended-rajmohan-warning-1783705211"></link>
            <id>https://ibctamilnadu.com/article/school-headmistress-suspended-rajmohan-warning-1783705211</id>
            <summary type="text">கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தமிழக வெற்றிக் கழகத்தின் நிகழ்ச்சியை மாணவர்களுக்கு நேரலையாக ஒளிபரப்பிய விவகாரத்தில்,...</summary>
            <content type="html"><![CDATA[<p>கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தமிழக வெற்றிக் கழகத்தின் நிகழ்ச்சியை மாணவர்களுக்கு நேரலையாக ஒளிபரப்பிய விவகாரத்தில், பள்ளித் தலைமையாசிரியை மல்லிகா பணியிடை நீக்கம் (சஸ்பெண்ட்) செய்யப்பட்டுள்ளார்.
</p><p>
இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிட்டதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.</p><p> விசாரணையில், தலைமையாசிரியை தன்னிச்சையாக துறையின் உத்தரவுகளையும் ஒழுங்குமுறைகளையும் மீறி செயல்பட்டது உறுதியானதால், உடனடி ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அவர் கூறினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/48a13641-196b-4fa0-ad8a-e5b5c8a8cc35/26-6a51313f30373.webp' /></p><p>
</p><p>
மேலும், அரசு சார்பில் நடத்தப்படும் அதிகாரப்பூர்வ நிகழ்ச்சிகளைத் தவிர, எந்த அரசியல் கட்சியின் நிகழ்ச்சிகளையும் அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்கு காண்பிக்கக் கூடாது என்ற உத்தரவு ஏற்கனவே நடைமுறையில் இருப்பதாகவும், அதை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் எச்சரித்தார்.</p><p>
"பள்ளிக்கூடம் கல்விக்காகவே; அரசியலுக்காக அல்ல" என்ற கொள்கையை தொடர்ந்து கடைப்பிடிப்போம் என்றும், இதுபோன்ற சம்பவங்கள் இனி நடைபெறாத வகையில் அனைத்து கல்வி அலுவலர்களுக்கும் தலைமையாசிரியர்களுக்கும் மீண்டும் கடுமையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">செய்தி அறிக்கை: <br><br>அரசுப் பள்ளிகளில் அரசியல் நிகழ்ச்சிகளுக்கு இடமில்லை, உத்தரவை மீறினால் கடும் நடவடிக்கை உறுதி!<br><br>அரசு சார்பில் நடத்தப்படும் அதிகாரப்பூர்வ நிகழ்ச்சிகளைத் தவிர, எந்தவொரு கட்சியின் நிகழ்ச்சியையும் பள்ளி வளாகங்களில் மாணவர்களுக்கு காட்டக் கூடாது என்று பள்ளிக்கல்வித்… <a href="https://t.co/f7bWenCFu0">pic.twitter.com/f7bWenCFu0</a></p>&mdash; Rajmohan (@imrajmohan) <a href="https://x.com/imrajmohan/status/2075588357690990726?ref_src=twsrc%5Etfw">July 10, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p>]]></content>
            <updated>2026-07-10T17:52:16+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Sahana</name>
            </author>
            <title type="text"><![CDATA[அரிசியைப் பயன்படுத்தி புதிய உற்பத்திகளை உருவாக்க வேண்டும் ; ஜனாதிபதி வலியுறுத்தல்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://jvpnews.com/article/dengue-western-province-next-two-weeks-dangerous-1783705674"></link>
            <id>https://jvpnews.com/article/dengue-western-province-next-two-weeks-dangerous-1783705674</id>
            <summary type="text">நாட்டின் அரிசி நுகர்வை உணவாக மாத்திரம் மட்டுப்படுத்தாமல், அரிசி சார்ந்த ஏனைய துணை உற்பத்திகளுக்கும் பயன்படுத்துவதன் மூலம் அரிசிக்கான சந்தை வாய்ப்புகளை...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாட்டின் அரிசி நுகர்வை உணவாக மாத்திரம் மட்டுப்படுத்தாமல், அரிசி சார்ந்த ஏனைய துணை உற்பத்திகளுக்கும் பயன்படுத்துவதன் மூலம் அரிசிக்கான சந்தை வாய்ப்புகளை விரிவுபடுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.</p><p> </p><p></p><p>கெபித்திகொல்லாவ பிரதேசத்தில் புதிய நீர் திட்டமொன்றைத் திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டபோதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார். </p><p>

கடந்த காலங்களில் நாட்டின் நெல் உற்பத்தி குறைந்த மட்டத்தில் இருந்ததால், அரிசியிலிருந்து ஏனைய உற்பத்திகளை மேற்கொள்வதைத் தடை செய்து வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டிருந்ததாகவும், தனது அரசாங்கம் அந்த வர்த்தமானி அறிவித்தலை நீக்க நடவடிக்கை எடுத்ததாகவும் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இதன்போது தெரிவித்தார்.</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d56e9aaf-824a-442e-b344-8b39470e90f9/26-6a51304c3c736.webp' /></p><p>நெல் உபரி காணப்படும் காலங்களில் விவசாயிகள் எதிர்கொள்ளும் நெருக்கடிகளைத் தவிர்த்து, சந்தையில் நெல்லுக்கான அதிக போட்டித்தன்மையையும் நியாயமான விலையையும் பெற்றுக்கொடுக்கும் நோக்கில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக ஜனாதிபதி கூறினார். </p><p>

எதிர்காலத்தில் நாட்டில் சோறு தவிர, கால்நடைத் தீவனம், பியர், வைன், பிஸ்கட் மற்றும் கேக் வகைகள் உள்ளிட்ட பல்வேறு மதிப்புக்கூட்டப்பட்ட உற்பத்திப் பொருட்களுக்கு அரிசியைப் பயன்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மேலும் தெரிவித்தார். </p><p>

அறுவடைக்குப் பிந்தைய விரயத்தைத் தடுக்கும் நிறுவனங்கள், அரிசியைக் கொண்டு உற்பத்தி செய்யக்கூடிய பல உணவு மற்றும் பான வகைகளை ஏற்கனவே ஆராய்ச்சி மட்டத்தில் கண்டறிந்துள்ளதாகவும், அவற்றை விரைவில் வணிக ரீதியாகச் சந்தைக்கு அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுப்பதாகவும் ஜனாதிபதி கூறினார்.</p><p> 

இதன் மூலம் நெல் கொள்வனவு செய்வதற்கு சாதாரண ஆலை உரிமையாளர்களுக்கு மேலதிகமாக, வைன், பிஸ்கட் மற்றும் கால்நடைத் தீவன உற்பத்தியாளர்களும் போட்டித்தன்மையுடன் சந்தைக்கு வருவதால், விவசாயிகளுக்குத் தமது அறுவடைக்கு மிகவும் நியாயமான மற்றும் அதிக விலையைப் பெற்றுக்கொள்ள வாய்ப்பு கிடைக்கும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.</p><p> 

அதன்படி, பயிர்ச் செய்கையின் உற்பத்தித்திறனையும் உழைப்பையும் மேலும் அதிகரித்து, இந்த புதிய சந்தையை இலக்காகக் கொண்டு நெல் பயிர்ச் செய்கையை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க விவசாயிகளிடம் கேட்டுக்கொண்டார்.</p><p></p>]]></content>
            <updated>2026-07-10T17:48:01+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Arbin</name>
            </author>
            <title type="text"><![CDATA[நெதன்யாகுவின் சாணக்கியத்தனம்... போர்நிறுத்தத்தை ரத்து செய்து ஈரான் மீது கொலைவெறியில் ட்ரம்ப்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://news.lankasri.com/article/israel-intel-convince-trump-to-1783705606"></link>
            <id>https://news.lankasri.com/article/israel-intel-convince-trump-to-1783705606</id>
            <summary type="text">இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எதிர்பார்த்தது போலவே, ஈரான் மீதான் போர் நிறுத்தத்தை ரத்து செய்து, மீண்டும் தாக்குதல் முடிவுக்கு வந்துள்ளார் ட்ரம்ப...</summary>
            <content type="html"><![CDATA[<p>இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எதிர்பார்த்தது போலவே, ஈரான் மீதான் போர் நிறுத்தத்தை ரத்து செய்து, மீண்டும் தாக்குதல் முடிவுக்கு வந்துள்ளார் ட்ரம்ப்.</p><h2>ஈரான் மீண்டும் சதி</h2><p>
</p><p>ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் இந்த திடீர் முடிவுக்குப் பின்னால் இஸ்ரேல் உளவுத்துறை இருப்பதாகவே தகவல் கசிந்துள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7ec223d4-f4df-4923-b4b7-792cf398d868/26-6a51319751468.webp' /></p><p> </p><p>ஈரானின் முன்னாள் உயர் தலைவர் அலி கமேனியின் ஒரு வார காலம் நீண்ட இறுதி ஊர்வலம் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில், ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதல் நடத்துவதற்கு ட்ரம்ப் முடிவு செய்தார். </p><p>
அமெரிக்க ஊடகங்கள் வெளியிட்டுள்ள தகவல்களின் அடிப்படையில், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பைக் கொல்ல ஈரான் மீண்டும் சதி செய்து வருவதாக உறுதி செய்யும் புதிய உளவுத் தகவல்களை இஸ்ரேல் பென்டகனுடன் பகிர்ந்துள்ளது. </p><p>இஸ்ரேல் கூறிய இந்தக் கொலைத் திட்டமானது அமெரிக்கா மற்றும் ஈரானிடையே புதிய பதற்றத்தை உருவாக்கியது. அத்துடன் போர் நிறுத்த ஒப்பந்தத்தை ட்ரம்ப் ரத்து செய்வதாக அறிவித்தார்.</p><p></p><p>
</p><p>சமீபத்திய வாரங்களில் அந்தத் திட்டம் குறித்த தொடர்ச்சியான சலசலப்பை அமெரிக்க உளவுத்துறை கண்டறிந்திருந்தது; ஆனால், இஸ்ரேல் விடுத்த எச்சரிக்கை புதியதாகவும், ஒரு குறிப்பிட்ட சதித்திட்டம் சார்ந்ததாகவும் இருந்தது என CNN செய்தி ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.
</p><p>இருப்பினும், ஈரானுக்கு எதிரான அமெரிக்க இராணுவ நடவடிக்கையைத் தீவிரப்படுத்துவதா அல்லது போர்நிறுத்தத் திட்டத்தைத் தொடர்வதா என்று ட்ரம்ப் சிந்தித்துக் கொண்டிருந்த வேளையில், </p><p>அவரது முடிவெடுக்கும் திறனைப் பாதிக்கும் ஒரு முயற்சியாகவே இஸ்ரேலிய உளவுத்துறை கொலை முயற்சி என்ற திட்டத்தை செயல்படுத்தியதாக சில அமெரிக்க அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c8328c1a-a170-4666-9e10-74971361dd8d/26-6a5131983df32.webp' /></p><p> </p><p>அமெரிக்க உளவு அமைப்புகளுக்கு இஸ்ரேல் அளித்த நம்பகமானத் தரவுகள் தொடர்பில் தகவல் ஏதும் இதுவரை வெளியாகவில்லை. ஆனால், இஸ்ரேலின் எச்சரிக்கைக்கு முன்னதாக அமெரிக்கா அதைத் தானே சரிபார்க்கவோ அல்லது கண்காணிக்கவோ இல்லை என்று CNN செய்தி வெளியிட்டுள்ளது.
</p><p>காசிம் சுலைமானியின் படுகொலையில் அமெரிக்காவுக்குப் பங்கு இருந்ததாகக் கூறப்படும் விவகாரத்தில், ட்ரம்ப் மீது கொலைவெறியில் இருப்பதாக ஈரான் பல ஆண்டுகளாக வெளிப்படையாகவே கூறி வருகிறது.</p><p> ட்ரம்பின் முதல் பதவிக்காலத்தில், இஸ்லாமிய புரட்சிகரப் படைப் பிரிவின் (Islamic Revolutionary Guard Corps) உயர்மட்டத் தளபதியாக இருந்தவர் காசிம் சுலைமானி. </p><p>இஸ்ரேலின் தூண்டுதலால் பிப்ரவரி 28 அன்று நடத்தப்பட்ட அமெரிக்க-இஸ்ரேலியத் தாக்குதல்களில் கொல்லப்பட்ட அலி கமேனி மற்றும் அவரது குடும்பத்தினரின் இறுதி ஊர்வலத்தின்போது, ​​நாங்கள் ட்ரம்ப்பைக் கொல்வோம் என்று எழுதப்பட்ட பதாகையை ஏந்தியவாறு, ஈரானியர்கள் ட்ரம்ப்பின் மரணத்தை வலியுறுத்தி முழக்கமிட்டிருந்தனர்.</p><h2>போரை நீட்டிக்க நெதன்யாகு</h2><p> </p><p>இந்த நிலையிலேயே துருக்கியில் நேட்டோ நாடுகளின் உச்சிமாநாட்டில் கலந்துகொண்ட ட்ரம்ப், ஈரான் தன்னைப் படுகொலை செய்ய திட்டமிட்டு வருவதாக செய்தியாளர்களிடம் கூறினார். </p><p>உண்மையில், ஈரானுடன் எந்த ஒப்பந்தத்தையும் கடுமையாக எதிர்க்கும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, தேர்தல் முடியும் வரையில் போர் நீடிக்க வேண்டும் என்றே விரும்புகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6bfb1b34-0895-480e-9f65-27007c351871/26-6a513198e2452.webp' /></p><p> </p><p>இதன் ஒருபகுதியாகவே அவர் லெபனானில் இருந்து இஸ்ரேல் இராணுவம் வெளியேறாது என்றும், காஸாவில் இரகசிய இராணுவ நடவடிக்கைகளையும் முன்னெடுத்தும் வருகிறார். </p><p>தனது அரசியல் இலாபத்திற்காக போரை நீட்டிக்க நெதன்யாகு திட்டமிட்டு வரும்போது, மறுபுறம் ட்ரம்ப், இந்த மோதல் உலகப் பொருளாதாரத்தைப் பாதிக்கும் என்ற கவலைகளைச் சுட்டிக்காட்டி, அதிலிருந்து வெளியேறுவதற்கான வழிகளைத் தீவிரமாகத் தேடி வருகிறார். </p><p>ஆனால், நெதன்யாகுவின் சாணக்கியத்தனத்தால், வளைகுடாவில் மீண்டும் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது.</p><table class="table table-bordered"><tbody><tr><td>உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி <a href="https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q" target="_blank">WHATSAPP CHANNEL</a> இல் இணையுங்கள்.&nbsp;</td></tr></tbody></table>]]></content>
            <updated>2026-07-10T17:45:29+00:00</updated>
        </entry>
    </feed>
